<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 05 Sep 2026 21:20:35 +0000</lastBuildDate><item><title>ஆட்சி மாறியதால் கடிக்காதே என கொசுக்களிடம் சொல்ல முடியாது.. டெங்கு பரவல் குறித்து மேற்கு வங்க அமைச்சர் கருத்து</title><link>https://www.maalaimalar.com/news/national/you-cannot-tell-mosquitoes-not-to-bite-just-because-the-government-has-changedwest-bengal-ministers-remarks-on-the-spread-of-dengue</link><comments>https://www.maalaimalar.com/news/national/you-cannot-tell-mosquitoes-not-to-bite-just-because-the-government-has-changedwest-bengal-ministers-remarks-on-the-spread-of-dengue#comments</comments><guid isPermaLink="false">28ec3401-d9a2-4e69-a4e9-0f45ba2486ca</guid><pubDate>Sat, 05 Sep 2026 20:51:52 +0000</pubDate><atom:updated>2026-09-05T20:51:52.570Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மேற்கு வங்கம்,சுவேந்து அதிகாரி,Suvendu Adhikari,dengue fever,west bengal,டெங்கு காய்ச்சல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/y4p9hr74/tn-4.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மேற்கு வங்க அமைச்சர்]]></media:title><media:description type="html"><![CDATA[ மேற்கு வங்க அமைச்சர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/y4p9hr74/tn-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்கத்தில் கொசுக்களால் பரவும் டெங்கு உள்ளிட்ட நோய்களின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அம்மாநில அமைச்சர் அக்னிமித்ரா பால் பேசியுள்ள கருத்து விவாதபொறுப்பாகி வருகிறது.</p><p>சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு பின் மேற்கு வங்கத்தில் முதல்வர் <a href="https://www.maalaimalar.com/topic/suvendu-adhikari">சுவேந்து அதிகாரி </a>தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது அமைச்சரவையில் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக அக்னிமித்ரா பால் உள்ளார்.</p><p>செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்த அக்னிமித்ரா பால், "அரசாங்கம் மாறிவிட்டது என்பதற்காக மட்டும் கொசுக்களை கடிக்காதே என்று சொல்ல முடியாது" என்றார்.</p><p>கொசுக்களை அடக்க முடியாது என்பதால், இந்தச் சூழ்நிலையை சமாளிக்க அரசாங்கம் வேறு வழிகளில் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர் மேலும் கூறினார்.</p><h2>டெங்கு பரவல்</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">மேற்கு வங்கத்தில்</a> கொசுக்கடி காரணமாக டெங்கு காய்ச்சலின் தாக்கம் தீவிரமாக உள்ளது. கடந்த சில வாரங்களில் மட்டும் 4,000 க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>நிலைமை கட்டுப்பாட்டிற்குள் உள்ளதாகவும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது என்றும் முதலமைச்சர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.</p><p>டெங்கு பரவல் காலத்தில் மாணவர்கள் உடல் முழுவதையும் மூடும் வகையில் ஆடைகளை அணிந்து பள்ளிக்கு வர அனுமதிக்க வேண்டும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சரத்வத் முகர்ஜி பள்ளிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.</p> <h2>அக்னிமித்ரா பால் சர்ச்சை</h2><p>கடந்த வாரம், கொல்கத்தாவின் பார்க் ஸ்ட்ரீட் பகுதியில் நடைபாதையில் தனது குழந்தைக்குப் பால் சூடாக்கிக் கொண்டிருந்த ஒரு வீடற்ற பெண்ணை அக்னிமித்ரா பால் திட்டும் காணொளி ஒன்று வெளியானது.</p><p>"நடைபாதையில் குழந்தைக்குப் பால் சூடாக்குகிறாயா? பார்க் ஸ்ட்ரீட்டிலா? இங்கே குடும்பம் நடத்த உனக்கு யார் அனுமதி கொடுத்தது?" என்று பால் கேட்பது அந்தக் காணொளியில் இடம்பெற்றிந்தது. பின்னர் கொல்கத்தா காவல்த்துறையினர் அந்த குடும்பத்தினரை அங்கிருந்து விரட்டியதும் விமர்சனத்துக்கு உள்ளானது.</p><p>அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, முதலமைச்சர் சுவேந்து அதிகாரி நேரில் சென்று அந்தப் பெண்ணை சந்தித்து இருப்பிடம் வழங்குவதாக உறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>மசூதி இடிப்பு - உத்தரப் பிரதேசத்தில் வெடித்த அரசியல் சர்ச்சை</title><link>https://www.maalaimalar.com/news/national/early-morning-stealth-mosque-demolition-political-controversy-erupts-in-uttar-pradesh</link><comments>https://www.maalaimalar.com/news/national/early-morning-stealth-mosque-demolition-political-controversy-erupts-in-uttar-pradesh#comments</comments><guid isPermaLink="false">32d4d7df-82cd-42a3-a059-057231a40b83</guid><pubDate>Sat, 05 Sep 2026 19:58:57 +0000</pubDate><atom:updated>2026-09-05T19:58:57.720Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Uttar Pradesh,அகிலேஷ் யாதவ்,Akhilesh Yadav,Yogi Adityanath,உத்தரப் பிரதேசம்,யோகி ஆதித்யநாத்,மசூதி இடிப்பு,Mosque demolition</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/vjnliy94/tn-1.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அகிலேஷ் யாதவ், மசூதி இடிப்பு, யோகி ]]></media:title><media:description type="html"><![CDATA[ அகிலேஷ் யாதவ், மசூதி இடிப்பு, யோகி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/vjnliy94/tn-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரப் பிரதேசத்தின் சகாரன்பூரில் நேற்று அதிகாலையில் மசூதி ஒன்று இடிக்கப்பட்ட விவகாரம் அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">உத்தரப் பிரதேச </a>மாநிலம் சகாரன்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்திருந்த மசூதியை மாவட்ட நிர்வாகம் நேற்று அதிகாலை 5 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடித்துத் தள்ளியுள்ளது. </p><h2> இடிப்பு </h2><p>சகாரன்பூர் ஆட்சியர் அலுவலகத்தின் 5 பிரதான நுழைவு வாயில்களையும் பூட்டி, யாரையும் உள்ளே அனுமதிக்காமல் அதிகாரிகள் இடிப்புப் பணியை முடித்தனர். </p><p>அரசு நிலத்தில் இருந்த ஆக்கிரமித்து கட்டடப்பட்டிருந்ததாலேயே  கட்டுமானத்தை அகற்றியதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <h2>பின்னணி</h2><p>இந்த மசூதி அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாகக் கூறி 2025-இல் பஜ்ரங் தள் அமைப்பின் தலைவர் விகாஸ் தியாகி மனுத் தாக்கல் செய்தார்.</p><p>விசாரணைக்குப் பின், ஜூலை 16 அன்று அந்த மசூதி ஆக்கிரமிப்புக் கட்டிடம் என உறுதிசெய்து, அதை இடிக்கச் சகாரன்பூர் நகர மெஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார்.</p><p>இந்த உத்தரவை எதிர்த்து மசூதி கமிட்டி மாவட்ட நீதிமன்றத்தை அணுகிய நிலையில், செப்டம்பர் 2 அன்று நீதிமன்றம் அவர்களின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது.</p> <h2>அவசர அவசரமாக</h2><p>மசூதி கமிட்டி உயர் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறுவதைத் தடுப்பதற்காகவே அரசு அதிகாலையில் இந்த இடிப்பு நடவடிக்கையை அவசர அவசரமாக மேற்கொண்டுள்ளது என எதிர்க்கட்சிகள், யோகி ஆதித்யநாத் அரசு மீது குற்றம் சாட்டியுள்ளன.</p> <h2>குற்றச்சாட்டு </h2><p>ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி, "பாஜக அரசுக்கு '<a href="https://www.maalaimalar.com/news/national/india-pakistan-diplomatic-row-india-rejects-zardaris-remarks-over-alleged-demolition-of-historic-mosque">மசூதி</a>' என்ற வார்த்தை மீதே வெறுப்பு உள்ளது.</p><p>பாதிக்கப்பட்டவர்கள் உயர் நீதிமன்றத்திற்கு செல்வதைத் தடுக்கவே அதிகாலையில் திருட்டுத்தனமாக இடித்துள்ளனர். மசூதி கமிட்டிக்குத் தேவையான அனைத்துச் சட்ட உதவிகளையும் நாங்கள் வழங்குவோம்." என சாடியுள்ளார்.</p><p>சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், "பாதிக்கப்பட்டவர்கள் உயர் நீதிமன்றத்தையோ அல்லது உச்ச நீதிமன்றத்தையோ அணுக ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அரசின் உத்தரவுக்கு ஏற்ப அதிகாரிகளும் கூட்டுச் சேர்ந்து நீதியைத் தடுத்துள்ளனர். பிற மதங்களை மதிக்காதவர்கள் ஒருபோதும் சனாதனிகளாக இருக்க முடியாது." என தெரிவித்துள்ளார்.</p> <h2>பதற்றம்</h2><p>இதனிடையே பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் சகாரன்பூர் சரக டி.ஐ.ஜி அபிஷேக் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p><p>இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால் காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>மாஸ்கோவில் அமெரிக்க 
பிரதிநிதிகள்.. 3 நாட்களுக்கு உக்ரைன் தலைநகர் மீது தாக்குதலை நிறுத்த புதின் உத்தரவு </title><link>https://www.maalaimalar.com/news/world/us-delegation-in-moscow-putin-orders-a-three-day-halt-to-attacks-on-the-ukrainian-capital</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-delegation-in-moscow-putin-orders-a-three-day-halt-to-attacks-on-the-ukrainian-capital#comments</comments><guid isPermaLink="false">9a1b72ba-4464-4ee5-8686-1c8ae55f1426</guid><pubDate>Sat, 05 Sep 2026 18:59:29 +0000</pubDate><atom:updated>2026-09-05T18:59:29.398Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உக்ரைன் போர்,Russia,Putin,புதின்,Ukraine War,ரஷியா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/xuym80ry/tn-5.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமெரிக்க பிரதிநிதிகளுடன் புதின் சந்திப்பு ]]></media:title><media:description type="html"><![CDATA[ அமெரிக்க பிரதிநிதிகளுடன் புதின் சந்திப்பு ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/xuym80ry/tn-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமைதி பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க தூதரகள் ரஷியா சென்றுள்ள நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை 3 நாட்களுக்கு நிறுத்த ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D">உக்ரைன்</a>, ஐரோப்பாவின் <a href="https://www.maalaimalar.com/topic/nato">நேட்டோ </a>கூட்டமைப்பில் இணைய முயற்சிப்பது தங்களது எல்லைப் பாதுகாப்புக்கு ஆபத்து என கூறி அந்நாடு மீது கடந்த 2022 பிப்ரவரியில் <a href="https://www.maalaimalar.com/topic/russia">ரஷியா </a>போர் தொடுத்தது. </p><p>5வது ஆண்டாக போர் முடிவின்றி தொடர்ந்து வருகிறது. உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகளும், ரஷியாவுக்கு சீனா, வடகொரிய நாடுகளும் ஆதரவு வழங்கி வருகின்றன. </p><p>கடந்த ஆண்டு தொடக்கத்தில் மீண்டும் அமெரிக்க அதிபரான டிரம்ப், உக்ரைன் - ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வர பல முயற்சிகளை மேற்கொண்டார். </p><p>இருப்பினும் போர் முடிந்தபாடில்லை. இரு நாடுகளும் பரஸ்பரம் டிரோன் தாக்குதல்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. </p><p>கடந்த சில நாட்களாக உக்ரைனின் தலைநகர் கீவ் மீது ரஷியா சரமாரி தாக்குதலை தொடுத்து வந்தது. </p> <h2>மாஸ்கோ</h2><p>இதனிடையே உக்ரைன் - ரஷியா போரை நிறுத்தும் புதிய முயற்சியாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் சிறப்புத் தூதர்களான ஸ்டீவ் விட்காப்மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் மாஸ்கோ சென்றடைந்துள்ளனர்.</p><p>அவர்களை ரஷிய அதிபரின் சிறப்புத் தூதர் கிரில் டிமிட்ரிவ் நேற்று வரவேற்றார்.</p><p>தொடர்ந்து, ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளினில் புதின், விட்காப் மற்றும் குஷ்னர் ஆகியோரை சந்தித்துப் பேசி உள்ளார்.</p><p>அமெரிக்கக் குழுவின் இந்த வருகையை முன்னிட்டு, உக்ரைன் தலைநகர் கீவ் மீதான தாக்குதல்களை சனிக்கிழமை இரவு முதல் 3 நாட்களுக்குத் தற்காலிகமாக நிறுத்திவைக்க ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.</p><p>இதனிடையே, நேற்று அன்று ரஷிய வான்வெளியில் உக்ரைனுக்கு சொந்தமான 53 டிரோன்களைகண்டறிந்து அழித்ததாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p> <h2>புதிய முயற்சி</h2><p>ஐந்து ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவிடம் வலுவான புதிய திட்டம் ஒன்று உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று முன் தினம் தெரிவித்திருந்தார்.</p><p>மாஸ்கோ பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, அமெரிக்கத் தூதர்கள் இருவரும் இன்று உக்ரைன் சென்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.</p> <p>இருப்பினும், இந்தப் பேச்சுவார்த்தை மூலம் உடனடியாகப் போருக்குத் தீர்வு காண்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என்றே அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.</p><p>உக்ரைன் உரிமை கோரும் 4 பிராந்தியங்களின் முழுப் நிலப்பரப்பையும் ரஷியாவிடம் ஒப்படைக்க வேண்டும், நேட்டோ அமைப்பில் இணைவதற்கான திட்டத்தை உக்ரைன் முற்றிலும் கைவிட வேண்டும் என்பதே ரஷியாவின் நிபந்தனையாக உள்ளது.</p><p>கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற கடைசி அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியால் மோதல் முற்றிய நிலையில் தற்போதைய அமெரிக்க தூதர்களின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>பெண்கள் ஆசிய கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/womens-asia-cup-team-india-secures-a-magnificent-victory-over-pakistan</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/womens-asia-cup-team-india-secures-a-magnificent-victory-over-pakistan#comments</comments><guid isPermaLink="false">77ce5c47-0e8c-441b-a1b2-a5971cecaec4</guid><pubDate>Sat, 05 Sep 2026 18:15:04 +0000</pubDate><atom:updated>2026-09-05T18:15:04.596Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,Pakistan,இந்தியா பாகிஸ்தான்,Womens Asia Cup,பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/pciwj53j/tn-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பெண்கள் ஆசிய கோப்பை:]]></media:title><media:description type="html"><![CDATA[ பெண்கள் ஆசிய கோப்பை:]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/pciwj53j/tn-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>10வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் தனது கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது.</p><h2>ஆசிய கோப்பை</h2><p>10-வது <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D">பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் </a>துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.</p><p>லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.</p> <h2>அரையிறுதி</h2><p>ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள 7 முறை சாம்பியனான இந்திய அணி, தனது முதல் ஆட்டத்தில் தாய்லாந்தையும், 2வது ஆட்டத்தில் ஹாங்காங்கையும் வீழ்த்தி அரையிறுதியை எட்டியது.</p><h2>இந்தியா பாகிஸ்தான்</h2><p>இந்நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக்கில் பரம எதிரியான பாகிஸ்தானுடன் இன்று மோதியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.</p> <h2>பாகிஸ்தான் பேட்டிங்</h2><p>பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்களான முனீபா அலி மற்றும் ஷவால் சுல்பிகார் முதல் நான்கு ஓவர்களில் 23 ரன்கள் எடுத்தனர்.</p><p>இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர்கள் முதல் நான்கு ஓவர்களை வீசியும் விக்கெட் எதுவும் எடுக்கத் தவறினர்.</p><p>ஐந்தாவது ஓவரில், ஷெபாலி வர்மா முனீபா அலியை ஆட்டமிழக்கச் செய்தார். அதற்கடுத்த ஓவரிலேயே, ஸ்ரீ சரணி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.</p><p>ஸ்ரீ சரணி மொத்தம் 3 விக்கெட்டுகளையும் தீப்தி ஷர்மா 2 விக்கெட்டுகளையும், ஷெபாலி வர்மா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.</p><p>பாகிஸ்தான் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 18.1 ஓவர்களில் 55 ரன்களுக்கு சுருண்டது. டி20 போட்டிகளில் பாகிஸ்தான் மகளிர் அணி எடுத்த மிகக் குறைந்த ஸ்கோர் இதுவாகும்.</p> <h2>ஸ்ரீ சரணி சாதனை</h2><p>ஸ்ரீ சரணியும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆசியக் கோப்பையில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை (34) எடுத்தவர்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். பூனம் யாதவ் 35 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.</p> <h2>இந்தியா பேட்டிங்</h2><p>56 ரன்கள் என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ஷெபாலி வர்மா, முதல் பந்திலேயே ஒரு சிக்ஸர் அடித்தார். அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்து, அவர் டி20 சர்வதேசப் போட்டிகளில் 3000 ரன்களை நிறைவு செய்தார்.</p><p>இந்த ஆட்டத்தில் இரண்டாவது ஓவரில், பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா, ஷெபாலி (12) மற்றும் பிரதிகா ராவல் (4) ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்தார். ஸ்மிருதி மந்தனாவை (9) எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்தார்.</p> <p>ஆனால் பின்னர் களமிறங்கிய பின்னர் ஹர்மன்பிரீத் மற்றும் தீப்தி ஷர்மா இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தனர். </p><p>இந்திய அணி 56 ரன்கள் என்ற இலக்கை 8.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு விரட்டிப் பிடித்து அபார வெற்றி பெற்றுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>ஜம்மு காஷ்மீரில் அதிரடி காட்டிய பாதுகாப்பு படை .. லஷ்கர் இ தொய்பா தளபதி சுட்டுக் கொலை</title><link>https://www.maalaimalar.com/news/national/encounter-in-jammu-and-kashmir-lashkar-e-taiba-commander-shot-dead</link><comments>https://www.maalaimalar.com/news/national/encounter-in-jammu-and-kashmir-lashkar-e-taiba-commander-shot-dead#comments</comments><guid isPermaLink="false">84a552e0-a989-48ed-b6be-16ad38bb2a39</guid><pubDate>Sat, 05 Sep 2026 17:46:18 +0000</pubDate><atom:updated>2026-09-05T17:46:18.490Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>terrorists,ஜம்மு காஷ்மீர்,Lashkar-e-Taiba,லஷ்கர் இ தொய்பா,Jammu &amp; Kashmir,பயங்கரவாதிகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/o6dlo4cn/tn-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ யாசிர்]]></media:title><media:description type="html"><![CDATA[ யாசிர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/o6dlo4cn/tn-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டரில் லஷ்கர் இ தொய்பா தளபதி யாசிர் சுட்டுக்கொல்லப்பட்டான்.</p><h2>யார் இந்த யாசிர்?</h2><p>2025ஆம் ஆண்டு <a href="https://www.maalaimalar.com/news/national/pahalgam-attack-responsible-will-not-be-spared-says-modi-ajit-doval">பஹல்காமில் </a>நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலின் முக்கியச் சூத்திரதாரிகளில் ஒருவன் 'ஹாஷிம் மூசா' என்றழைக்கப்படும் சுலைமான் மூசா. இவன் <a href="https://www.maalaimalar.com/news/world/lashkar-commander-qari-saeed-abdul-aziz-dies-mysteriously-in-pakistan-amid-poisoning-suspicions">லஷ்கர் இ தொய்பா </a>அமைப்பின் முக்கியத் தளபதி ஆவான்.</p><p>பஹல்காம் தாக்குதல் நடந்த சில மாதங்களிலேயே, ஸ்ரீநகரின் டாச்சிகாம் காட்டுப்பகுதியில் இந்தியப் படையினர் நடத்திய என்கவுண்டரில் மூசா சுட்டுக்கொல்லப்பட்டான்.</p><p>இந்த சுலைமான் மூசாவுடைய குழுவில் இருந்தவன் யாசிர். சுமார் ஒரு ஆண்டுக்கு முன்பு அக்குழுவிலிருந்து பிரிந்த யாசிர், தளபதி அந்தஸ்துடன் தனிப்படையாக இயங்கி வந்தான்.</p> <h2>என்கவுண்டர் </h2><p>மத்திய காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தில் உள்ள யூஸ்மார்க் மலைப்பகுதியில் இவனது நடமாட்டம் அதிகரித்துள்ளதை உளவுத்துறை கண்டறிந்தது.</p><p>உளவுத்துறை தகவலின் அடிப்படையில், இந்திய ராணுவத்தின் சிறப்புப் படையினர் மற்றும் ராஷ்ட்ரீய ரைபிள்ஸ் படையினர் இன்று அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.</p><p>அப்போது பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து நடத்திய தாக்குதலில் யாசிர் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளான்.</p> <h2>விசாரணை</h2><p>காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், யாசிரின் வீழ்ச்சி லஷ்கர் அமைப்புக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.</p><p>கொல்லப்பட்ட யாசிருடன் தொடர்பில் இருந்த பிற பயங்கரவாதிகள், சமீபத்திய பயங்கரவாத சம்பவங்களில் அவனுக்கு இருந்த பங்கு குறித்துப் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>30 இடங்களில் சோதனை.. 241 ஆவணங்களை பறிமுதல் செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை  - கே.என்.நேரு சொன்னது என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/raids-at-30-locations-anti-corruption-department-reports-seizure-of-241-documents-what-did-kn-nehru-say</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/raids-at-30-locations-anti-corruption-department-reports-seizure-of-241-documents-what-did-kn-nehru-say#comments</comments><guid isPermaLink="false">c2546ad8-fb28-438c-9013-4a4294b0e049</guid><pubDate>Sat, 05 Sep 2026 17:07:08 +0000</pubDate><atom:updated>2026-09-05T17:07:08.207Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,kn nehru,லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை,DVAC Raid</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/nnmfzu96/tn.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கே.என்.நேரு ]]></media:title><media:description type="html"><![CDATA[ கே.என்.நேரு ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/nnmfzu96/tn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுக முன்னாள் அமைச்சர் கே என் நேருவுக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் பிற்பகல் வரை நடைபெற்ற சோதனையில் 241 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.</p><p>தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.</p><h2>கே.என். நேரு வீட்டில் சோதனை</h2><p>அந்த வகையில் இன்று முன்னாள் அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dvac-raids-19-locations-linked-to-former-minister-kn-nehru">கே.என்.நேருவின்</a> சென்னை, திருச்சி வீடுகள் மற்றும் அவரது சகோதரர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள்.</p> <h2>சென்னை</h2><p>சென்னை மைலாப்பூர் மற்றும் திருச்சி தில்லைநகர் ஆகிய இடங்களில் உள்ள <a href="https://www.maalaimalar.com/topic/kn-nehru">கே.என். நேருவுக்கு</a> சொந்தமான இடங்களில் வீடுகளுக்கு இன்று காலை 7 மணி அளவில் சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினார்கள். திருவான்மியூர், அடையாறு, அண்ணா நகர், ராஜா அண்ணாமலைபுரம் ஆகிய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.</p><p>ராஜா அண்ணாமலை புரத்தில் கே.என். நேருவின் தம்பி ரவிச்சந்திரனுக்கு சொந்தமான தனியார் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திலும் சோதனை நடந்தது. இதேபோன்று திருச்சி, கோவை என மொத்தம் 19 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.</p><p>கே.என். நேரு, தி.மு.க. ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது அந்த துறை சார்பில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டது.</p><p>இந்த டெண்டர் ஒதுக்கீட்டில் தான் முறைகேடு நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையிலேயே இன்றைய சோதனை நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.</p> <h2>திருச்சி</h2><p>திருச்சி தில்லைநகர் 5-வது கிராசில் உள்ள கே.என். நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., மணிகண்டன் தலைமையிலான 10 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் இன்று காலை 7.30 மணியில் இருந்து சோதனையில் ஈடுபட்டனர். வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையிலும் அங்குலம் அங்குலமாக சோதனையிட்டனர். முக்கிய ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.</p> <h2>கோவை</h2><p>கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள கள்ளிமடை பகுதியில் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் வீடு மற்றும் அலுவலகம் உள்ளது. அதேபோன்று கோவை, மசக்காளி பாளையத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு உள்ளது. இந்த வீடுகள் மற்றும் அலுவலகத்திற்கு இன்று காலை கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் துணை சூப்பிரண்டு ராஜேஷ் தலை மையில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் காலை 7 மணிக்கு அதிரடியாக நுழைந்தனர்.</p><p>ஒவ்வொரு பகுதிக்கும் தலா 4 லஞ்ச ஒழிப்பு போலீசார் வீதம் சென்று அங்கு வீடு மற்றும் அலுவலகத்தில் அனைத்து பகுதிகளிலும் சோதனை செய்தனர்.</p> <h2>பறிமுதல்</h2><p>சோதனையின் முடிவில் கிடைத்த தகவல்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.</p><p>அதன்படி கே.என்.நேருவுக்கு தொடர்புடைய இடங்களில் நடத்திய சோதனையில் 241 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.</p><p>அறிக்கையின்படி, தமிழகத்தில் கோவை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 30 இடங்களில் நடந்த சோதனையில் 241 ஆவணங்கள், மின்னணு சாட்சியங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.</p><p>நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் பல்வேறு ஒப்பந்தங்களில் முறைகேடு என்ற புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.</p> <h2>கே. என். நேரு பேட்டி</h2><p>இதனிடையே திருச்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.</p><p>அப்போது அவர், "என் வீட்டில் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்றது. சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை.</p><p>லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தோம். என்னை பொறுத்தவரை நான் எந்த தவறும் செய்யவில்லை. எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்தை அணுகி சட்டப்படி வெல்வோம்.</p><p>சட்டசபையில் அரசை நோக்கி நான் கேள்வி எழுப்புவதால் என்னை மிரட்டுவதற்காக கூட இது போன்ற சோதனையை அவர்கள் செய்யலாம். இந்த சோதனை பழிவாங்கும் நடவடிக்கை" என தெரிவித்தார்.</p> ]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 5 செப். 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-5-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-5-september-2026#comments</comments><guid isPermaLink="false">a50194c3-ec3d-4c7a-b287-9e0350ac3ac4</guid><pubDate>Sat, 05 Sep 2026 06:38:36 +0000</pubDate><atom:updated>2026-09-05T16:48:29.615Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/1ky145b1/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live news]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/1ky145b1/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dvac-raids-19-locations-linked-to-former-minister-kn-nehru">முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை</a></p><p>* அபிராமபுரத்தில் உள்ள கே.என்.நேரு சகோதரர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. </p><p>* மயிலாப்பூர், ஆர்.ஏ.புரம், ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/firecracker-factory-explosion-near-sattur-worker-dies">சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து - தொழிலாளி உயிரிழப்பு</a></p><p>* சாத்தூர் அருகே ஒத்தையால் கிராமத்தில் உள்ள சின்னதம்பி பட்டாசு ஆலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.</p><p>* அடுத்தடுத்து வெடிச்சத்தம் கேட்பதாலும் வெடித்து சிதறுவதாலும் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-chief-mk-stalin-pays-tribute-to-vo-chidambaranar" rel="nofollow">தியாகத் திருவுளம் வ.உ. சிதம்பரனார்..!- மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து</a></p><p>* வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்தநாளில், அவருக்கு எனது புகழ் வணக்கங்களைச் செலுத்துகிறேன்.</p><p>* வ.உ.சிதம்பரனாரின் வீரத்தையும், தேசப்பற்றையும், தியாகத்தையும் இந்நாளில் நினைவுகூர்ந்து போற்றுவோம்!</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-greetings-to-teachers-who-shape-students-into-good-human-beings" rel="nofollow">மாணவர்களை நல்ல மனிதர்களாக வளர்த்தெடுக்கும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள்- மு.க.ஸ்டாலின்</a></p><p>* மாணவர்களை நல்ல மனிதர்களாக வளர்த்தெடுக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள்!</p><p>* சரியான கேள்விகளைக் கேட்கும் தலைமுறையை உருவாக்குவதே இனி ஆசிரியர்களின் பெரும் பணி!</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-indictment-tvk-govt-3">தவெக அரசின் பூச்சாண்டிகளுக்கு அஞ்ச மாட்டோம்- மு.க.ஸ்டாலின்</a></p><p>* உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது; சட்டமன்றக் கூட்டத்தொடரும் நடந்துகொண்டிருக்கிறது.</p><p>* இந்திய ஐனநாயகத்தின் இருண்ட பக்கமாய் இந்தப் போக்கு தொடரும் நிலையில் வழக்கம்போல் திசைதிருப்பும் நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளது இந்த ரீல்ஸ் அரசு.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-wishes-to-teachers-day">ஆசிரியர்களின் மகத்தான பணிகளைப் போற்றுவோம்- முதலமைச்சர் விஜய்</a></p><p>* மாணவச் செல்வங்களின் வளமான எதிர்காலத்திற்காகத் தன்னலம் கருதாது பணியாற்றிவரும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!</p><p>* ஆசிரியர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பும், சிறந்த வழிகாட்டுதலும் நமது மாணவச் செல்வங்களின் எதிர்காலத்தை மேலும் ஒளிமயமாக்கட்டும்! </p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-5-9-2026">GOLD PRICE TODAY: நகை வாங்குவோருக்கு குட் நியூஸ்... அதிரடியாக குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p>தங்கம் விலை கிராமுக்கு ரூ.170 குறைந்து ரூ.14,190-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-caste-wise-census-must-be-conducted-by-incorporating-the-list-of-castes">சாதிகள் பட்டியலை இணைத்தே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்!- அன்புமணி வலியுறுத்தல்</a></p><p>* காகா கலேல்கர் தலைமையிலான முதலாம் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தயாரித்த அந்தப் பட்டியலில் மொத்தம் 2399 சாதிகள் இடம் பெற்றிருந்தன. </p><p>* ஒரு காலத்தில் பிச்சை எடுப்பதை தொழிலாகக் கொண்டிருந்த தாசரி, ஜங்கம் போன்ற வகுப்பினர் மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி தான், 1993-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஓபிசி பட்டியலில் சேர்க்கப்பட்டனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-says-people-in-tn-safeonly-corrupt-are-not">தமிழ்நாட்டில் மக்களுக்கு பாதுகாப்பு உள்ளது... ஊழல்வாதிகளுக்கு தான் இல்லை - அமைச்சர் நிர்மல்குமார்</a></p><p>* திமுக, அதிமுக, பாஜக என அனைத்து கட்சிகளும் இணைந்து வரும் தேர்தலை எதிர்கொள்ளும்.</p><p>* நாள்தோறும் 7 முதல் 8 மணி நேரம் சட்டசபை நடைபெறுகிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-will-never-fear-bjp-govt-actions-says-mp-kanimozhi" rel="nofollow">தவெக அரசின் நடவடிக்கைகளைப் பார்த்து திமுக ஒருபோதும் அஞ்சாது- கனிமொழி எம்பி</a></p><p>* தவெக அரசு, தற்போது காழ்ப்புணர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுள்ளது.</p><p>* மிரட்டல்களுக்கும் சோதனைகளுக்கும் பணிந்து போகும் இயக்கம் தி.மு.கழகம் அல்ல. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-to-hold-consultation-meeting-with-alliance-parties-on-september-9-communist-parties-to-skip">செப்டம்பர் 9-ந்தேதி கூட்டணி கட்சிகளுடன் த.வெ.க. ஆலோசனைக் கூட்டம்: கம்யூனிஸ்டு கட்சிகள் புறக்கணிப்பு?</a></p><p>* த.வெ.க. கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் சார்பில் எனக்கு அழைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது</p><p>* சென்னை அண்ணாநகரில் உள்ள ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவையும் அவர்கள் சந்தித்து பேசினார்கள்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/election-commission-banned-former-congress-mla-aassan-maulaana-from-contesting-elections-for-3-years">காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை</a></p><p>* கடந்த 2021-ம் ஆண்டு வேளச்சேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றவர் அசன் மவுலானா.</p><p>* அசன் மவுலானா முறையாக கணக்கு காட்டவில்லை என புகார் எழுந்துள்ளது. </p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cpi-veerapandian-says-we-will-support-tvk-from-outside">தவெகவை வெளியில் இருந்தே ஆதரிப்போம்... கூட்டணியில் இடம்பெறவில்லை - வீரபாண்டியன் திட்டவட்டம்</a></p><p>* தவெகவின் நல்லாட்சி, நல்ல திட்டங்களை வரவேற்று ஆதரிப்போம்.</p><p>* அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பியது தொடர்பாக அமைச்சர்கள் அளித்த விளக்கத்தை ஏற்கவில்லை.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/consultative-meeting-of-tvk-alliance-party-leaders">தவெக கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம்: திருமாவளவனுக்கு அமைச்சர்கள் நேரில் சென்று அழைப்பு</a></p><p>*கடந்த ஜூலை 1-ஆம் தேதி சென்னை கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் தலைமையில் நடைபெற்றது. </p><p>*இக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகளிடையேயான அரசியல் நிலைப்பாடுகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/tomorrow-duleep-trophy-final-in-chepauk-ground">துலீப் டிராபி: நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் தெற்கு-கிழக்கு மண்டலங்கள் மோதல்</a></p><p>* கேப்டன் திலக் வர்மா ஒரு சதமும், ஒரு அரை சதமும் அடித்து நல்ல பார்மில் உள்ளார்.</p><p>* நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியை ரசிகர்கள் இலவசமாகப் பார்க்கலாம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/indian-youth-who-cleaned-polluted-river-gets-job-offer-from-dutch-ceo">நதியை மீட்டெடுத்த இந்திய இளைஞருக்கு நெதர்லாந்து சி.இ.ஓ அளித்த வேலை வாய்ப்பு!... </a></p><p>*பிட்டு தபாஹியின் இந்த முயற்சிக்கு நெதர்லாந்து நிறுவனத்தின் அழைப்பு மட்டுமன்றி, உள்நாட்டிலும் பலதரப்பட்ட ஆதரவுகள் குவிந்து வருகின்றன. </p><p>*தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா இவரின் தூய்மைப் பணியைப் பாராட்டியுள்ளார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/namal-former-sri-lankan-president-rajapaksas-son-arrested-over-airbus-deal">ஏர்பஸ் விமான ஊழல் வழக்கில் கைது: நமல் ராஜபக்சே சிறையில் அடைப்பு</a></p><p>* 5 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பிறகு நமல் ராஜபக்சே கைது செய்யப்பட்டார்.</p><p>* அவரை வரும் 18-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/disaster-flood-in-nepal-60-year-old-woman-rescued-alive-after-11-days">நேபாளத்தில் பேரழிவு வெள்ளம்: 11 நாட்களுக்குப் பின் 60 வயது மூதாட்டி உயிருடன் மீட்பு... </a></p><p>* வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாகப் பல நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். </p><p>*இந்த பேரதிசய மீட்புச் சம்பவங்களும் நாடு முழுவதும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ள மக்களுக்கு ஒரு சிறு நம்பிக்கைக் கீற்றை அளித்துள்ளன. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nameboards-mandatory-by-november-1-madras-high-court">நவம்பர் 1-க்குள் கடைகளில் தமிழில் பெயர்ப்பலகை: சென்னை உயர் நீதிமன்றம் கெடு விதித்து உத்தரவு!... </a></p><p>*இந்த உத்தரவைச் சரியாக நடைமுறைப்படுத்தத் தவறினால் மற்றும் கடைகளைக் கண்காணிப்பதில் அலட்சியம் காட்டினால் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை பாயும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/video-by-actress-leads-to-36-new-sanitary-napkin-dispensers-at-chennai-airport">நடிகையின் வீடியோவால் எதிரொலித்த கோரிக்கை: சென்னை விமான நிலையத்தில் 36 புதிய சானிட்டரி நாப்கின் இயந்திரங்கள் அமைப்பு!... </a></p><p>*பிரபல சின்னத்திரை நடிகை லதா ராவ், சென்னையில் இருந்து ஐதராபாத் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்தார். </p><p>*பெண்கள் தங்களின் பயணங்களின் போது நாப்கின்களை மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற விழிப்புணர்வையும் அவர் ஏற்படுத்தினார். </p><p><a href="https://www.maalaimalar.com/sports/satwik-chirag-pair-enter-final-round-in-china-masters-super-750">சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: சாத்விக்-சிராக் ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்</a></p><p>* சீனா மாஸ்​டர்ஸ் பேட்​மிண்​டன் தொடர் அங்குள்ள ஷென்​சென் நகரில் நடந்து வருகிறது.</p><p>* பெண்கள் பிரிவில் அனைவரும் ஏமாற்றம் அளித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>விருதுநகர் பட்டாசு ஆலையில் பலியானவரின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம்: முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announces-4-lakh-aid-virudhunagar-blast</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announces-4-lakh-aid-virudhunagar-blast#comments</comments><guid isPermaLink="false">6fe27d86-c933-4160-9189-907fbb70ad65</guid><pubDate>Sat, 05 Sep 2026 16:27:51 +0000</pubDate><atom:updated>2026-09-05T16:27:51.196Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>fire accident,சிவகாசி,Sivakasi,வெடி விபத்து,cm vijay,முதலமைச்சர் விஜய்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/3mswt1t6/Untitled-design-24.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Virudhunagar fireworks factory blast]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/3mswt1t6/Untitled-design-24.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர் அடுத்த தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த மாடசாமி என்பவரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஆறுதல் தெரிவித்து, நிதியுதவியை வழங்கியுள்ளார்.</p><p>விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஒத்தையால் கிராமத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88">சின்னதம்பி பட்டாசு ஆலையில்</a> செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இன்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் தொழிலாளி மாடசாமி என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p>இந்த நிலையில் ஒத்தையால் கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான வெடிபொருள்கள் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளார்.</p><h3><strong>முதலமைச்சர் விஜய் எக்ஸ் பதிவு</strong></h3><p>இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், ஒத்தையால் கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான வெடிபொருள்கள் தொழிற்சாலையில் இன்று (05.09.2026), எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில்</p><p>அங்கு பணியிலிருந்த மீனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திரு. மாடசாமி (வயது 33), த/பெ. ராமர் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி அறிந்து மிகவும் வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.</p><p>இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு நான்கு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.</p><p>இவ்வாறு அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கேரள கார் விபத்தில் பலியான 8 மாணவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் விஜய் ஆறுதல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-condoles-death-of-eight-engineering-students-in-kerala-crash</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-condoles-death-of-eight-engineering-students-in-kerala-crash#comments</comments><guid isPermaLink="false">facacd5c-28d3-4cf8-b7e5-e67f7ff8f49c</guid><pubDate>Sat, 05 Sep 2026 16:00:58 +0000</pubDate><atom:updated>2026-09-05T16:00:58.202Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கார் விபத்து,Car accident,ஜோசப் விஜய்,joseph vijay,கேரளம்,கேரளா,Keralam</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/p66lm2e5/Untitled-design-23.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/p66lm2e5/Untitled-design-23.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் இருந்து கேரளம் நோக்கி காரில் சென்ற எட்டு பொறியியல் மாணவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளார்.</p><p>தமிழகத்தில் இருந்து கேரளம் நோக்கி சென்ற 8 பொறியியல் மாணவர்கள் பயணித்த கார் ஒன்று, திருச்சூர் கடலோரப் பகுதியான கைப்பமங்கலம்-பனம்பிகுன்னுவில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியதில், காரில் பயணம் செய்த எட்டு மாணவர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். </p><h3><strong>முதல்வர் விஜய் எக்ஸ் பதிவு</strong></h3><p>இதையடுத்து சாலை விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D">ச.ஜோசப் விஜய்</a> ஆறுதல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>திண்டுக்கல் மாவட்டம், தனியார் பொறியியல் கல்லூரியில் பயின்றுவரும் எட்டு மாணவர்கள் நேற்று (04.09.2026) காரில் கேரளம் மாநிலத்திற்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், </p><p>இரவு 11.50 மணியளவில் திருச்சூர் மாவட்டம், கைப்பமங்கலம் கிராமம், பனம்பிக்குன்னு என்ற இடத்தில் நின்றிருந்த சரக்கு வாகனத்தில் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் எட்டு மாணவர்களும் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையுமடைந்தேன்.</p><p>உயிரிழந்த எட்டு மாணவர்களின் உடல்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு கொண்டுவர, அனைத்து அதிகாரப்பூர்வ நடைமுறைகளையும் விரைவுபடுத்தத் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.</p><p>இப்பணிகளை ஒருங்கிணைக்க திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட 5 அரசு அலுவலர்கள் உடனடியாக திருச்சூருக்கு அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து,</p><p>உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதுடன், அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.</p><p>அதன்பின் திருச்சூர் மாவட்ட ஆட்சியர் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட 8 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.</p><p>இச்சம்பவத்தால் துயருறும் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும், கல்லூரி நிர்வாகத்திற்கும், அவர்களது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இந்த செயல்முறையை விரைவுபடுத்தி தங்களது சொந்த ஆம்புலன்ஸ் மூலமாக உயிரிழந்த மாணவர்களின் உடல்களை தமிழ்நாட்டிலுள்ள அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி உதவிய கேரளம் மாநில அரசுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்காவில் உணவின்றி தவிக்கும் குடும்பங்களுக்கு 25,000 பீட்சாவை வழங்கிய 13 வயது இந்திய சிறுமி</title><link>https://www.maalaimalar.com/news/world/13-year-old-girl-serves-25000-pizzas-to-hungry-us-families</link><comments>https://www.maalaimalar.com/news/world/13-year-old-girl-serves-25000-pizzas-to-hungry-us-families#comments</comments><guid isPermaLink="false">12cbba6f-72db-4e19-81f1-eeff126972dd</guid><pubDate>Sat, 05 Sep 2026 15:07:28 +0000</pubDate><atom:updated>2026-09-05T15:07:28.505Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,America,Florida,புளோரிடா,பீட்சா,pizza for purpose</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/q2770kyr/Untitled-design-22.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ US Pizza delivery]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/q2770kyr/Untitled-design-22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த ஒரு 13 வயது சிறுமி ஒருவர், அவரது சகோதரருடன் இணைந்து நாட்டில் நிலவும் பசியை போக்குவதற்காக, ஒரு பிரத்யேக செயலியை உருவாக்கி, அதன்மூலம் உணவின்றி பசியால் வாடும் குடும்பங்களுக்கு 25,000 பீட்சாக்களை இலவசமாக வழங்கியுள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE">அமெரிக்காவில்</a> உள்ள தெற்கு புளோரிடாவில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட 13 வயதான ஆஷ்ரிதா காசா என்ற சிறுமியும், அவரின் சகோதரரான அனிஷும் உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் சேவை செய்து வந்தனர்.</p><p>அப்போது அவர்கள் ஒருநாள் பீட்சாவை இலவசமாக கொடுத்து கொண்டிருந்த போது, பல குடும்பங்கள் உணவுக்காக வரிசையில் நின்று உணவுகளை வாங்கி சென்றனர். </p><p>அந்த வரிசையில் பெரியவர்கள் மட்டுமல்லாமல், சிறு குழந்தைகளும் உணவுக்காக வரிசையில் நிற்பதை அவர்கள் கவனித்தனர்.</p><h3><strong>13 வயது ஆஷ்ரிதா</strong></h3><p>இந்த சம்பவம் 13 வயதான ஆஷ்ரிதாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஆஷ்ரிதா கூறுகையில், எங்கள் வயதில் உணவு தேவைப்படும் குழந்தைகள் இருப்பார்கள் என நாங்கள் நினைத்து கூட பார்த்தது இல்லை என்று கூறினார்.</p><p>இதையடுத்து உணவு தானம் செய்ய விரும்புவோருக்கும், அந்த உணவை பெற்று மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய அமைப்புக்கும் இடையே உள்ள இடைவெளியை, தொழில்நுட்ப உதவியால் இணைக்க முடியும் என அவர்கள் உணர்ந்தனர்.</p><h3><strong>’பீட்சா ஃபார் பர்பஸ்’ செயலி</strong></h3><p>இதைத்தொடர்ந்து ஆஷ்ரிதாவும் அவரது சகோதரரும், நன்கொடையாளர்களிடம் இருந்து உணவை வாங்கி, ஆர்டரை பெற்றுக்கொண்டு, அதை விநியோகம் செய்வதற்கு ஒரு அமைப்பை தேடுவதற்கு பதிலாக, ’பீட்சா ஃபார் பர்பஸ்’ (Pizza for Purpose) என்ற செயலியை உருவாக்கினர்.</p><p>இந்த செயலி மூலம், உணவுகளை நன்கொடையாக வழங்க விரும்புகிறவர்கள், அருகில் உள்ள உணவகம் அல்லது ஏதாவது ஒரு மளிகை கடையை தேர்ந்தெடுத்து, அதே பகுதியில் உள்ள தொண்டு நிறுவனத்திற்கு வழங்கும் வகையில் செயலியை வடிவமைத்தனர்.</p><p>இந்த செயலி குறித்து ஆஷ்ரிதா கூறுகையில், “உணவுகளை வாங்க வருபவர்களின் செயல்கள் எங்கள் மனதை நெகிழ வைக்கிறது. பீட்சா கிடைத்தவுடன் அவர்களின் முகங்கள் பிரகாசமாகி விடுகின்றன.</p><p>இது மிகவும் மனநிறைவளிக்கிறது. ஏனென்றால் நாங்கள் செய்யும் எல்லாவற்றையும் இது அர்த்தமுள்ளதாக்குகிறது” என்று அவர் கூறினார்.</p><h3><strong>மன நிறைவாக உள்ளது</strong></h3><p>ஆஷ்ரிதா மற்றும் அனிஷ் ஆகியோர் உருவாக்கிய செயலி குறித்து ‘தி பேன்ட்ரி ஆஃப் ப்ரௌவர்ட்’ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி வாரன் லூபோ கூறுகையில், “ஒவ்வொரு மாதமும் 600-க்கும் மேற்பட்டவர்களுக்கு சேவை செய்ய முடிகிறது.</p><p>புதிதாக தயாரிக்கப்பட்ட சூடான பீட்சாக்களைப் பெற்று, அவற்றை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக கொண்டு சேர்ப்பது ஒரு வரப்பிரசாதமாக உள்ளது.</p><p>ஒரு தாத்தா அல்லது பாட்டி அந்த உணவை தங்கள் பேரக் குழந்தைகளுக்காக வீட்டிற்கு கொண்டு சென்றாலும் சரி, அல்லது இரவு உணவிற்காக வீட்டிற்கு எடுத்து செல்லும் ஒரு மூத்த குடிமகனாக இருந்தாலும் சரி. </p><p>அவர்களின் முகத்தில் தோன்றும் அந்த புன்னகை மிகவும் மனநிறைவளிக்கிறது” என்று அவர் கூறினார்.</p><p>பீட்சா ஃபார் பர்பஸ் என்ற செயலி மூலம் இரண்டு ஆண்டுகளுக்குள், 25,000 பீட்சா உணவுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.</p><h3><strong>அமெரிக்க ஆய்வு நிறுவனங்கள்</strong></h3><p>அமெரிக்க (USDA) பொருளாதார ஆராய்ச்சி சேவையின் தரவுகளின்படி, அமெரிக்காவில் சுமார் 5 கோடி மக்கள் உணவின்றி தவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அமெரிக்காவை சேர்ந்த ஃபீடிங் என்ற நிறுவனம் வெளியிட்ட தரவுகளின்படி, ஆண்டுதோறும் சுமார் 1 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் பசி மற்றும் உணவின்றி தவிப்பதாக தெரிவித்துள்ளது.</p><p>இந்த சூழலில், அமெரிக்காவில் வறுமையில் பசியால் வாடும் குடும்பங்கள், புதிதாக உருவாக்கப்பட்ட செயலி மூலம் தங்களின் உணவு தேவை சந்திக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>நடுவானில் ரகளையில் ஈடுபட்ட பயணி: Tape மூலம் இருக்கையோடு கட்டிய ஊழியர்கள்!</title><link>https://www.maalaimalar.com/news/world/american-airlines-passenger-taped-to-seat-after-midair-rampage</link><comments>https://www.maalaimalar.com/news/world/american-airlines-passenger-taped-to-seat-after-midair-rampage#comments</comments><guid isPermaLink="false">1f8d4533-c585-4766-a319-01c3268e7c94</guid><pubDate>Sat, 05 Sep 2026 14:24:37 +0000</pubDate><atom:updated>2026-09-05T14:24:37.418Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,நியூயார்க்,Baltimore,American Airlines,Duct Tape,Dallas-Fort Worth,டாலஸ் ஃபார்ட் வொர்த்,மேரிலாந்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/hi4b2zkb/ff.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ American Airlines]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/hi4b2zkb/ff.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவில் டாலஸ் நகரிலிருந்து நியூயார்க் நோக்கிச் சென்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில், பயணி ஒருவர் நடுவானில் சக பயணிகளிடம் வம்பிலுத்து, ஊழியர்களைத் தாக்கி அநாகரிகமாக நடந்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>டாலஸ் ஃபார்ட் வொர்த் சர்வதேச விமான நிலையத்திலிருந்து நியூஜெர்சி நோக்கி AA618 என்ற <a href="https://www.maalaimalar.com/news/world/loud-explosion-near-kharg-island-us-missile-strike-on-iranian-oil-tanker">அமெரிக்கன் ஏர்லைன்ஸ் </a>விமானம் பறந்துகொண்டிருந்தது. பயணத்தின் பாதியில், 67 வயதான ஆர்தர் லண்டீன் என்ற பயணி, திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த சக பயணியிடம் தகராறில் ஈடுபட்டு அவரது கழுத்தைப் பிடித்துத் தாக்கத் தொடங்கினார். </p><p>நிலைமையைக் கட்டுப்படுத்த முயன்ற பெண் விமானப் பணிப்பெண்ணை, அவர் இனரீதியாகவும் தரக்குறைவாகவும் திட்டி அநாகரிகமாக நடந்துகொண்டார். மேலும், தடுக்க வந்த பிற பயணிகளையும் கடிக்க முயன்று வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.</p><p>பயணியின் இந்த ஆபத்தான நடவடிக்கையால் விமானத்தில் இருந்த பயணிகள் இடையே பெரும் அச்சமும் பரபரப்பும் நிலவியது. இதையடுத்து, விமானத்தில் இருந்த ஓய்வுபெற்ற காவல் அதிகாரி உள்ளிட்ட சக பயணிகள் மற்றும் விமானப் பணிப்பெண்கள் இணைந்து அவரை மடக்கிப் பிடித்தனர். மேலும் ஆபத்து ஏதும் ஏற்படாமல் தடுக்க, அவரிடம் இருந்த டேப்பால் மற்றும் பிளாஸ்டிக் கைவிலங்குகளைப்  பயன்படுத்தி, அந்த நபரின் கை, உடல் மற்றும் தலைப் பகுதியை இருக்கையோடு சேர்த்து இறுக்கமாகக் கட்டிப்போட்டனர்.</p><h2><strong>தரையிறக்கப்பட்ட விமானம்</strong></h2><p>பயணியின் அத்துமீறல் அதிகமானதைத் தொடர்ந்து, விமானி உடனடியாக விமானத்தை பால்டிமோர் விமான நிலையத்திற்குத் திருப்பி அவசரமாகத் தரையிறக்கினார். விமானம் தரையிறங்கியதும், அங்கு தயாராக இருந்த மேரிலாந்து போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் மற்றும் எஃப்.பி.ஐ முகவர்கள் விமானத்திற்குள் நுழைந்து, இருக்கையில் கட்டப்பட்டிருந்த நபரை மீட்டு கைது செய்து அழைத்துச் சென்றனர்.</p><h2><strong>வழக்குப் பதிவு</strong></h2><p>கைது செய்யப்பட்ட பயணி மீது தாக்குதல் நடத்துதல், விமானப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் பொது அமைதிக்குக் பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பிற்குத் தான் தங்களின் முதல் முன்னுரிமை என்றும், விமானத்திற்குள் இதுபோன்ற வன்முறைகளை சகித்துக்கொள்ள முடியாது என்றும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது. இருக்கையில் டேப்பால் நபர் கட்டப்பட்டிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: சாத்விக்-சிராக் ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்</title><link>https://www.maalaimalar.com/sports/satwik-chirag-pair-enter-final-round-in-china-masters-super-750</link><comments>https://www.maalaimalar.com/sports/satwik-chirag-pair-enter-final-round-in-china-masters-super-750#comments</comments><guid isPermaLink="false">83e9cbce-f2ea-40fd-8226-133bf26af7f3</guid><pubDate>Sat, 05 Sep 2026 14:24:28 +0000</pubDate><atom:updated>2026-09-05T14:24:28.939Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Satwik Chirag Pair,சாத்விக் சிராக் ஜோடி,China Masters Badminton,சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/c997ui9w/sadwik.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ satwik chirag]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/c997ui9w/sadwik.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சீனா மாஸ்​டர்ஸ் பேட்​மிண்​டன் தொடரின் இறுதிச்சுற்றுக்கு இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி முன்னேறியது.</strong></em></p><p>சீனா மாஸ்​டர்ஸ் பேட்​மிண்​டன் தொடர் அங்குள்ள ஷென்​சென் நகரில் நடந்து வருகிறது. நாளையுடன்  இந்தத் தொடர் முடிவடைகிறது.</p><p>இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதிச் சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, மலேசியாவின் நூர் முகமது-டான் வீ கியாங் ஜோடி உடன் மோதியது.</p><p>இதில் சிறப்பாக ஆடிய <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF">சாத்விக் சிராக் ஜோடி</a> முதல் செட்டை 21-16 என வென்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சுதாரித்து ஆடிய மலேசிய ஜோடி 2வது செட்டை 21-18 என கைப்பற்றியது.</p><p>வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய சாத்விக்-சிராக் ஜோடி 21-11 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.</p><p>நடப்பு ஆண்டில் இந்த ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய 3வது தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் காலிறுதி சுற்றிலும், லக்‌ஷயா சென் முதல் சுற்றிலும் தோல்வி அடைந்தனர். </p><p>இதேபோல், பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் உன்னதி ஹூடா, தன்வி ஷர்மா ஆகியோரும் தோல்வி அடைந்து வெளியேறினர்.</p>]]></content:encoded></item><item><title>பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/pakistan-opt-to-bat-first-against-india-in-womens-asia-cup</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/pakistan-opt-to-bat-first-against-india-in-womens-asia-cup#comments</comments><guid isPermaLink="false">c94ed294-c843-4217-b1af-2c841a898286</guid><pubDate>Sat, 05 Sep 2026 14:09:40 +0000</pubDate><atom:updated>2026-09-05T14:09:40.647Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,பாகிஸ்தான்,Pakistan,Womens Asia Cup,பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/hppun2wd/pakis.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ pakistan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/hppun2wd/pakis.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.</strong></em></p><p>10-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.</p><p>லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.</p><h2>அரையிறுதி</h2><p>ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள 7 முறை சாம்பியனான இந்திய அணி, தனது முதல் ஆட்டத்தில் தாய்லாந்தையும், 2-வது ஆட்டத்தில் ஹாங்காங்கையும் வீழ்த்தி அரையிறுதியை எட்டியது.</p><h2>இந்தியா-பாகிஸ்தான்</h2><p>இந்நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக்கில் பரம எதிரியான பாகிஸ்தானுடன் இன்று மோதுகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.</p><p>சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் இதுவரை 17 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 14-ல் இந்தியாவும். 3-ல் பாகிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>நடிகையின் வீடியோவால் எதிரொலித்த கோரிக்கை: சென்னை விமான நிலையத்தில் 36 புதிய சானிட்டரி நாப்கின் இயந்திரங்கள் அமைப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/video-by-actress-leads-to-36-new-sanitary-napkin-dispensers-at-chennai-airport</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/video-by-actress-leads-to-36-new-sanitary-napkin-dispensers-at-chennai-airport#comments</comments><guid isPermaLink="false">0119ad7d-000f-44f0-b971-e2d6da679dcb</guid><pubDate>Sat, 05 Sep 2026 13:42:44 +0000</pubDate><atom:updated>2026-09-05T13:42:44.047Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை விமான நிலையம்,sanitary napkin,chennai airport,Vending machines,Actress Latha Rao,சானிட்டரி நாப்கின் இயந்திரங்கள்,லதா ராவ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/ofquku0q/NAPKIN.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Vending Machines  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/ofquku0q/NAPKIN.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாப்கின் இயந்திரங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதன் காரணமாகவே அவை தற்காலிகமாக நீக்கப்பட்டதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. </p><p>சென்னை பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமான நிலையத்தில் பெண் பயணிகளின் அடிப்படை சுகாதாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், 36 புதிய சானிட்டரி நாப்கின் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. சின்னத்திரை நடிகை லதா ராவ் வெளியிட்ட வீடியோ பதிவைத் தொடர்ந்து, விமான நிலைய நிர்வாகம் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.</p><h2>பிரபல நடிகை <strong>லதா ராவ் ச</strong>ந்தித்த சங்கடம்</h2><p>பிரபல சின்னத்திரை நடிகை லதா ராவ், சென்னையில் இருந்து ஐதராபாத் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அப்போது அவருக்கு எதிர்பாராத விதமாக மாதவிடாய் சுழற்சி ஏற்பட்டது. அவசரத்தில் கைவசம் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nameboards-mandatory-by-november-1-madras-high-court">சானிட்டரி நாப்கின்</a> எடுத்து வரத் தவறியதால், உடனடியாக அங்கிருந்த பெண் ஊழியர்களிடம் விசாரித்தபோது, கழிவறைகளில் முன்னர் இருந்த தானியங்கி நாப்கின் இயந்திரங்கள் தற்போது செயல்பாட்டில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, முனையத்தின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனையில் உள்ள மருந்தகத்திற்கு விரைந்து சென்று நாப்கின் வாங்க வேண்டிய சூழல் அவருக்கு ஏற்பட்டது. இதனால் அவர் விமானத்தில் ஏறுவதற்கே தாமதமாகும் நிலை உருவானது.</p><p>இந்த அனுபவத்தை வீடியோவாகப் பதிவு செய்து லதா ராவ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்தார். பெண்களின் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் இடமான பன்னாட்டு விமான நிலையத்தில் இதுபோன்ற அடிப்படை வசதிகள் முடங்கிக் கிடப்பது வேதனையளிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். மேலும், பெண்கள் தங்களின் பயணங்களின் போது நாப்கின்களை மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற விழிப்புணர்வையும் அவர் ஏற்படுத்தினார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி பெரும் விவாதப் பொருளாக மாறியது.</p><h2>தற்கா<strong>லிக ஏற்பாடு</strong></h2><p>நாப்கின் இயந்திரங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதன் காரணமாகவே அவை தற்காலிகமாக நீக்கப்பட்டதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதற்கிடையே, பெண் பயணிகளின் உடனடித் தேவையை பூர்த்தி செய்ய உடனடி தற்காலிக ஏற்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. இதன்படி, பெண்கள் கழிவறைகளில் பிரத்யேக தொலைபேசி எண்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த எண்ணை அழைத்தால், அடுத்த 2 நிமிடங்களுக்குள் விமான நிலைய பெண் ஊழியர் நேரடியாக வந்து சானிட்டரி நாப்கினை வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>36 புதி<strong>ய இயந்திரங்கள் நிறு</strong>வும் பணி</h2><p>இந்த தற்காலிக ஏற்பாட்டைத் தொடர்ந்து, நிரந்தர தீர்வாக சென்னை விமான நிலையத்தில் உள்ள பெண்கள் கழிவறைகளில் மொத்தம் 36 புதிய சானிட்டரி நாப்கின் வழங்கும் இயந்திரங்களை நிறுவும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து இயந்திரங்களும் பொருத்தப்பட்டு, வரும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் முழுமையாக செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று இந்திய விமான நிலைய ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகை ஒருவர் துணிச்சலாக எழுப்பிய புகாருக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட்டுள்ளது பயணிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சீனாவில் சுவாரசியம்: வனவிலங்குகளுக்கும் வந்துவிட்டது நர்சரி பள்ளி</title><link>https://www.maalaimalar.com/news/world/wildlife-kindergarten-in-china-lkg-classes-for-lion-and-tiger-cubs</link><comments>https://www.maalaimalar.com/news/world/wildlife-kindergarten-in-china-lkg-classes-for-lion-and-tiger-cubs#comments</comments><guid isPermaLink="false">d624b163-2cbf-4139-9107-c09dee960721</guid><pubDate>Sat, 05 Sep 2026 13:27:09 +0000</pubDate><atom:updated>2026-09-05T13:27:09.503Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>China,சீனா,wild animal zoo,வனவிலங்கு பூங்கா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/nmmwebk9/Untitled-design-21.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ China wildlife nursery school]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/nmmwebk9/Untitled-design-21.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சீனாவின் லெஹே லெடு வனவிலங்கு பூங்காவில், புதிதாக சிங்கம் மற்றும் புலி குட்டிகளுக்கு எல்.கே.ஜி வகுப்புகளை நடத்தும் சோங்கிங் மழலையர் தொடக்கப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE">சீனாவின்</a> யோங்சுவான் மாவட்டத்தில் 30 லட்சம் sq.km பரப்பளவில் லெஹே லெடு என்ற வனவிலங்கு பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவறும் வகையில் தனித்துவமான பொழுதுபோக்கு அம்சமான டிரக் சஃபாரி நடத்தப்படுகிறது. </p><h3><strong>டிரக் சஃபாரி</strong></h3><p>இந்த டிரக் சஃபாரியின் போது, வாகனத்தை சுற்றிலும் இரும்பு கூண்டுகள் அமைக்கப்பட்டு, அதின் உள்ளே சுற்றுலா பயணிகள் பூங்காவை சுற்றி பயணம் மேற்கொள்கின்றனர்.     </p><p>அந்த பயணத்தின் போது டிரக்கில் கோழி இறைச்சி அல்லது மற்ற இறைச்சிகள் கட்டி தொடங்க விடப்படுகிறது.</p><p>இதையடுத்து சுற்றுலா பயணிகளுடன் அந்த வாகனம் சிங்கம், புலி மற்றும் கரடி என தனித்தனியாக பிரித்து பராமரிக்கப்படும் இடங்களுக்கு செல்கிறது.</p><p>அப்போது அந்த டிரக்கில் தொங்கவிடப்பட்டுள்ள இறைச்சியை, வனவிலங்குகள் போட்டி போட்டுக் கொண்டு, வாகனத்தின் மேல் தாவி சாப்பிடுகின்றன.</p><p>இதனை வாகனத்தின் உள்ளே உள்ள சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்தும், மிக அருகில் வனவிலங்குகளை நேராக பார்த்தும் மகிழ்ச்சி அடைகின்றனர்.</p><h3><strong>மழலையர் தொடக்கப்பள்ளி</strong></h3><p>இந்த நிலையில் லெஹே லெடு வனவிலங்கு பூங்காவில் புதிதாக பிறந்துள்ள சிங்கம் மற்றும் புலி குட்டிகளுக்கு, பள்ளிகளை போன்று புதிய பயிற்சி வகுப்புகளை அளிகும் சோங்கிங் மழலையர் தொடக்கப்பள்ளியை ஆரம்பித்துள்ளது.</p><figure><iframe width="936" height="526" src="https://www.youtube.com/embed/Q4_us0HD634" title="Adorable Tiger and Lion Cubs Start ‘School’ at Animal Kindergarten in China | DRM News | AO1G" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe></figure><p>இதனடிப்படையில் பூங்கா ஊழியர்கள் நான்கு சிங்க குட்டிகள் மற்றும் ஒரு புலி குட்டியை பயிற்சி வகுப்பிற்காக தேர்ந்தெடுத்துள்ளனர்.</p><p>இந்த குட்டிகளுக்கு காலையில் பால் கொடுப்பது ஆரம்பித்து, விளையாட்டு பயிற்சி வகுப்புகள் வரை என அனைத்து விதமான பயிற்சிகளும் பூங்கா ஊழியர்களால் மேற்கொள்ளப்படுகிறது.</p><p>இந்த தனித்துவமான மழலையர் பள்ளியானது, சிங்கம் மற்றும் புலிகள் வளரும்போது, அவற்றின் இயல்பான உள்ளுணர்வையும் உயிர் வாழ்வதற்கான அத்தியாவசிய திறன்களையும் வலுப்படுத்த உதவும் என பூங்கா ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நவம்பர் 1-க்குள் கடைகளில் தமிழில் பெயர்ப்பலகை: சென்னை உயர் நீதிமன்றம் கெடு விதித்து உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nameboards-mandatory-by-november-1-madras-high-court</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nameboards-mandatory-by-november-1-madras-high-court#comments</comments><guid isPermaLink="false">3fc7e160-4a1c-41fc-874e-a9673ce7b6b8</guid><pubDate>Sat, 05 Sep 2026 13:11:16 +0000</pubDate><atom:updated>2026-09-05T13:11:16.109Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,சென்னை உயர் நீதிமன்றம்,Madras High Court,தமிழ்நாடு,Tamil nameboards,தமிழ்பெயர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/ysp8q9vz/high.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Madras High Court ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/ysp8q9vz/high.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி சுரேந்தர், வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர்ப்பலகை அமைப்பதற்கு வரும் நவம்பர் 1-ஆம் தேதியை இறுதிச் சட்டப்பூர்வ காலக்கெடுவாக நிர்ணயித்து உத்தரவிட்டார்.</p><p>தமிழகத்தில் உள்ள அனைத்துக் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் நவம்பர் 1-ஆம் தேதிக்குள் தமிழில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது.</p><p>தமிழகத்தில் செயல்படும் அனைத்து வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளிலும் தமிழ் மொழிக்கு முதன்மை இடம் அளிக்கப்பட வேண்டும் என 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமிழக அரசு சட்டப்பூர்வ உத்தரவு பிறப்பித்திருந்தது.</p><p>இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த கால அவகாசம் தேவை என்றும், இதற்கெதிராகவும் 'இந்திய சில்லறை வர்த்தகர்கள் சங்கம்' சார்பில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/diwali-festival-train-reservations-begin-tomorrow">சென்னை உயர் நீதிமன்றத்தில் </a>மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், புதிய பெயர்ப்பலகைகளின் வடிவமைப்பு, எழுத்துரு மற்றும் வண்ணங்களை மாற்றி அமைப்பதற்கு கணிசமான தொகையும் கூடுதல் அவகாசமும் தேவைப்படுவதாகக் கூறி 3 மாத கால அவகாசம் வழங்கக் கோரினார்.</p><h2>உயர் <strong>நீதிமன்றம்</strong> தீர்ப்பு </h2><p>மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி சுரேந்தர், வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர்ப்பலகை அமைப்பதற்கு வரும் நவம்பர் 1-ஆம் தேதியை இறுதிச் சட்டப்பூர்வ காலக்கெடுவாக நிர்ணயித்து உத்தரவிட்டார். நிர்ணயிக்கப்பட்ட நவம்பர் 1-ஆம் தேதிக்குள் தமிழ் பெயர் பலகை வைக்கத் தவறினால், சட்டப்படி சம்பந்தப்பட்ட கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதி எச்சரித்தார். மேலும், இந்த உத்தரவைச் சரியாக நடைமுறைப்படுத்தத் தவறினால் மற்றும் கடைகளைக் கண்காணிப்பதில் அலட்சியம் காட்டினால் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை பாயும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நேபாளத்தில் பேரழிவு வெள்ளம்: 11 நாட்களுக்குப் பின்  60 வயது மூதாட்டி உயிருடன் மீட்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/disaster-flood-in-nepal-60-year-old-woman-rescued-alive-after-11-days</link><comments>https://www.maalaimalar.com/news/world/disaster-flood-in-nepal-60-year-old-woman-rescued-alive-after-11-days#comments</comments><guid isPermaLink="false">28b2b1d2-401c-40cd-9f85-365686c4fa50</guid><pubDate>Sat, 05 Sep 2026 12:38:27 +0000</pubDate><atom:updated>2026-09-05T12:38:27.478Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>nepal,நேபாள நிலச்சரிவு,நேபாள பெண்,Nepal disaster,Nuwakot,மேல் திரிசூலி,நுவாகோட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/vpd0y9ef/nepal.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 60-year-old woman rescued ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/vpd0y9ef/nepal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாகப் பல நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். </p><p>நேபாள நாட்டில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அப்பகுதியை பெருமளவில் பாதித்துள்ளது. இந்த இயற்கைப் பேரிடருக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இச்சம்பவம் நடந்து 11 நாட்கள் கடந்துவிட்ட சூழலில், இருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் ஆச்சரியத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>மேல் திரிசூலி-1 நீர்மின் திட்டப் பகுதியில்அமைந்திருந்த சுரங்கப்பாதையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது சீன நாட்டின் ஊழியரான லுஹைடாவ் என்பவர் உள்ளேயே சிக்கிக்கொண்டார். கடந்த 11 நாட்களாக உணவு மற்றும் வெளித்தொடர்பு ஏதுமின்றி அந்த இருள் சூழ்ந்த பகுதியில் தவித்துக் கொண்டிருந்த அவரை, மீட்புக்குழுவினர் மீட்டெடுத்தனர். உயிருடன் மீட்கப்பட்ட அவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.</p><h2>இடிபாடு<strong>களுக்குள்</strong> சிக்கிய மூதாட்டி</h2><p>இதேபோன்று மற்றொரு மீட்புச் சம்பவத்தில், <a href="https://www.maalaimalar.com/news/world/i-was-chanting-hare-krishna-for-9-days-worker-rescued-from-tunnel">நுவாகோட்</a> மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இடிந்து விழுந்த தனது வீட்டின் இடிபாடுகளுக்கு இடையே 60 வயதான சந்திகா ஸ்ரேஷ்டா என்ற மூதாட்டி அகப்பட்டுக்கொண்டார். மீட்புப் படையினர் அப்பகுதியில் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இடிபாடுகளுக்குள் அவர் உயிருடன் இருப்பதைச் சுட்டிக்காட்டி அவரைப் பத்திரமாக வெளியே கொண்டுவந்தனர்.</p><h2><strong>மீட்புப் பணிக</strong>ள்</h2><p>இந்த இரண்டு பேரதிசய மீட்புச் சம்பவங்களும் நாடு முழுவதும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ள மக்களுக்கு ஒரு சிறு நம்பிக்கைக் கீற்றை அளித்துள்ளன. இருப்பினும், வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாகப் பல நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து நாட்டின் பல்வேறு வெள்ளம் பாதித்த பகுதிகளில் தீவிரமான மீட்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>ஏர்பஸ் விமான ஊழல் வழக்கில் கைது: நமல் ராஜபக்சே சிறையில் அடைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/namal-former-sri-lankan-president-rajapaksas-son-arrested-over-airbus-deal</link><comments>https://www.maalaimalar.com/news/world/namal-former-sri-lankan-president-rajapaksas-son-arrested-over-airbus-deal#comments</comments><guid isPermaLink="false">5a638158-e13a-4a01-a780-9caf5d58b07d</guid><pubDate>Sat, 05 Sep 2026 12:13:36 +0000</pubDate><atom:updated>2026-09-05T12:13:36.811Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Arrest,கைது,Airbus,ஏர்பஸ்,namal rajapakse,நமல் ராஜபக்சே</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/er1i01z3/namal.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ namal rajapakse]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/er1i01z3/namal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஏர்பஸ் விமான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மூத்த மகனான நமல் ராஜபக்சே சிறையில் அடைக்கப்பட்டார்.</strong></em></p><p>இலங்கை ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஏர்பஸ் ரக விமானங்களை வாங்கியதில் ஊழல் நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில்  முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மூத்த மகனும், எம்.பியுமான நமல் ராஜபக்சேவை இலங்கை ஊழல் தடுப்பு ஆணையம் நேற்று கைதுசெய்தது. </p><h2>நமல் ராஜபக்சே கைது</h2><p>கடந்த 2013-ம் ஆண்டில் நடைபெற்ற ஏர்பஸ் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் (சுமார் 8 லட்சம் அமெரிக்க டாலர்கள்) லஞ்சமாகப் பெற்றிருக்கிறார் எனும் குற்றச்சாட்டு அவர்மீது எழுந்திருக்கிறது. இந்த ஒப்பந்தம் 2.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலானது.</p><p>இந்தக் குற்றச்சாட்டை விசாரிக்கவே நமல் ராஜபக்சே கைது செய்யப்பட்டிருக்கிறார்.</p><h2>5 மணி நேரம் விசாரணை</h2><p>அவரிடம் 5 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பிறகு  கைது செய்யப்பட்டார். அதன்பின் அவர் கோர்ட்டில் மாஜிஸ்திரேட் அசங்க போதரகம முன் ஆஜர்படுத்தப்பட்டார். நமல் ராஜபக்சேவை வரும் 18-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். </p><p>தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, ராஜபக்சே குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் நீதிமன்றக் காவலில் அடைக்கப்படுவது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>நதியை மீட்டெடுத்த இந்திய இளைஞருக்கு நெதர்லாந்து சி.இ.ஓ அளித்த வேலை வாய்ப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/indian-youth-who-cleaned-polluted-river-gets-job-offer-from-dutch-ceo</link><comments>https://www.maalaimalar.com/news/national/indian-youth-who-cleaned-polluted-river-gets-job-offer-from-dutch-ceo#comments</comments><guid isPermaLink="false">06bf141b-6098-4cd8-848b-90a84e3370c8</guid><pubDate>Sat, 05 Sep 2026 11:56:38 +0000</pubDate><atom:updated>2026-09-05T11:56:38.034Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Madhya Pradesh,மத்தியப் பிரதேசம்,Bittu Tabahi,Ajnar River,Surendra Singh Chaudhary,சுரேந்திர சிங் சவுத்ரி,பிட்டு தபாஹி,அஜ்னார் நதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/43b34swv/river.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bittu Tabahi ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/43b34swv/river.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்தியப் பிரதேச மாநிலத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள பயோரா பகுதியைச் சேர்ந்த 21 வயதான சுரேந்திர சிங் சவுத்ரி, சமூக வலைதளங்களில் 'பிட்டு தபாஹி' என்ற பெயரில் அறியப்படுகிறார். இவர் தனது பகுதியில் கடுமையாக மாசடைந்திருந்த அஜ்னார் நதியைத் தூய்மைப்படுத்தும் முயற்சியில் கடந்த ஜனவரி மாதம் முதல் தனியாளாக இறங்கினார். நதியில் தேங்கிக்கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள், பாசிகள் மற்றும் பிற குப்பைகளைத் தொடர்ச்சியாக அப்புறப்படுத்தி, சில மாதங்களிலேயே அந்த நதியை முழுமையாகத் தூய்மைப்படுத்தினார்.</p><p>தனது தூய்மைப் பணிகளை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பிட்டு தபாஹி பகிர்ந்து வந்தார். இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி உலகளவில் கவனம் பெற்றன. இவரின் இந்த அசாதாரண முயற்சியைப் பார்த்த நெதர்லாந்தைச் சேர்ந்த '<a href="https://www.maalaimalar.com/news/national/dont-make-false-promises-to-me-kangana-ranaut-slams-officials">தி ஓஷன் கிளீன்அப்</a>' தொண்டு நிறுவனத்தின் நிறுவனரும் தலைமைச் செயலதிகாரியுமான போயன் ஸ்லாட், சமூக வலைதளப் பதிவு ஒன்றிற்குப் பதிலளிக்கும் விதமாக "எங்களுடன் இணைந்து பணியாற்ற வாருங்கள்" எனப் பகிரங்கமாக வேலை வாய்ப்பு வழங்கி அழைப்பு விடுத்துள்ளார்.</p><p>பிட்டு தபாஹியின் இந்த முயற்சிக்கு நெதர்லாந்து நிறுவனத்தின் அழைப்பு மட்டுமன்றி, உள்நாட்டிலும் பலதரப்பட்ட ஆதரவுகள் குவிந்து வருகின்றன. தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா இவரின் தூய்மைப் பணியைப் பாராட்டியுள்ளார். மேலும், மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், பிட்டு தபாஹியைத் தனது அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்ததுடன், 'ஜல் கங்கா சம்வர்தன் அபியான்' என்ற நீர்நிலைகளைப் பாதுகாக்கும் அரசின் திட்டத்திற்கு இவரின் முயற்சி பெரும் ஊக்கமாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>சுமார் 30,000 ரூபாய் சொந்தப் பணத்தைச் செலவழித்து இந்த நதி மீட்புப் பணியைச் செய்துள்ளதாகக் கூறும் பிட்டு தபாஹி, இத்தகைய விழிப்புணர்வு வீடியோக்கள் வெளியான பிறகு பொதுமக்கள் நதியில் குப்பைகளைக் கொட்டுவது கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். தனி ஒருவனின் விடாமுயற்சி ஒரு நதியை மீட்டெடுத்தது மட்டுமன்றி, சர்வதேச அளவில் அவருக்கு ஒரு புதிய அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>என்னிடம் போலி வாக்குறுதிகளைக் கூறாதீர்கள்: அதிகாரிகளை கடுமையாகச் சாடிய கங்கனா ரணாவத்</title><link>https://www.maalaimalar.com/news/national/dont-make-false-promises-to-me-kangana-ranaut-slams-officials</link><comments>https://www.maalaimalar.com/news/national/dont-make-false-promises-to-me-kangana-ranaut-slams-officials#comments</comments><guid isPermaLink="false">54265f80-e617-42b7-b53e-d129d696d4fa</guid><pubDate>Sat, 05 Sep 2026 11:07:14 +0000</pubDate><atom:updated>2026-09-05T11:07:14.115Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கங்கனா ரனாவத்,Kangana Ranaut,திஷா,Disha,Mandi constituency,MPLADS,மண்டி தொகுதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/yiaodli6/kangana.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kangana Ranaut]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/yiaodli6/kangana.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மண்டி தொகுதிக்கான 11 கோடி ரூபாய் நிதியில் 50 லட்சம் மட்டுமே செலவிடப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்து பாஜக எம்பி கங்கனா ரணாவத் செயல்பாட்டு அறிக்கை கோரியுள்ளார். </p><p>இமாச்சலப் பிரதேச மாநிலம் மண்டி தொகுதி பாஜக எம்பி கங்கனா ரணாவத், தனது தொகுதிக்கான மேம்பாட்டு நிதி முறையாகப் பயன்படுத்தப்படாதது குறித்து அரசு அதிகாரிகளைக் கடுமையாகச் சாடியுள்ளார். மண்டி மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், அதிகாரிகளின் அலட்சியப் போக்கிற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.</p><h2>11 கோடியில் <strong>50 லட்சம் ம</strong>ட்டுமே செலவு</h2><p>கூட்டத்தின் போது தொகுதி <a href="https://www.maalaimalar.com/news/national/buy-me-a-bicycle-7-year-old-girl-with-amputated-leg-pleads-to-district-collector">மேம்பாட்டுத் திட்டங்கள் </a>குறித்து ஆய்வு செய்த கங்கனா ரணாவத், தனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் சுமார் 11 கோடி ரூபாய் வரை கைவசம் உள்ளது என்றும், ஆனால் அதில் வெறும் 50 லட்சம் ரூபாய் மட்டுமே இதுவரை செலவிடப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். பெரும்பாலான நிதி பயன்படுத்தப்படாமல் முடங்கிக் கிடப்பது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் அவர் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினார்.</p><h2>போலி வாக்கு<strong>றுதிகளுக்குக் கண்</strong>டனம்</h2><p>முந்தைய கூட்டங்களில் தொகுதி மேம்பாட்டு நிதியில் 90 சதவீதத்திற்கும் அதிகமான பணிகள் முடிந்துவிட்டதாகவும், எவ்வித சிக்கலும் இல்லை என்றும் அதிகாரிகள் தன்னிடம் தவறான தகவல்களைத் தெரிவித்ததாக அவர் குற்றம்சாட்டினார். "ஒவ்வொரு திஷா கூட்டத்திலும் என்னிடம் இதுபோன்ற போலி வாக்குறுதிகளை அளிக்காதீர்கள், இனி எனக்கு உண்மையான வேலைகளும் வெளிப்படையான செயல்பாடுகளுமே தேவை" என்று கோபத்துடன் குறிப்பிட்டார்.</p><p>தொகுதி நிதியை விரைவாகப் பயன்படுத்தி நிலுவையில் உள்ள வளர்ச்சிப் பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட அவர், இதுவரை மேற்கொள்ளப்பட்ட நிதிச் செலவினங்கள் மற்றும் பணிகளின் முன்னேற்றம் குறித்த முழுமையான செயல்பாட்டு அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு அதிகாரிகளுக்குக் கெடு விதித்துள்ளார். இக்கூட்டத்தில் கங்கனா ரணாவத் அதிகாரிகளைக் கடிந்துகொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>அரசு பள்ளியில் உணவு சாப்பிட்ட 2,000 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி: வேகவைக்கப்படாத இறைச்சி காரணமா? </title><link>https://www.maalaimalar.com/news/world/2000-students-hospitalized-after-school-meals-in-indonesia</link><comments>https://www.maalaimalar.com/news/world/2000-students-hospitalized-after-school-meals-in-indonesia#comments</comments><guid isPermaLink="false">c273330b-a69e-4956-b6d9-2341d364ca01</guid><pubDate>Sat, 05 Sep 2026 10:56:18 +0000</pubDate><atom:updated>2026-09-05T10:56:18.687Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>government school,இந்தோனேசியா,food poisoning,indonesia,அரசு பள்ளி,உணவு நஞ்சு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/cpduuvyn/Untitled-design-20.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Indonesia school food poisoning]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/cpduuvyn/Untitled-design-20.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தோனேசியாவில் உள்ள அரசு பள்ளியில் கடந்த மூன்று நாட்களில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட சுமார் 2,000 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வாந்தி மற்றும் தலைசுற்று ஏற்பட்டதை தொடர்ந்து, அவர்களை பள்ளி நிர்வாகம் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE">இந்தோனேசியா</a> பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்காக, ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோ பல பில்லியன் டாலர் திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.</p><h3><strong>அரசு உயர்நிலைப் பள்ளி</strong></h3><p>மத்திய ஜாவா அடுத்த ரெம்பாங் நகரத்தில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் மக்கான் பெர்கிஸி கிராடிஸ் (Makan Bergizi Gratis) என்ற திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட 752 மாணவர்கள் மற்றும் 25 ஆசிரியர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.   </p><p>இதையடுத்து பள்ளி நிர்வாகம் அந்த பள்ளியில் உள்ள 1,200 மாணவர்களையும் 95 பணியாளர்களையும் வீட்டிற்கு அனுப்பியது.</p><p>மேலும் வாந்தி, தலைசுற்று உள்ளிட்ட உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.</p><h3><strong>பள்ளி தலைமை ஆசிரியர்</strong></h3><p>இந்த சம்பவம் குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜுஹார்டுடிக் கூறுகையில், “அவர்களுக்கு வயிற்றுப்போக்கு இருந்ததால், அவர்கள் கழிப்பறையை முறைப்படி பயன்படுத்தினார்கள்.</p><p>ஆனால் மொத்தம் 40 கழிப்பறைகள் தான் பள்ளியில் இருந்ததால், அவர்கள் அனைவருக்கும் இடமளிக்க முடியவில்லை.</p><p>மருத்துவச் செலவுகள் அனைத்தையும் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும், மேலும் உணவு விநியோகம் செய்த உள்ளூர் உணவு விநியோகஸ்தர்கள் இதற்கு பொறுப்பேற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்” என அவர் கூறினார்.</p><h3><strong>பெற்றோர்கள் குற்றச்சாட்டு</strong></h3><p>இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், முறையற்ற சேமிப்பு மற்றும் சரியாக சமைக்கப்படாத உணவு ஆகியவற்றை சாப்பிட்டதால், மாணவர்களுக்கு உணவு நஞ்சு ஏற்பட்டுள்ளது.</p><p>மேலும் அசுத்தமான கோழிக்கறியின் இறைச்சி, சரியாக வேக வைக்கப்படாத அசைவ உணவுகள் மற்றும் சரியான சுத்தம் செய்யாத மீன்கள், இந்த உணவு ஒவ்வாமைக்கு காரணமாக இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.</p><h3><strong>உணவு மாதிரிகள் பரிசோதனை</strong></h3><p>இதையடுத்து உடல் நலக்குறைவு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து உள்ளூர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மேலும் இதில் சாத்தியமான கலப்படம் உள்ளதா என்பதைக் கண்டறிய உணவு மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதைத்தொடர்ந்து லாசெமில் உள்ள உணவு விநியோகப் பிரிவின் தலைவர் அஹ்மத் ஷோலே ஷரிஃபுதின், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் மன்னிப்புக் கோரியதோடு, அவர்கள் குணமடைவதற்கான முழுப் பொறுப்பையும் தான் ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்தார்.</p>]]></content:encoded></item><item><title>உலகின் மிகப்பெரிய காற்று மணியை அமைத்த அமெரிக்கர் - 12 கின்னஸ் சாதனைகளை படைத்தார்</title><link>https://www.maalaimalar.com/news/world/us-man-installs-giant-wind-chime-sets-12-guinness-records</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-man-installs-giant-wind-chime-sets-12-guinness-records#comments</comments><guid isPermaLink="false">1353f966-089a-41cf-9d98-387ae367e748</guid><pubDate>Sat, 05 Sep 2026 10:53:38 +0000</pubDate><atom:updated>2026-09-05T10:53:38.057Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,America,தொழிலதிபர்,businessman,கின்னஸ் சாதனை,Guinness</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/kecwpiv7/Untitled-design-19.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Guinness Record Wind Chime]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/kecwpiv7/Untitled-design-19.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவை சேர்ந்த போலின் என்பவர் கேசி என்ற தனது கிராமத்தில் உலகின் மிகப்பெரிய காற்று மணி ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் அதிகளவில் சுற்றுலா பயணிகளை ஈர்த்து 12 கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.</p><h3><strong>ஜிம் போலின்</strong></h3><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE">அமெரிக்காவில்</a> இல்லினாய்ஸ் நகரத்தில் உள்ள கேசி என்ற சிறிய கிராமத்தில் ஜிம் போலின் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்த கிராமத்தில் 3,000 மக்கள் வாழ்ந்து வந்தனர்.  </p><p>கேசி கிராமத்தில் போதுமான அளவில் மக்கள் வரவு இல்லாமல் குறைந்து காணப்பட்டது. இதையடுத்து போலினும் அவரது குடும்பத்தினரும் ஒரு தேநீர் கடையை திறந்தனர். </p><p>ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி, அந்த கிராமத்திற்கு போதுமான அளவில் மக்கள் வந்து செல்லவில்லை. </p><h3><strong>பிரம்மாண்டமான காற்று மணி</strong></h3><p>இதையடுத்து போலின் தனது பாட்டி முன்பு வைத்திருந்த சிறிய அளவிலான காற்று மணியை உதாரணமாக வைத்துக் கொண்டு, 2012-ஆம் அண்டு உலகின் மிகப்பெரிய காற்று மணி ஒன்றை உருவாக்கினார்.</p><p>போலினுக்கு குழாய் அமைக்கும் தொழிலில் ஏற்கனவே முன் அனுபவம் இருந்ததால், பெரிய காற்று மணியை உருவாக்குவதற்கு தேவையான பாகங்கள், அவரிடம் ஏற்கனவே இருந்தன.</p><p>போலின் தான் உருவாக்கிய காற்று மணியை, தனது கேசி நகரத்தில் மக்களின் பார்வைக்காக வைத்தார். இதைப் பார்த்த அந்த பகுதி மக்கள், பல பிரம்மாண்டமான பொருட்களை சேர்க்க தொடங்கினர்.</p><p>மேலும் அந்த பகுதி நகர மக்கள், பிரம்மாண்டமான முட்கரண்டி, கோல்ஃப் ஆணி (Golf tee), தபால் பெட்டி, ஆடும் நாற்காலி, கோல்ஃப் பேட், முடி திருத்தும் கம்பம், ஏற்ற இறக்க பலகை மற்றும் பிற பொருட்களை மிகப் பெரிய அளவில் பிரம்மாண்டமாக உருவாக்கினர்.</p><h3><strong>சுற்றுலா பயணிகளை ஈர்த்தது</strong></h3><p>அந்த மாதிரியிலான பொருட்கள் வெறும் அலங்கார பொருட்களாக இல்லாமல், அவை பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தன.</p><p>போலின் உருவாக்கிய காற்று மணியில் காற்று அதன் வழியே உள்ளே செல்லும்போது, அது பிரம்மாண்டமாக ஒலி எழுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது.</p><p>அந்த நகரத்தில் வைக்கப்பட்ட பிரம்மாண்டமான தபால் பெட்டியில், ஒருவர் தபால் போடும்போது அதில் உள்ள கொடி உயர்ந்து மேலே செல்லும்படியும், பின்னர் தாழ்ந்து கீழே இறங்கும்படியும் வடிவமைக்கப்பட்டு இருந்தது.</p><p>இதன்மூலம் பார்வையாளர்கள் அந்த நகரத்தில் வைக்கப்பட்ட பொருட்களை பார்த்து ரசிப்பது மட்டுமல்லாமல், அதன் அனுபவத்தை பெற்றனர்.</p><p>இதையடுத்து 2019-ஆம் ஆண்டு, கேசி நகரத்தில் உள்ள 6-க்கும் மேற்பட்ட சுற்றுலா தலங்கள் உலக சாதனை படைத்தன. இதைத்தொடர்ந்து ஒரு வார இறுதியில் அந்த பகுதிக்கு 1,500க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.</p><h3><strong>12 கின்னஸ் சாதனைகள்</strong></h3><p>போலின் 15 ஆண்டுகளில் உருவாக்கிய 21 வெவ்வேறு பொருட்களுக்காக, 12 கின்னஸ் உலக சாதனைகளை படைத்தார். அந்த பட்டியலில் 14.94 மீட்டர் உயரம் கொண்ட மிகப்பெரிய காற்று மணியும், 25.01 மீட்டர் நீளம் கொண்ட ஊஞ்சலும், 17.09 மீட்டர் உயரம் கொண்ட மிகப்பெரிய ஆடும் நாற்காலியும் இடம்பெற்றிருந்தன.</p><p>இந்த கின்னஸ் சாதனை குறித்து போலின் கூறும்போது, உலக சாதனைகள் தங்கள் கிராமத்தை மிகப்பெரிய அளவில் மாற்றிவிட்டதாக தெரிவித்தார்.</p><p>மேலும் இந்த மாற்றங்கள் ஒரே இரவில் நடந்துவிடவில்லை எனவும், இந்த முயற்சியை தொடங்க ஒட்டுமொத்த சமூகத்தின் ஆதரவும் தேவைப்பட்டதாகவும் போலின் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>நீதிபதிகளின் ஓய்வு வயதை 62ஆக உயர்த்த உச்சநீதிமன்றம் உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/national/retirement-age-of-judges-raised-to-62</link><comments>https://www.maalaimalar.com/news/national/retirement-age-of-judges-raised-to-62#comments</comments><guid isPermaLink="false">c376eb78-af7a-4d54-8b56-e6e95ed322c9</guid><pubDate>Sat, 05 Sep 2026 10:48:32 +0000</pubDate><atom:updated>2026-09-05T10:48:32.100Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நீதிபதிகள்,உச்சநீதிமன்றம்,தலைமை நீதிபதி சூர்யகாந்த்,ஒய்வு பெறும் வயது</media:keywords><media:content height="186" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/p37dhm2z/images-1.jfif" width="271"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாடு உட்பட இந்தியாவின் ஏழு மாநிலங்களின் மாவட்ட நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 62ஆக உயர்த்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/p37dhm2z/images-1.jfif?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>ஓய்வு பெறும் வயது உயர்வு..</h2><p>மாவட்ட நீதிமன்றங்களில் பணிபுரியும் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 60இருந்து 62ஆக முறைப்படி உயர்த்த ஏழு மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவானது, நீதித்துறையில் பல ஆண்டுகளாக  சிறப்புடனும், அனுபவத்துடனும் செயல்படும் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/fifteen-new-judges-take-oath-at-madras-high-court">நீதிபதிகள்</a> பணியிலிருந்து விலகுவதை  தடுக்கவும், முறைப்படி விசாரணை நடத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைப்பதையும் உறுதி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>மாநிலங்களின் ஒப்புதல் </h2><p>இந்த முன்மொழிவை அந்தந்த <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/hc-directs-centre-state-to-submit-detailed-report-on-rescue-of-missing-indians-in-nepal-floods">மாநில அரசுகள்</a> ஒப்புக்கொண்டத்தை தொடர்ந்து இந்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த அமர்வானது, தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் பிறப்பிக்கப்பட்டது.</p> <h2>சட்ட விதிகளை  திருத்த வேண்டும் </h2><p>நீதிபதிகளின் விசாரணை என்பது வெறும் கண்மூடித்தனமான மாயையாக இல்லாமல், நீதி கிடைப்பதை உறுதி செய்யவே என்றும், மேலும் இரண்டு மாதங்களுக்குள் இந்த விதிகளை திருத்த வேண்டும் என்றும் <a href="https://www.maalaimalar.com/news/national/tarun-tejpal-rape-conviction-supreme-court-orders-surrender-within-two-weeks">உச்சநீதிமன்றம்</a> உத்தரவிட்டுள்ளது. </p><p>நீதிபதிகளின் வயதுவரம்பை உய்ர்த்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ள மாநிலங்கள், சம்பந்தப்பட்ட நீதித்துறை அதிகாரிகள் 60 வயதை எட்டும்போது இந்த உத்தரவை கடைப்பிடித்து ஒய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்த வேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>ஓய்வு பெற முடியாது </h2><p>வழக்கானது நிலுவையில் உள்ள காரணத்தினால், இந்த ஏழு மாநிலங்களில் தற்போது 60 வயதை கடந்த அதிகாரிகள் அந்த வயதில் ஓய்வு பெற மாட்டார்கள் என்றும், இந்த உத்தரவு, மார்ச் 31, 2026 அன்று அல்லது அதற்குப் பிறகு ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கும் பொருந்தும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. </p><p>மேலும் அவர்கள் வேறு பணியில் சேராத பட்சத்தில், நீதித்துறைப் பணிக்குத் திரும்புவதற்கான விருப்பத்தைப் பயன்படுத்தி மீண்டும் நீதித்துறை பணிக்கு செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>முடிவு மறுபரிசீலனை</h2><p>மீதமுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்களது முடிவை இரண்டு வாரங்களுக்குள் மறுபரிசீலனை செய்து தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.</p><p>மேலும் இத்த உத்தரவு குறித்தான முடிவை மறுபரிசீலனை செய்து, இரண்டு வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் ஒரு விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், கேரளா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம்,அசாம், பீகார்,நாகாலாந்து, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலங்கானா, திரிபுரா, உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், டெல்லி , ஜம்மு காஷ்மீர் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களை நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கார்க் தீவு அருகே பலத்த வெடிச் சத்தம்: ஈரானிய எண்ணெய் டேங்கர் கப்பல் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல்</title><link>https://www.maalaimalar.com/news/world/loud-explosion-near-kharg-island-us-missile-strike-on-iranian-oil-tanker</link><comments>https://www.maalaimalar.com/news/world/loud-explosion-near-kharg-island-us-missile-strike-on-iranian-oil-tanker#comments</comments><guid isPermaLink="false">41ccd1b5-2cc4-4c83-a368-bc2c979fc431</guid><pubDate>Sat, 05 Sep 2026 10:11:11 +0000</pubDate><atom:updated>2026-09-05T10:11:11.633Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,America,ஈரான்,Iran,Strait of Hormuz,Kharg Island,கார்க் தீவு,எண்ணெய் டேங்கர் கப்பல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/z9dda30a/gah.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kharg Island]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/z9dda30a/gah.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவின் இத்தகைய தீவிர நடவடிக்கைகளுக்கு ஈரான் சார்பில் கடுமையான பதிலடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.</p><p>ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான <a href="https://www.maalaimalar.com/news/world/trump-calls-iran-conflict-small-potatoes">கார்க் தீவுக்கு </a>அருகே பயங்கர வெடி சத்தங்கள் கேட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எண்ணெய் டேங்கர் கப்பல் ஒன்று சரக்குகளை இறக்கிக் கொண்டிருந்தபோது, அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலே இதற்குக் காரணம் என ஈரானின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.</p><h2>நான்கு ஏவுக<strong>ணைகள் மூலம் தாக்கு</strong>தல்</h2><p>எண்ணெய் டேங்கர் கப்பலில் இருந்து கச்சா எண்ணெய் இறக்கப்பட்டு வந்த தருணத்தில், அதை இலக்கு வைத்து நான்கு ஏவுகணைகள் வீசப்பட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இத்தாக்குதலால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், வெடிப்புச் சத்தம் கேட்டபோதிலும் கார்க் தீவுப் பகுதியில் புகை எதுவும் எழும்பியதை உடனடியாகக் காண முடியவில்லை என ஈரான் குறிப்பிட்டுள்ளது.</p><h2>தீவி<strong>ரமடையும் மோ</strong>தல்</h2><p>மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கிடையே நிலவி வரும் மோதல் போக்கு கடந்த சில நாட்களாக மேலும் தீவிரமடைந்துள்ளது. உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தில் மிக முக்கியப் பாதையாக விளங்கும் ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகின்றன. ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள், ரேடார் மையங்கள் மற்றும் சுரங்கம் தோண்டும் திறன்களை இலக்கு வைத்து அமெரிக்க ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.</p><p>ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 90 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பைச் செய்து வரும் கார்க் தீவுப் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது, சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகத்தைப் பெருமளவில் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது. அமெரிக்காவின் இத்தகைய தீவிர நடவடிக்கைகளுக்கு ஈரான் சார்பில் கடுமையான பதிலடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வம்- தீபாவளி பண்டிகை ரெயில் முன்பதிவு நாளை தொடக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/diwali-festival-train-reservations-begin-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/diwali-festival-train-reservations-begin-tomorrow#comments</comments><guid isPermaLink="false">a0f84fa8-bc62-484e-ba86-604466113b3e</guid><pubDate>Sat, 05 Sep 2026 09:57:51 +0000</pubDate><atom:updated>2026-09-05T09:57:51.739Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Diwali,தீபாவளி,Ticket Booking,டிக்கெட் முன்பதிவு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/pqb59n5z/train01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ ரெயில்]]></media:title><media:description type="html"><![CDATA[ ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/pqb59n5z/train01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தீபாவளி பண்டிகை முன்பதிவு நாளை தொடங்குவதால் குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய மக்கள் முக்கிய ரெயில் நிலையங்களில் நேரடியாக டிக்கெட் பெற தயாராக உள்ளனர்.</strong></em> </p><p>சென்னை மற்றும் அதனை ஒட்டிய புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் <a href="https://www.maalaimalar.com/topic/தீபாவளி">தீபாவளி</a> பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட   செல்வது வழக்கம். </p><h2><strong>முன்பதிவு</strong></h2><p>இந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி தீபாவளி பண்டிகை வருகிறது. அதனால் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்லும் வகையில் ரெயில்களில் முன்பதிவு தொடங்குகிறது. </p><p>60 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்யக்கூடிய நிலை தற்போது இருப்பதால் தீபாவளி பயணத்திற்கான முன்பதிவு நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை  8 மணிக்கு தொடங்குகிறது.</p><p>சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் வந்தே பாரத் ரெயில்களில் பயணம் செய்ய மக்கள் தயாராக உள்ளனர். </p><p>நவம்பர்  5-ந்தேதி பயணம் செய்ய  நாளை முன்பதிவு தொடங்குகிறது.  நவம்பர் 6-ந் தேதி பயணம் செய்வதற்கு 7-ந்தேதி  (திங்கட்கிழமை)யும் 7ந்தேதி பயணத்திற்கு 8-ந்தேதியும் முன்பதிவு  நடைபெற உள்ளது. </p><p>தீபாவளி பண்டிகை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை  உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு திரும்ப  வருகிற 10-ந் தேதி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம். </p><p>தீபாவளி பண்டிகை முன்பதிவு நாளை தொடங்குவதால் குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய மக்கள் முக்கிய ரெயில் நிலையங்களில் நேரடியாக டிக்கெட் பெற தயாராக உள்ளனர். இது தவிர பெரும்பாலானவர்கள் ஏஜென்சிகள் மூலமாகவும் ஆன்லைன் வழியாகவும் முன்பதிவு செய்வதற்கு தயாராகி வருகின்றனர். </p><p>ரெயில்களில் குறைந்த  கட்டணத்தில் பாதுகாப்பாக  குறித்த நேரத்திற்கு செல்ல முடியும் என்பதால் பெரும்பாலானவர்கள் ரெயில் பயணத்தையே விரும்புகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/districts-likely-to-experience-moderate-rain-today-and-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/districts-likely-to-experience-moderate-rain-today-and-tomorrow#comments</comments><guid isPermaLink="false">c9015e34-62ec-4107-8288-9e1c48d94f20</guid><pubDate>Sat, 05 Sep 2026 09:51:10 +0000</pubDate><atom:updated>2026-09-05T09:51:10.047Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,Chennai Rain,சென்னை மழை,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/pbyi5qr7/rain007.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மழை]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/pbyi5qr7/rain007.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.</strong></em> </p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>சுமார் 7.6 கிமீ உயரத்தில் கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.</p><p>சுமார் 0.9 கிமீ உயரத்தில் தெற்கு தெலுங்கானா முதல் மன்னார் வளைகுடா வரை ராயலசீமா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><h2><strong>மிதமான மழை</strong></h2><p>இன்று சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், மயிலாடுதுறை, நாகபட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், மற்றும் அரியலூர் மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>6-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>7 மற்றும் 8-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>9 மற்றும் 10-ந்தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>11-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>இதனிடையே, இன்று முதல் 9-ந்தேதி வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p>]]></content:encoded></item><item><title>தவெக கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம்: திருமாவளவனுக்கு அமைச்சர்கள் நேரில் சென்று அழைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/consultative-meeting-of-tvk-alliance-party-leaders</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/consultative-meeting-of-tvk-alliance-party-leaders#comments</comments><guid isPermaLink="false">5c9f5c82-946b-4c32-b87c-c5491b80ec45</guid><pubDate>Sat, 05 Sep 2026 09:47:06 +0000</pubDate><atom:updated>2026-09-05T09:47:06.106Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,thirumavalavan,திருமாவளவன்,ஆதவ் அர்ஜுனா,Consultative Meeting,tvk,தவெக கூட்டணி,TVK  Ministers</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/c736cmg6/thiruma.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Thirumavalavan ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/c736cmg6/thiruma.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வரும் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள தவெக கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு திருமாவளவனுக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டது.</p><p>தமிழகத்தில் கூட்டணி அரசையும் அதன் தொடர்ச்சியாக வரவிருக்கும் தேர்தல்களையும் எதிர்கொள்ளும் வகையில், <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cpi-veerapandian-says-we-will-support-tvk-from-outside">தமிழக வெற்றிழகம்</a> (தவெக) ஆதரவுத் தலைவர்களின் இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டம் வரும் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்கான அதிகாரப்பூர்வ அழைப்பினை, தவெகவைச் சேர்ந்த அமைச்சர்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனிடம் நேரில் வழங்கி அழைப்பு விடுத்துள்ளனர்.</p><p>சென்னை அசோக் நகரில் அமைந்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் அருண்ராஜ் ஆகியோர் விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பின் போது, வரும் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள தவெக கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அவருக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டது.</p><p>முன்னதாக, கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் கடந்த ஜூலை 1-ஆம் தேதி சென்னை கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் காங்கிரஸ், விசிக, மதிமுக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டணிக்கு பொதுவான பெயர் சூட்டுவது, ஒருங்கிணைப்புக் குழு அமைப்பது மற்றும் குறைந்தபட்ச பொதுச் செயல்திட்டத்தை உருவாக்குவது தொடர்பாக அக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.</p><h2>இரண்<strong>டாம் கட்டக் கூட்டம்</strong></h2><p>வரவிருக்கும் 9-ஆம் தேதி கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகளிடையேயான அடுத்தகட்ட நடவடிக்கைகள், ஒருங்கிணைப்புப் பணிகள் மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>துலீப் டிராபி இறுதிப்போட்டி: தெற்கு-கிழக்கு மண்டலங்கள் நாளை மோதல்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/tomorrow-duleep-trophy-final-in-chepauk-ground</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/tomorrow-duleep-trophy-final-in-chepauk-ground#comments</comments><guid isPermaLink="false">f6943825-7add-46a6-8794-b4d99b884874</guid><pubDate>Sat, 05 Sep 2026 09:38:11 +0000</pubDate><atom:updated>2026-09-05T09:38:11.148Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இறுதிப்போட்டி,final,துலீப் டிராபி,Duleep Trophy,south zone,East Zone,கிழக்கு மண்டலம்,தெற்கு மண்டலம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/avsgre64/duleep.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ tilak varma, ishan kishan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/avsgre64/duleep.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நாளை நடைபெற உள்ள துலீப் டிராபி இறுதிப்போட்டியில் தெற்கு மண்டல அணியும், கிழக்கு மண்டல அணியும் மோத உள்ளன.</strong></em></p><p>இந்தியாவில் நடைபெறும் உள்நாட்டு முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் முக்கியமானது துலீப் டிராபி போட்டியாகும்.</p><h2>நாளை இறுதிப்போட்டி</h2><p>இதன் முதல் சீசன் 1961-1962-ல் நடைபெற்றது. தற்போது 63-வது சீசன் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம்  மைதானத்தில் நாளை தொடங்குகிறது. 10-ம் தேதி வரை  5 நாட்கள் இந்தப் போட்டி  நடக்கிறது. இதில் தெற்கு மண்டலம் - கிழக்கு மண்டலம் அணிகள் மோத உள்ளன. </p><h2>திலக் வர்மா</h2><p>தமிழ்நாடு, ஆந்திரா, ஐதராபாத், கர்நாடகா, கேரளம், புதுச்சேரி, கோவா ஆகிய அணிகளின் வீரர்களைக் கொண்டது தெற்கு மண்டலம்.</p><p>இந்த அணிக்கு திலக் வர்மா கேப்டனாக  இருக்கிறார். அவர் ஒரு சதமும், ஒரு அரை சதமும் அடித்து நல்ல பார்மில் உள்ளார். சென்னையைச் சேர்ந்த என்.ஜெகதீசன் விக்கெட் கீப்பராக  உள்ளார். தேவ்தத் படிக்கல், முகமது சிராஜ் போன்ற இந்திய வீரர்கள் தெற்கு மண்டல அணிக்காக விளையாடுகிறார்கள்.  </p><p>தெற்கு மண்டலம் 13 முறை துலீப் டிராபியை வென்றுள்ளது. 14-வது தடவையாக சாம்பியன் பட்டம் வெல்லும் ஆர்வத்தில் இருக்கிறது. அந்த அணி அரையிறுதியில் வடக்கு மண்டலத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. </p><h2>இஷான் கிஷன் </h2><p>கிழக்கு மண்டல அணிக்கு இஷான் கிஷன் கேப்டனாக இருக்கிறார். வைபவ் சூர்யவன்ஷி,  முகமது ஷமி, முகேஷ் குமார் போன்ற சிறந்த வீரர்களும் அந்த அணியில் இருக்கிறார்கள்.</p><p>கிழக்கு மண்டலம் அரையிறுதியில் மத்திய மண்டலத்தை 4  விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்தது. கிழக்கு மண்டலம்  2   தடவை துலீப் டிராபியை வென்றுள்ளது. 3-வது முறையாக  சாம்பியன் பட்டம் வெல்லும் வேட்கையில் உள்ளது.</p><p>அசாம், பீகார், பெங்கால், ஜார்க்கண்ட், ஒடிசா, திரிபுரா ஆகிய மாநில வீரர்களைக் கொண்டது கிழக்கு மண்டலம். </p><h2>அனுமதி இலவசம்</h2><p>நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியை ரசிகர்கள் இலவசமாகப் பார்க்கலாம். காலை 9 மணிக்கு கேட் 4 வழியாக ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. தமிழக கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது ஓர் அரிய வகை வாய்ப்பாகக்  கருதப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>தவெக கூட்டணியில் இடம் பெறவில்லை - இந்திய கம்யூனிஸ்ட் வீரபாண்டியன் திட்டவட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cpi-veerapandian-says-we-will-support-tvk-from-outside</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cpi-veerapandian-says-we-will-support-tvk-from-outside#comments</comments><guid isPermaLink="false">ce3c9857-72f5-44c7-9e26-f9a530b855c6</guid><pubDate>Sat, 05 Sep 2026 09:19:09 +0000</pubDate><atom:updated>2026-09-05T09:19:09.935Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,சிபிஐ,CPI,tvk,வீரபாண்டியன்,Veerapandian</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/nlv1intu/veerapandian.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/nlv1intu/veerapandian.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மக்கள் அதிகாரத்தின் குறியீடாக உள்ள முதலமைச்சர், அமைச்சர்கள் தான் அதிகாரிகளை வழிநடத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் கூறி உள்ளார்.</p><p>சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் 9-ந்தேதி <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-to-hold-consultation-meeting-with-alliance-parties-on-september-9-communist-parties-to-skip">தவெக</a> கூட்டணி கட்சிகள் கூட்டம் நடக்கிறது.</p><p>த.வெ.க. மூத்த நிர்வாகிகளும், அமைச்சர்களுமான ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல்குமார், ராஜ்மோகன் ஆகியோர் நேற்று தங்கள் கூட்டணி கட்சி தலைவர்களையும், நிர்வாகிகளையும் நேரில் சந்தித்தனர்.</p> <p>அதன்படி, சென்னை தியாகராயநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்துக்கு நேரில் சென்று மாநில செயலாளர்கள் வீரபாண்டியன் மற்றும் சண்முகத்தை தனித்தனியாக சந்தித்து பேசினார்கள். </p> <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95">த.வெ.க. </a>ஆதரவு கட்சிகளின் முதல் ஆலோசனை கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு பங்கேற்காத நிலையில், 2-வது கூட்டத்தில் பங்கேற்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.</p><p>இந்நிலையில் தி.நகரில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p> <p>* தவெகவின் நல்லாட்சி, நல்ல திட்டங்களை வரவேற்று ஆதரிப்போம்.</p><p>* அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பியது தொடர்பாக அமைச்சர்கள் அளித்த விளக்கத்தை ஏற்கவில்லை.</p><p>* மக்கள் அதிகாரத்தின் குறியீடாக உள்ள முதலமைச்சர், அமைச்சர்கள் தான் அதிகாரிகளை வழிநடத்த வேண்டும்.</p> <p>* தமிழ்நாட்டில் தலைகீழாக உள்ளது, அதிகாரிகள் வழி நடத்துகிறார்கள்.</p><p>* தவெக கூட்டணியில் நாங்கள் இல்லை.</p><p>* தவெகவை வெளியில் இருந்தே ஆதரிப்போம், கூட்டணியில் நாங்கள் இடம்பெறவில்லை என மீண்டும் அவர் திட்டவட்டமாக கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>68 ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்த மதுரை-சென்னை விமான சேவை  அக்.25-ந்தேதி முதல் நிறுத்தம்? </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurai-to-chennai-flight-service-operational-for-68-years-to-be-suspended-from-october-25</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurai-to-chennai-flight-service-operational-for-68-years-to-be-suspended-from-october-25#comments</comments><guid isPermaLink="false">e95be653-8fd9-4c30-89b6-fd85aa77b027</guid><pubDate>Sat, 05 Sep 2026 09:13:10 +0000</pubDate><atom:updated>2026-09-05T09:13:10.070Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,மதுரை,madurai,flight service,விமான சேவை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/zx8964ol/flight.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ விமானம்]]></media:title><media:description type="html"><![CDATA[ விமானம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/zx8964ol/flight.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை-மதுரை வழித்தடமே லாபகரமாக இல்லை என்றால், மதுரை-பெங்களூரு இடையேயான சேவை மட்டும் எவ்வாறு லாபகரமாக இயங்கும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.</strong></em></p><p>சென்னை-மதுரை-சென்னை வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் <a href="https://www.maalaimalar.com/topic/விமான-சேவை">விமான சேவை</a> அக்டோபர் 25 முதல் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக விமான போக்குவரத்து துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p>இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்களால் கடந்த 68 ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்த இந்த விமான சேவை, கட்டணம் குறைவாக இருந்ததால் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த சேவை நிறுத்தப்பட்டால், இந்த வழித்தடத்தில் நாள்தோறும் 5-க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கும் ‘இண்டிகோ’ மட்டுமே ஒரே விமான சேவை நிறுவனமாக நீடிக்கும் நிலை உருவாகும்.</p><h2><strong>கேள்வி</strong></h2><p>போதிய பயணிகள் வருகை இல்லை என்பது உள்ளிட்ட காரணங்கள் சேவை நிறுத்தத்திற்கு சொல்லப்பட்டாலும், அதனை பயண முகவர்களும் சுற்றுலா அமைப்பாளர்களும் மறுத்துள்ளனர். எடுத்துக்காட்டாக, வெள்ளிக்கிழமை அன்று கூட சென்னையில் இருந்து மதுரைக்கு 159 பயணிகளும், மதுரையிலிருந்து சென்னைக்கு 70 பயணிகளும் இந்த விமானத்தில் பயணித்துள்ளதை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். </p><p>மேலும், சென்னை-மதுரை வழித்தடமே லாபகரமாக இல்லை என்றால், மதுரை-பெங்களூரு இடையேயான சேவை மட்டும் எவ்வாறு லாபகரமாக இயங்கும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.</p><p>இத்தடத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, தென் மாவட்டங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரை நேரில் சந்தித்துப் பேசி, இச்சேவையைத் தொடர்ந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயண முகவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><h2><strong>அதிருப்தி</strong></h2><p>திருச்சியிலிருந்து ஐதராபாத், சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு இடங்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் புதிய விமான சேவைகளைத் தொடங்கியுள்ள நிலையில், மதுரை மட்டும் ஏன் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது என்று மதுரை, சிவகாசி மற்றும் காரைக்குடியைச் சேர்ந்த முகவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.</p><p>அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலம் சுற்றுலாவுக்கான உச்சக்கட்ட காலமாகும். தசரா, தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் போன்ற பண்டிகைகள் வரவுள்ள நிலையில், வெளிநாட்டுப் பயணிகள் பலர் தென் தமிழகத்திற்கு வரத் திட்டமிட்டு ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்திருக்கக்கூடும். </p><p>தற்போது இந்த சேவை ரத்து செய்யப்படுவதால் கட்டணங்கள் உயர வாய்ப்புள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மதுரைக்கு வருவதைத் தவிர்க்கும் சூழல் உருவாகி, உள்ளூர் சுற்றுலாத்துறை கடுமையாகப் பாதிக்கப்படும் என மதுரை டிராவல்ஸ் நிர்வாகி கவலை தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>4 வயதில் சர்வதேச செஸ் தரவரிசையில் இடம்பிடித்து உலகளவில் இளம் வீராங்கனையாக சாதனை படைத்த ஒடிசா சிறுமி!</title><link>https://www.maalaimalar.com/sports/odisha-girl-4-becomes-youngest-fide-rated-chess-player</link><comments>https://www.maalaimalar.com/sports/odisha-girl-4-becomes-youngest-fide-rated-chess-player#comments</comments><guid isPermaLink="false">e2d21462-a7d8-4bd3-a6a9-9a55835949f7</guid><pubDate>Sat, 05 Sep 2026 08:50:20 +0000</pubDate><atom:updated>2026-09-05T08:50:20.068Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Odisha,Chess,FIDE,சர்வதேச செஸ் கூட்டமைப்பு,Elena Mishra,ஒடிசா சிறுமி,எலெனா மிஷ்ரா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/74e6j37k/girl.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Elena Mishra]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/74e6j37k/girl.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சர்வதேச செஸ் கூட்டமைப்பு வெளியிட்ட செப்டம்பர் மாத உலகளாவிய தரவரிசைப் பட்டியலில், ஒடிசாவைச் சேர்ந்த 4 வயது சிறுமி எலெனா மிஷ்ரா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். 4 ஆண்டுகள், 6 மாதங்கள், 16 நாட்கள் மட்டுமே வயதான இவர், FIDE சர்வதேச அமைப்பில் அதிகாரப்பூர்வ தரவரிசையைப் பெற்ற மிக இளம் செஸ் வீராங்கனை என்ற பெருமையை அடைந்துள்ளார்.</p><p>புவனேஸ்வரில் அமைந்துள்ள மதர்ஸ் பப்ளிக் பள்ளியில் சமீபத்தில் நடைபெற்ற ‘ஒடிசா மாநில பிளிட்ஸ் FIDE ரேட்டிங் திறந்தவெளி செஸ் சாம்பியன்ஷிப்’ தொடரில் பங்கேற்ற அவர், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி 1,432 புள்ளிகளைப் பெற்றார். 2022-ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த பெண் வீராங்கனைகளில், தற்போது <a href="https://www.maalaimalar.com/sports/tennis/aclaraz-tsitsipas-enter-the-4th-round-in-us-open-tennis">FIDE </a>சர்வதேச தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே இளம் வீராங்கனை இவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>முன்னதாக, இவர் நடப்பாண்டில் நடைபெற்ற 7 வயதுக்குட்பட்டவர்களுக்கான மாநில அளவிலான செஸ் போட்டியில் வெற்றி பெற்று சிறுமிகள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார். மிகக் குறைந்த வயதிலேயே அக்ரஸீவ் செஸ் நகர்வுகளைக் கற்றுக்கொண்ட எலெனாவின் இச்சாதனையை ஒடிசா முதல்-மந்திரி மோகன் சரண் மாஜி உள்ளிட்ட பலர் பாராட்டியுள்ளனர்.</p><p>ஒட்டுமொத்தப் பிரிவில் (ஆண்/பெண்) மிகச் சிறிய வயதில் FIDE தரவரிசை பெற்ற உலக சாதனை மகாராஷ்டிராவைச் சேர்ந்த சர்வாக்யா சிங் குஷ்வாஹா பெயரில் உள்ளது. அவர் 2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், தனது 3 வயது 7 மாதம் 20 நாட்களில் FIDE தரவரிசையைப் பெற்று இச்சாதனையைப் படைத்திருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/election-commission-banned-former-congress-mla-aassan-maulaana-from-contesting-elections-for-3-years</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/election-commission-banned-former-congress-mla-aassan-maulaana-from-contesting-elections-for-3-years#comments</comments><guid isPermaLink="false">9a4cf26c-2853-4ff6-894e-a57d57629115</guid><pubDate>Sat, 05 Sep 2026 08:29:20 +0000</pubDate><atom:updated>2026-09-05T08:29:20.623Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,Election Commission,தேர்தல் ஆணையம்,Aassan Maulaana,அசன் மவுலானா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/vwqripl7/AassanMaulaana.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Aassan Maulaana]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/vwqripl7/AassanMaulaana.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை வேளச்சேரி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை விதித்து தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.</p><p>கடந்த 2021-ம் ஆண்டு வேளச்சேரி தொகுதியில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rahul-gandhi-is-the-pm-candidate-says-manickam-thakur">காங்கிரஸ்</a> சார்பில் போட்டியிட்டு வென்றவர் அசன் மவுலானா. இவர் அந்த தேர்தலில் செய்த செலவு குறித்து தேர்தல் ஆணையத்திற்கு கணக்கு காட்டினார். அதில் அவர் முறையாக கணக்கு காட்டவில்லை என புகார் எழுந்துள்ளது. </p> <p>அதாவது ரூ. 37 லட்சம் தேர்தலுக்கு செலவு செய்த நிலையில் 17.03 லட்சம் மட்டுமே செலவிட்டதாக கணக்கு காட்டினாராம். இதை <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">தேர்தல் ஆணையம் </a>கண்டுபிடித்துவிட்டது. நாளிதழ்களில் வெளியான விளம்பரச் செலவுகளை காங்கிரஸ் கமிட்டி ஏற்றதாக கூறி கணக்கு காட்டவில்லை என்று சொல்லப்படுகிறது. இதையடுத்து அசன் மவுலானா தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்திதான் - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rahul-gandhi-is-the-pm-candidate-says-manickam-thakur</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rahul-gandhi-is-the-pm-candidate-says-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">30d82500-29f9-470b-9b37-889072c9fc08</guid><pubDate>Sat, 05 Sep 2026 08:22:13 +0000</pubDate><atom:updated>2026-09-05T08:22:13.449Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Prime Minister,Manickam Tagore,பிரதமர் வேட்பாளர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/1xqa91xr/manickam-tagore.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Manickam tagore]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/1xqa91xr/manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரதமர் வேட்பாளர் யார் என்ற விவாதம் முடிந்து போன கதை: பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தி தான் என்பதை தவிர சொல்வதற்கு ஒன்றும் இல்லை.</p><p>பிரதமர் வேட்பாளர் விஜய் என அமைச்சர்கள் கூறி வரும் நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.</p><p>தவெக தோழமை கட்சி கூட்டத்துக்கு அமைச்சர்கள் அழைப்பு விடுத்த நிலையில், சென்னையில் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார்.</p><p>அப்போது அவர் பேசியதாவது;</p><p>முதலமைச்சர் தலைமையிலான கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்.</p><p>வரும் 9-ந்தேதி கூட்டணி கட்சி ஆலோசனை கூட்டத்தில் தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் குறித்து முடிவு செய்யப்படும்.</p><p>பிரதமர் வேட்பாளர் யார் என்ற விவாதம் முடிந்துபோன கதை. முடிந்துபோன விஷயத்தை மீண்டும் மீண்டும் பேச வேண்டாம். <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF" rel="nofollow">ராகுல்காந்தி</a>தான் பிரதமர் வேட்பாளர் என்பதை தவிர, சொல்வதற்கு வேறு ஒன்றுமில்லை.”</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>செப்டம்பர் 9-ந்தேதி கூட்டணி கட்சிகளுடன் த.வெ.க. ஆலோசனைக் கூட்டம்: கம்யூனிஸ்டு கட்சிகள் புறக்கணிப்பு?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-to-hold-consultation-meeting-with-alliance-parties-on-september-9-communist-parties-to-skip</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-to-hold-consultation-meeting-with-alliance-parties-on-september-9-communist-parties-to-skip#comments</comments><guid isPermaLink="false">fdb2fe14-9df5-4379-9139-1870c7e48483</guid><pubDate>Sat, 05 Sep 2026 08:18:23 +0000</pubDate><atom:updated>2026-09-05T08:18:23.550Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,இந்திய கம்யூனிஸ்டு கட்சி,கூட்டணி கட்சிகள்,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/bprcq3tq/allinace.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கூட்டணி கட்சிகளுடன் த.வெ.க. நடத்திய முதல் ஆலோசனைக் கூட்டம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கூட்டணி கட்சிகளுடன் த.வெ.க. நடத்திய முதல் ஆலோசனைக் கூட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/bprcq3tq/allinace.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதலமைச்சர் சொன்னதாக அமைச்சர்கள் கூறிய கருத்தையும் அதில் விவாதிப்போம். அப்போதுள்ள சூழலை பத்திரிகை, ஊடகத்தினருக்கு தெரிவிப்போம் என்றார்.</strong></em></p><p>தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 17-வது சட்டசபை தேர்தல், தமிழ்நாட்டில் அரசியல் களத்தையே புரட்டி போட்டது. 2-வது முறையாக தொடர்ந்து ஆட்சிக் கட்டிலில் அமரப்போகிறோம் என்ற எதிர்பார்ப்பில் இருந்த தி.மு.க.வுக்கு ஏமாற்றத்தையும், கட்சி தொடங்கிய சில ஆண்டுகளிலேயே ஆட்சியை பிடித்த <a href="https://www.maalaimalar.com/topic/தவெக">த.வெ.க.</a>வுக்கு இன்ப அதிர்ச்சியையும், அ.தி.மு.க.வுக்கு சற்று பின்னடைவையும் இந்த தேர்தல் கொடுத்தது.</p><h2><strong>கூட்டணி கட்சிகள் ஆதரவுக்கரம்</strong></h2><p>இதுமட்டுமா? தேர்தலுக்கு முன்பு ஒரு கூட்டணியில் இருந்த கட்சிகள், தேர்தலுக்கு பிறகு இன்னொரு கூட்டணிக்கு தாவி பயணித்த நிகழ்வும் அரங்கேறின. அந்த வகையில் ஆட்சி அமைப்பதற்கு உறுதுணையாக இருக்க த.வெ.க.வுடன், தி.மு.க.வில் அங்கம் வகித்து வந்த காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, வி.சி.க., ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவுக்கரம் நீட்டின.</p><p>இதை தற்போது அமைந்திருக்கும் ஆட்சிக்கான கூட்டணியாக மட்டுமல்லாமல், அடுத்து வர இருக்கும் தேர்தல்களை சந்திக்க இருக்கும் அரசியல் கூட்டணியாகவும் வலுப்படுத்தும் நோக்கில் கடந்த ஜூலை மாதம் 1-ந்தேதி த.வெ.க. ஆதரவு கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி முடித்தனர்.</p><h2><strong>கூட்டணிக்கு பெயர்</strong></h2><p>சென்னை அடுத்த கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் நடந்த இந்த கூட்டத்தில், முதலமைச்சரும், த.வெ.க. தலைவருமான விஜய் தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த முதல் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் பங்கேற்கவில்லை.</p><p>அந்த கூட்டத்தில், கூட்டணிக்கு ஒரு பொதுவான பெயர் சூட்டுவது, ஒருங்கிணைப்புக் குழு அமைப்பது மற்றும் பொதுவான குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. </p><p>இந்த சூழ்நிலையில் த.வெ.க. மூத்த நிர்வாகிகளும், அமைச்சர்களுமான ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல்குமார், ராஜ்மோகன் ஆகியோர் நேற்று தங்கள் கூட்டணி கட்சி தலைவர்களையும், நிர்வாகிகளையும் நேரில் சந்தித்தனர்.</p><p>அதன்படி, சென்னை தியாகராயநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்துக்கு நேரில் சென்று மாநில செயலாளர்கள் வீரபாண்டியன் மற்றும் சண்முகத்தை தனித்தனியாக சந்தித்து பேசினார்கள். அப்போது நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.</p><p>அதனைத் தொடர்ந்து, சென்னை அண்ணாநகரில் உள்ள ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவையும் அவர்கள் சந்தித்து பேசினார்கள்.</p><h2><strong>2-வது ஆலோசனை கூட்டம்</strong></h2><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளரை சந்தித்து விட்டு வெளியே வந்த அமைச்சர் நிர்மல்குமார், "இது மரியாதை நிமித்தமான சந்திப்பு " என்றும், வைகோவை சந்தித்துவிட்டு வெளியே வந்த போது, "முதலமைச்சருக்கு உற்ற துணையாக இருக்கும் திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். 9-ந்தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் முதலமைச்சரும் பங்கேற்கிறார்" என்றும் கூறினார்.</p><p>இதனைத்தொடர்ந்து "த.வெ.க. கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் சார்பில் எனக்கு அழைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அவசியம் பங்கேற்போம்" என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். 9-ந் தேதி நடைபெறும் த.வெ.க. ஆதரவு கட்சி தலைவர்களின் 2-வது ஆலோசனை கூட்டத்தில் கூட்டணி குறித்த பெயர் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.</p><p>கூட்டம் புறக்கணிப்பா?</p><p>த.வெ.க. ஆதரவு கட்சிகளின் முதல் ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு பங்கேற்காத நிலையில், 2-வது கூட்டத்தில் பங்கேற்பது குறித்து முடிவெடுக்கப்பட்டதா? என்பது குறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அவர் கூறியதாவது:-</p><p>இடதுசாரிகளின் ஒருங்கிணைப்புக் குழு நாளை (இன்று) கூடுகிறது. அதன் பிறகு எங்கள் நிர்வாக, செயல், மாநிலக்குழு கூட இருக்கிறது. முதலமைச்சர் சொன்னதாக அமைச்சர்கள் கூறிய கருத்தையும் அதில் விவாதிப்போம். அப்போதுள்ள சூழலை பத்திரிகை, ஊடகத்தினருக்கு தெரிவிப்போம்.</p><p>இடதுசாரிகள் மக்கள் அளித்த தீர்ப்புக்கு மதிப்பளித்து த.வெ.க.வை ஆதரித்தோம். அதேபோல் மக்கள் அதிகாரத்தில் கவர்னர் அமர்ந்துவிடக்கூடாது என்பதற்காக த.வெ.க.வை வெளியில் இருந்து ஆதரித்தோம். கூட்டணி, அமைச்சரவையில் இல்லை. வெளியில் இருந்து ஆதரிப்பதால், உழைக்கும் மக்களின் கோரிக்கைகளுக்காக சமரசம் இல்லாமல் குரல் எழுப்புகிறோம்.</p><p>அரசு நல்ல திட்டங்கள், அரசியல் திசையில் நகரும்போது ஆதரிப்போம். முதல் கூட்டம் விருந்து. கூட்டணி குறித்து அதில் பேசுவது உடன்பாடு அல்ல. நாங்கள் சென்றால் அந்த கூட்டணியில் பங்கேற்க இயலாது. விருந்தின் தன்மை கெட்டுவிடக்கூடாது என்பதால் முதலமைச்சரிடம் அதுபற்றி தெரிவித்து பங்கேற்கவில்லை. இப்போது கூட்டணி தொடர்பான அழைப்பு வந்திருக்கிறது. அதுபற்றி நாங்கள் முடிவெடுக்க முடியாது. கட்சிதான் முடிவு செய்யும் என்றார். </p>]]></content:encoded></item><item><title>VIDEO- &apos;TN07 CM&apos; கணிப்பு நிஜமானது-விஜய் ரசிகர்களை நெகிழ வைத்த வெங்கட் பிரபு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/video-tn07-cm-prediction-comes-true-venkat-prabhu-moves-vijay-fans</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/video-tn07-cm-prediction-comes-true-venkat-prabhu-moves-vijay-fans#comments</comments><guid isPermaLink="false">482a502f-2184-4af1-9ad0-982d9c89c7d7</guid><pubDate>Sat, 05 Sep 2026 08:16:07 +0000</pubDate><atom:updated>2026-09-05T08:16:07.601Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வெங்கட் பிரபு,Venkat Prabhu,goat,தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்,CMVIJAY,முதலமைச்சர் விஜய்,TN07 CM</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/wfbrysrj/VJ.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CMVijay ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/wfbrysrj/VJ.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விஜய் முதலமைச்சராவதை முன்கூட்டியே சரியாகக் கணித்தது போல் அமைந்ததாக வெங்கட் பிரபு பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். </p><p>இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (GOAT) திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதனை முன்னிட்டு இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு சிறப்பு வீடியோவை பகிர்ந்துள்ளார். விஜய் திரையுலகில் பெற்ற மகத்தான வெற்றியையும், அவரது தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் அரசியல் பயணத்தையும் ஒரே நேர்கோட்டில் இணைத்துக் காட்டும் வகையில் இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Thanks for the memories which we will cherish for a lifetime <a href="https://x.com/actorvijay?ref_src=twsrc%5Etfw">@actorvijay</a> na❤️❤️❤️<a href="https://x.com/hashtag/2YearsOfTheGOAT?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#2YearsOfTheGOAT</a> <a href="https://x.com/hashtag/TheGreatestOfAllTime?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TheGreatestOfAllTime</a> <a href="https://x.com/archanakalpathi?ref_src=twsrc%5Etfw">@archanakalpathi</a> <a href="https://x.com/aishkalpathi?ref_src=twsrc%5Etfw">@aishkalpathi</a> <a href="https://x.com/thisisysr?ref_src=twsrc%5Etfw">@thisisysr</a> <a href="https://x.com/Jagadishbliss?ref_src=twsrc%5Etfw">@Jagadishbliss</a> <a href="https://t.co/AxZYtqbnhe">pic.twitter.com/AxZYtqbnhe</a></p>&mdash; venkat prabhu (@vp_offl) <a href="https://x.com/vp_offl/status/2095945503909552627?ref_src=twsrc%5Etfw">September 4, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><p>வெளியாகியுள்ள அந்த நினைவலை வீடியோ, 'கோட்' திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியின் போது ரசிகர்கள் திரையரங்குகளில் எழுப்பிய அதிரடி ஆரவாரத்துடன் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து, படத்தில் <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/sundeep-kishan-sharing-inform-for-from-director-to-lead-actor-jason-sanjay">விஜய்</a> நடித்த முக்கியக் காட்சிகளையும், நிஜ வாழ்க்கையில் அவர் முதலமைச்சராகப் பதவியேற்றுப் பொறுப்புகளை வகிக்கும் காட்சிகளையும் அருகருகே ஒப்பீடு செய்து நெகிழ்ச்சியாகக் காட்சிப்படுத்தியுள்ளனர்.</p><h2>திரையி<strong>ல் கணித்த நிஜ அரசியல்</strong> வெற்றி</h2><p>இந்த வீடியோவில் மிகவும் சுவாரஸ்யமான அம்சமாக, 'கோட்' திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட "TN07 CM 2026" என்ற புகழ்பெற்ற வாகனப் பெயர் பலகை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. படத்தில் இடம் பெற்ற இந்தக் காட்சி, விஜய் முதலமைச்சராவதை முன்கூட்டியே சரியாகக் கணித்தது போல் அமைந்ததாக வெங்கட் பிரபு பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், வீடியோவின் இறுதியில் படத்தில் வரும் இளைய விஜய் கதாபாத்திரம் பேசும் "என்னை தடுத்து நிறுத்திட முடியும்னு நினைக்கிறியா?" என்ற மாஸ் வசனத்தைத் தொடர்ந்து, விஜய் முதலமைச்சராக இருக்கும் நிஜக் காட்சிகள் வருவது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.</p><p>2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 அன்று திரைக்கு வந்த 'கோட்' திரைப்படம், விஜய்யின் முழு நேர அரசியல் வருகைக்கு முந்தைய முக்கிய திரைப்படமாக அமைந்தது. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவான இத்திரைப்படம் உலகளவில் 450 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து மாபெரும் சாதனையைப் படைத்தது. "வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத இனிய நினைவுகளுக்கு நன்றி விஜய் அண்ணா" என்ற உருக்கமான வரிகளுடன் வெங்கட் பிரபு பகிர்ந்துள்ள இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>தவெக அரசின் நடவடிக்கைகளைப் பார்த்து திமுக ஒருபோதும் அஞ்சாது- கனிமொழி எம்பி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-will-never-fear-bjp-govt-actions-says-mp-kanimozhi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-will-never-fear-bjp-govt-actions-says-mp-kanimozhi#comments</comments><guid isPermaLink="false">989e47d5-2a3d-41f3-a737-96c46aa32235</guid><pubDate>Sat, 05 Sep 2026 07:44:31 +0000</pubDate><atom:updated>2026-09-05T07:44:31.448Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,Kanimozhi MP,தவெக அரசு,TVK Govt,கனிமெழி எம்பி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/98d2wm6g/kanimozhi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kanimozhi MP]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/98d2wm6g/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடைய வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.</p><p>இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் சோதனைக்கு தி.மு.க. எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><h2>காழ்ப்புணர்ச்சி</h2><p>சட்டமன்றத்தில் தி.மு.கழகத்தை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல், தொடர்ந்து அவதூறுகளையும் திசைதிருப்பல் நாடகங்களையும் அரங்கேற்றி வந்த தவெக அரசு, தற்போது காழ்ப்புணர்ச்சியின் உச்சத்திற்கே சென்று, கழக முதன்மைச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான கே.என். நேரு அவர்களைப் பழிவாங்கப் பார்க்கிறது. </p><h2>ஜனநாயக விரோதம்</h2><p>மிரட்டல்களுக்கும் சோதனைகளுக்கும் பணிந்து போகும் இயக்கம் தி.மு.கழகம் அல்ல. எதிர்க்கட்சியின் குரல்வளையை நெரிப்பதற்காக, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் இந்த ஜனநாயக விரோத தவெக அரசின் நடவடிக்கைகளைப் பார்த்து தி.மு.கழகம் ஒருபோதும் அஞ்சாது.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நைஜீரியாவில் கச்சா எண்ணெய் குழாயில் திருட முயற்சி: விஷவாயு தாக்கி 37 பேர் மூச்சுத்திணறி பரிதாப பலி</title><link>https://www.maalaimalar.com/news/world/nigeria-illegal-crude-oil-theft-toxic-gas-kills-37</link><comments>https://www.maalaimalar.com/news/world/nigeria-illegal-crude-oil-theft-toxic-gas-kills-37#comments</comments><guid isPermaLink="false">8be4ccd1-ab16-4312-809f-6ed30ad1e1af</guid><pubDate>Sat, 05 Sep 2026 07:39:32 +0000</pubDate><atom:updated>2026-09-05T07:39:32.353Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஷவாயு,கச்சா எண்ணெய்,Crude oil,Nigeria,Toxic Gas,நைஜீரியா,Okrika</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/s6wvr2qn/nygeria.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  crude oil from pipeline in Nigeria]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/s6wvr2qn/nygeria.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குழாயில் இருந்து மிக அதிக அழுத்தத்துடன் எரிபொருள் பாயும்போது "இண்டோராமா கெமிக்கல்" என்ற நச்சு வாயு காற்றில் பலமாக பரவியது.</p><p>நைஜீரியாவின் எண்ணெய் வளம் மிக்க ரிவர்ஸ் மாநிலத்தில் உள்ள ஒக்ரிகா பகுதிக்கு உட்பட்ட ஒகாரி ஜெட்டி அருகே, சட்டவிரோதமாக எரிபொருள் திருடும் முயற்சியின் போது ஏற்பட்ட நச்சு வாயு கசிவால் 37 பேர் சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.</p><h2>நள்ளி<strong>ரவில் நடந்த திருட்டு முயற்சி</strong></h2><p>நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில், 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சிறிய படகுகளில் ஒகாரி ஜெட்டி பகுதியில் ஒன்று திரண்டனர். இந்திரமா எலமே <a href="https://www.maalaimalar.com/news/world/russia-strike-on-who-medical-warehouse-in-ukraine">பெட்ரோ கெமிக்கல் </a>நிறுவனத்திலிருந்து போர்ட் ஹார்கோர்ட் சுத்திகரிப்பு நிலையம் வழியாக ஏற்றுமதிக்கு கொண்டு செல்லப்படும் பிரதான எரிபொருள் குழாயில் சட்டவிரோதமாக துளையிட்டு எரிபொருளை திருட முயன்றுள்ளனர்.</p><p>குழாயில் இருந்து மிக அதிக அழுத்தத்துடன் எரிபொருள் பாயும்போது "இண்டோராமா கெமிக்கல்" என்ற நச்சு வாயு காற்றில் பலமாக பரவியது. இதனால் அங்கிருந்த இளைஞர்களுக்கு கடுமையான மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டு அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.</p><h2>ஆற்றில் <strong>மூழ்கிய உடல்கள்</strong></h2><p>மயக்கமடைந்த பல இளைஞர்கள் போனி நதியில் விழுந்தனர். இதுவரை 37 பேரின் உடல்கள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பலரின் உடல்கள் ஆற்றில் மிதந்து கொண்டு இருப்பதாகவும், இன்னும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இச்சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>சம்பவம் குறித்து ரிவர்ஸ் மாநில காவல்துறை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. நைஜீரியாவில் நிலவும் வறுமை மற்றும் வேலைவாய்ப்பின்மை காரணமாக இது போன்ற சட்டவிரோத எண்ணெய் திருட்டு சம்பவங்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் மக்களுக்கு பாதுகாப்பு உள்ளது... ஊழல்வாதிகளுக்கு தான் இல்லை - அமைச்சர் நிர்மல்குமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-says-people-in-tn-safeonly-corrupt-are-not</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-says-people-in-tn-safeonly-corrupt-are-not#comments</comments><guid isPermaLink="false">7063b894-9df5-40ab-865a-bfdb1050395f</guid><pubDate>Sat, 05 Sep 2026 07:38:15 +0000</pubDate><atom:updated>2026-09-05T07:38:15.775Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>kn nehru,கேஎன் நேரு,அமைச்சர் நிர்மல்குமார்,minister nirmal kumar,லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை,DVAC Raid</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/sth8p819/nirmalkumar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister nirmal kumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/sth8p819/nirmalkumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் ரெய்டு குறித்த தகவல்களை லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிடும் என்று அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.</p> <p>திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.</p><p>இந்நிலையில் மதுரையில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">அமைச்சர் நிர்மல்குமார்</a> செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p>  <p>திமுக முன்னாள் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dvac-raids-19-locations-linked-to-former-minister-kn-nehru">அமைச்சர் கே.என்.நேரு</a> வீட்டில் ரெய்டு பழிவாங்கும் நடவடிக்கை இல்லை, ஆதாரங்கள் மற்றும் புகாரின் அடிப்படையில் தான் ரெய்டு நடக்கிறது.</p><p>பெண்களை பற்றி அவதூறாக பொதுமேடையில் பேசியதற்காக தான் உதயநிதி விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார்.</p><p>திமுக, அதிமுக, பாஜக என அனைத்து கட்சிகளும் இணைந்து வரும் தேர்தலை எதிர்கொள்ளும்.</p>  <p>முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் ரெய்டு குறித்த தகவல்களை லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிடும்.</p><p>பிரதமர் வேட்பாளர் குறித்த பேசுவதற்கு காலம் உள்ளது.</p><p>தமிழ்நாட்டில் மக்களுக்கு பாதுகாப்பு உள்ளது, ஊழல்வாதிகளுக்கு தான் பாதுகாப்பில்லை.</p><p>நாள்தோறும் 7 முதல் 8 மணி நேரம் சட்டசபை நடைபெறுகிறது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>டெங்கு தடுப்பு நடவடிக்கை: பள்ளி மாணவிகள் பாவாடைக்கு பதிலாக சுடிதார் அணிய மேற்கு வங்க அரசு பரிந்துரை!</title><link>https://www.maalaimalar.com/news/national/dengue-prevention-west-bengal-govt-urges-salwar-kameez</link><comments>https://www.maalaimalar.com/news/national/dengue-prevention-west-bengal-govt-urges-salwar-kameez#comments</comments><guid isPermaLink="false">dcbb3a1e-fc11-4923-8cd6-7dffcdb23532</guid><pubDate>Sat, 05 Sep 2026 07:17:14 +0000</pubDate><atom:updated>2026-09-05T07:17:14.266Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Health,Dengue,West Bengal Government,டெங்கு,Sarathwat Mukherjee,மேற்கு வங்க அரசு,சரத்வத் முகர்ஜி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/73a8g8v6/benga.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sarathwat Mukherjee]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/73a8g8v6/benga.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாநிலத்தில் மழைக்காலத்திற்குப் பிந்தைய காலத்தில் டெங்கு மற்றும் கொசுக்களால் பரவும் நோய்களின் தாக்கம் அதிகரித்து வருகிறது.</p><p>மேற்கு வங்க மாநிலத்தில் <a href="https://www.maalaimalar.com/news/national/2-crore-children-face-online-sexual-abuse-in-a-year">டெங்கு காய்ச்சல் </a>பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பள்ளிகளில் பயிலும் மாணவிகள் சீருடை பாவாடைக்கு பதிலாக உடலை முழுமையாக மூடும் சல்வார் கமீஸ் அல்லது சுடிதார் ஆடைகளை அணிய அனுமதிக்குமாறு மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சரத்வத் முகர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p><h2>கொசுக்க<strong>டியைத் தவிர்க்க புதிய</strong> நடவடிக்கை</h2><p>மாநிலத்தில் மழைக்காலத்திற்குப் பிந்தைய காலத்தில் டெங்கு மற்றும் கொசுக்களால் பரவும் நோய்களின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில், ஸ்வஸ்த்ய பவன் தலைமையகத்தில் உயர்நில ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் சரத்வத் முகர்ஜி, கொசுக்கடியிலிருந்து மாணவர்களைப் பாதுகாப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் எனக் குறிப்பிட்டார்.</p><p>அடுத்த மூன்று மாதங்களுக்கு பள்ளி மாணவர்கள் அனைவரும் முழுக்கை சட்டைகள் மற்றும் முழு நீள பேண்ட் அணிய பள்ளிகள் அனுமதிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். மேலும், வழக்கமாக பாவாடை (ஸ்கர்ட்) சீருடை அணியும் மாணவிகள், தங்கள் கால்களை முழுமையாக மூடும் வகையில் சல்வார் சூட்களுக்கு மாற தற்காலிகமாக விலக்கு அளிக்குமாறு பள்ளி நிர்வாகங்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.</p><h2>பள்ளிகளுக்கு விடுக்கப்<strong>பட்ட வேண்டு</strong>கோள்</h2><p>டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்கள் பகல் நேரத்திலேயே அதிகளவில் கடிக்கும் தன்மையுடையவை என்பதால், பள்ளி நேரங்களில் மாணவர்களின் கை மற்றும் கால்கள் மூடப்பட்டிருப்பது நோய்த்தொற்று அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கும். எனவே, அனைத்து தனியார் மற்றும் அரசுப் பள்ளிகள் இந்தத் தற்காலிக மாற்றத்தை நடைமுறைப்படுத்தி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&quot;செக்கிழுத்த செம்மல்&quot; வ.உ.சிதம்பரனாரின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றுவோம்!- முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-pays-tribute-to-vo-chidambaranar</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-pays-tribute-to-vo-chidambaranar#comments</comments><guid isPermaLink="false">fd6ed02a-18f7-49c6-9a86-37d61bd488fb</guid><pubDate>Sat, 05 Sep 2026 07:02:30 +0000</pubDate><atom:updated>2026-09-05T07:02:30.293Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,பிறந்தநாள் வாழ்த்து,Birthday,வ.உ.சிதம்பரனார்,VO Chidambaram,முதலமைச்சர் விஜய்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/4gvruaw7/Vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ VOC-TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/4gvruaw7/Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 154-வது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து பதிவு வெளியிட்டுள்ளார்.</p><p>அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:- </p><p>இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தன்னிகரற்ற வீரத்துடனும், தியாக உணர்வுடனும் போராடி, மக்கள் மனங்களில் சுதேசி உணர்வை விதைத்த “கப்பலோட்டிய தமிழன்” வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்தநாளில், அவருக்கு எனது புகழ் வணக்கங்களைச் செலுத்துகிறேன்.</p><p>ஆங்கிலேயரிடமிருந்து அரசியல் விடுதலை மட்டுமின்றி, பொருளாதார விடுதலையும் அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில், சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி, இந்தியர்களின் தன்னம்பிக்கைக்கும், தற்சார்பு உணர்விற்கும் புதிய எழுச்சியை ஏற்படுத்தியதோடு, உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான போராட்டத்தையும் முன்னெடுத்தவர் வ.உ.சிதம்பரனார் அவர்கள்.</p><p>தாய்நாட்டின் விடுதலை, சுதேசி உணர்வு, உழைப்பாளர்களின் உரிமை ஆகியவற்றிற்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்த “செக்கிழுத்த செம்மல்”வ.உ.சிதம்பரனாரின் வீரத்தையும், தேசப்பற்றையும், தியாகத்தையும் இந்நாளில் நினைவுகூர்ந்து போற்றுவோம்!</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item></channel></rss>