<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 18 Jul 2026 10:02:44 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-18-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-18-july-2026#comments</comments><guid isPermaLink="false">326d3728-e557-46b7-b4d5-7103447d079d</guid><pubDate>Sat, 18 Jul 2026 04:01:41 +0000</pubDate><atom:updated>2026-07-18T09:59:15.242Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/gjznrwdk/live0.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/gjznrwdk/live0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://maalai-malar.quintype.com/story/3e8b7f29-d0cd-48a9-b2ad-05756d3c3644">"மின் வெட்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்"- பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/147-girls-hospitalised-after-hostel-meal-in-gujarat">குஜராத் அரசு பள்ளி விடுதியில் கிச்சடி, கோதுமை ரொட்டி சாப்பிட்ட 147 மாணவிகளுக்கு திடீர் உடல் நலக்குறைவு</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/a1905b8b-554c-48bf-aca2-8242011846d7">கோவில் நில விவகாரத்தில் என் பெயரை இழுப்பதா?- அண்ணாமலைக்கு எச்.ராஜா கண்டனம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/plastic-rupee-notes-to-be-introduced-in-india-no-more-torn-or-wet-money">பணம் இனி கிழியாது நனையாது:இந்தியாவில் அறிமுகமாகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்!...</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/abd1ce03-d51e-4923-9fc7-6a37271f030c">சமூக நீதி விடுதிகளில் முதலமைச்சர் விஜய் நேற்று ஆய்வு- இன்று அதிரடி உத்தரவுகள்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/4547580d-f3aa-4b70-94e7-298a4f75e60a">ஆகஸ்டு முதல் வாரத்தில் தமிழக பட்ஜெட் தாக்கல்- முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/shashi-tharoor-stuck-in-lift-rescued-by-kerala-fire-force">லிஃப்டில் சிக்கிய சசி தரூர் எம்பி: ஹைட்ராலிக் கருவி மூலம் பத்திரமாக மீட்ட கேரள தீயணைப்புத்துறை!</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/1b7987f5-57c1-4c96-8c20-0e991acefc96">பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 7 முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற வியூகம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tnpsc-group-1-prelims-exam-date-changed">குரூப் 1 தேர்வு தேதி மாற்றம்.. எப்போது தெரியுமா? TNPSC அறிவிப்பு!... </a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/fbcc60cb-9c96-4736-a8a0-73f9a9f2cd82">அம்மா மினி கிளினிக்குகள் மீண்டும் தொடங்கப்படும் - அமைச்சர் அருண்ராஜ்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/4811dc25-2c86-4bfd-b81e-5b7fa9d437f0">"தனியார் ராக்கெட் ஏவும் திறன் பெற்ற 3வது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது"- பிரதமர் மோடி பெருமிதம்!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/sonam-wangchuk-hospitalised">சோனம் வாங்சுக் மருத்துவமனையில் அனுமதி: சப்தர்ஜங் ஊழியர்களுடன் அவரது மனைவி வாக்குவாதம்!... </a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/981434e0-9e28-4646-8907-cfe4006ccd91">மக்கள் தொகை கணக்கெடுப்பு: இணையதளத்தில் சுயமாக விவரங்கள் பதிவு செய்யும் வழிமுறைகள்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/65bbec77-2ae2-44ec-98ec-8372cc7edcc5">"என்னை நீக்க அதிகாரம் இல்லை"- தவெகவில் இருந்து நீக்கப்பட்ட ஞானசவுந்தரி பேட்டி</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/b7908e4e-b021-4e94-8d2b-4b33d250653c">வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம்-1</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/36b5d85b-9ebf-4a4d-8f31-ca6fa859566e">இன்று பிறந்தநாள்: தமிழக அமைச்சர் என்.ஆனந்துக்கு வாழ்த்து தெரிவிக்க குவிந்த தவெக தொண்டர்கள்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/f48dea31-2cc2-475e-93ea-d7d9b8d81dc0">தொழில்நுட்ப கோளாறு - தனியார் ராக்கெட் விக்ரம்-1 புறப்பாடு தாமதம்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/28a7888e-529f-477f-b5ba-75e342b4fb10">“தமிழ்நாடு” எனும் நம் தனிப்பெரும் அடையாளத்தை ஓங்கி ஒலிப்போம்! - கனிமொழி</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/453aaabb-a60c-4c23-b7e8-5a5b9dab6b35">GOLD PRICE TODAY: சற்றே உயர்ந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/17b67fab-0203-48b8-a4ee-a828e7849f47">ஊதியம் வழங்குவதற்கு கூட பணமின்றி சிஎம்டிஏ திவாலானது ஏன்?: வெள்ளை அறிக்கை வேண்டும்!- அன்புமணி</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/97077370-3769-42aa-bed7-5394eb95d5ed">பழனி கோவில் நில மோசடியில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை தீவிரம்- தி.மு.க. பிரமுகர் வீடுகளில் அதிரடி சோதனை</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/conspiracy-tvk-government-under-for-meghalaya-project">‘மேகாலயா புராஜெக்ட்’ என்ற பெயரில் த.வெ.க. ஆட்சியை கவிழ்க்க சதி திட்டம்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/b4109ef3-619f-4627-a14f-04da6a8ab601">அமைச்சர் ஆனந்த் மீது வழக்கு தொடர்ந்த ஞானசவுந்தரி த.வெ.க-வில் இருந்து நீக்கம்!</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/eee1b286-2e36-4f14-bc4e-280d83d03343">"தமிழ்த் தாயின் ஏக்கம் தீரப் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய நாள்"- மு.க.ஸ்டாலின் வாழ்த்து</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/212b730d-ea3e-4a1c-8952-40f3d28b929b">விசுவாசத்தின் உச்சம் - எஜமானியை காப்பாற்ற பாம்பிடம் போராடி உயிரை மாய்த்த நாய்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/sonam-wangchuk-removed-from-jantar-mantar-taken-to-hospital">21 நாளாக உண்ணாவிரதம்: மோசமடைந்த உடல்நிலை - சோனம் வாங்சுக் மருத்துவமனையில் அனுமதி</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/318ca44a-4f38-4c04-a47c-3f4e8ce7c27b">"தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட உறுதியேற்போம்"- முதலமைச்சர் விஜய் வாழ்த்து</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/8a8f042c-3464-4915-b85c-75f85f017832">உலகக் கோப்பை போட்டி: இந்திய பெண்கள் ஆக்கி அணி அறிவிப்பு</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/f04f11ed-9f6a-4154-9bc9-00e3cdf82551">உலகக் கோப்பை கால்பந்து: 3ம் இடத்துக்கான ஆட்டத்தில் பிரான்ஸ்- இங்கிலாந்து நாளை மோதல்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-delhi-travel-on-august-4th">வைகோவின் புத்தக வெளியீட்டு விழா: ஆகஸ்ட் 4-ல் முதலமைச்சர் விஜய் டெல்லி பயணம்!</a></p>]]></content:encoded></item><item><title>&quot;மின் வெட்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்&quot;- பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/withdraw-power-tariff-hike-and-end-power-cuts-premalatha-vijayakanth</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/withdraw-power-tariff-hike-and-end-power-cuts-premalatha-vijayakanth#comments</comments><guid isPermaLink="false">3e8b7f29-d0cd-48a9-b2ad-05756d3c3644</guid><pubDate>Sat, 18 Jul 2026 09:58:56 +0000</pubDate><atom:updated>2026-07-18T09:58:56.317Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Electricity,DMDK,தேமுதிக,பிரேமலதா விஜயகாந்த்,premalatha vijayakanth,மின்வெட்டு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/pgeraf75/premalatha.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Premalatha Vijatakanth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/pgeraf75/premalatha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் தொடர்ச்சியான மின் வெட்டு மற்றும் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என தமிழக அரசை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து ஏற்பட்டு வரும் மின் வெட்டு மற்றும் மின் பெரிதும் கட்டண உயர்வு காரணமாக பொதுமக்கள், விவசாயிகள், சிறு மற்றும் குறு தொழில்முனைவோர், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>இந்த நிலை மக்களின் அன்றாட வாழ்க்கையையும், விவசாய உற்பத்தியையும், தொழில் மற்றும் வணிக நடவடிக்கைகளையும் பாதிக்கிறது. எனவே, மின்சாரத் துறை அமைச்சரும், தமிழக முதல்வர் அவர்களும் இந்தப் பிரச்சினைக்கு மிக முக்கியத்துவம் அளித்து, உடனடியாக தீர்வு காண வேண்டும். </p><p>தமிழ்நாடு முழுவதும் ஏற்பட்டு வரும் மின் வெட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் சுமையை குறைக்கும் வகையில், மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். விவசாயத்திற்கான தடையற்ற மற்றும் தேவைப்படும் இடங்களில் இலவசமான மின்சாரம் வழங்கப்பட வேண்டும். </p><p>மின் கட்டண உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் நிலை இருப்பதால், சாமானிய மக்களின் வாழ்க்கை மேலும் சிரமத்திற்கு உள்ளாகும். மின் தடையை முற்றிலும் அகற்றி மின்சார கட்டண உயர்வையும் திரும்ப பெற வேண்டும் என தேமுதிக சார்பாக வலியுறுத்துகிறோம்.</p><p>மின்சார உற்பத்தி செய்ய, வருகின்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அதற்கான அறிவிப்பை இந்த அரசு வழங்கி தமிழ்நாட்டை மீண்டும் மின் மிகை மாநிலமாக உருவாக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.</p><p>இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>போலி பத்திரப்பதிவு மோசடியில் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் - அமைச்சர் நிர்மல்குமார் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-says-everyone-involved-in-fraudulent-document-registration-scam-will-be-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-says-everyone-involved-in-fraudulent-document-registration-scam-will-be-arrested#comments</comments><guid isPermaLink="false">0ae6ea80-66e4-4702-8c87-da14c7257ddc</guid><pubDate>Sat, 18 Jul 2026 09:29:22 +0000</pubDate><atom:updated>2026-07-18T09:29:22.099Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Palani temple,பழனி கோவில்,நில மோசடி,Land fraud,அமைச்சர் நிர்மல்குமார்,minister nirmal kumar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/03rlibqe/Ministernirmalkumar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Nirmal kumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/03rlibqe/Ministernirmalkumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுரையில் அமைச்சர் நிர்மல்குமார் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-</p><p>மின்துறையில் ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து தற்போது எந்த உறுதியும் அளிக்க முடியாது. முதலில் எத்தனை ஒப்பந்த பணியாளர்கள் பணியில் உள்ளனர் என்பது குறித்து கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. அதன் பிறகு முடிவெடிக்கப்படும்.</p><h2>தி.மு.க. ஆட்சி</h2><p>கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சியில் பத்திர பதிவுத்துறையில் முறைகேடு நடந்துள்ளது. முந்தைய அமைச்சரின் காலத்தில் ஊழல் மலிந்திருந்தது. <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-100-crore-fraud-at-palani-temple-buyer-and-seller-of-land-absconding">பழனி போலி பத்திரப்பதிவு மோசடி</a> தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. </p><p>இதுபோன்ற மோசடி தமிழகத்தின் பல பகுதிகளிலும் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. கோவில் நிலங்கள் மட்டுமல்லாமல், நீர் நிலைகளையும் ஆக்கிரமித்து போலி பட்டாக்கள் வழங்கப்பட்டிருக்கலாம். போலி பத்திரப்பதிவு மோசடியில் சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். </p><p>மேலும், பத்திரப்பதிவுத் துறை அலுவலர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இத்தகைய மோசடிகள் நடைபெற வாய்ப்பில்லை. அதிக புகார்கள் வருவதால் இதற்கென தனிப்பிரிவு அமைப்பது குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சருடன் ஆலோசிக்கப்படும். </p><h2>போலி பத்திரப்பதிவு</h2><p>போலி பத்திரப்பதிவு தொடர்பான ஆவணங்களை பொதுமக்கள் வழங்கினால் குற்றவியல் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்படும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>உலக கோப்பை யாருக்கு? நாளை நள்ளிரவு இறுதிப் போட்டி: அர்ஜென்டினா- ஸ்பெயின் பலப்பரீட்சை</title><link>https://www.maalaimalar.com/sports/football/fifa-world-cup-final-argentina-vs-spain-tomorrow-at-midnight-showdown</link><comments>https://www.maalaimalar.com/sports/football/fifa-world-cup-final-argentina-vs-spain-tomorrow-at-midnight-showdown#comments</comments><guid isPermaLink="false">5624d0aa-7b34-4cb4-b918-212809c5d419</guid><pubDate>Sat, 18 Jul 2026 09:14:43 +0000</pubDate><atom:updated>2026-07-18T09:14:43.870Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Lionel Messi,argentina,அர்ஜென்டினா,மெஸ்சி,Spain,Lamine Yamal,பிபா உலக கோப்பை,FIFA World Cup 2026,லமின் யமால்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/wvdtdcim/MessiYamal001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Messi- lamine yamal]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/wvdtdcim/MessiYamal001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கால்பந்து (Football)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் கடந்த மாதம் 11-ந்தேதி தொடங்கிய 23-வது உலக கோப்பை கால்பந்து போட்டி தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளது. இதில் முதல் முறையாக 48 நாடுகள் பங்கேற்றன. அவை 12 பிரிவாக பிரிக்கப்பட்டது. 28-ந் தேதியுடன் லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்றது.</p><h2>நாளை இறுதிப் போட்டி</h2><p>இதன் முடிவில் 2-வது சுற்றுக்கு 32 அணிகள் தகுதி பெற்றன. 2- வது ரவுண்டு கடந்த 5-ந்தேதி முடிவ–டைந்தது. இதில்  இருந்து 16 நாடுகள் 3-வது சுற்றுக்கு நுழைந்தன. 3-வது ரவுண்டு 8-ந்தேதி முடிவடைந்தது. அதில் இருந்து  8  அணிகள் கால்இறுதிக்கு முன்னேறின. கால்இறுதி ஆட்டங்கள் 12- ந்தேதி  நிறைவடைந்தது.</p><p>டாப் 4 வரிசையில் உள்ள பிரான்ஸ், அர்ஜென்டினா, ஸ்பெயின், இங்கிலாந்து ஆகியவை அரை இறுதிக்கு முன்னேறின. 14-ந்தேதி நடந்த முதல் அரை இறுதியில் ஸ்பெயின் 2-0 என்ற கணக்கில் பிரான்சையும், 15-ந்தேதி நடைபெற்ற 2-வது அரைஇறுதியில் அர்ஜென்டினா 2-1  என்ற கணக்கில் இங்கிலாந்தையும் வீழ்த்தின.</p><p>உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இறுதிப் போட்டி நாளை (19-ந்தேதி) நடக்கிறது.</p><h2>உலக கோப்பை யாருக்கு? அர்ஜென்டினா- ஸ்பெயின் பலப்பரீட்சை</h2><p>இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு நியூயார்க்கில் உள்ள நியூஜெர்சியில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா- ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.</p><p>தரவரிசையில் முதல் 2 இடங்களில் உள்ள அணிகள் உலக கோப்பை இறுதிப் போட்டியில் மோதுவது இதுவே முதல் முறையாகும். நடப்பு உலக சாம்பியனும் தென்அமெரிக்க சாம்பியனுமான அர்ஜென்டினாவும், ஐரோப்பிய சாம்பியனான ஸ்பெயினும் இறுதி ஆட்டத்தில் மோதுவது மிகுந்த சுவராசியமானது.</p><p>அர்ஜென்டினா 7-வது முறையாகவும், ஸ்பெயின் 2-வது தடவையாகவும் இறுதிப் போட்டியில் ஆடுகிறது. இதில் அர்ஜென்டினா 3 தடவையும், ஸ்பெயின் ஒரு முறையும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. பலம் வாய்ந்த அணிகள் மோதும் இந்த ஆட்டத்தில் உலக கோப்பையை வெல்லப் போவது அர்ஜென்டினாவா? ஸ்பெயினா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>அர்ஜென்டினா அணி</h2><p>தென் அமெரிக்காவின் வலிமையான அணிகளில் ஒன்றான அர்ஜென்–டினா. இதற்கு முன்பு 1930, 1978, 1986, 1990, 2014, 2022 ஆகிய ஆண்டுகளில் இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தது. இதில் 3 முறை (1978, 1986, 2022) உலக கோப்பையை கைப்பற்றியது. 3 தடவை பட்டத்தை இழந்தது. தற்போது சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து 4-வது முறையாக உலக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.</p><p>தரவரிசை–யில் முதல் இடத்தில் உள்ள அர்ஜென்டினா இந்த போட்டி தொடரில் தான் மோதிய அனைத்து ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருந்தது. 2-வது சுற்றில் கேப் வெர்டேயை போராடி தோற்கடித்தது. எகிப்து (3-வது ரவுண்டு), இங்கிலாந்து (அரைஇறுதி) ஆகிய–வற்றுக்கு எதிராக முதலில் கோல் வாங்கி பின்–தங்கி முன்னேறி வீழ்த்தி இருந்தது.</p><h2>மெஸ்சி</h2><p>அர்ஜென்–டினா அணி இறுதிப் போட்டியில் நுழைய முக்கிய பங்கு வகித்தவர் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி. கேப்டனும், உலகின் தலைசிறந்த வீரருமான அவர் இந்த போட்டி தொடரில் 8 கோல் அடித்து முன்னிலையில் உள்ளார். மேலும் 4 கோல் அடிக்க உதவியாக இருந்துள்ளார்.</p><p>மேஜிக்மேன் இன்னும் ஒரு ஆட்டத்தில் இதே திறமையை வெளிப்படுத்தினால் அர்ஜென்டினாவுக்கு கோப்பை கிடைக்கும். 39 வயதான அவர் உடல் தகுதியில் சற்று பின்தங்கி இருந்தாலும் நுணுக்கம், புத்திசாலித்தனம், அனுபவம் ஆகியவற்றால்  எதிர் அணியை தடுமாற வைக்கிறார். பெரும்பாலும் களத்தில் நடந்து கொண்டே இருக்கும் அவர் பந்து கிடைக்கும் போது ஆக்ரோஷத்தை வெளிப்–படுத்துகிறார். வீரர்களை ஒருங்கிணைத்து களப் பயிற்சியாளர் போல் செயல்படுகிறார்.</p><h2>பின்களம் பலவீனம்</h2><p>மேலும் லவுடரோ பெர்னாண்டஸ் (3 கோல்), என்சோ பெர்னாண்டஸ் (2), லிசாண்டரோ மார்ட்டினஸ், அலெக்ஸ் மேக்அலிஸ்டர், ஜிவோனி லோ செல்சோ, ஜூலியன் அல்வாரெஸ், கிறிஸ்டியன், ரோமிரோ (தலா ஒரு கோல்) போன்ற சிறந்த வீரர்களும் உள்ளனர்.</p><p>பின்–களத்தில் அர்ஜென்டினா பலவீனமாக இருக்கிறது. இதை சரி செய்–வது அவசியமாகும். ஸ்பெயின் வீரர்கள் பந்தை கடத்தி சென்று கோல் அடிப்பதில் வல்ல–வர்கள். இதனால் அவர்களது தாக்குதல் ஆட்டம் அர்ஜென்டினாவுக்கு கடும் சவாலாக இருக்கும்.</p><p>அர்ஜென்டினா அதிக கோல்களை அடித்த அணியாக திகழ்கிறது. அந்த அணி 19 கோல்கள் அடித்து உள்ளது. அதே நேரத்தில் 7 கோல் வாங்கி உள்ளது. இதனால் ஸ்பெயினுக்கு எதிராக அர்ஜென்டினா முழு திறமையை  வெளிப்–படுத்த வேண்டும்.</p><h2>ஸ்பெயின் அணி</h2><p><a href="https://www.maalaimalar.com/sports/football/spain-beats-france-2-0-to-reach-fifa-world-cup-final-after-16-years">ஸ்பெயின்</a> அணி இதற்கு முன்பு 2010-ம் ஆண்டு தென்–ஆப்பிரிக்காவில் நடந்த போட்டியில் இறுதி ஆட்டத்தில் விளையாடியது. தனது முதல் இறுதிப் போட்டியிலேயே உலக கோப்பையை வென்று சாதித்தது. தற்போது 16 ஆண்டுகளுக்கு பிறகு 2-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.</p><figure><img alt="Spain Team" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/kuozwxzk/SpainTeam0001.jpg" /></figure><p>அர்ஜென்டி–னாவை வீழ்த்தி 2-வது முறையாக உலக கோப்பையை கைப்பற்றும் வேட்கையில் உள்ளது. தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஸ்பெயின் இந்தப் போட்டித் தொடரில் தோல்வியை தழுவவில்லை. கேப்வார்டே அணியுடன் மட்டுமே </p><p>கோலின்றி ‘டிரா’ செய்தது. மற்ற அணிகளை எளிதில் வீழ்த்தியது. அரை இறுதியில் பிரான்சை 2 கோல் போட்டு தோற்கடித்ததன் மூலம் ஸ்பெயின் அசைக்க முடியாத அணியாக திகழ்கிறது.</p><h2>லமின் யமால்</h2><p>ஸ்பெயின் அணி–யின் நட்சத்திர வீரர் லமின் யமால் அர்ஜென்டினாவுக்கு கடும் சவாலாக இருப்பார். அவர் ஒரு கோல் மட்டும்தான் அடித்துள்ளார். ஆனால் பந்தை கடத்தி சென்று முன்னேறுவதில் 19 வயதான லமின் யமால் திறமைசாலி ஆவார். 2024-ம் ஆண்டு ஸ்பெயின் அணி, ஐரோப்பிய கோப்பையை வெல்ல அவர் முக்கிய பங்கு வகித்தார். பிரான்சுக்கு எதிரான அரைஇறுதியில் ஒரு கோல் அடித்தார்.</p><figure><img alt="lamine yamal" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-06/zx21urm2/3203225_yamal.webp" /></figure> <p>இந்த உலக கோப்பையில் அதிக கோல்கள் அடித்த ஸ்பெயின் வீரராக மைக்கேல் ஒயர்சபால் இருக்கிறார். அவர் 5 கோல்களை பதிவு செய்துள்ளார். மெரினோ, பெட்ரோ போரோ (தலா 2 கோல்கள்), அலெக்ஸ் பயெனா, பேபியன் ரூயிஸ் (தலா 1 கோல்) போன்ற சிறந்த வீரர்களும் ஸ்பெயின் அணியில் உள்ளனர்.</p><h2>ஸ்பெயின் கோல் கீப்பர்</h2><p>ஸ்பெயின் அணி வீரர்கள் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். பந்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் நீண்ட நேரம் வைத்து எதிர் அணியின் வளையத்தை உடைத்து முன்னேறி சென்று கோல் அடிப்பதில் வல்லவர்கள். முதல் நிலை அணியான பிரான்சுக்கு எதிராக அவர்கள் அற்புதமாக ஆடினார்கள். இதனால் உலக கோப்பையை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கையில் அந்த அணி இருக்கிறது.</p><p>மேலும் பின்களமும், கோல் கீப்பரும் ஸ்பெயின் அணியின் பலமாக இருக்கிறது. அந்த அணி இதுவரை ஒரு கோல் மட்டுமே வாங்கி உள்ளது. பந்துகளை தடுப்பதில் கோல் கீப்பர் சைமன் அபாரமாக செயல்படுகிறார். பெல்ஜியத்துக்கு எதிராக மட்டுமே அவர் ஒரு கோலை விட்டார். அர்ஜென்–டினா வீரர்களுக்கு அவர் கடும் சவாலாக இருப்பார்.</p><p>இரு அணிகளும் உலக கோப்பையை வெல்ல கடுமையாக போராடும் என்பதால் இறுதிப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. கால்பந்து ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும். </p><p>முன்ன தாக இன்று நள்ளிரவு 2.30 மணிக்கு நடைபெறும் 3-வது இடத்து க்கான ஆட்டத்தில் பிரான்ஸ்-இங்கி–லாந்து அணிகள் மோதுகின்றன.</p><h2>60 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பையில் மோதல்</h2><p>அர்ஜென்டினாவும், ஸ்பெயினும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் 60 ஆண்டுகளுக்கு பிறகு மோதுகின்றன. இரு அணிகளும் உலக கோப்பையில் ஒரே ஒரு தடவைதான் நேருக்கு நேர் சந்தித்தன. 1966-ம் ஆண்டு நடந்த அந்த போட்டியின் லீக் ஆட்டத்தில் அர்ஜென்டினா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அர்ஜென்டினா அணிக்காக  லூயிஸ் ஆர்டைம் (65 மற்றும் 79-வது நிமிடங்கள்) 2 கோலும், ஸ்பெயின் தரப்பில் பிர்ரியும் கோல் (71-வது நிமிடம்) அடித்தனர்.</p><p>சர்வதேச போட்டி மற்றும் நட்பு ஆட்டம் என இரு அணிகளும் 14 முறை மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா 6 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன. 2 போட்டி டிரா ஆனது. கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் ஸ்பெயின் 3-2 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பழனி கோவிலில் ரூ.100 கோடி மோசடி - நிலம் வாங்கியவர், விற்றவர் தலைமறைவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-100-crore-fraud-at-palani-temple-buyer-and-seller-of-land-absconding</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-100-crore-fraud-at-palani-temple-buyer-and-seller-of-land-absconding#comments</comments><guid isPermaLink="false">11720d56-6f4f-4d60-a8ac-0936026e8c74</guid><pubDate>Sat, 18 Jul 2026 09:02:05 +0000</pubDate><atom:updated>2026-07-18T09:02:05.257Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Palani temple,பழனி கோவில்,நில மோசடி,சிபிசிஐடி,Land fraud,cbcid</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/whvsujcm/palanitemple.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Palani Temple]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/whvsujcm/palanitemple.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[  <p>பழனி கோவிலில் ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடியில் நிலம் வாங்கியவர், விற்றவர் தலைமறைவாகி உள்ளனர்.</p><h2>பழனி கோவில்</h2><p>திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பூங்கா ரோட்டில் தண்டபாணி சுவாமி மடத்தில் அறக்கட்டளைக்கு சொந்தமான 1.40 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கான தக்காராக பழனி கோவில் இணை ஆணையர் நீதிமன்ற உத்தரவின் பேரில் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் கோவில் நிர்வாகம் அந்த நிலத்தை நிர்வகித்து வருகிறது. ரூ.100 கோடி மதிப்பிலான அந்த நிலம் கடந்த ஆண்டு முதல் பக்தர்களின் வாகன நிறுத்துமிடமாக மாற்றப்பட்டுள்ளது.</p><h2>பத்திரப்பதிவு மோசடி</h2><p>கடந்த ஜூலை 6ம் தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் அந்த நிலம் 2 பேருக்கு ரூ.2 கோடிக்கு கிரையமாக பத்திர பதிவு செய்யப்பட்டது. பழனி கோவில் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்த நிலத்தை பத்திர பதிவு செய்தது தொடர்பாக கோவில் நிலப்பிரிவு கண்காணிப்பாளர் முருகானந்தம் பழனி அடிவாரம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் பழனி சார்பதிவாளராக இருந்த ஜஸ்டின் மணிகண்டன், விழுப்புரத்தை சேர்ந்த முருகதாஸ், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்துள்ள பாப்பன்குளத்தை சேர்ந்த வெள்ளைத்துரை, பழனி டி.கே.என்.புதூரை சேர்ந்த சேதுபதி ஆகிய 4 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.</p><p>தொடர்ந்து சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். </p> <h2>சி.பி.சி.ஐ.டி. விசாரணை</h2><p>இந்த வழக்கில் தண்டபாணி சுவாமி மடத்தின் நிலத்தை தனியாருக்கு பத்திர பதிவு செய்தது செல்லாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து பழனி அடிவாரம் போலீசிடமிருந்து வழக்கு விசாரணை திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.</p><p>வழக்கு விசாரணைக்காக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-temple-land-scam-cbcid-probe-dmk-leaders-raids">சி.பி.சி.ஐ.டி.</a> மதுரை எஸ்.பி. ஷஜிதா திண்டுக்கல் நேருஜி நகரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு வருகை தந்தார். புகார் அளித்த கண்காணிப்பாளர் முருகானந்தம், செயல் அலுவலர் கணபதி, கண்காணிப்பாளர் சிவனேசன், கோவில் நிலங்கள் தொடர்பான பணிகளை மேற்கொண்ட ஓய்வு பெற்ற தாசில்தார் மாரியப்பன், ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ. சின்னச்சாமி ஆகியோர் திண்டுக்கல்லுக்கு வரவழைக்கப்பட்டனர்.</p><p>சம்பந்தப்பட்ட நிலம் தொடர்பான ஆவணங்களும் கொண்ட வரப்பட்டது. இதையடுத்து அவர்கள் 5 பேரிடமும் 4 மணிநேரம் எஸ்.பி. ஷஜிதா விசாரணை மேற்கொண்டார். இதனிடையே ஒட்டன்சத்திரம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சஞ்சை காந்தியை வரவழைத்து மடத்துக்கு உரிய நிலம் சம்பந்தமான ஆவணங்களை பெற்றனர்.</p> <h2>அனைவரும் தலைமறைவு</h2><p>தொடர் கிடுக்குப்பிடி விசாரணையால் தேவஸ்தான அதிகாரிகள், பதிவுத்துறை அதிகாரிகள், பணியாளர்கள் பலர் கலக்கத்தில் உள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் பலருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனிடையே நிலத்தை விற்ற திருப்புகழ் சுவாமிகள், முருகதாஸ் சுவாமிகள் மற்றும் தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளை சார்ந்த முருகதாஸ், நிலத்தை வாங்கிய வெள்ளைத்துரை, சேதுபதி ஆகிய அனைவரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களது செல்போன் எண்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. பத்திர பதிவு நாளில் சாட்சி கையெழுத்திட்டோரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களையும் போலீசார் சல்லடை போட்டு தேடி வருகின்றனர். </p><p>முறைகேடாக கோவில் நிலத்தை விற்ற, வாங்கியவர்களின் புகைப்படத்தை வெளியிட வேண்டும் என அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வரும் நிலையில் நிலத்தை வாங்கிய சேதுபதியின் புகைப்படம் மற்றும் நிலம் தொடர்பான வில்லங்கச்சான்று இணையதளத்தில் வெளியாகி உள்ளது. </p> <h2>பத்திரப்பதிவு</h2><p>பத்திரப்பதிவு நடந்த விவரம் குறித்து நடந்த விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. பத்திர பதிவுக்கான ஆவணங்கள் கொடுத்தபோது பழனி சார்பதிவாளர் அதனை வாங்கியுள்ளார். ஆனால் தள்ளுபடி செய்யாமல் நிலுவையில் உள்ளதாக வைத்துவிட்டு விடுமுறையில் சென்றுவிட்டார். பின்னர் திண்டுக்கல் மாவட்ட பதிவாளர் சசிகலா, கொடைக்கானலில் பணியில் இருந்த ஜஸ்டின் மணிகண்டனை ஒருநாள் விடுமுறைக்காக வரவழைத்து ரூ.100 மதிப்பிலான நிலத்தை ரூ.2 கோடிக்கு பத்திர பதிவு செய்து கொடுத்துள்ளார். பதிவு முடிந்ததும் அவர் கொடைக்கானலுக்கு மீண்டும் பணிக்கு சென்று விட்டார். இதனால் இந்த முறைகேட்டில் பல அதிகாரிகள், பல அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் சசிகலாவிடமும் விசாரணை நடத்தினால் இந்த முறைகேட்டின் பின்புலமாக இருந்தவர்கள் யார் என தெரியவரும்.</p><p>சசிகலா கடந்த 6 ஆண்டுகளாக விருதுநகர் மாவட்டத்தில் பணிபுரிந்து வந்தவர். பல அதிகாரிகள் மாற்றப்பட்ட போதும் இவர் மட்டும் மாற்றப்படாமல் இருந்துள்ளார். எனவே இவருக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அரசியல் கட்சியினர் பின்புலமாக இருந்திருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளார்கள்.</p>]]></content:encoded></item><item><title>கோவில் நில விவகாரத்தில் என் பெயரை இழுப்பதா?- அண்ணாமலைக்கு எச்.ராஜா கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/h-raja-condemned-annamalai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/h-raja-condemned-annamalai#comments</comments><guid isPermaLink="false">a1905b8b-554c-48bf-aca2-8242011846d7</guid><pubDate>Sat, 18 Jul 2026 08:57:29 +0000</pubDate><atom:updated>2026-07-18T08:57:29.562Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,அண்ணாமலை,H raja,எச் ராஜா,annamalai</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/fqiuyst9/Hraja.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ எச்.ராஜா ]]></media:title><media:description type="html"><![CDATA[ எச்.ராஜா ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/fqiuyst9/Hraja.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா, கோவில் நிலங்கள் தொடர்பாக கூறியதாக அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.</aside><p>எச்.ராஜா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-</p><h2><strong>உண்மைக்கு புறம்பாக</strong></h2><p>பொள்ளாச்சியில் நடந்த என்.ஜி.ஓ. கூட்டத்தில் அண்ணாமலை பேசும் போது என்னுடைய பெயரை இழுத்து விட்டு தன் பக்கத்தில் நியாயம் இருப்பது போல் <a href="https://www.maalaimalar.com/topic/அண்ணாமலை">அண்ணாமலை</a> பேசி இருக்கிறார். அதில் கோவில் இடத்தை பராதீனப்படுத்தலாம் என்று நான் கூறியதாக கூறி இருக்கிறார்.</p><p>இப்போதைய முதலமைச்சர் விஜய் அரசில் சபாநாயகர் சட்டசபையில் பைபிளில் இருந்து மேற்கோள் காட்டுகிறார். ஏன் குரானில் இருந்து தேவார பாடல்களில் இருந்து மேற்கோள் காட்டவில்லை? அப்படியானால் இந்த அரசு ஜனநாயக அரசு இல்லையா? இதை கண்டிக்க துணிச்சல் இல்லாத அரசியல் தலைவர்கள் எச்.ராஜா அப்படி பேசிவிட்டார் என்று நான் 2024-ல் பேசியதை தவறாகவும், உண்மைக்கு புறம்பாகவும் பேசி இருக்கிறார்.</p><h2><strong>பொய்</strong></h2><p>நான் எடப்பாடி பழனிசாமியை 2 முறை சந்தித்து இருக்கிறேன். அப்போது கோவில்களுக்கு சொந்தமான 4 லட்சத்து 76 ஆயிரம் ஏக்கர் நிலம், மனைகள், கட்டிடங்கள் அளக்கப்படவில்லை. கையகப்படுத்தவில்லை. ஆக்கிரமிப்பில் இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டி பேசி இருக்கிறேன். எந்த விதத்திலும் நான் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தியது கிடையாது.</p><p>நான் கட்சி பணிக்காக சென்ற போது உள்ளூர் விவசாயிகள் சிலர் என்னை சந்தித்தார்கள். அப்பவே நான் அவர்களிடம் சொன்னேன். கோவில் இடங்களை கையகப்படுத்த  முடியாது. தி.மு.க. அரசு மக்களின் பட்டா இடங்களை கைப்பற்றுவதை அனுமதிக்க மாட்டேன் என்று தெரிவித்தேன். முதலில் அது கோவில் சொத்தா? பட்டா இடமா? என்பது பற்றி விசாரிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறேன். இதை தவறாக சுட்டிக்காட்டி என் பெயரையும் சேர்த்து இழுத்து விட்டு பொய் கூறி இருக்கிறார் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>பணம் இனி கிழியாது நனையாது:இந்தியாவில் அறிமுகமாகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்!</title><link>https://www.maalaimalar.com/news/national/plastic-rupee-notes-to-be-introduced-in-india-no-more-torn-or-wet-money</link><comments>https://www.maalaimalar.com/news/national/plastic-rupee-notes-to-be-introduced-in-india-no-more-torn-or-wet-money#comments</comments><guid isPermaLink="false">2d359d41-1d4b-4116-891b-347bb22397be</guid><pubDate>Sat, 18 Jul 2026 08:45:13 +0000</pubDate><atom:updated>2026-07-18T08:45:13.339Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>RBI,இந்திய ரிசர்வ் வங்கி,Plastic banknotes,Paper banknotes,காகித ரூபாய் நோட்டுகள்,பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/teglev9a/rbi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Plastic banknotes ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/teglev9a/rbi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் தற்போது புழக்கத்தில் உள்ள காகித ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக, நீண்ட காலம் உழைக்கக்கூடிய பிளாஸ்டிக் (Polymer) ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்வதற்கான முதற்கட்ட பணிகளை இந்திய ரிசர்வ் வங்கி தீவிரப்படுத்தியுள்ளது. இதன் தொடக்கமாக, அடுத்த ஆண்டு முதல் 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நோட்டுகளை சோதனை முறையில் புழக்கத்தில் விட ஆர்பிஐ திட்டமிட்டுள்ளது.</p><h2><strong>உலகளாவிய டெண்டர் அறிவிப்பு:</strong></h2><p>ஆர்பிஐ-இன் நாணய அச்சடிப்பு நிறுவனமான பாரதிய ரிசர்வ் பேங்க் நோட் முத்ரான் பிரைவேட் லிமிடெட், இந்த பிளாஸ்டிக் நோட்டுகளை தயாரிப்பதற்கான பிரத்யேக 'பாலிமர் சப்ஸ்ட்ரேட்' தாள்களை வழங்க உலகளாவிய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துடெண்டர் வெளியிட்டுள்ளது. </p><p>இதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஆகஸ்ட் 18 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 68,000 ரீம்கள் பாலிமர் தாள்கள் முதற்கட்டமாக கோரப்பட்டுள்ளன. 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நோட்டுகளுக்கு தலா 34,000 ரீம்கள் பயன்படுத்தப்படும் (ஒரு ரீம் என்பது 500 தாள்களைக் கொண்டது).</p><h2><strong>பிளாஸ்டிக் நோட்டுகள் ஏன்?</strong></h2><p>இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்த போதிலும், ரொக்கப் பணத்தின் தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் சவால்களைச் சமாளிக்கவே இந்த மாற்றம் கொண்டுவரப்படுகிறது.</p><h2><strong>நீடித்த உழைப்பு:</strong></h2><p>சாதாரண காகித நோட்டுகளை விட பிளாஸ்டிக் நோட்டுகள் 4 முதல் 5 மடங்கு அதிக காலம் உழைக்கும். இவை எளிதில் கிழியாது; தண்ணீர், எண்ணெய் போன்றவற்றால் பாதிக்கப்படாது.</p><h2><strong>அழுக்கு மற்றும் கிருமி எதிர்ப்பு:</strong></h2><p>காகித நோட்டுகள் எளிதில் அழுக்கடைந்து 'அழுக்கு நோட்டுகளாக' மாறிவிடுகின்றன. ஆனால், பாலிமர் நோட்டுகள் ஈரப்பதம் மற்றும் பாக்டீரியாக்களை உறிஞ்சாது என்பதால் எப்போதும் சுத்தமாக இருக்கும்.</p><h2><strong>செலவு குறைப்பு:</strong></h2><p> ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான பழைய காகித நோட்டுகளை அழித்துவிட்டு, புதிய நோட்டுகளை அச்சடிக்க ஆர்பிஐ ஆயிரக்கணக்கான கோடிகளைச் செலவிடுகிறது. பிளாஸ்டிக் நோட்டுகள் நீண்ட காலம் உழைக்கும் என்பதால், இந்த அச்சடிப்புச் செலவு பெருமளவு குறையும்.</p><h2><strong>கள்ள நோட்டுகளைத் தடுத்தல்:</strong></h2><p> இந்த பாலிமர் நோட்டுகளில் வெளிப்படையான விண்டோ, உலோக எண்கள், காந்த இழை போன்ற அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெறும். இதனால் கள்ள நோட்டுகளைத் தயாரிப்பது முற்றிலும் சாத்தியமற்றதாக மாறும்.</p><h2><strong>கடுமையான பாதுகாப்பு நிபந்தனைகள்:</strong></h2><p>நாட்டின் பாதுகாப்பு நலனைக் கருத்தில் கொண்டு, இந்த டெண்டரில் பங்கேற்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஆர்பிஐ கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.</p><p>* சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் எந்தவொரு வணிகத் தொடர்பும் இல்லாத நிறுவனங்கள் மட்டுமே இதில் பங்கேற்க முடியும்.</p><p>* மூலப்பொருட்களை இந்த இரு நாடுகளிலிருந்தும் பெறக்கூடாது.</p><p>* இதற்கு முன் சீனா அல்லது பாகிஸ்தானில் பணியாற்றிய ஊழியர்களை இந்த இந்தியத் திட்டத்தில் பணியமர்த்தக் கூடாது.</p><h2><strong>எப்போது முழுமையாக புழக்கத்திற்கு வரும்?</strong></h2><p>இந்த பிளாஸ்டிக் நோட்டுகள் அறிமுகமான உடனே பழைய காகித நோட்டுகள் செல்லாததாகிவிடாது. இரண்டுமே ஒரே நேரத்தில் புழக்கத்தில் இருக்கும். அடுத்த ஆண்டு தொடங்கும் இந்த சோதனை ஓட்டத்தின் வெற்றி மற்றும் மக்களின் வரவேற்பைப் பொறுத்து, 2027-ஆம் ஆண்டிற்குப் பிறகு நாடு முழுவதும் அனைத்து நோட்டுகளும் பிளாஸ்டிக் நோட்டுகளாக மாற்றப்படும் எனத் தெரிகிறது.</p><p>ஏற்கனவே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா, நியூசிலாந்து உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த பாலிமர் பிளாஸ்டிக் கரன்சி முறையைப் பயன்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>புனேவில் பரவும் கொரோனா தொற்று: மருத்துவ நிபுணர்கள் சொல்வது என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/national/coronavirus-spread-on-pune</link><comments>https://www.maalaimalar.com/news/national/coronavirus-spread-on-pune#comments</comments><guid isPermaLink="false">08531ce1-495e-457d-8536-6933544b5765</guid><pubDate>Sat, 18 Jul 2026 08:42:02 +0000</pubDate><atom:updated>2026-07-18T08:42:02.819Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Coronavirus,கொரோனா வைரஸ்,மருத்துவ நிபுணர்கள்</media:keywords><media:content height="350" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/uwhm2aul/coronavirus.jpg" width="615"><media:title type="html"><![CDATA[ கொரோனா வைரஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ கொரோனா வைரஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/uwhm2aul/coronavirus.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலகையே உலுக்கிய <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D">கொரோனா</a> பெருந்தொற்றின் தாக்கம் குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்ட நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் கடந்த 10 நாட்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் மெதுவாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனினும், இது புதிய அலைக்கான அறிகுறி அல்ல என்றும், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். தற்போதைய பாதிப்புகள் அனைத்தும் லேசான அறிகுறிகளுடனேயே காணப்படுகின்றன.</p><h2><strong>புள்ளி விவரம்</strong></h2><p>மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டில் இதுவரை மாநிலம் முழுவதும் 48 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தொற்றின் காரணமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. கடந்த 3 ஆண்டுகளாக பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல் இருந்த நிலையில், 2026-ம் ஆண்டு வரை இந்த தொற்று படிப்படியாக உயர்ந்து வந்துள்ளது. இந்த ஆண்டின் கணக்குப்படி ஜனவரியில் 3, பிப்ரவரியில் 1, ஜூன் மாதத்தில் 11 மற்றும் ஜூலை மாதத்தில் 21 என பாதிப்புகள் பதிவாகியுள்ளன. கொரோனா பரிசோதனைகளை தாமாக முன்வந்து செய்து கொண்டவர்களை விட, வேறு நோய்களுக்கான அறுவை சிகிச்சைக்கு முந்தைய உடற்தகுதி பரிசோதனைகளின் போதே பலருக்கு தொற்று இருப்பது தற்செயலாக கண்டறியப்பட்டு உள்ளது. இந்த வைரஸ் தற்போது வழக்கமான இன்ப்ளூயன்ஸா காய்ச்சலை போன்ற ஒரு போக்கை நோக்கி மாறியுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.</p><h2><strong>அறிகுறி</strong></h2><p>2023-ம் ஆண்டிற்கு பிறகு <a href="https://www.maalaimalar.com/news/national/andhra-pradesh-reports-4-covid-19-deaths-12-cases-in-less-than-a-month">கொரோனா</a> பாதிப்பால் ஏற்பட்டுள்ள முதல் குறிப்பிடத்தக்க உயர்வு இதுவென்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். </p><p>இது குறித்து ஜஹாங்கீர் மருத்துவமனையின் தொற்று நோய்கள் நிபுணர் டாக்டர் பியூஷ் சௌத்ரி பேசுகையில், கடந்த சில நாட்களில் கொரோனா மற்றும் இன்ப்ளூயன்ஸா ஆகிய இரு பாதிப்புகளும் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். தங்கள் மருத்துவமனையில் மட்டும் அண்மை நாட்களில் 7 முதல் 8 கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. ஒரு மருத்துவ மையத்திலேயே இந்த அளவு பாதிப்பு இருந்தால், நகரம் முழுவதும் இதன் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. </p><p>இந்தத் தொற்றானது ஓமிக்ரான் வகையை விடவும் லேசானதாகவே உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 முதல் 5 நாட்கள் வரை இருமல், சளி, தொண்டை வலி மற்றும் உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன. தீவிர அறிகுறிகள் காரணமாக அல்லாமல், பிற மருத்துவ பிரச்சனைகளுக்காக பரிசோதனை செய்து கொண்ட போதே பலருக்கு தொற்று உறுதியானது. லேசான சளி உள்ள பலர் பரிசோதனை செய்து கொள்ளாததால், சமூகத்தில் உண்மையான பாதிப்பு அதிகமாக இருக்கலாம் என்றும், மக்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.</p><h2><strong>பரிசோதனை</strong></h2><p>சிம்பயோசிஸ் பல்கலைக்கழக மருத்துவமனை மற்றும் ஜூபிடர் மருத்துவமனையின் தொற்று நோய்கள் ஆலோசகர் டாக்டர் சுஜாதா ரெகே கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாகவே கொரோனா தொற்று ஆங்காங்கே நிலவி வந்தாலும், பரிசோதனைகள் குறைந்திருந்ததால் அது வெளியில் தெரியவில்லை என்றார். பொதுவாக பயன்படுத்தப்படும் கீழ் சுவாச பாதை மல்டிபிளக்ஸ் சோதனைகளில் இந்தத் தொற்று கண்டறியப்படுவதில்லை. ஆனால் மேல் சுவாசப் பாதை சோதனைகள் மூலம் இது எளிதாகக் கண்டறியப்படுகிறது. ஒரே மாதிரியிலிருந்து பல்வேறு வைரஸ்களைக் கண்டறியும் மேம்பட்ட மூலக்கூறு சோதனைகள் தற்போது அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால், கொரோனா பாதிப்புகள் மீண்டும் வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியுள்ளன. தற்போதைய நிலைமை புதிய அலையை ஒத்திருக்கவில்லை என்று உறுதியளித்த அவர், இது கூடிக்குறைந்து வரும் ஒரு சாதாரண சுவாச வைரஸ் தொற்று போன்றதே என்றார். இதனுடன் சேர்த்து மருத்துவமனைகளில் இன்ப்ளூயன்ஸா, டெங்கு, சிக்குன்குனியா மற்றும் டைபாய்டு காய்ச்சல்களும் தற்போது அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2><strong>கண்காணிப்பு</strong></h2><p>ஜூபிடர் மருத்துவமனையின் நுரையீரல் மருத்துவ ஆலோசகர் டாக்டர் ஷ்ரத்தா குல்கர்னி தெரிவிக்கையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த சில நாட்களில் கொரோனா நோயாளிகளை தாம் எதிர்கொண்டதாக கூறினார். ஏற்கனவே சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டு, பின்னர் காய்ச்சல் ஏற்பட்டு வந்த நோயாளிகளை பரிசோதித்த போது இந்தத் தொற்று உறுதியானது. தற்போது வரை அனைத்து பாதிப்புகளும் லேசானவையாகவே இருந்தாலும், அடுத்த சில வாரங்களுக்கு இந்தத் தொற்றின் பரவல் போக்கை உன்னிப்பாக கண்காணிப்பது அவசியம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பிபா உலக கோப்பை: இத்தாலி, பிரேசில் சாதனையுடன் அர்ஜென்டினா இணையுமா?</title><link>https://www.maalaimalar.com/sports/football/fifa-world-cup-messi-argentina-join-italy-and-brazil-in-achieving-this-record</link><comments>https://www.maalaimalar.com/sports/football/fifa-world-cup-messi-argentina-join-italy-and-brazil-in-achieving-this-record#comments</comments><guid isPermaLink="false">09b6ea9a-a93d-4597-a36a-a73d5129478d</guid><pubDate>Sat, 18 Jul 2026 08:41:34 +0000</pubDate><atom:updated>2026-07-18T08:41:34.499Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Lionel Messi,argentina,அர்ஜென்டினா,மெஸ்சி,பிபா உலக கோப்பை,FIFA World Cup 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/4lo5wwfx/ArgentinaTeam0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Argentina Team]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/4lo5wwfx/ArgentinaTeam0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கால்பந்து (Football)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலக கோப்பை கால்பந்து வரலாற்றில் இத்தாலி, பிரேசில் அணிகள் மட்டுமே தொடர்ந்து 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. இத்தாலி 1934, 1938 ஆகிய ஆண்டுகளிலும், பிரேசில் 1958, 1962 ஆகிய ஆண்டுகளிலும்  தொடர்ச்சியாக உலக கோப்பையை வென்றன.</p><h2>2022-அர்ஜென்டினா சாம்பியன்</h2><p>இந்த வரிசையில் அர்ஜென்டினா இணையுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. மெஸ்சி தலைமையில் அர்ஜென்டினா 2022-ல் கத்தாரில் நடந்த போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்று இருந்தது.</p><p>இதற்கு முன்பு மரடோனா இந்த சாதனையை தவறவிட்டார்.‌ 1986-ல் அவர் அர்ஜென்டினாவுக்கு உலக கோப்பையை வென்று கொடுத்தார். அதற்கு அடுத்த (1990) உலக கோப்பை இறுதிப் போட்டிக்கும் அர்ஜென்டினா முன்னேறியது. ஆனால் இறுதி ஆட்டத்தில் மரடோனா அணி 0-1 என்ற கணக்கில் மேற்கு ஜெர்மனியிடம் தோற்றது.</p><p>தற்போது <a href="https://www.maalaimalar.com/sports/football/messi-vs-yamal-argentina-spain-world-cup-final-as-star-faces-player-he-once-held-as-a-baby">மெஸ்சி</a> தொடர்ச்சியாக 2 முறை உலக கோப்பையை வென்று சாதிப்பாரா? அல்லது ஸ்பெயின் அந்த சாதனையை தடுக்குமா? என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.</p><p>இதற்கு முன்பு பிரான்ஸ் தொடர்ச்சியாக 2 முறை சாம்பியன் ஆகும் கனவை அர்ஜென்டினா தகர்த்தது. 2018-ல் உலக கோப்பையை வென்ற பிரான்ஸ் 2022 இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவிடம் தோற்றது. கடந்த காலங்களில் பிரேசில்  மீண்டும் தொடர்ச்சியாக உலக கோப்பையை வெல்லும் சாதனையை பிரான்ஸ் தகர்த்தது. 1994-ல் உலக கோப்பையை வென்ற பிரேசில் 1998-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் பிரான்சிடம் தோல்வியை தழுவியது.</p><h2>3-வது முறையாக இறுதிப்போட்டியில் விளையாடும் லியோனல் மெஸ்சி</h2><p>அர்ஜென்டினா அணியின் கேப்டனான லியோனல் மெஸ்சி இறுதிப் போட்டியில் விளையாடுவதன் மூலம் பல்வேறு சாதனைகளை படைக்கிறார். அவர் 3-வது முறையாக இறுதிப் போட்டியில் ஆடுகிறார். இதன் மூலம் இறுதிப் போட்டியில் 3-வது முறையாக விளையாடும் வீரர் என்ற சாதனை படைக்கிறார். இதற்கு முன்பு 2014, 2022-ம் ஆண்டுகளில் இறுதி போட்டியில் ஆடினார்.</p><figure><img alt="Messi" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/qbhxrzqt/Messi0005.jpg" /></figure><p>இதில் 2014-ல் தோற்று சாம்பியன் பட்டத்தை இழந்தார். 2022-ல் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினார். பிரேசிலை சேர்ந்த கபு 3 உலக கோப்பை இறுதிபோட்டியில் (1994, 1998, 2002) விளையாடி இருந்தார். அவரை மெஸ்சி சமன் செய்கிறார்.</p><p>மேலும் அதிக வயதில் (39 வயது 25 நாட்கள்) இறுதிப் போட்டியில் விளையாடும் வீரர் என்ற பெருமையை மெஸ்சி பெறுகிறார். இதற்கு முன்பு இத்தாலி கோல் கீப்பர் டினோ ஷோப் அதிக வயதில் (40 வயதில் 133 நாட்கள்) இறுதி போட்டியில் ஆடி இருந்தார். 1982-ம் ஆண்டு மேற்கு ஜெர்மனிக்கு எதிராக அவர் இடம் பெற்றார். வீரர்களை பொறுத்தவரை மெஸ்சிதான் அதிக வயதில் இறுதிப்போட்டியில் ஆட இருப்பவர் என்ற சாதனையை படைக்கிறார்.</p>]]></content:encoded></item><item><title>சமூக நீதி விடுதிகளில் முதலமைச்சர் விஜய் நேற்று ஆய்வு- இன்று அதிரடி உத்தரவுகள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-inspects-social-justice-hostel-issues-orders</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-inspects-social-justice-hostel-issues-orders#comments</comments><guid isPermaLink="false">abd1ce03-d51e-4923-9fc7-6a37271f030c</guid><pubDate>Sat, 18 Jul 2026 08:38:12 +0000</pubDate><atom:updated>2026-07-18T08:38:12.585Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,Government Hostel,tn cm vijay,தமிழக முதலமைச்சர் விஜய்,Social Justice Hostel,சமூகநீதி விடுதிகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/oegrbb69/Vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/oegrbb69/Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை சைதாப்பேட்டை சமூக நீதி விடுதியில் முதலமைச்சர் நேற்று ஆய்வு கொண்ட நிலையில் சமூக நீதித்துறை இன்று அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.</p><h2>முதலமைச்சர் திடீர் ஆய்வு</h2><p>சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா சமூக நீதி மாணவர் விடுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆய்வு மேற்கொண்டார்.</p><p>அங்கு ஆய்வு மேற்கொண்டபோது மாணவர்களில் ஒருவர், விடுதியில் நிலவும் குறைகள் குறித்து புகார் தெரிவித்தார்.</p><h2>குவிந்த புகார்கள்</h2><p>* விடுதி உணவுகள் மிகவும் தரமற்ற முறையில் உள்ளது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.</p><p>* தமிழ்நாடு அரசு பல வசதிகளுடன் விடுதி ஏற்பாடு செய்து கொடுத்தும், அதிகப்படியான குறைகள் தொடர்ந்து கொண்டுதான் வருகிறது.</p><p>* இது சம்பந்தமாக கடந்த ஆண்டு அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம் (AISF) சார்பாக, இங்கு உள்ள மாணவர்கள் எல்லோரும் முற்றுகை போராட்டம் நடத்தினோம்.</p><p>* விடுதியில் புழுக்கள் உள்ள அசைவ உணவுகளை சமைப்பது தொடர்பாக புகார் கூறப்பட்டதையடுத்து, அப்போது ஐந்து நாட்கள் தரமான உணவுகள் வழங்கப்பட்டது. ஆனால் அதையடுத்து மீண்டும் தரமற்ற நிலையிலேயே உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.</p><p>* இங்கு வசிக்கும் மாணவர்கள் பகுதி நேர வேலை செய்துகொண்டும், டிஎன்பிஎஸ்சி போன்ற அரசாங்க உத்தியோகங்களுக்கு படித்து கொண்டும் இரவு நேரத்தில் 10 மணியளவில் விடுதிக்கு வருகின்றனர். அப்போது விடுதியின் கதவுகள் மூடப்படுகிறது, இதன் காரணமாக மாணவர்கள் வெளியில் படுத்து தூங்கும் அவலநிலை ஏற்படுகிறது.</p><h2>முதலமைச்சர் விஜய் உத்தரவு</h2><p>சென்னை சைதாப்பேட்டை சமூக நீதி விடுதியில் முதலமைச்சர் நேற்று ஆய்வு கொண்ட நிலையில் சமூக நீதித்துறை இன்று அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.</p><p>முதலமைச்சரிடம் நேற்று மாணவர்கள் கூறிய அனைத்து புகார்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>உணவுப்பட்டியலை உடனடியாக மாற்றி, சிலிண்டர் தட்டுப்பாட்டால் நிறுத்தப்பட்ட இட்லி, சப்பாத்தியை மீண்டும் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>எம்.சி ராஜா விடுதியில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் இருந்த கைப்பந்து மைதானத்தை மாணவர் பயன்பாட்டுக்கு திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>விடுதியில் தங்கியிருந்து வெளியே பகுதிநேர பணிக்கு செல்லும் மாணவர்கள் இரவு 12 மணி வரை விடுதிக்குள் வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆகஸ்டு முதல் வாரத்தில் தமிழக பட்ஜெட் தாக்கல்- முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-filed-likely-chance-august-first-week</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-filed-likely-chance-august-first-week#comments</comments><guid isPermaLink="false">4547580d-f3aa-4b70-94e7-298a4f75e60a</guid><pubDate>Sat, 18 Jul 2026 08:28:14 +0000</pubDate><atom:updated>2026-07-18T08:28:14.708Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,TN budget,தமிழக பட்ஜெட்,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/3yws98fk/Vijay03.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/3yws98fk/Vijay03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு பதவி ஏற்ற பிறகு முதல் சட்டசபை கூட்டம் கடந்த ஜூன் மாதம் 18-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜூன் 19, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தது. நிறைவு நாளில் முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, சட்டசபை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.</p><h2><strong>தமிழக பட்ஜெட்</strong></h2><p>இந்த நிலையில், 2026-2027-ம் ஆண்டுக்கான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D">பொது பட்ஜெட் </a>மற்றும் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை மீண்டும் கூட இருக்கிறது. தமிழகத்தில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் என்பதால், பொதுமக்களை கவரும் புதிய திட்டங்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. </p><p>பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய புதிய திட்டங்கள், நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை  தொடர்பாக முதலமைச்சர் விஜய், பல்வேறு துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கடந்த சில நாட்களாக ஆலோசனை நடத்தி வருகிறார். வரும் 22-ந்தேதி வரை அவர் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். </p><h2><strong>அமைச்சரவை கூட்டம்</strong></h2><p>இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அறிவிப்புகள் குறித்தும், புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.</p><p>மேலும், தமிழக பட்ஜெட் எந்த தேதியில் தாக்கல் செய்யலாம் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் தவெக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் இடம்பெறும் என்று தெரிகிறது.</p><p>இந்த நிலையில் தமிழக பட்ஜெட் தாக்கல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக நிதி அமைச்சர் மரிய வில்சன் தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-</p><h2><strong>ஆகஸ்டு முதல் வாரம்</strong></h2><p>ஆகஸ்டு முதல் வாரத்தில் தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். கடந்த 16 நாட்களாக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-consult-with-ministers-and-govt-officers">முதலமைச்சர் விஜய்</a> எல்லா துறை ரீதியாக அமைச்சர்கள், அதிகாரிகளிடம் ஆலோசனை கூட்டம் நடத்தி இருக்கிறார். தினமும் 6 மணி நேரம் முதல் 7 மணி நேரம் செலவிட்டு ஆலோசனை நடத்தி உள்ளார். </p><p>நிறைய தகவல்களை பரிமாறி உள்ளோம்.  தமிழக அமைச்சரவை கூட்டம் நல்லபடியாக நடந்து முடிந்து இருக்கிறது. வரும் நாட்களில் ஆகஸ்டு முதல் வாரத்தில் நல்லபடியாக தமிழக வெற்றிக்கழக அரசின்  முதல் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். 100 சதவீதம் எல்லோரும் வரவேற்கிறார்கள்.</p><p>கடந்த 55 நாட்களாக எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். எல்லா துறை ரீதியாக நாங்கள் பார்த்து கொண்டு தான் வருகிறோம். சந்தோஷமாக இருக்கிறார்கள். மக்கள் வரவேற்கும் போது நீங்களும் வரவேற்பு தெரிவியுங்கள். சந்தோஷமாக இருப்போம்.</p><h2><strong>மக்கள் வரவேற்பு</strong></h2><p>தமிழக வெற்றிக்கழக ஆட்சி  6 மாதத்தில் கவிழும் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் அறியாமையில் பேசி வருகிறார். உண்மை நிலை அவருக்கு இன்னும் தெரியவில்லை, பாவம் அதனால் தான் அப்படி பேசிக் கொண்டிருக்கிறார். மக்கள் கொடுத்த தீர்ப்புக்கு மரியாதை கொடுப்பது மாதிரி தெரியவில்லை. முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் தெரியவில்லை, தி.மு.க. தலைமைக்கும் தெரியவில்லை. மக்கள் கொடுத்த தீர்ப்புக்கு முதலில் தலைவணங்க வேண்டும்.</p><p>தமிழக முதலமைச்சரின், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைக்கு மக்கள் அனைவரும் வரவேற்கிறார்கள். </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>நீட் தேர்வில் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகள் 27 பேர் தேர்ச்சி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/neet-exam-27-chennai-corporation-school-students-pass</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/neet-exam-27-chennai-corporation-school-students-pass#comments</comments><guid isPermaLink="false">975cb51b-9360-4c3f-8109-342816e3b0ae</guid><pubDate>Sat, 18 Jul 2026 08:15:52 +0000</pubDate><atom:updated>2026-07-18T08:15:52.673Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நீட் தேர்வு,Neet exam,Chennai Corporation school,சென்னை மாநகராட்சி பள்ளி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/hlph9vt4/Neet.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ NEET]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/hlph9vt4/Neet.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை மாநகராட்சி பள்ளியில் படித்த 122 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதினார்கள். இதில் 27 பேர் மட்டுமே தேர்ச்சிக்கான தகுதியைப் பெற்றனர்.</p><p>மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">நீட் தேர்வு</a> முடிவு வெளியானது. இதில் தமிழகத்தில் இருந்து 66 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். </p><p>தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளின் தரவரிசை விவரம் தேசிய மருத்துவ ஆணையத்திடம் இருந்து தமிழக மருத்துவ மாணவர் சேர்க்கை குழுவிற்கு வந்து உள்ளது. </p><p>நீட் தேர்வில் தமிழக அளவில் விழுப்புரம் மாணவர் வேங்கடபதி 720 மதிப்பெண்ணுக்கு 705 பெற்று முதலிடம் வகித்தார். சென்னை மாநகராட்சி பள்ளியில் படித்த 122 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதினார்கள். இதில் 27 பேர் மட்டுமே தேர்ச்சிக்கான தகுதியைப் பெற்றனர்.</p> <p>12 மாணவர்களும், 17 மாணவிகளும் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இதில் சாய் சரண் என்ற மாணவர் 369 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. அந்த இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பு கிடைக்க உள்ளது.</p><p>இது தவிர தமிழக முழுவதும் உள்ள அரசு, மாநகராட்சி பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகளுக்கு இந்த சலுகையின் கீழ் மருத்துவ கல்லூரியில் சேர வாய்ப்பளிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் இந்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதிக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர் விவரம் இதுவரை கிடைக்கப் பெறவில்லை.</p>]]></content:encoded></item><item><title>பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 7 முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற வியூகம்</title><link>https://www.maalaimalar.com/news/national/strategy-to-pass-7-important-bills-during-the-monsoon-session-of-parliament</link><comments>https://www.maalaimalar.com/news/national/strategy-to-pass-7-important-bills-during-the-monsoon-session-of-parliament#comments</comments><guid isPermaLink="false">1b7987f5-57c1-4c96-8c20-0e991acefc96</guid><pubDate>Sat, 18 Jul 2026 08:14:19 +0000</pubDate><atom:updated>2026-07-18T08:14:19.736Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>parliament,மசோதாக்கள்,பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்,பாராளுமன்றம்</media:keywords><media:content height="350" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/sp7uej98/parliament.jpg" width="615"><media:title type="html"><![CDATA[ பாராளுமன்றம்]]></media:title><media:description type="html"><![CDATA[ பாராளுமன்றம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/sp7uej98/parliament.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை மறுநாள் (20-ந்தேதி) தொடங்குகிறது. ஆகஸ்டு 13-ந்தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் சமீபத்தில் மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்ட சில அவசர சட்டங்களுக்கு மாற்றான மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.</aside><h2><strong>வருமான வரி சட்ட திருத்தம்</strong></h2><p>முக்கியமாக இந்த கூட்டத்தொடரில் வருமான வரி சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்பட உள்ளது. ரூபாயின் மீதான அழுத்தத்தை சமாளிப்பதற்காக வெளிநாட்டு மூலதனத்தை ஈர்க்கும் நோக்கத்தில், அரசு பத்திரங்கள் மூலம் கிடைக்கும் வட்டி வருமானம் மற்றும் மூலதன ஆதாயங்கள் மீதான வருமான வரியில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்துக்கு மாற்றாக இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது.</p><p>மேலும், தேசிய பாடலான 'வந்தே மாதரம்' பாடலுக்கு அவமதிப்பு செய்வதை தண்டனைக்குரிய குற்றமாக்கும் சட்ட திருத்த மசோதாவும் இந்த கூட்டத்தொடரில் கொண்டு வரப்படுகிறது.</p><h2><strong>வருமான வரி சட்ட திருத்தம்</strong></h2><p>முக்கியமாக இந்த கூட்டத்தொடரில் வருமான வரி சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்பட உள்ளது. ரூபாயின் மீதான அழுத்தத்தை சமாளிப்பதற்காக வெளிநாட்டு மூலதனத்தை ஈர்க்கும் நோக்கத்தில், அரசு பத்திரங்கள் மூலம் கிடைக்கும் வட்டி வருமானம் மற்றும் மூலதன ஆதாயங்கள் மீதான வருமான வரியில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்துக்கு மாற்றாக இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது.</p><p>மேலும், தேசிய பாடலான 'வந்தே மாதரம்' பாடலுக்கு அவமதிப்பு செய்வதை தண்டனைக்குரிய குற்றமாக்கும் சட்ட திருத்த மசோதாவும் இந்த கூட்டத்தொடரில் கொண்டு வரப்படுகிறது.</p><h2><strong>7 மசோதாக்கள்</strong></h2><p>பிறப்பு - இறப்பு பதிவு சட்ட திருத்த <a href="https://www.maalaimalar.com/topic/பாராளுமன்றம்">மசோதா</a>, வெளிநாட்டு பங்களிப்பு முறைப்படுத்துதல் திருத்த சட்ட மசோதா உள்ளிட்டவையும் இந்த கூட்டத்தொடரில் தாக்கலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கையை 33-ல் இருந்து 37 ஆக அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்து இருந்தது. தற்போது அதற்கான மசோதா பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட உள்ளது.</p><p>தொகுதி மறுசீரமைப்புடன் இணைந்த மகளிர் இடஒதுக்கீடு அமலாக்கத்துக்கான அரசமைப்பு சட்ட திருத்த மசோதா மீண்டும் கொண்டுவரப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.</p><p>தற்போதைய சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்களின் வளர்ச்சிக்கு ஏற்பவும், எளிதாக தொழில் செய்வதற்கும், 2006-ம் ஆண்டு சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்காக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சி திருத்த மசோதா கொண்டு வரப்பட உள்ளது. மொத்தம் 7 மசோதாக்களை பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.</p><h2><strong>ஆலோசனை கூட்டம்</strong></h2><p>இந்த நிலையில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் மசோதாக்களை நிறைவேற்றுவதற்கான வியூகம் குறித்து ஆலோசிப்பதற்காக பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் மந்திரிகள் குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.</p><p>டெல்லி கடமை பவனில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி அன்னபூர்ணா தேவி, கூட்டணி கட்சிகளை சேர்ந்த மத்திய மந்திரிகள் லாலன் சிங் (ஐக்கிய ஜனதா தளம்), ஜெயந்த் சவுத்ரி (ராஷ்ட்ரீய லோக் தளம்), கே.ராம் மோகன் நாயுடு (தெலுங்கு தேசம்) உள்ளி ட்டோர் பங்கேற்றனர்.</p><h2><strong>வியூகம்</strong></h2><p>பாராளுமன்றத்தில் மசோதாக்கள் நிறைவேற்றுவதற்காக ஆளும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் கடைப்பிடிக்க வேண்டிய வியூகம் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. காங்கிரஸ்– சமாஜ்வாடி கட்சிகளை தவிர, பிற எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன், தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்றுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.</p><p>மேலும் நீட் வினாத்தாள் கசிவு, மேற்காசிய தாக்குதல்களில் இந்திய மாலுமிகள் உயிரிழப்பு, பெட்ரோலுடன் எத்தனால் கலப்பு, அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வரும் நிலையில், அவர்களுக்கு பதிலடி தருவது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.</p>]]></content:encoded></item><item><title>லிஃப்டில் சிக்கிய சசி தரூர் எம்பி: ஹைட்ராலிக் கருவி மூலம் பத்திரமாக மீட்ட கேரள தீயணைப்புத்துறை!</title><link>https://www.maalaimalar.com/news/national/shashi-tharoor-stuck-in-lift-rescued-by-kerala-fire-force</link><comments>https://www.maalaimalar.com/news/national/shashi-tharoor-stuck-in-lift-rescued-by-kerala-fire-force#comments</comments><guid isPermaLink="false">f8e4db8a-58be-4622-af54-724e4ceaa8ec</guid><pubDate>Sat, 18 Jul 2026 08:13:00 +0000</pubDate><atom:updated>2026-07-18T08:13:00.907Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சசிதரூர்,Thiruvananthapuram,ShashiTharoor,LiftRescue,CongressMP,HydraulicSpreader,கேரளதீயணைப்புத்துறை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/is2wbycj/ShashiTharoor" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ShashiTharoor]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/is2wbycj/ShashiTharoor?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரளம் மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றின் லிஃப்டில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்<a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D"> சசி தரூர் </a>மற்றும் அவருடன் சென்றவர்கள் திடீரென சிக்கிக்கொண்டனர். </p><p>சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த பரபரப்பான சுழலுக்குப் பிறகு, விரைந்த வந்த தீயணைப்புத் துறையினர் அவரை பத்திரமாக மீட்டனர்.</p><h2><strong>நிகழ்ந்தது என்ன?</strong></h2><p>திருவனந்தபுரம் கிழக்கு ரோட்டரி கிளப் அமைப்பின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழாவில் பங்கேற்பதற்காக சசி தரூர் எம்பி அங்குள்ள தனியார் ஹோட்டலுக்கு வருகை தந்தார். </p><p>அவர் அங்கிருந்த மின்தூக்கியில் பயணித்தபோது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியிலேயே நின்றுவிட்டது. ஹோட்டல் ஊழியர்கள் கதவை திறக்க முயன்றும் முடியாததால், தீயணைப்பு மற்றும் மீட்புப் படைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.</p><h2><strong>அதிநவீன கருவி மூலம் மீட்பு..</strong></h2><p>தகவல் கிடைத்த அடுத்த சில நிமிடங்களிலேயே தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். லிஃப்ட் கதவுகள் பலமாகப் பூட்டியிருந்ததால், அவர்கள் 'ஹைட்ராலிக் ஸ்பெரெட்டர்' எனப்படும் அதிநவீன கதவு விரிக்கும் கருவியைப் பயன்படுத்தினர். </p><p>இதன் மூலம் லிஃப்ட் கதவுகளுக்கு இடையே இடைவெளியை உருவாக்கி, உள்ளே சிக்கியிருந்த சசி தரூர் உள்ளிட்ட அனைவரையும் எவ்வித காயமின்றி பத்திரமாக வெளியே கொண்டு வந்தனர்.</p><h2><strong>சசி தரூர் பாராட்டு மற்றும் கௌரவிப்பு..</strong></h2><p>மீட்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசி தரூர், "அரை மணி நேரம் லிஃப்டிற்குள் இருந்தது எனக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால், அமைச்சரைச் சந்திக்கும் அப்பாயிண்ட்மென்ட் உட்பட எனது அடுத்தடுத்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கு இதனால் தாமதமாகிவிட்டது" என்று கூறினார்.</p><p>இருப்பினும், தகவல் கிடைத்த சில நிமிடங்களிலேயே வந்து, அதீத திறமையுடன் தங்களை மீட்ட கேரள தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரின் வேகமான செயல்பாட்டை சசி தரூர் பாராட்டினார். தொடர்ந்து, தான் கலந்துகொண்ட ரோட்டரி கிளப் மேடையிலேயே, தன்னை மீட்ட தீயணைப்பு வீரர்களை நேரில் அழைத்து அவர்களுக்குப் பொதுவெளியில் சசி தரூர் எம்பி நன்றி கூறி கௌரவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>குரூப் 1 தேர்வு தேதி மாற்றம்.. எப்போது தெரியுமா?  TNPSC அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tnpsc-group-1-prelims-exam-date-changed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tnpsc-group-1-prelims-exam-date-changed#comments</comments><guid isPermaLink="false">d4c2b4ba-7e94-4320-9ea1-37279659605b</guid><pubDate>Sat, 18 Jul 2026 08:09:25 +0000</pubDate><atom:updated>2026-07-18T08:09:25.431Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TNPSC,TNPSC Announcement,டிஎன்பிஎஸ்சி,TNPSCGroup1,டிஎன்பிஎஸ்சி குரூப் 1,TNPSC அறிவிப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/gayn5az1/tnpsc.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  TNPSC Announcement]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/gayn5az1/tnpsc.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு தேதியை அதிரடியாக மாற்றி உள்ளது. செப்டம்பர் 6ம் தேதி நடைபெற இருந்த குரூப் 1 தேர்வு, செப்டம்பர் 27ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது.</p><p>தமிழகத்தில் அரசின் பெரும்பாலான துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி நிரப்பி வருகிறது. குரூப் வாரியாக தேர்வு நடத்தி வருகிறது. குரூப் 1, குரூப் 2, குருப் 4 என பல்வேறு தேர்வுகளை நடத்தி, இதில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில்  காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.</p><p>இதற்கிடையில், டிஎன்பிஎஸ்சி தேர்வு குறித்து அதிரடியாக சில அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது குரூப் 1 தேர்வு குறித்து முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குரூப் 1 தேர்வு தேதியை டிஎன்பிஎஸ்சி மாற்றி உள்ளது. அதாவது, குரூப் 1  முதல் நிலை தேர்வு செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த நிலையில், அதனை டிஎன்பிஎஸ்சி மாற்றி உள்ளது.</p><p>இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 23.06.2026 அன்று வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 1 அறிவிக்கையில் முதல்நிலைத் தேர்வானது 06.09.2026 மநடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, அத்தேர்வானது 27.09.2026 அன்று நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. </p><p>எனவே, தேர்வர்கள் இதற்கு ஏற்றவாறு தங்கள் திட்டங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.  குரூப் 1 முதல்நிலைத் தேர்வு மூலம் 26 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.  துணை ஆட்சியர், உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், மாவட்ட பதிவாளர் உள்ளிட்ட 26 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.  குரூப் 1 காலிப் பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகளில் நடைபெறும்.</p><p>குரூப் 1 தேர்வு மூலம் தேந்தெடுக்கப்படுபவர்களுக்கு 7வது ஊதியக் குழுவின்படி அடிப்படை ஊதியம் ரூ.56,100 முதல் ரூ.1.77 லட்சம் வழங்கப்படும்.  இதில் அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி, பல்வேறு படிகளும் வழங்கப்படும். பணியில் தொடக்க நிலையிலேயே ரூ.80,000 முதல் ரூ.1.20 லட்சம் வரை சம்பளம் இருக்கும். எனவே, குரூப் 1 முதல்நிலை தேர்வு தயாராகுபவர்கள் இந்த அறிவிப்பை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.</p>]]></content:encoded></item><item><title>&quot;தனியார் ராக்கெட் ஏவும் திறன் பெற்ற 3வது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது&quot;- பிரதமர் மோடி பெருமிதம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/india-emerges-as-third-country-with-private-rocket-launch-capability-pm-modi</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-emerges-as-third-country-with-private-rocket-launch-capability-pm-modi#comments</comments><guid isPermaLink="false">4811dc25-2c86-4bfd-b81e-5b7fa9d437f0</guid><pubDate>Sat, 18 Jul 2026 08:00:17 +0000</pubDate><atom:updated>2026-07-18T08:00:17.886Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ISRO,இஸ்ரோ,pm modi,பிரதமர் மோடி,Rocket Vikram 1,ராக்கெட் விக்ரம் 1</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/pruipi5l/PM-Modi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/pruipi5l/PM-Modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விண்வெளியில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி தொலைபேசியில் விஞ்ஞாணிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><h2>தனியார் ராக்கெட்</h2><p>தெலுங்கானா மாநிலம் தலைநகர் ஐதராபாத்தை சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் விக்ரம்-1 என்ற ராக்கெட்டை தயாரித்துள்ளது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்திலிருந்து இன்று 11.30 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருந்தது.</p><p>இந்தியாவின் முதலாவது தனியார் ராக்கெட் விக்ரம்-1 விண்ணில் ஏவப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 11.30 மணிக்கு ஏவப்பட இருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதமாகியது.</p><p>உடனடியாக தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதையடுத்து 20 நிமிட கவுண்டவுன் மீண்டும் தொடங்கியது. 12.05-க்கு ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.</p><p>இந்நிலையில் இந்தியாவின் முதலாவது தனியார் ராக்கெட் விக்ரம்-1 நண்பகல் 12.05-க்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.</p><h2>வெற்றிகரமாக பாய்ந்த விக்ரம்-1</h2><p>இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம்-1 எடுத்துச்சென்ற செயற்கைக்கோள் புவிவட்டப்பாதையில் செலுத்தப்பட்டது. </p><p>விக்ரம்-1 ஆனது கிரகா ஸ்பேஸ், காஸ்மோசர்வ், டிகியூப்ட் மற்றும் ஸ்கைரூட்டின் சொந்த ஸ்கோப் ஆகியவற்றிலிருந்து தொழில்நுட்ப விளக்க ஆய்வு கருவிகளை எடுத்துச் செல்கிறது. அத்துடன், காஸ்மோஸ் டயமண்ட்ஸின் கலைப்படைப்பான 'காஸ்மிக் புளூம்' மற்றும் ஒரு மைக்ரோ-ஆர்ட் பீஸ் கொண்டு செல்கிறது.</p><p>விக்ரம்-1 ராக்கெட் சுமந்து சென்ற சிறு செயற்கைக்கோள்கள் நிர்ணயித்த தூரம், புவிவட்டப்பதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.</p><h2>பிரதமர் மோடி வாழ்த்து</h2><p>இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விண்வெளியில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி தொலைபேசியில் விஞ்ஞாணிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><p>தொலைபேசியில் அவர்," விக்ரம்-1 திட்டத்தின் விஞ்ஞானிகள் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவன விக்ரம்-1 வெற்றியால் தனியார் ராக்கெட் ஏவும் திறன் பெற்ற 3வது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது" என்று விக்ரம்-1 ராக்கெட்டை தயாரித்துள்ள ஐதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்திற்கு பிரதமர் மோடி பாராட்டினார்.</p>]]></content:encoded></item><item><title>‘வாரணாசி’ படத்தில் பிரியங்கா சோப்ரா: மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/varanasi-first-look-released</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/varanasi-first-look-released#comments</comments><guid isPermaLink="false">294d7923-7c6d-4375-8191-15335c740cdc</guid><pubDate>Sat, 18 Jul 2026 07:32:29 +0000</pubDate><atom:updated>2026-07-18T07:32:29.388Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராஜமௌலி எஸ்.எஸ்.,பிரியங்கா சோப்ரா,வாரணாசி,varanasi,Priyanka Chopra,SSRajamouli</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/41802nwf/priyanka.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Varanasi-Priyanka Chopra]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/41802nwf/priyanka.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் அடுத்த லட்சியப் படைப்பான ‘வாரணாசி’ திரைப்படத்திலிருந்து, உலகளாவிய நட்சத்திரமான பிரியங்கா சோப்ராவின் அதிகாரப்பூர்வ 'ஃபர்ஸ்ட் லுக்' இன்று வெளியாகியுள்ளது.</p><p>பிரியங்கா சோப்ராவின் 44-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இயக்குநர் ராஜமௌலி இந்த மிரட்டலான போஸ்டரை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.</p><h2><strong>'மந்தாகினி'யாக மிரட்டும் பிரியங்கா:</strong> </h2><p>இப்படத்தில் பிரியங்கா சோப்ரா ‘மந்தாகினி’ என்ற வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இயக்குநர் ராஜமௌலி, "அவள் புன்னகைக்கும் போது பேரழகு.. புன்னகைக்காத போது பேரனல் (Fire)... வாரணாசியில் மந்தாகினியாக பிரியங்கா சோப்ரா" எனப் பாராட்டியுள்ளார்.</p><p>வெளியாகியுள்ள போஸ்டரில், பிரியங்கா சோப்ரா சுருள் தலைமுடியுடன், முற்றிலும் கருப்பு நிற உடையில் மிகவும் ஆக்ரோஷமான மற்றும் வசீகரமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். இது உலகளவில் உள்ள அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.</p><h2><strong>ரூ.1,400 கோடி பட்ஜெட்:</strong> </h2><p>சுமார் ரூ.1,400 கோடி பிரம்மாண்ட செலவில் உருவாகும் இப்படம், இந்திய திரையுலக வரலாற்றிலேயே மிக அதிக செலவில் தயாரிக்கப்படும் திரைப்படமாகும். கி.பி. 512 முதல் தற்காலம் வரை, திரேதா யுகம் முதல் கலியுகம் வரை எனப் பல காலகட்டங்களை இணைக்கும் ஒரு அறிவியல் புனைகதை மற்றும் ஆன்மீக சாகசப் படமாக இது உருவாகிறது. </p><p>அண்டவெளியில் இருந்து பூமிக்கு வரும் விண்கல் ஆபத்தும், வாரணாசி படித்துறைகளின் ரகசியங்களும் இதன் மையக்கதை எனத் தெரிகிறது. ஹைதராபாத், ஒடிசா, கென்யாவின் ஆப்பிரிக்க காடுகள் மற்றும் அண்டார்டிகாவின் உறைபனிப் பகுதிகள் என உலகம் முழுவதும் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.</p><p>இப்படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் 'மகேஷ் பாபு' கதாநாயகனாக ‘ருத்ரா’ மற்றும் ‘ஸ்ரீராமர்’ என இருவேறு பரிமாணங்களில் நடிக்கிறார். மலையாள முன்னணி நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் ‘கும்பா’ என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.</p><h2><strong>பிரியங்கா சோப்ராவின் சுவாரசியப் பகிர்வு:</strong></h2><p>சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய பிரியங்கா, "கடந்த 14 மாதங்களாக இந்தப் படத்தில் நடித்து வருகிறேன். ராஜமௌலி படம் எடுக்க அதிக காலம் எடுத்துக்கொள்வார் என்பது அனைவருக்கும் தெரியும். </p><p>இதில் நான் பல அற்புதமான ஸ்லோ-மோஷன் ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளேன். இந்திய சினிமாவிற்கு நான் மீண்டும் திரும்புவதால், ஒரு பிரம்மாண்ட நடனக் காட்சியும் இதில் இடம்பெற வேண்டும் என்று கேட்டு வாங்கி நடித்துள்ளேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>விஜயேந்திர பிரசாத் கதையமைப்பில், எம்.எம். கீரவாணியின் இசையமைப்பில் உருவாகி வரும் ‘வாரணாசி’ திரைப்படம், 2027 ஏப்ரல் 7 அன்று உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக திரைக்கு வரத் திட்டமிடப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>மக்கள் தொகை கணக்கெடுப்பு: இணையதளத்தில் சுயமாக விவரங்கள் பதிவு செய்யும் வழிமுறைகள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/census-procedures-for-self-registering-details-online</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/census-procedures-for-self-registering-details-online#comments</comments><guid isPermaLink="false">981434e0-9e28-4646-8907-cfe4006ccd91</guid><pubDate>Sat, 18 Jul 2026 07:26:41 +0000</pubDate><atom:updated>2026-07-18T07:26:41.196Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Census,இணையதளம்,Website,மக்கள் தொகை கணக்கெடுப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/983swwsn/census.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான இணையதளம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/983swwsn/census.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">மக்கள் தொகை கணக்கெடுப்பு</a>  பணியின் முதல் கட்டம் நேற்று தொடங்கியது. 2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதம்     கணக்கெடுப்பு பணி தொடங்கினாலும் அதற்கு முன்னதாக  வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் நடைபெறுகிறது. </p><h2><strong>வழிமுறைகள்</strong></h2><p>இது நேரடியாகவும்,  இணையதளம் மூலம் சுய கணக்கெடுப்பாகவும் நடக்கிறது. இந்த சுய கணக்கெடுப்பு எவ்வாறு இணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்ற  வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் சுய விவரங்களை இணைய தளம் பதிவு செய்ய முதலில் <a href="https://se.census.gov.in/">http:/se.census.gov.in</a>   உள் நுழையுங்கள், மாநிலத்தை தேர்ந்தெடுங்கள், கேப்சாவை உள்ளிடுங்கள். </p><p>2-வதாக குடும்பத்தினர் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். குடும்பத்தலைவரின் பெயர், 10 இலக்க மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி (விருப்பத்திற்குரியது) ஆகியவற்றை உள்ளிடவும். குடும்பத் தலைவரின் பெயரை பின்னர் மாற்ற முடியாது.  ஒரு குடும்பத்திற்கு ஒரே ஒரு மொபைல் எண் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.  ஒரு முறை பதிவு செய்யப்பட்டால் அதே எண்ணை வேறு எந்த குடும்பத்திற்கும் பயன்படுத்த முடியாது. </p><p>3-வதாக விருப்பமான மொழியை தேர்ந்தெடுத்து பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட ஓ.டி.பி.யை உள்ளிடவும். (தேர்ந்தெடுக்கப்பட்ட மொழியை பின்னர் மாற்ற முடியாது).</p><p>பின்னர்  மாவட்டத்தை தேர்ந்தெடுத்து தபால் அஞ்சல் எண், கிராமம் , நகரம், பகுதியை  பதிவு செய்ய வேண்டும். அதனைத் தொடர்ந்து உங்கள் இருப்பிடத்தை வரைபடத்தில் கண்டறிய வேண்டும். உங்கள் சரியான குடியிருப்பு கட்டிடத்தை அடையாளம் காணவும் மற்றும் இருப்பிடத்தை உறுதிப்படுத்தவும் சிவப்பு குறியீட்டை வரைபடத்தில் இழுக்கவும். </p><p>தொடர்ந்து கேள்வித்தாளை பூர்த்தி செய்ய வேண்டும். உதவி குறிப்புகள், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மற்றும் அத்தியாவசிய தகவல், குறிப்புகளின் வழிகாட்டுதலுடன் வீட்டு பட்டியல் மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்பு கேள்வித்தாளை நிரப்ப வேண்டும்.  இணையத்தில் உள்ளிடப்பட்ட அனைத்து தரவையும் சரிபார்க்க முன்னோட்ட திரையை பயன்படுத்தவும். பதிவுகளை திருத்தலாம். பின்னர் சமர்ப்பிக்க வரைவை சேமிக்கலாம், அல்லது இறுதியாக சமர்ப்பிக்கலாம். </p><h2><strong>சமர்ப்பித்தல்</strong> </h2><p>உங்கள் தரவை பூட்ட இறுதியாக சமர்ப்பிக்கவும் என்பதை கிளிக் செய்யவும். இறுதி சமர்ப்பிப்புக்கு பிறகு மாற்றங்கள் செய்ய முடியாது. சமர்ப்பிக்கப்பட்ட பின் தங்களது மொபைல் எண்ணிற்கு எஸ்.இ. ஐ.டி. குறுஞ்செய்தியாக பெறப்படும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/census-operations-government-orders-a-ban-on-the-transfer-of-officials-until-august-31">கணக்கெடுப்பாள</a>ர் உங்கள் வீட்டிற்கு வரும் போது உங்கள் எஸ்.இ. ஐ.டி. அவரிடம் பகிர வேண்டும். கணக்கெடுப்பாளர் உங்கள் தகவல்களை சரி பார்த்து திருத்தங்கள் இருப்பின் சரி செய்வார். </p><p>இந்த வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றி இணையத்தில் சுய விவரங்களை பதிவு செய்யலாம்.</p>]]></content:encoded></item><item><title>&quot;என்னை நீக்க அதிகாரம் இல்லை&quot;- தவெகவில் இருந்து நீக்கப்பட்ட ஞானசவுந்தரி பேட்டி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/gnanasoundari-says-district-secretary-has-no-power-to-expel-her</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/gnanasoundari-says-district-secretary-has-no-power-to-expel-her#comments</comments><guid isPermaLink="false">65bbec77-2ae2-44ec-98ec-8372cc7edcc5</guid><pubDate>Sat, 18 Jul 2026 07:13:57 +0000</pubDate><atom:updated>2026-07-18T07:13:57.073Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,புஸ்ஸி ஆனந்த்,Bussy Anand,tvk,ஞானசவுந்தரி,Gnanasoundhiri</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/3on4j6y6/gnanasoundhari.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gnanasoundhari]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/3on4j6y6/gnanasoundhari.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வழக்கறிஞர் நியமனத்தில் அமைச்சர் ஆனந்த் முறைகேட்டில் ஈடுபட்டதாக வழக்கு தொடர்ந்த ஞானசௌந்தரி இன்று காலை கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், ஞானசவுந்தரி விளக்கம் அளித்துள்ளார்.</p><h2>ஞானசவுந்தரி விளக்கம்</h2><p>இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பாதவது:-</p><p>என்னை கட்சியை விட்டு நீக்க விழுப்புரம் மாவட்ட செயலாளருக்கு அதிகாரம் இல்லை. அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கியது சட்டவிரோதம்.</p><p>முதல்வர் விஜய் ஊழலற்ற நிர்வாகத்தை வலியுறுத்துகிறார். அந்த கொள்கையால் தான் நீதிமன்றத்தை நாடினேன்" என அவர் விளக்கம் அளித்துள்ளார்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>நீக்கம் ஏன்?</h2><p>வழக்கறிஞர் நியமனத்தில் அமைச்சர் ஆனந்த் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், தம்மை விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞராக நியமிக்க கோரியும்  உயர்நீதிமன்றத்தில் ஞானசவுந்தரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மீதான விசாரணையின் முடிவில் ஞானசவுந்தரியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.</p><p>இந்நிலையில், எதிரிகளுடன் சேர்ந்துகொண்டு பொய்யான குற்றச்சாட்டுகள் கூறியும், கட்சியின் கொள்கைகள், கட்டுப்பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட ஞானசவுந்தரி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து உடனடியாக நீக்கப்படுவதாக விழுப்புரம் தெற்கு மாவட்ட தவெக செயலாளர் அறிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>சோனம் வாங்சுக் மருத்துவமனையில் அனுமதி: சப்தர்ஜங் ஊழியர்களுடன் அவரது மனைவி வாக்குவாதம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/sonam-wangchuk-hospitalised</link><comments>https://www.maalaimalar.com/news/national/sonam-wangchuk-hospitalised#comments</comments><guid isPermaLink="false">b6cac199-773f-4071-a998-3c7b4a3e1879</guid><pubDate>Sat, 18 Jul 2026 07:09:00 +0000</pubDate><atom:updated>2026-07-18T07:09:00.022Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sonam Wangchuk,delhi,கீதாஞ்சலி,சோனம் வாங்சுக்,டெல்லி,GitanjaliJAngmo</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/yfcn9brr/sonam.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ sonam Wangchuk]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/yfcn9brr/sonam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 21 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், உடல்நிலை நலிவடைந்ததை அடுத்து டெல்லி போலீசாரால் சப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். </p><p>இந்நிலையில், மருத்துவமனை வளாகத்தில் சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலிக்கும், அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2><strong>மொபைல் போனுக்கு தடை:</strong> </h2><p>மருத்துவமனையின் அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனம் வாங்சுக்கை காண்பதற்காக அவரது மனைவி கீதாஞ்சலி ஜே.ஆங்மோ சென்றார். அப்போது, அவசரப் பிரிவுக்குள் மொபைல் போன் எடுத்துச் செல்ல அங்கிருந்த பாதுகாப்பு மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அனுமதி மறுத்துள்ளனர்.</p><p>இதனால் ஆத்திரமடைந்த கீதாஞ்சலி, "ஏன் என்னால் எனது கைப்பேசியை உள்ளே கொண்டு செல்ல முடியாது?" என்று அங்கிருந்த ஊழியர்களிடம் காரசாரமாகக் கேள்வி எழுப்பினார். இந்த வாய்மொழித் தகராறு தொடர்பான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.</p><h2><strong>மருத்துவ அறிக்கை தர மறுப்பா?</strong></h2><p>பரவி வரும் அந்த வீடியோவில், கீதாஞ்சலியுடன் வந்த மற்றொரு பெண்ணும் மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவது தெரிகிறது. சோனம் வாங்சுக்கின் தற்போதைய உடல்நிலை குறித்த மருத்துவப் பரிசோதனை அறிக்கையின் நகலை தங்களுக்கு வழங்காதது ஏன் என்றும் அவர்கள் அங்குள்ள அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.</p><p>முன்னதாக, தனது கணவருக்கு தங்களின் அல்லது தங்களை கண்காணித்து வந்த மருத்துவர்களின் அனுமதியின்றி எந்தவொரு வாய்வழி மருந்தையோ அல்லது குளுக்கோஸ் மூலமான சிகிச்சையையோ அளிக்கக் கூடாது என கீதாஞ்சலி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2><strong>சோனம் வாங்சுக்கின் தற்போதைய உடல்நிலை:</strong></h2><p>சப்தர்ஜங் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, நீண்ட நாட்களாக உண்ணாவிரதம் இருந்ததால் சோனம் வாங்சுக் உடல் மிகவும் பலவீனமடைந்து, நீர்ச்சத்து குறைபாட்டுடன் காணப்படுகிறார்.</p><p>அவருக்கு ரத்த அழுத்தக் குறைவு மற்றும் ரத்த சர்க்கரை குறைவு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அவரது இதயத் துடிப்பு மற்றும் இசிஜி பரிசோதனை முடிவுகள் சீராக உள்ளன. அவர் தற்போது சுயநினைவுடன் உள்ளார்.</p><p>டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படியும், மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரிலுமே சோனம் வாங்சுக் பாதுகாப்புடன் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக டெல்லி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அம்மா மினி கிளினிக்குகள் மீண்டும் தொடங்கப்படும் - அமைச்சர் அருண்ராஜ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-arunraj-says-amma-mini-clinics-will-be-restarted</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-arunraj-says-amma-mini-clinics-will-be-restarted#comments</comments><guid isPermaLink="false">fbcc60cb-9c96-4736-a8a0-73f9a9f2cd82</guid><pubDate>Sat, 18 Jul 2026 07:07:09 +0000</pubDate><atom:updated>2026-07-18T07:07:09.452Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,tvk,அம்மா மினி கிளினிக்குகள்,amma mini clinic,அமைச்சர் அருண்ராஜ்,Minister Arunraj</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/52c4uvm9/MinisterArunRaj.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Arunraj]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/52c4uvm9/MinisterArunRaj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை</h2><p>சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் அருண்ராஜ் ஆய்வு மேற்கொண்டார். உயர் சிகிச்சை பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, சிறப்பு வார்டுகள் உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.</p><p>பின்னர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D">அமைச்சர் அருண்ராஜ்</a> நிருபர்களிடம் கூறியதாவது:-</p><p>தமிழகத்தில் 22 மாவட்டங்களில் தொடங்கப்பட்ட 'நலம் ஏ.ஐ.' வாட்ஸ்அப் செயலி வாயிலாக, 1.25 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர். அதேபோன்று, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் நெஞ்சக சிகிச்சை பிரிவில் தொடங்கப்பட்ட புறநோயாளிகள் இணைய முன்பதிவு நடைமுறையால் 500 பேர் பயனடைந்துள்ளனர். இதன் மூலம் அரசு மருத்துவமனைகளில் மருத்துவ ஆலோசனைக்கு காத்திருக்கும் நேரம் குறைந்துள்ளது.</p> <h2>மருத்துவ படிப்பு</h2><p>மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்துவதற்கான வாய்ப்பு இருந்தால் அதுகுறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார். ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் மாலை நேர மினி கிளினிக்குகள் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><h2>அம்மா மினி கிளினிக்</h2><p>கடந்த 2020-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்குகள் தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டன. போதிய திட்டமிடல் இல்லாமல் தொடங்கப்பட்டதாக கூறி அவை தி.மு.க. ஆட்சியில் மூடப்பட்டன. இந்த நிலையில் தற்போது <a href="https://www.maalaimalar.com/news/puducherry/tvk-cadres-crowded-tn-minister-bussy-anand-house">த.வெ.க.</a> அரசு அந்த திட்டத்துக்கு மீண்டும் புத்துயிர் அளிக்க முனைந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம்-1</title><link>https://www.maalaimalar.com/news/national/india-first-private-rocket-vikram-1-successfully-launched</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-first-private-rocket-vikram-1-successfully-launched#comments</comments><guid isPermaLink="false">b7908e4e-b021-4e94-8d2b-4b33d250653c</guid><pubDate>Sat, 18 Jul 2026 06:41:03 +0000</pubDate><atom:updated>2026-07-18T06:41:03.922Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ISRO,இஸ்ரோ,ராக்கெட்,Rocket,Rocket Vikram 1,ராக்கெட் விக்ரம் 1</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/6uv92bfd/rocket.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rocket Vikram-1]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/6uv92bfd/rocket.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து முதல் தனியார் ராக்கெட் விக்ரம்-1 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.</p><p>விண்வெளி ஆய்வு நடவடிக்கையில் தனியார் பங்களிப்புக்கு மத்திய அரசு அனுமதி அளித்து இருந்தது. </p><p>இதைத் தொடர்ந்து இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் கீழ் இயங்கும் இன்ஸ்பேஸ் (இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம்) ஐதராபாத்தை சேர்ந்த புத்தாக்க நிறுவனமான ஸ்கைருட் ஏரோஸ் பேஸ் நிறுவனத்துக்கு ராக்கெட் தயாரிப்புக்கான ஒப்புதலை அளித்தது.</p><h2>தனியார் ராக்கெட்</h2><p>இதையடுத்து “பிராரம்ப்” என்ற பெயரிலான திட்டம் மூலம் புதிய ராக்கெட் தயாரிப்பு பணிகளில் ஸ்கைருட் ஈடுபட்டு வந்தது. அந்த வகையில் வெவ்வேறு எடைகளை சுமந்து செல்லக்கூடிய 3 விதமான ராக்கெட்டுகள் வடிவமைக்கப்பட்டன.</p><p>அதற்கு இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தையான மறைந்த விஞ்ஞானி விக்ரம் சாராபாய் நினைவாக விக்ரம் என்று பெயரிடப்பட்டது. அதில் அதிகபட்சம் 480 கிலோ எடையை சுமந்து செல்லக்கூடிய விக்ரம் எஸ் ராக்கெட் சோதனை முயற்சியாக கடந்த 2022-ல் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து விக்ரம்-1 ராக்கெட்டை அந்த நிறுவனம் வடிவமைத்தது.</p> <h2>விக்ரம்-1 விண்ணில் பாய்ந்தது</h2><p>இந்த நிலையில் இந்திய விண்வெளி வரலாற்றில் முதல் முறையாக தனியார் நிறுவனம் தயாரித்த விக்ரம்-1 ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஆய்வு மையத்தில் இருந்து இன்று மதியம் 12.05 மணிக்கு புவியின் தாழ்வட்ட பாதை நோக்கி ஏவப்பட்டது.</p><p>காலை 11.30 மணிக்கு ஏவப்பட இருந்த இந்த ராக்கெட் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. 35 நிமிட தாமதத்திற்கு பிறகு விக்ரம்-1 விண்ணில் பாய்ந்தது.</p><h2>வெற்றிகரமாக</h2><p>பிரதமர் மோடி அனுப்பிய தபால் அட்டை உட்பட பல தொழில்நுட்ப செயல் விளக்க பொருட்களையும் வெற்றிகரமாக புவியின் தாழ்சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தியதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த திட்டம் ஒரு மாபெரும் வெற்றி என்று அந்த நிறுவனமும் அறிவித்து உள்ளது.</p><p>கிரகாபேஸ் காஸ்மோ சர்வ், டி-கியூப்ட் மற்றும் ஸ்கைரூட்டின் ஸ்கோப் ஆகியவற்றின் தொழில்நுட்ப செயல் விளக்க கருவிகளான முதன்மை பேலோடுகள் 450 கிலோ மீட்டர் தாழ் புவியின் சுற்றுப்பாதையில் நிலையாக நிறுத்தப்பட்டன.</p> <p>வந்தே மாதரம் என்ற செய்தியை கொண்ட பிரதமர் மோடியின் கையெழுத்து அஞ்சல் அட்டை என்ஜினீயர்கள், விஞ்ஞானிகள் மற்றும் விண்வெளி வீரர்கள் அஞ்சல் அட்டைகளுடன் வெற்றிகரமாக நிலைநிறுத்தினர்.</p><h2>முப்பரிமாணம்</h2><p>மொத்தம் 4 நிலைகளை கொண்ட இந்த ராக்கெட்டின் உயரம் 24 மீட்டர் ஆகும். 350 கிலோ வரையிலான செயற்கைகோள்களை சுமந்து செல்லக்கூடிய திறன் கொண்ட இந்த ராக்கெட்டின் என்ஜின்கள் முப்பரிமாண அச்சு தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டவை.</p><p>ஸ்கைரூட் நிறுவனம் கூறும்போது, “இந்தியாவின் அறிவியல் மற்றும் விண்வெளி பயணத்தை வடிவமைத்த 3 தொலைநோக்கர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்தியாவின் விண்வெளி திட்டத்தின் முன்னோடியான </p><p>விக்ரம் சாராபாய், விஞ்ஞானி சர்.சி.வி.ராமன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஆகியோரின் நுண் சிற்பங்களை கொண்ட் சிறிய பேலோடு உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Andhra Pradesh: India&#39;s first privately developed orbital-class rocket, Vikram-1, launched from the Satish Dhawan Space Centre in Sriharikota<br><br>Built by Hyderabad-based Skyroot Aerospace, Vikram-1 is powered by three solid-fuel stages and a liquid orbital adjustment… <a href="https://t.co/QQC9CPjcxH">pic.twitter.com/QQC9CPjcxH</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2078368358353768853?ref_src=twsrc%5Etfw">July 18, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>2014 முதல் நாடு முழுவதும் 152 தேர்வுத்தாள் கசிவுகள்!- மாணிக்கம் தாகூர் தாக்கு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/since-2014-152-exam-paper-leaks-nationwide-manickam-tagore-slams</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/since-2014-152-exam-paper-leaks-nationwide-manickam-tagore-slams#comments</comments><guid isPermaLink="false">55c3d3e3-7a0c-44ad-b10e-be7db6b357cc</guid><pubDate>Sat, 18 Jul 2026 06:40:31 +0000</pubDate><atom:updated>2026-07-18T06:40:31.231Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக அரசு,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore,question paper leak,bjp govt,தேர்வுத்தாள் கசிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/1qvuqyy4/manickam-tagore.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN Congress leader Manickam tagore]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/1qvuqyy4/manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>"2014 முதல் நாடு முழுவதும் 152 தேர்வுத்தாள் கசிவுகள்; மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள தேர்வுகளில் மட்டும் 60%-க்கும் மேற்பட்ட முறைகேடுகள் ஏன்" என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாக்கூர் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>மேலும் அவர்,"இளைஞர்கள் எதிர்காலத்தை கெடுக்கும் Doubtful Engineஆக பாஜக அரசு மாறிவிட்டது; பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் ஏன் இவ்வளவு அதிக தேர்வுத்தாள் கசிவுகள்? தேர்வுத்தாள் கசிவு குறித்து மத்திய கல்வி அமைச்சரிடம் என்ன பதில் உள்ளது?" என்றார்.</p><p>இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>2014 முதல் நாடு முழுவதும் 152 தேர்வுத்தாள் கசிவுகள்!</p><p>​இதில் அதிர்ச்சியூட்டும் உண்மை என்னவென்றால், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் டெல்லி/மத்திய அரசு தேர்வுகள் உட்பட பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள தேர்வுகளில் மட்டுமே 60%-க்கும் அதிகமான முறைகேடுகள் நடந்துள்ளன!</p><p>​பா.ஜ.க-வின் "Double Engine" அரசு இப்போது இளைஞர்களின் எதிர்காலத்தைக் கெடுக்கும் "Doubtful Engine" ஆக மாறிவிட்டது! </p><p>மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்</p><p>அவர்களே, பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் மட்டும் ஏன் இவ்வளவு அதிக தேர்வுத்தாள் கசிவுகள்? இதற்கு உங்களிடம் என்ன பதில் இருக்கிறது?</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இன்று பிறந்தநாள்: தமிழக அமைச்சர் என்.ஆனந்துக்கு வாழ்த்து தெரிவிக்க குவிந்த தவெக தொண்டர்கள்</title><link>https://www.maalaimalar.com/news/puducherry/tvk-cadres-crowded-tn-minister-bussy-anand-house</link><comments>https://www.maalaimalar.com/news/puducherry/tvk-cadres-crowded-tn-minister-bussy-anand-house#comments</comments><guid isPermaLink="false">36b5d85b-9ebf-4a4d-8f31-ca6fa859566e</guid><pubDate>Sat, 18 Jul 2026 06:38:03 +0000</pubDate><atom:updated>2026-07-18T06:38:03.526Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,Bussy Anand,புஸ்சி ஆனந்த்,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/0iry8dd5/bussy.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ த.வெ.க. தொண்டர்கள் மத்தியில் தமிழக அமைச்சர் புஸ்சி ஆனந்த்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/0iry8dd5/bussy.jpg?w=280" width="280"></media:thumbnail><category>புதுச்சேரி (Puducherry)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் என பலரும் ஆனந்தை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.</aside><p>த.வெ.க. பொதுச்செயலாளரும், தமிழகத்தின் அமைச்சருமான <a href="https://www.maalaimalar.com/topic/புஸ்சி-ஆனந்த்">என்.ஆனந்துக்கு</a> இன்று பிறந்தநாள்.</p><h2><strong>சிறப்பு பூஜை</strong></h2><p>ஜூலை 18, 1964ம் ஆண்டு பிறந்த அவருக்கு இன்று 62 வயது நிறைவடைந்துள்ளது. தனது பிறந்தநாளை இன்று புதுவையில் உள்ள இல்லத்தில் என்.ஆனந்த் கொண்டாடினார். இதற்காக இன்று காலை சின்னசுப்புராயப்பிள்ளை வீதியில் உள்ள அங்காளம்மன் கோவிலுக்கு சென்றார். அங்கு நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றார். </p><p>பின்னர் வீடு திரும்பிய அவர், தொண்டர்களின் வாழ்த்துகளை பெற்றார். புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் என பலரும் அவரை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். </p><h2><strong>த.வெ.க. தொண்டர்கள்</strong></h2><p>அமைச்சர் ஆனந்துக்கு வாழ்த்துக்கூற தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வேன், பஸ், கார்களில் நேற்று இரவு முதல் த.வெ.க.தொண்டர்கள் புதுவைக்கு வந்திருந்தனர். இதனால் நகர பகுதியில் த.வெ.க. கொடியுடன் வாகனங்கள் வலம் வந்தன.</p><figure><img alt="அமைச்சர் ஆனந்த் இல்லம்  உள்ள ரெயில்வே நிலையம், புஸ்சி வீதி பகுதியில் தொண்டர்கள் திரண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. " src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/9yt7linn/bussy0.jpg" /></figure> <p>அமைச்சர் ஆனந்த் இல்லம்  உள்ள ரெயில்வே நிலையம், புஸ்சி வீதி பகுதியில் தொண்டர்கள் திரண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆனந்துக்கு வாழ்த்து தெரிவித்து நகரின் பல இடங்களில் பேனர்களும் அமைக்கப்பட்டிருந்தது. </p> ]]></content:encoded></item><item><title>ஊதியம் வழங்குவதற்கு கூட பணமின்றி சிஎம்டிஏ திவாலானது ஏன்?: வெள்ளை அறிக்கை வேண்டும்!- அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-why-did-the-cmda-go-bankrupt-lacking-even-the-funds-to-pay-salaries</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-why-did-the-cmda-go-bankrupt-lacking-even-the-funds-to-pay-salaries#comments</comments><guid isPermaLink="false">17b67fab-0203-48b8-a4ee-a828e7849f47</guid><pubDate>Sat, 18 Jul 2026 06:23:07 +0000</pubDate><atom:updated>2026-07-18T06:23:07.615Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/2t9w01k1/Anbumaniramadoss01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/2t9w01k1/Anbumaniramadoss01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>சி.எம்.டி.ஏ அமைப்பின் பணிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக தேவையான நிதியை உதவியாக தமிழக அரசு வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.</aside><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>கையேந்தும் நிலை</strong></h2><p>சென்னை மற்றும் 4 புறநகர் மாவட்டங்களில் கட்டுமானப் பணிகள், நிலப்பயன்பாடு ஆகியவற்றை தீர்மானிக்கும் அதிகாரம் கொண்ட சி.எம்.டி,.ஏ எனும் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் அடுத்த மாதத்திற்கான ஊதியம் வழங்கக் கூட பணமின்றி திவாலாகி விட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. 54 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத வகையில் அடிப்படை செலவுகளுக்கு அரசிடம் உதவி கேட்டு கையேந்தும் நிலைக்கு சி.எம்.டி.ஏ தள்ளப்பட்டது ஏன்? என்ற உண்மை மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.</p><p>தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை மட்டுமின்றி, அதன் புறநகர் பகுதிகளிலும் நகர்ப்புற வளர்ச்சியை  வழிநடத்திச் செல்வது சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தான். சென்னை, தாம்பரம், ஆவடி, காஞ்சிபுரம் ஆகிய 4 மாநகராட்சிகள், 12 நகராட்சிகள் உள்பட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் 5,904 சதுர கி.மீ பரப்பளவிலான பகுதிகளில் நிலப்பயன்பாடு, கட்டுமானங்கள் ஆகியவற்றுக்கு அனுமதி அளிப்பது சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தான். 1972-ஆம் ஆண்டில் மதராஸ் பெருநகர வளர்ச்சிக் குழுமம் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட  இந்த அமைப்பு 54 ஆண்டுகளாக நிதி நிலையில் தற்சார்புடன் செயல்பட்டு வந்தது. ஆனால், கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் இந்த அமைப்பின் நிதிநிலை மிக மோசமாக சீரழிக்கப்பட்டிருக்கிறது.</p><h2><strong>தி.மு.க. ஆட்சியில்</strong> </h2><p>ஜூலை மாதத்திற்கான ஊதியம் வழங்குவது உள்ளிட்ட உடனடி செலவுகளுக்கு பணம் இல்லை என்பதால், உடனடியாக மானியம் மற்றும் நிதியுதவியாக ரூ.200 கோடி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அண்மையில் சி.எம்.டி.ஏ. கடிதம் எழுதியதைத் தொடர்ந்து தான் அதன் அவலநிலை அம்பலமாகி உள்ளது. சி.எம்.டி.ஏ அமைப்புக்கு இன்றைய நிலையில் சுமார் ரூ.3500 கோடி அளவுக்கு கடன் பொறுப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. சி.எம்.டி.ஏ. அமைப்பு இயல்பாக செயல்பட்டிருந்தால் இவ்வளவு சுமை ஏற்பட வாய்ப்பில்லை.</p><p>ஆனால், முந்தைய திமுக ஆட்சியில் சி.எம்.டி.ஏ மூலம் சென்னையில் ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு பல்வேறு உட்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதனால் தான் சி.எம்.டி.ஏ. இவ்வளவு பெரிய நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. சி.எம்.டி.ஏ.வின் முதன்மைப் பணி என்பது கட்டுமானப் பணிகளுக்கான திட்ட அனுமதி வழங்குவது தான். அதற்காக வசூலிக்கப்படும் மிகக் குறைந்த கட்டணம் தான் சி.எம்.டி.ஏ.வின் ஒற்றை வருவாய் ஆதாரம் ஆகும். அதைக் கொண்டு தான்  ஊழியர்களுக்கான ஊதியம், நிர்வாகச் செலவுகள்  ஆகியவற்றை சி.எம்.டி.ஏ. சமாளித்து வந்தது. கடந்த 54 ஆண்டுகளாக எந்த சிக்கலும் இல்லாமல் சி.எம்.டி.ஏ. அமைப்பின் நிர்வாகம் நடைபெற்று வந்தது.</p><h2><strong>நிதியை கொள்ளையடிக்க சதி</strong></h2><p>சென்னைக்கு தேவையான உட்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டிய சுமை சி.எம்.டி.ஏ மீது சுமத்தப்பட்டதால் தான் அதன் நிதி நிலை மோசமடைந்தது. சென்னை மாநகரில் மிகப்பெரிய அளவில்  கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டிய தேவை இருப்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், அவற்றை மேற்கொள்ள வேண்டியது தமிழ்நாடு அரசு மற்றும் சென்னை மாநகராட்சியின் பணி ஆகும்.  சி.எம்.டி.ஏ. என்பது அடிப்படையில் ஒழுங்கு முறை அமைப்பு ஆகும். அத்தகைய அமைப்பின் மீது கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு சுமத்தப்பட்டது அதன் நிதியை கொள்ளையடிக்க நடந்த சதி ஆகும்.</p><p>முந்தைய திமுக ஆட்சியின் கடைசி ஓராண்டில் ஊழலும், கொள்ளையும் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தன. ஊழல் செய்வதற்காக எந்த எல்லைக்கும் செல்ல ஆட்சியாளர்கள் துணிந்திருந்தனர். 2025-26ஆம் ஆண்டிலேயே சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படாத சாலைத் திட்டங்களுக்கு 2026-27ஆம்  ஆண்டு நிதிநிலை அறிக்கை நிதியிலிருந்து ரூ.2000 கோடி  ஒதுக்கி ஒப்பந்தம் வழங்கும் அளவுக்கு திமுக அரசு விதிமீறல்களை அரங்கேற்றியது. இதற்கு காரணம் நிதி இல்லாத நிலையிலும் நெடுஞ்சாலை பணிகளுக்கு ஒப்பந்தம் விட்டு கையூட்டு வசூலிக்க வேண்டும் என்ற பேராசை தான். இதை கடந்த ஜனவரி மாதத்திலேயே அறிக்கை மூலம் அம்பலப்படுத்தி கண்டனம் தெரிவித்திருந்தேன்.</p><h2><strong>ஊதியம்</strong></h2><p>நெடுஞ்சாலைத் துறையை நிர்வகித்தவர்கள் அடுத்த ஆண்டுக்கான நிதியில் முன்கூட்டியே ஒப்பந்தம் வழங்கி ஊழல் செய்தால், சி.எம்.டி.ஏவை நிர்வகித்தவர்கள் தங்கள் பங்குக்கு ஊழல் செய்வதற்காக ஒழுங்குமுறை அமைப்பான சி.எம்.டி.ஏவை கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ளச் செய்து, அதற்கான ஒப்பந்தங்களின் மூலம் ஊழல் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. முந்தைய ஆட்சியாளர்களின் அந்த பேராசை தான் சி.எம்.டி.ஏவை ஊதியம் வழங்குவதற்கு கூட நிதி இல்லாத நிலைக்கு தள்ளியுள்ளது.</p><p>சி.எம்.டி.ஏ அமைப்பை உட்கட்டமைப்புப் பணிகளை செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தியவர்கள் யார்? சி.எம்.டி.ஏ அமைப்பின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கான ஒப்பந்தங்கள் யார், யாருக்கு வழங்கப்பட்டன?  அவற்றில் ஊழல்கள், முறைகேடுகள் நடந்தனவா? என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும். அதே நேரத்தில் சி.எம்.டி.ஏ அமைப்பின்  பணிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக தேவையான நிதியை உதவியாக தமிழக அரசு வழங்க வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>பழனி கோவில் நில மோசடியில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை தீவிரம்- தி.மு.க. பிரமுகர் வீடுகளில் அதிரடி சோதனை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-temple-land-scam-cbcid-probe-dmk-leaders-raids</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-temple-land-scam-cbcid-probe-dmk-leaders-raids#comments</comments><guid isPermaLink="false">97077370-3769-42aa-bed7-5394eb95d5ed</guid><pubDate>Sat, 18 Jul 2026 06:18:09 +0000</pubDate><atom:updated>2026-07-18T06:18:09.120Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,பழனி கோவில்,pazhani,சிபிசிஐடி,cbcid</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/ej8oi7f8/pazhani.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pazhani Temple]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/ej8oi7f8/pazhani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பழனி கோயிலின் ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி விவகாரத்தில், அலங்காரப் பணி செய்பவர் வீட்டில் சிபிசிஐடி சோதனை நடத்தி வருகிறது.</p><p>நெல்லையில் அலங்காரப் பணி செய்யும் சண்முக சுந்தரம் வீட்டில் சிபிசிஐடி போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.</p><p>வழக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் முக்கிய தகவல்களை சேகரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பழனியில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் வீட்டில் காலை முதலே சோதனை நடத்தப்பட்டு வருகிறது.</p><h2>பழனி நில மோசடி விவகாரம்</h2><p>திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் சன்னதி வீதியில் அமைந்துள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் போலி ஆவணங்கள் மூலம் ரூ.2 கோடிக்கு மோசடி பதிவு செய்யப் பட்டது. இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><h2>7 பிரிவுகளில் வழக்கு</h2><p>இந்த வழக்கில் நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொடுத்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், போலி டிரஸ்ட் பிரமுகர் முருகதாஸ், நிலத்தை வாங்கிய சேதுபதி, வெள்ளைத்துரை ஆகிய 4 பேர் மீது கூட்டுச்சதி, மோசடி உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.</p><p>சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். சம்மந்தப்பட்ட ஆவணம் கடந்த ஏப்ரல் 1-ந் தேதி பதிவுக்காக சமர்ப்பிக் கப்பட்டது. அப்போதைய சார்பதி வாளர் பாலச்சந்தர் பதிவு செய்ய மறுத்து விட்டார்.</p><p>கடந்த ஏப்ரல் 10-ந் தேதி ரிட் மனு மீதான வழக்கில் ஆவணத்தை பதிவு செய்யு மாறு சார்பதிவாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில் ஜூலை 3-ந் தேதி சார்பதிவாளர் பால சுந்தரம் பதிவு செய்தார். </p><p>பாலசுந்தரம் விடுப்பில் சென்ற காரணத்தால் மாவட்ட பதிவாளர் அனுமதியுடன் ஜூலை 6-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை ஜஸ்டின் மணிகண்டன் பொறுப்பில் இருந்தார். அந்த காலக்கட்டத்தில்தான் இந்த மனு பதிவு செய்யப் பட்டது என்றும், அதற்கு எண் ஒதுக்கீடு செய்து கலெக்டருக்கு பரிந்துரைக்க மட்டுமே தான் செய்ததாகவும் மனுவில் தெரிவித்திருந்தார். </p><p>இதனையடுத்து ஜஸ்டின் மணிகண்டனுக்கு முன்ஜாமீன் வழங்கி வருகிற 27-ந் தேதி முதல் ஆகஸ்ட்டு 3-ந் தேதி வரை திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது. வழக்கில் விசாரணையும் அகஸ்ட் 4-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.</p><h2>அதிகாலையில் சோதனை</h2><p>இந்நிலையில் இன்று காலை திண்டுக்கல் ரவுண்டு ரோடு லிங்கா அவென்யூ பகுதியில் அமைந்துள்ள ஜஸ்டின் மணிகண்டனுக்கு சொந்தமான வீட்டில் சி.பி.சி.ஐ.டி.</p><p>டி.எஸ்.பி. அஜய் தங்கம் தலைமையில் 8 பேர் கொண்ட போலீசார் விசாரணைக்கு வந்தனர். அப்போது அவரது வீட்டில் ஜஸ்டின் மணிகண்டன் வீட்டில் இல்லை. அவரது மனைவி மற்றும் குழந்தைகள் மட்டுமே இருந்தனர். தொடர்ந்து 2 மணி நேரத்துக்கும் மேலாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>வங்கி கணக்கு விபரங்கள், பத்திரப்பதிவு செய்த நாளிலும், அதற்கு முந்தைய நாட்களிலும் அவரது செல்போன் உரையாடல்கள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து வருகின்றனர்.</p><p>இதே போல் பத்திரப்பதிவு செய்தபோது சாட்சி கையெழுத்து போட்ட வர்களின் விபரங்களையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேகரித்தனர். அதில் பழனி இடும்பன் கோவில் அருகே உள்ள லெட்சுமணன் என்பவரும் ஒருவர் என்பதால் அவரது  வீட்டுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிகாலை சென்றனர். </p><p>ஆனால் அவர் வீட்டில் இல்லை. அவரது மனைவியிடம் கேட்டபோது தனது கணவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அவர் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாகவும் தெரிவித்தார். </p><p>இதனையடுத்து அங்கு சென்றும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். இதே போல் சாட்சி கையெழுத்திட்ட மேலும் சிலரது வீடுகளுக்கும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விரைந்துள்ளனர். லெட்சு மணன் இப்பகுதியின் தி.மு.க. வார்டு செயலாளராக இருந்து வருகிறார்.</p><p>சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கில் அதிரடி திருப்பமாக அரசியல் பிரமுகர் ஒருவரிடம் விசாரணை நடத்தி இருப்பத பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><p>முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் சேதுபதி, வெள்ளைத்துரை ஆகியோர் கடந்த சில நாட்களாகவே தலைமறைவாக உள்ளதால் அவர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தொழில்நுட்ப கோளாறு - தனியார் ராக்கெட் விக்ரம்-1 புறப்பாடு தாமதம்</title><link>https://www.maalaimalar.com/news/national/technical-glitch-launch-of-private-rocket-vikram-1-delayed</link><comments>https://www.maalaimalar.com/news/national/technical-glitch-launch-of-private-rocket-vikram-1-delayed#comments</comments><guid isPermaLink="false">f48dea31-2cc2-475e-93ea-d7d9b8d81dc0</guid><pubDate>Sat, 18 Jul 2026 06:16:29 +0000</pubDate><atom:updated>2026-07-18T06:16:29.383Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ISRO,இஸ்ரோ,ராக்கெட்,Rocket,Rocket Vikram 1,ராக்கெட் விக்ரம் 1</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/dnuo8rhl/isro.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vikram-1 Rocket]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/dnuo8rhl/isro.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பறக்கும் முதல் தனியார் ராக்கெட் விக்ரம்-1-ல் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.</p><h2>தனியார் ராக்கெட்</h2><p>தெலுங்கானா மாநிலம் தலைநகர் ஐதராபாத்தை சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் விக்ரம்-1 என்ற ராக்கெட்டை தயாரித்துள்ளது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்திலிருந்து இன்று 11.30 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருந்தது.</p><h2>தொழில்நுட்ப கோளாறு</h2><p>இந்தியாவின் முதலாவது தனியார் ராக்கெட் விக்ரம்-1 விண்ணில் ஏவப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 11.30 மணிக்கு ஏவப்பட இருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதமாகி உள்ளது.</p><p>இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதையடுத்து 20 நிமிட கவுண்டவுன் மீண்டும் தொடங்கியது. 12.05-க்கு ராக்கெட் விக்ரம்-1 விண்ணில் ஏவப்படுகிறது.</p><h2>விக்ரம்-1</h2><p>விக்ரம்-1 ஆனது கிரகா ஸ்பேஸ், காஸ்மோசர்வ், டிகியூப்ட் மற்றும் ஸ்கைரூட்டின் சொந்த ஸ்கோப் ஆகியவற்றிலிருந்து தொழில்நுட்ப விளக்க ஆய்வு கருவிகளை எடுத்துச் செல்கிறது. அத்துடன், காஸ்மோஸ் டயமண்ட்ஸின் கலைப்படைப்பான 'காஸ்மிக் புளூம்' மற்றும் ஒரு மைக்ரோ-ஆர்ட் பீஸ் கொண்டு செல்கிறது.</p> <h2>கார்பன் கலவை அமைப்பு</h2><p>விக்ரம்-1 என்பது 7 அடுக்கு உயரமான, பல நிலை சுற்றுப்பாதை ஏவுகணை வாகனமாகும். இது அனைத்து கார்பன் கலவை அமைப்புடன் கட்டப்பட்டது மற்றும் 3டி-அச்சிடப்பட்ட எந்திரங்கள் மற்றும் உயர் உந்துதல் திட எரிபொருள் ராக்கெட் பூஸ்டர்கள் உந்துவிசை அமைப்புகளால் இயக்கப்படுகிறது.</p><p>350 கிலோ எடையுள்ள சிறிய செயற்கைக்கோள்களை குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் முதல் சோதனை விமானம் 60 டிகிரி சாய்வில் 450 கிமீ சுற்றுப்பாதையை இலக்காகக் கொண்டுள்ளது. </p><p>இந்தவகை ராக்கெட் மூலம் சில நூறு கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களை குறைந்த பூமியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த வடிவமைக்கப்பட்ட ஒரு சிறிய வகை ராக்கெட்டாகும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.</p> ]]></content:encoded></item><item><title>‘மேகாலயா புராஜெக்ட்’ என்ற பெயரில் த.வெ.க. ஆட்சியை கவிழ்க்க சதி திட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/conspiracy-tvk-government-under-for-meghalaya-project</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/conspiracy-tvk-government-under-for-meghalaya-project#comments</comments><guid isPermaLink="false">8d3cd558-62ac-43d1-b95c-b53eed65cc54</guid><pubDate>Sat, 18 Jul 2026 06:06:16 +0000</pubDate><atom:updated>2026-07-18T06:06:16.450Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,Police Investigation,போலீசார் விசாரணை,tvk,Meghalaya Project,மேகாலயா புராஜெக்ட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/yfyogev7/Vijay04.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய் ]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/yfyogev7/Vijay04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>த.வெ.க. ஆட்சியை கவிழ்ப்பதற்கு மேகாலயா மாநிலத்தில் அடிக்கடி அரங்கேறுவது போன்ற ஆட்சி கவிழ்ப்பு சதி திட்டத்தில் ஈடுபட்டதால் கைதானவர்கள் அதற்கு ‘மேகாலயா புராஜெக்ட்’ என்று பெயர் வைத்துள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.</aside><p>ஊத்தங்கரை  <a href="https://www.maalaimalar.com/topic/தவெக">த.வெ.க.</a> எம்.எல்.ஏ. இளையராஜாவை தொடர்பு கொண்டு ஆட்சியை கவிழ்ப்பதற்காக ரூ.35 கோடி பேரம் பேசப்பட்ட விவகாரத்தில் போலீசார் விசாரணையை  தீவிரப்படுத்தியுள்ளனர்.</p><h2><strong>திருநாவுக்கரசு</strong></h2><p>சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த யூடியூபர் திருநாவுக்கரசு  என்பவர் மேலும் சிலருடன் சேர்ந்து இளையராஜா எம்.எல்.ஏ.வை அணுகி சட்டமன்ற வாக்கெடுப்பில் த.வெ.க எடுக்கும் நிலைப்பாட்டை மீறி அவர்கள் சொல்லும்படி வாக்களிக்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்தால் ரூ.35 கோடி லஞ்சமாக வழங்குவதாகவும். அவ்வாறு செயல்பட மறுத்ததால் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில்தான் போலீசார் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.</p><p>இந்த வழக்கில் திருநாவுக்கரசோடு தொடர்பில் இருந்தவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.</p><h2><strong>அதிரடி விசாரணை</strong></h2><p>போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில்  திருநாவுக்கரசு மேலும் சிலருடன் சேர்ந்து கூட்டுச்சதி செய்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.</p><p>“மேகாலயா பிராஜெக்ட்” என்ற பெயரிட்டு  15 எம்.எல்.ஏ.க்களை விலை கொடுத்து வாங்குவதற்கு இவர்கள் காய்  நகர்த்தி இருப்பதும் தெரிய வந்து உள்ளதாக போலீசார் கூறி உள்ளனர்.  திருநாவுக்கரசுடன் தொடர்பில் இருந்த அனைவரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.</p><h2><strong>செல்போன் தொடர்புகள்</strong></h2><p>திருநாவுக்கரசின் செல்போன் தொடர்புகள் அவரது வாட்ஸ்அப்  உரையாடல்கள் ஆகியவற்றின் அடிப்படையாக வைத்து சம்பந்தப்பட்ட அனைவரையும் விசாரணை வளையத்துக்கும் போலீசார் கொண்டு வந்துள்ளனர்.</p><p>த. வெ. க. ஆட்சியை கவிழ்ப்பதற்காக திருநாவுக்கரசு படிப்படியாக மேற்கொண்ட ஒவ்வொரு நடவடிக்கைகளையும் தன்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களிடம்  செல்போன் மூலமாக தெரிவித்து வந்துள்ளார்.</p><p>வாட்ஸ் அப் வழியாகவும் தகவல்களை பரிமாறி இருக்கிறார். இது போன்ற தகவல்கள் கிடைக்கப் பெற்றதும் அவரது நட்பு வட்டத்தில் இருந்த பலர் அதனை ஊக்கப்படுத்தும் வகையில் பதிலும் அனுப்பி இருக்கிறார்கள்.</p><h2><strong>மேலும் பலர்</strong></h2><p>இதையெல்லாம் மையமாக வைத்து தான் இந்த வழக்கில் மேலும் யார் யாருக்கு தொடர்புள்ளது என்பது பற்றிய விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.</p><p>இதன் மூலம்  த.வெ.க. எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசிய வழக்கில்  திருநாவுக்கரசரோடு நெருங்கிய தொடர்பில் இருந்த மேலும் சிலரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.</p><p>அவருடன் வாட்ஸ்அப் மூலமாக தகவல்களை பரிமாறியவர்களுக்கு சம்மன் அனுப்பி அவர்களிடமும் விசாரணை நடத்த முடிவு செய்து இருக்கிறார்கள்.</p><h2><strong>விமர்சகர்கள்</strong></h2><p>இதன் முடிவில் இந்த வழக்கில் தொடர்புடைய அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் பலரும் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>த.வெ.க. ஆட்சியை கவிழ்ப்பதற்கு மேகாலயா மாநிலத்தில் அடிக்கடி அரங்கேறுவது போன்ற ஆட்சி கவிழ்ப்பு சதி திட்டத்தில் ஈடுபட்டதால் கைதானவர்கள் அதற்கு ‘மேகாலயா புராஜெக்ட்’ என்று பெயர் வைத்துள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>“தமிழ்நாடு” எனும் நம் தனிப்பெரும் அடையாளத்தை ஓங்கி ஒலிப்போம்! - கனிமொழி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-wishes-to-tamil-nadu-day</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-wishes-to-tamil-nadu-day#comments</comments><guid isPermaLink="false">28a7888e-529f-477f-b5ba-75e342b4fb10</guid><pubDate>Sat, 18 Jul 2026 05:41:40 +0000</pubDate><atom:updated>2026-07-18T05:41:40.381Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,Kanimozhi,கனிமொழி,TamilNadu Day,தமிழ்நாடு நாள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/kv8j5gls/kanimozhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kanimozhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/kv8j5gls/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு நாள் ஆண்டுதோறும் ஜூலை 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது. 1967-ம் ஆண்டு இதே நாளில், அன்றைய முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்கள் சென்னை மாகாணத்தின் பெயரை 'தமிழ்நாடு' என மாற்றுவதற்கான தீர்மானத்தை சட்டமன்றத்தில் முன்மொழிந்தார். முன்னதாக நவம்பர் 1-ந்தேதி கொண்டாடப்பட்ட நிலையில், 2022 முதல் ஜூலை 18 தமிழ்நாடு நாளாக அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டது. </p><p>இந்நிலையில், ஜூலை 18-ந்தேதியான இன்று தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுகிறது. இதுதொடர்பாக திமுக எம்பி <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF">கனிமொழி</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>எண்ணில்லா போராட்டங்களாலும், விலை மதிப்பில்லா உயிர்த் தியாகங்களாலும், நம் அன்னைத் தமிழ் நிலத்தின் பெயரை மீட்டளித்திட்ட நாள் இது.</p> <p>நம் கழகம் பெற்ற அதிகாரத்தால், நம் தாய்நிலம் தலைநிமிர்ந்து, தெற்கிலிருந்து தொடங்கும் இத்துணைக் கண்டத்தின் வரலாற்றை முழங்கும் இனமானச் சொல்லாக நிலைப்பெற்றுவிட்டது,  நம் தமிழ்நாடு!</p><p>பேரறிஞர் அண்ணா <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-ex-cm-mk-stalins-greetings-for-tamilnadu-day">தமிழ்நாடு</a> என்று பெயர் சூட்டிய இந்நாளில், மாநில உரிமைகளைக் காத்திட உறுதிகொள்வோம். </p><p>“தமிழ்நாடு” எனும் நம் தனிப்பெரும் அடையாளத்தை ஓங்கி ஒலிப்போம்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>அமைச்சர் ஆனந்த் மீது வழக்கு தொடர்ந்த ஞானசவுந்தரி த.வெ.க-வில் இருந்து நீக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/gnanasaundari-who-filed-a-case-against-minister-anand-has-been-removed-from-the-tvk</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/gnanasaundari-who-filed-a-case-against-minister-anand-has-been-removed-from-the-tvk#comments</comments><guid isPermaLink="false">b4109ef3-619f-4627-a14f-04da6a8ab601</guid><pubDate>Sat, 18 Jul 2026 05:19:08 +0000</pubDate><atom:updated>2026-07-18T05:19:08.676Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,புஸ்ஸி ஆனந்த்,Bussy Anand,tvk,ஞானசவுந்தரி,Gnanasoundhiri</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/4syrnrnv/TVK.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Bussy Anand- Gnanasoundhari]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/4syrnrnv/TVK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வழக்கறிஞர் நியமனத்தில் அமைச்சர் ஆனந்த் முறைகேட்டில் ஈடுபட்டதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஞானசவுந்தரி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>தம்மை விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞரான நியமிக்க கோரி வழக்கு தொடர்ந்த ஞானசவுந்தரி தவெகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.</p><p>ஆன்லைன் மூலம் தவெகவில் இணைந்து எதிரிகளுடன் கூட்டு சேர்ந்து குற்றச்சாட்டு சுமத்திய ஞானசவுந்தரி நீக்கப்பட்டுள்ளார்.</p><p>எதிரிகளுடன் சேர்ந்துகொண்டு பொய்யான குற்றச்சாட்டுகள் கூறியும், கட்சியின் கொள்கைகள், கட்டுப்பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட ஞானசவுந்தரி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து உடனடியாக நீக்கப்படுவதாக விழுப்புரம் தெற்கு மாவட்ட தவெக செயலாளர் அறிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வாட்ஸ்அப்-இல் படிப்படியாக வெளியாகும் Username அம்சம்!</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/whatsapp-usernames-are-now-reportedly-available-for-some-android-and-ios-users</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/whatsapp-usernames-are-now-reportedly-available-for-some-android-and-ios-users#comments</comments><guid isPermaLink="false">421822c3-4fe2-497b-9e6b-ca747af91ace</guid><pubDate>Sat, 18 Jul 2026 04:52:00 +0000</pubDate><atom:updated>2026-07-18T04:52:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>செயலி,WhatsApp,Apps,வாட்ஸ்அப்,ஆப்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/eongz5kp/WA-un.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/eongz5kp/WA-un.png?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வாட்ஸ்அப் நிறுவனம் அதன் யூசர்நேம் (Usernames) அம்சத்தினை படிப்படியாக விரிவுபடுத்தி வருகிறது, இது சில பயனர்கள் தங்கள் தொலைபேசி எண்களை பகிராமல் புதிய நபர்களுடன் இணைய அனுமதிக்கிறது. இந்த அப்டேட், முந்தைய யூசர்நேம் முன்பதிவு கட்டத்திற்கு பிறகு வரும் அடுத்த கட்டத்தை குறிக்கிறது. </p><p>மேலும், தற்போது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். பயனர்களுக்கு கிடைக்கிறது. இது புதிய தனியுரிமை கட்டுப்பாடுகளை சேர்ப்பதோடு, தனிநபர்கள் மற்றும் வணிகங்களுடன் உரையாடல்களை தொடங்க மற்றொரு வழியையும் அறிமுகப்படுத்துகிறது. இருப்பினும், தொலைபேசி எண்கள் வாட்ஸ்அப் கணக்குகள் மற்றும் ஏற்கனவே உள்ள உரையாடல்களின் ஒரு பகுதியாக தொடர்ந்து இருக்கும்.</p><p><strong>யூசர்நேம் வெளியீடு:</strong></p><p>தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். பயனர்களுக்கு வாட்ஸ்அப் முழுமையான யூசர்நேம் ஆதரவை வெளியிடுகிறது. WABetaInfo பதிவின்படி, வாட்ஸ்அப் அதன் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் செயலிகளின் ஸ்டேபிள் மற்றும் பீட்டா பதிப்புகள் இரண்டிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயனர்களுக்கு முழுமையான யூசர்நேம் ஆதரவை வெளியிட தொடங்கியுள்ளது.</p><p>தற்போது செயலில் உள்ள யூசர்நேம்களை கொண்டவர்கள், இந்த அம்சம் பயன்படுத்த தயாராக உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் ஒரு பேனரை சாட்ஸ் பகுதியில் காண முடியும். இந்த வெளியீடு வரும் வாரங்களில் கட்டங்களாக தொடரும், அதே நேரத்தில் முன்பதிவு செய்யப்பட்ட சில யூசர்நேம்கள் இந்த ஆண்டின் பிற்பகுதி வரை செயலில் வராமல் இருக்கலாம்.</p><p><strong>முன்பதிவு:</strong></p><p>இந்த அப்டேட், கடந்த மாதத்தின் யூசர்நேம் முன்பதிவு கட்டத்தின் தொடர்ச்சியாகும், இது பரவலான வெளியீட்டிற்கு முன்பு பயனர்கள் தங்களுக்கு விருப்பமான யூசர்நேமை பாதுகாக்க அனுமதித்தது. தங்கள் வாட்ஸ்அப் கணக்கை அக்கவுண்ட்ஸ் சென்டருடன் இணைத்தவர்கள், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் தாங்கள் பயன்படுத்தும் அதே யூசர்நேமை முன்பதிவு செய்துகொள்ளலாம். இதற்கு மாறாக, மற்றவர்களுக்கு வாட்ஸ்அப்பிற்கு மட்டுமேயான ஒரு தனி யூசர்நேமை உருவாக்கும் வாய்ப்பு இருந்தது.</p><p>ஒரு யூசர்நேம் செயலில் வந்தவுடன், அதை வாட்ஸ்அப் அமைப்புகளில் உள்ள சுயவிவர பிரிவில் இருந்து நிர்வகிக்கலாம். அங்கு பயனர்கள் அதை எப்போது வேண்டுமானாலும் திருத்தலாம் அல்லது நீக்கலாம். ஒரு யூசர்நேமை நீக்கினால், ஏற்கனவே உள்ள உரையாடல்களில் அதற்கு பதிலாக பயனரின் தொலைபேசி எண்ணை வாட்ஸ்அப் காண்பிக்கும்.</p><p><strong>மொபைல் எண்:</strong></p><p>யாராவது ஒரு யூசர்நேமை உருவாக்கும்போதோ அல்லது மாற்றும்போதோ, ஏற்கனவே உள்ள தொடர்புகளுக்கும் இது தெரிவிக்கப்படும். புஷ் நோட்டிஃபிகேஷன் அனுப்புவதற்கு பதிலாக, வாட்ஸ்அப் சாட்-இல் ஒரு சிஸ்டம் மெசேஜை சேர்க்கிறது, மேலும் அதே அப்டேட் க்ரூப் இன்ஃபோவில் உள்ள 'உறுப்பினர் மாற்றங்கள்' பிரிவிலும் தோன்றும்.</p><p>யூசர்நேம்கள் இணைவதற்கு மற்றொரு வழியை வழங்கினாலும், அவை தொலைபேசி எண்களுக்கு மாற்றாக அமையாது. ஏற்கனவே தொலைபேசி எண் உள்ள தொடர்புகளுக்கு, ஏற்கனவே உள்ள உரையாடல்களில் அந்த எண்கள் தொடர்ந்து காட்டப்படும், அதேசமயம் ஒரு பயனரின் எண் தெரியாதவர்கள் யூசர்நேமை மட்டுமே காண முடியும். ஒரு வாட்ஸ்அப் கணக்கை உருவாக்கவும் அணுகவும் மொபைல் எண் தேவைப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>திருப்பூர் அருகே லாரி மீது சுற்றுலா வாகனம் மோதி விபத்து - 3 பேர் பலி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/accident-near-tiruppur-lorry-collides-with-tourist-vehicle-3-dead</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/accident-near-tiruppur-lorry-collides-with-tourist-vehicle-3-dead#comments</comments><guid isPermaLink="false">ecba5eae-cb61-4e84-922f-ccaf806b1e8d</guid><pubDate>Sat, 18 Jul 2026 04:50:23 +0000</pubDate><atom:updated>2026-07-18T04:50:23.663Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruppur,Death,accident,விபத்து,திருப்பூர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/yv9zl3ab/accident.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Accident]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/yv9zl3ab/accident.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>சுற்றுலா</h2><p>​திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, புச்சிரெட்டிப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் விஜய்(30). இவரது மனைவி தேன்மொழி(26). இவர்களது குழந்தை சுபஸ்ரீ. இவர்களுடன் அதே பகுதியைச் சேர்ந்த குமார், காவியா, இலக்கியா உள்ளிட்ட மொத்தம் 8 பேர் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டனர்.</p><p>​அதன்படி அவர்கள் அனைவரும் நேற்று இரவு திருத்தணியில் இருந்து ஈக்கோ  கார் ஒன்றில் அனைவரும் ஊட்டி நோக்கிப் புறப்பட்டனர். காரை டிரைவர் ஒருவர் ஓட்டி வந்துள்ளார்.</p><h2>விபத்து</h2><p>​இன்று அதிகாலை திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளி அருகே, சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்துகொண்டிருந்தது. அப்போது, ரோட்டின் ஓரத்தில் கியாஸ் லாரி ஒன்று நின்று கொண்டிருந்துது.  அப்போது  லாரியின் மீது கார் எதிர்பாராவிதமாக பயங்கரமாக மோதி நசுங்கியது. </p><p>விபத்தின் இடிபாடுகளில் சிக்கி விஜய் மற்றும் குமார் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.</p> <h2>உயிரிழப்பு</h2><p>​தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊத்துக்குளி போலீசார் மற்றும் பொதுமக்கள், காரில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மற்றவர்களை மீட்டு ஊத்துக்குளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி விஜய்யின் மனைவி தேன்மொழி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. </p><p>மேலும், இந்த விபத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கார் டிரைவர் உட்பட 2 பேர் ஊத்துக்குளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறுமி சுபஸ்ரீ, காவியா, இலக்கியா ஆகிய 3 பேர் திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p>​விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.</p><h2>போலீசார் வழக்குப்பதிவு</h2><p>​சுற்றுலா சென்ற போது கணவன்-மனைவி உள்பட 3 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>&quot;தமிழ்த் தாயின் ஏக்கம் தீரப் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய நாள்&quot;- மு.க.ஸ்டாலின் வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-ex-cm-mk-stalins-greetings-for-tamilnadu-day</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-ex-cm-mk-stalins-greetings-for-tamilnadu-day#comments</comments><guid isPermaLink="false">eee1b286-2e36-4f14-bc4e-280d83d03343</guid><pubDate>Sat, 18 Jul 2026 04:24:59 +0000</pubDate><atom:updated>2026-07-18T04:24:59.502Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,TamilNadu Day,Perarignar Anna,தமிழ்நாடு நாள்,முக ஸ்டாலின்,பேரறிஞர் அண்ணா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/jibkuk7k/MKS.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN EX CM MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/jibkuk7k/MKS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மதராஸ் டூ தமிழ்நாடு</h2><p>முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா தலைமையிலான திமுக அரசு, 1967-ஆம் ஆண்டு ஜூலை 18 அன்று அப்போதைய மதராஸ் மாகாணத்திற்கு 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றியது.</p><h2>மு.க.ஸ்டாலின் வாழ்த்து</h2><p>தமிழ்த்தாயின் ஏக்கம் தீரத் தலைமகன் பேரறிஞர் அண்ணா தமிழ்நாடு என பெயர்சூட்டிய நாள் இந்நாள் என முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- </p><p>1956-ஆம் ஆண்டே மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்தாலும் இந்த நிலம் Madras State என்ற பெயரிலேயே தொடர்ந்தது.</p><p>எத்தனையோ முயற்சிகள், தீர்மானங்கள், போராட்டங்கள் நிகழ்ந்தும் எதுவும் மாறவில்லை.</p><p>1967-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது கழகம். முதலமைச்சரானார் நம் அண்ணா. வரலாற்றில் பொன்னாளாக நிலைபெற வந்தது அந்நாள்!</p><p>தமிழ்த்தாயின் ஏக்கம் தீரத் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள் 'தமிழ்நாடு' என்ற பெயரினை அவையினில் முழங்க, ஒட்டுமொத்த மாநிலத்தின் உணர்வினையும் எதிரொலிக்கும் வகையில் உறுப்பினர்கள் எல்லாம் 'வாழ்க' என வாழ்த்தி மகிழ்ந்த இந்த நாளே தமிழ்நாடு நாள்!</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY: சற்றே உயர்ந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்
</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-18-7-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-18-7-2026#comments</comments><guid isPermaLink="false">453aaabb-a60c-4c23-b7e8-5a5b9dab6b35</guid><pubDate>Sat, 18 Jul 2026 04:20:19 +0000</pubDate><atom:updated>2026-07-18T04:20:19.323Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/01/27/25441318-gold3.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/01/27/25441318-gold3.webp?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சர்வதேச பொருளாதார சூழல், போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. </p><p>தங்கம் விலையானது நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.1,05,200-க்கும், கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.13,150-க்கு விற்பனையானது. நேற்று சவரனுக்கு  ரூ.400 குறைந்து ரூ.1,04,800-க்கும், கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.13,100-க்கு விற்பனையானது.</p><h2>தங்கம் விலை உயர்வு</h2><p>இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு  ரூ.280 உயர்ந்து ரூ.1,05,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.13,135-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><h2>வெள்ளி விலை நிலவரம்</h2><p>வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-</h2><p>17-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,800</p><p>16-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,200</p><p>15-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,440</p><p>14-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,200</p><p>13-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,600</p><h2>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-</h2><p>17-07-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>16-07-2026- ஒரு கிராம் ரூ.240</p><p>15-07-2026- ஒரு கிராம் ரூ.240</p><p>14-07-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>13-07-2026- ஒரு கிராம் ரூ.240</p> ]]></content:encoded></item><item><title>&quot;தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட உறுதியேற்போம்&quot;- முதலமைச்சர் விஜய் வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-extends-greetings-on-tamil-nadu-day</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-extends-greetings-on-tamil-nadu-day#comments</comments><guid isPermaLink="false">318ca44a-4f38-4c04-a47c-3f4e8ce7c27b</guid><pubDate>Sat, 18 Jul 2026 03:48:09 +0000</pubDate><atom:updated>2026-07-18T03:48:09.972Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,TamilNadu Day,தமிழ்நாடு நாள்,tn cm vijay,தமிழக முதலமைச்சர் விஜய்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/jopxjc12/TN-CM-Vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN Chif Minister Joseph Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/jopxjc12/TN-CM-Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாளை ஒட்டி முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><p>அதில்,"தமிழ் மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த தமிழ்நாடு நாள் வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழரின் தொன்மை, வரலாறு, பண்பாடு, மொழியுணர்வைப் போற்றும் வகையில் நமது மாநிலத்திற்கு "தமிழ்நாடு" எனப் பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இந்நாளில், தமிழ் மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த “தமிழ்நாடு நாள்” நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>மெட்ராஸ் மாநிலமாக உருவான நவம்பர் 1-ஆம் நாளையும், 'தமிழ்நாடு' எனும் பெயர் சூட்ட பேரறிஞர் அண்ணா அவர்களால் சட்டமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட ஜூலை 18-ஆம் நாளையும் இந்த அரசு கொண்டாடும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  </p><p>சங்கம் கண்ட செம்மொழியின் தாயகமாக, சமத்துவமும், சமூகநீதியும் தழைத்தோங்கி, கல்வியிலும், தொழில்நுட்பத்திலும், திறன்மிகு மனிதவளத்திலும் சிறந்தோங்கும் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்!</p><p>தமிழின் இனிமையும், தமிழரின் உயரியபண்பாடும், மனிதநேய மரபும் தலைமுறைகள் கடந்தும் தழைத்தோங்கட்டும். தமிழ்நாடு உருவாக உழைத்திட்ட தியாக சீலர்களை இந்நாளில் நினைவுகூர்ந்து வணங்கிடுவோம்!</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>சவுண்ட் சும்மா பிச்சிக்கும்... வைபை ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்த சாம்சங்!</title><link>https://www.maalaimalar.com/technology/newgadgets/samsung-launches-music-studio-series-wi-fi-speakers-in-india</link><comments>https://www.maalaimalar.com/technology/newgadgets/samsung-launches-music-studio-series-wi-fi-speakers-in-india#comments</comments><guid isPermaLink="false">554e9c13-45aa-421e-b37f-c0878da5df85</guid><pubDate>Sat, 18 Jul 2026 03:38:00 +0000</pubDate><atom:updated>2026-07-18T03:38:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Samsung,சாம்சங்,speaker,ஸ்பீக்கர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/zqbobygs/sams.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சாம்சங் ஸ்பீக்கர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/zqbobygs/sams.png?w=280" width="280"></media:thumbnail><category>புதிய கேஜெட்டுகள் (New gadgets)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சாம்சங் நிறுவனம் இந்தய சந்தையில் தனது பிரீமியம் ஆடியோ சாதனங்களை விரிவுப்படுத்தியது. </p><p>அதன்படி <a href="https://www.maalaimalar.com/topic/samsung">சாம்சங்</a> நிறுவனத்தின் முற்றிலும் புதிய மியூசிக் ஸ்டூடியோ சீரிஸ் ஸ்பீக்கர் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. </p><p><strong>தனித்துவ ஸ்பீக்கர்:</strong></p><p>புதிய ஸ்பீக்கர்கள் மியூசிக் ஸ்டூடியோ 5 மற்றும் மியூசிக் ஸ்டூடியோ 7 என அழைக்கப்படுகின்றன. இரு வைபை மாடல்களும் தனித்துவ ஸ்பீக்கர்களாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.</p><p>இந்த சீரிஸ் ஸ்பீக்கர்கள் சாம்சங் நிறுவனத்தின் வரிவான ஆடியோ அமைப்பு மற்றும் இணக்கமான டிவி மற்றும் சவுண்ட் பார்களுடன் இணைந்து இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.</p><p><strong>ஹோம் ஆடியோ:</strong></p><p>வயர்லெஸ் கனெக்டிவிட்டி, சீரான ஆடியோ மற்றும் ஸ்மார்ட் ஹோம் இன்டகிரேஷன் வழங்க புது ஸ்பீக்கர்கள் கவனம் செலுத்துகின்றன. இந்த வசதிகள் புது ஸ்பீக்கர்களை சோனோஸ், போஸ் மற்றும் மார்ஷல் போன்ற பிரான்டுகளுடன் போட்டியிட வைக்கின்றன.</p><p>மற்ற ப்ளூடூத் ஸ்பீக்கர்களை போன்று இல்லாமல், சாம்சங் தனது மியூசிக் ஸ்டூடியோ மாடல்களை ஹோம் ஆடியோ சொல்யூஷனாக நிலைநிறுத்துகிறது.</p><p><strong>இரு மாடல்கள்:</strong></p><p>மியூசிக் ஸ்டூடியோ சீரிசில் மியூசிக் ஸ்டூடியோ 5 (LS50H) மற்றும் மியூசிக் ஸ்டூடியோ 7 (LS70H) என இரு மாடல்கள் இடம்பெற்றுள்ளன. இரு மாடல்களும் பிரெஞ்சு டிசைனர் எர்வன் பௌரௌலெக் உருவாக்கிய மியூசிக் மற்றும் கலை சார்ந்த சர்வதேச சின்னங்களை சார்ந்து "டாட்" டிசைன் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.</p><p>மியூசிக் ஸ்டூடியோ 7 சற்றே பிரீமியம் மாடல் ஆகும், இதில் 3.1.1 சேனல் ஸ்பீக்கர் செட்டப் உள்ளது. இந்த மாடலை தனியாகவோ அல்லது இணக்கமான சாம்சங் ஸ்பீக்கர்கள் அல்லது டிவிக்களுடன் பெரிய சரவுண்ட் சவுண்ட் செட்டப் உருவாக்கவும் முடியும்.</p><p>சாம்சங் மியூசிக் ஸ்டூடியோ சீரிஸ் சாம்சங் ஆன்லைன் ஸ்டோர், முன்னணி ஆன்லைன் தளங்கள், முன்னணி ஆஃப்லைன் விற்பனையாளர்களிடம் விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் விலை ரூ. 27,900 என தொடங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>உலகக் கோப்பை போட்டி: இந்திய பெண்கள் ஆக்கி அணி அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/sports/world-cup-indian-womens-hockey-team-announced</link><comments>https://www.maalaimalar.com/sports/world-cup-indian-womens-hockey-team-announced#comments</comments><guid isPermaLink="false">8a8f042c-3464-4915-b85c-75f85f017832</guid><pubDate>Sat, 18 Jul 2026 03:36:02 +0000</pubDate><atom:updated>2026-07-18T03:36:02.330Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>hockey,இந்திய பெண்கள் அணி,Indian Women Team,Women Hockey World Cup,ஆக்கி போட்டி,உலகக்கோப்பை ஆக்கி போட்டி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/n0eqvfd9/hockey1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Indian Hockry Team]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/n0eqvfd9/hockey1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>16-வது பெண்கள் உலகக் கோப்பை ஆக்கி போட்டி அடுத்த மாதம் 15-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை பெல்ஜியம், நெதர்லாந்தில் நடக்கிறது.</p><p>இதற்கான இந்திய பெண்கள் ஆக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. செப்டம்பர், அக்டோபரில் நடக்கும் ஆசிய விளையாட்டு போட்டிக்கான அணியில் இடம் பெற்றுள்ள வீராங்கனைகள் அப்படியே அணியில் நீடிக்கின்றனர். </p><p>இந்திய பெண்கள் அணி வருமாறு:- சவிதா, பிச்சுதேவி கரி பாம் (கோல் கீப்பர்கள்), இஷிகா சவுத்ரி, சுஷிலா சானு, லால்தன்ட்லுவாங்கி, ஜோதி, ஷில்பி தபாஸ் (பின்களம்), நிக்கி பிரதான், சாக்ஷி ராணா, சுனேலிதா டாப்போ, சலிமா டெடி (கேப்டன்), நேஹா, தீபிகா சோரெங் (நடுகளம்), லால்ரெம்சியாமி, ருதுஜா தாதாசோ பிசல், நவ்னீத் கவுர், தீபிகா, இஷிகா, பல்ஜீத் கவுர், பியூட்டி டங்டங்.</p>]]></content:encoded></item><item><title>விசுவாசத்தின் உச்சம் - எஜமானியை காப்பாற்ற பாம்பிடம் போராடி உயிரை மாய்த்த நாய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dog-sacrifices-life-fighting-a-snake-to-save-its-mistress</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dog-sacrifices-life-fighting-a-snake-to-save-its-mistress#comments</comments><guid isPermaLink="false">212b730d-ea3e-4a1c-8952-40f3d28b929b</guid><pubDate>Sat, 18 Jul 2026 03:24:39 +0000</pubDate><atom:updated>2026-07-18T03:24:39.430Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Dog,kanyakumari,snake,கன்னியாகுமரி,பாம்பு,நாய்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/o8hw3lnj/dog1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Snake - Dog]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/o8hw3lnj/dog1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பிரம்மபுரம் பகுதியில் வசித்து வருபவர் விகேஷ் (வயது 35). இவர் திருவனந்தபுரம் கோட்டத்தில் ரெயில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார். இவருக்கு காயத்ரி என்ற மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களோடு காயத்ரியின் தாயார் பத்மகுமாரியும் வசித்து வருகிறார். இவர்கள் வீட்டில் சிஞ்சான் என்ற 2 வயது நாய் ஒன்றையும் வளர்த்து வந்தனர். </p><p>நேற்று முன்தினம் மாலை பத்மகுமாரி வீட்டின் பின்புறம் உள்ள திண்ணையில் இருந்து இரவு சமையல் செய்வதற்கான பொருட்களை எடுத்து தயார் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் இருந்த இடத்தின் அருகில் திடீரென சுமார் 7 அடி நீளமுள்ள ஒரு நல்லபாம்பு படம் எடுத்து நின்றது. இதை பார்த்ததும் பத்மகுமாரி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு விகேசும், அவரது மனைவியும் வீட்டின் பின்புறம் ஓடோடி வந்தனர். </p> <p>அதே நேரத்தில் வீட்டின் முன்புறம் படுத்திருந்த நாய் சிஞ்சானும் அங்கே ஓடி வந்து பத்மகுமாரியின் முன்னே படம் எடுத்து நின்ற பாம்பை கவ்வி பிடிக்க முயன்றது. அப்போது பாம்பு சீறியபடி சிஞ்சானை கடித்தது. இதனால் ஆவேசமடைந்த அந்த நாய், பாம்பை கடித்து 2 துண்டாக்கி சின்னாபின்னமாக்கியாகியது. பின்னர் சிறிது நேரத்தில் சிஞ்சான் தரையில் மயங்கி விழுந்து இறந்தது. அதே போல் உடல் துண்டான பாம்பும் இறந்தது. </p><p>தனக்கு தினமும் சோறு போட்டு வளர்த்த எஜமானியை காப்பாற்றுவதற்காக பாம்பிடம் போராடி தனது உயிரை மாய்த்துக்கொண்ட செல்லப்பிராணியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>உலகக் கோப்பை கால்பந்து: 3ம் இடத்துக்கான ஆட்டத்தில் பிரான்ஸ்- இங்கிலாந்து நாளை மோதல்</title><link>https://www.maalaimalar.com/sports/football/world-cup-football-france-vs-england-third-place-match-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/sports/football/world-cup-football-france-vs-england-third-place-match-tomorrow#comments</comments><guid isPermaLink="false">f04f11ed-9f6a-4154-9bc9-00e3cdf82551</guid><pubDate>Sat, 18 Jul 2026 03:20:40 +0000</pubDate><atom:updated>2026-07-18T03:20:40.480Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உலகக்கோப்பை கால்பந்து,FIFA World Cup 2026,பிரான்ஸ் இங்கிலாந்து,France England</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/5i8mhdid/Fifa.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Fifa France vs England]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/5i8mhdid/Fifa.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கால்பந்து (Football)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலகக் கோப்பை கால்பந்தில் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் பிரான்ஸ்- இங்கிலாந்து அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்துகின்றன.</p><h2>3-வது இடம் யாருக்கு?</h2><p>23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. 48 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் இதுவரை 102 ஆட்டங்கள் முடிந்து விட்டன. இன்னும் இரு ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன.</p><p>இதில் இந்திய நேரப்படி நாளை அதிகாலை 2.30 மணிக்கு மியாமியில் அரங்கேறும் 3-வது இடத்தை நிர்ணயிக்கும் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான பிரான்சும், இங்கிலாந்தும் மோதுகின்றன.</p><p>கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாக கணிக்கப்பட்டிருந்த பிரான்ஸ் லீக் சுற்றில் 'ஹாட்ரிக்' வெற்றியை ருசித்ததோடு, 2-வது சுற்றில் சுவீடனையும் (3-0) 3-வது சுற்றில் பராகுவேயையும் (1-0), கால்இறுதியில் மொராக்கோவையும் (2-0) போட்டுத் தாக்கியது. </p><p>ஆனால் அரைஇறுதியில் 0-2 என்ற கோல் கணக்கில் ஸ்பெயி னிடம் தோற்று தொடர்ந்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழையும் வாய்ப்பை இழந்தது கேப்டன் கிலியன் எம்பாப்பே, உஸ்மான் டெம்பிளே, மைக்கேல் ஒலிசே ஆகிய மும்மூர்த்திகளின் தாக்குதல் யுக்தி ஸ்பெயினிடம் எடுபடாமல் போனது.</p><p>எம்பாப்பேக்கு தனிப்பட்ட முறையில் இந்த ஆட்டம் முக்கியத்துவம் பெறு கிறது. இதுவரை 8 கோல்கள் அடித்து, 3 கோலுக்கு உதவி புரிந்துள்ள எம்பாப்பே, தங்க ஷூ விருதுக்கான போட்டியில் மெஸ்சியுடன் (8 கோல்) சமநிலையில் உள்ளார்.</p><p>அந்த வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ள ஒன்றிரண்டு கோல்கள் அடிக்க வேண்டி யது அவசியமாகும். இனி இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதால் பிரான்ஸ் வீரர்கள் நெருக்கடியின்றி ஆக்ரோஷமாக ஆடுவார்கள் என்று நம்பலாம்.</p><h2>இங்கிலாந்து எப்படி?</h2><p>ஹாரி கேன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் லீக் சுற்றில் தோல்வியே சந்திக் காமல் நாக்-அவுட் சுற்றை எட்டியது. 2-வது சுற்றில் காங்கோவையும் (2-1), 3-வது சுற்றில் மெக்சிகோவையும் (3-2), கால்இறுதியில் நார்வேயையும் (2-1) விரட்டியது. </p><p>அர்ஜென்டினாவுக்கு எதிரான அரைஇறுதியில் 1-0 என முன்னிலை கண்ட இங்கி லாந்து கடைசி 10 நிமிடங்கள் அடுத்தடுத்து இரு கோல் வாங்கி 60 ஆண்டுக்கு பிறகு இறுதிப்போட்டிக்குள் செல்லும் அரிய வாய்ப்பை நழுவவிட்டது.</p><p>உலகக் கோப்பையை உயரிய நிலையில் முடிப்பதில் முனைப்பு காட்டும் இங்கி லாந்து அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று 3-வது இடத்தை பிடித்தால் 1966-ம் ஆண்டுக்கு பிறகு அவர்களின் சிறந்த செயல்பாடாக அமையும்.</p><p>ஆனால் அந்த நிலையை எட்ட நட்சத்திர வீரர்கள் கேப்டன் ஹாரி கேன் (6 கோல்), பெல்லிங்ஹாம் (6 கோல்) ஆகியோர் கைகொடுக்க வேண்டியது முக்கியம். 3-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.279 கோடியும், 4-வது இடத்தை பெறும் அணிக்கு ரூ.260 கோடியும் பரிசாக கிடைக்கும்.</p><p>சர்வதேச கால்பந்தில் இவ்விரு அணிகளும் இதுவரை 32 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 17-ல் இங்கிலாந்தும், 10-ல் பிரான்சும் வெற்றி பெற்றன. 5 ஆட்டங்கள் டிரா ஆனது. கடைசியாக 2022-ம் ஆண்டு உலகக் கோப்பை கால் இறுதியில் சந்தித்தன. அதில் பிரான்ஸ் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றிருந்தது.</p> ]]></content:encoded></item><item><title>வைகோவின் புத்தக வெளியீட்டு விழா: ஆகஸ்ட் 4-ல் முதலமைச்சர் விஜய் டெல்லி பயணம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-delhi-travel-on-august-4th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-delhi-travel-on-august-4th#comments</comments><guid isPermaLink="false">e1e171a2-e32d-4e7d-ad87-89a79d9593dd</guid><pubDate>Sat, 18 Jul 2026 03:02:55 +0000</pubDate><atom:updated>2026-07-18T03:02:55.892Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,வைகோ,vaiko,MDMK,மதிமுக</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/66ghszo5/Vijay05.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/66ghszo5/Vijay05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் கோரிக்கையை ஏற்று புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் ஆகஸ்ட் மாதம் 4-ந்தேதி டெல்லிக்கு செல்ல உள்ளார்.</aside><h2><strong>புத்தக வெளியீட்டு விழா</strong></h2><p>ம.தி.மு.க. பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B">வைகோ</a> நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, அவர் நாடாளுமன்றத்தில் தான் பேசிய உரையை புத்தகமாக தயாரித்துள்ளார். இந்த புத்தக வெளியிட்டு விழா டெல்லியில் வரும் ஆகஸ்ட் 4-ந்தேதி நடக்க இருக்கிறது.</p><h2><strong>ராகுல் காந்தி</strong></h2><p>இந்த புத்தகத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி வெளியிட இருக்கிறார். இந்த விழாவில் பங்கேற்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் விஜய்க்கு, வைகோ கோரிக்கை விடுத்திருந்தார். இதனை ஏற்று ஆகஸ்ட் 4-ந்தேதி முதலமைச்சர் விஜய் டெல்லி செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.</p><h2><strong>டெல்லி அரசியல்</strong></h2><p>இந்த நிகழ்வில், பல முக்கிய தலைவர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இந்த புத்தக வெளியீடு மூலம் டெல்லி அரசியலில் முதலமைச்சர் விஜய் தடம் பதிக்க இருக்கிறார்.</p>]]></content:encoded></item></channel></rss>