<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 19 Jul 2026 07:51:42 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-19-july-2026-2</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-19-july-2026-2#comments</comments><guid isPermaLink="false">e2e450c1-256f-496a-b860-25faf5d7b70f</guid><pubDate>Sun, 19 Jul 2026 02:32:13 +0000</pubDate><atom:updated>2026-07-19T07:33:35.666Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/8tgkqbac/live01.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Today Live News]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/8tgkqbac/live01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennaiites-get-double-dhamaka-new-rail-line-between-tambaram-and-chengalpattu">'சென்னைவாசிகளுக்கு டபுள் தமாக்கா'! தாம்பரம்-செங்கல்பட்டு ரெயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/football/sudarshan-patnaik-sand-sculpture-honours-world-cup-final-and-messi">உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி: மணல் சிற்பம் உருவாக்கி வாழ்த்து கூறிய சுதர்சன் பட்நாயக்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/central-government-salicylic-acid-face-wash-goes-viral">இணையத்தில் வைரலாகும் மத்திய அரசின் ‘ஃபேஸ் வாஷ்’: மிகக் குறைந்த விலை-எவ்வளவு தெரியுமா?...</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/monsoon-session-all-party-meeting-starts-dmk-stage-walkout">நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது- திமுக வெளிநடப்பு</a></p><p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/tamil-cinema-wins-10-national-awards-cm-vijay-congratulates">10 தேசிய விருதுகளை வென்ற தமிழ் திரையுலகம்: முதலமைச்சர் விஜய் வாழ்த்து!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/71-year-old-ashok-bahar-seeks-mbbs-quota-for-senior-citizens">மூத்த குடிமக்களுக்கு MBBS-இல் ஏன் இடஒதுக்கீடு இல்லை? அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் 71 வயது முதியவர் வழக்கு!...</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/pv-sindhu-clinches-japan-open-badminton-championship">ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் இந்தியாவின் பி.வி.சிந்து</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/football/who-will-win-world-cup-golden-boot-mbappe-surpasses-messi">உலகக் கோப்பை கால்பந்து: கோல்டன் பூட் விருது பெறப்போவது யார்?-மெஸ்சியை முந்திய எம்பாப்பே</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/hyderabad-it-woman-jumps-naked-into-lake-with-temple-idol-dies-by-suicide">ஹைதராபாத்தில் பரபரப்பு: அம்மன் சிலையோடு நிர்வாணமாக ஏரியில் குதித்து பெண் ஐடி ஊழியர் தற்கொலை!...</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cpm-shanmugam-we-left-parties-are-set-to-function-as-a-separate-bloc">இடதுசாரிகள் தனி அணியாக செயல்பட இருக்கிறோம்: சி.பி.எம். சண்முகம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/los-angeles-knight-riders-win-major-league-cricket-title">மேஜர் லீக் கிரிக்கெட்: கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது லாஸ் ஏஞ்சல்ஸ்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/topnews/delhi-parliament-march-ban-police-deployment-jantar-mantar">சி.ஜே.பி-யின் நாடாளுமன்ற பேரணிக்கு அதிரடி தடை: ஜந்தர் மந்தரில் போலீஸ் குவிப்பு!...</a></p><p>இந்தியா- இங்கிலாந்து மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று மதியம் நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/monsoon-to-return-in-delhi-heavy-rain-alert-for-himalayan-states">டெல்லியில் மீண்டும் தொடங்கும் பருவமழை: இமயமலை மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/petrol-diesel-prices-in-chennai">சென்னையில் பெட்ரோல், டீசல் விலை - இன்றைய நிலவரம்...</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/police-shoot-and-arrest-rowdy-who-attacked-officer">போலீசாரை தாக்கி தப்பி ஓட முயன்ற ரவுடியை சுட்டுப் பிடித்த போலீசார்</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/tsitsipas-advances-to-swiss-open-final">சுவிஸ் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சிட்சிபாஸ்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/amarnath-pilgrimage-halted-due-to-bad-weather">அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்: காரணம் இதுதான்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/us-military-launches-new-airstrikes-to-swiftly-punish-iran-for-deaths-of-us-troops">இரண்டு வீரர்கள் பலி: ஈரான் மீது புதிய தாக்குதலை நடத்திய அமெரிக்கா</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/karnataka-chief-minister-dk-shivakumar-said-pressure-to-release-water-to-tamil-nadu">தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க அதிக அழுத்தம்: கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார்</a></p>]]></content:encoded></item><item><title>எந்த இடத்தில் எனக்கு கட்டிங் கொடுத்தார்கள்?: முன்னாள் அமைச்சர் மூர்த்தி ஆவேசம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/moorthy-slams-nirmal-kumar-over-land-registration-scam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/moorthy-slams-nirmal-kumar-over-land-registration-scam#comments</comments><guid isPermaLink="false">7c5b8429-8da9-4cf7-97fb-0322ebffe5f3</guid><pubDate>Sun, 19 Jul 2026 07:50:34 +0000</pubDate><atom:updated>2026-07-19T07:50:34.187Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நிர்மல் குமார்,DMK,திமுக,Nirmal Kumar,former minister murthy,முன்னாள் அமைச்சர் மூர்த்தி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/lqo4hfjt/murthy.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ murthy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/lqo4hfjt/murthy.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் கடந்த தி.மு.க. ஆட்சியில் பத்திரப் பதிவு தொடர்பாக, தற்போதைய த.வெ.க. பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் நிர்மல் குமார் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.</p><p>இந்நிலையில், முன்னாள் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மதுரையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p><h2>மோசடிக்கு யார் உடந்தை?</h2><p>பழனி கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் நில மோசடி நடந்துள்ளது. இதில் யார் உடந்தையாக இருந்தார்கள் என்பதை பற்றி விவாதம் எழுந்துள்ளது. இது குறித்து அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தும், காரணமானவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.</p><p>கோவில்கள் இடத்தை பதிவே செய்யமுடியாது. கோவில், அரசு நிலம், நீர்நிலை, வக்பு இடங்கள் குறித்து பத்திரப்பதிவு அலுவலகங்கள் பதிவு இருக்கும் முதல் நாளே டோக்கன் போடப்பட்டிருக்கும். இதில் தெரியாமல் பத்திரப்பதிவு நடைபெற வாய்ப்பில்லை. </p><p>பதிவுத்துறையில் மாவட்டத்தில் அனைத்து அதிகாரிகளும் உள்ளனர். அமைச்சர் நிர்மல்குமார் நேரடியாக பதில் சொல்லாமல் கடந்த 5 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் பதிவுத்துறையில் மோசடி என்கிறார். கடந்த 5 ஆண்டுகளில் பத்திரப்பதிவு குறித்து யாரும் விமர்சித்தது கிடையாது. சில தவறுகள் நடந்தபோது உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.</p><p>519 பத்திரப்பதிவு அலுவலகத்தில் நான் எனது ஆதரவாளர்களை நியமித்ததாகக் கூறுகின்றனர்.  எந்த ஒரு அலுவலகத்திலும் நான் பத்திரப்பதிவு செய்ய சொல்லவில்லை. பொறுப்புள்ள அமைச்சர் இதுபோன்று பொதுவாக பேசக்கூடாது. சட்டத்துறையில் வழக்கறிஞர்கள் நியமனத்தில் லஞ்சம் பெறுவதாக அவரது கட்சியைச் சேர்ந்தவரே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.</p><p>நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்திப்பதே வேலையாக பார்த்து வருகிறார். முதல்-அமைச்சரின் நிழல் அமைச்சராக நிர்மல்குமார் செயல்படுகிறார்.</p> <p>அனைத்து துறைக்கும் நிர்மல்குமார் பதிலளிக்கிறார். அறநிலையத்துறை இடத்தை பதிவுசெய்ய முடியாது, ஆனால் எப்படி பதிவு செய்தனர்? குறிப்பாக ஒரு பதிவாளரை இடமாற்றி பதிவு செய்துள்ளனர். என் மீதான குற்றச்சாட்டை ஆதாரத்தோடு சொல்லுங்கள். ஆட்சிக்கு வந்தவுடன் லஞ்சம் இருக்காது என்றனர், 60 பத்திரப்பதிவு அலுவலகத்தில் சோதனை நடத்தி ரூ.37 லட்சமும், நகராட்சி அலுவலகங்களில் 31 லட்சமும் கைப்பற்றினார்கள். அதற்கு என்ன பதில்? இதற்கு யார் பொறுப்பாவது? </p><h2>ஆதாரத்தை கூறவேண்டும்?</h2><p>மின்சார கட்டணம் இப்போது உயர்ந்துள்ளது. அமைச்சர் தனது இருதுறை சார்ந்த பிரச்சனைகள் குறித்து பேச வேண்டும். கூட்டணி தொடங்கி அனைத்து துறைகள் குறித்து ஆல் இந்தியா அளவில் அவர்தான் பேசி பிரச்சனையை திசைதிருப்புகிறார். 589 பத்திரப்பதிவு அலுவலகங்களில் எந்த இடத்தில் எனக்கு கட்டிங் கொடுத்தார்கள் எனவும், என் மூலமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதற்கான ஆதாரத்தை கூறவேண்டும். வணிக வரித்துறையில் லீக்கேஜ் என நிதித்துறை செயலர் கூறியுள்ளார். அவர் இருக்கும்போது தான் வருவாயைப் பெருக்க திட்டம் தீட்டப்பட்டது. </p><p>வணிக வரித்துறையில் ரூ.96 ஆயிரம் கோடி வருவாய் இருந்தது. அதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். 2021-ல் 96 ஆயிரம் கோடியாக இருந்த வருவாய் 2026-ல் ரூ.1 லட்சத்து 43 ஆயி்ரம் கோடியாக வருவாய் வந்துள்ளது. பதிவு கட்டணம் 1 சதவீதத்தில் இருந்தது பின்னர் 3 சதவீதத்தில் தொடங்கி 8 சதவீதமாக உயர்த்தப்பட்டது. </p><p>நான் 48 ஆண்டுகள் தி.மு.க.வில் உள்ளேன். ஒரே கட்சியில் 48 வருடமாக பொறுப்பில் உள்ளேன். ஆனால் அமைச்சர் நிர்மல் குமார் அ.தி.மு.க.வில் இருந்தார், பின்னர் மாறினார். 3.0 தி.மு.க. ஆட்சியில் ஒவ்வொரு பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் எந்தெந்த நிலங்களை பதியக்கூடாது என விதிகள் வகுக்கப்பட்டன. ஆனால் எப்படி பதிவு செய்தார்கள் என தெரியவில்லை. </p><h2>பொய்யை திரும்ப திரும்ப சொல்கின்றனர்</h2><p>மூன்று நாட்களுக்கு முன்பு கட்சியில் சேர்ந்தவர்களுக்கு அரசு வழக்கறிஞர் பதவி வழங்கி வருகின்றனர். மக்கள் முடிவை ஏற்றுகொள்கிறோம். வெற்றியையும், தோல்வியையும் பார்த்துள்ளோம். கடந்த 3 மாதத்தில் மின்சாரம் ஆங்காங்கே தட்டுப்பாடாக உள்ளது. தி.மு.க. ஆட்சியில் 5 ஆண்டுகளில் எங்கும் மின் தடை இல்லை. அவர்கள் பொய்யை திரும்ப திரும்பச் சொல்கின்றனர். </p><p>பத்திரப்பதிவுத் துறை புகார் தொடர்பாக குழு அமைப்பதை வரவேற்கிறோம், புகார் வந்தால் நடவடிக்கைகள் எடுங்கள் என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>&quot;ஒரு நடிகராக இது எனது மூன்றாவது தேசிய விருது, ஒரு இயக்குனராக எனது முதல் தேசிய விருது!&quot; - தனுஷ்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/as-an-actor-this-is-my-third-national-award-as-a-director-my-first-national-award-dhanush</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/as-an-actor-this-is-my-third-national-award-as-a-director-my-first-national-award-dhanush#comments</comments><guid isPermaLink="false">70769c5c-7541-437e-bab5-4b0a1770b8a2</guid><pubDate>Sun, 19 Jul 2026 07:48:16 +0000</pubDate><atom:updated>2026-07-19T07:48:16.944Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தனுஷ்,Captain Miller,Dhanush,Raayan,NationalAwards</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/g173d4cg/Dhanush" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dhanush]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/g173d4cg/Dhanush?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய அரசு அறிவித்துள்ள 72-வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமும் இயக்குநருமான <a href="https://www.maalaimalar.com/topic/dhanush">தனுஷ்</a> இரட்டை விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளார். </p><p>அவர் இயக்கி நடித்த 'ராயன்' திரைப்படம் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதையும், அவரது அசாத்திய நடிப்பில் வெளியான 'கேப்டன் மில்லர்' திரைப்படம் சிறந்த நடிகருக்கான சிறப்புத் தகுதி விருதையும் பெற்றுள்ளார்.</p><p>இந்த சிறப்புமிக்க வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் தனுஷ் தனது ரசிகர்களுக்கும், ஊடகங்களுக்கும் மற்றும் தேசிய விருது நடுவர் குழுவிற்கும் நன்றி தெரிவித்து உணர்வுப்பூர்வமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.</p><h2>தனுஷ் வெளியிட்டுள்ள பதிவில்,</h2><p>ஓம் நமசிவாய! 'ராயன்' படத்திற்காக சிறந்த பிராந்திய திரைப்படத்திற்கான தேசிய விருதையும், 'கேப்டன் மில்லர்' படத்திற்காக தேசிய விருதையும் (சிறப்புக் குறிப்பு - சிறந்த நடிகர்) பெற்றிருப்பது எனக்கு மிகுந்த பணிவையும் பெருமகிழ்ச்சியையும் அளிக்கிறது. </p><p>மதிப்பிற்குரிய தேசிய திரைப்பட விருதுகள் நடுவர் குழுவிற்கும் தேர்வுக் குழுவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள். எனது திரைப்பயணம் முழுவதும் எனக்கு உறுதுணையாக இருந்த பத்திரிகை, ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகத் துறையினருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். </p><p>ஒரு நடிகராக இது எனது மூன்றாவது தேசிய விருது, ஒரு இயக்குனராக எனது முதல் தேசிய விருது. எனது பலத்தின் தூண்களான என் ரசிகர்கள் இல்லாமல் இது சாத்தியமாகியிருக்காது. </p><p>என் இதயத்தின் ஆழத்திலிருந்து உங்களுக்கு நன்றி. 'கேப்டன் மில்லர்' படத்திற்கான இந்த அங்கீகாரம் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது, ஏனென்றால் அதுவே இன்றுவரை எனது மிகச்சிறந்த நடிப்பு என்று நான் எப்போதும் நம்பி வந்திருக்கிறேன். </p><p>நான் மிகவும் போற்றும் ஒரு நடிப்புக்கு சிறப்புக் குறிப்பு பெறுவது, இந்த கௌரவத்தை இன்னும் அர்த்தமுள்ளதாக்குகிறது. மேலும், ஒரு முதல் அனுபவம் எப்போதும் மறக்க முடியாதது. </p><p>ராயன் படத்திற்காக இயக்குநராக எனது முதல் தேசிய விருதை வென்றது, நான் என்றென்றும் போற்றிப் பாதுகாக்கும் ஒரு வரம்" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.</p><p>அறிக்கையின் இறுதியில், மேலும் நான் எப்போதும் சொல்வது போல், "எண்ணம் போல் வாழ்க்கை" மற்றும் "ஹர ஹர மகாதேவ்" எனக் குறிப்பிட்டு, "அன்புடன் D" என்று பதிவை நிறைவு செய்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="hi" dir="ltr">OM NAMASHIVAAYA ❤️ <a href="https://t.co/3wkQYHER25">pic.twitter.com/3wkQYHER25</a></p>&mdash; Dhanush (@dhanushkraja) <a href="https://x.com/dhanushkraja/status/2078502027198615957?ref_src=twsrc%5Etfw">July 18, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் மின்  நுகர்வோர்களுக்கு அதிகப்படியான மின் கட்டணம்: தலைமை பொறியாளர் சொல்வது என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-power-consumers-overcharged-bills-chief-engineer-explains</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-power-consumers-overcharged-bills-chief-engineer-explains#comments</comments><guid isPermaLink="false">cf877f38-1a01-484d-a65f-87d962166f5c</guid><pubDate>Sun, 19 Jul 2026 07:46:57 +0000</pubDate><atom:updated>2026-07-19T07:46:57.545Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மின்கட்டணம்,TANGEDCO,Tamilnadu Electricity,Meter Reading,தமிழ்நாடு மின்வாரியம்,மீட்டர் கணக்கீடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/qqxlobkp/Untitled-design-36.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tamil Nadu Power Consumers overcharged]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/qqxlobkp/Untitled-design-36.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் மீட்டர் கணக்கீடு மற்றும் பில்லிங் செயல்முறைகளில் ஏற்பட்ட குளறுபாடுகள் காரணமாக, சில இடங்களில் மின் நுகர்வோருக்கு தவறான மற்றும் அதிகப்படியான கட்டணம் பதிவாகி உள்ளதாக மின் வாரிய தலைமை பொறியாளர் தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து திருநெல்வேலி மண்டல தலைமை பொறியாளர் கூறுகையில், “மீட்டர் கணக்கீடு மற்றும் பில்லிங் செயல்முறையில் ஏற்பட்ட குறைபாடுகளால் சில இடங்களில் மின் நுகர்வோருக்கு தவறான மற்றும் அதிகப்படியான கட்டணம் பதிவாகியுள்ளது. </p><p>இதன் காரணமாக மீட்டர் கணக்கீடுகளில் குறைபாடுகள் ஏற்பட்டு, பொதுமக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.</p><p>மின்வாரிய கணக்கில் குளறுபடிகள் ஏற்பட்டு, பெரும் நிதி இழப்புகள் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் பொதுமக்க்ளுக்கு தவறான மற்றும் அதிகப்படியான மின்கட்டணங்கள் விதிக்கப்பட்டுள்ளது.</p><p>மின்வாரிய அதிகாரிகளால் அடிப்படை களஆய்வு முறையாக மேற்கொள்ளப்படவில்லை. இதனால்தான் இதுபோன்ற குறைபாடுகள் ஏற்பட்டுள்ளது.</p><p>தமிழகம் முழுவதும் உள்ள மின் விநியோக வட்டங்களில் முறையாக ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை, பழுதடைந்த மீட்டரின் மின்அளவுகளில் இருக்கும் பிரச்சனை தொடக்க நிலையிலேயே கண்டறியப்படவில்லை.</p><p>இதனால் தான் மீட்டர்கள் மற்றும் பில்லிங் செயல்முறைகளில் குறைபாடுகள் ஏற்பட்டது. களஆய்வு அதிகாரிகள் தங்களின் கடமைகளை முறையாக செய்திருந்தால், பிரச்சனைகளை தவிர்த்திருக்க முடியும்.</p><p>மேலும் கால முறைப்படி முறையான ஆய்வு மேற்கொள்ள, மேற்பார்வை பொறியாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளேன்.</p><p>மின்வாரிய ஊழியர்கள் அனைவரும் முறையாக பணி செய்கிறார்களா என்பதை, இனிவரும் காலங்களில் அடிக்கடி களஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது” என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>&apos;சென்னைவாசிகளுக்கு டபுள் தமாக்கா&apos;! தாம்பரம்-செங்கல்பட்டு ரெயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennaiites-get-double-dhamaka-new-rail-line-between-tambaram-and-chengalpattu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennaiites-get-double-dhamaka-new-rail-line-between-tambaram-and-chengalpattu#comments</comments><guid isPermaLink="false">0ec15782-2bb6-4e76-9001-d611335b3a0c</guid><pubDate>Sun, 19 Jul 2026 07:29:12 +0000</pubDate><atom:updated>2026-07-19T07:29:12.302Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tambaram,தாம்பரம்,செங்கல்பட்டு,chengalpattu,Train passengers,ரெயில் பயணிகள்,railway board,ரெயில்வே வாரியம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/zguk527o/rail-line.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tambaram Chengalpattu 4th line]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/zguk527o/rail-line.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தெற்கு ரெயில்வேயில் பயணிகள் மற்றும் சரக்கு ரெயில்களின் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், பல்வேறு புதிய உள்கட்டமைப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சென்னை, தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 4-வது புதிய ரெயில் பாதை அமைக்கும் திட்டம் உட்பட மொத்தம் மூன்று முக்கிய ரெயில் பாதை திட்டங்களுக்கு ரெயில்வே வாரியம் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. </p><p>இந்த மூன்று திட்டங்களையும் மொத்தம் 2,576 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்காக இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இத்திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளைத் தெற்கு ரெயில்வே மிகமிக விரைவில் தொடங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><h2><strong>கூட்ட நெரிசலைக் குறைக்க திட்டம்:</strong></h2><p>தெற்கு ரெயில்வேயில் எப்போதும் நெரிசல் மிகுந்த மிக முக்கியமான முதன்மை வழித்தடங்களில், தடையற்ற ரெயில் போக்குவரத்தை உறுதி செய்யும் பொருட்டு கூடுதல் ரெயில் பாதைகளை அமைக்க ரெயில்வே வாரியம் தொடர்ந்து ஒப்புதல் வழங்கி வருகிறது. </p><p>சென்னை புறநகர்ப் பகுதியில் மிக அதிக போக்குவரத்து நெரிசலைக் கொண்டுள்ள வழித்தடமாகத் தாம்பரம்-செங்கல்பட்டு தடம் விளங்குகிறது. இந்தத் தடத்தில் நிலவும் நெரிசலைக் குறைப்பதற்காக, 713 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்காவது புதிய ரெயில் பாதை அமைப்பதற்கு ரெயில்வே வாரியம் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.</p><h2><strong>அரக்கோணம், ஈரோடு வழித்தடம்:</strong> </h2><p>தாம்பரம்-செங்கல்பட்டு தடம் மட்டுமன்றி, மேலும் இரண்டு முக்கிய வழித்தடங்களிலும் இரட்டைப் பாதை அமைப்பதற்கான ஒப்புதல் கிடைத்துள்ளது. இதன்படி, அரக்கோணம் -செங்கல்பட்டு வழித்தடத்தில் 929 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரட்டை ரெயில் பாதை அமைக்கப்பட உள்ளது. </p><p>இதேபோல், ஈரோடு-கரூர் வழித்தடத்தில் 934 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரட்டைப் பாதை அமைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று முக்கியத் திட்டங்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 2,576 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு ரெயில்வே வாரியம் பச்சைக் கொடி காட்டியுள்ளது. இதன் மூலம் அடுத்தகட்டப் பணிகளைத் தெற்கு ரெயில்வே தற்போதே உடனே தொடங்கியுள்ளது.</p><h2><strong>தெற்கு ரெயில்வேயின் வருவாய்:</strong></h2><p>இது குறித்துத் தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், தெற்கு ரெயில்வேயில் விரைவு ரெயில்கள், குறுகிய தூரப் பயணியர் ரெயில்கள் மற்றும் புறநகர் மின்சார ரெயில்கள் எனத் தினசரி சுமார் 1,400 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் எண்ணிக்கையும் ஆண்டுக்காண்டு கணிசமாக உயர்ந்து வருகிறது. </p><p>குறிப்பாக, கடந்த நிதியாண்டில் மட்டும் சுமார் 152.75 கோடி மக்கள் தெற்கு ரெயில்வே மூலமாகப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதன் வாயிலாக ரெயில்வே துறைக்கு 8,215 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர்.</p><h2><strong>எதிர்கால இலக்குகள்:</strong></h2><p>கூடுதல் ரெயில் பாதைகள் அமைப்பது, முக்கிய ரெயில் நிலையங்களை உலகத் தரத்திற்கு மேம்படுத்துவது, பண்டிகைக் கால சிறப்பு ரெயில்களை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களில் ரெயில்வே துறை தற்போது தீவிர கவனம் செலுத்தி வருகிறது. </p><p>இந்த புதிய மூன்று ரெயில் பாதை திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்துவது மற்றும் தேவையான உள்கட்டமைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்வதற்கான 'டெண்டர்' விரைவில் வெளியிடப்பட உள்ளது.</p><p>இதுமட்டுமன்றி, திருச்சி, மதுரை மற்றும் கேரள மாநிலத்தின் பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய கோட்டங்களிலும் பல்வேறு புதிய ரெயில் பாதை பணிகள் தற்போது அதிவேகமாக நடந்து வருகின்றன. </p><p>இந்த உள்கட்டமைப்பு மற்றும் விரிவாக்கப் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவடையும் போது, வரும் 2030-ஆம் ஆண்டில், தற்போது இயக்கப்பட்டு வரும் ரெயில்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் 50 சதவீதம் கூடுதலாக ரெயில்களை இயக்க முடியும் என்று தெற்கு ரெயில்வே அதிகாரிகள் மிகவும் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி: மணல் சிற்பம் உருவாக்கி வாழ்த்து கூறிய சுதர்சன் பட்நாயக்</title><link>https://www.maalaimalar.com/sports/football/sudarshan-patnaik-sand-sculpture-honours-world-cup-final-and-messi</link><comments>https://www.maalaimalar.com/sports/football/sudarshan-patnaik-sand-sculpture-honours-world-cup-final-and-messi#comments</comments><guid isPermaLink="false">3bb2db24-5e61-4ca5-9f0b-a2186a9cb16c</guid><pubDate>Sun, 19 Jul 2026 07:08:52 +0000</pubDate><atom:updated>2026-07-19T07:08:52.392Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>sand art,உலகக் கோப்பை கால்பந்து,Sudarsan Pattnaik,FIFA World Cup,மணல் சிற்பம்,சுதர்சன் பட்நாயக்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/f56iehop/sand.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ sand art]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/f56iehop/sand.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கால்பந்து (Football)</category><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக், உலகின் முக்கிய நிகழ்வுகள் குறித்து அவ்வவ்போது சிற்பங்களை உருவாக்கி வருகிறார்.</p><h2>மணல் சிற்பம்</h2><p>இந்நிலையில், பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் குறித்து பூரி கடற்கரையில் 8 அடி உயர மணல் சிற்பத்தை அவர் உருவாக்கி உள்ளார்.</p><p>நியூயார்க்கில் இன்று நள்ளிரவு நடைபெறவுள்ள அர்ஜென்டினா-ஸ்பெயின் இறுதிப்போட்டிக்கு முன், ஒடிசாவின் பூரி கடற்கரையில் 8 அடி உயர மணல் சிற்பமாக பிபா உலகக் கோப்பையை உருவாக்கியுள்ளார்.</p><h2>இறுதிப்போட்டிக்கு வாழ்த்துகள்</h2><p>இந்தச் சிற்பத்தில் ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினாவின் தேசியக் கொடிகளுடன், "FIFA உலகக் கோப்பை 2026 - இறுதிப்போட்டிக்கு வாழ்த்துகள்" என்ற செய்தியும் இடம்பெற்றுள்ளது.</p><p>மேலும், கால்பந்தின் மாபெரும் சின்னங்களில் ஒருவரான லயோனல் மெஸ்சியின் உருவத்தையும், "நாங்கள் மெஸ்சியை நேசிக்கிறோம்" என்ற செய்தியுடன் செதுக்கியுள்ளார்.</p><p>இந்தச் சிற்பத்தை உருவாக்க சுமார் 7 டன் மணல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவரது மணல் கலை நிறுவனத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஒன்றிணைந்து இந்தச் சிற்பத்தை நிறைவு செய்துள்ளனர்.</p><p>இதுதொடர்பாக சுதர்சன் பட்நாயக் கூறியதாவது:</p><p>பிபா உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு வாழ்த்துகள். யார் வெல்வார்கள் என்று உலகம் முழுவதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தங்கக் கோப்பையின் 8 அடி உயர மணல் சிற்பத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இந்த முறை, 'வாழ்த்துக்கள்' என்ற செய்தியுடன் இந்த சிறப்பு சிற்பத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இந்த இறுதிப்போட்டியில் இரு அணிகளுக்கும் எங்களின் வாழ்த்துகள். </p><p>கால்பந்து ஜாம்பவானான லயோனல் மெஸ்சியைக் கவுரவிக்கும் வகையில், அவரது மணல் சிற்பத்தையும் உருவாக்கியுள்ளோம். கிழக்கு இந்தியாவில் கால்பந்துக்கு மிகுந்த வரவேற்பு இருக்கிறது.</p><figure><img alt="messi" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/96ibwhmy/messi.jpg" /></figure> <h2>மெஸ்சியை நேசிக்கிறோம்</h2><p>கால்பந்து ஜாம்பவனான மெஸ்சியின் சிற்பத்தை, 'நாங்கள் மெஸ்ஸியை நேசிக்கிறோம்' என்ற செய்தியுடன் உருவாக்கி உள்ளோம். மெஸ்சி தனது தனித்துவமான ஆட்டத்தால் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கிறார் என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>இணையத்தில் வைரலாகும் மத்திய அரசின் ‘ஃபேஸ் வாஷ்’: மிகக் குறைந்த விலை-எவ்வளவு தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/news/national/central-government-salicylic-acid-face-wash-goes-viral</link><comments>https://www.maalaimalar.com/news/national/central-government-salicylic-acid-face-wash-goes-viral#comments</comments><guid isPermaLink="false">064a06a6-d53c-4189-9483-34c2e10f17a1</guid><pubDate>Sun, 19 Jul 2026 06:48:24 +0000</pubDate><atom:updated>2026-07-19T06:48:24.027Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,Modi,central government,மோடி,SalicylicAcid,FaceWash,சாலிசிலிக் ஆசிட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/874wgbbe/modi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Central Government's Face Wash]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/874wgbbe/modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சமூக வலைத்தளங்களில் தற்போது ஒரு புதிய அழகு சாதனப் பொருள் இந்திய அளவில் பெரும் விவாதத்தையும் வரவேற்பையும் பெற்று வருகிறது. அது வேறு எந்த ஒரு முன்னணி நிறுவனத்தின் தயாரிப்பும் அல்ல. </p><p>இந்திய மத்திய அரசின் ஜன அவுஷதி கேந்திராக்களில் விற்பனை செய்யப்படும் 'சாலிசிலிக் ஆசிட் ஃபேஸ் வாஷ்' தான் அது. மிகக் குறைந்த விலையில், முகப்பருக்களைக் கட்டுப்படுத்தும் அசாத்தியமான நன்மைகளை வழங்குவதால், இளைஞர்கள் மற்றும் ஸ்கின்கேர் பிரியர்கள் மத்தியில் இந்த தயாரிப்பு காட்டுத்தீ போல பரவி வருகிறது.</p><h2><strong>வைரலாவதற்கான முக்கிய காரணங்கள் என்ன?</strong></h2><p>சந்தையில் முன்னணி பிராண்டுகளின் சாலிசிலிக் ஆசிட் ஃபேஸ் வாஷ்கள் பொதுவாக ரூ.150 முதல் ரூ.500 வரை விற்கப்படுகின்றன. ஆனால், மத்திய அரசின் பிரதான் மந்திரி பாரதிய ஜனவுஷதி பரியோஜனா திட்டத்தின் கீழ், இதன் 1% வேரியண்ட் ரூ.46.88-க்கும், 2% வேரியண்ட் ரூ.65.63-க்கும் மட்டுமே கிடைக்கிறது. இது சந்தை விலையை விட கிட்டத்தட்ட 70% முதல் 90% வரை குறைவாகும்.</p><h2><strong>தரத்திற்கு உத்தரவாதம்:</strong></h2><p>குறைந்த விலை என்றதும் தரம் குறைவாக இருக்குமோ என்ற ஐயம் தேவையில்லை. இந்த தயாரிப்புகள் அனைத்தும் WHO-GMP மற்றும் NABL அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களால் சான்றளிக்கப்பட்டு, கடுமையான தரக்கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே சந்தைக்கு வருகின்றன.</p><h2><strong>முகப்பரு மற்றும் எண்ணெய் பசையுள்ள சருமத்திற்கு தீர்வு:</strong></h2><p>சாலிசிலிக் ஆசிட் என்பது சரும துவாரங்களில் உள்ள அழுக்குகள் மற்றும் அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கி, முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் வராமல் தடுப்பதில் மிகச்சிறந்த மருத்துவக் காரணியாகக் கருதப்படுகிறது.</p><h2><strong>ஸ்கின்கேர் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றம்:</strong></h2><p>நெட்டிசன்கள் பலரும் தங்களது எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில், "இனி தேவையின்றி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம், அரசாங்கத்தின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது" எனப் பதிவிட்டு வருகின்றனர். மருத்துவ ரீதியாக பரிந்துரைக்கப்படும் இந்த ஃபேஸ் வாஷ், நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களுக்கும் தரமான சருமப் பராமரிப்பு கிடைக்க வழிவகை செய்துள்ளது. </p><p>இது சாலிசிலிக் ஆசிட் கொண்ட ஒரு மருத்துவத் தயாரிப்பு என்பதால், உணர்திறன் மிக்க சருமம் உள்ளவர்கள் அல்லது முதன்முறையாகப் பயன்படுத்துபவர்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அல்லது 'பேட்ச் டெஸ்ட்' செய்து பார்ப்பது நல்லது.</p><h2><strong>எங்கு வாங்குவது?</strong></h2><p>இந்த ஃபேஸ் வாஷை உங்கள் பகுதிக்கு அருகில் உள்ள ஜன அவுஷதி கேந்திராக்களில் நேரடியாகப் பெற்றுக்கொள்ளலாம். உங்களுக்கு அருகிலுள்ள கடையைக் கண்டறிய Janaushadhi Official Website மற்றும் https://janaushadhi.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள “Locate Kendra” பக்கத்தைப் பயன்படுத்தலாம்.</p><p>மக்களுக்கு மலிவு விலையில் மருந்துகளை வழங்குவதற்காகத் தொடங்கப்பட்ட ஜன அவுஷதி கேந்திராக்கள், தற்போது சாலிசிலிக் ஆசிட் ஃபேஸ் வாஷ், புரோட்டீன் பவுடர்கள் மற்றும் ஐசோட்ரெட்டினாயின் கேப்சூல்கள் போன்ற நவீன சுகாதார மற்றும் அழகுப் பராமரிப்புத் துறையிலும் தடம் பதித்து வருவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>வீடுகளுக்கான மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதா.., கணக்கிடுவது எப்படி?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tneb-electricity-tariff-for-households-been-increased-how-is-it-calculated</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tneb-electricity-tariff-for-households-been-increased-how-is-it-calculated#comments</comments><guid isPermaLink="false">33a2f5b7-fb34-4f1e-9883-4cc3c3ffd8b6</guid><pubDate>Sun, 19 Jul 2026 06:44:23 +0000</pubDate><atom:updated>2026-07-19T06:44:23.741Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TNEB,திமுக அரசு,மின்சார கட்டணம் பில்,தவெக அரசு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/h48k2pya/TNEB0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TNEB]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/h48k2pya/TNEB0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் த.வெ.க. தலைவர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றதும், வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். 500 யூனிட்டுகளுக்கு குறைவாக பயன்படுத்துபவர்களுக்கு இந்த சலுகை பொருந்தும் எனஅறிவித்தார். அதனால் 500 யூனிட்டுகளுக்கு அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு எந்த வித்தியாசமும் கிடையாது. பழைய மாதிரி 100 யூனிட் இலவசமாக வழங்கப்படும்.</p><p>விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றபின், தற்போது வீட்டு நுகர்வோர் மின்சார கட்டணம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் வீட்டு நுகர்வோருக்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. பொதுமக்களுக்கு கணக்கீடு எவ்வாறு செய்யப்படுகிறது என்பதில் குழப்பம் நிலுவதால் இவ்வாறு தெரிவிக்கிறார்கள்.</p><p>ஆனால், தேமுதிக பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதாவும் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார். இவரைத் தவிர்த்து திமுக முன்னாள் அமைச்சரான கீதா ஜீவனும் சத்தமில்லாமல் மின்கட்டணம் உயர்த்தப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.</p><h2>திமுக ஆட்சியில் மின்சார கட்டணம் முறை</h2><p>கடந்த ஆட்சி மற்றும் தற்போதைய ஆட்சியில் எவ்வாறு மின்சார கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று பார்ப்போம். கடந்த திமுக ஆட்சியில் அதாவது 2025-ல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டது.</p><h2>2025 மின்சாரம் கணக்கீடு முறை 500 யூனிட் வரை</h2> <p>அதன்படி ஒரு வீட்டு நுகர்வோர் 100 யூனிட் மின்சாரம் பயன்படுத்தினால் கட்டணம் செலுத்த வேண்டாம். 200 யூனிட் பயன்படுத்தினால் 101 முதல் 200 யூனிட்களுக்கு, ஒரு யூனிட்டிற்கு 2.35 ரூபாய் என்ற வகையில் 235 ரூபாய் செலுத்த வேண்டும்.</p><h2>300 யூனிட் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோர்</h2><p>300 யூனிட் பயன்படுத்தப்பட்டதாக வைத்துக் கொள்வோம். இந்த நுகர்வோருக்கு முதல் 100 யூனிட் இலவசம். அடுத்த 101 முதல் 200 யூனிட் வரை ஒரு யூனிட்டிற்கு 2.35 ரூபாய் விதம் 235 ரூபாய் வசூலிக்கப்படும். நீங்கள் அடுத்த 1 யூனிட் (அதாவது 201) பயன்படுத்தினாலும், 400 யூனிட் பயன்படுத்தினாலும் ஒரு யூனிட்டிற்கு 4.70 ரூபாய் விதம் 470 ரூபாய் வசூலிக்கப்படும். அதன்படி ஒரு நுகர்வோர் 300 யூனிட் பயன்படுத்தினால் 705 ரூபாய் கட்டணம் (201 முதல் 300 யூனிட்டிற்கு 470 ரூபாய்) செலுத்த வேண்டும்.</p><h2>400 யூனிட் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோர்</h2><p>400 யூனிட் பயன்படுத்தினாலும் 201 முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட்டிற்கு 4.70 ரூபாய் விதம் வசூலிக்கப்படும். அதன்படி முதல் 100 யூனிட்கள் இலவசம். அதன்பின் 101 முதல் 200 யூனிட் வரை ஒரு யூனிட்டிற்கு 2.35 ரூபாய் விதம் 235 ரூபாய். 201 முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட் 4.70 ரூபாய் விதம் 940 என மொத்தமாக 1175 ரூபாய் வசூலிக்கப்படும்.</p><h2>500 யூனிட் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோர்</h2><p>500 யூனிட் பயன்படுத்தினால் 401 முதல் 500 யூனிட் வரை ஒரு யூனிட் 6.30 ரூபாய் விதம் 630 ரூபாய் வசூலிக்கப்படும். 100 யூனிட் வரை இலவசம். 101 முதல் 200 யூனிட் வரை ஒரு யூனிட்டிற்கு 2.35 ரூபாய் விதம் 235 ரூபாய். 201 முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட் 4.70 ரூபாய் விதம் 940 ரூபாய் வசூலிக்கப்படும். மொத்தம் 1805 ரூபாய் வசூலிக்கப்படும்.</p><h2>2025 மின்சாரம் கணக்கீடு முறை 1000 யூனிட்களுக்கு மேல் (1001 யூனிட்கள்)</h2> <h2>500-க்கு அதிகமான யூனிட் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோர்</h2><p>500-க்கு மேல் ஒரு யூனிட் பயன்படுத்தினாலும் முதல் 100 யூனிட் இலவசம். 101 முதல் 400 யூனிட் வரை 4.70 ரூபாய் (1410 ரூபாய்), 401 முதல் 500 யூனிட் வரை 6.30 ரூபாய் (630 ரூபாய்), 501 முதல் 600 யூனிட் வரை 8.40 ரூபாய் (840 ரூபாய்), 601 முதல் 800 யூனிட் வரை 9.45 ரூபாய் (1890 ரூபாய்), 801 முதல் 1000 யூனிட் வரை 10.50 ரூபாய் (2100 ரூபாய்) என வசூலிக்கப்படும்.</p><p>1000 யூனிட்டிற்கு மேல் வீட்டு நுகர் பயன்படுத்தினால், 1 யூனிட்டிற்கு 11.55 ரூபாய் வசூலிக்கப்படும். 1000-த்திற்கு உட்பட்ட யூனிட்களுக்கு மேற்பகுதியில் சொன்னவாரு வசூலிக்கப்படும்.</p><h2>தற்போது தவெக ஆட்சிக்கு வந்த பிறகு மின்சார கட்டணம் கணக்கீடு</h2><p>முதலமைச்சர் விஜய் 200 யூனிட் வரை பயன்படுத்தினால் மின்சார கட்டணம் தேவையில்லை என்கிறார். 500 யூனிட்டிற்கு மேல் 1 யூனிட் வசூலித்தாலும் பழைய முறைப்படை கணக்கிடப்படும். அப்படி என்றால், 201 முதல் 500 யூனிட் வரை எப்படி கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று பார்க்க வேண்டும்.</p><h2>201 யூனிட் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோர்</h2><p>ஒரு வீட்டு நுகர்வோர் 201 யூனிட் பயன்படுத்தினார் என்றால், முதல் 200 யூனிட் இலவசம். அடுத்த யூனிட்டிற்கு 4.70 ரூபாய் வசூலிக்கப்படும்.</p><h2>2026 மின்சாரம் கணக்கிடு முறை 500 யூனிட்கள் வரை</h2> <h2>300 யூனிட் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோர்</h2><p>300 யூனிட் பயன்படுத்தினால் என்றால் 201 முதல் 300 வரை 100 யூனிட்டிற்கு ஒரு யூனிட் 4.70 ரூபாய் விதம் 470 ரூபாய் வசூலிக்கப்படும்.</p><h2>420 யூனிட் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோர்</h2><p>201 முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட்டிற்கு 4.70 ரூபாய் விதம் வசூலிக்கப்படும். அப்படி பார்த்தால் 400 யூனிட்டிற்கு ஒரு யூனிட்டிற்கு 4.70 ரூபாய் விதம் 940 ரூபாய் வசூலிக்கப்படும். 420 யூனிட் பயன்படுத்தினால், முதல் 200 யூனிட்டிற்கு கட்டணம் இல்லை. 201 முதல் 400 யூனிட்டிற்கு 4.70 விதம் 940 ரூபாய், 401 முதல் 500 யூனிட்டிற்கு 6.30 யூனிட் விதம் 20 யூனிட்டிற்கு 126 ரூபாய் வசூலிக்கப்படும். மொத்தமாக 1066 ரூபாய் வசூலிக்கப்படும்.</p><h2>501 யூனிட் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோர்</h2><p>501 யூனிட் பயன்படுத்தினால் முதல் 100 யூனிட் இலவசம். 101 முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட் 4.70 ரூபாய் என்ற விதத்தில் 300 யூனிட்டுகளுக்கு 1410 ரூபாய். 401 முதல் 500 யூனிட் வரை ஒரு யூனிட் 6.30 விதம் 630 ரூபாய், 501 முதல் 600 யூனிட் வரை ஒரு யூனிட் 8.40 ரூபாய் விதம் 8.40 ரூபாய் என மொத்தம் 2048 ரூபாய் வசூலிக்கப்படும்.</p><h2>601 யூனிட் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோர்</h2><p>601 யூனிட் பயன்படுத்தினால் முதல் 100 யூனிட் இலவசம். 101 முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட் 4.70 ரூபாய் என்ற விதத்தில் 300 யூனிட்டுகளுக்கு 1410 ரூபாய். 401 முதல் 500 யூனிட் வரை ஒரு யூனிட் 6.30 விதம் 630 ரூபாய், 501 முதல் 600 யூனிட் வரை ஒரு யூனிட் 8.40 ரூபாய் விதம் 840 ரூபாய், 1 யூனிட்டிற்கு 9.45 யூனிட் விதம் 9.45 ரூபாய் வசூலிக்கப்படும். மொத்தமாக 601 யூனிட்டிற்கு 2889.45 ரூபாய் வசூலிக்கப்படும்.</p><h2>801 யூனிட் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோர்</h2><p>801 யூனிட் பயன்படுத்தினால், முதல் 100 யூனிட் இலவசம். 101 முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட் 4.70 ரூபாய் என்ற விதத்தில் 300 யூனிட்டுகளுக்கு 1410 ரூபாய். 401 முதல் 500 யூனிட் வரை ஒரு யூனிட் 6.30 விதம் 630 ரூபாய், 501 முதல் 600 யூனிட் வரை ஒரு யூனிட் 8.40 ரூபாய் விதம் 840 ரூபாய், 801 முதல் 1000 யூனிட் வரை ஒரு யூனிட் 10.50 ரூபாய் விதம் வசூலிக்கப்படும். அதன்படி 1 யூனிட்டிற்கு 10.50 ரூபாய் வசூலிக்கப்படும். மொத்தமாக 801 யூனிட்டிற்கு 4780 ரூபாய் வசூலிக்கப்படும்.</p><h2>2026 மின்சாரம் கணக்கிடு முறை 1000 யூனிட்களுக்கு மேல் (1001 யூனிட்கள்)</h2> <h2>1001 யூனிட் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோர்</h2><p>1001 யூனிட் பயன்படுத்தினால் முதல் 100 யூனிட் இலவசம். 101 முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட் 4.70 ரூபாய் என்ற விதத்தில் 300 யூனிட்டுகளுக்கு 1410 ரூபாய். 401 முதல் 500 யூனிட் வரை ஒரு யூனிட் 6.30 விதம் 630 ரூபாய், 501 முதல் 600 யூனிட் வரை ஒரு யூனிட் 8.40 ரூபாய் விதம் 840 ரூபாய், 801 முதல் 1000 யூனிட் வரை ஒரு யூனிட் 10.50 ரூபாய் விதம்  2100 ரூபாய் வசூலிக்கப்படும். அடுத்த ஒரு யூனிட்டிற்கு 1000 யூனிட்டிற்கு மேல் ஒவ்வொரு யூனிட்டிற்கும் 11.55 ரூபாய் என்ற விதத்தில் 11.55 ரூபாய் வசூலிக்கப்படும். மொத்தமாக 1001 யூனிட்டிற்கு 6881.55 ரூபாய் வசூலிக்கப்படும்.</p><h2>2025 மற்றும் 2026 கட்டணம் வேறுபாடு</h2><p>இதனடிப்படையில் 2025-ல் 101 யூனிட் பயன்படுத்தினால் கட்டணம் இல்லை. 2026-லும் அதுதான். 2025-ல் 201 யூனிட் பயன்படுத்தினால் முதல் 100 யூனிட்டிற்கு கட்டணம் இல்லை. 101 முதல் 200-க்கு 2.35 ரூபாய் விதம் 235 ரூபாய். அடுத்த 1 யூனிட்டிற்கு (201 முதல் 400 வரை 1 யூனிட் 4.70 ரூபாய் விதம்) 4.70 ரூபாய் வசூலிக்கப்படும். அதன்படி 201 யூனிட் பயன்படுத்தினால் 239.70 ரூபாய் செலுத்த வேண்டும்.</p><p>2026-ல் அதாவது தற்போது 200 வரை இலவசம். அடுத்த 1 யூனிட்டிற்கு (201 முதல் 400 யூனிட் வரை 1 யூனிட்டிற்கு 4.70 ரூபாய் விதம்) 4.70 ரூபாய் செலுத்த வேண்டும்.</p><p>2025-ல் 300 யூனிட் பயன்படுத்தினால் 705 ரூபாய் செலுத்த வேண்டும். தற்போது 470 ரூபாய் செலுத்த வேண்டும்.</p><p>2025-ல் 400 யூனிட் பயன்படுத்தினால் 1175 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். தற்போது 940 ரூபாய் செலுத்த வேண்டும்.</p><p>2025-ல் 500 யூனிட் பயன்படுத்தினால் 1805 ரூபாய் செலுத்த வேண்டும். தற்போது 1507 ரூபாய் செலுத்த வேண்டும். </p><p>2025-ல் 600 யூனிட் பயன்படுத்தினால் 2880 ரூபாய் செலுத்த வேண்டும். தற்போதும் 2880 ரூபாய் செலுத்த வேண்டும். 500 யூனிட்டிற்கு மேல் பயன்படுத்தினால் இரண்டு காலத்திலும் ஒரு மாதிரியான கட்டணம்தான்.</p>]]></content:encoded></item><item><title>இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு போர்க்குற்றவாளி: அமெரிக்கா வரும் அவரை கைது செய்ய விரும்புகிறேன்- மம்தானி தடாலடி</title><link>https://www.maalaimalar.com/news/world/israeli-pm-to-be-arrested-at-us-summit-says-nyc-mayor</link><comments>https://www.maalaimalar.com/news/world/israeli-pm-to-be-arrested-at-us-summit-says-nyc-mayor#comments</comments><guid isPermaLink="false">bb150ceb-5a81-4edb-ab61-388a52b800a2</guid><pubDate>Sun, 19 Jul 2026 06:29:02 +0000</pubDate><atom:updated>2026-07-19T06:29:02.855Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Benjamin Netanyahu,பெஞ்சமின் நெதன்யாகு,NewYork Mayor,UN summit,நியூயார்க் மேயர்,ஐ.நா உச்சி மாநாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/yeopi5vo/Untitled-design-33.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ New York Mayor says  Israeli PM will be arrested]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/yeopi5vo/Untitled-design-33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h3><strong>இஸ்ரேல் பிரதமரை கைது செய்ய பேச்சுவார்த்தை:</strong> </h3><p>அமெரிக்காவில் நடைபெற இருக்கும் ஐ.நா. உச்சி மாநாட்டிற்காக வருகை தரும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கைது செய்வது குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக நியூயார்க் மேயர் ஸோஹ்ரான் மம்தானி தெரிவித்தார்.</p><p>அமெரிக்காவின் நியூயார்க்கில் வரும் செப்டம்பர் மாதத்தில் ஐ.நா. உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த உச்சி மாநாட்டில் 193 ஐ.நா. உறுப்பு நாடுகள் கலந்துகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h3><strong>நியூயார்க் மேயர் தாக்குதல்:</strong></h3><p>இந்நிலையில் இந்த மாநாட்டிற்கு வருகை தரும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கைது செய்யப்பட ஆலோசகர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக நியூயார்க் மேயர் தெரிவித்தார்.</p><p>இதுகுறித்து அவர் கூறுகையில், “பிரதமர் நெதன்யாகு, ஹக்கில் (Hague) உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருக்க வேண்டியவர் என்று நான் நம்புகிறேன்.</p><p>அவர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்ட ஒரு போர்க் குற்றவாளி. கடந்த பல ஆண்டுகளாக அவருடைய செயல்பாடுகள் ஏற்படுத்திய விளைவுகளின் காரணமாக, இந்த கருத்து பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.</p><p>ஒரு வெளிநாட்டு பிரதமரை கைது செய்ய உத்தரவிடும் அதிகாரம் தனக்கு உள்ளதா என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் நியூயார்க் சட்டம் என்ன செய்ய அனுமதிக்கிறதோ, அதை நாங்கள் செய்வோம்” என்று கூறினார்.</p><p>மேலும் அமெரிக்காவில் மேயர் பதவிக்கான தேர்தல் பிரச்சாரத்தின்போது, நெதன்யாகுவை கைது செய்வதாகவும் மம்தானி உறுதியளித்தார்.</p><h3><strong>இஸ்ரேல் தூதர் பதிலடி:</strong></h3><p>இதையடுத்து அமெரிக்க மேயரின் கருத்துக்களுக்கு இஸ்ரேல் கடுமையான எதிர்வினையை பதிவு செய்துள்ளது. இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ரேலின் தூதர் டானி டானன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மேயராக தனது பொறுப்புகளில் கவனம் செலுத்தி, தனது நகரத்தில் அதிகரித்து வரும் யூத எதிர்ப்பு அலையை எதிர்கொள்வதற்கு பதிலாக, அவர் இஸ்ரேல் அரசை தாக்குவதன் மூலம், விரோதத்தை தூண்டி, தலைப்புச் செய்திகளை உருவாக்க முயற்சிக்கிறார். இதனால் எதுவும் மாறப்போவதில்லை.</p><p>இஸ்ரேல் பிரதமர் நியூயார்க்கிற்கு வந்து, ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றி, இஸ்ரேலின் உண்மையையும் தன் குடிமக்களை பாதுகாப்பதற்கான அசைக்க முடியாத உரிமையையும் உலகத்தின் முன் எடுத்துரைப்பார்.</p><p>மேலும் யாராவது கைது செய்யப்பட வேண்டும் என்றால், அது நியூயார் மேயர் உங்களை தான்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>10 தேசிய விருதுகளை வென்ற தமிழ் திரையுலகம்: முதலமைச்சர் விஜய் வாழ்த்து!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/tamil-cinema-wins-10-national-awards-cm-vijay-congratulates</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/tamil-cinema-wins-10-national-awards-cm-vijay-congratulates#comments</comments><guid isPermaLink="false">9a21af42-39bc-4f7a-8024-86f47af34497</guid><pubDate>Sun, 19 Jul 2026 06:08:39 +0000</pubDate><atom:updated>2026-07-19T06:08:39.457Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தேசிய திரைப்பட விருது விழா,Tamil Cinema,National Awards,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,தமிழ் திரையுலகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/o0um4o4d/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ national awards-CM Vijay Extends Congratulations]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/o0um4o4d/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய சினிமாவில் உள்ள நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்து ஆண்டுதோறும் மத்திய அரசு விருது வழங்கி  கவுரவித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2024-ம் ஆண்டு வெளிவந்த படங்களுக்கான 72-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. </p><p>இதில் தமிழ் திரை உலகம் 10 தேசிய விருதுகளை வென்றுள்ளது. தேசிய திரைப்பட விருதுகளை வென்ற தமிழ் திரை கலைஞர்களுக்கு முதலமைச்சர் விஜய் தனது பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.</p><h4><strong>இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-</strong></h4><p>2024-ம் ஆண்டில் வெளிவந்த திரைப்படங்களுக்கான 72-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், நடிகர்  தனுஷ் இயக்கி நடித்துள்ள “ராயன்” திரைப்படத்திற்குச் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதும், “கேப்டன் மில்லர்” திரைப்படத்திற்குத் தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் விழுமியங்களை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படத்திற்கான விருது மற்றும் அப்படத்தில் நடித்த  தனுசுக்கும் சிறப்புப் பிரிவில் சிறந்த நடிகருக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>“அமரன்” திரைப்படத்திற்காக ராஜ்குமார் பெரியசாமிக்குச் சிறந்த இயக்குநருக்கான விருது, ஆர்.கலைவாணனுக்குச் சிறந்த படத்தொகுப்புக்கான விருது மற்றும் ஜி.வி.பிரகாஷ் குமாருக்குச் சிறந்த பின்னணி இசைக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>மேலும், “மகாராஜா” திரைப்படத்திற்காக அனல் அரசுக்குச் சிறந்த சண்டைப் பயிற்சிக்கான விருது மற்றும் அப்படத்தில் நடித்த சாச்சனா நமிதாசுக்குச் சிறந்த துணை நடிகை விருதும், “மெய்யழகன்“ திரைப்படத்திற்காக சுரேன் ஜிக்குச் சிறப்புப் பிரிவில் சிறந்த ஒலிக்கலவைக்கான விருதும், “ப்ளூ” குறும்படத்திற்காக டி.எஸ்.ஹரிஹர சுதனுக்குச் சிறந்த ஒலி வடிவமைப்புக்கான விருதும் அறிவிக்கப்பட்டு உள்ளது.</p><h2><strong>பெருமை:</strong></h2><p>10 தேசிய திரைப்பட விருதுகளைத்  தமிழ்த் திரையுலகம் வென்றுள்ளதைப் பெருமைக்குரியது என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் விஜய், வருங்காலங்களில் தமிழ்த் திரையுலகம் மேலும் பல விருதுகளைப் பெற்றிடவும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது- திமுக வெளிநடப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/monsoon-session-all-party-meeting-starts-dmk-stage-walkout</link><comments>https://www.maalaimalar.com/news/national/monsoon-session-all-party-meeting-starts-dmk-stage-walkout#comments</comments><guid isPermaLink="false">2eae477f-8fe7-454c-b5e2-bf7338f72fc1</guid><pubDate>Sun, 19 Jul 2026 06:08:00 +0000</pubDate><atom:updated>2026-07-19T06:08:00.761Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>winter session,நாடாளுமன்றம்,parliment,All Party Meeting,அனைத்து கட்சி கூட்டம்,மழைக்காலக் கூட்டத்தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/1citcrlb/BJP.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ bjp]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/1citcrlb/BJP.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவை என நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மொத்தம் 19 அமர்வுகளாக இந்தக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜூ அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.</p><h2>அனல் பறக்கும்</h2><p>இந்தக் கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்கள் தாக்கலாக உள்ள நிலையில், மத்திய அரசுக்கு எதிராக நீட் வினாத்தாள் கசிவு, அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு, மேற்காசிய தாக்குதல்களில் இந்திய மாலுமிகள் உயிரிழப்பு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதனால் இந்த கூட்டத்தொடர் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>காங்கிரஸ்-தி.மு.க. இடையேயான கூட்டணி முறிவு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் பிளவு போன்ற அரசியல் ரீதியிலான மாற்றங்களுக்கு இடையே நடைபெறும் மழைக்கால கூட்டத்தொடர் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>நாளை தொடங்கும் மழைக்கால கூட்டத்தொடர், அடுத்த மாதம் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.</p><h2>சட்ட திருத்த மசோதா</h2><p>சமீபத்தில் மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்ட சில அவசர சட்டங்களுக்கு மாற்றான மசோதாக்கள், இந்த கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. முக்கியமாக, வருமான வரி சட்டத்திருத்த மசோதா கொண்டுவரப்பட உள்ளது. சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தி பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்துக்கு மாற்றான மசோதாவும் அறிமுகப்படுத்தப்படும். தேசிய பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்பதை தண்டனைக்குரிய குற்றமாக்கும் சட்டத்திருத்த மசோதா, பிறப்பு-இறப்பு பதிவு சட்டத்திருத்த மசோதா உள்ளிட்டவையும் தாக்கலாக உள்ளன.</p><p>அனைத்து கட்சி கூட்டம்</p><p>பாராளுமன்ற கூட்டம் சுமூகமாக நடைபெறுவதற்கு எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு தேவை. எனவே பாராளுமன்ற கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பு மத்திய அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்துவது வழக்கம்.</p><p>இந்நிலையில், மழைக்கால கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் இன்று தொடங்கியது. </p><h2>திமுக வெளிநடப்பு</h2><p>மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜிக்கு எதிராக திரும்பி உள்ள அதிருப்தி எம்.பி.க்கள் 20 பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்றதைக் கண்டித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.</p><p>இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் பல்வேறு விஷயங்கள் பற்றி பேச உள்ளனர். குறிப்பாக, ஜந்தர்மந்தரில் இருந்து சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை வெளியேற்றிய விவகாரம் பற்றி அனைத்து எதிர்கட்சியினரும் பேச இருக்கிறார்கள்.</p><p>மேலும், அயோத்தி ராமர் கோவில் நன்கொடை கையாடல் செய்யப்பட்டதாக கூறப்படும் விவகாரமும் இன்றைய கூட்டத்தில் விஸ்வரூபம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>video-கதாநாயகனாக மிரட்டும் சூரி: இணையத்தைக் கலக்கும் ‘மண்டாடி’ பட ப்ரோமோ பாடல் வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/soori-threatens-as-video-hero-mandadi-promo-song-takes-internet-by-storm</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/soori-threatens-as-video-hero-mandadi-promo-song-takes-internet-by-storm#comments</comments><guid isPermaLink="false">b7d6efd8-41ff-4ceb-8d9c-9d4d89cdb2ba</guid><pubDate>Sun, 19 Jul 2026 05:47:54 +0000</pubDate><atom:updated>2026-07-19T05:47:54.145Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Actor Soori,மண்டாடி,Mandaadi,ஜி.வி.பிரகாஷ் குமார்,சூரி,Gvprakash kumar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/aodf37n2/soori.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ mandaadi song]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/aodf37n2/soori.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/vnxCNGuBchw"></iframe></figure><p>தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்து, தற்போது 'விடுதலை' மற்றும் 'கருடன்' போன்ற திரைப்படங்கள் மூலம் முழுநேர ஆக்சன் கதாநாயகனாக விஸ்வரூபம் எடுத்துள்ள நடிகர் '<a href="https://www.maalaimalar.com/topic/-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF">சூரி</a>'யின் அடுத்த பிரம்மாண்ட படைப்பான ‘<a href="https://www.maalaimalar.com/topic/-மண்டாடி">மண்டாடி</a>’ திரைப்படத்தின் முதல் பாடல் ப்ரோமோ தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. </p><p>இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் இப்பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது.</p><h2><strong>துள்ளலான நடனத்தில் சூரி:</strong></h2><p>இதுவரை உணர்வுப்பூர்வமான மற்றும் எதார்த்தமான கதாபாத்திரங்களில் மட்டுமே ரசிகர்கள் பார்த்து ரசித்த நடிகர் சூரி, இந்த ‘மண்டாடி’ ப்ரோமோ பாடலில் பக்கா மாஸ் மற்றும் துள்ளலான நடன அசைவுகளுடன் தோன்றி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.</p><p>தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அவரின் துடிப்பான இசையும், பின்னணியும் பாடலுக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. ஒரு பக்காவான 'டிரெய்னிங் ஆந்தம்' போல இந்த ப்ரோமோ பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>மீனவர்களின் வாழ்வியல் பின்னணி:</strong></h2><p>நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் சமூகத்தின் வாழ்வியலையும், அங்கு நடைபெறும் விறுவிறுப்பான படகுப் போட்டிகளையும்  மையமாகக் கொண்டு இத்திரைப்படம் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இதற்காக கிளைமேக்ஸ் காட்சிகள் உள்ளிட்ட பல முக்கிய பகுதிகள் தொடர்ச்சியாக பல இரவுகள் படமாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.</p><p>ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் நிறுவனம் சார்பில் 'எல்ரெட் குமார்' தயாரிப்பில், இயக்குநர் 'மதிமாறன் புகழேந்தி' இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். சூரியுடன் இணைந்து சுஹாஸ், மஹிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்திரா விஜய், பாலசரவணன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் ஈ.ராகவ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.</p><p>சுமார் ரூ.60 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தற்போது வெளியாகியுள்ள இந்த மாஸ் ப்ரோமோ பாடல், படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மூத்த குடிமக்களுக்கு MBBS-இல் ஏன் இடஒதுக்கீடு இல்லை? அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் 71 வயது முதியவர் வழக்கு!</title><link>https://www.maalaimalar.com/news/national/71-year-old-ashok-bahar-seeks-mbbs-quota-for-senior-citizens</link><comments>https://www.maalaimalar.com/news/national/71-year-old-ashok-bahar-seeks-mbbs-quota-for-senior-citizens#comments</comments><guid isPermaLink="false">e9b83c14-fc48-4abd-8080-07f86f0dfe4e</guid><pubDate>Sun, 19 Jul 2026 05:21:12 +0000</pubDate><atom:updated>2026-07-19T05:21:12.895Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>எம்பிபிஎஸ்,MBBS,NEET UG,அலகாபாத் உயர் நீதிமன்றம்,நீட்தேர்வு,AllahabadHighCourt</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/jo17jyxz/MBBS.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 71 year old man]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/jo17jyxz/MBBS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கல்வி கற்பதற்கும், கனவுகளை துரத்துவதற்கும் வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், 71 வயது முதியவர் ஒருவர் மருத்துவப் படிப்பில் மூத்த குடிமக்களுக்கு இடஒதுக்கீடு கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.</p><p>உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதான அசோக் பகார் என்ற முதியவர், 2026-ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வுக்குத் தயாராகி வரும் ஒரு தீவிர மருத்துவ ஆர்வலர் ஆவார். மருத்துவராக வேண்டும் என்ற தனது 52 ஆண்டுகால நீண்ட கனவை நனவாக்க அவர் தொடர்ந்து முயன்று வருகிறார்.</p><p>தனது வயதைக் காரணம் காட்டி மருத்துவக் கல்வியைக் கற்கும் உரிமை மறுக்கப்படக் கூடாது என்று வாதிடும் அசோக் பகார், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் முக்கிய அம்சங்களை குறிப்பிட்டுள்ளார். </p><p>அதில், தகுதிவாய்ந்த மூத்த குடிமக்களுக்கு MBBS சேர்க்கையில் 1% சிறப்பு இடஒதுக்கீடு அல்லது தனி ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் கல்வி கற்கும் உரிமை வயது முதிர்வோடு முடிந்துவிடுவதில்லை. என குறிப்பிட்டுள்ளார்.</p><p>நாடெங்கும் நீட் தேர்வு குறித்த விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், 71 வயது முதியவர் ஒருவர் தனது லட்சியத்திற்காக சட்டப் போராட்டம் நடத்துவது கல்வி வட்டாரங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த  வழக்கு வரும் ஜூலை 21 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content:encoded></item><item><title>ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் இந்தியாவின் பி.வி.சிந்து</title><link>https://www.maalaimalar.com/sports/pv-sindhu-clinches-japan-open-badminton-championship</link><comments>https://www.maalaimalar.com/sports/pv-sindhu-clinches-japan-open-badminton-championship#comments</comments><guid isPermaLink="false">0a1e9d17-501e-465a-ac9e-106c1ffc46a4</guid><pubDate>Sun, 19 Jul 2026 05:04:32 +0000</pubDate><atom:updated>2026-07-19T05:04:32.949Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>pv sindhu,பிவி சிந்து,Japan Open Badminton,ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/y6106zrt/pv-sindhu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ pv sindhu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/y6106zrt/pv-sindhu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் டோக்கியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, சீனா, ஜப்பான், இந்தோனேசியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.</p><p>இந்தியா சார்பில் லக்சயா சென், ஆயுஷ் ஷெட்டி, பிவி சிந்து, உன்னதி ஹூடா, சிராக் ஷெட்டி-சாத்விக் ரங்கிரெட்டி ஜோடி, தனிஷா கிரஸ்டோ-துருவ் கபிலா ஜோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p><h2>முதல் வீராங்கனை</h2><p>ஜப்பான் ஓபன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார் பி.வி.சிந்து.</p><p>இந்நிலையில், இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பானின் அகானே யமாகுச்சி உடன் மோதினார். </p><p>இதில் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய பி.வி.சிந்து 21-17, 21-17 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்று அசத்தினார்.</p><h2>சாம்பியன்</h2><p>ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் பெற்றவரான பிவி சிந்து கடந்த 2 ஆண்டாக சர்வதேச பட்டம் எதுவும் வெல்லாத நிலையில், தற்போது ஜப்பான் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p>பி.வி.சிந்து கடந்த 2024-ம் ஆண்டில் சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>சத்தமில்லாமல் மின் கட்டணம் உயர்வு: தி.மு.க. முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/electricity-charges-hike-former-dmk-minister-geetha-jeevan-alleges</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/electricity-charges-hike-former-dmk-minister-geetha-jeevan-alleges#comments</comments><guid isPermaLink="false">e3e55438-bc0d-4ac3-ad4f-6d4fbe5f12d5</guid><pubDate>Sun, 19 Jul 2026 04:45:29 +0000</pubDate><atom:updated>2026-07-19T04:45:29.103Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TNEB,கீதா ஜீவன்,geetha jeevan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/6kymdia8/GeethaJeevan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Geetha Jeevan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/6kymdia8/GeethaJeevan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தி.மு.க. முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-</p><p>தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றதும் ஒரு உத்தரவு போட்டாரு. அது என்னவென்று தெரியுமா., 500 யூனிட்டிற்கு குறைவாக பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்று தெரிவித்தார்.</p><p>கணக்கு போட்டு பார்த்தீர்களா எல்லோரும்., என்ன செய்திருக்காங்க. சத்தமில்லாமல் இன்று இரண்டு மடங்காக விலை ஏற்றப்பட்டிருக்கு. மின்சாரக் கட்டணம் ஏற்றப்பட்டிருக்கு. மு.க. ஸ்டாலின் ஆட்சியில் 100 யூனிட் குறைக்கப்பட்டபோது கட்டணம் எவ்வளவு இருந்தது. இப்போது எவ்வளவு இருந்தது என்று பாருங்கள்?.</p><h2>மின் கட்டணம் உயர்வு</h2><p>சத்தமில்லாமல் மின்சார கட்டணம் ஒரு யூனிட்டிற்கு இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இன்று 4 ரூபாய் 50 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. ஆகவே, அவர்கள் எந்த அளவிற்கு பொய்யான செய்திகளை பரப்புகிறார்கள் என்ற அறிந்து கொள்ள முடியும்.</p><p>விலைவாசி ஏறுகிறது. எல்லா இடத்திலும் மின்வெட்டு தொடர்ச்சியாக இருக்கிறது. நிறைய இடத்துல யாரும் கேள்வி கேட்க முடியல. புகார் செய்ய முடியல. எதற்கு மின்தடை ஏற்படுகிறது என்பது தெரியல. தவெக ஆட்சிக்கு வந்தபிறகு மின்தடை என்பது சாதாரண ஒரு நிகழ்வாகிவிட்டது. </p><p>பஞ்ச் டயலாக் ஆட்சிக்கு முடிவு கொடுக்கணும். வெறுமன வசனம் பேசி நடித்துவிட்டு மேடைல பேசிகிறாரு. அவ்வளவுதான். </p><p>இவ்வாறு கீதா ஜீவன் பேசினார்.</p><h2>பிரேமலதா விஜயகாந்த்</h2><p>நேற்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் அவர் "தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து ஏற்பட்டு வரும் மின்வெட்டு மற்றும் மின் பெரிதும் கட்டண உயர்வு காரணமாக பொதுமக்கள், விவசாயிகள், சிறு மற்றும் குறு தொழில்முனைவோர், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>இந்த நிலை மக்களின் அன்றாட வாழ்க்கையையும், விவசாய உற்பத்தியையும், தொழில் மற்றும் வணிக நடவடிக்கைகளையும் பாதிக்கிறது. எனவே, மின்சாரத் துறை அமைச்சரும், தமிழக முதல்வர் அவர்களும் இந்தப் பிரச்சினைக்கு மிக முக்கியத்துவம் அளித்து, உடனடியாக தீர்வு காண வேண்டும். </p><figure><img alt="Premalatha Vijayakanth" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-12/jd9hohil/premalatha.jpg" /></figure> <p>தமிழ்நாடு முழுவதும் ஏற்பட்டு வரும் மின் வெட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் சுமையை குறைக்கும் வகையில், மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். விவசாயத்திற்கான தடையற்ற மற்றும் தேவைப்படும் இடங்களில் இலவசமான மின்சாரம் வழங்கப்பட வேண்டும்.</p><p>மின் கட்டண உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் நிலை இருப்பதால், சாமானிய மக்களின் வாழ்க்கை மேலும் சிரமத்திற்கு உள்ளாகும். மின் தடையை முற்றிலும் அகற்றி மின்சார கட்டண உயர்வையும் திரும்ப பெற வேண்டும் என தேமுதிக சார்பாக வலியுறுத்துகிறோம்.</p><p>மின்சார உற்பத்தி செய்ய, வருகின்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அதற்கான அறிவிப்பை இந்த அரசு வழங்கி தமிழ்நாட்டை மீண்டும் மின் மிகை மாநிலமாக உருவாக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>உலகக் கோப்பை கால்பந்து: கோல்டன் பூட் விருது பெறப்போவது யார்?-மெஸ்சியை முந்திய எம்பாப்பே</title><link>https://www.maalaimalar.com/sports/football/who-will-win-world-cup-golden-boot-mbappe-surpasses-messi</link><comments>https://www.maalaimalar.com/sports/football/who-will-win-world-cup-golden-boot-mbappe-surpasses-messi#comments</comments><guid isPermaLink="false">5f9d906a-201b-4daf-b925-e2d764de8466</guid><pubDate>Sun, 19 Jul 2026 04:38:03 +0000</pubDate><atom:updated>2026-07-19T04:38:03.720Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Lionel Messi,உலகக் கோப்பை கால்பந்து,FIFA World Cup,kylian Mpappe,கைலியன் எம்பாப்பே,லயோனல் மெஸ்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/o5vy2km2/kylian.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mbappe, Messi ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/o5vy2km2/kylian.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கால்பந்து (Football)</category><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் அர்ஜென்டினா-ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.</p><h2>வெண்கலம்</h2><p>இதற்கிடையே, வெண்கலப் பதக்கம் யாருக்கு என தீர்மானிக்கும் 3வது இடத்துக்கான ஆட்டத்தில் இங்கிலாந்து-பிரான்ஸ் அணிகள் நேற்று மோதின.</p><p>ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே இங்கிலாந்து ஆக்ரோஷமாக ஆடியது. புகாயோ சாகா 3 கோல்களும், கேப்டன் டெக்லான் ரைஸ் 2 கோல்களும் அடித்தனர்.</p><p>ஸ்பெயின் சார்பில் கைலியன் எம்பாப்பே 2 கோல்கள் அடித்தார்.</p><p>முதல் பாதியில் இங்கிலாந்து 4-0 என முன்னிலை பெற்றது. இறுதியில், இங்கிலாந்து அணி 6-4 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தது.</p><h2>சாதனை</h2><p>இந்தப் போட்டி 1982க்குப் பிறகு ஒரு உலகக் கோப்பைப் போட்டியில் அடிக்கப்பட்ட அதிக கோல்களுக்கான சாதனையை படைத்தது</p><h2>கோல்டன் பூட்</h2><p>இந்நிலையில், பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரரான எம்பாப்பே, தனது ஒட்டுமொத்த கோல்களின் எண்ணிக்கையை 22 ஆக உயர்த்தி உள்ளார்.</p><p>இதன்மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரர் என்ற லயோனல் மெஸ்சியின் சாதனையை முறியடித்துள்ளார்.</p><p>நடப்பு தொடரில் மட்டும் எம்பாப்பே மொத்தம் 10 கோல்களை அடித்து தங்கக் காலணி (கோல்டன் பூட்) விருது பெறும் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். </p><p>கைலியன் எம்பாப்பே 10 கோல், லயோனல் மெஸ்சி 8 கோல், எர்லிங் ஹாலண்ட், ஜூட் பெல்லிங்காம் தலா 7 கோல்கள், ஹாரி கேன், உஸ்மான் டெம்பெலே தலா 6 கோல்களும் அடித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>ஹைதராபாத்தில் பரபரப்பு: அம்மன் சிலையோடு நிர்வாணமாக ஏரியில் குதித்து பெண் ஐடி ஊழியர் தற்கொலை!</title><link>https://www.maalaimalar.com/news/national/hyderabad-it-woman-jumps-naked-into-lake-with-temple-idol-dies-by-suicide</link><comments>https://www.maalaimalar.com/news/national/hyderabad-it-woman-jumps-naked-into-lake-with-temple-idol-dies-by-suicide#comments</comments><guid isPermaLink="false">cea6890d-96de-425c-ae09-eab8ca4afc24</guid><pubDate>Sun, 19 Jul 2026 04:18:27 +0000</pubDate><atom:updated>2026-07-19T04:18:27.433Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Hyderabad,IT Employee Suicide,ஹைதராபாத்,Beerappa Temple,ஐடி ஊழியர் தற்கொலை,பீரப்பா கோயில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/klvxj3wx/PERSPP.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  IT employee commits suicide]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/klvxj3wx/PERSPP.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஹைதராபாத் பீர்சாடிகுடா பகுதியில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வந்த இளம்பெண் ஒருவர், நள்ளிரவில் நிர்வாணமாக ஓடி, அருகில் இருந்த கோயிலில் அம்மன் சிலையைத் தூக்கிக்கொண்டு ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்ட விசித்திரமான  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>ஆந்திரப் பிரதேசத்தின் விசியநகரம் மாவட்டத்தைச் சேர்ந்த தேஜஸ்வினி என்ற இளம் பெண், பெங்களூருவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தனது வேலையை ராஜினாமா செய்த அவர், ஹைதராபாத் பீர்சாடிகுடா சங்கர் நகர் காலனியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனது தாயாருடன் வசித்து வந்தார். </p><p>நேற்று நள்ளிரவு சுமார் 2:30 மணியளவில், தேஜஸ்வினி திடீரென தனது தாயார் தூங்கிக்கொண்டிருந்த அறையை வெளிப்பக்கமாகப் பூட்டியுள்ளார். பின்னர், தனது ஆடைகள் அனைத்தையும் கழற்றிவிட்டு நிர்வாணமான நிலையில் வீட்டை விட்டு வெளியே ஓடியுள்ளார்.</p><h2><strong>சிசிடிவி காட்சிகளில் சிக்கிய விசித்திரம்:</strong></h2><p>அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்தபோது அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளிவந்துள்ளன. நள்ளிரவில் நிர்வாணமாக ஓடிய தேஜஸ்வினி, அங்குள்ள பீரப்பா கோயிலில் நுழைந்துள்ளார். அங்கு கருவறையில் இருந்த அம்மாவாரு சிலையைக் கையில் எடுத்துக்கொண்டு, அருகில் இருந்த பீர்சாடிகுடா ஏரியை நோக்கி ஓடி, அதனுள் குதித்துள்ளார்.</p><h2><strong>காலையில் நடந்த தேடுதல் வேட்டை:</strong></h2><p>இன்று அதிகாலை தேஜஸ்வினியின் தாயார் அருணா கண்விழித்தபோது, அறை வெளிப்பக்கமாகப் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த பக்கத்து வீட்டினர் கதவைத் திறந்துள்ளனர். </p><p>வீட்டில் தேஜஸ்வினி இல்லாததால், தாயார் அவரைப் பல இடங்களில் தேடியுள்ளார். இதற்கிடையில், ஏரியில் ஒரு பெண்ணின் சடலம் மிதப்பது குறித்து போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த ஹைதராபாத் பேரிடர் மீட்புக்குழுவினர் ஏரியிலிருந்து தேஜஸ்வினியின் உடலை மீட்டனர்.</p><h2><strong>மாயமான அம்மன் சிலை:</strong></h2><p>தேஜஸ்வினியின் உடல் மீட்கப்பட்ட போதிலும், அவர் கையில் எடுத்துச் சென்ற அம்மன் சிலை இன்னும் கிடைக்கவில்லை. பேரிடர் மீட்புப் படையினர் படகுகள் மூலம் ஏரிக்குள் இறங்கி அந்தச் சிலையைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த வழக்கின் முக்கிய ஆதாரமாக அச்சிலை கருதப்படுவதால் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. </p><p>பெண் ஐடி ஊழியர் ஏன் இந்த விபரீத முடிவை எடுத்தார், மனநல பாதிப்பு ஏதேனும் இருந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் மேடிபள்ளி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>இடதுசாரிகள் தனி அணியாக செயல்பட இருக்கிறோம்: சி.பி.எம். சண்முகம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cpm-shanmugam-we-left-parties-are-set-to-function-as-a-separate-bloc</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cpm-shanmugam-we-left-parties-are-set-to-function-as-a-separate-bloc#comments</comments><guid isPermaLink="false">2e79c09d-24fb-4b9e-8ba0-6c667b591ab6</guid><pubDate>Sun, 19 Jul 2026 04:08:24 +0000</pubDate><atom:updated>2026-07-19T04:08:24.622Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,சிபிஐ,CPI,tvk,சிபிஎம் சண்முகம்,CPM Shanmugam</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/4fq031nd/CPMShanmugam001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/4fq031nd/CPMShanmugam001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-</p><p>இடதுசாரிகள் ஒரு தனி அணியாக செயல்பட தீர்மானித்திற்கிறோம். இதனால்தான் மூன்று இடது சாரி கட்சிகள் இணைந்து மாநில ஒருங்கிணைப்புக் குழு என்பதை உருவாக்கியுள்ளோம். இடைத்தேர்தலில் அப்போதையை சூழ்நிலையை குறித்து தேர்தலில் போட்டியிடுவதா? இல்லையா? யாருடன் சேர்ந்து போட்டியிடுவது என்பது குறித்து அப்போது பேசுவோம். இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நாங்கள் எந்த முடிவையும் எடுக்கவில்லை.</p><h2>இடதுசாரிகள் நாங்கள் மாற்று கொள்கை</h2><p>நாங்கள் மாற்று அணி என்று சொல்லவில்லை. மாற்று கொள்கை என்று சொல்கிறோம். உழைப்பாளி மக்கள் எதிர்நோக்கும் எல்லா பிரச்சினைகளுக்கும்.., வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, வறுமை குடியிருப்பு பிரச்சினைகள் போன்ற ஏராளமான பிரச்சினைகளை மக்கள் எதிர்நோக்கி கொண்டிருக்கிறார்கள்.</p><p>இவற்றிற்கு எல்லாம் முதலாளித்துவ கட்சிகளால், முதலாளித்துவ கொள்கைளால் தீர்வே கிடையாது. இதற்கு நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டுமென்றால் இடதுசாரி கொள்கைகளால் மட்டுமே முடியும்.</p><p>இந்த ஆட்சி எல்லா பிரச்சினைகளையும் தீர்த்து விடும் என்பதனால ஆதரவு தரல. அதை நாங்கள் எதிர்பார்க்கவும் இல்லை. குதிரை பேரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, வழக்கு விசாரணை முடிவில் என்ன வருகிறது என்று பார்ப்போம்.</p><h2>முதலமைச்சர் செய்தியாளர்களை சந்திக்காதது?</h2><p>முதலமைச்சர் எந்தவித கருத்து குறித்தும் பத்திரிகையாளர்களை சந்தித்து பதில் அளிக்கவில்லை என்பது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும். அரசு சார்பில் பதில் இல்லை என்று எடுத்துக் கொள்ள முடியாது. அமைச்சர்கள் எல்லாம் பதில் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அமைச்சர்கள் நீங்கள் (செய்தியாளர்கள்) சொன்ன அனைத்து கருத்துகளுக்கும் பதில் அளித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். முதலமைச்சர் ஏன் சந்திக்கவில்லை, பேட்டி கொடுக்கவில்லை என்பதை அவரிடம்தான் கேட்கனும்.</p><h2>சமூக நீதித்துறை</h2><p>ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை என்றுதான் இருந்தது. இரண்டு பிரிவினரையும் பிரதிநிதித்துவம் படுத்துவதாகத்தான் இருந்தது. அப்படி இருந்திருக்கலாம். பெயரை ஏன் மாற்றினார்கள் எனத் தெரியவில்லை. பெயர் மாற்றிலும், என்ன பெயராக இருந்தாலும் அந்த துறை, அந்த மக்களுக்கு என்ன செய்யப்போகிறது என்பதுதான் விவாதிக்கப்பட வேண்டிய விசயம். பெயர் மாற்றத்தை விவாதிக்க வேண்டியதில்லை. அந்த துறையை சேர்ந்த மக்கள் ஏராளமான பிரச்சினைகளை சந்தித்து கொண்டிருக்கிறது. அவர்களுக்கு இந்த துறை என்ற செய்யப்போகிறது, அவர்களுடைய எதிர்பார்ப்புகளை எவ்வாறு பூர்த்தி செய்யப்போகிறது என்பதுதான் கவலைப்பட வேண்டிய விசயம்.</p><p>இவ்வாறு சண்முகம் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>சி.ஜே.பி-யின் நாடாளுமன்ற பேரணிக்கு அதிரடி தடை: ஜந்தர் மந்தரில் போலீஸ் குவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/topnews/delhi-parliament-march-ban-police-deployment-jantar-mantar</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/delhi-parliament-march-ban-police-deployment-jantar-mantar#comments</comments><guid isPermaLink="false">b95cec59-6543-4b5e-8298-6464c43fc538</guid><pubDate>Sun, 19 Jul 2026 03:51:42 +0000</pubDate><atom:updated>2026-07-19T03:51:42.548Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Jantar Mantar,சிஜேபி,CJP,NEET UG 2026,Delhi Parliament,டெல்லி நாடாளுமன்றம்,ஜந்தர் மந்தர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/5lzmfjf3/cjp.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ cockroch janata party]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/5lzmfjf3/cjp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p>தேசிய அளவிலான நீட்  தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்கு எதிராக, சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மற்றும் சி.ஜே.பி அமைப்பினர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நாளை காலை நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல போராட்டக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.</p><h2><strong>காவல்துறை தடை விதித்தது ஏன்?</strong></h2><p>அதி உயர் பாதுகாப்பு வளையமாக இருக்கும் நாடாளுமன்றப் பகுதியில் இந்த பேரணி நடத்தப்பட்டால் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்படும், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உண்டாகும் மற்றும் மத்திய டெல்லியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் இந்த பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>மேலும், ஜந்தர் மந்தரில் ஒரு நாள் மட்டுமே போராட்டம் நடத்த இந்த அமைப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும், ஆனால் அனுமதியின்றி அவர்கள் போராட்டத்தை நீட்டித்துள்ளதால் ஒட்டுமொத்த உண்ணாவிரதப் போராட்டமுமே தற்போது சட்டவிரோதமானது என்றும் காவல்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.</p><p>பேரணிக்காக முறையான எழுத்துப்பூர்வ அனுமதியும் கோரப்படவில்லை என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், தாங்கள் இதுகுறித்து ஏற்கனவே வாய்மொழியாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்துவிட்டதாக சி.ஜே.பி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் வைஷ்ணவி கௌர் தெரிவித்துள்ளார்.</p><h2><strong>சோனம் வாங்சுக் கட்டாய இடமாற்றம்:</strong></h2><p>கடந்த 21 நாட்களாக ஜந்தர் மந்தரில் தொடர் உண்ணாவிரதத்தில் இருந்த லடாக் ஆர்வலர் சோனம் வாங்சுக், நேற்று அதிகாலையில் டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவு மற்றும் மருத்துவ ஆலோசனையின் பேரில் காவல்துறையினரால் அங்கிருந்து வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டு சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். </p><p>அவர் கடுமையான நீர்ச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காவல்துறை கூறினாலும், இந்த சம்பவத்தின் போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.</p><p>போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதாகவும், சி.ஜே.பி செய்தித் தொடர்பாளர் அபிஜீத் திப்கே தற்காலிகமாக காவலில் வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தடியடி மற்றும் மின்சாரத்தை துண்டித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை டெல்லி காவல்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது.</p><h2><strong>பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு:</strong></h2><p>தற்போது ஜந்தர் மந்தர் பகுதியில் பதற்றம் நிலவுவதால், 200-க்கும் மேற்பட்ட டெல்லி போலீசார் மற்றும் விரைவு அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். நாளை பேரணி நடத்த முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விதிகளை மீறி நாடாளுமன்றத்தை நோக்கி முன்னேற முயல்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் டெல்லி காவல்துறை எச்சரித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மேஜர் லீக் கிரிக்கெட்: கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது லாஸ் ஏஞ்சல்ஸ்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/los-angeles-knight-riders-win-major-league-cricket-title</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/los-angeles-knight-riders-win-major-league-cricket-title#comments</comments><guid isPermaLink="false">b81ee0f8-817b-47c1-8b2a-bd5ad2d807aa</guid><pubDate>Sun, 19 Jul 2026 03:43:26 +0000</pubDate><atom:updated>2026-07-19T03:43:26.037Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Major League Cricket,மேஜர் லீக் கிரிக்கெட்,MLC,los angeles knight riders,லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/tbgjtawb/runout.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ runout]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/tbgjtawb/runout.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>4-வது மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் கடந்த மாதம் 18-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்ற இத்தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.</p><p>லீக் சுற்றுகள் முடிந்து பிளே ஆப் சுற்றில் வெற்றிபெற்ற லாஸ் ஏஞ்சல்ஸ் நைட்ரைடர்ஸ், வாஷிங்டன் பிரீடம் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.</p><h2>இறுதிப்போட்டி</h2><p>இந்நிலையில், ஜேசன் ஹோல்டர் தலைமையிலான லாஸ் ஏஞ்சல்ஸ் நைட்ரைடர்ஸ், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான வாஷிங்டன் பிரீடம் அணிகள் மோதிய இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வாஷிங்டன் பிரீடம் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. </p><p>அதன்படி, முதலில் பேட் செய்த லாஸ் ஏஞ்சல்ஸ் நைட்ரைடர்ஸ் அணி 19.4 ஓவரில் 164 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் பிளட்சர் அதிகபட்சமாக 47 ரன்கள் சேர்த்தார். தொடக்க ஆட்டக்காரர் காலின் முன்ரோ 40 ரன்னும், மேத்யூ டிரோம்ப் 39 ரன்னும் எடுத்தனர்.</p><p>வாஷிங்டன் பிரீடம் அணி சார்பில் பென் வார்ஷஸ் 3 விக்கெட்டும், மிட்செல் ஓவன், நிகில் சவுத்ரி, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><h2>சிறப்பான பந்துவீச்சு</h2><p>இதையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வாஷிங்டன் பிரீடம் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர்.</p><p>ஆண்ட்ரீஸ் கவுஸ் பொறுப்புடன் ஆடி 35 பந்தில் 2 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 40 ரன்கள் எடுத்தார். நிகில் சவுத்ரி 25 ரன்கள் சேர்த்தார்.</p><p>கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஓபஸ் பியனார் 24 பந்தில் சிக்சர், 3 பவுண்டரியுடன் 53 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.</p><h2>கடைசி பந்தில் ரன் அவுட்</h2><p>கடைசி பந்தில் வெற்றி பெற 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஒரு ரன் எடுத்து லஹிரு மிலந்தா ரன் அவுட்டானார். இதனால் ஒரு ரன் வித்தியாசத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணி திரில் வெற்றி பெற்றதுடன், முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.</p><p>இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் பெறும் வாய்ப்பை வாஷிங்டன் பிரீடம் அணி ஒரு ரன்னில் இழந்தது அந்த அணி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.</p>]]></content:encoded></item><item><title>டெல்லியில் மீண்டும் தொடங்கும் பருவமழை: இமயமலை மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/national/monsoon-to-return-in-delhi-heavy-rain-alert-for-himalayan-states</link><comments>https://www.maalaimalar.com/news/national/monsoon-to-return-in-delhi-heavy-rain-alert-for-himalayan-states#comments</comments><guid isPermaLink="false">9c266baf-c269-48d1-916c-9630acf479af</guid><pubDate>Sun, 19 Jul 2026 03:15:58 +0000</pubDate><atom:updated>2026-07-19T03:15:58.631Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>delhi,டெல்லி,Delhi Monsoon,Himalayan states,டெல்லி பருவமழை,இமயமலை மாநிலங்க;ள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/upznqegv/rain.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ delhi mansoon]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/upznqegv/rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த சில வாரங்களாக கடுமையான வெயில் மற்றும் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மட்டுமே பெய்த மழையால் தவித்து வந்த வட இந்தியாவில், தென்மேற்குப் பருவமழை மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது.</p><p>இன்று முதல் தலைநகர் டெல்லியில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்றும், அதே நேரத்தில் இமயமலைப் பகுதிகளில் உள்ள மாநிலங்களுக்கு அதிதீவிர மழைக்கான எச்சரிக்கையையும் இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.</p><p>வானிலை ஆய்வாளர்களின் கூற்றுப்படி, அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா ஆகிய இரு பகுதிகளில் இருந்தும் வீசும் பலத்த ஈரப்பதம் கொண்ட காற்று மற்றும் பருவமழைக் காற்று வட இந்திய சமவெளிப் பகுதியை நோக்கி நகர்வது ஆகிய காரணங்களால் இந்த மழைப்பொழிவு தீவிரமடைந்துள்ளது. கடந்த சில வாரங்களாகப் போதிய மழையின்றி வறண்டு காணப்பட்ட டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் இன்று முதல் தொடர் மழைச் சுழற்சி ஆரம்பமாகிறது.</p><h2><strong>வானிலை கணிப்பு:</strong></h2><p>இன்று தொடங்கும் இந்த பரவலான மழைப்பொழிவு, அடுத்த 48 முதல் 72 மணி நேரத்தில் அதன் உச்சத்தை எட்டும் என்று வானிலை மாதிரிகள் காட்டுகின்றன. இந்த மழையினால் வெப்பம் கணிசமாகக் குறைந்து குளிர்ந்த வானிலை நிலவும். மேலும், டெல்லியின் காற்றில் உள்ள மாசுகள் சுத்திகரிக்கப்பட்டு காற்றின் தரம் மேம்படும். </p><p>இருப்பினும், திடீர் கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால் நகராட்சி நிர்வாகம் உஷார்படுத்தப்பட்டுள்ளது.</p><h2><strong>இமயமலை மாநிலங்களுக்கு ‘ஹை அலர்ட்’:</strong></h2><p>சமவெளிப் பகுதிகளில் மழை நிம்மதியைத் தந்தாலும், இமயமலைப் பகுதிகளில் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. வட மற்றும் கிழக்கு இந்தியாவின் பல மலைப்பகுதிகளுக்கு IMD மிகக் கனமழை எச்சரிக்கையை நீட்டித்துள்ளது.</p><h2><strong>உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள்:</strong></h2><p>பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மலை மாநிலங்களில் உள்ள உள்ளூர் நிர்வாகங்கள், நதிக்கரைகள் மற்றும் நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளுக்கு அத்தியாவசியத் தேவையின்றி மக்கள் பயணம் செய்ய வேண்டாம் என்று கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளன. </p><p>இமாச்சலப் பிரதேசம் போன்ற பகுதிகளில் ஏற்கனவே ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் தற்காலிக உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதால், உள்ளூர் பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.அதே சமயம், வட இந்திய சமவெளிப் பகுதிகளில் உள்ள உள்ளூர் அமைப்புகள், மழைநீர் தேங்குவதைத் தடுக்க வடிகால் அமைப்புகளைச் சீரமைக்க உத்தரவிடப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பெரியபாளையம் பவானி அம்மன்- தல வரலாறு</title><link>https://www.maalaimalar.com/spirituality/periyapalaiyam-bhavani-amman-temple-history</link><comments>https://www.maalaimalar.com/spirituality/periyapalaiyam-bhavani-amman-temple-history#comments</comments><guid isPermaLink="false">382912b8-51e8-4e1d-a572-0b1ee2541a12</guid><pubDate>Sun, 19 Jul 2026 02:44:16 +0000</pubDate><atom:updated>2026-07-19T02:44:16.828Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பெரியபாளையம்,தல வரலாறு,Bhavani Amman Temple,temple history,Periyapalaiyam</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/dfl9ia3j/news-2.png" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெரியபாளையம் தல வரலாறு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/dfl9ia3j/news-2.png?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னைக்கு அருகில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையம் அருள்மிகு பவானி அம்மன் கோவில், கம்சனிடமிருந்து தப்பிய கண்ணனின் சகோதரியான யோகமாயா வாசம் செய்யும் தலம் ஆகும்.</p><h2>தல வரலாறு</h2><p>துவாபர யுகத்தில், தேவகி மற்றும் வசுதேவருக்கு எட்டாவதாகப் பிறக்கும் குழந்தையால் தனக்கு மரணம் நிகழும் என்பதை அறிந்த கம்சன், அவர்களைச் சிறைவைத்தான். எட்டாவது குழந்தையாகக் கிருஷ்ணர் அவதரித்தபோது, அவர் யசோதையிடமும், யசோதைக்குப் பிறந்த யோகமாயா சிறைச்சாலைக்கும் மாற்றப்பட்டனர்.</p><p>சிறையில் இருந்த பெண் குழந்தையைக் கொல்ல கம்சன் முயன்றபோது, அக்குழந்தை அன்னை ஆதிசக்தியாக மிகுந்த உக்கிரத்துடன் ஆகாயத்தில் எழும்பி, "உன்னைக் கொல்லப் போகும் கிருஷ்ணன் பிறந்துவிட்டான்" என்று எச்சரித்து மறைந்தது.  </p><p>துர்க்கையாக அவதரித்த ஆதிசக்தி, உக்கிரம் தணிய தென்புலத்திற்கு வந்து உத்தர வாகினியாக ஓடும் ஆரணி நதிக்கரையில் ஸ்ரீ பவானி என்ற பெயரில் அமர்ந்தாள். அவளோடு பரசுராமரின் தாயான ரேணுகாதேவியும் இங்கு வந்து அமர்ந்ததாகத் தல புராணம் கூறுகிறது.</p><p>'பாளையம்' என்றால் படை வீடு என்று பொருள். அன்னை பவானி தீமைகளை அழிக்க இங்கு ஒரு பெரிய படைவீடு அமைத்துத் தங்கியதால், இவ்வூர் பெரியபாளையம்<strong> </strong>என்று பெயர் பெற்றது.</p><p>மூலவரான பவானி அம்மன் தனது மேல் கரங்களில் சங்கு மற்றும் சக்கரத்தையும், கீழ் கரங்களில் கத்தி மற்றும் அமுத கலசத்தையும் ஏந்தி வைஷ்ணவி தேவியாகக் கம்பீரமாகக் காட்சி தருகிறாள். அவளது மடியருகே தலை மட்டுமே கொண்ட சுயம்புவாக ரேணுகாதேவி அம்சமும் வீற்றிருக்கிறது</p><p>ஆதி காலத்தில் இப்பகுதி அடர்ந்த வனமாகவும், பெரிய புற்று மேடாகவும் இருந்தது. அன்னை நீண்ட காலம் புற்றினுள்ளேயே மறைந்திருந்தாள். சில நூற்றாண்டுகளுக்கு முன்பு, இப்பகுதிக்கு வளையல் விற்க வந்த வியாபாரி ஒருவரின் கனவில் அன்னை தோன்றி, தான் இப்புற்றில் வசிப்பதை உலகிற்கு உணர்த்துமாறு கட்டளையிட்டாள்.</p><p>அன்னையின் ஆணைப்படி ஊர்மக்கள் அந்தப் புற்றை அகழ்ந்து பார்க்க முயன்றபோது, கடப்பாரை பட்டு அங்கிருந்து ரத்தம் பீறிட்டுக் கிளம்பியது. அங்கே அன்னை சுயம்புவாகக் காட்சி தந்தார். இன்றும் அன்னையின் வெள்ளிக் கவசத்தை நீக்கிப் பார்த்தால், சுயம்புவின் உச்சியில் கடப்பாரை பட்ட வடுவைக் காணலாம்.</p><h2>சிறப்பு</h2><p>பக்தர்கள் வேப்ப இலைகளை ஆடையாக உடுத்தி, அங்கப்பிரதட்சணம் செய்து வழிபடுவது மிகவும் சிறப்பாகும். இங்கு வழங்கப்படும் குங்குமம் மற்றும் தீர்த்தப் பிரசாதம் மனித உடலில் உள்ள பல நோய்களைக் குணமாக்கும் உடற்பிணி தீர்க்கும் மருந்தாக நம்பப்படுகிறது. தமிழ் மாதங்களான ஆடி மற்றும் ஆவணி மாதங்களில் இக்கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம்.</p><h2>நடைதிறந்திருக்கும் நேரம்</h2><p>காலை 5 மணி முதல் 12.30 மணி வரை</p><p>மாலை 2 மணி முதல் இரவு 9 மணி வரை</p>]]></content:encoded></item><item><title>அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்: காரணம் இதுதான்</title><link>https://www.maalaimalar.com/news/national/amarnath-pilgrimage-halted-due-to-bad-weather</link><comments>https://www.maalaimalar.com/news/national/amarnath-pilgrimage-halted-due-to-bad-weather#comments</comments><guid isPermaLink="false">168ce73a-ea02-4021-9b91-7ff143054031</guid><pubDate>Sun, 19 Jul 2026 02:33:55 +0000</pubDate><atom:updated>2026-07-19T02:33:55.020Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Amarnath yatra,அமர்நாத் யாத்திரை,Ice lingam,பனிலிங்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/9d02anms/yatra.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ amarnath yatra]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/9d02anms/yatra.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காஷ்மீரில் ஆண்டுதோறும் நடைபெறும் அமர்நாத் யாத்திரை கடந்த 3-ம் தேதி தொடங்கியது. இந்த யாத்திரை ஆகஸ்டு 28-ம் தேதி நிறைவடையும்.</p><h2>3.77 லட்சம் பேர் தரிசனம்</h2><p>இதற்கிடையே, அமர்நாத் குகைக் கோவிலை இதுவரை 3.77 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p>பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில், வருடாந்திர அமர்நாத் யாத்திரைக்காக 4,640 பக்தர்களைக் கொண்ட புதிய குழு நேற்று அதிகாலை பகவதி நகர் யாத்ரி நிவாஸிலிருந்து புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>171 வாகனங்கள் கொண்ட அணிவகுப்பில் பயணிக்கும் 16-வது குழுவில், மத்திய காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள குறுகிய பால்டால் வழித்தடத்தில் 1,626 பக்தர்களும், தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பாரம்பரிய பஹல்காம் வழித்தடத்தில் இருந்து 3,014 பக்தர்களும் அடங்குவர்.</p><p>அதிகாரிகளின் தகவலின்படி, பால்டால் செல்லும் வாகன அணிவகுப்பு அதிகாலை 2:42 மணிக்கும், அதைத் தொடர்ந்து பஹல்காம் செல்லும் அணிவகுப்பு அதிகாலை 3:11 மணிக்கு முகாமிலிருந்து புறப்பட்டன.</p><p>இந்த யாத்திரைக்கான முன்பதிவு கடந்த ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கியது. நபர் ஒருவர் ரூ.150 கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். மருத்துவ சான்றிதழ் ஒன்றையும் கட்டாயம் கொண்டு வர வேண்டும்.</p><h2>உருகிய பனிலிங்கம்</h2><p>நடப்பு ஆண்டில் 5 நாட்களில் 90 சதவீதம் அளவுக்கு பனிலிங்கம் உருகியது என்றாலும், பக்தர்களின் கூட்டம் குறையாமல் அதிகரித்து வருகிறது.</p><p>இந்நிலையில், மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.</p><p>பக்தர்களின் பாதுகாப்பு கருதி யாத்திரை நிறுத்தப்படுகிறது. அதிகாரிகளுடன் ஒத்துழைத்து அடுத்த உத்தரவு வரும் வரை பக்தர்கள் யாத்திரை மேற்கொள்ள வேண்டாம்.</p><p>யாத்திரை எப்போது தொடங்கும் என்பதை வானிலை குறித்த விரிவான மதிப்பீடு, வழித்தடத்தில் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு உரிய காலத்தில் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><h2>மாதா வைஷ்ணவி தேவி யாத்திரை</h2><p>இதேபோல், ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் மாதா வைஷ்ணவி தேவி கோவிலுக்கான யாத்திரையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இரண்டு வீரர்கள் பலி: ஈரான் மீது புதிய தாக்குதலை நடத்திய அமெரிக்கா</title><link>https://www.maalaimalar.com/news/world/us-military-launches-new-airstrikes-to-swiftly-punish-iran-for-deaths-of-us-troops</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-military-launches-new-airstrikes-to-swiftly-punish-iran-for-deaths-of-us-troops#comments</comments><guid isPermaLink="false">1c834caa-787b-46a6-bed9-1057a2df4b81</guid><pubDate>Sun, 19 Jul 2026 02:23:57 +0000</pubDate><atom:updated>2026-07-19T02:23:57.219Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>jordan,US troops,அமெரிக்க படை வீரர்கள்,US Iran war,அமெரிக்கா ஈரான் போர்,ஜோர்டான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/mfec02pp/USAttack0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ US Attack On Iran]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/mfec02pp/USAttack0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஹார்முஸ் ஜலசந்தியை நிர்வகிப்பது தொடர்பாக அமெரிக்கா- ஈரான் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் கட்டுப்பாட்டை குறைக்கும் வகையில், ராணுவ தளம், கட்டுப்பாட்டு அமைப்புகள் போன்ற இடங்களில் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளையில் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.</p><p>இதற்கிடையே பாகிஸ்தான் தலைமையில் கடந்த மாதம் அமெரிக்காவுடன் எட்டப்பட்ட தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தமான <a href="https://www.maalaimalar.com/news/world/iran-quits-islamabad-pact-us-strikes-hit-hormozgan-desalination-power-and-key-infrastructure">இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்</a> இருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாக ஈரான் அறிவித்துள்ளது.</p><h2>ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்திய ஈரான்</h2><p>நேற்று ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஈரான் டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஈரான் உடனான போரில் ஜோர்டான் தளத்தில் வீரர்கள் மரணம் அடைந்த தகவலை முதல் முறையாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.</p><p>இரண்டு வீரர்கள் உயிரிழந்ததுடன், ஒரு வீரரை காணவில்லை என்றும் நான்கு வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.</p><h2>வீரர்கள் மரணத்திற்கு பதிலடி தாக்குதல் நடத்திய அமெரிக்கா</h2><p>இதற்கு விரைவாக பதிலடி கொடுக்கும் வகையில் ஜலசந்தியை நிர்வகிக்கும் திறன் கொண்ட பகுதிகள் மீது அமெரிக்கா அதிகாலை தாக்குதல் நடத்தியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியின் சிரிக் அருகில் உள்ள பகுதி மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. </p><p>ஈரானுக்கு எதிரான போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 16 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 430-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.</p><p>ராணுவ வீரர்கள் உயிரழந்ததாக அறிவிப்பதற்கு முன்னதாக, எங்கள் நாட்டின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் மறக்க முடியாத பாடம் கற்பிப்போம் என்று ஈரான் உச்ச தலைவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.</p><h2>பிப்ரவரி மாதம் தொடங்கிய போர்</h2><p>கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கடும் தாக்குதலை நடத்தியது. இதில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி கொல்லப்பட்டார். இதனால் கோபம் அடைந்த ஈரான், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்துவதாக கூறி, வளைகுடா நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தியது. அப்போது துபாய், கத்தார், பஹ்ரைன், குவைத் பொது இடங்களையும் டிரோன் மற்றும் ஏவுகணைகள் மீதும் தாக்குதல் நடத்தியது.</p><p>சமீபகாலமாக ஹார்முஸ் ஜலசந்தியில் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த வாரம் நடத்திய தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்தார். 10 பேர் உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>போலீசாரை தாக்கி தப்பி ஓட முயன்ற ரவுடியை சுட்டுப் பிடித்த போலீசார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/police-shoot-and-arrest-rowdy-who-attacked-officer</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/police-shoot-and-arrest-rowdy-who-attacked-officer#comments</comments><guid isPermaLink="false">57029fa3-44b6-44e4-bc7f-ad95197b690f</guid><pubDate>Sun, 19 Jul 2026 01:55:50 +0000</pubDate><atom:updated>2026-07-19T01:55:50.323Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>துப்பாக்கிச்சூடு,Gun Fire,rowdy,ரவுடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/t9o6vkbe/gun.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gun]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/t9o6vkbe/gun.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ரவுடிகளை ஒழிப்பதற்கு போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். குற்ற செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து ரவுடிகள் கண்காணிக்கப்பட்டு அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்து வருகிறது. </p><p>இப்படி போலீசார் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு கட்டுப்படாத நேரங்களில் ரவுடிகளைப் பிடிக்கச் செல்லும் போலீசார் மீதும் அவர்கள் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள்.  இதுபோன்று எல்லை மீறும் ரவுடிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படுகிறது. </p><h2>பிரபல ரவுடி கருப்பு</h2><p>இந்நிலையில், குன்றத்தூர் அருகே பிரபல ரவுடி துப்பாக்கியால் நேற்று இரவு சுட்டு பிடிக்கப்பட்டார். பரபரப்பான இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:</p><p>குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பு (என்ற) தமிழழகு. 27 வயதான  இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. ஏ பிளஸ் ரவுடியான கருப்பு மீது  திருமுடிவாக்கம் போலீஸ் நிலையத்தில் சரித்திர பதிவேடும்  உருவாக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் போலீசார் அவரை ஏ பிளஸ் ரவுடியாக சரித்திர பதிவேட்டில் சேர்த்துள்ளனர்.</p><h2>நாட்டு வெடிகுண்டு</h2><p>ரவுடி கருப்பு தனது எதிரி ஒருவரை தீர்த்துக் கட்டுவதற்காக திட்டம் தீட்டி வருவது போலீசுக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரது நடவடிக்கைகளை போலீசார் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர். அப்போது, முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் ஏற்பட்ட பகையால் அந்த நபரை தீர்த்துக்கட்ட ரவுடி கருப்பு நாட்டு வெடிகுண்டைத் தயாரித்து வரும் அதிர்ச்சி தகவலும் தெரிய வந்தது.</p><p>குன்றத்தூர் அருகே உள்ள காவனூர் பகுதியில் பதுங்கி இருந்து ரவுடி கருப்பு நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரிப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். </p><p>ரவுடி கருப்புடன் அவரது நண்பரான சூர்யாவும் இருந்தார். நாட்டு வெடிகுண்டு தயாரித்த இடத்திற்குச் சென்றதும் திருமுடிவாக்கம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், போலீஸ் ஏட்டு விஜயகுமார் ஆகியோர் ரவுடி கருப்புவை போலீஸ் வேனில் ஏறுமாறு கூறினார்கள். ஆனால் அவரும், அவரது கூட்டாளி சூர்யாவும் அதற்கு உடன்படவில்லை.</p><p>ரவுடி கருப்பு தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளை எடுத்து ஏட்டு விஜயகுமாரை வெட்டினார். இதில் அவருக்கு கையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது.</p><h2>துப்பாக்கிச்சூடு</h2><p>இதையடுத்து, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தங்களை தற்காத்து கொள்வதற்காக ரவுடி கருப்பு மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் ரவுடியின் வலது காலில் குண்டு பாய்ந்து அங்கேயே அவர் சுருண்டு விழுந்தார். உடனே, இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் இருவரும் துரித வேகத்தில் செயல்பட்டு  இருவரையும் மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கருப்புவின் கூட்டாளியான சூர்யாவை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.</p><p>தாம்பரம் போலீஸ் கமிஷனராக பிரேமானந்த் சின்கா பொறுப்பேற்ற பிறகு ரவுடிகளை கட்டுப்படுத்துவதற்கும் குற்ற செயல்களை ஒழித்துக் கட்டவும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அவரது உத்தரவின் பேரில் போலீசார் தாம்பரம் கமிஷனர் அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதியில் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.</p><p>அந்த வகையில்தான் ரவுடி கருப்புவின் நடமாட்டத்தையும் போலீசார் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில்தான் ரவுடியை பிடிக்க சென்ற இடத்தில் அவர் தாக்குதலில் ஈடுபட்டதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. போலீசாரின் இந்த நடவடிக்கை மற்ற ரவுடிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க அதிக அழுத்தம்: கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார்</title><link>https://www.maalaimalar.com/news/national/karnataka-chief-minister-dk-shivakumar-said-pressure-to-release-water-to-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/news/national/karnataka-chief-minister-dk-shivakumar-said-pressure-to-release-water-to-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">9826222d-a7ab-4ab8-b32c-bf9ead5b0263</guid><pubDate>Sun, 19 Jul 2026 01:53:03 +0000</pubDate><atom:updated>2026-07-19T01:53:03.451Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DK Shivakumar,டிகே சிவக்குமார்,காவிரி அணை,cauvery dam</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/7573bbpj/19072026Shivakumar0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DK Shivakumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/7573bbpj/19072026Shivakumar0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெங்களூரு விதானசவுதாவில் நேற்று மாலையில் முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-</p><h2>அவசர மந்திரிசபை கூட்டம்</h2><p>கர்நாடக மந்திரிசபை கூட்டம் கடந்த 16-ந்தேதி நடைபெற இருந்தது. அன்றைய தினம் நான் டெல்லியில் இருந்ததால் மந்திரிசபை கூட்டம் நடைபெறவில்லை. இதனால் நாளை (அதாவது இன்று) மதியம் 3 மணிக்கு அவசர மந்திரிசபை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மந்திரிசபை கூட்டத்தில் மாநிலத்தில் நிலவும் வறட்சி குறித்தும், இந்த விவகாரத்தில் அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் விரிவாக ஆலோசிக்க உள்ளோம்.</p><p>வறட்சி குறித்து மந்திரிசபை மற்றும் மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசிக்கப்படும். மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு நடத்தப்படும். அதன்பிறகு, மத்திய அரசுடன், மாநிலத்தில் நிலவும் வறட்சி குறித்து தெரிவிக்கப்படும். மாநிலத்தில் நிலவும் வறட்சி குறித்து மத்திய அரசுக்கு இதுவரை எந்த கடிதமும் எழுதவில்லை. மாநிலத்தில் எந்தெந்த மாவட்டங்களில் வறட்சி உள்ளது. வறட்சியால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மத்திய அரசுக்கு தெரிவிக்கப்படும்.</p><p>தற்போது மாநிலத்தில் உள்ள அணைகளில் இருப்பு இருக்கும் தண்ணீரை, குடிநீருக்கு மட்டும் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரும், குடிநீர் தேவைக்காக மட்டுமே ஆகும். இப்போதும் சொல்கிறேன், விவசாயத்துக்கு தண்ணீரை பயன்படுத்த வேண்டாம். விவசாய தேவைக்காக அணைகளில் எவ்வளவு தண்ணீர் உள்ளது என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.</p><h2>தமிழ்நாட்டுக்கு உதவி</h2><p>அதற்கு முன்பாக அரசுக்கு விவசாயிகள் அழுத்தம் கொடுக்க வேண்டும். குடிநீருக்காக தான் அணைகளில் தண்ணீர் திறந்து வருகிறோம். காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடும்படி அதிக அழுத்தம் இருக்கிறது. துங்க பத்ரா அணையில் இருந்து தண்ணீர் திறக்க அழுத்தம் இருக்கிறது. அணைகள் நிரம்பினால் தண்ணீர் கொடுப்போம். அப்போது எந்த தொந்தரவும் ஏற்படாது.</p><p>காவிரி நதிநீர் விவகாரம்பற்றி பேச விரும்பவில்லை. அதுபற்றி நிறைய பிரச்சினை இருக்கிறது. அதனால் காவிரி நதிநீர் குறித்து விவாதிக்க விரும்பவில்லை. காவிரி நீர் நமது உரிமை. மேகதாது விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு கூட தீர்ப்பு கூறியுள்ளது. மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழ்நாட்டுக்குதான் உதவியாக இருக்கும் என்பதை மீண்டும் சொல்லி கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் பெட்ரோல், டீசல் விலை - இன்றைய நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/petrol-diesel-prices-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/petrol-diesel-prices-in-chennai#comments</comments><guid isPermaLink="false">c341d0b6-b98a-47eb-a7c6-a63dec183b21</guid><pubDate>Sun, 19 Jul 2026 01:40:37 +0000</pubDate><atom:updated>2026-07-19T01:40:37.923Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,Petrol,Crude oil,CNG,Petrol Diesel Price,diesel,பெட்ரோல், டீசல் விலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/n15pib15/petrol.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பெட்ரோல் - டீசல் விலை ]]></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல் - டீசல் விலை ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/n15pib15/petrol.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>கச்சா எண்ணெய்</h2><p>சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான மோதல் மற்றும் போர் பதற்றம் காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.</p><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.</p><h2>இன்றைய பெட்ரோல், டீசல் விலை</h2><p>அந்த வகையில் இன்றைய (19.07.2026 - ஞாயிற்றுக்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>ஒருநாள் தொடரை கைப்பற்றப் போவது யார்?: 3வது போட்டியில் இந்தியா-இங்கிலாந்து இன்று மோதல்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/who-will-clinch-odi-series-india-vs-england-third-odi-today</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/who-will-clinch-odi-series-india-vs-england-third-odi-today#comments</comments><guid isPermaLink="false">be865954-2206-46ce-baf0-143a033fc4a4</guid><pubDate>Sun, 19 Jul 2026 01:34:27 +0000</pubDate><atom:updated>2026-07-19T01:34:27.186Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சுப்மன் கில்,Shubman Gill,ENGvIND,இங்கிலாந்து இந்தியா தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/0ktaj6v4/india.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ team india]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/0ktaj6v4/india.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>விளையாட்டு (Sports)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி லண்டனில் இன்று நடைபெறுகிறது.</p><p>இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.</p><p>முதலில் நடந்த டி20 தொடரை இங்கிலாந்து அணி 4-0 என வென்றது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியும், 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றன. இதனால் ஒருநாள் தொடர் 1-1 என சமனிலையில் உள்ளது.</p><h2>கடைசி ஒருநாள் போட்டி</h2><p>இந்நிலையில், தொடரில் வெற்றி பெறப் போவது யார் என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.</p><p>இந்திய அணியில் ரோகித் சர்மா கடந்த இரு போட்டிகளில் முறையே 11, 26 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார். தடுமாற்றத்தைச் சந்தித்து வரும் அவரது ஆட்டம் அதிக எதிர்பார்ப்புக்கு ஆளாகி இருக்கிறது.</p><p>மற்றொரு மூத்த வீரரான விராட் கோலி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். இரண்டாவது போட்டியில் 65 ரன் எடுத்த இவர் மீண்டும் கைகொடுக்கலாம். ஷ்ரேயஸ் ஐயர் (101) நம்பிக்கை தருகிறார். மிடில் ஆர்டர் சரிவை தடுத்து நிறுத்தினால் இங்கிலாந்து அணிக்கு இமாலய ஸ்கோரை நிர்ணயிக்கலாம். </p><p>இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் அனுபவ வீரர் ஜோ ரூட் முதுகெலும்பாக திகழ்ந்து வருகிறார் அவர் இதுவரை 2 போட்டியில் 175 ரன் எடுத்து தனது திறமையை நிரூபித்துள்ளார்.</p><h2>ஹர்ஷ் துபே</h2><p>காயம் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து விலகிய வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஹர்ஷ் துபே சேர்க்கப்பட உள்ளார்.</p><p>இந்திய நேரப்படி இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் டென் 1, 4, 5 ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.</p><p>தொடரை வெல்ல சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியும், ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மல்லுக் கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.</p>]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 19.7.2026 - இல்லம் தேடி நல்ல தகவல் வரும் நாள்.</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-19-july-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-19-july-2026#comments</comments><guid isPermaLink="false">2fa65ffc-5a65-4a48-a687-e4f61898969d</guid><pubDate>Sun, 19 Jul 2026 01:07:58 +0000</pubDate><atom:updated>2026-07-19T01:07:58.047Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/11/11/21436547-rasipalan3.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/11/11/21436547-rasipalan3.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>ராசிபலன்(Rasipalan)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>கனவுகள் நனவாகும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.</p><h2>ரிஷபம்</h2><p>செல்வாக்கு உயரும் நாள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். தொழிலில் புதிய பணியாளர்களை சேர்த்துக் கொள்வீர்கள்.</p><h2>மிதுனம்</h2><p>மனக்குழப்பம் ஏற்படும் நாள். சேமித்த தொகையில் சிறிது கரையலாம். புதிய முயற்சியில் தடைகளும், தாமதங்களும் ஏற்படும். உத்தியோக மாற்றம் உண்டு.</p><h2>கடகம்</h2><p>இல்லம் தேடி நல்ல தகவல் வரும் நாள். எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.</p><h2>சிம்மம்</h2><p>வேகத்துடனும் விவேகத்துட னும் செயல்படும் நாள். புதிய தொழில் தொடங்க தீட்டிய திட்டம் வெற்றி பெறும். விரும்பிய காரியம் விரும்பியபடியே நடைபெறும்.</p><h2>கன்னி</h2><p>மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள். வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும்.</p><h2>துலாம்</h2><p>வாக்குவாதங்களைத் தவிர்த்து வளம் காண வேண்டிய நாள். எடுத்த முயற்சி வெற்றி தரும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.</p><h2>விருச்சிகம்</h2><p>வருமானம் உயரும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை.</p> <h2>தனுசு  </h2><p>மனக்ககலக்கம் ஏற்படும் நாள். நினைத்தது நிறைவேறவில்லையே என்று கவலைப்படுவீர்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும்.  </p><h2>மகரம்  </h2><p>பிரச்சினையில் இருந்து விடுபடும் நாள். பிள்ளைகளால் பெருமைகள் ஏற்படும். அனுபவ அறிவால் அற்புதமான பலனைக் காண்பீர்கள்.  </p><h2>கும்பம் </h2><p>காரிய வெற்றிக்கு கவனம் தேவைப்படும் நாள். குடும்பத்தினர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. தொழில் வளர்ச்சியில் குறுக்கீடுகள் ஏற்படும்.</p><h2>மீனம்</h2><p>தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும், செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் தலைமைப்பொறுப்புகள் தானே தேடி வரும்.</p>]]></content:encoded></item><item><title>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: இன்று அனைத்து கட்சி கூட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/national/parliament-monsoon-session-all-party-meeting-today</link><comments>https://www.maalaimalar.com/news/national/parliament-monsoon-session-all-party-meeting-today#comments</comments><guid isPermaLink="false">9b267779-50c3-4d8f-9bc4-9642363e0541</guid><pubDate>Sun, 19 Jul 2026 00:50:20 +0000</pubDate><atom:updated>2026-07-19T00:50:20.687Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>winter session,நாடாளுமன்றம்,parliment,All Party Meeting,அனைத்து கட்சி கூட்டம்,மழைக்கால கூட்டத்தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-12/t1to0308/parliment.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ parliment]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-12/t1to0308/parliment.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கி ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரங்களுக்கான துறை தெரிவித்துள்ளது.</p><p>5 மாநில சட்டசபைத் தேர்தல்களுக்குப் பிறகு தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பரபரப்பான இந்த அரசியல் சூழலில் மழைக்கால கூட்டத்தொடர் கூட இருப்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.</p><p>காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக விலகியுள்ளது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் கட்சி இரண்டாக உடைந்தது உள்ளிட்ட பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு மத்தியில் கூட்டத்தொடர் கூட உள்ளது.</p><p>இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்தும் வகையில் இன்று காலை 11 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்துக் கட்சி தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.</p><p>இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் பேசுவதற்கு பல்வேறு விஷயங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக, நேற்று ஜந்தர்மந்தரில் இருந்து சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை வெளியேற்றிய விவகாரம் பற்றி அனைத்து எதிர்கட்சியினரும் பேச இருக்கிறார்கள்.</p><p>மேலும், அயோத்தி ராமர் கோவில் நன்கொடைகள் கையாடல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரமும் இன்றைய கூட்டத்தில் விஸ்வரூபம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>முன்னதாக, தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தால் தானாகவே முதல் மந்திரி, பிரதமர் பதவி பறிபோகும் மசோதா உள்ளிட்டவற்றை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.</p><p>இந்த மசோதாக்கள் அரசியல் அமைப்பு மசோதாக்கள் என்பதால் இவற்றில் திருத்தம் மேற்கொள்ள மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அவசியம். எனவே, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என தெரிகிறது. </p>]]></content:encoded></item><item><title>ரத்தத்துக்கு ரத்தம்.. சவப்பெட்டியில் டிரம்ப் குடும்பம்  - ஈரான் வைக்கப்பட்ட விளம்பர பலகையால் பரபரப்பு </title><link>https://www.maalaimalar.com/news/world/iran-us-tensions-tehran-billboard-shows-trump-family-on-coffins</link><comments>https://www.maalaimalar.com/news/world/iran-us-tensions-tehran-billboard-shows-trump-family-on-coffins#comments</comments><guid isPermaLink="false">67073852-2474-4c0e-ab4c-1fd44f24065a</guid><pubDate>Sun, 19 Jul 2026 00:22:46 +0000</pubDate><atom:updated>2026-07-19T00:22:46.441Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>trump,டிரம்ப்,Tehran,Iran War,ஈரான் போர்,தெஹ்ரான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/541vx30a/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தெஹ்ரான் ]]></media:title><media:description type="html"><![CDATA[ தெஹ்ரான் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/541vx30a/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரானில் அமெரிக்க அதிபர் <a href="https://www.maalaimalar.com/topic/donald-trump">டிரம்ப் </a>மற்றும் அவரது குடும்பத்தினர் சவப்பெட்டி மேல் இருப்பது போன்று சித்தரிக்கப்பட்ட  விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. </p><p>ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் சூழலில், "ரத்தத்திற்கு ரத்தம்" என அடைமொழியிடப்பட்டு தலைநகர் தெஹ்ரானில் இந்த பலகை வைக்கப்பட்டுள்ளது. </p><h2>விளம்பர பலகை </h2><p>டெஹ்ரானின் பாலஸ்தீன சதுக்கத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட விளம்பர பலகையில், டிரம்ப், அவரது மனைவி மெலனியா மற்றும் அவர்களின் ஐந்து பிள்ளைகளான இவான்கா, டொனால்ட் டிரம்ப் ஜூனியர், எரிக், டிஃப்பனி மற்றும் பாரோன் ஆகியோர் வெள்ளை மாளிகையின் பின்னணியில் சவப்பெட்டிகளின் மேல் இருப்பது போலச் சித்தரிக்கப்பட்டுள்ளது. </p><p>தெஹ்ரானில் உள்ள மிகப்பெரிய சுவரோவியங்கள் அனைத்தும், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையுடன் தொடர்புடைய ஓவ்ஜ் கலை மற்றும் ஊடக அமைப்பு மூலம் வடிவமைக்கப்படுகின்றன.</p> <h2>பழிக்கு பழி</h2><p>கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்க-இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் ஈரானின் அப்போதைய உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி மற்றும் அவரது மகள், மருமகன், மருமகள், பேத்தி உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர்.</p><p>அவர்களின் இறுதிச்சடங்கு இந்த மாத தொடக்கத்தில் நடந்து முடிந்தது. இதில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். அங்கும் டிரம்ப்புக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டன. பதாகைகளை சுமந்து மக்கள் ஊர்வலம் வந்தனர். இறுதிச்சடங்கு முடிந்து உடல் அடக்கம் செய்யப்பட்ட அதே வேளையில் ஈரான் - அமெரிக்கா இடையேயான தற்காலிக புரிந்துணர்வு முறிந்து மீண்டும் முழு அளவிலான <a href="https://www.maalaimalar.com/news/world/iran-blames-us-as-two-tankers-hit-mines-in-hormuz">போர் </a>வெடித்துள்ளது.</p><p>ஈரானின் பாலங்கள், மற்றும் பிற உள்கட்டமைப்புகளை அமெரிக்கா 7வது நாளாக குறிவைத்து தாக்கி வருகிறது. அதேநேரம், மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.</p> <h2>டிரம்பைக் கொல்வோம்</h2><p>சில நாட்களுக்கு முன்புதான், தெஹ்ரானின் ஏங்கெலாப் சதுக்கத்தில் மற்றொரு பிரம்மாண்ட விளம்பரப் பலகை வைக்கப்பட்டிருந்தது.</p><p>அதில், டிரம்ப் ஒரு திறந்த கருப்பு சவப்பெட்டிக்குள் படுத்திருப்பது போலவும், அதற்கு மேலே பாரசீக மற்றும் ஆங்கில மொழிகளில் "நாங்கள் டிரம்பைக் கொல்வோம்" என்ற வார்த்தைகளும் எழுதப்பட்டிருந்தன.</p><p>அந்த சவப்பெட்டியின் மேல், "மினாப் குழந்தைகளின் நினைவாக" என்று எழுதப்பட்டிருந்தது.</p><p>பிப்ரவரி 28 அன்று தெற்கு ஈரான் நகரமான மினாப்பில் உள்ள பெண் குழந்தைகள் ஆரம்பப் பள்ளி மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 170 சிறுமிகள் கொல்லப்பட்ட சம்பவம் உலகையே உலுக்கியது. இந்த வான்வழித் தாக்குதல் இஸ்ரேலால் நடத்தப்பட்டதாக கருதப்பட்ட நிலையில் இது அமெரிக்காவால் நடத்தப்பட்ட தாக்குதல் என பின்னர் தெரியவந்தது.</p>]]></content:encoded></item><item><title>உலக்கோப்பை கால்பந்து: 6-4  கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி.. தொடரில் மூன்றாம் இடம்</title><link>https://www.maalaimalar.com/sports/football/world-cup-football-england-beat-france-6-4-in-thriller-to-clinch-third-place</link><comments>https://www.maalaimalar.com/sports/football/world-cup-football-england-beat-france-6-4-in-thriller-to-clinch-third-place#comments</comments><guid isPermaLink="false">c4f6b745-c8ac-4bbc-9d2d-5a1bb8f3e926</guid><pubDate>Sun, 19 Jul 2026 00:16:50 +0000</pubDate><atom:updated>2026-07-19T00:16:50.448Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பிரான்ஸ்,France,FIFA World Cup,Football World Cup,கால்பந்து உலகக்கோப்பை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/5kibb5dd/tn-12.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ உலக்கோப்பை கால்பந்து]]></media:title><media:description type="html"><![CDATA[ உலக்கோப்பை கால்பந்து]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/5kibb5dd/tn-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கால்பந்து (Football)</category><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலகக் கோப்பை கால்பந்தில் <a href="https://www.maalaimalar.com/sports/football/it-is-impossible-to-completely-shut-down-messi-do-not-fear-him-spanish-coach-advises">இறுதிப்போட்டி </a>நாளை அர்ஜென்டினா - ஸ்பெயின் இடையே நடைபெற உள்ளது.</p><p>இதனிடையே வெண்கலப் பதக்கம் யாருக்கு என தீமானிக்கும்  3வது இடத்துக்கான ஆட்டம் இங்கிலாந்து - பிரான்ஸ் இடையே இன்று நடைபெற்றது. </p><h2>முதல் பாதி </h2><p>ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே இங்கிலாந்து ஆக்ரோஷமான ஆடியது. கேப்டன் டெக்லான் ரைஸ் மூன்றாவது நிமிடத்தில் நீண்ட தூர கோல் அடித்தார். </p><p>18வது நிமிடத்தில், எஸ்ரி கோன்சா தலையால் முட்டி கோல் அடித்து, கோல் கணக்கை 2-0 என மாற்றினார். </p><p>பின்னர், புகாயோ சாகா 37வது மற்றும் 43வது நிமிடங்களில் மேலும் இரண்டு கோல்களை அடித்து, 4-0 என்ற முன்னிலைக்கு இங்கிலாந்தை இட்டுச் சென்றனர். </p> <h2>இரண்டாம் பாதி</h2><p>இடைவேளைக்குப் பிறகு உஸ்மான் டெம்பலே மற்றும் பிராட்லி பார்கோலாவின் வருகை பிரான்சுக்கு புத்துயிர் அளித்தது.</p><p>பிரான்ஸ் கேப்டன் கைலியன் எம்பாப்பே 48வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து பிரான்சின் கணக்கை தொடங்கினார்.</p><p>10 நிமிடங்கள் கழித்து, பார்கோலா ஒரு கோல் அடித்து, கோல் வித்தியாசத்தை 4-2 என உயர்த்தினார்.</p><p>67வது நிமிடத்தில், எம்பாப்பே தனது இரண்டாவது கோலை அடிக்க, ஆட்டத்தின் ஸ்கோர் 4-3 ஆனது.</p><p>87வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் புகாயோ சாகா தனது 3 வது கோலையும் அணியின் 5வது கோலையும் பதிவு செய்தார்.</p><p>இதையடுத்து 90 நிமிடங்கள் முடிவில் இங்கிலாந்து 5-3 என முன்னிலையில் இருந்த நிலையில், கூடுதலாக 7 நிமிடங்கள் வழங்கப்பட்டன.</p><h2>வெற்றி </h2><p>அப்போது 94 வது நிமிடத்தில் பிரான்ஸின் உஸ்மான் டெம்பலே கோல் அடிக்க முன்னிலை 5-4 ஆக குறைந்தது.</p><p>இருப்பினும் 98 வது நிமிடத்தில் ஜுட் பெல்லிங்ஹாம் கோல் அடிக்க 6-4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி இங்கிலாந்து 3 வது இடத்தை பிடித்தது.</p><h2>சாதனை</h2><p>இந்த போட்டி 1982க்குப் பிறகு ஒரு உலகக் கோப்பைப் போட்டியில் அடிக்கப்பட்ட அதிக கோல்களுக்கான சாதனையையும் படைத்தது</p><p>இந்த போட்டியில் இரண்டு கோல்கள் அடித்ததன் மூலம் உலகக் கோப்பையில் 22வது கோல்களை பதிவு செய்து லியோனல் மெஸ்ஸியின் 21 கோல்கள் என்ற சாதனையை பிரான்ஸ் கேப்டன் எம்பாப்வே முறியடித்தார்.</p><p>மேலும், இந்தத் தொடரில் 10 கோல்களுடன் கோல்டன் பூட் விருதிற்கான போட்டியில் முதலிடத்தையும் அவர் அடைந்தார்.</p>]]></content:encoded></item><item><title>தேசியவாத காங்கிரஸ் ஒன்றிணைவதற்கு சுனேத்ரா பவார் எதிர்ப்பு..  பாஜகவிடம் கறார் கண்டிஷன்?</title><link>https://www.maalaimalar.com/news/national/maharashtra-ncp-merger-push-bjp-moves-to-unite-sharad-pawar-and-sunetra-pawar-factions-to-boost-nda-strength</link><comments>https://www.maalaimalar.com/news/national/maharashtra-ncp-merger-push-bjp-moves-to-unite-sharad-pawar-and-sunetra-pawar-factions-to-boost-nda-strength#comments</comments><guid isPermaLink="false">3bf89fb2-a3e9-435e-96d0-f807af64d8a7</guid><pubDate>Sat, 18 Jul 2026 23:55:56 +0000</pubDate><atom:updated>2026-07-18T23:55:56.908Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,Sharad Pawar,சரத் பவார்,Sunetra Pawar,சுனேத்ரா பவார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/2dt81pen/tn-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சுனேத்ரா பவார்]]></media:title><media:description type="html"><![CDATA[ சுனேத்ரா பவார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/2dt81pen/tn-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகராஷ்டிராவில் <a href="https://www.maalaimalar.com/news/national/will-sharad-pawars-nationalist-congress-party-support-the-constituency-delimitation-bill">சரத் பவார் </a>தேசியவாத காங்கிரஸ் மற்றும் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ்  பிரிவுகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் பாஜக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. </p><p> பராமத்தி விமான விபத்தில் அஜித் பவார் மறைவுக்கு பின் அந்த அணி  தற்போது அவரின் மனைவியும் மகாரஷ்டிர துணை முதல்வருமான சுனேத்ரா பவார் தலைமையில் இயங்கி வருகிறது. </p> <h2>சரத் பவார்</h2><p>அஜித் பவார் அணி தற்போது என்டிஏ கூட்டணியில் உள்ள நிலையில் 8 எம்.பி.க்களை வைத்துள்ள சரத் பவார் அணியை அதனுடன் இணைத்து நாடாளுமன்றத்தில் என்டிஏ கூட்டணி பலத்தை அதிகரிப்பதே பாஜகவின் இந்த அவசர நகர்வுக்கு முக்கியக் காரணமாகும்.</p><p>இந்த இணைப்புக்கு சரத் பவார் இசைவு தெரிவித்ததாக கூறப்படுகிறது. அண்மையில் என்டிஏவில் உள்ள சிவன்சேனா தலைவரும் மகாராஷ்டிராவின் மற்றொரு துணை முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே உடன் சரத் பவார் சந்திப்பு இந்த ஊகங்களை வலுப்படுத்தியது.</p><p>இரு பிரிவுகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியாக, இரு தரப்பிற்கும் மத்திய அமைச்சரவையில் தலா ஒரு அமைச்சர் பதவியை வழங்க பாஜக முன்வந்துள்ளதாகத் தெரிகிறது.</p><h2>சுனேத்ரா பவார்</h2><p>இரு பிரிவுகளையும் இணைக்கும் இந்த முயற்சிக்கு சுனேத்ரா பவார் மற்றும் அவரது மகனும் மாநிலங்களவை எம்பியுமான பார்த் பவார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.</p><p>இந்த இணைப்பு நடந்தால், கட்சியின் அதிகாரம் மீண்டும் மூத்த தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/national/political-opponents-not-enemies-eknath-shinde-on-meeting-sharad-pawar">சரத் பவார் </a>மற்றும் அவரது மகள் சுப்ரியா சுலே ஆகியோரின் கைக்குச் சென்றுவிடும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.</p><p>இந்த இணைப்பு பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், பார்த் பவார் கடந்த வியாழன் இரவு மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸை சந்தித்துப் பேசியுள்ளார்.</p><p>ஒருவேளை இணைப்பு தவிர்க்க முடியாததாக மாறினால், சுனேத்ரா பவாரே தொடர்ந்து துணை முதலமைச்சராகவும், கட்சியின் தேசியத் தலைவராகவும் நீடிக்க வேண்டும் என்று அவர்கள் நிபந்தனை விதிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.</p><p>இருப்பினும், தற்போதைக்கு அதிகாரப்பூர்வமாக இரு கட்சிகளுமே இந்த இணைப்புப் பேச்சுவார்த்தைகளை மறுத்துள்ளன.</p> <h2>பாஜக அவசரம்</h2><p>கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது, போதிய பெரும்பான்மை இல்லாததால் மோடி அரசாங்கத்தின் தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் தோல்வியடைந்தது.</p><p>இந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் இந்த மசோதாவை எப்படியாவது நிறைவேற்ற பா ஜ க திட்டமிட்டுள்ளது.</p><p>மக்களவையின் மொத்த பலம் 540 ஆகும். அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை (360 வாக்குகள்) தேவை.</p> <p>தற்போது என்டிஏ கூட்டணியின் பலம் 319 ஆக உயர்ந்துள்ளது. இதில் அண்மையில் உத்தவ் சிவசேனாவின் இருந்து ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தாவிய 6 எம்.பிக்களும் அடங்குவர்.</p><p>சரத் பவாரின் பிரிவு  இணைந்தால் என்டிஏவின் வாக்கு எண்ணிக்கை 327 ஆக உயரும்.</p><p>இருப்பினும், 360 என்ற இலக்கை எட்ட இன்னும் 33 வாக்குகள் குறைவாக இருக்கும் என்பதால், சில எதிர்க்கட்சிகளை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் விலகச் செய்ய முயற்சி நடந்து வருவதாக கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>கட்சியை விட்டுச் சென்றவர்கள் திரும்பி வந்தால் 1 மணி நேரத்தில் பதவி விலக தயார் - அபிஷேக் பானர்ஜி சவால் </title><link>https://www.maalaimalar.com/news/national/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-1-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D</link><comments>https://www.maalaimalar.com/news/national/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-1-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D#comments</comments><guid isPermaLink="false">8b45f936-8243-4489-96e6-4c5e02a17810</guid><pubDate>Sat, 18 Jul 2026 22:58:00 +0000</pubDate><atom:updated>2026-07-18T22:58:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மம்தா பானர்ஜி,Mamata Banerjee,trinamool congress,Abhishek Banerjee,அபிஷேக் பானர்ஜி,திரிணாமுல் காங்கிரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/dob9ulx7/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அபிஷேக் பானர்ஜி]]></media:title><media:description type="html"><![CDATA[ அபிஷேக் பானர்ஜி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/dob9ulx7/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கட்சியை விட்டு விலகிய தலைவர்கள் மீண்டும் மம்தா பானர்ஜியின் தலைமையின் கீழ் கட்சிக்குத் திரும்பினால் தான் ஒரே மணி நேரத்தில் தனது பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்று திரிணாமுல் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/abhishek-banerjee">அபிஷேக் பானர்ஜி</a>  சவால் விடுத்துள்ளார். </p><h2>அதிருப்தி </h2><p>மம்தாவின் மருமகன் என்பதால் கட்சியில் அபிஷேக் பானர்ஜிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்றும், அவரின் ஆதிக்கம் அதிகம் உள்ளது என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. </p><p>குறிப்பாக கட்சியில் இருந்து வெளியேறிய மூத்த தலைவர் அனுவ்ரதா மொண்டல் மற்றும் எம்.எல்.ஏ மதன் மித்ரா போன்றவர்கள், அபிஷேக் பானர்ஜியின் அணுகுமுறை தான் தங்களது அதிருப்திக்குக் காரணம் எனக் குற்றம் சாட்டியிருந்தனர். </p><p>மமதா பானர்ஜி தங்களது புகார்களைக் காதுகொடுத்துக் கேட்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். </p> <h2>பதிலடி</h2><p>இதற்கு பதிலடி கொடுத்துள்ள அபிஷேக் பானர்ஜி,</p><p>"என் மீதுதான் உங்களுக்குப் பிரச்சினை என்றால், மம்தா பானர்ஜியின் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D">தலைமை </a>மீது உங்களுக்கு உண்மையான நம்பிக்கை இருந்தால், நீங்கள் முதலில் அவரிடம் திரும்பி வாருங்கள்.</p><p>நீங்கள் மதியம் 3 மணிக்குக் கட்சிக்குத் திரும்பினால், நான் மாலை 4 மணிக்குள் எனது பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்து விடுகிறேன்.</p><p>நீங்கள் வரமாட்டீர்கள், ஏனென்றால் நீங்கள் டெல்லியில் இருப்பவர்களுடன் டீல் பேசியிருக்கிறீர்கள்" என்று சாடியுள்ளார்.</p> <p>அரசியல் பாதையை தேர்ந்தெடுக்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் உள்ளது என்று குறிப்பிட்ட அவர், மத்திய புலனாய்வு அமைப்புகளான அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகியவற்றின் நோட்டீஸ் வந்தவுடனேயே பயந்துபோய் தலைவர்கள் கட்சி மாறுவதாகக் குற்றம் சாட்டினார்.</p><p>மேலும் அவர், "நோட்டீஸ் வந்ததும் நான் ஓடிவிடவில்லை. அமலாக்கத்துறை என்னை 10 முறைக்கும் மேலாக அழைத்து விசாரித்துள்ளது. சிபிஐ மற்றும் காவல்துறையினரும் விசாரித்துள்ளனர். என் மீது 20 முதல் 30 எப்.ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன் துல்லியமான எண்ணிக்கை எனக்கே தெரியாது.</p><p>பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்குப் பயந்து டி.எம்.சி தலைவர்கள் 'வாஷிங் மெஷின்' பாணியில் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவே கட்சி மாறுகிறார்கள் என்றும், மக்கள் ஆதரவு மட்டுமே தங்களுக்கு பாதுகாப்பு என்றும் அவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>50 பேர் பலி.. &apos;இஸ்லாமாபாத்&apos; ஒப்பந்தத்தில் இருந்து விலகிய ஈரான் - குவைத் மீது தாக்குதல் - ஜோர்டானில் 2 அமெரிக்க வீரர்கள் மரணம்</title><link>https://www.maalaimalar.com/news/world/iran-quits-islamabad-pact-us-strikes-hit-hormozgan-desalination-power-and-key-infrastructure</link><comments>https://www.maalaimalar.com/news/world/iran-quits-islamabad-pact-us-strikes-hit-hormozgan-desalination-power-and-key-infrastructure#comments</comments><guid isPermaLink="false">077ab087-be25-4dd8-8953-c56fa5cd4914</guid><pubDate>Sat, 18 Jul 2026 21:55:44 +0000</pubDate><atom:updated>2026-07-18T21:55:44.611Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Kuwait,jordan,Iran War,ஈரான் போர்,குவைத்,ஜோர்டான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/mvfqenhj/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ குவைத் மீதான ஈரானின் முந்தைய தாக்குதல் 
]]></media:title><media:description type="html"><![CDATA[ குவைத் மீதான ஈரானின் முந்தைய தாக்குதல் 
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/mvfqenhj/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாகிஸ்தான் தலைமையில் கடந்த மாதம் அமெரிக்காவுடன் எட்டப்பட்ட தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தமான 'இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்'  இருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாக <a href="https://www.maalaimalar.com/topic/iran-war">ஈரான் </a>அறிவித்துள்ளது.</p><p>ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரிபாபாடி கூறுகையில்,</p><p>"அமெரிக்கா 'இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்' விதிகளை அப்பட்டமாக மீறிவிட்டது. எனவே, இந்த ஒப்பந்தத்தை ஈரான் தொடர்ந்து பின்பற்றுவதில் எந்த அர்த்தமும் இல்லை. நாங்களும் இதன் செயல்பாடுகளை நிறுத்துகிறோம். தற்போதைய சூழலில், ஈரானின் முழுக் கவனமும் நாட்டின் பாதுகாப்பில் மட்டுமே உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.</p> <h2>அமெரிக்க தாக்குதல்</h2><p>ஈரானின் ஹார்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலையை அமெரிக்கப் படைகள் குண்டுவீசித் தகர்த்துள்ளன.</p><p>இந்தத் தாக்குதலால் சுமார் 20 கிராமங்களுக்கான குடிநீர் விநியோகம் முற்றிலும் துண்டிக்கப்பட்டு 10,000க்கும் மேற்பட்ட மக்கள் குடிநீரின்றி தவித்து வருகின்றனர்.</p><p>இதுதவிர, மின் உற்பத்தி நிலையங்கள், இரண்டு முக்கிய சுரங்கப்பாதைகள் மற்றும் ஒரு பாலம் ஆகியவை சேதமடைந்துள்ளதால், முக்கியத் துறைமுக நகரான பந்தர் அப்பாஸை இணைக்கும் முதன்மை சாலை போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.</p><p>ஈரான் சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி, ஜூலை 6 முதல் தொடங்கி நடைபெற்று வரும் அமெரிக்க <a href="https://www.maalaimalar.com/news/world/iran-airstrikes-on-iran-bridges-us-targets-key-coastal-infrastructure-at-least-7-killed">தாக்குதல்களில் </a>இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.</p> <h2>ஈரான் பதிலடி</h2><p>அமெரிக்க படை தளங்களை கொண்டுள்ள நட்பு நாடான குவைத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலைகளை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. குவைத்தின் 90 சதவீதக் குடிநீர் இந்த ஆலைகளிலிருந்தே பெறப்படுகிறது.</p><p>ஈரானின் இந்தத் தாக்குதலால் குடியிருப்புப் பகுதிகளில் ஏவுகணைத் துண்டுகள் விழுந்தபோதிலும், பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பில்லை என விளக்கம் அளித்த குவைத் வெளியுறவு அமைச்சகம் சர்வதேச சட்டங்களை மீறிச் செயல்படுவதாக ஈரானை கண்டித்துள்ளது.</p><p>மேலும் ஈரானின் இந்தத் தாக்குதலால் ஒரு முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை சேதமடைந்து பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <h2>ஜோர்டான் மீது தாக்குதல்</h2><p>ஜோர்டானில் ஈரான் நடத்திய தாக்குதலில் இரண்டு அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.</p><p>மத்திய கிழக்குக்கான அமெரிக்க பாதுகாப்பு துறை கட்டளை பிரிவான சென்ட்காம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,</p><p>ஜூலை 17 அன்று ஈரானிய படைகளால் ஏவப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் தற்கொலைப்படை டிரோன்களை அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாட்டுப் படைகள் வானிலேயே சுட்டு வீழ்த்தித் தடுத்துக் கொண்டிருந்தன.</p> <p>இந்த நடவடிக்கையின்போது, துரதிர்ஷ்டவசமாக இரண்டு அமெரிக்க ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.</p><p>மேலும், மற்றொரு அமெரிக்க வீரர் தற்போது வரை மாயமாகியுள்ளார். அவரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது" பென்டகன் தெரிவித்துள்ளது.</p><p>இந்த தாக்குதலின் போது அமெரிக்க வீரர்கள் பலர் காயமடைந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>உத்தவ் சிவசேனாவின் 6 எம்.பி.க்கள் கட்சித் தாவலை அங்கீகரித்த சபாநாயகர்.. திரிணாமுல் காங்கிரஸ் அதிருப்தி எம்.பி.களுக்கும் தனி இருக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/national/speaker-recognizes-the-defection-of-six-uddhav-shiv-sena-mps-separate-seating-allotted-for-dissident-trinamool-congress-mps-as-well</link><comments>https://www.maalaimalar.com/news/national/speaker-recognizes-the-defection-of-six-uddhav-shiv-sena-mps-separate-seating-allotted-for-dissident-trinamool-congress-mps-as-well#comments</comments><guid isPermaLink="false">7b262e7d-7af9-472f-82fc-90e250beb44a</guid><pubDate>Sat, 18 Jul 2026 21:06:42 +0000</pubDate><atom:updated>2026-07-18T21:06:42.235Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>uddhav Thackeray,உத்தவ் தாக்கரே,Eknath Shinde,ஏக்நாத் ஷிண்டே,Shiv Sena,சிவசேனா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/cfxx1pvv/tn-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ உத்தவ் சிவசேனா]]></media:title><media:description type="html"><![CDATA[ உத்தவ் சிவசேனா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/cfxx1pvv/tn-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகராஷ்டிராவில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள <a href="https://www.maalaimalar.com/topic/udhav-thackeray">உத்தவ் தாக்கரே</a>வின் சிவசேனாவிலிருந்து பிரிந்து சென்ற 6 அதிருப்தி மக்களவை உறுப்பினர்கள் என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஷிண்டே சிவசேனாவுடன் இணைந்ததை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளார். </p><p>சஞ்சய் உத்தம்ராவ் தேஷ்முக், சஞ்சய் ஹரிபாவ் ஜாதவ், பாவ்சாகேப் ராஜாராம் வக்காசவ்ரே, ஓம்பிரகாஷ் பூபால்சிங் நிம்பால்கர், சஞ்சய் தினா பாட்டீல் மற்றும் நாகேஷ் பாபுராவ் பாட்டீல் அஷ்டிகர் ஆகிய 6 எம்பிக்களின் கட்சி மாற்றம் அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டுள்ளது.</p><p>இதன்மூலம் மக்களவையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் பலம் 7லிருந்து 13 ஆக உயர்ந்துள்ளது. </p><p>இதன் மூலம் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில், 16 எம்பிக்களை கொண்ட தெலுங்கு தேசம் கட்சிக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய கூட்டணி கட்சியாக ஷிண்டேவின் சிவசேனா உருவெடுத்துள்ளது.  </p><p>மறுபுறம், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியின் பலம் வெறும் 3 எம்பிக்களாகக் குறைந்துள்ளது. </p><p>உத்தவ் அணியில் இருந்த 9 எம்பிக்களில் 6 பேர் (மூன்றில் இரண்டு பங்கு) பிரிந்து சென்றதால், இவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயாது என்று சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.  </p> <h2>ஆபரேஷன் டைகர்</h2><p>பண பலத்தைக் காட்டி எம்பிக்கள் விலைக்கு வாங்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87">ஏக்நாத் ஷிண்டே</a>,</p><p>"தங்களது தொகுதிகளின் வளர்ச்சிப் பணிகளுக்காகவும், அரசியல் காரணங்களுக்காகவுமே அவர்கள் எங்களுடன் இணைந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான வளர்ச்சி நிதியை நாங்கள் வழங்குவோம்.</p><p>அவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்கவும் நாங்கள் வழிவகை செய்துள்ளோம். ஒரு தலைவர் கட்சியில் இருக்கும் வரை நல்லவராகவும், வெளியேறியவுடன் கெட்டவராகவும் மாறுவது உத்தவ் அணியின் வழக்கமான ஒன்றுதான். அவர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.</p> <h2>திரிணாமுல் காங்கிரஸ்</h2><p>மறுபுறம் மேற்கு வங்க எதிர்க்கட்சியான மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸில் இருந்து விலகி தேசியவாத குடிமக்கள் கட்சியில் (NCPI) இணைந்த 20 அதிருப்தி எம்.பிக்களுக்கும் மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா, தனியிடம் ஒதுக்க சம்மதித்துள்ளார்.</p><h2>பலம்</h2><p>தற்போது பாஜகவின் என்டிஏ கூட்டணியின் பலம் 319 ஆக உள்ளது. இந்தியா கூட்டணியின் பலம் 181 ஆகவும், இதர கட்சிகள் பலம் 41 ஆகவும் உள்ளது.</p><p>மக்களவையின் மொத்த பலம் 540 ஆக உள்ள நிலையில் பாராளுமன்றத்தில் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை (360 வாக்குகள்) தேவைப்படுகிறது.</p> <h2>பாஜக திட்டம்</h2><p>திங்களன்று மழைக்கால கூட்டத்தொடர் கூடும் நிலையில் தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த ஏதுவாக மக்களவை இடங்களை 850 ஆக உயர்த்தும் 131வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவை நிறைவேற்ற தனது கூட்டணியின் பலத்தை 360க்கு நெருக்கமாக கொண்டுவர பாஜக தீவிரமாக முயன்று வருகிறது.</p><p>மகாராஷ்டிராவில் தனது கூட்டணியில் இருக்கும் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் உடன் 8 எம்.பிக்களை கொண்ட சரத் பவார் தேசியவாத காங்கிரசையும் இணைக்க பாஜக முயற்சி எடுத்து வருகிறது. இதற்கு சரத் பவார் சம்மதம் தெரிவிக்கலாம் என்றும் ஆனால் மறைந்த அஜித் பவரின் மனைவியும் அவ்வணியின் தலைவியுமான சுனேத்ரா பவார் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இணைப்பில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><p>சரத் பவாரின் பிரிவு இணைந்தால் என்டிஏவின் வாக்கு எண்ணிக்கை 327 ஆக உயரும்.</p><p>இருப்பினும், 360 என்ற இலக்கை எட்ட இன்னும் 33 வாக்குகள் குறைவாக இருக்கும் என்பதால், சில எதிர்க்கட்சிகளை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் விலகச் செய்ய முயற்சி நடந்து வருவதாக கூறப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title> மேற்கு வங்கத்தில் அபிஷேக் பானர்ஜி அலுவலகம் இடிப்பு.. திரிணாமுல் காங்கிரஸ் கொந்தளிப்பு </title><link>https://www.maalaimalar.com/news/national/abhishek-banerjee-office-demolished-district-says-office-built-without-approval-bulldozers-raze-structure</link><comments>https://www.maalaimalar.com/news/national/abhishek-banerjee-office-demolished-district-says-office-built-without-approval-bulldozers-raze-structure#comments</comments><guid isPermaLink="false">45e6662d-7a95-47cf-a644-79dec00d4006</guid><pubDate>Sat, 18 Jul 2026 20:18:56 +0000</pubDate><atom:updated>2026-07-18T20:18:56.935Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மம்தா பானர்ஜி,Mamata Banerjee,trinamool congress,Abhishek Banerjee,அபிஷேக் பானர்ஜி,திரிணாமுல் காங்கிரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/77t1xhoa/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அபிஷேக் பானர்ஜி அலுவலகம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ அபிஷேக் பானர்ஜி அலுவலகம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/77t1xhoa/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்கத்தில்  திரிணாமுல் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளரும் மக்களவை எம்.பி.யுமான <a href="https://www.maalaimalar.com/topic/abhishek-banerjee">அபிஷேக் பானர்ஜி</a>யின் அலுவலகம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><h2> மாவட்ட நிர்வாகம் </h2><p>மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பரகனா மாவட்டத்தின் அம்டலா பகுதியில் இயங்கி வந்த அபிஷேக் பானர்ஜியின் அப்பகுதியின் அலுவலகம் முறையான கட்டிட அனுமதி பெறாமல் கட்டப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. </p><p>இது தொடர்பாக ஜூன் 30 அன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் முதல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தொடர்ந்து ஜூலை 7 அன்று இரண்டாவது நோட்டீஸும் அனுப்பப்பட்டு, ஜூலை 15க்குள் உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க அவகாசம் வழங்கப்பட்டது.</p> <h2>அபிஷேக் பானர்ஜி தரப்பு</h2><p>வழங்கப்பட்ட இரண்டு நோட்டீஸ்களுக்கும் அபிஷேக் பானர்ஜி தரப்பிலிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை. அவரும் நேரில் ஆஜராகவில்லை. இதன் காரணமாகவே சட்டப்பூர்வமாக இந்த இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p>இன்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புல்டோசர்கள் கொண்டு வரப்பட்டு இந்த அலுவலகம் இடிக்கப்பட்டது.</p> <h2>திரிணாமுல் காங்கிரஸ் கொந்தளிப்பு</h2><p>அபிஷேக் பானர்ஜி அலுவலகம் இடிக்கப்பட்டதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.</p><p>திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில்,</p><p>"இந்தக் கட்டிட விவகாரம் தொடர்பான வழக்கு ஏற்கனவே நீதிமன்றத்தின் பரிசீலனையில் நிலுவையில் உள்ளது. பாஜக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்ததிலிருந்து வங்காளத்தில் ஒரு புதிய மோசமான கலாச்சாரத்தைப் புகுத்தி வருகிறது. அதுதான் 'புல்டோசர் கலாச்சாரம்'.</p> <p>இன்று நாம் பார்த்தது பாஜகவின் அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கை. அருவருப்பான, வன்முறை அரசியல் இது. மாநிலத்தில் பாஜகவின் ரவுடி ராஜ்ஜியம் முழுமையாக அரங்கேறி வருகிறது" என்று சாடியுள்ளது.</p><h2>திரிணாமுல் காங்கிரஸ் பூசல்</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF">மம்தா பானர்ஜி </a>தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மேற்கு வங்க தேர்தலில் பாஜவிடம் தோற்றது. </p><p>அதன் 80 எம்எல்ஏகளில் 50க்கும் மேற்பட்டோர் தனி அணியாக பிரிந்து கட்சியை தங்களுக்கு சொந்தம் கொண்டாடி வருகின்றனர். மேலும் பல எம்.பிக்களும் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர்.</p><p>கட்சியில் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி மீது கட்சியில் அதிருப்தி நிலவுகிறது. இந்த சூழலில் அவரின் அலுவலகம் மாவட்ட நிர்வாகத்தால் இடித்து தரைமட்டக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரஷியாவில் சேமிப்பு கிடங்குகளை குறிவைத்து உக்ரைன் தாக்குதல்.. 8 பேர் பலி -  60க்கும் மேற்பட்டோர் படுகாயம் </title><link>https://www.maalaimalar.com/news/world/ukraine-drone-strikes-8-killed-and-over-60-injured-as-russian-warehouses-and-oil-depot-hit</link><comments>https://www.maalaimalar.com/news/world/ukraine-drone-strikes-8-killed-and-over-60-injured-as-russian-warehouses-and-oil-depot-hit#comments</comments><guid isPermaLink="false">ef227e75-a597-4c65-b146-899ed12fe8c0</guid><pubDate>Sat, 18 Jul 2026 19:32:12 +0000</pubDate><atom:updated>2026-07-18T19:32:12.335Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உக்ரைன் போர்,டிரோன் தாக்குதல்,drone attack,Russia-Ukraine war,ரஷியா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/hbznf2rv/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[  
மாஸ்கோ அருகே சேமிப்பு கிடங்கில் புகை எழும் காட்சி ]]></media:title><media:description type="html"><![CDATA[  
மாஸ்கோ அருகே சேமிப்பு கிடங்கில் புகை எழும் காட்சி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/hbznf2rv/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D">உக்ரைன் - ரஷியா போர்</a> 5வது ஆண்டாக நீடித்து வரும் நிலையில் ரஷிய எல்லைக்குள் உக்ரைன் நடத்திய  டிரோன் தாக்குதல்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். </p><h2>தாக்குதல் </h2><p>ரஷியாவின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான Wildberries நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு சேமிப்புக் கிடங்குகளை உக்ரைன் டிரோன்கள் தாக்கியுள்ளன.</p><p>உக்ரைன் எல்லையிலிருந்து சுமார் 360 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோடோவ்ஸ்க் நகரில் அமைந்திருந்த கிடங்கில் நைட்  ஷிப்ட் வேலை செய்துகொண்டிருந்த 7 தொழிலாளர்கள் இந்த தாக்குதலில் உயிரிழந்தனர். மேலும் 25 பேர் காயமடைந்தனர்.</p><p>மாஸ்கோவிற்கு கிழக்கே 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிடங்கு மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு தொழிலாளி உயிரிழந்தார். அங்கு 24 பேர் காயமடைந்தனர். </p><p>இந்தத் தாக்குதலின் போது சிதறிய டிரோன் பாகங்கள் அருகில் இருந்த ஒரு மழலையர் பள்ளி கட்டிடத்திலும் விழுந்து தீ விபத்தை ஏற்படுத்தியது.</p><p>எலெக்ட்ரோஸ்டல் நகருக்கு வடக்கே உள்ள நோகின்ஸ்க் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கிய எண்ணெய் கிடங்கையும் உக்ரைன் டிரோன்கள் தகர்த்தன. </p><p>அங்கு ஏற்பட்ட பயங்கர தீ மற்றும் நச்சுப் புகை காரணமாக, அதற்கு மிக அருகில் இருந்த மகப்பேறு மருத்துவமனை மற்றும் ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் இருந்த மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.</p><p>மேலும், மாஸ்கோவிற்கு கிழக்கே 180 கி.மீ தொலைவில் உள்ள விளாடிமிர் நகரிலும் ஒரு குடியிருப்பு கட்டிடம் தாக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அங்கு உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.</p> <h2>ஜெலென்ஸ்கி விளக்கம்</h2><p>இந்தத் தாக்குதல்கள் குறித்துத் தனது டெலிகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள உக்ரைன் அதிபர் <a href="https://www.maalaimalar.com/news/world/ukraine-defense-minister-fired-zelensky-sacks-drone-war-architect-sparking-nationwide-protests">ஜெலென்ஸ்கி</a>,</p><p>"மாஸ்கோ மற்றும் தம்போவ் பிராந்தியங்களில் உள்ள ரஷியாவின் இரண்டு மிக முக்கியமான தளவாட மையங்களை எங்களது நீண்ட தூர ஏவுகணைகள் வெற்றிகரமாகத் தாக்கியுள்ளன.</p><p>இந்த இடங்களை ரஷியா வெறும் வணிகக் கிடங்காகப் பயன்படுத்தவில்லை. மாறாக, சர்வதேச தடைகளை மீறி ராணுவ டிரோன்கள் மற்றும் நேவிகேஷன் கருவிகளை தயாரிப்பதற்கான உதிரிபாகங்களை விநியோகிக்கும் மையங்களாகவே பயன்படுத்தி வந்தது. அதனாலேயே இவை அழிக்கப்பட்டன" என்று தெரிவித்துள்ளார்.</p><p>ரஷியாவின் 19 பிராந்தியங்கள் மற்றும் கிரிமியா, அசோவ் கடல் மற்றும் கருங்கடல் பகுதிகளில் உக்ரைனின் 379 டிரோன்களை தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சோனம் வாங்சுக்-ஐ வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றது தவறு - ராகுல் காந்தி 
 </title><link>https://www.maalaimalar.com/news/national/neet-protest-crackdown-rahul-gandhi-condemns-forced-removal-of-sonam-wangchuk</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-protest-crackdown-rahul-gandhi-condemns-forced-removal-of-sonam-wangchuk#comments</comments><guid isPermaLink="false">8305960d-2a34-43bc-9f68-9df481d32ff6</guid><pubDate>Sat, 18 Jul 2026 18:55:16 +0000</pubDate><atom:updated>2026-07-18T18:55:16.968Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,hunger strike,Sonam Wangchuk,சோனம் வாங்சுக்,உண்ணாவிரதம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/hvjolzhq/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராகுல் காந்தி ]]></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல் காந்தி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/hvjolzhq/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி போலீசார் சோனம் வாங்சுக்கை போராட்டக் களத்திலிருந்து வலுக்கட்டாயமாக அகற்றியதற்கு  மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம்  தெரிவித்துள்ளார். </p><h2>போராட்டம் </h2><p> நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்றுமத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் 20 முதல் அபிஜித் தீப்கே தலைமையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை சேர்ந்த இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். </p> <h2>சோனம் வாங்சுக்</h2><p>இதில் கடந்த 20 நாளாக உண்ணாவிரதம் இருந்து வந்த செயல்பாட்டாளர் மற்றும் கல்வியாளர் <a href="https://www.maalaimalar.com/news/national/sonam-wangchuk-hospitalised">சோனம் வாங்சுக் </a>உடல்நிலை மோசமடைந்த நிலையில் அவர் வலுக்கட்டாயமாக டெல்லி போலீசாரால் சப்தர்ஜங்மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்டார்.</p><p>சப்தர்கஞ்ச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனம் வாங்சுக் சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார் என மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.</p> <h2>ராகுல் காந்தி</h2><p>சோனம் வாங்சுக் 20 நாட்களாகத் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வந்த போதிலும், நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரான <a href="https://www.maalaimalar.com/topic/rahul-gandhi">ராகுல் காந்தி</a> எந்தவொரு கருத்தும் தெரிவிக்காமல் மௌனமாக இருந்தது குறித்து சமூக வலைதளங்களில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் தொடர் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.</p><p>இந்நிலையில் ராகுல் காந்தி முதல் முறையாக இவ்விவகாரத்தில் பொதுவெளியில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.</p> <p>அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,</p><p>"நாட்டில் கல்விக் கட்டணங்கள் தொடர்ந்து உயர்ந்து வருவதற்கும், போட்டித் தேர்வுகளை நடத்துவதில் அரங்கேறி வரும் முறைகேடுகளுக்கும் எதிராக நடக்கும் இந்தப் போராட்டம், இந்தியாவின் ஒட்டுமொத்த மாணவர்களின் எதிர்காலப் பாதுகாப்பிற்கு மிக முக்கியமானது.</p><p>அமைதியான முறையில் நடந்த போராட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டு, சோனம் வாங்சுக்கை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அகற்றியிருப்பது, உண்மை மற்றும் அகிம்சையின் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரானது.</p><p>அநாகரிகமும் வன்முறையும்தான் இந்த மோடி அரசின் முதன்மையான கொள்கைகளாக மாறிவிட்டன.</p><p>ஆனால், எந்தவிதமான அதிகார பலத்தாலும் இந்திய மாணவர்களின் மன உறுதியை நசுக்கிவிட முடியாது. மாணவர்களின் உரிமைக்காகப் போராடுபவர்களையோ அல்லது அவர்களின் மேல் நம்பிக்கை கொண்டு ஆதரவளிக்கும் எங்களைப் போன்றவர்களையோ இத்தகைய மிரட்டல்களால் பின்வாங்கச் செய்ய முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>VIDEO: நீலம் எனது நிறம்..ஜெய் பீம்!.. பெண் தன் மீது மை வீசியது குறித்து அபிஜித் தீப்கே கருத்து  
</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-protest-ink-attack-woman-throws-black-ink-at-abhijit-deepke-during-jantar-mantar-agitation</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-protest-ink-attack-woman-throws-black-ink-at-abhijit-deepke-during-jantar-mantar-agitation#comments</comments><guid isPermaLink="false">790ce7f0-acae-488c-9098-ce54794f0859</guid><pubDate>Sat, 18 Jul 2026 18:05:31 +0000</pubDate><atom:updated>2026-07-18T18:05:31.448Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sonam Wangchuk,சோனம் வாங்சுக்,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,CJP,அபிஜித் தீப்கே,Abhijit Dipke</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/osdcjcjo/abijith-deepke.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Abhijit Deepke]]></media:title><media:description type="html"><![CDATA[ Abhijit Deepke]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/osdcjcjo/abijith-deepke.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே மீது பெண் ஒருவர் மை வீசிய சம்பவம் அரங்கேறியுள்ளது. </p><h2>போராட்டம் </h2><p>நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்றுமத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் 20 முதல் அபிஜித் தீப்கே தலைமையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை சேர்ந்த இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். </p> <h2>வாங்சுக் நிலைமை</h2><p>இதில் கடந்த 20 நாளாக உண்ணாவிரதம் இருந்து வந்த செயல்பாட்டாளர் மற்றும் கல்வியாளர் <a href="https://www.maalaimalar.com/news/national/sonam-wangchuk-hospitalised">சோனம் வாங்சுக்</a> உடல்நிலை மோசமடைந்த நிலையில் அவர் வலுக்கட்டாயமாக டெல்லி போலீசாரால் சப்தர்ஜங்மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்டார்.</p><p>இதனால் போராட்டக் களத்தில் இன்று முழுவதும் பரபரப்பான சூழல் நிலவியது. தானும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் இருக்கப் போவதாக தீப்கே அறிவித்தார்.</p> <h2>மை வீச்சு</h2><p>இதனையே தீப்கே போராட்டக்காரர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது கூட்டத்திலிருந்து வந்த பெண் ஒருவர் திடீரென மேடைக்கு அருகில் வந்து, தான் வைத்திருந்த கருப்பு மையை அபிஜித் தீப்கே மீது வீசினார்.</p><p>இதனால் அதிர்ச்சியடைந்த தீப்கேவின் ஆதரவாளர்கள் உடனடியாக அந்தப் பெண்ணைத் தடுத்து நிறுத்தினர்.</p><p>அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் சிறிது நேரம் தடைபட்ட போராட்டம், பின்னர் மீண்டும் தொடர்ந்தது.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">STORY | Chaos at Jantar Mantar as woman throws ink-like liquid at CJP founder Abhijeet Dipke<br><br>Chaos erupted at Jantar Mantar on Saturday after a woman threw an ink-like liquid at Cockroach Janata Party (CJP) founder Abhijeet Dipke while he was addressing a gathering at the… <a href="https://t.co/KW2forKlnx">https://t.co/KW2forKlnx</a></p>&mdash; Press Trust of India (@PTI_News) <a href="https://x.com/PTI_News/status/2078394809807741435?ref_src=twsrc%5Etfw">July 18, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>வைரலாகும் வீடியோ</h2><p>மை வீசப்பட்ட இந்தச் சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.</p><p>ஒரு பெண் திடீரென மேடையில் ஏறி மையை வீசுவதும், அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.</p> <h2>தீப்கே பதிலடி</h2><p>இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, தனது எக்ஸ் பக்கத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்த அபிஜித் தீப்கே, 'நீலம் எனது நிறம்... ஜெய் பீம்!' என்று பதிவிட்டுள்ளார்.</p><p>இதனிடையே சப்தர்கஞ்ச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனம் வாங்சுக் சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார் என மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item></channel></rss>