<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 24 Jul 2026 14:48:49 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-24-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-24-july-2026#comments</comments><guid isPermaLink="false">9e297809-3778-431a-83e7-2d092abe8672</guid><pubDate>Fri, 24 Jul 2026 03:41:33 +0000</pubDate><atom:updated>2026-07-24T14:02:48.047Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/zz39nvcd/TodayLive0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Today Live News]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/zz39nvcd/TodayLive0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/sudden-landslide-in-himachal-13-dead-including-a-6-month-old-infant">இமாச்சலில் திடீர் நிலச்சரிவு - 6 மாதக்குழந்தை உட்பட 13 பேர் பரிதாப பலி!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/bangladesh-politics-shock-president-shahabuddin-resigns-amid-sheikh-hasina-return-row">வங்கதேச ஜனாதிபதி திடீர் ராஜினாமா.. பின்னணியில் ஷேக் ஹசீனா?</a></p><p>*ஏப்ரல் 2023இல் ஷஹாபுதீன் வங்கதேச ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  </p><p>*ஹசீனாவை மீண்டும் தொடர்பு கொள்ள முயற்சி மேற்கொண்டதால் அவர் மீதான அரசின் அதிருப்தி அதிகரித்தது.</p> <p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/christopher-nolans-the-odyssey-earns-over-rs-100-crore-at-box-office">ஒரே வாரத்தில் இந்தியாவில் 100 கோடி வசூலித்த ‘தி ஒடிசி'</a></p><p>* தமிழகத்தில் நோலனின் படங்களுக்கு எப்போதும் தனி இடமுண்டு. </p><p>* தமிழ்நாட்டில் இத்திரைப்படம் மிரட்டலான வரவேற்பைப் பெற்றுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/ashes-2027-list-of-venues-announced-southampton-to-host-fourth-test">இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மோதும் ஆஷஸ் தொடர் அட்டவணை அறிவிப்பு</a></p><p>* ஆஷஸ் டெஸ்ட் தொடருக்​கான அட்​ட​வணையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரி​யம் வெளி​யிட்டது. </p><p>* முதல் போட்டி​ அடுத்த ஆண்டு ஜூன் 18 முதல் 22 வரை நடக்கிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/sports/pm-modi-conveys-best-wishes-to-indian-contingent-participating-in-commonwealth-games-in-glasgow">காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து</a></p><p>* காமன்வெல்த் போட்டிகளில் 3 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர் .</p><p>* இந்தியா சார்பில் 126 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது. இதில் 78 பேர் வீரர்கள், 48 வீராங்கனைகள்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/central-government-seeks-time-until-tomorrow-to-deliberate-on-dharmendra-pradhans-resignation">தர்மேந்திர பிரதான் ராஜினாமா குறித்து ஆலோசனை செய்ய நாளைவரை அவகாசம் கோரிய மத்திய அரசு!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/a-bill-proposing-a-three-year-prison-sentence-for-disrespecting-the-vande-mataram-song-has-been-introduced-in-the-rajya-sabha">வந்தே மாதர பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் மசோதா மாநிலங்களவையில் அறிமுகம்!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/special-train-to-run-between-tambaram-and-tenkasi">பயணிகள் கவனத்திற்கு... தாம்பரம்-தென்காசி இடையே அதிவிரைவு சிறப்பு ரெயில் இயக்கம்</a></p><p>* வியாழன் மற்றும் சனிக்கிழமையில் வாரத்தில் 2 நாட்கள் இந்த சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. </p><p>* தென்காசியில் இருந்து வருகிற 31-ந்தேதி, ஆகஸ்ட் 2, 7, 9, 14,16 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. </p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/students-protest-condemning-irregularities-in-neet-exam">நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து மாணவர்கள் தொடர் போராட்டம்</a></p><p>* மாநிலக் கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். </p><p>* மெரினா கடற்கரையில் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணித்து வருகிறார்கள்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/cji-kant-no-plea-filed-on-cjp-protest-police-action">மாணவர்களுக்கு எதிரான போலீசார் நடவடிக்கை தொடர்பாக மனு தாக்கல் செய்யப்படவில்லை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி</a></p><p>* சமீபத்தில் எந்தவொரு ஆவணமும் தாக்கல் செய்யப்படாத நிலையில் இந்த விவகாரம் எங்கள் முன் குறிப்பிடப்பட்டது.</p><p>* நான் பதிவகத்தில் சரிபார்த்தேன். உச்ச நீதிமன்றத்தில் ஒரு பக்கத்தில் கூட மனு தாக்கல் செய்யப்பட்டதாக குறிப்பிடப்படவில்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/space-constraints-proposal-to-relocate-chennai-secretariat"> இட நெருக்கடி - தலைமை செயலகத்தை இடமாற்றம் செய்ய ஆலோசனை</a></p><p>* சட்டசபைக்கு வந்து செல்லும் எம்.எல்.ஏ.க்கள் அமரும் அறைகளும் சிறிய அறைகளாகவே உள்ளன.</p><p>* பட்டினப்பாக்கத்தில் உள்ள காலி இடத்தை தேர்வு செய்யலாமா? என்று ஆலோசிக்கப்பட்டது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/lok-sabha-adjourned-for-the-day-amid-opposition-protest-on-various-issues">எதிர்க்கட்சிகள் கடும் அமளி: மக்களவை நாள்முழுவதும் ஒத்திவைப்பு</a></p><p>* அவையின் செயல்பாடுக்கு இடையூறு விளைவிக்காதீர்கள் என சபாநாயகர் ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்தார்.</p><p>* சனி, ஞாயிறு என இரு நாள் விடுமுறைக்குப் பிறகு மக்களவை இனி திங்கள்கிழமை கூடுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/india-to-lead-the-series-tomorrow-second-t20-match">நாளை 2-வது டி20 போட்டி: ஜிம்பாப்வேக்கு எதிராக தொடரை வெல்லுமா இந்தியா?</a></p><p>* ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையில் இந்திய அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.</p><p>* டி20 தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/400-year-old-cannon-stolen-at-gunpoint-in-madhya-pradesh">மத்திய பிரதேசத்தில் 400 ஆண்டுகள் பழமையான பீரங்கி துப்பாக்கி முனையில் கொள்ளை</a></p><p>* பீரங்கியை ஏற்றி சென்ற லாரி ராஜஸ்தானுக்கு சென்றது கண்டறியப்பட்டுள்ளது.</p><p>* சந்தேகிக்கப்படும் இடங்களில் தேடுதல் வேட்டை தீவிரமாக நடக்கிறது. </p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-students-started-discussing-rahul-said-regarding-neet-exam-issue">நீட் தேர்வு பிரச்சனையில் ராகுல் கூறியதை மாணவர்கள் பேச தொடங்கி உள்ளனர் - மாணிக்கம் தாகூர்</a></p><p>* ராகுல் காந்தியை பொருத்தமட்டில், தமிழ்நாட்டுக்கு நீட் கிடையாது என்பதில் தெளிவாக இருக்கிறார். </p><p>* ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவர் ஆன பிறகு, மோடி அரசு வந்ததில் இருந்து 152 முறை பேப்பர் லீக் ஆகி இருக்கிறது.</p>  <p><a href="https://www.maalaimalar.com/sports/india-games-in-commenwealth-today">காமன்வெல்த் விளையாட்டு: இந்தியா இன்று பங்கேற்கும் போட்டிகள்</a></p><p>* இந்தியா சார்பில் 126 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது.</p><p>* இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா உள்பட 74 நாடுகளில் இருந்து 3 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர் </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/bengal-border-force-jawan-kills-2-colleagues">மேற்கு வங்காளத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் சுட்டுக்கொலை</a></p><p>* சிவம்குமார் மிஸ்ராவை எல்லை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.</p><p>* காயம் அடைந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் பிகாஸ் பிரம்மா சிகிச்சை பெற்று வருகிறார்.&nbsp;</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/prisoner-death-at-kilpauk-mental-hospital">கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் கைதி அடித்துக்கொலை</a></p><p>* மனநல காப்பகத்தில் அரவிந்தசாமி கைதிக்கும் ஜாகிருக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.</p><p>* தலை மற்றும் முகத்தில் பலத்த காயமடைந்த ஜாகிர் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். </p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-appears-in-court-after-one-month">தவெக அரசை கவிழ்க்க முயன்ற வழக்கு - நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி ஆஜர்</a></p><p>* சோதனை, விசாரணை என்ற பெயரில் எங்களை துன்புறுத்தக்கூடாது என்று போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்</p><p>* முன்ஜாமின் வழங்கப்பட்டும் இதுவரை மனுதாரர்கள் கீழ் கோர்ட்டில் சரணடைந்து முன்ஜாமின் பெறவில்லை. </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/flood-like-situation-worsens-in-gujarat-22000-relocated-1200-rescued-as">குஜராத்தை துவம்சம் செய்த இடைவிடாத கனமழை: 1200 பேர் மீட்பு, 22 ஆயிரம் பேர் இடம்பெயர்வு</a></p><p>* வால்சாட் மாவட்டத்தில் உள்ள உம்பேர்கான் தாலுகா இந்த கனமழையால் கடுமையாக பாதித்தது. இங்கு 36 மணி நேரத்தில் 1200 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.</p><p>* அகமதாபாத்தில் உள்ள 22 தாலுக்காவில் 12 மணி நேரத்தில் 200 மி.மீ.-க்கு அதிகமான மழை பதிவாகியுள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/wtc-final-2027-moved-to-the-oval">உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்: ஓவல் மைதானத்தில் இறுதிப்போட்டி</a></p><p>* கடந்த 2023-25 சீசனில் தென் ஆப்ரிக்கா அணி சாம்பியன் பட்டம் வென்றது.</p><p>* உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி நான்காவது முறையாக இங்கிலாந்தில் நடக்க உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tho-thirumavalavan-vck-protest-august-27-support-students">மாணவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் 27-ந்தேதி விசிக ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் அறிவிப்பு</a></p><p>* போராடிவரும் மாணவர்களின் கோரிக்கைகளான கல்வி மந்திரி தர்மேந்தர பிரதான் பதவி விலக வேண்டும். </p><p>* போராடிய மாணவர்கள் மீது வன்முறைத் தாக்குதலை நடத்தியவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/cjp-protest-wangchuk-shares-govt-assurance-no-cases-against-peaceful-july-20-protesters">ஜூலை 20-ந்தேதி போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்குகள் கிடையாது: மத்திய அரசின் உத்தரவாதத்தை பகிர்ந்த வாங்சுக்</a></p><p>* ஜூலை 20-ந்தேதி மாணவர்கள், இளைஞர்கள் நாடாளுமன்றம் நோக்கி முற்றுகை போராட்டம் பேரணி நடத்தினர்.</p><p>* நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்றால் போலீசார் தடியடி நடத்தினர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/rahul-urges-modi-remove-dharmendra-pradhan-first">வீடியோ வெளியிட்டு அவமதிப்பதா? - தர்மேந்திர பிரதானை முதலில் நீக்குங்கள்: மோடிக்கு ராகுல் வலியுறுத்தல்</a></p><p>* பிரதானை பதவியிலிருந்து நீக்குங்கள்.</p><p>* மாணவர்களை தாக்கியவர்களை தண்டியுங்கள்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-exam-paper-leak-issue-key-decision-to-be-taken-at-cabinet-meeting-pm-modi">நீடிக்கும் மாணவர்கள் போராட்டம்: இன்று அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் - பிரதமர் மோடி</a></p><p>* நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>* தேர்வு முறையை மாற்றியமைப்பது தொடர்பாக அமைச்சரவை  கூட்டத்தில் விவாதிக்கப்படும்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/annamalai-announce-new-partys-name-and-flag-next-month">புதிய கட்சியின் பெயர், கொடியை அடுத்த மாதம் அறிவிக்கிறார் அண்ணாமலை</a></p><p>* தூத்துக்குடியில் 2-வது மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது.</p><p>* தமிழகம் முழுவதும் ‘வீ த லீடர்ஸ்' குழுவினர் தொண்டர்களை சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறார்கள்.&nbsp;</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/modi-govt-treating-students-seeking-accountability-as-enemies-of-nation-sonia-gandhi">மோடி அரசு மாணவர்களை நாட்டின் எதிரிகளாக நடத்துகிறது: சோனியா காந்தி குற்றச்சாட்டு</a></p><p>* மாணவர்களின் கோரிக்கைகள் மிகத் தெளிவானவை மற்றும் நேரடியானவை.</p><p>* இந்திய அரசிடமிருந்து பொறுப்புக்கூறல் மற்றும் கல்விச் சீர்திருத்தத்தை கேட்டார்கள்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/us-military-says-its-launching-new-strikes-on-iran-as-clashes-escalate-over-shipping-routes">ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம்: புதிய தாக்குதல் நடத்திய அமெரிக்கா- ஹவுதிக்கு டிரம்ப் எச்சரிக்கை</a></p><p>* செங்கடலில் இரண்டு எண்ணெய் கப்பல்கள் மீது ஹவுதி தாக்குதல்</p><p>* ஈரான் மற்றும் ஹவுதிகள் ஆகிய இரு தரப்பினர் மீதும் கடுமையான ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்- டிரம்ப்</p>]]></content:encoded></item><item><title>பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 12 ராணுவ வீரர்கள் உட்பட 15 பேர் பலி!</title><link>https://www.maalaimalar.com/news/world/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-12-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-15-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF</link><comments>https://www.maalaimalar.com/news/world/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-12-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-15-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF#comments</comments><guid isPermaLink="false">e51ea3e9-59b7-41e1-b2d0-327bc7b178f6</guid><pubDate>Fri, 24 Jul 2026 14:48:12 +0000</pubDate><atom:updated>2026-07-24T14:48:12.840Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords></media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/o8j5o42h/New-Project-2026-07-24T201715.628.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 12 ராணுவ வீரர்கள் உட்பட 15 பேர் பலி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/o8j5o42h/New-Project-2026-07-24T201715.628.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வடமேற்கு பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள டாங்க் மாவட்டத்தில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 15 பேர் பலியாகியுள்ளனர். உயிரிழந்த 15 பேரில் 12 ராணுவ வீரர்கள், 2 போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஒரு வனத்துறை அரசு அதிகாரி அடங்குவர். </p><p>தீவிரவாதிகள், வெடிபொருட்கள் நிரம்பிய வாகனத்தை பாதுகாப்பு சோதனைச் சாவடியின் சுவரில் மோதி வெடிக்க செய்ததில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதற்குப் பதிலடியாக 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. </p><p>இந்த கொடூரத் தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் எனப்படும் உள்ளூர் தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. வாகனத்தில் நான்கு தற்கொலை தாக்குதல்வாதிகள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளது.</p><p>பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் சமீபகாலமாக தீவிரவாதத் தாக்குதல்கள் கணிசமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>நீதிமன்ற விசாரணைகளை சமூக வலைதளங்களில் பதிவேற்ற உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை! </title><link>https://www.maalaimalar.com/news/national/supreme-court-imposes-interim-stay-on-uploading-court-proceedings-to-social-media</link><comments>https://www.maalaimalar.com/news/national/supreme-court-imposes-interim-stay-on-uploading-court-proceedings-to-social-media#comments</comments><guid isPermaLink="false">497ae7fe-3965-4fb3-ab34-d19615ea893f</guid><pubDate>Fri, 24 Jul 2026 14:19:20 +0000</pubDate><atom:updated>2026-07-24T14:19:20.954Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,உச்ச நீதிமன்றம்,Court hearing,நீதிமன்ற விசாரணைகள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/hiw32guf/New-Project-2026-07-24T190605.266.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நீதிமன்ற விசாரணைகளை சமூக வலைதளங்களில் பதிவேற்ற உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை! ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/hiw32guf/New-Project-2026-07-24T190605.266.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீதிமன்ற விசாரணைகளின் ஒலி மற்றும் காணொலி பதிவுகளை உரிய அனுமதியின்றி சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதற்கும், பகிர்வதற்கும் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. </p><p>தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்ஷி, மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.</p><p>டிஜிட்டல் தளங்களில் நீதிமன்ற நடவடிக்கைகளின் ஒலி மற்றும் காணொளிப் பதிவுகளைப் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகளை விதிக்கக்கோரி, செய்தியாளர் ஹர்ஷிதா குரோவர் தாக்கல் செய்த பொது நல மனுவின் அடிப்படையில் இந்த உத்தரவு வந்துள்ளது.</p><p>இருப்பினும், செய்தி ஊடகங்கள் மற்றும் அறிக்கையிடல் பணிகளுக்கு இந்த உத்தரவால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளது.</p><h2>24 மணிநேரமும் இயங்கும் பொழுதுபோக்கு ஊடகமல்ல...</h2><p>“ஒரு இடைக்கால நடவடிக்கையாக, இந்த நீதிமன்றத்தின் பொதுச் செயலாளர் அல்லது அதிகார வரம்புக்குட்பட்ட உயர் நீதிமன்றங்களின் பதிவாளர் முன் அனுமதியின்றி, நீதித்துறை நடவடிக்கைகளின் ஒலி-ஒளிப் பதிவுகளை சமூக ஊடகங்கள் அல்லது பிற டிஜிட்டல் தளங்களில் பதிவிடுதல், பகிர்தல், மறுபதிவிடுதல், எடிட் செய்தல், மாற்றியமைப்பது, பணமாக்குதல் ஆகியவை செய்யப்படக்கூடாது என்று உத்தரவிடப்படுகிறது.</p><p>இது நீதிமன்றத்தின் 24 மணி நேர பொழுதுபோக்கு சேனலாக இருக்க முடியாது.” என அமர்வு தெரிவித்துள்ளது. </p><p>மேலும் இதுதொடர்பான வழிகாட்டுதல்கள் கொண்ட அறிக்கையை சமர்பிக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ள நீதிமன்றம்,</p><p>விசாரணை தொடர்பாக இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள், நீதித்துறையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும், நீதிமன்ற நடவடிக்கைகளைத் திரிக்கும் வகையிலும் பயன்படுத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>இமாச்சலில் திடீர் நிலச்சரிவு - 6 மாதக்குழந்தை உட்பட 13 பேர் பரிதாப பலி!</title><link>https://www.maalaimalar.com/news/national/sudden-landslide-in-himachal-13-dead-including-a-6-month-old-infant</link><comments>https://www.maalaimalar.com/news/national/sudden-landslide-in-himachal-13-dead-including-a-6-month-old-infant#comments</comments><guid isPermaLink="false">c618cadf-48d6-4f3e-90f6-8ff861812745</guid><pubDate>Fri, 24 Jul 2026 13:59:52 +0000</pubDate><atom:updated>2026-07-24T13:59:52.568Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>landslide,himachal,நிலச்சரிவு,இமாச்சல் பிரதேசம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/2149eufw/New-Project-2026-07-24T190834.113.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இமாச்சலில் திடீர் நிலச்சரிவு - 6 மாதக்குழந்தை உட்பட 13 பேர் பரிதாப பலி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/2149eufw/New-Project-2026-07-24T190834.113.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இமாச்சலப் பிரதேசத்தின் லாஹவுல்-ஸ்பிடி மாவட்டத்தில், இன்று நிகழ்ந்த பயங்கர நிலச்சரிவில் சிக்கி 6 மாதக்குழந்தை உட்பட 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. </p><p>உதய்பூர்-கில்லர் வழித்தடத்தில் உள்ள கஹு-து நாலா அருகே இந்த விபத்து நடந்துள்ளது.  இமாச்சலில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மலையின் ஒரு பகுதி திடீரெனச் சரிந்து, குலுவிலிருந்து பாங்கிக்குச் சென்று கொண்டிருந்த டாடா சுமோ வாகனம்மீது ராட்சதப் பாறைகள் விழுந்துள்ளன. </p><p>இதில் வாகனம் சம்பவ இடத்திலேயே பாறைகளுக்கு அடியில் புதைந்துள்ளது. தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை, மீட்புக் குழுவினர், காயமடைந்த ஒருவரைப் பத்திரமாக மீட்டனர். இருப்பினும் அவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். </p><p>இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தற்போது பெய்து வரும் கனமழையின் போது, ​​நிலச்சரிவு அபாயம் உள்ள சாலைகளில் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறும், மலைப்பகுதியில் பயணம் மேற்கொள்வதற்கு முன்பு அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் பார்மோர் சட்டமன்ற உறுப்பினர் ஜனக் ராஜ் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். </p><p>உயிரிழந்தவர்களுக்கு அம்மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு இரங்கல் தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குமாறும், காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யுமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அமைதிக்கு குந்தகம்.. இணைய சேவை இல்லாமலே இயங்கும் BitChat தகவல் பரிமாற்ற செயலிக்கு மத்திய அரசு தடை! </title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-protest-bitchat-ban-centre-blocks-bluetooth-app-amid-internet-shutdown-and-neet-row</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-protest-bitchat-ban-centre-blocks-bluetooth-app-amid-internet-shutdown-and-neet-row#comments</comments><guid isPermaLink="false">dcabe09b-fa94-4abd-b9f9-f0bc44ccd8c8</guid><pubDate>Fri, 24 Jul 2026 13:45:34 +0000</pubDate><atom:updated>2026-07-24T13:45:34.977Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Internet service shutdown,இணைய சேவை முடக்கம்,CJP Protest,சிஜேபி போராட்டம்,பிட்சாட்,bitchat</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/5zq7pgbb/tn-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ BitChat ]]></media:title><media:description type="html"><![CDATA[ BitChat ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/5zq7pgbb/tn-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தொழில்நுட்பம் (Technology)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் ஜூன் 20 முதல் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகிறது. நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதே அவர்களின் <a href="https://www.maalaimalar.com/news/national/delhi-protest-pellet-gun-allegations-youth-march-faces-harsh-police-crackdown-and-expired-tear-gas">பிரதான கோரிக்கை. </a></p><p>அவர்களுக்கு ஆதரவாக கடந்த ஜூன் 28 முதல் உண்ணாவிரதம் இருந்து வந்தார் கல்வியாளர் சோனம் வாங்சுக். </p><p>அவரின் உண்ணாவிரதத்தை 20வது நாளில் டெல்லி போலீசாரால் வலுக்கட்டாயமாக தூக்கிச்செல்லப்பட்டு மருத்துவமமனையில் அனுமதிக்கப்பட்டார்.  </p><p>அவருக்கு ஆதரவாகவும் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையிலும் நாடு முழுவதும் இருந்து பலர் குரல் கொடுத்தனர். </p><p>கடந்த ஜூலை 20 அன்று நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடரின் முதல் நாளில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்ற இளைஞர்களை காவல்துறை மற்றும் ஆர்ஏஎப் படையினர் கொடூரமான முறையில் லத்திகளால் தாக்கினர். </p><p>கண்ணீர் புகைகுண்டுகளை பிரயோகித்து மாணவர்களை கலைக்க முயன்றனர். மேலும் பெல்லட் துப்பாக்கிகள், ஆணிகள் பொருத்திய லத்திகள் பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. </p><p>சீருடையற்ற நபர்களும் கையில் லத்திகளுடன் மாணவர்களை தாக்கிய வீடியோக்களும் வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியது. </p><p>இளைஞர்கள் மீதான தாக்குதலுக்கு நாடு முழுவதிலும் பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்த தாக்குதலை அடுத்து போராட்டம் மேலும் வலுப்பெற்றது. நாடு முழுதும் டெல்லியில் போராடும் இளைஞர்களுக்காக போராட்டங்கள் நடத்தப்படுகிறது. அழுத்தம் அதிகரித்த நிலையில் மௌனம் கலைத்த பிரதமர் மோடி, நேற்று இரவு வீடியோ ஒன்றை வெளியிட்டார். </p> <p>அதில் நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும் வினாத்தாள் கசிவை தடுக்க சிறப்பு மசோதா இயற்றப்படும் என்றும் வாக்குறுதியளித்தார். </p><p>இதனைதொடர்ந்து மருத்துவமனையில் ஜேபி நட்டா, ஜிதேந்திர சிங் உள்ளிட்ட அமைச்சர்கள் சோனம் வாங்சுக்கை சென்று சந்தித்ததை அடுத்து அவர் தனது 26 நாட்கள் போராட்டத்தை நேற்றிரவு முடித்துக்கொண்டார்.</p><p>ஜூலை 20 அன்று பேரணி சென்ற மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படாது என மத்திய அரசு தனக்கு உறுதியளித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>இதனிடையே, தர்மேந்திர பிராதான் கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகும் வரை ஜந்தர் மந்தரில் தங்கள் போராட்டம் தொடரும் என சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே அறிவித்துள்ளார். இன்று ஜேபி நட்டாவை சந்தித்த சிஜேபி பிரதிநிதிகள் அதேயே வலுயுறுத்தினர்.</p> <h2>இணைய சேவை முடக்கம்</h2><p>மறுபுறம் போராட்டம் தீவிரமடைவதை தடுக்க, மத்திய அரசு இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. ஜந்தர் மந்தர் பகுதியை சுற்றிலும் இணைய சேவை முடிக்கப்பட்டுள்ளது. இதனால் சமூக ஊடங்களின் மூலம் போராட்டத்திற்கு விடுக்கப்படும் அழைப்புகள் மூலம் அங்கு மேலும் பலர் வருவதை தடுக்கும் நோக்கத்தில் இணைய சேவைகள் முடக்கப்பட்டது.</p><p>ஆனால் இளைஞர்கள் இந்த இணைய சேவை முடக்கத்தை சாமர்த்தியமாக பைபாஸ் செய்து இணையம் தேவைப்படாத செயலிகள் மூலமும் பிற வகையிலும் வெளியுலக தொடர்பை தக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p>அதிலும் குறிப்பாக கிட்ஹப் நிறுவனத்தின் பிட்சாட் செயலி இணைய தேவை இன்று முற்றிலும் புளூடூத் மூலம் இயங்கக்கூடுய ஒரு தகவல் பரிமாற்ற ஊடகம் ஆகும்.</p><p>இணையம் முற்றிலும் துண்டிக்கப்பட்ட சூழலிலும், புளூடூத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அருகிலுள்ள மொபைல் போன்களுக்கு இடையே நேரடியாக செய்திகளை பரிமாறிக் கொள்ள இது உதவுகிறது.</p><p>இந்த லூப் ஹோலை பலரும் பயன்படுத்தத்தொடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் நிலையில் விழித்துக்கொண்ட மத்திய அரசு அச்செயலிக்கு தடை விதித்துள்ளது.</p><p>பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலும், சட்டவிரோதக் கூட்டங்களை ஒருங்கிணைக்கவும் இச்செயலி பயன்படுத்தப்படும் ஆபத்து அதிகம் உள்ளதாக அந்த செயலியை வரையறுத்துள்ள மத்திய அரசு பிட் சாட்டை முடக்கக்கோரி கிட் ஹப் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.</p> <h2>பிட் சாட் - ஜாக் டோர்சி</h2><p>எக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான ஜாக் டோர்சியால் உருவாக்கப்பட்டதே இந்த 'பிட்சாட்' செயலியாகும்.</p><p>மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் 'இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம்'நேற்று இது தொடர்பான நோட்டீஸை அனுப்பியுள்ளது.</p><p>தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 மற்றும் ஐ.டி விதிகள் 2021ன் கீழ் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>பிட்சாட்டின் பிரதான Repository மற்றும் ஆண்ட்ராய்டு பதிப்புகளை 3 மணி நேரத்திற்குள் தடையுறுத்துமாறு அனுப்பப்பட்ட அந்த நோட்டீசின் ஸ்க்ரீன் ஷாட்களை ஜாக் டோர்சி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.</p><p>டெல்லியில் இணையம் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் பிட்சாட் செயலியைப் பயன்படுத்தினார்களா என்பது குறித்து டெல்லி காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.</p><p>இருப்பினும், போராட்டக்காரர்கள் இச்செயலியைத் தான் பயன்படுத்தினார்களா என்பதை அதிகாரிகள் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.</p>]]></content:encoded></item><item><title>‘மேகதாது விவகாரத்தில் மேலும் மேலும் தவறுகளை செய்கிறது தவெக அரசு’ - அன்புமணி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-government-is-making-repeated-errors-regarding-the-mekedatu-issue-anbumani</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-government-is-making-repeated-errors-regarding-the-mekedatu-issue-anbumani#comments</comments><guid isPermaLink="false">57dbfa34-b9e6-4abb-9fc0-897bda63166d</guid><pubDate>Fri, 24 Jul 2026 13:07:34 +0000</pubDate><atom:updated>2026-07-24T13:07:34.050Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,mekedatu dam,மேகதாது அணை,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,தவெக அரசு,tvk government</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/1pic2x9n/New-Project-2026-07-24T183532.644.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘மேகதாது விவகாரத்தில் மேலும் மேலும் தவறுகளை செய்கிறது தவெக அரசு’ - அன்புமணி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/1pic2x9n/New-Project-2026-07-24T183532.644.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் நடக்கவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பங்கேற்பது மிகவும் தவறான ஒரு நிலைப்பாடு என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;</p><p>“மேகதாது அணை குறித்து விவாதிக்க கர்நாடகத்தில் வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படவுள்ளதாகவும், அந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் கர்நாடகம் செல்லவிருப்பதாகவும்  வேளாண் துறை அமைச்சர் வினோத் தெரிவித்திருக்கிறார். மேகதாது சிக்கல் குறித்து பேச்சு நடத்த தமிழ்நாடு அரசு ஒப்புக்கொண்டிருப்பது  அதிர்ச்சியளிக்கிறது; இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.</p><p>கும்பகோணத்தில் இன்று மதியம் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,‘‘கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக் கட்ட தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது. காவிரி நமது உரிமை. அதை விட்டுக் கொடுக்க மாட்டோம், கர்நாடகாவில் ஆகஸ்ட் 3-ம் தேதி மேகேதாட்டு அணை தொடர்பாக நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில், முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு அம்மாநில முதலமைச்சர் டி.கே.சிவகுமாரிடம் பேசவுள்ளார்’’ என்று தெரிவித்தார்.</p><p>கர்நாடகத்தில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தை ஏற்பாடு செய்வது யார்? மத்திய அரசா, கர்நாடக அரசா? என்பது குறித்து எந்த விவரமும் தெரியவில்லை. </p><p>ஆனால், மேகதாது குறித்து பேச்சு நடத்த முதலமைச்சர் விஜய்க்கு  கர்நாடக அதிகாரிகள் மின்னஞ்சல் வாயிலாக அழைப்பு விடுத்திருக்கிறார்கள் என்று நேற்று ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் பார்த்தால் கர்நாடக அரசின் அழைப்பை ஏற்றுத் தான்  முதலமைச்சர் விஜய் அம்மாநிலத்திற்கு பேச்சு நடத்த செல்வதாகத் தோன்றுகிறது. இது மிகவும் தவறு.</p><p>பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும், மீண்டும் கூறி வருவது என்னவென்றால், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது என்பது தமிழ்நாட்டிற்கும், கர்நாடகத்திற்கும் இடையிலான பிரச்சினை அல்ல.... அது கர்நாடக அரசின் ஒரு சார்பான கோரிக்கை மட்டும் தான்.  அது குறித்து அந்த மாநில அரசுடன் நாம் எந்த பேச்சுக்களையும் நடத்தத் தேவையில்லை என்பது தான்.</p><p>மேகதாது அணை குறித்து கர்நாடக அரசுடன் நாம் பேச்சு நடத்தினால் அதை இரு தரப்பு பிரச்சினையாக ஏற்றுக்கொண்டு விட்டோம் என்று பொருளாகி விடும். அதன் பின்னர் மேகதாது அணையை கட்டக்கூடாது என்பது தீர்வாக இருக்காது. மாறாக, மேகதாது அணையின் கொள்ளளவு எவ்வளவு டி.எம்.சியாக இருக்க வேண்டும்?  </p><p>அந்த அணையிலிருந்து தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதற்கான நடைமுறைகள் என்னென்ன? என்பது தான் தீர்வாக இருக்கும். இது காவிரியில் தமிழ்நாட்டுக்கு  உரிய  உரிமைகளை மொத்தமாக கர்நாடகத்திடம் தாரைவார்ப்பதற்கு ஒப்பானது ஆகும்.</p><p>மேகதாது அணை குறித்து சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், இந்த சிக்கலுக்கு தீர்வு காண்பதற்காக புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற வாசகம் சேர்க்கப்பட்ட போதே  அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. </p><p>மேகதாது அணை விவகாரத்திற்கு தீர்வு காண  நடுவர் மன்றம் அமைக்கப் பட்டால் அது தமிழ்நாட்டிற்கு எந்த அளவுக்கு பின்னடைவை ஏற்படுத்துமோ, அதை விட மோசமான பின்னடைவை  மேகதாது விவகாரம் குறித்து கர்நாடக அரசுடன் முதலமைச்சர் விஜய் பேச்சு நடத்துவது ஏற்படுத்தி விடும்.</p><p>மேகதாது போன்ற சர்ச்சைக்குரிய விவகாரங்களில் தமிழ்நாடு அரசு தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. அதில் சம்பந்தப்பட்ட உழவர் அமைப்புகள், அரசியல் கட்சிகள்  போன்றவற்றுடன்  ஆலோசனை நடத்திய பிறகு தான் நிலைப்பாட்டை  தீர்மானிக்க வேண்டும். </p><p>மேகதாது சிக்கல் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று பாமக பல வாரங்களாக வலியுறுத்தி வரும் நிலையில், அதை ஏற்காத அரசு, கர்நாடக அரசுடன் பேசும் முடிவை தன்னிச்சையாக எடுத்திருப்பது இவ்விவகாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.</p><p>எனவே, மேகதாது அணை குறித்து பேச்சு நடத்துவதற்காக கர்நாடகத்திற்கு செல்லும் முடிவை முதலமைச்சர் விஜய் கைவிட வேண்டும். மாறாக, சட்டப் போராட்டங்களின் மூலம் மேகதாது அணை கட்டுவதற்கான சதித் திட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இதுவரை, கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்காதது குறித்தும், மேகதாது விவகாரம் தொடர்பாகவும் முதலமைச்சர் விஜய் வாய் திறவாதது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>VIDEO: ஜூலை 20 தாக்குதல்.. பெல்லட் துப்பாக்கியால் கண் பார்வை இழந்த இளைஞரை அழைத்துவந்து ராகுல் பேட்டி  </title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-protest-pellet-gun-row-youth-allege-brutal-police-action-as-government-denies-use</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-protest-pellet-gun-row-youth-allege-brutal-police-action-as-government-denies-use#comments</comments><guid isPermaLink="false">5e76b6b3-d507-456d-beba-23976ecdc029</guid><pubDate>Fri, 24 Jul 2026 13:01:23 +0000</pubDate><atom:updated>2026-07-24T13:01:23.095Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,question paper leak,வினாத்தாள் கசிவு,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/0mv4303j/tn-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராகுல், சாஹில் ]]></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல், சாஹில் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/0mv4303j/tn-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜூலை 20 அன்று சிஜேபி தலமையில் இளைஞர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்றபோது டெல்லி காவல்துறை மற்றும் ரேபிட் ஆக்ஷன் போர்ஸ் உள்ளிட்ட மத்திய படையினர் கொடூராமான முறையில் தாக்குதல் நடத்தினர். </p><p>அமைதியான முறையில் முன்னேறிச் சென்ற இளைஞர்களை தடிகளால் தாக்கியும், கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும் கலைக்க முயன்றனர். சீருடையற்ற நபர்களும் கைகளில் லத்தியுடன் இளைஞர்கள் மற்றும் பெண்களை தாக்கிய காணொளிகளும் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. </p><p>காலாவதியான கண்ணீர் புகைகுண்டுகள், ஆணிகள் பொருத்திய லத்திகள், மின்சார அதிர்ச்சி தரும் லத்திகள், பெல்லட் துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றை இளைஞர்கள் மீது பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. </p><p>இவற்றில் குறிப்பாக சர்ச்சைக்குரிய <a href="https://www.maalaimalar.com/news/national/delhi-protest-pellet-gun-allegations-youth-march-faces-harsh-police-crackdown-and-expired-tear-gas">பெல்லட் துப்பாக்கிகள் </a>பயன்படுத்தப்பட்டதற்காக ஆதாரமாக சிகிச்சை பெற்று வரும் காயமடைந்தவர்களின் மருத்துவ அறிக்கைகளும் புகைப்படங்களும் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>ஊடகவியலாளர் ஒருவரும் பெல்லட் துப்பாக்கியால் சுடப்படும்போது உடலில் ஏற்படும் புள்ளி புள்ளியான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற புகைடபடங்களுடன் ஊடக அறிக்கைகள் வெளியாகின. </p><p>ஆனால் பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்படவில்லை என டெல்லி காவல்துறையும், அரசின் அதிகாரப்பூர்வ உண்மைச் சரிபார்ப்பகமான PIB-யும் மறுத்துள்ளன.</p> <h2>பெல்லட் துப்பாக்கிகள்</h2><p>உலோகம், ரப்பர் அல்லது ஈயத்தால் செய்ப்பட்ட சிறிய குண்டுகள் Pellets எனப்படுகின்றன. ஒருமுறை சுட்டால் பல சிறிய குண்டுகள் ஒரே நேரத்தில் பாயும்.</p><p>இது உடலில் புள்ளி புள்ளியான காயங்களை ஏற்படுத்தும்.</p><p>கூட்டத்தைக் கலைக்கவும், கலவரங்களைக் கட்டுப்படுத்தவும் இவை குறைந்த ஆபத்துள்ள ஆயுதங்களாக பயன்படுத்தப்படுகின்றன.</p><p>ஆனால் சில நேரங்களில் இந்த குண்டுகள் கண் பார்வை மற்றும் கேட்கும் திறனை பறிக்கக்கூடியவை. பெல்லட் குண்டுகள் உடலின் முக்கிய பாகங்களில் பட்டால் கடுமையான காயங்கள் மற்றும் சில சமயங்களில் உயிரிழப்பும் கூட ஏற்படக்கூடும்.</p><p>இதன் காரணமாகவே பெல்லட் துப்பாக்கிகளின் பயன்பாட்டிற்கு மனித உரிமைகள் அமைப்புகள் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.</p><figure><img alt="ராகுல், சாஹில் " src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/pixk3pqi/tn-4.jpg" /><figcaption>ராகுல், சாஹில் </figcaption></figure><h2>ராகுல் காந்தி பேட்டி</h2><p>இந்த சூழலில் பெல்லட் துப்பாக்கியால் காயமுற்று சிகிச்சை பெற்ற சாஹில் என்ற 19 வயது மாணவரை உடன்வைத்துக்கொண்டு மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.</p><p>முன்னதாக இளைஞர்கள் மீதான தாக்குதல், தேர்வு முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை நாள் முழுவதும் முடங்கிய நிலையில் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து புதிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.</p><p>முகத்தில் உடலிலும் முகத்தில் கண்களின் அருகேயும் பெல்லெட் குண்டு தழும்புகள் கொண்ட அம்மாணவரை அருகில் வைத்துக்கொண்டு ராகுல் காந்தி செய்தியளர்களிடம் பேசுகையில், இந்த சகோதரர் (மாணவர்) கையில் தேசியக்கொடியை ஏந்தி அமைதியான முறையில் போராடிக்கொண்டிருந்தபோது பெல்லட் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | LoP, Lok Sabha, Rahul Gandhi brings before the media a man he claims suffered pellet gun injuries during students&#39; protest<br><br>He says, &quot;I want to explain that my brother standing here was injured by a pellet gun while he was peacefully protesting, holding the Tricolour.… <a href="https://t.co/TCQJ4OZJcu">pic.twitter.com/TCQJ4OZJcu</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2080591144971297051?ref_src=twsrc%5Etfw">July 24, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><p>இதனால் அவரின் ஒருபக்க கண் பார்வை பறிபோயுள்ளது. அரசு பெல்லட் துப்பாக்கிகளை பயன்படுத்தவே இல்லை என கூறுகிறது. அப்படி சொன்னார்கள் தானே, அப்போது இங்கே பாருங்கள், இது என்ன, இவரின் கண் பாதிக்கப்பட்டுள்ளது. தனது பார்வையை இழந்துள்ளார்" என மாணவரின் முகத்தை சுட்டிக்காட்டி தெரிவித்தார்.</p><p>மேலும், "அரசாங்கம், தேசத்தின் எதிர்காலத்தின் மீது தாக்குதல் நடத்துகிறது. இவர் (மாணவர்), கடினமாக படித்து போலீஸ் பணி தேர்வு எழுதியுள்ளார். ஆனால் ஒரு நாள் அவரிடம், அதன் வினாத்தாள் கசிந்துவிட்டதாக சொல்லப்பட்டது. நாட்டின் லட்சக்கணக்கான மாணவர்களுக்கும் இதே நிலைமை தான். அவர்களின் பெற்றோரின் கடின உழைப்பு அனைத்தும் வீணடிக்கப்பட்டுள்ளது.</p><p>அவர்களிடம் மூன்றே மூன்று கோரிக்கைகள் தான் உள்ளன. ஒன்று, யாரால் இவையெல்லாம் நிகழ்ந்ததோ அந்த கல்வி அமைச்சர் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும். இரண்டாவது, நமது எதிர்காலத்தின் மீது லத்திகளையும், பெல்லட் துப்பாக்கிகளையும் பயன்படுத்திவர்கள் நீதியின்முன் நிறுத்தப்பட வேண்டும், மூன்றாவது, இதற்கெல்லாம் மூலகர்த்தாவான நரேந்திர மோடி, இளைஞர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்." என வலியுறுத்தியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஜந்தர் மந்தர் போராட்டம்: டெல்லி காவல்துறை தடியடிக்கு எதிரான மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/jantar-mantar-protest-supreme-court-agrees-to-hear-plea-against-delhi-police-lathi-charge</link><comments>https://www.maalaimalar.com/news/national/jantar-mantar-protest-supreme-court-agrees-to-hear-plea-against-delhi-police-lathi-charge#comments</comments><guid isPermaLink="false">dc07442f-ddc2-461a-b650-32bafad6faa6</guid><pubDate>Fri, 24 Jul 2026 12:51:56 +0000</pubDate><atom:updated>2026-07-24T12:51:56.804Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,உச்ச நீதிமன்றம்,Jantar Mantar,டெல்லி காவல்துறை,ஜந்தர் மந்தர்,police excesses</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/si3yk8sf/New-Project-2026-07-24T182055.533.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜந்தர் மந்தர் போராட்டம்: டெல்லி காவல்துறை தடியடிக்கு எதிரான மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/si3yk8sf/New-Project-2026-07-24T182055.533.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி போராட்டத்தில் மாணவர்கள்மீது கண்மூடித்தனமான தடியடி தாக்குதல் நடத்திய காவல்துறைக்கு எதிரான மனுவை திங்கள்கிழமையன்று (ஜூலை.27) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. </p><p>நீதிமன்றத்தில், “மாணவர்கள் போராட்டங்கள் தொடர்பாக நாங்கள் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளோம். அதற்கான டைரி எண் (தற்காலிக பதிவு எண். அதாவது மனு பெறப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ சான்று) உருவாக்கப்பட்டுவிட்டது. </p><p>இதில் அவசரம் உள்ளது. மாணவர்களுக்கு எதிராகக் காவல்துறையினர் அளவுக்கு அதிகமாகத் தடியடி நடத்தி அத்துமீறி வருகிறார்கள். </p><p>இதற்கு ஏதாவது செய்தாக வேண்டும். நீதிமன்றம்தான் இதற்கு இடையில் நின்றுகொண்டிருக்கிறது.” என மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் தெரிவித்தார். </p><p>இதனைத்தொடர்ந்து தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜெயமால்ய பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள சம்மதித்துள்ளது.</p><h2>போராட்டமும், போலீசாரின் அராஜகப் போக்கும்</h2><p>நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூன்.20 முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது. </p><p>போராட்டத்தின் ஒருபகுதியாக ஜூலை 20 அன்று நாடாளுமன்றத்தை நோக்கி "சன்சத் சலோ" பேரணி செல்ல திட்டமிடப்பட்டது. பேரணிக்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்று டெல்லி காவல்துறை எச்சரித்தது. இதனைத் தொடர்ந்தும் போராட்டக்காரர்கள் பேரணியில் ஈடுபட்டனர். </p><p>இதனால் போராட்டக்காரர்கள்மீது போலீசார் தடியடி நடத்தினர். மேலும் அவர்களை தடுக்க கண்ணீர் புகைக் குண்டுகள், பெல்லட் துப்பாக்கிகள் போன்றவற்றை பயன்படுத்தியுள்ளனர். இதனால் 20க்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>குறிப்பாக பெல்லட் துப்பாக்கியால் இளைஞர் ஒருவருக்கு கண்பார்வையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே போலீசார் தாக்குதல் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சீற்றத்தை தூண்டின.</p><p>பெண்கள்மீதும் சராமாரி தாக்குதல், அவர்களை தவறான இடங்களில் அடித்தல், நேம் பேட்ச் அணியாத காவலர்கள், குறிப்பாக சீருடை அணியாத காவலர்கள் என பல்வேறு சர்ச்சைகள் டெல்லி காவல்துறையை சூழ்ந்தது.</p><h2>நீதிமன்றத்தின் முந்தைய நிலைப்பாடு</h2><p>இச்சம்பவம் தொடர்பாக முதலில் அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் கோரப்பட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் தலையிட தங்களுக்கு விருப்பம் இல்லை, நேரம் இல்லை என உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவிற்கு நாடு முழுவதும் பெரும் கண்டனங்கள் எழு, தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் ராஜேஷ்  லக்கானி, சிவஞானத்திற்கு புதிய பொறுப்பு வழங்கியது தமிழ்நாடு அரசு !</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-tamil-nadu-government-has-assigned-new-responsibilities-to-senior-ias-officers-rajesh-lakhoni-and-sivagnanam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-tamil-nadu-government-has-assigned-new-responsibilities-to-senior-ias-officers-rajesh-lakhoni-and-sivagnanam#comments</comments><guid isPermaLink="false">695046cb-70e3-4bfc-9142-079d657e0d79</guid><pubDate>Fri, 24 Jul 2026 12:23:30 +0000</pubDate><atom:updated>2026-07-24T12:23:30.611Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,Government of Tamil Nadu,IAS officers,ஐஏஎஸ் அதிகாரிகள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/nqeydifq/New-Project-2026-07-24T175312.615.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் ராஜேஷ்  லக்கானி, சிவஞானத்திற்கு புதிய பொறுப்பு வழங்கியது தமிழ்நாடு அரசு !]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/nqeydifq/New-Project-2026-07-24T175312.615.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் தலைமை தேர்தல் அதிகாரிகளாக பணியாற்றி வந்த ராஜேஷ் லக்கானி மற்றும் சிவஞானம் ஆகியோருக்கு புதிய பொறுப்புகளை வழங்க தலைமைச் செயலாளர் சாய்குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். </p><p>அதன்படி தமிழ்நாடு நில நிர்வாக ஆணையராக கஜலக்ஷ்மிக்கு பதிலாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராஜேஷ் லக்கானி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசுப் பணியில் இருந்து திரும்பிய நிலையில் அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. </p><p>மேலும் இப்பணி தலைமைச் செயலாளர் பணிக்கு ஈடான பொறுப்பும், அந்தஸ்தும் உடையது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையராக சிவஞானம் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>வங்கதேச ஜனாதிபதி திடீர் ராஜினாமா.. பின்னணியில் ஷேக் ஹசீனா? </title><link>https://www.maalaimalar.com/news/world/bangladesh-politics-shock-president-shahabuddin-resigns-amid-sheikh-hasina-return-row</link><comments>https://www.maalaimalar.com/news/world/bangladesh-politics-shock-president-shahabuddin-resigns-amid-sheikh-hasina-return-row#comments</comments><guid isPermaLink="false">29852e66-6057-4ead-9800-15d0c1f89126</guid><pubDate>Fri, 24 Jul 2026 12:05:27 +0000</pubDate><atom:updated>2026-07-24T12:05:27.933Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Bangladesh,வங்கதேசம்,ஜனாதிபதி,Sheikh Hasina,President,ஷேக் ஹசீனா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/xycq5nj8/bangladesh.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முகமது ஷஹாபுதின் ]]></media:title><media:description type="html"><![CDATA[ முகமது ஷஹாபுதின் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/xycq5nj8/bangladesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வங்கதேச ஜனாதிபதி முகமது ஷஹாபுதின் தனது பதவியை இன்று அத்திரைடியாக ராஜினாமா செய்துள்ளார்.  </p><p>ஏப்ரல் 2023இல் ஷஹாபுதீன் வங்கதேச ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அங்கு ஷேக் ஹசீனாவின் ஆட்சி நடந்து வந்தது. </p><h2>மாணவர்கள் போராட்டம்  </h2><p>ஆகஸ்ட் 2024 இல் மாணவர்கள் போராட்டத்தால் ஆட்சிக் கட்டிலில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட ஷேக் ஹசீனாவுடன் ஷஹாபுதீனுக்கு இருந்த நெருக்கம் காரணமாக அதன் பின் வந்த தற்காலிக பிரதமர் முகமது யூனுஸ் அரசுக்கும், கடந்த ஆண்டு தேர்தலில் வென்று ஆட்சி அமைத்த தாரிக் ரஹ்மான் அரசுக்கும் பிணக்கு இருந்து வந்தது. </p><p>இந்நிலையில் தனது 5 ஆண்டு பதவிக்காலம் முடிவடையும் முன்னரே ஷஹாபுதின் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளது விவாதப்பொருளாகி வருகிறது. தாரிக் ரஹ்மான் அரசின் அழுத்தத்தின் பேரிலேயே அவர் ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. </p><p>குறிப்பாக 2024 போராட்டங்களின்போது மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்ட விவகாரத்தில் ஷேக் ஹசீனாவுக்கு அந்நாட்டு  போர் குற்ற தீர்பாயம் மரண தண்டனை விதித்திருந்தது. </p><p>2024 ஆகஸ்டில் இந்தியா தப்பி வந்த ஷேக் ஹசீனா தற்போதுவரை மோடி அரசின் அடைக்கலத்தில் இருந்து வருகிறார். </p> <h2>ஷேக் ஹசீனா மீள்வருகை</h2><p>அவரை நாடுகடத்த வங்கதேச அரசு தொடர்ந்து இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. அவருக்கு பிடிவாரண்ட்டும் போர் குற்ற தீர்பாயத்தால் பிறப்பிக்கப்பட்டது.</p><p>ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின்படி, அண்மையில்<a href="https://www.maalaimalar.com/news/world/may-arrest-or-kill-me-sheikh-hasina-says-she-will-return-to-bangladesh-by-december"> ஷேக் ஹசீனா</a> அளித்த பேட்டியில், வரும் டிசம்பரில் தான் வங்கதேசம் திரும்பி சரணடைய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார் என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஷஹாபுத்தீனின் ராஜினாமா வந்துள்ளது.</p> <h2>ஷஹாபுதின் சர்ச்சை</h2><p>அண்மையில் அவர் ஹசீனாவை மீண்டும் தொடர்பு கொள்ள முயற்சி மேற்கொண்டதால் அவர் மீதான அரசின் அதிருப்தி அதிகரித்துள்ளதாக வங்கதேச ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன.</p><p>அவருக்கு பதிலாக இடைக்கால ஜனாதிபதியாக பாராளுமன்ற சபாநாயகர் ஹபீஸ் உத்தின் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>ஷஹாபுதின், 1971 வங்கதேச சுதந்திர போரில் பங்கேற்றவர் ஆவார். முன்னதாக நீதிபதியவனும் இருந்துள்ளார். முகமது யூனுஸ் அரசால் ஓரங்கட்டப்பட்ட ஷஹாபுதின் கடந்த ஆண்டு தேர்தல் நடைபெற்றபோதே ராஜினாமா செய்ய திட்டமிட்டுருந்ததாக கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>ரூ.1 கோடி அபராதம், 10 ஆண்டுகள் சிறை: வினாத்தாள் கசிவுகளுக்கு தண்டனையை கடுமையாக்கும் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/rs-1-crore-fine-10-years-in-prison-union-cabinet-approves-bill-to-toughen-penalties-for-question-paper-leaks</link><comments>https://www.maalaimalar.com/news/national/rs-1-crore-fine-10-years-in-prison-union-cabinet-approves-bill-to-toughen-penalties-for-question-paper-leaks#comments</comments><guid isPermaLink="false">da93b70b-4f95-43ba-a5c6-d2473e7196a1</guid><pubDate>Fri, 24 Jul 2026 11:59:06 +0000</pubDate><atom:updated>2026-07-24T11:59:06.821Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Union Cabinet,மத்திய அமைச்சரவை,paper leak cases,வினாத்தாள் கசிவுகள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/p3bweqr4/New-Project-2026-07-24T172632.601.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரூ.1 கோடி அபராதம், 10 ஆண்டுகள் சிறை: வினாத்தாள் கசிவுகளுக்கு தண்டனையை கடுமையாக்கும் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/p3bweqr4/New-Project-2026-07-24T172632.601.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வினாத்தாள் கசிவுகளுக்கு கடுமையான தண்டனைகளை உறுதிசெய்யும் வரைவு மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. </p><p>மத்திய கல்வி அமைச்சர் பிரதானின் பதவி விலகல், தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்றல், கல்வித்துறையில் சீர்திருத்தங்கள், நீட்-யுஜி தேர்வால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>வினாத்தாள் கசிவு உள்ளிட்ட திட்டமிட்ட தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைதண்டனை, ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்க மசோதா வழிவகை செய்கிறது. </p><p>வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்குகளை மிக விரைவாக விசாரித்து, குற்றவாளிகளுக்கு உடனுக்குடன் தண்டனை வழங்குவதை உறுதி செய்ய பிரத்யேக விரைவு நீதிமன்றங்கள் அமைக்கவும் மசோதாவில் விதிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. </p><p>மசோதா திங்கள்கிழமை (ஜூலை.27) நாடாளுமன்ற இரு அவைகளிலும் தாக்கலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>அதிகரிக்கும் சாலை விபத்துகள்: தமிழ்நாடு முதலிடம்</title><link>https://www.maalaimalar.com/news/national/india-saw-513-lakh-road-accidents-in-2025-with-21-deaths-every-hour-nitin-gadkari-tells-parliament</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-saw-513-lakh-road-accidents-in-2025-with-21-deaths-every-hour-nitin-gadkari-tells-parliament#comments</comments><guid isPermaLink="false">f34b9ea1-e71d-4fbe-946a-436b8e58a4a2</guid><pubDate>Fri, 24 Jul 2026 11:53:51 +0000</pubDate><atom:updated>2026-07-24T11:53:51.415Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நாடாளுமன்றம்,road accident,parliment,சாலை விபத்துகள்,Nitin gadkari,நிதின் கட்கரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/s7c86dxj/accident.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ accident]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/s7c86dxj/accident.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடாளுமன்றத்தின் மக்களவையில் சாலை விபத்துகள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்கரி எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில் அவர் கூறியதாவது:</p><p>இந்தியாவில் 2025-ம் ஆண்டு நிகழ்ந்த 5,13,563 சாலை விபத்துகளில் 1,83,382 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>இது 2024-ம் ஆண்டில் பதிவான 1,77,175 மரணங்களுடன் ஒப்பிடுகையில் 3.5 சதவீதம் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது. </p><p>மொத்த விபத்துகளின் எண்ணிக்கை 5.3 சதவீதம் உயர்ந்து 5,13,563 ஆக பதிவாகியுள்ளது.</p><p>நாட்டில் சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு 59 சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. அதில் 21 பேர் உயிரிழக்கின்றனர்.</p><p>தினமும் 502 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர்.</p><p>சாலை விபத்து மரணங்களில் உத்தர பிரதேசம் முதலிடத்திலும், தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும் உள்ளன.</p><p>உத்தர பிரதேசத்தில் சாலை விபத்து மரணங்கள் கடுமையாக உயர்ந்துள்ளன. அங்கு கடந்த ஆண்டு 27,550 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்தனர். 2024-ம் ஆண்டு 24,118-ல் இருந்து 27,550 ஆக அதிகரித்துள்ளது.</p><p>தமிழ்நாட்டில் சாலை விபத்துகளில் 18,505 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டிலேயே அதிக சாலை விபத்துகள் நடைபெறும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. 2025-ல் தமிழ்நாட்டில் 71,387 சாலை விபத்துகள் பதிவாகி உள்ளன.</p><p>பஞ்சாபில் குறைந்தபட்சமாக 3,062 பேர் சாலை விபத்துகளில் இறந்துள்ளனர். பஞ்சாபில் சாலை விபத்து மரணங்கள் 4,759-லிருந்து 3,062 ஆக கணிசமாகக் குறைந்துள்ளன.</p><p>பீகார், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களிலும் சாலை விபத்து மரணங்கள் உயர்ந்துள்ளன. அதேவேளையில், சத்தீஸ்கர், கர்நாடகா, தெலுங்கானா, டெல்லி ஆகிய மாநிலங்களிலும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை சரிவைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என எச்சரித்த டெல்லி பல்கலைக்கழகம் - பொங்கிய ராகுல் 
</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-protest-crackdown-delhi-university-warns-students-against-joining-jantar-mantar-agitation</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-protest-crackdown-delhi-university-warns-students-against-joining-jantar-mantar-agitation#comments</comments><guid isPermaLink="false">f5858d41-dc18-4ca6-b85a-4636a420e763</guid><pubDate>Fri, 24 Jul 2026 11:22:22 +0000</pubDate><atom:updated>2026-07-24T11:22:22.886Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,டெல்லி பல்கலைக்கழகம்,delhi university,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/h8pnsylw/tn.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராகுல் ]]></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/h8pnsylw/tn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூன் 20 முதல் <a href="https://www.maalaimalar.com/news/national/central-government-seeks-time-until-tomorrow-to-deliberate-on-dharmendra-pradhans-resignation">சிஜேபி </a>தலைமையில் போராட்டம் நடந்து வருகிறது. கடந்த ஜூலை 20 அன்று நாடாளுமன்றம் நோக்கி போராட்டக்காரர்கள் நடத்திய பேரணியை போலீசார் மற்றும் மத்திய படையினர் தடியடி நடத்தினர்.</p><p>கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர். மேலும் பெல்லட் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆபத்தான ஆயுதங்களையும் பயன்படுத்தியதற்கான ஆதாரமாக காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களின் மருத்துவ அறிக்கைகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. சுமார் 60 பேர் இதில் காயமடைந்தனர். </p><p>இதனிடையே சோனம் வாங்சுக் தனது 26 உண்ணாவிரதத்தை நேற்று இரவு முடித்துக்கொண்டபோதும், முறைகேடுகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும், சிறப்பு மசோதா நிறைவேற்றப்படும் என <a href="https://www.maalaimalar.com/news/national/change-of-higher-and-school-education-secretaries-central-government-action-after-student-protests">பிரதமர் மோடி</a> வீடியோ மூலம் அறிவித்தும், தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என சிஜேபி தலைவர் அபிஜித் தீப்கே அறிவித்துள்ளார். </p> <h2>டெல்லி பல்கலைக்கழகம் சுற்றறிக்கை</h2><p>இந்த சூழலில் டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்து வரும் போராட்டத்தில் பங்கேற்பதைத் தவிர்க்குமாறு டெல்லி பல்கலைக்கழகம் தனது மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>அந்த சுற்றறிக்கையில், "உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களின்படி ஜந்தர் மந்தர் போராட்டங்களில் பங்கேற்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மீறி சட்டவிரோதக் கூட்டங்களில் பங்கேற்கும் மாணவர்கள் மீது நேரடியாக சட்ட நடவடிக்கை பாயும்.</p><p>அப்படி நடந்தால் மாணவர்களின் கல்வி, மற்றும் எதிர்கால வேலைவாய்ப்பு பாதிக்கப்படும்" என நிர்வாகம் எச்சரித்துள்ளது.</p><p>மேலும், "மாணவர்களை உணர்ச்சிவசப்படுத்தவும் பதற்றத்தை அதிகரிக்கவும் இணையத்தில் போலியான வீடியோக்களும் செய்திகளும் பரப்பப்படுகின்றன. அவற்றை நம்பவோ அல்லது பகிரவோ வேண்டாம்" என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>ஜனநாயக ரீதியில் போராடும் மாணவர்களின் குரலை ஒடுக்க நினைப்பதாக டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்தச் சுற்றறிக்கைக்கு மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடையே பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.</p> <h2>ராகுல் காந்தி ஆவேசம்</h2><p>டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்தச் சுற்றறிக்கைக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>அவரது பதிவில், "தங்களின் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தும் மாணவர்களை அச்சுறுத்தவும் மிரட்டவும் உங்களுக்கு எவ்வளவு தைரியம்?</p><p>காலம் வரும்போது இதற்கெல்லாம் நீங்கள் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!" என்று சாடியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஒரே வாரத்தில் இந்தியாவில் 100 கோடி வசூலித்த ‘தி ஒடிசி&apos;</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/christopher-nolans-the-odyssey-earns-over-rs-100-crore-at-box-office</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/christopher-nolans-the-odyssey-earns-over-rs-100-crore-at-box-office#comments</comments><guid isPermaLink="false">38decaad-67f5-47d4-9a9a-a49b2bb2c663</guid><pubDate>Fri, 24 Jul 2026 10:37:20 +0000</pubDate><atom:updated>2026-07-24T10:37:20.822Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கிறிஸ்டோபர் நோலன்,christopher nolan,The Odyssey,தி ஒடிசி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/uao6gf6k/nolan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ the odyessy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/uao6gf6k/nolan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>புகழ்பெற்ற இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ' தி ஒடிசி' திரைப்படம், இந்திய பாக்ஸ் ஆபீஸில் முதல் நாளிலேயே வரலாறு காணாத வசூல் சாதனை படைத்தது.</p><p>மேட் டாமன் மற்றும் டாம் ஹாலண்ட் இருவரும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள இத்திரைப்படம், இந்திய ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.</p><p>பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான 'தி ஒடிசி' திரைப்படம், இந்தியாவில் முதல் நாளில் மட்டும் ரூ.20.76 கோடி மொத்த வசூலையும், ரூ.17.40 கோடி நிகர வசூலையும் ஈட்டி சாதனை படைத்துள்ளது.</p><p>ஹாலிவுட் படங்களுக்கு இந்தியாவில் இருக்கும் அசுரத்தனமான வரவேற்பை இந்த வசூல் மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளது.</p><h2>திரையரங்குகளில் குவியும் ரசிகர்கள்</h2><p>இந்திய அளவில் இந்தத் திரைப்படம் சராசரியாக 48.7% திரையரங்கு ஆக்குபென்சியுடன் இயங்கியது. குறிப்பாக, கிறிஸ்டோபர் நோலனின் முந்தைய படங்களைப் போலவே, இதற்கும் ஐமேக்ஸ் மற்றும் முப்பரிமாண திரையரங்குகளில் டிக்கெட்டுகள் அனைத்தும் மின்னல் வேகத்தில் விற்றன.</p><h2>தமிழகத்தில் மிரட்டலான வரவேற்பு</h2><p>இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் நோலனின் படங்களுக்கு எப்போதும் தனி இடமுண்டு. அதற்கேற்ப தமிழ்நாட்டில் இத்திரைப்படம் மிரட்டலான வரவேற்பைப் பெற்றுள்ளது.</p><p>ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானதால், அனைத்து தரப்பு ரசிகர்களையும் இந்தத் திரைப்படம் வெகுவாகக் கவர்ந்துள்ளது.</p><p>உலகம் முழுவதும் 8,413-க்கும் மேற்பட்ட திரைகளில் திரையிடப்பட்டுள்ள 'தி ஒடிசி', ரசிகர்களிடம் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வருகிறது.</p><p>இந்நிலையில், தி ஒடிசி படத்தின் வசூல் இந்தியாவில் மட்டும் இதுவரை 100 கோடி ரூபாயைக் கடந்துள்ளதாக படக்குழு தெரிவித்தது. உலக அளவில் 3 ஆயிரம் கோடியைத் தாண்டியுள்ளது என வார்னர் ப்ரோஸ் இந்தியா என்ற வெளியீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘சினிமா பார்த்து அழுதுட்டு சீன் ஓட்டுவது அல்ல அரசாங்கம்’ - தவெக அரசை விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/governance-is-not-about-watching-a-movie-shedding-tears-and-playing-to-the-gallery-premalatha-vijayakanth-criticizes-tvk</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/governance-is-not-about-watching-a-movie-shedding-tears-and-playing-to-the-gallery-premalatha-vijayakanth-criticizes-tvk#comments</comments><guid isPermaLink="false">21de334f-472f-4919-b8bd-37093d6008f5</guid><pubDate>Fri, 24 Jul 2026 10:33:55 +0000</pubDate><atom:updated>2026-07-24T10:33:55.376Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMDK,தேமுதிக,பிரேமலதா விஜயகாந்த்,premalatha vijayakanth,தவெக அரசு,tvk government</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/7gp9fnux/New-Project-2026-07-24T160340.666.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘சினிமா பார்த்து அழுதுட்டு சீன் ஓட்டுவது அல்ல அரசாங்கம்’ - தவெகவை விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/7gp9fnux/New-Project-2026-07-24T160340.666.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரி ஆற்றில் இருந்து ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய தண்ணீரை கர்நாடக இன்னும் வழங்கவில்லை. மேலும் மேகதாது அணையை கட்டியே தீர்வோம் என அம்மாநில முதலமைச்சர் டி.கே.சிவகுமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.</p><p>இந்த விவகாரங்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசு தரப்பிலோ, முதலமைச்சர் விஜய்யோ இதுவரை வாய்திறக்கவில்லை. இந்நிலையில் இன்று கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா இந்த விவகாரங்கள் தொடர்பாகப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;</p><p>“இன்றுவரை காவேரியில் தண்ணீர் திறக்கவில்லை. மேகதாது அணை கட்டுவோம் என கர்நாடகா தைரியமாக கூறுகிறது. நம் அரசு என்ன செய்கிறது?</p><p>அதுமட்டுமில்லாமல் நேற்று அரசி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு டன் அரிசிவிலை நேற்று மட்டும் ரூ.15 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. அரிசிக்கே இந்த நிலை என்றால், மற்றப் பொருட்களின் விலையும் உயரும். அரசு இதுகுறித்து சிந்திக்க வேண்டும். வெறும் சினிமா பார்த்துவிட்டு தியேட்டரில் உட்கார்ந்து அழுதுகொண்டு வெறும் சீன் ஓட்டுவது அரசு கிடையாது. இது பலகோடி மக்களின் வாழ்வாதாரம். </p><p>எல்நினோ காலநிலை,வறட்சியை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் மழை இல்லை. விவசாயிகள் நன்றாக இருந்தால்தான் நாடு நன்றாக இருக்கும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடைமை. </p><p>மீண்டும் ஒரு லாக்கப் மரணம் தூத்துக்குடியில் நிகழ்ந்துள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் என தொடர்ந்து லாக்கப் மரணங்கள் நிகழ்ந்துகொண்டு இருக்கிறது. இது தடுக்கப்பட வேண்டும். காவல்துறைக்கு ஒருவரை அடித்துக்கொல்ல அதிகாரம் இல்லை. விசாரியுங்கள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துங்கள். மற்ற எந்த அதிகாரமும் காவல்துறைக்கு இல்லை.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>குதிரை பேர வழக்கில் ஜாமின் பெற்றார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/former-minister-senthil-balaji-granted-bail-in-the-horse-trading-case</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/former-minister-senthil-balaji-granted-bail-in-the-horse-trading-case#comments</comments><guid isPermaLink="false">4388a41f-fc6e-450a-8bad-fe60979e5882</guid><pubDate>Fri, 24 Jul 2026 10:16:11 +0000</pubDate><atom:updated>2026-07-24T10:16:11.744Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>senthil balaji,செந்தில் பாலாஜி,Conditional Bail,நிபந்தனை ஜாமின்,TVK MLA bribery case,தவெக எம்எல்ஏ குதிரைபேர வழக்கு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/oxep7lad/New-Project-2026-07-24T154553.123.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ குதிரை பேர வழக்கில் ஜாமின் பெற்றார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/oxep7lad/New-Project-2026-07-24T154553.123.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ இளையராஜாவிடம் பேரம்பேசி, தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்டோர் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.</p><p>இந்த வழக்கில் இருவருக்கும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கியது. மேலும், மறு உத்தரவு வரும் வரை காலையும், மாலையும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராக நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.</p><p>இதற்கிடையே, போலீசார் தங்களை துன்புறுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் இருவரும் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு விசாரணையின்போது, “முன் ஜாமின் வழங்கப்பட்டு இதுவரை இருவரும் சரணடையவில்லை; சரணடையாத பட்சத்தில் துன்புறுத்தக்கூடாது என எப்படி கோர முடியும்? என நீதிபதி கேள்வி எழுப்பியதுடன், இருவரது மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.</p><p>நீதிமன்றம் ஜாமின் வழங்கிய நிலையில், பிணைத்தொகை செலுத்துவதற்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு இன்று ஆஜரானார். </p><p>நீதிமன்ற உத்தரவிற்கிணங்க ஆஜரானதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம். நாளை முதல் திருவல்லிகேணி காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என தெரிவித்துள்ளது. </p><p>காலை 10.30 மணிக்கும், மாலை 5.30 மணிக்கும் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தர்மேந்திர பிரதான் ராஜினாமா குறித்து ஆலோசனை செய்ய நாளைவரை அவகாசம் கோரிய மத்திய அரசு!</title><link>https://www.maalaimalar.com/news/national/central-government-seeks-time-until-tomorrow-to-deliberate-on-dharmendra-pradhans-resignation</link><comments>https://www.maalaimalar.com/news/national/central-government-seeks-time-until-tomorrow-to-deliberate-on-dharmendra-pradhans-resignation#comments</comments><guid isPermaLink="false">d0eba668-c359-43a3-8089-59eb80c26847</guid><pubDate>Fri, 24 Jul 2026 09:48:43 +0000</pubDate><atom:updated>2026-07-24T09:48:43.070Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,CJP,Dharmendra Pradhan Resignation,தர்மேந்திர பிரதான் பதவி விலகல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/0mqej2bs/New-Project-2026-07-24T145633.015.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தர்மேந்திர பிரதான் ராஜினாமா குறித்து ஆலோசனை செய்ய நாளைவரை அவகாசம் கோரிய மத்திய அரசு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/0mqej2bs/New-Project-2026-07-24T145633.015.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் கரப்பான்பூச்சி கட்சித் தொடங்கிய நீட்டுக்கு எதிரான மற்றும் தர்மேந்திர பிரதான் பதவி விலகல் தொடர்பான போராட்டம் தற்போது இந்தியா முழுவதும் தீவிரமடைந்துள்ளது. </p><p>இந்நிலையில் இப்போராட்டத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு கரப்பான்பூச்சி கட்சியுனருடன் பலகட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.</p><p>மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவுடனான முதல்கட்ட பேச்சுவார்த்தையில் தர்மேந்திர பிரதான் பதவி விலகல், நீட் தேர்வால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம், உயர்கல்வித்துறையில் சீர்த்திருந்தங்களை மேற்கொள்ளுதல் என மூன்று கோரிக்கைகளை கரப்பான்பூச்சி கட்சியினர் முன்வைத்தனர்.</p><p>அதனைத்தொடர்ந்து இன்று இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின்போது பிரதானின் பதவி விலகல் கோரிக்கை சமரசத்திற்கு அப்பாற்பட்டது என கரப்பான்பூச்சி கட்சியினர் மத்திய அரசின் சார்பில் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, ஜிதேந்திர சிங் ஆகியோரிடம் தெரிவித்துள்ளனர். </p><p>“கல்வி அமைச்சரின் ராஜினாமாவே, ஒரு மாத காலமாக நடைபெற்று வரும் சி.ஜே.பி. போராட்டங்களின் மையக்கருவாக இருந்து வருகிறது. பிரதான் பதவியை ராஜினாமா செய்யாவிட்டால், போராட்டங்களைத் தீவிரப்படுத்துவோம்” என எச்சரித்ததாக பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட சி.ஜே.பி. தேசிய செய்தித் தொடர்பாளர்கள் சௌரவ் தாஸ் மற்றும் அஷுதோஷ் ரங்கா ஆகியோர் தெரிவித்துள்ளனர். </p><p>இதனைத்தொடர்ந்து இதுதொடர்பாக ஆலோசிக்க நாளை மதியம் வரை மத்திய அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டுள்ளது. இதனையடுத்து நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>வந்தே மாதர பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் மசோதா மாநிலங்களவையில் அறிமுகம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/a-bill-proposing-a-three-year-prison-sentence-for-disrespecting-the-vande-mataram-song-has-been-introduced-in-the-rajya-sabha</link><comments>https://www.maalaimalar.com/news/national/a-bill-proposing-a-three-year-prison-sentence-for-disrespecting-the-vande-mataram-song-has-been-introduced-in-the-rajya-sabha#comments</comments><guid isPermaLink="false">16f630b6-0a09-4523-935c-2d2e13a60caa</guid><pubDate>Fri, 24 Jul 2026 09:22:50 +0000</pubDate><atom:updated>2026-07-24T09:22:50.061Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Aishwarya Rai,மாநிலங்களவை,rajya sabha,Nityanand Rai,Vande Mataram bill,வந்தே மாதரம் மசோதா,நித்யானந்தா ராய்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/q8z8bwnr/New-Project-2026-07-24T145231.271.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வந்தே மாதர பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் மசோதா மாநிலங்களவையில் அறிமுகம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/q8z8bwnr/New-Project-2026-07-24T145231.271.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வந்தே மாதரப் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வழிவகுக்கும், தேசிய கௌரவம் அவமதிப்பு தடுப்பு (திருத்த) மசோதா, 2026 இன்று மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் இந்த மசோதாவை அறிமுகம் செய்துவைத்தார். </p><p>இந்த மசோதா தாக்கலைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக மாநிலங்களவை வரும் திங்கள்கிழமை காலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. </p><p>முன்னதாக மக்களவை, எதிர்க்கட்சிகளின் அமளியால் 12.15 மணிக்கே ஒத்திவைக்கப்பட்டது. இதனால் மாநிலங்களவையில் மட்டும் மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  </p><p>மசோதா என்னக்கூறுகிறது?</p><p>1971-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தேசிய கௌரவம் அவமதிப்பு தடுப்புச் சட்டத்தில் (பிரிவு 3) திருத்தம் கொண்டுவரப்பட்டு, தேசியக் கொடி, தேசிய கீதம் ஆகியவற்றுக்கு இணையாக தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' பாடலுக்கும் சட்டப்பூர்வ பாதுகாப்பு வழங்கப்படுகிறது.</p><p>வந்தே மாதரம் பாடல் பாடுவதை யாராவது வேண்டுமென்றே தடுத்தாலோ, அல்லது பாடல் இசைக்கப்படும் கூட்டத்தில் இடையூறு விளைவித்தாலோ அவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது. </p><p>பங்கிம் சந்திர சாட்டர்ஜியால் இயற்றப்பட்ட வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்தச் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.</p><p>அரசு நிகழ்ச்சிகளில் இந்தப் பாடலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க அரசாங்கம் முயன்று வருகிறது. தேசிய கீதம் இசைக்கப்படும் அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடுவது அல்லது இசைப்பது தொடர்பாக  உள்துறை அமைச்சகம் முன்னதாக வழிகாட்டுதல்களை வெளியிட்டிருந்தது.</p><p>இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் (மக்களவை மற்றும் மாநிலங்களவை) விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற பிறகு முழுமையான சட்டமாக அமலுக்கு வரும்.</p>]]></content:encoded></item><item><title>பயணிகள் கவனத்திற்கு... தாம்பரம்-தென்காசி இடையே அதிவிரைவு சிறப்பு ரெயில் இயக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-train-to-run-between-tambaram-and-tenkasi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-train-to-run-between-tambaram-and-tenkasi#comments</comments><guid isPermaLink="false">31d086a4-441e-4209-9d6b-b05a77350359</guid><pubDate>Fri, 24 Jul 2026 09:20:10 +0000</pubDate><atom:updated>2026-07-24T09:20:10.429Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Southern Railway,special train,சிறப்பு ரெயில்,தெற்கு ரெயில்வே</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2023/03/26/1855747-12.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Express Train]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2023/03/26/1855747-12.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, மதுரை ஆகிய தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படுகின்ற அனைத்து ரெயில்கள் எப்பொழுதுமே நிரம்பியே செல்கின்றன. </p><p>வழக்கமாக இயக்கப்படுகின்ற எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மட்டுமின்றி வந்தே பாரத் மற்றும் சிறப்பு ரெயில்களிலும் இடங்கள் கிடைப்பதில்லை. அனைத்து ரெயில்களின் எல்லா வகுப்புகளிலும் நிரம்பி விடுகின்றன.</p><p>குறிப்பாக தென்காசி வழியாக செங்கோட்டைக்குச் செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ், கொல்லம் எக்ஸ்பிரஸ் எப்போதுமே நிரம்பி காணப்படுகின்றன. 2 மாதங்களுக்கு முன்பாக முன்பதிவு செய்தால் மட்டுமே படுக்கை வசதி கிடைக்கிறது. </p> <p>தென் மாவட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய ரெயில்களில் அதிக கூட்ட நெரிசல் இருப்பதால் தெற்கு ரெயில்வே தாம்பரம்- தென்காசி இடையே அதிவிரைவு சிறப்பு ரெயிலை அறிவித்துள்ளது. வியாழன் மற்றும் சனிக்கிழமையில் வாரத்தில் 2 நாட்கள் இந்த சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. </p><p>இந்த சிறப்பு ரெயில் பகல் நேரத்தில் இயக்கப்படுகிறது. அதிகாலையில் புறப்பட்டு மாலையில் செல்லக்கூடிய வகையில் விடப்பட்டுள்ளது.</p> <p>சிறப்பு ரெயில் எண்.06135 தாம்பரத்தில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு அன்று பிற்பகல் 3.30 மணிக்கு தென்காசி சென்றடைகிறது. </p><p>எண். 06136 சிறப்பு ரெயில் தென்காசியில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு பிற்பகல் 3.15 மணிக்கு வந்து சேருகிறது. தாம்பரத்தில் இருந்து வரு கிற 30-ந்தேதி, ஆகஸ்ட் 1,6, 8,13,15 ஆகிய நாட்களில் இயக்கப்படுகிறது. தென்காசியில் இருந்து வருகிற 31-ந்தேதி, ஆகஸ்ட் 2, 7, 9, 14,16 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. </p><p>இந்த சிறப்பு ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம் வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தவெக எம்.எல்.ஏ.க்கள் ஜனநாயகன் படம் பார்ப்பதில்தான் தீவிரமாக இருக்கிறார்கள்: நயினார் நாகேந்திரன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/taveka-legislators-focused-on-watching-democrat-film-nainar-nagendran</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/taveka-legislators-focused-on-watching-democrat-film-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">3d80c0a5-20a6-49ad-aece-ce2b33bd02b1</guid><pubDate>Fri, 24 Jul 2026 09:18:25 +0000</pubDate><atom:updated>2026-07-24T09:18:25.797Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,Lockup death,Arunachalam,லாக்அப் மரணம்,அருணாச்சலம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/pmqu5a1o/Untitled-design-63.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ BJP’s Nainar Nagendran slams TN police after lockup death]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/pmqu5a1o/Untitled-design-63.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h3><strong>மதுபாட்டில்களை விற்பனை செய்ததாக அருணாச்சலம் கைது: </strong></h3><p>தூத்துக்குடியில் அமுதா நகரை சேர்ந்த 24 வயதான அருணாச்சலம், சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்ததாக தூத்துக்குடி தெற்கு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.</p><p>இதையடுத்து அவரிடமிருந்த 120 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.  இதைத்தொடர்ந்து காவல் நிலையத்தில் மயங்கி விழுந்த அவரை, நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.</p><p>அப்போது அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் உயிரிழந்த அருணாச்சலத்தின் தாயாரை இன்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.</p><p>இதையடுத்து செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது:-</p><p>தூத்துக்குடி தெற்கு காவல்துறையால் கைது செய்யப்பட்ட அருணாச்சலம், அரசு மருத்துவமனையில் இருப்பதாக அவரின் தாயாரிடம் காவல்துறை கூறியுள்ளது. </p><p>மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருந்த அவருக்கு, முதுகு தண்டுவடத்தில் பலமாக அடிபட்டு ரத்த காயம் இருந்துள்ளது. அதன்பிறகு அவருக்கு மூளையில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக உயிரிழந்தார்.</p><p>அவரை வைத்துதான் இந்த குடும்பம் வாழ்ந்து வந்துள்ளது. அந்த மாதிரியான ஒரு நபரை, காவல்துறை அத்துமீறி வீட்டில் இருந்து இழுத்து கொண்டு போய், அடித்து கொலை செய்திருக்கிறார்கள். </p><p>இதற்கு சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த குடும்பத்திற்கு கண்டிப்பாக ஒரு இழப்பீடு வழங்க வேண்டும். இது தொடர்ந்து நடைபெற்று கொண்டு வந்திருக்க்கிறது.</p><p>சமீபத்தில் நாகர்கோவிலில் சபரிவர்மன் என்பவரை சிறையில் அடித்ததால் அவர் இறந்தார். இது இரண்டாவது சம்பவம் அல்ல, தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. </p><p>இதே தெற்கு காவல் நிலையத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரு பெண் உயிரிழந்தார், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அந்த பெண் காவல் நிலையத்திலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர். </p><p>அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார், அதற்கான பிரேத பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த சம்பவமும் அதே தெற்கு காவல் நிலையத்தில் தான் நிகழ்ந்துள்ளது.</p><p>காவல்துறையினர் அத்துமீறி நடந்து கொண்டிருக்கிறார்கள். மனிதாபிமானம் இல்லாமல் காவல்துறையினர், பெற்ற தாயின் கண்முன்னே மகன் சாகும் அளவிற்கு தடியடி நடத்தியுள்ளனர்.</p><p>தூத்துக்குடியில் முன்னாள் சட்டமன்ற உறுபினர் மார்க்கண்டேயனை கைது செய்யும்போதும், காவல்துறையினர் நாக்கை துருத்தி கொண்டு, ஊடகவியலாளரை மிரட்டும் காட்சிகள் வெளியாகின.</p><p>காவல்துறையை கையில் வைத்திருக்கக்கூடிய தமிழகத்தின் முதல்வர் ஜோசப் விஜய் இதைப்பற்றி வாய்திறக்கவில்லை. சட்டமன்ற உறுப்பினர்கள் ஜனநாயகன் படம் பார்ப்பதில் தான் தீவிரமாக இருக்கிறார்கள்.</p><p>வாக்களித்த மக்களுக்கு தங்களது உரிமைகளை பெற்றுத் தருவதில் அக்கறை செலுத்தவில்லை. இதை பொதுமக்களும்பார்த்து கொண்டுருக்கிறார்கள். இந்த அரசிற்கு கடுமையான கண்டனத்தையும், எச்சரிக்கையையும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நான் தெரிவிக்கிறேன்.</p><p>இதேபோன்று சாத்தான்குளத்தில் இரண்டு பேர் அடித்து கொலை செய்யப்பட்டார்கள். அதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள், அதன் பிறகு ஆட்சி மாறியது. அதுபோல சிவகங்கை சம்பவத்தில் நிகழ்ந்த லாக்அப் மரணத்திற்கு பிறகு, ஆட்சி மாறியது.</p><p>ஆனால் தற்போது இந்தமாதிரியான சம்பவங்கள் ஆட்சியின் தொடக்கத்திலேயே ஆரம்பித்துள்ளன. கடந்த ஆட்சிகளுக்கும், இந்த ஆட்சிக்கும் எந்தவிதமான வித்தியாசமும் இல்லை. மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் இல்லை.</p><p>இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/sports/pm-modi-conveys-best-wishes-to-indian-contingent-participating-in-commonwealth-games-in-glasgow</link><comments>https://www.maalaimalar.com/sports/pm-modi-conveys-best-wishes-to-indian-contingent-participating-in-commonwealth-games-in-glasgow#comments</comments><guid isPermaLink="false">ed0de2e7-67f6-40e9-ae13-295763dbbbe0</guid><pubDate>Fri, 24 Jul 2026 09:04:02 +0000</pubDate><atom:updated>2026-07-24T09:04:02.808Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,காமன்வெல்த் போட்டி,pm modi,Glasgow,commenwealth games,பிரதமர் மோடி,கிளாஸ்கோ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/cb2f6fko/pm-modi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ pm modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/cb2f6fko/pm-modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது.  ஆகஸ்ட் 2-ம் தேதி வரை 11 நாட்கள் இந்தப் போட்டி நடைபெறுகிறது. </p><p>இதில் காமன்வெல்த் கூட்டமைப்பில் இருக்கும் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா உள்பட 74 நாடுகளில் இருந்து 3 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர் .</p><p>தடகளம், பளு தூக்குதல், குத்துச்சண்டை, நீச்சல், கூடைப்பந்து (3x3), ஜிம்னாஸ்டிக் (ஆர்ஸ்டிக்), சைக்கிளிங், ஜூடோ, நெட்  பால், பவுல்ஸ் வலு தூக்குதல் (பாரா பிரிவினருக்கு மட்டும்) ஆகிய 11  விளையாட்டுகள் 215 பிரிவுகளில் நடைபெறுகிறது. இதில்  6 விளையாட்டுகள் பாரா பிரிவினருக்கு நடத்தப்படுகிறது.</p><h2>தேசிய கொடி </h2><p>இதில் இந்தியா சார்பில் 126 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது. இதில் 78 பேர் வீரர்கள், 48 வீராங்கனைகள் கலந்துகொள்கிறார்கள். 8 விளையாட்டுகளில் பங்கேற்கிறார்கள். 5 பாரா விளையாட்டுகளில் கலந்துகொள்கிறார்கள்.</p><p>பிரமாண்டமாக நடைபெற்ற தொடக்க விழாவில் தேசிய கொடியை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பளு தூக்கும் வீராங்கனை  மீராபாய் சானு, குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா ஆகியோர் ஏந்திச்சென்றனர். இன்று முதல் போட்டிகள் ஆரம்பமாகிறது.</p><p>இந்தியா இன்று ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ், நீச்சல் மற்றும் பாரா நீச்சல், பாரா வலு தூக்குதல், லான் பவுல்ஸ், குத்துச்சண்டை உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்கிறது.</p><h2>பிரதமர் மோடி வாழ்த்து</h2><p>இந்நிலையில், காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கும் வேளையில், இந்திய அணிக்கு எனது நல்வாழ்த்துக்கள். நமது விளையாட்டு வீரர்கள் இந்தப் போட்டிகளில் பேரார்வம், உறுதி மற்றும் சிறந்து விளங்கும் மனப்பான்மையுடன் பங்கேற்பார்கள் என உறுதியாக நம்புகிறேன். நமது விளையாட்டு வீரர்களின் திறமையும் அர்ப்பணிப்பும் எப்போதும் எண்ணற்ற இந்தியர்களுக்கு உத்வேகம் அளிக்கின்றன என தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்களுக்கு எதிரான போலீசார் நடவடிக்கை தொடர்பாக மனு தாக்கல் செய்யப்படவில்லை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி</title><link>https://www.maalaimalar.com/news/national/cji-kant-no-plea-filed-on-cjp-protest-police-action</link><comments>https://www.maalaimalar.com/news/national/cji-kant-no-plea-filed-on-cjp-protest-police-action#comments</comments><guid isPermaLink="false">b9c89c41-f546-4b3a-8c2d-c7dff99a8e21</guid><pubDate>Fri, 24 Jul 2026 08:44:19 +0000</pubDate><atom:updated>2026-07-24T08:44:19.142Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,உச்சநீதிமன்றம்,CJP Protest,கரப்பான்பூச்சி கட்சி போராட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2023/06/10/1895651-supreme-court.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Supreme court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2023/06/10/1895651-supreme-court.webp?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வில் நடைபெற்ற குளறுபடிகளை கண்டித்தும், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லியில் ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் மாதம் 20-ந்தேதி போராட்டத்தை தொடங்கினர்.</p><h2>மாணவர்கள் மீது தடியடி</h2><p>கடந்த 20-ந்தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இன்றைய தினம் நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவோம் என அறிவித்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் மாணவர்கள், இளைஞர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி முற்றுகையிட பேரணியாக சென்றனர். அப்போது போலீசார், துணை ராணுவத்தினர் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டது. மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.</p><h3>அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு எனத் தகவல்</h3><p>போராட்டத்தில் ஈடுபட்ட இந்த மாணவர்களுக்கு எதிரான போலீசார் நடவடிக்கை தொடர்பாக உச்சநீதிமன்றம் மனுதாக்கல் செய்யப்பட்டதாகவும், அப்போது தலைமை நீதிபதி சூர்யகாந்த், அவசர வழக்காக விசாரிக்க மறுத்ததாகவும், எங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். உங்கள் நேரத்தையும் வீணாக்காதீர்கள் என்று அவர் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியானது.</p><p>இந்த நிலையில், போராட்டக்காரர்களுக்கு எதிராக போலீஸ் நடவடிக்கை தொடர்பாக எந்த மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை. விசாரிக்க மறுத்ததாக பொறுப்பற்ற வகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் காட்டமான வகையில் பதில் அளித்துள்ளார்.</p><h2>இது தொடர்பாக தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறியதாவது:-</h2><p>சமீபத்தில் எந்தவொரு ஆவணமும் தாக்கல் செய்யப்படாத நிலையில் இந்த விவகாரம் எங்கள் முன் குறிப்பிடப்பட்டது. நான் பதிவகத்தில் சரிபார்த்தேன். உச்ச நீதிமன்றத்தில் ஒரு பக்கத்தில் கூட தாக்கல் செய்யப்பட்டதாக குறிப்பிடப்படவில்லை. </p><p>நீதிமன்றத்திற்கு வந்தது வெறும் ஒரு கோரிக்கை மனு மட்டுமே. மிஷ்ரா அல்லது வேறு யாரோ ஒருவரால் அனுப்பப்பட்ட ஒரு கோரிக்கை மனு மட்டுமே. அந்தக் கோரிக்கை மனுவை நான் எப்படி ஒரு ரிட் மனுவாக (writ petition) கருத முடியும்? ஆனால் மக்கள் இதைப்பற்றிப் பொறுப்பற்ற முறையில் செய்திகளை வெளியிடத் தொடங்கிவிட்டனர்.</p><p>கடந்த இரண்டு நாட்களில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக முற்றிலும் பொய்யான தகவல் பரப்பப்பட்டது. அந்த வழக்கை விசாரணைப் பட்டியலிடத் தலைமை நீதிபதி மறுத்துவிட்டதாக ஊடகங்கள் எந்த பொறுப்புணர்வும் இன்றி பொறுப்பற்ற முறையில் தவறான செய்தியை வெளியிட்டன. ஆனால், காலை 10 மணி வரை ஒரு பக்கம் கூட தாக்கல் செய்யப்பட்டிருக்கவில்லை.</p><p>இவ்வாறு உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்துள்ளார்.</p><p>வழக்கறிஞர் நரேந்திர மிஷ்ரா, வாய்மொழியாக உச்சநீதிமன்றம் இது தொடர்பாக தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புதன்கிழமை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பட்ட கடித மனுவை வழகறிஞர் மிஷ்ரா குறிப்பிட்டார். அப்போது, மாணவர்களுக்கு எதிராக காவல்துறையின் எடுத்த நடவடிக்கை தொடர்பான வீடியோக்களை பார்வையிட வேண்டும் என்றார். அப்போது தலைமை நீதிபதி அடங்கிய பெஞ்ச், அவரின் வேண்டுகோளை ஏற்க மறுத்தது. அப்போது வழக்கறிஞர் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று தெரிவித்தது.</p>]]></content:encoded></item><item><title>எதிர்க்கட்சிகள் கடும் அமளி: மக்களவை நாள்முழுவதும் ஒத்திவைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/lok-sabha-adjourned-for-the-day-amid-opposition-protest-on-various-issues</link><comments>https://www.maalaimalar.com/news/national/lok-sabha-adjourned-for-the-day-amid-opposition-protest-on-various-issues#comments</comments><guid isPermaLink="false">ca10454f-7d51-4fcf-b497-d7b1df2d9a3e</guid><pubDate>Fri, 24 Jul 2026 08:33:07 +0000</pubDate><atom:updated>2026-07-24T08:33:07.526Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>winter session,மக்களவை,Loksabha,மழைக்கால கூட்டத்தொடர்,adjourned,ஒத்திவைப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/mj2by9v4/loksabha.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ lok sabha]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/mj2by9v4/loksabha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதி தொடங்கியது. நீட் வினாத்தாள் கசிவு, ராமர் கோவில் நன்கொடை முறைகேடு, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம் ஆகியவை குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் கடந்த 4 தினங்களாக நாடாளுமன்றத்தில் அலுவல் எதுவும் நடைபெறாமல் முடங்கியது.</p><h2>எதிர்க்கட்சிகள் 5-வது நாளாக அமளி</h2><p>இந்நிலையில், மழைக்காலக் கூட்டத் தொடரின் 5-ம் நாளான இன்று காலை 11 மணிக்கு வழக்கம்போல இரு அவைகளும் கூடின. </p><p>சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மக்களவை கூடியதும் கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு கார்கில் போரில் வீரமரணம் அடைந்த தியாகிகளின் வீரத்தைப் போற்றும் வகையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து, கேள்வி நேரம் தொடங்குவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.</p><p>ஆனாலும், நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷங்களை எழுப்பினர். அவர்களை சமாதானப்படுத்த ஓம் பிர்லா தொடர்ந்து முயன்றார்.</p><p>கேள்வி நேரத்துக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு உங்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன். எந்த விஷயம் தொடர்பாக விவாதிக்க நீங்கள் விரும்பினாலும் அதற்கான அனுமதி உங்களுக்கு வழங்கப்படும். நேற்றும்கூட இதை நான் தெரிவித்தேன். அவையின் செயல்பாடுக்கு இடையூறு விளைவிக்காதீர்கள் என சபாநாயகர் ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்தார்.</p><p>எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவை தொடர்ந்து நடக்க நீங்கள் விரும்பவில்லை என்பதால் அவையை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கிறேன் என அறிவித்தார்.</p><h2>ராகுல் காந்தியிடம் கிரண் ரிஜிஜு வேண்டுகோள்</h2><p>இதற்கிடையே, அவை நடவடிக்கைகள் தொடர ஒத்துழைக்குமாறு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம், நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ வேண்டுகோள் விடுத்தார். </p><p>ராகுல் காந்தியை நேரில் சந்தித்த கிரண் ரிஜிஜூ, அவை நடவடிக்கைகள் சுமுகமாக தொடர ஒத்துழைக்குமாறு நேரில் கேட்டுக்கொண்டார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க அரசு ஒப்புக்கொண்ட போதிலும், எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபடுவதால் விவாதத்தை நடத்த முடியவில்லை என்றும் அவர் கூறினார்.</p><h2>மக்களவை ஒத்திவைப்பு</h2><p>எனினும், பகல் 12 மணிக்கு ஜகதாம்பிகா பால் தலைமையில் மக்களவை மீண்டும் கூடியது. அப்போதும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். ஜகதாம்பிகா பால் பலமுறை வேண்டுகோள் விடுத்தும், அமளி தொடர்ந்ததால் அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அவர் அறிவித்தார்.</p><p>சனி, ஞாயிறு என இரு நாள் விடுமுறைக்குப் பிறகு மக்களவை இனி திங்கள்கிழமை கூடுகிறது.</p>]]></content:encoded></item><item><title>இட நெருக்கடி - தலைமை செயலகத்தை இடமாற்றம் செய்ய ஆலோசனை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/space-constraints-proposal-to-relocate-chennai-secretariat</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/space-constraints-proposal-to-relocate-chennai-secretariat#comments</comments><guid isPermaLink="false">e6a3e7d9-8cde-486a-be95-00b0e3038b11</guid><pubDate>Fri, 24 Jul 2026 08:25:16 +0000</pubDate><atom:updated>2026-07-24T08:25:16.734Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,தலைமை செயலகம்,Tamil Nadu secretariat</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2023/08/16/1933024-tn.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tamil Nadu secretariat]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2023/08/16/1933024-tn.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக அரசின் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">தலைமைச் செயலகம்</a> மெரினா கடற்கரை சாலையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வருகிறது.</p><p>ராணுவத்துக்கு சொந்தமான இந்த இடத்திற்கு தமிழக அரசு வாடகை செலுத்தி வருகிறது.</p><h2>இட நெருக்கடி</h2><p>இங்குள்ள கோட்டை வளாகத்தில் பாரம்பரிய மிக்க கட்டிடத்தில் தலைமைச் செயலகம் செல்படுவதால் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் அறைகளும் அங்குதான் உள்ளது. இதனால் கடும் இட நெருக்கடியை சந்தித்து வருகிறது.</p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/national/karnataka-cm-dk-shivakumar-likely-to-meet-tn-cm-vijay-on-aug-3">முதலமைச்சர்  விஜய் </a>வந்து செல்லும் அவரது அலுவலக அறை பகுதிகள் மற்றும் அங்குள்ள அதிகாரிகள் அறைகள் சட்டசபை வளாகத்துக்கு மேலே முதல் மாடியில் இருப்பதால் அங்கும் இடப்பற்றாக்குறை நிலவுகிறது.</p><p>சட்டசபைக்கு வந்து செல்லும் எம்.எல்.ஏ.க்கள் அமரும் அறைகளும் சிறிய அறைகளாகவே உள்ளன.</p><p>இதனால் இப்போது தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் அலுவலகம், அவரது செயலாளர்கள் 4 பேரின் அறைகள் அனைத்தும் அங்குள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்றப்பட இருக்கிறது.</p> <h2>ஜோதிடர் ஆலோசனை</h2><p>இட நெருக்கடி மற்றும் வாஸ்துபடி சில மாற்றங்கள் செய்ய வேண்டி இருப்பதால் ஜோதிடர் ஆலோசனைக்கிணங்க 10-வது மாடிக்கு செல்ல முதலமைச்சர் விஜய் சம்மதித்ததாக கூறப்படுகிறது. அதன்படி 10-வது மாடியில் பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது.</p><p>இந்த சூழலில் அரசு ஊழியர்கள் அதிகாரிகள் இருக்கும் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10 மாடி கட்டிடத்திலும் போதிய இட வசதி கிடையாது. அங்கும் இடநெருக்கடி தொடர்கிறது. இதுபற்றிய விவரமும் முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.  இதனால் தலைமைச் செயலகத்தை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யலாமா? என்றும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.</p> <h2>கிண்டி கவர்னர் மாளிகை</h2><p>இதற்காக கிண்டி கவர்னர் மாளிகை எதிரே உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்துக்குள் தலைமை செயலகத்தை கொண்டு செல்லலாமா? என்று ஆலோசிக்கப்பட்டது.</p><p>இந்த இடம் சரியில்லை என்றால் பட்டினப்பாக்கத்தில் உள்ள காலி இடத்தை தேர்வு செய்யலாமா? என்றும் ஆலோசிக்கப்பட்டது.</p><p>ஆனால் இந்த இடங்கள் தலைமைச் செயலகத்துக்கு சரிபட்டு வராது என்று தெரிவிக்கப்பட்டு விட்டது. இதனால் வேறு இடங்கள் பார்க்கப்பட்டு வருகிறது.</p> <h2>ஓமந்தூரார் வளாகம்</h2><p>2006-ம் ஆண்டு முதலமைராக இருந்த கருணாநிதி கோட்டையில் இடநெருக்கடி இருப்பதை உணர்ந்து, புதிய தலைமைச் செயலகத்தை சட்டமன்றத்துடன் வசதியாக திட்டமிட்டு கட்டினார். 2010-ம் ஆண்டு இந்த புதிய தலைமைச் செயலகம் திறந்து வைக்கப்பட்டது.</p><p>அதன்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெயலலிதா முதலமைச்சராக வந்ததும் அதை ஒரு பன்னோக்கு மருத்துவமனையாக மாற்றியதுடன் தலைமைச் செயலகத்தை மீண்டும் செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கே மாற்றினார். அதன்பிறகு ராணி மேரி கல்லூரி அருகே தலைமைச் செயலகத்தை கொண்டு வரலாமா? என்றும் ஆலோசிக்கப்பட்டது. பின்னர் அந்த எண்ணமும் கைவிடப்பட்டது.</p> <h2>த.வெ.க. ஆட்சி</h2><p>இப்படி ஒவ்வொரு ஆட்சியிலும் தலைமை செயலகத்தை இடமாற்றம் செய்வது பற்றி ஆலோசிக்கப்பட்டு வந்தது. அதேபோல் இப்போது த.வெ.க. ஆட்சி வந்ததும் முதலமைச்சர் விஜய்யிடம், தலைமைச் செயலகத்தை வேறு இடத்துக்கு மாற்றுவது குறித்தும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி உள்ளதாக தெரிகிறது.</p>]]></content:encoded></item><item><title>மத்திய பிரதேசத்தில் 400 ஆண்டுகள் பழமையான பீரங்கி துப்பாக்கி முனையில் கொள்ளை</title><link>https://www.maalaimalar.com/news/national/400-year-old-cannon-stolen-at-gunpoint-in-madhya-pradesh</link><comments>https://www.maalaimalar.com/news/national/400-year-old-cannon-stolen-at-gunpoint-in-madhya-pradesh#comments</comments><guid isPermaLink="false">4800897a-252d-4a08-8275-a5b07cd46cc1</guid><pubDate>Fri, 24 Jul 2026 07:31:57 +0000</pubDate><atom:updated>2026-07-24T07:31:57.994Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய பிரதேசம்,Madhya Pradesh,cannon,பீரங்கி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/srlnget2/cannon.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/srlnget2/cannon.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[  <p>மத்திய பிரதேச மாநிலம் சிவ்புரி மாவட்டத்தில் உள்ள நர்வார் கோட்டை, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவு சின்னமாகும். </p><p>கச்வாஹா ராஜ்புத் மன்னர்களால் 10-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படும் இந்த கோட்டையில், வரலாற்று சிறப்புமிக்க 14 பீரங்கிகள் இருந்தன. இந்த பீரங்கிகள், சிந்தியா மன்னர்களின் ஆட்சி காலத்தை சேர்ந்தவை ஆகும். ஒவ்வொரு பீரங்கியும் 3.5 டன் எடை கொண்டவை.</p> <p>பழங்கால பொருட்கள் விற்பனை செய்யக்கூடிய சட்டவிரோத சந்தையில் இத்தகைய பீரங்கிகளுக்கு நல்ல மதிப்பு உண்டு. இதையடுத்து கோட்டையில் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். அந்த பாதுகாவலர்களையும் தாண்டி, சில நாட்களுக்கு முன்பு கொள்ளை கும்பலால் ஒரு பீரங்கி திருடி செல்லப்பட்டது. </p><p>கோட்டையின் பின்புறம் வழியாக வந்த கொள்ளை கும்பல், பாதுகாப்பு பணியில் இருந்தவர்களை துப்பாக்கி முனையில் காட்டி மிரட்டி பீரங்கியை லாரியில் ஏற்றி சென்றது விசாரணையில் தெரிய வந்தது.</p> <p>கோட்டையை சுற்றியுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் பீரங்கியை கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். பீரங்கியை ஏற்றி சென்ற லாரி ராஜஸ்தானுக்கு சென்றது கண்டறியப்பட்டுள்ளது.</p><p>சர்வதேச அளவில் பழமையான பொருட்களை கடத்தும் கும்பலுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்றும், கொள்ளை கும்பல் பீரங்கியை மண்ணில் புதைத்து வைத்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.</p><p>பீரங்கியை கண்டறிவதற்காக ராஜஸ்தானின் கரவுலி மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் தேடுதல் வேட்டையை தொடங்கி உள்ளனர். சந்தேகிக்கப்படும் இடங்களில் தேடுதல் வேட்டை தீவிரமாக நடக்கிறது. </p> <p>பரத்பூரில் இருந்து ஒரு உலோக கண்டறிதல் குழுவும் சம்பவ இடத்திற்கு வந்து, மின்னணு கருவிகள் மூலம் நிலத்தை ஆய்வு செய்து வருகிறது. ஜே.சி.பி. எந்திரங்களை பயன்படுத்தி பல இடங்களில் மண்ணை தோண்டி தேடும் முயற்சியும் நடக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>நடிகர் விஜய்யின் ஜனநாயகன் முதல் நாள் வசூல் எவ்வளவு? </title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/how-much-did-vijays-jananayagan-earn-on-day-one</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/how-much-did-vijays-jananayagan-earn-on-day-one#comments</comments><guid isPermaLink="false">ca4b349a-8c10-46a3-8c92-21a0c9b9ad2f</guid><pubDate>Fri, 24 Jul 2026 07:16:49 +0000</pubDate><atom:updated>2026-07-24T07:16:49.693Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கூலி,Coolie,JanaNayagan,ஜனநாயகன்,first day collection,முதல் நாள் வசூல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/jlwsbx4a/Untitled-design-62.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jananaayagan Box Office report worldwide]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/jlwsbx4a/Untitled-design-62.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகர் விஜய்யின் 69வது திரைப்படமான ‘ஜனநாயகன்’ தணிக்கைச் சான்றிதழ் அனுமதி பெற்று உலகம் முழுவதும் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் இந்தியாவில் மட்டும் இதுவரை ரூ.41 கோடி வசூல் புரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>எச். வினோத் இயக்கியுள்ள இந்த படம், தேர்தலுக்கு முன்னதாக கடந்த பொங்கல் அன்று வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களுக்காக ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. </p><p>கே.வி.என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரித்துள்ள இந்த படத்தில், பூஜா ஹெக்டே, பாபி தியோல் மற்றும் மமிதா பைஜு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். </p><h3><strong>ஜனநாயகன் வசூல்:</strong></h3><p>இந்த படம் வெளிநாடுகளில் மொத்தமாக ரூ.30 கோடி வசூலித்துள்ளதாக வர்த்தக கண்காணிப்பு இணையதளம் ஒன்று கூறியுள்ளது. </p><p>இருந்தபோதிலும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தால், விஜய்யின் முந்தைய வெற்றிப் படங்களான 'பீஸ்ட்' மற்றும் 'கோட்' ஆகியவற்றின் தொடக்க வசூலை எட்ட முடியவில்லை எனவும் கூறப்படுகிறது.</p><p>வர்த்தக கண்காணிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஜனநாயகன் திரைப்படம் 13,067 காட்சிகளில் மொத்தமாக ரூ. 41 கோடி வசூலித்துள்ளது.</p><p>இதன்மூலம், இந்தியாவின் மொத்த வசூல் இதுவரை ரூ. 48.27 கோடியாகவும், மொத்த நிகர வசூல் ரூ. 41 கோடியாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.</p><p>வெளிநாடுகளில் இப்படம் மொத்தம் ரூ.30 கோடி வசூலித்துள்ளது, இதன்மூலம் அதன் மொத்த உலகளாவிய வசூல் ரூ. 78.27 கோடியாக உயர்ந்துள்ளது.</p><p>இந்தி மொழியில் முதல் நாள் வசூல் ரூ. 1.75 கோடியாகவும், தெலுங்கில் ரூ.2.75 கோடியாகவும் உள்ளது.</p><h3><strong>முந்தைய படங்களை விட வசூல் குறைவு:</strong></h3><p>விஜய்யின் முந்தைய பிளாக்பஸ்டரான பீஸ்ட் படத்தின் ரூ. 49.30 கோடியையும், கோட் படத்தின் ரூ. 44 கோடி வசூலையும், ஜனநாயகனால் முறியடிக்க முடியவில்லை.</p><p>மேலும் முதல் நாளில் 50 கோடி ரூபாய் வசூலித்த தமிழ் படங்களின் மதிப்புமிக்க பட்டியலில், ஜனநாயகன் திரைப்படத்தால் இடம்பெற முடியவில்லை என்று கூறப்படுகிறது.</p><p>இதில் முதல் இடத்தில் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் ரூ. 65 கோடியை வசூலித்துள்ளது. விஜய்யின் முந்தைய படமான லியோ ரூ. 64.80 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மேற்கு வங்காளத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் சுட்டுக்கொலை</title><link>https://www.maalaimalar.com/news/national/bengal-border-force-jawan-kills-2-colleagues</link><comments>https://www.maalaimalar.com/news/national/bengal-border-force-jawan-kills-2-colleagues#comments</comments><guid isPermaLink="false">83ea0499-b969-4f2f-b24d-1ce217d6070d</guid><pubDate>Fri, 24 Jul 2026 07:00:53 +0000</pubDate><atom:updated>2026-07-24T07:00:53.860Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மேற்கு வங்காளம்,BSF,எல்லை பாதுகாப்பு படை,west bengal</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/xz06gium/jawan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/xz06gium/jawan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்காள மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ள எல்லை பாதுகாப்பு படை முகாம் ஒன்றில், காவலில் வைக்கப்பட்டு இருந்த வீரர் ஒருவர், அங்கு பணியில் இருந்த மற்றொரு வீரரிடம் இருந்து துப்பாக்கியை பறித்து சரமாரியாக சுட்டார்.</p><h2>எல்லை பாதுகாப்பு படை வீரர்கள்</h2><p>இந்த சம்பவத்தில், 2 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டனர். மற்றொருவர் காயமடைந்தார். இந்த சம்பவம் மால்டா மாவட்டம், பைஷ்ணப்நகர் பகுதியில் உள்ள 119-வது பட்டாலியன் தலைமையகத்தில் நடந்தது. இந்த சம்பவத்தில் சக வீரர் சிவம்குமார் மிஸ்ரா என்பவர் ஈடுபட்டுள்ளார். இவர் கடுமையான மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.</p> <p>இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-</p><p>எல்லை பாதுகாப்பு படை வீரர் சிவம்குமார் மிஸ்ரா ராணுவ கோர்ட்டு உத்தரவின்பேரில் 119-வது பட்டாலியன் தலைமையகத்தில் காவலில் வைக்கப்பட்டு இருந்தார்.</p><p>நேற்று மாலை அவர் பணியில் இருந்த வீரர் வைத்திருந்த துப்பாக்கியை வலுக்கட்டாயமாக பறித்தார். பின்னர் அந்த துப்பாக்கியால் அருகில் இருந்த ராணுவ முகாம்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டார். இதில் 3 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் குண்டு பாய்ந்து காயமடைந்தனர்.</p> <h2>பாதுகாப்புப் படையினர் கைது</h2><p>உடனடியாக அவர்கள் மால்டா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 2 உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். காயமடைந்த மற்றொரு வீரருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் நடந்த உடனேயே, சிவம்குமார் மிஸ்ராவை எல்லை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.</p> <p>இந்த சம்பவத்தில் பலியான எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பீகாரை சேர்ந்த அஜய்குமார் சிங் (வயது 51), மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த அம்படார் சுரேஷ் (36) என அடையாளம் காணப்பட்டு உள்ளது. காயம் அடைந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் பிகாஸ் பிரம்மா சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக உள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.</p><p>இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.</p>]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் விளையாட்டு: இந்தியா இன்று பங்கேற்கும் போட்டிகள்</title><link>https://www.maalaimalar.com/sports/india-games-in-commenwealth-today</link><comments>https://www.maalaimalar.com/sports/india-games-in-commenwealth-today#comments</comments><guid isPermaLink="false">7b51e1c0-1aef-4035-ba9f-64a566042020</guid><pubDate>Fri, 24 Jul 2026 06:56:28 +0000</pubDate><atom:updated>2026-07-24T06:56:28.189Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,காமன்வெல்த் போட்டி,commenwealth games,glascow,கிளாஸ்கோ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/fbihvfci/india.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ india]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/fbihvfci/india.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>23-வது  காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது.  ஆகஸ்ட் 2-ம் தேதி வரை 11 நாட்கள் இந்தப் போட்டி நடைபெறுகிறது. </p><h2>மொத்தம் 74 நாடுகள்</h2><p>இதில் காமன்வெல்த் கூட்டமைப்பில் இருக்கும் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா உள்பட 74 நாடுகளில் இருந்து 3 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர் .</p><p>தடகளம், பளு தூக்குதல், குத்துச்சண்டை, நீச்சல், கூடைப்பந்து (3x3), ஜிம்னாஸ்டிக் (ஆர்ஸ்டிக்), சைக்கிளிங், ஜூடோ, நெட்  பால், பவுல்ஸ் வலு தூக்குதல் (பாரா பிரிவினருக்கு மட்டும்) ஆகிய 11  விளையாட்டுகள் 215 பிரிவுகளில் நடைபெறுகிறது. இதில்  6 விளையாட்டுகள் பாரா பிரிவினருக்கு நடத்தப்படுகிறது.</p><h2>தேசிய கொடி </h2><p>இதில் இந்தியா சார்பில் 126 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது. இதில் 78 பேர் வீரர்கள், 48 வீராங்கனைகள் கலந்துகொள்கிறார்கள். 8 விளையாட்டுகளில் பங்கேற்கிறார்கள். 5 பாரா விளையாட்டுகளில் கலந்துகொள்கிறார்கள்.</p><p>பிரமாண்டமாக நடைபெற்ற தொடக்க விழாவில் தேசிய கொடியை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பளு தூக்கும் வீராங்கனை  மீராபாய் சானு, குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா ஆகியோர் ஏந்திச்சென்றனர். இன்று முதல் போட்டிகள் ஆரம்பமாகிறது.</p><p>இந்தியா இன்று பங்கேற்கும் போட்டிகளின் விவரம் வருமாறு:</p><p>ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் (பிற்பகல் 2:30) - ஆண்கள் அணிகள் பிரிவு இறுதிப் போட்டி மற்றும் தனிநபர் தகுதிச்சுற்று நடக்கிறது. இதில் தபன் மொஹந்தி, சுவாதிஷ்  தபேஷ்வர்நாத் தாஸ், யோகேஷ்வர் சிங் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.</p><p>நீச்சல் மற்றும் பாரா நீச்சல் (பிற்பகல் 3.40) ஆண்கள் 100மீ ப்ரீஸ்டைல் தகுதிச்சுற்றில் ரவி வீரா வெங்கட பவானி கார்த்திக் புடிகனா, ஆண்கள் 100மீ ப்ரீஸ்டைல் தகுதிச்சுற்றில் இமாம் அலி.  ஆண்கள் 50மீ பேக்ஸ்ட்ரோக்  தகுதிச்சுற்றில் ஸ்ரீஹரி நடராஜ் ஆகியோா களம் காணுகிறார்கள்.</p><p>பாரா வலு தூக்குதலில் மாலை 5.40 மணிக்கு ஆண்கள் லைட்வெயிட் இறுதிப்போட்டியில் அசோக், பரம்ஜீத் குமார் ஆகியோரும், மாலை 7:24 மணிக்கு பெண்கள் லைட்வெயிட் இறுதிப்போட்டியில் ஜஸ்பிரீத் கவுர், சுமன் தேவி ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.</p><p>லான் பவுல்ஸ் போட்டியில் இரவு 7:30 மணிக்கு நடக்கும் பெண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் பிங்கி-ரூபா ராணி டிர்கி ஜோடி தென் ஆப்பிரிக்காவின் தபெலோ முவாங்கோ-ஜாக்கி ஜான்ஸ் வான் ரென்ஸ் பர்க் ஜோடியுடன் மோதுகிறது. இரவு 10.20 மணிக்கு நடக்கும் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டதில் இந்தியாவின் புதுல் சோனோவால்-பாக்லாந்து தீவை சேர்ந்த செசில் அலெக்சாண்டர் மோதுகிறார்கள்.</p><p>பாரா வலு தூக்குதலில் இரவு 10:40 மணிக்கு  பெண்களுக்கான ஹெவி வெயிட் பிரிவு இறுதிப்போட்டி நடக்கிறது. இதில் கஸ்தூரி ராஜாமணி பங்கேற்கிறார். அதிகாலை 12:29 மணிக்கு நடக்கும் ஆண்களுக்கான ஹெவி வெயிட் பிரிவு இறுதிப்போட்டியில் சுதிர், ஜந்து குமார் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.</p><h2>குத்துச்சண்டை</h2><p>குத்துச்சண்டை போட்டியில்  இரவு 11 மணிக்கு நடக்கும் ஆண்களுக்கான 55 கிலோ பிரிவு போட்டி ஒன்றில் இந்தியாவின் ஜடுமணி சிங், ஸ்காட்லாந்தின் ஆரோன் கல்லன் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-22-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-22-july-2026#comments</comments><guid isPermaLink="false">07faf4ec-9c5b-4385-ab8c-543b6cbe670b</guid><pubDate>Wed, 22 Jul 2026 04:45:36 +0000</pubDate><atom:updated>2026-07-24T06:53:51.310Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/vymt58ob/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/vymt58ob/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-31">சென்னையில் நாளை (23.07.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்...</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/1635-special-bus-running-across-tamilnadu-for-weekly-holidays">வார விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1,635 சிறப்பு பஸ்கள் இயக்கம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rail-one-app-discount-offer-extended-until-march-31">ரெயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: 'ரெயில் ஒன்' செயலி தள்ளுபடி சலுகை மார்ச் 31-ந்தேதி வரை நீட்டிப்பு</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-arresting-protesters-reveals-ruling-partys-double-standard-regarding-neet">போராடுவோரை கைது செய்வது நீட் விஷயத்தில் ஆளுங்கட்சியின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது  - உதயநிதி</a></p><p><em>*  ‘நீட்’ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றம் நோக்கி செல்ல முயன்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி</em></p><p><em>*  மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்.</em></p><p><a href="https://www.maalaimalar.com/sports/the-pain-of-defeat-is-very-intense-messi-melts-on-instagram" rel="nofollow">தோல்வி கொடுத்த வலி மிக கடுமையானது..!- இன்ஸ்டாவில் மெஸ்சி உருக்கம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadhav-arjuna-crushing-of-democracy-in-capital-strongly-condemnable">தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது! - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</a></p><p><em>* தமிழகத்தின் எதிர்ப்புக் குரலை இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் எதிரொலிக்கிறது. </em></p><p><em>* மாணவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, ஒன்றிய அரசு உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.</em></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-only-scrapping-neet-will-provide-a-lasting-solution-to-all-these-problems">நீட் தேர்வை ரத்து செய்வது மட்டுமே அனைத்திற்கும் நிரந்தர தீர்வை அளிக்கும் - மு.க.ஸ்டாலின்</a></p><p><em>* நீட் பெரிய அளவிலான முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.</em></p><p><em>* திமுக ஆரம்பத்திலிருந்தே நீட் தேர்வை எதிர்த்து வருகிறது.</em></p> <p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-22-07-2026">GOLD PRICE TODAY: ராக்கெட் வேகத்தில் எகிறிய தங்கம் விலை! - எவ்வளவு தெரியுமா?</a></p><p><em>* சர்வதேச பொருளாதார சூழல், போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. </em></p><p><em>* தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. </em></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/nagercoil-sabarivarman-murdered-case-transferred-to-cbcid">நாகர்கோவில் சிறையில் மரணமடைந்த சபரிவர்மன் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்</a></p><p><em>* கைது செய்யப்பட்ட சிறைக் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.</em></p><p><em>* சிறை கைதிகள் 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.</em> </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/tax-exemption-for-generic-drugs-in-us-for-2-years-donald-trump-announcement">அமெரிக்காவில் ஜெனரிக் மருந்துகளுக்கு 2 ஆண்டுகள் வரிவிலக்கு: டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!...</a> </p><p>"அமெரிக்காவிற்குள்ளேயே ஜெனரிக் மருந்துகளின் உற்பத்தியை மீண்டும் கொண்டுவருவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-vettri-kazhagam-condemns-rahul-gandhi-arrest-and-neet-issues">டெல்லியில் ராகுல் காந்தி கைது-நீட் தேர்வுப் பிரச்சனை: ஒன்றிய அரசுக்கு எதிராக தவெக கடும் கண்டனம்!... </a></p><p> "நீட் தேர்வால் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் பாதிப்பிற்குள்ளாவது நின்றபாடில்லை."</p><p><a href="https://www.maalaimalar.com/sports/ben-stokes-century-for-durham">சர்வதேச கிரிக்கெட் ஓய்வுக்குப் பின் புதிய அத்தியாயம்: டர்ஹாம் அணிக்காக அபார சதமடித்து பென் ஸ்டோக்ஸ் சாதனை!... </a></p><p>ஆட்டத்தின் இடையே தசைப்பிடிப்பு ஏற்பட்ட போதிலும், கடைசி வரை களத்தில் நின்றார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/keeladi-11th-phase-excavation">கீழடி 11-ஆம் கட்ட அகழாய்வு: புதிய தொழிற்கூடம் மற்றும் நீர் மேலாண்மை அமைப்புகள் கண்டுபிடிப்பு!... </a></p><p>நடப்பு அகழாய்வுப் பருவத்தின் முதல் நான்கு மாதங்களிலேயே 1,300-க்கும் மேற்பட்ட அபூர்வத் தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/wildfire-intensifies-in-the-us">அமெரிக்காவில் தீவிரமடையும் காட்டுத் தீ: பிளசண்டன் பகுதியில் 950 ஏக்கர் சாம்பல்; மக்கள் வெளியேற்ற உத்தரவு!... </a></p><p>சுமார் 4,900-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/trump-posts-comparing-with-previous-wars">'ஈரான் போரில் 18 பேர் மட்டுமே பலி': முந்தைய போர்களுடன் ஒப்பிட்டு டிரம்ப் பதிவு!... </a></p><p>டிரம்பின் இந்தப் பதிவுக்கு எதிர்க்கட்சியினரும் மனித உரிமை அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-ongoing-mineral-plunder-in-the-southern-districts-must-be-stopped-a-cbi-inquiry-is-needed">தொடரும் தென் மாவட்ட கனிமக் கொள்ளையை தடுக்க வேண்டும் - சிபிஐ விசாரணை தேவை!- அன்புமணி வலியுறுத்தல்</a></p><p>எந்த அளவுக்கு கனிமக் கொள்ளை நடந்திருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதை கனிமக் கொள்ளையர்களிடம் இருந்து வசூலிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-temple-land-scam-aiadmk-protest-announcement" rel="nofollow">பழனி கோவில் நிலம் மோசடி விவகாரம்- அ.தி.மு.க ஆர்ப்பாட்டம் அறிவிப்பு</a></p><p>* மடத்திற்குச் சொந்தமான நிலத்தை, தனியாருக்கு பத்திரப் பதிவு செய்து கொடுத்ததன் மர்மம் விளங்கவில்லை.</p><p>* நிலத்தை விற்பதற்கான பத்திரம் தயாரித்து, விற்பனைப் பத்திரத்தில் கையெழுத்திட்ட நபர்கள் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/spirituality/increase-in-pilgrim-arrivals-at-tirupati-distribution-of-time-slot-darshan-tickets-cancelled">திருப்பதியில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு- நேர ஒதுக்கீடு தரிசன டிக்கெட் விநியோகம் ரத்து</a></p><p>* தரிசன டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டது தெரியாமல் ஏராளமான பக்தர்கள் டிக்கெட் வழங்கும் மையங்களில் நேற்று இரவு முதல் விடிய, விடிய காத்திருந்தனர். </p><p>* நாளை மறுநாள் தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் நாளை வழக்கம்போல் வழங்கப்படும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/premalatha-says-people-will-view-him-as-a-hero-only-if-he-does-what-vijay-said">விஜய் சொன்னதை செய்தால் தான் மக்கள் ‘ஹீரோ’வாக பார்ப்பார்கள்- பிரேமலதா</a></p><p>* தே.மு.தி.க. சார்பில் ஆகஸ்ட் 1-ந் தேதி ஒகேனக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.</p><p>* விவசாயிகளை காக்க தமிழக அரசு விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யவேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ponni-rice-price-hike">அரிசி விலை கிடுகிடு உயர்வு- பொன்னி அரிசி கிலோ ரூ.80-க்கு விற்பனை</a></p><p>* நாட்டில் பரவலாக ஏற்பட்டுள்ள வறட்சி, நெல் உற்பத்தியை வெகுவாக பாதித்துவிட்டது. </p><p>*கர்நாடக மாநிலத்தில் விளைச்சல் குறைந்ததால் ஏற்பட்டுள்ள இந்த விலையேற்றம் கவலை தருவதாக உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-says-kerala-turning-tamil-nadu-into-a-garbage-bin">தமிழகத்தை குப்பைத் தொட்டியாக்கும் கேரளம்- டிடிவி தினகரன் கண்டனம்</a></p><p>* பெரிய அளவிலான மருத்துவக் கழிவுகள் அதிகாரிகளின் கவனத்திற்குப் படாமல் தமிழக எல்லைக்குள் நுழைந்தது எப்படி?</p><p>* தமிழகத்தை குப்பைத் தொட்டியாகப் பயன்படுத்தும் இத்தகைய செயல்பாடுகளைத் தடுக்கத் தவறியுள்ள தவெக அரசின் அலட்சியமும் மெத்தனமும் கடும் கண்டனத்திற்குரியது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/students-arrested-protest-demand-cancellation-of-neet-exam">நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது</a></p><p><em>* அனுமதியின்றி போராட்டம் நடத்திய மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.</em></p><p><em>* ராயப்பேட்டையில் புதுக்கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.</em></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ips-officers-transferred-in-tamil-nadu-2">தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்</a></p><p><em><strong>* சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவப்பிரசாத், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணியிட மாற்றம்.</strong></em></p><p><em><strong>* திருச்சி ஆயுதப்படை டிஐஜி விஜயலட்சுமி சென்னை ஊர்க்காவல் படை டிஐஜியாக பணியிட மாற்றம்.</strong></em></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-government-must-take-measures-to-curb-the-rise-in-rice-prices">அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!- அன்புமணி வலியுறுத்தல்</a></p><p>* அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த இந்தியாவிலிருந்து அரிசி ஏற்றுமதிக்கு  தடை விதிக்க வேண்டும்.</p><p>* மொத்த வணிகர்களின் அரிசி கையிருப்புக்கு உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/sc-allows-cbi-probe-to-armstrong-murder-case">ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு- சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி</a></p><p>* சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை ஆட்சி மாற்றத்துக்கு பிறகு தற்போதைய த.வெ.க. அரசு திரும்பப் பெற்றது. </p><p>* வழக்கு விசாரணை செப்டம்பர் மாதம் 2-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. </p> <p><a href="https://www.maalaimalar.com/sports/west-indies-win-fifth-odi-new-zealand-take-series-3-2">5வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி: ஒருநாள் தொடரை 3-2 என வென்றது நியூசிலாந்து</a></p><p>* ரூதர்போர்ட், ஹெட்மயர் ஜோடி பொறுப்புடன் ஆடி 95 ரன்களை சேர்த்தது. </p><p>* நியூசிலாந்து சார்பில் ஜேக்கப் டபி, ஜெய்டன் லெனாக்ஸ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/china-open-badminton-ayush-shetty-advances-to-second-round">சீனா ஓபன் பேட்மிண்டன்: ஆயுஷ் ஷெட்டி 2வது சுற்றுக்கு முன்னேற்றம்</a></p><p>* சீனா ஓபன் பேட்மிண்டன் தொடர் அங்குள்ள சாங்சோவ் நகரில் நடந்து வருகிறது.</p><p>* இதில் அதிரடியாக ஆடிய ஆயுஷ் ஷெட்டி முதல் செட்டை 21-17 என வென்றார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/delhi-security-concerns-students-protest-16-key-metro-stations-closed">தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம் - டெல்லியில் 16 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடல்!</a></p><p>* ராஜீவ் சௌக், மண்டி ஹவுஸ் உட்பட 16 ஸ்டேஷன்கள் தற்காலிகமாக மூடல்.</p><p>* 3 நிலையங்களில் ஒரு பாதையிலிருந்து மற்றொரு பாதைக்கு மாறுவதற்கான இணைப்பு ரெயில் சேவை தொடர்ந்து இயங்கும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rahul-gandhi-arrested-in-delhi-cm-vijay-condemns">டெல்லியில் ராகுல் காந்தி கைது - முதலமைச்சர் விஜய் கண்டனம்</a></p><p>* வாக்கு அரசியல் செய்வதற்காக, பொய்யான வாக்குறுதிகளை நாம் ஒருபோதும் அளிக்கமாட்டோம்.</p><p>* மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/koyambedu-bus-terminus-presents-a-pathetic-sight">பரிதாபமாக காட்சி தரும் கோயம்பேடு பஸ் நிலையம்- சமூக விரோதிகளின் கூடாரமாக மாறுகிறது</a></p><p>* கோயம்பேடு என்பது வெறும் பஸ் நிலையமல்ல, ஒரு தலைமுறையின் பயண நினைவகம்</p><p>* போலீஸ் ரோந்தும் இல்லாததால் பொதுமக்கள் உள்ளே செல்லவே அஞ்சுகிறார்கள். கழிப்பறைகளும் பராமரிக்கப்படாததால் துர்நாற்றம் வீசுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/student-injured-in-delhi-protest-is-stable-say-doctors">டெல்லி போராட்டக்களத்தில் காயமடைந்த மாணவி நலமுடன் உள்ளார்-மருத்துவர்கள் அறிவிப்பு!... </a></p><p>இச்சம்பவத்தில் 100-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களும், 118 காவல் துறையினரும் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/dont-waste-our-time-supreme-court-refuses-urgent-listing-petiton-against-police-action">எங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் - சுப்ரீம் கோர்ட் சாடல்</a></p><p>* டெல்லியில் மாணவர்கள் மீது தடியடி நடத்தியது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.&nbsp;</p><p>* தாக்குதல் காணொளிகளை எங்களுக்கு பார்க்க ஆர்வமும், நேரமும் இல்லை என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/two-more-days-granted-to-apply-for-mbbs">எம்.பி.பி.எஸ். படிப்புக்கு விண்ணப்பிக்க மேலும் 2 நாட்கள் அவகாசம்</a></p><p>* எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவ படிப்பில் 15 ஆயிரம் இடங்கள் உள்ளன.</p><p>* ஆகஸ்ட் முதல் வாரத்தில் தரவரிசை பட்டியல் வெளியிட வாய்ப்பு உள்ளது. </p> <p><a href="https://www.maalaimalar.com/sports/pv-sindhu-advances-to-second-round-at-china-open-badminton">சீனா ஓபன் பேட்மிண்டன்: 2வது சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து</a></p><p>* சீனா ஓபன் பேட்மிண்டன் தொடர் அங்குள்ள சாங்சோவ் நகரில் நடந்து வருகிறது.</p><p>* வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை பி.வி.சிந்து 21-10 என வென்றார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rain-likely-chance-to-chennai-3">சென்னையில் மழைக்கு வாய்ப்பு </a></p><p>* தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/hindu-religious-charitable-endowments-department-extension-of-deadline-to-apply-for-trustee-posts-in-214-temples">அறங்காவலர் நியமனத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - இந்து சமய அறநிலையத்துறை</a></p><p>* கோயில் அறங்காவலர் விண்ணப்ப அவகாசம் ஆகஸ்ட் 12 வரை நீட்டிப்பு!</p><p>* இணையதளம் அல்லது அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க அரசு அறிவுறுத்தல்!</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/opposition-uproar-both-houses-adjourned-all-day">எதிர்க்கட்சிகள் அமளி: இரு அவைகளும் நாள்முழுவதும் ஒத்திவைப்பு</a></p><p>* எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.</p><p>*இதனால் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/marco-rubio-iran-demands-strait-of-hormuz-would-set-a-dangerous-precedent-tells-asian-leaders">ஹார்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கோரிக்கை ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்கும்: ஆசிய தலைவர்களிடம் மார்கோ ரூபியோ எச்சரிக்கை</a></p><p>* மேற்கு ஆசியப் போரில் அமெரிக்கா அதிக கவனம் செலுத்தி வந்தாலும், நாங்கள் 100 சதவீதம் ASEAN அமைப்புடன் துணை நிற்கிறோம்.</p><p>* ஒரு நாடு சர்வதேச நீர் வழிப்பாதையை கட்டுப்படுத்தவும், அதற்கான கட்டணத்தை வசூலிக்கவும் கட்டணம் செலுத்தாத கப்பல்களை தகர்க்கவும் முடிவு செய்யக்கூடிய ஒரு முன்னுதாரணத்தை மத்திய கிழக்கில் நாம் உருவாக்கினால், அது மிகவும் ஆபத்தான ஒரு முன்னுதாரணமாக அமையும்.</p><figure><img alt="Marco Rubio" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/z9dpk3e8/MarcoRupio.jpg" /></figure><p><a href="https://www.maalaimalar.com/news/national/how-to-end-students-protest-rahul-gandhi-clarifies">மாணவர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர செய்ய வேண்டியது இதுதான்: ராகுல் காந்தி விளக்கம்</a></p><p>* மாணவர்கள் அமைதியான வழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.</p><p>* நீட் தேர்வில் ஓராண்டுக்கு 1.32 லட்சம் கோடி புழங்குகிறது.</p><h2><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-morning-foods-scheme-name-chang">முதல்வர் காலை உணவுத் திட்டத்தின் பெயரை மாற்றியது த.வெ.க. அரசு</a></h2><p>* பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.</p><p>* இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.</p><figure><img alt="Chief Minister Morning Food Scheme" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/jzvgywz8/MorningFoodSCheme.jpg" /></figure><p><a href="https://www.maalaimalar.com/news/national/annamalai-warns-students-of-delhi-protest-hijack-attempt">டெல்லி போராட்டத்தை ஹைஜாக் செய்ய முயற்சி! மாணவர்களுக்கு எச்சரிக்கை - அண்ணாமலை</a></p><p>* போராட்டத்தை ஹைஜாக் செய்ய முயற்சி நடக்கிறது.</p><p>* மத்திய அரசு உடனே பேச்சுவார்தை நடத்த வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/suvendu-attacks-mamata-abhishek-over-appeasement-politics-corruption">ஊழல், சமரச அரசியல்: மம்தா மற்றும் அபிஷேக் பானர்ஜியை விளாசிய சுவேந்து அதிகாரி</a></p><p>* இந்து மதத்தை தவறாகப் பயன்படுத்தி நீங்கள் (மம்தா) மேற்கொண்ட அந்த வகையான சமரசம் செய்து கொள்ளும் அரசியல், அடிப்படைவாதிகளின் அரசியலை விடவும் மோசமானது.</p><p>* உங்கள் உண்மையான முகத்தை நான் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துவிட்டேன். நீங்கள் ஒரு திருடன் என்பதை உங்கள் வாழ்நாளிலேயே நான் நிரூபிப்பேன்.</p><figure><img alt="Suvendu Adhikari" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/5r5brlsh/SuvenduAdhikari002.jpg" /></figure><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/david-warner-pleads-guilty-risk-of-prison">குற்றத்தை ஒப்புக்கொண்ட டேவிட் வார்னர்: சிறைக்கு செல்ல வாய்ப்பு</a></p><p>* தனது செயல் முட்டாள்தனமானது. </p><p>*மது அருந்திவிட்டு வாடகை காரில் செல்லாமல் தானே வாகனத்தை ஓட்டிச்சென்றது தவறு.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/ind-vs-zim-fear-of-failure-has-no-place-in-this-team-says-india-skipper-shreyas-iyer">இந்த அணியில் தோல்வி குறித்த பயத்திற்கு இடமில்லை: ஷ்ரேயாஸ் அய்யர்</a></p><p>* அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்களில் முடிவுகள் எங்களுக்குச் சாதகமாக அமையவில்லை. </p><p>* ஆனால் அது அணியை ஒருவருக்கொருவர் மேலும் நெருக்கமாக்கியுள்ளது.</p><figure><img alt="Shreyas Iyer" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/g61vg3lb/ShreyasIyer0002.jpg" /></figure><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/icc-odi-rankings-gill-misses-top-spot-by-one-point">ஐசிசி ஒருநாள் தரவரிசை: ஒரு புள்ளி வித்தியாசத்தில் முதலிடத்தை தவறவிட்ட கில்</a></p><p>* ஒருநாள் தொடரில் சுப்மன் கில் 802 புள்ளிகள் பெற்றுள்ளார்.</p><p>* விராட் கோலி, ரோகித் சர்மா இங்கிலாந்து தொடரில் சிறப்பாக செயல்பட்டதால் முன்னேறினர்.</p>]]></content:encoded></item><item><title>கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் கைதி அடித்துக்கொலை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/prisoner-death-at-kilpauk-mental-hospital</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/prisoner-death-at-kilpauk-mental-hospital#comments</comments><guid isPermaLink="false">c36d3fc3-b26d-4316-9dee-a0c7cab434a4</guid><pubDate>Fri, 24 Jul 2026 06:43:36 +0000</pubDate><atom:updated>2026-07-24T06:43:36.267Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>prisoner death,கீழ்ப்பாக்கம் மனநல காப்பகம்,Kilpauk Mental Hospital,கைதி கொலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/psgnk73o/kilpauk.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கீழ்ப்பாக்கம் மனநல காப்பகம்
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/psgnk73o/kilpauk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் அரவிந்தசாமி என்ற கொலை வழக்கு கைதிக்கும் ஜாகிருக்கும் இடையே திடீரென ஏற்பட்ட மோதலில் பலத்த காயமடைந்த ஜாகிர் உயிரிழந்தார்.</strong></em></p><h2>கீழ்ப்பாக்கம் மனநல காப்பகம்</h2><p>சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த மனநல காப்பகத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களும் தனி அறையில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களின் நடவடிக்கைகளை மனநல காப்பகத்தில் உள்ள காப்பாளர்கள் கவனித்து அவர்களை பாதுகாத்து வருகின்றனர்.</p> <h2>மாற்றுத்திறனாளி</h2><p>கோவை மாவட்டம் ஆழியார் பகுதியைச் சேர்ந்த ஜாகிர் என்பவரும் மனநல காப்பகத்தில் தங்கியிருந்தார்.</p><p>ஆழியார் பூங்காவில் கடந்த 2024-ம் ஆண்டு படுத்து தூங்குவதில் ஏற்பட்ட தகராறில் முதியவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாகிர் பொள்ளாச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதால் ஜாகிரை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல காப்பகத்தில் அனுமதித்து இருந்தனர்.</p> <h2>ஜாகிர் உயிரிழப்பு</h2><p>இந்த நிலையில் இந்த மனநல காப்பகத்தில் தங்கி இருந்த நெல்லையை சேர்ந்த அரவிந்தசாமி என்ற கொலை வழக்கு கைதிக்கும் ஜாகிருக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டு உள்ளது.</p><p>கழிவறையை பயன்படுத்துவது தொடர்பாக இருவரும் மோதிக்கொண்டு உள்ளனர் அப்போது அரவிந்தசாமி ஜாகிரை சரமாரியாக தாக்கி கீழே தள்ளி மிதித்துள்ளார்.</p><p>இதில் தலை மற்றும் முகத்தில் பலத்த காயமடைந்த ஜாகிர் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் ஜாகீர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.</p> <h2>போலீசார் விசாரணை</h2><p>இந்த சம்பவம் தொடர்பாக தலைமைச் செயலக காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.</p><p>அரவிந்தசாமியை இந்த வழக்கில் கைது செய்து அது தொடர்பான தகவலை கோர்ட்டில் தெரிவித்து உள்ளனர்.</p><p>அரவிந்த்சாமி மனநல காப்பகத்திலேயே தொடர்ந்து இருப்பார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p><p>இவர் தனது தாயை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு மன நல காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>Samsung Galaxy Z Fold 8 | கேமிங் பிரியர்களை கவரும் வகையில் விலை நிர்ணயம்</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/samsung-galaxy-z-fold-8-priced-to-attract-gamers</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/samsung-galaxy-z-fold-8-priced-to-attract-gamers#comments</comments><guid isPermaLink="false">fafce36a-59e1-49d8-91af-2bb3f1f40d0f</guid><pubDate>Fri, 24 Jul 2026 06:27:59 +0000</pubDate><atom:updated>2026-07-24T06:27:59.728Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Samsung,சாம்சங்,galaxy z fold 8,கேலக்ஸி Z ஃபோல்ட் 8</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/npylmqvm/Untitled-design-61.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Samsung Galaxy Z Fold 8 launched in India ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/npylmqvm/Untitled-design-61.jpg?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சாம்சங் நிறுவனம் தனது அடுத்த படைப்பான கேலக்ஸி Z ஃபோல்ட் 8 என்ற ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.</p><h3><strong>கேலக்ஸி Z ஃபோல்ட் 8 சிறப்பம்சம்:</strong></h3><p>சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்ட் 8 இதுவரை இல்லாத அளவில் இலகுவான 7.6-இன்ச் திரையுடன், 5.5-இன்ச் கவர் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இவை 120Hz வேகத்தில் இயங்குகின்றன.</p><p>வெளிப்புறங்களில் சிறந்த பார்வைத் திறனுக்காக, பிரதான பேனல் 3,000 நிட்ஸ் வரை பிரகாசத்தை தருகிறது. </p><p>இதன் உள்ளே குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப் உள்ளது. இது 16GB வரையிலான ரேம் மற்றும் 1TB வரையிலான ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. </p><p>இது ஆண்ட்ராய்டு 17 இயங்குதளத்தில் ஒன் UI 9 உடன் இயங்குகிறது. தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP48 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது.</p><p>மேலும் 4,800mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த பேட்டரியை அரை மணி நேரத்தில் 67% வரை சார்ஜ் செய்ய முடியும் என்று சாம்சங் கூறுகிறது. </p><p>இந்த ஸ்மார்ட்போன் அனைத்து விதமான கேமிங்கையும் எந்தவித இடற்பாடும் இல்லாமல் விளையாடும் வகையில், GPU Adreno 840 அம்சத்துடன் வடிமைக்கப்பட்டுள்ளது.</p><p>கேமராவைப் பொறுத்தவரை, இதில் உள்ள 200MP பிரதான கேமரா சென்சார், அதனுடன் 50MP அல்ட்ரா-வைட் மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 10MP டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன.</p><p>மேலும் டூயல் 50MP அமைப்புடன், டூயல் ரெக்கார்டிங் மற்றும் மை ஃபேன்கேம் மூலம் செல்ஃபிகளை ஆட்டோ-டிராக்கிங் செய்வது போன்ற அம்சங்களும் உள்ளன.</p><p>இதில் 8-இன்ச் பிரதான டிஸ்ப்ளே மற்றும் 6.5-இன்ச் கவர் ஸ்கிரீன் உள்ளன. இவை இரண்டும் 3.000 நிட்ஸ் உச்சபட்ச பிரகாசத்தை எட்டுகின்றன. மேலும் விரிக்கும்போது வெறும் 4.1 மிமீ தடிமனைக் கொண்டுள்ளது.</p><p>மேலும், 5,000mAh பேட்டரியைக் கொண்ட முதல் சாம்சங் மடிக்கக்கூடிய போன் இதுவாகும். மேலும் இது ஏழு ஆண்டுகளுக்கு உறுதியளிக்கப்பட்ட OS மற்றும் பாதுகாப்பு அப்டேட்களுடன், ஜெமினி நோட்புக் மற்றும் நவ் ப்ரீஃப் போன்ற ஆழமான கேலக்ஸி Al கருவிகளுடனும் வருகிறது.</p><h3><strong>விலை மற்றும் விற்பனைக்கு வரும் தேதி:</strong></h3><p>இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்ட் 8-ன் 256GB மாடலின் விலை ரூ. 1,79,999 ஆகவும், 512GB மாடலின் விலை ரூ. 1,99,999 ஆகவும், மற்றும் 1TB மாடலின் விலை ரூ. 2,39,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த போன் லாவெண்டர், கிராஃபைட் மற்றும் கிரீம் ஆகிய வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>ஆன்லைனில் மட்டும் பிரத்யேகமாக பிஸ்தா நிறத்திலும் கிடைக்கிறது. இந்த போன் ஆகஸ்ட் 7 முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்க்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>குஜராத்தை துவம்சம் செய்த இடைவிடாத கனமழை: 1200 பேர் மீட்பு, 22 ஆயிரம் பேர் இடம்பெயர்வு</title><link>https://www.maalaimalar.com/news/national/flood-like-situation-worsens-in-gujarat-22000-relocated-1200-rescued-as</link><comments>https://www.maalaimalar.com/news/national/flood-like-situation-worsens-in-gujarat-22000-relocated-1200-rescued-as#comments</comments><guid isPermaLink="false">1ed662b2-557f-4802-a067-949d43e34fb3</guid><pubDate>Fri, 24 Jul 2026 06:22:54 +0000</pubDate><atom:updated>2026-07-24T06:22:54.175Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வெள்ளம்,Heavy Rain,குஜராத்,gujarat,Gujarat Rains,கனமழை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/brq33tpe/GujaratRains0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ குஜராத் மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/brq33tpe/GujaratRains0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத், அகமதாபாத், கேடா தபி மற்றும் டாங்ஸ், வால்சாட் உள்ளிட்ட மாவட்டங்களில் புதன்கிழமையில் இருந்து இடைவிடாது கனமழை கொட்டித்தீர்த்தது. நேற்று மாலை வரையிலும் இந்த கனமழை நீடித்தது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தன.</p><h2>1200 மி.மீ. மழை</h2><p>குறிப்பாக வால்சாட் மாவட்டத்தில் உள்ள உம்பேர்கான் தாலுகா இந்த கனமழையால் கடுமையாக பாதித்தது. இங்கு 36 மணி நேரத்தில் 1200 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.</p><p>வால்சாட் பகுதிகளில் இருந்து 1200 பேர் மீட்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை காரணமாக 22 ஆயிரம் பேர் சொந்த இடங்களில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு இடம் பெயர்ந்துள்ளனர்.</p><h2>மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் NDRF மற்றும் SDRF</h2><p>பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புக்குழு (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழு (SDRF) குவிக்கப்பட்டுள்ளது. நவ்சாரி மற்றும் வால்சாட் மாவட்டங்களில் ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் நிவாரணப்பணி, மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><figure><img alt="குஜராத் மழை" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/yh037wsx/GujaratRains0002.jpg" /></figure> <p>மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்து. பிரதமர் மோடி குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேலிடம் இது தொடர்பாக பேசியுள்ளார். சாத்தியமான அனைத்து வகை உதவிகளும் மத்திய அரசு வழங்கும் என உறுதி அளித்துள்ளார்.</p><p>வால்சாட் மற்றும் நவ்சாரி மற்றும் சூரத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அருகில் உள்ள இடங்கள் மற்றும் கிராமங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன.</p><h2>ரெட் அலர்ட் எச்சரிக்கை</h2><p>அகமதாபாத்தில் உள்ள 22 தாலுக்காவில் 12 மணி நேரத்தில் 200 மி.மீ.-க்கு அதிகமான மழை பதிவாகியுள்ளது. </p><p>இந்திய வானிலை மையம், இன்று வரை கனமழை முதல் அதிகன மழை பெய்யக்கூடும் என பரூச், சூரத், நவ்சாரி, வால்சாட், டாங்ஸ், நர்மதா, வதோதரா, சோட்டா உதேபூர், பஞ்ச்மஹால், தாஹோத் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தவெக அரசை கவிழ்க்க முயன்ற வழக்கு - நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி ஆஜர்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-appears-in-court-after-one-month</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-appears-in-court-after-one-month#comments</comments><guid isPermaLink="false">f825bde0-54d3-44bf-a1b3-9e574144b0ce</guid><pubDate>Fri, 24 Jul 2026 06:06:45 +0000</pubDate><atom:updated>2026-07-24T06:06:45.405Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,senthil balaji,செந்தில்பாலாஜி,tvk,Horse Trading,குதிரை பேரம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/zpodrq5h/senthilbalaji.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Senthil balaji]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/zpodrq5h/senthilbalaji.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கில் முன்ஜாமின் உத்தரவை பெறுவதற்காக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார்.</strong></em></p><h2>குதிரை பேரம்</h2><p>ஊத்தங்கரை தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF">செந்தில்பாலாஜி</a>, அவரது தம்பி அசோக்குமார் ஆகியோருக்கு கடந்த 8-ந்தேதி நிபந்தனை முன்ஜாமின் வழங்கி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இருவரும் காலை மற்றும் மாலையில் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.</p><h2>செந்தில்பாலாஜி </h2><p>கடந்த 8-ந்தேதி முன்ஜாமின் கிடைத்த பிறகும் செந்தில்பாலாஜி தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வந்தார். போலீசார் தேடி வந்த நிலையில் முன்ஜாமின் கிடைத்த பிறகும் அவர் தலைமறைவாக இருந்தார்.</p><p>இதற்கிடையே, குதிரை பேர வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்போது தங்களை துன்புறுத்தக்கூடாது என்று போலீசாருக்கு உத்தரவிடக்கோரி செந்தில்பாலாஜி, அவரது தம்பியும் மனு தாக்கல் செய்து இருந்தனர். அதில், ஊத்தங்கரை த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் எங்களுக்கு இந்த ஐகோர்ட்டு நிபந்தனை முன்ஜாமின் வழங்கியது. ஐகோர்ட்டு விதித்துள்ள நிபந்தனைகளை கண்டிப்புடன் பின்பற்ற தயாராக உள்ளோம். ஆனால், தமிழ்நாடு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, 'கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கணக்கு தீர்க்க வேண்டியுள்ளது' என்று வெளிப்படையாக பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார். அதன்படி, ஏதேனும் ஒரு வழக்கில் எங்களை கைது செய்ய போலீசாருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.</p> <p>குதிரை பேர வழக்கில் எங்களை காவலில் வைத்து விசாரிக்க அவசியமில்லை என்று ஐகோர்ட்டு முன்ஜாமின் வழங்கிய பின்னும், தொடர்ந்து சோதனைகள் நடத்தப்படுகின்றன. சட்டப்படியான எந்த புலன் விசாரணையயும் நாங்கள் தடுக்கவில்லை. நிலுவையில் உள்ள வழக்குகளின் விசாரணைக்கு நாங்கள் தேவைப்படுவதாக இருந்தால். பி.என்.எஸ்.எஸ்., சட்டத்தின் 35 (3) வது பிரிவின் கீழ் முறையாக நோட்டீஸ் அனுப்ப போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளோம். சோதனை, விசாரணை என்ற பெயரில் எங்களை துன்புறுத்தக்கூடாது என்று போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.</p> <p>இந்த மனுவை விசாரித்த நீதிபதி, குதிரை பேர வழக்கில் முன்ஜாமின் வழங்கப்பட்டும் இதுவரை மனுதாரர்கள் கீழ் கோர்ட்டில் சரணடைந்து முன்ஜாமின் பெறவில்லை. இந்த சூழ்நிலையில், தங்களை துன்புறுத்தக்கூடாது என கோர முடியாது. முன்கூட்டியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனால் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.</p><h2>செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்</h2><p>இந்நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜரானார். சுமார் ஒரு மாத காலமாக தலைமறைவாக இருந்த நிலையில், முன்ஜாமின் நிபந்தனையின்படி சூரிட்டி வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர்களுடன் செந்தில்பாலாஜி வந்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>தமிழக அளவில் முதலிடம்: சுற்றுலாவில் புதிய வரலாறு படைக்கும் திருச்சி மாவட்​டம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/trichy-top-in-tamilnadu-district-creates-new-history-in-tourism</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/trichy-top-in-tamilnadu-district-creates-new-history-in-tourism#comments</comments><guid isPermaLink="false">658313fb-19f3-4a84-8622-bc3f993b9957</guid><pubDate>Fri, 24 Jul 2026 05:50:53 +0000</pubDate><atom:updated>2026-07-24T05:50:53.956Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்சி,சுற்றுலா,thiruchirapalli</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/j7af13t9/Trichy0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருச்சி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/j7af13t9/Trichy0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சுற்–று–லாத்–துறை நாட்–டின் மொத்த உள்–நாட்டு உற்–பத்–தி–யில் (ஜி.டி.பி.) சுமார் 5.22 சத–வீத பங்–க–ளிப்பை வழங்–கு–கிறது. மேலும், இது கோடிக்–க–ணக்–கான மக்–க–ளுக்கு நேர–டி–யா–க–வும், மறை–மு–க–மா–க–வும் வேலை–வாய்ப்–பு–களை உரு–வாக்–கித் தரு–கிறது. ஆன்–மி–கச் சுற்றுலா, மருத்–துவ சுற்–றுலா, கலா–சார சுற்–றுலா, சூழ–லி–யல் சுற்–றுலா என பல பிரி–வு–களில் இந்–திய சுற்–று–லாத்–துறை உலக அள–வில் வேக–மாக வளர்ந்து வரு–கிறது. உல–கப் பொரு–ளா–தார தர–வ–ரி–சை–யில் இந்–தியா தற்–போது 8-வது பெரிய சுற்–று–லாப் பொரு–ளா–தார நாடாக உரு–வெ–டுத்–துள்–ளது.</p><h2>திருச்சி முதலிடம்</h2><p>இந்–தி–யா–வின் ஒட்–டு–மொத்த உள்–நாட்டு சுற்–று–லாப் பய–ணி–கள் வரு–கை–யில் உத்–த–ர– பி–ர–தே–சம் முதல் இடத்–தி–லும், தமிழ்–நாடு இரண்டாம் இடத்–தி–லும் உள்–ளன. வெளி–நாட்–டுப் பய–ணி–கள் வரு–கை–யைப் பொறுத்–த–வரை மராட்–டி–யம், குஜ–ராத் போன்ற மாநி–லங்–களுக்கு அடுத்–த–ப–டி–யாக தமிழ்–நாடு மிக முக்–கிய இடத்–தைப் பிடித்–துள்–ளது.</p><p>ஒட்–டு–மொத்–த–மாக கலா–சா–ரம், ஆன்–மி–கம் மற்–றும் மருத்–து–வச் சிகிச்–சை–க–ளுக்–காக இந்–தியா வரும் சுற்–றுலா பய–ணி–க–ளின் முதன்மை தேர்–வா–கத் தமி–ழ–கம் விளங்–கு–கிறது. தமி–ழக சுற்–று–லாத் துறை–யின் அதி–கா–ரப்–பூர்வ சமீ–பத்–திய புள்–ளி –வி–வ–ரங்–க–ளின்–படி கடந்த ஆண்–டில் மட்–டும் தமிழ்–நாட்–டிற்கு சுமார் 30.80 கோடி உள்–நாட்டு சுற்–று–லாப் பய–ணி–களும் மற்–றும் 11.61 லட்–சம் வெளிநாட்டுச் சுற்–று–லாப் பய–ணி–களும் வருகை தந்–துள்–ள–னர்.</p><h2>மாதத்திற்கு 23 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை</h2><p>தமி–ழ–கத்–தில் உள்ள 38 மாவட்–டங்–களில் திருச்சிதான் சுற்–றுலா பய–ணி–களை சுண்டி இழுத்து வரு–வதில் முத–லி–டத்–தில் உள்–ளது. மாதத்–திற்கு சுமார் 23 லட்–சம் சுற்–றுலா பய–ணி–கள் திருச்–சிக்கு வரு–கி–றார்–கள். இதற்கு கார–ணம் திருச்சி தமிழ்–நாட்–டின் மத்–திய பகுதி என்–பது மட்–டும் அல்ல. காஷ்–மீர் முதல் கன்–னி–யா–கு–மரி வரை இயக்–கப்–படும் ரெயில்–களில் பெரும்–பா–லா–னவை திருச்சி வழியாக செல்–வ–தும், திருச்–சி–யில் சர்–வ–தேச விமான நிலை–யம் இருப்–ப–தும் ஒரு கார–ணம் ஆகும்.</p><p>இது தவிர என்.ஐ.டி, மத்–திய சட்–டப்–பல்–க–லைக்–க–ழ–கம், ஐ.ஐ.எம்., ஐ.ஐ.ஐ.எம். போன்ற மத்–திய அர–சின் கல்வி நிறு–வ–னங்–கள், பாரத மிகு மின் நிலை–யம் (பெல்), துப்–பாக்கி தொழிற்–சாலை போன்ற தொழில் நிறு–வ–னங்–கள் திருச்–சி–யில் அமைந்து இருப்–ப–தும், சென்னைக்கு நிக–ராக நவீன வச–தி–கள் கொண்ட மருத்–து–வ–ம–னை–கள், ஆசி–யா–வி–லேயே உய–ர–மான கோபு–ரத்தை கொண்ட ஸ்ரீரங்கம் ரெங்–க–நா–தர் கோவில், வானு–யர எழுந்து நிற்–கும் மலைக்–கோட்டை, சக்தி தலங்–களில் முதன்–மை–யான சம–ய–பு–ரம் மாரி–யம்மன் கோவில், புனித லூர்து அன்னை ஆல–யம், நத்–தர் வலி தர்கா உள்–ளிட்ட வழி–பாட்டு தலங்–க–ளை–யும் தன்–ன–கத்தே அடக்கி இருப்–ப–தால் திருச்–சியை நாடி சுற்–றுலா பய–ணி–கள் அதிக அள–வில் வருகை தந்த வண்–ணம் உள்–ள–னர்.</p><p>முக்–கொம்பு மேலணை, புளி–யஞ்–சோலை, பச்–ச–மலை, வண்–ணத்து பூச்சி பூங்கா, பற–வை–கள் பூங்கா, ரெயில் மியூ–சி–யம், அரசு அருங்–காட்–சி–ய–கம், அண்ணா அறி–வி–யல் மைய கோள–ரங்–கம் ஆகி–யவை திருச்சி மாவட்–டத்–தில் உள்ள முக்–கிய சுற்–றுலா மையங்–க–ளா–கும்.</p><h2>மெட்ரோ சேவை</h2><p>இதுகுறித்து சுற்–று–லாத்–துறை அதி–கா–ரி–கள் கூறு–கை–யில், திருச்–சி–யில் இருந்து தமி–ழ–கத்–தின் எந்த ஊருக்–கும் குறிப்–பாக சென்னை, மதுரை, நாகப்–பட்–டி–னம், கோவை ஆகிய நக–ரங்–க–ளுக்கு செல்–வ–தற்–கான நான்கு வழிச்–சாலை வசதி உள்–ளது. இது கார் உள்–ளிட்ட வாக–னங்–களில் பய–ணிப்–ப–வர்–க–ளுக்கு மிக–வும் பய–னுள்–ள–தா–கும்.</p><p>ஒரு இடத்–தில் இருந்து இன்–னொரு இடத்–திற்கு எளி–தாக செல்–வ–தற்–கான வச–தி–களும், அமை–தி–யான சூழ–லும் திருச்–சி–யில் தான் உள்–ளது. அத–னால் தான் சென்–னையை தாண்டி திருச்சி முத–லி–டத்தை பிடித்–துள்–ளது. மேலும் திருச்–சி–யில் சுற்–றுலா பய–ணி–கள் தங்–கு–வ–தற்–கான சர்–வ–தேச தரத்–தி–லான நட்–சத்–திர விடு–தி–கள் அமைந்–தி–ருப்–ப–தும் ஒரு முக்–கிய கார–ணம். மெட்ரோ ரெயில்–சேவை உள்–ளிட்ட வச–தி–களை ஏற்–ப–டுத்தி கொடுத்–தால் சுற்–றுலா மூலம் திருச்சி மேலும் வளர்ச்சி அடை–யும் என்–ற–னர்.</p>]]></content:encoded></item><item><title>போராடும் மாணவர்களுக்கு எதிரான மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் நாளை கண்டன பொதுக்கூட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/congress-allies-protest-rally-against-centre-over-students-crackdown</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/congress-allies-protest-rally-against-centre-over-students-crackdown#comments</comments><guid isPermaLink="false">97c86c87-fd58-4ed2-8d25-eb87843bfef1</guid><pubDate>Fri, 24 Jul 2026 05:40:26 +0000</pubDate><atom:updated>2026-07-24T05:40:26.723Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,CJP Protest,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/nj6ltf3q/Congress0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காங்கிரஸ் போராட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/nj6ltf3q/Congress0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து டெல்லியில் போராடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வரும் மத்திய அரசை காங்கிரஸ் கண்டித்துள்ளது. மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறது.</p><p>சென்னையில் நாளை (சனிக்கிழமை) காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது. இது தொடர்பாக காங்கிரஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>தலைநகர் டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து அமைதியான முறையில் போராடிய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீதும், அவர்களுக்கு ஆதரவாக தங்கள் கண்டனங்களை தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர்கள் மீதும் கொடூரமான வன்முறைகளை கட்டவிழ்த்து விட்ட மக்கள் விரோத மோடி அரசை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நாளை மாலை 5.30 மணியளவில் சென்னை தியாகராய நகர் பஸ் நிலையம் பின்புறம் முத்துரங்கம் சாலையில் நடைபெற உள்ளது.</p><h2>அமைச்சர்கள் பங்கேற்பு</h2><p>தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் அமைச்சர் ராஜ்மோகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அமைச்சர் வன்னியரசு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சுப்புராயன் எம்.பி., மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் வெங்கடேசன் எம்.பி., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் நவாஸ் கனி எம்.பி., ம.தி.மு.க. கட்சி சார்பில் முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி. ஆகியோர் பங்கேற்று கண்டன உரை ஆற்றுகிறார்கள்.</p><p>இக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு பொறுப்பாளருமான குலாம் அகமது மிர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். அமைச்சர் ராஜேஷ்குமார் வரவேற்புரை ஆற்றுகிறார். அமைச்சர் பெ.விஸ்வநாதன், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் நிவேதித் ஆல்வா முன்னிலை வகிக்கின்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ் விளக்க உரையாற்றுகிறார்.</p><p>கூட்டத்தில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்கிறார்கள்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>மாணவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் 27-ந்தேதி விசிக ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tho-thirumavalavan-vck-protest-august-27-support-students</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tho-thirumavalavan-vck-protest-august-27-support-students#comments</comments><guid isPermaLink="false">ddddc8e8-30d3-4210-af50-0d30fbbbecec</guid><pubDate>Fri, 24 Jul 2026 05:23:58 +0000</pubDate><atom:updated>2026-07-24T05:23:58.261Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விசிக,vck,Thol Thirumavalavan,தொல் திருமாவளவன்,CJP Protest,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-17/3evee4ti/thirumavalavan03.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Thol. Thirumavalavan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-17/3evee4ti/thirumavalavan03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாணவர்கள், இளைஞர்கள் மீது ஏவப்பட்ட கண்மூடித்தனமான வன்முறையைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதி மாவட்டங்களிலும் வருகிற 27-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.</p><h2>விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டு உள்ள அறிக்கையில கூறியிருப்பதாவது:-</h2><p>நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிவு விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து புதுடெல்லியில் மாணவர்களும் இளைஞர்களும் போராடி வருகின்றனர்.</p><p>இது தொடர்பாக காக்ரோச் ஜனதா பார்ட்டி நடத்திய பேரணியில் மோடி அரசின் காவல்துறை கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது. ஏராளமான மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><h2>மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்</h2><p>மாணவர்கள், இளைஞர்கள் மீது ஏவப்பட்ட கண்மூடித்தனமான வன்முறையைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதி மாவட்டங்களிலும் வருகிற 27-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும். </p><p>தர்மேந்திர பிரதான் கல்வி மந்திரி ஆனதற்குப் பிறகு நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகள் மற்றும் தகுதித் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் 152 முறை கசிந்து, பலமுறை தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு சுமார் 7½ கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதனால் சில மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்குப் பொறுப்பேற்க வேண்டிய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.</p><h2>பிரதமர் வருத்தம் தெரிவிக்க வேண்டும்</h2><p>கல்வித் துறையைச் சீரழிக்கும் மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும என்று மாணவர்கள் தன்னெழுச்சியாகக் கிளர்ந்தெழுந்து போராடி வருகின்றனர். மாணவர்களை சிவில் உடையில் வந்து யார் தாக்கியது என்பதைப் பற்றி இதுவரை டெல்லி காவல்துறை விளக்கம் அளிக்கவில்லை. பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் பலர் கை, கால்களில் முறிவு ஏற்பட்டும், தலையில் காயம் அடைந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p>போராடிவரும் மாணவர்களின் கோரிக்கைகளான கல்வி மந்திரி தர்மேந்தர பிரதான் பதவி விலக வேண்டும். போராடிய மாணவர்கள் மீது வன்முறைத் தாக்குதலை நடத்தியவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். இது தொடர்பாக பிரதமர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். ஆகியவற்றை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரிக்கிறது. நீட் தேர்வை முற்றாக ரத்து செய்ய வேண்டும், மாநில அரசுகளே மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது.</p><p>இவ்வாறு அவர் கூறி உள்ளார். </p>]]></content:encoded></item><item><title>ரூ. 8599 விலையில் புது ஸ்மார்ட்போன் அறிமுகம் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/itel-zeno-100-pro-launched-in-india</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/itel-zeno-100-pro-launched-in-india#comments</comments><guid isPermaLink="false">82cd406e-67bc-43c5-b20e-b0be412514ed</guid><pubDate>Fri, 24 Jul 2026 04:58:00 +0000</pubDate><atom:updated>2026-07-24T04:58:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>itel,smartphone,ஸ்மார்ட்போன்,ஐடெல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/4pm7j24z/itel-zeno-100-pro.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ itel Zeno 100 Pro]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/4pm7j24z/itel-zeno-100-pro.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஐடெல் நிறுவனம் இந்திய சந்தையில் தனது முற்றிலும் புதிய ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புது ஸ்மார்ட்போன் ஐடெல் செனோ 100 ப்ரோ என அழைக்கப்படுகிறது. </p><p>பட்ஜெட் விலையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 4ஜி கனெக்டிவிட்டியுடன் கிடைக்கிறது. </p><h2>அம்சங்கள்:</h2><p>ஐடெல் செனோ 100 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் HD+ டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்ட ஸ்கிரீன், DTS சவுண்ட் தொழில்நுட்பம் கொண்ட ஒற்றை ஸ்பீக்கர், ஸ்கிரீனில் அழைப்புகள், நோட்டிபிகேஷன் மற்றும் பேட்டரி விவரங்களை காண்பிக்கும் டைனமிக் பார் இடம்பெற்றுள்ளது.</p><p>புகைப்படங்களை எடுக்க 8MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமராவுடன் வருகிறது. இத்துடன் ஐ.ஆர். பிளாஸ்டர் உள்ளது. இதை கொண்டு பயனர்கள் ஏ.சி., டி.வி போன்ற சாதனங்களை இந்த ஸ்மார்ட்போன் கொண்டே இயக்க முடியும். பொதுவாக இரு மின்சாதனங்களுக்கு ரிமோட் கண்ட்ரோல் செய்ய முடியும்.</p><p>இந்த ஸ்மார்ட்போன் யுனிசாக் டி7100 பிராசஸர் மூலம் இயங்குகிறது. இத்துடன் 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி உள்ளது. இதில் உள்ள ரேமை 5 ஜிபி நீட்டிக்கும் வசசதி வழங்கப்படுகிறது. இதில் உள்ள சிப்செட் என்ட்ரி லெவல் செயல்திறனுக்கு நிகரானது ஆகும். இதை கொண்டு அன்றாட பயன்பாடுகளான அழைப்புகள், வாட்ஸ்அப் சாட் மற்றும் மீடியா பார்க்கலம்.</p><p>புதிய ஐடெல் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 கோ எடிஷன் ஓ.எஸ். மூலம் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 10 வாட் சார்ஜிங் வசதி உள்ளது. இந்த ஸ்மாரட்போனுடன் சார்ஜரும் சேர்த்தே வழங்கப்படுகிறது.</p><h2>விலை விவரங்கள்:</h2><p>ஐடெல் செனோ 100 ப்ரோ ஸ்மார்ட்போன் கொமெட் ஆரஞ்சு, பிளாக் மற்றும் கிளவுட் வைட் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 8,599 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நீதிபதி முன்னிலையில் தூத்துக்குடி வாலிபர் உடல் பிரேத பரிசோதனை - வீடியோ பதிவு
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/post-mortem-thoothukudi-youth-body-conducted-in-presence-of-a-magistrate</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/post-mortem-thoothukudi-youth-body-conducted-in-presence-of-a-magistrate#comments</comments><guid isPermaLink="false">bf5b608b-f318-44a4-860e-333912847d3f</guid><pubDate>Fri, 24 Jul 2026 04:53:05 +0000</pubDate><atom:updated>2026-07-24T04:53:05.211Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Custodial deaths,லாக்கப் மரணங்கள்,Thoothukudi youth death,தூத்துக்குடி வாலிபர் உயிரிழப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/532l653l/youth.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அருணாச்சலம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/532l653l/youth.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தூத்துக்குடி போலீஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த வாலிபர் உடல் பிரேத பரிசோதனை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடங்கியது.</strong></em> </p><p>தூத்துக்குடி அமுதா நகர் பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம்(வயது 24), இவர் கடந்த 17-ந் தேதி சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து தென்பாகம் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர்</p> <h2>வாலிபர் உயிரிழப்பு</h2><p>இதைத் தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் இருந்து அவரை நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு தயார் செய்து கொண்டிருக்கும்போது வாலிபர் அருணாச்சலம் போலீஸ் நிலையத்தில் வைத்து வலிப்பு வந்து மயங்கி விழுந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.</p><p>இந்நிலையில் அவரது தலையில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து அவரை உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கே சிகிச்சை பலனின்றி அருணாச்சலம் நேற்று உயிரிழந்தார்.</p> <h2>உறவினர்கள் போராட்டம்</h2><p>இதைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் அருணாச்சலத்தை தாக்கியதால் ஏற்பட்ட காயம் காரணமாகவே அவர் உயிரிழந்தார் என்று குற்றச்சாட்டு தெரிவித்து தென்பாகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் அருணாச்சலத்தின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர் </p><p>இதைத்தொடர்ந்து உறவினர்கள் இந்த சம்பவத்தில் தொடர்புடைய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த சம்பவம் தொடர்பாக நீதித்துறை நடுவர் முன்னிலையில் விசாரணை நடத்த வேண்டும், பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.</p> <h2>பிரேத பரிசோதனை</h2><p>இதைத்தொடர்ந்து <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-must-intervene-and-take-action-regarding-the-custodial-death-incident-premalatha-urges">அருணாச்சலத்தின்</a> உடல் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரேத பரிசோதனை கூட்டத்திற்கு கொண்டுவரப்பட்டு இன்று காலை பிரேத பரிசோதனை தொடங்கியது. </p><p>பிரேத பரிசோதனை தொடங்குவதற்கு முன்பாக அருணாச்சலத்தின் தந்தை நாகராஜ் மற்றும் தம்பி சுடலைமணி உள்ளிட்ட உறவினர்கள் அவரது உடலை அடையாளம் காண்பிக்க வந்தனர். இதைத் தொடர்ந்து தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் விஜய ராஜசேகர் முன்னிலையில் கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய பகுதியில் இருந்து வந்துள்ள பிரேத பரிசோதனை சிறப்பு மருத்துவர் குழுவினர் பணியில் ஈடுபட்டனர். அருணாச்சலத்தின் உடல் பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>உயர்கல்வித் துறை செயலாளர் மாற்றம்.. மாணவர்கள் போராட்டத்தால் மத்திய அரசு நடவடிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/change-of-higher-and-school-education-secretaries-central-government-action-after-student-protests</link><comments>https://www.maalaimalar.com/news/national/change-of-higher-and-school-education-secretaries-central-government-action-after-student-protests#comments</comments><guid isPermaLink="false">6a11c37c-9ce1-475c-be2d-6d1377479fca</guid><pubDate>Fri, 24 Jul 2026 04:46:44 +0000</pubDate><atom:updated>2026-07-24T04:46:44.157Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>paper leak,கல்வி அமைச்சகம்,Ministry of Education,neet protest,நீட் வினாத்தாள் கசிவு,நீட் போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/gkfde24o/Untitled-design-60.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Centre shifts Higher Education Secretary amid student protests]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/gkfde24o/Untitled-design-60.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும்படி, மாணவர்கள் போராடி வரும் சூழலில், உயர்கல்வித் துறை செயலாளர் வினீத் ஜோஷியை பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்திற்கு இடமாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.</p><h3><strong>எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு:</strong></h3><p>தேசிய அளவில் நடைபெற்ற நீட் தேர்வில், வினாத்தாள் கசிந்ததையடுத்து பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். </p><p>மேலும் நீட் வினாத்தாள் கசிவிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.</p><p>இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.</p><p>மேலும் சிபிஎஸ்இ நடத்திய பொதுத் தேர்வு மதிப்பீட்டில் நடந்த முறைகேடுகள் குறித்தும் தேசிய தேர்வு முகமையின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.</p><p>இந்நிலையில் உயர்கல்வித் துறை செயலாளர் வினீத் ஜோஷியை பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்திற்கு இடமாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.</p><p>ஜோஷி இதற்கு முன்னர் தேசிய தேர்வு முகமையின் தலைமை இயக்குநராகவும், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.</p><h3><strong>புதிய அதிகாரிகள் நியமனம்:</strong></h3><p>இவர் 2023-ல் மணிப்பூரில் இன மோதல் மோசமடைந்ததை தொடர்ந்து, தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். மேலும் இவர் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) தற்காலிகத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.</p><p>இதையடுத்து பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வி ஆகிய இரு துறைகளின் உயர் பதவிகளுக்கும் புதிய அதிகாரிகளை மத்திய அரசு நியமித்துள்ளது.</p><p>நரேஷ் குமார் கங்வார் என்பவர் தற்போது உயர்கல்விச் செயலாளராகவும், டி.கே.அனில் குமார் என்பவர் பள்ளிக்கல்விச் செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.</p><p>நரேஷ் கங்வார் முன்னதாக கால்நடை வளர்ப்பு அமைச்சகத்தில் செயலாளராகவும், அனில் குமார் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தில் கூடுதல் செயலாளராகவும் பணியாற்றி வந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>ஜூலை 20-ந்தேதி போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்குகள் கிடையாது: மத்திய அரசின் உத்தரவாதத்தை பகிர்ந்த வாங்சுக்</title><link>https://www.maalaimalar.com/news/national/cjp-protest-wangchuk-shares-govt-assurance-no-cases-against-peaceful-july-20-protesters</link><comments>https://www.maalaimalar.com/news/national/cjp-protest-wangchuk-shares-govt-assurance-no-cases-against-peaceful-july-20-protesters#comments</comments><guid isPermaLink="false">87ee1a4f-55fd-4fa1-8457-05dce568fddf</guid><pubDate>Fri, 24 Jul 2026 04:30:28 +0000</pubDate><atom:updated>2026-07-24T04:30:28.789Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sonam Wangchuk,CJP Protest</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/y3t8jkm7/Wangchuk0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sonam Wangchuk]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/y3t8jkm7/Wangchuk0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த மொத்தம் 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னை நேரில் சந்தித்தோ அல்லது கடிதங்கள் மூலமாகவோ உண்ணாவிரதத்தை கைவிடுமாறு வலியுறுத்தியதாக வாங்சுக் தெரிவித்தார்.</p><p>கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கடந்த ஜூன் 20-ந்தேதி ஜந்தர் மந்திரில் போராட்டம் நடத்தினர். அப்போது, நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான பல்வேறு உயர்க்கல்வி தொடர்பான முறைகேடு தொடர்பாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர். ஒரு மாதமாக தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.</p><h2>பாராளுமன்றம் முற்றுகை போராட்டம்</h2><p>கடந்த 20-ந்தேதி பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது பாராளுமன்றத்தை முற்றுகையிடும் வகையில் மாணவர்கள் பேரணி மேற்கொண்டனர். அவர்கள் நாடாளுமன்றத்தை நெருங்கியதால், மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்படும் நிலை உருவானது. இதனால் போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகைக் குண்டுகள் வீசி பேரணியை கலைத்தனர்.</p><p>இதில் மாணவர்கள், இளைஞர்கள், காவல்துறையினர் காயம் அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாணவர்கள் போராட்டத்திற்குப் பிறகு மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ளது. என்ன இருந்தாலும் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதில் கரப்பான்பூச்சி ஜனதா தளம் உறுதியாக உள்ளது.</p><h2>மத்திய அரசு உறுதி அளிப்பு- போராட்டத்தை கைவிட்ட வாங்சுக்</h2><p>இதற்கிடையே ஜூன் 28-ந்தேதில் முதல் சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவரது உடல்நிலை மிகவும் மோசடைய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கும் அவரும் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். நேற்று மத்திய அமைச்சர்கள் அவரை சென்று சந்தித்தனர். அப்போது கோரிக்கைகள் ஏற்கப்படும் என்று மத்திய அமைச்சர்கள் உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.</p><p>ஜூலை 20-ந்தேதி போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டால் எதிர்காலம் கேள்விக்குறி ஆகும். அதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என வாங்சுக் கோரிக்்கை வைத்தார். மத்திய அரசு அதை ஏற்றுக் கொண்டுள்ளது. இது தொட்ரபாக அவரிடம் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.</p><p>மருத்துவமனையில் இருக்கும் அவர், அமைதியான ஜூலை 20 போராட்டக்காரர்களுக்கு எதிராக எந்த வழக்கும் கிடையாது என எழுத்துப்பூர்வமாக மத்திய அரசு வழங்கியுள்ள அந்த உத்தரவாதத்தை அவர் பகிர்ந்துள்ளார்.</p><h2>வாங்சுக் பதிவு</h2><p>பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த மொத்தம் 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னை நேரில் சந்தித்தோ அல்லது கடிதங்கள் மூலமாகவோ உண்ணாவிரதத்தை கைவிடுமாறு வலியுறுத்தியதாக வாங்சுக் தெரிவித்தார்.</p><p>பல்வேறு நிபந்தனைகள் குறித்த நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகும், நாட்டில் ஏற்படக்கூடிய வன்முறையை கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அந்த நிபந்தனைகள் குறித்த விவரங்களை விரைவில் ஒரு தனி காணொளியில் விளக்குவேன். அதேவேளையில், எங்கும் எந்தவிதமான வன்முறையும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்," என்று அவர் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p>உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது, பொறுப்புக்கூறுல் தொடங்கியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item></channel></rss>