<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 30 Jul 2026 09:29:01 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-30-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-30-july-2026#comments</comments><guid isPermaLink="false">bf0c91f5-aaf3-410c-a1d3-867674186d8c</guid><pubDate>Thu, 30 Jul 2026 04:27:27 +0000</pubDate><atom:updated>2026-07-30T09:27:52.225Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/f9fzok5j/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/f9fzok5j/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-government-appoints-over-100-new-principals-in-arts-and-science-colleges">தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 100-க்கும் மேற்பட்ட புதிய முதல்வர்கள் நியமனம்: உயர்கல்வித் துறை நடவடிக்... </a></p><p>*தேர்வான இணைப் பேராசிரியர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டு, இடங்களுக்கான கலந்தாய்வு விரைவில் நடத்தப்பட உள்ளது.</p><p>*ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அனைத்துக் கல்லூரிகளிலும் புதிய நிரந்தர முதல்வர்கள் பணியில் பொறுப்பேற்பார்கள்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-oversees-mou-for-rs-125-crore-international-university-in-velachery" rel="nofollow">சென்னை வேளச்சேரியில் ரூ.125 கோடியில் சர்வதேச பல்கலைக்கழக வளாகம்!- முதலமைச்சர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்</a></p><p>*  1,500 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்.</p><p>*   தமிழ்நாட்டை நிலைநிறுத்துவதில் முக்கியப் பங்காற்றும் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/unnati-hooda-tanvi-sharma-enter-qf-round-in-taipae-open-badminton">தைபே ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறினர் உன்னதி ஹூடா, தன்வி ஷர்மா</a></p><p>* தைபே ஓபன் பேட்மிண்டன் தொடர் தைவானில் நடந்து வருகிறது.</p><p>* சிறப்பாக ஆடிய உன்னதி ஹூடா காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/india-in-commonwealth-games-today">காமன்வெல்த் விளையாட்டு: இந்தியா இன்று பங்கேற்கும் போட்டிகள்</a></p><p>* இந்திய அணி 3 தங்கம், 9 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கம் வென்றுள்ளது.</p><p>* ஈட்டி எறிதல் தகுதிச்சுற்றில் நீரஜ் சோப்ரா இன்று களம் காணுகிறார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-if-rahul-gandhi-makes-a-single-statement-we-will-withdraw-from-the-alliance">ராகுல் காந்தி ஒரு வரி கூறினால் கூட்டணியில் இருந்து விலகுகிறோம்- அன்புமணி ராமதாஸ்</a></p><p>* தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், எங்களை டெல்லிக்கு, பிரதமரை சந்திக்க அழைத்து செல்லட்டும்</p><p>* ராகுல் காந்தி கர்நாடக அரசு மேகதாது அணை கட்டக்கூடாது என்று, ஒரே ஒரு வரி கூறிவிட்டால், நாங்கள் என்.டி.ஏ.வில் இருந்து விலகுகிறோம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennais-gateway-project-to-beautify-the-stretch-from-kathipara-flyover-to-the-airport">கத்திப்பாரா மேம்பாலம் To விமானநிலையம் வரை அழகுபடுத்தும் சென்னையின் கேட்-வே திட்டம்: ரூ.10.50 கோடி ஒதுக்கிய மாநகராட்சி</a></p><p>* தமிழ்நாடு மற்றும் சென்னையின் வரலாற்றுச் சிறப்புகளைப் பிரதிபலிக்கும் தீம் கலைப் படைப்புகள் மற்றும் சின்னங்கள் இங்கு நிறுவப்படவுள்ளன.</p><p>* திட்டத்தின் கீழ் பழுதடைந்த சிமெண்ட் நடைபாதைகள், பயன்பாடற்ற தடுப்புகள், காடாக மண்டிக்கிடக்கும் தேவையற்ற செடிகள் மற்றும் உடைந்த கட்டிடப் பகுதிகள் முற்றிலும் அகற்றப்படும்.  </p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/bihar-bypoll-tension-jan-suraaj-leaders-held-in-pankipur-as-prashant-kishor-challenges-bjp-stronghold">3 மாநில இடைத்தேர்தல் விறுவிறுப்பு.. பிரசாந்த் கிஷோர் போட்டியிடும் தொகுதியில் பரபரப்பு</a></p><p>*இன்று பதிவாகும் வாக்குகள் ஆகஸ்ட் 3ம் அன்று எண்ணப்படுகின்றன.</p><p>*தோல்வி பயத்தால் பீகார் அரசு நடுங்கிக்கொண்டிருக்கிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-will-present-medals-to-police-personnel-tomorrow">முதலமைச்சர் விஜய் நாளை போலீசாருக்கு பதக்கங்கள் வழங்குகிறார்- அணிவகுப்பு மரியாதையும் நடைபெறுகிறது</a></p><p>* முதலமைச்சர் விஜய் நாளை மாலை 4 மணி அளவில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடைபெறும் போலீசாருக்கு பதக்கங்கள் வழங்கும் விழாவில் பங்கேற்று பதக்கங்கள் வழங்க உள்ளார்.</p><p>* முதலமைச்சர் விஜய் ராஜரத்தினம் ஸ்டேடியத்துக்கு வந்ததும் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை நடைபெறுகிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-forms-7-member-expert-panel-on-el-nino-impact">’எல் நினோ’ தாக்கம் குறித்து ஆராய 7 பேர் கொண்ட நிபுணர் குழு அமைப்பு: தமிழகஅரசு அதிரடி உத்தரவு!... </a></p><p>*தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கீழ் இந்த நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.</p><p>*‘தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்' இக்குழுவின் முக்கிய நிபுணராக நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/parliament-clash-opposition-uproar-over-july-20-student-protest-crackdown-stalls-lok-sabha">மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு அமித் ஷா பொறுப்பேற்க வேண்டும்.. அமளியால் மக்களவை ஒத்திவைப்பு</a></p><p>*அமித் ஷா நாடாளுமன்றத்திற்கு நேரில் வந்து எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு விளக்கமளிக்க வேண்டும்</p><p>* பெல்லட் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களும் பயன்படுத்ததட்தற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/nyt-india-protests-pakistani-kashmir-reference-in-nyt-report">POK-ஐ 'பாகிஸ்தானி காஷ்மீர்' என குறிப்பிட்ட நியூயார்க் டைம்ஸ்.. இந்தியா கடும் கண்டனம்<br></a><br>*உள்ளாட்சித் தேர்தல் தொடங்கும் வேளையில் 'பாகிஸ்தானி காஷ்மீரில்' வன்முறை வெடித்தது.</p><p>*'பாகிஸ்தானி காஷ்மீர்' என்று ஒன்று கிடையாது. 'பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்' மட்டுமே உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-chicken-shops-to-remain-open-despite-shutdown-call" rel="nofollow">சென்னையில் சிக்கன் கடைகள் நாளை வழக்கம் போல் செயல்படும்- வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு</a></p><p>* சிறு ஓட்டல்கள் முதல் நட்சத்திர ஓட்டல்கள் வரை கோழி இறைச்சி பயன்பாடு உள்ளது. </p><p>* ஓட்டல்கள், சிறு சிறு சில்லறை விற்பனையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-announced-dmk-protest-against-tvk-govt-on-august-3rd">த.வெ.க. அரசைக் கண்டித்து ஆக. 3-ல் தஞ்சாவூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு</a></p><p>* மாநிலத்தின் முக்கியப் பிரச்சனையில் யார் குரலையும் கேட்காமல் indifferent ஆகவும், inactive ஆகவும் இந்த அரசு இருப்பது நல்லதல்ல.</p><p>* அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கும் தி.மு.க.தான் அழைப்பு விடுக்க வேண்டும் என முதலமைச்சர் எதிர்பார்க்கிறாரா? அரசால் முடியாது என்றால் சொல்லிவிடுங்கள்; </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-super-speciality-seats-to-central-pool-controversy" rel="nofollow">சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்கள்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்</a></p><p>*  திமுக ஆட்சியில் எந்த எதிர்ப்பும் இன்றி மத்திய அரசிற்கு சரண்டர் செய்யப்பட்டன.</p><p>* கட் ஆஃப் அதிகமாக இருப்பதால் மாணவர்களை முழுமையாக சேர்க்க முடியவில்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/grammy-racism-row-bts-to-boycott-after-recording-academy-adds-separate-best-asian-pop-category">இனப்பாகுபாடு?.. அடுத்த ஆண்டு கிராமி விருதுகளை புறக்கணித்த BTS இசைக்குழு</a></p><p>*ஜின், சுகா, ஜே ஹோப், ஜிமின், வி, ஜங்குக் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.</p><p>*கிராமி விருதுகளுக்கு தங்கள் படைப்பை சமர்ப்பிக்க போவதில்லை என்று அறிவித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/plan-for-officials-to-conduct-on-site-inspections-of-370-lakh-houses">மின் கட்டண உயர்வு புகார்: 3.70 லட்சம் வீடுகளில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய திட்டம்</a></p><p>* மின் கட்டண உயர்வு புகார் வந்ததை தொடர்ந்து 3.70 லட்சம் வீடுகளில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய மின்சார வாரியம் உத்தரவிட்டு உள்ளது.</p><p>* ஆய்வின்போது ஏதேனும் தவறுகள் கண்டறியப்பட்டால், அவற்றை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-anticipatory-bail-petition-dismissed">டாஸ்மாக் முறைகேடு வழக்கு : செந்தில் பாலாஜியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி</a></p><p>* முறைகேடு நடந்துள்ளதற்கும், அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதற்கும் ஆதாரங்கள் உள்ளன. </p><p>* குற்றம்சாட்டப்பட்டவர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர் என்பதற்கு முகாரந்திரம் உள்ளது. </p> <p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/ajinkya-rahane-retirement-india-batter-quits-all-formats-of-international-cricket">சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் ரஹானே!<br></a></p><p>*அஜிங்க்யா' என்றால் 'வெல்ல முடியாதவன்' என்று பொருள்.</p><p>* கேப் எண் 278 (ரஹானேவின் தொப்பி எண்), இத்துடன் விடைபெறுகிறது.   <br></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/assam-flood-death-toll-rises-to-78-heavy-rain-warning-issued">அசாம் வெள்ளப்பெருக்கில் உயிரிழப்பு எண்ணிக்கை 78 ஆக உயர்வு: கனமழை எச்சரிக்கை விடுத்தது வானிலை மையம்!...</a></p><p>*மாநிலம் முழுவதும் '3,00,031 பேர்' வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>*அசாம் மற்றும் அதன் சுற்றியுள்ள வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்கு மேலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-praise-to-doctor-muthulakshmi-reddy-birthday">டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாள்- முதலமைச்சர் விஜய் புகழாரம்</a></p><p>* முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.  </p><p>* பெண்களின் சமூக முன்னேற்றத்திற்காகவும் ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும் முத்துலட்சுமி ரெட்டி ஆற்றிய மகத்தான சேவைகளை அவர் நினைவு கூர்ந்துள்ளார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/cjp-new-protest-warning-delhi-jantar-mantar-security">CJP புதிய போராட்டம் எச்சரிக்கை: டெல்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் உச்சகட்ட பாதுகாப்பு!</a></p><p>*தற்போது நிலுவையில் உள்ள வழக்குகளை மையமாக வைத்து மீண்டும் அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.</p><p>*பாஜனதா ஆளும் மாநிலங்களில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கைது செய்யப்பட்டு வருவதாக சிஜேபி குற்றம் சாட்டியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/nasa-to-livestream-total-solar-eclipse-on-august-12">ஆகஸ்ட் 12-ல் முழு சூரிய கிரகணத்தை நேரலையில் ஒளிபரப்பும் நாசா!</a></p><p>*சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு கடந்து செல்லும் போது, நிலவின் நிழல் பூமியின் மீது விழுவதால் இந்த முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது.</p><p>*இந்திய நேரப்படி ஆகஸ்ட் 12 ஆம் தேதி இரவு இந்த நிகழ்வு நடைபெறுவதால், இந்தியாவில் இதனை நேரில் பார்க்க முடியாது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-metro-phase-2-works-cm-vijay-orders-speedy-completion">சென்னை மெட்ரோ 2-ம் கட்டப் பணிகள்: விரைந்து முடிக்க முதலமைச்சர் விஜய் உத்தரவு!... </a></p><p>*கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகள், அவசரகால பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பயணிகளுக்கான வசதிகளை விரிவாகக் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.</p><p>*முதலமைச்சரைக் கண்ட பயணிகள் அவருடன் ஆர்வத்துடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/pok-human-rights-abuses-over-30-civilians-killed-in-pakistan-security-forces-firing">POK பேரணி.. பாகிஸ்தான் பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் 30 பொதுமக்கள் பலி</a></p><p>*இணையம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளை பாகிஸ்தான் அரசு முற்றிலும் முடக்கியுள்ளது.</p><p>* 33க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/us-iran-airstrikes-us-hits-iranian-targets-after-jordan-base-missile-attack">ஜோர்டான் சம்பவத்துக்கு பதிலடி.. ஈரான் மீது மீண்டும் முழுவீச்சில் அமெரிக்கா தாக்குதல்</a></p><p>*டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு இடையேயான சந்திப்பைத் தொடர்ந்து தாக்குதல்கள் மீண்டும் தொடங்கியுள்ளன</p><p>* குடியிருப்புப் பகுதி மீது ஏவுகணை தாக்கியதாகவும் ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-diesel-prices-in-chennai">சென்னையில் இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்</a></p><p>*பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.</p><p>*கடல்வழிப்பாதையில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/telegram-international-warrant-shock-russia-targets-pavel-durov-over-alleged-terror-support">பயங்கரவாதத்திற்கு உதவியதாக டெலிகிராம் நிறுவனருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த ரஷியா</a></p><p>*ரஷியாவில் பிறந்த பாவெல் தற்போது பிரஞ்சு, ஐக்கிய அரபு அமீரக குடியுரிமையைக் கொண்டு வெளிநாட்டில் வாழ்ந்து வருகிறார்.</p><p>*பிரான்சிலும் துரோவ் மீது விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-30-07-2026">GOLD PRICE TODAY : இன்று அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... எவ்வளவு தெரியுமா?</a></p><p>* சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. </p><p>* ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-irregularities-case-senthil-balajis-anticipatory-bail-plea">டாஸ்மாக் முறைகேடு வழக்கு- செந்தில் பாலாஜி முன்ஜாமின் கோரி மனு</a></p><p>* டாஸ்மாக் மதுபான கொள்முதல், டெண்டர் உள்ளிட்டவற்றில் மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி, டாஸ்மாக் முன்னாள் எம்.டி.விசாகன் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. </p><p>* டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தி.மு.க. முன்னால் அமைச்சர் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமின் மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/notice-issued-to-woman-who-worked-for-125-days-demanding-tax-payment-of-rs-2-75-crore">ஊரக வேலை திட்டத்தில் பணியாற்றும் பெண்ணுக்கு ரூ.2.75 கோடி வரி செலுத்தும்படி நோட்டீஸ்</a></p><p>* தனது வங்கி கணக்கு முடக்கப்பட்டதால் அதில் இருந்து கூலி பணத்தை எடுக்க முடியாமல் திரும்பி உள்ளார்.</p><p>* 125 நாள் வேலை செய்யும் பெண்ணுக்கு ரூ.2.75கோடி ஜி.எஸ்.டி. செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 100-க்கும் மேற்பட்ட புதிய முதல்வர்கள் நியமனம்: உயர்கல்வித் துறை நடவடிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-government-appoints-over-100-new-principals-in-arts-and-science-colleges</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-government-appoints-over-100-new-principals-in-arts-and-science-colleges#comments</comments><guid isPermaLink="false">ab734995-0679-4c52-ab9e-ff48c05b7e61</guid><pubDate>Thu, 30 Jul 2026 09:24:50 +0000</pubDate><atom:updated>2026-07-30T09:24:50.961Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,government arts colleges,உயர்கல்வித் துறை,Principals appointed,தமிழக அரசு கலை கல்லுரி,முதல்வர்கள் நியமனம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/igpg7qnl/dd.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Principals appointed]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/igpg7qnl/dd.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நீண்ட நாட்களாக காலியாக உள்ள கல்லூரி முதல்வர் பணியிடங்களை நிரப்பும் வகையில் 100-க்கும் மேற்பட்ட புதிய முதல்வர்களை நியமிப்பதற்கான பட்டியலை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.</p><h2><strong>நீண்ட நாள் கோரிக்கை:</strong></h2><p>தமிழ்நாட்டில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் 7 அரசு கல்வியல் கல்லூரிகளில் சுமார் 125-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் நிரந்தர முதல்வர்கள் இன்றி பொறுப்பு முதல்வர்கள் மூலமே இயங்கி வந்தன. இதனால் கல்வி நிர்வாகம், மாணவர் சேர்க்கை மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த முடிவுகளை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.</p><h2><strong>பணிமூப்பு பட்டியல் பிரச்சனை தீர்வு:</strong></h2><p>பேராசிரியர்களின் பணிமூப்பு சார்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் விதித்திருந்த தடைகள் விலக்கப்பட்டதைத் தொடர்ந்து, இப்பதவி உயர்வுக்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.</p><h2><strong>அரசாணை வெளியீடு:</strong></h2><p>இரண்டாம் நிலை கல்லூரிகளுக்கு முதல்வர்களாகப் பதவி உயர்வு வழங்குவதற்காக 129 இணைப் பேராசிரியர்கள் கொண்ட தகுதிப் பட்டியலுக்கு  உயர்கல்வித் துறை ஒப்புதல் அளித்து அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது.</p><h2><strong>கலந்தாய்வு நடைமுறை:</strong></h2><p>தேர்வான இணைப் பேராசிரியர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டு, இடங்களுக்கான கலந்தாய்வு விரைவில் நடத்தப்பட உள்ளது.</p><h2><strong>ஆகஸ்ட் இறுதிக்குள் பணி நியமனம்:</strong></h2><p>ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அனைத்துக் கல்லூரிகளிலும் புதிய நிரந்தர முதல்வர்கள் பணியில் பொறுப்பேற்பார்கள் என்று கல்லூரி கல்வி ஆணையரகம் மற்றும் உயர்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த நியமனங்களின் மூலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் நிர்வாகச் சிக்கல்கள் தீர்ந்து, கல்வித் தரம் மேலும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை வேளச்சேரியில் ரூ.125 கோடியில் சர்வதேச பல்கலைக்கழக வளாகம்!- முதலமைச்சர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-oversees-mou-for-rs-125-crore-international-university-in-velachery</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-oversees-mou-for-rs-125-crore-international-university-in-velachery#comments</comments><guid isPermaLink="false">819049a6-c8c0-4e76-a683-504d677c614b</guid><pubDate>Thu, 30 Jul 2026 09:19:59 +0000</pubDate><atom:updated>2026-07-30T09:19:59.440Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Memorandum of Understanding,முதலமைச்சர் விஜய்,tn cm vijay,புரிந்துணர்வு ஒப்பந்தம்,சர்வதேச பல்கலைக்கழக வளாகம்,international university campus</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/64s4yf2s/Vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/64s4yf2s/Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் தொழில் வழிகாட்டி நிறுவனத்தில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது.</p><p>இதில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் இன்று காலை அங்கு நேரில் சென்றிருந்தார். அவரை தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, தலைமைச் செயலாளர் சாய்குமார் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.</p><p>அதன் பிறகு நிகழ்ச்சிகளில் 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது வழிகாட்டி நிறுவனத்துக்கும், முன்னணி உலகளாவிய நிறுவனங்களுக்கும் இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.</p><p>இந்த உலகளாவிய திறன் மையங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், உற்பத்தித் துறை மற்றும் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF" rel="nofollow">உயர்கல்வி</a> உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய இந்த முதலீடுகள் வாயிலாக, தமிழ்நாட்டில் 2,920-க்கும் மேற்பட்டோருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><h2>ஒப்பந்தங்கள்</h2><p>சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சப் நிறுவனம், தனது உலகளாவிய திறன் மையம் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த நார்டெக்ஸ் நிறுவனம், தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் ஆகியவற்றை  தமிழ்நாட்டில் முதன்முறையாக நிறுவ முன்வந்துள்ளன.</p><p>சப் நிறுவனம் அமைக்கவுள்ள மையத்தின் மூலம் 220 பேருக்கும், நார்டெக்ஸ் நிறுவனம் அமைக்கவுள்ள மையத்தின் மூலம் 1,000 பேருக்கும் வேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு நிறுவனங்களின் முதலீடுகள் மூலம் மொத்தம் 1,220 உயர்தர ஊதியம் வழங்கும் வேலை வாய்ப்பு கள் உருவாக்கப்பட உள்ளன.</p><p>இந்த முதலீடுகள், உயர்மதிப்புடைய உலக ளாவிய திறன் மையங்கள் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கான முக்கிய சர்வதேச மையமாக சென்னை நகரின் நிலையை மேலும் வலுப்படுத்தும். </p><p>புத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்ட தொழில் வளர்ச்சியை ஊக்குவித்தல், அறிவுசார் திறன் சார்ந்த முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் திறன்மிக்க மனிதவளத்திற்கு உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-metro-phase-2-works-cm-vijay-orders-speedy-completion" rel="nofollow">முதலமைச்சர் விஜய்</a> தலைமையிலான அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்றாற்போல், இம்முதலீடுகள் அமைந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>மேலும், உயர்கல்வித் துறையில், ஆஸ்திரேலி யாவின் முன்னணி ஆராய்ச்சி சார்ந்த பல் கலைக்கழகங்களில் ஒன்றான மேற்கு ஆஸ்தி ரேலியா பல்கலைக்கழகம், இந்தியாவில் தனது வளாகத்தை சென்னை நகரில் நிறுவ உள்ளது. இது தமிழ்நாட்டில் அமையவுள்ள முதல் சர்வதேசப் பல்ல கலைக்கழக வளாகமாகும்.  1911-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம், உலகப்பல்கலைக்கழக தரவரிசை 2026-ல் 77-வது இடத்தைப் பிடித்துள்ளது. </p><p>சென்னை வேளச்சேரியில் சுமார் ரூ.125 கோடி முதலீட்டில் இப்பல்கலைக்கழகம் உருவாக்கப்பட உள்ளது. இதன்மூலம் 200-க்கும் மேற்பட்டோருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>தொழில்துறை அமைச்சர்  கீர்த்தனா கடந்த ஜூன் மாதம் தென் கொரியாவிற்கு மேற்கொண்ட பயணத்தின் தொடர்ச்சியாக, அந்நாட்டின் முன்னணி வாகன உதிரிபாக உற்பத்தி நிறுவனமான மோட்டிவ்லிங்க், காஞ்சிபுரம் மாவட்டம் சிப்காட் பிள்ளை ப்பாக்கம் தொழிற்பூங்காவில் ரூ.300 கோடி முதலீட்டில் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன்மூலம் 1,500 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்.</p><p>இந்த முதலீடுகள், தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதோடு, உலகளாவிய திறன் மையங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உயர்கல்வி மற்றும் மேம்பட்ட உற்பத்தித் துறைகளுக்கான உலகளாவிய மையமாக தமிழ்நாட்டை நிலைநிறுத்துவதில் முக்கியப் பங்காற்றும் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.</p><p>மேலும், இந்நிறுவனங்களின் முதலீடுகளை எளிதாக்குவதற்கும், அவற்றின் செயல்பாடுகள் தமிழ்நாட்டில் வெற்றிகரமாக அமைய தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து வழங்கும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உறுதியளித்தார்.</p>]]></content:encoded></item><item><title>காவிக்கு மாற்றப்பட்ட ஜெர்சி - ஹாக்கி இந்தியா விளக்கம்!</title><link>https://www.maalaimalar.com/sports/jersey-changed-to-saffron-hockey-india-explains</link><comments>https://www.maalaimalar.com/sports/jersey-changed-to-saffron-hockey-india-explains#comments</comments><guid isPermaLink="false">447a0228-be51-4a2d-9c58-d2d7d7868edc</guid><pubDate>Thu, 30 Jul 2026 09:13:34 +0000</pubDate><atom:updated>2026-07-30T09:13:34.666Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜெர்சி,Hockey India,ஹாக்கி இந்தியா,Saffron,Jersey,காவி,நீலம்,blue</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/xlbwgcim/New-Project-2026-07-30T142422.517.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காவிக்கு மாற்றப்பட்ட ஜெர்சி - ஹாக்கி இந்தியா விளக்கம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/xlbwgcim/New-Project-2026-07-30T142422.517.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய ஹாக்கி அணியின் ஜெர்சி நீல நிறத்தில் இருந்து, காவி நிறத்திற்கு மாற்றப்பட்டதற்கான காரணத்தை ஹாக்கி இந்தியா விளக்கியுள்ளது. </p><p>தற்போது ஹாக்கி மைதானங்களும் (நீல நிறம்), வீரர்களின் ஜெர்சியும் ஒரேநிறத்தில் இருப்பதால், பந்தை பாஸ் செய்வது, வீரர்களை அடையாளம் காண்பது சிரமமாக இருப்பதாக பயிற்சியாளர்களும், வீரர்களும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. </p><p>இதனையொட்டியே, மாற்று நிறங்களாக மஞ்சள் அல்லது காவி நிறத்தைப் பயன்படுத்தலாம் எனப் பரிந்துரைக்கப்பட்டதாகவும், அதில் காவி இந்தியாவின் தேசிய கொடியில் இருப்பதால், தைரியம், தியாகம் மற்றும் தேசியப் பெருமிதத்தை அடையாளப்படுத்துவதால் அந்த நிறம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஹாக்கி இந்தியா விளக்கம் அளித்துள்ளது. </p><h2>நிறம் மாற்றம்</h2><p>2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 30 வரை பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெறவுள்ள FIH உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் பங்கேற்கும் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகளுக்கு இந்த புதிய காவி நிற ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.</p><p>இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக இதற்கு பெரும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதுமையிலும் ஓயாத ஓட்டம்.. 80 வயதில் 16 மணி நேரம் டாக்ஸி ஓட்டும் முதியவர்!</title><link>https://www.maalaimalar.com/news/national/80-year-old-kolkata-taxi-driver-works-16-hours</link><comments>https://www.maalaimalar.com/news/national/80-year-old-kolkata-taxi-driver-works-16-hours#comments</comments><guid isPermaLink="false">e56adff3-e993-470d-a512-c0f0ea614633</guid><pubDate>Thu, 30 Jul 2026 08:52:01 +0000</pubDate><atom:updated>2026-07-30T08:52:01.299Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கொல்கத்தா,Kolkata,TaxiDriver,RabindranathSarkar,டாக்ஸிடிரைவர்,SupportSarkar,ரவீந்திரநாத்சர்க்கார்,SeniorCitizens,ElderMan</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/r43t1wuo/Kolkata-TaxiDriver" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kolkata TaxiDriver]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/r43t1wuo/Kolkata-TaxiDriver?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கொல்கத்தாவை சேர்ந்த 80 வயது டாக்சி டிரைவர் சைதாலி போஸ் என்ற பயனர் 80 வயதான டிரைவர் ரவீந்திரநாத் சர்க்கார் என்ற டிரைவரின் வாழ்க்கையை ஆவணப்படுத்தி உள்ளார். </p><p>தினமும் காலை 6 மணிக்கு, ரவீந்திரநாத் சர்க்கார் வாடகை டாக்சியில் கொல்கத்தா வீதிகளில் பயணிக்க தொடங்குகிறார்.</p><h2><strong>வாழ்வாதாரத்திற்காகத் தொடரும் போராட்டம்:</strong></h2><p>கொல்கத்தாவைச் சேர்ந்த 80 வயது டாக்ஸி ஓட்டுநர் ரவீந்திரநாத் சர்க்காரின் கடினமான வாழ்க்கை நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. </p><p>சைதாலி போஸ் என்ற பயனர், இந்த மூத்த ஓட்டுநரின் அன்றாட வாழ்க்கையையும், அவரது 77 வயது மனைவியுடன் வசிக்கும் எளிய சூழலையும் நேரில் கண்டு பகிர்ந்துள்ளார்.</p><h2><strong>அதிகாலை முதல் நள்ளிரவு வரை ஓயாத உழைப்பு:</strong></h2><p>தினமும் காலை 6 மணிக்குத் தனது வாடகை டாக்ஸியில் கொல்கத்தா வீதிகளில் பயணிக்கத் தொடங்கும் ரவீந்திரநாத், சுமார் 16 மணி நேரக் கடுமையான வேலைக்குப் பிறகு இரவு 10 அல்லது 11 மணி அளவிலேயே தனது வீட்டிற்குத் திரும்புகிறார்.</p><h2><strong>தினசரிச் செலவுகள்:</strong></h2><p>கடந்த 52 ஆண்டுகளாகத் தொடர்ந்து டாக்ஸி ஓட்டி வரும் இவர், சொந்த வாகனம் இல்லாததால் தினசரி ஒரு குறிப்பிட்ட தொகையை வாகன வாடகையாகச் செலுத்த வேண்டும். </p><p>அதோடு எரிபொருள் செலவுகளையும் அவரே ஏற்பதால், இச்செலவுகளுக்குப் பின் கையில் மிகக் குறைந்த பணமே எஞ்சுகிறது.</p><h2><strong>மருந்து வாங்கக்கூடப் பணமின்றித் தவிப்பு:</strong></h2><p>வயதான காரணமாகக் கைகள் நடுங்கினாலும், மூச்சுவிடச் சிரமப்பட்டாலும் பசியற்ற வாழ்க்கைக்காக மிகுந்த சிரமத்துடன் அவர் வாகனம் ஓட்டி வருகிறார். </p><p>கையில் போதியப் பணம் இல்லாததால், தனக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துகளைக்கூட அவரால் வாங்க முடிவதில்லை.</p><h2><strong>"உங்களுக்குச் சரியெனத் தோன்றும் தொகையைக் கொடுங்கள்":</strong></h2><p>கட்டணத்தைப் பொறுத்தவரை, இவர் பயணிகளிடம் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கேட்டு வற்புறுத்துவதில்லை. மாறாக, அவர்களிடம் மிகுந்த எளிமையுடன், "உங்களுக்குச் சரியெனத் தோன்றும் தொகையைக் கொடுங்கள்" என்று கூறி நெகிழ வைக்கிறார்.</p><h2><strong>முதிய தம்பதிக்குக் குவியும் நெட்டிசன்களின் ஆதரவு:</strong></h2><p>இந்த முதிய தம்பதியின் வறுமை நிலையை அறிந்த பலர், அவர்களுக்கு உதவ முன்வருமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். </p><p>இதைப் பார்த்த சமூக வலைத்தளவாசிகள் பலர், அந்த முதிய தம்பதிக்குத் தங்களால் இயன்ற நிதி உதவிகளையும், ஆதரவையும் வழங்கி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>இனி ஆன்லைனில்.. அனைத்து கோவில்களுக்கும் பொதுவான டெண்டர் முறை- அமைச்சர் ரமேஷ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/common-tender-system-for-all-temples-through-online-minister-ramesh</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/common-tender-system-for-all-temples-through-online-minister-ramesh#comments</comments><guid isPermaLink="false">679f7206-3f75-4c3f-bb2a-56e59b3cb992</guid><pubDate>Thu, 30 Jul 2026 08:35:41 +0000</pubDate><atom:updated>2026-07-30T08:35:41.394Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அறநிலையத்துறை,tender,Hindu Religious Charities Department,அமைச்சர் ரமேஷ்,Minister Ramesh,டெண்டர் முறை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/s9esz1zo/Ramesh.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Ramesh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/s9esz1zo/Ramesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைச்சர் ரமேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><h2>பொதுவான டெண்டர்</h2><p>அனைத்து கோவில்களுக்கும் டெண்டர் வழிகாட்டுமுறையில் சில மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறேன். அதன்படி பார்க்கிங், மொட்டை போடுதல், கடைகள் அமைப்பது உள்ளிட்டவற்றிற்கு பொதுவான <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D" rel="nofollow">டெண்டர்</a> முறை கொண்டு வரப்பட்டு உள்ளது.</p><p>அனைத்து கோவில்களுக்கும் உறுதிமொழி படிவங்கள் டெண்டருக்கான விண்ணப்பங்கள் எல்லாவற்றுக்கும் முறையான ஒரே மாதிரியான படிவங்களை கொண்டு வந்துள்ளோம். </p><p>தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அதை கொண்டு வந்துள்ளோம். <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/hindu-religious-charitable-endowments-department-extension-of-deadline-to-apply-for-trustee-posts-in-214-temples" rel="nofollow">இந்து சமய அறநிலையத்துறை</a>யில் இருக்கக் கூடிய அனைத்து டெண்டர்களும் இனிமேல் ஆன்லைனில் நடைபெறும்.</p><p>ஆன்-லைனில் டெண்டருக்கான ஒப்பந்தப் புள்ளி  கோருதலும் நடக்கும், அதற்கான ஏலமும் ஆன்-லைனில் நடைபெறும். </p><p>இதற்கு முன்பு பல கோவில்களில் இ.எம்.டி. என்கிற வைப்புத்தொகை கோவிலுக்கு கோவில் சில இடங்களில் மாறுபட்டு இருந்தது. இப்போது தமிழ்நாடு முழுவதும் பொதுவாக கொண்டு வந்துள்ளோம். </p><p>அனைத்து டெண்டர்களுக்கும் ஜி.எஸ்.டி, பான் கட்டாயம். அது இல்லாமல் எந்த டெண்டரையும் அனுமதிக்க மாட்டோம். அதேபோல் ஒருவருக்கே காண்டிராக்ட் கொடுக்காமல் 2-3 பேருக்கு பிரித்து கொடுப்பதற்கான வழிமுறைகளை கொண்டு வந்துள்ளோம். டெண்டரில் உள்ள விதிகளை மீறினால் அபராதம் விதிக்கும் நடைமுறையும் கொண்டு வந்துள்ளோம். </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ராகுல் காந்தி ஒரு வரி கூறினால் கூட்டணியில் இருந்து விலகுகிறோம்- அன்புமணி ராமதாஸ் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-if-rahul-gandhi-makes-a-single-statement-we-will-withdraw-from-the-alliance</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-if-rahul-gandhi-makes-a-single-statement-we-will-withdraw-from-the-alliance#comments</comments><guid isPermaLink="false">11b5ca90-a677-4c62-a0fb-67bf7eac4d9d</guid><pubDate>Thu, 30 Jul 2026 08:35:11 +0000</pubDate><atom:updated>2026-07-30T08:35:11.850Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,மேகதாது அணை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/p9xxte5o/Anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ் ]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/p9xxte5o/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>ராகுல் காந்தி கர்நாடக அரசு மேகதாது அணை கட்டக்கூடாது என்று, ஒரே ஒரு வரி கூறிவிட்டால், நாங்கள் என்.டி.ஏ.வில் இருந்து விலகுகிறோம் என்று அன்புமணி கூறியுள்ளார்.</aside><h2><strong>தமிழ்நாட்டுக்கு பாதகம்</strong></h2><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> இன்று சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் சென்றார். முன்னதாக அவர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-</p><p>முதலமைச்சர் விஜய், கர்நாடகா சென்று, கர்நாடக முதலமைச்சரை சந்தித்து பேசிவிட்டு, மேகதாது அணை கட்டும் பகுதியை பார்வையிட்டால், அது தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய ஒரு பாதகமாக இருக்கும். </p><p>மேகதாது அணையை, தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளவில்லை, அங்கீகரிக்கவில்லை. அவ்வாறு அங்கீகரிக்காத ஒன்றுக்காக, பேச்சுவார்த்தை நடத்துவதில், எந்த அர்த்தமும் கிடையாது. அது சம்பந்தமாக பேச்சுவார்த்தை, மத்திய அரசிடம், பிரதமர் மோடியிடம் நடத்த வேண்டும். </p><h2><strong>தமிழ்நாடு விழக்கூடாது</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/மேகதாது-அணை">மேகதாது அணை</a> கட்டுவதற்கு முன்னதாகவே, தமிழ்நாட்டுக்கு, தண்ணீர் கொடுக்க மறுக்கும் கர்நாடகா, அங்கு அணைக்கட்டி விட்டால், நமக்கு குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்காது. மத்தியில் உள்ள பா.ஜ.க., கர்நாடகத்தின் காங்கிரஸ் கூட்டு சதி செய்கின்றனர். இந்த சதியில், தமிழ்நாடு விழக்கூடாது. </p> <p>கர்நாடகா அணையே கட்டக்கூடாது என்று நாம் கூறிக் கொண்டு இருக்கையில், அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்துவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? முதலமைச்சர் விஜய்யை யார் அவ்வாறு வழி நடத்துகிறார்? என்று தெரியவில்லை. இது தவறான ஒரு போக்கு. இது கண்டிக்கத்தக்கது.</p><h2><strong>தைரியம் இருக்கிறதா?</strong> </h2><p>மத்திய மந்திரி நாடாளுமன்றத்தில், ஒரு பொய்யான தகவலை வெளியிட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு, டெல்லியில் உள்ள தமிழ்நாட்டின் மாநிலங்களவை உறுப்பினர்களிடம் பேசிக் கொண்டு இருக்கிறோம். </p><p>தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், எங்களை டெல்லிக்கு, பிரதமரை சந்திக்க அழைத்து செல்லட்டும். நாங்கள் செல்வதற்கு தயாராக இருக்கிறோம். </p><p>அந்தமான் நிக்கோபார் தீவுகளில், காடுகளை அழித்து, கிரேட் நிக்கோபார் திட்டத்தை அமைக்க கூடாது என்று ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் மேகதாது அணை கட்டும் போது 12,500 ஏக்கர் காடுகள், புலிகள் சரணாலயங்கள் 3, அவைகளை எல்லாம் அழித்து, அணை கட்ட வேண்டிய சூழ்நிலை வரும்.</p><p>எனவே மேகதாது அணையை கட்டக்கூடாது என்று சொல்லுவதற்கு ராகுல் காந்திக்கு தைரியம் இருக்கிறதா? இல்லையேல் மாணிக்கம் தாகூர் ஆவது, அதை கூறுவதற்கு தைரியம் இருக்கிறதா? </p><p>ராகுல் காந்தி கர்நாடக அரசு மேகதாது அணை கட்டக்கூடாது என்று, ஒரே ஒரு வரி கூறிவிட்டால், நாங்கள் என்.டி.ஏ.வில் இருந்து விலகுகிறோம்.</p><p>இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>கத்திப்பாரா மேம்பாலம் To விமான நிலையம் வரை அழகுபடுத்தும் சென்னையின் கேட்-வே திட்டம்: ரூ.10.50 கோடி ஒதுக்கிய மாநகராட்சி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennais-gateway-project-to-beautify-the-stretch-from-kathipara-flyover-to-the-airport</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennais-gateway-project-to-beautify-the-stretch-from-kathipara-flyover-to-the-airport#comments</comments><guid isPermaLink="false">a07e2f0b-aa35-48fb-b382-b77183e4482f</guid><pubDate>Thu, 30 Jul 2026 08:22:13 +0000</pubDate><atom:updated>2026-07-30T08:22:13.709Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Corporation,சென்னை மாநகராட்சி,சென்னை விமான நிலையம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/bpbbaqd8/guindy.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கத்திப்பாரா மேம்பாலம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கத்திப்பாரா மேம்பாலம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/bpbbaqd8/guindy.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>சென்னைக்கு விமானம் மூலம் வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு, நகரத்திற்குள் நுழையும் போதே மறக்க முடியாத மற்றும் வரவேற்கும் விதமான அழகிய அனுபவத்தை வழங்கும் நோக்கில் சென்னை மாநகராட்சி புதிய பொலிவூட்டும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.</aside><h2><strong>‘கேட்-வே ஆப் சென்னை’</strong></h2><p>கத்திப்பாரா மேம்பாலம் முதல் சென்னை சர்வதேச விமான நிலையம் வரையிலான 4.8 கி.மீ தூரப் பகுதியை ரூ.10.50 கோடி மதிப்பீட்டில்  ‘கேட்-வே ஆப் சென்னை’ என்ற பெயரில் நவீன முறையில் அழகுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>இத்திட்டத்திற்கான பணிகளை விரைவாகவும் திறம்படவும் முடிக்கும் வகையில், <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">சென்னை மாநகராட்சி</a> இதை இரண்டு முக்கியப் தொகுப்புகளாகப் பிரித்து உள்ளது.</p><p>முதலாவதாக, விமான நிலையத்திலிருந்து கத்திப்பாரா வரையிலான சாலையின் இருபுறமும் உள்ள நடைபாதைகள், பசுமைப் பகுதிகள் மற்றும் மின் விளக்கு அமைப்புகளை மேம்படுத்துவதற்காகத் தனியாக ரூ.5.65 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.</p><h2><strong>‘வி.ஐ.பி. பூங்கா’</strong></h2><p>2-வதாக விமான நிலையத்தின் வி.ஐ.பி. கேட் அருகே உள்ள சுமார் 1 ஏக்கர் பரப்புடைய ‘வி.ஐ.பி. <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/parks-and-car-parking-facilities-under-flyovers-in-chennai-city">பூங்கா</a>’ மற்றும் அதன் அருகில் உள்ள மாநகராட்சிப் பூங்கா ஆகியவற்றை அதி நவீன வசதிகளுடன் புதுப்பிப்பதற்காக ரூ. 4.92 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>ஐதராபாத் மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் விமான நிலையத்தில் இருந்து நகருக்குள் செல்லும் வழியில் தனித்துவமான வரவேற்புப் பகுதிகள் இருப்பது போல, சென்னைக்குள் நுழையும் ஒவ்வொரு நபரும் எமது ஊரின் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் உணரும் வகையிலான சூழலை உருவாக்குவதே இதன் முதன்மை நோக்கமாகும்.</p><p>இதற்காக தமிழ்நாடு மற்றும் சென்னையின் வரலாற்றுச் சிறப்புகளைப் பிரதிபலிக்கும் தீம் கலைப் படைப்புகள் மற்றும் சின்னங்கள் இங்கு நிறுவப்படவுள்ளன.</p><p>இத்திட்டத்தின் கீழ் பழுதடைந்த சிமெண்ட் நடைபாதைகள், பயன்பாடற்ற தடுப்புகள், காடாக மண்டிக்கிடக்கும் தேவையற்ற செடிகள் மற்றும் உடைந்த கட்டிடப் பகுதிகள் முற்றிலும் அகற்றப்படும்.  </p><p>அதற்குப் பதிலாக அகலமான நடைபாதைகள், பூச்செடிகள், அலங்கார மரங்கள், புல்வெளிகள் மற்றும் தானியங்கி நீர்ப்பாசன வசதிகள் அமைக்கப்பட்டு அப்பகுதி பசுமையாக்கப்படும். மேலும், இரவு நேரங்களில் அழகூட்டும் அலங்கார மின்விளக்குகள், பயணிகள் அமரப் பெஞ்சுகள், தகவல் பலகைகள் மற்றும் சிற்பங்கள் நிறுவப்படும். நங்கநல்லூர் சிக்னல் அருகில் உள்ள பழமையான காவல் சாவடி மற்றும் மின் கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டு, அப்பகுதியில் கைவிடப்பட்ட வாகனங்கள் மற்றும் கழிவுகள் அகற்றப்பட்டு, பழுதடைந்த கழிப்பறைகளும் புனரமைக்கப்படும்.</p><p>இப்பணிகளைத் தொடங்குவதற்கு முன், போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் மின்கம்பிகள் அல்லது குழாய்களை மாற்றியமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். டெண்டர் இறுதி செய்யப்பட்ட பிறகு, விரைவில் பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>3 மாநில இடைத்தேர்தல் விறுவிறுப்பு.. பிரசாந்த் கிஷோர் போட்டியிடும் தொகுதியில் பரபரப்பு </title><link>https://www.maalaimalar.com/news/national/bihar-bypoll-tension-jan-suraaj-leaders-held-in-pankipur-as-prashant-kishor-challenges-bjp-stronghold</link><comments>https://www.maalaimalar.com/news/national/bihar-bypoll-tension-jan-suraaj-leaders-held-in-pankipur-as-prashant-kishor-challenges-bjp-stronghold#comments</comments><guid isPermaLink="false">117936ed-f3e7-4ebc-834f-0802e6fc7b0b</guid><pubDate>Thu, 30 Jul 2026 08:20:23 +0000</pubDate><atom:updated>2026-07-30T08:20:23.328Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பீகார்,Bihar,by election,பிரசாந்த் கிஷோர்,Prashant Kishor,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/hbbqqaly/tn-13.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரசாந்த் கிஷோர் ]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரசாந்த் கிஷோர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/hbbqqaly/tn-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பீகார், குஜராத், மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள 3 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று பதிவாகும் வாக்குகள் ஆகஸ்ட் 3ம் அன்று எண்ணப்படுகின்றன. </p><h2>காலியான தொகுதிகள்  </h2><p>பீகார் மாநிலத்தின் பங்கிப்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தவர் பாஜகவைச் சேர்ந்த நிதின் நபின். இவர் மாநிலங்களவை எம்.பி.யாக சமீபத்தில் பதவியேற்றார். இதனால் அவரது தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.</p><p>மத்திய பிரதேத்தின் தாட்டியா தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த காங்கிரசைச் சேர்ந்த ராஜேந்திர பாரதி தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் அவரது தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.</p><p>குஜராத்தின் மஞ்சள்பூர் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான யோகேஷ்பாய் நரேந்தாஸ் படேல் சமீபத்தில் காலமானார். இதனால் அவரது தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.</p> <h2>இடைத்தேர்தல்</h2><p>இதைத்தொடர்ந்து அந்த தொகுதிகளுக்கு அறிவித்தபடி இன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை முதல் நடைபெற்று வருகிறது.</p><p>இதில் குறிப்பாக பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள பங்கிபூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரும் ஜன் சுராஜ் கட்சித் தலைவருமான பிரசாந்த் கிஷோர் போட்டியிடுகிறார்.</p><p>முன்னதாக அவரை எதிர்த்து பாஜக சார்பில் அபிஷேக் குமார் சின்ஹா என்பவர் போட்டியிட இருந்த நிலையில் அவர் குடும்ப காரணங்களை தெரிவித்து வாபஸ் பெற்றார். அவருக்கு மாற்றாக நீரஜ் குமார் சின்ஹா என்பவரை பாஜக களம் இறக்கியது.</p><h2>கைது</h2><p>இதனிடையே இன்று வாக்குப்பதிவு தொடங்குவதற்கும் உன் நேற்று இரவே ஜன் சுராஜ் கட்சியின் நிர்வாகிகள் 20 பேர் பாட்னா காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.</p><p>கைது செய்யப்பட்டவர்கள் வாக்குபதிவில் சலசலப்பை ஏற்படுத்த முயன்றதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>செய்தி அறிந்ததும் நள்ளிரவிலேயே பிரசாந்த் கிஷோர் தனது ஆதரவாளர்களுடன் காவல் நிலையத்திற்கு நேரடியாகச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.</p><p>இதுகுறித்து பேட்டியளித்த அவர், "எங்கள் கட்சியின் தொண்டர்கள் ஏதேனும் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது முறைப்படி வழக்குப்பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுங்கள்.</p><p>தோல்வி பயத்தால் பீகார் அரசு நடுங்கிக்கொண்டிருக்கிறது. நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட காரணத்தை காவல்துறை உடனடியாக விளக்க வேண்டும். இல்லையெனில் காவல்துறை மீதே கடத்தல் வழக்கு தொடருவோம்" என எச்சரித்தார்.</p> <h2>பீகார் வாக்குப்பதிவு</h2><p>பங்கிபூர் இடைத்தேர்தலில் 422 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணி வரை தொடரும்.</p><p>காலை 11 மணி வரை சுமார் 11.5 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.</p><p>பல ஆண்டுகளாக பாஜக பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று வந்த ஒரு தொகுதியில், கிஷோரின் நுழைவு போட்டியை விறுவிறுப்பாக்கியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய் நாளை போலீசாருக்கு பதக்கங்கள் வழங்குகிறார்- அணிவகுப்பு மரியாதையும் நடைபெறுகிறது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-will-present-medals-to-police-personnel-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-will-present-medals-to-police-personnel-tomorrow#comments</comments><guid isPermaLink="false">46a95fd1-f6d9-42dc-b464-2e1d11ce2364</guid><pubDate>Thu, 30 Jul 2026 07:57:36 +0000</pubDate><atom:updated>2026-07-30T07:57:36.612Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,முதலமைச்சர் பதக்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/k5t8vwjn/Vijay06.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய் ]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/k5t8vwjn/Vijay06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>முதலமைச்சர் விஜய் நாளை மாலை 4 மணி அளவில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடைபெறும் போலீசாருக்கு பதக்கங்கள் வழங்கும் விழாவில் பங்கேற்று பதக்கங்கள் வழங்க உள்ளார்.</aside><h2><strong>முதலமைச்சர் பதக்கம்</strong></h2><p>தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு ஆண்டுதோறும் முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கப்படுகிறது.</p><p>அந்த வகையில் இந்த ஆண்டுக்கான <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">முதலமைச்சர்</a> பதக்கம் பெறுபவர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டிருந்தது. இவற்றுடன் ஜனாதிபதி பதக்கம் பெறுபவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் பதக்கம் பெறுபவர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டிருந்தது. இதில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட காவல்துறையில் மெச்சத்தகுந்த வகையில் பணியாற்றிய காவலர்கள், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, ஊர்க்காவல் மற்றும் குடிமை பாதுகாப்பு படை மற்றும் தடய அறிவியல் துறையினருக்கு முதலமைச்சர் விஜய் நாளை பதக்கங்களை வழங்க உள்ளார்.</p><h2><strong>பொதுமக்களுக்கு அனுமதி</strong></h2><p>முதலமைச்சர் விஜய் ராஜரத்தினம் ஸ்டேடியத்துக்கு வந்ததும் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை நடைபெறுகிறது. அதை அவர் பார்வையிட்டு அணிவகுப்பை ஏற்றுக்கொள்கிறார். அதன் பிறகு நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. போலீஸ் டி.ஜி.பி. மகேஷ் குமார் அகர்வால் வரவேற்புரை நிகழ்த்துகிறார். </p><p>இந்த விழாவில் போலீஸ் உயர் அதிகாரிகள், அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். பதக்கங்கள் வழங்கப்பட்ட பிறகு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. இதை பொதுமக்களும் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>’எல் நினோ’ தாக்கம் குறித்து ஆராய 7 பேர் கொண்ட நிபுணர் குழு அமைப்பு: தமிழகஅரசு அதிரடி உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-forms-7-member-expert-panel-on-el-nino-impact</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-forms-7-member-expert-panel-on-el-nino-impact#comments</comments><guid isPermaLink="false">d44ccae2-21a0-4b46-b403-0fbaa19b36dc</guid><pubDate>Thu, 30 Jul 2026 07:52:16 +0000</pubDate><atom:updated>2026-07-30T07:52:16.382Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,Tamil Nadu government,Pradeep John,பிரதீப் ஜான்,எல் நினோ,El Niño</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/ctfpvdgb/el-nino.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ EL NINO]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/ctfpvdgb/el-nino.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் காலநிலை மாற்றமான ‘எல் நினோ’ தாக்கத்தால் நிகழும் வறட்சி, வெப்ப அலை, பருவமழை மாற்றங்கள் மற்றும் திடீர் வெள்ளப் பெருக்கு போன்ற பேரிடர் சூழல்களை அறிவியல் பூர்வமாகக் கண்காணிக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் 7 பேர் கொண்ட உயர்மட்ட நிபுணர் ஆலோசனைக் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிட்டுள்ளது.</p><p>‘பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005’-இன் பிரிவு 17(1)-ன் கீழ் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>குழுவின் தலைவரும் உறுப்பினர்களும்:</strong></h2><p>தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கீழ் இந்த நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் முருகானந்தம் இக்குழுவின் தலைவராகச் செயல்படுவார். அண்ணா பல்கலைக்கழக காலநிலை மாற்றத் துறைத் தலைவர் முனைவர் எஸ். கண்மணி உட்பட துறை சார்ந்த 7 காலநிலை மற்றும் பேரிடர் மேலாண்மை நிபுணர்கள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.</p><h2><strong>சிறப்பு உறுப்பினர்:</strong></h2><p>எளிய முறையில் மக்களிடம் வானிலை தகவல்களைக் கொண்டு சேர்த்து பிரபலமான ‘தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்' இக்குழுவின் முக்கிய நிபுணராக நியமிக்கப்பட்டுள்ளார்.</p><h2><strong>அரசு வகுத்துள்ள குழுவின் முதன்மைப் பணிகள்:</strong></h2><p>*தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலத்தில் நிலவும் மழைப்பொழிவு மற்றும் வறட்சி சூழல்களைத் தொடர்ந்து கண்காணித்து, அதிக பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய பகுதிகளைக் கண்டறிவது.</p><p>*‘தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை’க்கு அதிநவீன தொழில்நுட்ப முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களை வழங்குவது.</p><p>* பருவமழை பொய்க்கும்போது ஏற்படும் வறட்சியை எதிர்கொள்வதற்கும், வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் திடீர் பெருமழை-வெள்ளப் பெருக்கைச் சமாளிப்பதற்கும் உரிய நீர் மேலாண்மை ஆலோசனைகளை வழங்குவது.</p><p>*இக்குழு '2026-27 மற்றும் 2027-28' ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கான காலகட்டத்தில் தீவிரமாகச் செயல்படும்.</p><h2><strong>எல் நினோ என்றால் என்ன?</strong></h2><p>மத்திய பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும்போது 'எல் நினோ' உருவாகிறது. இதன் காரணமாக உலகளவில் வானிலை சீர்குலைந்து, சில இடங்களில் கடும் வறட்சியும், சில இடங்களில் வழக்கத்திற்கு மாறான பெருமழையும் புயலும் ஏற்படுவது வழக்கம். தமிழ்நாட்டில் இதன்காரணமாக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் விவசாயப் பகுதிகளில் நீர் வரத்து குறையும் அபாயம் உள்ளதால், அரசு போர்க்கால அடிப்படையில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>POK-ஐ &apos;பாகிஸ்தானி காஷ்மீர்&apos; என குறிப்பிட்ட நியூயார்க் டைம்ஸ்.. இந்தியா கடும் கண்டனம் 
</title><link>https://www.maalaimalar.com/news/world/nyt-india-protests-pakistani-kashmir-reference-in-nyt-report</link><comments>https://www.maalaimalar.com/news/world/nyt-india-protests-pakistani-kashmir-reference-in-nyt-report#comments</comments><guid isPermaLink="false">e3118fcc-bd80-4f29-a880-10734038a4b6</guid><pubDate>Thu, 30 Jul 2026 07:50:01 +0000</pubDate><atom:updated>2026-07-30T07:50:01.630Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PoK,பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்,Pakistan Occupied Kashmir,நியூயார்க் டைம்ஸ்,The New York Times</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/3hdqyr6l/tn-12.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ POK]]></media:title><media:description type="html"><![CDATA[ POK]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/3hdqyr6l/tn-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவின் 'தி நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரை (POK)  "பாகிஸ்தானி காஷ்மீர்" என்ற எனக் குறிப்பிட்டுச் செய்தி வெளியிட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. </p><h2>இந்தியா கண்டனம்</h2><p>அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகம் தனது எக்ஸ் தளத்தில், "நியூயார்க் டைம்ஸின் தலைப்பு தவறானது. 'பாகிஸ்தானி காஷ்மீர்' என்று ஒன்று கிடையாது. 'பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்' மட்டுமே உள்ளது.</p><p>ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்கள் எப்போதும் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதிகளாகவே இருந்துள்ளன, இருக்கின்றன, அதுவே தொடரும்.</p><p>பாகிஸ்தான் இந்த நிலப்பகுதிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து, அங்குள்ள மக்கள் மீது வன்முறையைப் பிரயோகித்து வருகிறது." என தெரிவித்துள்ளது. </p><p>ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி அம்பாசிடர் பர்வதனேனி ஹரிஷ் பேசுகையில், "ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி என்பதே சட்டப்பூர்வ உண்மை. பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு மட்டுமே இங்கு தீர்க்கப்பட வேண்டிய ஒரே பிரச்சினை" எனக் குறிப்பிட்டிருந்தார்.</p> <h2>நியூயார்க் டைம்ஸ் செய்தி</h2><p>"உள்ளாட்சித் தேர்தல் தொடங்கும் வேளையில் 'பாகிஸ்தானி காஷ்மீரில்' வன்முறை வெடித்தது" என்ற தலைப்பில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட செய்திக்கே இந்தியா தற்போது கண்டனம் தெரிவித்துள்ளது.</p><h2>தேர்தல்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/world/pok-unrest-over-30-civilians-killed-in-brutal-crackdown-by-pakistani-forces">பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்</a> ஜூலை 27 முதற்கட்ட சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. ஜாயிண்ட் அவாமி ஆக்ஷன் கமிட்டி (JAAC) என்ற அமைப்பு மக்களை தேர்தலை புறக்கணிக்கச் செய்து போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.</p><h2>துப்பாக்கிச்சூடு</h2><p>ஜூலை 27, 28,29 ஆகிய நாட்களில் ராவலாகோட்டில் இருந்து முசாபராபாத் நோக்கி JAAC அமைப்பின் தலைமையில் மக்கள் சென்ற பேரணியில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் துப்பாக்கிச்சூடு மற்றும் பிற வகைகளில் தாக்குதல் நடத்தின.</p><p>இந்த தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதில் JAAC மத்தியக் குழு உறுப்பினர் உமர் நசீரின் சகோதரர் உஸ்மான் நசீர் என்பவரும் உயிரிழந்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>தைபே ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறினர் உன்னதி ஹூடா, தன்வி ஷர்மா</title><link>https://www.maalaimalar.com/sports/unnati-hooda-tanvi-sharma-enter-qf-round-in-taipae-open-badminton</link><comments>https://www.maalaimalar.com/sports/unnati-hooda-tanvi-sharma-enter-qf-round-in-taipae-open-badminton#comments</comments><guid isPermaLink="false">39521a6f-1ee1-4eb4-8c10-22663460b338</guid><pubDate>Thu, 30 Jul 2026 07:47:27 +0000</pubDate><atom:updated>2026-07-30T07:47:27.780Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Unnati Hooda,உன்னதி ஹூடா,tanvi sharma,தன்வி ஷர்மா,taipae open badminton,தைபே ஓபன் பேட்மிண்டன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/uh4eiz21/unnati.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ unnati hooda]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/uh4eiz21/unnati.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தைபே ஓபன் பேட்மிண்டன் தொடர் தைவானின் தைபேயில் நடைபெற்று வருகிறது.</p><p>இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, சக நாட்டு வீராங்கனையான தன்யா ஹேமந்த் உடன் மோதினார்.</p><p>இதில் சிறப்பாக ஆடிய உன்னதி ஹூடா 21-19, 21-12 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.</p><p>மற்றொரு போட்டியில் இந்தியாவின் தன்வி ஷர்மா, இந்தோனேசியாவின் தலித ரமாதானி உடன் மோதினார். இதில் அதிரடியாக ஆடிய தன்வி ஷர்மா 21-17, 22-20 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.</p><p>இதேபோல் இந்தியாவின் தேவிகா சிஹாக்கும் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.</p><p>நாளை நடைபெறும் காலிறுதி சுற்றில் இந்தியாவின் தன்வி ஷர்மா, தாய்லாந்தின் சுபனிதா கடேதோங் உடன் மோதுகிறார்.</p>]]></content:encoded></item><item><title>இன்ஸ்டாகிராம் மூலம் காதல்: படங்களில் நடித்த திருநங்கையை திருமணம் செய்த ஆவடி வாலிபர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/avadi-man-marries-transgender-woman-who-acted-in-films</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/avadi-man-marries-transgender-woman-who-acted-in-films#comments</comments><guid isPermaLink="false">8e53cab0-6f62-49b5-ba1f-439c3ec7f916</guid><pubDate>Thu, 30 Jul 2026 07:45:03 +0000</pubDate><atom:updated>2026-07-30T07:45:03.756Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமணம்,Instagram,இன்ஸ்டாகிராம் காதல்,இன்ஸ்டாகிராம்,திருநங்கை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/9dld8yq8/insta.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ திருநங்கையை திருமணம் செய்த வாலிபர்]]></media:title><media:description type="html"><![CDATA[ திருநங்கையை திருமணம் செய்த வாலிபர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/9dld8yq8/insta.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு திருவள்ளுவர் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரும், திருச்செங்கோட்டை சேர்ந்த திருநங்கை ஒருவரும் 7 வருடங்களாக பழகி நேற்று கோபியில் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர்.</aside><h2><strong>இன்ஸ்டாகிராம் மூலம் காதல்</strong></h2><p>திருநங்கையை திருமணம் செய்து கொண்டது குறித்து தனியார் நிறுவன ஊழியர் பிரவீன் ராஜ் கூறும்போது, நான் திருவள்ளுவர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள மோரை பகுதியைச் சேர்ந்தவன். கணினி தகவல் தொழில்நுட்பம் (ஐடி) படித்துவிட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வருகிறேன். </p><p>இந்நிலையில் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு அதாவது 2019-ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம்  நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள வருகூராம்பட்டியைச் சேர்ந்த திருநங்கை கயல்விழி என்பவர் அறிமுகமானார் .</p><p>அவர் திருநங்கை என்பது எனக்கு முதலிலேயே தெரியும். முதலில் எங்களது பழக்கம் சாதாரண நட்பாக தொடங்கியது. தொடர்ந்து இரண்டு வருடம் நட்பாக பழகி வந்தோம். அவரை திருச்செங்கோடு நேரில் சென்று சந்தித்து பேசி இருக்கிறேன். அவரை பார்த்ததும் எனக்கு பிடித்து விட்டது . இருந்தாலும் இரண்டு வருடமாக நல்ல நட்புடன் பழகி வந்தோம். பின்னர் நான் தான் எனது காதலை முதல் முதலாக அவரிடம் தெரிவித்தேன். அதற்கு அவர் உடனடியாக காதலை ஏற்கவில்லை நண்பர்களாகவே பழகலாம் என்று கூறிவிட்டார். </p><p>பின்னர் அவருக்கும் என்னை பிடித்து நாங்கள் இருவரும் காதலில் விழுந்தோம் . இந்நிலையில் எங்கள் காதல் விவகாரத்தை எங்கள் வீட்டில் தெரிவித்தேன். கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதே சமயம் அவரது வீட்டில் எங்கள் காதலை ஏற்றுக் கொண்டனர். இதற்கிடையே வீட்டில் பெண் பார்க்கும் ஏற்பாடு நடந்ததால் இனியும் தாமதிக்கக்கூடாது என்பதால் கோபியில் சட்டப்படி சுயமரியாதை செய்து கொண்டோம் என்றார் .</p><p>இதுகுறித்து திருநங்கை கயல்விழி கூறும்போது,</p><p>நான் சினிமாவில் தோற்றம், கந்தமலை, ராவண ராமணன் போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். இதில் தோற்றம், கந்தமலை படம் ரிலீஸ் ஆகிவிட்டது.  இதைத்தொடர்ந்து தற்போது வெப் சீரியலான டாசிக் பார்ட்டியில் நடித்து வருகிறேன்.</p><p>முதலில் இன்ஸ்டாகிராம் மூலமே எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. 7 வருடங்களாக பழகி வந்தோம். அவர்தான் முதன்முதலில் காதலை என்னிடம் சொன்னார். நான் அப்போது சூழ்நிலை காரணமாக காதலை ஏற்கவில்லை. அதன்பிறகு நானும் காதலை ஏற்றுக்கொண்டேன் . </p><p>எங்கள் காதல் விவகாரம் பிரவீன் ராஜ் வீட்டிற்கு தெரிந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனினும் காதலில் உறுதியாக இருந்த நாங்கள் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் திருமணம் செய்து கொண்டோம். ஆனால் கோவிலில் நாங்கள் திருமணம் செய்து கொண்டதற்கான சான்றிதழ் கேட்டபோது திருநங்கைக்கு திருமணம் செய்து வைத்ததில்லை என்று கூறி சான்றிதழ் தரவில்லை. </p><p>இதனை அவர்கள் வீட்டில் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு எங்களை பிரிப்பதற்காக பிரவீன் ராஜை கட்டாயப்படுத்தி சென்னையில் உள்ள ஒரு தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர். அங்கே அவர் 3  வருடமாக தங்கியிருந்தார். எனினும் நாங்கள் காதலில் உறுதியாக இருந்தோம் . இந்நிலையில் பிரவீன் ராஜிக்கு அவசரமாக வேறொரு பெண்ணை திருமணத்துக்காக நிச்சயம் செய்தனர்.</p><p>இதனால் வீட்டை விட்டு வெளியேறிய அவர் திருச்செங்கோடு வந்தார். அதனை அடுத்து நாங்கள் சட்டப்படி திருமணம் செய்ய வேண்டும் என்ற காரணத்தினால் கோபியில் மனித சட்ட உதவி மையத்தை நாடினோம். எனது பெற்றோர் முன்னிலையில் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டோம் . தற்போது நாங்கள் திருச்செங்கோட்டில் இருக்கிறோம். கண்டிப்பாக எனது மாமியார் வீட்டில் என்னை ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்பிக்கை உள்ளது. பிரவீன் ராஜிக்கு நல்ல மனைவியாகவும், அவரது குடும்பத்தினருக்கு நல்ல மருமகளாகவும் இருப்பேன், என்றார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் சிக்கன் கடைகள் 
நாளை வழக்கம் போல் செயல்படும்- வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-chicken-shops-to-remain-open-despite-shutdown-call</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-chicken-shops-to-remain-open-despite-shutdown-call#comments</comments><guid isPermaLink="false">454ac728-5da0-48ec-8fe4-3f1197af4b11</guid><pubDate>Thu, 30 Jul 2026 07:30:19 +0000</pubDate><atom:updated>2026-07-30T07:30:19.636Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,Chicken,சிக்கன் தடை,வியாபாரிகள் சங்கம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/ec2vg0iu/chicken.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chicken]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/ec2vg0iu/chicken.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை (வெள்ளிக் கிழமை) கோழி கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>விற்பனைக்கு கொண்டு வரப்படும் கோழிகளுக்கு குறிப்பிட்ட நாட்களுக்கு முன்பு தீவனம் வழங்கக் கூடாது. அதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு கோழி கறி விற்பனையாளருக்கு  தொழில் ரீதியாக நஷ்டம் ஏற்படுவதாக கூறி இந்த கடை அடைப்பு போராட்டத்தை அறிவித்தனர். </p><p>திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் நாளை கடைகள் அடைக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>தமிழகத்தில் அதிக அளவு <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF" rel="nofollow">கோழி கறி</a> விற்பனை செய்யும் நகரமாக சென்னை தலைநகரம் இருப்பதால்  கடைகளை மூடினால் கடுமையான பாதிப்பு ஏற்படக்கூடும் என்று கருதி சென்னை கோழி மொத்த வியாபாரிகள் சங்கம் நாளை கோழிக்கறி கடைகள் வழக்கம் போல் செயல்படும். மூடப்பட மாட்டாது என்று  தெரிவித்துள்ளது. </p><p>சென்னையில் 8 ஆயிரம் கோழி கடைகள் செயல்பட்டு வருகின்றன. தினமும் 600 டன் கோழிக்கறி விற்பனை செய்யப்படுகிறது.  அதாவது 6 லட்சம் கிலோ  கோழிகள் உயிரோடு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>இதுகுறித்து சங்கத்தின் பொதுச்செயலாளர் ஞானம் கூறியதாவது:- </p><p>தமிழ்நாடு கோழி மொத்த விற்பனையாளர்கள் சங்கம் எடுத்துள்ள முடிவு சென்னை  பெருநகருக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். </p><p>பொதுமக்கள் மட்டுமல்லாது ஓட்டல்கள், சிறு சிறு சில்லறை விற்பனையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். </p><p>ஒரு நாள் கோழிக் கடை களை அடைத்தால் கூட கோழி தொழில் சார்ந்தவர்கள் மட்டுமல்லாது ஓட்டல் தொழிலும் கடுமையான  பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். அதனால்  எங்களது கோரிக்கை குறித்து  கோழி பண்ணையாளர்களிடம் ஆலோசிக்கப்பட்டு இருக்கிறது. நல்ல முடிவு எதிர்பார்க்கப்படுகிறது. எனவே சென்னையில் நாளை கோழி கறி கடைகள் வழக்கம் போல் செயல்படும். </p><p>இவ்வாறு அவர் கூறினார். </p><p>சென்னையையொட்டி உள்ள காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் கோழிக்கடைகள் நாளை மூடப்படாது. </p><p>சென்னை மாவட்டத்தை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளில் தான் அதிகளவு கோழி இறைச்சி கடைகள் இயங்குகிறது. </p><p>சிறு ஓட்டல்கள் முதல் நட்சத்திர ஓட்டல்கள் வரை <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-consult-with-chicken-biryani-with-nutritious-meal-for-government-school-students" rel="nofollow">கோழி இறைச்சி </a>பயன்பாடு உள்ளது.  அதனால் சென்னையையொட்டிய புறநகர் பகுதியில் வழக்கம் போல் நாளை கோழிக்கடைகள் செயல்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. அரசைக் கண்டித்து ஆக. 3-ல் தஞ்சாவூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-announced-dmk-protest-against-tvk-govt-on-august-3rd</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-announced-dmk-protest-against-tvk-govt-on-august-3rd#comments</comments><guid isPermaLink="false">54e136d7-8591-468e-8e0d-23d3e0117b09</guid><pubDate>Thu, 30 Jul 2026 07:18:30 +0000</pubDate><atom:updated>2026-07-30T07:18:30.140Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,மேகதாது அணை,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/1vdvj5cl/MKStalin09.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/1vdvj5cl/MKStalin09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தி.மு.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/முக-ஸ்டாலின்">மு.க.ஸ்டாலின்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>வேதனை தரும் த.வெ.க. ஆட்சி! விவசாயிகள் படும் துன்பமே அதற்கு சாட்சி! என நாட்டின் முதுகெலும்பாய் விளங்கும் விவசாயிகளை வீதிகளில் போராடவிட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்.</p><h2><strong>கடன் தள்ளுபடியில் ஏமாற்றம்</strong></h2><h3><strong>தேர்தலுக்கு முன்பு</strong></h3><p>“5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்கள் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும். 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்களில் 50 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும்.”</p><h2><strong>தேர்தலுக்குப் பின்பு</strong></h2><p>50 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே முழுக் கடன் தள்ளுபடி என்ற வெற்று அறிவிப்பை வெளியிட்டு, அதன் காரணமாக விவசாயிகள் வெகுண்டெழுந்து தற்போது வரை போராட்டம் நடத்திக் கொண்டிருப்பதால், 75 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே முழுக் கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டது.</p><p>சொன்னதைச் செய்ய நேரம் கேட்ட முதலமைச்சர், இன்னும் எவ்வளவு நேரம் வேண்டும் என்றாவது விவசாயிகளிடம் சொல்லியிருக்க வேண்டும்.</p><h2><strong>மேகதாது விவகாரத்தில் த.வெ.க. அரசின் செயல்படா நிலை</strong></h2><p>தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்தே மேகதாது அணை கட்டுவதில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது.</p><p>ஜூன் 11: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை கர்நாடக முதலமைச்சர் நேரில் சந்தித்து மேகதாது நிதியுதவி கோரி மனு அளித்துள்ளார்.</p><p>ஜூன் 12: ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சரை நேரில் சந்தித்து <a href="https://www.maalaimalar.com/topic/மேகதாது-அணை">மேகதாது</a> திட்டத்துக்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்தினார்.</p><p>ஜூலை 27: டெல்லியில் கர்நாடகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பி.க்களுடன் கூட்டம் நடத்தி, மேகதாது அணை கட்டக் கடைமடை மாநிலங்களின் அனுமதி தேவையில்லை என நாடாளுமன்றத்தில் ஒன்றிய ஜல்சக்தி துறை தெரிவித்த பதிலை மேற்கோள் காட்டிப் பேசியுள்ளார்.</p><p>அதேநாளில், கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி, கர்நாடக அரசின் டெல்லி பிரதிநிதி, கர்நாடக அரசின் தலைமை வழக்கறிஞர் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் மேகதாது அணை தொடர்பான ஆய்வுக் கூட்டத்தையும் நடத்தியுள்ளார்.</p><p>ஊடகங்களிடம் தொடர்ந்து மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் எனவும், தமிழ்நாடு அரசின் அனுமதி தேவையில்லை எனவும் பேசி வருகிறார்.</p><p>இதற்கு மாறாக, இவ்விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பிரதமருக்குக் கடிதம் எழுதியதோடு தனது கடமை முடிந்துவிட்டது என மவுனம் காத்து வருகிறார்.</p><p>இதற்கிடையில், தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடகம் சென்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என்று வேளாண் துறை அமைச்சர் சொன்னார். பின்னர் அவரும் இன்னும் சிலரும் இல்லை என்று மறுத்தார்கள்.</p><p>இப்போது தமிழ்நாடு சார்பில் சில விவகாரங்கள் தொடர்பாகத் தமிழ்நாடு முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளதாக, கர்நாடக முதலமைச்சரே தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடக செல்வதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில், காவிரியில் நமக்கு உரிய பங்கினை வழங்க காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டும், அதனை நிறைவேற்ற முடியாது என்று கர்நாடக மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் இன்னும் வாய் திறக்காமல் இருக்கிறார்.</p><p>அதுமட்டுமல்ல, மேகதாது விவகாரம் தொடர்பாக ஒரு தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தின் மூலம் வலியுறுத்தி இருக்கின்ற நிலையில், இந்த கர்நாடக பயணம் இதனை நீர்த்துபோகச் செய்யாதா? என்ற கேள்வியும் எழுகிறது.</p><p>இப்படி இந்த அரசைப் பொறுத்தவரையில் எந்தத் தகவல்களிலும் தெளிவு இல்லை; எதிலும் வெளிப்படைத்தன்மை இல்லை. எதற்கெடுத்தாலும் குழப்பம்; எல்லாவற்றிலும் ஏமாற்றம். இதுவே இந்த அரசின் வழக்கமாக மாறியிருக்கிறது.</p><p>தனது திரைப்படம் கர்நாடகம் வெளியாவதில் சிக்கல் ஏற்படக் கூடாது என்பதற்காகவே முதலமைச்சர் இதுகுறித்து வெளிப்படையாகப் பேசாமல் அமைதி காப்பதாக ஊடகங்களில் ஓயாமல் செய்திகள் வெளியாகின்றன. அதற்கும் எந்தப் பதிலும் இல்லை.</p><h2><strong>அனைத்துக் கட்சிக் கூட்டம்</strong></h2><p>அனைத்துக் கட்சிக் கூட்டத்தோடு, விவசாயச் சங்கப் பிரதிநிதிகளின் கூட்டத்தையும் கூட்டச் சொல்லி, முதலமைச்சருக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகள் உட்பட தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கட்சிகளும், விவசாயச் சங்கங்களும் அரசுக்குக் கோரிக்கை விடுத்தும் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்து வருகிறார் முதலமைச்சர்.</p><p>மாநிலத்தின் முக்கியப் பிரச்சனையில் யார் குரலையும் கேட்காமல் indifferent ஆகவும், inactive ஆகவும் இந்த அரசு இருப்பது நல்லதல்ல.</p><p>அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கும் தி.மு.க.தான் அழைப்பு விடுக்க வேண்டும் என முதலமைச்சர் எதிர்பார்க்கிறாரா? அரசால் முடியாது என்றால் சொல்லிவிடுங்கள்; அதற்கும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.</p><h2><strong>விவசாயிகளின் அடுத்த பெரும் பிரச்சனை</strong> </h2><h3><strong>குறுவை சிறப்பு நிவாரணத் தொகுப்பு</strong></h3><p>கடந்த ஆண்டு 6.5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடந்து சாதனை படைத்த நிலையில், இந்த ஆண்டு மேட்டூர் அணை திறக்கப்படாததால் 1.5 லட்சம் ஏக்கர் சாகுபடி மட்டுமே நடப்பதாகச் செய்திகள் வருகிறது.</p> <p>இதனால் 2,500 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டு 14 இலட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுத் தவிக்கிறார்கள். எனவே அவர்களுக்குக் கீழ்க்கண்ட வகையில் தமிழ்நாடு அரசு நிவாரணத் தொகுப்பினைக் காலம் தாழ்த்தாமல் அறிவித்திட வேண்டும்.</p><p>1) ஏக்கர் ஒன்றுக்குக் குறுவை நிவாரணமாக 25 ஆயிரம் ரூபாய்.</p><p>2) காப்பீட்டுத் திட்டத்துக்கான பிரீமியம் தொகையை அரசே செலுத்தி முழுக் காப்பீடு கிடைக்க உதவி.</p><p>3) சம்பா சாகுபடிக்கான மறுமுதலீடாக விதை, உரம், பூச்சிக்கொல்லி என இடுபொருட்கள் மானியமாக வழங்குதல்.</p><h2><strong>கழகம் சார்பில் டெல்டா மண்ணில் போராட்டம்</strong></h2><p>இப்படி, விவசாயப் பெருமக்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், காவிரி உரிமையை நிலைநாட்டுவதில் த.வெ.க. அரசின் மெத்தனப்போக்கைக் கண்டித்தும் வரும் 03-08-2026 அன்று காலை 10.00 மணியளவில், தஞ்சாவூர், பனகல் கட்டடம் அருகில் கழக இளைஞரணிச் செயலாளரும் மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த தி.மு.க. முடிவெடுத்துள்ளது.</p><p>இப்போராட்டத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கழகத் துணை அமைப்புகளானப் பல்வேறு சார்பு அணிகளின் நிர்வாகிகள் என அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு விவசாயிகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டும்.</p><p>மேலும், அனைத்து விவசாயச் சங்கங்களைச் சேர்ந்த தோழர்களும், இவ்விவகாரத்தில் ஒருமித்த கருத்துடைய அனைத்து அரசியல் கட்சிகளின் தோழர்களும் போராட்டத்தில் கலந்துகொண்டு விவசாயிகளின் கோரிக்கைகள் விரைவில் வென்றிடத் துணை நிற்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் என்பது, விவசாயிகளின் குரலைக் கேட்காமல் இருக்கும் த.வெ.க. அரசின் கவனத்தை ஈர்க்கும் முதல்கட்ட நடவடிக்கைதான். அரசின் இந்த மெத்தனப்போக்குத் தொடர்ந்தால், மிகப்பெரிய போராட்டத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதையும் எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு அமித் ஷா பொறுப்பேற்க வேண்டும்.. அமளியால் மக்களவை ஒத்திவைப்பு </title><link>https://www.maalaimalar.com/news/national/parliament-clash-opposition-uproar-over-july-20-student-protest-crackdown-stalls-lok-sabha</link><comments>https://www.maalaimalar.com/news/national/parliament-clash-opposition-uproar-over-july-20-student-protest-crackdown-stalls-lok-sabha#comments</comments><guid isPermaLink="false">93e51114-076f-47e3-8ff2-be2f8295f63c</guid><pubDate>Thu, 30 Jul 2026 07:15:15 +0000</pubDate><atom:updated>2026-07-30T07:15:15.226Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மக்களவை,Lok Sabha,monsoon session,மழைக்கால கூட்டத்தொடர்,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/rt0vh3sn/tn-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மக்களவை ]]></media:title><media:description type="html"><![CDATA[ மக்களவை ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/rt0vh3sn/tn-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்டம் கடந்த திங்கள் கிழமை தொடங்கிய நிலையில் வரும் ஆகஸ்ட் 2 வரை நடைபெறுகிறது. </p><p>இன்றைய கூட்டமும் வழக்கம்போல அமளியால் முடங்கியுள்ளது. ஜூலை 20 அன்று நாடாளுமன்றம் நோக்கி <a href="https://www.maalaimalar.com/news/national/cjp-new-protest-warning-delhi-jantar-mantar-security">பேரணி </a>வந்த இளைஞர்கள் மீது டெல்லி காவல்துறைக்கு மற்றும் ஆர்ஏஎப் மத்திய படை தடியடி, கண்ணீர் புகை உள்ளிட்டவையால் தாக்கியது. மேலும் பெல்லட் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களும் பயன்படுத்ததட்தற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. </p><p>இந்த தாக்குதல் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக மக்களவை இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.</p> <h2>ராகுல் காந்தி குற்றச்சாட்டு</h2><p>ஜூலை 20 அன்று டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின் போது காவல்துறை நடத்திய தாக்குதலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.</p><p>உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்திற்கு நேரில் வந்து எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு விளக்கமளிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி வலியுறுத்தினார்.</p> <h2>இந்தியா கூட்டணி போராட்டம்</h2><p>நாடாளுமன்றத்தின் மகார் துவார் பகுதியில் திரண்ட எதிர்க்கட்சி எம்பிக்கள், மாணவர்கள் மீதான காவல்துறை நடவடிக்கைக்கும், அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை நன்கொடை முறைகேடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.</p><h3>சபாநாயகர்</h3><p>முன்னதாக மக்களவை தொடங்கியபோது கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்த இந்திய வீரர்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வாழ்த்து தெரிவித்தார்</p><p>இன்று நடந்த நீளம் தாண்டுதல் பிரிவு போட்டியில் 8.09 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார்.</p><p>மாற்றுத்திறனாளிகளுக்கான ஆண்களுக்கான 100 மீட்டர் T47 ஓட்டப்பந்தயத்தில் திலீப் மகாது கவித் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.</p><p>அதே 100 மீட்டர் T47 பிரிவில் முகமது பாசில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.</p>]]></content:encoded></item><item><title>VIDEO- வதந்தி சீசன் 2: வெளியானது ‘டைவா கோட்டிங்’ பாடல் வீடியோ! </title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/vathanti-season-2-daiva-coating-song-video-release</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/vathanti-season-2-daiva-coating-song-video-release#comments</comments><guid isPermaLink="false">0a6facae-1447-4eb6-a9d2-bcbfadee4ba5</guid><pubDate>Thu, 30 Jul 2026 07:14:49 +0000</pubDate><atom:updated>2026-07-30T07:14:49.090Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சசிகுமார்,Sasikumar,Vadhandhi Season 2,வதந்தி சீசன் 2,Daiva Coatingu,டைவா கோட்டிங்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/wze3moeo/daiva.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vadhandhi Season 2  Daiva Coatingu ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/wze3moeo/daiva.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திரையுலகிலும் ஓடிடி தளங்களிலும் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘வதந்தி’ வெப் சீரிஸின் இரண்டாவது பாகம் வரவிருக்கும் ஆகஸ்ட் 7-ம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் உலகளவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், இந்தத் தொடரில் இடம்பெற்றுள்ள ‘டைவா கோட்டிங்’ என்ற வீடியோ பாடலை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/FPyHPOVLgQg"></iframe></figure><h2><strong>புதிய கதைக்களம்:</strong></h2><p>முதல் சீசனின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இதையும் இயக்கி எழுதியுள்ளார். முன்னணி தயாரிப்பாளர்களான புஷ்கர்-காயத்ரி தங்களது 'வால்வாட்சர் ஃபிலிம்ஸ்' நிறுவனம் சார்பில் இதன் கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாகச் செயல்பட்டுள்ளனர். முதல் பாகத்தில் எஸ்.ஜே.சூர்யா முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், இரண்டாம் பாகத்தில் பிரபல நடிகரும் இயக்குநருமான 'சசிகுமார்' சப்-இன்ஸ்பெக்டர் மூசா ராசா என்ற அதிரடியான காவலர் கதாபாத்திரத்தில் களமிறங்கியுள்ளார்.</p><p>இந்தக் க்ரைம்-த்ரில்லர் தொடரில் சசிகுமாருடன் இணைந்து, அபர்னா தாஸ், விவேக் பிரசன்னா, யஷ்வந்த், அனகா, ரேவதி சர்மா, அர்ஜுன் நந்தகுமார் உள்ளிட்டப் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்தொடருக்கு 'சைமன் கே.கிங்' இசையமைத்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள 'டைவா கோட்டிங்' பாடல் துள்ளலான இசையுடனும், அட்டகாசமான காட்சிகளுடனும் இணையதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.</p><h2><strong>ரசிகர்களின் எதிர்பார்ப்பு:</strong></h2><p>மதுரையின் பின்னணியில் நடைபெறும் அரசியல், வதந்தி மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த க்ரைம் புலனாய்வுக் கதையாக 'வதந்தி சீசன் 2' உருவாகியுள்ளது. தமிழ் தவிர தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் ஒரே நேரத்தில் 8 அத்தியாயங்களாக ஒளிபரப்பாகவுள்ள இத்தொடருக்கு ஓடிடி பார்வையாளர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.</p>]]></content:encoded></item><item><title>டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாள்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-pays-tribute-on-dr-muthulakshmi-reddy-birthday</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-pays-tribute-on-dr-muthulakshmi-reddy-birthday#comments</comments><guid isPermaLink="false">dd58ed12-4ff8-4f85-9c86-ecb58623d7bc</guid><pubDate>Thu, 30 Jul 2026 07:08:55 +0000</pubDate><atom:updated>2026-07-30T07:08:55.165Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,Edappadi pazhanisamy,பிறந்தநாள் வாழ்த்து,birthday wish,டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி,Doctor muthulakshmi reddy</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/03/29/10980480-eps.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Edappadi pazhanismy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/03/29/10980480-eps.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் மிக முக்கிய சமூகப் போராளியும் தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவருமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-</p><p>பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் பெண் சட்ட மேலவை உறுப்பினராகவும், தலைசிறந்த மருத்துவராகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், பெண் கல்வி, பெண்ணுரிமை, குழந்தைகள் நலன் மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் புகழைப் போற்றி வணங்குகிறேன்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இனப்பாகுபாடு?.. அடுத்த ஆண்டு கிராமி விருதுகளை புறக்கணித்த  BTS இசைக்குழு</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/grammy-racism-row-bts-to-boycott-after-recording-academy-adds-separate-best-asian-pop-category</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/grammy-racism-row-bts-to-boycott-after-recording-academy-adds-separate-best-asian-pop-category#comments</comments><guid isPermaLink="false">bdcf88cd-7884-4420-b687-513daf69e90f</guid><pubDate>Thu, 30 Jul 2026 06:35:56 +0000</pubDate><atom:updated>2026-07-30T06:35:56.456Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பிடிஎஸ்,BTS,grammy awards,கிராமி விருதுகள்,இசைக்குழு,பாப் இசை,music group,pop music</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/4yt55pob/tn-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ BTS ]]></media:title><media:description type="html"><![CDATA[ BTS ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/4yt55pob/tn-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆண்டுதோறும் உலகம் முழுவதும் சிறந்த இசைக்கு பல்வேறு பிரிவுகளில் <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/lady-gaga-takes-home-grammy-for-mayhem-807629">கிராமி விருதுகள் </a>வழங்கப்படுகின்றன. ரெக்கார்டிங் அகாடமி என்ற அமைப்பால் வழங்கப்படும் இவ்விருதுகள் இசைக்கான ஆஸ்கார் என்றே கூறலாம். </p><p>இந்நிலையில் தென் கொரியாவை சேர்ந்த பிரபல இசைக்குழுவான BTS, அடுத்த ஆண்டு கிராமி விருதுகளுக்கு தங்கள் படைப்பை சமர்ப்பிக்க போவதில்லை என்று அறிவித்துள்ளது. </p> <h2>கிராமி விருதுகள்</h2><p>கிராமி விருதுகளில் இருந்து விலகும் பிடிஎஸ் உடைய முடிவுக்கு பின்னால் உள்ள காரணம் இனப்பாகுபாடு.</p><p>அமெரிக்காவை சேர்ந்த ரெக்கார்டிங் அகாடமி அமைப்பு அதன் கிராமி விருதுகளில் ஒரு புதிய பிரிவை சேர்த்துள்ளது. அதன் பெயர் 'சிறந்த ஆசிய பாப் இசை' என்பதாகும். இதுவரை இப்படி ஒரு பிரிவு கிராமி விருதுகளில் இல்லை.</p><p>2027ஆம் ஆண்டிற்கான 69வது கிராமி விருதுகள் விழாவில் இந்த பிரிவு அறிமுகப்படுத்தப்படும் என ரெக்கார்டிங் அகாடமி அறிவித்தது.</p><h2>குற்றச்சாட்டு</h2><p>இது இசையை மொழி மற்றும் பிராந்தியத்தின் அடிப்படையில் இது பிரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.</p><p>ஆண்டின் சிறந்த ஆல்பன் உள்ளிட்ட முதன்மை விருது பிரிவுகளில் இருந்து ஆசியக் கலைஞர்களை</p><p>போட்டியிட அனுமதிப்பதற்குப் பதிலாக தனியாக ஒரு பிராந்தியப் பிரிவை உருவாக்குவது அவர்களை முதன்மைப் போட்டியிலிருந்து ஒதுக்கி வைக்கும் ஒரு முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.</p> <h2>பிடிஎஸ் முடிவு</h2><p>இந்த காரணத்தால் அடுத்த ஆண்டு தங்களின் சமீபத்திய ஆல்பமான 'Arirang' உட்பட எந்தவொரு படைப்பையும் கிராமி விருதுகளுக்கு அனுப்பப் போவதில்லை என பிடிஎஸ் குழுவின் தலைவர் ஆர்.எம் மற்றும் கலைஞர்கள் ஜின், சுகா, ஜே ஹோப், ஜிமின், வி, ஜங்குக் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.</p><p>தங்கள் இசையை பிராந்தியம் அல்லது மொழியின் அடிப்படையில் பிரித்துப் பார்ப்பதை விட, இசையாகவே கேட்டு ரசிக்க வேண்டும் விரும்புவுவதாக பி.டி.எஸ் தெரிவித்துள்ளது.</p><p>புதிய பிரிவில் உள்ள விதிகளின்படி, பாடல்களில் ஆசிய மொழிகளின் பயன்பாடு கட்டாயம் இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், ஆங்கில மொழிகயை அதிகம் கலந்து பயன்படுத்தும் பயன்படுத்தும் பி.டி.எஸ் போன்ற குழுக்களுக்கு இந்த விதிமுறை நியாயமற்ற ஒன்றாக அமைகிறது.</p><p>2021 முதல் 2023 வரை கிராமி விருதுகளில் தொடர்ச்சியாக 3 முறை 'Best Pop Duo - Group Performance' பிரிவில் பிடிஎஸ் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்கள்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-super-speciality-seats-to-central-pool-controversy</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-super-speciality-seats-to-central-pool-controversy#comments</comments><guid isPermaLink="false">a1283d03-266e-4dfe-adf1-5d0b7ef5a97e</guid><pubDate>Thu, 30 Jul 2026 06:35:28 +0000</pubDate><atom:updated>2026-07-30T06:35:28.247Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,மருத்துவ இடங்கள்,Medical seat,முக ஸ்டாலின்,Minister Arunraj,அமைச்சர் அருண் ராஜ்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/8an8kzmb/Arun-raj.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Arunraj]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/8an8kzmb/Arun-raj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மருத்துவ இடங்கள் மத்திய தொகுப்பிற்கு சென்ற விவகாரம் தொடர்பாக,"தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்களை தவெக அரசு காற்றில் பறக்கவிட்டுவிட்டதாக" முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனத்திற்கு சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் பதில் அளித்துள்ளார்.</p><h2>மு.க.ஸ்டாலின்</h2><p>ஆறாண்டுகளுக்கு முன் இதே நாளில், இந்தியா முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீட்டைத் தி.மு.க. போராடிப் பெற்றுத் தந்தது. ஆனால் இன்றோ, மருத்துவப் படிப்பில் தமிழ்நாட்டின் இடங்களை இழக்கும் செய்தி வந்திருக்கிறது.</p><p>தமிழ்நாட்டின் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-super-speciality-medical-seats-lost-mk-stalin-questions-dmk-government" rel="nofollow">சூப்பர் ஸ்பெஷாலிட்டி</a> இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட த.வெ.க. அரசு; உச்சநீதிமன்றத்தில் வாய்பொத்தி நின்ற தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள்.</p><p>தமிழ்நாடு அரசு நியமித்த மூத்த வழக்கறிஞர்கள் ஏன் ஆஜராகவில்லை?</p><p>மிகுந்த முக்கியத்துவம் கொண்ட இந்த வழக்கில் தொடக்கம் முதல் அலட்சியம் ஏன்? மூத்த வழக்கறிஞரை நியமிப்பதில் கூட ஏன் தாமதம்?</p><p>நியாயம் நம் பக்கம் இருந்தும் நீதிமன்றத்தில் எந்த வலுவான வாதங்களையும் எடுத்து வைக்காமல் 'சரண்டர்' ஆனதன் பின்னணி என்ன?</p><p>அகில இந்திய கவுன்சிலிங்கின் இரண்டாம் சுற்று நடைபெறுவதற்கு முன்னரே, மாநிலக் கலந்தாய்வை அவசரமாக நடத்தி 151 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவித்தது திட்டமிட்டே செய்யப்பட்டதா?</p><p>தமிழ்நாட்டுக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் அகில இந்தியத் தொகுப்புக்கு மாற்றப்படுவதை எதிர்த்து, கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் சிறப்புத் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D" rel="nofollow">தீர்மானம்</a> நிறைவேற்ற வலியுறுத்தியும் செய்யாதது ஏன்?</p><p>29-05-2026 உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனு என்ன ஆனது?</p><p>இப்படி பல கேள்விகளை இதனால் பாதிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவர்கள் எழுப்புகிறார்கள்.</p><p>எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் தொண்டாற்ற இருந்த 151 உயர்சிறப்பு அரசு மருத்துவர்களை இழந்திருக்கிறோம். லட்சக்கணக்கான தமிழ்நாட்டு மக்களின் உயிர்ப்பிரச்சினை இது.</p><p>த.வெ.க. அரசு இதில் உரிய விளக்கத்தை நம் அரசு மருத்துவர்களுக்கும் மக்களுக்கும் அளித்தாக வேண்டும்!</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.</p><h2>அமைச்சர் அருண்ராஜ்</h2><p>முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் விமர்சனத்திற்கு சுகாதாரத்துறை அமைச்சர் கூறியதாவது:-</p><p>2024-ல் 119 இடங்களும், 2025-ல் 149 இடங்களும் மத்திய தொகுப்பிற்கு அளிக்கப்பட்டுள்ளன. திமுக ஆட்சியில் எந்த எதிர்ப்பும் இன்றி மத்திய அரசிற்கு சரண்டர் செய்யப்பட்டன.</p><p>கட் ஆஃப் அதிகமாக இருப்பதால் மாணவர்களை முழுமையாக சேர்க்க முடியவில்லை; மத்திய அரசு கட் ஆஃப்-ஐ குறைத்து மாணவர்களை சேர்த்து கொள்கிறது.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் முறைகேடு வழக்கு: கைதாகிறாரா செந்தில் பாலாஜி...?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-scam-case-will-senthil-balaji-be-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-scam-case-will-senthil-balaji-be-arrested#comments</comments><guid isPermaLink="false">919a0d93-b0f5-454e-aafc-411830e83a53</guid><pubDate>Thu, 30 Jul 2026 06:34:40 +0000</pubDate><atom:updated>2026-07-30T06:34:40.039Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>senthil balaji,செந்தில் பாலாஜி,wineshops,டாஸ்மாக்,டாஸ்மாக் முறைகேடு வழக்கு,TASMAC irregularities</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/0vnadxhv/senthil.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Senthil Balaji]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/0vnadxhv/senthil.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்ற பல கோடி ரூபாய் முறைகேடு தொடர்பான வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதனால் அவர் எந்நேரமும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.</p><h2><strong>மனு தள்ளுபடி:</strong></h2><p>முன்ஜாமீன் கோரி <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-anticipatory-bail-petition-dismissed">செந்தில் பாலாஜி</a> தாக்கல் செய்த மனுவை விசாரித்த 'நீதிபதி ஜி.கே.இளந்திரையன்', மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார். விசாரணையின் போது, "டாஸ்மாக் நிறுவனத்தில் பெரும் முறைகேடு நடந்திருப்பதற்கும், அதன் மூலம் அரசு கருவூலத்திற்குப் பலத்த நிதி இழப்பு ஏற்பட்டிருப்பதற்கும் போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மேலும், குற்றம்சாட்டப்பட்டவர் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்ததற்கான ஆரம்பக்கட்ட முகாந்திரங்கள் தெளிவாக உள்ளன." இந்நிலையில், எதனடிப்படையில் முன்ஜாமீன் கோருகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.</p><h2><strong>11 பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு:</strong></h2><p>தமிழக அரசின் கீழ் இயங்கும் டாஸ்மாக் நிறுவனம் மூலம் 5,380 மதுக் கடைகளும், 3,240 மதுக் கூடங்களும் (பார்கள்) இயங்கி வருகின்றன. 2021 முதல் 2025 வரை மது விற்பனை உயர்ந்தபோதிலும், அரசுக்கான வருவாய் கணிசமாகக் குறைந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து, தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை  தீவிர விசாரணை நடத்தி, 11 பிரிவுகளின் கீழ் வழக்கைப் பதிவு செய்தது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி உட்பட '7 பேர்' குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.</p><h2><strong>போலி டெண்டர் மற்றும் கூட்டுச்சதி:</strong></h2><p>2021-ஆம் ஆண்டில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் 857 டாஸ்மாக் பார்களுக்கு டெண்டர் கோரப்பட்டதில் பெரும் முறைகேடு நடந்துள்ளது. டெண்டரில் பங்கேற்றவர்கள் ஒரே வங்கிக் கிளையிலிருந்து தொடர்ச்சியான எண்களில் வரைவு காசோலைகளை பிணையத் தொகையாகச் செலுத்தியதன் மூலம் கூட்டுச்சதி அம்பலமாகியுள்ளது.</p><h2><strong>பாட்டில் சேகரிப்பு முறைகேடு:</strong></h2><p>45 கிடங்குகளுக்கான போக்குவரத்து டெண்டர் நடைமுறையிலும் முறைகேடு நடந்துள்ளது. மேலும், பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட பாட்டில்களைச் சேகரித்து மதுபான ஆலைகளுக்கு வழங்குவதில் ரூ.143 கோடி வரை முறைகேடு செய்யப்பட்டுள்ளது.</p><h2><strong>14 மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை:</strong></h2><p>வழக்கின் ஆதாரங்களைத் திரட்டும் வகையில், சென்னை, கரூர், நாமக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் 45 இடங்களில் ஊழல் தடுப்புத் துறையினர் ஒரே நேரத்தில் அதிரடிச் சோதனை நடத்தினர். கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு, அவரது ஆதரவாளர்கள் மற்றும் நண்பர்களின் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பல முக்கியமான ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><h2><strong>கைது செய்யப்படுகிறாரா?</strong></h2><p>வழக்கின் முதல் தகவல் அறிக்கை (FIR) சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், முன்ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், செந்தில் பாலாஜியை விசாரணைக்காகக் கைது செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை சட்டரீதியான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. இந்நிலையில், செந்தில் பாலாஜி கட்சி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். </p>]]></content:encoded></item><item><title>மின் கட்டண உயர்வு புகார்: 3.70 லட்சம் வீடுகளில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய திட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/plan-for-officials-to-conduct-on-site-inspections-of-370-lakh-houses</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/plan-for-officials-to-conduct-on-site-inspections-of-370-lakh-houses#comments</comments><guid isPermaLink="false">50812a59-11f7-47e0-b935-022b7d159d75</guid><pubDate>Thu, 30 Jul 2026 06:20:50 +0000</pubDate><atom:updated>2026-07-30T06:20:50.867Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TNEB,EB Charge Hike,தமிழ்நாடு மின்சார வாரியம்,மின் கட்டணம் உயர்வு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/v8jaghsv/EB.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/v8jaghsv/EB.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>மின் கட்டண உயர்வு புகார் வந்ததை தொடர்ந்து 3.70 லட்சம் வீடுகளில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய மின்சார வாரியம் உத்தரவிட்டு உள்ளது.</aside><h2><strong>மின் கட்டண உயர்வு</strong></h2><p>தமிழகத்தில் ஜூலை மாத மின் கட்டண உயர்வு தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து அதிக அளவில் புகார்கள் வந்தது. இதையடுத்து, <a href="https://www.maalaimalar.com/topic/தமிழ்நாடு-மின்சார-வாரியம்">மின் நுகர்வு</a> கணக்கீட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஆய்வு செய்ய தமிழ்நாடு மின்சாரவாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக மூத்த அதிகாரிகள் மூலம் மறு ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.</p><p>கடந்த மே மாதம் வழங்கப்பட்ட மின் கட்டணத்துடன் ஒப்பிடும்போது, ஜூலை மாதம் மின் நுகர்வில் அதிக மாற்றம் காணப்பட்ட 3.70 லட்சம் மின் இணைப்புகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த ஆய்வை ஆகஸ்ட் 7-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.</p><h2><strong>இணைப்புகள் ஆய்வு</strong></h2><p>இந்த ஆய்வில் தலைமைப் பொறியாளர் 25 இணைப்புகளையும், மேற்பார்வைப் பொறியாளர் 50 இணைப்புகளையும், கோட்டப்பொறியாளர் 75 இணைப்புகளையும் ஆய்வு செய்ய வேண்டும்.</p><p>அதேபோல், துணை நிதி கட்டுப்பாட்டாளர் 50, உதவி கோட்டப் பொறியாளர் 100, வருவாய் புலனாய்வு பிரிவு கணக்கு அலுவலர் 150, மூத்த மதிப்பீட்டு அலுவலர் 150, வருவாய் பிரிவு உதவி கணக்கு அலுவலர் 100, மதிப்பீட்டு அலுவலர் 150 மற்றும் உதவிப் பொறியாளர் 100 மின் இணைப்புகளை ஆய்வு செய்ய வேண்டும்.</p><p>இந்த ஆய்வின்போது ஏதேனும் தவறுகள் கண்டறியப்பட்டால், அவற்றை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் வி.அருண் ராய் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் முறைகேடு வழக்கு : செந்தில் பாலாஜியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-anticipatory-bail-petition-dismissed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-anticipatory-bail-petition-dismissed#comments</comments><guid isPermaLink="false">8cb450a7-a222-4137-a71f-f22739fbdc01</guid><pubDate>Thu, 30 Jul 2026 06:06:28 +0000</pubDate><atom:updated>2026-07-30T06:06:28.364Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,senthil balaji,செந்தில் பாலாஜி,Tasmac case,டாஸ்மாக் முறைகேடு வழக்கு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/gimmnvvk/senthilbalaji.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/gimmnvvk/senthilbalaji.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>முறைகேடு நடந்துள்ளதற்கும், அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதற்கும் ஆதாரங்கள் உள்ளன. குற்றம்சாட்டப்பட்டவர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர் என்பதற்கு முகாரந்திரம் உள்ளது.</aside><h2><strong>வழக்கு பதிவு</strong></h2><p>தி.மு.க. ஆட்சியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்த <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF">செந்தில்பாலாஜி</a> மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். </p><p>கடந்த தி.மு.க. ஆட்சியில் டாஸ்மாக்கில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி கூட்டுச் சதி மோசடி, முறைகேடு உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள். 120, 167, 409, 109, 420, 61 (2), 201, 316 (5), 13 (2) ஆகிய சட்டப்பிரிவுகளில் செந்தில் பாலாஜி மற்றும் டாஸ்மாக் முன்னாள் மேலாண்மை இயக்குனர் விசாகன், டாஸ்மாக் அதிகாரிகள் ராமதுரை முருகன், பன்னீர் செல்வம், பாஸ்கர், செந்தில் பாலாஜியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ரதேஷ் மற்றும் கார்த்திக் உள்பட டாஸ்மாக் ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.</p><h2><strong>சம்மன்</strong></h2><p>இது தொடர்பாக 45 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த செந்தில் பாலாஜியிடம் நேரில் சென்றும் விசாரித்தார்கள். இந்த நிலையில் டாஸ்மாக் முறைகேடுகள் தொடர்பாக மேலும் பல்வேறு தகவல்களை திரட்ட வேண்டி இருப்பதால் செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்ப லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர்.</p><p>இது தொடர்பாக அவருக்கு விரைவில் சம்மன் அனுப்பப்பட இருப்பதாகவும் அப்போது அவரிடம் நேரில் பல்வேறு தகவல்களை சேகரிக்க உள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்து உள்ளனர். </p><h2><strong>டிஜிட்டல் ஆவணங்கள்</strong></h2><p>இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் குற்றம் புரிந்ததற்கான ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையிலேயே செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. </p><p>இந்த நிலையில் செந்தில் பாலாஜி இந்த வழக்கில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-irregularities-case-senthil-balajis-anticipatory-bail-plea">முன் ஜாமின்</a> கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. </p><h2><strong>முகாந்திரம் உள்ளது</strong></h2><p>அப்போது, முதல் தகவல் அறிக்கையில் தன் மீது பொத்தம் பொதுவாக குற்றச்சாட்டுகள் உள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது. </p><p>காவல்துறை தரப்பில் ரூ.100 கோடி வரை முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளது என்பதால் விரிவான விசாரணை தேவை என கூறப்பட்டது. </p><p>இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜிகே. இளந்திரையன்,  முறைகேடு நடந்துள்ளதற்கும், அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதற்கும் ஆதாரங்கள் உள்ளன. குற்றம்சாட்டப்பட்டவர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர் என்பதற்கு முகாரந்திரம் உள்ளது. காவலில் வைத்து விசாரிக்க அவசியம் உள்ளது. இதனால் முன் ஜாமின் தர மறுப்பு தெரிவித்து செந்தில் பாலாஜியின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். </p>]]></content:encoded></item><item><title>
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் ரஹானே! </title><link>https://www.maalaimalar.com/sports/cricket/ajinkya-rahane-retirement-india-batter-quits-all-formats-of-international-cricket</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/ajinkya-rahane-retirement-india-batter-quits-all-formats-of-international-cricket#comments</comments><guid isPermaLink="false">8407f7f7-e3a9-46ef-b093-5d7efeeb75e7</guid><pubDate>Thu, 30 Jul 2026 05:59:04 +0000</pubDate><atom:updated>2026-07-30T05:59:04.989Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய அணி,Indian team,rahane,international cricket,சர்வதேச கிரிக்கெட்,ரஹானே</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/z6iqv9o0/tn-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ரஹானே]]></media:title><media:description type="html"><![CDATA[ ரஹானே]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/z6iqv9o0/tn-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய கிரிக்கெட் அணி வீரர்  <a href="https://www.maalaimalar.com/sports/cricket/kkr-captain-ajinkya-rahane-now-tops-this-unwanted-ipl-list">அஜிங்க்யா ரஹானே</a>, சர்வதேச கிரிக்கெட்டில் தனது ஓய்வை அறிவித்துள்ளார். </p><p>இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். </p><h2>வீடியோ</h2><p>தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது, ஒவ்வொன்றுக்கும் ஒரு தொடக்கமும் முடிவும் உண்டு என்பதே வாழ்வின் நிதர்சனம். </p><p>பேட்டிங்கில் எப்படி சரியான டைமிங் இருப்பதை நம்புகிறேனோ,  இன்று சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களில் இருந்தும் விலகுவதற்கு இதுவே சரியான டைமிங் என உணர்கிறேன். </p><p>கேப் எண் 278 (ரஹானேவின் தொப்பி எண்), இத்துடன் விடைபெறுகிறது. </p><p>இத்தனை ஆண்டுகளாக நீங்கள் அளித்த அன்பு, நம்பிக்கை மற்றும் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றிகள். </p><p>'அஜிங்க்யா' என்றால் 'வெல்ல முடியாதவன்' என்று பொருள், ஆனால் கிரிக்கெட் எனக்கு பல தோல்விகளைக் கற்றுக்கொடுத்திருக்கிறது. </p><p>நாம் வெற்றியை விட பெறுவதை விட தோல்விகளையே அதிகம் சந்திக்கிறோம். இருப்பினும், ரசிகர்களின் இதயங்களில் நான் ஒருபோதும் தோற்றதில்லை." என உருக்கமாக தெரிவித்துள்ளார். </p><figure><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DbZ1f0-tcFB/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:658px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DbZ1f0-tcFB/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a></div></blockquote>
<script async src="//platform.instagram.com/en_US/embeds.js"></script></figure><h2>ரஹானே டிராக் ரெக்கார்ட்</h2><p>ரஹானே இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வடிவங்களிலும் சேர்த்து 35.95 சராசரியில் 8,414 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 15 சதங்களும் 51 அரை சதங்களும் அடங்கும்.</p><h3>டெஸ்ட்</h3><p>இவற்றில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 85 போட்டிகளில் விளையாடி 5,077 ரன்கள் குவித்துள்ளார்.</p><p>டெஸ்ட் கிரிக்கெட்டில், அவர் ஆறு போட்டிகளில் இந்தியாவை கேப்டனாக வழிநடத்தினார். </p><p>அவற்றில் நான்கு போட்டிகளில் அணி வெற்றி பெற்றது மற்றும் இரண்டு போட்டிகள் சமனில் முடிந்தன. அவர் தலைமை தாங்கிய ஒரு போட்டியில் கூட இந்திய அணி தோல்வி அடையவில்லை.</p><h3>ஒருநாள் போட்டி</h3><p>ஒருநாள் போட்டிகளில் 90 போட்டிகளில் விளையாடியுள்ள ரஹானே 2,962 ரன்கள் குவித்துள்ளார்.</p><p>இதில் ரஹானே மூன்று போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார். அவை அனைத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.</p><h3>டி20</h3><p>டி20 சர்வதேச போட்டிகளில் 20 போட்டிகளில் விளையாடி 375 ரன்கள் குவித்துள்ளார். அதேநேரம் அவற்றில் இரண்டு போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமை தாங்கினார். அவற்றில் ஒன்றில் இந்தியா வெற்றி பெற்றது மற்றும் ஒன்றில் தோல்வியடைந்தது.</p><p>மேலும் 2008 முதல் தனது ஐபிஎல் பயணத்தில் 212 ஐபிஎல் போட்டிகளில் மொத்தம் 5,367 ரன்கள் குவித்துள்ளார். இதில் 2 சதங்கள், 35 அரைசதங்கள் அடங்கும்.</p> ]]></content:encoded></item><item><title>அசாம் வெள்ளப்பெருக்கில் உயிரிழப்பு எண்ணிக்கை 78 ஆக உயர்வு: கனமழை எச்சரிக்கை விடுத்தது வானிலை மையம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/assam-flood-death-toll-rises-to-78-heavy-rain-warning-issued</link><comments>https://www.maalaimalar.com/news/national/assam-flood-death-toll-rises-to-78-heavy-rain-warning-issued#comments</comments><guid isPermaLink="false">276f876d-26ee-4abf-9785-18502a6d7c8c</guid><pubDate>Thu, 30 Jul 2026 05:58:14 +0000</pubDate><atom:updated>2026-07-30T05:58:14.408Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Heavy Rain,Meteorological Department,கனமழை எச்சரிக்கை,Assam Floods,அசாம் வெள்ளப்பெருக்கு,இந்திய வானிலை மையம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/lv0dejsi/rain.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Assam floods ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/lv0dejsi/rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அசாம் மாநிலத்தில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 78 ஆக உயர்ந்துள்ளது என அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (ASDMA) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p><p>சிவசாகர் மாவட்டத்தில் இருவரும், கோலாகாட் மாவட்டத்தில் ஒருவரும் என புதிதாக 3 பேர் வெள்ளத்திற்கு பலியானதைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது.  மாநிலம் முழுவதும் '3,00,031 பேர்' வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><h2><strong>பாதிக்கப்பட்ட பகுதிகள்:</strong></h2><p>சிவசாகர், சராடியோ, கோலாகாட், ஜோர்ஹாட், நகோன், பிஸ்வநாத் மற்றும் கம்ரூப் மெட்ரோபொலிட்டன் ஆகிய 7 முக்கிய மாவட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மொத்தம் 21 வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட 551 கிராமங்கள் வெள்ள நீரில் தவித்து வருகின்றன. மேலும் 21,523 ஹெக்டேர் விவசாய நிலங்கள் முற்றிலும் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.</p><h2><strong>கனமழை எச்சரிக்கை:</strong></h2><p>அசாம் மற்றும் அதன் சுற்றியுள்ள வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்கு மேலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. மீண்டும் பெய்யும் கனமழையால் நகர்ப்புற நீர் தேக்கம், ஆறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படக்கூடிய ஆபத்தான பகுதிகளில் மேலும் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், வெள்ள நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதால் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள்:</strong></h2><p>வெள்ளத்தில் சிக்கிய மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணிகளில் மாநில பேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்க நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.</p><p>அசாமில் பிரம்மபுத்திரா மற்றும் அதன் துணை ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக தொடர்ந்து இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. தற்போதைய வானிலை எச்சரிக்கையைத் தொடர்ந்து கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>‘ஜனநாயகன்’ வெற்றிக்கு விஜய்யின் மேஜிக்கே காரணம்: தயாரிப்பாளர் கே.வெங்கட் நாராயணா பேட்டி!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/jananayagan-success-due-to-vijays-magic-producer-k-venkat-narayana-interview</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/jananayagan-success-due-to-vijays-magic-producer-k-venkat-narayana-interview#comments</comments><guid isPermaLink="false">40ba8d57-0eb0-4661-a19f-83e2445b796e</guid><pubDate>Thu, 30 Jul 2026 05:35:30 +0000</pubDate><atom:updated>2026-07-30T05:35:30.601Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Vijay,ஜன நாயகன்,JanaNayagan,KVN Productions,K.Venkat Narayana,கே.வெங்கட் நாராயணா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/y7b4x7xy/vj.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vijay-K.Venkat Narayana]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/y7b4x7xy/vj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>எச்.வினோத் இயக்கத்தில், <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்</a> நடிப்பில் கடந்த 23ஆம் தேதி அன்று '<a href="https://www.maalaimalar.com/topic/ஜனநாயகன்">ஜனநாயகன்</a>' திரைப்படம் வெளியானது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் மற்றும் மமிதா பைஜூ ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.</p><p>நடிகர் விஜய்யின் சினிமாப் பயணத்தில் கடைசிப் படமாக வெளியாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம், வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.அனைத்துத் தடைகளையும் தாண்டி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இத்திரைப்படத்தின் வெற்றி குறித்து, அதன் தயாரிப்பாளரான 'கேவிஎன் புரொடக்ஷன்ஸ்' உரிமையாளர் 'கே.வெங்கட் நாராயணா' தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.</p><h2><strong>6 மாத கால போராட்டம்:</strong></h2><p>இப்படத்தை உருவாக்குவது எங்களுக்கு எளிதான காரியமாகவே இருந்தது. ஆனால், எதிர்பாராத சில காரணங்களால் பல இன்னல்களையும், போராட்டங்களையும் சந்திக்க வேண்டியதாயிற்று. தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் தாமதம், ஏப்ரல் மாதத்தில் முழு படமும் இணையதளங்களில் கசிந்த பைரசி பிரச்சனை என அடுக்கடுக்கான சவால்கள் எங்களுக்கு எழுந்தன. </p><p>சான்றிதழ் கிடைத்த பிறகு, விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களை ஒன்றிணைத்து சரியான நாளில் படத்தை ரிலீஸ் செய்வதே எங்கள் ஒரே இலக்காக இருந்தது. விஜய்யின் கடைசிப் படம் என்பதால், அதை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் கொண்டு சேர்ப்பதே எங்கள் நோக்கமாக இருந்தது என்றார்.</p><h2><strong>இயக்குநர் ஆதங்கம்:</strong></h2><p>முன்னதாக, இயக்குநர் எச்.வினோத்பேட்டி  அளிக்கையில், "இப்படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் 'A' சான்றிதழ் அளித்தது பின்னடைவாக அமைந்தது. ஒருவேளை 'U/A' சான்றிதழ் கிடைத்திருந்தால், குடும்பங்கள் திரளாக வந்து இப்படத்தின் வசூல் சாதனையை யாராலும் தடுக்க முடியாத அளவிற்குப் பெருக்கியிருக்கும்" என்று வருத்தம் தெரிவித்திருந்தார்.</p><p>பொங்கல் பண்டிகை அல்லது தேர்தல் விடுமுறை நேரத்தில் ரிலீஸாகியிருந்தால் வசூல் இன்னும் வேற லெவலில் இருந்திருக்கும் எனக் குறிப்பிட்ட தயாரிப்பாளர், தற்போதைய சூழலிலும் படம் அடைந்துள்ள வெற்றிக்கு 'விஜய்யின் நட்சத்திர அந்தஸ்தும், அவரது மேஜிக் மற்றும் உணர்வுப்பூர்வமான இணைப்புமே காரணம்' எனத் தெரிவித்துள்ளார்.</p><h2><strong>திரைப்பயணத்தின் நிறைவு:</strong></h2><p>விஜய் தனது அரசியல் வாழ்க்கையில் தீவிரமாக கவனம் செலுத்தி வருவதால், அவரது கடைசிப் படமான 'ஜனநாயகன்' மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பும் எமோஷனல் பிணைப்பும் உருவாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாள்- முதலமைச்சர் விஜய் புகழாரம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-praise-to-doctor-muthulakshmi-reddy-birthday</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-praise-to-doctor-muthulakshmi-reddy-birthday#comments</comments><guid isPermaLink="false">32716fed-6e34-446e-93c0-445eb9967389</guid><pubDate>Thu, 30 Jul 2026 05:01:43 +0000</pubDate><atom:updated>2026-07-30T05:01:43.283Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Dr Muthulakshmi Reddy,டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/9inpxa9a/vijay.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி- முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி- முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/9inpxa9a/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்</a>, இந்தியாவின் மிக முக்கிய சமூகப் போராளியும் தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவருமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.  அதில், பெண்களின் சமூக முன்னேற்றத்திற்காகவும் ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும் முத்துலட்சுமி ரெட்டி ஆற்றிய மகத்தான சேவைகளை அவர் நினைவு கூர்ந்துள்ளார். </p><p>முதலமைச்சர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><h2><strong>சமூகப் போராளி</strong></h2><p>தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவரும், மெட்ராஸ் மாகாண சட்டமன்ற மேலவைக்கு 1927ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவரும், பெண்களின் கல்வி, உரிமை மற்றும் சமூக முன்னேற்றத்திற்காகவும், ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவருமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் பிறந்த நாளில் அவரது மகத்தான சேவைகளை நினைவுகூர்ந்து போற்றுகிறேன்!</p><p>டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள், ஆதரவற்ற பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் புகலிடமாக 'அவ்வை இல்லம்', புற்றுநோயாளிகளின் வாழ்வொளியாக 'அடையாறு புற்றுநோய் நிலையம்' போன்ற மகத்தான நிறுவனங்களை உருவாக்கியதோடு, குழந்தைத் திருமண தடைச்சட்டத்துக்கு வித்திட்ட சமூகப் போராளி ஆவார்.</p><p>அவரது உயரிய இலட்சியங்களும், பெண் முன்னேற்ற முன்னெடுப்புகளும், மனிதநேயப் பணிகளும், தன்னலமற்ற அர்ப்பணிப்பும் தலைமுறைகளைக் கடந்து என்றும் தமிழ் மண்ணில் நிலைத்திருக்கும்! என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவரும், மெட்ராஸ் மாகாண சட்டமன்ற மேலவைக்கு 1927ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவரும், பெண்களின் கல்வி, உரிமை மற்றும் சமூக முன்னேற்றத்திற்காகவும், ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவருமான டாக்டர்… <a href="https://t.co/wip3GFieSA">pic.twitter.com/wip3GFieSA</a></p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2082681800778981759?ref_src=twsrc%5Etfw">July 30, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>சென்னை மெட்ரோ 2-ம் கட்டப் பணிகள்: விரைந்து முடிக்க முதலமைச்சர் விஜய் உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-metro-phase-2-works-cm-vijay-orders-speedy-completion</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-metro-phase-2-works-cm-vijay-orders-speedy-completion#comments</comments><guid isPermaLink="false">eb20e855-6883-46b2-8c50-eb948dd67c33</guid><pubDate>Thu, 30 Jul 2026 04:52:06 +0000</pubDate><atom:updated>2026-07-30T04:52:06.805Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை மெட்ரோ,cm vijay,முதலமைச்சர் விஜய்,CM Vijay Inspects,Chennai Metro Phase 2,முதலமைச்சர் விஜய் ஆய்வு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/nn7wv915/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay Inspects Travel by Train]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/nn7wv915/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளைத் தமிழக முதலமைச்சர் விஜய் நேற்று நேரில் ஆய்வு செய்தார். கள ஆய்வின் ஒரு பகுதியாக, பொதுமக்களுடன் சக பயணியாக ரெயிலில் பயணம் செய்து அவர்களுடைய கருத்துகளையும் கேட்டறிந்தார்.</p><h2><strong>அரசினர் தோட்டம் முதல் நந்தனம் வரை பயணம்:</strong></h2><p>தலைமைச் செயலகத்தில் அன்றாடப் பணிகளை முடித்துக் கொண்டு புறப்பட்ட முதலமைச்சர் விஜய், அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்தை வந்தடைந்தார். அங்கு தானே டிக்கெட் பெற்றுக்கொண்டு ரெயிலில் ஏறினார். அரசினர் தோட்டம் முதல் நந்தனம் வரை பயணிகளுடன் சேர்ந்து பயணித்த அவர், மக்களிடம் உரையாடினார். முதலமைச்சரைக் கண்ட பயணிகள் அவருடன் ஆர்வத்துடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.</p><h2><strong>பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வு:</strong></h2><p>நந்தனத்தில் அமைந்துள்ள மெட்ரோ தலைமை அலுவலகத்திற்குச் சென்ற முதலமைச்சரை உயர் அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து, மெட்ரோ ரெயில் பாதுகாப்பு ஏற்பாடுகள், கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகள், அவசரகால பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பயணிகளுக்கான வசதிகளை விரிவாகக் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.</p><h2><strong>101 அடி உயர மேம்பாலத்தில் பிரம்மாண்ட பாதை:</strong></h2><p>கிண்டி கத்திப்பாரா பகுதியில் சுமார் 101 அடி உயரத்தில், 1,354 அடி நீளத்திற்கு அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்ட ரெயில் பாதையின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் நேரில் பார்வையிட்டார். இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்பணிகளின் முன்னேற்றத்தைக் கண்டு மெட்ரோ ரயில் அதிகாரிகளுக்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.</p><h2><strong>ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்:</strong></h2><p>தொடர்ந்து போரூர் மெட்ரோ ரெயில் நிலையம் சென்ற முதலமைச்சர், அங்கிருந்து பூந்தமல்லி வரை இயக்கப்பட்ட ஓட்டுநர் இல்லா  மெட்ரோ ரெயிலின் சோதனை ஓட்டத்தில் பங்கேற்றுப் பார்வையிட்டார்.</p><h2><strong>காலக்கெடுவுக்குள் முடிக்க உத்தரவு:</strong></h2><p>ஆய்வின் நிறைவாக, மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டப் பணிகள் அனைத்தையும் திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>பயங்கரவாதத்திற்கு உதவியதாக டெலிகிராம் நிறுவனருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த ரஷியா </title><link>https://www.maalaimalar.com/news/world/telegram-international-warrant-shock-russia-targets-pavel-durov-over-alleged-terror-support</link><comments>https://www.maalaimalar.com/news/world/telegram-international-warrant-shock-russia-targets-pavel-durov-over-alleged-terror-support#comments</comments><guid isPermaLink="false">24790f60-bb74-486f-93f6-eac5d407c061</guid><pubDate>Thu, 30 Jul 2026 04:37:12 +0000</pubDate><atom:updated>2026-07-30T04:37:12.218Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Pavel Navageethan,Russia,பயங்கரவாதம்,Terrorism,Telegram,பாவெல் துரோவ்,ரஷியா,டெலிகிராம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/84kqeztc/tn-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ புதின், பாவெல்]]></media:title><media:description type="html"><![CDATA[ புதின், பாவெல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/84kqeztc/tn-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தொழில்நுட்பம் (Technology)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெலிகிராம் நிறுவனம், தலைமை நிர்வாக அதிகாரியுமான பாவெல் துரோவ் மீது பயங்கவரத்திற்கு உதவி செய்வதாக  குற்றம்சாட்டி சர்வதேச பிடிவாரண்ட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது ரஷியா. </p><p>ரஷியாவில் பிறந்த பாவெல் தற்போது பிரஞ்சு, ஐக்கிய அரபு அமீரக குடியுரிமையைக் கொண்டு வெளிநாட்டில் வாழ்ந்து வருகிறார். </p><h2>ரஷியா</h2><p>ரஷியாவின் பரவலாக பயன்படுத்தப்படும் ஊடகங்களில் ஒன்றாக டெலிகிராம் உள்ளது. ரஷிய அரசு டெலிகிராமில் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க முயன்று வருகிறது. பயனர்கள் தரவுகளை அரசுடன் பகிர்ந்துகொள்ள துரோவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. </p><p>மேலும் ரஷிய மக்களை அரசு ஆதரவு பெற்ற MAX என்ற தகவல் பரிமாற்ற செயலிக்கு மாறவும் ரஷிய அரசு ஊக்குவித்து வருகிறது.</p><p>இந்த சூழலில் ரஷியாவின் பாதுகாப்பு அமைப்பான பெடரல் செக்யூரிட்டி சர்வீஸ் (FSB) துரோவை கைது செய்ய சர்வதேச பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. </p> <h2>குற்றச்சாட்டு</h2><p>துரோவ், பயங்கரவாத செயல்பாடுகளுக்கு உதவி செய்வதாக FSB குற்றம்சாட்டியுள்ளது. மேலும் உக்ரைனிய உளவு அமைப்புகளும், பயங்கரவாத குழுக்களும் பயன்படுத்தும் வகையில் டெலிகிராமில் உள்ள உள்ளடக்கங்களை அந்நிறுவனம் நீக்கத் தவறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.</p><p>FSBயின்படி, ரஷியாவுக்குள் ஆட்களை பணிக்கு எடுக்கவும், நாசவேலைகளை ஒருங்கிணைக்கவும் , பயங்கரம், படுகொலைகள் மற்றும் சைபர் மோசடிகளை அரங்கேற்றவரும் டெலிகிராம் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தடை செய்யப்பட்ட தகவல்களையும் டெலிகிராமில் இருந்து நீக்க துரோவ் தவறிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்ச்சாட்டுகள் குறித்தும் கைது வாரண்ட் குறித்தும் பாவெல் துரோவ் தரப்பில் இன்னும் எந்த பதிலும் இல்லை. அழுத்தத்திற்கு மத்தியிலும் டெலிகிராம் தொடர்ந்து அதிகம் பயன்படுத்தப்படும் தகவல் பரிமாற்ற ஊடகங்களில் ஒன்றாக நீடித்து வருகிறது.</p> <p>குறிப்பாக 2022 முதல் நடைபெற்று வரும் <a href="https://www.maalaimalar.com/news/world/black-sea-ukraine-port-attack-indian-sailors-trapped">ரஷியா உக்ரைன் போரில் </a>இரு தரப்பிலும் டெலிகிராம் தகவல் பரிமாற்றத்துக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது பல அதிகாரபூர்வ பதிவுகளை தனது டெலிகிராம் கணக்கின் வழியே வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.</p><p>மேலும் டெலிகிராம் செயலி சட்டவிரோத உள்ளக்கடகங்களை கொண்டுள்ளதாக துரோவ் மீது பிரான்சிலும் துரோவ் மீது விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>வாட்ஸ்அப் வெப் வெர்ஷனில் வேற லெவல்அப்டேட்!</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/whatsapp-web-gets-audio-and-video-calling-support-with-call-transfer-and-more</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/whatsapp-web-gets-audio-and-video-calling-support-with-call-transfer-and-more#comments</comments><guid isPermaLink="false">fe4aa2a1-2d33-4d32-84ba-c28be4085a9e</guid><pubDate>Thu, 30 Jul 2026 04:32:00 +0000</pubDate><atom:updated>2026-07-30T04:32:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>WhatsApp,Apps,வாட்ஸ்அப்,ஆப்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/a3r8cb4w/WA-Update.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Whatsapp]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/a3r8cb4w/WA-Update.png?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலகளவில் முன்னணி குறுந்தகவல் செயலி வாட்ஸ்அப், அவ்வப்போது புதுப்துபு அம்சங்களை வழங்கி பயனர் அனுபவத்தை மேம்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், வாட்ஸ்அப் தனது இணைய வெர்ஷனில் அழைப்புகளை மேம்படுத்தும் புதிய அப்டேட் வழங்கியுள்ளது.</p><p>வாட்ஸ்அப் நிறுவனம் நிறுவனம் தனது  வெப் வெர்ஷனில் காலிங் வசதியை வழங்குகிறது. இதன் மூலம் பயனர்கள் டெஸ்க்டாப் ஆப் இன்றி வாட்ஸ்அப் வெப் மூலம் க்ரூப் ஆடியோ மற்றும் வீடியோ கால் மேற்கொள்ளலாம். </p><h2>புது அப்டேட்:</h2><p>புதிய அப்டேட் மூலம் பயனர்கள் க்ரூப் ஆடியோ மற்றும் க்ரூப் வீடியோ கால்களை வெப் பிரவுசரில் இருந்தபடியே மேற்கொள்ள முடியும். இதற்காக டெக்ஸ்டாப் செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இதுதவிர பயனர்கள் ஸ்கிரீன் ஷேரிங், எமோஜி ரியாக்ஷன், பிரத்யேக Calls Tab, கால் ஹிஸ்டரி மற்றும் காண்டாக்ட் உள்ளிட்ட ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.</p><p>இணைய வெர்ஷனில் மேற்கொள்ளப்படும் வாட்ஸ்அப் அழைப்புகளும் முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்படும் என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. இந்த சேவையில் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை என்றும் இது முற்றிலும் இலவசமாகவே வழங்கப்படுவதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.</p><h2>புதிய அம்சங்கள்:</h2><p>வாட்ஸ்அப் அழைப்புகளில் வழங்கப்பட்டுள்ள புதிய அப்டேட் வழக்கமான காலிங் அம்சங்களுடன் கால் டிரான்ஸ்ஃபர், வெயிட்டிங் ரூம், குயிக் ஹெச்.டி., நாய்ஸ் சப்ரெஷன் போன்ற வசதிகளுடன் வருகிறது.</p><p>இதில் கால் டிரான்ஸ்ஃபர் அம்சம் கொண்டு பயனர்கள் அழைப்பை துண்டிக்காமல் நேரடியாக ஆக்டிவ் க்ரூப் கால்-இல் இணைய முடியும். ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட் கொண்டு அழைப்புகளை மேற்கொண்டு அதனை வாட்ஸ்அப் வெப் அல்லது டெக்ஸ்டாப் செயலியில் தொடர முடியும்.</p><p>வெயிட்டிங் ரூம் அம்சம் கொண்டு பயனர்கள் க்ரூப் கால்களில் லின்க் இன்றி இணைய அனுமதிக்கிறது. வாட்ஸ்அப் கால் லின்க் உருவாக்கும் போது, பயனர்கள் “Require approval to join” ஆப்ஷனை செயல்படுத்தலாம். இவ்வாறு செய்யும் போது அழைப்பாளர்கள் அழைப்பிற்கு முன் காத்திருக்க செய்கிறது.</p><p>குயிக் ஹெச்.டி. அம்சம் அழைப்பு தொடங்கிய சில நொடிகளில் ஹெச்.டி. வீடியோ ஆப்ஷனை செயல்படுத்திவிடும். நாய்ஸ் சப்ரெஷன் வசதி அழைப்புகளின் போது பின்னணியில் இருக்கும் இரைச்சல் மற்றும் சத்தத்தை குறைத்து அழைப்பின் தரத்தை மேம்படுத்தும். இந்த அம்சத்தை இன்-கால் செட்டிங்ஸ்-இல் எப்போது வேண்டுமானாலும் செயல்படுத்த முடியும்.</p><p>வாட்ஸ்அப் நிறுவனம் இந்த அம்சங்களை உலகளவில் வரும் வாரங்களில் வெளியிடும் என்று தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆகஸ்ட் 12-ல் முழு சூரிய கிரகணத்தை நேரலையில் ஒளிபரப்பும் நாசா!</title><link>https://www.maalaimalar.com/news/world/nasa-to-livestream-total-solar-eclipse-on-august-12</link><comments>https://www.maalaimalar.com/news/world/nasa-to-livestream-total-solar-eclipse-on-august-12#comments</comments><guid isPermaLink="false">61b5509b-b35f-41eb-952a-5c69bc93f83a</guid><pubDate>Thu, 30 Jul 2026 04:22:46 +0000</pubDate><atom:updated>2026-07-30T04:22:46.128Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நாசா,முழு சூரிய கிரகணம்,Total Solar Eclipse  NASA,Perseid Meteor Shower,பெர்சீட்ஸ் விண்கல் மழை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/n0iqj6vm/nasa.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Total Solar Eclipse  NASA ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/n0iqj6vm/nasa.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வரும் ஆகஸ்ட் 12த் தேதி அன்று வட அரைக்கோளத்தின் பல பகுதிகளில் அரிதான மற்றும் கண்கவர் 'முழு சூரிய கிரகணம்' நிகழவுள்ளது. இந்த அரிய வானியல் நிகழ்வை உலகெங்கிலும் உள்ள மக்கள் பார்க்கும் வகையில் 'நாசா' தனது அதிகாரப்பூர்வ தளம் மற்றும் சமூக வலைத்தள பக்கங்களில் நேரலை செய்ய ஏற்பாடு செய்துள்ளது.</p><h2><strong>கிரகணம் எங்கெல்லாம் தெரியும்?</strong></h2><p>சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு கடந்து செல்லும் போது, நிலவின் நிழல் பூமியின் மீது விழுவதால் இந்த முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது.</p><h2><strong>முழு கிரகணம்:</strong></h2><p>கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யாவின் வட பகுதி, அட்லாண்டிக் பெருங்கடல், ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலின் சில பகுதிகளில் சூரியன் முழுமையாக நிலவால் மறைக்கப்பட்டு 'முழு சூரிய கிரகணம்' தென்படும்.</p><h2><strong>பகுதி கிரகணம்:</strong></h2><p>அமெரிக்காவின் வடகிழக்கு பகுதிகள், கனடா, ஐரோப்பாவின் பெரும்பகுதி மற்றும் வடமேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இது பகுதி கிரகணமாக தெரியும்.</p><h2><strong>முழு மறைப்பு நேரம்:</strong></h2><p>ஐஸ்லாந்தின் மேற்கு பகுதியில் கிரகணத்தின் உச்சக்கட்டத்தில் சூரியன் முழுமையாக மறைக்கப்படும் நிகழ்வு '2 நிமிடங்கள் 18 வினாடிகள்' வரை நீடிக்கும். ஐஸ்லாந்தில் மாலை வேளையிலும், ஸ்பெயினில் சூரிய அஸ்தமனத்திற்கு சற்று முன்பாகவும் முழு கிரகணம் தென்படும்.</p><p>பகுதி கிரகணம் தொடங்குவது முதல் முடிவது வரை இந்த முழு நிகழ்வும் சுமார் '4 மணி நேரமும் 23 நிமிடங்களும்' நீடிக்கும். இந்த கிரகணம் நிகழும் அதே இரவில் ஆண்டின் புகழ்பெற்ற 'பெர்சீட்ஸ் விண்கல் மழை' மற்றும் 'அமாவாசை' இரவும் இணைவது இதன் மற்றொரு சிறப்பு அம்சம்.</p><h2><strong>நாசாவின் அறிவியல் ஆராய்ச்சிகள்:</strong></h2><p>இந்த கிரகணத்தின் போது சூரியனின் வளிமண்டல மேலடுக்கான 'கொரோனா' பகுதியை விரிவாக ஆய்வு செய்ய அறிவியல் குழுக்கள் தீவிரமாக தயாராகி வருகின்றன.</p><h2><strong>WB-57 ஜெட் விமானங்கள்:</strong></h2><p> நாசாவின் அதிவேக ஆராய்ச்சி ஜெட் விமானங்கள் நிலவின் நிழலைத் தொடர்ந்து பறந்து, மேகங்கள் இல்லாத வளிமண்டலத்தின் மேல் பகுதியில் இருந்து சூரியன் கொரோனாவைத் தெளிவான புகைப்படங்கள் மற்றும் தரவுகள் மூலம் ஆய்வு செய்யும்.</p><h2><strong>ஆராய்ச்சி பலூன்கள்:</strong></h2><p>அமெரிக்கப் பல்கலைக்கழக மாணவர்கள் மூலம் ஐஸ்லாந்து மற்றும் ஸ்பெயினில் அறிவியல் பலூன்கள் விண்ணில் செலுத்தப்பட்டு, கிரகணத்தின் போது பூமியின் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள் அளவிடப்படும்.</p><h2><strong>பார்வையாளர்களுக்கான எச்சரிக்கை:</strong></h2><p>ஐரோப்பா மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளில் இந்த கிரகணத்தைப் பார்க்க சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் குவிந்து வருகின்றனர். சூரிய கிரகணத்தைப் வெறும் கண்களாலோ அல்லது சாதாரண கூலிங் கிளாஸ் மூலமாகவோ பார்க்கக்கூடாது. 'ISO 12312-2 'சான்றிதழ் பெற்ற சூரிய கிரகணக் கண்ணாடிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என நாசா எச்சரித்துள்ளது.</p><p>இந்திய நேரப்படி ஆகஸ்ட் 12 ஆம் தேதி இரவு இந்த நிகழ்வு நடைபெறுவதால், இந்தியாவில் இதனை நேரில் பார்க்க முடியாது. இருப்பினும், நாசாவின் நேரலை ஒளிபரப்பு மூலம் விண்வெளி ஆர்வலர்கள் இதனை தங்களது மொபைல் மற்றும் கணினிகளில் நேரடியாகக் கண்டு ரசிக்கலாம்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY : இன்று அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... எவ்வளவு தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-30-07-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-30-07-2026#comments</comments><guid isPermaLink="false">c6636af7-fdb0-4d45-b189-c5a9c6946ff3</guid><pubDate>Thu, 30 Jul 2026 04:18:06 +0000</pubDate><atom:updated>2026-07-30T04:18:06.917Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="350" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/vdfsbd0p/gold04.jpg" width="615"><media:title type="html"><![CDATA[ தங்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/vdfsbd0p/gold04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.</aside><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">தங்கம்</a> விலை கடந்த 27-ந்தேதி வரை குறைந்து வந்து, அதன் தொடர்ச்சியாக நேற்றும் விலை குறைந்திருந்தது. அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 215-க்கும் ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 720-க்கும் விற்பனை ஆனது. <a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-29-07-2026">நேற்றைய</a> நிலவரப்படி, கிராமுக்கு ரூ.60-ம், சவரனுக்கு ரூ.480-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 155-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 240-க்கும் விற்பனை செய்யப்பட்டது. </p><h2><strong>தங்கம் விலை உயர்வு</strong></h2><p>இந்நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு 75 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,230-க்கும் சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 840 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. </p><h2><strong>வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>வெள்ளி விலையில் மூன்றாவது நாளாக மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><h2><strong>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-</strong></h2><p>29-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,240</p><p>28-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,720</p><p>27-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,960</p><p>26-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,400</p><p>25-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,400</p><h2><strong>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-</strong></h2><p>28-07-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>28-07-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>27-07-2026- ஒரு கிராம் ரூ.240</p><p>26-07-2026- ஒரு கிராம் ரூ.240</p><p>25-07-2026- ஒரு கிராம் ரூ.240</p>]]></content:encoded></item><item><title>மோடி பிரதமர் வேலையை விட்டுவிட்டு முழுநேர Influencer ஆக மாறலாம் - தீப்கே காட்டம்
</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-scam-protest-dharmendra-pradhan-quits-as-abhijit-deepke-slams-pm-modi</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-scam-protest-dharmendra-pradhan-quits-as-abhijit-deepke-slams-pm-modi#comments</comments><guid isPermaLink="false">de79404e-bce0-4c70-a012-2098f7a8d12b</guid><pubDate>Thu, 30 Jul 2026 04:09:43 +0000</pubDate><atom:updated>2026-07-30T04:09:43.603Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,பிரதமர் மோடி,CJP,அபிஜித் தீப்கே,சிஜேபி போராட்டம்,Abhijit Deepke</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/2t6rjrkz/tn-5.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தீப்கே, மோடி ]]></media:title><media:description type="html"><![CDATA[ தீப்கே, மோடி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/2t6rjrkz/tn-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் பதவியை தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யவேண்டும் என்ற முழக்கத்துடன் அபிஜித் தீப்கேவின் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்திய 1 மாத கால <a href="https://www.maalaimalar.com/news/national/cjp-new-protest-warning-delhi-jantar-mantar-security">போராட்டம் </a>கடந்த வாரம் வெற்றி பெற்றது. </p><h2>போராட்டம் வெற்றி </h2><p>அழுத்தத்தின் பேரில் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். அதேநேரம், பிரதமர் மோடியும் தனது நீண்ட நெடிய மௌனத்தை களைத்து கடந்த வாரம் இன்ஸ்டாகிராமில் வீடியோ மூலம் இதுபற்றி பேசினார். </p><p>தேர்வு முறைகேடுகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளுக்கு அதிக தண்டனை விதிக்கும் சிறப்பு மசோதா ஆகிய அறிவுப்புகளை அவர் அடுத்தடுத்து வெளியிட்டார். </p><p>இதன்படி நேற்று, பொதுத் தேர்வுகள் (முறைகேடு தடுப்பு) மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. </p><p>போராட்டத்தின் வெற்றியை தொடர்ந்து சிஜேபி தலைவர் அபிஜித் தீப்கே மகாராஷ்டிராவில் உள்ள தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.  </p> <h2>பேட்டி </h2><p>அங்கு ஊடகங்களிடம் பேசிய அவர் மாணவர்களை ஈர்ப்பதற்காக பிரதமர் மோடி வெளியிட்ட சமூக வலைத்தள வீடியோக்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.</p><p>தீப்கே கூறியதாவது, "பிரதமர் மோடி இப்போது ஒரு இன்புளூயன்சராக மாறலாம். அவர் அந்த வேலையை மிகவும் சிறப்பாகச் செய்கிறார். எனவே, அவர் பிரதமர் பதவியை விட்டுவிட்டு முழுநேர இன்புளூயன்சராக மாறட்டும். நாட்டின் ஆட்சியை வேறு ஏதேனும் தலைவர் கவனிக்கட்டும்" என்று கூறினார்.</p> <h2>நடவடிக்கை</h2><p>மேலும், போராட்டம் வாபஸ் பெறப்பட்ட பின்னரும், பல்வேறு மாநில அரசுகள் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் கண்டறிந்து அச்சுறுத்தி வருவதாகக் குற்றம் சாட்டினார்.</p><p>ஜூலை 20 அன்று டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மீது தடியடி நடத்தவும், பெல்லட் துப்பாக்கிகளை பயன்படுத்தவும் உத்தரவிட்ட அமித் ஷா உட்படப் பொறுப்பான அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.</p><p>தொடர்ந்து பேசிய அவர், "மாணவர்கள் ஒன்றும் தீவிரவாதிகள் அல்ல. மத்திய அரசு தனது அடக்குமுறையைக் கைவிடாவிட்டால், தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது போல, அடுத்து ஆட்சியையே மாற்றுவோம்" என்றும், அடுத்தகட்டப் போராட்டம் இதைவிட மிகப்பெரிய அளவில் இருக்கும் என்றும் எச்சரித்தார்.</p><p>தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்த பின் சிஜேபி உறுப்பினர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது குறித்து பேசிய தீப்கே, 36 நாட்கள் வெயிலிலும் மழையிலும் போராடிய தன்னார்வலர்களைக் கௌரவிக்கவே அந்த நிகழ்வு நடத்தப்பட்டது என்றார்.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் முறைகேடு வழக்கு- செந்தில் பாலாஜி முன்ஜாமின் கோரி மனு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-irregularities-case-senthil-balajis-anticipatory-bail-plea</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-irregularities-case-senthil-balajis-anticipatory-bail-plea#comments</comments><guid isPermaLink="false">15df6957-c24e-4c7e-8872-b85da0d8d5dc</guid><pubDate>Thu, 30 Jul 2026 04:05:40 +0000</pubDate><atom:updated>2026-07-30T04:05:40.196Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,senthil balaji,செந்தில் பாலாஜி,Tasmac case,டாஸ்மாக் முறைகேடு வழக்கு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/fjr6d0w7/senthilbalaji.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/fjr6d0w7/senthilbalaji.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமின் மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.</aside><h2><strong>சோதனை</strong></h2><p>தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் த.வெ.க. ஆட்சி அமைந்த பிறகு கடந்த தி.மு.க. ஆட்சியில் எழுப்பப்பட்ட பல்வேறு முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. </p><p>கடந்த தி.மு.க. ஆட்சியில் டாஸ்மாக்கில் பல்வேறு முறைகேடுகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக சட்டமன்றத்திலும் முதலமைச்சர் விஜய் விமர்சனம் செய்து பேசினார். ‘‘பார்ட்டி பண்ட்” என்ற பெயரில் தனியாக பணம் வசூல் செய்யப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியதுடன் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து இருந்தார். </p><p>இதனை தொடர்ந்து டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சென்னை, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 41 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னை தி.நகர் தணிகாசலம் சாலையில் உள்ள மதுபான நிறுவன அலுவலகத்திலும், கரூரில் <a href="https://maalaimalar.com/news/tamilnadu/rs-35-crore-bribery-case-questioning-of-senthil-balaji-completed">செந்தில் பாலாஜியின்</a> வீடு உள்பட 6 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. மேலும் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் இடங்களிலும் சோதனை நடைபெற்றது. </p><h2><strong>வழக்கு பதிவு</strong></h2><p>இதற்கிடையே, டாஸ்மாக் மதுபான கொள்முதல், டெண்டர் உள்ளிட்டவற்றில் மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி, டாஸ்மாக் முன்னாள் எம்.டி.விசாகன் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. </p><h2><strong>முன்ஜாமின் மனு</strong></h2><p>இந்த நிலையில், டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF">செந்தில்பாலாஜி</a> தாக்கல் செய்த முன்ஜாமின் மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. </p><p>முன்ஜாமின் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு 3-வது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>CJP புதிய போராட்டம் எச்சரிக்கை: டெல்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் உச்சகட்ட பாதுகாப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/cjp-new-protest-warning-delhi-jantar-mantar-security</link><comments>https://www.maalaimalar.com/news/national/cjp-new-protest-warning-delhi-jantar-mantar-security#comments</comments><guid isPermaLink="false">8aeda57e-cce2-41dd-96ef-33317819aeea</guid><pubDate>Thu, 30 Jul 2026 03:52:46 +0000</pubDate><atom:updated>2026-07-30T03:52:46.808Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Jantar Mantar,delhi,டெல்லி,காக்ரோச் ஜனதா கட்சி,ஜந்தர் மந்தர்,CJPProtest</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/va7atry1/jantar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jantar Mantar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/va7atry1/jantar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலகியதைத் தொடர்ந்து, 36 நாட்கள் நீடித்த போராட்டத்தை கடந்த 25ஆம் தேதி அன்று தற்காலிகமாக முடித்துக்கொள்வதாக 'காக்ரோச் ஜனதா கட்சி' அறிவித்திருந்தது.</p><p>ஆனால், போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட FIR-ஐ திரும்பப் பெறுவது குறித்த வாக்குறுதியை மத்திய அரசு மீறிவிட்டதாகக் கூறி, CJP கட்சி மீண்டும் போராட்டக் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து புதுடெல்லியிலுள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் டெல்லி காவல்துறையினரும் துணை ராணுவப் படையினரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மிகத் தீவிரப்படுத்தியுள்ளனர்.</p><h2><strong>இரும்புத் தடுப்புகள்:</strong></h2><p>முந்தைய போராட்டங்களின் போது போராட்டக்காரர்கள் தடுப்புகளை அகற்றிவிட்டு நாடாளுமன்றத்தை நோக்கி முன்னேற முயன்றனர். இதைத் தவிர்க்கும் வகையில், தற்போது ஜந்தர் மந்தரின் இரு புறங்களிலும் வைக்கப்பட்டுள்ள இரும்புத் தடுப்புகளை அகற்றிவிட முடியாதபடி, அவற்றை இரும்பு வெல்டிங் செய்து ஒன்றாக இணைத்து பலப்படுத்தி வருகின்றனர்.</p><h2><strong>சிஜேபி விடுத்துள்ள முக்கியக் குற்றச்சாட்டுகள்:</strong></h2><h2><strong>வாக்குறுதி மீறல்:</strong></h2><p>போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது எந்தவித சட்ட நடவடிக்கையோ, வழக்குப்பதிவோ செய்யப்பட மாட்டாது என கடந்த 25 ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது மத்திய அரசு உறுதியளித்ததாக சிஜேபி செய்தி தொடர்பாளர் அசுதோஷ் ரன்கா தெரிவித்துள்ளார். ஆனால், பாஜனதா ஆளும் மாநிலங்களில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கைது செய்யப்பட்டு வருவதாக சிஜேபி குற்றம் சாட்டியுள்ளது.</p><h2><strong>கட்சியின் கோரிக்கைகள்:</strong></h2><p>* அனைத்து FIR வழக்குகளையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.</p><p>* கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்.</p><p>* டெல்லி போலீஸ் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகள் புதிய வழக்குகளைப் பதிவு செய்யக் கூடாது.</p><p>* அரசுடன் எட்டப்பட்ட ஒப்பந்த நகலை உடனடியாகப் பகிரங்கமாக வெளியிட வேண்டும்.</p><h2><strong>சட்ட உதவிகள் மற்றும் நிதியுதவி:</strong></h2><p>போராட்டத்தில் பாதிக்கப்பட்டு சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு உதவ CJP கட்சி "SAAKSHI" என்ற ஆன்லைன் தளத்தையும், தேசிய அளவிலான சட்ட உதவி மையத்தையும் தொடங்கியுள்ளது. மேலும், மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல், பாதிக்கப்பட்ட மாணவர்களின் சட்டப் போராட்டத்திற்கு உதவ ரூ.1 கோடி நிதி ஒதுக்குவதாக அறிவித்துள்ளார்.</p><h2><strong>CJP நிறுவனர் அபிஜீத் திப்கே எச்சரிக்கை:</strong></h2><p>மகாராஷ்டிராவில் செய்தியாளர்களைச் சந்தித்த CJP நிறுவனர் அபிஜீத் திப்கே, "மாணவர்களை மீண்டும் வீதிக்கு வர அரசு வற்புறுத்துகிறது. மாணவர்களின் கோபம் இன்னும் தணியவில்லை. அரசு தனது போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால் மாணவர்கள் அதைச் செய்வார்கள்" என எச்சரித்துள்ளார்.</p><p>NEET தேர்வுத் தாள்கள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ மதிப்பீட்டு குளறுபடிகளைக் கண்டித்து CJP அமைப்பினர் நடத்திய தொடர் போராட்டத்தைத் தொடர்ந்து, முன்னாள் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். தற்போது நிலுவையில் உள்ள வழக்குகளை மையமாக வைத்து மீண்டும் அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஜோர்டான் சம்பவத்துக்கு பதிலடி.. ஈரான் மீது மீண்டும் முழுவீச்சில் அமெரிக்கா தாக்குதல் </title><link>https://www.maalaimalar.com/news/world/us-iran-airstrikes-us-hits-iranian-targets-after-jordan-base-missile-attack</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-iran-airstrikes-us-hits-iranian-targets-after-jordan-base-missile-attack#comments</comments><guid isPermaLink="false">7979ba4d-2320-4f0f-9f7d-cb6c64592447</guid><pubDate>Thu, 30 Jul 2026 03:51:46 +0000</pubDate><atom:updated>2026-07-30T03:51:46.824Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>trump,டிரம்ப்,Iraq,ஈராக்,Iran War,ஈரான் போர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/8qed8afw/tn-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஈரான் மீது தாக்குதல் ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஈரான் மீது தாக்குதல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/8qed8afw/tn-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/trump-netanyahu-explored-all-iran-options-including-attack-israeli-official">ஈரான் </a>மீதான வான்வழித் தாக்குதல்களை அமெரிக்கா இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. </p><p>ஜோர்டானில் உள்ள அமெரிக்கப் படைத்தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்கா ஈரானில் தாக்குதல் நடத்தியுள்ளது .  </p><p> அமெரிக்க மத்திய நேரப்படி இரவு 8 மணி (இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணி) முதல் ஈரான் இலக்குகள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதலைத் தொடங்கியதாக அமெரிக்க மத்தியக் கட்டளையகமான சென்ட்காம் அறிவித்துள்ளது. </p> <h2>தாக்குதல்</h2><p>அமெரிக்கத் தாக்குதல் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, ஈரானின் தெற்குப் பகுதியில் ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள கெஷ்ம் தீவில் 3 சக்திவாய்ந்த குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாகவும், குடியிருப்புப் பகுதி மீது ஏவுகணை தாக்கியதாகவும் ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>புஷெர் உட்பட தெற்கு ஈரானின் பல இடங்களில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல்களால் ஏற்பட்ட சேதம் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.</p> <h2>டிரம்ப் எச்சரிக்கை</h2><p>முன்னதாக, ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தைக் குறிவைத்து ஈரானின் புரட்சிகரப் படை ஏவுகணைகளை வீசியது. அவை அனைத்தையும் அமெரிக்கக் வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்தன.</p><p>இதுகுறித்து நேற்று வெள்ளை மாளிகையில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், "இப்போது எங்கள் முறை, அவர்களுக்குக் கடுமையான பதிலடி கொடுப்போம்" என்று எச்சரித்திருந்தார்.</p><p>டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு இடையேயான சந்திப்பைத் தொடர்ந்து ஈரான் மீது கடந்த வாரம் நிறுத்தப்பட்ட தாக்குதல்களை அமெரிக்கா மீண்டும் தொடங்கியுள்ளது பேசுபொருளாகி உள்ளது.</p><h2>ஈராக்</h2><p>முன்னதாக ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள் மீது அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா நடத்திய கூட்டு வான்வழித் தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர்.</p><p>சவுதி எண்ணெய் நிறுவனங்கள் மீது 30க்கும் மேற்பட்ட டிரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>முன்பதிவில் நல்ல வரவேற்பை பெற்ற கேலக்ஸி Z ஃபோல்டு 8</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/samsung-galaxy-z-fold-8-series-and-z-flip-8-record-271000-pre-orders-in-india-in-72-hours</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/samsung-galaxy-z-fold-8-series-and-z-flip-8-record-271000-pre-orders-in-india-in-72-hours#comments</comments><guid isPermaLink="false">039f06e6-7248-4ef8-a060-3a8ea636ea5a</guid><pubDate>Thu, 30 Jul 2026 03:41:00 +0000</pubDate><atom:updated>2026-07-30T03:41:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஸ்மிதா,Samsung,சாம்சங்,Foldable Smartphone</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/e44s4m70/Z-Fold-8-Ulra.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Galaxy Z Fold 8 ultra]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/e44s4m70/Z-Fold-8-Ulra.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/samsung">சாம்சங் </a>நிறுவனத்தின் கேலக்ஸி Z ஃபோல்டு 8 அல்ட்ரா, கேலக்ஸி Z ஃபோல்டு 8 மற்றும் கேலக்ஸி Z ப்ளிப் 8 மாடல்கள் சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. அறிமுக தினம் தொடங்கி புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு நடைபெற்று வருகிறது.</p><p>இந்த நிலையில், கேலக்ஸி Z ஃபோல்டு 8 அல்ட்ரா, கேலக்ஸி Z ஃபோல்டு 8 மற்றும் கேலக்ஸி Z ஃப்ளிப் 8 மாடல்கள் முன்பதிவு தொடங்கிய 72 மணி நேரத்திலேயே 2,71,000 யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவில் இது சாம்சங் நிறுவனத்தின் முந்தைய தலைமுறை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை விட அதிகம் ஆகும்.</p><h2>அதிகரிக்கும் வரவேற்பு:</h2><p>இதுகுறித்து சாம்சங் வெளியிட்ட தகவல்களின் படி, புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் ஒட்டுமொத்த முன்பதிவில் 45 சதவீத யூனிட்கள் 2-ஆம் கட்ட நகரங்கள் மற்றும் சிறு பிராந்தியங்களில் இருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p><p>அதன்படி புதிய பிரீமியம் பிரிவில் இடம்பெற்றுள்ள மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை வாங்க வழக்கமான மெட்ரோ பகுதிகளை தவிர்த்து பரவலாக பல்வேறு பகுதிகளில் இருப்பவர்கள் வரை ஆர்வம் அதிகரித்து வருவது தெரிகிறது.</p><h2>விலை விவரங்கள்:</h2><p>கேலக்ஸி Z ஃபோல்டு 8 அல்ட்ரா ரூ. 1,99,999</p><p>கேலக்ஸி Z ஃபோல்டு 8 ரூ. 1,79,999</p><p>கேலக்ஸி Z ஃப்ளிப் 8 ரூ. 1,24,999</p><p>கடுமையான விலையை கருத்தில் கொண்டு சாம்சங் நிறுவனம் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை வாங்குவோருக்கு சந்தையிலேயே முதல் முறையாக முன்பணம் இல்லாமலேயே வாங்கும் வசதி, வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் விற்பனை ஆகஸ்ட் 08-ஆம் தேதி தொடங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஊரக வேலை திட்டத்தில் பணியாற்றும் பெண்ணுக்கு ரூ.2.75 கோடி வரி செலுத்தும்படி நோட்டீஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/notice-issued-to-woman-who-worked-for-125-days-demanding-tax-payment-of-rs-2-75-crore</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/notice-issued-to-woman-who-worked-for-125-days-demanding-tax-payment-of-rs-2-75-crore#comments</comments><guid isPermaLink="false">26c9209a-23bf-424f-900b-d027c4101234</guid><pubDate>Thu, 30 Jul 2026 03:20:28 +0000</pubDate><atom:updated>2026-07-30T03:20:28.108Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>GST,ஜிஎஸ்டி வரி,GST Tax,ஜிஎஸ்டி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/eucj7d3u/jolarpet.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வரி செலுத்தும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்ட பெண்மணி ருக்மணி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/eucj7d3u/jolarpet.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>125 நாள் வேலை செய்யும் பெண்ணுக்கு, ரூ.2.75 கோடி ஜி.எஸ்.டி. செலுத்துமாறு நோட்டீஸ் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.</aside><h2><strong>125 நாள் வேலை</strong></h2><p>திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த புதூர் படவேட்டம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி ருக்மணி (வயது 56). இவர் 100 நாள் வேலை திட்டத்தில் ஏரி வேலைக்கு சென்று குடும்பம் நடத்தி வருகிறார்.</p><p>இந்த நிலையில் 125 நாள் வேலை திட்டத்தில் வந்த கூலி பணத்தை எடுப்பதற்காக நேற்று சந்தைக்கோடியூர் பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்றுள்ளார்.</p><h2><strong>ரூ.2.75 கோடி வரி ஏய்ப்பு</strong></h2><p>அங்கு வங்கியில் இருந்த ஊழியர்கள் நீங்கள் ஆர்.எம்.டிரேடர்ஸ் என்ற பெயரில் தொழில் நிறுவனம் நடத்துவதாகவும், அதன் மூலம் ஜி.எஸ்.டி. செலுத்தாமல் ரூ.2 கோடியே 79 லட்சத்து 19 ஆயிரத்து 420 வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் ஆம்பூர் வட்ட வணிகவரித்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் இருந்து கடிதம் வந்துள்ளது.</p><p>அதன்பேரில் உங்களுடைய வங்கி கணக்கு முடக்கம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.</p><h2><strong>பரபரப்பு</strong></h2><p>இதனால் அதிர்ச்சியடைந்த ருக்மணி, தான் அதுபோன்று தொழில் நிறுவனம் எதுவும் நடத்தவில்லை என்றும், 125 நாள் வேலைக்கு சென்று குடும்பம் நடத்தி வருவதாகவும் கூறியிருக்கிறார். மேலும் தனது வங்கி கணக்கு முடக்கப்பட்டதால் அதில் இருந்து கூலி பணத்தை எடுக்க முடியாமல் திரும்பி உள்ளார்.</p><p>125 நாள் வேலை செய்யும் பெண்ணுக்கு ரூ.2.75கோடி ஜி.எஸ்.டி. செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>4.09 நிமிட நீளம்.. ராவணனாக மிரட்டும் யாஷ் - வெளியானது &apos;ராமாயணா&apos; டிரெய்லர் </title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ramayana-trailer-release-epic-film-trailer-drops-at-415-am-featuring-ranbir-kapoor-sai-pallavi-and-yash</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ramayana-trailer-release-epic-film-trailer-drops-at-415-am-featuring-ranbir-kapoor-sai-pallavi-and-yash#comments</comments><guid isPermaLink="false">d71cc0b2-a22b-4fb6-b9a9-8153fbf38c6b</guid><pubDate>Thu, 30 Jul 2026 03:07:46 +0000</pubDate><atom:updated>2026-07-30T03:07:46.785Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிரெய்லர்,ரன்பீர் கபூர்,ராமாயணா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/u9ag129e/tn-4.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராமாயணா]]></media:title><media:description type="html"><![CDATA[ ராமாயணா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/u9ag129e/tn-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BE">ராமாயணா</a>’ படத்தின் டிரெய்லர் இன்று (ஜூலை.30ம் தேதி) அதிகாலை 4.15 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் வெளியாகி உள்ளது. </p><p>முன்னதாக இந்த டிரெய்லர் ஜூலை 24 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டு தற்பொழுது வெளியாகி உள்ளது. </p> <h2>ராமாயணா</h2><p>ரமேஷ் திவாரி இயக்கத்தில், ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, மற்றும் இராவணனாக யஷ் நடித்துள்ள வரலாற்றுப் படம் ராமாயணா. அனுமன் கதாபாத்திரத்தில் சன்னி தியோல் நடித்துள்ளார்.</p><p>ஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த இதிகாசத் திரைப்படத்தின் முதல் பாகம், 2026 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.</p> <h2>டிரெய்லர்</h2><p>4.09 நிமிடங்கள் நீளமுள்ள இந்த டிரெய்லர், ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக உள்ளது.</p><p>மூன்று உலகங்களுக்கும் தானே அரசன் என்று பெருமையுடன் அறிவித்துக்கொள்ளும் ராவணனின் (யாஷ்) உரையாடலுடன் டிரெய்லர் தொடங்குகிறது.</p><p>ராமரின் (ரன்பீர்) குழந்தைப் பருவம், அசுரர்களுடனான போர்கள் மற்றும் சீதையுடனான திருமணம் போன்ற காட்சிகள் இதில் காட்டப்பட்டுள்ளன.</p><p>அதன்பிறகு, 14 வருட வனவாசம், சீதாராமன் லட்சுமணனுடன் வனத்திற்குச் செல்வது, மற்றும் ராவணன் சீதையைக் கடத்துவது போன்ற முக்கியக் காட்சிகளுடன் இந்த டிரெய்லர் கதையின் மீதான ஆர்வத்தை அதிகரித்தது.</p><p>குறிப்பாக, விஷுவல் எபெக்ட்ஸ் மற்றும் பின்னணி இசை ஆகியவை படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/K7zjRJ_0sgk"></iframe></figure>]]></content:encoded></item></channel></rss>