<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 17 Aug 2026 13:41:55 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: ரூ.75 ஆயிரம் வரை பயிர்க்கடன் தள்ளுபடி: முதலமைச்சர் விஜய் அறிவிப்பு- 17 ஆகஸ்ட் 2026 </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-17-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-17-august-2026#comments</comments><guid isPermaLink="false">e5056155-d3e7-4ac5-831d-27ef01f8d24e</guid><pubDate>Mon, 17 Aug 2026 04:01:34 +0000</pubDate><atom:updated>2026-08-17T09:32:53.939Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/obhwuvef/vijay1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/obhwuvef/vijay1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>வருவாய்த்துறை மானியக்கோரிக்கை மீது அமைச்சர் செங்கோட்டையன் பதிலுரை</h2><p>வருவாய்த்துறை சேவை துறையாக மாறி உள்ளது. வருவாய்த்துறையில் 26 சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.</p><p>15 நாட்களுக்குள் சான்றிதழ்களை வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.</p><p>100 நாட்களில் சுமார் 39 லட்சம் சான்றிதழ்கள் வழங்கி உள்ளது வருவாய்த்துறை.</p><p>முதலமைச்சர் விஜய் ஒரு தீர்க்கதரிசி.</p><h2>அதிமுக எம்எல்ஏ ஓ.எஸ்.மணியன் உரை</h2><p>15 வகையான நோயாளிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை போதாது, ரூ.10,000- ஆக உயர்த்த வேண்டும்.</p><p>எந்த நேரத்திலும் உடல் கூறு ஆய்வுக்கு அனுமதிக்க வேண்டும். </p><h2>திமுக எம்எல்ஏ லெட்சுமணன் உரை</h2><p>3.2% மட்டுமே மருத்துவ கட்டமைப்புக்கு நிதி உயர்த்தப்பட்டுள்ளது.</p><p>செவிலியர்கள் பணி நிரந்தரம் - பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை.</p> <p>விவசாயிகள் நலன் கருதி 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.</p><p>வெள்ளவயலை தனி வட்டாரமாக அறிவிக்க வேண்டும்.</p><p>அமராவதி ஆற்றின் உபரி நீரை நீரேற்றம் செய்து காங்கேயம் தொகுதிக்கு வழங்க வேண்டும் - அதிமுக எம்எல்ஏ நடராஜ் உரை</p><h2>அதிமுக எம்எல்ஏ நடராஜ் உரை</h2><p>அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை விரிவுப்படுத்தி காங்கேயம் பகுதியை இணைக்க வேண்டும்.</p><p>காங்கேயத்தில் தேங்காய், அரிசி உற்பத்திக்காக புதிய தொழிற்பேட்டை அவசியம்.</p><p>தொகுதி மேம்பாட்டு நிதியான ரூ.3 கோடியை ரூ.7 கோடியாக உயர்த்த வேண்டும்.</p><h2>பாமக எம்எல்ஏ வைத்தியலிங்கம் உரை</h2><p>கொள்ளிடத்தில் இருந்து அரியலூர் பொன்னேரிக்கு நீர் கொண்டு வர வேண்டும்.</p><p>முந்திரியை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். </p><p>விருத்தாசலம் - கும்பகோணம் சாலை 4 வழிச்சாலையாக்க வேண்டும்.</p><p>இயற்கை சீற்றங்களுக்கு நிரந்தர நிவாரண திட்டம் தேவை.</p><p>கும்பகோணம், விருத்தாசலத்தை தனி மாவட்டமாக பிரிக்க வேண்டும்.</p> <p>கொள்ளிடத்தில் இருந்து அரியலூர் பொன்னேரிக்கு நீர் கொண்டு வர வேண்டும் - வைத்தியலிங்கம்</p><p>நீட் தேர்வை இந்த அரசு எந்தளவிற்கு எதிர்க்கிறதோ அந்த அளவிற்கு நெக்ஸ்ட் தேர்வையும் கண்டிப்பாக எதிர்ப்போம் - அமைச்சர் அருண்ராஜ்</p> <h2>அமைச்சர் ஆனந்த் உரை</h2><p>அம்மா முதலமைச்சராக இருந்தபோது ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் எழுந்து நிற்பார். குனிந்தபடி நிற்பார் அதை உலகமே அறியும்.</p><p>தலைவர் தளபதிக்காக மட்டுமே எங்கள் எல்லோருக்கும் மக்கள் அனைவரும் வாக்களித்தார்கள் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.</p><p>ஏனென்றால் தளபதி முதலமைச்சராக வர வேண்டும் என்று தமிழ்நாடு மக்கள் முடிவெடுத்து விட்டார்கள்.  அதன்  அடிப்படையில் எங்களுக்கு வாக்களித்தார்கள்.</p> <h2>சபாநாயகர் பேச்சு</h2><p>தமிழர் பண்பாட்டை கடைபிடித்து மரியாதை செலுத்துவது அவரவர் விருப்பம்.</p><p>முதலமைச்சர் விஜய் வரும்போது இ.பி.எஸ். எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்.</p><p>எழுந்து நிற்பது அவரவர் விருப்பம் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. </p> <p>சபாநாயகருக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தப்பட வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை - சபாநாயகர்</p><h2>ஓ.பன்னீர்செல்வம் உரை</h2><p>பேரவைக்கு சபாநாயகர் வரும்போது எழுந்து நிற்பது தான் மரபு. </p><p>முதலமைச்சர் வரும்போது அவையில் அனைவரும் எழுந்து நிற்பது மரபு இல்லை. </p> <p>மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு செயல்படுகிறது.</p><p>மதுரவாயல் தொகுதியில் பட்டா பிரச்சனை அதிகமாக உள்ளது - தவெக எம்எல்ஏ ரேவந்த் சரண்</p><h2>எடப்பாடி பழனிசாமி உரை</h2><p>2010-ம் ஆண்டு டிசம்பரில் நீட் அறிவிக்கை வந்தது.</p><p>காங்கிரஸ் ஆட்சியில் தான் நீட் அறிவிக்கை வெளியிடப்பட்டது.</p><p>உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக நடந்து கொள்ள முடியாது.</p><p>நீட் தேர்வுக்கு விலக்கு தேவை என்பதே அதிமுகவின் கொள்கை.</p> <p>விரும்பாத மாநிலங்களுக்கு நீட் இல்லை 2014-ல் ராகுல் காந்தி வாக்குறுதி - அமைச்சர் ராஜேஷ் குமார்</p><p>நீட் தேர்வால் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவர்களின் பெற்றோரை ராகுல் சந்தித்தார் - அமைச்சர் ராஜேஷ் குமார்</p><p>2017-ம் ஆண்டு தான் நீட் தேர்வு வந்தது - அமைச்சர் ராஜேஷ் தளவாய் சுந்தரம்குமார்</p><h2>தளவாய் சுந்தரம் உரை</h2><p>தமிழ்நாட்டில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமி.</p><p>அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரி கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமி.</p> <p>அதிமுக ஆட்சியில் நீட் கொண்டு வரப்படவில்லை. 2011, 2012ல் தான் நீட் தொடர்பான அறிவிக்கை வந்தது - தளவாய் சுந்தரம்</p><p>முன்னாள் முதல்வர் வரும்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து நின்றதில்லை. அதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை - கே.என்.நேரு</p><p>சட்டமன்றத்தின் கண்ணியம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதிக்கு கற்றுக்கொடுங்கள்  </p><p>சட்டமன்ற கண்ணியம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதிக்கு ஓ.பன்னீர்செல்வம் கற்றுக்கொடுக்க வேண்டும்.</p><p>முதலமைச்சர் வரும்போது எதிர்க்கட்சி தலைவர் எழுந்திருக்க வேண்டும் - அமைச்சர் ரமேஷ் பேச்சால் அவையில் சலசலப்பு</p><p>ரூ.75 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை கடன் பெற்றவர்களுக்கு ரூ.75,000 வரை தள்ளுபடி.</p><p>ரூ.1 லட்சத்திற்கு மேல் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு ரூ.35,000 தள்ளபடி - முதலமைச்சர் விஜய்</p><p>தமிழ்நாட்டில் விவசாயிகளின் பயிர்க்கடன் கூடுதலாக தள்ளுபடி செய்து முதலமைச்சர் விஜய் அறிவிப்பு </p><p>75 ஆயிரம் ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்றுள்ளவர்களுக்கு முழுமையாக தள்ளுபடி.</p><p>தமிழக மக்கள் நம் உயிர் என்றால் விவசாயிகள் நம் உயிர்நாடி, சாதி மதம் என அனைத்திற்கும் அப்பாற்பட்ட தொழில் விவசாயம் - முதலமைச்சர்</p><p>திமுக தலைவர் பெயரை குறிப்பிட்டு அமைச்சர் பேசியதற்காக முதலமைச்சர் விஜய் பேரவையில் வருத்தம் தெரிவித்தார்.</p><p>தவெக அரசு பொறுப்பேற்ற 100-வது நாளையொட்டி 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்புகளை வெளியிடுகிறார்.</p><p>தமிழ்நாட்டு விவசாயிகள் நமது உயிர்நாடி - முதலமைச்சர் விஜய்</p> <p>110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்புகளை வெளியிட்டார்.</p><p>தமிழ்நாட்டு விவசாயிகள் நமது உயிர்நாடி - முதலமைச்சர் விஜய்</p> <p>முறைகேடு நடந்ததாக திமுக முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஒப்புக்கொண்டதற்கு நன்றி - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>ஒரு சில இடங்களில் தவறு நடந்திருக்கலாம், ஆனால் திமுக ஆட்சியில் நாங்கள் 27 லட்சம் பட்டா வழங்கி உள்ளோம் - சாத்தூர் ராமச்சந்திரன்</p><p>பட்டா கொடுத்தீர்கள், ஆனால் இடம் இல்லையே என்று கேள்வி எழுப்பிய மக்கள் தான் திமுகவுக்கு ஓட்டு போடவில்லை - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>கொரோனா காலத்தில் கைகொடுக்காதீர் என்று தான் சொன்னார்கள். உரிமைத்தொகை தராதீர் என சொல்லவில்லை - அமைச்சர் ராஜ்மோகன் கிண்டல்</p><p>திமுக ஆட்சியின் முந்தைய அதிமுக காலத்தில் தான் கொரோனா பெருந்தொற்று வந்தது - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>கொரோனா பெருந்தொற்றின் காரணமாகத்தான் மகளிர் உரிமைத்தொகையை திமுக தாமதமாக தந்தது - சாத்தூர் ராமச்சந்திரன்</p> <p>மகளிர் உரிமைத்தொகையை 28 மாதங்களுக்கு திமுக தரவில்லை, நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் தான் தந்தது - செங்கோட்டையன்</p><p>100 நாட்கள் தான் முடிந்தது, தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றுவோம் - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>தவெக அளித்த வாக்குறுதியான மகளிர் உரிமைத்தொகை வழங்காதது ஏன்? - திமுக எம்எல்ஏ சாத்தூர் ராமச்சந்திரன்</p><p>சென்னையில் மீட்கப்படாமல் இருந்த தோட்டக்கலை சங்கம், கிண்டி ரேஸ் கோர்ஸ் நிலத்தை மீட்டெடுத்தவர் ஸ்டாலின்.</p><p>திமுக ஆட்சிக்காலத்தில் கனமழை, வெள்ளம், புயல் ஏற்பட்ட நிலையில் ரூ.5,000 கோடி மத்திய அரசிடம் கேட்கப்பட்டது - சாத்தூர் ராமச்சந்திரன்</p> <h2>திமுக எம்எல்ஏ சாத்தூர் ராமச்சந்திரன் உரை</h2><p>திமுக ஆட்சியில் 27 லட்சம் பேருக்கு பட்டா வழங்கினோம். சொன்னது எதையும் தவெக அரசு நிறைவேற்றவில்லை.</p><p>கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் சென்னை மாநகராட்சியில் 77,000 பேருக்கு பட்டா வழங்கினோம்.</p><p>தவெக அரசின் லட்சியங்கள் குறையவில்லை. லட்சியங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் அரசாக தவெக அரசு உள்ளது - செங்கோட்டையன்</p><p>பக்கங்கள் தான் குறைந்துள்ளன. தவெக ஆட்சியில் கொள்கை, லட்சியங்கள் குறையவில்லை - அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி</p><h2>திமுக எம்எல்ஏ சாத்தூர் ராமச்சந்திரன் உரை</h2><p>கலைஞரின் கொள்கை பிடிப்பும் மு.க.ஸ்டாலினின் செயல்திறனும் கொண்ட இளம் தலைவர் உதயநிதி.</p><p>திமுக ஆட்சியில் 400 பக்கங்கள் கொண்ட கொள்கை விளக்க குறிப்பு தவெக ஆட்சியில் 300 பக்கமாக குறைந்துள்ளது. </p><p>சுகாதாரம், வருவாய் மற்றும் பேரிடர் மீதான மானிய கோரிக்கை மீதும் விவாதம் தொடங்கியது. திமுக எம்எல்ஏ சாத்தூர் ராமச்சந்திரன் பேசினார்.</p><h2>அமைச்சர் அருண்ராஜ்</h2><p>முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற 100-வது நாள் இன்று.</p><p>மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை என்ற மாபெரும் தூணை தூக்கிப் பிடிக்க என்னிடம் ஒப்படைத்த முதல்வருக்கு நன்றி.</p><p>சட்டசபையில் 3 துறைகள் மீதான மானிய கோரிக்கை மீது விவாதம் தொடங்கியது.</p><p>வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மீதான மானிய கோரிக்கை மீது விவாதத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பதில்</p><p>சட்டசபையில் வருவாய்த்துறை மீதான மானிய கோரிக்கை மீது விவாதம் தொடங்கியது.</p><p>மேகமலை விவகாரத்தில் திமுக குறித்து அமைச்சர் நிர்மல்குமார் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் - சபாநாயகர்</p><p>திமுக அளித்த இறுதி அறிக்கை பெயரில் தான் உச்சநீதிமன்றம் முடிவெடுத்து அறிவித்துள்ளது.</p><p>மேகமலை விவகாரத்தில் திமுக செய்த ஒட்டுமொத்த தவறின் காரணமாகத்தான் மக்கள் வெளியேற்றப்படுகின்றனர்.</p><p>திமுக தவற விட்ட நிலையில் எதை வைத்து மேகமலை மக்களை காப்பாற்ற போகிறோம் என 3 நாட்களில் தெரிவிப்போம் - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>மேகமலை விவகாரத்தில் திமுகவை குறிப்பிட்டு அமைச்சர் நிர்மல்குமார் பேசியதற்கு திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.</p><p>15 ஆண்டுகளாக மக்கள் போராடுகின்றனர். கடந்த கால ஆட்சியில் இந்த வழக்குகள் முறையாக கையாளப்படவில்லை.</p><p>2025 முதல் 2026-ம் ஆண்டு வரை ஆய்வு செய்தபோது முறையான ஆதாரம் கொடுத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது - அமைச்சர் நிர்மல்குமார்</p><h2>அமைச்சர் நிர்மல்குமார் உரை</h2><p>2009 திமுக ஆட்சியில்தான் மேகமலை காப்புக்காடுகளாக அறிவிக்கப்பட்டது.</p><p>2009-ல் காப்புக்காடாக அறிவித்தபோது திமுக முறையாக கையாண்டிருந்தால் இந்த இக்கட்டான சூழல் ஏற்பட்டிருக்காது.</p><p>மேகமலை விவகாரத்தில் கடந்த 5 ஆண்டுகளில் செய்த தவறுகளை தவெக அரசு செய்யாது.</p><p>மேகமலை விவகாரத்தில் நிரந்தர தீர்வு கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கையையும் தவெக அரசு மேற்கொள்கிறது. </p><h2>தவெக எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா உரை</h2><p>மேகமலை - வருசநாடு மலைகிராம மக்களை வெளியேற்றுவததை ஏற்றுக்கொள்ள முடியாது.</p><p>உச்சநீதிமன்றத்தில் கடந்த கால அரசு சரியாக வாதாடாததே இந்த நிலைக்கான காரணம்.</p><p>கடந்த 60 ஆண்டு காலமாக ஆட்சி செய்தவர்கள் பட்டா வழங்கியிருந்தால் இந்த நிலை வந்திருக்காது - எம்எல்ஏ ராமச்சந்திரன்</p><p>உச்சநீதிமன்றமே சொந்த நாட்டு மக்களை துணை ராணுவம் கொண்டு வெளியேற்ற கூறியது வேதனை - எம்எல்ஏ ராமச்சந்திரன்</p><h2>எம்எல்ஏ செல்லசாமி உரை</h2><p>மேகமலையை காப்புக்காடு என அறிவித்த நிலையில் வனத்துறை அதிக கட்டுப்பாடு விதித்துள்ளது.</p><p>வனத்துறையினர் கெடுபிடிகள் காரணமாக விளைபொருளை விற்க கூட முடியாமல் மேகமலை மக்கள் தவிக்கின்றனர்.</p><p>சாலை, போக்குவரத்து, குடிநீர், பள்ளிக்கூடம், ரேஷன் உள்ளிட்ட வசதிகளை தமிழ்நாடு அரசே செய்து கொடுத்துள்ளது.</p> <h2>அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி</h2><p>மேகமலையில் 98 கிராமங்களில் 100 ஆண்டுகளுக்கு மேலாக 5,000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.</p><p>மேகமலை விவகாரத்தில் அரசு கொள்கை முடிவெடுத்து சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என கோரிக்கை.</p><p>மேகமலை குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்து அப்பகுதி மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை தடுக்க வேண்டும்.</p><h2>மேகமலை விவகாரம் - தொடர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்</h2><p>மேகமலையில் வசித்து வரும் பழங்குடியினர் உள்ளிட்ட மக்களை வெளியேற்றக்கூடாது - அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி</p><p>சட்டசபையில் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு சம்பந்தமே இல்லாமல் பேசுவதால் நேரம் வீணாகிறது - எடப்பாடி பழனிசாமி</p><p>எதிர்க்கட்சி எழுப்பிய கேள்விக்கு உரிய விளக்கம் இல்லை என கூறி பேரவையில் இருந்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.</p><p>திமுக ஆட்சியில் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் சிறப்பாக செயல்பட்ட 15 போலீசாருக்கு தவெக அரசே விருது தந்தது ஏன்?- உதயநிதி</p><p>இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த திமுக ஆட்சியில் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்.</p><p>போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் எதற்காக நாங்கள் அமர்த்திய அதிகாரிக்கு முக்கிய பதவி தந்தீர்கள்?  - உதயநிதி</p><p>திமுக ஆட்சியை குறை சொல்ல புகைப்படம் காட்டும் அமைச்சரே நாங்கள் எடுத்த நடவடிக்கை குறித்து சான்று தருகிறார் - உதயநிதி</p><p>திமுக ஆட்சியில் நடந்த குற்றங்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. தவெக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? அமைச்சர் ஆதவ் பேச்சிற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கேள்வி?</p><p>கவன ஈர்ப்பு, ஒத்திவைப்பு தீர்மானத்தில் அரசு விளக்கம் தான் கூற வேண்டும், பதில் குற்றச்சாட்டு கூறுவது அவை மரபு அல்ல - எ.வ.வேலு</p><p>கேள்வி நேரத்திலும் கவன ஈர்ப்பு தீர்மான நேரத்திலும் குற்றச்சாட்டு கூறக்கூடாது என்பது தான் பேரவை விதி - எ.வ.வேலு</p><p>கவன ஈர்ப்பு தீர்மானத்தில் குற்றச்சாட்டுகளை அடுக்கக்கூடாது - எ.வ.வேலு</p><p>போதைப்பொருள் அதிகரிப்பு காரணமாக தான் திமுகவை மக்கள் தூக்கி எறிந்தனர் என்ற அமைச்சர் ஆதவின் பேச்சுக்கு பேரவையில் அமளி</p><p>கடந்த திமுக ஆட்சியில் 40 சதவீத போக்சோ வழக்குகள் அதிகரித்துள்ளன. இது காவல்துறை கொடுத்த அறிக்கை - அமைச்சர் ஆதவ்  </p><p>திமுக ஆட்சியில் தான் போதைப்பொருள் பயன்பாடு, பாலியல் குற்றங்கள் அதிகரித்ததாக அமைச்சர் ஆதவ் குற்றச்சாட்டு.</p> <p>கடந்த 2020ம் ஆண்டுக்கு முன்பு தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் உறுதியாக இல்லை.</p><p>போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்ததால் தான் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குற்றங்கள் அதிகரிப்பு - அமைச்சர் ஆதவ்</p> <p>நாங்கள் எழுந்தால் நீங்கள் பேசவே முடியாது என்று அமைச்சர் ஆதவ் பேசியதற்கு திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உரை</h2><p>தவெகவின் 100 நாள் ஆட்சி, அடுத்த 25 ஆண்டுக்கான அடித்தளம். தவெக ஆட்சியை உருவாக்கிய இளைஞர்கள், பெண்களுக்கு நாங்கள் என்றும் உண்மையாக இருப்போம்.</p><p>மாணவர் கொலை வழக்கு விசாரணையில் எவ்வித அழுத்தம் இருக்காது. முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>மாநிலம் முழுவதும் 65 போதைப்பொருள் தடுப்பு குழு ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ளது.</p><p>தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டை அடியோடு ஒழிக்க தவெக அரசு உறுதியாக உள்ளது.</p><h2>கோவை மாணவர் விவகாரம் - அமைச்சர் ராஜ்மோகன் உரை</h2><p>கோவை மாணவர் குடும்பத்திற்கு இழப்பீடு, அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>மாணவர் தனுஷ் கொலையில் எந்தவித சார்பும் இன்றி காவல்துறை விசாரணை நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.</p><p>மாணவர் கொலை விவகாரத்தில் சார்பு தன்மை இன்றி நேர்மையாக காவல்துறை விசாரணை நடைபெறும்.</p><p>கொல்லப்பட்ட மாணவர்ன தனுஷின் சகோதரருக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>கோர்ட்டில் இருக்கும் வழக்கு பற்றி ஏன் பேசுகிறார்? பவுடர் பயன்படுத்தியது பற்றி மட்டும் அமைச்சர் பதில் தரட்டும் - கே.என்.நேரு</p><p>திமுக ஆட்சியில் போதைப்பொருள் விற்கப்பட்டது என்று ஒப்புக்கொள்கிறீர்களா? என் அமைச்சர் சரத் கேள்வி எழுப்பினார்.</p><p>ஸ்டேடியத்தில் நடந்தவற்றை பற்றி விளக்கம் அளித்துவிட்டேன், ஆதாரம் இன்றி தேவையின்றி பேசக்கூடாது.</p><p>திமுக ஆட்சியில் தான் அந்த நிகழ்வு நடந்தது, அப்படியென்றால் ஸ்டேடியம் வளாகத்தில் போதைப்பொருள் விற்றார்களா?  - அமைச்சர் சரத்</p><p>மாத்திரை நுணுக்கியதாக கதைவிட்ட தவெக அமைச்சரிடம் காவல்துறை விசாரணை நடத்தியதா? </p><p>போதைப்பொருள் கடத்தல் மன்னன் விவகாரத்தில் திமுக உடனடி நடவடிக்கை எடுத்தது - உதயநிதி</p><p>ஐபிஎல் போட்டியில் தவெக அமைசசர் பவுடர் என உதயநிதி பேசியதும் தவெக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.</p><p>ஒரு அமைச்சரே ஐபிஎல் போட்டியின்போது போதைப்பொருள் பயன்படுத்தியது வீடியோவாக வெளியாகி உள்ளது - உதயநிதி</p><p>ஜாபர் சாதிக் உடன் திமுக ஆட்சியில் இருந்த முதல்வர் உடன் தொடர்பு என அமைச்சர் குற்றம்சாட்டியதற்கு திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.</p><p>போதைப்பொருள் குறித்து புகார் அளித்தவரின் தகவலை போலீசார் கசியவிட்டதாக கூறுவதில் உண்மையில்லை. போதைப்பொருள் தொடர்பாக புகாரளித்தால் கொலை என சித்தரித்து உண்மையை திசை திருப்ப வேண்டாம்.</p><p>கோவை மாணவன் அமுதன் கொலையில் உண்மையை மறைக்க வேண்டிய அவசியம் காவல்துறைக்கு இல்லை.  கடந்த 5 ஆண்டுகளாக போதைப்பொருள் புழக்கம் தமிழகத்தில் எப்படி இருந்தது என நாம் அறிந்ததே.</p><p>போதைப்பொருள் கடத்தல் மன்னர் ஜாபர் சாதிக் உடன் கடந்த ஆட்சியில் முதல்வரின் குடும்பத்தினரிடம் தொடர்பு உள்ளது - அமைச்சர் நிர்மல்குமார்</p><h2>அமைச்சர் நிர்மல்குமார் உரை</h2><p>அமுதன் இறந்ததை தொடர்ந்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>அமுதன் கொலை தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.</p><p>போதைப்பொருள் தொடர்பாக எந்த தகவலும் இல்லை. பழிவாங்கல் காரணமாகவே கொலை என தெரிய வந்துள்ளது.</p><p>போதைப்பொருள் புகார் தந்தவரின் தகவலை போலீசார் கசிய விட்டது என எந்த நிகழ்வும் நடைபெறவில்லை என அமைச்சர் நிர்மல்குமார் திட்டவட்டம்.</p><p>கோவை அமுதன் கொலை விவகாரம் தொடர்பாக அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்தார்.</p><p>இரண்டாமாண்டு பயிலும் அமுதனின் நண்பனுக்கும் 4-ம் ஆண்டு மாணவர்களுக்கும் இடையிலான மோதலில் தாக்கி உள்ளனர்.</p><p>மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அமைப்பை உருவாக்கி செயல்பட வேண்டும் -  தாரகை கட்பட்</p><h2>காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கட்பட் உரை</h2><p>இரும்புக்கரம் கொண்டு அடக்கினாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக தமிழகத்தில் போதைப்பொருளால் அசம்பாவிதம் நடக்கிறது.</p><p>பள்ளி, கல்லூரிகளில் மாணவ அமைப்புகளை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவது முக்கியம்.</p><p>சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக எடுத்துக்கொள்ளாமல்   காவல்துறையை களை எடுத்து கரைபடியாத கரங்களாக கொண்டு வர வேண்டும் - எம்எல்ஏ செல்லசாமி</p> <p>கஞ்சா போதை பழக்கமே கல்லூரி, பள்ளிகளில் மாணவர்கள் தாக்குதலுக்கு காரணமாக உள்ளது - எம்எல்ஏ செல்லசாமி</p><p>எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வு நடைபெறாத வகையில் கடும் தண்டனை வழங்க வேண்டும் - பாஜக எம்எல்ஏ போஜராஜன்</p><h2>பாமக எம்எல்ஏ கணேஷ் குமார்</h2><p>போதைப்பொருள் 15 வயது மாணவர்கள் இடையே புழக்கத்தில் உள்ளது.</p><p>கடந்த ஆட்சியில் இருந்த போதைப்பொருள் புழக்கம் போன்றவை தற்போது தவெக ஆட்சியிலும் தொடர்வது வேதனை தருகிறது.</p><p>மாணவர்கள் கொலை விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க வேண்டும்.</p><h2>அதிமுக எம்எல்ஏ காமராஜ் உரை</h2><p>விடுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை, பயன்பாட்டை புகார் தந்த மாணவன் அமுதன் கொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p>மாணவன் தாக்கப்பட்ட பின் விடுதியில் இருந்து வெளியேறுமாறு கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.</p><p>மைதானத்தில் வைத்து மாணவன் அமுதனை இரும்பு கம்பியால் அடித்தும் கத்தியால் குத்தியும் 20 பேர் கொண்ட கும்பல் கொலை செய்துள்ளது.</p><p>செல்போன் சம்பந்தப்பட்ட சீனியர் ஜூனியர் சம்பவம், கோஷ்டி மோதல் என காவல்துறை அதிகாரியே சொல்கிறார்.</p> <p>போதைக்கு எதிரான தொடர் விழிப்புணர்வு, வன்முறைக்கு எதிராக கவுன்சிலிங் நடத்த வேண்டும் என உதயநிதி கோரிக்கை விடுத்தார்.</p><p>கொலை மட்டுமல்ல பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் அதிகரித்துள்ளது.</p><p>100 நாள் சாதனை என பெருமை பேசும் தவெக அரசு, 100 நாட்களில் சட்டம் ஒழுங்கு நிலையையும் பார்க்க வேண்டும் - உதயநிதி</p><p>கோவையில் மட்டுமல்ல சென்னை திருவொற்றியூர் பள்ளி மாணவன் தனுஷ் போதை பழக்கத்தை தட்டிக்கேட்டதால் கொலை.</p><p>சென்னை அம்பத்தூரில் ஆட்டோவில் வைத்து பெண் கழுத்தறுத்து கொலை.</p><p>கடந்த ஒரு வாரத்தில் தமிழகம் முழுவதும் நடந்த கொலைகளை பட்டியலிட்டு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உரையாற்றினார்.</p><h2>எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உரை</h2><p>கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகத்தில் ஏராளமான கொலைகள் நடந்துள்ளது.</p><p>கோவை கல்லூரி மாணவன் கொலையை ஏற்கெனவே அமைச்சர் ராஜ்மோகன் கோஷ்டி மோதலால் கொலை என கூறினார். இரு தரப்பாக பிரிந்து அடித்துக்கொண்டால் தான் கோஷ்டி மோதல், அமுதனை 20 பேர் அடித்துள்ளனர், இது கொலை. </p><p>அமுதனின் பெற்றோரிடம் தொலைபேசியில் ஆதரவு கூறினேன்.</p><p>போதைப்பொருள் புழக்கம் பற்றி தகவல் அளித்ததால் தான் அமுதன் கொலை என அவரின் பெற்றோர் திட்டவட்டம்.</p><p>கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகத்தில் ஏராளமான கொலைகள் நடந்துள்ளது - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி</p><p>கோவை மாணவன் கொலை தொடர்பாக திமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதம் ஏற்கப்பட்டுள்ளது - சபாநாயகர்</p><p>கோவை அமுதன் கொலை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்துள்ளோம் - திமுக எம்எல்ஏ வேலு</p><p>வளமான சமத்துவமான ஊழலற்ற தமிழ்நாடு என்ற கட்டமைப்பை முதல் 100 நாட்களில் செயல்படுத்தி உள்ளது தவெக அரசு  - சபாநாயகர்</p><p>மக்களின் நாடித்துடிப்பை அறிந்து தவெக அரசு பல துறைகளில் சிறப்பான திட்டங்களை செயல்படுத்துகிறது - சபாநாயகர்</p><p>100-வது நாளில் அடியெடுத்து வைத்துள்ள தவெக ஆட்சிக்கு பாராட்டு - சபாநாயகர்</p><p>சட்டசபையில் இன்று முதல் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.</p><p>4 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் இன்று சட்டசபை கூட்டத்தொடர் கூடியது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-today-debates-on-demands-forg-grants-session-begin">மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் சட்டசபையில் இன்று தொடக்கம்</a></p>]]></content:encoded></item><item><title>வி.சி.க மாநாட்டிற்கு முதலமைச்சர் விஜயின் வாழ்த்துக் கடிதம்: மேடையில் பெருமிதத்துடன் வாசித்துக் காட்டி நன்றி தெரிவித்த திருமாவளவன்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-congratulates-vck-conference-letter-read-on-stage</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-congratulates-vck-conference-letter-read-on-stage#comments</comments><guid isPermaLink="false">60e1a4e9-ce0b-4bb9-b5d3-cc3e47985f66</guid><pubDate>Mon, 17 Aug 2026 13:36:19 +0000</pubDate><atom:updated>2026-08-17T13:36:19.506Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>thirumavalavan,திருமாவளவன்,விசிக,vck,உளுந்தூர்பேட்டை,Ulundurpet,tvk,தமிழ் தேசிய எழுச்சி மாநாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/o8smxoam/gg.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chief Minister Vijay-Thirumavalavan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/o8smxoam/gg.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ‘தமிழ் தேசிய எழுச்சி மாநாடு’  கோலாகலமாக நடைபெற்றது. இந்த மாநாட்டின் முக்கிய நிகழ்வாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் அனுப்பி வைத்த வாழ்த்துக் கடிதத்தை விசிக தலைவர் திருமாவளவன் மேடையில் பெருமையுடன் படித்துக் காட்டினார். இரு தலைவர்களுக்கும் இடையிலான அரசியல் தோழமையையும் பரஸ்பர மரியாதையையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது.</p><h2>முதலமைச்<strong>சர் விஜய் கடி</strong>தம்..</h2><p>அந்த கடிதத்தில், அன்பிற்குரிய அண்ணண் <a href="https://www.maalaimalar.com/news/topnews/alliance-with-tavega-visika-and-tavega-to-journey-together-in-this-political-arena-thirumavalavan">திருமாவளவன் </a>அவர்களுக்கு வணக்கம், தமிழ் தேசிய எழுச்சி மாநாடு வெற்றிகரமாக நடைபெற எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். திராவிடமும் தமிழ்தேசியமும் இந்த மண்ணின் இரு கண்கள் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிலேயே தெரிவித்தோம். </p><p>எங்கள் செயற்குழு நிறேவேற்றிய தீர்மானத்தில் நிரந்தர அரசியல் தீர்மானத்தை உருவாக்க பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். மேலும் பேரறிஞர் அண்ணாவின் இருமொழிக்கொள்கையே தமிழகத்தின் இறுதியான மொழிக்கொள்கை என்று அறிவித்துள்ளோம்.</p><p>இந்நிலையில் தாங்கள் முன்னெடுத்து வரும் இந்த தமிழ் தேசிய எழுச்சி மாநாடு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தமிழ்மொழி பெருமையையும் தமிழர் உரிமைகளின் அவசியத்தையும் தமிழ்தேசியத் தேவைகளையும் உண்மைத் தன்மையுடன் உலகிற்கு எடுத்துரைக்கும் தங்களது முயற்சி பாராட்டுக்குரியது. மேலும் இம்மாநாடு தமிழ் சமூகத்தில் எதிர்காலம் குறித்த ஆழமான சிந்தனைகள் ஆக்கப்பூர்மான விவாதங்கள் மற்ற புதிய கொள்கை நோக்கங்கள் உருவாக ஒரு முக்கிய தளமாக அமையும் என நம்புகிறேன்.</p><p>இம்மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கான பல்வேறு ஆக்கப்பூர்வமான கருத்துகளை தீர்மானங்கள் மற்றும் செயல்திட்டங்கள் உருவாகிட வேண்டும் என மனமார வாழ்த்துகிறேன். இம்மாநாட்டின் முடிவுகள் தமிழ்சமூகத்திற்கு புதிய திசையை அமைக்கட்டும். தமிழும் தமிழரும் உயரட்டும்..தமிழ்நாடு வளம் பெறட்டும் என முதலமைச்சர் விஜய் கடிதத்தில் தெரிவித்திருந்தார்.</p><h2>நெஞ்<strong>சார்ந்த நன்றி</strong></h2><p>வாழ்த்துக் கடிதத்தை வாசித்து முடித்த திருமாவளவன், மாநாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து வாழ்த்துச் செய்தி அனுப்பிய முதலமைச்சர் விஜய்க்கு தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். எளிய மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் தேசியத்திற்காகவும் குரல் கொடுக்கும் விசிகவின் இந்த மாநாட்டிற்கு முதல்வரின் வாழ்த்து மேலும் உற்சாகத்தையும் எழுச்சியையும் அளித்துள்ளதாக அவர் மாநாட்டு மேடையில் சுட்டிக்காட்டினார்.</p><h2>கூட்ட நெரிச<strong>லால் சீக்கிரம் முடி</strong>ந்த உரை </h2><p>மாநாட்டுத் திடலில் கட்டுக்கடங்காத அளவில் தொண்டர்களும் பொதுமக்களும் திரண்டதால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. திருமாவளவன் மேடையில் பேசத் தொடங்கியதும், அவரைக் காண்பதற்காக தொண்டர்கள் முன்னோக்கி தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். திடலின் கொள்ளளவைக் கடந்து மக்கள் அலைமோதியதால், சூழலின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு தொண்டர்களின் பாதுகாப்பிற்காக விசிக தலைவர் திருமாவளவன் தனது நீண்ட உரையை விரைவாக முடித்துக் கொண்டார்.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய் வெற்றி பெற்றதற்கு காரணமே இதுதான்: இந்த விஷயத்தில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்- அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-this-reason-behind-chief-minister-vijay-victory</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-this-reason-behind-chief-minister-vijay-victory#comments</comments><guid isPermaLink="false">97b04102-cc5c-43e2-9a6b-56f7bef8e60c</guid><pubDate>Mon, 17 Aug 2026 13:31:35 +0000</pubDate><atom:updated>2026-08-17T13:31:35.514Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,முதலமைச்சர் விஜய்,tn cm vijay,தவெக அரசு,TVK Govt</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/0mrjc8x8/VijayAnbumani001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்- அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/0mrjc8x8/VijayAnbumani001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-</p><p>தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5 கொலைகள் நடந்திருக்கு. கடந்த 10 நாட்களாக மதுரை, கோவை, சென்னை போன்ற நகரங்களில் கொலைகள் நடந்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் போதை மற்றும் மது. இதை இன்னும் கட்டுப்படுத்தனும். ஓரளவிற்கு போதைப்பொருள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. இது போதுமானது கிடையாது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் போதைப் பொருட்களுக்கு இளைஞர்கள் அடிமை ஆகியிருக்கிறார்கள். அதை உடனடியாக கட்டுப்படுத்தவில்லை என்றால் மோசமான விளைவுகள் வரும்.</p><p>ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாக நாங்கள் படிப்படியாக மதுவை குறைப்போம் என்றார்கள். அவர்கள் செய்யும் நடவடிக்கைகளை பார்த்தால் மது வழிகளை அதிகப்படுத்துவற்கான பல முயற்சிகளை நடத்தியிருக்காங்க. வருவாயை இன்னும் எப்படி அதிகப்படுத்தலாம் என்பதற்கான அலுவாலியா தலைமையில் ஐவர் குழு அமைத்திருக்கிறார்கள். டாஸ்மாக்கில் எப்படி வருவாயை உயர்த்தலாம் என்பது போன்ற Terms கொடுக்கப்பட்டுள்ளது.</p><p>தற்போது டாஸ்மாக்கில் செயலி கொடுத்து ஆன்லையில் புக் செய்யலாம். தனியாரிடம் விற்பனை செய்யலாம் என்பது தேவையில்லாதது. இவ்வளவு கொலைகள் நடந்திருப்பது இதனால்தான்.</p><h2>விஜய் வெற்றி பெற்றதற்கு காரணம்</h2><p>த.வெ.க. தலைவர் விஜய் வெற்றி பெற்றதற்கு காரணம், கடந்த திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. சட்டம் ஒழுங்கு கெட்டு போய்விட்டது. அன்றாடம் கொலைகள் நடந்து கொண்டிருக்கு. இந்த காரணத்திற்காகத்தான் அனைத்து மக்களும் சேர்ந்து விஜய்க்கு வாக்கு அளித்தார்கள்.</p><p>அந்த பிரச்சினையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். முதலமைச்சர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். காவல்துறை அவரின் கீழ்தான் உள்ளது. இதை முதலமைச்சர் பார்க்க வேண்டும். </p>]]></content:encoded></item><item><title>பாஜக என பேச்சு வந்தால் அன்புமணி சைலன்ட் மோடுக்கு செல்கிறார்: மாணிக்கம் தாகூர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickamtagore-says-anbumani-ramadoss-goes-to-silent-mode-mention-bjp</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickamtagore-says-anbumani-ramadoss-goes-to-silent-mode-mention-bjp#comments</comments><guid isPermaLink="false">52328fce-8e2f-4c90-aff5-0340968c0182</guid><pubDate>Mon, 17 Aug 2026 13:11:25 +0000</pubDate><atom:updated>2026-08-17T13:11:25.782Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/xqtni9w9/AnbumaniramadossManickamTagore.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்- மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/xqtni9w9/AnbumaniramadossManickamTagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடகா அரசு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட <a href="https://www.maalaimalar.com/news/national/karnataka-to-release-cauvery-water-state-assures-12000-cusecs-per-day-to-tamil-nadu-in-supreme-court">காவிரி</a> மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட மறுப்பு தெரிவித்தது. தென்மேற்கு பருவமழை காரணமாக காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்ததால் வேறு வழியில்லாமல் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட்டது.</p><p>கர்நாடகாவை உரிய தண்ணீரை திறந்துவிட உத்தரவிடக்கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தண்ணீர் திறந்து விடப்படுவதை உறுதி செய்தார்.</p><p>இதற்கிடையே கர்நாடக மாநில காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தி மீது அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சனம் வைத்தார்.</p><h2>இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:-</h2><p>அன்புமணி ராமதாஸ் அவர்களை நாம் சும்மா விட்டுவிடக் கூடாது. காவிரியில் தண்ணீர் வரவில்லை என்றால் காங்கிரஸ்தான் காரணம் என்று சொல்லும் அவர், இதையும் மறந்து விடக்கூடாது. தண்ணீர் திறந்துவிடும்போது, அதை மறிக்கும் பாஜக-வினர் பற்றி பேசமால் ஏன் சைலன்ட் மோடுக்கு போய்விடுகிறார்? என்று தெரியவில்லை.</p><h2>சைலன்ட் மோடுக்கு செல்லும் அன்புமணி</h2><p>பாஜக என்று பேச்சு வந்தாலும் சைலன்ட் மோடுக்கு போய்விட்டார். ஏனென்றால் அவர் மீது சி.பி.ஐ. வழக்கு பாட்டியாலா நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதுதான காரணம். மருத்துவ கல்லூரிக்கு அனுமதி வழங்கியதற்காக ஊழல் செய்தது விளைவாக இன்னும் வழங்கு நிலுவையில் உள்ளதால், பா.ஜ.க. ஆட்டுவிக்கின்ற பொம்மை போன்று அன்புமணி செயல்படுகிறார்.</p><p>அவரை பொறுத்தமட்டில் தமிழர்கள் மீது அவ்வளவு அன்பு இருக்கிறது என்றால், குரல் கொடுப்பதாக நினைத்தால் பா.ஜ.க செய்யும் அட்டூழியத்தையும், தண்ணீர் திறந்து விடும் கர்நாடக அரசுக்கு எதிராக போராடும் பாஜக-வையும் அன்புமணி ராமதாஸ் கண்டிப்பாரா? என்பது முக்கியம்.</p><p>இவ்வாறு மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>தவெகவுடன் கூட்டணி: விசிகவும் தவெகவும் இனி இந்த அரசியல் களத்தில் இணைந்தே பயணிக்கும்- திருமாவளவன்!</title><link>https://www.maalaimalar.com/news/topnews/alliance-with-tavega-visika-and-tavega-to-journey-together-in-this-political-arena-thirumavalavan</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/alliance-with-tavega-visika-and-tavega-to-journey-together-in-this-political-arena-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">ccc889d5-40bb-49ea-b6c3-e2a2fc0c1e14</guid><pubDate>Mon, 17 Aug 2026 12:49:22 +0000</pubDate><atom:updated>2026-08-17T12:49:22.323Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>thirumavalavan,திருமாவளவன்,விசிக,vck,உளுந்தூர்பேட்டை,Ulundurpet,tvk,தமிழ் தேசிய எழுச்சி மாநாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/o8smxoam/gg.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Alliance with TVK]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/o8smxoam/gg.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற பிரமாண்ட மாநாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியதாவது, <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vck-tamil-national-uprising-conference-ulundurpet-grand-opening">தமிழக வெற்றிக் கழகத்துடன்</a> (தவெக) கூட்டணி அமைத்து இனிவரும் தேர்தல்களில் இணைந்து பயணிக்கப் போவதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மாநாட்டுத் திடலில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்களின் பலத்த கரகோஷத்திற்கு இடையே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.</p><h2>சகோ<strong>தரத்துவ உ</strong>றவு</h2><p>மாநாட்டில் உரையாற்றிய விசிக தலைவர் திருமாவளவன், தவெக தலைவர் ஜோசப் விஜய் அவர்களுடனான நட்புறவையும், கூட்டணி குறித்து எடுக்கப்பட்ட முடிவையும் விரிவாகப் பேசினார். "இன்றைக்கு ஆளுகிற முதலமைச்சர் அன்பு சகோதரர் ஜோசப் விஜய் அவர்களோடு நாம் கூட்டணி வைத்திருக்கிறோம். </p><p>விசிகவும் தவெகவும் இனி இந்த அரசியல் களத்தில் இணைந்தே பயணிக்கும்" என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். சமூக நீதி, மாநில உரிமைகள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளின் அடிப்படையில் இந்த கூட்டணி வலுப்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p>விசிக-தவெக கூட்டணியின் இந்த திடீர் அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களை உருவாக்கியுள்ளது. இரு முக்கியக் கட்சிகளின் கரங்கள் கோர்க்கப்பட்டுள்ள நிலையில், வரவிருக்கும் தேர்தல் களத்தில் இது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்த எதிர்பார்ப்பு அரசியல் விமர்சகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.</p><h2>ஆ<strong>ளுங்கட்சியாக</strong> வரவேண்டும்</h2><p>இத்தனை ஆண்டுகாலம் ஆளுங்கட்சிகளோடு நாம் கூட்டணி வைத்தோம். இனி நாம் ஆளுங்கட்சியாக வரவேண்டும் என திருமாவளவன் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>ஆடி மாதம் முடிஞ்சுடுச்சு.. மகளை அழைத்துச் செல்ல வந்த புதுமாப்பிள்ளைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மாமியார்</title><link>https://www.maalaimalar.com/news/national/aadi-month-over-wife-mother-in-law-surprise</link><comments>https://www.maalaimalar.com/news/national/aadi-month-over-wife-mother-in-law-surprise#comments</comments><guid isPermaLink="false">bb459491-9bbe-40a2-bdb0-482a534996d0</guid><pubDate>Mon, 17 Aug 2026 12:43:17 +0000</pubDate><atom:updated>2026-08-17T12:43:17.674Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Telangana,தெலங்கானா,ஆடி மாதம்,Aadi,ஆடி விருந்து,Aadi feast</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/g44y7y4u/Aadi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Aadi feast]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/g44y7y4u/Aadi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தெலுங்கானா மாநிலம், நர்சி பட்டினத்தை சேர்ந்தவர் ரமேஷ் குமார் - கலாவதி தம்பதி. அவரது மகள் நவ்யாவிற்கும், ஸ்ரீ ஹர்ஷா என்பவருக்கும் திருமணம் நடந்தது.</p><p>ஆடி மாதம் என்பதால் நவ்யா தனது தாய் வீட்டிற்கு வந்து இருந்தார். ஆடி மாதம் முடிந்ததால் ஸ்ரீஹர்ஷா மனைவியை தனது வீட்டிற்கு அழைத்துச் செல்ல நேற்று மாமியார் வீட்டிற்கு வந்தார்.</p><p>மருமகனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க மாமியார் வீட்டினர் தடல் புடலான ஏற்பாடுகளை செய்தனர். அதன்படி, வீட்டுக்கு வெளியில் இருந்து பூக்களால் ஒவ்வொரு அடிக்கும் இதயப்பூர்வமாக வரவேற்றனர். புது மாப்பிள்ளை ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போது வெள்ளி சாமி சிலை பணமுடிப்பு உள்ளிட்ட பரிசுகளை வழங்கினர். </p><p>பின்னர் மருமகனின் கண்ணைக் கட்டி மேசைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருமகனின் கண்ணில் கட்டப்பட்டிருந்த துணியை அகற்றினர். மேஜையில் அடிக்கி வைக்கப்பட்டு இருந்த உணவுப் பொருட்களைக் கண்டு ஸ்ரீஹர்ஷா திக்குமுக்காடி போனார். </p><p>மேஜையில் இட்லி வடை, பூரி, பொங்கல், உப்புமா மற்றும் இனிப்பு வகைகள் என 100-க்கும் மேற்பட்ட உணவுகளை அடுக்கி வைத்திருந்தனர்.</p><p>மாமனார், மாமியார், மனைவி ஆகியோர் ஸ்ரீஹர்ஷாவுக்கு உணவுகளை ஊட்டி விட்டனர். </p><p>இதுபோல் மாமனார் மாமியார் மனைவி கிடைப்பதற்கு பாக்கியம் செய்து இருக்க வேண்டும் என ஸ்ரீஹர்ஷா தெரிவித்தார்.</p> ]]></content:encoded></item><item><title>உளுந்தூர்பேட்டையில் விசிகவின் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு: தமிழ்த்தாய் வாழ்த்துடன் கோலாகலத் தொடக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vck-tamil-national-uprising-conference-ulundurpet-grand-opening</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vck-tamil-national-uprising-conference-ulundurpet-grand-opening#comments</comments><guid isPermaLink="false">571479ec-cd20-4587-bf9f-73f5a4baf661</guid><pubDate>Mon, 17 Aug 2026 12:34:17 +0000</pubDate><atom:updated>2026-08-17T12:34:17.096Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>thirumavalavan,திருமாவளவன்,விசிக,vck,உளுந்தூர்பேட்டை,Ulundurpet,தமிழ் தேசிய எழுச்சி மாநாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/9lrpv9nc/ff.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Thirumavalavan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/9lrpv9nc/ff.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் திருமாவளவன் பிறந்தநாளையொட்டி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்ட 'தமிழ் தேசிய எழுச்சி மாநாடு' தமிழ்த்தாய் வாழ்த்துடன் முறைப்படி தொடங்கியது. </p><p>தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மாநாட்டுத் திடலில் குவிந்துள்ளதால், உளுந்தூர்பேட்டை பகுதியே மக்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. மாநாட்டுத் திடல் முழுமையாக நிரம்பி வழிவதோடு, வாகனப் போக்குவரத்தும் அப்பகுதியில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.</p><h2>தலை<strong>வர்கள் பங்</strong>கேற்பு</h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-released-tvk-government-100-day-achievements-booklet">விடுதலைச் சிறுத்தைகள்</a> கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில், கட்சியின் முன்னணி நிர்வாகிகள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். எழுச்சிப் பாடல்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கிய இந்த மாநாட்டில், தமிழக அரசியல் சூழல், தமிழ் தேசிய உரிமைகள் மற்றும் சமூக நீதி குறித்த முக்கியக் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.</p><h2>மிகுந்த <strong>எதிர்பார்ப்பு</strong></h2><p>மாநாட்டின் முத்தாய்ப்பாக கட்சியின் தலைவர் திருமாவளவன் பேரணித் தொண்டர்கள் மத்தியில் சிறப்புரையாற்றவுள்ளார். வரவிருக்கும் தேர்தல் அரசியல், தமிழ் தேசியத்தின் தேவை மற்றும் மாநில உரிமைகள் தொடர்பாக அவர் பேசவிருக்கும் கருத்தாழமிக்க உரையை கேட்க மாநாட்டுத் திடலில் கூடியுள்ள மக்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். பாதுகாப்புப் பணியில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டு, மாநாடு அமைதியான முறையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>&apos;ஜன நாயகன்&apos; ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு:  எப்போது தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/jana-nayagan-ott-release-date-official-announcement-when-do-you-know</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/jana-nayagan-ott-release-date-official-announcement-when-do-you-know#comments</comments><guid isPermaLink="false">95484855-ebaf-4688-ac99-68ceb3fce2d6</guid><pubDate>Mon, 17 Aug 2026 12:10:44 +0000</pubDate><atom:updated>2026-08-17T12:10:44.632Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Jana Nayagan,ஜன நாயகன்,vijay,OTT,எச்.வினோத்,H.vinoth,ஓடிடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/4nwguaso/janana.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jana Nayagan ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/4nwguaso/janana.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக முதலமைச்சரும் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமுமான விஜயின் கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்', திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகத் தயாராகியுள்ளது. இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 21 அன்று 'ஜீ5' (Zee5) ஓடிடி தளத்தில் அதிகாரப்பூர்வமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது.</p><h2>திரைய<strong>ரங்குகளில் சாதனை</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/is-sathuranga-vettai-2-finally-hitting-screens-after-long-wait">எச்.வினோத் </a>இயக்கத்தில் பல தடைகளைத் தாண்டி கடந்த ஜூலை 23 அன்று வெளியான 'ஜன நாயகன்', பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. சாக்னில்க் தகவலின்படி, இந்தியாவில் மட்டும் ரூ.227.14 கோடியும், உலகளவில் ரூ.320.34 கோடியும் வசூலித்து மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது.</p><p>கே.வி.என் புரொடக்ஷன்ஸ் சார்பில் வெங்கட் கே நாராயணா தயாரித்த இப்படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி மற்றும் நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைப்பில் விவேக் வரிகளில் உருவான 'தளபதி கச்சேரி' போன்ற பாடல்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றன.</p><h2>அரசியல் <strong>வருகை</strong></h2><p>ஏப்ரல் 2026-இல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜயின் திரையுலகப் பயணத்தின் கடைசித் திரைப்படமாக 'ஜன நாயகன்' அமைந்துள்ளது. தளபதி வெற்றி கொண்டானாக அவரது வழக்கமான துடிப்பான நடனம், சுவாரஸ்யமான சண்டைக்காட்சிகள் மற்றும் மாஸ் நடிப்பால் ரசிகர்களை நெகிழ வைத்துள்ள இத்திரைப்படம், தற்போது ஓடிடி தளத்திற்கு வருவது விஜய் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காலே டெஸ்டில் சோனல் தினுஷா சதம்: முதல் இன்னிங்சில் 284 ரன்களில் ஆல்அவுட் ஆனது இலங்கை</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/galle-test-sonal-dinusha-century-sri-lanka-284-all-out-1st-innings</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/galle-test-sonal-dinusha-century-sri-lanka-284-all-out-1st-innings#comments</comments><guid isPermaLink="false">3e20cd99-7790-4977-a248-ced87a438e9a</guid><pubDate>Mon, 17 Aug 2026 11:44:39 +0000</pubDate><atom:updated>2026-08-17T11:44:39.815Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜடேஜா,jadeja,Galle Test,காலே டெஸ்ட்,Manav suthar,மானவ் சுதர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/nusbzxvf/GalleTest0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காலே டெஸ்ட்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/nusbzxvf/GalleTest0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியா- இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 460 ரன்கள் எடுத்திருந்தது. குல்தீப் யாதவ் 12 ரன்களுடனும், பிரசித் கிருஷ்ணா 1 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.</p><h2>இந்திய முதல் இன்னிங்சில் 462 ரன்களில் ஆல்அவுட்</h2><p>இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய இந்தியா மேலும் 2 ரன்கள் சேர்த்து 462 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இந்திய அணி சார்பில் தேவ்தத் படிக்கல் அதிகபட்சமாக 167 ரன்கள் குவித்தார். கே.எல். ராகுல் 82 ரன்களும், துருவ் ஜுரெல் 51 ரன்களும் சேர்த்தனர்.</p><p>இலங்கை அணி சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 4 விக்கெட்டுகளும், கேஷரா நுவாந்தா 3 விக்கெட்டும், அசிதா பெர்னாண்டோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><h2>தொடக்கத்தில் திணறிய இலங்கை</h2><p>பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. நிஷான் மதுஷ்கா பெர்னாண்டோ, லஹிரு உதாரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். நிஷான் மதுஷ்கா பெர்னாண்டோ ரன்ஏதும் எடுக்காமல் முகமது சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார்.</p><p>அடுத்து வந்த தினேஷ் சண்டிமல் 4 ரன்களிலும், கமிந்து மெண்டிஸ் 14 ரன்கிளலும், லஹிரு உதாரா 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை அணி 59 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.</p><p>5-வது விக்கெட்டுகு்கு தனஞ்ஜெயா டி சில்வா உடன் சோனால் தினுஷா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 31 ரன்கள் சேர்த்தது. தனஞ்ஜெயா டி சில்வா 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது இலங்கை 90 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.</p><h2>சோனல் தினுஷா- நிரோஷன் டிக்வெல்லா அரைசதம்</h2><p>அப்போது 6-வது விக்கெட்டுக்கு சோனல் தினுஷா உடன் நிரோஷன் டிக்வெல்லா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடியை இந்திய பந்து வீச்சாளர்கள் வீழ்த்த கடும் சிரமப்பட்டனர்.</p><p>டிக்வெல்லா 67 பந்திலும், தினுஷா 92 பந்திலும் அரைசதம் அடித்தனர். இறுதியாக 236 ரன்கள் எடுத்திருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. நிரோஷன் டிக்வெல்லா 80 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.</p><h2>சோனல் தினுஷா 100 ரன்கள்</h2><p>அதன்பின் இலங்கை அணி விக்கெட்டுகளை மளமளவென இழந்தது. கேஷரா நுவாந்தா 2 ரன்களிலும், பிரபாத் ஜெயசூர்யா 10 ரனகளிலும், லஹிரு குமாரா 10 ரன்களிலும் ஆட்டமிழந்தார். சோனல் தினுஷா சரியாக 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 284 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.</p><h2>மானவ் சுதர் 4 விக்கெட்</h2><p>இந்திய அணி சார்பில் மானவ் சுதர் 4 விக்கெட்டும், ரவிந்தீர ஜடேஜா 3 விக்கெட்டும், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p>178 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்க இருக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>பாஜக-வின் தேசிய துணைத் தலைவர்களாக 13 பேர் நியமனம்</title><link>https://www.maalaimalar.com/news/national/bjp-appoints-13-national-vice-presidents-piyush-goyal-named-national-treasurer</link><comments>https://www.maalaimalar.com/news/national/bjp-appoints-13-national-vice-presidents-piyush-goyal-named-national-treasurer#comments</comments><guid isPermaLink="false">2cd9f0c9-7c79-4046-a18c-0098ac88e3da</guid><pubDate>Mon, 17 Aug 2026 11:41:09 +0000</pubDate><atom:updated>2026-08-17T11:41:09.087Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/8zlnxomu/Untitled-design-70.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பாஜகவில் 13 தேசிய துணைத் தலைவர்கள் நியமனம்]]></media:title><media:description type="html"><![CDATA[ BJP National Leadership ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/8zlnxomu/Untitled-design-70.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின் தலைமையில் செயல்படவுள்ள தேசிய துணைத் தலைவர்கள், பொது செயலாளர்கள் மற்றும் தேசிய செயலாளர்கள் உள்ளிட்ட குழு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த பட்டியலில் பொருளாளர்கள், மத்திய அலுவலக பொறுப்பாளர்கள் மற்றும் பல்வேறு மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ஆகிய உயர் பதவிகளுக்கு பொறுப்பாளர்களை பாரதிய ஜனதா கட்சி நியமித்துள்ளது.</p><p>உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநிலத்தின் பொதுச் செயலாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை இணை அமைச்சராக இருந்த பியூஷ் கோயல், கட்சியின் தேசிய பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.</p><h3><strong>தேசிய துணைத் தலைவர்கள்</strong></h3><p>பாஜக-வின் தேசிய துணைத் தலைவர்களாக 13 பேர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.</p><p>வசுந்தரா ராஜே சிந்தியா, தீரத் சிங் ராவத், ராம் மாதவ், பைஜ்யந்த் ஜெய் பாண்டா, டி புரந்தேஸ்வரி, ரேகா வர்மா, வர்ஷாபென் நரேந்திரபாய் தோஷி, பார்தி பிரவின் பவார், மன்பிரீத் சிங் பாதல், லால் சிங் ஸ்ம்ரி ஆர்யா, நாகராஜா, தாரிக் மன்சூர் மற்றும் மதுசந்திர கர் உள்ளிட்ட 13 பேர் தேசிய துணைத் தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.</p><p>பி.எல். சந்தோஷ் தேசிய பொதுச் செயலாளராக தொடர்ந்து நீடிக்கிறார். வினாத் தாவ்டே மற்றும் ஸ்மிருதி இரானி ஆகியோர் எட்டு தேசிய பொதுச் செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளனர்.</p><p>ஒரு தசாப்தத்திற்கும் மேலாக சமூக ஊடக ஒருங்கிணைப்பாளராக இருந்த அமித் மால்வியாவிற்கு பதிலாக சத்தீஸ்கரைச் சேர்ந்த தீபக் மஸ்கே அந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.</p><h3><strong>சமூக ஊடகம்</strong></h3><p>அதேசமயம், அனில் பலூனி பாஜகவின் ஊடக ஒருங்கிணைப்பாளராகத் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிரீத்தி காந்தி, டெல்லியைச் சேர்ந்த சிவானந்த் திவேதி, உத்தரகாண்டைச் சேர்ந்த அலோக் பட் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த அருண் யாதவ் ஆகியோர் சமூக ஊடக ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.</p><p>மேலும், யுவ மோர்ச்சா தலைவராக பெங்களூரு தெற்கு எம்பி தேஜஸ்வி சூர்யாவுக்கு பதிலாக ஹேமங் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>சத்தீஸ்கரைச் சேர்ந்த ரூப் குமாரி சௌத்ரி மகளிர் அணியின் புதிய தலைவராகவும், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த குன்வர் பாசித் அலி சிறுபான்மையினர் அணியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>த்ரில்லர் கதைகளில் புதிய கட்டமைப்பு: &apos;வதந்தி 2&apos; அனுபவம் குறித்து தயாரிப்பாளர்கள் புஷ்கர்-காயத்ரி பேட்டி!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/new-structure-in-thriller-stories-vadhandhi-2-experience-producers-pushkar-gayathri-interview</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/new-structure-in-thriller-stories-vadhandhi-2-experience-producers-pushkar-gayathri-interview#comments</comments><guid isPermaLink="false">bf4fd16f-a114-42c1-ac8a-1a08dedff0ea</guid><pubDate>Mon, 17 Aug 2026 11:25:34 +0000</pubDate><atom:updated>2026-08-17T11:25:34.111Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சசிகுமார்,Sasikumar,காயத்ரி,gayathri,Vadhandhi 2,வதந்தி 2,Pushkar,புஷ்கர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/ddyi4apo/vadhanthi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vadhandhi 2 ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/ddyi4apo/vadhanthi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ள 'வதந்தி: தி மிஸ்டரி ஆஃப் மணி' தொடரின் கிரியேட்டிவ் புரொடியூசர்களான புஷ்கர்-காயத்ரி தம்பதியினர், தொடரின் திரைக்கதை உருவாக்கம் மற்றும் த்ரில்லர் கதைகளில் உள்ள சுவாரஸ்யங்கள் குறித்து நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.</p><p>கிராமப்புறப் பகுதிகளில் நடக்கும் குற்றப் புலனாய்வுகள் நவீனத் தொழில்நுட்பங்களை விடவும், காவல் அதிகாரிகளின் அனுபவம் மற்றும் மனித உள்ளுணர்வை நம்பியே அதிகம் நகர்கின்றன. வதந்தி தொடரின் முதல் பாகமான 'வேலோனியின் கதை' அமைந்த அதே பாணியில், இந்த இரண்டாம் பாகத்திலும் '<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/susindran-directs-shanthanu-seeman-new-film-oru-kaithiyin-diary-poster-release">மூசா ராசா</a>' என்ற காவல் அதிகாரியின் உள்ளுணர்வை மையமாக வைத்துதான் கதை நகர்த்தப்பட்டுள்ளது. தடய அறிவியல் ஆய்வகங்கள் மற்றும் நீதிமன்ற முடிவுகளிலும்கூட மனித அனுமானங்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன.</p><h2>வதந்திகளும் தவ<strong>றான புரிதல்க</strong>ளும் </h2><p>இத்தொடரில் காட்டப்படும் சம்பவங்கள் மற்றும் தகவல்கள் எந்தவித உள்நோக்கமும் இன்றி சாதாரணமாக மனிதர்களால் பேசப்படுபவை. ஆனால், ஒருவரைப் பற்றி முதன்முதலில் கேள்விப்படும் செய்தியை மக்கள் அப்படியே நம்பும்போது அது எங்கு போய் முடிகிறது என்பதைத்தான் கதையின் முதன்மைப் பொருளாக எடுத்துக்கொண்டுள்ளோம். உலகில் யாருமே முற்றிலும் சரியானவர்களும் இல்லை, முற்றிலும் தவறானவர்களும் இல்லை என்ற எங்களின் உலகப் பார்வையே இத்தொடரிலும் பிரதிபலிக்கிறது.</p><h2>சிகை அலங்கா<strong>ரம் மூலம் பே</strong>சப்பட்ட மனித உரிமை</h2><p>இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இத்தொடரில் மூசா ராசா என்ற கதாபாத்திரத்தை வடிவமைத்த விதம் மிகவும் இயல்பானது. ஒரு காவல் அதிகாரி தாடி வைத்துக்கொள்ளத் துறை ரீதியாக அனுமதி கோரும் உண்மையான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இக்கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது. தனது உரிமைக்காகத் துறையை எதிர்த்து நிற்கும் மூசா ராசாவின் குணாதிசயம், 'மணி' என்பவனின் இன்னொசென்ஸை நிரூபிக்க அவர் எடுக்கும் போராட்டத்திற்குப் பெரும் சான்றாக அமைகிறது.</p><p>இன்றைய காலகட்டத்தில் ரசிகர்கள் ஏராளமான த்ரில்லர் கதைகளையும் வெப் தொடர்களையும் பார்த்துப் பழகிவிட்டனர். அதனால் பார்வையாளர்களுக்குத் தெரிந்த த்ரில்லர் பாணியில் இருந்து விலகி புதிய கட்டமைப்புடன் கதையை உருவாக்க வேண்டியிருந்தது. 'முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது' போல, ஆரம்பத்தில் ஒரு நம்பகமான காரணத்தைக் காட்டி பார்வையாளர்களை நம்ப வைத்து, பின்னர் திடீரென திருப்பங்களை ஏற்படுத்தி கதையின் உண்மைத் தன்மையை உடைப்பதுதான் வதந்தி தொடரின் சிறப்பு.</p><p>சென்னையைத் தாண்டி கன்னியாகுமரி, கோவில்பட்டி மற்றும் மதுரை போன்ற களங்களில் கதையை அமைப்பது எங்களுக்குப் பெருமகிழ்ச்சியைத் தருகிறது. அப்பகுதி மக்களின் வட்டார வழக்கு மற்றும் வாழ்க்கை முறையைத் துல்லியமாகப் படம்பிடிப்பது சவாலானது என்றாலும், அதுவே கதையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது. கதாபாத்திரங்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும், பிரதான குற்றப் பின்னணியையும் ஒன்றாக இணைத்து ஒரு பெரிய உலகத்தை உருவாக்குவதே நீண்ட கதைக்களங்களை  நோக்கி எங்களை ஈர்க்கிறது.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் ஊழல் புகார்- காரசார விவாதம்: அமைச்சர் அருண்ராஜ் பேச்சுக்கு திமுக, அதிமுக கடும் எதிர்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-arunraj-remarks-trigger-dmk-aiadmk-protest-in-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-arunraj-remarks-trigger-dmk-aiadmk-protest-in-assembly#comments</comments><guid isPermaLink="false">273bad99-1e24-4747-a44c-f7af95f86042</guid><pubDate>Mon, 17 Aug 2026 11:19:19 +0000</pubDate><atom:updated>2026-08-17T11:19:19.122Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,ev velu,எவ வேலு,TN assembly,அமைச்சர் அருண்ராஜ்,Minister Arunraj</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/uh5esrcr/Arunraj.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Arunraj]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/uh5esrcr/Arunraj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில், சுகாதாரத்துறை மானிய கோரிக்கையின் மீது அமைச்சர் அருண்ராஜ் பதில் அளித்தார்.</p><p>அப்போது,"திமுக ஆட்சியில் பல நல்ல திட்டங்கள் கொண்டு வந்தாலும் லஞ்சத்தை எதார்த்தமாக மாற்றி விட்டார்கள். அதுதான் பிரச்சனை" என்றார்.</p><p>கடந்த ஆட்சியாளர்கள் ஊழலை அன்றாட வாழ்வின் எதார்த்தமாக பார்த்ததாக அமைச்சர் அருண்ராஜ் பேசியதற்கு கண்டனம் தெரிவித்தனர்.</p><p>ஊழலை எதார்த்தமாக பார்த்த கடந்த ஆட்சியாளர்கள் என அமைச்சர் அருண்ராஜ் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.</p><p>அப்போது, எந்த கட்சி என்றே அமைச்சர் அருண்ராஜ் குறிப்பிடவில்லை, ஊழல் என்றால் திமுகவினர் கத்துவது ஏன் என அமைச்சர் ஆனந்த் கேள்வி எழுப்பினார்.</p><p>மேலும்," கடந்த ஆட்சியாளர்களில் அதிமுகவும் உள்ளனர். அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள், திமுகவினர் ஏன் அமளி" எனவும் அமைச்சர் ஆனந்த் கேள்வி எழுப்பினார்.</p><p>மதவாத சக்தியை எதிர்த்தால் போதும், ஊழல் ஒரு பொருட்டல்ல என்பது அரை நூற்றாண்டில் தமிழகத்தின் வேதனை.</p><p>ஊழல் இல்லா ஆட்சி தருவோம் என நம்பிக்கையுடன் முதலமைச்சர் சொல்ல காரணம் நாங்கள் நேர்மையாக தேர்தலை சந்தித்து வென்றதுதான்.</p><p>கட்சி தொடங்கும் முன்னே ஓட்டுக்கு பணம் இல்லை என்பதை முதலமைச்சர் விஜய் நின்று நிரூபித்தார். </p><p>நல்ல அரசியலுக்கு தமிழ்நாட்டு மக்கள் என்று உறுதுணையாக இருப்பார்கள் என்பதை முதலமைச்சர் விஜய் முழுமையாக நம்பினார். </p><p>முதல்கோணல் முற்றுலும் கோணல் என்பது போல் ஊழல் கலாச்சாரத்திற்கு தேர்தலில் லஞ்சம் கொடுப்பது முதல் விஷயம்.</p><h2>யாரை ஊழல்வாதி என்கிறீர்கள்?- எ.வ.வேலு கேள்வி</h2><p>ஊழல் செய்தார்கள் என யாரை கூறுகிறீர்கள், அண்ணாவையா? எம்ஜிஆரையா? ஜெயலலிதாவையா, கலைஞரயைா?</p><p>கடந்த கால ஆட்சியாளர்கள் என குறிப்பிடும் அமைச்சர் அருண்ராஜ் திராவிட இயக்கங்களை குறிப்பிட்டு யாரை பேசுகிறார்?</p><h2>ஓ.எஸ்.மணியன்</h2><p>ஊழல் வழக்குகள் உள்ள இரண்டு முன்னாள் அமைச்சர்களை தவெகவில் சேர்த்துக்கொண்டீர்களே.</p><p>ஊழலை பற்றிபேசும் அருகதை தவெகவிற்கு கிடையாது.</p><h2>சபாநாயகர் அறிவுரை</h2><p>தகுந்த ஆதாரத்துடன் ஊழல் என குறிப்பிட்டு பேச வேண்டும், பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது.</p><p>ஊழல் குறித்து அமைச்சர் பேசியதும் அதற்கு திமுக, அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சபாநாயகர் அறிவுரை வழங்கினார்.</p><p>ஊழல் குறித்து நடத்தப்பட்ட அனைத்து பேச்சும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் உறுப்பினர்களுக்கு அறிவுரை வழங்கினார்.</p>]]></content:encoded></item><item><title>21 சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் ஒரு நாளைக்கு 63,810 டன் எல்பிஜி உற்பத்தி: மத்திய அரசு திட்டம் </title><link>https://www.maalaimalar.com/news/national/india-63-810-tonnes-lpg-daily-output-from-21-refineries-petroleum-ministry</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-63-810-tonnes-lpg-daily-output-from-21-refineries-petroleum-ministry#comments</comments><guid isPermaLink="false">e26566d2-7952-4a75-9ce1-8d67f06e5501</guid><pubDate>Mon, 17 Aug 2026 10:58:32 +0000</pubDate><atom:updated>2026-08-17T10:58:32.337Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>LPG,எல்பிஜி,ministry of petroleum,பெட்ரோலிய அமைச்சகம்,LPG production,எல்பிஜி உற்பத்தி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/1rrdvnul/Untitled-design-69.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ இந்தியாவில் எல்பிஜி உள்நாட்டு உற்பத்தி உயர்வு]]></media:title><media:description type="html"><![CDATA[ India LPG Production]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/1rrdvnul/Untitled-design-69.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் சமையல் எரிவாயு பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இறக்குமதி செய்யப்படும் எல்.பி.ஜி. தேவையும் அதிகரித்து காணப்படுகிறது. இதற்கிடையில் எல்.பி.ஜி. வெளிநாட்டு விநியோகத்தில் தடைகள் ஏற்படும்போது, அதனை சமாளிக்கும் வகையில் உள்நாட்டு எல்.பி.ஜி. உற்பத்திக்கான ஒரு புதிய மாற்று கட்டமைப்பை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>இந்த நடவடிக்கை வீடுகளில் சமையல் எரிவாயு கிடைப்பதை உறுதி செய்வதையும், திடீர் இறக்குமதி பற்றாக்குறையால் நாட்டு மக்கள் பாதிக்கப்படுவதை குறைப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது.</p><p>பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் ஆகஸ்ட் 13 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, 21 சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் மூல உற்பத்தியாளர்களுக்கு ஒரு நாளைக்கு சுமார் 63,810 டன் ஒருங்கிணைந்த எல்பிஜி உற்பத்தி திறன் ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>இது இந்தியாவின் வழக்கமான உள்நாட்டு உற்பத்தி அளவை விட கணிசமான அளவில் அதிகமாகும். மேலும் இந்த உற்பத்தி நாட்டின் தினசரி எல்.பி.ஜி. தேவையில் 70 சதவீதத்தை நோக்கமாக கொண்டு உற்பத்தி செய்யப்பட உள்ளது.</p><h3><strong>எல்பிஜி தட்டுப்பாடு</strong></h3><p>மேற்கு ஆசியாவில் சமீப காலமாக ஏற்பட்டுள்ள பதற்றத்தால் எரிவாயு இறக்குமதி பாதிக்கப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு உள்நாட்டு எல்.பி.ஜி. உற்பத்தியை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.</p><p>இந்தியாவில் எரிவாயு உற்பத்தி செய்வதை விட, மிக அதிகளவில் எல்பிஜி பயன்படுத்தப்பட்டு வருகிறது.</p><h3><strong>எல்பிஜி தேவை</strong></h3><p>கடந்த 2025-2026ஆம் நிதியாண்டில், நாடு சுமார் 33.2 மில்லியன் டன் எல்பிஜி-யை பயன்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் உள்நாட்டு உற்பத்தி தோராயமாக 13.1 மில்லியன் டன்களாக இருந்தது.</p><p>எனவே இந்த தேவையை பூர்த்தி செய்யும் வகையில், வெளிநாட்டில் இருந்து கணிசமான அளவில் எல்.பி.ஜி. இறக்குமதி செய்யப்பட்டது.</p><p>இந்தியா கடந்த நிதியாண்டில் சுமார் 21.3 மில்லியன் டன் எல்பிஜியை இறக்குமதி செய்துள்ளது. இது உள்நாட்டு சந்தை, வெளிநாட்டு விநியோகங்களை எந்த அளவிற்கு சார்ந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது.</p><p>இந்தியாவில் 2026 நிதியாண்டில் சராசரி உள்நாட்டு எல்.பி.ஜி. உற்பத்தி ஒரு நாளைக்கு சுமார் 35,900 டன்களாக இருந்தது. இதனை கருத்தில் கொண்டு ஒரு நாளைக்கு சுமார் 63,810 டன்கள் என்ற அதிகபட்ச கொள்ளளவு ஒதுக்கப்பட்டுள்ளது.</p><h3><strong>ரிலையன்ஸ் உள்நாட்டு உற்பத்தி</strong></h3><p>இந்த கட்டமைப்பின் கீழ் ரிலையன்ஸின் ஜாம்நகர் சுத்திகரிப்பு ஆலைக்கு மிகப்பெரிய தனிப்பட்ட அளவில் ஒரு நாளைக்கு சுமார் 18,000 டன் எல்பிஜி உற்பத்தி திறன் ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>இதற்கிடையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களால் இயக்கப்படும் 18 சுத்திகரிப்பு நிலையங்கள் ஒன்றிணைந்து ஒரு நாளைக்கு சுமார் 31,470 டன்கள் எண்ணெயை சுத்திகரிக்கின்றன.</p><p>நயாரா எனர்ஜியின் வதினார் சுத்திகரிப்பு ஆலைக்கு ஒரு நாளைக்குச் சுமார் 4,480 டன்கள் உற்பத்தி பணி ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>இத்திட்டத்தின் கீழ், ONGC மற்றும் GAIL இந்தியா உள்ளிட்ட மூல உற்பத்தி மற்றும் எரிவாயுத்துறை உற்பத்தியாளர்கள் இணைந்து, ஒரு நாளைக்கு மேலும் சுமார் 6,460 டன்கள் உற்பத்தி செய்கின்றனர்.</p><p>இந்த விநியோகமானது, அவசர காலங்களில் கூடுதல் வீட்டு உபயோக எல்.பி.ஜி. எங்கிருந்து கிடைக்கக்கூடும் என்பது குறித்து அதிகாரிகளுக்கு ஒரு தெளிவான கண்ணோட்டத்தை அளிக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>ஆசிய போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணியில் முகமது நபி மகன்: ரஷீத் கானுக்கு இடமில்லை</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/mohammad-nabi-son-included-in-afghanistan-squad-for-asian-games-2026-no-rashid-khan</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/mohammad-nabi-son-included-in-afghanistan-squad-for-asian-games-2026-no-rashid-khan#comments</comments><guid isPermaLink="false">d09e085c-58ba-4d4e-8103-fef3112eb71c</guid><pubDate>Mon, 17 Aug 2026 10:54:31 +0000</pubDate><atom:updated>2026-08-17T10:54:31.672Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Asian Games,ஆசிய போட்டி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/vwevzgtj/RashidKhan0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரஷீத் கான்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/vwevzgtj/RashidKhan0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆசிய போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்படடுள்ளது. இதில் ஆப்கானிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் நட்சத்திர ஆல்-ரவுண்டரான முகமது நபியின் மகன் ஹசன் ஈசாகிள் இடம் பிடித்துள்ளார். டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான இவருக்கு 20 வயதுதான் ஆகிறது. 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>ஈசாகிள் 41 டி20 அணியில் 1,094 ரன்கள் அடித்துள்ளார். ஆனால், ஆப்கானிஸ்தான் சீனியர் அணிக்காக இதுவரை விளையாடியதில்லை.</p><figure><img alt="மகனுடன் முகமது நபி" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/o0cmbpoy/HassanEisakhil001.jpg" /></figure> <p>ஆப்கானிஸ்தான் அணிக்கு தர்விஷ் ரசூலி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரஷித் கான் உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.</p><h2>ஆப்கானிஸ்தான் அணி விவரம்:-</h2><p>தர்விஷ் ரசூலி (கேப்டன்), முகமது ஈசாக் (விக்கெட் கீப்பர்), முகமது அக்ரம், ஹசன் ஈசாகிள், காலித் தனிவால், இம்ரான் மிர், பைசல் கான் ஷினோசடா, நஜிபுல்லா ஜத்ரன், ஃபார்மனுல்லா சஃபி, இஸ்மாத் அலாம், கரீம் ஜனத், நங்யால் கரோட்டி, அரப் குல் மொமண்ட், ஃபரிதூன் தாவூத்சாய், அப்துல்லா அகமதுசாய்.</p><h2>இந்திய அணி:-</h2><p>ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய டி20 அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.</p><h2>பாகிஸ்தான் அணி:-</h2><p>சஹிப்சதா பர்ஹான் தலைமையிலான பாகிஸ்தான் அணியில், சைம் ஆயுப், அப்ரார் அகமது, உஸ்மான் கான், சுபியன் மொகிம், மாஸ் சதாகத், ஹசன் நவாஸ் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>&apos;டிசி&apos; திரைப்படத்தை &quot;தமிழ் கிளாசிக்&quot; என கொண்டாடிய அல்லு அர்ஜுன்: லோகேஷ் கனகராஜிற்கு வாழ்த்து!</title><link>https://www.maalaimalar.com/news/topnews/allu-arjun-praises-dc-tamil-classic-lokesh-kanagaraj</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/allu-arjun-praises-dc-tamil-classic-lokesh-kanagaraj#comments</comments><guid isPermaLink="false">a43c3f89-7ce0-43c4-8e4a-e05eeb94ff20</guid><pubDate>Mon, 17 Aug 2026 10:53:10 +0000</pubDate><atom:updated>2026-08-17T10:53:10.034Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Lokesh Kanagaraj,அல்லு அர்ஜுன்,அருண் மாதேஸ்வரன்,allu arjun,DC,லோகேஷ் கனகராஜ்,டிசி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/bn16qiv2/allu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Allu Arjun -Lokesh Kanagaraj]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/bn16qiv2/allu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><content:encoded><![CDATA[ <p>இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள 'டிசி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஏற்கனவே தெலுங்கு நடிகர் <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/mahesh-babu-applauds-dc-movie-says-enjoyed-every-scene">மகேஷ் பாபு </a>இப்படத்தைப் பாராட்டியிருந்த நிலையில், தற்போது தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான அல்லு அர்ஜுனும் இப்படத்தை வெகுவாகப் புகழ்ந்து தள்ளியுள்ளார்.</p><h2>அல்லு அர்ஜுனி<strong>ன் எக்ஸ் பதிவு</strong> </h2><p>திரைப்படத்தைப் பார்த்த பிறகு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அல்லு அர்ஜுன், "டிசி திரைப்படத்தைப் பார்த்தேன். இது ஒரு தமிழ் கிளாசிக் திரைப்படம். சினிமா விரும்பிகள் அனைவரும் தவறாமல் பார்க்க வேண்டிய ஒன்று. புரிந்துகொள்பவர்களுக்கு இது ஒரு கவிதை" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் இயக்கம் உயரிய மரியாதைக்குரியது என்றும், இசையமைப்பாளர் அனிருத்தின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது என்றும் பாராட்டியுள்ளார்.</p><h2>இயக்குநர் அ<strong>ருண் மாதேஸ்வர</strong>னின் நன்றி</h2><p>அல்லு அர்ஜுனின் பாராட்டுக்கு இயக்குநர் அருண் மாதேஸ்வரன் உடனடியாகப் பதிலளித்து தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். "டிசி திரைப்படத்தைப் பார்த்து, இவ்வளவு அன்போடு படத்தை ஏற்றுக்கொண்டதற்கு மிக்க நன்றி சார். இது எங்கள் முழு படக்குழுவிற்கும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஒரு படைப்பாளியாக உங்கள் வார்த்தைகளும் பாராட்டும் எங்களுக்கு மேலும் ஊக்கமளிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.</p><h2>கூட்டணியில் உரு<strong>வாகும் 'AA23' திரைப்</strong>படம்</h2><p>அல்லு அர்ஜுன் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி விரைவில் இணையவுள்ள சூழலில் இந்தப் பாராட்டு வெளிவந்துள்ளது. லோகேஷ் கனகராஜ் தெலுங்கில் இயக்குநராக அறிமுகமாகும் 'AA23' திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2><strong>வசூல் சாதனை</strong> </h2><p>சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான 'டிசி' திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜுடன் வமிதா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வெளியான பத்து நாட்களுக்குள்ளேயே 50 கோடி ரூபாய் வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ள இப்படம், தற்போது 100 கோடி ரூபாய் வசூல் இலக்கை நோக்கி வெற்றிகரமாகப் பயணித்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஒவ்வொரு காட்சியையும் ரசித்தேன்: &apos;DC&apos; படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ் பாபு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/mahesh-babu-applauds-dc-movie-says-enjoyed-every-scene</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/mahesh-babu-applauds-dc-movie-says-enjoyed-every-scene#comments</comments><guid isPermaLink="false">7185de33-eb9d-46ad-82a1-4e3a4dd7c2e5</guid><pubDate>Mon, 17 Aug 2026 10:38:17 +0000</pubDate><atom:updated>2026-08-17T10:38:17.466Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>லோகேஷ் கனகராஜ்,Lokesh Kanagaraj,மகேஷ் பாபு,DC,Mahesh Babu,டிசி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/vedqeodn/lokesh.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Mahesh Babu-Lokesh Kanagaraj]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/vedqeodn/lokesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>லோகேஷ் கனகராஜ் நடிகராக அறிமுகமாகி, அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள '<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/parthiban-praise-to-lokesh-kanagaraj-acting-in-dc-moviehttps://www.maalaimalar.com/cinema/cinemanews/parthiban-praise-to-lokesh-kanagaraj-acting-in-dc-movie">டிசி</a>' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரின் பாராட்டுக்களைப் பெற்று வரும் இப்படத்தை, தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான மகேஷ் பாபு பார்த்துவிட்டு தனது எக்ஸ் தளத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.</p><h2>மகேஷ் பாபு<strong>வின் எக்ஸ் பதிவு</strong> </h2><p>படத்தைப் பார்த்த பிறகு மகேஷ் பாபு வெளியிட்ட பதிவில், "என்ன ஒரு அசல் மற்றும் அற்புதமான திரைப்படம்! மிகவும் கூலாக இருக்கிறது, படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மிகவும் ரசித்துப்பார்த்தேன். படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார். அவரின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p>மகேஷ் பாபுவின் பாராட்டுக்குச் சில மணி நேரங்களிலேயே இயக்குநர் அருண் மாதேஸ்வரன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் பதிலளித்து தங்களது நன்றியைத் தெரிவித்துள்ளனர். இயக்குநர் அருண் மாதேஸ்வரன், "மிக்க நன்றி சார்! நீங்கள் படத்தைப் பார்த்து பாராட்டியது எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. </p><p>உங்கள் அன்பிற்கும் இனிய வார்த்தைகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்" எனக் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், இப்படத்திற்கு இசையமைத்து பலதரப்பட்ட பாராட்டுக்களைப் பெற்று வரும் அனிருத்தும் மகேஷ் பாபுவிற்கு தனது நன்றியைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.</p><h2>திரையரங்குக<strong>ளில் வசூல் சாதனை</strong> படைக்கும் 'டிசி'</h2><p>சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்துள்ள 'டிசி' திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜுடன் வமிதா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, ஆடுகளம் நரேன், தலைவாசல் விஜய் மற்றும் கஸ்தூரி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். காவல் துறையின் அத்துமீறலால் பாதிக்கப்பட்ட ஒரு அப்பாவி குடும்பத்தைக் காப்பாற்றப் போராடும் 'தேவதாஸ்' என்ற கதாபாத்திரத்தில் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளார். வெளியான பத்து நாட்களுக்குள்ளேயே 50 கோடி ரூபாய் வசூலைக் கடந்து, 100 கோடி ரூபாய் இலக்கை நோக்கி இப்படம் வெற்றிகரமாகப் பயணித்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>சேப்பாக்கத்தில் நாளை முதல் நடைபெறும் டி.என்.பி.எல். போட்டிகள்</title><link>https://www.maalaimalar.com/sports/tnpl-matches-to-begin-in-chepauk-from-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/sports/tnpl-matches-to-begin-in-chepauk-from-tomorrow#comments</comments><guid isPermaLink="false">dca8b68f-419e-41fd-83a4-df279619f8c4</guid><pubDate>Mon, 17 Aug 2026 10:23:28 +0000</pubDate><atom:updated>2026-08-17T10:23:28.770Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>chepauk,டிஎன்பிஎல்,tnpl,சேப்பாக்கம்,சேப்பாக் கில்லீஸ்,chepauk ghillies</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/vuma3d8t/stadium.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chepauk stadium]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/vuma3d8t/stadium.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>8 அணிகள்  பங்கேற்று உள்ள 10-வது டி.என்.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் அடுத்த நத்தத்தில் உள்ள என்.பி. ஆர். கல்லூரி மைதானத்தில் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. நேற்று முன்தினத்துடன்  அங்கு முதல் கட்ட ஆட்டங்கள் முடிவடைந்தன. </p><h2>சேப்பாக்கத்தில் டி.என்.பி.எல். </h2><p>2 நாள் ஓய்வுக்கு பிறகு  2-வது மற்றும் இறுதி கட்ட டி.என்.பி.எல். போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நாளை (18- ந் தேதி) தொடங்குகிறது. </p><p>எஞ்சிய 8 லீக் ஆட்டம், பிளே ஆப் சுற்று மற்றும் இறுதிப் போட்டி என 12 போட்டிகள் சென்னையில் நடைபெறுகிறது.</p><p>22-ந் தேதியுடன் லீக் ஆட்டம் முடிவடைகிறது. 23-ந்தேதி குவாலி பயர்-1, 24-ந் தேதி எலிமினேட்டர், 26-ந் தேதி குவாலிபயர்-2, இறுதிப் போட்டி 28-ந் தேதியும் நடைபெறுகிறது.</p><h2>மதுரை முன்னிலை </h2><p>இதுவரை நடைபெற்ற  20 ஆட்டங்களின் முடிவில்  மதுரை பாந்தர்ஸ் 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 8  புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளது.</p><p>சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், திருச்சி கிராண்ட்  சோழாஸ் ஆகிய அணிகள் முறையே  2 முதல் 5- வது இடங்களில் உள்ளன. இந்த அணிகள்  3 வெற்றி, 2 தோல்வியுடன்  தலா 6  புள்ளிகளுடன் இருக்கிறது.</p><p>கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் 2 வெற்றி, 3 தோல்வியுடன்  தலா   4 புள்ளிகளுடன்  6 மற்றும் 7- வது இடங்களில் உள்ளன. சேலம் ஸ்பார்டன்ஸ் 5  ஆட்டத்திலும் தோற்று புள்ளி எதுவும் பெறாமல்  பிளே ஆப் சுற்று வாய்ப்பை ஏற்கனவே இழந்து விட்டது.</p><p>சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- கோவை, சேப்பாக்கம் மைதானத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறும். 21-வது லீக் ஆட்டத்தில் என்.ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.</p><p>4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதல் போட்டியில் நெல்லையிடம் 50 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் திருப்பூரிடம் 7 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்றது.</p><p>3-வது போட்டியில் திண்டுக்கல்லை 7 விக்கெட் வித்தியாசத்திலும், 4- வது ஆட்டத்தில் சேலம்  ஸ்பார் டன்சை  5 விக்கெட் வித்தியாசத்திலும், 5-வது போட்டியில் மதுரை பாந்தர்சை 39 ரன் வித்தியாசத்திலும் வீழ்த்தியது.</p><h2>ஜெகதீசன்</h2><p>சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி கோவையை தோற்கடித்து 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க வெற்றி பெறுவது அவசியமாகும்.</p><p>கேப்டன் என். ஜெகதீசன் பேட்டிங்கில் மிகவும் நல்ல நிலையில் இருக்கிறார். அவர் 5  போட்டியில் 3  அரை சதத்துடன் 301  ரன்கள் எடுத்துள்ளார்.</p><p>சராசரி 75.25 ஆகும். ஸ்டிரைக் ரேட் 171.02 ஆகும்.  மோகித் ஹரிகரன், சுவப்னில் சிங், ஆசிக் போன்ற சிறந்த பேட்ஸ் மேன்களும் உள்ளனர்.</p><p>பந்துவீச்சாளர்களில்   விக்னேஷ் 6 விக்கெட்டும், அபிஷேக் தன்வர், சிலம்ப ரசன், பிரேம் குமார் தலா 5 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளனர்.</p><h2>3-வது வெற்றி ஆர்வம்</h2><p>கோவை கிங்ஸ்  3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. முன்னாள் சாம்பியனான அந்த அணி சேலத்தை 34 ரன் வித்தியாசத்திலும், திருச்சியை 116 ரன் வித்தியாசத்திலும் வீழ்த்தி இருந்தது.</p><p>மதுரை (6 விக்கெட்), திருப்பூர் (4 விக்கெட்), நெல்லை (2 விக்கெட்) ஆகியவற்றிடம் தோற்று இருந்தது. </p><p>அந்த அணியின் பேட்டிங் கில் சச்சின் (310 ரன்), ஆந்திரே சித்தார்த் (149 ரன்) ஆகியோரும் பந்து வீச்சில் தீபன் லிங்கேஷ் (11 விக்கெட்), கிஷோர் (9 விக்கெட்), சுப்பிரமணியம் (8 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>குத்தகை முறையில் நடத்துனர்களை நியமிக்கும் உ.பி. நிறுவனம்: திமுக ஒப்பந்தத்தை தவெக தொடருவது ஏன்?- அன்புமணி கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-question-to-tvk-govt</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-question-to-tvk-govt#comments</comments><guid isPermaLink="false">05cb1664-256d-4554-a0af-99c3d4299d70</guid><pubDate>Mon, 17 Aug 2026 10:22:12 +0000</pubDate><atom:updated>2026-08-17T10:22:12.938Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தவெக,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,tvk</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/5ck4iiv5/Anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/5ck4iiv5/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அனைத்து அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள்,  மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் குத்தகை முறை நியமனங்களை ரத்து செய்வதாக அறிவிக்க வேண்டும்; காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் காலமுறை ஊதிய அடிப்படையில் உடனே நிரப்ப வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணிப்போருக்கு பேருந்து நிறுத்தங்களில் பயணச்சீட்டு வழங்குவதற்காக 1797 நடத்துனர்களை குத்தகை முறையில் நியமிப்பதற்கான ஒப்பந்தம் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.எஸ். எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் கோரப்பட்ட ஒப்பந்தப் புள்ளியின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்ட ஒப்பந்தத்தை தவெக அரசு வழங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.</p><h2><strong>ஒப்பந்தக் காலம்</strong></h2><p>சென்னை மற்றும் அதையொட்டியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டப் பகுதிகளைச்  சேர்ந்த மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் மாநகரப் போக்குவரத்துக் கழகம் 3858 பேருந்துகளை இயக்கி வருகிறது. இவற்றை  இயக்குவதற்குத் தேவையான 18,898 பணியிடங்களில் 6,000க்கும்  மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், அவற்றை நிரந்தரப் பணியாளர்களைக் கொண்டு நிரப்ப வேண்டிய அரசும், மாநகரப் போக்குவரத்துக் கழகமும் குத்தகை முறைப் பணியாளர்களைக் கொண்டு நிரப்பி வருகின்றன.</p><p>அந்த வரிசையில் இப்போது 1797 நடத்துனர்களை குத்தகை முறையில் நியமிப்பதற்கான ஒப்பந்தம் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.எஸ். எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து புதிய நடத்துனர்களை தேர்வு செய்வதற்கான விளம்பரத்தை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. அடுத்த சில வாரங்களில் இவர்கள் தேர்வு செய்யப்படுவர். குத்தகை முறையில் நியமிக்கப்படும் நடத்துனர்களின் ஒப்பந்தக் காலம் 11 மாதங்கள் ஆகும். அவர்களுக்கு மாத ஊதியமாக அனைத்துப் படிகள், வருங்கால வைப்பு நிதி பங்களிப்பு உள்பட ரூ.26,743 வழங்கப்படும். சென்னையில் அடையார், குரோம்பேட்டை, வடபழனி, தண்டையார்பேட்டை, அயனாவரம், அண்ணாநகர் பணிமனைகளுக்கு உள்ளிட்ட பேருந்து நிறுத்தங்களில் பயணிக்கக் காத்திருக்கும் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கும் பணியில் அவர்கள் அமர்த்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த குத்தகை முறை நடத்துனர்களை நியமிப்பதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கடந்த ஜனவரி 17-ஆம் தேதி கோரப்பட்டன. மொத்தம் 3297 ஓட்டுனர்கள், 1895 ஓட்டுனர்கள் என மொத்தம் 5192 பேரை நியமிப்பதற்காக கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளின் முதல்கட்டமாகத் தான் இப்போது 1797 நடத்துனர்களை தேர்ந்தெடுத்து குத்தகை முறையில் வழங்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1500 நடத்துனர்கள் மற்றும் 1895 ஓட்டுனர்களை தேர்ந்தெடுத்து வழங்கும் ஒப்பந்தங்களும் சில நிறுவனங்களுக்கு விரைவில் வழங்கப்படவுள்ளன.</p><p>இதில் கொடுமை என்னவென்றால், திமுக ஆட்சியில் கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளின் அடிப்படையில் இந்த ஒப்பந்தங்களை தவெக அரசு வழங்கியிருப்பது தான். திமுக ஆட்சியில் இறுதி செய்யப்பட்ட பல ஒப்பந்தங்களை, அவற்றில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி தவெக அரசு ரத்து செய்திருக்கிறது. ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அவற்றை பாட்டாளி மக்கள் கட்சியும் வரவேற்றிருக்கிறது. ஆனால், குத்தகை முறை பணி நியமனங்கள் தொழிலாளர்களின் உழைப்பையும், உரிமைகளையும் சுரண்டக் கூடியவை என்பதை அறிந்தும் அவற்றை தவெக அரசு தொடர்வது ஏன்? என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சி எழுப்பும் வினா.</p><h2><strong>மக்களுக்கு விளக்க வேண்டும்</strong></h2><p>திமுக ஆட்சியில் தான் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் குத்தகை முறையில் ஓட்டுனர்கள் &amp; நடத்துனர்களை நியமிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டது. குத்தகை முறையில் நியமிக்கப்படும் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் எந்த அளவுக்கு சுரண்டப்படுவார்கள் என்பதை பாட்டாளி மக்கள் கட்சி நன்றாக அறியும். அதுமட்டுமின்றி, குத்தகை முறையில் நடைபெறும் நியமனங்களில் இட ஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப்படுவதில்லை. அதனால் தான் குத்தகை முறை பணி நியமனங்களை தொடக்கம் முதலே பாட்டாளி மக்கள் கட்சி எதிர்த்து வருகிறது.</p><p>2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தவெக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்களுக்கு கண்ணியமான வாழ்க்கையும், சமூகப் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி சமூகநீதி தான் தங்களின் முதன்மைக் கொள்கை என்றும் தவெக கூறி வருகிறது. அப்படிப்பட்ட  தவெக, இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாத, உழைப்பைச் சுரண்டக்கூடிய  குத்தகைமுறை பணி நியமனங்களை நடைமுறைப்படுத்துவது ஏன்? என்பது பற்றி மக்களுக்கு விளக்க வேண்டும்.</p><p>மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் ஒட்டுமொத்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களின் எண்ணிக்கை 18,898 ஆகும். இவற்றில் திமுக ஆட்சிக்காலத்திலேயே 3692 ஓட்டுனர்களும், நடத்துனர்களும் குத்தகை முறையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்போது நியமிக்கப்படும் 1797 பேரையும் சேர்த்தால் குத்தகை பணியாளர் எண்ணிக்கை 4989 ஆக அதிகரிக்கும். மேலும் 1500 நடத்துனர்கள், 1895 ஓட்டுனர்கள் நியமிக்கப்படும் போது இந்த எண்ணிக்கை 8384 ஆக உயரும். இது மொத்த ஓட்டுனர், நடத்துனர் எண்ணிக்கையில் 45% ஆகும். ஒரு நிறுவனத்தில் 45% பணியாளர்கள் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டால், அங்கு சமூகநீதியும், சமநீதியும் எங்கிருந்து தழைக்கும்? மனித உரிமை எவ்வாறு மலரும்? என்ற வினாவுக்கு அரசு விடையளிக்க வேண்டும்.</p><p>அவுட்சோர்சிங் எனப்படும் குத்தகை முறை நியமனங்களை ஜனநாயகத்திலும், சமூகநீதியிலும் அக்கறை கொண்டு எந்த அரசாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தக் கொள்கைகளில் தவெக அரசுக்கு நம்பிக்கை இருந்தால் மாநகரப் போக்குவரத்துக் கழகம் மட்டுமின்றி, அனைத்து அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள்,  மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் குத்தகை முறை நியமனங்களை ரத்து செய்வதாக அறிவிக்க வேண்டும்; காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் காலமுறை ஊதிய அடிப்படையில் உடனே நிரப்ப வேண்டும். </p>]]></content:encoded></item><item><title>ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நட்சத்திர வீரர்கள் டிரான்ஸ்ஃபரில் முழு வெளிப்படைத்தன்மையை பிசிசிஐ உறுதி செய்ய வேண்டும்: கவாஸ்கர்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/sunil-gavaskar-urges-bcci-to-ensure-full-transparency-during-high-profile-ipl-transfers-no-finger-pointing</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/sunil-gavaskar-urges-bcci-to-ensure-full-transparency-during-high-profile-ipl-transfers-no-finger-pointing#comments</comments><guid isPermaLink="false">9ebaddec-25f1-451d-90db-7359ab05cfd3</guid><pubDate>Mon, 17 Aug 2026 10:14:05 +0000</pubDate><atom:updated>2026-08-17T10:14:05.436Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>IPL,Sunil Gavaskar,BCCI,சுனில் கவாஸ்கர்,பிசிசிஐ,ஐபிஎல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/ziwhk5kq/SunilGavaskar0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சுனில் கவாஸ்கர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/ziwhk5kq/SunilGavaskar0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரான்சைஸ் அடிப்படையிலான டி20 லீக்கான இந்தியன் பிரிமீயர் லீக் (IPL) பிசிசிஐ-யால் மிகப்பெரிய அளவில் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.</p><p>மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மெகா ஏலம் மூலம் வீரர்கள் ஏலம் எடுக்கப்படுவார்கள். அதன்பின் ஒவ்வொரு வருடமும் மினி ஏலம் நடத்தப்படும்.</p><h2>வீரர்கள் டிரான்ஸ்ஃபர்</h2><p>தற்போது சில வருடங்களாக மெகா ஏலம், மினி ஏலத்தை தவிர்த்து சீசன் முடிந்த நிலையில் வீரர்கள் இரண்டு அணிகளுக்கு இடையில் உடன்பாடு ஏற்பட்டு Trade என்ற அடிப்படையில் மாற்றப்படுகிறார்கள்.</p><p>இந்த சீசனுக்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடிய சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வர்த்தகம் ஆனார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய ஜடேஜா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சென்றார்.</p><p>இந்த சீசன் முடிவடைந்த பின்னர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக விளையாடிய ரிஷப் பண்ட் டெல்லி அணிக்கும், டெல்லி அணியில் விளையாடிய குல்தீப் யாதவ் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கும் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>ஹர்திக் பாண்ட்யா</h2><p>தற்போது ஹர்திக் பாண்ட்யா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேற இருக்கிறார். அவரை Trade செய்ய 5-க்கும் அதிகமான அணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.</p><p>ஆனால் இவர்கள் எவ்வளவு தொகைக்கு Trade செய்யப்படுகிறார்கள் என்று விளக்கம் தெளிவாக இல்லை. இரண்டு அணிகளுக்கு இடையிலான Trade குறித்து மற்ற அணிகளிடமும் தெளிவான புள்ளி விவரங்கள் கிடையாது எனத் தகவல் வெளியாகியுள்ளது.</p><p>இந்த நிலையில்தான் சுனில் கவாஸ்கர் வீரர்கள் வர்த்தகத்தில் வெளிப்படைத்தன்மை தேவை என்று வலியுறுத்தியுள்ளார்.</p><h2>இது தொடர்பாக சுனில் கவாஸ்கர் கூறியதாவது:-</h2><p>அணிகளுக்கு இடையே வீரர்கள் மாறக்கூடும் என்பது குறித்து ஊடகங்களில் சில யூகங்கள் நிலவுகின்றன. அந்த மாற்றங்களுக்கான காலக்கெடு முடிவதற்கு இன்னும் சிறிது காலம் உள்ளது. இருப்பினும், ஒரு அணியிலிருந்து மற்றொரு அணிக்கு வீரர் மாறுவது பொதுவெளியில் தெரிந்தாலும், பரிமாற்றம் (trade) நடைபெறும்போது, ​​அது தொடர்பான நிதி விவரங்கள் சம்பந்தப்பட்ட இரண்டு அணிகள், அந்த வீரர் மற்றும் பிசிசிஐ (BCCI) ஆகியோருக்கு மட்டுமே தெரியும்.</p><p>இத்தகைய சூழலில், ஒவ்வொரு அணியும் தங்கள் வீரர்களுக்கான ஊதிய வரம்பை (salary cap) கடைப்பிடித்ததா அல்லது மீறியதா என்பது மற்ற அணிகளுக்குத் தெரிவதில்லை. அதனால்தான், முழுமையான வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த, அந்த நிதி விவரங்களும் பொதுவெளியில் வெளியிடப்பட வேண்டியது அவசியம்.</p><h2>பொறாமை கொள்பவர்கள்</h2><p>ஐ.பி.எல். உலகின் மிகச்சிறந்த டி20 லீக் ஆகும். எனவே, அதன் மீது பொறாமை கொள்பவர்கள் யாரும் அதன் மீது பழி சுமத்தாத வகையில், முழுமையான வெளிப்படைத்தன்மை பேணப்படுவது மிகவும் அவசியமாகும்.</p><p>இவ்வாறு சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நீண்ட காத்திருப்புக்கு பின் திரைக்கு வருகிறதா &apos;சதுரங்க வேட்டை 2&apos;? </title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/is-sathuranga-vettai-2-finally-hitting-screens-after-long-wait</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/is-sathuranga-vettai-2-finally-hitting-screens-after-long-wait#comments</comments><guid isPermaLink="false">6d765fb4-34a9-4749-8c9a-a79e34dd3dda</guid><pubDate>Mon, 17 Aug 2026 10:12:57 +0000</pubDate><atom:updated>2026-08-17T10:12:57.877Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அரவிந்த் சாமி,Arvind Swamy,H. Vinoth,trisha,sathuranga vettai 2,ஹெச்.வினோத்,திரிஷா,சதுரங்க வேட்டை 2</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/z1zfgliq/trisa.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sathuranga Vettai 2 ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/z1zfgliq/trisa.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அரவிந்த் சாமி மற்றும் திரிஷா பிரதான கதாபாத்திரங்களில் நடித்து, நீண்ட காலமாக ரிலீசாகாமல் தாமதமாகி வந்த 'சதுரங்க வேட்டை 2' திரைப்படம், விரைவில் திரையரங்குகளில் வெளியாவதற்கான சூழல் உருவாகியுள்ளது. தயாரிப்பு பணிகள் நிறைவடைந்து பல ஆண்டுகள் கழிந்த நிலையிலும் நிதி தொடர்பான சிக்கல்கள் நிலவி வந்த நிலையில் தற்போது அவை சரிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>பிரபல விநி<strong>யோகஸ்தரின் தலை</strong>யீடு</h2><p>இத்திரைப்படத்தை திரைக்கு கொண்டு வரும் முயற்சியில் திரையரங்க உரிமையாளர் மற்றும் பிரபல விநியோகஸ்தரான திருப்பூர் சுப்பிரமணியம் முக்கிய பங்கு வகித்துள்ளார். இப்படத்தின் நிதிச் சிக்கல் குறித்து <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/yen-ennai-edho-seidhai-movie-release-on-sep-4th">சினிமா</a> ஃபைனான்சியர் மதுரை அன்புச்செழியனுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். </p><p>அப்போது பேசிய அன்புச்செழியன், "தற்போது எனக்கு பணத் தொகை எதுவும் தேவையில்லை, திரைப்படம் முதலில் திரையரங்குகளில் வெளியாகட்டும்; வசூலாகும் தொகையில் இருந்து எனது பங்கை பிறகு பெற்றுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார். இந்த சாதகமான முடிவு, படம் திரைக்கு வருவதற்கு மிகப்பெரிய கதவை திறந்துவிட்டுள்ளது.</p><h2>மறைந்<strong>த நடிகர் மனோபாலாவின்</strong> கனவு </h2><p>2014-ஆம் ஆண்டு வெளியான ஹெச்.வினோத்தின் 'சதுரங்க வேட்டை' படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகத்தை நடிகர் மற்றும் தயாரிப்பாளரான மனோபாலா தயாரித்தார். படம் முடிவடைந்தும் வெளியாவதில் ஏற்பட்ட தடைகள் அவருக்கு மிகுந்த மனவருத்தத்தை தந்திருந்தன. கடந்த 2023-ஆம் ஆண்டு அவர் மறைந்த நிலையில், அவரின் பல நாள் கனவாக இருந்த இப்படத்தின் ரிலீஸ் தற்போது சாத்தியமாவது அவருக்கு செய்யும் சமர்ப்பணமாக அமையும்.</p><p>ஹெச்.வினோத் கதையமைக்க, என்.வி. நிர்மல் குமார் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் அரவிந்த் சாமி, திரிஷா ஆகியோருடன் மறைந்த டானியல் பாலாஜி, நாசர், ராதாரவி, ஸ்ரீமன் மற்றும் தீரஜ் ரத்னம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். ஏமாற்று வேலைகள் மற்றும் நவீன முறையிலான நிதி மோசடிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படம், ரசிகர்களுக்கு ஒரு விறுவிறுப்பான திரையனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/imd-inform-districts-likely-to-experience-heavy-rain-accompanied-by-strong-winds</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/imd-inform-districts-likely-to-experience-heavy-rain-accompanied-by-strong-winds#comments</comments><guid isPermaLink="false">03d1b266-9014-43d4-abed-f4fa1ca0eb81</guid><pubDate>Mon, 17 Aug 2026 10:00:38 +0000</pubDate><atom:updated>2026-08-17T10:00:38.945Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/iqg6yeg5/rain.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/iqg6yeg5/rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</strong></em></p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p><h2><strong>கனமழை</strong></h2><p>இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடகடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>நாளை செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>19-ந்தேதி நீலகிரி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடக்கு கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>20-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>இதனிடையே இன்று முதல் 21-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் வட உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>இன்று முதல் 21-ந்தேதி வரை தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடலின் ஒரு சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>100 நாள் தவெக ஆட்சியில் எந்த சாதனையும் இல்லை- எடப்பாடி பழனிசாமி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-achievements-in-100-days-of-tvk-rule-edappadi-palaniswami</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-achievements-in-100-days-of-tvk-rule-edappadi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">6350d9e0-d527-4f9a-a8cf-c772b1738ba6</guid><pubDate>Mon, 17 Aug 2026 09:59:37 +0000</pubDate><atom:updated>2026-08-17T09:59:37.678Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,TN Govt,Edappadi pazhanisamy,தவெக அரசு,TVK Govt,100 நாள் சாதனை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/6oipcrjb/EPS.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Edappadi pazhanisamy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/6oipcrjb/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>100 நாள் தவெக ஆட்சியில் எந்த சாதனையும் இல்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார்.</p><h2>100 நாள் சாதனை</h2><p>முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆகிறது. இதையொட்டி தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் ‘100 நாள் ஆட்சி ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி’ என்ற தலைப்பில் வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது.</p><p>இதில் தமிழக அரசின் திட்டங்கள் விளக்கி கூறப் பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோவில் விஜய் ஏற்க னவே கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் பேசியதும் இடம்பெற்றுள்ளது. வீடி யோவின் முடிவில் ‘பிரியமு டன் விஜய்’ என்று முதலமைச்சர் விஜய்யின் கையெழுத்தும் இடம்பெற்று உள்ளது.</p><p>அந்த வீடியோவில் விஜய் பேசி இருப்பதாவது:-</p><h2>ஒரு புதிய தொடக்கம்</h2><p>சி.ஜோசப் விஜய் என்னும் நான், வாங்க... எல்லோரும் சேர்ந்து ஒரு பிரெஷ் ஆட்சி, ஒரு புதிய ஆட்சியை கொடுப்போம். இது ஒரு புதிய தொடக்கம். புதிய சகாப்தம்.</p><p>பெண்கள் பாதுகாப்பை மிகவும் கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பேன். போதைப் பொருள் கலாச்சாரத்தில் இருந்து நமது பசங்களை காப்பாற்ற வேண்டியது நமது அரசினுடைய பொறுப்பு. கல்வி, ரேஷன், மருத்துவம், குடிநீர், பஸ் வசதி இந்த மாதிரி விஷயங்களில்தான் என்னுடைய முழு முதல் கவனம்.</p><p>இது உங்களுடைய ஆட்சி, உங்களுக்கு அதில் எந்தவித மான சந்தேகமும் வேண்டாம். இந்த நேரத்தில் இதை நான் சொல்லணும். அரசியலுக்கு வந்த உங்கள்  விஜய்யை, விஜய் தம்பி, விஜி தம்பி, அண்ணா நீ வாண்ணா, நண்பா, நீ வா நண்பா நாங்கள் எல்லாம் இருக்கிறோம் என்று சொல்லி அவ்வளவு உறவா என்னை ஏற்றுக் கொண்டீர்கள். 8 கோடி மக்களும் என் மக்கள்தானே. நம்பிக்கையா இருங்க.</p><p>இவ்வாறு முதலமைச்சர் விஜய் பேசி உள்ளார்.</p><h2>சிங்கப்பெண் அதிரடிப்படை</h2><p>மேலும் அந்த வீடியோ வில் தமிழக அரசின் திட்டங்களான 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, ‘அண்ணன் சீர்’, 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ஒரு  பட்டுப்புடவை, சிறப்பு பேதைப்பொருள் தடுப்பு படை, பெருந்தலை வர் காமராஜர் காலை உணவு திட்டம் விரிவாக்கம், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், ரூ.6 ஆயிரம் கோடி பயிர்க்கடன் தள்ளுபடி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவர்க ளுக்கு ஹெல்மெட் மற்றும் வாட்டர் பாட்டில் வசதியு டன் கூடிய நவீன பிராண்டட் மிதி வண்டிகள், வெற்றி வீடு திட்டம் ஆகிய திட்டங்கள் இடம்பெற்று உள்ளன. மேலும் வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026-ரூ.1 லட்சம் கோடி முதலீடு என்ற சாதனையும் இடம்பெற்றுள்ளது.</p><p>இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>எடப்பாடி பழனிசாமி</h2><p>இந்நிலையில், 100 நாள் தவெக ஆட்சியில் எந்த சாதனையும் இல்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-</p><p>100 நாள் தவெக ஆட்சியில் எந்த ஒரு புதிய திட்டமும் கொண்டு வரப்படவில்லை. அறிவிக்கவும் இல்லை.</p><p>தமிழக மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்ததுதான் இந்த 100 நாள் ஆட்சியில் சாதனை.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பிரிட்டனில் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியடைந்த வீடுகளின் விலை..!</title><link>https://www.maalaimalar.com/news/world/london-house-prices-see-largest-fall-in-eight-years</link><comments>https://www.maalaimalar.com/news/world/london-house-prices-see-largest-fall-in-eight-years#comments</comments><guid isPermaLink="false">831e4720-d61a-49ff-a98d-54dbe0d1162b</guid><pubDate>Mon, 17 Aug 2026 09:41:41 +0000</pubDate><atom:updated>2026-08-17T09:41:41.371Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>britain,England,பிரிட்டன்,இங்கிலாந்து,Andy Burnham,ஆண்டி பர்ன்ஹாம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/itz0dat4/Untitled-design-68.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ லண்டன் வீட்டு விலைகள் 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவு]]></media:title><media:description type="html"><![CDATA[ London Real Estate]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/itz0dat4/Untitled-design-68.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரிட்டனில் ஆகஸ்ட் மாதத்தில் வீடுகளின் விலைகள் வழக்கத்தை விட மிகப்பெரிய அளவில் வீழ்ச்சியை கண்டுள்ளதாக ரைட்மூவ் என்ற சொத்து வலைதளம் தெரிவித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">இங்கிலாந்தில்</a> பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் பதவியேற்ற பிறகு, பிரிட்டனில் புதிதாக பட்டியிலடப்பட்ட வீடுகளுக்கு முதலில் கேட்கப்படும் விலைகள் (asking prices) 2018-ஆம் ஆண்டிற்கு பிறகு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளதாகவும் அந்த வலைதளம் தெரிவித்துள்ளது.</p><h3><strong>சரசாசரி விற்பனை விலை வீழ்ச்சி</strong></h3><p>ஆகஸ்ட் 8 வரையிலான சராசரி விற்பனை விலைகள் 2.0 சதவீதம் சரிந்து காணப்படுகிறது. இது கடந்த 10 ஆண்டுகளில் சராசரியாக ஏற்படும் 1.3 சதவீத வீழ்ச்சியை விட அதிகமான சரிவாக உள்ளது.</p><p>கோடைக்கால மந்தநிலை மற்றும் 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் விற்பனைக்கு உள்ள வீடுகள் ஆகியவை விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.</p><h3><strong>லண்டன் வீடுகள் விலை</strong></h3><p>விற்பனைக்காக முதலில் கேட்கப்படும் விலைகள் ஓராண்டுக்கு முன்பு இருந்ததை விட 1.0 சதவீதம் குறைந்துள்ளது. இது டிசம்பர் 2023-ஆம் ஆண்டிற்கு பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய வருடாந்தர வீழ்ச்சியாகும்.</p><p>இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வீடுகளுக்கு முதலில் கேட்கப்படும் விலைகள் ஆண்டுக்கு 3.1 சதவீதம் சரிந்து, மிக கடுமையான வீழ்ச்சியை கண்டுள்ளன. ஆனால் இங்கிலாந்தின் வடக்கு பகுதிகளில் விலைகள் உயர்ந்து காணப்படுகின்றன.</p><h3><strong>இங்கிலாந்து பிரதமர்</strong></h3><p>ஜூலை 20 அன்று பர்ன்ஹாம் பிரதமராக பதவியேற்றதில் இருந்து, வீடு வாங்குபவர்களின் தேவை 5 சதவீதம் அதிகரித்துள்ளது.</p><p>இருந்தபோதிலும் இதன் தேவை ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 10 சதவீதம் குறைந்தே காணப்படுகிறது.</p><p>சராசரி இரண்டு வருடத்திற்கான வீட்டுக்கடனின் வட்டி விகிதம், ஒரு மாதத்திற்கு முன்பு இருந்த 4.92 சதவீதத்தில் இருந்து 5.09 சதவீதமாக உயர்ந்துள்ளது.</p><h3><strong>விலை வீழ்ச்சிக்கான காரணிகள்</strong></h3><p>உலகளவில் உள்ள அரசியல் நிச்சயமற்ற தன்மை, உயர்ந்த வீட்டு கடன் வட்டி விகிதங்கள் மற்றும் அக்டோபர் மாத நிதி நிலை அறிக்கை ஆகியவற்றால் ஏறபடும் அபாயங்களை கருத்தில் கொண்டு,</p><p>ரைட்மூவ் நிறுவனம் 2026-ஆம் ஆண்டில் விலை வளர்ச்சி 2 சதவீதமாக இருக்கும் என்ற கணிப்பை குறைத்து, விலை மாற்றமின்றி இருக்கலாம் அல்லது 2 சதவீதம் வரை வீழ்ச்சியடையலாம் என அறிவித்துள்ளது.</p><p>இந்த விலை வீழ்ச்சி கணிப்புகள் ஜூலை 12 முதல் ஆகஸ்ட் 8 வரை விற்பனைக்கு வைக்கப்பட்ட சொத்துக்களின் விலைகளை அடிப்படையாக கொண்டு வெளியிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சீனப் பொருளாதாரத்தில் மந்தநிலை: சில்லறை விற்பனை மற்றும் தொழிற்துறை உற்பத்தி பெரும் வீழ்ச்சி!</title><link>https://www.maalaimalar.com/news/world/china-economic-slowdown-retail-sales-industrial-output-slump</link><comments>https://www.maalaimalar.com/news/world/china-economic-slowdown-retail-sales-industrial-output-slump#comments</comments><guid isPermaLink="false">aa3c7053-8368-43aa-9d63-a89cff060709</guid><pubDate>Mon, 17 Aug 2026 09:39:26 +0000</pubDate><atom:updated>2026-08-17T09:39:26.427Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>China,சீனா,Chinese economy,Retail sales,சீனப் பொருளாதாரம்,சில்லறை விற்பனை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/0mp3dpj0/cines.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chinese economy ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/0mp3dpj0/cines.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சீனப் பொருளாதாரம் ஆண்டின் இரண்டாம் பாதியின் தொடக்கத்திலேயே பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. நாட்டின் தொழிற்துறை உற்பத்தி மற்றும் சில்லறை விற்பனை ஆகிய இரண்டும் கணிசமாகக் குறைந்து, பொருளாதார வல்லுநர்களின் எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்கியுள்ளன. </p><p>மோசமான காலநிலை மாற்றங்கள், வெள்ளப்பெருக்கு மற்றும் உள்நாட்டு நுகர்வுத் தேவையில் தொடரும் பலவீனம் ஆகியவையே இந்த வீழ்ச்சிக்கு முதன்மை காரணங்களாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன. நிலைமையைக் கட்டுப்படுத்த அரசு உடனடியாகப் புதிய தூண்டுதல் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்துள்ளது.</p><h2>சில்ல<strong>றை விற்பனை</strong></h2><p>சீன தேசிய புள்ளியியல் வாரியம் வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, கடந்த ஜூலை மாதத்தில் சீன தொழிற்துறை உற்பத்தி 4.5 சதவீதம் மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளது. இது ஜூன் மாதத்தில் பதிவான 5.3 சதவீத வளர்ச்சியை விடக் குறைவாகும். பொருளாதார நிபுணர்கள் 4.8 சதவீத வளர்ச்சியை எதிர்பார்த்திருந்த நிலையில், இந்தத் தரவு ஏமாற்றத்தை அளித்துள்ளது. அதேபோல், நுகர்வோர் தேவையின் முக்கிய அளவீடான <a href="https://www.maalaimalar.com/news/topnews/global-market-semiconductor-firms-strong-profits-boost-china-hong-kong-stocks">சில்லறை விற்பனை</a> வெறும் 0.6 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. </p><p>இது ஜூன் மாதத்தின் 1 சதவீத வளர்ச்சியைக் காட்டிலும் மிகக் குறைவு. கோடைகால சுற்றுலா மற்றும் பயணங்கள் அதிகரித்தபோதிலும், மக்களின் வாங்கும் திறன் மேம்படவில்லை என்பதை இந்தத் தரவுகள் வெளிப்படுத்துகின்றன.</p><h2>முதலீடு<strong>கள் குறைவு</strong> </h2><p>நாட்டின் நிலையான சொத்துகள் மீதான முதலீடு நடப்பு ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 6.7 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. குறிப்பாக நாட்டின் முக்கிய தூணாக விளங்கும் ரியல் எஸ்டேட் துறை இன்னும் மீள முடியாத நெருக்கடியில் நீடிக்கிறது. புதிய வீடுகளின் விலைகள் ஆண்டுக்காண்டு ஒப்பீட்டில் தொடர்ந்து சரிந்து வருகின்றன. நாட்டின் பெரும்பாலான குடும்பங்களின் சொத்து மதிப்பு ரியல் எஸ்டேட் துறையுடன் பிணைக்கப்பட்டுள்ளதால், வீடுகளின் மதிப்பு குறைவது நுகர்வோரின் செலவிடும் மனநிலையைப் பெருமளவில் பாதித்துள்ளது.</p><h2>இயற்<strong>கை சீற்றங்கள்</strong> </h2><p>சீனாவின் உற்பத்தி மையங்களாகத் திகழும் கிழக்குப் பகுதிகளில் சமீபத்தில் தாக்கிய தொடர் சூறாவளிகள் மற்றும் கடுமையான மழைப்பொழிவு ஆகிய இயற்கை பேரிடர்களும் உற்பத்தியையும் விநியோகத்தையும் வெகுவாகப் பாதித்துள்ளன. இதன் காரணமாகப் பல லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குப் அனுப்பப்பட்டனர். மேலும், அமெரிக்காவின் வர்த்தகக் கட்டுப்பாடுகள், வரிகள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் அரசியல் ஸ்திரமற்ற தன்மை போன்றவை சீனாவின் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்திற்கு கூடுதல் முட்டுக்கட்டைகளாக மாறியுள்ளன.</p><h2>அரசின் அ<strong>டுத்தகட்ட நடவடிக்கைகள்</strong></h2><p>உள்நாட்டுத் தேவையை உடனடியாக ஊக்குவிக்க அரசு உடனடியாக நிதியுதவி மற்றும் வரிச்சலுகை திட்டங்களைச் தீவிரப்படுத்த வேண்டும் எனப் பொருளாதார வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர். தேசிய புள்ளியியல் வாரியத்தின் செய்தி தொடர்பாளர், சந்தையில் நிலவும் இந்த மந்தநிலையைச் சமாளிக்கவும் உள்நாட்டு நுகர்வை உயர்த்தவும் எதிர்-சுழற்சி கொள்கை நடவடிக்கைகளை விரைவுபடுத்தப்போவதாகத் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>போதையால் நிகழும் குற்றங்களைத் தடுக்க தீவிர நடவடிக்கை தேவை!- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-urgent-action-is-needed-to-prevent-crimes-driven-by-substance-abuse</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-urgent-action-is-needed-to-prevent-crimes-driven-by-substance-abuse#comments</comments><guid isPermaLink="false">f6be4729-5e8e-4c5a-8adb-4d92be33ba57</guid><pubDate>Mon, 17 Aug 2026 09:36:03 +0000</pubDate><atom:updated>2026-08-17T09:36:03.664Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,போதைப்பொருள்,Drugs</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/vpgu9239/anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/vpgu9239/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்நாட்டில் போதைப்பொருள்கள் வணிகம், அதன் விளைவாக நிகழும் கொலைகள் உள்ளிட்ட குற்றச் செயல்களை தடுத்து சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.</strong></em></p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>காஞ்சிபுரம் மாவட்டம்  படுநெல்லி கிராமத்தில் கோவில் திருவிழாவில்  மது போதையால்  ஏற்பட்ட மோதல் காரணமாக சந்துரு, விக்கி (எ) நீலகண்டன் என்ற இரு இளைஞர்கள் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.</p><h2><strong>கவலை</strong></h2><p>அதேபோல்,  சிவகங்கை மாவட்டம் கொந்தகை கிராமத்தில் 25 வயது இளைஞர் கழுத்தை அறுத்து படுகொலை,  கடலூர் மாவட்டம் நெய்வேலியில் நரேஷ்குமார் என்ற இளைஞர் வெட்டிக்கொலை, சென்னை தியாகராயநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில்  ராதா என்ற பெண்  நகைக்காக கொலை என கடந்த 24 மணி நேரத்தில்  5 பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பது தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.</p><p>மதுரை மாவட்டத்தில்  மட்டும் கடந்த 10 நாள்களில்  8 கொலைகள்,  கோவை மாவட்டத்தில் 11 நாள்களில் 4 படுகொலைகள் நடந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவற்றில் பெரும்பான்மையான கொலைகளின் பின்னணி போதைப்பொருள் புழக்கம் மற்றும் பயன்பாடு  என்பதாகத்தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் போதைப்பொருள்களின்  புழக்கத்தை வேகமாக கட்டுப்படுத்த வேண்டும் என்ற அவசரத் தேவை  ஏற்பட்டிருப்பதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன.</p><p>தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் போதைப்பொருள்களின் வணிகமும், பயன்பாடும் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தன. அதனால் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்ததால் தான்  கடந்த <a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-அரசு">ஆட்சியை</a> மக்கள் வீட்டுக்கு அனுப்பினார்கள். புதிய ஆட்சியிலும் இதே நிலை தொடருவது சரியல்ல.</p><p>எனவே, தமிழ்நாட்டில் போதைப்பொருள்கள் வணிகம், அதன் விளைவாக நிகழும் கொலைகள் உள்ளிட்ட குற்றச் செயல்களை தடுத்து சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.</p>]]></content:encoded></item><item><title>காலே டெஸ்டில் இந்தியா 462-ல் ஆல்அவுட்: 6-வது விக்கெட்டுக்கு இலங்கை ஜோடி நங்கூரம்..!</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/galle-test-india-462-all-out-sri-lanka-6th-wicket-pair-steady-start</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/galle-test-india-462-all-out-sri-lanka-6th-wicket-pair-steady-start#comments</comments><guid isPermaLink="false">6fbfec59-4727-48b8-b78e-2d2d1328bec3</guid><pubDate>Mon, 17 Aug 2026 09:31:07 +0000</pubDate><atom:updated>2026-08-17T09:31:07.808Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Team India,டீம் இந்தியா,Galle Test,காலே டெஸ்ட்,Devdutt Padikkal,தேவ்தத் படிக்கல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/geeyensd/SrilankaTeam001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இலங்கை அணி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/geeyensd/SrilankaTeam001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியா- இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 460 ரன்கள் எடுத்திருந்தது. குல்தீப் யாதவ் 12 ரன்களுடனும், பிரசித் கிருஷ்ணா 1 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.</p><h2>இந்திய முதல் இன்னிங்சில் 462 ரன்களில் ஆல்அவுட்</h2><p>இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய இந்தியா மேலும் 2 ரன்கள் சேர்த்து 462 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இந்திய அணி சார்பில் <a href="https://www.maalaimalar.com/sports/cricket/india-288-for-2-wickets-in-first-innings-for-end-of-first-day-against-srilanka-first-test">தேவ்தத் படிக்கல்</a> அதிகபட்சமாக 167 ரன்கள் குவித்தார். கே.எல். ராகுல் 82 ரன்களும், துருவ் ஜுரெல் 51 ரன்களும் சேர்த்தனர்.</p><p>இலங்கை அணி சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 4 விக்கெட்டுகளும், கேஷரா நுவாந்தா 3 விக்கெட்டும், அசிதா பெர்னாண்டோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><h2>தொடக்கத்தில் திணறிய இலங்கை</h2><p>பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. நிஷான் மதுஷ்கா பெர்னாண்டோ, லஹிரு உதாரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். நிஷான் மதுஷ்கா பெர்னாண்டோ ரன்ஏதும் எடுக்காமல் முகமது சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார்.</p><p>அடுத்து வந்த தினேஷ் சண்டிமல் 4 ரன்களிலும், கமிந்து மெண்டிஸ் 14 ரன்கிளலும், லஹிரு உதாரா 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை அணி 59 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.</p><p>5-வது விக்கெட்டுகு்கு தனஞ்ஜெயா டி சில்வா உடன் சோனால் தினுஷா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 31 ரன்கள் சேர்த்தது. தனஞ்ஜெயா டி சில்வா 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது இலங்கை 90 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.</p><h2>சோனல் தினுஷா- நிரோஷன் டிக்வெல்லா அரைசதம்</h2><p>அப்போது 6-வது விக்கெட்டுக்கு சோனல் தினுஷா உடன் நிரோஷன் டிக்வெல்லா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடியை இந்திய பந்து வீச்சாளர்கள் வீழ்த்த கடும் சிரமப்பட்டனர்.</p><p>டிக்வெல்லா 67 பந்திலும், தினுஷா 92 பந்திலும் அரைசதம் அடித்தனர். இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் இலங்கை அணி 200 ரன்களை தாண்டி விளையாடி வருகிறது.</p><p>தற்போது 56 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் இலங்கை 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி சார்பில் மானவ் சுதர் 2 விக்கெட்டும் முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் வருகையின் போது எழுந்து நிற்க வேண்டுமா?- காரசார விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த சபாநாயகர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/must-one-stand-up-during-the-chief-ministers-arrival-speaker-puts-an-end-to-the-heated-debate</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/must-one-stand-up-during-the-chief-ministers-arrival-speaker-puts-an-end-to-the-heated-debate#comments</comments><guid isPermaLink="false">a8c3796c-b77f-4bbc-a5d4-c8aad90f58e9</guid><pubDate>Mon, 17 Aug 2026 08:58:12 +0000</pubDate><atom:updated>2026-08-17T08:58:12.509Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>O Panneer Selvam,தமிழக சட்டசபை,TN assembly,ஓ பன்னீர்செல்வம்,JCD Prabhakar,சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/fzb8ghhd/JCDPrabhakar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்]]></media:title><media:description type="html"><![CDATA[ சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/fzb8ghhd/JCDPrabhakar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சட்டசபையில் முதலமைச்சர் வருகையின் போது, எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து நிற்பது கட்டாயமில்லை என்று சபாநாயகர் தெரிவித்தார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> முதலமைச்சர் விஜய் வரும்போது அனைவருக்கும் வணக்கம் தெரிவிப்பது வழக்கம். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்  அவரை நேருக்கு நேர் முகம் கொடுத்து பார்ப்பதில்லை. வணக்கமும் தெரிவிப்பதில்லை.</p><p>இது பற்றி  <a href="https://maalaimalar.com/news/tamilnadu/minister-ramesh-says-ops-should-teach-opposition-leader-about-house-dignity">அமைச்சர் ரமேஷ்</a> சட்டசபையில் குறிப்பிட்டார்.  அவர் கூறுகையில்,  முன்னாள் முதலமைச்சருக்கு  (ஓ.பி.எஸ்)சிறிய வேண்டுகோள். எங்களுக்கு எப்படி  முதலமைச்சர் அறிவுரை வழங்கினாரோ அதைப் போலவே எதிர்க்கட்சித் தலைவருக்கும்  நீங்கள் கண்ணியம் பற்றி  அறிவுரை வழங்க வேண்டும் என்றார்.</p><p>8 கோடி மக்களின் பிரதிநிதியாக இருக்கும் முதலமைச்சர் வரும் போது அமர்ந்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கு மரியாதை கொடுக்கும் கண்ணியத்தை சொல்லித் தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார்.</p><p>இதற்கு திமுக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சபாநாயகர் அவர்களை சமாதானப்படுத்தினார்.</p><p>உடனே முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு எழுந்து, எதிர்க்கட்சித் தலைவரை பற்றி அமைச்சர்  சொல்கிறார். திமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்த எங்கள் தலைவர் வரும் போது எதிர்க்கட்சித் தலைவர் எழுந்தது இல்லை. எனவே அது ஒரு குற்றம்  இல்லை. அது அவரவர்  எண்ணம் நடைமுறை.</p><p>எதிர்க்கட்சித் தலைவருக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என சொல்லி பேசுவதெல்லாம் தேவையற்றது என்றார்.</p><p>இதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், பேரவைத் தலைவர் வரும் போது மட்டுமே அவை உறுப்பினர்கள் எழுந்து நிற்க வேண்டும். முதலமைச்சர் நேராக தனது இருக்கைக்குச் சென்று வணக்கம் சொல்வது தான் மரபு.  முதலமைச்சர் வரும்போது எழுந்து நிற்க வேண்டுமெனில் எதிர்க்கட்சித் தலைவருக்கும் நிற்க வேண்டுமா? என்று ஓ பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார். </p><p>இதற்கு சபாநாயகர் விளக்கம் அளிக்கையில், சட்டசபையில் முதலமைச்சர் வருகையின் போது, எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து நிற்பது கட்டாயமில்லை. சட்டசபைக்குள் முதலமைச்சர் வந்த போது எடப்பாடி பழனிசாமி எழுந்து நின்று மரியாதை செலுத்தினார். அவைக்கு முதலமைச்சர் வரும்போது எழுந்து நின்று மரியாதை அளிப்பது அவரவர் விருப்பம், கட்டாயப்படுத்தவில்லை என்றார். </p>]]></content:encoded></item><item><title>GLOBAL MARKET: செமிகண்டக்டர் நிறுவனங்களின் அதிரடி லாபத்தால் சீனா மற்றும் ஹாங்காங் பங்குகள் கிடு கிடு உயர்வு!</title><link>https://www.maalaimalar.com/news/topnews/global-market-semiconductor-firms-strong-profits-boost-china-hong-kong-stocks</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/global-market-semiconductor-firms-strong-profits-boost-china-hong-kong-stocks#comments</comments><guid isPermaLink="false">0fca0d7d-b5df-44fd-a9d2-a79f3b7ce592</guid><pubDate>Mon, 17 Aug 2026 08:56:11 +0000</pubDate><atom:updated>2026-08-17T08:56:11.086Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>China,சீனா,ஹாங்காங்,பங்குச்சந்தை,Shanghai,global market,CSI Semiconductor,Hang Seng Index,செமிகண்டக்டர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/9ir5wb2e/global.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ GLOBAL MARKET]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/9ir5wb2e/global.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>வணிகம் (Business)</category><content:encoded><![CDATA[ <p>சீனா மற்றும் ஹாங்காங் பங்குச்சந்தைகளில் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள், குறிப்பாக செமிகண்டக்டர் தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகள் கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. செமிகண்டக்டர் நிறுவனங்கள் வெளியிட்ட சிறப்பான அரையாண்டு நிதி முடிவுகள் மற்றும் அதிகரித்த லாபம் ஆகியவையே இந்த திடீர் உயர்வுக்கு முதன்மைச் சான்றாக அமைந்துள்ளன. இதன் விளைவாக ஆசிய பங்குச்சந்தைகளில் செமிகண்டக்டர் மற்றும் <a href="https://www.maalaimalar.com/news/world/black-hole-star-spotted-in-early-universe-by-james-webb-telescope">செயற்கை நுண்ணறிவு </a>(AI) சார்ந்த பங்குகளின் வர்த்தகம் விறுவிறுப்படைந்துள்ளது.</p><h2>சீன ப<strong>ங்குச்சந்தை</strong> </h2><p>சீன சந்தையின் முன்னணி பங்குச்சந்தை குறியீடான ஷாங்காய் காம்போசிட் வர்த்தகத்தின் இடையே 0.8 சதவீதம் உயர்ந்து 3,960.19 புள்ளிகளை எட்டியது. அதேபோல ப்ளூ-சிப் சிஎஸ்ஐ 300 குறியீடும் 0.8 சதவீத உயர்வைச் சந்தித்தது. தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகம் நிறைந்த ஷாங்காயின் 'ஸ்டார் 50'  குறியீடு 3 சதவீதமும், சிஎஸ்ஐ செமிகண்டக்டர் குறியீடு 4 சதவீதமும் உயர்ந்து முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளன.</p><h2>லா<strong>ப விவரங்கள்</strong></h2><p>நினைவக சிப் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள 'சிஎக்ஸ்எம்டி' நிறுவனத்தின் பங்குகள் 9 சதவீதம் வரை அதிகரித்துள்ளன. மேலும் 'ஷென்சென் சீனா மைக்ரோ செமிகண்டக்டர்' நிறுவனம் தனது முதல் அரையாண்டு லாபம் இருமடங்காக உயர்ந்துள்ளதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அதன் பங்குகள் 15 சதவீதம் உயர்ந்து கடந்த ஒரு மாத கால அளவில் இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.</p><h3>நுகர்வோர் து<strong>றையில் நிலவும் சரிவு</strong></h3><p>தொழில்நுட்ப பங்குகள் ஏற்றம் கண்ட போதிலும், நுகர்வோர் மற்றும் மதுபானத் தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன. சிஎஸ்ஐ மதுபான குறியீடு 3.3 சதவீதம் சரிவடைந்தது. நாட்டின் முன்னணி மதுபான தயாரிப்பு நிறுவனமான குவைச்சோவ் மௌடாய் தனது லாபத்தில் வீழ்ச்சியைச் சந்தித்ததாகக் கூறியதைத் தொடர்ந்து, அதன் பங்கு மதிப்பு 4.2 சதவீதம் சரிந்தது. இதன் காரணமாகவே சந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சி சற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.</p><h2>ஹா<strong>ங்காங் சந்தை</strong></h2><p>ஹாங்காங் பங்குச்சந்தையில் ஹேங் செங் குறியீடு 1.6 சதவீதம் உயர்ந்து 25,521.99 புள்ளிகளாகப் பதிவானது. சீன நாட்டின் தொழில் உற்பத்தி மற்றும் சில்லறை விற்பனை தொடர்பான முக்கிய பொருளாதார தரவுகள் வெளியிடப்பட உள்ள நிலையில், முதலீட்டாளர்கள் சந்தையை கூர்ந்து கவனித்து வருகின்றனர். உள்நாட்டு தேவை மற்றும் கடன் சந்தையின் ஸ்திரத்தன்மை குறித்து இந்த தரவுகள் தெளிவான பார்வையை வழங்கும் என்பதால் சந்தையில் குறிப்பிட்ட சில துறைகளுக்கு இடையே முதலீடுகள் மாறி வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>மேற்கு வங்கத்தில் உள்ள உணவகத்தில் பயங்கர தீ விபத்து- 7 பேர் உடல் கருகி பலி</title><link>https://www.maalaimalar.com/news/national/west-bengal-hotel-fire-7-killed</link><comments>https://www.maalaimalar.com/news/national/west-bengal-hotel-fire-7-killed#comments</comments><guid isPermaLink="false">5659cbcd-755c-4924-8f32-b0c48ad52d65</guid><pubDate>Mon, 17 Aug 2026 08:42:50 +0000</pubDate><atom:updated>2026-08-17T08:42:50.285Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உயிரிழப்பு,fire accident,dead,மேற்குவங்கம்,west bengal,தீ விபத்து</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/wya52dbj/Fire.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Fire accident in westbengal]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/wya52dbj/Fire.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்காள மாநிலம் பீபூம் மாவட்டத்தில் உள்ள தாரா பீத்தில் 4 மாடியில் ஒரு ஓட்டல் உள்ளது.  தாராபீடக் கோவிலுக்கு சிராவண மற்றும் நாக பஞ்சமி மாதங்களின் கடைசி திங்கட்கிழமை என்பதால் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.</p><h2>பயங்கர தீ விபத்து</h2><p>இதனால் ஓட்டல் முழுவதும்  ஏராளமான பக்தர்கள் தங்கி இருந்தார்கள். இங்கு இன்று அதிகாலை 4.30 மணியளவில் தீடீரென்று தீ பிடித்தது. தரைத்தளத்தில் உள்ள வரவேற்புப் பகுதியில் தீ பிடிக்க தொடங்கியது.  பின்னர் தீ மள மளவென பரவி எரிந்தது.</p><p>தரைத்தளத்தில் இருந்த செயற்கைக் கூரைகள், பைபர் கிளாஸ் மற்றும் பிற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் காரணமாக, புகையும் தீயும் மேல் தளங்களுக்கு வேகமாகப் பரவின.</p><p>ஓட்டலில் தங்கி இருந்தவர்கள் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்ததால் அவர்களால் ஓட்டலைவிட்டு வெளியேற முடியவில்லை. </p><h2>7 பேர் பலி</h2><p>பலரும் தீ பற்றி எரிந்த ஓட்டலுக்குள் சிக்கிகொண்டனர். இந்த பயங்கர தீவிபத்தில் 7 பேர் பலியானார்கள். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.  இறந்தவர்களில் சிலர் சுற்றுலாப் பயணிகள் என்றும் மற்றவர்கள் ஊழியர்கள் என கூறப்பட்டுள்ளது.</p><p>தீக்காயங்களாலும், தீயால் ஏற்பட்ட புகையால் மூச்சுத்திணறல் காரணமாகவும் உயிரிழப்பு நேர்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.  தீ விபத்து குறித்த தகவல் அறிந்ததும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.</p><p>ஓட்டலில் புகை மண்டலமாக காணப்பட்டதால் போலீசார், தீயணைப்பு படையினரால் உடனடியாக சம்பவ இடத்துக்குள் நுழைய முடியவில்லை.  எனினும் கதவுகளை உடைத்து உள்ளே சிக்கியவர்களை மீட்டனர்.</p><p>வெகுநேரம் போராடி தீயை அணைத்து ஓட்டலுக்குள் சிக்கியவர்களை மீட்டு ராம்பூர்ஹாட் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><h2>விசாரணை தீவிரம்</h2><p>தீ விபத்து நடந்த ஓட்டலில் அடிப்படை தீயணைப்பு கருவிகள் மிகக் குறைவாக இருந்தன. பின்பக்கக் கதவு பூட்டப்பட்டிருந்ததால் ஒட்டலில் இருந்த தப்பிப்பது கடினமாக இருந்ததாக அப்பகுதியினர் தெரிவித்தனர். </p><p>உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.</p><p>தீ விபத்து நடந்த ஓட்டலில் அடிப்படை தீயணைப்பு கருவிகள் மிகக் குறைவாக இருந்தன. பின்பக்கக் கதவு பூட்டப்பட்டிருந்ததால் ஒட்டலில் இருந்த தப்பிப்பது கடினமாக இருந்ததாக அப்பகுதியினர் தெரிவித்தனர். </p><p>உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விண்வெளியில் புதிய அதிசயம்: பிரபஞ்சத்தின் தொடக்க கால &apos;கருந்துளை நட்சத்திரம்&apos; கண்டுபிடிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/world/black-hole-star-spotted-in-early-universe-by-james-webb-telescope</link><comments>https://www.maalaimalar.com/news/world/black-hole-star-spotted-in-early-universe-by-james-webb-telescope#comments</comments><guid isPermaLink="false">2a92bdf2-072b-447b-a1bb-6193b13b9ac1</guid><pubDate>Mon, 17 Aug 2026 08:41:58 +0000</pubDate><atom:updated>2026-08-17T08:41:58.901Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நாசா,space,விண்வெளி,Universe,Black Hole Star,Nuclear Fusion,கருந்துளை நட்சத்திரம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/3urtfhma/star.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Black Hole Star]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/3urtfhma/star.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் வானியலாளர்கள் இதுவரை கண்டிராத முற்றிலும் புதிய வகை விண்வெளிப் பொருளைக் கண்டுபிடித்துள்ளனர். பிரபஞ்சம் உருவாகி நூறு மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகான தொடக்க காலத்தில் இந்த விசித்திரமான பொருள் காணப்பட்டுள்ளது. </p><p>நமது சூரிய மண்டலத்தின் அளவுக்குப் பிரம்மாண்டமான ஒரு பெரிய நட்சத்திரத்தைப் போல தோற்றமளிக்கும் இது, சாதாரண நட்சத்திரங்களை விட சுமார் 100 பில்லியன் மடங்கு அதிக ஆற்றலை வெளிப்படுத்துகிறது. இந்த பிரம்மாண்ட ஆற்றல் மற்றும் தோற்றத்தின் அடிப்படையில், இதற்கு "<a href="https://www.maalaimalar.com/news/world/china-new-kande-satellite-network-to-track-space-debris">கருந்துளை நட்சத்திரம்</a>" என்று ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டுள்ளனர்.</p><h2>முற்றிலும் <strong>மாறுபட்ட ஆற்றல்</strong> மையம்</h2><p>பொதுவாக நட்சத்திரங்கள் அணுக்கரு இணைவு மூலம் ஆற்றலை உருவாக்குகின்றன. ஆனால், இந்த புதிய பொருளின் ஆற்றல் உற்பத்தி ஒரு சாதாரண நட்சத்திரத்தால் சாத்தியமில்லாத அளவுக்குப் பிரம்மாண்டமாக உள்ளது. விஞ்ஞானி ரோஹன் நாயுடு தலைமையிலான ஆய்வுக் குழுவினர், இதன் மையத்தில் சூரியனை விட 1,00,000 மடங்கு அதிக நிறை கொண்ட ஒரு பெரிய கருந்துளை இருக்கக் கூடும் என்று கூறியுள்ளனர். </p><p>அந்தக் கருந்துளையைச் சுற்றி சூரிய மண்டலத்தின் அளவிற்கு ஹைட்ரஜன் வாயுக்கள் அடர்த்தியான மேகம் போல சூழ்ந்து, ஒரு பெரிய நட்சத்திரத்தின் வளிமண்டலம் போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளன.</p><h2>நீண்ட கால <strong>விண்வெளி புதி</strong>ருக்கு விடை</h2><p>ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அனுப்பிய தொடக்கால பிரபஞ்சத்தின் படங்களில் பல சிறிய சிவப்பு புள்ளிகள் காணப்பட்டு வந்தன. அவை என்னவென்று தெரியாமல் பல ஆண்டுகளாக வானியலாளர்கள் இடையே பெரும் விவாதம் நடந்து வந்தது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள 'MoM-BH-1' என பெயரிடப்பட்ட இந்த கருந்துளை நட்சத்திரம், அந்த சிவப்பு புள்ளிகள் அனைத்தும் எவ்வாறு உருவாகின என்ற புதிருக்கு முக்கிய விடையாக அமைந்துள்ளது.</p><h2>அறிவியல் <strong>உலகில் புதிய</strong> மைல்கல்</h2><p>இந்த ஆய்வு முடிவுகள் பிரபல 'நேச்சர்' அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. பிரபஞ்சத்தின் தொடக்க காலத்தில் ராட்சத கருந்துளைகள் எப்படி இவ்வளவு விரைவாக உருவாயின என்பதைப் புரிந்து கொள்ள இந்த "கருந்துளை நட்சத்திரம்" பற்றிய கண்டுபிடிப்பு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தவெக அரசின் 100 நாள் சாதனை மலர் - முதலமைச்சர் விஜய் வெளியிட்டார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-released-tvk-government-100-day-achievements-booklet</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-released-tvk-government-100-day-achievements-booklet#comments</comments><guid isPermaLink="false">63fe7d20-a361-4c5c-8742-cc65221dd287</guid><pubDate>Mon, 17 Aug 2026 08:31:15 +0000</pubDate><atom:updated>2026-08-17T08:31:15.669Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழ்நாடு அரசு,TN Government,தவெக அரசு,tvk government</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/v7xr4fei/vijay2.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/v7xr4fei/vijay2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தவெக அரசு பொறுப்பேற்று 100 நாட்களில் நிறைவேற்றிய சாதனைகளை விளக்கிடும் வகையில் 100 நாள் சாதனை மலர் வெளியிடப்பட்டுள்ளது.</strong></em></p><p>தமிழ்நாட்டின் 14-வது முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் மே 10-ந்தேதி பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர்.</p> <p>தலைமைச் செயலகத்தில முதலமைச்சராக பொறுப்பேற்றதும் குடும்பங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கல், பெண்களின் பாதுகாப்பிற்கான சிறப்புப் பிரிவு மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுத்தல் தொடர்பான 3 முக்கிய கோப்புகளில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-video-released-100-day-administration-represents-peoples-conscience-for-an-era">முதலமைச்சர் விஜய்</a> கையெழுத்திட்டார்.</p> <p>தவெக அரசு பொறுப்பேற்று 100 நாட்களான நிலையில் முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">விஜய்</a>,  'ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி' என்று குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தவெக அரசு பொறுப்பேற்று 100 நாட்களில் செய்யப்பட்ட திட்டங்களின் பட்டியலை அவர் குறிப்பிட்டுள்ளார்.</p> <p>தவெக ஆட்சி அமைத்து இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைகின்ற நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் அரசின் 100 நாள் சாதனை மலரை முதலமைச்சர் விஜய் வெளியிட்டார்.</p> <p>அரசு பொறுப்பேற்று 100 நாட்களில் நிறைவேற்றிய சாதனைகளை விளக்கிடும் வகையில் மலர் வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் நலனை இலக்காகக் கொண்ட அரசின் 100 நாள் சாதனை மலர் என்ற பெயரில் வெளியிடப்பட்டது.</p> ]]></content:encoded></item><item><title>3வது மாடியில் இருந்து கீழே விழுந்த 2 வயது சிறுவன்.. விளையாடிக் கொண்டிருந்தபோது விபரீதம் </title><link>https://www.maalaimalar.com/news/national/bengaluru-toddler-critical-after-fall-two-year-old-boy-severely-injured-in-third-floor-apartment-grille-accident</link><comments>https://www.maalaimalar.com/news/national/bengaluru-toddler-critical-after-fall-two-year-old-boy-severely-injured-in-third-floor-apartment-grille-accident#comments</comments><guid isPermaLink="false">73e2d8cd-0b11-47aa-8e3a-f2d2ce950fce</guid><pubDate>Mon, 17 Aug 2026 08:28:47 +0000</pubDate><atom:updated>2026-08-17T08:28:47.410Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பெங்களூரு,bengaluru,அடுக்குமாடி குடியிருப்பு,accident,விபத்து,apartment complex</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/d7kh9id2/tn-22.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கோப்புப் படம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ கோப்புப் படம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/d7kh9id2/tn-22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக மாநிலம் <a href="https://www.maalaimalar.com/topic/bangalore">பெங்களூருவில்</a> 2 வயது சிறுவன் அடுக்குமாடி குடியிருப்பின் 3 ஆம் தளத்தில் இருந்த கீழே விழுந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.  </p><h2>பெங்களூரு</h2><p>பெங்களூருவின் சிக்கா அடுகோடி பகுதியில் நேற்று காலை 10.50 மணியளவில் மூன்றாம் மாடியில் இருந்த தனது வீட்டின் வெளியே அமைக்கப்பட்டுள்ள கிரீல் மீது சிறுவன் ஏறியபோது தவறி கீழே விழுந்துள்ளான். அப்போது பெற்றோர் யாரும் உடனிருக்கவில்லை.</p> <h2>காயம்</h2><p>நேரில் கண்டவர்கள் சாட்சிபடி, சிறுவன் விழுந்த வேகத்தில் அவன் பின்புறம் தரையில் மோதி அதன் தாக்கத்தால் மேலே எம்பியுள்ளான். </p><p>இதனால் சிறுவனுக்கு அதிக காயம் ஏற்பட்டுள்ளது. அருகே ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்த இரு பெண்கள் சிறுவன் விழுந்ததை பார்த்து அங்கு ஓடிச் சென்றுள்ளனர்.</p><h2>மீட்பு </h2><p>மேலும் குடியிருப்பு வாசிகளும் அங்கு விரையவே, சிறுவனை இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்று கோராமங்களாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். </p><p>அங்கு சிறுவன் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறான். அவனது உடனல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><h2>பெற்றோர்</h2><p>சிறுவனின் பெற்றோர் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. சிறுவனின் தந்தை சமையளாலாக வேலை பார்த்து வருகிறார்.</p><p>இதுவரை இந்த சம்பவம் குறித்து எந்த புகாரும் வரவில்லை என்றும் சிறுவன் விழுந்த சூழ்நிலை குறித்து விசாரித்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நேரில் செல்லாமல் பத்திரப்பதிவு செய்யும் நடைமுறையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-inaugurated-the-procedure-for-property-registration-without-the-need-for-an-in-person-visit</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-inaugurated-the-procedure-for-property-registration-without-the-need-for-an-in-person-visit#comments</comments><guid isPermaLink="false">7c7e9bfc-0e29-4488-b1f2-1ec2f2ba9561</guid><pubDate>Mon, 17 Aug 2026 08:26:39 +0000</pubDate><atom:updated>2026-08-17T08:26:39.026Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,ஆன்லைன் பத்திரப்பதிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/7k1ycajg/Vijay07.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/7k1ycajg/Vijay07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஆவணப்பதிவு முறையின் மூலம் பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் (Anywhere Registration) பதிவுத்துறை இணையதளத்தின் மூலம் இணையவழியில் தங்களது ஆவணங்களைப் பதிவு செய்து கொள்ள முடியும்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-அரசு">தமிழ்நாடு அரசு</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று தலைமைச் செயலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில், தமிழ்நாட்டில் உள்ள மனைப்பிரிவில் முதல் மனை விற்பனை மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்பில் முதல் வீடு விற்பனை ஆவணங்களைப் பதிவுத்துறையில் இணையவழியில் வருகையில்லா ஆவணப்பதிவு மூலம் மட்டுமே கட்டாயமாகப் பதிவுசெய்யும் நடைமுறையைத் தொடங்கி வைத்தார்.</p><p>பதிவுத்துறையில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81">ஆவணப்பதிவு</a> நடைமுறைகளை எளிமைப்படுத்த பொதுமக்கள் தாங்களே நேரடியாக இணையவழியில் ஆவணங்களைப் பதிவுசெய்யும் முறையினை ஏற்கனவே பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>இந்த ஆவணப்பதிவு முறையின் மூலம் பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் (Anywhere Registration) பதிவுத்துறை இணையதளத்தின் மூலம் இணையவழியில் தங்களது ஆவணங்களைப் பதிவு செய்து கொள்ள முடியும்.</p><p>பதிவு நடைமுறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேலும் மேம்படுத்தவும், பொதுமக்களுக்கு எளிதான சேவையை வழங்கவும் நேரில் வருகையற்ற பதிவு (Presenceless Registration) முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இம்முறையில், பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகம் வராமலேயே மனைப்பிரிவில் முதல் மனை விற்பனை மற்றும் அடுக்குமாடி குடியிருப்பில் முதல் வீடு விற்பனை ஆகிய ஆவணங்களைத் தற்போது பதிவு செய்யலாம். இம்முறையில் ஆவணங்களை இணையவழியில் சமர்ப்பிக்க இயலும் என்பதால், சம்பந்தப்பட்டவர்கள் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் வருகைதர வேண்டிய அவசியம் தவிர்க்கப்படுகிறது.</p><h2><strong>ஆவணப்பதிவு முறை</strong></h2><p>1. பதிவுத்துறை இணையதளத்தில் தங்களது உள்நுழைவினைத் தாங்களே உருவாக்கி மேற்படி ஆவணங்களை இணையவழியில் சமர்ப்பிக்கலாம்.</p><p>2. ஆவணத்தை எழுதிக் கொடுப்பவர்கள், எழுதிப் பெறுபவர்கள் மற்றும் சாட்சிகள் ஆகிய அனைவருக்கும் ஆதார் அட்டை பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.</p><p>3. ஆதார் ஆணையத்தின் மூலம் கைரேகை அல்லது கருவிழிப் படலம் வழி ஆதார் சரிபார்க்கப்பட வேண்டும்.</p><h2><strong>தொழில்நுட்பத் தேவைகள்</strong></h2><p>இணைய இணைப்பு, UIDAI அங்கீகரிக்கப்பட்ட எல்1 விரல் ரேகை இயந்திரம் மற்றும் கருவிழிப்படலம் ஸ்கேன் செய்யும் கருவி, புகைப்படம் எடுக்க நீலநிறத் திரை (புகைப்படம் எடுப்பவரின் பின்புறத்தில் வைத்திருக்க வேண்டும்), புகைப்படக் கருவி (Webcam) ஆகிய தொழில்நுட்ப உபகரணங்கள் தேவைப்படும்.</p><h2><strong>வருகையில்லா ஆவணப்பதிவின் முக்கிய அம்சங்கள்</strong></h2><p>வருகையில்லா ஆவணப்பதிவின் மூலம் இணையவழியில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை சார்பதிவாளர்கள் 24 மணி நேரத்திற்குள் பதிவு செய்தோ அல்லது திருத்தத்திற்காக திருப்பி அனுப்பியோ அல்லது நிராகரித்தோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>வருகையில்லா ஆவணப்பதிவின் மூலம் இணையவழியில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் சார்பதிவாளர்களால் தற்போதுள்ள நடைமுறையில் உள்ளபடி சரிபார்க்கப்பட்டு, சட்ட விதிகளுக்குட்பட்டு பதிவு செய்யப்படும்.</p><p>திருத்தத்திற்காகத் திருப்பி அனுப்பப்படும் ஆவணங்களைத் திருப்பி அனுப்பப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தேவையான திருத்தங்களுடன் மீண்டும் சமர்ப்பிக்கலாம்.</p><p>பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில் சார்பதிவாளர் டிஜிட்டல் கையொப்பமிட்டு, ஆவணப் பதிவிற்காக உருவாக்கப்பட்ட பயனர் உள்நுழைவில் அவை கிடைக்கச் செய்யப்படும்.</p><p>பயனர் உள்நுழைவில் கிடைக்கும் பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை 60 நாட்களுக்குள் தேவையான எண்ணிக்கையில் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் மென்பொருள் வசதி செய்யப்பட்டுள்ளது.</p><p>60 நாட்கள் முடிந்த பின்னர், பொதுமக்கள் நடைமுறையில் உள்ள முறையின்படி சான்றிட்ட நகலுக்கு (Certified Copy) விண்ணப்பித்து பதிவு செய்யப்பட்ட ஆவணத்தைப் பெறலாம்.</p><h2><strong>வருகையில்லா ஆவணப்பதிவின் பாதுகாப்பு அம்சங்கள்</strong></h2><p>ஆவணத்தின் பதிவுச் சான்றுரை (Endorsement) ஒவ்வொரு முறையும் மாறுபடும் ஐந்து நிறங்களைக் கொண்ட தானியங்கி சீரற்ற நிற அமைப்பில் (Dynamic Random Five Colours) அச்சிடப்படும். சான்றிட்ட நகல் கோரப்படும் போது கருப்பு-வெள்ளை நகல் மட்டுமே வழங்கப்படும்; அசல் நிற டிஜிட்டல் நகல் பொதுமக்களின் உள்நுழைவில் 60 நாட்கள் வரை கிடைக்கும். இதனால் அசல் ஆவணத்தின் பதிவுச் சான்றுரையில் இடம்பெற்ற நிற அமைப்பை ஆவண உரிமையாளர் அறிந்துகொள்ள இயலும்; போலி ஆவணம்  உருவாக்குவதைத் தடுக்கும் கூடுதல் பாதுகாப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.</p><p>ஆவணத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் QR குறியீடு இடம்பெறும். அதில் ஆவண எண், ஆவணத்தின் தன்மை மற்றும் பதிவு செய்யப்பட்ட தேதி ஆகிய விவரங்கள் இடம்பெறும். பதிவு அலுவலர் ஆவணத்தில் டிஜிட்டல் கையொப்பமிடுவார். காகித ஆவணத்தில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டிருந்தால் டிஜிட்டல் கையொப்பமிடப்பட்ட ஆவணத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கலாம். டிஜிட்டல் ஆவணம் மாற்றம் செய்யப்பட்டால், டிஜிட்டல் கையொப்பச் சரிபார்ப்பில் “X” குறியீடு தோன்றுவதன்மூலம் மாற்றம் செய்யப்பட்டிருப்பதை அறியலாம்.</p><p>பொதுமக்கள் நலனுக்காகவும், பதிவு நடைமுறையை எளிமைப்படுத்தி, வெளிப்படைத்தன்மையோடு செயல்படுத்திடும் வகையிலும் மனைப்பிரிவிற்கான முதல் மனை விற்பனை மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புக்கான முதல் வீடு விற்பனை ஆவணத்தை பதிவுத்துறையில் வருகையில்லா ஆவணப்பதிவு முறையின்கீழ் பதிவு செய்வது கட்டாயமாக்கப்படுகிறது.</p><p>இந்நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன், வணிகவரி, பதிவுத்துறை மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் குமரகுருபரன், பதிவுத்துறைத் தலைவர் ஜி.கே.அருண் சுந்தர் தயாளன், இ.ஆ.ப. ஆகியோர் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>பிரபல ஹாலிவுட் நடிகை 36 வயதில் திடீர் மரணம் </title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/hollywood-actress-death-hayden-panettiere-dies-at-36</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/hollywood-actress-death-hayden-panettiere-dies-at-36#comments</comments><guid isPermaLink="false">076e917e-10dd-4c2a-82d9-436f4cbfc3aa</guid><pubDate>Mon, 17 Aug 2026 08:24:31 +0000</pubDate><atom:updated>2026-08-17T08:24:31.256Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மறைவு,Hollywood,ஹாலிவுட்,ஹாலிவுட் நடிகை,Hollywood actress</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/6e0tqvyj/tn-21.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[  ஹெய்டன் பனெட்டியர்]]></media:title><media:description type="html"><![CDATA[  ஹெய்டன் பனெட்டியர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/6e0tqvyj/tn-21.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஹாலிவுட் <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/young-bollywood-star-ananya-raj-dies-at-27-after-severe-physical-and-mental-health-issues">நடிகை </a>ஹெய்டன் பனெட்டியரின் உயிரிழப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு வயது 36.</p><p>அவரது மரணத்திற்கான காரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. அவர் கடைசி வரை மன உறுதியுடன் இருந்ததாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். </p> <h2>திரை வாழ்க்கை</h2><p>தனது குழந்தை பருவத்திலேயே விளம்பரங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் மூலம் நடிகையானவர் ஹெய்டன்.</p><p>2006–2010 வரை ஒளிபரப்பான ஹீரோஸ் என்ற தொலைக்காட்சி தொடரில் கிளேர் பென்னட் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சர்வதேச அளவில் புகழ்பெற்றார்.</p> <p>'நாஷ்வில்லி' தொடரில் ஜூலியட் பார்னஸ் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததற்காக இருமுறை கோல்டன் குளோப் விருதுகளுக்கு தேர்வானார்</p><p>ரிமம்பர் தி டைட்டன்ஸ், ஐஸ் பிரின்சஸ், ஸ்க்ரீம் 4, ஸ்க்ரீம் 6 போன்ற திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார்.</p><h2>தனிப்பட்ட வாழ்க்கை</h2><p>2009 முதல் 2018 வரை விலாடிமிர் கிளிட்ச்கோ என்ற குத்துச்சண்டை வீரருடன் உறவில் இருந்த அவருக்கு 2014 இல் பெண் குழந்தை பிறந்தது.</p><p>அப்போது பிரசவத்திற்குப் பிந்தைய மன அழுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டார்.</p><p>அதிலிருந்து விடுபட மதுப் பழக்கத்திற்கு அடிமையானதை அவர் பின்னாட்களில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.</p> <p>மதுப்பழக்கத்தில் இருந்து மீள்வதகான சிகிச்சை எடுத்துக்கொள்ள தனது மகளை 2018 இல் துணைவர் விலாடிமிர் கிளிட்ச்கோவிடம் ஒப்படைத்தார்.</p><p>தனது வாழ்க்கைப் போராட்டங்கள், மனநலப் பாதிப்புகள் மற்றும் அதிலிருந்து மீண்டு வந்த அனுபவங்களைப் பற்றி This Is Me: A Reckoning என்ற பெயரில் சுயசரிதை நூலாக எழுதி வெளியிட்டுள்ளார்.</p><p>அவரது திடீர் மறைவு <a href="https://www.maalaimalar.com/topic/hollywood">ஹாலிவுட் </a>திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>குழந்தையின் மொட்டை அடிக்கும் விழா: மீண்டும் இணைந்து புகைப்படங்களை வெளியிட்ட மாதம்பட்டி ரங்கராஜ்-ஜாய் கிரிசில்டா!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/mathampatti-rangaraj-joy-griselda-reunite-for-sons-head-shaving-ceremony</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/mathampatti-rangaraj-joy-griselda-reunite-for-sons-head-shaving-ceremony#comments</comments><guid isPermaLink="false">07743232-343c-4070-b9c6-224ead7e73ae</guid><pubDate>Mon, 17 Aug 2026 08:20:48 +0000</pubDate><atom:updated>2026-08-17T08:20:48.858Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மாதம்பட்டி ரங்கராஜ்,ஜாய் கிரிசில்டா,Madhampatti Rangaraj,Joy Griselda,Raga Rangaraj,ராகா ரங்கராஜ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/a0qe0axw/madhampatty.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Madhampatti Rangaraj-Joy Griselda ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/a0qe0axw/madhampatty.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இடையேயான தனிப்பட்ட குடும்பச் சிக்கல்கள் கடந்த சில நாட்களாக இணையதளங்களிலும் ஊடகங்களிலும் பெரும் விவாதப் பொருளாக இருந்து வந்தன. இந்த நிலையில், தற்போது இருவரும் இணைந்து தங்களின் மகனுக்கு மொட்டை அடிக்கும் விழாவில் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.</p><p>ஏற்கனவே திருமணமாகி மனைவியுடன் வாழ்ந்து வந்த <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/i-will-stand-by-raga-rangaraj-throughout-my-life-madhampatti-rangaraj-assumes-the-role-of-a-father">மாதம்பட்டி ரங்கராஜ்</a>, தன்னை ஏமாற்றி இரண்டாம் திருமணம் செய்து கொண்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர். அதே வேளையில், இந்த விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்திலும் நிலுவையில் இருந்து வந்தது.</p><h2>மரப<strong>ணு சோத</strong>னை </h2><p>சட்டப் போராட்டங்கள் தொடர்ந்த நிலையில், கர்ப்பமாக இருந்த ஜாய் கிரிஸில்டாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. நீதிமன்ற விசாரணையின் போது, குழந்தையின் உயிரியல் தந்தை மதாம்பட்டி ரங்கராஜ் தான் என்பது உறுதியானது. இந்த அறிக்கை வெளியானதை கடந்த ஏப்ரல் மாதம் ஜாய் கிரிஸில்டா அதிகாரப்பூர்வ அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தினார். மேலும் குழந்தைக்கு ராகா ரங்கராஜ் என்றும் பெயரிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, குழந்தையின் வாழ்நாள் முழுவதற்கும் தேவையான அனைத்து பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்ளத் தயார் என ரங்கராஜின் வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.</p><h2>மகனு<strong>க்கு ஆதரவு</strong></h2><p>இந்த வழக்கு மற்றும் சர்ச்சைகளுக்கு நடுவே, மாதம்பட்டி ரங்கராஜ் தனது மகன் ராகா ரங்கராஜுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். கடந்த ஆறு மாதங்களாகத் தனது மகனுக்கான அனைத்து கடமைகளையும் அன்போடும் அர்ப்பணிப்போடும் நிறைவேற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், மகனின் எதிர்காலத் தேவைகள் அனைத்தையும் தொடர்ந்து வழங்குவதாகவும், அவன் வாழ்நாள் முழுவதும் அவனுக்கு பக்கபலமாக நின்று ஆதரவளிப்பேன் என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.</p><h2>சமூக வலை<strong>தளங்களில்</strong> வைரலாகும் புகைப்படங்கள்</h2><p>இந்தச் சுமுகமான முடிவைத் தொடர்ந்து, தங்களது மகனுக்கு மொட்டை அடிக்கும் கோயில் சடங்கில் இருவரும் ஒன்றாகப் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் எடுக்கப்பட்டப் புகைப்படங்களை ஜாய் கிரிசில்டா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைந்து மகிழ்ச்சியுடன் காணப்பட்ட இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வைரலாகி வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>NEET விவகாரம்: அதிமுக- காங்கிரஸ் இடையே கடும் விவாதம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/neet-controversy-aiadmk-congress-clash</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/neet-controversy-aiadmk-congress-clash#comments</comments><guid isPermaLink="false">98b53713-3555-4783-9a38-4349d123c796</guid><pubDate>Mon, 17 Aug 2026 08:13:55 +0000</pubDate><atom:updated>2026-08-17T08:13:55.354Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,ADMK,அதிமுக,neet,​​Congress,நீட் விவகாரம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/vvgud2w5/Thalavadi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Rajeshkumar-EPS-Thalavaai sundharam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/vvgud2w5/Thalavadi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் நீட் நுழைவுத் தேர்வு மானிய கோரிக்கை விவாதத்தின் போது அதிமுக- காங்கிரஸ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.</p><p>மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம் பேசுகையில்,"</p><p>அதிமுக ஆட்சியில் நீட் கொண்டு வரப்படவில்லை. 2011, 2012ல் தான் நீட் தொடர்பான அறிவிக்கை வந்தது </p><p>கன்னியாகுமரியில் சித்தா மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும்.</p><p>தமிழ்நாட்டில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமி என சட்டசபையில் தளவாய் சுந்தரம் பேச்சு</p><p>அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரி கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமி</p><p>நீட் தேர்வை கொண்டு வந்து ஏழை எளிய மாணவர்கள் வயிற்றில் அடித்தது யார்?.</p><p>பாஜக கொத்தடிமை எடப்பாடி பழனிசாமி என்றார்கள். ஆனால் சாதித்து காட்டி இருக்கிறார்.</p><p>6 புதிய மாவட்டங்களை உருவாக்கியவர் எடப்பாடி பழனிசாமிதான். " என்றார்.</p><h2>அமைச்சர் ராஜேஷ் குமார்:</h2><p>2017-ம் ஆண்டு தான் நீட் தேர்வு வந்தது. விரும்பாத மாநிலங்களுக்கு நீட் இல்லை என  2014-ல் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தார். </p><p>நீட் தேர்வால் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவர்களின் பெற்றோரை ராகுல் சந்தித்தார்.</p><h2>எடப்பாடி பழனிசாமி:</h2><p>2010-ம் ஆண்டு டிசம்பரில் நீட் அறிவிக்கை வந்தது. காங்கிரஸ் ஆட்சியில் தான் நீட் அறிவிக்கை வெளியிடப்பட்டது.</p><p>நீட் தேர்வுக்கு விலக்கு தேவை என்பதே அதிமுகவின் கொள்கை. </p><p>உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக நடந்து கொள்ள முடியாது.</p>]]></content:encoded></item><item><title>தவெக அரசின் 100 நாள் ஆட்சி: வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளும், பொதுமக்களுமே சாட்சி !!- டி.டி.வி.தினகரன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-indictment-tvk-govt-5</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-indictment-tvk-govt-5#comments</comments><guid isPermaLink="false">6d2438ff-916e-4478-ba06-e3077d0c51f9</guid><pubDate>Mon, 17 Aug 2026 08:01:58 +0000</pubDate><atom:updated>2026-08-17T08:01:58.806Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,AMMK,அமமுக,டிடிவி தினகரன்,tvk,TTTV Dhinakaran</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/bleo63zg/TTVDhinakaran001.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ டி.டி.வி.தினகரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ டி.டி.வி.தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/bleo63zg/TTVDhinakaran001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தவெக அரசின் இந்த 100 நாட்களில் நடைபெற்ற குழப்பங்களையும், குளறுபடிகளையும் அடுக்கும் நிலையில், ஏதேனும் மக்கள் நலனுக்கென ஆக்கப்பூர்வமான திட்டங்கள் ஏதேனும் கொண்டு வரப்பட்டதாக இதுவரை தெரியவில்லை.</strong></em> </p><p>அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">டி.டி.வி. தினகரன்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழ்நாட்டில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95">தவெக </a>ஆட்சியமைந்து இன்றோடு 100 நாட்கள் நிறைவடைந்துள்ளன. முதல் 100 நாட்களில் வாக்களித்த மக்கள் மனதில் நம்பிக்கையை விதைக்க வேண்டிய அரசு, ஏமாற்றத்தையும், அதிருப்தியையுமே விதைத்துள்ளது.</p><p>அரசு நிர்வாகத்தை முதல் 100 நாட்களில் முழுமையாக மதிப்பிட முடியாது என்றாலும், அந்த அரசு செல்லும் திசையை குறிப்பிட்ட நாட்களில் நிச்சயமாக கண்டறிய முடியும். இந்த 100 நாட்களில் மக்களின் அன்றாட பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டிய அரசு நிர்வாகம், தனக்கும் மக்கள் நலனுக்கும் எந்தவகையிலும் சம்பந்தமேயில்லாதைப் போல சமூகவலைத்தளத்தில் ரீல்ஸ் போடுவதையே பிரதான வேலையாக செய்துவந்துள்ளது.</p><h2><strong>அந்த வகையில் கடந்த 100 நாட்களில்...</strong></h2><p>* கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களால் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு. புதிதாக காவலர்களை நியமிக்காமல், இருக்கும் காவலர்களை வைத்தே புதிய அதிரடிப்படை என்ற வேடிக்கை அறிவிப்பு.</p><p>* பெண்களுக்கு எதிரான குற்றங்களில் அமைச்சர், ஆளும்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது குற்றச்சாட்டு எழுந்த பின்னும் எந்தவித விசாரணையும் இல்லை.</p><p>* பள்ளி, கல்லூரிகளில் தொடங்கி பட்டிதொட்டி எங்கும் பரவியிருக்கும் போதைப் பொருள் கலாச்சாரம். இதை குறித்து தகவல் தரும் மாணவர்கள் படுகொலை.</p><p>* போதைப்பொருள் விற்பனை தொடங்கி பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் வரை ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்கு தொடர்பு.</p><p>* தற்போதைய அமைச்சர் ஒருவர், தேர்தலுக்கு முன்பாக உடல்நலம் சரியில்லாத தனது குழந்தையை கிரிக்கெட் போட்டிக்கு அழைத்துச்சென்று வெள்ளை நிற பவுடரை தனது ATM கார்டு மூலம் உடைத்துத் தந்ததை அவரே THUG MOMENT என ரீலாக வெளியிட, அதுபோதைப்பொருளோ? என பலர் சந்தேகம் எழுப்பியும் இதுவரை எந்தவிசாரணையும், நடவடிக்கையும் இல்லை.</p><p>* விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்வதாக தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதி கொடுத்து விட்டு ஆட்சிக்கு வந்த பின்பு குளறுபடியோடு அறிவிக்கப்பட்ட தள்ளுபடி. இன்று வரை விவசாயிகள் போராடியும் எந்தப்பயனும் இல்லை.</p><p>* காவிரி நதிநீர், மேகதாது அணை மற்றும் குறுவை சாகுபடி விவகாரத்தில் தொடரும் அரசு நிர்வாகத்தின் மெத்தனப் போக்கு.</p><p>* மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் என்ற வாக்குறுதிக்கு மாறாக 2 மாதங்களுக்கு 200 யூனிட் இலவசம் என ஏமாற்று அறிவிப்பு.</p><p>* முதலமைச்சர் தொகுதியில் தொடங்கி, அனைத்து பகுதிகளிலும் அறிவிக்கப்படாத இரவுநேர மின்வெட்டு.</p><p>* தமிழகம் எங்கும் திடீரென உயர்த்தப்பட்ட மின்கட்டணம், மக்கள் போராட்டத்திற்குப் பின் மின் கணக்கீட்டில் குளறுபடி என்று திசை திருப்பினர். அதுவும் இன்றுவரை தீர்க்கமுடியவில்லை.</p><p>*  சென்னை மாநகராட்சியில், மக்கள் பிரதிநிதிகளிடம் ஆலோசிக்காமல் ஏதேச்சதிகாரத்தோடு உயர்த்தப்பட்ட சொத்துவரி, மக்களின் தொடர் கேள்விக்குப்பின் கைவிடப்பட்டது.</p><p>* அரசுப் பள்ளிகள், மருத்துவமனைகள், அம்மா உணவகங்கள் என அரசு நிர்வாகத்திற்குள் ஆளுங்கட்சியினரின் தலையீடு.</p><p>* உதவியாளர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் என தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு அரசு உயர் பதவி வழங்கி தன்னை நவீன கலிகுலா மன்னர் என நிரூபித்தார் முதலமைச்சர்  ஜோசப் விஜய் அவர்கள்.</p><p>* அரசு வழக்கறிஞர் நியமனத்தில் சொந்தக் கட்சியினரிடமே லஞ்சம் கேட்பதாக தவெக நிர்வாகிகள் புகார்.</p><p>* கடந்த திராவிட ஆட்சிகளில் அறிமுகப்படுத்தி செயல்படுத்திய திட்டங்களுக்கு வெற்றி என வெட்டியாக பெயர் சூட்டி ஸ்டிக்கர்</p><p>ஒட்டுதல்.</p><p>* சட்டமன்ற உறுப்பினர்கள் தொடங்கி அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சரின் அறைகள் வரை அதிகரித்திருக்கும் ரீல்ஸ் மோகம்.</p><p>* அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவுக்குள்ளாகவே எலிகள் சுற்றித்திரியும் அவல நிலை.</p><p>* அங்கன்வாடி மையங்களில் உணவருந்தும் குழந்தைகள் முதல், தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கும் உணவு வரை வழங்கப்படும் உணவின் தரம் கேள்விக்குறி.</p><p>* பழனி முருகன் திருக்கோயிலுக்குச் சொந்தமான 100 ஏக்கர் நிலம் தனி நபர் பெயரில் முறைகேடாக பத்திரப்பதிவு, அதனை தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலிக்குச் சொந்தமான நிலம் மோசடி பத்திரபதிவு என தினம்தோறும் வரும் நிலமோசடி புகார்கள்.</p><p>* மக்களுக்கும், மாநிலத்திற்கும் எந்தவகையிலும், துளியளவிலும் பயன்படாத நிதிநிலை அறிக்கை.</p><p>* விவசாயிகளின் உண்மையான வலியைக் கூட உணராமல் தயாரிக்கப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கை.</p><p>* கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியில் தலைமைச் செயலகத்தில் பல கோடி ரூபாய் செலவில் அறையை மாற்றும் முதலமைச்சர்.</p><p>* உண்மையான முதலீடுகளை கொண்டுவருவதிலும் வேலைவாய்ப்பை பெருக்குவதிலும் அக்கறையின்மை.</p><p>* தொகுதி மறுவரையறை தொடர்பாக எந்தவொரு அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடாத நிலையில் இந்த தமிழக அரசின் மீது மக்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தை மடைமாற்ற அவசியமற்ற தீர்மானம் நிறைவேற்றம்.</p><p>இப்படியாக தவெக அரசின் இந்த 100 நாட்களில் நடைபெற்ற குழப்பங்களையும், குளறுபடிகளையும் அடுக்கும் நிலையில், ஏதேனும் மக்கள் நலனுக்கென ஆக்கப்பூர்வமான திட்டங்கள் ஏதேனும் கொண்டு வரப்பட்டதாக இதுவரை தெரியவில்லை. நிர்வாகக் குழப்பம், திட்டமிடலின்மை, ரீல்ஸ் மற்றும் விளம்பர மோகம் மட்டுமே இந்த <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-video-released-100-day-administration-represents-peoples-conscience-for-an-era">100 நாட்கள்</a> தவெக ஆட்சியின் அடையாளங்களாக மாறியுள்ளன. முதல் 100 நாட்கள் ஆட்சியில் ஒட்டுமொத்த தமிழகத்தையும் தடுமாற வைத்திருக்கும் தவெக அரசு, இனிவரும் நாட்களிலாவது மக்கள் நலனுக்கான பாதையை தேர்ந்தெடுத்து பயணிக்க முன்வர வேண்டும் என இந்நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டுக்கு முழு தண்ணீரும் வழங்கப்படும்.. காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் உறுதியளித்த கர்நாடகா </title><link>https://www.maalaimalar.com/news/national/karnataka-to-release-cauvery-water-state-assures-12000-cusecs-per-day-to-tamil-nadu-in-supreme-court</link><comments>https://www.maalaimalar.com/news/national/karnataka-to-release-cauvery-water-state-assures-12000-cusecs-per-day-to-tamil-nadu-in-supreme-court#comments</comments><guid isPermaLink="false">dde0ca9e-4dca-4cfc-a7d1-d09d2c687431</guid><pubDate>Mon, 17 Aug 2026 07:42:31 +0000</pubDate><atom:updated>2026-08-17T07:42:31.300Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,Supreme Court,Tamil Nadu government,காவிரி நீர்,Cauvery water,உச்சநீதிமன்றம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/v9dxr7e7/tn-20.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/v9dxr7e7/tn-20.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டிய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/8000-cusecs-flow-in-hogenakkal-cauvery">காவிரி </a>நீரை கர்நாடகா திறந்துவிடாததை எதிர்த்து தமிழக அரசு, திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. </p><h2>தமிழ்நாடு தரப்பு </h2><p><a href="https://www.maalaimalar.com/topic/kaveri-river">காவிரி</a> ஒழுங்குமுறை குழு  மற்றும் மேலாண்மை ஆணையம் பரிந்துரைத்த அளவை விடக் கர்நாடகா மிகக் குறைந்த அளவே நீரைத் திறந்துவிட்டதாக மனுக்களில் தெரிவிகிக்கப்பட்டிருந்தன. </p><h2>கர்நாடகா தரப்பு</h2><p>இந்த சூழலில் இன்றைய விசாரணையில் கர்நாடகா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், தமிழகத்திற்கு நாள்தோறும் 12,000 கனஅடி வீதம் 15 நாட்களுக்குத் தண்ணீரை திறந்துவிட  காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவை கர்நாடக அரசு பின்பற்றும் என உறுதியளித்துள்ளார்.</p><p>அவர் கூறியதாவது, "கடுமையான சூழல் நிலவியபோதிலும், காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டபடி 12,000 கனஅடி தண்ணீரை தமிழகத்திற்குத் திறந்துவிடுவதை உறுதிசெய்ய முயன்றுள்ளோம்.</p><p>ஆரம்பத்தில் சில நாட்களில் திறந்துவிடப்பட்ட நீரின் அளவு 6,000 கனஅடியாக குறைந்திருந்தாலும், தட்டுப்பாட்டை சரிசெய்து வரும் நாட்களில் முழு அளவிலான தண்ணீரும் வழங்கப்படும்" எனத் தெரிவித்தார்.</p><h2>உத்தரவு</h2><p>இதைத்தொடர்ந்து நீர் திறப்பு நிலவரம் குறித்த முழுமையான அறிக்கையை தாக்கல் செய்ய கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>மேலும், இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 24 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.</p><h2>காவிரி நீர் திறப்பு நிலவரம் </h2><p>நேற்றைய நிலவரப்படி தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கான நீர் வரத்து 6500 கன அடியிலிருந்து 8000 கன அடியாக உயர்ந்துள்ளது.</p><p>சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 4385 கன அடியில் இருந்து 6,179 கன அடியாக அதிகரித்துள்ளது.</p><p>மேட்டூர் அணையின் தற்போதைய நீர்மட்டம் 81.31 அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 43.27 மில்லியன் கன அடியாக உள்ளது.</p><p>மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 6,179 கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில் குடிநீர் தேவைக்காக 2000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>அப்பாவை காணும்னு சொல்றாங்க... அவர் வந்தா பாதி பேர் இருக்க மாட்டீங்க!- ராமச்சந்திரன் பரபரப்பு பேச்சு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-minister-sengottaiyan-vs-kkssr-ramachandran-agruments</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-minister-sengottaiyan-vs-kkssr-ramachandran-agruments#comments</comments><guid isPermaLink="false">3e104e95-238d-48b7-b70c-e6fcc106943d</guid><pubDate>Mon, 17 Aug 2026 07:34:28 +0000</pubDate><atom:updated>2026-08-17T07:34:28.335Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,minister Sengottaiyan,அமைச்சர் செங்கோட்டையன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/vk35d3rd/KKSSR.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/vk35d3rd/KKSSR.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இந்த கோட்டையில் அமர்ந்த பிறகு அவர் உயிர் உள்ளவரை திமுக வெற்றி பெறவில்லை என்பதே வரலாறு என்றார்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> இன்று மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் பங்கேற்று பேசினார். அவரது பேச்சின் இறுதியில், அப்பாவை  காணும் என்று  சொல்கிறார்கள். அவர் இங்கு வரும்போது பாதி பேர் இங்கு இருக்க மாட்டார்கள். ஆனால் நாங்கள் இருப்போம் என்றார்.</p><p>இதற்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறும்போது, எங்கள் முதலமைச்சர் இருக்கும் வரை இனி தமிழ்நாட்டில் உங்களால் தலை தூக்க முடியாது. மீண்டும் வருவதற்கான வாய்ப்பே இல்லை என்றார்.</p><p>உடனே கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கூறுகையில், திமுக விழுந்துள்ளது. ஆனால் விழுந்த வேகத்தில் மீண்டும் எழும் அதுதான் திமுக என்றார்.</p><p>உடனே செங்கோட்டையன், எம்ஜிஆர் இருந்தவரை திமுக வெற்றி பெறவில்லை. </p><p>புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இந்த கோட்டையில் அமர்ந்த பிறகு அவர் உயிர் உள்ளவரை திமுக வெற்றி பெறவில்லை என்பதே வரலாறு என்றார் .</p><p>முன்னாள் அமைச்சர்  கே.என்.நேரு:- 1980ல் பாராளுமன்றத்தில் திமுக வெற்றி பெற்றது. 1986 இல் உள்ளாட்சி தேர்தலிலும் திமுக வெற்றி பெற்றது.</p><p>செங்கோட்டையன் :- 1980ல் நாடாளுமன்றம் சென்றீர்கள்.. ஆட்சியை கலைத்தீர்கள் ஆனாலும் மீண்டும் நிரந்தர முதலமைச்சர் என்ற வரலாற்றை படைத்தவர் எம்ஜிஆர். என்றார்.</p>]]></content:encoded></item><item><title>சட்டமன்ற கண்ணியம் குறித்து எதிர்க்கட்சித் தலைவருக்கு ஓபிஎஸ் கற்றுக்கொடுக்க வேண்டும்- அமைச்சர் ரமேஷ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-ramesh-says-ops-should-teach-opposition-leader-about-house-dignity</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-ramesh-says-ops-should-teach-opposition-leader-about-house-dignity#comments</comments><guid isPermaLink="false">131143eb-796e-4c95-a05e-f2dff7599e00</guid><pubDate>Mon, 17 Aug 2026 07:29:51 +0000</pubDate><atom:updated>2026-08-17T07:29:51.564Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>udhayanithi stalin,உதயநிதி ஸ்டாலின்,தமிழக சட்டசபை,O Paneerselvam,TN assembly,ஓபன்னீர்செல்வம்,அமைச்சர் ரமேஷ்,Minister Ramesh</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/gec5e66s/Ramesh.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Ramesh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/gec5e66s/Ramesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மக்கள் நல்வாழ்வுத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மீதான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.</p><p>அப்போது, திமுக எம்எல்ஏ கே.கே.எஸ்.எஸ்.ஆர் மற்றும் அமைச்சர் செங்கோட்டையன் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.</p><p>இதைதொடர்ந்து, சட்டமன்ற கண்ணியம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு ஓ.பன்னீர்செலவம் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் ரமேஷ் கூறினார்.</p><p>முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்திற்குள் வரும்போது எதிர்க்கட்சி தலைவர் அமர்ந்திருந்ததை சுட்டிக்காட்டி அமைச்சர் ரமேஷ் வலியுறுத்தினார்.</p><p>கே.என்.நேரு:</p><p>முன்னாள் முதல்வர் வரும்போது எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் எழுந்து நின்றதில்லை. அதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை.</p><p>எதிர்க்கட்சித் தலைவருக்கு சொல்லிக் கொடுங்கள் என அமைச்சர் ரமேஷ் கூறுவதை ஏற்க முடியாது.</p>]]></content:encoded></item></channel></rss>