<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 05 Aug 2026 06:48:25 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: தமிழக உரிமையை பாதிக்கும் திட்டங்களை உறுதியாக எதிர்ப்போம்- அமைச்சர்: 05 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-05-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-05-august-2026#comments</comments><guid isPermaLink="false">26a830e4-6e1c-496e-877c-f6d4a71ea964</guid><pubDate>Wed, 05 Aug 2026 04:04:45 +0000</pubDate><atom:updated>2026-08-05T06:46:36.751Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,TN budget,தமிழக பட்ஜெட்,tvk,Budget 2026,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/7e49t1zq/maria.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நிதி அமைச்சர் மரிய வில்சன்]]></media:title><media:description type="html"><![CDATA[ நிதி அமைச்சர் மரிய வில்சன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/7e49t1zq/maria.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை பிராட்வேயில் 160 நீதிமன்றங்களை ஒருங்கிணைத்து நீதிமன்ற வளாகம் உருவாக்கப்படும்.</p><p>சென்னையில் உள்ள அனைத்து நீதிமன்றங்களையும் ஒருங்கிணைக்க ரூ.1375 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு</p><p>தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் நீதி நிர்வாகத்துறைக்கு ரூ.2,486 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. </p><p>இயற்கை வளங்கள் துறைக்கு ரூ.438 கோடி ஒதுக்கீடு</p><p>மனித-வனவிலங்கு மோதல் தடுப்பு திட்டத்திற்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. </p><p>கடற்கரை பாதுகாப்பு, பருவநிலை மாற்ற பாதிப்பு குறைக்கும் வகையில் 2500 ஹெக்டரில் அலையாத்தி காடுகள் உருவாக்க திட்டம். </p><p>கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, மயிலாடுமுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, குமரியில் புதிய அலையாத்தி காடுகளை உருவாக்கம்.</p><p>தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் என்ற பெயிால் புதிய அலையாத்தி காடுகளை உருவாக்க புதிய திட்டம் பட்ஜெட்டில் அறிவிப்பு</p><p>விளையாட்டுத்துறைக்கு ரூ.1,051 கோடி ஒதுக்கீடு</p><p>காவிரி டெல்டா சுற்றுச்சூழல் மறுசீரமைப்புக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு</p><p>காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க சாத்தியக்கூறு இருக்கிறதா என ஆய்வு செய்ய ரூ.10 கோடி ஒதுக்கீடு</p><p>சுற்றுச்சூழல் துறைக்கு ரூ.1762 கோடி ஒதுக்கீடு</p><p>நதிகள் மறுசீரமைப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு, திடக்கழிவு மேலாண்மை, நதி மேற்பரப்பு சுத்தம் செய்ய திட்டம். </p><p>பெண்ணையாறு- செய்யாறு, பெண்ணையாறு- பாலாறு, தாமிரபரணி வைப்பாறு திட்டங்களுக்கு திட்ட அறிக்கை தயார் செய்ய ரூ.50 கோடி ஒதுக்கீடு</p><p>நதி இணைப்பு திட்டங்களுக்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு</p><p>நீர்வளத்துறைக்கு ரூ.9,264 கோடி ஒதுக்கீடு</p><p>காவிரி-வைகை-குண்டாறு நதி இணைப்புத் திட்டத்திற்கு ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு</p><p>முல்லைபெரியாறு, ஆனைமலையாறு திட்டங்களுக்கு தமிழக அரசு முன்னுரிமை</p><p>மேகதாது உள்ளிட்ட தமிழக உரிமையை பாதிக்கும் திட்டங்களை உறுதியாக எதிர்ப்போம்- நிதி அமைச்சர் மரிய வில்சன்</p><p>எரிசக்தித்துறைக்கு ரூ.15,828 கோடி, மின்மானியத்திட்டம் ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு</p><p>தமிழகத்தில் 3 புதிய மெட்ரோ வழித்தடங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விமானநிலையம் - கிளாம்பாக்கம், கோயம்பேடு- பட்டாபிராம், பூந்தமல்லி- சுங்குவார் சத்திரம் மெட்ரோ வழித்தடங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. </p><p>நகர்ப்புற வளர்ச்சித்துறைக்கு ரூ.8,252 கோடி ஒதுக்கீடு</p><p>போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.7,657 கோடி, செயல்திறன் இடைவெளி நிதியுதவிக்கு ரூ.2,650 கோடி ஒதுக்கீடு</p><p>சென்னை பயணிகளின் வசதிக்காக புதிதாக ஆயிரம் ஏசி மின்சார பேருந்துகள் வாங்கப்படும். புதிய ஏசி மின்சார பேருந்துகள், பேருந்து பணிமனைகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.500 கோடி ஒதுக்கீடு. </p><p>நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு ரூ.21,524 கோடி நிதி ஒதுக்கீடு</p><p>சாலை விபத்துகளை தடுக்க, சாலைகளை பராமரிக்க, வாகன ஓட்டிகளை கண்காணிக்க பாதுகாப்பான சாலைஇயக்கம் அறிமுகம். AI மூலம் வேகக்கட்டுப்பாடு மற்றும் விதிமீறல் கண்காணிப்பு, ரோந்து பிரிவு மற்றும் தீவிர காய சிகிச்சை மையம் அமைக்க திட்டம். </p><p>நம்ம சாலை திட்டத்திற்காக ரூ.250 கோடி ஒதுக்கீடு. நம்ம சாலை செயலி மூலம் சாலை குறைபாடு பற்றி புகாரளித்தால் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும். </p><p>முதலமைச்சரின் ஒருங்கிணைந்த மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.2,117 கோடி ஒதுக்கீடு</p><p>பனை விவசாயிகளின் வாழ்வாதார பாதுகாப்பையும், வருவாயையும் உறுதி செய்ய பனை மேம்பாட்டுக் கழகம் நிறுவப்படும்- நிதியமைச்சர் மரிய வில்சன்</p><p>திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு</p><p>ரூ.16 கோடி நிதியுடன் தமிழ்நாடு பனை மேம்பாட்டுக் கழகம் நிறுவப்படும்</p><p>செயற்கை நுண்ணறிவு பாடத்திட்ட வடிவமைப்புக்கான குழு அமைக்கப்படும் - பட்ஜெட்டில் அறிவிப்பு</p><p>கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறைக்கு ரூ. 1,678 கோடி ஒதுக்கீடு</p><p>ஆதிதிராவிடர், பழங்குடியினர் தொழில் முனைவுத்திறனை ஊக்குவிக்க ரூ.163 கோடி ஒதுக்கீடு</p><p>நெல்லை, தூத்துக்குடியில் விண்வெளித் தொழில் முதலீட்டு மண்டலம் அமைக்கப்படும்- பட்ஜெட்டில் அறிவிப்பு</p><p>பின்தங்கிய மாவட்டங்களில் புதிய தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும்.</p><p>மாவட்டம் தோறும் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க ரூ.3200 கோடி ஒதுக்கீடு</p><p>ஆழ்கடல் மீன்பிடி தொழில் ஊக்குவிப்பிற்காக ரூ.12கோடி ஒதுக்கீடு</p><p>விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டததிற்கு தமிழக பட்ஜெட்டில் ரூ.57 கோடி ஒதுக்கீடு</p><p>பசுந்தீவன சாகுபடி ஊக்குவிப்பு திட்டத்திற்காக ரூ.13 கோடி ஒதுக்கீடு</p><p>மாநிலம் முழுவதும் உள்ள மேய்ச்சல் நிலங்களை மீட்க பட்ஜெட்டில் ரூ.13 கோடி ஒதுக்கீடு</p><p>தீவன விதை வங்கிகள் மற்றும் கிடங்குகள் அமைக்க ரூ.6.7 கோடி ஒதுக்கீடு</p><p>41 கால்நடை மருத்துவமனை கட்டடங்கள், 25 கால்நடை பல்நோக்கு மருத்துவமனைகள், 143 புதிய நடமாடும் கால்நடை மருத்துவ பிரிவுகள்  அமைக்கப்படும். </p><p>கால்நடை மருத்துவத்திற்காக ரூ.122 கோடி ஒதுக்கீடு. கால்நடைகள் காப்போம் திட்டத்திற்கு ரூ.31 கோடி ஒதுக்கீடு.</p><p>1.39 லட்சம் மீனவ குடும்பங்கள் பயன்பெறும் பணியில்லா கால உதவித்தொகைக்கு ரூ.135 கோடி ஒதுக்கீடு</p><p>மீனவர்களுக்கு பணியில் இல்லாத கால உதவித்தொகை ரூ.6ஆயிரத்தில் இருந்து ரூ.7ஆயிரமாக உயர்த்தப்படும் என அறிவிப்பு</p><p>வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டத்திற்கு ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டத்தில் 5 வெள்ளாடு அல்லது செம்மறி ஆடு 100 சதவீத மானித்துடன் வழங்கப்படும். </p><p>வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டத்தில் பெண்களுக்கு 5 ஆடுகள் வழங்கப்படும். </p><h2><strong>எந்த துறைக்கு எவ்வளவு நிதி</strong></h2><p>பள்ளிக்கல்வித்துறை ரூ.44,527 கோடி, உயர்கல்வித்துறை ரூ.8,393 கோடி, தொழிலாளர் நலத்துறை ரூ.2,022 கோடி, சிறப்பு திட்ட செயலாக்கம் ரூ.44,527 கோடி, கூட்டுறவுத்துறை ரூ.8,028 கோடி, வேளாண் துறை ரூ.14,984.</p><p>சமூக நீதித்துறை ரூ.3,937 கோடி, மாற்றுத்திறனாளி நலத்துறை ரூ.1,485 கோடி, சமூக நலத்துறை ரூ.9,818 கோடி, மருத்துவத்துறை ரூ.3937 கோடி.</p><p>டெல்டா அல்லாத மாவட்டங்களில் குறுவை தொகுப்பு திட்டம்-ரூ.134 கோடி ஒதுக்கீடு</p><p>விவசாயிகளின் மின் மானியத்திற்கு ரூ.7,432 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. </p><p>டெலி மெடிசன் நெட்வொர்க் உருவாக்க ரூ.18.5 கோடி நிதி ஒதுக்கீடு</p><p>தமிழக பட்ஜெட்டில் கூட்டுறவுத்துறைக்கு ரூ.8,028 கோடி ஒதுக்கீடு</p><p>சுகாதாரத்துறைக்கு ரூ.23,357 கோடி நிதி ஒதுக்கீடு- பட்ஜெட்டில் அறிவிப்பு</p><p>5 மண்டலங்களில் புற்றுநோய் பராமரிப்பு மருத்துவமனைகள் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு</p><p>5 ஆண்டுகளில் 1000 தொலை மருத்துவ மையங்கள் அமைக்கப்படும் - ரூ.33 கோடி ஒதுக்கீடு</p><p>கிராமிய விளையாட்டு போட்டித்திட்டம் ரூ.42 கோடி ஒதுக்கீடு</p><p>ஒவ்வொரு மாவட்டத்திலும் தாய கேர் மையங்கள் அமைக்கப்படும்- தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு</p><p>கருவுற்ற பெண்களுக்கான தாய் கேர் திட்டத்திற்கு ரூ.23 கோடி ஒதுக்கீடு</p><p>தமிழகம் முழுவதும் ஆயிரம் நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள்- ரூ.33 கோடி ஒதுக்கீடு</p><p>மண்ணின் மகள் திட்டம் ரூ.20 கோடி ஒதுக்கீடு</p><p>ஆன்றோர் மேம்பாட்டுத்திட்டம் ரூ.250 கோடி ஒதுக்கீடு</p><p>சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைக்கு ரூ.9,818 கோடி ஒதுக்கீடு</p><p>திருநர்களுக்கு திறன்பயிற்சி சுயத்தொழிலுக்கு மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படும் என அறிவிப்பு</p><p>திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வங்கிகளில் சுயதொழில் தொடங்க ரூ.50,000 கடன் வழங்கப்படும் என அறிவிப்பு</p><p>திருநர்களுக்காக 5 மாவட்டங்களில் அரண் தங்குமிடங்கள் அமைக்கப்படும். </p><p>திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வங்கிகளில் சுயதொழில் தொடங்க ரூ.50,000 கடன் வழங்கப்படும் என அறிவிப்பு</p><p>தமிழகம் முழுவதும் சிதிலமடைந்த 500 அங்கன்வாடி அமையங்களுக்கு புதிய கட்டிடம்- பட்ஜெட்டில் அறிவிப்பு</p><p>யோகா உள்ளிட்டவையுடன் உருவாக்கப்படும் முதியோருக்கான இல்லங்கள் 12 மாவட்டங்களில் அமைக்க ரூ.6.6 கோடி ஒதுக்கீடு</p><p>தமிழக பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.1485 கோடி ஒதுக்கீடு</p><p>இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கு ரூ.1051 கோடி ஒதுக்கீடு</p><p>கிராமிய விளையாட்டு போட்டித்திட்டம் ரூ.42 கோடி ஒதுக்கீடு</p><p>10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள்- ரூ.50 கோடி ஒதுக்கீடு</p><p>பெண்களின் திருமணத்திற்காக 8 கிராம் தங்கம், பட்டு சேலை வழங்கும் அண்ணன் சீர் திட்டம் அமல்படுத்தப்படும். </p> <p>காலை உணவுத்திட்டம் 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்படுகிறது. </p><p>அண்ணனின் சீர் திட்டத்திற்காக ரூ.812 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>முதல்வரின் காலை உணவு திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் திட்டம் என பெயர்வைத்து பெருமை சேர்த்தவர் முதலமைச்சர் விஜய்- மரிய வில்சன்</p><p>காலை உணவு திட்டம் விரிவாக்கத்திற்கு 15.14 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.170 கோடி ஒதுக்கீடு</p><p>பள்ளி நேரத்திற்கு பிறகு தினமும் ஒரு மணி நேரம் முறைப்படுத்தப்பட்டு விளையாட்டு பயிற்சி வழங்கப்படும். விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவி வழங்க கூடுதலாக ரூ.22 கோடி ஒதுக்கீடு</p><p>11ஆம் வகுப்பு மாணவர்கள் 5.32 லட்சம் பேருக்கு ஹெல்மெட், வாட்டர்பாட்டில் வசதியுடன் ரூ.277 கோடி மதிப்பில் சைக்கிள் - பட்ஜெட்டில் அறிவிப்பு</p><p>5 ஆண்டுகளில் 24 ஆயிரம் மாணவர்களுக்கு AI வேலைவாய்ப்பு பயிற்சி வழங்க ரூ.7.5 கோடி ஒதுக்கீடு</p><p>TN சுடர் திட்டத்தில் 200 ஒருங்கிணைந்த மாணவர் விடுதிகள், 1 லட்சம் நவீன படுக்கை வசதிகள் உருவாக்க ரூ.3200 கோடி ஒதுக்கீடு</p><p>போட்டி தேர்வுகளுக்கான கூடுதல் பயிற்சி வகுப்புகளுக்காக ரூ.3.38 கோடி ஒதுக்கீடு</p><p>ரூ.90 கோடி மதிப்பீட்டில் 5 புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும்.</p><p>உயர் கல்வித்துறைக்கு ரூ.8,393 கோடி நிதி ஒதுக்கீடு- நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவிப்பு</p><p>அடுத்தாண்டு மதுரையில் அரசு சட்டக்கல்லூரி தொடங்கப்படும்- நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவிப்பு</p><p>நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு வலியுறுத்துகிறது- நிதியமைச்சர் மரிய வில்சன்</p><p>Drugs Free தமிழ்நாடு செயலி மூலம் போதைப்பொருள் பரவல் குறித்து புகார் அளிக்கும் வகையில் சிறப்பு செயல்பாடு</p><p>பள்ளிகளில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்திற்கு ரூ.7 கோடி ஒதுக்கீடு</p><p>பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.44,524 கோடி நிதி ஒதுக்கீடு- மரிய வில்சன்</p><p>பள்ளி பாடத்திட்டம் மறு சீரமைப்பிற்காக கற்றலில் முதலிடம் தமிழ்நாடு திட்டத்திற்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு</p><p>போதையில்லா தமிழ்நாடு செயலி உருவாக்கப்பட்டு தன்னார்வ குழுக்கள் அமைக்க ரூ.7 கோடி ஒதுக்கீடு</p><p>பெருந்தலைவர் காமராசர் சிறப்பு பள்ளிகள் திட்டத்திற்காக ரூ.125 கோடி ஒதுக்கீடு- தரமான கல்வி வழங்க காமராஜர் சிறப்பு பள்கிள திட்டம் செயல்படுத்தப்படும்- அமைச்சர் அறிவிப்பு</p><p>மாடர்ன் பள்ளிகளை மேம்படுத்த ரூ.125 கோடி ஒதுக்கீடு</p><p>அரசு பள்ளிகளில் தூய்மையை பாதுகாக்கும் விதமாக சூப்பர் கிளீன் கேம்பஸ் திட்டம் என்ற புதிய அறிமுகம்- இத்திட்டத்திற்கு ரூ.139 கோடி நிதி ஒதுக்கீடு</p><p>மதுபான உற்பத்தியாளர்களுக்கான கூடுதல் சிறப்பு கட்டணம் மூலம் ஆண்டுக்கு ரூ.1000 கோடி வரவு- நிதி அமைச்சர் மரிய வில்சன்</p><p>3,734 அரசுப்பள்ளிகளில் ரூ.2132 கோடி மதிப்பீட்டில் நவீன மயமாக்கல் திட்டம் - இந்த ஆண்டிற்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு</p><p>பள்ளி பாடத்திட்டம் மறுசீரமைப்பிற்கு ரூ. 25 கோடி நிதி ஒதுக்கீடு</p><p>பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் தாய்மாமன் சீர் திட்டம் தொடங்கப்படும் - நிதியமைச்சர் மரிய வில்சன்</p><p>தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்கு ரூ.560 கோடி நிதி ஒதுக்கீடு - நிதியமைச்சர் மரிய வில்சன்</p><p>டெண்டர்களை கண்காணிப்பதன் மூலம் அரசுக்கு ரூ.15ஆயிரம் கோடி வருவாய் வர வாய்ப்பு- மரிய வில்சன்</p><p>த.வெ.க அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் மரிய வில்சன்</p><p>தமிழக அரசின் கடனுக்கான வட்டி ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது- மரிய வில்சன்</p><p>மக்களின் வரிப்பணத்தில் ஒரு பைசா தொட மாட்டோம், தொடவும் விடமாட்டோம், இதற்கு முன்பு தொட்டவர்களையும் விடமாட்டோம்- மரிய வில்சன்</p><p>முதலமைச்சரின் பெயரை கேட்டாலே ஊழல்வாதிகள் அஞ்சி நடுங்குகின்றனர்- மரிய வில்சன்</p><p>தமிழகத்தில் அரசு டெண்டர்களில் வெளிப்படை தன்மை கொண்டு வரப்பட்டுள்ளன- மரிய வில்சன்</p><p>டெண்டர் விதிமுறைகள் பலவற்றை தளர்த்தி முன் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன- மரிய வில்சன்</p><p>தவெக அரசு பொறுப்பேற்ற நேரத்தில் ரூ.10 லட்சம் கோடி கடன் இருப்பதை வெள்ளை அறிக்கை மூலம் தெளிவுப்படுத்தியுள்ளோம்- மரிய வில்சன்</p><p>நிதி நெருக்கடியில் இருந்து தமிழகத்தை மீட்க தவெக அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது- மரிய வில்சன்</p><p>புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கான நிதி ஆதாரம் மிக குறைவாகவே உள்ளது- மரிய வில்சன்</p><p>வெற்றிக்கொள்கை ஆவணத்தில் உள்ள திட்டங்களை நிறைவேற்றுவது உறுதி- மரிய வில்சன்</p><p>தவெக வெற்றி என்பது தனிப்பட்ட ஒரு கட்சியின் வெற்றியல்ல, தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களின் வெற்றி-மரிய வில்சன்</p><p>2036-ம் ஆண்டுக்குள் 1.5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட  மாநிலமாக மாற்ற திட்டம் </p><p>சொன்னது மட்டுமல்ல, சொல்லாததையும் நிகழ்த்தி காட்டியுள்ளார் முதலமைச்சர் விஜய்-மரிய வில்சன்</p><p>குறுகிய காலத்தில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளது த.வெ.க. அரசு</p><p>தமிழகத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த 717 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன- மரிய வில்சன்</p><p>விலையில்லா மின்சாரம் 200 யூனிட்களாக த.வெ.க அரசில் உயர்த்தப்பட்டுள்ளது- மரிய வில்சன்</p><p>தன்னை உயிராய் நேசிக்கும் மக்களுக்காக சூழ்ச்சிகளை வென்று ஜனநாயகனாக நிற்கும் முதலமைச்சருக்கு நன்றி- மரிய வில்சன்</p><p>3 மாதங்களில் சொன்னதை செய்து காட்டியுள்ளது த.வெ.க. அரசு- மரிய வில்சன்</p><p>பிறப்பால் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டுடன் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார் முதலமைச்சர்- நிதி அமைச்சர் மரிய வில்சன்</p><p>நன்றி கடன் செலுத்துவதற்காக மட்டும் அரசியலுக்கு வந்தவர் முதலமைச்சர் விஜய்- நிதி அமைச்சர் மரிய வில்சன்</p><figure><img alt="முதலமைச்சர் விஜய்" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/32znrfa9/vijay.jpg" /><figcaption>முதலமைச்சர் விஜய்</figcaption></figure><p>2026-2027-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் மரிய வில்சன்.</p><p>பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சட்டசபை கூடியது.</p><p>பட்ஜெட் கூட்டத்தொடர் சற்று நேரத்தில் தொடங்க உள்ள நிலையில், தி.மு.க. எம்எல்ஏக்களுடன் உதயநிதி ஆலோசனை.</p><p>த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் சற்று நேரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முண்டகக்கண்ணி ம்மன் கோவிலில் அமைச்சர்கள் என்.ஆனந்த், விஜய் பாலாஜி ஆகியோர் சாமி தரிசனம்.</p><p>முதலமைச்சர் விஜயை சந்தித்து வாழ்த்து பெற்றார் நிதி அமைச்சர் மரிய வில்சன்</p><p>அதிமுக எம்எல்ஏக்கள் அறையில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்எல்ஏக்கள் கூட்டம். முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன், நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம் ஆகியோர் பங்கேற்கவில்லை.</p><p>எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் சட்டசபைக்கு வருகை</p><p>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டசபைக்கு வருகை</p><p>த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட்- முதலமைச்சர் விஜய் சட்டசபைக்கு வருகை</p><p>சட்டசபைக்கு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் வருகை</p><p>2026-27-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>ரூ.16 கோடி நிதி உதவியுடன் பனை மேம்பாட்டு கழகம்: அமைச்சர் மரிய வில்சன் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/palm-development-corporation-with-rs-16-crore-funding-minister-maria-wilson</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/palm-development-corporation-with-rs-16-crore-funding-minister-maria-wilson#comments</comments><guid isPermaLink="false">3055be23-d1ed-403e-8334-0256080bf7fb</guid><pubDate>Wed, 05 Aug 2026 06:42:56 +0000</pubDate><atom:updated>2026-08-05T06:42:56.500Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,தமிழக பட்ஜெட்,tvk,TNBudget,Budget2026,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/acbg0qqq/Untitled-design-24.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Tamil Nadu Budget Palm Development Boost: New corporation with ₹16 crore aid to support palm farmers]]></media:title><media:description type="html"><![CDATA[ ₹16 crore aid to support palm farmers - Minister Marie Wilson]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/acbg0qqq/Untitled-design-24.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h3><strong>தமிழக நிதி நிலை அறிக்கை 2026</strong></h3><p>2026-27 நிதியாண்டிற்கான தமிழக நிதி நிலை அறிக்கை இன்று தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் புதிதாக அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் கீழ், நிதித்துறை அமைச்சர் என். மரிய வில்சன்-ஆல் சமர்ப்பிக்கப்பட்டது.</p><p>காலை 10 மணிக்கு இந்த நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த அமைச்சர் மரிய வில்சன், தனக்கு அனைத்தும் கொடுத்த மக்களுக்கு நன்றி கடன் செலுத்துவதற்காக தமிழக முதலமைச்சர் அரசியலுக்கு வந்துள்ளதாக கூறினார்.</p><p>மேலும் அவர், பிறப்பின் அடிப்படையில் அனைவரும் சமம், ஆனால் செய்யும் செயலில் தான் அவர்கள் சிறப்பு இயல்புகள் வேறுபடுகின்றன எனவும் கூறினார்.</p><h3><strong>பனை மேம்பாட்டு கழகம்</strong></h3><p>இதையடுத்து அமைச்சர் தாக்கல் செய்த பெட்ஜெட்டில், ரூ.16 கோடி நிதி உதவியுடன் பனை மேம்பாட்டு கழகம் நிறுவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதன் மூலம் பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக வெற்றி கழகம் தலைமையிலான அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.</p><p>பதநீர், பனங்கருப்பட்டி மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பனை பொருட்களுக்கு ஊக்கம் அளிக்கவும், பனை விவசாயிகளின் வாழ்வாதாரமும், பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. </p><h3><strong>ஆடை உற்பத்தி</strong></h3><p>மேலும் ஆடை உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர்-க்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>கைத்தறி, கைத்திறன், துணி நூல் மற்றும் கதர் துறைக்கு ரூ.1,678 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னைக்கு 1000 ஏசி மின் பேருந்துகள் வாங்க ரூ.500 கோடி ஒதுக்கீடு - பட்ஜெட்டில் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-2026-rs-500-crore-allocated-to-procure-1000-ac-electric-buses-for-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-2026-rs-500-crore-allocated-to-procure-1000-ac-electric-buses-for-chennai#comments</comments><guid isPermaLink="false">07eb3f8b-5e09-499d-af96-05d83cc60ef0</guid><pubDate>Wed, 05 Aug 2026 06:35:13 +0000</pubDate><atom:updated>2026-08-05T06:35:13.296Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,TN budget,தமிழக பட்ஜெட்,tvk,Budget 2026,மரிய வில்சன்,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/c52nj2dj/bus.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ AC Bus]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/c52nj2dj/bus.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/hajj-sacred-pilgrimage-subsidy-raised-to-rs-35000">பட்ஜெட்</a> இன்று தாக்கல் செய்யப்பட்டது. 2026-2027ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D">பட்ஜெட்டில்</a> இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-</p><p>* முதலமைச்சரின் ஒருங்கிணைந்த மேம்பாட்டு திட்டம் ரூ.2,117 கோடி ஒதுக்கீடு</p><p>* நம்ம சாலை திட்டத்திற்காக ரூ.250 கோடி ஒதுக்கீடு. நம்ம சாலை செயலி மூலம் சாலை குறைபாடு பற்றி புகாரளித்தால் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும். </p> <p>* சாலை விபத்துகளை தடுக்க, சாலைகளை பராமரிக்க, வாகன ஓட்டிகளை கண்காணிக்க பாதுகாப்பான சாலைஇயக்கம் அறிமுகம். AI மூலம் வேகக்கட்டுப்பாடு மற்றும் விதிமீறல் கண்காணிப்பு, ரோந்து பிரிவு மற்றும் தீவிர காய சிகிச்சை மையம் அமைக்க திட்டம். </p><p>* நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு ரூ.21,524 கோடி நிதி ஒதுக்கீடு</p> <p>* சென்னை பயணிகளின் வசதிக்காக புதிதாக ஆயிரம் ஏசி மின்சார பேருந்துகள் வாங்கப்படும். புதிய ஏசி மின்சார பேருந்துகள், பேருந்து பணிமனைகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.500 கோடி ஒதுக்கீடு. </p><p>* போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.7,657 கோடி, செயல்திறன் இடைவெளி நிதியுதவிக்கு ரூ.2,650 கோடி ஒதுக்கீடு</p><p>இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சென்னை மெட்ரோ ரெயில் சேவை: 3 புதிய வழித்தட நீட்டிப்புக்கு வரைவு திட்ட அறிக்கை தயாரித்து அரசுக்கு பரிந்துரை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/draft-report-submitted-to-government-for-3-new-chennai-metro-extensions</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/draft-report-submitted-to-government-for-3-new-chennai-metro-extensions#comments</comments><guid isPermaLink="false">b8f1a095-bbca-4838-8331-50da90b7c892</guid><pubDate>Wed, 05 Aug 2026 06:34:10 +0000</pubDate><atom:updated>2026-08-05T06:34:10.954Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,தவெக,தமிழக பட்ஜெட்,tvk,TNBudget,மரிய வில்சன்,Budget2026,பட்ஜெட்2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/m3ix0bhp/metro.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/m3ix0bhp/metro.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், தொலைதூரப் பகுதிகளை நகருடன் இணைக்கவும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் 3 புதிய முக்கிய வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவையை நீட்டிக்க திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.</p><h2><strong>பரிந்துரைக்கப்பட்டுள்ள 3 புதிய வழித்தடங்களின் விவரங்கள்:</strong></h2><h2><strong>1. சென்னை விமானநிலையம் -கிளாம்பாக்கம் (கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்)</strong></h2><p>தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை மிக விரைவாகவும் தடையின்றியும் சென்றடைய இது பெரிதும் உதவும். சென்னை வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரெயில் சேவை விரைவில் துவங்கும்.</p><h2><strong>2. கோயம்பேடு-பட்டாபிராம் (ஆவடி வழியாக):</strong></h2><p>மேற்கு சென்னை மற்றும் ஆவடி, பட்டாபிராம் பகுதி வாழ் மக்களின் நீண்ட நாள் போக்குவரத்து தேவையைப் பூர்த்தி செய்யும்.</p><h2><strong>3.பூந்தமல்லி-சுங்குவார்சத்திரம் (ஸ்ரீபெரும்புதூர் வழியாக):</strong></h2><p>ஸ்ரீபெரும்புதூர் சுற்றியுள்ள தொழில் நிறுவனங்கள், தொழிற்பேட்டைகள் மற்றும் வரவிருக்கும் பரந்தூர் புதிய விமான நிலைய இணைப்புக்கு இப் பாதை முக்கியப் பங்காற்றும். </p><h2><strong>போக்குவரத்து நெரிசல் குறைப்பு:</strong></h2><p>ஸ்ரீபெரும்புதூர் - சுங்குவார்சத்திரம் தொழிற்சாலை மண்டலங்கள் நேரடியாக நகரின் மையப்பகுதியுடன் இணைக்கப்படும். ஜி.எஸ்.டி சாலை (GST Road) மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு இது நிரந்தரத் தீர்வாக அமையும்.  கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், ஆவடி ரெயில் நிலையம் மற்றும் சென்னை விமான நிலையம் ஆகிய முக்கியப் போக்குவரத்து மையங்கள் மெட்ரோ நெட்வொர்க்குடன் ஒருங்கிணைக்கப்படும்.</p>]]></content:encoded></item><item><title>தமிழக பட்ஜெட் 2026: மீனவர், கால்நடைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி விவரம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-2026-funds-for-fishermen-and-livestock</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-2026-funds-for-fishermen-and-livestock#comments</comments><guid isPermaLink="false">bc1418fd-2fac-49e5-8d42-5772cd268a57</guid><pubDate>Wed, 05 Aug 2026 06:31:51 +0000</pubDate><atom:updated>2026-08-05T06:31:51.470Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக பட்ஜெட்,தவெக விஜய்,TNBudget,மத்திய பட்ஜெட் 2026,maria wilson,மரிய வில்சன்,Budget2026,TVKVijay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/nmytrdv1/Maria-wilson3.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Maria Wilson]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/nmytrdv1/Maria-wilson3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 2026-2027ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்து வருகிறார். </p><p>இதில், மீனவர்கள், கால்நடைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இதுகுறித்து நிதி அமைச்சர் மரிய வில்சன் அறிவித்துள்ளதாவது:-</p><p>மீனவர்களுக்கு பணியில் இல்லாத கால உதவித்தொகை ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரமாக உயர்த்தப்படும்.</p><p>1.39 லட்சம் மீனவ குடும்பங்கள் பயன்பெறும் பணியில்லா கால உதவித்தொகைக்கு ரூ.135 கோடி ஒதுக்கீடு.</p><p>ஆழ்கடல் மீன்பிடி தொழில் ஊக்குவிப்பிற்காக ரூ.12 கோடி ஒதுக்கீடு.</p><p>கால்நடை மருத்துவத்திற்காக ரூ.122 கோடி ஒதுக்கீடு. கால்நடைகள் காப்போம் திட்டத்திற்கு ரூ.31 கோடி ஒதுக்கீடு.</p><p>41 கால்நடை மருத்துவமனை கட்டடங்கள், 25 கால்நடை பல்நோக்கு மருத்துவமனைகள், 143 புதிய நடமாடும் கால்நடை மருத்துவ பிரிவுகள்  அமைக்கப்படும். </p><p>தீவன விதை வங்கிகள் மற்றும் கிடங்குகள் அமைக்க ரூ.6.7 கோடி ஒதுக்கீடு.</p><p>மாநிலம் முழுவதும் உள்ள மேய்ச்சல் நிலங்களை மீட்க பட்ஜெட்டில் ரூ.13 கோடி ஒதுக்கீடு.</p><p>பசுந்தீவன சாகுபடி ஊக்குவிப்பு திட்டத்திற்காக ரூ.13 கோடி ஒதுக்கீடு. விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டததிற்கு தமிழக பட்ஜெட்டில் ரூ.57 கோடி ஒதுக்கீடு.</p><p>வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டத்திற்கு ரூ.110 கோடி ஒதுக்கீடு. </p><p>வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டத்தில் 5 வெள்ளாடு அல்லது செம்மறி ஆடு 100% மானியத்துடன் வழங்கப்படும்.</p><p>கைம்பெண், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள், மாற்றுத்திறனாளிகள் 30,000 பேருக்கு 100% மானியத்துடன் 5 வெள்ளாடுகள் வழங்கப்படும்.</p><p>மாவட்டம் தோறும் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க ரூ.3200 கோடி ஒதுக்கீடு. பின்தங்கிய மாவட்டங்களில் புதிய தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும்.</p><p>இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஹஜ் புனித யாத்திரை மானியம் ரூ.35,000-ஆக உயர்வு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/hajj-sacred-pilgrimage-subsidy-raised-to-rs-35000</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/hajj-sacred-pilgrimage-subsidy-raised-to-rs-35000#comments</comments><guid isPermaLink="false">5604335a-e0ca-4729-8d80-67c3cee04cba</guid><pubDate>Wed, 05 Aug 2026 06:13:16 +0000</pubDate><atom:updated>2026-08-05T06:13:16.893Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,தமிழக பட்ஜெட்,tvk,TNBudget,மரிய வில்சன்,Budget2026,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/r94x3bxk/Untitled-design-23.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Tamil Nadu Hajj Aid: Pilgrims to get additional Rs 10,000 support]]></media:title><media:description type="html"><![CDATA[ Haj aid - Minister Marie Wilson]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/r94x3bxk/Untitled-design-23.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h3><strong>நிதி நிலை அறிக்கை 2026</strong></h3><p>2026-27 நிதியாண்டிற்கான தமிழக நிதி நிலை அறிக்கை இன்று தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் புதிதாக அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் கீழ், நிதித்துறை அமைச்சர் என். மரிய வில்சன்-ஆல் சமர்ப்பிக்கப்பட்டது.</p><p>காலை 10 மணிக்கு இந்த நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த அமைச்சர் மரிய வில்சன், தனக்கு அனைத்தும் கொடுத்த மக்களுக்கு நன்றி கடன் செலுத்துவதற்காக தமிழக முதலமைச்சர் அரசியலுக்கு வந்துள்ளதாக கூறினார்.</p><p>மேலும் அவர், பிறப்பின் அடிப்படையில் அனைவரும் சமம், ஆனால் செய்யும் செயலில் தான் அவர்கள் சிறப்பு இயல்புகள் வேறுபடுகின்றன எனவும் கூறினார்.</p><h3><strong>ஹஜ் புனித யாத்திரை</strong></h3><p>இதையடுத்து அமைச்சர் தாக்கல் செய்த பெட்ஜெட்டில், ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கான மானியம் ரூ.25,000 இல் இருந்து, ரூ.35,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.</p><p>இதன் மூலம் இஸ்லாமியர்களின் ஹஜ் புனித பயணத்திற்கு முன்பை விட ரூ.10,000 மானியம் உயர்த்தப்பட்டுள்ளது.</p><h3><strong>சிறுபான்மை நல அரசு</strong></h3><p>தமிழகத்தில் சிறுபான்மை இன மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை தொடர்ந்து வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மகளிர் சங்கங்களுக்கு ரூ.1.05 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p> கபர்ஸ்தான்கள் கல்லறைத் தோட்ட மேம்பாட்டிற்கு ரூ.34 கோடி நிது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு பட்ஜெட்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல திட்டங்களுக்கு முக்கிய நிதி ஒதுக்கீடு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamilnadu-budget-major-fund-allocation-for-adi-dravidar-and-tribal-welfare-schemes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamilnadu-budget-major-fund-allocation-for-adi-dravidar-and-tribal-welfare-schemes#comments</comments><guid isPermaLink="false">5a9ca02f-7cba-4ab1-a4da-2dd9f71ec546</guid><pubDate>Wed, 05 Aug 2026 06:12:44 +0000</pubDate><atom:updated>2026-08-05T06:12:44.165Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,தவெக,விஜய்,தமிழக பட்ஜெட்,tvk,TNBudget,நிதி அமைச்சர் மரிய வில்சன்,Budget2026,பட்ஜெட்2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/yrre8v7e/tt.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MARIE WILSON]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/yrre8v7e/tt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள நிதிநிலை அறிக்கையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், தொழில் முனைவோரை ஊக்குவிக்கவும் பல்வேறு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><h2><strong>அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்:</strong></h2><p>ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களிடையே தொழில் முனைவுத் திறனை ஊக்குவிக்க மூலதன மானியத்துடன் கூடிய கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்திற்காக 'ரூ.165 கோடி' நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>அயோத்திதாச பண்டிதர் வாழ்விட மேம்பாட்டுத் திட்டம்:</strong></h2><p>நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை உள்கட்டமைப்புகளை விரிவாக மேம்படுத்தவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் இத்திட்டத்தின் கீழ் 'ரூ.300 கோடி' நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><h2><strong>ஆன்றோர்  மேம்பாட்டுத் திட்டம்</strong>:</h2><p>பழங்குடியினர் குடியிருப்புகளில் வீடுகள், சாலைகள், குடிநீர், தெருவிளக்குகள், சுகாதார மற்றும் கல்வி வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டத்திற்காக 'ரூ.250 கோடி' ஒதுக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>மண்ணின் மகள்:</strong></h2><p>ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண் விவசாய தொழிலாளர்களை நில உரிமையாளர்களாக மாற்றும் நோக்குடன் 'மண்ணிள் மகள்' திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு விவசாயம் செய்திடத் தேவையான நவீன தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்படும். திருத்த வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் இத்திட்டத்திற்கு 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.</p><h2><strong>கூடுதல் ஒதுக்கீடுகள்:</strong></h2><p>* ஆதிதிராவிடர்களுக்கான சிறப்புக் கூறுகள் திட்டம்: ரூ.25,225 கோடி</p><p>* பழங்குடியினருக்கான துணைத் திட்டம்: ரூ.2,079 கோடி</p><p>* சமூகநீதித் துறைக்கான மொத்த ஒதுக்கீடு: ரூ.3,937 கோடி</p><p>சமூகநீதியைக் வெறும் சொல்லாக அல்லாமல், செயலில் காட்டும் வகையில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விவசாயிகளின் மின் மானியத்திற்கு ரூ.7,432 கோடி ஒதுக்கீடு - பட்ஜெட்டில் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-2026-rs-7432-crore-allocated-for-farmers-electricity-subsidy</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-2026-rs-7432-crore-allocated-for-farmers-electricity-subsidy#comments</comments><guid isPermaLink="false">3de84d7e-67f1-43bf-b317-e2f466338d22</guid><pubDate>Wed, 05 Aug 2026 06:10:17 +0000</pubDate><atom:updated>2026-08-05T06:10:17.974Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,TN budget,தமிழக பட்ஜெட்,tvk,Budget 2026,மரிய வில்சன்,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/eof8ebl8/MarieWilson3.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Marie Wilson]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/eof8ebl8/MarieWilson3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-2026-allocations-for-various-sectors">பட்ஜெட்</a> இன்று தாக்கல் செய்யப்பட்டது. 2026-2027ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-</p><p>* சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைக்கு ரூ.9,818 கோடி ஒதுக்கீடு</p><p>* சமூக நீதித்துறைக்கு ரூ.3937 கோடி ஒதுக்கீடு</p><p>* ஆன்றோர் மேம்பாட்டுத்திட்டம் ரூ.250 கோடி ஒதுக்கீடு</p> <p>* மண்ணின் மகள் திட்டம் ரூ.20 கோடி ஒதுக்கீடு</p><p>* தமிழகம் முழுவதும் ஆயிரம் நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் அமைக்க ரூ.33 கோடி ஒதுக்கீடு</p><p>* கருவுற்ற பெண்களுக்கான தாய் கேர் திட்டத்திற்கு ரூ.23 கோடி ஒதுக்கீடு</p><p>* சுகாதாரத்துறைக்கு ரூ.23,357 கோடி நிதி ஒதுக்கீடு.</p><p>* <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D">தமிழக பட்ஜெட்டில்</a> கூட்டுறவுத்துறைக்கு ரூ.8,028 கோடி ஒதுக்கீடு</p>  <p>* டெலி மெடிசன் நெட்வொர்க் உருவாக்க ரூ.18.5 கோடி நிதி ஒதுக்கீடு</p><p>* விவசாயிகளின் மின் மானியத்திற்கு ரூ.7,432 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. </p><p>* டெல்டா அல்லாத மாவட்டங்களில் குறுவை தொகுப்பு திட்டத்திற்கு ரூ.134 கோடி ஒதுக்கீடு</p><p>* ஆடுகள் வளர்ப்பு திட்டத்திற்கு ரூ.110 கோடி ஒதுக்கீடு</p> <p>* வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டத்திற்கு ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டத்தில் 5 வெள்ளாடு அல்லது செம்மறி ஆடு 100 சதவீத மானித்துடன் வழங்கப்படும். </p><p>* வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டத்தில் பெண்களுக்கு 5 ஆடுகள் வழங்கப்படும்.</p><p>இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்திற்கு ரூ.165 கோடி நிதி ஒதுக்கீடு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-165-crore-allocation-for-ambedkar-industrial-pioneers-scheme</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-165-crore-allocation-for-ambedkar-industrial-pioneers-scheme#comments</comments><guid isPermaLink="false">d342987c-c7ec-481d-b79c-062d7f21df85</guid><pubDate>Wed, 05 Aug 2026 05:58:09 +0000</pubDate><atom:updated>2026-08-05T05:58:09.197Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,தமிழக பட்ஜெட்,tvk,TNBudget,Budget2026,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/363luuig/Untitled-design-22.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Ambedkar Industrial Pioneer Scheme: ₹165 crore allocation to boost SC/ST entrepreneurs in Tamil Nadu]]></media:title><media:description type="html"><![CDATA[ Ambedkar Industrial Pioneer Scheme - Minister Marie Wilson]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/363luuig/Untitled-design-22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h3><strong>தமிழக பட்ஜெட் 2026</strong></h3><p>2026-27 நிதியாண்டிற்கான தமிழக நிதி நிலை அறிக்கை இன்று தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் புதிதாக அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் கீழ், நிதித்துறை அமைச்சர் என். மரிய வில்சன்-ஆல் சமர்ப்பிக்கப்பட்டது.</p><p>காலை 10 மணிக்கு இந்த நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த அமைச்சர் மரிய வில்சன், தனக்கு அனைத்தும் கொடுத்த மக்களுக்கு நன்றி கடன் செலுத்துவதற்காக தமிழக முதலமைச்சர் அரசியலுக்கு வந்துள்ளதாக கூறினார்.</p><p>மேலும் அவர், பிறப்பின் அடிப்படையில் அனைவரும் சமம், ஆனால் செய்யும் செயலில் தான் அவர்கள் சிறப்பு இயல்புகள் வேறுபடுகின்றன எனவும் கூறினார்.   </p><h3><strong>அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்</strong></h3><p>இதையடுத்து அவர் தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்திற்கு ரூ.165 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.</p><p>இந்த நிதி ஒதுக்கீடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கான ஊக்குவிக்கும் திட்டமாக நடைமுறைக்கு வர உள்ளது.</p><p>மூலதன மாணியம் மற்றும் கடன் வழங்கி தொழில் தொடங்குவோருக்கு ஆதரவு அளிக்கப்பட உள்ளது.</p><p>தமிழகத்தில் பொருளாதார முன்னேற்றம் மற்றும் தன்னிறைவு நோக்கில் முன்னேற்றம் அடையும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சுகாதாரத்துறைக்கு ரூ.23,357 கோடி நிதி ஒதுக்கீடு- பட்ஜெட்டில் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/budget-announces-rs-23357-crore-for-health-sector</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/budget-announces-rs-23357-crore-for-health-sector#comments</comments><guid isPermaLink="false">0357fcf3-241d-4a58-869b-a369db6cd545</guid><pubDate>Wed, 05 Aug 2026 05:53:38 +0000</pubDate><atom:updated>2026-08-05T05:53:38.959Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக பட்ஜெட்,தவெக விஜய்,TNBudget,மத்திய பட்ஜெட் 2026,maria wilson,மரிய வில்சன்,Budget2026,TVKVijay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/5sjpt5hk/Maria-wilson2.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Maria wilson]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/5sjpt5hk/Maria-wilson2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 2026-2027ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்து வருகிறார். </p><p>இதில், சுகாதாரத் துறைக்கு ரூ.23,357 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி, தமிழகம் முழுவதும் ஆயிரம் நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் திறக்கப்படும் என்றும் இதற்காக ரூ.33 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>கருவுற்ற பெண்களுக்கான தாய் கேர் திட்டத்திற்கு ரூ.23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>ஒவ்வொரு மாவட்டத்திலும் தாய் கேர் மையங்கள் அமைக்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>5 ஆண்டுகளில் 1000 தொலை மருத்துவ மையங்கள் அமைக்கப்படும். இதற்காக, ரூ.33 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>5 மண்டலங்களில் புற்றுநோய் பராமரிப்பு மருத்துவமனைகள் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழக பட்ஜெட்: எந்தெந்த துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-2026-allocations-for-various-sectors</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-2026-allocations-for-various-sectors#comments</comments><guid isPermaLink="false">cb940b76-fe0f-4364-9896-c82da5341eeb</guid><pubDate>Wed, 05 Aug 2026 05:52:38 +0000</pubDate><atom:updated>2026-08-05T05:52:38.702Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,TN budget,தமிழக பட்ஜெட்,tvk,Budget 2026,மரிய வில்சன்,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/kttebe1c/MarieWilson2.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Marie Wilson]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/kttebe1c/MarieWilson2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/transgender-safety-and-self-employment-priority-rs-50000-subsidised-loan-announced">பட்ஜெட்</a> இன்று தாக்கல் செய்யப்பட்டது. 2026-2027ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D">பட்ஜெட்டில்</a> இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-</p><p>* போட்டி தேர்வுகளுக்கான கூடுதல் பயிற்சி வகுப்புகளுக்காக ரூ.3.38 கோடி ஒதுக்கீடு</p><p>* TN சுடர் திட்டத்தில் 200 ஒருங்கிணைந்த மாணவர் விடுதிகள், 1 லட்சம் நவீன படுக்கை வசதிகள் உருவாக்க ரூ.3200 கோடி ஒதுக்கீடு</p> <p>* 5 ஆண்டுகளில் 24 ஆயிரம் மாணவர்களுக்கு AI வேலைவாய்ப்பு பயிற்சி வழங்க ரூ.7.5 கோடி ஒதுக்கீடு</p><p>* அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 5.32 லட்சம் ஜென்சி மாணவர்களுக்கு நவீன மிதி வண்டி வழங்க ரூ.272 கோடி ஒதுக்கீடு</p><p>* பள்ளி நேரத்திற்கு பிறகு தினமும் ஒரு மணி நேரம் முறைப்படுத்தப்பட்டு விளையாட்டு பயிற்சி வழங்கப்படும். </p><p>* விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவி வழங்க கூடுதலாக ரூ.22 கோடி ஒதுக்கீடு</p> <p>* காலை உணவுத்திட்டத்திற்கு ரூ.170 கோடி ஒதுக்கீடு</p><p>* காலை உணவு திட்டம் விரிவாக்கத்திற்கு 15.14 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.170 கோடி ஒதுக்கீடு</p><p>* முதல்வரின் காலை உணவு திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் திட்டம் என பெயர்வைத்து பெருமை சேர்த்தவர் முதலமைச்சர் விஜய். காலை உணவுத்திட்டம் 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்படுகிறது. </p><p>* தமிழகம் முழுவதும் சிதிலமடைந்த 500 அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டிடம்.</p> <p>* அண்ணனின் சீர் திட்டத்திற்காக ரூ.812 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>* பெண்களின் திருமணத்திற்காக 8 கிராம் தங்கம், பட்டு சேலை வழங்கும் அண்ணன் சீர் திட்டம் அமல்படுத்தப்படும். </p><p>* 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள்- ரூ.50 கோடி ஒதுக்கீடு</p><p>* கிராமிய விளையாட்டு போட்டித்திட்டம் ரூ.42 கோடி ஒதுக்கீடு</p> <p>* இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கு ரூ.1051 கோடி ஒதுக்கீடு</p><p>* தமிழக பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.1485 கோடி ஒதுக்கீடு</p><p>* யோகா உள்ளிட்டவையுடன் உருவாக்கப்படும் முதியோருக்கான இல்லங்கள் 12 மாவட்டங்களில் அமைக்க ரூ.6.6 கோடி ஒதுக்கீடு</p><p>* கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி திட்டம் செயல்படுத்த ரூ.2000 கோடி ஒதுக்கீடு.</p>  <p>* உயர்கல்வித்துறைக்கு ரூ.8,393 கோடி ஒதுக்கீடு</p><p>* புதிதாக 5 தொழிற்பள்ளி நிலையங்கள் நிறுவ தமிழக பட்ஜெட்டில் ரூ.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>* வெற்றி திறன் பயிற்சி திட்டத்திற்காக ரூ.150 கோடி ஒதுக்கீடு.</p><p>* அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் ஏஐ புதிய தொழிற்பிரிவு உருவாக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு</p><p>* மின்சார வாகனம் மற்றும் மின்கலன் பராமரிப்பு பயிற்சிக்கு ரூ.3 கோடி ஒதுக்கிடு</p><p>* பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் படிக்கும் 5 லட்சம் மாணவர்களுக்கு ஏஐ திறன் பயிற்சி அளிக்கப்படும்.</p>]]></content:encoded></item><item><title>திருநர்களின் பாதுகாப்பிற்கும் சுயதொழிலுக்கும் முக்கியத்துவம்: ரூ.50,000 மானியக் கடன் அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/transgender-safety-and-self-employment-priority-rs-50000-subsidised-loan-announced</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/transgender-safety-and-self-employment-priority-rs-50000-subsidised-loan-announced#comments</comments><guid isPermaLink="false">4db899c3-724d-4f69-aba9-35d62ef5bbc7</guid><pubDate>Wed, 05 Aug 2026 05:48:17 +0000</pubDate><atom:updated>2026-08-05T05:48:17.479Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,தவெக,vijay,தமிழக பட்ஜெட்,tvk,TNBudget,மரிய வில்சன்,Budget2026,பட்ஜெட்2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/zyu1hbru/tt.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Marie wilson]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/zyu1hbru/tt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2026-2027ஆம் நிதியாண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் (பட்ஜெட்), திருநர்களின் வாழ்வாதாரம், பாதுகாப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்யும் வகையில் முக்கிய சமூக நல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.</p><h2>5 மாவட்டங்களில் 'அரண்' தங்குமிடங்கள்:</h2><p>திருநர்களுக்கு பாதுகாப்பான தங்குமிடம், உணவு, உளவியல் ஆலோசனை மற்றும் சட்ட உதவிகள் வழங்கும் வகையில் மேலும் 5 முக்கிய மாவட்டங்களில் 'அரண்' காப்பகங்கள்/தங்குமிடங்கள் புதிதாக அமைக்கப்படும்.</p> <h2><strong>ரூ.50,000 வரை மானியத்துடன் கடன்:</strong></h2><p>திருநர்களின் தொழில்முனைவை ஊக்குவிக்கவும், அவர்களின் சுயமரியாதையுடனான வாழ்வாதாரத்தை உயர்த்தவும் வங்கிகள் மூலம் தொழில் தொடங்க ரூ.50,000 வரை மானியத்துடன் கூடிய கடன் உதவி வழங்கப்படும்.</p><h2><strong>திறன் பயிற்சி:</strong></h2><p>சுயதொழில் தொடங்க விரும்பும் திருநர்களுக்கு சிறப்புத் தொழிற்பயிற்சிகளும், தொழில்முனைவோர் பயிற்சிகளும் அரசு சார்பில் வழங்கப்படும்.அசமூகத்தில் திருநர்களின் உரிமைகளைப் பாதுகாத்து, அவர்களை முதன்மைச் சமூகத்துடன் ஒருங்கிணைக்கும் நோக்கில் இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>உடையை மாற்றிய முதல்வர் விஜய் - சட்டமன்றத்திற்கு பேண்ட்-ஷர்ட் அணிந்து வருகை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-c-joseph-vijay-attends-assembly-in-simple-attire</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-c-joseph-vijay-attends-assembly-in-simple-attire#comments</comments><guid isPermaLink="false">2f53bbfb-4382-4ed0-a9dc-107772fdf681</guid><pubDate>Wed, 05 Aug 2026 05:45:02 +0000</pubDate><atom:updated>2026-08-05T05:45:02.417Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,தமிழக பட்ஜெட்,TNBudget,cm vijay,Budget2026,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/x295838h/Untitled-design-21.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Tamil Nadu CM in Simple Attire: C Joseph Vijay draws attention in Assembly budget session]]></media:title><media:description type="html"><![CDATA[ Tamilnadu CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/x295838h/Untitled-design-21.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h3><strong>தமிழக நிதி நிலை அறிக்கை</strong></h3><p>2026-27 நிதியாண்டிற்கான தமிழக நிதி நிலை அறிக்கை இன்று தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையில் புதிதாக அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் கீழ், நிதித்துறை அமைச்சர் என். மரிய வில்சனால் சமர்ப்பிக்கப்பட்டது.</p><p>காலை 10 மணிக்கு நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த அமைச்சர் மரிய வில்சன், தனக்கு அனைத்தும் கொடுத்த தமிழக மக்களுக்கு நன்றி கடன் செலுத்துவதற்காகவே முதலமைச்சர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார் என கூறினார்.</p><p>மேலும் அமைச்சர் மரிய வில்சன், பிறப்பின் அடிப்படையில் அனைவரும் சமம், ஆனால் செய்யும் செயலில் தான் அவர்களின் சிறப்பு இயல்புகள் வேறுபடுகின்றன எனவும் தெரிவித்தார்.</p><h3><strong>எளிமையாக வந்த முதல்வர்</strong></h3><p>நேரம் தவறாமையை கடைபிடிக்கும் முதலமைச்சர் விஜய், இன்றும் நிதி நிலை அறிக்கையை ஒட்டி, காலை 10 மணிக்கு முன்பே சட்டமன்றத்திற்கு வருகை தந்தார்.</p><p>மேலும் தான் வழக்கமாக சட்டமன்றத்திற்கு அணிந்து வரும் கருப்பு பிளேஸர், கோட்-சூட்டுக்கு பதிலாக பேண்ட்-ஷர்ட் அணிந்து காணப்பட்டார். சில்வர் ப்ளூ நிற ஷர்ட் அணிந்து எளிமையாக இருந்தார்.</p><p>இதைத்தொடர்ந்து அவையில் இருந்த சபாநாயகர் மற்றும் ஆனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கும் அவர் வணக்கத்தை தெரிவித்தார்.</p><p>அப்போது அமைச்சர்களும் முதலமைச்சருக்கு எழுந்து நின்று வணக்கம் வைத்து, மரியாதை செலுத்தினர்.</p>]]></content:encoded></item><item><title>அண்ணனின் சீர் திட்டத்திற்கு ரூ.812 கோடி ஒதுக்கீடு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-budget-allocates-rs-812-crore-annan-scheme</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-budget-allocates-rs-812-crore-annan-scheme#comments</comments><guid isPermaLink="false">9c703792-f2f9-4d46-9ed7-c31dbe76dfbc</guid><pubDate>Wed, 05 Aug 2026 05:42:16 +0000</pubDate><atom:updated>2026-08-05T05:42:16.855Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,தவெக,தமிழக பட்ஜெட்,TNBudget,Budget 2026,maria wilson,மரிய வில்சன்,பட்ஜெட் 2026,TVKVijay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/4p8gk6bj/wilson.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Maria Wilson]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/4p8gk6bj/wilson.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 2026-2027ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்து வருகிறார். </p><p>இதில், அண்ணனின் சீர் திட்டத்திற்காக ரூ.812 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>பெண்களின் திருமணத்திற்காக 8 கிராம் தங்கம், பட்டு சேலை வழங்கும் அண்ணன் சீர் திட்டம் அமல்படுத்தப்படும் என அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.</p><p>தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக வெற்றி பெற்று அரசு அமைத்ததை தொடர்ந்து தற்போது இந்த ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக அப்போதைய திமுக அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தது.</p><p>இதைதொடர்ந்து, தமிழக வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் நாளை தாக்கல் செய்கிறார்.</p><p>இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தலைமையில் நடைபெறவுள்ள அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். </p><p>அதன் பிறகு, அந்தந்த நாட்களில் பல்வேறு துறைகளுக்கான மானியக் கோரிக்கைகளும் அவற்றின் மீதான விவாதங்களும் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ 8-ஆம் வகுப்பு வரை விரிவாக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/perundhalaivar-kamarajar-breakfast-scheme-extended-till-class-8</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/perundhalaivar-kamarajar-breakfast-scheme-extended-till-class-8#comments</comments><guid isPermaLink="false">24335df0-6528-4374-bb95-2e38b4f8ddd2</guid><pubDate>Wed, 05 Aug 2026 05:33:22 +0000</pubDate><atom:updated>2026-08-05T05:33:22.112Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Vijay,தவெக,தமிழக பட்ஜெட்,tvk,TNBudget,நிதி அமைச்சர் மரிய வில்சன்,Budget2026,பட்ஜெட்2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/03cgbrfs/tt.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ marie wilson]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/03cgbrfs/tt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டமன்றத்தில் 2026-2027ஆம் நிதியாண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை (பட்ஜெட்) தாக்கல் செய்து உரையாற்றிய நிதியமைச்சர் என்.மரிய வில்சன், பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.</p><h2><strong>திட்டத்தின் பெயர் மாற்றம்:</strong></h2><p>தமிழக முதலமைச்சர் விஜயின் அறிவிப்பின்படி, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு "பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்" எனப் பெயர் சூட்டப்பட்டு பெருமை சேர்க்கப்பட்டுள்ளது.</p><h2><strong>8-ஆம் வகுப்பு வரை விரிவாக்கம்:</strong></h2><p>இதுவரை ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த இத்திட்டம், இனி 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படுகிறது.</p><h2><strong> நிதி ஒதுக்கீடு:</strong></h2><p>இத்திட்ட விரிவாக்கத்தின் மூலம் மொத்தம் 15.14 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள். இதற்காக பட்ஜெட்டில் ரூ.170 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் பசி போக்கி, அவர்களின் கல்விச் சேர்க்கை மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>பள்ளிகளில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு திட்டத்திற்கு ரூ.7 கோடி ஒதுக்கீடு - நிதி அமைச்சர்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-budget-2026-rs-7-crore-allocated-for-anti-drug-awareness-programs-in-schools</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-budget-2026-rs-7-crore-allocated-for-anti-drug-awareness-programs-in-schools#comments</comments><guid isPermaLink="false">f991d00c-bdce-4256-ad81-59ffe2d8f984</guid><pubDate>Wed, 05 Aug 2026 05:24:51 +0000</pubDate><atom:updated>2026-08-05T05:24:51.716Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,TN budget,தமிழக பட்ஜெட்,tvk,Budget 2026,மரிய வில்சன்,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/pchf0zma/MarieWilson1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Marie Wilson]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/pchf0zma/MarieWilson1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய் தலைமையிலான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D">த.வெ.க. </a>அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 2026-2027ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-2000-crore-laptop-scheme-mariya-wilson-tn-budget">பட்ஜெட்டில்</a> இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-</p><p>* போதையில்லா தமிழ்நாடு செயலி உருவாக்கப்பட்டு தன்னார்வ குழுக்கள் அமைக்க ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>* பள்ளிகளில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்திற்கு ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p> <p>* Drugs Free தமிழ்நாடு செயலி மூலம் போதைப்பொருள் பரவல் குறித்து புகார் அளிக்கும் வகையில் சிறப்பு செயல்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.</p><p>* அடுத்தாண்டு மதுரையில் அரசு சட்டக்கல்லூரி தொடங்கப்படும்.</p><p>* நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு வலியுறுத்துகிறது.</p>]]></content:encoded></item><item><title>பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.44,524 கோடி நிதி ஒதுக்கீடு- அமைச்சர் மரிய வில்சன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-budget-44524-crore-for-school-education</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-budget-44524-crore-for-school-education#comments</comments><guid isPermaLink="false">4619abd1-a7e7-423f-bbef-6902a22ebce2</guid><pubDate>Wed, 05 Aug 2026 05:18:39 +0000</pubDate><atom:updated>2026-08-05T05:18:39.417Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,தவெக,விஜய்,TN budget,தமிழக பட்ஜெட்,tvk,Budget 2026,maria wilson,மரிய வில்சன்,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/zftfoe7h/maria-wilson1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Maria wilson]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/zftfoe7h/maria-wilson1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 2026-2027ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்து வருகிறார். </p><p>பட்ஜெட்டில், பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.44,524 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:-</p><p>பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.44,524 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், பள்ளி பாடத்திட்டம் மறுசீரமைப்பிற்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>3,734 அரசுப்பள்ளிகளில் ரூ.2132 கோடி மதிப்பீட்டில் நவீன மயமாக்கல் திட்டம்- இந்த ஆண்டிற்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு.</p><p>அரசு பள்ளிகளில் தூய்மையை பாதுகாக்கும் விதமாக சூப்பர் கிளீன் கேம்பஸ் திட்டம் என்ற புதிய அறிமுகம் செய்யப்படுகிறது. இத்திட்டத்திற்கு ரூ.139 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.</p><p>மாடர்ன் பள்ளிகளை மேம்படுத்த ரூ.125 கோடி ஒதுக்கீடு.</p><p>பெருந்தலைவர் காமராசர் சிறப்பு பள்ளிகள் திட்டத்திற்காக ரூ.125 கோடி ஒதுக்கீடு. தரமான கல்வி வழங்க காமராஜர் சிறப்பு பள்ளிகள் திட்டம் செயல்படுத்தப்படும்.</p><p>போதையில்லா தமிழ்நாடு செயலி உருவாக்கப்பட்டு தன்னார்வ குழுக்கள் அமைக்க ரூ.7 கோடி ஒதுக்கீடு.</p><p>பள்ளி பாடத்திட்டம் மறு சீரமைப்பிற்காக கற்றலில் முதலிடம் தமிழ்நாடு திட்டத்திற்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு.</p><p>பொதுநூலகங்களை டிஜிட்டல் நூலகங்களாக மாற்ற ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அண்ணா பிறந்தநாளில் ‘தாய்மாமன் சீர் திட்டம்’ தொடக்கம்: 1 கிராம் தங்க மோதிரம் வழங்க ரூ.560 கோடி நிதி ஒதுக்கீடு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/launch-of-thaaymaaman-seer-scheme-on-annas-birthday-rs-560-crore-allocation-for-1-gram-gold-ring</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/launch-of-thaaymaaman-seer-scheme-on-annas-birthday-rs-560-crore-allocation-for-1-gram-gold-ring#comments</comments><guid isPermaLink="false">be1306c3-9b34-4595-8fb8-ef8d41323d3e</guid><pubDate>Wed, 05 Aug 2026 05:16:31 +0000</pubDate><atom:updated>2026-08-05T05:16:31.654Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக பட்ஜெட்,tvk,TNBudget,நிதி அமைச்சர் மரிய வில்சன்,Budget2026,பட்ஜெட்2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/c3kay71i/tt.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Marie wilson]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/c3kay71i/tt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டமன்றத்தில் 2026-2027ஆம் நிதியாண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை (பட்ஜெட்) தாக்கல் செய்து உரையாற்றிய நிதியமைச்சர் என். மரிய வில்சன், தவெக அரசின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான 'தாய்மாமன் சீர் திட்டம்' குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.</p><h2><strong>அண்ணாவின் பிறந்தநாளில் தொடக்கம்:</strong> </h2><p>தாய்மாமன் சீர் திட்டம் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி, பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளன்று முறைப்படி தொடங்கி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. &nbsp; </p><h2><strong>1 கிராம் தங்க மோதிரம்:</strong> </h2><p>தமிழக பாரம்பரிய மரபின்படி, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்மாமனின் அன்பளிப்பாக 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும். &nbsp; </p><h2><strong>நிதி ஒதுக்கீடு:</strong> </h2><p>இத்திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்காக இந்த வரவு-செலவுத் திட்டத்தில் ரூ.560 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தை ஊக்குவிக்கவும், ஏழை எளிய குடும்பங்களின் தாய்மையின் மகிழ்ச்சியைக் கௌரவிக்கும் வகையிலும் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் லேப்டாப் வழங்கும் திட்டம்-மரிய வில்சன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-2000-crore-laptop-scheme-mariya-wilson-tn-budget</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-2000-crore-laptop-scheme-mariya-wilson-tn-budget#comments</comments><guid isPermaLink="false">f25b2e4a-e0b8-4ee4-a3de-03b5c08cc380</guid><pubDate>Wed, 05 Aug 2026 05:08:24 +0000</pubDate><atom:updated>2026-08-05T05:08:24.396Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக பட்ஜெட்,tvk,TNBudget,Budget2026,பட்ஜெட்2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/2y3zgsig/tt.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ marie wilson]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/2y3zgsig/tt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 2026-2027ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-</p><h2><strong>கல்வி மற்றும் மாணவர் நலன்:</strong></h2><p>மாணவர் தங்குமிட வசதியை மேம்படுத்த ரூ.10 கோடி மூலதனம் மற்றும் வெற்றி மடிக்கணினி திட்டம் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் லேப்டாப் வழங்கும் திட்டம். 5 லட்சம் மாணவர்களுக்கான ஸ்மார்ட் சைக்கிள் திட்டத்திற்கு ரூ.277 கோடி, உயர்கல்வித்துதுறைக்கு ரூ.8393 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஹெல்மெட் மற்றும் வாட்டர் பாட்டில் வைக்கும் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் சைக்கிள்கள் வழங்கப்படும்.</p><p>அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 2,132 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துப் படிப்புகளில் சேர்க்கை என்பதை தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நிதி ஆதாரம் மிக குறைவு - த.வெ.க அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் - மரிய வில்சன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-2026-finance-minister-says-all-promises-made-by-tvk-will-be-fulfilled-in-phased-manner</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-2026-finance-minister-says-all-promises-made-by-tvk-will-be-fulfilled-in-phased-manner#comments</comments><guid isPermaLink="false">915e0084-e846-4cae-b6b4-8b7a88dfd7a4</guid><pubDate>Wed, 05 Aug 2026 05:05:53 +0000</pubDate><atom:updated>2026-08-05T05:05:53.088Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,TN budget,தமிழக பட்ஜெட்,tvk,Budget 2026,மரிய வில்சன்,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/cj15f9j1/MarieWilson.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Marie Wilson ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/cj15f9j1/MarieWilson.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D">பட்ஜெட் கூட்டம்</a> இன்று கூடியது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 2026-2027-ம் ஆண்டுக்கான <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/1-5-trillion-economy-by-2036-finance-minister-maria-wilson">பட்ஜெட்டை</a> நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது: </p> <p>தவெக வெற்றி என்பது தனிப்பட்ட ஒரு கட்சியின் வெற்றியல்ல, தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களின் வெற்றி.</p><p>வெற்றிக்கொள்கை ஆவணத்தில் உள்ள திட்டங்களை நிறைவேற்றுவது உறுதி.</p><p>புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கான நிதி ஆதாரம் மிக குறைவாகவே உள்ளது.</p><p>நிதி நெருக்கடியில் இருந்து தமிழகத்தை மீட்க தவெக அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.</p> <p>தவெக அரசு பொறுப்பேற்ற நேரத்தில் ரூ.10 லட்சம் கோடி கடன் இருப்பதை வெள்ளை அறிக்கை மூலம் தெளிவுப்படுத்தியுள்ளோம்.</p><p>டெண்டர் விதிமுறைகள் பலவற்றை தளர்த்தி முன் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.</p><p>தமிழகத்தில் அரசு டெண்டர்களில் வெளிப்படை தன்மை கொண்டு வரப்பட்டுள்ளன.</p> <p>தமிழக அரசின் கடனுக்கான வட்டி ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.</p><p>த.வெ.க அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>2036-க்குள் 1.5 டிரில்லியன் பொருளாதாரம்- நிதியமைச்சர் மரிய வில்சன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/1-5-trillion-economy-by-2036-finance-minister-maria-wilson</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/1-5-trillion-economy-by-2036-finance-minister-maria-wilson#comments</comments><guid isPermaLink="false">a6d9b101-4f58-482a-8e14-7151d5d549f6</guid><pubDate>Wed, 05 Aug 2026 05:04:16 +0000</pubDate><atom:updated>2026-08-05T05:04:16.226Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,தவெக,விஜய்,TN budget,தமிழக பட்ஜெட்,tvk,Budget 2026,அமைச்சர் மரிய வில்சன்,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/rmdb3w1v/Maria-wilson.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Maria Wilson]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/rmdb3w1v/Maria-wilson.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தவெகவின் கொள்கை தலைவர்களுக்கு வணக்கம் செலுத்திய நிதியமைச்சர் மரிய வில்சன், தனது பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:- </p><p>மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்த அரசியலுக்கு வந்தவர் முதலமைச்சர் விஜய். தன்னை உயிராய் நேசிக்கும் மக்களுக்காக சூழ்ச்சிகளை வென்று ஜனநாயகனாக நிற்கும் முதலமைச்சருக்கு நன்றி.</p><p>பிறப்பால் அனைவரும் சமமன் என ஆட்சிக்கு வந்த 3 மாதத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் உயிராக வாழ்கிறார் முதலமைச்சர் விஜய்.</p><p>மாபெரும் மக்கள் புரட்சியை 3 மாதங்களில் நிகழ்த்தி காட்டியுள்ளார் முதலமைச்சர் விஜய்.</p><p>சொன்னது மட்டுமல்ல, சொல்லாததையும் நிகழ்த்தி காட்டியுள்ளார். தவெக வெற்றி என்பது தனிப்பட்ட ஒரு கட்சியின் வெற்றியல்ல, தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களின் வெற்றி.</p><p>உண்மையான சமூக நீதி என்றால் என்ன என்பதை கடந்த 3 மாதங்களில் நிகழ்த்தி காட்டியுள்ளார். பெண்களுக்கு அதிகாரமளித்தல், பசுமை நிலங்களை அதிகரிப்பது உள்ளிட்ட நோக்கங்களை அடிப்படையாக கொண்டு பட்ஜெட். தவெக அரசு பொறுப்பேற்ற நேரத்தில் ரூ.10 லட்சம் கோடி கடன் இருப்பதை வெள்ளை அறிக்கை மூலம் தெளிவுபடுத்தியுள்ளோம்.</p><p>2016ம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் பொருளாதாரத்தை அடைவதே இலக்கு. தவெக அரசு பொறுப்பேற்றவுடன் டெண்டர் வெளியீட்டில் உள்ள சிக்கல் நீக்கி வெளிப்படைத்தன்மை கொண்டு வந்துள்ளோம்.</p><p>பதிவு செய்த ஒப்பந்ததாரர்கள் எந்த துறையிலும் டெண்டர் தாக்கல் செய்யலாம் என புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளோம். </p><p>தமிழக அரசின் கடனுக்கான வட்டி ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. </p><p>மக்களின் வரிப்பணத்தில் ஒரு பைசா தொட மாட்டமோம், தொடவும் விடமாட்டோம், இதற்கு முன்பு தொட்டவர்களையும் விடமாட்டோம்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 3,734 அரசுப் பள்ளிகளுக்கு ரூ.2,132 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் மரிய வில்சன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/allocation-of-rs-2132-crore-for-3734-schools-in-tamil-nadu-minister-maria-wilson</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/allocation-of-rs-2132-crore-for-3734-schools-in-tamil-nadu-minister-maria-wilson#comments</comments><guid isPermaLink="false">02084f6b-e751-4049-9ae2-54fd239f585b</guid><pubDate>Wed, 05 Aug 2026 04:59:19 +0000</pubDate><atom:updated>2026-08-05T04:59:19.914Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,TN budget,தமிழக பட்ஜெட்,tvk,Budget 2026,மரிய வில்சன்,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/hgtjx0l5/Untitled-design-20.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தமிழ்க நிதி நிலை அறிக்கையை அமைச்சர் மரிய வில்சன் சமர்ப்பித்தார்]]></media:title><media:description type="html"><![CDATA[ Marie Wilson - Tamilnadu budget]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/hgtjx0l5/Untitled-design-20.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2026-27 நிதியாண்டிற்கான தமிழக நிதி நிலை அறிக்கை இன்று தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையில் புதிதாக அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் கீழ், நிதித்துறை அமைச்சர் என். மரிய வில்சன்-ஆல் சமர்ப்பிக்கப்பட்டது.</p><p>காலை 10 மணிக்கு சட்டப்பேரவைக்கு வந்த தமிழக முதலமைச்சர் விஜய், தான் வழக்கமாக அணிந்து வரும் கோட் ஷூட்-டிற்கு பதிலாக எளிமையான உடையில் வந்தார்.</p><p>இந்த நிதி நிலை அறிக்கையை 10 மணிக்கு தாக்கல் செய்த அமைச்சர் மரிய வில்சன், தனக்கு அனைத்தும் கொடுத்த மக்களுக்கு நன்றி கடன் செலுத்துவதற்காக அரசியலுக்கு தமிழக முதலமைச்சர் வந்துள்ளார் என கூறினார்.</p><p>மேலும் அவர், பிறப்பின் அடிப்படையில் அனைவரும் சமம், ஆனால் செய்யும் செயலில் தான் அவர்கள் சிறப்பு இயல்புகள் வேறுபடுகின்றன எனவும் கூறினார்.</p><p>இதையடுத்து அவர் தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில், “தமிழகத்தில் 3,734 அரசுப் பள்ளிகளை மேம்படுத்த ரூ.2,132 கோடி நிதி ஒதுக்கீடு செய்யபப்ட்டுள்ளது.</p><p>இந்த நிதியாண்டில்” என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>3 மாதங்களில் சொன்னதை செய்து காட்டியுள்ளது த.வெ.க. அரசு- மரிய வில்சன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dvk-govt-fulfills-promises-in-3-months-maria-wilson</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dvk-govt-fulfills-promises-in-3-months-maria-wilson#comments</comments><guid isPermaLink="false">f480dd31-c000-4634-a0fb-1b286fce7e82</guid><pubDate>Wed, 05 Aug 2026 04:50:53 +0000</pubDate><atom:updated>2026-08-05T04:50:53.669Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Vijay,தவெக,TN budget,தமிழக பட்ஜெட்,tvk,Budget 2026,மரிய வில்சன்,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/qccakgbe/tt.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ marie wilson ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/qccakgbe/tt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் 2026-2027ஆம் நிதியாண்டுக்கான முதல் முழுமையான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) இன்று (ஆகஸ்ட் 5, 2026) சட்டப்பேரவையில் காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது. </p><p>தவெக அரசின் நிதியமைச்சர் என்.மரிய வில்சன் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரை நிகழ்த்தி வருகிறார்.</p><p>தன்னை உயிராய் நேசிக்கும் மக்களுக்காக சூழ்ச்சிகளை வென்று ஜனநாயகனாக நிற்கும் முதலமைச்சருக்கு நன்றி.  நன்றி கடன் செலுத்துவதற்காக மட்டும் அரசியலுக்கு வந்தவர் முதலமைச்சர் விஜய். பிறப்பால் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டுடன் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார் முதலமைச்சர்.</p><p>விலையில்லா மின்சாரம் 200 யூனிட்களாக த.வெ.க அரசில் உயர்த்தப்பட்டுள்ளது. தவெகவின் வெற்றி ஒரு கட்சியின் தனிப்பட்ட வெற்றி அல்ல, தமிழக மக்களின் வெற்றி..தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்து துறைகளிலும் கனிசமான வளர்ச்சி பெற்றுள்ளது. 3 மாதங்களில் சொன்னதை செய்து காட்டியுள்ளது த.வெ.க. அரசு மக்களுக்கு இடையூறாக இருந்த  717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. என மரிய வில்சன் தெரிவித்தார்.</p> ]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY: நகை பிரியர்களுக்கு ஷாக்... மீண்டும் எகிறிய தங்கம் விலை! - இன்றைய நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-5-8-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-5-8-2026#comments</comments><guid isPermaLink="false">73638d95-a272-4243-bfe8-0dd544da7f90</guid><pubDate>Wed, 05 Aug 2026 04:43:40 +0000</pubDate><atom:updated>2026-08-05T04:43:40.667Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/11/11/21441387-gold.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/11/11/21441387-gold.webp?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கத்துடன் காணப்படுகிறது. ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.1,05,760-க்கும், கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.13,220-க்கும் விற்பனையானது. 2-ந்தேதி ஒரு சவரன் ரூ.1,05,760-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.13,220-க்கும் விற்பனையானது. 3-ந்தேதி சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,06,000-க்கும், கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.13,250-க்கும் விற்பனையானது. நேற்று  சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,05,600-க்கும், கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.13,200-க்கு விற்பனையானது.</p> <h2>தங்கம் விலை உயர்வு</h2><p>இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ரூ.1,06,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.13,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><h2>வெள்ளி விலை நிலவரம்</h2><p>வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-</h2><p>04-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,600</p><p>03-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,000</p><p>02-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,760</p><p>01-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,760</p><p>31-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,040</p> <h2>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-</h2><p>04-08-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>03-08-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>02-08-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>01-08-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>31-07-2026- ஒரு கிராம் ரூ.235</p> ]]></content:encoded></item><item><title>கூடியது சட்டசபை - த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-finance-minister-presents-tvk-government-first-budget</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-finance-minister-presents-tvk-government-first-budget#comments</comments><guid isPermaLink="false">452b46af-87d4-4264-b3c5-9ea383c9d39b</guid><pubDate>Wed, 05 Aug 2026 04:32:32 +0000</pubDate><atom:updated>2026-08-05T04:32:32.308Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,TN budget,தமிழக பட்ஜெட்,tvk,Budget 2026,மரிய வில்சன்,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/5nfbqyvt/budget.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மரிய வில்சன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/5nfbqyvt/budget.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார்.</strong></em> </p><p>2026-2027-ம் ஆண்டுக்கான பட்ஜெட் மிகச்சிறப்பாக இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/why-is-chief-minister-vijay-showing-such-urgency-regarding-the-arrest-when-he-failed-to-show-similar-speed-in-the-cauvery-river-water-dispute-seeman-asks">விஜய்</a> உத்தரவிட்டிருந்தார்.</p> <p>அதோடு, கடந்த ஜூலை மாதத்தில், அரசின் அனைத்துத் துறை அமைச்சர்கள், செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு வந்தார்.</p><p>பின்னர், ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், துறை ரீதியாக த.வெ.க. அறிவித்துள்ள வாக்குறுதிகள் போன்றவற்றை அந்தந்த துறை அமைச்சர்கள் தன்னிடம் கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டு இருந்தார்.</p> <p>அதன் பின்னர் அதுபற்றி ஆய்வு மேற்கொண்டும், தமிழக அரசின் நிதி நிலைமையையும் கருத்தில் கொண்டும், பட்ஜெட்டில் அறிவிப்பதற்கான முக்கிய திட்டங்களை முதலமைச்சர் முடிவு செய்துள்ளார்.</p><p>அதில் ஒரு சிறப்பம்சமாக, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையில் வெற்றித் தமிழகம் தொலைநோக்குத் திட்டம் என்ற ஒரு திட்டம் அறிவிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.</p> <p>மேலும், ஒவ்வொரு குடும்பத்தலைவிக்கும் 60 வயது வரை ரூ.2,500 என்ற மதிப்புமிகு மகளிர் திட்டம், ஆண்டுக்கு 6 இலவச கியாஸ் சிலிண்டர், வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை, அனைத்து அரசு பஸ்களிலும் பெண்களுக்கு இலவச பயணம் என தேர்தலுக்கு முன்பு த.வெ.க. தரப்பில் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அவற்றில் எவையெல்லாம் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ளன? என்ற பலத்த எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.</p> <p>இந்நிலையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D">பட்ஜெட்</a> இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்காக சட்டசபை பட்ஜெட் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடியது.</p><p>இதனையடுத்து, 2026-2027-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். </p> ]]></content:encoded></item><item><title>முருகன் அருள் நிறைந்த ஆடிக் கார்த்திகை</title><link>https://www.maalaimalar.com/spirituality/aadi-krithigai-murugan-worship-3</link><comments>https://www.maalaimalar.com/spirituality/aadi-krithigai-murugan-worship-3#comments</comments><guid isPermaLink="false">328979b1-136d-462a-871a-b56db0e92fed</guid><pubDate>Wed, 05 Aug 2026 04:09:53 +0000</pubDate><atom:updated>2026-08-05T04:09:53.369Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,வழிபாடு,worship,aadi krithigai,ஆடி கிருத்திகை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/zxijzh13/muruga1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Murugan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/zxijzh13/muruga1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>ஆடி மாதம்</h2><p>ஆடி மாதம் என்பது இறைவனை வழிபடுவதற்கு ஒதுக்கப்பட்ட மாதமாகவே கருதப்படுகிறது. அதனால்தான், ஆடி மாதத்தில் எந்தவித சுபகாரியங்களும் நடத்தப்படுவதில்லை. ஆடி மாதம் முழுவதும் திருவிழா, சிறப்பு வழிபாடு என அம்மன் வழிபாடே அதிகமாக காணப்படும். அதே நேரம், தமிழ்க் கடவுளான முருகப் பெருமானை வழிபட வேண்டிய சிறப்புமிக்க நாளாக ஆடிக் கார்த்திகை திகழ்கிறது.</p> <h2>ஆடிக் கார்த்திகை</h2><p>முருகப்பெருமானுக்கு தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்தசஷ்டி விரதம், தை கார்த்திகை போன்ற நாட்கள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்த விதத்தில் ஆடி மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரம் 'ஆடிக் கார்த்திகை' என சிறப்பிக்கப்பட்டு, வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.</p> <h2>கார்த்திகை நட்சத்திரம்</h2><p>முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நட்சத்திரமாக கார்த்திகை கருதப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரம் வந்தாலும், ஆடி மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரம் தனிச் சிறப்பு வாய்ந்தது. ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுவதுடன், பார்வதி தேவி, தனது சக்தி அனைத்தையும் திரட்டி முருகனுக்கு வேல் கொடுத்ததன் காரணமாக, ஆடிக் கார்த்திகை அன்று, வடிவேல் முருகனை வழிபட்டால் முருகன் அருளோடு அம்மன் அருளும் சேர்ந்து கிடைக்கும் என்பது ஐதீகம்.</p> <h2>கார்த்திகை பெண்கள்</h2><p>சிவபெருமான் நெற்றிக் கண்ணில் இருந்து வெளிப்பட்ட ஆறு அக்னிகள், சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக உருபெற்றன. பின்னர், அந்த ஆறு குழந்தைகளையும் கார்த்திகை பெண்கள் தாலாட்டி, சீராட்டி வளர்த்தனர். அந்த கார்த்திகை பெண்களே கார்த்திகை நட்சத்திரங்களாயினர். இதன் காரணமாகவே, கார்த்திகை நட்சத்திர நாள் முருகப் பெருமானுக்கு மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.</p> <h2>கார்த்திகை விரதம்</h2><p>மேலும், கார்த்திகை சூரிய பகவானுக்குரிய நட்சத்திரமாகவும் உள்ளது. ஆரோக்கியத்திற்கு அதிபதியாக சூரியன் விளங்குவதால், கார்த்திகை நட்சத்திர நாளில் முருகப்பெருமானை வழிபட்டால் ஆரோக்கியத்துடன் வாழ்வதோடு, நீண்ட ஆயுளையும் பெறலாம். கார்த்திகை நட்சத்திர நாளன்று, விரதம் இருந்து வழிபட்டால் அழகும், அறிவும் பெருகும் என்பது நம்பிக்கை.</p> <h2>நேர்த்திக்கடன்</h2><p>அதிலும் ஆடி மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திர தினத்தன்று, அனைத்து முருகன் கோவில்களும் களைகட்டிவிடும். குறிப்பாக முருகனின் அறுபடை வீடுகளில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் என வெகுவிமரிசையாக ஆடிக் கார்த்திகை கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.</p> <h2>விரதம்</h2><p>இந்த ஆண்டு ஆடிக் கார்த்திகை நட்சத்திரம், 6-ந் தேதி மாலை தொடங்கி 7-ந் தேதி மாலை வரை இருக்கிறது. விரதம் இருப்பவர்கள், இந்த நேரத்தில் ஆதித்ய ஹிருதயம் பாடலை படித்து விரதத்தை தொடங்கலாம். விரத நேரத்தில் உணவு அருந்தாமல் உபவாசம் இருப்பது சிறந்தது. முடியாதவர்கள், பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் மேற்கொள்ளலாம்.</p> <h2>முருகன் கோவில்</h2><p>பூஜையறையில் ஆறு அகல் விளக்கு தீபம் ஏற்றி முருகப்பெருமானை வழிபட வேண்டும். கந்த சஷ்டி கவசம், கந்த புராணம், சண்முக கவசம், முருகன் பாடல்களை பாராயணம் செய்தும், முருகன் மந்திரத்தை ஜெபித்தும் வழிபடலாம். ஆடிக் கார்த்திகை தினத்தன்று, காலையிலும், மாலையிலும் அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு செல்லலாம்.</p> <h2>தொழில் வளர்ச்சி அடையும்</h2><p>ஆடிக் கார்த்திகை அன்று, முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபட்டால் திருமணத் தடைகள் விலகும், தொழில் வளர்ச்சி அடையும், கர்ம வினைகள் நீங்கும், செவ்வாய் தோஷம் அகலும், ஆரோக்கியமான, ஆனந்த வாழ்வு அமையும். தொடர்ந்து 12 ஆண்டுகள் ஆடிக் கார்த்திகையில் விரதம் கடைப்பிடிப்பவர்கள், வாழ்வில் பெரும் வெற்றியை அடைவார்கள்.</p>]]></content:encoded></item><item><title>&apos;Swadeshi&apos;, &apos;Make in India&apos; என்பதெல்லாம் மோடியின் வெறும் விளம்பர நாடகம்!- மாணிக்கம் தாகூர் 
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-swadeshi-and-make-in-india-are-merely-modi-publicity-stunts</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-swadeshi-and-make-in-india-are-merely-modi-publicity-stunts#comments</comments><guid isPermaLink="false">84cf9d8f-4d6a-402c-a23a-8a012f9e2b11</guid><pubDate>Wed, 05 Aug 2026 03:51:16 +0000</pubDate><atom:updated>2026-08-05T03:51:16.936Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,Congress,காங்கிரஸ்,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/0mr0x377/manickamtagore.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Manickam Tagore]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/0mr0x377/manickamtagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக காங்கிரஸ் தலைவரும், எம்.பி.யுமான <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">மாணிக்கம் தாகூர் </a>எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><p>September 19, 2025 அன்று DGTR பரிந்துரைத்தும், 11 மாதங்களாக Customs Notification தராமல் நிதி அமைச்சகம் இழுத்தடிப்பு.</p><p>China-வில் இருந்து இறக்குமதி செய்யப்படும் Heavy Cranes மீது Anti-Dumping Duty விதிக்க DGTR பரிந்துரைத்தும், Customs Notification தராமல் நிதி அமைச்சகம் இழுத்தடிக்கிறது.</p> <p>இதன் விளைவு? </p><p>5 முன்னணி உள்நாட்டு Crane உற்பத்தியாளர்கள் தொழிலை மூடும் அவலநிலை!</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/kharge-says-pm-modi-shah-scared-insulting-parliament-by-evading-answers-on-donation-theft-students-issue">மோடி</a> அரசாங்கம் யாருக்காக செயல்படுகிறது? </p><p>இந்திய உற்பத்தியாளர்களுக்காகவா அல்லது Chinese நிறுவனங்களுக்காகவா?</p><p>அனைத்து துறைகளிலும் BJP-யின் இந்த போலித்தனம் ஒவ்வொன்றாக அம்பலமாகி வருகிறது! என்று கூறியுள்ளார்.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">Swadeshi&#39;, &#39;Make in India&#39; என்பதெல்லாம் மோடியின் வெறும் விளம்பர நாடகம்!<br><br>September 19, 2025 அன்று DGTR பரிந்துரைத்தும், 11 மாதங்களாக Customs Notification தராமல் நிதி அமைச்சகம் இழுத்தடிப்பு.<br><br>China-வில் இருந்து இறக்குமதி செய்யப்படும் Heavy Cranes மீது Anti-Dumping Duty விதிக்க… <a href="https://t.co/hhzs1UQSaf">pic.twitter.com/hhzs1UQSaf</a></p>&mdash; Manickam Tagore .Bமாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) <a href="https://x.com/manickamtagore/status/2084843862229737973?ref_src=twsrc%5Etfw">August 5, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-government-first-budget-to-be-presented-in-assembly-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-government-first-budget-to-be-presented-in-assembly-today#comments</comments><guid isPermaLink="false">51ee100e-38db-4470-827e-328b46014fd7</guid><pubDate>Wed, 05 Aug 2026 02:26:19 +0000</pubDate><atom:updated>2026-08-05T02:26:19.254Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN budget,தமிழக பட்ஜெட்,TN assembly,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/sqn1n5dw/tnassembly.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN Assembly -  Marie Wilson]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/sqn1n5dw/tnassembly.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அரசியல் பரபரப்புக்கு இடையே தமிழ்நாடு சட்டசபையில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.</strong></em></p> <h2>பட்ஜெட் தாக்கல்</h2><p>முதலமைச்சர் விஜய் தலைமையிலான <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95">த.வெ.க. </a>அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. சட்டசபையில் பட்ஜெட் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது.</p><p>2026-2027-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட் மிகச்சிறப்பாக இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டிருந்தார்.</p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>அதோடு, கடந்த ஜூலை மாதத்தில், அரசின் அனைத்துத் துறை அமைச்சர்கள், செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு வந்தார்.</p><p>பின்னர், ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், துறை ரீதியாக த.வெ.க. அறிவித்துள்ள வாக்குறுதிகள் போன்றவற்றை அந்தந்த துறை அமைச்சர்கள் தன்னிடம் கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/why-is-chief-minister-vijay-showing-such-urgency-regarding-the-arrest-when-he-failed-to-show-similar-speed-in-the-cauvery-river-water-dispute-seeman-asks">விஜய்</a> உத்தரவிட்டு இருந்தார்.</p> <h2>என்னென்ன திட்டம்?</h2><p>அதன் பின்னர் அதுபற்றி ஆய்வு மேற்கொண்டும், தமிழக அரசின் நிதி நிலைமையையும் கருத்தில் கொண்டும், பட்ஜெட்டில் அறிவிப்பதற்கான முக்கிய திட்டங்களை முதலமைச்சர் முடிவு செய்துள்ளார்.</p><p>அதில் ஒரு சிறப்பம்சமாக, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையில் வெற்றித் தமிழகம் தொலைநோக்குத் திட்டம் என்ற ஒரு திட்டம் அறிவிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.</p> <h2>முக்கிய அறிவிப்புகள்</h2><p>மேலும், ஒவ்வொரு குடும்பத்தலைவிக்கும் 60 வயது வரை ரூ.2,500 என்ற மதிப்புமிகு மகளிர் திட்டம், ஆண்டுக்கு 6 இலவச கியாஸ் சிலிண்டர், வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை, அனைத்து அரசு பஸ்களிலும் பெண்களுக்கு இலவச பயணம் என தேர்தலுக்கு முன்பு த.வெ.க. தரப்பில் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அவற்றில் எவையெல்லாம் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ளன? என்ற பலத்த எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.</p> <h2>தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்</h2><p>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீதான கைது நடவடிக்கையை கண்டித்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்வார்கள் என்று தெரிகிறது.</p><p>எனவே பட்ஜெட்டை கூட்டத்தை தி.மு.க. புறக்கணிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பட்ஜெட் தாக்கல் நிகழ்வு முடிந்தவுடன் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது. இதில் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்று முடிவெடுத்து அறிவிக்கப்படும்.</p><h2>வேளாண்மை பட்ஜெட்</h2><p>தமிழக சட்டசபையில் நாளை வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 5.8.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு செல்வாக்கு உயரும் நாள்
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-5-august-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-5-august-2026#comments</comments><guid isPermaLink="false">f69482b1-f58d-4d7a-96f3-11215beb22e6</guid><pubDate>Wed, 05 Aug 2026 02:02:35 +0000</pubDate><atom:updated>2026-08-05T02:02:35.093Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/12/08/22809610-rasipalan3.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/12/08/22809610-rasipalan3.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>ராசிபலன்(Rasipalan)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>தொழில் வளர்ச்சி திருப்தி தரும் நாள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள்.</p><h2>ரிஷபம்</h2><p>நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். வீட்டைச் சீரமைப்பதில் அக்கறை காட்டுவீர்கள். நேற்று வரை நடைபெறாத காரியம் இன்று நடைபெறும்.</p> <h2>மிதுனம்</h2><p>சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும் நாள். தொழிலில் மற்றவர்களின் குறுக்கீடுகள் அகலும். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். விரதங்களில் நம்பிக்கை கூடும்.</p><h2>கடகம்</h2><p>வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். இடம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அரசு வழியில் சலுகை எதிர்பார்த்தபடியே கிடைக்கும்.</p> <h2>சிம்மம்</h2><p>கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். வருமான அதிகரிப்பிற்கு வழி என்ன என்று யோசிப்பீர்கள். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும்.</p><h2>கன்னி</h2><p>யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வளர்ச்சிப் பாதையில் சில இடையூறுகள் வந்து சேரும். புது முயற்சிகளைத் தள்ளி வைப்பது நல்லது.</p> <h2>துலாம்</h2><p>வழிபாட்டால் வளர்ச்சி கூடும் நாள். சுபவிரயங்கள் ஏற்படும். தொழில் பங்குதாரர்களால் தொல்லை உண்டு. உத்தியோகத்தில் பிரச்சனை இன்றும் நீடிக்கும்.</p><h2>விருச்சிகம்</h2><p>யோகமான நாள். நினைத்தது நிறைவேறும். பூர்வீக சொத்துகளால் லாபம் கிட்டும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். பயணம் பலன் தரும்.</p> <h2>தனுசு</h2><p>தடைகள் அகலும் நாள். தாராளமாகச் செலவிட்டு மகிழ்வீர்கள். இளைய சகோதர வழியில் இனிய தகவல் வந்து சேரும். உத்தியோக முயற்சிக்கு நண்பர்கள் உறுதுணைபுரிவர்.</p><h2>மகரம்</h2><p>செல்வாக்கு உயரும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.</p> <h2>கும்பம்</h2><p>பக்கபலமாக இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். அலைபேசி வழிச்செய்தி அனுகூலம் தரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.</p><h2>மீனம்</h2><p>பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பக்குவமாகப் சாதித்துக் கொள்வீர்கள். பேசிக் காரியங்களைச் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையால் விரோதம் விலகும்.</p> ]]></content:encoded></item><item><title>பெண் வெறுப்பும் பாலினப் பாகுபாடும் திமுகவின் பாரம்பரியத்தின் ஒரு பகுதி: குஷ்பு சுந்தர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/those-clapping-and-whistling-for-udayanidhi-are-not-public-but-sycophants-khushbu-sundar</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/those-clapping-and-whistling-for-udayanidhi-are-not-public-but-sycophants-khushbu-sundar#comments</comments><guid isPermaLink="false">c840deab-a4fb-48bc-bd3b-fbfb9227c859</guid><pubDate>Wed, 05 Aug 2026 02:00:12 +0000</pubDate><atom:updated>2026-08-05T02:00:12.001Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,Kushboo,குஷ்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/9lopmr6s/Untitled-design-17.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின் - குஷ்பு]]></media:title><media:description type="html"><![CDATA[ Udhayanidhi stalin- Khushbu sundhar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/9lopmr6s/Untitled-design-17.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தன்னைத் தலைவர் என்று கூறிக்கொள்ள வெட்கப்பட வேண்டும் என்று நடிகையும் பாஜக-வை சேர்ந்த அரசியல்வாதியுமான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D">குஷ்பு சுந்தர்</a> கூறியுள்ளார்.</p><h3><strong>திமுக ஆர்ப்பாட்டத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">உதயநிதி ஸ்டாலின்</a></strong></h3><p>தஞ்சாவூரில் நடந்த திமுக ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இரட்டை அர்த்தம் கொண்டதாக கூறப்படும் வார்த்தை ஒன்றை குறிப்பிட்டார். </p><p>இது, சமூகத்தில் உள்ள பெண்களை மிகவும் இழிவான கண்ணோட்டத்தில் குறிப்பிடுவதாக சமூக வலைதளத்தில் சர்ச்சையானது.</p><p>இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் மீது பெண்கள் மீது மானபங்கம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 9 பிரிவுகளில் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.</p><p>இதைத்தொடர்ந்து நேற்று காலை உதயநிதி ஸ்டாலினை, அவரின் வீட்டிற்கே சென்று போலீசார் கைது தஞ்சை அழைத்துச்சென்றனர். பின்னர் இரவு 8 மணியளவில் விசாரணைக்கு பிறகு அவரை விடுவித்தனர்.</p><h3><strong>உதயநிதி குறித்து கருத்து தெரிவித்த குஷ்பு</strong> </h3><p>இந்நிலையில் இதுகுறித்து தமிழக பாஜகவின் துணைத் தலைவரான குஷ்பு சுந்தர் ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “ நான் பலமுறை பாலினப் பாகுபாடு நிறைந்த கருத்துக்களுக்கு ஆளாகியிருக்கிறேன்.</p><p>பெண் வெறுப்பும் பாலினப் பாகுபாடும் திமுகவின் பாரம்பரியத்தின் ஒரு பகுதி. எனக்கு இதில் துளியும் ஆச்சரியமில்லை. இது போன்ற பெண் வெறுப்பு மற்றும் பாலினப் பாகுபாடு நிறைந்த கருத்துக்களை நான் பார்த்திருக்கிறேன்.</p><p>மேலும், திமுகவில் பெண்கள் அவமானப்படுத்தப்படுவதையும் நான் பார்த்திருக்கிறேன். எனவே, இது இறுதியாக நீங்கள் முன்னெடுத்துச் செல்லும் ஒரு மரபு.</p><p>உதயநிதி ஸ்டாலினிடம் இருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை, ஏனென்றால் அவர் இளைஞர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் என்று நினைத்தேன்.</p><p>அவர் முன்னாள் துணை முதல்வர் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக இருந்தவர், அதனால் இந்த மனிதர் வித்தியாசமாக இருப்பார் என்று நினைத்தேன்.</p><p>ஆனால், உதயநிதி ஸ்டாலின் இது போன்ற மிகவும் அநாகரிகமான, தரம் தாழ்ந்து பேசி இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. மேலும், அவரிடம் ஒரு துளி வருத்தம் இருந்ததாக கூட தெரியவில்லை.</p><p>ஒரு பொது மேடையில் ஒரு பெண்ணை இழிவாகப் பேச உங்களுக்கு யார் பிறப்புரிமை கொடுத்தது? இது உதயநிதி ஸ்டாலினுக்கு மட்டும் அல்ல, எல்லா அரசியல் கட்சிகளிலும் இதுதான் நிலை.</p><p>உங்கள் கருத்தை நிரூபிக்க இன்னும் எவ்வளவு காலத்திற்கு ஒரு பெண்ணை இழிவாகப் பேசப் போகிறீர்கள்?</p><p>ஒரு பெண்ணைப் பற்றி இவ்வளவு மரியாதைக் குறைவாகப் பேசவும், ஒரு பெண்ணின் தோளில் இருந்து துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு, ‘நான்தான் பலமானவன், நான்தான் தலைவர்’ என்று சொல்லவும் ஒரு ஆண் எவ்வளவு பலவீனமாக இருக்க வேண்டும்?</p><p>இங்கே உங்களை நீங்களே தலைவர் என்று அழைத்துக்கொள்வதற்கு வெட்கமாக இல்லையா?</p><p><strong>சட்டமன்ற தேர்தல்</strong></p><p>மே மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில், திமுக உறுப்பினர்களே கட்சிக்கு வாக்களிக்கவில்லை. அவர்களது சொந்தக் குடும்ப உறுப்பினர்களே திமுகவுக்கு வாக்களிக்கவில்லை.</p><p>எனவே, இங்கே கைதட்டுவது பொதுமக்கள் அல்ல. இங்கே விசில் அடிப்பது பொதுமக்கள் அல்ல. கூச்சலிட்டு, கைதட்டி, விசில் அடித்து, ஒரு பெண் நிந்திக்கப்படுவதைப் பார்த்து இந்த விதமான இன்பம் காணும் உங்கள் சொந்த சம்சாக்கள் (முகஸ்துதி செய்பவர்கள்)தான் இதைச் செய்கிறார்கள்.</p><p>இது அவர்களுடைய பெண் வெறுப்பு மற்றும் அசிங்கமான மனப்பான்மையைத்தான் காட்டுகிறது.</p><p>திமுக ஒரு கற்பனை பலூனில் வாழ்ந்து வந்தது. தங்களை யாரும் தொட முடியாது என்று அவர்கள் நினைத்திருந்த அந்த பலூன் உடைந்துவிட்டது என்பதை இந்த தேர்தல் நிரூபித்துள்ளது,” என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள் - 5 ஆகஸ்ட் 2026: பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-5-august-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-5-august-2026#comments</comments><guid isPermaLink="false">93a6c253-d6ee-486a-bba1-402b17353713</guid><pubDate>Wed, 05 Aug 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-08-05T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/10/26217560-krishna2.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ krishna]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/10/26217560-krishna2.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆடி-20 (புதன்கிழமை)</p><p>பிறை : தேய்பிறை</p><p>திதி :  சப்தமி இரவு 6.09 மணி வரை பிறகு அஷ்டமி</p><p>நட்சத்திரம் :  அசுவினி இரவு 7.32 வரை பிறகு பரணி</p> <p>யோகம் :  மரண / சித்தயோகம்</p><p>ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை</p><p>எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை</p><p>சூலம் : வடக்கு</p><p>நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை</p> <h2>ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப்பெருமான் பவனி</h2><p>சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் பொங்கல் பெரு விழா, திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் உற்சவாரம்பம். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் உற்சவாரம்பம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு காலை அலங்கார திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு. </p> <p>விருதுநகர் ஸ்ரீ விஸ்வநாதர், வேதாரண்யம் ஸ்ரீ திருமறைக்காடர் கோவில்களில் அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை தலத்தில் அலங்கார திருமஞ்சன சேவை. கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருப்போரூர் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு. திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாத சுவாமி சிறப்பு வழிபாடு.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - ஆக்கம்</p><p>ரிஷபம் - நன்மை</p><p>மிதுனம் - வரவு</p><p>கடகம் - உதவி</p><p>சிம்மம் - சுபம்</p><p>கன்னி - வாழ்வு</p> <p>துலாம் - கவனம்</p><p>விருச்சிகம் - நலம்</p><p>தனுசு - முயற்சி</p><p>மகரம் - லாபம்</p><p>கும்பம் - ஜெயம்</p><p>மீனம் - புகழ்</p> ]]></content:encoded></item><item><title>POK தேர்தல் வெறும் நாடகம்.. 90 பேர் இறந்திருக்கிறார்கள்.. மனித உரிமை மீறலுக்கு பாகிஸ்தான் பொறுப்பேற்க வேண்டும் - இந்தியா</title><link>https://www.maalaimalar.com/news/national/pok-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-90-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE</link><comments>https://www.maalaimalar.com/news/national/pok-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-90-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE#comments</comments><guid isPermaLink="false">20c029f7-66ee-4f4f-97aa-0732396e7237</guid><pubDate>Wed, 05 Aug 2026 00:26:10 +0000</pubDate><atom:updated>2026-08-05T00:26:10.618Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Pakistan,பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்,Ministry of External Affairs,வெளியறவு அமைச்சகம்,Pakistan-occupied Kashmir</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/aduy5uif/tn-13.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ POK ]]></media:title><media:description type="html"><![CDATA[ POK ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/aduy5uif/tn-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/pok-human-rights-abuses-over-30-civilians-killed-in-pakistan-security-forces-firing">பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்</a> நடைபெற்று வரும் தேர்தல் மற்றும் போராட்டங்களால் நிலவும் அசாதாரண சூழல் குறித்து இந்தியா கருத்து தெரிவித்துள்ளது. </p><h2>நாடகம் </h2><p>நேற்று செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து பேசிய இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்தப்படும் சட்டப்பேரவைத் தேர்தல் முழுக்க முழுக்க ஒரு போலி நாடகம்.</p><p>கடந்த ஜூன் மாதம் முதல் பாகிஸ்தான் படைகள் நடத்தி வரும் தாக்குதல்களில் குறைந்தது 90 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.  </p><p>மக்களின் நியாயமான எதிர்ப்புகளுக்கு பாகிஸ்தான் அரசு துப்பாக்கிச் சூடு, இணைய சேவை முடக்கம், மிரட்டல் மற்றும் வன்முறை மூலமே பதிலளித்து வருகிறது.  </p> <p>பாகிஸ்தானின் மனித உரிமைப் போதனைகளின் போலித்தனத்தை சர்வதேச சமூகம் உணர்ந்து, அங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு பாகிஸ்தானைப் பொறுப்பேற்க வைக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.</p> <h2>பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்</h2><p>ஜம்மு காஷ்மீரின் 35 சதவீத நிலம் பாகிஸ்தான் வசம் உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (POK) என அழைக்கப்படும் இந்த பகுதிக்கு தனி ஜனாதிபதி, பிரதமர், சட்டசபை உள்ளது.</p><p>இங்கு மக்களுக்கு எதிராக பாகிஸ்தான் அரசின் அடக்குமுறை, உரிமைகள் மறுப்பு, விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றால் மக்கள் பெருமளவில் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.</p><h2>தேர்தல்</h2><p>பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஜூலை 27 முதற்கட்ட சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. ஜாயிண்ட் அவாமி ஆக்ஷன் கமிட்டி (JAAC) என்ற அமைப்பு மக்களை தேர்தலை புறக்கணிக்கச் செய்து போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.</p><p>மூன்று கட்டங்களாக நடைபெற்று வரும் சட்டப்பேரவை தேர்தலில் வாக்குப்பதிவை பெருமபாலான மக்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஆகஸ்ட் 5, ஷேக் ஹசீனா பத்திரிகையாளர் சந்திப்பு.. வங்கதேசம் எதிர்ப்பு - &quot;தொடர்பில்லை&quot; என இந்தியா மறுப்பு </title><link>https://www.maalaimalar.com/news/national/sheikh-hasinas-first-delhi-press-meet-india-distances-itself-as-ex-pm-to-outline-return-plan-to-bangladesh</link><comments>https://www.maalaimalar.com/news/national/sheikh-hasinas-first-delhi-press-meet-india-distances-itself-as-ex-pm-to-outline-return-plan-to-bangladesh#comments</comments><guid isPermaLink="false">87e2ad8b-24cb-4044-81cb-f33335526ba8</guid><pubDate>Wed, 05 Aug 2026 00:12:15 +0000</pubDate><atom:updated>2026-08-05T00:12:15.462Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Bangladesh,வங்கதேசம்,Sheikh Hasina,ஷேக் ஹசீனா,தாரிக் ரகுமான்,Tarique Rahman</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/s5sgrlry/tn-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஷேக் ஹசீனா ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஷேக் ஹசீனா ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/s5sgrlry/tn-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் <a href="https://www.maalaimalar.com/topic/sheikh-hasina">ஷேக் ஹசீனா</a>, டெல்லியில் உள்ள 'வெளிநாட்டு செய்தியாளர்கள் சங்கத்தில்' (FCC) இணைய வழியில் வரும் ஆகஸ்ட் 5 பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த திட்டமிட்டுள்ளார். </p><h2>2 ஆண்டுகள் நிறைவு </h2><p>2023 ஆகஸ்டில் மாணவர் போராட்டத்தால் வங்கதேசத்தில் அவரின் தலைமையிலான அவாமி லீக் ஆட்சி கவிழ்ந்தது. பிரதமர் மாளிகையை போராட்டாக்காரர்கள் முற்றுகையிட்ட நிலையில் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு தப்பி வந்தார். </p><p>அதுமுதல் மத்திய அரசின் அடையாளத்தில் இருக்கும் அவரின் இருப்பிடம் குறித்த தகவல் பொதுவெளியில் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் பதிவுகள் மூலம் மட்டுமே அவர் வெளியுலக தொடர்பு கொண்டிருந்தார். </p><p>இந்நிலையில் ஆட்சி கவிழ்ந்து, அதாவது இந்தியாவுக்கு தப்பி வந்து ஆகஸ்ட் 5 உடன் 2 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் அன்றைய தினம் ஹசீனா முதல் முறையாக பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளார். </p> <h2>வங்கதேசம் எதிர்ப்பு</h2><p>அவர் பத்திரிகையாளர்களை சந்திப்பதை தடுத்து நிறுத்தும்படி, வங்கதேசத்தில் ஆட்சியில் உள்ள தார்பிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி அரசு இந்தியாவை வலியுறுத்தியுள்ளது.</p><p>டாக்காவில் உள்ள இந்திய உயர் ஆணையர் தினேஷ் திரிவேதியை சந்தித்த வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மானின் வெளியுறவு ஆலோசகர் ஹுமாயூன் கபீர், இந்திய மண்ணைப் பயன்படுத்தி வங்கதேசத்தில்பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலோ அல்லது அரசியல் கருத்துக்களைக் கூறும் வகையிலோ ஷேக் ஹசீனாவோ அல்லது பிறரோ செயல்பட அனுமதிக்கக் கூடாது எனக் கேட்டுக் கொண்டார்.</p><p>மேலும் கடந்த ஆண்டு வங்கதேச சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் ஷேக் ஹசீனா மாணவர் போராட்டத்தை ஒடுக்க எடுத்த நடவடிக்கைகளுக்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. எனவே தண்டனையை நிறைவேற்ற அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு வங்கதேச அரசு இந்தியாவுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.</p> <h2>மத்திய அரசு விளக்கம்</h2><p>இந்நிலையில் ஷேக் ஹசீனா நடத்த திட்டமிட்டுள்ள பத்திரிகையாளர் சந்திப்புடன் இந்திய அரசாங்கத்திற்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றும், அதில் தெரிவிக்கப்படும் கருத்துக்களை இந்தியா ஆதரிக்கவில்லை என்றும் இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ரந்தீர் ஜெய்ஷ்வால் விளக்கம் அளித்துள்ளார்.</p><p>ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், "நீங்கள் குறிப்பிடும் இந்தச் சந்திப்பு ஒரு தனியார் ஊடக அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் இந்திய அரசுக்கு எந்தப் பங்கோ தொடர்போ இல்லை. அதில் தெரிவிக்கப்படும் எந்தவொரு கருத்தையும் இந்திய அரசு ஆதரிக்கவோ ஏற்கவோ செய்யாது" என்று தெரிவித்துள்ளார்.</p> <h2>நாடு திரும்புதல்</h2><p>மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளபோதிலும், வரும் டிசம்பர் மாதத்திற்குள் வங்கதேசம் திரும்பி நீதிமன்றத்தில் சரணடையத் திட்டமிட்டுள்ளதாக ஹசீனா தெரிவித்திருந்தார்.</p><p>எனவே தனது நாடு திரும்பும் திட்டம் மற்றும் எதிர்காலம் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் ஹசீனா பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>முதல் முறையாக கடலை பார்த்த 80 வயது தந்தை.. அழைத்து வந்த மகன் பகிர்ந்த வீடியோ  - நெட்டிசன்கள் நெகிழ்ச்சி  </title><link>https://www.maalaimalar.com/news/national/odisha-viral-video-emotional-moment-as-80-year-old-father-sees-the-sea-for-the-first-time</link><comments>https://www.maalaimalar.com/news/national/odisha-viral-video-emotional-moment-as-80-year-old-father-sees-the-sea-for-the-first-time#comments</comments><guid isPermaLink="false">2d88c257-e164-4a12-a1f4-81cf9380dacd</guid><pubDate>Wed, 05 Aug 2026 00:01:39 +0000</pubDate><atom:updated>2026-08-05T00:01:39.080Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஒடிசா,Odisha,வைரல் வீடியோ,viral video,Father-son,தந்தை-மகன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/iug6ctu4/tn-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ வீடியோ  ]]></media:title><media:description type="html"><![CDATA[ வீடியோ  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/iug6ctu4/tn-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஒடிசாவில் கடற்கரைக்கு தனது 80 வயது தந்தையை அழைத்து வந்த மகன் ஒருவர், அவருக்குக் கடலை முதன்முறையாக காட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B">வைரலாகி</a> வருகிறது. </p><h2>ஒடிசா</h2><p>ஒடிசா மாநிலம் கோணார்க்கில் புகழ்பெற்ற சந்திரபாகா கடற்கரை அமைந்துள்ளது. </p><p>இங்கு ஸ்ரீகாந்த் என்ற நபர், வாழ்நாள் முழுவதும் கடலையே பார்த்திராத தனது 80 வயது தந்தையை அழைத்துச் சென்றுள்ளார். கடலை முதல் முறை பார்க்கும் தந்தையை படம்பிடித்து அந்த வீடியோவை ஸ்ரீகாந்த் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். </p><h2>வீடியோ</h2><p>அந்த வீடியோவில், 80 வயதில் முதன்முறையாக கடலைப் பார்த்த அந்தப் பெரியவர், சிறு குழந்தையின் மகிழ்ச்சியோடும் ஆச்சரியத்தோடும் அலைகளை பார்த்த வண்ணம் இருக்கிறார். </p><p>மேலும், கடலைத் தொட்டு வணங்கித் தனது மரியாதையைச் செலுத்திய தருணம் காண்போரைக் நெகிழ்ச்சி செய்துள்ளது.</p><p>"இது எனது வாழ்க்கையின் பொன்னான தருணம். 80 வயதில் என் தந்தையின் முகத்தில் இந்தச் சிரிப்பைக் காண்பதே எங்கள் மிகப்பெரிய பொக்கிஷம்" என மகன் ஸ்ரீகாந்த் பதிவிட்டுள்ளார்.</p> <h2>நெட்டிசன்கள் நெகிழ்ச்சி  </h2><p>இந்த வீடியோ 4.5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று நெட்டிசன்களை கவர்ந்து வருகிறது.</p><p>"கடல் கூட இன்று மகிழ்ச்சியடைந்திருக்கும், முதல்முறையாக ஒருவர் காலால் மிதிக்காமல், கைகளால் தொட்டு வணங்கி அதற்கு மரியாதை செலுத்தியுள்ளார்" என ஒரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார்.</p><p>"இயற்கையைத் தெய்வமாக மதித்து வணங்கும் அந்தப் பெரியவரின் செயல் இயற்கையின் மதிப்பை உணர்த்துகிறது" என மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.</p><p>இவ்வளவு அன்பைப் பொழியும் மக்களின் கருத்துக்களை தனது தந்தைக்கு படித்துக் காண்பித்து அவரையும் மகிழ்ச்சியடைய செய்வதாக ஸ்ரீகாந்த் நன்றியுடன் தெரிவித்துள்ளார்.</p> <figure><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DbiHmeaM6k4/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:658px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DbiHmeaM6k4/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a></div></blockquote>
<script async src="//platform.instagram.com/en_US/embeds.js"></script></figure>]]></content:encoded></item><item><title>பதக்கங்கள் வெல்வது அரியானா... பயன்பெறுவது குஜராத்.. 2030 காமன்வெல்த் போட்டி குறித்து காங்கிரஸ் எம்.பி கருத்து </title><link>https://www.maalaimalar.com/sports/haryana-mps-demand-hosting-commonwealth-games-2030-in-medal-winning-state</link><comments>https://www.maalaimalar.com/sports/haryana-mps-demand-hosting-commonwealth-games-2030-in-medal-winning-state#comments</comments><guid isPermaLink="false">0335ad3a-8a56-4444-9620-2d6995d282e1</guid><pubDate>Tue, 04 Aug 2026 22:10:59 +0000</pubDate><atom:updated>2026-08-04T22:10:59.412Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>haryana,அரியானா,குஜராத்,gujarat,Commonwealth games,காமன்வெல்த் போட்டி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/qsdpb1bt/tn-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ காமன்வெல்த் போட்டி ]]></media:title><media:description type="html"><![CDATA[ காமன்வெல்த் போட்டி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/qsdpb1bt/tn-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஸ்காட்லாந்து கிளாஸ்கோ நகரில் நடப்பாண்டின் <a href="https://www.maalaimalar.com/sports/commonwealth-games-medal-tally-india-finishes-fourth-with-39-medals-in-glasgow">காமென்வெல்த் போட்டிகள் </a>கடந்த ஆஜிஸ்ட் 2 அன்று முடிந்தன. இதில் 39 பதக்கங்களுடன் இந்தியா 4 ஆம் இடம் பிடித்தது. </p><p>இந்தியா வென்ற 39 பதக்கங்களில் 10 பதக்கங்களை (13 தங்கங்களில் 7 தங்கம் உட்பட) அரியானா வீரர்கள் பெற்று தந்தனர்.</p><p>இதனிடையே, 2030 காமன்வெல்த் போட்டிகளை இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. போட்டிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடக்க உள்ளன. </p><h2>போராட்டம் </h2><p>இந்நிலையில் இந்திய விளையாட்டுத் துறையில் அதிக பங்களிக்கும் அரியானாவில் காமன்வெல்த் போட்டிகளை நடத்த வேண்டும் என வலியுறுத்தி இன்று பாராளுமன்ற வளாகத்தில் அம்மாநில காங்கிரஸ் எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். </p><p> எம்.பி தீபேந்தர் சிங் ஹூடாவுடன், அரியானாவை சேர்ந்த பிற காங்கிரஸ் எம்பிக்களான ஜெய் பிரகாஷ், வருண் முல்லானா, சத்பால் பிரம்மச்சாரி மற்றும் கர்மபீர் பௌத் ஆகியோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.  </p><p>பதக்கங்களை அரியானா தருகிறது, ஆனால் போட்டிகளை நடத்த குஜராத் தேர்ந்தெடுக்கப்படுகிறது என்று தீபேந்திர சிங் ஹூடா குற்றம்சாட்டினார். </p> <h2>தீபேந்தர் சிங் ஹூடா</h2><p>இதுகுறித்து தீபேந்தர் சிங் ஹூடா பேசுகையில், "நாட்டின் மொத்த மக்கள்தொகையில் அரியானா சிறிய பங்கைக் கொண்டிருந்தாலும், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்கு அதிக எண்ணிக்கையிலான பதக்கங்களைப் பெற்றுத் தரும் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது.</p><p>மல்யுத்தம், பாக்ஸிங், தடகளம், துப்பாக்கிச் சூடு மற்றும் ஹாக்கி போன்ற விளையாட்டுகளில் ஒலிம்பிக், ஆசியப் போட்டிகள் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் அரியானா வீரர்கள் தொடர்ந்து வரலாற்றுச் சாதனைகளை படைத்து வருகின்றனர்.</p> <p>அரியானா வீரர்களின் இணையற்ற பங்களிப்பையும், மாநிலத்தின் விளையாட்டுத் திறனையும் அங்கீகரிக்கும் வகையில், 2030 காமன்வெல்த் போட்டிகளை நடத்தும் முதன்மை மாநிலமாக அல்லது இணை மாநிலமாக அரியானாவை அறிவிக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>இருப்பினும், நாட்டின் விளையாட்டு மையமாகத் திகழும் அரியானாவிற்கு இப்போட்டியை நடத்தும் வாய்ப்பு வழங்குவதே தகுதியான முடிவாக இருக்கும் என அரியானா காங்கிரஸ் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>மோகன்லால் மகளின் முதல் படம்.. துடக்கம் டிரெய்லர் வெளியீடு  </title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/malayalam-debut-trailer-mohanlals-daughter-vismaya-makes-acting-debut-in-thudakkam</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/malayalam-debut-trailer-mohanlals-daughter-vismaya-makes-acting-debut-in-thudakkam#comments</comments><guid isPermaLink="false">aa2b037a-9c84-4953-b60d-2f609358ff12</guid><pubDate>Tue, 04 Aug 2026 21:21:43 +0000</pubDate><atom:updated>2026-08-04T21:21:43.192Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஸ்மயா,மோகன்லால்,துடக்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/r6x7rinh/tn-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ துடக்கம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ துடக்கம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/r6x7rinh/tn-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/mohanlaal">மோகன்லாலின் </a>மகள் விஸ்மயா நாயகியாக அறிமுகமாகும்‘துடக்கம்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.</p><h2>விஸ்மயா</h2><p>மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் வளர்த்து வரும் நடிகராக உள்ளார். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான 'டைஸ் ஐரே' என்ற பேய் படம் நல்ல வரவேற்பை பெற்றது.</p><p>இந்நிலையில் மோகன்லால் தனது மகள் விஸ்மயா-வை மோகன்லால் சினிமாவில் களம் இறக்கி உள்ளார்.</p> <h2>துடக்கம்</h2><p>ஆசீர்வாத் சினிமாஸ் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில் விஸ்மயா நடித்துள்ள முதல் படத்தை இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு, 'துடக்கம்' எனப் பெயரிடப்பட்டது.</p><p>பிளாக்பஸ்டர் திரைப்படமான '2018' ஐ இயக்கியவர் இந்த ஜூட் ஆண்டனி. </p> <p>இந்த படத்தில் விஸ்மயா மோகன்லாலுடன் ஆஷிஷ் ஜோ ஆண்டனி, சாய்குமார், சித்திக், மனோஜ் கே. ஜெயன் மற்றும் ஜாபர் இடுக்கி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.</p><p>தாமஸ் ஸ்காரியா என்ற ஐபிஎஸ் கதாபாத்திரத்தில் மோகன்லால் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். பிரபல பின்னணி இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.</p><p>ஜோமோன் டி. ஜான் ஒளிப்பதிவு செய்ய, சாமன் சாக்கோ படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.</p><p>மார்ஷியல் ஆர்ட்ஸ் உள்ளிட்ட தற்காப்புக் கலைகளில் பயிற்சி பெற்ற விஸ்மயா, இப்படத்தின் சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் சொந்தமாக நடித்துள்ளார்.</p><p>பெங்களூரு, குட்டிக்கானம் மற்றும் கொச்சி ஆகிய பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது</p><p>‘துடக்கம்’ படம் வரும் ஆகஸ்ட் 7ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், துடக்கம் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/ivZ2c69D69E"></iframe></figure>]]></content:encoded></item><item><title>அயோத்தி ராமர் கோவில் நன்கொடை திருட்டில் துறவிகளுக்கு எந்த தொடர்பும் இல்லை -  யோகி ஆதித்யநாத் 
</title><link>https://www.maalaimalar.com/news/national/ayodhya-donation-scam-probe-finds-no-involvement-of-monks-says-yogi-adityanath</link><comments>https://www.maalaimalar.com/news/national/ayodhya-donation-scam-probe-finds-no-involvement-of-monks-says-yogi-adityanath#comments</comments><guid isPermaLink="false">43c21fd8-5e45-44c7-ae7a-d59045a4ba4a</guid><pubDate>Tue, 04 Aug 2026 20:33:56 +0000</pubDate><atom:updated>2026-08-04T20:33:56.774Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Yogi Adityanath,Ayodhya Ram Temple,யோகி ஆதித்யநாத்,அயோத்தி ராமர் கோவில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/miqbhzbk/tn-12.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[  யோகி ஆதித்யநாத் ]]></media:title><media:description type="html"><![CDATA[  யோகி ஆதித்யநாத் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/miqbhzbk/tn-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/pappu-yadav-stages-unique-protest-in-parliament-over-ram-temple-donation-row">அயோத்தி ராமர் கோவில் நன்கொடை திருட்டு</a> முறைகேட்டில் எந்த ஒரு துறவிக்கும் தொடர்பில்லை என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.</p><h2>விசாரணை</h2><p>அயோத்தி ராமர் கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மற்றும் வழங்கிய நன்கொடை திருடப்பட்டதாக எழுந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><p>கோவிலை நிர்வகித்து வரும் ராம ஜென்மபூமி அறக்கட்டளையை சேர்ந்த ஊழியர்கள் உட்பட 8 பேர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த முறைகேட்டை எழுந்த புகாரை  சிறப்பு விசாரணை குழு விசாரித்து வருகிறது. </p><p>இதில் தொடர்புடைய கூடுதல் நபர்கள் மற்றும் சொத்துக்களை கண்டறிய முழு நிதிப் பரிவர்த்தனைகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.</p> <h2>யோகி ஆதித்யநாத்</h2><p>இந்நிலையில் சிறப்பு விசாரணை குழுவின் முதற்கட்ட அறிக்கையில் இந்த முறைகேட்டில் எந்த ஒரு துறவிக்கும் தொடர்பில்லை என்பது உறுதியாகி உள்ளதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.</p><p>நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "சிறப்பு விசாரணை குழுவின் முதற்கட்ட அறிக்கையின்படி, நன்கொடை முறைகேட்டில் எந்தவொரு சாதுவுக்கோ அல்லது துறவிக்கோ தொடர்பிருப்பது கண்டறியப்படவில்லை" என்று தெரிவித்தார்</p><p>மேலும், சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் உத்தரபிரதேசத்தின் பிம்பத்தை சீர்குலைக்க முயல்வதாக யோகி குற்றம் சாட்டினார்.</p><p>"எதிர்க்கட்சிகளின் இந்த நடவடிக்கை ஜனநாயகத்திற்கும் அரசியலமைப்புக்கும் எதிரானது. இது  அம்பேத்கர் மற்றும் சனாதன உணர்வுகளை இழிவுபடுத்தும் செயலாகும்."</p><p>ஒரு காலத்தில் ஸ்ரீ ராமர் மற்றும் கிருஷ்ணரின் இருப்பையே கேள்வி கேட்டவர்கள், இன்று நம்பிக்கையைப் பற்றிப் பேசுகிறார்கள். அயோத்தியின் வீதிகளையும் சரயு நதியையும் ரத்தத்தால் கறைபடுத்திய பாவத்தை செய்தது சமாஜ்வாதி அரசுதான்" என்று சாடினார்.</p> ]]></content:encoded></item><item><title>ஸ்பெயின் அருகே நடுக்கடலில் பழுதான படகு.. 15 நாட்கள் உணவு, தண்ணீரின்றி 17 அகதிகள் உயிரிழப்பு </title><link>https://www.maalaimalar.com/news/world/north-african-migrants-die-after-15-days-adrift-without-food-or-water</link><comments>https://www.maalaimalar.com/news/world/north-african-migrants-die-after-15-days-adrift-without-food-or-water#comments</comments><guid isPermaLink="false">18e778ad-047f-4d62-b24a-317dca16de62</guid><pubDate>Tue, 04 Aug 2026 20:02:04 +0000</pubDate><atom:updated>2026-08-04T20:02:04.355Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அகதிகள்,refugees,படகு விபத்து,Spain,ஸ்பெயின்,Boat Accident</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/pbdv7n9l/tn-4.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கோப்புப் படம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ கோப்புப் படம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/pbdv7n9l/tn-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வட ஆப்பிரிக்காவில் இருந்து ஸ்பெயினின் பாலேரிக் தீவுகளுக்கு சென்றுகொண்டிருந்த படகு நடுவழியில் பழுதானதில் அதிலிருந்த 17 அகதிகள் 15 நாட்கள் கடலில் உணவு மற்றும் தண்ணீரின்றி தத்தளித்து உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.</p><p>ஸ்பெயின் செய்தி நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  </p><h2>இருவர் மீட்பு </h2><p>ஸ்பெயினின் மல்லோர்கா  தீவுக்கு தென்மேற்கே 12.7 நாட்டிக்கல் மைல் தொலைவில் நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் படகு ஒன்றில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இருவரை ஸ்பெயின் கடற்படை  மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.  </p><p>தாங்கள் பயணித்த படகில் மொத்தம் 19 பேர் இருந்ததாகவும், இன்ஜின் பழுதாகி 15 நாட்களாகக் கடலில் தத்தளித்ததால் உணவு மற்றும் தண்ணீரின்றி மற்ற 17 பேரும் இறந்துவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.  </p><p>மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.  </p> <h2>அகதிகள் நெருக்கடி</h2><p>மறுபுறம், ஸ்பெயினின் இபிஸா தீவுக்கு தென்மேற்கே 30 நாட்டிக்கல் மைல் தொலைவில் 15 வட ஆப்பிரிக்க அகதிகளுடன் வந்த மற்றொரு படகை மீட்புக் குழுவினர் மீட்டனர்.</p><p>இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 3,935 அகதிகளுடன் 211 படகுகள்ஸ் பெயினின் பாலேரிக் தீவுகளுக்கு வந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது.</p><p>ஸ்பெயின் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்பிரிக்க எல்லைப் பகுதியான செவுடாவில் அகதிகள் நெருக்கடி தீவிரமடைந்துள்ளது.</p><p>கடந்த வாரம் மொராக்கோவில் இருந்து சுமார் 72,000 அகதிகள் செவுடாவிற்குள் நுழைந்தனர்.</p><p>இதில் இதுவரை 70,000 பேர் செவுடாவிலிருந்து வெளியேறியுள்ள நிலையில்,<a href="https://www.maalaimalar.com/news/world/60000-refugees-entered-spain-from-morocco-41-tragically-lost-their-lives"> எல்லையைக் கடக்கும் முயற்சியில் </a>உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது.</p><p>மனித கடத்தல் கும்பல்களின் சட்டவிரோத நடவடிக்கைகளே இந்த மனித உரிமை நெருக்கடிக்குக் காரணம் என ஸ்பெயின் அரசு குற்றம்சாட்டியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சக வீரர்கள் இருவரை சுட்டுக் கொன்று சிஆர்பிஎப் வீரர் தற்கொலை.. அசாமில் பயங்கரம் </title><link>https://www.maalaimalar.com/news/national/assam-crpf-camp-shooting-officer-kills-two-colleagues-and-then-himself</link><comments>https://www.maalaimalar.com/news/national/assam-crpf-camp-shooting-officer-kills-two-colleagues-and-then-himself#comments</comments><guid isPermaLink="false">217028bc-b8b8-4ca4-92a3-2bb08cc1a71f</guid><pubDate>Tue, 04 Aug 2026 19:24:40 +0000</pubDate><atom:updated>2026-08-04T19:24:40.573Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தற்கொலை,சிஆர்பிஎப்,சிஆர்பிஎப் வீரர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/g9rzo6wt/tn-9.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சிஆர்பிஎப் வீரர் ]]></media:title><media:description type="html"><![CDATA[ சிஆர்பிஎப் வீரர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/g9rzo6wt/tn-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அசாம் மாநிலத்தில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D">சிஆர்பிஎப் </a>முகாமில், அதிகாரி  ஒருவர் சக வீரர்கள் இருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, தானும் சுட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. </p><h2>சம்பவம் </h2><p>நேற்று காலை 7 மணியளவில், அசாமின் நகோன் மாவட்டம் கதிமாரி பகுதியில் உள்ள சிஆர்பிஎப் 34-வது பட்டாலியன் முகாமின் வாயிலில் இச்சம்பவம் நடந்துள்ளது.</p><p>ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் பல்லானி பிரேமாம்பரம் என்பவர், பணியில் இருந்த சக வீரர்கள் மீது திடீரெனத் தனது துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுள்ளார்.</p><p>இந்தத் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒரு வீரர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p> சக வீரர்களைச் சுட்ட பிறகு, அதிகாரி பிரேமாம்பரம் அதே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.</p> <h2>விசாரணை</h2><p>இச் சம்பவத்தை தொடர்ந்து முகாமில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது. தகவலறிந்த உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணையை தொடங்கினர்.</p><p>அதிகாரி மன அழுத்தத்தால் இவ்வாறு செய்தாரா அல்லது வீரர்களுக்கு இடையே ஏதேனும் தகராறு ஏற்பட்டதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p> <p>மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபட,</p><p>சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணிநேரம்)</p><p>மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணிநேரம்)</p><p>சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண் – 1800-599-0019</p>]]></content:encoded></item><item><title>கஜினி வில்லன்.. நடிகர் பிரதீப் ராவத் ரத்தப் புற்றுநோயால் மறைவு</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/veteran-actor-pradeep-rawat-passes-away-senior-star-dies-in-mumbai-after-battle-with-blood-cancer</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/veteran-actor-pradeep-rawat-passes-away-senior-star-dies-in-mumbai-after-battle-with-blood-cancer#comments</comments><guid isPermaLink="false">4bc36186-4282-41b1-988e-64e467302d46</guid><pubDate>Tue, 04 Aug 2026 18:46:17 +0000</pubDate><atom:updated>2026-08-04T18:46:17.900Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>mumbai,மும்பை,Bollywood actor,Ghajini,Pradeep Rawat,பாலிவுட் நடிகர்,பிரதீப் ராவத்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/4s3vivt0/tn-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரதீப் ராவத்]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரதீப் ராவத்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/4s3vivt0/tn-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மூத்த நடிகர்  பிரதீப் ராவத் (74), ரத்தப் புற்றுநோய் பாதிப்பு காரணமாக நேற்று  மாலை மும்பையில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-cm-vijay-offers-condolences-on-iuml-president-kader-mohideen-sons-death">காலமானார்</a>.</p><p>நான்கு ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயிலிருந்து மீண்ட அவருக்கு, கடந்த ஒன்றரை மாதங்களாக நோய் மீண்டும் தீவிரமடைந்தது. </p><p>மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல்நிலை மோசமடைந்து அவர் நேற்று காலமானார். </p><p>அவருக்குக் கல்யாணி என்ற மனைவியும், விக்ரமாதித்யா என்ற மகனும் உள்ளனர். அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை மும்பையில் நடைபெறவுள்ளது.  </p> <h2>திரைப்பயணம்</h2><p>பி.ஆர்.சோப்ராவின் புகழ்பெற்ற 'மகாபாரதம்' தொடரில் அஸ்வத்தாமன் கதாபாத்திரத்தில் நடித்து தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.</p><p>இந்தியில் அமீர் கான் நடித்த 'லகான்' மூலம் பிரபலமான பிரதீப் ராவத் தமிழில் சூர்யாவின் கஜினியில் இரட்டை வேடத்தில் வில்லனாக மிரட்டியிருந்தார். அமீர் கான் நடிப்பில் அதன் இந்தி ரீமேக்கிலும் அவர் வில்லன் பாத்திரத்தில் நடித்திருந்தார்.</p> <p>தமிழ் சினிமாவில் ‘தொட்டி ஜெயா’ படத்தில் வில்லனாக அறிமுகமான பிரதீப் ராவத், பின்னர் ‘கஜினி’ படத்தில் வில்லனாக மிரட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் என்பது.</p><p>இந்தி, தெலுங்கு, தமிழ் தவிர கன்னடம், மலையாளம், போஜ்புரி மற்றும் நேபாளி மொழிப் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.</p><p>பிரதீப் ராவத்தின் மறைவுக்கு இந்தியா முழுவதும் உள்ள பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item></channel></rss>