<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 17 Jul 2026 06:49:27 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-17-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-17-july-2026#comments</comments><guid isPermaLink="false">1ef20ff1-dcd7-484e-81a8-ef47dfdd988e</guid><pubDate>Fri, 17 Jul 2026 04:36:42 +0000</pubDate><atom:updated>2026-07-17T06:33:41.327Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/9x9oqe5m/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/9x9oqe5m/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/rohit-sharma-no-more-automatic-selection-after-lord-odi">ஒருநாள் போட்டி அணியில் இனி இடம்பெறமாட்டார்- சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெறும் ரோகித் சர்மா</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-flags-off-india-made-hydrogen-train" rel="nofollow">இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் பயணிகள் ரெயில்- நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protest-sonam-wangchuk-on-critical-indefinite-fast-as-centre-stays-silent">Day 20: மரணப் படுக்கையில் சோனம் வாங்சுக்.. உடல் உறுப்புகள் செயலிழக்கும் அபாயம் - மருத்துவர்கள் எச்சரிக்கை</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/over-50-tenders-cancelled-municipal-administration-department-announcement">50-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து - நகராட்சி நிர்வாகத்துறை அறிவிப்பு </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mps-need-tokens-to-breathe-under-modi-government-manickam-thakur-asks" rel="nofollow">எம்பிக்கள் மூச்சு விடவும் மோடி அரசிடம் டோக்கன் வாங்க வேண்டுமா?- மாணிக்கம் தாகூர்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-paddy-bags-piling-up-at-procurement-centres-immediate-removal-required">கொள்முதல் நிலையங்களில் தேங்கும் நெல் மூட்டைகள்: உடனடியாக அகற்ற அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/school-van-hit-by-train-three-including-two-children-killed-at-murshidabad-govindpur-crossing-as-suburban-train-rams-vehicle-on-open-railway-track">மேற்கு வங்கம்: பள்ளிக் குழந்தைகள் சென்ற வாகனம் மீது ரெயில் மோதி விபத்து - 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலி </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ecr-high-level-road-project-technical-team-formed-to-cut-costs" rel="nofollow">ECR உயர்மட்ட சாலைத் திட்டம்: செலவை குறைக்க தொழில்நுட்பக் குழு அமைப்பு!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/rohingya-boat-tragedy-over-500-feared-dead-after-two-refugee-boats-vanish-off-myanmar-coast">மியான்மரில் இருந்து தப்பி ரோஹிங்கியா அகதிகள் சென்ற படகுகள் விபத்து.. 500-க்கும் மேற்பட்டோர் பலி என அச்சம்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/ukraine-defense-minister-fired-zelensky-sacks-drone-war-architect-sparking-nationwide-protests">உக்ரைன் ராணுவத்தில் டிரோன் போர்முறையை அறிமுகம் செய்த பாதுகாப்பு அமைச்சர் நீக்கம் - ஜெலன்ஸ்கியின் முடிவுக்கு எதிராக மக்கள் போராட்டம்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/iran-airstrikes-on-iran-bridges-us-targets-key-coastal-infrastructure-at-least-7-killed">ஈரானில் பாலங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் - 7 பேர் பலி.. பஹ்ரைன், கத்தார், குவைத் மீது ஈரான் பதில் தாக்குதல்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/us-election-data-theft-claim-trump-alleges-china-stole-data-of-220-million-voters">மாபெரும் தேர்தல் மோசடி.. 22 கோடி அமெரிக்க வாக்காளர்களின் தரவுகளை திருடிய சீனா - டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/mamata-faces-tmc-split-over-50-mlas-and-20-mps-quit-as-she-urges-rebels-to-leave-before-july-21">விலகிய எம்.பி.க்கு மிக்க நன்றி.. போகிறவர்கள் ஜூலை 21க்குள் போய்விடுங்கள் - கெடு விதித்த மம்தா</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-says-salutes-to-the-martyrs-on-martyrs-day">தியாகிகள் தினத்தையொட்டி வீரவணக்கங்கள்- முதலமைச்சர் விஜய்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-17-7-2026">GOLD PRICE TODAY: தொடர் சரிவில் தங்கம்: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/maternity-leave-professor-asserts-her-right-by-going-to-court">மகப்பேறு விடுப்பு - கோர்ட்டுக்கு சென்று உரிமையை நிலைநாட்டிய பேராசிரியை</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-inaugurate-75-railway-stations-today">சென்னை பூங்கா, குன்னூர் உள்பட 75 ரெயில் நிலையங்களை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்</a></p><p><strong><a href="https://www.maalaimalar.com/news/national/indias-first-private-orbital-rocket-vikram-1-to-launch-on-tomorrow">நாளை விண்ணில் பாய்கிறது இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!</a></strong></p><p><strong><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/express-trains-time-change-to-nilgiri-and-mangalore">பராமரிப்பு பணி: நீலகிரி, மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில்களின் நேரம் மாற்றம்!</a></strong></p>]]></content:encoded></item><item><title>தாய்ப்பாலின் மகத்துவம்...ஏன் அவசியம் தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/news/topnews/the-greatness-of-breast-milk</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/the-greatness-of-breast-milk#comments</comments><guid isPermaLink="false">299a5d1d-3f52-4c26-95be-ebc497011ca0</guid><pubDate>Fri, 17 Jul 2026 06:45:00 +0000</pubDate><atom:updated>2026-07-17T06:45:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Health,ஆரோக்கியம்,HealthTips,தாய்ப்பால்,Breast Milk,உடல்நலம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/gyk0ivcq/jjj.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ breast milk]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/gyk0ivcq/jjj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>பெண்கள் மருத்துவம் (Women Medicine)</category><content:encoded><![CDATA[ <p>தாய்ப்பால் என்பது குழந்தைக்கு இயற்கை அளித்த முதல் மற்றும் சிறந்த உணவாகும். குழந்தை பிறந்த முதல் ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்கத் தொடங்குவது மிகவும் முக்கியமானது. முதல் ஆறு மாதங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.</p><h2><strong>தாய்ப்பாலின் நன்மைகள்</strong></h2><h2><strong>1.முழுமையான சத்துகள் நிறைந்தது:</strong></h2><p>குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நீர்ச்சத்து ஆகிய அனைத்தும் சரியான அளவில் தாய்ப்பாலில் உள்ளன.</p><h2><strong>2.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது:</strong></h2><p>தாய்ப்பாலில் உள்ள ஆன்டிபாடிகள் குழந்தையை சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு, நிமோனியா போன்ற தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகின்றன.</p><h2><strong>3.எளிதில் ஜீரணமாகும்:</strong></h2><p>தாய்ப்பால் குழந்தையின் மென்மையான செரிமான அமைப்பிற்கு ஏற்றதாக இருப்பதால், வயிற்று உபாதைகள் குறைவாக இருக்கும்.</p><h2><strong>4. மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது:</strong></h2><p>தாய்ப்பாலில் உள்ள DHA போன்ற சத்துகள் குழந்தையின் மூளை மற்றும் பார்வை வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.</p><h2><strong>5. தாய்-சேய் பாசப்பிணைப்பை வலுப்படுத்துகிறது:</strong></h2><p>தாய்ப்பால் கொடுக்கும் போது தாய் மற்றும் குழந்தைக்கு இடையேயான உணர்வுப் பிணைப்பு அதிகரிக்கிறது.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/3gad0l0a/fff.jpg" /></figure><h2><strong>தாய்க்கு கிடைக்கும் நன்மைகள்:</strong></h2><p>*பிரசவத்திற்குப் பிறகு கருப்பை விரைவாக இயல்பு நிலைக்கு திரும்ப உதவுகிறது.</p><p>*அதிகப்படியான ரத்தப்போக்கைக் குறைக்கிறது.</p><p>*மார்பகப் புற்றுநோய் மற்றும் கருப்பை முட்டைப்பை புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.</p><p>*உடல் எடையை இயற்கையாகக் குறைக்க உதவுகிறது.</p><p>*மனஅழுத்தத்தைக் குறைத்து தாயின் மனநலத்தை மேம்படுத்துகிறது.</p><h2><strong>முதல் ஆறு மாதங்கள் ஏன் தாய்ப்பால் மட்டும்?</strong></h2><p>முதல் ஆறு மாதங்கள் குழந்தைக்கு தண்ணீர், தேன், கஞ்சி அல்லது வேறு எந்த உணவையும் கொடுக்காமல் தாய்ப்பால் மட்டுமே வழங்க வேண்டும். ஆறு மாதங்களுக்குப் பிறகு, கூடுதல் திட உணவுகளுடன் தாய்ப்பாலை இரண்டு வயது அல்லது அதற்கு மேலும் தொடரலாம்.</p><h2><strong>தாய்ப்பால் கொடுக்கும் போது கவனிக்க வேண்டியவை:</strong></h2><p>*குழந்தை பசிக்கும்போதெல்லாம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.</p><p>*தாய் சத்தான உணவுகளை உட்கொண்டு போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும்.</p><p>*மார்பக சுத்தத்தைப் பராமரிக்க வேண்டும்.</p><p>*குழந்தை சரியான நிலையில் பால் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.</p><p>தாய்ப்பால் என்பது குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கான அடித்தளமாகும். இது குழந்தைக்கு தேவையான முழுமையான ஊட்டச்சத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் வழங்குவதோடு, தாயின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது. எனவே, ஒவ்வொரு தாயும் முடிந்தவரை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிப்பது மிகவும் அவசியம்.</p>]]></content:encoded></item><item><title>ஒருநாள் போட்டி அணியில் இனி இடம்பெறமாட்டார்- சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெறும் ரோகித் சர்மா</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/rohit-sharma-no-more-automatic-selection-after-lord-odi</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/rohit-sharma-no-more-automatic-selection-after-lord-odi#comments</comments><guid isPermaLink="false">f479b74a-996b-4d41-bf44-3de28c5a4929</guid><pubDate>Fri, 17 Jul 2026 06:29:47 +0000</pubDate><atom:updated>2026-07-17T06:29:47.438Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rohit sharma,ரோகித் சர்மா,இந்திய அணி,ஒருநாள் போட்டி,ODI</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/xhwpyfg2/rohit.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரோகித் சர்மா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/xhwpyfg2/rohit.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய அணியின் சீனியர் பேட்ஸ்மேன்களில் ஒருவர் <a href="https://www.maalaimalar.com/topic/ரோகித்-சர்மா">ரோகித் சர்மா</a>. இந்தியாவுக்கு  2 ஐ.சி.சி. கோப்பையை வென்று கொடுத்த அவர் டெஸ்ட் மற்றும் 20 ஓவர் ஆட்டங்களில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டார். ஒருநாள் போட்டியில் மட்டும் ஆடி வருகிறார்.</p><h2><strong>ரோகித் சர்மா</strong> </h2><p>இந்த நிலையில் ஒருநாள் போட்டியிலும்  ரோகித் சர்மாவின் எதிர்காலம் முடிவுக்கு வருகிறது.  இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 போட்டியிலும் அவரது ஆட்டம் ஏமாற்றம் அளித்தது. முதல் ஆட்டத்தில் 11 ரன்னும், நேற்று நடந்த 2- வது போட்டியில்  26 ரன்னும் எடுத்தார். </p><aside><cite></cite>2027 உலக கோப்பைக்கான அணியை உருவாக்கும் வகையில் இனிவரும் போட்டிகளில் ரோகித் சர்மாவுக்கு இடம் கிடைக்காது. இதை அவரிடம் தேர்வு குழு தெரிவித்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.</aside><p>ரோகித் சர்மா இடத்தில் ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்படுவார். அவர் நீண்ட காலமாக காத்திருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான 3- வது ஒருநாள் போட்டி  ரோகித் சர்மாவின் கடைசி சர்வதேச ஆட்டமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் அவர் ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>39 வயதான ரோகித் சர்மாவின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. அவர் 287 ஒருநாள் போட்டியில் விளையாடி 11,757 ரன் எடுத்துள்ளார். சராசரி 48.58 ஆகும். 33 சதமும்,  62 அரை சதமும் பதிவு செய்துள்ளார். அதிகபட்சமாக 264 ரன் குவித்துள்ளார்.</p><h2><strong>விராட் கோலி</strong> </h2><p>மற்றொரு சீனியர்  வீரரான விராட் கோலி தொடர்ந்து நல்ல நிலையில் இருப்பதால் உலக கோப்பை வரை விளையாடுவார் என்று கருதப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் பயணிகள் ரெயில்- நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-flags-off-india-made-hydrogen-train</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-flags-off-india-made-hydrogen-train#comments</comments><guid isPermaLink="false">7b67659d-b49c-4591-a252-ecfe44f1785d</guid><pubDate>Fri, 17 Jul 2026 06:10:16 +0000</pubDate><atom:updated>2026-07-17T06:10:16.434Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Hydrogen train,pm modi,பிரதமர் மோடி,ஹைட்ரஜன் ரெயில்,ஹைட்ரஜன்,Hydrogen</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/t6qgu16w/PM-Modi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/t6qgu16w/PM-Modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாட்டின் முதலாவது, உலகின் நீண்ட தூர ஹைட்ரஜன் எரிபொருள் ரெயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.</p><p>பிரதமர் நரேந்திர மோடி இன்று அரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது அவர் சுமார் ரூ.26 ஆயிரத்து 800 கோடி மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மேலும் புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.</p><h2>ஹைட்ரஜன் ரெயில்</h2><p>இதில் முதல் நிகழ்ச்சியாக இந்தியாவின் முதலா​வது ஹைட்​ரஜன் பயணிகள் ரெயிலை பிரதமர் நரேந்​திர மோடி தொடங்கி வைத்தார்.</p><p>இந்​தி​யா​வில் ஹைட்​ரஜன் எரிபொருளில் இயங்​கும் ரெயில் என்​ஜினை தயாரிப்பதற்காக கடந்த 2021-ம் ஆண்டு முயற்​சிகள் தொடங்​கின. ரூ.136 கோடி மதிப்​பீட்​டில் வடக்கு மண்டல ரெயில்வே இந்த திட்​டத்தை கடந்த 2022-ம் ஆண்டு ஏப்​ரல் மாதம் தொடங்கியது. இந்த திட்​டத்​துக்​கான டெண்​டர் ஐத​ரா​பாத்​தை சேர்ந்த மேதா நிறுவனத்துக்கு வழங்​கப்​பட்​டது. இந்த ​நிறு​வனம் ​தான் எரிபொருட்​களை சப்ளை செய்​கிறது.</p><h2>தொடங்கி வைத்தார்</h2><p>ஹைட்​ரஜன் ரெயிலை வடிவ​மைக்​கும் பணி​கள் சென்னை பெரம்​பூரில் உள்ள ஐ.சி.எப். தொழிற்​சாலை​யில் நடைபெற்றது. ரெயில் வடிவமைப்பு பணி​கள் முடிவடைந்ததை தொடர்ந்து சோதனை ஓட்​டங்​களும் நடை​பெற்​றன. இதையடுத்​து, ஹைட்ரஜன் பயணிகள் ரெயிலை அறி​முகப்படுத்த கடந்த மே 22-ந்தேதி ரெயில்வே வாரி​யம் ஒப்​புதல் அளித்தது.</p><p>இந்த நிலையில் அரியானா மாநிலம் ஜிந்த் ரெயில் நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற விழாவில் இந்தியாவின் முதலாவது ஹைட்​ரஜன் ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதன் மூலம் தூய எரிசக்திக்கு மாறும் இந்தியாவின் லட்சிய பயணம் மற்றும் நிலையான - பசுமையான ரெயில் போக்குவரத்துக்கான புதிய அத்தியாயம் தொடங்கியது.</p><h2>ஐ.சி.எப். தொழிற்​சாலை</h2><p>ஜெர்​மனி​யில் முதன்​முதலாக உலகின் முதல் ஹைட்​ரஜன் பயணி​கள் ரெயில் கடந்த 2018-ம் ஆண்​டு இயக்​கப்​பட்​டது. பின்னர் ஜப்பான், சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள் தங்​கள் நாடு​களில் தயாரிக்​கப்பட்ட ஹைட்ரஜன் ரெயிலை இயக்​கின. தமிழகத்துக்கு பெருமை சேர்க்​கும் வித​மாக, இந்த வரலாற்​று சிறப்​புமிக்க முதல் ஹைட்​ரஜன் ரெயில், சென்னை பெரம்​பூரில் உள்ள ஐ.சி.எப். தொழிற்​சாலை​யில் முழு​மை​யாக வடிவமைக்​கப்​பட்டு தயாரிக்கப்பட்டு உள்ளது.</p><p>இந்த ரெயில் சுற்​றுச்​சூழலுக்கு கேடு விளைவிக்​காத வகையில் ஹைட்ரஜன் எரிபொருள் தொழில்நுட்பம், பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை கொண்டது. இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன், புதைபடிவ எரிபொருட்களின் இறக்குமதியும் குறையும்.</p><h2>குறைந்த கட்டணம்</h2><p>பன்முக பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய இந்த ரெயில் அரியானா மாநிலத்தில் மின்​மய​மாக்​கப்​ப​டாத 89 கி.மீ. நீள​முள்ள ஜிந்த் - சோனிபட் வழித்​தடத்​தில் உள்ள 12 ரெயில் நிலை​யங்​களை இணைக்கும் வகை​யில் இயக்​கப்​படுகிறது. இந்த ரெயில், உலகின் மிக நீளமான, அதிக திறன் கொண்ட ஹைட்ரஜன் ரெயில் திட்டங்களில் ஒன்றாகும்.</p><p>இந்த ரெயில் தின​மும் 2 முறை இரு​மார்க்​கங்​களி​லும் இயக்​கப்படும். ஏழை, நடுத்தர மக்​கள் பயன்​பெறும் வகை​யில் இதன் பயண கட்​ட​ணம் மிக குறை​வாக ரூ.5 முதல் அதி​கபட்​ச​மாக ரூ.25 வரை நிர்​ண​யம் செய்யப்​பட்​டுள்​ளது.</p><h2>நவீன தொழில்நுட்பம்</h2><p>மேல்நிலை கம்பிகளில் இருந்து மின்சாரத்தை பெறும் வழக்கமான மின்சார ரெயில்களை போல் அல்லாமல் ஹைட்ரஜன் ரெயிலானது ஹைட்ரஜன் - ஆக்சிஜன் வேதிவினை மூலம் ரெயிலுக்கு உள்ளேயே மின்சாரத்தை உற்பத்தி செய்து பயன்படுத்தும். </p><p>1200 கிலோ​வாட் திறன்கொண்ட ஹைட்​ரஜன் எரிபொருள் மின்கல உந்து விசை அமைப்பின் நவீன தொழில்நுட்பத்தில் இந்த ரெயில் இயங்​கு​கிறது. ரெயில் வேகம் எடுக்​கும்​போது உந்​துதலை தர லித்​தி​யம் பெரோ பாஸ்பேட் பேட்டரி​களும், ரெயில் வேகம் குறை​யும் போது பேட்​டரியை தானாகவே ரீசார்ஜ் செய்​யும் மறு உரு​வாக்க தொழில்​நுட்​ப​மும் இணைக்கப்​பட்​டுள்​ளன.</p><h2>10 பெட்டிகள்</h2><p>பிரதமர் மோடிதொடங்கி வைத்துள்ள ஹைட்ரஜன் ரெயில் 2 டிரைவர் பெட்​டிகள், 8 பயணி​யர் பெட்​டிகள் என 10 பெட்​டிகளை கொண்​டது. ஒரே நேரத்​தில் 2,600-க்​கும் மேற்பட்ட பயணி​களை ஏற்​றி செல்​லும் திறன் கொண்​டது.</p><p>சோதனை​யின்போது இந்த ரெயில் அதிகபட்​ச​மாக மணிக்கு 120 கி.மீ. வேகத்தை தொட்​டது. ஆனாலும், பாது​காப்​பான, வழக்கமான இயக்​கத்துக்​காக மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் மட்​டுமே இயக்​கப்​பட உள்​ளது. இந்த ரெயில் ஜிந்த் - சோனிபட் நகரங்களுக்கு இடையிலான 89 கி.மீ. தூரத்தை 2 மணி நேரத்தில் கடக்கும்.</p><h2>பாதுகாப்பு அமைப்பு</h2><p>ஹைட்ரஜன் கசிவுகள், வெப்பம், தீப்பிழம்புகள், புகையை முன்கூட்டியே கண்டறியும் பன்முக பாதுகாப்பு அமைப்புகளுடன் பாதுகாப்பான ரெயில் என்ற சிறப்பையும் ஹைட்ரஜன் ரெயில் கொண்டுள்ளது.</p><p>இந்தியாவில் தற்போது 99 சதவீதத்துக்கும் மேற்பட்ட அகல ரெயில் பாதை வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் மாசில்லா ரெயில் இயக்கத்துக்கான அடுத்த கட்ட பாய்ச்சலை இந்திய ரெயில்வே முன்னெடுத்து உள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Jind, Haryana: Prime Minister Narendra Modi flags off the country&#39;s first hydrogen-powered train from Jind to Sonipat<br><br>(Video source: DD) <a href="https://t.co/kMQv2nBhOZ">pic.twitter.com/kMQv2nBhOZ</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2077995283028595080?ref_src=twsrc%5Etfw">July 17, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>Day 20: மரணப் படுக்கையில் சோனம் வாங்சுக்.. உடல் உறுப்புகள் செயலிழக்கும் அபாயம் - மருத்துவர்கள் எச்சரிக்கை </title><link>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protest-sonam-wangchuk-on-critical-indefinite-fast-as-centre-stays-silent</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protest-sonam-wangchuk-on-critical-indefinite-fast-as-centre-stays-silent#comments</comments><guid isPermaLink="false">faabdadf-17be-43be-941c-360941049953</guid><pubDate>Fri, 17 Jul 2026 06:10:11 +0000</pubDate><atom:updated>2026-07-17T06:10:11.025Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>hunger strike,தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,Sonam Wangchuk,சோனம் வாங்சுக்,உண்ணாவிரதம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/fkmoxg4y/sonam-wangchuk.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சோனம் வாங்சுக்]]></media:title><media:description type="html"><![CDATA[ சோனம் வாங்சுக்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/fkmoxg4y/sonam-wangchuk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்சி விடைத்தாள் திருத்த குளறுபடி உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி அபிஜித் தீப்கே தலைமையிலான கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் ஜூன் 20 முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் காவலரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். </p><p>இந்த போராட்டத்தில் ஜூன் 28 இல் வந்து இணைந்த லடாக் மாநில உரிமை செயல்பாட்டாளர் மற்றும் கல்வியாளர், விஞ்ஞானி என பன்முகம் கொண்ட சோனம் வாங்சுக் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார். </p><h2>மரணப் படுக்கை</h2><p>இந்த உண்ணாவிரதம் இன்று (ஜூலை 17) 20வது நாளை எட்டியுள்ளது. 59 வயதான சோனம் வாங்சுக் இந்த உண்ணாவிரததால் ஏற்கனவே  9 கிலோவுக்கு மேல் குறைந்துள்ளார். அவரின் எடை தற்போது  56.9 கிலோவாக உள்ளது. </p><p>அவரின் உடலின் நீரேற்றம், ரத்த சர்க்கரை அளவு, ஆக்சிஜன் அளவு தொடர்ந்து சீரற்றதாகி வருகிறது. </p><p>"நான் இதை சொல்ல விரும்பவில்லை. ஆனால் சோனம் வாங்சுக் தன் மரணப் படுக்கையில் உள்ளார்" என சிஜேபி கட்சி தலைவர் அபிஜித் தீப்கே உருக்கமாக தெரிவித்துள்ளார். </p><p>முன்னதாக நேற்று வெளியான வீடியோவில் சோனம் வாங்சுக் எலும்பும் தோலுமாக இருப்பதை பார்க்க முடிந்தது. நேற்று மட்டும் கழிவறை செல்லும்போது 2 முறை அவர் கீழே விழப் பார்த்தார் என தீப்கே தெரிவித்துள்ளார். அந்த அளவு அவரின் உடல் பலவீனமடைந்துள்ளது. </p><p>நேற்றைய அந்த வீடியோவில், தன் தளர்ந்த நடையில் வாங்சுக் ஆதரவாளர்களின் உதவியுடன் கழிவறை நோக்கி மெல்ல அடியெடுத்து வைத்து நடந்து சென்றது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.</p><h2>மெல்லிய புன்னகை</h2><p>இத்தகு சூழலிலும் அவரின் முகத்தில் இரு மெல்லிய புன்னகையையும், பெரும்பாலும் மாணவர்களை உள்ளடக்கிய ஆதரவாளர்களை நோக்கி அவர் கையசைத்தார். அந்த மாணவர்களில் பலர் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் அவரது போராட்டத்திற்கு ஆதரவாக டெல்லி வந்தவர்கள் ஆவர்.</p><p>நேற்றும் தீப்கே, வாங்சுகை உண்ணாவிரதத்தை கைவிட சொல்லி வலியுறுத்தினார். ஆனால் வாங்சுக் ஒருவித தீர்க்கத்துடன் அதை மறுத்திவிட்டார்.</p><p>சிஜேபியின் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில் "நீ பேசாம இரு. என்னை உண்ணாவிரதத்தை கைவிட சொல்லி கேக்காத. அரசாங்கம் ஏன் நம்ம சொல்றதை கவனிக்க மாட்டேங்குதுன்னு கேளு" என வாங்சுக் தீப்கேயை கண்டிப்பது இடம்பெற்றுள்ளது.</p><h2>மருத்துவர்கள் எச்சரிக்கை</h2><p>வாங்சுக் தற்போது ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும், இந்த உண்ணாவிரதம் தொடர்ந்தால் அவரின் உடல் உறுப்புக்கள் செயலிழக்கும் அபாயம் இருப்பதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். ஏற்கனவே அவருக்கு சிகிச்சை அளிக்க மத்திய அரசுக்கு உத்ராவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு நேற்று விசாரணைக்கு வந்தது.</p><h2><a href="https://www.maalaimalar.com/amp/story/news/national/neet-ugc-protest-sonam-wangchuk-on-19th-day-of-fast-with-deteriorating-health">தேவைப்பட்டால்</a></h2><p>அப்போது நீதிபதிகள், ஒவ்வொரு குடிமகனின் உயிரும் முக்கியம், வாங்சுக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. மத்திய அரசும், மருத்துவர்கள் ஆலோசனைப்படி, <a href="https://www.maalaimalar.com/amp/story/news/national/neet-ugc-protest-sonam-wangchuk-on-19th-day-of-fast-with-deteriorating-health">தேவைப்பட்டால் </a>தாங்கள் தலையிடுவோம் என தெரிவித்துள்ளது. இருப்பினும் இதுவரை மத்திய அரசு தரப்பில் இருந்து ஒரு துரும்பும் அசையவில்லை.</p><h2>ஜூலை 20 அழைப்பு</h2><p>இதனிடையே, வரும் 20 ஆம் தேதி தொடங்கும் மழைக்கால கூட்டத் தொடரின்போது பாராளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல நாடு முழுவதும் உள்ள சமூக அக்கறை கொண்ட மாணவர்கள் மற்றும் ஏனையோருக்கு வாங்சுக் தன் தளர்ந்த குரலில் அழைப்பு விடுத்துள்ளார். நேற்று ஆம் ஆத்மி தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/national/prime-minister-modi-fears-sonam-wangchuk-kejriwals-criticism">அரவிந்த் கெஜ்ரிவால் சோனம் வாங்சுக்கை சென்று சந்தித்ததும் </a>குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>மதுப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: மேலும் 54 நிறுவன மதுபானங்களை அறிமுகப்படுத்த டாஸ்மாக் முடிவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-decides-to-introduce-54-more-liquor-brands</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-decides-to-introduce-54-more-liquor-brands#comments</comments><guid isPermaLink="false">14763f1b-b7ed-431b-a3f3-509159b8a35d</guid><pubDate>Fri, 17 Jul 2026 06:00:31 +0000</pubDate><atom:updated>2026-07-17T06:00:31.022Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மதுபானம்,Tasmac,டாஸ்மாக்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/g1zfc3jn/Liquor.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/g1zfc3jn/Liquor.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>டாஸ்மாக் நிர்வாகம் மேலும் 54 நிறுவன மதுபானங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது மதுப்பிரியர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</aside><h2><strong>ஏக்கம்</strong></h2><p>தமிழகத்தில் இயங்கி வரும் <a href="https://www.maalaimalar.com/topic/டாஸ்மாக்">டாஸ்மாக்</a> கடைகளில் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் விஸ்கி, பிராந்தி, ரம், ஒட்கா, பீர் உள்ளிட்ட மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் இதில் குறிப்பிட்ட சில நிறுவனங்களின் மதுபானங்களே மதுப்பிரியர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளன. மீதம் உள்ள நிறுவன மதுபான வகைகள் போதுமான வரவேற்பை பெறவில்லை.</p><p>பண்டிகை காலங்கள் உள்ளிட்ட தேவை அதிகமாக உள்ள நேரத்தில் மட்டும் அவை விற்பனையாகின்றன. இதுபோல புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரா மற்றும் கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் விற்பனையாகும் பிரபல நிறுவனங்களின் மதுபான வகைகள் தமிழகத்தில் கிடைப்பதில்லையே என்ற ஏக்கம் மதுப்பிரியர்களிடம் இருந்து வருகிறது.</p><h2><strong>மகிழ்ச்சி</strong></h2><p>இந்த சூழலில், மதுப்பிரியர்களின் தாகத்தை தணிக்க மேலும் 54 நிறுவனங்களின் பிராந்தி, விஸ்கி, பீர் உள்ளிட்ட மதுபான வகைகளை டாஸ்மாக் பல்வேறு கட்டங்களாக அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மதுபானங்கள் விரைவில் மதுக்கடைகளுக்கு வந்துவிடும். தேர்வு செய்து மதுபானங்களை வாங்க முடியும் என்பதால் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சியில் உறைந்துள்ளனர்.</p><p>இதுகுறித்து டாஸ்மாக் மூத்த அதிகாரிகள் கூறுகையில், "வாடிக்கையாளர்களின் விருப்பம் கடந்த சில ஆண்டுகளில் மாற்றம் அடைந்திருக்கிறது. பிரீமியம் மற்றும் வரவேற்பு அதிகம் உள்ள பிராண்டு மதுபானங்களை கேட்கிறார்கள். அவர்களின் தேவையை அறிந்து, நாங்கள் விரிவான ஆலோசனை நடத்தி புது மதுபான வகைகளை அறிமுகம் செய்ய முடிவெடுத்துள்ளோம் " என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>50-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து - நகராட்சி நிர்வாகத்துறை அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/over-50-tenders-cancelled-municipal-administration-department-announcement</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/over-50-tenders-cancelled-municipal-administration-department-announcement#comments</comments><guid isPermaLink="false">b35ae71b-e7cf-4f71-b228-cc506d367c81</guid><pubDate>Fri, 17 Jul 2026 05:55:34 +0000</pubDate><atom:updated>2026-07-17T05:55:34.265Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,TN Government,Municipality,tenders,நகராட்சி,டெண்டர்கள் ரத்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/nsgs8mqx/tngovernment.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN Government]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/nsgs8mqx/tngovernment.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விதிமீறல்கள் மற்றும் நிர்வாகக் காரணங்களால், ஒட்டுமொத்தமாக 50-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை அறிவித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-says-salutes-to-the-martyrs-on-martyrs-day">முதலமைச்சர் விஜயின்</a> வசம் உள்ள நகராட்சி நிர்வாகத்துறையில் 50-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.</p><p>டெண்டர்களை சமர்பிக்க குறுகிய நாள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>கோத்தகிரி நகராட்சியில் 3 டெண்டர்கள், செங்கம் நகராட்சியில் 2 டெண்டர்கள், உடுமலைப்பேட்டை நகராட்சியில் 30 டெண்டர்கள், மணப்பாறை, பெரம்பலூர், திருவள்ளூர், திருவையாறு உள்ளிட்ட நகராட்சிகளில் 20-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.</p><p>டெண்டர் கோரி டெண்டர் சமர்ப்பிப்பதற்கு ஒன்று முதல் 4 நாட்கள் வரை மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது.</p><p>நிர்வாக காரணங்களுக்காக 50-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் நகராட்சி நிர்வாகத்துறையால் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.</p><p>கழிவுநீர் வடிகால் பராமரிப்பு, குடிநீர் இணைப்பு பணி, வாரச்சந்தை கடைகள், புதிய போர்வெல் அமைக்கும் பணி தொடர்புடைய டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.</p> ]]></content:encoded></item><item><title>ஆடி 1- தேங்காய் சுடும் திருவிழா...</title><link>https://www.maalaimalar.com/spirituality/aadi-1-coconut-roasting-festival</link><comments>https://www.maalaimalar.com/spirituality/aadi-1-coconut-roasting-festival#comments</comments><guid isPermaLink="false">bcfa0bea-e758-491a-896b-705442c1f947</guid><pubDate>Fri, 17 Jul 2026 05:51:57 +0000</pubDate><atom:updated>2026-07-17T05:51:57.051Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,வழிபாடு,worship,devotional,தேங்காய் சுடும் திருவிழா,அரவான் பலி,ஆடி  திருவிழா</media:keywords><media:content height="188" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/pakb6nxn/images.jpg" width="335"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/pakb6nxn/images.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆடி ஒன்று தேங்காய் சுடும் திருவிழா என்பது தமிழ்நாட்டின் கொங்கு மண்டலத்தில், குறிப்பாக சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களில் ஆடி மாதத்தின் முதல் நாளில் மிகவும் பாரம்பரியமாக கொண்டாடப்படும் ஒரு தனித்துவமான திருவிழாவாகும். </p><p>இந்த நாளில் மக்கள் தங்கள் குடும்ப நலன், விவசாய செழிப்பு மற்றும் நல்ல தொடக்கத்திற்காக இறைவனை வேண்டி தேங்காயைச் சுட்டு பிரசாதமாகப் படைக்கிறார்கள்.</p><p>அதர்மத்திற்கும் தர்மத்திற்கும் இடையிலான மகாபாரத யுத்தம் ஆடி மாதம் 1-ஆம் தேதி தொடங்கி 18 நாட்கள் நடைபெற்றது. இந்த போர் ஆடி 18 (ஆடிப்பெருக்கு) அன்று முடிவுக்கு வந்ததாக ஒரு ஐதீகம் உள்ளது.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/dnl8iqe4/aadi_festivalthumb5.webp" /></figure> <h2>அரவான் பலியும் தேங்காய் சுடும் திருவிழாவும்!</h2><p>மகாபாரதக் கதையின்படி, தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையிலான குருக்ஷேத்திரப் போர் ஆடி மாதம் 1-ஆம் தேதி தொடங்கியதாக நம்பப்படுகிறது.</p><p>அப்போது, போரில் பாண்டவர்கள் வெற்றி பெற வேண்டும் என்றால், 32 சாமுத்ரிகா லட்சணங்களும் பொருந்திய ஒரு உன்னதமான வீரனை காளி தேவிக்கு 'களப்பலி' கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது. அப்போது அர்ஜுனனுக்கும் நாககன்னி உலுப்பிக்கும் பிறந்த மகனான அரவான், பாண்டவர்களின் வெற்றிக்காகத் தன்னைத்தானே களப்பலியாகத் தர முன்வந்தான். </p><p>மேலும் தான் போரில் நேரடியாகப் பங்கேற்க முடியாவிட்டாலும், முழுப் போரையும் பார்க்க வேண்டும் என்று அரவான் விரும்பினான். அவனது தியாகத்தைப் பாராட்டி, கிருஷ்ணர் அவனது தலை மட்டும் போர்க்களம் முழுவதையும் பார்க்கும் வரம் அளித்தார். அரவானின் தியாகத்தை குறிக்கும் வகையில் ஆடி முதல் நாள் அன்று தேங்காய் சுடும் திருவிழா தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/wcjk57v4/sddefault.jpg" /></figure><p><em><strong>தேங்காய்:</strong></em></p><p>சுடுவதற்காகத் தயார் செய்யப்படும் தேங்காய் அரவானின் தலையைக் குறிப்பதாககும். தேங்காயில் உள்ள மூன்று கண்கள் அரவானின் முக அமைப்பாகக் கருதப்படுகிறது.</p> <p><em><strong>அழிஞ்சி மரக்குச்சி</strong>:</em> </p><p>தேங்காயில் செருகப்படும் அழிஞ்சி மரக்குச்சி, போரில் பயன்படுத்தப்பட்ட ஈட்டியின் குறியீடாகும்.</p><p><em><strong>நெருப்பில் சுடுதல்:</strong></em> </p><p>பாண்டவர்கள் போரில் வெற்றி பெற வேண்டி அக்னி வளர்த்து வழிபாடு செய்ததன் அடையாளமாகவே, இன்றும் மக்கள் வீட்டின் வாசலில் நெருப்பு மூட்டி தேங்காயைச் சுடுகிறார்கள். </p><p>தேங்காய் வெந்து ஓடு லேசாக உடையும் போது, அது அரவானின் பலியையும், அதன்பின் கிடைத்த தர்மத்தின் வெற்றியையும் குறிக்கிறது.</p><h2>தேங்காய் சுடும் முறை:</h2><p>நன்கு முற்றிய தேங்காயை எடுத்து அதன் மேல் உள்ள நார்களை முழுமையாக அகற்றிவிட்டு, ஓடு மெலிதாகும் அளவுக்குத் தரையில் நன்றாகத் தேய்க்க வேண்டும்.</p><p>தேங்காயின் ஒரு கண்ணில் துளையிட்டு, உள்ளே இருக்கும் தண்ணீரை வெளியேற்றி, தேங்காயின் ஒரு கண்ணில் துளையிட்டு, உள்ளே இருக்கும் தண்ணீரை வெளியேற்றுவார்கள். </p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/znx7uoc0/Aadi13.jpg" /></figure> <p>பின்னர் அந்தத் துளையின் வழியாக பச்சரிசி, பாசிப்பருப்பு, வெல்லம், அவல், எள், பொட்டுக்கடலை மற்றும் ஏலக்காய் ஆகியவற்றைத் தேங்காய் தண்ணீருடன் கலந்து உள்ளே நிரப்ப வேண்டும். </p><p>பின் நிரப்பப்பட்ட தேங்காயில் கூராகச் சீவப்பட்ட அழிஞ்சி மரக்குச்சியை சொருகவேண்டும். சித்த மருத்துவத்தில் இந்த குச்சி நோய் எதிர்ப்புத் திறன் கொண்டதாகக் கருதப்படுகிறது. பின்னர் தேங்காயின் மேல் மஞ்சள் பூச வேண்டும்.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/dflbggv6/hqdefault.jpg" /></figure> <p>மாலை நேரத்தில் வீட்டின் வாசலில் சிறு நெருப்பு மூட்டி, குச்சியில் உள்ள தேங்காயை நெருப்பில் காட்டி மெதுவாகச் சுட வேண்டும். அப்போது ஓடு வெடிக்கும். </p><p>இது நம் வாழ்வில் உள்ள தீமைகள் எல்லாம் வெடித்து சிதறி விலகுவதாக நம்பப்படுகிறது. சுட்டத்தேங்காயை விநாயகர் கோவிலுக்கு எடுத்து சென்று உடைத்து பூஜை செய்து வழிபடுவது வழக்கம்.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/hllwh3wt/images.jpg" /></figure>]]></content:encoded></item><item><title>எம்பிக்கள் மூச்சு விடவும் மோடி அரசிடம் டோக்கன் வாங்க வேண்டுமா?- மாணிக்கம் தாகூர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mps-need-tokens-to-breathe-under-modi-government-manickam-thakur-asks</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mps-need-tokens-to-breathe-under-modi-government-manickam-thakur-asks#comments</comments><guid isPermaLink="false">ad4833b4-83f0-4337-9719-fb0f28b97742</guid><pubDate>Fri, 17 Jul 2026 05:47:11 +0000</pubDate><atom:updated>2026-07-17T05:47:11.742Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore,pm modi,parliament,பிரதமர் மோடி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/mq52kz1g/manickam-tagore.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Manickam tagore]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/mq52kz1g/manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>"நாடாளுமன்றத்திற்குள் போராட்டம் நடத்தக்கூடாது, முழக்கமிடக் கூடாது, ஸ்மார்ட் வாட்ச் மற்றும் ஸ்மார்ட் கண்ணாடி கூட அணியக்கூடாது. அடுத்ததாக எம்பிக்கள் மூச்சு விடவும் மோடி அரசிடம் டோக்கன் வாங்க வேண்டுமா? நாடாளுமன்றத்தை ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாற்றிவிட்டால் எந்தக் கேள்வியும் எழாது என்று மோடி அரசு கணக்கு போடுகிறது; மக்கள் மன்றத்தில் உங்களின் சர்வாதிகாரம் தவிடுபொடியாவது உறுதி" என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் பதிவு வெளியிட்டுள்ளார்.</aside><p>மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>நாடாளுமன்றத்திற்குள் போராட்டம் நடத்தக்கூடாது, முழக்கமிடக் கூடாது, ஸ்மார்ட் வாட்ச் மற்றும் ஸ்மார்ட் கண்ணாடி கூட அணியக்கூடாது! </p><p>அடுத்ததாக எம்பிக்கள் மூச்சு விடவும் மோடி அரசிடம் டோக்கன் வாங்க வேண்டுமா?</p><p>​போராடத் தடை, பேசத் தடை, பார்க்கத் தடை... நாடாளுமன்றத்தை ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாற்றிவிட்டால் எந்தக் கேள்வியும் எழாது என்று மோடி அரசு கணக்கு போடுகிறது!</p><h2>​பாசிச பாஜக அரசின் கோழைத்தனம்:</h2><p>- நாடாளுமன்றத்தில் அதானி பற்றி கேள்வி கேட்டால் உடனே மைக் கட் செய்யப்படும்!</p><p>- நீட் தேர்வு முறைகேடு, மணிப்பூர் வன்முறை போன்ற மக்களின் அத்தியாவசியப் பிரச்சினைகளைப் பேசினாலே அவையில் எதிர்க்கட்சிகளின் மைக் அணைக்கப்படுவது தான் இந்த 'புதிய இந்தியா'வின் லட்சணமா?</p><p>- மக்களின் நியாயமான குரலை எழுப்பினால் எம்பிக்கள் ஒட்டுமொத்தமாக சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்!</p><p>​இத்தகைய தடையுத்தரவுகள் மற்றும் தணிக்கைகள் மூலம் மக்களின் குரலை உங்களால் ஒருபோதும் நசுக்கிவிட முடியாது. </p><p>மக்கள் மன்றத்தில் உங்களின் சர்வாதிகாரம் தவிடுபொடியாவது உறுதி!</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கொள்முதல் நிலையங்களில் தேங்கும் நெல் மூட்டைகள்: உடனடியாக அகற்ற அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-paddy-bags-piling-up-at-procurement-centres-immediate-removal-required</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-paddy-bags-piling-up-at-procurement-centres-immediate-removal-required#comments</comments><guid isPermaLink="false">5648f024-8af0-453d-8706-59c5b84f42d6</guid><pubDate>Fri, 17 Jul 2026 05:26:55 +0000</pubDate><atom:updated>2026-07-17T05:26:55.398Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,Anbumani ramadoss</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/me8p63bd/anbumani.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/me8p63bd/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கும், கிடங்குகளில் உள்ள மூட்டைகளை அரவை ஆலைகளுக்கும் போர்க்கால அடிப்படையில் அரசு அனுப்பி வைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.</aside><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><h2><strong>கொள்முதல் பணி முடக்கம்</strong></h2><p>காவிரி பாசன மாவட்டங்களில் கோடைப்பருவ நெல் அறுவடை தீவிரமடைந்திருக்கும் நிலையில், அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை விற்பனை செய்ய முடியாமல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் காத்துக் கிடக்கின்றனர். ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கிடங்குகளுக்கு அனுப்பப்படாமல் குவிந்து கிடப்பது தான் இதற்கு காரணம். இதில் அரசின் அலட்சியம் கவலையளிக்கிறது.</p><p>தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர்  உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில்  ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் கோடை பருவ நெல் சாகுபடி தொடங்கப்பட்டது. நிலத்தடி நீரைக் கொண்டு சாகுபடி செய்யப்பட்ட நெல் பயிர்களை அறுவடை செய்யும் பணி ஜூன் இறுதியில்  தொடங்கியது. பாதிக்கும் மேற்பட்ட பரப்பில் அறுவடை முடிவடைந்து விட்ட நிலையில், ஆகஸ்ட் மாதம் வரை இந்தப் பணி நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோடை பருவத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்ய காவிரி பாசன மாவட்டங்கள் முழுவதும் 800-க்கும் மேற்பட்ட கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், கடந்த 10 நாள்களுக்கும் மேலாக கொள்முதல் பணி முடங்கிக் கிடக்கிறது.</p><h2><strong>ஏமாற்றம்</strong></h2><p>இதற்கு காரணம் அரசு நிர்வாகத்தின் சரியான திட்டமிடல் இல்லாமை தான் என்று உழவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். வழக்கமாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும்  நெல் மூட்டைகளை அங்கிருந்து கிடங்குகளுக்கும்,  கிடங்குகளில் இருந்து அரவை ஆலைகளுக்கும் அனுப்பும் பணி சங்கிலித் தொடர் போல நடைபெற வேண்டும். ஆனால், இந்த சங்கிலித் தொடர் அறுபட்டு கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அங்கேயே அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. போதிய இடவசதி இல்லாததைக் காரணம் காட்டி கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் உழவர்கள் கொண்டு சென்ற நெல் மூட்டைகளும் குவித்து வைக்கப்பட்டுள்ளன.</p><p>காவிரி பாசன மாவட்டங்களில் திறக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் பெரும்பாலானவை  திறந்த வெளியில் அமைக்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் மூட்டைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. எதிர்பாராத வகையில் தென்மேற்கு பருவமழை காவிரி பாசன மாவட்டங்களில் தீவிரமடைந்தால் உழவர்கள் அரும்பாடுபட்டு விளைவித்த நெல் முழுமையும்  வீணாகி விடும். ஆனால், இது குறித்த கவலை அரசுக்கும், அதிகாரிகளுக்கும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.</p> <h2><strong>கொள்முதல் செய்யமுடியாத நிலை</strong> </h2><p>கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கும், அரவை ஆலைகளுக்கும் அனுப்பி வைக்காதது ஏன்? என்பது குறித்து அரசுத் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. ஆனால், கடந்த ஆண்டு அளவுக்கு அதிகமாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கிடங்குகளில் மலை போல குவிந்து கிடப்பதாகவும், அரவை ஆலைகளும் அளவுக்கு அதிகமான நெல் மூட்டைகளை கையாள முடியாத நிலையில் இருப்பதும் தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம் உழவர் அமைப்புகள் கூறுகின்றன.</p><p>ஒருவேளை இது தான் உண்மை என்றால், உழவர்கள் எதிர்கொள்ளும் அனைத்து சிக்கல்களுக்கும் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். கடந்த ஆண்டு குறுவை மற்றும் சம்பா பருவத்தில் அளவுக்கு அதிகமாக கொள்முதல் செய்யப்பட்டதால் கிடங்குகள் நிரம்பி விட்டன என்றால், கோடைப்பருவ கொள்முதல் மூலம் கிடைக்கும் நெல் மூட்டைகளை எவ்வாறு கையாள்வது? அவற்றை எங்கு அடுக்கி வைப்பது என்பதற்கான திட்டங்களை அரசு வகுத்திருக்க வேண்டும். ஆடி மாதம் பிறந்து விட்ட நிலையில், திருமண அரங்குகள் போன்றவற்றையாவது வாடகைக்கு எடுத்து தற்காலிக கிடங்குகளாக மாற்றியிருக்க வேண்டும். ஆனால், அதற்கான எந்த நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளாததால் தான் உழவர்களின் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.</p><h2><strong>உறுதி செய்ய வேண்டும்</strong></h2><p>கடந்த ஆண்டு குறுவைப் பருவத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் சரியான தருணத்தில்  கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படாததால் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கிக் கிடந்ததையும்,   கொள்முதல் நடக்காததால் உழவர்களும் தங்களின் நெல்லை கொள்முதல் நிலையங்களுக்கு அருகில் திறந்த வெளிகளில் குவித்து வைக்கப்பட்டிருந்ததையும், அவை அனைத்தும் வடகிழக்கு பருவ மழையில் நனைந்து வீணானதையும் எவரும் மறந்திருக்க முடியாது. அதனால் ஏற்பட்ட இழப்புகளில் இருந்தே காவிரி பாசன மாவட்ட உழவர்கள் இன்னும் மீளாத நிலையில், மீண்டும் அதே போன்ற நிலை ஏற்பட்டு விடக்கூடாது.</p><p>எனவே, கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கும், கிடங்குகளில் உள்ள மூட்டைகளை அரவை ஆலைகளுக்கும் போர்க்கால அடிப்படையில் அரசு அனுப்பி வைக்க வேண்டும். அதன் மூலம் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் தடையின்றி நடப்பதை உறுதி செய்ய வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>மேற்கு வங்கம்: பள்ளிக் குழந்தைகள் சென்ற வாகனம் மீது ரெயில் மோதி விபத்து - 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலி </title><link>https://www.maalaimalar.com/news/national/school-van-hit-by-train-three-including-two-children-killed-at-murshidabad-govindpur-crossing-as-suburban-train-rams-vehicle-on-open-railway-track</link><comments>https://www.maalaimalar.com/news/national/school-van-hit-by-train-three-including-two-children-killed-at-murshidabad-govindpur-crossing-as-suburban-train-rams-vehicle-on-open-railway-track#comments</comments><guid isPermaLink="false">831a3c6d-3d61-47fb-960b-ad9b9dcfa0d2</guid><pubDate>Fri, 17 Jul 2026 05:26:49 +0000</pubDate><atom:updated>2026-07-17T05:26:49.603Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>train accident,ரெயில் விபத்து,மேற்கு வங்கம்,School Children,west bengal,பள்ளிக் குழந்தைகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/b35mdk1h/west-bengal.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ரெயில் விபத்து]]></media:title><media:description type="html"><![CDATA[ ரெயில் விபத்து]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/b35mdk1h/west-bengal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் பள்ளி வாகனம் மீது ரெயில் மோதியதில் 2 குழந்தைகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.</p><p>முர்ஷிதாபாத்தில் உள்ள கோவிந்த்பூர் ரெயில்வே கிராசிங்கில், இன்று காலை 7 மணியளவில் பலர் அமரும் காரில் குழந்தைகள் பள்ளி சென்று கொண்டிருந்தனர். </p><p>திறந்திருந்த ரெயில் தண்டவாளத்தை வாகனம் கடக்க முயன்றபோது புறநகர் ரெயில் மோதியதில் இந்த <a href="https://www.maalaimalar.com/topic/train-accident">விபத்து </a>நிகழ்ந்தது. </p><h2>உயிரிழப்பு - காயம்</h2><p>இதில் உயிரிழந்தவர்களில் இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு முதியவர் அடங்குவர்.</p><p>மேலும் வாகனத்தில் இருந்த மற்ற பல குழந்தைகளும் பலத்த காயமடைந்தனர். ஒரு சைக்கிள் ஓட்டுநரும் மோதப்பட்டு காயமடைந்தார்.</p><p>உள்ளூர் மக்கள் உடனடியாக செயல்பட்டு, காயமடைந்த குழந்தைகளையும், நபரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.</p><p>காயமடைந்த குழந்தைகள் பெர்ஹாம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><h2>விசாரணை</h2><p>விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், ரெயில்வே காவல்துறையினரும் உள்ளூர் காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.</p><p>ரெயில்வே கிராசிங்கைக் கடக்கும்போது விபத்து எப்படி நிகழ்ந்தது என்பதை காவல்துறையினர் கண்டறிய முயன்று வருகின்றனர்.</p> <p>10 பேர் கொண்ட விசாரணை குழு அமைத்து ரெயில்வே டிவிஷனல் மானேஜர் உத்தரவிட்டுள்ளார். அலட்சியமாக செயல்பட்டதாக கேட்மேன் மற்றும் சூப்பர்வைசர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.</p><p>அவர்கள் மீது குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.</p><p>பள்ளிக்குழந்தைகள் விபத்தில் சிக்கியுள்ளது பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ECR உயர்மட்ட சாலைத் திட்டம்: செலவை குறைக்க தொழில்நுட்பக் குழு அமைப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ecr-high-level-road-project-technical-team-formed-to-cut-costs</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ecr-high-level-road-project-technical-team-formed-to-cut-costs#comments</comments><guid isPermaLink="false">febd8fdd-0ca4-404a-92b2-2e482f9bdd2b</guid><pubDate>Fri, 17 Jul 2026 05:07:57 +0000</pubDate><atom:updated>2026-07-17T05:07:57.627Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,ECR,ஈசிஆர்,திருவான்மியூர்-உத்தண்டி,உயர்மட்ட சாலை,Thiruvanmiyur- uthandi</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/0oxlfwgv/ECR-Road.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ECR Road]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/0oxlfwgv/ECR-Road.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை ஈசிஆர்-ல் திட்டமிடப்பட்ட 13.3 கி.மீ நீளமுடைய 4 வழிச்சாலை உயர்மட்ட பாதை திட்டச் செலவை குறைக்க குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.</p><p>திருவான்மியூர்-உத்தண்டி உயர்மட்ட சாலை திட்டச் செலவில் இருந்து 600 கோடி ரூபாய் குறைக்க தொழில்நுட்ப குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் (TNSHA) தொழில்நுட்ப குழு அமைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.</p><p>ஈசிஆர் உயர்மட்ட சாலைக்கு ரூ.2,100 கோடியாக இருந்த திட்ட மதிப்பை ரூ.1500 கோடியாக குறைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.</p><p>தூண் அமைப்பு, அடித்தளம், சாலை அகலம், கட்டுமான பொருள் போன்றவை தேவைக்கு மீறி உள்ளதாக கூறப்படுகிறது.</p><p>தேவைக்கு அதிகமாக உள்ள விவரக்குறிப்புகளை மாற்றி அமைத்தால் 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை செலவு குறைக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.</p><p>புதிய மாற்றங்களை ஏற்க மறுத்தால் திட்டத்திலிருந்து ஒப்பந்ததாரர் விலகும் வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தியாகிகள் தினத்தையொட்டி வீரவணக்கங்கள்- முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-says-salutes-to-the-martyrs-on-martyrs-day</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-says-salutes-to-the-martyrs-on-martyrs-day#comments</comments><guid isPermaLink="false">3bc451da-ca1b-4955-8dcf-65319100f906</guid><pubDate>Fri, 17 Jul 2026 04:51:13 +0000</pubDate><atom:updated>2026-07-17T04:51:13.827Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,TN Govt,தமிழக அரசு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-06/gav3hyx1/cmvijay1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-06/gav3hyx1/cmvijay1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய விடுதலைக்கும், மக்களின் உரிமை வாழ்விற்கும் தங்களது இன்னுயிரை ஈந்த தியாகி ஆர்யா (எ) பாஷ்யம், தியாகி சங்கரலிங்கனார் மற்றும் தியாகி செண்பகராமன் ஆகியோருக்கு தியாகிகள் தினத்தை முன்னிட்டு எனது வீரவணக்கங்கள் என்று முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்</a> தெரிவித்துள்ளார். </p><h2><strong>வீரவணக்கங்கள்</strong></h2><p>தியாகிகள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><p>இந்திய விடுதலைக்கும், மக்களின் உரிமை வாழ்விற்கும் தங்களது இன்னுயிரை ஈந்த தியாகி ஆர்யா (எ) பாஷ்யம், தியாகி சங்கரலிங்கனார் மற்றும் தியாகி செண்பகராமன் ஆகியோருக்கு தியாகிகள் தினத்தை முன்னிட்டு எனது வீரவணக்கங்கள்.</p><h2><strong>தன்னலமற்ற தியாகம்</strong></h2><p>ஆங்கிலேயரின் அதிகாரச் செருக்கை வேரறுக்கும் வகையில், சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக் கொத்தளத்தில் பறந்த பிரிட்டிஷ் யூனியன் ஜாக் கொடியை இறக்கிவிட்டு, இந்திய மூவர்ணக் கொடியை ஏற்றிய மாவீரர் தியாகி ஆர்யா (எ) பாஷ்யம், நமது மாநிலத்திற்கு ‘தமிழ்நாடு’ என்ற பெயர் சூட்டப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காகத் தொடர் உண்ணாவிரதமிருந்து இன்னுயிரை ஈந்த தியாகி சங்கரலிங்கனார், ‘ஜெய் ஹிந்த்’ என்ற முழக்கத்தை சுதந்திரப் போராட்டத்திற்கு அளித்து, இந்திய விடுதலைக்காக சர்வதேச ஆதரவைத் திரட்டிய, வீரத்தியாகி செண்பகராமன் ஆகியோரின் அயராத உழைப்பும் தன்னலமற்ற தியாகமும் என்றென்றும் போற்றத்தக்கது.</p><p>இத்தகைய தியாகிகளின் உயரிய பண்புகளை வாழ்வியல் நெறியாக ஏற்று, மனிதநேயமும் நாட்டுப்பற்றும் கொண்ட புதிய சமுதாயத்தை உருவாக்கிடுவோம்! என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">இந்திய விடுதலைக்கும், மக்களின் உரிமை வாழ்விற்கும் தங்களது இன்னுயிரை ஈந்த தியாகி ஆர்யா (எ) பாஷ்யம், தியாகி சங்கரலிங்கனார் மற்றும் தியாகி செண்பகராமன் ஆகியோருக்கு தியாகிகள் தினத்தை முன்னிட்டு எனது வீரவணக்கங்கள்.<br><br>ஆங்கிலேயரின் அதிகாரச் செருக்கை வேரறுக்கும் வகையில், சென்னை புனித…</p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2077973465156702497?ref_src=twsrc%5Etfw">July 17, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>அம்மனுக்கு உகந்த ஆடி - குமரி பகவதி அம்மன்</title><link>https://www.maalaimalar.com/spirituality/kanyakumari-bhagavathi-amman-temple-14</link><comments>https://www.maalaimalar.com/spirituality/kanyakumari-bhagavathi-amman-temple-14#comments</comments><guid isPermaLink="false">cb75a30b-c620-4e09-80bc-6f7dde863845</guid><pubDate>Fri, 17 Jul 2026 04:48:58 +0000</pubDate><atom:updated>2026-07-17T04:48:58.191Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,வழிபாடு,kanyakumari,worship,ஆடி மாதம்,Aadi Month,Bhagavathi Amman Temple,கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்,பகவதி அம்மன்,கன்னியாகுமரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/o0t4x9fk/bhagavathiamman.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் -  பகவதி அம்மன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/o0t4x9fk/bhagavathiamman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>ஆடி மாதம்</h2><p>ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாக திகழ்கிறது. ஆடி மாதத்தில் அம்மனை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அந்தவகையில் குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் ஒன்று கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்.</p><p>இந்தியாவின் தென்கோடியில் முக்கடல் சங்கமிக்கும் புனித தலத்தில் அமைந்துள்ள இக்கோவில் புகழ் பெற்ற சக்தி தலம் ஆகும். இத்தலத்தின் பெயராலேயே இப்பகுதிக்கு கன்னியாகுமரி என்ற பெயர் ஏற்பட்டதாக கருதப்படுகிறது.</p><h2>பாணாசுரன்</h2><p>பாணாசுரன் மக்களை துன்புறுத்தி வந்தான். கன்னிப்பெண்ணால் மட்டுமே தன்னை அழிக்க முடியும் என்ற வரத்தை பெற்ற அசுரனை அழிக்க ஆதிபராசக்தி கன்னி பகவதி வடிவில் கன்னியாகுமரியில் அவதரித்து தவம் செய்தாள். அப்போது சிவபெருமானை திருமணம் செய்ய நாள் குறிக்கப்பட்டது. ஆனால் உலக நன்மைக்காக நாரதர் திருமணம் நடைபெறாமல் தடுத்ததாகவும், அதனால் அம்மன் நித்திய கன்னியாகவே இருந்து பாணாசுரனை வதம் செய்து உலகை காத்ததாகவும் தல புராணம்.</p> <h2>அம்மனுக்கு சிறப்பு பூஜைகள்</h2><p>இத்தகைய சிறப்புவாய்ந்த கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி மாதத்தில் சிறப்பாக விழாக்கள் நடத்தப்படுகிறது. ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடி செவ்வாய்கிழமைகள், ஆடி களப பூஜை, ஆடி நிறை புத்தரிசி பூஜை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த நிகழ்ச்சிகளின் போது அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெறும். ஆடி செவ்வாய்க்கிழமைகளில் அம்மனுக்கு கூழ் படைத்து பக்தர்களுக்கு வழங்கப்படும். ஆடி அமாவாசை தினத்தன்று வாகன பவனி நடைபெறும். களப பூஜை 12 நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.</p><h2>கோவில் நடை திறக்கப்படும் நேரம்</h2><p>பகவதி அம்மன் கோவிலின் நடை தினமும் அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்படும். 5 மணிக்கு அபிஷேகம், 6 மணிக்கு தீபாராதனை, 10 மணிக்கு அபிஷேகம், 11.30 மணிக்கு உச்சகால பூஜை, பகல் 12.30 மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னர் மாலை 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு 6.30 மணிக்கு சாய ரட்சை தீபாராதனை, இரவு 8.15 மணிக்கு ஸ்ரீபலி, 8.25 மணிக்கு ஏகாந்த தீபாராதனை ஆகியவை நடைபெற்று இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.</p>]]></content:encoded></item><item><title>மாபெரும் தேர்தல் மோசடி.. 22 கோடி அமெரிக்க வாக்காளர்களின் தரவுகளை திருடிய சீனா - டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/world/us-election-data-theft-claim-trump-alleges-china-stole-data-of-220-million-voters</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-election-data-theft-claim-trump-alleges-china-stole-data-of-220-million-voters#comments</comments><guid isPermaLink="false">c9456dc0-919d-45ac-b499-547c006d9ffe</guid><pubDate>Fri, 17 Jul 2026 04:41:23 +0000</pubDate><atom:updated>2026-07-17T04:41:23.836Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>China,சீனா,trump,டிரம்ப்,US Presidential Election,அமெரிக்க அதிபர் தேர்தல்,தேர்தல் மோசடி,election fraud</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/yhf12o4h/trump.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டிரம்ப் ]]></media:title><media:description type="html"><![CDATA[ டிரம்ப் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/yhf12o4h/trump.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்க தேர்தல் அமைப்பில் சீனா தலையிட்டு 22 கோடி வாக்காளர்களின் தரவுகளைத் திருடியுள்ளதாக அமெரிக்க அதிபர் <a href="https://www.maalaimalar.com/topic/donald-trump">டிரம்ப் </a>பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். </p><h2>பின்னணி </h2><p>2020 அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வென்றார். அப்போது தேர்தலில் முறைகேடு நடந்ததாக தோல்வியை தழுவிய குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் குற்றம்சாட்டினார். தேர்தல் முடிவுக்கு பின்னர், தனது ஆதரவாளர்களை வைத்து அதிபர் மாளிகையை முற்றுகையிட செய்தார். இது அந்த சமயத்தில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது. </p><p>இதன்பின்னர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக டிரம்ப் தரப்பு நீதிமன்றங்களில் பல வழக்குகளை போட்டது. ஆனால் எதற்கும் போதிய ஆதாரம் இல்லை என அவரின் கட்சியில் இருந்தே குரல்கள் வந்தன. </p><p>இந்த சர்ச்சை அடங்காமல் புகைந்துகொண்டே இருந்தது. இதனிடையே 2024 தேர்தலில் 2 கொலை முயற்சிகளில் இருந்து தப்பி, உலகபெரும்பபணக்காரார் எலான் மஸ்கின் ஏகபோக ஆதரவு மற்றும் அளவற்ற நிதியின்மூலம் டிரம்ப் வெற்றி பெற்று அதிபரானார். </p><p>இதன் பின்னர் தற்போது புகைந்துகொண்டிருந்த 2020 தேர்தல் முறைகேடு குற்றச்சாட்டை டிரம்ப் ஊதிப் பற்ற வைத்துள்ளார். <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D">ஈரான் போர் </a>நஷ்டங்களால் உள்நாட்டில் சொந்த கட்சி ஆதரவாளர்கள் மத்தியிலும் டிரம்ப் செல்வாக்கை இழந்து வருவதை சர்வேக்கள் காட்டி வருகின்ற இந்த சூழலில் டிரம்ப் தன் தேர்தல் முறைகேடு குற்றச்சாட்டை கையில் எடுத்துள்ளார். </p> <h2>'வெள்ளை' மாளிகை உரை</h2><p>இன்று வெள்ளை மாளிகையில் இருந்தபடி டிரம்ப் நாட்டு மக்களுக்கு 24 நிமிடம் உரையாற்றினார்.</p><p>அப்போது பேசிய அவர், சீனா, அமெரிக்க தேர்தல் அமைப்பில் ஊடுருவி 22 கோடி வாக்காளர்களின் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">தரவுகளை திருடி </a>வைத்துள்ளதாவும் இது அமெரிக்க வரலாற்றில் நடந்த மிகப்பெரிய தேர்தல் தரவுத் திருட்டு என்றும் குறிப்பிட்டார்.</p><p>தொடர்ந்து பேசிய அவர், "இந்த தரவு கசிவு அமெரிக்க தேர்தல் பாதுகாப்புக்கு மிக பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.</p><p>சீனாவின் இந்தத் தரவு மோசடியை மூடிமறைக்க, அப்போதைய அரசின் சில உறுப்பினர்கள் முயன்றனர்.</p><p>இப்போதும் நமது நாட்டின் தேர்தல் அமைப்பு வெளிப்படைத்தன்மையற்றதாகவும் துல்லியமற்றதாகவும் உள்ளது.</p><p>ஒவ்வொரு அமெரிக்கரும் தங்களின் வாக்கு சரியான முறையில் சென்று சேர்கிறது என்ற நம்பிக்கையை பெற வேண்டும். ஆனால் இன்றைய தேர்தல் அமைப்பின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. ஹேக்கிங் மற்றும் வெளிநாட்டுத் தலையீடுகளுக்கு ஆபத்தான அளவுக்கு உள்ளது.</p><p>மோசடி மற்றும் தலையீடுகள் இல்லாத ஒரு வலுவான அமைப்பை உருவாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது." என தெரிவித்தார்.</p><p>இதற்கு தீர்வாக அமெரிக்க வாக்காளர் தகுதிப் பாதுகாப்புச் சட்டத்தை (SAVE சட்டம்) நிறைவேற்றுமாறு காங்கிரஸை அவர் வலியுறுத்தினார்.</p><p>இந்தச் SAVE சட்டத்தின் கீழ், வாக்களிக்கப் பதிவு செய்யும் ஒவ்வொருவரும் தங்கள் அமெரிக்கக் குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.</p><p>ஆனால் இந்த விதிமுறையில் மில்லியன் கணக்கான அமெரிக்கர்களின் வாக்குரிமையைப் பறிக்கும் அபாயம் உள்ளதென மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.</p> <h2>ஊடகங்கள் மீது காட்டம்</h2><p>இன்றைய தனது உரையை ஒளிபரப்பாத ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டிரம்ப் கடுமையான மிரட்டல் விடுத்துள்ளார்.</p><p>தனது உரையை நேரலையில் ஒளிபரப்ப மறுத்த ஏபிசி மற்றும் என்பிசி போன்ற ஊடகங்களின் உரிமங்களை ரத்து செய்வேன் எனவும் அந்த ஊடகங்கள் தேர்தலில் முறைகேடு செய்யும் சதித்திட்டத்தில் ஒரு பகுதியாக இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.</p> <h2>சீனா மறுப்பு</h2><p>டிரம்ப் குற்றச்சாட்டுகளை அமெரிக்காவில் உள்ள சீனத் தூதரகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.</p><p>சீனத் தூதரக செய்தித் தொடர்பாளர் லியு சாங் பேசுகையில், "அமெரிக்கத் தேர்தல்கள் அவர்களின் சொந்த விவகாரம். அமெரிக்க மக்கள் தங்கள் வாக்குகளின் மூலம் அதன் முடிவை தீர்மானிப்பார்கள். அமெரிக்க அதிபர் தேர்தலில் சீனா ஒருபோதும் தலையிட்டதில்லை, இனியும் அவ்வாறு செய்யாது" என்று தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மேக்புக் மாடல்களுக்கு அசத்தல் சலுகை வழங்கும் ஆப்பிள்</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/apple-back-to-school-sale-now-live-in-india</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/apple-back-to-school-sale-now-live-in-india#comments</comments><guid isPermaLink="false">d4f445bc-2b2b-458a-9d68-d0ec7913e31f</guid><pubDate>Fri, 17 Jul 2026 04:41:00 +0000</pubDate><atom:updated>2026-07-17T04:41:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Apple,ஆப்பிள்,Offers,Back to School,சலுகைகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/dfg9fzjw/apple.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/dfg9fzjw/apple.png?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் M5 பிராசஸர் கொண்ட புதிய மேக்புக் ஏர், M5, M5 Pro மற்றும் M5 Max சிப்செட்கள் கொண்ட மேக்புக் ப்ரோ, ஐபேட் (2024), ஐபேட் ஏர் மற்றும் ஐபேட் ப்ரோ உள்ளிட்ட பல சாதனங்களின் விலையை உயர்த்தியது. </p><p>குறிப்பிடப்பட்ட இந்த சாதனங்கள் இப்போது கணிசமாக அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இருப்பினும், புதிய மேக்புக் அல்லது ஐபேட் மாடலை வாங்க விரும்பும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்காக, ஆப்பிள் தனது வருடாந்திர 'Back to School' சலுகைகளை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>இந்த சலுகைகள் தற்போது நடைமுறையில் உள்ளன. நிறுவனத்தின் ஆண்டு முழுவதும் வழங்கப்படும் மாணவர் தள்ளுபடி திட்டத்தின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்கள் புதிய சாதனத்தை தள்ளுபடி விலையில் வாங்கலாம். அத்துடன் ஏர்பாட்ஸ் 4, ஆப்பிள் பென்சில் அல்லது ஏர்டேக் போன்ற அக்சசரிக்களில் ஒன்றை இலவசமாக பெறலாம்.</p><p><strong>இந்திய சலுகைகள்:</strong></p><p>இந்தியாவில் இந்த ஆண்டிற்கான ஆப்பிள் 'Back to School' விற்பனை தற்போது தொடங்கியுள்ளதாகவும், இது ஆகஸ்ட் 27-ஆம் தேதி வரை நடைபெறும். இந்த விற்பனையின் போது, ​​மாணவர்கள், அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு மேக்புக் மற்றும் ஐபேட் மாடல்களைக் குறைந்த விலையில் வாங்கலாம். மேலும் ஏர்பாட்ஸ் 4, ஆப்பிள் பென்சில் மற்றும் ஏர்டேக்ஸ் போன்ற அக்சசரிக்களை இலவசமாக பெறலாம்.</p><p>M5 பிராசஸர் கொண்ட மேக்புக் ஏர் (2026) மாடலை, மாணவர்களுக்கான சிறப்பு தள்ளுபடியுடன் சேர்த்து ரூ. 1,37,900 என்ற ஆரம்ப விலையில் வாங்கலாம். கூடுதலாக, வாடிக்கையாளர்கள் ஏர்பாட்ஸ் 4 அல்லது நான்கு ஏர்டேக்ஸ் கொண்ட பன்டிலை (bundle) இலவசமாக தேர்வு செய்யலாம்.</p><p>இதுதவிர ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) வசதி கொண்ட ஏர்பாட்ஸ் 4-ஐ ரூ. 5,000-க்கும் அல்லது ஏர்பாட்ஸ் ப்ரோ 3 மாடலை ரூ. 13,000-க்கும் பெறும் விருப்பத்தையும் அவர்கள் தேர்வு செய்யலாம்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY: தொடர் சரிவில் தங்கம்: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-17-7-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-17-7-2026#comments</comments><guid isPermaLink="false">6c0cc3c8-73f7-48ae-8b2f-9b1940e87443</guid><pubDate>Fri, 17 Jul 2026 04:17:53 +0000</pubDate><atom:updated>2026-07-17T04:17:53.296Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-01/jledb4zm/gold05.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-01/jledb4zm/gold05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சர்வதேச பொருளாதார சூழல், போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. </p><p>தங்கம் விலையானது நேற்று முன்தினம் சவரனுக்கு  ரூ.240 உயர்ந்து ரூ.1,05,440-க்கும், கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.13,180-க்கும் விற்பனையானது. நேற்று சவரனுக்கு  ரூ.240 குறைந்து ரூ.1,05,200-க்கும், கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.13,150-க்கு விற்பனையானது.</p><h2>தங்கம் விலை சரிவு</h2><p>இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு  ரூ.400 குறைந்து ரூ.1,04,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.13,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p> <figure><img alt="Silver" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/fanjnwfj/silver.jpg" /></figure> <h2>வெள்ளி விலை நிலவரம்</h2><p>தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-</h2><p>16-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,200</p><p>15-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,440</p><p>14-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,200</p><p>13-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,600</p><p>12-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,400</p><h2>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-</h2><p>16-07-2026- ஒரு கிராம் ரூ.240</p><p>15-07-2026- ஒரு கிராம் ரூ.240</p><p>14-07-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>13-07-2026- ஒரு கிராம் ரூ.240</p><p>12-07-2026- ஒரு கிராம் ரூ.240</p> ]]></content:encoded></item><item><title>ஈரானில் பாலங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் - 7 பேர் பலி.. பஹ்ரைன், கத்தார், குவைத் மீது ஈரான் பதில் தாக்குதல் </title><link>https://www.maalaimalar.com/news/world/iran-airstrikes-on-iran-bridges-us-targets-key-coastal-infrastructure-at-least-7-killed</link><comments>https://www.maalaimalar.com/news/world/iran-airstrikes-on-iran-bridges-us-targets-key-coastal-infrastructure-at-least-7-killed#comments</comments><guid isPermaLink="false">ab304a06-432a-4003-8faf-ac5969c88628</guid><pubDate>Fri, 17 Jul 2026 04:07:07 +0000</pubDate><atom:updated>2026-07-17T04:07:07.073Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,USA,Iran War,ஈரான் போர்,மத்திய கிழக்கு,Middle East</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/r8aiobqw/iran-war.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஈரான் பாலங்களை குறிவைத்து தாக்குதல் ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஈரான் பாலங்களை குறிவைத்து தாக்குதல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/r8aiobqw/iran-war.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>புரிந்துணர்வு முறிந்ததை அடுத்து ஈரான் மீது அமெரிக்கா தொடர் <a href="https://www.maalaimalar.com/news/world/iran-strikes-to-intensify-trump-warns-severe-military-action-on-iran-over-next-three-days">தாக்குதல்களை </a>மேற்கொண்டு வருகிறது. </p><h2>பாலங்கள் மீது தாக்குதல் </h2><p>இன்று அதிகாலையில் ஈரானில் உள்ள பாலங்கள் மற்றும் போக்குவரத்து வழித்தடங்களை குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. </p><p>பிரதானமாக தெற்கு ஈரானில் நடந்த இந்த பாலங்கள் மேக்கேதான் தாக்குதலில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. </p><p> இன்றைய தாக்குதலில் ஈரானிய ராணுவப் போக்குவரத்திற்கு முக்கியமான கடலோரப் பாலங்களையும் உள்கட்டமைப்புகளையும் அழித்ததாகவும் இந்தத் தாக்குதல்கள் மூலம் ஈரானிய கடற்படை நடவடிக்கைகளை முழுமையாக  தடுப்பதே தங்களின் திட்டம் என்றும் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p>இன்றைய தாக்குதல்களுடன் சேர்த்து, கடந்த சில நாட்களில் ஈரானில் அமெரிக்கா நடத்திய தாக்குதல் பொதுமக்கள் 35 பேர் கொல்லப்பட்டதாகவும், 300 பேர் வரை காயமடைந்ததாகவும் ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p> <h2>ஈரான் பதிலடி</h2><p>அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு பதிலடியாக மத்திய கிழக்கில் பஹ்ரைன், குவைத், கத்தார் ஆகிய நாடுகள் மீது ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானிய ஏவுகணைகளை இடைமறித்ததாக கத்தார் உறுதிப்படுத்தியுள்ளது.</p> <h2>மருத்துவமனை மீது தாக்குதல்</h2><p>நேற்று, ஈரானின் தென்மேற்கில் குசெஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ள அஹ்வாஸூ பகுதியில் செயல்பட்டு வரும் புற்றுநோய் சிறப்பு மையமான ஷாஹித் பகாயி <a href="https://www.maalaimalar.com/news/world/us-airstrike-near-iran-cancer-hospital-211-child-patients-evacuated-after-attack">மருத்துவமனைக்கு </a>அருகே  அமெரிக்கா வான்வழித் தாக்குதலை நடத்தியது.</p><p>இதையடுத்து அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தைகள் உட்பட 211 உள்நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.</p><p>ஈரானின் குசெஸ்தான் மாகாணத்தில் உள்ள புற்றுநோய் சிறப்பு மையமான ஷாஹித் பகாயி மருத்துவமனைக்கு அருகே, அமெரிக்க படைகள் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியது.</p><p>இந்த தாக்குதலை அடுத்து மருத்துவமனையில் இருந்த இருநூறுக்கும் மேற்பட்ட நோயாளிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.</p> <h2>எச்சரிக்கை</h2><p>அமெரிக்கா தனது தாக்குதல்களை நிறுத்தவில்லை என்றால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து உள்கட்டமைப்புகளில் அழிப்போம் என ஈரான் ராணுவ பிரிவு செய்தி தொடர்பாளர் கர்னல் எப்ராஹிம் ஜோல்பஹாரி எச்சரித்துள்ளார்.</p><p>தனது இறையாண்மை மீறப்படுவதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்றும், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் பெரும் விலையைக் கொடுக்க நேரிடும் என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சகம் எச்சரித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கலர்ஓ.எஸ்.-இல் இயங்கும் ரியல்மி ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம்?</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/realme-could-replace-realme-ui-with-coloros-17-in-india-report</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/realme-could-replace-realme-ui-with-coloros-17-in-india-report#comments</comments><guid isPermaLink="false">ec521acd-63eb-4c1e-b187-ef50e73abad1</guid><pubDate>Fri, 17 Jul 2026 03:37:00 +0000</pubDate><atom:updated>2026-07-17T03:37:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Realme,ரியல்மி,ColorOS 17,கலர்ஓஎஸ் 17</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/8lhel5qy/rlme.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/8lhel5qy/rlme.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ரியல்மி நிறுவனம் இந்தியாவில் உள்ள தனது ஸ்மார்ட்போன்களில் ரியல்மி யு.ஐ.-க்கு பதிலாக ஒப்போவின் கலர்ஓ.எஸ். 17-ஐ விரைவில் அறிமுகப்படுத்த இருப்தாக தகவல் வெளியாகி உள்ளது. எதிர்கால ஸ்மார்ட்போன்கள் கலர்ஓ.எஸ். 17 உடன் வெளியிடப்படும் என்றும், தகுதியுள்ள தற்போதைய சாதனங்களும் எதிர்கால ஓ.எஸ். அப்டேட்கள் மூலம் இந்த மென்பொருளைப் பெறும் என்றும் ரியல்மி இந்தியா உறுதிப்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. </p><p>இந்த நடவடிக்கை, மென்பொருள் உருவாக்கத்தை எளிமையாக்கவும், மேம்படுத்தல் செயல்முறையை நெறிப்படுத்தவும் உதவும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், எந்த ரியல்மி ஸ்மார்ட்போன் இந்த புதிய இயங்குதளத்துடன் முதலில் அறிமுகமாகும் என்பதை அந்நிறுவனம் வெளியிடவில்லை.</p><p><strong>கலர்ஓ.எஸ். 17:</strong></p><p>ஜிஎஸ்எம்அரினா அறிக்கையின்படி , இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள வரவிருக்கும் ஸ்மார்ட்போன்கள், ரியல்மி யுஐ-க்கு பதிலாக கலர்ஓ.எஸ். 17-இல் இயங்கும் என்று ரியல்மி இந்தியா தெரிவித்துள்ளது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செலவுகளை குறைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, ரியல்மி யுஐ ஒப்போவின் மென்பொருள் தளத்துடன் இணைக்கப்படும் என்று கூறிய முந்தைய அறிக்கையை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><p>தனது ஸ்மார்ட்போன் சீரிஸ் முழுவதும் மென்பொருள் உருவாக்கத்தை நெறிப்படுத்தவும், மென்பொருள் அப்டேட்களை எளிதாக்கவும் இந்த மாற்றம் நோக்கமாக கொண்டுள்ளது என்று ரியல்மி இந்தியா கூறியதாக அந்த அறிக்கை மேலும் தெரிவித்தது. இருப்பினும், கலர்ஓ.எஸ். 17 உடன் முதலில் வெளிவரும் வரவிருக்கும் மாடல் எது என்பதை அந்நிறுவனம் வெளியிடவில்லை.</p><p>ரியல்மி யுஐ மற்றும் கலர்ஓ.எஸ். ஏற்கனவே ஒரே மாதிரியான இடைமுகம் மற்றும் அம்சங்களை கொண்டிருப்பதால், இந்த மாற்றம் ஒட்டுமொத்த பயனர் அனுபவத்தில் பெரிய மாற்றங்களை கொண்டுவர வாய்ப்பில்லை என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது. மேலும், 2020-இல் நிறுவனம் ரியல்மி யுஐ-ஐ அறிமுகப்படுத்துவதற்கு முன்பே, ஆரம்பகால ரியல்மி ஸ்மார்ட்போன்கள் கலர்ஓ.எஸ். உடன் வெளியிடப்பட்டன என்றும் அது சுட்டிக்காட்டியது.</p>]]></content:encoded></item><item><title>நாளை விண்ணில் பாய்கிறது இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!</title><link>https://www.maalaimalar.com/news/national/indias-first-private-orbital-rocket-vikram-1-to-launch-on-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/national/indias-first-private-orbital-rocket-vikram-1-to-launch-on-tomorrow#comments</comments><guid isPermaLink="false">fa52a01f-f477-4aba-99c0-bedd5db41db4</guid><pubDate>Fri, 17 Jul 2026 03:30:53 +0000</pubDate><atom:updated>2026-07-17T03:30:53.805Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ISRO,இஸ்ரோ,ராக்கெட்,Rocket,Rocket Vikram 1,ராக்கெட் விக்ரம் 1</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/hj0ux9gj/rocket.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நாளை விண்ணில் பாய உள்ள தனியார் ராக்கெட்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/hj0ux9gj/rocket.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>'ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பறக்கும் முதல் தனியார் ராக்கெட் விக்ரம்-1 நாளை (சனிக்கிழமை) விண்ணில் ஏவப்படுகிறது' என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.</aside><h2><strong>தனியார் ராக்கெட்</strong></h2><p>தெலுங்கானா மாநிலம் தலைநகர் ஐதராபாத்தை சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் விக்ரம்-1 என்ற ராக்கெட்டை தயாரித்துள்ளது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்திலிருந்து நாளை (சனிக்கிழமை) காலை 11.30 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.</p><p>விக்ரம்-1 ஆனது கிரகா ஸ்பேஸ், காஸ்மோசர்வ், டிகியூப்ட் மற்றும் ஸ்கைரூட்டின் சொந்த ஸ்கோப் ஆகியவற்றிலிருந்து தொழில்நுட்ப விளக்க ஆய்வு கருவிகளை எடுத்துச் செல்கிறது. அத்துடன், காஸ்மோஸ் டயமண்ட்ஸின் கலைப்படைப்பான 'காஸ்மிக் புளூம்' மற்றும் ஒரு மைக்ரோ-ஆர்ட் பீஸ் கொண்டு செல்கிறது.</p><h2><strong>கார்பன் கலவை அமைப்பு</strong></h2><p>விக்ரம்-1 என்பது 7 அடுக்கு உயரமான, பல நிலை சுற்றுப்பாதை ஏவுகணை வாகனமாகும். இது அனைத்து கார்பன் கலவை அமைப்புடன் கட்டப்பட்டது மற்றும் 3டி-அச்சிடப்பட்ட எந்திரங்கள் மற்றும் உயர் உந்துதல் திட எரிபொருள் ராக்கெட் பூஸ்டர்கள் உந்துவிசை அமைப்புகளால் இயக்கப்படுகிறது.</p><p>350 கிலோ எடையுள்ள சிறிய செயற்கைக்கோள்களை குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் முதல் சோதனை விமானம் 60 டிகிரி சாய்வில் 450 கிமீ சுற்றுப்பாதையை இலக்காகக் கொண்டுள்ளது. இந்தவகை ராக்கெட் மூலம் சில நூறு கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களை குறைந்த பூமியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த வடிவமைக்கப்பட்ட ஒரு சிறிய வகை ராக்கெட்டாகும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>மகப்பேறு விடுப்பு - கோர்ட்டுக்கு சென்று உரிமையை நிலைநாட்டிய பேராசிரியை 
</title><link>https://www.maalaimalar.com/news/national/maternity-leave-professor-asserts-her-right-by-going-to-court</link><comments>https://www.maalaimalar.com/news/national/maternity-leave-professor-asserts-her-right-by-going-to-court#comments</comments><guid isPermaLink="false">0ac766f5-a7f1-4dab-933c-daced17e4626</guid><pubDate>Fri, 17 Jul 2026 03:29:17 +0000</pubDate><atom:updated>2026-07-17T03:29:17.770Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Telangana,Professor,pregnant woman,தெலுங்கானா,பேராசிரியை,தெலுங்கானா ஐகோர்ட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/m39e5zmu/pregnantwoman.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pregnant woman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/m39e5zmu/pregnantwoman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகப்பேறு விடுப்பு தொடர்பாக, ஐகோர்ட்டுக்கு சென்று தனக்கான உரிமையை பேராசிரியை ஒருவர் நிலை நாட்டியுள்ளார்.</p><h2>இரட்டை குழந்தைகள்</h2><p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE">தெலுங்கானா</a> மாநிலம் மஞ்செரியல் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்வரூப ராணி (வயது 35), அரசு மகளிர் கலைக்கல்லூரியில் ஆங்கில பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். திருமணமான இவருக்கு கடந்த 2023-ம் ஆண்டு முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தன. இந்தநிலையில் 2-வது முறையாக ஸ்வரூப ராணி கடந்த ஏப்ரல் மாதத்தில் கர்ப்பமானார்.</p> <figure><img alt="Twins" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/6a7yh298/twins.jpg" /></figure> <p>இதையடுத்து தனக்கு மகப்பேறு விடுப்பு வேண்டி அவர் கல்லூரி நிர்வாகத்திடம் விண்ணப்பித்தார். ஆனால், அரசு விதிகளின் படி “இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் மகப்பேறு விடுப்பு கிடையாது" என்ற விதியைக் காட்டி அதிகாரிகள் அவரது விண்ணப்பத்தை அதிரடியாக நிராகரித்தனர்.</p><h2>தெலுங்கானா ஐகோர்ட்டில் வழக்கு</h2><p>அதிகாரிகளின் இந்த உத்தரவை எதிர்த்து ஸ்வரூப ராணி தெலுங்கானா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், "முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறப்பது என்பது இயற்கையான உயிரியல் நிகழ்வு. அதை இரண்டு தனித்தனி பிரசவங்களாகக் கருதக் கூடாது. எனவே எனக்கு விடுப்பு மறுப்பது சட்டவிரோதம்" என்று குறிப்பிட்டிருந்தார்.</p> <p>இந்த வழக்கை தெலுங்கானா ஐகோர்ட்டு நீதிபதி கே.சரத் விசாரணை நடத்தினார். வழக்கு விசாரணையில் பரபரப்பு தீர்ப்பு அளித்து உத்தரவிட்டார். அந்த உத்தரவில், மகப்பேறு விடுப்பு என்பது பெண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும், அவர்கள் தொடர்ந்து பணியில் நீடிப்பதற்கும் கொண்டு வரப்பட்ட நலத்திட்டமாகும். விதிகளை எந்திரத்தனமாகப் பார்க்காமல் மனிதநேயத்தோடு அணுக வேண்டும். முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தால், அதை ஒரே ஒரு பிரசவமாகத்தான் கருத வேண்டும். இரண்டு குழந்தைகளாக கணக்கிட்டு மகப்பேறு விடுப்பை மறுக்கக் கூடாது.</p><h2>அதிரடி தீர்ப்பு</h2><p>சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பைத் தொடர்ந்து, முதல் பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தாலும் அடுத்த பிரசவத்திற்கு விடுப்பு வழங்கலாம் என தமிழ்நாடு அரசு விதிகளில் திருத்தம் செய்துள்ளது. இதனை நாம் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே, மனுதாரருக்கு ஏப்ரல் 14, 2026 முதல் அக்டோபர் 11, 2026 வரையிலான 180 நாட்களுக்கு முழு சம்பளம் மற்றும் இதர படிகளுடன் கூடிய மகப்பேறு விடுப்பை உடனடியாக வழங்க வேண்டும் என்று தெலுங்கானா அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். தெலுங்கானா ஐகோர்ட்டின் இந்த அதிரடி தீர்ப்பு அரசு பெண் ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பராமரிப்பு பணி: நீலகிரி, மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில்களின் நேரம் மாற்றம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/express-trains-time-change-to-nilgiri-and-mangalore</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/express-trains-time-change-to-nilgiri-and-mangalore#comments</comments><guid isPermaLink="false">42de31d8-3243-4dad-bb31-0c8d132d0c38</guid><pubDate>Fri, 17 Jul 2026 03:06:11 +0000</pubDate><atom:updated>2026-07-17T03:06:11.519Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Southern Railway,Express trains,தெற்கு ரெயில்வே,எக்ஸ்பிரஸ் ரெயில்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/duyh0fsf/train01.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/duyh0fsf/train01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87">தெற்கு ரெயில்வேயில்</a> மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகள் காரணமாக, மேட்டுப்பாளையம் - சென்னை மற்றும் மங்களூரு - சென்னை இடையிலான முக்கிய எக்ஸ்பிரஸ் ரெயில்களின் புறப்படும் மற்றும் வருகை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த நேர மாற்றம் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 20-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. மாற்றப்பட்ட புதிய கால அட்டவணையின் விவரங்கள் பின்வருமாறு:</p><h2><strong>மேட்டுப்பாளையம் - சென்னை சென்ட்ரல் நீலகிரி எக்ஸ்பிரஸ்</strong></h2><p>மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வரும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலின் வருகை நேரம் காட்பாடி மற்றும் அரக்கோணம் நிலையங்களில் மாற்றப்பட்டுள்ளது.</p><p><strong>காட்பாடி ரெயில் நிலையம்:</strong> காலை 4.08 மணிக்கு வருவதற்குப் பதிலாக, காலை 3.53 மணிக்கு முன்னதாகவே வந்தடையும்.</p><p><strong>அரக்கோணம் ரெயில் நிலையம்:</strong> காலை 4.53 மணிக்கு வருவதற்குப் பதிலாக, காலை 4.43 மணிக்கு வந்தடையும்.</p><h2><strong>மங்களூரு சென்ட்ரல் - சென்னை சென்ட்ரல் அதிவிரைவு மெயில் எக்ஸ்பிரஸ்</strong></h2><p>மங்களூருவில் இருந்து சென்னை வரும் இந்த ரெயிலின் நேரமும் அரக்கோணம் மற்றும் திருவள்ளூர் நிலையங்களில் சில நிமிடங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.</p><p><strong>அரக்கோணம் ரெயில் நிலையம்:</strong> அதிகாலை 4.40 மணிக்கு வருவதற்குப் பதிலாக, இரண்டு நிமிடங்கள் முன்னதாக அதிகாலை 4.38 மணிக்கு வந்தடையும்.</p><p><strong>திருவள்ளூர் ரெயில் நிலையம்:</strong> காலை 5.05 மணிக்கு வருவதற்குப் பதிலாக, காலை 5.03 மணிக்கு வந்தடையும்.</p><h2><strong>பயணிகள் கவனத்திற்கு</strong></h2><p>அடுத்த மாதம் 20-ஆம் தேதி முதல் இந்த ரெயில்களில் பயணிக்கத் திட்டமிட்டுள்ள பயணிகள், தங்களது பயண நேரத்தை இந்த புதிய கால அட்டவணையின்படி திட்டமிட்டுக் கொள்ளுமாறு தெற்கு ரெயில்வே அறிவுறுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை (18.07.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/power-cut-areas-in-chennai-tomorrow-18-07-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/power-cut-areas-in-chennai-tomorrow-18-07-2026#comments</comments><guid isPermaLink="false">1d4c01cb-161d-44ca-868e-fa73b10b2c3d</guid><pubDate>Fri, 17 Jul 2026 02:51:25 +0000</pubDate><atom:updated>2026-07-17T02:51:25.424Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மின்தடை,TNEB,மின்சார வாரியம்,Power Cut,தமிழ்நாடு மின்சார வாரியம்,சென்னையில் மின்தடை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/3pw84p21/powercut1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/3pw84p21/powercut1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை:</p><p>சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின் தடை</a> செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><p>அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (18.07.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.  அதன்படி, </p><h2><strong>தில்லைகங்காநகர்</strong></h2><p>நங்கநல்லூர், பழவந்தாங்கல், ஜீவன்நகர், சஞ்ஜய்காந்திநகர், வேளச்சேரி, ஆதம்பாக்கம், ஆன்டாள்நகர், வானுவம்பேட்டை, பிருந்தாவன்நகர், மகாலட்சுமிநகர், சாந்தி நகர், புழுதிவாக்கம், உள்ளகரம், ஏ.ஜி.எஸ். காலனி வேளச்சேரி, இ.பி. காலனி, மோகனபுரி, ஆதம்பாக்கம் நியுகாலனி.</p><h2><strong>பஞ்செட்டி</strong></h2><p>அழிஞ்சிவாக்கம், அத்திப்பேடு, இருளிப்பட்டு, ஜனபஞ்சத்திரம் கூட் ரோடு, பெரியபாளையம் சாலை, ஜெகநாதபுரம் சாலை, சாய்கிருபா நகர், விருந்தாவன் நகர், எம்.கே. கார்டன், ஸ்ரீ நகர், எஸ்.வி. பண்ணை, மாலிவாக்கம், அமூர் ஜெகநாதபுரம் சத்திரம், குதிரைப்பள்ளம்.</p><h2><strong>சோழிங்கநல்லூர்</strong></h2><p>எல்காட் அவென்யூ சாலை, மாடல் பள்ளி சாலை கிளாசிக் படிவங்கள், நெடுஞ்செழியன் தெரு, நாராயணசாமி தெரு, படவேட்டம்மன் கோவில் தெரு, பரமேஸ்வரன் நகர், பொன்னியம்மன் கோவில் தெரு, குமரன் நகர், டி.என்.எச்.பி., அலமேலுமங்காபுரம், காந்தி நகர், ஒ.எம்.ஆர்., நூக்காம்பாளையம் சாலை, திருவள்ளுவர் சாலை, பாண்டிச்சேரி பட்டி, செம்மஞ்சேரி, ஜவகர் நகர், சத்யபாமா நகர், ஜே.பி.ஆர்., செயின்ட் ஜோஷப் கல்லூரி, கிராம உயர் சாலை, வேலுநாயக்கர் தெரு, நேரு தெரு, கணேஷ் நகர், மேடவாக்கம் சாலை, விப்ரோ சாலை, அண்ணா தெரு, தேவராஜ் நகர், நியூ குமரன் நகர், எழில் நகர், காந்தி தெரு, எம்.ஜி.ஆர்.தெரு.</p><h2><strong>நங்கநல்லூர்</strong></h2><p>ஷீலா நகர், ஐஸ்வர்யா தெரு, எரிகரை தெரு, ராமகிருஷ்ண ராஜு நகர், நீலமேகம் தெரு, அகத்தியர் தெரு, மணிகண்டன் தெரு, அன்னை தெரசா நகர், ஏழுமலை தெரு, ஏ.ஜி.எஸ். காலனி, பாலாஜி நகர் தெரு, சிவபிரகாசம் நகர், சங்கரா நகர், சங்கரதாஸ் தெரு, நந்தனார் தெரு, முல்லை தெரு, சிவசுப்ரமணியன் தெரு, அம்பிகாபதி தெரு, ராமலிங்க நகர், குப்புசாமி தெரு, கங்கை தெரு, யமுனை தெரு, வைகை தெரு, சொக்கநாதன் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, சிவராமன் தெரு, சதாசிவம் நகர், ராம் குமார் தெரு.</p><h2><strong>பொன்னேரி</strong></h2><p>பஞ்செட்டி, தச்சூர் கூட் ரோடு, அழிஞ்சிவாக்கம், போராக்ஸ், கீழ்மேனி, பெரவள்ளூர், அத்திப்பேடு, நத்தம், ஆண்டார்குப்பம், சத்திரம், மாதவரம், ஆமூர், கோடூர், கே.பி.கே. நகர், சின்னாவரம், வெள்ளோடை, எலியம்பேடு, சின்னகாவனம், பெரியகாவனம், காவல்பட்டி, உப்பளம், டி.வி.பாடி, வெம்பாக்கம், தேவதானம், அன்னுப்பம்பட்டு, ஏ.ஆர். பாளையம், ஆலாடு, பெரும்பேடு, டி.வி.புரம்., உத்தண்டி, கண்டிகை, அரசூர்.</p><h2><strong>திருமுல்லைவாயல்</strong></h2><p>பழைய அலமாதி, அலமாதி ஏ காலனி, வெண்மணி நகர், பால் பண்னை, கோவிந்தபுரம், கிருஷ்ணா நகர்.</p><h2><strong>கோவிலம்பாக்கம்</strong></h2><p>மேடவாக்கம் பிரதான சாலை, எம்.ஜி.ஆர். நகர், ரோஸ் கார்டன், சின்ன கோவிலம்பாக்கம், எஸ். கொளத்தூர் சாலை, ஈச்சாங்காடு தொழிற்பேட்டை, பல்லாவரம் ரேடியல் சாலை.</p><h2><strong>ஒட்டியம்பாக்கம்</strong></h2><p>வேடந்தாங்கல் நகர், ஒட்டியம்பாக்கம் முழுவதும், நேதாஜி நகர், காரணை பிரதான சாலை, ஒட்டியம்பாக்கம் பிரதான சாலை, ஜோன்ஸ், கிரஷர் சாலை.</p><h2><strong>போரூர்</strong></h2><p>பனிமலர் மருத்துவ கல்லூரி, வரதராஜபுரம், யமுனா நகர், கோலப்பன்சேரி, சொக்கநல்லூர்.</p><h2><strong>அடையாறு</strong></h2><p>காந்தி நகர் 4-வது பிரதான சாலை, 2-வது மற்றும் 3-வது கிரசென்ட் பார்க் சாலை, 3-வது பிரதான சாலை, ராமச்சந்திர ஆதித்தனார் சாலை.</p><h2><strong>பூந்தமல்லி</strong></h2><p>டிரன்க் சாலை, ஆஞ்சநேயர் கோவில் தெரு, வைதீஸ்வரன் கோவில் தெரு, ராமானுஜகூடம் தெரு, சுந்தர் நகர், புது தெரு, கங்கா சாரதி நகர், பிள்ளையார் கோவில் தெரு.</p><h2><strong>ஆவடி</strong></h2><p>சோழம்பேடு சாலை, ஸ்ரீ நகர் காலனி, கணபதி நகர், அர்ஜுன நகர், செந்தில் நகர், சீனிவாச நகர், பிருந்தாவனம் அவென்யூ.</p><h2><strong>தாம்பரம்</strong></h2><p>முல்லை நகர், அம்பேத்கர் தெரு, வைகை நகர், காந்தி நகர், பழைய ஸ்டேட் பேங்க் காலனி, ஆர்.டி.ஓ. அலுவலகச் சாலை, காமராஜ் தெரு, காந்தி சாலை.</p><h2><strong>ஈஞ்சம்பாக்கம்</strong></h2><p>பாரதி அவென்யூ, கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் முதல் அக்கரை வரை, வி.ஜி.பி. லேஅவுட், ஷாலிமார் கார்டன், விமலா கார்டன், பெரியார் தெரு, பொதிகை தெரு, முனீஸ்வரன் கோவில் தெரு, கங்கையம்மன் கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, கவுரியம்மன் கோவில் தெரு, ஜெகஜீவன்ராம் அவென்யூ, சோழமண்டல் தேவி நகர், சேஷாத்ரி அவென்யூ, பெத்தல் நகர் 1-வது தெரு, பொன்னுரங்கன் தெரு.</p><h2><strong>நீலாங்கரை</strong></h2><p>கோஹினூர் காம்ப்ளக்ஸ், பாண்டியன் நகர், வெட்டுவாங்கேணி, பே வாட்ச் பார்ம், டீச்சர்ஸ் காலனி, வொர்க்கர்ஸ் எஸ்டேட், ராஜா தெரு, சங்கர் தெரு, பூம்புகார் தெரு, ஜோனி தெரு, கங்கையம்மன் கோவில் தெரு.</p><h2><strong>பல்லாவரம்</strong></h2><p>ஆர்.கே.வி. அவென்யூ, கட்டபொம்மன் நகர், பி.வி. வைத்தியலிங்கம் தெரு.</p><h2><strong>குமணன்சாவடி</strong></h2><p>பெரியார் நகர், அபிராமி நகர், வி.ஜி.என். அவென்யூ, சாந்தி நகர், எஸ்.வி. நகர், ஜீவன் பிரகாஷ் நகர், பூந்தமல்லி பைபாஸ், ரேடியன் மற்றும் ஷோபா அபார்ட்மெண்ட்.</p><h2><strong>காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை</strong></h2><h2><strong>தியாகராயர்நகர்</strong></h2><p>ஆர்.ஏ.புரம், எம்.ஆர்.சி.நகர் பகுதி. போர்ஷோர் எஸ்டேட்டின் ஒரு பகுதி, காந்தி நகரின் ஒரு பகுதி, பி.ஆர்.ஓ. குவார்ட்டர்ஸ், ஆர்.கே.மடம், ஆர்.கே.நகர், ராணி மெய்யம்மை டவர், சத்திய தேவ் அவென்யூ, ட்ரூ வேல்யூ ஹோம்ஸ், ராஜா தெரு, ராபர்ட்சன் லேன், ராஜா கிராமணி கார்டன், கே.வி.பி. கார்டன், அப்பா கிராமணி தெரு, வேலாயுதராஜா தெரு, டி.பி. ஸ்கீம் ரோடு, ராஜா முத்தையா புரம், குட்டிகிராமணி தெரு, காமராஜ சாலை, கஸ்தூரி அவென்யூ, கற்பகம் அவென்யூ, வசந்த் அவென்யூ, சவுத் அவென்யூ, சண்முகபுரம், சாந்தோம் நெடுஞ்சாலை, சத்தியா நகர், அறிஞர் அண்ணாநகர், அன்னை தெரிசா நகர், பெருமாள் கோவில் தெரு, தெற்கு கால்வாய் வங்கி சாலை.</p>]]></content:encoded></item><item><title>சென்னை பூங்கா, குன்னூர் உள்பட 75 ரெயில் நிலையங்களை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்
</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-inaugurate-75-railway-stations-today</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-inaugurate-75-railway-stations-today#comments</comments><guid isPermaLink="false">2d2e973f-e581-4441-b3e2-4ae1a7610f40</guid><pubDate>Fri, 17 Jul 2026 02:44:01 +0000</pubDate><atom:updated>2026-07-17T02:44:01.357Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>railway stations,pm modi,பிரதமர் மோடி,ரெயில் நிலையங்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/05/22/13232361-modi0.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/05/22/13232361-modi0.webp?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அதிநவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட 75 ரெயில் நிலையங்களை <a href="https://www.maalaimalar.com/news/national/looking-forward-to-being-among-people-of-haryana-chandigarh-punjab-said-pm-modi">பிரதமர் மோடி </a>இன்று திறந்து வைக்கிறார்</p><p>'அம்ரித் பாரத்' ரெயில் நிலைய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஏராளமான ரெயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. இதில் ரூ.1,570 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட 75 ரெயில் நிலையங்கள் திறப்புவிழாவுக்கு தயாராகி உள்ளன. அவை இன்று பிற்பகல் 3.40 மணிக்கு<a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF"> பிரதமர் மோடி</a>யால் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கப்படுகிறது.</p><p>இதில் தமிழகத்தில் உள்ள சென்னை பூங்கா மற்றும் குன்னூர், சின்னசேலம் ரெயில் நிலையங்களும் அடக்கம். மத்திய பிரதேசத்தில் உள்ள சாஞ்சி, விதிஷா, அசோக்நகர், சிவ்புரி உள்ளிட்ட 13 ரெயில் நிலையங்களும் திறக்கப்படுகின்றன. நவீன பயணிகள் வசதிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் மற்றும் அந்தந்த பகுதியின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு உள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>உக்ரைன் ராணுவத்தில் டிரோன் போர்முறையை அறிமுகம் செய்த  பாதுகாப்பு அமைச்சர் நீக்கம் - ஜெலன்ஸ்கியின் முடிவுக்கு எதிராக மக்கள் போராட்டம் </title><link>https://www.maalaimalar.com/news/world/ukraine-defense-minister-fired-zelensky-sacks-drone-war-architect-sparking-nationwide-protests</link><comments>https://www.maalaimalar.com/news/world/ukraine-defense-minister-fired-zelensky-sacks-drone-war-architect-sparking-nationwide-protests#comments</comments><guid isPermaLink="false">b4e351ec-b8e9-4bfd-81a0-86c495002854</guid><pubDate>Fri, 17 Jul 2026 02:40:02 +0000</pubDate><atom:updated>2026-07-17T02:40:02.954Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உக்ரைன் போர்,Ukraine War,டிரோன் தாக்குதல்,drone attack,Zelenskyy,ஜெலன்ஸ்கி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/bvgyqfe5/ukraine.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ உக்ரைன் ]]></media:title><media:description type="html"><![CDATA[ உக்ரைன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/bvgyqfe5/ukraine.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ரஷியாவுடன் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D">போரிட்டு </a>வரும்  வேளையில் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சரை அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடியாக நீக்கியுள்ளார். </p><p>உக்ரைன் பாதுகாப்பு அமைச்சராக 35 வயது மிகைலோ பெடோரோ பதவியேற்ற ஆறே மாதங்களில்  அவர் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். </p><h2>மிகைலோ பெடோரோ - டிரோன் நாயகன் </h2><p>உக்ரைன் ராணுவத்தில் நவீன டிரோன் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து ரஷிய எல்லைக்குள் புகுந்து பல தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தியதால் இவர் அங்கு 'டிரோன் போரின் தந்தை' என்று மக்களால் கொண்டாடப்பட்டவர்.</p><h2>நீக்கம் </h2><p>உக்ரைன் ராணுவ தலைமை தளபதி அலக்சாண்டர் சிர்ஸ்கிக்கும், பாதுகாப்பு அமைச்சர் பெடோரோவிற்கும் இடையே போர் வியூகம் தொடர்பாக ஏற்பட்ட மோதலே அவரை <a href="https://www.maalaimalar.com/topic/zelensky">ஜெலன்ஸ்கி </a>நீக்க காரணம் எனக் கூறப்படுகிறது. </p><p>எதிர்காலப் போர் டிரோன்கள் மூலமே நடக்கும் என்று பெடோரோவ் வாதிட, தரைப்படை தான் முக்கியம் என்று தலைமை தளபதி சிர்ஸ்கி பிடிவாதமாக இருந்தார். </p><p>இந்த மோதலில் அதிபர் ஜெலென்ஸ்கி ராணுவத் தலைமையின் பக்கம் சாய்ந்து அமைச்சரை நீக்கியுள்ளார். </p><p>மேலும், ராணுவத் தளவாடக் கொள்முதலில் பெடோரோவ் கொண்டு வந்த டிஜிட்டல் சீர்திருத்தங்கள், பெரிய கார்ப்பரேட் ஒப்பந்ததாரர்களுக்கு  பாதிப்பை ஏற்படுத்தியதால் அவர்களும் இவருக்கு எதிராகத் திரும்பினர்.</p> <h2>மக்கள் போராட்டம்</h2><p>பாதுகாப்பு அமைச்சரின் இந்த நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய அளவில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.</p><p>தலைநகர் கீவ், ஒடேசா, எல்விவ் மற்றும் கார்கிவ் போன்ற முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர்.</p><p>"ராணுவ தலைமை தளபதி சிர்ஸ்கி வெளியேற வேண்டும்" என்று அவர்கள் கோஷமிட்டனர்.</p><p>இந்த நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் விமானப்படையின் துணை கமாண்டர் கர்னல் பாவ்லோ யெலிசரோவ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.</p><p>தற்போதைய சூழலில், தொழில்நுட்ப அமைச்சரின் நீக்கம் போர்க்களத்தில் உக்ரைனின் பலவீனத்தை அதிகரிக்கும் என்று பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>விலகிய எம்.பி.க்கு மிக்க நன்றி.. போகிறவர்கள் ஜூலை 21க்குள் போய்விடுங்கள் - கெடு விதித்த மம்தா</title><link>https://www.maalaimalar.com/news/national/mamata-faces-tmc-split-over-50-mlas-and-20-mps-quit-as-she-urges-rebels-to-leave-before-july-21</link><comments>https://www.maalaimalar.com/news/national/mamata-faces-tmc-split-over-50-mlas-and-20-mps-quit-as-she-urges-rebels-to-leave-before-july-21#comments</comments><guid isPermaLink="false">eccce6af-3bd2-4c70-80fd-2b210f6f8f60</guid><pubDate>Fri, 17 Jul 2026 02:12:18 +0000</pubDate><atom:updated>2026-07-17T02:12:18.758Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மம்தா பானர்ஜி,Mamata Banerjee,மேற்கு வங்கம்,trinamool congress,west bengal,திரிணாமுல் காங்கிரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/8a6oxw7e/tn-45.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மம்தா, கோயல் மல்லிக்]]></media:title><media:description type="html"><![CDATA[ மம்தா, கோயல் மல்லிக்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/8a6oxw7e/tn-45.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்க சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF">மம்தா பானர்ஜி</a>யின் திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாக உடைந்தது. 80 எம்எல்ஏக்களில் 50க்கும் மேற்பட்டோர் தனி அணியாக பிரிந்துள்ளனர். அவர்களுக்கே பாஜகவை சேர்ந்த சட்டமன்ற சபாநாயகர் எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கியுள்ளார். </p><p>மறுபுறம் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் 20க்கும் மேற்பட்டோர் விலகியது மம்தாவுக்கு மேலும் பின்னடைவாக அமைந்தது. தொடர்ந்து பல முக்கிய தலைவர்கள், மம்தாவுக்கு நம்பிக்கைக்குரியவர்களாக இருந்தவர்கள் அடுத்தடுத்து கட்சியில் இருந்து <a href="https://www.maalaimalar.com/news/national/mamata-banerjee-loses-cool-slaps-tmc-worker-amid-post-rally-chaos">விலகி </a>வருகின்றனர். </p><p>இந்த சூழலில் நேற்று பேஸ்புக் லைவில் மம்தா பானர்ஜி பேசியுள்ளார். </p><p>அதில், </p><p>"பாஜக, காவல்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ, சிஐடி உள்ளிட்டவற்றின் அழுத்தம் காரணமாகவோ அல்லது நிலுவையில் உள்ள வழக்குகள் காரணமாகவோ யாராவது கட்சியை விட்டு வெளியேற விரும்பினால், கைகூப்பி வேண்டுகிறேன், தயவுசெய்து ஜூலை 21க்கு முன்பே வெளியேறிவிடுங்கள். </p><p>நாம் கட்டியெழுப்பிய கட்சியின் பெயரைக் கெடுக்க வேண்டாம். நீங்கள் தாராளமாக வெளியேறலாம், இதனால் எங்கள் கட்சி பலவீனமடையாது.</p> <p>யார் வருகிறார்கள், யார் போகிறார்கள் என்பது முக்கியமல்ல. கட்சியில் நீடிப்பவர்களே எங்களின் உண்மையான பலம்.</p><p>ஜூலை 21க்குப் பிறகு நாங்கள் ஒரு புதிய தொடக்கத்தை ஏற்படுத்துவோம்" என்று தெரிவித்துள்ளார்.</p><h2>கோயல் மல்லிக்</h2><p>பிரபல நடிகையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பியுமான கோயல் மல்லிக் தனது மாநிலங்களவை எம்பி பதவியை நேற்று ராஜினாமா செய்துள்ளார்.</p><p>தன் பின்னர் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பூபேந்தர் யாதவைச் சந்தித்துப் பேசியுள்ளார். இது அவர் பாஜகவில் இணையப் போகிறார் என்ற ஊகங்களை வலுப்படுத்தியுள்ளது.</p><p>இருப்பினும், கோயல் மல்லிக்கின் இந்த முடிவு குறித்து பேசிய மம்தா பானர்ஜி, அவருக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p>  <p>மேலும், "1993, ஜூலை 21, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தியாகிகளின் குடும்பத்தினர் கூட மிரட்டப்பட்டு பாஜகவிற்கு அழைத்துச் செல்லப்படுவதாகக் கேள்விப்பட்டேன். அவர்கள் போகலாம், ஆனால் அவர்களின் இதயம் எப்போதும் நம்முடன்தான் இருக்கும் என்பது எனக்குத் தெரியும்." என தெரிவித்துள்ளார்.</p><h2>ஜூலை 21 - தியாகிகள் தினம்</h2><p>1993ல் மேற்கு வங்காளத்தில் ஜோதி பாசு தலைமையிலான இடதுசாரி அரசை எதிர்த்து அப்போது காங்கிரஸ் இளைஞர் அணித் தலைவியாக இருந்த மம்தா பானர்ஜி மாபெரும் பேரணி நடத்தினார்.</p><p>அப்போதைய தேர்தலில் முறைகேடுகள் நடப்பதைத் தடுக்க வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தலைமைச் செயலகம் நோக்கி இந்த பேரணி நடந்தது.</p><p>ஜூலை 21 அன்று கொல்கத்தாவின் வீதிகளில் லட்சக்கணக்கான இளைஞர்கள் திரண்டனர். போராட்டம் தீவிரமடைந்தபோது, கூட்டத்தைக் கலைக்கக் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் காங்கிரசை சேர்ந்த 13 தொண்டர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மமதா பானர்ஜியும் இதில் காயமடைந்தார்.</p><p>இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் இடதுசாரி அரசுக்கு எதிரான மம்தா பானர்ஜியின் போராட்டம் மாநிலம் தழுவிய அளவில் தீவிரமடைந்தது. பிற்காலத்தில் அவர் காங்கிரஸிலிருந்து பிரிந்து 1998 ல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைத் தொடங்க இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவமே அடித்தளமாக அமைந்தது.</p> ]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 17.7.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு வரவு இருமடங்காகும்</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-17-july-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-17-july-2026#comments</comments><guid isPermaLink="false">ac2ea788-62fc-414e-9ba6-5c5e376b3f40</guid><pubDate>Fri, 17 Jul 2026 01:45:49 +0000</pubDate><atom:updated>2026-07-17T01:45:49.781Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/03/13/27322352-rasi-3.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/03/13/27322352-rasi-3.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>ராசிபலன்(Rasipalan)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும் நாள். முடங்கிக்கிடந்த தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் குடும்ப பொறுப்புடன் நடந்து கொள்வர்.</p><h2>ரிஷபம்</h2><p>துயரங்கள் துள்ளி ஓடும் நாள். நேற்றைய சேமிப்பு இன்று செலவிற்கு கைகொடுக்கும். கொள்கைப் பிடிப்பை தளர்த்திக் கொள்வீர்கள்.</p><h2>மிதுனம்</h2><p>எதிர்பாராத வரவால் இனிமை சேரும் நாள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வரும். உடல்நலத்தில் கவனம் தேவை. நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.</p><h2>கடகம்</h2><p>வரவு இருமடங்காகும் நாள். பயணத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். வருங்கால நலன் கருதி திட்டமொன்றைத் தீட்டுவீர்கள்.</p> <h2>சிம்மம்</h2><p>அருகிலிருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். அரைகுறையாக நின்ற பணிகளை மீண்டும் தொடருவீர்கள். முன்னேற்றப்பாதை புலப்படும்.</p><h2>கன்னி</h2><p>முக்கியப் புள்ளிகளின் சந்திப்பு கிடைக்கும் நாள். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். சுபகாரியப் பேச்சுகள் முடிவிற்கு வரும்.</p><h2>துலாம்</h2><p>யோகமான நாள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக் கொள்வர்.</p><h2>விருச்சிகம்</h2><p>காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.</p> <h2>தனுசு</h2><p>நல்ல தகவல் கிடைக்கும் நாள். வியாபார விரோதம் விலகும். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். உத்தியோகத்திலிருந்த இடையூறுகள் அகலும்.</p><h2>மகரம்</h2><p>கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். நேர்மறைச் சிந்தனை தேவை. திடீர் செலவுகளை சமாளிக்க பிறரிடம் கைமாற்று வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம்.</p><h2>கும்பம்</h2><p>நன்மைகள் நடைபெறும் நாள். பெரிய மனிதர்களின் சந்திப்பு உண்டு. தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். நிலையான வருமானத்திற்கு வழியமைத்து கொள்வீர்கள்.</p><h2>மீனம்</h2><p>வம்பு வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாள். உடன்பிறப்புகள் உங்கள் உள்ளமறிந்து நடந்து கொள்வர். பாகப் பிரிவினைகள் சுமூகமாக முடியும்.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்று பெட்ரோல் - டீசல் விலை நிலவரம் </title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/fuel-price-hike-iran-war-and-hormuz-tensions-push-up-chennai-petrol-and-diesel-rates</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/fuel-price-hike-iran-war-and-hormuz-tensions-push-up-chennai-petrol-and-diesel-rates#comments</comments><guid isPermaLink="false">c34f5142-a657-4134-98bd-7a2bd10f3d01</guid><pubDate>Fri, 17 Jul 2026 01:33:20 +0000</pubDate><atom:updated>2026-07-17T01:33:20.919Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கச்சா எண்ணெய்,Crude oil,பெட்ரோல் டீசல் விலை,petrol diesel prices</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/n15pib15/petrol.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பெட்ரோல் - டீசல் விலை ]]></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல் - டீசல் விலை ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/n15pib15/petrol.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் போரினால் மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.</p><h2>எண்ணெய் நிறுவனங்கள்</h2><p>இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது. கச்சா எண்ணெய்யை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது.</p><p>அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.</p> <h2>பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்</h2><p>அந்த வகையில் இன்று (17.07.2026 - வெள்ளிக்கிழமை)க்கான பெட்ரோல், டீசல் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88">விலைப்பட்டியல் </a>வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ.99.55-க்கும் நேற்றைய நிலவரப்படி விற்பனை செய்யப்படுகிறது.</p><p>அதேவேளை, இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கச்சா எண்ணெய்</h2><p>இன்று சர்வதேச சந்தையில் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 85.362 டாலர் என விற்பனை ஆகி வருகிறது.</p><p>வரும் நாட்களில் போர் மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுவதால் விலை மேலும் உயரக்கூடும். இதனால் வாகன ஓட்டிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.</p><p>மத்திய அரசு உலக சந்தை நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 17 ஜூலை 2026: வளர்பிறை சதுர்த்தி விரதம்</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-17-july-2026-chaturthi-viratham</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-17-july-2026-chaturthi-viratham#comments</comments><guid isPermaLink="false">45644b6d-0a99-4811-978b-3f06ffc0725b</guid><pubDate>Fri, 17 Jul 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-07-17T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/09/09/18375563-vinayagar3.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pillaiyar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/09/09/18375563-vinayagar3.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆடி-1 (வெள்ளிக்கிழமை)</p><p>பிறை : வளர்பிறை</p><p>திதி :   திருதியை காலை 10.50 வரை பிறகு சதுர்த்தி</p><p>நட்சத்திரம் : மகம் இரவு 11.24 வரை பிறகு பூரம்</p><p>யோகம் :  மரண / சித்தயோகம்</p><p>ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை</p><p>எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை</p><p>சூலம் : மேற்கு</p><p>நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை</p> <h2>திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை</h2><p>வளர்பிறை சதுர்த்தி விரதம். தட்சிணாயன புண்ணிய காலம். தேரெழுந்தூர் ஸ்ரீ ஞானசம்பந்தர் புறப்பாடு. படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் பவனி. மிலட்டூர் ஸ்ரீ விநாயகப் பெருமான் புறப்பாடு. மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் வெள்ளி அன்ன வாகனத்தில் திருவீதியுலா. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமான் பால் அபிஷேகம். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. </p><p>பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர் புறப்பாடு. லால்குடி ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சனம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சனம். தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை தலங்களில் அபிஷேகம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு, திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - ஓய்வு</p><p>ரிஷபம் - கடமை</p><p>மிதுனம் - வரவு</p><p>கடகம் - ஜெயம்</p><p>சிம்மம் - கீர்த்தி</p><p>கன்னி - உதவி</p><p>துலாம் - கனிவு</p><p>விருச்சிகம் - பாராட்டு</p><p>தனுசு - உயர்வு</p><p>மகரம் - அன்பு</p><p>கும்பம் - லாபம்</p><p>மீனம் - திறமை</p> ]]></content:encoded></item><item><title>மியான்மரில் இருந்து தப்பி ரோஹிங்கியா அகதிகள் சென்ற படகுகள் விபத்து.. 500-க்கும் மேற்பட்டோர் பலி என அச்சம்</title><link>https://www.maalaimalar.com/news/world/rohingya-boat-tragedy-over-500-feared-dead-after-two-refugee-boats-vanish-off-myanmar-coast</link><comments>https://www.maalaimalar.com/news/world/rohingya-boat-tragedy-over-500-feared-dead-after-two-refugee-boats-vanish-off-myanmar-coast#comments</comments><guid isPermaLink="false">a3ed1e40-8c6b-411e-b31b-3006aac5e61d</guid><pubDate>Fri, 17 Jul 2026 01:07:24 +0000</pubDate><atom:updated>2026-07-17T01:07:24.969Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Myanmar,Boat Capsizes,படகு கவிழ்ந்து பலி,ரோஹிங்கியா அகதிகள்,Rohingya Refugees,மியான்மர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/116xaeyy/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ ரோஹிங்கியா அகதிகள் - கோப்புப் படம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ ரோஹிங்கியா அகதிகள் - கோப்புப் படம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/116xaeyy/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மியான்மரில் கடலில் 2 படகுகள் மாயமானதில் 500க்கும் மேற்பட்ட <a href="https://www.maalaimalar.com/topic/rohingya-refugees">ரோஹிங்கியா அகதிகள்</a> பலியாகியிருக்கலாம் என  அஞ்சப்படுகிறது. </p><p>ஐநா தகவல்படி, கடந்த ஜூன் மாத இறுதியில் மியான்மரின் மேற்கு ராகினே மாநிலத்திலிருந்து இரண்டு படகுகள் அகதிகளுடன் புறப்பட்டுள்ளன.</p><h2>விபத்து </h2><p>சுமார் 250 பயணிகளுடன் புறப்பட்ட முதல் படகு படகு, புறப்பட்ட சில நாட்களிலேயே கடலில் தொடர்பை இழந்து மாயமானது.</p><p>சுமார் 280 அகதிகளுடன் சென்ற இரண்டாவது படகு, கடந்த ஜூலை 8 அன்று மியான்மரின் ஆயேயர்வாடி கடற்கரைக்கு அருகே நடுக்கடலில் மூழ்கியதாக நம்பப்படுகிறது.</p><p>மியான்மரின் ராகினே மாநிலத்தில் நிலவி வரும் வன்முறைகளிலிருந்து தப்பித்து வேறு புகலிடம் தேடிச் சென்றவர்கள் இவர்கள்.   </p><p>அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என ஐநா அகதிகள் முகமை  மற்றும் சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு  ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் அச்சம் தெரிவித்துள்ளன.</p><h2>ரோஹிங்கியா அகதிகள்</h2><p>ரோஹிங்கியாக்கள் என்பவர்கள் மியான்மரின் ராகினே மாநிலத்தில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வரும் இஸ்லாமிய சிறுபான்மையினர் ஆவர்.</p><p>மியான்மர் அரசு இவர்களைத் தனது நாட்டின் அதிகாரப்பூர்வ பழங்குடி இனமாக ஏற்பதில்லை. மாறாக, வங்காளதேசத்திலிருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்றே கூறி வருகிறது.</p><p>கடந்த 1982ம் ஆண்டு மியான்மர் அரசு கொண்டு வந்த சட்டத்தின் மூலம் இவர்களின் குடியுரிமை முழுமையாகப் பறிக்கப்பட்டது.</p><p>இதனால் அவர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டு கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, திருமணம் மற்றும் சுதந்திரமாகப் பயணிக்கும் உரிமைகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர்.</p><h2>அரச வன்முறை - அகதிகள்</h2><p>மியான்மரின் அரச வன்முறைக்கு அஞ்சி, தற்போது அண்டை நாடான வங்கதேசத்தின் தற்காலிக முகாம்களில் மட்டும் சுமார் 12 லட்சம் ரோஹிங்கியாக்கள் அடைக்கலமாகியுள்ளனர்.</p><p>ஐநா அகதிகள் முகமையின் அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி, கடந்த 2025 டிசம்பர் 31 நிலவரப்படி இந்தியாவில் சுமார் 22,700 ரோஹிங்கியா அகதிகள் பதிவு செய்துள்ளனர்.</p><p>ஆனால், இந்திய அரசின் மதிப்பீட்டின்படி, ஐநாவிடம் பதிவு செய்யாதவர்களையும் சேர்த்து சுமார் 40,000 ரோஹிங்கியாக்கள் இந்தியாவில் வசித்து வருகின்றனர்.</p><p>இந்தியாவில் ரோஹிங்கியாக்களுக்கென அதிகாரப்பூர்வ அகதிகள் முகாம்கள் எதுவும் நடத்தப்படவில்லை என்றும், சட்டவிரோதமாகத் தங்கியுள்ளவர்களைக் கண்டறிந்து நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p>முகாம்களில் சர்வதேச மனிதாபிமான உதவிகள் குறைந்துவிட்டதாலும், போதிய வாழ்வாதாரம் இல்லாததாலும், அவர்கள் மலேசியா, இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு மரப் படகுகள் மூலம் ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொள்கின்றனர்.</p> <h2>மாயம் - மரணம்</h2><p>ஐநா தரவுகளின்படி, கடந்த 2025ம் ஆண்டில் மட்டும் அந்தமான் கடல் மற்றும் வங்காள விரிகுடாப் பகுதியில் சுமார் 900 ரோஹிங்கியா அகதிகள் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் அல்லது மாயமாகியுள்ளனர்.</p><p>2025ல் மட்டும் 6,500க்கும் மேற்பட்டோர் இத்தகைய ஆபத்தான பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>கொரோனா பாதிப்புக்கு ஒரே மாதத்தில் 4 பேர் உயிரிழப்பு... ஆந்திர சுகாதார ஆணையர் அதிர்ச்சி தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/national/andhra-pradesh-reports-4-covid-19-deaths-12-cases-in-less-than-a-month</link><comments>https://www.maalaimalar.com/news/national/andhra-pradesh-reports-4-covid-19-deaths-12-cases-in-less-than-a-month#comments</comments><guid isPermaLink="false">a0188026-01c9-4251-8226-7f1154761bde</guid><pubDate>Fri, 17 Jul 2026 00:33:50 +0000</pubDate><atom:updated>2026-07-17T00:33:50.057Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Andhra Pradesh,ஆந்திர பிரதேசம்,கொரோனா வைரஸ்,Covid-19</media:keywords><media:content height="512" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/29w3fe5t/Coronavirus.webp" width="767"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/29w3fe5t/Coronavirus.webp?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜூன் 26 முதல் ஜூலை 16 வரை மாநிலம் முழுவதும் 12 பேருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டது என்றும், அவர்களில் இணை நோய்கள் இருந்த நான்கு பேர் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தனர் என்று ஆந்திர பிரதேச மாநில சுகாதார ஆணையர் ஜி. வீரபாண்டியன் தெரிவித்தார்.</p><p>இறந்தவர்கள் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், சிறுநீரக பிரச்சினைகள் மற்றும் பிற நோய்கள் போன்ற கடுமையான இணை நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்று அவர் குறிப்பிட்டார்.</p><p><strong>4 உயிரிழப்புகள்:</strong></p><p>"மாநிலத்தில் ஆங்காங்கே கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. ஜூன் 26 முதல் ஜூலை 16 வரை, 12 பேருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டது, அவர்களில் நான்கு பேர் உயிரிழந்தனர்," என்று வீரபாண்டியன் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.</p><p>நான்கு மரணங்களில், மூன்று கடப்பா மாவட்டத்தை சேர்ந்தவர்களும், ஒன்று காக்கிநாடாவை சேர்ந்தவரும் ஆவர் என்று அவர் கூறினார்.</p><p>ஆணையரின் கூற்றுப்படி, ஆந்திர பிரதேச மாநிலத்தின் 2026-ஆம் ஆண்டின் முதல் கோவிட்-19 தொற்று கடப்பா மாவட்டத்தில் ஜூன் 26 அன்று பதிவானதுடன், ஜூலை 1 முதல் 16-ஆம் தேதிக்குள் மேலும் 11 தொற்றுகள் பதிவாகியுள்ளன.</p><p><strong>நோய் தொற்று:</strong></p><p>நோய்த்தொற்று உள்ளவர்களுடன் நெருக்கமாக பழகிய பின்னர் இருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது. மேலும், அதிகபட்சமாக கடப்பா மாவட்டத்தில் எட்டு பேரும், அதைத் தொடர்ந்து குண்டூரில் இரண்டு பேரும், விசாகப்பட்டினம் மற்றும் காக்கிநாடாவில் தலா ஒருவருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p>"இந்த வழக்குகள் அனைத்தும் ஒரே இடத்திலிருந்து ஏற்பட்ட ஒரு கொத்தாக அல்லாமல், வெவ்வேறு மண்டலங்களில் இருந்து பதிவாகியுள்ளன," என்று வீரபாண்டியன் கூறினார்.</p><p>மேலும், ஜூன் 26 முதல் ஜூலை 15 வரை தென்னிந்திய மாநிலத்தில் 67 கோவிட்-19 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அவற்றில் 11 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டதாகவும், 12-வது தொற்று தமிழகத்தின் வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் (சிஎம்சி) கண்டறியப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>புரி ரத யாத்திரையில் 2 பேர் உயிரிழப்பு... கூட்ட நெரிசல் குறித்து ஒடிசா அரசு விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/national/odisha-government-confirms-2-deaths-denies-stampede-at-puri-rath-yatra</link><comments>https://www.maalaimalar.com/news/national/odisha-government-confirms-2-deaths-denies-stampede-at-puri-rath-yatra#comments</comments><guid isPermaLink="false">240d36ae-0b73-432a-a1cf-0998d761a581</guid><pubDate>Thu, 16 Jul 2026 23:38:28 +0000</pubDate><atom:updated>2026-07-16T23:38:28.505Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஒடிசா,Odisha,stampede,கூட்ட நெரிசல்,Puri Rath Yatra,புரி ரத யாத்திரை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/a8p79wgp/puri.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/a8p79wgp/puri.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாநிலம், நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான யாத்ரீகர்களின் பங்கேற்புடன், புனித கடற்கரை நகரமான புரியில் தொடங்கிய வருடாந்திர ரத யாத்திரை விழாவின் போது, ​​இரண்டு பக்தர்கள் உயிரிழந்ததை ஒடிசா அரசு உறுதி செய்துள்ளது; ஆனால், கூட்ட நெரிசல் போன்ற சம்பவம் எதுவும் நடந்ததாக வெளியான செய்திகளை அது மறுத்துள்ளது.</p><p>முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, மகாபிரபு ஸ்ரீ ஜெகந்நாத், மகாபிரபு பாலபத்ரா, தேவி சுபத்ரா மற்றும் சக்ரராஜ் சுதர்சனன் ஆகியோரின் உலகப் புகழ்பெற்ற ரத யாத்திரை 2026, வியாழக்கிழமை புரியில் மிகுந்த மத உணர்வு, பக்தி மற்றும் முன்மாதிரியான நிர்வாக ஒருங்கிணைப்புடன் கொண்டாடப்பட்டது.</p><p><strong>ஒன்பது லட்சம் பக்தர்கள்:</strong></p><p>மேலும், நாள் முழுவதும் தொடர் மழை மற்றும் மோசமான வானிலை நிலவியபோதிலும், சுமார் எட்டு முதல் ஒன்பது லட்சம் பக்தர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டது, தெய்வங்கள் மீது பக்தர்கள் கொண்டுள்ள இணையற்ற நம்பிக்கையை பிரதிபலிப்பதாக அது மேலும் தெரிவித்தது.</p><p>மூன்று தேர்களை இழுப்பது உட்பட, திருவிழா தொடர்பான அனைத்து புனித சடங்குகளும் திட்டமிட்டபடி சுமுகமாக நடத்தப்பட்டன. கோவர்தன பீடாதிபதி ஜகத்குரு சங்கராச்சாரியாரும் தேர்களுக்கு வந்து பிரார்த்தனை செய்தார். திருவிழாவை வெற்றிகரமாக நடத்துவதற்காக மாநில அரசு விரிவான மற்றும் பல அடுக்கு ஏற்பாடுகளைச் செய்திருந்தது," என்று முதலமைச்சர் அலுவலகம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><p>காவல்துறை, சுகாதாரம், தீயணைப்புத் துறை, ஒடிசா பேரிடர் விரைவு நடவடிக்கைப் படை (ODRAF), தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), போக்குவரத்து, நகராட்சி நிர்வாகம், பொது சுகாதார பொறியியல், எரிசக்தி மற்றும் பிற துறை சார்ந்த அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கி, முன்கூட்டியே விரிவான திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டதாக மாநில அரசு மேலும் தெரிவித்தது.</p>]]></content:encoded></item><item><title>அன்பே டயானா படக்குழுவை பாராட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-sivakarthikeyan-praises-anbe-diana-movie-team</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-sivakarthikeyan-praises-anbe-diana-movie-team#comments</comments><guid isPermaLink="false">1714d7a0-f16d-4b2d-a12f-3e794125acf6</guid><pubDate>Thu, 16 Jul 2026 22:46:40 +0000</pubDate><atom:updated>2026-07-16T22:46:40.174Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>sivakarthikeyan,சிவகார்த்திகேயன்,Anbe Diana,அன்பே டயானா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/mbdjrpgv/ad-sk.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/mbdjrpgv/ad-sk.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழில் "ஜமா" திரைப்படம் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் பாரி இளவழகன். இவர் தற்போது இயக்கி, நடித்துள்ள திரைப்படம் "அன்பே டயானா." </p><p>இந்த திரைப்படத்தின் ரிலீசை ஒட்டி நடிகர் சிவகார்த்திகேயன் "அன்பே டயானா" படக்குழுவை நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார்.</p><p>மில்லியன் டாலர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் இன்று (ஜூலை 17) வெளியாகிறது. இந்தப் படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார். </p><p>முன்னதாக அன்பே டயானா படத்தை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் படக்குழுவை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இது குறித்து படக்குழு சார்பில்  சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.</p><p>அந்த பதிவில், "நீங்கள் உயர்வாக கருதும் ஒருவரிடம் இருந்து மனமார்ந்த பாராட்டு பெறுவதை விட சிறந்த வெகுமதி வேறு எதுவும் இல்லை," என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>அன்பே டயானா திரைப்படத்தில் இயக்குநர் பாரி இளவழகன் இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் ரம்யா ரங்கநதன், சேத்தன், ரோஜா, பரிதாபங்கள் கோபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ராகுல் டிராவிட்-ஐ முந்திய விராட் கோலி</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/virat-kohli-surpasses-rahul-dravid-to-script-historic-odi-milestone</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/virat-kohli-surpasses-rahul-dravid-to-script-historic-odi-milestone#comments</comments><guid isPermaLink="false">fd0b676a-cfaa-4fd2-9353-698388d473c2</guid><pubDate>Thu, 16 Jul 2026 21:50:53 +0000</pubDate><atom:updated>2026-07-16T21:50:53.536Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Virat Kohli,விராட் கோலி,Rahul Dravid,ராகுல் டிராவிட்,ENGvsIND</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/u3o468zw/vk-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/u3o468zw/vk-1.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி புதிய மைல்கல் சாதனையை படைத்துள்ளார். SENA (South Africa, England, New Zealand &amp; Australia) நாடுகளில் அதிக அரைசதங்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். </p><p>இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது விராட் கோலி அடித்த அரைசதம் SENA நாடுகளில் அவர் அடித்த 30-ஆவது அரைசதம் ஆகும். </p><p>இதன் மூலம் விராட் கோலி SENA நாடுகளில் அதிக அரைசதம் அடித்த இந்திய வீரர் ஆகியுள்ளார். இதன் மூலம் இவர் ராகுல் டிராவிட் (29), சச்சின் டெண்டுல்கர் (25), எம்எஸ் தோனி (24) மற்றும் முகமது அசாருதீன் (17) ஆகியோரை முந்தியுள்ளார்.</p><p>கார்டிஃப்-இல் நடைபெறும் 2-ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி 66 பந்துகளில் 65 ரன்களை குவித்தார். இந்த அரைசதம் மூலம் ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் விவ் ரிச்சர்ட்ஸ்-ஐ சமன் செய்தார்.</p><p>இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 233 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்தியா சார்பில் விராட் கோலியை தொடர்ந்து, ஸ்ரேயஸ் அய்யர் 66 ரன்களை குவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஹார்முஸ் நீரிணையை &apos;சிவப்புக் கோடு&apos; என்று அறிவித்த ஈரான்... தாக்குதலை தீவிரப்படுத்தும் அமெரிக்கா..!</title><link>https://www.maalaimalar.com/news/world/us-expands-attacks-on-iran</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-expands-attacks-on-iran#comments</comments><guid isPermaLink="false">78a6118f-ca5d-47f5-8b21-985ad55e4660</guid><pubDate>Thu, 16 Jul 2026 20:58:55 +0000</pubDate><atom:updated>2026-07-16T20:58:55.789Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,ஈரான்,Iran,us,Strait of Horuz</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-08/pnpxsy4v/us-iran-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-08/pnpxsy4v/us-iran-1.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் மீதான தாக்குதல்களை அமெரிக்கா நேற்று (வியாழக்கிழமை) தீவிரப்படுத்தியது. வடக்கு பகுதிகள் வரை தாக்குதல்களை நடத்தியதுடன், இஸ்லாமிய குடியரசான ஈரான் மீதான கடற்படை முற்றுகையை மீற முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட கப்பல் ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்தியது. </p><p>இதற்கு பதிலடியாக, இப்பகுதியில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியது; மேலும் தனது தாக்குதல்கள் தீவிரமடையக்கூடும் என்றும் எச்சரித்தது.</p><p><strong>போர்நிறுத்தம் முறிவு:</strong></p><p>கடந்த மாதம் ஒப்புக்கொள்ளப்பட்ட தற்காலிகப் போர்நிறுத்தம் முறிந்துவிட்டது. ஹார்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டிற்காக அமெரிக்காவும் ஈரானும் மோதி வருவதால், இப்பகுதி கடந்த சில நாட்களாக இரு தரப்பு தாக்குதல்களையும் சந்தித்து வருகிறது. அமெரிக்க தாக்குதல்களில் 35-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஈரானிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.</p><p>சமீபத்திய வன்முறை சுழற்சியில் முதன்முறையாக, ஈரானின் தலைநகரான தெஹ்ரானை சுற்றியுள்ள பகுதிகளிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன; இது அமெரிக்காவின் தாக்குதல் இலக்குகள் விரிவடைந்து வருவதை காட்டுகிறது. கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதியன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது போரைத் தொடங்கியபோது, ​​தெஹ்ரான் கப்பல் போக்குவரத்திற்கு அந்த நீரிணையை மூடியது.</p><p><strong>கச்சா எண்ணெய்:</strong></p><p>இந்த நடவடிக்கை கச்சா எண்ணெய் விலையை வெகுவாக உயர்த்தியதுடன், பேச்சுவார்த்தைகளில் ஈரானுக்கு முக்கிய செல்வாக்கையும் அளித்தது.</p><p>ஈரானிய ராணுவத்தின் 'கதம் அல்-அன்பியா' மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் கர்னல் எப்ராஹிம் ஜோல்ஃபகாரி ஒரு எச்சரிக்கையை விடுத்தார்.</p><p><strong>டிரம்ப் எச்சரிக்கை:</strong></p><p>ஈரானின் பாலங்கள் மற்றும் மின் நிலையங்களை தாக்கக்கூடும் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் மீண்டும் விடுத்து வரும் எச்சரிக்கைகளை அமெரிக்கா செயல்படுத்தினால், இப்பகுதியில் உள்ள "அனைத்து உள்கட்டமைப்புகள்" மீதும் ஈரான் பரவலான தாக்குதல்களை நடத்தக்கூடும் என்று அவர் கூறினார்.</p><p>"எந்த சூழ்நிலையிலும், எந்த வகையிலும், ஒரு வெளிநாட்டு மற்றும் இப்பகுதிக்கு அப்பாற்பட்ட நாடான அமெரிக்கா ஹார்முஸ் நீரிணையில் தலையிட நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இது ஈரானின் அசைக்க முடியாத சிவப்புக் கோடு (red line) ஆகும்," என்று அவர் மேலும் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>ஜோ ரூட் அபாரம்... 2-ஆவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/eng-beat-ind-in-2nd-odi</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/eng-beat-ind-in-2nd-odi#comments</comments><guid isPermaLink="false">2df6c918-0201-4525-a84e-ab3bbd0967b4</guid><pubDate>Thu, 16 Jul 2026 20:11:13 +0000</pubDate><atom:updated>2026-07-16T20:11:13.294Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா,ENGvsIND,இங்கிலாந்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/71sz6l4p/eng-win-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/71sz6l4p/eng-win-1.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இங்கிலாந்து நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு  அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கார்டிஃப்-இல் நடந்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. </p><p>அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தொடக்க வீரர்களான ரோகித் சர்மா (26), சுப்மன் கில் (31) ரன்களை எடுத்தனர். அடுத்து களமிறங்கிய விராட் கோலி 65 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். </p><p><strong>இந்திய அணி ஆல்-அவுட்:</strong></p><p>அடுத்து களமிறங்கியவர்களில் ஸ்ரேயஸ் அய்யர் 66 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இவர்களை தொடர்ந்து களமிறங்கியவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 44 ஓவர்கள் மிடிவில் 233 ரன்களில் ஆட்டமிழந்தது.</p><p>இங்கிலாந்து சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஆர்ச்சர் மற்றும் அட்கின்சன் தலா 3 விக்கெட்டுகளையும், சகிப் முகமது இரு விக்கெட்டுகளையும், சாம் கர்ரன் மற்றும் வில் ஜாக்ஸ் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.</p><p><strong>ஜோ ரூட் அபாரம்:</strong></p><p>234 ரன்களை துரத்திய இங்கிலாந்து அணி ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்தது. எனினும், அந்த அணியின் ஜோ ரூட் சிறப்பாக ஆடி 99 ரன்களை குவிததார். இவர் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த நிலையில், கேப்டன் ஹேரி ப்ரூக் 16 ரன்களும், சாம் கர்ரன் 26 ரன்களும், ஜோஸ் பட்லர் 17 ரன்களும், வில் ஜாக்ஸ் 30 ரன்கள், கஸ் அட்கின்சன் 23 ரன்களும் குவித்தனர்.</p><p>இங்கிலாந்து அணி 44.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 235 ரன்களை குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 சமனாகியுள்ளது. இரு அணிகள் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி வருகிற 19-ஆம்தேதி நடைபெற இருக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>அமைச்சரவை விரிவாக்கம்: காங்கிரஸ் மேலிடத் தலைவர்களுடன் சிவகுமார் மற்றும் சித்தராமையா ஆலோசனை</title><link>https://www.maalaimalar.com/news/national/karnataka-cm-siddaramaiah-discuss-cabinet-expansion-with-top-cong-leaders</link><comments>https://www.maalaimalar.com/news/national/karnataka-cm-siddaramaiah-discuss-cabinet-expansion-with-top-cong-leaders#comments</comments><guid isPermaLink="false">90943c4a-81e4-4fd3-94ee-0c9228b93da5</guid><pubDate>Thu, 16 Jul 2026 19:06:23 +0000</pubDate><atom:updated>2026-07-16T19:06:23.185Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சித்தராமையா,கர்நாடகா,Siddaramaiah,Karnataka</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/y56bib4t/ka-cm.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/y56bib4t/ka-cm.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் மற்றும்  முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா ஆகியோர், மாநில அமைச்சரவை விரிவாக்கம் குறித்து காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர். இந்த விரிவாக்கம் அடுத்த சட்டமன்ற கூட்டத்தொடருக்கு முன்னதாகவே நடைபெற வாய்ப்புள்ளது.</p><p>இந்த இரு தலைவர்களும் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்ததுடன், மாநிலத்திற்கான அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (AICC) பொறுப்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலாவையும் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.</p><p><strong>அமைச்சரவை விரிவாக்கம்:</strong></p><p>இருப்பினும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவசரமாக கர்நாடகாவுக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவரால் சிவகுமார் மற்றும் சித்தராமையாவை சந்திக்க முடியவில்லை.</p><p>"ஆலோசனைகள் இப்போது தான் தொடங்கியுள்ளன. இவை ஆரம்பக்கட்ட ஆலோசனைகள் தான். விரைவில் கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும். கர்நாடக அமைச்சரவையில், சட்டமன்ற சபாநாயகர் பதவி தவிர, 20 இடங்கள் காலியாக உள்ளன. அனைத்து காலி இடங்களையும் நிரப்ப முயற்சி மேற்கொள்ளப்படும்," என்று கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் சுர்ஜேவாலா கூறினார்.</p><p><strong>ஆலோசனை:</strong></p><p>விரிவாக்கம் எப்போது நடைபெறும் என்று கேட்டதற்கு, ஆகஸ்ட் 6-ஆம் தேதி தொடங்கவுள்ள சட்டமன்ற கூட்டத்தொடருக்கு முன்னதாகவே அது நடைபெற வாய்ப்புள்ளதாக அவர் கூறினார்.</p><p>கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.கே. ஹரிபிரசாத் ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். காங்கிரஸ் தலைவர் கார்கே அவசரமாக பெங்களூருவுக்கு செல்ல வேண்டியிருந்ததால், ஓரிரு நாட்களில் ஆலோசனைகள் மீண்டும் தொடரும் என்று அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.</p><p>காங்கிரஸ் தலைவர் திரும்பியதும், மாநில காங்கிரஸ் தலைவர்கள் மேலும் ஆலோசனை நடத்துவார்கள் என்று ஹரிபிரசாத் தெரிவித்தார்.</p><p>ராகுல் காந்தியுடனான சந்திப்புக்குப் பிறகு, சிவகுமார் மற்றும் சித்தராமையா ஆகியோர் சுர்ஜேவாலாவைச் சந்தித்து, அமைச்சரவையில் சேர்க்கப்படக்கூடிய வேட்பாளர்கள் குறித்து விவாதித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>NEET-UG results: நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு- 19 பேர் 720-க்கு 700 மதிப்பெண்கள் பெற்று அசத்தல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-ug-results-out-now-19-candidates-score-700-out-of-720</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-ug-results-out-now-19-candidates-score-700-out-of-720#comments</comments><guid isPermaLink="false">3f74cdf4-5716-4ca9-857b-3dd8d3d6a075</guid><pubDate>Thu, 16 Jul 2026 17:21:04 +0000</pubDate><atom:updated>2026-07-16T17:21:04.735Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நீட் தேர்வு,Neet exam,நீட் தேர்வு முடிவுகள்,NEET-UG results</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-05-22/1c57vjb8/tn-17.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ நீட் தேர்வு]]></media:title><media:description type="html"><![CDATA[ நீட் தேர்வு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-05-22/1c57vjb8/tn-17.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேசியத் தேர்வுகள் முகமை (NTA) இன்று (வியாழக்கிழமை) நீட் இளநிலை (NEET UG 2026) தேர்வு முடிவுகளை வெளியிட்டது. இதில் நாடு முழுவதும் உள்ள இளநிலை மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ் (AYUSH) மற்றும் அது சார்ந்த படிப்புகளில் சேர்வதற்கு 11.21 லட்சம் தேர்வர்கள் தகுதி பெற்றுள்ளனர். </p><p>மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை மற்றும் கலந்தாய்வு அட்டவணை திட்டமிட்டபடி நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு எழுதியவர்கள் இப்போது neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து தங்கள் மதிப்பெண் பட்டியல்களை (scorecards) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். </p><p><strong>முழு பட்டியல்:</strong></p><p>அகில இந்திய தரவரிசை பெற்றவர்கள், மாநில அளவில் முதலிடம் பிடித்தவர்கள், பிரிவு வாரியாக முதலிடம் பிடித்தவர்கள், தகுதி பெறுவதற்கான கட்-ஆஃப் (cut-off) மதிப்பெண்கள் மற்றும் மொழி வாரியான பங்கேற்பு விவரங்கள் அடங்கிய பட்டியல்களையும் NTA வெளியிட்டுள்ளது.</p><p>ஜூன் 21-ஆம் தேதியன்று நடைபெற்ற நீட் 2026 மறுதேர்வில், நாடு முழுவதும் 551 நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள 14 நகரங்களில் அமைக்கப்பட்ட 5,440 தேர்வு மையங்களில் சுமார் 20 லட்சம் தேர்வர்கள் பங்கேற்றனர்.</p><p><strong>பெண்கள் ஆதிக்கம்:</strong></p><p>இத்தேர்வு ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, மராத்தி மற்றும் உருது உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்பட்டது. தகுதி பெற்றவர்களில் 58 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள் ஆவர்; ஆண்களை விடப் பெண்களே அதிக அளவில் தகுதி பெற்றுள்ளனர்.</p><p><strong>சிறந்த மதிப்பெண் பெற்றவர்கள்:</strong></p><p>பஞ்சாப்பை சேர்ந்த ஆர்யன் குப்தா மற்றும் ஹரியானாவை சேர்ந்த பன்சுல் பன்சால் ஆகியோர் 720-க்கு 715 மதிப்பெண்களை பெற்று கூட்டாக முதலிடத்தைப் பிடித்தனர்.</p><p><strong>NTA-வின் தகவலின்படி:</strong></p><ul><li><p>19 தேர்வர்கள் 700-க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றுள்ளனர்</p></li><li><p>138 தேர்வர்கள் 690-க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றுள்ளனர்</p></li><li><p>1,492 தேர்வர்கள் 650 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களை பெற்றுள்ளனர்</p></li><li><p>10,160 தேர்வர்கள் 600 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களை பெற்றுள்ளனர்</p></li><li><p>90,780 தேர்வர்கள் 500 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களை பெற்றுள்ளனர்</p></li></ul>]]></content:encoded></item><item><title>ஹரியானா, சண்டிகர் மக்களை காண ஆவலுடன் காத்திருக்கிறேன் - பிரதமர் மோடி</title><link>https://www.maalaimalar.com/news/national/looking-forward-to-being-among-people-of-haryana-chandigarh-punjab-said-pm-modi</link><comments>https://www.maalaimalar.com/news/national/looking-forward-to-being-among-people-of-haryana-chandigarh-punjab-said-pm-modi#comments</comments><guid isPermaLink="false">a1f16cc5-9391-4ad6-9c59-73fbeeccec86</guid><pubDate>Thu, 16 Jul 2026 17:12:26 +0000</pubDate><atom:updated>2026-07-16T17:12:26.962Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-21/fzdjthpk/PMModi0001.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரதமர் மோடி]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர் மோடி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-21/fzdjthpk/PMModi0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ரெயில்வே, சுகாதாரம், போக்குவரத்து மற்றும் கல்வி தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நாளை (வெள்ளிக்கிழமை) ஹரியானா, சண்டிகர் மற்றும் பஞ்சாப் ஆகிய இடங்களுக்கு செல்ல ஆவலுடன் காத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இந்த திட்டங்கள் மக்களின், குறிப்பாக இளைஞர்களின் வாழ்க்கையில் மிக சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.</p><p>இந்த பயணத்தின்போது, ​​26,000 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவார் மற்றும் நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.</p><p>அத்துடன் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரெயிலையும் கொடியசைத்து தொடங்கி வைப்பார். மேலும், சண்டிகர் மற்றும் ஹரியானாவின் ஜிந்த் ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களிலும் உரையாற்றுகிறார். </p><p><strong>எக்ஸ் பதிவு:</strong></p><p>"ரெயில்வே, சுகாதாரம், கலாச்சாரம், போக்குவரத்து, கல்வி மற்றும் பல துறைகள் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஹரியானா, சண்டிகர் மற்றும் பஞ்சாப் மக்களின் மத்தியில் இருக்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். </p><p>இத்திட்டங்கள் மக்களின், குறிப்பாக நமது 'யுவ சக்தி'யின் (இளைஞர் சக்தியின்) வாழ்க்கையில் மிக சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்," என்று பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p>ஜிந்த் நகரிலிருந்து, ஜிந்த் மற்றும் சோனிபட் ஆகியவற்றை இணைக்கும் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.</p><p><strong>ஹைட்ரஜன் ரெயில்:</strong></p><p>"இத்தகைய ரெயில்களை கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைகிறது. ரெயில்வே துறையில் தூய்மையான தொழில்நுட்பத்தை இந்தியா ஏற்றுக்கொள்வதை உறுதி செய்வதில் இது முக்கிய பங்காற்றும்," என்று அவர் கூறினார்.</p><p>ஜிந்த் நகரில் உள்ள ஏகலவ்யா மைதானத்தில், சுமார் 14,700 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, அவற்றை தொடங்கி வைக்கிறார்.</p><p>ஜிந்த் நகரில் பிற பணிகளும் தொடங்கி வைக்கப்படும் என்றும், அவற்றில் டெல்லி-அமிர்தசரஸ், அம்பாலா-கலா ஆம்ப் (Kala Amb), ஜிந்த்-கோஹானா (Gohana) ஆகியவற்றுக்கு இடையேயான போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதற்கான சாலை மற்றும் ரெயில்வே திட்டங்கள் அடங்கும் என்றும் மோடி குறிப்பிட்டார்.</p><p><strong>வளர்ச்சிப் பணி:</strong></p><p>சண்டிகரில் இருப்பது எப்போதும் மகிழ்ச்சியளிக்கிறது. நாளைய நிகழ்ச்சியின் போது, ​​4,700 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் தொடங்கி வைக்கப்படும் அல்லது அவற்றுக்கு அடிக்கல் நாட்டப்படும்.</p><p>குறிப்பிடத்தக்க பணிகளில், சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (PGIMER) மேம்பட்ட தாய்-சேய் நல மையம் மற்றும் மேம்பட்ட நரம்பியல் அறிவியல் மையம் ஆகியவற்றை தொடங்கி வைப்பதும் அடங்கும். </p><p>இந்த சாலை திட்டங்கள் பஞ்சாப், ஹரியானா, இமாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகியவற்றுக்கு இடையேயான போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும் என்று அவர் கூறினார்.</p><p><strong>தனித்துப் போட்டி:</strong></p><p>ஜலந்தரில் நடைபெறவுள்ள பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பஞ்சாப் மக்களுடன் கலந்துகொள்ள ஆவலுடன் காத்திருப்பதாக பிரதமர் தெரிவித்தார். 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலைத் தனித்துப் போட்டியிட பா.ஜ.க. தயாராகி வரும் நிலையில், பிரதமர் மோடியின் இந்தப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.</p><p>"பஞ்சாப் மாநிலம் பா.ஜ.க.வை நம்பிக்கையுடன் பார்க்கிறது. எங்கள் கட்சியின் வளர்ச்சித் திட்டங்கள், பஞ்சாபில் உள்ள எனது சகோதர-சகோதரிகளுக்கு வளமான வாழ்வையும், 'எளிதான வாழ்க்கை முறையையும்' உறுதி செய்யும்," என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>‘ராகினி 3’ முதல் நாள் படப்பிடிப்பு.. நடிகை தமன்னா எடுத்த புகைப்படம் வைரல்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ragini-3-tamanna-viral-shoot-photo-first-day-filming-still-creates-social-media-buzz</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ragini-3-tamanna-viral-shoot-photo-first-day-filming-still-creates-social-media-buzz#comments</comments><guid isPermaLink="false">69decc21-6e56-48ed-b7ff-7e7a39698c70</guid><pubDate>Thu, 16 Jul 2026 16:43:00 +0000</pubDate><atom:updated>2026-07-16T16:43:00.540Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamannaah,நடிகை தமன்னா,Ragini 3,Ragini mms,ராகினி 3,ராகினி எம்எம்எஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/6rqicnnk/Untitled-design-19.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ragini 3 Tamanna viral shoot photo]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/6rqicnnk/Untitled-design-19.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாலிவுட்டில் வெளியாகி வெற்றியடைந்த ராகினி எம்எம்எஸ் திரைப்படத்தின் மூன்றாவது பாகத்தின் முதல் நாள் படப்பிடிப்பு தளத்தில் நடிகை தமன்னா எடுத்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.</p><p>2011 அன்று வெளியான ராகினி எம்எம்எஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டானது. </p><p>இதைத்தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு வெளியான ராகினி எம்எம்எஸ் 2-ம் பாகத்தில் நடிகை சன்னி லியோன் நடித்தார். </p><p>இதன் வெற்றியை தொடர்ந்து தற்போது சஷாங்கா கோஷ் இயக்கத்தில் அமானுஷ்ய திரில்லராக உருவாகும் ‘ராகினி 3’ படத்தை, பாலாஜி மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது.</p><p>ஷோபா கபூர், ஏக்தா ஆர் கபூர் மற்றும் அமர் புடாலா ஆகியோருடன் இணைந்து குமார் தெளரானி மற்றும் கிரிஷ் குமார் உள்ளிட்டோர் இந்த படத்தை தயாரிக்க உள்ளனர்.</p><p>இந்த படத்தில் நடிகை தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த தொடர் இரவு நேரத்தில் நிகழும் திகில் திரைப்படமாக, காதலர்கள் ரசிக்கும் பொழுதுபோக்கு அம்சமாக உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/wsfr2zti/Untitled-design-20.jpg" /></figure><p>இந்நிலையில் முதல் நாள் படப்பிடிப்பு தளத்தில் நடிகை தமன்னா எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.</p><p>நடிகை தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தமாகியுள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் அதிகரித்துள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>