<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 03 Aug 2026 03:41:56 +0000</lastBuildDate><item><title>காஞ்சிபுரம் செல்லும் முதலமைச்சர் விஜய்... தனியார் தொழிற்சாலைகளை பார்வையிடுகிறார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-today-visit-kancheepuram-district</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-today-visit-kancheepuram-district#comments</comments><guid isPermaLink="false">9eb64882-40cf-454c-9d10-3fc8b9e78281</guid><pubDate>Mon, 03 Aug 2026 03:40:25 +0000</pubDate><atom:updated>2026-08-03T03:40:25.285Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,TN Govt,தமிழக அரசு,தனியார் தொழிற்சாலைகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/eoqi738c/Vijay05.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/eoqi738c/Vijay05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>ஸ்ரீபெரும்புதூர், ஒரகடத்தில் தனியார் தொழிற்சாலைகளை முதலமைச்சர் விஜய் இன்று நேரில் பார்வையிடுகிறார்.</aside><h2><strong>ஒரகடம் பயணம்</strong></h2><p>காஞ்சிபுரம் மாவட்டம் ஓரகடத்தில் அமைந்துள்ள சிப்காட் தொழிற் வளர்ச்சி மையத்தில், 'டெய்ம்லர் பஸஸ் இந்தியா' என்ற நிறுவனம் சார்பில் 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரமாண்டமான ‘டெய்ம்லர் இந்தியா வர்த்தக வாகனங்கள்’ உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இயங்குகிறது. இந்த நிறுவனம் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.</p><p>"பாரத்பென்ஸ்' மற்றும் 'மெர்சிடிஸ்-பென்ஸ்' முத்திரையிடப்பட்ட பஸ்களையும், 'பஸ் சேஸ்'களையும் உற்பத்தி செய்கிறது. வணிக வாகன உற்பத்தியில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனத்தை இன்று <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">முதலமைச்சர் விஜய்</a> பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.</p><h2><strong>கண்ணாடி தொழிற்சாலை</strong></h2><p>அதேபோல், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கத்தில் செயல்படும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான செயின்ட் கோபின் நிறுவனமும், தமிழக அரசுடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.</p><p>இந்த நிறுவனம் உலகத்தரத்திலான கண்ணாடி தயாரிப்பு வளாகத்தை விரிவுபடுத்தி உள்ளது. இதனை முதலமைச்சர் விஜய் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். தொடர்ந்து நிசான் கார் கம்பெனியையும் முதலமைச்சர் விஜய் பார்வையிடுகிறார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இந்தியர்கள் அதிக நேரத்தை செலவிடும் செயலி - ஆய்வில் புதிய தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/national/indians-spend-most-time-app</link><comments>https://www.maalaimalar.com/news/national/indians-spend-most-time-app#comments</comments><guid isPermaLink="false">23f48111-dc1c-4c00-9d6a-6670a2e1336f</guid><pubDate>Mon, 03 Aug 2026 03:25:33 +0000</pubDate><atom:updated>2026-08-03T03:25:33.884Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>YouTube,Instagram,indians,smartphone,CELLPHONES,செல்போன்,இந்தியர்கள்,இன்ஸ்டாகிராம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/r8blba5o/socialmedia.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/r8blba5o/socialmedia.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இந்தியர்கள் எந்தெந்த செயலிகளில் அதிக நேரம் செலவிடுகிறார்கள்? என்பது குறித்த ஆய்வில் புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.</strong></em></p><h2>செயலிகள்</h2><p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D">செல்போன்</a> உலகில் இன்று அனைவரும் மூழ்கிப் போய்த்தான் கிடக்கிறோம். இதில் யாரும் மாற்று கருத்தை சொல்ல முடியாது. ஒருவர் வீட்டில் இருந்து வெளியில் புறப்படுவதற்கு முன்பு எந்த பொருளை எடுக்க மறக்கிறாரோ? இல்லையோ? முதலில் கையில் எடுப்பது செல்போனாகத்தான் இருக்கும். அந்தவகையில் நம்முடைய அன்றாட வாழ்வில் முக்கிய அங்கமாகவே அது மாறிவிட்டது.</p> <h2>ஸ்மார்ட்போன்</h2><p>இந்த நிலையில் இந்தியாவில் '<a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D">ஸ்மார்ட்போன்</a>' பயன்படுத்தும் பயனாளர்கள் எந்த செயலியில் (அப்ளி கேஷன்ஸ்) அதிக நேரம் செலவிடுகிறார்கள்? என்பது குறித்து 'பேங்க் ஆப் அமெரிக்காவின்' நிதிச் சந்தை ஆராய்ச்சி பிரிவு ஆய்வு நடத்தியுள்ளது. அதில் ஒரு மாதத்தில் எவ்வளவு நேரம் அந்த செயலிகளில் நேரத்தை செலவிடுகிறார்கள் என்ற புள்ளிவிவரங்களுடன் ஆய்வை வெளியிட்டுள்ளது.</p> <h2>சமூக வலைதளங்கள்</h2><p>அதில், ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் இந்தியர்கள் சராசரியாக இன்ஸ்டாகிராம் செயலிக்கு 49 மணி நேரம் 42 நிமிடமும், யூ-டியூப் செயலிக்கு 47 மணி நேரம் 23 நிமிடமும் செலவிடுகிறார்கள். அதாவது நாளொன்றுக்கு சுமார் 16 மணி நேரத்துக்கு மேல் பயன்படுத்துகிறார்கள். அதற்கடுத்தபடியாக முகநூலில் 24 மணி நேரம் 45 நிமிடமும், 'எக்ஸ்' தளத்தில் 13 மணி நேரம் 30 நிமிடமும் கழிக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p><p>சமூக வலைத்தளங்களை தவிர, ஆன்லைன் விளையாட்டு செயலிகளுக்கு (பிரீ பயர்) இளைஞர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதற்கு மட்டும் மாதத்துக்கு 41 மணி நேரம் 12 நிமிடம் செலவிடுகிறார்கள். இதேபோல், லுடோ கிங், கேரம் ஆகிய கேமிங் செயலிகளுக்கு முறையே சுமார் 13 மணி நேரம் செலவு செய்கிறார்கள்.</p> <h2>வாட்ஸ்-அப்...</h2><p>சமூக வலைத்தளங்கள். கேமிங் செயலிகளை போல, ஓ.டி.டி தளங்களிலும் நீண்ட நேரம் நேரத்தை செலவிடுகிறார்கள். அதில் பிரபல நிறுவனங்களின் ஓ.டி.டி. தளங்களை அதிகபட்சமாக மாதத்துக்கு இந்தியர்கள் சராசரியாக 10 மணி நேரம் முதல் 22 மணி நேரம் வரை பயன்படுத்துகிறார்கள்.</p><p>இதுதவிர வாட்ஸ்-அப் செயலியில் மாதத்துக்கு 18 மணி நேரம் 49 நிமிடம் சராசரியாக இந்தியர்கள் செலவிடுவதும் இந்த புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.</p> <p>இந்தியாவில் மொபைல் டேட்டா கட்டணங்கள் குறைவாக இருப்பதும், மலிவான ஸ்மார்ட்போன்கள் பரவலாக கிடைப்பதும் மக்கள் தங்களின் பெரும்பகுதி நேரத்தை பொழுதுபோக்கு, கேமிங் மற்றும் சமூக வலைத்தளங்களில் செலவிட வழிவகுத்துள்ளது. இது இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் அசுர வளர்ச்சியை காட்டுவதாக சொல்லப்பட்டிருக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>&quot;வலிமையாக மீண்டுவர உத்வேகம்&quot;: காமன்வெல்த்-இல் வெண்கலம் வென்ற இந்திய வீரர் செல்வ பிரபு திருமாறன்</title><link>https://www.maalaimalar.com/sports/motivation-to-come-back-stronger-indias-selva-prabhu-thirumaran-after-cwg-bronze-in-triple-jump</link><comments>https://www.maalaimalar.com/sports/motivation-to-come-back-stronger-indias-selva-prabhu-thirumaran-after-cwg-bronze-in-triple-jump#comments</comments><guid isPermaLink="false">9bf1fc9e-036f-4d25-8f85-550f7832de5f</guid><pubDate>Mon, 03 Aug 2026 03:22:45 +0000</pubDate><atom:updated>2026-08-03T03:22:45.362Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காமன்வெல்த் போட்டிகள்,CWG 2026,Selva Prabhu Thirumaran,செல்வ பிரபு திருமாறன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/7o97we3p/Selva-Prabhu-Thirumaran.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Selva Prabhu Thirumaran]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/7o97we3p/Selva-Prabhu-Thirumaran.png?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2026 <a href="https://www.maalaimalar.com/topic/cwg-2026">காமன்வெல்த் விளையாட்டு</a> போட்டிகளில் வெண்கல பதக்கம் வென்ற தமிழ் நாட்டை சேர்ந்த டிரிபில் ஜம்ப் வீரர் செல்வ பிரபு திருமாறன், இந்த சாதனை தனக்கு ஒரு பெருமைக்குரிய தருணம் என்றும், எதிர்காலத்தில் மேலும் பெரிய வெற்றிகளை அடைய தொடர்ந்து முயற்சிப்பதற்கான உந்துதல் என்றும் கூறி மகிழ்ச்சி தெரிவித்தார். </p><p>கடந்த சனிக்கிழமை நடந்த ஆடவர் டிரிபில் ஜம்ப் போட்டியில் செல்வ பிரபு வெண்கல பதக்கத்தையும், சக வீரரான பிரவீன் சித்ரவேல் வெள்ளி பதக்கத்தையும் வென்ற அசத்தினர். இதனால், இந்தியா ஒரு மறக்க முடியாத இரட்டை மேடை வெற்றியை இந்தப் போட்டியில் பதிவு செய்ய முடிந்தது.</p><p>தனது சாதனையை நினைவுகூர்ந்த செல்வ பிரபு திருமாறன், தனது பயணம் முழுவதும் தனக்கு துணையாக நின்ற பயிற்சியாளர்கள், குடும்பத்தினர் மற்றும் குழுவினர்களுக்கு நன்றி தெரிவித்தார்.</p><h2>வெண்கல பதக்கம்:</h2><p>போட்டி முழுவதும் சீரான முன்னேற்றத்தை காட்டிய இந்திய வீரர் செல்வா, 16.52 மீட்டர் என்ற தனது சிறந்த தாண்டுதலுடன் வெண்கல பதக்கத்தை வென்றார்.</p><p>வெண்கல பதக்கத்தை வென்ற பிறகு ஏ.என்.ஐ-யிடம் பேசிய செல்வ பிரபு திருமாறன், "எனக்கும் என் பெற்றோருக்கும் இது மிகுந்த பெருமை அளிக்கிறது. இது ஆரம்பத்தில் இருந்தே அவர்களின் கனவாக இருந்தது. நான் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று அவர்கள் எப்போதும் விரும்பினார்கள். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த பதக்கம் வலிமையாக மீண்டுவருவதற்கான உத்வேகம் அளித்திருக்கிறது.</p><p>என் கவனம் பதக்கத்தின் மீது இருந்தது. நான் என் செயல்திறனில் அதிக கவனம் செலுத்தினேன். இந்தியாவுக்காக ஒரு பதக்கத்தை பெறுவது சிறந்த விஷயம். எனக்கு ஆதரவளித்தவர்கள், என் பயிற்சியாளர்கள், பிசியோக்கள், சக வீரர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு இந்த பதக்கத்தை நான் அர்ப்பணிக்கிறேன். அவர்கள் எப்போதும் என் முதுகெலும்பாக இருக்கிறார்கள்," என்றார்.</p><h2>வெள்ளி பதக்கம்:</h2><p>செல்வ பிரபு திருமாறன் தனது இரண்டாவது முயற்சியில் 16.17 மீட்டர் தாண்டி பதக்க நிலைகளுக்குள் நுழைந்தார், பின்னர் மூன்றாவது சுற்றில் அதை 16.43 மீட்டராக மேம்படுத்தினார். அதன்பிறகு, 16.52 மீட்டர் என்ற தனது சிறந்த முயற்சியை வெளிப்படுத்தி, பதக்க மேடையில் தனக்கான இடத்தை உறுதி செய்தார்.</p><p>விறுவிறுப்பான போட்டியில், பிரவீன் சித்ரவேல் 16.58 மீட்டர் தாண்டி வெள்ளிப் பதக்கத்தை வென்றார். தொடக்க மூன்று சுற்றுகளுக்குப் பிறகு அவர் ஐந்தாவது இடத்தில் இருந்தார்; முதலில் 16.05 மீட்டர் தாண்டிய அவர், மூன்றாவது முயற்சியில் அதை 16.31 மீட்டராக மேம்படுத்தினார்.</p><p>பின்னர், தனது நான்காவது முயற்சியில் 16.58 மீட்டர் தாண்டி அசத்தினார். இதன் மூலம் சிறிது நேரம் முன்னிலை பெற்ற சித்ரவேல், இறுதியில் வெள்ளி பதக்கத்தை வென்றார்.</p><p>கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவின் தடகள பிரிவு செயல்பாடு, இரட்டை பதக்க வெற்றியால் மேலும் சிறப்படைந்தது.</p>]]></content:encoded></item><item><title>ரிசர்வ் வங்கி இன்று முதல் ஆலோசனை- வங்கிக்கடன் வட்டியில் மாற்றம் வருமா?</title><link>https://www.maalaimalar.com/news/national/reserve-bank-begins-consultations-today-will-there-be-a-change-in-bank-loan-interest-rates</link><comments>https://www.maalaimalar.com/news/national/reserve-bank-begins-consultations-today-will-there-be-a-change-in-bank-loan-interest-rates#comments</comments><guid isPermaLink="false">bc800ef4-79c0-4fe5-9835-8db109fe38c2</guid><pubDate>Mon, 03 Aug 2026 03:15:33 +0000</pubDate><atom:updated>2026-08-03T03:15:33.093Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>RBI,ரெப்போ வட்டி,Repo,ரிசர்வ் வங்கி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/fma9yx71/RBI.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ ரிசர்வ் வங்கி]]></media:title><media:description type="html"><![CDATA[ ரிசர்வ் வங்கி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/fma9yx71/RBI.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழு கூட்டம் இன்று முதல் 3 நாட்கள் நடக்கிறது. இந்த தடவை, வங்கிக்கடன் வட்டி விகிதம் மாற்றம் வருமா என்பது 5-ந்தேதி தெரியும்.</aside><h2><strong>3 நாட்கள் ஆலோசனை</strong></h2><p>வங்கிகளுக்கு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF">ரிசர்வ் வங்கி</a> வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 'ரெப்போ ரேட்' என்று அழைக்கப்படுகிறது. இதன் அடிப்படையில்தான் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வீடு, வாகன கடன்களுக்கான வட்டியை வங்கிகள் தீர்மானிக்கின்றன.</p><p>2 மாதங்களுக்கு ஒருதடவை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூடி, ரெப்போ ரேட்டை மாற்றியமைப்பது பற்றி ஆலோசனை நடத்துவது வழக்கம். அதுபோல், இம்முறைக்கான இக்கூட்டம் இன்று மும்பையில் தொடங்குகிறது. 5-ந்தேதி வரை ஆலோசனை நடைபெறுகிறது.</p><h2><strong>மாற்றம் இருக்காது</strong></h2><p>ரெப்போ ரேட்டை மாற்றியமைப்பது பற்றி முடிவு செய்து, 5-ந் தேதி ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவிப்பார். ரெப்போ ரேட் மாற்றப்படுமா என்பது குறித்து 10 பொருளாதார நிபுணர்களிடையே கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில், பெரும்பாலான நிபுணர்கள், ரிசர்வ் வங்கி, தற்போதைய வங்கிக்கடன் வட்டியான 5.25 சதவீதத்தில் மாற்றம் செய்யாது என்று கருத்து தெரிவித்தனர்.</p><p>அவர்கள் கூறியதாவது:-</p><p>மேற்கு ஆசிய பதற்றம் காரணமாக பணவீக்கம் அதிகரித்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. பருவமழையும் நிச்சயமற்ற நிலையில் இருக்கிறது.</p><h2><strong>காரணம் என்ன?</strong></h2><p>இருப்பினும், <a href="https://www.maalaimalar.com/news/national/plastic-rupee-notes-to-be-introduced-soon-in-india-union-government-approves-rbi-proposal">ரிசர்வ் வங்கி</a> 'காத்திருந்து பார்க்கும்' அணுகுமுறையை பின்பற்றும் என்று எதிர்பார்க்கிறோம். பண வீக்கம் தீங்கற்ற நிலையில்தான் இருக்கிறது. எனவே தற்போதைய நிலையே தொடர வாய்ப்புள்ளது.</p><p>இவ்வாறு அவர்கள் கூறினர். </p><p>கடந்த ஆண்டு பல தவணைகளாக ‘ரெப்போ ரேட்’ 1.5 சதவீதம் குறைக்கப்பட்டது. தற்போது 5.25 சதவீதமாக உள்ளது. இதே வட்டிவிகிதம் மாற்றமின்றி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 3 ஆகஸ்ட் 2026: ஆடிப்பெருக்கு</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-3-august-2026-aadi-perukku</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-3-august-2026-aadi-perukku#comments</comments><guid isPermaLink="false">9039cbf6-9e2d-4427-a5e4-9dfb1e978a3a</guid><pubDate>Mon, 03 Aug 2026 02:41:58 +0000</pubDate><atom:updated>2026-08-03T02:41:58.359Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/831iq12f/aadiperukku.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆடிப்பெருக்கு விழா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/831iq12f/aadiperukku.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆடி-18 (திங்கள்கிழமை)</p><p>பிறை : தேய்பிறை</p><p>திதி :  பஞ்சமி இரவு 9.13 மணி வரை பிறகு சஷ்டி</p><p>நட்சத்திரம் : உத்திரட்டாதி இரவு 9.06 வரை பிறகு ரேவதி</p> <p>யோகம் :  சித்தயோகம்</p><p>ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை</p><p>எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை</p><p>சூலம் : கிழக்கு</p><p>நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை</p> <h2>ஆடிப்பெருக்கு விழா</h2><p>சகல நதி தீரங்களில் ஆடிப்பெருக்கு விழா. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் மூலவருக்கு அலங்கார திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் காலை அலங்கார திருமஞ்சன சேவை. </p> <p>கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதர் காலை பால் அபிஷேகம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் தலங்களில் காலை அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் தலங்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம் வழிபாடு.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - யோகம்</p><p>ரிஷபம் - சாந்தம்</p><p>மிதுனம் - உயர்வு</p><p>கடகம் - நற்செயல்</p><p>சிம்மம் - இன்பம்</p><p>கன்னி - உழைப்பு</p> <p>துலாம் - சாதனை</p><p>விருச்சிகம் - சாதனை</p><p>தனுசு - முயற்சி</p><p>மகரம் - சுகம்</p><p>கும்பம் - விருத்தி</p><p>மீனம் - உற்சாகம்</p> ]]></content:encoded></item><item><title>மதுரை அருகே பயங்கர விபத்து - சென்னையை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/car-accident-near-madurai-4-dead</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/car-accident-near-madurai-4-dead#comments</comments><guid isPermaLink="false">2d88e209-61ed-4a6c-8b01-2e83a868fadc</guid><pubDate>Mon, 03 Aug 2026 02:33:06 +0000</pubDate><atom:updated>2026-08-03T02:33:06.050Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கார் விபத்து,Car accident,மதுரை,madurai</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/h328g1vi/accident-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ File Pic]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/h328g1vi/accident-1.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை மாவட்டம் மேலூர் அருகே நடந்த சாலை விபத்தில் சென்னையை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.</p><p>சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் தனது குடும்பத்தினருடன் <a href="https://www.maalaimalar.com/topic/trichy">திருச்சி</a> சென்ற போது, மேலூர் அருகே தும்பைப்பட்டி நான்கு வழிச்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் மற்றொரு கார் மீது மோதியது. இந்த விபத்தில் ஸ்ரீரராம், அவரது மனைவி ரஞ்சனா, ஒன்றரை வயது குழுந்தை பிரனிதா உள்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.</p><h2>தீவிர சிகிச்சை:</h2><p>மேலும், மூன்று பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். இவர்களுக்கு மேலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><p>இருசக்கர வாகனத்தின் மீது தனது கார் மோதுவதை தவிர்க்க காரை ஓட்டி வந்த ஸ்ரீராரம் காரை வலது புறமாக திருப்பியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் மற்றொரு காரின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் கார் முற்றிலும் சேதமடைந்தது.</p><h2>பெரும் சோகம்:</h2><p>இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவல் துறையினர் போக்குவரத்தை சரி செய்து, இடிபாடுகளில் சிக்கிய காரை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதிகாலையிலேயே நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் பெட்ரோல், டீசல் விலை - இன்றைய நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-and-diesel-price-in-chennai-3-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-and-diesel-price-in-chennai-3-august-2026#comments</comments><guid isPermaLink="false">352ddef9-be69-4a68-b082-311ef7393ea6</guid><pubDate>Mon, 03 Aug 2026 02:24:24 +0000</pubDate><atom:updated>2026-08-03T02:24:24.442Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,கச்சா எண்ணெய்,Crude oil,பெட்ரோல் டீசல் விலை,Pertrol Diesel Prices</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-14/lultzg19/petrol.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Petrol Diesel ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-14/lultzg19/petrol.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் போரினால் மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p> <h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.</p> <h2>இன்றைய பெட்ரோல், டீசல் விலை</h2><p>அந்த வகையில் இன்றைய (3.8.2026 - (திங்கள்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.76-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>ஜார்க்கண்ட்: காவல் துறையுடனான மோதலில் குற்ற செயல்களில் ஈடுபட்ட நபர் சுட்டுக் கொலை</title><link>https://www.maalaimalar.com/news/national/man-accused-of-criminal-activities-shot-dead-in-police-encounter-in-jharkhand</link><comments>https://www.maalaimalar.com/news/national/man-accused-of-criminal-activities-shot-dead-in-police-encounter-in-jharkhand#comments</comments><guid isPermaLink="false">10b634db-5e07-4fbc-9d7f-b8999339a93e</guid><pubDate>Mon, 03 Aug 2026 01:55:59 +0000</pubDate><atom:updated>2026-08-03T01:55:59.691Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜார்கண்ட்,Jharkhand,என்கவுண்டர்,police encounter</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/vxvqeo1e/Jamtara-SP-Shambhi-Kumar-Singh.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/vxvqeo1e/Jamtara-SP-Shambhi-Kumar-Singh.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சாஹிப்கஞ்ச் சிறையில் இருந்து தன்பாத் சிறைக்கு மாற்றப்பட்டு கொண்டிருந்தபோது, ​​ஜம்தாரா மாவட்டத்தில் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை நடைபெற்ற போலீஸ் மோதலில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த சுஜித் சின்ஹா ​​கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து <a href="https://www.maalaimalar.com/topic/jharkhand">ஜார்க்கண்ட்</a> காவல் துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.</p><p>இதுகுறித்து காவல் துறையினர் அளித்த தகவலின்படி, கைதிகளை ஏற்றி சென்ற வாகனம் பயணத்தின்போது விபத்துக்குள்ளானதை தொடர்ந்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதைத் தொடர்ந்து நடந்த மோதலில் சின்ஹா ​​கொல்லப்பட்டார்.</p><h2>தீவிர விசாரணை:</h2><p>மூத்த போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்; அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தடயவியல் குழுவும் வரவழைக்கப்பட்டது. அதேவேளையில், அனைத்து சட்ட மற்றும் நடைமுறை விதிமுறைகளும் பின்பற்றப்படுவதை உறுதிசெய்யும் வகையில் ஒரு மாஜிஸ்திரேட் நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு வருகிறார்.</p><p>இந்த மோதலுக்கு வழிவகுத்த நிகழ்வுகளின் முழு வரிசையையும் கண்டறிய விசாரணையும் தடயவியல் ஆய்வும் உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><h2>காவல் துறை விளக்கம்:</h2><p>இதுகுறித்து ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் பேசிய ஜம்தாரா மாவட்டகாவல் கண்காணிப்பாளர் (SP) ஷாம்பி குமார் சிங், "சுஜித் சின்ஹா ​​சாஹிப்கஞ்ச் சிறையில் இருந்து தன்பாத் சிறைக்கு மாற்றப்பட்டு கொண்டிருந்தார். பயணத்தின்போது வாகனம் விபத்துக்குள்ளானது.</p><p>அதைத் தொடர்ந்து போலீஸ் மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாங்கள் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். தடயவியல் குழு வரவழைக்கப்பட்டுள்ளது, மேலும் மாஜிஸ்திரேட்டும் சம்பவ இடத்தில் உள்ளார்," என்று கூறினார்.</p><h2>தடயவியல் ஆய்வு:</h2><p>தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (NHRC) வழிகாட்டுதல்களின்படி விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்படும் தடயவியல் ஆய்வு மோதல் தொடர்பான துல்லியமான சூழலை தீர்மானிக்க உதவும் என்றும் காவல் துறையினர் தெரிவித்தனர்.</p><p>"நாங்கள் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் அனைத்து வழிகாட்டுதல்களையும் கண்டிப்பாக பின்பற்றி வருகிறோம். மாஜிஸ்திரேட் முன்னிலையில் சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்படும் முழுமையான ஆய்வு, மீதமுள்ள அம்சங்களை தெளிவுபடுத்த உதவும்," என்று காவல் கண்காணிப்பாளர் மேலும் கூறினார்.</p><p>இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 3.8.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் வளர்ச்சி மேலோங்கும்
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-3-august-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-3-august-2026#comments</comments><guid isPermaLink="false">b8ecf373-a672-4bae-bdf6-a9381ee68e38</guid><pubDate>Mon, 03 Aug 2026 01:53:54 +0000</pubDate><atom:updated>2026-08-03T01:53:54.649Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-04-26/5jm25v3a/rasipalan.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-04-26/5jm25v3a/rasipalan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>ராசிபலன்(Rasipalan)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும் நாள். சமுதாயப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆன்மிகப் பயணம் உண்டு. தொழில் சீராக இருக்கும்.</p><h2>ரிஷபம்</h2><p>தொழில் வளர்ச்சி மேலோங்கும் நாள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். நேற்று பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும்.</p> <h2>மிதுனம்</h2><p>கொள்கைப் பிடிப்போடு செயல்படும் நாள். தொழில் ரீதியான பயணம் அனுகூலம் தரும். வருங்கால நலன் கருதி புதிய திட்டம் தீட்டுவீர்கள்.</p><h2>கடகம்</h2><p>யோகமான நாள். சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். பேச்சுத் திறமையால் சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள்.</p> <h2>சிம்மம்</h2><p>யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வரவை விடச் செலவு கூடும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செய்யும் தொழிலில் நிலையான போக்கு இருக்காது.</p><h2>கன்னி</h2><p>கனவுகள் நனவாகும் நாள். காரிய வெற்றிக்கு முக்கியப் புள்ளிகளின் ஒத்துழைப்பு கிட்டும். அதிக முதலீடுகள் செய்து தொழிலை விரிவுபடுத்த நினைப்பீர்கள்.</p> <h2>துலாம்</h2><p>மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும். வியாபாரத்திலிருந்த மறைமுக போட்டிகள் விலகும். கடன் சுமை குறையும்.</p><h2>விருச்சிகம்</h2><p>ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள். வி.ஐ.பி.க்களின் சந்திப்புக் கிட்டும். விரும்பிய காரியத்தை செய்து முடிப்பீர்கள். புது முயற்சி வெற்றி தரும்.</p> <h2>தனுசு</h2><p>ஒளிமயமான எதிர்காலத்திற்கு உறுதுணை புரியும் நாள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். வாகன யோகம் உண்டு. அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு.</p><h2>மகரம்</h2><p>யோகமான நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் அதிரடி மாற்றங்களை மேலதிகாரிகள் செய்வர்.</p> <h2>கும்பம்</h2><p>நல்லது நடக்கும் நாள். அடுத்தவர் நலனில் காட்டிய அக்கறைக்கு ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரிகளால் பாராட்டுகள் கிடைக்கும்.</p><h2>மீனம்</h2><p>ஆரோக்கியம் சீராகும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். வியாபார ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி தரும். தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.</p> ]]></content:encoded></item><item><title>வளைகுடா தலைவர்களால் தான் ஈரான் மீதான புதிய தாக்குதல்கள் தள்ளிவைக்கப்பட்டன - அதிபர் டிரம்ப் தகவல்!</title><link>https://www.maalaimalar.com/news/world/trump-said-gulf-leaders-input-weighed-heavily-in-decision-to-hold-off-on-ordering-new-iran-strikes</link><comments>https://www.maalaimalar.com/news/world/trump-said-gulf-leaders-input-weighed-heavily-in-decision-to-hold-off-on-ordering-new-iran-strikes#comments</comments><guid isPermaLink="false">6811fbc5-81cd-4565-bd5b-f8666c577777</guid><pubDate>Mon, 03 Aug 2026 01:14:15 +0000</pubDate><atom:updated>2026-08-03T01:14:15.071Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டொனால்டு டிரம்ப்,Donald Trump,ஈரான்,Iran,Gulf Leaders</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/f0766le0/Donald-Trump-5.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Donald Trump]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/f0766le0/Donald-Trump-5.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் மீது புதிய தாக்குதல்களை நடத்துமாறு அமெரிக்க படைகளுக்கு உத்தரவிடுவதை தள்ளிவைக்க முடிவு செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் <a href="https://www.maalaimalar.com/topic/donald-trump">டொனால்டு டிரம்ப்</a> தெரிவித்தார். கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய வளைகுடா நட்பு நாடுகளின் வலியுறுத்தலின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.</p><p>இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய மிகப்பெரிய தாக்குதலை <a href="https://www.maalaimalar.com/topic/US">அமெரிக்க</a> படைகள் நடத்துவதற்கான திட்டம் தயாராக இருந்ததாக அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார். </p><p>ஆனால், சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் உள்ளிட்ட முக்கிய வளைகுடா நாட்டு தலைவர்களின் கருத்துகளை கேட்டறிந்த பிறகும், பெயர் குறிப்பிடப்படாத ஈரான் அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரிலும், அந்த திட்டத்தை கைவிட்டு, இராஜதந்திர முயற்சிகளுக்கு மேலும் கால அவகாசம் அளிக்க அவர் முடிவு செய்தார்.</p><h2>எதை விரும்புகிறீர்கள்?</h2><p>நியூ ஜெர்சியின் பெட்மின்ஸ்டரில் உள்ள தனது கோல்ஃப் கிளப்பில் வார இறுதி நாட்களை கழித்துவிட்டு வாஷிங்டனுக்குத் திரும்பும் வழியில், 'ஏர் ஃபோர்ஸ் ஒன்' விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "நான் இளவரசரிடம், 'நீங்கள் எதை விரும்புகிறீர்கள்? நாங்கள் இதை செய்வதையா அல்லது செய்யாமல் இருப்பதையா?' என்று கேட்டேன்," என்று கூறினார்.</p><p>"தாக்குதலை விட ஒரு ஒப்பந்தத்தையே நாங்கள் பெரிதும் விரும்புகிறோம் என்று அவர்கள் கூறினார்கள்; ஏனெனில் இத்தகைய தாக்குதல்கள் எங்கு போய் முடியும் என்று யாருக்கும் தெரியாது," என்றும் அவர் தெரிவித்தார்.</p><h2>புதிய ஒப்பந்தம்:</h2><p>ஐந்து மாதங்களாக நீடிக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தின் "அடிப்படை அம்சங்களை" மத்திய கிழக்கு நட்பு நாடுகள் எட்டியுள்ளதாக சமூக ஊடக பதிவு ஒன்றில் டிரம்பும் இளவரசரும் இது குறித்து பேசினர்.</p><p>உருவாகி வரும் இந்த ஒப்பந்தத்தில் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது மற்றும் ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த அமெரிக்காவின் கவலைகளுக்கு தீர்வு காண்பது ஆகியவை அடங்கும் என்று டிரம்ப் மீண்டும் வலியுறுத்தினார்.</p><p>அமெரிக்காவுடனான மோதலின் ஒரு பகுதியாக, தனது அனுமதியின்றி ஹார்முஸ் நீரிணை வழியாக செல்ல முயலும் கப்பல்கள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.</p><h2>பேச்சுவார்த்தை இல்லை:</h2><p>மேலும், போர் தொடங்கிய நாளான பிப்ரவரி 28-க்கு முன்பு இருந்த நிலைக்கு ஹார்முஸ் நீரிணை "எந்த வகையிலும் திரும்ப போவதில்லை" என்று ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் கூறினார். ஈரானிய அரசு தொலைக்காட்சியுடனான உரையாடலில், ஹார்முஸ் நீரிணையின் மறுபுறம் உள்ள ஓமானுடன் அந்த நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தை மேற்கொள்வது குறித்து ஈரான் விவாதித்து வருவதாகவும், ஆனால் அந்த முக்கியமான நீர்வழியை மீண்டும் திறப்பது குறித்த பேச்சுவார்த்தை எதுவும் தற்போது நடைபெறவில்லை என்றும் அவர் கூறினார்.</p><p>பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதிலிருந்து, பல சந்தர்ப்பங்களில் ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்துவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்; இருப்பினும், அந்த முயற்சிகள் தோல்வியடைந்து மீண்டும் மோதல்கள் வெடித்தன.</p><p>டிரம்பின் அறிவிப்பைத் தொடர்ந்து, தங்கள் நாடு "ஆச்சரியப்படவோ அல்லது செயலற்றிருக்கவோ இல்லை" என்று ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் எக்ஸ் தளத்தில் தெரிவித்தார்; மேலும், அமெரிக்காவிடம் இருந்து வரும் உறுதியான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ஈரான் விழிப்புடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>2030இல் இந்தியாவில் சங்கமிக்கும் உலக வீரர்கள்.. காமன்வெல்த் கொடியை பெற்றுக்கொண்ட நீரஜ் சோப்ரா - பி.டி. உஷா</title><link>https://www.maalaimalar.com/sports/commonwealth-games-2026-glasgow-closing-ceremony-india-wins-39-medals-ahmedabad-to-host-2030-edition</link><comments>https://www.maalaimalar.com/sports/commonwealth-games-2026-glasgow-closing-ceremony-india-wins-39-medals-ahmedabad-to-host-2030-edition#comments</comments><guid isPermaLink="false">b0549700-90dd-4377-b585-e904317013f3</guid><pubDate>Mon, 03 Aug 2026 00:12:59 +0000</pubDate><atom:updated>2026-08-03T00:12:59.576Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ahmedabad,Commonwealth games,காமன்வெல்த் போட்டி,Scotland,ஸ்காட்லாந்து,அகமதாபாத்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/0u2wex5f/tn-20.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நீரஜ் சோப்ரா - பி.டி. உஷா]]></media:title><media:description type="html"><![CDATA[ நீரஜ் சோப்ரா - பி.டி. உஷா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/0u2wex5f/tn-20.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் கோலாகலமாக நடைபெற்று வந்த <a href="https://www.maalaimalar.com/sports/2026-commonwealth-games-conclude-notable-achievements">2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் </a>அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ளன.</p><p>இசை நிகழ்ச்சிகளுடன் காமன்வெல்த் கொடி இறக்கப்பட்டு, போட்டிகள் முடிவுக்கு வந்தன.</p><p>இங்கிலாந்து இளவரசர் எட்வர்ட் போட்டிகளை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்து வைத்தார்.</p><p>"2030ஆம் ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் 100வது ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க தொடரை கொண்டாட, உலகெங்கிலும் உள்ள விளையாட்டு வீரர்களை இந்தியாவின் அகமதாபாத் நகருக்கு அன்போடு அழைக்கிறேன்" என்று அவர் பேசினார்.</p> <h2>நிறைவு</h2><p>நிறைவு விழாவில் ஸ்காட்டிஷ் மற்றும் இந்திய பாரம்பரியக் கலைகளை ஒருங்கிணைத்து இந்தோ-ஸ்காட்டிஷ் கலாச்சார இசை மற்றும் நடன நிகழ்வு அரங்கேறியது.</p><p>"உலகம் ஒரே குடும்பம்" என்ற இந்தியத் தத்துவத்தை மையமாகக் கொண்டு இந்தியக் கலை நிகழ்ச்சிகள் அமைந்தன.</p><p>வந்தே மாதரம் பாடல் உருவாக்கப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவு பெறுவதைக் கொண்டாடும் வகையில், நடிகை மனுஷி சில்லார் தலைமையில் நூற்றுக்கணக்கான நடனக் கலைஞர்கள் மற்றும் ஷங்கர் மகாதேவனின் இசையுடன் பிரம்மாண்ட நடன நிகழ்வு நடைபெற்றது.</p><p>பிரபல பாடகர்களின் இசை நிகழ்ச்சிகளுடன் அனைத்து நாடுகளின் கொடியேந்திகள் அணிவகுத்து வந்தனர்.</p><p>இந்திய அணி சார்பில் தங்கப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா தேசியக் கொடியை ஏந்தி வந்தார்.</p><p>விழா முடிவில், 2030ஆம் ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகளை நடத்தும் அகமதாபாத் நகரத்திற்காக, இந்தியாவின் சார்பில் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவி பி.டி. உஷா மற்றும் குஜராத் துணை முதலமைச்சர் ஹர்ஷ் சங்கவி ஆகியோர் காமன்வெல்த் கொடியைப் பெற்றுக்கொண்டனர்.</p> <h2>பட்டியல்</h2><p> 2026 காமன்வெல்த் தொடரில் இந்தியாவின் 39 பதக்கங்களில் 13 தங்கம், 17 வெள்ளி மற்றும் 9 வெண்கலம் அடங்கும்.</p><p>13 தங்கம், ஒன்பது வெள்ளி உட்பட 39 பதக்கங்களுடன் ஸ்காட்லாந்து 5வது இடத்தில் உள்ளது.</p><p>68 தங்கம், 41 வெள்ளி மற்றும் 54 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 163 பதக்கங்களை வென்று ஆஸ்திரேலியா முதலித்தில் உள்ளது.</p><p>26 தங்கம், 43 வெள்ளி மற்றும் 36 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 105 பதக்கங்களைப் பெற்று இங்கிலாந்து இரண்டாம் இடம் பிடித்தது.</p><p>18 தங்கம், 20 வெள்ளி மற்றும் 21 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 59 பதக்கங்களை அடைந்து மூன்றாம் கனடா இடத்தில் உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அடுத்தகட்ட நகர்வு.. ஆகஸ்ட் 5 அறிவிக்கும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி 
</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-fallout-dharmendra-pradhan-quits-cjb-to-decide-next-political-moves</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-fallout-dharmendra-pradhan-quits-cjb-to-decide-next-political-moves#comments</comments><guid isPermaLink="false">360fd072-3fb0-4fe1-b7e6-33faca764e78</guid><pubDate>Sun, 02 Aug 2026 23:51:18 +0000</pubDate><atom:updated>2026-08-02T23:51:18.147Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,Cockroach Janata Party,CJP Protest,அபிஜித் தீப்கே,சிஜேபி போராட்டம்,Abhijit Deepke</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/9weqp9ql/tn-17.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கரப்பான்பூச்சி ஜனதா கட்சி 
]]></media:title><media:description type="html"><![CDATA[ கரப்பான்பூச்சி ஜனதா கட்சி 
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/9weqp9ql/tn-17.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p> நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான், கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யக்கோரி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி கடந்த ஜூன் 20 முதல் 1 மாதத்திற்கும் மேலாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தியது. </p><p>இதன் விளைவாக கடந்த வாரம் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் தேர்வு முறைகேடுகளை தடுக்க சிறப்பு மசோதா, விரைவு நீதிமன்றங்கள், உயர்மட்ட குழு உள்ளிட்ட அறிவிப்புகளை பல மாத மௌனத்தை கலைத்து பிரதமர் மோடி அடுத்தடுத்து வெளியிட்டார். </p><p>இந்த போராட்டத்தின் வெற்றியை தொடர்ந்த சிஜேபி கட்சி தனது அடுத்த செயல்திட்டத்தை குறித்து முடிவெடுக்க உள்ளது. </p><p>போராட்டத்திற்குப் பிறகு, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களது குடும்பத்தினருடன் நேரம் செலவிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.</p> <p>இந்நிலையில் மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகரில் சிஜேபி நிறுவனர் <a href="https://www.maalaimalar.com/news/national/trouble-for-the-cockroach-party-founder-where-did-the-money-for-us-studies-come-from-new-petition-seeks-rti-inquiry">அபிஜித் தீப்கே</a> வீட்டில், முக்கிய நிர்வாகிகள் வரும் ஆகஸ்ட் 5 அன்று இதுகுறித்து ஆலோசிக்க கூடுகின்றனர்.</p><h2>ஆலோசனை </h2><p>நாடு முழுவதுமுள்ள மாணவர்கள் மற்றும் தொண்டர்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்து, ஆகஸ்ட் 5 ஆலோசனைக் கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு நிர்வாகிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p>இதில் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.</p><p>ஆகஸ்ட் 5 அன்று நடைபெறும் கூட்டத்திற்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்துத் தங்களது அடுத்தகட்ட முடிவுகளை சிஜேபி அறிவிக்கவுள்ளது.</p><p>இதனிடையே, தனது இல்லத்தில் அப்பகுதி மாணவர்களை சந்தித்த அபிஜித் தீப்கே நேற்று நண்பர்கள் தினத்தை கொண்டாடினார்.</p> <h2>கரப்பான்பூச்சி ஜனதா கட்சி</h2><p>உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் வேலையற்ற இளைஞர்களை கரப்பான்பூச்சிகள் என அழைத்தன் எதிர்வினையாக இணையத்தில் தொடங்கப்பட்ட சிஜேபி இயக்கத்துக்கு இளைஞர்களும் மற்றும் ஜென் இசட் மத்தியில் வரவேற்பு அதிகரித்தது. </p><p>தொடர்ந்து நாட்டில் நடைபெற்ற நீட் உள்ளிட்ட தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகளை கையில் எடுத்த சிஜேபி தெருக்களுக்கு வந்தது. கல்வியாளர் சோனம் வாங்சுக் இப்போராட்டத்தில் 26 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தது சிஜேபி வெற்றிக்கு முக்கிய காரணியாக அமைந்தது. </p><p>தங்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றும் நோக்கம் இல்லை என அதன் நிர்வாகிகள் முன்னர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>கஜினி படத்துல இருந்தே சூர்யா சார் மேல எனக்கு கிரஸ் - விஸ்வநாத் &amp; சன்ஸ் இசை வெளியீட்டு விழாவில் மமிதா </title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/suriyas-viswanath-sons-audio-launch-mamitha-reveals-crush-new-song-gains-buzz</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/suriyas-viswanath-sons-audio-launch-mamitha-reveals-crush-new-song-gains-buzz#comments</comments><guid isPermaLink="false">bdae61fb-2ecb-44bb-8bd2-0f0b109abd32</guid><pubDate>Sun, 02 Aug 2026 23:16:00 +0000</pubDate><atom:updated>2026-08-02T23:16:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சூர்யா,mamitha baiju,மமிதா பைஜூ,Surya,விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்,Viswanathan &amp; Sons</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/3a9abmcb/tn-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விஸ்வநாத் & சன்ஸ் ]]></media:title><media:description type="html"><![CDATA[ விஸ்வநாத் & சன்ஸ் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/3a9abmcb/tn-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>'கருப்பு' படத்தை தொடர்ந்து நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE">சூர்யா</a>வின் 46வது படமாக ‘விஸ்வநாத் &amp; சன்ஸ்’ படம் உருவாகியுள்ளது. </p><p>தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கிய இப்படத்தில் ராதிகா சரத்குமார் மற்றும் ரவீனா தாண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.</p><p>'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படம் ஒரு நடுத்தர வயது விளையாட்டு வீரருக்கும், அவர் மீது ஈர்ப்பு கொள்ளும் இளம் பெண்ணுக்கும் இடையிலான காதலை மையமாகக் கொண்ட கதைக்களத்தை கொண்டுள்ளது என டிரெய்லர் மூலம் அறிய முடிகிறது. </p><p>இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று கோவை இந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள சூர்யா இன்று விமான மார்க்கமாக கோவை வந்தடைந்தார். </p><p>இந்த விழாவில் படத்தின் நாயகி மமிதா பைஜூ, படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், நடிகர் சுனில், நடிகை ராதிகா, இயக்குநர் அட்லூரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். </p><p>இந்நிகழ்வில் பேசிய நடிகை மமிதா, சூர்யா மீது தனக்கு இருந்த கிரஷ்-ஐ தெரிவித்துள்ளார். </p> <h2>மமிதா பேச்சு</h2><p>மேடையில் மமிதா சூர்யா குறித்து பேசியதாவது, சூர்யா சாரை பார்த்து நிறைய கத்துருக்கேன்.</p><p>ஆஃப் ஸ்கிரின்ல இருந்தும் நிறைய இன்ஸ்பையர் பண்ணிருக்காரு. அவரோட சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு இதுக்கு முன்னாடி மிஸ் ஆகிடுச்சு. ஆனா இந்த முறை அந்த வாய்ப்பு அமைஞ்சுடுச்சு. கஜினி படத்துல இருந்தே சூர்யா சார் மேல எனக்கு க்ரஷ்.</p><p>அவரோட சேர்ந்து வொர்க் பண்ணது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. அவரு ஒரு சீனை அப்ரோச் பண்ணுற விதம் எனக்கு ரொம்ப பிடிக்கும். </p><p>ஜிவி சார் கூட இரண்டாவது முறையாக வொர்க் பண்ணதுல ரொம்ப ஹாப்பி. ராதிகா மேம் செட்ல ஒரு மெண்டாராக எனக்கு இருந்தாங்க." என்றார்</p><p>‘விஸ்வநாத் &amp; சன்ஸ்’ படம் ஆகஸ்ட் மாதம் 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் வெளியாக உள்ளதை தொடர்ந்து இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.</p> <h2>பாடல்கள்</h2><p>‘விஸ்வநாத் &amp; சன்ஸ்’ படம் ஆகஸ்ட் மாதம் 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் வெளியாக உள்ளதை தொடர்ந்து இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.</p><p>நடிகர் சூர்யா பிறந்தநாளையொட்டி கடந்த வாரம் வெளியான இரண்டாவது பாடலும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.</p> <p>இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் உருவாகியுள்ள இப்பாடலை, நடிகர் சூர்யாவே தனது சொந்தக் குரலில் பாடியுள்ளார்.</p><p>மேலும் கென் கருணாஸ் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடல், ஒரு குடும்பத் திருமண விழாவின் கொண்டாட்டங்களை மையமாகக் கொண்டு துள்ளலான இசையுடன் பின்னப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இந்திய வரைபடத்தில் விடுபட்ட வடகிழக்கு.. சுட்டிக்காட்டிய வீராங்கனை லவ்லினா - திருத்திக்கொண்ட ஸ்காட்லாந்து உணவகம் </title><link>https://www.maalaimalar.com/sports/india-map-row-boxer-lovlina-flags-missing-northeast-in-glasgow-restaurant</link><comments>https://www.maalaimalar.com/sports/india-map-row-boxer-lovlina-flags-missing-northeast-in-glasgow-restaurant#comments</comments><guid isPermaLink="false">746fa1cc-987a-4dea-94cf-f3359f1a687c</guid><pubDate>Sun, 02 Aug 2026 22:09:00 +0000</pubDate><atom:updated>2026-08-02T22:09:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Commonwealth games,காமன்வெல்த் போட்டி,வடகிழக்கு மாநிலங்கள்,northeastern states,Boxing,குத்துச்சண்டை,Lovlina,லவ்லினா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/nal0eids/tn-14.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ லவ்லினா ]]></media:title><media:description type="html"><![CDATA[ லவ்லினா ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/nal0eids/tn-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்து வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியக் <a href="https://www.maalaimalar.com/sports/india-boxing-wins-seven-golds-sachin-and-ankush-clinch-titles-at-glasgow-commonwealth-games">குத்துச்சண்டை </a>அணி 7 தங்கம், 3 வெள்ளி என மொத்தம் 10 பதக்கங்களை வென்றது.</p><h2>மிஸ்டர் சிங்ஸ் இந்தியா உணவகம்</h2><p>இந்த வரலாற்று சாதனையை கொண்டாடும் வகையில்,  கிளாஸ்கோ நகரில் உள்ள 'மிஸ்டர் சிங்ஸ் இந்தியா'  என்ற உணவகத்திற்கு  இந்திய வீரர் வீராங்கனைகள் சென்றுள்ளனர். </p><p>கிளாஸ்கோவில் மிகவும் பிரபலமான 'மிஸ்டர் சிங்ஸ் இந்தியா' உணவகம், விளையாட்டு வீரர்கள் மற்றும் முக்கியப் பிரபலங்கள் பலர் வந்து செல்லும் உணவகமாகும். </p><p>நேற்று 75 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற அசாம் மாநிலத்தை சேர்ந்த வீராங்கனை லவ்லினா போர்கோஹைனும் சென்றுள்ளார். </p><p>உணவகத்தில் பயன்படுத்தப்பட்ட நாப்கின்கள் மற்றும் நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த இந்திய வரைபடத்தில் வடகிழக்கு மாநிலங்கள் விடுவிக்கப்பட்டிருப்பதை அவர் கவனித்துள்ளார்.</p> <h2>லவ்லினா</h2><p>இது குறித்து லவ்லினா அங்கு பேசிய வீடியோ பதிவு வெளியாகியுள்ளது.</p><p>அதில் அவர், "தயவுசெய்து இதைத் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இதைப் பார்த்தபோது எனக்குச் சற்று மனவருத்தமாக இருந்தது.</p><p>இந்த இந்திய வரைபடத்தில் எங்கள் வடகிழக்குப் பகுதியைக் காணவில்லை. வெளியிலும் வடகிழக்கு பகுதி நீக்கப்பட்ட வரைபடமே வைக்கப்பட்டுள்ளது.</p><p>வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவள் என்ற முறையில் இது எங்களுக்கு மிகுந்த வேதனையைத் தருகிறது. அடுத்த முறை இதைக் கவனத்தில் கொள்ளுங்கள், நன்றி." என சுட்டிக்காட்டினார்.</p> <h2>அஜய் சிங்</h2><p>இது குறித்து இந்தியக் குத்துச்சண்டை கூட்டமைப்பின் தலைவர் அஜய் சிங் அளித்த பேட்டியில், "உணவக நிர்வாகத்துடன் எந்த மோதலோ அல்லது வாக்குவாதமோ ஏற்படவில்லை. நானும் லவ்லினாவும் அந்தத் தவறான வரைபடத்தை அவர்களிடம் சுட்டிக்காட்டினோம்.</p><p>உணவக நிர்வாகத்தினர் உடனடியாகத் தங்களது தவறை ஒப்புக்கொண்டு, வரைபடத்தை விரைவில் சரிசெய்வதாக உறுதியளித்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>2026 காமன்வெல்த்  போட்டிகள் நிறைவு.. கவனிக்கத்தக்க சாதனைகள் </title><link>https://www.maalaimalar.com/sports/2026-commonwealth-games-conclude-notable-achievements</link><comments>https://www.maalaimalar.com/sports/2026-commonwealth-games-conclude-notable-achievements#comments</comments><guid isPermaLink="false">04480b6f-3a11-4aa7-a486-68b80f7766b9</guid><pubDate>Sun, 02 Aug 2026 21:14:25 +0000</pubDate><atom:updated>2026-08-02T21:14:25.594Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Commonwealth games,காமன்வெல்த் போட்டி,Scotland,ஸ்காட்லாந்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/eg93shn0/tn-19.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ 2026 காமன்வெல்த்  போட்டிகள் ]]></media:title><media:description type="html"><![CDATA[ 2026 காமன்வெல்த்  போட்டிகள் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/eg93shn0/tn-19.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் கோலாகலமாக நடைபெற்று வந்த<a href="https://www.maalaimalar.com/sports/commonwealth-games-medal-tally-india-finishes-fourth-with-39-medals-in-glasgow"> 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் </a>அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ளன. </p><p>இசை நிகழ்ச்சிகளுடன் காமன்வெல்த் கொடி இறக்கப்பட்டு, போட்டிகள் முடிவுக்கு வந்தன.</p> <h2>பட்டியல்</h2><p>இந்தியாவின் 39 பதக்கங்களில் 13 தங்கம், 17 வெள்ளி மற்றும் 9 வெண்கலம் அடங்கும்.</p><p>13 தங்கம், ஒன்பது வெள்ளி உட்பட 39 பதக்கங்களுடன் ஸ்காட்லாந்து 5வது இடத்தில் உள்ளது.</p><p>68 தங்கம், 41 வெள்ளி மற்றும் 54 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 163 பதக்கங்களை வென்று ஆஸ்திரேலியா முதலித்தில் உள்ளது.</p><p>26 தங்கம், 43 வெள்ளி மற்றும் 36 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 105 பதக்கங்களைப் பெற்று இங்கிலாந்து இரண்டாம் இடம் பிடித்தது.</p><p>18 தங்கம், 20 வெள்ளி மற்றும் 21 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 59 பதக்கங்களை அடைந்து மூன்றாம் கனடா இடத்தில் உள்ளது.</p> <h2>தொடரின் நாயகர்கள்</h2><p>34 வயதான சத் லே குளோஸ் தென் ஆப்பிரிக்க நீச்சல் வீரர் சத் லே குளோஸ் இத்தொடரில் 3 பதக்கங்களை வென்றார். இதன்மூலம் காமன்வெல்த் தொடர்களில் இவர் வென்ற பதக்கங்களில் எண்ணிக்கை 21ஆக உயர்ந்தது. காமன்வெல்த் வரலாற்றிலேயே அதிக பதக்கம் வென்ற வீரர் என்ற உலக சாதனையைப் படைத்தார்.</p><p>போட்டியில் வேல்ஸ் நாட்டின் டிராக் சைக்கிளிங் வீராங்கனை எம்மா பினுக்கேன் ஒரே காமன்வெல்த் தொடரில் 4 தங்கப் பதக்கங்களை வென்று ஒரே தொடரில் 4 தங்கம் வென்ற முதல் சைக்கிளிங் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார்.</p> <h2>இந்திய சாதனை</h2><p>10 விளையாட்டுகள் மட்டுமே இடம்பெற்ற இத்தொடரில், இந்தியா 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.</p><p>இந்தியாவிற்கு அதிக பதக்கங்களை அள்ளிக் கொடுத்த விளையாட்டாகக் குத்துச்சண்டை அமைந்தது. அதில் மட்டுமே ஆண்கள், பெண்கள் பிரிவை சேர்த்து இந்தியா 7 தங்க பதக்கங்களை கொண்டுள்ளது.</p> <figure><img alt="இந்திய குத்துச்சண்டை வீராங்கனைகள் லவ்லினா, ஜாஸ்மின் லம்போரியா, பிரியா கங்காஸ், பிரீத்தி பவார், சாக்ஷி சவுத்ரி, அருந்ததி சவுத்ரி  (இடமிருந்து வலம்) 
" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/k6jm3um9/tn-18.jpg" /><figcaption>இந்திய குத்துச்சண்டை வீராங்கனைகள் லவ்லினா, ஜாஸ்மின் லம்போரியா, பிரியா கங்காஸ், பிரீத்தி பவார், சாக்ஷி சவுத்ரி, அருந்ததி சவுத்ரி  (இடமிருந்து வலம்) 
</figcaption></figure><h2>இளம் வீரர்கள் வருகை</h2><p>ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தவிர்த்து, தேஜஸ்வின் சங்கர், யாஷ்வீர் சிங் மற்றும் பல இளம் வீரர்கள் தடகளப் பிரிவில் பதக்கங்களை வென்றுள்ளனர். </p><p>ஜூடோ, பளுதூக்குதல் மற்றும் குத்துச்சண்டையில் இளம் வீரர்கள் பதக்கங்களை வென்று எதிர்கால நம்பிக்கையை விதைத்துள்ளனர்.</p>  <h2>அடுத்த இலக்கு</h2><p>காமன்வெல்த் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், இந்திய வீரர்களின் அடுத்தகட்ட இலக்கு ஜப்பானில் வரும் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை நடைபெறவுள்ள 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஆகும்.</p><p>சீனா, ஜப்பான், தென் கொரியா போன்ற வல்லரசுகள் பங்கேற்பதால் அங்குப் போட்டி கடுமையாக இருக்கும்.</p> ]]></content:encoded></item><item><title>கிரீஸ்: காட்டுத் தீயை அணைக்கும்போது 2 தீயணைப்பு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி விபத்து </title><link>https://www.maalaimalar.com/news/world/greece-firefighting-helicopters-crash-two-choppers-collide-mid-air-near-athens-during-wildfire-mission</link><comments>https://www.maalaimalar.com/news/world/greece-firefighting-helicopters-crash-two-choppers-collide-mid-air-near-athens-during-wildfire-mission#comments</comments><guid isPermaLink="false">691bc97a-0aa1-40e9-a8aa-e2fa559133a5</guid><pubDate>Sun, 02 Aug 2026 20:34:26 +0000</pubDate><atom:updated>2026-08-02T20:34:26.662Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கிரீஸ்,greece,helicopter crash,ஹெலிகாப்டர் விபத்து,காட்டுத் தீ,wildfire</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/r310kti4/tn-13.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கிரீஸ் விபத்து ]]></media:title><media:description type="html"><![CDATA[ கிரீஸ் விபத்து ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/r310kti4/tn-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸ் அருகே <a href="https://www.maalaimalar.com/news/world/europe-wildfires-crisis-heat-fuelled-forest-fires-in-france-and-spain-affect-220000-people">காட்டுத்தீயை </a>அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. </p><p>ஏதென்ஸுக்கு மேற்கே உள்ள போர்ட்டோ ஜெர்மெனோ பகுதியில் வேகமாகப் பரவி வரும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு தீயணைப்பு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாகின. </p> <h2>தேடுதல்</h2><p>கிரீஸ் தீயணைப்புத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, மோதிக்கொண்ட ஒவ்வொரு ஹெலிகாப்டரிலும் தலா இரண்டு விமானப் படை வீரர்கள் என மொத்தம் 4 பேர் இருந்தனர்.</p><p>விபத்து நடந்த இடத்தில் தேடுதல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இருப்பினும், விமானிகளின் நிலை குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.</p><p>விபத்தில் ஒரு ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கும் வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன.</p><h2>ஐரோப்பாவில் தீ</h2><p>ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் காட்டுத்தீ பரவலாக தீவிரமடைந்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் காட்டுத் தீயானது தன் தலைநகர் பாரிஸை விட 4 மடங்கு பெரிய பரப்பளவை எரித்து சாம்பலாக்கியுள்ளது.</p><p>சுமார் 2,24,000 மக்கள் தங்கள் வீடுகளை விட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><p>தீயை அணைக்க ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள், ராணுவம், ஹெலிகாப்டர்கள் மற்றும் பிரத்யேக விமானங்கள் களமிறக்கப்பட்டுள்ளன.</p> <p>வீசும் கடுமையான காற்று, வறண்ட நிலப்பரப்பு மற்றும் காற்றில் குறைந்த ஈரப்பதம் ஆகியவை தீயை விரைவாகப் பரவச் செய்வதால், தணிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.</p><p>இருப்பினும் ஸ்பெயினின் பல்வேறு பகுதிகளில் பரவி வந்த காட்டுத் தீயின் வேகம், தீயணைப்பு வீரர்களின் தொடர் முயற்சியால் தற்போது சற்றுக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் ஏற்பட்ட இந்த காட்டுத் தீ காரணமாக சுமார் 3.5 லட்சம் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.</p><p>வானிலை முக்கியக் காரணமாகக் கருதப்பட்டாலும், திட்டமிட்டு நாசவேலையில் ஈடுபட தீ வைக்கப்பட்டதா அல்லது மனிதத் தவறுகளால் தீ வைக்கப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.</p><p>முன்னதாக இந்த வார தொடக்கத்தில் அர்ஜென்டினாவின் மேற்கு சான் ஜுவான் மாகாணத்தில் தீயணைப்பு ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் உயிரிழந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>பெண்களுக்கு காதலை விட மரியாதையை அதிகம் கொடுங்கள் - ‘விஸ்வநாத் &amp; சன்ஸ்’ இசை வெளியீட்டு விழாவில் சூர்யா </title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/suriya-stresses-enduring-love-and-respect-for-women-at-viswanath-sons-audio-launch</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/suriya-stresses-enduring-love-and-respect-for-women-at-viswanath-sons-audio-launch#comments</comments><guid isPermaLink="false">2575f795-a7bd-4ea3-ab7c-91ef67fc70e2</guid><pubDate>Sun, 02 Aug 2026 19:36:31 +0000</pubDate><atom:updated>2026-08-02T19:36:31.545Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சூர்யா,suriya,mamitha baiju,மமிதா பைஜூ,விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்,Viswanathan &amp; Sons</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/q78ygwah/tn-15.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ‘விஸ்வநாத் & சன்ஸ்’]]></media:title><media:description type="html"><![CDATA[ ‘விஸ்வநாத் & சன்ஸ்’]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/q78ygwah/tn-15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>'கருப்பு' படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் 46வது படமாக ‘<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D">விஸ்வநாத் &amp; சன்ஸ்</a>’ படம் உருவாகியுள்ளது. </p><p>தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கிய இப்படத்தில் ராதிகா சரத்குமார் மற்றும் ரவீனா தாண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.</p><p>'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படம் ஒரு நடுத்தர வயது விளையாட்டு வீரருக்கும், அவர் மீது ஈர்ப்பு கொள்ளும் இளம் பெண்ணுக்கும் இடையிலான காதலை மையமாகக் கொண்ட கதைக்களத்தை கொண்டுள்ளது என டிரெய்லர் மூலம் அறிய முடிகிறது. </p><p>இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று கோவை இந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள சூர்யா இன்று விமான மார்க்கமாக கோவை வந்தடைந்தார். </p><p>இந்த விழாவில் படத்தின் நாயகி மமிதா பைஜூ, படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், நடிகர் சுனில், நடிகை ராதிகா, இயக்குநர் அட்லூரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். </p><p>இந்நிகழ்வில் பேசிய நடிகர் சூர்யா பெண்கள், அவர்கள் மீதான காதல் மற்றும் மரியாதை குறித்து பேசியுள்ளார். </p> <h2>சூர்யா பேச்சு</h2><p>மேடையில் சூர்யா பேசியதாவது, "காதல் என்பது என்றும் மாறாத ஒன்றாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அது தாலி கட்டும் நாளில் மட்டும் உணரப்படும் ஒன்று அல்ல. ஒவ்வொரு நாளும் நாம் காதலிக்க வேண்டும்.</p><p>ஒருவருடன் 20 ஆண்டுகள் வாழ்ந்தாலும், அந்த அன்பும் காதலும் தொடர வேண்டும். உங்கள் துணை மீது எப்போதும் மரியாதையும் அன்பும் குறையாமல் இருக்க வேண்டும்.</p><p>காலப்போக்கில் ஒவ்வொருவரும் மாறுகிறார்கள். நாமும் மாறுகிறோம், நம் துணையும் மாறுவார்.</p><p>20, 25 அல்லது 30 வயதில் நமது முன்னுரிமைகள் வேறாக இருக்கும். நமது சிந்தனைகள் மாறலாம், வாழ்க்கை எந்தப் பாதையிலும் செல்லலாம். ஆனால், நமது துணை மீது நாம் வைத்துள்ள அன்பும் பாசமும் ஒருபோதும் மாறக்கூடாது."</p> <p>ஒரு பெண் ஒரு நிலையை அடையக் கடந்து வரும் பாதையானது, ஒரு ஆண் கடந்து வருவதை விட மிகவும் கடினமானது.</p><p>ஒரு வீட்டைக் கவனித்துக் கொள்வதிலும், ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதிலும் பெண்கள் எவ்வளவோ விட்டுக் கொடுத்துத் தியாகங்களைச் செய்கிறார்கள்.</p><p>அவர்களின் தியாகங்களுக்கு எப்போதும் மதிப்பளியுங்கள். அந்த மரியாதையுடன் முடிந்தவரை உறுதியாக நில்லுங்கள். உண்மையில் காதலை விட மரியாதையை அதிகம் அவர்களுக்குக் காட்டுங்கள்." என தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>முடிவுக்கு வரும் 2026 காமன்வெல்த் போட்டிகள்: 39 பதக்கங்களுடன் இந்தியா 4ஆம் இடம்! - முதலிடம் யார்?</title><link>https://www.maalaimalar.com/sports/commonwealth-games-medal-tally-india-finishes-fourth-with-39-medals-in-glasgow</link><comments>https://www.maalaimalar.com/sports/commonwealth-games-medal-tally-india-finishes-fourth-with-39-medals-in-glasgow#comments</comments><guid isPermaLink="false">716eb3fa-b3d9-4e11-ba89-c2fe44f5d5b6</guid><pubDate>Sun, 02 Aug 2026 18:42:42 +0000</pubDate><atom:updated>2026-08-02T18:42:42.404Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Commonwealth games,காமன்வெல்த் போட்டி,Scotland,ஸ்காட்லாந்து,cycling,சைக்கிளிங்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/o20ad3aq/tn-16.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ காமன்வெல்த் போட்டிகள்]]></media:title><media:description type="html"><![CDATA[ காமன்வெல்த் போட்டிகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/o20ad3aq/tn-16.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/sports/india-advances-to-fourth-with-18-medals-in-a-day-at-commonwealth-games">2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில்</a> இந்தியாவின் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. </p><p>ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற இப்போட்டிகளில், இந்தியா 39 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்தது. </p><p>தற்போது, ​​பதக்கப் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. </p><h2>பட்டியல் </h2><p>இந்தியாவின் 39 பதக்கங்களில் 13 தங்கம், 17 வெள்ளி மற்றும் 9 வெண்கலம் அடங்கும்.    </p><p>13 தங்கம்,  ஒன்பது வெள்ளி உட்பட 39 பதக்கங்களுடன் ஸ்காட்லாந்து இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் உள்ளது. ஸ்காட்லாந்து மேலும் தங்கப் பதக்கங்களை வென்றால், அது நான்காவது இடத்தை அடைந்திருக்கும். அதே நேரத்தில் இந்தியா ஐந்தாவது இடத்திற்குச் சரியும்.</p><p> 68 தங்கம், 41 வெள்ளி மற்றும் 54 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 163 பதக்கங்களை வென்று ஆஸ்திரேலியா முதலித்தில் உள்ளது. </p><p>26 தங்கம், 43 வெள்ளி மற்றும் 36 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 105 பதக்கங்களைப் பெற்று இங்கிலாந்து இரண்டாம் இடம் பிடித்தது.</p><p>18 தங்கம், 20 வெள்ளி மற்றும் 21 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 59 பதக்கங்களை அடைந்து மூன்றாம் கனடா  இடத்தில் உள்ளது. </p> <h2>முடிவுக்கு வந்த 40வது பதக்க எதிர்பார்ப்பு</h2><p>இன்று நடந்த பாரா சைக்கிளிங் போட்டியில் இந்தியாவின்16 வயது லிஷா தாஸ் ஏமாற்றத்தைச் சந்தித்தார். லிஷா ஆறாவது இடத்தைப் பிடித்தார். அவரால் பதக்கம் வெல்ல முடியாததால், 40 பதக்கங்கள் வெல்ல வேண்டும் என்ற இந்தியாவின் கனவு முடிவுக்கு வந்தது.</p><p>முன்னதாக மகளிர் 78 கிலோ எடைப் பிரிவில் போட்டியில், இஷ்ரூப் நாரங் கனடாவின் கோரலி காட்பவுட்டிடம் தோல்வியடைந்தார்.</p> <h2>கொடி ஏந்தல்</h2><p>இன்றிரவு 1.30 மணிக்கு நடைபெறும் நிறைவு விழாவில் 24 வயதான குத்துச்சண்டை வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா இந்தியாவின் கொடி ஏந்திச் செல்வார். நேற்று மகளிர் 57 கிலோ எடைப்பிரிவில் அவர் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>பாகிஸ்தான்: காவல் நிலையம் அருகே அமைதி பேரணியில் தற்கொலைப் படை தாக்குதல் - 14 பேர் பலி </title><link>https://www.maalaimalar.com/news/world/pakistan-swat-suicide-bombing-14-killed-and-over-20-injured-during-peace-rally</link><comments>https://www.maalaimalar.com/news/world/pakistan-swat-suicide-bombing-14-killed-and-over-20-injured-during-peace-rally#comments</comments><guid isPermaLink="false">c6e263c8-13c4-4f2f-bc97-109110f992da</guid><pubDate>Sun, 02 Aug 2026 18:01:13 +0000</pubDate><atom:updated>2026-08-02T18:01:13.894Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Pakistan,பயங்கரவாத தாக்குதல்,suicide attack,Khyber Pakhtunkhwa,கைபர் பக்துன்கவா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/agqy4oz4/tn-12.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பாகிஸ்தான் தற்கொலைப் படை தாக்குதல் ]]></media:title><media:description type="html"><![CDATA[ பாகிஸ்தான் தற்கொலைப் படை தாக்குதல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/agqy4oz4/tn-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாகிஸ்தானின் <a href="https://www.maalaimalar.com/news/world/pakistan-drone-terror-strike-11-policemen-killed-at-hangu-checkpoint-near-afghanistan-border">கைபர் பக்துன்கவா</a> மாகாணத்தில் உள்ள ஸ்வாட் மாவட்டத்தில் கபல் சவுக் பகுதியில்  பயங்கரவாதத்திற்கு எதிராக  ஸ்வாட் ஆமன் ஜிர்கா என்ற அமைப்பின் தலைமையில் உள்ளூர் மக்களின் அமைதிப் பேரணி இன்று நடைபெற்றது. </p><p>பேரணியில் பேச்சாளர் உரையாற்றிக் கொண்டிருந்த வேளையில், அருகில் உள்ள கபல் காவல் நிலையத்தின் நுழைவாயில் வழியே நுழைய முயன்ற நபரை சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் தடுத்து நிறுத்திச் சோதனை செய்ய முயன்றனர். </p><p>அப்போது, அந்த நபர் உடலில் பொருத்தப்பட்டிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளார்.</p> <h2>உயிரிழப்புகள்</h2><p>தொடக்கத்தில் 4 காவலர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளதாக ஸ்வாட் மாவட்ட காவல் செய்தித் தொடர்பாளர் நாசிர் இக்பால் கரிமி தெரிவித்துள்ளார்.</p><p>காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் உடனடியாக மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p> <h2>விசாரணை</h2><p>சம்பவம் நடந்த இடம் முழுவதையும் பாதுகாப்புப் படையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.</p><p>அமைதியை வலியுறுத்தி திரண்ட மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதல் பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் பதற்றம்</p><p>2021இல் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து, TTP என அழைக்கப்படும் தெஹ்ரிக் இ பாகிஸ்தான் அமைப்பு கைபர் பக்துன்க்வாவில் வலுவடைந்துள்ளது.</p><p>பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் சமீபகாலமாக பயங்கரவாதத் தாக்குதல்கள் கணிசமாக அதிகரித்துள்ளன.</p><p>TTP பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதிகளில் இருந்துகொண்டு அங்கிருந்து திட்டம் தீட்டி கைபர் பக்துன்க்வாவிற்குள் ஊடுருவி தாக்குதல் நடத்துவதாக பாகிஸ்தான் அரசு குற்றம்சாட்டுகிறது.</p><p>இதனால் இரு நாடுகள் இடையே ராணுவ மோதல் அவ்வப்போது வெடித்து அடங்குகிறது.</p><p>கைபர் பக்துன்க்வா பகுதியில் தொடர்ந்து நடைபெறும் துப்பாக்கிச் சூடு, வெடிகுண்டு தாக்குதல்கள் உள்ளூர் மக்களை கடுமையாக பாதித்துள்ளது. பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்- 2 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-2-august-2026-2</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-2-august-2026-2#comments</comments><guid isPermaLink="false">48999084-21c9-4682-8ced-862e589bbdef</guid><pubDate>Sun, 02 Aug 2026 04:01:11 +0000</pubDate><atom:updated>2026-08-02T17:04:47.979Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/f9fzok5j/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Today Live News]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/f9fzok5j/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-cm-vijay-offers-condolences-on-iuml-president-kader-mohideen-sons-death">IUML தேசியத் தலைவர் காதர் மொகிதீன் மகன் மறைவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்</a></p><p>தனது அன்பு மகனை இழந்து தவிக்கும் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்தின் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kabini-dam-water-release-cut-to-10000-cusecs-warning-to-riverbank-residents-continues">கபினி அணையில் நீர் திறப்பு 10,000 கன அடியாக குறைப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை தொடர்கிறது!... </a></p><p>*இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முயற்சித் நிலையில் இயற்கையே தற்போது கைகொடுத்துள்ளது.</p><p>*கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீர், கர்நாடக-தமிழக எல்லையான 'பிலிகுண்டுலு' பகுதி வழியாக தமிழகத்திற்கு வந்தடையும்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/india-jump-to-fourth-after-day-10-australia-continue-to-lead-medal-standings">காமன்வெல்த் விளையாட்டு: டாப் 5 பட்டியலில் சட்டென முன்னேறிய இந்தியா</a></p><p>* இந்திய அணி இதுவரை 13 தங்கப் பதக்கம் வென்றுள்ளது.</p><p>* காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்றுடன் நிறைவடைய உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/gautam-gambhir-warned-questions-will-be-asked-with-india-in-tough-fight-for-wtc-final-spot">உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்கு முன்னேறனும், இல்லைனா... எச்சரித்த கம்பீர்</a></p><p>* அனைவரிடமும் கேள்விகள் கேட்கப்படும்.</p><p>* ஏனென்றால், நாம் சொந்த மண்ணில் தோற்றிருக்கிறோம். </p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/mumbai-indians-have-denied-hardik-pandya-negotiations-with-csk-or-other-outfits-at-present">ஹர்திக் பாண்ட்யா விடுவிப்பா? - மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் விளக்கம்</a></p><p>* கடந்த 3 சீசனிலும் மும்பை இந்தியன்ஸ் அணி ஏமாற்றம் அளித்தது.</p><p>* ஹர்திக் பாண்ட்யாவை வாங்க பெரும்பாலான அணிகள் ஆர்வம் காட்டி வருகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/special-camp-today-to-register-fingerprints-of-left-out-ration-cardholders">ரேசன் கடைகளில் விடுபட்டவர்கள் கைவிரல் ரேகையை பதிவு செய்ய இன்று சிறப்பு முகாம்</a></p><p>* மத்திய அரசு குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கையை வைத்து உணவு பொருட்களை ஒதுக்கீடு செய்து வருகிறது.</p><p>* இதனால் பயனாளிகளின் உண்மைத் தன்மையை அறிய கைவிரல் ரேகை அல்லது கருவிழிரேகை பதிவு செய்வது என்பது கட்டாயம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/trump-says-us-halts-military-attack-on-iran">ஈரானுக்கு எதிரான ராணுவத் தாக்குதலை ரத்து செய்தது அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!... </a></p><p>*உலகின் நன்மைக்காகவும், ஈரானின் எதிர்கால வாழ்விற்காகவும் இந்த தாக்குதலை நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்டுள்ளேன்.</p><p>*அமெரிக்கப் படைகள் இரண்டாம் உலகப்போருக்குப் பின் இல்லாத அளவிற்குத் தயாராக இருக்கின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/if-i-wear-coat-suit-too-vijay-prabhakaran-jabs-cm-vijay">நானும் கோட் ஷூட் போட்டால்.., முதல்வர் விஜயை சீண்டிய விஜய பிரபாகரன்</a></p><p>*காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக சார்பில் போராட்டம்.</p><p>* நானும் கோட் ஷூட் கண்ணாடி எல்லாம் போட்டால், நானும் அழகாகதான் இருப்பேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/we-the-leaders-beach-cleanup-campaign-annamalai-launches">'WE THE LEADERS' இயக்கம் சார்பில் கடற்கரை தூய்மைப் பணி: அண்ணாமலை தொடங்கி வைத்தார்!... </a></p><p>*கடற்கரை தூய்மை இயக்கம் கன்னியாகுமரி கடற்கரைச் சாலையில் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.</p><p>* சுற்றுச்சூழல் மற்றும் கடலோரப் பாதுகாப்பை வலியுறுத்தி இந்த மாநிலத் தழுவிய கடற்கரை தூய்மை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-rights-dmk-mp-dayanidhimaran-critics-rahul-gandhi">தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டு காவிரி உரிமைகள் குறித்து பேசாமல் இருப்பவர்கள் துரோகிகள்: ராகுல்காந்திக்கு தயாநிதி மாறன் பதிலடி</a></p><p>பாஜக-வின் குதிரைப் பேரங்களைக் கண்டிக்கிறவர்கள், தவெக-வின் அருவருப்பான குதிரைப் பேரங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் துரோகத்தின் தொடர்ச்சியே!</p><p>ஆட்சியையும் அமைச்சர்களையும் விமர்சித்து X-இல் பதிவிட்டால்கூட கைது செய்யும் பாசிச தவெக ஆட்சியைக் கண்டிக்காததும் துரோகமே!</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/broad-peak-avalanche-in-pakistan-claims-life-of-record-breaking-climber-nirmal-purja">பாகிஸ்தான் பிராட் பீக் சிகரத்தில் பனிச்சரிவு: புகழ்பெற்ற மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா பலி!... </a></p><p>*ஹெலிகாப்டர்கள் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்பு மீட்புக் குழுவினர் கடந்த இரண்டு நாட்களாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். </p><p>*உலகின் 8,000 மீட்டருக்கு மேல் உயரமுள்ள 14 சிகரங்களையும் வெறும் '6 மாதங்கள் மற்றும் 6 நாட்களில்' ஏறி சாதனை படைத்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kaveri-water-dispute-tamil-nadu-politics">டி.கே. சிவக்குமார் உடன் சேர்ந்து கொண்டு திமுக முட்டுக்கட்டை: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு</a></p><p>* ஒரே மாநிலத்தில் காவிரி நதி நீர் தொடர்பாக பல வழக்குகள் தொடரப்பட்டால், அது குழப்பத்தை ஏற்படுத்தும்</p><p>* கடந்த முப்பது ஆண்டுகளாக காவிரி நதி நீர் பிரச்சனையில், தமிழகத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியது திமுக தான்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-issue-tn-cm-vijay-nirmal-kumar-dmk-former-miniser-regupathy">கட்சித்தாவல் வல்லுநர் நிர்மல் குமார்: காவிரி தொடர்பாக முதல்வர் உறக்கம் கலைத்து திருவாய் மலர்வது எப்போது?- முன்னாள் அமைச்சர் ரகுபதி கேள்வி</a></p><p>* ஊடகங்களைச் சந்தித்தால் தனது இமேஜ் சரிந்துவிடும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அஞ்சுவதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். </p><p>* ஆனால், காவிரி போன்ற முக்கியப் பிரச்சினையில் முதலமைச்சர் தனது நிலைப்பாட்டை மக்களுக்கு அறிவிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அவருக்கு இருக்கிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/sports/tanvi-sharma-won-the-title-in-taipae-open-badminton">தைபே ஓபன் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் தன்வி ஷர்மா</a></p><p>* தைபே ஓபன் பேட்மிண்டன் தொடர் தைவானில் நடந்து வருகிறது.</p><p>* மற்றொரு வீராங்கனை உன்னதி ஹூடா அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/litton-das-added-to-bangladesh-squad-for-darwin-test">ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: வங்கதேச அணியில் லிட்டன் தாஸ் சேர்ப்பு</a></p><p>* முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 13 முதல் 17 வரை டார்வினில் நடைபெறுகிறது.</p><p>* வங்கதேச அணி கேப்டனாக நஜ்முல் ஹொசைன் ஷான்டோ செயல்படுகிறார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/i-did-not-run-or-hide-i-have-seen-prison-senthil-balaji">'நான் சிறையைப் பார்த்தவன்'- திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜரான பின் செந்தில் பாலாஜி பேட்டி!... </a></p><p>*காவல்துறையினர் பதிவு செய்த எஃப்.ஐ.ஆர்-இல் எனது பெயரோ அல்லது எனது சகோதரர் அசோக் குமாரின் பெயரோ தொடக்கத்தில் இடம்பெறவில்லை. </p><p>*அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே பின்னணியில் எங்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. சட்ட ரீதியாக இந்தப் பொய் வழக்குகளை எதிர்கொண்டு முறியடிப்பேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/why-should-people-who-love-india-settle-in-dubai">இந்தியாவை நேசிப்பவர்கள் ஏன் துபாயில் குடியேற வேண்டும்? - விவேக் ஒபராய் மற்றும் ஆர். மாதவனை விமர்ச்சித்த ராஜ் தாக்கரே!</a></p><p>* மோடியை புகழும் நடிகர்கள் ஏன் துபாய் சென்றனர்</p><p>* இந்தியா நன்றாக இருந்தால் வெளிநாட்டில் ஏன் வாழ்கிறீர்கள்</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/250-km-in-2-hours-donor-heart-races-via-vande-bharat-to-save-life">வந்தே பாரத் ரெயிலில் பறந்து வந்த இதயம்: சாதித்து காட்டிய இந்திய ரெயில்வே</a></p><p>* சூரத்தில் இருந்து புறப்​பட்டு அகம​தா​பாத்​துக்கு 2 மணி நேரத்தில் வந்தடைந்தது.</p><p>* இந்​திய ரெயில்வேயின் ஒரு வரலாற்​றுச் சிறப்​புமிக்க நிகழ்​வு இது. </p><p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/jessica-pegula-enter-final-round-in-citi-open-tennis">சிட்டி ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினர் ஜெசிகா பெகுலா</a></p><p>* சிட்டி ஓபன் டென்னிஸ் தொடர் வாஷிங்டனில் நடந்து வருகிறது.</p><p>* மற்றொரு அரையிறுதியில் ஜப்பானின் நவோமி ஒசாகா தோல்வி அடைந்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kerala-heavy-rains-trigger-landslide-risk-in-pamba-sabarimala-devotees-warned">கேரளாவில் கனமழை-பம்பையில் நிலச்சரிவு அபாயம்: சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய எச்சரிக்கை!... </a></p><p>*கேரளாவில் நிலவும் மோசமான வானிலை காரணமாக பம்பை ஆற்றில் நீர்மட்டம் மிக வேகமாக உயர்ந்துள்ளது.</p><p>*இன்று மற்றும் நாளை நடைபெறவுள்ள சிறப்பு 'நிறபுத்தரி' பூஜையைக் காண பக்தர்கள்  திட்டமிட்டிருந்தனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-if-the-mekedatu-dam-had-already-been-built-even-the-water-now-being-released-from-kabini-would-not-have-reached-tn">மேகதாது அணை கட்டப்பட்டிருந்தால் கபினியிலிருந்து இப்போது வரும் தண்ணீரும் கிடைத்திருக்காது: அன்புமணி ராமதாஸ்</a></p><p>* கர்நாடக அரசால் புதிதாக கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள மேகதாது அணை மேற்கண்ட 4 அணைகளுக்கும் கீழாக, தமிழக  எல்லைக்கு அருகில் அமையும்.</p><p>* ஹாரங்கி, ஹேமாவதி அணைகளில் இருந்து திறக்கப்பட்டு, கிருஷ்ணராஜ சாகர் அணை வழியாக காவிரியில் விடப்படும் தண்ணீரும் கூட மேகதாது அணையில் தடுக்கப்பட்டு விடும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/india-china-border-trade-resumes-after-6-years">6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது இந்தியா-சீனா எல்லை வர்த்தகம்!... </a></p><p>*இந்த வர்த்தகப் பாதையில் இந்தோ-திபெத்திய எல்லைப் போலீஸ் படையினர் தீவிர பாதுகாப்பு சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். </p><p>*இந்த எல்லை வர்த்தகம் ஒவ்வொரு ஆண்டும் மே முதல் நவம்பர் மாதம் வரை மட்டுமே நடைபெறும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/mumbai-tv-actress-aditi-sharma-files-complaint-against-husband">மும்பை சின்னத்திரையில் பரபரப்பு: கணவர், புகுந்த வீட்டினர் மீது நடிகை அதிதி சர்மா புகார்!</a></p><p>* கணவர் சந்தேகம் மாமியார் நகை பறித்ததாக அதிதி குற்றச்சாட்டு</p><p>* கோரேகான் போலீஸ் மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்தது</p><p><a href="https://www.maalaimalar.com/news/puducherry/puduchcheri-july-gst-collection-203-crore" rel="nofollow">புதுச்சேரியில் ஜூலை மாதம் ஜி.எஸ்.டி. ரூ.203 கோடி வசூல்</a></p><p>* கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 15.4 சதவீதம் அதிகரித்துள்ளது.</p><p>* நாட்டின் நிகர ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1,81,237 கோடியாக உயர்ந்துள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/death-of-kadhar-mogitheen-son-edappadi-palanisamy-condolence" rel="nofollow">காதர் மொகிதீன் மகன் இறப்பு- எடப்பாடி பழனிசாமி இரங்கல்</a></p><p>* கலீலூர் ரஹ்மான் அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து துயருற்றேன்.</p><p>* அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.</p>]]></content:encoded></item><item><title>எம்.பி. பப்பு யாதவ் மீது செய்தியாளர் சந்திப்பில் காலணி வீச்சு.. குற்றவாளியிடம் இருந்து கத்தி பறிமுதல்  </title><link>https://www.maalaimalar.com/news/national/ayodhya-donation-row-independent-mp-pappu-yadav-faces-shoe-attack-in-delhi</link><comments>https://www.maalaimalar.com/news/national/ayodhya-donation-row-independent-mp-pappu-yadav-faces-shoe-attack-in-delhi#comments</comments><guid isPermaLink="false">82d58c46-6971-4cce-8245-6c019dedc16c</guid><pubDate>Sun, 02 Aug 2026 17:03:56 +0000</pubDate><atom:updated>2026-08-02T17:03:56.263Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பப்பு யாதவ்,டெல்லி,அயோத்தி ராமர் கோவில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/xazqname/tn-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பப்பு யாதவ், அமித் ]]></media:title><media:description type="html"><![CDATA[ பப்பு யாதவ், அமித் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/xazqname/tn-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பீகார் மாநிலத்தை சேர்ந்த சுயேச்சை எம்.பி. பப்பு யாதவ், அயோத்தி ராமர் கோவில் நன்கொடை திருட்டை விமர்சிக்கும் விதமாக கடந்த பாராளுமன்ற கூட்டத்தின்போது சாமியார் வேடத்தில் உண்டியலுடன் வந்திருந்தார். </p><p>அவருடன், நன்கொடை திருட்டை கண்டித்து எதிர்க்கட்சிகள், நாடாளுமன்ற வளாகத்தில் <a href="https://www.maalaimalar.com/news/national/pappu-yadav-stages-unique-protest-in-parliament-over-ram-temple-donation-row">நூதன போராட்டம் </a>நடத்தின. </p> <h2>காலணி வீச்சு</h2><p>இதற்காக பப்பு யாதவ், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் பப்பு யாதவ் சனாதன தர்மத்தை அவமதித்ததாக கண்டனம் எழுந்தது.</p><p>இந்நிலையில் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தபோது பப்பு யாதவ் மீது நபர் ஒருவர் காலணி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><p>தாக்குதல் நடத்திய நபர் உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாகரைச் சேர்ந்த சுமித் என கண்டறியப்பட்டது. அவர் அங்கிருந்தவர்களால் உடனடியாக பிடிக்கப்பட்டு டெல்லி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.</p><p>தாக்குதல் நடத்தியவர் தன்னைக் கத்தியால் குத்திக் கொல்லத் திட்டமிட்டு வந்ததாகப் பப்பு யாதவ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.</p><p>அமித் இடம் இருந்த கத்தி கைப்பற்றப்பட்டு காவல்துறையிடம் வழங்கப்பட்டுள்ளது.</p> <h2>குற்றச்சாட்டு</h2><p>பப்பு யாதவுக்குத் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்கள் இருந்தும், டெல்லி காவல்துறை போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என்றும், தாக்குதலின் போது மெத்தனமாகச் செயல்பட்டதாகவு காங்கிரஸ் தலைவர் பவன் கேரா ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர்.</p><p>இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள டெல்லி காவல்துறை, தாக்குதலின் பின்னணி குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p> <h2>ராமர் கோவில் திருட்டு </h2><p>உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவிலுக்கு பக்தர்களால் வழங்கப்பட்ட நன்கொடை பணம், தங்கம் உள்ளிட்டவை கோடிக்கணக்கில் சுருட்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.</p><p>விசாரணையில் அங்குள்ள ஊழியர்கள் இந்தச் செயலில் ஈடுபட்டதாகத் தெரியவந்தது. இதுதொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். 77 லட்சம் ரூபாய் ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டது.</p><p>இந்த முறைகேடுகளுக்கு தார்மிக பொறுப்பேற்று, ராம ஜென்ம பூமி ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்த சம்பத் ராயிடமும், போலீசார் விசாரணை நடத்தினர்.</p><p>ராமர் கோவில் நன்கொடை திருட்டுக்கு பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>ஆத்தூர் அருகே தனியார் ஆலையில் வாயு கசிவு- 6 பேர் மருத்துவமனையில் அனுமதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/gas-leak-at-sago-factory-near-athur-6-hospitalised</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/gas-leak-at-sago-factory-near-athur-6-hospitalised#comments</comments><guid isPermaLink="false">c5401b03-cb80-4f15-9172-7ef08d4da95a</guid><pubDate>Sun, 02 Aug 2026 16:08:57 +0000</pubDate><atom:updated>2026-08-02T16:08:57.445Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மருத்துவமனையில் அனுமதி,சேலம்,Salem,hospitalized,gas leakage,ஆலை வாயு கசிவு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/j531snbs/gas.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gas leakage]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/j531snbs/gas.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தனியார் சேகோ (Sago) ஆலையில் திடீரென வாயு கசிவு ஏற்பட்டது.</p><p>இதில், பாதிக்கப்பட்ட 6 பேரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர்,வாயு கசிவை தடுக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.</p><p>கடந்த ஒரு மணி நேரமாக வாயு கசிவை தடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், வாயு கசிவு ஏற்பட்டதற்கான காரணம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>போதைப் பொருள் பயன்படுத்துவதில் இருந்து இளைஞர்கள் விலகி இருக்க வேண்டும் - விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு!</title><link>https://www.maalaimalar.com/news/national/youth-must-stay-away-from-drug-abuse-pm-modi-speaks-after-launching-an-awareness-campaign</link><comments>https://www.maalaimalar.com/news/national/youth-must-stay-away-from-drug-abuse-pm-modi-speaks-after-launching-an-awareness-campaign#comments</comments><guid isPermaLink="false">d7a6d022-ef40-4741-aeba-d24dde13a7ec</guid><pubDate>Sun, 02 Aug 2026 16:05:26 +0000</pubDate><atom:updated>2026-08-02T16:05:26.127Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>pm modi,பிரதமர் மோடி,Drug-Free Youth,போதைப்பொருள் இல்லாத இளையோர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/xd9f9wlu/New-Project-2026-08-02T213222.327.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ போதைப் பொருள் பயன்படுத்துவதில் இருந்து இளைஞர்கள் விலகி இருக்க வேண்டும் - விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/xd9f9wlu/New-Project-2026-08-02T213222.327.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கான போதைப் பொருள் இல்லாத இளைஞர் விழிப்புணர்வு இயக்கத்தை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்து இருந்தது. </p><h2>பிரதமர் மோடி</h2><p>அதன்படி போதைப் பொருள் இல்லாத இளைஞர் உறுதிமொழி இயக்கம் என்ற திட்டத்தை பிரதமர் மோடி இன்று காலை காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.  </p><p>போதைப் பொருட்கள் புழக்கம் இல்லாத இந்தியா என்ற இலக்கை முன்நிறுத்தி நாடு முழுவதும் விழிப்பு ணர்வு ஏற்படுத்த இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. போதையின் பிடியில் சிக்கிய இளைஞர்களை மீட்பதுடன், அதில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதற்காக இந்த விழிப்புணர்வு  செய்யப்படுகிறது.</p><h2>100 வாரங்கள்</h2><p>பள்ளி, கல்லூரிகள்,  பல்கலைக் கழகங்கள், தன்னார்வலர்கள் போன்ற 125-க்கும் மேற்பட்ட அமைப்புகளை இணைத்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், வீதி நாடகங்கள் மூலமும் இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.</p><p>நாடு முழுவதும் 10 ஆயிரம் இடங்களில் ஒரே நேரத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகின்றன. இதில் 1 கோடிக்கு அதிகமான இளைஞர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த உறுதிமொழி இயக்கம் 100 வாரங்களுக்கு தொடரும் மக்கள் இயக்கமாகும். </p><p>இதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் விழிப்புணர்வு விளையாட்டு போட்டிகள், நடைபயணங்கள் நடத்தப்படும். </p><p>போதைப்பொருள் இல்லாத இளைஞர்கள் இயக்கத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:-</p><h2>விலகி இருக்க வேண்டும்</h2><p>இன்று நாம் காணும் இந்த இயக்கம் தனிநபர் மற்றும் சமூகத்திற்கானது. எல்லாவற்றுக்கும் மேலாக நாட்டிற்கானது. அடுத்த 100 ஞாயிற்றுக்கிழமைகளும் போதை பொருள் இல்லாத இந்தியாவை நோக்கிய வலுவான நடவடிக்கைகளாக அமையும்.</p><p>வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய இளைஞர்கள் உடல் மற்றும் மனதளவில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். போதைப்பொருள் பயன்பாட்டில் இருந்து விலகி இருக்க வேண்டும். நாட்டு மக்களின் நலனுக்காக தொடங்கப்பட்ட இந்த இயக்கத்துடன் 125-க்கும் மேற்பட்ட ஆன்மீக அமைப்புகள் எங்களுடன் இணைந்து உள்ளன.</p><h2>உறுதிமொழி</h2><p>போதைப்பொருள் இல்லா இளைஞர்களுக்கான இயக்கம் இன்று நாடு முழுவதும் தொடங்கப்படுகிறது. கூட்டு நடவடிக்கையில் அளப்பறிய ஆற்றல் உள்ளது. இந்த இயக்கம் ஒவ்வொரு இளைஞர்களின் மனதை சென்றடைய உள்ளது.</p><p>நாடு முழுவதும் லட்சக்கணக்கான இளைஞர்கள் போதைப் பொருட்களில் இருந்து விலகி இருப்பதற்கான உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். இன்று எடுக்கப்பட்ட இந்த உறுதி மொழி அடுத்த 100 வாரங்களுக்கு  தொடர்ந்து உறுதியுடன் முன்னெடுத்து செல்லப்படும்.</p><h2>லட்சியங்கள் பாதிப்பு</h2><p>போதைப் பொருள் பயன்பாடு கவனத்தை சிதறடித்து, உங்களை உங்கள் கனவு களில் இருந்து விலக்குகிறது. ஒரு இளைஞன் போதை பொருளுக்கு அடிமையா னால் அவனது லட்சியங்கள் பாதிக்கப்படுகின்றன. குடும்பங்கள் சிதைகிறது. </p><p>போதைப் பொருட்கள் விநியோகிப்பதன் மூலம் இந்தியாவின் நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது எதிரி நாடுகளின் பயங்கரவாத திட்டத்தின் ஒரு பகுதியாகும்.” </p><p>இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>டெல்லிக்கு போராட்டத்திற்கு சென்ற தமிழ்நாடு விவசாயிகள் நாக்பூரில் தடுத்து நிறுத்தம் - உதயநிதி கண்டனம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-farmers-heading-to-delhi-for-a-protest-stopped-in-nagpur-udhayanidhi-condemns-the-move</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-farmers-heading-to-delhi-for-a-protest-stopped-in-nagpur-udhayanidhi-condemns-the-move#comments</comments><guid isPermaLink="false">396e4b0d-61a0-4dd7-8287-6816f99b50d1</guid><pubDate>Sun, 02 Aug 2026 15:51:37 +0000</pubDate><atom:updated>2026-08-02T15:51:37.189Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,tamil nadu farmers,தமிழ்நாடு விவசாயிகள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/auy37bs9/New-Project-2026-08-02T212112.071.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டெல்லிக்கு போராட்டத்திற்கு சென்ற தமிழ்நாடு விவசாயிகள் நாக்பூரில் தடுத்து நிறுத்தம் - உதயநிதி கண்டனம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/auy37bs9/New-Project-2026-08-02T212112.071.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரி தண்ணீர் திறப்பு, மேகதாது அணை உள்ளிட்ட விவகாரங்களுக்கு கண்டனம் தெரிவித்து, தமிழ்நாடு காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆகஸ்ட் 4ஆம் தேதி டெல்லியில் உள்ள மத்திய நீர்வளத்துறை  அமைச்சகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். </p><p>அதற்காக தமிழ்நாட்டில் இருந்து ரயில் மூலம் மகாராஷ்டிரா வழியாக டெல்லிக்குச் சென்றுள்ளனர். இதன்போது மகாராஷ்டிராவின் பாதிவழியில் அம்மாநில காவல்துறை விவசாயிகளை நாக்பூரில் தடுத்து நிறுத்தி அவர்களை திரும்பி செல்லுமாறு அறிவுறுத்தி இருக்கிறார்கள். இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. </p><p>அவர்கள் கைது செய்யப்பட்டனரா என்பன குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்.,</p><p>“மேகதாது அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று டெல்லியில் முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக ரயிலில் சென்ற தமிழ்நாட்டு விவசாயிகளை நாக்பூரில் கைது செய்துள்ள மகாராஷ்டிரா மாநில காவல்துறையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.</p><p>மேகதாது விஷயத்தில் தொடக்கம் முதலே கர்நாடகாவுக்கு ஆதரவாக ஒருதலைபட்சமாக செயல்படும் நீர்வளத்துறையின் போக்கை கண்டித்துதான் தமிழ்நாட்டு விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தை அறிவித்தனர்.</p><p>ஆனால், அவர்கள் ரயிலில் சென்று கொண்டிருக்கும் போதே நடுவழியில் இறங்க வைத்து, தமிழ்நாட்டுக்கே திரும்பிச் செல்லுங்கள் என கட்டாயப்படுத்தி உள்ளது மகாராஷ்டிர காவல்துறை.</p><p>நாக்பூரில் கைது செய்யப்பட்டுள்ள  நம் விவசாயிகளை உடனே விடுவிக்க தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். </p><p>நம் விவசாயிகளை கைது செய்த மகாராஷ்டிர அரசிடம் அதற்கான விளக்கத்தைக் கேட்பதுடன், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கான உறுதியைப் பெற வேண்டும்.</p><p>டெல்லி சென்று போராட அவர்களை ஒன்றிய அரசு அனுமதிக்க வேண்டும். ஜனநாயக வழியில் போராடும் உரிமையைப் பறிக்கக் கூடாது.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>காதர் மொகிதீன் மகன் இறப்பு- எடப்பாடி பழனிசாமி இரங்கல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/death-of-kadhar-mogitheen-son-edappadi-palanisamy-condolence</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/death-of-kadhar-mogitheen-son-edappadi-palanisamy-condolence#comments</comments><guid isPermaLink="false">1106cd40-e860-4a44-b10c-bd513937884c</guid><pubDate>Sun, 02 Aug 2026 15:31:47 +0000</pubDate><atom:updated>2026-08-02T15:31:47.017Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,EPS,இபிஎஸ்,Edappadi pazhanisamy,காதர் மொகிதீன்,Kadhar mohideen</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/5a23wl1g/EPS.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kadhar Mohideen- EPS]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/5a23wl1g/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஐயூஎம்எல் தலைவர் காதர் மொகிதீனின் மகன் கலீலூர் ரஹ்மான் காலமான செய்தி அறிந்து துயருற்றேன்</p><p>பாசமிகு மகனை இழந்து வாடும் காதர் மொகிதீன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் திரு. காதர் மொகிதீன் அவர்களின் மகன் மருத்துவர் கே.எம்.கே. கலீலூர் ரஹ்மான் அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து துயருற்றேன்.</p><p>பாசமிகு மகனை இழந்து வாடும் காதர் மொகிதீன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>மறைந்த கலீலூர் ரஹ்மான் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>குளோபல் சூப்பர் லீக்: யூனிகார்ன்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மீண்டும் பட்டத்தை வென்றது வாரியர்ஸ் அணி!</title><link>https://www.maalaimalar.com/sports/global-super-league-warriors-defeat-the-unicorns-by-6-runs-to-clinch-the-title-again</link><comments>https://www.maalaimalar.com/sports/global-super-league-warriors-defeat-the-unicorns-by-6-runs-to-clinch-the-title-again#comments</comments><guid isPermaLink="false">65a93274-98f7-441e-a54a-6d79524f5430</guid><pubDate>Sun, 02 Aug 2026 15:23:25 +0000</pubDate><atom:updated>2026-08-02T15:23:25.480Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Guyana Amazon Warriors,கயானா அமேசான் வாரியர்ஸ்,Global Super League 2026,San Francisco Unicorns,குளோபல் சூப்பர் லீக்ஸ்,சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/e1vwcnou/New-Project-2026-08-02T192022.424.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ குளோபல் சூப்பர் லீக்: யூனிகார்ன்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மீண்டும் பட்டத்தை வென்றது வாரியர்ஸ் அணி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/e1vwcnou/New-Project-2026-08-02T192022.424.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குளோபல் சூப்பர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில், சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணியை வெறும் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, மீண்டும் பட்டத்தை தக்கவைத்தது அமேசான் வாரியர்ஸ் அணி. </p><p>பிராவிடன்ஸில் உள்ள கயானா தேசிய மைதானத்தில்  நேற்று மாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற நடப்பு சாம்பியனான வாரியர்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, 18.5 ஓவர்களிலேயே 85 என்ற ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. </p><p>இதனைத்தொடர்ந்து விளையாடிய யூனிகார்ன்ஸ் அணி, 79 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் வெற்றி வாகையை சூடியது அமேசான் வாரியர்ஸ்.</p><p>கடந்த ஆண்டு ரங்க்பூர் ரைடர்ஸ் அணியை வீழ்த்திய வாரியர்ஸ் அணி, இந்தாண்டு யூனிகார்ன்ஸ் அணியை வீழ்த்தியுள்ளது.</p><h2>குளோபல் சூப்பர் லீக்</h2><p>பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், கயானா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட 5 நாடுகள் பங்கேற்று விளையாடும் இந்த டி20 தொடரை மேற்குவங்க கிரிக்கெட் வாரியம் எடுத்து நடத்துகிறது. </p><p>லீக் சுற்றில் மொத்தம் 10 போட்டிகள் நடைபெறும். இதில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் அணி இறுதிச்சுற்றுக்கு நேரடியாக தகுதிபெறும். இரண்டாம் மற்றும் மூன்றாவது இடத்தில் இருக்கும் அணிகள் தகுதிச்சுற்றில் மோதும். இதில் வெற்றிப்பெறும் அணி இறுதிச்சுற்றில் பங்கேற்கும்.</p><p>நடப்பாண்டு தொடர் ஜூலை.23ம் தேதி தொடங்கியது. ஜூலை.31 தகுதிச்சுற்று நடைபெற்ற நிலையில், நேற்று இறுதிப்போட்டி நடைபெற்றது.   </p>]]></content:encoded></item><item><title>இன்று இரவு தமிழகம் வரும் காவிரி நீர்: மேட்டூர் அணை நீர்மட்டம் உயர வாய்ப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-to-reach-tamil-nadu-tonight</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-to-reach-tamil-nadu-tonight#comments</comments><guid isPermaLink="false">de884910-4ea1-4d5b-ac6a-633491a1a5c3</guid><pubDate>Sun, 02 Aug 2026 14:30:23 +0000</pubDate><atom:updated>2026-08-02T14:30:23.762Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,காவிரி நீர்,மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/kkp6vxmi/cauvery.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/kkp6vxmi/cauvery.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடகாவில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையாததாலும், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்காததாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. அதே நேரம் அணைக்கு வரும் தண்ணீரை விட குடிநீர் தேவைக்கு அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.</p><p>அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் இந்தாண்டு இதுவரை காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை உருவாகி உள்ளது. இதனால்  13 மாவட்டங்களில் சுமார் 16.4 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி இன்றி காணப்படுகிறது.</p><p>குறிப்பாக குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது. எனவே சம்பா, தாளடி விவசாயத்துக்காவது தண்ணீர் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் காத்திருக்கின்றனர். </p><p>இதேபோல் மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கும் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் 45 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில் பாசனம் செய்ய முடியாத நிலை உள்ளது.</p><h2>தண்ணீர் திறக்க உத்தரவு</h2><p>இந்த நிலையில் கடந்த மாதம் 28-ந் தேதி காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் காணொலி மூலம் நடை பெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக அதிகாரிகள் கர்நாடகம் தண்ணீர் தரமறுப்பது பற்றியும், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரின் அளவு பற்றியும் விளக்கினர்.</p><p>அதே போல் கர்நாடக அதிகாரிகள் அணைகளில் தற்போது போதுமான தண்ணீர் இல்லை என்று தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது என்று தெரிவித்தனர்.</p><p>இருதரப்பு வாதங்களையும் கேட்ட குழு தலைவர் கடந்த 29-ந் தேதி முதல் தொடர்ந்து 15 நாட்களுக்கு வினாடிக்கு 3500 கனஅடி வீதம் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டார். இதை எதிர்த்து காவிரி நீர்மேலாண்மை ஆணையத்திடம்  கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது.</p><p>அது நிராகரிக்கப்பட்டு  தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டனர். இந்த உத்தரவுக்கு எதிராக கர்நாடகாவில் கன்னட அமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. </p><h2>மழை தீவிரம்</h2><p>இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் நேற்று மாலை முதல் கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. எனவே அணையின் பாதுகாப்பை கருதி காவிரியில் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.</p><p>கர்நாடக காவிரி ஆற்றுப்படுகையில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை, கபினி அணை, ஹேமாவதி அணை, ஹாரங்கி அணை ஆகிய 4 அணைகளும் குடகு மாவட்டம் மற்றும் கேரளம் மாநிலம் வயநாடு மாவட்டத்தை நீர்ப்பிடிப்பு பகுதிகளாக  கொண்டுள்ளது.</p><p>தற்போது குடகு மாவட்டத்திலும், வயநாடு மாவட்டத்திலும் தொடர் கனமழை பெய்து வருவதால் இந்த அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. </p><p>இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹாரங்கி அணை முழுவதும் நீர் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது.</p><p>2,859 அடி உயரம்  கொண்ட இந்த அணையில் இருந்து  வினாடிக்கு 10 ஆயிரத்து 58 கன அடி நீர்  திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் நேராக  கபினி அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.</p><p>மேலும், காவிரிநீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கபினி அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.</p><h2>கபினி அணை</h2><p>இதனால்  கபினி அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்த அணையின் உயரம் 2,284 அடி  ஆகும். இதையடுத்து அணையின் பாதுகாப்பை கருதி நேற்று மாலை 3 மணிக்கு 5 ஆயிரம் கன அடி உபரி தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது.</p><p>பின்னர் இரவு 8 மணிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி இருந்ததால் இரவு 10 மணிக்கு 25 ஆயிரம் கனஅடி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. இதனால் எச்.டி. கோட்டை தாலுகாவில் உள்ள பிடர ஹள்ளி பாலம் நீரில் மூழ்கியது.</p><p>கபினி ஆற்றுப்படுகையில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என்றும் அங்குள்ள  காவிரி நீர்ப்பாசன கழகம்  தெரிவித்துள்ளது.</p><h2>23 ஆயிரம் கன அடியாக திறப்பு</h2><p>இந்தநிலையில் இன்று காலை 7 மணிக்கு கபினி அணையில் இருந்து  தமிழகத்திற்கு நீர் திறப்பு குறைக்கப்பட்டது. 25 ஆயிரம் கன அடியில் இருந்து வினாடிக்கு 17 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.</p><p>பின்னர் காலை 8 மணி அளவில் மீண்டும் வினாடிக்கு   9,958 கன  அடியாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் கபினி அணைக்கு தொடர்ந்து தண்ணீர் அதிகரித்து கொண்டு வருகிறது. வினாடிக்கு 23 ஆயிரம் கன அடி தண்ணீர் கபினி அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.</p><p>இதனால்  இன்று மதியம் 12 மணி அளவில் அணைக்கு வரும் 23 ஆயிரம் கன அடி உபரி தண்ணீரை அப்படியே  காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் கிருஷ்ண ராஜசாகர்  அணையில் இருந்து வினாடிக்கு 1,768 கன அடி நீர் காவிரியிலும், கால்வாயிலும் திறந்து விடப்பட்டுள்ளது.</p><p>இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர்  அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட  உபரி நீர்   காவிரி ஆற்றில் சீறி பாய்ந்தபடி தமிழகத்தை  நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இன்று இரவு அல்லது நாளை காலை தமிழக எல்லையான பிலி குண்டுலு பகுதியை இந்த நீர் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>ஒகேனக்கல்</h2><p>கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டதை தொடர்ந்து   தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுலு மற்றும் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.</p><p>ஒகேனக்கல்லில் நீர்வரத்து நேற்று காலை 500 கன அடியாகவும், மாலையில் அது 600 கன அடியாகவும் இருந்தது. இன்று  காலையில் நீர்வரத்து 500  கன அடியாக உள்ளது. மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர்  கொட்டுகிறது.</p><p>இன்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாள்  என்பதால் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்துள்ளனர். அவர்கள் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். பரிசலில் சென்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர். </p><h2>மேட்டூர் அணை</h2><p>அதே நேரத்தில்  மேட்டூர் அணைக்கு  நீர்வரத்து வினாடிக்கு 42 கன அடியிலிருந்து 47 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர் மட்டம் 73.33 அடியாகவும், நீர் இருப்பு 35.63 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.</p><p>கர்நாடக அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர்  மேட்டூர் அணைக்கு வரும்போது நீர்மட்டம் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இருமாநில அரசுகளுக்கிடையே காவிரி பிரச்சினை நிலவி வரும் நிலையில் தற்போது மழை காரணமாக தண்ணீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>புதுச்சேரியில் ஜூலை மாதம் ஜி.எஸ்.டி. ரூ.203 கோடி வசூல்</title><link>https://www.maalaimalar.com/news/puducherry/puduchcheri-july-gst-collection-203-crore</link><comments>https://www.maalaimalar.com/news/puducherry/puduchcheri-july-gst-collection-203-crore#comments</comments><guid isPermaLink="false">1259a867-f281-45c9-8619-702a8d6bf42b</guid><pubDate>Sun, 02 Aug 2026 13:49:23 +0000</pubDate><atom:updated>2026-08-02T13:49:23.788Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>GST,புதுச்சேரி,வசூல்,Pondycherry,ஜிஎஸ்டி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/6yo39ygm/GST.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ GST]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/6yo39ygm/GST.jpg?w=280" width="280"></media:thumbnail><category>புதுச்சேரி (Puducherry)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடு முழுவதும் 2026-ம் ஆண்டு ஜூலை மாதம் ஜி.எஸ்.டி. வருவாய் நேற்று வெளியிடப்பட்டது. </p><h2>உயர்வு</h2><p>அதன்படி கடந்த மாதம் மொத்தம் ஜி.எஸ்.டி. ரூ.2,11,205 கோடியாக பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 15.4 சதவீதம் அதிகரித்துள்ளது.</p> <p>இதில் உள்நாட்டு ஜி.எஸ்.டி. ரூ.1,44,695 கோடியாக இருந்து 10.1 சதவீதமும், இறக்குமதி மூலம் கிடைத்த ஜி.எஸ்.டி. ரூ.66,511 கோடியாக இருந்து 28.8 சதவீதமும் உயர்ந்துள்ளது. மேலும் ஜூலை மாதத்தில் மொத்தமாக ரூ.29,968 கோடி ஜி.எஸ்.டி. திருப்பி தொகை வழங்கப்பட்டுள்ளது.</p><p>தொடர்ந்து நாட்டின் நிகர ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1,81,237 கோடியாக உயர்ந்துள்ளது. மாநிலவாரியான உள்நாட்டு ஜி.எஸ்.டி. வசூலில் மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன.</p><h2>புதுச்சேரியில் குறைவு</h2><p>புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஜூலையில் உள்நாட்டு ஜி.எஸ்.டி. ரூ.203 கோடி வசூலாகியுள்ளது. கடந்தாண்டு ஜூலை மாதம் ரூ.244 கோடி வசூலான நிலையில், இந்தாண்டு 17 சதவீதம் குறைந்துள்ளது. அதே நேரத்தில், புதுச்சேரியின் எஸ்.ஜி.எஸ்.டி.  ரூ.48 கோடியாக உயர்ந்துள்ளது. </p><p>மேலும் மாநிலங்களுக்கு ஐ.ஜி.எஸ்.டி. பங்கீடு செய்யப் பட்ட பின் கிடைக்கும் பிந்தைய எஸ்.ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.143 கோடியாக உயர்ந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் - பும்ரா விலகல்!</title><link>https://www.maalaimalar.com/sports/test-series-against-sri-lanka-bumrah-withdraws</link><comments>https://www.maalaimalar.com/sports/test-series-against-sri-lanka-bumrah-withdraws#comments</comments><guid isPermaLink="false">cc81f3ae-ab3f-4775-8e89-ddef24e6bda5</guid><pubDate>Sun, 02 Aug 2026 13:19:19 +0000</pubDate><atom:updated>2026-08-02T13:19:19.226Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>இலங்கை,Sri Lanka,Jasprit Bumrah,டெஸ்ட் தொடர்,Test series,ஜஸ்ப்ரித் பும்ரா</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/20isd202/New-Project-2026-08-02T184856.849.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் - பும்ரா விலகல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/20isd202/New-Project-2026-08-02T184856.849.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 15 தொடங்கவுள்ளது. இலங்கையில் நடைபெறவுள்ள இந்தத் தொடரில் இருந்து இந்திய வேகப்பந்து ஜஸ்ஸ்ப்ரித் பும்ரா விலகியுள்ளார்.</p><p>இந்தாண்டு தொடக்கத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது பும்ராவின் இடது முழங்காலில் ஏற்பட்ட காயம் மற்றும் வீக்கம் இன்னும் முழுமையாகக் குணமடையாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.</p><p>இந்தத் தொடரில் இருந்து நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் ஏற்கனவே விலகியுள்ளனர். மேலும் வாஷிங்டன் சுந்தரும் முதல் போட்டியில் பங்கேற்கமாட்டார். இந்நிலையில் பும்ராவும் விளையாடாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>இலங்கையில் முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15 அன்று காலியிலும், இரண்டாவது போட்டி ஆகஸ்ட் 23 அன்று கொழும்பில் உள்ள எஸ்.எஸ்.சி மைதானத்திலும் தொடங்குகிறது. இந்தத் தொடருக்கு முன்னதாக, அணி ஆகஸ்ட் 7 ஆம் தேதி தொடங்கி கொழும்பில் மூன்று நாள் பயிற்சிப் போட்டியில் விளையாடும்.</p><h2>இலங்கை தொடருக்கான இந்திய அணி </h2><p>ஷுப்மன் கில் (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், சாய் சுதர்சன், துருவ் ஜுரெல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மானவ் சுதர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார், தேவ்தத் படிக்கல், சரன்ஷ் ஜெயின். </p>]]></content:encoded></item><item><title>நாக்பூரில் இறக்கிவிடப்பட்ட தமிழ்நாடு விவசாயிகள்: மகாராஷ்டிராவிடம் அரசு விளக்கம் கோரவேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-farmers-dropped-off-in-nagpur-government-must-seek-explanation-from-maharashtra-anbumani-urges</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-farmers-dropped-off-in-nagpur-government-must-seek-explanation-from-maharashtra-anbumani-urges#comments</comments><guid isPermaLink="false">36cda716-09f5-41eb-936a-62e7d67fcc58</guid><pubDate>Sun, 02 Aug 2026 12:57:28 +0000</pubDate><atom:updated>2026-08-02T12:57:28.256Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>anbumani,அன்புமணி,Government of Tamil Nadu,தமிழ்நாடு,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/a2a5ecxs/New-Project-2026-08-02T182520.339.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நாக்பூரில் இறக்கிவிடப்பட்ட தமிழ்நாடு விவசாயிகள்: மகாராஷ்டிராவிடம் அரசு விளக்கம் கோரவேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/a2a5ecxs/New-Project-2026-08-02T182520.339.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரி நீர் பிரச்னைகளை கண்டித்து டெல்லியில் ஆக.4ம் தேதி போராட்டம் நடத்த சென்ற தமிழ்நாடு விவசாயிகளை, மகாராஷ்டிரா அரசு நடுவழியில் நிறுத்தி அவர்களை திருப்பி அனுப்பிய சம்பவத்திற்கு தமிழ்நாடு அரசு விளக்கம் கோரவேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில்.,</p><p>“காவிரி நீர் பிரச்சினை, மேகதாது அணை விவகாரம் ஆகியவற்றில் தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் அநீதி, மத்திய நீர்வள அமைச்சகத்தின் ஒரு சார்பான  நிலைப்பாடு ஆகியவற்றைக் கண்டித்து  டெல்லியில் நாளை மறுநாள் மத்திய நீர்வள அமைச்சகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக  தொடர்வண்டி முலம் சென்ற காவிரி பாசன மாவட்ட விவசாயிகள் சங்கங்களைச் சேர்ந்தவர்களை,</p><p>மராட்டிய மாநிலம் நாக்பூரில் அம்மாநில காவல்துறையினர் தடுத்தி நிறுத்தி இறக்கி விட்டதுடன், அவர்களை வலுக்கட்டாயமாக தமிழ்நாட்டுக்கு திருப்பி அனுப்பி்யுள்ளனர். தமிழ்நாடு உழவர்கள் மீதான இந்த அடக்குமுறை அநீதியானது; கண்டிக்கத்தக்கது.</p><p>மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டித்து போராட்டம் நடத்தும் அனைத்து உரிமைகளும் தமிழ்நாடு விவசாயிகளுக்கு உண்டு. </p><p>அவர்களின் போராட்டத்தைத்  தடுப்பதற்காக அவர்களை மராட்டிய காவல்துறை தடுத்து நிறுத்தி இறக்கி விட்டது மனித உரிமை மீறல் ஆகும். அதுமட்டுமின்றி, இது தமிழ்நாட்டின்  உரிமைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். இதை தமிழ்நாடு அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது.</p><p>டெல்லிக்கு தொடர்வண்டியில் பயணம் செய்த விவசாயிகளை  எதற்காக தடுத்து நிறுத்தினார்கள் என்று மராட்டிய அரசிடமும், காவல்துறையிடமும் தமிழ்நாடு அரசு விளக்கம் கேட்க வேண்டும். அத்துமீறிய இந்த செயலுக்காக மராட்டிய அரசை கடுமையாக கண்டிக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>காமன்வெல்த்: ஒரே நாளில் 18 பதக்கம்..! 4-வது இடத்துக்கு முன்னேறியது இந்தியா</title><link>https://www.maalaimalar.com/sports/india-advances-to-fourth-with-18-medals-in-a-day-at-commonwealth-games</link><comments>https://www.maalaimalar.com/sports/india-advances-to-fourth-with-18-medals-in-a-day-at-commonwealth-games#comments</comments><guid isPermaLink="false">136f0140-4886-4c27-97e3-58d6e0dc9043</guid><pubDate>Sun, 02 Aug 2026 12:23:23 +0000</pubDate><atom:updated>2026-08-02T12:23:23.754Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>குத்துச்சண்டை,medals,Commonwealth Games 2026,காமன்வெல்த் 2026,தமிழக வீரர்கள்,TN Players</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/mmzcrml9/commonwealth.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 2026 Common Wealth games]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/mmzcrml9/commonwealth.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது.</p><h2>ஒரே நாளில் 16 பதக்கம்</h2><p>8-வது நாள் போட்டி முடிவில் இந்தியா 5 தங்கம், 12 வெள்ளி, 6 வெண்கலம் ஆக மொத்தம் 23 பதக்கம் பெற்று இருந்தது. மீராபாய் சானு (பளு தூக்குதல்), ஷர்மிளா தன்கர் (பாரா குண்டு எறிதல்), திலீப் கவிட் (பாரா 100 மீட்டர் ஓட்டம்), அஸ்மிதா டே, ஹர்ஷ் சிங் (ஜூடோ) ஆகியோர் தங்கம் வென்றனர்.</p><p>தமிழகத்தை சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி, ரிஷி காந்த் சிங், ஞானேஸ்வரி யாதவ், அஜயா பாபு, ஹர் ஜிந்தர் கவுர், லவ்பிரீத்சிங் (பளு தூக்குதல்), சர்வேஷ் குஷாரே (உயரம் தாண்டுதல்), குல்வீர்சிங் (10 ஆயிரம் மீட்டர்), முரளி ஸ்ரீசங்கர்  (நீளம் தாண்டுதல்), முகமது பசில் (பாரா 100 மீட்டர் ஓட்டம்), யாமினி மவுரியா (ஜூடோ), நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்) ஆகியோர் வெள்ளிப் பதக்கமும், ஜண்டு குமார் (பாரா வலு தூக்குதல்), பிந்த்யா ராணி தேவி (பளு தூக்குதல்), ஷில்பா ஷைலா (பாரா குண்டு எறிதல்), சீமா (வட்டு எறிதல்), தேஜஸ்வின் சங்கர் (டெகத்லான்), யஷ்வீர் சிங் (ஈட்டி எறிதல்) ஆகியோர் வெண்கல பதக்கமும் பெற்று இருந்தனர்.</p><p>நேற்றைய 9-வது நாளில் இந்தியாவுக்கு 8 தங்கம் உள்பட 16 பதக்கம் கிடைத்தது.</p><h2>குத்துச்சண்டை</h2><p>குத்துச்சண்டையில் 7 தங்கமும், 3 வெள்ளியும் கிடைத்தது. பிரீத்தி பவார், ஜாஸ்மின் லம்போரியா, சாக்‌ஷி சவுத்ரி, பிரியா கங்காஸ், அருந்ததி சவுத்ரி, சச்சின் சிவாச், அங்குஷ் பங்கல் ஆகியோர் தங்கமும், லவ்லினா போர்கோஹைன், ஜடுமணி சிங், நரேந்தர் பெர்வால் ஆகியோர் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். </p><p>பாரா ஆண்களுக்கான குண்டு எறிதலில் (எப் 57) சோமன் ரானா தங்கமும், இதே பிரிவில் சுபம் ஜூயல் வெள்ளியும் பெற்றனர். </p><h2>தமிழக வீரர்கள் </h2><p>ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் பந்தயத்தில் தமிழக வீரர்கள் பிரவீன் சித்ரவேல் வெள்ளிப் பதக்கமும், செல்வ பிரபு வெண்கலமும் கைப்பற்றினார்கள்.  ஜூடோவில் உனதி சர்மாவும், (பெண்கள் 63 கிலோ பிரிவு), 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் குல்வீர் சிங்கும் வெண்கலம் பெற்றனர்.</p><h2>39 பதக்கம் </h2><p>நேற்றைய போட்டி முடிவில் இந்தியா 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் ஆக மொத்தம் 39 பதக்கம் பெற்று 4-வது இடத்துக்கு முன்னேறியது. இன்றுடன் போட்டி முடிவடைகிறது. கடைசி நாளில் ஜூடோவில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.</p><p>இஷ்ரூப் நரங் (பெண்கள் 78 கிலோ பிரிவு), அவ்தார் சிங் (100 கிலோ), யாஷ் கங்காஸ் (100 கிலோவுக்கு மேற்பட்ட பிரிவு) ஆகிய 3 பேர் பங்கேற்கிறார்கள். இதே போல சைக்கிளிங் பந்தயத்தில் கலந்து கொள்கிறார்கள்.</p><h2>இன்று முடிகிறது </h2><p>ஆஸ்திரேலியா 65 தங்கம், 41 வெள்ளி, 52 வெண்கலம் ஆகமொத்தம் 158 பதக்கத்துடன் முதல் இடத்தை பிடித்தது. இங்கிலாந்து 26 தங்கம் உள்பட 102 பதக்கத்துடன் 2-வது இடத்தையும், கனடா 18 தங்கம் உள்பட 59 பதக்கத்துடன் 3-வது இடத்தையும் பிடித்தன.</p><p>கடைசி நாளில் 15 தங்கம் (டிராக் சைக்கிளிங் 6, ஜூடோ 4, லான் பவுல்ஸ் 4, நெட் பால்1 ) வழங்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து நிறைவு விழா நடைபெறுகிறது.</p>]]></content:encoded></item><item><title>சிப்ஸ் பாக்கெட்டில் இருந்த விளையாட்டுப் பொருளை விழுங்கி 5 வயது சிறுவன் பரிதாப பலி!</title><link>https://www.maalaimalar.com/news/national/five-year-old-boy-chokes-on-free-toy-in-chips-packet-mysuru</link><comments>https://www.maalaimalar.com/news/national/five-year-old-boy-chokes-on-free-toy-in-chips-packet-mysuru#comments</comments><guid isPermaLink="false">70a011d1-f71e-49bd-88be-7ee8fd14bfbc</guid><pubDate>Sun, 02 Aug 2026 12:06:44 +0000</pubDate><atom:updated>2026-08-02T12:06:44.523Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,Child safety,ChokingHazard,HunsurPolice,ChipsPacket Toy,குழந்தை பாதுகாப்பு,Karnataka Tragedy</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/vszcxdxn/Karnataka-Choking-Hazard" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Karnataka Choking Hazard ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/vszcxdxn/Karnataka-Choking-Hazard?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தில், சிப்ஸ் பாக்கெட்டுக்குள் பரிசாகக் கிடைத்த சிறிய பிளாஸ்டிக் பொம்மை பந்தை விளையாட்டாக வாயில் போட்ட 5 வயது சிறுவன், அது தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2><strong>விளையாட்டாக தொடங்கிய விபரீதம்:</strong></h2><p> மைசூரு மாவட்டம் ஹுன்சூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் நேற்று இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்த சிறுவன் முகுந்த் மயூர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p>சிறுவன் முன்னாள் கிராம பஞ்சாயத்து துணைத் தலைவர் கௌரம்மா - சங்கர் நாயக் தம்பதியின் பேரனும், சந்தோஷ் - ஐஸ்வர்யா தம்பதியின் ஒரே மகனும் ஆவார்.</p><p>போலீசாரின் முதற்கட்ட விசாரணையின்படி, சிறுவன் கடையில் வாங்கிய சிப்ஸ் பாக்கெட்டைத் திறந்து சாப்பிட்டுள்ளார். அப்போது அந்தப் பாக்கெட்டுக்குள் குழந்தைகளுக்குப் பரிசாக வழங்கப்படும் சிறிய அளவிலான பிளாஸ்டிக் பந்து ஒன்று இருந்துள்ளது. </p><p>அதை எடுத்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், எதிர்பாராதவிதமாக அந்தப் பந்தை வாயில் போட்டு விழுங்கியதாகக் கூறப்படுகிறது.</p><h2>தொண்டையில் சிக்கிய பந்து:</h2><p>சிறுவன் விழுங்கிய அந்தப் பிளாஸ்டிக் பந்து அவரது தொண்டைப் பகுதியில் பலமாகச் சிக்கிக் கொண்டது. இதனால் சிறுவனுக்குக் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. </p><p>உடனே பதறிப்போன குடும்பத்தினர் சிக்கிய சிறு பந்தை எடுக்க முயன்றும், துரதிர்ஷ்டவசமாகச் சிறுவன் மூச்சுதிணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். </p><p>இச்சம்பவம் குறித்து ஹுன்சூர் ஊரகக் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p><h2>தொடரும் சோகங்கள்: </h2><p>மைசூருவின் ஹுன்சூர் பகுதியில் இதுபோன்ற அஜாக்கிரதை மற்றும் எதிர்பாராத விபத்துகளால் குழந்தைகள் உயிரிழப்பது இது முதல் முறையல்ல. </p><p>கடந்த மார்ச் மாதம், இதே தாலுகாவில் உள்ள தொட்டஹெஜ்ஜூர் கிராமத்தில் 6 மாதக் குழந்தை ஒன்று பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த காய்ந்த செம்பருத்திப் பூவை விழுங்கியதால் மூச்சுத்திணறி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.</p><p>சின்மய் கவுடா என்ற அந்த ஆண் குழந்தை, தனது மூத்த சகோதரனுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது வாசலில் இருந்த காய்ந்த பூவை வாயில் வைத்துள்ளது. </p><p>அதை மூத்த சகோதரன் பிடுங்க முயன்றபோது குழந்தை அதை அவசரமாக விழுங்கியதால், தொண்டையில் சிக்கிச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.</p><h2>சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை:</h2><p>திருமணங்கள், விழாக்கள் மற்றும் பலகாரப் பாக்கெட்டுகளில் வரும் சிறிய பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் விளையாட்டுப் பொம்மைகளைக் குழந்தைகளுக்குக் கொடுக்கும்போது பெற்றோர்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>‘நான் உயிரோடு இருக்கும்வரை இனி 4 பேரும் ஒன்றாவதற்கு வாய்ப்பில்லை’ -  நடிகர் ரவிமோகன்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/as-long-as-i-am-alive-there-is-no-chance-for-the-four-of-us-to-come-together-again-actor-ravi-mohan</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/as-long-as-i-am-alive-there-is-no-chance-for-the-four-of-us-to-come-together-again-actor-ravi-mohan#comments</comments><guid isPermaLink="false">57cc56f0-abad-4220-91da-9985c400e9db</guid><pubDate>Sun, 02 Aug 2026 11:49:26 +0000</pubDate><atom:updated>2026-08-02T11:49:26.154Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆர்த்தி ரவி,Actor ravi mohan,Aarti Ravi,நடிகர் ரவிமோகன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/ir1s0krh/New-Project-2026-08-02T171754.684.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘நான் உயிரோடு இருக்கும்வரை இனி 4 பேரும் ஒன்றாவதற்கு வாய்ப்பில்லை’ -  நடிகர் ரவிமோகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/ir1s0krh/New-Project-2026-08-02T171754.684.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகர் ரவிமோகன் தனது மனைவியை விட்டுப் பிரிவதாக கடந்த 2024ம் ஆண்டு அறிவித்தார். ஆனால் ஆர்த்தி ரவி தனது ஒப்புதல் இன்றி இந்த அறிவிப்பு வெளியானதாக அறிவித்தார். இவர்களின் விவாகரத்து வழக்கு தற்போது சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. </p><p>இந்நிலையில் அண்மையில் இந்த வழக்கில் ரவிமோகன் ஆர்த்திக்கு மாதம் ரூ.3 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டதாக செய்திகள் வெளியாகின. அவர் ரூ.40 லட்சம் கேட்டநிலையில், ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டதாக கூறப்பட்டது.</p><p>இந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து, ஆர்த்தியின் தாயும், தயாரிப்பாளர் சுஜாதாவும் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது குழந்தைகளின் செலவுக்காகத்தான் ஆர்த்தி இவ்வளவு பணத்தை கேட்டதாகவும், தனிப்பட்ட செலவுகளுக்காக அல்ல என விளக்கம் அளித்திருந்தார். </p><p>இந்நிலையில் நடிகர் ரவிமோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்.,</p><p>“அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள். உண்மையான நண்பர்களாக எனக்கு எப்போதும் உறுதுணையாக நின்றவர்களுக்கு நன்றி. சிலர் தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்புக்கு வழிவகுக்கும் வகையிலான செயல்களில் ஈடுபடுவது வருந்தத்தக்கது.</p><p>என்னைப் பொறுத்தவரை, ஒரு விஷயத்தைத் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன்: நான் உயிரோடு இருக்கும் வரை, நாங்கள் நால்வரும் ஒருபோதும் ஒரே அறையில் ஒன்றாக இருக்கப்போவதில்லை.</p><p>எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்;  உங்கள் நண்பர்களை புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுங்கள்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>நகங்களை சுத்தமாக வைத்திருப்பது ஏன் அவசியம்?-மருத்துவர்கள் அறிவுறுத்தல்!</title><link>https://www.maalaimalar.com/health/generalmedicine/importance-of-clean-nails-for-health-doctors-advice</link><comments>https://www.maalaimalar.com/health/generalmedicine/importance-of-clean-nails-for-health-doctors-advice#comments</comments><guid isPermaLink="false">9bf79664-fdc2-4417-9bb5-5d585fb676d7</guid><pubDate>Sun, 02 Aug 2026 11:36:34 +0000</pubDate><atom:updated>2026-08-02T11:36:34.352Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Health,ஆரோக்கியம்,HealthTips,உடல்நலம்,Nails clean,நகங்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/xv1ui06s/nails.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ NAILS CLEAN]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/xv1ui06s/nails.jpg?w=280" width="280"></media:thumbnail><category>பொது மருத்துவம் (General Medicine)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நமது உடலின் ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் முக்கிய அடையாளங்களில் நகங்களும் ஒன்றாகும். நகங்கள் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பது அழகுக்காக மட்டுமல்ல, பல்வேறு தொற்றுநோய்களைத் தடுப்பதற்கும் மிகவும் அவசியமானது. தினசரி செயல்பாடுகளின்போது கைகளிலும் கால்களிலும் உள்ள நகங்களில் தூசி, அழுக்கு மற்றும் கிருமிகள் எளிதில் சேரக்கூடும். எனவே, நகங்களை சரியான முறையில் பராமரிப்பது தனிப்பட்ட சுகாதாரத்தின் முக்கியமான பகுதியாகும்.</p><h2><strong>நகங்களை ஏன் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்?</strong></h2><p>நகங்களின் கீழ் தேங்கும் அழுக்குகளில் பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சைகள் வளரக்கூடும். இவை உணவு உண்ணும்போது அல்லது கண்கள், மூக்கு, வாய் போன்ற உறுப்புகளைத் தொடும்போது உடலுக்குள் நுழைந்து பல்வேறு நோய்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு இது அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.</p><h2><strong>நகங்களை சுத்தமாக பராமரிக்கும் முறைகள்:</strong></h2><p>கைகளை சோப்பு மற்றும் சுத்தமான நீரால் அடிக்கடி கழுவுவதுடன், நகங்களின் அடிப்பகுதியையும் நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். நகங்களை நீளமாக வளர விடாமல், அவ்வப்போது வெட்டி ஒழுங்காக வைத்திருப்பது நல்லது. நகங்களை வெட்டுவதற்கு சுத்தமான நக வெட்டியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நகங்களை கடிக்கும் பழக்கத்தைத் தவிர்ப்பதும் மிகவும் முக்கியம்.</p><h2><strong>நகங்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது:</strong></h2><p>சரிவிகித உணவுமுறையைப் பின்பற்றுவது நகங்களின் வலிமைக்கு உதவுகிறது. புரதம், இரும்புச் சத்து, கால்சியம், பயோட்டின் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வதால் நகங்கள் உறுதியாக வளரும். வீட்டுப் பணிகள் அல்லது ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தும் பணிகளில் ஈடுபடும்போது கையுறைகளை அணிவது நகங்களை பாதுகாக்க உதவும்.</p><h2><strong>கவனிக்க வேண்டிய மாற்றங்கள்:</strong></h2><p>நகங்களில் நிறமாற்றம், உடைதல், தடிமனாகுதல், வலி அல்லது வீக்கம் போன்ற மாற்றங்கள் நீண்ட நாட்களாக இருந்தால் மருத்துவரை அணுகுவது அவசியம். சில நேரங்களில் இத்தகைய மாற்றங்கள் உடல்நலப் பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்கலாம்.</p><p>நகங்களை சுத்தமாக வைத்திருப்பது ஒரு சிறிய பழக்கமாகத் தோன்றினாலும், அது உடல்நலத்தைப் பாதுகாக்கும் முக்கியமான சுகாதார நடைமுறையாகும். தினசரி நகங்களை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் கிருமித் தொற்றுகளைத் தவிர்த்து, ஆரோக்கியமான மற்றும் சுத்தமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற முடியும்.</p>]]></content:encoded></item><item><title>&apos;கார்த்தி 30&apos; படத்தில் இணைந்தார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/karthi-30-movie-music-composer-devi-sri-prasad-joins</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/karthi-30-movie-music-composer-devi-sri-prasad-joins#comments</comments><guid isPermaLink="false">85490dee-8ec6-45f8-9377-f50cf33fbc32</guid><pubDate>Sun, 02 Aug 2026 11:24:08 +0000</pubDate><atom:updated>2026-08-02T11:24:08.565Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Devi Sri Prasad,Meenakshi Chaudhary,Karthi,கார்த்தி,தேவி ஸ்ரீ பிரசாத்,நடிகை மீனாட்சி சவுத்ரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/izptft8t/dsp.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Karthi-Meenakshi Chaudhary   ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/izptft8t/dsp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான கார்த்தியின் 30-வது திரைப்படமான 'கார்த்தி 30' படத்தின் இசை அமைப்பாளராகப் பிரபல பாப் நட்சத்திரமும், முன்னணி இசையமைப்பாளருமான 'தேவி ஸ்ரீ பிரசாத்' இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>பிறந்தநாள் பரிசு:</strong></h2><p>தேவி ஸ்ரீ பிரசாத்தின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்ட படத்தின் தயாரிப்பு நிறுவனமான 'சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ்', சமூக வலைத்தளங்களில் சிறப்புப் பதிவொன்றைப் பகிர்ந்து வரவேற்பு அளித்துள்ளது. "ராக்ஸ்டார் நம்மோடு இணைகிறார்! வருக வருக @ThisIsDSP. எங்கள் இசையமைப்பாளருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். இணைந்து புதிய சாதனை படைக்கக் காத்திருக்கிறோம் என பதிவிட்டுள்ளனர்.</p><p>வசூல் சாதனை படைத்த பல வெற்றிப்படங்களின் பின்னணியில் உள்ள இளம் மற்றும் திறமை வாய்ந்த இயக்குநர் கல்யாண் சங்கர் இப்படத்தை இயக்குகிறார்.  கார்த்திக்கு ஜோடியாக முன்னணி நடிகை மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடிக்கிறார். 'வாத்தி', 'லக்கி பாஸ்கர்' போன்ற பிளாக்பஸ்டர் வெற்றிப் படங்களைத் தந்த சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட வரவு செலவுத் திட்டத்தில் இப்படத்தைத் தயாரிக்கிறது.</p><h2><strong>விறுவிறுப்பாக நடைபெறும் படப்பிடிப்பு:</strong></h2><p>ஏற்கனவே கார்த்தியின் பிறந்தநாளின் போது படப்பிடிப்பு குறித்த அப்டேட்டைத் தந்த தயாரிப்பு நிறுவனம், தற்போது இப்படத்தின் முக்கியக் காட்சிகள் மிக அதிவேகமாகப் படமாக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. கார்த்தியை இதுவரை ரசிகர்கள் பார்த்திராத முற்றிலும் மாறுபட்ட, எனர்ஜெட்டிக்கான புதிய கோணத்தில் திரையில் காட்ட இயக்குநர் திட்டமிட்டுள்ளார்.</p><h2><strong>எதிர்பார்ப்பில் ரசிகர்கள்:</strong></h2><p>முன்னதாக கார்த்தி-தேவி ஸ்ரீ பிரசாத் கூட்டணியில் வெளியான படங்களின் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்த நிலையில், மீண்டும் இக்கூட்டணி இணைந்துள்ளதால் இப்படத்தின் ஆல்பம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் கணிசமாக அதிகரித்துள்ளது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>“காவிரி விவகாரத்தில் மேகதாது திட்டம்தான் ஒரே தீர்வு” - டி.கே. சிவகுமார்</title><link>https://www.maalaimalar.com/news/national/the-mekedatu-project-is-the-only-solution-to-the-cauvery-issue-dk-shivakumar</link><comments>https://www.maalaimalar.com/news/national/the-mekedatu-project-is-the-only-solution-to-the-cauvery-issue-dk-shivakumar#comments</comments><guid isPermaLink="false">c346bcf6-d647-4734-83c9-3489fcd73b76</guid><pubDate>Sun, 02 Aug 2026 11:00:23 +0000</pubDate><atom:updated>2026-08-02T11:00:23.637Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DK Shivakumar,டி.கே.சிவகுமார்,Mekedatu project,Cauvery Issue,மேகதாது திட்டம்,காவேரி விவகாரம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/dgnnrjgk/New-Project-2026-08-02T160900.711.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “காவிரி விவகாரத்தில் மேகதாது திட்டம்தான் ஒரேத் தீர்வு” - டி.கே. சிவகுமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/dgnnrjgk/New-Project-2026-08-02T160900.711.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிற்கு இடையே இருக்கும் தண்ணீர் பிரச்னைக்கு மேகதாது திட்டம்தான் ஒரே நிரந்தர தீர்வு என கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். </p><p>அவரது இல்லத்தில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பின் பேசிய அவர்.,</p><p>“எனது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கர்நாடகப் பயணத்தை ஒத்திவைத்துள்ளார். இந்தப் பிரச்னையைத் தீர்க்க நாம் அனைவரும் முழு ஒத்துழைப்புடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே எங்கள் அரசின் நிலைப்பாடாகும். </p><p>எங்கள் அமைச்சர்கள் அனைவரும் ஏற்கனவே தங்கள் பொறுப்பிலுள்ள மாவட்டங்களுக்குச் சென்று கள நிலவரத்தை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர். அடுத்தடுத்த நாட்களை தொடர்ந்து விவசாயிகளை சந்தித்துப் பேசி கிராமங்களில் உள்ள யதார்த்த நிலைகுறித்து அறிக்கை சமர்பிப்பார்கள். </p><p>அதன் பிறகு, வருவாய்த்துறை அமைச்சர் தொழில்நுட்ப அம்சங்கள், அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் இந்திய அரசின் விதிமுறைகள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு நிலைமையை மதிப்பீடு செய்வார். அந்த மதிப்பீட்டின் அடிப்படையில், அரசு தனது முடிவுகளையும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளையும் அறிவிக்கும்.</p><p>பிரச்னைகளுக்கு மேகதாது திட்டம்தான் ஒரு நிரந்தரத் தீர்வு. உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தனது தீர்ப்பை வழங்கிவிட்டது, மத்திய அரசும் தனது பதிலை அளித்துள்ளது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, நாம் இனியும் நேரத்தை வீணாக்காமல் அடுத்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.</p><p>இது தமிழ்நாட்டிற்கு அதிகம் கிடைப்பதோ அல்லது கர்நாடகாவிற்கு குறைவாகக் கிடைப்பதை பற்றியது அல்ல. கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து, சுமூகமான முறையில் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.</p><p>இம்முயற்சியில் அனைவரின் ஒத்துழைப்பையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>இனிமே கெஸ்ட் ரோல் பண்ண மாட்டேன்!- விஜய் சேதுபதி எடுத்த திடீர் முடிவு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/vijay-sethupathi-says-no-more-guest-roles</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/vijay-sethupathi-says-no-more-guest-roles#comments</comments><guid isPermaLink="false">a6939600-effd-45cf-839e-c8d9fca851c8</guid><pubDate>Sun, 02 Aug 2026 10:44:27 +0000</pubDate><atom:updated>2026-08-02T10:44:27.178Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Train,டிரெயின்,Jailer 2,ஜெயிலர் 2,விஜய் சேதுபதி,Vijay sethupathi</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/z13wm91q/vjs.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vijay Sethupathi ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/z13wm91q/vjs.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, இனி திரைப்படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதை முற்றிலும் நிறுத்தப்போவதாகத் தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' படத்திற்கு மட்டுமே தாம் இதில் ஒரே விலக்கு அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><h2><strong>சிறு படங்களின் வியாபார பாதிப்பு:</strong></h2><p>நான் கதாநாயகனாக நடிக்கும் படங்கள் ஒருபுறம் இருக்க, நட்பின் அடிப்படையில் சில சிறிய படங்களில் கெஸ்ட் ரோலில் நடிக்க ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அந்தப் படங்களின் விளம்பர போஸ்டர்களில் எனது புகைப்படத்தைப் பெரிய அளவில் போட்டு விளம்பரம் செய்கிறார்கள். இது நான் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் படங்களின் வணிகத்தையும் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பையும் பெரிதும் பாதிக்கிறது என்று கூறியுள்ளார்.</p><h2><strong>பிரமோஷன் உத்திகள்:</strong></h2><p>தான் உதவும் மனப்பான்மையோடு செய்யும் சிறு கதாபாத்திரங்கள், தவறான முறையில் விளம்பரம் செய்யப்படுவதால் தான் கதாநாயகனாக நடிக்கும் படங்களுக்குப் பின்னடைவு ஏற்படுவதாக உணர்ந்து இந்த முடிவை எடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><h2><strong>'ஜெயிலர் 2' படத்திற்கு மட்டும் ஏன் இந்த விலக்கு?</strong></h2><p>ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' படத்தில் மட்டும் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பது குறித்துப் பேசிய அவர், ஜெயிலர் 2 படத்தில் ரஜினி சாருக்காக மட்டுமே நடிக்க ஒப்புக்கொண்டேன். ரஜினி சார் போஸ்டரில் இருக்கும்போது மக்கள் அனைவரும் அவரையேதான் பார்ப்பார்கள், என் புகைப்படம் இருந்தால் யாருடைய கவனமும் அதில் செல்லாது. </p><p>அதோடு, அவருடன் இணைந்து பணியாற்றுவதையும் அவர் அருகே இருப்பதையும் ஒரு சிறந்த கற்றல் அனுபவமாகப் பார்க்கிறேன். அதனால்தான் ரஜினி சாருக்காக இந்த ஒரு விதிவிலக்கைச் செய்தேன்" எனக் கூறியுள்ளார்.</p><h2><strong>வில்லன் வேடங்களுக்கும் 'நோ':</strong></h2><p>முன்னதாக, முன்னணி கதாநாயகர்களின் படங்களில் நெகட்டிவ் பாத்திரங்களில் நடிப்பதை நிறுத்தப்போவதாகவும் விஜய் சேதுபதி அறிவித்திருந்தார். "இயக்குநர்கள் என்னிடம் வரும்போது ஒரு தனித்துவமான வில்லன் கதாபாத்திரத்தைக் கொடுக்காமல், கதாநாயகனை உயர்த்திப் பிடிப்பதற்காகவே என்னை அணுகுகிறார்கள்" எனக் கூறியிருந்த அவர், தற்போது கெஸ்ட் ரோல்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.</p><h2><strong>'ஜெயிலர் 2' மற்றும் அடுத்தடுத்த படங்கள்:</strong></h2><p>நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'ஜெயிலர் 2' திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், விஜய் சேதுபதி கைவசம் மிஷ்கினின் 'டிரெயின்', வெற்றிமாறனின் 'அரசன்', மணிரத்னம் - சாய் பல்லவி இணையும் புதிய படம் உள்ளிட்ட பல முக்கியப் படங்கள் அணிவகுத்து நிற்கின்றன.</p>]]></content:encoded></item><item><title>தி.மு.க. தலைமை மீது அதிருப்தி: அ.தி.மு.க.வில் இணைகிறாரா தோப்பு வெங்கடாசலம்?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dissatisfaction-with-dmk-leadership-will-thoppu-venkatasalam-join-aiadmk</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dissatisfaction-with-dmk-leadership-will-thoppu-venkatasalam-join-aiadmk#comments</comments><guid isPermaLink="false">dcec4765-bf0a-443e-8e4d-9a1def9e0be9</guid><pubDate>Sun, 02 Aug 2026 10:40:37 +0000</pubDate><atom:updated>2026-08-02T10:40:37.017Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,ADMK,அதிமுக,தோப்பு வெங்கடாசலம்,Thoppu venkadachalam</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/8rhzqucg/thoppu.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Thoppu venkatasalam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/8rhzqucg/thoppu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராக இருந்த தோப்பு வெங்கடாச்சலம் அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் ஈரோடு மத்திய மாவட்ட தி.மு.க. கலைக்கப்பட்டு அதிலிருந்த பெருந்துறை, பவானி சட்டமன்ற தொகுதிகளில் பெருந்துறை தொகுதி ஈரோடு தெற்கு மாவட்டத்திலும், பவானி தொகுதி  ஈரோடு வடக்கு மாவட்டத்திலும் இணைக்கப்பட்டு விட்டது.</p><p>அ.தி.மு.க.வில் இருந்த போது 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பெருந்துறை தொகுதியில் போட்டியிட்ட தோப்பு வெங்கடாசலம் முதன்முறையாக எம்.எல்.ஏ. ஆனார். சில மாதங்களில் அவரை வருவாய்த்துறை அமைச்சராக அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா நியமித்தார்.</p><p>2 ஆண்டுகள் அப்பதவியில் நீடித்த தோப்பு வெங்கடா சலம், பின்னர் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். </p><p>கே.ஏ.செங்கோட்டையன் வகித்து வந்த வேளாண் மற்றும் வனத்துறை அமைச்சர் பதவியை பறித்த ஜெயலலிதா ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் பதவி யையும் பறித்து தோப்பு வெங்கடாசலத்திடம் கொடுத்தார்.</p><p>அதற்கு முன்பு வரை ஈரோடு மாவட்டத்தில் கே.ஏ.செங்கோட்டையனும், சு.முத்துசாமியும் அ.தி.மு.க.வின் முக்கிய புள்ளிகளாக இருந்தனர். 2009-ம் ஆண்டில் சு.முத்துசாமி தி.மு.க.வில் சேர்ந்தார். பின்னர் செங்கோட்டையனின் கரம் வலுவானது. </p><p>செங்கோட்டையனின் அமைச்சர் பதவியையும், மாவட்ட செயலாளர் பதவியையும் பறித்த பிறகு கிட்டத்தட்ட ஈரோடு மாவட்ட அ.தி.மு.க .தோப்பு வெங்கடாச்சலத்தின் கட்டுப்பாட்டில் வந்தது. </p><p>தோப்பு வெங்கடாசலம், 2016-ம் ஆண்டு மீண்டும் பெருந்துறை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.</p><p>அந்த தேர்தலில் தோப்பு வெங்கடாசலம் வெற்றி பெற்ற போதிலும் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சராக ஓ.பன்னீர் செல்வமும் இருந்தபோது தோப்பு வெங்கடாசலத்திற்கு பதவி தரவில்லை.</p><p>2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தோப்பு வெங்கடாசலத்திற்கு பெருந்துறை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக ஜெயக்குமாருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.</p><p>இதன் காரணமாக அதிருப்தி அடைந்த தோப்பு வெங்கடாச்சலம் சுயேட்சையாக போட்டியிட்டு 9,900 வாக்குகளை பெற்றார். தேர்தல் தோல்விக்கு பின் தோப்பு வெங்கடாச்சலம் தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் இணைந்தார்.</p><p>2025-ம் ஆண்டு பெருந்துறை, பவானி ஆகிய 2 தொகுதி களையும் பிரித்து ஈரோடு மத்திய மாவட்டம் உருவாக்கப்பட்டு அதன் மாவட்ட பொறுப்பாளராக தோப்பு வெங்கடாச்சலம் நியமிக்கப்பட்டார்.</p><p>கட்சி பொறுப்பை ஏற்றுக்கொண்ட திலிருந்து இவ்விரு தொகுதிகளிலும் தி.மு.க.வின் வளர்ச்சிக்காக வேகமாக பணியாற்றினார்.பெருந்துறை மற்றும் பவானி சட்டமன்ற தொகுதிகள் எப்போதும் அ.தி.மு..கவின் கோட்டையாகவே இருந்து வந்துள்ளது.</p><p>2026 சட்டமன்ற தேர்தலில் இந்த 2 தொகுதி களிலும் நிச்சயம் வெற்றி பெற்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அர்ப்ப ணிப்பேன் என்று கூறி பணியாற்றி வந்தார். ஆனால் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயக்குமார் வெற்றி பெற்றார். தோப்பு வெங்க டாசலம் தோல்வி அடைந்தார். </p><p>பின்னர் ஜெயக்குமார் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு த.வெ.க.வில் இணைந்தார். விரைவில் பெருந்துறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திடீரென தி.மு.க. மத்திய மாவட்ட பொறுப்பாளராக இருந்து தோப்பு வெங்கடாசலம் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டிருப்பது பேசு பொருளாகியுள்ளது.</p><p>இன்னும் ஒரு வாரத்தில் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பேன் என தோப்பு வெங்கடாசலம் தெரிவித்துள்ளார். பெருந்துறை  இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வலுவான வேட்பாளரை நிறுத்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். அதன்படி தோப்பு வெங்கடாசலத்தை மீண்டும் அ.தி.மு.க.வில் இணைத்து கொள்ள பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><p>மேலும் அவர் த.வெ.க.விலும் இணையலாம் என்ற ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் தெளிவான முடிவை அறிவிப்பேன் என தோப்பு வெங்கடாசலம் கூறிவிட்டார். எனவே மீண்டும் அவர் அ.தி.மு.க.வில் இணைவாரா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இந்தோனேசியாவில் கடல் நடுவே தீப்பிடித்த பயணிகள் கப்பல் - 5 பேர் உயிரிழப்பு... 41 பேர் மாயம்!</title><link>https://www.maalaimalar.com/news/world/passenger-ship-catches-fire-at-sea-in-indonesia-5-dead-41-missing</link><comments>https://www.maalaimalar.com/news/world/passenger-ship-catches-fire-at-sea-in-indonesia-5-dead-41-missing#comments</comments><guid isPermaLink="false">64414128-cc46-4c49-9bed-661b4ab2f5b3</guid><pubDate>Sun, 02 Aug 2026 10:33:56 +0000</pubDate><atom:updated>2026-08-02T10:33:56.379Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தோனேசியா,indonesia,Mutiara Sentosa 2,முதியோரா செந்தோசா 2</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/4rkjobj5/New-Project-2026-08-02T160029.784.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இந்தோனேசியாவில் கடல்நடுவே தீப்பிடித்த பயணிகள் கப்பல் - 5 பேர் உயிரிழப்பு... 41 பேர் மாயம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/4rkjobj5/New-Project-2026-08-02T160029.784.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தோனேசியாவின் மதுரா தீவுக்கு அருகே கடலில் பயணிகள் படகு தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்ததாகவும், 41 பேரைக் காணவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. </p><p>இந்தோனேசியாவின் சுரபயாவில் இருந்து இன்று காலை மக்காசரை நோக்கி சுமார் 250க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் பணியாளர்களை ஏற்றிக்கொண்டு ‘முதியாரா செந்தோசா 2’ என்ற கப்பல் சென்றுள்ளது. </p><p>கப்பல் புறப்பட்ட சிலமணிநேரங்களிலேயே மதுரா தீவுக்கு அருகே தீவிபத்து ஏற்பட்டுள்ளது. உடனே இதுகுறித்து கப்பல் கேப்டன் தகவல் அளிக்க பலரும் பாதுகாப்பு ஜாக்கெட்டுகளை அணிந்துகொண்டு கடலில் குதித்துள்ளனர். கடலில் குதித்தவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.</p><p>இதனிடையே மற்றவர்கள் மாற்றுக் கப்பல்கள் மூலம் மாற்றப்பட்டு, கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடலில் மாயமானவர்களை மீட்க அனைத்து பாதுகாப்பு முகமைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதாகவும்  இந்தோனேசிய போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>படகில் தீ விபத்து ஏற்பட்டதற்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. 17,000க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவில், படகுப் போக்குவரத்து ஒரு பிரபலமான போக்குவரத்து முறையாகும். </p><p>இங்கு, மோசமான பாதுகாப்புத் தரங்களால், போதுமான உயிர்காக்கும் உபகரணங்கள் இல்லாமலும், கப்பல்களில் அடிக்கடி அதிக சுமை ஏற்றப்படுவதால், விபத்துகள் சாதாரணமாக நிகழ்கின்றன.</p>]]></content:encoded></item><item><title>என்னைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?-காதல் முறிவு வதந்திகளுக்குப் பதிலடி கொடுத்த நடிகை அனுபமா பரமேஸ்வரன்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/anupama-parameswaran-responds-to-rumours-about-dhruv-vikram-relationship</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/anupama-parameswaran-responds-to-rumours-about-dhruv-vikram-relationship#comments</comments><guid isPermaLink="false">6729e2c1-8430-4a1b-be2b-a3f47ece6905</guid><pubDate>Sun, 02 Aug 2026 10:22:29 +0000</pubDate><atom:updated>2026-08-02T10:22:29.525Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அனுபமா பரமேஸ்வரன்,Bison,anupama parameswaran,பைசன்,துருவ் விக்ரம்,Dhuruv vikram</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/t95dc016/anupama.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anupama Parameswaran ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/t95dc016/anupama.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகின் பிரபல நடிகையான அனுபமா பரமேஸ்வரன், நடிகர் துருவ் விக்ரமுடனான காதல் முறிவு குறித்து சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளுக்குத் தனது பாணியில் நேரடியாகப் பதிலளித்துள்ளார்.</p><h2>ச<strong>ர்ச்சையைக் கிளப்பிய இன்ஸ்டாகிராம் பதிவுகள்:</strong></h2><p>சில மாத இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில் மீண்டும் இன்ஸ்டாகிராமிற்கு வந்த அனுபமா பரமேஸ்வரன், சுதந்திரம், மன அமைதி மற்றும் "என்னை நானே தேர்ந்தெடுத்துக்கொள்கிறேன்" போன்ற வரிகளுடன் உணர்ச்சிப்பூர்வமான பல பதிவுகளைப் பகிர்ந்திருந்தார்.</p><p>குறிப்பாக, "யாரோ ஒருவரின் ஒப்புதலுக்காகவோ அல்லது தலைப்பிற்காகவோ காத்திருக்கத் தேவையில்லை என்பதை உணரும்போதுதான் சமூக வலைத்தளம் மகிழ்ச்சியாக மாறுகிறது எனக் குறிப்பிட்டிருந்தார். இப்பதிவுகள், மாரி செல்வராஜின் 'பைசன் காளமாடன்' படத்தில் அவருடன் இணைந்து நடித்த துருவ் விக்ரமுடனான காதல் முறிவை மறைமுகமாக உணர்த்துவதாக ரசிகர்களிடையே வதந்திகள் வேகமாகப் பரவின.</p><h2><strong>எனது வாழ்க்கை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?</strong> </h2><p>தனது புதிய தெலுங்குத் திரைப்படமான 'கிரேஸி கல்யாணம்' படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அனுபமாவிடம், இந்தச் சர்ச்சை பதிவுகள் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்துப் பேசிய அவர், "இது எனது சொந்த சோஷியல் மீடியா கணக்கு. </p><p>அதில் என்ன பதிவிட வேண்டும் என்பதை நானே தீர்மானிக்கிறேன். நான் யாருக்கும் எதிராகக் கோபத்தையோ, ஆதங்கத்தையோ வெளிப்படுத்தவில்லை. ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றத்தையும் கடந்து வந்த பாதையையும்தான் நான் பகிர்ந்துகொண்டேன். அதற்காக நான் பெருமைப்படுகிறேன்" என்றார்.</p><p>தொடர்ந்து பேசிய அவர், என்னைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? என் வாழ்க்கையைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? எனவே, மக்கள் எதையும் யூகிக்கத் தேவையில்லை. அது என் இன்ஸ்டாகிராம், எனக்கு விருப்பமானதை நான் பதிவிடுகிறேன் என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.</p><h2><strong>வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி:</strong></h2><p>'பைசன்' படப்பிடிப்பின் போது அனுபமாவும் துருவ் விக்ரமும் காதலித்து வருவதாக இணையத்தில் பரவலாகப் பேசப்பட்டது. இருப்பினும், இருவரும் தங்களது உறவு குறித்து எப்போதுமே அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை. தற்போது அனுபமா அளித்துள்ள இந்தத் தெளிவான விளக்கம், சமூக வலைத்தளங்களில் பரவி வந்த பல்வேறு யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்துள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>