<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 18 Aug 2026 07:31:50 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: 4 துறைகள் மீதான மானிய கோரிக்கை தொடங்கியது - 18 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-18-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-18-august-2026#comments</comments><guid isPermaLink="false">c27daa42-6f88-4a58-93d9-0737d7f66078</guid><pubDate>Tue, 18 Aug 2026 03:58:44 +0000</pubDate><atom:updated>2026-08-18T07:30:55.573Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/2xvhx5yb/speaker1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/2xvhx5yb/speaker1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காங்கிரஸ், பாஜக உடலில் இருப்பது ஒரே ஜீன் தான்.</p><p>உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நீட் தொடர்வதாக பாஜக உறுப்பினர் கூறுகிறார் - சிவி சண்முகம்</p><p>வைபவ் சூர்யவன்ஷி போல் குழந்தைகள் விளையாட்டில் சாதிக்க வேண்டும்.</p><p>டிஎன்பிஎஸ்சியில் 8 உறுப்பினர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.</p><p>தமிழகத்தில் அளவுக்க அதிகமாக உள்ள சுங்கச்சாவடிகளை மூட வேண்டும்.</p><p>மத்திய அரசிடம் பேசி சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக எம்எல்ஏ சிவக்குமார்</p><p>8 ஆண்டுகளுக்கு முன்பு அமைச்சராக இருந்தபோது தூர்வாரும் பணி நடைபெற்றது.</p><p>ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் நந்தன் கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்றது - சிவி சண்முகம்</p><h2>மானியக் கோரிக்கை விவாதம் - விக்கிரவாண்டி பாமக எம்எல்ஏ சிவக்குமார் உரை</h2><p>விக்கிரவாண்டியில் தொழிற்பயிற்சி கல்லூரி அமைத்து தர வேண்டும்.</p><p>விக்கிரவாண்டியில் சிங்கப்பெண் சிறப்புப் படை காவல் நிலையம் தேவை.</p><p>நந்தன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றித் தர வேண்டும்.</p><h2>காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பட் உரை</h2><p>நீட் எந்தெந்த மாநிலத்திற்கு தேவையோ அந்த மாநிலத்திற்கு கொண்டு வரலாம் என்று தான் சொன்னோம்.</p><p>காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த ஒவ்வொரு சட்டத்தையும் பில் திருத்தம் என்ற பெயரில் அனைத்து சட்டத்தையும் பாஜக அரசு திருத்திக்கொண்டு இருக்கிறது.</p><p>மக்களுக்கு எது தேவையோ அதை காங்கிரஸ் ஆட்சியில் நாங்கள் கொண்டு வந்தோம்.</p><p>அனைத்து திட்டங்களையும் திருத்திக்கொண்டு இருக்கும்போது மாணவர்களுக்கான இந்த திட்டத்தை திருத்துவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்?</p> <p>காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தான் நீட் வந்தது என தாரகை கத்பட் கூறி விட்டார் - பாஜக எம்எல்ஏ போஜராஜன்</p><p>கன்னியாகுமரியில் உள்ள அனைத்து குளங்களையும் இணைக்க வேண்டும் - தாரகை கத்பட்</p><p>குளச்சல் தொகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.</p><p>தாமிரபரணி, கோதையாறு, பரளியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் தேவை  - தாரகை கத்பட்</p> <p>பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மிகப்பெரிய சவாலாக உள்ளன. இரும்புக்கரம் கொண்டு குற்றங்களை அரசு அடக்க வேண்டும் - தாரகை கத்பட்</p><p>சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு காங்கிரஸ் வரவேற்பு.</p><p>மீனவர்கள் கைது பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.</p><p>கடலில் காணாமல் போகும் மீனவர்களை மீட்க கடல் ஆம்புலன்ஸ் தேவை - தாரகை கத்பட்</p><p>இருமொழிக் கொள்கையை பாதுகாப்பதிலும் காங்கிரஸ் உறுதியாக இருக்கும்.</p><p>IREL அரிய வகை தனிம நிறுவனத்தால் கடல் அரிப்பு, கடற்கரை சுருங்கி விட்டது  - தாரகை கத்பட்</p><p>காலை உணவுத்திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டியதற்க நன்றி. </p><p>காங்கிரஸ் திட்டங்களை மாற்றும் பாஜக, நீட் தேர்வை ஏன் மாற்றவில்லை?</p><p>100 நாள் வேலைத்திட்டத்தை நிறுத்துவதற்கு பாஜக முயற்சி செய்கிறது - தாரகை கத்பட்</p><h2>மானியக்கோரிக்கை விவாதம் - காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பட் உரை</h2><p>எனது வெற்றிக்கு உழைத்த கூட்டணி கட்சியினருக்கு நன்றி.</p><p>ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கொடுத்து, கூட்டணி கட்சிக்கு மரியாதை தந்தவர் விஜய்.</p><p>தவெக பட்ஜெட் ஏழை, எளிய மக்களுக்கான பட்ஜெட்.</p><p>தமிழகத்திற்கான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும்.</p><p>செம்மேடு - தாழம்பட்டு சாலை பெரிய ஓடையின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைத்து தர  வேண்டும் -  எம்எல்ஏ ராஜேந்திரன்</p><h2>என்எல்சி தொழிலாளர்கள் நலன் குறித்து அதிமுக எம்எல்ஏ ராஜேந்திரன் உரை</h2><p>சுற்றுவட்டார கிராமங்களின் மேம்பாட்டிற்கு என்எல்சி 3% சிஎஸ்ஆர் நிதி தர வேண்டும்.</p><p>சிஎஸ்ஆர் நிதி தொடர்பாக என்எல்சியை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/0nckklvs/thahira.jpg" /></figure><p>அந்த கவுரம் என்னை சார்ந்தது மட்டும் அல்ல. இஸ்லாமியர்கள் அனைவருக்குமான பெருமை அளிப்பதுபோல் நடத்தினார்.</p><p>அன்றே முடிவு செய்தேன். எந்த கட்சிக்காக இந்த இடத்திற்கு நான் வந்தேனோ சாகும் வரை இந்த ஆடை தான் அணிந்து இருப்பேன். இது என் அடையாளம் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்,.</p><p>தளபதியால் நான், தளபதிக்காகவே நான், என்றும் தலைமைக்கும் தளபதிக்கும் விசுவாசத்துடன் நன்றியுடன் நடந்து கொள்வேன் - எம்எல்ஏ தாஹிரா</p> <p>என்னைப்போன்ற பெண்களுக்கு முக்கிய இடத்தை கொடுத்து இந்த இடத்தில்  நிற்க வைத்து இருக்கிறார்.</p><p>எந்த அரசியல்வாதிகளும், எந்த அமைப்பில் இருப்பவர்களும் இஸ்லாமிய பெண்களுக்கு முதல் இடம் கொடுத்தது இல்லை.</p><p>எங்கள் தலைவர் கட்சியில் பதவி கொடுத்தபோது அவருடன் பக்கத்தில் அமரவைத்து கவுரவித்தார்.</p> <h2>கட்சி கொடி நிறத்தில் உடை அணிந்திருப்பது  ஏன்? என எம்எல்ஏ தாஹிரா விளக்கம்</h2><p>தலைவருடன் கடந்த 27 ஆண்டுகளாக பயணித்து இருக்கிறேன்.</p><p>தமிழ்நாட்டில் முதல் பெண் ரசிகர் மன்றத்தில் நான் அந்த பட்டத்தை வாங்கி இருக்கிறேன்.</p> <p>ராணிப்பேட்டையில் புதிய மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, வாலாஜா அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் - எம்எல்ஏ தாஹிரா</p><h2>ராணிப்பேட்டை தொகுதி தவெக எம்எல்ஏ தாஹிரா உரை</h2><p>வாயால் வடை சுட்ட காலம் போய் சுவையான வடை சுட்டு கையில் கொடுக்கும் காலம்.</p><p>முதலமைச்சரை பேச சொல்லும் கூட்டம், அவர் பேசத் தொடங்கினால் ஓடுகிறது.</p><p>தவெக ஆட்சி ஊழலற்ற உண்மையான மக்கள் ஆட்சி.</p><p>அதிகாரிகள் எந்த திட்டத்தை தீட்டினாலும் அமைச்சரின் கவனத்திற்கு வராமல் வெளியிடப்படாது.</p><p>நெடுஞ்சாலை, பொதுப்பணித் துறையிலும் விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட உள்ளது - ஆதவ்</p><p>தான் மட்டும் நல்ல அறையில் அமர்ந்திருக்க வேண்டும் என முதல்வர் நினைக்கவில்லை.</p><p>முதல்வரை சுற்றி பணியாற்றும் 80-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அவரை காண வருவோர் வசதிக்காகத்தான் அறை மாற்றம்.</p><p>எளிமையை விரும்பும் முதலமைச்சர் விஜய், தன்னை சுற்றி இருப்பவகளை நினைத்துதான் அறையை மாற்றுகிறார் - அமைச்சர் ஆதவ்</p> <p>கலைஞரும், ஜெயலலிதாவும் புதிய தலைமைச்செயலகத்தை கட்ட வேண்டும் என நினைத்தனர் - அமைச்சர் ஆதவ்</p> <p>5 வருடத்தில் நடைபெற்ற டெண்டர் குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிட உள்ளோம்.</p><p>தான் மட்டும் நல்ல அறையில் அமர்ந்திருக்க வேண்டும் என முதல்வர் நினைக்கவில்லை - அமைச்சர் ஆதவ்</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உரை</h2><p>வாழைப்பழத்தில் ஊசி ஏற்றி அதனை மக்களுக்கே கொடுப்பது போல் சிரித்துக்கொண்டு பேசியிருக்கிறார் எ.வ.வேலு</p><p>கடந்த 5 வருட பத்திரிகை செய்திக எடுத்து பார்த்தால் பொதுப்பணித்துறையில் ஊழல் மட்டுமே நிறைந்திருக்கும்.</p><p>முதல்வர் அறை மாற்றத்திற்கான டெண்டர் இன்னும் முடியவில்லை.</p><p>தவெக அரசின் வாக்குறுதி புத்தகத்தில் அறம் திட்டத்தின் 25-வது பக்கத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் பற்றி கூறி உள்ளீர்கள்.</p><p>எந்த ஓய்வூதிய திட்டத்திற்கு தவெக அரசு அனுமதி அளிக்கப்போகிறது, அரசு அதிகாரிகளுக்கு தெளிவான விளக்கம் தேவை.</p><p>முதல்வர் அறையை தயார் செய்ய ரூ.5.54 கோடி மதிப்பிலான பணிக்கு டெண்டர் விடப்படவில்லை என்ற செய்தியை சுட்டிக்காட்டி எ.வ. வேலு பேச்சு</p><p>காலை உணவுத்திட்டத்தின் பெயர் காமராஜர் பெயரில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. காலை உணவுத்திட்டத்திற்கு காமராஜர் பெயரை தவிர வேறு எந்த பெயரும் பொருத்தமாக இருக்காது - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>பெயர் மாற்றம் என்பது கலைஞர் ஆட்சியிலும் இருந்தது என்பதை சுட்டிக்காட்டி அமைச்சர் ராஜ்மோகன் பேசினார்.</p><p>அந்த மைக், சேர், டேபிள் செய்தது நாங்கள் தான் என்கிறார்கள். இவை அனைத்தும் செய்தது மக்கள் வரிப்பணத்தில் தான்.</p><p>கடந்த திமுக ஆட்சியில் அம்மா மினி கிளினிக் முதல்வர் கிளினிக் ஆக மாறி உள்ளது.</p><p>பொதுக்கூட்டத்தில் பேசுவதை போல் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேரவையில் பேசிக்கொண்டிருக்கிறார் - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>பொதுக்கூட்டத்தில் பேசுவதை போல் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேரவையில் பேசிக்கொண்டிருக்கிறார் - அமைச்சர் செங்கோட்டையன்</p><p> மானியக்கோரிக்கை தொடர்பாக மட்டும் பேசுங்கள் - சபாநாயகர்</p><p>2003-ல் பழைய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டது - எ.வ.வேலு</p><p>அரசு அதிகாரிகள் பொதுவானவர்கள்.</p><p>நேற்று எங்களுக்கு சல்யூட்... இன்று உங்களுக்கு சல்யூட் - எ.வ.வேலு </p><h2>எ.வ.வேலு உரை</h2><p>இந்த நிதி ஆண்டுக்கான எதிர்கால திட்டமிடல் குறித்து எதுவும் இல்லை.</p><p>வெள்ளத் தடுப்புப் பணிகள் குறித்து கொள்ளை விளக்க குறிப்பில் இல்லை.</p><p>சட்டசபையை கலைநயமிக்கதாக மாற்றியது திமுக தான்.</p><p>4 வழித்தடம், 2 வழித்தடம் சாலைகள் இந்த நிதி ஆண்டில் எவ்வளவு அமைக்கப்பட்டது? - எ.வ.வேலு</p><p>முதலமைச்சருக்கு அதிக திறமை இருக்கிறது என்பதை ஏற்கிறேன் - எ.வ.வேலு</p><p>டெண்டர் விலையை உயர்த்தி முறைகேடு செய்யத் தெரியாது என முதல்வர் கூறுகிறார் - எ.வ.வேலு</p><p>அமைச்சர் போல் திமுக ஆட்சியின் சாதனைகளை பட்டியல் போடுகிறீர்கள் - சபாநாயகர்</p><p>மானியக்கோரிக்கையை விட்டுவிட்டு காலை உணவு குறித்து பேசுவது ஏன்? - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>காலை உணவுத்திட்டத்திற்கு காமராஜர் பெயரை வைக்க வேண்டிய அவசியம் என்ன?</p><p>புதிய திட்டத்திற்கு காமராஜர் பெயரை வைத்தால் அதை வரவேற்கிறோம்.</p><p>முதலமைச்சர் என்பது பொதுவான சொற்றொடர் - எ.வ.வேலு</p><p>மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கையில் தான் கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்தோம் - எ.வ.வேலு</p><p>கோவை தந்தை பெரியார் நூலகத்தை திறக்க வேண்டும் - எ.வ.வேலு கோரிக்கை</p><p>அண்ணா அறிவாலயத்தில் பெரியார் சிலை இல்லை.</p><p>எங்கள் கட்சி அலுவலகத்தில் பெரியாருக்கு சிலை இருக்கிறது - ஆதவ் அர்ஜூனா</p><p>3 மாத காலமாக பெரியார் நூலகத்தை கிடப்பில் போட்டது ஏன்? - எ.வ.வேலு</p><p>பெரியார் கொள்கை தலைவர் என தவெக தம்பட்டம் அடித்துக்கொள்கிறது - எ.வ.வேலு</p><p>விடுதலை போராட்ட வீரர்களுக்கு சிலைகள், மணிமண்டபங்கள் அமைத்து தந்தோம் - எ.வ.வேலு</p><p>மானியக் கோரிக்கை மீது விவாதம் - எதிர்க்கட்சி கொறடா எ.வ.வேலு உரை</p><p>சென்னை வள்ளுவர் கோட்டம் முதல் குமரி வள்ளுவர் சிலை வரை கலைஞரின் அடையாளம் இல்லா ஊரே இல்லை - எ.வ.வேலு</p><p>4 துறைகள் மீதான மானிய கோரிக்கை தொடங்கியது.</p><p>மனிதவள மேலாண்துறை மானிய கோரிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் சரத்குமார்.</p><p>பொதுப்பணித்துறை மானிய கோரிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</p><p>மீன்வளம், சுற்றுச்சூழலை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் தவெக அரசு அனுமதிக்காது - அமைச்சர் ராஜீவ்</p><p>3 கிணறுகளுக்கு திமுக ஆட்சியிலும், ஒரு கிணறுக்கு அதிமுக ஆட்சியிலும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது - அமைச்சர் ராஜீவ்</p><p>ஹைட்ரோ கார்பன் கிணறு திட்டத்தால் புதுவை முதல் கன்னியாகுமரி வரை கடல் வளம் பாதிக்கப்படும் -  சிபிஐ எம்எல்ஏ மாரிமுத்து</p><h2>எம்எல்ஏ தமிமுன் அன்சாரி உரை</h2><p>சுற்றுச்சூழல் பாதிப்பை கூர்ந்தாய்வு செய்து அரசு நடவடிக்கை என அமைச்சர் கூறி உள்ளார்.</p><p>புதிதாக 4 கிணறு தோண்டினால் மீனவர் நலன் என பல பாதிப்பு உள்ளதால் அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம்.</p><p>பரங்கிப்பேட்டையில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைப்பதற்கான HOEC நிறுவன விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும்.</p><h2>கடலூர் பரங்கிப்பேட்டையில் ஹைட்ரோ கார்பன் திட்டமா? அமைச்சர் ராஜீவ் விளக்கம் அளித்தார்.</h2><p>பரங்கிப்பேட்டையில் 4 புதிய எண்ணெய் கிணறுகள் அமைக்க இந்துஸ்தான் நிறுவனம் திட்டம்.</p><p>மீனவர்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் முதலமைச்சர் விஜய் அரசு அனுமதிக்காது.</p><p>சுற்றுச்சூழலை பாதிக்கும் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்.</p><p>பரங்கிப்பேட்டையில் இந்துஸ்தான் ஆயில் எக்ஸ்ப்ளோஷன் நிறுவன கிணறுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு என கவன ஈர்ப்பு தீர்மானம்.</p><p>தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டதில் தமிழ்நாடு அரசின் மேல் நடவடிக்கை என்ன? </p><p>தமிழர்களை சுட்டுக்கொன்றவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய தமிழக அரசு கோரியுள்ளதா?  - திமுக</p><p>கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி - அமைச்சர் ரஞ்சித்</p><p>கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள் குடும்பத்திற்கு நிதி வழங்கப்படுமா? - எடப்பாடி பழனிசாமி</p><p>கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொலை - கர்நாடக அரசின் விசாரணையை தமிழ்நாடு அரசு கண்காணிக்கிறது - அமைச்சர் நிர்மல்குமார்</p> <p>சிபிஐ விசாரணை தேவை என்கிறோம் - தவெக அரசின் நிலைப்பாடு என்ன? - பாமக</p><p>கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொலை - தவெக அரசு அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? - பாமக</p><p>யாருடைய கவனத்தை ஈர்க்க இப்படி பேசுகிறீர்கள்? - அமைச்சர் நிர்மல்குமாருக்கு சபாநாயகர் கண்டிப்பு</p><p>அமைச்சர் நிர்மல்குமார் இனி தேவையற்றதை பேச அனுமதிக்க மாட்டேன் - சபாநாயகர்</p><p>திமுகவை விமர்சித்து அமைச்சர் நிர்மல்குமார் பேசியவை அவை குறிப்பில் இருந்து நீக்கம் - சபாநாயகர்</p><p>உலகம் முழுவதும் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களின் ஒரே நம்பிக்கை முதலமைச்சர் விஜய் - அமைச்சர் நிர்மல்குமார்</p><h2>கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொலை - கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அமைச்சர் நிர்மல்குமார் பதில்</h2><p>சுட்டுக்கொல்லப்பட்ட தமிழகர்கள் குடும்பத்திற்கு கூடுதல் நிதி வழங்குவது குறித்து கர்நாடகா பரிசீலனை.</p><p>தமிழர்களை சுட்டுக்கொன்ற வனத்துறை மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு.</p><p>தமிழர்களை சுட்டுக்கொன்ற வனத்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல்.</p><h2>பாஜக எம்எல்ஏ போஜராஜன்</h2><p>துப்பாக்கிச்சூட்டில் பலியான தமிழர்கள் குடும்பத்திற்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும். </p><p>பலியான தமிழர்கள் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசும் நிதி வழங்க வேண்டும்.</p><p>தமிழர்கள் நலனுக்கு கட்சி வேறுபாடுகள் இன்றி ஒன்றிணைய வேண்டும்.</p><p>மான் வேட்டைக்கு சென்றவர்கள் சுட்டுக்கொலை என்பது பொய்யான செய்தி - கீழ்வேளூர் மார்க்சிஸ்ட் எம்எல்ஏ லதா</p><p>தமிழர்களின் உயிரை துப்பாக்கி குண்டுகள் தீர்மானிக்கக்கூடாது.  சிபிஐ விசாரணைக்கு கர்நாடக அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ ராமச்சந்திரன்</p><p>தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட வேண்டும் - தளி இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ ராமச்சந்திரன்</p><p>கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொலை - அதிமுக, பாமக, காங்கிரஸ், சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தல்.</p><p>கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை தேவை - காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பட்</p><p>தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதில் ஏதோ இருக்கிறது என கர்நாடக எம்எல்ஏவே கூறுகிறார். கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் - பாமக எம்எல்ஏ கணேஷ் </p><h2>பாமக எம்எல்ஏ கணேஷ் உரை</h2><p>மேட்டூர் கட்டப்பட்டதால் கர்நாடகாவிற்கு புலம்பெயர்ந்த 3 பேர் சுட்டுக்கொலை.</p><p>தங்கள் கால்நடைகளை தேடிச்சென்றவர்களை சுட்டுக்கொன்றுள்ளது கர்நாடக வனத்துறை.</p><p>மான் வேட்டைக்கு சென்றவர்கள் சுட்டுக்கொலை என்பது ஏற்புடையது அல்ல.</p><p>மான் வேட்டையில் ஈடுபட்டதாக 3 தமிழர்களை குற்றம்சாட்டி கொன்றுள்ளது கர்நாடக வனத்துறை.</p><p>2 மாநில எல்லை பகுதியில் கொலை நடைபெற்றுள்ளதால் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை.</p><p>வனத்துறை சுட்டுக்கொன்ற தமிழர்களுக்கு ரூ.5 லட்சம் மட்டுமே இழப்பீடு அறிவிப்பு, தமிழக அரசு கூடுதலாக நிதி தர வேண்டும்  - எடப்பாடி பழனிசாமி</p> <h2>கவன ஈர்ப்பு தீர்மானத்தில் எடப்பாடி பழனிசாமி உரை</h2><p>பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் தனது கால்நடை தேடிச்சென்ற 3 தமிழர்கள் சுட்டுககொலை, ஒருவர் படுகாயத்துடன் சிகிக்சை.</p><p>அப்பாவி விவசாயிகளை வனத்துறை சுட்டுக்கொன்றது மனித உரிமை மீறல் - மனோஜ்பாண்டியன் </p><h2>கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்கள்  - கவன ஈர்ப்பு தீர்மானத்தில் மனோஜ்பாண்டியன் உரை</h2><p>கர்நாடகாவில் கால்நடை தேடிச்சென்ற 3 தமிழர்கள் கர்நாடக வனத்துறையால்  சுட்டுக்கொலை.</p><p>சட்டசபையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது.</p><p>சட்டசபையில் இன்று இளைஞர் நலன், விளையாட்டு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள், பொதுப்பணி, மனிதவள மேம்பாட்டுத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.</p><p>கடலூரில் இந்துஸ்தான் ஆயில் நிறுவனம், மேம்பாட்டுக் கிணறுகள் அமைப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஒடிசி, ஸ்பைடர் மேனை ஓரங்கட்டிய ரூ.1 லட்சம் பட்ஜெட்டில் உருவான அனிமேஷன் படம்.. காரணம் தான் ஹைலைட் </title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/low-budget-chinese-animation-goes-viral-mockery-turns-niu-lai-into-20-crore-box-office-hit</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/low-budget-chinese-animation-goes-viral-mockery-turns-niu-lai-into-20-crore-box-office-hit#comments</comments><guid isPermaLink="false">430a8359-5b20-4ae7-96eb-2b506bfb70d4</guid><pubDate>Tue, 18 Aug 2026 07:26:48 +0000</pubDate><atom:updated>2026-08-18T07:26:48.943Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அனிமேஷன் படம்,The Odyssey,தி ஒடிசி,ஸ்பைடர் மேன்,Animated movie,Spider-Man</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/9jhqbkta/tn-13.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நியூ லாய்
]]></media:title><media:description type="html"><![CDATA[ நியூ லாய்
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/9jhqbkta/tn-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்த டிஜிட்டல் யுகத்தில் மக்களின் கவனம் எதன் மீது எப்போது திரும்பும் என்றே கணிக்க முடியாத நிலை தான் உள்ளது. </p><p>மிகவும் சாதராண விஷயம் வைரலாவதும், எதிர்பார்க்கப்பட்ட ஒன்று குப்பைக்கு போவதும் சகஜமாகி வருகிறது.</p><p>7 ஆயிரம் வருட பழமையான மகாகாவியம், உலகையேயே பிரமாண்டத்திற்கு பெயர்போன இயக்குநரால் உருவாக்கப்பட்டபோதும், வெறும் 2 பேர் மட்டும் இணைத்து உருவாக்கிய ஒரு அனிமேஷன் படம் அதிக கவனம் பெற்றுள்ளது சீனாவில். </p><p>அதற்கு அப்படம் கிறிஸ்டோபர் நோலனின் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BF">ஒடிசியை </a>விட நன்றாக இருப்பதால் இல்லை. எதிர்மாறாக, மிகவும் மோசமாக  இருப்பதால் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. </p><h2>நியூ லாய்</h2><p>அண்மையில் வெளியாகிய தி ஒடிசி மற்றும் ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே படங்கள் உலக பாக்ஸ் ஆபீசில் சக்கைப் போடு போட்டுக்கொண்டிருக்கும் வேளையில் சீனாவில் உருவாக்கப்பட்ட 'நியூ லாய்' ((Niu Lai -  The Cow Is Coming) என்ற படம் தான் இப்போது ஹாட் டாபிக். </p><p>86 நிமிட நீள அனிமேஷன் திரைப்படம், ஒரு கன்றுக்குட்டிக்கும் பறவைக்கும் இடையிலான உறவை  கதைக்களமாகக் கொண்டது.</p><p>சின் யுமெங் மற்றும் சுன் லிபாங் ஆகிய இருவர் மட்டுமே கடந்த 5 ஆண்டுகளில் இந்த முழுப் படத்தையும் எழுதியும், இயக்கியும், தயாரித்தும், குரல் கொடுத்தும் உருவாக்கியுள்ளனர். இவர்கள் இருவரும் தாய் மற்றும் மகன் ஆவர். இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சம் இதன் பட்ஜெட். </p> <h2>ஆரம்பகட்ட வசூல்</h2><p>கடந்த ஆகஸ்ட் 5 அன்று சீனாவில் வெளியான இத்திரைப்படம், முதல் 10 நாட்களில் வெறும் 7,700 யுவான் (சுமார் ரூ.1.04 லட்சம்) மட்டுமே வசூலித்தது.</p><p>நாடு முழுவதிலும் 300க்கும் குறைவான மக்களே இப் படத்திற்கான டிக்கெட்டுகளை வாங்கியிருந்தனர்.</p> <h2>கேலி கிண்டல் டூ டிரண்ட்</h2><p>இத்திரைப்படத்திற்கு எந்தவொரு விளம்பரமோ ப்ரீ, போஸ்ட் புரொமோஷனோ, ஏன் ஒரு டிரெய்லரோ கூட இல்லை. ஒரு போஸ்டர் மட்டுமே இப் படத்திற்கான ஒரே விளம்பரம்.</p><p>படத்தின் மோசமான கிராபிக்ஸ், கதாபாத்திரங்கள், மோசமான குரல் பதிவு மற்றும் குழப்பமான கதையை பார்வையாளர்கள் கேலி செய்யத் தொடங்கினர்.</p><p>சிலர் இதை ஏஐ உருவாக்கித் தருவதை விட மோசமானது என்றும் 2026 ன் மிக மோசமான திரைப்படம் என்றும் குறிப்பிட்டனர்.</p><p>இதுவே படத்திற்கு சாதகமாக மாறியது. படம் உண்மையிலேயே அவ்வளவு மோசமாகத்தான் இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்வதற்காக மக்கள் டிக்கெட்டுகளை வாங்கி திரையரங்கிற்குப் படையெடுக்கத் தொடங்கினர்.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">A newly released animated film called “Niu Lai” (牛来) is going viral for all the wrong reasons in China.<br><br>People are calling the visuals “disaster-level” , the entire production team was basically just two people: the director and the screenwriter. After 9 days in theaters, the… <a href="https://t.co/l7RM9ZER67">pic.twitter.com/l7RM9ZER67</a></p>&mdash; Tong Bingxue 仝冰雪 (@tongbingxue) <a href="https://x.com/tongbingxue/status/2088589642648244338?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>வசூல் சாதனை</h2><p>இத்திரைப்படம் இதுவரை 14.9 மில்லியன் யுவான்களுக்கும் மேல் (சுமார் ரூ.20 கோடி) வசூல் செய்துள்ளது.</p><p>முதல் 10 நாட்களில் சொற்ப அளவில் வசூலித்து, அடுத்த சில நாட்களிலேயே பன்மடங்காக வசூல் பெருகுவது தி ஒடிசி மற்றும் <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/spider-man-brand-new-day-box-office-record-india">ஸ்பைடர் மேன்</a> போன்ற பிரமாண்ட படங்களுக்கே சாத்தியமற்றது.</p><p>அரங்கு நிறைந்த காட்சி என்பது பெரிய படங்களுக்கே சாத்தியமாகாதபோது இச்சிறிய படம் அதை முறியடித்து வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>கட்சி கொடி நிறத்தில் உடை அணிந்திருப்பது  ஏன்? - எம்எல்ஏ தாஹிரா விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mla-thahira-explain-why-are-you-wearing-an-outfit-in-the-party-flags-colors</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mla-thahira-explain-why-are-you-wearing-an-outfit-in-the-party-flags-colors#comments</comments><guid isPermaLink="false">f1d18dce-7160-425f-bb50-222d9dbe12c7</guid><pubDate>Tue, 18 Aug 2026 07:04:22 +0000</pubDate><atom:updated>2026-08-18T07:04:22.306Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,தமிழக சட்டசபை,TN assembly,tvk,தவெக எம்எல்ஏ,TVK MLA</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/qhxmpy17/Thahira.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ எம்எல்ஏ தாஹிரா]]></media:title><media:description type="html"><![CDATA[ எம்எல்ஏ தாஹிரா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/qhxmpy17/Thahira.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>எந்த கட்சிக்காக இந்த இடத்திற்கு நான் வந்தேனோ சாகும் வரை இந்த ஆடை தான் அணிந்து இருப்பேன். இது என் அடையாளம் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபையில்</a> மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய ராணிப்பேட்டை த.வெ.க. எம்.எல்.ஏ. தாஹிரா பேசுகையில், </p><p><em><strong>‘அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை</strong></em></p><p><em><strong> ஆரிருள் உய்த்து விடும்’</strong></em> </p><p>சட்டசபையில் கம்பீரத்துடன் அமர்ந்திருக்கும் எங்கள் தளபதி அவருக்கே இத்திருக்குறள் பொருந்தும். </p><p>* வாயால் வடை சுட்ட காலம் போய், சுவையான வடை சுட்டு கையில் கொடுக்கும் காலம்.</p><p>* முதலமைச்சரை பேச சொல்லும் கூட்டம், அவர் பேசத் தொடங்கினால் ஓடுகிறது.</p><p>* தலைவருடன் கடந்த 27 ஆண்டுகளாக பயணித்து இருக்கிறேன்.</p><p>* தமிழ்நாட்டில் முதல் பெண் ரசிகர் மன்றத்தில் நான் அந்த பட்டத்தை வாங்கி இருக்கிறேன்.</p><p>* என்னைப்போன்ற பெண்களுக்கு முக்கிய இடத்தை கொடுத்து இந்த இடத்தில்  நிற்க வைத்து இருக்கிறார்.</p><p>* எந்த அரசியல்வாதிகளும், எந்த அமைப்பில் இருப்பவர்களும் இஸ்லாமிய பெண்களுக்கு முதல் இடம் கொடுத்தது இல்லை.</p><p>* எங்கள் தலைவர் ஆட்சி தொடங்கிய அன்றே எனக்கு கட்சியில் கொள்ளை பரப்பு இணை செயலாளராக பதவி கொடுத்தபோது அவர்களுடன் அமர வைத்து கவுரவித்தார். </p><p>* அந்த கவுரம் என்னை சார்ந்தது மட்டும் அல்ல. இஸ்லாமியர்கள் அனைவருக்குமான பெருமை அளிப்பதுபோல் அன்று நடத்தினார்.</p><p>* அன்றே முடிவு செய்தேன். எந்த கட்சிக்காக இந்த இடத்திற்கு நான் வந்தேனோ சாகும் வரை இந்த ஆடை தான் அணிந்து இருப்பேன். இது என் அடையாளம் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>* தளபதியால் நான்... தளபதிக்காகவே நான்... என்றும் தலைமைக்கும் தளபதிக்கும் விசுவாசத்துடன் என் உயிர் உள்ளவரை நன்றியுடன் நடந்து கொள்வேன் என்றார். </p>]]></content:encoded></item><item><title>ரூ.1 கோடி கடத்தல் வழக்கு: 26 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை கைதி கைது!</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-rs-1-crore-smuggling-case</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-rs-1-crore-smuggling-case#comments</comments><guid isPermaLink="false">3ec6c0bc-f350-433e-8be5-d8f55c4d9607</guid><pubDate>Tue, 18 Aug 2026 06:54:52 +0000</pubDate><atom:updated>2026-08-18T06:54:52.476Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கடத்தல் வழக்கு,delhi,Ghaziabad,டெல்லி,smuggling case,மீரட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/cpdac862/smugling.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ smuggling case ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/cpdac862/smugling.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் 1995-ஆம் ஆண்டு நடைபெற்ற கடத்தல் வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த 26 ஆண்டுகளாக காவல்துறையிடம் இருந்து தப்பியோடி தலைமறைவாக இருந்த அமித் யாதவ் (57) என்பவரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் டேராடூனில் வைத்து அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.</p><h2>31 ஆண்டுகளு<strong>க்கு முந்தைய</strong> கடத்தல் சம்பவம்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/national/uttar-pradesh-death-penalty-row-muzaffarnagar-fast-track-judge-ravi-kumar-diwakar-awards-death-sentence-to-22-convicts-in-10-cases">டெல்லி </a>படேல் நகரைச் சேர்ந்த தொழிலதிபரின் மகனான ரிஷி சேத்தி என்பவர், 1995-ஆம் ஆண்டு செப்டம்பர் 12 அன்று எய்ம்ஸ் இயக்குனர் குடியிருப்பு அருகே தனது காரில் அமர்ந்திருந்தபோது 3 முதல் 4 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டுக் கடத்தப்பட்டார். கடத்தல்காரர்கள் அவரை ரகசிய இடத்தில் அடைத்து வைத்து, அவரது குடும்பத்தினரிடம் 1 கோடி ரூபாய் பிணைத்தொகை கேட்டனர்.</p><h2>பொறி வைத்<strong>து பிடித்த</strong> போலீசார்</h2><p>காவல்துறையின் அறிவுறுத்தலின்படி, மீரட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் 10 லட்சம் ரூபாய் பணத்தை வைப்பதாகக் கடத்தல்காரர்களிடம் தெரிவிக்கப்பட்டது. செப்டம்பர் 16, 1995 அன்று அப்பணத்தைப் பெற வந்த அமித் யாதவை போலீசார் கையும் களவுமாகப் பிடித்தனர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில், காசியாபாத்தில் உள்ள வீட்டின் சேமிப்பு அறையில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த ரிஷி சேத்தி பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.</p><h2>இ<strong>டைக்கால ஜாமீனில் தப்பித்</strong>தல்</h2><p>இந்த வழக்கில் 1999-ஆம் ஆண்டு டெல்லி நீதிமன்றம் அமித் யாதவுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 2.5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. இதை எதிர்த்து அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது, 2000-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அவருக்கு ஒரு மாத இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் ஜாமீன் காலம் முடிந்ததும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தப்பியோடினார்.</p><h2>பில்<strong>டர் வாழ்</strong>க்கை</h2><p>தலைமறைவான அமித் யாதவ், காசியாபாத் வாடகை வீட்டைக்காலி செய்துவிட்டு, பாக்பத்தில் இருந்த தனது பூர்வீகச் சொத்துகளை விற்றார். டெல்லி காவல்துறையின் பிடியிலிருந்து தப்ப ரிஷிகேஷிற்குச் சென்று அடிக்கடி இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருந்தார். பின்னர் 2001-இல் டேராடூனுக்குச் சென்று தனது அடையாளத்தை முற்றிலும் மாற்றிக்கொண்டு, புதிய பெயரில் கட்டிட ஒப்பந்ததாரராக உருவெடுத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.</p><h2>பயோ<strong>மெட்ரிக்</strong> ஆதாரம்</h2><p>சமீபத்திய புகைப்படங்கள் எதுவுமில்லாத நிலையில், 1999-ஆம் ஆண்டு தண்டனையின் போது பதிவு செய்யப்பட்ட பழைய பயோமெட்ரிக் மற்றும் கைரேகை பதிவுகளை குற்றப்பிரிவு போலீசார் மீட்டெடுத்தனர். அதன் மூலம் தீவிர விசாரணை நடத்தி டேராடூனில் அவர் இருக்கும் இடத்தை உறுதிசெய்து, கடந்த 13ம் தேதி அன்று அதிரடி சோதனை நடத்தி அவரைப் பிடித்தனர். தற்போது அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>4 மாதங்கள்.. 10 வழக்குகள்..  22 பேருக்கு மரண தண்டனை - வைரலாகும் நீதிபதி</title><link>https://www.maalaimalar.com/news/national/uttar-pradesh-death-penalty-row-muzaffarnagar-fast-track-judge-ravi-kumar-diwakar-awards-death-sentence-to-22-convicts-in-10-cases</link><comments>https://www.maalaimalar.com/news/national/uttar-pradesh-death-penalty-row-muzaffarnagar-fast-track-judge-ravi-kumar-diwakar-awards-death-sentence-to-22-convicts-in-10-cases#comments</comments><guid isPermaLink="false">e0c0af9e-a802-43dc-8a29-289d5c6465a7</guid><pubDate>Tue, 18 Aug 2026 06:51:52 +0000</pubDate><atom:updated>2026-08-18T06:51:52.432Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Uttar Pradesh,மரண தண்டனை,judge,Death Penalty,உத்தரப் பிரதேசம்,நீதிபதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/yxldx39a/tn-12.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ரவி குமார் திவாகர்]]></media:title><media:description type="html"><![CDATA[ ரவி குமார் திவாகர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/yxldx39a/tn-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">உத்தரப் பிரதேச </a>மாநிலம் முசாபர்நகர் விரைவு நீதிமன்ற நீதிபதி ரவி குமார் திவாகர் கடந்த நான்கு மாதங்களில் 10 வெவ்வேறு வழக்குகளில் 22 குற்றவாளிகளுக்கு ரவி குமார் திவாகர் மரண தண்டனை விதித்துள்ளார். </p>  <h2>மரண தண்டனைகள்</h2><p>ஆகஸ்ட் 13 அன்று, 12 ஆண்டுகளுக்கு முன்பு ஷாம்லி மாவட்டத்தில் நடந்த பவன் குமார் என்பவரது கொலை வழக்கில் ராம்வீர், ராஜீவ், ராகுல், ஹரேந்தர் குமார் ஆகிய 4 குற்றவாளிகளுக்கு அபராதத்துடன் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88">மரண தண்டனை</a> விதித்தார்.</p><p>1999ஆம் ஆண்டு 5 லட்சம் ரூபாய் பிணை கேட்டு தொழிலதிபர் சலீம் என்பவரை கடத்திக் கழுத்தை அறுத்துக் கொன்ற வழக்கில், முதன்மை குற்றவாளியான ஷாநவாஸு என்பவருக்கு அண்மையில் மரண தண்டனை வழங்கினார்.</p><p>2011இல் நடந்த விவசாயி கொலை வழக்கு, 2010 பஞ்சாயத்து தேர்தல் முன்விரோதக் கொலை வழக்கு, பணியில் இருந்த ஹோம் கார்டு குத்திக் கொல்லப்பட்ட வழக்கு மற்றும் பல இரட்டைக்கலை வழக்குகள் அனைத்திலும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்துள்ளார்.</p> <p>குற்றங்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை என ஒரு தரப்பினர் இத்தீர்ப்புகளை ஆதரித்தாலும், குறுகிய காலத்தில் இத்தனை பேருக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது குறித்து மனித உரிமை ஆர்வலர்களும் சட்ட வல்லுநர்களும் கவலைகளைத் தெரிவித்து வருகின்றனர்.</p> <h2>ரவி குமார் திவாகர்</h2><p>லக்னோவைச் சேர்ந்த 46 வயதான நீதிபதி ரவி குமார் திவாகர் முதன்முதலில், 2009ஆம் ஆண்டு அசாம்கரில் கூடுதல் சிவில் நீதிபதியாக பொறுப்பேற்றார்.</p><p>தொடர்ந்து சுல்தான்பூர் உட்படப் பல இடங்களில் பணியாற்றிய இவர், 2025 நவம்பர் முதல் முசாபர்நகரில் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.</p><p>முன்னதாக, 2022இல் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோகிராபி ஆய்வு நடத்த உத்தரவிட்டதன் மூலமும் இவர் நாடு முழுவதும் பரவலாக அறியப்பட்டார்.</p>]]></content:encoded></item><item><title>நெசவாளர்களுக்கு வாக்குறுதி அளித்து விட்டு ஏமாற்றக் கூடாது!- அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-we-must-not-make-promises-to-weavers-and-then-let-them-down</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-we-must-not-make-promises-to-weavers-and-then-let-them-down#comments</comments><guid isPermaLink="false">246de2c8-2842-4e46-824a-6e1bb6b9e536</guid><pubDate>Tue, 18 Aug 2026 06:43:33 +0000</pubDate><atom:updated>2026-08-18T06:43:33.498Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/vhm9rl7a/Anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/vhm9rl7a/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் 10 விற்பனையகங்களை  மூடும் முடிவை கைவிட வேண்டும். தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் புதிய கோ-ஆப்டெக்ஸ்  விற்பனையகங்களைத் திறந்து நவீன சந்தை மற்றும் விற்பனை உத்திகளுடன்  கோ-ஆப்டெக்ஸ்  நிறுவனத்திற்கு புத்துயிரூட்ட வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தல்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழ்நாட்டில் கடலூர், சேலம், வேலூர், திருநெல்வேலி  உள்ளிட்ட நகரங்களிலும், ஆந்திரம்,  மகாராஷ்டிரா உள்ளிட்ட நகரங்களிலும் செயல்பட்டு வரும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 10 விற்பனையகங்களை மூட அரசு ஆணையிட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. கைத்தறி நெசவாளர்களின்  வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும்,  கைத்தறி துணிகளை விற்பனை செய்வதற்காகவும்  உருவாக்கப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மூடப்பட்டு வருவது கவலையளிக்கிறது.</p><h2><strong>சீரழிக்கப்பட்டதன் விளைவு</strong></h2><p>விற்பனையிலும், வருவாயிலும் ஏற்பட்ட வீழ்ச்சி, ஆள்குறைப்பு நடவடிக்கைகள் ஆகியவை தான் இந்த முடிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த முடிவின்படி சில விற்பனையகங்கள் மூடப்பட்டு விட்டன. மேலும் சில விற்பனையகங்களில்  விற்பனையும்,  மீதமுள்ளவற்றில் கொள்முதலும் நிறுத்தப்பட்டு விட்டன. அடுத்த சில வாரங்களில் 10 விற்பனையகங்களும் மூடப்பட்டு விடும் என்று கூறப்படுகிறது.</p><p>கோ-ஆப்டெக்ஸ்  விற்பனையகங்கள்  நெசவாளர்களின் வாழ்வாதாரத்துடன் பின்னிப் பிணைந்தவை ஆகும். கோ-ஆப்டெக்ஸ் என்பதே தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் என்பதன் வணிகப் பெயர் தான் . 1935-ஆம் ஆண்டில்  தொடங்கப்பட்ட கோ-ஆப்டெக்ஸ்  விற்பனையகங்கள்  ஒரு காலத்தில் அரசு ஊழியர்கள், நெசவாளர்கள், ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் விருப்பத்திற்குரிய ஆடையகமாக இருந்தது. ஆனால், தனியார் நிறுவனங்களின் நலனுக்காக கோ-ஆப்டெக்ஸ் திட்டமிட்டு சீரழிக்கப்பட்டதன் விளைவு தான் இன்றைய அவலம் ஆகும்.</p><p>2025-16ஆம் ஆண்டில்  தமிழ்நாட்டில் 133, வெளிமாநிலங்கள், வளைகுடா நாடுகள், ஐரோப்பா ஆகியவற்றில் 67  என மொத்தம் 200 விற்பனையகங்களுடன்  கோ-ஆப்டெக்ஸ்  செயல்பட்டு வந்தது. அதன்பின் கடந்த 2025-26 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 150 ஆக குறைந்து விட்டது. நடப்பாண்டில் மேலும் 10 விற்பனையகங்கள் மூடப்படுகின்றன. இதே நிலை நீடித்தால் 2035-ஆம் ஆண்டில் நூற்றாண்டு விழா கொண்டாட வேண்டிய  கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் மூடுவிழா நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படும். அதனால் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தைக் காக்க உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.</p><p>2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தவெக அரசு வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ’’தமிழ்நாட்டின் ஒவ்வொரு முக்கிய நகரத்திலும் வெற்றித் தறி ஷோரூம்கள் அமைக்கப்படும். தமிழக நெசவாளர்களின் தயாரிப்புகளை சர்வதேச அளவில் விற்பனை செய்வதற்கு பிரத்தியேகமான இ-காமர்ஸ் பிராண்ட் உருவாக்கப்படும்” என்று வாக்குறுதி ( எண். அறம் 2 (8) ) அளிக்கப்பட்டிருந்தது. வெற்றித் தறி ஷோரூம்கள் என்ற பெயரில் புதிய விற்பனையகங்களை திறக்கப் போவதாகக் கூறி விட்டு, இருக்கும் விற்பனையகங்களையும் மூடுவது சரியல்ல. தவெகவின் சொல்லுக்கும், செயலுக்கும் தொடர்பு இல்லை என்பதையே இது காட்டுகிறது.</p><p>தவெக  ஆட்சிக்கு வந்தால் நமது வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று நெசவாளர்கள் நம்பினார்கள்.  அதனால் தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதற்கு காரணமாக நெசவாளர்களை ஏமாற்றக் கூடாது. கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் 10 விற்பனையகங்களை  மூடும் முடிவை கைவிட வேண்டும். தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் புதிய கோ-ஆப்டெக்ஸ்  விற்பனையகங்களைத் திறந்து நவீன சந்தை மற்றும் விற்பனை உத்திகளுடன்  கோ-ஆப்டெக்ஸ்  நிறுவனத்திற்கு புத்துயிரூட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>அமித்ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு- மாமல்லபுரத்தில் நாளை தொடங்குகிறது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/conference-of-southern-state-chief-ministers-led-by-amit-shah-begins-tomorrow-in-mamallapuram</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/conference-of-southern-state-chief-ministers-led-by-amit-shah-begins-tomorrow-in-mamallapuram#comments</comments><guid isPermaLink="false">cb909c4b-2f9a-4568-9330-2e7d7231a802</guid><pubDate>Tue, 18 Aug 2026 06:36:01 +0000</pubDate><atom:updated>2026-08-18T06:36:01.734Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,அமித்ஷா,Amitshah,தென்மாநில முதல்வர்கள் மாநாடு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/l318vib0/amitshah01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அமித்ஷா]]></media:title><media:description type="html"><![CDATA[ அமித்ஷா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/l318vib0/amitshah01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் தமிழக முதலமைச்சர் விஜய், கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், கேரளம் முதல்-மந்திரி சதீசன், தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி ஆகிய 5 பேரும் பங்கேற்கிறார்கள்.</strong></em></p><p>மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஆண்டு தோறும் தென் மாநில முதல்- மந்திரிகள் மாநாடு நடத்தப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 2022-ம் ஆண்டுக்கு பிறகு இந்த மாநாடு நடைபெறவில்லை.</p><p>இந்த நிலையில் இந்த ஆண்டு தென் மாநில முதல்வர்கள் மாநாடு நாளை (19-ந்தேதி) மற்றும் நாளை மறுநாள் (20-ந்தேதி) ஆகிய 2 நாட்கள் மாமல்லபுரத்தில் நடக்கிறது.</p><h2><strong>அமித்ஷா</strong></h2><p>மாமல்லபுரத்தை அடுத்துள்ள கோவளம் நட்சத்திர ஓட்டலில் நடைபெறும் இந்த மாநாட்டுக்கு மத்திய உள்துறை மந்திரி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE">அமித்ஷா</a> தலைமை தாங்குகிறார்.</p><p>மாநாட்டில் தமிழக முதலமைச்சர் விஜய், கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், கேரளம் முதல்-மந்திரி சதீசன், தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி ஆகிய 5 பேரும் பங்கேற்கிறார்கள்.</p><p>மேலும் அந்தந்த மாநில தலைமை செயலாளர்கள், உள்துறை செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பங்கேற்கிறார்கள்.</p><h2><strong>ஒத்துழைப்பு-பிரச்சனைகள்</strong></h2><p>இந்த <a href="https://www.maalaimalar.com/news/topnews/conference-of-south-indian-chief-ministers-chaired-by-amit-shah">கூட்டத்தில்</a> மாநிலங்களுக்கு இடையயோன ஒத்துழைப்பு, பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீடுகள், கூட்டுறவை பலப்படுத்துவது, கட்டமைப்பு மேம்பாடு, நீர்வளப் பகிர்வு, கல்வி, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், பேரிடர் மேலாண்மை, குற்றங்கள் தடுப்பு, எல்லைப் பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.</p><p>தற்போது காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகா மற்றும் தமிழகம் இடையே முரண்பாடுகள் எழுந்த நிலையில் இந்த கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.</p><h2><strong>வரவேற்பு</strong></h2><p>இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய மந்திரி அமித்ஷா நாளை (19-ந் தேதி) மாலை 4.50 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை புறப்படுகிறார். இரவு 7.40 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். விமான நிலையத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் கட்சியினர் வரவேற்கிறார்கள். பின்னர் காரில் கோவளம் செல்கிறார்.</p><p>இரவு 9 மணி முதல் ஆய்வு கூட்டம் நடக்கிறது. அதைத் தொடர்ந்து இரவில் அந்த ஓட்டலில் தங்குகிறார்.</p><h2><strong>தென்மாநில முதல்வர்கள் மாநாடு</strong></h2><p>மறுநாள் (20-ந்தேதி) காலை 10.30 மணிக்கு தென்மாநில முதல்-மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் மாநாடு நடைபெறுகிறது. மதியம் 1.30 மணி வரை நடக்கும் இந்த மாநாட்டில் அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடனும் பல்வேறு விசயங்கள் பற்றி அமித்ஷா ஆலோசனை நடத்துகிறார்.</p><p>பின்னர் அனைத்து முதல்-மந்திரிகளுடன் அமித்ஷா மதிய  உணவு அருந்துகிறார். மாலை 2.30 மணி முதல் 3 மணி வரை முக்கிய நிர்வாகிகளை சந்திக்கிறார்.</p><p>மாநாட்டை முடித்துக் கொண்டு மாலை 3 மணிக்கு கார் மூலம் சென்னை விமான நிலையம் புறப்படுகிறார். சென்னையில் இருந்து மாலை 3.45 மணிக்கு டெல்லி புறப்பட்டு செல்கிறார்.</p><h2><strong>பலத்த பாதுகாப்பு</strong></h2><p>மத்திய மந்திரி அமித்ஷா 2 நாட்கள் கோவளம் ஓட்டலில் தங்கி இருப்பதால் ஓட்டல் அமைந்துள்ள பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த பகுதியில் டிரோன்கள் பறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>அமித்ஷா மற்றும் முதல்-மந்திரிகள் பயணிக்கும் கிழக்கு கடற்கரை சாலையிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சூழ்நிலைக்கு ஏற்ப போக்குவரத்திலும் மாற்றங்கள் செய்யப்படும் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவான &apos;சிக்மா&apos; திரைப்படத்தின் புதிய வெளியீட்டு தேதி அறிவிப்பு! </title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/new-release-date-announced-for-the-film-sigma</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/new-release-date-announced-for-the-film-sigma#comments</comments><guid isPermaLink="false">c896d0c1-49aa-43ba-9a46-f97dc7e67471</guid><pubDate>Tue, 18 Aug 2026 06:29:06 +0000</pubDate><atom:updated>2026-08-18T06:29:06.851Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>jason sanjay,சந்தீப் கிஷன்,Sandeep Kishan,ஜேசன் சஞ்சய்,சிக்மா,sigma</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/ejy58db7/dd.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sigma  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/ejy58db7/dd.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக முதலமைச்சர் விஜயின் மகனும் இளம் இயக்குனருமான ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-second-song-from-the-movie-sigma-has-been-released">சிக்மா</a>’ திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். </p><p>லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. </p><figure><img alt="Sigma  " src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/4idewnor/sigma.jpg" /></figure><p>முன்னதாக இத்திரைப்படம் ஜூலை 31 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில தொழில்நுட்ப மற்றும் தயாரிப்பு காரணங்களால் இதன் வெளியீட்டு தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. </p><p>இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. ஒரு அசாதாரணமான நாயகன் தனது தனித்துவமான பாதையை உருவாக்கி, பல்வேறு தடைகளைத் தாண்டி எப்படி உயர்கிறான் என்பதை மையமாகக் கொண்டு, நகைச்சுவை மற்றும் திருப்பங்களுடன் கூடிய சாகசப் படமாக உருவாக்கப்பட்டுள்ளது.</p><h2>ரசிகர்களுக்<strong>கு விருந்து</strong></h2><p>இசையமைப்பாளர் தமன் இசையில், சந்தீப் கிஷன் மற்றும் நடிகை கேத்தரின் தெரசா இணைந்து நடனமாடியுள்ள பாடல் ஒன்று பிரம்மாண்ட அரங்கில் படமாக்கப்பட்டுள்ளது. சென்னை, சேலம், தலக்கோனா காடுகள் மற்றும் தாய்லாந்தின் அழகிய இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவையும், பிரவீன் கே.எல் எடிட்டிங் பணியையும், பெஞ்சமின் எம் கலை இயக்கத்தையும் மேற்கொண்டுள்ளனர்.</p><p>தற்போது சந்தீப் கிஷன் தனது டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ள நிலையில், படத்தின் பிந்தைய கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழ் திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2 அன்று ரசிகர்களுக்கு விருந்தளிக்க வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>விஸ்வநாத் &amp; சன்ஸ் வசூல் வேட்டை: 4 நாட்களில் ரூ.120 கோடியைக் கடந்து சூர்யா திரைப்படம் சாதனை!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/viswanath-sons-box-office-spree</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/viswanath-sons-box-office-spree#comments</comments><guid isPermaLink="false">32f46538-4824-4f39-ba0d-311a079801b3</guid><pubDate>Tue, 18 Aug 2026 06:15:22 +0000</pubDate><atom:updated>2026-08-18T06:15:22.298Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சூர்யா,suriya,mamitha baiju,மமிதா பைஜூ,Venky Atluri,விஸ்வநாத் &amp; சன்ஸ்,வெங்கி அட்லூரி,Viswanath &amp; Sons</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/61sk20nt/VISWANATH.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Viswanath & Sons  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/61sk20nt/VISWANATH.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வெங்கி அட்லூரி இயக்கத்தில் <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/surya-thanks-for-wishes-for-viswanath-and-sons">நடிகர் சூர்யா</a>, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான 'விஸ்வநாத் &amp; சன்ஸ்' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. முதல் வார இறுதியில் அசுர வசூல் செய்த இத்திரைப்படம், உலகளவில் ரூ. 120 கோடி வசூல் மைல்கல்லை எளிதாக எட்டியுள்ளது.</p><h2>வார இறு<strong>தி நாட்களில்</strong> அசுர வசூல்</h2><p>ஆகஸ்ட் 14 அன்று திரைக்கு வந்த இத்திரைப்படம் முதல் நாளில் இந்தியாவில் ரூ.17.74 கோடி மொத்த வசூலுடன் தனது கணக்கைத் தொடங்கியது. தொடர்ந்து சனிக்கிழமையன்று ரூ.25.72 கோடியும், ஞாயிற்றுக்கிழமை ரூ.23.75 கோடியும் வசூலித்து மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் மூலம் முதல் 3 நாட்களிலேயே இந்திய மொத்த வசூல் ரூ.67 கோடியைக் கடந்து சாதனை படைத்தது.</p><p>வார இறுதி நாட்களைத் தொடர்ந்து முதல் வேலை நாளான திங்கள்கிழமை (4-வது நாள்) திரையரங்குகளில் வழக்கமான சரிவு காணப்பட்டது. திங்களன்று இந்தியாவில் ரூ. 8.66 கோடி மொத்த வசூலை ஈட்டியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் மட்டும் 4 நாட்களில் படத்தின் மொத்த வசூல் ரூ. 75.88 கோடியாகவும் உயர்ந்துள்ளது.</p><h2>உலகளவில் ரூ<strong>.120 கோடி சாத</strong>னை</h2><p>வெளிநாடுகளிலும் சூர்யாவின் திரைப்படத்திற்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. வெளிநாட்டுச் சந்தையில் இதுவரை ரூ. 45 கோடி மொத்த வசூல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 4 நாட்கள் முடிவில் உலகளவில் 'விஸ்வநாத் &amp; சன்ஸ்' திரைப்படம் ரூ. 120.88 கோடி மொத்த வசூலை எட்டி தயாரிப்பாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. </p><p>இந்திய அளவில் கர்நாடக மாநிலத்தில் மிக அதிகபட்சமாக ரூ. 30.50 கோடியும், தமிழகத்தில் ரூ.30 கோடியும் வசூலாகியுள்ளது. கேரளாவில் ரூ.8.85 கோடியும், இந்தியாவின் பிற பகுதிகளில் ரூ. 6.53 கோடியும் வசூலித்து படம் வலுவான நிலையில் பயணிக்கிறது.</p><p>துப்பாக்கிச் சுடுதல் வீரரான சஞ்சய் விஸ்வநாத்தின் (சூர்யா) வாழ்க்கையில் அவரது மகனுக்கு ஏற்படும் உடல்நலக் குறைவு எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதையும், குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும் மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. </p><p>இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். ரவீனா டாண்டன், ராதிகா சரத்குமார், நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரும் வேலை நாட்களிலும் நிலையான வசூலைத் தக்கவைக்கும் பட்சத்தில் இத்திரைப்படம் மேலும் பல வசூல் சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>முதல்வர் அறை மாற்றம் ஏன்?- விளக்கம் அளித்த அமைச்சர் ஆதவ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadhav-arjuna-explain-why-is-the-chief-ministers-room-being-changed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadhav-arjuna-explain-why-is-the-chief-ministers-room-being-changed#comments</comments><guid isPermaLink="false">8b6b5ab6-af23-44ef-b82a-4b168c804555</guid><pubDate>Tue, 18 Aug 2026 06:15:17 +0000</pubDate><atom:updated>2026-08-18T06:15:17.553Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆதவ் அர்ஜூனா,தமிழக சட்டசபை,ev velu,எவ வேலு,TN assembly,Minister Aadhav Arjuna</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/oh2q0ytv/aadhavarjuna.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் ஆதவ் அர்ஜூனா]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ஆதவ் அர்ஜூனா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/oh2q0ytv/aadhavarjuna.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதல்வரை சுற்றி பணியாற்றும் 80-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், அவரை காண வருவோர் வசதிக்காகத்தான் அறை மாற்றம் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறினார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபையில்</a> மானியக் கோரிகை மீதான விவாதத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ.வேலு பேசுகையில், தமிழ்நாட்டின் அனைத்து முதல்வர்களும் இருந்த அறையை எதற்காக மாற்ற வேண்டும்?. தமிழ்நாட்டை முன்னேற்றிய திட்டங்கள் அனைத்தும் இந்த அறையில் இருந்ததான் இயற்றப்பட்டன. கலைஞர் கட்டிய நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு முதல்வர் செல்வதில் எனக்கு மகிழ்ச்சிதான். நாமக்கல் கவிஞர் மாளிகை சென்றால் அரசு அலுவலர்கள் உணவு அருந்துவது உள்ளிட்டவற்றில் சிரமம் ஏற்படும் என்றார். </p><p>இதனை தொடர்ந்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசுகையில், </p><p>* வாழைப்பழத்தில் ஊசி ஏற்றி அதனை மக்களுக்கே கொடுப்பது போல் சிரித்துக்கொண்டு பேசியிருக்கிறார் எ.வ.வேலு.</p><p>* கடந்த 5 வருட பத்திரிகை செய்திகளை எடுத்து பார்த்தால் பொதுப்பணித்துறையில் ஊழல் மட்டுமே நிறைந்திருக்கும்.</p><p>* முதல்வர் அறை மாற்றத்திற்கான டெண்டர் இன்னும் முடியவில்லை. முதல்வர் அறையை மாற்றுவதற்காக வெளியிடப்பட்ட டெண்டரில் கோளாறு என வெளியான செய்தி தவறு.</p><p>* 200 பேர் வரை அமரக்கூடிய வகையில் அறை இருக்க வேண்டும் என முதலமைச்சர் நினைக்கிறார். </p><p>* கலைஞரும், ஜெயலலிதாவும் புதிய தலைமைச்செயலகத்தை கட்ட வேண்டும் என நினைத்தனர்.</p><p>* முதலமைச்சர் தன்னுடைய வசதிக்காக அறையை மாற்றவில்லை, அனைவருக்காகவும் மாற்றுகிறார். </p><p>* தான் மட்டும் நல்ல அறையில் அமர்ந்திருக்க வேண்டும் என முதல்வர் நினைக்கவில்லை.</p><p>* முதல்வரை சுற்றி பணியாற்றும் 80-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அவரை காண வருவோர் வசதிக்காகத்தான் அறை மாற்றம்.</p><p>* எளிமையை விரும்பும் முதலமைச்சர் விஜய், தன்னை சுற்றி இருப்பவர்களை நினைத்துதான் அறையை மாற்றுகிறார்.</p><p>* முதல்வர் இப்போது இருக்கும் அறையில் முறையான கழிப்பறை வசதி கூட இல்லை என்பதால் மாற்றுகிறோம். </p><p>* அதிகாரிகள் எந்த திட்டத்தை தீட்டினாலும் அமைச்சரின் கவனத்திற்கு வராமல் வெளியிடப்படாது.</p><p>* 5 வருடத்தில் நடைபெற டெண்டர் குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிட உள்ளோம்.</p><p>* நெடுஞ்சாலை, பொதுப்பணித் துறையிலும் விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட உள்ளது என்றார். </p>]]></content:encoded></item><item><title>தென்னகத்து சூரியன் கலைஞர்.. காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் தான் பொருத்தம்  - அமைச்சர் ராஜ்மோகன் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kamarajar-name-row-opposition-and-minister-spar-over-renaming-cm-breakfast-scheme-in-tamil-nadu-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kamarajar-name-row-opposition-and-minister-spar-over-renaming-cm-breakfast-scheme-in-tamil-nadu-assembly#comments</comments><guid isPermaLink="false">f31552ba-6af6-4b3d-b7bb-43bfea8416f0</guid><pubDate>Tue, 18 Aug 2026 05:59:32 +0000</pubDate><atom:updated>2026-08-18T05:59:32.471Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,rajmohan,Tamil Nadu Legislative Assembly,ராஜ்மோகன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/hmf6qc4y/tn-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராஜ்மோகன்]]></media:title><media:description type="html"><![CDATA[ ராஜ்மோகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/hmf6qc4y/tn-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி கொறடா எ.வ. வேலு முந்தைய ஆட்சியின் சாதனைகளை பற்றி விரிவாக பேசினார். </p><p>மேலும் முதல்வரின்<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/velu-raises-periyar-library-delay-and-cm-breakfast-scheme-naming-issue-in-assembly"> காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் </a>வைத்தது ஏன்? புதிய திட்டத்தை தொடங்கி அதற்கு காமராஜர் பெயர் வைத்திருந்தால் வரவேற்றிருப்போம் என தெரிவித்தார். </p> <h2>ராஜ்மோகன்</h2><p>இதற்கு பதிலளிக்க எழுந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்,</p><p>"கலைஞரை நாங்கள் மதிக்கிறோம். நேற்று எங்கள் கட்சி உறுப்பினர் அவர் பெயரை சொன்னபோது அதற்கு எழுந்து நின்று வாஞ்சையோடு தாய்மையோடு எழுந்து நின்று வருத்தம் தெரிவித்த முதல்வர் இங்கே அமர்ந்து கொண்டிருக்கிறார்.</p> <h2>கலைஞர்</h2><p>தென்னநாடு பெர்னாட்ஷா என்றால் அது அறிஞர் அண்ணா தான். தெற்கில் இருந்து உதித்த சூரியன் என்றால் அது கலைஞர் தான். </p><p>ஆனால் இங்கே பேசும்போது அந்த டேபிள் செய்தது நாங்கள் தான், மைக் செய்தது நாங்கள் தான் என பேசிக்கொண்டிருக்கிறார். இது மக்கள் வரிப்பணத்தில் செய்யப்பட்டது என்பதை சுட்டிக்காட்டுகிறேன்.</p><p>பெயர் மாற்றம் பற்றி பலரும் பலமுறை சொல்கிறீர்கள். நான் வரலாற்றை சுட்டிக்காட்ட ஆசைப்படுகிறேன். 96 க்கு பின் முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சி அமையும்போது அவர் பெயர் மாற்றம் பற்றி பேசியிருந்தார்.</p><p>திரைப்பட நகர் ஜேஜே சினி சிட்டி ஆரம்பிக்கப்பட்டது பற்றி உங்களுக்கு தெரியும், இந்த பெயரை கலைஞர் ஆட்சி அமைந்த பிறகு ஜேஜே சினி சிட்டியை அதற்கு பொருத்தமான பெயர் மாற்றமாக எம்ஜிஆர் திரைப்பட நகராக மாற்றுகிறேன் என அறிவித்திருக்கிறார்.</p> <p>எனவே பெயர் மாற்றம் காலங்காலமாக நடந்து வருகிறது. அம்மா பசுமை வீடு, கலைஞர் கனவு இல்லமாக மாறுகிறது. அம்மா மருந்தகம் முதல்வர் மருந்தகமாக மாறியிருக்கிறது. அம்மா மினி கிளினிக் முதல்வர் மினி கிளினிக் ஆக மாறியிருக்கிறது.</p><h2>காமராஜர்</h2><p>ஆனால் நான் 10 இடத்திற்கு போயாவது செல்வம் சேர்த்து வருவேன், நீ படிக்கின்ற வேலையை மட்டும் பார் என்ற கொள்கை தலைவர் காமராஜர் பெயர் தான் இந்த காலை உணவுத் திட்டத்திற்கு பொருத்தமானது.</p><p>இந்த திட்டம் ரூ.203 கொடியே 72 லட்சம் செலவில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.</p><p>இரு குறிப்பிட்ட வகுப்பு வரை இருந்த திட்டம் பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு காமராஜர் பெயரை விட பொருத்தமாக பெயர் இந்த உலகிலேயே இருக்காது.</p> ]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய்க்கு அனைத்து விவரங்களும் தெரியும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன்- எ.வ.வேலு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ev-velu-says-i-acknowledge-that-chief-minister-vijay-is-aware-of-all-the-details</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ev-velu-says-i-acknowledge-that-chief-minister-vijay-is-aware-of-all-the-details#comments</comments><guid isPermaLink="false">64fc62b0-543f-4349-ba4d-ee237d1141f3</guid><pubDate>Tue, 18 Aug 2026 05:56:55 +0000</pubDate><atom:updated>2026-08-18T05:56:55.848Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தமிழக சட்டசபை,ev velu,எவ வேலு,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/odn4cbfv/evvelu.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்- எ.வ.வேலு]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்- எ.வ.வேலு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/odn4cbfv/evvelu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ.வேலு, முதலமைச்சர் விஜய்க்கு அனைத்து விவரங்களும் தெரியும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என கூறினார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபையில்</a> இன்று 3 மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ.வேலு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>பொருளாதரத்தை முன்னேற்ற சாலைகள் தேவை, தி.மு.க. ஆட்சியில் 67,000 கி.மீ. தொலைவு சாலைகள் அமைக்கப்பட்டது. டெண்டர் விலை உயர்த்தி முறைகேடு செய்ய தெரியாது என முதலமைச்சர் விஜய் கூறுகிறார். அவரை யாரோ தவறாக வழிநடத்துகிறார்கள் என்றார். </p><p>உடனே குறுக்கிட்ட சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், </p><p>முதலமைச்சரை யாரும் வழிநடத்த தேவையில்லை, விரல் நுனியில் தகவல் வைத்துள்ளார் முதலமைச்சர் என்றார். </p><p>இதனை தொடர்ந்து, தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ.வேலு, முதலமைச்சர் விஜய்க்கு அனைத்து விவரங்களும் தெரியும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என கூறினார். </p><p>இதனை தொடந்து பேசிய எ.வ.வேலு, நடப்பு ஆண்டில் எவ்வளவு சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது, எவ்வளவு நிதி ஒதுக்கீடு என விவரம் இல்லை. ஒரு திட்டம் போட்டால் அதற்கு இவ்வளவு நிதி ஒதுக்கீடு என கொள்கை குறிப்பில் சொல்ல வேண்டும். வெள்ள தடுப்பு பணிகள் குறித்து கொள்கை விளக்க குறிப்பில் இல்லை. </p><p>நேற்று எங்களுக்கு சலாம் போட்டவர் தான் இன்று உங்களுக்கு சலாம் போடுகின்றனர், அரசு அலுவலர்கள் பொதுவானவர்கள். பழைய ஓய்வூதிய திட்டத்தை 2003-ல் அப்போதைய அரசு ரத்து செய்தது, பல போராட்டங்கள் நடைபெற்றது. உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை ஏற்றுக்கொள்ளும் நிலை திமுக அரசின் பேச்சுவார்த்தையில் ஏற்பட்டது.  அரசு ஊழியர்களுக்காக கலைஞர் கொண்டு வந்த திட்டங்களை பட்டியலிட்டு பேசினார்.</p><p>அப்போது குறுக்கிட்ட அமைச்சர் செங்கோட்டையன், பொதுக்கூட்டத்தில் பேசுவதை போல் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சட்டசபையில் பேசிக்கொண்டிருக்கிறார் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>சர்வதேச கிரிக்கெட்டில் 18 ஆண்டுகளை நிறைவு செய்த விராட் கோலி: ஒருநாள் உலகக்கோப்பை மீது மட்டுமே முழு கவனம்!</title><link>https://www.maalaimalar.com/sports/virat-kohli-completes-18-years-in-international-cricket</link><comments>https://www.maalaimalar.com/sports/virat-kohli-completes-18-years-in-international-cricket#comments</comments><guid isPermaLink="false">bee82685-1615-4939-8681-e4bfa70990f6</guid><pubDate>Tue, 18 Aug 2026 05:44:35 +0000</pubDate><atom:updated>2026-08-18T05:44:35.236Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Virat Kohli,விராட் கோலி,world cup,international cricket,சர்வதேச கிரிக்கெட்,உலகக்கோப்பை கிரிக்கெட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/w82rfdm2/virat.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Virat Kohli]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/w82rfdm2/virat.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தடம் பதித்து வெற்றிகரமாக 18 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 அன்று இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான கோலி, உலகக் கிரிக்கெட்டின் முன்னணி பேட்டராக உருவெடுத்துள்ளார். தனது 18 ஜெர்சி எண்ணைப் போலவே, சர்வதேசக் களத்தில் இந்த 18 ஆண்டுகாலப் பயணம் அவரது தொழில்முறை வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.</p><h2>டி20 மற்றும் டெ<strong>ஸ்ட் போட்டிகளில்</strong> இருந்து ஓய்வு</h2><p>இந்திய கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் சாதனைகளைப் படைத்த விராட் கோலி, ஏற்கனவே டி20 பன்னாட்டுப் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்துவிட்டார். பணிச்சுமையைக் குறைக்கவும் உடற்தகுதியைப் பேணவும் எடுக்கப்பட்ட இந்த முடிவின் மூலம், அவர் தனது <a href="https://www.maalaimalar.com/sports/cricket/virat-kohli-surpasses-rahul-dravid-to-script-historic-odi-milestone">கிரிக்கெட்</a> வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை ஒருநாள் போட்டிகளில் மட்டுமே தொடர தீர்மானித்துள்ளார்.</p><h2>2027 ஒருநாள் உல<strong>கக்கோ</strong>ப்பை மீது முழு இலக்கு</h2><p>டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகியதன் மூலம், கோலியின் முழு கவனமும் தற்போது ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் மீது மட்டுமே உள்ளது. தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமிபியா நாடுகளில் நடைபெறவுள்ள 2027 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்குக் கோப்பையை வென்று தருவதே அவரது முதன்மை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காகத் தனது உடற்தகுதியையும் ஆட்டத் திறனையும் உச்சகட்டத்தில் வைத்துக்கொள்ள அவர் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.</p><h2>சர்வதேச <strong>கிரிக்கெட்டில் படைத்த</strong> சாதனைகள்</h2><p>தனது 18 ஆண்டுகாலப் பயணத்தில் 28,000-க்கும் அதிகமான ரன்களைக் குவித்து, சர்வதேசக் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் கோலி நீடிக்கிறார். சச்சின் டெண்டுல்கரின் ஒருநாள் போட்டிச் சதங்கள் சாதனையை முறியடித்த கோலி, கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த ஒருநாள் ஆட்டக்காரராகத் திகழ்கிறார். வரும் 2027 உலகக்கோப்பைத் தொடரே இவரது புகழ்பெற்ற கிரிக்கெட் பயணத்தின் உச்சகட்ட இறுதித் தொடராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் வைத்ததற்கு எ.வ. வேலு எதிர்ப்பு
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/velu-raises-periyar-library-delay-and-cm-breakfast-scheme-naming-issue-in-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/velu-raises-periyar-library-delay-and-cm-breakfast-scheme-naming-issue-in-assembly#comments</comments><guid isPermaLink="false">4ec75a39-f4fa-427d-8f1c-853a64c3aefa</guid><pubDate>Tue, 18 Aug 2026 05:36:21 +0000</pubDate><atom:updated>2026-08-18T05:36:21.989Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,Tamil Nadu Legislative Assembly,காமராஜர் காலை உணவுத் திட்டம்,எ.வ. வேலு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/ylljt2l7/tn-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ எ.வ. வேலு]]></media:title><media:description type="html"><![CDATA[ எ.வ. வேலு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/ylljt2l7/tn-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது.  </p><p>இதில் எதிர்க்கட்சி திமுகவை சேர்ந்த கொறடா <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8E%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81">எ.வ.வேலு </a>பேசுகையில், </p><p>"சென்னை வள்ளுவர் கோட்டம் முதல் குமரி வள்ளுவர் சிலை வரை கலைஞரின் அடையாளம் இல்லா ஊரே இல்லை.</p> <h2>பெரியார்</h2><p>விடுதலை போராட்ட வீரர்களுக்கு சிலைகள், மணிமண்டபங்கள் அமைத்து தந்தோம். பெரியார் கொள்கை தலைவர் என தவெக தம்பட்டம் அடித்துக்கொள்கிறது. 3 மாத காலமாக பெரியார் நூலகத்தை கிடப்பில் போட்டது ஏன்?</p><p>அறிவாலயத்தில் பெரியார் சிலை இல்லை. எங்கள் கட்சி அலுவலகத்தில் பெரியாருக்கு சிலை இருக்கிறது. கோவை தந்தை பெரியார் நூலகத்தை திறக்க வேண்டும்.</p> <h2>காமராஜர்</h2><p>மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கையில் தான் கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்தோம். காலை உணவுத்திட்டத்திற்கு காமராஜர் பெயரை வைக்க வேண்டிய அவசியம் என்ன?.</p><p>புதிய திட்டத்திற்கு காமராஜர் பெயரை வைத்தால் அதை வரவேற்கிறோம். ஆனால் முதலமைச்சர் என்ற பொதுவான சொற்றொடரை நீக்கிவிட்டு காமராஜர் பெயரை வைக்க வேண்டிய அவசியம் என்ன? திட்டத்தை அறிமுகம் செய்யப்பட்டபோது ஏன் இதற்கு மு.க. ஸ்டாலின் காலை உணவுத் திட்டம் என பெயர் வைக்கக்கூடாது எனக் கேட்டேன்.</p> <h2>மு.க. ஸ்டாலின்</h2><p>அதற்கு அப்போது முதல்வராக இருந்த ஸ்டாலின், முதலமைச்சர் என்று வைத்தால் ஒரு தனிப்பட்ட நபரை குறிக்காமல் அடுத்து வரும் அனைத்து முதல்வர்களையும் குறிக்கும், அந்த பெயரை மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது என்று கூறியதாக எ.வ. வேலு தெரிவித்தார்.</p> <p>உடனே எழுந்த அவை முன்னவர் செங்கோட்டையன், "மானியக்கோரிக்கையை விட்டுவிட்டு காலை உணவு குறித்து பேசுவது ஏன்?" என கேள்வி எழுப்பினார். இதைத்தொடர்ந்து மானிய கோரிக்கை பற்றி மட்டுமே பேச வேண்டும் என சபாநாயகர் கண்டித்தார்.</p> ]]></content:encoded></item><item><title>தொடரும் காவல்நிலைய மரணங்களுக்கு  அரசு முடிவு கட்ட வேண்டும்!- அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-government-must-put-an-end-to-the-continuing-deaths-in-police-custody</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-government-must-put-an-end-to-the-continuing-deaths-in-police-custody#comments</comments><guid isPermaLink="false">fec904da-0dd9-4c67-8c4d-f322355cc0cb</guid><pubDate>Tue, 18 Aug 2026 05:20:22 +0000</pubDate><atom:updated>2026-08-18T05:20:22.276Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,காவல் நிலைய மரணங்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/aynl8f9p/anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/aynl8f9p/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இனிவரும் காலங்களில் காவல் மரணங்கள் நடப்பதை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும். காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்த  பரமசிவம்  குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.</strong></em></p><p>பா.ம.க தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>மதுரை சிந்தாமணி காவல் நிலையத்திற்கு  விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட  மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்த கோவில் பூசாரி பரமசிவம் என்பவரை, காவல்நிலையத்தில் வைத்து  கொடூரமாகத் தாக்கியதில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில்  தீவிர மருத்துவம் அளிக்கப்பட்டும் பயனின்றி உயிரிழந்தார் என்று வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.  பூசாரி பரமசிவம் அவர்களை இழந்து வாடும்  குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும்,  அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2><strong>மனித உரிமை மீறல்கள்</strong> </h2><p>காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்த பரமசிவம் எந்த தவறும் செய்யவில்லை. அண்டை வீட்டாருடன் வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட மோதல் தொடர்பான விசாரணைக்காக கடந்த மாதம்  19-ஆம் தேதி  அழைத்துச் சென்ற  சிந்தாமணி காவல் நிலைய காவலர்கள், அவரை கொடூரமாகத் தாக்கியதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து வாந்தி, மயக்கம், தலைவலி ஏற்பட்டு அவதிப்பட்ட பரமசிவம்  மதுரை  தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டும் பயனின்றி  உயிரிழந்திருக்கிறார். காவல்துறையினர் தம்மை கொடூரமாகத் தாக்கியது தான் தமது உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடுவதற்கு காரணம் என்று இறப்பதற்கு முன் பதிவு செய்யப்பட்ட காணொலியில் பரமசிவம் குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p>விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுவோரை காவல்துறையினர் கொடூரமாகத் தாக்குவதும், அதில் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழப்பதும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.  நாகர்கோவில் கிளைச்சிறையில் சபரிவர்மன் என்ற மாற்றுத்திறனாளியும், தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த அருணாச்சலம் என்ற இளைஞரும் முறையே சிறைத்துறையினர், காவல்துறையினர்  தாக்கியதில் உயிரிழந்ததால் ஏற்பட்ட பதட்டம் விலகும் முன்பே  மதுரை கோயில் பூசாரி பரமசிவம் உயிரிழந்தது மனித உரிமை மீறல்கள் குறித்த கவலையை  அதிகரித்துள்ளது.</p><p>ஆட்சிக்கு வந்தால் காவல் மரணங்கள் முற்றிலுமாக தடுத்து நிறுத்தப்படும் என்று கடந்த தேர்தலின் போது தவெக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பின் இதுவரை 6 காவல் மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.  இனிவரும் காலங்களில் காவல் மரணங்கள் நடப்பதை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும். காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்த  பரமசிவம்  குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இதற்கு காரணமான காவலர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>ஈரான் வெள்ளைக் கொடி தூக்க வேண்டும்.. ஹார்முஸில் ஓமன் தலையிட்டால் தாக்குவோம் - டிரம்ப் </title><link>https://www.maalaimalar.com/news/world/usiran-tensions-trump-warns-unconditional-surrender-and-tougher-sanctions</link><comments>https://www.maalaimalar.com/news/world/usiran-tensions-trump-warns-unconditional-surrender-and-tougher-sanctions#comments</comments><guid isPermaLink="false">d5ac39bb-b122-4fa4-bcab-6f7d2aa04343</guid><pubDate>Tue, 18 Aug 2026 05:15:03 +0000</pubDate><atom:updated>2026-08-18T05:15:03.510Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>trump,டிரம்ப்,Iran War,ஈரான் போர்,ஹார்முஸ் ஜலசந்தி,Strait of Hormuz</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/oc1903s6/tn-9.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டிரம்ப்  ]]></media:title><media:description type="html"><![CDATA[ டிரம்ப்  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/oc1903s6/tn-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவின் Fox News தொலைக்காட்சிக்கு அதிபர் <a href="https://www.maalaimalar.com/topic/donald-trump">டிரம்ப் </a>சிறப்பு பேட்டி அளித்துள்ளார். </p><h2>ஈரான் போர்</h2><p>அதில் <a href="https://www.maalaimalar.com/news/world/iran-nuclear-strike-talks-trump-administration-accused-of-risking-global-war-over-iran-attack-plans">ஈரானுடனான போர்</a> குறித்து பேசிய அவர்,</p><p>"ஈரான் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாகச் சரணடைய வேண்டும். அவர்கள் சரணடைவதற்கான வெள்ளைக் கொடியை உயர்த்த வேண்டும்.</p><p>இதில் எங்களுக்கு எந்த அவசரமும் இல்லை. இதற்கென எந்தக் காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை.</p><p>எங்களது கடற்படை முற்றுகையால் ஈரான் தினமும் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை இழந்து வருகிறது.</p><p>இந்த வாரத்தில் அவர்கள் மீது இன்னும் கடுமையான பொருளாதார தடைகளை விதிப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம்.</p><p>ஈரானின் ஆட்சியாளர்கள் நல்ல ராஜதந்திரிகள், ஆனால் அவர்களின் பொருளாதாரம் தற்போது முற்றிலும் குலைந்துவிட்டது." என்று தெரிவித்தார்.</p> <h2>ஹார்முஸ்</h2><p>ஹார்முஸ் ஜலசந்தியில் ஒரு தற்காலிக புதிய போக்குவரத்து பாதையை உருவாக்க ஈரானுடன் ஓமன் ஒப்பந்தம் எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் இதுகுறித்து டிரம்ப் கூறுகையில், "ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் ஒருவேளை ஓமன் குறுக்கே நின்றால், அவர்கள் மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்துவோம்." என்றார்.</p><p>முன்னதாக ஹார்முஸ் ஜலசந்தி கிட்டத்தட்ட தங்கள் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாகவும், அதை அமெரிக்காவின் பகுதியாக அறிவிக்கப்போவதாகவும் டிரம்ப் கூறியதன் பின்னனியில் இவ்வாறு பேசியுள்ளார்.</p><p>Fox News பேட்டியில் தொடர்ந்து பேசிய அவர், ஈரான் அணுஆயுத வல்லரசாக மாறுவதைத் தடுப்பதே எங்களது முதன்மை இலக்கு. இதுவரை நாங்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் மிகச் சிறியவை.</p><p>பைடன் ஆட்சியில் உக்ரைனுக்கு வழங்கப்பட்ட அதிநவீன பாதுகாப்பு அமைப்புகளும் எங்களிடம் தயார் நிலையில் உள்ளன." என தெரிவித்தார்.</p> <h2>காசா</h2><p>காசா - இஸ்ரேல் விவகாரம் குறித்து பேசிய அவர், "ஹமாஸ் அமைப்பினர் தங்களிடமுள்ள ஆயுதங்களைக் கைவிட்டு வருகிறார்கள். </p><p>எனவே, காசா மீது இஸ்ரேல் இனி தொடர்ந்து தாக்குதல்களை நடத்த வேண்டிய அவசியமில்லை" எனத் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>செயற்கை சுவையூட்டிகளுக்கு தடை: ராயல் சேலஞ்ச், மெக்டவல்ஸ் மதுபானங்களின் பார்முலா மாற்றம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/india-food-safety-authority-forces-formula-change-for-royal-challenge-mcdowells-spirits</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-food-safety-authority-forces-formula-change-for-royal-challenge-mcdowells-spirits#comments</comments><guid isPermaLink="false">74611483-60c4-4af3-a1e7-69648b0a7366</guid><pubDate>Tue, 18 Aug 2026 05:08:41 +0000</pubDate><atom:updated>2026-08-18T05:08:41.652Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>FSSAI,Royal Challenge,McDowell&apos;s,Antiquity Blue,ராயல் சேலஞ்ச்,மெக்டவல்ஸ்,ஆண்டிகுவிட்டி ப்ளூ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/359w3z4c/drug.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ royal challange
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/359w3z4c/drug.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுபானங்களின் தயாரிப்பு முறையில் மாற்றம் செய்ய டியாஜியோ ஒப்புக் கொண்டுள்ளது. ராயல் சேலஞ்ச், ஆண்டிகுவிட்டி ப்ளூ மற்றும் மெக்டவல்ஸ் எண் 1 ஆகிய பிரபல மதுபானங்களின் தயாரிப்பு முறைகளை மாற்றப் போவதாக அந்த நிறுவனம் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் (FSSAI) உறுதி அளித்துள்ளது.</p><p>உணவுப் பாதுகாப்பு அமைப்பின் அதிரடி நடவடிக்கை காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/11-liquor-brands-banned-in-tasmac">மதுபானங்களில் </a>செயற்கை சுவையூட்டிகளைச் சேர்ப்பதைக் கட்டுப்படுத்தும் விதமாக சில மாநிலங்களில் இந்த பானங்களின் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டது. தற்போது தயாரிப்பு முறையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.</p><h2>தடைக்<strong>கான காரணம்</strong></h2><p>இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் மதுபான தயாரிப்பில் உள்ள சில விதிமீறல்களைச் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>* விஸ்கி பானத்தில் பிரத்யேக விஸ்கி சுவையையோ அல்லது ரம் பானத்தில் செயற்கையான ரம் சுவையையோ தனியாகச் சேர்ப்பது சர்வதேச உற்பத்தி நடைமுறைகளுக்கு எதிரானது என ஆணையம் தெரிவித்தது.</p><p>* பழைய மரப் பீப்பாய்களில் முறைப்படி சேமித்து வைக்கப்பட்டுப் பதப்படுத்தப்படுவதற்குப் பதிலாக, நடுநிலையான தானிய மதுபானத்துடன் செயற்கை சுவையூட்டிகளைச் சேர்த்துத் தயாரிப்பது வாடிக்கையாளர்களை ஏமாற்றும் செயலாகும் என எச்சரிக்கப்பட்டது.</p><p>* ராயல் சேலஞ்ச் மற்றும் ஆண்டிகுவிட்டி ப்ளூ ஆகியவை மத்தியப் பிரதேசத்திலும், மெக்டவல்ஸ் எண் 1 ரம் மகாராஷ்டிராவிலும் உள்ள உற்பத்தி மையங்களில் விதிகளுக்குப் புறம்பாகச் தயாரிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.</p><h2>டியா<strong>ஜியோ நிறுவனத்தின் புதிய மு</strong>டிவுகள்</h2><p>கட்டுப்பாட்டு அமைப்பின் நடவடிக்கையை அடுத்து, டியாஜியோ நிறுவனம் இந்தியா முழுவதற்கும் பொருந்தக்கூடிய சில முக்கிய மாற்றங்களைச் செய்ய ஒப்புக் கொண்டுள்ளது.</p><p>* தனது பிரபல மதுபானங்களில் தனியாகச் சேர்க்கப்பட்டு வந்த விஸ்கி மற்றும் ரம் சுவையூட்டிகளை முற்றிலுமாக நிறுத்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.</p><p>* அடுத்த 3 மாத கால அவகாசத்திற்குள் அனைத்துப் பிராண்டுகளின் தயாரிப்பு விதிகளையும் மாற்றி அமைக்க டியாஜியோ திட்டமிட்டுள்ளது.</p><p>* புதிய தயாரிப்பு முறை நடைமுறைக்கு வரும் வரை, பாட்டில்களின் முன்பகுதியில் என்ன சுவையூட்டி சேர்க்கப்பட்டுள்ளது என்பதை நுகர்வோர் தெளிவாகப் புரிந்து கொள்ளும் வகையில் லேபிளிங் செய்யப்படும்.</p><h2>விற்பனைத் <strong>தடை விலக்கப்படுமா</strong></h2><p>நிறுவனம் தயாரிப்பு முறையை மாற்றுவதற்கும், பாட்டில்களில் சரியான விவரங்களைக் குறிப்பிடுவதற்கும் ஒப்புக் கொண்டுள்ளதால், விதிக்கப்பட்ட தடையை வாபஸ் பெற உணவுப் பாதுகாப்பு ஆணையம் பரிசீலித்து வருகிறது. இந்தியாவில் ஆண்டுக்கு லட்சக்கணக்கான கேஸ்கள் விற்பனையாகும் இந்த முக்கிய பிராண்டுகளின் தயாரிப்பு மாற்றம், நாட்டின் 40 பில்லியன் டாலர் மதிப்புள்ள மதுபான சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>மீன்வளம், சுற்றுச்சூழலை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் த.வெ.க. அரசு அனுமதிக்காது- அமைச்சர் ராஜீவ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajeev-says-tvk-government-will-not-permit-any-project-that-harms-fisheries-or-the-environment</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajeev-says-tvk-government-will-not-permit-any-project-that-harms-fisheries-or-the-environment#comments</comments><guid isPermaLink="false">c5bc84b0-446f-4a1f-8da8-19937d314e20</guid><pubDate>Tue, 18 Aug 2026 05:04:42 +0000</pubDate><atom:updated>2026-08-18T05:04:42.253Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/6r806m9g/rajeev.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் ராஜீவ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ராஜீவ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/6r806m9g/rajeev.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதில் எந்த சமரசமும் இன்றி த.வெ.க. அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபையில்</a> இன்று  கர்நாடக வனத்துறையால் தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இத்தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேசினர். இதைதொடர்ந்து அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்தார். </p><p>அதனை தொடர்ந்து, கடலூரில் இந்துஸ்தான் ஆயில் நிறுவனம், மேம்பாட்டுக் கிணறுகள் அமைப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இத்தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேச்சைத் தொடர்ந்து அமைச்சர் விளக்கம் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-</p><h2><strong>மஜக எம்எல்ஏ தமிமுன் அன்சாரி</strong></h2><p>சுற்றுச்சூழல் பாதிப்பை கூர்ந்தாய்வு செய்து அரசு நடவடிக்கை என அமைச்சர் கூறியுள்ளார். புதிதாக 4 கிணறு தோண்டினால் மீனவர் நலன் என பல பாதிப்பு உள்ளதால் அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். பரங்கிப்பேட்டையில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைப்பதற்கான HOEC நிறுவன விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். </p><h2><strong>சிபிஐ எம்எல்ஏ மாரிமுத்து</strong> </h2><p>ஹைட்ரோ கார்பன் கிணறு திட்டத்தால் புதுவை முதல் கன்னியாகுமரி வரை கடல் வளம் பாதிக்கப்படும் என்றார். </p><h2><strong>அமைச்சர் ராஜீவ்</strong></h2><p>3 கிணறுகளுக்கு திமுக ஆட்சியிலும், ஒரு கிணறுக்கு அதிமுக ஆட்சியிலும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1-ல் HOEC நிறுவனம் மேலும் கிணறு அமைக்கும் விண்ணப்பத்தை கடலோர மண்டல மேலாண்மை குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  மீன்வளம் சுற்றுச்சூழலை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் த.வெ.க. அரசு அனுமதிக்காது. சுற்றுச்சூழலுக்கு எதிரான, மீனவர்களுக்கு எதிரான எந்த திட்டத்தையும் இந்த அரசு அனுமதிக்காது. மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதில் எந்த சமரசமும் இன்றி த.வெ.க. அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார். </p><h2><strong>தமிமுன் அன்சாரி</strong> </h2><p>சுற்றுச்சூழுல் விழிப்புணர்வு ஏற்படும் முந்தைய காலத்தில் முந்தைய ஆட்சியாளர்கள் அனுமதி வழங்கியிருக்கலாம்.  மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் கிணறு அமைக்க அனுமதி தரவில்லை. எந்த அரசு செய்தது என்ற வாதத்திற்கு செல்லாமல், மண் வளத்தை காக்கும் வகையில் தான் பேரவையில் இதுகுறித்து பேசுகிறோம் என்றார். </p>]]></content:encoded></item><item><title>3 தமிழர்கள் கொலையில் சிபிஐ விசாரணை வேண்டும் - சட்டசபையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-demands-justice-parties-seek-higher-compensation-and-cbi-probe-into-killing-of-3-tamils-in-karnataka-forest</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-demands-justice-parties-seek-higher-compensation-and-cbi-probe-into-killing-of-3-tamils-in-karnataka-forest#comments</comments><guid isPermaLink="false">d5b47a8d-4fd1-4052-b9fa-b8282c097b4b</guid><pubDate>Tue, 18 Aug 2026 04:41:00 +0000</pubDate><atom:updated>2026-08-18T04:41:00.371Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN assembly,தமிழர்கள் சுட்டுக்கொலை,Karnataka Forest Department,சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/7tw3jsfb/tn-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ]]></media:title><media:description type="html"><![CDATA[ காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/7tw3jsfb/tn-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">கர்நாடகாவில் </a>சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்கள் குறித்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை திமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் சட்டசபையில் கொண்டு வந்தார். </p><h2></h2><h2>காங்கிரஸ்</h2><p>இதன் மீதான விவாதத்தில் பேசிய குளச்சல் காங்கிரஸ் எம்எல்ஏ தாமரை தீட்சித்,</p><p>"கர்நாடகா சாம்ராஜ் மாவட்ட வனப்பகுதியில் தமிழர்களை சுட்டுத் தள்ளியுள்ளார்கள். இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது.</p><p>மனித உயிருக்கு இன்று விலை இல்லாமல் போய்விட்டது என்பது மிகவும் வருந்தத்தக்க விஷயம். எப்பொழுதும் எந்த பிரச்சனை என்றாலும் தமிழர்கள் என்றாலே இளக்காரமாக மாறிவிட்ட சூழ்நிலை உள்ளது.</p><p>இதை <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-cm-vijay-condemns-killing-of-three-tamils-in-karnataka">முதலமைச்சர் கண்டித்துள்ளார்</a>. கர்நாடக அரசு கொடுத்துள்ள இழப்பீடு நியாயமானது அல்ல. </p><p>எனவே இதற்கு கூடுதல் இழப்பீடு வழங்குவதோடு இதற்கு தகுந்த சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்பது தமிழக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு.</p> <p>அதைப்போல இன்றைக்கு மகிமி தாஸ் என்பவர் அங்கே உயிருக்கு போராடிக்கொண்டிருக்கக்கூடிய நிலைமை இருக்கிறது. </p><p>அதற்கும் கர்நாடக அரசு அவருவடைய சிகிச்சைக்கான செலவுகளை முழுமையாக ஏற்க வேண்டும் என்பது தமிழக காங்கிரஸ் நிலைப்பாடு.</p><p>இறந்த மூன்று பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இந்த வழக்கில் ஆணித்தனமான சிபிஐ விசாரணை வேண்டும் என்ற எங்கள் நிலைப்பாட்டை எடுத்துக்கூற விழைகிறேன். "என்றார்.</p><h2>கம்யூனிஸ்ட்</h2><p>தொடர்ந்து தளி இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ டி.ராமச்சந்திரன் பேசுகையில், "தமிழர்களின் உயிரை துப்பாக்கி குண்டுகள் தீர்மானிக்கக்கூடாது. </p><p>சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கர்நாடக அரசுக்கு தமிழக அரசும் நம் முதலமைச்சரும் அழுத்தம் கொடுக்க வேண்டும்" என்றார்.</p> <p>கீழ்வேளூர் மார்க்சிஸ்ட் எம்எல்ஏ லதா பேசுகையில், " மான் வேட்டைக்கு சென்றவர்கள் சுட்டுக்கொலை என்பது பொய்யான செய்தி. </p><p>துப்பாக்கிச்சூட்டில் பலியான தமிழர்கள் குடும்பத்திற்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும்.</p><p>பலியான தமிழர்கள் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசும் நிதி வழங்க வேண்டும். </p><p>இந்த விஷயத்தில் தமிழர்கள் நலனுக்கு கட்சி வேறுபாடுகள் இன்றி ஒன்றிணைய வேண்டும்." என்றார்.</p>]]></content:encoded></item><item><title>கர்நாடகாவில் தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொலை: அமைச்சரின் விளக்கமும்... தி.மு.க. எதிர்ப்பும்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-explain-three-tamils-shot-dead-in-karnataka-incident</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-explain-three-tamils-shot-dead-in-karnataka-incident#comments</comments><guid isPermaLink="false">22c0f8f5-0642-4d42-b9df-b3330da4d3e9</guid><pubDate>Tue, 18 Aug 2026 04:38:41 +0000</pubDate><atom:updated>2026-08-18T04:38:41.160Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,தமிழர்கள் சுட்டுக்கொலை,சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/ii6i0mp6/nirmalkumar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் நிர்மல்குமார்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் நிர்மல்குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/ii6i0mp6/nirmalkumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து சர்ச்சைக்குரிய முறையில் பேசிய கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபையில்</a> இன்று  கர்நாடக வனத்துறையால் தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இத்தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேசினர். இதைதொடர்ந்து அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-</p><p>* தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட 3 பேர் வனத்துறையால் சுட்டுக்கொலை, ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். </p><p>* ஆக.12-ல் 3 தமிழர்கள் கொல்லப்பட்ட நிலையில் உரிய விசாரணை நடத்தப்படும் என கர்நாடக அரசு உறுதி அளித்தது. </p><p>* உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்ததால் இறந்தவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. </p><p>* இடைக்கால நிவாரணம் ரூ.5 லட்சம் வழங்கிய கர்நாடக அரசு விசாரணைக்கு பின் கூடுதல் நிவாரணம் தருவதாக கூறியுள்ளது. </p><p>* கர்நாடக வனத்துறை நடத்தியது படுகொலை என குறிப்பிட்டு முதலமைச்சர் விஜய் கண்டனம் தெரிவித்தார். </p><p>* 3 தமிழர்கள் கொலை தொடர்பாக கர்நாடக அரசின் விளக்கம் ஏற்கத்தக்கதல்ல, விசாரணை தேவை என முதலமைச்சர் கூறியுள்ளார். </p><p>*ஒரு சிலருக்கு திடீரென தமிழ் பாசம் தமிழர் பாசம் இருக்கும் என்றார். </p><p>அமைச்சர் நிர்மல்குமாரின் பேச்சுக்கு தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். </p><p>இதனை தொடர்ந்து பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், யாருடைய கவனத்தை ஈர்ப்பதற்காக அமைச்சர் இதுபோன்று பேசுகிறார் எனத் தெரியவில்லை. கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான அமைச்சரின் பதில் மட்டுமே அவைக்குறிப்பில் இருக்கும். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து சர்ச்சைக்குரிய முறையில் பேசிய கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>விரைவில் வெளியீடு - ஒரே நாளில் ஸ்மார்ட்போன், இயர்பட்ஸ் அறிமுகம் செய்யும் ஐகூ</title><link>https://www.maalaimalar.com/technology/newgadgets/iqoo-buds-are-launching-in-india-on-this-date</link><comments>https://www.maalaimalar.com/technology/newgadgets/iqoo-buds-are-launching-in-india-on-this-date#comments</comments><guid isPermaLink="false">96ead538-031f-4091-9d14-aa5449536073</guid><pubDate>Tue, 18 Aug 2026 04:34:00 +0000</pubDate><atom:updated>2026-08-18T04:34:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>iQOO,Earbuds,ஐகூ,இயர்பட்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/700yc9ao/iQOO-TWS.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ iQOO TWS]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/700yc9ao/iQOO-TWS.png?w=280" width="280"></media:thumbnail><category>புதிய கேஜெட்டுகள் (New gadgets)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/vivo">விவோ</a> நிறுவனத்தின் துணை பிராண்டான ஐகூ (iQOO) விரைவில் இந்தியாவில் புதிய ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்போன்களை அறிமுகப்படுத்த உள்ளது. இவை ஐகூ பட்ஸ் என்று அழைக்கப்படும், மேலும் தற்போது இந்தியாவிற்கான இதன் வெளியீட்டுத் தேதியை அந்த பிராண்ட் உறுதி செய்துள்ளது. </p><p>புதிய <a href="https://www.maalaimalar.com/topic/earbuds">இயர்பட்ஸ்</a> மாடலுடன் ஐகூ நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஐகூ Z11 5ஜி என அழைக்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் மற்றும் இயர்போன் என இரண்டு சாதனங்களும் ஒரே நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.</p><h2>வெளியீட்டு தேதி:</h2><p>புதிய ஐகூ பட்ஸ், 2026 ஆகஸ்ட் 20-ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமாகும். இத்துடன் ஐகூ Z11 5ஜி உடன் சேர்ந்து நடைபெறும். ஐகூ Z11 வடிவமைப்பு குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. </p><p>இது சந்தையில் உள்ள மற்ற இயர்போன்களை போல தோற்றமளிக்கிறது. ஐகூ பட்ஸ், அமேசான் இந்தியா வழியாக விற்பனைக்கு வரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டீசரில், இந்த ஸ்மார்ட்போன் கருப்பு நிறத்தில் இருப்பதை காணலாம்.</p><p>ஐகூ பட்ஸ், காதுக்குள் பொருந்தும் வடிவமைப்பை கொண்டிருக்கும், மேலும் அதன் சார்ஜிங் கேஸின் அடிப்பகுதியில் ஒரு எல்.இ.டி. இண்டிகேட்டர் உள்ளது. புதிய ஐகூ Z11 ஸ்மார்ட்போன் தற்போது இந்திய சந்தையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் மாடல்களில் ஒன்றாக இருக்கிறது.</p><h2>அம்சங்கள்:</h2><p>புதிய ஐகூ Z11 ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 7500 SoC வழங்கப்படுகிறது. மேலும் இதில் AI சார்ந்த பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் 1.5K ரெசல்யூஷனுடன் 6.8-இன்ச் கர்வ்டு AMOLED டிஸ்ப்ளே, 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 5000nits பிரைட்னஸ் வழங்கப்படும் என்று தெரிகிறது.</p><p>இந்த ஸ்மார்ட்போன் 7050mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என்று கூறப்படுகிறது. இந்திய சந்தையில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 40,000-க்கும் குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது அரோரா கிரீன் மற்றும் செலஸ்டியல் ப்ளூ ஆகிய இரண்டு வண்ணங்களில் வரும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கர்நாடகாவில் தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொலை: சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் எம்.எல்.ஏ.க்கள் பேச்சு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamils-shot-dead-in-karnataka-mlas-speak-during-special-calling-attention-motion</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamils-shot-dead-in-karnataka-mlas-speak-during-special-calling-attention-motion#comments</comments><guid isPermaLink="false">b639043d-19a7-40aa-b12d-be5475fb64ec</guid><pubDate>Tue, 18 Aug 2026 04:21:16 +0000</pubDate><atom:updated>2026-08-18T04:21:16.385Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,தமிழர்கள் சுட்டுக்கொலை,சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/ooatftz3/assembly.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மனோஜ் பாண்டியன்- எடப்பாடி பழனிசாமி-கணேஷ் குமார்]]></media:title><media:description type="html"><![CDATA[ மனோஜ் பாண்டியன்- எடப்பாடி பழனிசாமி-கணேஷ் குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/ooatftz3/assembly.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கர்நாடகாவில் கால்நடை தேடிச்சென்ற 3 தமிழர்கள் கர்நாடக வனத்துறையால் போலி என்கவுண்ட்டர் செய்யப்பட்டுள்ளனர். அப்பாவி விவசாயிகளை வனத்துறை சுட்டுக்கொன்றது மனித உரிமை மீறல்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபையில்</a> இன்று இளைஞர் நலன், விளையாட்டு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள், பொதுப்பணி, மனிதவள மேம்பாட்டுத்துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதானம் நடைபெறுகிறது.  </p><p>முதலில், கர்நாடக வனத்துறையால் தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இத்தீர்மானத்தின் மீது தி.மு.க. எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் முதலில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-</p><p>கர்நாடகாவில் கால்நடை தேடிச்சென்ற 3 தமிழர்கள் கர்நாடக வனத்துறையால் போலி என்கவுண்ட்டர் செய்யப்பட்டுள்ளனர். அப்பாவி விவசாயிகளை வனத்துறை சுட்டுக்கொன்றது மனித உரிமை மீறல். பாதிக்கப்பட்ட தமிழர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலையும் நிவாரணமும் வழங்க வேண்டும் என்றார். </p><h2><strong>அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி</strong></h2><p>பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் தனது கால்நடை தேடிச்சென்ற 3 தமிழர்கள் சுட்டுக்கொலை, ஒருவர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். மான் வேட்டையில் ஈடுபட்டதாக 3 தமிழர்களை குற்றம்சாட்டி கொன்றுள்ளது கர்நாடக வனத்துறை. 2 மாநில எல்லை பகுதியில் கொலை நடைபெற்றுள்ளதால் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை. வனத்துறை சுட்டுக்கொன்ற தமிழர்களக்கு ரூ.5 லட்சம் மட்டுமே இழப்பீடு அறிவிப்பு, தமிழக அரசு கூடுதலாக நிதி தர வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் தொடராத வகையில் கர்நாடக அரசுடன் தமிழக அரசு பேச வேண்டும். </p><h2><strong>பா.ம.க. எம்.எல்.ஏ. கணேஷ்குமார்</strong></h2><p>கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். தற்காப்புக்காக கொலை, இதில் உரிமை மீறல் எதுவுமில்லை என கர்நாடக வனத்துறை அமைச்சர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். தமிழர்களுக்கான நியாயம், நிவாரணம், நீதி கிடைக்க சிபிஐ விசாரணை நடத்த வேண்டியது அவசியம். பாதிக்கப்பட்ட தமிழர்களின் குடும்பத்துக்கு நிதியுதவியாக ரூ.1 கோடி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். </p>]]></content:encoded></item><item><title>காசாவில் தினமும் 30 முதல் 40 பேரைக் கொல்ல வேண்டும் - இஸ்ரேல் அமைச்சர் பென் க்விர்  </title><link>https://www.maalaimalar.com/news/world/israeli-minister-calls-for-daily-killings-ben-gvir-urges-expulsion-and-systematic-killing-of-palestinians-in-gaza</link><comments>https://www.maalaimalar.com/news/world/israeli-minister-calls-for-daily-killings-ben-gvir-urges-expulsion-and-systematic-killing-of-palestinians-in-gaza#comments</comments><guid isPermaLink="false">1b2a3faa-7a6c-4281-8bc0-2f70a0e0f2ce</guid><pubDate>Tue, 18 Aug 2026 04:16:47 +0000</pubDate><atom:updated>2026-08-18T04:16:47.554Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>palestine,காசா,இஸ்ரேல்,gaza,Israel,இனப்படுகொலை,Genocide,பாலஸ்தீனம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/994kv0ub/tn-5.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பென் க்விர் ]]></media:title><media:description type="html"><![CDATA[ பென் க்விர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/994kv0ub/tn-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/trump-envoy-meets-netanyahu-over-gaza-plan-day-after-talks-with-hamas">காசாவில் </a>தினமும் 30 முதல் 40 பேரைக் கொல்ல வேண்டும் என <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D">இஸ்ரேல் </a>தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென் க்விர் இலக்கு நிர்ணயித்துள்ளார். </p><p>தினமும் இரவில் 30 முதல் 40 பாலஸ்தீனர்களை கொல்ல வேண்டும் என்றும், அச்சுறுத்தலாக இல்லாத நபர்களையும் இலக்கு வைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>2023 அக்டோபர் 7 அன்று நோவா இசை நிகழ்வில் ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட ரோம் பிராஸ்லாவ்ஸ்கி என்பவருடனான பாட்காஸ்ட் உரையாடலில் பென் க்விர் இக்கருத்தை தெரிவித்துள்ளார். </p> <h2>தினமும் இரவு கொலை செய்ய வேண்டும்</h2><p>அவர் பேசியதாவது, "எனக்கும் பிரதமருக்கும் கருத்து வேறுபாடு இருப்பது இரகசியமல்ல. </p><p>காசாவில் தினமும் இரவில் 30 முதல் 40 பேரைக் கொல்வதற்கு இலக்கு நிர்ணயித்து நாம் தாக்குதல்களை நடத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.</p><p>அந்த நேரத்தில் நமக்கு உடனடி ஆபத்தாக இருப்பவர்களை மட்டும் இலக்கு வைக்கக் கூடாது. அங்கு வாழத் தகுதியற்ற பலர் இருக்கிறார்கள். அவர்கள் வாழவேக் கூடாது. அவர்கள் மனிதர்களே அல்ல.</p><p>அதைச் செய்ய நான் உலகத்தையே தலைகீழாக மாற்றுவேன். அது நடக்கும் வரை என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று நான் வாக்குறுதி அளிக்கிறேன்.</p> <h2>காசா நமக்கே சொந்தம்</h2><p>முழு காசாவையும் நான் நமக்கே சொந்தமானதாகப் பார்க்கிறேன். காசா முழுவதிலும் யூதக் குடியேற்றங்களை அமைக்க வேண்டும்.</p><p>முடிந்தவரை பாலஸ்தீனர்களை இங்கிருந்து வெளியேற்றி அவர்களின் நாடுகளுக்கு அனுப்ப வேண்டும். </p><p>தீவிரவாதிகளுக்கு வெளியேற்றமெல்லாம் இல்லை, அவர்களை ஒவ்வொன்றாகக் கொன்றழிக்க வேண்டும்." என்று வலியுறுத்தியுள்ளார்.</p><p>மேலும் பயணக்கைதியாக பிடித்துச்செல்லப்பட்டதற்கு பழிதீர்க்க, ரோம் பிராஸ்லாவ்ஸ்கியே நேரடியாக இஸ்ரேல் வசம் உள்ள பாலஸ்தீன கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற அனுமதி அளிப்பதாகவும் பென் க்விர் வாக்குறுதி அளித்தார்.</p> ]]></content:encoded></item><item><title>என்னை நிம்மதியாக சாக விடுங்கள்.. த்விஷா சர்மா தற்கொலைக்கு கணவர் - மாமியாரே காரணம் - சிபிஐ குற்றப்பத்திரிகை  </title><link>https://www.maalaimalar.com/news/national/twisha-sharma-suicide-case-husband-and-mother-in-laws-harassment-drove-model-actress-to-death</link><comments>https://www.maalaimalar.com/news/national/twisha-sharma-suicide-case-husband-and-mother-in-laws-harassment-drove-model-actress-to-death#comments</comments><guid isPermaLink="false">91194dc3-72ba-4885-b493-b89515d507bf</guid><pubDate>Tue, 18 Aug 2026 03:55:06 +0000</pubDate><atom:updated>2026-08-18T03:55:06.743Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வரதட்சணை கொடுமை,மாமியார்,Dowry harassment,mother-in-law,த்விஷா சர்மா,tiwsha sharma</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/39henela/tn-4.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ த்விஷா சர்மா, கணவர் - மாமியார் ]]></media:title><media:description type="html"><![CDATA[ த்விஷா சர்மா, கணவர் - மாமியார் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/39henela/tn-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரப் பிரதேசம் மாநிலம் நொய்டாவை சேர்ந்த <a href="https://www.maalaimalar.com/topic/twisha-sharma">த்விஷா ஷர்மா </a>மாடல் அழகியாகவும் நடிகையாகவும் திரைப்படங்களில் நடித்து வந்தார்.</p><p>கடந்த மே 13 அன்று மத்தியப் பிரதேச மாநிலம் போபாலின் கட்டாரா மலைப்பகுதியில் உள்ள கணவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் த்விஷா ஷர்மாவின் உடல் மீட்கப்பட்டது.</p> <h2>குற்றச்சாட்டு</h2><p>தனது மகளை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88">வரதட்சணை </a>தொடர்பாக துன்புறுத்தி கொன்றுவிட்டதாகவும், அவர் வசித்து வந்த வீட்டின் கேமரா காட்சிகளில் முரண்பாடு உள்ளதாகவும் பெண்ணின் தந்தை நவ்நீதி ஷர்மா குற்றம்சாட்டியிருந்தார்.</p><p>இதையடுத்து தலைமறைவான பெண்ணின் கணவர் சமர்த் சிங் மற்றும் முன்னாள் மாவட்ட நீதிபதியான சமர்த்தின் தாயார் கிரிபலா சிங் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.</p> <h2>சிபிஐ குற்றப்பத்திரிகை</h2><p>இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ போபால் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.</p><p>அதில், கணவர் சமர்த் சிங் மற்றும் மாமியார் கிரிபாலா சிங் ஆகியோர் அளித்த தொடர் மன உளைச்சல் மற்றும் கொடுமைகள் காரணமாக த்விஷா சர்மா தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழியில்லாமல் போயுள்ளது என்று சிபிஐ சுட்டிக்காட்டியுள்ளது</p><p>த்விஷா சர்மா பெற்ற மனநல ஆலோசனை குறித்த ஆவணங்கள், வாட்ஸ்அப் உரையாடல்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் ஆகியவை இதற்கு முக்கிய ஆதாரங்களாக குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன.</p> <h2>மன உளைச்சல்</h2><p>குற்றப்பத்திரிக்கையின்படி, திருமணத்திற்குப் பிறகு த்விஷா சர்மா தொடர்ந்து மன ரீதியாக சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். கணவர் சமர்த் சிங் அவரைப் பலமுறை அவமானப்படுத்தி, தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.</p><p>மகனின் இந்த தவறான நடவடிக்கைகளுக்கு தாய் கிரிபாலா சிங் முழு ஆதரவு அளித்து ஊக்கப்படுத்தியுள்ளார். கணவர் மீது த்விஷா புகார் கூறும்போதெல்லாம் , கிரிபாலா தன் மகனுக்கு ஆதரவாக நின்று அவரைப் பாதுகாத்துள்ளார்.</p><p>த்விஷாவிற்கு நீண்டகாலம் மன உளைச்சலை ஏற்படுத்துவதே இருவரின் முதன்மை நோக்கமாகவும் திட்டமாகவும் இருந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p> <h2>கர்ப்பம்</h2><p>2026 ஏப்ரல் மாதத்தில் த்விஷா கர்ப்பமானார். ஆனால், குடும்பத்தில் நிலவிய தொடர் கசப்பான சூழல், திருமண வாழ்க்கையின் மீது ஏற்பட்ட விரக்தி மற்றும் விரிசல் காரணமாக, கர்ப்பத்தை தொடர்வதா வேண்டாமா என்ற குழப்பத்தில் அவர் இருந்துள்ளார்</p><p>இறுதியாக தனது கர்ப்பத்தைக் கலைக்க த்விஷா முடிவெடுத்தார். இந்த முடிவால் த்விஷா, அவரது கணவர் சமர்த் சிங் மற்றும் மாமியார் கிரிபாலா சிங் ஆகியோருக்கு இடையேயான மோதல் தீவிரமடைந்தது. தொடர் மன உளைச்சல் காரணமாக அவர் தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.</p> <h2>நிம்மதியாக சாக விடுங்கள்</h2><p>மே 12, இரவு 9:36 மணியளவில் த்விஷா தற்கொலை செய்துகொள்வதற்குச் சற்று முன்பு தனது நாத்தனார் ராஷி அப்ரோலுக்கு அனுப்பிய வாட்ஸ்அப் குறுஞ்செய்தியில், "உன் அண்ணனிடம் (சமர்த்) அவரது மனைவியின் எஞ்சிய உடலை வந்து எடுத்துக்கொள்ளச் சொல். </p><p>ஆனால் நாளைக்கு வந்து எடுக்கச் சொல். இப்போது என்னை நிம்மதியாக சாக விடுங்கள்" என்று மெசேஜ் செய்திருக்கிறார்.</p> <p>இந்த வாட்ஸ்அப் குறுஞ்செய்திதான், த்விஷா தீவிர மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டு தற்கொலைக்கு முயன்றார் என்பதற்கான மிக முக்கிய ஆதாரமாக சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது.</p><p>இவ்வழக்கின் விசாரணை இன்னமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. த்விஷாவின் ஐபோன், சிசிடிவி மற்றும் குரல் மாதிரிகளின் தடயவியல் பரிசோதனை முடிவுகளுக்காக சிபிஐ காத்திருக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>குற்ற வழக்குகளை சந்திக்கும் 14 முதலமைச்சர்கள், 326 எம்.பி.க்கள் - சுப்ரீம் கோர்ட்டில் தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/national/14-cm-and-326-mps-facing-criminal-cases-information-revealed-in-supreme-court</link><comments>https://www.maalaimalar.com/news/national/14-cm-and-326-mps-facing-criminal-cases-information-revealed-in-supreme-court#comments</comments><guid isPermaLink="false">b1442748-58f1-452b-8c67-a5b34878e24e</guid><pubDate>Tue, 18 Aug 2026 03:46:20 +0000</pubDate><atom:updated>2026-08-18T03:46:20.698Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,சுப்ரீம் கோர்ட்,CM,எம்பிக்கள்,MPs,criminal cases,குற்ற வழக்குகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/7jjepzho/supremecourt.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Supreme court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/7jjepzho/supremecourt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நாட்டில் 14 முதல்-மந்திரிகள், 326 எம்.பி.க்கள் ஆகியோர் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.</strong></em></p> <h2>சுப்ரீம் கோர்ட்</h2><p>எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்றவியல் வழக்குகளை விரைந்து விசாரிக்க உத்தரவிடக்கோரி வக்கீல் அஸ்வினி உபாத்யாயா <a href="https://www.maalaimalar.com/news/national/karnataka-to-release-cauvery-water-state-assures-12000-cusecs-per-day-to-tamil-nadu-in-supreme-court">சுப்ரீம் கோர்ட்டில்</a> ஒரு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.</p><p>அந்த வழக்கில், கோர்ட்டுக்கு உதவுவதற்காக மூத்த வக்கீல் விஜய் ஹன்சாரியா நியமிக்கப்பட்டார். அவர் ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி, சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.</p> <p>அதில் அவர் கூறியிருப்பதாவது:-</p><h2>ரேவந்த் ரெட்டி</h2><p>நாட்டில் மொத்தம் உள்ள 28 மாநிலங்களில், 14 மாநிலங்களின் முதல்-மந்திரிகள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்களில் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டிக்கு எதிராக அதிகபட்சமாக 89 வழக்குகள் நிலுவையில் உள்ளன.</p> <h2>குற்றவியல் வழக்குகள்</h2><p>மேற்கு வங்காள முதல்-மந்திரி சுவேந்து அதிகாரி மீது 29 வழக்குகளும், கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மீது 19 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.</p><p>முன்னாள், இந்நாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக 4 ஆயிரத்து 192 குற்றவியல் வழக்குகள் இருக்கின்றன. மொத்தம் உள்ள 543 மக்களவை எம்.பி.க்களில், 251 பேர் குற்றவியல் வழக்குகளை சந்தித்து வருகின்றனர். அவற்றில் 170 வழக்குகள், 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கத்தக்கவை ஆகும்.</p> <p>மொத்தம் உள்ள 233 மாநிலங்களவை எம்.பி.க்களில் 75 பேர் (33 சதவீதம்) மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன. அவற்றில் 40 வழக்குகள், 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கத்தக்கவை ஆகும்.</p><h2>கேரளம், தமிழ்நாடு</h2><p>மாநிலவாரியாக பார்த்தால், கேரளாவின் மொத்த எம்.பி.க்கள் 20 பேரில் 19 பேர் குற்றவியல் வழக்குகளை சந்தித்து வருகின்றனர். அவர்களில் 11 பேர் மீது கடுமையான வழக்குகள் உள்ளன.</p> <h2>உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா</h2><p>17 தெலுங்கானா எம்.பி.க்களில் 14 பேர் மீதும், 21 ஒடிசா எம்.பி.க்களில் 16 பேர் மீதும், 14 ஜார்கண்ட் எம்.பி.க்களில் 10 பேர் மீதும், 39 தமிழக எம்.பி.க்களில் 26 பேர் மீதும் குற்றவியல் வழக்குகள் உள்ளன. </p><p>உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், பீகார், கர்நாடகா, ஆந்திரா ஆகிய பெரிய மாநிலங்களின் சுமார் 50 சதவீத எம்.பி.க்கள் குற்றவியல் வழக்குகளை சந்தித்து வருகின்றனர்.</p><p>கடந்த ஆண்டு, 1.243 குற்றவியல் வழக்குகளில் தீர்வு காணப்பட்டது. அதே ஆண்டில் 1,050 புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.</p>  <p>எம்.பி.. எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான குற்றவியல் வழக்குகளை விரைவாக விசாரிக்க அவற்றை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D">சுப்ரீம் கோர்ட்டு</a> கண்காணிக்க வேண்டும். அந்த வழக்குகளின் விசாரணையை முடித்த பிறகுதான் மற்ற வழக்குகளை தனிக்கோர்ட்டுகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.</p> <p>எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகள் முடிந்த பிறகுதான் மற்ற வழக்குகளை தனிக்கோர்ட்டுக்கு மாவட்ட நீதிபதிகள் ஒதுக்க வேண்டும். அந்த வழக்குகளின் முன்னேற்றத்தை ஐகோர்ட்டுகள் மாதந்தோ றும் கண்காணிக்க வேண்டும். குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட ஓராண்டுக்குள் விசாரணை முடிவடைய வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவில் மீண்டும் ஜியோ பிரைம் திட்டத்தை கொண்டுவந்த ரிலையன்ஸ் ஜியோ</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/jio-prime-membership-relaunched-in-india</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/jio-prime-membership-relaunched-in-india#comments</comments><guid isPermaLink="false">d2cf26af-caee-4e91-a0d5-0db747093ce9</guid><pubDate>Tue, 18 Aug 2026 03:42:00 +0000</pubDate><atom:updated>2026-08-18T03:42:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Jio,Jio Prime,ஜியோ பிரைம்,ஜியோ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/kiysr9ja/Jio-Logo-.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jio Logo]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/kiysr9ja/Jio-Logo-.png?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/jio">ஜியோ</a> பிரைம் திட்டம் இந்தியாவில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என அந்நிறுவனம் அறிவித்தது. இந்த திட்டம், ஜியோ சந்தாதாரர்களுக்கு விலை உறுதித்தன்மையை வழங்குகிறது. இதன் மூலம் பயனர்கள் தங்கள் தொலைத்தொடர்பு திட்டங்களின் விலையை ஓராண்டுக்கு நிர்ணயித்துக்கொள்ள முடியும். </p><p>எனவே, ஜியோ தனது ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தினால், பயனர்கள் தங்களின் தற்போதைய திட்டத்தை பழைய விலையிலேயே வாங்க முடியும். விலை நிர்ணயத்தைத் தவிர, ஜியோ பிரைம் சந்தா மற்ற பலன்களையும் வழங்குகிறது. </p><p>பிரைம் சந்தாதார்களுக்கு முன்னுரிமை ஆதரவையும், புதிய ஜியோ தயாரிப்புகளை முன்கூட்டியே அணுகும் வாய்ப்பையும் நிறுவனம் உறுதியளிக்கிறது. பிரைம் உறுப்பினர்கள் கூடுதல் கேஷ்பேக் சலுகைகளையும் பெற முடியும்.</p><h2>ஜியோ பிரைம் நன்மைகள்:</h2><p>வாடிக்கையாளர்கள் ரூ. 300 ஒருமுறை செலுத்தி ஜியோ பிரைம் சந்தாவை பெறலாம். தற்போதுள்ள அனைத்து ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் ஜியோ வாடிக்கையாளர்களுக்கும் இந்த பிரைம் சந்தா கிடைக்கிறது.</p><p>தற்போது வேறு தொலைத்தொடர்பு சேவை வழங்குநரின் வாடிக்கையாளர்களாக இருக்கும் பயனர்கள், ஜியோ பிரைம் உறுப்பினராக ஆவதற்கு ஜியோவிற்கு மாறலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பல நன்மைகளில், ஜியோ பிரைம் விலை உறுதித்தன்மை, கேஷ்பேக் மற்றும் பிற பிரத்யேக பலன்களை வழங்குகிறது.</p><p>ஜியோ பிரைம் திட்டம், வாடிக்கையாளரின் தற்போதைய ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களின் விலையை, செப்டம்பர் 5, 2027 வரை, ஒரு வருடத்திற்கு நிலையாக வைத்திருக்கும் என்று ஜியோ தெரிவித்துள்ளது.</p><h2>கேஷ்பேக் வவுச்சர்:</h2><p>எதிர்கால விலை உயர்வுகள் மற்றும் பிற மாற்றங்களை பொருட்படுத்தாமல், சந்தாதாரர்கள் தாங்கள் முன்பு செலுத்திய அதே விலையில் போஸ்ட்பெய்ட் திட்டங்களை ரீசார்ஜ் செய்யவும் பணம் செலுத்தவும் முடியும்.</p><p>இது தவிர, பிரைம் சந்தா ரூ. 300 மதிப்புள்ள கேஷ்பேக் வவுச்சரை வழங்கும், இதை ஒரு புதிய ஜியோஹோம் அல்லது ஜியோபிசி இணைப்புக்கு பணம் செலுத்தும் போது பயன்படுத்திக்கொள்ளலாம்.</p><p>மேலும், நண்பர்கள் அல்லது குடும்பத்தினருக்காக ஒரு புதிய ஜியோ சிம் இணைப்பை சேர்ப்பதன் மூலம், ஜியோ பிரைம் சந்தா ரூ. 300 மதிப்புள்ள மற்றொரு கேஷ்பேக் வவுச்சரை வழங்கும்.</p><p>ஜியோ நிறுவனம், பிரைம் சந்தாதாரர்களுக்கு புதிய ஜியோ தயாரிப்புகள், சேவைகள் மற்றும் சோதனைகளுக்கான முன்கூட்டிய அணுகலையும் வழங்கும், இதன் மூலம் அவர்கள் மற்றவர்களுக்கு முன்பாக அவற்றை சோதித்து பார்க்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>முகமது அலி ஜின்னா பற்றிய ரகசியத்தை பாதுகாத்த மும்பை மருத்துவர்கள் 2 பேருக்கு பாகிஸ்தானின் உயரிய விருது அறிவிப்பு </title><link>https://www.maalaimalar.com/news/world/pakistan-honours-mumbai-doctors-top-civilian-award-for-keeping-jinnahs-illness-secret</link><comments>https://www.maalaimalar.com/news/world/pakistan-honours-mumbai-doctors-top-civilian-award-for-keeping-jinnahs-illness-secret#comments</comments><guid isPermaLink="false">7f213d90-96ec-40ab-914e-192b785d6593</guid><pubDate>Tue, 18 Aug 2026 03:08:00 +0000</pubDate><atom:updated>2026-08-18T03:08:00.842Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,பிரிவினை,முகமது அலி ஜின்னா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/w7ivp7uv/tn-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஜின்னா ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஜின்னா ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/w7ivp7uv/tn-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.google.com/search?sca_esv=89ea68fd8af44367&amp;sxsrf=APpeQnsecMLmVPzfx0fYR--h23pyUgnhQg:1787019745961&amp;q=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+maalaimalar&amp;spell=1&amp;sa=X&amp;ved=2ahUKEwiPk6ipj6mWAxW6muEIHT-gO-cQBSgAegQIEBAB&amp;biw=1422&amp;bih=659&amp;dpr=1.35">1947 பிரிவினைக்கு</a> முன்னர் முஸ்லீம் லீக் தலைவர் முகமது அலி ஜின்னாவுக்கு இருந்த நோயை வைத்திருந்ததற்காக மும்பையை சேர்ந்த இரு மருத்துவர்களுக்குப் பாகிஸ்தானின் உயரிய குடிமகன் விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>நாட்டுக்கு <a href="https://www.maalaimalar.com/topic/independence-day">சுதந்திரம் </a>கிடைத்ததோடு பிரிவினையும் ஏற்பட்டு இந்தியா - பாகிஸ்தான் என பிரிந்தது. பாகிஸ்தான் உருவாக்கத்திற்கு மூல கர்த்தா முகமது அலி ஜின்னா ஆவார். அவரே பாகிஸ்தானின் நிறுவனராக அறியப்படுகிறார். </p> <h2>ரகசியம்</h2><p>1946இல் ஜின்னாவின் எக்ஸ்ரேயைப் பரிசோதித்து அவருக்கு நுரையீரல் காசநோய் முற்றிய நிலையில் இருப்பதாகவும், அவர் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் மட்டுமே உயிருடன் இருக்கக்கூடும் என்றும் இரு மருத்துவர்கள் கணித்திருந்தனர்.</p><p>மும்பையை சேர்ந்த மருத்துவர் ஜல் ரத்தன்ஜி படேல் மற்றும் எக்ஸ்ரே நிபுணர் டாக்டர் ஜல் தைபோ ஆகியோரே அவ்விருவர் ஆவர்.</p><p>இந்த இரு மருத்துவர்களும் ஜின்னாவின் மருத்துவ அறிக்கையை ரகசியமாக வைத்திருந்தனர்.</p> <h2>முக்கியத்துவம்</h2><p>லேரி காலின்ஸ் மற்றும் டொமினிக் லேபியர் எழுதிய Freedom at Midnight புத்தகத்தில், "ஜின்னாவின் நோய் குறித்த தகவல் லார்ட் மவுண்ட்பேட்டன், ஜவஹர்லால் நேரு அல்லது மகாத்மா காந்தி ஆகியோருக்கு தெரிந்திருந்தால், விடுதலை மற்றும் பிரிவினைக்கான அரசியல் கணக்கீடுகளே மாறியிருக்கக்கூடும்" எனகுறிப்பிடப்பட்டுள்ளது.</p> <h2>விருது</h2><p>இந்நிலையில் மறைந்த இந்த மருத்துவர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நாட்டின் உயரிய விருதான நிஷான் இ இம்தியாஸ் விருது வழங்கப்படும் எனப் பாகிஸ்தான் அமைச்சரும், நாட்டின் விருதுகள் குழுவின் தலைவருமான அஹ்சன் இக்பால் தெரிவித்துள்ளார்.</p> <h2>ஜின்னாவின் நோய்</h2><p>1930களில் இருந்தே ஜிண்ணா காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அந்த காலகட்டத்தில் இந்த நோய்யை குணப்படுத்த ஆன்டிபயாடிக் எதுவுமில்லை.</p><p>தனது அரசியல் வாழ்வின் இறுதிப் பகுதியில் கடும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார்.</p><p>பாகிஸ்தான் பிறந்த ஓராண்டிற்குப் பிறகு, 1948 செப்டம்பர் 11 அன்று நுரையீரல் காசநோய் காரணமாக அவர் காலமானார்.</p>]]></content:encoded></item><item><title>பணிக்கு தாமதமாக வந்ததை போட்டுக்கொடுத்த AI மேனேஜர்... ஊழியர் பணிநீக்கம் - வரலாற்றில் முதல்முறை!</title><link>https://www.maalaimalar.com/news/world/for-the-first-time-ai-boss-fires-human-employee-at-us-store-after-17-late-arrivals</link><comments>https://www.maalaimalar.com/news/world/for-the-first-time-ai-boss-fires-human-employee-at-us-store-after-17-late-arrivals#comments</comments><guid isPermaLink="false">3d37590f-5501-4812-9139-b03689d119c1</guid><pubDate>Tue, 18 Aug 2026 03:05:49 +0000</pubDate><atom:updated>2026-08-18T03:05:49.451Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>AI,பணிநீக்கம்,ஏஐ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/javv7bup/luna-aii.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/javv7bup/luna-aii.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மனித ஊழியர் ஒருவரை செயற்கை நுண்ணறிவு மேலாளர் மதிப்பிட்டுப் பணிநீக்கம் செய்யப் பரிந்துரைத்தது வரலாற்றிலேயே இதுவே முதல் முறை எனக் கூறப்படும் நிலையில், இது தொடர்பான செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.</strong></em></p><p>அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் ‘ஆண்டன் மார்க்கெட்’ என்ற சில்லறை விற்பனைக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் நிர்வாகத்தை கவனிக்க ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் 'கிளாட்' தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட ஏ.ஐ. மேலாளரை உருவாக்கி உள்ளனர். அதற்கு ‘லூனா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.</p><p>இந்த ஏ.ஐ. மேலாளருக்கு வரவு-செலவு கணக்கு பார்ப்பது, இணைய வசதியை அணுகுவது மற்றும் நிர்வாகம் செய்யவும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.</p><h2><strong>பணி நீக்கம்</strong></h2><p>இந்த கடையில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் 17 முறை பணிக்கு தாமதமாக வந்துள்ளார். மேலும், பணிநேரத்தில் வெளியே சென்றது உள்ளிட்ட விதிமீறல்களிலும் அவர் ஈடுபட்டுள்ளார். இந்தச் செயல்களைக் கவனித்த ஏ.ஐ. மேலாளர் லூனா, அந்த ஊழியரைப் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">பணி நீக்கம்</a> செய்ய பரிந்துரை செய்தது.</p><p>அந்த பரிந்துரையை, ஆண்டன் லேப்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மீண்டும் ஒருமுறை சரிபார்த்து, ஊழியரை பணிநீக்கம் செய்தனர். மனித ஊழியர் ஒருவரை <a href="https://www.maalaimalar.com/technology/techfacts/ai-job-loss-warning-anthropic-ceo-says-ai-will-permanently-displace-white-collar-work">செயற்கை நுண்ணறிவு</a> மேலாளர் மதிப்பிட்டுப் பணிநீக்கம் செய்யப் பரிந்துரைத்தது வரலாற்றிலேயே இதுவே முதல் முறை எனக் கூறப்படும் நிலையில், இது தொடர்பான செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>இந்த வார விசேஷங்கள்: 18-8-2026 முதல் 24-8-2026 வரை</title><link>https://www.maalaimalar.com/spirituality/this-week-specials-18-8-2026-to-24-8-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/this-week-specials-18-8-2026-to-24-8-2026#comments</comments><guid isPermaLink="false">4f84b333-1515-40f4-b12f-2dd069d62526</guid><pubDate>Tue, 18 Aug 2026 02:55:13 +0000</pubDate><atom:updated>2026-08-18T02:55:13.738Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,வழிபாடு,Astrology,this week special,இந்த வார விசேஷங்கள்,worship</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/837e0yq3/chokkanathar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ pittukku man sumantha leelai]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/837e0yq3/chokkanathar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>18-ந் தேதி (செவ்வாய்)</h2><p>* சஷ்டி விரதம்.</p><p>* விருதுநகர் சுவாமி பூத வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் பவனி.</p><p>* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.</p><p>* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.</p> <h2>19-ந் தேதி (புதன்)</h2><p>* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் தருமிக்கு பொற்கிழி அருளுதல்.</p><p>* குறுக்குத்துறை முருகப்பெருமான் புறப்பாடு.</p><p>* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.</p><p>* கீழ்நோக்கு நாள்.</p> <h2>20-ந் தேதி (வியாழன்)</h2><p>* திருப்பரங்குன்றம் ஆண்டவர் புறப்பாடு.</p><p>சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.</p><p>* திருப்பதி திருவேங்கட முடையானுக்கு புஷ்பாங்கி சேவை.</p><p>* கீழ்நோக்கு நாள்.</p> <h2>21-ந் தேதி (வெள்ளி)</h2><p>* வரலட்சுமி விரதம்.</p><p>* நெல்லை கெட்வெல் கனக மகாலட்சுமி வளையல் உற்சவம்.</p><p>* திருத்தணி முருகப் பெருமான் கிளி வாகன சேவை.</p><p>* சமநோக்கு நாள்.</p> <h2>22-ந் தேதி (சனி)</h2><p>* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் வளையல் விற்ற திருவிளையாடல், இரவு பட்டாபிஷேகம். </p><p>* மன்னார்குடி ராஜகோபால சுவாமி, காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள், திருமோகூர் காளமேகப் பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.</p><p>* திருவைகுண்டம் வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.</p><p>* சமநோக்கு நாள்.</p> <h2>23-ந் தேதி (ஞாயிறு)</h2><p>* முகூர்த்த நாள்.</p><p>* சுமார்த்த ஏகாதசி.</p><p>* திருப்பரங்குன்றம் ஆண்டவரும், திருவாதவூர் மாணிக்க வாசகரும் மதுரை எழுந்தருளல்.</p><p>* நெல்லை குறுக்குத் துறை சுப்பிரமணியர் அதிகாலை உருகுசட்ட சேவை.</p><p>* கீழ்நோக்கு நாள்.</p> <h2>24-ந் தேதி (திங்கள்)</h2><p>* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் புட்டுக்கு மண் சுமந்தருளிய லீலை.</p><p>* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.</p><p>* கீழ்நோக்கு நாள்.</p> ]]></content:encoded></item><item><title>&quot;ப. சிதம்பரம் உண்மையான நக்ஸலைட்..&quot; விசாரணை நடத்த அசாம் முதல்வர் வலியுறுத்தல் </title><link>https://www.maalaimalar.com/news/national/naxalism-political-row-chidambaram-and-himanta-trade-barbs-over-modis-dimagi-naxal-remark</link><comments>https://www.maalaimalar.com/news/national/naxalism-political-row-chidambaram-and-himanta-trade-barbs-over-modis-dimagi-naxal-remark#comments</comments><guid isPermaLink="false">eef3e399-8cf9-4d4b-b68a-0b7afc7732f8</guid><pubDate>Tue, 18 Aug 2026 02:42:53 +0000</pubDate><atom:updated>2026-08-18T02:42:53.213Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Naxalite,ஹிமாந்தா பிஸ்வா சர்மா,Himanta Biswa Sarma,p. chidambaram,ப. சிதம்பரம்,நக்ஸலைட்டு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/2cvn9rd4/tn-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ப. சிதம்பரம், ஹிமாந்தா பிஸ்வா]]></media:title><media:description type="html"><![CDATA[ ப. சிதம்பரம், ஹிமாந்தா பிஸ்வா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/2cvn9rd4/tn-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>80வது சுதந்திர தினமான கடந்த சனிக்கிழமை பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் உரையாற்றுகையில் நாட்டில் ஆயுதமேந்திய நக்ஸலைட்டுகளை ஒழித்துவிட்டோம் ஆனால் <a href="https://www.maalaimalar.com/news/national/dimaki-naxal-row-modis-independence-day-speech-sparks-opposition-backlash">திமாகி நக்சல்கள் </a>(அறிவுஜீவி நக்சல்கள்) இன்னும் இருக்கிறார்கள் என பேசியிருந்தார். </p> <h2>திமாகி நக்சல்</h2><p>இது கேள்வி கேட்டும் எதிர்கட்சிகளை நோக்கி பிரதமர் பயன்படுத்திய வார்த்தையாக பார்க்கப்பட்டது. இதற்கு எதிர்வினையாற்றிய காங்கிரஸ் மூத்த தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/national/proud-to-be-dimagi-naxal-congs-p-chidambaram-hits-back-at-pm">ப. சிதம்பரம் </a>தான் ஒரு திமாகி நக்சலாக இருப்பதில் பெருமை கொள்கிறேன் என எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.</p><p>மறுபுறம் திமாகி நக்சல் என பிரதமர் குறிப்பிட்டது எதிர்கட்சிகளை அல்ல, நாட்டை பிரிக்க நினைக்கும் பிரிவினைவாதிகளை என்று விளக்கம் அளித்தார் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ.</p><p>இந்த சூழலில் ப. சிதம்பரம் கருத்துக்கு பாஜகவை சேர்ந்த அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா எதிர்வினை ஆற்றியுள்ளார்.</p> <h2>ஹிமாந்தா பிஸ்வா</h2><p>நேற்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய சர்மா, ப. சிதம்பரம் வெறும் 'திமாகி நக்சல்' அல்ல, அவர் ஒரு ‘பியூர் நக்சல்’ (உண்மையான நக்சல்)</p><p>ப. சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், நாட்டில் மாவோயிஸ்ட் தாக்குதல்கள் தொடர்ந்தபோதிலும், அவர் வேண்டுமென்றே நக்சலிசத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்தாரா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும்.</p><p>சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோதுதான், சத்தீஸ்கரில் மூத்த காங்கிரஸ் தலைவர் வி.சி. சுக்லா உட்படப் பல காங்கிரஸ் தலைவர்கள் நக்சல் தாக்குதலில் உயிரிழந்தனர்.</p> <p>இவ்வளவு பெரிய இழப்புகள் ஏற்பட்ட பிறகும், நக்சலிசத்தை அழிக்கக் காங்கிரஸ் அரசு எந்த உறுதியான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.</p><p>நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்தி, அதைப் பயன்படுத்தி 2029ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றவே காங்கிரஸ் கட்சி முயற்சிக்கிறது.</p><p>பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான ஆட்சியில், ஆயுதமேந்திய நக்சலிசம் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.</p> ]]></content:encoded></item><item><title>ஈரான் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த திட்டமிடும் டிரம்ப்?.. லீக் ஆன தகவல்  </title><link>https://www.maalaimalar.com/news/world/iran-nuclear-strike-talks-trump-administration-accused-of-risking-global-war-over-iran-attack-plans</link><comments>https://www.maalaimalar.com/news/world/iran-nuclear-strike-talks-trump-administration-accused-of-risking-global-war-over-iran-attack-plans#comments</comments><guid isPermaLink="false">3e15815b-06b8-438e-8c9c-62af96f2b438</guid><pubDate>Tue, 18 Aug 2026 02:04:49 +0000</pubDate><atom:updated>2026-08-18T02:04:49.123Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>trump,டிரம்ப்,அணு ஆயுதம்,Nuclear weapon,Iran War,ஈரான் போர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/p5ga5yhg/tn-1.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டெய்லர் கிரீன், டிரம்ப்]]></media:title><media:description type="html"><![CDATA[ டெய்லர் கிரீன், டிரம்ப்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/p5ga5yhg/tn-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/iran-threatens-to-go-on-offensive-in-hormuz-if-diplomacy-with-us-fails">ஈரான் </a>மீது அணு ஆயுதங்களை பயன்படுத்துவது தொடர்பாக வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரிகள் ஆலோசனை கூட்டங்கள் நடத்தி வருவதாக அமெரிக்க முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர் மார்ஜோரி டெய்லர் கிரீன் தெரிவித்துள்ளார். </p><p>இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கிரீன்,</p> <h2>அணு ஆயுத தாக்குதல்</h2><p>"<a href="https://www.maalaimalar.com/topic/iran-war">வெளிநாட்டுப் போர்களில்</a> இனி அமெரிக்கா ஈடுபடாது என்று டிரம்ப் வாக்குறுதி அளித்தார். ஆனால் தற்போது ஈரான் மீது அணு ஆயுத தாக்குதலுக்கான எல்லையை டிரம்ப் நிர்வாகம் குறைத்து வருகிறது.</p><p>ஈரான் மீது தாக்குதல் நடத்த வெள்ளை மாளிகை மூத்த அதிகாரிகள் ஆலோசனை கூட்டங்கள் நடத்தி வருகின்றனர்.</p><p>ஈரான் அணுஆயுதம் தயாரிக்கும் அளவு விளிம்பிற்கு இன்னும் வரவில்லை என்ற அமெரிக்க உளவுத்துறையின் அறிக்கைகளை டிரம்ப் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.</p><p>இஸ்ரேலின் எச்சரிக்கைகளை கேட்டு மட்டுமே அவர்கள் நடக்கின்றனர்.</p><p>ஈரான் மீது அணுஆயுதத்தைப் பயன்படுத்தினால் அது மிகப்பெரிய உலகப்போராக மாறி, லட்சக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கும். கடுமையான பொருளாதாரச் சிக்கலை ஏற்படுத்தும்" என எச்சரித்துள்ளார்.</p> <h2>குற்றச்சாட்டு</h2><p>கிரீனின் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து வெள்ளை மாளிகை தரப்பிலிருந்து இதுவரை எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை.</p><p>ஜூன் 2025இல் ஈரான் அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, வெளிநாட்டுப் போர்களைத் தவிர்க்க வேண்டும் என்ற பிரச்சார வாக்குறுதிகளை டிரம்ப் கைவிட்டுவிட்டதாக கிரீன் முன்பும் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 18 ஆகஸ்ட் 2026:  வளர்பிறை சஷ்டி விரதம்
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-18-august-2026-valarpirai-sashti-viratham</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-18-august-2026-valarpirai-sashti-viratham#comments</comments><guid isPermaLink="false">46106342-a650-4b0b-a6b4-ca0d68c3054f</guid><pubDate>Tue, 18 Aug 2026 01:55:30 +0000</pubDate><atom:updated>2026-08-18T01:55:30.585Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/03/08/27259313-muruga1.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Murugan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/03/08/27259313-muruga1.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆவணி-1 (செவ்வாய்க்கிழமை)</p><p>பிறை : வளர்பிறை</p><p>திதி :  சஷ்டி இரவு 9.06 மணி வரை பிறகு சப்தமி</p><p>நட்சத்திரம் :  சித்திரை இரவு 8.50 வரை பிறகு சுவாதி</p> <p>யோகம் :  சித்தயோகம்</p><p>ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை</p><p>எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை</p><p>சூலம் : வடக்கு</p><p>நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை</p> <h2>திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்</h2><p>வளர்பிறை சஷ்டி விரதம். மதுரை ஸ்ரீ ஆலவாய் அண்ணல் மாணிக்கம் விற்றருளிய லீலை கைலாச வாகனத்தில் பவனி. சுவாமி மலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சனம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.</p> <p>திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம், திருநெல்வேலி 3-ஆம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய திருத்தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத ஸ்ரீ வைத்த மாநிதிப் பெருமாள் திருக்கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு சம்ஹார அர்ச்சனை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல் ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமாள் பவனி.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - ஆக்கம்</p><p>ரிஷபம் - சுகம்</p><p>மிதுனம் - ஆர்வம்</p><p>கடகம் - கவனம்</p><p>சிம்மம் - கடமை</p><p>கன்னி - உழைப்பு</p> <p>துலாம் - முயற்சி</p><p>விருச்சிகம் - நலம்</p><p>தனுசு - சுபம்</p><p>மகரம் - இரக்கம்</p><p>கும்பம் - ஜெயம்</p><p>மீனம் - புகழ்</p> ]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 18.8.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு சுபச்செய்திகள் வந்து சேரும்</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-18-august-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-18-august-2026#comments</comments><guid isPermaLink="false">179de9d1-dca7-4f8f-85b8-f4e327a40d71</guid><pubDate>Tue, 18 Aug 2026 01:44:29 +0000</pubDate><atom:updated>2026-08-18T01:44:29.883Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/01/07/24376583-rasipalan1.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/01/07/24376583-rasipalan1.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>அலைபேசி வழித்தகவலால் ஆதாயம் கிட்டும் நாள். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள் பண நெருக்கடி தீரும். உடன் இருப்பவர்கள் கேட்ட உதவி கிடைக்கும்.</p><h2>ரிஷபம்</h2><p>முக்கியப் புள்ளிகளின் சந்திப்பால் முன்னேற்றம் கூடும் நாள். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவம் நடைபெறும். செய்யும் காரியங்களில் உங்கள் திறமை மேம்படும்.</p> <h2>மிதுனம்</h2><p>வசந்த காலத்திற்கு வழிகாட்டும் நாள். பேச்சுத் திறமையால் சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள். பயணங்கள் பலன் தரும்.</p><h2>கடகம்</h2><p>மகிழ்ச்சி கூடும் நாள். இடமாற்றம் பற்றிய இனிய தகவல் வரும். பயணத்தால் பால்ய நண்பர் ஒருவரைச் சந்தித்து மகிழ்வீர்கள். உறவினர்களால் விரயமுண்டு.</p> <h2>சிம்மம்</h2><p>யோகமான நாள். சேமிப்பு உயரும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.</p><h2>கன்னி</h2><p>முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படுவர். தொழிலில் அனுபவமிக்க பங்குதாரர்கள் வந்திணைவர்.</p> <h2>துலாம்</h2><p>கனவுகள் நனவாகும் நாள். கடமையில் இருந்த தொய்வு அகலும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வர்.</p><h2>விருச்சிகம்</h2><p>சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். சொல்லைச் செயலாக்கிக் காட்டுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.</p> <h2>தனுசு</h2><p>சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக மாறும் நாள். பிரியமானவர்களோடு இருந்த பிரச்சனை அகலும். உத்தியோகத்தில் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.</p><h2>மகரம்</h2><p>மனக்குழப்பம் அகலும் நாள். சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். திருமணப் பேச்சு முடிவாகும்.</p> <h2>கும்பம்</h2><p>காரிய வெற்றி ஏற்படும் நாள். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும்.</p><h2>மீனம்</h2><p>சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். மனக்குழப்பம் அதிகரிக்கும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. கூட்டாளிகளின் ஒத்துழைப்பு குறையும்.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம் </title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/todays-petrol-and-diesel-price-status-in-chennai-2</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/todays-petrol-and-diesel-price-status-in-chennai-2#comments</comments><guid isPermaLink="false">e6a808f6-2a91-46b8-be22-769dab6004d8</guid><pubDate>Tue, 18 Aug 2026 01:36:26 +0000</pubDate><atom:updated>2026-08-18T01:36:26.578Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,கச்சா எண்ணெய்,Crude oil,பெட்ரோல் டீசல் விலை,petrol diesel prices</media:keywords><media:content height="614" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/b0nhpc4w/maalai-malar2026-08-11blbkipxnmaalai-malar2026-08-08eyp4pp4lpetrol.avif" width="1024"><media:title type="html"><![CDATA[ பெட்ரோல் டீசல் விலை]]></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல் டீசல் விலை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/b0nhpc4w/maalai-malar2026-08-11blbkipxnmaalai-malar2026-08-08eyp4pp4lpetrol.avif?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/iran-threatens-to-go-on-offensive-in-hormuz-if-diplomacy-with-us-fails">ஈரான் போரினால் </a>மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p> <h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.</p> <h2>இன்றைய பெட்ரோல், டீசல் விலை</h2><p>அந்த வகையில் இன்றைய (18.08.2026 - செய்வ்வாய்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கச்சா எண்ணெய் விலை</h2><p>இன்று சர்வதேச சந்தையில் பிரனட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 91.01 டாலர் என விற்பனை ஆகி வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>குடிநீர் குழாய்களில் பாக்டீரியா.. நாட்டின் ரெயில் நிலையங்களில் அடிப்படை வசதிகளே இல்லை - சிஏஜி அறிக்கை </title><link>https://www.maalaimalar.com/news/national/cag-report-flags-poor-passenger-amenities-and-contaminated-drinking-water-at-major-railway-stations</link><comments>https://www.maalaimalar.com/news/national/cag-report-flags-poor-passenger-amenities-and-contaminated-drinking-water-at-major-railway-stations#comments</comments><guid isPermaLink="false">d8bb99c5-2639-42b2-a846-a459f439b9db</guid><pubDate>Tue, 18 Aug 2026 01:03:25 +0000</pubDate><atom:updated>2026-08-18T01:03:25.835Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ரெயில்வே,Railways,railway stations,CAG Report,ரெயில் நிலையங்கள்,சிஏஜி அறிக்கை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/030opsjm/tn-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ரெயில் நிலையம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ ரெயில் நிலையம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/030opsjm/tn-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடு முழுவதும் உள்ள <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/another-ac-electric-train-in-chennai">ரெயில் </a>நிலையங்களில் பயணிகளுக்கான வசதிகளில் கடும் குறைபாடு இருப்பதாக சிஏஜி அறிக்கை  வெளியாகியுள்ளது. </p><p>பல்வேறு <a href="https://www.maalaimalar.com/topic/railway-stations">ரெயில்வே </a>மண்டலங்களில் உள்ள 512 புறநகர் அல்லாத வெளியூர் ரெயில்கள் இயக்கப்படும் ரெயில் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட தணிக்கையின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.</p><p>கோயம்புத்தூர், பாலக்காடு, ஐதராபாத், மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் ரெயில் நிலையம் ஆகியவை இதில் அடங்கும்.</p> <h2>பாக்டீரியா</h2><p>அறிக்கையின்படி, 2022-23 நிதியாண்டில் 8 மண்டலங்களில் உள்ள 49 ரெயில் நிலையங்களின் பிளாட்பார குடிநீர் குழாய்களில் எடுக்கப்பட்ட நீர் மாதிரிகளில் Total Coliform என்ற பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டது.</p><p>2023-24 நிதியாண்டில் 9 மண்டலங்களில் உள்ள 56 ரெயில் நிலையங்களில் வாட்டர் கூலர்களில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் E. coli பாக்டீரியா கண்டறியப்பட்டது.</p><p>E. coli பாக்டீரியா பொதுவாக மனித அல்லது விலங்கு கழிவு மாசுபாட்டால் நீரினுள் ஊடுருவக்கூடிய ஒன்றாகும்.</p>  <h2>அடிப்படை வசதிகள்</h2><p>ஆய்வு செய்யப்பட்ட 512 ரெயில் நிலையங்களில் 458 நிலையங்களில், அதாவது சுமார் 90% நிலையங்களில் குறைந்தபட்சம் இருக்க வேண்டிய அத்தியாவசிய வசதிகள் கூட இல்லை என்பது தெரியவந்துள்ளது.</p><p>மும்பை சென்ட்ரல், சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ், ஹவுரா - சீல்டா மற்றும் டெல்லி போன்ற நாட்டின் மிகப்பெரிய ரெயில் நிலையங்களிலும் கூட இருக்கை வசதி, தூய்மை, குப்பைத் தொட்டிகள் மற்றும் மின்னணு தகவல் பலகைகள் அமைப்பதில் பெருமளவு குறைபாடுகள் பதிவாகியுள்ளன.</p> <h2>பரிந்துரை</h2><p>ரெயில்வே வாரியம் ஏப்ரல் 2018இல் NSG-1 முதல் NSG-6 வகையை சேர்ந்த அனைத்து ரெயில் நிலையங்களிலும் குறைந்தபட்ச வசதிகளை உறுதி செய்ய உத்தரவிட்டிருந்தது. ஆனால் அந்த உத்தரவுகள் சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.</p><p>எனவே, ரெயில் நிலையங்களில் குடிநீர் விநியோக அமைப்புகளைத் தொடர்ந்து ஆய்வு செய்யவும், குடிநீரின் தரத்தைச் சோதிக்க நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை தீவிரமாக எடுத்துக்கொண்டு பின்பற்றவும் ரெயில்வே நிர்வாகத்திற்கு சிஏஜி பரிந்துரை செய்துள்ளது.</p> <p>NSG-1 முதல் NSG-3 வரை அதிக வருமானம் ஈட்டும் மிக முக்கியப் பெருநகர நிலையங்கள் எனவும், NSG-4 முதல் NSG-6 வரை நடுத்தர மற்றும் சிறிய அளவிலான ரெயில் நிலையங்களாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>தேர்வுகள் ரத்து - உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொண்ட மாணவர் தலைவர்</title><link>https://www.maalaimalar.com/news/national/jharkhand-devendra-nath-mahto-ends-hunger-strike-after-jssc-cgl-exam-cancelled</link><comments>https://www.maalaimalar.com/news/national/jharkhand-devendra-nath-mahto-ends-hunger-strike-after-jssc-cgl-exam-cancelled#comments</comments><guid isPermaLink="false">701adfe1-747c-4d29-8220-eb83f701a286</guid><pubDate>Tue, 18 Aug 2026 00:19:45 +0000</pubDate><atom:updated>2026-08-18T00:19:45.972Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தேர்வுகள் ரத்து,Jharkhand protest,ஜார்க்கண்ட் போராட்டம்,Exams Cancelled</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/a4y3aunq/Devendra-Nath-Mahto.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Devendra Nath Mahto]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/a4y3aunq/Devendra-Nath-Mahto.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பணி நியமன தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி மாணவர்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், JSSC-CGL தேர்வு மற்றும் 2014 முதல் வெளிமுகமை நிறுவனமான TDPL-ஆல் நடத்தப்பட்ட அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்வதாக <a href="https://www.maalaimalar.com/topic/jharkhand">ஜார்க்கண்ட்</a> முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்தார்.</p><p>JSSC-CGL தேர்வு மற்றும் TDPL மூலம் நடத்தப்பட்ட அனைத்துத் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் <a href="https://www.maalaimalar.com/topic/hemant-soren">ஹேமந்த் சோரன்</a> அறிவித்ததைத் தொடர்ந்து, ஜார்க்கண்ட் அமைச்சர்கள் தீபிகா பாண்டே சிங் மற்றும் இர்பான் அன்சாரி ஆகியோர் முன்னிலையில், ராஞ்சியில் உள்ள சதார் மருத்துவமனையில் மாணவர் தலைவர் தேவேந்திர நாத் மஹ்தோ தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார். </p><h2>கடுமையான சட்டங்கள் தேவை:</h2><p>மாநிலத்தில் ஆட்சேர்ப்பு தேர்வு நடைமுறைகள் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் ஒரு பகுதியாக மஹ்தோ இந்த உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தார். </p><p>செய்தியாளர்களிடம் பேசிய மஹ்தோ, தேர்வர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதற்காக முதல்வர் சோரன், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் மாநில அமைச்சர்கள் தீபிகா பாண்டே மற்றும் இர்பான் அன்சாரி ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.</p><p>தேர்வுகளை கண்காணிக்கவும், வினாத்தாள் கசிவை தடுக்கவும் கடுமையான சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் தேவை என்று அவர் வலியுறுத்தினார்.</p><p>இது குறித்து பேசும் போது மஹ்தோ கூறியதாவது: "இன்று உண்ணாவிரத போராட்டத்தின் 16-வது நாள்; இந்தப் போராட்டம் ஜூலை 2-ஆம் தேதி தொடங்கியது. ஜூலை 20-ஆம் தேதி முதல்வருடனான சந்திப்பை தொடர்ந்து, ஜூலை 28-ஆம் தேதி சிஐடி (CID) விசாரணை தொடங்கப்பட்டது. முன்னாள் தலைமைச் செயலாளர் மற்றும் JPSC தலைவர் போன்ற உயர்மட்டப் பொறுப்பில் உள்ளவர்கள் உட்பட யாரையும் விட்டுவைக்காமல், இந்த விசாரணை மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.</p><h2>துணிச்சலான நடவடிக்கை:</h2><p>இத்தகைய முக்கிய முடிவை எடுப்பதற்கான துணிச்சலை காட்டிய ஜார்க்கண்ட் அரசுக்கு நான் நன்றி கூறுகிறேன். ஒரு தேர்வை ரத்து செய்வது என்பது மிகப்பெரிய சவாலான காரியமாகும். JSSC CGL தேர்வுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறை ஏற்கனவே பணி நியமனம் பெறும் நிலையை எட்டியிருந்ததாலும், பல மாணவர்கள் ஏற்கனவே தங்கள் இடங்களை உறுதி செய்திருக்கக்கூடும் என்பதாலும், இது எளிதான முடிவாக இருக்கவில்லை.</p><p>இருப்பினும், இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மாணவர்களுக்காக அரசு இந்த துணிச்சலான நடவடிக்கையை மேற்கொண்டது... ஜார்க்கண்ட் அரசு, முதல்வர் ஹேமந்த் சோரன், ராகுல் காந்தி, எங்கள் எம்.எல்.ஏ., அமைச்சர் தீபிகா பாண்டே, இர்பான் அன்சாரி, மாணவர்கள், ஊடகங்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் போராட்டத்தின் போது நள்ளிரவு 1 அல்லது 2 மணிக்கு எங்களுக்குத் தண்ணீர் மற்றும் சிற்றுண்டிகளை வழங்கிய அறிமுகம் இல்லாத நபர்கள் என அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்காவுடன் ராஜதந்திர முயற்சிகள் தோல்வியுற்றால்... - ஈரான் பகிரங்க எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/world/iran-threatens-to-go-on-offensive-in-hormuz-if-diplomacy-with-us-fails</link><comments>https://www.maalaimalar.com/news/world/iran-threatens-to-go-on-offensive-in-hormuz-if-diplomacy-with-us-fails#comments</comments><guid isPermaLink="false">75ceab94-9756-429f-9963-12c288deae5b</guid><pubDate>Mon, 17 Aug 2026 23:32:40 +0000</pubDate><atom:updated>2026-08-17T23:32:40.776Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஈரான்,Iran,Strait of Hormuz,ஹார்முஸ் நீரிணை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/54lnwim9/strait-of-hormuz.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Strait of Hormuz]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/54lnwim9/strait-of-hormuz.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவுடனான போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை காரணமாக, <a href="https://www.maalaimalar.com/topic/Iran">ஈரான்</a> தனது கொள்கையை தற்காப்பு நிலையில் இருந்து முழுமையான தாக்குதல் நிலைக்கு மாற்ற முடிவு செய்துள்ளது என்று ஒரு மூத்த ஈரானிய அதிகாரி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.</p><p>அமைதி பேச்சுவார்த்தைகள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கான முன்னேற்றம் முடங்கியுள்ளது. மேலும், பிப்ரவரி 28-ஆம் தேதியன்று <a href="https://www.maalaimalar.com/news/world">அமெரிக்கா</a> மற்றும் இஸ்ரேலும் தொடங்கிய இந்த மோதலை முடிவுக்கு கொண்டுவருவதற்கான எந்த அறிகுறியும் போரிடும் தரப்புகளுக்கு இல்லை.</p><h2>சரியான நேரத்தில் தாக்குதல்:</h2><p>"ஹோர்முஸ் நீரிணை மற்றும் பரந்த பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரிக்க ஈரானிய அமைப்புகள் தயாராக இருக்க வேண்டும், ஏனெனில் கடினமான முடிவுகள் மீது ஈரான் முடிவெடுக்கவும் நடவடிக்கை எடுக்கவும் தயாராக இருக்கும்," என்று அந்த ஈரானிய அதிகாரி கூறினார்.</p><p>மேலும், ராஜதந்திர முயற்சிகள் தோல்வியுற்றால், அமெரிக்க கடற்படை முற்றுகையை உடைக்க தெஹ்ரான் "சரியான நேரத்தில் மற்றும் துல்லியமான" ராணுவ தாக்குதலை நடத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><h2>சிதைந்து போன ஒப்பந்தம்:</h2><p>போரை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில், ஜூன் மாதம் ஒப்புக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், ஈரானும் அமெரிக்காவும் ஒரு இறுதி உடன்பாட்டை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நாள் திங்கட்கிழமை ஆகும்.</p><p>ஜூன் 17 அன்று கையெழுத்திடப்பட்ட இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், ஈரானின் அணுசக்தி திட்டத்தின் எதிர்காலம் போன்ற பரந்த பிரச்சினைகளை உள்ளடக்கிய ஒரு உடன்பாட்டை வாஷிங்டனும் தெஹ்ரானும் எட்டுவதற்கு, பரஸ்பர ஒப்புதலுடன் நீட்டிக்கப்படக்கூடிய 60 நாள் காலக்கெடுவை நிர்ணயித்தது.</p><p>இருப்பினும், அனைத்து முனைகளிலும் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாகவும் நிரந்தரமாகவும் நிறுத்துவதாக அறிவித்த அந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், ஹார்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு குறித்த தகராறு காரணமாக விரைவாக சிதைந்து போனது.</p><p>புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் 5-ஆவது பிரிவு, நீர்வழியை நிர்வகிக்கும் உரிமையை தங்களுக்கு அளிப்பதாக தெஹ்ரான் கூறியது, ஆனால் வாஷிங்டன் அந்த விளக்கத்தை நிராகரித்தது. அங்கீகரிக்கப்படாத பாதையில் நீர்வழி வழியாக செல்ல முயன்றதாக கூறப்பட்ட கப்பல்கள் மீது தெஹ்ரான் துப்பாக்கி சூடு நடத்த தொடங்கியதால், மோதல்கள் மீண்டும் தொடங்கின.</p>]]></content:encoded></item><item><title>இம்ரான் கானின் கண் பார்வை &apos;கிட்டத்தட்ட இயல்பு&apos; நிலைக்கு திரும்பியது: சிறை நிர்வாகம் தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/world/jail-authorities-said-imran-khans-eye-condition-almost-normal-to-apex-court</link><comments>https://www.maalaimalar.com/news/world/jail-authorities-said-imran-khans-eye-condition-almost-normal-to-apex-court#comments</comments><guid isPermaLink="false">7b02a04b-08f7-4c91-a183-490579caabfe</guid><pubDate>Mon, 17 Aug 2026 21:25:04 +0000</pubDate><atom:updated>2026-08-17T21:25:04.382Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறை,Imran Khan,இம்ரான் கான்,நீதிமன்றம்,jail,Court</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/utk8b4wh/Imran-Khan-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Imran Khan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/utk8b4wh/Imran-Khan-1.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கண் பார்வை கணிசமாக மேம்பட்டுள்ளதாகவும், அவரது பார்வைத்திறன் "கிட்டத்தட்ட இயல்பு நிலைக்கு" திரும்பியுள்ளதாக சிறை அதிகாரிகள் <a href="https://www.maalaimalar.com/news/world">பாகிஸ்தான்</a> உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்தனர்.</p><p>இஸ்லாமாபாத்தில் உள்ள முன்னணி தனியார் மருத்துவமனையான 'ஷிஃபா இன்டர்நேஷனல்' மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக <a href="https://www.maalaimalar.com/topic/imran-khan">இம்ரான் கான்</a> விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் விசாரிக்கவிருந்த நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>மருத்துவ அறிக்கை:</h2><p>ஆகஸ்ட் 2023 முதல் சிறையில் உள்ள 'பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப்' (PTI) கட்சியின் நிறுவனர் இம்ரான் கான், ஜனவரி மாத இறுதியில் அவருக்கு வலது கண்ணில் 'சென்ட்ரல் ரெட்டினல் வெயின் அக்லூஷன்' (CRVO) எனும் கண் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதில் இருந்து, கண் சிகிச்சைக்காக இஸ்லாமாபாத்தில் உள்ள 'பாகிஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ்' (PIMS) மருத்துவமனைக்கு பலமுறை அழைத்து செல்லப்பட்டுள்ளார்.</p><p>ராவல்பிண்டியில் உள்ள அடியால சிறை அதிகாரிகள், 73 வயதான இம்ரான் கான் கண்களின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.</p><p>இம்ரான் கானின் மருத்துவ பிரச்சனை கண்டறியப்பட்டதில் இருந்து அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், PIMS மருத்துவமனையின் கண் மருத்துவ பிரிவுத் தலைவர் டாக்டர் முகமது ஆரிஃப் கான் மற்றும் ராவல்பிண்டியில் உள்ள அல்ஷிஃபா டிரஸ்ட் கண் மருத்துவமனையின் விட்ரியோ-ரெட்டினல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் நதீம் குரேஷி ஆகியோர் அவருக்கு சிகிச்சை அளித்ததாகவும் அந்த அறிக்கை தெரிவித்தது.</p><h2>பார்வைத்திறன் முன்னேற்றம்:</h2><p>"இதன் விளைவாக, அவரது கண்ணில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுகிறது, மேலும் அவரது பார்வைத்திறன் கிட்டத்தட்ட இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது" என்று அந்த அறிக்கை கூறியது.</p><p>மருத்துவ சிகிச்சைகள் மற்றும் பார்வைத்திறனில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் ஆகியவை, கானுக்கு சிறந்த மருத்துவ வசதிகளை வழங்குவதில் சிறை நிர்வாகம் முழுமையான முயற்சிகளை மேற்கொண்டதை காட்டுவதாக அது மேலும் குறிப்பிட்டது.</p><p>மருத்துவ அதிகாரிகள் தினமும் மூன்று முறை இம்ரான் கானை சந்தித்து, அவரது உணவை சரிபார்ப்பதுடன், இரத்த அழுத்தம், இதய துடிப்பு மற்றும் ஆக்சிஜன் அளவு உள்ளிட்ட முக்கிய உடல்நல குறியீடுகளை பரிசோதிப்பதாக அது கூறியது. சிறைவாசத்தின் போது அவரது மருத்துவ பதிவுகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>உக்ரைன் போருக்கு எதிராக பேசிய கிரெம்ளின் விமர்சகருக்கு 11 ஆண்டுகள் சிறை - ரஷ்யா</title><link>https://www.maalaimalar.com/news/world/russia-jails-kremlin-critic-for-11-years-for-speaking-against-ukraine-war</link><comments>https://www.maalaimalar.com/news/world/russia-jails-kremlin-critic-for-11-years-for-speaking-against-ukraine-war#comments</comments><guid isPermaLink="false">5c189651-29cb-4e73-a72d-5248493789b3</guid><pubDate>Mon, 17 Aug 2026 20:25:52 +0000</pubDate><atom:updated>2026-08-17T20:25:52.556Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உக்ரைன் போர்,Russia,Ukraine War,ரஷ்யா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/kzqod4sa/Lev-Shlosberg.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Lev Shlosberg]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/kzqod4sa/Lev-Shlosberg.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக, <a href="https://www.maalaimalar.com/news/world">உக்ரைன்</a> போருக்கு எதிராக குரல் எழுப்பிய முக்கிய எதிர்க்கட்சி அரசியல்வாதி ஒருவருக்கு ரஷ்ய நீதிமன்றம் 11 ஆண்டுகள் மற்றும் ஒரு மாதம் சிறை தண்டனை விதித்தது.</p><p>2022 பிப்ரவரியில் <a href="https://www.maalaimalar.com/topic/russia">ரஷ்யா</a> தனது அண்டை நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை பேரில் போரை தொடங்கியதில் இருந்து, எதிர்ப்புக் குரல்களை ஒடுக்குவதற்காக ரஷ்யா எடுத்துவரும் மற்றுமொரு நடவடிக்கையாக, யப்லோகோ கட்சியின் மூத்த உறுப்பினரான லெவ் ஷ்லோஸ்பெர்க்கிற்கு எதிரான தீர்ப்பு அமைந்துள்ளது. போரை வெளிப்படையாக எதிர்க்கும் ஒரே அதிகாரப்பூர்வ அரசியல் கட்சி யப்லோகோ ஆகும்.</p><h2>சகித்துக்கொள்ளாது:</h2><p>திங்களன்று வழங்கப்பட்ட தனித் தீர்ப்பில், ரஷ்யாவின் உச்ச நீதிமன்றம், செப்டம்பர் 18-20 தேதிகளில் நடைபெறவிருந்த நாடாளுமன்ற தேர்தலில் யப்லோகோ கட்சியை வேட்பாளர் பட்டியலில் இருந்து தடைசெய்த தனது முந்தைய முடிவை உறுதிசெய்ததுடன், அக்கட்சியின் மேல்முறையீட்டையும் நிராகரித்தது.</p><p>தற்போது ஐந்தாம் ஆண்டில் இருக்கும் போர் குறித்த எந்தவொரு விமர்சனத்தையும் கிரெம்ளின் சகித்துக்கொள்ளாது என்பதை, ஷ்லோஸ்பெர்க் மற்றும் யாப்லோகோவுக்கு எதிரான இந்த நடவடிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன.</p><p>63 வயதான ஷ்லோஸ்பெர்க், யப்லோகோவின் துணைத் தலைவர் ஆவார். இவர் 2016 முதல் 2021 வரை பிஸ்கோவ் பிராந்திய சட்டமன்றத்தில் பணியாற்றினார். </p><p>மாஸ்கோவில் இருந்து வடமேற்கே சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிஸ்கோவ் நகரில், ரஷ்ய இராணுவத்தை பற்றி "அவமதிப்பு" விளைவித்ததாகவும் மற்றும் "பொய் தகவல்களை" பரப்பியதாகவும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் மீது விசாரணை நடைபெற்றது.</p><h2>வெளிநாட்டு உளவாளி:</h2><p>போரை முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுத்த விவாதத்தில் இருந்தும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் படத்திற்கு அருகில் இரத்தம் தோய்ந்த பெண்ணின் படத்தை கொண்ட ஒரு பிரிட்டிஷ் பத்திரிகையின் முதல் பக்கத்தை, "அவள் இரத்தம்... அவன் கைகள்" என்ற தலைப்புடன் தனது டெலிகிராம் சேனலில் பதிவிட்டதில் இருந்தும் இந்தக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஷ்லோஸ்பெர்க் இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று நிராகரித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>காலே டெஸ்ட்: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்த ஜடேஜா</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/ravindra-jadeja-joins-kapil-dev-in-elite-list-to-achieve-this-feat</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/ravindra-jadeja-joins-kapil-dev-in-elite-list-to-achieve-this-feat#comments</comments><guid isPermaLink="false">0ab2200a-dce3-47b7-b460-64a8794b42fb</guid><pubDate>Mon, 17 Aug 2026 19:33:54 +0000</pubDate><atom:updated>2026-08-17T19:33:54.933Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Kapil Dev,ரவீந்திர ஜடேஜா,Ravindra Jadeja,கபில் தேவ்,Galle Test,காலே டெஸ்ட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/yj63hrbi/Jadeja.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jadeja]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/yj63hrbi/Jadeja.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காலேயில் இலங்கைக்கு எதிரான <a href="https://www.maalaimalar.com/sports/cricket">முதல் டெஸ்ட்</a> போட்டியில், இந்திய ஆல்-ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 350 விக்கெட்டுகளை பூர்த்தி செய்து, ஒரு உயர்மட்டக் குழுவில் நுழைந்தார். </p><p>37 வயதான <a href="https://www.maalaimalar.com/topic/jadeja">ஜடேஜா</a>, டெஸ்ட் போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டிய ஐந்தாவது இந்திய பந்துவீச்சாளர் ஆனார். அவருக்கு முன்னதாக அனில் கும்ப்ளே (619), ரவிச்சந்திரன் அஸ்வின் (537), கபில் தேவ் (434) மற்றும் ஹர்பஜன் சிங் (417) ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர். </p><h2>மூன்றவது இடம்:</h2><p>இடது கை சுழற்பந்து வீச்சாளர்களில், இலங்கையின் ரங்கனா ஹெரத் (433) மற்றும் நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி (362) ஆகியோருக்குப் பின்னால், டெஸ்ட் விக்கெட்டுகளில் ஜடேஜா இப்போது மூன்றாவது இடத்தில் உள்ளார். </p><p>இலங்கை வீரர் கேசர நுவந்தா, வெளிநோக்கித் திரும்பிய பந்தை அடிக்க முயன்றபோது, ​​அவரது ஷாட்டை தவறவிட்டதால் ஜடேஜா இந்த மைல்கல்லை எட்டினார். சுப்மன் கில் அந்த கேட்சை பிடித்து, ஜடேஜாவின் 350-ஆவது டெஸ்ட் விக்கெட்டை பெற்றுத் தந்தார்.</p><p>இந்த மைல்கல்லை எட்டியதன் மூலம், 4,000-க்கும் மேற்பட்ட டெஸ்ட் ரன்களையும் 350 விக்கெட்டுகளையும் குவித்த ஒரே இந்தியர்களான முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் உடன் ஜடேஜா இணைந்தார். இந்த போட்டி தொடங்குவதற்கு முன், ஜடேஜா 89 டெஸ்ட் போட்டிகளில் 4,095 ரன்களையும் 348 விக்கெட்டுகளையும் எடுத்திருந்தார்.</p><p>ஒட்டுமொத்தமாக, டெஸ்ட் கிரிக்கெட்டில் 4,000-க்கும் மேற்பட்ட ரன்கள் மற்றும் 350-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்த நான்காவது வீரர் என்ற பெருமையை ஜடேஜா பெற்றார். அவருக்கு முன்னதாக கபில் தேவ், இங்கிலாந்தின் இயன் போத்தம் மற்றும் நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி ஆகியோர் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தனர்.</p><p>கபில் தனது புகழ்பெற்ற டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை 5,248 ரன்கள் மற்றும் 434 விக்கெட்டுகளுடன் நிறைவு செய்தார். அதே சமயம், போத்தம் 5,200 ரன்கள் மற்றும் 383 விக்கெட்டுகளையும், வெட்டோரி 4,531 ரன்கள் மற்றும் 362 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.</p><h2>பின்தங்கிய இலங்கை:</h2><p>இலங்கையின் இன்னிங்ஸ் தொடக்கத்திலேயே, கேப்டன் தனஞ்சய டி சில்வாவை 21 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்து ஜடேஜா தனது தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். </p><p>இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கில் 13 ரன்கள் மட்டுமே எடுத்த போதிலும், நாள் ஆட்டம் முடிவடைவதற்குள் அவர் மற்றொரு குறிப்பிடத்தக்க சாதனையை நிகழ்த்தினார்.</p><p>தேவ்தத் படிக்கலின் 167 ரன்களுக்குப் பிறகு இந்தியா 462 ரன்களை எடுத்தது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 284 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் அந்த அணி தற்போது 178 ரன்கள் பின்தங்கியுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>