<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 15 Aug 2026 10:31:52 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 15 ஆகஸ்ட் 2026...</title><link>https://www.maalaimalar.com/news/topnews/today-news-in-tamil-live-updates-15-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/today-news-in-tamil-live-updates-15-august-2026#comments</comments><guid isPermaLink="false">c6da5784-7244-49ec-aad8-b0af519a1d11</guid><pubDate>Sat, 15 Aug 2026 01:53:31 +0000</pubDate><atom:updated>2026-08-15T08:25:08.134Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/umtv98iy/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live News]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/umtv98iy/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/24-hour-turnaround-tasmac-lifts-ban-on-11-enrica-liquor-brands">24 மணி நேரத்திற்குள் மாற்றம்: என்ரிகா நிறுவனத்தின் 11 மதுபான வகைகளுக்கான தடையை நீக்கியது டாஸ்மாக் நிர்வாகம்!... </a></p><p>*11 மதுபான வகைகளையும் சில்லறை விற்பனைக் கடைகளுக்கும், FL-2 மற்றும் FL-3 உரிமம் பெற்ற ஹோட்டல்கள் மற்றும் கிளப்புகளுக்கும் விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.</p><p>*என்ரிகா நிறுவனத்தின் தயாரிப்புகளை மீண்டும் சில்லறை விற்பனை நிலையங்களுக்கு அனுப்பும் பணிகள் தொடங்கியுள்ளன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/equal-opportunity-for-digital-media-centre-removes-12-minute-tv-ad-cap">டிஜிட்டல் ஊடகங்களுக்கு இணையான சமவாய்ப்பு: டிவியின் 12 நிமிட விளம்பரக் கட்டுப்பாட்டை நீக்கியது மத்திய அரசு!... </a></p><p>*தற்போதுள்ள காலகட்டத்தில் டிஜிட்டல் மற்றும் சமூக ஊடக தளங்களில் விளம்பரங்களுக்கு எந்தவித கால வரம்பும் கிடையாது. </p><p>*இதனால் பாரம்பரிய தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு கடும் வருவாய் இழப்பும் சமமற்ற போட்டியும் ஏற்பட்டு வந்தது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/internet-services-disrupted-in-taiwan">சீன அச்சுறுத்தல்: தைவானில் முடங்கிய இணைய சேவை! போர்க்கால அவசரநிலை சோதனை</a></p><p>*இணையம் மற்றும் 4G/5G நெட்வொர்க் முற்றிலும் முடங்கும் போது, நாட்டின் மக்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு அமைப்புகள் எவ்வாறு தொடர்பில் இருப்பது என்பதைத் தைவான் பரிசோதித்தது. </p><p>*பல பயனர்களுக்கு டிக்டாக் செயலி திறக்கவே இல்லை; இன்ஸ்டாகிராமில் ஒரு மெசேஜ் செல்ல 30 வினாடிகளுக்கு மேல் ஆனதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/mallikarjun-kharge-rahul-gandhi-skip-independence-day-event-for-2nd-second-consecutive-year">சுதந்திர தின விழாவை 2-வது ஆண்டாக புறக்கணித்த கார்கே, ராகுல் - காரணம் இதுதான்!</a></p><p>* டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.</p><p>* மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி மத்திய மந்திரிக்கு இணையான அந்தஸ்து கொண்டவர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-pledges-to-build-an-india-of-equality-and-social-justice" rel="nofollow">சமத்துவம், சமூகநீதி தழைத்தோங்கும் இந்தியாவை உருவாக்க உறுதி ஏற்போம்- முதலமைச்சர் விஜய்</a></p><p>* சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் விஜய் தேசிய கொடி ஏற்றி வைத்தார். </p><p>* மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள் ஆண்களில் 3 பேருக்கும், பெண்களில் இருவருக்கும் வழங்கப்பட்டது.</p><p>திருப்பூர் இம்மானுவேல் நெல்சன், தூத்துக்குடி சரவண குமார், சேலம் நிர்மல் கதிர்வேலு, மயிலாடுதுறை ராஜேஸ்வரி மகாதேவன், மதுரை சிந்தாவுக்கு முதலமைச்சரின் இளைஞர் விருது வழங்கப்பட்டது.</p> <p>காரில் இருந்து இறங்கி சாலையில் நடந்து சென்றவாறு மக்களை சந்தித்தார் முதலமைச்சர் விஜய்</p><p>சாலையின் இருபுறமும் உள்ள மக்களை பார்த்து கை அசைத்தவாறு நடந்து சென்றார் முதலமைச்சர் விஜய்</p><p>விருதாளர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார் முதலமைச்சர் விஜய்</p><p>முதலமைச்சரின் நல் ஆளுமை விருதை நீலகிரி ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யாவுக்கு வழங்கினார் முதலமைச்சர்</p><p>விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சிருஷ்டி பவுண்டேஷனுக்கு சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான விருதை வழங்கினார் - முதலமைச்சர் விஜய்</p> <p>உலகின் கடினமான மாரத்தானில் ஒன்றான டென்சிங் ஹிலாரி எவரெஸ்ட் மாரத்தானை 2 முறை வென்ற நவ்ஷீனுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கினார் முதலமைச்சர் விஜய்</p><p>எம்.கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருது, நீரிழிவு நோய் நிபுணர் மோகனுக்கு அப்துல் கலாம் விருதை வழங்கினார் முதலமைச்சர் விஜய் </p><p>விடுதலை போராட்ட வீரர்கள் ஓய்வூதியம் ரூ.25,000 ஆக உயர்வு - முதலமைச்சர் விஜய்</p><p>மாற்றுத்திறன் கொண்ட முன்னாள் படைவீரர்களின் குடும்பத்திற்கான மாதாந்திர நிதியுதவி ரூ.5000-ல் இருந்து ரூ.7000 ஆக உயர்வு முதலமைச்சர் விஜய்</p><p>முன்னாள் படை வீரர்களின் 2 மகள்களுக்கு வழங்கும் திருமண நிதியுதவி ரூ.25,000-ல்  இருந்து ரூ.50,000ஆக உயர்வு - முதலமைச்சர் விஜய்</p> <p>தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது - முதலமைச்சர் விஜய்</p><p>தமிழ்நாட்டை முன்மாதிரி மாநிலமாக்குவதுடன் 2036-ம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவோம் - முதலமைச்சர் விஜய்</p> <p>தமிழக நலனுக்கு எதிராக, மாநில உரிமைக்கு பிரச்சனையாக எது வந்தாலும் தவெக அரசு எதிர்க்கும் - முதலமைச்சர் விஜய்</p> <p>தமிழக மக்கள் நலனுக்காக மட்டுமே நிர்வாக ரீதியாக மத்திய அரசுடன் ஒத்துழைப்பு தருகிறோம்  - முதலமைச்சர் விஜய்</p><p>இந்த விழாவில் என்னை பேச வைத்த உலகம் முழுவதும் உள்ள தமிழக மக்கள், GenZ இளைஞர்களுக்கும் நன்றி - முதலமைச்சர் விஜய்</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/q8bvaih9/vijay3.jpg" /></figure><p>லஞ்சம், ஊழலற்ற தமிழகம் என்பதை நோக்கியே நமது தவெக அரசு செயல்பட்டு வருகிறது - முதலமைச்சர் விஜய்</p><p>நாட்டின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்து முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். </p><p>கோட்டையில் கொடியேற்றுவதை பார்க்க வந்துள்ள மக்களுக்கும், என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும் வாழ்த்து - முதலமைச்சர் விஜய்</p><p>தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய் கோட்டை கொத்தளத்தில் முதன்முறையாக தேசியக்கொடி ஏற்றினார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Tamil Nadu Chief Minister C Joseph Vijay hoists the tricolour at the state Secretariat in Chennai on the occasion of 80th Independence Day. <a href="https://t.co/QFKUtuvUjl">pic.twitter.com/QFKUtuvUjl</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2088466594729214122?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>முதலமைச்சர் விஜய்க்கு முப்படை மற்றும் சிறப்பு காவல் படை உள்ளிட்ட படையினர் அணிவகுப்பு மரியாதை.</p><p>திறந்தவெளி வாகனத்தில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பினை பார்வையிடுகிறார் முதலமைச்சர் விஜய்</p><p>சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியேற்றுவதற்காக முதலமைச்சர் விஜய் வருகை.</p><p>நாம் கண்ட மிகப்பெரிய கனவுகள் நமது எண்ணங்களை விரிவாக்கி உள்ளது. கனவு உயர்வாக இருந்தால் திறனும் உயரும் - பிரதமர் மோடி</p><p>40-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம். வர்த்தக ஒப்பந்தத்தால் மீனவர்கள், விவசாயிகள் பயன் - பிரதமர் மோடி</p><p>வரும் 2047-ம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் அணுசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி</p><p>நமது தேவைகளுக்காக பிற நாடுகளை எப்போதும் சார்ந்திருக்க முடியாது. நாம் தற்சார்பு அடைய வேண்டியது காலத்தின் கட்டாயம் - பிரதமர் மோடி</p><p>உலகளவில் ஈர்க்கும் வகையில் பொருட்களை தயாரிக்க வேண்டும் - பிரதமர் மோடி</p><p>உற்பத்தி துறையில் மேலும் வளர்வது கட்டாயம் - பிரதமர் மோடி</p><p>நாட்டு மக்கள் 25 கோடி பேர் வறுமையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் - பிரதமர் மோடி</p><p>கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா பல்வேறு வரலாற்று சாதனைகளை படைத்துள்ளது  - பிரதமர் மோடி பெருமிதம்</p><p>ஒவ்வொரு இந்தியரும் இணைந்து இந்தியா வளர்ச்சி அடைந்த நாடு என்ற கனவை 2047-ம் ஆண்டில் நனவாக்குவோம் - பிரதமர் மோடி</p><p>இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 4 மடங்கு உயர்ந்துள்ளது. </p><p>மிகப்பெரிய செமி கண்டக்டர் ஆலைகள் வர உள்ளன - பிரதமர் மோடி</p><p>அனைத்து பிரிவு மக்களும் நாட்டை முன்னேற்றி கொண்டிருக்கின்றனர். நமது கனவுகளை தடுத்து நிறுத்துவது சாத்தியமற்றது - பிரதமர் மோடி</p><p>அனைவரது மனதிலும் மூவர்ணம் நிறைந்துள்ளது. நாடெங்கிலும் வந்தே மாதரம் பாடல் எதிரொலிக்கிறது - பிரதமர் மோடி</p><p>நமது நாட்டின் டிஜிட்டல் பரிவர்த்தனை கடந்த 12 ஆண்டுகளில் 100 மடங்கு அதிகரித்துள்ளது - பிரதமர் மோடி</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Delhi: From the ramparts of the Red Fort, Prime Minister Narendra Modi says, &quot;... Over the past 12 years, countless citizens—whether Dalits, the downtrodden, the marginalized, or tribals; whether rural or urban dwellers; the poor or the middle class; youth or the… <a href="https://t.co/YT8btWXU6S">pic.twitter.com/YT8btWXU6S</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2088452942542365128?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>இந்தியா தற்சார்பு அடைய வேண்டியது காலத்தின் கட்டாயம் - பிரதமர் மோடி</p><p>2047-ல் 100 ஜிகாவாட் அணுசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி</p><p>இந்தியா அனைத்து நாடுகளுக்கும் முன்னோடியாக சென்று கொண்டிருக்கிறது - பிரதமர் மோடி</p><p>12 ஆண்டுகளில் இந்தியாவின் டிஜிட்டல் பண பரிவர்த்தனை 100 சதவீதத்தை எட்டி உள்ளது.</p><p>நமது வாழ்வில் பெரிதாக சாதிக்க வேண்டும் எனில் ஒவ்வொரு இந்தியரும் கனவு காண வேண்டும் - பிரதமர் மோடி</p><p>நாட்டில் எலக்ட்ரானிக் பொருட்களின் உற்பத்தி 7 மடங்கு உயர்ந்துள்ளது.</p><p>தேசத்தின் அனைத்து பிரிவு மக்களும் நாட்டை முன்னேற்றி கொண்டிருக்கின்றனர் - பிரதமர் மோடி</p><p>உலகம் இன்று நம்மை பார்க்கும் விதம் மாறி உள்ளது - பிரதமர் மோடி</p><p>கனவுகள் உயர்வாக இருக்கும்போது தான் திறன்களும் உயர்ந்ததாக இருக்கும்.</p><p>நாம் கண்ட மிகப்பெரிய கனவுகள் தான் தற்போது நமது எண்ணங்களை விரிவாக்கி உள்ளது.</p><p>நாட்டின் விடுதலைக்காக எண்ணற்றோர் உயிர் தியாகம் செய்துள்ளனர்.</p><p>வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டை அனைவரும் கொண்டாடி கொண்டிருக்கிறோம்.</p><p>நாட்டு மக்கள் அனைவரது இல்லங்களிலும் இன்று மூவர்ண கொடி பறந்து கொண்டிருக்கிறது.</p><p>வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த  ஒரு நிகழ்வை இந்தியா கண்டு கொண்டிருக்கிறது.</p><p>நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி.</p><p>செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Delhi: Prime Minister Narendra Modi hoists the National Flag at Red Fort on the 80th Independence Day. <br><br>The hoisting of the National Flag was synchronised with the 21-Gun Salute by the gunners of the 1721 Field Battery (Ceremonial). The ceremonial battery, utilising the… <a href="https://t.co/rbaiIKQpPU">pic.twitter.com/rbaiIKQpPU</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2088448119566676389?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையில் பிரதமர் மோடி ஏற்றி வைத்த தேசியக்கொடிக்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.</p><p>டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி.</p><p>சுதந்திர தினவிழா கொண்டாட்ட வரலாற்றில் முதன்முறையாக டெல்லி செங்கோட்டையில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டது.</p><p>13-வது முறையாக தேசியக்கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களிடையே உரையாற்ற  உள்ளார் பிரதமர் மோடி.</p><p>நாட்டின் சுதந்திர தினவிழாவை ஒட்டி டெல்லி கடமைப்பாதையில் பிரதமர் மோடிக்கு முப்படை, காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை </p><p>டெல்லியில் உள்ள செங்கோட்டைக்கு வந்தடைந்த பிரதமர் மோடியை பாதுகாப்புத்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங் வரவேற்றார்.</p><p>நாட்டின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி.</p><p>டெல்லி ராஜ்காட்டில் உள்ள தேசத்தந்தை மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Prime Minister Narendra Modi pays floral tributes to the Father of the Nation, Mahatma Gandhi, at Rajghat on the 80th Independence Day<br><br>(Video source: PM Modi/ YouTube) <a href="https://t.co/xIcfLPeDol">pic.twitter.com/xIcfLPeDol</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2088441067771494821?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>சுதந்திர தினத்தில் சிஜேபியின் அதிகாரப்பூர்வ கணக்கு முடக்கம்.. கோழைகள் என சிஜேபி பதிவு</title><link>https://www.maalaimalar.com/news/national/cjps-official-account-suspended-on-independence-day</link><comments>https://www.maalaimalar.com/news/national/cjps-official-account-suspended-on-independence-day#comments</comments><guid isPermaLink="false">09b50f0e-f2dd-4f1b-82b9-2a1a22d22700</guid><pubDate>Sat, 15 Aug 2026 10:26:56 +0000</pubDate><atom:updated>2026-08-15T10:26:56.216Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சுதந்திர தினம்,Independance Day,CJP,சிஜேபி போராட்டம்,account blocked,கணக்கு முடக்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/ra0xuppz/Untitled-design-60.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CJP Instagram]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/ra0xuppz/Untitled-design-60.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சுதந்திர தினமான இன்று தங்களது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கு காலையில் முடக்கப்பட்ட நிலையில், தற்போது அது மீண்டும் சரி செய்யப்பட்டுள்ளதாக <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">கரப்பான்பூச்சி கட்சி</a> (சிஜேபி) தெரிவித்துள்ளது.</p><p>நாடு சுதந்திரம் அடைந்து 80 ஆணடுகள் ஆன நிலையில், ஆகஸ்ட் 15 அன்று எங்கள் கணக்கு முடக்கப்படுவது, சுதந்திர தினத்தன்று எங்கள் குரலை ஒடுக்கும் முயற்சியாக உள்ளது என சிஜேபி கட்சி தெரிவித்துள்ளது.</p><p>இதுகுறித்து சிஜேபி வெளியிட்ட பதிவில், “காக்ரோச் ஜனதா கட்சியை எதிர்ப்பவர்கள் எங்கள் குரலை ஒடுக்க முயற்சிப்பதற்காக நினைக்கிறார்கள். இந்தியாவின் சுதந்திர தினமான இன்று காக்ரோச் ஜனதா கட்சியை அமைதியாக்க முயற்சிப்பது வெட்கக்கேடானது.</p><p>எங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டுள்ள கோழைத்தனமான செயல்களை கண்டு, நாங்கள் அஞ்சமாட்டோம்,”என்று தெரிவித்துள்ளது.</p><p>இந்த முடக்கம் குறித்து சிஜேபி நிறுவனர் அபிஜீத் திப்கே கூறுகையில், “அவர்கள் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்கியுள்ளனர், கோழைகள்!” என்று கூறியுள்ளார்.</p><p>இதையடுத்து இன்றைய தினம் பிற்பகுதியில் தங்கள் கணக்கு மீட்டெடுக்கப்பட்டதாக சிஜேபி தெரிவித்துள்ளது.</p><p>முன்னதாக வேலையின்மை, கல்வி மற்றும் இளைஞர்களிடையே உள்ள கவலைகள் குறித்த கேள்விகளை எழுப்பி, பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் நாட்டின் இளைஞர்களை சந்தித்து பேச வேண்டும் என்று வலியுறுத்தி தனது பிரச்சாரத்தை தொடங்கியிருந்தார்.</p><p>இதைத்தொடர்ந்து தங்கள் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக சிஜேபி தெரிவித்துள்ளது.</p><p>மேலும், அரசு மற்றும் கிராம பள்ளிகளின் நிலை குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள், மாணவர்கள் மற்றும் கல்வி தொடர்பான பிரச்சினைகள் குறித்த போராட்டங்கள் உள்ளிட்ட, சமீப வாரங்களில் சி.ஜே.பி. நடத்தி வரும் தொடர் பிரச்சாரங்களுக்கு மத்தியில் இந்த வகையிலான முடக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் சிஜேபி தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு</title><link>https://www.maalaimalar.com/spirituality/sabariimala-temple-opening-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/spirituality/sabariimala-temple-opening-tomorrow#comments</comments><guid isPermaLink="false">5c651f84-11ed-4fe4-a51c-74d95eb8a887</guid><pubDate>Sat, 15 Aug 2026 10:15:26 +0000</pubDate><atom:updated>2026-08-15T10:15:26.460Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>sabarimalai,சபரிமலை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/e4dxsnkf/sabarimala.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ சபரிமலை கோவில்]]></media:title><media:description type="html"><![CDATA[ சபரிமலை கோவில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/e4dxsnkf/sabarimala.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தினமும் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், அபிஷேகம், கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகளும், அதனைத்தெடர்ந்து நெய் அபிஷேகம், அஷ்டாபிஷேகம், உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட பூஜைகளும் நடத்தப்படும்.</strong></em>  </p><p><a href="https://www.maalaimalar.com/topic/சபரிமலை">சபரிமலை</a> ஐயப்பன் கோவில் நடை மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்கள் மட்டுமின்றி, மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் முதல் 5 நாட்கள் திறக்கப்படும். அந்த நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி ஆவணி மாத பூஜைகளுக்காக நாளை (16-ந்தேதி) மாலை 5 மணிக்கு ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. கோவிலின் தலைமை தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில் சபரிமலை ஐயப்பன் கோவில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி, நடையை திறக்கிறார்.</p><p>நாளை மாலை நடை திறக்கப்பட்ட பிறகு சிறப்பு பூஜைகள் எதுவும் நடக்காது. நாளை மறுநாள்(17-ந்தேதி) மாதாந்திர பூஜை தொடங்குகிறது. அன்று முதல் வருகிற 21-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும். இந்த நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். </p><p>தினமும் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், அபிஷேகம், கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகளும், அதனைத்தெடர்ந்து நெய் அபிஷேகம், அஷ்டாபிஷேகம், உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட பூஜைகளும் நடத்தப்படும்.  </p><p>இந்த பூஜைகள் அனைத்திலும் பக்தர்கள் கலந்துகொள்ளலாம் என்பதால் மாதாந்திர பூஜையின் போதும், பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். சாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் www.sabarimalaonline.org என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து வரவேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.</p><p>முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே மாதாந்திர பூஜையில் பங்கேற்க முடியும். ஆவணி மாத மாதாந்திர பூஜை 21-ந்தேதி முடிவடைகிறது. அன்றைய தினம் இரவு 10 மணிக்கு சிறப்பு பூஜைகள் நிறைவடைந்ததும் அரிவராசனம் பாடப்பட்டு கோவில் நடைசாத்தப்படும். </p><p>இதையடுத்து ஓணம் பண்டிகைக்காக வருகிற 24-ந்தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மீண்டும் திறக்கப்படுகிறது. வருகிற 25-ந்தேதி ஓணம் பூஜைகள் நடக்கின்றன. மறுநாள் (26-ந்தேதி)திருவேணம் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. ஓணம் பண்டிகைக்காக வருகிற 24-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐயப்பன் கோவில் நடை திறந்திருக்கும். </p><p>மாதாந்திர பூஜை மற்றும் ஓணம் பண்டிகையில் பங்கேற்க பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால், நாளை(16-ந்தேதி) முதல் வருகிற 28-ந்தேதி வரை கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருவனந்தபுரம், செங்கன்னூர், பத்தினம் திட்டா, கொட்டாரக்கரை, எருமேலி, புனலூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து பம்பைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. </p>]]></content:encoded></item><item><title>உதயநிதியை தொடர்ந்து நயினார் நாகேந்திரன்.. அரசியல் களத்தில் தொடரும் நாகரிகமற்ற பேச்சுகள்..!- அண்ணாமலை கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/uncivilized-speeches-continue-in-the-political-arena-annamalai-condemns</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/uncivilized-speeches-continue-in-the-political-arena-annamalai-condemns#comments</comments><guid isPermaLink="false">a0fe0110-bcf2-4e53-9392-6f6a945fdfb6</guid><pubDate>Sat, 15 Aug 2026 10:10:35 +0000</pubDate><atom:updated>2026-08-15T10:10:35.885Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அண்ணாமலை,நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,annamalai,முதலமைச்சர் விஜய்,tn cm vijay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/6o0psznc/Nainar.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Annamalai]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/6o0psznc/Nainar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அப்பாவை காணோம் என்று கூறியதற்கு, விஜய் மற்றும் அவரது குடும்பம் குறித்து அநாகரிகமாக பேசிய  பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.</p><p>இந்நிலையில், நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு வீ த லீடர்ஸ் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:- </p><p>தமிழ்நாட்டின் அரசியல் களத்தை அநாகரிகமாக்கும் பேச்சுகள் தொடர்ந்து அரங்கேறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.<a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95" rel="nofollow"> திமுக</a>வின் உதயநிதி ஸ்டாலினைத் தொடர்ந்து, தற்போது தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களும், அரசியல் நாகரிகத்தின் எல்லைகளை மீறி, தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் தாய் குறித்துக் கருத்து கூறியிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. </p><p>அரசியலில் இருப்பவர்கள் தங்கள் வார்த்தைகளுக்கும், செயல்களுக்கும் பொறுப்புடன் இருக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கொள்கைகளை விமர்சிக்கலாம்.  ஆட்சியின் செயல்பாடுகளைக் கேள்வி கேட்கலாம். ஆனால், ஒருவரின் குடும்பத்தினரை, குறிப்பாக அவர்களின் தாயாரை  இழிவுபடுத்தும் வகையில் பேசுவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. </p><p>இந்த வகையிலான தரக்குறைவான கருத்துக்கள், முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே காலாவதியாகிப் போன அரசியல். இன்றைய தமிழக இளைஞர்களுக்கும், வளரும் நமது குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டியது இத்தகைய மூன்றாந்தர அரசியல் அல்ல.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வடகொரியாவின் 81-வது விடுதலை நாள்: தேசோங்சான் தியாகிகள் நினைவிடத்தில் அதிபர் கிம் ஜோங் உன் அஞ்சலி</title><link>https://www.maalaimalar.com/news/world/north-korea-81st-independence-day-kim-jong-un-pays-tribute</link><comments>https://www.maalaimalar.com/news/world/north-korea-81st-independence-day-kim-jong-un-pays-tribute#comments</comments><guid isPermaLink="false">7b6f5f08-e8f0-41c7-896c-c6a96ebfeef7</guid><pubDate>Sat, 15 Aug 2026 10:09:35 +0000</pubDate><atom:updated>2026-08-15T10:09:35.951Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>North korea,வடகொரியா,சுதந்திர தினம்,president kim jong un,Taesongsan Revolutionary,தேசோங்சான் தியாகிகள்,அதிபர் கிம் ஜோங் உன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/5jkymnrl/korea.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ North Korea's 81st Liberation Day]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/5jkymnrl/korea.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று ஜப்பானிய ஆதிக்கத்திலிருந்து கொரிய தீபகற்பம் விடுதலை பெற்றதன் நினைவாக, ஆண்டுதோறும் வடகொரியாவில் ஆகஸ்ட் 15-ஆம் தேதி 'தாயக விடுதலை நாள்' பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படுகிறது. 81-வது  விடுதலை முன்னிட்டு, நாட்டின் வளர்ச்சிக்கும் விடுதலைக்கும் வித்திட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் அரசு சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.</p><h2>தியாகிகள் நி<strong>னைவிடத்தில்</strong> அஞ்சலி</h2><p><a href="https://www.maalaimalar.com/news/world/internet-services-disrupted-in-taiwan">தலைநகர் பியாங்யாங்</a>கில் அமைந்துள்ள தேசோங்சான் புரட்சித் தியாகிகள் நினைவிடத்திற்கு அதிபர் கிம் ஜோங் உன் நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வில் அவரது மனைவி ரி சோல்-ஜூ, மகள் கிம் ஜூ-ஏ மற்றும் வடகொரிய ஆளும் தொழிலாளர் கட்சியின் மூத்த நிர்வாகிகள், ராணுவ உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.</p><h2>சுதந்திரப் <strong>போராட்ட வீரர்களி</strong>ன் தியாகம் </h2><p>நினைவஞ்சலிக்குப் பிறகு பேசிய அதிபர் கிம் ஜோங் உன், அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராக ரத்தம் சிந்திப் போராடிய முதல்கட்ட புரட்சியாளர்களின் தளராத மன உறுதியும் தியாகமுமே வடகொரியாவின் அமைதிக்கும் வளர்ச்சிக்கும் முதன்மை ஆணிவேராக விளங்குவதாகக் குறிப்பிட்டதுடன், அந்தப் போராட்ட உணர்வு தலைமுறை தலைமுறையாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.</p><h2>புதினின் வா<strong>ழ்த்து</strong> செய்தி</h2><p>தொடர்ந்து, இரண்டாம் உலகப் போரின் போது கொரிய விடுதலையில் பங்குவகித்து உயிர்த்தியாகம் செய்த சோவியத் யூனியன் வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள விடுதலை நினைவிடத்திற்கும் கிம் ஜோங் உன் சென்று மரியாதை செலுத்தினார். இதனிடையே, வடகொரியாவின் 81-வது விடுதலை நாளை முன்னிட்டு ரஷிய அதிபர் விளாமிர் புதின், இரு நாடுகளுக்கும் இடையே வரலாற்று ரீதியாக நிலவும் நட்புறவையும் ஒத்துழைப்பையும் சுட்டிக்காட்டி தனது அதிகாரப்பூர்வ வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அரசியல் விரக்தியின் உச்சம்..!- நயினாரின் சர்ச்சை பேச்சுக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/political-frustration-peak-manickam-thakur-slams-nainar-remarks</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/political-frustration-peak-manickam-thakur-slams-nainar-remarks#comments</comments><guid isPermaLink="false">7c59db67-a391-4c69-b720-c5e147420b64</guid><pubDate>Sat, 15 Aug 2026 09:47:28 +0000</pubDate><atom:updated>2026-08-15T09:47:28.086Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore,முதலமைச்சர் விஜய்,tn cm vijay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/66at4uck/manickam-tagore.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Manickam Tagore]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/66at4uck/manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அப்பாவை காணோம் என்று கூறியதற்கு, விஜய் மற்றும் அவரது குடும்பம் குறித்து அநாகரிகமாக பேசிய  பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.</p><p>இதுகுறித்து காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது குடும்பம் குறித்து அநாகரிகமாக பேசிய  பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.</p><p>அரசியல் விரக்தியின் உச்சத்தில் முதலமைச்சர் விஜய் அவர்களையும் அவரது தாயாரையும் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இழிவாகப் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அரசியல் நாகரிகமற்ற முறையில் தரம் தாழ்ந்து பேசுவது இவருக்கு இது முதல் முறையல்ல. தொடர் வாடிக்கையாகிவிட்டது.</p><p>பொதுவெளியில் கவனத்தைப் பெற பெண்களை இழிவுபடுத்தும் , தனது அருவருக்கத்தக்க பேச்சுக்குத் தமிழ்நாட்டு மக்களிடமும் முதலமைச்சரிடமும் உடனடியாக நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>டார்வின் டெஸ்டில் வங்கதேசம் 426 ரன்கள் குவிப்பு: 2வது இன்னிங்சிலும் ஆஸ்திரேலியா திணறல்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/bangladesh-426-all-out-in-first-innings-against-australia-first-test</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/bangladesh-426-all-out-in-first-innings-against-australia-first-test#comments</comments><guid isPermaLink="false">c47b06cc-5439-43b0-81b4-12c41974d312</guid><pubDate>Sat, 15 Aug 2026 09:45:29 +0000</pubDate><atom:updated>2026-08-15T09:45:29.580Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>AUSvBAN,ஆஸ்திரேலியா வங்கதேசம் தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/eizdjrrf/hasun.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ hasun mahmud]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/eizdjrrf/hasun.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டின் 3வது நாள் முடிவில் ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்துள்ளது.</p><p>ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நஜ்முல் ஹூசைன் ஷான்டோ தலைமையிலான வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது.</p><h2>டார்வின் டெஸ்ட்</h2><p>ஆஸ்திரேலியா-வங்கதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டார்வினில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.</p><h2>ஸ்மித் அரை சதம்</h2><p>அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்கியது. வங்கதேச வீரர்கள் ஆரம்பம் முதலே சிறப்பாக பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன. ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து அரை சதம் கடந்தார். அவர் 71 ரன்னில் அவுட்டானார்.</p><p>இறுதியில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 198 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.</p><p>வங்கதேசம் சார்பில் ஹசன் மகமுது 6 விக்கெட்டும், தஸ்கின் அகமது, எபாடட் ஹொசைன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p>தொடர்ந்து ஆடிய வங்கதேசம் முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 426 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக ஆடிய ஹசன் தமிம் சதமடித்து 101 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஷாண்டோ பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 84 ரன்னில் வெளியேறினார்.</p><p>மொமினுல் ஹக் 49 ரன்னில் அவுட்டானார். மெஹிதி ஹசன் அரை சதம் கடந்து 65 ரன்னில் அவுட்டானார்.</p><p>இதன்மூலம் வங்கதேசம் அணி ஆஸ்திரேலியாவை விட 228 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.</p><h2>ஹேசில்வுட் 6 விக்கெட்</h2><p>ஆஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட் 6 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p>இதையடுத்து, ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் ஜேக் வெதரால்டு 4 ரன்னில் அவுட்டானார். டிராவிஸ் ஹெட் 17 ரன்னில் ஆட்டமிழந்தார். லபுசேன் 31 ரன்னில் வெளியேறினார்.</p><p>4வது விக்கெட்டுக்கு இணைந்த ஸ்டீவ் ஸ்மித், கேமரூன் கிரீன் ஜோடி 49 ரன்கள் சேர்த்த நிலையில், ஸ்மித் 44 ரன்னில் ஆட்டமிழந்தார்.</p><p>மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்துள்ளது. கேமரூன் கிரீன் 43 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.</p><p>இன்னும் இரண்டு மீதமுள்ள நிலையில், வங்கதேசம் 67 ரன் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p>வங்கதேசம் சார்பில் ஹசன் மகமுது 2 விக்கெட் வீழ்த்தினார்.</p>]]></content:encoded></item><item><title>VIDEO- மார்வெல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி: &apos;Avengers: Doomsday&apos; ஸ்பெஷல் லுக் வீடியோவை வெளியிட்ட மார்வெல் ஸ்டுடியோஸ்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/marvel-fans-get-a-pleasant-surprise-avengers-doomsday-special-look-video-released-by-marvel-studios</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/marvel-fans-get-a-pleasant-surprise-avengers-doomsday-special-look-video-released-by-marvel-studios#comments</comments><guid isPermaLink="false">c98e5376-4b9d-4c14-860e-3583c32f87c9</guid><pubDate>Sat, 15 Aug 2026 09:38:42 +0000</pubDate><atom:updated>2026-08-15T09:38:42.677Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே,Russo Brothers,Avengers: Doomsday,MCU,Victor von Doom,மார்வெல் சினிமாட்டிக்,டாக்டர் டூம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/90tl6n1f/dommsday.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Avengers: Doomsday  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/90tl6n1f/dommsday.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலகெங்கிலும் உள்ள மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' திரைப்படத்தின் புதிய ஸ்பெஷல் லுக் வீடியோவை மார்வெல் ஸ்டுடியோஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. </p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/X1aFkAkFASk"></iframe></figure><p>அமெரிக்காவில் நடைபெற்ற 'D23 Disney Fan Event' விழாவில், மார்வெல் தலைவர் கெவின் ஃபேகி, நடிகர்கள் ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் எவான்ஸ் மற்றும் ஹேலி அட்வெல் ஆகியோர் மேடையில் இந்த பிரத்யேக வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினர்</p><h2>வி<strong>ல்லன் அவதாரத்தில் ரா</strong>பர்ட் டவுனி ஜூனியர்</h2><p>ஐயர்ன் மேன் கதாபாத்திரத்தின் மூலம் உலகளவில் பேரன்பைப் பெற்ற ராபர்ட் டவுனி ஜூனியர், இத்திரைப்படத்தில் சக்திவாய்ந்த வில்லனான 'டாக்டர் டூம்' கதாபாத்திரத்தில் களமிறங்குகிறார். தற்போது வெளியாகியுள்ள வீடியோவில், அவரது கொடூரமான பின்னணி, முந்தைய காலக்கட்டம் மற்றும் மல்டிவர்ஸ் உலகைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு அவரிடம் இருக்கும் அளப்பரிய ஆற்றல் ஆகியவை மிக பிரம்மாண்டமாகக் காட்டப்பட்டுள்ளன.</p><h2>ஒரே நேர்கோட்டில் <strong>மோதும் 3 மார்</strong>வெல் உலகங்கள்</h2><p>இத்திரைப்படத்தில் அவெஞ்சர்ஸ், ஃபன்டாஸ்டிக் ஃபோர் மற்றும் எக்ஸ்-மேன் ஆகிய மூன்று வெவ்வேறு சூப்பர் ஹீரோ உலகங்களைச் சேர்ந்த கதாநாயகர்கள் ஒரே புள்ளியில் சந்திக்கின்றனர். தோர் (கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்), ரீட் ரிச்சர்ட்ஸ் (பெட்ரோ பாஸ்கல்), சூ ஸ்டார்ம் (வனேசா கெர்பி) மற்றும் ஸ்டீவ் ரோஜர்ஸ் போன்ற முன்னணி கதாபாத்திரங்கள் டாக்டர் டூமின் பேராபத்தை எதிர்கொள்ள ஒன்றாக இணைய உள்ளனர்.</p><h2>திரையர<strong>ங்கு ரிலீஸ் மற்றும் மு</strong>ன்பதிவு</h2><p>ரூஸோ சகோதரர்கள் இயக்கியுள்ள இத்திரைப்படம் வரும் டிசம்பர் 18, 2026 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. ஸ்பெஷல் லுக் வீடியோ வெளியானதுடன், படத்தின் புதிய போஸ்டரும் வெளியிடப்பட்டு, சர்வதேச அளவிலான டிக்கெட் முன்பதிவுகளும் உடனடியாகத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>கர்ம வினைகள், தோஷங்களை நீக்கும் கருட பஞ்சமி வழிபாடு</title><link>https://www.maalaimalar.com/spirituality/garuda-panchami-worship-2</link><comments>https://www.maalaimalar.com/spirituality/garuda-panchami-worship-2#comments</comments><guid isPermaLink="false">e2880a0e-6a91-481b-bc43-7eb98d54e28c</guid><pubDate>Sat, 15 Aug 2026 09:30:00 +0000</pubDate><atom:updated>2026-08-15T09:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,வழிபாடு,worship,garuda panchami,கருட பஞ்சமி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/pmwns61q/garuda-panchami.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Garudan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/pmwns61q/garuda-panchami.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>கருட பஞ்சமி</h2><p>'பெரிய திருவடி' எனப் போற்றப்படும் கருட பகவான் பிறந்த தினமே 'கருட பஞ்சமி' ஆகும். ஆடி மாத அமாவாசைக்கு பின் வரும் பஞ்சமி திதி நாள்தான், 'கருட பஞ்சமி' என்று போற்றப்படுகிறது. இதை 'கருட ஜெயந்தி' என்றும் சொல்வதுண்டு. ஒரு ஆவணி மாத வளர்பிறை பஞ்சமி திதியுடன் கூடிய சுவாதி நட்சத்திரத்தில் கருடன் அவதரித்ததாக கூறப்படுகிறது.</p> <p>மகாவிஷ்ணுவின் கொடியாகவும், வாகனமாகவும், காவலனாகவும் இருப்பவர், கருட பகவான். கருட பஞ்சமி தினத்தன்று, பறவைகளின் தலைவனாக போற்றப்படும் கருட பகவானையும், மகா விஷ்ணுவையும் விரதம் இருந்து வழிபட்டால் பல நன்மைகளை பெறலாம்.</p><h2>காசியப முனிவர்</h2><p>காசியப முனிவருக்கு வினதை, கத்ரு என இரண்டு மனைவிகள் இருந்தனர். கத்ரு மற்றும் வினதை இருவரும் சகோதரிகள் ஆவர். முதல் மனைவியான கத்ருவுக்கு நாகர்களும், இரண்டாம் மனைவியான வினதைக்கு அருணன் மற்றும் கருடன் ஆகியோரும் மகன்களாக இருந்தனர்.</p> <h2>கத்ரு - வினதை</h2><p>ஒரு சமயம் 'உச்சைஸ்வரஸ்' என்ற தெய்வீக குதிரையின் வாலின் நிறம் குறித்து கத்ருவுக்கும், வினதைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாலின் நிறம் வெள்ளை என்று வினதையும், கருப்பு என்று கத்ருவும் வாதிட்டனர். இறுதியில், யார் கூறுவது உண்மையோ அவருக்கு மற்றவர் அடிமையாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.</p> <p>கத்ரு, தன் மகனான கார்க்கோடகன் என்ற கருப்பு நிற பாம்பின் உதவியுடன், குதிரையின் வெள்ளை நிற வாலை சுற்றி, கருப்பாக தோன்றும்படி செய்தார். கத்ருவின் சூழ்ச்சியால், வினதை கத்ருவுக்கு அடிமையானார்.</p><h2>தாய்ப்பாசம்</h2><p>இதை அறிந்த வினதையின் மகனான கருடன், தன் தாயை விடுவிக்க முயன்றார். அதற்கு, தேவர்களிடம் இருந்து அமிர்த கலசத்தை கொண்டுவர வேண்டும் என்று நாகர்கள் நிபந்தனை விதித்தனர். இதையடுத்து கருடன், தன் வீரத்தாலும், பக்தியாலும் தேவர்களை வென்று, அமிர்த கலசத்தை கொண்டு வந்தார். பின்னர், மகாவிஷ்ணுவின் அருளால் வினதையை அடிமைத் தனத்தில் இருந்து விடுவித்தார்.</p> <h2>மகாவிஷ்ணு</h2><p>கருடனின் துணிச்சலையும், தாய்ப் பாசத்தையும் கண்டு மகிழ்ந்த மகாவிஷ்ணு, அவரை தன் வாகனமாக ஏற்றுக்கொண்டார். இதன் நினைவாக கருட பஞ்சமி கொண்டாடப்படுவதாகவும் கூறப்படுகிறது.</p><h2>கருட பஞ்சமி வழிபாடு</h2><p>இந்த ஆண்டு கருட பஞ்சமி, ஆகஸ்டு 17-ந் தேதி திங்கட்கிழமை வருகிறது. அன்றைய தினம் விரதம் இருந்து வழிபடுவது மிகவும் சிறப்பு ஆகும். அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, பூஜையறையை சுத்தம் செய்து, கருடாழ்வார் மற்றும் மகாவிஷ்ணுவின் படங்களை வைத்து பூஜை செய்ய வேண்டும்.</p> <p>இறைவனுக்கு மஞ்சள், குங்குமம், மலர்கள், துளசி சாற்றி, தீபம் ஏற்றி வழிபட வேண்டும். பழங்கள், பாயசம், சர்க்கரைப் பொங்கல் போன்ற நைவேத்தியங்களை படைக்கலாம். அன்றைய தினம் விஷ்ணு மற்றும் கருடன் பாடல்களையும், மந்திரங்களையும் பாராயணம் செய்து வழிபடலாம்.</p><p>கருட பஞ்சமி தினத்தன்று, அமிர்த கலசத்துடன் இருக்கும் கருடனையும், கருட வாகனத்தில் வலம் வரும் பெருமாளையும் தரிசித்தால் மிகவும் விசேஷமாகும். தன்னை எப்போதும் சுமந்துக் கொண்டிருக்கும் கருடனை வழிபடுபவர்களுக்கு மகா விஷ்ணுவின் அருளும் முழுமையாக கிடைக்கும்.</p> <p>கருடனின் திருவருளைப் பெற்று தரும் கருட பஞ்சமி நாளில், கருடனை மனதார வழிபட்டால் கர்ம வினைகளும், தோஷங்களும் விலகும், பகை உணர்வு நீங்கும், பக்தி, நினைவாற்றல் அதிகரிக்கும். பெண்கள் மாங்கல்ய பேறு பெறுவார்கள். இந்நாளில் கருடனை கண்டால் மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.</p> ]]></content:encoded></item><item><title>வரும் 17-ந்தேதி 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-heavy-rain-in-4-districts-on-17th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-heavy-rain-in-4-districts-on-17th#comments</comments><guid isPermaLink="false">5d6220dd-18cb-470b-8275-1393057da1b1</guid><pubDate>Sat, 15 Aug 2026 09:21:47 +0000</pubDate><atom:updated>2026-08-15T09:21:47.188Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,IMD,TN,Heavy Rain,தமிழ்நாடு,கனமழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/06/15/14313826-rain1.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rain
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/06/15/14313826-rain1.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p> <h2>புதுவை மற்றும் காரைக்கால்</h2><p>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/august-rain-expected-above-normal-in-tamilnadu">மழை </a>பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p> <p>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p> <h2>4 மாவட்டங்களில் கன மழை</h2><p>17-ந்தேதி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.</p> <p>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சேலம், நாமக்கல், பெரம்பலூர், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p>  <p>தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் வட உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.</p><p>வட உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p> <h2>சென்னை மற்றும் புறநகர் பகுதி</h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p> <p>நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நயினாரின் சர்ச்சை பேச்சு அருவருக்கத்தக்கது- அமைச்சர் ராஜ்மோகன் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainars-controversial-speech-is-disgusting-minister-rajmohan-condemns</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainars-controversial-speech-is-disgusting-minister-rajmohan-condemns#comments</comments><guid isPermaLink="false">1ad3c2b3-339c-413b-8031-071817d3dfeb</guid><pubDate>Sat, 15 Aug 2026 09:09:59 +0000</pubDate><atom:updated>2026-08-15T09:09:59.330Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,அமைச்சர் ராஜ்மோகன்,அமைச்சர் வினோத்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/w4s75nqx/Raj-mohan.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Raj mohan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/w4s75nqx/Raj-mohan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது குடும்பம் குறித்து அநாகரிகமாக பேசிய  பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.</p><p>இந்நிலையில், சட்டமன்றத்தில் அப்பாவை காணவில்லை என <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-says-tvk-government-will-oppose-anything-that-poses-a-threat-to-state-rights" rel="nofollow">முதலமைச்சர்</a> பேசியது குறித்து அமைச்சர் ராஜ்மோகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும்," பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நாகரிகமாக பேச வேண்டும்" என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.</p><h2>அமைச்சர் ராஜ்மோகன்</h2><p>பாஜக மாநில தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanniarasu-says-nainar-nagendran-must-apologize-for-his-uncivilized-remark" rel="nofollow">நயினார் நாகேந்திரன்</a> நாகரிகமாக பேச வேண்டும். நயினாரின் சர்ச்சை பேச்சு அருவருக்கத்தக்கது.</p><p>திமுக- பாஜகவின் மறைமுக நட்பு வெளிப்படுகிறது. ஒரு கட்சியின் தலைவராக நயினார் பேசவில்லை.</p><h2>அமைச்சர் வினோத்</h2><p>நயினார் நாகேந்திரன் அநாகரீகமாக பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. வாய்க்கு வந்தபடி பேசுவது அவரது தரத்தை வெளிப்படுத்துகிறது.</p><p>அரசியல் களத்தில், கருத்தை எதிர்கருத்தால் எதிர்கொள்ளத் திராணியில்லை. நயினார் முதல்வரிடமும் தமிழ்நாட்டு மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்.</p><h2>டிஜிபி அலுவலகத்தில் புகார்</h2><p>முதலமைச்சர் மற்றும் அவரது தாயார் குறித்து அநாகரிகமாக பேசிய நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.</p><p>முதலமைச்சர் குறித்து அநாகரிகமாக பேசிய நயினார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டிஜிபி அலுவலகத்தில் ஆன்லைன் வாயிலாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.</p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மீது <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88" rel="nofollow">குற்றவியல் நடவடிக்கை</a> எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் வர்த்தினி தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நயினார் நாகேந்திரன் தமது அநாகரிகமான பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்! - அமைச்சர் வன்னிஅரசு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanniarasu-says-nainar-nagendran-must-apologize-for-his-uncivilized-remark</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanniarasu-says-nainar-nagendran-must-apologize-for-his-uncivilized-remark#comments</comments><guid isPermaLink="false">a39310c7-e973-4a29-9a10-f432241366e4</guid><pubDate>Sat, 15 Aug 2026 08:51:57 +0000</pubDate><atom:updated>2026-08-15T08:51:57.093Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,cm vijay,minister vanni arasu,அமைச்சர் வன்னி அரசு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/n7k728iq/vanniarasu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vanni arasu - Nainar Nagendran]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/n7k728iq/vanniarasu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது குடும்பம் குறித்து நயினார் நாகேந்திரனின் அநாகரிக பேச்சிற்கு அமைச்சர் வன்னி அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.</strong></em></p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-pledges-to-build-an-india-of-equality-and-social-justice">முதலமைச்சர் விஜய்</a> மற்றும் அவரது குடும்பம் குறித்து அநாகரிகமாக பேசிய  பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மீது டிஜிபி அலுவலகத்தில் வழக்கறிஞர் வர்த்தினி ஆன்லைன் வாயிலாக புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள புகாரில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். </p> <h2>வன்னி அரசு</h2><p>இந்நிலையில் முதலமைச்சர் மற்றும் அவரது குடும்பம் குறித்து நயினார் நாகேந்திரனின் அநாகரிக பேச்சிற்கு அமைச்சர் வன்னி அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">அமைச்சர் வன்னி அரசு</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p> <h2>நயினார் நாகேந்திரன்</h2><p>தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் குறித்தும், அவரது குடும்பம் குறித்தும் மிக மோசமான அருவருக்கத்தக்க வகையில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களின் பேசிய அநாகரிகமான பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.</p><p>பாஜக சனாதனிகளிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?</p> <h2>பாஜக</h2><p>காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி குறித்து இந்திய தலைமை அமைச்சர் மோடி பேசாத அவதூறா?</p><p>காஷ்மீரில் 8 வயது ஆசிபாவை கூட்டு பாலியல்  வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேரணி நடத்தி, 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானுவை கூட்டு பாலியல்  வன்கொடுமை செய்த குற்றவாளிகளை விடுதலை செய்து, வரவேற்பு அளித்தவர்கள் தான் பாஜகவினர்.</p> <p>பெண்களுக்கு எதிரான வெறுப்பும், அவதூறும் தான் அவர்கள் பேசும் அரசியலின் அடிப்படை. இதற்கு முன்னரும் நடிகை ஒருவர் குறித்தும் நயினார் அவர்களின் பேச்சு தரம் தாழ்ந்து அமைந்திருந்தது.</p><p>நயினார் நாகேந்திரன் அவர்கள் தமது அநாகரிகமான பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்காவில் வரலாறு காணாத வகையில் குற்ற சம்பவங்கள் குறைந்து வருகிறது: FBI அறிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/world/historic-drop-in-us-crime-fbi-report</link><comments>https://www.maalaimalar.com/news/world/historic-drop-in-us-crime-fbi-report#comments</comments><guid isPermaLink="false">a03a095d-0db5-42bf-9773-360409f7dd55</guid><pubDate>Sat, 15 Aug 2026 08:29:31 +0000</pubDate><atom:updated>2026-08-15T08:29:31.772Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,America,FBI,எஃப்.பி.ஐ.,crime rate,குற்ற சம்பவம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/4zlwz822/Untitled-design-59.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமெரிக்காவில் கொலை மற்றும் வன்முறைகள் குறைவு]]></media:title><media:description type="html"><![CDATA[ USA Crime rate]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/4zlwz822/Untitled-design-59.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்கவில் 1936-ல் இருந்து கொலை மற்றும் வன்முறைக் குற்றங்களின் புள்ளிவிவரங்களை ஆராய்ந்தபோது, நாட்டின் 2025-ஆம் ஆண்டு கொலை விகிதம் வரலாற்றுச் சரிவை எட்டியுள்ளது என்று <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE" rel="nofollow">அமெரிக்கா</a>வின் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ தெரிவித்துள்ளது. </p><p>மேலும், கொலை மற்றும் வன்முறை குற்றங்களின் புள்ளிவிவரங்கள் ஆண்டுக்கு ஆண்டு மிகப்பெரிய சரிவை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த சரிவுக்கான காரணங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், இந்த ஆண்டில் தேசிய அளவில் ஒரு லட்சம் பேருக்கு 4.1 கொலைகள் என்ற விகிதத்தில், FBI வரலாற்றிலேயே மிகக் குறைந்த விகிதமாக 1955 மற்றும் 1956 ஆம் ஆண்டுகளுடன் ஒத்துப்போகிறது.</p><h3><strong>குற்றவியல் நீதிமன்றம் அறிக்கை</strong></h3><p>இதற்கிடையில், குற்றவியல் நீதிமன்றத்தின் அறிக்கை, கொலை விகிதங்கள் தொடர்ந்து குறைந்து வருவதை குறிப்பிட்டு காட்டுகிறது. இது 2026-ல் தேசிய கொலை விகிதம் மற்றொரு வரலாற்று சரிவை எட்டக்கூடும் என்றும் சுட்டிக்காட்டுகிறது.</p><p>அமெரிக்காவில் குற்ற சம்பவங்கள் குறைந்து வருவது குறித்து குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான ஆடம் கெல்ப் கூறுகையில், “கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட மிக முக்கியமான பொது பாதுகாப்பு முன்னேற்றங்களில் இதுவும் ஒன்றாகும்.</p><p>2022-ஆம் ஆண்டிலிருந்து கொலைகள், பாதிக்கும் கீழாக குறைந்துள்ளன. இதன் காரணமாக உயிர்கள் காப்பாற்றப்பட்டு, குடும்பங்கள் மன உளைச்சலிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.</p><p>சமூகங்கள் பாதுகாப்பானதாக உருவாக்கப்பட்டுள்ளன. இது கொண்டாடப்பட வேண்டிய ஒன்றாகும். இந்த குற்ற சம்பவங்கள் வீழ்ச்சி அடைந்ததை விட, அதற்கான காரணங்கள் தெளிவாக தெரியாமல் உள்ளன.</p><p>குற்றவியல் நீதித்துறை செயல்பாடுகள் மற்றும் உத்திகளில் ஏற்படும் மாற்றங்கள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் சமூகம், கலாச்சாரத்தில் ஏற்படும் பரந்த மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு சாத்தியமான காரணிகளை ஆராய்ச்சியாளர்களும் சட்ட அமலாக்க அதிகாரிகளும் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p>ஆனால் எது, எங்கே, யாருக்கு, மற்றும் என்ன சூழ்நிலைகளில் பலனளிக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நாம் புரிந்துகொள்ளாத முன்னேற்றத்தை வீணடிக்கும் அபாயமும் உள்ளது” என்று அவர் கூறினார்.</p><h3><strong>எஃப்.பி.ஐ அறிக்கை</strong></h3><p>இதுகுறித்து FBI இயக்குநர் காஷ் படேல் வெளியிட்ட அறிக்கையில், “வன்முறை குற்றங்களை ஒடுக்குவதற்காக, FBI-யும் களத்தில் உள்ள நமது சட்ட அமலாக்க அதிகாரிகளும் ஆற்றிவரும் மகத்தான பணிக்கு 2025-ஆம் ஆண்டின் குற்றப் புள்ளிவிவரங்கள் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.</p><p>17,000-க்கும் மேற்பட்ட முகமைகள் தரவுகளைச் சமர்ப்பித்துள்ளன. இது 2024-ஆம் ஆண்டை விட 2.4% அதிகமாக உள்ளது.</p><p>5 லட்சம் முதல் 1 மில்லியன் வரையிலான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் கடுமையான குற்றங்கள் பெருமளவில் குறைந்துள்ளன; கொலைகள் 27%, கொள்ளை 23%, பாலியல் வன்கொடுமை 18% மற்றும் வன்முறைக் குற்றங்கள் 15% வரையிலும் குறைந்துள்ளன.</p><p>இதற்கிடையில், வெறுப்புக் குற்றங்கள் ஒட்டுமொத்தமாக 7% குறைந்து, 2024-ல் 11,404 ஆக இருந்த எண்ணிக்கை 2025-ல் 10,606 ஆக சரிந்துள்ளது.</p><p>பணியில் இருந்த சட்ட <a href="https://www.maalaimalar.com/topic/அமலாக்கத்-துறை">அமலாக்கத் துறை </a>அதிகாரிகள் மீதான தாக்குதல்கள் 2025-ஆம் ஆண்டில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டின.</p><p>அந்த ஆண்டில் நடந்த 90,178 தாக்குதல்களில் கால் பங்கு, அதிகாரிகள் கலவர அழைப்புகளுக்குப் பதிலளித்துக் கொண்டிருந்தபோது நிகழ்ந்தன. கடமையில் இருந்தபோது 53 அதிகாரிகள் குற்றவியல் ரீதியாகக் கொல்லப்பட்டனர்” என்று அந்த FBI அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரூ.13,000 கோடி போதைப்பொருள் வழக்கு: ஐக்கிய அமீரகத்தில் பிடிப்பட்ட கடத்தல் மன்னன்</title><link>https://www.maalaimalar.com/news/national/rs-13000-crore-drug-trafficking-case-indian-officials-arrest-accused-in-uae</link><comments>https://www.maalaimalar.com/news/national/rs-13000-crore-drug-trafficking-case-indian-officials-arrest-accused-in-uae#comments</comments><guid isPermaLink="false">57bbcbe2-8513-49b7-94bd-fb92a47b6c4b</guid><pubDate>Sat, 15 Aug 2026 08:26:51 +0000</pubDate><atom:updated>2026-08-15T08:26:51.785Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>போதைப்பொருள் கடத்தல்,narcotics control bureau,virendra singh basoya,வீரேந்திர சிங் பசோயா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/2ze7bb55/Untitled-design-58.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ரூ.13,000 கோடி போதைப்பொருள் மன்னன் UAE-யில் கைது]]></media:title><media:description type="html"><![CDATA[ 13,000 Crore Drug Kingpin Arrested in UAE]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/2ze7bb55/Untitled-design-58.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>போதைப்பொருள் வழக்கில் தேடப்பட்டு வந்த வீரேந்திர சிங் பசோயாவை ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து, <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">போதைப்பொருள் கடத்தல்</a> கட்டுப்பாட்டு பிரிவினர் இந்தியாவிற்கு அழைத்து கொண்டு வந்தனர்.</p><p>இந்தியாவில் இருந்து வெளிநாட்டு சந்தைகளுக்கு பெருமளவு போதைப்பொருள் கடத்திய சம்பவத்தில் பசோயாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் அதிகாரிகள் குற்றம்சாட்டினர்.</p><h3><strong>ரூ.13,000 கோடி போதைப்பொருள் வழக்கு</strong></h3><p>கடந்த 2024 பிப்ரவரி 21 அன்று, புனே காவல்துறை டெல்லியில் திவேஷ் சரண்ஜித் பூட்டானி மற்றும் சந்தீப் குமார் ராஜ்பால் பசோயா ஆகியோரை கைது செய்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த சுமார் 970 கிலோ போதைப்பொருளை பறிமுதல் செய்தது.</p><p>இதுகுறித்து புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், “சர்வதேச சந்தையில் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த சரக்கு, லண்டனுக்கு அனுப்பி விற்பனை செய்யப்பட இருந்தது. </p><p>வீரேந்திர பசோயாவின் தலைமையில் பூட்டானி மற்றும் சந்தீப் குமார் ராஜ்பால் பசோயா ஆகியோர், இந்த போதைப்பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்தும் செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.</p><p>சுமார் ரூ.13,000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக, பசோயா என்பவரை டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவு தேடி வந்தனர்.</p><p>மேலும் அவருடைய மகன் ரிஷப் பசோயாவுக்கு எதிராகவும் இண்டர்போல் அதிகாரிகள் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்தனர்.</p><p>இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தில் டெல்டா லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சந்தீப் ஹனுமான்சிங் யாதவ் மற்றும் நிறுவன மேலாளர் தேவேந்திர ராம்ஃபுல் யாதவ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போதைப்பொருளை ஒரு வழக்கமான வர்த்தக சரக்கு போல் மாற்றி, பாதுகாப்பு சோதனைகளில் மாட்டிக் கொள்ளாதவாறு ஏற்றுமதி செய்தது தெரியவந்தது,” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><h3><strong>மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா</strong></h3><p>இந்த பசோயாவின் கைது நடவடிக்கை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “மோடி அரசு, வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை இடைவிடாமல் தேடிப்பிடித்து, அவர்களை முழுமையாக அழித்து வருகிறது.</p><p>போதைப்பொருட்களுக்கு எதிரான சகிப்புத்தன்மையற்ற கொள்கையில் ஒரு புதிய மைல்கல்லை உருவாக்கும் வகையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து தப்பியோடிய போதைப்பொருள் மன்னன் வீரேந்தர் சிங் பசோயாவை அதிகாரிகள் என்சிபி மீட்டுள்ளது.</p><p>குற்றவாளியை முழுமையாக பின்தொடர்ந்ததன் மூலம், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் எங்கு ஒளிந்திருந்தாலும், இந்திய சட்டத்தின் கரத்திலிருந்து அவர்களால் தப்பிக்க முடியாது என்பதை நமது அமைப்புகள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளன” என்று பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>24 மணி நேரத்திற்குள் மாற்றம்: என்ரிகா நிறுவனத்தின் 11 மதுபான வகைகளுக்கான தடையை நீக்கியது டாஸ்மாக் நிர்வாகம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/24-hour-turnaround-tasmac-lifts-ban-on-11-enrica-liquor-brands</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/24-hour-turnaround-tasmac-lifts-ban-on-11-enrica-liquor-brands#comments</comments><guid isPermaLink="false">f0bc7817-a1ce-4715-ae22-199cfd2bb0b4</guid><pubDate>Sat, 15 Aug 2026 08:22:28 +0000</pubDate><atom:updated>2026-08-15T08:22:28.409Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>FSSAI,Tasmac,டாஸ்மாக் நிர்வாகம்,Brands Enrica,என்ரிகா நிறுவனம்,மதுபானக்கடை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/2pwidhja/TASMAC.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Brands Enrica]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/2pwidhja/TASMAC.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் பிரபல மதுபான உற்பத்தி நிறுவனமான என்ரிகா எண்டர்பிரைசஸ் தயாரிக்கும் 11 வகையான மதுபானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த விற்பனைத் தடையை, உத்தரவிட்ட 24 மணி நேரத்திற்குள்ளேயே டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகத் திரும்பப் பெற்றுள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட பிராண்டுகளின் விற்பனை மற்றும் கிடங்கு விநியோகம் மீண்டும் உடனடியாகச் செயல்பாட்டிற்கு வரவுள்ளது.</p><h2>உணவு <strong>பாதுகாப்புத் து</strong>றை ஆய்வு</h2><p>முன்னதாக, பூந்தமல்லி பகுதியில் இயங்கி வரும் என்ரிகா நிறுவனத்தின் உற்பத்தி வளாகத்தில் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தீவிர ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில், தயாரிப்புகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் செயற்கை சுவையூட்டும் பொருட்கள் சேர்க்கப்பட்டதாகக் கூறி, 10 பிராந்தி வகைகள் மற்றும் 1 ரம் வகை உள்ளிட்ட 11 பிராண்டுகளை உடனடியாகச் சந்தையிலிருந்து திரும்பப் பெற FSSAI பரிந்துரைத்திருந்தது.</p><h2>டாஸ்மாக் நி<strong>ர்வாகத்தின்</strong> முந்தைய நடவடிக்கை</h2><p>FSSAI அமைப்பின் அறிக்கையைத் தொடர்ந்து, <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/11-liquor-brands-banned-in-tasmac">மதுவிலக்கு </a>மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையரின் வழிகாட்டுதலின்படி டாஸ்மாக் மேலாண் இயக்குநர் கே.நந்தகுமார் அனைத்து மண்டல மற்றும் டிப்போ மேலாளர்களுக்கும் அவசரச் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். அதில், குறிப்பிட்ட 11 மதுபான வகைகளையும் சில்லறை விற்பனைக் கடைகளுக்கும், FL-2 மற்றும் FL-3 உரிமம் பெற்ற ஹோட்டல்கள் மற்றும் கிளப்புகளுக்கும் விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.</p><h2>மீண்டும் <strong>விற்பனைக்கு அனும</strong>தி </h2><p>தடை விதிக்கப்பட்ட குறுகிய கால இடைவெளியில், உரிய தெளிவுபடுத்தல்கள் மற்றும் நடைமுறை மறுபரிசீலனைகளுக்குப் பிறகு, அந்த 11 மதுபான வகைகளின் மீதான தடையை நீக்கி டாஸ்மாக் நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து, கிடங்குகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த என்ரிகா நிறுவனத்தின் தயாரிப்புகளை மீண்டும் சில்லறை விற்பனை நிலையங்களுக்கு அனுப்பும் பணிகள் தொடங்கியுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>போதை- வன்முறை கலாசாரத்திற்கு இளைஞர்கள் இடம் கொடுக்கக்கூடாது: ஜி.கே. வாசன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/gk-vasan-says-youth-should-not-give-in-to-the-culture-of-drugs-and-violence</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/gk-vasan-says-youth-should-not-give-in-to-the-culture-of-drugs-and-violence#comments</comments><guid isPermaLink="false">b11f6f15-df47-45b7-b36b-8d7e0a371ebd</guid><pubDate>Sat, 15 Aug 2026 08:12:03 +0000</pubDate><atom:updated>2026-08-15T08:12:03.423Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>GK Vasan,Tamil maanila congress,ஜிகே வாசன்,தமிழ் மாநில காங்கிரஸ்,Independence Day,சுதந்திர தினம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/h1k389wm/vasan.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஆழ்வார்பேட்டையில் உள்ள த.மா.கா. தலைமை அலுவலகத்தில் தலைவர் ஜி.கே.வாசன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆழ்வார்பேட்டையில் உள்ள த.மா.கா. தலைமை அலுவலகத்தில் தலைவர் ஜி.கே.வாசன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/h1k389wm/vasan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சுதந்திரத்தின் பெருமையையும், தியாகிகள் செய்த தியாகத்தையும் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு இளம் தலைமுறையினரிடம் இருக்கிறது.</strong></em></p><p>80-வது சுதந்திர தினத்தையொட்டி ஆழ்வார்பேட்டையில் உள்ள த.மா.கா. தலைமை அலுவலகத்தில் தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/ஜிகே-வாசன்">ஜி.கே.வாசன்</a> தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.</p><p>இந்த நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், ராணி கிருஷ்ணன் நம்பி, விடியல் சேகர், சக்தி வடிவேல், கோவிந்த சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். மக்கள் தலைவர் மூப்பனார் பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது.</p><p>பின்னர் ஜி.கே. வாசன் நிருபர்களிடம் கூறும்போது, </p><p>சுதந்திரத்தின் பெருமையையும், தியாகிகள் செய்த தியாகத்தையும் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு இளம் தலைமுறையினரிடம் இருக்கிறது. இளைய தலைமுறையினர் போதை, வன்முறைக் கலாச்சாரத்திற்கு இடம் கொடுக்கக்கூடாது.  தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாக மாற்றம் ஏற்பட்டு உள்ளது. மக்களின் இந்த விருப்பத்தை வரவேற்போம். மாற்றங்கள் தொடர வேண்டும் என்றார்.</p><p>சிந்தாதிரிப்பேட்டையில் த.மா.கா சார்பில் வட்ட தலைவர் பி.அழகுவேல் தலைமையில் மாநில பொது செயலாளர் முனவர் பாட்ஷா தேசிய கொடியேற்றினார். </p><p>மாநில கொள்கை பரப்பு செயலாளர் வி.எம்.அரவணன் இனிப்புகள் வழங்கினார். இதில் சர்கிள் தலைவர் என்.ஆர்.டி.தயாளன், கே.சந்தானம், புகழேந்தி, ரெக்ஸ் ஜெகன், கிருஷ்ணன், ஆர்.எஸ்.குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>பிரான்ஸில் காட்டுத்தீ: 1,100 ஹெக்டேர் காடுகள் சாம்பல்; 500-க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்!</title><link>https://www.maalaimalar.com/news/world/wildfire-in-france-1100-hectares-burned-over-500-evacuated</link><comments>https://www.maalaimalar.com/news/world/wildfire-in-france-1100-hectares-burned-over-500-evacuated#comments</comments><guid isPermaLink="false">9853bec2-7c44-47f3-940c-e603c300e5f9</guid><pubDate>Sat, 15 Aug 2026 08:05:13 +0000</pubDate><atom:updated>2026-08-15T08:05:13.255Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பிரான்ஸ்,France,காட்டுத்தீ,France Wildfire,Luglon Fire,லுக்லான் தீவிபத்து,France Heatwave</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/wp9x2o2a/France-Wildfire" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ France Wildfire ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/wp9x2o2a/France-Wildfire?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஐரோப்பிய நாடான பிரான்ஸின் தென்மேற்குப் பகுதியில் திடீரெனப் பரவிய <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80">காட்டுத்தீ</a>யால் ஒட்டுமொத்தப் பகுதியும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. </p><p>இதுவரை 1100 ஹெக்டேருக்கும் அதிகமான காடுகள் தீயில் கருகியுள்ள நிலையில், பாதுகாப்பு கருதி 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு அவசரமாக வெளியேறினார்.</p><h2><strong>தீவிரம் அடைந்த வெப்ப அலை</strong></h2><p>இந்த ஆண்டு கோடைகாலத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D">பிரான்ஸ்</a> நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தொடர்ச்சியான வெப்ப அலைகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>காடுகள் வறண்டு, மிக எளிதாகத் தீப்பற்றக்கூடிய "தகரப் பெட்டி" போன்ற சூழலில் இருந்ததே இந்தத் தீ விபத்து மிக வேகமாகப் பரவியதற்குக் முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. </p><p>வியாழக்கிழமை அன்று லேண்ட்ஸ் மாகாணத்தில் இந்த புதிய காட்டுத்தீ உருவாகியுள்ளது.</p><h2><strong>தீயணைப்பு வீரர்களின் போராட்டம்</strong></h2><p>காட்டுத்தீயைக் கட்டுக்குள் கொண்டு வர 500-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் அதிநவீன வாகனங்கள் களமிறக்கப்பட்டுள்ளன. </p><p>நள்ளிரவு நேரத்தில், 'லாண்டஸ் டி காஸ்கோக்னே' இயற்கை பூங்காவில் அமைந்துள்ள 'லுக்லான்' என்ற சிறிய கிராமத்திற்கு மிக அருகில் தீப்பொறிகள் எழும்பின. </p><p>எனினும், தீயணைப்பு வீரர்கள் இரவு முழுவதும் போராடி தீயை கிராமத்திற்குள் நுழைய விடாமல் தடுத்தனர். இதனால் வீடுகள் எதுவும் சேதமடையவில்லை என்றும் கூறினர்.</p><h2><strong>அடுத்த 15 மணி நேரம்</strong></h2><p>நேற்றைய நிலவரப்படி, லுக்லான் கிராமம் முழுவதும் அடர்ந்த கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது. தீயின் வேகம் தற்பொழுது சற்றே குறைந்திருந்தாலும், மதிய நேரத்தில் வெப்பநிலை மீண்டும் 36°C வரை உயரக்கூடும் என்பதால், அணைக்கப்பட்ட தீ மீண்டும் பற்றிக்கொள்ளலாம் எனத் தீயணைப்புத் துறைத் தலைவர் அர்னாட் ஃபாப்ரே கவலை தெரிவித்துள்ளார். </p><p>மாகாண அதிகாரி கில்ஸ் கிளாரூல் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அடுத்த 15 மணி நேரம் நமக்கு மிகவும் சவாலான மற்றும் தீர்க்கமான நேரமாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.</p><h2><strong>வரலாற்றுப் பின்னணி</strong></h2><p>பிரான்ஸ் அதிகாரிகள் தற்பொழுது ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிட்டு வருகின்றனர். </p><p>தென்மேற்கு பிரான்சில் கடந்த 1949-ஆம் ஆண்டிற்குப் பிறகு ஏற்பட்ட மிக மோசமான மற்றும் மிகப்பெரிய காட்டுத்தீ சம்பவங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது என்றும் கூறி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>டிஜிட்டல் ஊடகங்களுக்கு இணையான சமவாய்ப்பு: டிவியின் 12 நிமிட விளம்பரக் கட்டுப்பாட்டை நீக்கியது மத்திய அரசு!</title><link>https://www.maalaimalar.com/news/national/equal-opportunity-for-digital-media-centre-removes-12-minute-tv-ad-cap</link><comments>https://www.maalaimalar.com/news/national/equal-opportunity-for-digital-media-centre-removes-12-minute-tv-ad-cap#comments</comments><guid isPermaLink="false">b8427785-59e0-4ae9-8916-1769af845aa7</guid><pubDate>Sat, 15 Aug 2026 08:00:27 +0000</pubDate><atom:updated>2026-08-15T08:00:27.701Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>central government,digital media,advertising cap,டிஜிட்டல் ஊடகங்கள்,டிவி விளம்பரம்,டிஜிட்டல் மீடியா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/voa7i20a/TV.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ advertising cap ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/voa7i20a/TV.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தொலைக்காட்சி சேனல்கள் ஒரு மணி நேரத்திற்கு 10 நிமிடங்கள் வணிக விளம்பரம் மற்றும் 2 நிமிடங்கள் சுய விளம்பரம் என மொத்தம் 12 நிமிடங்கள் மட்டுமே விளம்பரம் ஒளிபரப்ப வேண்டும் என்ற கட்டுப்பாடு நடைமுறையில் இருந்தது. 2006-ஆம் ஆண்டு <a href="https://www.maalaimalar.com/news/national/national-flag-delivered-by-drone-to-post-office-har-ghar-tiranga-himachal">கேபிள் தொலைக்காட்சி</a> நெட்வொர்க் விதிகளின் கீழ் கொண்டுவரப்பட்ட இந்த விளம்பரக் கட்டுப்பாட்டை தளர்வு செய்து நீக்குவதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p><h2>டிஜிட்டல் ஊட<strong>கங்களுக்கு இணை</strong>யான சமவாய்ப்பு</h2><p>தற்போதுள்ள காலகட்டத்தில் டிஜிட்டல் மற்றும் சமூக ஊடக தளங்களில் விளம்பரங்களுக்கு எந்தவித கால வரம்பும் கிடையாது. இதனால் பாரம்பரிய தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு கடும் வருவாய் இழப்பும் சமமற்ற போட்டியும் ஏற்பட்டு வந்தது. இந்த இடைவெளியைக் குறைத்து, தொலைக்காட்சி ஊடகங்களுக்கும் டிஜிட்டல் தளங்களுக்கு இணையான சமமான வாய்ப்பை வழங்குவதற்காகவும், தொழில் நடத்துவதை எளிதாக்குவதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>தொலைக்காட்சி<strong>த் துறையின் அப</strong>ரிமிதமான வளர்ச்சி</h2><p>கடந்த 2006-ஆம் ஆண்டு இக்கட்டுப்பாடு விதிக்கப்பட்ட போது இந்தியாவில் வெறும் 62 தொலைக்காட்சி சேனல்கள் மட்டுமே இயங்கி வந்தன. ஆனால் தற்போது 900-க்கும் மேற்பட்ட சேனல்கள் செயல்பட்டு வருகின்றன. </p><p>மேலும், கேபிள் டிவி, DTH, HITS மற்றும் IPTV போன்ற நவீன டிஜிட்டல் தொழில்நுட்ப மாற்றங்களால் நேயர்களுக்கு பல நூற்றுக்கணக்கான சேனல்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சந்தையில் போதிய போட்டி நிலவுவதால், இனி சந்தை விதிகளே விளம்பர நேரத்தைத் தீர்மானிக்கும் என அரசு தெளிவுபடுத்தியுள்ளது.</p><h2>உடனடியாக அம<strong>லுக்கு வரு</strong>கிறதா?</h2><p>மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் எடுத்துள்ள இந்த முடிவு, கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க் விதிகள், 1994 திருத்தம் செய்யப்பட்டு மத்திய அரசின் அரசிதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் நாளில் இருந்து நடைமுறைக்கு வரும்.</p>]]></content:encoded></item><item><title>16-வது உலகக் கோப்பை ஆக்கி தொடர் இன்று தொடக்கம்- வேல்ஸ் உடன் மோதும் இந்தியா </title><link>https://www.maalaimalar.com/sports/india-vs-wales-opener-16th-hockey-world-cup-starts-today</link><comments>https://www.maalaimalar.com/sports/india-vs-wales-opener-16th-hockey-world-cup-starts-today#comments</comments><guid isPermaLink="false">f3a7af6e-3683-48ee-9dd8-3721f43967b9</guid><pubDate>Sat, 15 Aug 2026 07:55:14 +0000</pubDate><atom:updated>2026-08-15T07:55:14.315Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய அணி,Indian team,hockey,ஆக்கி,Hockey World Cup,உலகக்கோப்பை ஆக்கி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/4ye6ichp/Hockey.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Hockey]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/4ye6ichp/Hockey.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>16-வது உலக கோப்பை ஆக்கி போட்டியை பெல்ஜியம், நெதர்லாந்து ஆகியவை இணைந்து நடத்துகின்றன. </p><p>இந்த போட்டி இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. 30-ந் தேதி வரை உலக கோப்பை ஆக்கி ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் நடைபெறுகிறது.</p><h2>16 நாடுகள்</h2><p>ஆண்கள் பிரிவில் பங்கேற்கும் 16 நாடுகளும்  4 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. இந்திய அணி டி பிரிவில் இடம்பெற்று உள்ளது. பாகிஸ்தான்,  இங்கிலாந்து  வேல்ஸ் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.</p><p>‘ஏ’ பிரிவில் நெதர்லாந்து, அர்ஜென்டினா, நியூசிலாந்து, ஜப்பான்  ‘பி’ பிரி வில்  நடப்பு சாம்பியன் ஜெர்மனி, பெல்ஜியம், </p><p>பிரான்ஸ், மலேசியா  ‘சி’ பிரிவில்  ஆஸ்திரேலியா, ஸ்பெயின், அயர்லாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் இடம் பெற்று உள்ளன.</p><p>ஒவ்வொரு அணியும்  தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில்  ஒவ்வொரு பிரிவிலும் முதல்  2 இடங்களை பிடிக்கும் அணிகள் அதாவது 8 நாடுகள் 2-வது  சுற்றுக்கு  தகுதி பெறும். </p><p>எஞ்சிய 8 அணிகள்‌ 9 முதல் 16-வது இடங்க ளுக்கான போட்டியில் ஆடும். பெல்ஜியத்தின் வேவ்ரே, நெதர்லாந்தின் ஆம்ஸ்டல்வீன் ஆகிய நகரங்களில் போட்டி நடக்கிறது. மொத்தம் 50  ஆட்டங்கள் நடைபெறுகிறது.</p><h2>இந்தியா - வேல்ஸ் </h2><p>உலக கோப்பை ஆக்கி போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இந்தியா-வேல்ஸ் (‘டி’ பிரிவு) அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு ஆம்ஸ்டல்வீனில் போட்டி  நடக்கிறது.</p><p>ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>ஒலிம்பிக்கில் 8 முறை தங்கம் வென்ற இந்திய அணி உலக கோப்பையில் பெரிதாக சாதிக்கவில்லை. </p><p>1975-ல்  மட்டும் சாம்பியன் ஆனது. அதற்கு பிறகு சோபிக்க முடியவில்லை. 51 ஆண்டுகளுக்கு பிறகு  உலக  கோப்பை  மீண்டும் கிடைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><h2>மற்ற ஆட்டங்கள்</h2><p>இன்று நடைபெறும் மற்ற  போட்டிகளில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி- மலேசியா (மாலை 6), இங்கிலாந்து- பாகிஸ்தான் (இரவு 10.30), பெல்ஜியம்- பிரான்ஸ் (நள்ளிரவு 12.30 மணி) அணிகள் மோதுகின்றன.</p><p>பெண்கள் பிரிவில் நடைபெறும் ஆட்டங்களில் ஆஸ்திரேலியா-ஜப்பான், ஜெர்மனி-ஸ்கார்ட்லாந்து, நெதர்லாந்து-சிலி, அர்ஜென்டினா-அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.</p><p>போட்டிகள் அனைத்தும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>சீன அச்சுறுத்தல்: தைவானில் முடங்கிய இணைய சேவை! போர்க்கால அவசரநிலை சோதனை</title><link>https://www.maalaimalar.com/news/world/internet-services-disrupted-in-taiwan</link><comments>https://www.maalaimalar.com/news/world/internet-services-disrupted-in-taiwan#comments</comments><guid isPermaLink="false">cc9abcfc-fef0-4b85-8eb5-a7e283159721</guid><pubDate>Sat, 15 Aug 2026 07:37:27 +0000</pubDate><atom:updated>2026-08-15T07:37:27.047Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Taiwan,தைவான்,Taiwan  Internet shutdown,Chinese Threat,சீன அச்சுறுத்தல்,தைவான் இணைய சேவை முடக்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/ultxvyl4/TAIWAN.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Taiwan  Internet shutdown]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/ultxvyl4/TAIWAN.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தைவான் நாட்டின் மீது சீனா எந்நேரமும் படையெடுக்கலாம் அல்லது வான்வழித் தாக்குதல்களை நடத்தலாம் என்ற அச்சம் அதிகரித்து வரும் சூழலில், தைவான் அரசு நாடு முழுவதும் தனது வருடாந்திர 'ஹான் குவாங்' சிவில் பாதுகாப்புப் பயிற்சியை நடத்தியுள்ளது. இந்த முறை வழக்கம் போல் நடத்தப்படும் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை சைரன் பயிற்சிகளுடன் சேர்த்து, வரலாற்றிலேயே முதல் முறையாக நாடு தழுவிய அளவில் கைபேசி இணைய வேகத்தை அதிரடியாகக் குறைத்து ‘இணைய முடக்க’ சோதனையையும் தைவான் மேற்கொண்டுள்ளது.</p><h2>டிக்டாக் <strong>முதல் சோஷியல் மீடியா</strong> வரை ஸ்தம்பித்த சேவைகள்</h2><p>இந்தப் பயிற்சியின் போது தைவானின் தலைநகர் தைபே உட்பட முக்கிய பகுதிகளில் இணைய வேகம் மிகக் கடுமையாகக் குறைக்கப்பட்டது. சாதாரண கைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் மட்டுமே வேலை செய்தன. உயர் அலைவரிசை தேவைப்படும் டிக்டாக், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள், வீடியோ ஸ்ட்ரீமிங் சேவைகள் மற்றும் வீடியோ கால்கள் முற்றிலும் செயல்படாமல் முடங்கின. பல பயனர்களுக்கு டிக்டாக் செயலி திறக்கவே இல்லை; இன்ஸ்டாகிராமில் ஒரு மெசேஜ் செல்ல 30 வினாடிகளுக்கு மேல் ஆனதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.</p><h2>சைர<strong>ன் ஒலிகள்</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/news/world/indonesia-hit-by-powerful-7-7-quake-coastal-regions-suffer-severe-damage">வான்வழித் தாக்குதல்</a> சைரன் ஒலித்தவுடன், காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் தெருக்களில் இருந்த மக்களை உடனடியாக அருகில் உள்ள நிலத்தடிப் பாதைகள் மற்றும் வாகனக் காப்பகங்களுக்குச் செல்ல அறிவுறுத்தினர். சில நிமிடங்களிலேயே பரபரப்பான நகர வீதிகள் முற்றிலும் வெறிச்சோடின. அதே நேரத்தில், மக்களின் செல்போன்களுக்கு "தகவல் தொடர்பு உள்கட்டமைப்பு மீதான தாக்குதலைச் சித்தரிக்கும் வகையில் இணைய வேகம் குறைக்கப்படுகிறது" என்ற எச்சரிக்கைச் செய்தியும் அனுப்பப்பட்டது.</p><h2>ரேடியோ <strong>அலைவரி</strong>சை</h2><p>இணையம் மற்றும் 4G/5G நெட்வொர்க் முற்றிலும் முடங்கும் போது, நாட்டின் மக்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு அமைப்புகள் எவ்வாறு தொடர்பில் இருப்பது என்பதைத் தைவான் பரிசோதித்தது. சில தன்னார்வ சிவில் பாதுகாப்பு அமைப்புகள் இணையமே தேவையில்லாத, குறைந்த மின்சாரத்தில் இயங்கும் நீண்டதூர ரேடியோ அலைவரிசைகள் மற்றும் புளூடூத் சாதனங்கள் மூலம் மெசேஜ்களை அனுப்பி வெற்றிகரமாகச் சோதித்தனர். இதன் மூலம் அவசர காலத்தில் அரசின் கட்டளைகளையும் தகவல்களையும் மக்களுக்குக் கொண்டு சேர்க்க முடியும் என்பது உறுதி செய்யப்பட்டது.</p><h2>சைபர் தாக்<strong>குதல் அச்சுறுத்த</strong>ல்</h2><p>தைவானை உலகத்துடன் இணைக்கும் 16 சர்வதேச ஆழ்கடல் இணைய கேபிள்கள் மீது சீனா மறைமுகத் தாக்குதல்களை நடத்தும் அபாயம் உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் சீனக் கப்பல்கள் தைவானின் கடல்சார் கேபிள்களைச் சேதப்படுத்திய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.</p><p>ஒருவேளை போர் மூண்டால், சீனா முதலில் தைவானின் இணையத் தொடர்பையும், ஆழ்கடல் கேபிள்களையும் துண்டித்து, நாட்டை உலகிலிருந்து தனிமைப்படுத்த முயற்சிக்கும் என்பதால், இந்த முன்கூட்டிய டிஜிட்டல் முடக்கப் பயிற்சி மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.</p><h2>உக்ரைன் <strong>போரிலிருந்து க</strong>ற்றுக்கொண்ட பாடம்</h2><p>ரஷிய-உக்ரைன் போரின் போது உக்ரைனின் இணையக் கட்டமைப்புகள் அழிக்கப்பட்ட பிறகு, எலான் மாஸ்க்கின் 'ஸ்டார்லிங்க்' செயற்கைக்கோள் இணையம் அந்நாட்டிற்குப் பெரும் உதவியாக இருந்தது. அதேபோல, தைவானும் குறைந்த புவி சுற்றுப்பாதையில் இயங்கும் செயற்கைக்கோள் இணைய சேவைகளை நாட்டிற்குள் கொண்டு வரச் சட்டத் திருத்தங்களைச் செய்து வருகிறது. எதிரி நாடுகள் இணையத்தைத் துண்டித்தாலும் செயற்கைக்கோள் மூலம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யத் தைவான் நடவடிக்கை எடுத்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>சுதந்திர தின விழாவை 2-வது ஆண்டாக புறக்கணித்த கார்கே, ராகுல் - காரணம் இதுதான்!</title><link>https://www.maalaimalar.com/news/national/mallikarjun-kharge-rahul-gandhi-skip-independence-day-event-for-2nd-second-consecutive-year</link><comments>https://www.maalaimalar.com/news/national/mallikarjun-kharge-rahul-gandhi-skip-independence-day-event-for-2nd-second-consecutive-year#comments</comments><guid isPermaLink="false">af4513c7-a6db-4020-9f49-3b36e55dfd8f</guid><pubDate>Sat, 15 Aug 2026 07:29:07 +0000</pubDate><atom:updated>2026-08-15T07:29:07.354Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Congress,காங்கிரஸ்,mallikarjun kharge,மல்லிகார்ஜூன கார்கே,Independence Day,சுதந்திர தினம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/u02tozgh/rahulgandhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rahul Gandhi - Mallikarjun Kharge]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/u02tozgh/rahulgandhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியும், கார்கேவும் தொடர்ந்து 2-வது ஆண்டாக சுதந்திர தின விழாவில் பங்கேற்கவில்லை.</strong></em></p><h2>பிரதமர் மோடி</h2><p>டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில் <a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-hoists-national-flag-red-fort-delhi">பிரதமர் மோடி</a> தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் தொடர்ந்து 2-வது ஆண்டாக சுதந்திர தின விழாவை புறக்கணித்தனர்.</p> <h2>சுதந்திர தின விழா</h2><p>2024-ம் ஆண்டு நடைபெற்ற <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">சுதந்திர தின விழா</a>வின்போது சர்ச்சை எழுந்தது. மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி மத்திய மந்திரிக்கு இணையான அந்தஸ்து கொண்டவர் ஆவார். செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் வழக்கமான மரபு மற்றும் நெறிமுறைகளுக்கு மாறாக கடைசி வரிசையில் அவருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்தது.</p> <p>ராகுல்காந்திக்கு பின் வரிசையில் இருக்கை ஒதுக்கியது மக்களுக்கு இழைக்கப்பட்ட அவமரியாதை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. அதே நேரத்தில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு இடம் அளிக்கும் வகையில் இருக்கை அமைப்பில் மாற்றம் செய்யப்பட்டதாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் அளித்து இருந்தது.</p> <h2>எதிர்க்கட்சி தலைவர்</h2><p>அரசின் நெறிமுறைகளின்படி இத்தகைய முக்கிய விழாக்களின்போது எதிர்க்கட்சி தலைவர் முன்வரிசையில் அமர வைக்கப்பட வேண்டும் என்பது வழக்கமாகும். இதன் காரணமாகவே ராகுல்காந்தியும், கார்கேவும் தொடர்ந்து 2-வது ஆண்டாக சுதந்திர தின விழாவில் பங்கேற்கவில்லை.</p>]]></content:encoded></item><item><title>நாளை நாக சதுர்த்தி: நாகராஜர்கள் அருளால் தோஷம் நீங்கி வாழ்வு வளம் பெறும் நாள்</title><link>https://www.maalaimalar.com/spirituality/tomorrow-naga-chathurthi-worship</link><comments>https://www.maalaimalar.com/spirituality/tomorrow-naga-chathurthi-worship#comments</comments><guid isPermaLink="false">b3f73337-b750-4be7-9a4e-81547d7b3865</guid><pubDate>Sat, 15 Aug 2026 07:23:06 +0000</pubDate><atom:updated>2026-08-15T07:23:06.222Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வழிபாடு,worship,நாக சதுர்த்தி,naga chaturthi</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/azhwh9yc/NagaChaturthi.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நாக சதுர்த்தி வழிபாடு]]></media:title><media:description type="html"><![CDATA[ நாக சதுர்த்தி வழிபாடு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/azhwh9yc/NagaChaturthi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஜாதகத்தில் உள்ள சர்ப்ப மற்றும் கிரக பீடைகள் தணியும். வீட்டில் அமைதி நிலவும். எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி நல்ல அதிர்ஷ்டம் பெருகும்.</strong></em> </p><p>‘நாகம்’ என்பது இந்து சமயத்தில் வெறும் பாம்பு அல்ல; அது தெய்வீக சக்தியின் அடையாளம். சிவபெருமானின் திருமேனியில் அலங்கரிக்கும் நாகம், மகாவிஷ்ணுவின் ஆதி சேஷன், சுப்ரமணிய சுவாமியின் திருவடியில் அமர்ந்திருக்கும் சர்ப்பம் –இவை அனைத்தும் நாக வழிபாட்டின் உயர்ந்த ஆன்மிக அர்த்தத்தை உணர்த்துகின்றன.</p><p>ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்திய ஆன்மிக மரபில் நாக வழிபாடு சிறப்பாக இருந்து வருகிறது. மனித வாழ்க்கையில் ஏற்படும் திருமணத் தடை, சந்தானப் பிரச்சனை, ராகு-கேது தோஷம், குடும்பத் துன்பம், மனஅமைதியின்மை போன்றவற்றிலிருந்து விடுபட நாக சதுர்த்தி விரதமும் பூஜையும் மிகவும் சக்திவாய்ந்ததாகக் கருதப்படுகிறது.</p><p>இந்த ஆண்டில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">நாக சதுர்த்தி</a> நாளை (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது. இந்த புனித நாளில் பக்தியுடன் நாகராஜர்களை வணங்குவோருக்கு தெய்வ அருள் கிட்டி வாழ்க்கை தடைகள் விலகும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/spirituality/naga-chaturthi-worship-2">நாக சதுர்த்தியின்</a> ஆதாரம் வேதங்கள், மகாபாரதம், புராணங்கள் ஆகியவற்றில் காணப்படுகிறது. காஸ்யப முனிவருக்கும் கத்ரு தேவிக்கும் நாகர்கள் பிறந்தனர். அவர்கள் தெய்வீக சக்தி பெற்றவர்களாக இருந்தாலும், தாயின் கட்டளையை மீறியதால் சாபம் பெற்றதாக புராணம் கூறுகிறது.</p><p>பிற்காலத்தில் தட்சகன் என்ற நாகம் தீண்டியதால் பரீட்சித் மன்னன் இறந்தான். இதனால் துயரமுற்ற ஜனமேஜயன், அனைத்து பாம்புகளையும் அழிக்க சர்ப்பயாகம் செய்தான். அந்த வேள்வியில் எண்ணற்ற நாகங்கள் தீயில் விழுந்து அழியத் தொடங்கின. அப்போது ஆஸ்திக முனிவர் வந்து ஜனமேஜயனை சமாதானப்படுத்தி யாகத்தை நிறுத்தினார். நாக இனத்திற்கு சாப விமோசனம் கிடைத்தது. அந்த அருள் நிகழ்ந்த தினமே நாக சதுர்த்தி எனப் போற்றப்படுகிறது.</p><p>இந்த வரலாறு நமக்கு ஒரு பெரிய ஆன்மிகப் பாடத்தை கற்பிக்கிறது: அழிவை விட கருணை உயர்ந்தது; கோபத்தை விட காப்பதே தெய்வீகமானது. நாகம் என்பது குண்டலினி சக்தியின் அடையாளம். மனித உடலில் உறங்கிக் கிடக்கும் தெய்வீக சக்தி விழிப்பதை நாகம் குறிக்கிறது. அதனால் யோக மரபிலும் நாகத்திற்கு உயர்ந்த இடம் உண்டு.</p><p>சிவன் – நாகாபரணம் அணிந்திருக்கிறார்.  விஷ்ணு – ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டிருக்கிறார். முருகன் – சர்ப்ப சக்தியின் அருளுடன் அருள்பாலிக்கிறார்.  அம்மன் – நாக வடிவ சக்தியாக பல தலங்களில் அருள் பாலிக்கிறார். எனவே நாக வழிபாடு என்பது பயத்தால் செய்யப்படுவது அல்ல; உள்ளுறைந்த தெய்வீக சக்தியை விழிப்பிக்கும் ஆன்மிக சாதனை ஆகும். நாக சதுர்த்தி அனுஷ்டிப்பதற்கான முக்கிய காரணங்கள், நாகதோஷ நிவர்த்தி, ராகு-கேது பீடைகள் குறைதல், திருமணத் தடை நீக்கம், புத்திர பாக்கியம், குடும்ப ஒற்றுமை, மன அமைதி, பித்ரு அருள், கர்ம நிவர்த்தி. சிலருக்கு அடிக்கடி பாம்பு கனவில் தோன்றுதல், நாக உருவம் மீண்டும் மீண்டும் கண்ணில் படுதல், திருமணத் தாமதம், கருச்சிதைவு, சந்தானத் தடை போன்றவை இருந்தால் நாக வழிபாடு செய்யும்படி பெரியவர்கள் கூறுவர். நாக சதுர்த்தி விரதத்தின் பலன்கள் குறித்து சாஸ்திரங்கள் கூறுவது,  திருமண யோகம் கைகூடும், தொடர்ந்து தடைப்பட்ட திருமணங்கள் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது. கணவன்-மனைவி ஒற்றுமை பெருகும் பிரிவு, கருத்து வேறுபாடு, குடும்ப கலக்கம் குறையும். சந்தான பாக்கியம் கிடைக்கும். குழந்தை பாக்கியம் வேண்டி பலர் இந்த விரதத்தை அனுஷ்டிக்கிறார்கள். ராகு-கேது தோஷங்கள் குறையும்.</p><p>ஜாதகத்தில் உள்ள சர்ப்ப மற்றும் கிரக பீடைகள் தணியும். வீட்டில் அமைதி நிலவும். எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி நல்ல அதிர்ஷ்டம் பெருகும். தொழில் மற்றும் வருமான முன்னேற்றம், தடைப்பட்ட காரியங்கள் நடைபெற்று வளம் அதிகரிக்கும். ஆனால் மிக முக்கியமான பலன், பயம் அகலும்; பக்தி பெருகும்; மனம் சுத்தமாகும்.</p><h2><strong>வீட்டிலேயே நாக பூஜை செய்வது எப்படி?</strong></h2><p>அதிகாலை விரைவாக எழுந்து ஸ்நானம் செய்ய வேண்டும். வீட்டின் பூஜை அறையை சுத்தம் செய்ய வேண்டும். கோலம் போட்டு தீபம் ஏற்ற வேண்டும். வெள்ளி, பித்தளை, கல் நாகம் இருந்தால் வைக்கலாம். இல்லையெனில் மஞ்சளால் நாக உருவம் வரையலாம். பூஜை பொருட்கள் மஞ்சள், குங்குமம், சந்தனம், அருகம்புல், அரளி, செவ்வரளி பூ, பால், துள்ளுமாவு, வெல்லம், வாழைப்பழம்,</p><p>“ஓம் நமோ நாகதேவதாப்யோ நம:” என்று 11 முறை ஜபிக்கவும். மஞ்சள், சந்தனம் சாத்தவும். அருகம்புல் சமர்ப்பிக்கவும். பால் அபிஷேகம் செய்யலாம் (அளவோடு). துள்ளுமாவு மற்றும் வெல்லம் நைவேத்தியம் செய்யவும். குடும்ப நலன் வேண்டி பிரார்த்தனை செய்யவும். மாலை நேரத்தில் மீண்டும் தீபம் ஏற்றி நாக ஸ்லோகத்தை ஜபிப்பது சிறப்பு. நாகர் சன்னதி உள்ள கோவில்களில் செய்யும் நாக பூஜைக்கு பால், மஞ்சள், சந்தனம் கொண்டு செல்லலாம். அருகம்புல் மாலை சமர்ப்பிக்கலாம். நாக பிரதிஷ்டை செய்து அர்ச்சனை செய்யலாம். ராகு-கேது சாந்தி பூஜை செய்யலாம். சிலர் 9 வாரங்கள் தொடர்ந்து நாகர் வழிபாடு செய்வார்கள். இது திருமணத் தடை நீக்கத்திற்கு மிகவும் பிரசித்தமான பரிகாரமாக கருதப்படுகிறது. நாக சதுர்த்தி நாளில் செய்ய வேண்டிய மிகப்பெரிய பூஜை, யாரையும் காயப்படுத்தாதிருங்கள். உயிர்களை அன்புடன் காக்குங்கள்.</p><p>மரங்களை நட்டிடுங்கள். முன்னோர்களை நினைத்து பிரார்த்தியுங்கள். மனதில் இருக்கும் கோபத்தை விடுங்கள். நாகர்கள் பூமியின் காவலர்கள் என சாஸ்திரம் கூறுகிறது. பூமியை காப்பவர்களை வணங்கும் போது நம் வாழ்க்கையும் பாதுகாக்கப்படும். இந்த நாக சதுர்த்தி நாளில் நாகராஜர்களின் திருவருளால் திருமணத் தடை நீங்கட்டும், சந்தான பாக்கியம் கிட்டட்டும், குடும்பங்களில் ஒற்றுமை பெருகட்டும், ராகு-கேது பீடைகள் விலகட்டும், நோய்கள் குறையட்டும், மன அமைதி நிலவட்டும், கர்மத் துன்பங்கள் கரையட்டும்.</p><p>அனந்த வாசுகி தட்சக காளிங்க கார்க்கோட காதி நாகராஜர்கள் அனைவரின் அருளால் ஒவ்வொரு பக்தரின் துயரங்களும் நீங்கி, செல்வம், சந்தோஷம், ஆன்மிக முன்னேற்றம், இறையருள் ஆகிய நான்கு பெரும் பேறுகளும் கிடைக்க இறைவனை பிரார்த்தித்து அருள் பெறலாம்.</p>]]></content:encoded></item><item><title>வயது முதிர்ந்த அளவுக்கு அரசியலில் முதிர்ச்சி இல்லை..!- ஆர்.எஸ்.பாரதி பேச்சுக்கு கொந்தளித்த அமைச்சர் ராஜேஷ்குமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajeshkumar-criticizes-rs-bharathi-controversial-remarks</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajeshkumar-criticizes-rs-bharathi-controversial-remarks#comments</comments><guid isPermaLink="false">b16d31c2-2ac6-4055-b1cf-470ccf5352af</guid><pubDate>Sat, 15 Aug 2026 07:16:36 +0000</pubDate><atom:updated>2026-08-15T07:16:36.898Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,RS Bharathi,ஆர்எஸ் பாரதி,அமைச்சர் ராஜேஷ்குமார்,Minister rajeshkumar</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/v92tbia3/Rajesh-kumar.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ RS Bharathi- Minister Rajesh kumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/v92tbia3/Rajesh-kumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அரசியல் பொதுக்கூட்டத்தில் பேசும்போது, "சிறப்பாக செயல்பட்டும் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மா.சுப்பிரமணியம் ஆகியோரை தோற்கடித்தது ஏற்றுக்கொள்ள முடியாதது.</p><p>அவர்களுக்கு வாக்கு அளிக்காதவர்கள் நன்றாக இருக்க மாட்டார்கள்" என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.</p><p>இதுபற்றி அமைச்சர் ராஜேஷ்குமார் கூறியதாவது:- </p><p>ஆர்.எஸ்.பாரதி தி.மு.க.வில் மூத்த தலைவர், வயது முதிர்ந்தவர். அவருக்கு வயது முதிர்ச்சி அடைந்த அளவுக்கு அரசியல் முதிர்ச்சி அடையவில்லை  என்பதையே இது காட்டுகிறது.</p><p>அரசியலில் நீண்ட காலம் பயணித்து வரும் ஆர்.எஸ்.பாரதி போன்றவர்கள் இந்த மாதிரி தரம் தாழ்ந்து கருத்துக்களை தெரிவிப்பது, மக்கள் மத்தி யில் பேசுவது அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் சார்ந்த இயக்கத்துக்கும் இழுக்கை தான் ஏற்படுத்தும்.</p><p>ஜனநாயகத்தில் எவ்வளவோ பெரிய தலைவர்கள் எல்லாம் தோல்வியை தழுவி இருக்கிறார்கள். பெருந்தலைவர் காமராஜர் கூட தோற்கடிக்கப் பட்டிருக்கிறார். அன்னை இந்திரா காந்தியும் தோற்கடிக்கப்பட்டார்.</p><p>ஜனநாயகத்தில் வெற்றி, தோல்வி என்பது சகஜமானது. அதை அரசியல் கட்சிகளால் ஏற்றுக் கொள்ள தங்களை தாங்களே பக்குவப்படுத்தி கொள்ள வேண்டும். வெற்றி பெற்றதும் மக்களை வாயார புகழ்வதும், தோல்வி அடைந்ததும் வாய்க்கு வந்தபடி பேசுவதும் சரியானது அல்ல.</p><p>ஒரு இயக்கம் தோற்றா லும், அந்த இயக்கத்தினுடைய முக்கிய தலைவர்கள் தோற்றாலும், அந்த தோல் விக்கான காரணங்களை ஆய்வு செய்ய வேண்டும்.</p><p>அதன் பின்னர் மக்கள் கருத்து அறிந்து மக்கள் மனதில் இடம் பிடிக்கும் வகையில் தங்கள் செயல்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும். இதுதான் நல்ல அரசியல் தலைவர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் அழகாக இருக்கும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>பிரிட்டிஷ் செஸ் தொடரில் இளம் தலைமுறையின் வரலாற்று சாதனை: 3 இளம் இந்திய வம்சாவளி நட்சத்திரங்கள் முத்திரை!</title><link>https://www.maalaimalar.com/sports/historic-young-indian-origin-stars-shine-at-british-chess-championship</link><comments>https://www.maalaimalar.com/sports/historic-young-indian-origin-stars-shine-at-british-chess-championship#comments</comments><guid isPermaLink="false">58f25b81-c995-4a63-9d1f-706f54d4fec3</guid><pubDate>Sat, 15 Aug 2026 07:14:27 +0000</pubDate><atom:updated>2026-08-15T07:14:27.699Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>British Chess series,Shreyas Royal,Pothana Sivanandan,Supratit Banerjee,பிரிட்டிஷ் செஸ்  தொடர்,ஸ்ரேயாஸ் ராயல்,போதனா சிவநந்தன்,சுப்ரதித் பானர்ஜி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/lbugqaay/chess.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ British Chess series ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/lbugqaay/chess.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இங்கிலாந்தின் கவென்ட்ரி நகரில் உள்ள வார்விக் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 122-வது பிரிட்டிஷ் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் 2026, பிரிட்டிஷ் செஸ் வரலாற்றிலேயே ஒரு புதிய சகாப்தத்தைத் தொடக்கி வைத்துள்ளது. இந்தத் தொடரில் மூத்த கிராண்ட்மாஸ்டர்களை பின்னுக்குத் தள்ளி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 3 இளம் திறமையாளர்கள் வரலாற்று சாதனைகளைப் படைத்துள்ளனர்.</p><h2>17 <strong>வயதில் பிரிட்டிஷ் சாம்</strong>பியன் பட்டம் </h2><p>டெர்ட்ஃபோர்ட் நகரைச் சேர்ந்த 17 வயது கிராண்ட்மாஸ்டர் ஸ்ரேயாஸ் ராயல், ஒட்டுமொத்த <a href="https://www.maalaimalar.com/sports/cricket/shubman-gill-chooses-batting-after-winning-toss-india-vs-sri-lanka-first-test">பிரிட்டிஷ் செஸ் சாம்பியன்ஷிப் </a>பட்டத்தைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். 1989-இல் மைக்கேல் ஆடம்ஸ் தனது 17 வயதில் படைத்த மிக இளம் வயதில் சாம்பியன் பட்டம் வென்ற சாதனையை, ஸ்ரேயாஸ் 2 மாதங்கள் வித்தியாசத்தில் முறியடித்துள்ளார்.</p><p>மொத்தம் 107 சர்வதேச வீரர்கள் பங்கேற்ற இந்த திறந்தநிலை பிரிவில், 9 சுற்றுகளின் முடிவில் 7.5/9 புள்ளிகள் பெற்று தோல்வியே சந்திக்காத ஒரே வீரராக ஸ்ரேயாஸ் மகுடம் சூடினார். இவருக்கு முதன்மை பரிசாக £10,000 (சுமார் 10.5 லட்சம் ரூபாய்) வழங்கப்பட்டது. முன்னணி கிராண்ட்மாஸ்டர் லூக் மெக்ஷேனை வீழ்த்தியும், 9 முறை சாம்பியனான மைக்கேல் ஆடம்ஸுக்கு எதிராக டிராவை பதிவு செய்தும் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.</p><h2>மிக<strong>க் குறைந்த வயதில் பிரிட்டி</strong>ஷ் மகளிர் சாம்பியன்</h2><p>லண்டனைச் சேர்ந்த 11 வயது சிறுமி போதனா சிவநந்தன், பிரிட்டிஷ் மகளிர் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று புதிய வரலாறு படைத்துள்ளார்.  மகளிர் பிரிவில் அயர்லாந்தின் வுமன் கிராண்ட்மாஸ்டர் த்ரிஷா கன்யாமாராலாவை 1.5 - 0.5 என்ற புள்ளிக்கணக்கில் டை-பிரேக் சுற்றில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.</p><p>1939-இல் எலைன் பிரிட்சார்ட் தனது 13 வயதில் படைத்த சாதனையை முறியடித்த போதனா, ஏற்கனவே பிளிட்ஸ் மற்றும் ரேபிட் சாம்பியன் பட்டங்களை வைத்திருந்த நிலையில், தற்போது கிளாசிக்கல் பட்டத்தையும் வென்று 'முப்பரிமாண சாம்பியன்' பட்டம் பெற்றுள்ளார். தொடரில் கிராண்ட்மாஸ்டர் அமித் காசியை வீழ்த்தி ஆச்சரியப்படுத்திய போதனாவின் ஆட்டம், போட்டியின் சிறந்த ஆட்டமாகக் கருதப்பட்டு £100 மதிப்பிலான "அலெக்சாண்டர் விருது" வழங்கி கவுரவிக்கப்பட்டது.</p><h2>12 வயதில் <strong>இன்டர்நேஷனல் மா</strong>ஸ்டர் பட்டம் </h2><p>சட்டன் கிராமர் பள்ளியில் பயிலும் 12 வயது மாணவர் சுப்ரதித் பானர்ஜி, இங்கிலாந்தின் மிக இளம் வயது இன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். பிரிட்டிஷ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தனது 3-வது ஐஎம் நார்மை பூர்த்தி செய்த சுப்ரதித், அடுத்த சில நாட்களிலேயே ஸ்வீடனில் நடைபெற்ற தொடரில் பங்கேற்று 2400 FIDE ரேட்டிங் இலக்கை எட்டி அதிகாரப்பூர்வமாக இன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டத்தைப் பெற்றார். </p><p>இதற்கு முன் இங்கிலாந்தின் லூக் மெக்ஷேன் மற்றும் டேவிட் ஹோவெல் ஆகிய இருவருமே 13 வயது 2 மாதங்களில் ஐஎம் பட்டம் பெற்றிருந்த நிலையில், சுப்ரதித் தனது 12 வயது 5 மாதங்களிலேயே இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.</p><h2>புதிய தலைமு<strong>றையின் ஆதி</strong>க்கம்</h2><p>122 ஆண்டுகால பாரம்பரியம் மிக்க பிரிட்டிஷ் செஸ் தொடரில் 2,000-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த சீசனில், அனுபவமிக்க முன்னணி கிராண்ட்மாஸ்டர்களை பின்னுக்குத் தள்ளி இந்த மூன்று இளம் வீரர்கள் நிகழ்த்தியுள்ள சாதனைகள் இங்கிலாந்து செஸ் வரலாற்றில் ஒரு புதிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் மேலும் ஒரு ஏ.சி. மின்சார ரெயில்- ரெயில்வே கோட்ட மேலாளர் தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/another-ac-electric-train-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/another-ac-electric-train-in-chennai#comments</comments><guid isPermaLink="false">ac3ca49a-46bb-4cfb-b846-cbd3543eb1eb</guid><pubDate>Sat, 15 Aug 2026 06:56:53 +0000</pubDate><atom:updated>2026-08-15T06:56:53.305Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>electric train,மின்சார ரெயில்,ஏசி மின்சார ரெயில்,AC Electric Train</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/yqezq0ym/ACTrain.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ ஏ.சி. மின்சார ரெயில்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஏ.சி. மின்சார ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/yqezq0ym/ACTrain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>புறநகர் மின்சார ஏ.சி. ரெயில் மற்றொன்று தயார் நிலையில் உள்ளது. அதனை எந்த வழித்தடத்தில் இயக்குவது என்று ஆலோசிக்கப்படுகிறது.</strong></em> </p><p>சென்னை கோட்ட ரெயில்வே மேலாளர் சைலேந்திர சிங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- </p><p>2025-26 நிதி ஆண்டில் ரூ.5,038 கோடி மொத்த வருவாய் ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 9.26 சதவீத கூடுதல் வளர்ச்சி ஆகும். சென்னை கோட்டம் 43.2 98 கோடி பயணிகளை ஏற்றி சென்றதுடன் 11.3 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு 6.20 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. </p><p>கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் 3559  சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டதுடன் 1557 கூடுதல் பெட்டிகள்  இணைக்கப்பட்டன. கிளாம்பாக்கம் ரெயில் நிலைய பணிகள் அக்டோபர் மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. புறநகர் <a href="https://www.maalaimalar.com/topic/மின்சார-ரெயில்">மின்சார</a> ஏ.சி. ரெயில் மற்றொன்று தயார் நிலையில் உள்ளது. அதனை எந்த வழித்தடத்தில் இயக்குவது என்று ஆலோசிக்கப்படுகிறது. இன்னும் ஒரு மாதத்தில் புதிய ரெயில் சேவை தொடங்கும்.</p><p>எழும்பூர் ரெயில் நிலைய மறு சிரமைப்பு பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்க திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஒருவேளை 2 மாதம் தாமதமாகலாம். பயணிகளுக்கு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. 26  ரெயில் நிலையங்களில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. 13  ரெயில் நிலையங்களில் புதிதாக வாகனம் நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.  26 லிப்ட்டுகள், 7 எஸ்கலேட்டர் வசதி செய்யப்பட்டுள்ளது. </p><p>மாற்றுத்திறனாளிகளுக்காக 16 ரெயில் நிலையங்களில் அடிப்படையான வசதி செய்யப்பட்டுள்ளது. வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் மின்சார சேவையில் ஆதம்பாக்கம் ரெயில்  நிலையத்தில் ரெயில் நின்று செல்வதற்கான வசதியில் சில குறைபாடுகள் உள்ளன. வளைவான பகுதி என்பதால் ரெயிலில் இருந்து பயணிகள் நடைமேடையில் ஏறி இறங்குவதில்  அதிக சிரமம் உள்ளது. அதனை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.</p><p>தாம்பரம்- கடற்கரை மின்சார ரெயில் இயக்கத்தில் காலை 9 மணி முதல் 10 மணிக்குள் சேத்துப்பட்டு நிலையத்தில் சிக்னல் காரணமாக ரெயில்கள் நீண்ட நேரம் நிறுத்தப்படுகிறது. பாஸ்ட் மின்சார  ரெயிலுக்காக மற்ற மின்சார ரெயில்களை நிறுத்துவதால் ஏற்படும் சிரமங்கள் தெரியவந்துள்ளன. அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.  பேட்டியின் போது கூடுதல் கோட்ட ரெயில்வே மேலாளர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் தோல்வி- உதயநிதி ஸ்டாலின் சாடல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-indictment-tvk-govt-3</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-indictment-tvk-govt-3#comments</comments><guid isPermaLink="false">a86f17f4-4630-40c7-8ee5-f71949b071b8</guid><pubDate>Sat, 15 Aug 2026 06:23:39 +0000</pubDate><atom:updated>2026-08-15T06:23:39.540Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,TN Govt,Udhayanidhi Stalin,தமிழக அரசு,போதைப்பொருள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/686ac0hl/udhayanidhistalin004.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/686ac0hl/udhayanidhistalin004.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>வன்முறை எதற்கும் தீர்வல்ல என்பதை உணர்த்தும் வகையில் மாணவர்கள் மத்தியில் Counselling வழங்கி போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.</strong></em> </p><p>எதிர்க்கட்சித் தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">உதயநிதி ஸ்டாலின்</a> எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><p>சென்னை திருவொற்றியூரில் போதைப்பொருள் புழக்கத்தைத் தட்டிக்கேட்டதால், அரசுப்பள்ளியில் +2 படித்து வந்த மாணவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-three-people-including-plus-two-student-brutally-killed-two-arrested">தனுஷ்</a>, 30 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.</p><h2><strong>தோல்வி</strong></h2><p>கோவையில் போதை கும்பலை தட்டிக் கேட்டதற்காக கல்லூரி மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்ட, அடுத்த சில தினங்களில் சென்னையிலும் இத்தகைய கொடூரம் நடந்திருக்கிறது.</p><p>சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் இந்த அரசு எந்த அளவுக்கு தோற்றுக் கொண்டிருக்கிறது என்பதற்கு தமிழ்நாட்டிலே தொடரும் கொலைகளே சாட்சி.</p><p>போதைப் பொருள் பயன்படுத்துவதையோ – விற்பதையோ அம்பலப்படுத்தினால், அவர்கள் கொலை செய்யப்படுவார்கள் என்பது, ஒட்டுமொத்த சமூகத்திற்கும் விடப்படும் எச்சரிக்கை.</p><p>நிர்வாகத்திறனற்ற இந்த கோமாளி சர்க்காரை கண்டு சமூக விரோதிகளுக்குத் துளியும் பயமில்லை என்பதே இதற்கு காரணம்.</p><p>குறிப்பாக, பள்ளிகளில் – கல்லூரிகளில் இத்தகைய சம்பவங்கள் நடப்பதை அரசு கண்டும் காணாமல் வாயை மூடிக் கொண்டு இருப்பது வெட்கக்கேடு.</p><p>மாணவர் தனுஷ் கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும். </p><p>இத்தகைய தொடர் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>பள்ளி கல்லூரிகளில் போதைப் பொருள் பயன்பாடு இருக்கிறதா? அதற்கு என்ன காரணம்? </p><p>இதன் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை எல்லாம் உரிய முறையில் விசாரித்து இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>மேலும், வன்முறை எதற்கும் தீர்வல்ல என்பதை உணர்த்தும் வகையில் மாணவர்கள் மத்தியில் Counselling வழங்கி போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">சென்னை திருவொற்றியூரில் போதைப்பொருள் புழக்கத்தைத் தட்டிக்கேட்டதால், அரசுப்பள்ளியில் +2 படித்து வந்த மாணவர் தனுஷ், 30 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.<br><br>கோவையில் போதை கும்பலை தட்டிக் கேட்டதற்காக கல்லூரி மாணவர் அமுதன் கொலை…</p>&mdash; Udhay (@Udhaystalin) <a href="https://x.com/Udhaystalin/status/2088504581903008194?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>சென்னையில் ஒரே நாளில் பிளஸ்-2 மாணவர் உட்பட 3 பேர் கொடூரக் கொலை-இருவரை கைது செய்து போலீஸ் விசாரணை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-three-people-including-plus-two-student-brutally-killed-two-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-three-people-including-plus-two-student-brutally-killed-two-arrested#comments</comments><guid isPermaLink="false">a0a3611d-9962-49fe-9243-5b6a5c8c8098</guid><pubDate>Sat, 15 Aug 2026 06:18:54 +0000</pubDate><atom:updated>2026-08-15T06:18:54.483Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,student murdered,Crime,பிளஸ்-2 மாணவர் கொலை,கொடூரக் கொலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/nhfw9ito/mur.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ student murdered]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/nhfw9ito/mur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் ஒரே நாளில் பிளஸ்-2 மாணவர் உட்பட 3 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட பீகார் வாலிபர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2><strong>‘சீனியர்’ தகராறு: பிளஸ்-2 மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சோகம்</strong></h2><p>சென்னை திருவொற்றியூர் தாங்கல் வசந்த் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகன் தனுஷ் (16), விம்கோ நகரில் அமைந்துள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியில் மாணவர்களிடையே யார் ‘சீனியர்’ என்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக, பள்ளி முடிந்து அஜாக்ஸ் பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள காலி மைதானத்தில் வைத்து பிளஸ்-1 மாணவர் மற்றும் முன்னாள் மாணவர்கள் சிலர் அடங்கிய கும்பல் தனுஷை மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளது. </p><p>இதில் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்த தனுஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து திருவொற்றியூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.</p><h2>மெரினா <strong>கடற்கரை அரு</strong>கில் வாலிபர் சடலமாகக் கண்டெடுப்பு</h2><p>சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நீச்சல் குளத்தின் பின்புறப் பகுதியில் இளைஞர் ஒருவர் தலை மற்றும் உடலில் பலத்த காயங்களுடன் பிணமாகக் கிடப்பதாக அண்ணா சதுக்கம் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. காவல் துறையினர் நடத்திய விசாரணையில், கொலையானவர் நேபாளத்தைச் சேர்ந்த ஸ்ரீராம்சாகா (27) என்பதும், பணப் பரிவர்த்தனை தொடர்பான தகராறில் அவர்<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/was-student-amudhan-murdered-for-exposing-drug-sales-heated-debate-in-the-legislative-assembly-what-do-the-parents-say"> அடித்துக் கொலை </a>செய்யப்பட்டதும் தெரியவந்தது. </p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/ope72x7n/murdere.jpg" /></figure><p>இக்கொலை தொடர்பாக, மத்திய ரெயில் நிலையத்தில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற பீகாரைச் சேர்ந்த சன்னிசதா (26) என்பவரைக் காவல் துறையினர் விரைந்து செயல்பட்டுக் கைது செய்தனர்.</p><h2>வயல்வெ<strong>ளி சமாதியில் ரத்த வெள்ளத்தில் வாலிபர் வெட்டிக்கொலை</strong></h2><p>திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பாதிரிவேடு காவல் எல்லைக்கு உட்பட்ட சாணாபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜாவின் மூத்த மகன் ரஞ்சன் (18). இவர் தனியார் வயல்வெளியில் உள்ள சமாதி ஒன்றின் மீது ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். </p><p>விசாரணையில், இரும்பு உருக்கு ஆலையில் நடந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய ரஞ்சனும், அவரது நெருங்கிய நண்பரான காமேஷ் (22) என்பவரும் சம்பவத்தன்று இரவு ஒன்றாக மது அருந்தியதும், போதையில் ஏற்பட்ட முன்பகைத் தகராறில் காமேஷ், ரஞ்சனைச் சரமாரியாக வெட்டிக்கொலை செய்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காமேஷை பாதிரிவேடு காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சமத்துவம், சமூகநீதி தழைத்தோங்கும் இந்தியாவை உருவாக்க உறுதி ஏற்போம்- முதலமைச்சர் விஜய் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-pledges-to-build-an-india-of-equality-and-social-justice</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-pledges-to-build-an-india-of-equality-and-social-justice#comments</comments><guid isPermaLink="false">b7210659-da6f-416b-bdde-a539d5296185</guid><pubDate>Sat, 15 Aug 2026 05:40:25 +0000</pubDate><atom:updated>2026-08-15T05:40:25.096Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Independence Day,சுதந்திர தினம்,flag hoist,கொடியேற்றம்,முதலமைச்சர் விஜய்,tn cm vijay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/m6h419r6/TN-CM-VJ1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/m6h419r6/TN-CM-VJ1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனித்த நல்வாழ்த்துகள் என முதலமைச்சர் விஜய் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.</p><p>நாட்டின் 80-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி வைத்தார்.</p><p>சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் விஜய் தேசிய கொடி ஏற்றி வைத்தார். சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.</p><p>இந்நிலையில், முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்துப் பதிவு வெளியிட்டுள்ளார்.</p><p>அந்த பதிவில் அவர் கூறியதாவது:- </p><p>தாய்நாட்டின் விடுதலைக்காகத் தம் இன்னுயிரையே ஈந்த எண்ணற்ற தியாகிகளையும், ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராக அஞ்சாது களமிறங்கிப் போராடிய தேசத் தலைவர்களையும் இந்நன்னாளில் நன்றியுடன் நினைவுகூர்ந்து, மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில், தமிழ்நாட்டிற்கு என்றும் ஒரு தனித்துவமான, மகத்தான இடமுண்டு. அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராக அச்சமின்றி எழுந்த முதல் குரலும், விடுதலை வேட்கையை மக்கள் மனங்களில் விதைத்த வீர உணர்வும் இந்த தமிழ் மண்ணிலிருந்தே வலிமை பெற்றன. இத்தகைய வீரத்தையும், தேசப்பற்றையும் விதைத்திட்ட தியாக சீலர்கள் கண்ட கனவுகளை நிறைவேற்றுவோம். </p><p>நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பேணிக்காத்து, அனைத்து குடிமக்களின் நலனையும் முன்னிறுத்தி, சமத்துவமும் சமூகநீதியும் ஜனநாயகமும் தழைத்தோங்கும் இந்தியாவை உருவாக்கிட இந்நன்னாளில் உறுதியேற்போம்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>செல்வ வளத்தை பெருக்கும் நாக சதுர்த்தி வழிபாடு</title><link>https://www.maalaimalar.com/spirituality/naga-chaturthi-worship-2</link><comments>https://www.maalaimalar.com/spirituality/naga-chaturthi-worship-2#comments</comments><guid isPermaLink="false">ef5b7bde-a736-4964-abed-e22745a188f7</guid><pubDate>Sat, 15 Aug 2026 05:39:13 +0000</pubDate><atom:updated>2026-08-15T05:39:13.814Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,வழிபாடு,worship,நாக சதுர்த்தி,naga chaturthi</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/c5rwtbva/nagachaturthi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ naga chaturthi worship]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/c5rwtbva/nagachaturthi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2></h2><h2>நாக வழிபாடு</h2><p>'பாம்பை கண்டால் படையே நடுங்கும்' என்பார்கள். ஆனால் அந்த பாம்பை தெய்வமாக கருதி வழிபடும் வழக்கம் இந்து சமயத்தில் உள்ளது. நாக வழிபாடு என்பது வேத காலத்தில் இருந்தே நடைபெற்று வருகிறது. நாகத்தை வழிபடுவதற்கு உகந்த நாள் 'நாக சதுர்த்தி' ஆகும். ஆடி அல்லது ஆவணி மாதங்களில் வரும் சதுர்த்தி திதியில் நாக சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. கருட பஞ்சமிக்கு முந்தைய நாளாக வருகிறது.</p> <h2>நாக சதுர்த்தி</h2><p>நாக சதுர்த்தி குறித்தும், நாக வழிபாடு குறித்தும் பல புராணக் கதைகள் கூறப்படுகின்றன. காசியப முனிவருக்கும், கத்ருவுக்கும் பிறந்தவர்களே நாகர்கள். அவர்களில் ஆதிசேஷன், வாசுகி, தட்சகன், கார்க்கோடகன் போன்றோர் மிகவும் புகழ்பெற்றவர்கள்.</p> <h2>சர்ப்ப யாகம்</h2><p>ஒரு சமயம் பரீட்சித் என்ற மன்னன், நாகங்களின் தலைவனாக விளங்கிய தட்சகனால் தீண்டப்பட்டு உயிரிழந்தார். இதனால் கோபம் கொண்ட பரீட்சித் மன்னனின் மகனான ஜனமேஜயன், அனைத்து நாகங்களையும் அழிப்பதற்காக 'சர்ப்ப யாகம்' ஒன்றை நடத்தினான். அந்த யாகத் தீயில் விழுந்து பல நாகங்கள் மாண்டன. நாக இனம் அழிவதை அறிந்த ஜரத்காரு முனிவரின் மகனான ஆஸ்தீக முனிவர், யாக சாலைக்கு வந்தார்.</p> <p>அவர், தனது வார்த்தைகளால் ஜனமேஜயனை சமாதானப்படுத்தினார். இதையடுத்து மன்னன் யாகத்தை நிறுத்தினான். இதனால் நாக குலம் காக்கப்பட்டது. இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையிலேயே நாக சதுர்த்தி கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது.</p> <h2>ஆதிசேஷன்</h2><p>இந்த நாளில் அஷ்ட நாகங்களாக கருதப்படும் அனந்தன் (ஆதிசேஷன்), வாசுகி, தட்சகன், கார்க்கோடகன், பத்மன், மகாபத்மன், சங்கன், குளிகன் ஆகிய நாகங்களை வழிபடுவது சிறந்தது. ஆதிசேஷன், மகாவிஷ்ணுவின் படுக்கையாக பூமியை தாங்கும் பாக்கியம் பெற்றார். தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் வேண்டி திருபாற்கடலை கடைந்தபோது, வாசுகியை கயிறாக பயன்படுத்தினர். மகாபத்மன், வடதிசையின் காவலன். கார்க்கோடகன், ஈசனின் மோதிரமாக திகழ்கிறார். தட்சகன், பரீட்சித்து மன்னரை தீண்டி வைகுண்டம் அனுப்பினார். சங்கன், ஈசனின் சிகரத்தை அலங்கரிக்கும் பாக்கியத்தை பெற்றார்.</p> <h2>புற்று மண் பிரசாதம்</h2><p>இந்த ஆண்டு நாக சதுர்த்தி, 16-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அன்றைய தினம் அதிகாலையில் நீராடி விரதத்தை தொடங்க வேண்டும். வீட்டின் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று, அங்குள்ள நாக புற்று அல்லது நாக சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள், குங்குமம் அணிவித்தும், மலர் சாற்றியும் வழிபட வேண்டும். புற்று மண்ணை பிரசாதமாக அணிந்து கொள்ளலாம்.</p> <h2>பாலாபிஷேகம்</h2><p>கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள், நாகர் சிலை இருந்தால் அதை பூஜையறையில் வைத்து பாலாபிஷேகம் செய்ய வேண்டும். இல்லையென்றால், அம்பாளுடன் நாகர் இருக்கும் படங்களை வைத்து, அதற்கு மஞ்சள், குங்குமம் இட்டு அலங்கரிக்கலாம். நாகருக்கு உகந்த உளுந்து, கொள்ளு தானியங்களை கொண்டு நைவேத்தியம் படைக்கலாம். அம்மன் பாடல்களை பாடி, பிரார்த்தனை செய்ய வேண்டும்.</p> <h2>நாக வழிபாடு</h2><p>நாக வழிபாடு செய்வதன் மூலம் குடும்ப நலம் மேம்படும், புத்திர பாக்கியம் கிட்டும், திருமணத் தடை நீங்கும், செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. அருகில் உள்ள ஆலயங்களுக்கு சென்று, நவக்கிரகங்களை வழிபடலாம். அதில் உள்ள ராகு - கேது பகவான்களுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது மிகுந்த பலனை தரும்.</p> <h2>கணவன்-மனைவி ஒற்றுமை பலப்படும்</h2><p>நாக சதுர்த்தி விரதம் மேற்கொண்டால் தலைமுறை தலைமுறையாக உள்ள தோஷங்கள் விலகும். சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம், ராகு - கேது தோஷம் போன்றவை நீங்கும். கணவன் - மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடு விலகி, ஒற்றுமை பலப்படும். நோய்கள் நீங்கி ஆரோக்கியமான வாழ்க்கை அமையும்.</p>]]></content:encoded></item><item><title>மாமல்லபுரத்தில் பட்டம் விடும் திருவிழா கோலாகலம்: வானில் மிதந்த வண்ணமயமான பட்டங்களை ரசித்த பொதுமக்கள்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mamallapuram-kite-festival-celebration</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mamallapuram-kite-festival-celebration#comments</comments><guid isPermaLink="false">92a47d7b-710a-43ee-b1c2-337cf189abb2</guid><pubDate>Sat, 15 Aug 2026 05:32:40 +0000</pubDate><atom:updated>2026-08-15T05:32:40.843Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Mamallapuram,பட்டம் விடும் திருவிழா,மாமல்லபுரம்,Mamallapuram  Kite flying festival,giant kites,Tamil Nadu Tourism Development,தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/wwxk18y4/mamallapuram.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Mamallapuram  Kite flying festival]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/wwxk18y4/mamallapuram.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாமல்லபுரம் கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மைதானத்தில், 5-வது சர்வதேச பட்டம் விடும் திருவிழா மிகக் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. </p><p>சுதந்திர தின வார இறுதியைக் கொண்டாடும் வகையில் ஆகஸ்ட் 14 முதல் ஆகஸ்ட் 16 வரை 3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பட்டம் பறக்கவிடும் வல்லுநர்கள் கலந்துகொண்டு தங்கள் கைவண்ணத்தில் உருவான பல வண்ண பட்டங்களை வானில் பறக்கவிட்டுப் பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர்.</p><h2>திருவி<strong>ழா தொடக்</strong>கம் </h2><p>செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சுற்றுலா வளர்ச்சிக் கழக மைதானத்தில் 5-வது சர்வதேச <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-raises-pension-to-rs-25000-in-tribute-to-freedom-fighters">பட்டம் விடும் திருவிழா </a>நேற்று தொடங்கியது. செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வீரப்பன், சுற்றுலாத்துறை கமிஷனர் ஜெயசீலன், திருப்போரூர் எம்.எல்.ஏ.பா.விஜயராஜ், மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் எஸ்.சக்திவேல் ஆகியோர் முன்னிலையில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் பட்டம் விடும் திருவிழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த பட்டம் பறக்கவிடும் வீரர்களுக்கு அமைச்சர் பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.</p><p>இந்த விழாவில் இந்தியா (தமிழ்நாடு, பஞ்சாப், குஜராத், உத்தரப் பிரதேசம்) மட்டுமின்றி தாய்லாந்து, வியட்நாம், சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் அயர்லாந்து உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 30-க்கும் மேற்பட்ட சர்வதேச பட்டம் பறக்கவிடும் நிபுணர்கள் கலந்துகொண்டுள்ளனர்.</p><h2>வானை அல<strong>ங்கரித்த பட்டங்கள்</strong></h2><p>கடற்கரைக் காற்று சாதகமாக வீசியதால், சுமார் 200-க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட ராட்சத பட்டங்கள் மாமல்லபுரம் வானில் வண்ணமயமாகப் பறந்தன.</p><h2>கடல்வாழ் <strong>உயிரினங்</strong>கள்</h2><p>ஆக்டோபஸ், டால்பின், ஆமை, டிராகன், சூப்பர்மேன், மிக்கி மவுஸ், லபுபு மற்றும் ராட்சத ஷார்க் போன்ற பல்வேறு வடிவங்களிலான காற்று நிரப்பப்பட்ட பட்டங்கள் பொதுமக்களையும் குழந்தைகளையும் பெரிதும் கவர்ந்தன.</p><h2>த<strong>மிழர்களின் பாரம்பரியக் கலை பட்டங்கள்</strong></h2><p>தமிழ்நாட்டின் "ஸ்கைட்டர்ஸ்"  குழுவினர் தங்களின் விருது பெற்ற பொய்க்கால் குதிரை மற்றும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை வடிவ பட்டங்களை வானில் பறக்கவிட்டு நமது பாரம்பரிய பெருமையை பறைசாற்றினர். மாலை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, ஒளிரும் எல்.இ.டி விளக்குகள் பொருத்தப்பட்ட சிறப்புப் பட்டங்கள் வானில் ஜொலித்து இரவை மேலும் அழகாக்கின.</p><h2>குடும்பங்களு<strong>க்கான கொண்</strong>டாட்டம்</h2><p>இந்த பட்டம் விடும் திருவிழா முற்றிலும் இலவச அனுமதி கொண்ட ஒரு குடும்பக் திருவிழாவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உணவுப் பிரியர்களுக்கான கடற்கரை உணவு அரங்குகள், கைவினைப் பொருட்கள் விற்பனைச் சந்தை, குழந்தைகள் புகைப்படப் பகுதிகள் மற்றும் ஃபார்முலா 1 கார் மாதிரி காட்சிப்படுத்தல் போன்றவை இடம்பெற்றுள்ளன.</p><p>விழாவிற்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தருவதால் செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரைச் சாலையில் வாகன நெரிசலைத் தவிர்க்கவும், வாகனங்கள் மெதுவாகச் செல்லவும் சிறப்புத் தடுப்புகள் அமைத்து போக்குவரத்து சீரமைக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பாகிஸ்தான் கைக்கு சென்ற சிந்து, பஞ்சாப் மாகாணம் -  காங்கிரஸை குற்றம்சாட்டிய யோகி ஆதித்யநாத் </title><link>https://www.maalaimalar.com/news/national/pakistan-kaikku-sendra-sindhu-panjab-maganam-kangirasai-kutramsattiya-yogi-adityanath</link><comments>https://www.maalaimalar.com/news/national/pakistan-kaikku-sendra-sindhu-panjab-maganam-kangirasai-kutramsattiya-yogi-adityanath#comments</comments><guid isPermaLink="false">e9e67a81-b576-4516-908a-aa30061caaf9</guid><pubDate>Sat, 15 Aug 2026 05:16:47 +0000</pubDate><atom:updated>2026-08-15T05:16:47.718Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,Yogi Adityanath,சுதந்திர தினம்,Independance Day,யோகி ஆதித்யநாத்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/o0se0n7t/Untitled-design-56.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ யோகி ஆதித்யநாத்]]></media:title><media:description type="html"><![CDATA[ Yogi Adityanath]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/o0se0n7t/Untitled-design-56.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நாட்டின் பிரிவினைக்கு காரணமாக காங்கிரஸ் இருந்தது என்றும், நாடு சுதந்திரம் பெற்ற நேரத்தில் நரேந்திர மோடி பிரதமராக இருந்திருந்தால், இந்தியா பிரிவினையை சந்தித்திருக்காது என்றும் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். </p><h3><strong>முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்</strong></h3><p>உத்தரப் பிரதேசத்தில் ‘பிரிவினை கொடுமைகள் நினைவு நாள்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசினார்.</p><p>அப்போது அவர் கூறுகையில், “சுதந்திரத்தின் போது நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக இருந்திருந்தால், நாட்டிற்கு தீங்கு விளைவிக்க யாரும் துணிந்திருக்க மாட்டார்கள். </p><p>காங்கிரஸ் பிரிவினைய எதிர்த்து துணிந்து போராட தவறியதால், நாடு ஒரு பெரிய விலையை கொடுக்க வேண்டியிருந்தது. பஞ்சாபிலோ அல்லது வங்காளத்திலோ பாகிஸ்தான் ஒருபோதும் கேட்காத நிலம் அவர்களுக்கு வழங்கப்பட்டது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.</p><h3><strong>பாகிஸ்தான் கைக்கு சென்ற இந்திய மாகாணங்கள்</strong></h3><p>பாகிஸ்தான் மாகாணமான சிந்துவில் ஒரு காலத்தில் சிந்துக்களும் இந்துக்களும் பெரும்பான்மையாக இருந்தனர். ஆனால், அது வலுக்கட்டாயமாக பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது.</p><p>அதேபோல் பஞ்சாப் மற்றும் வங்காளத்தில் பஞ்சாபிகளும் வங்காளிகளும் பெரும்பான்மையாக இருந்தனர். ஆனால் அந்த பகுதிகளும் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது.</p><p>நமது நாடு காங்கிரஸை நம்பியது. ஆனால் காங்கிரஸ் மக்களுக்கு துரோகம் செய்துவிட்டது.</p><p>1947-ல் பிரிவினையின்போது மெளனம் காத்தவர்கள், இன்றும் அதே மனப்பான்மையை கொண்டிருக்கின்றனர்.</p><p>வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல்கள் குறித்து, காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் மவுனம் காத்து வருகின்றனர்.</p><p>தங்களுக்கு வாக்கு வங்கியை திருப்திபடுத்துவதும், அதிகாரத்தை கைப்பற்றுவதுமே தங்களின் முன்னுரிமை என்பதால், காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் எதிர்காலத்திலும் அமைதியாகவே இருக்கும்” என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY: ஏறுமுகத்தில் தங்கம் விலை - இன்றைய நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-15-8-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-15-8-2026#comments</comments><guid isPermaLink="false">054caca1-aea0-47ac-9dc5-33ba130fdc38</guid><pubDate>Sat, 15 Aug 2026 05:06:05 +0000</pubDate><atom:updated>2026-08-15T05:06:05.341Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-28/bflp3azn/Gold.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-28/bflp3azn/Gold.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தங்கம் விலை இம்மாத தொடக்கத்தில் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், கடந்த 5-ந்தேதியில் இருந்து தொடர்ந்து ஏறுமுகத்திலேயே பயணித்து வந்தது. அதன்படி, கடந்த 5-ந்தேதியில் இருந்து 13-ந்தேதி வரை மட்டும் கிராமுக்கு ரூ.840-ம், சவரனுக்கு ரூ.6 ஆயிரத்து 720-ம் உயர்ந்திருந்தது.</p> <p>கடந்த 9 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை நேற்று குறைந்து காணப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 220-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 760-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி காலையில், கிராமுக்கு ரூ.180-ம், சவரனுக்கு ரூ.1,440-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 40-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 320-க்கும் விற்பனை செய்யப்பட்டது. </p> <p>இதனையடுத்து மாலையில், ஏற்றம் கண்டது. கிராமுக்கு ரூ.160-ம், சவரனுக்கு ரூ.1,240-ம் அதிகரித்தது. ஆக நேற்று முன்தினத்தைவிட கிராமுக்கு ரூ.20-ம், சவரனுக்கு ரூ.160-ம் மட்டுமே குறைந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 200-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 600-க்கும் விற்பனை ஆனது. </p> <h2>தங்கம் விலை உயர்வு</h2><p>இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ரூ.1,13,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.14,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p> <h2>வெள்ளி விலை நிலவரம்</h2><p>வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-</h2><p>14-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,600</p><p>13-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,760</p><p>12-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,600</p><p>11-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,200</p><p>10-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,600</p> <h2>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-</h2><p>14-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>13-08-2026- ஒரு கிராம் ரூ.260</p><p>12-08-2026- ஒரு கிராம் ரூ.260</p><p>11-08-2026- ஒரு கிராம் ரூ.260</p><p>10-08-2026- ஒரு கிராம் ரூ.250</p> ]]></content:encoded></item><item><title>ஜூலை மாதத்தில் இந்தியாவின் ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி 50.8% ஆக உயர்ந்து வரலாற்றுச் சாதனை!</title><link>https://www.maalaimalar.com/news/topnews/indias-russian-crude-oil-imports-hit-record-50-8-percent-in-july</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/indias-russian-crude-oil-imports-hit-record-50-8-percent-in-july#comments</comments><guid isPermaLink="false">634004fb-5f5d-44d9-8d27-2dc3df4050b9</guid><pubDate>Sat, 15 Aug 2026 04:58:37 +0000</pubDate><atom:updated>2026-08-15T04:58:37.644Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,Russia,America,கச்சா எண்ணெய்,Crude oil,ரஷியா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/y77sp7kh/oil.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ crude oil  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/y77sp7kh/oil.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>வணிகம் (Business)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷியாவின் பங்கு கடந்த ஜூலை மாதத்தில் 50.83 சதவீதமாக உயர்ந்து புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. உலகின் மூன்றாவது மிகப்பெரிய எண்ணெய் நுகர்வு மற்றும் இறக்குமதி நாடான இந்தியா, ஜூலை மாதத்தில் மட்டும் ரஷியாவிடமிருந்து நாளொன்றுக்கு சராசரியாக 24.7 லட்சம் பேரல்கள் முதல் 28 லட்சம் பேரல்கள் வரை கச்சா எண்ணெயைக் கொள்முதல் செய்துள்ளது.</p><p>கடந்த ஆண்டு ஜூலை மாதத்தின் கொள்முதலுடன் ஒப்பிடுகையில் இது 62.4 சதவீத வளர்ச்சியாகும். ஒரு குறிப்பிட்ட நாடு இந்தியாவின் ஒரு மாதத்தின் மொத்த எண்ணெய் தேவையில் பாதியை விட அதிகமாக விநியோகிப்பது வர்த்தக வரலாற்றில் இதுவே முதன்முறையாகும்.</p><h2>மத்திய <strong>கிழக்கு ஆசியப்</strong> போர்</h2><p>நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் மற்றும் சாத்தியமான சுங்கவரிக் கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, இந்திய சுத்திகரிப்பு ஆலைகள் ரஷிய<a href="https://www.maalaimalar.com/news/world/donald-trump-says-will-soon-declare-strait-of-hormuz-us-territory"> கச்சா எண்ணெய் </a>கொள்முதலைச் சற்றே குறைத்து வந்தன. இருப்பினும், மத்திய கிழக்கு ஆசியப் பகுதியில் தீவிரமடைந்த போர்ச் சூழல், ஹார்முஸ் மற்றும் பாப் அல்-மந்தெப் போன்ற முதன்மை கடல்சார் விநியோக வழித்தடங்களில் தடைகளை ஏற்படுத்தியது. </p><p>இதனால் பாரம்பரியமாக எண்ணெய் விநியோகிக்கும் வளைகுடா நாடுகளிடமிருந்து எண்ணெய் கிடைப்பதில் சிக்கல் உருவானது. இதனையடுத்து, உள்நாட்டு சுத்திகரிப்பு ஆலைகளின் உற்பத்தியைத் தொய்வின்றித் தொடர, இந்திய நிறுவனங்கள் மீண்டும் ரஷியாவின் மலிவு விலை ‘யூரல்ஸ்’ கச்சா எண்ணெயை அதிக அளவில் கொள்முதல் செய்யத் தொடங்கின. </p><p>இதன் காரணமாக, ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் சவுதி அரேபியா மற்றும் ஈராக் உள்ளிட்ட பாரம்பரிய மத்திய கிழக்கு நாடுகளின் கூட்டு வர்த்தகப் பங்கு 43 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாகக் குறைந்துள்ளது.</p><h2>பொரு<strong>ளாதார நெரு</strong>க்கடி</h2><p>இந்தியாவின் இந்த சாதனை அளவிலான எண்ணெய் கொள்முதல் அமெரிக்காவின் அதிருப்தியை தீவிரப்படுத்தியுள்ளது. ரஷிய கச்சா எண்ணெயைக் கொள்முதல் செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் நாடுகள் மீது 100% வரை வர்த்தக சுங்கவரி விதிக்க வழிவகுக்கும் புதிய சட்ட மசோதாவுக்கு அமெரிக்க மேலவை சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.</p><p>இந்த மசோதா பிரதிநிதிகள் சபையின் ஒப்புதலையும் பெற வேண்டியுள்ள நிலையில், வரவிருக்கும் மாதங்களில் இந்திய சுத்திகரிப்பு ஆலைகள் கூடுதல் பொருளாதாரக் கட்டுப்பாடுகளையோ அல்லது தங்களின் கொள்முதல் உத்திகளை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தையோ சந்திக்கக்கூடும் என சர்வதேச வர்த்தக வல்லுநர்கள் கணிக்கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த சுப்மன் கில்.. இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி தொடக்கம்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/shubman-gill-chooses-batting-after-winning-toss-india-vs-sri-lanka-first-test</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/shubman-gill-chooses-batting-after-winning-toss-india-vs-sri-lanka-first-test#comments</comments><guid isPermaLink="false">893d8791-c6e6-4f06-8cbf-d05f60bea67c</guid><pubDate>Sat, 15 Aug 2026 04:49:27 +0000</pubDate><atom:updated>2026-08-15T04:49:27.114Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சுப்மன் கில்,Shubman Gill,Cricket,டெஸ்ட் போட்டி,test match</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/7q0jqww3/Untitled-design-57.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Srilanka test match]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/7q0jqww3/Untitled-design-57.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.</p><p>இந்நிலையில் இன்று முதல் டெஸ்ட் போட்டி இலங்கையில் உள்ள கல்லே கிரிக்கெட் மைதானத்தில் காலை 10 மணிக்கு தொடங்கியது.</p><p>அப்போது டாஸ் வென்ற இந்திய கிர்க்கெட் அணியின் கேப்டன் சுப்மன் கில், பேட்டிங்கை தேர்வு செய்தார்.</p><p>அப்போது பேசிய அவர், “நாங்கள் முதலில் பேட் செய்யப் போகிறோம். விக்கெட்டும் வானிலையும் நன்றாக இருப்பதாக தெரிகிறது.</p><p>எனவே இது எங்களுக்கு ஒரு நல்ல கிரிக்கெட் நாளாக அமையும் என்று நம்புகிறோம். கடந்த போட்டியில் விளையாடிய அதே ஆடும் லெவனுடன் களமிறங்கியுள்ளோம். </p><p>எங்களிடம் ஐந்து பந்துவீச்சாளர்கள் உள்ளனர். இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள். நம் நாட்டை வழிநடத்த வாய்ப்பு கிடைக்கும் ஒவ்வொரு முறையும் இது எனக்கு ஒரு மிகப்பெரிய கௌரவம்.</p><p>இந்த சந்தர்ப்பத்தில் இது இன்னும் சிறப்பு வாய்ந்தது. எங்களுக்கு இது சுதந்திர தினம் மற்றும் 600-வது டெஸ்ட் போட்டி. எனவே, ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என்று அவர் கூறினார்.</p><p>டெஸ்ட் போட்டியில் கலந்துகொண்டு விளையாடும் இரண்டு அணிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.</p><p>இந்தியா (பிளேயிங் லெவன்): யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், தேவ்தத் படிக்கல், ஷுப்மன் கில்(கேட்ச்), ரிஷப் பந்த்(வ), ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், மானவ் சுதர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா</p><p>இலங்கை (பிளேயிங் லெவன்): லஹிரு உதாரா, நிஷான் பெர்னாண்டோ, தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா (கேட்ச்), சோனல் தினுஷா, நிரோஷன் டிக்வெல்லா (வ), கேஷர நுவந்த, பிரபாத் ஜெயசூர்யா, லஹிரு குமார, அசித்த பெர்னாண்டோ</p>]]></content:encoded></item><item><title>7000mAh பேட்டரியுடன் அறிமுகமான புது மோட்டோ ஸ்மார்ட்போன்</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/moto-g-max-launched-in-india</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/moto-g-max-launched-in-india#comments</comments><guid isPermaLink="false">600f05cf-8535-4765-8317-2a0b60319d38</guid><pubDate>Sat, 15 Aug 2026 04:49:00 +0000</pubDate><atom:updated>2026-08-15T04:49:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Motorola,மோட்டோரோலா,smartphone,ஸ்மார்ட்போன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/5uuq4kvg/moto-g-max.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Moto G Max]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/5uuq4kvg/moto-g-max.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/motorola">மோட்டோரோலா</a> நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது முற்றிலும் புதிய மோட்டோ ஜி மேக்ஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இது இந்திய சந்தையில் அந்நிறுவனத்தின் இரண்டாவது மேக்ஸ் சீரிஸ் <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மார்ட்போன்</a> ஆகும். </p><p>புதிய மோட்டோ ஜி மேக்ஸ் மாடலில் 6.72 இன்ச் டிஸ்ப்ளே, குவால்காம் நிறுவனத்தின் சிப்செட், அதிகபட்சமாக 7000mAh பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. </p><h2>சிறப்பு அம்சங்கள்:</h2><p>சிறப்பம்சங்களை பொருத்தவரை மோட்டோ ஜி மேக்ஸ் ஸ்மார்ட்போனில் 6.72 இன்ச் 1080x2400 பிக்சல் Full HD+ LCD ஸ்கிரீன், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6s ஜென் 4 சிப்செட், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, விர்ச்சுவல் ரேம் எக்ஸ்பான்ஷன் வசதி வழங்கப்படுகிறது.</p><p>இந்த ஸ்மார்ட்போன் டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ஹெல்லோ யுஐ கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் இரண்டு ஆண்ட்ராய்டு ஓ.எஸ். அப்டேட்கள், மூன்று ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்குவதாக மோட்டோ தெரிவித்துள்ளது.</p><p>புகைப்படங்களை எடுக்க 50MP சோனி பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, 4ஜி எல்.டி.இ., ப்ளூடூத் 5.1, ஜி.பி.எஸ்., 3.5mm ஹெட்போன் ஜாக் மற்றும் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது.</p><p>இத்துடன் IP64 தர டஸ்ட், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி மற்றும் MIL-STD-810H தரத்திற்கு உட்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 7000mAh பேட்டரி, 30 வாட் டர்போ பவர் சார்ஜிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது.</p><h2>விலை விவரங்கள்:</h2><p>புதிய மோட்டோ ஜி மேக்ஸ் ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 27,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பேன்டோன் அலாஸ்கன் புளூ, பேன்டோன் மலாகா மற்றம் பேன்டோன் ஸ்டார்கேசர் நிறங்களில் கிடைக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>உரிமையை பெற்றுத் தந்தவர் தலைவர் கலைஞர்..!- திமுக எம்பி கனிமொழி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mp-kanimozhi-hails-kalaignar-for-winning-flag-hoisting-rights</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mp-kanimozhi-hails-kalaignar-for-winning-flag-hoisting-rights#comments</comments><guid isPermaLink="false">f7b3787b-30ca-4b1d-b276-aa4748fb6139</guid><pubDate>Sat, 15 Aug 2026 04:45:42 +0000</pubDate><atom:updated>2026-08-15T04:45:42.446Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,கனிமொழி,Kanimozhi MP,Independence Day,சுதந்திர தினம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/lemy6kd1/kanimozhi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DMK MP Kanimozhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/lemy6kd1/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாட்டின் 80-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி வைத்தார்.</p><p>சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் விஜய் தேசிய கொடி ஏற்றி வைத்தார். சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.</p><p>இந்நிலையில், திமுக எம்பி கனிமொழி சுதந்திர தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்தார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பக்கத்தில் கூறியதாவது:-</p><p>எண்ணற்ற தியாகங்களாலும் போராட்டங்களாலும் ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து இந்நாளில் விடுதலை பெற்றது, இந்திய நாடு.</p><p>அவ்வாறு போராடிப் பெற்ற சுதந்திரம் அனைத்து மக்களுக்குமானது என்பதை உணர்த்தும் வகையிலும், இந்நாடு ஏற்றுள்ள கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்தும் வகையிலும், சுதந்திர தினத்தன்று மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடியேற்றும் உரிமையைப் போராடிப் பெற்றுத் தந்தவர் தலைவர் கலைஞர்.</p><p>தாய்நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வீரர்களின் தியாகங்களைப் போற்றுவோம். அந்த விடுதலையை முழுமையாக்கும் கூட்டாட்சித் தத்துவத்தின் விழுமியங்களை உயர்த்திப் பிடிப்போம்!</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">எண்ணற்ற தியாகங்களாலும் போராட்டங்களாலும் ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து இந்நாளில் விடுதலை பெற்றது, இந்திய நாடு.<br><br>அவ்வாறு போராடிப் பெற்ற சுதந்திரம் அனைத்து மக்களுக்குமானது என்பதை உணர்த்தும் வகையிலும், இந்நாடு ஏற்றுள்ள கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்தும் வகையிலும், சுதந்திர… <a href="https://t.co/cdkC6Psq0x">pic.twitter.com/cdkC6Psq0x</a></p>&mdash; Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) <a href="https://x.com/KanimozhiDMK/status/2088454865311936800?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த 7.7 ரிக்டர் நிலநடுக்கம்: கரையோர பகுதிகள் கடும் பாதிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/world/indonesia-hit-by-powerful-7-7-quake-coastal-regions-suffer-severe-damage</link><comments>https://www.maalaimalar.com/news/world/indonesia-hit-by-powerful-7-7-quake-coastal-regions-suffer-severe-damage#comments</comments><guid isPermaLink="false">9040fe41-b142-45eb-b252-3ecbf0e80f08</guid><pubDate>Sat, 15 Aug 2026 04:40:53 +0000</pubDate><atom:updated>2026-08-15T04:40:53.981Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>indonesia,நிலநடுக்கம்,Indonesia  Earthquake,Flores,இந்தோனேசியா,புளோரெஸ் தீவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/4b6pfi8d/INDONESIA.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Indonesia  Earthquake]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/4b6pfi8d/INDONESIA.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் உள்ள புளோரெஸ் தீவுப் பகுதியில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் நிலப்பரப்புகள் பலமாக அதிர்ந்ததால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.</p><h2>நில அதிர்<strong>வு நிலவர</strong>ம்</h2><p>அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, நிலநடுக்கத்தின் மையப்பகுதி எண்டே நகரத்திற்கு வடமேற்கே 68 கிலோமீட்டர் தொலைவில், கடலுக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்திருந்தது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் 5.6 மற்றும் 5.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த தொடர் அதிர்வுகளும் பதிவாகியுள்ளன.</p><h2>சுனாமி <strong>எச்சரிக்</strong>கை</h2><p>நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தோனேசிய புவியியல் மற்றும் வானிலை ஆய்வு மையம் தெற்கு சுலவேசி மற்றும் கிழக்கு நுசா தெங்காரா ஆகிய கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்தது. சில இடங்களில் கடல் அலைகள் 1 மீட்டர் உயரம் வரை உயர்ந்து சீறியதைத் தொடர்ந்து, கரையோர மக்கள் உடனடியாக உயரமான நிலப்பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டனர். பின்னர் அலைகளின் ஆபத்து குறைந்ததால் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.</p><h2>உயி<strong>ர்ச்சேதம்-கட்</strong>டிடங்கள் சேதம்</h2><p>நிலநடுக்கத்தின் தீவிரத்தால் பல மருத்துவமனைகள், வீடுகள், பாலங்கள் மற்றும் வணிகக் கட்டிடங்கள் பலத்த சேதமடைந்து இடிந்து விழுந்தன. இதுவரை கிடைத்துள்ள முதற்கட்ட தகவல்களின்படி, கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், பலர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் இருந்த நோயாளிகளும், சுமார் 2,000-க்கும் மேற்பட்ட உள்ளூர் கிராமவாசிகளும் உடனடியாகப் பாதுகாப்பான முகாம்களுக்கு மாற்றப்பட்டு மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>அனைவருக்கும் விடுதலை நாள் நல்வாழ்த்துகள்!- மு.க.ஸ்டாலின் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-wishes-to-independence-day</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-wishes-to-independence-day#comments</comments><guid isPermaLink="false">e103d90e-1e4f-4555-ace3-f6680a88f03e</guid><pubDate>Sat, 15 Aug 2026 04:11:16 +0000</pubDate><atom:updated>2026-08-15T04:11:16.416Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,Independence Day,சுதந்திர தினம்,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/drpu10xi/MKStalin09.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/drpu10xi/MKStalin09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நாளை என்பதை அறிவாலும் ஆற்றலாலும் வடிவமைத்து, சமத்துவம் – சகோதரத்துவம் – முற்போக்கு – மனிதநேயம் உள்ளிட்ட விழுமியங்களோடு ஒன்றுபட்டு முன்னேறுவோம்! என்று கூறியுள்ளார்.</strong></em> </p><p>நாட்டின் 80-வது <a href="https://www.maalaimalar.com/topic/சுதந்திர-தினம்">சுதந்திர தினம்</a> இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி வைத்தார். சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் விஜய் தேசிய கொடி ஏற்றி வைத்தார். சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். </p><p>இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் சுதந்திர தினத்தையொட்டி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><p>பிற்போக்கையும் பழமையையும் வேரறுத்து, பன்மைத்துவத்தையும் ஒற்றுமையையும் உயர்த்திப் பிடிப்பதே நமது இந்தியா!</p><p>கோடிக்கணக்கான மக்களின் கனவுகள் நனவாகும் ஒளிமிகு எதிர்காலத்தை நோக்கிய நம் நாட்டின் பயணம் வெல்ல வேண்டும்!</p><p>நாளை என்பதை அறிவாலும் ஆற்றலாலும் வடிவமைத்து, சமத்துவம் – சகோதரத்துவம் – முற்போக்கு – மனிதநேயம் உள்ளிட்ட விழுமியங்களோடு ஒன்றுபட்டு முன்னேறுவோம்!</p><p>அனைவருக்கும் விடுதலை நாள் நல்வாழ்த்துகள்!  என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">பிற்போக்கையும் பழமையையும் வேரறுத்து, பன்மைத்துவத்தையும் ஒற்றுமையையும் உயர்த்திப் பிடிப்பதே நமது இந்தியா!<br><br>கோடிக்கணக்கான மக்களின் கனவுகள் நனவாகும் ஒளிமிகு எதிர்காலத்தை நோக்கிய நம் நாட்டின் பயணம் வெல்ல வேண்டும்!<br><br>நாளை என்பதை அறிவாலும் ஆற்றலாலும் வடிவமைத்து, சமத்துவம் – சகோதரத்துவம்… <a href="https://t.co/TeA3zZ0SQ9">pic.twitter.com/TeA3zZ0SQ9</a></p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2088464998813319176?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>24 மணி நேர உபவாசம்: காந்திஜி ஆகஸ்ட் 15, 1947 அன்று டெல்லியை விடுத்து கல்கத்தாவில் இருந்தது ஏன்?</title><link>https://www.maalaimalar.com/news/national/24-hour-fast-why-gandhi-stayed-in-calcutta-not-delhi-on-august-15-1947</link><comments>https://www.maalaimalar.com/news/national/24-hour-fast-why-gandhi-stayed-in-calcutta-not-delhi-on-august-15-1947#comments</comments><guid isPermaLink="false">2f49b301-3618-44c4-91cb-9ad9517b1d62</guid><pubDate>Sat, 15 Aug 2026 04:10:52 +0000</pubDate><atom:updated>2026-08-15T04:10:52.769Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Independence Day,சுதந்திர தினம்,கல்கத்தா,calcutta,டெல்லி,Gandhiji,காந்திஜி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/qlj0ysu8/Untitled-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gandhiji ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/qlj0ysu8/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் முதல் சுதந்திர தினம் ஆகஸ்ட் 15, 1947 அன்று நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. நாட்டின் தலைநகரான புதுடெல்லியில் அரசமைப்பு பேரவையில் கொண்டாட்டங்கள் கலைகட்டின. லார்ட் மவுண்ட்பேட்டன் சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகப் பொறுப்பேற்றார். </p><p>டெல்லி முழுவதும் நூற்றுக்கணக்கான இடங்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, "மகாத்மா காந்தி வாழ்க" என்ற முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன. ஆனால், இந்தியாவின் விடுதலைக்காகத் தன் வாழ்நாளெல்லாம் பாடுபட்ட அண்ணல் காந்திஜி அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வின் போது டெல்லியில் இருக்கவில்லை.</p><h2>வன்முறை<strong>யும் பிரிவினை</strong>யும்</h2><p>சுதந்திர தினத்திற்கு இரு வாரங்களுக்கு முன்பாகவே டெல்லியிலிருந்து புறப்பட்ட காந்திஜி, காஷ்மீர் பயணத்திற்குப் பிறகு கல்கத்தா(அப்போதைய பெயர்) நகரத்தை அடைந்தார். அப்பகுதியில் மதக் கலவரங்கள் உக்கிரமாக நடந்து வந்தன. கல்கத்தாவில் தொடங்கி கிராமப்புறங்களுக்கும், பீகார் மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கும் பரவியிருந்த வன்முறை காரணமாக எண்ணற்ற மக்கள் உயிர்களையும் உடைமைகளையும் இழந்து தவித்தனர். </p><p>ஆகஸ்ட் 13 அன்று கல்கத்தாவின் பெலியாகாட்டா பகுதிக்கு வந்தடைந்த காந்திஜி, அங்குள்ள 'ஹைதாரி ஹவுஸ்' என்னும் கட்டிடத்தில் தங்கினார். கல்கத்தாவில் அமைதியையும் சகிப்புத்தன்மையையும் மீட்டெடுப்பதே அவரது முதன்மை நோக்கமாகும்.</p><h2>எதிர்ப்பு<strong>களும் காந்தி</strong>ஜியின் உறுதியும்</h2><p>ஆரம்பத்தில் காந்திஜியின் வருகைக்கு அங்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தினர். எனினும், தான் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய இரு தரப்பினருக்குமே சேவை செய்ய வந்துள்ளதாகக் கூறிய காந்திஜி, வன்முறை மீண்டும் தொடர்ந்தால் தான் உயிருடன் இருக்க மாட்டேன் என எச்சரித்தார். கல்கத்தாவில் மத நல்லிணக்கம் திரும்பினால் மட்டுமே பஞ்சாப் மற்றும் நாட்டின் பிற பகுதிகளையும் காப்பாற்ற முடியும் என்று அவர் தீர்க்கமாக நம்பினார்.</p><h2>பிரார்த்த<strong>னையும் உப</strong>வாசமும்</h2><p>சுதந்திர தினத்தைக் எவ்வாறு கொண்டாடுவது என்று தன்னிடம் கேட்டவர்களிடம், "சுற்றிலும் மனிதர்கள் பசியாலும் வன்முறையாலும் மடிந்து கொண்டிருக்கும் போது, நாம் எப்படி கொண்டாட்டங்களில் ஈடுபட முடியும்?" என்று காந்திஜி கேள்வி எழுப்பினார். சர்வதேச ஊடகங்கள் அவரிடம் சுதந்திர தினச் செய்தியைக் கேட்டபோது, "என் மனதில் வார்த்தைகள் வற்றிவிட்டன" என்று கூறி, ஜவாஹர்லால் நேருவைப் தொடர்பு கொள்ளுமாறு வழிகாட்டினார்.</p><p>நாடு விடுதலை அடைந்த போதிலும், அது பிரிவினையோடும் பேரழிவோடும் வந்தடைந்ததை எண்ணி காந்திஜி வேதனை அடைந்தார். இதனால், ஆகஸ்ட் 15, 1947 அன்று எந்தவித கொண்டாட்டத்திலும் பங்கேற்காமல் 24 மணி நேர உபவாசம் இருந்தார். அத்துடன் பிரார்த்தனையிலும் கைராட்டையில் நூல் நூற்பதிலும் தன் பொழுதைச் செலவிட்டார்.</p><h2>நம்பிக்<strong>கையளித்த நல்லி</strong>ணக்கத்தின் உதயம்</h2><p>இருப்பினும், சுதந்திர தினத்தின் காலைப் பொழுதில் சில மாற்றங்கள் காந்திஜிக்கு நம்பிக்கையளித்தன. கல்கத்தாவில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து வீதிகளில் "ஜெய் ஹிந்த்" என முழக்கமிட்டபடி ஊர்வலம் சென்றனர். மாலையில் பெலியாகாட்டாவில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். அங்கு உரையாற்றிய காந்திஜி, மக்களிடையே ஏற்பட்ட இந்த நல்லிணக்கம் தற்காலிகமானதாக இல்லாமல், இதயப்பூர்வமானதாக நீடிக்க வேண்டும் என்று தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருதை வழங்கினார் முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-presented-the-thagaisal-tamizhar-award-to-senior-congress-leader-krishnasamy</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-presented-the-thagaisal-tamizhar-award-to-senior-congress-leader-krishnasamy#comments</comments><guid isPermaLink="false">b8e4e90b-deb5-43b1-ba54-1b5207e3429c</guid><pubDate>Sat, 15 Aug 2026 03:54:35 +0000</pubDate><atom:updated>2026-08-15T03:54:35.349Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Independence Day,சுதந்திர தினம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/ksplz5wv/vijay0.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருதை வழங்கினார் முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருதை வழங்கினார் முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/ksplz5wv/vijay0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>திருவிடைமருதூர், கருங்கல், செட்டிப்பாளையத்துக்கு சிறந்த பேரூராட்சிக்கான விருதும், போடிநாயக்கனூர், ஆரணி, விழுப்புரத்துக்கு சிறந்த நகராட்சிக்கான விருதும் வழங்கப்பட்டது.</strong></em> </p><p>நாட்டின் 80-வது <a href="https://www.maalaimalar.com/topic/சுதந்திர-தினம்">சுதந்திர தினத்தையொட்டி</a> சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் விஜய் கொடியேற்றினார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். இதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருது வழங்கினார். மேலும் விருது பெற்றவர்களின் விவரம்:- </p><p>* மாநில இளைஞருக்கான விருது இம்மானுவேல் நெல்சன், சரவணகுமார், நிர்மல் கதிரவேலுக்கு வழங்கப்பட்டது. </p><p>* மாநில இளைஞருக்கான விருதை பெண்கள் பிரிவில் ராஜேஸ்வரி மகாதேவன், சிந்தா பெற்றுக்கொண்டனர்.</p><p>* கே.கே. நகர் அரசு மருத்துவனை மருத்துவர் திருநாவுக்கரசுக்கு சிறந்த மருத்துவருக்கான விருது வழங்கப்பட்டது. </p><p>* முதலமைச்சரின் நல் ஆளுமை விருது நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னீருக்கு வழங்கப்பட்டது. </p><p>* கோவையைச் சேர்ந்த வீராங்கனை நவ்ஷீன் பானுசந்த் என்பவருக்கு கல்பனா சாவ்லா விருதை முதலமைச்சர் விஜய் வழங்கினார். </p><p>* முதலமைச்சரின் நல் ஆளுமை விருதை கோவை அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் கீதாஞ்சலிக்கு வழங்கப்பட்டது. </p><p>* முதலமைச்சரின் நல் ஆளுமை விருதை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் சதீஷ் பிரபு மற்றும் குழுவினருக்கு வழங்கப்பட்டது. </p><p>* கிருஷ்ணகிரி ஆட்சியர் தினேஷ்குமாருக்கு சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவருக்கான விருது. </p><p>* திருவிடைமருதூர், கருங்கல், செட்டிப்பாளையத்துக்கு சிறந்த பேரூராட்சிக்கான விருதும், போடிநாயக்கனூர், ஆரணி, விழுப்புரத்துக்கு சிறந்த நகராட்சிக்கான விருதும் வழங்கப்பட்டது. </p><p>* விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள சிருஷ்டி பவுண்டேஷன் சிறந்த நிறுவனத்துக்கான விருதைப் பெற்றது. </p><p>* திருவண்ணாமலை மாவட்டத்தின் பா.மணிமாறனுக்கு சிறந்த சமூகப் பணியாளருக்கான விருது வழங்கப்பட்டது. </p><p>* அதிகளவில் பணியமரித்திய சிறந்த நிறுவனத்திற்கான விருதை திருப்பூரின் SCM கார்மெண்ட்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. </p><p>* மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு சிறந்த கூட்டுறவு வங்கிக்கான விருதை முதலமைச்சர் விஜய் வழங்கினார். </p><p>இதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளி சிறுவர்களுக்கு முதலமைச்சர் விஜய் இனிப்புகளை வழங்கினார். இதையடுத்து விருது பெற்றவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். </p>]]></content:encoded></item></channel></rss>