<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 15 Sep 2026 06:31:26 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 15 செப். 2026...
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-15-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-15-september-2026#comments</comments><guid isPermaLink="false">f4009f82-0bcd-4c6f-adcc-cb203382a7f8</guid><pubDate>Tue, 15 Sep 2026 04:08:57 +0000</pubDate><atom:updated>2026-09-15T06:21:29.622Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/xuyvvatv/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live News]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/xuyvvatv/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/international-democracy-day-2026-democracy-thrives-when-every-voice-is-heard-un-appeal">சர்வதேச ஜனநாயக தினம் 2026: அனைத்து குரல்களும் கேட்கும்போது ஜனநாயகம் சிறக்கும்- ஐ.நா முக்கிய அழைப்பு!... </a></p><p>*சர்வதேச ஜனநாயக தின கொண்டாட்டங்களின் பின்னணியில் பல தசாப்தகால சர்வதேச முயற்சிகள் உள்ளன. </p><p>*தனிநபர்களின் முடிவெடுக்கும் உரிமைகளைப் பாதுகாத்தல், மனித உரிமைகளுக்கு முன்னுரிமை அளித்தல் மற்றும் சமூகத்தில் அனைத்துத் தரப்பு மக்களின் பங்களிப்பை உறுதி செய்வதை இக்கருப்பொருள் வலியுறுத்துகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-high-court-dismisses-election-case-against-minister-sengottaiyan">அமைச்சர் செங்கோட்டையனுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்தது சென்னை ஐகோர்ட்</a></p><p>* தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய மனு மீது அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிமுக வேட்பாளர் பிரபு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.  </p><p>* இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அமைச்சர் செங்கோட்டையன் மனுவை தீர்ப்புக்காக தள்ளிவைத்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-says-it-is-true-there-are-power-cuts-tn">தமிழகத்தில் மின்வெட்டு இருப்பது உண்மைதான் - திருமாவளவன்</a></p><p>* திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் மக்கள் முகம் சுழிக்கும் வகையில் அவதூறாக பேசுவது தவறு.</p><p>* பேருந்துகளுக்கு தவெக கொடி நிறத்தில் வண்ணம் பூசுவது ஏற்புடையதல்ல.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-says-let-us-pledge-to-restore-anna-rule">அண்ணா ஆட்சியை மீண்டும் நிறுவிட உறுதியேற்போம்! - எடப்பாடி பழனிசாமி</a></p><p>* அண்ணாவின் அரசியல் வாழ்வு, தலைமுறைகள் கடந்து வழிகாட்டும் கலங்கரை விளக்கம்.</p><p>* தமிழினத்தின் தன்மானக் குரலான நம் கொடியாகவும் கொள்கையாகவும் என்றும் வீற்றிருக்கும் பேரறிஞர் பெருந்தகை அண்ணா.</p> <p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-oscars-of-television-list-of-winners-at-the-78th-emmy-awards-ceremony">தொலைக்காட்சியின் ஆஸ்கார்.. 78வது எம்மி விருதுகள் விழா வெற்றியாளர்கள் பட்டியல்<br></a><br>*விடோஸ் பே (Widow's Bay) சிறந்த காமெடி சீரீஸ் உட்பட 14 பிரிவுகளில் விருது வென்றுள்ளது.</p><p>*அடுத்ததாக தி பிட் (The Pitt) தொடர் சிறந்த டிராமா சீரீஸ் விருதை வென்றது. <br></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-wishes-national-engineers-day">தேசிய பொறியாளர்கள் தினம்- முதலமைச்சர் விஜய் வாழ்த்து</a></p><p>* பொறியாளர்களின் அறிவாற்றலும் புதுமையான சிந்தனையும் வளமான, வலிமையான, முன்னேற்றம் மிக்க நாட்டினை உருவாக்கத் தொடர்ந்து துணை நிற்கட்டும்! </p><p>* தேசத்தின் உள்கட்டமைப்பை நாளும் செதுக்கிவரும் பொறியியல் வல்லுநர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்! </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-praise-perarignar-anna">அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் பேரறிஞர் அண்ணா- முதலமைச்சர் விஜய்</a></p><p>* முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில், அவரது தொலைநோக்குப் பார்வையையும், மக்கள் சேவையையும் நெஞ்சார நினைவுகூர்ந்து போற்றுகிறேன். </p><p>* சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட அங்கீகாரம் வழங்கி தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/please-help-taliban-arrests-indian-female-vlogger-traveling-alone-in-afghanistan">தயவுசெஞ்சு உதவுங்க.. ஆப்கானிஸ்தானில் தனியாக பயணம் செய்த கேரள பெண் Vlogger-ஐ கைது செய்த தாலிபான்கள்<br></a></p><p>*'பேக்பேக்கர் அருணிமா' என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். </p><p>*ஆப்கானிஸ்தானில் பெண்கள் தனியாகப் பயணம் செய்ய சட்டப்படி அனுமதியில்லை</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/durai-murugan-announced-dmk-mupperum-vizha-adjourn">மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு</a></p><p>* 2026-ம் ஆண்டுக்கான தி.மு.க. முப்பெரும் விழா இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. </p><p>* இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட தி.மு.க. முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/police-case-filed-against-a-rasa-and-sekhar-babu">அவதூறு பேச்சு: ஆ.ராசா, சேகர்பாபு மீது வழக்கு பதிவு</a></p><p>*  சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை தாங்கினார். </p><p>*  தி.மு.க. எம்.பி.ராசா மற்றும் சேகர்பாபு ஆகியோர் முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் நிர்மல்குமார் குறித்து பேசியது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/perarignar-anna-birthday-vairamuthu-tribute">அண்ணாவின் பொன்னடிகளுக்குப் புகழ் வணக்கம் - வைரமுத்து</a></p><p>* நீ செய்த சாதனை புரிய 300 ஆண்டு வாழ்ந்தவனாலும் முடியாது</p><p>* உன் பெயர் சொல்லாமல் அரசாள இயலாது உன் கொள்கை இல்லாமல் அரசியல் கிடையாது</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/today-gold-price-in-chennai-15-9-2026">GOLD PRICE TODAY: தொடர் சரிவில் தங்கம் விலை - எவ்வளவு குறைந்தது தெரியுமா?</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.14,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-perarignar-anna-who-rules-tamil-nadu-yesterday-today-and-forever">பேரறிஞர் அண்ணா தான் அன்றைக்கும் - இன்றைக்கும் - என்றைக்கும் தமிழ்நாட்டை ஆள்கிறார் - உதயநிதி</a></p><p>* பேரறிஞர் அண்ணா எனவும் ஜனநாயக பெருவெளிச்சம் பிறந்த நாள் இன்று!</p><p>* இருமொழி கொள்கையை உறுதி செய்த பேரறிஞர் அண்ணா தான்</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/ai-companies-gather-to-call-for-curbing-the-pace-of-ai-technology-trump-posts-in-a-panic">ஏஐ தொழில்நுட்பத்தின் வேகத்தை கட்டுப்படுத்தனும் - ஒன்றுகூடிய ஏஐ நிறுவனங்கள் - பதறியடித்து டிரம்ப் போட்ட பதிவு</a></p><p>*ஏஐ இல் யார் வெல்கிறார்களோ, அவர்களே உலகை வெல்வார்கள்</p><p>*ஒரு வலுவான, அறிவார்ந்த - High IQ கொண்ட அதிபர் மட்டுமே தேவை, அது அமெரிக்காவிடம் உள்ளது</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/the-curious-case-of-maharashtras-richest-bjp-mla-turning-into-a-beggar-what-happened">மகாராஷ்டிராவின் மிகப் பணக்கார பாஜக எம்எல்ஏ பிச்சைக்கரராக மாறிய வினோதம்.. என்ன ஆனது?</a></p><p>*ஒரு நபர் அவரிடம் ரூ.20 கொடுத்து "போய் சாப்பிடு பாபா" என்று கூறியுள்ளார்.</p><p>*ஒரு ஏழை சமோசா வியாபாரி இன்முகத்துடன் இலவசமாக சமோசா வழங்கியுள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/india-has-decided-to-supply-654-mw-of-electricity-to-flood-affected-nepal-for-18-hours-a-day-until-december">வெள்ளத்தால் பாதித்த நேபாளத்திற்கு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வீதம் டிசம்பர் வரை  654 மெகாவாட் மின்சாரம் வழங்க இந்தியா முடிவு</a></p><p>*2 வாரங்கள் கடந்தும் மீட்பு பணிகள் தொடந்து வருகின்றன. செப்டம்பர்</p><p>*சுமார் 130 டன்னுக்கும் அதிகமான நிவாரணப் பொருட்கள் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளன.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/security-lapse-three-italians-boarded-a-flight-without-immigration-checks-central-ministry-calls-urgent-meeting">பாதுகாப்பு குளறுபடி.. குடிவரவு சோதனையின்றி டெல்லியில்  விமானம் ஏறிச் சென்ற 3 இத்தாலியர்கள் - மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அவசர கூட்டம்</a></p><p>*சோதனைக்கு செல்லாமலேயே அவர்கள் முனிச் விமானத்தில் ஏறிச் சென்றுள்ளனர்.</p> <p>*அவர்களை குடியேற்ற சோதனைக்கு அனுப்பியிருக்க வேண்டும்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/absolutely-not-bihar-raises-the-banner-of-revolt-against-the-implementation-of-the-uniform-civil-code">முடியவே முடியாது.. பொது சிவில் சட்டம் அமலுக்கு பீகாரில் போர்க்கொடி!</a></p><p>*21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார்.</p> <p>*ஷா பேசியிருந்த நிலையில் பீகார் அதற்கு போர்க்கொடி தூக்கியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/technology/techfacts/the-bitter-truth-behind-creating-retro-style-ai-images">ரெட்ரோ ஸ்டைல்‌ ஏஐ படங்களை உருவாக்குவதற்கு பின்னால் இருக்கும் கசப்பான உண்மை!</a></p><p>*ஒரே நபர்‌ ஏராளமான புகைப்படங்களை உருவாக்கி சமூக வலைத்தளங்களில்‌ உலவ விட்டு வருகின்றனர்‌.</p><p>*புகைப்படத்தை உருவாக்குவதற்கான முக்கிய கம்ப்யூட்டிங்‌ செயல்முறை தொடங்குகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/perarignar-anna-birthday-kanimozhi-says-dmk-must-endure-and-serve-the-people-for-many-generations">அண்ணா விதைத்து பெருமரமாக்கிய தி.மு.க. பல தலைமுறைகளுக்கு நின்று பயன் தர வேண்டும்! - கனிமொழி</a></p><p>* ஆதாயத்திற்காக அண்ணாவின் பெயரை உச்சரிப்பவர்கள் அதிகரித்துவிட்டனர்.</p><p>* திராவிடத்தையும், பெரியாரியத்தையும், தமிழறத்தையும் ஆழ்மனதில் ஏந்திப் பயணிப்பவர்கள் அதிகம் வர வேண்டும்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/perarignar-anna-birthday-mk-stalin-tribute">தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ் வணக்கம்! - மு.க.ஸ்டாலின்</a></p><p>* தலைநிமிர்ந்த தமிழர்! தலைநிமிர்ந்த தமிழ்நாடு! </p><p>* தமிழன்னையின் தனயனாகப் பிறந்து தாய்க்குப் பெயரிட்ட மாபெரும் தமிழ்க் கனவு அவர்!</p>]]></content:encoded></item><item><title>லண்டன் வாழ் தமிழர்களை இன்று மாலை சந்திக்கிறார் முதலமைச்சர் விஜய் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-is-meeting-london-based-tamils-this-evening</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-is-meeting-london-based-tamils-this-evening#comments</comments><guid isPermaLink="false">0109e3e8-83d8-4c64-900c-0a86bdd86b8d</guid><pubDate>Tue, 15 Sep 2026 06:30:30 +0000</pubDate><atom:updated>2026-09-15T06:30:30.618Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/w5i8rrr6/vijay08.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய் ]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/w5i8rrr6/vijay08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதலீட்டாளர்களுடனான சந்திப்பை தொடர்ந்து இன்று மாலை லண்டன் வாழ் தமிழர்களை முதலமைச்சர் விஜய் சந்திக்க உள்ளார்.</strong></em></p><p>தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்</a> லண்டன் சென்றுள்ளார்.  அங்கு நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை அவர் தொடங்கி வைத்தார்.</p><h2><strong>புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்</strong> </h2><p>இந்த நிகழ்ச்சியை முடித்த பிறகு லண்டனில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்யவும், தொழிலை விரிவாக்கம் செய்யவும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அங்கு சுமார் ரூ.12ஆயிரத்து 300 கோடி அளவுக்கு தொழில் முதலீடுகள், முதலமைச்சர் விஜய் முன்னிலையில்  ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு  கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2><strong>சந்திப்பு</strong> </h2><p>இந்த முதலீட்டாளர்களுடனான சந்திப்பை தொடர்ந்து இன்று மாலை லண்டன் வாழ் தமிழர்களை முதலமைச்சர் விஜய் சந்திக்க உள்ளார்.</p><p>முறையான சந்திப்பு 15ஆம் தேதி இருக்கும் என தெரிவித்திருந்த நிலையில் நேற்று லண்டனில் உள்ள ரசிகர்களை அவர் தங்கியுள்ள தி ஷார்ட் நட்சத்திர விடுதியில் சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார்.</p><p>அதனைத் தொடர்ந்து இன்று லண்டன் வாழ் தமிழர்களை அவர் சந்திக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் அங்கு விரிவாக செய்யப்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>அமைச்சர் செங்கோட்டையனுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்தது சென்னை ஐகோர்ட்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-high-court-dismisses-election-case-against-minister-sengottaiyan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-high-court-dismisses-election-case-against-minister-sengottaiyan#comments</comments><guid isPermaLink="false">2fb9bf68-bb6b-4b02-838d-ee6f83041cfc</guid><pubDate>Tue, 15 Sep 2026 06:17:53 +0000</pubDate><atom:updated>2026-09-15T06:17:53.102Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,சென்னை ஐகோர்ட்,Madras HC,tvk,அமைச்சர் செங்கோட்டையன்,minister sengottaiyann</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/k6d3j3et/MadrasHC.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/k6d3j3et/MadrasHC.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இந்தநிலையில், இந்த தேர்தல் வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய மனு மீது அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிமுக வேட்பாளர் பிரபு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.  செங்கோட்டையனின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை ஐகோர்ட் நீதிபதி உத்தரவிட்டார்.</strong></em></p><p>தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கோபி செட்டிப்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட <a href="https://www.maalaimalar.com/topic/அமைச்சர்-செங்கோட்டையன்">செங்கோட்டையன்</a> வெற்றி பெற்றார். வருவாய்த்துறை அமைச்சரான செங்கோட்டையனின் வெற்றிக்கு எதிராக அதிமுக வேட்பாளர் பிரபு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். </p><p>அந்த மனுவில், செங்கோட்டையனின் வேட்புமனுவில் சான்றளித்துள்ள நோட்டரி வக்கீலின் உரிமம் காலாவதியாகிவிட்டதால், அந்த வேட்புமனுவை ஏற்றதே தவறு எனக் கூறியிருந்தார். இதேபோல், தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி அமைச்சர் செங்கோட்டையன் தரப்பிலும் <a href="https://www.maalaimalar.com/topic/சென்னை-ஐகோர்ட்">சென்னை ஐகோர்ட்டில்</a> மனு தாக்கல் செய்யப்பட்டது. </p><p>இந்தநிலையில், இந்த தேர்தல் வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய மனு மீது அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிமுக வேட்பாளர் பிரபு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.  </p><p>இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அமைச்சர் செங்கோட்டையன் மனுவை தீர்ப்புக்காக தள்ளிவைத்தார். இந்தநிலையில் இந்த மனு மீது நீதிபதி தீர்ப்பளித்தார். அதில், அமைச்சர் செங்கோட்டையனின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் மின்வெட்டு இருப்பது உண்மைதான் - திருமாவளவன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-says-it-is-true-there-are-power-cuts-tn</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-says-it-is-true-there-are-power-cuts-tn#comments</comments><guid isPermaLink="false">5b45e763-00af-48b7-ac81-d849155f6672</guid><pubDate>Tue, 15 Sep 2026 06:15:52 +0000</pubDate><atom:updated>2026-09-15T06:15:52.843Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தவெக,thirumavalavan,திருமாவளவன்,விசிக,vck,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/2l19wbxt/thirumavalavan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Thirumavalavan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/2l19wbxt/thirumavalavan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விசிக துரோகம் செய்துவிட்டதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்த திமுகவினர் முயற்சி செய்வதாக திருமாவளவன் கூறினார்.</p> <p>திருச்சியில் விசிக தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-says-communist-parties-have-right-to-stand-alone-in-elections">திருமாவளவன்</a> செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p><p>* தமிழகத்தில் மின்வெட்டு இருப்பது உண்மைதான்.</p><p>* மின்வெட்டு பிரச்சனையை சீர்செய்ய தவெக அரசு கூடுதல் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p> <p>* அதிகாரிகள் கூறுவதை கேட்டு தான் அமைச்சர்கள் பதிலளித்து கொண்டிருக்கின்றனர். அதிகாரிகள் உண்மை தகவலை கூற வேண்டும்.</p><p>* <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/police-case-filed-against-a-rasa-and-sekhar-babu">திமுகவினர் </a>ஆர்ப்பாட்டத்தில் மக்கள் முகம் சுழிக்கும் வகையில் அவதூறாக பேசுவது தவறு.</p><p>* விசிக துரோகம் செய்துவிட்டதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்த திமுகவினர் முயற்சி செய்கின்றனர்.</p> <p>* பதவிக்காக விசிக கூட்டணி மாறியதாக திமுக ஆதரவாளர்கள் பேசுகின்றனர்.</p><p>* திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை சரியாக வேண்டும்.</p><p>* பேருந்துகளுக்கு தவெக கொடி நிறத்தில் வண்ணம் பூசுவது ஏற்புடையதல்ல.</p><p>இவ்வாறு அவர் கூறினார்</p>]]></content:encoded></item><item><title>சர்வதேச ஜனநாயக தினம் 2026: அனைத்து குரல்களும் கேட்கும்போது ஜனநாயகம்  சிறக்கும்- ஐ.நா முக்கிய அழைப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/world/international-democracy-day-2026-democracy-thrives-when-every-voice-is-heard-un-appeal</link><comments>https://www.maalaimalar.com/news/world/international-democracy-day-2026-democracy-thrives-when-every-voice-is-heard-un-appeal#comments</comments><guid isPermaLink="false">20687075-4c52-4a33-8a40-63deaf57e1a2</guid><pubDate>Tue, 15 Sep 2026 06:13:09 +0000</pubDate><atom:updated>2026-09-15T06:13:09.815Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஐ.நா,Mother of Democracy,International Day of Democracy,Democracy  Day 2026,சர்வதேச ஜனநாயக தினம்,ஜனநாயக தினம் 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/22vg3kso/ff.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ International Day of Democracy ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/22vg3kso/ff.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தனிநபர்களின் முடிவெடுக்கும் உரிமைகளைப் பாதுகாத்தல், மனித உரிமைகளுக்கு முன்னுரிமை அளித்தல் மற்றும் சமூகத்தில் அனைத்துத் தரப்பு மக்களின் பங்களிப்பை உறுதி செய்வதை இக்கருப்பொருள் வலியுறுத்துகிறது.</p><p>உலகம் முழுவதும் ஜனநாயகத்தின் அடிப்படை கோட்பாடுகள், மனித உரிமைகள் மற்றும் மக்களின் நேரடிப் பங்கேற்பை வலியுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 15-ஆம் தேதி இன்று சர்வதேச ஜனநாயக தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 2026-ஆம் ஆண்டிற்கான ஜனநாயக தின கொண்டாட்டங்கள், உலகின் பல்வேறு நாடுகளின் மக்களிடையேயான கருத்து சுதந்திரத்தையும் வெளிப்படையான நிர்வாகத்தையும் மையமாகக் கொண்டு விரிவாக முன்னெடுக்கப்படுகின்றன.</p><h2>2026-ஆம் <strong>ஆண்டின் மையப்பொ</strong>ருள்</h2><p>இந்த ஆண்டின் சர்வதேச ஜனநாயக தினத்திற்கான ஐக்கிய நாடுகள் சபையின் முக்கியக் கருப்பொருள் "அனைத்து குரல்களும் மதிப்பைப் பெறும்போது, ஜனநாயகம் தனது பலனைத் தரும்" (When every voice counts, democracy delivers) என்பதாகும். தனிநபர்களின் முடிவெடுக்கும் உரிமைகளைப் பாதுகாத்தல், மனித உரிமைகளுக்கு முன்னுரிமை அளித்தல் மற்றும் சமூகத்தில் அனைத்துத் தரப்பு மக்களின் பங்களிப்பை உறுதி செய்வதை இக்கருப்பொருள் வலியுறுத்துகிறது. </p><p>ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் வெளியிட்டுள்ள செய்தியில், ஜனநாயகம் என்பது வெறும் தேர்தல்கள் மற்றும் வாக்களிப்புடன் முடிந்துவிடுவதில்லை என்றும், அது சமூகத்தில் அனைவரையும் உள்ளடக்கிய அமைதி, நம்பிக்கை மற்றும் வெளிப்படையான சட்டத்தின் ஆட்சியை உருவாக்குவதில்தான் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>சர்வதேச ஜனநாயக தின கொண்டாட்டங்களின் பின்னணியில் பல தசாப்தகால சர்வதேச முயற்சிகள் உள்ளன. 1997-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், சர்வதேச நாடாளுமன்றங்களின் ஒன்றியம் ஜனநாயகத்தின் உலகளாவிய பிரகடனத்தை ஏற்றுக்கொண்டது.</p><p>அதனைத் தொடர்ந்து 2006-ஆம் ஆண்டு கத்தாரின் தோஹாவில் நடைபெற்ற புதிய மற்றும் மீட்டெடுக்கப்பட்ட ஜனநாயக நாடுகளின் சர்வதேச மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், கத்தார் நாடு முன்மொழிந்த வரைவுத் தீர்மானத்தை 2007 நவம்பர் 8 அன்று <a href="https://www.maalaimalar.com/news/world/tragedy-in-new-york-indian-origin-woman-nepali-american-friend-killed-on-subway-tracks">ஐக்கிய நாடுகள் </a>பொதுச்சபை ஒருமனதாக நிறைவேற்றியது. இதன் தொடர்ச்சியாக, 2008-ஆம் ஆண்டு முதல் முதன்முறையாக உலகளாவிய அளவில் செப்டம்பர் 15 அன்று சர்வதேச ஜனநாயக தினம் முறையாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.</p><h2>ஐ.நா அமைப்பின் 2<strong>0-ஆவது ஆண்டு</strong> மைல்கல்</h2><p>இந்த ஆண்டின் ஜனநாயக தினத்தை முன்னிட்டு, நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் 'ஐக்கிய நாடுகள் ஜனநாயக நிதியம்' மற்றும் 'கூட்டாண்மைக்கான ஐ.நா அலுவலகம்' இணைந்து சிறப்பு மாநாடுகளை நடத்துகின்றன. குறிப்பாக, ஐக்கிய நாடுகள் ஜனநாயக நிதியம் உருவாக்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடையும் தருணத்தில் இந்த நிகழ்வு நடைபெறுவது கூடுதல் சிறப்பு சேர்க்கிறது. இந்த 20 ஆண்டுகளில், உலகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிவில் சமூகத் திட்டங்கள், பாலின சமத்துவ முயற்சிகள் மற்றும் ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு இந்த நிதி உதவி வழங்கி உள்ளது.</p><p>சர்வதேச ஜனநாயக தின கொண்டாட்டங்களில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பங்களிப்பு முக்கியமானது. இந்தியா "ஜனநாயகத்தின் தாய்" என்ற கருத்தாக்கத்தை உலக அளவில் முன்வைத்து வருகிறது. கிராம பஞ்சாயத்துகள் முதல் நாடாளுமன்றம் வரை பல அடுக்குத் தேர்தல் முறைகளைக் கொண்டுள்ள இந்தியாவில், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களின் பங்களிப்பும் மக்கள் பங்கேற்கும் 'கிராம சபா' கூட்டங்களும் ஜனநாயகத்தின் அடிமட்ட வலிமையைப் பிரதிபலிப்பதாக சர்வதேச அரங்கில் சுட்டிக்காட்டப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>தொலைக்காட்சியின் ஆஸ்கார்.. 78வது எம்மி விருது விழாவில் வெற்றி பெற்ற தொடர்கள், நடிகர்கள் பட்டியல்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-oscars-of-television-list-of-winners-at-the-78th-emmy-awards-ceremony</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-oscars-of-television-list-of-winners-at-the-78th-emmy-awards-ceremony#comments</comments><guid isPermaLink="false">041ca8b4-95f3-405d-b7bf-77c7c08a50d0</guid><pubDate>Tue, 15 Sep 2026 06:08:16 +0000</pubDate><atom:updated>2026-09-15T06:08:16.346Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Hollywood,தொலைக்காட்சி தொடர்,ஹாலிவுட்,எம்மி விருதுகள்,Emmy Awards,television series</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/2pcbp9t3/tn-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ காமெடி தொடர் விடோஸ் பே - சிறந்த துணை நடிகை விருது வென்ற கேட் ஓ பிளின் ]]></media:title><media:description type="html"><![CDATA[ காமெடி தொடர் விடோஸ் பே - சிறந்த துணை நடிகை விருது வென்ற கேட் ஓ பிளின் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/2pcbp9t3/tn-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p> 78வது எம்மி விருதுகள் விழாவில் வெற்றி பெற்றவர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. </p><p>திரைப்படங்களுக்கு <a href="https://www.maalaimalar.com/topic/oscars">ஆஸ்கார் </a>போல அமெரிக்காவில் தொலைக்காட்சி தொடர் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு ஆண்டுதோறும் <a href="https://www.maalaimalar.com/topic/emmy-award">எம்மி விருதுகள்</a> வழங்கப்படுகின்றன. </p><p>அந்த வகையில் இவ்வாண்டு 78வது எம்மி விருதுகள் விழா லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பீகாக் திரையரங்கில் இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு தொடங்கி நடைபெற்றது. </p><p>இவ்வாண்டு விருது விழாவை பிரபல நடிகை மரிஸ்கா ஹார்கிடா தொகுத்து வழங்கினார். </p><p>இவ்வாண்டு அதிகபட்சமாக விடோஸ் பே (Widow's Bay) தொலைக்காட்சி தொடர் சிறந்த காமெடி சீரீஸ் உட்பட 14 பிரிவுகளில் விருது வென்றுள்ளது. </p><p>அடுத்ததாக தி பிட் (The Pitt) தொடர் சிறந்த டிராமா சீரீஸ் விருதை வென்றது. டிராமா சீரீஸில் சிறந்த முதன்மை கதாபாத்திர விருதை நோவா வைல் வென்றார். </p><p>ஆப்பிள் டிவி,  2026 ஆம் ஆண்டிற்கான எம்மி விருதுகளில் மொத்தம் 28 பிரிவுகளில் விருதுகளை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.</p><h2>விருது பட்டியல்</h2><p>சிறந்த நாடக தொடர் விருதை தி பிட் (The Pitt) வென்றது. தி டிப்லோமேட், பாரடைஸ், பல்ரிப்ஸ் ஆகியவை போட்டியில் இருந்தபோதும் வெற்றி பெறவில்லை.</p><p>சிறந்த நகைச்சுவை தொடர் விருதை விடோஸ் பே (Widow's Bay) வென்றுள்ளது.</p><p>நாடக தொடரில் சிறந்த நாயகன் விருதை 'தி பிட்' தொடரில் நடித்த நோவா வைல் வென்றார்.</p><p>நாடக தொடரில் சிறந்த துணை நடிகர் விருதை 'டாஸ்க்' தொடரில் நடித்த டாம் பெல்ப்ரே வென்றார்.</p><p>நாடக தொடரில் சிறந்த துணை நடிகை விருதை 'தி டிப்லோமேட்' தொடரில் நடித்த அலிசன் ஜனே வென்றார்.</p> <p>காமெடி தொடரில் சிறந்த நாயகன் விருதை 'விடோஸ் பே' வில் நடித்த மேத்யூவ் ரைஸ் வென்றார்.</p><p>காமெடி தொடரில் சிறந்த கதாநாயகி விருதை 'ஹேக்ஸ்' (Hacks) தொடரில் நடித்த ஜீன் ஸ்மார்ட் வென்றார்.</p><p>காமெடி தொடரில் சிறந்த துணை நடிகர் விருதை 'விடோஸ் பே' வில் நடித்த ஸ்டீபன் ரூட் வென்றார். </p><p>காமெடி தொடரில் சிறந்த றந்த துணை நடிகை விருதை விடோஸ் பே தொடரில் நடித்த கேட் ஓ பிளின் வென்றார். </p><p>Limited or Anthology Series or Movie பிரிவில் சிறந்த துணை நடிகர் விருதை DTF St Louis இல் நடித்த டேவிட் ஹார்பர் வென்றார். </p><p>அதே பிரிவில் சிறந்த துணை நடிகை விருதை அதே DTF St Louis இல் நடித்த லிண்டா கார்டெனெல்லி வென்றார்.</p> <p>நாடக தொடரில் சிறந்த கெஸ்ட் ரோல் நடிகை விருதை பாரடைஸ் தொடரில் தோன்றிய சைலேன் உட்லி பெற்றார்.</p><p>நாடக தொடரில் சிறந்த கெஸ்ட் ரோல் நடிகர் விருதை தி பிட் தொடரில் தோன்றிய எர்னஸ்ட் ஹார்டென் பெற்றார்.</p><p>Limited or Anthology Series or Movie சிறந்த இயக்கம் விருது DTF St Louis க்கு சென்றது. அதே பிரிவில் சிறந்த திரைக்கதை விருதும் அதே தொடருக்கு சென்றது.</p> <p>சிறந்த தொலைக்காட்சி பட விருது 'ரிமார்க்கப்லி பிரைட் கிரியேச்சர்ஸ்' -க்கு வழங்கப்பட்டது.</p><p>சிறந்த லைவ் ஷோ விருது The Apple Music Super Bowl LX Halftime Show Starring Bad Bunnக்கு வழங்கப்பட்டது.</p><p>சிறந்த TV ஷோ விருது The Muppet Showக்கு வழங்கப்பட்டது.</p><p>சிறந்த அனிமேஷன் நிகழ்ச்சி விருது சவுத் பார்க் நிகழ்ச்சிக்கு வழங்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>தேசிய பொறியாளர்கள் தினம்- முதலமைச்சர் விஜய் வாழ்த்து </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-wishes-national-engineers-day</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-wishes-national-engineers-day#comments</comments><guid isPermaLink="false">a2e8692f-1cb1-4a9f-b5e9-87d835ee453c</guid><pubDate>Tue, 15 Sep 2026 06:02:49 +0000</pubDate><atom:updated>2026-09-15T06:02:49.919Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,National Engineers Day,தேசிய பொறியாளர்கள் தினம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/g5m402pj/Vijay07.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/g5m402pj/Vijay07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தேசத்தின் உள்கட்டமைப்பை நாளும் செதுக்கிவரும் பொறியியல் வல்லுநர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்! என முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார்.</strong></em> </p><p>முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்</a> எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><p>இந்தியப் பொறியியலின் தந்தை எனப் போற்றப்படும் சர் எம். விஸ்வேஸ்வரய்யா அவர்களின் பிறந்தநாளை தேசிய பொறியாளர் நாளாகக் கொண்டாடும் இந்நாளில், தேசத்தின் உள்கட்டமைப்பை நாளும் செதுக்கிவரும் பொறியியல் வல்லுநர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்! </p><p>அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமையின் துணையுடன் நவீன இந்தியாவைக் கட்டமைப்பதில் பொறியாளர்களின் பங்கு மகத்தானது. சாலைகள், பாலங்கள், அணைகள், விண்வெளி ஆய்வுகள், டிஜிட்டல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, பசுமை ஆற்றல் என நாட்டின் அனைத்துத் துறைகளின் வளர்ச்சியிலும் நமது பொறியாளர்களின் திறனும், உழைப்பும் மிளிர்கின்றன.</p><p>பொறியாளர்களின் அறிவாற்றலும் புதுமையான சிந்தனையும் வளமான, வலிமையான, முன்னேற்றம் மிக்க நாட்டினை உருவாக்கத் தொடர்ந்து துணை நிற்கட்டும்! என கூறியுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">இந்தியப் பொறியியலின் தந்தை எனப் போற்றப்படும் சர் எம். விஸ்வேஸ்வரய்யா அவர்களின் பிறந்தநாளை தேசிய பொறியாளர் நாளாகக் கொண்டாடும் இந்நாளில், தேசத்தின் உள்கட்டமைப்பை நாளும் செதுக்கிவரும் பொறியியல் வல்லுநர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்! <br><br>அறிவியல், தொழில்நுட்பம்…</p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2099735682273210573?ref_src=twsrc%5Etfw">September 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>நியூயார்க்கில் சோகம்: ரெயில் பாதையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த இந்திய வம்சாவளி பெண்,  நண்பர் ரெயில் மோதி பலி</title><link>https://www.maalaimalar.com/news/world/tragedy-in-new-york-indian-origin-woman-nepali-american-friend-killed-on-subway-tracks</link><comments>https://www.maalaimalar.com/news/world/tragedy-in-new-york-indian-origin-woman-nepali-american-friend-killed-on-subway-tracks#comments</comments><guid isPermaLink="false">c2151fbb-d0b1-4d54-b340-5904ae4f9aaf</guid><pubDate>Tue, 15 Sep 2026 05:38:36 +0000</pubDate><atom:updated>2026-09-15T05:38:36.694Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,New York,நியூயார்க்,indian origin woman,Rutgers University,லோயர் மேன்ஹாட்டன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/z0en3vsy/dd.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tragedy in New York]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/z0en3vsy/dd.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ரெயில் மோதிய சில வினாடிகளுக்கு முன்பாக இருவரும் தண்டவாளத்தில் மிகவும் அமைதியாக அமர்ந்திருப்பது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>அமெரிக்காவின்<a href="https://www.maalaimalar.com/news/world/please-help-taliban-arrests-indian-female-vlogger-traveling-alone-in-afghanistan"> நியூயார்க்</a> நகரில் உள்ள சப்வே ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் அமர்ந்திருந்த இந்திய வம்சாவளி பெண் மற்றும் அவரது நேபாள-அமெரிக்க நண்பர் ஓடும் ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><p>நியூயார்க் நகரின் லோயர் மேன்ஹாட்டன் பகுதியில் அமைந்துள்ள ஸ்ப்ரிங் ஸ்ட்ரீட் சப்வே ரெயில் நிலையத்தில் நள்ளிரவு சுமார் 3:15 மணியளவில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. நியூஜெர்சி மாநிலத்தைச் சேர்ந்த மாளவிகா சித்ரே(24) மற்றும் அவரது நண்பரான நவம் கவுல் (24) ஆகிய இருவரும் சப்வே ரெயில் பாதையில் அமர்ந்திருந்துள்ளனர். அந்த நேரத்தில் வந்த தெற்கு நோக்கிய 'நம்பர் 4' ரயில் தண்டவாளத்தில் அமர்ந்திருந்தவர்கள் மீது மோதியது. ஓட்டுநர் உடனடியாக அவசர பிரேக்கை பயன்படுத்திய போதிலும், ரெயிலை நிறுத்த முடியாமல் இருவர் மீதும் மோதியதாக நியூயார்க் காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>ரெயில் மோதிய சில வினாடிகளுக்கு முன்பாக இருவரும் தண்டவாளத்தில் மிகவும் அமைதியாக அமர்ந்திருப்பது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாளவிகா சித்ரே சிரித்துக் கொண்டே நவம் கவுலை தன் பக்கம் இழுப்பது போல் இருந்ததாக ரெயில் ஓட்டுநர் தனது உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். ரெயில் மோதிய வேகத்தில் இருவரும் ரெயிலின் கீழ் பகுதியிலேயே சிக்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த அவசர உதவிக்குழுவினர் இருவரின் உடல்களையும் மீட்டனர். ரெயிலில் பயணம் செய்த சுமார் 100 பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.</p><h2>காவல்து<strong>றை விசாரணை</strong></h2><p>பலியான இருவருமே நியூஜெர்சியில் உள்ள ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் 2024-ஆம் ஆண்டு ஒன்றாகப் படித்து பட்டம் பெற்ற நண்பர்கள் ஆவர். மாளவிகா சித்ரே மருந்து நிறுவனப் பணியிலும், நவம் கவுல் நிதித் துறை நிறுவனத்திலும் பணியாற்றி வந்தனர். இருவரும் தவறி தண்டவாளத்தில் விழுந்தனரா அல்லது திட்டமிட்டு இறங்கினரா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரும் போதைப்பொருளின் தாக்கத்தில் ஆபத்தை உணராமல் தண்டவாளத்தில் அமர்ந்திருந்தனரா என்ற கோணத்திலும் நியூயார்க் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். தற்கொலைக்கான கடிதங்கள் எதுவும் மீட்கப்படவில்லை.</p>]]></content:encoded></item><item><title>ரூ.2,000 வரையிலான UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க மத்திய அரசு தடை</title><link>https://www.maalaimalar.com/news/national/central-government-bans-charges-on-upi-transactions-up-to-rs-2000</link><comments>https://www.maalaimalar.com/news/national/central-government-bans-charges-on-upi-transactions-up-to-rs-2000#comments</comments><guid isPermaLink="false">68bf4cb0-90a4-455f-9f20-28ff745860aa</guid><pubDate>Tue, 15 Sep 2026 05:30:13 +0000</pubDate><atom:updated>2026-09-15T05:30:13.438Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>UPI,யுபிஐ,மத்திய நிதி அமைச்சகம்,digital money transactions,Union Ministry of Finance,டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/evj7yq31/tn-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[  UPI பரிவர்த்தனை]]></media:title><media:description type="html"><![CDATA[  UPI பரிவர்த்தனை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/evj7yq31/tn-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ரூ.2,000 வரையிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.</p> <p>ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்படும் <a href="https://www.maalaimalar.com/topic/upi">யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு</a> எந்தக் கட்டணமும் வசூலிக்க வேண்டாம் என வங்கிகள் மற்றும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சேவை வழங்குநர்களுக்கு மத்திய அரசு  உத்தரவிட்டுள்ளது.</p> <h2>உத்தரவு</h2><p>மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள இன்று வெளியிட்டுள்ள உத்தரவில், "ரூ.2,000 வரையிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கும், ரூபே டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் வசூலிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.</p><p>குறிப்பிட்ட முறைகள் மூலம் பணம் செலுத்தும் அல்லது பெறும் ஒரு நபரிடம், எந்தவொரு வங்கியும் அல்லது பணம் செலுத்தும் முறைமை வழங்குநரும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தக் கட்டணத்தையும் வசூலிக்கக் கூடாது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>2007ன் பிரிவு 10 ஏவில் திருத்தும் செய்து கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 'வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2026'வின் கீழ் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. </p> <h2>ரூ.2000-க்கு மேல் உள்ள பரிவர்த்தனைகள்</h2><p>புதிய விதியின்படி, ரூ. 2,000 வரையிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கும், ரூபே பற்று அட்டைகளைப் பயன்படுத்தி செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படாது.</p><p>இருப்பினும், வணிகர் தள்ளுபடி விகிதம் செயல்படுத்தப்படாவிட்டாலும், ரூ. 2,000 ஐ தாண்டிய யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படலாம்.</p><p>2025-26 ஆம் ஆண்டில், நடந்த யு.பி.ஐ பரிவர்த்தனைகளில் ரூ. 2,000-க்கும் அதிகமான தொகைக்கு வெறும் 4% மட்டுமே பரிவர்த்தனைகள் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. </p><p>அதவாது ஒப்பீட்டளவில் ரூ.2000க்கு கீழ் பரிவர்த்தனை செய்வோரே அதிகம். எனவே இந்த வரி விலக்கு சாமானிய மக்களுக்கு நிம்மதியை தந்துள்ளது. </p><p>டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துதல் வேகமாக அதிகரித்து வருவதால், நாட்டின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறையை நிதி ரீதியாக மேலும் வலுப்படுத்த<a href="https://www.maalaimalar.com/news/national/upi-mdr-charges-lok-sabha-passes-bill-empowering-centre-to-levy-fees-on-digital-payments"> கட்டணங்களை அறிமுகப்படுத்துவது </a>குறித்து பரிசீலித்து வருவதாக மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>இந்த வார விசேஷங்கள்: 15-9-2026 முதல் 21-9-2026 வரை</title><link>https://www.maalaimalar.com/spirituality/this-week-specials-15-9-2026-to-21-9-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/this-week-specials-15-9-2026-to-21-9-2026#comments</comments><guid isPermaLink="false">1bc216f7-8fe7-4777-8be8-76a848ba2a3b</guid><pubDate>Tue, 15 Sep 2026 05:16:43 +0000</pubDate><atom:updated>2026-09-15T05:16:43.296Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,வழிபாடு,Astrology,this week special,இந்த வார விசேஷங்கள்,worship</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/twz6ncdy/hanuman1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Hanuman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/twz6ncdy/hanuman1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இந்த வார விசேஷங்கள்</h2><h2>15-ந் தேதி (செவ்வாய்)</h2><p>* ரிஷி பஞ்சமி.</p><p>* திருப்பதி, நாட்டரசன் கோட்டை உற்சவம் ஆரம்பம்.</p><p>* மதுரை நவநீத கிருஷ்ணர், ருக்மணி-சத்தியபாமா சமேத கிருஷ்ணர் அலங்காரம்.</p><p>* சமநோக்கு நாள்.</p> <h2>16-ந் தேதி (புதன்)</h2><p>* சஷ்டி விரதம்.</p><p>* மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசர், கிருஷ்ணர் அவதாரம், சிம்ம வாகனத்தில் உலா.</p><p>* திருவில்லிபுத்தூர் பெரியபெருமாள் சந்திர பிரபையில் பவனி.</p><p>* குணசீலம், ஆழ்வார் திருநகரி, திருப்பரங்குன்றம், நாட்டரசன் கோட்டை தலங்களில் எம்பெருமான் புறப்பாடு.</p><p>* கீழ்நோக்கு நாள்.</p> <h2>17-ந் தேதி (வியாழன்)</h2><p>* முகூர்த்த நாள்.</p><p>* திருவில்லிபுத்தூர் பெரியபெருமாள் அனுமன் வாகனத்தில் பவனி.</p><p>* திருப்பதி ஏழுமலையான் காலை சிம்ம வாகனத்தில் பவனி, இரவு முத்துப்பந்தல் அருளிய லீலை.</p><p>* சமநோக்கு நாள்.</p> <h2>18-ந் தேதி (வெள்ளி)</h2><p>* உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் வெள்ளி பல்லக்கில் பவனி.</p><p>* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.</p><p>* சமநோக்கு நாள்.</p> <h2>19-ந் தேதி (சனி)</h2><p>* நெல்லை கெட்வெல் ஆஞ்சநேயருக்கு 5008 வடை அலங்காரம்.</p><p>* கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசர் வெள்ளி சேஷ வாகனத்தில் பவனி.</p><p>* திருப்பதி ஏழுமலையான் மோகினி அலங்காரம்.</p><p>* திருபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு.</p><p>* கீழ்நோக்கு நாள்.</p> <h2>20-ந்தேதி (ஞாயிறு)</h2><p>* உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் வெள்ளி பல்லக்கில் திருவீதி உலா.</p><p>* மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசர் ராஜாங்க சேவை.</p><p>* திருவில்லிபுத்தூர் பெரியபெருமாள் யானை வாகனத்தில் பவனி.</p><p>* கீழ்நோக்கு நாள்.</p> <h2>21-ந் தேதி (திங்கள்)</h2><p>* கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள் திருக்கல்யாணம்.</p><p>* திருப்பதி ஏழுமலையான் காலை சூரிய பிரபையிலும், இரவு சந்திர பிரபையிலும் புறப்பாடு.</p><p>* உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் சூர்ணாபிஷேகம்.</p><p>* மேல்நோக்கு நாள்.</p>]]></content:encoded></item><item><title>அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் பேரறிஞர் அண்ணா- முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-praise-perarignar-anna</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-praise-perarignar-anna#comments</comments><guid isPermaLink="false">a35eaaf7-8ab4-4d94-b6f8-291d5c9b34b3</guid><pubDate>Tue, 15 Sep 2026 05:14:52 +0000</pubDate><atom:updated>2026-09-15T05:14:52.245Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,Perarignar Anna,tvk,பேரறிஞர் அண்ணா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/3kdq2bog/Vijay06.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/3kdq2bog/Vijay06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில், அவரது தொலைநோக்குப் பார்வையையும், மக்கள் சேவையையும் நெஞ்சார நினைவுகூர்ந்து போற்றுகிறேன் என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/பேரறிஞர்-அண்ணா">பேரறிஞர் அண்ணாவின்</a> 118-வது பிறந்தநாளையொட்டி அண்ணாசாலையில் உள்ள அண்ணாவின் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். மேலும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர். மேலும் அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அதிமுக உள்ளிட்ட பிற கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.  இதனிடையே, அரசியல் தலைவர்கள் அண்ணாவை நினைவு கூர்ந்து வருகின்றனர். </p><p>இந்த நிலையில், அண்ணாவின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து வெளியிட்டுள்ள பதிவில், </p><h2><strong>தனி முத்திரை பதித்தவர்</strong></h2><p>தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கி, ஏழை எளிய மக்களின் உரிமைகளுக்காகக்  குரல் கொடுத்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில், அவரது தொலைநோக்குப் பார்வையையும், மக்கள் சேவையையும் நெஞ்சார நினைவுகூர்ந்து போற்றுகிறேன். </p><p>எழுச்சியூட்டும் மேடைப் பேச்சாலும், கூர்மையான எழுத்தாற்றலாலும் மக்கள் மனங்களைக் கவர்ந்து, அவர்களின் பேராதரவோடு ஆட்சிப்பொறுப்பேற்று, தமிழ் மொழி மீது கொண்ட அளவற்ற பற்றால் நம் மாநிலத்திற்கு “தமிழ்நாடு” எனப் பெயர் சூட்டி, மாநில சுயாட்சிக்கு வித்திட்டு, சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட அங்கீகாரம் வழங்கி தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.</p><p>“கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு”, "ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்"  போன்ற அவரது உயரிய முழக்கங்களை நெஞ்சில் ஏந்தி, சமூகநீதியும், சமத்துவமும், சகோதரத்துவமும் எங்கும் தழைத்தோங்கிடவும், தமிழின் பெருமையைக் காத்திடவும் இந்நாளில் உறுதியேற்போம்! என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கி, ஏழை எளிய மக்களின் உரிமைகளுக்காகக்  குரல் கொடுத்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில், அவரது தொலைநோக்குப் பார்வையையும், மக்கள் சேவையையும் நெஞ்சார நினைவுகூர்ந்து போற்றுகிறேன். <br><br>எழுச்சியூட்டும்… <a href="https://t.co/ii2pkrkIxm">pic.twitter.com/ii2pkrkIxm</a></p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2099723590484815955?ref_src=twsrc%5Etfw">September 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>தயவுசெஞ்சு உதவுங்க.. ஆப்கானிஸ்தானில் தனியாக பயணம் செய்த கேரள பெண் Vlogger-ஐ கைது செய்த தாலிபான்கள்</title><link>https://www.maalaimalar.com/news/world/please-help-taliban-arrests-indian-female-vlogger-traveling-alone-in-afghanistan</link><comments>https://www.maalaimalar.com/news/world/please-help-taliban-arrests-indian-female-vlogger-traveling-alone-in-afghanistan#comments</comments><guid isPermaLink="false">98a937ed-a37d-4ecb-b51a-b21d4e819ed3</guid><pubDate>Tue, 15 Sep 2026 05:01:42 +0000</pubDate><atom:updated>2026-09-15T05:01:42.312Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Arrest,கைது,Afghanistan,Taliban,ஆப்கானிஸ்தான்,தாலிபான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/v2ikrtc3/tn-5.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அருணிமா]]></media:title><media:description type="html"><![CDATA[ அருணிமா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/v2ikrtc3/tn-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆப்கானிஸ்தானில் தாலிபான்களால் இந்திய பெண் சிறைபிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p> <p>கேரளாவை சேர்ந்த Travel Vlogger ஆன அருணிமா, 'பேக்பேக்கர் அருணிமா' என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். உலகின் பல இடங்களுக்கு பயணப்பட்டு அங்குள்ள அனுபவங்களை விவரித்து வருகிறார். </p> <h2>ஆப்கானிஸ்தானில் கைது</h2><p>அந்த வகையில் தாலிபான்கள் ஆளும் <a href="https://www.maalaimalar.com/topic/afghanistan">ஆப்கானிஸ்தானுக்கு </a>பயணம் சென்றுள்ள அவர் அங்கு பாமியான் பகுதியில் தாலிபான் அதிகாரிகளால் சிறைபிடிபட்டுள்ளார்.</p><p>தனது பேஸ்புக் பக்கத்தில் அருணிமா, முறையான ஆவணங்கள் மற்றும் அனுமதிப் கடிதம் கையில் இல்லாமல் தனியாக பயணித்ததால் தாலிபான்கள் தன்னை கைது செய்துள்ளதாகவும் இந்திய தூதரகத்தை தொடர்புகொள்ள உதவி செய்யுமாறும் கோரியிருந்தார்.</p><p>அவர் அந்த பதவியை வெளியிட்ட சுமார் 3 மணி நேரத்திற்குள், தாலிபான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தான் விடுவிக்கப்பட்டதாக அவர் மீண்டும் மற்றொரு பதிவை வெளியிட்டுள்ளார்.</p> <h2>விடுதலை</h2><p>பாமியான் வருவதற்கு முன்பாகத் தனக்கு உதவிய ஒரு நபரைத் தொடர்புகொண்டு, அவர் மூலமாக தாலிபான் அதிகாரிகளுடன் அருணிமா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.</p><p>இனி ஆப்கானிஸ்தானில் பயணம் செய்யும்போது முறையான அனுமதி பெற வேண்டும் என்றும், வழிகாட்டி ஒருவருடன் மட்டுமே பயணிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்து அவரை தாலிபான் அதிகாரிகள் விடுத்துள்ளனர். மேலும் அவருக்கு அபராதமும் விதித்துள்ளனர்.</p><h2>பெண்கள் தனியாக பயணிக்க தடை</h2><p>கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை விளக்கிய அருணிமா, <a href="https://www.maalaimalar.com/news/world/afghanistan-girls-denied-secondary-and-higher-education-under-taliban-rule">ஆப்கானிஸ்தானில் பெண்கள்</a> தனியாகப் பயணம் செய்ய சட்டப்படி அனுமதியில்லை என்றும், விதியை மீறியதால் கைது செய்வதாக அதிகாரிகள் தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்தார்.</p><p>அங்குள்ள ஒவ்வொரு மாகாணத்திற்கும் செல்ல தனித்தனியாக அனுமதி பெற வேண்டும். இவர் தனியாகப் பயணிக்கும் பெண் என்பதால் பாமியானிலும், அதற்கு முன்னதாக ஜலாலாபாத்திலும் இவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.</p> <p>ஆப்கானிஸ்தான் பயணத்தின் போது தாலிபான்கள் பலமுறை தன்னை வழிமறித்துச் சோதனையிட்டதாகவும், கேள்வி எழுப்பியதாகவும் அருணிமா குறிப்பிட்டுள்ளார்.</p><p>ஆண் பயணிகளுக்கு இல்லாத பல கடுமையான கட்டுப்பாடுகள் தான் ஒரு பெண் என்பதால் தன் மீது திணிக்கப்பட்டதாகவும், பயணத்தின் பெரும் பகுதி பாதுகாப்பிற்காக 'பர்தா' அணிந்தே பயணித்ததாகவும் அவர் வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அண்ணா ஆட்சியை மீண்டும் நிறுவிட உறுதியேற்போம்! - எடப்பாடி பழனிசாமி
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-says-let-us-pledge-to-restore-anna-rule</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-says-let-us-pledge-to-restore-anna-rule#comments</comments><guid isPermaLink="false">7d0cdbb8-0fb1-4493-9e5e-c629cfa13ce6</guid><pubDate>Tue, 15 Sep 2026 04:53:51 +0000</pubDate><atom:updated>2026-09-15T04:53:51.562Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,Edappadi Palaniswami,அதிமுக,எடப்பாடி பழனிசாமி,Perarignar Anna,பேரறிஞர் அண்ணா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/nacryiul/eps.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/nacryiul/eps.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அண்ணாவின் அரசியல் வாழ்வு, தலைமுறைகள் கடந்து வழிகாட்டும் கலங்கரை விளக்கம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/perarignar-anna-birthday-vairamuthu-tribute">பேரறிஞர் அண்ணாவின்</a> 118-வது பிறந்தநாளை ஒட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF">எடப்பாடி பழனிசாமி</a> மலர்தூவி மரியாதை செலுத்தினார். </p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>தமிழக மக்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் தன்மான உணர்வை விதைத்து, சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மாநில உரிமைகள் என திராவிட இயக்கத்தின் கொள்கைகளை மக்கள் இயக்கமாக வளர்த்தெடுத்த ஒப்பற்ற தலைவர் நம் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள். </p> <p>அதிகாரத்தை விட கொள்கையையும், பதவியை விட மக்களையும், தனிமனிதப் புகழை விட சமூகத்தின் முன்னேற்றத்தையும் முன்னிறுத்திய அண்ணாவின் அரசியல் வாழ்வு, தலைமுறைகள் கடந்து வழிகாட்டும் கலங்கரை விளக்கம்.</p><p>தமிழினத்தின் தன்மானக் குரலான நம் கொடியாகவும் கொள்கையாகவும் என்றும் வீற்றிருக்கும் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களை, அவர்தம் பிறந்தநாளில் போற்றி வணங்குகிறேன்.</p> <p>மக்கள் நலனுக்கு முற்றிலும் எதிரான ரீல்ஸ் அரசியல் மோகத்தில் இருந்து தமிழகத்தை விடுவித்து, தமிழகத்தின் வளர்ச்சியை கட்டமைக்கும் நம் அண்ணா ஆட்சியை மீண்டும் நிறுவிட இந்நாளில் உறுதியேற்போம்!</p><p>வாழ்க அண்ணா நாமம்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/durai-murugan-announced-dmk-mupperum-vizha-adjourn</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/durai-murugan-announced-dmk-mupperum-vizha-adjourn#comments</comments><guid isPermaLink="false">cd103674-104e-44cf-9076-cae5ede779ea</guid><pubDate>Tue, 15 Sep 2026 04:43:27 +0000</pubDate><atom:updated>2026-09-15T04:43:27.668Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,Durai Murugan,துரைமுருகன்,முக ஸ்டாலின்,திமுக முப்பெரும் விழா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/bc0hbr5q/mkstalin.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/bc0hbr5q/mkstalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தி.மு.க. முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.</strong></em> </p><h2><strong>தி.மு.க. முப்பெரும் விழா</strong></h2><p>தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் <a href="https://www.maalaimalar.com/topic/திமுக-முப்பெரும்-விழா">முப்பெரும் விழா</a> கொண்டாடப்பட்டு வருகிறது. பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்தநாள்கள், தி.மு.க. தொடங்கப்பட்ட நாள் ஆகிய மூன்றையும் இணைத்து முப்பெரும் விழா நடத்தப்படுகிறது. </p><p>அந்த வகையில், 2026-ம் ஆண்டுக்கான தி.மு.க. முப்பெரும் விழா இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. </p><h2><strong>ஒத்திவைப்பு</strong></h2><p>இந்த நிலையில், இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட தி.மு.க. முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். </p><p>தி.மு.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/முக-ஸ்டாலின்">மு.க.ஸ்டாலினுக்கு</a> ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக தி.மு.க. முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுவதாகவும் முப்பெரும் விழாவுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில்  நடந்த அண்ணா பிறந்தநாள் விழாவிலும் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை. </p><p>அதுகுறித்து துரைமுருகன் கூறுகையில், மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் அண்ணா சிலைக்கு மாலை போடவில்லை என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY: தொடர் சரிவில் தங்கம் விலை - எவ்வளவு குறைந்தது தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-15-9-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-15-9-2026#comments</comments><guid isPermaLink="false">5a8ef608-1724-4269-8ca4-6f9725f20593</guid><pubDate>Tue, 15 Sep 2026 04:35:40 +0000</pubDate><atom:updated>2026-09-15T04:35:40.655Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/bxvt918k/gold.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/bxvt918k/gold.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. </p><p>சென்னையில் கடந்த 12-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு  ரூ.120 உயர்ந்து ரூ.1,13,360-க்கும், கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.14,170-க்கும் விற்பனையானது. 13-ந்தேதி சவரன் ரூ.1,13,360-க்கும், ஒரு கிராம் ரூ.14,170-க்கும் விற்பனையானது.</p> <p>நேற்று சவரனுக்கு  ரூ.360 குறைந்து ரூ.1,13,000-க்கும், கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.14,125-க்கும் விற்பனையானது.</p><p>இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு  ரூ.680 குறைந்து ரூ.1,12,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.14,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>  <h2>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்</h2><p>14-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,000</p><p>13-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,360</p><p>12-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,360</p><p>11-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,240</p><p>10-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.114,040</p> <h2>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்</h2><p>14-09-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>13-09-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>12-09-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>11-09-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>10-09-2026- ஒரு கிராம் ரூ.255</p> ]]></content:encoded></item><item><title>ஏஐ தொழில்நுட்பத்தின் வேகத்தை கட்டுப்படுத்தணும் - ஒன்றுகூடிய ஏஐ நிறுவனங்கள் - பதறியடித்து டிரம்ப் போட்ட பதிவு</title><link>https://www.maalaimalar.com/news/world/ai-companies-gather-to-call-for-curbing-the-pace-of-ai-technology-trump-posts-in-a-panic</link><comments>https://www.maalaimalar.com/news/world/ai-companies-gather-to-call-for-curbing-the-pace-of-ai-technology-trump-posts-in-a-panic#comments</comments><guid isPermaLink="false">69a03f74-843e-425f-a260-b9d789902cf4</guid><pubDate>Tue, 15 Sep 2026 04:29:27 +0000</pubDate><atom:updated>2026-09-15T04:29:27.367Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Artificial Intelligence,AI technology,trump,டிரம்ப்,ஏஐ தொழில்நுட்பம்,செயற்கை நுண்ணறிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/4a4stkxj/tn-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டிரம்ப் ]]></media:title><media:description type="html"><![CDATA[ டிரம்ப் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/4a4stkxj/tn-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தொழில்நுட்பம் (Technology)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியை கட்டுப்படுத்தினால் அது சீனாவுக்கு சாதகமாகிவிடும் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-warns-against-weaponisation-of-critical-minerals">செயற்கை நுண்ணறிவு </a>தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் நிலையில் அதன் அதிவேக வளர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும் என்ற விவாதம் உருவாகியுள்ளது. </p> <p>அமெரிக்காவின் ஆந்திரபிக் ஏஐ நிறுவன சிஇஓ டேரியோ அமோடி, <a href="https://www.maalaimalar.com/news/world/ai-technology-used-for-missile-production-anthropic-exposes-yemen-group">ஏஐ தொழில்நுட்பத்தின்</a> வேகத்தைக் குறைக்க வேண்டும் என்றும், கூடுதல் பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் தேவை என்றும் வலியுறுத்தியிருந்தார். இந்த கருத்துக்கு எக்ஸ் ஏஐ தலைவர் எலான் மஸ்க், ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன் ஆகியோர் உடன்பட்டுள்ளனர்.</p><p>ஆனால் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியை Slow செய்தால் அது சீனாவுக்கு சாதகமாகிவிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.</p> <h2>டிரம்ப் கருத்து</h2><p>தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள டொனால்ட் டிரம்ப், "ஏஐக்கு கூடுதல் விதிகளோ கட்டுப்பாடுகளோ தேவையில்லை; ஒரு வலுவான, அறிவார்ந்த - High IQ கொண்ட அதிபர் மட்டுமே தேவை, அது அமெரிக்காவிடம் உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.</p><p>மேலும் தனது பதிவில் சீனா பற்றி எச்சரித்த டிரம்ப் , "ஏஐ மற்றும் டேட்டா சென்டர்களுக்கு எதிராக ஒரு சதி நடக்கிறது. இதனால் மகிழ்ச்சியடையும் ஒரே நாடு சீனா மட்டுமே. ஏஐ இல் யார் வெல்கிறார்களோ, அவர்களே உலகை வெல்வார்கள்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.</p> <p>அதுமட்டுமின்றி ஏஐ வளர்ச்சி வேகத்தை குறைக்க அழைப்பு விடுத்த ஆந்திரோபிக் சிஇஓ டேரியோ அமோடி பற்றி விமர்சித்த டிரம்ப், அவர் உலகை காக்க வந்த "perfect little angel" போல நடிக்கிறார் என்று சாடியுள்ளார்.</p><p>தனது நிர்வாகத்திற்கு ஏஐ நிறுவனங்கள் மீது ஏற்கனவே குற்றவியல் மற்றும் சட்டரீதியான முழு அதிகாரம் உள்ளது என்றும், தவறான விஷயங்கள் நடப்பதைத் தடுத்து நிறுத்தியுள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>வளர்ச்சி மற்றும் தரவு மையங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் ஒரு சதித்திட்டத்தின் பகுதியாக செயல்படுவதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஏ.பி.எஸ்., க்ரூயிஸ் கண்ட்ரோல் வசதியுடன் புதிய ஹீரோ பைக் அறிமுகம் - ஹைலைட்டே அதன் விலை தான்</title><link>https://www.maalaimalar.com/automobilenews/bike/hero-glamour-x-125-launched-with-integrated-abs</link><comments>https://www.maalaimalar.com/automobilenews/bike/hero-glamour-x-125-launched-with-integrated-abs#comments</comments><guid isPermaLink="false">1364b906-df61-495e-a142-4398b64bfb18</guid><pubDate>Tue, 15 Sep 2026 04:23:00 +0000</pubDate><atom:updated>2026-09-15T04:23:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>bike,பைக்,Hero MotoCorp,ஹீரோ மோட்டோகார்ப்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/is6zbind/Hero-Glamour-X-125.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Hero Glamour X 125]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/is6zbind/Hero-Glamour-X-125.png?w=280" width="280"></media:thumbnail><category>பைக் (Automobile)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/hero-motocorp">ஹீரோ மோட்டோகார்ப்</a> நிறுவனம் , சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் மற்றும் இன்டகிரேட்டட் பிரேக்கிங் சிஸ்டம் (ஐபிஎஸ்) ஆகியவற்றை இணைக்கும் புதிய பிரேக்கிங் சிஸ்டத்துடன் கிளாமர் எக்ஸ் 125 பைக்கை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. </p><p>125சிசி பிரிவில், சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் மற்றும் ஐபிஎஸ் உடன் வரும் முதல் <a href="https://www.maalaimalar.com/topic/bike">மோட்டார்சைக்கிள்</a> கிளாமர் எக்ஸ் 125 தான் என ஹீரோ நிறுவனம் கூறுகிறது. இந்த புதிய பிரேக்கிங் அமைப்பு, கடுமையாக பிரேக் செய்யும்போது முன் சக்கரங்கள் லாக் ஆவதைத் தடுக்கிறது.</p><h2>என்ஜின் மற்றும் பவர்:</h2><p>அதே சமயம், ஐபிஎஸ் ஆனது முன் மற்றும் பின் பிரேக்குகளை இணைப்பதன் மூலம் பிரேக்கிங் செயல்திறனை மேம்படுத்துகிறது. மேலும், கிளாமர் எக்ஸ் மாடலில் பேனிக் பிரேக் அலர்ட் மற்றும் ஹசார்ட் லேம்ப்கள் போன்ற அம்சங்களும் தொடர்ந்து இடம்பெற்றுள்ளன.</p><p>ஹீரோ கிளாமர் எக்ஸ் பைக்கில் 124.7சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 11.4 பிஎச்பி பவரையு மற்றும் 10.5 நியூட்டன் மீட்டர் டார்க் உற்பத்தி செய்கிறது. இந்த பைக்கில் ஈகோ, ரோடு மற்றும் பவர் என மூன்று ரைடிங் மோட்கள் உள்ளன. மேலும், இந்த செக்மென்ட் பைக்கிற்கு முதல் முறையாக க்ரூயிஸ் கண்ட்ரோல் வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது.</p><p>ஹீரோ கிளாமர் எக்ஸ் 125, ப்ளூடூத் இணைப்பு, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், மற்றும் அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ். அலெர்ட்களுடன் கூடிய வண்ண டி.எஃப்.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் வழங்கப்படுகிறது. ஃபுல்-எல்.இ.டி. லைட்கள், யு.எஸ்.பி. டைப்-சி சார்ஜிங் போர்ட் மற்றும் இருக்கைக்கு அடியில் இரட்டை மொபைல் ஸ்டோரேஜ் ஆகியவை மற்ற அம்சங்களில் அடங்கும்.</p><h2>இந்திய விலை:</h2><p>ஒருங்கிணைந்த ஏபிஎஸ் உடன் கூடிய கிளாமர் எக்ஸ், கன் மெட்டல் கிரே, மேட் ஆக்சிஸ் கிரே, பிளாக் பேர்ல் ரெட் மற்றும் பிளாக் டீல் ப்ளூ ஆகிய நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது. புதிய ஹீரோ பைக்கின் விலை ரூ. 1.01 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அவதூறு பேச்சு: ஆ.ராசா, சேகர்பாபு மீது வழக்கு பதிவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/police-case-filed-against-a-rasa-and-sekhar-babu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/police-case-filed-against-a-rasa-and-sekhar-babu#comments</comments><guid isPermaLink="false">92268d81-3b27-407d-aba5-9d9eaaa9698c</guid><pubDate>Tue, 15 Sep 2026 04:00:18 +0000</pubDate><atom:updated>2026-09-15T04:00:18.582Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,ஆ ராசா,A Rasa,அவதூறு பேச்சு,சேகர்பாபு,Sekhar Babu</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/iybitfe9/dmk.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஆ.ராசா- சேகர்பாபு]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆ.ராசா- சேகர்பாபு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/iybitfe9/dmk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசா மற்றும் சேகர்பாபு ஆகியோர் முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் நிர்மல்குமார் குறித்து அவதூறு பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.</strong></em> </p><h2><strong>ஆர்ப்பாட்டம்</strong></h2><p>முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில், முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் பற்றி பேசியதை கண்டித்து தமிழகம் முழுவதும் <a href="https://www.maalaimalar.com/topic/திமுக">தி.மு.க.</a> சார்பில் கடந்த 12-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. </p><p>அந்த வகையில், சென்னை தெற்கு, தென்மேற்கு, மேற்கு மாவட்ட தி.மு.க.சார்பில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். </p><h2><strong>விமர்சனம்</strong></h2><p>இதே போல, சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் சேகர்பாபு முன்னிலை வகித்தார். </p><p>ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. எம்.பி.ராசா மற்றும் சேகர்பாபு ஆகியோர் முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் நிர்மல்குமார் குறித்து பேசியது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. </p><h2><strong>வழக்கு பதிவு</strong></h2><p>இந்த நிலையில், தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசா மற்றும் சேகர்பாபு ஆகியோர் முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் நிர்மல்குமார் குறித்து அவதூறு பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. த.வெ.க நிர்வாகி ஜெகதீஸ்வரி என்பவர் அளித்த புகாரின் பேரில் வடக்கு கடற்கரை போலீசார் சேகர்பாபு மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். </p><p>இதேபோல், தி.மு.க. எம்.பி.ஆ.ராசா மீதும் சைதாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆ.ராசா மீது ஆபாசமாக பேசுதல், பொது அமைதியை குலைக்க முயற்சி உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>அண்ணாவின் பொன்னடிகளுக்குப் புகழ் வணக்கம் - வைரமுத்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/perarignar-anna-birthday-vairamuthu-tribute</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/perarignar-anna-birthday-vairamuthu-tribute#comments</comments><guid isPermaLink="false">53ce6900-a2e0-45d7-9086-e1b35d0bf1d0</guid><pubDate>Tue, 15 Sep 2026 03:49:16 +0000</pubDate><atom:updated>2026-09-15T03:49:16.780Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,Vairamuthu,Perarignar Anna,வைரமுத்து,பேரறிஞர் அண்ணா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/ehh2djos/vairamuthu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Perarignar Anna - Vairamuthu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/ehh2djos/vairamuthu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீ செய்த சாதனை புரிய 300 ஆண்டு வாழ்ந்தவனாலும் முடியாது என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-perarignar-anna-who-rules-tamil-nadu-yesterday-today-and-forever">பேரறிஞர் அண்ணாவின்</a> 118-வது பிறந்தநாளையொட்டி கவிஞர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">வைரமுத்து</a> வெளிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>அண்ணா! </p><p>காலவெளியில்</p><p>உன் இருப்பு சிறிதுதான்</p><p>நீ வாழ்ந்தது</p><p>59.4 ஆண்டுகள்</p> <p>உன் பொதுவாழ்வு</p><p>35 ஆண்டுகள்</p><p>கட்டியெழுப்பிய கட்சியோடு </p><p>19.5 ஆண்டுகள்</p><p>ஆட்சிப் பொறுப்பில்</p><p>வெறும் 22 மாதங்கள்</p> <p>ஆனால்,</p><p>நீ செய்த சாதனை புரிய</p><p>300 ஆண்டு</p><p>வாழ்ந்தவனாலும் முடியாது</p><p>உன் பெயர் சொல்லாமல்</p><p>அரசாள இயலாது</p><p>உன் கொள்கை இல்லாமல்</p><p>அரசியல் கிடையாது</p> <p>நீ</p><p>சாமானியர்க்காகவே வாழ்ந்தவன்;</p><p>சாமானியனாகவே மரித்தவன்</p><p>பூமியின் மீது</p><p>அதிகச் சிலைகள் புத்தருக்கு;</p><p>இந்தியாவில் அம்பேத்கருக்கு;</p><p>தமிழ்நாட்டில் உனக்கு</p> <p>பொன்னடிகளுக்குப் </p><p>புகழ் வணக்கம்</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பேரறிஞர் அண்ணா தான் அன்றைக்கும் - இன்றைக்கும் - என்றைக்கும் தமிழ்நாட்டை ஆள்கிறார் - உதயநிதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-perarignar-anna-who-rules-tamil-nadu-yesterday-today-and-forever</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-perarignar-anna-who-rules-tamil-nadu-yesterday-today-and-forever#comments</comments><guid isPermaLink="false">1a3df343-9dba-453e-9171-a1ab64d8cc8e</guid><pubDate>Tue, 15 Sep 2026 03:36:10 +0000</pubDate><atom:updated>2026-09-15T03:36:10.848Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,Perarignar Anna,பேரறிஞர் அண்ணா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/zaiszeiw/udhayanidhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Perarignar Anna -  Udhayanidhi Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/zaiszeiw/udhayanidhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் - தமிழ்மொழியின் ஏற்றத்துக்கும் -  மாநில சுயாட்சிக்காகவும் குரல் கொடுத்த அண்ணா என்றும் நம்மை வழிநடத்துவார் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/perarignar-anna-birthday-kanimozhi-says-dmk-must-endure-and-serve-the-people-for-many-generations">பேரறிஞர் அண்ணாவின்</a> 118-வது பிறந்தநாளையொட்டி எதிர்க்கட்சி தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">உதயநிதி ஸ்டாலின்</a> வெளிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>பேரறிஞர் அண்ணா எனவும் ஜனநாயக பெருவெளிச்சம் பிறந்த நாள் இன்று!</p> <p>கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு என்ற முழக்கத்தோடு தி.மு.கழகத்தை தொடங்கி, தமிழ்நாட்டிற்கு பாதுகாப்பு வளையமிட்டவர் - அண்ணா!</p><p>தமிழ்நாடு என்று பெயர் சூட்டி - சுயமரியாதை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் தந்து - இருமொழி கொள்கையை உறுதி செய்த பேரறிஞர் அண்ணா தான், அன்றைக்கும் - இன்றைக்கும் - என்றைக்கும் தமிழ்நாட்டை ஆள்கிறார்.</p> <p>தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் - தமிழ்மொழியின் ஏற்றத்துக்கும் -  மாநில சுயாட்சிக்காகவும் குரல் கொடுத்த அண்ணா என்றும் நம்மை வழிநடத்துவார்.</p><p>வாழ்க அண்ணாவின் புகழ்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>Exynos Chip கொண்ட புதிய ஃபேன் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த சாம்சங்</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/samsung-galaxy-s26-fe-launched-in-india</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/samsung-galaxy-s26-fe-launched-in-india#comments</comments><guid isPermaLink="false">85411858-8e69-491c-a7ec-221fab857724</guid><pubDate>Tue, 15 Sep 2026 03:32:00 +0000</pubDate><atom:updated>2026-09-15T03:32:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Samsung,சாம்சங்,smartphone,ஸ்மார்ட்போன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/r43606rc/Samsung-Galaxy-S26-FE.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Samsung Galaxy S26 FE]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/r43606rc/Samsung-Galaxy-S26-FE.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/samsung">சாம்சங்</a> நிறுவனத்தின் சமீபத்திய 'ஃபேன் எடிஷன்' மாடலாக கேலக்ஸி S26 FE இந்திய சந்தையிவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டு வெளியான கேலக்ஸி S26 FE மாடலின் அடுத்த தலைமுறை மாடலாக வருகிறது. </p><p>புதிய கேலக்ஸி S26 FE மாடலில் 120Hz ரிப்ரெஷ் ரேட் உடன் 6.7-இன்ச் டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த <a href="https://www.maalaimalar.com/topic/samsung">ஸ்மார்ட்போன்</a> எக்சைனோஸ் 2500 பிராசசரால் இயக்கப்படுகிறது. மேலும், இதில் 50-மெகாபிக்சல் பிரைமரி கேமரா மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது. </p><h2>சாம்சங் கேலக்ஸி S26 FE சிறப்பு அம்சங்கள்:</h2><p>டூயல் சிம் (நானோ + நானோ) வசதி கொண்ட சாம்சங் கேலக்ஸி S26 FE, ஆண்ட்ராய்டு 17-ஐ அடிப்படையாகக் கொண்ட ஒன் யுஐ 9 மூலம் இயங்குகிறது. இதற்கு ஏழு ஆண்டுகளுக்கு மென்பொருள் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படும் என சாம்சங் தெரிவித்துள்ளது.</p><p>இந்த ஸ்மார்ட்போனில் 120Hz ரிப்ரெஷ் ரேட் மற்றும் 1,900 நிட்ஸ் வரையிலான பிரைட்னஸ் கூடிய 6.7-இன்ச் FHD+ டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே உள்ளது. மேலும் இந்த மாடலில், 3nm தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட எக்சைனோஸ் 2500 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இது 8GB ரேம் மற்றும் 256GB என ஒற்றை மெமரி வேரியண்டில் கிடைக்கிறது.</p><p>கேமராக்களைப் பொறுத்தவரை, கேலக்ஸி S26 FE-ல் மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இதில் OIS வசதியுடன் கூடிய 50MP வைட் கேமரா, 12MP அல்ட்ரா-வைட் கேமரா, மற்றும் OIS மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் வசதியுடன் கூடிய 8MP டெலிஃபோட்டோ கேமரா ஆகியவை அடங்கும். மேலும், செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 12MP செல்ஃபி கேமராவும் உள்ளது.</p><p>இந்த ஸ்மார்ட்போன் ஜெமினி ஓம்னி சப்போர்ட் உடன் வருகிறது, இதன் மூலம் கேலரியில் சேமிக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பயன்படுத்தி வீடியோக்களை உருவாக்கவும் எடிட் செய்யவும் முடியும். கனெக்டிவிட்டிக்கு 5G, 4G LTE, Wi-Fi 6E, Wi-Fi Direct மற்றும் ப்ளூடூத் 5.4 ஆகியவை அடங்கும்.</p><p>சாம்சங் கேலக்ஸி, 45W வயர்டு சார்ஜிங் உடன் 4,900mAh பேட்டரி கொண்டுள்ளது. இத்துடன் 15W ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் பவர்ஷேர் சப்போர்ட் உடன் வருகிறது. மேலும், இது IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.</p><h2>சாம்சங் கேலக்ஸி S26 FE விலை விவரங்கள்:</h2><p>சாம்சங் கேலக்ஸி S26 FE ஸ்மார்ட்போனின் 8GB ரேம் மற்றும் 256GB மெமரி மாடல் விலை இந்தியாவில் ரூ. 79,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மெமரி அடிப்படையில் ஒற்றை வேரியண்டிலேயே கிடைக்கிறது. மேலும், இந்த மாடல் பிஸ்தா, புளூபெர்ரி மற்றும் கிராஃபைட் ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது.</p><p>அறிமுகச் சலுகைகளின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்சேஞ் செய்யும்போது ரூ. 8,000 வரையிலான போனஸ் பெற முடியும். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி சாரா நிதி நிறுவன (NBFC) சேவைகள் மூலம் 30 மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதியையும், அதனுடன் கூடுதலாக ரூ. 3,000 வரை போனஸ் பெற முடியும்.</p><p>இத்துடன் வாடிக்கையாளர்கள் முக்கிய வங்கி கார்டுகள் மூலம் ரூ. 7,000 கேஷ்பேக் அல்லது 12 மாத வட்டியில்லா வங்கி மாத தவணை முறையை தேர்வு செய்யலாம். சாம்சங்கின் இ-ஸ்டோர் மூலம் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் 18 மாத வங்கி மாத தவணை முறையையும் தேர்வு செய்யலாம்.</p>]]></content:encoded></item><item><title>கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-inspection-kilambakkam-bus-stand</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-inspection-kilambakkam-bus-stand#comments</comments><guid isPermaLink="false">19bf33ce-fb4a-410f-8e13-5110265c3977</guid><pubDate>Tue, 15 Sep 2026 03:23:55 +0000</pubDate><atom:updated>2026-09-15T03:23:55.157Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்,Kilambakkam Bus Terminus,விஜய் தமிழன் பார்த்திபன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/cchell3v/minister.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர்]]></media:title><media:description type="html"><![CDATA[ கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/cchell3v/minister.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் இன்று காலை 6 மணி முதல் கிளாம்பாக்கம் மாநகர பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் மற்றும் பயணிகளின் வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.</strong></em> </p><h2><strong>அமைச்சர் ஆய்வு</strong></h2><p>தொடர் விடுமுறை மற்றும் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்ற பயணிகள் இன்று சென்னை நோக்கி படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர். அப்படியாக வரக்கூடிய பொதுமக்களின் போக்குவரத்து பாதுகாப்பாக இருக்கிறதா மேலும் பேருந்துகள் குறித்து ஏதேனும் புகார் வருகிறதா என்று இன்று காலை 6 மணி முதல் அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் ஆய்வில் ஈடுபட்டிருந்தார். </p><p>போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் உடன் போக்குவரத்து துறை செயலாளர் நிர்மல்ராஜ் தமிழ்நாடு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் மாநகரப் பேருந்து அதிகாரிகள் உட்பட பலர் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர்.</p><h2><strong>ஆய்வு கூட்டம்</strong></h2><p>நேற்றைய தினம் இதே <a href="https://www.maalaimalar.com/topic/கிளாம்பாக்கம்-பேருந்து-நிலையம்">கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில்</a> வரப்போகிற ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை ஒட்டி பொதுமக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் பேருந்துகள் மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் குறித்து விரிவான ஆய்வு கூட்டம் அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தலைமையில் நடைபெற்றது.</p><p>இக்கூட்டத்திற்கு போக்குவரத்துச் செயலாளர் நிர்மல்ராஜ் தாம்பரம் மாநகர துணை ஆணையர் கார்த்திகேயன் தாம்பரம் மாநகர போக்குவரத்து துணை ஆணையர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அதிகாரிகள் மற்றும் போலீசார் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பயணிகளுக்கு எந்தவித சிரமமும் இல்லாமல் போதிய பேருந்துகள் ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் அன்றைய தினத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்வதை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. </p>]]></content:encoded></item><item><title>பாதுகாப்பு குளறுபடி.. குடிவரவு சோதனையின்றி டெல்லியில்  விமானம் ஏறிச் சென்ற 3 இத்தாலியர்கள் - மத்திய அமைச்சகம் அவசர கூட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/national/security-lapse-three-italians-boarded-a-flight-without-immigration-checks-central-ministry-calls-urgent-meeting</link><comments>https://www.maalaimalar.com/news/national/security-lapse-three-italians-boarded-a-flight-without-immigration-checks-central-ministry-calls-urgent-meeting#comments</comments><guid isPermaLink="false">67606c23-7f22-445f-9847-d4b2bcb18f8b</guid><pubDate>Tue, 15 Sep 2026 03:12:06 +0000</pubDate><atom:updated>2026-09-15T03:12:06.095Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords></media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/m58i81dc/tn-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டெல்லி]]></media:title><media:description type="html"><![CDATA[ டெல்லி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/m58i81dc/tn-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி விமான நிலையத்தில் குடியேற்ற சோதனைக்கு செல்லாமலேயே 3 இத்தாலியர்கள் ஜெர்மனியின் முனிச் நகருக்கு விமானத்தில் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p> <p>கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி அதிகாலை இத்தாலியை சேர்ந்த 3 பேர் அமிர்தசரசில் இருந்து<a href="https://www.maalaimalar.com/news/national/air-india-pilot-dies-in-delhi-5-star-hotel-room"> ஏர் இந்தியா</a> விமானம் மூலம் டெல்லி வந்தனர். </p><p>அந்த விமானம் அதிகாலை 12.50 மணியளவில் டெல்லி வந்தடைந்தது. அதன்பின்னர் அதிகாலை 1.45 மணியளவில் டெல்லியில் இருந்து லுப்தான்சா விமானத்தில் முனிச் நகருக்கு அவர்கள் புறப்பட்டுச் சென்றனர். </p><p>ஆனால், இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு முன்பு அவர்கள் கட்டாய குடிவரவு சோதனைக்கு செல்லவில்லை என்பது தெரியவந்துள்ளது.</p> <p>3 இத்தாலியர்களுக்கும் அமிர்தசரசிலேயே டெல்லியில் இருந்து முனிச் செல்லும் லுப்தான்சா விமானத்துக்கான பயணச்சீட்டும் வழங்கப்பட்டுள்ளது.</p><p>டெல்லி வந்தபோது சர்வதேச பயணிகள் என்று அடையாளம் கண்டு, அவர்களை குடிவரவு சோதனைக்கு அனுப்பியிருக்க வேண்டும்.</p><p>ஆனால் அவர்கள் சர்வதேச பயணிகள் செல்லும் மாற்றுப்பாதைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதன் மூலம் குடிவரவு சோதனைக்கு செல்லாமலேயே அவர்கள் சர்வதேச புறப்பாடு பகுதிக்கு சென்று முனிச் விமானத்தில் ஏறிச் சென்றுள்ளனர். பதிவேடு சரிபார்ப்பின்போது இந்த குளறுபடி தெரியவந்துள்ளது.</p> <h2>அரசு நடவடிக்கை</h2><p>இச்சம்பவத்தில் ஏர் இந்தியாவின் அலட்சியத்தைக் சுட்டிக்காட்டி, மத்திய உள்துறை அமைச்சகம் செப்டம்பர் 12 அன்று அந்நிறுவனத்திடம் நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. 7 நாட்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>மேலும் உள்துறைச் செயலாளர் கோவிந்த் மோகன் தலைமையில் அவசர கூட்டமும் இதுதொடர்பாக நாளை மாலை கூட்டப்பட்டுள்ளது. </p><p>இக்கூட்டத்தில், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகச் செயலாளர், உளவுத்துறை இயக்குநர், குடிவரவுப் பணியகக் ஆணையர், ஏர் இந்தியா தலைவர் மற்றும் டெல்லி விமான நிலைய சி.இ.ஓ ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>அண்ணா விதைத்து பெருமரமாக்கிய தி.மு.க. பல தலைமுறைகளுக்கு நின்று பயன் தர வேண்டும்! - கனிமொழி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/perarignar-anna-birthday-kanimozhi-says-dmk-must-endure-and-serve-the-people-for-many-generations</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/perarignar-anna-birthday-kanimozhi-says-dmk-must-endure-and-serve-the-people-for-many-generations#comments</comments><guid isPermaLink="false">9cb8f4d9-bd41-4d5f-8a0a-34fc565d826e</guid><pubDate>Tue, 15 Sep 2026 03:03:23 +0000</pubDate><atom:updated>2026-09-15T03:03:23.545Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,Kanimozhi,கனிமொழி,Perarignar Anna,பேரறிஞர் அண்ணா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/r76n71ha/kanimozhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Perarignar Anna - Kanimozhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/r76n71ha/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கொள்கைகளாலும், செயல்களாலும் அன்று அண்ணா விதைத்து பெருமரமாக்கிய நம் தி.மு.கழகம், இன்னும் பல தலைமுறைகளுக்கு நின்று பயன் தர வேண்டும்! என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/perarignar-anna-birthday-mk-stalin-tribute">பேரறிஞர் அண்ணாவின்</a> 118-வது பிறந்தநாளையொட்டி அவர் குறித்த வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">திமுக</a> எம்பி கனிமொழி வெளியிட்டுள்ள பதிவில், </p><p>ஆதாயத்திற்காக அண்ணாவின் பெயரை உச்சரிப்பவர்கள் அதிகரித்துவிட்ட இக்காலத்தில், அவர் உள் ஒளியாக ஏற்றுக்கொண்ட திராவிடத்தையும், பெரியாரியத்தையும், தமிழறத்தையும் ஆழ்மனதில் ஏந்திப் பயணிப்பவர்கள் அதிகம் வர வேண்டும்.</p> <p>கொள்கைகளாலும், செயல்களாலும் அன்று அண்ணா விதைத்து பெருமரமாக்கிய நம் தி.மு.கழகம், இன்னும் பல தலைமுறைகளுக்கு நின்று பயன் தர வேண்டும்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">ஆதாயத்திற்காக அண்ணாவின் பெயரை உச்சரிப்பவர்கள் அதிகரித்துவிட்ட இக்காலத்தில், அவர் உள் ஒளியாக ஏற்றுக்கொண்ட திராவிடத்தையும், பெரியாரியத்தையும், தமிழறத்தையும் ஆழ்மனதில் ஏந்திப் பயணிப்பவர்கள் அதிகம் வர வேண்டும்.<br><br>கொள்கைகளாலும், செயல்களாலும் அன்று அண்ணா விதைத்து பெருமரமாக்கிய நம்… <a href="https://t.co/NGE7IDb6lU">pic.twitter.com/NGE7IDb6lU</a></p>&mdash; Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) <a href="https://x.com/KanimozhiDMK/status/2099683993079943306?ref_src=twsrc%5Etfw">September 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>வெள்ளத்தால் பாதித்த நேபாளத்திற்கு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வீதம் டிசம்பர் வரை  654 மெகாவாட் மின்சாரம் வழங்க இந்தியா முடிவு</title><link>https://www.maalaimalar.com/news/world/india-has-decided-to-supply-654-mw-of-electricity-to-flood-affected-nepal-for-18-hours-a-day-until-december</link><comments>https://www.maalaimalar.com/news/world/india-has-decided-to-supply-654-mw-of-electricity-to-flood-affected-nepal-for-18-hours-a-day-until-december#comments</comments><guid isPermaLink="false">3d4e26e4-b28f-42cd-8395-18cae48e47b0</guid><pubDate>Tue, 15 Sep 2026 02:51:16 +0000</pubDate><atom:updated>2026-09-15T02:51:16.336Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாளம்,nepal,வெள்ளம்,flood,Electricity,மின்சாரம்,Nepal Floods,நேபாள வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/jsxfn986/tn-1.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நேபாளம்  வெள்ளம், இந்தியா மின்சார விநியோகம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ நேபாளம்  வெள்ளம், இந்தியா மின்சார விநியோகம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/jsxfn986/tn-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள நேபாளத்திற்கு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வீதம் வரும் டிசம்பர் மாதம் வரை 654 மெகாவாட் மின்சாரம் வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/topic/nepal">நேபாளத்தில் </a>கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி கோஷி நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் ரசுவா மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் <a href="https://www.maalaimalar.com/news/world/disaster-flood-in-nepal-60-year-old-woman-rescued-alive-after-11-days">கடும் பாதிப்பு </a>ஏற்பட்டது. </p> <h2>பாதிப்பு</h2><p>2 வாரங்கள் கடந்தும் மீட்பு பணிகள் தொடந்து வருகின்றன. செப்டம்பர் 13 நிலவரப்படி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,388 ஆக உயர்ந்துள்ளது. 13,728 பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மாயமான 5,130 பேரை தேடும் பணி நடந்து வருகிறது.</p><p>வெள்ளத்தால் ஏற்பட்ட பொருட் சேதம் மற்றும் உள்கட்டமைப்பு சேதத்தால் நேபாளம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது.</p><p>குறிப்பாக வெள்ளபெருக்கு ஏற்பட்ட பகுதிகளில் நீர்மின் திட்ட கட்டுமானங்கள் சேதமடைந்து நாட்டின் மின் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த சூழலில், அண்டை நாடு எனும் முறையில் கூடுதல் மின்சாரத்தை நேபாளத்திற்கு வழங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.</p> <h2>மின்சாரம்</h2><p>இதன்படி, செப்டம்பர் 13 முதல் டிசம்பர் 31 வரை நேபாளத்திற்கு அதிகபட்சமாக 654 மெகாவாட் மின்சாரத்தை வழங்க செய்ய இந்திய மின்சார அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.</p><p>இந்த மின் விநியோகம் தினமும் நள்ளிரவு 12 மணி முதல் மாலை 6 மணி வரை, அதாவது 18 மணி நேரத்திற்கு வழங்கப்படும்.</p><p>இந்தியா மற்றும் நேபாளம் இடையே மின்சாரத்தை பரிமாறிக்கொள்வதற்காக ஏற்கனவே கிராஸ் பார்டர் பவர் டிரான்ஸ்மிஷன் லைன் வழியாக கூடுதல் மின்சாரம் அனுப்பப்படும்.</p> <p>இதில் 600 மெகாவாட் மின்சாரம் முசாபர்பூர் - டல்கேபார் 400 கேவி டபுள் சர்க்யூட் லைன் வழியாகவும், மீதமுள்ள 54 மெகாவாட் மின்சாரம் தனக்பூர் - மகேந்திரநகர் 132 கேவி சிங்கிள் சர்க்யூட் லைன் வழியாகவும் அனுப்பப்படவுள்ளது.</p><p>தற்போதைக்கு இந்த ஏற்பாடு டிசம்பர் 31 வரை நடைமுறையில் இருக்கும். ஜனவரி 2027 முதல் எந்த அளவில் மின்சாரம் வழங்கப்படும் என்பது குறித்து டிசம்பரில் ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <h2>உதவி</h2><p>நேபாள மின் உற்பத்தியில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டு, நாட்டின் மின் தேவைக்கும் விநியோகத்திற்குமான இடைவெளி அதிகரித்துள்ள சூழலில் நேபாளம் தனது மின் கட்டமைப்பைச் சீரமைக்கும் வரை இந்த அவசரகால மின் விநியோகம் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>மின்சாரம் தவிர, இந்தியா மனிதநேய உதவிகளையும் நேபாளத்திற்குச் செய்து வருகிறது. </p><p>ஆகஸ்ட் 26 முதல் இந்திய விமானப்படையின் 8 சிறப்பு விமானங்கள் மூலம் நிவாரணப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் மீட்புக் குழுக்கள் காத்மாண்டுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. </p><p>செப்டம்பர் 9 வரை சுமார் 130 டன்னுக்கும் அதிகமான நிவாரணப் பொருட்கள் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 15 செப்டம்பர் 2026: முருகன் கோவில்களில் அபிஷேகம்</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-15-september-2026-murugan-temple-abhishekam</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-15-september-2026-murugan-temple-abhishekam#comments</comments><guid isPermaLink="false">dec5098c-d993-46e9-b8b3-8f369aed987f</guid><pubDate>Tue, 15 Sep 2026 02:45:58 +0000</pubDate><atom:updated>2026-09-15T02:45:58.234Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/11/24/22107820-muruga5.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Murugan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/11/24/22107820-muruga5.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆவணி-29 (செவ்வாய்க்கிழமை)</p><p>பிறை : வளர்பிறை</p><p>திதி :  சதுர்த்தி காலை 9.22 மணி வரை பிறகு பஞ்சமி</p><p>நட்சத்திரம் : சுவாதி மாலை 5.41 மணி வரை பிறகு விசாகம்</p> <p>யோகம் :  சித்த / மரணயோகம்</p><p>ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை</p><p>எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை</p><p>சூலம் : வடக்கு</p><p>நல்ல நேரம் : காலை  8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை</p> <h2>ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமான் பவனி</h2><p>சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். சோழசிம்மபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் புறப்பாடு. குரங்கணி ஸ்ரீ முத்துமாலையம்மன் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் உற்சவாரம்பம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை, சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். </p> <p>திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் திருக்கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு சம்ஹார அர்ச்சனை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமான் பவனி. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - உறுதி</p><p>ரிஷபம் - நட்பு</p><p>மிதுனம் - வரவு</p><p>கடகம் - கடமை</p><p>சிம்மம் - அமைதி</p><p>கன்னி - தீரம்</p> <p>துலாம் - நன்மை</p><p>விருச்சிகம் - போட்டி</p><p>தனுசு - பரிசு</p><p>மகரம் - மகிழ்ச்சி</p><p>கும்பம் - இன்பம்</p><p>மீனம் - உவகை</p> ]]></content:encoded></item><item><title>மகாராஷ்டிராவின் மிகப் பணக்கார பாஜக எம்எல்ஏ பிச்சைக்காரராக மாறிய வினோதம்.. என்ன ஆனது?</title><link>https://www.maalaimalar.com/news/national/the-curious-case-of-maharashtras-richest-bjp-mla-turning-into-a-beggar-what-happened</link><comments>https://www.maalaimalar.com/news/national/the-curious-case-of-maharashtras-richest-bjp-mla-turning-into-a-beggar-what-happened#comments</comments><guid isPermaLink="false">566511e4-0898-409c-b4db-07240cfabd12</guid><pubDate>Tue, 15 Sep 2026 02:25:42 +0000</pubDate><atom:updated>2026-09-15T02:25:42.233Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>mumbai,மும்பை,Beggar,பாஜக எம்எல்ஏ,bjp mla,யாசகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/ywe8apxa/tn.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பராக் ஷா]]></media:title><media:description type="html"><![CDATA[ பராக் ஷா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/ywe8apxa/tn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிர மாநிலத்தின் மிகப் பணக்கார எம்எல்ஏக்களில் ஒருவரான பாஜகவை சேர்ந்த பராக் ஷா ஒரு நாள் முழுவதும் மும்பை வீதிகளில் பிச்சைக்காரராக வாழ்ந்துள்ளார்.</p><p>பராக் ஷா, மும்பை காட்கோபர் கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராவார். 2024 <a href="https://www.maalaimalar.com/topic/maharashtra">மகாராஷ்டிர </a>சட்டமன்ற தேர்தலின் போது ரூ.3,383 கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்பை வேட்புமனுவில் தாக்கல் செய்து, மாநிலத்தின் மிகப்பணக்கார வேட்பாளராக பராக் ஷா அறியப்பட்டார். </p> <h2>பிச்சை எடுக்க காரணம் </h2><p>பராக் ஷா குஜராத்தி ஜைன மதத்தவர் ஆவார்.</p><p>ஜைன மதப் புனித மாதத்தையொட்டி , தனது ஆன்மீகக் குருவான நம்ரமுனி என்பவரின் வழிகாட்டுதலின் பேரிலேயே பராக் ஷா பிச்சைக் கோளம் பூண முடிவு செய்தார்.</p><p>நேற்று (செப்டம்பர் 14) தனது பாதுகாவலர்கள், உதவியாளர்கள் அனைவரையும் தவிர்த்துவிட்டு, மக்கள் தன்னை அடையாளம் கண்டுகொள்ளக் கூடாது என்பதற்காக அழுக்காக மேக்கப் போட்டு பிச்சைக்காரர் வேடமிட்டு மும்பை தெருக்களில் சுற்றியுள்ளார்.</p> <h2>அனுபவம் </h2><p>இதுகுறித்து பின்னர் பேசிய பராக் ஷா, "நமக்குக் கிடைக்கும் அனைத்து மரியாதைகளும் நம் பதவி மற்றும் அந்தஸ்துக்காக மட்டுமே கிடைக்கிறது.</p><p>பிச்சைக்காரர் வேடத்தில் சென்றபோது, வழக்கமாக என்னைச் சந்திக்க வரிசையில் நிற்கும் அதே மனிதர்கள் என்னை விட உயர்ந்தவர்களாக உணர்ந்தனர். இதுவே வாழ்க்கையின் கசப்பான உண்மை." என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.</p><p>பிச்சைக்காரராக இருந்தபோது மும்பை மக்கள் தனக்குச் செய்த உதவிகளைப் பராக் ஷா நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார.</p><p>ஒரு நபர் அவரிடம் ரூ.20 கொடுத்து "போய் சாப்பிடு பாபா" என்று கூறியுள்ளார். ஒரு ஏழை சமோசா வியாபாரி, அவரிடம் பணம் இல்லை என்று கூறியபோதும், சிறு சலிப்பும் இன்றி இன்முகத்துடன் இலவசமாக சமோசா வழங்கியுள்ளார்.</p><p>"மும்பை நகரம் என்பது மக்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்ய எப்போதும் தயாராக இருக்கும் ஒரு நகரம் என்பதை இந்த அனுபவம் எனக்கு உணர்த்தியது" என பராக் ஷா உணர்ச்சிபொங்க தெரிவித்தார்.</p><p>பிச்சை எடுத்து சாப்பிட்டு முடித்த பிறகு, தனது மேக்கப்பை நீக்கிவிட்டு தான் சென்ற அதே இடங்களுக்கு மீண்டும் சென்று மக்களிடம் உரையாடியுள்ளார்.</p><p>இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ் வணக்கம்! - மு.க.ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/perarignar-anna-birthday-mk-stalin-tribute</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/perarignar-anna-birthday-mk-stalin-tribute#comments</comments><guid isPermaLink="false">2dc05e0c-4697-46b7-9e8b-42ab2722ddeb</guid><pubDate>Tue, 15 Sep 2026 02:19:11 +0000</pubDate><atom:updated>2026-09-15T02:19:11.420Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,Perarignar Anna,முக ஸ்டாலின்,பேரறிஞர் அண்ணா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/59q4310m/mkstalin.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Perarignar Anna - MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/59q4310m/mkstalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பேரறிஞர் அண்ணா சுயமரியாதையில் - சமூகநீதியில் - மாநில உரிமையில் - தமிழ்ப்பற்றில் என்றென்றும் வாழ்வார்! என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.</p> <p>பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளையொட்டி அவர் குறித்த வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-questions-arrests-of-justice-seekers-in-student-death-case">திமுக</a> தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க.ஸ்டாலின் </a>வெளிட்டுள்ள பதிவில்,</p><p>தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ் வணக்கம்!</p> <p>தலைநிமிர்ந்த தமிழர்! தலைநிமிர்ந்த தமிழ்நாடு! என்ற இலட்சியத்தை நனவாக்கத் தமிழன்னையின் தனயனாகப் பிறந்து தாய்க்குப் பெயரிட்ட மாபெரும் தமிழ்க் கனவு அவர்!</p><p>பேரறிஞர் அண்ணா சுயமரியாதையில் - சமூகநீதியில் - மாநில உரிமையில் - தமிழ்ப்பற்றில் என்றென்றும் வாழ்வார்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ் வணக்கம்!<br><br>தலைநிமிர்ந்த தமிழர்! தலைநிமிர்ந்த தமிழ்நாடு! என்ற இலட்சியத்தை நனவாக்கத் தமிழன்னையின் தனயனாகப் பிறந்து தாய்க்குப் பெயரிட்ட மாபெரும் தமிழ்க் கனவு அவர்!<br><br>பேரறிஞர் அண்ணா சுயமரியாதையில் - சமூகநீதியில் -… <a href="https://t.co/G35C7yx7j8">pic.twitter.com/G35C7yx7j8</a></p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2099668270509125809?ref_src=twsrc%5Etfw">September 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>முடியவே முடியாது.. பொது சிவில் சட்டம் அமலுக்கு பீகாரில் போர்க்கொடி!</title><link>https://www.maalaimalar.com/news/national/absolutely-not-bihar-raises-the-banner-of-revolt-against-the-implementation-of-the-uniform-civil-code</link><comments>https://www.maalaimalar.com/news/national/absolutely-not-bihar-raises-the-banner-of-revolt-against-the-implementation-of-the-uniform-civil-code#comments</comments><guid isPermaLink="false">7d1a5c0e-742e-46da-82c4-ef91d6052360</guid><pubDate>Tue, 15 Sep 2026 02:02:25 +0000</pubDate><atom:updated>2026-09-15T02:02:25.094Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பீகார்,Bihar,Amit Shah,அமித் ஷா,Uniform Civil Code,பொது சிவில் சட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/7lwq88k9/tn-40.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமித் ஷா, நிதிஷ் குமார் ]]></media:title><media:description type="html"><![CDATA[ அமித் ஷா, நிதிஷ் குமார் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/7lwq88k9/tn-40.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாஜகவின் என்டிஏ கூட்டணி ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் 2029ஆம் ஆண்டிற்குள் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியிருந்த நிலையில் பீகார் அதற்கு போர்க்கொடி தூக்கியுள்ளது.</p> <p>வெவ்வேறு மதங்களுக்கு உள்ள விதிவிலக்குகளை ரத்து செய்து திருமணம், விவாகரத்து, வாரிசு உரிமை மற்றும் தத்தெடுப்பு தொடர்பான ஒரே மாதிரியான சட்டத்தை அமல்படுத்துவதே <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">பொது சிவில் சட்டம்</a> ஆகும்.</p> <h2>அமல்</h2><p>பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெறும் மாநிலமான உத்தரகாண்டில் ஏற்கனவே பொது சிவில் சட்டம் அமலில் உள்ளது.</p><p>குஜராத் , மத்தியப் பிரதேசம், அசாம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் அந்தந்த மாநில சட்டமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெற்றுள்ளது</p><p>நேற்று முன் தினம் மும்பையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய <a href="https://www.maalaimalar.com/news/national/uniform-civil-code-to-be-implemented-in-all-21-nda-ruled-states-by-2029-amit-shah">அமித் ஷா</a>, 2029ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பாக, என்டிஏ ஆட்சியிலுள்ள 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார்.</p> <h2>போர்க்கொடி</h2><p>பீகாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் - பாஜகவின் என்டிஏ கூட்டணி ஆட்சியில் உள்ளது. கடந்த ஏப்ரலில் மாநிலங்கவளை எம்.பி சீட்டுக்காக மாநில முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அங்கு தற்போது பாஜகவின் சாம்ராட் சவுத்ரி முதல்வராக உள்ளார். நிதிஷ் குமாரின் மகனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.</p><p>பாஜகவை சேர்ந்தவர் முதல்வராக இருந்தாலும் மக்கள் செல்வாக்கு நிதிஷ் குமாருக்கே உள்ளது. பொது சிவில் சட்டம் விஷயத்தில் ஐக்கிய ஜனதா தளம் தொடக்கம் முதல் ஒரு விசித்திர நிலைப்பாட்டில் தான் உள்ளது.</p> <p>அதாவது, நாடாளுமன்றத்தில் பொது சிவில் சட்டத்தை ஆதரித்து வாக்களித்த ஐக்கிய ஜனதா தளம், பீகாரில் அதை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நிதிஷ் குமாரும் இதுகுறித்து தன் நிலைப்பாட்டை ஏற்கனவே அறிவித்திருந்தார்.</p><p>அமித் ஷாவின் கருத்துக்கு பின் பேசிய ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் ஷியாம் ரஜக், "இவ்விவகாரம் குறித்த எங்கள் கட்சியின் நிலைப்பாடு முன்பே எங்கள் தலைவரால் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>நாடாளுமன்றத்தில் பொது சிவில் சட்ட மசோதாவை எங்கள் கட்சி ஆதரித்தாலும், பீகாரில் அதைச் செயல்படுத்துவதற்கு நாங்கள் ஆதரவாக இல்லை என்று அவர் கூறியிருந்தார்," என்று தெரிவித்தார்.</p><p>ஐக்கிய ஜனதா தள செயல் தலைவர் சஞ்சய் ஜா, "பொது சிவில் சட்டம் குறித்து விவாதிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்துப் பேசவுள்ளோம்." என தெரிவித்துள்ளார்.</p> <h2>பிற என்டிஏ கட்சிகள் நிலைப்பாடு</h2><p>பீகாரில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ராம் விலாஸ் எல்ஜேபி கட்சி தலைவரும் மத்திய அமைச்சருமான சிராக் பஸ்வான் பேசுகையில், "நாட்டின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மை இரண்டிற்கும் எங்கள் கட்சி கட்டுப்பட்டது. </p><p>அரசியலமைப்பு சட்டமே பழங்குடியினருக்கு சிறப்பு விலக்குகளை வழங்கியுள்ளது. பொது சிவில் வரைவு வெளிப்படையாக வெளியிடப்பட்டு ஆலோசனைகள் நடந்த பிறகே முடிவை அறிவிப்போம்." என தெரிவித்துள்ளார்.</p> <p>அதேநேரம் ஆந்திராவில் என்டிஏ கூட்டணியில் இடம்பெற்று ஆட்சியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர் லவு ஸ்ரீ கிருஷ்ண தேவராயலு கூறுகையில், "தற்போது இதுகுறித்து எந்த விவாதமும் இல்லை. தேவை ஏற்படும் போது, அனைத்துத் தரப்பினரையும் கலந்தாலோசித்த பிறகே முடிவெடுக்கப்படும்." என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 15.9.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு வாகன வழியில் செலவு உண்டு</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-15-september-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-15-september-2026#comments</comments><guid isPermaLink="false">8486b5df-c039-4698-aad4-ee913ca7960e</guid><pubDate>Tue, 15 Sep 2026 01:47:23 +0000</pubDate><atom:updated>2026-09-15T01:47:23.847Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/10/19854207-rasi2.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/10/19854207-rasi2.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>புகழ் கூடும் நாள். புதிய மனிதர்களின் சந்திப்பு உண்டு. நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.</p><h2>ரிஷபம்</h2><p>நாடாளும் நபர்களின் நட்பால் நலம் சேரும் நாள். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.</p> <h2>மிதுனம்</h2><p>ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமையும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். தொழிலில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு உண்டு.</p><h2>கடகம்</h2><p>வளர்ச்சி கூடும் நாள். பக்குவமாகப் பேசிப் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பழைய பிரச்சனைகள் படிப்படியாக மாறும். உத்தியோக மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.</p> <h2>சிம்மம்</h2><p>விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பிற்கு பாத்திரமாவீர்கள்.</p><h2>கன்னி</h2><p>பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை.</p> <h2>துலாம்</h2><p>எதிரிகள் உதிரியாகும் நாள். குடும்ப ஒற்றுமை பலப்படும். கொடுக்கல் வாங்கல்களில் ஆதாயம் உண்டு. கவுரவப் பதவிகள் வரலாம். சொத்துப் பிரச்சனை சுமுகமாக முடியும்.</p><h2>விருச்சிகம்</h2><p>நாட்டுப்பற்று மிக்கவர்களின் நல்லாதரவு கிடைக்கும் நாள். விழாக்களில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் ஆலோசனைகளை மேலதிகாரிகள் ஏற்றுக் கொள்வர்.</p> <h2>தனுசு</h2><p>விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். சுபகாரியம் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். வியாபார விருத்திக்கு நண்பர்கள் உதவி செய்வர்.</p><h2>மகரம்</h2><p>யோசித்து செயல்பட வேண்டிய நாள். பொருளாதார நெருக்கடி ஏற்படும். தொழில் ரீதியான பிரச்சனைகளுக்கு முடிவெடுக்க முடியாது. வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.</p> <h2>கும்பம்</h2><p>முன்னேற்றம் கூடும் நாள். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். தகுந்த நபர்களின் ஆலோசனைகள் தக்க விதத்தில் கைகொடுக்கும். கல்யாணக் கனவுகள் நனவாகும்.</p><h2>மீனம்</h2><p>மனக்கலக்கம் ஏற்படும் நாள். தொழிலில் மறைமுகப் போட்டிகள் உருவாகும். வாகன வழியில் செலவு உண்டு. எடுத்த காரியங்களை நிறைவேற்ற இயலாது.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/topnews/chennai-fuel-price-update-iran-conflict-pushes-crude-oil-up-todays-petrol-and-diesel-rates-announced-6</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/chennai-fuel-price-update-iran-conflict-pushes-crude-oil-up-todays-petrol-and-diesel-rates-announced-6#comments</comments><guid isPermaLink="false">222729b8-f158-4d47-903d-33285ac0efc4</guid><pubDate>Tue, 15 Sep 2026 01:34:45 +0000</pubDate><atom:updated>2026-09-15T01:34:45.943Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டீசல் விலை,Diesel price,Petrol Price,பெட்ரோல் விலை,இன்றைய பெட்ரோல் விலை,Todays petrol price</media:keywords><media:content height="576" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/1xkldom8/maalai-malar2026-08-14alj4ing3maalai-malar2026-07-28zqvhuwkktn-2.avif" width="1024"><media:title type="html"><![CDATA[ பெட்ரோல், டீசல் விலை நிலவரம்]]></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல், டீசல் விலை நிலவரம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/1xkldom8/maalai-malar2026-08-14alj4ing3maalai-malar2026-07-28zqvhuwkktn-2.avif?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>வணிகம் (Business)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பெட்ரோல், டீசல் விலை</h2><p>இன்றைய (15.09.2026 - செய்வாய்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/saudi-arabia-seeks-us-help-against-houthis">ஈரான் போரினால்</a> மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p><h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது.</p><p>அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.</p><h2>கச்சா எண்ணெய் விலை</h2><p>இன்று சர்வதேச சந்தையில் பிரனட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு106 டாலர் என விற்பனை ஆகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>ரெட்ரோ ஸ்டைல்‌ ஏஐ படங்களை உருவாக்குவதற்கு பின்னால் இருக்கும் கசப்பான உண்மை! </title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/the-bitter-truth-behind-creating-retro-style-ai-images</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/the-bitter-truth-behind-creating-retro-style-ai-images#comments</comments><guid isPermaLink="false">efac3df8-b554-408d-8786-9ee9501a98cd</guid><pubDate>Tue, 15 Sep 2026 00:53:07 +0000</pubDate><atom:updated>2026-09-15T00:53:07.580Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Artificial Intelligence,AI technology,ஏஐ தொழில்நுட்பம்,வைரல்,viral,செயற்கை நுண்ணறிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/fo0e3ham/tn-25.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஏஐ ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஏஐ ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/fo0e3ham/tn-25.jpg?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தொழில்நுட்பம் (Technology)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>Gallery</category><content:encoded><![CDATA[ <p>'ரெட்ரோ ஸ்டைல்‌' ஏஐ புகைப்படங்களை உருவாக்க என்ன செலவாகும், அதற்கு பின்னே இருக்கும் பெரிய செயல்முறையை இதில் அறிவோம். </p><p>சமூக வலைத்தளங்களில்‌ தற்போது 1980களின்‌ 'ரெட்ரோ ஸ்டைல்‌' புகைப்படங்கள்‌ வைரலாகி வருகின்றன. </p><p>அந்த காலகட்டத்தில்‌ பயன்படுத்தப்பட்ட சிகை அலங்காரம்‌, ஆடைகள்‌, ஸ்டூடியோ பின்னணி உள்ளிட்ட அம்சங்களுடன்‌ தங்களது புகைப்படங்களை மாற்றி பலரும்‌ பதிவிட்டு 'டிரெண்டிங்‌' ஆக்கி வருகின்றனர்‌. </p><p>இதற்காக பெரிய அளவில்‌ எந்த முயற்கியும்‌ தேவையில்லை. சாட்‌ ஜிபிடி போன்ற <a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-warns-against-weaponisation-of-critical-minerals">செயற்கை நுண்ணறிவு</a> கருவிகளில்‌ புகைப்படத்தை பதிவேற்றிவிட்டு, 1960களின்‌ ஸ்டைலில்‌ மாற்றி அமைக்கும்படி கட்டளையிட்டால்‌ போதும்‌.</p><p>சில ஏ.ஐ. கருவிகளே அதற்கான 'பிராம்ப்ட்‌-ஐ வழங்குகின்றன. இதனால்‌ ஒரே நபர்‌ ஏராளமான புகைப்படங்களை உருவாக்கி சமூக வலைத்தளங்களில்‌ உலவ விட்டு வருகின்றனர்‌.</p><p>ஆனால்‌, இலவசமாக உருவாக்கப்படும்‌ இந்த புகைப்படங்களுக்கு பின்னால்‌ மிகப்பெரிய அளவிலான மின்சாரம்‌, தண்ணீர்‌ மற்றும்‌ தொழில்நுட்ப வளங்கள்‌ பயன்படுத்தப்படுகின்றன.</p> <h2>உருவாக்கம்</h2><p>ஒரு புகைப்படத்தை ஏ.ஐ. மூலம்‌ உருவாக்கும்போது முதலில்‌ அது சர்வருக்கு அனுப்பப்படுகிறது. அங்கு நெட்வொர்க்‌ மற்றும்‌ சேமிப்பு வசதிகள்‌ பயன்படுத்தப்படுகின்றன. அதன்பிறகு, புகைப்படத்தில்‌ பாதுகாப்பு விதிகளுக்கு எதிரான உள்ளடக்கம்‌ உள்ளதா என்பது பரிசோதிக்கப்படுகிறது.</p><p>தொடர்ந்து. புகைப்படத்தை உருவாக்குவதற்கான முக்கிய கம்ப்யூட்டிங்‌ செயல்முறை தொடங்குகிறது.</p><p>இதற்காக ‘Hull’ உள்ளிட்ட சக்திவாய்ந்த பிராசசர்கள்‌ பயன்படுத்தப்படுகின்றன. அவை அதிக மின்சாரத்தை பயன்படுத்துவதுடன்‌ வெப்பத்தையும்‌ உருவாக்குகின்றன. இந்த வெப்பத்தை கட்டுப்படுத்த தரவு மையங்களில்‌ குளிரூட்டும்‌ அமைப்புகள்‌ செயல்படுகின்றன. இதற்கும்‌ தண்ணீர் தேவைப்படுகிறது.</p> <h2>செலவு</h2><p>ஏ.ஐ. நிறுவனத்தின்‌ இரண்டு வெவ்வேறு மென்பொருட்கள்‌ அல்லது செயலிகள்‌ ஒன்றுக்கொன்று தகவல்களைப்‌ பரிமாறிக்கொள்ள உதவும்‌ செயலி நிரலாக்க இடைமுகம்‌ (ஏ.பி.ஐ.) விலையை அடிப்படையாகக்‌ கொண்டால்‌, 1024x1024 பிக்சல் அளவிலான அதாவது 27:09 செமீ. என்ற சமச்சீர்‌ அளவிலான 10 குறைந்த தரத்திலான ஏ.ஐ. படங்களை உருவாக்க சுமார்‌ ரூ.10, நடுத்தர தரத்திலான 10 படங்களுக்கு சுமார்‌ ரூ.36, உயர்தர 10 படங்களுக்கு சுமார்‌ ரூ.142 செலவாகிறது என நிபுணர்கள்‌ கூறுகிறார்கள்‌.</p><p>இது ஏ.ஐ. நிறுவனங்களின்‌ அடிப்படை செலவு மட்டுமே. மின்சாரம்‌, தண்ணீர்‌. பாதுகாப்பு உள்ளிட்ட பிற செலவுகள்‌ இதில்‌ அடங்காது. ஏ.ஐ. மூலம்‌ ஒரு புகைப்படத்தை உருவாக்க சுமார்‌ 1.2 வாட்‌ மின்சாரம்‌ பயன்படுத்தப்படலாம்‌ என்று நிபுணர்கள்‌ மதிப்பிட்டுள்ளனர்‌.</p><p>ஆனால்‌, பயன்‌படுத்தப்படும்‌ ஏ.ஐ. மாடல்‌ மற்றும்‌ கம்ப்யூட்டிங்‌ அமைப்பைப்‌ பொறுத்து இந்த அளவு மாறுபடலாம்‌. சில மதிப்பீடுகளில்‌ ஒரு படத்திற்கு 0.1 முதல்‌ 4 வாட்‌ வரை மின்சாரம்‌ தேவைப்படலாம்‌ என கூறப்படுகிறது.</p><h2>தாக்கம்</h2><p>ஒரு நபர்‌ ஒன்று அல்லது இரண்டு படங்களை உருவாக்குவது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆனால்‌, உலகம்‌ முழுவதும்‌ கோடிக்கணக்கான மக்கள்‌ ஒரே நேரத்தில்‌ ஏ.ஐ. புகைப்படங்களை உருவாக்கும்போது அதன்‌ மொத்த தாக்கம்‌ அதிகரிக்கிறது. </p><p>ஏ.ஐ. பயன்பாடு அதிகரித்து வரும்‌ நிலையில்‌, மின்சாரம்‌ மற்றும்‌ தண்ணீர்‌ தேவையும்‌ அதிகரிக்கும்‌ அபாயம்‌ உள்ளது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/security-reduced-for-ex-cm-o-panneerselvam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/security-reduced-for-ex-cm-o-panneerselvam#comments</comments><guid isPermaLink="false">c94b388a-9311-4610-a279-ac26cce88214</guid><pubDate>Tue, 15 Sep 2026 00:36:06 +0000</pubDate><atom:updated>2026-09-15T00:36:06.542Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>O Panneerselvam,ஓபிஎஸ்,OPS,ஓ பன்னீர்செல்வம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/0v27enl0/OPS.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ OPS]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/0v27enl0/OPS.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ் நாட்டில் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளார். <a href="https://www.maalaimalar.com/topic/aiadmk">அ.தி.மு.க.</a> ஆட்சிக்காலத்தில் மூன்று முறை முதலமைச்சராக அவர் பதவி வகித்துள்ளார். மேலும் துணை முதலமைச்சர், நிதி அமைச்சர் உள்பட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். </p><p>அ.தி.மு.க.-வில் இருந்து நீக்கப்பட்டு இருந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் <a href="https://www.maalaimalar.com/topic/ops">ஓ. பன்னீர்செல்வம்</a> தி.மு.க.வில் இணைந்தார். பின்னர் நடந்த சட்டமன்ற தேர்தலில் போடி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.</p><h2>திடீர் பாதுகாப்பு குறைப்பு:</h2><p>முன்னாள் முதலமைச்சர் என்ற அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு திடீரென பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல் துறை சார்பில் அவருடைய வீட்டுக்கு அளிக்கப்பட்டிருந்த துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப் பட்டுள்ளது.</p><p>அவருடைய வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஆயுதப்படை பிரிவுக்கு திரும்ப அழைக்கப்பட்டனர். அதுபோல், 'வி.ஐ.பி.' வாகன பாதுகாப்பும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. அவருக்கான பாதுகாப்பு 'ஒய்' பிரிவில் இருந்து 'எக்ஸ்' பிரிவாக குறைக்கப்பட்டுள்ளது. 'எக்ஸ்' பிரிவு என்பது அடிப்படை பாதுகாப்பு ஆகும்.</p><h2>காவல் துறை விளக்கம்:</h2><p>இதுகுறித்து காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "மத்திய பாதுகாப்பு அமைப்புகளால் 'அச்சுறுத்தல் மதிப்பீட்டு ஆய்வு' மேற்கொள்ளப்பட்டு, மத்திய உள்துறை அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.</p><p>மத்திய பாதுகாப்பு அமைப்புகளால் அச்சுறுத்தல் மதிப்பீட்டு ஆய்வின் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்பட்ட 'ஒய்' பிரிவு பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது" என்றனர்.</p><p>முன்னதாக முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு இருந்த பாதுகாப்பும் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>2-ஆவது டி20 போட்டி: இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/afg-vs-ind-2nd-t20-match-today</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/afg-vs-ind-2nd-t20-match-today#comments</comments><guid isPermaLink="false">8d9ed141-a4d2-4c89-9e38-4b34fbf96b61</guid><pubDate>Tue, 15 Sep 2026 00:08:19 +0000</pubDate><atom:updated>2026-09-15T00:08:19.133Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>T20 Cricket,டி20 கிரிக்கெட்,india vs afghanistan,இந்தியா-ஆப்கனிஸ்தான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/7n8sbhgu/IND-vs-AFG.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ IND vs AFG]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/7n8sbhgu/IND-vs-AFG.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் டி20 <a href="https://www.maalaimalar.com/sports/cricket">கிரிக்கெட்</a> தொடரின் 2-ஆவது போட்டி, டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.</p><p>இந்தியா வந்துள்ள <a href="https://www.maalaimalar.com/topic/india-vs-afghanistan">ஆப்கானிஸ்தான்</a> அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியை எதிர்கொண்டு விளையாடுகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகள் இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.</p><h2>இந்திய அணி தடுமாற்றம்:</h2><p>இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்குகிறது.</p><p>காயம் காரணமாக ஹா்திக் பாண்டியா இந்தத் தொடரில் விளையாடாத நிலையில், 5-ஆவது பந்துவீச்சாளர் வாய்ப்புக்கு பொருத்தமான வீரா் இல்லாமல் இந்திய அணி தடுமாறுகிறது. பேட்டிங்கில் அபிஷேக் சா்மா, இஷான் கிஷண் உள்ளிட்டோரும், பந்துவீச்சில் ஜஸ்பிரீத் பும்ரா, அா்ஷ்தீப் சிங் ஆகியோரும் பலம் சோ்க்கின்றனா்.</p><h2>தொடரில் இருந்து விலகல்:</h2><p>சஞ்சு சாம்சன் நல்லதொரு இன்னிங்ஸை மீண்டும் வழங்க வேண்டிய எதிா்பாா்ப்பு ரசிகா்களிடையே உள்ளது. இந்திய சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவா்த்தி இடுப்பு பகுதி காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து நேற்று (திங்கள்கிழமை) விலகினாா்.</p><p>ஏற்கெனவே காயத்தில் இருந்து மீண்டு வந்த அவா், தற்போது மீண்டும் காயம் அடைந்துள்ளதால், இந்தத் தொடர் மட்டுமின்றி ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதும் சந்தேகத்துக்கு இடமாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>உள்கட்டமைப்புகளை தாக்கமாட்டோம் என உறுதியளித்தால், ரஷ்யா மீதான தாக்குதல்களை நிறுத்த தயார் - ஜெலன்ஸ்கி</title><link>https://www.maalaimalar.com/news/world/zelenskyy-says-ukraine-will-pause-strikes-on-russia-if-kremlin-spares-critical-infrastructure</link><comments>https://www.maalaimalar.com/news/world/zelenskyy-says-ukraine-will-pause-strikes-on-russia-if-kremlin-spares-critical-infrastructure#comments</comments><guid isPermaLink="false">9e701c48-c3be-4a98-8003-b4a0e758051a</guid><pubDate>Mon, 14 Sep 2026 23:46:46 +0000</pubDate><atom:updated>2026-09-14T23:46:46.867Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Russia,ரஷ்யா,Volodymyr Zelenskyy,வோலோடிமிர் ஜெலன்ஸ்கி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/w5csvotm/Volodymyr-Zelenskyy.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Volodymyr Zelenskyy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/w5csvotm/Volodymyr-Zelenskyy.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உக்ரைனின் முக்கிய உள்கட்டமைப்புகளைத் தாக்கமாட்டோம் என்று ரஷ்யாவிடம் இருந்து உண்மையான உறுதிமொழியை தங்கள் நட்பு நாடுகள் பெற்று தந்தால், ரஷ்ய பகுதி மீதான தாக்குதல்களை நிறுத்த தயார் என்று அதிபர் <a href="https://www.maalaimalar.com/topic/volodymyr-zelenskyy">வோலோடிமிர் ஜெலன்ஸ்கி</a> கூறினார்.</p><p>ரஷ்யாவும் உக்ரைனும் ஒருவருக்கொருவர் எரிசக்தி உள்கட்டமைப்புகளை தாக்கிக்கொள்ளக்கூடாது என்று ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் <a href="https://www.maalaimalar.com/topic/volodymyr-zelenskyy">டொனால்டு டிரம்ப்</a> சமூக வலைதள பதிவு ஒன்றில் கூறியதை தொடர்ந்து ஜெலன்ஸ்கியின் இந்தக் கருத்துகள் வெளியாகியுள்ளன. இருப்பினும், அந்த ஒப்பந்தம் குறித்த கூடுதல் விவரங்களை டிரம்ப் அளிக்கவில்லை. </p><p>டிரம்பின் இந்தக் கூற்று குறித்து ரஷ்யா உடனடியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. பகுதி அளவிலான போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான முந்தைய முயற்சிகள் பலமுறை சில மணிநேரங்களிலேயே முறிந்துபோயுள்ளன; இரு தரப்பினரும் விதிமீறல்களுக்காக ஒருவரையொருவர் குற்றம் சாட்டியதே இதற்குக் காரணமாக அமைந்தது. </p><h2>நட்பு நாடுகள் உதவ வேண்டும்:</h2><p>அந்த ஒப்பந்தம் குறித்த கூடுதல் விவரங்களை டிரம்ப் வழங்கவில்லை. ஆனால், ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் டீசல் உற்பத்தி, விநியோகத்திற்குப் பயன்படும் பிற உள்கட்டமைப்புகளைத் தாக்குவதை நிறுத்துமாறு ஜெலன்ஸ்கியை அமெரிக்க அதிபர் வலியுறுத்திய மறுநாளே இது நிகழ்ந்துள்ளது; இத்தாக்குதல்கள் உலகளாவிய பற்றாக்குறையை ஏற்படுத்துவதாக அவர் கூறினார்.</p><p>அமெரிக்காவில் டீசல் விலைகள் உயர்ந்துள்ளன; ஈரான் தொடர்பான மோதல்களால் ஏற்பட்டுள்ள அதிக எரிபொருள் செலவுகள், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்களில் டிரம்பின் கட்சிக்கு ஒரு முக்கியப் பிரச்சினையாக மாறியுள்ளன.</p><p>உலகளாவிய டீசல் எரிபொருள் விலை உயர்வு "பெரும்பாலும் ரஷ்யா-உக்ரைன் போரினால் ஏற்படுகிறது" என்றும், ஈரானால் அல்ல என்றும் டிரம்ப் கூறினார்.</p><p>ஆனால், ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் ஓட்டம் குறைந்தது மற்றும் ரஷ்யாவில் சேதமடைந்த சுத்திகரிப்பு அமைப்புகள் காரணமாக விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டிருப்பது எரிசக்தி சந்தையில் நெருக்கடிகளை ஏற்படுத்துகிறது. ரஷ்யாவுடன் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள நட்பு நாடுகள் உதவ வேண்டும் என்று உக்ரைன் முன்மொழிந்துள்ளதாக ஜெலன்ஸ்கி தனது பதிவில் தெரிவித்தார். கீவ் இத்தகைய யோசனையை முன்வைப்பது இது முதல் முறையல்ல.</p><h2>உறுதியான முன்மொழிவுகளை எதிர்பார்க்கிறேன்:</h2><p>"ஒவ்வொரு நாளும் உக்ரைனின் எரிசக்தி நிலையங்கள், துறைமுக உள்கட்டமைப்பு, தளவாட வசதிகள் மற்றும் உணவு மற்றும் மருந்து கிடங்குகள் கூட தாக்குதலுக்கு உள்ளாகின்றன. போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.</p><p>முக்கிய உள்கட்டமைப்புகள் தொடர்பான பதற்றத்தைக் குறைக்கும் நடவடிக்கை, அமைதியை நோக்கிய முதல் படியாக அமையலாம். எங்கள் நட்பு நாடுகளிடமிருந்து உறுதியான முன்மொழிவுகளை எதிர்பார்க்கிறேன்" என்று ஜெலன்ஸ்கி கூறினார்.</p><p>தாக்குதல்களை நிறுத்துமாறு ஞாயிற்றுக்கிழமையன்று டிரம்ப் ஜெலன்ஸ்கியை வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் சார்ந்த பொருளாதார கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு கீவ் நகருக்கு விடுக்கப்படும் எந்தவொரு அழைப்பும் வரவேற்கத்தக்கது மட்டுமே என்று கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>வெற்றிக்கு பின் ஆசிய கோப்பையை பெற்றுக்கொள்ளாத விவகாரம் - பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கருத்து</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/bcci-vice-president-rajeev-shukla-on-asia-cup-trophy-row</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/bcci-vice-president-rajeev-shukla-on-asia-cup-trophy-row#comments</comments><guid isPermaLink="false">9179ca5c-2016-4a81-af28-6e85db82aceb</guid><pubDate>Mon, 14 Sep 2026 23:04:36 +0000</pubDate><atom:updated>2026-09-14T23:04:36.987Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BCCI,Rajeev Shukla,ராஜீவ் சுக்லா,Womens Asia Cup,பிசிசிஐ,மகளிர் ஆசிய கோப்பை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/f62f1ejo/Rajeev-Shukla.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rajeev Shukla]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/f62f1ejo/Rajeev-Shukla.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மொஹ்சின் நக்வியிடம் இருந்து ஆசிய கோப்பையை பெற்றுக்கொள்ள இந்திய மகளிர் அணி மறுத்தது வாரியத்தின் "கூட்டு முடிவு" என்றும், ஆசிய <a href="https://www.maalaimalar.com/sports/cricket">கிரிக்கெட்</a> கவுன்சில் தலைவரும் இதற்கு "எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை" என்றும் <a href="https://www.maalaimalar.com/topic/bcci">பிசிசிஐ</a> துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்தார்.</p><p>ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இருப்பினும், கடந்த ஆண்டு 26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, ஆண்கள் அணி கடைப்பிடித்த நடைமுறையை பின்பற்றி, இந்திய மகளிர் அணியும் நக்வியிடம் இருந்து கோப்பையை பெற்றுக்கொள்ளவில்லை.</p><h2>ராஜீவ் சுக்லா விளக்கம்:</h2><p>"நாங்கள் இது குறித்து எங்களுக்குள் விவாதித்து, அவரிடமிருந்து (நக்வி) கோப்பையை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்தோம். இது எங்கள் கூட்டு முடிவு. அவரும் (நக்வி) இதற்கு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை," என்று அணியுடன் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்த பிறகு சுக்லா செய்தியாளர்களிடம் கூறினார்.</p><p>"நாங்கள் எங்கள் அணிக்கு அதற்கேற்ப தகவல் தெரிவித்தோம்; அவர் யாருக்கு வழங்க வேண்டுமோ அவருக்கு அதை வழங்கிவிட்டுச் சென்றார்," என்றும் சுக்லா மேலும் கூறினார்.</p><p>இந்த மூத்த நிர்வாகியின் கருத்துக்கள் பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சைகியாவின் நிலைப்பாட்டைப் பிரதிபலிப்பதாக அமைந்திருந்தன.</p><h2>இந்திய அணி பங்கேற்காது:</h2><p>"தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு நாங்கள் ஒரு தெளிவான முடிவை எடுத்திருந்தோம். இத்தகைய சூழலில் கோப்பை வழங்கும் நிகழ்வில் இந்திய அணி பங்கேற்காது என்பது குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ACC) முன்பே தெரிவிக்கப்பட்டிருந்தது," என்று சைகியா முன்னதாக பிடிஐ-யிடம் கூறியிருந்தார்.</p><p>ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியின் போது சைகியா நக்வியுடன் பேசுவது போன்ற சில படங்கள் முன்னதாக வெளியாகியிருந்தன; ஆனால் அது வெறும் "வழக்கமான உரையாடல்" மட்டுமே என்று சுக்லா கூறினார்.</p><p>"சைகியா ஜி கூறியது முற்றிலும் சரியானது. ஒரு போட்டியின் போது அனைவரும் அங்கு இருப்பார்கள், தொழில்முறை ரீதியாக ஒருவருக்கொருவர் உரையாடுவார்கள். அது குறித்து இவ்வளவு விமர்சனங்கள் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை," என்று அவர் கூறினார்.</p><h2>ராஜீவ் சுக்லா நம்பிக்கை:</h2><p>ஆசியக் கோப்பை வெற்றிக்காக அணிக்கு வாழ்த்து தெரிவித்த சுக்லா, ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் அணி சிறப்பாகச் செயல்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.</p><p>"நாங்கள் ஆசியக் கோப்பை சாம்பியன்களாகிவிட்டோம். எங்கள் வீராங்கனைகள் மீண்டும் ஒருமுறை எங்களுக்குப் பெருமை சேர்த்துள்ளனர்; எதிர்காலத்திலும் நாங்கள் தொடர்ந்து வெற்றி பெறுவோம். அணி இப்போது ஜப்பானுக்குச் செல்கிறது; அங்கேயும் நாங்கள் வெற்றியைப் பெறுவோம் என்பதில் முழு நம்பிக்கை உள்ளது," என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: மக்களுக்கும், தொண்டர்களுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-on-rajasthan-civic-poll-results</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-on-rajasthan-civic-poll-results#comments</comments><guid isPermaLink="false">01ad718a-0e1b-45a5-9a8f-30028c8809d3</guid><pubDate>Mon, 14 Sep 2026 21:11:02 +0000</pubDate><atom:updated>2026-09-14T21:11:02.800Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rajasthan,pm modi,உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்,பிரதமர் மோடி,ராஜஸ்தான்,civic poll results</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-21/fzdjthpk/PMModi0001.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரதமர் மோடி]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர் மோடி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-21/fzdjthpk/PMModi0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராஜஸ்தான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் பாஜக பெற்ற வெற்றியைப் பிரதமர் <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">நரேந்திர மோடி</a> திங்கள்கிழமை வரவேற்றார். இந்த வெற்றி, "பொய்யின் எதிரொலி"க்கு எதிரான உண்மையின் வெற்றிக்குச் சான்றாக அமைந்துள்ளது என்று அவர் கூறினார். </p><p>ராஜஸ்தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியை பின்னுக்கு தள்ளி பா.ஜ.க. முன்னிலை பெற்றது; எதிர்க்கட்சியான <a href="https://www.maalaimalar.com/topic/congress">காங்கிரஸ்</a> 3,613 வார்டுகளில் வெற்றி பெற்ற நிலையில், பா.ஜ.க. 4,179 வார்டுகளில் வெற்றி பெற்றது. மேலும், மாநிலத்தில் உள்ள 10 மாநகராட்சிகளில் நான்கில் பா.ஜ.க. தெளிவான பெரும்பான்மையை பெற்றது.</p><h2>எக்ஸ் தள பதிவு:</h2><p>"ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல்களில் பா.ஜ.க.வுக்கு பெரும் வெற்றியை தேடித்தந்த மக்களுக்கு மனமார்ந்த நன்றிகள். இது பொய்யின் எதிரொலிக்கு எதிரான உண்மையின் வெற்றிக்கு சான்றாகும்," என்று பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.</p><p>'டபுள்-என்ஜின்' (மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த) ஆட்சியின் நல்லாட்சி மற்றும் வளர்ச்சி சார்ந்த கொள்கைகளுக்கு மக்களின் முழு ஆதரவு உள்ளது என்பதை, மக்கள் வழங்கிய இந்த தீர்ப்பு மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தியுள்ளது என்று பிரதமர் கூறினார்.</p><h2>தொண்டர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்:</h2><p>இந்த வெற்றியின் மூலம், மாநிலத்தை வளர்ச்சியின் புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்வதற்கும், ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்விலும் மகிழ்ச்சியைக் கொண்டு வருவதற்கும் பா.ஜ.க. கொண்டுள்ள உறுதிப்பாடு மேலும் வலுப்பெறும் என்று மோடி குறிப்பிட்டார்.</p><p>"இந்தத் தருணத்தில், வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களுக்கும், அதேபோல கட்சியின் அர்ப்பணிப்புமிக்க மற்றும் கடின உழைப்பாளிகளான தொண்டர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்," என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிமுடன் கேரள முதல்வர் சதீசன் சந்திப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/keralam-cm-satheesan-meets-malaysia-pm-anwar-ibrahim</link><comments>https://www.maalaimalar.com/news/national/keralam-cm-satheesan-meets-malaysia-pm-anwar-ibrahim#comments</comments><guid isPermaLink="false">0efa3562-3f7e-467c-92ce-b9bdb80da783</guid><pubDate>Mon, 14 Sep 2026 20:49:47 +0000</pubDate><atom:updated>2026-09-14T20:49:47.015Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Anwar Ibrahim,அன்வர் இப்ராஹிம்,கேரளம்,Keralam,சதீசன்,Satheesan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/p9l3clgm/Keralam-CM-Satheesan-and-Malaysia-PM.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிமுடன் கேரள முதல்வர் சதீசன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/p9l3clgm/Keralam-CM-Satheesan-and-Malaysia-PM.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world">மலேசிய</a> பிரதமர் அன்வர் இப்ராகிம் கேரளாவில் தங்கியிருந்தபோது, ​​திங்கள்கிழமை அன்று செலம்பிராவில் உள்ள ஒரு நல்வாழ்வு மையத்தில் <a href="https://www.maalaimalar.com/news/national">கேரள</a> முதல்வர் வி.டி. சதீசன் அவரை சந்தித்தார். </p><p>மாலை கரிப்பூர் விமான நிலையத்திலிருந்து மாலத்தீவுக்குப் புறப்படுவதற்கு முன்னதாக, கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மற்றும் தொழிலதிபர்களும் பிரதமர் இப்ராகிமை சந்தித்தனர். </p><p>டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு, ஞாயிற்றுக்கிழமை மாலை கேரளம் வந்தடைந்த இப்ராகிம், அந்த நல்வாழ்வு மையத்தில் தங்கியிருந்தார். </p><p>கேரள மக்கள் தொடர்புத் துறை (PRD) வெளியிட்ட தகவல்களின்படி, மலேசியப் பிரதமருடனான சந்திப்பிற்காக சதீசன் பிற்பகல் 2.30 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் அந்த மையத்திற்கு வந்து சேர்ந்தார். </p><p>மக்கள் தொடர்புத் துறை வெளியிட்ட புகைப்படங்களின்படி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்களான சையத் சாதிக் அலி ஷிஹாப் தங்கல் மற்றும் கேரள தொழில்துறை அமைச்சரான பி.கே. குன்ஹாலிகுட்டி ஆகியோரும் இச்சந்திப்பில் உடனிருந்தனர். </p><p>சதீசன், பாரம்பரிய கதகளி கலை வடிவத்தை மையமாக கொண்ட நினைவு பரிசை இப்ராகிமுக்கு வழங்கினார்.</p><h2>சமூக வலைத்தள பதிவு:</h2><p>பின்னர், சதீசனுடனான தனது சந்திப்பு குறித்த புகைப்படங்களை இப்ராகிம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார்.</p><p>"குறிப்பாகப் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தகம், முதலீட்டை அதிகரிப்பதன் மூலம் மலேசியா-இந்தியா உறவை வலுப்படுத்துவதில் கேரளாவின் பெரும் ஆற்றல் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள இச்சந்திப்பு வாய்ப்பளித்தது," என்று அவர் கூறினார்.</p><p>"டிஜிட்டல் பொருளாதாரம், சுகாதாரம், சுற்றுலா, கல்வி மற்றும் உயர் மதிப்புள்ள துறைகளில் ஒத்துழைப்பு மற்றும் வாய்ப்புகள் குறித்து நாங்கள் ஆராய்ந்தோம். வணிக உறவுகள், மக்களிடையேயான பரிமாற்றங்கள் மற்றும் நெருக்கமான வரலாற்று மற்றும் கலாச்சாரத் தொடர்புகள் ஆகியவை வலுப்படுத்தப்பட வேண்டும்," என்றும் அவர் மேலும் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>விநாயகர் சதூர்த்தியை ஒட்டி நடிகர் சூர்யாவின் &quot;சீன்&quot; திரைப்படம் புது போஸ்டர் வெளியீடு</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/suriya-starrer-scene-movie-new-poster-released</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/suriya-starrer-scene-movie-new-poster-released#comments</comments><guid isPermaLink="false">a038d040-54aa-4db8-bb43-7330182c449e</guid><pubDate>Mon, 14 Sep 2026 18:27:25 +0000</pubDate><atom:updated>2026-09-14T18:27:25.285Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சூர்யா,jithu madhavan,scene,vசீன், ஜீத்து மாதவன், Suriya</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/eo4aq83r/Scene-movie-poster.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Scene Movie Poster ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/eo4aq83r/Scene-movie-poster.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விநாயகர் சதுர்த்தியை ஒட்டி நடிகர் சூர்யாவின் "சீன்" படக்குழு வாழ்த்து தெரிவித்து சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது.</p><p>நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகும் 47 ஆவது திரைப்படம் சீன். இயக்குநர் ஜித்து மாதவன் இப்படத்தினை இயக்கியு வருகிறார்.</p><p>இதனை, சூர்யாவின் புதிய தயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கான படப்பிடிப்பு கேரளம், சென்னை பகுதிகளில் நடைபெற்று அண்மையில் முழுமையாக நிறைவடைந்ததாக படக்குழு விடியோ வெளியிட்டு அறிவித்தது.</p><h2>விநாயகர் சதுர்த்தி வாழ்த்து:</h2><p>இந்த நிலையில், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்து சிறப்பு போஸ்டர் ஒன்றை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.</p><p>சூர்யா நடிப்பில் வெளியான கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து வெளியாகும் படம் என்பதால் இந்தப் படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பாத்துக் காத்திருக்கின்றனர்.</p><p>மேலும், இப்படம் வரும் நவ. 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் வெற்றியை ஒட்டுமொத்த உலகமும் கண்டது: அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம்</title><link>https://www.maalaimalar.com/news/national/jaishankar-says-brics-summit-a-success</link><comments>https://www.maalaimalar.com/news/national/jaishankar-says-brics-summit-a-success#comments</comments><guid isPermaLink="false">71f596ad-5e29-4969-a517-5e73ef41d390</guid><pubDate>Mon, 14 Sep 2026 17:09:15 +0000</pubDate><atom:updated>2026-09-14T17:09:15.547Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Jaishankar,BRICS Summit,ஜெய்சங்கர்,பிரிக்ஸ் மாநாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/cb1d7071/Jaishankar.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jaishankar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/cb1d7071/Jaishankar.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மிகவும் பிரிவினைவாத சூழல் நிலவும் உலகில் <a href="https://www.maalaimalar.com/topic/brics">பிரிக்ஸ் உச்சிமாநாடு</a> நடைபெற்றது என்றும், அந்த சூழலிலும் தாங்கள் ஒருமித்த கருத்தை உருவாக்க முடிந்தது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார். இந்தியாவின் தலைமையின் கீழ் நடைபெற்ற இந்த மாபெரும் நிகழ்வு வெற்றிகரமாக அமைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/jaishankar">ஜெய்சங்கர்</a>, "பிரிக்ஸ் உச்சிமாநாடு எதிரெதிர் கருத்துக்கள் நிறைந்த உலகில் நடைபெற்றது; அங்கு இரண்டு முக்கிய மோதல்கள், பெரிய பிளவுகள் மற்றும் மிகவும் வலுவான கருத்துகள் மற்றும் நலன்கள் இருந்தன. இந்த துருவமயமாக்கலுக்கு மத்தியிலும், நாங்கள் ஒருமித்த கருத்தை உருவாக்கினோம். </p><p>உற்றுநோக்கினால், அன்றைய தினத்தின் மிகக் கடினமான விவகாரம் மேற்கு ஆசிய மோதலாக இருந்தது. ஆனால், அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு அறிக்கையை எங்களால் வெளியிட முடிந்தது," என்று கூறினார். </p><h2>உச்சிமாநாட்டின் வெற்றியை உலகமே கண்டது:</h2><p>தொடர்ந்து பேசிய அவர், "அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை, நீண்டகால புரிதல், உலகளாவிய வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலிகளின் சீரான இயக்கம், எரிசக்தி விநியோகம், அத்துடன் பொதுமக்களுக்கான உள்கட்டமைப்பை பாதுகாத்தல் ஆகியவற்றை வலியுறுத்தும் அறிக்கை அது.</p><p>வேறு சூழல்களில் ஒருவேளை சந்தித்திருக்காத தலைவர்கள் இந்த உச்சிமாநாட்டின் போது சந்தித்தனர். இது முக்கியமான விவகாரங்கள் குறித்த உலகளாவிய கலந்துரையாடலுக்கு பெரும் பங்களிப்பை அளித்தது. பிரிக்ஸ் (BRICS) இந்தியா உச்சிமாநாட்டின் வெற்றியை ஒட்டுமொத்த தேசமும், ஏன் உலகமே கூட கண்டது," என்றும் அவர் கூறினார்.</p><h2>நாடுகளை ஒன்றிணைக்கும் கருப்பொருள்:</h2><p>இந்த உச்சிமாநாட்டிற்கெனத் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் இருந்தது; அது 'குளோபல் சவுத்' (Global South - வளரும் நாடுகள்) பகுதிக்கான பொருளாதாரம், மேம்பாடு மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது என்று அவர் வலியுறுத்தினார்.</p><p>"'குளோபல் சவுத்' நாடுகளுக்காக குரல் கொடுப்பது – அதுவே இதில் இருந்து வெளிப்பட்ட மிக வலுவான செய்தியாக இருந்தது. இதில் இரண்டு கருப்பொருள்கள் மற்றும் இரண்டு அமர்வுகள் இருந்தன... முதல் அமர்வு சீர்திருத்தம் குறித்தும், இரண்டாவது அமர்வு மீள்திறன் குறித்தும் அமைந்திருந்தன. இவை நாடுகளை ஒன்றிணைக்கும் கருப்பொருள்களாக இருந்தன. ஒருமித்த கருத்து உருவானதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகும்," என்று ஜெய்சங்கர் கூறினார்.</p>]]></content:encoded></item></channel></rss>