<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 19 Jul 2026 11:39:14 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-19-july-2026-2</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-19-july-2026-2#comments</comments><guid isPermaLink="false">e2e450c1-256f-496a-b860-25faf5d7b70f</guid><pubDate>Sun, 19 Jul 2026 02:32:13 +0000</pubDate><atom:updated>2026-07-19T10:01:36.906Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/8tgkqbac/live01.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Today Live News]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/8tgkqbac/live01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/delhi-protest-ink-attack-woman-throws-ink-at-cockroach-janata-party-founder-abhijit-deepke-during-jantar-mantar-agitation">நான் தீவிர இந்து.. ஸ்ரீ ராமரை அவமதித்ததால் தீப்கே மீது மை வீசினேன் - பெண் பொறுப்பேற்பு</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/facebook-down-only-on-computers-users-face-inconvenience">கணினிகளில் மட்டும் முடங்கிய ஃபேஸ்புக் - பயனர்கள் அவதி!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/sonam-wangchuk-wife-petitions-delhi-high-court-over-safdarjung-hospital">'சஃப்தர்ஜங் மருத்துவமனை மீது நம்பிக்கை இல்லை'-டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடினார் சோனம் வாங்சுக்கின் மனைவி!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/president-murmus-tri-nation-tour">வரலாற்றில் முதன்முறை: குடியரசுத் தலைவர் முர்முவின் முத்தரப்புப் பயணம்!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/moorthy-slams-nirmal-kumar-over-land-registration-scam">எந்த இடத்தில் எனக்கு கட்டிங் கொடுத்தார்கள்?: முன்னாள் அமைச்சர் மூர்த்தி ஆவேசம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennaiites-get-double-dhamaka-new-rail-line-between-tambaram-and-chengalpattu">'சென்னைவாசிகளுக்கு டபுள் தமாக்கா'! தாம்பரம்-செங்கல்பட்டு ரெயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/football/sudarshan-patnaik-sand-sculpture-honours-world-cup-final-and-messi">உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி: மணல் சிற்பம் உருவாக்கி வாழ்த்து கூறிய சுதர்சன் பட்நாயக்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/central-government-salicylic-acid-face-wash-goes-viral">இணையத்தில் வைரலாகும் மத்திய அரசின் ‘ஃபேஸ் வாஷ்’: மிகக் குறைந்த விலை-எவ்வளவு தெரியுமா?...</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/monsoon-session-all-party-meeting-starts-dmk-stage-walkout">நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது- திமுக வெளிநடப்பு</a></p><p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/tamil-cinema-wins-10-national-awards-cm-vijay-congratulates">10 தேசிய விருதுகளை வென்ற தமிழ் திரையுலகம்: முதலமைச்சர் விஜய் வாழ்த்து!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/71-year-old-ashok-bahar-seeks-mbbs-quota-for-senior-citizens">மூத்த குடிமக்களுக்கு MBBS-இல் ஏன் இடஒதுக்கீடு இல்லை? அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் 71 வயது முதியவர் வழக்கு!...</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/pv-sindhu-clinches-japan-open-badminton-championship">ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் இந்தியாவின் பி.வி.சிந்து</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/football/who-will-win-world-cup-golden-boot-mbappe-surpasses-messi">உலகக் கோப்பை கால்பந்து: கோல்டன் பூட் விருது பெறப்போவது யார்?-மெஸ்சியை முந்திய எம்பாப்பே</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/hyderabad-it-woman-jumps-naked-into-lake-with-temple-idol-dies-by-suicide">ஹைதராபாத்தில் பரபரப்பு: அம்மன் சிலையோடு நிர்வாணமாக ஏரியில் குதித்து பெண் ஐடி ஊழியர் தற்கொலை!...</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cpm-shanmugam-we-left-parties-are-set-to-function-as-a-separate-bloc">இடதுசாரிகள் தனி அணியாக செயல்பட இருக்கிறோம்: சி.பி.எம். சண்முகம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/los-angeles-knight-riders-win-major-league-cricket-title">மேஜர் லீக் கிரிக்கெட்: கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது லாஸ் ஏஞ்சல்ஸ்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/topnews/delhi-parliament-march-ban-police-deployment-jantar-mantar">சி.ஜே.பி-யின் நாடாளுமன்ற பேரணிக்கு அதிரடி தடை: ஜந்தர் மந்தரில் போலீஸ் குவிப்பு!...</a></p><p>இந்தியா- இங்கிலாந்து மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று மதியம் நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/monsoon-to-return-in-delhi-heavy-rain-alert-for-himalayan-states">டெல்லியில் மீண்டும் தொடங்கும் பருவமழை: இமயமலை மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/petrol-diesel-prices-in-chennai">சென்னையில் பெட்ரோல், டீசல் விலை - இன்றைய நிலவரம்...</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/police-shoot-and-arrest-rowdy-who-attacked-officer">போலீசாரை தாக்கி தப்பி ஓட முயன்ற ரவுடியை சுட்டுப் பிடித்த போலீசார்</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/tsitsipas-advances-to-swiss-open-final">சுவிஸ் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சிட்சிபாஸ்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/amarnath-pilgrimage-halted-due-to-bad-weather">அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்: காரணம் இதுதான்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/us-military-launches-new-airstrikes-to-swiftly-punish-iran-for-deaths-of-us-troops">இரண்டு வீரர்கள் பலி: ஈரான் மீது புதிய தாக்குதலை நடத்திய அமெரிக்கா</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/karnataka-chief-minister-dk-shivakumar-said-pressure-to-release-water-to-tamil-nadu">தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க அதிக அழுத்தம்: கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார்</a></p>]]></content:encoded></item><item><title>பார்லரில் டாட்டூ குத்திய பெண்ணுக்கு எச்.ஐ.வி தொற்று - அதிர்ச்சி சம்பவம் </title><link>https://www.maalaimalar.com/news/national/tattoo-hiv-alert-woman-contracts-hiv-after-getting-tattoo-at-delhi-parlour</link><comments>https://www.maalaimalar.com/news/national/tattoo-hiv-alert-woman-contracts-hiv-after-getting-tattoo-at-delhi-parlour#comments</comments><guid isPermaLink="false">74cf990f-7e2e-4460-ab09-17bef9ce2ef0</guid><pubDate>Sun, 19 Jul 2026 11:34:44 +0000</pubDate><atom:updated>2026-07-19T11:34:44.722Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டாட்டூ,AIDS,tattoo,HIV,எய்ட்ஸ்,எச்ஐவி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/yhuv4261/tn-1.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ டாட்டூ ]]></media:title><media:description type="html"><![CDATA[ டாட்டூ ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/yhuv4261/tn-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் உள்ள ஒரு பார்லரில் <a href="https://www.maalaimalar.com/health/naturalbeauty/tattoo-beautiful-is-it-dangerous-595944">டாட்டூ </a>குத்திய சில நாட்களிலேயே பெண் ஒருவருக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>பெண் </h2><p>உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த 32 வயதுப் பெண் பிறப்புறுப்பில் ஏற்பட்ட தொற்று காரணமாக கான்பூர் மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்கு சென்றுள்ளார். </p><p>அறிகுறிகளை அறிந்து மருத்துவர்கள் அவருக்கு எச்.ஐ.வி மற்றும் ஹெபடைடிஸ்-பி பரிசோதனைகளை மேற்கொள்ளப் பரிந்துரைத்தனர். </p><p>அவருக்கு எச்.ஐ.வி பாசிட்டிவ் என பரிசோதனை முடிவு வந்துள்ளது. பெண்ணுக்கு தற்போது அரசு மருத்துவமனையில் இலவச ஆண்டி ரெட்ரோவைரல் சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது.</p>  <h2>டாட்டூ ஊசியால் வந்த வினை</h2><p>இது குறித்து மருத்துவக் கல்லூரியின் தோல் மருத்துவப் பிரிவு இணைப் பேராசிரியர் டாக்டர் ஸ்வேதாங்க் கூறுகையில்,</p><p>"பாதிக்கப்பட்ட பெண் இரண்டு வாரங்களுக்கு முன்புதான் டெல்லியில் உள்ள ஒரு டாட்டூ பார்லருக்கு சென்று பச்சை குத்தியுள்ளார்.</p><p>அங்கு முறையாக ஸ்டெர்லைஸ் செய்யப்படாத அல்லது ஏற்கனவே மற்றொருவருக்கு பயன்படுத்தப்பட்ட ஊசிகளை இவருக்குப் பயன்படுத்தியதே இந்த எச்.ஐ.வி தொற்றுக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என நம்புகிறோம்.</p><p>எச்.ஐ.வியை முழுமையாகக் குணப்படுத்த முடியாது என்றாலும், முறையான தொடர் சிகிச்சையின் மூலம் அதைக் கட்டுப்படுத்த முடியும். இதற்காக நோயாளி வாழ்நாள் முழுவதும் மருந்துகளை உட்கொள்ள வேண்டியிருக்கும்" என்று தெரிவித்தார்</p> <h2>மருத்துவர்கள் எச்சரிக்கை</h2><p>முறையான சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாத, தரம் குறைந்த டாட்டூ நிலையங்களில் பச்சை குத்திக் கொள்வது எச்.ஐ.வி மற்றும் ஹெபடைடிஸ்-பி போன்ற ரத்தத்தின் மூலம் பரவக்கூடிய கொடிய நோய்களுக்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p>மேலும், டாட்டூ குத்தப் பயன்படுத்தப்படும் மைகள் தோலில் கடுமையான ஒவ்வாமை போன்ற ஆபத்தான தோல் நோய்களை ஏற்படுத்தக்கூடும்.</p><p>குறிப்பாக, டாட்டூக்களில் பயன்படுத்தப்படும் சிகப்பு மற்றும் பச்சை நிற மைகள் தான் தோலில் அரிப்பு, தடிப்பு மற்றும் கடுமையான அலர்ஜிகளை மிக எளிதாக உருவாக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தலிலும் தவெகவுடனான கூட்டணித் தொடரும் - அமைச்சர் ஷாஜஹான்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/alliance-with-tvk-to-continue-in-by-elections-and-local-body-elections-too-minister-shahjahan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/alliance-with-tvk-to-continue-in-by-elections-and-local-body-elections-too-minister-shahjahan#comments</comments><guid isPermaLink="false">54689179-bd3b-4c10-8c1f-f12f85a2ccff</guid><pubDate>Sun, 19 Jul 2026 11:31:19 +0000</pubDate><atom:updated>2026-07-19T11:31:19.647Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>by-election,IUML,tvk</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/ywdlwkql/New-Project-2026-07-19T170104.548.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தலிலும் தவெகவுடனான கூட்டணித் தொடரும் - அமைச்சர் ஷாஜஹான்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/ywdlwkql/New-Project-2026-07-19T170104.548.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடைப்பெற்றது. இதில் நான்குமுனைப் போட்டி நிலவியது. திமுக தலைமையிலான அணி, அதிமுக தலைமையிலான அணி, நாம் தமிழர், தவெக என நான்குமுனைப் போட்டி நிலவியது.</p><p>இதில் திமுக அணியில் இடதுசாரிகள், ஐயூஎம்எல், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விசிக, மதிமுக உள்ளிட்டக் கட்சிகள் இடம்பெற்றிருந்தன. </p><p>தொடர்ந்து தேர்தல் முடிவுகள் வெளியாக திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பலக் கட்சிகள் தவெக பக்கம் சென்றன. தவெக ஆட்சியமைக்க ஆதரவு அளித்தன. ஆனால் கூட்டணி குறித்தும், தேர்தலில் தவெக உடன் இணைந்து போட்டியிடுவது குறித்தும் தெளிவான முடிவை பல கட்சிகளும் எடுக்கவில்லை.</p><p>இந்நிலையில் தமிழ்நாட்டில் விரைவில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் ஐயூஎம்எல் தவெகவுடன் இணைந்தே போட்டியிடும் என சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜஹான் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>காஷ்மீரில் காலை முதல் தொடர் மழை- வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பரிதமாக உயிரிழப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/heavy-rains-trigger-deadly-floods-and-landslides-in-kashmir</link><comments>https://www.maalaimalar.com/news/national/heavy-rains-trigger-deadly-floods-and-landslides-in-kashmir#comments</comments><guid isPermaLink="false">c0b0103f-68ce-439d-9b89-e532485fcc12</guid><pubDate>Sun, 19 Jul 2026 11:15:34 +0000</pubDate><atom:updated>2026-07-19T11:15:34.073Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காஷ்மீர்,மேகவெடிப்பு,Rajouri,jammukashmir,FlashFloods,இயற்கைசீற்றம்,RainAlert</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/q29xkrcz/JammuKashmirFlashFloods" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ JammuKashmirFlashFloods   ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/q29xkrcz/JammuKashmirFlashFloods?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜம்மு காஷ்மீரின் எல்லை மாவட்டங்களான பூஞ்ச் மற்றும் ரஜௌரியில் இன்று காலை முதல் பெய்த மழையில் பெரு வெள்ளம் மற்றும் மேகவெடிப்பு காரணமாக கோர விபத்து ஏற்பட்டுள்ளது. </p><p>அங்குள்ள முக்கிய ஆறுகளில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிலும், நிலச்சரிவிலும் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். </p><p>மேலும் பலர் வெள்ளித்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகியுள்ளனர்.</p><h2><strong>பெருக்கெடுத்த ஆற்றுவெள்ளம்...</strong></h2><p>இன்று அதிகாலை முதலே கொட்டித்தீர்த்த மழையால் தர்ஹாலி, காண்ட்லி, சுக்தோ, ஜமோலா ஆகிய முக்கிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. </p><p>சில நிமிடங்களிலேயே ஆற்று நீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. ரஜௌரியின் புதிய பேருந்து நிலையம் வெள்ளத்தில் முற்றிலும் சிதைந்தது. </p><p>அங்கு நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. </p><p>நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர்.</p><h2><strong>ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மாயம்:</strong></h2><p>வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் வீடுகள் இடிந்து விழுந்து பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. </p><p>வெள்ளத்தில் ஒரு வீடு ஒட்டுமொத்தமாக அடித்துச் செல்லப்பட்டதில் அப்துல் ஹமீது, அவரது மனைவி ஷரீபா பேகம், மகள் அரீபா, சகோதரி மனீரா ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மாயமாகியுள்ளனர். </p><p>நூனாபந்தி கிராமத்தில் நாஜியா கௌசர் என்ற பெண் வீடு இடிந்து பலியானார். சுரான்கோட் பகுதியில் ஷாஜைப் அகமது என்ற வாலிபர் வீடு இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். </p><p>மார்ஹோட் ஆற்றுப் பகுதியில் இரம் என்ற சிறுமி வெள்ளத்தில் மூழ்கி பலியாகியுள்ளார். துந்தக் லாடூங் பாலம் அருகே அடையாளம் தெரியாத பெண்ணின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.</p><h2><strong>அதிவிரைவு மீட்புப் பணிகள்..</strong></h2><p>பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம், உள்ளூர் நிர்வாகம் மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் இணைந்து நள்ளிரவிலும் மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். </p><p>நிலைமையை கவனித்து வருவதாகக் கூறியுள்ள ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, "மக்களின் உயிரைக் காப்பதே தற்போதைய முதன்மை நோக்கம். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு போர்க்கால அடிப்படையில் வழங்கும்" என உறுதியளித்துள்ளார்.</p><h2><strong>வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..</strong></h2><p>ஜம்மு காஷ்மீர் முழுவதும் வரும் ஜூலை 23 ஆம் தேதி வரை மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. </p><p>இதனால் பொதுமக்கள் ஆறுகள் மற்றும் மலைப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அவசர உதவிக்காகப் பிரத்யேகக் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு: &quot;பிரதமரின் மவுனம் ஏற்றுக்கொள்ள முடியாதது&quot;- ராகுல்காந்தி-கார்கே கடிதம்</title><link>https://www.maalaimalar.com/news/national/ayodhya-ram-temple-donation-scam-pm-silence-unacceptable-rahul-kharge-letter</link><comments>https://www.maalaimalar.com/news/national/ayodhya-ram-temple-donation-scam-pm-silence-unacceptable-rahul-kharge-letter#comments</comments><guid isPermaLink="false">58c3b890-82ce-467c-a22c-e5802959e66b</guid><pubDate>Sun, 19 Jul 2026 10:49:23 +0000</pubDate><atom:updated>2026-07-19T10:49:23.292Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,pm modi,அயோத்தி ராமர் கோவில்,Ayothi ramar temple,நன்கொடை முறைகேடு,பிரதமர் மவுனம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/m8wriytv/Rahul-gandhi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Malligarjuna Kharghe-Rahul gandhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/m8wriytv/Rahul-gandhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. </p><p>இந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு பாராளுமன்ற மக்களவை தலைவர் ராகுல்காந்தி, மேல்-சபை தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் கூட்டாக கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். </p><h2>கடிதம்</h2><p>கடிதத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு காரணமாக, நம்பிக்கை மற்றும் பக்தியுடன் தங்கள் கடின உழைப்பின் பணத்தை நன்கொடையாக வழங்கிய லட்சக்கணக்கான பக்தர்கள், ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள். </p><p>இத்தகைய குற்றச் செயல் நடந்திருக்கும் நிலையில் நீங்கள் (பிரதமர் மோடி) மவுனம் காப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. பொறுப்புக்கூறலையும் இழப்பீட்டையும் உறுதி செய்வது உங்கள் கடமை ஆகும்.</p><p>அறக்கட்டளையின் நிதி விவகாரங்கள் குறித்தும்-ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட அனைத்து காணிக்கைகளும் கையாளப்பட்ட விதம் குறித்தும் உடனடியாக சுதந்திரமான மற்றும் விரிவான விசாரணைக்கு உத்தரவிடு மாறு உங்களை வலியுறுத்துகிறோம். </p><p>பக்தர்கள் வழங்கிய காணிக்கைகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்பதை அவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், விசாரணையின் முடிவுகளையும் அறக்கட்டளையின் கணக்கு விவரங்களையும் பொது வெளியில் வெளியிட வேண்டும்.</p><p>நீங்கள் எவ்வளவு வெளிப்படையாகவும், விரைவாகவும் செயல்படுகிறீர்கள் என்பதில்தான் உங்கள் அரசாங்கத்தின் மற்றும் அந்த அறக்கட்டளையின் நம்பகத்தன்மை அடங்கி உள்ளது. இதை இந்திய மக்கள் உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறார்கள். </p><p>இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மத்தியப் பிரதேசத்தில் மழை வேண்டி கழுதைகளுக்கு குலாப் ஜாமூன் ஊட்டி சிறப்பு வழிபாடு!</title><link>https://www.maalaimalar.com/news/national/madhya-pradesh-rain-ritual-bhopal-donkeys-fed-gulab-jamun-in-unique-prayer-for-monsoon</link><comments>https://www.maalaimalar.com/news/national/madhya-pradesh-rain-ritual-bhopal-donkeys-fed-gulab-jamun-in-unique-prayer-for-monsoon#comments</comments><guid isPermaLink="false">ba0a618d-fdbe-40e9-9dc4-9b729b79d251</guid><pubDate>Sun, 19 Jul 2026 10:46:28 +0000</pubDate><atom:updated>2026-07-19T10:46:28.428Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,மழை,Bhopal,போபால்,கழுதை,donkey</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/t8dc9o50/tn.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ கழுதைகளுக்கு குலாப் ஜாமூன் ]]></media:title><media:description type="html"><![CDATA[ கழுதைகளுக்கு குலாப் ஜாமூன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/t8dc9o50/tn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>வழிபாடு </h2><p>மத்தியப் பிரதேச மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பலவீனமடைந்துள்ளதால் தலைநகர் போபாலில்  மழை வேண்டி கழுதைகளுக்கு குலாப் ஜாமுன் ஊட்டும் விசித்திரமான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81">வழிபாடு </a>கவனத்தையும் ஈர்த்துள்ளது.</p><p> மழைக் கடவுளான இந்திரனை மகிழ்வித்து, மாநிலத்தில் போதிய மழை பொழிய வைக்க போபாலில்  கோலார் சாலைப் பகுதியில் நடந்த இந்த சடங்கில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். மேலும் மழை வேண்டி வழிபாடும் நடத்தப்பட்டது.</p><p>கழுதைகளுக்கு குலாப் ஜாமுன் ஊட்டிய விசித்திர சடங்கின் வீடியோ இணையத்தில் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது</p><p>இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,</p><p>"பருவமழை தாமதமாகும் போதோ அல்லது போதிய மழை பொழியாமல் வறட்சி ஏற்படும் போதோ, எங்களது முன்னோர்கள் கடைப்பிடித்த ஒரு நீண்டகால பாரம்பரிய வழக்கத்தின்படியே இந்தச் சடங்கை நடத்தினோம்.</p><p>இந்து புராணங்களின்படி மழைக்கடவுளாகக் கருதப்படும் இந்திரனை குளிர வைக்கவும், அவரது கோபத்தைத் தணித்து நல்ல மழையைப் பெறவுமே இந்த பிரசாதம் கழுதைகளுக்கு வழங்கப்பட்டது" என்று  தெரிவித்தனர்.</p><h2>மழைப்பொழிவு</h2><p>மாநிலத்தின் மொத்தமுள்ள மாவட்டங்களில் 35 மாவட்டங்களில் இதுவரை பெய்திருக்க வேண்டிய சராசரி மழையை விட மிகக் குறைவான மழையே பதிவாகியுள்ளது. போதிய மழையின்றி வறட்சியான சூழல் நிலவுகிறது.</p><p>போபால் நகரில் இந்த பருவமழைக் காலத்தில் பெய்ய வேண்டிய சராசரி அளவை விட 44 சதவீதம் கூடுதல் மழை பதிவாகியுள்ளது.</p><p>வறண்ட மாவட்டங்களிலும் இன்று முதல் பருவமழை மீண்டும் தீவிரமடைந்து பரவலாக நல்ல மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது</p> ]]></content:encoded></item><item><title>மனைவி, இரண்டு மகன்கள் கொலை வழக்கு.. கணவரை விடுவித்த உயர் நீதிமன்றம்</title><link>https://www.maalaimalar.com/news/national/wife-two-sons-murder-case-high-court-acquits-husband</link><comments>https://www.maalaimalar.com/news/national/wife-two-sons-murder-case-high-court-acquits-husband#comments</comments><guid isPermaLink="false">82c88d5e-8c3f-4001-bc7c-656e707064a5</guid><pubDate>Sun, 19 Jul 2026 10:27:03 +0000</pubDate><atom:updated>2026-07-19T10:27:03.736Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Allahabad High Court,Mathura Trail Court,அலகாபாத் உயர்நீதிமன்றம்,மதுரா விசாரணை நீதிமன்றம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/ltoh7twn/Untitled-design-37.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Allahabad High Court released acquited person]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/ltoh7twn/Untitled-design-37.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தர பிரதேசத்தில் மனைவி மற்றும் இரண்டு மகன்களை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட நபரை அலகாபாத் உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது.</p><p>சூழ்நிலை சான்றுகளை மட்டுமே அடிப்படையாக கொண்ட வழக்குகளில், அரசுத் தரப்பு ஒரு நியாயமான மற்றும் நம்பத்தகுந்த நோக்கத்தை நிறுவ வேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.</p><h3><strong>மனைவி மற்றும் மகன்கள் கொலை:</strong></h3><p>உத்தர பிரதேசத்தில் உள்ள மதுரா மாவட்டத்தில் கடந்த 2017 செப்டம்பர் 3ம் தேதி அன்று வீட்டின் உள்ளே மனைவி மற்றும் இரண்டு மகன்கள் சடலமாக கிடந்ததாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.  </p><p>அப்போது அந்த வீட்டில் வேறு யாரும் இல்லை என சம்பவத்தை நேரில் பார்த்த உறவினர் ஒருவர் தெரிவித்தார்.</p><p>மேலும் அந்த சமயத்தில் உயிரிழந்த பெண்ணின் கணவர் அந்த வீட்டில் இல்லை எனவும், மூன்று பேர்களும் ஒரு கூர்மையான பொருளால் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டு கிடந்த நிலையில் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.</p><h3><strong>கணவர் கைது:</strong></h3><p>இதையடுத்து டெல்லியில் உயிரிழந்த பெண்ணின் கணவரான பாபுவை ரத்தக்கறை படிந்த சட்டையுடன் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.</p><p>பாபுவின் வாக்குமூலத்தின் பேரில், கொலைக்காக பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தையும் மீட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.</p><p>இதைத்தொடர்ந்து 2022 ஜனவரி 27ம் தேதி அன்று, மதுரா விசாரணை நீதிமன்றம் கைது செய்யப்பட்டவரை குற்றவாளி என தீர்ப்பளித்து, ஆயுள் தண்டனை விதித்தது.</p><p>இதற்கு எதிராக குற்றம்சாட்டப்பட்ட பாபு, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தார். அப்போது இந்த வழக்கு நீதிபதிகள் ஜே.ஜே. முனிர் மற்றும் சஞ்சீவ் குமார் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.</p><p>அப்போது நீதிபதிகள், “கைது செய்யப்பட்டவர், தான் குற்றத்திற்காக பயன்படுத்தப்பட்ட ஆயுதம் குறித்து, காவல்துறைக்கு தெரிவித்ததாக எந்தவொரு சுயாதீன சாட்சியும் அளிக்கவில்லை.</p><p>இத்தகைய கொடூரமான குற்றத்தை செய்வதற்கு குற்றம் சாட்டப்பட்டவருக்கு எந்த உள்நோக்கமும் இருந்ததாக அரசுத் தரப்பு சாட்சியம் கூறவில்லை.</p><p>இதைத்தொடர்ந்து சூழ்நிலைச் சான்றுகளின் அடிப்படையில் மட்டுமே ஒரு தனி நபரை குற்றவாளியாக்குவது முற்றிலும் பாதுகாப்பற்றது என்று சுட்டிக்காட்டி, 2022-ஆம் ஆண்டு மதுரா விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்தது.</p>]]></content:encoded></item><item><title>உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி -  அர்ஜென்டினா அணிக்கு இஸ்ரேல் பிரதமர் முழு ஆதரவு </title><link>https://www.maalaimalar.com/sports/football/world-cup-final-support-netanyahu-backs-messi-led-argentina-against-spain</link><comments>https://www.maalaimalar.com/sports/football/world-cup-final-support-netanyahu-backs-messi-led-argentina-against-spain#comments</comments><guid isPermaLink="false">0f579787-d089-493d-869f-f7819d2ea30a</guid><pubDate>Sun, 19 Jul 2026 10:17:59 +0000</pubDate><atom:updated>2026-07-19T10:17:59.496Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நேதன்யாகு,Netanyahu,இஸ்ரேல்,Israel,argentina,அர்ஜென்டினா,World Cup football,உலகக்கோப்பை கால்பந்து</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/bdel60ao/israel.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ இஸ்ரேல் பிரதமர் ]]></media:title><media:description type="html"><![CDATA[ இஸ்ரேல் பிரதமர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/bdel60ao/israel.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கால்பந்து (Football)</category><category>விளையாட்டு (Sports)</category><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணிக்கு இஸ்ரேல் பிரதமர் <a href="https://www.maalaimalar.com/news/world/israeli-pm-to-be-arrested-at-us-summit-says-nyc-mayor">நேதன்யாகு </a>முழு ஆதரவை அளித்துள்ளார். </p><h2>அர்ஜென்டினா தூதர்</h2><p>இஸ்ரேலுக்கான அர்ஜென்டினா தூதர் ரப்பி ஷிமோன் ஆக்சல் வாஜ்னிஸ் உடனான சந்திப்பின் போது நேதன்யாகு தனது வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார். </p><p>ஜெருசலேமில் நடைபெற்ற இச்சந்திப்பில், அர்ஜென்டினா தூதர் மூலமாக அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலேவுக்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தனது வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார்.</p><p>அதில், "ஜேவியர், நீங்கள் இஸ்ரேலின் உண்மையான நண்பர். நாளைய உலகக் கோப்பை இறுதிப் போட்டி உட்பட அனைத்து விஷயங்களிலும் நாங்கள் உங்களுடனும், அர்ஜென்டினாவுடனும் என்றும் இருப்போம். எனது வாழ்த்துகள்!" என்று நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.</p><p>இதற்குப் பதிலளிக்கும் விதமாக அர்ஜென்டினா தூதர் வழியாக அதிபர் ஜேவியர் மிலே அனுப்பிய செய்தியில், "நீங்கள் எனது சிறந்த நண்பர், எப்போதும் எங்களை ஆதரிப்பவர். எனக்காக நீங்கள் அர்ஜென்டினா அணியை ஆதரிக்கிறீர்கள் என்று கேட்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி" என்று தனது நன்றி தெரிவித்துள்ளார்.</p><h2>இஸ்ரேல் - அர்ஜென்டினா உறவு</h2><p>2023 டிசம்பரில் அர்ஜென்டினாவின் அதிபராக ஜேவியர் மிலே பதவியேற்றது முதலே இஸ்ரேலுடன் மிக நெருக்கமான உறவைப் பேணி வருகிறார்.</p><p>பதவியேற்ற பிறகு மிலே இதுவரை மூன்று முறை இஸ்ரேலுக்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார்.</p><p>கடைசியாக, கடந்த ஏப்ரல் மாதம் இஸ்ரேல் சென்றிருந்தபோது பிரதமர் நேதன்யாகு மற்றும் அதிபர் ஐசக் ஹெர்சாக் ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசினார்.</p><p>அதிபர் ஜேவியர் மிலேயின் தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளையும், இஸ்ரேலுக்கு ஆதரவான அவரது வெளியுறவுக் கொள்கைகளையும் பிரதமர் நேதன்யாகு பலமுறை பாராட்டியுள்ளார்.</p><h2>போர் குற்றவாளி </h2> <p>இதனிடையே அமெரிக்காவின் நியூ யார்க்கில்  நடைபெற இருக்கும் ஐ.நா. உச்சி மாநாட்டிற்காக வருகை தரும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கைது செய்வது குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக நியூயார்க் மேயர் ஸோஹ்ரான் மம்தானி தெரிவித்தார். </p><p>நேதன்யாகு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்ட ஒரு போர்க் குற்றவாளி என அவர் தெரிவித்தார். </p> <h2>உலககோப்பை இறுதிப் போட்டி</h2><p>இன்று நள்ளிரவு நடக்க இருக்கும் உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் மொத உள்ளன. </p><p>உலகமே உற்று நோக்கும் இந்த ஆட்டத்தில் மெஸ்ஸி வழிநடத்தும் அர்ஜென்டினாவை எதிர்கொள்ள அனைத்து வியூகங்களை பயன்படுத்துவோம் என ஸ்பெயின் பயிற்சியாளர் லூயிஸ் டி லா புவென்டே தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் ‘ஜன நாயகன்’ டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ticket-booking-for-jana-nayagan-has-started-in-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ticket-booking-for-jana-nayagan-has-started-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">c0f0247e-5446-429d-bf29-ab01b3bf4caf</guid><pubDate>Sun, 19 Jul 2026 10:13:45 +0000</pubDate><atom:updated>2026-07-19T10:13:45.434Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜன நாயகன்,விஜய்,vijay,Ticket Booking,டிக்கெட் முன்பதிவு,JanaNayagan</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/ae2601b6/New-Project-2026-07-19T154329.819.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாட்டில் ‘ஜன நாயகன்’ டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/ae2601b6/New-Project-2026-07-19T154329.819.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி, இந்தாண்டு பொங்கலுக்கு வெளியாக இருந்தப் படம் ஜன நாயகன். ஆனால் தணிக்கை பிரச்னையால் வெளியாகவில்லை.</p><p>ஒருவழியாக பல்வேறு பிரச்னைகளை தாண்டி மத்திய தணிக்கை வாரியம் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியது. இதனையடுத்து படம் ஜூலை.23ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது. அதனைத்தொடர்ந்து படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.</p><p>இந்நிலையில் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தமிழ்நாட்டில் தொடங்கியதாக படக்குழு அறிவித்துள்ளது. இதற்கு முன்னரே அண்டை மாநிலங்களில் தொடங்கியது. </p>]]></content:encoded></item><item><title>தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புவதில் தாமதம்..! வரவேற்க திரண்ட தொண்டர்கள் ஏமாற்றம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-leader-mk-stalin-delays-return-to-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-leader-mk-stalin-delays-return-to-chennai#comments</comments><guid isPermaLink="false">5680fc1a-f532-4cc9-8afc-d0de95be3931</guid><pubDate>Sun, 19 Jul 2026 10:01:10 +0000</pubDate><atom:updated>2026-07-19T10:01:10.642Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,மு.க.ஸ்டாலின் லண்டன் பயணம்,முக ஸ்டாலின்,london visit</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/wp9x9btw/mk-stalin.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN EX CM MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/wp9x9btw/mk-stalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் 2 வாரங்களுக்கு முன்பு வெளிநாடு பயணம் மேற்கொண்டார்.</p><p>மு.க.ஸ்டாலினின் பேரனும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி, லண்டன் மான்செஸ்டர் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் விளையாட்டு மேம்பாடு தொடர்பான பட்டப்படிப்பு படித்து முடித்துள்ளார்.</p><p>இதற்கான பட்டமளிப்பு விழாவிலும் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேரனை வாழ்த்தினார். அதன் பிறகு லண்டனில் ஓய்வெடுத்து வந்தார்.</p><h2>தொண்டர்கள் திரண்டனர்</h2><p>மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு பயணத்தை முடித்து கொண்டு இன்று சென்னை திரும்புகிறார். காலை 8 மணிக்கு அவர் சென்னை வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.</p><p>இதையடுத்து விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்புக்கு தி.மு.க.வினர் ஏற்பாடு செய்து இருந்தனர். காலை 7 மணி முதல் விமான நிலையத்தில் தி.மு.க. தொண்டர்களும், நிர்வாகிகளும் திரள தொடங்கினார்கள்.</p><p>சிறிய மேடை ஒன்று அமைத்து அதில் நின்று தொண்டர்கள் வரவேற்பை ஏற்றுக் கொள்ளும் வகையில் கட்சியினர் ஏற்பாடு செய்தனர். இதற்காக மேடை அமைப்பதற்கு பலகைகள் கொண்டு வரப்பட்டன. ஆனால் மேடை அமைக்க போலீசார் அனுமதிக்கவில்லை.</p><p>தாரை-தப்பட்டை போன்ற இசைக் கருவிகளுடன் வந்த கலைஞர்கள் வாத்தியங்களை வாசிக்க தொடங்கினார்கள். அதற்கும் மு.க.ஸ்டாலின் வரும்போது வாசிக்கும்படி போலீசார் கட்டுப்பாடு விதித்தனர். இதனால் இசைப்பது நிறுத்தப்பட்டது.</p><h2>தாமதம்</h2><p>இந்த களேபரம் நடந்து கொண்டிருந்தபோது மு.க.ஸ்டாலின் வரும் விமானம் லண்டனில் இருந்து புறப்படுவது தாமதம் ஆனது. எனவே இன்று இரவு 8 மணிக்குதான் அவர் சென்னை திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டது.</p><p>இதனால் விமான நிலையத்தில் திரண்டு இருந்த கட்சியினர் ஏமாற்றம் அடைந்தனர். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், த.மோ.அன்பரசன் மற்றும் நிர்வாகிகள் அன்பகம் கலை, தாயகம் கவி, எம்.கிருஷ்ணமூர்த்தி உள்பட திரண்டு இருந்த நிர்வாகிகள், கட்சியினரை திரும்பி செல்லும்படியும், இரவில் திரும்பி வருமாறும் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து அனைவரும் திரும்பி சென்றார்கள்.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி: இங்கிலாந்து பேட்டிங் தேர்வு!</title><link>https://www.maalaimalar.com/sports/final-odi-against-india-england-elects-to-bat</link><comments>https://www.maalaimalar.com/sports/final-odi-against-india-england-elects-to-bat#comments</comments><guid isPermaLink="false">9c17b2cf-3794-4604-a4e4-2f850a2ffa28</guid><pubDate>Sun, 19 Jul 2026 09:51:51 +0000</pubDate><atom:updated>2026-07-19T09:51:51.307Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,ஒருநாள் தொடர்,England,ODI Series,இங்கிலாந்து</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/u1uc6fdc/New-Project-2026-07-19T152135.004.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி: இங்கிலாந்து பேட்டிங் தேர்வு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/u1uc6fdc/New-Project-2026-07-19T152135.004.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்றுப் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே இரண்டு போட்டிகளில் முடிவடைந்துள்ள நிலையில், 1-1 என்ற சமநிலையில் தொடர் உள்ளது.</p><p>இந்நிலையில் இன்று மூன்றாவது போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்தியவுக்கு எதிராக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. </p><p>இந்திய அணியில் ரோகித் சர்மா, சுப்மன் கில் (கேப்டன்), விராட் கோலி, இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், குர்ணூர் ப்ரார், ப்ரின்ஷ் யாதவ், பிரஷித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>மத்திய அரசின் அனைத்துக் கட்சிக் கூட்டம் நிறைவு!</title><link>https://www.maalaimalar.com/news/national/central-governments-all-party-meeting-concludes</link><comments>https://www.maalaimalar.com/news/national/central-governments-all-party-meeting-concludes#comments</comments><guid isPermaLink="false">4dce0872-2cb5-43a0-aa11-60056ab5df56</guid><pubDate>Sun, 19 Jul 2026 09:41:27 +0000</pubDate><atom:updated>2026-07-19T09:41:27.282Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா கூட்டணி,INDIA Bloc,monsoon session,All-party meeting,அனைத்துக் கட்சிக் கூட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/k548rj2b/New-Project-2026-07-19T151058.268.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மத்திய அரசின் அனைத்துக் கட்சிக் கூட்டம் நிறைவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/k548rj2b/New-Project-2026-07-19T151058.268.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு டெல்லியில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம், நிறைவடைந்தது.</p><p>நாளை (ஜூலை. 20) நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், அவையைச் சுமுகமாக நடத்துவது குறித்து விவாதிக்க மத்திய அரசு இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது</p><p>நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் கிரண் ரிஜிஜுவால், நாடாளுமன்ற இணைப்பு கட்டிடத்தில் கூட்டப்பட்ட இந்த கூட்டத்தின் ஆலோசனைகளுக்கு இடையே எதிர்க்கட்சிகள் வெளிநடப்பும் செய்தன.</p><p>அதிருப்தி திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.களுக்கு தனி இருக்கை ஒதுக்கியதாக குற்றம்சாட்டி, காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, திமுக, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ஆம் ஆத்மி கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சி, இடதுசாரிக் கட்சிகள் மற்றும் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா உள்ளிட்டக் கட்சிகள் வெளிநடப்பு செய்தன.</p><p>பின்னர் மீண்டும் வந்து கூட்டத்தில் கலந்துகொண்டன. இக்கூட்டத்தில் அரசின் சார்பில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா, நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் கலந்துகொண்டனர்.</p><p>நாளை தொடங்கவுள்ள கூட்டத்தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா போன்றவற்றை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதேநேரம் நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>3-வது முறை தேசிய விருது வென்றார் ஜி.வி.பிரகாஷ்: நெகிழ்ச்சியுடன் வாழ்த்திய ஏ.ஆர்.ரஹ்மான்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/gv-prakash-wins-third-national-award-ar-rahman-congratulates</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/gv-prakash-wins-third-national-award-ar-rahman-congratulates#comments</comments><guid isPermaLink="false">ee811c86-065d-437e-9f18-31b377bcc40c</guid><pubDate>Sun, 19 Jul 2026 09:36:17 +0000</pubDate><atom:updated>2026-07-19T09:36:17.804Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஏ.ஆர்.ரகுமான்,A.R.Rahman,gv prakash,தேசிய விருது,National Awards,ஜி.வி.பிரகாஷ்குமார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/geqtgg50/gv.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  A.R.Rahman-GV Prakash]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/geqtgg50/gv.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய அரசு அறிவித்துள்ள 72-வது தேசிய திரைப்பட விருதுகளில், தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தனது மூன்றாவது தேசிய விருதை வென்று சாதனை படைத்துள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'அமரன்'  திரைப்படத்திற்காக சிறந்த பின்னணி இசை பிரிவில் இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.</p><p>இந்தத் தருணத்தில், அவரது மாமாவும் உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் மருமகனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.</p><h2><strong>ஏ.ஆர்.ரஹ்மானின் நெகிழ்ச்சியான பதிவு:</strong></h2><p>ஏ.ஆர்.ரஹ்மான் தனது எக்ஸ் மற்றும் சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்துள்ள வாழ்த்துச் செய்தியில், "உன்னுடைய 3-வது தேசிய விருதுக்கு வாழ்த்துகள் ஜி.வி.பிரகாஷ். ஒட்டுமொத்தமாக நமது குடும்பம் இணைந்து வாங்கும் 10-வது தேசிய விருது இது என்பதால், எங்கள் குடும்பத்திற்கு இது மிகவும் பெருமையான தருணம். </p><p>இசையின் மீதான உனது ஆர்வம், நேர்மை மற்றும் அர்ப்பணிப்பு எப்போதுமே ஊக்கமளிப்பதாக உள்ளது. நீ இன்னும் பல மைல்கற்களை எட்ட வாழ்த்துகிறேன். இறைவன் ஆசீர்வதிக்கட்டும்," என்று பதிவிட்டுள்ளார். மேலும், தனது வழக்கமான தாரக மந்திரமான 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்ற வார்த்தைகளுடன் இந்த வாழ்த்தை அவர் நிறைவு செய்துள்ளார். இதற்கு ஜி.வி. பிரகாஷ், "லவ் யூ சார்" என்று நெகிழ்ச்சியுடன் பதிலளித்துள்ளார்.</p><h2><strong>ஜி.வி.பிரகாஷின் தேசிய விருதுப் பயணம்:</strong></h2><p>ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பாளராக தேசிய விருது மேடையில் ஏறுவது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான சூரரைப் போற்று திரைப்படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான முதல் தேசிய விருது பெற்றார். அதனைதொடர்ந்து, கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான வாத்தி திரைப்படத்திற்காக  சிறந்த பாடல்களுக்கான இசையமைப்பாளர் விருது பெற்றார்.</p><h2><strong>ரஹ்மான் குடும்பத்தின் 10 தேசிய விருதுகள்:</strong></h2><p>ஏ.ஆர். ரஹ்மான் குறிப்பிட்டது போல, இவர்களது இசைக்குடும்பம் இதுவரை மொத்தம் 10 தேசிய விருதுகளை வென்று இந்தியத் திரையுலகில் அசைக்க முடியாத சாதனையை நிகழ்த்தியுள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் மட்டும் தனியாக 7 தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார்.  ஜி.வி. பிரகாஷின் 3 விருதுகளையும் சேர்த்தால் ரஹ்மான் குடும்பத்தின் மொத்த தேசிய விருதுகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்கிறது.</p><p>ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பெரும் இசை ஆளுமைகள் இந்திய சினிமாவின் உயரிய அங்கீகாரத்தைப் பெற்று, அதனைத் தங்களது குடும்பத்தின் 10-வது வெற்றியாகக் கொண்டாடுவது ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரையும் ரசிகர்களையும் பெருமிதம் கொள்ளச் செய்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கணினிகளில் மட்டும் முடங்கிய ஃபேஸ்புக் - பயனர்கள் அவதி!</title><link>https://www.maalaimalar.com/news/world/facebook-down-only-on-computers-users-face-inconvenience</link><comments>https://www.maalaimalar.com/news/world/facebook-down-only-on-computers-users-face-inconvenience#comments</comments><guid isPermaLink="false">8894d2ef-f6fc-463c-a078-30b698d44035</guid><pubDate>Sun, 19 Jul 2026 09:18:15 +0000</pubDate><atom:updated>2026-07-19T09:18:15.007Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Lockdown,முடக்கம்,Facebook,ஃபேஸ்புக்,desktop version,டெஸ்க்டாப் வெர்ஷன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/1q5qzp0i/New-Project-2026-07-19T144731.989.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கணினிகளில் மட்டும் முடங்கிய ஃபேஸ்புக் - பயனர்கள் அவதி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/1q5qzp0i/New-Project-2026-07-19T144731.989.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஃபேஸ்புக்கின் இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப (site issue) காரணமாக, காலையில் இருந்து பயனர்கள் கணினியில் செயலியை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. </p><p>இந்தியா, மால்டா உள்பட உலக நாடுகளில் உள்ள அனைத்துப் பயனர்களும் செயலியை அணுகும்போது ‘கணக்கு தற்போது பயன்பாட்டில் இல்லை’ (account is currently unavailable) என்ற வாசகம் வருகிறது. </p><p>இந்த தொழில்நுட்ப கோளாறு விரைவில் சரிசெய்யப்படும் என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த முடக்கம் கணினிகளில் மட்டுமே நிகழ்ந்துள்ளது. மொபைல் ஃபோன்களில் வழக்கம்போல ஃபேஸ்புக் செயல்பாட்டில் உள்ளது.</p><p>உலகளவில் ஃபேஸ்புக்கிற்கு 3 பில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் இருக்கின்றனர். இதில் சுமார் 1.5% முதல் 2% பேர்  டெஸ்க்டாப் வழியாக  தளத்தை அணுகுகின்றனர். </p><p>அதே சமயம் ஏறத்தாழ 14.3% பேர் டெஸ்க்டாப் மற்றும் மொபைல் இரண்டையும் பயன்படுத்துகின்றனர். 81% க்கும் அதிகமானோர் மொபைல் ஃபோன்களில் ஃபேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>நான் தீவிர இந்து.. ஸ்ரீ ராமரை அவமதித்ததால் தீப்கே மீது மை வீசினேன் - பெண் பொறுப்பேற்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-protest-ink-attack-woman-throws-ink-at-cockroach-janata-party-founder-abhijit-deepke-during-jantar-mantar-agitation</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-protest-ink-attack-woman-throws-ink-at-cockroach-janata-party-founder-abhijit-deepke-during-jantar-mantar-agitation#comments</comments><guid isPermaLink="false">3624e349-ee8d-40aa-a512-1670f332b46b</guid><pubDate>Sun, 19 Jul 2026 09:09:59 +0000</pubDate><atom:updated>2026-07-19T09:09:59.791Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sonam Wangchuk,சோனம் வாங்சுக்,CJP,அபிஜித் தீப்கே,Abhijit Dipke</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/k574bqq4/tn-13.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ தீப்கே, பர்கா த்ரெஹான்]]></media:title><media:description type="html"><![CDATA[ தீப்கே, பர்கா த்ரெஹான்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/k574bqq4/tn-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே மீது மை வீசியதற்கு பெண் ஒருவர் பொறுப்பேற்றுள்ளார்.  </p><h2>போராட்டம்</h2><p>நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்றுமத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் 20 முதல் <a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-ink-attack-woman-throws-black-ink-at-abhijit-deepke-during-jantar-mantar-agitation">அபிஜித் தீப்கே </a>தலைமையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை சேர்ந்த இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.</p> <h2>வாங்சுக் நிலைமை</h2><p>இதில் 20 நாளாக உண்ணாவிரதம் இருந்து வந்த செயல்பாட்டாளர் மற்றும் கல்வியாளர் <a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-crackdown-rahul-gandhi-condemns-forced-removal-of-sonam-wangchuk">சோனம் வாங்சுக் </a>உடல்நிலை மோசமடைந்த நிலையில் அவர் வலுக்கட்டாயமாக டெல்லி போலீசாரால் சப்தர்ஜங்மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்டார்.</p><p>இதனால் போராட்டக் களத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. தானும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் இருக்கப் போவதாக தீப்கே அறிவித்தார்.</p> <h2>மை வீச்சு</h2><p>இதனையே தீப்கே போராட்டக்காரர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது கூட்டத்திலிருந்து வந்த பெண் ஒருவர் திடீரென மேடைக்கு அருகில் வந்து, தான் வைத்திருந்த மையை அபிஜித் தீப்கே மீது வீசினார்.</p><p>இதனால் அதிர்ச்சியடைந்த தீப்கேவின் ஆதரவாளர்கள் உடனடியாக அந்தப் பெண்ணைத் தடுத்து நிறுத்தினர்.</p><p>அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் சிறிது நேரம் தடைபட்ட போராட்டம், பின்னர் மீண்டும் தொடர்ந்தது. மை வீச்சு வீடியோ வைரலாகி வருகிறது.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">STORY | Chaos at Jantar Mantar as woman throws ink-like liquid at CJP founder Abhijeet Dipke<br><br>Chaos erupted at Jantar Mantar on Saturday after a woman threw an ink-like liquid at Cockroach Janata Party (CJP) founder Abhijeet Dipke while he was addressing a gathering at the… <a href="https://t.co/KW2forKlnx">https://t.co/KW2forKlnx</a></p>&mdash; Press Trust of India (@PTI_News) <a href="https://x.com/PTI_News/status/2078394809807741435?ref_src=twsrc%5Etfw">July 18, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>பொறுப்பேற்பு</h2><p>தீப்கே மீது மை வீசியதற்கு பர்கா த்ரெஹான் என்ற பெண் பொறுப்பேற்றுள்ளார். இதுகுறித்து அவர் தன் எக்ஸ் பதிவில்,</p><p>"ஆமாம், பர்கா த்ரெஹானாகிய நான் தான் அபிஜித் தீப்கே மீது மையை வீசினேன். ஏன்னென்றால், அவருடைய கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் மேடையில் எனது பிரபு ஸ்ரீராமர் பகிரங்கமாக அவமதிக்கப்பட்டபோது, அதைத் தடுத்து நிறுத்தாமல் அவர் மேடையில் நின்று சிரித்துக் கொண்டிருந்தார்.</p><p>நான் ஒரு தீவிரமான இந்து. நமது கடவுள் பொதுவெளியில் இழிவுபடுத்தப்பட்டதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை; அது என் மனதை ஆழமாகப் பாதித்தது. அதற்கு எதிராக நான் காட்டிய எதிர்ப்புதான் இந்த மை வீச்சு. எனது இந்தச் செயலை எண்ணி நான் பெருமைப்படுகிறேன், இதில் எனக்கு எந்தப் பச்சாதாபமும் இல்லை. ஜெய் ஹிந்த். ஜெய் ஸ்ரீராம்!" என்று குறிப்பிட்டுள்ளார்.</p> <h2>தீப்கே பதிலடி</h2><p>இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, தனது எக்ஸ் பக்கத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்த அபிஜித் தீப்கே, 'நீலம் எனது நிறம்... ஜெய் பீம்!' என்று பதிவிட்டுள்ளார்.</p><p>இதனிடையே சப்தர்கஞ்ச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனம் வாங்சுக் சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார் என மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>பீகாரில் தலைமுடியை வெட்டும் கொள்ளை கும்பல் - மக்களிடையே பீதி</title><link>https://www.maalaimalar.com/news/national/bihar-robbery-gang-cuts-womens-hair</link><comments>https://www.maalaimalar.com/news/national/bihar-robbery-gang-cuts-womens-hair#comments</comments><guid isPermaLink="false">0b6bfd20-c584-4c90-848e-caac2672e616</guid><pubDate>Sun, 19 Jul 2026 09:09:46 +0000</pubDate><atom:updated>2026-07-19T09:09:46.983Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பீகார்,Bihar,robbery,Darbhanga,HairChoppingGang,தலைமுடிதிருட்டு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/jkfnsn28/BiharHairChoppingGang" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ BiharHairChoppingGang   ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/jkfnsn28/BiharHairChoppingGang?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2><strong>தலைமுடி வெட்டி சென்ற கும்பல்..</strong></h2><p>பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் 5 பேர் கொண்ட கொள்ளை கும்பல் வீடுகளில் புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு, இளம்பெண்களின் தலைமுடியை வெட்டிச் செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.</p><h2><strong>முதல் சம்பவம் - டாக்டர் வீட்டில் கொள்ளை..</strong></h2><p>தர்ஹார் கிராமத்தை சேர்ந்த டாக்டர் பவன் குமார் மிஸ்ரா வீட்டில் புகுந்த கும்பல், உறங்கிக்கொண்டிருந்த அவரது மருமகள் கரிஷ்மா தேவிவை தாக்கி, கை கால்களை கட்டி போதை ஊசி போட்டுள்ளனர்.</p><p>பின்னர் ரூ.35 ஆயிரம் பணம் மற்றும் ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகளை கொள்ளையடித்து, சத்தம் வராமல் இருக்க டி.வி.யை சத்தமாக வைத்து விட்டு செல்லும் முன் கரிஷ்மாவின் தலைமுடியை வெட்டிச் சென்றுள்ளனர். சுயநினைவின்றி கிடந்த பெண்ணை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்தனர்.</p><h2><strong>இரண்டாவது சம்பவம் - ஆசிரியர் வீட்டில்..</strong></h2><p>இதேபோல் ஒரு வாரத்திற்கு பிறகு அதே பகுதியை சேர்ந்த ஆசிரியர் சுமன் குமார் சௌத்ரி வீட்டிலும் கொள்ளை நடந்தது. மதிப்புமிக்க பொருட்களை கொள்ளையடித்த கும்பல், ஆசிரியரின் இளைய மகளின் தலைமுடியையும் வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.</p><h2><strong>போலீஸ் விசாரணை - மக்கள் அச்சம்</strong></h2><p>இரண்டு சம்பவங்களும் வியாழக்கிழமை நடந்ததாலும், முறைகள் ஒரே மாதிரி இருந்ததாலும் இது ஒரே கும்பலின் வேலையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தடயவியல் குழுவுடன் விசாரணை நடந்து வருகிறது.</p><p>ஆனால் "தலைமுடியை வெட்டி செல்லும் கும்பல்" என்ற தகவல் தர்ஹார் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&apos;சஃப்தர்ஜங் மருத்துவமனை மீது நம்பிக்கை இல்லை&apos;-டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடினார் சோனம் வாங்சுக்கின் மனைவி!</title><link>https://www.maalaimalar.com/news/national/sonam-wangchuk-wife-petitions-delhi-high-court-over-safdarjung-hospital</link><comments>https://www.maalaimalar.com/news/national/sonam-wangchuk-wife-petitions-delhi-high-court-over-safdarjung-hospital#comments</comments><guid isPermaLink="false">83bf6735-496f-4512-8ac6-a36b321d94d0</guid><pubDate>Sun, 19 Jul 2026 09:09:43 +0000</pubDate><atom:updated>2026-07-19T09:09:43.899Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Delhi High Court,Sonam Wangchuk,டெல்லி உயர் நீதிமன்றம்,கீதாஞ்சலி,Safdarjung hospital,சோனம் வாங்சுக்,Gitanjali J Angmo,சஃப்தர்ஜங் மருத்துவமனை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/97lww7c8/sonam.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sonam Wangchuk-Gitanjali J Angmo]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/97lww7c8/sonam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும், மாணவர்களின் மரணங்களுக்கு நீதி கேட்டு டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 22 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலரும் கல்வியாளருமான சோனம் வாங்சுக், நேற்று டெல்லி போலீசாரால் வலுக்கட்டாயமாக சஃப்தர்ஜங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.</p><p>இந்நிலையில், சஃப்தர்ஜங் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், சோனம் வாங்சுக்கை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி அவரது மனைவி டாக்டர் கீதாஞ்சலி ஜே.ஆங்மோ டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில்,</p><h2><strong>மருத்துவமனை அறிக்கையில் முரண்பாடு:</strong> </h2><p>சஃப்தர்ஜங் மருத்துவமனை அதிகாரிகள், சோனம் வாங்சுக்கின் ரத்தத்தில் பொட்டாசியம் அளவு 2.9 ஆகக் குறைந்துவிட்டதாகவும், இது உயிருக்கு ஆபத்தான நிலை என்றும் எங்களிடம் கூறினர். ஆனால், அவர்கள் வெளியிட்ட பொது சுகாதார அறிக்கையில் இந்த எண்ணைக் குறிப்பிடாமல், "பொட்டாசியம் அளவு குறைந்து வருகிறது" என்று மழுப்பலாகக் குறிப்பிட்டுள்ளனர்.</p><h2><strong>தனியார் ஆய்வக அறிக்கை:</strong></h2><p>மருத்துவமனை அதிகாரிகளின் கூற்றின் மீது சந்தேகம் அடைந்து, 10 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு ரத்த மாதிரியைப் பெற்று வெளியில் உள்ள ஒரு தனியார் ஆய்வகத்தில் சோதனை செய்தோம். அதில் பொட்டாசியம் அளவு 3.5 என்ற சாதாரண எல்லையிலேயே  உள்ளது தெரியவந்தது.</p><h2><strong>சட்டவிரோத காவலில் வாங்சுக்:</strong></h2><p>மருத்துவமனையில் அவர் தங்கியிருக்கும் தளத்தில் 30 போலீசாரும், வளாகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். எங்களை அவரைப் பார்க்க அனுமதிப்பதில்லை. இது மருத்துவச் சிகிச்சை அல்ல, 'சட்டவிரோதக் காவல்' ஆகும்.</p><p>எனது கணவருக்கு எனது சம்மதம் இன்றியோ அல்லது அவரது தனிப்பட்ட மருத்துவர்களின் ஆலோசனையின்றியோ எந்தவொரு மருந்தையோ அல்லது குளுக்கோஸையோ செலுத்தக்கூடாது என்று அதிகாரிகளிடம் திட்டவட்டமாகக் கூறியுள்ளேன்.</p><h2><strong>அரசு மற்றும் மருத்துவமனை தரப்பு விளக்கம்:</strong></h2><p>மறுபுறம், சோனம் வாங்சுக்கை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்ய அரசுத் தரப்பும் சஃப்தர்ஜங் மருத்துவமனை நிர்வாகமும் மறுப்பு தெரிவித்துள்ளன. சோனம் வாங்சுக்கின் உடல்நிலையைக் கண்காணித்து, தேவைப்பட்டால் மருத்துவத் தலையீடு செய்ய வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் முன்னதாக பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலும், நிபுணர்களின் மருத்துவ ஆலோசனையின்படியுமே அவர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.</p><p>நீண்ட நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருவதால், வாங்சுக்கின் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் தற்போதைய சூழலில் அவரை டிஸ்சார்ஜ் செய்ய முடியாது என்று அரசுத் தரப்பு வட்டாரங்கள் வலியுறுத்துகின்றன. </p><p>சஃப்தர்ஜங் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர்கள் அடங்கிய கூட்டு மருத்துவக் குழு அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், தற்போது அவர் சீரான நிலையில் இருந்தாலும் தொடர் கண்காணிப்பு அவசியம் என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.</p><h2><strong>மருத்துவமனையில் இருந்தபடி வாங்சுக் விடுத்த அழைப்பு:</strong></h2><p>இதற்கிடையே, மருத்துவமனைக் காவலில் இருந்தபடியே தனது மனைவி கீதாஞ்சலி மூலமாக சோனம் வாங்சுக் எக்ஸ் தளத்தில் ஒரு செய்தியைப் பகிர்ந்துள்ளார். அதில், "நாளை நாடாளுமன்றத்தை நோக்கி நடத்த திட்டமிடப்பட்டுள்ள பேரணி இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம். </p><p>பயமில்லாத மற்றும் அநீதியற்ற இந்தியாவை உருவாக்க இப்பேரணியை அனைவரும் பெரும் வெற்றியாக்க வேண்டும்" என்று அவர் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்காக இன்று விசாரிக்கப்பட வாய்ப்புள்ளதால், அரசியல் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அர்ஜென்டினாவை வீழ்த்த அனைத்து வியூகத்தையும் பயன்படுத்துவோம்: ஸ்பெயின் பயிற்சியாளர் சொல்கிறார்</title><link>https://www.maalaimalar.com/sports/football/fifa-world-cup-2026-arg-vs-spa-spain-coach-says-we-will-use-every-strategy-to-defeat-argentina</link><comments>https://www.maalaimalar.com/sports/football/fifa-world-cup-2026-arg-vs-spa-spain-coach-says-we-will-use-every-strategy-to-defeat-argentina#comments</comments><guid isPermaLink="false">787275ca-c151-4a1b-8e8f-277ec9568acf</guid><pubDate>Sun, 19 Jul 2026 09:02:48 +0000</pubDate><atom:updated>2026-07-19T09:02:48.940Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>argentina,அர்ஜென்டினா,Spain,ஸ்பெயின்,பிபா உலக கோப்பை,FIFA World Cup 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/4c1o2l4z/LuisdelaFuente.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Luis de la Fuente]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/4c1o2l4z/LuisdelaFuente.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கால்பந்து (Football)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அர்ஜென்டினாவுக்கு எதிரான இறுதிப் போட்டி குறித்து ஸ்பெயின் அணியின் தலைமை பயிற்சியாளர் லூயிஸ் டி லா புவென்டே நிருபர்களிடம் கூறியதாவது:-</p><p>உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்துவதற்கு எங்களிடம் உள்ள அனைத்து வியூகங்களையும் பயன்படுத்துவோம். அர்ஜென்டினாவை தோற்கடிப்பதற்கு தன்னால் இயன்ற அனைத்தையும் செய்வேன்.</p><p>உலக கோப்பையை வெல்வதற்காக போராடும் வாய்ப்பு கிடைத்து இருப்பது ஒரு பாக்கியம். கடந்த சில ஆண்டுகளாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஒரு நாட்டிற்கு எதிராக வெற்றி பெற எங்களின் அனைத்து பலங்களையும் பயன்படுத்த முயற்சிப்போம். </p><p>அர்ஜென்டினாவை வீழ்த்தி உலக கோப்பையை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><h2>36 வெற்றி</h2><p>லூயிஸ் டி லா புவென்டே ஸ்பெயின் அணிக்கு 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பயிற்சியாளராக பொறுப்பேற்றார். 36 ஆட்டத்தில் அவர் ஸ்பெயின் அணியை வெற்றி பெற வைத்துள்ளார். 10 போட்டி ‘டிரா’ ஆனது. 2 போட்டியில் தோல்வி ஏற்பட்டது. 48 போட்டிக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார். அவரது பயிற்சியின் கீழ் ஸ்பெயின் அணி 2023-ம் ஆண்டு ஐரோப்பிய தேசிய லீக் சாம்பியன் பட்டத்தையும், 2024-ம் ஆண்டு ஐரோப்பிய சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.</p><h2>உலக கோப்பை யாருக்கு?</h2><p>இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு நியூயார்க்கில் உள்ள நியூஜெர்சியில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா -   ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.</p><p>தரவரிசையில் முதல் 2 இடங்களில் உள்ள அணிகள் உலக கோப்பை இறுதிப் போட்டியில் மோதுவது இதுவே முதல் முறையாகும்.   நடப்பு உலக சாம்பியனும், தென் அமெரிக்க சாம்பியனுமான அர்ஜென்டினாவும், ஐரோப்பிய சாம்பியனான ஸ்பெயினும் இறுதி ஆட்டத்தில்  மோதுவது முதல் தடவையாகும்.</p><h2>7-வது முறை</h2><p>அர்ஜென்டினா 7-வது முறையாகவும், ஸ்பெயின்  2-வது தடவையாகவும் இறுதிப் போட்டியில் ஆடுகிறது. இதில் அர்ஜென்டினா 3  தடவையும், ஸ்பெயின் ஒரு முறையும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. அர்ஜென்டினா 4-வது உலக கோப்பைக்காகவும், ஸ்பெயின் 2-வது பட்டத்துக்காகவும் காத்திருக்கிறது.</p><p>இறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த அணிகள் மோதுவதால் உலக கோப்பையை வெல்லப் போவது அர்ஜென்டினாவா? ஸ்பெயினா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>இன்று நள்ளிரவு இறுதிப்போட்டி: ஸ்பெயின் சிறந்த அணி- அர்ஜென்டினா பயிற்சியாளர் ஸ்கலோனி சொல்கிறார்</title><link>https://www.maalaimalar.com/sports/football/fifa-world-cup-2026-arg-vs-spa-spain-best-team-argentina-coach-lionel-scaloni</link><comments>https://www.maalaimalar.com/sports/football/fifa-world-cup-2026-arg-vs-spa-spain-best-team-argentina-coach-lionel-scaloni#comments</comments><guid isPermaLink="false">950c4f1c-645c-4570-b5a9-7d622773c4a8</guid><pubDate>Sun, 19 Jul 2026 08:53:43 +0000</pubDate><atom:updated>2026-07-19T08:53:43.227Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>argentina,அர்ஜென்டினா,Spain,ஸ்பெயின்,பிபா உலக கோப்பை,FIFA World Cup 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/czu7gipi/LionelScaloni.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Lionel Scaloni]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/czu7gipi/LionelScaloni.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கால்பந்து (Football)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் பிபா உலக கோப்பையின் இறுதிப் போட்டி இன்று நள்ளிரவு நநடக்கிறது.</p><h2>உலக கோப்பை யாருக்கு?</h2><p>இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு நியூயார்க்கில் உள்ள நியூஜெர்சியில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா -   ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.</p><p>தரவரிசையில் முதல் 2 இடங்களில் உள்ள அணிகள் உலக கோப்பை இறுதிப் போட்டியில் மோதுவது இதுவே முதல் முறையாகும்.   நடப்பு உலக சாம்பியனும், தென் அமெரிக்க சாம்பியனுமான அர்ஜென்டினாவும், ஐரோப்பிய சாம்பியனான ஸ்பெயினும் இறுதி ஆட்டத்தில்  மோதுவது முதல் தடவையாகும்.</p><h2>அர்ஜென்டினா இறுதிப் போட்டியில் 7-வது முறை: ஸ்பெயின் 2-வது முறை</h2><p>அர்ஜென்டினா 7-வது முறையாகவும், ஸ்பெயின்  2-வது தடவையாகவும் இறுதிப் போட்டியில் ஆடுகிறது. இதில் அர்ஜென்டினா 3  தடவையும், ஸ்பெயின் ஒரு முறையும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. அர்ஜென்டினா 4-வது உலக கோப்பைக்காகவும், ஸ்பெயின் 2-வது பட்டத்துக்காகவும் காத்திருக்கிறது.</p><p>இறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த அணிகள் மோதுவதால் உலக கோப்பையை வெல்லப் போவது அர்ஜென்டினாவா? ஸ்பெயினா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>ஸ்பெயின் சிறந்த அணி</h2><p>ஸ்பெயினுடன் மோதும் இறுதிப் போட்டி குறித்து அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி நிருபர்களிடம் கூறியதாவது:-</p><p>ஸ்பெயின் ஒரு சிறந்த அணி. அவர்களை பற்றிய அனைத்தும் எனக்கு கவலை அளிக்கிறது. நாங்கள் வெற்றி பெறுவோம். அவ்வாறு வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன். ஆனால் எப்படி இருந்தாலும் இறுதிப்போட்டிக்கான நிலையை அடைய நாங்கள் மேற்கொண்ட பயணம் நம்ப முடியாத அளவில் இருந்தது.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p><h2>69 வெற்றி</h2><p>ஸ்கலோனி 2018-ம் ஆண்டு அர்ஜென்டினா அணிக்கு பயிற்சியாளராக பொறுப்பேற்றார். அவரது பயிற்சியின் கீழ் 4 முக்கிய கோப்பைகளை அர்ஜென்டினா கைப்பற்றியது. 2022 உலக கோப்பை மற்றும் 2 கோபா அமெரிக்க கோப்பையை (2021, 2024) வென்றது. </p><p>96 ஆட்டத்துக்கு பயிற்சி யாளராக இருந்து உள்ளார். இதில் அர்ஜென்டினா 69-ல் வெற்றி பெற்றது. வெற்றி சதவீதம் 71.88 ஆகும். 18 போட்டி ‘டிரா’ ஆனது. 9 ஆட்டத்தில் தோல்வி ஏற்பட்டது. </p>]]></content:encoded></item><item><title>பிஃபா உலகக்கோப்பை 2026 இறுதிப்போட்டி.. கேரளாவில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை!</title><link>https://www.maalaimalar.com/sports/football/fifa-world-cup-2026-final-kerala-school-college-holiday</link><comments>https://www.maalaimalar.com/sports/football/fifa-world-cup-2026-final-kerala-school-college-holiday#comments</comments><guid isPermaLink="false">cd9e0eb8-aaf8-4ef7-a0bd-d943c494cac9</guid><pubDate>Sun, 19 Jul 2026 08:40:24 +0000</pubDate><atom:updated>2026-07-19T08:40:24.172Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உலகக்கோப்பை கால்பந்து 26,FIFAWorldCup2026,KeralaSchoolHoliday,ArgentinaVsSpain,அர்ஜென்டினாvsபெயின்,MetLifeStadium</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/kffoll27/FIFA-World-Cup-2026-final" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ FIFA World Cup 2026 final ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/kffoll27/FIFA-World-Cup-2026-final?w=280" width="280"></media:thumbnail><category>கால்பந்து (Football)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாளை நடக்கவிருக்கும் உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியை முன்னிட்டு, கேரளா மாநிலத்தின் எர்ணாகுளம், கோழிக்கோடு மற்றும் ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு கேரள அரசு நாளை (ஜூலை 20) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி நள்ளிரவில் நடப்பதால், இந்த முடிவை பள்ளி நிர்வாகங்கள் எடுத்துள்ளன.</p><h2><strong>விளையாட்டு நேரம்..</strong></h2><p>இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கால்பந்து போட்டி அமெரிக்காவின் மெட்லைஃப் மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்திய நேரப்படி நள்ளிரவு 12:30 மணிக்குத் தொடங்குகிறது. </p><p>வழக்கமான நேரத்தில் முடிந்தால் கூட அதிகாலை 2:30 மணி ஆகும், பரிசு வழங்கும் விழா முடிய 3 மணி ஆகிவிடும். ஒருவேளை போட்டி கூடுதல் நேரம் அல்லது பெனால்டி ஷூட்-அவுட் வரை சென்றால் அதிகாலை வரை நீடிக்கும். </p><p>இதனால் மாணவர்கள் தூக்கமில்லாமல், சோர்வோடு பள்ளிக்கு வருவதைத் தவிர்க்கவே இந்த விடுமுறை அறிவிக்கபட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><h2><strong>அமைச்சரின் நெகிழ்ச்சிப் பதிவு..</strong></h2><p>கேரள பொதுக்கல்வித் துறை அமைச்சர் ந. சம்சுதீன் இந்த விடுமுறை அறிவிப்பைத் தனது சமூக வலைத்தளப் பக்கங்கள் மூலம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். </p><p>அதில், "இப்போது சந்தோஷமா குழந்தைகளே?" என்று மாணவர்களை நோக்கி நெகிழ்ச்சியுடன் கேள்வி எழுப்பியுள்ளார். </p><p>மேலும், "கால்பந்து ரசிகர்கள் மற்றும் மாணவர்களின் தொடர் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, நள்ளிரவுக்கு மேல் நடைபெறும் உலகக்கோப்பை இறுதிப்போட்டியைக் காணும் வகையில், பொதுக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்படுகிறது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திருப்பூரில் ஜனநாயகன் டி-ஷர்ட் தயாரிப்பு பணி தீவிரம்: 700-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் குவியும் ஆர்டர்கள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/over-700-tiruppur-garment-units-rush-to-meet-demand-for-vijay-democratic-t-shirts</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/over-700-tiruppur-garment-units-rush-to-meet-demand-for-vijay-democratic-t-shirts#comments</comments><guid isPermaLink="false">999d6a8d-1d73-485b-807f-1964cfd8455c</guid><pubDate>Sun, 19 Jul 2026 08:31:38 +0000</pubDate><atom:updated>2026-07-19T08:31:38.339Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>JanaNayagan,ஜனநாயகன்,ஜனநாயகன் டிஷர்ட்,Jananayagan Tshirt,திருப்பூர் டெக்ஸ்டைல்,Tiruppu Textile</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/24y0np6l/Untitled-design-34.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tiruppur Textile Jananayagan T-shirt Boom]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/24y0np6l/Untitled-design-34.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்பதற்கு முன்பு, கடைசியாக நடித்த திரைப்படமான ‘ஜனநாயகன்’ வெளியாக உள்ளதால், திருப்பூரில் ரசிகர்களுக்காக பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட டி-ஷர்ட் உற்பத்தி அதிகரித்துள்ளது.</p><p>இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் மற்றும் நரேன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.</p><p>ஜூலை 23இல் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தை தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சுமார் 1,000 திரையரங்குகளில் திரையிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. </p><p>ஜனநாயகன் திரைப்படத்தை கொண்டாடும் விதமாக, முதல்வர் விஜய்யின் ரசிகர்களும் தவெக தொண்டர்களும், பிரத்தியேக டி-ஷர்ட் அணிந்து முதல் நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட உள்ளனர். </p><p>இந்நிலையில் திரைப்படம் வெளியாக இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், 700-க்கும் மேற்பட்ட பின்னல் ஆடை உற்பத்தி நிறுவனங்கள் டி-ஷர்ட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன.</p><p>இந்த அவசரத் தேவையைப் பூர்த்தி செய்ய, பெரும்பாலான உள்ளூர் உற்பத்தியாளர்கள் தமிழகம் முழுவதும் கூரியர் சேவைகளையும் வழங்கி வருகின்றனர்.</p><p>நடிகராக இருந்து முதலமைச்சராக உருவெடுத்துள்ள விஜய்யின் புகைப்படத்துடன் கூடிய பிரத்தியேக டி-ஷர்ட்களுக்கு, தமிழகத்தின் ஜவுளி மையமான திருப்பூர் ஆடை உற்பத்தி ஆலைகளில் பெருமளவில் ஆர்டர்கள் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதுகுறித்து திருப்பூர் ஜவுளி ஆலைகள் சங்கத்தின் உறுப்பினர் கே. பிரபாகரன் கூறுகையில், “சில நாட்களுக்கு முன்பு திரைப்பட வெளியீடு அறிவிக்கப்பட்டதிலிருந்து, இங்குள்ள திருப்பூர் ஜவுளி ஆலைகள், பிரத்தியேகமான ஜனநாயகன் டி-ஷர்ட்களைத் தயாரிப்பதற்காகக் கூடுதல் நேரத்துடன் பணியாற்றி வருகின்றன,” என்று கூறினார்.</p><p>மேலும் ஆடைத் தொழிற்சாலை உரிமையாளரான கே. சேவா நாதன் கூறுகையில், “பல ஆண்டுகளாக இந்த அளவிலான உற்சாகத்தை நாங்கள் கண்டதில்லை.</p><p>தமிழ்நாட்டிலிருந்து மட்டுமல்லாமல், கேரளா மற்றும் கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களிலிருந்தும் ஆர்டர்கள் குவிந்து வருகின்றது,” என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>வரலாற்றில் முதன்முறை: குடியரசுத் தலைவர் முர்முவின் முத்தரப்புப் பயணம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/president-murmus-tri-nation-tour</link><comments>https://www.maalaimalar.com/news/national/president-murmus-tri-nation-tour#comments</comments><guid isPermaLink="false">559649e5-97cf-475e-aa53-dd0472d9b41d</guid><pubDate>Sun, 19 Jul 2026 08:00:12 +0000</pubDate><atom:updated>2026-07-19T08:00:12.232Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>President Murmu,Romania,Moldova,North Macedonia,குடியரசுத் தலைவர் முர்மு,மோல்டோவா,வட மாசிடோனியா,ருமேனியா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/dg4pie2d/murmu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ President Murmu's Tri-Nation Tour]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/dg4pie2d/murmu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மோல்டோவா, வட மாசிடோனியா மற்றும் ருமேனியா ஆகிய மூன்று நாடுகளுக்கு இன்று (ஜூலை 19) தனது வரலாற்றுச் சிறப்புமிக்க அரசுமுறைப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். இந்த மூன்று நாடுகளுடனான இந்தியாவின் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மேம்படுத்தவும் இப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது.</p><h2>மோல்டோவா பயணம் (முதல் கட்டம்):</h2><p>இந்தியக் குடியரசுத் தலைவர் ஒருவர் மோல்டோவா நாட்டிற்குச் செல்வது இதுவே முதல்முறை ஆகும். இப்பயணத்தின் போது, மோல்டோவா அதிபர் மாயா சாந்துவை சந்தித்து குடியரசுத் தலைவர் தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தைகளை நடத்துவார்.</p><p>நாடாளுமன்றத் தலைவர் இகோர் குரோசு மற்றும் மோல்டோவா-இந்தியா நாடாளுமன்ற நட்புத் குழுவின் உறுப்பினர்களைச் சந்திக்கிறார். மேலும், அங்கு நடைபெறும் வர்த்தக மன்றக் கூட்டத்தில் உரையாற்றுவதுடன், மோல்டோவாவில் வாழும் இந்திய வம்சாவளியினரையும் நேரில் சந்தித்துக் கலந்துரையாட உள்ளார்.</p><h2><strong>வட மாசிடோனியா பயணம் (2ம் கட்டம்)</strong></h2><p>மோல்டோவாவைப் போலவே, வட மாசிடோனியா நாட்டிற்கும் இந்தியக் குடியரசுத் தலைவர் ஒருவர் மேற்கொள்ளும் முதலாவது அரசுமுறைப் பயணம் இதுவாகும். வட மாசிடோனியா அதிபர் சிலியானோவ்ஸ்கா-டவ்கோவா, அந்நாட்டுப் பிரதமர் மற்றும் நாடாளுமன்றத் தலைவர் ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துகிறார்.</p><p>வட மாசிடோனியா நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சிறப்புரையாற்ற உள்ளார். அத்துடன் இந்தியா-வட மாசிடோனியா வர்த்தக மன்றக் கூட்டத்திலும் பங்கேற்கிறார். வேளாண்மை, மருந்தகத் துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஐடி சார்ந்த சேவைகள் ஆகியவற்றில் இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார உறவுகளை ஆழப்படுத்துவதில் இந்த சந்திப்பு கவனம் செலுத்தும்.</p><h2><strong>ருமேனியா பயணம் (இறுதிக்கட்டம்)</strong></h2><p>தென்கிழக்கு ஐரோப்பிய நாடான ருமேனியாவிற்கு, சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு இந்தியக் குடியரசுத் தலைவர் ஒருவர் செல்லும் முக்கியப் பயணம் இதுவாகும். ருமேனியா அதிபர், இடைக்காலப் பிரதமர் மற்றும் செனட் சபையின் தலைவர் ஆகியோரைச் சந்தித்துப் பேசுகிறார். </p><p>ருமேனியா-இந்தியா நாடாளுமன்ற நட்பு குழு உறுப்பினர்களுடனான சந்திப்பு, இந்தியா-ருமேனியா வர்த்தக மன்ற உரை மற்றும் அங்குள்ள இந்திய சமூகத்தினருடனான கலந்துரையாடல் ஆகியவை இப்பயணத்தில் இடம்பெற்றுள்ளன.</p><h2><strong>பயணத்தின் நோக்கம்:</strong></h2><p>இந்த 3 நாடுகளின் பயணமானது, ஐரோப்பிய பிராந்தியத்தில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>குறிப்பாக வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், கண்டுபிடிப்புகள், கல்வி மற்றும் இருநாட்டு மக்களிடையேயான கலாச்சாரப் பரிமாற்றங்களை விரிவுபடுத்துவதில் இப்பயணம் புதிய வேகத்தை ஏற்படுத்தும் என்று வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content:encoded></item><item><title>எந்த இடத்தில் எனக்கு கட்டிங் கொடுத்தார்கள்?: முன்னாள் அமைச்சர் மூர்த்தி ஆவேசம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/moorthy-slams-nirmal-kumar-over-land-registration-scam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/moorthy-slams-nirmal-kumar-over-land-registration-scam#comments</comments><guid isPermaLink="false">7c5b8429-8da9-4cf7-97fb-0322ebffe5f3</guid><pubDate>Sun, 19 Jul 2026 07:50:34 +0000</pubDate><atom:updated>2026-07-19T07:50:34.187Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நிர்மல் குமார்,DMK,திமுக,Nirmal Kumar,former minister murthy,முன்னாள் அமைச்சர் மூர்த்தி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/lqo4hfjt/murthy.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ murthy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/lqo4hfjt/murthy.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் கடந்த தி.மு.க. ஆட்சியில் பத்திரப் பதிவு தொடர்பாக, தற்போதைய த.வெ.க. பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் நிர்மல் குமார் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.</p><p>இந்நிலையில், முன்னாள் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மதுரையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p><h2>மோசடிக்கு யார் உடந்தை?</h2><p>பழனி கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் நில மோசடி நடந்துள்ளது. இதில் யார் உடந்தையாக இருந்தார்கள் என்பதை பற்றி விவாதம் எழுந்துள்ளது. இது குறித்து அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தும், காரணமானவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.</p><p>கோவில்கள் இடத்தை பதிவே செய்யமுடியாது. கோவில், அரசு நிலம், நீர்நிலை, வக்பு இடங்கள் குறித்து பத்திரப்பதிவு அலுவலகங்கள் பதிவு இருக்கும் முதல் நாளே டோக்கன் போடப்பட்டிருக்கும். இதில் தெரியாமல் பத்திரப்பதிவு நடைபெற வாய்ப்பில்லை. </p><p>பதிவுத்துறையில் மாவட்டத்தில் அனைத்து அதிகாரிகளும் உள்ளனர். அமைச்சர் நிர்மல்குமார் நேரடியாக பதில் சொல்லாமல் கடந்த 5 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் பதிவுத்துறையில் மோசடி என்கிறார். கடந்த 5 ஆண்டுகளில் பத்திரப்பதிவு குறித்து யாரும் விமர்சித்தது கிடையாது. சில தவறுகள் நடந்தபோது உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.</p><p>519 பத்திரப்பதிவு அலுவலகத்தில் நான் எனது ஆதரவாளர்களை நியமித்ததாகக் கூறுகின்றனர்.  எந்த ஒரு அலுவலகத்திலும் நான் பத்திரப்பதிவு செய்ய சொல்லவில்லை. பொறுப்புள்ள அமைச்சர் இதுபோன்று பொதுவாக பேசக்கூடாது. சட்டத்துறையில் வழக்கறிஞர்கள் நியமனத்தில் லஞ்சம் பெறுவதாக அவரது கட்சியைச் சேர்ந்தவரே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.</p><p>நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்திப்பதே வேலையாக பார்த்து வருகிறார். முதல்-அமைச்சரின் நிழல் அமைச்சராக நிர்மல்குமார் செயல்படுகிறார்.</p> <p>அனைத்து துறைக்கும் நிர்மல்குமார் பதிலளிக்கிறார். அறநிலையத்துறை இடத்தை பதிவுசெய்ய முடியாது, ஆனால் எப்படி பதிவு செய்தனர்? குறிப்பாக ஒரு பதிவாளரை இடமாற்றி பதிவு செய்துள்ளனர். என் மீதான குற்றச்சாட்டை ஆதாரத்தோடு சொல்லுங்கள். ஆட்சிக்கு வந்தவுடன் லஞ்சம் இருக்காது என்றனர், 60 பத்திரப்பதிவு அலுவலகத்தில் சோதனை நடத்தி ரூ.37 லட்சமும், நகராட்சி அலுவலகங்களில் 31 லட்சமும் கைப்பற்றினார்கள். அதற்கு என்ன பதில்? இதற்கு யார் பொறுப்பாவது? </p><h2>ஆதாரத்தை கூறவேண்டும்?</h2><p>மின்சார கட்டணம் இப்போது உயர்ந்துள்ளது. அமைச்சர் தனது இருதுறை சார்ந்த பிரச்சனைகள் குறித்து பேச வேண்டும். கூட்டணி தொடங்கி அனைத்து துறைகள் குறித்து ஆல் இந்தியா அளவில் அவர்தான் பேசி பிரச்சனையை திசைதிருப்புகிறார். 589 பத்திரப்பதிவு அலுவலகங்களில் எந்த இடத்தில் எனக்கு கட்டிங் கொடுத்தார்கள் எனவும், என் மூலமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதற்கான ஆதாரத்தை கூறவேண்டும். வணிக வரித்துறையில் லீக்கேஜ் என நிதித்துறை செயலர் கூறியுள்ளார். அவர் இருக்கும்போது தான் வருவாயைப் பெருக்க திட்டம் தீட்டப்பட்டது. </p><p>வணிக வரித்துறையில் ரூ.96 ஆயிரம் கோடி வருவாய் இருந்தது. அதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். 2021-ல் 96 ஆயிரம் கோடியாக இருந்த வருவாய் 2026-ல் ரூ.1 லட்சத்து 43 ஆயி்ரம் கோடியாக வருவாய் வந்துள்ளது. பதிவு கட்டணம் 1 சதவீதத்தில் இருந்தது பின்னர் 3 சதவீதத்தில் தொடங்கி 8 சதவீதமாக உயர்த்தப்பட்டது. </p><p>நான் 48 ஆண்டுகள் தி.மு.க.வில் உள்ளேன். ஒரே கட்சியில் 48 வருடமாக பொறுப்பில் உள்ளேன். ஆனால் அமைச்சர் நிர்மல் குமார் அ.தி.மு.க.வில் இருந்தார், பின்னர் மாறினார். 3.0 தி.மு.க. ஆட்சியில் ஒவ்வொரு பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் எந்தெந்த நிலங்களை பதியக்கூடாது என விதிகள் வகுக்கப்பட்டன. ஆனால் எப்படி பதிவு செய்தார்கள் என தெரியவில்லை. </p><h2>பொய்யை திரும்ப திரும்ப சொல்கின்றனர்</h2><p>மூன்று நாட்களுக்கு முன்பு கட்சியில் சேர்ந்தவர்களுக்கு அரசு வழக்கறிஞர் பதவி வழங்கி வருகின்றனர். மக்கள் முடிவை ஏற்றுகொள்கிறோம். வெற்றியையும், தோல்வியையும் பார்த்துள்ளோம். கடந்த 3 மாதத்தில் மின்சாரம் ஆங்காங்கே தட்டுப்பாடாக உள்ளது. தி.மு.க. ஆட்சியில் 5 ஆண்டுகளில் எங்கும் மின் தடை இல்லை. அவர்கள் பொய்யை திரும்ப திரும்பச் சொல்கின்றனர். </p><p>பத்திரப்பதிவுத் துறை புகார் தொடர்பாக குழு அமைப்பதை வரவேற்கிறோம், புகார் வந்தால் நடவடிக்கைகள் எடுங்கள் என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>&quot;ஒரு நடிகராக இது எனது மூன்றாவது தேசிய விருது, ஒரு இயக்குனராக எனது முதல் தேசிய விருது!&quot; - தனுஷ்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/as-an-actor-this-is-my-third-national-award-as-a-director-my-first-national-award-dhanush</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/as-an-actor-this-is-my-third-national-award-as-a-director-my-first-national-award-dhanush#comments</comments><guid isPermaLink="false">70769c5c-7541-437e-bab5-4b0a1770b8a2</guid><pubDate>Sun, 19 Jul 2026 07:48:16 +0000</pubDate><atom:updated>2026-07-19T07:48:16.944Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தனுஷ்,Captain Miller,Dhanush,Raayan,NationalAwards</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/g173d4cg/Dhanush" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dhanush]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/g173d4cg/Dhanush?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய அரசு அறிவித்துள்ள 72-வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமும் இயக்குநருமான <a href="https://www.maalaimalar.com/topic/dhanush">தனுஷ்</a> இரட்டை விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளார். </p><p>அவர் இயக்கி நடித்த 'ராயன்' திரைப்படம் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதையும், அவரது அசாத்திய நடிப்பில் வெளியான 'கேப்டன் மில்லர்' திரைப்படம் சிறந்த நடிகருக்கான சிறப்புத் தகுதி விருதையும் பெற்றுள்ளார்.</p><p>இந்த சிறப்புமிக்க வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் தனுஷ் தனது ரசிகர்களுக்கும், ஊடகங்களுக்கும் மற்றும் தேசிய விருது நடுவர் குழுவிற்கும் நன்றி தெரிவித்து உணர்வுப்பூர்வமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.</p><h2>தனுஷ் வெளியிட்டுள்ள பதிவில்,</h2><p>ஓம் நமசிவாய! 'ராயன்' படத்திற்காக சிறந்த பிராந்திய திரைப்படத்திற்கான தேசிய விருதையும், 'கேப்டன் மில்லர்' படத்திற்காக தேசிய விருதையும் (சிறப்புக் குறிப்பு - சிறந்த நடிகர்) பெற்றிருப்பது எனக்கு மிகுந்த பணிவையும் பெருமகிழ்ச்சியையும் அளிக்கிறது. </p><p>மதிப்பிற்குரிய தேசிய திரைப்பட விருதுகள் நடுவர் குழுவிற்கும் தேர்வுக் குழுவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள். எனது திரைப்பயணம் முழுவதும் எனக்கு உறுதுணையாக இருந்த பத்திரிகை, ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகத் துறையினருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். </p><p>ஒரு நடிகராக இது எனது மூன்றாவது தேசிய விருது, ஒரு இயக்குனராக எனது முதல் தேசிய விருது. எனது பலத்தின் தூண்களான என் ரசிகர்கள் இல்லாமல் இது சாத்தியமாகியிருக்காது. </p><p>என் இதயத்தின் ஆழத்திலிருந்து உங்களுக்கு நன்றி. 'கேப்டன் மில்லர்' படத்திற்கான இந்த அங்கீகாரம் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது, ஏனென்றால் அதுவே இன்றுவரை எனது மிகச்சிறந்த நடிப்பு என்று நான் எப்போதும் நம்பி வந்திருக்கிறேன். </p><p>நான் மிகவும் போற்றும் ஒரு நடிப்புக்கு சிறப்புக் குறிப்பு பெறுவது, இந்த கௌரவத்தை இன்னும் அர்த்தமுள்ளதாக்குகிறது. மேலும், ஒரு முதல் அனுபவம் எப்போதும் மறக்க முடியாதது. </p><p>ராயன் படத்திற்காக இயக்குநராக எனது முதல் தேசிய விருதை வென்றது, நான் என்றென்றும் போற்றிப் பாதுகாக்கும் ஒரு வரம்" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.</p><p>அறிக்கையின் இறுதியில், மேலும் நான் எப்போதும் சொல்வது போல், "எண்ணம் போல் வாழ்க்கை" மற்றும் "ஹர ஹர மகாதேவ்" எனக் குறிப்பிட்டு, "அன்புடன் D" என்று பதிவை நிறைவு செய்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="hi" dir="ltr">OM NAMASHIVAAYA ❤️ <a href="https://t.co/3wkQYHER25">pic.twitter.com/3wkQYHER25</a></p>&mdash; Dhanush (@dhanushkraja) <a href="https://x.com/dhanushkraja/status/2078502027198615957?ref_src=twsrc%5Etfw">July 18, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் மின்  நுகர்வோர்களுக்கு அதிகப்படியான மின் கட்டணம்: தலைமை பொறியாளர் சொல்வது என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-power-consumers-overcharged-bills-chief-engineer-explains</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-power-consumers-overcharged-bills-chief-engineer-explains#comments</comments><guid isPermaLink="false">cf877f38-1a01-484d-a65f-87d962166f5c</guid><pubDate>Sun, 19 Jul 2026 07:46:57 +0000</pubDate><atom:updated>2026-07-19T07:46:57.545Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மின்கட்டணம்,TANGEDCO,Tamilnadu Electricity,Meter Reading,தமிழ்நாடு மின்வாரியம்,மீட்டர் கணக்கீடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/qqxlobkp/Untitled-design-36.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tamil Nadu Power Consumers overcharged]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/qqxlobkp/Untitled-design-36.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் மீட்டர் கணக்கீடு மற்றும் பில்லிங் செயல்முறைகளில் ஏற்பட்ட குளறுபாடுகள் காரணமாக, சில இடங்களில் மின் நுகர்வோருக்கு தவறான மற்றும் அதிகப்படியான கட்டணம் பதிவாகி உள்ளதாக மின் வாரிய தலைமை பொறியாளர் தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து திருநெல்வேலி மண்டல தலைமை பொறியாளர் கூறுகையில், “மீட்டர் கணக்கீடு மற்றும் பில்லிங் செயல்முறையில் ஏற்பட்ட குறைபாடுகளால் சில இடங்களில் மின் நுகர்வோருக்கு தவறான மற்றும் அதிகப்படியான கட்டணம் பதிவாகியுள்ளது. </p><p>இதன் காரணமாக மீட்டர் கணக்கீடுகளில் குறைபாடுகள் ஏற்பட்டு, பொதுமக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.</p><p>மின்வாரிய கணக்கில் குளறுபடிகள் ஏற்பட்டு, பெரும் நிதி இழப்புகள் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் பொதுமக்க்ளுக்கு தவறான மற்றும் அதிகப்படியான மின்கட்டணங்கள் விதிக்கப்பட்டுள்ளது.</p><p>மின்வாரிய அதிகாரிகளால் அடிப்படை களஆய்வு முறையாக மேற்கொள்ளப்படவில்லை. இதனால்தான் இதுபோன்ற குறைபாடுகள் ஏற்பட்டுள்ளது.</p><p>தமிழகம் முழுவதும் உள்ள மின் விநியோக வட்டங்களில் முறையாக ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை, பழுதடைந்த மீட்டரின் மின்அளவுகளில் இருக்கும் பிரச்சனை தொடக்க நிலையிலேயே கண்டறியப்படவில்லை.</p><p>இதனால் தான் மீட்டர்கள் மற்றும் பில்லிங் செயல்முறைகளில் குறைபாடுகள் ஏற்பட்டது. களஆய்வு அதிகாரிகள் தங்களின் கடமைகளை முறையாக செய்திருந்தால், பிரச்சனைகளை தவிர்த்திருக்க முடியும்.</p><p>மேலும் கால முறைப்படி முறையான ஆய்வு மேற்கொள்ள, மேற்பார்வை பொறியாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளேன்.</p><p>மின்வாரிய ஊழியர்கள் அனைவரும் முறையாக பணி செய்கிறார்களா என்பதை, இனிவரும் காலங்களில் அடிக்கடி களஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது” என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>&apos;சென்னைவாசிகளுக்கு டபுள் தமாக்கா&apos;! தாம்பரம்-செங்கல்பட்டு ரெயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennaiites-get-double-dhamaka-new-rail-line-between-tambaram-and-chengalpattu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennaiites-get-double-dhamaka-new-rail-line-between-tambaram-and-chengalpattu#comments</comments><guid isPermaLink="false">0ec15782-2bb6-4e76-9001-d611335b3a0c</guid><pubDate>Sun, 19 Jul 2026 07:29:12 +0000</pubDate><atom:updated>2026-07-19T07:29:12.302Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tambaram,தாம்பரம்,செங்கல்பட்டு,chengalpattu,Train passengers,ரெயில் பயணிகள்,railway board,ரெயில்வே வாரியம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/zguk527o/rail-line.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tambaram Chengalpattu 4th line]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/zguk527o/rail-line.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தெற்கு ரெயில்வேயில் பயணிகள் மற்றும் சரக்கு ரெயில்களின் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், பல்வேறு புதிய உள்கட்டமைப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சென்னை, தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 4-வது புதிய ரெயில் பாதை அமைக்கும் திட்டம் உட்பட மொத்தம் மூன்று முக்கிய ரெயில் பாதை திட்டங்களுக்கு ரெயில்வே வாரியம் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. </p><p>இந்த மூன்று திட்டங்களையும் மொத்தம் 2,576 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்காக இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இத்திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளைத் தெற்கு ரெயில்வே மிகமிக விரைவில் தொடங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><h2><strong>கூட்ட நெரிசலைக் குறைக்க திட்டம்:</strong></h2><p>தெற்கு ரெயில்வேயில் எப்போதும் நெரிசல் மிகுந்த மிக முக்கியமான முதன்மை வழித்தடங்களில், தடையற்ற ரெயில் போக்குவரத்தை உறுதி செய்யும் பொருட்டு கூடுதல் ரெயில் பாதைகளை அமைக்க ரெயில்வே வாரியம் தொடர்ந்து ஒப்புதல் வழங்கி வருகிறது. </p><p>சென்னை புறநகர்ப் பகுதியில் மிக அதிக போக்குவரத்து நெரிசலைக் கொண்டுள்ள வழித்தடமாகத் தாம்பரம்-செங்கல்பட்டு தடம் விளங்குகிறது. இந்தத் தடத்தில் நிலவும் நெரிசலைக் குறைப்பதற்காக, 713 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்காவது புதிய ரெயில் பாதை அமைப்பதற்கு ரெயில்வே வாரியம் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.</p><h2><strong>அரக்கோணம், ஈரோடு வழித்தடம்:</strong> </h2><p>தாம்பரம்-செங்கல்பட்டு தடம் மட்டுமன்றி, மேலும் இரண்டு முக்கிய வழித்தடங்களிலும் இரட்டைப் பாதை அமைப்பதற்கான ஒப்புதல் கிடைத்துள்ளது. இதன்படி, அரக்கோணம் -செங்கல்பட்டு வழித்தடத்தில் 929 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரட்டை ரெயில் பாதை அமைக்கப்பட உள்ளது. </p><p>இதேபோல், ஈரோடு-கரூர் வழித்தடத்தில் 934 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரட்டைப் பாதை அமைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று முக்கியத் திட்டங்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 2,576 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு ரெயில்வே வாரியம் பச்சைக் கொடி காட்டியுள்ளது. இதன் மூலம் அடுத்தகட்டப் பணிகளைத் தெற்கு ரெயில்வே தற்போதே உடனே தொடங்கியுள்ளது.</p><h2><strong>தெற்கு ரெயில்வேயின் வருவாய்:</strong></h2><p>இது குறித்துத் தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், தெற்கு ரெயில்வேயில் விரைவு ரெயில்கள், குறுகிய தூரப் பயணியர் ரெயில்கள் மற்றும் புறநகர் மின்சார ரெயில்கள் எனத் தினசரி சுமார் 1,400 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் எண்ணிக்கையும் ஆண்டுக்காண்டு கணிசமாக உயர்ந்து வருகிறது. </p><p>குறிப்பாக, கடந்த நிதியாண்டில் மட்டும் சுமார் 152.75 கோடி மக்கள் தெற்கு ரெயில்வே மூலமாகப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதன் வாயிலாக ரெயில்வே துறைக்கு 8,215 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர்.</p><h2><strong>எதிர்கால இலக்குகள்:</strong></h2><p>கூடுதல் ரெயில் பாதைகள் அமைப்பது, முக்கிய ரெயில் நிலையங்களை உலகத் தரத்திற்கு மேம்படுத்துவது, பண்டிகைக் கால சிறப்பு ரெயில்களை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களில் ரெயில்வே துறை தற்போது தீவிர கவனம் செலுத்தி வருகிறது. </p><p>இந்த புதிய மூன்று ரெயில் பாதை திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்துவது மற்றும் தேவையான உள்கட்டமைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்வதற்கான 'டெண்டர்' விரைவில் வெளியிடப்பட உள்ளது.</p><p>இதுமட்டுமன்றி, திருச்சி, மதுரை மற்றும் கேரள மாநிலத்தின் பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய கோட்டங்களிலும் பல்வேறு புதிய ரெயில் பாதை பணிகள் தற்போது அதிவேகமாக நடந்து வருகின்றன. </p><p>இந்த உள்கட்டமைப்பு மற்றும் விரிவாக்கப் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவடையும் போது, வரும் 2030-ஆம் ஆண்டில், தற்போது இயக்கப்பட்டு வரும் ரெயில்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் 50 சதவீதம் கூடுதலாக ரெயில்களை இயக்க முடியும் என்று தெற்கு ரெயில்வே அதிகாரிகள் மிகவும் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி: மணல் சிற்பம் உருவாக்கி வாழ்த்து கூறிய சுதர்சன் பட்நாயக்</title><link>https://www.maalaimalar.com/sports/football/sudarshan-patnaik-sand-sculpture-honours-world-cup-final-and-messi</link><comments>https://www.maalaimalar.com/sports/football/sudarshan-patnaik-sand-sculpture-honours-world-cup-final-and-messi#comments</comments><guid isPermaLink="false">3bb2db24-5e61-4ca5-9f0b-a2186a9cb16c</guid><pubDate>Sun, 19 Jul 2026 07:08:52 +0000</pubDate><atom:updated>2026-07-19T07:08:52.392Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>sand art,உலகக் கோப்பை கால்பந்து,Sudarsan Pattnaik,FIFA World Cup,மணல் சிற்பம்,சுதர்சன் பட்நாயக்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/f56iehop/sand.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ sand art]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/f56iehop/sand.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கால்பந்து (Football)</category><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக், உலகின் முக்கிய நிகழ்வுகள் குறித்து அவ்வவ்போது சிற்பங்களை உருவாக்கி வருகிறார்.</p><h2>மணல் சிற்பம்</h2><p>இந்நிலையில், பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் குறித்து பூரி கடற்கரையில் 8 அடி உயர மணல் சிற்பத்தை அவர் உருவாக்கி உள்ளார்.</p><p>நியூயார்க்கில் இன்று நள்ளிரவு நடைபெறவுள்ள அர்ஜென்டினா-ஸ்பெயின் இறுதிப்போட்டிக்கு முன், ஒடிசாவின் பூரி கடற்கரையில் 8 அடி உயர மணல் சிற்பமாக பிபா உலகக் கோப்பையை உருவாக்கியுள்ளார்.</p><h2>இறுதிப்போட்டிக்கு வாழ்த்துகள்</h2><p>இந்தச் சிற்பத்தில் ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினாவின் தேசியக் கொடிகளுடன், "FIFA உலகக் கோப்பை 2026 - இறுதிப்போட்டிக்கு வாழ்த்துகள்" என்ற செய்தியும் இடம்பெற்றுள்ளது.</p><p>மேலும், கால்பந்தின் மாபெரும் சின்னங்களில் ஒருவரான லயோனல் மெஸ்சியின் உருவத்தையும், "நாங்கள் மெஸ்சியை நேசிக்கிறோம்" என்ற செய்தியுடன் செதுக்கியுள்ளார்.</p><p>இந்தச் சிற்பத்தை உருவாக்க சுமார் 7 டன் மணல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவரது மணல் கலை நிறுவனத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஒன்றிணைந்து இந்தச் சிற்பத்தை நிறைவு செய்துள்ளனர்.</p><p>இதுதொடர்பாக சுதர்சன் பட்நாயக் கூறியதாவது:</p><p>பிபா உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு வாழ்த்துகள். யார் வெல்வார்கள் என்று உலகம் முழுவதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தங்கக் கோப்பையின் 8 அடி உயர மணல் சிற்பத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இந்த முறை, 'வாழ்த்துக்கள்' என்ற செய்தியுடன் இந்த சிறப்பு சிற்பத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இந்த இறுதிப்போட்டியில் இரு அணிகளுக்கும் எங்களின் வாழ்த்துகள். </p><p>கால்பந்து ஜாம்பவானான லயோனல் மெஸ்சியைக் கவுரவிக்கும் வகையில், அவரது மணல் சிற்பத்தையும் உருவாக்கியுள்ளோம். கிழக்கு இந்தியாவில் கால்பந்துக்கு மிகுந்த வரவேற்பு இருக்கிறது.</p><figure><img alt="messi" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/96ibwhmy/messi.jpg" /></figure> <h2>மெஸ்சியை நேசிக்கிறோம்</h2><p>கால்பந்து ஜாம்பவனான மெஸ்சியின் சிற்பத்தை, 'நாங்கள் மெஸ்ஸியை நேசிக்கிறோம்' என்ற செய்தியுடன் உருவாக்கி உள்ளோம். மெஸ்சி தனது தனித்துவமான ஆட்டத்தால் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கிறார் என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>இணையத்தில் வைரலாகும் மத்திய அரசின் ‘ஃபேஸ் வாஷ்’: மிகக் குறைந்த விலை-எவ்வளவு தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/news/national/central-government-salicylic-acid-face-wash-goes-viral</link><comments>https://www.maalaimalar.com/news/national/central-government-salicylic-acid-face-wash-goes-viral#comments</comments><guid isPermaLink="false">064a06a6-d53c-4189-9483-34c2e10f17a1</guid><pubDate>Sun, 19 Jul 2026 06:48:24 +0000</pubDate><atom:updated>2026-07-19T06:48:24.027Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,Modi,central government,மோடி,SalicylicAcid,FaceWash,சாலிசிலிக் ஆசிட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/874wgbbe/modi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Central Government's Face Wash]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/874wgbbe/modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சமூக வலைத்தளங்களில் தற்போது ஒரு புதிய அழகு சாதனப் பொருள் இந்திய அளவில் பெரும் விவாதத்தையும் வரவேற்பையும் பெற்று வருகிறது. அது வேறு எந்த ஒரு முன்னணி நிறுவனத்தின் தயாரிப்பும் அல்ல. </p><p>இந்திய மத்திய அரசின் ஜன அவுஷதி கேந்திராக்களில் விற்பனை செய்யப்படும் 'சாலிசிலிக் ஆசிட் ஃபேஸ் வாஷ்' தான் அது. மிகக் குறைந்த விலையில், முகப்பருக்களைக் கட்டுப்படுத்தும் அசாத்தியமான நன்மைகளை வழங்குவதால், இளைஞர்கள் மற்றும் ஸ்கின்கேர் பிரியர்கள் மத்தியில் இந்த தயாரிப்பு காட்டுத்தீ போல பரவி வருகிறது.</p><h2><strong>வைரலாவதற்கான முக்கிய காரணங்கள் என்ன?</strong></h2><p>சந்தையில் முன்னணி பிராண்டுகளின் சாலிசிலிக் ஆசிட் ஃபேஸ் வாஷ்கள் பொதுவாக ரூ.150 முதல் ரூ.500 வரை விற்கப்படுகின்றன. ஆனால், மத்திய அரசின் பிரதான் மந்திரி பாரதிய ஜனவுஷதி பரியோஜனா திட்டத்தின் கீழ், இதன் 1% வேரியண்ட் ரூ.46.88-க்கும், 2% வேரியண்ட் ரூ.65.63-க்கும் மட்டுமே கிடைக்கிறது. இது சந்தை விலையை விட கிட்டத்தட்ட 70% முதல் 90% வரை குறைவாகும்.</p><h2><strong>தரத்திற்கு உத்தரவாதம்:</strong></h2><p>குறைந்த விலை என்றதும் தரம் குறைவாக இருக்குமோ என்ற ஐயம் தேவையில்லை. இந்த தயாரிப்புகள் அனைத்தும் WHO-GMP மற்றும் NABL அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களால் சான்றளிக்கப்பட்டு, கடுமையான தரக்கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே சந்தைக்கு வருகின்றன.</p><h2><strong>முகப்பரு மற்றும் எண்ணெய் பசையுள்ள சருமத்திற்கு தீர்வு:</strong></h2><p>சாலிசிலிக் ஆசிட் என்பது சரும துவாரங்களில் உள்ள அழுக்குகள் மற்றும் அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கி, முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் வராமல் தடுப்பதில் மிகச்சிறந்த மருத்துவக் காரணியாகக் கருதப்படுகிறது.</p><h2><strong>ஸ்கின்கேர் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றம்:</strong></h2><p>நெட்டிசன்கள் பலரும் தங்களது எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில், "இனி தேவையின்றி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம், அரசாங்கத்தின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது" எனப் பதிவிட்டு வருகின்றனர். மருத்துவ ரீதியாக பரிந்துரைக்கப்படும் இந்த ஃபேஸ் வாஷ், நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களுக்கும் தரமான சருமப் பராமரிப்பு கிடைக்க வழிவகை செய்துள்ளது. </p><p>இது சாலிசிலிக் ஆசிட் கொண்ட ஒரு மருத்துவத் தயாரிப்பு என்பதால், உணர்திறன் மிக்க சருமம் உள்ளவர்கள் அல்லது முதன்முறையாகப் பயன்படுத்துபவர்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அல்லது 'பேட்ச் டெஸ்ட்' செய்து பார்ப்பது நல்லது.</p><h2><strong>எங்கு வாங்குவது?</strong></h2><p>இந்த ஃபேஸ் வாஷை உங்கள் பகுதிக்கு அருகில் உள்ள ஜன அவுஷதி கேந்திராக்களில் நேரடியாகப் பெற்றுக்கொள்ளலாம். உங்களுக்கு அருகிலுள்ள கடையைக் கண்டறிய Janaushadhi Official Website மற்றும் https://janaushadhi.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள “Locate Kendra” பக்கத்தைப் பயன்படுத்தலாம்.</p><p>மக்களுக்கு மலிவு விலையில் மருந்துகளை வழங்குவதற்காகத் தொடங்கப்பட்ட ஜன அவுஷதி கேந்திராக்கள், தற்போது சாலிசிலிக் ஆசிட் ஃபேஸ் வாஷ், புரோட்டீன் பவுடர்கள் மற்றும் ஐசோட்ரெட்டினாயின் கேப்சூல்கள் போன்ற நவீன சுகாதார மற்றும் அழகுப் பராமரிப்புத் துறையிலும் தடம் பதித்து வருவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>வீடுகளுக்கான மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதா.., கணக்கிடுவது எப்படி?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tneb-electricity-tariff-for-households-been-increased-how-is-it-calculated</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tneb-electricity-tariff-for-households-been-increased-how-is-it-calculated#comments</comments><guid isPermaLink="false">33a2f5b7-fb34-4f1e-9883-4cc3c3ffd8b6</guid><pubDate>Sun, 19 Jul 2026 06:44:23 +0000</pubDate><atom:updated>2026-07-19T06:44:23.741Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TNEB,திமுக அரசு,மின்சார கட்டணம் பில்,தவெக அரசு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/h48k2pya/TNEB0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TNEB]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/h48k2pya/TNEB0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் த.வெ.க. தலைவர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றதும், வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். 500 யூனிட்டுகளுக்கு குறைவாக பயன்படுத்துபவர்களுக்கு இந்த சலுகை பொருந்தும் எனஅறிவித்தார். அதனால் 500 யூனிட்டுகளுக்கு அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு எந்த வித்தியாசமும் கிடையாது. பழைய மாதிரி 100 யூனிட் இலவசமாக வழங்கப்படும்.</p><p>விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றபின், தற்போது வீட்டு நுகர்வோர் மின்சார கட்டணம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் வீட்டு நுகர்வோருக்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு சில இடங்களில் மீட்டர் கோளாறு காரணமாக கூடுதல் கட்டணத்தை காண்பித்ததாக கூறப்படுகிறது. பொதுவாக பொதுமக்களுக்கு கணக்கீடு எவ்வாறு செய்யப்படுகிறது என்பதில் குழப்பம் நிலவுகிறது.</p><p>தேமுதிக பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதாவும் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார். இவரைத் தவிர்த்து திமுக முன்னாள் அமைச்சரான கீதா ஜீவனும் சத்தமில்லாமல் மின்கட்டணம் உயர்த்தப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.</p><h2>திமுக ஆட்சியில் மின்சார கட்டணம் முறை</h2><p>கடந்த ஆட்சி மற்றும் தற்போதைய ஆட்சியில் எவ்வாறு மின்சார கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று பார்ப்போம். கடந்த திமுக ஆட்சியில் அதாவது 2025-ல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டது.</p><h2>2025 மின்சாரம் கணக்கீடு முறை 500 யூனிட் வரை</h2> <p>அதன்படி ஒரு வீட்டு நுகர்வோர் 100 யூனிட் மின்சாரம் பயன்படுத்தினால் கட்டணம் செலுத்த வேண்டாம். 200 யூனிட் பயன்படுத்தினால் 101 முதல் 200 யூனிட்களுக்கு, ஒரு யூனிட்டிற்கு 2.35 ரூபாய் என்ற வகையில் 235 ரூபாய் செலுத்த வேண்டும்.</p><h2>300 யூனிட் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோர்</h2><p>300 யூனிட் பயன்படுத்தப்பட்டதாக வைத்துக் கொள்வோம். இந்த நுகர்வோருக்கு முதல் 100 யூனிட் இலவசம். அடுத்த 101 முதல் 200 யூனிட் வரை ஒரு யூனிட்டிற்கு 2.35 ரூபாய் விதம் 235 ரூபாய் வசூலிக்கப்படும். நீங்கள் அடுத்த 1 யூனிட் (அதாவது 201) பயன்படுத்தினாலும், 400 யூனிட் பயன்படுத்தினாலும் ஒரு யூனிட்டிற்கு 4.70 ரூபாய் விதம் 470 ரூபாய் வசூலிக்கப்படும். அதன்படி ஒரு நுகர்வோர் 300 யூனிட் பயன்படுத்தினால் 705 ரூபாய் கட்டணம் (201 முதல் 300 யூனிட்டிற்கு 470 ரூபாய்) செலுத்த வேண்டும்.</p><h2>400 யூனிட் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோர்</h2><p>400 யூனிட் பயன்படுத்தினாலும் 201 முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட்டிற்கு 4.70 ரூபாய் விதம் வசூலிக்கப்படும். அதன்படி முதல் 100 யூனிட்கள் இலவசம். அதன்பின் 101 முதல் 200 யூனிட் வரை ஒரு யூனிட்டிற்கு 2.35 ரூபாய் விதம் 235 ரூபாய். 201 முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட் 4.70 ரூபாய் விதம் 940 என மொத்தமாக 1175 ரூபாய் வசூலிக்கப்படும்.</p><h2>500 யூனிட் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோர்</h2><p>500 யூனிட் பயன்படுத்தினால் 401 முதல் 500 யூனிட் வரை ஒரு யூனிட் 6.30 ரூபாய் விதம் 630 ரூபாய் வசூலிக்கப்படும். 100 யூனிட் வரை இலவசம். 101 முதல் 200 யூனிட் வரை ஒரு யூனிட்டிற்கு 2.35 ரூபாய் விதம் 235 ரூபாய். 201 முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட் 4.70 ரூபாய் விதம் 940 ரூபாய் வசூலிக்கப்படும். மொத்தம் 1805 ரூபாய் வசூலிக்கப்படும்.</p><h2>2025 மின்சாரம் கணக்கீடு முறை 1000 யூனிட்களுக்கு மேல் (1001 யூனிட்கள்)</h2> <h2>500-க்கு அதிகமான யூனிட் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோர்</h2><p>500-க்கு மேல் ஒரு யூனிட் பயன்படுத்தினாலும் முதல் 100 யூனிட் இலவசம். 101 முதல் 400 யூனிட் வரை 4.70 ரூபாய் (1410 ரூபாய்), 401 முதல் 500 யூனிட் வரை 6.30 ரூபாய் (630 ரூபாய்), 501 முதல் 600 யூனிட் வரை 8.40 ரூபாய் (840 ரூபாய்), 601 முதல் 800 யூனிட் வரை 9.45 ரூபாய் (1890 ரூபாய்), 801 முதல் 1000 யூனிட் வரை 10.50 ரூபாய் (2100 ரூபாய்) என வசூலிக்கப்படும்.</p><p>1000 யூனிட்டிற்கு மேல் வீட்டு நுகர் பயன்படுத்தினால், 1 யூனிட்டிற்கு 11.55 ரூபாய் வசூலிக்கப்படும். 1000-த்திற்கு உட்பட்ட யூனிட்களுக்கு மேற்பகுதியில் சொன்னவாரு வசூலிக்கப்படும்.</p><h2>தற்போது தவெக ஆட்சிக்கு வந்த பிறகு மின்சார கட்டணம் கணக்கீடு</h2><p>முதலமைச்சர் விஜய் 200 யூனிட் வரை பயன்படுத்தினால் மின்சார கட்டணம் தேவையில்லை என்கிறார். 500 யூனிட்டிற்கு மேல் 1 யூனிட் வசூலித்தாலும் பழைய முறைப்படை கணக்கிடப்படும். அப்படி என்றால், 201 முதல் 500 யூனிட் வரை எப்படி கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று பார்க்க வேண்டும்.</p><h2>201 யூனிட் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோர்</h2><p>ஒரு வீட்டு நுகர்வோர் 201 யூனிட் பயன்படுத்தினார் என்றால், முதல் 200 யூனிட் இலவசம். அடுத்த யூனிட்டிற்கு 4.70 ரூபாய் வசூலிக்கப்படும்.</p><h2>2026 மின்சாரம் கணக்கிடு முறை 500 யூனிட்கள் வரை</h2> <h2>300 யூனிட் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோர்</h2><p>300 யூனிட் பயன்படுத்தினால் என்றால் 201 முதல் 300 வரை 100 யூனிட்டிற்கு ஒரு யூனிட் 4.70 ரூபாய் விதம் 470 ரூபாய் வசூலிக்கப்படும்.</p><h2>420 யூனிட் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோர்</h2><p>201 முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட்டிற்கு 4.70 ரூபாய் விதம் வசூலிக்கப்படும். அப்படி பார்த்தால் 400 யூனிட்டிற்கு ஒரு யூனிட்டிற்கு 4.70 ரூபாய் விதம் 940 ரூபாய் வசூலிக்கப்படும். 420 யூனிட் பயன்படுத்தினால், முதல் 200 யூனிட்டிற்கு கட்டணம் இல்லை. 201 முதல் 400 யூனிட்டிற்கு 4.70 விதம் 940 ரூபாய், 401 முதல் 500 யூனிட்டிற்கு 6.30 யூனிட் விதம் 20 யூனிட்டிற்கு 126 ரூபாய் வசூலிக்கப்படும். மொத்தமாக 1066 ரூபாய் வசூலிக்கப்படும்.</p><h2>501 யூனிட் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோர்</h2><p>501 யூனிட் பயன்படுத்தினால் முதல் 100 யூனிட் இலவசம். 101 முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட் 4.70 ரூபாய் என்ற விதத்தில் 300 யூனிட்டுகளுக்கு 1410 ரூபாய். 401 முதல் 500 யூனிட் வரை ஒரு யூனிட் 6.30 விதம் 630 ரூபாய், 501 முதல் 600 யூனிட் வரை ஒரு யூனிட் 8.40 ரூபாய் விதம் 8.40 ரூபாய் என மொத்தம் 2048 ரூபாய் வசூலிக்கப்படும்.</p><h2>601 யூனிட் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோர்</h2><p>601 யூனிட் பயன்படுத்தினால் முதல் 100 யூனிட் இலவசம். 101 முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட் 4.70 ரூபாய் என்ற விதத்தில் 300 யூனிட்டுகளுக்கு 1410 ரூபாய். 401 முதல் 500 யூனிட் வரை ஒரு யூனிட் 6.30 விதம் 630 ரூபாய், 501 முதல் 600 யூனிட் வரை ஒரு யூனிட் 8.40 ரூபாய் விதம் 840 ரூபாய், 1 யூனிட்டிற்கு 9.45 யூனிட் விதம் 9.45 ரூபாய் வசூலிக்கப்படும். மொத்தமாக 601 யூனிட்டிற்கு 2889.45 ரூபாய் வசூலிக்கப்படும்.</p><h2>801 யூனிட் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோர்</h2><p>801 யூனிட் பயன்படுத்தினால், முதல் 100 யூனிட் இலவசம். 101 முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட் 4.70 ரூபாய் என்ற விதத்தில் 300 யூனிட்டுகளுக்கு 1410 ரூபாய். 401 முதல் 500 யூனிட் வரை ஒரு யூனிட் 6.30 விதம் 630 ரூபாய், 501 முதல் 600 யூனிட் வரை ஒரு யூனிட் 8.40 ரூபாய் விதம் 840 ரூபாய், 801 முதல் 1000 யூனிட் வரை ஒரு யூனிட் 10.50 ரூபாய் விதம் வசூலிக்கப்படும். அதன்படி 1 யூனிட்டிற்கு 10.50 ரூபாய் வசூலிக்கப்படும். மொத்தமாக 801 யூனிட்டிற்கு 4780 ரூபாய் வசூலிக்கப்படும்.</p><h2>2026 மின்சாரம் கணக்கிடு முறை 1000 யூனிட்களுக்கு மேல் (1001 யூனிட்கள்)</h2> <h2>1001 யூனிட் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோர்</h2><p>1001 யூனிட் பயன்படுத்தினால் முதல் 100 யூனிட் இலவசம். 101 முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட் 4.70 ரூபாய் என்ற விதத்தில் 300 யூனிட்டுகளுக்கு 1410 ரூபாய். 401 முதல் 500 யூனிட் வரை ஒரு யூனிட் 6.30 விதம் 630 ரூபாய், 501 முதல் 600 யூனிட் வரை ஒரு யூனிட் 8.40 ரூபாய் விதம் 840 ரூபாய், 801 முதல் 1000 யூனிட் வரை ஒரு யூனிட் 10.50 ரூபாய் விதம்  2100 ரூபாய் வசூலிக்கப்படும். அடுத்த ஒரு யூனிட்டிற்கு 1000 யூனிட்டிற்கு மேல் ஒவ்வொரு யூனிட்டிற்கும் 11.55 ரூபாய் என்ற விதத்தில் 11.55 ரூபாய் வசூலிக்கப்படும். மொத்தமாக 1001 யூனிட்டிற்கு 6881.55 ரூபாய் வசூலிக்கப்படும்.</p><h2>2025 மற்றும் 2026 கட்டணம் வேறுபாடு</h2><p>இதனடிப்படையில் 2025-ல் 101 யூனிட் பயன்படுத்தினால் கட்டணம் இல்லை. 2026-லும் அதுதான். 2025-ல் 201 யூனிட் பயன்படுத்தினால் முதல் 100 யூனிட்டிற்கு கட்டணம் இல்லை. 101 முதல் 200-க்கு 2.35 ரூபாய் விதம் 235 ரூபாய். அடுத்த 1 யூனிட்டிற்கு (201 முதல் 400 வரை 1 யூனிட் 4.70 ரூபாய் விதம்) 4.70 ரூபாய் வசூலிக்கப்படும். அதன்படி 201 யூனிட் பயன்படுத்தினால் 239.70 ரூபாய் செலுத்த வேண்டும்.</p><p>2026-ல் அதாவது தற்போது 200 வரை இலவசம். அடுத்த 1 யூனிட்டிற்கு (201 முதல் 400 யூனிட் வரை 1 யூனிட்டிற்கு 4.70 ரூபாய் விதம்) 4.70 ரூபாய் செலுத்த வேண்டும்.</p><p>2025-ல் 300 யூனிட் பயன்படுத்தினால் 705 ரூபாய் செலுத்த வேண்டும். தற்போது 470 ரூபாய் செலுத்த வேண்டும்.</p><p>2025-ல் 400 யூனிட் பயன்படுத்தினால் 1175 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். தற்போது 940 ரூபாய் செலுத்த வேண்டும்.</p><p>2025-ல் 500 யூனிட் பயன்படுத்தினால் 1805 ரூபாய் செலுத்த வேண்டும். தற்போது 1507 ரூபாய் செலுத்த வேண்டும். </p><p>2025-ல் 600 யூனிட் பயன்படுத்தினால் 2880 ரூபாய் செலுத்த வேண்டும். தற்போதும் 2880 ரூபாய் செலுத்த வேண்டும். 500 யூனிட்டிற்கு மேல் பயன்படுத்தினால் இரண்டு காலத்திலும் ஒரு மாதிரியான கட்டணம்தான்.</p>]]></content:encoded></item><item><title>இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு போர்க்குற்றவாளி: அமெரிக்கா வரும் அவரை கைது செய்ய விரும்புகிறேன்- மம்தானி தடாலடி</title><link>https://www.maalaimalar.com/news/world/israeli-pm-to-be-arrested-at-us-summit-says-nyc-mayor</link><comments>https://www.maalaimalar.com/news/world/israeli-pm-to-be-arrested-at-us-summit-says-nyc-mayor#comments</comments><guid isPermaLink="false">bb150ceb-5a81-4edb-ab61-388a52b800a2</guid><pubDate>Sun, 19 Jul 2026 06:29:02 +0000</pubDate><atom:updated>2026-07-19T06:29:02.855Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Benjamin Netanyahu,பெஞ்சமின் நெதன்யாகு,NewYork Mayor,UN summit,நியூயார்க் மேயர்,ஐ.நா உச்சி மாநாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/yeopi5vo/Untitled-design-33.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ New York Mayor says  Israeli PM will be arrested]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/yeopi5vo/Untitled-design-33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h3><strong>இஸ்ரேல் பிரதமரை கைது செய்ய பேச்சுவார்த்தை:</strong> </h3><p>அமெரிக்காவில் நடைபெற இருக்கும் ஐ.நா. உச்சி மாநாட்டிற்காக வருகை தரும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கைது செய்வது குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக நியூயார்க் மேயர் ஸோஹ்ரான் மம்தானி தெரிவித்தார்.</p><p>அமெரிக்காவின் நியூயார்க்கில் வரும் செப்டம்பர் மாதத்தில் ஐ.நா. உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த உச்சி மாநாட்டில் 193 ஐ.நா. உறுப்பு நாடுகள் கலந்துகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h3><strong>நியூயார்க் மேயர் தாக்குதல்:</strong></h3><p>இந்நிலையில் இந்த மாநாட்டிற்கு வருகை தரும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கைது செய்யப்பட ஆலோசகர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக நியூயார்க் மேயர் தெரிவித்தார்.</p><p>இதுகுறித்து அவர் கூறுகையில், “பிரதமர் நெதன்யாகு, ஹக்கில் (Hague) உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருக்க வேண்டியவர் என்று நான் நம்புகிறேன்.</p><p>அவர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்ட ஒரு போர்க் குற்றவாளி. கடந்த பல ஆண்டுகளாக அவருடைய செயல்பாடுகள் ஏற்படுத்திய விளைவுகளின் காரணமாக, இந்த கருத்து பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.</p><p>ஒரு வெளிநாட்டு பிரதமரை கைது செய்ய உத்தரவிடும் அதிகாரம் தனக்கு உள்ளதா என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் நியூயார்க் சட்டம் என்ன செய்ய அனுமதிக்கிறதோ, அதை நாங்கள் செய்வோம்” என்று கூறினார்.</p><p>மேலும் அமெரிக்காவில் மேயர் பதவிக்கான தேர்தல் பிரச்சாரத்தின்போது, நெதன்யாகுவை கைது செய்வதாகவும் மம்தானி உறுதியளித்தார்.</p><h3><strong>இஸ்ரேல் தூதர் பதிலடி:</strong></h3><p>இதையடுத்து அமெரிக்க மேயரின் கருத்துக்களுக்கு இஸ்ரேல் கடுமையான எதிர்வினையை பதிவு செய்துள்ளது. இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ரேலின் தூதர் டானி டானன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மேயராக தனது பொறுப்புகளில் கவனம் செலுத்தி, தனது நகரத்தில் அதிகரித்து வரும் யூத எதிர்ப்பு அலையை எதிர்கொள்வதற்கு பதிலாக, அவர் இஸ்ரேல் அரசை தாக்குவதன் மூலம், விரோதத்தை தூண்டி, தலைப்புச் செய்திகளை உருவாக்க முயற்சிக்கிறார். இதனால் எதுவும் மாறப்போவதில்லை.</p><p>இஸ்ரேல் பிரதமர் நியூயார்க்கிற்கு வந்து, ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றி, இஸ்ரேலின் உண்மையையும் தன் குடிமக்களை பாதுகாப்பதற்கான அசைக்க முடியாத உரிமையையும் உலகத்தின் முன் எடுத்துரைப்பார்.</p><p>மேலும் யாராவது கைது செய்யப்பட வேண்டும் என்றால், அது நியூயார் மேயர் உங்களை தான்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>10 தேசிய விருதுகளை வென்ற தமிழ் திரையுலகம்: முதலமைச்சர் விஜய் வாழ்த்து!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/tamil-cinema-wins-10-national-awards-cm-vijay-congratulates</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/tamil-cinema-wins-10-national-awards-cm-vijay-congratulates#comments</comments><guid isPermaLink="false">9a21af42-39bc-4f7a-8024-86f47af34497</guid><pubDate>Sun, 19 Jul 2026 06:08:39 +0000</pubDate><atom:updated>2026-07-19T06:08:39.457Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தேசிய திரைப்பட விருது விழா,Tamil Cinema,National Awards,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,தமிழ் திரையுலகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/o0um4o4d/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ national awards-CM Vijay Extends Congratulations]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/o0um4o4d/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய சினிமாவில் உள்ள நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்து ஆண்டுதோறும் மத்திய அரசு விருது வழங்கி  கவுரவித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2024-ம் ஆண்டு வெளிவந்த படங்களுக்கான 72-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. </p><p>இதில் தமிழ் திரை உலகம் 10 தேசிய விருதுகளை வென்றுள்ளது. தேசிய திரைப்பட விருதுகளை வென்ற தமிழ் திரை கலைஞர்களுக்கு முதலமைச்சர் விஜய் தனது பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.</p><h4><strong>இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-</strong></h4><p>2024-ம் ஆண்டில் வெளிவந்த திரைப்படங்களுக்கான 72-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், நடிகர்  தனுஷ் இயக்கி நடித்துள்ள “ராயன்” திரைப்படத்திற்குச் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதும், “கேப்டன் மில்லர்” திரைப்படத்திற்குத் தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் விழுமியங்களை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படத்திற்கான விருது மற்றும் அப்படத்தில் நடித்த  தனுசுக்கும் சிறப்புப் பிரிவில் சிறந்த நடிகருக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>“அமரன்” திரைப்படத்திற்காக ராஜ்குமார் பெரியசாமிக்குச் சிறந்த இயக்குநருக்கான விருது, ஆர்.கலைவாணனுக்குச் சிறந்த படத்தொகுப்புக்கான விருது மற்றும் ஜி.வி.பிரகாஷ் குமாருக்குச் சிறந்த பின்னணி இசைக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>மேலும், “மகாராஜா” திரைப்படத்திற்காக அனல் அரசுக்குச் சிறந்த சண்டைப் பயிற்சிக்கான விருது மற்றும் அப்படத்தில் நடித்த சாச்சனா நமிதாசுக்குச் சிறந்த துணை நடிகை விருதும், “மெய்யழகன்“ திரைப்படத்திற்காக சுரேன் ஜிக்குச் சிறப்புப் பிரிவில் சிறந்த ஒலிக்கலவைக்கான விருதும், “ப்ளூ” குறும்படத்திற்காக டி.எஸ்.ஹரிஹர சுதனுக்குச் சிறந்த ஒலி வடிவமைப்புக்கான விருதும் அறிவிக்கப்பட்டு உள்ளது.</p><h2><strong>பெருமை:</strong></h2><p>10 தேசிய திரைப்பட விருதுகளைத்  தமிழ்த் திரையுலகம் வென்றுள்ளதைப் பெருமைக்குரியது என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் விஜய், வருங்காலங்களில் தமிழ்த் திரையுலகம் மேலும் பல விருதுகளைப் பெற்றிடவும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது- திமுக வெளிநடப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/monsoon-session-all-party-meeting-starts-dmk-stage-walkout</link><comments>https://www.maalaimalar.com/news/national/monsoon-session-all-party-meeting-starts-dmk-stage-walkout#comments</comments><guid isPermaLink="false">2eae477f-8fe7-454c-b5e2-bf7338f72fc1</guid><pubDate>Sun, 19 Jul 2026 06:08:00 +0000</pubDate><atom:updated>2026-07-19T06:08:00.761Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>winter session,நாடாளுமன்றம்,parliment,All Party Meeting,அனைத்து கட்சி கூட்டம்,மழைக்காலக் கூட்டத்தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/1citcrlb/BJP.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ bjp]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/1citcrlb/BJP.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவை என நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மொத்தம் 19 அமர்வுகளாக இந்தக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜூ அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.</p><h2>அனல் பறக்கும்</h2><p>இந்தக் கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்கள் தாக்கலாக உள்ள நிலையில், மத்திய அரசுக்கு எதிராக நீட் வினாத்தாள் கசிவு, அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு, மேற்காசிய தாக்குதல்களில் இந்திய மாலுமிகள் உயிரிழப்பு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதனால் இந்த கூட்டத்தொடர் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>காங்கிரஸ்-தி.மு.க. இடையேயான கூட்டணி முறிவு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் பிளவு போன்ற அரசியல் ரீதியிலான மாற்றங்களுக்கு இடையே நடைபெறும் மழைக்கால கூட்டத்தொடர் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>நாளை தொடங்கும் மழைக்கால கூட்டத்தொடர், அடுத்த மாதம் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.</p><h2>சட்ட திருத்த மசோதா</h2><p>சமீபத்தில் மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்ட சில அவசர சட்டங்களுக்கு மாற்றான மசோதாக்கள், இந்த கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. முக்கியமாக, வருமான வரி சட்டத்திருத்த மசோதா கொண்டுவரப்பட உள்ளது. சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தி பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்துக்கு மாற்றான மசோதாவும் அறிமுகப்படுத்தப்படும். தேசிய பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்பதை தண்டனைக்குரிய குற்றமாக்கும் சட்டத்திருத்த மசோதா, பிறப்பு-இறப்பு பதிவு சட்டத்திருத்த மசோதா உள்ளிட்டவையும் தாக்கலாக உள்ளன.</p><p>அனைத்து கட்சி கூட்டம்</p><p>பாராளுமன்ற கூட்டம் சுமூகமாக நடைபெறுவதற்கு எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு தேவை. எனவே பாராளுமன்ற கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பு மத்திய அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்துவது வழக்கம்.</p><p>இந்நிலையில், மழைக்கால கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் இன்று தொடங்கியது. </p><h2>திமுக வெளிநடப்பு</h2><p>மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜிக்கு எதிராக திரும்பி உள்ள அதிருப்தி எம்.பி.க்கள் 20 பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்றதைக் கண்டித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.</p><p>இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் பல்வேறு விஷயங்கள் பற்றி பேச உள்ளனர். குறிப்பாக, ஜந்தர்மந்தரில் இருந்து சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை வெளியேற்றிய விவகாரம் பற்றி அனைத்து எதிர்கட்சியினரும் பேச இருக்கிறார்கள்.</p><p>மேலும், அயோத்தி ராமர் கோவில் நன்கொடை கையாடல் செய்யப்பட்டதாக கூறப்படும் விவகாரமும் இன்றைய கூட்டத்தில் விஸ்வரூபம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>video-கதாநாயகனாக மிரட்டும் சூரி: இணையத்தைக் கலக்கும் ‘மண்டாடி’ பட ப்ரோமோ பாடல் வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/soori-threatens-as-video-hero-mandadi-promo-song-takes-internet-by-storm</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/soori-threatens-as-video-hero-mandadi-promo-song-takes-internet-by-storm#comments</comments><guid isPermaLink="false">b7d6efd8-41ff-4ceb-8d9c-9d4d89cdb2ba</guid><pubDate>Sun, 19 Jul 2026 05:47:54 +0000</pubDate><atom:updated>2026-07-19T05:47:54.145Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Actor Soori,மண்டாடி,Mandaadi,ஜி.வி.பிரகாஷ் குமார்,சூரி,Gvprakash kumar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/aodf37n2/soori.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ mandaadi song]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/aodf37n2/soori.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/vnxCNGuBchw"></iframe></figure><p>தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்து, தற்போது 'விடுதலை' மற்றும் 'கருடன்' போன்ற திரைப்படங்கள் மூலம் முழுநேர ஆக்சன் கதாநாயகனாக விஸ்வரூபம் எடுத்துள்ள நடிகர் '<a href="https://www.maalaimalar.com/topic/-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF">சூரி</a>'யின் அடுத்த பிரம்மாண்ட படைப்பான ‘<a href="https://www.maalaimalar.com/topic/-மண்டாடி">மண்டாடி</a>’ திரைப்படத்தின் முதல் பாடல் ப்ரோமோ தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. </p><p>இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் இப்பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது.</p><h2><strong>துள்ளலான நடனத்தில் சூரி:</strong></h2><p>இதுவரை உணர்வுப்பூர்வமான மற்றும் எதார்த்தமான கதாபாத்திரங்களில் மட்டுமே ரசிகர்கள் பார்த்து ரசித்த நடிகர் சூரி, இந்த ‘மண்டாடி’ ப்ரோமோ பாடலில் பக்கா மாஸ் மற்றும் துள்ளலான நடன அசைவுகளுடன் தோன்றி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.</p><p>தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அவரின் துடிப்பான இசையும், பின்னணியும் பாடலுக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. ஒரு பக்காவான 'டிரெய்னிங் ஆந்தம்' போல இந்த ப்ரோமோ பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>மீனவர்களின் வாழ்வியல் பின்னணி:</strong></h2><p>நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் சமூகத்தின் வாழ்வியலையும், அங்கு நடைபெறும் விறுவிறுப்பான படகுப் போட்டிகளையும்  மையமாகக் கொண்டு இத்திரைப்படம் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இதற்காக கிளைமேக்ஸ் காட்சிகள் உள்ளிட்ட பல முக்கிய பகுதிகள் தொடர்ச்சியாக பல இரவுகள் படமாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.</p><p>ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் நிறுவனம் சார்பில் 'எல்ரெட் குமார்' தயாரிப்பில், இயக்குநர் 'மதிமாறன் புகழேந்தி' இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். சூரியுடன் இணைந்து சுஹாஸ், மஹிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்திரா விஜய், பாலசரவணன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் ஈ.ராகவ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.</p><p>சுமார் ரூ.60 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தற்போது வெளியாகியுள்ள இந்த மாஸ் ப்ரோமோ பாடல், படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மூத்த குடிமக்களுக்கு MBBS-இல் ஏன் இடஒதுக்கீடு இல்லை? அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் 71 வயது முதியவர் வழக்கு!</title><link>https://www.maalaimalar.com/news/national/71-year-old-ashok-bahar-seeks-mbbs-quota-for-senior-citizens</link><comments>https://www.maalaimalar.com/news/national/71-year-old-ashok-bahar-seeks-mbbs-quota-for-senior-citizens#comments</comments><guid isPermaLink="false">e9b83c14-fc48-4abd-8080-07f86f0dfe4e</guid><pubDate>Sun, 19 Jul 2026 05:21:12 +0000</pubDate><atom:updated>2026-07-19T05:21:12.895Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>எம்பிபிஎஸ்,MBBS,NEET UG,அலகாபாத் உயர் நீதிமன்றம்,நீட்தேர்வு,AllahabadHighCourt</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/jo17jyxz/MBBS.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 71 year old man]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/jo17jyxz/MBBS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கல்வி கற்பதற்கும், கனவுகளை துரத்துவதற்கும் வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், 71 வயது முதியவர் ஒருவர் மருத்துவப் படிப்பில் மூத்த குடிமக்களுக்கு இடஒதுக்கீடு கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.</p><p>உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதான அசோக் பகார் என்ற முதியவர், 2026-ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வுக்குத் தயாராகி வரும் ஒரு தீவிர மருத்துவ ஆர்வலர் ஆவார். மருத்துவராக வேண்டும் என்ற தனது 52 ஆண்டுகால நீண்ட கனவை நனவாக்க அவர் தொடர்ந்து முயன்று வருகிறார்.</p><p>தனது வயதைக் காரணம் காட்டி மருத்துவக் கல்வியைக் கற்கும் உரிமை மறுக்கப்படக் கூடாது என்று வாதிடும் அசோக் பகார், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் முக்கிய அம்சங்களை குறிப்பிட்டுள்ளார். </p><p>அதில், தகுதிவாய்ந்த மூத்த குடிமக்களுக்கு MBBS சேர்க்கையில் 1% சிறப்பு இடஒதுக்கீடு அல்லது தனி ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் கல்வி கற்கும் உரிமை வயது முதிர்வோடு முடிந்துவிடுவதில்லை. என குறிப்பிட்டுள்ளார்.</p><p>நாடெங்கும் நீட் தேர்வு குறித்த விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், 71 வயது முதியவர் ஒருவர் தனது லட்சியத்திற்காக சட்டப் போராட்டம் நடத்துவது கல்வி வட்டாரங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த  வழக்கு வரும் ஜூலை 21 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content:encoded></item><item><title>ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் இந்தியாவின் பி.வி.சிந்து</title><link>https://www.maalaimalar.com/sports/pv-sindhu-clinches-japan-open-badminton-championship</link><comments>https://www.maalaimalar.com/sports/pv-sindhu-clinches-japan-open-badminton-championship#comments</comments><guid isPermaLink="false">0a1e9d17-501e-465a-ac9e-106c1ffc46a4</guid><pubDate>Sun, 19 Jul 2026 05:04:32 +0000</pubDate><atom:updated>2026-07-19T05:04:32.949Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>pv sindhu,பிவி சிந்து,Japan Open Badminton,ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/y6106zrt/pv-sindhu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ pv sindhu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/y6106zrt/pv-sindhu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் டோக்கியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, சீனா, ஜப்பான், இந்தோனேசியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.</p><p>இந்தியா சார்பில் லக்சயா சென், ஆயுஷ் ஷெட்டி, பிவி சிந்து, உன்னதி ஹூடா, சிராக் ஷெட்டி-சாத்விக் ரங்கிரெட்டி ஜோடி, தனிஷா கிரஸ்டோ-துருவ் கபிலா ஜோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p><h2>முதல் வீராங்கனை</h2><p>ஜப்பான் ஓபன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார் பி.வி.சிந்து.</p><p>இந்நிலையில், இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பானின் அகானே யமாகுச்சி உடன் மோதினார். </p><p>இதில் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய பி.வி.சிந்து 21-17, 21-17 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்று அசத்தினார்.</p><h2>சாம்பியன்</h2><p>ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் பெற்றவரான பிவி சிந்து கடந்த 2 ஆண்டாக சர்வதேச பட்டம் எதுவும் வெல்லாத நிலையில், தற்போது ஜப்பான் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p>பி.வி.சிந்து கடந்த 2024-ம் ஆண்டில் சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>சத்தமில்லாமல் மின் கட்டணம் உயர்வு: தி.மு.க. முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/electricity-charges-hike-former-dmk-minister-geetha-jeevan-alleges</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/electricity-charges-hike-former-dmk-minister-geetha-jeevan-alleges#comments</comments><guid isPermaLink="false">e3e55438-bc0d-4ac3-ad4f-6d4fbe5f12d5</guid><pubDate>Sun, 19 Jul 2026 04:45:29 +0000</pubDate><atom:updated>2026-07-19T04:45:29.103Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TNEB,கீதா ஜீவன்,geetha jeevan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/6kymdia8/GeethaJeevan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Geetha Jeevan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/6kymdia8/GeethaJeevan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தி.மு.க. முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-</p><p>தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றதும் ஒரு உத்தரவு போட்டாரு. அது என்னவென்று தெரியுமா., 500 யூனிட்டிற்கு குறைவாக பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்று தெரிவித்தார்.</p><p>கணக்கு போட்டு பார்த்தீர்களா எல்லோரும்., என்ன செய்திருக்காங்க. சத்தமில்லாமல் இன்று இரண்டு மடங்காக விலை ஏற்றப்பட்டிருக்கு. மின்சாரக் கட்டணம் ஏற்றப்பட்டிருக்கு. மு.க. ஸ்டாலின் ஆட்சியில் 100 யூனிட் குறைக்கப்பட்டபோது கட்டணம் எவ்வளவு இருந்தது. இப்போது எவ்வளவு இருந்தது என்று பாருங்கள்?.</p><h2>மின் கட்டணம் உயர்வு</h2><p>சத்தமில்லாமல் மின்சார கட்டணம் ஒரு யூனிட்டிற்கு இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இன்று 4 ரூபாய் 50 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. ஆகவே, அவர்கள் எந்த அளவிற்கு பொய்யான செய்திகளை பரப்புகிறார்கள் என்ற அறிந்து கொள்ள முடியும்.</p><p>விலைவாசி ஏறுகிறது. எல்லா இடத்திலும் மின்வெட்டு தொடர்ச்சியாக இருக்கிறது. நிறைய இடத்துல யாரும் கேள்வி கேட்க முடியல. புகார் செய்ய முடியல. எதற்கு மின்தடை ஏற்படுகிறது என்பது தெரியல. தவெக ஆட்சிக்கு வந்தபிறகு மின்தடை என்பது சாதாரண ஒரு நிகழ்வாகிவிட்டது. </p><p>பஞ்ச் டயலாக் ஆட்சிக்கு முடிவு கொடுக்கணும். வெறுமன வசனம் பேசி நடித்துவிட்டு மேடைல பேசிகிறாரு. அவ்வளவுதான். </p><p>இவ்வாறு கீதா ஜீவன் பேசினார்.</p><h2>பிரேமலதா விஜயகாந்த்</h2><p>நேற்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் அவர் "தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து ஏற்பட்டு வரும் மின்வெட்டு மற்றும் மின் பெரிதும் கட்டண உயர்வு காரணமாக பொதுமக்கள், விவசாயிகள், சிறு மற்றும் குறு தொழில்முனைவோர், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>இந்த நிலை மக்களின் அன்றாட வாழ்க்கையையும், விவசாய உற்பத்தியையும், தொழில் மற்றும் வணிக நடவடிக்கைகளையும் பாதிக்கிறது. எனவே, மின்சாரத் துறை அமைச்சரும், தமிழக முதல்வர் அவர்களும் இந்தப் பிரச்சினைக்கு மிக முக்கியத்துவம் அளித்து, உடனடியாக தீர்வு காண வேண்டும். </p><figure><img alt="Premalatha Vijayakanth" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-12/jd9hohil/premalatha.jpg" /></figure> <p>தமிழ்நாடு முழுவதும் ஏற்பட்டு வரும் மின் வெட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் சுமையை குறைக்கும் வகையில், மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். விவசாயத்திற்கான தடையற்ற மற்றும் தேவைப்படும் இடங்களில் இலவசமான மின்சாரம் வழங்கப்பட வேண்டும்.</p><p>மின் கட்டண உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் நிலை இருப்பதால், சாமானிய மக்களின் வாழ்க்கை மேலும் சிரமத்திற்கு உள்ளாகும். மின் தடையை முற்றிலும் அகற்றி மின்சார கட்டண உயர்வையும் திரும்ப பெற வேண்டும் என தேமுதிக சார்பாக வலியுறுத்துகிறோம்.</p><p>மின்சார உற்பத்தி செய்ய, வருகின்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அதற்கான அறிவிப்பை இந்த அரசு வழங்கி தமிழ்நாட்டை மீண்டும் மின் மிகை மாநிலமாக உருவாக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>உலகக் கோப்பை கால்பந்து: கோல்டன் பூட் விருது பெறப்போவது யார்?-மெஸ்சியை முந்திய எம்பாப்பே</title><link>https://www.maalaimalar.com/sports/football/who-will-win-world-cup-golden-boot-mbappe-surpasses-messi</link><comments>https://www.maalaimalar.com/sports/football/who-will-win-world-cup-golden-boot-mbappe-surpasses-messi#comments</comments><guid isPermaLink="false">5f9d906a-201b-4daf-b925-e2d764de8466</guid><pubDate>Sun, 19 Jul 2026 04:38:03 +0000</pubDate><atom:updated>2026-07-19T04:38:03.720Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Lionel Messi,உலகக் கோப்பை கால்பந்து,FIFA World Cup,kylian Mpappe,கைலியன் எம்பாப்பே,லயோனல் மெஸ்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/o5vy2km2/kylian.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mbappe, Messi ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/o5vy2km2/kylian.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கால்பந்து (Football)</category><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் அர்ஜென்டினா-ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.</p><h2>வெண்கலம்</h2><p>இதற்கிடையே, வெண்கலப் பதக்கம் யாருக்கு என தீர்மானிக்கும் 3வது இடத்துக்கான ஆட்டத்தில் இங்கிலாந்து-பிரான்ஸ் அணிகள் நேற்று மோதின.</p><p>ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே இங்கிலாந்து ஆக்ரோஷமாக ஆடியது. புகாயோ சாகா 3 கோல்களும், கேப்டன் டெக்லான் ரைஸ் 2 கோல்களும் அடித்தனர்.</p><p>ஸ்பெயின் சார்பில் கைலியன் எம்பாப்பே 2 கோல்கள் அடித்தார்.</p><p>முதல் பாதியில் இங்கிலாந்து 4-0 என முன்னிலை பெற்றது. இறுதியில், இங்கிலாந்து அணி 6-4 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தது.</p><h2>சாதனை</h2><p>இந்தப் போட்டி 1982க்குப் பிறகு ஒரு உலகக் கோப்பைப் போட்டியில் அடிக்கப்பட்ட அதிக கோல்களுக்கான சாதனையை படைத்தது</p><h2>கோல்டன் பூட்</h2><p>இந்நிலையில், பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரரான எம்பாப்பே, தனது ஒட்டுமொத்த கோல்களின் எண்ணிக்கையை 22 ஆக உயர்த்தி உள்ளார்.</p><p>இதன்மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரர் என்ற லயோனல் மெஸ்சியின் சாதனையை முறியடித்துள்ளார்.</p><p>நடப்பு தொடரில் மட்டும் எம்பாப்பே மொத்தம் 10 கோல்களை அடித்து தங்கக் காலணி (கோல்டன் பூட்) விருது பெறும் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். </p><p>கைலியன் எம்பாப்பே 10 கோல், லயோனல் மெஸ்சி 8 கோல், எர்லிங் ஹாலண்ட், ஜூட் பெல்லிங்காம் தலா 7 கோல்கள், ஹாரி கேன், உஸ்மான் டெம்பெலே தலா 6 கோல்களும் அடித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>ஹைதராபாத்தில் பரபரப்பு: அம்மன் சிலையோடு நிர்வாணமாக ஏரியில் குதித்து பெண் ஐடி ஊழியர் தற்கொலை!</title><link>https://www.maalaimalar.com/news/national/hyderabad-it-woman-jumps-naked-into-lake-with-temple-idol-dies-by-suicide</link><comments>https://www.maalaimalar.com/news/national/hyderabad-it-woman-jumps-naked-into-lake-with-temple-idol-dies-by-suicide#comments</comments><guid isPermaLink="false">cea6890d-96de-425c-ae09-eab8ca4afc24</guid><pubDate>Sun, 19 Jul 2026 04:18:27 +0000</pubDate><atom:updated>2026-07-19T04:18:27.433Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Hyderabad,IT Employee Suicide,ஹைதராபாத்,Beerappa Temple,ஐடி ஊழியர் தற்கொலை,பீரப்பா கோயில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/klvxj3wx/PERSPP.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  IT employee commits suicide]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/klvxj3wx/PERSPP.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஹைதராபாத் பீர்சாடிகுடா பகுதியில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வந்த இளம்பெண் ஒருவர், நள்ளிரவில் நிர்வாணமாக ஓடி, அருகில் இருந்த கோயிலில் அம்மன் சிலையைத் தூக்கிக்கொண்டு ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்ட விசித்திரமான  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>ஆந்திரப் பிரதேசத்தின் விசியநகரம் மாவட்டத்தைச் சேர்ந்த தேஜஸ்வினி என்ற இளம் பெண், பெங்களூருவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தனது வேலையை ராஜினாமா செய்த அவர், ஹைதராபாத் பீர்சாடிகுடா சங்கர் நகர் காலனியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனது தாயாருடன் வசித்து வந்தார். </p><p>நேற்று நள்ளிரவு சுமார் 2:30 மணியளவில், தேஜஸ்வினி திடீரென தனது தாயார் தூங்கிக்கொண்டிருந்த அறையை வெளிப்பக்கமாகப் பூட்டியுள்ளார். பின்னர், தனது ஆடைகள் அனைத்தையும் கழற்றிவிட்டு நிர்வாணமான நிலையில் வீட்டை விட்டு வெளியே ஓடியுள்ளார்.</p><h2><strong>சிசிடிவி காட்சிகளில் சிக்கிய விசித்திரம்:</strong></h2><p>அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்தபோது அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளிவந்துள்ளன. நள்ளிரவில் நிர்வாணமாக ஓடிய தேஜஸ்வினி, அங்குள்ள பீரப்பா கோயிலில் நுழைந்துள்ளார். அங்கு கருவறையில் இருந்த அம்மாவாரு சிலையைக் கையில் எடுத்துக்கொண்டு, அருகில் இருந்த பீர்சாடிகுடா ஏரியை நோக்கி ஓடி, அதனுள் குதித்துள்ளார்.</p><h2><strong>காலையில் நடந்த தேடுதல் வேட்டை:</strong></h2><p>இன்று அதிகாலை தேஜஸ்வினியின் தாயார் அருணா கண்விழித்தபோது, அறை வெளிப்பக்கமாகப் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த பக்கத்து வீட்டினர் கதவைத் திறந்துள்ளனர். </p><p>வீட்டில் தேஜஸ்வினி இல்லாததால், தாயார் அவரைப் பல இடங்களில் தேடியுள்ளார். இதற்கிடையில், ஏரியில் ஒரு பெண்ணின் சடலம் மிதப்பது குறித்து போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த ஹைதராபாத் பேரிடர் மீட்புக்குழுவினர் ஏரியிலிருந்து தேஜஸ்வினியின் உடலை மீட்டனர்.</p><h2><strong>மாயமான அம்மன் சிலை:</strong></h2><p>தேஜஸ்வினியின் உடல் மீட்கப்பட்ட போதிலும், அவர் கையில் எடுத்துச் சென்ற அம்மன் சிலை இன்னும் கிடைக்கவில்லை. பேரிடர் மீட்புப் படையினர் படகுகள் மூலம் ஏரிக்குள் இறங்கி அந்தச் சிலையைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த வழக்கின் முக்கிய ஆதாரமாக அச்சிலை கருதப்படுவதால் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. </p><p>பெண் ஐடி ஊழியர் ஏன் இந்த விபரீத முடிவை எடுத்தார், மனநல பாதிப்பு ஏதேனும் இருந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் மேடிபள்ளி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>இடதுசாரிகள் தனி அணியாக செயல்பட இருக்கிறோம்: சி.பி.எம். சண்முகம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cpm-shanmugam-we-left-parties-are-set-to-function-as-a-separate-bloc</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cpm-shanmugam-we-left-parties-are-set-to-function-as-a-separate-bloc#comments</comments><guid isPermaLink="false">2e79c09d-24fb-4b9e-8ba0-6c667b591ab6</guid><pubDate>Sun, 19 Jul 2026 04:08:24 +0000</pubDate><atom:updated>2026-07-19T04:08:24.622Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,சிபிஐ,CPI,tvk,சிபிஎம் சண்முகம்,CPM Shanmugam</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/4fq031nd/CPMShanmugam001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/4fq031nd/CPMShanmugam001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-</p><p>இடதுசாரிகள் ஒரு தனி அணியாக செயல்பட தீர்மானித்திற்கிறோம். இதனால்தான் மூன்று இடது சாரி கட்சிகள் இணைந்து மாநில ஒருங்கிணைப்புக் குழு என்பதை உருவாக்கியுள்ளோம். இடைத்தேர்தலில் அப்போதையை சூழ்நிலையை குறித்து தேர்தலில் போட்டியிடுவதா? இல்லையா? யாருடன் சேர்ந்து போட்டியிடுவது என்பது குறித்து அப்போது பேசுவோம். இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நாங்கள் எந்த முடிவையும் எடுக்கவில்லை.</p><h2>இடதுசாரிகள் நாங்கள் மாற்று கொள்கை</h2><p>நாங்கள் மாற்று அணி என்று சொல்லவில்லை. மாற்று கொள்கை என்று சொல்கிறோம். உழைப்பாளி மக்கள் எதிர்நோக்கும் எல்லா பிரச்சினைகளுக்கும்.., வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, வறுமை குடியிருப்பு பிரச்சினைகள் போன்ற ஏராளமான பிரச்சினைகளை மக்கள் எதிர்நோக்கி கொண்டிருக்கிறார்கள்.</p><p>இவற்றிற்கு எல்லாம் முதலாளித்துவ கட்சிகளால், முதலாளித்துவ கொள்கைளால் தீர்வே கிடையாது. இதற்கு நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டுமென்றால் இடதுசாரி கொள்கைகளால் மட்டுமே முடியும்.</p><p>இந்த ஆட்சி எல்லா பிரச்சினைகளையும் தீர்த்து விடும் என்பதனால ஆதரவு தரல. அதை நாங்கள் எதிர்பார்க்கவும் இல்லை. குதிரை பேரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, வழக்கு விசாரணை முடிவில் என்ன வருகிறது என்று பார்ப்போம்.</p><h2>முதலமைச்சர் செய்தியாளர்களை சந்திக்காதது?</h2><p>முதலமைச்சர் எந்தவித கருத்து குறித்தும் பத்திரிகையாளர்களை சந்தித்து பதில் அளிக்கவில்லை என்பது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும். அரசு சார்பில் பதில் இல்லை என்று எடுத்துக் கொள்ள முடியாது. அமைச்சர்கள் எல்லாம் பதில் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அமைச்சர்கள் நீங்கள் (செய்தியாளர்கள்) சொன்ன அனைத்து கருத்துகளுக்கும் பதில் அளித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். முதலமைச்சர் ஏன் சந்திக்கவில்லை, பேட்டி கொடுக்கவில்லை என்பதை அவரிடம்தான் கேட்கனும்.</p><h2>சமூக நீதித்துறை</h2><p>ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை என்றுதான் இருந்தது. இரண்டு பிரிவினரையும் பிரதிநிதித்துவம் படுத்துவதாகத்தான் இருந்தது. அப்படி இருந்திருக்கலாம். பெயரை ஏன் மாற்றினார்கள் எனத் தெரியவில்லை. பெயர் மாற்றிலும், என்ன பெயராக இருந்தாலும் அந்த துறை, அந்த மக்களுக்கு என்ன செய்யப்போகிறது என்பதுதான் விவாதிக்கப்பட வேண்டிய விசயம். பெயர் மாற்றத்தை விவாதிக்க வேண்டியதில்லை. அந்த துறையை சேர்ந்த மக்கள் ஏராளமான பிரச்சினைகளை சந்தித்து கொண்டிருக்கிறது. அவர்களுக்கு இந்த துறை என்ற செய்யப்போகிறது, அவர்களுடைய எதிர்பார்ப்புகளை எவ்வாறு பூர்த்தி செய்யப்போகிறது என்பதுதான் கவலைப்பட வேண்டிய விசயம்.</p><p>இவ்வாறு சண்முகம் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>சி.ஜே.பி-யின் நாடாளுமன்ற பேரணிக்கு அதிரடி தடை: ஜந்தர் மந்தரில் போலீஸ் குவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/topnews/delhi-parliament-march-ban-police-deployment-jantar-mantar</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/delhi-parliament-march-ban-police-deployment-jantar-mantar#comments</comments><guid isPermaLink="false">b95cec59-6543-4b5e-8298-6464c43fc538</guid><pubDate>Sun, 19 Jul 2026 03:51:42 +0000</pubDate><atom:updated>2026-07-19T03:51:42.548Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Jantar Mantar,சிஜேபி,CJP,NEET UG 2026,Delhi Parliament,டெல்லி நாடாளுமன்றம்,ஜந்தர் மந்தர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/5lzmfjf3/cjp.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ cockroch janata party]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/5lzmfjf3/cjp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p>தேசிய அளவிலான நீட்  தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்கு எதிராக, சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மற்றும் சி.ஜே.பி அமைப்பினர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நாளை காலை நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல போராட்டக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.</p><h2><strong>காவல்துறை தடை விதித்தது ஏன்?</strong></h2><p>அதி உயர் பாதுகாப்பு வளையமாக இருக்கும் நாடாளுமன்றப் பகுதியில் இந்த பேரணி நடத்தப்பட்டால் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்படும், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உண்டாகும் மற்றும் மத்திய டெல்லியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் இந்த பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>மேலும், ஜந்தர் மந்தரில் ஒரு நாள் மட்டுமே போராட்டம் நடத்த இந்த அமைப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும், ஆனால் அனுமதியின்றி அவர்கள் போராட்டத்தை நீட்டித்துள்ளதால் ஒட்டுமொத்த உண்ணாவிரதப் போராட்டமுமே தற்போது சட்டவிரோதமானது என்றும் காவல்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.</p><p>பேரணிக்காக முறையான எழுத்துப்பூர்வ அனுமதியும் கோரப்படவில்லை என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், தாங்கள் இதுகுறித்து ஏற்கனவே வாய்மொழியாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்துவிட்டதாக சி.ஜே.பி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் வைஷ்ணவி கௌர் தெரிவித்துள்ளார்.</p><h2><strong>சோனம் வாங்சுக் கட்டாய இடமாற்றம்:</strong></h2><p>கடந்த 21 நாட்களாக ஜந்தர் மந்தரில் தொடர் உண்ணாவிரதத்தில் இருந்த லடாக் ஆர்வலர் சோனம் வாங்சுக், நேற்று அதிகாலையில் டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவு மற்றும் மருத்துவ ஆலோசனையின் பேரில் காவல்துறையினரால் அங்கிருந்து வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டு சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். </p><p>அவர் கடுமையான நீர்ச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காவல்துறை கூறினாலும், இந்த சம்பவத்தின் போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.</p><p>போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதாகவும், சி.ஜே.பி செய்தித் தொடர்பாளர் அபிஜீத் திப்கே தற்காலிகமாக காவலில் வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தடியடி மற்றும் மின்சாரத்தை துண்டித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை டெல்லி காவல்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது.</p><h2><strong>பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு:</strong></h2><p>தற்போது ஜந்தர் மந்தர் பகுதியில் பதற்றம் நிலவுவதால், 200-க்கும் மேற்பட்ட டெல்லி போலீசார் மற்றும் விரைவு அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். நாளை பேரணி நடத்த முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விதிகளை மீறி நாடாளுமன்றத்தை நோக்கி முன்னேற முயல்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் டெல்லி காவல்துறை எச்சரித்துள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>