<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 17 Jul 2026 19:33:39 +0000</lastBuildDate><item><title>ரோகித் சர்மா ஓய்வு ஊகங்களை முற்றிலுமாக நிராகரித்த பி.சி.சி.ஐ. செயலாளர்!</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/bcci-rubbishes-speculation-about-rohit-sharma-says-he-will-continue-to-play-after-lords-odi</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/bcci-rubbishes-speculation-about-rohit-sharma-says-he-will-continue-to-play-after-lords-odi#comments</comments><guid isPermaLink="false">0e6a83bc-488c-4917-861d-48101e480ef0</guid><pubDate>Fri, 17 Jul 2026 19:28:26 +0000</pubDate><atom:updated>2026-07-17T19:28:26.449Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rohit sharma,ரோகித் சர்மா,BCCI,பிசிசிஐ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-13/oc57ou70/Rahitsharma0001.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ரோகித் சர்மா]]></media:title><media:description type="html"><![CDATA[ ரோகித் சர்மா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-13/oc57ou70/Rahitsharma0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டிக்குப் பிறகும் ரோகித் சர்மா இந்திய அணிக்காகத் தொடர்ந்து விளையாடுவார் என்று பி.சி.சி.ஐ. தகவல். </p><p>இந்த தகவலின் மூலம், இந்திய அணியில் ரோகித் சர்மா எதிர்காலம் குறித்த ஊகங்களை பி.சி.சி.ஐ. முற்றிலுமாக நிராகரித்தது.</p><p>வருகிற ஜூலை 19-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் ஒருநாள் போட்டி ரோகித் சர்மாவின் கடைசி சர்வதேச ஒருநாள் போட்டியாக இருக்கலாம் என்று பரவலாக ஊகங்கள் நிலவி வந்த நிலையில், பி.சி.சி.ஐ. செயலாளர் தேவாஜித் சைகியா அந்த கருத்துக்களை மறுத்தார்.</p><p><strong>மறுப்பு:</strong></p><p>இது குறித்து பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துடனான உரையாடலில் பேசிய அவர், "ரோகித் சர்மாவின் எதிர்காலம் குறித்து ஊடகங்களில் பல ஊகங்கள் பரவி வருகின்றன. </p><p>ஞாயிற்றுக்கிழமை லார்ட்ஸ் மைதானத்தில் ரோகித் தனது கடைசி போட்டியில் விளையாடுவார் என்பது போன்ற எந்தவொரு விவாதமும் நடைபெறவில்லை என்பதை நான் உறுதியாக கூற விரும்புகிறேன்.</p><p>ரோகித் இந்திய ஒருநாள் அணியின் வழக்கமான உறுப்பினர்; அணியின் திட்டமிடலில் அவர் இடம்பெறும் வரை தொடர்ந்து நாட்டிற்காக விளையாடுவார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், லார்ட்ஸ் ஒருநாள் போட்டி அவரது கடைசிப் போட்டியாக இருக்காது," என்று தெரிவித்தார்.</p><p><strong>உலகக் கோப்பை:</strong></p><p>2027 ஒருநாள் உலகக் கோப்பை வரை விளையாட வேண்டும் என்ற விருப்பத்தை ரோகித் சர்மா வெளிப்படையாக தெரிவித்து இருந்தாலும், இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் அவரது குறைவான ரன் குவிப்பு (முறையே 11 மற்றும் 26 ரன்கள்) இந்த விவாதத்தைத் தூண்டியுள்ளது.</p><p>மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியை இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.</p><p>இந்தப் போட்டியில் இங்கிலாந்து தரப்பில் அபாரமாக ஆடிய ஜோ ரூட் 99 ரன்களை விளாசி கடைசி வரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>வினாத்தாள் கசிவு விவகாரம்: கல்வி நிறுவனங்கள் மீது அரசியல் ஆதிக்கம் இருக்கக்கூடாது - ராகுல் காந்தி</title><link>https://www.maalaimalar.com/news/national/no-party-should-have-hold-on-edu-institutes-rahul-gandhi-blames-entire-system-for-paper-leaks</link><comments>https://www.maalaimalar.com/news/national/no-party-should-have-hold-on-edu-institutes-rahul-gandhi-blames-entire-system-for-paper-leaks#comments</comments><guid isPermaLink="false">2512aae3-3a92-423c-82d2-be35448f0ecc</guid><pubDate>Fri, 17 Jul 2026 18:22:46 +0000</pubDate><atom:updated>2026-07-17T18:22:46.252Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Congress,காங்கிரஸ்,paper leaks,வினாத்தாள் கசிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/ljtym4tb/R-G-2.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல் காந்தி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/ljtym4tb/R-G-2.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கல்வி நிறுவனங்கள் மீது எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது அமைப்போ ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார். மேலும், வினாத்தாள் கசிவு விவகாரத்தில் அரசியல் ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும் என்றும், இது அனைவரின் பொறுப்பு என்றும் அவர் வலியுறுத்தினார்.</p><p><strong>குற்றச்சாட்டு:</strong></p><p>இன்று (வெள்ளிக்கிழமை) மாலை நடைபெற்ற 'சத்ரோன் கி கூஞ்ச்' (மாணவர்களின் குரல்) பேரணியில் உரையாற்றிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரையிலான ஒட்டுமொத்த கல்வி அமைப்பும் ஈடுபட்டுள்ளது என்றும், இதனால் இதுவரை 7.5 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் குற்றம் சாட்டினார்.</p><p>இது குறித்து பேசிய ராகுல் காந்தி, "பயிற்சி மையங்கள், தேர்வு மையங்கள், வினாத்தாள் தயாரிப்பாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், போக்குவரத்து மற்றும் விநியோகஸ்தர்கள் முதல் தேசிய தேர்வு முகமை (NTA) மற்றும் உயர்மட்டத்தில் உள்ள கல்வி அமைச்சகம் வரை ஒட்டுமொத்த கட்டமைப்பும் இதில் ஈடுபட்டுள்ளது.</p><p><strong>ஆதிக்கம் கூடாது:</strong></p><p>நமது கல்வி நிறுவனங்கள் சுதந்திரமானவையாக இருக்க வேண்டும். எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது அமைப்போ நமது கல்வி நிறுவனங்கள் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடாது. துணைவேந்தர்கள் ஒரே அமைப்பை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடாது. அதேபோல் தேசிய தேர்வு முகமையின் பொறுப்பாளர் ஒரு அரசியல் அமைப்பை சேர்ந்தவராக இருக்கக்கூடாது.</p><p>நாம் வினாத்தாள் கசிவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அனைத்துக் கட்சிகளிடையேயும் ஒருமித்த கருத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த ஒருமித்த கருத்தை நடைமுறைப்படுத்துவது அனைவரின் பொறுப்பாகும். யாரேனும் வினாத்தாள் கசிவில் ஈடுபட்டால், உடனடியாகக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.</p><p><strong>உடனடி மறுதேர்வு:</strong></p><p>வினாத்தாள் கசிவு ஏற்பட்டால், மாணவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்; அத்துடன் உடனடியாக மறுதேர்வு நடத்தப்பட வேண்டும்.</p><p>மாணவர்களின் துயரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும், நமது தேர்வு மற்றும் மதிப்பீட்டு முறையில் நேர்மையை உறுதி செய்வதற்கும் இது கூடிய விரைவில் உறுதி செய்யப்பட வேண்டும்," என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/world/74-magnitude-earthquake-strikes-southern-mexico-tsunami-alert-issued</link><comments>https://www.maalaimalar.com/news/world/74-magnitude-earthquake-strikes-southern-mexico-tsunami-alert-issued#comments</comments><guid isPermaLink="false">efc60525-14e1-44bf-b3c0-53043957e858</guid><pubDate>Fri, 17 Jul 2026 17:26:46 +0000</pubDate><atom:updated>2026-07-17T17:26:46.170Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Earthquake,மெக்சிகோ,Mexico,Tsunami Alert,சுனாமி எச்சரிக்கை,நிலநடுக்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/bcobc0qv/mxco-erthqu.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Earthquake Map]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/bcobc0qv/mxco-erthqu.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மெக்சிகோவின் தென்கோடி மாநிலமான சியாபாஸின் கடற்கரைக்கு அருகே சக்திவாய்ந்த <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">நிலநடுக்கம் </a>ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 7.3 ஆக பதிவானது. </p><p><strong>15.2 கி.மீ. ஆழம்:</strong></p><p>இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு, அண்டை நாடுகளான குவாத்தமாலா மற்றும் எல் சால்வடாரிலும் கட்டிடங்கள் அதிர்ந்தன.</p><p>நிலநடுக்கத்தால் உடனடி சேதம் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த <a href="https://www.maalaimalar.com/news/world/venezuela-earthquake-death-count-rises-to-3889">நிலநடுக்கம் </a>15.2 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.</p><p><strong>சுனாமி எச்சரிக்கை:</strong></p><p>நில அதிர்வை தொடர்ந்து, நிலநடுக்க மையத்தில் இருந்து 300 கிலோமீட்டர்கள் (186 மைல்கள்) தொலைவிற்குள் அமைந்துள்ள கடற்கரைகளில் அபாயகரமான சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.</p><p>மெக்சிகோ மற்றும் குவாத்தமாலாவின் சில கடற்கரைகளில், இந்த அலைகள் ஓத மட்டத்திலிருந்து 0.3 மீட்டர் முதல் 1 மீட்டர் வரை உயரத்தை எட்டக்கூடும் என்றும் அது கூறியுள்ளது.</p><p>மெக்சிகோவின் கடற்படைச் செயலாளர் ரேமுண்டோ மொரேல்ஸ், நீர்மட்டம் அரை மீட்டருக்கு மேல் உயர வாய்ப்பில்லை என்று கூறியபோதிலும், தற்போதைக்கு மக்கள் கடற்கரைகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினார்.</p><p><strong>நியூசி. நிலநடுக்கம்:</strong></p><p>முன்னதாக நேற்று (ஜூலை 16) நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நியூசிலாந்தின் தென் தீவுப் பகுதியில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த கடுமையான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் அச்சம் அடைந்தனர்.</p><p>டீ அனாவ் நகருக்கு அருகில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தால் கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால், கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். மக்கள் உடனடியாக உயரமான இடங்களுக்கு செல்லவும் அந்நாட்டு அரசு அறிவுறுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>Kawasaki Versys-X 300 | MY25 மற்றும் MY26 மாடல்  பைக்குகளுக்கு ரூ.35,000 வரை தள்ளுபடி</title><link>https://www.maalaimalar.com/automobilenews/bike/kawasaki-versys-x-300-my25-and-my26-model-bikes-get-discounts-up-to-rs-35000</link><comments>https://www.maalaimalar.com/automobilenews/bike/kawasaki-versys-x-300-my25-and-my26-model-bikes-get-discounts-up-to-rs-35000#comments</comments><guid isPermaLink="false">b54ebf3a-e989-4985-9b0e-72aacbbdc2cf</guid><pubDate>Fri, 17 Jul 2026 16:37:31 +0000</pubDate><atom:updated>2026-07-17T16:37:31.767Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Kawasaki,கவாசகி,versys x 300,வெர்சிஸ்-எக்ஸ் 300</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/s1zar2lh/Untitled-design-26.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kawasaki Versys-X 300 Offers Up to ₹35,000 ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/s1zar2lh/Untitled-design-26.jpg?w=280" width="280"></media:thumbnail><category>பைக் (Automobile)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h3><strong>கவாசகி வெர்சிஸ்-எக்ஸ் 300:</strong></h3><p>கவாசகி நிறுவனம் தனது வெர்சிஸ்-எக்ஸ் 300 பைக்கிற்கான சலுகைகளை ஜூலை இறுதி வரை தொடர இருப்பதாக தெரிவித்துள்ளது.</p><p>MY25 மற்றும் MY26 ஆகிய இரண்டு மாடல்களும் ரொக்கத் தள்ளுபடிகள் மற்றும் இலவச உபகரணங்களுடன் கிடைக்கும் வகையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.</p><p>இந்த இரண்டு பதிப்புகளும் இயந்திர ரீதியாக ஒரே மாதிரியான ரூ. 3.49 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h3><strong>கவாசகி பைக்குகளுக்கு </strong>சலுகை எவ்வளவு:</h3><p>MY25 வெர்சிஸ்-எக்ஸ் 300 மாடலுக்கு ரூ.35,000 ரொக்கத் தள்ளுபடி எனவும், MY26 வெர்சிஸ்-எக்ஸ் 300 மாடலுக்கு ரூ.10,000 தள்ளுபடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இரண்டு பைக்குகளும் 40hp மற்றும் 26Nm ஆற்றலை உற்பத்தி செய்து, 296cc பேரலல்-ட்வின் இன்ஜினால் இயக்கப்படுகின்றன.</p><p>கவாசாகி வெர்சிஸ்-எக்ஸ் 300 ஜூலை சலுகைகள் MY25 ஒட்டுமொத்தமாக மிகவும் கவர்ச்சிகரமான சலுகையை வழங்குகிறது.</p><p>இரண்டு மாடல்களிலும், இலவசமாக வழங்கப்படும் பேனியர் செட் அல்லது சென்டர் ஸ்டாண்ட் ஆகிய தேர்வுகளும் உள்ளன. இந்த ஆக்சஸரி சலுகையின் மதிப்பை கவாஸாகி நிறுவனம் ரூ. 46,000 வரை மதிப்பிடுகிறது.</p><p>இருப்பினும், MY25 மாடல் ஒரு வலுவான ஒட்டுமொத்த தொகுப்பை வழங்குகிறது. இது ஆக்சஸரி சலுகையுடன் ரூ. 35,000 தள்ளுபடியையும் இணைத்து, அதன் எக்ஸ்-ஷோரூம் விலையை ரூ. 3.14 லட்சமாகக் குறைக்கிறது.</p><p>MY26 மாடலுக்கு ரூ. 10,000 என்ற சிறிய ரொக்கத் தள்ளுபடி வழங்கப்பட்டு, அதன் விலை ரூ. 3.39 லட்சமாகக் குறைகிறது.</p><p>வெர்சிஸ்-எக்ஸ் 300, 40hp மற்றும் 26Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் 296cc பேரலல் ட்வின் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது இந்தியாவில் கவாசாகியின் மிகவும் எளிதில் அணுகக்கூடிய அட்வென்ச்சர் மோட்டார் சைக்கிளாகத் திகழ்கிறது.</p><h3><strong>சலுகை காலம்:</strong></h3><p>இந்தச் சலுகைகள் ஜூலை 31, 2026 வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சமூக நீதி மாணவர் விடுதியில் முதல்வர் திடீர் விசிட்.. பல புகார்களை அடுக்கிய மாணவர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/social-justice-student-hostel-cm-visit-exposes-poor-conditions</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/social-justice-student-hostel-cm-visit-exposes-poor-conditions#comments</comments><guid isPermaLink="false">57e00050-041a-463a-8f08-8a9b8def8ad2</guid><pubDate>Fri, 17 Jul 2026 16:33:55 +0000</pubDate><atom:updated>2026-07-17T16:33:55.798Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Government Hostel,CM Vijay visit,Social Justice Hostel,அரசு விடுதி,முதல்வர் விஜய் ஆய்வு,சமூக நீதி விடுதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/31yfse3b/Untitled-design-27.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay visits Social Justice Hostel ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/31yfse3b/Untitled-design-27.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா சமூக நீதி மாணவர் விடுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆய்வு மேற்கொண்டார்.</p><p>அங்கு ஆய்வு மேற்கொண்டபோது மாணவர்களில் ஒருவர், விடுதியில் நிலவும் குறைகள் குறித்து புகார் தெரிவித்தார். </p><p>அப்போது அந்த மாணவர் கூறியதாவது:-</p><p>விடுதி உணவுகள் மிகவும் தரமற்ற முறையில் உள்ளது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.</p><p>தமிழ்நாடு அரசு பல வசதிகளுடன் விடுதி ஏற்பாடு செய்து கொடுத்தும், அதிகப்படியான குறைகள் தொடர்ந்து கொண்டுதான் வருகிறது.</p><p>இது சம்பந்தமாக கடந்த ஆண்டு அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம் (AISF) சார்பாக, இங்கு உள்ள மாணவர்கள் எல்லோரும் முற்றுகை போராட்டம் நடத்தினோம்.   </p><p>விடுதியில் புழுக்கள் உள்ள அசைவ உணவுகளை சமைப்பது தொடர்பாக புகார் கூறப்பட்டதையடுத்து, அப்போது ஐந்து நாட்கள் தரமான உணவுகள் வழங்கப்பட்டது. </p><p>ஆனால் அதையடுத்து மீண்டும் தரமற்ற நிலையிலேயே உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.</p> <p>இங்கு வசிக்கும் மாணவர்கள் பகுதி நேர வேலை செய்துகொண்டும், டிஎன்பிஎஸ்சி போன்ற அரசாங்க உத்தியோகங்களுக்கு படித்து கொண்டும் இரவு நேரத்தில் 10 மணியளவில் விடுதிக்கு வருகின்றனர்.</p><p>அப்போது விடுதியின் கதவுகள் மூடப்படுகிறது, இதன் காரணமாக மாணவர்கள் வெளியில் படுத்து தூங்கும் அவலநிலை ஏற்படுகிறது.</p><p>அப்போது வெளியில் இருக்கும் மாணவர்களிடம் அங்கிருக்கும் ரவுடி கும்பல்களால் தொல்லை ஏற்படுகிறது.</p><p>விடுதியில் வாலிபால் மைதானம் தயார் செய்யப்பட்டு பல மாதங்களாக உள்ளது. ஆனால் மாணவர்கள் அதை பயன்படுத்த மறுக்கப்பட்டு வருகிறது.</p><p>விடுதி காப்பாளர்கள் மாணவர்களை இழிவாக பேசுகின்றனர். 64 கேமரா இருக்க வேண்டிய இடத்தில் மிகக்குறைவான அளவிலேயே கேமராக்கள் உள்ளது.</p><p>கழிப்பறை கட்டிடங்கள் உடைந்து போய், சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. மேலும் அடிக்கடி தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்படுகிறது.</p><p>விடுதி சுகாதாரமற்ற நிலையில் இருப்பதால், கொசுக்கள் தொல்லை அதிகமாக உள்ளது.</p><p>இவ்வாறு அந்த மாணவர் தமிழக முதல்வர் விஜய்யிடம் அடுக்கடுக்காக பல புகார்களை தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>உலகின் அமைதியான நாடுகள் பட்டியல் வெளியீடு: கடந்த ஆண்டைவிட 12 இடங்கள் சரிந்த இந்தியா!</title><link>https://www.maalaimalar.com/news/national/list-of-worlds-most-peaceful-countries-released-india-slips-12-places-compared-to-last-year</link><comments>https://www.maalaimalar.com/news/national/list-of-worlds-most-peaceful-countries-released-india-slips-12-places-compared-to-last-year#comments</comments><guid isPermaLink="false">e3cc9bfe-f485-495e-801e-16e763251db0</guid><pubDate>Fri, 17 Jul 2026 16:27:24 +0000</pubDate><atom:updated>2026-07-17T16:27:24.133Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,Global Peace Index,உலகின் அமைதியான நாடுகள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/9r8xzexp/New-Project-2026-07-17T215706.661.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உலகின் அமைதியான நாடுகள் பட்டியல் வெளியீடு: கடந்த ஆண்டைவிட 12 இடங்கள் சரிந்த இந்தியா!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/9r8xzexp/New-Project-2026-07-17T215706.661.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலகின் அமைதியான நாடுகள் பட்டியலில் இந்தியா 127வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டைவிட இந்தாண்டு 12 இடங்கள் பின்னுக்கு சென்றிருக்கிறது. இந்த பட்டியலில் 19 ஆண்டுகளாக ஐஸ்லாந்து தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.</p><p>ஆஸ்திரேலியாவை சேர்ந்த பொருளாதார மற்றும் அமைதிக்கான நிறுவனம் கடந்த 2007-ம் ஆண்டில் இருந்து உலகின் அமைதியான நாடுகள் எவை? என்ற பட்டியலை வெளியிட்டு வருகிறது.</p><p>நாடுகளின் சமூக பாதுகாப்பு மற்றும் அமைதி, நடந்து வரும் உள்நாட்டு மற்றும் சர்வதேச மோதல்கள், ராணுவமயமாக்கல் ஆகிய 3 முக்கிய பிரிவுகளின்கீழ் 23 காரணிகள் ஆராயப்பட்டு இந்த பட்டியல் வெளியாகிறது.</p><p>அதன்படி, 2026-ம் ஆண்டுக்கான உலகின் அமைதியான நாடுகள் பட்டியல் வெளியாகியுள்ளது. 163 நாடுகள் கொண்ட இந்த பட்டியலில் ஐஸ்லாந்து நாடு முதலிடத்தில் உள்ளது. கடந்த 2007-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 19-வது ஆண்டாக ஐஸ்லாந்து முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.</p><h2><strong>இந்தியாவுக்கு 127-வது இடம்</strong></h2><p>இந்தாண்டு இந்த பட்டியலில் இந்தியாவுக்கு 127-வது இடம் கிடைத்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளான பூட்டான் 16-வது இடத்திலும், இலங்கை 67, நேபாளம் 111-வது இடம், வங்காளதேசம் 117-வது இடங்களில் இருக்கையில் இந்தியா 127-வது இடத்தில் உள்ளது. இதில் பாகிஸ்தானுக்கு 152-வது இடம் கிடைத்திருக்கிறது.</p><p>கடந்த 2025-ம் ஆண்டைவிட 12 இடங்கள் இந்தியா பின்னுக்கு சென்றுள்ளது. கடந்த 2025-ம் ஆண்டில் 115-வது இடத்தில் இருந்தது. 2007-ம் ஆண்டில் 109-வது இடத்தில் இருந்த நிலையில், தொடர்ந்து பின்னுக்கு சென்றபடி, கடந்த 2015-ம் ஆண்டில் 143-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. </p><p>பிறகு முன்னேறி வந்து, நடப்பாண்டில் மீண்டும் சறுக்கலை சந்தித்திருக்கிறது. எல்லைப் பதற்றங்கள் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு காரணங்களால் இந்தியா பின்னுக்கு சென்றிருப்பதாக சொல்லப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை மசோதா: ‘திமுகவிடம் பாஜக ஆதரவு கேட்கும்’ - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பேட்டி</title><link>https://www.maalaimalar.com/news/topnews/delimitation-bill-bjp-will-seek-dmks-support-union-minister-ramdas-athawales-statement</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/delimitation-bill-bjp-will-seek-dmks-support-union-minister-ramdas-athawales-statement#comments</comments><guid isPermaLink="false">0a157e74-3ad7-4b42-be32-dcedafc8bf35</guid><pubDate>Fri, 17 Jul 2026 16:12:40 +0000</pubDate><atom:updated>2026-07-17T16:12:40.977Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,Ramdas Athawale,Constituency Delimitation Bill</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/e51uv3my/New-Project-2026-07-17T214224.268.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தொகுதி மறுவரையறை மசோதா: ‘திமுகவிடம் பாஜக ஆதரவு கேட்கும்’ - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பேட்டி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/e51uv3my/New-Project-2026-07-17T214224.268.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உடனான சந்திப்பிற்கு பிறகு, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை மந்திரியும், இந்திய குடியரசு கட்சியின் தேசிய தலைவருமான ராம்தாஸ் அத்வாலே சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>தமிழ்நாட்டில் தலித் சமூகத்தினர் மீதான வன்கொடுமைகள், கொலை சம்பவங்களும் அதிகரித்துள்ளது. இதனை தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் 8 ஆயிரத்து 352 கலப்பு திருமணங்கள் நடந்துள்ளன. இது வரவேற்கத்தக்கது.</p><p>அமைச்சர்கள் சம்பத்குமார், வன்னியரசு அளித்த துறை சம்பந்தமான கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும். கடந்த முறை தோல்வி அடைந்த பெண்களுக்கான இட ஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை ஆகிய 2 மசோதாக்களும் வருகிற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பெரும்பான்மையுடன் நிறைவேறும்.</p><p>இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் - தி.மு.க. உறவில் பிளவு ஏற்பட்டுள்ளது. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசில் இருந்து 20 எம்.பி.க்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்ததன் மூலம் இந்த மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற வாய்ப்பு உள்ளது.</p><p>காங்கிரசுக்கு எதிரான நிலைப்பாட்டை தி.மு.க. எடுக்கும் அல்லது நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பை புறக்கணிக்கும் என எதிர்பார்க்கிறோம். இல்லையென்றாலும் தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற ஆதரவு தெரிவிக்குமாறு தி.மு.க.விடம் பா.ஜனதா தலைமை பேச்சுவார்த்தை நடத்தும். தமிழ்நாட்டில் ஆணவ படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டு வருவது வரவேற்கத்தக்கது.</p><p>த.வெ.க. அரசு ஆட்சியமைக்க தேசிய ஜனநாய கூட்டணி கட்சியின் ஆதரவை கேட்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் தி.மு.க. கூட்டணியை சேர்ந்த இதர கட்சிகளின் ஆதரவு பெற்று ஆட்சி அமைத்தது. தமிழ்நாடு அரசுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும். அரசு ஆதிதிராவிடர் நலத்துறையை சமூகநீதி துறை என பெயர் மாற்றியது வரவேற்கத்தக்கது.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-17-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-17-july-2026#comments</comments><guid isPermaLink="false">1ef20ff1-dcd7-484e-81a8-ef47dfdd988e</guid><pubDate>Fri, 17 Jul 2026 04:36:42 +0000</pubDate><atom:updated>2026-07-17T16:02:20.467Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/9x9oqe5m/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/9x9oqe5m/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/legendary-west-indies-cricketer-sir-garfield-sobers-no-more">வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் சர் கார்பீல்டு சோபர்ஸ் காலமானார்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/gyanesh-kumar-a-weapon-of-mass-destruction-for-electoral-rolls-congress-jairam-ramesh">வாக்காளர் பட்டியலுக்கான பேரழிவு ஆயுதம் ஞானேஷ் குமார்: ஜெய்ராம் ரமேஷ் விளாசல்..!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-stalin-criticises-tamil-nadu-over-police-exam-delay">காவலர் தேர்வை தள்ளி வைப்பதா? தமிழக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/bangladesh-crush-zimbabwe-second-t20-match">அசத்தல் பந்துவீச்சு: 2வது டி20 போட்டியில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது வங்கதேசம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/jairam-ramesh-explains-dmk-bjp-alliance-claims">திமுக-பாஜக கூட்டணி உண்மையா?: ஜெய்ராம் ரமேஷ் விளக்கம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/andy-burnham-elected-new-labour-party-leader-uk-pm-designate">தொழிலாளர் கட்சி தலைவராக ஆண்டி பர்ன்ஹாம் தேர்வு: இங்கிலாந்தின் அடுத்த பிரதமராகிறார்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/83fb8bd8-9a16-4296-9d74-9fa9c6d8a750">மக்கள் தொகை கணக்கெடுப்பு: சுய விவரங்களை பதிவு செய்த முதலமைச்சர் விஜய்</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/second-t20-match-bangladesh-set-187-target-for-zimbabwe">2வது டி20 போட்டி: ஜிம்பாப்வே வெற்றிபெற 187 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வங்கதேசம்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/1f7c43a8-6ddf-4372-a49a-2818290d5d6d">தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு என்ன? - திருமாவளவன் கேள்வி</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/58d7359e-20b7-4415-bda3-26c811047319">தமிழகம் உள்பட.. மறுசீரமைக்கப்பட்ட 75 ரெயில் நிலையங்களை திறந்து வைத்தார் பிரதமர் மோடி</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/worried-about-neet-results-tamil-nadu-government-mental-health-helpline" rel="nofollow">நீட் தேர்வு முடிவால் பதற்றமா? மாணவர்களின் மனநலம் காக்க தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-indictment-tn-govt">பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் தவெக அரசு!- நயினார் நாகேந்திரன் சாடல்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-hc-dismissed-ponrajs-petitions-seeking-the-quashing-of-cases">வழக்குகளை ரத்து செய்யக்கோரிய பொன்ராஜின் மனுக்கள் தள்ளுபடி- ஐகோர்ட் உத்தரவு</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/higher-neet-cutoff-to-lead-to-intense-medical-seat-race-jayaprakash-gandhi" rel="nofollow">நீட் தேர்வு முடிவு: கட்-ஆப் மதிப்பெண் உயர்வதால் கடும் போட்டி நிலவும்..! கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajmohan-malayadipatti-excavation">மலையடிப்பட்டி அகழாய்வு - தமிழர்களின் தொன்மையை‌ மேலும் உலகிற்கு பறைசாற்றும்: அமைச்சர் ராஜ்மோகன்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vaiko-says-made-two-major-mistakes-in-life">வாழ்க்கையில் 2 பெரிய தவறுகளை செய்துவிட்டேன் - வைகோ வேதனை</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/supreme-court-refuses-urgent-hearing-case-against-election-freebies">தேர்தல் இலவசங்களுக்கு எதிரான வழக்கை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/weather-department-warns-of-5-day-heat-spell-in-tamil-nadu" rel="nofollow">தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்..!- வானிலை ஆய்வு மையம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/governor-rajendra-vishwanath-arlekar-request-to-tn-people">மக்கள் தொகை கணக்கெடுப்பில் பங்கேற்குமாறு தமிழ்நாட்டு மக்களுக்கு ஆளுநர் வேண்டுகோள்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/trump-to-watch-argentina-spain-world-cup-final-live" rel="nofollow">உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி: அர்ஜென்டினா- ஸ்பெயின் ஆட்டத்தை நேரில் பார்க்கிறார் அதிபர் டிரம்ப்!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/international-justice-day-icc-rome-statute-and-global-justice-contradictions">சர்வதேச நீதி தினம்.. கடந்து வந்த பாதையும், கடக்க வேண்டிய தூரமும்..</a><br></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/coonoor-railway-station-revamped-pm-modi-to-inaugurate-it-today">கண்கவர் ஓவியங்களுடன் புதுப்பிக்கப்பட்ட குன்னூர் ரெயில் நிலையம் - பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார் </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/pakistan-backs-hafiz-saeed-indias-nia-issues-non-bailable-warrant-over-pahalgam-terror-attack">அவரை ஒன்னும் சொல்லாதீங்க.. பயங்கரவாதி ஹபீஸ் சயீத்துக்கு எதிராக என்ஐஏ பிடிவாரண்ட் - பொங்கிய பாகிஸ்தான்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/sports/pv-sindhu-enter-sf-round-in-japan-open-badminton">ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் பி.வி.சிந்து</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-lawyer-paranthaman-slams-vijay-regime-over-palani-land-fraud" rel="nofollow">பழனிக்கே மொட்டை போட்ட ஆட்சி விஜய் ஆட்சி- திமுக வழக்கறிஞர் பரந்தாமன்</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/rohit-sharma-no-more-automatic-selection-after-lord-odi">ஒருநாள் போட்டி அணியில் இனி இடம்பெறமாட்டார்- சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெறும் ரோகித் சர்மா</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-flags-off-india-made-hydrogen-train" rel="nofollow">இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் பயணிகள் ரெயில்- நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protest-sonam-wangchuk-on-critical-indefinite-fast-as-centre-stays-silent">Day 20: மரணப் படுக்கையில் சோனம் வாங்சுக்.. உடல் உறுப்புகள் செயலிழக்கும் அபாயம் - மருத்துவர்கள் எச்சரிக்கை</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/over-50-tenders-cancelled-municipal-administration-department-announcement">50-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து - நகராட்சி நிர்வாகத்துறை அறிவிப்பு </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mps-need-tokens-to-breathe-under-modi-government-manickam-thakur-asks" rel="nofollow">எம்பிக்கள் மூச்சு விடவும் மோடி அரசிடம் டோக்கன் வாங்க வேண்டுமா?- மாணிக்கம் தாகூர்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-paddy-bags-piling-up-at-procurement-centres-immediate-removal-required">கொள்முதல் நிலையங்களில் தேங்கும் நெல் மூட்டைகள்: உடனடியாக அகற்ற அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/school-van-hit-by-train-three-including-two-children-killed-at-murshidabad-govindpur-crossing-as-suburban-train-rams-vehicle-on-open-railway-track">மேற்கு வங்கம்: பள்ளிக் குழந்தைகள் சென்ற வாகனம் மீது ரெயில் மோதி விபத்து - 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலி </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ecr-high-level-road-project-technical-team-formed-to-cut-costs" rel="nofollow">ECR உயர்மட்ட சாலைத் திட்டம்: செலவை குறைக்க தொழில்நுட்பக் குழு அமைப்பு!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/rohingya-boat-tragedy-over-500-feared-dead-after-two-refugee-boats-vanish-off-myanmar-coast">மியான்மரில் இருந்து தப்பி ரோஹிங்கியா அகதிகள் சென்ற படகுகள் விபத்து.. 500-க்கும் மேற்பட்டோர் பலி என அச்சம்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/ukraine-defense-minister-fired-zelensky-sacks-drone-war-architect-sparking-nationwide-protests">உக்ரைன் ராணுவத்தில் டிரோன் போர்முறையை அறிமுகம் செய்த பாதுகாப்பு அமைச்சர் நீக்கம் - ஜெலன்ஸ்கியின் முடிவுக்கு எதிராக மக்கள் போராட்டம்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/iran-airstrikes-on-iran-bridges-us-targets-key-coastal-infrastructure-at-least-7-killed">ஈரானில் பாலங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் - 7 பேர் பலி.. பஹ்ரைன், கத்தார், குவைத் மீது ஈரான் பதில் தாக்குதல்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/us-election-data-theft-claim-trump-alleges-china-stole-data-of-220-million-voters">மாபெரும் தேர்தல் மோசடி.. 22 கோடி அமெரிக்க வாக்காளர்களின் தரவுகளை திருடிய சீனா - டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/mamata-faces-tmc-split-over-50-mlas-and-20-mps-quit-as-she-urges-rebels-to-leave-before-july-21">விலகிய எம்.பி.க்கு மிக்க நன்றி.. போகிறவர்கள் ஜூலை 21க்குள் போய்விடுங்கள் - கெடு விதித்த மம்தா</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-says-salutes-to-the-martyrs-on-martyrs-day">தியாகிகள் தினத்தையொட்டி வீரவணக்கங்கள்- முதலமைச்சர் விஜய்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-17-7-2026">GOLD PRICE TODAY: தொடர் சரிவில் தங்கம்: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/maternity-leave-professor-asserts-her-right-by-going-to-court">மகப்பேறு விடுப்பு - கோர்ட்டுக்கு சென்று உரிமையை நிலைநாட்டிய பேராசிரியை</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-inaugurate-75-railway-stations-today">சென்னை பூங்கா, குன்னூர் உள்பட 75 ரெயில் நிலையங்களை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்</a></p><p><strong><a href="https://www.maalaimalar.com/news/national/indias-first-private-orbital-rocket-vikram-1-to-launch-on-tomorrow">நாளை விண்ணில் பாய்கிறது இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!</a></strong></p><p><strong><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/express-trains-time-change-to-nilgiri-and-mangalore">பராமரிப்பு பணி: நீலகிரி, மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில்களின் நேரம் மாற்றம்!</a></strong></p>]]></content:encoded></item><item><title>வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் சர் கார்பீல்டு சோபர்ஸ் காலமானார்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/legendary-west-indies-cricketer-sir-garfield-sobers-no-more</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/legendary-west-indies-cricketer-sir-garfield-sobers-no-more#comments</comments><guid isPermaLink="false">e06ec4c9-8258-44fa-bb2f-f69aeccc6d7d</guid><pubDate>Fri, 17 Jul 2026 16:01:13 +0000</pubDate><atom:updated>2026-07-17T16:01:13.742Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கிரிக்கெட்,Sir Garfield Sobers,சர் கார்பீல்டு சோபர்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/chumtnlz/Sobers0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sir Garfield Sobers]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/chumtnlz/Sobers0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜாம்பவானாக திகழ்ந்த சர் கார்பீல்டு சோபர்ஸ், தனது 89 வயதில் இன்று காலமானார். இவர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார். இவர் சிறந்த இடது கை பேட்ஸ்மேன், பந்து வீச்சாளர் ஆல்-ரவுண்டர் ஆவார்.</p><p>90 வயதை பூர்த்தி செய்வதற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், இயற்கை எய்தியுள்ளார்.</p><h2>டெஸ்ட் போட்டிகளில் அசத்தினார் கார்பீல்டு சோபர்ஸ்</h2><p>இவர் 1954-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 1974 ஏப்ரல் மாதம் வரை சுமார் 20 ஆண்டுகள் விளையாடியுள்ளார். 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் 8,032 ரன்கள் அடித்துள்ளார். இதில் 26 சதங்கள் 30 அரைசதங்கள் அடங்கும். சராசரி 57.78 ஆகும். 365 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.</p><h2>ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டும்...</h2><p>தனது அபாரமான இடது கை வேகப்பந்து வீச்சால் 235 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 6 முறை 5 விக்கெட்டுகளும், 8 முறை 4 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். இவர் ஒரேயொரு ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடியுள்ளார்.</p><h2>தொடர்ச்சியாக 6 சிக்சர்கள் அடித்தவர்</h2><p>அதோடு மட்டுமல்ல முதல்தர போட்டியில் தொடர்ச்சியாக 6 சிக்சர்கள் அடித்த முதல் பேட்ஸ்மேன் ஆவார்கள். 1968-ல் நாட்டிங்காம்ஷைர் அணிக்காக விளையாடியபோது கிளாமோர்கன் அணிக்கு எதிராக இந்த சாதனையைப் படைத்துள்ளார்.</p><h2>முதல் தர போட்டிகள்</h2><p>383 முதல்தர போட்டிகளில் விளையாடி 86 சதங்கள், 121 அரைசதங்களுடன் 28314 ரன்கள் அடித்துள்ளார். அதோடு 1043 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 1 முறை 10 விக்கெட்டும் 36 முறை 5 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.</p><figure><img alt="Sir Garfield Sobers" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/29cb9jva/GarfieldSobers0001.jpg" /></figure><h2>லிஸ்ட் ஏ போட்டிகள்</h2><p>95 லிட்ஸ் ஏ போட்டிகளில் 1 சதம், 18 அரைசதங்களுடன் 2721 ரன்கள் அடித்துள்ளார். 109 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.</p><p>இவரது மறைவுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் தற்போதைய கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.</p><h2>சாதனையை முறியடித்த லாரா</h2><p>பாகிஸ்தானுக்கு எதிராக 1958-ல் டெஸ்ட் கிரிக்கெட் ஒரு இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 365 ரன்கள் குவித்தது சாதனையை இருந்தது. அதை பிரையன் லாரா 36 வருடங்களுக்குப் பிறகு 1994-ல் 375 ரன்கள் அடித்து முறியடித்தார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத் தலைவராக அமைச்சர் வெங்கட ரமணன் நியமனம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-minister-venkata-ramanan-appointed-as-consumer-goods-corporation-head</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-minister-venkata-ramanan-appointed-as-consumer-goods-corporation-head#comments</comments><guid isPermaLink="false">8e96a84e-eeea-4b3a-848b-ac4198c58487</guid><pubDate>Fri, 17 Jul 2026 15:55:33 +0000</pubDate><atom:updated>2026-07-17T15:55:33.906Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழ்நாடு அரசு,Venkataramanan,TNCSC,அமைச்சர் வெங்கட ரமணன்,நுகர்பொருள் வாணிபக் கழகம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/lhunbo22/New-Project-2026-07-17T212238.136.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத் தலைவராக அமைச்சர் வெங்கட ரமணன் நியமனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/lhunbo22/New-Project-2026-07-17T212238.136.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் புதிய தலைவராக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் பி.வெங்கட ரமணன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்திற்கான சிறப்பு அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.</p><p>இந்த நியமனத்தின் மூலம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் ஒட்டுமொத்த நிர்வாகம், செயல்பாடுகள் மற்றும் பொதுமக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் (ரேஷன் கடைகள்) ஆகிய பணிகளை அமைச்சர் நேரடியாக மேற்பார்வையிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>மணாலியில் பிளிங்கிட்: இருந்தாலும்.., யூடியூப் பிரபலம் வெளியிட்ட வீடியோ வைரல்..!</title><link>https://www.maalaimalar.com/news/national/blinkit-delivery-manali-mountain-region-viral-instagram</link><comments>https://www.maalaimalar.com/news/national/blinkit-delivery-manali-mountain-region-viral-instagram#comments</comments><guid isPermaLink="false">67b9ef73-a82a-4629-90a6-e77d25a6db26</guid><pubDate>Fri, 17 Jul 2026 15:34:40 +0000</pubDate><atom:updated>2026-07-17T15:34:40.686Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Manali,Blinkit,பிளிங்கிட்,மணலி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/cpp9olvw/Untitled-design-25.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Blinkit Delivery in  Manali ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/cpp9olvw/Untitled-design-25.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வீட்டிற்கு தேவையான மளிகைப் பொருட்களை சில நிமிடங்களில் டெலிவரி செய்யும் சேவையை பிளிங்கிட் நிறுவனம் தற்போது மலைப் பகுதிகளிலும் தொடங்கியுள்ளது.</p><p>ஆனால் அது அவ்வளவு எளிமையானதாகவோ அல்லது வழக்கமானதாகவோ இல்லை என்பதை பிரபல யூடியூபர் துருவ் என்பவர் பகிர்ந்த ஒரு வீடியோவில் உறுதியாகியுள்ளது.</p><p>இமாச்சல் பிரதேசத்தில் உள்ள மலைப்பகுதியான மணாலியில் பிளிங்கிட் நிறுவனத்தில் தான் ஆர்டர் செய்த பொருட்கள் எவ்வாறு டெலிவரி வாங்கப்பட்டது என்பதை வீடியோவில் பதிவிட்டுள்ளார்.</p><p>மலைப்பகுதியில் தங்கியிருந்த துருவ் அத்தியாவசிய பொருட்கள் தீர்ந்து விட்டதையடுத்து, பிளிங்கிட் செயலி மூலம் உணவுப் பொருட்களை ஆர்டர் செய்தார். அப்போது பிளிங்கிட் செயலி, உணவு டெலிவரி செய்ய 25 நிமிடங்கள் ஆகும் என குறுஞ்செய்தி அனுப்பியது. </p><p>இதையடுத்து இருசக்கர வாகனத்தால் மலை மீது பயணிக்க முடியாது என்பதால், பிளிங்கிட் பொருட்களை ஒரு கி.மீ. தூரம் கீழே வந்து வாங்க வேண்டியது ஆயிற்று யூடியூபருக்கு.</p><figure><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DaM3Wery-8B/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DaM3Wery-8B/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DaM3Wery-8B/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Akhil Dhruv (@dhruv_franky)</a></p></div></blockquote>
<script async src="//www.instagram.com/embed.js"></script></figure><p>இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அந்த நபர், “ஒரு டெல்லிவாசியின் பார்வையில் மணாலி வாழ்க்கை” என்று எழுதியிருந்தார்.</p><p>அந்தப் பதிவுக்குப் பதிலளித்த பயனர் ஒருவர், “பிளிங்கிட் இறுதியாக மலைப்பகுதிகளிலும் கிடைப்பதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.</p><p>இது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மணாலியில் ஒரு பல் துலக்கும் பிரஷ் வாங்குவதற்காக, இரவு முழுவதும் காத்திருந்ததை எனக்கு நினைவூட்டியது” என்று குறிப்பிட்டார்.</p><p>இந்தியாவில் அதிகமான டிஜிட்டல் நாடோடிகளும், பயணிகளும் இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் போன்ற இடங்களில் தங்குவதைத் தேர்ந்தெடுப்பதால், டெலிவரி நிறுவனங்கள் அத்தகைய சுற்றுலா நகரங்களுக்கும் தங்கள் சேவைகளை விரிவுபடுத்தி வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>‘புல்லட் ரயில் திட்ட தாமதத்திற்கு இந்திய அதிகாரிகளே காரணம்’ - ஜப்பான் முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு!</title><link>https://www.maalaimalar.com/news/national/former-japan-minister-says-indian-officials-caused-bullet-train-project-delay</link><comments>https://www.maalaimalar.com/news/national/former-japan-minister-says-indian-officials-caused-bullet-train-project-delay#comments</comments><guid isPermaLink="false">a6f94a8b-2cc0-43c4-a05b-082a8fb3d344</guid><pubDate>Fri, 17 Jul 2026 15:34:01 +0000</pubDate><atom:updated>2026-07-17T15:34:01.569Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>japan,ஜப்பான்,Bullet Train Project,Hideki Makihara,புல்லட் ரயில் திட்டம்,ஹிடேகி மகிஹாரா</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/zgb1zfkc/New-Project-2026-07-17T210340.266.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘புல்லட் ரயில் திட்ட தாமதத்திற்கு இந்திய அதிகாரிகளே காரணம்’ - ஜப்பான் முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/zgb1zfkc/New-Project-2026-07-17T210340.266.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மும்பை - அகமதாபாத் அதிவேக புல்லட் ரயில் திட்டத்தில் தாமதம் ஏற்பட்டதற்கு இந்திய அதிகாரிகளின் அலட்சியப் போக்கும், பொறுப்பற்ற உணர்வும், சுயநலமுமே காரணம் என்று ஜப்பானின் முன்னாள் நீதித்துறை அமைச்சர் ஹிடேகி மகிஹாரா குற்றம் சாட்டியுள்ளார். </p><p>இந்திய அதிகாரிகள் தங்களின் சொந்த நலன்களை மட்டுமே முன்னிறுத்திப் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், கொடுத்த வாக்குறுதிகளை மீண்டும் மீண்டும் மீறியதே தாமதத்திற்கு முழுக் காரணம் என்றும் ஹிடேகி மகிஹாரா தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த திட்டத்திற்கு பொறுப்பான அமைச்சரையும் மகிஹாரா விமர்சித்துள்ளார்.</p><p>இந்தத் திட்டம் ஜப்பானின் அசல் ஷின்கன்சென் மாதிரியிலிருந்தும், சிக்னலிங் முறையிலிருந்தும் கணிசமாக விலகிச் சென்றுவிட்டதாக டோக்கியோவைச் சேர்ந்த செய்தி இணையதளம் ஒன்றில், மூத்த ஜப்பானிய ரயில்வே பொறியாளரும், டெல்லியைச் சேர்ந்த மெட்ரோ வாகன ஆலோசகருமான இசாவோ சுஜிமுரா கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். </p><p>இசாவோ சுஜிமுரா எழுதிய கட்டுரைக்கு பதிலளிக்கும் விதமாக இக்கருத்தை இந்த சமூக வலைதளப் பதிவை முன்னாள் அமைச்சர் வெளியிட்டுள்ளார்.</p><p>மகிஹாராவின் இந்தக் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து காங்கிரஸ், பாஜகவை விமர்சித்துள்ளது. இதனைத்தொடர்ந்து இந்த குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்துள்ளது இந்தியா.</p><h2>ஜப்பான் குற்றச்சாட்டிற்கு இந்தியா மறுப்பு</h2><p>ஜப்பான் முன்னாள் அமைச்சரின் இந்தக் கருத்துக்கள் உண்மைக்கு முற்றிலும் மாறானவை என்று இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.</p><p>இந்தியா - ஜப்பான் இடையேயான பேச்சுவார்த்தைகள் சிறப்பாகவும், திட்டத்தின் கட்டுமானப் பணிகள் திட்டமிட்ட நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கேற்ப வேகமாக முன்னேறி வருவதாகவும், முதல் பகுதியாக சூரத் முதல் பிலிமோரா வரையிலான இயக்கம் 2027ம் ஆண்டிலேயே பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்துள்ளார்.</p><h2><strong>மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம்</strong></h2><p>இந்தியாவில் முதல் புல்லட் ரயில் திட்டம் மும்பை - அகமதாபாத் இடையே அமைக்கப்பட்டு வருகிறது. 508 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த வழித்தடம், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் தாத்ரா நகர் ஹவேலி ஆகிய பகுதிகள் வழியே மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தை அகமதாபாத்துடன் இணைக்கும். இதற்கிடையில் 12 நிலையங்கள் உள்ளன.</p><p>இந்த புல்லட் ரயில் மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடம் இரு நகரங்களுக்கு இடையேயான பயண நேரத்தை சுமார் எட்டு மணி நேரத்திலிருந்து இரண்டு மணி நேரமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  </p>]]></content:encoded></item><item><title>வாக்காளர் பட்டியலுக்கான பேரழிவு ஆயுதம் ஞானேஷ் குமார்: ஜெய்ராம் ரமேஷ் விளாசல்..!</title><link>https://www.maalaimalar.com/news/national/gyanesh-kumar-a-weapon-of-mass-destruction-for-electoral-rolls-congress-jairam-ramesh</link><comments>https://www.maalaimalar.com/news/national/gyanesh-kumar-a-weapon-of-mass-destruction-for-electoral-rolls-congress-jairam-ramesh#comments</comments><guid isPermaLink="false">79ab8170-4500-4ce6-b4cf-cca54f7fa4d2</guid><pubDate>Fri, 17 Jul 2026 15:33:13 +0000</pubDate><atom:updated>2026-07-17T15:33:13.682Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sir,எஸ்ஐஆர்,ஞானேஷ் குமார்,Gyanesh Kumar,election commision of india,இந்திய தேர்தல் ஆணையம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/g7cyirob/GyaneshKumar0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gyanesh Kumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/g7cyirob/GyaneshKumar0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலின்போது, ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டதாக இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. மேலும், SIR-ன்போது ஏராளமான வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டியது. பாஜக-வின் ஒரு பிரிவாகவும் செயல்படுவதாக குற்றம்சாட்டியது.</p><p>இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், வாக்காளர்கள் பட்டியலுக்கான பேரழிவு ஆயுதம் எனம் குற்றம்சாட்டியுள்ளார்.</p><h2>இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-</h2><p>ஞானேஷ் குமார் மீதான மிகக் கடுமையான விமர்சனம், UIDAI முதல் தலைமை இயக்குநராகப் பணியாற்றியவரும், கலாசார ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பெயரைக் கொண்டவருமான மூத்த ஐஏஎஸ் (IAS) அதிகாரி ராம் சேவக் சர்மாவிடமிருந்து வந்துள்ளது. SIR (எஸ்.ஐ.ஆர்) தொடர்பான ஒட்டுமொத்த நடவடிக்கையும் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகவும் பேரழிவை விளைவிப்பதாகவும் மாறியுள்ளது என்பதை விவரிக்கும் கட்டுரை ஒன்றை அவர் எழுதியுள்ளார்.</p><figure><img alt="Jairam Ramesh" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/b1asccjj/JairamRamesh0001.jpg" /></figure> <p>எனவே, இது காங்கிரஸ் கட்சியோ அல்லது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியோ கூறுவது மட்டுமல்ல.</p><h2>ஓய்வு பெற்ற அதிகாரி விமர்சனம்</h2><p>அதாவது, இவர் மோடி அரசாங்கத்தில் பணியாற்றிய ஒரு ஓய்வுபெற்ற அரசு அதிகாரி. இவருக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டிருந்தன. இப்போது இவர் வெளிப்படையாகக் கருத்து தெரிவித்துள்ளார். அதேபோல, ஓய்வுபெற்ற தேர்தல் ஆணையர்களும் (இதற்கு எதிராக) மிக வெளிப்படையாகவே தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.</p><p>தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை நீக்குவதற்கான தீர்மானத்தைக் கொண்டுவருவதற்காக, எதிர்க்கட்சிகள் ஏப்ரல் 24 அன்று நோட்டீஸ் ஒன்றை மாநிலங்களவையில் வழங்கின. உள்துறை அமைச்சர் அமித் ஷா தனக்கு என்ன சொல்கிறாரோ, அதை ஞானேஷ் குமார் செய்து வருகிறார்.</p><p>இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.</p><p>தற்போதைய வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் (SIR) குறித்து முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி தேர்தல் ஆணையத்தைக் கடுமையாகச் சாடிய சில நாட்களுக்குப் பிறகு ஜெய்ராம் ரமேஷ் இவ்வாறு தெரிவித்துள்ளார். </p><p>SIR பணிகள் வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்குவதிலேயே அதிக கவனம் செலுத்துவதாகவும், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் இது ஜனநாயகத்தைச் சீர்குலைத்துள்ளது என்றும் குரேஷி விமர்சித்திருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஆளுநரின் ஒற்றை வார்த்தை: விடுதியில் அசைவ உணவை முடிவுக்கு கொண்டு வரும் உ.பி. பல்கலைக்கழகம்..!</title><link>https://www.maalaimalar.com/news/national/ban-on-non-vegetarian-food-in-university-soy-paneer-introduced</link><comments>https://www.maalaimalar.com/news/national/ban-on-non-vegetarian-food-in-university-soy-paneer-introduced#comments</comments><guid isPermaLink="false">7d137898-4ddf-4dfe-96c7-a16571eaff3c</guid><pubDate>Fri, 17 Jul 2026 14:59:33 +0000</pubDate><atom:updated>2026-07-17T14:59:33.014Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Anandiben Patel,Non Veg Food,Medical University</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/tiap6jao/Untitled-design-24.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ UP Medical University bans non-veg in hostels]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/tiap6jao/Untitled-design-24.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விடுதியில் அசைவ உணவு சமைப்பதற்குத் தடைவிதித்து உத்தர பிரதேச மாநில கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டது. </p><p>இதையடுத்து மாணவர்கள் தங்களின் தினசரி புரோட்டீன் ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மீல் மேக்கர் (Soya Chunks), பன்னீர் மற்றும் சோயா பன்னீர் (Tofu) போன்ற சைவ உணவுகளை பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்த உள்ளது.</p><h3><strong>அசைவ உணவு குறித்து ஆளுநர் ஆனந்திபென் படேல் கவலை:</strong></h3><p>உத்தர பிரதேச மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக உள்ள ஆளுநர் ஆனந்திபென் படேல், ஜூலை 13 அன்று கே.ஜி.எம்.யு பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு, சில விடுதி உணவகங்களில் அசைவ உணவு பரிமாறப்படுவதாகக் கவலை தெரிவித்தார். </p><p>அவரது கருத்துக்கள், அனைத்து விடுதிகளிலும் அசைவ உணவு தயாரிப்பதற்குத் தடை விதிக்க பல்கலைக்கழக நிர்வாகத்தைத் தூண்டியதுடன், அரசியல் விமர்சனங்களையும் ஏற்படுத்தியது.</p><h3><strong>கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகம் நடவடிக்கை:</strong></h3><p>இதையடுத்து பல்கலைக்கழகத்தில் உள்ள 18 விடுதி உணவகங்களுக்கும் புரதச்சத்து நிறைந்த சைவ உணவைப் பரிமாற அறிவுறுத்தியுள்ளதாக கே.ஜி.எம்.யு. செய்தித் தொடர்பாளர் கே.கே. சிங் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக பல்கலைக்கழக செய்தி தொடர்பாளர் கே.கே. சிங் வெளியிட்ட அறிவிப்பில், “சராசரியாக சைவ உணவு உண்ணும், வயது வந்தோருக்கான தினசரி புரதத் தேவை 100 கிராம் ஆகும்.</p><p>அசைவ உணவு உண்பவர்களுக்கும் புரதச்சத்து கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.</p><p>மேலும், பரிந்துரைக்கப்பட்ட தினசரி உட்கொள்ளும் அளவைப் பூர்த்தி செய்வதற்காக, விடுதி உணவகங்கள் இனி மீல் மேக்கர் (Soya Chunks), பன்னீர் மற்றும் சோயா பன்னீர் (Tofu) மற்றும் பிற சைவ புரதச்சத்து நிறைந்த உணவுகளை இனி வழங்கும்” என்று கூறினார்.</p><p>இதையடுத்து பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சோனியா நித்யானந்த் கூறுகையில், “நமது நாட்டில் அதிக வெப்பமும் ஈரப்பதமும் நிலவுகிறது. எனவே, அசைவ உணவை, குறிப்பாகப் பெருமளவில் தயாரிக்கும்போது சுகாதாரத்தைப் பேணுவது கடினம்.</p><p>இது மிகவும் ஆரோக்கியமான ஒரு தேர்வாக இருப்பதாலும், இரைப்பை குடல், குறிப்பாக பெருங்குடல் புற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் மிகவும் குறைவு என்பதாலும், தற்போது உலகம் முழுவதும் அதிகமான மக்கள் சைவ உணவுப் பழக்கத்திற்கு மாறுவதை நாம் காண்கிறோம்.</p><p>அசைவ உணவு குறித்த ஆளுநரின் பரிந்துரை மிகவும் நேர்மறையானது” என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>லோகேஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மிஸ்டர் பாரத்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/cinema/mr-bharat-release-date-announced</link><comments>https://www.maalaimalar.com/cinema/mr-bharat-release-date-announced#comments</comments><guid isPermaLink="false">ce57632c-8c44-47c5-bbd6-ecd9c8340e58</guid><pubDate>Fri, 17 Jul 2026 14:51:16 +0000</pubDate><atom:updated>2026-07-17T14:51:16.468Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>லோகேஷ் கனகராஜ்,Lokesh Kanagaraj,நிரஞ்சன்,Niranjan,Mr Bhaarath,மிஸ்டர் பாரத்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/bv8vbstr/New-Project-2026-07-17T201555.469.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ லோகேஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மிஸ்டர் பாரத்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/bv8vbstr/New-Project-2026-07-17T201555.469.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா (Cinema)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனம் மற்றும் பேஷன் ஸ்டூடியோஸ், தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் 'மிஸ்டர் பாரத்'. </p><p>யூடியூபில் பிரபலமான நிரஞ்சன் இத்திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ‘ஃபைனலி’ யூடியூப் சேனல் புகழ் பாரத் இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.</p><p>சம்யுக்தா விஸ்வநாதன், பால சரவணன், நிதி பிரதீப், சுந்தர்ராஜன், லிங்கா, ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு பிரணவ் முனிராஜ் இசையமைத்துள்ளார். </p><p>இந்நிலையில் இப்படம் அக்டோபர் 1ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.</p><p>1986 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், சத்யராஜ் நடிப்பில் 'மிஸ்டர் பாரத்' என்ற படம் ஏற்கனவே வெளியானது. இப்படத்தின் தலைப்பை ரஜினிகாந்தின் உதவியின் மூல ஏவிஎம் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து லோகேஷ் பெற்றுள்ளார்.</p> <figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/uSRZDWV4uHI"></iframe></figure>]]></content:encoded></item><item><title>காவலர் தேர்வை தள்ளி வைப்பதா? தமிழக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-stalin-criticises-tamil-nadu-over-police-exam-delay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-stalin-criticises-tamil-nadu-over-police-exam-delay#comments</comments><guid isPermaLink="false">51bc473f-9b16-4134-998f-9aeca235a8d8</guid><pubDate>Fri, 17 Jul 2026 14:49:02 +0000</pubDate><atom:updated>2026-07-17T14:49:02.558Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,TN Govt,Udhayanidhi Stalin,தமிழக அரசு,police recruitment,காவலர் தேர்வு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/n4z42gy8/udhayanidhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ udhayanidhi stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/n4z42gy8/udhayanidhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:</p><p>தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்தது முதலே குற்றச்சம்பவங்கள் பெருகி வரும் நிலையில், முன்பை விட கூடுதலாக தற்போது காவலர்கள் தேவைப்படுகிறார்கள்.</p><p>ஆனால் நடப்பாண்டுக்கான காவலர்கள் நியமனத்தை இன்னும் ஓராண்டுக்கு இந்த அரசு தள்ளி வைத்திருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.</p><p>சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பின்படி அடுத்த ஆண்டுதான் காவலர்கள் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. இது, காவல்துறை பணிக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது. </p><p>இதன்மூலம் ஏற்கனவே சீர்கெட்டுக் கிடக்கும் சட்டம்-ஒழுங்கையும், காவல்துறை பணியின்மீது ஆர்வம் கொண்ட இளைஞர்களின் எதிர்காலத்தையும் ஒருசேர கேள்விக்குறியாக்கி இருக்கிறது இந்த அரசு.</p><p>எனவே, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையம் தற்போது வெளியிட்டிருக்கும் அட்டவணையை உடனடியாக திரும்பப் பெற்று, நடப்பு ஆண்டிலேயே காவலர்களை நியமிப்பதற்கான பணிகளை தொடங்க வேண்டுமென்று இந்த அரசை கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அசத்தல் பந்துவீச்சு: 2வது டி20 போட்டியில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது வங்கதேசம்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/bangladesh-crush-zimbabwe-second-t20-match</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/bangladesh-crush-zimbabwe-second-t20-match#comments</comments><guid isPermaLink="false">68ea7707-9a8f-4613-bdb0-9058f6fe4d62</guid><pubDate>Fri, 17 Jul 2026 14:21:30 +0000</pubDate><atom:updated>2026-07-17T14:21:30.856Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ZIMvBAN,ஜிம்பாப்வே வங்கதேசம் தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/4fmkzlmn/bangla.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ bangladesh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/4fmkzlmn/bangla.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது டி20 போட்டியில் வங்கதேசம் அணி அபார வெற்றி பெற்றது.</p><p>வங்கதேச அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.</p><p>முதலில் நடந்த ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 85 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி அபார வெற்றி பெற்றது.</p><p>அடுத்து நடந்த ஒருநாள் தொடரிலும் 2-1 என ஜிம்பாப்வே அணியே வெற்றி பெற்றது. முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது.</p><p>இந்நிலையில், ஜிம்பாப்வே, வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி புலவாயோவில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்துவீச்சை தேர்வு செய்தது.</p><p>அதன்படி, முதலில் களமிறங்கிய வங்கதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 186 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஜோடியான சைப் ஹசன், தன்ஜித் ஹசன் தமிம் அதிரடியாக ஆடியது. இருவரும் அரை சதம் கடந்தனர்.</p><p>முதல் விக்கெட்டுக்கு 120 ரன்கள் சேர்த்த நிலையில் சைப் ஹசன் 55 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து தன்ஜித் ஹசன் தமிம் 58 ரன்னில் ஆட்டமிழந்தார்.</p><p>கடைசி கட்டத்தில் இறங்கிய யாசிர் அலி- சயிபுதின் ஜோடி 19 பந்தில் 45 ரன்களை சேர்த்தது. இதில் சயிபுதின் கடைசி ஓவரில் 4 சிக்சர்களை விளாசினார்.</p><p>ஜிம்பாப்வே சார்பில் நகரவா, பிராட் இவான்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.</p><p>இதையடுத்து, 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. வங்கதேச வீரர்கள் துல்லியமாக பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன.</p><p>அதிகபட்சமாக ரியான் பர்ல் 29 ரன்னும், சிக்கந்தர் ராசா 28 ரன்னும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் நகரவா, பிராட் இவான்ஸ் ஜோடி 40 ரன்கள் சேர்த்தது. பிராட் இவான்ஸ் 25 ரன்கள் சேர்த்தார்.</p><p>இறுதியில், ஜிம்பாப்வே அணி 19.4 ஓவரில் 152 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 34 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி பெற்றதுடன், டி20 தொடரில் 1-1 என சமனிலை வகிக்கிறது.</p><p>வங்கதேசம் சார்பில் ரிஷாத் ஹொசைன் 4 விக்கெட்டும், மெஹிதி ஹசன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p>]]></content:encoded></item><item><title>ஜனநாயகன் படத்தின் ‘அடியே என் பூந்தேனே’ பாடல் வெளியானது!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-song-adiye-en-poonthene-from-the-movie-jananayagan-has-been-released</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-song-adiye-en-poonthene-from-the-movie-jananayagan-has-been-released#comments</comments><guid isPermaLink="false">6441abc2-20f5-48ea-b875-d2fb2a49283f</guid><pubDate>Fri, 17 Jul 2026 14:14:09 +0000</pubDate><atom:updated>2026-07-17T14:14:09.314Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Jana Nayagan,ஜன நாயகன்,விஜய்,அனிருத்,Anirudh,H Vinoth,ஹெச் வினோத்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/m9h95j4d/New-Project-2026-07-17T194935.061.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜனநாயகன் படத்தின் ‘அடியே என் பூந்தேனே’ பாடல் வெளியானது!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/m9h95j4d/New-Project-2026-07-17T194935.061.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளப் படம் ஜன நாயகன். கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான இப்படம் இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கே வெளிவர வேண்டியது. </p><p>ஆனால் தணிக்கை சிக்கலால் வெளிவரமால் போனது. இந்நிலையில் கடந்தவாரம் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் படம் ஜூலை.23ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது.</p><p>இந்நிலையில் படத்தின் அடியே என் பூந்தேனே பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி உள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், பாடலையும் அவரே பாடியுள்ளார். </p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/u06B4BVTgvU"></iframe></figure>]]></content:encoded></item><item><title>திமுக-பாஜக கூட்டணி உண்மையா?: ஜெய்ராம் ரமேஷ் விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/national/jairam-ramesh-explains-dmk-bjp-alliance-claims</link><comments>https://www.maalaimalar.com/news/national/jairam-ramesh-explains-dmk-bjp-alliance-claims#comments</comments><guid isPermaLink="false">cd006d5f-6fec-452b-bd85-32479ccd7d20</guid><pubDate>Fri, 17 Jul 2026 13:35:32 +0000</pubDate><atom:updated>2026-07-17T13:35:32.230Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,Congress,காங்கிரஸ்,ஜெய்ராம் ரமேஷ்,Jairam Ramesh</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/njv3e892/jairam.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ jairam ramesh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/njv3e892/jairam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 20-ம் தேதி தொடங்க உள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் கடந்தமுறை தாக்கல் செய்த தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்தாலும், மீண்டும் தாக்கல் செய்ய மத்திய ஆலோசித்து வருகிறது.</p><p>இந்நிலையில், தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p><p>பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணியில் தி.மு.க. ஒருபோதும் இடம்பெறாது.</p><p>இரு கட்சிகளின் கொள்கைகளும் வெவ்வேறானவை என்பதால் அவை ஒன்றிணைய வாய்ப்பில்லை.</p><p>கடந்த 8-ம் தேதி நடந்த இண்டியா கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை என்பதும், நாங்கள் தவெகவை ஆதரிக்கிறோம் என்பதும் உண்மைதான்.</p><p>தவெக அரசில் எங்கள் கட்சியைச் சேர்ந்த இருவர் அமைச்சர்களாகவும் இருக்கிறார்கள். எனினும், நாங்கள் தொடர்ந்து திமுக எம்பிக்களுடன் தொடர்பில் இருக்கிறோம்.</p><p>திமுகவுடன் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன. திமுக இன்னும் ஒரு எதிர்க்கட்சியாகவே உள்ளது. அது (மத்தியில்) ஆளும் கட்சியாகவோ அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கமாகவோ மாறவில்லை.</p><p>ஸ்டாலின் கூறி இருப்பதைப் படித்தேன். பாஜகவுக்கும் திமுகவுக்கும் இடையே உடன்பாடு இல்லை என்பது அதில் இருந்து தெளிவாகிறது.</p><p>தொகுதி மறுவரையறை மசோதா வரும்போது திமுக அதற்கு எதிராக நிற்கும் என நான் உறுதியாக நம்புகிறேன் என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>தொழிலாளர் கட்சி தலைவராக ஆண்டி பர்ன்ஹாம் தேர்வு: இங்கிலாந்தின் அடுத்த பிரதமராகிறார்</title><link>https://www.maalaimalar.com/news/world/andy-burnham-elected-new-labour-party-leader-uk-pm-designate</link><comments>https://www.maalaimalar.com/news/world/andy-burnham-elected-new-labour-party-leader-uk-pm-designate#comments</comments><guid isPermaLink="false">7682d7be-d41e-47de-8cc9-5c47660ed142</guid><pubDate>Fri, 17 Jul 2026 13:23:09 +0000</pubDate><atom:updated>2026-07-17T13:23:09.866Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>கெய்ர் ஸ்டார்மர்,Keir Starmer,இங்கிலாந்து பிரதமர் தேர்தல்,england prime minister,Andy Burnham,ஆண்டி பர்ன்ஹாம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/l8sxo2qd/AndyBurnham001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Andy Burnham]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/l8sxo2qd/AndyBurnham001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இங்கிலாந்தின் ஆளும் தொழிலாளர் கட்சியின் புதிய தலைவராக ஆண்டி பர்ன்ஹாம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அடுத்த வாரம் பிரதமாக பதவி ஏற்க உள்ளார்.</p><h2>10 ஆண்டுகளில் 7-வது பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம்</h2><p>மேக்கர்பீல்டு பாராளுமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட, 56 வயதான ஆண்டி பர்ன்ஹாம், கடந்த 10 ஆண்டுகளில் இங்கிலாந்தின் 7-வது பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார். கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சி ஏராளமான வாக்குறுதிகளை வழங்கியது. அதை நிறைவேற்ற இதுதான் கடைசி வாய்ப்பு எனக் கூறப்படுகிறது.</p><p>நாங்கள் மக்களுக்கு மீண்டும் நம்பிக்கையை அளிக்கப் போகிறோம் என்று ஆண்டி பர்ன்ஹாம், தொழிலாளர் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின், தனது முதல் உரையில் குறிப்பட்டார்.</p><p>மேலும், கெய்ர் ஸ்டார்மர் அமைத்த அடித்தளத்தின் மீது நின்று தலைமை தாங்க நான் தயாராக இருக்கிறேன். அவரது சேவைக்காக நன்றி தெரிவிக்கிறேன். பிரிட்டனை ஒரு புதிய பாதையில் கொண்டு செல்ல இருக்கிறேன்.</p><p>இந்த மாபெரும் நாட்டின் ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் மற்றும் தேசத்திற்கும் நான் ஒரு தலைவராகத் திகழ்வேன்; மேலும், எங்கள் முன்னுரிமைகள் மற்றும் நாங்கள் எடுக்கும் முடிவுகள் ஆகியவற்றில் இந்தக் கட்சி எவ்விதத் தயக்கமும் இன்றி 'லேபர்' (Labour) கொள்கை சார்ந்ததாகவே இருக்கும்.</p><p>உங்களுக்கு மிகவும் அவசியமான உள்ளாட்சி மற்றும் சமூகக் குடியிருப்புகளைக் கட்டுவதற்கும், உங்கள் வணிக வீதியை மேம்படுத்துவதற்கும், அப்பகுதிக்கு உயிரூட்டும் பப்கள் (pubs) மற்றும் கடைகள் போன்ற உள்ளூர் வணிகங்களுக்கு ஆதரவளிப்பதற்கும், அத்துடன் மீண்டும் தொழில்மயமாக்கலை மேற்கொள்வதற்கும் உங்கள் பகுதிக்கு அதிக அதிகாரங்களை வழங்க நாங்கள் விரும்புகிறோம்.” என்றார்.</p><h2>ஸ்டார்மர் ராஜினாமா</h2><p>கடந்த மாதம் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், கட்சியின் தலைவர் பதவிக்கு இவரைத் தவிர வேறு யாரும் போட்டியிடவில்லை.</p><p>தற்போதைய பிரதமர் ஸ்டார்மர் ராஜினாமாவை முறையாக மன்னர் சார்லசிடம் வழங்கிய பிறகு, வருகிற திங்கட்கிழமை புதிய அரசு அமைக்க ஆண்டி பர்ன்ஹாமிற்கு அழைப்பு விடுப்பார். அதன்பின் புதிய பிரதமராக பதவி ஏற்பார்.</p>]]></content:encoded></item><item><title>‘ஜூலை.20 வரை உயிருடன் இருப்பேன்... இல்லையென்றால் பேயாக திரும்பி வருவேன்’ - சோனம் வாங்சுக்</title><link>https://www.maalaimalar.com/news/national/i-will-remain-alive-until-july-20-otherwise-i-will-return-as-a-ghost-sonam-wangchuk</link><comments>https://www.maalaimalar.com/news/national/i-will-remain-alive-until-july-20-otherwise-i-will-return-as-a-ghost-sonam-wangchuk#comments</comments><guid isPermaLink="false">54e691f1-0371-452e-bf27-b6c0f40612e7</guid><pubDate>Fri, 17 Jul 2026 13:11:02 +0000</pubDate><atom:updated>2026-07-17T13:11:02.828Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>நாடாளுமன்றம்,parliament,Cockroach Janta Party,Activist Sonam Wangchuk,சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக்,கரப்பான் பூச்சி ஜனதா கட்சி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/0yhz8vaq/New-Project-2026-07-17T175224.816.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘ஜூலை.20 வரை உயிருடன் இருப்பேன்... இல்லையென்றால் பேயாக திரும்பி வருவேன்’ - சோனம் வாங்சுக்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/0yhz8vaq/New-Project-2026-07-17T175224.816.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட மத்திய அரசின் குளறுபடிகளை கண்டித்து, டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூன்.28 முதல், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் இணைந்து சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்.</p><p>பல்வேறு தரப்பினரும் அவர் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று டெல்லியில் திரண்டிருந்த தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய சோனம் வாங்சுக், “உங்கள் அனைவருடனும் சேர்ந்து நாடாளுமன்றத்திற்குப் பேரணி செல்வதற்காக, ஜூலை 20 வரை நான் எப்படியாவது உயிரோடு இருப்பேன். </p><p>அப்படி இல்லையெனில், அன்று நடத்தப்படும் நமது பேரணி வெற்றி பெறவில்லை என்றால், நான் ஒரு பேயாகத் திரும்பி வருவேன்," என தெரிவித்துள்ளார்.</p><h2>9 கிலோ குறைந்த சோனம் வாங்சுக்</h2><p>கடந்த 20 நாட்களாக சோனம் வாங்சுக் உணவு எடுத்துக் கொள்ளாததால், சுமார் 9.5 கிலோ வரை உடல் எடை குறைந்து, தற்போது 56.55 கிலோவாக உள்ளார் என நேற்று வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>அவரது இந்த உண்ணாவிரதம் தொடர்ந்தால் அவரது முக்கிய உடல் உறுப்புகள் செயலிழக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.</p><p>சோனம் வாங்சுக்கின் உடல்நிலையை மத்திய அரசு தினந்தோறும் தீவிரமாகக் கண்காணித்து, தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>மக்கள் தொகை கணக்கெடுப்பு: சுய விவரங்களை பதிவு செய்த முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-vijay-self-enumeration-online</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-vijay-self-enumeration-online#comments</comments><guid isPermaLink="false">83fb8bd8-9a16-4296-9d74-9fa9c6d8a750</guid><pubDate>Fri, 17 Jul 2026 12:36:37 +0000</pubDate><atom:updated>2026-07-17T12:36:37.996Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Census,மக்கள் தொகை கணக்கெடுப்பு,tn cm vijay,தமிழக முதலமைச்சர் விஜய்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/uyk2qxkp/CM-Vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/uyk2qxkp/CM-Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மக்கள் தொகை சுய கணக்கெடுப்பில் தனது சுய விவரங்களை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு இணையத்தில் முதலமைச்சர் விஜய் பதிவு செய்துள்ளார்.</p><p>மேலும்,"மக்கள் தொகை சுய கணக்கெடுப்புக்கு உண்மையான விவரங்களை வழங்குமாறு"  தமிழக மக்களிடம் முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.</p><p>இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>அன்பார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கம்!  </p><p>நம் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முக்கியமான மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது. இது வெறும் எண்ணிக்கை இல்லை,  நீங்கள் வழங்கும் தகவல்கள்தான் எல்லா திட்டங்களுக்குமான அடிப்படையாகும்.  எனவே, ஒவ்வொரு குடும்பமும் உண்மையான தகவல்களைக் கொடுங்கள். </p><p>இணையவழியில் சுய கணக்கெடுப்பு (Self Enumeration) செய்யலாம் – நான் பதிவு செய்துள்ளேன்!  </p><p>உங்கள் தகவல்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும். வாங்க, எல்லோரும் சேர்ந்து இதை வெற்றிகரமாகச் செய்து முடிப்போம். மக்கள் நலனுக்காக மக்கள்தொகை கணக்கெடுப்பு! வணக்கம்!</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">அன்பார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கம்!  <br><br>நம் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முக்கியமான மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது. இது வெறும் எண்ணிக்கை இல்லை,  நீங்கள் வழங்கும் தகவல்கள்தான் எல்லா திட்டங்களுக்குமான அடிப்படையாகும்.  எனவே,… <a href="https://t.co/fvA6pX24Jq">pic.twitter.com/fvA6pX24Jq</a></p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2078079650815971589?ref_src=twsrc%5Etfw">July 17, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய பாகிஸ்தான் வீரர் முகமது நவாஸ்..ஐசிசி எடுத்த முக்கிய முடிவு</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/pakistan-cricketer-mohammad-nawaz-banned-after-doping-test</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/pakistan-cricketer-mohammad-nawaz-banned-after-doping-test#comments</comments><guid isPermaLink="false">61947a33-4671-4f1a-86ff-eb9782a1de3a</guid><pubDate>Fri, 17 Jul 2026 12:26:57 +0000</pubDate><atom:updated>2026-07-17T12:26:57.250Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ICC,ஐசிசி,ஊக்கமருந்து சோதனை,Mohammad Nawaz,முகமது நவாஸ்,Dope Test</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/td65s62f/Untitled-design-23.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ICC suspends Pakistan all-rounder Mohammad Nawaz]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/td65s62f/Untitled-design-23.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியின் போது, ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டி தொடர்ந்து பாகிஸ்தான் நட்சத்திர ஆல்-ரவுண்டர் முகமது நவாஸுக்கு ஐசிசி மூன்று மாதங்கள் விதித்த தடையை தற்போது ரத்து செய்துள்ளது.</p><p>இலங்கையில் இந்த ஆண்டு பிப்ரவரி 7 அன்று நெதர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டிக்கு பிறகு, பாகிஸ்தான் அணி வீரர் முகமது நவாஸ் ஊக்கமருந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.</p><h3><strong>ஊக்கமருந்து சோதனை சிக்கிய முகமது நவாஸ்:</strong></h3><p>இதையடுத்து கஞ்சா உட்கொண்ட பிறகு கல்லீரலில் உருவாகும் செயலற்ற வளர்சிதை மாற்ற பொருளான கார்பாக்ஸி-THC, அவரின் உடலில் இருந்தது சோதனை மூலம் கண்டறியப்பட்டது.</p><p>இதைத்தொடர்ந்து நவாஸ் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதோடு, அந்த பொருளை போட்டிக்கு வெளியே உட்கொண்டதாகவும், போட்டியின் செயல்திறனுக்காக பயன்படுத்தவில்லை என்றார். மேலும், ஐசிசி-யின் தண்டனையை ஏறு்றுக் கொள்ளவதாகவும் தெரிவித்தார்.</p><p>இதனைத் தொடர்ந்து ஐசிசி கடந்த மே மாதத்தில் இருந்து அவருக்கு 3 மாதக்காலம் தடைவிதித்தது. இதில் இரண்டரை மாதக் காலம் புனர்வாழ்வு (rehabilitation) திட்டத்தில் சிகிச்சை மேற்்கொண்டு சிறப்பாக அந்த காலக்கட்டத்தை முடித்தால், தண்டனை ஒரு மாதக்காலமாக குறைக்கப்படும் என்றது ஐசிசி.</p><p>ஐசிசி-யின் நிபந்தனையின்படி நேற்று முன்தினத்துடன், வெற்றிகரமாக புனர்வாழ்வு காலத்தை முடித்தார். இதனைத் தொடர்ந்து, குற்றத்தை ஒப்புக் கொண்டதுடன், புனர்வாழ்வு சிகிச்சையையும் வெற்றிகரமகா முடித்ததால், ஒரு மாதக்காலம் தடை தேவையில்லை என்று ஐசிசி அவர் மீதான தடையை ரத்து செய்தது.</p><p>இதனால் அவர் இனிமேல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியும்.</p>]]></content:encoded></item><item><title>2வது டி20 போட்டி: ஜிம்பாப்வே வெற்றிபெற 187 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வங்கதேசம்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/second-t20-match-bangladesh-set-187-target-for-zimbabwe</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/second-t20-match-bangladesh-set-187-target-for-zimbabwe#comments</comments><guid isPermaLink="false">798e379f-8786-4067-a21a-8dcb0f339dfe</guid><pubDate>Fri, 17 Jul 2026 12:16:34 +0000</pubDate><atom:updated>2026-07-17T12:16:34.551Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ZIMvBAN,ஜிம்பாப்வே வங்கதேசம் தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/eiize00b/saif-hasan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ saif hassan, tanzid hasan tamim]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/eiize00b/saif-hasan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது டி20 போட்டியில் வங்கதேசம் அணி 186 ரன்கள் எடுத்துள்ளது.</p><p>வங்கதேச அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.</p><p>முதலில் நடந்த ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 85 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி அபார வெற்றி பெற்றது.</p><p>அடுத்து நடந்த ஒருநாள் தொடரிலும் 2-1 என ஜிம்பாப்வே அணியே வெற்றி பெற்றது. முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது.</p><p>இந்நிலையில், ஜிம்பாப்வே, வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி புலவாயோவில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்துவீச்சை தேர்வு செய்தது.</p><p>அதன்படி, முதலில் களமிறங்கிய வங்கதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 186 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஜோடியான சைப் ஹசன், தன்ஜித் ஹசன் தமிம் அதிரடியாக ஆடியது. இருவரும் அரை சதம் கடந்தனர்.</p><p>முதல் விக்கெட்டுக்கு 120 ரன்கள் சேர்த்த நிலையில் சைப் ஹசன் 55 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து தன்ஜித் ஹசன் தமிம் 58 ரன்னில் ஆட்டமிழந்தார்.</p><p>கடைசி கட்டத்தில் இறங்கிய யாசிர் அலி- சயிபுதின் ஜோடி 19 பந்தில் 45 ரன்களை சேர்த்தது. இதில் சயிபுதின் கடைசி ஓவரில் 4 சிக்சர்களை விளாசினார்.</p><p>ஜிம்பாப்வே சார்பில் நகரவா, பிராட் இவான்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.</p><p>இதையடுத்து, 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தலில் போட்டியிடுவதை உறுதிப்படுத்திய சீமான்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/seeman-confirms-he-will-contest-the-by-election</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/seeman-confirms-he-will-contest-the-by-election#comments</comments><guid isPermaLink="false">c428288d-dc4a-40ab-9209-022bfb9fb094</guid><pubDate>Fri, 17 Jul 2026 12:11:16 +0000</pubDate><atom:updated>2026-07-17T12:11:16.045Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Seeman,NTK,நாதக,by-election,சீமான்,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/117sjzcp/New-Project-2026-07-17T174054.841.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இடைத்தேர்தலில் போட்டியிடுவதை உறுதிப்படுத்திய சீமான்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/117sjzcp/New-Project-2026-07-17T174054.841.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். அப்போது இடைத்தேர்தல் குறித்துப் பேசிய அவர்,  </p><p>“நான் ஒன்றும் மன்னன் இல்லை, மந்திரி மகன் இல்லை; கூப்பிட்டால் கூட்டம் வருவதற்கு. தோற்றுப்போனாலும் 20 லட்சம் மக்கள் எனக்கு வாக்களித்துள்ளார்கள். பாரதிராஜா காரியத்திற்கு சென்றபோது பெரியவர் ஒருவர் என்னிடம் பேசினார்.</p><p>“மகனே, 50 உறுப்பினர்களோடாவது சட்டமன்றம் செல்வாய் என நினைத்தேன்; நடக்கவில்லை. விட்டுவிடாதே, இந்த இடைத்தேர்தலில் நின்று நீ உள்ளேப் போகவேண்டும்.” என தெரிவித்தார். உறுதியாக போகிறேன் என சிரித்தவாறே சொன்னேன். </p><p>‘இந்த சிரிப்போடு உள்ளே போகவேண்டும்’ என தெரிவித்தார். இதன்மூலம் சீமான் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. </p><p>நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாதக போட்டியிட்டது. ஆனால் ஒரு தொகுதியில் கூட நாதக வெல்லவில்லை. 4.02 சதவீத வாக்குகளைப் பெற்றது. இதனிடையே எம்.எல்.ஏக்களின் தொடர் ராஜினாமாவால் இடைத்தேர்தல் சூழல் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது.</p><p>இதில் சீமான் போட்டியிடுவாரா என யூகங்கள் எழுந்துவந்தநிலையில் அதனை உறுதிப்படுத்துமாறு பேசியுள்ளார் சீமான். </p>]]></content:encoded></item><item><title>சென்னை பூங்கா உள்பட.. மறுசீரமைக்கப்பட்ட 75 ரெயில் நிலையங்களை திறந்து வைத்தார் பிரதமர் மோடி</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-inaugurates-three-redeveloped-railway-stations-in-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-inaugurates-three-redeveloped-railway-stations-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">58d7359e-20b7-4415-bda3-26c811047319</guid><pubDate>Fri, 17 Jul 2026 11:54:10 +0000</pubDate><atom:updated>2026-07-17T11:54:10.011Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Railway Station,pm modi,பிரதமர் மோடி,ரெயில் நிலையங்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/p5au4ziq/PM-Modi1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/p5au4ziq/PM-Modi1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடு முழுவதும் மேம்படுத்தப்பட்ட 75 ரெயில் நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதில், தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை பூங்கா ரெயில் நிலையத்தை காணொளி காட்சி வாயிலாக பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார்.</p><h2>சென்னை பூங்கா, குன்னூர், சின்னசேலம்</h2><p>மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஏற்கனவே 261 ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக மேலும் 75 ரெயில் நிலையங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன.</p><h2>75 ரெயில் நிலையங்கள்</h2><p>அதிநவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ள இந்த 75 ரெயில் நிலையங்களையும் பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகலில் திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பத்தார்.</p><p>இந்த 75 ரெயில் நிலையங்களில் தமிழகத்தை சேர்ந்த 3 ரெயில் நிலையங்களும் இடம்பெற்றுள்ளன. சென்னை பூங்கா, சின்ன சேலம், குன்னூர் ஆகிய ரெயில் நிலையங்களும் புதுப்பொலிவுடன் இன்று திறக்கப்பட்டுள்ளன.</p><p>பயணிகளுக்கான வசதியை மேம்படுத்தும் வகையிலும், அடுத்த 40 முதல் 50 ஆண்டுகால தேவையை நிறைவு செய்யும் வகையிலும் இந்த ரெயில் நிலையங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.</p><h2>திறந்து வைத்தார்</h2><p>நகர்ப்புற போக்குவரத்து மற்றும் பயணிகள் வசதியை மேம்படுத்தும் வகையில், ரூ.14.79 கோடி செலவில் சென்னை பூங்கா ரெயில் நிலையம் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. சின்ன சேலம் ரெயில் நிலையம் ரூ.15.14 கோடியிலும், குன்னூர் ரெயில் நிலையம் ரூ.12.18 கோடியிலும் மறுசீரமைப்பு செய்யப்பட்டு உள்ளன. கேரளாவில் 9 ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.</p><p>பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் இன்று பிற்பகலில் நடைபெற்ற விழாவில் சென்னை பூங்கா, சின்னசேலம், குன்னூர் உள்ளிட்ட 75 மறுசீரமைக் கப்பட்ட ரெயில் நிலையங்களையும் பிரதமர் மோடி காணொளி மூலம் திறந்து வைத்தார்.</p><h2>குன்னூர்</h2><p>நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரையிலான நீலகிரி மலை ரெயில் பாதை கடந்த 1899-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த ரெயில் நிலையம் அங்கு வரும் பயணிகளின் ஈர்ப்பு மையமாக உள்ளது. குன்னூர் ரெயில் நிலையம் அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>குன்னூர் ரெயில் நிலையத்தின் நுழைவு வாயில் ஆர்ச், செல்பி ஸ்பாட், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளது. ரெயில் நிலைய வளாக சுவர்களில் நீலகிரி மாவட்டத்தின் இயற்கை சூழலை பிரதிபலிக்கும் வகையில், பறவைகள், வன விலங்குகளின் ஓவியங்கள் தீட்டப்பட்டு, ஒட்டுமொத்த ரெயில் நிலையமும் தற்போது வன விலங்குகள் சரணாலயம் போன்று ரம்மியமாக காட்சி அளிக்கிறது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Punjab: Prime Minister Narendra Modi arrives at Jalandhar Cantt Railway Station to inspect it. <br><br>75 redeveloped railway stations from all over India are being dedicated to the nation under the Amrit Bharat Station Scheme. <br><br>(Video: DD) <a href="https://t.co/F49l7SgF5C">pic.twitter.com/F49l7SgF5C</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2078067818864705561?ref_src=twsrc%5Etfw">July 17, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>உகாண்டாவில் பரிதாபம்: சுற்றுலா சென்ற பள்ளி வாகனம் கவிழ்ந்து 20 குழந்தைகள் பலி</title><link>https://www.maalaimalar.com/news/world/uganda-elementary-school-bus-crash-at-least-20-children-1-adult-killed</link><comments>https://www.maalaimalar.com/news/world/uganda-elementary-school-bus-crash-at-least-20-children-1-adult-killed#comments</comments><guid isPermaLink="false">9ea37542-2db9-46c4-acff-6772125675a1</guid><pubDate>Fri, 17 Jul 2026 11:49:15 +0000</pubDate><atom:updated>2026-07-17T11:49:15.174Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>bus accident,Uganda,உகாண்டா,பஸ் விபத்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/mzm4n2ou/BusAccident.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உகாண்டா பேருந்து]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/mzm4n2ou/BusAccident.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உகாண்டாவில் தொடக்கப் பள்ளி குழந்தைகள் சுற்றுலா சென்ற வாகனம் சாலையோரத்தில் உள்ள பெரிய பாறையில் மோதி விபத்துக்குள்ளானதில் 20 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><p>உகாண்டா நாட்டின் தலைநகர் கம்பலாவில் கிங் டேவிட் ஜூனியர் பள்ளி உள்ளது. இது தொடக்கப் பள்ளியாகும். இந்த பள்ளியில் உள்ள குழந்தைகளை, அங்குள்ள சிபி நீர்விழ்ச்சியை பார்ப்பதற்காக பள்ளி வாகனத்தில் சுற்றுலா அழைத்துச் சென்றனர்.</p><h2>பாறையில் மோதி விபத்து</h2><p>காலை மற்றும் மாலை முழுவதும் குழந்தைகள் நீர்வீழ்ச்சியில் குளித்து, விளையாடி மகிழ்ந்தனர். பின்னர் குழந்தைகளுடன் வாகனம் பள்ளிக்கு திரும்பியது. அப்போது வரும் வழியில், திடீரென வாகனம் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து விலகி அருகில் இருந்த பெரிய பாறையில் மோதி கவிழ்ந்தது. இதில் குழந்தைகள் தூக்கி வீசப்பட்டனர். பலம் காயத்தால் துடிதுடித்தனர்.</p><p>விபத்து ஏற்பட்ட பகுதியில் வசித்தவர்கள், காயம் அடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்க உதவி புரிந்தனர். இந்த விபத்தில் 20 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பள்ளி தாளாளரும் இந்த விபத்தில் உயிரிழந்தார்.</p><p>ஆசிரியர்கள் 3 பேர் உள்பட பல குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக அஞ்சப்படுகிறது.</p><h2>மோசமான சாலை</h2><p>மோசமான வாகன பராமரிப்பு, அதிவேகம் மற்றும் மோசமான சாலை ஆகியவற்றால் உகாண்டாவில் அடிக்கடி சாலை விபத்து ஏற்படுகிறது. இந்த மாதம் தொடக்கத்தில் பேருந்து ஒன்று லாரியுடன் மோதிய பயங்கர விபத்தில் 14 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.</p><blockquote>ஆப்பிரிக்கா நாட்டில் சாலை பாதுகாப்பு ரெக்கார்டு மோசமாக உள்ளது. ஆண்டிற்கு மட்டும் 3 லட்சம் பேர் சாலை விபத்தில் உயிரிழக்கின்றனர். 1 லட்சம் மக்களுக்கு 26 பேர் என்ற அடிப்படையில் உயிரிழக்கின்றனர்.</blockquote><p>ஐரோப்பிய நாடுகளில் சாலை பாதுகாப்பு ரெக்கார்டு சிறப்பாக உள்ளது. அங்கு வருடத்திற்கு 20 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். 1 லட்சம் பேருக்கு 9 பேர் எனக் குறைவாக உள்ளது. இந்த தகவலை உலக சுகாதார அமைப்பு மற்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளன.</p>]]></content:encoded></item><item><title>‘பாஜக - தவெக இணைப்பு வேலையைப் பார்த்து வருகிறார் வைகோ... விரைவில் மதிமுக காணாமல் போகும்’ - மல்லை சத்யா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vaigai-is-working-on-the-bjp-tvk-merger-mdmk-will-soon-vanish-mallai-sathya</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vaigai-is-working-on-the-bjp-tvk-merger-mdmk-will-soon-vanish-mallai-sathya#comments</comments><guid isPermaLink="false">1d00fc06-08db-42e7-a6b2-6f71a5a0ccaa</guid><pubDate>Fri, 17 Jul 2026 11:30:01 +0000</pubDate><atom:updated>2026-07-17T11:30:01.909Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>mallai sathya,மல்லை சத்யா,வைகோ,vaiko,MDMK,மதிமுக</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/asvk0q31/New-Project-2026-07-17T165939.627.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘பாஜக - தவெக இணைப்பு வேலையைப் பார்த்து வருகிறார் வைகை... விரைவில் மதிமுக காணாமல் போகும்’ - மல்லை சத்யா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/asvk0q31/New-Project-2026-07-17T165939.627.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவர் மல்லை சத்யா திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், </p><p>“பாஜக - தவெக இடையேயான இணைப்புப் பணியை வைகோ செவ்வனே செய்துவருகிறார். இன்று திமுகவிற்கு என்ன நடக்கிறதோ, நாளை தவெகவிற்கு அது நடக்கும். தான் சொன்னதை தவெக செய்யவில்லை என்றால், விமர்சிப்பார் வைகோ. 32 ஆண்டுகள் என்னை வழிநடத்தியவர். 32 ஆண்டுகளில் கடைசி 4 ஆண்டுகள் அவருடைய மகனுக்காக என்னிடம் பாராமுகமாக இருந்தார். </p><p>என்னை வெளியேற்ற திருச்சியில் எல்லாம் ஆர்ப்பாட்டம் நடத்தினார். என்மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், கட்சியில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிக்கைவிட்டார். என்னை கட்சியில் இருந்து வெளியேற்ற வைகோ பல நாடகங்களை நடத்தினார், அவர் மகன் அதன்பின் நின்று இயக்கியவர். அதனால் எனக்கு எந்த இழப்பும் இல்லை.</p><p>நாங்கள் வெளியேறிய பின் தற்போது அந்த இயக்கம் காணாமல் கரைந்துபோய் வருகிறது. சுதந்திரா கட்சி ராஜகோபாலாச்சாரி காலத்திலேயே காணாமல் போனது. தமிழரசு கழகம் ம.பொ.சி காலத்திலேயே காணாமல் போனது. சிவாஜி கணேசன் கட்சியும் இரண்டு ஆண்டுகளிலேயே காணாமல் போனது.  இந்த வரலாற்றில் தற்போது இணையவுள்ள கட்சி மகன் திமுக. </p><p>மகன் கனடாவின் டொரோண்டோவில் செட்டில் ஆகிவிடுவார். பாஜக - தவெக இணைப்பு வேலைய வைகோ பார்த்து வருகிறார்.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு என்ன? - திருமாவளவன் கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-asks-what-is-dmk-position-on-delimitation-issue</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-asks-what-is-dmk-position-on-delimitation-issue#comments</comments><guid isPermaLink="false">1f7c43a8-6ddf-4372-a49a-2818290d5d6d</guid><pubDate>Fri, 17 Jul 2026 11:26:27 +0000</pubDate><atom:updated>2026-07-17T11:26:27.597Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,Thol Thirumavalavan,தொல் திருமாவளவன்,தொகுதி மறுவரையறை,Delimitation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/pp4ttqf2/thiruma.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ thirumavalavan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/pp4ttqf2/thiruma.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D">திருமாவளவன்</a> இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p><p>தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு என்ன?</p><p>எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.</p><p>திமுக என்ன நிலைப்பாட்டை எடுக்கும் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.</p><p>தென்னிந்திய மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் உள்ளது.</p><p>இந்தியா கூட்டணியின் நிலைப்பாடுடன் இணைந்து விசிக பயணிக்கும்.</p><p>சேலத்தில் அம்பேத்கர் சிலையை 5 ஆண்டுகளாக திறக்க முடியவில்லை.</p><p>கடந்த ஆட்சியின்போது அம்பேத்கர் சிலையைத் திறக்க முயன்றோம்.</p><p>சிலைகளைத் திறக்க அனுமதி பெறுவது மிகவும் கடினமாக உள்ளது.</p><p>தமிழகத்தில் மட்டும்தான் அம்பேத்கர் சிலையைத் திறக்க அனுமதி பெற முடியவில்லை.</p><p>தவெக அரசு அம்பேத்கர் சிலைகளைத் திறக்க முன்வர வேண்டும் என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>அம்பத்தூரில் பொது மக்களிடம் வரவேற்பை பெற்ற “நம்ம எம்.எல்.ஏ.” செயலி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ambattur-public-welcomes-namm-mla-mobile-app</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ambattur-public-welcomes-namm-mla-mobile-app#comments</comments><guid isPermaLink="false">a002072e-5aed-4245-a6a5-211004d7554f</guid><pubDate>Fri, 17 Jul 2026 11:12:29 +0000</pubDate><atom:updated>2026-07-17T11:12:29.667Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அம்பத்தூர்,நம்ம எம்எல்ஏ செயலி,Ambatture,Namma MLA App</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/2n3xwxxv/MLA.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ambatture MLA]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/2n3xwxxv/MLA.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அம்பத்தூர் தொகுதி மக்கள் தங்கள் பகுதி குறைகளை தெரிவிக்கவும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களை அறியவும் அம்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. ஜி.பாலமுருகன் “நம்ம எம்.எல்.ஏ.” என்ற புதிய செயலியைத் தொடங்கியுள்ளார்.</p><p>இந்த செயலியின் மூலம் தொகுதி மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளைப் புகைப் படம் எடுத்தோ அல்லது எழுத்துப்பூர்வமாகவோ மனுவாகப் பதிவு செய்ய முடியும்.</p><p>அவ்வாறு பொதுமக்கள் பதிவு செய்த மனுக்கள் மற்றும் கோரிக்கைகளின் தற்போதைய நிலை என்ன என்பதை இந்தச் செயலி மூலமாகவே அவர்கள் தொடர்ந்து கண்காணித்துத் தெரிந்து கொள்ளலாம்.</p><p>இதுமட்டுமின்றி, அம்பத்தூர் பகுதியில் உள்ள வேலை வாய்ப்புகள் மற்றும் அரசுப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கியத் தகவல்களையும் இந்தச் செயலி மூலம் மக்கள் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.</p><p>இந்த புதிய செயலியை அறிமுகம் செய்துள்ள எம்.எல்.ஏ. ஜி.பாலமுருகன், இதன் மூலம் மக்களுடன் எப்போதும் நேரடித் தொடர்பில் இருக்க முடியும் என வீடியோ ஒன்றை வெளியிட்டுத் தெரிவித்து உள்ளார்.</p><p>அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது:-</p><p>அம்பத்தூர் மக்களுக்கு வணக்கம். இந்த செயலில் உங்கள் குறைகளை நீங்கள் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யலாம். இதுவெறும் செயலி மட்டுமல்ல உங்களுக்கும் எனக்கும் உண்டான நேரடி தொடர்பாக உள்ளது. கோரிக்கைகளை சரி செய்ய எங்களது குழு தயார் நிலையில் உள்ளது. </p><p>நீங்கள் அனுப்பும் குறை கள் உடனுக்குடன்  48 மணி நேரத்தில் சரி செய்யப்பட்டு எனது நேரடி கண்காணிப் பில் இந்த செயலி இருந்து வரும். உங்களுக்காக உழைக்க நான் இருக்கிறேன். நாம் இணைந்து இன்னும் சிறப்பாக அம்பத்தூரை உருவாக்குவோம்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>விழிஞ்சம் துறைமுகத்திற்கு உம்மன் சாண்டி பெயர் சூட்டப்பட வேண்டும்: காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/national/congress-leader-seeks-oommen-chandy-name-for-vizhinjam-port-ahead-of-third-death-anniversary</link><comments>https://www.maalaimalar.com/news/national/congress-leader-seeks-oommen-chandy-name-for-vizhinjam-port-ahead-of-third-death-anniversary#comments</comments><guid isPermaLink="false">2cf0c96f-e407-4a0b-aeb3-ce8276250c3d</guid><pubDate>Fri, 17 Jul 2026 11:12:15 +0000</pubDate><atom:updated>2026-07-17T11:12:15.360Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,Oommen Chandy,விழிஞ்சம் துறைமுகம்,உம்மன் சாண்டி,Vizhinjam Port</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/zhlkjfvd/OommenChandy001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உம்மன் சாண்டி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/zhlkjfvd/OommenChandy001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரளம் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் உம்மன் சாண்டி. இருவர் இரண்டு முறை முதல்வராக இருந்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை 18-ந்தேதி, புற்றுநோய்க்கு சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில், காலமானார். 79 வயதில் காலமானார். அவரது 3-வது அண்டு நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது.</p><p>அவரது 3-வது நினைவு தினத்தை அனுசரிக்கும் நாளில், விழிஞ்சம் துறைமுகத்திற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் காங்கிரஸ் தலைவர் தாம்பனூர் ரவி வலியுறுத்தியுள்ளார்.</p><h2>இது தொடர்பாக தம்பனூர் ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</h2><p>விழிஞ்சம் துறைமுகத்திற்கு உம்மன் சாண்டி பெயர் சூட்டினால், அது பொருத்தமான அஞ்சலியாக இருக்கும். இதுவரை பார்த்திரா வகையில் விழிஞ்சம் கேரளா மாநிலத்தின் மிகப்பெரிய வளர்ச்சி திட்டமாக உயர்ந்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியின் நினைவு தினத்தை அர்த்தமுள்ளதாக்கும் வகையில், அந்த துறைமுகத்திற்கு அதன் வடிவமைப்பாளரான அவரது பெயரே சூட்டப்பட வேண்டும்.</p><h2>விழிஞ்சம் துறைமுகம்</h2><p>விழிஞ்சம் துறைமுகம் தொடர்பாக தங்களுக்கு நற்பெயர் கிடைக்க பலர் முயற்சி செய்து வருகிறார்கள்.</p><blockquote>விழிஞ்சியத்தில் துறைமுகம் கொண்டு வர உம்மன் சாண்டியின் பங்களிப்பு யதார்த்தத்தை முந்தைய பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசு புறந்தள்ளியது.</blockquote><p>பெயர் சூட்டும் முடிவை வி.டி. சதீசன் தலைமையிலான UDF அரசு காலம் தாழ்த்தக் கூடாது. இந்த திட்டத்தை சர்ச்சைக்குள் தள்ளக்கூடாது.</p><p>உம்மன் சாண்டி கேரளாவே கண்டிராத மிகவும் பிரபலமான தலைவர் மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட முதலமைச்சர். மறைந்த அந்த தலைவருக்கு ஒரு நினைவிடம் அமைப்பது மக்களின் விருப்பம்</p><p>உம்மன் சாண்டி மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை வரவேற்கிறேன். இது அவருக்கு மிகச் சிறந்த அஞ்சலியாக அமையும்.</p><h2>உம்மன் சாண்டிக்கு நினைவிடம்</h2><p>முன்னாள் அமைச்சர் கே.ஆர். கௌரி அம்மா மற்றும் நடிகர் சலீம் குமார் ஆகியோருக்கு நினைவிடங்கள் அமைப்பதற்கான முன்மொழிவை வரவேற்கிறேன். உம்மன் சாண்டியின் விசயத்திலும் இதேபோன்ற ஆக்கபூர்வமான அணுகுமுறை பின்பற்றப்பட வேண்டும். தனது பொதுவாழ்வு மற்றும் அரசியல் பணிகளை மேற்கொண்ட தலைநகரிலேயே, உம்மன் சாண்டிக்கு நினைவிடம் ஒன்று தாமதமின்றி அமைக்கப்பட வேண்டும்</p><p>இவ்வாறு தம்பனூர் ரவி வலியுறுத்தியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நீட் தேர்வு முடிவால் பதற்றமா? மாணவர்களின் மனநலம் காக்க தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/worried-about-neet-results-tamil-nadu-government-mental-health-helpline</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/worried-about-neet-results-tamil-nadu-government-mental-health-helpline#comments</comments><guid isPermaLink="false">207fb194-4c6d-44c7-aeb1-4104f40b10e7</guid><pubDate>Fri, 17 Jul 2026 10:52:12 +0000</pubDate><atom:updated>2026-07-17T10:52:12.273Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,neet,நீட்,NEET EXAM Result,நீட் தேர்வு முடிவு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/q85exuk6/TN-govt.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Neet result- TN Govt]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/q85exuk6/TN-govt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2026-27ம் ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் 'நட்புடன் உங்களோடு' திட்டத்தை பயன்படுத்த தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><h2>நீட் மறுதேர்வு</h2><p>கடந்த ஜூன் 21-ஆம் தேதியன்று நடைபெற்ற நீட் 2026 மறுதேர்வில், நாடு முழுவதும் 551 நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள 14 நகரங்களில் அமைக்கப்பட்ட 5,440 தேர்வு மையங்களில் சுமார் 20 லட்சம் தேர்வர்கள் பங்கேற்றனர்.</p><p>இத்தேர்வு ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, மராத்தி மற்றும் உருது உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்பட்டது.</p><h2>நீட் மறுதேர்வு முடிவு</h2><p>தேசியத் தேர்வுகள் முகமை நேற்று (வியாழக்கிழமை) நீட் இளநிலை தேர்வு முடிவுகளை வெளியிட்டது. இதில் நாடு முழுவதும் உள்ள இளநிலை மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ் (AYUSH) மற்றும் அது சார்ந்த படிப்புகளில் சேர்வதற்கு 11.21 லட்சம் தேர்வர்கள் தகுதி பெற்றுள்ளனர்.</p><p>பஞ்சாப்பை சேர்ந்த ஆர்யன் குப்தா மற்றும் ஹரியானாவை சேர்ந்த பன்சுல் பன்சால் ஆகியோர் 720-க்கு 715 மதிப்பெண்களை பெற்று கூட்டாக முதலிடத்தைப் பிடித்தனர்.</p><h2>நட்புடன் உங்களோடு..</h2><p>மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மனநல ஆலோசனைகளை பெற 14416 அல்லது 104 என்ற எண்ணை அழைக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. </p><p>இதுதொடர்பாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>2026-27 கல்வியாண்டின் நீட்தேர்வு முடிவுகள் நேற்று (16.07.2026) வெளியாகி உள்ளது.</p><p>மாணவர்களின் மன உறுதி மற்றும் மனநலம் காக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் "நட்புடன் உங்களோடு" திட்டம் மூலம் தொலைபேசி வழியாக மனநல ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.</p><p>எனவே, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மனநல ஆலோசனைகள் பெறுவதற்கு தயங்காமல் 14416 அல்லது 104 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. </p><p>இச்சேவை மனநல மருத்துவர்கள் மற்றும் மனநல ஆலோசகர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நாளை முதல் 24-ந்தேதி வரை சென்னை-மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-to-mumbai-express-trains-cancelled</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-to-mumbai-express-trains-cancelled#comments</comments><guid isPermaLink="false">5c889a44-f678-482a-a3dd-19bf43dc564d</guid><pubDate>Fri, 17 Jul 2026 10:37:08 +0000</pubDate><atom:updated>2026-07-17T10:37:08.347Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Trains cancelled,ரெயில்கள் ரத்து,Mumbai rain,மும்பையில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/xl3ywcxd/train01.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/xl3ywcxd/train01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p> 9 <a href="https://www.maalaimalar.com/topic/எக்ஸ்பிரஸ்-ரெயில்கள்">எக்ஸ்பிரஸ் ரெயில்கள்</a> மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியில் பெய்து வரும்  கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. </p><p>இதன் காரணமாக சென்னை சென்ட்ரல்-மும்பை இடையே இயக்கப்படும் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. </p><h2><strong>ரெயில்கள் ரத்து</strong></h2><p>மும்பை ஜி.எஸ்.டி.-சென்னை சென்ட்ரல்  இடையே இயக்கப்படும் சூப்பர் பாஸ்ட் மெயில் (எண்-22157) நாளை முதல் 24-ந்தேதி வரை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. </p><p>இதே போல சென்ட்ரலில் இருந்து காலை 6.35 மணிக்கு புறப்படும் ஜி.எஸ்.டி. எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை முதல் 24-ந்தேதி வரை முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. </p><p>மேலும் 9 ரெயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.</p><p>திருச்சி-அகமதாபாத், மதுரை-லோக் மணியா, காரைக்கால்-லோக் மணியா, இக்டா நகர்- சென்னை சென்ட்ரல், அகமதாபாத்-திருச்சி, லோக் மணியா திலக்-மதுரை, ராஜ் கோட்-கோவை உள்ளிட்ட 9 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>லங்கா பிரீமியர் லீக்: வீரருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக இந்தியாவைச் சேர்ந்த அணி உரிமையாளர் கைது</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/indian-co-owner-of-lpl-franchise-arrested-in-sri-lanka-in-player-bribery-case</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/indian-co-owner-of-lpl-franchise-arrested-in-sri-lanka-in-player-bribery-case#comments</comments><guid isPermaLink="false">f06c75f1-ff4b-48f2-b9ff-1c11d10a126a</guid><pubDate>Fri, 17 Jul 2026 10:19:59 +0000</pubDate><atom:updated>2026-07-17T10:19:59.936Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>lanka premier league,லங்கா பிரீமியர் லீக்,Manjot kalra,மன்ஜோத் கல்ரா,Jaffna Kings,ஜாஃப்னா கிங்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/ejiicdg1/ManjotKalra0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மன்ஜோத் கல்ரா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/ejiicdg1/ManjotKalra0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் ஐ.பி.எல். டி20 நடைபெறுவதுபோல், இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 5 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. 2026 சீசன் வருகிற ஆகஸ்ட் மாதம் 8-ந்தேதி தொடங்குகிறது. இதில் மொத்தம் 24 போட்டிகளில் அடங்கும்.</p><h2>மன்ஜோத் கல்ரா</h2><p>இதில் பங்கேற்கும் அணிகளில் ஒன்று ஜாஃப்னா கிங்ஸ். இந்த அணியின் உரிமையாளர்களில் ஒருவராக இந்தியாவைச் சேர்ந்த 27 வயதாக மன்ஜோத் கல்ரா உள்ளார். இவர் 2018-ம் ஆண்டும் இந்தியா U19 அணி சாம்பியன் பட்டம் வென்றபோது, இறுதிப் போட்டியில் சதம் அடித்தவர். இவர் வீரருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக இலங்கையின் விளையாட்டுத் ஊழல் தடுப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். </p><figure><img alt="ஜாஃப்னா கிங்ஸ்" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/y37cn64d/JaffnaKings.jpg" /></figure> <p>10 நாட்களுக்கு முன்னதாக கல்ரா, ஒரு வீரரை அணுகியுள்ளார். இந்த வீரர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். அதன்அடிப்படையில் இன்று கல்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>ஜாஃப்னா கிங்ஸ்</h2><p>ஜாஃப்னா கிங்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள இலங்கை வீரர்கள் பனுகா ராஜபக்சே, அவிஷ்கா பெர்னாண்டோ, துனித் வெலலாகே ஆகியோர் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>இந்த ஆண்டின் தொடக்கத்தில், நாட்டின் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு வீரரைத் தங்கள் பக்கம் ஈர்க்க முயன்றதையும், பந்தய நடவடிக்கைகளை ஏற்பாடு செய்ய முயன்றதையும் ஒப்புக்கொண்ட LPL அணி உரிமையாளர் ஒருவருக்கு, இலங்கை நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையை விதித்தது. அத்துடன் அவருக்கு 24 மில்லியன் இலங்கை ரூபாய்கள் அபராதமும் விதிக்கப்பட்டது.</p><blockquote>அணி உரிமையாளர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டாலும், தொடர் எந்த வித இடையூறு இன்றி நடத்தப்படும் என்று கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.</blockquote><p>நான்கு ஆண்டு கால ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை என்பது, நீதிபதி நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தாலும் அதை உடனடியாகச் செயல்படுத்தாமல் ஒத்திவைத்து, குற்றவாளியை நன்னடத்தைக் கண்காணிப்பின் (probation) கீழ் சுதந்திரமாக இருக்க அனுமதிப்பதைக் குறிக்கிறது. அக்குற்றவாளி நீதிமன்றம் விதித்த அனைத்து நிபந்தனைகளையும் கண்டிப்பாகப் பின்பற்றி, அக்காலகட்டத்தில் வேறு எந்தக் குற்றத்திலும் ஈடுபடாமல் இருந்தால், அவர் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்காது.</p>]]></content:encoded></item><item><title>பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் தவெக அரசு!- நயினார் நாகேந்திரன் சாடல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-indictment-tn-govt</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-indictment-tn-govt#comments</comments><guid isPermaLink="false">413070be-154d-4ec3-8c64-11c2a39a32c1</guid><pubDate>Fri, 17 Jul 2026 10:15:47 +0000</pubDate><atom:updated>2026-07-17T10:15:47.409Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,TN Govt,நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,தமிழக அரசு</media:keywords><media:content height="350" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/jiijhsdg/NainarNagendran.jpg" width="615"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/jiijhsdg/NainarNagendran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>முடிந்தவரையில் டாஸ்மாக் கடைகளைக் குறைத்து தமிழகத்தில் மதுவிற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்! என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.</aside><p>பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><h2><strong>கடும் அதிர்ச்சி</strong></h2><p>“டாஸ்மாக் கடைகளை மூடுகிறோம்” என பக்கத்திற்கு பக்கம் சுய விளம்பரம் செய்து கொண்டிருக்கும், முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான அரசு, தமிழகத்தில் இயங்கும் டாஸ்மாக் கடைகளில் மேலும் 54 நிறுவனங்களின் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-decides-to-introduce-54-more-liquor-brands">மதுபான வகைகளை</a> அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக வெளியாகியுள்ள ஊடகச் செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது. </p><p>கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் என தமிழகத்தில் நாளுக்கு நாள் பெருகி வரும் குற்றங்களின் பின்னணியில், பெரும்பாலும் போதைப் பழக்கமே ஒளிந்திருக்கையில், மது உள்ளிட்ட போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்துவது தான் ஒரு நல்ல அரசுக்கு அழகு. அதை விட்டு விட்டு, மதுபான வகைகளைக் கூட்டி, மக்களை போதைக்கு அடிமையாக்குவது அல்ல. </p><h2><strong>அரசு உணர வேண்டும்</strong></h2><p>எப்போவாவது வெளியூர்களுக்கு டூர் சென்றால் மட்டும் தான் குறிப்பிட்ட வகை மதுபானம் கிடைக்கும் என்றிருக்கும் நிலையை மாற்றி, கைக்கு எட்டும் தூரத்திலேயே எல்லா வகை மதுபானங்களையும் கொண்டு வருவது, இளைஞர்களிடையே குடிப்பழக்கத்தை அதிகரிக்கும் என்பதை ஆளும் அரசு உணர வேண்டும். “More Choices, More chances”</p><p>எனவே, ஒருவேளை முதல்வர் விஜய் அவர்களுக்கு, அதிகளவிலான மதுபானங்களை டாஸ்மாக் கடைகளில் அறிமுகம் செய்யும் திட்டம் இருந்தால் அதை உடனடியாகக் கைவிட வேண்டும்! முடிந்தவரையில் டாஸ்மாக் கடைகளைக் குறைத்து தமிழகத்தில் மதுவிற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்!</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் தவெக அரசு! <br><br>“டாஸ்மாக் கடைகளை மூடுகிறோம்” என பக்கத்திற்கு பக்கம் சுய விளம்பரம் செய்து கொண்டிருக்கும், முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான அரசு, தமிழகத்தில் இயங்கும் டாஸ்மாக் கடைகளில் மேலும் 54 நிறுவனங்களின் மதுபான வகைகளை… <a href="https://t.co/JYRKje19Oq">pic.twitter.com/JYRKje19Oq</a></p>&mdash; Nainar Nagenthran (@NainarBJP) <a href="https://x.com/NainarBJP/status/2078053807179870419?ref_src=twsrc%5Etfw">July 17, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>நீட் தேர்வு முடிவு: கட்-ஆப் மதிப்பெண் உயர்வதால் கடும் போட்டி நிலவும்..! கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/higher-neet-cutoff-to-lead-to-intense-medical-seat-race-jayaprakash-gandhi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/higher-neet-cutoff-to-lead-to-intense-medical-seat-race-jayaprakash-gandhi#comments</comments><guid isPermaLink="false">adf4f21b-471e-4ac5-98a1-77da6fb5417a</guid><pubDate>Fri, 17 Jul 2026 09:59:58 +0000</pubDate><atom:updated>2026-07-17T09:59:58.034Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>neet,நீட் தேர்வு,neet exam results,நீட் தேர்வு முடிவு,கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி,நீட் கட்-ஆப்,Jayaprakash gandhi</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/wwswywzh/jayaprakash.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Educationist Jayaprakash Gandhi ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/wwswywzh/jayaprakash.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நீட் தேர்வு மே மாதம்  நடந்தது. தேர்வு நடப்பதற்கு முன்பே  வினாத்தாள் வெளியாகி  நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் முறைகேடு நடந்ததால் தேர்வு ரத்து செய்யப்பட்டது. </p><p>அதைத்தொடர்ந்து ஜூன் 21-ந்தேதி மறுதேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை 20 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள். </p><p>இதில் 11 லட்சத்து 21 ஆயிரம் பேர் தகுதி பெற்றுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஆரியன் குப்தா மற்றும் அரியானாவைச் சேர்ந்த  பான்சூல்  பன்சால் ஆகிய இருவரும் 720 மதிப்பெண்ணுக்கு 715 பெற்று முதலிடத்தை பிடித்தனர். </p><p>கடந்தாண்டை ஒப்பிடும்போது நீட் தேர்வு முடிவில் மாணவ-மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்று இருப்பது தெரியவந்துள்ளது.</p><p>இதனால் நீட் கட்-ஆப்  மதிப்பெண் உயர வாய்ப்பு உள்ளது  என்று கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறியுள்ளார். </p><p>இதுகுறித்து அவர் மேலும்  கூறியதாவது:- </p><p>கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு நீட்  தேர்வில் மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர். இதன் காரணமாக கட்-ஆப் மதிப்பெண் 30 முதல் 36 வரை உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது.</p><p>நீட் தேர்வில் 690-க்கு மேல் கடந்த ஆண்டு ஒருவரும் பெறவில்லை. ஆனால் இந்த வருடம் 85 பேர்   இடம் பெற்றுள்ளனர். அதேபோல 600 மதிப்பெண்ணுக்கு மேல் 1367 பேர் கடந்தாண்டு பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு 9,080 பேர் வாங்கியுள்ளனர்.</p><p>550 மதிப்பெண்ணுக்கு மேல் இந்த ஆண்டு 38 ஆயிரம் பேர் பெற்றுள்ளனர். இது கடந்தாண்டு 12,280- ஆக இருந்தது. 500 மதிப்பெண்ணுக்குமேல் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பெற்றுள்ளனர். இது கடந்த வருடம் 52,217 ஆக இருந்தது.</p><p>இந்த மறு தேர்வு முடிவை வைத்துப் பார்க்கும்போது நீட் கட்-ஆப் மதிப்பெண் உயர வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக மருத்துவ படிப்பில் சேர்வதற்கு கடுமையான போட்டி ஏற்படக்கூடும்.</p><p>நீட் மறு தேர்வு கடினமாக இருந்தாலும் கூட கடந்த ஆண்டு தேர்வை விட இந்த வருடம் மாணவ, மாணவிகள் அதிக அளவில் மதிப்பெண்களை குவித்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின்         மருத்துவமனைகளில்  மட்டுமன்றி மாநில அரசு களின் மருத்துவுமனைகளிலும் சேர்ந்து படிப்பதற்கு கடுமையான போட்டி ஏற்பட வாய்ப்பு உள்ளது.</p><p>எய்ம்ஸ், ஜிப்மர், ராணுவ மருத்துவ கல்லூரிகளில்  சேர்வதற்கு 680-க்கும் மேல் மதிப்பெண் பெற வேண்டும். நாட்டின் தலை சிறந்த  மருத்துவமனைகளில் சேர்வதற்கு உயர் மதிப்பெண் அவசியமாகும்.</p><p>தமிழகத்தைப் பொறுத்த வரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு கட் ஆப் மதிப்பெண் 30 முதல் 36 வரை  அதிகரிக்ககூடும். </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>E20 பெட்ரோலால் கார் பழுது? நுகர்வோர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாருதி சுசுகி மேல்முறையீடு!</title><link>https://www.maalaimalar.com/news/national/car-damage-due-to-e20-petrol-maruti-suzuki-appeals-against-consumer-court-order</link><comments>https://www.maalaimalar.com/news/national/car-damage-due-to-e20-petrol-maruti-suzuki-appeals-against-consumer-court-order#comments</comments><guid isPermaLink="false">7ff65f24-431a-41a6-966c-bc1abcfc9d8f</guid><pubDate>Fri, 17 Jul 2026 09:51:31 +0000</pubDate><atom:updated>2026-07-17T09:51:31.419Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Maruti Suzuki,மாருதி சுசுகி,Consumer Court,நுகர்வோர் நீதிமன்றம்,எத்தனால் பெட்ரோல்,E20 fuel</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/8h50kh1d/New-Project-2026-07-17T151800.513.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ E20 பெட்ரோலால் கார் பழுது? நுகர்வோர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாருதி சுசுகி மேல்முறையீடு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/8h50kh1d/New-Project-2026-07-17T151800.513.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>எத்தனால் பெட்ரோலால் பழுதடைந்த காருக்குப் பதிலாக புதுக்காரை வாடிக்கையாளர் ஒருவருக்கு வழங்க உத்தரவிட்ட ராய்ப்பூர் நுகர்வோர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, மாருதி சுசுகி நிறுவனம் மேல்முறையீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. </p><p>கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் ரூ.20 லட்சத்திற்கு, ராய்ப்பூரைச் சேர்ந்த  சிறுநீரக மருத்துவர் ஒருவர் மாருதி கிராண்ட் விட்டாரா ஆல்ஃபா இன்டெலிஜென்ட் எலக்ட்ரிக் ஸ்ட்ராங் ஹைப்ரிட் காரை வாங்கியுள்ளார். </p><p>சுமார் 21,913 கி.மீ. ஓடியபிறகு, நவம்பர் மாதமே, இன்ஜின் கோளாறாகி ஓடாமல் பாதியிலேயே நின்றுள்ளது. இதனையடுத்து ஷோரூம் சர்வீஸ்க்கு காரை விட்டுள்ளார். அங்கு கலப்பட பெட்ரோலே காரணம் எனக்கூறி, பெட்ரோல் டேங்கை சுத்தம் செய்து தந்துள்ளனர். இருப்பினும் அடுத்தடுத்து தொடர்ந்து கார் பழுதாகி வந்துள்ளது.</p><p>மாருதி நிறுவனமும் வாரண்டி காலம் முடியும்வரை பழுதுபார்த்துள்ளது. ஆனால் பழுதுபார்க்கும் செலவு ரூ.5 லட்சத்தை எட்டியநிலையில், இதற்கு மேல் சர்வீஸ் செய்யமுடியாது என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>ஆனால் காருக்கு 2029 ஆம் ஆண்டு வரை அல்லது 1 லட்சம் கி.மீ. ஓடும் வரை சர்வீஸ் செய்து தரப்படும் என கார் நிறுவனம் தரப்பில் உத்தரவாதம் தரப்பட்டதாக மருத்துவர், நிறுவனத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்படி சர்வீஸ் செய்யமுடியாதெனில் காரை மாற்றித் தரவேண்டும் அல்லது முழுப் பணத்தையும் தருமாறும், அதற்கு நஷ்ட ஈடும் கொடுக்கவேண்டும் எனக் கூறியுள்ளார். </p><p>இதனைத்தொடர்ந்து இதுதொடர்பாக மருத்துவர் ராய்ப்பூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர, நீதிமன்றம் அவருக்கு புதுக்காரையும், கூடுதலாக நஷ்ட ஈடும் வழங்க உத்தரவிட்டது. இந்நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><h2>மாருதிக்கு எதிராக நீதிமன்றம் உத்தரவிட்டது ஏன்?</h2><p>கார் என்ஜின் எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு ஏற்றதல்ல என்பதை நிறுவனம் தெளிவுப்படுத்த தவறியது என்றும், 2023ல் தயாரிக்கப்பட்ட கார், 2024ல் அதே நிர்ணயம் செய்யப்பட்ட விலைக்கே விற்பனை செய்யப்பட்டது. அதாவது, 17 மாதங்கள் பழமையான காரை புதிய வாகனத்தின் விலைக்கே விற்றது, உத்தரவாதம் அளித்தவாறு காரை மாற்றித் தராமல் இருந்தது உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு நீதிமன்றம் புதுகாரை வழங்க உத்தரவிட்டது. </p><h2>உத்தரவில் நீதிமன்றம் கூறியது என்ன?</h2><p>கிராண்ட் விட்டாரா காரைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, அதே மாடலில் E20 எரிபொருளை தாங்கும் திறன் கொண்ட புதிய வாகனத்தை 45 நாட்களுக்குள் வழங்குமாறு மாருதி சுசுகிக்கு உத்தரவிட்டது.</p><p>அவ்வாறு செய்யத் தவறினால் கார் வாங்க அவர் செய்த மொத்த செலவான ரூ.20,50,494-ஐ திருப்பி செலுத்த வேண்டும். மேலும் மன உளைச்சலுக்கான இழப்பீடாக ரூ. 1 லட்சமும், வழக்குச் செலவாக ரூ. 10,000-மும் செலுத்த வேண்டும். அதுவும் 45 நாட்களுக்குகள் இந்த தொகை செலுத்தப்படாவிட்டால், ஆண்டுக்கு 7% வட்டி விதிக்கப்படும் என தெரிவித்தது.</p><h2>மேல்முறையீடு செய்யும் மாருதி</h2><p>இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது மாருதி நிறுவனம். அந்த வாகனம் எத்தனால் பெட்ரோலுக்கு உகந்ததுதான் என்றும், பெட்ரோலில்தான் கலப்படம் இருந்தது என்றும், அதற்கான ஆதாரமும் உள்ளது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. </p><p>சட்டப்படி, ஆட்சேபிக்கப்பட்ட இந்த உத்தரவை உரிய உயர் மன்றத்தில் எதிர்த்து மாருதி சுசுகி தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என தெரிவித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>வந்தே மாதரம் பாடலுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பை அளிக்கும் மசோதாவை எதிர்ப்பதா? காங்கிரசை சாடிய பாஜக</title><link>https://www.maalaimalar.com/news/national/bjp-slams-cong-for-opposing-bill-giving-statutory-protection-to-vande-mataram</link><comments>https://www.maalaimalar.com/news/national/bjp-slams-cong-for-opposing-bill-giving-statutory-protection-to-vande-mataram#comments</comments><guid isPermaLink="false">22e4c9e0-751f-468c-8753-9896ad053ed3</guid><pubDate>Fri, 17 Jul 2026 09:42:59 +0000</pubDate><atom:updated>2026-07-17T09:42:59.227Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,Congress,காங்கிரஸ்,வந்தே மாதரம்,Vande Mataram</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/mqm7ophc/CongressandBJP0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ vandematharam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/mqm7ophc/CongressandBJP0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய பாரளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வருகிற 20-ந்தேதி தொடங்கப்பட இருக்கிறது. இதில் தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பு வழங்கும் வகையில், தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு (திருத்தம்) மசோதா கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>காங்கிரஸ் எதிர்ப்பு</h2><p>இதற்கு காங்கிரஸ் கட்சி, அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலை கட்டாயமாகப் பாடுவதை அவமதிப்பவர்களுக்கோ அல்லது அதற்குத் தடையை ஏற்படுத்துபவர்களுக்கோ தண்டனை வழங்கும் மசோதாவை வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்வதற்கான மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளது.</p><p>இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, பாராளுமன்ற இரு அவைகளிலும் விவாதம் நடத்தப்பட்டு அதன்பின் நிறைவேற்றப்பட்ட பின், ஜனாதிபதி ஒப்புதலுக்குப்பின் சட்டமானால், வந்தே மாதரம் பாடலை உள்துறை அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைப்படி படிக்கவில்லை என்றால் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள். குறிப்பாக அரசு நிகழ்ச்சிகளில் பாடப்பட வேண்டும். இதில் 6 பத்திகள் உள்ளன. அதில் இரண்டு பத்திகளுக்குப் பின் இந்து மத கடவுகளை போற்றி வருவதாக உள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தெரிவிக்கின்றன.</p><p>இந்த நிலையில் வந்தே மாதரம் மசோதாவை விமர்சிக்கும் காங்கிரஸ் கட்சியை பாஜக சாடியுள்ளது. </p><h2>இது தொடர்பாக பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவாலா கூறியதாவது:-</h2><p>காங்கிரசும் அதன் ஆதரவு வட்டாரமும் வந்தே மாதரம் பாடலை வெறுக்கின்றன. தேசியக் கொடி மற்றும் தேசிய கீதத்திற்கு அளிக்கப்படும் அதே மரியாதையை தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலுக்கும் அளிக்கும் வகையில், தேசிய கவுரவ அவமதிப்புத் தடுப்பு சட்டத்தில் (Prevention of Insults to National Honour Act) அரசு திருத்தம் கொண்டு வருகிறது. ஆனால், இதை வரவேற்பதற்குப் பதிலாகவும், வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு விழாவைக் கொண்டாடுவதற்குப் பதிலாகவும், காங்கிரஸ் இதில் அதிருப்தி கொண்டுள்ளது.</p><h2>வந்தே பாரதம் பாடலை இரண்டு பகுதிகளாக பிரித்தார் நேரு</h2><p>நேருஜி வந்தே பாரதம் பாடலை இரண்டு பகுதிகளாகப் பிரித்தார். முதல் இரண்டு சரணங்கள் மட்டுமே இருந்தபோதே, காங்கிரஸும் அதன் பல தலைவர்களும் வந்தே மாதரம் பாடலை இசைக்க மறுத்துவிட்டனர்.</p><figure><img alt="ஷேசாத் பூனவாலா" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/vp27sqve/ShehzadPoonawalla.jpg" /></figure><p>சித்தராமையாவாக இருக்கட்டும், மத்தியப் பிரதேச காங்கிரஸாக இருக்கட்டும் அல்லது சோனியா காந்தியாக இருக்கட்டும். வந்தே மாதரம் மீது அவர்களுக்கு ஒரு வெறுப்புணர்வு இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.</p><h2>INC இல்ல ANC</h2><p>இப்போதும் கூட அவர்கள் வந்தே மாதரம் பாடலை வெறுக்கிறார்கள். இது அவர்களின் மனநிலையை வெளிப்படுத்துகிறது. அவர்களால் ஹித்மாவை (Hidma) புகழ்ந்து பேசவும், நக்ஸல்கள் தியாகிகள் என்று கூறவும் முடிகிறது. அஃப்சல் மற்றும் யாகூப் போன்ற பயங்கரவாதிகள் மீது மென்மையான போக்கைக் கொண்டிருக்கவும் அவர்களால் முடிகிறது. </p><blockquote>அக்காலத்தில், முஸ்லிம் லீக்கின் அழுத்தத்திற்குப் பணிந்து வந்தே மாதரம் பாடலை எதிர்த்தனர். இன்றும் கூட, கேரளாவில் முஸ்லிம் லீக்குடன் கூட்டணி அமைத்துள்ள காரணத்தாலேயே வந்தே மாதரம் பாடலை காங்கிரஸ்காரர்கள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர்</blockquote> <p>ஆனால் பாரத மாதா மற்றும் வந்தே மாதரம் என்று வரும்போது மட்டும் அவர்களுக்குப் பிரச்சனை ஏற்படுகிறது. இது INC (இந்திய தேசிய காங்கிரஸ்) அல்ல, மாறாக ANC (தேச எதிர்ப்புக் காங்கிரஸ்) என்பதைத்தான் காட்டுகிறது.</p><p>இவ்வாறு ஷேசாத் பூனவாலா தெரிவித்துள்ளார்.</p><p>தற்போது மத்திய உள்துறை அமைச்சகம், தேசிய கீதத்திற்கு முன் தேசிய பாடலான வந்தே மாதரம் பாடல் பாடப்பட வேண்டும். ஒருவேளை மாநில பாடல்கள் இருந்தால், அது இசைக்கப்பட்ட பின், வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதம் என இருக்க வேண்டும். வந்தே மாதரம் பாடலின் 6 வரிகளையும் முழுமையாக பாடப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.</p>]]></content:encoded></item><item><title>எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவில் குதிரை பேரம் - அ.தி.மு.க. சார்பில் டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/horse-trading-admk-complaint-at-dgps-office</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/horse-trading-admk-complaint-at-dgps-office#comments</comments><guid isPermaLink="false">f7a1b243-ba3d-4595-ad7f-0cd37320beaf</guid><pubDate>Fri, 17 Jul 2026 09:33:56 +0000</pubDate><atom:updated>2026-07-17T09:33:56.202Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,ADMK,அதிமுக,tvk,Horse Trading,குதிரை பேரம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/timrhpnw/admk.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/timrhpnw/admk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">அ.தி.மு.க.</a> எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர். </p><p>இந்த விவகாரத்தில் குதிரை பேரம் நடந்து எம்.எல்.ஏ.க்கள் விலை பேசப்பட்டுள்ளதாக அ.தி.மு.க. சார்பில் புகார் மனுக்கள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.</p><p>சென்னை ஐகோர்ட்டிலும் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் அ.தி.மு.க. சார்பில் இன்று புகார் மனு அளிக்கப்பட்டது.</p><p>அந்தக் கட்சியின் கொறடாவும் முன்னாள் அமைச்சருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஐ.எஸ். இன்பதுரை எம்.பி. ஆகியோர் இன்று டி.ஜி.பி. மகேஷ் குமார் அகர்வாலை சந்தித்து மனு அளித்தனர்.</p> <p>பின்னர் அக்ரிகிருஷ்ண மூர்த்தி அளித்த பேட்டி வருமாறு:-</p><p>குதிரை பேரத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி டி.ஜி.பி.யிடம் இன்று மனு அளித்து உள்ளோம். குதிரை பேர நிகழ்வுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அதில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளோம்.</p><p>தமிழகத்தினுடைய தலைமைச் செயலகத்திலேயே பேரவைத் தலைவரிடம் 11 மணியளவில் ராஜினாமா கடிதத்தை கொடுக்கிறார்கள். அன்றைய தினமே 11.15 மணியளவில் மேலே சென்று அமைச்சருடைய அறையிலேயே அவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்படுகிறது. அதன் பிறகு பேரவை தலைவர் அவருடைய ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்திருப்பது ஜனநாயகத்திற்கு முரணானது. தமிழக சட்டப்பேரவை மரபுகளுக்கும் முரணானதாகும்.</p><p>இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியே இன்று மனு அளித்திருக்கிறோம். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p><p>இன்பதுரை எம்.பி. கூறும்போது, ‘இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களின் செல்போன்களை ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.</p>]]></content:encoded></item><item><title>மலையடிப்பட்டி அகழாய்வு - தமிழர்களின் தொன்மையை‌ மேலும் உலகிற்கு பறைசாற்றும்: அமைச்சர் ராஜ்மோகன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajmohan-malayadipatti-excavation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajmohan-malayadipatti-excavation#comments</comments><guid isPermaLink="false">4e557384-0f37-4163-83db-faca1ae68939</guid><pubDate>Fri, 17 Jul 2026 09:11:14 +0000</pubDate><atom:updated>2026-07-17T09:11:14.560Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Excavation,அகழாய்வு,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/at4oj3nf/rajmohan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அகழாய்வில் கிடைத்த தொல் பொருட்கள் -  அமைச்சர் ராஜ்மோகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/at4oj3nf/rajmohan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி மாவட்டம், கரிவலம் வந்தநல்லூர் அருகே உள்ள மலையடிப்பட்டியில் அகழாய்வில்  நூற்றுக்கும் மேற்பட்ட தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. </p><p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D">அமைச்சர் ராஜ்மோகன்</a> எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>தென்காசி மாவட்டம், கரிவலம் வந்தநல்லூர் அருகே உள்ள மலையடிப்பட்டியில் அமைந்துள்ள தொல்லியல் தளத்தில் அகழாய்வு கடந்த 3 மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த அகழாய்வில் நூற்றுக்கும் மேற்பட்ட தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் நுண்கற்கால கற்கருவிகள், சங்கு வளையல்கள், சுடுமண்ணால் ஆன தக்களிகள், வட்டச்சில்லுகள், சுடுமண் மணிகள், சூதுபவள மணிகள், ஆடி மணிகள், தங்கத்திலான மணி, செவ்வக பகடைக்காய், இரும்பு பொருட்கள் மற்றும் செப்பு நாணயங்கள் ஆகியவை கிடைக்கப்பெற்றுள்ளன. </p><p>இவை தவிர சங்க கால சதுர வடிவிலான செங்கல் கட்டுமானம், முழுமையான பானைகள், மூடியுடன் கூடிய கருப்பு வண்ணம் தீட்டப்பட்ட பானைகள், துளையிடப்பட்ட கிண்ணங்கள் போன்றவைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. </p><p>சங்க காலத்தில் இரும்புக் கருவிகள், ஆடி மணிகள், சங்கு வளையல்கள் மற்றும் நெசவு தொழிற்கூடங்கள் சிறப்புற செயல்பட்டதற்கான கட்டமைப்புகள் கிடைக்கப் பெற்றுள்ளன‌. தொடர் தொல்லியல் பணிகளும், அறிவியல் பூர்வமான ஆய்வு முடிவுகளும் தமிழர்களின் தொன்மையை‌ மேலும் உலகிற்கு பறைசாற்றும் என நம்புகிறோம். </p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item></channel></rss>