<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 27 Jul 2026 07:32:32 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-27-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-27-july-2026#comments</comments><guid isPermaLink="false">8b4780d9-1157-4420-b1d3-5493e3a0aec3</guid><pubDate>Mon, 27 Jul 2026 04:28:11 +0000</pubDate><atom:updated>2026-07-27T07:28:23.212Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/po8rkawb/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/po8rkawb/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-government-introduces-strict-exam-malpractice-prevention-bill-in-parliament">கடும் அமளிக்கு மத்தியில் 'தேர்வு முறைகேடுகளை தடுக்கும் மசோதா' மக்களவையில் தாக்கல்.. அம்சங்கள் என்ன? </a></p><p>பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்த மசோதா 2026' அவையில் தாக்கல் செய்யப்பட்டது.</p><p>*சட்ட விதிமுறைகளை கடுமையாகும் வகையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-says-law-against-honor-killing-soon">ஆணவக்கொலைக்கு எதிராக விரைவில் சட்டம் - அமைச்சர் வன்னி அரசு</a></p><p>* சாதிய ஆணவப்படுகொலைக்கு எதிரான சட்டம் தொடர்பாக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.</p><p>* பிரதமர் மோடி அமைத்துள்ள உயர்மட்ட குழுவே ஒரு ஏமாற்ற வேலைதான். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-modi-government-must-withdraw-highway-toll-robbery"> சுங்கக் கட்டண கொள்ளையை மோடி அரசு திரும்பப் பெற வேண்டும் - மாணிக்கம் தாகூர்</a></p><p>* கடந்த நான்கு மாதங்களில் மூன்றாவது முறையாக கட்டணம் சுங்கக் கட்டணம் உயர்ந்துள்ளது.</p><p>* தமிழ்நாட்டில் இருந்து ஆண்டுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் சுங்கக் கட்டணம் வசூலிக்கிறது மோடி அரசு. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/desilting-of-water-bodies-minister-anand-conducts-field-inspection-after-arriving-on-a-motorcycle">நீர்நிலைகள் தூர்வாரும் பணி - மோட்டார் சைக்கிளில் வந்து கள ஆய்வு செய்த அமைச்சர் ஆனந்த் </a></p><p>* கோயம்பேடு பகுதியில் ஆய்வு செய்வதற்காக அமைச்சர் ஆனந்த் தனது காரில் சென்றார்.</p><p>* கோயம்பேடு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anticipatory-bail-for-person-who-watched-jana-nayagan-online">இணையத்தில் 'ஜன நாயகன்' பார்த்தவருக்கு முன்ஜாமின்</a></p><p>* படம் கசிந்த விவகாரத்தில் மூளையாக செயல்பட்ட 8 முதல் 21 வரையிலான குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்</p><p>* வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் சிலர் ஏற்கனவே சட்டப்படியான ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/tamil-nadu-weightlifter-raja-muthupandi-brings-pride-to-india" rel="nofollow">இந்தியாவிற்கு பெருமை சேர்த்த தமிழக வீரர்..!- யார் இந்த ராஜா முத்துப்பாண்டி?</a></p><p>* ராஜா தனது பள்ளி காலத்தில் இருந்தே பளுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்று வந்துள்ளார்.</p><p>* 2018-ம் ஆண்டில் முதல் முறையாக காமன்வெல்த் போட்டியில் பங்கேற்று 6-வது இடம் பிடித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/supreme-court-slams-excessive-police-force-on-peaceful-delhi-student-march">போராட்டம் நடத்தினாலே தடியடியா? மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்</a><br><br>*போராட்டம் என்பது வன்முறை என்று அர்த்தமாகாது.</p><p>*தாக்குதல் குறித்த மனுக்கள் மீதான விசாரணையில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-congratulates-raja-muthupandi-on-commonwealth-games-silver-medal" rel="nofollow">காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம்: தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து</a></p><p>* தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக 30 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.</p><p>* ராஜா முத்துப்பாண்டியின் வெற்றி, இளைஞர்களுக்கு புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கட்டும்.  </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/11th-death-anniversary-of-peoples-president-dr-apj-abdul-kalam">"மக்கள் ஜனாதிபதி" டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 11-ம் ஆண்டு நினைவு அஞ்சலி!</a></p><p>* இராமேஸ்வரத்தில் பிறந்த எளிய செய்தித்தாள் விற்பனையாளர் மகன்</p><p>* மக்களின் ஜனாதிபதி, மாணவர்களுக்கு கனவு காண கற்றுக்கொடுத்தவர்</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/parliament-disruption-both-houses-adjourned-as-opposition-demands-debate-on-neet-leak-and-student-assault">தர்மேந்திர பிரதானுக்கு ராஜ வரவேற்பு.. மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளி - அவைகள் ஒத்திவைப்பு</a></p><p>*கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகிய தர்மேந்திர பிரதான், மக்களவை எம்.பி.யாக இன்று அவைக்கு வருகை புரிந்தார்.</p><p>*அவையின் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளை ஒத்திவைத்து இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/what-events-will-india-participate-in-at-the-commonwealth-games-today" rel="nofollow">காமன்வெல்த் விளையாட்டில் இன்று இந்தியா பங்கேற்கும் போட்டிகள் எவை?</a></p><p>* ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டம் முதல் சுற்று - குரிந்தர்விர் சிங். </p><p>* ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் தகுதிச் சுற்று, (பி பிரிவு)-லோகேஷ் சத்யநாதன். </p><p><a href="https://www.maalaimalar.com/sports/hattrick-gold-for-india-brings-immense-joy-mirabai-chanu" rel="nofollow">இந்தியாவுக்காக ‘ஹாட்ரிக்’ தங்கம் வென்றது மிகுந்த மகிழ்ச்சி- மீராபாய் சானு</a></p><p>* நான் 48 கிலோ எடை பிரிவில் போட்டியிடும் போது அதில் கடினமாக இருக்கிறது. </p><p>* நான் 3 நாட்களாக தண்ணீர் கூட குடிக்கவில்லை. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/abdul-kalam-memorial-day-11th-death-anniversary-collector-and-annamalai-pay-tribute">11-ம் ஆண்டு நினைவு நாள் - அப்துல் கலாம் நினைவிடத்தில் கலெக்டர், அண்ணாமலை மரியாதை</a></p><p>* ஏபிஜே அப்துல் கலாம் நினைவை போற்றும் வகையில், மத்திய அரசு பல கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம் அமைத்தது. </p><p>* பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் திரண்டு வந்து  அப்துல்கலாம் சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். </p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kavin-first-death-anniversary-minister-vanni-arasu-meets-family">கவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் - குடும்பத்தினரை சந்தித்து  அமைச்சர் வன்னி அரசு ஆறுதல்</a></p><p>* காதல் விவகாரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 27-ந்தேதி நெல்லையில் படுகொலை செய்யப்பட்டார். </p><p>* கவினின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.</p>  <p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-27-07-2026">GOLD PRICE TODAY: வார தொடக்கத்திலேயே தங்கப் பிரியர்களுக்கு அதிர்ச்சி: அதிரடியாக உயர்ந்த விலை!</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.13,370-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-ban-student-assault-row-dmk-congress-push-for-heated-debate-in-parliament">நீட் தேர்வு தடை, மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து விவாதிக்க தி.மு.க நோட்டீஸ்</a></p><p>*தொடர்ச்சியான தற்கொலைகள் குறித்து விவாதிக்க வேண்டும்</p><p>* கூட்டத்தொடரின் இரண்டாம் கட்டம் இன்று தொடங்கி வரும் ஆகஸ்ட் 2 வரை நடைபெற உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/seattle-food-festival-shooting-two-killed-five-injured-at-space-needle-event">அமெரிக்கா: உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச்சூடு - 2 பேர் பலி - ஐவர் காயம்</a></p><p>*தப்பிக்கும் முயற்சியில், மக்கள் ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டபடி சென்றதால் பலர் கீழே விழுந்தது பதிவாகியுள்ளது.</p><p>*இருவர் கைது என சியாட்டில் நகர மேயர் கேட்டி வில்சன் தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/plans-for-womens-premier-league-cricket-in-tamil-nadu" rel="nofollow">தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு முதல் 'பெண்கள் பிரீமியர் லீக்' போட்டி?</a></p><p>* தமிழ்நாட்டிற்கு மேலும் ஒரு சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கும் திட்டம் நீண்ட காலமாக உள்ளது.</p><p>* போட்டியுடன் பெண்களுக்கான இரண்டு கண்காட்சி போட்டி நடத்தப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-mariya-wilson-says-a-list-of-dmks-acts-of-corruption-will-be-released-during-the-upcoming-budget-session">நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் தி.மு.க. ஊழல் பட்டியல் வெளியாகும்- அமைச்சர் மரிய வில்சன்</a></p><p>* முதலமைச்சராக விஜய் பதவியேற்ற போதே, ஊழல் இல்லாத வெளிப்படைத்தன்மையுடன் கூடிய அரசாக இருக்கும் என்று உறுதியளித்தார்.</p><p>* '100 சதவீதம் மக்களுக்கு நன்மை அளிக்க கூடிய பட்ஜெட்டாக த.வெ.க. அரசின் பட்ஜெட் இருக்கும்' என்று தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>கடும் அமளிக்கு மத்தியில் &apos;தேர்வு முறைகேடுகளை தடுக்கும் மசோதா&apos; மக்களவையில் தாக்கல்.. அம்சங்கள் என்ன? </title><link>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-government-introduces-strict-exam-malpractice-prevention-bill-in-parliament</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-government-introduces-strict-exam-malpractice-prevention-bill-in-parliament#comments</comments><guid isPermaLink="false">de8f33c4-69ef-4e65-9161-06581d3f9c4d</guid><pubDate>Mon, 27 Jul 2026 07:25:43 +0000</pubDate><atom:updated>2026-07-27T07:25:43.019Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>bill,மக்களவை,Lok Sabha,question paper leak,வினாத்தாள் கசிவு,மசோதா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/ldzryqsr/tn-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மக்களவை ]]></media:title><media:description type="html"><![CDATA[ மக்களவை ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/ldzryqsr/tn-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இரண்டாம் கட்ட நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நீட் வினாத்தாள் கசிவு விவகாரம், ஜூலை 20 அன்று நாடாளுமன்றம் நோக்கி பேரணி வந்த <a href="https://www.maalaimalar.com/news/national/supreme-court-slams-excessive-police-force-on-peaceful-delhi-student-march">மாணவர்கள் மீதான தாக்குதல்</a> குறித்து உடனே விவாதகிக்க இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். </p><p>இதைத்தொடர்ந்து இரு அவைகளும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மதியம் 12 மணிக்கு மீண்டும் இரு அவைகளும் கூடின. </p><h2>மசோதா தாக்கல்</h2><p>மக்களவை மீண்டும் கூடிய உடனே,  'பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்த மசோதா 2026' மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்கால் அவையில் தாக்கல் செய்யப்பட்டது.</p><p>வினாத்தாள் கசிவுகள், தேர்வு முறைகேடுகளுக்கு தண்டனையை அதிகரிக்கும் விதமாக சட்ட விதிமுறைகளை கடுமையாகும் வகையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. </p><h2>மசோதாவின் அம்சங்கள்</h2><p>முறைகேட்டின் தீவிரத்தை பொறுத்து 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் திருத்தம் செய்யப்படும். திட்டமிட்டு குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டு சிறை; ரூ.10 கோடி வரை அபராதம் விதிக்கப்படும்.</p><p>மேல் முறையீடு வழக்குகள் மூன்று மாதத்திற்குள் முடிக்க வேண்டும். தவறு செய்யும் நிறுவனங்கள் பொதுத்தேர்வுகளை நடத்த விதிக்கப்படும் தடை காலம் 8 ஆண்டுகளாக உயர்த்தப்படும் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளிட்ட மசோதாவில் இடம்பெற்றுள்ளன</p><h2>அவையில் அமளி</h2><p>மசோதா அறிமுகத்தின்போதும் அதை தொடர்ந்தும், ஜூலை 20 அன்று மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து விவாதிக்க கோரி, எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் அமளியால் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.</p> <h2>ஜூலை 20 தாக்குதல்</h2><p>ஜூலை 20, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் சிஜேபி தலைமையில் மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்றனர்.</p><p>அப்போது அவர்கள் மீது டெல்லி காவல்துறை, ஆர்ஏஎப் மத்திய படையினர் லத்திகளால் கொடூரமாக தாக்குதல் நடத்தினர். கண்ணீர் புகைகுண்டுகுகள் வீசப்பட்டன.</p><p>ஆபத்தான பெல்லட் துப்பாக்கிகளும் மாணவர்கள் மீது பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. 60 பேர் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.</p> ]]></content:encoded></item><item><title>ஆணவக்கொலைக்கு எதிராக விரைவில் சட்டம் - அமைச்சர் வன்னி அரசு
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-says-law-against-honor-killing-soon</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-says-law-against-honor-killing-soon#comments</comments><guid isPermaLink="false">747547db-dfb6-46ec-b258-39679ac5f87b</guid><pubDate>Mon, 27 Jul 2026 07:15:44 +0000</pubDate><atom:updated>2026-07-27T07:15:44.015Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>honour killing,ஆணவ படுகொலை,minister vanni arasu,அமைச்சர் வன்னி அரசு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/8aiycqxm/vanniarasu1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வன்னி அரசு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/8aiycqxm/vanniarasu1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் சாதி ஆணவக்கொலைக்கு எதிராக விரைவில் சட்டம் இயற்றப்படும் என அமைச்சர் வன்னிஅரசு தெரிவித்துள்ளார்.</p><h2>ஆணவப்படுகொலை</h2><p>காதல் விவகாரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 27-ந்தேதி நெல்லையில் கவின் படுகொலை செய்யப்பட்டார். கவின் ஆணவப்படுகொலை செய்யப்பட்டு ஓராண்டான நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தில் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு ஆறுதல் கூறினார்.</p> <h2>சாதிய ஆணவப்படுகொலைக்கு எதிரான சட்டம்</h2><p>இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது:</p><p>* தமிழகத்தில் சாதி ஆணவக்கொலைக்கு எதிராக விரைவில் சட்டம் இயற்றப்படும்.</p><p>* சாதிய ஆணவப்படுகொலைக்கு எதிரான சட்டம் தொடர்பாக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.</p><p>* ஆணவப்படுகொலைக்கு எதிரான சட்டம் தொடர்பாக அரசு அதிகாரிகளின் கருத்தின்படி விரைவில் முதலமைச்சர் விஜயிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.</p> <h2>தர்மேந்திர பிரதான்</h2><p>* நீட் விவகாரத்தில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகி இருப்பது சரியல்ல. பிரதமரே பதவி விலக வேண்டும். ஏனென்றால் அவரும் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்பது தான் எங்களுடைய கோரிக்கை.</p><h2>நீட் தேர்வு ரத்து</h2><p>* நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும். பிரதமர் மோடி அமைத்துள்ள <a href="https://www.maalaimalar.com/news/national/panel-formed-to-restore-prime-ministers-tainted-image-jairam-ramesh">உயர்மட்ட குழுவே</a> ஒரு ஏமாற்ற வேலைதான். நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் இதுதான் நம்முடைய இலக்கு. தமிழ்நாடு அரசின் நிலைப்பாடும் அதுதான்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>இணையத்தில் &apos;ஜன நாயகன்&apos; பார்த்தவருக்கு முன்ஜாமின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anticipatory-bail-for-person-who-watched-jana-nayagan-online</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anticipatory-bail-for-person-who-watched-jana-nayagan-online#comments</comments><guid isPermaLink="false">ea6334ca-8a2c-46c7-b964-98e6249a84bb</guid><pubDate>Mon, 27 Jul 2026 07:12:41 +0000</pubDate><atom:updated>2026-07-27T07:12:41.474Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Jana Nayagan,ஜன நாயகன்,சென்னை ஐகோர்ட்,Madras HC</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/tb80akb6/jana.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஜன நாயகன் பட காட்சி]]></media:title><media:description type="html"><![CDATA[ ஜன நாயகன் பட காட்சி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/tb80akb6/jana.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் பார்த்தவருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.</aside><h2><strong>இணையதளத்தில்...</strong></h2><p>சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக, தனது கடைசிப்படம் என முதலமைச்சர் விஜய் அறிவித்து, நடித்த <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9C%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D">ஜனநாயகன்</a> படம், கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தணிக்கைக் குழுவின் மறு ஆய்வு குழுவின்  ஆய்வில் படம் இருந்த நிலையில், ஏப்ரல் 3-ந்தேதி சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியானது.</p><p>பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்‌ஷன்ஸ் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவுசெய்யப்பட்ட வழக்கை சென்னை  சைபர் கிரைம் பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த எறகுண்டப்பட்டியை சேர்ந்த ஆர்.பிரதீப்குமார் என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.</p><h2><strong>முன் ஜாமின்</strong></h2><p>இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி பிரதீப்குமார் தாக்கல் செய்த மனு நீதிபதி சி.குமரப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது.</p><p>அப்போது, மனுதாரர் தரப்பில், <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/3-big-films-starring-mamitha-baiju-are-releasing-within-a-same-month">ஜனநாயகன்</a> படம் திருட்டுத்தனமாக வெளியான போது பதிவு செய்யப்பட்ட பிரதான வழக்கில் அந்தப் படத்தை பார்த்தார் என்ற காரணத்திற்காக மட்டும் மனுதாரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. படம் கசிந்த விவகாரத்தில் ஒருவர் கைதுசெய்யப்பட்டபோது சாட்சியாக இருந்த மனுதாரர் மீதே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முதலாவது குற்றம்சாட்டப்பட்ட நபர் அந்த குற்றச்சாட்டிலிருந்தே விடுவிக்கப்பட்டுவிட்டார். விசாரணை முடிந்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்ட நிலையில், மேற்கொண்டு காவலில் வைத்து விசாரிக்க அவசியம் இல்லை. குற்றம்சாட்டப்பட்ட மற்ற சிலரும் ஜாமின், முன் ஜாமின் பெற்றுள்ளனர். எனவே,மனுதாரருக்கு முன் ஜாமின் வழங்க வேண்டுமென் வாதிடப்பட்டது.</p><p>போலீஸ் தரப்பில், "படம் கசிந்த விவகாரத்தில் மூளையாக செயல்பட்ட 8 முதல் 21 வரையிலான குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். விசாரணை நீதிமன்றத்தில் ஆரம்பகட்ட குற்றப்பத்திரிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரரரை கைது செய்து விசாரிக்காவிட்டால், படம் கசிவு தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்களை கண்டுபிடிக்க முடியாமல் போய்விடும். படத்தின் சட்டவிரோத வெளியீட்டு அதிகம்பேர் பார்த்து, படக்குழுவினருக்கு கணிசமான இழப்பை ஏற்படுத்தியுள்ளனர். மனுதாரரும் இந்த வழக்கில் முக்கிய குற்றம்சாட்டப்பட்ட நபர் என்பதால், அவரது முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென வாதிட்டார்.</p><p>இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி குமரப்பன், "வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் சிலர் ஏற்கனவே சட்டப்படியான ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒருவர் கைது செய்யப்பட்டபோது காவல்துறை தரப்பு சாட்சியாக ​​மனுதாரர் இருந்ததிலிருந்தே அவர் விசாரணைக்கு ஒத்துழைத்துள்ளார் என்பது தெரியவருகிறது. எனவே, அவருக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்குகிறேன்" என்று உத்தரவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவிற்கு பெருமை சேர்த்த தமிழக வீரர்..!- யார் இந்த ராஜா முத்துப்பாண்டி?</title><link>https://www.maalaimalar.com/sports/tamil-nadu-weightlifter-raja-muthupandi-brings-pride-to-india</link><comments>https://www.maalaimalar.com/sports/tamil-nadu-weightlifter-raja-muthupandi-brings-pride-to-india#comments</comments><guid isPermaLink="false">a18eb8b7-3858-4271-b88b-050479171ea8</guid><pubDate>Mon, 27 Jul 2026 07:12:03 +0000</pubDate><atom:updated>2026-07-27T07:12:03.109Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக வீரர்,காமன்வெல்த் போட்டி,Raja Muthupandi,ராஜா முத்துப்பாண்டி,TN player Raja muthupandi,Common wealth games 2026</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/wrk4hnh3/CWG.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Weight Lifter Raja Muthupandi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/wrk4hnh3/CWG.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட சங்கரலிங்க புரத்தை சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி என்ற பளுதூக்கும் வீரர் காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.</p><h2>சாதனை</h2><p>இவரது பெற்றோர்  முத்துப்பாண்டி- பேச்சியம்மாள். இந்த தம்பதியின் இளைய மகனான ராஜா முத்துப்பாண்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் 65 கிலோ எடை பிரிவு பளுதூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.</p><p>ராஜா வெள்ளிப்பதக்கம் வென்று உள்ளதால் அவரது குடும்பத்தினர் மற்றும்  கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ராஜாவின் தந்தை முத்துப்பாண்டி சுமை தூக்கும் தொழிலாளியாக உள்ளார்.</p><h2>சகோதரரும் பளு தூக்கும் வீரர்</h2><p>அவரது தாயார் பேச்சியம்மாள் தீப்பெட்டி ஆலையில் பணிபுரிந்து வருகிறார். அவருடைய  அண்ணன் சுரேஷ்குமாரும்  பளுதூக்கும் வீரர் ஆவார். இவர் மாநிலம் மற்றும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று வெற்றியும் பெற்றுள்ளார்.</p><p>காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றுள்ள ராஜா, அவருடைய சகோதரர் சுரேஷ் குமார் இருவரும் தொடக்கத்தில் கபடி விளையாட்டில் ஆர்வம் செலுத்திய நிலையில், உடலை பராமரிக்க வேண்டும், உடல் வலிமை பெற வேண்டும் என்பதற்காக  சங்கரலிங்கபுரத்தில் உள்ள  ஜிம்மில் பயிற்சி பெற சென்றுள்ளனர்.</p><h2>ரெயில்வே பணி</h2><p>இவர்கள் ஜிம்மில் காட்டும் ஆர்வத்தை பார்த்து அங்குள்ள பயிற்சியாளர்கள் இருவரையும் பளுதூக்கும் விளையாட்டிற்கு தயார் செய்துள்ளனர். வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ள ராஜா தனது பள்ளி காலத்தில் இருந்தே பளுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைக்க, அவருக்கு மயிலாடுதுறையில் உள்ள  சாய் விளையாட்டு விடுதியில் இடம் கிடைத்து.</p><p>அங்கு பயிற்சி பெற்று மாநிலம் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைக்க பெரம்பூர் ரெயில்வேயில் அவருக்கு பணி கிடைத்தது.</p><h2>வெள்ளி பதக்கம்</h2><p>2018-ம் ஆண்டில் முதல் முறையாக காமன்வெல்த் போட்டியில் பங்கேற்று 6-வது இடம் பிடித்தார். 2022-ல் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் உடல்நிலை பாதிப்பு காரணமாக பங்கேற்க முடியாத சூழ்நிலை இருந்தது.</p><p>இந்த நிலையில் தான் தற்போது ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் 65 கிலோ எடை பிரிவு பளுதூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>போராட்டம் நடத்தினாலே தடியடியா? மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/national/supreme-court-slams-excessive-police-force-on-peaceful-delhi-student-march</link><comments>https://www.maalaimalar.com/news/national/supreme-court-slams-excessive-police-force-on-peaceful-delhi-student-march#comments</comments><guid isPermaLink="false">84b89d0c-f779-4b02-862c-b7c3307a9d6c</guid><pubDate>Mon, 27 Jul 2026 06:52:05 +0000</pubDate><atom:updated>2026-07-27T06:52:05.524Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,Delhi Police,டெல்லி காவல்துறை,உச்சநீதிமன்றம்,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/ziofnyz9/tn-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஜூலை 20 தாக்குதல் 
]]></media:title><media:description type="html"><![CDATA[ ஜூலை 20 தாக்குதல் 
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/ziofnyz9/tn-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமைதியான போராட்டத்தில் லத்திகளால் தடியடி நடத்தியிருக்க கூடாது என ஜூலை 20 அன்று டெல்லியில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்ற இளைஞர்கள் மீதான தாக்குதல் குறித்த மனுக்கள் மீதான விசாரணையில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. </p><h2>ஜூலை 20 தாக்குதல் </h2><p>ஜூலை 20, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் சிஜேபி தலைமையில் மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்றனர். </p><p>அப்போது அவர்கள் மீது <a href="https://www.maalaimalar.com/news/national/delhi-student-protest-pellet-gun-row-police-crackdown-on-peaceful-march-rahul-gandhi-questions-amit-shah">டெல்லி காவல்துறை, ஆர்ஏஎப் மத்திய படையினர் </a>லத்திகளால் கொடூரமாக தாக்குதல் நடத்தினர். கண்ணீர் புகைகுண்டுகுகள் வீசப்பட்டன.</p><p>ஆபத்தான பெல்லட் துப்பாக்கிகளும் மாணவர்கள் மீது பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. 60 பேர் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். </p><p>இந்த விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில் இன்று தொடங்கிய நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டம் மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது. </p> <h2>உச்சநீதிமன்றம் குட்டு</h2><p>இதனிடையே ஜூலை 20 அன்று பேரணி போராட்டம் நடத்திய மாணவர்கள் மீதான மிதமிஞ்சிய தாக்குதலை விசாரிக்க கோரி தொடரப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.</p><p>இதன்போது பேசிய தலைமை நீதிபதி சூரியகாந்தி போராட்டம் நடத்தினார்கள் என்பதற்காகவே அவர்கள் மீது போலீசார் லத்திகளால் தாக்குதல் நடத்தியதை நியாயப்படுத்த முடியாது என தெரிவித்தார்.</p><p>அவர் கூறியதாவது, "சமூக விரோத சக்திகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதே வேளையில், அமைதியான போராட்டத்திற்கு வழிவகை செய்யும் வகையிலான நாடு தழுவிய ஒரே மாதிரியான வழிமுறையை வரையறுக்க வேண்டியது அவசியம்.</p><p>அமைதியான முறையில் போராடுவதற்கு அரசியலமைப்பு அனுமதி அளிக்கிறது. அமைதியான முறையில் போராட்டம் நடத்த உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். அவை மறுக்கப்பட கூடாது. அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படுகிறது என்பதற்காக போலீசார் எல்லைமீறி மிதமிஞ்சிய தாக்குதல் நடத்துவதை நியாயப்படுத்த முடியாது.</p> <h2>போராட்டம் நடத்தினாலே தடியடி</h2><p>போராட்டம் நடத்தினாலே தடியடி  நடத்த வேண்டும் என்று அர்த்தமல்ல. போராட்டம் என்பது வன்முறை என்று அர்த்தமாகாது. அப்படி அத்துமீறப்பட்ட சம்பவங்கள் விசாரிக்கப்பட வேண்டும்.</p><p>அமைதியான போராட்டங்களை நடத்த முறையான இடம் ஒதுக்கீடு செய்து தருவது உள்ளிட்ட சில நெறிமுறைகள் அவசியமானது. இத்தகைய தருணங்களில் சுய கட்டுப்பாடு மிக முக்கியமானது" என தெரிவித்தார்.</p><p>அமர்வில் இடம்பெற்ற நீதிபதி ஜோய்மாலா பேசுகையில், "போராட்டங்களின் போது காவல்துறையினர் தாக்கப்பட்டுள்ளது கவலையளிக்கிறது. அவர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டியது அரசின் கடமை" என தெரிவித்தார்.</p><p>இதைத்தொடர்ந்து விசாரணை நாளை (செவ்வாய்க்கிழமைக்கு) ஒத்திவைக்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>சுங்கக் கட்டண கொள்ளையை மோடி அரசு திரும்பப் பெற வேண்டும் - மாணிக்கம் தாகூர்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-modi-government-must-withdraw-highway-toll-robbery</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-modi-government-must-withdraw-highway-toll-robbery#comments</comments><guid isPermaLink="false">c599fac6-e775-4aac-8076-6291da065cd1</guid><pubDate>Mon, 27 Jul 2026 06:42:02 +0000</pubDate><atom:updated>2026-07-27T06:42:02.640Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore,சுங்கவரி கட்டணம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/0mr0x377/manickamtagore.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/0mr0x377/manickamtagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><h2>நிதின் கட்கரி</h2><p>நெடுஞ்சாலைகளையே தான் கண்டுபிடித்தது போல, எப்போதும் தற்பெருமை பேசி வருபவர் மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி. 'நெடுஞ்சாலைத் துறை ஹீரோ” என்று, தனக்குத் தானே தம்பட்டம் அடித்து மகிழ்ச்சி அடையும் அமைச்சராகவும் அவர் இருக்கிறார்.</p> <h2>சுங்கக் கட்டணம் உயர்வு</h2><p>மோடி ஆட்சியில் நெடுஞ்சாலைகள் என்பது, சுங்கக் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கும் வழியாக மாறிவிட்டன. மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையாலும், மொத்த விற்பனை விலைக் குறியீடு அடிப்படையிலான கணக்கீட்டுச் சொதப்பலாலும், கடந்த நான்கு மாதங்களில் மூன்றாவது முறையாக கட்டணம் சுங்கக் கட்டணம் உயர்ந்துள்ளது.</p> <p>பெட்ரோல், டீசல், எரிவாயு போன்ற எரிபொருள் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால், மக்கள் பெரும் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில், சுங்கச்சாவடிகளில் மீண்டும் கட்டணத்தை உயர்த்தியிருப்பது, நடுத்தர குடும்பங்களையும், வாடகை வாகன ஓட்டுநர்களையும் கடுமையாகப் பாதித்துள்ளது. ஆனால், இது பற்றியெல்லாம் கவலைப்படாமல், ‘நெடுஞ்சாலைகளை அமைத்து விட்டோம் - இந்தியா வளர்ந்து விட்டது" என்று தினமும் பொய் கதைகளைப் பரப்பி வருகின்றனர்.</p> <h2>மோடி அரசு</h2><p>தமிழ்நாட்டில் உள்ள 80 சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ரூ. 4,200 கோடிக்கு அதிகமாக மோடி அரசு வசூல் செய்து வருகிறது. அதன் பிறகும் அடங்காமல், லாரிகளுக்கு ரூ. 30 வரை சுங்கக் கட்டணத்தை உயர்த்தி, மீண்டும் தமிழக மக்களுக்கு 'அல்வா” கொடுத்துள்ளது.</p><p>லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தையும், சாமானிய மக்களின் பாக்கெட்டையும் பிடுங்கும் திருட்டு பாஜக அரசின் சுங்கக் கொள்ளை கடும் கண்டனத்திற்குரியது. சுங்க கட்டண உயர்வை மோடி அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.</p> <h2>மதுரை, கோவை மெட்ரோ ரெயில் திட்டம்</h2><p>தமிழ்நாட்டில் இருந்து ஆண்டுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் சுங்கக் கட்டணம் வசூலிக்கிறது மோடி அரசு. ஆனால், தமிழகத்திற்கு எந்த திட்டங்களை தராமல், கொடுக்க வேண்டிய நிதியையும் கொடுக்காமல் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. மதுரை, கோவை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. ரெயில்வே துறைக்கு அதிக வருவாயை ஈட்டித் தரும் தமிழ்நாட்டிற்கு, 'வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில்கள்” ஒதுக்காமல் வஞ்சிக்கிறது. தமிழ்நாட்டை வெறும் பணம் காய்க்கும் மரமாக மட்டும் பயன்படுத்திக் கொண்டு, அந்த மரத்தையே வெட்ட நினைக்கும் மோடி அரசுக்கு, மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் வலுவான குரல் எழுப்புவோம்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம்: தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-congratulates-raja-muthupandi-on-commonwealth-games-silver-medal</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-congratulates-raja-muthupandi-on-commonwealth-games-silver-medal#comments</comments><guid isPermaLink="false">50990a5e-097e-43b0-9552-61c3ee91b16e</guid><pubDate>Mon, 27 Jul 2026 06:36:29 +0000</pubDate><atom:updated>2026-07-27T06:36:29.416Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காமன்வெல்த் போட்டி,Common wealth Games,முதலமைச்சர் விஜய்,tn cm vijay,தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டி,TN player Raja muthupandi</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/2h2u3nl1/Vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN Player Raja Muthupandi- TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/2h2u3nl1/Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காமன்வெல்த் பளு தூக்கும் போட்டி 65 கிலோ எடைப்பிரிவில் வெள்ளி பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-</p><h2>ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை</h2><p>ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும்   23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்கும் எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் ராஜா முத்துப்பாண்டி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.</p><p>ராஜா முத்துப்பாண்டி அவர்களின் சாதனையைப் பாராட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக 30 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.</p><p>அவரது வெற்றி, இளைஞர்களுக்கு புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கட்டும்.  அவர், மேலும் பல சாதனைகள் படைத்து இந்திய திருநாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க எனது வாழ்த்துகள்!</p><p>இவ்வாறு அவர் கூறிப்பிட்டுள்ளார்.</p><h2>தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டி</h2><p>கிளாஸ்கோ 2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில், பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவுப் போட்டியில் ஆதிக்கம் செலுத்தி, தனது மூன்றாவது தொடர்ச்சியான தங்க பதக்கத்தை வென்று, இந்தியாவிற்கு முதல் தங்க பதக்கத்தை பெற்று தந்த இந்திய பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி இருந்தார்.</p><p>இந்த நிலையில், காமன்வெல்த் போட்டிகளில் தனது அறிமுகத்திலேயே, ஆண்களுக்கான 65 கிலோ எடை பிரிவில் பளுதூக்கும் வீரர் ராஜா முத்துப்பாண்டி வெள்ளி பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம், இங்கு நடைபெற்ற பளுதூக்கும் போட்டிகள் அனைத்திலும் இந்தியா குறைந்தது ஒரு பதக்கத்தையாவது உறுதி செய்தது.</p><h2>புள்ளி விவரம்:</h2><p>முத்துப்பாண்டி 'ஸ்னாட்ச்' (snatch) முறையில் 126 கிலோவையும், 'கிளீன் அண்ட் ஜெர்க்' (clean and jerk) முறையில் 160 கிலோவையும் தூக்கி, மொத்தம் 286 கிலோ எடையுடன் போட்டியை நிறைவு செய்தார்.</p>]]></content:encoded></item><item><title>&quot;மக்கள் ஜனாதிபதி&quot; டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 11-ம் ஆண்டு  நினைவு அஞ்சலி!</title><link>https://www.maalaimalar.com/news/national/11th-death-anniversary-of-peoples-president-dr-apj-abdul-kalam</link><comments>https://www.maalaimalar.com/news/national/11th-death-anniversary-of-peoples-president-dr-apj-abdul-kalam#comments</comments><guid isPermaLink="false">c31c5bd9-723f-42c9-bd53-0c0ee6be1ddd</guid><pubDate>Mon, 27 Jul 2026 06:30:34 +0000</pubDate><atom:updated>2026-07-27T06:30:34.432Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அப்துல்கலாம்,APJAbdulKalam,AbdulKalam11thDeathAnniversary,ஏவுகணைமனிதன்,MissileMan,PeoplesPresident,Inspiration</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/ku3h7oz3/APJAbdulKalam" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ APJAbdulKalam ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/ku3h7oz3/APJAbdulKalam?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய வரலாற்றில் தங்களது சுயநலமற்ற சேவையால் மக்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்த தலைவர்கள் பலருண்டு. அவர்களுள் முதன்மையானவர் டாக்டர் ஏ.பி.ஜே. <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D">அப்துல் கலாம்</a>. ராமேஸ்வரத்தின் எளிய வீதிகளில் பிறந்து, இந்தியாவின் மிக உயரிய குடியரசுத் தலைவர் மாளிகை வரை உயர்ந்த இவரது வாழ்க்கை ஒரு தற்காலக் காவியம். </p><p>ஒரு சிறந்த விஞ்ஞானியாக நாட்டை அணுஆயுத மற்றும் ஏவுகணை வல்லரசாக மாற்றியதோடு மட்டுமல்லாமல், கோடிக்கணக்கான இளைஞர்களின் நெஞ்சில் சாதிக்கும் உத்வேகத்தை விதைத்த மாபெரும் வழிகாட்டியாகத் திகழ்கிறார். இன்று அவருடைய 11-ம் ஆண்டு நினைவு நாள்.</p><h2><strong>தொடக்கமும் கல்விப் பயணமும்</strong></h2><p>இராமேஸ்வரத்தில் 1931 அக்டோபர் 15 அன்று ஜெயினுலாப்தீன் - ஆஷியம்மா தம்பதியருக்கு மகனாகப் பிறந்த இவர், ஏழ்மையான குடும்பச் சூழ்நிலை காரணமாகச் சிறு வயதில் செய்தித்தாள்களை விநியோகம் செய்து தனது பள்ளிப் படிப்பிற்கான கட்டணத்தைச் செலுத்தினார்.</p><p>பின்னர் தனது உயர்கல்வியைத் தொடர்ந்த இவர், திருச்சிராப்பள்ளி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பட்டமும், சென்னை தொழில்நுட்பக் கழகத்தில் விண்வெளிப் பொறியியல் படிப்பையும் முடித்தார்.</p><h2><strong>ஏவுகணை மனிதன்</strong></h2><p>இஸ்ரோவின் பங்களிப்பாக இந்தியாவின் முதல் உள்நாட்டு செயற்கைக்கோள் ஏவுகணையான SLV-III திட்ட இயக்குநராகச் செயல்பட்டு 'ரோகிணி' செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இவர், டிஆர்டிஓ அமைப்பில் இணைந்து இந்தியாவின் பாதுகாப்பு அரணாக விளங்கும் அக்னி மற்றும் பிருத்வி ஏவுகணைகளை உருவாக்கியதன் மூலம் 'இந்தியாவின் ஏவுகணை மனிதர்' என்று அழைக்கப்பட்டார். </p><p>மேலும், 1998-ல் நடந்த பொக்ரான்-II அணு ஆயுத சோதனையில் முதன்மைத் திட்ட ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு, இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக உலகிற்குப் பிரகடனப்படுத்தினார்.</p><h2><strong>மக்களின் குடியரசுத் தலைவர்</strong></h2><p>2002 ஆம் ஆண்டு இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற இவர், குடியரசுத் தலைவர் மாளிகையின் கதவுகளைச் சாதாரண மக்களுக்காக, குறிப்பாக மாணவர்களுக்காகத் திறந்து வைத்ததன் மூலம் 'மக்களின் குடியரசுத் தலைவர்' என்று அன்போடு அழைக்கப்பட்டார். </p><p>எளிமையின் இலக்கணமாகத் திகழ்ந்து, லட்சக்கணக்கான இளைஞர்களுடனும் பள்ளி மாணவர்களுடனும் கலந்துரையாடி அவர்களுக்குள் கனவுகளை விதைத்த இவர், கல்வி, அறிவியல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு 2020-க்குள் இந்தியாவை வல்லரசாக்க வேண்டும் என்ற உன்னத இலக்கை தொலைநோக்குத் திட்டமாக முன்வைத்து நாட்டிற்குப் பெரும் எழுச்சியூட்டினார்.</p><h2><strong>விருதுகளும் கௌரவங்களும்</strong></h2><p>இந்திய அரசு இவருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா (1997), பத்ம விபூஷண் (1990) மற்றும் பத்ம பூஷண் (1981) ஆகிய விருதுகளை வழங்கி கௌரவித்ததோடு மட்டுமல்லாமல், சர்வதேச அங்கீகாரமாக இவரது பிறந்த நாளான அக்டோபர் 15-ஆம் தேதியை ஐக்கிய நாடுகள் சபை 'உலக மாணவர்கள் தினமாக' அறிவித்துக் கொண்டாடி வருகிறது.</p><h2><strong>இறுதிப் பயணம்</strong></h2><p>தனது பதவிக்காலத்திற்குப் பின், ஐஐஎம் ஷில்லாங், அகமதாபாத் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பேராசிரியராகப் பணியாற்றி மாணவர்களுக்குத் தொடர்ந்து கற்பித்த இவர், இறுதிவரை மாணவர்களுக்குக் கல்வி கற்பிப்பதையே தனது வாழ்நாள் லட்சியமாகக் கொண்டிருந்தார். </p><p>அதற்கேற்ப கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூலை 27 அன்று ஷில்லாங்கில் மாணவர்களிடையே 'வாழக்கூடிய தகுதியான பூமியை உருவாக்குவது' என்ற தலைப்பில் உரையாற்றிக் கொண்டிருந்தபோதே மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். </p><p>லட்சக்கணக்கான மக்களின் கண்ணீருக்கும் அஞ்சலிக்கும் இடையே அவரது உடல், சொந்த ஊரான இராமேஸ்வரத்தில் உள்ள பேய்க்கரும்பில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. </p><p>பிற்காலத்தில் அவரது நினைவாக அவ்விடத்தில் 'டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தேசிய நினைவகம்' அமைக்கப்பட்டு, அவரது வாழ்க்கைச் சுவடுகளும் ஏவுகணை மாதிரிகளும் பொதுமக்களின் பார்வைக்காக இன்றும் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.</p><h2><strong>11 ஆண்டுகள் நிறைவு</strong></h2><p>டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வெறும் அறிவியல் விஞ்ஞானியாகவோ அல்லது நாட்டின் தலைவராகவோ மட்டும் வாழவில்லை; அவர் ஒரு சகாப்தமாக வாழ்ந்தார். </p><p>எளிய பின்புலத்தில் இருந்து வந்த எவராலும் அரிய சிகரங்களை எட்ட முடியும் என்பதற்கு அவரே மிகச்சிறந்த உதாரணம். "கனவு காணுங்கள்; அந்த கனவு தூக்கத்தில் வருவதல்ல, உங்களைத் தூங்கவிடாமல் செய்வதே கனவு" என்ற அவரது பொன்மொழிகள், இன்றும் நாளையும் இந்திய இளைஞர்களை தங்களது இலக்குகளை நோக்கி அர்ப்பணிப்புடன் பயணிக்கத் தொடர்ந்து ஊக்கமளித்துக் கொண்டே இருக்கும். </p><p>அவரது பாதையில் பயணித்து தற்சார்பு இந்தியாவின் வளர்ச்சிக்கு பாடுபடுவதே நாம் அவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.</p>]]></content:encoded></item><item><title>நீர்நிலைகள் தூர்வாரும் பணி - மோட்டார் சைக்கிளில் வந்து கள ஆய்வு செய்த அமைச்சர் ஆனந்த் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/desilting-of-water-bodies-minister-anand-conducts-field-inspection-after-arriving-on-a-motorcycle</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/desilting-of-water-bodies-minister-anand-conducts-field-inspection-after-arriving-on-a-motorcycle#comments</comments><guid isPermaLink="false">5d49fff6-e061-4456-b18e-b6ca313e525d</guid><pubDate>Mon, 27 Jul 2026 06:24:54 +0000</pubDate><atom:updated>2026-07-27T06:24:54.329Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Northeast Monsoon,வடகிழக்கு பருவமழை,Minister Anand,அமைச்சர் ஆனந்த்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/phywe3xv/anand.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/phywe3xv/anand.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>அமைச்சர் ஆனந்த்</h2><p>சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் பணியை நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் இன்று தொடங்கி வைத்தார்.</p><p>கோயம்பேடு பகுதியில் ஆய்வு செய்வதற்காக <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D">அமைச்சர் ஆனந்த்</a> தனது காரில் சென்று கொண்டு இருந்தபோது அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அமைச்சர் ஆனந்தின் கார் செல்ல முடியவில்லை.</p> <p>உரிய நேரத்துக்கு நிகழ்ச்சிக்கு வர முடியாமல் போகும் என்பதால், உடனடியாக அரசு ஊழியர் ஒருவரின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு அவர் வந்து சேர்ந்தார்.</p><p>நிகழ்ச்சிக்கு சரியான நேரத்தில் சென்று பங்கேற்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் மோட்டார் சைக்கிளில் சென்றதை மக்கள் பலரும் வரவேற்று உள்ளனர்.</p> <h2>வடகிழக்கு பருவமழை</h2><p>வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி உள்ள நிலையில், கூவம் ஆற்றுப் பகுதியில் நீர் நிலைகளை கள ஆய்வு செய்து, தூர்வாரி பராமரிக்கும் பணிகளை அமைச்சர் என்.ஆனந்த் தொடங்கி வைத்தார்</p>]]></content:encoded></item><item><title>தர்மேந்திர பிரதானுக்கு ராஜ வரவேற்பு.. மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளி - அவைகள் ஒத்திவைப்பு </title><link>https://www.maalaimalar.com/news/national/parliament-disruption-both-houses-adjourned-as-opposition-demands-debate-on-neet-leak-and-student-assault</link><comments>https://www.maalaimalar.com/news/national/parliament-disruption-both-houses-adjourned-as-opposition-demands-debate-on-neet-leak-and-student-assault#comments</comments><guid isPermaLink="false">30494f7e-dcaf-4a48-9560-8a2bdcefdefa</guid><pubDate>Mon, 27 Jul 2026 06:18:54 +0000</pubDate><atom:updated>2026-07-27T06:18:54.361Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Lok Sabha,மல்லிகார்ஜுன கார்கே,mallikarjun kharge,தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,parliament session,மழைக்காக கூட்டத்தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/u7tlz4cj/tn-5.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ இடது - காங்கிரஸ் போராட்டம், வலது - தர்மேந்திர பிரதானை வரவேற்கும் எம்.பிக்கள் 
]]></media:title><media:description type="html"><![CDATA[ இடது - காங்கிரஸ் போராட்டம், வலது - தர்மேந்திர பிரதானை வரவேற்கும் எம்.பிக்கள் 
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/u7tlz4cj/tn-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடாளுமன்ற மழைக்கால  கூட்டத் தொடரின் இரண்டாம் கட்டம் இன்று தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 2 வரை நடைபெற உள்ளது. இன்றைய நாளில் தொடங்கிய <a href="https://www.maalaimalar.com/news/national/neet-ban-student-assault-row-dmk-congress-push-for-heated-debate-in-parliament">இரு அவைகளும்</a> சில நிமிடங்களிலேயே ஒத்திவைக்கப்பட்டது. </p><p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரம், ஜூலை 20 நாடாளுமன்றம் நோக்கி பேரணி வந்த மாணவர்கள் மீது தாக்குதல், அயோத்தி ராமர் கோவில் வன்கொடுமை திருட்டு உள்ளிட்டவை குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுப்பட்டதால் இரு அவைகளிலும் அவை நடவடிக்கைகள் பாதித்தன. </p><h2>மல்லிகார்ஜுன கார்கே</h2><p>மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவையில் பேசுகையில், மாணவர்கள் மீதான தாக்குதல் என்பது மிகவும் தீவிரமான விஷயம் என்பதால்  விதி 267-ஐ பயன்படுத்தி அவையின் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளை ஒத்திவைத்து இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். </p><h2>ஒத்திவைப்பு </h2><p>தொடர்ந்து மாநிலங்களவை எதிர்க்கட்சி எம்.பிக்கள், நீட் பிரச்சனை, மாணவர்கள் மீதான போலீஸ் தாக்குதல் குறித்து விவாதத்தை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர்.  இதனால் அவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. </p><p>மக்களவையிலும் நீட் பிரச்சனை, மாணவர்கள் மீதான போலீஸ் தாக்குதல் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி எம்.பிக்கள் கோஷம் எழுப்பியதால் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. </p><p>முன்னதாக நீட் தேர்வை தடை செய்வது குறித்தும் மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்தும் விவாதிக்க மக்களவை திமுக குழு தலைவர் டிஆர்பாலுவும், மாநிலங்களவை திமுக எம்.பி திருச்சி சிவாவும் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியது குறிப்பிடத்தக்கது. </p> <h2>வினாத்தாள் கசிவை தடுக்கும் மசோதா</h2><p>இதனிடையே வினாத்தாள் கசிவு உள்பட அரசுத் தோ்வு முறைகேடுகளுக்கு கடும் தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதாவை இன்று மக்களவையில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சிஜேபி தலைமையில் இளைஞர்களின் 1 மதத்திற்கும் மேலான போராட்டத்தை தொடர்ந்து அண்மையில் பிரதமர் மோடி மௌனம் களைத்து, இந்த மசோதா குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இன்று மதியம் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.</p> <h2>தர்மேந்திர பிரதான்</h2><p>இளைஞர்களின் போராட்டத்திற்கு அடிபணிந்து கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகிய தர்மேந்திர பிரதான், மக்களவை எம்.பி.யாக இன்று அவைக்கு வருகை புரிந்தார். அவரை என்டிஏ கூட்டணி எம்.பிக்கள் பாரம்பரிய தலைப்பாகை அணிவித்து, சால்வை அணிவித்து வரவேற்று ஆறுதல்படுத்தினர்.</p> <h2>போராட்டம்</h2><p>இதனிடையே, ஜூலை 20 அன்று இளைஞர்கள் மீதான தாக்குதலை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டு பதாகைகளை ஏந்தியவாறு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.</p> ]]></content:encoded></item><item><title>வெயில் பாதிப்பு, வியர்வை அதிகரிப்பதால் எடை குறைந்த குழந்தை, குறை பிரசவ அபாயம்- கர்ப்பிணிகளுக்கு எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/health/generalmedicine/risk-of-premature-birth-and-weight-loss-in-the-baby-due-to-the-impact-of-heat-and-increased-sweating</link><comments>https://www.maalaimalar.com/health/generalmedicine/risk-of-premature-birth-and-weight-loss-in-the-baby-due-to-the-impact-of-heat-and-increased-sweating#comments</comments><guid isPermaLink="false">5dacbc6f-d595-490c-a658-3162ee38bffc</guid><pubDate>Mon, 27 Jul 2026 06:15:04 +0000</pubDate><atom:updated>2026-07-27T06:15:04.493Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>குறை பிரசவம்,கர்ப்பிணி பெண்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/xdr3bucx/pregnant.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கர்ப்பிணி பெண்]]></media:title><media:description type="html"><![CDATA[ கர்ப்பிணி பெண்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/xdr3bucx/pregnant.jpg?w=280" width="280"></media:thumbnail><category>பொது மருத்துவம் (General Medicine)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>2-வது 3-வது மாதங்களில் கடுமையான வெப்பத்திற்கு ஆளாவது, குறைந்த எடையுள்ள குழந்தை பிறப்பதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது.</aside><h2><strong>சுட்டெரிக்கும் வெப்பம்</strong></h2><p>தென் மாநிலங்களில் சுட்டெரிக்கும் வெப்பம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸை எட்டியதால் வெப்பத்தாக்குதல் காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர். </p><p>கடுமையான வெப்பம் <a href="https://www.maalaimalar.com/topic/கர்ப்பிணி-பெண்கள்">கர்ப்பிணிப் பெண்களின்</a> ஆரோக்கியத்தில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.</p><h2><strong>அபாயம்</strong></h2><p>புழுக்கமான நாட்களுக்கு ஆளாகும் பெண்களுக்கு குறைந்த எடையுள்ள குழந்தைகள் பிறக்கும் அபாயம் அதிகமாக உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. 2,09,266 கர்ப்பிணிப் பெண்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளிலிருந்து இந்த அறிக்கை தொகுக்கப்பட்டது.</p><p>ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்களின் தரவுகளும் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டன. கர்ப்ப காலத்தில் தாய் சூரிய ஒளியில் இருக்கும்போது, குறைந்த எடையுள்ள குழந்தை பிறப்பதற்கான ஆபத்து அதிகரிக்கிறது. கர்ப்பத்தின் முதல் 3 மாதங்களில் கடுமையான வெப்பத்திற்கு ஆளாவது குறைப்பிரசவ அபாயத்தை அதிகரிக்கிறது என்று இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.</p><h2><strong>எச்சரிக்கை</strong></h2><p>2-வது 3-வது  மாதங்களில் கடுமையான வெப்பத்திற்கு ஆளாவது, குறைந்த எடையுள்ள குழந்தை பிறப்பதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது. </p><p>வெப்பநிலை, ஈரப்பதம், காற்றின் வேகம் மற்றும் சூரியக் கதிர்வீச்சு ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்ளும் இந்திய வெப்பக் குறியீடு, கர்ப்பிணிப் பெண்கள் எதிர்கொள்ளும் உண்மையான வெப்ப அழுத்தத்தை மிகவும் துல்லியமாக மதிப்பிட முடிந்துள்ளது. வெயில் காலங்களில் கர்ப்பிணிகள் எச்சரிக்கையுடன் இருக்க  வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் விளையாட்டில் இன்று இந்தியா பங்கேற்கும் போட்டிகள் எவை?</title><link>https://www.maalaimalar.com/sports/what-events-will-india-participate-in-at-the-commonwealth-games-today</link><comments>https://www.maalaimalar.com/sports/what-events-will-india-participate-in-at-the-commonwealth-games-today#comments</comments><guid isPermaLink="false">d1c770ec-a361-411a-99db-2e182cbcd1e7</guid><pubDate>Mon, 27 Jul 2026 06:13:36 +0000</pubDate><atom:updated>2026-07-27T06:13:36.354Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா,காமன்வெல்த் போட்டி,Indian Players,காமன்வெல்த் விளையாட்டு போட்டி,Common Wealth,Common wealth Games</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/1a6znjh1/common-wealth.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Common wealth Games 2026]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/1a6znjh1/common-wealth.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காமன்வெல்த் விளையாட்டில் 4-வது நாளான இன்று இந்தியா பங்கேற்கும் போட்டிகள் வருமாறு:-</p><p>தடகளம் : பெண்களுக்கான உயரம் தாண்டுதல் தகுதி சுற்று- பூஜா சிங். </p><p>ஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டம் முதல் சுற்று-யாஷஸ் பலக் ஷா, சந்தோஷ் தமிழரசன். </p><p>ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் தகுதி சுற்று (ஏ பிரிவு)- முரளி ஸ்ரீசங்கர். </p><p>ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டம் முதல் சுற்று - குரிந்தர்விர் சிங். </p><p>ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் தகுதிச் சுற்று, (பி பிரிவு)-லோகேஷ் சத்யநாதன். </p><p>ஆண்களுக்கான 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் முதல் சுற்று-தேஜஸ் ஷிர்சே. (பிற்பகல் 2.30 முதல் மாலை 4.30 மணி வரை).</p><p>பெண்களுக்கான பாரா குண்டு எறிதல் (எம் 57 ) இறுதிப் போட்டி -ஷர்மிளா தங்கர் , ஷில்பா ஷைலா.</p><p>ஆண்கள் உயரம் தாண்டுதல் இறுதிப் போட்டி- சர்வேஷ் குஷாரே, ஆதர்ஷ் ராம் , தேஜஸ்வின் சங்கர். </p><p>ஆண்களுக்கான பாரா 100 மீட்டர் (டி38) இறுதிப் போட்டி- ராகேஷ்பாய் பட், ஸ்ரேயான்ஷ் திரிவேதி. </p><p>ஆண்களுக்கான 110 மீட்டர் தடை தாண்டுதல் - தேஜஸ் ஷிர்சே (இரவு 11.35 முதல் நள்ளிரவு 2.15 வரை).</p><p>குத்துச்சண்டை: 60 கிலோ பிரிவில் சச்சின் இங்கிலாந்து வீரருடன் மோதல் (மாலை 4.45 மணி). </p><p>80 கிலோ பிரிவில் அங்குஸ் மோதல் (மாலை 6 மணி).</p><p>பெண்கள் 51 கிலோ பிரிவில் சாக்‌ஷி சவுத்ரி, போஸ்வானா வீராங்கனையுடன் மோதல் ( இரவு 10.30 மணி).</p><p>70 கிலோ பிரிவில் சுமித் குண்டூ, வடக்கு அயர்லாந்து வீரருடன் மோதல் (நள்ளிரவு 1 மணி).</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவுக்காக ‘ஹாட்ரிக்’ தங்கம் வென்றது மிகுந்த மகிழ்ச்சி- மீராபாய் சானு</title><link>https://www.maalaimalar.com/sports/hattrick-gold-for-india-brings-immense-joy-mirabai-chanu</link><comments>https://www.maalaimalar.com/sports/hattrick-gold-for-india-brings-immense-joy-mirabai-chanu#comments</comments><guid isPermaLink="false">f8c6bd9d-9f55-467d-8ba7-5fbba82d017b</guid><pubDate>Mon, 27 Jul 2026 05:59:23 +0000</pubDate><atom:updated>2026-07-27T05:59:23.967Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காமன்வெல்த் போட்டி,பளு தூக்கும் போட்டி,Common Wealth,Weight lifting,இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கம்,Meerabai sanu</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/khjgj30y/Meerabai.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Meerabai Sanu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/khjgj30y/Meerabai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கத்தை பெற்று கொடுத்தவர் மீராபாய் சானு.</p><h2>ஹாட்ரிக் தங்கம்</h2><p>பெண்களுக்கான பளு தூக்கும் போட்டியின் 48 கிலோ உடல் எடை பிரிவில் பங்கேற்ற அவர் 190 கிலோ தூக்கி புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். அவர் ஸ்னாட்ச் முறையில் 85 கிலோவும், கிளின் மற்றும் ஜெர்க் முறையில் 105 கிலோவும் தூக்கினார்.</p><p>மணிப்பூரை சேர்ந்த 31 வயது வீராங்கனையான மீராபாய் சானு காமன் வெல்த் விளையாட்டில் ஹாட்ரிக் தங்கம் வென்று முத்திரை பதித்தார். 2018, 2022 போட்டிகளிலும்  அவர் தங்கப் பதக்கம் வென்று இருந்தார்.</p><p>ஜப்பான் ஒலிம்பிக் போட்டியிலும் அவர்  வெள்ளி பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்து இருந்தார். தற்போது காமன் வெல்த்தில் ஹாட்ரிக்  தங்கம் வென்று சாதித்து உள்ளார். பதக்க அணிவிப்பு நிகழ்ச்சியில் மீராபாய் சானு ஆனந்த கண்ணீர் விட்டார்.</p><p>தங்கம் வென்ற பிறகு அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-</p><h2>மகிழ்ச்சி அளிக்கிறது</h2><p>இக்கட்டான மற்றும் சாதகமான சூழ்நிலைகள் அனைத்திலும் எனக்கு தாயார் மற்றும் பயிற்சியாளர் விஜய்சர்மா ஆதரவு அளித்துள்ளார். </p><p>குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் இருந்து எனக்கு அதிகமான அழுத்தம் இருந்தது. இதனால் இந்தியாவுக்காக ஹாட்ரிக் தங்கம் பதக்கத்தை வென்று  மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.</p><p>எனது முதல் முயற்சியில் தோல்வி ஏற்பட்டது. நானும் பயிற்சியாளரும் அடுத்த முயற்சிகளில் நன்றாக செயல்பட முடியும் என நினைத்து இருந்தோம்.</p><p>எதிர்பார்த்தபடி சிறப்பாக செயல்பட்டேன். என் எடையை கையாளுவது மிகவும் கடினம். எந்த ஒரு விளையாட்டு வீரருக்கும் உடல் எடையை கட்டுப்படுத்துவது மிகவும் பெரும் போராட்டம் ஆகும்.</p><p>நான் 48 கிலோ எடை பிரிவில் போட்டியிடும் போது அதில் கடினமாக இருக்கிறது. சரியான உடல் எடையை அடைய நான் எல்லாவரையும் நிறுத்த வேண்டி உள்ளது. என்னால் உணவு உண்ண முடியவில்லை. நான் 3 நாட்களாக தண்ணீர் கூட குடிக்கவில்லை. 2 நாட்களாக சாப்பிடவில்லை.</p><p>50.5 கிலோ என்பது எனது இயல்பான எடை. 48 கிலோவுக்கு அதை குறைப்பது மிகவும் கடினமானது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>கட்டா குஸ்தி 2 முதல் பாலன் தி பாய் வரை... இந்த வார ஓடிடி ரிலீஸ்</title><link>https://www.maalaimalar.com/cinema/ott/this-week-ott-release-update-8</link><comments>https://www.maalaimalar.com/cinema/ott/this-week-ott-release-update-8#comments</comments><guid isPermaLink="false">fc1f5f97-e825-4068-b14b-fc63c5253dcc</guid><pubDate>Mon, 27 Jul 2026 05:52:22 +0000</pubDate><atom:updated>2026-07-27T05:52:22.612Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>OTT,ஓடிடி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/0dlcxhjp/OTT.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ ஓடிடி தளங்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஓடிடி தளங்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/0dlcxhjp/OTT.jpg?w=280" width="280"></media:thumbnail><category>OTT</category><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளை போலவே <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%93%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF">ஓ.டி.டி.</a> தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.</p><h2><strong>சின்ன சின்ன ஆசை</strong></h2><p>மலையாளத் திரைப்படமான 'சின்ன சின்ன ஆசை' நாளை முதல் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் அதிகாரப்பூர்வமாக ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. இந்தத் திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது.</p><h2><strong>ஹார்ட் பீட்</strong></h2><p>ஹார்ட் பீட் சீசன் 3 தொடர் வரும் 30-ந்தேதி அன்று ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகிறது. மருத்துவ பின்னணியைக் கொண்ட இத்தொடரில் தீபா பாலு, அனுமோல் மற்றும் பலர் நடித்து உள்ளனர்.</p><h2><strong>பாலன்: தி பாய்</strong></h2><p>கேவிஎன் புரொடக்ஷன்ஸ் மற்றும் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் வெளியான படம் ‘<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/balan-the-boy-movie-ott-release-update">பாலன்: தி பாய்</a>’. 'ஆவேஷம்' மற்றும் 'ரோமஞ்சம்' படங்களின் இயக்குநரான ஜித்து மாதவன் இதன் திரைக்கதையை எழுதியுள்ளார். ஃபர்சானா பாலத்திங்கல், ஆதிஷேஷன் கே.ஆர்., முகமது ஜினான் உள்ளிட்டோர் நடித்து இப்படத்திற்கு சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளார். ‘பாலன்’ கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான நிலையில் தற்போது ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது. அதன்படி, ‘பாலன்’ திரைப்படம் வருகிற 31-ந்தேதி முதல் ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் கண்டு களிக்கலாம். </p><h2><strong>கட்டா குஸ்தி 2</strong></h2><p>இயக்குநர் செல்ல அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், யோகி பாபு ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ‘கட்டா குஸ்தி 2’. வேல்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் ரசிகர்களின் கவனத்தை பெற்ற நிலையில் வரும் 31-ந்தேதி அன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இப்படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் கண்டு மகிழலாம். </p><h2><strong>லவ் ஓ லவ்</strong></h2><p>தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் பவிஷ். இவர் தனுஷின் அக்கா மகன். இவர் நடிப்பில் உருவான 2வது படம் ‘லவ் ஓ லவ்’. இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் நாயகியாக நாக துர்கா நடித்திருந்தார். ஃபாக்ஸன் இசையமைத்தார். படத்தில் கேஎஸ் ரவிக்குமார், செல்வராகவன், வனிதா விஜயகுமார், ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். காதலர்களிடையே கிரெடிட் கார்டால் ஏற்படும் பொருளாதார சிக்கல்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில், இந்தப் படம் வரும் 31-ந் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>தீவானா</strong></h2><p>இயக்குநர் ஸ்ரீகாந்த் சங்கீஷெட்டி இயக்கத்தில் ஹர்ஷித் ரெட்டி மற்றும் ஸ்மேகா மணிமேகலை நடித்த படம் ‘தீவானா’. இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது. அதன்படி, ‘தீவானா’ படம் வருகிற 31-ந்தேதி ஆஹா வீடியோ ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது. ஆஹா கோல்ட் சந்தாதாரர்கள் ஒரு நாள் முன்னதாக, அதாவது ஜூலை 30 அன்றே, இப்படத்தைப் பார்க்கலாம். இந்த ஓடிடி வெளியீடு தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகிறது. </p><p>இதனிடையே 20-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும், ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் வெளியாக உள்ளன.</p>]]></content:encoded></item><item><title>11-ம் ஆண்டு நினைவு நாள் - அப்துல் கலாம் நினைவிடத்தில் கலெக்டர், அண்ணாமலை மரியாதை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/abdul-kalam-memorial-day-11th-death-anniversary-collector-and-annamalai-pay-tribute</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/abdul-kalam-memorial-day-11th-death-anniversary-collector-and-annamalai-pay-tribute#comments</comments><guid isPermaLink="false">3d254325-85d3-4d53-aef2-59666f99b32c</guid><pubDate>Mon, 27 Jul 2026 05:22:35 +0000</pubDate><atom:updated>2026-07-27T05:22:35.187Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அண்ணாமலை,ஏபிஜே அப்துல் கலாம்,APJ Abdul Kalam,annamalai,APJ Abdul Kalam Death Anniversary,Abdul Kalam Death Anniversary</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/ztvy5fd1/annamalai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/ztvy5fd1/annamalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 11-ம் ஆண்டு நினைவு தினமான இன்று அவரது நினைவிடத்தில் கலெக்டர் சிவகுரு பிரபாகரன், வி த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை ஆகியோர் மரியாதை செலுத்தினர்.</p><h2>ஏபிஜே அப்துல் கலாம் நினைவு தினம்</h2><p>முன்னாள் குடியரசு தலைவரும், ஏவுகணை விஞ்ஞானியுமான ஏ.பி.ஜே.அப்துல் கலாம், உலகப் புகழ் பெற்ற புண்ணிய தலமான ராமேசுவரத்தில் பிறந்தார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, இந்தியாவின் பாதுகாப்பு துறையில் பணியாற்றி அணுகுண்டு சோதனை, செயற்கைக்கோள் வடிவமைத்தல், அக்னி ஏவுகணை உருவாக்குவதில் பங்கேற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர்.</p> <h2>மணிமண்டபம்</h2><p>கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 27-ந்தேதி மேகாலயா மாநிலத் தலைநகர் ஷில்லாங்கில் மாணவர்களுடன் உரையாடும்போது அப்துல்கலாமுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடம் ஊராட்சிக்கு உட்பட்ட பேக்கரும்பு என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது நினைவைப் போற்றும் வகையில், மத்திய அரசு பல கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம் அமைத்தது. </p> <h2>அப்துல் கலாம் நினைவிடம்</h2><p>அந்த நினைவிடத்தில் அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறு குறித்து வாசகங்கள் அமைக்கப்பட்டும், அவர் பயன்படுத்திய உடைமைகளும் வைக்கப்பட்டு உள்ளன. இன்று அப்துல் கலாமின் 11-ம் ஆண்டு நினைவு தினம் ஆகும். இதையொட்டி ராமேசுவரம் மணிமண்டபத்தில் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. மணி</p><p>மண்டபத்தின் வெளிப்பகுதி மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.</p> <p>அவரது சமாதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இன்று காலை கலெக்டர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட சூப்பிரண்டு சந்தீஷ் மற்றும் அதிகாரிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் திரண்டு வந்து  அப்துல்கலாம் சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். </p><h2>அண்ணாமலை</h2><p>இதையடுத்து வி த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88">அண்ணாமலை</a> அப்துல் கலாம் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அப்துல் கலாமின் குடும்பத்தினர் மற்றும் ஜமாத் நிர்வாகிகள், அப்துல் கலாம் பேரன்கள் சேக் சலீம், ஷேக் தாவூத், அண்ணன் மகள் நசீமா மரைக்காயர் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அப்துல் கலாம் நினைவிடத்தில் கூட்டு பிரார்த்தனையும் நடந்தது.</p>]]></content:encoded></item><item><title>VIDEO: அமெரிக்காவில் உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச்சூடு - 2 பேர் பலி - ஐவர் காயம் </title><link>https://www.maalaimalar.com/news/world/seattle-food-festival-shooting-two-killed-five-injured-at-space-needle-event</link><comments>https://www.maalaimalar.com/news/world/seattle-food-festival-shooting-two-killed-five-injured-at-space-needle-event#comments</comments><guid isPermaLink="false">2f242764-16f4-4d20-a3ac-031e8024067c</guid><pubDate>Mon, 27 Jul 2026 05:14:20 +0000</pubDate><atom:updated>2026-07-27T05:14:20.163Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,துப்பாக்கிச்சூடு,USA,shooting,Food Festival,உணவுத் திருவிழா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/z9bwt3xg/tn-37.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ துப்பாக்கிச்சூடு ]]></media:title><media:description type="html"><![CDATA[ துப்பாக்கிச்சூடு ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/z9bwt3xg/tn-37.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவின் சியாட்டல் நகரில் நடந்த உணவுத் திருவிழாவில் நடந்த <a href="https://www.maalaimalar.com/news/world/us-mosque-shooting-5-killed-outside-san-diego-mosque">துப்பாக்கிச்சூட்டில்</a> 2 பேர் கொல்லப்பட்டனர். ஐவர் படுகாயமடைந்தனர். </p><h2>துப்பாக்கிச்சூடு </h2><p>நேற்று மாலை சியாட்டல் சென்டரில் ஸ்பேஸ் நீடில் பகுதியில் நடந்த வருடாந்திர உணவுத்திருவிழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூட்டுயிருந்தனர். மாலை 6 மணியளவில் மர்ம நபர்கள் அங்கு புகுந்து கூட்டத்தின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். </p><p>இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்றும் ஐவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஹார்பர்வியூ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் சியாட்டில் தீயணைப்புத்துறை செய்தித்தொடர்பாளர் கிரேஸ் நுனெஸ் தெரிவித்தார். </p><p>இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சியாட்டில் நகர மேயர் கேட்டி வில்சன் தெரிவித்துள்ளார்.   </p><p>சம்பவம் நடந்த இடத்தை சுற்றிவளைத்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். </p><p>சியாட்டில் நகர் போலீஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், விரைவில் மேலதிக தகவல்கள் தெரிவிக்கப்படும்" எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. </p> <h2>காயம்</h2><p>காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐவரில் 56 வயது பெண்மணி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதேநேரம் காயமடைந்தவர்களில் 2 வயது சிறுவன், 23 வயது இளைஞர் மற்றும் 29 வயது பெண்மணியின் உடல்நிலை சீரடைந்து வருவதாகவும், 40 வயது பெண் ஒருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>மக்கள் பீதி</h2><p>துப்பாக்கிச்சூடு நடந்ததும் அங்கிருந்த மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்ததால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.</p><p>இதுதொடர்பான வீடியோக்களும் சமூக வலைதங்களில் வெளியாகி உள்ளன. அது, "சுடுகிறார்கள், சுடுகிறார்கள்" என நபர் ஒருவர் கத்துவதும், அதைத் தொடர்ந்து ஆங்காங்கே அமைந்திருந்த உணவுக்கடைகளில் இருந்த மக்கள் பீதியடைந்து நாலாபுறமும் சிதறி ஓடுவதும் பதிவாகி உள்ளது.</p><p>தப்பிக்கும் முயற்சியில், மக்கள் ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டபடி சென்றதால் பலர் கீழே விழுந்ததும் பதிவாகியுள்ளது.</p> <h2>உணவுத்திருவிழா</h2><p>சியாட்டில் உணவுத் திருவிழா 1982 முதல் ஆண்டுதோறும் நடந்து வருகிறது. வருடாவருடம் 3 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவுக்கு சுமார் 350,000 மக்கள் வருகை தருவர். </p><p>இத்துனை பெரிய திருவிழாவில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Video: Shots heard, people fleeing at Seattle Center in Washington state. Reports of multiple victims. <br><br>Livestream: Hawaiian Honey Cones. <a href="https://t.co/YGv30969z2">pic.twitter.com/YGv30969z2</a></p>&mdash; AZ Intel (@AZ_Intel_) <a href="https://x.com/AZ_Intel_/status/2081560830915604481?ref_src=twsrc%5Etfw">July 27, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு முதல் &apos;பெண்கள் பிரீமியர் லீக்&apos; போட்டி?</title><link>https://www.maalaimalar.com/sports/plans-for-womens-premier-league-cricket-in-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/sports/plans-for-womens-premier-league-cricket-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">3cbe970e-5098-40d9-a3f7-25a89ded62cb</guid><pubDate>Mon, 27 Jul 2026 05:12:00 +0000</pubDate><atom:updated>2026-07-27T05:12:00.218Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கிரிக்கெட் போட்டி,cricket match,தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்,பெண்கள் பிரீமியர் லீக்,Womens Premier League,Tamilnadu cricket sangh</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/ehhw240j/wpl.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tamilnadu cricket Sangh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/ehhw240j/wpl.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 10-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 4-ந்தேதி தொடங்குகிறது.</p><p>முதற்கட்ட ஆட்டங்கள் திண்டுக்கல் நத்தத்திலும் (ஆக.4-15), நாக்-அவுட் உள்பட 2-வது கட்ட ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கத்திலும் (ஆக.18-28) நடைபெறுகிறது.</p><p>இந்த போட்டிக்கான கோப்பை அறிமுக விழா சேப்பாக்கத்தில் நேற்று நடந்தது. இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் சீனிவாசராஜ், செயலாளர் பக்வன்தாஸ் ராவ் ஆகியோர் நிருபர்களிடம் கூறுகையில்,"20 ஓவர் வடிவிலான கிரிக்கெட் பேட்டர்களுக்கு சாதகமான ஆட்டமாக மாறிவிட்டது. எனவே அதிக ரன்கள் குவிக்கும் வகையிலான ஆட்டங்களை காணும் வகையில், இந்த ஆண்டு பேட்டிங்குக்கு உகந்த ஆடுகளங்கள் அமைப்பதை உறுதி செய்வோம்.</p><p>தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் பெண்கள் கிரிக்கெட்டை முன்னெடுத்து செல்வதில் உறுதியாக இருக்கிறது. பெண்களுக்கான பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியை இந்த ஆண்டே நடத்துவது குறித்து யோசித்தோம். </p><p>ஆனால் அதற்கு நிறைய திறமை கொண்ட வீராங்கனைகள் தேவை. அதற்கு முன்னோட்டமாகத் தான் இந்த ஆண்டு டி.என்.பி.எல். போட்டியுடன் பெண்களுக்கான இரண்டு கண்காட்சி போட்டி நடத்தப்படுகிறது.</p><p>அடுத்த ஆண்டு நிச்சயம் பெண்கள் பிரிமீயர் லீக் போட்டியை நடத்த முயற்சிப்போம். தமிழ்நாட்டிற்கு மேலும் ஒரு சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கும் திட்டம் நீண்ட காலமாக உள்ளது.</p><p>சென்னை அல்லது கோவை எங்கு வேண்டும் மென்றாலும் கொண்டு வரலாம். ஆனால் அந்த திட்டம் இன்னும் இறுதி வடிவம் பெறவில்லை' என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் - குடும்பத்தினரை சந்தித்து அமைச்சர் வன்னி அரசு ஆறுதல்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kavin-first-death-anniversary-minister-vanni-arasu-meets-family</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kavin-first-death-anniversary-minister-vanni-arasu-meets-family#comments</comments><guid isPermaLink="false">fd3ef0a7-c33a-4cf2-a7f9-c054bd5f156c</guid><pubDate>Mon, 27 Jul 2026 05:06:25 +0000</pubDate><atom:updated>2026-07-27T05:06:25.359Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>honour killing,ஆணவ படுகொலை,ஐடி ஊழியர் கொலை,Kavin murder case,minister vanni arasu,அமைச்சர் வன்னி அரசு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/9ecgs803/vanniarasu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கவின் குடும்பத்தினரை சந்தித்து அமைச்சர் வன்னி அரசு ஆறுதல்
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/9ecgs803/vanniarasu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>கவின் ஆணவ கொலை</h2><p>தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் (27). இவர் காதல் விவகாரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 27-ந்தேதி நெல்லையில் படுகொலை செய்யப்பட்டார். </p><p>இந்த வழக்கில் பாளையங்கோட்டையைச் சேர்ந்த சுர்ஜித், தனது அக்கா உடனான காதலை கைவிட வலியுறுத்தி கவினை அரிவாளால் வெட்டி ஆணவ கொலை செய்தார்.</p> <p>இதைத் தொடர்ந்து சுர்ஜித் சில மணி நேரத்தில் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். </p><p>இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் சரவணன், மனைவி கிருஷ்ணகுமாரி, இவர்களது மகன் சுர்ஜித் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிபிசிஐடி போலீசாரால் விசாரிக்கப்பட்டு வருகிறது.</p><h2>அமைச்சர் வன்னி அரசு</h2><p>இந்நிலையில், கவினின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.</p><p>கவின் ஆணவப்படுகொலை செய்யப்பட்டு ஓராண்டான நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தில் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு ஆறுதல் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>உங்களுடன் பயணித்தது அற்புதமான அனுபவம்... நன்றி விஜய் சார்- அனிருத் நெகிழ்ச்சி</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/anirudh-says-traveling-with-you-was-a-wonderful-experience-thank-you-vijay-sir</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/anirudh-says-traveling-with-you-was-a-wonderful-experience-thank-you-vijay-sir#comments</comments><guid isPermaLink="false">e5162cc4-9c76-4b04-b3af-d09256cf725e</guid><pubDate>Mon, 27 Jul 2026 05:01:55 +0000</pubDate><atom:updated>2026-07-27T05:01:55.577Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Jana Nayagan,ஜன நாயகன்,விஜய்,அனிருத்,Anirudh,vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/yk0h94hp/anirudh.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஜன நாயகன் பட காட்சி]]></media:title><media:description type="html"><![CDATA[ ஜன நாயகன் பட காட்சி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/yk0h94hp/anirudh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>'ஜனநாயகன்', 'லியோ', 'பீஸ்ட்', 'மாஸ்டர்' மற்றும் 'கத்தி' ஆகிய படங்கள் மூலமாக உங்களுடன் பயணித்தது மிகவும் அற்புதமான மற்றும் உணர்வுப்பூர்வமான ஒரு அனுபவம் என்று கூறியுள்ளார்.</p><h2><strong>ஜன நாயகன்</strong></h2><p>தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து இன்று தமிழக முதலமைச்சராக மாறியுள்ளார், விஜய். எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான '<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9C%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D">ஜனநாயகன்</a>' பல்வேறு சிக்கல்களை கடந்து கடந்த 23-ந்தேதி வெளியானது.</p><p>இந்த படம் ஏற்கனவே சட்டவிரோதமாக இணையத்தில் வெளியாகி இருந்தாலும், விஜய்யின் கடைசி படம் என்பதால் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இதனால் திரையிடப்பட்ட தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் மிகுதியாக இருந்தது. </p><h2><strong>வசூல்</strong></h2><p>முதல் நாள் வசூலே ரூ.80 கோடியை தாண்டியது. இந்தநிலையில், 4 நாட்களில் '<a href="https://maalaimalar.com/cinema/cinemanews/after-mgr-an-actors-film-releasing-after-becoming-chief-minister-history-created-by-vijay">ஜனநாயகன்</a>' திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 4 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ.200 கோடி வசூலை கடந்துள்ளது. இதனால் இனி வரும் நாட்களில் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><h2><strong>அனிருத்</strong></h2><p>இதனிடையே, இசையமைப்பாளர் அனிருத் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><p>'ஜனநாயகன்', 'லியோ', 'பீஸ்ட்', 'மாஸ்டர்' மற்றும் 'கத்தி' ஆகிய படங்கள் மூலமாக உங்களுடன் பயணித்தது மிகவும் அற்புதமான மற்றும் உணர்வுப்பூர்வமான ஒரு அனுபவம்.</p><p>என்றென்றும் நான் போற்றிப் பாதுகாக்கும் நினைவுகளுக்கும், என் மீதான அளப்பரிய நம்பிக்கைக்கும் நன்றி விஜய் சார், இசை என்றும் நிலைத்திருக்கும் என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">It has been a thoroughly amazing and emotional journey with you through JanaNayagan, Leo, Beast, Master and Kaththi <br>Thank you <a href="https://x.com/actorvijay?ref_src=twsrc%5Etfw">@actorvijay</a> sir for the unlimited trust and memories that I will cherish forever <br>The music lives on ❤️ <a href="https://t.co/kt9On6Ms1L">pic.twitter.com/kt9On6Ms1L</a></p>&mdash; Anirudh Ravichander (@anirudhofficial) <a href="https://x.com/anirudhofficial/status/2081593904374423591?ref_src=twsrc%5Etfw">July 27, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>சந்தையில் இருந்து வெளியேறும் நத்திங் - இணை நிறுவனர் கூறியது என்ன?</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/nothing-co-founder-denies-exit-report</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/nothing-co-founder-denies-exit-report#comments</comments><guid isPermaLink="false">c7753181-ed5a-4065-992c-bd35ec935f5c</guid><pubDate>Mon, 27 Jul 2026 04:49:00 +0000</pubDate><atom:updated>2026-07-27T04:49:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Nothing,நத்திங்,smartphone,ஸ்மார்ட்போன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/uolg0jok/nothing-phone-4b-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nothing Phone (4b)]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/uolg0jok/nothing-phone-4b-1.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பன்னிரண்டுக்கும் மேற்பட்ட உலகளாவிய சந்தைகளில் இருந்து நிறுவனம் வெளியேறுவதாகக் கூறும் ஒரு அறிக்கையை 'நத்திங்' நிறுவனம் கடுமையாக மறுத்து வருகிறது. பல ஆதாரங்களை மேற்கோள் காட்டி, 'டிஜிட்' செய்தி நிறுவனம், 'நத்திங்' நிறுவனம் தனது உலகளாவிய செயல்பாடுகளை சுருக்கி வருவதாகவும், பணியாளர்களின் எண்ணிக்கையை குறைத்து வருவதாகவும், மேலும் அதன் இந்திய வணிகம் வலுவான வளர்ச்சியை பதிவு செய்து வரும் நிலையிலும், நிறுவனத்தின் நிதி நெருக்கடியை சமாளித்து வருவதாகவும் செய்தி வெளியிட்டது. </p><p>'நத்திங்' நிறுவனத்தின் இணை நிறுவனர் அகிஸ் இவாஞ்சலிடிஸ், 'எக்ஸ்' தளத்தில் வெளியான அந்த அறிக்கையை "போலிச் செய்தி" என்று கூறி மறுத்துள்ளார், மேலும் அதன் பல குறிப்பிட்ட விவரங்களையும் அவர் மறுத்துள்ளார்.</p><h2>அறிக்கை கூறியது என்ன?</h2><p>'டிஜிட்' தகவலின்படி, 'நத்திங்' நிறுவனம் மத்திய கிழக்கு, ஜப்பான் மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகள் உட்பட 12 அல்லது அதற்கு மேற்பட்ட சந்தைகளில் தனது செயல்பாடுகளை நிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. உலகளாவிய பணியாளர்களின் எண்ணிக்கையில் 40 சதவீத குறைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சீனா மற்றும் லண்டனில் பிரிக்கப்பட்டுள்ள 'நத்திங்' நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவில், அந்தந்த இடங்களில் முறையே சுமார் 50 சதவீதம் மற்றும் 30 முதல் 40 சதவீதம் வரை ஆட்குறைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.</p><p>விற்பனையைப் பொறுத்தவரை, டிஜிட்டின் அறிக்கை, அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து உலகளவில் ஃபோன் (4b) சுமார் 20,000 யூனிட்கள் அனுப்பப்பட்டதாகவும், ஃபோன் (4a) மற்றும் ஃபோன் (4a) ப்ரோ இரண்டும் சேர்ந்து சுமார் 150,000 யூனிட்களை எட்டியுள்ளதாகவும் மதிப்பிட்டுள்ளது.</p><p>இந்த மந்தநிலைக்கு அதிகரித்து வரும் மெமரி விலைகளே காரணம் என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டது. கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச்சின் கூற்றுப்படி, செப்டம்பர் 2025 முதல் மெமரி விலைகள் ஏறக்குறைய நான்கு மடங்கு உயர்ந்துள்ளன. இது குறைந்த விலையில் செயல்படும் பிராண்டுகளை குறிப்பாகக் கடுமையாகப் பாதிக்கிறது.</p><p>நத்திங்கின் துணை பிராண்டான CMF-இல் உள்ள சிக்கல்களையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது. டிஜிட்டின் கூற்றுப்படி, 2026-ஆம் ஆண்டிற்கு CMF எந்த புதிய ஸ்மார்ட்போனையும் திட்டமிடவில்லை. தற்போதைய மெமரி விலைகள், பிராண்டிற்கு ஏற்ற விலையில் ஒரு உண்மையான அடுத்த தலைமுறை மாடலை உருவாக்குவதை கடினமாக்குகிறது என்று அகிஸ் எவாஞ்சலிடிஸ் முன்பு உறுதிப்படுத்தியிருந்தார். CMF-இன் ஹிமான்ஷு டாண்டனும் சமீபத்தில் பதவி விலகியுள்ளார், இந்த விவரத்தை எவாஞ்சலிடிஸின் பதிலில் மறுக்கவில்லை.</p><h2>நத்திங் பதில்:</h2><p>எவாஞ்சலிடிஸ், சந்தையில் இருந்து வெளியேறுவதாகக் கூறப்படும் முக்கிய குற்றச்சாட்டை நேரடியாக நிராகரித்து, நத்திங் எந்த சந்தையையும் மூடவில்லை என்று கூறினார். அந்த அறிக்கையின் விற்பனை புள்ளிவிவரங்களையும் அவர் மறுத்தார். ஃபோன் (4b) முதல் நாளிலேயே 29,537 யூனிட்களை விற்றதாகவும், இது அதன் விலை பிரிவில் ஒரு சாதனை என்றும் அவர் விவரித்தார்.</p><p>இந்த எண்ணிக்கை, அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து உலகளவில் சுமார் 20,000 யூனிட்கள் விற்பனையானதாக டிஜிட்டின் அறிக்கை குறிப்பிட்டிருந்ததை விடக் கணிசமாக அதிகமாகும்.</p><p>நிறுவனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு தயாராவதற்காக, குழுக்களை மறுசீரமைக்கும் பணியே உண்மையில் நடைபெற்று வருவதாக எவாஞ்சலிடிஸ் கூறினார். இதில், செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஒரு பிரிவு உட்பட, புதிய பிரத்யேக வணிக பிரிவுகள் உருவாக்கப்படுவதும், தனிப்பட்ட நாட்டு செயல்பாடுகள் பிராந்திய மையங்களாக ஒருங்கிணைக்கப்படுவதும் அடங்கும்.</p><p>இதன் ஒரு பகுதியாக சில பதவிகள் பாதிக்கப்பட்டுள்ளன என்பதை அவர் ஒப்புக்கொண்டார், ஆனால் அறிக்கையின் புள்ளிவிவரங்கள் கணிசமாக மிகைப்படுத்தப்பட்டவை என்றும், துல்லியமான செய்திகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு ஊடக நிறுவனங்களை கேட்டுக்கொண்டார்.</p><p>மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் முடிவுகளை நிறுவனம் சாதாரணமாக எடுத்துக்கொள்வதில்லை என்றும், இந்த மாற்றத்தின்போது ஊழியர்களுக்கு ஆதரவளிக்க உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>நீட் தேர்வு தடை, மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து விவாதிக்க தி.மு.க நோட்டீஸ்</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-ban-student-assault-row-dmk-congress-push-for-heated-debate-in-parliament</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-ban-student-assault-row-dmk-congress-push-for-heated-debate-in-parliament#comments</comments><guid isPermaLink="false">cf1c3c0e-1440-470b-a124-bd71567cc939</guid><pubDate>Mon, 27 Jul 2026 04:45:06 +0000</pubDate><atom:updated>2026-07-27T04:45:06.471Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,மழைக்கால கூட்டத்தொடர்,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/gtinjbfa/tn-35.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மாணவர்கள் மீதான தாக்குதல், அமித் ஷா
]]></media:title><media:description type="html"><![CDATA[ மாணவர்கள் மீதான தாக்குதல், அமித் ஷா
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/gtinjbfa/tn-35.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் இரண்டாம் கட்டம் இன்று தொடங்கி வரும் ஆகஸ்ட் 2 வரை நடைபெற உள்ளது. </p><p>சிஜேபி போராட்டத்தின்போது <a href="https://www.maalaimalar.com/news/national/delhi-student-protest-pellet-gun-row-police-crackdown-on-peaceful-march-rahul-gandhi-questions-amit-shah">மாணவர்கள் மீதான தாக்குதல்</a>, மத்திய கல்வி அமைச்சர் ராஜினாமா, அயோத்தி ராமர் கோவில் நன்கொடை திருட்டு ஆகியவை குறித்து இன்றைய கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் வலுவான குரல் எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><h2>திமுக நோட்டீஸ் </h2><p>அந்த வகையில் இன்று மக்களவையில், நீட் தேர்வை தடை செய்வது தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி திமுக மக்களவை முழு தலைவர் எம்.பி. டி.ஆர்.பாலு ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளார்.</p><p>அந்த நோட்டீஸில், நீட் தேர்வுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும். டெல்லி ஜந்தர் மந்தரில் போராடிய மாணவர்கள் மீது கொடூர ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும் என்று டி.ஆர். பாலு வலியுறுத்தி உள்ளார்.</p><p>இதேபோல திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா, 267ன் கீழ் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் ஒன்றை கொடுத்துள்ளார்.</p><p>அதில், “நாட்டின் மருத்துவக் கல்வி கனவோடு உள்ள மாணவர்களின் அவல நிலை, நீட் தேர்வால் அவர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் மற்றும் மாணவர்களின் தொடர்ச்சியான தற்கொலைகள் குறித்து விவாதிக்க வேண்டும்” என்று  திருச்சி சிவா வலியுறுத்தி உள்ளார். </p><h2>காங்கிரஸ் நோட்டீஸ்</h2><p>இதேபோல விருதுநகர் காங்கிரஸ் எம்.பியும், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவருமான மாணிக்கம் தாகூர்</p><p>மக்களவையில் ஒத்திவைப்பு நோட்டீஸ் ஒன்றை வழங்கியுள்ளார். அதில், டெல்லி போராட்டத்தில் போலீஸ் தடியடி நடத்தியதா கூறி, அதுகுறித்து விவாதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>மாணவர்கள் மீது தாக்குதல்</p><p>ஜூலை 20, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் சிஜேபி தலைமையில் மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்றனர். அப்போது அவர்கள் மீது டெல்லி காவல்துறை, ஆர்ஏஎப் மத்திய படையினர் லத்திகளால் கொடூரமாக தாக்குதல் நடத்தினர். கண்ணீர் புகைகுண்டுகுகள் வீசப்பட்டன.</p><p>ஆபத்தான பெல்லட் துப்பாக்கிகளும் மாணவர்கள் மீது பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. 60 பேர் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY: வார தொடக்கத்திலேயே தங்கப் பிரியர்களுக்கு அதிர்ச்சி: அதிரடியாக உயர்ந்த விலை!
</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-27-07-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-27-07-2026#comments</comments><guid isPermaLink="false">ff0ce846-15f9-4bce-8975-7ece8d91873a</guid><pubDate>Mon, 27 Jul 2026 04:28:33 +0000</pubDate><atom:updated>2026-07-27T04:28:33.620Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-05-13/iabruizi/Gold.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-05-13/iabruizi/Gold.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தங்கம் விலை கடந்த 23-ந்தேதி வரை உயர்ந்து வந்த நிலையில், 24-ந்தேதி குறைந்தது. அதன்படி, ஒரு கிராம் ரூ.13,230-க்கும், ஒரு சவரன் ரூ.1,05,840-க்கும் விற்பனையானது. 25-ந்தேதி தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,300-க்கும், சவரனுக்கு ரூ.560-ம் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,400-க்கும் விற்பனை ஆனது. நேற்றும் இதே விலையில் விற்பனையானது.</p> <h2>தங்கம் விலை உயர்வு</h2><p>இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வாரத்தின் முதல்நாளான இன்று உயர்ந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு  ரூ.560 உயர்ந்து ரூ.1,06,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.13,370-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><h2>வெள்ளி விலை நிலவரம்</h2><p>வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-</h2><p>26-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,400</p><p>25-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,400</p><p>24-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,840</p><p>23-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,000</p><p>22-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,07,440</p> <h2>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-</h2><p>26-07-2026- ஒரு கிராம் ரூ.240</p><p>25-07-2026- ஒரு கிராம் ரூ.240</p><p>24-07-2026- ஒரு கிராம் ரூ.240</p><p>23-07-2026- ஒரு கிராம் ரூ.245</p><p>22-07-2026- ஒரு கிராம் ரூ.245</p> ]]></content:encoded></item><item><title>நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் தி.மு.க. ஊழல் பட்டியல் வெளியாகும்- அமைச்சர் மரிய வில்சன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-mariya-wilson-says-a-list-of-dmks-acts-of-corruption-will-be-released-during-the-upcoming-budget-session</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-mariya-wilson-says-a-list-of-dmks-acts-of-corruption-will-be-released-during-the-upcoming-budget-session#comments</comments><guid isPermaLink="false">55ae5324-1ce0-4ca0-a4b1-97cbfb5f99f9</guid><pubDate>Mon, 27 Jul 2026 03:56:32 +0000</pubDate><atom:updated>2026-07-27T03:56:32.317Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தவெக,TN budget,தமிழக பட்ஜெட்,tvk,ஊழல்,அமைச்சர் மரிய வில்சன்,Mariya Wilson</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/r9bnuqqu/mariawilson.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் மரிய வில்சன்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் மரிய வில்சன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/r9bnuqqu/mariawilson.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் தி.மு.க. அரசின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்று நிதி அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.</aside><h2><strong>ஊழல் பட்டியல்</strong></h2><p>த.வெ.க. சார்பில் முதலமைச்சர் விஜய் பிறந்தநாளையொட்டி சென்னை துறைமுகம் தொகுதியில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு 'முதல்வரின் கரம்' என்ற தலைப்பில் பாராட்டு விழா நேற்று நடைபெற்றது.</p><p>விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், <a href="https://www.maalaimalar.com/topic/மரிய-வில்சன்">நிதி அமைச்சர் மரிய வில்சன்</a> ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.</p><p>இதில் நிதி அமைச்சர் மரிய வில்சன் பேசியதாவது:-</p><h2><strong>சிறந்த அடித்தளம்</strong></h2><p>முதலமைச்சராக விஜய் பதவியேற்ற போதே, ஊழல் இல்லாத வெளிப்படைத்தன்மையுடன் கூடிய அரசாக இருக்கும் என்று உறுதியளித்தார். அதன்படி அவர் லஞ்சம்-ஊழல் என்ற வார்த்தை அடுத்த தலைமுறையினருக்கு தெரியாத அளவுக்கு சிறந்த அடித்தளம் அமைத்து வருகிறார்.</p><p>தமிழக சட்டமன்ற கூட்டம் நடைபெற்ற போது, 'பார்ட்டி பண்ட்' (கட்சி நிதி) என்றால் என்னவென்று தெரியாது போன்று வெளியே சென்றார்கள். அதில் ஒருவர் இந்த தொகுதியில் வெற்றி பெற்றவர் (சேகர்பாபு). அவருக்கு நான் இந்த மேடையில் இருந்து சொல்லி கொள்கிறேன்.</p><h2><strong>ஊழல் பட்டியல்</strong></h2><p>நடைபெற உள்ள தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் தனியாக தணிக்கை அறிக்கையை வெளியிட போகிறோம். அந்த ஊழல் பட்டியலில் என்ன இருக்கிறது என்பது அப்போது உங்களுக்கு தெரியும்.</p><h2><strong>'நீட்' தேர்வு விவகாரம்</strong></h2><p>நீங்கள் (எதிர்க்கட்சி) ஒருமையில் பேசி எங்களை கோபப்படுத்தினாலும் நாங்கள் உங்களை போன்று பேச மாட்டோம். உங்களுடைய ஊழல் அறிக்கைகளை தொடர்ந்து வெளியிட்டு பேசப்போகிறோம். ஊழல், லஞ்சம் இல்லாத தமிழ்நாட்டில் அனைவரும் வாழ போகிறோம். 100 சதவீதம் நம்பிக்கையுடன் இருங்கள். இந்த நோக்கத்தை சிதைப்பதற்காக இந்த ஆட்சி 60 நாட்கள், 3 மாதம், 6 மாதம் என்று சில பேர் பேசுகிறார்கள். அவர்கள்தான் 5 மாதத்தில் ஆள், 'அட்ரஸ்' இல்லாமல் போக போகிறார்கள்.</p><p>தற்போது 'நீட்' தேர்வை தடை செய்ய வேண்டும் என்று போராட்டங்கள் நடைபெற்றது. மாணவர்கள் நம்பிக்கையுடன் இருங்கள். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலில் எப்படி பெரிய மாற்றம் வந்ததோ, அதே போன்று 'நீட்' விவகாரத்தில் நிரந்தர தீர்வை பெற 2029 பாராளுமன்ற தேர்தலில் நம்முடைய தலைவர் (முதலமைச்சர் விஜய்) மூலம் சாதிக்கக்கூடிய எல்லா திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நீட் தேர்வு முற்றிலும் ஒழிக்கப்படும். இதை இந்த நாடு பார்க்க போகிறது.</p><p>இவ்வாறு அவர் பேசினார். </p><h2><strong>100 சதவீதம் நன்மை இருக்கும்</strong> </h2><p>விழா முடிந்ததும் அமைச்சர் மரிய வில்சனிடம், 'தமிழக பட்ஜெட்டில் ஊழல் பட்டியல் வெளியிட போகிறோம் என்று சொல்லி இருக்கிறீர்கள். அதில் எந்த மாதிரியான ஊழல்கள் இடம் பெற்றுள்ளது? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், 'பொறுத்திருந்து பாருங்கள்' என்று பதிலளித்தார். மேலும் அவர். '100 சதவீதம் மக்களுக்கு நன்மை அளிக்க கூடிய பட்ஜெட்டாக த.வெ.க. அரசின் பட்ஜெட் இருக்கும்' என்று தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் முழுமையாக நிறுத்தாமல் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் சாத்தியமில்லை - ஈரான் உச்ச தலைவர் </title><link>https://www.maalaimalar.com/news/world/iran-sets-condition-peace-with-us-only-if-israel-halts-attacks-on-lebanon</link><comments>https://www.maalaimalar.com/news/world/iran-sets-condition-peace-with-us-only-if-israel-halts-attacks-on-lebanon#comments</comments><guid isPermaLink="false">4915478b-0a65-4b76-86f0-3b0e89e1afc7</guid><pubDate>Mon, 27 Jul 2026 03:56:24 +0000</pubDate><atom:updated>2026-07-27T03:56:24.804Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>lebanon,Hezbollah,லெபனான்,Mojtaba Khamenei,ஹிஸ்புல்லா,மொஜ்தபா காமேனி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/6qkvlnbf/tn-34.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[  
மொஜ்தபா, டிரம்ப்]]></media:title><media:description type="html"><![CDATA[  
மொஜ்தபா, டிரம்ப்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/6qkvlnbf/tn-34.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவுடன் <a href="https://www.maalaimalar.com/news/world/us-pauses-attacks-on-iran-for-second-straight-day">போரை </a>முடிக்க லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும் என்பதே ஈரானின் முதன்மை நிபந்தனை என உச்ச தலைவர்  மொஜ்தபா காமேனி தெரிவித்துள்ளார். </p><p>லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா ஹிஸ்புல்லா பொதுச்செயலாளர் ஷேக் நைம் காசிம் மற்றும் அமைப்பின் போராளிகள் அனுப்பிய  கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில்  காமேனி எக்ஸ் பதிவு ஒன்றை மொஜ்தபா வெளியிட்டுள்ளார். </p> <h2>ஹிஸ்புல்லாவுக்கு பாராட்டு </h2><p>அதில், ஹிஸ்புல்லாவின் "பொறுமை, உன்னதம் மற்றும் தியாகத்தை" பாராட்டிய மொஜ்தபா, அவ்வமைப்பை "அசையாத பாறை" என்று வர்ணித்துள்ளார்.</p><p>மேலும், "ஜிகாத் மற்றும் எதிர்த்து போரிடுவதை தவிர வேறு பாதை எதுவும் இல்லை" என்று கூறிய காமேனி தொடர்ந்து போராடினால் இறுதியில் தெய்வீக வெற்றியை அது கொண்டுவரும் என தெரிவித்துள்ளார்.</p><p>லெபனானின் பிராந்திய ஒருமைப்பாட்டையும், ஹிஸ்புல்லாவையும் பாதுகாப்பது ஈரானின் பொறுப்பு என்றும் அமெரிக்காவிற்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டுவர, லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் நிறுத்தப்படுவது கட்டாயம் எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.</p><p>தொடர்ந்து தனது பதிவில், தாக்குதலுக்கு உள்ளான தெற்கு லெபனான் மக்களின் பொறுமையையும் ஆதரவையும் பாராட்டி, கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் சையத் ஹசன் நஸ்ரல்லா மற்றும் பிற தளபதிகளுக்கு அஞ்சலி செலுத்திதுவதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p>ஹிஸ்புல்லாவை ஒரு சிறிய நாற்றிலிருந்து ஒரு பெரிய மரமாக போராளிகள் உயர்த்தியுள்ளனர் என்றும் இஸ்லாமிய உலகம் முழுவதும் லெபனானிற்கு பெருமை சேர்த்துள்ளனர் என ஹிஸ்புல்லாவினரை மீண்டும் மொஜ்தபா பாராட்டியுள்ளார்.</p> <h2>டிரம்ப் - லெபனான் அதிபர் சந்திப்பு</h2><p>முன்னதாக ஜூலை 21 அன்று அமெரிக்காவுக்கு சென்று, லெபனான் அதிபர் ஜோசப் அவ்ன், அதிபர் டிரம்பை சந்தித்தபோது, லெபனான் எல்லையிலிருந்து இஸ்ரேல் முழுமையாக வெளியேறுவது நாட்டின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த அவசியம் என்று தெரிவித்தார்.</p><p>இந்த சந்திப்பில், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லாவை ஆயுதங்களை கைவிடச் செய்வதற்கான திட்டங்கள், இஸ்ரேல் வெளியேறுவதை உறுதி செய்தல், லெபனான் ராணுவத்திற்கான அமெரிக்க உதவி, தாக்குதல் சீரமைப்பு பணிகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>6 மாதங்களுக்கு ரூ. 1,449/- மட்டுமே... வேற லெவல் ஆஃபர் அறிவித்த பி.எஸ்.என்.எல்.</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/bsnl-six-months-broadband-plan-just-for-rs-1449</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/bsnl-six-months-broadband-plan-just-for-rs-1449#comments</comments><guid isPermaLink="false">0dc84da1-d807-4c00-a28a-9c22d0e5c7e4</guid><pubDate>Mon, 27 Jul 2026 03:41:00 +0000</pubDate><atom:updated>2026-07-27T03:41:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பிஎஸ்என்எல்,BSNL,broadband plan,பிராட்பேண்ட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/hzlp8vmf/bsnl-2.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ BSNL Logo]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/hzlp8vmf/bsnl-2.png?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான <a href="https://www.maalaimalar.com/topic/bsnl">பி.எஸ்.என்.எல்.</a> வெறும் ரூ. 1,449 விலையில் ஆறு மாத கால பிராட்பேண்ட் (broadband) திட்டத்தை வழங்குகிறது. மற்ற சேவை வழங்குநர்களின் திட்டங்களுடன் ஒப்பிடுகையில், இது மிகவும் மலிவான ஒரு திட்டமாகும். </p><p>மற்ற நிறுவனங்களில் சில திட்டங்கள் ஒரு மாதத்திற்கே ரூ. 1,000-க்கும் அதிகமான விலையை கொண்டுள்ளன. ரூ. 1,449 மதிப்பிலான இந்த திட்டம் ஆறு மாத கால வேலிடிட்டி கொண்டிருந்தாலும், இதில் வேகம் மற்றும் டேட்டா பயன்பாடு ஆகியவை குறைவாகவே உள்ளன. இருப்பினும், பயனர்களுக்கு இதில் OTT (ஓவர்-தி-டாப்) சேவையை பெற முடியும்.</p><h2>இலக்கு:</h2><p>இத்திட்டம் இந்தியாவின் கிராமப்புறங்களில் வசிக்கும் நுகர்வோருக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல். இதனை 'ரூரல் என்ட்ரி பிளான்' (Rural Entry Plan) என்று அழைக்கிறது; இது ஒரு மாத காலத்திற்கும் கிடைக்கிறது. ஒரு மாத காலத் திட்டத்திற்கு ரூ. 259 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.</p><p>ஆறு மாத காலத் திட்டமாகத் தேர்ந்தெடுக்கும்போது, ​​மாதத்திற்கான கட்டணம் தோராயமாக ரூ. 241-ஆகக் குறைகிறது. குறிப்பிடப்பட்ட மொத்தத் தொகைக்கு வரி (taxes) கூடுதலாகச் செலுத்தப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இப்போது இதன் செலவு விவரங்களைப் பார்ப்போம்.</p><h2>கட்டண விவரங்கள்:</h2><p>பி.எஸ்.என்.எல்.-இன் ரூ. 1,449 பிராட்பேண்ட் திட்டம், 25 Mbps வேகம் மற்றும் 700GB வரையிலான டேட்டாவுடன் வருகிறது. நியாயமான பயன்பாட்டு கொள்கையின் (FUP) வரம்பிற்குட்பட்ட டேட்டா தீர்ந்த பிறகு, இணைய வேகம் 2 Mbps-ஆக குறைகிறது.</p><p>இத்திட்டத்தில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங் (voice calling) வசதி கிடைக்கிறது; ஆனால் இது லேண்ட்லைன் (landline) மூலமான அழைப்பு வசதியாகும், எனவே இதற்கான லேண்ட்லைன் சாதனத்தை வாடிக்கையாளர்கள் தனியாக வாங்க வேண்டியிருக்கும்.</p><p>கிராமப்புற வீடுகளில் பிராட்பேண்ட் சேவையை விரிவுபடுத்தவும், அதற்கான தேவையை உருவாக்கவும் இத்திட்டம் அறிமுகம் செய்யப்படுட்டுள்ளதாக பி.எஸ்.என்.எல். தெரிவித்துள்ளது. இத்திட்டத்துடன் 'பிரசார் பாரதி (WAVES) பிரீமியம்' (Prasar Bharati (WAVES) Premium) எனும் OTT சேவையை பெறும் வசதியும் கிடைக்கிறது. இத்திட்டம் ஆறு மாத கால செல்லுபடியாகும் தன்மையை கொண்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விண்வெளி முதல் பாதுகாப்பு துறை வரை.. தேர்வு அமைப்பை சீர்செய்யும் உயர்மட்ட குழுவில் இடம்பெற்றவர்கள் முழு விவரம்
</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-reforms-pm-modi-announces-nandan-nilekani-led-high-level-panel-after-protests</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-reforms-pm-modi-announces-nandan-nilekani-led-high-level-panel-after-protests#comments</comments><guid isPermaLink="false">94e74e96-9ddb-48fd-8888-f013cba0de54</guid><pubDate>Mon, 27 Jul 2026 03:32:02 +0000</pubDate><atom:updated>2026-07-27T03:32:02.650Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,question paper leak,பிரதமர் மோடி,வினாத்தாள் கசிவு,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/vex89daq/tn-33.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ உயர்மட்ட குழு]]></media:title><media:description type="html"><![CDATA[ உயர்மட்ட குழு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/vex89daq/tn-33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் 1 மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தியதன் விளைவாக நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தேர்வு முறைகேடுகள் குறித்து பிரதமர் மோடி மௌனம் கலைத்துள்ளார். </p><p>நேற்று முன் தினம் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததன் மூலம் சிஜேபி போராட்டம் வெற்றி பெற்று முடிவுக்கு வந்தது. </p><h2>இன்ஸ்டாகிராம் வீடியோவில் மோடி  </h2><p>தேர்வு முறைகேடு வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றம், வினாத்தாள் கசிவை  தடுக்க சிறப்பு மசோதா, தேர்வு முறையைச் சீரமைக்க  <a href="https://www.maalaimalar.com/news/national/panel-formed-to-restore-prime-ministers-tainted-image-jairam-ramesh">உயர்மட்டக் குழு</a> உள்ளிட்ட அறிவிப்புகளை கடந்த சில நாட்களில் பிரதமர் மோடி அடுத்தடுத்து வெளியிட்டுள்ளார். </p><p>குறிப்பாக நேற்று வினாத்தாள் கசிவுச் சம்பவங்களைத் தடுத்து, தேர்வு முறையை முற்றிலும் நவீனமயமாக்கிச் சீரமைக்க இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகணி தலைமையில் உயர்மட்ட குழுவை அமைப்பதாக இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் மோடி அறிவித்தார். </p> <h2>உயர்மட்ட குழு</h2><p>இந்த குழுவில் வெவ்வேறு துறைகளை சேர்ந்த 6 பேர் இடம்பெற்றுள்ளனர். அவர்களின் விவரங்கள் கீழ் வருமாறு,</p><h3>குழு தலைவர் - நந்தன் நிலேகணி</h3><p>இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான இவர், இந்தியாவின் ஆதார் கார்டு திட்டத்தின் முக்கிய வடிவமைப்பாளராகக் கருதப்படுபவர்.</p><p>வினாத்தாள் தயாரிப்பு, தேர்வு மையப் பாதுகாப்பு, தேர்வர் சரிபார்ப்பு மற்றும் தேர்வு முடிவுகள் வெளியீடு என அனைத்துக் கட்டங்களிலும் அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்ப தீர்வுகளை பயன்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்கி குழுவை வழிநடத்த உள்ளார்.</p><h3>டாக்டர் எஸ். சோமநாத்</h3><p>2022–2025 வரை இஸ்ரோவின் தலைவராக இருந்தவரும் விண்வெளித் துறை முன்னாள் செயலாளருமான சோமநாத், ராக்கெட் தொழில்நுட்பம் மற்றும் பெரிய அளவிலான அமைப்புகளை திட்டமிடுவதில் 40 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்.</p><h3>தபன் குமார் தேகா</h3><p>2022–2026 வரை இந்திய உளவுத்துறையின் இயக்குநராக இருந்த தேகா, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் தேசியப் பாதுகாப்பில் நீண்ட அனுபவம் கொண்ட முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி ஆவார்.</p><p>இவர் தேர்வு மையங்களின் பாதுகாப்பு மற்றும் முறைகேடுகளைத் தடுக்கும் பாதுகாப்பு நெறிமுறைகளை பலப்படுத்துவதில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h3>பேராசிரியர் வி. காமகோடி</h3><p>ஐ.ஐ.டி மெட்ராஸ் இயக்குநரான இவர், கணினி கட்டமைப்பு மற்றும் சைபர் பாதுகாப்பில் நிபுணர்.</p><p>கல்வித்துறை சார்ந்த ஆலோசனைகள் மற்றும் தேர்வு முறையில் கணினி சார்ந்த பாதுகாப்பை உறுதி செய்யும் நுட்பங்களை புகுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>சென்னையில் கடந்த ஆண்டு மாட்டுப் பொங்கல் விழாவில் பேசிய காமகோடி, மாட்டின் கோமியம் மற்றும் சாணத்தில் மருத்துவ குணம் உள்ளதாக பேசி விமர்சனத்துக்கு ஆளானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. </p><h3>அனிதா கர்வால்</h3><p>2017–2026 வரை சிபிஎஸ்சியின் தலைவராகவும், பள்ளி இடைநிலைக் கல்வித்துறை செயலாளராகவும் பணியாற்றிய முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி அனிதா கர்வால். தேசியக் கல்விக் கொள்கை 2020உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றியவர்.</p><h3>அம்ரித் லால் மீனா</h3><p>2024–2025 வரை பீகார் மாநிலத்தின் தலைமைச் செயலாளராகவும், நிலக்கரித் துறை செயலாளராகவும் பணியாற்றிய அம்ரித் லால் மீனா 1989 ஆம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார். நிர்வாகம் மற்றும் தளவாடப் போக்குவரத்தை சீரமைப்பதில் அனுபவம் வாய்ந்தவர் இவர்.</p> <h2>தேசிய தேர்வு முகமை மறுசீரமைப்பு</h2><p>இந்த உயர்மட்டக் குழு, தேசிய தேர்வு முகமையை பலப்படுத்துவதுடன், போட்டித் தேர்வுகளின் நம்பகத்தன்மையை மீட்டெடுக்கத் தேவையான பரிந்துரைகளை மத்திய அரசுக்கு வழங்கும்.</p><p>குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் தேர்வு முறையில் பெரிய அளவிலான தொழில்நுட்ப சீர்திருத்தங்களை அமல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தர்மபுரியில் ரெயில் பெட்டியில்  தீவிபத்து
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/fire-breaks-out-in-a-train-coach-in-dharmapuri</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/fire-breaks-out-in-a-train-coach-in-dharmapuri#comments</comments><guid isPermaLink="false">5f0b3937-6564-4053-8f1a-17a89b7e78c6</guid><pubDate>Mon, 27 Jul 2026 03:04:24 +0000</pubDate><atom:updated>2026-07-27T03:04:24.625Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Train,ரெயில்,fire,Dharmapuri,தர்மபுரி,தீவிபத்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/bymyswf2/fire.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/bymyswf2/fire.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தருமபுரி ரெயில் நிலையத்தில், பெங்களூரு–சேலம் பேசஞ்சர் ரெயிலின் ஒரு பெட்டியின் கீழ்பகுதியில் திடீரென தீப்பிடித்த சம்பவம் பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ரெயில்வே பாதுகாப்புப் படையினர் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் உடனடியாக தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.</p><p>பெங்களூரு யஸ்வந்த்பூரில் இருந்து சேலம் நோக்கி இயக்கப்படும் பேசஞ்சர் ரெயில், நேற்று இரவு 7.13 மணியளவில் தருமபுரி ரெயில் நிலையத்தின் முதலாவது நடைமேடைக்கு வந்தது. அப்போது ரெயிலின் 5-வது பெட்டியின் கீழ்பகுதியில் உள்ள சஸ்பென்ஷன் ஸ்பிரிங் பகுதியில் திடீரென தீப்பிடித்து புகை கிளம்பியது.</p> <p>இதனை கவனித்த ரெயில்வே பாதுகாப்புப் படையினர் உடனடியாக ரெயில் ஓட்டுநருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து ரெயில்வே காவல்து றையினர் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் இணைந்து விரைந்து செயல்பட்டு தீயை முழுமையாக அணைத்தனர். தீ அணைக்கும் பணிகள் காரணமாக ரெயில் சுமார் 47 நிமிடங்கள் தாமதமாக தருமபுரியில் இருந்து சேலம் நோக்கி புறப்பட்டது.</p> <p>சம்பவம் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டு தீ அணைக்கப்பட்டதால் பெரிய அளவிலான சேதமும், உயிரிழப்பும் தவிர்க்கப்பட்டது. திடீரென ரெயிலில் தீப்பிடித்ததால் பயணிகள் மத்தியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.</p><p>ரெயில்வே அதிகாரிகள் சம்பவத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை (28.07.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-33</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-33#comments</comments><guid isPermaLink="false">98d98c85-0d1c-4d40-986b-a8a875410773</guid><pubDate>Mon, 27 Jul 2026 03:02:48 +0000</pubDate><atom:updated>2026-07-27T03:02:48.095Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மின்தடை,TNEB,மின்சார வாரியம்,Power Cut,தமிழ்நாடு மின்சார வாரியம்,சென்னையில் மின்தடை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/qrnu1j3l/powercut0.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மின்தடை]]></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/qrnu1j3l/powercut0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் <a href="https://www.maalaimalar.com/topic/சென்னையில்-மின்தடை">மின் தடை</a> செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><p>அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (28.07.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.  அதன்படி, </p><h2><strong>ஐடி காரிடார்</strong></h2><p>எம்சிஎன் நகர் மற்றும் விரிவாக்கம், பவுண்டரி சாலை, பிள்ளையார் கோவில் தெரு, எஸ்பிஐ காலனி, கங்கையம்மன் கோவில் தெரு, 200 அடி ரேடியல் சாலை, போஸ்ட் ஆபிஸ் தெரு, வேம்புலியம்மன் கோவில் தெரு, தேரடி தெரு, பஞ்சாயத்து சாலை, மேப்பிள் அவென்யூ, குளக்கரை தெரு, ஆறுமுகம் நகர் மற்றும் குமரன் நகர், குமரன் நகர், குமரன் நகர் ஆர்.ஈ. நகர், செல்வகணபதி அவென்யூ, சரவணா நகர், கார்ப்பரேஷன் சாலை, செல்வகுமார் அவென்யூ, சீவரம், தணிகாசலம் தெரு, ராமச்சந்திரன் தெரு, காமராஜ் தெரு, இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் சாலை, எம்.ஜி. சாலை, பாலவிநாயகர் அவென்யூ, பிரகாசம் தெரு, எல்லையம்மன் நகர், ஸ்ரீபுரம் சாலை, ராமன் நகர், ஓ.எம்.ஆர்., திருமலைவ் நகர், ராமன் நகர், திருமலை, சிபிஐ நகர். மெயின் ரோடு, ஐஐடி காலனி, மீனாட்சிபுரம், மனோகர் நகர், விஜிபி சாந்தி நகர்.</p><h2><strong>ராமாபுரம்</strong></h2><p>மணப்பாக்கம், கிருஷ்ணா நீதிமன்றம், சிஆர்ஆர் புரம், கிருஷ்ணா நகர், பெரியார் சாலை, இந்திரா நகர், மற்றும் எம்ஜிஆர் நகர், ஸ்ரீராம் கார்டன், லட்சுமி நகர், பிள்ளையார் கோவில் தெரு, மைக்ரோ மார்வெல், தர்மராஜபுரம், காசாகிராண்ட் உட்சைட் மற்றும் கோட்டை, டி.வி.எஸ். எமரால்டு.</p><h2><strong>மேடவாக்கம்</strong></h2><p>படேல் கம்பெனி சாலை, ஏரிக்கரை தெரு, சிபிஐ காலனி 1-7வது தெரு, வேளச்சேரி மெயின் ரோடு, பெல் நகர் 1-5வது தெரு, சிவகாமி நகர், பஜனை கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, ரங்கநாதபுரம், பிரின்ஸ் கல்லூரி.</p><h2><strong>வளசரவாக்கம்</strong></h2><p>விருகம்பாக்கம், ஆழ்வார்திரு நகர்.</p><h2><strong>நொளம்பூர்</strong></h2><p>எஸ்&amp;பி கார்டன், விஜிஎன் மான்டே கார்லோ, எஸ்ஆர்ஆர் நகர், ராஜா கார்டன் ஏரியா, குருசாமி சாலை, நொளம்பூர் முதல் மற்றும் இரண்டாம் யூனியன் சாலை, விஜிஎன் நகர் கட்டம் I-IV, பிளாக்ஸ் 1-8வது, கம்பர்சாலை, கவிமணிசாலை, பாரதி சாலை, அண்ணாமலை அவென்யூ, மீனாட்சி அவென்யூ, எம்.கே.லாட் பல்கலைக்கழகம், ரெட்டி. பனஞ்சோலை தெரு, மாதா கோவில் பகுதி, பெருமாள் கோவில் பகுதி, கஜலட்சுமி நகர், வேம்புலி அம்மன் பகுதி, ஸ்ரீ ராம் நகர், பச்சையப்பன் நகர், சக்தி நகர், பாடசாலை தெரு.</p><h2><strong>ஆதம்பாக்கம்</strong></h2><p>நிலமங்கை நகர், கேசரி நகர், சாந்தி நகர், சுரேந்தர் நகர், பாரதிதாசன் தெரு, பாரத் நகர்.</p>]]></content:encoded></item><item><title>
உத்தவ் தாக்கரே பிறந்தநாள் - மு.க.ஸ்டாலின் வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-birthday-wishes-to-uddhav-thackeray</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-birthday-wishes-to-uddhav-thackeray#comments</comments><guid isPermaLink="false">d9eab2e5-c37e-4b46-933d-92bbac76b21c</guid><pubDate>Mon, 27 Jul 2026 02:38:24 +0000</pubDate><atom:updated>2026-07-27T02:38:24.531Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,uddhav Thackeray,உத்தவ் தாக்கரே,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/nofhe1vl/mkstalin.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/nofhe1vl/mkstalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுக தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/the-chief-minister-vijay-must-drop-plan-to-go-to-karnataka-for-talks-mk-stalin">மு.க.ஸ்டாலின்</a> சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.</p> <p>நேற்று சிவாஜி பூங்காவில் வெளிப்பட்ட அபரிமிதமான ஆதரவு, உங்களை பலவீனப்படுத்த மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு முயற்சியும், உங்களுக்குத் துணையாக நிற்க வேண்டும் என்ற மக்களின் உறுதியை மேலும் வலுப்படுத்தியுள்ளது என்பதைத் தெளிவாக உணர்த்தியது.</p><p>உங்கள் தளராத போராட்டக் குணத்துடன் சவால்களை முறியடித்து, நீங்கள் நல்ல உடல்நலத்துடனும் வெற்றியுடனும் திகழ வாழ்த்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மேற்கு கரை: பாலஸ்தீனிய கிராமங்களில் புகுந்து இஸ்ரேலிய குடியேறிகள் வன்முறை.. மசூதிகளுக்கு தீவைப்பு </title><link>https://www.maalaimalar.com/news/world/west-bank-violence-israeli-settlers-torch-mosques-kill-palestinians</link><comments>https://www.maalaimalar.com/news/world/west-bank-violence-israeli-settlers-torch-mosques-kill-palestinians#comments</comments><guid isPermaLink="false">c7a491ab-a043-47bf-981a-6633e34d48ca</guid><pubDate>Mon, 27 Jul 2026 02:30:30 +0000</pubDate><atom:updated>2026-07-27T02:30:30.360Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>palestine,காசா,இஸ்ரேல்,gaza,Israel,மேற்கு கரை,West Bank,பாலஸ்தீனம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/pymzgwhb/tn-31.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மசூதிகளுக்கு தீவைப்பு ]]></media:title><media:description type="html"><![CDATA[ மசூதிகளுக்கு தீவைப்பு ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/pymzgwhb/tn-31.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாலஸ்தீனத்தின் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88">மேற்கு கரை</a> பகுதியை முழுமையாக ஆக்கிரமிக்கும் முயற்சியில் இஸ்ரேல் தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே பல இஸ்ரேலிய குடும்பங்களை குடியேற்றிய நிலையில் மேலும் இஸ்ரேலியர்களை அங்கு குடியமர்த்த அண்மையில் அந்நாட்டு பாராளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. </p><p>மேலும் மேற்கு கரையில் காலங் காலமாக வசித்து வரும் பாலஸ்தீன குடும்பங்களை விரட்ட அனைத்து முயற்சிகளிலும் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது. அங்குள்ள இஸ்ரேலிய குடியேறிகள் அவ்வப்போது வன்முறையிலும் ஈடுபட்டு பாலஸ்தீனர்கள் அங்கிருந்து வெளியேற அழுத்தம் தந்து வருகின்றனர். </p><p>அதுமட்டுமின்றி, அங்கு பாலஸ்தீன பெண்கள் மீதான பாலியல் வன்முறையையும் இஸ்ரேல் கட்டவிழ்துவிட்டு அவர்களை பயம் மூலம் அங்கிருந்து விரட்ட இஸ்ரேல் முயன்று வருவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன. </p> <figure><img alt="இஸ்ரேல் ராணுவம் " src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/wlxllxhd/tn-29.jpg" /><figcaption>இஸ்ரேல் ராணுவம் </figcaption></figure><h2>மோதல்</h2><p>இதற்கு மத்தியில் கடந்த ஜூலை 24ஆம் தேதி நப்லஸ் நகருக்கு அருகே பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலிய குடியேறிகள் மற்றும் ராணுவத்தினர் இணைந்து தாக்குதல் நடத்தினர்.</p><p>கிராம மக்கள் எதிர்த்துப் போராடியபோது குடியேற்றவாசிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாலஸ்தீனர்கள் திருப்பித் தாக்கிய நிலையில், இஸ்ரேலிய ராணுவம் நுழைந்து நடத்திய தாக்குதலில் 4 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். 4 பேர் காயமடைந்தனர். மோதலில் 2 இஸ்ரேல் வீரர்களும் கொல்லப்பட்டனர்.</p><p>இச்சம்பவத்தைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் பென்யமின் நெதன்யாகு மேற்குக் கரை முழுவதும் தீவிர ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.</p><p>தால் கிராமத்தில் 70க்கும் மேற்பட்ட வீடுகளில் சோதனையிட்ட இஸ்ரேலியப் படையினர், 50க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களைக் கைது செய்தனர்.</p><p>ஒரே நாளில் மேற்குக் கரை முழுவதும் 80 பாலஸ்தீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பாலஸ்தீன சிறைவாசிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.</p><p>உயிரிழந்த 4 பாலஸ்தீனர்களின் அடக்கச் சடங்குகளும் கடும் கட்டுப்பாடுகளுக்கு இடையே நடத்தப்பட்டன.</p><p>மசூதிகளுக்கு தீவைப்பு </p><figure><img alt="மசூதிகளுக்கு தீவைப்பு " src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/0w5621l1/tn-32.jpg" /><figcaption>மசூதிகளுக்கு தீவைப்பு </figcaption></figure><h2>மசூதிகளுக்கு தீ வைப்பு</h2><p>இந்த சம்பவத்திற்கு பழிவாங்க, நேற்றுமுன் தினம் அதிகாலைஇஸ்ரேலியர்கள் ஆயுதங்களுடன் பாலஸ்தீன கிராமங்களுக்குள் புகுந்தனர்.</p><p>அங்கு வெறித்தனமாக தாக்குதல் நடத்திய அவர்கள், குஸ்ரா மற்றும் கூர் ஆகிய கிராமங்களில் உள்ள 2 மசூதிகளுக்கு தீ வைத்தனர். அங்கிருந்த பாலஸ்தீனியர்களின் கார்கள் மற்றும் விவசாய நிலங்களையும் தீயிட்டுக் கொளுத்தினர்.</p><p>சுவர்களில் ஹீப்ரு மொழியில் "பழிவாங்குதல்" என்று எழுதி வைத்துவிட்டு தப்பியோடினர். இதுதொடர்பாக விசாரித்து வரும் இஸ்ரேல் காவல்துறை சம்பவத்துடன் தொடர்புடைய 2 பேரை கைது செய்துள்ளது.</p><p>இந்த சம்பவத்தால் மேற்குக்கரை பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டு, போர் பதற்றம் நிலவி வருகிறது.</p><p>பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக இஸ்ரேலில் போராட்டம்</p><p>இதனிடையே இஸ்ரேலின் இடதுசாரி அமைப்பான 'ஹதாஷ்' மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் டெல் அவிவின் கப்லான் தெருவில் நேற்று முன்தினம் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற போராட்டம் நடத்தப்பட்டது.</p><p>குடியேற்றவாசிகளின் வன்முறையைக் கண்டித்து 200க்கும் மேற்பட்டோர் தெருவில் இறங்கிப் போராடியதாக Mothers Against Violenceஅமைப்பு தெரிவித்துள்ளது.</p><p>போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் பலப்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், முன்அனுமதியின்றிப் போராட்டம் நடத்தியதாலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாலுமே நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இஸ்ரேல் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <figure><img alt="இஸ்ரேல் ராணுவம் " src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/n98ege35/tn-30.jpg" /><figcaption>இஸ்ரேல் ராணுவம் </figcaption></figure><h2>மேற்கு கரை</h2><p>2023இல் காசாவில் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை மேற்கு கரையில் 1,182 பாலஸ்தீனர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 13,000 பேர் காயமடைந்துள்ளனர்.</p><p>24,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களை இஸ்ரேல் கைது செய்து சிறையிலடைத்துள்ளது என பாலஸ்தீன அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.</p> ]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 27.7.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-27-july-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-27-july-2026#comments</comments><guid isPermaLink="false">b87621db-5c25-4128-8a67-f21c8cd3bbbd</guid><pubDate>Mon, 27 Jul 2026 01:56:51 +0000</pubDate><atom:updated>2026-07-27T01:56:51.441Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/11/15/21633882-rasi.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/11/15/21633882-rasi.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>ராசிபலன்(Rasipalan)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>யோகமான நாள். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள். கடந்த சில நாட்களாக தாமதப்பட்டு வந்த காரியங்கள் இன்று துரிதமாக நடைபெறும்.</p><h2>ரிஷபம்</h2><p>ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். கைமாற்றாக கொடுத்த பணத்தை போராடி வாங்குவீர்கள். பக்கத்து வீட்டாருடன் பகை ஏற்படலாம்.</p><h2>மிதுனம்</h2><p>குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும் நாள். வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வது நல்லது. சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.</p> <h2>கடகம்</h2><p>பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பணத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது.</p><h2>சிம்மம்</h2><p>கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். பயணம் பலன் தரும். உத்தியோகப் பிரச்சினை அகலும்.</p><h2>கன்னி</h2><p>பொருளாதாரத்தில் இருந்த தேக்கநிலை மாறும். உடன்பிறப்புகள் வழியில் ஒரு சுபச்செய்தி உண்டு. உத்தியோகத்தில் உங்கள் கைஓங்கும்.</p> <h2>துலாம்</h2><p>காரிய வெற்றி ஏற்படும் நாள். நண்பர்கள் நல்ல தகவலை தருவர். வளர்ச்சிக்காக எடுத்த முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் இலாகா மாற்றம் உறுதியாகலாம்.</p><h2>விருச்சிகம்</h2><p>ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நாள். பொருளாதார நிலை உயரும். தொலைபேசி வழித்தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு வித்திடும்.</p><h2>தனுசு</h2><p>வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும் நாள். வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் பிரச்சினை ஏற்படும்.</p> <h2>மகரம்</h2><p>பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். அடுத்தவர் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். பூர்வீக சொத்தை விற்று புதிய சொத்தை வாங்குவீர்கள்.</p><h2>கும்பம்</h2><p>எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். நாணயமும், நேர்மையும் கொண்ட நண்பர்களால் நம்பிக்கைகள் நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.</p><h2>மீனம்</h2><p>விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். வீடு மாற்றம் செய்யலாமா என்று சிந்திப்பீர்கள்.</p> ]]></content:encoded></item><item><title>&quot;அப்பா தான் அம்மாவை வெட்டுனாரு..&quot; 8 மாத கர்ப்பிணி தாயை கொன்ற தந்தையை காட்டிக்கொடுத்த 5 வயது மகன்</title><link>https://www.maalaimalar.com/news/national/up-pregnant-wife-murder-husband-held-after-5-year-old-sons-testimony</link><comments>https://www.maalaimalar.com/news/national/up-pregnant-wife-murder-husband-held-after-5-year-old-sons-testimony#comments</comments><guid isPermaLink="false">ca38754e-4d5a-486d-8948-a547e2ed0aec</guid><pubDate>Mon, 27 Jul 2026 01:50:17 +0000</pubDate><atom:updated>2026-07-27T01:50:17.170Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கொலை வழக்கு,Murder case,Uttar Pradesh,கணவன்-மனைவி,husband and wife,உத்தரப் பிரதேசம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/88zt30pr/tn-28.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/88zt30pr/tn-28.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உ.பியில் 8 மாத கர்ப்பிணி மனைவியை கணவன் குடிபோதையில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/boyfriend-arrested-for-illegal-girlfriend-murder">கொலை </a>செய்த நிலையில் அவரை 5 வயது மகனினே போலீசில் சிக்கவைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.   </p><h2>மது - சூது </h2><p>உத்தரப் பிரதேச மாநிலம் மகோபா மாவட்டத்தில் உள்ள பாஜ்ராரி கிராமத்தை சேர்ந்த ஹனீப் மன்சூரி மதுப்பழக்கம் மற்றும் சூதாட்டத்திற்கு அடிமையானவர்.</p><p>தனது பழக்கங்களுக்காகத் தன் நிலத்தின் பெரும் பகுதியை ஏற்கனவே விற்றுவிட்ட நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு அதிகளவில் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.</p><p>கணவர் மீண்டும் மது அருந்துவதைத் த தடுக்க மனைவி மனிஷா முயன்றபோது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. </p> <h2>கொலை</h2><p>இதில் ஆத்திரமடைந்த ஹனீப், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து 8 மாதக் கர்ப்பிணியான மனைவியை அவரது தலை, உடல் மற்றும் கைகளில் சரமாரியாக வெட்டிக் கொடூரமாகக் கொலை செய்தார்.</p><p>இந்தக் கொடூரச் சம்பவத்தை அவர்களின் 5 வயது மகனும், 2 வயது மகளும் நேரில் பார்த்து உறைந்து போயினர்.</p><p>கொலையை மறைக்க எண்ணிய ஹனீப், தானே காவல்துறைக்குத் தகவல் தெரிவித்து ஒரு பொய் கதையைக் கூறித் தப்ப முயன்றார்.</p> <h2>மகன் வாக்குமூலம்</h2><p>ஆனால், 5 வயது மகன், காவல்துறையினரிடம் தந்தை தான் அம்மாவை வெட்டிக் கொன்றார் என்றும் தான் அதை நேரில் பார்த்ததை வாக்குமூலமாகக் கூறினான்.</p><p>இதையடுத்து, பன்வாரியிடம் காவல்துறை நடத்திய விசாரணையில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டதை அடுத்து கைது செய்யப்பட்டார்.</p><p>2 மற்றும் 5 வயதுக் குழந்தைகளின் கண் முன்னே 8 மாதக் கர்ப்பிணியை கணவன் வெட்டிக் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>தூக்கு தண்டனை </h2><p>மனிஷாவுக்கு 2021இல் திருமணமான நிலையில், கணவர் ஹனீப் சந்தேகப் புத்தியால் அடிக்கடி அவரை அடித்துத் துன்புறுத்தி வந்ததாகவும், பலமுறை வீட்டை விட்டுத் துரத்தியபோதும் குடும்பத்திற்காக மனிஷா பொறுத்துக்கொண்டு வாழ்ந்து வந்ததாகவும் அவரது சகோதரர் நசீம் மன்சூரி தெரிவித்தார்.</p><p>ஹனீபின் தந்தை பேசுகையில், "என் மகன் மன்னிக்க முடியாத குற்றத்தைச் செய்துவிட்டான். அவனுக்கு தூக்கு தண்டனை அளித்தாலும் தகும்" எனக் கூறினார். </p><p>மேலும் தாய் இழந்த இரண்டு பேரக் குழந்தைகளையும் தானே வளர்க்கப்போவதாகக் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம் </title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/todays-petrol-and-diesel-price-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/todays-petrol-and-diesel-price-chennai#comments</comments><guid isPermaLink="false">c0c4a7b8-311e-4115-beb8-2bf8b689be1c</guid><pubDate>Mon, 27 Jul 2026 01:34:42 +0000</pubDate><atom:updated>2026-07-27T01:34:42.231Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,கச்சா எண்ணெய்,Crude oil,பெட்ரோல் டீசல் விலை,Petrol and Diesel Prices</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/69ax2m3e/petrol-diesel-price.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ petrol diesel price ]]></media:title><media:description type="html"><![CDATA[ petrol diesel price]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/69ax2m3e/petrol-diesel-price.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/us-pauses-attacks-on-iran-for-second-straight-day">ஈரான் போரினால்</a> மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.</p><p>அண்மை நாட்களாக பரஸ்பர தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டபோதோலும் ஹார்முஸ் பதற்றம் தொடர்ந்து வருகிறது. </p> <h2>எண்ணெய் நிறுவனங்கள்</h2><p>இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது. கச்சா எண்ணெய்யை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது.</p><p>அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.</p> <h2>பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்</h2><p>அந்த வகையில் இன்று (27.07.2026 - திங்கள்கிழமை)க்கான பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல்ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p>அதேவேளை, இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கச்சா எண்ணெய்</h2><p>இன்று சர்வதேச சந்தையில் பிரனட் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 92.5 டாலர் என விற்பனை ஆகி வருகிறது.</p><p>வரும் நாட்களில் போர் மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுவதால் விலை மேலும் உயரக்கூடும். இதனால் வாகன ஓட்டிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.</p><p>மத்திய அரசு உலக சந்தை நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 27 ஜூலை 2026: கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-27-july-garudalwar-thirumanjana-seva</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-27-july-garudalwar-thirumanjana-seva#comments</comments><guid isPermaLink="false">180e7d07-8c9e-46f0-8f2c-84d51642aab3</guid><pubDate>Mon, 27 Jul 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-07-27T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-13/06ol1jpz/garudalwar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Garudalwar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-13/06ol1jpz/garudalwar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம் </h2><p>பராபவ ஆண்டு ஆடி-11 (திங்கள்கிழமை) </p><p>பிறை : வளர்பிறை</p><p>திதி : திரயோதசி மாலை 5.47 வரை பிறகு சதுர்த்தசி</p><p>நட்சத்திரம் : மூலம் நண்பகல் 12.34 வரை பிறகு பூராடம்</p><p>யோகம் : அமிர்த / சித்தயோகம்</p> <p>ராகு காலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை</p><p>எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை</p><p>சூலம் : கிழக்கு</p><p>நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை</p> <h2>திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு</h2><p>வாஸ்து நாள் (காலை 7.44க்கு மேல் 8.20க்குள் வாஸ்து செய்ய நன்று. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் ரதோற்சவம். சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் உற்சவாரம்பம், அன்ன வாகனத்தில் பவனி. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் காலை அலங்கார திருமஞ்சன சேவை. கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதர் காலை பால்  அபிஷேகம். </p> <p>திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மஹாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுர சுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ அராளகேசி அம்பாள் சமேத ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் மூலவருக்கு அலங்கார திருமஞ்சன சேவை.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம்-ஆர்வம்</p><p>ரிஷபம்-முயற்சி</p><p>மிதுனம்-பெருமை</p><p>கடகம்-இன்பம்</p><p>சிம்மம்-உற்சாகம்</p><p>கன்னி-உதவி</p> <p>துலாம்-யோகம்</p><p>விருச்சிகம்-சாதனை</p><p>தனுசு-ஆக்கம்</p><p>மகரம்-பரிசு</p><p>கும்பம்-நன்மை</p><p>மீனம்-உண்மை</p>]]></content:encoded></item><item><title>எனக்காக எல்லா தியாகமும் செய்த உங்கள் ஆசையை  நிறைவேற்ற முடியவில்லை.. &quot;நீட்&quot; அழுத்தத்தால் மாணவி தற்கொலை</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-aspirant-suicide-low-score-and-pressure-over-medical-dream-leads-to-tragic-death-in-maharashtra</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-aspirant-suicide-low-score-and-pressure-over-medical-dream-leads-to-tragic-death-in-maharashtra#comments</comments><guid isPermaLink="false">12f0b46a-f662-4591-88f5-05316921473f</guid><pubDate>Mon, 27 Jul 2026 00:49:39 +0000</pubDate><atom:updated>2026-07-27T00:49:39.433Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நீட் தேர்வு,Neet exam,மாணவி தற்கொலை,student suicide,நீட் வினாத்தாள் கசிவு,NEET Question Paper Leak</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/2pzgsgxi/tn-24.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மாணவி தற்கொலை]]></media:title><media:description type="html"><![CDATA[ மாணவி தற்கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/2pzgsgxi/tn-24.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் மன உளைச்சலுக்கு ஆளான மேலும் ஒரு மாணவி  </p><p>தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>தற்கொலை</h2><p>மகாராஷ்டிராவின் அகில்யாநகர் மாவட்டத்தில் உள்ள ஜலால்பூர் கிராமத்தை அங்கிதா சாங்லே என்ற அந்த மாணவி நேற்று முன் தினம்  மாலை சுமார் 4.30 மணியளவில் தனது அறையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.</p><p>நடந்து முடிந்த நீட் மறுதேர்வில் அங்கிதா 166 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தார். பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் கனவை நிறைவேற்ற முடியவில்லையே என்ற மன அழுத்தத்தில் அவர் இருந்து வந்ததாகக் குடும்பத்தினர் தெரிவித்தனர்.</p><p>சம்பவ இடத்தில் இருந்து மாணவியின் தற்கொலை கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். </p> <h2>தற்கொலை கடிதம் </h2><p>அதில் அவர் எழுதியிருப்பதாவது,</p><p>"நீங்கள் என் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தீர்கள், ஆனால் உங்களின் ஒரு ஆசையைக் கூட என்னால் நிறைவேற்ற முடியவில்லை.</p><p>அம்மா, ஒவ்வொரு கஷ்டத்திலும் ஒரு தோழியைப் போல எனக்கு ஆதரவாக இருந்தீர்கள். அண்ணா, நீங்களும் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தீர்கள். அம்மா, அப்பாவை விட நீங்கள் என் மீது அதிக அன்பு காட்டினீர்கள். என் தற்கொலைக்கு நீங்கள் யாரும் பொறுப்பல்ல.</p><p>நான் நீட் தேர்வுக்குப் படித்தபோதும் கூட எனக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்தீர்கள். ஆனால் நான் தோற்றுவிட்டேன்; உங்கள் ஆசைகளை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது.</p><p>அண்ணா, அம்மா மற்றும் அப்பாவை தயவுசெய்து நன்றாகப் பார்த்துக்கொள். அவர்களுக்கு எந்தக் குறையும் வராமல் பார்த்துக்கொள்." என எழுதியுள்ளார்.</p><p>இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>கல்வி அமைச்சர் ராஜினாமா</h2><p>மே 3 நடந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டு ஜூன் 21 அன்று மறுதேர்வு நடத்தப்பட்டு இந்த மாதம் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதனிடையே ஏற்பட்ட மன அழுத்தத்தில் நாடு முழுவதும் 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். </p><p>தேர்வு முறைகேடுகளை தடுக்கத் தவறிய நிர்வாக தோல்விக்கு பொறுப்பேற்குமாறு டெல்லியில் <a href="https://www.maalaimalar.com/news/national/third-round-talks-with-central-government-conclude">சிஜேபி </a>தலைமையில் இளைஞர்களின் ஒரு மாதத்திற்கும் மேலான போராட்டத்தை தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று முன் தினம் ராஜினாமா செய்தார். </p><h2>உதவி எண்கள்</h2><p>மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணங்கள் தோன்றினால், உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள்:</p><p>சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணிநேரம்)</p><p>மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணிநேரம்)</p><p>சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண் – 1800-599-0019</p>]]></content:encoded></item><item><title>10 ஆண்டுகள் சிறை, ரூ. 10 கோடி வரை அபராதம்... தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா மக்களவையில் இன்று தாக்கல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/government-to-introduce-exam-irregularities-bill-lok-sabha-today</link><comments>https://www.maalaimalar.com/news/national/government-to-introduce-exam-irregularities-bill-lok-sabha-today#comments</comments><guid isPermaLink="false">de3a8103-98c2-435f-b98b-ddc8d13d14ac</guid><pubDate>Mon, 27 Jul 2026 00:28:12 +0000</pubDate><atom:updated>2026-07-27T00:28:12.736Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>paper leak,neet protest,வினாத்தாள் கசிவு,நீட் போராட்டம்,public examinations bill,பொதுத் தேர்வுகள் மசோதா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/9xhwzmu5/parliment.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Parliment]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/9xhwzmu5/parliment.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வினாத்தாள் கசிவு உள்பட அரசுத் தேர்வு முறைகேடுகளுக்கு கடும் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் இன்று (ஜூலை 27) தாக்கல் செய்யப்பட உள்ளது.</p><p>டெல்லியில் சில தினங்களுக்கு முன் சி.ஜே.பி. (கரப்பான் பூச்சி ஜனதா கட்சி) போராட்டம் தீவிரமாக நடைபெற்றது. அப்போது, '<a href="https://www.maalaimalar.com/topic/paper-leaks">வினாத்தாள் கசிவு</a> வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்; இந்த முறைகேட்டுக்கு கடும் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத் திருத்த மசோதா கொண்டுவரப்படும்' என மாணவர்களை சமாதானப்படுத்தும் வகையிலான அறிவிப்புகளை <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">பிரதமர் மோடி</a> வெளியிட்டார்.</p><h2>சட்ட திருத்த மசோதா:</h2><p>அவரது இந்த உறுதிமொழியின்படி, அரசு தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்கும் வகையில், "தேர்வு முறைகேடுகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா-2026", மக்களவையில் இன்று (திங்கள்கிழமை) தாக்கல் செய்யப்பட உள்ளது. அறிமுகம் -பரிசீலனை-நிறைவேற்றம் ஆகிய அலுவல்களுக்காக மசோதா பட்டியலிடப்பட்டுள்ளது.</p><p>இந்த சட்ட திருத்தத்தின்படி, வினாத்தாள் கசிவு அல்லது தேர்வு முறைகேடுகளில் ஈடுபடும் தனிநபர்களுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். இதுதவிர முறைகேடு கும்பலால் திட்டமிட்டு அரங்கேற்றப்படும் குற்றங்களுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையுடன் ரூ.10 கோடி வரை அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.</p><p>வழக்கு விசாரணையை விரைந்து முடிப்பதற்காக விரைவு நீதிமன்றங்கள் அமைப்பது உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.</p><h2>சி.ஜே.பி. போராட்டம்:</h2><p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுக்க பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தொடர்ச்சியாக நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததை தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக செய்வதே போராட்டத்தின் முக்கிய கோரிக்கையாக இருந்தது.</p><p>இந்த போராட்டத்திற்கு நாடு முழுக்க ஒவ்வொரு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆதரவு தெரிவித்து கண்டன போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் காரணமாக நாடு முழுக்க பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. மேலும், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அமளிகளால் தினந்தோரும் ஒத்திவைக்கப்பட்டன.</p><p>நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், தர்மேந்திர பிரதான் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.</p>]]></content:encoded></item><item><title>பாகிஸ்தானில் இம்ரான் கான் கட்சியின் பேரணிக்கு அனுமதி மறுப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/world/paks-punjab-govt-denies-imran-khans-party-permission-to-hold-rally-on-august-5</link><comments>https://www.maalaimalar.com/news/world/paks-punjab-govt-denies-imran-khans-party-permission-to-hold-rally-on-august-5#comments</comments><guid isPermaLink="false">52e3a617-1865-4f91-be7b-0bae372376e4</guid><pubDate>Sun, 26 Jul 2026 23:53:38 +0000</pubDate><atom:updated>2026-07-26T23:53:38.007Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Imran Khan,Pakistan,இம்ரான் கான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/hthlj9u9/imran-khan.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Imran Khan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/hthlj9u9/imran-khan.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் <a href="https://www.maalaimalar.com/topic/imran-khan">இம்ரான் கான்</a> மூன்றாண்டுகளை நிறைவு செய்வதை முன்னிட்டு, லாகூரில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பேரணி நடத்த அவரது கட்சிக்கு பாகிஸ்தானின் பஞ்சாப் அரசு அனுமதி மறுத்துள்ளது. இந்த பேரணிக்கான அனுமதியை பெற நீதிமன்றத்தை நாடவுள்ளதாக <a href="https://www.maalaimalar.com/topic/pakistan">பாகிஸ்தான் </a>தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பி.டி.ஐ.) கட்சி அறிவித்தது. </p><p>"அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கு அனுமதி கோரி நாங்கள் விடுத்த கோரிக்கைக்கு லாகூர் துணை ஆணையர் எந்த பதிலும் அளிக்கவில்லை. இது எங்கள் கோரிக்கையை நிராகரிப்பதற்குச் சமம்," என்று பிடிஐ பொதுச் செயலாளர் சல்மான் அக்ரம் ராஜா செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.</p><h2>போராட்டம்:</h2><p>மேலும், 'ஜாயிண்ட் அவாமி ஆக்ஷன் கமிட்டி' விடுத்த போராட்ட அழைப்பை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) பகுதி மக்களுடன் ராஜா மற்றும் பிற கட்சி தலைவர்கள் தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இப்பகுதியில் சர்ச்சைக்குரிய 12 அகதிகள் இடங்கள் தொடர்பாக இந்த போராட்டம் நடைபெற்றது.</p><p>PoK-இன் சட்டமன்றம் என்று அழைக்கப்படும் அவையில் மொத்தம் 53 இடங்கள் உள்ளன; இதில் 45 இடங்களுக்கு நேரடி தேர்தல் நடைபெறுகிறது, அதேவேளையில் 8 இடங்கள் பெண்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் மதகுருமார்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.</p><p>இந்த 53 இடங்களில், 1947-க்குப் பிறகு PoK-இல் குடியேறிய அகதிகளுக்காக 12 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.</p><p>சட்டமன்றத்தின் 45 இடங்களுக்கான தேர்தல் திங்கட்கிழமை முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது.</p><h2>ஆகஸ்ட் பேரணி:</h2><p>இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டு மூன்றாண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, ஆகஸ்ட் 5-ஆம் தேதி அமைதியான பேரணி நடத்த அனுமதி கோரி லாகூர் துணை ஆணையரிடம் விண்ணப்பித்திருந்ததாக ராஜா மேலும் தெரிவித்தார்.</p><p>"அரசு எங்களுக்கு அனுமதி அளிக்கத் தயாராக இல்லாததால், நாங்கள் நீதிமன்றத்தை நாடி, ஆகஸ்ட் 5-ஆம் தேதி லாகூரில் பேரணியை நடத்துவோம்," என்று கூறிய அவர், கான் தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், வழக்கறிஞர்கள் மற்றும் குடும்பத்தினரைச் சந்திக்க அனுமதி மறுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.</p><p>ஆகஸ்ட் 5-ஆம் தேதி போராட்ட இயக்கம் தொடங்கப்பட்டு, கான் விடுவிக்கப்படும் வரை அது தொடரும் என்று அவரது கட்சி தெரிவித்தது.</p><h2>அனுமதி இல்லை:</h2><p>முன்னாள் கிரிக்கெட் வீரரும் அரசியல்வாதியுமான இவர், 'தோஷா கானா' (தேசியக் கருவூலம்) வழக்கில் ஊழல் குற்றச்சாட்டுகளில் இஸ்லாமாபாத் விசாரணை நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அதன் பிறகு விதிக்கப்பட்ட தண்டனைகள் மற்றும் நிலுவையில் உள்ள பல வழக்குகள் காரணமாக அவர் தொடர்ந்து சிறையில் உள்ளார்.</p><p>கான் தனது குடும்பத்தினரைச் சந்திக்க அனுமதிக்குமாறு அரசை வலியுறுத்துவதற்காக, ராவல்பிண்டியில் உள்ள சிறைக்கு வெளியே ஒவ்வொரு வாரமும் அவரது சகோதரிகள், வழக்கறிஞர்கள் மற்றும் சில கட்சித் தொண்டர்கள் கூடுகிறார்கள்.</p><p>கான் கட்சியின் தொண்டர்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொள்வதால், அந்த மாகாணத்தில் அக்கட்சி எந்தவொரு போராட்டத்தையும் நடத்த அனுமதிப்பதில்லை என்பதில் உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக பஞ்சாப் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>மோசமான வானிலை: லக்னோவில் அவசரமாக தரையிறங்கிய சைனா சதர்ன் ஏர்லைன்ஸ் விமானம்</title><link>https://www.maalaimalar.com/news/national/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D</link><comments>https://www.maalaimalar.com/news/national/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D#comments</comments><guid isPermaLink="false">102dff4f-2ebf-4b13-836d-51da4b24bee4</guid><pubDate>Sun, 26 Jul 2026 23:15:32 +0000</pubDate><atom:updated>2026-07-26T23:15:32.617Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விமானம்,Southern Airlines,Flight diverted,சதர்ன் ஏர்லைன்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/j8vjcqq8/c-s-a.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ China Southern airlines Flight]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/j8vjcqq8/c-s-a.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காத்மாண்டுவில் மோசமான வானிலை காரணமாக சைனா சதர்ன் ஏர்லைன்ஸ் விமானம் லக்னோவுக்குத் திருப்பி விடப்பட்டது</p><p>காத்மாண்டு விமான நிலையத்தில் நிலவிய மோசமான வானிலை காரணமாக, சைனா சதர்ன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) லக்னோவுக்குத் திருப்பி விடப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><h2>தரையிறக்கம்:</h2><p>"காத்மாண்டுவில் நிலவிய மோசமான வானிலை காரணமாக, இரவு 10.57 மணிக்கு சைனா சதர்ன் ஏர்லைன்ஸ் விமானம் CZ 3067 (ஏர்பஸ் A320neo) லக்னோவுக்குத் திருப்பி விடப்பட்டது. இந்த விமானம் இரவு 11.18 மணிக்கு லக்னோ விமான நிலையத்தில் தரையிறங்கியது" என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.</p><p>சீனாவின் குவாங்சூவில் இருந்து புறப்பட்ட இந்த விமானம், நேபாள தலைநகரில் தரையிறங்கத் திட்டமிடப்பட்டிருந்தது என்று அவர்கள் கூறினர். இவ்விமானத்தில் 159 பயணிகள் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><h2>விமானம் மாயம்:</h2><p>முன்னதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கராச்சிக்கு சென்று கொண்டிருந்த, பாகிஸ்தானிய சரக்கு விமானம் காணாமல் போன சம்பவம் அரங்கேறியது. இதனை பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் தெரிவித்து இருந்தது. காணாமல் போன விமானத்தில் ஐந்து பேர் இருந்தனர்.</p><p>காணாமல் போன விமானத்தைக் கண்டறிய பல்வேறு அமைப்புகள் மூலம் கடலில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக ஆணையம் கூறியது.</p><p>மேலும், இதுகுறித்த எக்ஸ் தள பதிவில், ஷார்ஜாவில் இருந்து கராச்சிக்கு சென்று கொண்டிருந்த K2 ஏர்வேஸ் நிறுவனத்தின் B737 சரக்கு விமானத்தில் செவ்வாய் கிழமை இரவு 9.18 மணிக்கு நேவிகேஷன் சிஸ்டமில் கோளாறு ஏற்பட்டதாகவும், கராச்சி பகுதி கட்டுப்பாட்டு மையம் (ACC) உடனடியாக அதற்கு வழிகாட்டியதாகவும் ஆணையம் தெரிவித்து இருந்தது.</p>]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் போட்டிகள்: குத்துச்சண்டையில் பாக். வீரரை பொளந்துகட்டிய இந்திய வீரர் ஜதுமணி சிங்</title><link>https://www.maalaimalar.com/sports/cwg-2026-jadumani-singh-defeats-pakistans-sumama-rehman</link><comments>https://www.maalaimalar.com/sports/cwg-2026-jadumani-singh-defeats-pakistans-sumama-rehman#comments</comments><guid isPermaLink="false">05111448-d8cb-4d63-9a7a-ef4585d0c8c6</guid><pubDate>Sun, 26 Jul 2026 21:21:35 +0000</pubDate><atom:updated>2026-07-26T21:21:35.837Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காமன்வெல்த் போட்டிகள்,CWG 2026,Jadumani Singh,ஜதுமணி சிங்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/x7r26at7/Jadumani-Singh.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜதுமணி சிங்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/x7r26at7/Jadumani-Singh.png?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் மாண்டெங்பாம் ஜதுமணி சிங், 2026 <a href="https://www.maalaimalar.com/topic/cwg-2026">காமன்வெல்த் விளையாட்டு</a> போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தார். </p><p>ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 16-ஆவது சுற்றுப் போட்டியில், பாகிஸ்தானின் சுமாமா ரஹ்மானை 5-0 என்ற புள்ளிக்கணக்கில் ஒருமனதான தீர்ப்பின் மூலம் ஆதிக்கம் செலுத்தி வீழ்த்தி, ஆடவர் 55 கிலோ குத்துச்சண்டை காலிறுதிக்கு முன்னேறினார். </p><p>ஜதுமணி மூன்று சுற்றுகளிலும் தனது எதிராளியை விட மிக சிறப்பாக செயல்பட்டு, ஐந்து நடுவர்களின் தீர்ப்பையும் பெற்று, புள்ளிகள் அடிப்படையில் ஒரு முழுமையான வெற்றியை பதிவு செய்தார். </p><p>இந்திய குத்துச்சண்டை வீரர், தனது கூர்மையான தாக்குதல், திறமையான அசைவுகள் மற்றும் கட்டுக்கோப்பான தற்காப்பு ஆகியவற்றின் மூலம் போட்டி முழுவதும் தனது கட்டுப்பாட்டை தக்கவைத்து, பாகிஸ்தான் வீரர் மீண்டு வருவதற்கு சிறிதளவும் இடமளிக்கவில்லை.</p><h2>தொடர் வெற்றி:</h2><p>அதிகாரப்பூர்வ மதிப்பெண் அட்டையின்படி, மூன்று நடுவர்கள் இந்த போட்டிக்கு 30-27 என ஜதுமணிக்கு ஆதரவாக மதிப்பெண் வழங்கியுள்ளனர், மீதமுள்ள இரண்டு நடுவர்கள் 29-28 எனத் தீர்ப்பளித்துள்ளனர். இது மூன்று சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் ஜதுமணியின் மேலாதிக்கத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது.</p><p>ஜதுமணியின் முதல் சுற்று ஆட்டமும் அதே அளவு சிறப்பானதாக அமைந்தது. 32 பேர் கொண்ட சுற்றில், அவர் ஸ்காட்லாந்தின் கல்லனை 5-0 என்ற மற்றொரு ஒருமனதான முடிவின் மூலம் தோற்கடித்து, கிளாஸ்கோவில் தொடர்ச்சியாக இரண்டாவது முழுமையான வெற்றியை பதிவு செய்தார்.</p><h2>நாக்-அவுட் சுற்று:</h2><p>இந்த சமீபத்திய வெற்றியின் மூலம், இந்திய குத்துச்சண்டை வீரர் காலிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். இப்போட்டி ஜூலை 28 அன்று இரவு 7:45 மணிக்கு (உள்ளூர் நேரம்) நடைபெற உள்ளது. அங்கு, அரையிறுதி போட்டியில் இடம் பிடிப்பதற்காக, அவர் ஜாம்பியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 16-ஆவது சுற்று மோதலின் வெற்றியாளரை எதிர்கொள்வார்.</p><p>இதுவரை தான் பங்கேற்ற இரண்டு போட்டிகளிலும் நிதானமாகவும் நம்பிக்கையுடனும் காணப்பட்ட ஜதுமணி, குத்துச்சண்டை போட்டி நாக்-அவுட் சுற்றுகளை எட்டியுள்ள நிலையில், ஆடவர் 55 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் நம்பிக்கைக்குரிய பதக்க போட்டியாளர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார்.</p>]]></content:encoded></item></channel></rss>