<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 05 Aug 2026 22:43:10 +0000</lastBuildDate><item><title>சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் &apos;கரிகாலா&apos; மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/sandeep-kishan-new-movie-titled-karikaala</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/sandeep-kishan-new-movie-titled-karikaala#comments</comments><guid isPermaLink="false">03399e90-a1b5-40ab-a024-acf2ae755da8</guid><pubDate>Wed, 05 Aug 2026 21:43:44 +0000</pubDate><atom:updated>2026-08-05T21:43:44.707Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சந்தீப் கிஷன்,Sandeep Kishan,karikaala,கரிகாலா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/u3qpaahp/Karikaala-Poster.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Karikaala Poster]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/u3qpaahp/Karikaala-Poster.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>'ஷம்பாலா' திரைப்படத்தின் மூலம் தனித்துவமான கற்பனை உலகை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் யுகேந்தர் முனி, தற்போது இன்னும் பிரம்மாண்டமான படைப்பான 'கரிகாலா' மூலம் ரசிகர்களை புதிய மாய உலகிற்கு அழைத்துச் செல்ல தயாராகியுள்ளார். ஷைனிங் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் மகிதர் ரெட்டி மற்றும் ராஜசேகர் அன்னபிமோஜு தயாரிக்கும் இந்த பான் இந்தியா சோஷியோ ஃபேண்டஸி திரைப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார்.</p><p>சமீபத்தில் வெளியான கான்செப்ட் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது படத்தின் தலைப்பும், மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.</p><p>'கரிகாலா' என்ற தலைப்பில் வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ரசிகர்களை ஒரு பிரம்மாண்டமான கற்பனை உலகிற்குள் அழைத்துச் செல்கிறது. அடர்ந்த மர்ம காட்டில், கையில் வாளை உயர்த்தியபடி வீரராக குதிரையில் சீறிப்பாயும் சந்தீப் கிஷனுடன், அருகில் கர்ஜித்தபடி பாய்ந்து வரும் கம்பீரமான சிங்கமும் இடம்பெற்றுள்ளது. இந்த காட்சியமைப்பு, இந்திய நாட்டுப்புற கதைகள், சாகசம் மற்றும் கற்பனை உலகம் ஆகியவற்றை இணைக்கும் பிரம்மாண்டமான திரைப்பட அனுபவத்திற்கு முன்னோட்டமாக அமைந்துள்ளது.</p><h2>புதிய அவதாரம்:</h2><p>தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் உருவாகி வரும் 'கரிகாலா', தலைமுறைகளை கவர்ந்த சந்தமாமா கதைகளின் மாய உலகில் இருந்து உத்வேகம் பெற்று உருவாகியுள்ளது. மந்திர சக்திகள், மறக்கப்பட்ட ராஜ்ஜியங்கள், வீரர்கள், சிங்கங்கள், ஓநாய்கள் மற்றும் புராண மரபுகள் நிறைந்த இந்த உலகம், இந்திய நாட்டுப்புறக் கதைகளை நவீன தொழில்நுட்பத்துடன் இணைத்து திரையில் உயிர்ப்பிக்கவுள்ளது.</p><p>இந்தப் படத்திற்காக சந்தீப் கிஷன் தனது திரைப்பயணத்தில் இதுவரை இல்லாத மிகப்பெரிய மாற்றத்தை மேற்கொண்டுள்ளார். பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆடை அலங்காரம், புதிய தோற்றம் மற்றும் முற்றிலும் மாறுபட்ட உடல் மொழியுடன் சக்திவாய்ந்த போர்வீரராக அவர் திரையில் தோன்றுகிறார். அவரது இந்த புதிய அவதாரம் ரசிகர்களுக்கு வித்தியாசமான திரை அனுபவத்தை வழங்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.</p><h2>கரிகாலா அப்டேட்கள்:</h2><p>'கரிகாலா' இரண்டு அத்தியாயங்களாக வெளியாகவுள்ளது. முதல் அத்தியாயம் 2027 ஜூலை 2-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் அத்தியாயம் 2027 அக்டோபர் 28-ஆம் தேதி வெளியாக உள்ளது.</p><p>பிரம்மாண்டமான தலைப்பு அறிவிப்பும், மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகியுள்ள நிலையில், 'கரிகாலா' திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.</p><p>படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் 'கரிகாலா' திரைப்படம் தொடர்பான மேலும் பல முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.</p>]]></content:encoded></item><item><title>இதனால் தான் மக்கள் காவலன் கதையை தேர்வு செய்தேன் - நடிகர் மணிகண்டன்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-manikandan-shares-update-on-his-new-movie-makkal-kaavalan</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-manikandan-shares-update-on-his-new-movie-makkal-kaavalan#comments</comments><guid isPermaLink="false">f978374a-1f50-41d7-aa3d-8d150b26b8ff</guid><pubDate>Wed, 05 Aug 2026 21:07:57 +0000</pubDate><atom:updated>2026-08-05T21:07:57.096Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>manikandan,Makkal Kaavalan,மக்கள் காவலன்,நீலம் ஸ்டுடியோஸ்,மணிகன்டன்,neelam studios</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/8j8y6m4t/Manikandan.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Manikandan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/8j8y6m4t/Manikandan.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பைசன் காளமாடன் திரைப்படத்தின் மாபெரும் திரையரங்கு வெற்றியை தொடர்ந்து, பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் தங்களது கூட்டணியில் அடுத்த திரைப்படமாக “மக்கள் காவலன்” படத்தை &nbsp;அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p><p>இயக்குநர் சந்தோஷ் குமார் எழுதி இயக்கியுள்ள “மக்கள் காவலன்” கண்ணியமாக வாழ வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் இருக்கும் ஒரு சாதாரண மனிதனின் கதையை சொல்கிறது. ஆனால் ஊழல் நிறைந்த ஒரு அமைப்பு, அவனுக்கு சரணடைவதா அல்லது எதிர்த்து நிற்பதா என்ற இரண்டு வழிகளையே விட்டுச் செல்கிறது. </p><h2>படக்குழு:</h2><p>இந்தப் படத்தில், முதன்மை கதாபாத்திரத்தில் கே. <a href="https://www.maalaimalar.com/topic/manikandan">மணிகண்டன்</a> நடிக்கிறார். அவருடன் வாகை சந்திரசேகர், ஏ. வெங்கடேஷ், ஆர்.கே. விஜய்முருகன், சண்முகம் முத்துசாமி, சபுமோன், உன்னி மாயா, திவ்யா ஸ்ரீபாதா, ஜென்சன் திவாகர், லல்லு, ஜெமினி மணி மற்றும் ரகு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.</p><p>ஒளிப்பதிவு – பிரதீபன் செல்வரத்தினம், படத்தொகுப்பு – அருள் மோசஸ், கலை இயக்கம் – பாப்பநாடு சி. உதயகுமார், சண்டைப் பயிற்சி – டான் அசோக், ஒலியமைப்பு – ஆண்டனி ஜெயரூபன், ஆடை வடிவமைப்பு – சுரேஷ்குமார், ஒப்பனை – ராமச்சந்திரன் ஆகியோர் தொழில் நுட்ப குழுவில் பணியாற்றியுள்ளனர்.</p><p>பைசன் காளமாடன் திரைப்படத்தைத் தொடர்ந்து வெற்றிகரமாக தொடரும் இந்தக் கூட்டணியில் உருவாகும் “மக்கள் காவலன்” திரைப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார்.</p><h2>புதுமை, நேர்மை:</h2><p>இந்தப் படம் குறித்து நடிகர் கே. மணிகண்டன் பேசும் போது, “மக்கள் காவலன் என்பது கலாச்சார மற்றும் இன மோதல்களை மையமாகக் கொண்ட தனித்துவமான ஆக்‌ஷன் டிராமா. இந்த கதையின் புதுமையும், நேர்மையும் என்னை உடனே கவர்ந்தது. அதுவே இந்த படத்தில் நடிக்க என்னை தூண்டியது.</p><p>இது விறுவிறுப்பான, தீவிரமான, இன்றைய காலத்துக்கு மிகவும் பொருத்தமான திரைப்படம். சந்தோஷ் இந்தக் கதையை முதன்முதலாக சொன்னபோதே நான் முழுமையாக ஈர்க்கப்பட்டேன். இது எங்கள் அனைவரின் கனவு படம். நாங்கள் நினைத்தபடியே இந்தப் படம் உருவாகி இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி,” என்று தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு பட்ஜெட் 2026-27: ஒரு ரூபாயில் வரவு மற்றும் செலவு எவ்வளவு தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/news/topnews/tn-budget-2026-27-breakdown-of-income-and-expenditure-for-each-rupee</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/tn-budget-2026-27-breakdown-of-income-and-expenditure-for-each-rupee#comments</comments><guid isPermaLink="false">95200614-beda-4d3c-b0b4-3c7afc0d1194</guid><pubDate>Wed, 05 Aug 2026 20:22:15 +0000</pubDate><atom:updated>2026-08-05T20:22:15.770Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK Vijay,TN budget,தமிழக பட்ஜெட்,தவெக விஜய்,Budget 2026,மரிய வில்சன்,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/m1fdm39x/CM-VIjay-with-Maira-Wilson.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM VIjay with Maira Wilson]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/m1fdm39x/CM-VIjay-with-Maira-Wilson.png?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய் தலைமையிலான <a href="https://www.maalaimalar.com/topic/tvk">த.வெ.க.</a> அரசின் முதல் பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் நேற்று (ஆகஸ்ட் 05) தாக்கல் செய்தார்.</p><p>தமிழ்நாட்டில் கடந்த மே 10-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/vijay">விஜய்</a> தலைமையிலான அரசு பொறுப்பேற்றது. ஆட்சி பொறுப்பேற்ற இரண்டரை மாதங்களுக்கு பிறகு தங்களது முதல் பட்ஜெட்டை சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.</p><p>காலை 10.00 மணிக்கு பட்ஜெட் தாக்கலை தொடங்கிய அமைச்சர் மரிய வில்சன் சுமார் இரண்டரை மணி நேரம் பட்ஜெட் தாக்கல் செய்து மதியம் 12:31 மணிக்கு உரையை முடித்தார். நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ஒரு ரூபாயின் வரவு மற்றும் செலவு விவரங்களை தொடர்ந்தும்.</p><h2>ஒரு ரூபாயில் வரவு:</h2><ul><li><p>பொதுக்கடன் -33.1%</p></li><li><p>கடன்களின் வசூல் மற்றும் மூலதன வரவு -0.1%</p></li><li><p>மத்திய அரசிடம் இருந்து பெறும் உதவி மானியங்கள்- 6.3%</p></li><li><p>மத்திய வரிகளில் பங்கு - 11.9%</p></li><li><p>மாநிலத்தின் சொந்த வரி வருவாய் -43.3%</p></li><li><p>மாநிலத்தின் சொந்த வரி அல்லாத வருவாய் - 5.3%</p></li></ul><h2>ஒரு ரூபாயில் செலவு:</h2><ul><li><p>மூலதனச் செலவு -10.9%</p></li><li><p>வட்டி செலுத்துதல் -15.0%</p></li><li><p>உதவித் தொகைகளும் மானியங்களும் - 33.2%</p></li><li><p>கடன்களை திருப்பிச் செலுத்துதல் -9.9%</p></li><li><p>சம்பளங்கள் - 17.3%</p></li><li><p>ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகால பலன்கள் - 8.0%</p></li><li><p>கடன் வழங்குதல் - 1.9%</p></li><li><p>செயல்பாடுகளும் பராமரிப்புகளும் -3.8%</p></li></ul><h2>2 ஆண்டுகள் அவகாசம்:</h2><p>பட்ஜெட் தாக்கலின் போது நிதி அமைச்சர் மரிய வில்சன் தனது உரையில், "போதிய நிதி ஆதாரம் தேவைப்படுகிறது. நிதி ஆதாரங்களை பெருக்காவிடில் நலத்திட்டங்களை தொடர முடியாத நிலை ஏற்படும். போதிய நிதி ஆதாரங்களை பெருக்கி நலத்திட்டங்களை செயல்படுத்தும் முயற்சியில் வெற்றி பெறுவோம்.</p><p>தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாய் ரூ.2,54,575 கோடியாக உள்ளது. தமிழ்நாட்டின் நிதி நிர்வாகத்தை சீரமைக்க குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் தேவைப்படும். கடந்த ஆட்சியை போல் குறுகிய அரசியல் ஆதாயம் இல்லாமல் 15 ஆண்டுகளுக்கான வளர்ச்சி திட்டம் முன்னெடுக்கப்படும்.</p>]]></content:encoded></item><item><title>ஷேக் ஹசீனா நேர்காணலை தொடர்ந்து ஷகிப் அல் ஹாசன் வீட்டின் மீது பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு தாக்குதல் </title><link>https://www.maalaimalar.com/news/world/bomb-attack-at-shakib-al-hasans-house-hours-after-sheikh-hasinas-delhi-presser</link><comments>https://www.maalaimalar.com/news/world/bomb-attack-at-shakib-al-hasans-house-hours-after-sheikh-hasinas-delhi-presser#comments</comments><guid isPermaLink="false">699ea99e-e872-41e5-8317-580e099dd455</guid><pubDate>Wed, 05 Aug 2026 19:43:01 +0000</pubDate><atom:updated>2026-08-05T19:43:01.770Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sheikh Hasina,வெடிகுண்டு தாக்குதல்,Shakib Al Hasan,Bomb Attack,ஷேக் ஹசீனா,ஷகிப் அல் ஹாசன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/1xww34rp/shakib-al-hasan.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ shakib al hasan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/1xww34rp/shakib-al-hasan.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வங்கதேசத்தின் முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், முன்னாள் அவாமி லீக் எம்.பி.யுமான ஷகிப் அல் ஹசன் மூதாதையர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தியாவில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் காணொளி வாயிலாக செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சில மணி நேரங்களுக்கு பிறகு, ஷகிப் அல் ஹசன் மூதாதையர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.</p><p>உள்ளூர் நேரப்படி இரவு சுமார் 8:45 மணியளவில், மகுரா நகரின் கேஷப்மோர் பகுதியில் உள்ள ஷகிப் அல் ஹசனின் மூதாதையர் இல்லத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றது. தாக்குதலில் அந்த வீடும் சேதப்படுத்தப்பட்டது. டெல்லியில் உள்ள வெளிநாட்டு செய்தியாளர் மன்றத்தில் ஷேக் ஹசீனா ஏற்பாடு செய்திருந்த காணொளிக் கருத்தரங்கில் உரையாற்றிய சிறிது நேரத்திலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. </p><h2>அவாமி லீக் அறிக்கை:</h2><p>"வீடுகளுக்குத் தீ வைப்பது: அவாமி லீக் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொள்வதற்கான விலை. நவ பாசிசம் வங்கதேசத்தை சூழ்ந்துள்ளது," என்று அவாமி லீக் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><p>மாண்புமிகு கட்சித் தலைவர் ஷேக் ஹசீனாவுடன் உலக புகழ்பெற்ற நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சில மணி நேரங்களுக்கு பிறகு, வங்கதேசத்தின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான அவரது இல்லத்தில் ஒரு கொடூரமான பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.</p><p>அந்த செய்தியாளர் சந்திப்புக்கு முன்னதாக, பி.என்.பி, இஸ்லாமிய ஜமாத் மற்றும் என்.சி.பி ஆகிய கட்சிகள், செய்தியாளர் சந்திப்புகள் குறித்த செய்திகள் வெளியானால், வழக்கு தொடர நீதித்துறையை ஒரு ஆயுதமாக பயன்படுத்துவோம் என்று தேசிய ஊடகங்களை பகிரங்கமாக அச்சுறுத்தின. இந்த திட்டமிட்ட தாக்குதல், ஜனநாயக கட்டமைப்பு திட்டம் என்ற பெயரில் அவ்மாய் லீக் ஆர்வலர்களுக்கு எதிராக தொடரும் இனப்படுகொலை பிரச்சாரத்திற்கு மற்றுமொரு சான்றாகும்; இது பாசிசத்தின் அடையாள சின்னம்," என்று அந்த அறிக்கை மேலும் கூறியது.</p><h2>உறுதி:</h2><p>காணொளி வாயிலாக பேசிய ஷேக் ஹசீனா, ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் முயற்சி என்று தான் விவரித்ததில், கைது அல்லது மரணத்தை கூட எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கூறி, டிசம்பரில் வங்கதேசத்திற்கு திரும்புவதில் உறுதியாக இருப்பதாக அறிவித்தார்.</p> ]]></content:encoded></item><item><title>மூன்று நாட்கள் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் - அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/parliament-special-session-from-aug-16-18-for-womens-reservation</link><comments>https://www.maalaimalar.com/news/national/parliament-special-session-from-aug-16-18-for-womens-reservation#comments</comments><guid isPermaLink="false">55275c1b-2e5c-48d8-85e0-fa7f842210c9</guid><pubDate>Wed, 05 Aug 2026 18:19:37 +0000</pubDate><atom:updated>2026-08-05T18:19:37.479Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>parliament session,பாராளுமன்ற கூட்டம்,மகளிர் இடஒதுக்கீடு,Womens Reservation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/lvybt9r7/Kiren-Rijiju.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கிரண் ரிஜிஜு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/lvybt9r7/Kiren-Rijiju.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா ஆகியவற்றை விவாதிப்பதற்காக, ஆகஸ்ட் 16 முதல் 18 வரை மூன்று நாட்கள் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரை மத்திய அரசு கூட்டும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%81">கிரண் ரிஜிஜு</a> தெரிவித்தார்.</p><p>"நாடாளுமன்ற கூட்டத்தொடரின் தேதிகளை நீட்டிக்கும் திட்டம் எதுவும் இல்லை. மகளிர் இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாக்கள் மீதான சிறப்பு கூட்டத்தொடர் ஆகஸ்ட் 16 முதல் 18 வரை நடைபெறும்," என ரிஜிஜு ஊடகங்களிடம் தெரிவித்தார். </p><h2>வாக்கெடுப்பு:</h2><p>2029 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரிய அரசியலமைப்பு (131வது திருத்தம்) மசோதா, 2026, மக்களவையில் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற தவறிய சில நாட்களுக்கு பிறகு இந்த விளக்கம் வந்துள்ளது.</p><p>மசோதாவுக்கு ஆதரவாக அரசாங்கம் 298 வாக்குகளை பெற்றது, அதே நேரத்தில் 230 உறுப்பினர்கள் அதற்கு எதிராக வாக்களித்தனர். இந்த வாக்கெடுப்பில் 528 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற நிலையில், இந்த சட்டம் நிறைவேற 352 வாக்குகள் தேவைப்பட்டன.</p><p>அரசியலமைப்பு திருத்த மசோதாவின்படி, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலான தொகுதி மறுவரையறையை தொடர்ந்து, 2029 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, மக்களவை இடங்கள் தற்போதைய 543-இல் இருந்து அதிகபட்சமாக 850 ஆக அதிகரிக்கப்பட வேண்டும்.</p><h2>இரண்டு மசோதாக்கள்:</h2><p>மசோதாவின் தோல்வியை தொடர்ந்து, தொகுதி மறுவரையறை மற்றும் மக்களவையின் பலத்தை அதிகரிப்பது உள்ளிட்ட, அது தொடர்பான இரண்டு சட்ட மசோதாக்கள் வாக்கெடுப்புக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.</p><p>முன்மொழியப்பட்ட திருத்தங்கள், புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பிற்காக காத்திருக்காமல் தொகுதி மறுவரையறைக்கு அனுமதிப்பதன் மூலம், 2029 பொது தேர்தலுக்கு முன்னர் நரி சக்தி வந்தன் அதினியத்தின் விதிகளை செயல்படுத்த முற்படுகின்றன. மேலும், இட ஒதுக்கீட்டு கட்டமைப்பிற்கு இடமளிக்கும் வகையில், மக்களவையின் தற்போதைய 543 இடங்களின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவதையும் அவை பரிந்துரைக்கின்றன.</p><p>வியாழக்கிழமை இரவு வரை நீடித்து, வெள்ளிக்கிழமையும் தொடர்ந்த விவாதத்தின் போது, ​​பிரதமர் நரேந்திர மோடி, இந்த சட்டத்தை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்காமல் தேசிய நலன் கருதி ஆதரிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களை வலியுறுத்தினார்.</p><p>தென்னிந்திய மாநிலங்களில் தொகுதி மறுபங்கீட்டின் தாக்கம் குறித்த கவலைகளுக்கு பதிலளித்த மோடி, மக்களவையின் பலம் அதிகரிக்கப்பட்டால் அப்பகுதிக்கு எந்த அநீதியும் இழைக்கப்படாது என்று தாம் தனிப்பட்ட முறையில் சபையில் உறுதியளித்ததாக கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>என்ன நடந்தாலும், மக்களுக்காக நான் திரும்புவேன் - ஷேக் ஹசீனா</title><link>https://www.maalaimalar.com/news/world/whatever-fate-awaits-me-i-will-return-to-my-people-sheikh-hasina</link><comments>https://www.maalaimalar.com/news/world/whatever-fate-awaits-me-i-will-return-to-my-people-sheikh-hasina#comments</comments><guid isPermaLink="false">2e0cf735-cfed-4014-a976-a8cc88f5da44</guid><pubDate>Wed, 05 Aug 2026 17:29:29 +0000</pubDate><atom:updated>2026-08-05T17:29:29.147Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sheikh Hasina,ஷேக் ஹசீனா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/vgaw3xfy/sheikh-hasina.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sheikh Hasina]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/vgaw3xfy/sheikh-hasina.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வங்கதேச முன்னாள் பிரதமர் <a href="https://www.maalaimalar.com/topic/sheikh-hasina">ஷேக் ஹசீனா</a>, இன்று (புதன்கிழமை) காணொளி வாயிலாக ஆற்றிய உரையில், தான் வங்கதேசத்திற்கு திரும்புவதாகவும், தனக்கு என்ன நேர்ந்தாலும் அது ஒரு பொருட்டல்ல என்றும் கூறினார். </p><p>தனது இந்த திரும்புதல் அதிகாரத்தை கோருவதற்காக அல்ல என்றும், மாறாக நாட்டை மீண்டும் வளர்ச்சி, மதச்சார்பின்மை மற்றும் செழிப்புக்கான பாதையில் கொண்டு செல்வதற்காகவே என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p>"அவர்கள் என்னை சிறையில் அடைக்கலாம் அல்லது கொன்றுவிடலாம் என்பது எனக்கு தெரியும். நான் என் மக்களுடன் இருப்பதற்காக என் வீட்டிற்குத் திரும்பிச் செல்வேன்," என்று மேலும் கூறினார்.</p><p>காணொளிக் காட்சி மூலம் பேசிய அவர், மக்கள் "மிகுந்த துன்பங்களை அனுபவித்ததாலும்", அதை இனியும் தன்னால் பொறுத்துக்கொள்ள முடியாததாலும் வங்கதேசத்திற்கு திரும்பி செல்ல முடிவு செய்ததாக ஊடகப் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.</p><h2>வெற்றி மாதம்:</h2><p>"டிசம்பர் எங்கள் வெற்றி மாதம். அதனால், நான் டிசம்பர் மாதத்தில் திரும்பி செல்ல விரும்புகிறேன். நான் எதையும் எதிர்கொள்ள நேரிடலாம் என்று எனக்கு தெரியும்.</p><p>தற்போதைய நெருக்கடி குறித்துப் பேசுவதற்கு முன்பு, தேசத்தந்தை பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் அவர்களுக்கும், முக்கிய தேசிய தலைவர்களுக்கும், நமது விடுதலைப் போரின் முப்பது லட்சம் தியாகிகளுக்கும் எனது ஆழ்ந்த அஞ்சலியைச் செலுத்துகிறேன். </p><p>மேலும், 1975-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி நான் இழந்த எனது சொந்த குடும்ப உறுப்பினர்களையும் ஆழ்ந்த துயரத்துடன் நினைவுகூர்கிறேன்," என்று அவர் கூறினார்.</p><h2>பிரிக்கப்படவில்லை:</h2><p>அந்த உரையில், இராணுவ புரட்சியின் போது படுகொலை செய்யப்பட்ட தனது தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானைப் பற்றிப் பேசும்போது, ​​அவர் கண்ணீர் விட்டு அழுதார். தன் நாட்டிலிருந்து தான் "வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டபோதிலும்", தன் மக்களிடமிருந்து "ஒருபோதும் பிரிக்கப்படவில்லை" என்று அவர் கூறினார்.</p><p>தெற்காசியாவின் வெளிநாட்டு செய்தியாளர் மன்றம் (FCC) ஏற்பாடு செய்திருந்த தனது உரையில், ஜனநாயகத்திற்கான தனது நாட்டின் 'போராட்டத்திற்கு' சர்வதேச சமூகம் ஆதரவளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.</p>]]></content:encoded></item><item><title>மகுடம் படத்தின் ‘காத்தாக வாழப்போறேன்’ பாடல் வெளியானது!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-song-kaathaaga-vaazhapporen-from-the-movie-magudam-has-been-released</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-song-kaathaaga-vaazhapporen-from-the-movie-magudam-has-been-released#comments</comments><guid isPermaLink="false">3eaf53df-28da-4bdf-b3ee-5b0da82bd428</guid><pubDate>Wed, 05 Aug 2026 16:30:51 +0000</pubDate><atom:updated>2026-08-05T16:30:51.160Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜிவி பிரகாஷ்,gv prakash,Vishal,Magudam,மகுடம்,விஷால்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/m1hl588i/New-Project-2026-08-05T215643.341.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மகுடம் படத்தின் ‘காத்தாக வாழப்போறேன்’ பாடல் வெளியானது!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/m1hl588i/New-Project-2026-08-05T215643.341.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விஷால் இயக்கி, நடித்துள்ள புதியப் படம் மகுடம். இப்படம் மூலம் விஷால் தமிழ் திரையுலகில் இயக்குநராகவும் கால்பதிக்கிறார்.</p><p>ஆக்ஷன் என்டர்டெயிணராக உருவாகியுள்ள இப்படத்தில் அஞ்சலி, துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் விஷால் மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.</p><p>தனது 99வது படமாக இப்படத்தை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாக உள்ளநிலையில், இதன் டிரெய்லர் நாளை மறுநாள் வெளியாகிறது.</p><p>இந்நிலையில் இன்று இப்படத்தின் காத்தாக வாழப்போறேன் பாடல் வெளியாகி உள்ளது. விவேக் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலை ஹரிஹரன், மேக்னா சுமேஷ் பாடியுள்ளனர். </p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/Ms7NrNKeIuI"></iframe></figure>]]></content:encoded></item><item><title>நாளை மறுநாள் வெளியாகிறது ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ டிரெய்லர்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-viswanath-and-sons-trailer-releases-the-day-after-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-viswanath-and-sons-trailer-releases-the-day-after-tomorrow#comments</comments><guid isPermaLink="false">bb301ead-fb55-4668-a9b5-c84718bed0d0</guid><pubDate>Wed, 05 Aug 2026 16:18:16 +0000</pubDate><atom:updated>2026-08-05T16:18:16.000Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சூர்யா,suriya,மமிதா பைஜு,mamitha baiju,vishwanath and sons,விஸ்வநாத் அண்ட் சன்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/kwr9ke5a/New-Project-2026-08-05T214056.845.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நாளை மறுநாள் வெளியாகிறது ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ டிரெய்லர்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/kwr9ke5a/New-Project-2026-08-05T214056.845.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜு, ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளப் படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். </p><p>நாசர், சுதா, ரகு பாபு, சுனில் ரெட்டி, பவானி ஸ்ரீ, விவா ஹர்ஷா, காளி வெங்கட், ஜார்ஜ் மரியன், ஹைப்பர் ஆதி, ஸ்ரீஜா ரவி, சர்வதமன் பானர்ஜி, மேத்யூ வர்கீஸ், கல்யாணி நடராஜன், கராத்தே கார்த்திக் மற்றும் மாஸ்டர் சார்விக் ஆகியோரும் படத்தில் நடித்துள்ளனர். </p><p>இளம் வயது பெண் மமிதா அவரைவிட அதிக வயதுள்ள சூர்யாமீது காதல் கொள்வதையும், சூர்யாவின் தந்தை கதாபாத்திரத்தையும் மையமாக வைத்து கதை நகர்கிறது. சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.</p><p>இப்படம் ஆக.14ம் தேதி வெளியாக உள்ளது. இதன் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் நாளை மறுநாள் (ஆக.7) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தமிழ் வளர்ச்சித்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? மக்களுக்கு ஏமாற்றத்தை தரும் பட்ஜெட் - தங்கம் தென்னரசு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/how-much-funding-has-been-allocated-to-the-department-of-tamil-development-a-budget-that-disappoints-the-people-thangam-thennarasu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/how-much-funding-has-been-allocated-to-the-department-of-tamil-development-a-budget-that-disappoints-the-people-thangam-thennarasu#comments</comments><guid isPermaLink="false">deadc17b-3c5a-4722-97af-bb8886b653d4</guid><pubDate>Wed, 05 Aug 2026 16:05:15 +0000</pubDate><atom:updated>2026-08-05T16:05:15.541Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தங்கம் தென்னரசு,Thangam Thennarasu,Tamil Nadu budget,தமிழ்நாடு பட்ஜெட்,தவெக அரசு,tvk government</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/nsdkj1x3/New-Project-2026-08-05T212629.158.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ் வளர்ச்சித்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? மக்களுக்கு ஏமாற்றத்தை தரும் பட்ஜெட் - தங்கம் தென்னரசு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/nsdkj1x3/New-Project-2026-08-05T212629.158.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் தொடர்பாக முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;</p><p>“தவெக அரசின் தேர்தல் வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்பதை மக்கள் நன்கு அறிவர். </p><p>தமிழ்நாட்டின் ரூ.10 லட்சம் கடன் சுமையை திமுகதான் ஏற்படுத்தியதாக ஒரு மாயத்தோற்றத்தை தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும்போதே நிதியமைச்சர் ஏற்படுத்த முயன்றார். நான் அப்போதே கடன் வாங்குவதற்கான அளவுகோல்களை விளக்கியிருந்தேன்.  </p><p>தவெக அரசு 5 ஆண்டுகளை நிறைவு செய்யும் போது அரசின் கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும் என நான் அப்போது கூறியிருந்தேன். </p><p>இன்று பேட்டியளித்த நிதித்துறை செயலாளர், கடன் வாங்குவது அதிகரிக்கும் என ஒப்புதல் வாக்குமூலமாக கொடுத்துள்ளார். ரூ.1 லட்சத்து 22 ஆயிரம் கோடி இந்த ஆண்டு நிகர கடன் வாங்கியுள்ளனர். இதே அளவு சென்றால் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி தவெக அரசு கடனாக வாங்குவார்கள். </p><p>நாங்கள் ஆட்சியை விட்டு போகும்போது ரூ.1 லட்சம் நிகர கடன்தொகை வாங்கினோம். இப்போது அவர்கள் கூடுதலாக ரூ.22 ஆயிரம் கோடி வாங்கியுள்ளார்கள். ரூ.7000 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. </p><p>மூலதனச் செலவுகளையே திமுக செய்யாததைப் போல ஒரு தோற்றத்தை வெள்ளை அறிக்கை வெளியீட்டில் அமைச்சர் கூறியிருந்தார். ஆனால், திமுகவின் இடைக்கால பட்ஜெட்டில் மூலதன செலவுகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகை 59,662 கோடி. தற்போதைய பட்ஜெட்டில் மூலதனச் செலவிற்கு ரூ.56,985 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.3000 கோடி குறைக்கப்பட்டுள்ளது. </p><p>திமுக செல்லும் வேளையில் மாநில வரி வருவாய் ரூ. 2 லட்சத்தி 29 ஆயிரம். இப்போது ரூ.2 லட்சத்தி 26 ஆயிரம் கோடி. அதிலும் ரூ.3000 கோடி ரூபாய் குறைவாக காட்டுகிறார்கள். வெள்ளை அறிக்கையில் எந்தெந்த விஷயங்களை திமுகவிற்கு எதிராக கூறினார்களோ, பட்ஜெட்டில் அந்த துறைகள் அனைத்திலும் தோல்வி அடைந்துள்ளனர். </p><p>திமுக திட்டங்களுக்கு முலாம் பூசப்பட்டிருக்கிறது. தமிழ் வளர்ச்சித்துறைக்கு எவ்வளவு நிதி என்றுக்கூட அறிவிக்கவில்லை. தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி கொடுத்துள்ளார்கள். அதைவைத்து என்ன செய்யமுடியும்?</p><p>டெல்டா மாவட்டங்களில் தடுப்பணைகளை உருவாக்கப் போவதாக அறிவித்துள்ளனர். ஆனால் அதற்கு சொற்ப நிதியினை ஒதுக்கியுள்ளனர். இதுதான் நிலைமை. பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறைக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>தமிழக பட்ஜெட் குறித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சனத்திற்கு த.வெ.க. பதில்..!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-it-wing-reply-to-dmk-leader-stalin-slams-tamil-nadu-budget</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-it-wing-reply-to-dmk-leader-stalin-slams-tamil-nadu-budget#comments</comments><guid isPermaLink="false">2108b207-9e99-4c5e-87d3-0cbca419acf0</guid><pubDate>Wed, 05 Aug 2026 15:16:55 +0000</pubDate><atom:updated>2026-08-05T15:16:55.242Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,TN budget,தமிழக பட்ஜெட்,முக ஸ்டாலின்,தவெக அரசு,TVK Govt</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/zfue4ozj/MKStalinITing.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MK Stalin- TVK IT Wing]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/zfue4ozj/MKStalinITing.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அரசு வாங்கிய கடன் எல்லாம் எங்கே போனது என்று தெரியாமல் அருமையான நிர்வாகத்திறன் ஆட்சி நடத்திய ஸ்டாலின் சார் தன் ஆட்சியை வேஸ்ட் வேஸ்ட் என்று ஆட்சி போன பிறகு அறிக்கை விட்டுள்ளார்.</p><p>மகளிர் உரிமைத்தொகையை ஆட்சிக்கு வந்த 28 மாதங்கள் வரை தூங்கிவிட்டு அறிவித்ததை மறந்துவிட்டு ஸ்பீட் முதலமைச்சர் போல ஃபேக் நரேட்டிவ் செய்ய முற்படுகிறார்.</p><h2>ஓட்டுக்காக லேப்டாப் வழங்கிய ஸ்டாலின் சார்</h2><p>ஆட்சி முடியும்போது அவசர அவசரமாக ஓட்டுக்காக லேப்டாப் வழங்கிய ஸ்டாலின் சார் ஆட்சிக்கு வந்ததும் லேப்டாப் வழங்கப்படப் போவதைப்பொறுக்காமல் சொந்தமாக யோசிக்கத் தெரியாத அரசு தன் அரசு என்பதை சுரத்தே இல்லாமல் ஒரு சூப்பர் சொதப்பல் அறிக்கை விட்டிருக்கிறார்.</p><p>எங்கே தான் நடத்திய ஊழல் மாடல் உதார் ஆட்சியின் ஊழல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தங்கிலீஷ் மாடல் அறிக்கை விட்டு தடுமாறி இருக்கிறார்.</p><h2>உதயநிதி ஸ்டாலின் கூறும்போது மாற்றம் மாற்றம் என்ற பெயரைத்தான் மாற்றியுள்ளனர் என்று விமர்சித்திருந்தார். இதற்கும் த.வெ.க. ஐ.டி. விங் பதில் கொத்துள்ளது.</h2><p>மாற்றம் மாற்றம் என்று சொன்னது என்ன மாற்றம் தெரியுமா?. திமுகவின் ஊழல் லஞ்சத்தில் இருந்து நடந்த  மீள்வதற்கான மாற்றம்தான். அந்த வகையில் பெயர் மாற்றமும்தான் நடந்துள்ளது.</p><p>மாடல் மாடல் என்று வெற்று விளம்பர மாடல் ஆட்சி நடத்திய ஏமாற்றுப் பெயரை மனசாட்சி உள்ள மக்களாட்சி என்று உண்மையானப் பெயர் பெற்றுள்ளது நம் வெற்றித் தலைவர் தலைமையிலான அரசு.</p><p>ஊழல் அரசாக மட்டுமே பெயர் பெற்றிருந்த திமுக-வின் பெயரை தமிழக அரசின் நேர்மையான நடவடிக்கைகள் வாயிலாக லஞ்சம் ஊழலற்ற அரசு என்ற பெயர் வாங்கி இருப்பதால் இதுவும் பெயர் மாற்றம்தான் என்பதை உதயநிதி ஸ்டாலின் உணர்ந்தால் நல்லது.</p>]]></content:encoded></item><item><title>கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/karthik-subbarajs-dorothy</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/karthik-subbarajs-dorothy#comments</comments><guid isPermaLink="false">e79d0729-825f-47d0-b21e-6b4cdbb88f7e</guid><pubDate>Wed, 05 Aug 2026 14:49:15 +0000</pubDate><atom:updated>2026-08-05T14:49:15.643Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Keerthy suresh,Karthik Subbaraj,கார்த்திக் சுப்பராஜ்,கீர்த்தி சுரேஷ்,டோரதி,Dorothy</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/i2umsqtj/New-Project-2026-08-05T200144.872.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/i2umsqtj/New-Project-2026-08-05T200144.872.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இயக்குதர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள 10வது படத்திற்கு டோரதி என பெயரிடப்பட்டுள்ளது. </p><p>கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம், 2026 டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் சென்டர்பீஸ் பிரிவில் திரையிடவும் தேர்வாகியுள்ளது. </p><p>கார்த்திக் சுப்பராஜின் தம்மம் ஃபிலிம்ஸ், ஜியோ ஸ்டுடியோஸ், சிக்யா என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு மாஸ்ட்ரோ இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படம் செப்டம்பர் 25ம் தேதி வெளியாகும் எனவும் கார்த்திக் சுப்பராஜ் அறிவித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள கார்த்திக்.,</p><p>“எனது பத்தாவது திரைப்படம் 'டோரதி'. கீர்த்தி சுரேஷ், சனந்த் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோர் இதில் நடித்துள்ளனர். </p><p>என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமான, பல ஆண்டுகளாக நான் உருவாக்க விரும்பிய ஒரு கதை இப்போது இறுதியாகப் படமாகியுள்ளது... அதுவும் இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில்!</p><p>மேலும், புகழ்பெற்ற டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் உலக அளவில் திரையிடப்பட இப்படம் அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.</p><p>அத்துடன்... 2026-ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.</p><p>எப்போதும் போல ரசிகர்களின் அன்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன். இம்முறை எங்கள் 'டோரதி'க்காக இன்னும் சற்று அதிகமாகவே!” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>2வது இன்னிங்சில் 117 ரன்னில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்-2வது டெஸ்டில் வெற்றியின் விளிம்பில் பாகிஸ்தான்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/pakistan-need-75-runs-to-win-against-west-indies-in-second-test</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/pakistan-need-75-runs-to-win-against-west-indies-in-second-test#comments</comments><guid isPermaLink="false">1e5b3664-f9d9-4531-907e-1c7a8ccd4297</guid><pubDate>Wed, 05 Aug 2026 14:47:34 +0000</pubDate><atom:updated>2026-08-05T14:47:34.628Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>WIvPAK,சஜித் கான்,Sajid Khan,வெஸ்ட் இண்டீஸ் பாகிஸ்தான் தொடர்,Ali Usman,அலி உஸ்மான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/kpy0gj3l/ali-usman.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ali usman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/kpy0gj3l/ali-usman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்து வரும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 117 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.</p><p>பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.</p><p>இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்து வருகிறது.</p><h2>முதல் இன்னிங்சில் 344 ரன்</h2><p>டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 34 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.</p><p>தொடக்க வீரர் பிராண்டன் கிங் 46 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜஸ்டின் கிரீவ்ஸ் 73 ரன்னும், ராஸ்டன் சேஸ் 70 ரன்னும் எடுத்தனர்.</p><p>பாகிஸ்தான் சார்பில் சஜித் கான் 4 விக்கெட்டும், முகமது அலி, உபைத் ஷா, அலி உஸ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p>இதையடுத்து, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஆசான் அவிஸ் 54 ரன்னில் ஆட்டமிழந்தார்.</p><h2>அப்துல்லா ஷபிக் சதம்</h2><p>அடுத்து இறங்கிய பாபர் அசாம், அப்துல்லா ஷபிக்குடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அப்துல்லா ஷபிக் சதமடித்து அசத்தினார். பாபர் அசாம் அரை சதம் கடந்தார்.</p><p>இரண்டாம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 66 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 266 ரன்கள் எடுத்திருந்தது. அப்துல்லா ஷபிக் 107 ரன்னும், பாபர் அசாம் 86 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.</p><p>இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. 3வது விக்கெட்டுக்கு 183 ரன்கள் சேர்த்த நிலையில் பாபர் அசாம் 88 ரன்னில் அவுட்டானார்.</p><p>அவரை தொடர்ந்து அப்துல்லா ஷபிக் 160 ரன்னில் வெளியேறினார். அதன்பின், மற்ற வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.</p><p>இறுதியில், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி 43 ரன்கள் முன்னிலை பெற்றது.</p><h2>வாரிகன் 6 விக்கெட்</h2><p>வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜோமெல் வாரிகன் 6 விக்கெட்டும், ஷமார் ஜோசப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p>இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது இன்னின்ங்சில் களமிறங்கியது. ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. அதிகபட்சமாக காவெம் ஹோட்ஜ் 34 ரன் எடுத்தார்.</p><p>இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் 117 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.</p><h2>அசத்தல் பந்துவீச்சு</h2><p>பாகிஸ்தான் சார்பில் சஜித் கான், அலி உஸ்மான் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.</p><p>இதையடுத்து, 75 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு பாகிஸ்தான் களமிறங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>ரியோவின் &apos;ராம் இன் லீலா&apos; படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/second-single-cheppu-chela-from-ram-in-leela-out-now</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/second-single-cheppu-chela-from-ram-in-leela-out-now#comments</comments><guid isPermaLink="false">09ab4fa1-63ff-429d-a92e-931699740790</guid><pubDate>Wed, 05 Aug 2026 14:31:29 +0000</pubDate><atom:updated>2026-08-05T14:31:29.290Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rio Raj,ரியோ ராஜ்,RamInLeela,ராம்இன்லீலா,SeppuSela song,செப்புசேல பாடல்,VM Mahalingam,Ramachandran Kannan</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/cd2qae3f/RamInLeela-Second-Single" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ RamInLeela-Second-Single]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/cd2qae3f/RamInLeela-Second-Single?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகர்<a href="https://www.maalaimalar.com/topic/rio-raj"> ரியோ ராஜ்</a> கதாநாயகனாக நடிக்கும் '<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BE">ராம் இன் லீலா</a>' திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டாவது சிங்கிள் பாடலான ‘செப்பு சேல’ அதிகாரப்பூர்வமாக இன்று வெளியாகியுள்ளது. </p><p>துள்ளலான திருமணக் கொண்டாட்டப் பாடலாக வெளிவந்துள்ள இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/oV5hXeVoVt0"></iframe></figure><h2><strong>'செப்பு சேல' வீடியோ பாடல்</strong></h2><p>ஒரு பிரம்மாண்டமான திருமண விழாவை மையமாகக் கொண்டு இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. நடிகர் ரியோ ராஜ் மற்றும் அறிமுக நாயகி வர்த்திகா ஆகியோரின் அதிரடியான நடன அசைவுகள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.</p><p>அங்கித் மேனனின் இசையமைப்பில், கிராமிய மணம் மாறாத அதே சமயம் நவீன பாப் தாளங்களுடன் இப்பாடல் அமைந்துள்ளது. </p><p>பாடகர் வி.எம். மகாலிங்கத்தின் குரலும், உமா தேவியின் எளிய வரிகளும் பாடலுக்குப் கூடுதல் பலம் சேர்த்துள்ளன.</p><h2><strong>திரைப்படக்குழு</strong></h2><p>சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் தனது நகைச்சுவையான நடிப்பால் கவர்ந்த ரியோ ராஜ் மற்றும் அறிமுக நாயகி வர்த்திகா இவர்களுடன் முனிஷ்காந்த், சேட்டன், நயனா எல்சா, பிரியங்கா நாயர், மாளவிகா அவினாஷ், மாகாபா ஆனந்த், தீபா வெங்கட் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.</p><p>இந்தத் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் இயக்கியுள்ளார். இது ஒரு கலகலப்பான மற்றும் காதல் நிறைந்த குடும்பத் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>ட்ரைடென்ட் ஆர்ட்ஸ், ஆய்வா எண்டர்டெய்ன்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. இந்த படம் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நீலம் தயாரிப்பில் மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/makkal-kavalan-starring-manikandan-produced-by-neelam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/makkal-kavalan-starring-manikandan-produced-by-neelam#comments</comments><guid isPermaLink="false">55c71ebb-c79f-402b-8793-3497bb646890</guid><pubDate>Wed, 05 Aug 2026 14:28:06 +0000</pubDate><atom:updated>2026-08-05T14:28:06.893Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>manikandan,neelam productions,மணிகண்டன்,மக்கள் காவலன்,Makkal Kavalan,நீலம் புரொடக்ஷன்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/6psymmv4/New-Project-2026-08-05T195744.046.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நீலம் தயாரிப்பில் மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/6psymmv4/New-Project-2026-08-05T195744.046.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் பிர்லா ஸ்டூடியோஸ் தயாரிப்பில், மணிகண்டன் நடிக்கும் புதியப் படத்திற்கு மக்கள் காவலன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.</p><p>சந்தோஷ் குமார் எழுதி, இயக்கும் இப்படத்திற்கு நிவாஷ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டரில் தலைவர்கள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள் எனும் வசனம் அதில் இடம்பெற்றுள்ளது. </p><p>படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் படம் குறித்த பிற அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>பிரதமர் மோடியின் வீடியோவை நீக்கிய விவகாரம்: மன்னிப்பு கேட்டது மெட்டா</title><link>https://www.maalaimalar.com/news/national/meta-apologises-over-error-restricting-pm-modi-post</link><comments>https://www.maalaimalar.com/news/national/meta-apologises-over-error-restricting-pm-modi-post#comments</comments><guid isPermaLink="false">ca69f6c7-9584-4811-a1d0-c09b9233a1bc</guid><pubDate>Wed, 05 Aug 2026 14:25:57 +0000</pubDate><atom:updated>2026-08-05T14:25:57.314Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பேஸ்புக்,Meta,மெட்டா,Facebook,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/1lankq6r/Meta00001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மெட்டா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/1lankq6r/Meta00001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா (Meta) நிறுவனத்தின் மூத்த அதிகாரியா உலகளாவிய விவகாரங்களுக்கான தலைவர் ஜோயல் கப்லான் இந்திய அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ​​பிரதமர் நரேந்திர மோடியின் காணொளிச் செய்தி ஒன்று ஃபேஸ்புக்கிலிருந்து ஐந்து மணி நேரம் நீக்கப்பட்டிருந்ததற்காக அவர் மன்னிப்பு கோரினார்.</p><h2>மெட்டாவின் உயர் அதிகாரி ஜோயல் கப்லான்</h2><p>​​மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் மெட்டா நிறுவனத்தின் தலைமை உலகளாவிய அதிகாரி ஜோயல் கப்லான் (Joel Kaplan) இந்த மன்னிப்பைத் தெரிவித்தார். பிரதமர் மோடியின் பதிவைக் கட்டுப்படுத்திய தவறுக்காக மெட்டா நிறுவனம் சார்பில் நான் அமைச்சரிடம் மன்னிப்பு கோரினேன் என்று கபிலன் கூறியதாக மெட்டா வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.</p><p>தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் தலைவரும் பாரதிய ஜனதா கட்சி எம்.பி.யுமான நிஷிகாந்த் துபே, பிரதமர் மோடியின் காணொளி நீக்கப்பட்ட விவகாரத்தில் மன்னிப்பு கோர மெட்டா நிறுவனத் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு மூன்று நாட்கள் அவகாசம் அளித்து, அவ்வாறு செய்யாவிட்டால் சட்டப்பூர்வமான பாதுகாப்பு (statutory immunity) ரத்து செய்யப்படும் என்று எச்சரித்ததைத் தொடர்ந்து இந்தச் சந்திப்பும் மன்னிப்பு கோரும் நிகழ்வும் நடைபெற்றுள்ளன.</p><h2>பிரதமர் மோடி வீடியோ 5 மணி நேரம் நீக்கம்</h2><p>ஜூலை 28 அன்று இந்திய இளைஞர்களை உரையாற்றி, வினாத்தாள் கசிவுகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்து மோடி பதிவிட்ட ஃபேஸ்புக் பதிவு, அந்தத் தளத்தில் சிறிது நேரம் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய அரசு மெட்டாவின் உயர்மட்ட உலகளாவிய நிர்வாகிகளை வரவழைத்திருந்தது. அந்தப் பதிவு நள்ளிரவு 12.30 மணி முதல் அதிகாலை 5.30 மணி வரை கிடைக்கவில்லை என்று துபே கூறியிருந்தார்.</p><h2>தொழில் நுட்பக்கோளாறு எனக் கூறியது பேஸ்புக்</h2><p>பரவலான மாணவர் போராட்டங்களுக்கு மத்தியில் முன்னாள் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்த சில நாட்களுக்குப் பிறகு இந்த சர்ச்சை எழுந்தது.</p><p>அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த சமூக ஊடக நிறுவனம், இந்தச் சம்பவத்திற்குக் காரணம் ஒரு தொழில்நுட்பக் கோளாறு என்று கூறி மன்னிப்புக் கோரிய நிலையில், அந்த விளக்கம் "போதுமானதாக இல்லை" என்று மெய்ட்டி (MeitY) கூறியது. ஃபேஸ்புக்கிற்குச் சொந்தமான அந்த நிறுவனம், அந்த உள்ளடக்கம் "தவறுதலாக" அகற்றப்பட்டு, பின்னர் தளத்தில் மீண்டும் சேர்க்கப்பட்டதாகக் கூறியது.</p>]]></content:encoded></item><item><title>‘கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் வெட்டு விழுந்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது’ - பெ.சண்முகம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-cut-in-the-budget-allocation-for-the-education-sector-is-disappointing-p-shanmugam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-cut-in-the-budget-allocation-for-the-education-sector-is-disappointing-p-shanmugam#comments</comments><guid isPermaLink="false">6c875a8a-dad9-4e78-9210-c3b92f10b948</guid><pubDate>Wed, 05 Aug 2026 14:16:19 +0000</pubDate><atom:updated>2026-08-05T14:16:19.736Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu budget,தமிழ்நாடு பட்ஜெட்,P. Shanmugam,பெ.சண்முகம்,தவெக அரசு,tvk government</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/ut0ttdxx/New-Project-2026-08-05T194545.707.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் வெட்டு விழுந்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது’ - பெ.சண்முகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/ut0ttdxx/New-Project-2026-08-05T194545.707.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தவெக அரசின் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள மக்கள் நல அறிவிப்புகளை வரவேற்பதாகவும், அதேநேரம் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைவு, பல துறைகள் தனியார் உடன் கூட்டிணைவது ஏற்கத்தக்கத்தல்ல எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. </p><p>இதுதொடர்பாக மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;</p><p>“2026-27 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள மக்கள் நலனுக்கான அறிவிப்புகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. அதே நேரத்தில் அரசு - தனியார் கூட்டு வினை என்ற அடிப்படையில் நவீன தாராளமய பாதையை ஒட்டியே திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருப்பது ஏற்கத்தக்கதல்ல என்பதையும், மக்கள் பெரிதும் எதிர்பார்த்த தேர்தல் வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இடம் பெற்றிருக்க வேண்டுமென்பதையும் அழுத்தமாக சுட்டிக் காட்டுகிறது.</p><p>புதிய கட்டண உயர்வுகள் ஏதும் முன்மொழியப்படவில்லை. அதே நேரத்தில் வருவாய் கசிவை தடுப்போமென்று உறுதிபடக் கூறியிருப்பது பாராட்டத்தக்கது. ஆனால் அரசியல் உறுதியோடு இது நிறைவேற்றப்பட வேண்டும்.</p><h2>வரவேற்கத்தக்க அறிவிப்புகள் </h2><p>பள்ளிகளின், மாணவர் விடுதிகளின் கட்டமைப்பு மேம்பாடு, 500 புதிய அங்கன்வாடி கட்டிடங்கள், போதை ஒழிப்பு, சுகாதாரத் துறையில் கருவுற்ற மகளிர் பராமரிப்பு மையங்கள், 5 மண்டலங்களில் புற்று நோய் சிகிச்சை மையங்கள், மூத்த குடிமக்களுக்கான நடமாடும் மருத்துவகங்கள் - பாதுகாப்பு இல்லங்கள், </p><p>அறிதல் திறன் குறைபாடு உடையோருக்கு நம்பிக்கை இல்லங்கள், புதிய கால்நடை காப்பீடு, ஜென் இசட் மாணவர்களுக்கு நவீன மிதி வண்டிகள், திருநர்களுக்கு சமூகப் பொருளாதார அதிகாரமளிப்பு, பொது நூலகங்கள் டிஜிட்டல் மயம், கிராமிய விளையாட்டு ஊக்குவிப்பு, ஒலிம்பிக் சிறப்பு மையங்கள், நாட்டுப் புறக் கலைஞர்கள் நிகழ்ச்சிகளுக்கு வாய்ப்பு உள்ளிட்ட அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.</p><h2>கல்வித்துறையில் ஏமாற்றம்</h2><p>மக்கள் நல அறிவிப்புகளில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் உரிமைத்தொகை உயர்த்தப்படவில்லை. முதியோர் உதவித் தொகையும் உயர்த்தப்படவில்லை. பள்ளிக்கல்வி, உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் வெட்டு விழுந்திருப்பது என்பதும் ஏமாற்றம் அளிப்பதாகும். 10,000 அரசுப் பள்ளிகளில் "சூப்பர் கிளீன் சூப்பர் கேம்பஸ்" என்ற திட்டம் அறிவிக்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்க துவக்கம் ஆகும். </p><p>இது நடைமுறைப்படுத்தும் போது நிரந்தர துப்புரவு பணியாளர்கள், காவலர்கள் பள்ளிகளில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒரு பள்ளிக்கு ஒரு நாளைக்கு ரூ.380/- மட்டுமே கிடைக்கிறதென்பது ஒதுக்கீட்டின் போதாமையை வெளிப்படுத்துகிறது. </p><p>பகுத்தறிவு, பாலின சமத்துவம், சுற்றுச் சூழல் போன்றவற்றை உள்ளடக்கிய முற்போக்கான பாடத் திட்டத்தை உருவாக்குவது என்ற அறிவிப்பும் வரவேற்புக்குரியது. </p><p>ஆனால் கல்விக்கான நிதி ஒதுக்கீடு பட்ஜெட் ஆவணம் காண்கிற கனவுக்கு ஈடு கொடுப்பதாக இல்லை என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.</p><h2>வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு இல்லை</h2><p>இளைஞர்களிடம் வேலை வாய்ப்பு குறித்த பெரும் எதிர்பார்ப்புகள் உள்ள நேரத்தில் வேலை உருவாக்கம் குறித்த திட்டவட்டமான அறிவிப்புகள் ஏதுமில்லை. வேலையில்லா கால நிவாரணம் அறிவிக்கப்படுமென்ற எதி ர்பார்ப்பும் இடம்பெறவில்லை. 20000 இளைஞர்களுக்கு பணியிடப்பயிற்சி, உதவித் தொகை என்கிற திட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு மிகக் குறைவாக உள்ளது. இது தனியார்கள் மலிவான உழைப்பை பெற்றுக் கொள்வதற்கே பயன்படும்.</p><p>அரசு - தனியார் கூட்டு வினை என்பது மாணவர் விடுதி மேம்பாடு, நகர்ப்புற மேம்பாடு, மின் பகிர்மான பாதை, போக்குவரத்தில் மொத்த செலவின ஒப்பந்தம் ஆகியவற்றில் முன்மொழியப்பட்டுள்ளது. இது நவீன தாராளமய பாதையை அடியொற்றிய நடவடிக்கையே ஆகும். தனியார்கள் லாபம் பெறவே இந்த கூட்டு வினைகள் உதவுமே தவிர சமூகப் பொறுப்புடனான செயலாக்கத்திற்கு பயன்படாது.</p><h2>விபிஜி - ராம்ஜி திட்டம்</h2><p>விவசாயிகளின் பயிர்க்கடன் ரத்து வரம்பு அதிகரிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை இதில் இடம் பெறவில்லை. அனைத்து விவசாயிகளும் பயன்பெறத்தக்க வகையில் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட வேண்டும். </p><p>விபி ஜி ராம் ஜி திட்டத்தில் ஒன்றிய அரசு அறிவித்துள்ள, 125 நாட்களை நிறைவு செய்பவர்களுக்கு கூடுதல் 25 நாட்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு சராசரி வேலை நாட்கள் 44 முதல் 59 ஆகவே இருக்கிற சூழலில் சட்டப்படியான வேலை நாட்களை உறுதி செய்வதும், அதற்கு மேலாக 25 நாட்கள் வேலை தருவதுமே பெரும் பகுதி மக்களுக்கு பயனளிக்கும். </p><p>இதற்கான நிதிப் பகிர்வுக்கு ஒன்றிய அரசின் வஞ்சனையை எதிர்த்து குரல் கொடுத்து மாநில நிதி உரிமையை உறுதி செய்ய வேண்டும். காவிரி, கொள்ளிடம் குறுக்கே தடுப்பணை கட்டுவது பற்றி நீரியல் நிபுணர்கள் ஆலோசனை பெற்று கதவணைகளை உறுதி செய்ய வேண்டும். வைகை குண்டாறு இணைப்புத்திட்டம் தாமதம் பற்றி பட்ஜெட் குறிப்பிட்டு இருப்பது சரியானது. எனவே, கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து காலவரையறை தீர்மானித்து திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.</p><p>'திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர்' அறிவிப்பு வரவேற்கத்தக்கது. டெண்டர் முறையில் வெளிப்படைத்தன்மை பற்றி பட்ஜெட் பேசி இருப்பது நடைமுறையில் அமலாக வேண்டும். கிரானைட், மணல் மற்றும் கனிம வளங்கள் அனைத்தும் அரசின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு தனியார், ஒப்பந்த முறை தடுக்கப்பட வேண்டும். அரசின் வருவாய் உயர்வதற்கான வழியாகும் இது. </p><p>சுற்றுலா ஊக்குவிப்பிற்கான அறிவிப்புகள் குறிப்பிடத்தக்கவை. மாமல்லபுரத்தை போல சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த கன்னியாகுமரியும் சுற்றுலா மேம்பாட்டில் இணைக்கப்பட வேண்டும். நதி நீர் சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா, சூழல் சுற்றுலா ஆகியன அரசின் வருவாய் பெருக்கத்திற்கு உதவும். மாநிலம் முழுமைக்கான ஒருங்கிணைந்த சுற்றுலா கொள்கை உருவாக்குவதும் முக்கியம். தென்மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி பற்றி பட்ஜெட் பேசியிருப்பது முக்கியமானது.</p><p>தொழிலாளர் உரிமைகள் பற்றி பட்ஜெட் எந்தக் குறிப்பையும் கொண்டதாக இல்லை. தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களை ஒன்றிய அரசு உருவாக்கிய வடிவில் தமிழ்நாட்டில் அமலாக்க மாட்டோமென்றும், மாநில அரசின் அதிகார வரம்பைப் பயன்படுத்தி தொழிலாளர் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்வோமென்றும் அறிவித்திட வேண்டும்.</p><p>பழைய பென்சன் திட்டம் பரிசீலிக்கப்படுமென்ற தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும். அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைகள் களையப்பட வேண்டும்.</p><p>ஆதிதிராவிடர், பழங்குடி சிறப்பு உட்கூறு திட்டங்களின் கோட்பாடுகள் உறுதியாக கடைப்பிடிக்கப்பட்டு மடைமாற்றம் இல்லாத, இலக்கிடப்பட்டதாக, ஒதுக்கீடுகள் முழுமையாகப் பயன்படுத்ததக்கதாக அமலாக்கப்பட வேண்டும். </p><p>ஆதிதிராவிடர், பழங்குடி மாணவர் அயல்கல்வி ஊக்குவிப்பு வரவேற்கத்தக்கது. ஜூன் இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்ற காலவரம்பு நீக்கப்பட வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடி தொழில் முனைவோர் ஊக்குவிப்பு, வட்டி மானியம் ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு போதுமான அளவில் இல்லை.</p><p>மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையில் உயர்வு இல்லை என்பதும் ஏமாற்றம் தருகிறது. பணியில்லா கால மீன்பிடித் தொகை தற்போது ரூ.8000 வழங்கப்பட்டு வருகிறது. அதைவிட குறைவாக அறிவித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல.</p><p>சிறுபான்மையினர் நலனுக்கான அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை. புனித ஹஜ் மானியம், கிறித்தவ இஸ்லாமிய மகளிர் சங்கங்கள், கபர்ஸ்தான், கல்லறைத் தோட்டங்களின் உட்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு பாராட்டத்தக்கது.</p><p>புதிய வீடு கட்டும் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 5 லட்சமாக அதிகரிக்கப்பட்டு இருந்தாலும் இன்றைய கட்டுமான செலவுகளின் நிலைமையை ஒப்பிடும் போது அது போதுமானதல்ல. ரூ. 10 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும். </p><h2>அறிவிப்புகள் வரவேற்க்கத்தக்கது... ஆனால்,</h2><p>மொத்தத்தில் பட்ஜெட் மக்கள் நல அம்சங்கள் குறித்த அறிவிப்புகள் சார்ந்தும், அது வெளிப்படுத்தி இருக்கிற எண்ணங்கள் சார்ந்தும் வரவேற்கத்தக்கது. இருப்பினும் அவற்றின் அமலாக்கம், நிதி ஒதுக்கீடு ஆகியவற்றில் உள்ள போதாமை களையப்பட வேண்டும். </p><p>நவீன தாராளமய பொருளாதாரப் பாதையில் இருந்து விலகாமல் சாதாரண எளிய மக்களை உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்ய முடியாது. நிதி கூட்டாட்சி குறித்த வலுவான குரலை ஒன்றிய அரசை நோக்கி எழுப்ப வேண்டும். </p><p>தேர்தல் வாக்குறுதிகள் சார்ந்து மக்கள் மத்தியில் உள்ள எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டிஎன்பிஎல் 2026: திருச்சியை வீழ்த்தி திரில் வெற்றியை பதிவு செய்தது மதுரை</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/madurai-beat-trichy-in-tnpl-2026</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/madurai-beat-trichy-in-tnpl-2026#comments</comments><guid isPermaLink="false">1fa8ca8c-c80f-44ec-95fc-d549eb7df01b</guid><pubDate>Wed, 05 Aug 2026 13:50:13 +0000</pubDate><atom:updated>2026-08-05T13:50:13.635Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,Trichy Grand Cholas,திருச்சி கிராண்ட் சோழாஸ்,madurai panthers,மதுரை பாந்தர்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/f8dm88mt/madurai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ madurai panthers]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/f8dm88mt/madurai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>10-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியின் முதல் கட்ட ஆட்டங்கள் திண்டுக்கல்லில் நடத்தப்படுகிறது.</p><p>டிஎன்பிஎல் தொடரின் 2வது லீக் போட்டி திண்டுக்கல்லில் இன்று நடைபெற்றது. இதில் திருச்சி கிராண்ட் சோழாஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் பவுலிங் தேர்வு செய்தது.</p><h2>173 ரன் குவித்த திருச்சி அணி</h2><p>அதன்படி, முதலில் ஆடிய திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்தது.</p><p>ராஜ்குமார் 24 ரன்னில் அவுட்டானார். ஜெயராமன் சுரேஷ்குமார் 18 பந்தில் 43 ரன்கள் குவித்தார். </p><p>6-வது விக்கெட்டுக்கு சஞ்சய் யாதவ் உடன் ராஜ்குமார் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 65 ரன் சேர்த்த நிலையில் ராஜ்குமார் 35 ரன்னில் ஆட்டமிழந்தார். சஞ்சய் யாதவ் 37 ரன்னில் ஆட்டமிழக்காமல் உள்ளார்.</p><h2>ராஜலிங்கம் 3 விக்கெட்</h2><p>மதுரை பாந்தர்ஸ் அணி சார்பில் ராஜலிங்கம் 3 விக்கெட் வீழ்த்தினார்.</p><p>இதையடுத்து 174 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்கியது. முதலில் இருந்தே சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன. அதிகபட்சமாக கிரண் கார்த்திகேயன் 38 ரன்னும், சதுர்வேத் 27 ரன்னும் எடுத்தனர்.</p><p>கடைசி கட்டத்தில் இணைந்த குர்ஜப்நீத் சிங், சரவணன் ஜோடி அதிரடியாக ஆடி சிக்சர் , பவுண்டரிகளை விளாசினர்.</p><h2>திரில் வெற்றி பெற்ற மதுரை</h2><p>இறுதியில், மதுரை அணி 19.4 ஓவரில் 174 ரன்களை எடுத்து, 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியைப் பதிவு செய்தது. சரவணன் 13 பந்தில் 26 ரன்னும், குர்ஜ்ப்நீத் சிங் 9 பந்தில் 21 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.</p><p>திருச்சி அணி சார்பில் ஆண்டனி தாஸ் 3 விக்கெட் வீழ்த்தினார்.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் அனைத்து மதுபானங்களுக்கும் ரசீது வழங்கப்பட வேண்டும் - உயர் நீதிமன்றம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/receipts-must-be-issued-for-all-liquor-sold-at-tasmac-shops-high-court</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/receipts-must-be-issued-for-all-liquor-sold-at-tasmac-shops-high-court#comments</comments><guid isPermaLink="false">aabf1062-a482-4e37-b006-c23dc450ddb0</guid><pubDate>Wed, 05 Aug 2026 13:30:40 +0000</pubDate><atom:updated>2026-08-05T13:30:40.588Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை உயர் நீதிமன்றம்,Madras High Court,Tasmac,டாஸ்மாக்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/9v7ud1ff/New-Project-2026-08-05T183426.636.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் அனைத்து மதுபானங்களுக்கும் ரசீது வழங்கப்பட வேண்டும் - உயர் நீதிமன்றம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/9v7ud1ff/New-Project-2026-08-05T183426.636.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் அனைத்து மதுபாட்டில்களுக்கும் ரசீது வழங்கப்பட வேண்டும் எனவும், அனைத்து கடைகளும் ரசீது புத்தகங்களை பராமரிக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>சென்னை முழுவதும் உள்ள 30க்கும் மேற்பட்ட சில்லறை மதுபானக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக வழக்கறிஞர் தேவரஜன் என்பவர் தாக்கல் செய்திருந்த ரிட் மனுவை விசாரித்தபோது, ​​நீதிபதி ஜி.கே. இளந்திரையன் இந்த உத்தரவுகளைப் பிறப்பித்தார்.</p><p>இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தியது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு, வழக்கின் அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.</p><h2>நுகர்வோர்க்கான பலன்கள்</h2><p>நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட கூடுதலாக 10 ரூபாய் அல்லது அதற்கு மேல் வசூலிக்கும் முறைகேடுகள் இதன் மூலம் தடுக்கப்படும்.</p><p>மதுபானங்களின் சரியான விலை மற்றும் விவரங்கள் நுகர்வோருக்குத் தெளிவாகத் தெரியவரும். கூடுதல் விலைக்கு விற்கும் ஊழியர்கள் மீது பெறப்படும் புகார்களுக்கு இந்த ரசீதுகள் முக்கிய ஆதாரமாக விளங்கும்.</p>]]></content:encoded></item><item><title>சில நேரங்களில் மக்களை ரகசியமாக சந்திக்க வேண்டியுள்ளது: கேரளம் முதல்வர் சதீசன்</title><link>https://www.maalaimalar.com/news/national/kerala-cm-on-meeting-investors-in-kochi-sometimes-people-have-to-be-met-in-secret</link><comments>https://www.maalaimalar.com/news/national/kerala-cm-on-meeting-investors-in-kochi-sometimes-people-have-to-be-met-in-secret#comments</comments><guid isPermaLink="false">a524fe2b-e218-4a12-b084-9f6b0b645656</guid><pubDate>Wed, 05 Aug 2026 13:11:56 +0000</pubDate><atom:updated>2026-08-05T13:11:56.485Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>kerala,VD Satheesan,விடி சதீசன்,கேரளா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/m5jpxriq/VDSatheesan0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ VD Satheesan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/m5jpxriq/VDSatheesan0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரளம் அரசுப் பணத்தில் ஹெலிகாப்டரை வாடகை எடுத்து கொச்சியில் உடல்நலம் சரியில்லாமல் சிகிச்சை பெற்று வுரும் மாமனாரை (father-in-law) பார்ப்பதற்காக கொச்சி சென்றதாக வி.டி. சதீசன் மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், சில நேரங்களில் மக்களை ரகசியமாக சந்திக்க வேண்டியுள்ளது என்று சதீசன் குறிப்பிட்டுள்ளார்.</p><p>சதீசன் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பிறகு வி.டி. சதீசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, எர்ணாகுளம் சென்று முதலீட்டாளர்களை சந்திக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.</p><h2>எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு</h2><p>எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்த வி.டி. சதீசன் "சமீபத்தில் நான் மேற்கொண்ட பயணம் எதிர்கால முதலீட்டாளர்கள் குரூப்பை சந்திப்பதற்கானது. சில சமயம் மக்களை ரகசியமாக சந்திக்க வேண்டியுள்ளது. சில சமயம் வெளிப்படையா சந்திக்க வேண்டியுள்ளது. சில நேரங்களில் அவர்கள் முதலமைச்சரை சந்திக்க இங்கே வருகிறார்கள்" என்றார்.</p><p>முதலமைச்சர் முதலீட்டாளர்களை சந்திதார் என்றார், அது தொடர்பான விவரங்களை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்கு மேற்கண்டவாறு பதில் அளித்துள்ளார்.</p><h2>பிரியதர்ஷினி பேருந்து பயணத் திட்டம் </h2><p>தனியார் பேருந்து உரிமையாளர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் இரண்டு நாட்களுக்கு முன்பு பேசிய போக்குவரத்துத்தறை அமைச்சர் "மாநில அரசின் இலவச பிரியதர்ஷினி பேருந்து பயணத் திட்டம் மற்றும் அரசு மருத்துவமனைகளைப் பயன்படுத்தும் பெண்கள், தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் படிக்க வைப்பதையே விரும்புகின்றனர்" எனக் கூறியிருந்தார். இது மாநிலத்தில் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது.</p><p>இது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த முதலமைச்சர் வி.டி. சதீசன், "போக்குவரத்துத்துறை அமைச்சர் ஏற்கனவே தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி, அக்கூற்றுக்காக வருத்தம் தெரிவித்து விட்டார். எனவே, இது குறித்து சர்ச்சையை உருவாக்க வேண்டிய அவசியமில்லை" என்றார்.</p>]]></content:encoded></item><item><title>‘பெயர் மட்டும்தான் வெற்றி... நிதிநிலை அறிக்கை வெற்று அறிக்கைதான்’ - சீமான் விமர்சனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/only-the-name-spells-success-the-budget-statement-is-merely-an-empty-one-seemans-criticism</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/only-the-name-spells-success-the-budget-statement-is-merely-an-empty-one-seemans-criticism#comments</comments><guid isPermaLink="false">5728041e-3da7-4074-9ea7-7c514afa3ee7</guid><pubDate>Wed, 05 Aug 2026 12:56:54 +0000</pubDate><atom:updated>2026-08-05T12:56:54.886Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Seeman,சீமான்,TVK budget,தவெக பட்ஜெட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/z3z6nv7p/New-Project-2026-08-05T182616.305.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘பெயர் மட்டும்தான் வெற்றி... நிதிநிலை அறிக்கை வெற்று அறிக்கைதான்’ - சீமான் விமர்சனம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/z3z6nv7p/New-Project-2026-08-05T182616.305.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் ஆக்கப்பூர்வத் திட்டங்களோ, மாநிலத்தின் நிதிச்சுமையைக் குறைக்கும் மாற்றுப்பொருளாதாரப் பெருக்கத்திற்கான நடவடிக்கைகளோ எதுவுமற்று, வெற்றி எனும் பெயரை மட்டுமே கொண்டுள்ள வெற்று அறிக்கைதான் தவெக அரசின் நிதிநிலை அறிக்கை என இன்றைய தவெக அரசின் பட்ஜெட் தாக்கல் குறித்து நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்., </p><p>“தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2026-27ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை பெரும் ஏமாற்றமளிக்கிறது. மாநிலத்தின் வருவாய் பெருக்கத்திற்கோ, புதிய திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கோ, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கோ, மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கோ என எந்த ஆக்கப்பூர்வ நோக்கங்களும், திட்டங்களும் இல்லாத வெற்று அறிக்கையாக நிதிநிலை அறிக்கையை தயாரித்திருப்பது தவெக அரசின் நிதி நிர்வாக மேலாண்மையின்மையையே காட்டுகிறது. </p><p>தேர்தல் சமயத்தில் வாய்க்கு வந்ததை எல்லாம் வாக்குறுதிகளாக அள்ளி வீசிவிட்டு, இப்போது அவற்றைத் திட்டமும், நோக்கமுமின்றி தறிகெட்டு நிற்பது வெட்கக்கேடானது. </p><p>முந்தைய 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டதைவிட 2,240 கோடி ரூபாய் குறைவான நிதியை ஒதுக்கியிருக்கிறது தவெக அரசு. இத்தோடு, உயர் கல்வித்துறைக்கு 100 கோடி ரூபாய் குறைவாகவும் ஒதுக்கீடு செய்திருக்கிறது. தொழில்வளர்ச்சி துறைக்கு 1,419 கோடி ரூபாயும், கைத்தறி துறைக்கு 302 கோடி ரூபாயும், நீர்வளத்துறைக்கு 196 கோடி ரூபாயும் குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது. </p><p>அதுமட்டுமின்றி, மின்துறைக்கான நிதியையும்கூட 5,350 கோடி ரூபாய் அளவுக்குக்குக் குறைத்துள்ளது. இவ்வாறாக, கல்வி, மின்துறை, தொழில் வளர்ச்சி, கைத்தறி, நீர்வளத்துறை உள்ளிட்ட அதிமுக்கிய துறைகளுக்கான நிதியைக் குறைத்திருப்பது பெரும் நிர்வாக வீழ்ச்சியை நோக்கி தமிழ்நாட்டைக் கொண்டு செல்லுமென்பது தெளிவாகிறது. </p><p>தொழிலாளர் நலத்துறைக்கு கூடுதலாக 30 கோடி ரூபாயும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு கூடுதலாக 50 கோடி ரூபாயும், சமூகநீதித்துறைக்கு கூடுதலாக 13 கோடி ரூபாயும் எனக் குறைவான அளவாக நிதியைக் கூட்டி ஒதுக்கீடு செய்திருப்பது போதுமானதல்ல!</p><p>தவெக தனது தேர்தல் அறிக்கையில் வழங்கிய வாக்குறுதிகளான 2,500 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை, ஆண்டுக்கு 6 எரிகாற்று உருளைக்கான பணத்தை வங்கிக்கணக்கில் செலுத்துதல், வேலை இல்லாத இளைஞர்களுக்கு 4,000 ரூபாய் நிதியளிப்பு, </p><p>பெண்களுக்கான இலவசப் போக்குவரத்துப்பயணம் உள்ளிட்டவைக் குறித்து எந்தவொரு அறிவிப்பையும் இந்நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடாததன் மூலம் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மக்களை முற்றாக ஏமாற்றியிருக்கிறது தவெக அரசு. </p><p>மீன்பிடி தடைக்காலத்தில் 20,000 உதவித்தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்த தவெக, தற்போது 7,000 ரூபாய் மட்டுமே வழங்கப்படும் எனக் கூறியிருப்பது ஏமாற்று வேலையாகும்.</p><p>சமூகநீதியை உணர்வுப்பூர்வமாக ஏற்றிருக்கிறோம் எனக் கூறிவிட்டு, மாநில அரசின் சார்பில் சாதிவாரிக்கணக்கெடுப்பு எடுப்பது குறித்து எந்தவொரு அறிவிப்பையும் அளிக்காதது மோசடித்தனமாகும். </p><p>பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாது ஏமாற்றிய நிலையில், குறுவை சாகுபடி பொய்த்துப் போனதால் பாதிக்கப்பட்ட காவிரிப்படுகை விவசாயிகள் ஏக்கருக்கு 25,000 ரூபாய் இழப்பீடு கேட்டு நிற்கும் நிலையில், அதனைப் பற்றிப் பேசாது கடந்துபோவது உழவர் பெருங்குடி மக்களுக்குச் செய்யும் துரோகமாகும். </p><p>பதிவுத்துறையில் தவெக அரசு செய்த சீர்திருத்தங்கள் மூலம் ஆண்டுக்குக் கூடுதலாக 15,000 கோடி வருவாய் கிடைக்கும் என அரசுத்தரப்பில் கூறப்படுவது உண்மையென்றால், அதிமுக்கிய துறைகளுக்கு நிதியைக் குறைத்தது ஏன்? எனும் கேள்வி எழுகிறது. பிறந்த குழந்தைக்குத் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளில்  பிரசவத்தின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அரசு கூறுவது அவமானகரமானது. </p><p>மருத்துவமனையின் தரத்தை உயர்த்தி, மக்களை அரசு மருத்துவமனைகளின் பக்கம் திருப்பாது, தங்க மோதிரம் மூலம் நாடச் செய்வதாகக் கூறுவது அவல நிலையின் உச்சம்.</p><p>மூன்று மாதத்தைக்கூட நிறைவுசெய்யாத் தவெகவின் ஆட்சியில் ஏறக்குறைய 25,000 கோடி ரூபாய்வரை கடனை வாங்கி வைத்திருப்பதுதான் இவ்வாட்சியின் நிதிநிர்வாக மேலாண்மையின் இலட்சணமாகும். </p><p>தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2031ஆம் ஆண்டிற்குள் 1.5 ட்ரில்லியன் டாலராக உயர்த்துவோம் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ள தவெக அரசு, அந்த இலக்கை எப்படி அடைவோம்? என்பது குறித்து எவ்வித தெளிவான வழிமுறையையும் குறிப்பிடவில்லை. </p><p>நிதியமைச்சர் மரிய வில்சன் நிதிநிலை அறிக்கையைத் தங்கு தடையின்றி வாசிக்கத்தான் தடுமாறுகிறாரென்று பார்த்தால், நிதிநிலை அறிக்கையின் உள்ளடக்கம் அதனைவிடத் தடுமாற்றமாக இருக்கிறது. </p><p>மொத்தத்தில், தமிழ்நாட்டை முன்னேற்றிக் கொண்டு செல்வதற்கான ஆக்கப்பூர்வமானத் திட்டங்கள் ஏதும் இல்லாது, அரசின் வருவாயை அதிகரிப்பதற்கோ, மாற்றுப்பொருளாதாரப் பெருக்கத்திற்கோ, நிதிப்பற்றாக்குறையைக் குறைப்பதற்கோ, கடன் சுமையைக் குறைப்பதற்கோ பொருளாதாரச் சீர்திருத்தத் திட்டங்கள், நடவடிக்கைகள் ஏதும் இல்லாது, பெயரில் மட்டுமே வெற்றியைக் கொண்டுள்ள வெற்று நிதிநிலை அறிக்கைதான் தவெக அரசின் நிதிநிலை அறிக்கையாகும்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>வெற்று அறிக்கை தான் த.வெ.க பட்ஜெட்- சீமான்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-budget-is-empty-report-says-seeman</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-budget-is-empty-report-says-seeman#comments</comments><guid isPermaLink="false">60df1da1-7042-4882-9b50-20de05d35dc7</guid><pubDate>Wed, 05 Aug 2026 12:43:26 +0000</pubDate><atom:updated>2026-08-05T12:43:26.876Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Seeman,தமிழக பட்ஜெட்,TNBudget,சீமான்,Budget2026,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/49mjqn32/seeman.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Seeman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/49mjqn32/seeman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2026- 2027-ம் ஆண்டுக்கான பட்ஜெட் பெரும் ஏமாற்றம் அளிக்கிறது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். </p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- </p><p>மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் ஆக்கப்பூர்வத் திட்டங்களோ, மாநிலத்தின் நிதிச்சுமையைக் குறைக்கும் மாற்றுப்பொருளாதாரப் பெருக்கத்திற்கான நடவடிக்கைகளோ எதுவுமற்று, வெற்றி எனும் பெயரை மட்டுமே கொண்டுள்ள வெற்று அறிக்கைதான் தவெக அரசின் நிதிநிலை அறிக்கை!</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>தமிழக பட்ஜெட் 2026</h2><p>முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 2026-2027ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார்.</p><p>நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் மரிய வில்சன் இரண்டரை மணி நேரம் உரையாற்றினா்.</p><p>காலை 10.01 மணிக்கு பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கிய மரிய வில்சன் 12.31 மணிக்கு உரையை நிறைவு செய்தார்.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவின் 20 செயற்கைக்கோள்கள் விண்வெளிப் பொருட்களுடன் மோதும் அபாயம்: மத்திய அரசு</title><link>https://www.maalaimalar.com/news/national/20-of-22-active-satellites-in-low-earth-orbit-at-higher-risk-of-collision-with-space-objects-govt</link><comments>https://www.maalaimalar.com/news/national/20-of-22-active-satellites-in-low-earth-orbit-at-higher-risk-of-collision-with-space-objects-govt#comments</comments><guid isPermaLink="false">f63e293b-9c03-4562-8354-2cdd9e4ecccd</guid><pubDate>Wed, 05 Aug 2026 12:40:28 +0000</pubDate><atom:updated>2026-08-05T12:40:28.291Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ISRO,இஸ்ரோ,செயற்கைக்கோள்,Satellites</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/bu75vq0p/Earth001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ satellites in low earth orbit]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/bu75vq0p/Earth001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குறைந்த புவி சுற்றுப்பாதையில் (Low Earth Orbit) செயல்படும் 22 இந்திய செயற்கைக்கோள்களில் 20 செயற்கைக்கோள்கள் விண்வெளி பொருட்களுடன் மோதும் அதிக அபாயத்தில் உள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.</p><p>மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், இப்பகுதியில் விண்வெளிப் பொருட்களின் அடர்த்தி அதிகமாக இருப்பதால், குறைந்த புவிப்பாதையில் (2,000 கி.மீ-க்கும் குறைவான உயரத்தில்) இயங்கும் செயற்கைக்கோள்கள் மோதல் அபாயத்திற்கு அதிகம் உள்ளாகின்றன என்று குறிப்பிட்டார்.</p><h2>இது தொடர்பாக அமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:-</h2><p>2026-ஆம் ஆண்டில் இதுவரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) ஒன்பது முறை மோதலைத் தவிர்க்கும் நடவடிக்கைகளை (collision avoidance manoeuvres) மேற்கொண்டுள்ளது. 2025-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 20-ஆக இருந்தது.</p><p>மோதலைத் தவிர்க்கும் நடவடிக்கை என்பது மற்றொரு பொருள் அல்லது விண்வெளி குப்பைகளுடன் (space debris) விண்வெளியில் மோதல் ஏற்படுவதைத் தடுக்க, செயற்கைக்கோள் இயக்குபவரால் மேற்கொள்ளப்படும் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதை மாற்றமாகும்.</p><p>விண்வெளி குப்பை மேலாண்மை தொடர்பான சர்வதேச ஒத்துழைப்பு அமைப்புகளான 'இன்டர்-ஏஜென்சி டெப்ரிஸ் கோஆர்டினேஷன் கமிட்டி' (IADC) மற்றும் 'நீண்ட கால நிலைத்தன்மைக்கான ஐக்கிய நாடுகள் பணிக்குழு' (UN-LTS) ஆகியவற்றில் இந்தியா தீவிரமாகப் பங்கேற்று வருகிறது.</p><p>திருத்தப்பட்ட IADC விண்வெளி குப்பை குறைப்பு வழிகாட்டுதல்களுக்கு இஸ்ரோ கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளதுடன், தொழில்நுட்ப ஆய்வுகளின் அடிப்படையில் தனது கருத்துகளையும் வழங்கியுள்ளது.</p><p>விண்வெளி குப்பைகளைக் குறைப்பதற்கான தனது உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, குப்பைகளற்ற விண்வெளிப் பணி (Debris Free Space Mission) முன்னெடுப்பிற்கான இந்தியாவின் நோக்கம் 2024-இல் அறிவிக்கப்பட்டது.</p><p>எதிர்காலத்தில் அரசு மற்றும் தனியார் என அனைத்து இந்தியத் தரப்பினராலும் பூஜ்ஜிய குப்பை (zero debris) என்ற இலக்கை அடைவதே இஸ்ரோவின் நோக்கம்.</p><p>இவ்வாறு ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.</p><p>4 ஆயிரம் கிலோ எடைகொண்ட ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டின் ஒரு பகுதி நிலாவில் மோத உள்ளது. இதனால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>அமைச்சராக பதவி ஏற்ற நாகேந்திரா ராஜினாமா செய்யவில்லை என்றால் மாநிலம் தழுவிய போராட்டம்: பாஜக</title><link>https://www.maalaimalar.com/news/national/bjp-hits-out-at-cong-for-re-inducting-nagendra-in-karnataka-cabinet-seeks-resignation</link><comments>https://www.maalaimalar.com/news/national/bjp-hits-out-at-cong-for-re-inducting-nagendra-in-karnataka-cabinet-seeks-resignation#comments</comments><guid isPermaLink="false">38769198-dc8e-4927-9cae-4e359b6da2ed</guid><pubDate>Wed, 05 Aug 2026 12:21:20 +0000</pubDate><atom:updated>2026-08-05T12:21:20.018Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,Karnataka congress,கர்நாடக காங்கிரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/tvovgi9v/BJP00001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நாகேந்திரா- சாலவாடி நாராயணசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/tvovgi9v/BJP00001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக மாநில முதல்வராக டி.கே. சிவக்குமார் கடந்த இரணடு மாதங்களுக்கு முன்னதாக பதவி ஏற்றுக் கொண்டார். ஆனால் கடந்த 20-ந்தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. 20 பேர் புதிதாக அமைச்சரவையில் இடம் பிடித்தனர்.</p><p>அமைச்சரவையில் இடம் கிடைக்காததால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் சிலர் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் பல்லாரி ஊரக காங்கிரஸ் எம்.எல்.ஏ. நாகேந்திராவை அமைச்சரவையில் சேர்த்ததற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.</p><h2>89 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை</h2><p>89 கோடி ரூபாய் வால்மீகி பழங்குடியினர் மேம்பாட்டு கார்ப்பரேசன் மோசடி குற்றச்சாட்டில் பி. நாகேந்திரா கைது செய்யப்பட்டு ஜாமினில் உள்ளார். அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். தொடர்ந்து பதவியில் தொடர்ந்தால், போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>இது தொடர்பாக கர்நாடக மாநில மேலவை எதிர்கட்சி தலைவரான சாலவாடி நாராயணசாமி, அமைச்சரவையில் இருந்து நாகேந்திரா நீக்கப்படவில்லை என்றால், மாநிலம் தழுவிய போராட்டத்தை பாஜக நடத்தும். ஆகஸ்ட் 13-ந்தேதி தொடங்கும் சட்டசபை கூட்டத்தை சுமூகமாக நடத்த விடமாட்டோம் என்றார்.</p><h2>அமைச்சர் பதவியை ஏலம் விட்ட காங்கிரஸ்</h2><p>அமைச்சரவை விரிவாக்கத்தின்போது, அப்பதவியை காங்கிரஸ் கட்சி ஏலம் விட்டது என்ற பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.</p><p>நாகேந்திரா நாராயணசாமி ஊழல் குற்றச்சாட்டு எதிர்கொண்டு வருகிறார். அவர் ஜாமினில் உள்ளார். அவருக்கு அமைச்சரவை பதவி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், காங்கிரஸ் ஊழலுக்கு ஆதரவாக உள்ளது என்று நிரூபனமாகியுள்ளது.</p><p>நாகேந்திரா ராஜினாமா செய்யும் வரைக்கும், நாங்கள் போராட்டத்தை நிறுத்தமாட்டோம். நாகேந்திரா ராஜினாமாவை முதலமைச்சர் சிவக்குமார் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.</p><h2>ஊழல் குற்றச்சாட்டில் நாகேந்திரா கைது</h2><p>காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடையும் முன்பே, கர்நாடக மகரிஷி வால்மீகி பட்டியல் பழங்குடியினர் மேம்பாட்டுக்கழக (KMVSTDCL) முறைகேடு விவகாரம் மாநிலத்தையே உலுக்கியது.</p><p>இம்முறைகேட்டிற்கு உடந்தையாக இருக்குமாறு கடும் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டி, அக்கழகத்தின் கணக்குப்பிரிவு கண்காணிப்பாளர் பி. சந்திரசேகரன் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.</p><p>இக்கழகத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் கணக்கு அதிகாரி ஆகியோர் இணைந்து, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் உள்ள கழகத்தின் கணக்கில் ரூ. 187 கோடியைக் குவித்ததாகக் கூறப்படுகிறது. </p><p>போலி காசோலைகள் மற்றும் RTGS பரிவர்த்தனைகள் மூலம் ரூ. 89.63 கோடி மோசடியாகத் திசைதிருப்பப்பட்டது. இவ்வாறு திசைதிருப்பப்பட்ட நிதி சுமார் 600 வங்கிக் கணக்குகள் வழியாகப் பல நிலைகளில் மாற்றப்பட்டு, இறுதியில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பயன்பாட்டிற்காகப் பணம், தங்கக் கட்டிகள் மற்றும் ஆடம்பர வாகனங்களாக மாற்றப்பட்டது என்று சிபிஐ (CBI) தனது விசாரணையில் குற்றம் சாட்டியது.</p><p>இக்குற்றச்சாட்டைத் தொடர்ந்து, ஜூன் 2024-ல் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையிலிருந்து நாகேந்திரா நீக்கப்பட்டார். ஜூலை 12, 2024 அன்று அமலாக்கத் துறையால் (ED) கைது செய்யப்பட்ட நாகேந்திரா, ஜாமின் கிடைக்கும்வரை, அதாவது அக்டோபர் 14, 2024 வரை சிறையில் இருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-cm-vijay-give-prize-money-to-triple-jump-medal-winners-in-commonwealth-games</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-cm-vijay-give-prize-money-to-triple-jump-medal-winners-in-commonwealth-games#comments</comments><guid isPermaLink="false">d3996c5b-605b-433f-b4c6-7eee8d26aca1</guid><pubDate>Wed, 05 Aug 2026 12:15:49 +0000</pubDate><atom:updated>2026-08-05T12:15:49.304Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Commonwealth games,காமன்வெல்த் போட்டி,Price Money,ஊக்கத்தொகை,cm vijay,முதல்வர் விஜய்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/mq40vbm2/cm1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ cm vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/mq40vbm2/cm1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>விளையாட்டு (Sports)</category><content:encoded><![CDATA[ <p>காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் விஜய் ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார்.</p><h2>பதக்கப் பட்டியலில் 4-வது இடம்</h2><p>சமீபத்தில் நடந்த கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் டிரிபிள் ஜம்ப் போட்டியில் தமிழகத்தின் பிரவீன் சித்ரவேல் வெள்ளிப் பதக்கம் வென்றார். செல்வ பிரபு வெண்கலப் பதக்கம் வென்றார். நடப்பு ஆண்டு பதக்கப் பட்டியலில் இந்தியா 4-வது இடம் பிடித்தது.</p><p>காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்மைச்சர் விஜய் அறிவித்திருந்தார்.</p><p>இதுதொடர்பாக, முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியவதாவது:</p><p>ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்த 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன் சித்ரவேலுக்கும், வெண்கலப் பதக்கம் வென்ற மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த செல்வ பிரபுவுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2>30 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை</h2><p>இவ்வீரர்களின் சாதனையைப் பாராட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக, வெள்ளிப் பதக்கம் வென்ற பிரவீன் சித்ரவேலுக்கு 30 லட்சம் ரூபாயும், வெண்கலப் பதக்கம் செல்வ பிரபுவுக்கு 20 லட்சம் ரூபாயும் வழங்கப்படும்.</p><h2>தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்</h2><p>ஒரே போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு விளையாட்டு வீரர்கள் பதக்கங்களை வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்த இருவீரர்களும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதிகளில் தங்கி பயின்று, முறையான பயிற்சி பெற்றவர்கள் என்பது தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறைக்குப் பெருமை சேர்ப்பதாகும்.</p><p>இவர்களின் கடின உழைப்பும், விடாமுயற்சியும், அர்ப்பணிப்பும் வெற்றியைத் தேடித்தந்ததோடு, ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமை அளிக்கிறது. சர்வதேச அரங்கிலும் தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற எனது வாழ்த்துகள் என தெரிவித்திருந்தார்.</p><p>இந்நிலையில், காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு தலைமைச் செயலகத்தில் நேரில் வரவழைத்து முதலமைச்சர் விஜய் ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>டிஎன்பிஎல் 2026: மதுரை வெற்றிபெற 174 ரன்களை இலக்காக நிர்ணயித்தது திருச்சி</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/madurai-need-174-runs-against-trichy-in-tnpl-2026</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/madurai-need-174-runs-against-trichy-in-tnpl-2026#comments</comments><guid isPermaLink="false">be50ea04-58da-4def-9019-cc6996647339</guid><pubDate>Wed, 05 Aug 2026 11:53:07 +0000</pubDate><atom:updated>2026-08-05T11:53:07.414Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,Trichy Grand Cholas,திருச்சி கிராண்ட் சோழாஸ்,madurai panthers,மதுரை பாந்தர்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/7vf3pdoy/sanjay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ suresh kumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/7vf3pdoy/sanjay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 10-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. வரும் 28-ம் தேதி வரை இரு கட்டமாக இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.</p><p>மொத்தம் உள்ள 32 ஆட்டங்களில் திண்டுக்கல்லில் 20 போட்டிகளும், சென்னையில் 12 ஆட்டங்களும் நடக்கிறது. 16 மற்றும் 17- ந் தேதி ஓய்வு தினமாகும்.</p><p>முதல் கட்ட போட்டிகள் வரும் 15-ம் தேதி வரை திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி  மைதானத்தில் நடக்கின்றன.</p><h2>மதுரை பாந்தர்ஸ் பவுலிங்</h2><p>இந்நிலையில், டிஎன்பிஎல் தொடரின் 2வது லீக் போட்டி திண்டுக்கல்லில் இன்று நடைபெறுகிறது. இதில் திருச்சி கிராண்ட் சோழாஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் பவுலிங் தேர்வு செய்தது.</p><p>அதன்படி, திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக ஆடினர். </p><h2>சுரேஷ் குமார் அதிரடி</h2><p>முதல் விக்கெட்டுக்கு 71 ரன் சேர்த்த நிலையில் ராஜ்குமார் 24 ரன்னில் அவுட்டானார். ஜெயராமன் சுரேஷ் குமார் 18 பந்தில் 43 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.</p><p>ஜெகதீசன் கவுசிக், ஷியாம் சுந்தர் தலா 11 ரன்னில் வெளியேறினர். ஜாபர் ஜமால் 2 ரன்னில் அவுட்டானார். அந்த அணி 5 விக்கெட்டுக்கு 105 ரன்கள் எடுத்து திணறியது.</p><p>6-வது விக்கெட்டுக்கு சஞ்சய் யாதவ் உடன் ராஜ்குமார் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 65 ரன் சேர்த்த நிலையில் ராஜ்குமார் 35 ரன்னில் ஆட்டமிழந்தார்.</p><p>இறுதியில், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்துள்ளது. சஞ்சய் யாதவ் 37 ரன்னில் ஆட்டமிழக்காமல் உள்ளார்.</p><p>மதுரை பாந்தர்ஸ் அணி சார்பில் ராஜலிங்கம் 3 விக்கெட் வீழ்த்தினார்.</p><p>இதையடுத்து, 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் மது வகைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் திட்டம் ஆபத்தானது: கேடான முடிவை  கைவிட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/pmk-president-dr-anbumani-ramadoss-online-pre-booking-of-tasmac-liquor-is-dangerous-the-government-must-withdraw-this-harmful-scheme</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/pmk-president-dr-anbumani-ramadoss-online-pre-booking-of-tasmac-liquor-is-dangerous-the-government-must-withdraw-this-harmful-scheme#comments</comments><guid isPermaLink="false">1ed913d9-63a5-41df-a287-9aca36b5d5f1</guid><pubDate>Wed, 05 Aug 2026 11:38:42 +0000</pubDate><atom:updated>2026-08-05T11:38:42.586Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,Tasmac,டாஸ்மாக்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/21x4g3h2/Tasmacanbumani.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டாஸ்மாக்- அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/21x4g3h2/Tasmacanbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழ்நாட்டில்<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-bar-rules-relaxed-new-move-by-tamil-nadu-govt"> டாஸ்மாக்</a> மதுவகைகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் முறை நாளை முதல் நடைமுறைக்கு வரவிருப்பதாகவும், அதற்காக தனி இணையதளம் &nbsp;தொடங்கப்பட்டிருப்பதாகவும் &nbsp;வெளியாகியுள்ள செய்திகள் &nbsp;அதிர்ச்சி அளிக்கின்றன. &nbsp;மதுவை ஒழிப்பதற்கு பதிலாக மது வாங்குவதை மிகவும் எளிதானதாக மாற்றும் முயற்சி மிகவும் பிற்போக்கானது ஆகும்.</p><p>மதுவகைகளை முன்பதிவு செய்வதற்காக டாஸ்மாக் நிறுவனத்தின் சார்பில் &nbsp;<a href="https://tasmace2e.in/">https://tasmace2e.in/</a>&nbsp;என்ற இணையதளம் நாளை முதல் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.</p><p>இந்த இணையதளத்தின் வாயிலாக தமிழ்நாட்டின் எந்த மூலையிலிருந்தும் மொத்தமுள்ள 4048 மதுக்கடைகளிலும் என்னென்ன மதுவகைகள் உள்ளன? அவற்றின் விலை எவ்வளவு என்பதைக் கண்டறிந்து முன்பதிவு செய்ய முடியும். அவ்வாறு முன்பதிவு செய்து பணம் செலுத்தியவர்களுக்கு கியூ.ஆர் கோடுடன் கூடிய கூடிய ரசீது வழங்கப்படும். எந்தக் கடையில் மது வாங்க முன்பதிவு செய்தார்களோ, அந்த கடைக்கு செல்வதற்கான வழிகாட்டும் வரைபடமும் அவர்களுக்கு வழங்கப்படும். அதன்பின் அந்தக் கடைக்கு சென்று கியூ.ஆர் கோடுடன் கூடிய கூடிய ரசீதைக் காட்டி மதுபாட்டிலை பெற்றுக்கொள்ள முடியும்.</p><h2>மதுப் புழக்கத்தையும் &nbsp;அதிகரிக்கச் செய்யும்.</h2><p>மதுக்கடைகளில் வாடிக்கையாளர்கள் அதிக நேரம் வரிசையில் நிற்பதைத் தவிர்க்கும் வகையிலும், சில்லறை விற்பனைக் கடைகளில் அதிகபட்ச விற்பனை விலைக்கும் கூடுதலாக மது விற்கப்படுவதைத் தடுக்கும் வகையிலும் இந்த புதிய முறை அறிமுகம் செய்யப்படுவதாக &nbsp;டாஸ்மாக் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஓசையின்றி நாளை முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டம் மிகவும் ஆபத்தானது ஆகும். இது மது வணிகத்தையும், மதுப் புழக்கத்தையும் &nbsp;அதிகரிக்கச் செய்யும்.</p><p>தமிழ்நாட்டில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டிய துறைகள் ஏராளமான உள்ளன. கல்வி, மருத்துவம், வேளாண்மை, உணவுப் பொருள் வழங்கல், மின்சாரம் போன்ற துறைகள் சீர்திருத்தத்திற்காக ஏங்குகின்றன. ஆனால், அவற்றில் அக்கறை காட்டுவதற்கு பதிலாக மது வணிகத்தில் மட்டும் சீர்திருத்தம் என்ற பெயரில் சீரழிவுகளை செய்யத் துடிப்பது சரியல்ல.<br><br>மது மனிதனுக்கு அடிப்படைத் தேவை அல்ல. மது வாங்குவதற்கு எளிதானதாக இருக்கக் கூடாது. அப்போது தான் மது வணிகம் குறையும். &nbsp;ஆனால், மதுவை ஆன்லைனில் முன்பதிவு செய்து மதுக்கடைகளுக்கு சென்று வரிசையில் நிற்காமல் வாங்க வசதி செய்து கொடுப்பது மது வணிகம் அதிகரிப்பதற்கு தான் வழிவகுக்கும்.</p><h2>35039 நியாய விலைக் கடைகள்</h2><p>தமிழ்நாட்டில் உள்ள 35,039 &nbsp;நியாயவிலைக் கடைகள் &nbsp;செயல்பட்டு வருகின்றன. அந்தக் கடைகள் ஒவ்வொன்றிலும், ஒவ்வொரு நாளும் ஏராளமான மக்கள், குறிப்பாக பெண்கள் &nbsp;உணவுப் பொருள்களை வாங்குவதற்காக நீண்ட வரிசைகளில் நிற்கிறார்கள். அவர்களின் வாட்டத்தைப் போக்குவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத &nbsp;அரசு, மது குடிப்பவர்களின் வசதிக்காக இத்தகைய திட்டங்களை செயல்படுத்துவது சமூகச் சீரழிவுக்கு தான் வகை செய்யும்.</p><p>டாஸ்மாக் இணையதளத்தில் பதிவு செய்வதற்கு 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும் என்பதால், அதற்கும் குறைவான வயதுப் பிரிவினர் மது வாங்குவது தடுக்கப்படும் என்றும் டாஸ்மாக் தரப்பில் கூறப்படுகிறது. இதுவும் ஏற்க முடியாத வாதம். 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது விற்கக் கூடாது என்பது விதி. இது குறித்த அறிவிப்பு பலகைகளும் மதுக்கடைகளில் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அதையும் மீறி &nbsp;அவர்களுக்கு மது விற்கப்படுகிறது. இப்போது ஆன்லைனில் முன்பதிவு செய்யும் முறை நடைமுறைக்கு வந்தால் ஒருவரின் கணக்கில் முன்பதிவு செய்து பலரும் மது வாங்கிச் செல்லும் நிலை உருவாகும்.</p><p>மாணவர்கள், இளம்பெண்கள் உள்ளிட்ட பலரும் குடிப்பழக்கத்திற்கு ஆளாவதை தடுத்து வருவது &nbsp;மதுக்கடைகளில் வரிசையில் நின்று மது வாங்கினால் பார்ப்பவர்கள் தவறாக நினைப்பார்கள் என்ற அச்சம் தான். அது தான் அவர்களை மதுக்கடைகளுக்கு செல்வதைத் தடுக்கிறது. இப்போது ஆன்லைனில் மதுவை முன்பதிவு செய்து &nbsp;மதுக்கடைகளில் சில வினாடிகள் மட்டுமே நின்று மதுவை வாங்கிச் செல்லலாம் என்ற நிலை உருவானால் அவர்கள் மதுப்பழக்கத்திற்கு எளிதில் அடிமையாகி விடுவார்கள்.</p><h2>வாதம் அபத்தானது</h2><p>மதுக்கடைகளில் அதிக விலைக்கு மது விற்கப்படுவதைத் தடுக்கவே இந்தத் திட்டம் என்பதும் தவறான வாதம் ஆகும். மதுக்கடைகளில் ஊழலை ஒழிக்க முடியவில்லை என்ற அரசின் தோல்வியையே இது காட்டுகிறது. கள்ளச்சாராய வணிகத்தைத் தடுப்பதற்காகத் தான் மதுக்கடைகளை நடத்துகிறோம் என்று ஆட்சியாளர்கள் கூறுவது எந்த அளவுக்கு அபத்தமானதோ, அதே அளவுக்கு இந்த வாதமும் அபத்தமானது.<br><br>தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் அவர்கள் பொறுப்பேற்ற சில நாள்களிலேயே தமிழ்நாட்டில் 717 மதுக்கடைகளை மூடுவதற்கு ஆணையிட்டார். அது மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால், &nbsp;அதை சிதைக்கும் வகையில் மதுக்கடைகளை தனியார் மயமாக்குதல், ரெஸ்டோ பார்களை அனுமதித்தல் போன்ற செய்திகள் வெளிவருவதும், ஆன்லைனில் மதுவை முன்பதிவு செய்வதை அனுமதிப்பதும் அரசுக்கு பெருமை சேர்க்காது. எனவே, மதுப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்யும் &nbsp;மது முன்பதிவு திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.</p><p>&nbsp;இவ்வாறு அன்புமணி ராமதாஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.55,775 கோடி- அமைச்சர்: 05 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-05-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-05-august-2026#comments</comments><guid isPermaLink="false">26a830e4-6e1c-496e-877c-f6d4a71ea964</guid><pubDate>Wed, 05 Aug 2026 04:04:45 +0000</pubDate><atom:updated>2026-08-05T11:34:59.889Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,TN budget,தமிழக பட்ஜெட்,tvk,Budget 2026,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/7e49t1zq/maria.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நிதி அமைச்சர் மரிய வில்சன்]]></media:title><media:description type="html"><![CDATA[ நிதி அமைச்சர் மரிய வில்சன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/7e49t1zq/maria.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-today-another-shock-gold-rates-jump-second-time-today" rel="nofollow">GOLD PRICE TODAY: அதிர்ச்சி மேல் அதிர்ச்சி..! ஒரே நாளில் 2வது முறையாக எகிறிய தங்கம் விலை</a></p><p>* காலை கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.13,360க்கு விற்பனை.</p><p>* வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கு விற்பனை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-calls-tamil-nadu-budget-waste-waste-not-blast-blast" rel="nofollow">'Blast Blast' இல்ல..‘Waste Waste' என சொல்லும்படியாக இருக்கிறது தமிழக பட்ஜெட்- மு.க.ஸ்டாலின்</a></p><p>* திராவிட மாடல் அரசின் திட்டங்களின் Remake Version budget! </p><p>* தவெக வாக்குறுதிகளை எப்போது நிறைவேற்றுவார்கள் என தகவல் இல்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-comments-tn-budget">தவெக அரசின் பட்ஜெட்டுக்கு '0' மார்க்- உதயநிதி ஸ்டாலின்</a></p><p>* தவெக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அதிக பாதிப்புக்குள்ளாகும் விவசாயிகளுக்கு முழு பயிர்க்கடன் தள்ளுபடி இல்லை. </p><p>* மடிக்கணினி திட்டத்தை வெற்றி மடிக்கணினி திட்டம், கலைஞர் வீடு கட்டும் திட்டத்தை வெற்றி வீடு கட்டும் திட்டம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. </p><p>2026-2027ம் ஆண்டிற்கான நிதிநிலை குறித்த பட்ஜெட்டை அமைச்சர் மரிய வில்சன் இன்று சட்டசபையில் தாக்கல் தாக்கல் செய்தார். அதன் விவரம்:-</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-comments-tn-budget">த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட்: லீக்கேஜ் என கூறி மக்களை ஏமாற்றுகின்றனர்- எடப்பாடி பழனிசாமி</a></p><p>* யாரும் அறிவிக்காத புதிய திட்டத்தை அறிவிப்போம் என வீரவசனம் பேசினார்கள், ஆனால் புதிய திட்டங்களை அறிவிக்கவில்லை.</p><p>* நிதி பற்றாக்குறையை சரிசெய்ய அமைத்த குழுவினர் நிதி பற்றாக்குறையை சரி செய்வர் என்கிறார்கள், அது எப்படி சாத்தியம்?</p><p>அரசு ஊழியர்கள் மருத்துவ காப்பீடு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நோய்களுக்கு ரூ.12 லட்சம் வரை காப்பீடு. அரிய நோய்களுக்கு ரூ.15 லட்சம் வரை நிதி உதவி. இதற்காக ரூ.838 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. </p><p>கூவம் மற்றும் அடையாறு ஆறுகள் உலகத்தரத்தில் மறுசீரமைப்பு செய்யப்படும். விரிவான சாத்தியக்கூறு மற்றும் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். படகு சவாரி, நதிக்கரை நடைபாதை மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் ஏற்படுத்தப்ழுடும். சென்னையின் புதிய அடையாளமாக கூவம் மற்றும் அடையாளு ஆறுகள் உருவாக்கப்படும்- அமைச்சர்</p><p>அனைத்து தேர்வு முகமைகளின் ஆண்டு தேர்வுத் திட்டம் வெளியிடப்படும் - நிதியமைச்சர் மரிய வில்சன்</p><p>அனைவருக்கும் தரமான வீடு: ரூ. 1,253 கோடி நிதி ஒதுக்கீடு</p><p>நிதி நிலையை சீரமைக்க இரண்டு ஆண்டுகள் தேவை- நிதி அமைச்சர் மரிய வில்சன்</p><p>தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாய் ரூ.2,54,575 கோடியாக உள்ளது. 2026-27ஆண்டில் மாநில வருவாய் பற்றாக்குறை ரூ.55,775 கோடி இருக்கும் என கணிப்பு. தமிழ்நாடு அரசின் மொத்த கடன் 10.98 லட்சம் கோடி ரூபாய் என நிதி அமைச்சர் மரியவில்சன் அறிவிப்பு</p><p>5 ஆண்டுகளில் 3000 கோவில்களில் திருப்பணி மற்றும் திருமுழுக்கு நடத்தப்படும்</p><p>தமிழர் பாரம்பரியத்தை உலகறிய செய்வோம் திட்டத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு</p><p>நாட்டுப்புற கலைஞர் வாழ்வாதார பாதுகாப்பு திட்டத்திற்கு ரூ.23 கோடி ஒதுக்கீடு</p><p>ஆண்டுதோறும் 2.5 லட்சம் முதியவர்கள் புனித பயணம் மேற்கொள்ள பட்ஜெட்டில் ரூ.20 கோடி ஒதுக்கீடு</p><p>ஆன்மிகப் பயணிகளின் வசதிக்காக திருக்கடையூர், நாகூர், வேளாங்கண்ணியில் ஓய்வு இல்லங்கள் நிறுவ ரூ.60 கோடி ஒதுக்கீடு</p><p>நகர்புறத்தை ஒட்டிய கிராம மேம்டபாட்டுத்திட்டத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு</p><p>தமிழகத்தின் பல பகுதிகளில் உணவு மற்றும் கலைப் பண்பாட்டை பிரபலப்படுத்தும் நோக்கில் உணவு சுற்றுலா வழித்தடம் அறிமுகம்</p><p>தமிழ்நாட்டின் உணவு சுற்றுலா வழித்தடங்கள் ரூ.20 கோடியில் அறிமுகம் செய்யப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு</p><p>உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைக்கு ரூ.14,830கோடி ஒதுக்கீடு</p><p>உள்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறைக்கு ரூ.17,290 கோடி ஒதுக்கீடு</p><p>உணவு மற்றும் கலைத்திருவிழாக்கள் நடத்த ரூ.20 கோடி ஒதுக்கீடு</p><p>காவல்துறை புதிய குடியிருப்பு வளாகத் திட்டம் ரூ.431 கோடி நிதி ஒதுக்கீடு</p><p>காவிரி, வைகை, தாமிரபரணி ஆறுகளில் நதிச்சுற்றுலா திட்டத்திற்காக ரூ.53 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. </p><p>வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறைக்கு ரூ.11,532 கோடி ஒதுக்கீடு</p><p>வணிக வரிகள் துறைக்கு ரூ.651 கோடி ஒதுக்கீடு</p><p>பத்திர பதிவுத்துறைக்கு ரூ.475 கோடி ஒதுக்கீடு</p><p>மாமல்லபுரத்தை சர்வதேச சுற்றுலா தளமாக மேம்படுத்த மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என பட்ஜெட்டில் அறிவிப்பு</p><p>சென்னை பிராட்வேயில் 160 நீதிமன்றங்களை ஒருங்கிணைத்து நீதிமன்ற வளாகம் உருவாக்கப்படும்.</p><p>சென்னையில் உள்ள அனைத்து நீதிமன்றங்களையும் ஒருங்கிணைக்க ரூ.1375 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு</p><p>தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் நீதி நிர்வாகத்துறைக்கு ரூ.2,486 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. </p><p>இயற்கை வளங்கள் துறைக்கு ரூ.438 கோடி ஒதுக்கீடு</p><p>மனித-வனவிலங்கு மோதல் தடுப்பு திட்டத்திற்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. </p><p>கடற்கரை பாதுகாப்பு, பருவநிலை மாற்ற பாதிப்பு குறைக்கும் வகையில் 2500 ஹெக்டரில் அலையாத்தி காடுகள் உருவாக்க திட்டம். </p><p>கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, மயிலாடுமுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, குமரியில் புதிய அலையாத்தி காடுகளை உருவாக்கம்.</p><p>தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் என்ற பெயிால் புதிய அலையாத்தி காடுகளை உருவாக்க புதிய திட்டம் பட்ஜெட்டில் அறிவிப்பு</p><p>விளையாட்டுத்துறைக்கு ரூ.1,051 கோடி ஒதுக்கீடு</p><p>காவிரி டெல்டா சுற்றுச்சூழல் மறுசீரமைப்புக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு</p><p>காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க சாத்தியக்கூறு இருக்கிறதா என ஆய்வு செய்ய ரூ.10 கோடி ஒதுக்கீடு</p><p>சுற்றுச்சூழல் துறைக்கு ரூ.1762 கோடி ஒதுக்கீடு</p><p>நதிகள் மறுசீரமைப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு, திடக்கழிவு மேலாண்மை, நதி மேற்பரப்பு சுத்தம் செய்ய திட்டம். </p><p>பெண்ணையாறு- செய்யாறு, பெண்ணையாறு- பாலாறு, தாமிரபரணி வைப்பாறு திட்டங்களுக்கு திட்ட அறிக்கை தயார் செய்ய ரூ.50 கோடி ஒதுக்கீடு</p><p>நதி இணைப்பு திட்டங்களுக்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு</p><p>நீர்வளத்துறைக்கு ரூ.9,264 கோடி ஒதுக்கீடு</p><p>காவிரி-வைகை-குண்டாறு நதி இணைப்புத் திட்டத்திற்கு ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு</p><p>முல்லைபெரியாறு, ஆனைமலையாறு திட்டங்களுக்கு தமிழக அரசு முன்னுரிமை</p><p>மேகதாது உள்ளிட்ட தமிழக உரிமையை பாதிக்கும் திட்டங்களை உறுதியாக எதிர்ப்போம்- நிதி அமைச்சர் மரிய வில்சன்</p><p>எரிசக்தித்துறைக்கு ரூ.15,828 கோடி, மின்மானியத்திட்டம் ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு</p><p>தமிழகத்தில் 3 புதிய மெட்ரோ வழித்தடங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விமானநிலையம் - கிளாம்பாக்கம், கோயம்பேடு- பட்டாபிராம், பூந்தமல்லி- சுங்குவார் சத்திரம் மெட்ரோ வழித்தடங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. </p><p>நகர்ப்புற வளர்ச்சித்துறைக்கு ரூ.8,252 கோடி ஒதுக்கீடு</p><p>போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.7,657 கோடி, செயல்திறன் இடைவெளி நிதியுதவிக்கு ரூ.2,650 கோடி ஒதுக்கீடு</p><p>சென்னை பயணிகளின் வசதிக்காக புதிதாக ஆயிரம் ஏசி மின்சார பேருந்துகள் வாங்கப்படும். புதிய ஏசி மின்சார பேருந்துகள், பேருந்து பணிமனைகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.500 கோடி ஒதுக்கீடு. </p><p>நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு ரூ.21,524 கோடி நிதி ஒதுக்கீடு</p><p>சாலை விபத்துகளை தடுக்க, சாலைகளை பராமரிக்க, வாகன ஓட்டிகளை கண்காணிக்க பாதுகாப்பான சாலைஇயக்கம் அறிமுகம். AI மூலம் வேகக்கட்டுப்பாடு மற்றும் விதிமீறல் கண்காணிப்பு, ரோந்து பிரிவு மற்றும் தீவிர காய சிகிச்சை மையம் அமைக்க திட்டம். </p><p>நம்ம சாலை திட்டத்திற்காக ரூ.250 கோடி ஒதுக்கீடு. நம்ம சாலை செயலி மூலம் சாலை குறைபாடு பற்றி புகாரளித்தால் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும். </p><p>முதலமைச்சரின் ஒருங்கிணைந்த மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.2,117 கோடி ஒதுக்கீடு</p><p>பனை விவசாயிகளின் வாழ்வாதார பாதுகாப்பையும், வருவாயையும் உறுதி செய்ய பனை மேம்பாட்டுக் கழகம் நிறுவப்படும்- நிதியமைச்சர் மரிய வில்சன்</p><p>திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு</p><p>ரூ.16 கோடி நிதியுடன் தமிழ்நாடு பனை மேம்பாட்டுக் கழகம் நிறுவப்படும்</p><p>செயற்கை நுண்ணறிவு பாடத்திட்ட வடிவமைப்புக்கான குழு அமைக்கப்படும் - பட்ஜெட்டில் அறிவிப்பு</p><p>கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறைக்கு ரூ. 1,678 கோடி ஒதுக்கீடு</p><p>ஆதிதிராவிடர், பழங்குடியினர் தொழில் முனைவுத்திறனை ஊக்குவிக்க ரூ.163 கோடி ஒதுக்கீடு</p><p>நெல்லை, தூத்துக்குடியில் விண்வெளித் தொழில் முதலீட்டு மண்டலம் அமைக்கப்படும்- பட்ஜெட்டில் அறிவிப்பு</p><p>பின்தங்கிய மாவட்டங்களில் புதிய தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும்.</p><p>மாவட்டம் தோறும் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க ரூ.3200 கோடி ஒதுக்கீடு</p><p>ஆழ்கடல் மீன்பிடி தொழில் ஊக்குவிப்பிற்காக ரூ.12கோடி ஒதுக்கீடு</p><p>விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டததிற்கு தமிழக பட்ஜெட்டில் ரூ.57 கோடி ஒதுக்கீடு</p><p>பசுந்தீவன சாகுபடி ஊக்குவிப்பு திட்டத்திற்காக ரூ.13 கோடி ஒதுக்கீடு</p><p>மாநிலம் முழுவதும் உள்ள மேய்ச்சல் நிலங்களை மீட்க பட்ஜெட்டில் ரூ.13 கோடி ஒதுக்கீடு</p><p>தீவன விதை வங்கிகள் மற்றும் கிடங்குகள் அமைக்க ரூ.6.7 கோடி ஒதுக்கீடு</p><p>41 கால்நடை மருத்துவமனை கட்டடங்கள், 25 கால்நடை பல்நோக்கு மருத்துவமனைகள், 143 புதிய நடமாடும் கால்நடை மருத்துவ பிரிவுகள்  அமைக்கப்படும். </p><p>கால்நடை மருத்துவத்திற்காக ரூ.122 கோடி ஒதுக்கீடு. கால்நடைகள் காப்போம் திட்டத்திற்கு ரூ.31 கோடி ஒதுக்கீடு.</p><p>1.39 லட்சம் மீனவ குடும்பங்கள் பயன்பெறும் பணியில்லா கால உதவித்தொகைக்கு ரூ.135 கோடி ஒதுக்கீடு</p><p>மீனவர்களுக்கு பணியில் இல்லாத கால உதவித்தொகை ரூ.6ஆயிரத்தில் இருந்து ரூ.7ஆயிரமாக உயர்த்தப்படும் என அறிவிப்பு</p><p>வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டத்திற்கு ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டத்தில் 5 வெள்ளாடு அல்லது செம்மறி ஆடு 100 சதவீத மானித்துடன் வழங்கப்படும். </p><p>வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டத்தில் பெண்களுக்கு 5 ஆடுகள் வழங்கப்படும். </p><h2><strong>எந்த துறைக்கு எவ்வளவு நிதி</strong></h2><p>பள்ளிக்கல்வித்துறை ரூ.44,527 கோடி, உயர்கல்வித்துறை ரூ.8,393 கோடி, தொழிலாளர் நலத்துறை ரூ.2,022 கோடி, சிறப்பு திட்ட செயலாக்கம் ரூ.44,527 கோடி, கூட்டுறவுத்துறை ரூ.8,028 கோடி, வேளாண் துறை ரூ.14,984.</p><p>சமூக நீதித்துறை ரூ.3,937 கோடி, மாற்றுத்திறனாளி நலத்துறை ரூ.1,485 கோடி, சமூக நலத்துறை ரூ.9,818 கோடி, மருத்துவத்துறை ரூ.3937 கோடி.</p><p>டெல்டா அல்லாத மாவட்டங்களில் குறுவை தொகுப்பு திட்டம்-ரூ.134 கோடி ஒதுக்கீடு</p><p>விவசாயிகளின் மின் மானியத்திற்கு ரூ.7,432 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. </p><p>டெலி மெடிசன் நெட்வொர்க் உருவாக்க ரூ.18.5 கோடி நிதி ஒதுக்கீடு</p><p>தமிழக பட்ஜெட்டில் கூட்டுறவுத்துறைக்கு ரூ.8,028 கோடி ஒதுக்கீடு</p><p>சுகாதாரத்துறைக்கு ரூ.23,357 கோடி நிதி ஒதுக்கீடு- பட்ஜெட்டில் அறிவிப்பு</p><p>5 மண்டலங்களில் புற்றுநோய் பராமரிப்பு மருத்துவமனைகள் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு</p><p>5 ஆண்டுகளில் 1000 தொலை மருத்துவ மையங்கள் அமைக்கப்படும் - ரூ.33 கோடி ஒதுக்கீடு</p><p>கிராமிய விளையாட்டு போட்டித்திட்டம் ரூ.42 கோடி ஒதுக்கீடு</p><p>ஒவ்வொரு மாவட்டத்திலும் தாய கேர் மையங்கள் அமைக்கப்படும்- தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு</p><p>கருவுற்ற பெண்களுக்கான தாய் கேர் திட்டத்திற்கு ரூ.23 கோடி ஒதுக்கீடு</p><p>தமிழகம் முழுவதும் ஆயிரம் நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள்- ரூ.33 கோடி ஒதுக்கீடு</p><p>மண்ணின் மகள் திட்டம் ரூ.20 கோடி ஒதுக்கீடு</p><p>ஆன்றோர் மேம்பாட்டுத்திட்டம் ரூ.250 கோடி ஒதுக்கீடு</p><p>சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைக்கு ரூ.9,818 கோடி ஒதுக்கீடு</p><p>திருநர்களுக்கு திறன்பயிற்சி சுயத்தொழிலுக்கு மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படும் என அறிவிப்பு</p><p>திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வங்கிகளில் சுயதொழில் தொடங்க ரூ.50,000 கடன் வழங்கப்படும் என அறிவிப்பு</p><p>திருநர்களுக்காக 5 மாவட்டங்களில் அரண் தங்குமிடங்கள் அமைக்கப்படும். </p><p>திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வங்கிகளில் சுயதொழில் தொடங்க ரூ.50,000 கடன் வழங்கப்படும் என அறிவிப்பு</p><p>தமிழகம் முழுவதும் சிதிலமடைந்த 500 அங்கன்வாடி அமையங்களுக்கு புதிய கட்டிடம்- பட்ஜெட்டில் அறிவிப்பு</p><p>யோகா உள்ளிட்டவையுடன் உருவாக்கப்படும் முதியோருக்கான இல்லங்கள் 12 மாவட்டங்களில் அமைக்க ரூ.6.6 கோடி ஒதுக்கீடு</p><p>தமிழக பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.1485 கோடி ஒதுக்கீடு</p><p>இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கு ரூ.1051 கோடி ஒதுக்கீடு</p><p>கிராமிய விளையாட்டு போட்டித்திட்டம் ரூ.42 கோடி ஒதுக்கீடு</p><p>10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள்- ரூ.50 கோடி ஒதுக்கீடு</p><p>பெண்களின் திருமணத்திற்காக 8 கிராம் தங்கம், பட்டு சேலை வழங்கும் அண்ணன் சீர் திட்டம் அமல்படுத்தப்படும். </p> <p>காலை உணவுத்திட்டம் 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்படுகிறது. </p><p>அண்ணனின் சீர் திட்டத்திற்காக ரூ.812 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>முதல்வரின் காலை உணவு திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் திட்டம் என பெயர்வைத்து பெருமை சேர்த்தவர் முதலமைச்சர் விஜய்- மரிய வில்சன்</p><p>காலை உணவு திட்டம் விரிவாக்கத்திற்கு 15.14 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.170 கோடி ஒதுக்கீடு</p><p>பள்ளி நேரத்திற்கு பிறகு தினமும் ஒரு மணி நேரம் முறைப்படுத்தப்பட்டு விளையாட்டு பயிற்சி வழங்கப்படும். விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவி வழங்க கூடுதலாக ரூ.22 கோடி ஒதுக்கீடு</p><p>11ஆம் வகுப்பு மாணவர்கள் 5.32 லட்சம் பேருக்கு ஹெல்மெட், வாட்டர்பாட்டில் வசதியுடன் ரூ.277 கோடி மதிப்பில் சைக்கிள் - பட்ஜெட்டில் அறிவிப்பு</p><p>5 ஆண்டுகளில் 24 ஆயிரம் மாணவர்களுக்கு AI வேலைவாய்ப்பு பயிற்சி வழங்க ரூ.7.5 கோடி ஒதுக்கீடு</p><p>TN சுடர் திட்டத்தில் 200 ஒருங்கிணைந்த மாணவர் விடுதிகள், 1 லட்சம் நவீன படுக்கை வசதிகள் உருவாக்க ரூ.3200 கோடி ஒதுக்கீடு</p><p>போட்டி தேர்வுகளுக்கான கூடுதல் பயிற்சி வகுப்புகளுக்காக ரூ.3.38 கோடி ஒதுக்கீடு</p><p>ரூ.90 கோடி மதிப்பீட்டில் 5 புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும்.</p><p>உயர் கல்வித்துறைக்கு ரூ.8,393 கோடி நிதி ஒதுக்கீடு- நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவிப்பு</p><p>அடுத்தாண்டு மதுரையில் அரசு சட்டக்கல்லூரி தொடங்கப்படும்- நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவிப்பு</p><p>நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு வலியுறுத்துகிறது- நிதியமைச்சர் மரிய வில்சன்</p><p>Drugs Free தமிழ்நாடு செயலி மூலம் போதைப்பொருள் பரவல் குறித்து புகார் அளிக்கும் வகையில் சிறப்பு செயல்பாடு</p><p>பள்ளிகளில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்திற்கு ரூ.7 கோடி ஒதுக்கீடு</p><p>பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.44,524 கோடி நிதி ஒதுக்கீடு- மரிய வில்சன்</p><p>பள்ளி பாடத்திட்டம் மறு சீரமைப்பிற்காக கற்றலில் முதலிடம் தமிழ்நாடு திட்டத்திற்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு</p><p>போதையில்லா தமிழ்நாடு செயலி உருவாக்கப்பட்டு தன்னார்வ குழுக்கள் அமைக்க ரூ.7 கோடி ஒதுக்கீடு</p><p>பெருந்தலைவர் காமராசர் சிறப்பு பள்ளிகள் திட்டத்திற்காக ரூ.125 கோடி ஒதுக்கீடு- தரமான கல்வி வழங்க காமராஜர் சிறப்பு பள்கிள திட்டம் செயல்படுத்தப்படும்- அமைச்சர் அறிவிப்பு</p><p>மாடர்ன் பள்ளிகளை மேம்படுத்த ரூ.125 கோடி ஒதுக்கீடு</p><p>அரசு பள்ளிகளில் தூய்மையை பாதுகாக்கும் விதமாக சூப்பர் கிளீன் கேம்பஸ் திட்டம் என்ற புதிய அறிமுகம்- இத்திட்டத்திற்கு ரூ.139 கோடி நிதி ஒதுக்கீடு</p><p>மதுபான உற்பத்தியாளர்களுக்கான கூடுதல் சிறப்பு கட்டணம் மூலம் ஆண்டுக்கு ரூ.1000 கோடி வரவு- நிதி அமைச்சர் மரிய வில்சன்</p><p>3,734 அரசுப்பள்ளிகளில் ரூ.2132 கோடி மதிப்பீட்டில் நவீன மயமாக்கல் திட்டம் - இந்த ஆண்டிற்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு</p><p>பள்ளி பாடத்திட்டம் மறுசீரமைப்பிற்கு ரூ. 25 கோடி நிதி ஒதுக்கீடு</p><p>பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் தாய்மாமன் சீர் திட்டம் தொடங்கப்படும் - நிதியமைச்சர் மரிய வில்சன்</p><p>தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்கு ரூ.560 கோடி நிதி ஒதுக்கீடு - நிதியமைச்சர் மரிய வில்சன்</p><p>டெண்டர்களை கண்காணிப்பதன் மூலம் அரசுக்கு ரூ.15ஆயிரம் கோடி வருவாய் வர வாய்ப்பு- மரிய வில்சன்</p><p>த.வெ.க அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் மரிய வில்சன்</p><p>தமிழக அரசின் கடனுக்கான வட்டி ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது- மரிய வில்சன்</p><p>மக்களின் வரிப்பணத்தில் ஒரு பைசா தொட மாட்டோம், தொடவும் விடமாட்டோம், இதற்கு முன்பு தொட்டவர்களையும் விடமாட்டோம்- மரிய வில்சன்</p><p>முதலமைச்சரின் பெயரை கேட்டாலே ஊழல்வாதிகள் அஞ்சி நடுங்குகின்றனர்- மரிய வில்சன்</p><p>தமிழகத்தில் அரசு டெண்டர்களில் வெளிப்படை தன்மை கொண்டு வரப்பட்டுள்ளன- மரிய வில்சன்</p><p>டெண்டர் விதிமுறைகள் பலவற்றை தளர்த்தி முன் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன- மரிய வில்சன்</p><p>தவெக அரசு பொறுப்பேற்ற நேரத்தில் ரூ.10 லட்சம் கோடி கடன் இருப்பதை வெள்ளை அறிக்கை மூலம் தெளிவுப்படுத்தியுள்ளோம்- மரிய வில்சன்</p><p>நிதி நெருக்கடியில் இருந்து தமிழகத்தை மீட்க தவெக அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது- மரிய வில்சன்</p><p>புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கான நிதி ஆதாரம் மிக குறைவாகவே உள்ளது- மரிய வில்சன்</p><p>வெற்றிக்கொள்கை ஆவணத்தில் உள்ள திட்டங்களை நிறைவேற்றுவது உறுதி- மரிய வில்சன்</p><p>தவெக வெற்றி என்பது தனிப்பட்ட ஒரு கட்சியின் வெற்றியல்ல, தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களின் வெற்றி-மரிய வில்சன்</p><p>2036-ம் ஆண்டுக்குள் 1.5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட  மாநிலமாக மாற்ற திட்டம் </p><p>சொன்னது மட்டுமல்ல, சொல்லாததையும் நிகழ்த்தி காட்டியுள்ளார் முதலமைச்சர் விஜய்-மரிய வில்சன்</p><p>குறுகிய காலத்தில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளது த.வெ.க. அரசு</p><p>தமிழகத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த 717 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன- மரிய வில்சன்</p><p>விலையில்லா மின்சாரம் 200 யூனிட்களாக த.வெ.க அரசில் உயர்த்தப்பட்டுள்ளது- மரிய வில்சன்</p><p>தன்னை உயிராய் நேசிக்கும் மக்களுக்காக சூழ்ச்சிகளை வென்று ஜனநாயகனாக நிற்கும் முதலமைச்சருக்கு நன்றி- மரிய வில்சன்</p><p>3 மாதங்களில் சொன்னதை செய்து காட்டியுள்ளது த.வெ.க. அரசு- மரிய வில்சன்</p><p>பிறப்பால் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டுடன் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார் முதலமைச்சர்- நிதி அமைச்சர் மரிய வில்சன்</p><p>நன்றி கடன் செலுத்துவதற்காக மட்டும் அரசியலுக்கு வந்தவர் முதலமைச்சர் விஜய்- நிதி அமைச்சர் மரிய வில்சன்</p><figure><img alt="முதலமைச்சர் விஜய்" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/32znrfa9/vijay.jpg" /><figcaption>முதலமைச்சர் விஜய்</figcaption></figure><p>2026-2027-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் மரிய வில்சன்.</p><p>பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சட்டசபை கூடியது.</p><p>பட்ஜெட் கூட்டத்தொடர் சற்று நேரத்தில் தொடங்க உள்ள நிலையில், தி.மு.க. எம்எல்ஏக்களுடன் உதயநிதி ஆலோசனை.</p><p>த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் சற்று நேரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முண்டகக்கண்ணி ம்மன் கோவிலில் அமைச்சர்கள் என்.ஆனந்த், விஜய் பாலாஜி ஆகியோர் சாமி தரிசனம்.</p><p>முதலமைச்சர் விஜயை சந்தித்து வாழ்த்து பெற்றார் நிதி அமைச்சர் மரிய வில்சன்</p><p>அதிமுக எம்எல்ஏக்கள் அறையில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்எல்ஏக்கள் கூட்டம். முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன், நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம் ஆகியோர் பங்கேற்கவில்லை.</p><p>எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் சட்டசபைக்கு வருகை</p><p>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டசபைக்கு வருகை</p><p>த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட்- முதலமைச்சர் விஜய் சட்டசபைக்கு வருகை</p><p>சட்டசபைக்கு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் வருகை</p><p>2026-27-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY: அதிர்ச்சி மேல் அதிர்ச்சி..! ஒரே நாளில் 2வது முறையாக எகிறிய தங்கம் விலை</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-today-another-shock-gold-rates-jump-second-time-today</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-today-another-shock-gold-rates-jump-second-time-today#comments</comments><guid isPermaLink="false">262cae28-ef65-454c-a905-5ae99fdcb7e4</guid><pubDate>Wed, 05 Aug 2026 11:29:51 +0000</pubDate><atom:updated>2026-08-05T11:29:51.721Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தங்கம் விலை அதிகரிப்பு,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/fb4wta34/Untitled-1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold Rate]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/fb4wta34/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கத்துடன் காணப்படுகிறது. ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88" rel="nofollow">தங்கம் விலை</a> சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.1,05,760-க்கும், கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.13,220-க்கும் விற்பனையானது.</p><p>2-ந்தேதி ஒரு சவரன் ரூ.1,05,760-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.13,220-க்கும் விற்பனையானது. 3-ந்தேதி சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,06,000-க்கும், கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.13,250-க்கும் விற்பனையானது. நேற்று சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,05,600-க்கும், கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.13,200-க்கு விற்பனையானது.</p><h2>தங்கம் விலை உயர்வு</h2><p>தொடர்ந்து, சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ரூ.1,06,880-க்கு விற்பனை செய்யப்பட்டது. </p><p>இந்நிலையில், தங்கம் விலை இன்று மாலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி, தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.1.07.840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p>காலை கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.13,360க்கு விற்கப்பட்ட நிலையில் மாலையில் ரூ.120 உயர்ந்து ரூ.13,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><h2>வெள்ளி விலை நிலவரம்</h2><p>வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><h2>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-</h2><p>05-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,880</p><p>04-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,600</p><p>03-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,000</p><p>02-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,760</p><p>01-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,760</p><p>31-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,040</p><h2>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-</h2><p>05-08-2026- ஒரு கிராம் ரூ.240</p><p>04-08-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>03-08-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>02-08-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>01-08-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>31-07-2026- ஒரு கிராம் ரூ.235</p>]]></content:encoded></item><item><title>&apos;Spider-Man: Brand New Day&apos;படக்குழுவை வாழ்த்திய ருசோ சகோதரர்கள்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/russo-brothers-congratulate-spider-man-brand-new-day-team</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/russo-brothers-congratulate-spider-man-brand-new-day-team#comments</comments><guid isPermaLink="false">91d029af-6190-42be-8b13-c86174baed5a</guid><pubDate>Wed, 05 Aug 2026 11:27:29 +0000</pubDate><atom:updated>2026-08-05T11:27:29.794Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tom Holland,டாம் ஹாலண்ட்,Spider-Man: Brand New Day,Russo Brothers,ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே,ரூஸோ சகோதரர்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/nzqezxyr/russo.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Spider-Man: Brand New Day]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/nzqezxyr/russo.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மார்வெல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள, டெஸ்டின் டேனியல் க்ரெட்டன்  இயக்கத்தில் டாம் ஹாலண்ட் நடித்துள்ள ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படம் , அமெரிக்கா மற்றும் கனடாவில் தனது முதல் வார இறுதியில் $360 மில்லியனுக்கும் அதிகமான வசூல் செய்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.</p><p>இதன் மூலம், இதுவரை ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ திரைப்படம் வைத்திருந்த $357.1 மில்லியன் வசூல் சாதனையை இது முறியடித்துள்ளது.</p><h2><strong>ரூஸோ சகோதரர்களின் பதிவு:</strong></h2><p>இந்த சாதனையைத் தொடர்ந்து, 'Avengers: Endgame' படத்தின் இயக்குநர்களான ருசோ சகோதரர்கள் (ஆந்தனி ருசோ, ஜோ ருசோ) சமூக வலைதளத்தில் சிறப்பு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர்கள் வெளியிட்ட பதிவில், இயக்குநர் டெஸ்டின் டேனியல் கிரெட்டன், நடிகர்கள் டாம் ஹாலண்ட், சென்டயா உள்ளிட்ட முழு படக்குழுவிற்கும் பாராட்டு தெரிவித்து, "The gauntlet has been passed" (சாதனையின் கிரீடம் அடுத்த தலைமுறைக்கு சென்றுவிட்டது) என குறிப்பிட்டுள்ளனர். </p> <p>மேலும், ஸ்பைடர்-மேன் இன்ஃபினிட்டி ஸ்டோன்களை ஏந்தியிருக்கும் சிறப்பு கலைப்படத்தையும் அவர்கள் பகிர்ந்துள்ளனர். இந்த பதிவு, மார்வெல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, எதிர்கால Avengers படங்களில் ஸ்பைடர்-மேனின் பங்கு குறித்த புதிய ஊகங்களையும் கிளப்பியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>தவெக அரசின் பெயர் மாற்றத் திட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? - கனிமொழி எம்.பி. கேள்வி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/how-much-funding-has-been-allocated-for-the-tvk-governments-name-change-plan-mp-kanimozhi-asks</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/how-much-funding-has-been-allocated-for-the-tvk-governments-name-change-plan-mp-kanimozhi-asks#comments</comments><guid isPermaLink="false">0f90c6a1-9f93-41fe-bec9-52cf54e89571</guid><pubDate>Wed, 05 Aug 2026 11:21:14 +0000</pubDate><atom:updated>2026-08-05T11:21:14.267Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>கனிமொழி எம்பி,Kanimozhi MP,Tamil Nadu budget,தமிழ்நாடு பட்ஜெட்,தவெக அரசு,tvk government</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/q14wglr1/New-Project-2026-08-05T165046.482.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தவெக அரசின் பெயர் மாற்றத் திட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? - கனிமொழி எம்.பி. கேள்வி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/q14wglr1/New-Project-2026-08-05T165046.482.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பட்ஜெட், இன்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் மரிய வில்சனால்  தாக்கல் செய்யப்பட்டது.</p><p>இதில் கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கும் நிதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் அத்திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு, நிதிகள் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில் பெயர் மாற்ற திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு என திமுக எம்.பி. கனிமொழி விமர்சனம் செய்துள்ளார்.</p><p>பட்ஜெட் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்.,</p><p>தவெக அரசு தேர்தல் வாக்குறுதிகளாக அளித்த எதையும் செயல்படுத்தப் போவதில்லை என்பதையே இந்த நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டு மக்களுக்கு உணர்த்தியுள்ளது.</p><p>இந்த அரசின் முக்கிய திட்டமான பெயர் மாற்றத் திட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடாதது ஏமாற்றம் அளிக்கிறது.</p><p>மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? மக்கள் நலத்திட்டங்கள் எல்லாம் தி.மு.க செயல்படுத்தியதாகவே உள்ளது.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>இந்தியாவின் FCRA சட்டத்திருத்தம் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் – அமெரிக்கா குற்றச்சாட்டு!</title><link>https://www.maalaimalar.com/news/world/indias-new-fcra-amendment-an-attack-on-christians-us-congressman-riley-moore-alleges</link><comments>https://www.maalaimalar.com/news/world/indias-new-fcra-amendment-an-attack-on-christians-us-congressman-riley-moore-alleges#comments</comments><guid isPermaLink="false">88bf3fa4-a4db-4ac4-b997-a324fd132433</guid><pubDate>Wed, 05 Aug 2026 10:59:50 +0000</pubDate><atom:updated>2026-08-05T10:59:50.209Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>FCRABill,IndiaUS,இந்தியா அமெரிக்கா,Riley Moore,ரைலி மூர்,சட்டத்திருத்தம்,ChristianityInIndia,Foreign Donations</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/knee386e/Riley-Moore" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Riley Moore]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/knee386e/Riley-Moore?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மத அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து பெறும் நிதியைக் கட்டுப்படுத்தும் வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட உள்ளது. </p><p>இந்தச் சட்டதிருத்தத்திற்கு அமெரிக்காவின் குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரைலி மூர் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.</p><h2>அமெரிக்க எம்பியின் குற்றச்சாட்டு:</h2><p>இந்தியாவின் வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்தச் சட்டம் 2026, இந்தியாவில் உள்ள தேவாலயங்களையும் கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்களையும் அரசு தன்வசப்படுத்த வழிவகுக்கும் என்று அமெரிக்க மேற்கு வர்ஜீனியா மாகாணம் எம்பி Riley Moore குற்றம் சாட்டியுள்ளார்.</p><h2>Riley Moore கூறியதாவது,</h2><p>"நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு சில பத்தாண்டுகளில், புனித தோமையார் மலபார் கடற்கரைக்கு பயணம் செய்த காலத்திலிருந்தே கிறிஸ்தவர்கள் இந்தியாவில் இருந்து வருகின்றனர்.</p><p>ஆனால், இவ்வளவு நீண்ட கிறிஸ்தவ வரலாறு இருந்தபோதிலும், தேவாலயங்களையும் மத அறக்கட்டளைகளையும் அரசாங்கம் கையகப்படுத்த அனுமதிக்கும் வகையில், வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைத் திருத்த (FCRA) விதிகளைத் திருத்துவது குறித்து இந்திய நாடாளுமன்றம் பரிசீலித்து வருகிறது.</p><p>இது கிறிஸ்தவர்களுக்கு எதிரான ஒரு தெளிவான தாக்குதலாகும். இந்த மசோதா இதே வழியில் நிறைவேறினால், இந்தியாவுடனான நமது இருதரப்பு உறவில் இது ஒரு பெரும் கவலைக்குரிய விஷயமாக அமையும்" என்று கூறியுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Christians have been in India since St. Thomas the Apostle traveled to the Malabar Coast just decades after the resurrection of our Lord Jesus Christ.<br> <br>But despite this long Christian history, India’s Parliament is considering amending Foreign Contribution Regulation Amendment…</p>&mdash; Rep. Riley M. Moore (@RepRileyMoore) <a href="https://x.com/RepRileyMoore/status/2084675064738570336?ref_src=twsrc%5Etfw">August 4, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2>புதிய FCRA சட்டத்திருத்தம் (2026) கூறுவது என்ன?</h2><p>அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கும் இந்தியாவின் புதிய வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்தச் சட்டம் 2026-ல் பல முக்கிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.</p><p>அதன்படி, ஏதேனும் ஒரு தொண்டு நிறுவனத்தின் FCRA உரிமம் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது அதன் காலாவதி காலம் முடிந்துவிட்டாலோ, அந்த நிறுவனம் வெளிநாட்டிலிருந்து பெற்ற நிதி மற்றும் சொத்துக்களை நிர்வகிக்க ஒரு "நியமிக்கப்பட்ட அதிகார அமைப்பை" உருவாக்க இந்த சட்டம் வழிவகுக்கிறது.</p><p>ஒருவேளை அந்தச் சொத்துக்கள் தேவாலயம், கோயில் போன்ற வழிபாட்டுத் தலங்களாக இருந்தால், அதன் மத அமைப்பையோ அல்லது ஆன்மீகத் தன்மையையோ மாற்றாமல் அப்படியே பராமரிக்க வேண்டும் என்றும் இந்த மசோதா குறிப்பிடுகிறது. மேலும், இந்த சட்ட விதிகளை மீறுபவர்களுக்கான அதிகபட்ச சிறைத்தண்டனை 5 ஆண்டுகளில் இருந்து 1 ஆண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது.</p><h2>இந்தியாவில் தற்போதைய FCRA நிலவரம்:</h2><p>மத்திய உள்துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2019 மற்றும் 2022-க்கு இடையில் நாட்டில் உள்ள 13,520 நிறுவனங்கள் வெளிநாட்டுப் பங்களிப்பைப் பெற்றுள்ளன. </p><p>ஜூலை 15, 2026 நிலவரப்படி, 14,449 செயல்பாட்டில் உள்ள FCRA சான்றிதழ்களும், 22,498 ரத்து செய்யப்பட்ட சான்றிதழ்களும், 15,212 காலாவதியான சான்றிதழ்களும் உள்ளன.</p>]]></content:encoded></item><item><title>கேரளா: தன்னுயிரை துறந்து வெள்ளத்தில் சிக்கிய முதியவரை காப்பாற்றிய நீச்சல் வீரர்!</title><link>https://www.maalaimalar.com/news/national/kerala-swimmer-saves-elderly-man-trapped-in-floodwaters</link><comments>https://www.maalaimalar.com/news/national/kerala-swimmer-saves-elderly-man-trapped-in-floodwaters#comments</comments><guid isPermaLink="false">2b57e3fc-1497-44ff-8e7b-9cc557747286</guid><pubDate>Wed, 05 Aug 2026 10:26:37 +0000</pubDate><atom:updated>2026-08-05T10:26:37.325Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>kerala,தென்மேற்கு பருவமழை,Southern monsoon,கேரளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/c370em65/New-Project-2026-08-05T142455.929.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கேரளா: தன்னுயிரை நீர்த்து வெள்ளத்தில் சிக்கிய முதியவரை காப்பாற்றிய நீச்சல் வீரர்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/c370em65/New-Project-2026-08-05T142455.929.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் கனத்த மழை பெய்துவருகிறது. கனமழையால் அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பி, ஆறுகளில் வெள்ளப்பெருக்கும், ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன.</p><p>இந்நிலையில் ஆக.1ம் தேதி கண்ணூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால், காரியங்கோடு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் பென்னி என்னும் 61 வயது முதியவர் சிக்கியுள்ளார். </p><p>ஆற்றங்கரையிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் சிக்கிக்கொண்டிருந்த பென்னியை மீட்க நீச்சர் வீரர் ராஜேஷ் (36) ஷிபின், ஜிதின் உள்ளிட்டோர் அடங்கிய மீட்புக்குழு சென்றுள்ளது.</p><p>மற்ற இருவரும் ஆற்றில் இறங்கிய பென்னியிடம் கயிற்றை தூக்கி வீசியுள்ளனர். அந்த கயிற்றை அருகிலுள்ள தென்னை மரத்தில் கட்ட முயன்றபோது கயிற்றில் சிக்கி அவரது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ராஜேஷ் நீந்திசென்று முதியவரை அடைந்துள்ளார். </p><p>முதியவரை மீட்டு கரைக்கு அழைத்து வரும்போது, ராஜேஷ் தன்னிடம் இருந்த பாதுகாப்பு ஜாக்கெட்டை அந்த முதியவருக்குக் கொடுத்துள்ளார். </p><p>முதியவரைக் கரையேற்றிய பின்னர், ஆற்றைக் கடக்கப் பயன்படுத்திய கயிற்றிலிருந்து ராஜேஷின் பிடி நழுவியுள்ளது. இதில் ஆற்றின் அலைகளின் வேகம் மற்றும் கடுமையான நீரோட்டம் காரணமாக அவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.</p><p>வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ராஜேஷை தீயணைப்புத் துறை, மீட்புப் படையினர் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து மூன்று நாட்களாகத் தீவிரமாக தேடியுள்ளனர். ஆனால் துரதிஷ்டவசமாக நேற்று மாலை புலிங்கோம் பாலத்தின் அருகில் ராஜேஷின் உடல் மீட்கப்பட்டது. </p><p>அவரது இறப்பு கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜேஷின் உடலுக்கு கேரள முதலமைச்சர் வி.டி.சுதீஷன் அஞ்சலி செலுத்தினார். எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன், பாஜக மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். </p><h2>யார் இந்த ராஜேஷ்?</h2><p>கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டம் கல்லியூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் ஒரு நீச்சல் மற்றும் ராப்பெல்லிங் பயிற்றுவிப்பாளராக இருந்துவந்தார். கேளராவில் பேரிடர்கள் ஏற்படும் போதெல்லாம் தன்னார்வலராக மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். </p><p>2018 கேரள வெள்ளம், 2024 வயநாடு நிலச்சரிவு பேரிடர் காலங்களில் தீவிரமாக மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இவருக்கு ஒரு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இவரது இறப்பிற்கு கேரள மக்கள், இணையவாசிகள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>பள்ளிக் கல்வித்துறைக்கு குறைவாக நிதி ஒதுக்கீடா?: உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதில்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-tamil-nadu-school-education-funding-rajmohan-defends-budget</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-tamil-nadu-school-education-funding-rajmohan-defends-budget#comments</comments><guid isPermaLink="false">47c88557-c9cf-4a5f-a6c9-ea9cf17c0b3a</guid><pubDate>Wed, 05 Aug 2026 10:15:51 +0000</pubDate><atom:updated>2026-08-05T10:15:51.681Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhyanidhi Stalin,TN budget,தமிழக பட்ஜெட்,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/r8dbf95g/UdhyanidhiStalinRajmohan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உயதநிதி ஸ்டாலின்- ராஜ்மோகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/r8dbf95g/UdhyanidhiStalinRajmohan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2025-26 திமுக பட்ஜெட்டில் பள்ளிக்கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதி 46,767 கோடி ரூபாய். இதில், இடைக்கால பட்ஜெட்டுக்கு முன்பு வரை செலவிடப்பட்ட தொகை 42,351 கோடி ரூபாய் மட்டும் தான் என அமைச்சர் ராஜ்மோகன் &nbsp;தெரிவித்துள்ளார்.</p><p>தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு இன்று முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இதில் பள்ளிக் கல்வித்துறைக்கு 44,527 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், முந்தைய திமுக ஆட்சியில் ஒதுக்கப்பட்ட நிதியை விட இது குறைவு என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.</p><h2>இதற்கு பதில் அளிக்கும் விதமாக அமைச்சர் ராஜ்மோகன் தனது எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-</h2><p>&nbsp;வெற்றிக்கழக பட்ஜெட்டே பள்ளிக் கல்விக்கு உண்மையான நிதி உயர்வை தந்துள்ளது!</p><p>&nbsp;2025-26 திமுகபட்ஜெட்டில்பள்ளிக்கல்விக்குஒதுக்கப்பட்டநிதி 46,767 கோடிரூபாய். இதில், இடைக்காலபட்ஜெட்டுக்குமுன்புவரைசெலவிடப்பட்டதொகை 42,351 கோடிரூபாய்மட்டும்தான்.</p><p>இடைக்கால பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாத நிலையில், பல ஊதிய வரம்புகளையும், செலவினங்களையும் மிகை மதிப்பீடு செய்து திமுகவின் கடைசி பட்ஜெட்டான 2026-27 இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு 48,534 கோடி ரூபாய் என அறிவிக்கப்பட்டது.</p><p>&nbsp;அதாவது, 2025-26 முழுமையான ஆண்டு பட்ஜெட்டில் உண்மையாக செலவு செய்யப்பட்டதைவிட சுமார் 6003 கோடி ரூபாய் காரணமே இல்லாமல் உயர்த்தப்பட்டது. காரணமற்ற இந்த உயர்வுக்கு பின்னால் இருந்தது தவறான கணக்கீடுகளும், தேவையற்ற நிதி உயர்வுகளும் மட்டுமே.</p><h2>2176 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு</h2><p>வெற்றிக்கழக ஆட்சி அமைந்ததும் அதை முறையாக சரிசெய்து, காரணமற்ற நிதி உயர்வுகளை குறைத்து, 2025-26 திமுக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு செலவிடப்பட்டதைவிட சுமார் 2176 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>இதுகுறித்து நிதித்துறை செயலாளர் தெளிவான விளக்கம் அளித்துள்ளார்.&nbsp;</p><p>வெற்றிக்கழக அரசால் ஒதுக்கப்பட்டுள்ள இந்த 44,527 கோடி ரூபாயை முதலமைச்சரின் வழிகாட்டுதல் படி திறம்பட கையாண்டு, முழுமையான பலன்கள் மாணவர்களையும், ஆசிரியர்களையும், பள்ளிக்கல்வி நிர்வாகத்தையும் சென்று சேரும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.&nbsp;</p><p>இந்த உண்மையான கூடுதல் ஒதுக்கீடு, பள்ளிக்கல்வித்துறையின் மேன்மையான லட்சியங்களை முழுமையாக நிறைவேற்றும்.</p><p>இவ்வாறு ராஜ்மோகன் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி</title><link>https://www.maalaimalar.com/news/national/rbi-mpc-meeting-2026-rbi-keeps-repo-rate-steady-at-525-amid-us-iran-war</link><comments>https://www.maalaimalar.com/news/national/rbi-mpc-meeting-2026-rbi-keeps-repo-rate-steady-at-525-amid-us-iran-war#comments</comments><guid isPermaLink="false">fa7f6f00-21d1-44af-8a90-726b91ef8353</guid><pubDate>Wed, 05 Aug 2026 09:36:55 +0000</pubDate><atom:updated>2026-08-05T09:36:55.007Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>RBI,ரெப்போ வட்டி விகிதம்,repo rate,ரிசர்வ் வங்கி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/flja7ert/RBI.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ RBI]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/flja7ert/RBI.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ரெப்போ வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமில்லை. ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாக தொடரும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார். இதனால் வீடு, வாகனக் கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை.</p><p>வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் ரெப்போ வட்டி விகிதம் என அழைக்கப்படுகிறது.</p><p>நிதிச்சூழலுக்கு ஏற்ப இந்த வட்டி விகிதத்தை மாற்றுவது குறித்து ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூடி ஆலோசிக்கும்.</p><p>அந்த வகையில் 2026-27 நிதியாண்டுக்காக ஆகஸ்ட் 3 முதல் 5 வரை மூன்று நாட்கள் நிதிக்குழு கூட்டம் கூட்டப்பட்டது.</p><p>இன்று கூட்டத்தின் பின் ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை, ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாக தொடரும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.</p><p>மேற்காசிய போரால் எரிபொருள், எண்ணெய் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் இந்திய பொருளாதாரத்தின் மீதான பணவீக்க அபாயங்களை உணர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.</p><p>நடப்பு 2026-27 நிதி ஆண்டிற்கான இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 6.7 சதவீதம் ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.</p><p>இது முன்பு கணிக்கப்பட்ட 6.6 சதவீதத்தை விட சற்று அதிகமாகும்.</p><p>முதல் காலாண்டிற்கான பணவீக்கக் கணிப்பு எதிர்பார்க்கப்பட்டதை விடக் குறைவாக உள்ளது. அதாவது, பணவீக்கம் தற்போது 5 சதவீதமாக கணிக்கப்பட்டுள்ளது. இது முன்பு எதிர்பார்க்கப்பட்ட 5.1 சதவீதத்தை விட குறைவானதாகும் என தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இந்திய கிரிக்கெட் வீரர் இஷான் கிஷன் மீண்டும் RBI உதவி மேலாளராகப் பொறுப்பேற்பு!</title><link>https://www.maalaimalar.com/sports/ishan-kishan-returns-to-rbi-assistant-manager-role-in-patna</link><comments>https://www.maalaimalar.com/sports/ishan-kishan-returns-to-rbi-assistant-manager-role-in-patna#comments</comments><guid isPermaLink="false">f27d1847-9fc7-489c-ab10-fb4006493124</guid><pubDate>Wed, 05 Aug 2026 09:31:10 +0000</pubDate><atom:updated>2026-08-05T09:31:10.992Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இஷான் கிஷன்,RBI,இந்திய ரிசர்வ் வங்கி,cricketer Ishan Kishan,Patna bank,பாட்னா வங்கி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/9gilo04c/Indian-cricketer-Ishan-Kish.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ cricketer Ishan Kishan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/9gilo04c/Indian-cricketer-Ishan-Kish.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் அதிரடி ஆட்டக்காரரான இஷான் கிஷன், தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இடைவெளி கிடைத்துள்ள இந்தச் சூழலில், தனது மற்றொரு அரசு சார்ந்த பணியை மீண்டும் தொடங்கியுள்ளார்.</p><h2><strong>அலுவலகப் பணி:</strong></h2><p>விளையாட்டுக் கோட்டாவின் கீழ் இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) உதவி மேலாளராக நியமிக்கப்பட்ட இஷான் கிஷன், பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள RBI கிளையில் தனது அன்றாடப் பணிகளை முறைப்படி மீண்டும் ஆரம்பித்துள்ளார்.</p><p>பாட்னா அலுவலகத்தில் அடையாள அட்டையுடன் வந்து தனது பணிகளைச் சுறுசுறுப்பாக மேற்கொண்டு வரும் புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. தற்போது சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்கு இடைவெளி உள்ள நிலையில், ஓய்வு நேரத்தை வீணடிக்காமல் தனது வங்கிப் பொறுப்புகளை நிறைவேற்ற அவர் அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளார்.</p><p>பாட்னா அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இயல்பாகப் பேசிப் பணிபுரியும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ஒரு முன்னணி சர்வதேச கிரிக்கெட் வீரராக இருந்தும் தனது அரசுப் பொறுப்பை மதித்து பணிக்கு வந்த இஷான் கிஷனின் எளிமையை ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ஆடி கிருத்திகை விரதம் இருப்பது எப்படி?</title><link>https://www.maalaimalar.com/spirituality/aadi-krithigai-vratham</link><comments>https://www.maalaimalar.com/spirituality/aadi-krithigai-vratham#comments</comments><guid isPermaLink="false">47ae9cfa-9f7c-41a5-b430-2d429defcc9c</guid><pubDate>Wed, 05 Aug 2026 09:16:28 +0000</pubDate><atom:updated>2026-08-05T09:16:28.165Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,வழிபாடு,Murugan Temple,worship,Aadi,aadi krithigai,murugan,முருகன் கோவில்,ஆடி கிருத்திகை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/emhuchp6/muruga2.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Murugan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/emhuchp6/muruga2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>ஆடி கிருத்திகை நாளில் விரதம் இருந்து வழிபட விரும்புபவர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய முறைகள்:</h2><p>விரதம் இருப்பவர்கள் முதல் நாள் (முந்தைய நாள்) இரவு எளிமையான, சாத்வீகமான உணவை உட்கொள்ள வேண்டும். ஆடி கிருத்திகை நாளன்று அதிகாலையிலேயே (பிரம்ம முகூர்த்தத்தில்) எழுந்து நீராட வேண்டும்.</p><h2>ஆடி கிருத்திகை விரதம்</h2><p>உபவாசம் (உணவின்றி விரதம்): உடல் ஆரோக்கியம் அனுமதிப்பவர்கள் நாள் முழுவதும் தண்ணீர் மட்டும் அருந்தி முழு உபவாசமாக இருக்கலாம். </p> <h2>பால் பழ விரதம்</h2><p>பால், பழ விரதம்: முழு உபவாசம் இருக்க முடியாதவர்கள் பால், பழங்கள், இளநீர் அல்லது பழச்சாறுகளை மட்டும் அருந்தி விரதம் மேற்கொள்ளலாம். </p><p>ஒருவேளை உணவு: முதியவர்கள் மற்றும் உடல்நலக் குறைவு உள்ளவர்கள் மதிய வேளையில் மட்டும் சாத்வீக உணவை (வெங்காயம், பூண்டு சேர்க்காத உணவு) உண்டு, மற்ற நேரங்களில் திரவ உணவுகளை உட்கொள்ளலாம். </p>  <h2>ஓம் சரவணபவ</h2><p>பூஜையறையை சுத்தம் செய்து, முருகப்பெருமானின் படம் அல்லது வேலுக்கு தீபமேற்ற வேண்டும். முருகனுக்கு உகந்த சிவப்பு நிற மலர்களான அரளி, செவ்வரளி அல்லது முல்லை, செவ்வந்தி மலர்களால் அர்ச்சனை செய்யலாம். ”ஓம் சரவணபவ” அல்லது “ஓம் சரவணபவ நமக” என்ற ஆறெழுத்து மந்திரத்தை 108 முறை ஜெபிப்பது மிகுந்த நன்மைகளைத் தரும்.</p><h2>நைவேத்தியம்</h2><p>சர்க்கரை பொங்கல், தினை மாவு, பஞ்சாமிர்தம் அல்லது காய்ச்சிய பால் நைவேத்தியமாகப் படைக்கலாம். மாலையில் அருகில் உள்ள முருகப்பெருமான் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வது சிறப்பு. தரிசனம் முடித்த பிறகு அல்லது வீட்டில் மாலை பூஜை செய்து தீபாராதனை காட்டிய பின், முருகனுக்கு படைத்த பிரசாதத்தை உண்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.</p><p>இந்த நாளில் விரதம் இருந்து கந்த சஷ்டி கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை பாடி இறைவனை வழிபடுவதால் தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.</p> ]]></content:encoded></item><item><title>&apos;Blast Blast&apos; இல்ல..‘Waste Waste&apos; என சொல்லும்படியாக இருக்கிறது தமிழக பட்ஜெட்- மு.க.ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-calls-tamil-nadu-budget-waste-waste-not-blast-blast</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-calls-tamil-nadu-budget-waste-waste-not-blast-blast#comments</comments><guid isPermaLink="false">81d38a15-c21c-4f4a-9e2a-8b116406cf69</guid><pubDate>Wed, 05 Aug 2026 09:11:46 +0000</pubDate><atom:updated>2026-08-05T09:11:46.149Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,TN budget,தமிழக பட்ஜெட்,Budget 2026,முக ஸ்டாலின்,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/b2ym0gyv/mks.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/b2ym0gyv/mks.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 2026-2027ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/two-years-needed-for-fiscal-reforms-montek-singh-ahluwalia-panel" rel="nofollow">நிதிநிலை அறிக்கை</a>யை தாக்கல் செய்த நிதியமைச்சர் மரிய வில்சன் இரண்டரை மணி நேரம் உரையாற்றினா்.</p><p>காலை 10.01 மணிக்கு பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கிய மரிய வில்சன் 12.31 மணிக்கு உரையை நிறைவு செய்தார்.</p><h2>Waste waste..</h2><p>இந்நிலையில், தமிழக பட்ஜெட் குறித்து முன்னா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>இன்று சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்ட தமிழக பட்ஜெட் பற்றி Reels CM-க்குப் புரியும் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், </p><p>'Blast Blast'-ஆக இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு, ‘Waste Waste' எனச் சொல்லும்படிதான் இருக்கு!</p><p>அதுமட்டுமல்ல, இது <a href="https://www.maalaimalar.com/search?q=dravida%20model" rel="nofollow">திராவிட மாடல்</a> அரசின் திட்டங்களின் Remake Version budget! </p><p>மக்கள் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், விவசாயிகள் பிரச்சினை, மின் கட்டணக் குளறுபடி பிரச்சினை, விலைவாசி உயர்வுப் பிரச்சினை என எதைப் பற்றியும் கவலையின்றி, மாநிலத்திற்குத் தேவையான புதிய தொலைநோக்குத் திட்டங்களையும் அறிவிக்காத பட்ஜெட்!</p><p>அதுமட்டுமல்ல, </p><p>- ரூ.2,500 <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88" rel="nofollow">மகளிர் உரிமைத் தொகை</a>,</p><p>- வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ. 4 ஆயிரம்,</p><p>- ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்,</p><p>- முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி, என முக்கிய வாக்குறுதிகள் எதைப் பற்றியும் மூச்சே விடாத பட்ஜெட்!</p><p>மொத்தத்தில், </p><p>சொந்தமாகவும் யோசிக்காத - </p><p>சொன்னதையும் செய்யாத - </p><p>சுரத்தில்லாத - புஸ்வாண பட்ஜெட்டாகத்தான் ‘ரீல் அரசின்’ முதல் பட்ஜெட் அமைந்திருக்கிறது.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>தமிழக பட்ஜெடுக்கு '0' மார்க்</h2><p>தமிழக பட்ஜெட் குறித்து சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில்,"த.வெ.க. அரசுக்கும் இன்று வெளியான பட்ஜெட்டிற்கும் மிகப்பெரிய பூஜ்ஜியம் மார்க். தவெக வாக்குறுதிகளை எப்போது நிறைவேற்றுவார்கள் என தகவல் இல்லை.</p><p>மாற்றம் மாற்றம் என கூறும் தவெக அரசு திராவிட மாடல் கொண்டு வந்த திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்துள்ளது. <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95" rel="nofollow">திமுக</a> அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர்.</p><p>திமுக கொண்டு வந்த திட்டத்திற்கு பெயரை மாற்றுவதற்கு எதற்காக அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்கள்?</p><p>தேர்தல் வாக்குறுதியில் சொன்ன எதுவுமே பட்ஜெட்டில் இடம்பெறவில்லை" என்றார்.</p>]]></content:encoded></item><item><title>ரியோவின் ‘ராம் இன் லீலா’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘செப்பு சேல’ இன்று மாலை வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/rio-rams-leela-second-single-cheppu-chela-release-today-evening</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/rio-rams-leela-second-single-cheppu-chela-release-today-evening#comments</comments><guid isPermaLink="false">b36de353-7d4c-4939-9d39-61d9ecde06b9</guid><pubDate>Wed, 05 Aug 2026 09:01:02 +0000</pubDate><atom:updated>2026-08-05T09:01:02.808Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ரியோ ராஜ்,rio raj,RamInLeela,ராம்இன்லீலா,SeppuSela song,செப்புசேல பாடல்,VM Mahalingam,Ramachandran Kannan</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/liwgf8ff/RamInLeela-Second-Single" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ RamInLeela Second Single]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/liwgf8ff/RamInLeela-Second-Single?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D">ரியோ ராஜ்</a> கதாநாயகனாக நடித்து விரைவில் வெளியாகவிருக்கும் '<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BE">ராம் இன் லீலா</a>' திரைப்படத்திலிருந்து முதல் சிங்கள் வெளியாகி ரசிகர்களிடையே பிரம்மாண்டமான வரவேற்பை பெற்றது. அந்த வரிசையில் பெரிதும் எதிர்பார்த்த இரண்டாவது சிங்கிள் 'செப்பு சேல' பாடல் இன்று மாலை 6:00 மணிக்கு வெளியாக இருக்கிறது.</p><h2><strong>‘செப்பு சேல’ பாடல் எப்படிப்பட்ட பாடல்?</strong></h2><p>திரைப்படக் குழுவினரின் அதிகாரபூர்வ அறிவிப்பின் படி, இந்த 'செப்பு சேல' பாடல் பிரம்மாண்டமான திருமண பாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>பிரபல நாட்டுப்புற மற்றும் சினிமா பாடகரான வி.எம். மகாலிங்கத்தின் குரலில், அங்கித் மேனனின் இசையில் துள்ளலான தாளங்களுடன் இந்த பாடல் அமைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. </p><p>இந்த பாடலுக்குப் பிரபல பெண் பாடலாசிரியர் உமா தேவி வரிகளை எழுதியுள்ளார்.</p><h2>நட்சத்திரப் பட்டாளம் &amp; தொழில்நுட்பக் கூட்டணி:</h2><p>சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் தனது நகைச்சுவையான நடிப்பால் கவர்ந்த ரியோ ராஜ் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக அறிமுக நாயகி வர்த்திகா லீலா என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். </p><p>இவர்களுடன் முனிஷ்காந்த், சேட்டன், நயனா எல்சா, பிரியங்கா நாயர், மாளவிகா அவினாஷ், மாகாபா ஆனந்த், தீபா வெங்கட் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.</p><p>இந்தத் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் இயக்கியுள்ளார். இது ஒரு கலகலப்பான மற்றும் காதல் நிறைந்த குடும்பத் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>ட்ரைடென்ட் ஆர்ட்ஸ், ஆய்வா எண்டர்டெய்ன்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">The celebration begins today! ❤️<br>​<a href="https://x.com/hashtag/Seppusela?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Seppusela</a> — the ultimate marriage track from <a href="https://x.com/hashtag/RamInLeela?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#RamInLeela</a> drops TODAY at 6 PM! <br><br>Sung by: VM Mahalingam<br><br>Penned by: Uma Devi<br><br>An Ankit Menon musical<a href="https://x.com/rio_raj?ref_src=twsrc%5Etfw">@rio_raj</a> <a href="https://x.com/tridentartsoffl?ref_src=twsrc%5Etfw">@tridentartsoffl</a> <a href="https://x.com/eywaent?ref_src=twsrc%5Etfw">@eywaent</a> <a href="https://x.com/sude_v?ref_src=twsrc%5Etfw">@sude_v</a> <a href="https://x.com/sanjayvijayragh?ref_src=twsrc%5Etfw">@sanjayvijayragh</a> <a href="https://x.com/Ramachandr5017?ref_src=twsrc%5Etfw">@ramachandr5017</a> <a href="https://x.com/thinkmusicindia?ref_src=twsrc%5Etfw">@thinkmusicindia</a>… <a href="https://t.co/0fZUQD0qv3">pic.twitter.com/0fZUQD0qv3</a></p>&mdash; Think Music (@thinkmusicindia) <a href="https://x.com/thinkmusicindia/status/2084877372613161161?ref_src=twsrc%5Etfw">August 5, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2><strong>ரிலீஸ் தேதி:</strong></h2><p>முன்னதாக வெளியான இப்படத்தின் முதல் பாடலான 'யார் யாரிவள்' காதல் மெலடி பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகவுள்ள இந்தத் பாடல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. </p><p>இத்திரைப்படம் இம்மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விஷாலின் ‘மகுடம்’ டிரெய்லர் அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/announcement-of-the-trailer-for-vishals-magudam</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/announcement-of-the-trailer-for-vishals-magudam#comments</comments><guid isPermaLink="false">2e59e12a-7004-483d-b6d5-fdc93950eaf0</guid><pubDate>Wed, 05 Aug 2026 08:49:30 +0000</pubDate><atom:updated>2026-08-05T08:49:30.296Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>டிரெய்லர்,Trailer,Vishal,Magudam,மகுடம்,விஷால்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/7pshz634/New-Project-2026-08-05T141823.514.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விஷாலின் ‘மகுடம்’ டிரெய்லர் அறிவிப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/7pshz634/New-Project-2026-08-05T141823.514.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விஷால் இயக்கி, நடித்துள்ள புதியப் படம் மகுடம். இப்படம் மூலம் விஷால் தமிழ் திரையுலகில் இயக்குநராகவும் கால்பதிக்கிறார். </p><p>ஆக்ஷன் என்டர்டெயிணராக உருவாகியுள்ள இப்படத்தில் அஞ்சலி, துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் விஷால் மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். </p><p>தனது 99வது படமாக இப்படத்தை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.</p><p>அதன்படி படத்தின் டிரெய்லர் நாளை மறுநாள் வெளியாக உள்ளது. படம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஆடிக்கிருத்திகை: திருத்தணி கோவிலுக்கு முதியோர், கர்ப்பிணிகள் வரவேண்டாம் - கலெக்டர் வேண்டுகோள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/aadi-krithigai-elderly-people-and-pregnant-women-not-to-visit-tiruttani-temple</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/aadi-krithigai-elderly-people-and-pregnant-women-not-to-visit-tiruttani-temple#comments</comments><guid isPermaLink="false">44710f5a-4286-4507-b26f-bd1e89e0dc37</guid><pubDate>Wed, 05 Aug 2026 08:49:02 +0000</pubDate><atom:updated>2026-08-05T08:49:02.170Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruttani temple,aadi krithigai,திருத்தணி முருகன் கோவில்,திருவள்ளூர் கலெக்டர்,Tiruvallur Collector,ஆடி கிருத்திகை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/rqfvnd06/tiruttanitemple.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tiruttani temple
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/rqfvnd06/tiruttanitemple.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு நாளை திருத்தணி முருகன் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு கருதி கர்ப்பிணி பெண்கள், முதியோர், மாற்றத்திறனாளிகள் சாமி தரிசனம் செய்ய வர வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.</strong></em></p> <h2>ஆடிக்கிருத்திகை விழா</h2><p>திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடிக்கிருத்திகை விழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு <a href="https://www.maalaimalar.com/spirituality/aadi-krithigai-murugan-worship-3">ஆடிக்கிருத்திகை </a>விழா நேற்று ஆடி அஸ்வினியுடன் தொடங்கியது. இன்று ஆடி பரணி, நாளை(6-ந்தேதி) ஆடிக்கிருத்திகை விழா நடைபெறுகிறது. ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான குடிநீர், வாகன நிறுத்தும் இடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. </p> <h2>திருத்தணி முருகன் கோவில்</h2><p>சிறப்பு பஸ்கள், சிறப்பு ரெயில்களும் இயக்கப்படுகின்றன. அனைத்து முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு நாளை திருத்தணி முருகன் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து பாதுகாப்பு கருதி கர்ப்பிணி பெண்கள், முதியோர், மாற்றத்திறனாளிகள் நாளை சாமி தரிசனம் செய்ய வர வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.</p><h2>திருவள்ளூர் கலெக்டர்</h2><p>திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கவிதா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>திருத்தணி முருகன் கோவிலில் நாளை(6-ந்தேதி)ஆடிக்கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு சுமார் 5 முதல் 7 லட்சம் பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டில் 5 லட்சம் பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர். இது தொடர்பாக அனைத்து முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளும் சிறப்பான முறையில் மாவட்ட நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. </p><p>இருப்பினும் அதிக பக்தர்கள் வருகை காரணமாக திருத்தணி நகரத்துக்குள் வாகனப் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் பாதுகாப்பு கருதி மேற்படி தினங்களில் நேரடி தரிசனத்திற்கு வருகை புரிவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.</p> <h2>பக்தர்கள் நேர்த்திக்கடன்</h2><p>ஆடிபரணியை முன்னிட்டு அதிகாலை முதலே திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.  ஏராளமான பக்தர்கள் காவடி சுமந்து வந்தும், தலைமுடி காணிக்கை செய்தும் தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர். மலைக்கோவிலில் காவடி செலுத்துவதற்கு தனி மண்டபம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு மாலையில் சரவண பொய்கை திருக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் வள்ளி தெய்வானை சமேதராய் உற்சவமூர்த்தி கடவுள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.</p> <p>மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரணீத் உத்தரவின் பேரில் திருத்தணி உதவி காவல் கண்காணிப்பாளர் ஷீபம் திமான் தலைமையில் சுமார் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர் மலைக்கோவில் திருக்குளம் நல்லான்குளம், மேல் திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில் நோய் தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.</p> <p>நகராட்சி சார்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர்கள் சுகாதார பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மலைக்கோவிலுக்கு சென்று வர கோயில் சார்பில் இலவச பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆட்டோக்கள் மலை கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் க.ரமணி தலைமையில் அறங்காவலர் குழு தலைவர் சு.ஸ்ரீதரன், வி.சுரேஷ்பாபு, மோகனன். ஜி, உஷாரவி, மு.நாகன் மற்றும் அதிகாரிகள் செய்து உள்ளனர்.</p>]]></content:encoded></item></channel></rss>