<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 13 Aug 2026 02:17:25 +0000</lastBuildDate><item><title>ஆளே மாறிட்டீங்க.. திருமண விழாவில் மோடியுடன் கார்கே கலகல - வீடியோ உண்மையா?</title><link>https://www.maalaimalar.com/news/national/old-modi-congress-leaders-wedding-reception-clip-not-linked-to-revati-sule-event-fact-check-confirms</link><comments>https://www.maalaimalar.com/news/national/old-modi-congress-leaders-wedding-reception-clip-not-linked-to-revati-sule-event-fact-check-confirms#comments</comments><guid isPermaLink="false">c05de73d-186a-46a2-aad2-5c46b9d3abab</guid><pubDate>Thu, 13 Aug 2026 02:04:31 +0000</pubDate><atom:updated>2026-08-13T02:04:31.329Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,வைரல் வீடியோ,கார்கே,Kharge,viral video,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/uyi3zsw8/tn-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ வீடியோ ]]></media:title><media:description type="html"><![CDATA[ வீடியோ ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/uyi3zsw8/tn-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேசியவாத காங்கிரஸ் பிரிவு தலைவர் சரத்சந்திர பவார் மகளும் எம்.பியுமான சுப்ரியா சுலேயின் மகள் ரேவதி சுலேயின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கடந்த ஆகஸ்ட் 10 அன்று டெல்லியில் நடைபெற்றது. </p><p>இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பலர் தனித்தனியே கலந்துகொண்டனர்.  </p><p>இந்த நிகழ்வின் பின்னணியில், பிரதமர் மோடி காங்கிரஸ் தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பிரியங்கா காந்தி, சோனியா காந்தி ஆகியோருடன் கலகலப்பாகப் பேசுவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. </p><p>இது ரேவதி சுலே திருமண வரவேற்பில் எடுக்கப்பட்ட வீடியோ எனக் கூறிப் பரப்பப்பட்டு வருகிறது.</p><p>ஜூலை 20, <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">சிஜேபி பேரணியில்</a> மாணவர்கள் மீது போலீஸ் அடக்குமுறை தொடர்பாக மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் நிலையில் இவ்வாறு கார்கேவும், மோடியும், பிரியங்காவும் சந்தித்து கொண்டது சங்கடமான ஒன்று என்று இணையத்தில் இந்த வீடியோவை பார்த்த பலரும் கருதினர். </p><p>ஆனால், இந்த வீடியோ பழையது என்பதும், தற்போதைய நிகழ்வோடு இதற்கு எவ்வித தொடர்பும் இல்லை என்பதும் உண்மை சரிபார்ப்பில் தெரியவந்துள்ளது. </p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">• PM Modi: “And Priyanka, how are you?”<br><br>• Priyanka Vadra: “I’m good, sir! How are you?”<br><br>• PM Modi: “I’m still the same.”<br><br>• Kharge: “Bhai Sahab, you’ve changed a little. Aap thoda sa badal gaye hain.”<br><br>• PM Modi: “Oh, really?” <br><br>A light-hearted exchange at Supriya Sule’s… <a href="https://t.co/mua0ThApQf">pic.twitter.com/mua0ThApQf</a></p>&mdash; Bhavesh Gujrati (@Bhaveshlivelife) <a href="https://x.com/Bhaveshlivelife/status/2087500055012089885?ref_src=twsrc%5Etfw">August 12, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h3>வீடியோ</h3><p>வைரலாகும் வீடியோவில் பிரதமர் மோடியை பார்த்து கார்கே, "நீங்கள் ஆள் கொஞ்சம் மாறிவிட்டீர்கள்" என கூற, அதற்கு மோடி "ஓ அப்படியா" என கூறுவது பதிவாகியுள்ளது. மேலும் பிரியங்காவுடன் பேசுவதும் இடம்பெற்றுள்ளது.</p><p>இந்த வீடியோ 'கவுண்டே சிங்' என்ற இன்ஸ்டாகிராம் பயனரால் கடந்த 2025 அன்று பதிவேற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.</p><p>கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகானின் மகன் திருமண விழாவின் போது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை என அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>அதே இன்ஸ்டாகிராம் பயனர், பிரதமர் மோடியின் பிறந்தநாளான செப்டம்பர் 17, 2025 அன்றும் இதே வீடியோவைப் பகிர்ந்து பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். எனவே, இந்த வீடியோ 2025ஆம் ஆண்டிலிருந்தே இணையத்தில் உள்ளது என்பது தெளிவாகிறது.</p> <h2>ஊர்ஜிதம்</h2><p>ஆகஸ்ட் 10 அன்று நடைபெற்ற ரேவதி சுலேயின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அணிந்திருந்த ஆடையின் நிறமும், வைரல் வீடியோவில் அவர் அணிந்திருக்கும் கோட்டின் நிறமும் வேறுபடுகின்றன.</p><p>எனவே பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருடன் உரையாடும் வீடியோ 2025ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பழைய வீடியோவா என்பதும் இது சுப்ரியா சுலேயின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டது அல்ல என்பதும் ஊர்ஜிதமாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 13.8.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு நட்பால் நன்மை கிட்டும்
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-13-august-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-13-august-2026#comments</comments><guid isPermaLink="false">1e9d85f4-7de6-482f-8a92-30ef2a80953d</guid><pubDate>Thu, 13 Aug 2026 01:48:58 +0000</pubDate><atom:updated>2026-08-13T01:48:58.570Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/03/10/27281868-rasipalan4.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/03/10/27281868-rasipalan4.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>ராசிபலன்(Rasipalan)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்தபடியே லாபம் கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் மறையும்.</p><h2>ரிஷபம்</h2><p>நட்பால் நன்மை கிட்டும் நாள். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.</p> <h2>மிதுனம்</h2><p>எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். வியாபாரப் போட்டிகள் அகலும். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்ப்பர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.</p><h2>கடகம்</h2><p>யோகமான நாள். தாமதப்பட்ட காரியங்கள் இன்று துரிதமாக நடைபெறும். தொழில் முன்னேற்றம் உண்டு. வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை.</p> <h2>சிம்மம்</h2><p>பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். தொழிலில் அதிக முதலீடுகள் செய்ய முன்வருவீர்கள். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் வந்து சேரும்.</p><h2>கன்னி</h2><p>தெய்வீக சிந்தனை அதிகரிக்கும் நாள். தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.</p> <h2>துலாம்</h2><p>துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். சொத்துகளிலிருந்து வில்லங்கங்கள் அகலும். தொழில் ரீதியாக வெளியூர் பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.</p><h2>விருச்சிகம்</h2><p>மகிழ்ச்சி கூடும் நாள். வரவு திருப்தி தரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பக்கத்து வீட்டாருடன் இருந்த பகை மாறும். உத்தியோகத்தில் கேட்ட சலுகை கிடைக்கும்.</p> <h2>தனுசு</h2><p>மனக்குழப்பம் ஏற்படும் நாள். திட்டமிட்ட காரியங்களை செய்ய இயலாது. உத்தியோகத்தில் பணத்தைக் கையாளும்பொழுது கவனம் தேவை.</p><h2>மகரம்</h2><p>விரயங்களைத் தவிர்க்க விழிப்புணர்ச்சி தேவை. உத்தியோகத்தில் உங்களிடம் கொடுத்த பொறுப்பை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம்.</p> <h2>கும்பம்</h2><p>நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். நினைத்த காரியம் நிறைவேறும். பிள்ளைகளுக்கு வேலை கிடைத்த தகவல் வரலாம்.</p><h2>மீனம்</h2><p>வரவு திருப்தி தரும் நாள். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம் 
</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/todays-petrol-and-diesel-price-status-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/todays-petrol-and-diesel-price-status-in-chennai#comments</comments><guid isPermaLink="false">9fa7bfe5-3868-4337-aeae-162f54299640</guid><pubDate>Thu, 13 Aug 2026 01:38:16 +0000</pubDate><atom:updated>2026-08-13T01:38:16.975Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,பெட்ரோல் டீசல் விலை,Petrol and diesel price</media:keywords><media:content height="576" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/pi5s1hs9/maalai-malar2026-08-07d9lkl9l7tn-31.avif" width="1024"><media:title type="html"><![CDATA[ பெட்ரோல் டீசல் விலை]]></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல் டீசல் விலை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/pi5s1hs9/maalai-malar2026-08-07d9lkl9l7tn-31.avif?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/iran-missile-threat-trump-secretly-escapes-air-force-one">ஈரான் போரினால்</a> மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p><h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.</p> <h2>இன்றைய பெட்ரோல், டீசல் விலை</h2><p>அந்த வகையில் இன்றைய (13.08.2026 - வியாழக்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><h2>கச்சா எண்ணெய்</h2><p>இன்று சர்வதேச சந்தையில் பிரனட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 88.09 டாலர் என விற்பனை ஆகி வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 13 ஆகஸ்ட் 2026: குருபகவானுக்கு திருமஞ்சனம்
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-13-august-2026-guru-bhagavan-tirumanjanam</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-13-august-2026-guru-bhagavan-tirumanjanam#comments</comments><guid isPermaLink="false">b7720dce-e18a-4068-a6e4-520e0d8bc98e</guid><pubDate>Thu, 13 Aug 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-08-13T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/11/19/21853306-gurubhagavan3.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Guru bhagavan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/11/19/21853306-gurubhagavan3.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆடி-28 (வியாழக்கிழமை)</p><p>பிறை : வளர்பிறை</p><p>திதி :  பிரதமை இரவு 10.38 மணி வரை பிறகு துவிதியை</p><p>நட்சத்திரம் :  ஆயில்யம் காலை 8.06 வரை பிறகு மகம்</p> <p>யோகம் :  சித்த / அமிர்தயோகம்</p><p>ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை</p><p>எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை</p><p>சூலம் : தெற்கு</p><p>நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை</p> <h2>திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்</h2><p>சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். நாகபட்டினம் ஸ்ரீ நீலாயதாட்சியம்மன் கண்ணாடி பல்லக்கில் பவனி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் புஷ்பப் பல்லக்கு, ஸ்ரீ ரெங்கமன்னார் குதிரை வாகனத்தில் புறப்பாடு. இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் திருவீதியுலா. சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச்சாற்று வைபவம். </p> <p>திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஸ்ரீ உடையவர் கூட புறப்பாடு, திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - செலவு</p><p>ரிஷபம் - நன்மை</p><p>மிதுனம் - வரவு</p><p>கடகம் - நலம்</p><p>சிம்மம் - லாபம்</p><p>கன்னி - போட்டி</p> <p>துலாம் - விவேகம்</p><p>விருச்சிகம் - ஆசை</p><p>தனுசு - பொறுமை</p><p>மகரம் - மகிழ்ச்சி</p><p>கும்பம் - வெற்றி</p><p>மீனம் - இன்பம்</p> ]]></content:encoded></item><item><title>சிறுநீர் நிரம்பிய பாட்டில்கள்.. கன்வர் யாத்திரை நிறைவில் ஹரித்வாரில் 7 ஆயிரம் டன் குப்பைகள்</title><link>https://www.maalaimalar.com/news/national/haridwar-ganga-pollution-outrage-7000-tonnes-of-plastic-and-urine-bottle-waste-cleared-after-kanwar-yatra</link><comments>https://www.maalaimalar.com/news/national/haridwar-ganga-pollution-outrage-7000-tonnes-of-plastic-and-urine-bottle-waste-cleared-after-kanwar-yatra#comments</comments><guid isPermaLink="false">42e344e1-22c6-421a-a768-8e058da3dd43</guid><pubDate>Thu, 13 Aug 2026 01:01:45 +0000</pubDate><atom:updated>2026-08-13T01:01:45.027Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Haridwar,Garbage,Kanwar Yatra,கன்வர் யாத்திரை,ஹரித்வார்,குப்பைகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/b5tatigj/tn.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஹரித்வார்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஹரித்வார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/b5tatigj/tn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/kanwar-yatra">கன்வர் யாத்திரை</a> நிறைவடைந்ததை தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கங்கை நதிக் கரைகளில் இருந்து சுமார் 7,000 டன்னுக்கு மேற்பட்ட கழிவுகள் அகற்றுப்பட்டுள்ளன. </p><p>இந்த ஆண்டு கன்வர் யாத்திரையில் கங்கை தீர்த்தம் சேகரிப்பதற்காகச் சுமார் 5 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் ஹரித்வாருக்கு வருகை தந்தனர்.</p> <h2>குப்பைகள்</h2><p>யாத்திரை முடிந்த நிலையில், புனிதமாகக் கருதப்படும் 'ஹர் கி பௌரி' உட்பட 100க்கும் மேற்பட்ட கங்கைக் கரைகளில் டன்கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகள், ஆடைகள் சிதறிக் கிடக்கின்றன.</p><p>குறிப்பாக, கரைகளில் உள்ள உடை மாற்றும் அறைகளில் பக்தர்கள் சிறுநீர் நிரப்பப்பட்ட லட்சக்கணக்கான பிளாஸ்டிக் பாட்டில்களை அப்படியே போட்டுவிட்டுச் சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>பொதுக்கழிப்பிட வசதிகள் குறைவால் பக்தர்கள் பாட்டில்களில் இவ்வாறு பாட்டில்களில் சிறுநீர் கழிகின்றன .</p><p>புனித நதியை வழிபட வந்துவிட்டு, அதே நதியையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் இந்த அளவிற்கு மாசடையச் செய்து சென்ற பக்தர்களின் போக்கிற்குப் உள்ளூர் வாசிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/a8wsspys/tn-1.jpg" /></figure><h2>அகற்றம்</h2><p>மாஸ்க் அல்லது கையுறைகள் போன்ற எவ்வித அடிப்படைப் பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி, தூய்மைப் பணியாளர்கள் சிறுநீர் பாட்டில்கள் மற்றும் கழிவுகளை மண்வாரிகளைக் கொண்டு அகற்றும் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.</p><p>மாநகராட்சி ஆணையர் நந்தன் குமார் தலைமையிலான தூய்மைப் பணியாளர்கள் குழு இரவு முழுதும் பணியாற்றி, இதுவரை சுமார் 7,000 டன் கழிவுகளைக் குப்பை சேகரிப்பு மையங்களுக்கு அனுப்பியுள்ளது.</p> <h2>கங்கோத்ரி</h2><p>ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷ் மட்டுமல்லாது, கங்கை நதி உற்பத்தியாகும் இமயமலைப் பகுதியான கங்கோத்ரியிலும் இதே போன்ற சூழலே நிலவுகிறது.</p><p>பிளாஸ்டிக் தடை செய்யப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்ட கங்கோத்ரிக்கு இந்த ஆண்டு ஆன்மீக பயணமாக சுமார் 57,000 பக்தர்கள் வருகை தந்தனர்.</p><p>இமயமலை சூழலியல் மண்டலத்தில் பக்தர்கள் பெருமளவில் குப்பைகளைக் கொட்டிச் சென்றுள்ளதால் அரிய வகை உயிரினங்களுக்கும் வனப்பகுதிக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.</p><p>யாத்திரைக்குப் பிறகு வனத்துறை நடத்திய சிறப்புத் தூய்மை முகாமில் மட்டும் 57 மூட்டைகள் கொண்ட பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.</p> <h2>கன்வர் யாத்திரை</h2><p>கன்வர் யாத்திரை என்பது வட இந்தியாவில் ஆண்டுதோறும் சிராவண (ஆடி) மாதத்தில் சிவபெருமானை வேண்டி சிவபக்தர்களால் மேற்கொள்ளப்படும் ஒரு முக்கியமான பாதயாத்திரையாகும்.</p><p>இவர்கள் ஹரித்வார், கங்கோத்ரி போன்ற புனிதத் தலங்களுக்கு சென்று கங்கை நீரைச் சேகரித்து, அதனைத் தங்களது தோள்களில் கன்வர் என்ற காவடி போன்ற அமைப்பில் சுமந்து கொண்டு பல நூறு கிலோமீட்டர்கள் நடந்து வந்து உள்ளூர் சிவன் கோயில்களில் உள்ள சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வர்.</p> ]]></content:encoded></item><item><title>ட்ரூத் சோஷியல் API: அதிபர் டிரம்ப்-க்கு எதிராக வழக்குப் பதிவு</title><link>https://www.maalaimalar.com/news/world/donald-trump-sued-over-paid-access-to-truth-social-posts</link><comments>https://www.maalaimalar.com/news/world/donald-trump-sued-over-paid-access-to-truth-social-posts#comments</comments><guid isPermaLink="false">9c427ce3-c5ab-43e3-8108-a56e2f4e4d65</guid><pubDate>Thu, 13 Aug 2026 00:24:43 +0000</pubDate><atom:updated>2026-08-13T00:24:43.090Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>டொனால்டு டிரம்ப்,Donald Trump,Truth API,ட்ரூத்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-26/gewqg8fo/donald.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அதிபர் டிரம்ப்]]></media:title><media:description type="html"><![CDATA[ Donald Trump]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-26/gewqg8fo/donald.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world">அமெரிக்க</a> அதிபர் டொனால்டு டிரம்ப்-இன் 'ட்ரூத் சோஷியல்' தளத்தில், சந்தை நிலவரத்தை மாற்றக்கூடிய சில பதிவுகள் உட்பட, அவரது பதிவுகளுக்கான கட்டண அணுகலை விற்கும் ஒரு புதிய சேவையை முடக்கக் கோரி, இரண்டு ஊடக நிறுவனங்கள் புதன்கிழமை அன்று டொனால்ட் டிரம்ப் மீது வழக்கு தொடர்ந்தன.</p><p>மன்ஹாட்டன் கூட்டாட்சி நீதிமன்றத்தில் இன்டர்செப்ட் மற்றும் ஃப்ரீடம் ஆஃப் தி பிரஸ் ஃபவுண்டேஷன் தாக்கல் செய்துள்ள புகாரானது, <a href="https://www.maalaimalar.com/topic/donald-trump">டிரம்ப்</a> மீடியா &amp; டெக்னாலஜி குரூப் வழங்கும் 'ட்ரூத் ஏ.பி.ஐ.' என்ற சேவையை எதிர்த்து சவால் விடுத்தது. இந்த சேவை, அதிபர் டிரம்பின் சொந்த கணக்கு உட்பட, 10 முக்கிய பிரமுகர்களின் 'ட்ரூத் சோஷியல்' கணக்குகளுக்கான முன்கூட்டிய அணுகலுக்காக மாதத்திற்கு 100,000 டாலர் வரை கட்டணம் வசூலிக்கிறது.</p><h2>ட்ரூத் ஏ.பி.ஐ. தொடக்கம்:</h2><p>வால் ஸ்ட்ரீட், செல்வந்தர்கள் மற்றும் டிரம்ப் ஆகியோரை வளப்படுத்திய அதே வேளையில், நிதி சந்தைகளின் நேர்மையை அது சீர்குலைத்ததா என்பதை விசாரிக்க அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தை, மாசசூசெட்ஸின் ஜனநாயகக் கட்சி செனட்டர் எலிசபெத் வாரன் மற்றும் கலிபோர்னியாவின் ஆடம் ஷிஃப் ஆகியோர் வலியுறுத்திய நான்கு நாட்களுக்கு பிறகு, ஆகஸ்ட் 1-ஆம் தேதி அன்று ட்ரூத் ஏ.பி.ஐ. தொடங்கப்பட்டது.</p><p>பங்குகள், எண்ணெய் மற்றும் பிற சந்தைகளின் விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சுங்க வரிகள் மற்றும் மத்திய கிழக்கு மோதல்கள் போன்ற செய்திகளை வெளியிடுவதற்கு, டிரம்ப் நீண்ட காலமாக 'ட்ரூத் சோஷியல்' தளத்தை பயன்படுத்தி வருகிறார்.</p><p>புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, கட்டண சேவை இருக்கும் வரை, வெள்ளை மாளிகை தனது அதிகாரப்பூர்வ அரசாங்க அறிவிப்புகளை 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பிரத்தியேகமாக பதிவிடுவதை தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.</p><h2>ஆழமான ஊழல்:</h2><p>இதுகுறித்த புகாரில், சந்தாதாரர்கள் பதிவு செய்யும்போது அதிபதிர் நிதி ஆதாயம் அடைவதால், ட்ரூத் ஏ.பி.ஐ. சேவை "ஆழமான ஊழல் நிறைந்தது" என்று மனுதாரர்கள் குறிப்பிட்டனர்.</p><p>டிரம்பின் அறிவிப்புகளை அனைவரும் சமமாக அணுகும் உரிமை பெற்றிருப்பதாலும், டிரம்பின் பதிவுகளை தனியார் சந்தாதாரர்களுக்கு விற்று அவரை லாபம் ஈட்ட அனுமதிப்பதில் அரசாங்கத்திற்கு முறையான ஆர்வம் எதுவும் இல்லாததாலும், அந்த சேவை அமெரிக்க அரசியலமைப்பின் முதல் திருத்தத்தை மீறுவதாகவும் அவர்கள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>விபத்தில் சிக்கிய அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் - 2 பேர் பலி</title><link>https://www.maalaimalar.com/news/world/2-killed-after-us-army-apache-helicopter-crashes-in-texas</link><comments>https://www.maalaimalar.com/news/world/2-killed-after-us-army-apache-helicopter-crashes-in-texas#comments</comments><guid isPermaLink="false">1b5a1fd6-8efa-4def-a011-fdd6f46ba588</guid><pubDate>Wed, 12 Aug 2026 23:44:53 +0000</pubDate><atom:updated>2026-08-12T23:44:53.443Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>helicopter crash,ஹெலிகாப்டர் விபத்து,அமெரிக்க ராணுவம்,டெக்சாஸ்,texas,US army</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/jmv0yj16/Helicopter-Crash.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Helicopter Crash]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/jmv0yj16/Helicopter-Crash.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய டெக்சாஸ் வயல்வெளி ஒன்றில் புதன்கிழமையன்று ராணுவத்தின் அபாச்சி தாக்குதல் ரக <a href="https://www.maalaimalar.com/topic/Helicopter-Crash">ஹெலிகாப்டர்</a> ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த இருவரும் உயிரிழந்தனர். மேலும், இதனால் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக பல வீடுகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர் என ஷெரிப் அதிகாரி தெரிவித்தார்.</p><p>அருகில் உள்ள ஃபோர்ட் ஹூட் அதிகாரிகள், ஏ.எச். 64 அபாச்சி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக அறிவித்தனர். பெல் கவுண்டி ஷெரிஃப் அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் கிளிஃப் கோல்மன், அதில் இருந்த இருவரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினார்.</p><h2>விசாரணை தீவிரம்:</h2><p>விபத்துக்கான காரணம் உடனடியாக அறிவிக்கப்படவில்லை. ஃபோர்ட் ஹூட்டின் குற்றப் புலனாய்வுப் பிரிவு விபத்து விசாரணையை முன்னெடுத்து வருவதாக கோல்மன் தெரிவித்தார். ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானபோது எந்த வீடுகளின் மீதோ அல்லது பிற கட்டிடங்களின் மீதோ மோதவில்லை என்று கோல்மன் கூறினார்.</p><p>அது ஒரு பயங்கரமான விபத்து என்பதைப் பார்க்க முடிந்தது, என்று கோல்மன் கூறினார்.</p><p>"அந்த இடத்தைப் பாதுகாப்பதும், முதற்கட்ட மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதுமே எங்களின் உடனடி முன்னுரிமையாகும்," என்று தற்காலிகத் தளபதியான பிரிகேடியர் ஜெனரல் ஈதன் டைவன் கூறினார். "மேலதிக தகவல்களுக்காக நாங்கள் காத்திருக்கும் வேளையில், எங்கள் எண்ணங்கள் மீட்புக் குழுவினருடனும் அவர்களது குடும்பத்தினருடனும் உள்ளன."</p><h2>கட்டுக்கடங்காத தீ:</h2><p>விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் ஃபோர்ட் ஹுட் (Fort Hood) தளத்தை மையமாக கொண்டது என்று ராணுவம் தெரிவித்துள்ளது. அபாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்கள் இருவர் அமரக்கூடிய வகையை சேர்ந்தவை.</p><p>உள்ளூர் நேரப்படி மதியம் 1:30 மணிக்குப்பிறகு, ஹெலிகாப்டர் விபத்து குறித்த '911' அவசர அழைப்பு ஒன்று தங்களுக்கு வந்ததாக ஷெரிப் அலுவலகம் தெரிவித்தது. இந்த விபத்தினால் புல்வெளியில் தீப்பிடித்தது; ஷெரிப் அலுவலக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தடைந்தபோது அந்தத் தீ "கட்டுக்கடங்காத" நிலையில் இருந்தது.</p>]]></content:encoded></item><item><title>ரசிகர்கள் காட்டும் அன்பை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது - இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/yuvan-shankar-raja-said-he-is-happy-with-fans-love</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/yuvan-shankar-raja-said-he-is-happy-with-fans-love#comments</comments><guid isPermaLink="false">8141db5b-a590-4833-b03b-1bf2ea2b289b</guid><pubDate>Wed, 12 Aug 2026 23:14:17 +0000</pubDate><atom:updated>2026-08-12T23:14:17.328Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Yuvan Shankar Raja,யுவன் சங்கர் ராஜா,பியார் பிரேமா கல்யாணம்,pyar prema kalyanam</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/xvdy6rpo/Yuvan.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Yuvan ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/xvdy6rpo/Yuvan.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இயக்குநர் இளன் நடிப்பில் உருவாகி இருக்கும் "பியார் பிரேமா கல்யாணம்" <a href="https://www.maalaimalar.com/cinema">திரைப்படம்</a> ரிலீசுக்கு தயாராகி வருகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய இசையமைப்பாளர் <a href="https://www.maalaimalar.com/topic/yuvan-shankar-raja">யுவன் சங்கர் ராஜா</a>, தான் இந்தப் படத்தை பார்த்துவிட்டதாக தெரிவித்தார்.</p><p>தொடர்ந்து பேசிய அவர், ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் தொடங்கிய ஒரு விஷயம் இப்போதும் தொடர்கிறது. பொதுவாக ஒரு படத்தின் ஆரம்பத்தில் இரண்டு அல்லது மூன்று பாடல்களைத்தான் அறிவிப்பார்கள். ஆனால் படம் முடியும் நேரத்தில் 13, 14 டிராக்குகள் இருக்கும். ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் முதலிலேயே முழு டிராக் லிஸ்ட்டையும் அறிவித்தோம். அதே மாதிரியான விஷயத்தை இந்தப் படத்திலும் செய்திருக்கிறோம்.</p><p>இது இப்போது இளனுடன் இணைந்த ஒரு ட்ரெண்ட் மாதிரி ஆகிவிட்டது. பாடல்கள் தொடர்ந்து வெளியாகி, சமூக வலைதளங்களிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.</p><h2>மகிழ்ச்சி:</h2><p>இந்தப் பாடலுக்கு ரசிகர்களிடம் இருந்து வரும் அனைத்து ரியாக்ஷன்களும் பாசிட்டிவாக இருக்கின்றன. நான் கமெண்ட்ஸ் உள்ளிட்டவற்றை படித்துக்கொண்டிருக்கிறேன். ரசிகர்கள் காட்டும் அன்பை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.</p><p>மேலும், இந்தப் படத்தை நான் முழுமையாகப் பார்த்துவிட்டேன். படம் மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது. ஒரு நல்ல என்டர்டெயினராக இருக்கிறது. குடும்பத்துடன் சேர்ந்து பார்த்து ரசிக்கக்கூடிய படமாக இது இருக்கும். இந்தப் படம் ரசிகர்களின் பிளே லிஸ்ட்டில் தொடர்ந்து இடம்பெறும் படமாகவும், மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் படமாகவும் இருக்கும் என்று நினைக்கிறேன். படம் மிகவும் அருமையாக வந்திருக்கிறது,” என்று கூறினார்.</p><p>இளன் இயக்குநராக மட்டுமின்றி இப்படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமாகிறார். அவருடன் சான்வீ மேக்னா கதாநாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், செந்தில், மாறன், டீப்ஸ் சைரஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.</p><h2>நெட்ஃப்ளிக்ஸ் ரிலீஸ்:</h2><p>யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் காதல் மற்றும் குடும்ப உணர்வுகளுக்கு கூடுதல் வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.</p><p>காதல், குடும்பம், நகைச்சுவை மற்றும் திருமண வாழ்க்கையின் எதிர்பாராத திருப்பங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 21 முதல் உலகம் முழுவதும் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஹூதிக்களை குறி வைத்த அமெரிக்க தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் 153 பேர் உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/us-strikes-targeting-houthis-killed-153-civilians-in-yemen-last-year</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-strikes-targeting-houthis-killed-153-civilians-in-yemen-last-year#comments</comments><guid isPermaLink="false">bbace9ee-13bf-4c5e-a09a-1669baf82fe2</guid><pubDate>Wed, 12 Aug 2026 21:29:38 +0000</pubDate><atom:updated>2026-08-12T21:29:38.400Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Yemen,Houthi,us</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/4j3x1sqz/us-attacks-houthis.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ us attacks houthis]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/4j3x1sqz/us-attacks-houthis.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/donald-trump">டிரம்ப்</a> நிர்வாகத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் போது பொதுமக்கள் உயிரிழப்பது குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஆண்டு ஏமனில் ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து நடத்தப்பட்ட <a href="https://www.maalaimalar.com/news/world">அமெரிக்க</a> வான்வழித் தாக்குதல்களில் 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக பென்டகன் ஆய்வு தெரிவித்தது.</p><p>'அசோசியேட்டட் பிரஸ்' (AP) செய்தி நிறுவனத்தால் பெறப்பட்ட இந்த ரகசியமற்ற மதிப்பீட்டு அறிக்கை, பொதுமக்கள் உயிரிழப்புகள் குறித்த வருடாந்திர அறிக்கையின் ஒரு பகுதியாக அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட்டது. இது குறித்து 'என்பிசி நியூஸ்' (NBC News) ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது. </p><h2>வான்வழித் தாக்குதல்:</h2><p>ஹூதிகளுக்கு எதிரான அமெரிக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஏப்ரல் 2025-இல் நடத்தப்பட்ட மூன்று வான்வழித் தாக்குதல்கள் மீது இந்த பென்டகன் ஆய்வு கவனம் செலுத்தியது. சூயஸ் கால்வாய் மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிக்கும், இஸ்ரேலுக்கும் செல்லும் மிக முக்கியமான உலகளாவிய வர்த்தக பாதையான செங்கடலில் வணிக கப்பல்கள் மீது இந்த ஆயுதமேந்திய குழுவினர் தாக்குதல் நடத்தி வந்தனர்.</p><p>கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமனின் தலைநகரான சனா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள், அத்துடன் ராஸ் இசா துறைமுகம் ஆகியவற்றில் இருந்த எதிரி படைகளை அந்த தாக்குதல்கள் குறிவைத்ததாக அறிக்கை தெரிவித்தது. இதில் மொத்தம் 153 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 243 பேர் காயமடைந்தனர்.</p><h2>80 பேர் உயிரிழப்பு:</h2><p>துறைமுகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலே மிகவும் மோசமானதாக அமைந்தது; இதில் 80 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 171 பேர் காயமடைந்தனர். இத்தாக்குதல் வானத்தை நோக்கிப் பெரும் தீப்பிழம்புகளை எழுப்பியதுடன், எரிபொருள் டேங்கர் லாரிகளை எரிந்துபோன சிதைவுகளாக மாற்றியது. </p><p>தாக்குதலுக்குப் பிந்தைய காட்சிகளை ஹூதிகள் தங்கள் 'அல்-மசிரா' செயற்கைக்கோள் செய்தி சேனலில் ஒளிபரப்பினர்; அதில் துறைமுக பகுதியில் உடல்கள் சிதறிக் கிடப்பது காட்டப்பட்டது.</p><p>மத்திய கிழக்கில் இராணுவ நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் அமெரிக்க மத்திய கட்டளை மையம், அந்த நேரத்தில், "இந்தத் தாக்குதல் ஏமன் மக்களைப் பாதிக்கும் நோக்கில் நடத்தப்படவில்லை" என்று கூறியது.</p>]]></content:encoded></item><item><title>இந்தியா - வங்கதேச எல்லையில் பாக். உளவாளி அதிரடி கைது!</title><link>https://www.maalaimalar.com/news/national/spy-from-pak-arrested-near-bangladesh-border</link><comments>https://www.maalaimalar.com/news/national/spy-from-pak-arrested-near-bangladesh-border#comments</comments><guid isPermaLink="false">ceb6ea7e-be7a-4f75-9881-c4834626df7e</guid><pubDate>Wed, 12 Aug 2026 20:55:49 +0000</pubDate><atom:updated>2026-08-12T20:55:49.118Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Pakistan,spy,உளவாளி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/tqcdnj6u/ind-ban-border.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ind ban border]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/tqcdnj6u/ind-ban-border.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/india">இந்தியா</a> - வங்கதேசம் எல்லைப் பகுதிக்கு அருகே, பாகிஸ்தான் நாட்டவர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் உட்பட இரண்டு பேரை <a href="https://www.maalaimalar.com/news/national">மேற்கு வங்க</a> சிறப்பு அதிரடிப்படை கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>பாகிஸ்தானின் பைசலாபாத்தை சேர்ந்த ராணா ரவுஃப் என்ற வஹாப் ஆலம், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் ஹப்ரா பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.</p><h2>தேடுதல் வேட்டை:</h2><p>கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், பங்காவோன் அருகே உள்ள ஹப்ரா பகுதியில் சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் தேடுதல் வேட்டை நடத்தி ரவுஃபை கைது செய்ததாக அவர்கள் தெரிவித்தனர்.</p><p>ரவுஃபிற்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.-யுடன் தொடர்பு இருப்பதாக புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர் என்றும், இந்தியாவில் அவரது செயல்பாடுகள், தொடர்புகள் மற்றும் நடமாட்டங்களை விசாரித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>கொல்கத்தாவின் டாப்சியாவில் செவ்வாயன்று கைது செய்யப்பட்ட முகமது எஜாஸ் என அடையாளம் காணப்பட்ட மற்றொரு நபருக்கு, ரவுஃபுடன் நேரடித் தொடர்பு இருந்ததாகவும், அவர் இந்திய அடையாள அட்டைகளைப் பெற உதவியதாகவும் கூறப்படுகிறது என அவர்கள் தெரிவித்தனர், ஆனால் அவரது அடையாளத்தை வெளியிடவில்லை.</p><h2>ரகசிய தகவல்:</h2><p>"போங்கான் எல்லையை நோக்கி ரவுஃப் நகர்வது குறித்த குறிப்பிட்ட தகவல்கள் எங்களுக்குக் கிடைத்தன. அதனையடுத்து, ஹப்ரா பகுதியில் உள்ள ஜெஸ்ஸோர் சாலையில் அவரை கைது செய்தோம். ஐ.எஸ்.ஐ.-யுடன் அவருக்கு உள்ளதாகக் கூறப்படும் தொடர்புகள், அவர் இந்திய அடையாள ஆவணங்களை பயன்படுத்தியது, மற்றும் அவர் வங்கதேசத்திற்குள் நுழைய முயன்றாரா என்பது குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம்.</p><p>இந்தியாவுக்குள் நுழைவதற்கு முன்பு அவர் சிறிது காலம் நேபாளத்தில் தங்கியிருந்தார், பின்னர் மேற்கு வங்கத்தில் குடியேறினார். அவரிடமிருந்து பல இந்திய அடையாள அட்டைகள் மீட்கப்பட்டன. அவரிடமிருந்து கண்டெடுக்கப்பட்ட ஆதார் அட்டையில் டாப்சியா முகவரி இருந்தது," என்று சிறப்பு அதிரடிப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.</p><h2>சட்டவிரோத என்ட்ரி:</h2><p>புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, ரவுஃப் 2012-இல் நேபாளம் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தார்.</p><p>ரவுஃப், நாட்டில் உள்ள பல்வேறு ரயில்கள் மற்றும் ஆயுதப் படைகளின் நடமாட்டங்களைக் கண்காணித்து வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். முக்கியத்துவம் வாய்ந்த வில்லியம் கோட்டை உட்பட, கொல்கத்தாவில் உள்ள முக்கிய இடங்களை ரவுஃப் கண்காணித்து வந்ததை சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் கண்டறிந்தனர்.</p><p>ராணா தனது கைபேசியை அழித்துவிட்டதாகவும், அவர் கைது செய்யப்பட்டபோது அவரிடமிருந்து எந்த மின்னணு சாதனமும் மீட்கப்படவில்லை என்றும் அந்த அதிகாரி கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மேற்கு வங்கம் பெயரை &quot;பச்சிம் பங்கா&quot; என மாற்ற வேண்டும் - பா.ஜ.க. எம்.பி. வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/national/bjp-mp-wants-bengal-renamed-paschim-banga</link><comments>https://www.maalaimalar.com/news/national/bjp-mp-wants-bengal-renamed-paschim-banga#comments</comments><guid isPermaLink="false">d1bcc092-44b1-4784-8686-2dea327bb2dc</guid><pubDate>Wed, 12 Aug 2026 20:17:40 +0000</pubDate><atom:updated>2026-08-12T20:17:40.341Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,மேற்கு வங்கம்,bjp mp,west bengal,Paschim Banga,பச்சிம் பங்கா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/5ranzsrw/Samik-Bhattacharya.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Samik Bhattacharya]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/5ranzsrw/Samik-Bhattacharya.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national">மேற்கு வங்க</a> மாநிலத்தின் பெயர் அதன் வரலாறு மற்றும் 1947-இல் அது உருவாக்கப்பட்ட சூழ்நிலைகளுடன் தொடர்புடையது என்று கூறி, அம்மாநிலத்திற்கு 'பச்சிம் பங்கா' எனப் பெயர் மாற்றப்பட வேண்டும் என <a href="https://www.maalaimalar.com/topic/bjp">பா.ஜ.க.</a> மாநிலங்களவை உறுப்பினர் சமிக் பட்டாச்சார்யா கோரிக்கை விடுத்தார்.</p><p>கேரளாவை 'கேரளம்' என பெயர் மாற்றம் செய்ய முன்மொழியும் கேரள (பெயர் மாற்றம்) மசோதா, 2026 மீதான மாநிலங்களவை விவாதத்தில் பங்கேற்ற பட்டாச்சார்யா, தென்னிந்திய மாநில மக்கள் இந்த பெயர் மாற்றத்திற்காக பல தசாப்தங்களாக போராடி வருகின்றனர் என்று கூறி அதனை வரவேற்றார்.</p><h2>பிரதமருக்கு பாராட்டு:</h2><p>கேரள மக்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, இந்த நடவடிக்கைக்கு வழிவகுத்ததற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கும் பட்டாச்சார்யா பாராட்டு தெரிவித்தார்.</p><p>மேற்கு வங்கத்தில் இருந்த முந்தைய திரிணாமூல் காங்கிரஸ் அரசை குறிவைத்து பேசிய பட்டாச்சார்யா, மாநில சட்டமன்றத்தில் தங்கள் கட்சிக்கு பெரும்பான்மை இருந்த ஒரே காரணத்திற்காக, மாநிலத்திற்கு வங்காளம் என பெயர் மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார்.</p><p>"1947 ஜூன் 20 அன்று ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் தலைமையில் மேற்கு வங்காளம் உருவானது. வங்காள இந்துக்களின் நலனுக்காக ஒரு தனி மாநிலம் தேவை என்று காங்கிரஸ் கூட கூறியிருந்தது. மேற்கு வங்கம் என்பது வெறும் பெயர் மட்டுமல்ல; அதற்கு ஒரு வரலாறு உண்டு. அதன் பெயரை 'பச்சிம் பங்கா' என மாற்ற வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்," என்று பட்டாச்சார்யா கூறினார்.</p><h2>ஏற்றுக்கொள்ள முடியாதது:</h2><p>மேற்கு வங்கத்தின் பெயரை வங்காளம் என மாற்றுவது, வங்காள இந்துக்களுக்கு தனி மாநிலத்திற்காக போராடியவர்களை அவமதிப்பதாக அமையும் என்று அவர் கூறினார்.</p><p>சி.பி.ஐ. நிறுவன உறுப்பினர் முசாஃபர் அகமதுவின் சுயசரிதையைக் குறிப்பிட்டு, பங்கிம் சந்திர சட்டர்ஜியின் வந்தே மாதரம் மற்றும் ஆனந்தமடம் ஆகியவை வெறுப்பு நிறைந்தவை என்று அகமது விவரித்திருந்ததாக அவர் கூறினார்.</p><p>"வந்தே மாதரம் மற்றும் ஆனந்தமடம் வெறுப்பு நிறைந்தவை. என்னைப் போன்ற ஒரு முஸ்லிமுக்கு இது ஏற்றுக்கொள்ள முடியாதது," என்று பட்டாச்சார்யா கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>டி.என்.பி.எல்.: திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மதுரை அணி அபார வெற்றி</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-mp-beat-dd-by-21-runs</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-mp-beat-dd-by-21-runs#comments</comments><guid isPermaLink="false">6fb4cee5-4354-4f4e-963a-c4678ba49f58</guid><pubDate>Wed, 12 Aug 2026 19:06:58 +0000</pubDate><atom:updated>2026-08-12T19:06:58.325Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,திண்டுக்கல் டிராகன்ஸ்,Dindigul Dragons,madurai panthers,மதுரை பேந்தர்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/pv65osd2/Madurai-Panthers-Win.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Madurai Panthers]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/pv65osd2/Madurai-Panthers-Win.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>10-ஆவது <a href="https://www.maalaimalar.com/topic/tnpl">டி.என்.பி.எல்.</a> டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முறை தொடரின் அனைத்து போட்டிகளும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.</p><p>இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற 15-ஆவது லீக் ஆட்டத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/madurai-panthers">மதுரை பேந்தர்ஸ்</a> மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற  திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து, மதுரை பேந்தர்ஸ் முதலில் பேட்டிங் செய்தது.</p><h2>அதிரடி தொடக்கம்:</h2><p>மதுரை அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கிய ராம் அரவிந்த் 15 பந்துகளில் 40 ரன்களை (3 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) குவித்தார். இவருடன் களமிறங்கிய சத்தார்த் மகாதேவன் 17 பந்துகளில் 22 ரன்களை (3 பவுண்டரிகள், 1 சிக்சர்) எடுத்தார். என்.எஸ். சதுர்வேத் 31 பந்துகளில் 42 ரன்களை (3 பவுண்டரிகள், 1 சிக்சர்) அடித்தார்.</p><p>அடுத்து களமிறங்கியவர்களில் அத்திக் உர் ரஹ்மான் 19 பந்துகளில் 26 ரன்களை அடித்தார். பி சரவணன் 11 பந்துகளில் 12 ரன்கள் (1 சிக்சர்), குர்ஜப்நீத் சிங் 6 பந்துகளில் 13 ரன்கள் (1 பவுண்டரி, 1 சிக்சர்) அடித்தார். 18 ஓவர்கள் முடிவில் மதுரை பேந்தர்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை குவித்தது.</p><p>திண்டுக்கல் டிராகன்ஸ் சார்பில் சந்தீப் வாரியர் மற்றும் விஜு அருள் தலா 2 விக்கெட்டுகளையும், புவனேஸ்வரன் 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.</p><h2>டிராகன்ஸ் ஏமாற்றம்:</h2><p>சற்றே கடின இலக்கை துரத்திய திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு ஓரளவு நல்ல தொடக்கம் கிடைத்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய சிவம் சிங் 26 பந்துகளில் 40 ரன்களையும் (4 பவுண்டரிகள்,  2 சிக்சர்கள்), வி.கே. வினீத் 19 பந்துகளில் 28 ரன்களையும் (4 பவுண்டரிகள், 1 சிக்சர்) எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர்.</p><p>பின்னர் களமிறங்கியவர்களில் விமல் குமார் மற்றும் மோகித் மிட்டன் தலா 17 ரன்களும், ஹூனி சைனி 20 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். போட்டியின் முடிவில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 150 ரன்களை மட்டுமே எடுத்தது. </p><p>இதனால், மதுரை பேந்தர்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. திண்டுக்கல் டிராகன்ஸ் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ரோஹன் பத்ரா 2 விக்கெட்டுகளையும், குர்ஜப்நீத் சிங், சரவணன், கணேஷன் பெரியசாமி மற்றும் ராஜலிங்கம் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.</p>]]></content:encoded></item><item><title>அயர்லாந்துக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தான் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/afghanistan-beat-ireland-by-42-runs</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/afghanistan-beat-ireland-by-42-runs#comments</comments><guid isPermaLink="false">d34e1dbe-61b6-4f64-8f6a-0b43c6a7ea9e</guid><pubDate>Wed, 12 Aug 2026 18:44:10 +0000</pubDate><atom:updated>2026-08-12T18:44:10.644Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Ibrahim Zadran,IREvAFG,அயர்லாந்து ஆப்கானிஸ்தான் தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/5aclc02p/Afghanistan-Win-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Afghanistan Win]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/5aclc02p/Afghanistan-Win-1.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/sports/cricket">ஆப்கானிஸ்தான்</a> அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. தொடரின் முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. </p><p>2-ஆவது மற்றும் 3-ஆவது ஒருநாள் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 4-ஆவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற <a href="https://www.maalaimalar.com/topic/irevafg">அயர்லாந்து</a> அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.</p><h2>ஆப்கன் பேட்டிங்:</h2><p>ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கிய ரஹ்மனுல்லா குர்பாஸ் 12 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இவருடன் களமிறங்கிய இப்ராகிம் ஜட்ரன் அதிரடியாக ஆடி சதம் விளாசினார். </p><p>இவருடன் ஆடிய செடிகுல்லா சதம் விளாசினார். ஜட்ரன் 118 பந்துகளில் 107 ரன்கள் (11 பவுண்டரிகள், 1 சிக்சர்), செடிகுல்லா 120 பந்துகளில் 143 ரன்களை (17 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) விளாசினார்.</p><p>2-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த இந்த ஜோடி 231 ரன்கள் சேர்த்த நிலையில், இப்ராகிம் ஜட்ரன் 107 ரன்னில் அவுட்டானார். சிறப்பாக ஆடிய செடிகுல்லா அடல் 143 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்தடுத்து களமிறங்கியவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.</p><h2>அயர்லாந்து போராட்டம்:</h2><p>அயர்லாந்து சார்பில் பிரியன் மெக்டொனவ் 3 விக்கெட்டுகளையும், மார்க் அடைர், கேவின் ஹோய் தலா 2 விக்கெட்டுகளையும், லியாம் மெக்கார்த்தி 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 344 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து களமிறங்குகியது.</p><p>கடின இலக்கை துரத்திய அயர்லாந்து அணிக்கு தொடக்க வீரரான ஆன்டி பால்பிர்னி அபாரமாக ஆடினார். இவருடன் களமிறங்கிய கேப்டன் பால் ஸ்டிர்லிங் 27 ரன்களும், கேட் கார்மைக்கேல் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஹேரி டெக்டர் நிதானமாக ஆடி 34 ரன்களை எடுத்த போது தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.</p><p>ஆன்டி பால்பிர்னி சிறப்பாக ஆடி சதம் விளாசினார். இவர் 119 பந்துகளில் 109 ரன்கள் (9 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) எடுத்து தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். பின்னர் களமிறங்கிய குர்டிஸ் கேம்பர் அதிரடியாக ஆடி அரைசதம் கடந்தார். இவர் 46 பந்துகளில் 84 ரன்கள் (8 பவுண்டரிகள், 5 சிக்சர்கள்) எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார்.</p><h2>ஆப்கன் வெற்றி:</h2><p>அடுத்தடுத்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அயர்லாந்து அணி 48 ஓவர்கள் முடிவில் 301 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.</p><p>ஆப்கானிஸ்தான் சார்பில் சிறப்பாக பந்துவீசிய யாமின் அகமதுசாய் 4 விக்கெட்டுகளையும், ரஷித் கான் 3 விக்கெட்டுகளையும், அஸ்மதுல்லா ஓமர்சாய் 2 விக்கெட்டுகளையும், கசன்ஃபர் 1 விக்கெட் வீழ்த்தினர். </p><p>இந்த வெற்றி மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 3-0 கணக்கில் முன்னிலை பெற்று தொடரை கைப்பற்றியது.</p>]]></content:encoded></item><item><title>டி.என்.பி.எல்.: திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு 172 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மதுரை பேந்தர்ஸ்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-mp-set-172-runs-as-target-for-dd</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-mp-set-172-runs-as-target-for-dd#comments</comments><guid isPermaLink="false">7e907ce1-4eb4-4ca3-be19-8c70cbd46534</guid><pubDate>Wed, 12 Aug 2026 17:04:24 +0000</pubDate><atom:updated>2026-08-12T17:04:24.094Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,திண்டுக்கல் டிராகன்ஸ்,Dindigul Dragons,madurai panthers,மதுரை பேந்தர்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/hv7idtjc/MP.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MP Batting]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/hv7idtjc/MP.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>10-ஆவது <a href="https://www.maalaimalar.com/topic/tnpl">டி.என்.பி.எல்.</a> டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முறை தொடரின் அனைத்து போட்டிகளும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.</p><p>இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற 15-ஆவது லீக் ஆட்டத்தில் மதுரை பேந்தர்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற  திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து, <a href="https://www.maalaimalar.com/topic/madurai-panthers">மதுரை பேந்தர்ஸ்</a> முதலில் பேட்டிங் செய்தது.</p><h2>அதிரடி தொடக்கம்:</h2><p>மதுரை அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கிய ராம் அரவிந்த் 15 பந்துகளில் 40 ரன்களை (3 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) குவித்தார். இவருடன் களமிறங்கிய சத்தார்த் மகாதேவன் 17 பந்துகளில் 22 ரன்களை (3 பவுண்டரிகள், 1 சிக்சர்) எடுத்தார். என்.எஸ். சதுர்வேத் 31 பந்துகளில் 42 ரன்களை (3 பவுண்டரிகள், 1 சிக்சர்) அடித்தார்.</p><p>அடுத்து களமிறங்கியவர்களில் அத்திக் உர் ரஹ்மான் 19 பந்துகளில் 26 ரன்களை அடித்தார். பி சரவணன் 11 பந்துகளில் 12 ரன்கள் (1 சிக்சர்), குர்ஜப்நீத் சிங் 6 பந்துகளில் 13 ரன்கள் (1 பவுண்டரி, 1 சிக்சர்) அடித்தார். 18 ஓவர்கள் முடிவில் மதுரை பேந்தர்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை குவித்தது.</p><p>திண்டுக்கல் டிராகன்ஸ் சார்பில் சந்தீப் வாரியர் மற்றும் விஜு அருள் தலா 2 விக்கெட்டுகளையும், புவனேஸ்வரன் 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.</p>]]></content:encoded></item><item><title>மல்லையாவின் வழக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்: அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு </title><link>https://www.maalaimalar.com/news/national/court-orders-ed-to-clarify-mallya-case</link><comments>https://www.maalaimalar.com/news/national/court-orders-ed-to-clarify-mallya-case#comments</comments><guid isPermaLink="false">a275de66-4b2b-45a7-8e32-398593875326</guid><pubDate>Wed, 12 Aug 2026 16:49:06 +0000</pubDate><atom:updated>2026-08-12T16:49:06.060Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய் மல்லையா,Vijay mallaya,kingfisher,கிங்ஃபிஷர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/g6wujden/Untitled-design-40.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமலாக்கத்துறைக்கு சமரச நிலை தெளிவுபடுத்த பம்பாய் உயர்நீதிமன்றம் உத்தரவு]]></media:title><media:description type="html"><![CDATA[ Vijay Mallya Case]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/g6wujden/Untitled-design-40.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தொழிலதிபர் விஜய் மல்லையாவிடம் இருந்து நிலுவைத் தொகையை வசூலிப்பது தொடர்பான நீண்டகாலப் பிரச்சினைக்கு, ஒரு முடிவுகட்டப்பட வேண்டும் என்று பம்பாய் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.</p><h3><strong>விஜய் மல்லையாவின் நீதிமன்ற வழக்கு</strong> </h3><p>ஜூலை 2015-ல், ஐடிபிஐ வங்கி தலைமையிலான வங்கிகளின் கூட்டமைப்பிடமிருந்து கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் பெற்ற கடன்களில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக, மத்திய புலனாய்வுப் பிரிவின் வங்கிப் பத்திரங்கள் மற்றும் மோசடி பிரிவு மல்லையா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.</p><p>அவர் மீது குற்றச் சதி, குற்றவியல் நம்பிக்கை மீறல் மற்றும் குற்றவியல் முறைகேடு ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.</p><p>கடன்களைத் திருப்பிச் செலுத்தத் தவறியது, மோசடி, பணமோசடி மற்றும் அந்தக் கடன்கள் தொடர்பான நிதி முறைகேடுகள் குறித்து மல்லையா மீது இந்தியாவில் பல சட்ட வழக்குகள் தொடரப்பட்டது. </p><p>இதையடுத்து விஜய் மல்லையா, 2016 மார்ச் மாதம் இந்தியாவை விட்டு வெளியேறி, அன்று முதல் இங்கிலாந்தில் வசித்து வருகிறார். குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்காக இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவதை அவர் எதிர்த்து வருகிறார்.</p><p>தலைமறைவான மல்லையாவின் கடன்களை மீட்பதற்காக அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை, எஸ்பிஐ தலைமையிலான கூட்டமைப்பு பயன்படுத்தி கொள்ள, தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று அமலாக்கத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது.</p><p>2018-ல் வெளிநாட்டு உரிமை மீறல் தடுப்புச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு, அச்சட்டத்தின் கீழ் மல்லையா மீது நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, அவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.</p><p>இங்கிலாந்து நீதிமன்றங்கள் அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த ஒப்புதல் அளித்திருந்த போதிலும், அவர் அரசியல் தஞ்சம் கோருவதற்கான ஒரு விண்ணப்பத்தை பயன்படுத்தி தொடர்ந்து இங்கிலாந்தில் வசித்து வருகிறார்.</p><p>கடந்த 2020-ஆம் ஆண்டு மல்லையாவின் செலுத்தப்படாத நிலுவைத் தொகையை வசூலிப்பதற்காக, அமலாக்க இயக்குநரகத்தால் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை பயன்படுத்திக்கொள்ள, பாரத ஸ்டேட் வங்கி (SBI) தலைமையிலான கடன் வழங்கும் வங்கிகளின் கூட்டமைப்பிற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.</p><p>இந்த பணமோசடி தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, மல்லையா வழக்கு தொடர்ந்து இருந்தார்.</p><h3><strong>மல்லையா தரப்பு வழக்கறிஞர்</strong></h3><p>இந்த வழக்கில் இன்று, மல்லையா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அமித் தேசாய், சமரசப் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்தபோது 2020-ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டதாகவும், அதில் குறிப்பிட்ட சொத்துக்களுக்கு பாதுகாப்பு கோரப்பட்டிருந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.</p><p>இருப்பினும், குறிப்பிடப்பட்ட பெரும்பாலான சொத்துக்கள் ஏற்கனவே முடக்கப்பட்டு, அவை தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டதால், அந்த மனு இனி செல்லுபடியாகாது என்றும் தேசாய் வாதிட்டார்.</p><p>மேலும் அவர், “பொதுத்துறை வங்கிகள் இந்த விஷயத்தை நிலுவையில் வைத்திருப்பது முறையானது கிடையாது. ஆரம்பத்தில் கோரப்பட்ட ரூ.6,203.35 கோடி நிலுவைத் தொகை மற்றும் வட்டிக்கு எதிராக, வங்கிகள் ஏற்கனவே மல்லையாவிடமிருந்து சுமார் ரூ.15,000 கோடியை வசூலித்துவிட்டது.</p><p>ரிசர்வ் வங்கியின் தணிக்கை அறிக்கை, இது ஒரு விமான நிறுவனத்தின் வணிகத் தோல்வி மட்டுமே என்று கூறுகிறது. வங்கிகள் ரூ. 15,000 கோடியை எடுத்துக்கொண்டன, இப்போது மன்னிப்பு கேட்கின்றன. இது போதாது,” என்று மல்லையாவின் வழக்கறிஞர் வாதாடினார்.</p><h3>நீதிமன்ற உத்தரவு</h3><p>இந்த நிலையில் வழக்கு நீதிபதி ஜாதவ் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “உண்மையில், இந்தப் பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.</p><p>சமரசப் பேச்சுவார்த்தை முடிவடைந்துவிட்டதா என்பதைத் தெளிவுபடுத்தும் பிரமாணப் பத்திரத்தைத் அமலாக்கத்துறை தாக்கல் செய்ய வேண்டும்.</p><p>அதேவேளையில், இது மல்லையா மீதான குற்றவியல் வழக்கைப் பாதிக்காமல், தர்க்கரீதியான முடிவுக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும்” என்றும் நீதிபதி கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>புதுச்சேரி காவல்துறையினர் குண்டர்கள் போல் நடந்து கொள்கிறார்கள் -  செளரவ் தாஸ் குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/national/puducheri-police-act-like-thugs-saurav-das-accusation</link><comments>https://www.maalaimalar.com/news/national/puducheri-police-act-like-thugs-saurav-das-accusation#comments</comments><guid isPermaLink="false">8c3fd852-e54a-44bb-9c34-a82b08c3a58a</guid><pubDate>Wed, 12 Aug 2026 16:47:38 +0000</pubDate><atom:updated>2026-08-12T16:47:38.797Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Cockroach Janata Party,abhijeet dipke,அபிஜீத் தீப்கே,காக்ரோச் ஜனதா கட்சி,Saurav Das,செளரவ் தாஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/v4d571ko/Untitled-design-41.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ புதுச்சேரி காவல்துறை குண்டர்கள் போல நடந்து கொள்கிறார்கள்.]]></media:title><media:description type="html"><![CDATA[ Saurav das - Abhijeet dhipke]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/v4d571ko/Untitled-design-41.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>புதுச்சேரி காவல்துறை தனது குடும்பத்தின் வீட்டுக்கு வந்து, குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தியதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் தெரிவித்தார்.</p><p>பாஜக அரசின் உத்தரவின் பேரில் இந்த தொந்தரவு மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.</p><h3><strong>செளரவ் தாஸ் பேட்டி</strong></h3><p>இதுகுறித்து தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், “இரண்டு மணி நேரத்திற்கு முன்பு, புதுச்சேரி காவல்துறையினர் என் குடும்ப வீட்டிற்கு வந்து, அவர்களிடம் பலவிதமான விசாரணைகளை மேற்கொண்டனர்.</p><p>இவ்வாறு தொந்தரவு செய்வதற்கு யார் உத்தரவிட்டது, என்ன நோக்கத்திற்காக இது நடத்தப்பட்டது. இது தான் சட்ட நடைமுறையா? </p><p>புதுச்சேரியில் உள்ள பாஜக அரசு ஏன் என் குடும்பத்தை அச்சுறுத்துகிறது? இது புதுச்சேரி அரசின் குணம் அல்ல. இது மத்திய அரசின் தூண்டுதலின் பேரில் செய்யப்படுகிறது.</p><p>என்னை மிரட்டி அமைதியாக்குவதே நோக்கம் என்றால், அது பலிக்காது. இது என்னை அச்சுறுத்தி பணிய வைக்காது. காவல்துறையினர் குண்டர்களைப் போல செயல்படாமல், சட்டத்தை நிலைநாட்டும் வகையில் செயல்பட வேண்டும்.</p><p>தலைமை நீதிபதியின் இரண்டு நாள் கூட்டத்திற்காக மகாராஷ்டிராவில் இருந்தபோது, ​​சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு, 15 முதல் 20 யூடியூபர்கள் மற்றும் ஊடக சேனல்கள் எனது தனியுரிமையை மீறி டெல்லியில் உள்ள எனது வீட்டிற்குள் நுழைந்தனர்.</p><p>அவர்கள் உள்ளிருந்து காட்சிகளைப் பதிவுசெய்து காண்பித்துக் கொண்டிருந்தனர். இது தனது குடும்பத்திற்கு ஒரு கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தலாக உள்ளது"என்று அவர் கூறினார்.</p><h3><strong>அபிஜீத் தீப்கே பேட்டி</strong></h3><p>முன்னதாக சிஜேபி நிறுவனர் அபிஜீத் திப்கே, ஜந்தர் மந்தரரின் அடுத்த கட்ட போராட்டம் விரைவில் தொடங்கும் என்று அறிவித்தார்.</p><p>கடந்த மாதம் டெல்லியின் ஜந்தர் மந்தரில் மாணவர்கள் தலைமையில் நடந்த போராட்டங்களைக் குறித்து கருத்து தெரிவித்த அவர், “ஜந்தர்-மந்தரில் அடுத்த அளவிலான போராட்டம் மிக விரைவில் தொடங்கவிருக்கிறது என்பதை நான் அவர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.</p><p>இன்று டெல்லியில் எங்கள் தன்னார்வலர்கள் கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டிருந்தோம். நாங்கள் ஒரு மண்டபத்தைத் தேடிக்கொண்டிருந்தோம், ஆனால் யாரும் எங்களுக்கு வாடகைக்கு இடம் தரவில்லை. மேல் இடத்திலிருந்து அழுத்தம் இருப்பதாக எல்லோரும் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.</p><p>இவை அனைத்தையும் பாஜக செய்து வருகிறது. அவர்களுடைய செயல்களும் வார்த்தைகளும், அவர்கள் நாட்டின் இளைஞர்களுக்கு பயப்படுகிறார்கள் என்பதை தெளிவாகக் காட்டுகின்றன.</p><p>இதுபோன்ற அற்பமான செயல்கள் எங்களைப் பயமுறுத்திவிடும் என்று அவர்கள் நினைத்தால், அவர்கள் மிகவும் தவறாக நினைக்கிறார்கள்.</p><p>ஆரம்பத்தில் எங்களுக்கு தேசிய கவனத்தை ஈர்த்த போராட்டங்களைத் தாண்டியும், தற்போது சிஜேபி தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறது.</p><p>கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதை மையமாகக் கொண்டு, ஆகஸ்ட் 15 அன்று தங்களின் 'பள்ளியைச் சீராக்குங்கள்' பிரச்சாரத்தை சிஜேபி அமைப்பு தொடங்கும்.</p><p>சுதந்திரம் அடைந்து 80 ஆண்டுகளுக்குப் பிறகும், கிராமப்புறக் குழந்தைகள் பள்ளிகளில் அடிப்படை வசதிகளுக்காகக் கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை,” என்று தீப்கே கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>முத்தையா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ‘இருளன்’!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/irulan-starring-arun-vijay-directed-by-muthaiah</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/irulan-starring-arun-vijay-directed-by-muthaiah#comments</comments><guid isPermaLink="false">652b3bdc-a2db-43a5-9098-91ecddd0a1a1</guid><pubDate>Wed, 12 Aug 2026 16:37:59 +0000</pubDate><atom:updated>2026-08-12T16:37:59.188Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Arun vijay,Muthaiah,முத்தையா,அருண் விஜய்,Irulan,இருளன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/8ym7hq8e/New-Project-2026-08-12T220451.813.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முத்தையா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ‘இருளன்’!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/8ym7hq8e/New-Project-2026-08-12T220451.813.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முத்தையா எழுத்து மற்றும் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் புதிய படத்திற்கு 'இருளன்' என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் அறிவிப்பு வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. </p><p>நேதாஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் சண்முகவேல் பாண்டியன் படத்தை தயாரிக்கிறார். ஜிப்ரான் படத்திற்கு இசையமைக்கிறார். </p><p>படத்தில் நடிகை மிர்ணா, சமுத்திரக்கனி, ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படம் குறித்த பிற அறிவிப்புகள் அடுத்தடுத்த வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Presenting the first look motion poster of  &#39;IRULAN&#39; for you&#39;ll!! <br><br> <a href="https://x.com/dir_muthaiya?ref_src=twsrc%5Etfw">@dir_muthaiya</a> <a href="https://x.com/s_v_pandian?ref_src=twsrc%5Etfw">@s_v_pandian</a> <a href="https://x.com/Nethajifilm1032?ref_src=twsrc%5Etfw">@nethajifilm1032</a> <a href="https://x.com/thondankani?ref_src=twsrc%5Etfw">@thondankani</a> <a href="https://x.com/mirnaaofficial?ref_src=twsrc%5Etfw">@mirnaaofficial</a> <a href="https://x.com/highonkokken?ref_src=twsrc%5Etfw">@highonkokken</a> <a href="https://x.com/GhibranVaibodha?ref_src=twsrc%5Etfw">@GhibranVaibodha</a> <a href="https://x.com/hashtag/Gopinath_DOP?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Gopinath_DOP</a> <a href="https://x.com/kalaivananoffl?ref_src=twsrc%5Etfw">@kalaivananoffl</a>  <a href="https://x.com/hashtag/Balachander_Art?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Balachander_Art</a> <a href="https://x.com/hashtag/SakthiSaravanan_Stunt?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#SakthiSaravanan_Stunt</a> <a href="https://x.com/Pavan_Reddot?ref_src=twsrc%5Etfw">@Pavan_Reddot</a> <a href="https://x.com/Udaykumar_Mix?ref_src=twsrc%5Etfw">@Udaykumar_mix</a>… <a href="https://t.co/vWaw14Mehi">pic.twitter.com/vWaw14Mehi</a></p>&mdash; ArunVijay (@arunvijayno1) <a href="https://x.com/arunvijayno1/status/2087528524357972364?ref_src=twsrc%5Etfw">August 12, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>வைபவ்வின் ‘மாறு வேஷம்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/release-date-announced-for-vaibhavs-maaru-vesham</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/release-date-announced-for-vaibhavs-maaru-vesham#comments</comments><guid isPermaLink="false">99aee25b-5ee6-4928-a6c3-e1449fc2cc31</guid><pubDate>Wed, 12 Aug 2026 16:18:30 +0000</pubDate><atom:updated>2026-08-12T16:18:30.869Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Vaibhav,வைபவ்,Maaruvesham,மாறுவேஷம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/fkuijukf/New-Project-2026-08-12T214145.165.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வைபவ்வின் ‘மாறு வேஷம்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/fkuijukf/New-Project-2026-08-12T214145.165.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகர் வைபவ்வின் ‘மாறு வேஷம்’ திரைப்படம் அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. </p><p>இயக்குநர் ஸ்ரீனி எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகி உள்ள மாறுவேஷம் திரைப்படத்தில் வைபவ், வியானா, ராம்கி, முனிஸ்காந்த், விவேக் பிரசன்னா, லிவிங்ஸ்டன், ஜார்ஜ் மரியம், இந்துமதி, மு. ராமசாமி, செல் முருகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். </p><p>படத்திற்கு ராஜ்குமார் அமல் இசையமைத்திருக்கிறார்.&nbsp; படத்தை ஒனிரோமான்சி பிக்சர்ஸ் மற்றும் மங்கி மேன் கம்பனி ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் விஜய் ஆனந்த் மற்றும் வைபவ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.</p><p>சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானநிலையில், ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>10 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-government-orders-the-transfer-of-10-ips-officers</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-government-orders-the-transfer-of-10-ips-officers#comments</comments><guid isPermaLink="false">46d5636d-973b-4adc-95cd-2de9a779ad14</guid><pubDate>Wed, 12 Aug 2026 15:52:44 +0000</pubDate><atom:updated>2026-08-12T15:52:44.932Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,Tamil Nadu government,IPS officers,ஐபிஎஸ் அதிகாரிகள்,பணியிட மாற்றம்,transfers</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/pzkntppc/New-Project-2026-08-12T212222.632.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 10 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/pzkntppc/New-Project-2026-08-12T212222.632.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் 10 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி.,</p><p>அபின் தினேஷ் மொடக்கிற்கு பதிலாக சிபிசிஐடி டிஜிபியாக பால நாகதேவி நியமனம் செய்யப்பட்டுள்ளார். </p><p>பால நாகதேவி வகித்த சைபர் கிரைம் ஏடிஜிபி பொறுப்பிற்கு அபின் தினேஷ் மொடக் நியமிக்கப்பட்டுள்ளார். பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபியாக வித்யா ஜெயந்த் குல்கர்னி நியமனம் செய்யப்பட்டுள்ளார். </p><p>சிஐடியின் க்யூ பிராஞ்ச் எஸ்.பி.யாக ராமமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை சிஐடி சிறப்புப் பிரிவு எஸ்பியாக அரவிந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அண்ணா நகர் காவல்நிலைய துணை ஆணையராக அர்பிதா ராஜ்புட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். </p><p>தமிழ்நாடு கமாண்டோ எஸ்.பி.யாக ஈஸ்வரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாகை கடலோர பாதுகாப்புப் பிரிவு எஸ்பியாக செந்தில் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>தீவிரவாத தடுப்புப் பிரிவு எஸ்பியாக சரவணகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையராக ரமேஷ் பாபு நியமனம் செய்யப்பட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>முதலிடம் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே - அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/top-priority-for-tamil-thai-vazhthu-tamil-nadu-government-issues-go</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/top-priority-for-tamil-thai-vazhthu-tamil-nadu-government-issues-go#comments</comments><guid isPermaLink="false">f77b2333-c827-4de8-b010-3053476f8ac2</guid><pubDate>Wed, 12 Aug 2026 15:26:21 +0000</pubDate><atom:updated>2026-08-12T15:26:21.384Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,Government of Tamil Nadu,தமிழ்த்தாய் வாழ்த்து,Tamil Thai Vazhthu</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/rz4nceh3/New-Project-2026-08-12T205554.181.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதலிடம் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே - அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/rz4nceh3/New-Project-2026-08-12T205554.181.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் அமைந்துள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்தை கட்டாயம் முதலில் பாடவேண்டும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. </p><p>நேற்று முன்தினம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேறிய நிலையில், இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. </p><p>தமிழ்மொழி மற்றும் பண்பாட்டின் அடையாளமாக விளங்கும் தமிழ்த்தாய் வாழ்த்தை முன்னிலைப்படுத்துவதில் அரசு எந்த சமரசமும் செய்யாது என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர் அடித்துக் கொலை: உண்மையை மூடி மறைக்கப் பார்க்கிறதா தவெக அரசு? கனிமொழி எம்.பி. கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/student-beaten-to-death-is-tvk-govt-trying-to-cover-up-asks-mp-kanimozhi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/student-beaten-to-death-is-tvk-govt-trying-to-cover-up-asks-mp-kanimozhi#comments</comments><guid isPermaLink="false">c4809aad-24d9-4b35-933a-b4cdbcea9e49</guid><pubDate>Wed, 12 Aug 2026 15:19:36 +0000</pubDate><atom:updated>2026-08-12T15:19:36.329Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,போதைப்பொருள்,Drugs,College student</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-14/k7fmgcjg/kanimozhi-mp.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கனிமொழி எம்.பி.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-14/k7fmgcjg/kanimozhi-mp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>தி.மு.க. எம்.பி. கனிமொழி எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-</h2><p>கோவையில் தனியார் கல்லூரியில் படித்து வந்த <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/was-student-amudhan-murdered-for-exposing-drug-sales-heated-debate-in-the-legislative-assembly-what-do-the-parents-say">முதலாம் ஆண்டு மாணவர்</a>, போதைப் பொருள் விற்பனை குறித்து தகவல் தெரிவித்ததற்காக போதை பழக்கத்தில் ஈடுபட்ட மாணவர்களால் அடித்து கொலை செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் நிலையில், அதை மாணவர்கள் இடையேயான கோஷ்டி மோதல் என்று திசை திருப்பும் வகையில் வழக்கை முடித்து வைக்கப்பார்க்கிறது தவெக அரசு.</p><p>கல்லூரி நிர்வாகமும் காவல்துறையும் போதைப் பொருள் விற்பனை குறித்து தகவல் அளித்த பின் பாதுகாக்கத் தவறியதால்தான், அம்மாணவர் கொலை செய்யப்பட்டதாக அவரது பெற்றோர் கூறும் நிலையில், பலியான அப்பாவி மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மூடி மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு?</p><p>இந்தக் கொலையைச் செய்தவர்கள் மட்டுமின்றி, பாதுகாப்பு வழங்கத் தவறிய காவல்துறையினரையும் விசாரணைக்கு உட்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>இவ்வாறு கனிமொழி தெரிவித்துள்ளார்.</p><h2>முன்னதாக,</h2><p>கள்ளக்குறிச்சி வள்ளலார் வீதியைச் சேர்ந்தவர் கென்னடி. இவரது மகன் அமுதன் (வயது 19). இவர் கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கியிருந்து இவர் கல்லூரிக்கு சென்று வந்தார்.</p><h2>அடித்துக்கொலை</h2><p>இந்த நிலையில் விடுதியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அமுதன் விடுதியில் இருந்து வெளியேறி ஒத்தக்கால் மண்டபத்தில் உள்ள தனது நண்பர்களின் அறையில் தங்கியிருந்துள்ளார். நேற்று முன்தினம் காலை அமுதன், அவரது நண்பரான குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீமன் (19) என்பவருடன் மலுமிச்சம்பட்டி பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது சில மாணவர்கள் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்துள்ளனர்.</p><p>அவர்கள் நடந்து சென்ற அமுதன் மற்றும் ஸ்ரீமன் ஆகியோரை தங்களுடன் அழைத்துச் சென்று இருக்கிறார்கள். பின்னர் எங்கள் அறைக்கு வந்து செல்போன் பறித்து சென்றது நீங்கள் தானே என கேட்டு அவர்கள் அமுதனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்த அமுதன், வேதனை தாங்க முடியாமல் தனது அறைக்கு சென்று ஓய்வெடுத்துள்ளார். மாலையில் கல்லூரி முடிந்து திரும்பிய நண்பர்கள், அமுதன் காயங்களுடன் அசைவற்று கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக அவரை மீட்டு பக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அமுதன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.</p><h2>5 மாணவர்கள் கைது</h2><p>இதுகுறித்து செட்டிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. விசாரணையில் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. சக மாணவர்கள் 5 பேர் அவரை அடித்ததில் அவர் இறந்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.</p><p>அவர்களில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா ஏ.மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆராமுதன் (வயது 20), சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கீழ்கரையைச் சேர்ந்த அரவிந்த் (21), திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தைச் சேர்ந்த சிவரோகித் (20), பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா சாத்தநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மணிபாலு (20) மற்றும் 17 வயது சிறுவன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.</p><p>அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். அமுதன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஒரு மாணவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடிவருகிறார்கள். இதற்கிடையே கொலை செய்யப்பட்ட அமுதன் உடல், கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.</p><h2>பெற்றோர்கள் குற்றச்சாட்டு</h2><p>ஆனால், அமுதனின் பெற்றோர், தனது மகன் சக மாணவர்கள் போதைப்பொருள் வைத்திருந்ததாக புகார் அளித்தார். இதனால் மாணவர்கள் கோபமடைந்து தனது மகனை கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளனர். கல்லூரியின் பெயரை காப்பாற்ற போலீசார் அவர்களுடன் சேர்ந்து இதை மாணவர்களுக்கு இடையிலான மோதல் என்று சொல்வதாக குற்றம்சாட்டினனர்.</p><h2>சட்டசபையில் பேசிய உதயநிதி ஸ்டாலின்</h2><p>அமுதன் கொலை தொடர்பாக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் திமுக சார்பில் கொடுக்கப்பட்டு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது தீர்மானம் துறைக்கு அனுப்பப்பட்டு முறையான விவரங்கள் வழங்கப்படும் என்றார். மேலும், கவன ஈர்ப்பு தீர்மானமாக எடுக்கப்படுவது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>சீனாவின் முன்னாள் பிரதமர் ஜூ ரோங்ஜி காலமானார்!</title><link>https://www.maalaimalar.com/news/world/former-chinese-premier-zhu-rongji-has-passed-away</link><comments>https://www.maalaimalar.com/news/world/former-chinese-premier-zhu-rongji-has-passed-away#comments</comments><guid isPermaLink="false">db8ec00d-468e-42c4-9a31-df3ee66db0f3</guid><pubDate>Wed, 12 Aug 2026 15:04:12 +0000</pubDate><atom:updated>2026-08-12T15:04:12.231Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>China,சீனா,Zhu Rongji,ஜூ ரோங்ஜி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/nzpaqglb/New-Project-2026-08-12T200057.681.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சீனாவின் முன்னாள் பிரதமர் ஜூ ரோங்ஜி காலமானார்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/nzpaqglb/New-Project-2026-08-12T200057.681.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சீனாவின் அசாதாரண பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்ட, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஜூ ரோங்ஜூ உடல்நலக்குறைவால் இன்று காலை 11 மணியளவில் உயிரிழந்தார். </p><p>ஜூவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு, தேசிய மக்கள் பேரவையின் நிலைக் குழு, அரச மன்றம் மற்றும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசியக் குழு ஆகியவை கூட்டாக வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில்.,</p><p>“ஜூ ஒரு சிறந்த கட்சி உறுப்பினர், காலத்தால் சோதிக்கப்பட்ட மற்றும் விசுவாசமான கம்யூனிஸ்ட் போராளி. ஒரு தலைசிறந்த பாட்டாளி வர்க்கப் புரட்சியாளர், ராஜதந்திரி, கட்சி மற்றும் நாட்டின் சிறந்த தலைவர் ஆவார்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p> ஜூ 1998-ல் சீனாவின் பிரதமரானார். இவரது மிகவும் பிரபலமான சீர்திருத்தங்களில், லாபமற்ற அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவதற்கான ஒரு பரந்த திட்டம், நகர்ப்புற வீட்டுவசதியைத் தனியார்மயமாக்குதல் மற்றும் சொந்த வீட்டு உரிமையை ஊக்குவித்தல் ஆகியவை அடங்கும்.</p>]]></content:encoded></item><item><title>விமான பயணியின் பையில் இருந்த குரங்கு மண்டை ஓடு: பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை</title><link>https://www.maalaimalar.com/news/national/monkey-skull-found-in-air-passengers-bag-security-officials-launch-probe</link><comments>https://www.maalaimalar.com/news/national/monkey-skull-found-in-air-passengers-bag-security-officials-launch-probe#comments</comments><guid isPermaLink="false">cb543b6c-1e55-4c8d-a45b-cb27740ca9d3</guid><pubDate>Wed, 12 Aug 2026 15:00:26 +0000</pubDate><atom:updated>2026-08-12T15:00:26.387Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>CISF,சிஐஎஸ்எப்,Delhi International Airport,monkey skull,டெல்லி சர்வதேச விமான நிலையம்,குரங்கு மண்டை ஓடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/wxei16pj/Untitled-design-39.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பயணியின் பையில் இருந்த குரங்கு மண்டை ஓடு பறிமுதல்]]></media:title><media:description type="html"><![CDATA[ Delhi Airport monkey skull]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/wxei16pj/Untitled-design-39.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளை சோதனை செய்த அதிகாரிகள், ஒரு பயணியின் பையில் குரங்கின் மண்டை ஓடு இருப்பதை கண்டறிந்தனர்.</p><h3><strong>டெல்லி சர்வதேச விமான நிலையம்</strong></h3><p>டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் மத்திய தொழில்துறை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் சந்தேகத்திற்கிடமான ஒரு பயணியை சோதனை செய்தனர்.</p><p>அந்த பயணி டெல்லியிலிருந்து ஐதராபாத் செல்லும் விமானத்தில் ஏறவிருந்தார். அவர் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு,  பாதுகாப்பு அதிகாரிகள் அவர் கொண்டு வந்த பையை சோதனை செய்தனர்.</p><p>அப்போது, ​​பயணியின் கைப்பையில் சந்தேகத்திற்கிடமான ஒரு மண்டை ஓடு ஒன்று இருந்ததை சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் கண்டறிந்தனர். பின்னர் அதனைத் தொடர்ந்து அவர் கொண்டு வந்த கைப்பையை முழுமையாக சோதனை செய்தனர்.</p><p>இந்த பாதுகாப்பு சோதனையின் போது மீட்கப்பட்ட மண்டை ஓடு ஒரு குரங்கினுடையது என்று அந்த பயணி தெரிவித்ததாக தொழில்துறை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><h3><strong>குரங்கு மண்டை ஓடு</strong></h3><p>இதையடுத்து அந்த பயணி இறுதியில் உள்ளூர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். மேலும் மீட்கப்பட்ட மண்டை ஓடு பரிசோதனைக்காகப் பாதுகாக்கப்பட்டுள்ளது.</p><p>இது வனவிலங்குகள் சம்பந்தப்பட்டுள்ளதால், 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் விதிகளின் கீழ் நடவடிக்கைகள் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>அந்த பயணிக்கு மண்டை ஓடு எங்கிருந்து கிடைத்தது என்பதையும், அதை டெல்லியிலிருந்து ஐதராபாதுக்கு கொண்டு சென்றதன் நோக்கம் என்ன என்பதையும் கண்டறியும் பணியில் காவல்துறையும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>பெண்களின் வாழ்க்கையில் இல்லறம் என்பது மன உளைச்சலாக உள்ளது: கிரண் பேடி</title><link>https://www.maalaimalar.com/news/national/household-life-for-women-means-unpaid-labour-kiran-bedi</link><comments>https://www.maalaimalar.com/news/national/household-life-for-women-means-unpaid-labour-kiran-bedi#comments</comments><guid isPermaLink="false">9fe59850-6e8a-4021-a6c3-a6ddf026158a</guid><pubDate>Wed, 12 Aug 2026 14:56:14 +0000</pubDate><atom:updated>2026-08-12T14:56:14.789Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Kiran Bedi,women life,பெண்கள் வாழ்க்கை,கிரண் பேடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/0txu7r6l/Untitled-design-38.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ திருமணத்தால் பெண்கள் வாழ்க்கையில் ஏற்படும் மனஅழுத்தம் குறித்து கிரண் பேடி கருத்து]]></media:title><media:description type="html"><![CDATA[ Women Empowerment - Kiran bedi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/0txu7r6l/Untitled-design-38.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் திருமணம் என்பது குடும்ப பெயரை மாற்றுவது அல்லது புதிய வீட்டிற்கு குடிபெயர்வதை விட, பெண்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான கிரண் பேடி தெரிவித்தார்.</p><p>திருமணத்திற்கு பிறகு இந்தியாவில் உள்ள பெண்கள் தங்கள் பெற்றொர் வீட்டை விட்டு வெளியேறும்போது, அவர்கள் எவற்றையெல்லாம் கடந்து செல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள் என்றும் அவர் கூறினார்.</p><h3><strong>முன்னாள் ஐ.ஏ.எஸ் கிரண் பேடி</strong></h3><p>முன்னாள் டென்னிஸ் வீராங்கனையான கிரண் பேடி, 1972-ல் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். </p><p>அவர் 2016 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் புதுச்சேரியின் 24-வது துணைநிலை ஆளுநராகப் பணியாற்றினார்.</p><p>இந்த நிலையில் இந்திய பெண்களின் திருமண வாழ்க்கை குறித்து ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியான கிரண் பேடி தனியார் நிகழ்ச்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், </p><p>“இந்திய பெண்களுக்கு திருமணம் என்பது ஒரு மன உளைச்சலாக உள்ளது. ஒரு பெண் தனக்கு நன்கு அறிமுகமான மனிதர்கள், அன்றாட பழக்கவழக்கங்கள் மற்றும் உறவுகளை கொண்ட தங்கள் வீட்டை பிரிந்து செல்லும் சூழல் ஏற்படுகின்றது.</p><p>அப்போது அவர்கள் மற்றொரு குடும்பத்தில் விரைவாக இணைந்து, அந்த குடும்பத்திற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்று பெண்கள் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.</p><h3><strong>பெண்களின் திருமண வாழ்க்கை</strong></h3><p>பெண்கள் தங்களின் திருமணத்திற்கு பிறகு, புதிய உறவுகளை ஆரம்பத்தில் இருந்து கட்டியெழுப்ப வேண்டிய சூழல் ஏற்படுகிறது.</p><p>தனது மாமியாரை அழைப்பது போன்ற ஒரு சிறிய விஷயம் கூட, பெண்களை உணர்ச்சி ரீதியில் மிகவும் பாதிக்கிறது.</p><p>ஒரு பெண் தன் கணவனின் குடும்பம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் அவர்களை தன் சொந்த குடும்பமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவள் மீது எதிர்ப்பார்ப்பு அதிகாக இருக்கிறது.</p><p>அதற்காக அந்த பெண் சில கஷ்டங்களையும் அனுபவிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறாள்.</p><p>பெண்களின் வாழ்க்கையில் இல்லறம் என்பது சம்பளமே இல்லாத வேலையை உள்ளடக்கியதாக உள்ளது.</p><p>ஒரு திருமணத்தின் போது ஊர்வலம் மிகுந்த ஆடம்பரத்துடனும் கோலாகலத்துடனும் மணமகள் அழகாக இருக்கிறாள். ஆனால் திருமணத்திற்கு பிறகு ஒரு பெண் தனது பாதுகாப்பான, அன்பான, ஆதரவான வீட்டை விட்டுப் பிரிந்து செல்லும்போது அது ஒரு மன உளைச்சலாக மாறுகிறது.</p><h3><strong>பெண்களின் இல்லற வாழ்க்கை</strong></h3><p>பல வீடுகளில் பெண்கள் உணவு சமைத்தல், பொருட்களை சுத்தம் செய்தல், குடும்பத்திற்கான பொருட்களை வாங்குதல், குழந்தைகளின் தேவைகள், குடும்ப நிகழ்வுகள் மற்றும் வீட்டை சீராக இயங்க வைக்கும் அன்றாட நிகழ்வுகளை கவனித்து கொள்பவர்களாக பார்க்கப்படுகிறார்கள்.</p><p>ஒரு பெண், திருமணத்திற்குப் பிறகும் தான் தொடர்ந்து வேலை செய்வேன் என்றும், வீட்டு வேலைக்கு ஒருவரை அமர்த்திக்கொள்வேன் என்றும், இருவரும் சேர்ந்து குடும்பத்தை நடத்த முடியும் என்றும் கூற வேண்டும். அப்போதுதான் அந்த பெண் தனது வேலையை விட வேண்டிய அவசியம் ஏற்படாது.</p><p>ஆண்கள் தங்கள் வேலையை விட வேண்டியதில்லை, ஆனால் பெண்கள் அவ்வாறு செய்ய வேண்டும் என்றும், பல நேரங்களில் அது அவர்களுக்கு நிர்பந்தமாக உள்ளது.</p><p>கணவர்கள் ஆதரவாக இல்லை என்று பெண்கள் உணர்ந்தால், திருமணத்திற்குப் பிறகு அவர்கள் தங்கள் பெற்றோருடன் வாழ்வதற்குத் தேவையான தைரியமும் பொருளாதாரச் சுதந்திரமும் அவர்களிடம் இருக்க வேண்டும்.</p><p>திருமணத்திற்குப் பிறகு பெற்றோரைப் பராமரிப்பதற்காக அவர்களுடன் தங்க விரும்பும் ஒரு பெண்ணை தாழ்வாகக் கருதக்கூடாது, மாறாக அது கொண்டாடப்பட வேண்டும்” என்றும் அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ஜிம்பாப்வே ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து: பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு</title><link>https://www.maalaimalar.com/news/world/at-least-44-die-as-ferry-sinks-in-zimbabwes-lake-kariba</link><comments>https://www.maalaimalar.com/news/world/at-least-44-die-as-ferry-sinks-in-zimbabwes-lake-kariba#comments</comments><guid isPermaLink="false">1ad79634-88ae-490f-a871-42882ee88c0d</guid><pubDate>Wed, 12 Aug 2026 14:51:13 +0000</pubDate><atom:updated>2026-08-12T14:51:13.603Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>zimbabwe,ஜிம்பாப்வே,படகு விபத்து,Boat Capsizes in Accident</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/pvnjatk9/boat.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ boat accident]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/pvnjatk9/boat.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜிம்பாப்வே நாட்டின் கரிபா ஏரியில் அதிக பயணிகளை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்ததில் பலி எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.</p><h2>கரிபா ஏரி</h2><p>தென் ஆப்பிரிக்காவில் உள்ள கரிபா ஏரி ஜிம்பாப்வே மற்றும் அதன் அண்டை நாடான ஜாம்பியா ஆகியவற்றுக்கு இடையேயான எல்லையின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது.</p><p>இந்த ஏரி 200 கி.மீ-க்கும் அதிகமான நீளமும், சில இடங்களில் 40 கி.மீ. வரை அகலமும் கொண்டதாக உள்ளது.</p><p>ஜிம்பாப்வே மற்றும் ஜாம்பியா ஆகிய நாடுகள் இந்த ஏரியைப் பகிர்ந்து கொள்கின்றன. அவற்றுக்கு இடையேயான அதிகாரப்பூர்வ எல்லை ஏரியின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது.</p><p>கரிபா ஏரியில் அதிக பயணிகளை ஏற்றிச்சென்ற படகு இன்று கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது. இச்சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.</p><p>இந்த விபத்தில் 27 பேர் மாயமாகினர் எனவும், ஏரியில் இருந்து 77 பேர் மீட்கப்பட்டு அங்குள்ள ஒரு தீவுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்தது. விசாரணையில் அந்தப் படகு 90 பேர் பயணிக்கும் திறன் கொண்டது என கூறப்படுகிறது.</p><h2>மீட்புப் பணிகள்</h2><p>மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது என ஜிம்பாப்வே காவல்துறை தெரிவித்திருந்தது.</p><p>இந்நிலையில், கரிபா ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.</p><h2>தேசிய பேரிடர்</h2><p>படகு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த ஜிம்பாப்வே அதிபர் எமர்சன் நகாவா, இந்தப் படகு விபத்தை தேசிய பேரிடர் என அறிவித்துள்ளார். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர். </p> ]]></content:encoded></item><item><title>ஜட்ரன், அடல் அசத்தல் சதம்: 4வது ஒருநாள் போட்டியில் 343 ரன்களைக் குவித்த ஆப்கானிஸ்தான்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/ireland-need-344-runs-to-win-against-afghanistan-4th-odi</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/ireland-need-344-runs-to-win-against-afghanistan-4th-odi#comments</comments><guid isPermaLink="false">3b24ef47-c072-4a14-a4a8-4c71b3db9b13</guid><pubDate>Wed, 12 Aug 2026 13:52:45 +0000</pubDate><atom:updated>2026-08-12T13:52:45.410Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Ibrahim Zadran,IREvAFG,அயர்லாந்து ஆப்கானிஸ்தான் தொடர்,sediqullah atal,இப்ராகிம் ஜட்ரன்,செடிகுல்லா அடல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/0wwnct36/afgan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ibrahim zadran, sediqullah Atal]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/0wwnct36/afgan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அயர்லாந்துக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 343 ரன்களைக் குவித்துள்ளது.</p><p>ஆப்கானிஸ்தான் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. 2வது மற்றும் 3வது ஒருநாள் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி வென்று 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.</p><p>இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற அயர்லாந்து பவுலிங் தேர்வு செய்தது.</p><p>அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 343 ரன்கள் குவித்தது. </p><h2>இப்ராகிம் ஜட்ரன், செடிகுல்லா சதம்</h2><p>தொடக்க ஆட்டக்காரர் இப்ராகிம் ஜட்ரன் மற்றும் செடிகுல்லா அடல் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினர்.</p><p>2வது விக்கெட்டுக்கு இணைந்த இந்த ஜோடி 231 ரன்கள் சேர்த்த நிலையில், இப்ராகிம் ஜட்ரன் 107 ரன்னில் அவுட்டானார். </p><p>சிறப்பாக ஆடிய செடிகுல்லா அடல் 143 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.</p><p>அயர்லாந்து சார்பில் பிரியன் மெக்டொனவ் 3 விக்கெட்டும், மார்க் அடைர், கேவின் ஹோய் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p>இதையடுத்து, 344 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து களமிறங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>பெரம்பூர் வெற்றியை எதிர்த்த வழக்கு - ஆக.25க்குள் முதலமைச்சர் விஜய் பதிலளிக்க உத்தரவு! </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/case-challenging-perambur-election-victory-chief-minister-vijay-ordered-to-respond-by-august-25</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/case-challenging-perambur-election-victory-chief-minister-vijay-ordered-to-respond-by-august-25#comments</comments><guid isPermaLink="false">410c162a-3f07-4045-9c0b-1b552b1f808f</guid><pubDate>Wed, 12 Aug 2026 13:43:08 +0000</pubDate><atom:updated>2026-08-12T13:43:08.051Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை உயர் நீதிமன்றம்,Madras High Court,தேர்தல் வழக்கு,Election case,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/zch9w1e7/New-Project-2026-08-12T191239.317.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெரம்பூர் வெற்றியை எதிர்த்த வழக்கு - ஆக.25க்குள் முதலமைச்சர் விஜய் பதிலளிக்க உத்தரவு! ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/zch9w1e7/New-Project-2026-08-12T191239.317.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெரம்பூர் தொகுதி வெற்றியை எதிர்த்த வழக்கில் ஆக.25ம் தேதிக்குள் பதிலளிக்க முதலமைச்சர் விஜய்க்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. </p><p>பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட விஜய் பிரமாணப் பத்திரத்தில் சில தகவல்களை மறைத்ததாகவும், இதனால் அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரி, அத்தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். </p><p>கடந்தமுறை இந்த வழக்கு விசாரணையின்போது, இதுதொடர்பாக பதிலளிக்க முதலமைச்சர் விஜய்க்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. </p><p>அப்போது விஜய் தரப்பில் வழக்கறிஞர்கள் ஜி. மசிலாமணி மற்றும் ஸ்ரீநாத் ஸ்ரீதேவன் ஆகியோர் ஆஜராகி, விஜய் தனக்கு எதிரான தேர்தல் வழக்குகளைத் தள்ளுபடி செய்யக் கோரி மனுக்களைத் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.</p><p>மேலும் அந்த மனுக்களைத் தாக்கல் செய்ய நான்கு வார கால அவகாசம் கோரி, இந்த வழக்கு விசாரணையும் ஒத்திவைக்கக் கோரினர். </p><p>ஆனால் நான்குவார கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, அடுத்த விசாரணைக்கு மனுக்களை தாக்கல் செய்யக்கோரி, வழக்கு விசாரணையை ஆக.25ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.</p><p>தொடர்ந்து வில்லிவாக்கம் தொகுதியில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெற்றி பெற்றதை எதிர்த்துத் தொடரப்பட்ட தேர்தல் வழக்கையும் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அந்த வழக்கும் ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>டிஎன்பிஎல்: ஜெகதீசன், ஸ்வப்னில் சிங் அதிரடியில் சேலத்தை வீழ்த்தி 2வது வெற்றி பெற்றது சேப்பாக்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/chepauk-super-gillies-beat-salem-spartans-in-tnpl-2026</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/chepauk-super-gillies-beat-salem-spartans-in-tnpl-2026#comments</comments><guid isPermaLink="false">34ec620e-0c49-4e99-b1fd-9440c1d20852</guid><pubDate>Wed, 12 Aug 2026 13:21:15 +0000</pubDate><atom:updated>2026-08-12T13:21:15.358Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,Chepauk super gillies,Salem Spartans,சேலம் ஸ்பர்டன்ஸ்,சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/li7ai4bj/jegaa.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ jegadeesan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/li7ai4bj/jegaa.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>10-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் அடுத்த நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி  மைதானத்தில் நடந்து வருகிறது.</p><h2>சேப்பாக் சூப்பர் கில்லீஸ்</h2><p>இன்று நடைபெற்ற 14வது லீக் ஆட்டத்தில் ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், அபிஷேக் தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.</p><h2>கடைசி ஓவரில் 4 சிக்சர்</h2><p>அதன்படி, முதலில் களமிறங்கிய சேலம் ஸ்பர்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 182 ரன்களை எடுத்தது. கடைசி ஓவரில் 4 சிக்சர்களை விளாசிய ஹரிஷ்குமார் 57 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.</p><p>ஈஸ்வர் 39 ரன்னும், பூபதி குமார் 30 ரன்னும் எடுத்தனர்.</p><p>7வது விக்கெட்டுக்கு இணைந்த ஹரிஷ்குமார்-ஈஸ்வர் ஜோடி 68 ரன்கள் சேர்த்தது.</p><p>சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சார்பில் சிலம்பரசன், பிரேம்குமார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.</p><h2>ஜெகதீசன் 2வது அரை சதம்</h2><p>இதையடுத்து, 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் ஜெகதீசன் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார். நடப்பு தொடரில் 2வது அரை சதத்தை பதிவு செய்தார்.</p><p>ஜெகதீசன் 39 பந்தில் 6 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 78 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.</p><p>கடைசி கட்டத்தில் ஸ்வப்னில் சிங் சிக்சர்களை விளாசினார். அவர் 26 பந்தில் 5 சிக்சர் உள்பட 46 ரன்கள் குவித்து அவுட்டானார்.</p><p>இறுதியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 16.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பெறும் 2வது வெற்றி இதுவாகும்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்கள் போராட்டம் தொடர்பாக விவாதம்: அமித் ஷா வைத்த முன்மொழிவு- நிராகரித்த எதிர்க்கட்சிகள்</title><link>https://www.maalaimalar.com/news/national/govt-offers-to-hold-debate-on-student-protests-opposition-rejects-proposal</link><comments>https://www.maalaimalar.com/news/national/govt-offers-to-hold-debate-on-student-protests-opposition-rejects-proposal#comments</comments><guid isPermaLink="false">3346f6b5-8153-4160-a230-e2658ede5bd2</guid><pubDate>Wed, 12 Aug 2026 13:14:38 +0000</pubDate><atom:updated>2026-08-12T13:14:38.872Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,நாடாளுமன்றம்,Amit Shah,அமித் ஷா,parliament</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/yfm3mrg1/AmitshahRahulGandhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமித் ஷா- ராகுல் காந்தி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/yfm3mrg1/AmitshahRahulGandhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாணவர்கள் போராட்டத்தில் அடக்குமுறை மேற்கொண்டது தொடர்பான விவகாரத்திற்கு தான் தயார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வைத்த முன்மொழிவை எதிர்க்கட்சியினர் நிராகரித்தனர்.</p><p>நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்திற்கு மாணவர்கள், இளைஞர்கள் ஆதரவு தெரிவித்தனர். கடந்த 20-ந்தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது.</p><h2>மாணவர்கள் மீது தடியடி</h2><p>அப்போது கரப்பான்பூச்சி ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் வகையில் பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது மாணவர்கள் தடுப்புகளை தாண்டி நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்ல முயன்றனர். அப்போது போலீசாடி தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி அவர்களை கலைத்தனர். அப்போது வெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.</p><p>இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட அடக்குமுறை நடவடிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக அமித் ஷா நாடாளுமன்றத்திற்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.</p><h2>விவாத்திற்கு தயார் என அமித் ஷா அறிவிப்பு</h2><p>நாடாளுமன்ற விவகாரத்துறை, அமைச்சர் கிரண் ரிஜிஜு, "அமித் ஷா விவாகத்தில் கலந்து கொள்ள தயாராக உள்ளார். ஆனால் எதிர்க்கட்சிகள் அவையில் வெளிநடப்பு செய்யக்கூடாது" என்று வேண்டுகோள் விடுத்தார்.</p><p>இன்று காலை அவை தொடங்குவதற்கு முன்னதா அமித் ஷா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இன்று கூட, அவர்கள் (எதிர்க்கட்சிகள்) 2 மணிக்குள் சபாநாயரிடம் கடிதம் வழங்க வேண்டும். இன்று மதியம் 3 மணியில் இருந்து நாளை மதியம் 3 மணி வரைக்கும் அனைத்து வகையிலான விவாதத்திற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்றார்.</p><p>நாளையுடன் மழைக்கால கூட்டத் தொடர் முடிவடைய இருக்கிறது.</p><h2>ராகுல் காந்தி சொல்வது என்ன?</h2><p>அமித் ஷா கூறிய நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி அமித் ஷாவின் முன்மொழிவை நிராகரித்துள்ளார். பெல்லட் துப்பாக்கிகள் மூலம் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவு போட்டது யார் என்பதை இளைஞர்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள் என்றார்.</p><p>நாடாளுமன்றத்தில் அமித் ஷாவின் கற்பனையான கருத்துகளையும் அவர் வழங்கும் விரிவுரையையும் கேட்க எதிர்க்கட்சிகளுக்கு விருப்பமில்லை. மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த ஷா உத்தரவிட்டிருந்தால் அவர் குற்றவாளி. அவ்வாறு உத்தரவிடவில்லை என்றால் அவர் திறமையற்றவர். எந்தச் சூழலாக இருந்தாலும் அவர் பதவி விலக வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்தார்.</p><p>அதனைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா இது தொடர்பாக சபாநாயகருக்குக் கடிதம் எழுதினார். </p><p>"எதிர்க்கட்சியினருடன் கலந்தாலோசிக்குமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். அனைவரின் ஒப்புதலுடனும், விவாதத்திற்குத் தேவையான அளவு நேரத்தை ஒதுக்குங்கள். விவாதத்தின்போது நடைபெறும் முழு விவாதத்திலும் நான் பங்கேற்பேன். அத்துடன் எதிர்க்கட்சியினர் எழுப்பும் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிப்பேன்," என்று ஷா கூறினார்.</p><p>மேலும், ஜனநாயகத்தில் தீர்வு காண்பதற்கான ஒரே வழி பேச்சுவார்த்தைகளும் கலந்தாய்வுகளுமே. ஜனநாயகத்தின் மீதும் ஜனநாயக அமைப்புகளின் மீதும் தனக்கு முழு நம்பிக்கை உள்ளது. மாணவர் போராட்டங்கள் தொடர்பான முக்கிய விவகாரத்தில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களை வெளிப்படுத்த இந்த விவாதம் வழிவகுக்க வேண்டும் என்று அமித் ஷா தெரிவித்தார்.</p><h2>நாடாளுமன்றம் ஒத்திவைப்பு</h2><p>ஆனால் அவையில் அமளி தொடர்ந்தது. இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட பிறகு பிற்பகல் 3 மணிக்கு மக்களவை மீண்டும் கூடியபோது, ​​எதிர்க்கட்சியினரின் கூச்சல் மற்றும் போராட்டங்கள் மீண்டும் தீவிரமடைந்தன.</p><p>இந்த அமளிக்கு மத்தியிலும், மாணவர் போராட்டம் குறித்த விவாதத்தை உடனடியாகத் தொடங்க அரசு தயாராக இருப்பதாகவும், இது தொடர்பாக உள்துறை அமைச்சர் ஷா ஏற்கனவே சபாநாயகருக்குக் கடிதம் எழுதியிருப்பதாகவும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அவையில் அறிவித்தார்.</p><p>எதிர்க்கட்சியினரின் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்க உள்துறை அமைச்சர் தயாராக இருக்கும் நிலையில், அவர்கள் விவாதத்திலிருந்து விலகிச் செல்லக்கூடாது என்று அவர் கூறினார். </p><p>ஆனால் அமைச்சரின் வேண்டுகோள் எந்தப் பலனையும் அளிக்கவில்லை. </p><p>முழக்கங்கள் மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில், அவையை வழி நடத்திய ஜகதம்பிகா பால், விவாதத்திற்கான அரசின் முன்மொழிவை ஏற்றுக் கொள்ளுமாறு எதிர்க்கட்சியினரைத் தொடர்ந்து வலியுறுத்தினார். அவரது வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்ட நிலையில், அவை நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>‘சிக்மா’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-second-song-from-the-movie-sigma-has-been-released</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-second-song-from-the-movie-sigma-has-been-released#comments</comments><guid isPermaLink="false">805da616-e0aa-46c4-9bd9-adf0f6b524ae</guid><pubDate>Wed, 12 Aug 2026 13:03:36 +0000</pubDate><atom:updated>2026-08-12T13:03:36.650Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமன்,thaman,சந்தீப் கிஷன்,ஜேசன் சஞ்சய்,சிக்மா,sigma,Sundeep</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/ffrvda1v/New-Project-2026-08-12T182904.969.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘சிக்மா’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/ffrvda1v/New-Project-2026-08-12T182904.969.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகர் விஜய்யின் மகள் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் படம் சிக்மா. இப்படத்தின் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். </p><p>லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜி.கே.தமிழ்க்குமரன் தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடலான அய்யய்யோ அம்மாடி இன்று வெளியாகி உள்ளது.</p><p>முதல் பாடலான சிக்மா ஸ்டைல் வெளியாகி வரவேற்பை பெற்றநிலையில் இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது. விவேக் வரிகளில் உருவாகியுள்ள பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். </p><p>படம் முன்னதாக ஜூலை.31ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் பின் ஒத்திவைக்கப்பட்டது.</p><p>தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் படம் வெளியாக உள்ளது. புது வெளியீடு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/fhMHHRM6Vtc"></iframe></figure>]]></content:encoded></item><item><title>‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியானது!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/pyaar-prema-kaadhal-trailer-released</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/pyaar-prema-kaadhal-trailer-released#comments</comments><guid isPermaLink="false">ece7ff08-b4a0-424b-be7f-b52bdea92cb8</guid><pubDate>Wed, 12 Aug 2026 12:45:24 +0000</pubDate><atom:updated>2026-08-12T12:45:24.695Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Yuvan Shankar Raja,யுவன் சங்கர் ராஜா,இளன்,elan,Pyaar Prema Kalyanam,பியார் பிரேமா கல்யாணம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/9auklt4q/New-Project-2026-08-12T175720.034.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியானது!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/9auklt4q/New-Project-2026-08-12T175720.034.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பியார் பிரேமா காதல், ஸ்டார் உள்ளிட்டப் படங்களை இயக்கிய இயக்குதர் இளன் எழுத்து மற்றும் இயக்கத்தில், அவர் கதாநாயகனாக அறிமுகமாகும் புதியப் படம் ‘பியார் பிரேமா கல்யாணம்’. இப்படத்தில் இளனுக்கு ஜோடியாக சான்வே மேக்னா நடித்துள்ளார்.</p><p>மேலும் ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், செந்தில் மற்றும் மாறன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். </p><p>படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக ஆக.21ம் தேதி படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இன்று இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. </p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/n65bXlvrHlo"></iframe></figure>]]></content:encoded></item><item><title>போலீசில் சிக்காமல் திருடுவது எப்படி என கற்றுக்கொண்ட இன்ஃபார்மர்: நடிகை வீட்டில் கைவரிசை!</title><link>https://www.maalaimalar.com/news/national/informer-turned-thief-targets-actress-home</link><comments>https://www.maalaimalar.com/news/national/informer-turned-thief-targets-actress-home#comments</comments><guid isPermaLink="false">c5085bef-02ca-47c3-bb61-4b789971e04a</guid><pubDate>Wed, 12 Aug 2026 12:43:51 +0000</pubDate><atom:updated>2026-08-12T12:43:51.790Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>mumbai,மும்பை,police informer,Mumbai Burglary,ChandanMukhiya,BiharPolice Arrest,Santacruz Theft</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/z9i5s21f/Mumbai-Burglary" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mumbai Burglary ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/z9i5s21f/Mumbai-Burglary?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரபல பாலிவுட் நடிகையும், 2016 அழகிப் போட்டியின் ரன்னர் - அப்புமான லோபாமுத்ரா ராவத் என்பவரின் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88">மும்பை </a>வீட்டில் புகுந்து ரூ. 1 கோடி பாதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்த சந்தன் முகியா (26) என்ற வாலிபர் பீகாரில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>பிடிபட்ட நபர், முன்பு போலீசாருக்கு தூது கொடுக்கும் 'இன்ஃபார்மராக' இருந்து கொண்டே, இப்போது திருட்டு தொழிலில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது.</p><h2>போலீசிடமே 'டியூஷன்' படித்த திருடன்:</h2><p>கைது செய்யப்பட்டுள்ள சந்தன் முகியாவின் கடந்த காலப் பின்னணி போலீசாரையே தலைசுற்ற வைத்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டில் மும்பை காம்தேவி பகுதி போலீசார் ஒரு திருட்டு வழக்கை விசாரித்தபோது, அவர்களுக்கு இன்ஃபார்மராக இருந்து சந்தன் முகியா உதவினார். </p><p>இது போன்ற பல சமயங்களில் போலீசாருக்கு உதவி செய்ததால் சந்தனை போலீசார் கூடவே வைத்துக்கொண்டனர். </p><p>அப்போது போலீசாருக்கு நெருக்கமாக இருந்த சந்தன், போலீஸ் எப்படி ஆதாரம் திரட்டுகிறது? சிசிடிவி-யை எப்படி ஆய்வு செய்கிறது? குற்றவாளிகளை எப்படி டிராக் செய்கிறது? போன்ற அத்தனை ரகசியங்களையும் உன்னிப்பாகக் கவனித்து, அப்படியே தனக்கான திருட்டுப் பாடமாகக் கற்றுக்கொண்டுள்ளார்.</p><p>இதன் பிறகு, அதே 2021-ல் தனது முதலாளியான வைர வியாபாரி வீட்டில் ரூ.1.8 கோடியைச் சுருட்டினார். பின்னர் 2025-ல் மற்றொரு திருட்டு வழக்கில் கைதாகி, இந்த ஆண்டு ஜனவரியில் தான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.</p><h2>நடிகை வீட்டில் ஸ்கெட்ச் போட்டது எப்படி?</h2><p>ஜாமீனில் வந்த பிறகு மும்பை சென்ட்ரல் பகுதியில் தங்கியிருந்தபடி, நகரின் முக்கிய இடங்களை நோட்டமிட்டுள்ளார். </p><p>அப்போது சாந்தாகுரூஸ் பகுதியில் உள்ள நடிகையின் வீட்டின் அடுக்குமாடி குடியிருப்பில் பழுதுபார்க்கும் பணிகளுக்காக மூங்கில் சாரம் கட்டப்பட்டிருப்பதை கவனித்துள்ளார்.</p><p>கடந்த ஜூலை 14 அன்று அதிகாலை 4 முதல் 5 மணிக்குள், அந்த மூங்கில் சாரம் வழியாக ஏறி, 5-வது மாடியில் உள்ள நடிகையின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். </p><p>உள்ளே ஒரு மணி நேரம் நிதானமாகத் தேடி, ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம், வைரம், விலை உயர்ந்த வாட்ச்கள் மற்றும் ரொக்கப் பணத்தை அள்ளிக்கொண்டு தப்பியுள்ளார். சிசிடிவி கேமராவில் ஒரே ஒரு பிரேமில் மட்டுமே முகம் தெரியும்படி மிக சாமர்த்தியமாக தப்பியோடியுள்ளார்.</p><h2>நடிகைக்கு அதிர்ச்சி &amp; போலீஸ் ஆபரேஷன்:</h2><p>சொந்த ஊரான நாக்பூருக்குச் சென்றிருந்த நடிகை, ஜூலை 27 அன்று மும்பை திரும்பியபோது வீடு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ந்தார். கட்டிட ஊழியர் ஒருவர் பால்கனி வழியாக உள்ளே சென்று கதவைத் திறந்தபோது தான் கொள்ளை போனது தெரிந்தது.</p><p>மேற்கு மண்டல டிசிபி மோஹித் கார்க் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு, சிசிடிவி மற்றும் நெட்வொர்க் டிராக்கிங் மூலம் குற்றவாளி சந்தன் முகியா என அடையாளம் காணப்பட்டனர்.</p><p>அவர் கொள்ளையடித்த உடனே ரெயிலில் ஏறி இந்தியா-நேபாள எல்லைக்கு அருகில் உள்ள பீகார் தர்பங்கா கிராமத்திற்கு ஓடியது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு விரைந்த போலீசார் அவரை அதிரடியாகக் கைது செய்தனர்.</p><h2>திருட்டுப் பணத்தில் ரியல் எஸ்டேட் பிசினஸ்:</h2><p>கைது செய்யப்பட்ட சந்தன் முகியாவிடமிருந்து ரூ.76.4 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், கொள்ளையடித்த வெறும் 10 நாட்களுக்குள், சந்தன் மற்றும் அவரது மாமா லாலு முகியா ஆகியோர் திருட்டுப் பணத்தில் ரூ.22 லட்சத்தை முதலீடு செய்து, தங்கள் கிராமத்திற்கு அருகில் ஒரு ஹோட்டல் இருக்கும் இடம் உட்பட இரண்டு நிலங்களை வாங்கிய அதிர்ச்சித் தகவலும் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>போலீஸ் அதிகாரி கூறுகையில், "இவனது ஒட்டுமொத்த குடும்பமுமே வீட்டு வேலைக்குச் சேர்ந்து திருடுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளது. </p><p>பொதுமக்கள் தங்கள் வீடுகளில் ஆட்களை வேலைக்கு வைப்பதற்கு முன்பு அவர்களின் பின்னணியை முழுமையாகச் சரிபார்க்க வேண்டும்" என எச்சரித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>காவிரி நீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் நாளை மாநிலம் தழுவிய கடை அடைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/karnataka-bandh-tomorrow-over-cauvery-mekedatu-issues</link><comments>https://www.maalaimalar.com/news/national/karnataka-bandh-tomorrow-over-cauvery-mekedatu-issues#comments</comments><guid isPermaLink="false">57f2d07b-e196-4282-845d-b08085eaa182</guid><pubDate>Wed, 12 Aug 2026 12:42:44 +0000</pubDate><atom:updated>2026-08-12T12:42:44.750Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,bandh,Cauvery,முழு அடைப்பு போராட்டம்,காவேரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/l4abssef/Untitled-design-37.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ காவிரி, மேகதாது நீர்திட்டங்களை வலியுறுத்தி ஆகஸ்ட் 13 மாநிலம் தழுவிய போராட்டம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ Kaveri Protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/l4abssef/Untitled-design-37.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடகா மாநிலத்தில் காவிரி நதிநீர் தொடர்பாக, நாளை (ஆகஸ்ட் 13) மாநிலம் தழுவிய முழு கடை அடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h3><strong>கர்நாடகாவில் முழு அடைப்பு</strong></h3><p>தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மஹதாயி மற்றும் கலச பண்டுரி போன்ற நீண்ட காலமாக நிலுவையில் உள்ள திட்டங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கன்னட ஆதரவு அமைப்புகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன.</p><p>கர்நாடகா தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், தற்போது அந்த அறிவிப்பை திரும்ப பெற்றுள்ளது.  </p><p>இதன் காரணமாக கர்நாடகாவில் நாளை பள்ளிகள் தொடர்ந்து வழக்கம்போல இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>மருத்துவமனைகள் மற்றும் மருந்து கடைகள் போன்ற அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து செயல்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>கர்நாடகாவில் நாளை நடைபெற இருக்கும் முழு அடைப்பு காரணமாக, எல்லையோர தமிழ்நாடு மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.</p><h3><strong>காவிரி ஒழுங்கு நீர் மேலாண்மை</strong></h3><p>முன்னதாக தமிழ்நாட்டிற்கு ஒரு நாளைக்கு குறிப்பிட்ட டி.எம்.சி அளவில் தண்ணீர் திறந்து விடுமாறு காவிரி ஒழுங்கு நீர் மேலாண்மை உத்தரவிட்டிருந்தது.</p><p>ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராகவும், மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடகா அரசு தீவிரமாக செயல்பட வலியுறுத்தியும் நாளை போராட்டம் நடைபெற உள்ளது.</p><p>தமிழகத்திற்கு உபரி நீர் மட்டுமே திறக்கப்பட்டு வருவதால், முழு அடைப்பு போராட்டத்தில் அமைப்புகள் ஈடுபட வேண்டாம் என கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் தமிழக நலனுக்கு எதிரானது: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/resolution-against-delimitation-hurts-tamil-nadu-interest-nainar-nagendran</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/resolution-against-delimitation-hurts-tamil-nadu-interest-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">b6fb782a-d841-43f3-8eb8-6a507c756fbb</guid><pubDate>Wed, 12 Aug 2026 12:19:25 +0000</pubDate><atom:updated>2026-08-12T12:19:25.122Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,தொகுதி மறுவரையறை,Delimitation,தவெக அரசு,TVK Govt</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/8mpuo0rp/NainarNagendran001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/8mpuo0rp/NainarNagendran001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-</h2><p>தமிழக சட்டமன்றத்தில் இன்று தொகுதி மறுவரையறைக்கு (Delimitation) எதிராகத் தீர்மானம் கொண்டு வந்துள்ள </p><p>த.வெ.க. அரசின் செயல், ஜனநாயகத்தின் மாண்பினைச் சிதைக்கும் முயற்சியாகும்.</p><p>ஒரு ஓட்டுக்கு ஒரு மதிப்பு என்பதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை. மக்கள்தொகை அதிகரிப்பிற்கு ஏற்ப தொகுதிகள் பிரிக்கப்படும்போது தான், ஒவ்வொரு குடிமகனின் குரலும் நாடாளுமன்றத்தில் சமமான வலிமையுடன் ஒலிக்கும். இது வெறும் எல்லைகளைப் பிரிப்பது அல்ல. மக்களின் சரியான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கையாகும்.</p><h2>மத்திய அரசு உறுதி அளித்துள்ளது</h2><p>பிரதமர் தலைமையிலான மத்திய அரசு எந்த மாநிலத்திற்கும், குறிப்பாகத் தென் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே அனைத்து முடிவுகளும் எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ள நிலையில், த.வெ.க. அரசின் இந்த எதிர்ப்பு தமிழகத்தின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமானதல்ல. கண்மூடித்தனமாக இத்தகைய சீர்திருத்தங்களை எதிர்ப்பதைத் தவிர்த்து, முதல்வர் விஜய் அரசு தனது முடிவினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.</p><p>தமிழக சட்டசபையில் இன்று தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு தொடர்பாக தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு அளித்தன. ஆனால், தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாவுக்கு அதிமுக, பாமக, தேமுதிக, பாஜக எதிர்ப்பு தெரிவித்தனர்.</p><p>என்றபோதிலும் குரல் வாக்கெடுப்பால் இரு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.</p>]]></content:encoded></item><item><title>போதைப்பொருள் விற்பனையை காட்டிக் கொடுத்ததால் மாணவர் அமுதன் கொலை? சட்டப்பேரவையில் முற்றிய விவாதம்... பெற்றோர் கூறுவது என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/was-student-amudhan-murdered-for-exposing-drug-sales-heated-debate-in-the-legislative-assembly-what-do-the-parents-say</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/was-student-amudhan-murdered-for-exposing-drug-sales-heated-debate-in-the-legislative-assembly-what-do-the-parents-say#comments</comments><guid isPermaLink="false">6b3f7b52-cbe9-4836-90dd-cad4b0ce29c8</guid><pubDate>Wed, 12 Aug 2026 12:09:59 +0000</pubDate><atom:updated>2026-08-12T12:09:59.283Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,போதைப்பொருள்,Drugs,College student,கல்லூரி மாணவர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/j8ygezto/New-Project-2026-08-12T173914.064.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ போதைப்பொருள் விற்பனையை காட்டிக் கொடுத்ததால் மாணவர் அமுதன் கொலை? சட்டப்பேரவையில் முற்றிய விவாதம்... பெற்றோர் கூறுவது என்ன?]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/j8ygezto/New-Project-2026-08-12T173914.064.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கள்ளக்குறிச்சி வள்ளலார் வீதியைச் சேர்ந்தவர் கென்னடி. இவரது மகன் அமுதன் (வயது 19). இவர் கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். </p><p>இந்த நிலையில் விடுதியில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அமுதன் விடுதியில் இருந்து வெளியேறி ஒத்தக் கால்மண்டபத்தில் உள்ள தனது நண்பர்களின் அறையில் தங்கியிருந்துள்ளார். </p><p>இச்சூழலில் நேற்று முன்தினம் (ஆக.10) காலை அமுதன், அவரது நண்பரான குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீமன் (19) என்பவருடன் மலுமிச்சம்பட்டி பகுதியில் நடந்து சென்று உள்ளார். அப்போது சில மாணவர்கள் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்துள்ளனர். </p><p>அவர்கள் நடந்து சென்ற அமுதன் மற்றும் ஸ்ரீமன் ஆகியோரை தங்களுடன் அழைத்துச் சென்று இருக்கிறார்கள்.   பின்னர் எங்கள் அறைக்கு வந்து செல்போன் பறித்து சென்றது நீங்கள் தானே எனக்கூறி அமுதனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.   </p><p>இதில் காயம் அடைந்த அமுதன், வேதனை தாங்க முடியாமல் தனது அறைக்கு சென்று ஓய்வெடுத்துள்ளார். மாலையில் கல்லூரி முடிந்து திரும்பிய நண்பர்கள், அமுதன் காயங்களுடன் அசைவற்று கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். </p><p>உடனடியாக அவரை மீட்டு பக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அமுதன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். </p><h2>5 மாணவர்கள் கைது   </h2><p>இதுகுறித்து செட்டிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. விசாரணையில் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. </p><p>சக மாணவர்கள் 5 பேர் அவரை அடித்ததில் அவர் இறந்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் கைது செய்தனர். </p><p>கைதானவர்கள் திருவள்ளூர், கடலூர், சிவகங்கை, திருவாரூரை சேர்ந்தவர்களாவர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். </p><p>அமுதன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஒரு மாணவர் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.  இதற்கிடையே கொலை செய்யப்பட்ட அமுதன் உடல், கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. </p><p>கோவையில் கல்லூரி மாணவரை சக மாணவர்களே அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்த, இது செல்போன் விவகாரம் இல்லை, போதைப்பொருள் விவகாரம் என தகவல் வெளியாகி வருகிறது. </p><h2>போதைப்பொருள் விற்பனையை காட்டிக் கொடுத்ததால் கொலையா?</h2><p>மாணவர் அமுதன் போதைப்பொருள் விற்பனையை காட்டிக் கொடுத்ததால் இந்த கொலை நிகழ்ந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள அமுதனின் பெற்றோர்.,</p><p>“கல்லூரி விஷமருந்தி என் மகன் இறந்ததாக பொய் சொல்கின்றனர். இந்த கல்லூரிமீது நடவடிக்கை எடுக்கவேண்டும். என் பிள்ளைக்கு நடந்தாவறு எந்தப் பிள்ளைக்கும் நடக்கக்கூடாது. </p><p>என் மகனிடம் கஞ்சா விற்பவர்கள் தொடர்பாக போலீசார் கேட்டனர். நீங்கள் கூறும் தகவல் உங்களுக்கும், எங்களுக்கும் மட்டுமே தெரியும் எனக்கூறிவிட்டு, சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் போலீசார் தெரிவித்துவிட்டனர். </p><p>அவர்கள் இருபது பேர் சேர்ந்து இரும்பு ராடு மற்றும் கத்தியால் அடித்து துடிதுடிக்க என் பையனை கொன்றுவிட்டனர்.” என கண்ணீர்மல்க கதறுகின்றனர். </p><h2>சட்டப்பேரவையில் அமுதன் கொலை தொடர்பாக விவாதம் </h2><p>மாணவன் அமுதன் கொலை தொடர்பாக சட்டமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.,</p><p>“கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துவந்த அமுதன் எனும் மாணவர், அவருடன் படித்துவரும் 20 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். </p><p>இதற்கு அரசு முழு பொறுப்பேற்க வேண்டும். காரணம், வழக்கு விசாரணைக்காக மாணவர் அமுதனை கோவை செட்டிப்பாளையம் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் பற்றி அமுதனிடம் விசாரணை நடத்தி தகவல் பெற்றுள்ளனர். </p><p>இந்தத் தகவலை ரகசியமாக வைத்து போதைப் பொருட்களை பறிமுதல் செய்ய வேண்டிய காவல்துறை, போதைப் பொருள் விற்பனை செய்த நபர்களை அழைத்து, புகார் கொடுத்தவர் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளனர். </p><p>அந்த கோபத்தில்தான் மாணவர் அமுதனை அந்தக் கும்பல் அடித்துக் கொன்றுள்ளது. காவல்துறை ஏன் இவ்வளவு அலட்சியமாக நடந்துகொள்கிறது என அரசு விளக்கம் கொடுக்க வேண்டும். மாணவர் அமுதனின் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும்.” என தெரிவித்தார். </p><h2>அரசு விளக்கம்</h2><p>எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் இந்த குற்றச்சாட்டுக்கு சட்டப்பேரவையில் பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன் இது ஒரு கோஷ்டி மோதலால் வந்த விளைவு என்று தெரிவித்தார். </p><h2>காவல்துறை கூறுவது என்ன?</h2><p>மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி அளித்த விளக்கத்தின்படி, அமுதன் கல்லூரியில் தங்கியிருந்தபோது விடுதி சமையலாளரை தாக்கியதாகவும், அதனால் அவர் விடுதியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். </p><p>மேலும் சம்பவத்தன்று அதிகாலை விடுதிக்கு சென்ற அமுதன் மற்றும் அவரது நண்பர்கள் முகமூடி அணிந்து மற்றொரு மாணவர் அறைக்குள் புகுந்து செல்போன்களைப் பறித்ததாகவும், அப்போது அமுதன் மட்டும் முகமூடி அணியாததால் எதிர் தரப்பினர் அவரை அடையாளம் கண்டதாகவும்,</p><p>இந்த செல்போன் பறிப்பு சம்பவத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், எதிர் தரப்பு மாணவர்கள் அன்றே அமுதனை வழிமறித்து மைதானத்திற்கு அழைத்துச் சென்று தாக்கியுள்ளனர். இதில் ஏற்பட்ட பலத்த காயங்களால் அவர் உயிரிழந்தார். என காவல்துறை தெரிவித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு: பிரதமர் மோடிக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்</title><link>https://www.maalaimalar.com/news/national/caste-census-anbumani-ramadoss-letter-pm-modi</link><comments>https://www.maalaimalar.com/news/national/caste-census-anbumani-ramadoss-letter-pm-modi#comments</comments><guid isPermaLink="false">2fba0993-4f1e-41f1-b785-107446522b80</guid><pubDate>Wed, 12 Aug 2026 11:58:58 +0000</pubDate><atom:updated>2026-08-12T11:58:58.549Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,pm modi,பிரதமர் மோடி,சாதிவாரி கணக்கெடுப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/yp61saof/PMModiAnbumani0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர் மோடி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/yp61saof/PMModiAnbumani0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாட்டாளி மக்கள் கட்சி தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ், இந்திய பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>இந்தியாவில் முழுமையான சமூக நீதியை ஏற்படுத்தும் நோக்குடன், 2021-ஆம் ஆண்டில் நடத்தப்பட வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு, 2026-27ஆம் ஆண்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பாக நடத்தப்படும் என்று தங்களின் அரசு அறிவித்திருப்பதற்காக எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று 40 ஆண்டுகளுக்கும் மேலாக எழுப்பப்பட்டு வந்த கோரிக்கைகளை தாங்கள் நிறைவேற்றியிருக்கிறீர்கள். இதன் காரணமாக சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இது இந்தியாவில் சமூக நீதியை பாதுகாப்பதில் நீண்ட காலத்திற்கு ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கைக்காக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>அதேநேரத்தில், இந்தக் கணக்கெடுப்பை நடத்துவதில் கடைபிடிக்கப்படும் சில நடைமுறைகளால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுவிடக் கூடும் என்பதால், அது குறித்த எனது கவலைகளை தங்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல்கட்டமான வீட்டுப்பட்டியல் தயாரிப்பு பணிகள் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களைத் தவிர இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது.</p><h2>மக்கள் குறிப்பிடும் சாதியின் பெயரை அப்படியே பதிவு செய்யும் முறை</h2><p>அடுத்தக்கட்டமாக, மக்களை எண்ணும் பணிகள் மலைப்பிரதேசங்களில் உள்ள மாநிலங்களில் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதலும், மற்ற மாநிலங்களில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி முதலும் நடைபெறவுள்ளன. இந்த பணியின்போது, சாதி என்ற கேள்விக்கான பதிலை குறிப்பிடும் பகுதியை காலியாக விட்டு விடுவதென்றும், அந்த இடத்தில் மக்கள் குறிப்பிடும் சாதியின் பெயரை அப்படியே பதிவு செய்வதென்றும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ளும் இந்தியத் தலைமைப் பதிவாளர் முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில்  செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p>இந்த முறையில் மக்களின் சாதி விவரம் சேகரிக்கப்பட்டால், நிறைய சிக்கல்கள் ஏற்படும். நாடு முழுவதும் ஒவ்வொரு சாதியிலும் பல உட்பிரிவுகள் உள்ளன. பெரும்பான்மையான மக்கள் சாதியின் பெயரைக் கடந்து உள்பிரிவுகளால் தங்களை அழைத்துக் கொள்வார்கள். ஆனால், அந்த உட்பிரிவுகளின் பெயர்கள் அரசால் பயன்படுத்தப்படும் சாதிகளின் பட்டியலில் இடம் பெற்றிருக்காது. இத்தகைய சூழலில், மக்கள் தெரிவிக்கும் சாதியின் பெயரை அப்படியே நிரப்பி, அது சாதியின் பெயராக இல்லாமல், உட்பிரிவின் பெயராக இருந்தால், ஒரு அரசின் பட்டியலில் உள்ள சாதிகளின் எண்ணிக்கையை விட பல மடங்கு அதிக சாதிகள் இருப்பதாக கணக்கில் காட்டப்படும். இது சரி செய்ய முடியாத குழப்பத்தை உண்டாக்கி, இந்தக் கணக்கெடுப்பின் தரவுகளை பயன்படுத்த முடியாத நிலையை உருவாக்கிவிடும்.</p><h2>2011-ல் இது போன்ற நடைமுறைதான் இருந்தது</h2><p>2011-ஆம் ஆண்டில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சார்பில் சமூக, பொருளாதார, சாதிவாரி கணக்கெடுப்பு மத்திய அரசால் நடத்தப்பட்டது. அதற்கான வினாக்கள் பட்டியலில் இதே போல்தான் சாதி என்ற வினாவுக்கு எதிரில் காலியிடம் விடப்பட்டு, மக்கள் தெரிவிக்கும் சாதியின் பெயரை அதில் குறிப்பிடும் முறை பின்பற்றப் பட்டது.</p><p>அதன் விளைவு அந்தக் கணக்கெடுப்பில் நாடு முழுவதும் 46 லட்சத்து 70 ஆயிரம் சாதிகள் இருப்பதாக தெரியவந்தது. இந்தியாவில் 1931-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பில் 4147 சாதிகள் மட்டுமே அறிவிக்கப்பட்ட நிலையில், 2011 கணக்கெடுப்பில் 46.70 லட்சம் சாதிகள் இருப்பதாகக் கூறப்பட்டது விமர்சனங்களுக்கு உள்ளானது. அதனால், அந்தக் கணக்கெடுப்பு தரவுகள் சமூக நீதிக்காக பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்டு விட்டன.</p><p>இந்த சிக்கலுக்கான தீர்வு மிகவும் எளிதானது. இந்தியாவில் என்னென்ன சாதிகள் உள்ளன? என்பது குறித்த பட்டியல் மத்திய அரசிடமும், மாநில அரசுகளிடமும் உள்ளன. சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தேசிய அளவில் மத்திய அரசால் நடத்தப்படும் நிலையில், அந்தப் பட்டியலை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான செயலியின் மென்பொருளில் இணைத்து, அந்தப் பட்டியலில் இருந்து மக்கள் தங்கள் சாதியை தேர்வு செய்யும் முறையை பின்பற்றுவதுதான் சரியான தீர்வாகும்.</p><h2>பீகார் மாநில சாதிவாரி சர்வேயில் துல்லியமான விவரங்கள்</h2><p>கடந்த 2023-ஆம் ஆண்டு பீகார் மாநிலத்திலும், 2024-ஆம் ஆண்டு தெலுங்கானா மாநிலத்திலும் நடத்தப்பட்ட சாதிவாரி சர்வேயில், அரசின் பட்டியலில் உள்ள சாதிகள் வரிசைப்படுத்தப்பட்டு, அதை மக்கள் தேர்ந்தெடுத்து நிரப்பும் முறை கடைபிடிக்கப்பட்டது. அதன் பயனாக பீகார் மாநில சாதிவாரி சர்வேயில் துல்லியமான விவரங்கள் கிடைத்தன. அதனால் அதே முறையை இந்த கணக்கெடுப்பிலும் பின்பற்றலாம்.</p><p>சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டமாக வரும் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ள மக்களை எண்ணும் பணியின் போது மத்திய அரசின் சாதிகள் பட்டியலைக் காட்டி, அதிலிருந்து அவர்களின் சாதி மற்றும் எண்ணை பதிவு செய்யும் முறை கடைபிடிக்கும்படி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொள்ளும் இந்திய தலைமைப் பதிவாளர் அலுவலகத்திற்கு தாங்கள் அறிவுறுத்தல்களை வழங்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.</p><p>சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதிகளை பதிவு செய்யும் பணிகள் இன்னும் இரு வாரங்களில் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இதை அவசர கோரிக்கையாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கையை ஒட்டுமொத்த நாடும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறது. சமூகநீதியை காப்பதற்காக இதை செய்யும்படி தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>டிஎன்பிஎல்: சேப்பாக் வெற்றி பெற 183 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சேலம்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/csg-needs-183-runs-to-win-against-salem-spartans-in-tnpl-2026</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/csg-needs-183-runs-to-win-against-salem-spartans-in-tnpl-2026#comments</comments><guid isPermaLink="false">582c0298-4912-4b15-b444-e74276df6a7f</guid><pubDate>Wed, 12 Aug 2026 11:55:25 +0000</pubDate><atom:updated>2026-08-12T11:55:25.750Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,Chepauk super gillies,Salem Spartans,சேலம் ஸ்பர்டன்ஸ்,சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/e6nkvgja/salem.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ harishkumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/e6nkvgja/salem.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>10-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் அடுத்த நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி  மைதானத்தில் நடந்து வருகிறது.</p><h2>சேப்பாக் சூப்பர் கில்லீஸ்</h2><p>இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 14வது லீக் ஆட்டத்தில் ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், அபிஷேக் தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.</p><p>அதன்படி, சேலம் ஸ்பர்டன்ஸ் அணி முதலில் களமிறங்கியது. முதலில் இருந்தே சேலம் அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது. ஒரு கட்டத்தில் 6 விக்கெட்டுக்கு 84 ரன்கள் எடுத்து திணறியது.</p><p>7வது விக்கெட்டுக்கு இணைந்த ஹரிஷ்குமார்-ஈஸ்வர் ஜோடி 68 ரன்கள் சேர்த்தது.</p><h2>கடைசி ஓவரில் 4 சிக்சர்</h2><p>கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஹரிஷ்குமார் அரை சதம் கடந்து அசத்தினார். கடைசி ஓவரில் அவர் 4 சிக்சர்களை விளாசினார்.</p><p>இறுதியில், சேலம் ஸ்பர்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 182 ரன்களை எடுத்துள்ளது. ஹரிஷ்குமார் 57 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.</p><p>சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சார்பில் சிலம்பரசன், பிரேம்குமார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.</p><p>இதையடுத்து, 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் அணி களமிறங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>இந்து சமய அறநிலை, ஊரக வளர்ச்சி மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் நியமனங்களில் நடப்பு நிலையே தொடர வேண்டும்: சி.பி.எம்.</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cpm-shanmugam-hindu-religious-charities-rural-development-health-postings-should-continue</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cpm-shanmugam-hindu-religious-charities-rural-development-health-postings-should-continue#comments</comments><guid isPermaLink="false">3276f3f6-6d6e-4752-a907-cee8a7cd8809</guid><pubDate>Wed, 12 Aug 2026 11:29:22 +0000</pubDate><atom:updated>2026-08-12T11:29:22.648Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>CPM,சிபிஎம்,பெ சண்முகம்,P Shanmugam</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/vbl6ccmh/Pshanmugam0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெ. சண்முகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/vbl6ccmh/Pshanmugam0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</h2><p>இந்து சமய அறநிலையத் துறையில் இதுவரை கிரேடு 1 செயல் அலுவலர் மற்றும் உதவி ஆணையர் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்தில் சட்டம் படித்தவர்கள் மட்டுமே தேர்வெழுதி அலுவலர்களாக முடியும் என்ற நிலை இருக்கிறது. கோயில் சொத்துக்கள் சம்பந்தமான வழக்குகளை நிர்வகிக்க சட்ட அறிவு அவசியமானதாக இருக்கிறது என்பதால், துறையின் இணை ஆணையர் பதவிக்கு சட்டம் படித்து இருப்பது அவசியமானதாகும்.</p><p>நீதிபதியாக இருந்து வழக்கறிஞர்களின் வாதங்களை கேட்டு பூசல்களை தீர்க்கும் இடமாக இணை ஆணையர் பொறுப்பு நீதித்துறை சார்ந்து முக்கியமானதாக இருக்கிறது. இந்நிலையில் சட்டம் பயிலாதவர்களும் நேரடி நியமனத்தின் மூலம் உதவி ஆணையர்களாக, கிரேடு 1 செயல் அலுவலர்களாக நியமிப்பதற்கும், மேலும், அவ்விடங்களை வருவாய்த் துறையினரை வைத்து நிரப்புவதற்கும் தற்போதுள்ள இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் 9-வது சட்டப் பிரிவை திருத்தி பிரிவு 2-ஐ ரத்து செய்ய உள்ளதாக அறிகிறோம்.</p><p>இது பொருத்தமற்றதும், அறநிலையத்துறை செயல்பாடுகளை முடக்குவதுமாகும். எனவே, இந்த சட்டத்திருத்தத்தை அரசு கைவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.</p><h2>ஊரக வளர்ச்சித் துறை</h2><p>இதேபோன்று, ஊரக வளர்ச்சித் துறையில் இதுவரை திட்ட இயக்குநர் பொறுப்புகள் பதவி உயர்வு மூலமாகவோ அல்லது ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்டோ நிரப்பப்பட்டு கொண்டிருக்கின்றன. தற்போது அந்த பணியிடங்களில் தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட திட்ட இயக்குநர்களாக ஐ.எப்.எஸ். அதிகாரிகளை நியமிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த பொறுப்புகளோடு எவ்வித தொடர்பும் இல்லாத அதிகாரிகளை இப்படி நியமிப்பது தங்கள் பொறுப்புகளை சரிவர நிறைவேற்றுவதற்கு உதவாது. எனவே, இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண் 2731 நாள் 28.07.2026-ஐ ரத்து செய்து பழைய நிலையே தொடர வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.</p><h2>மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி, ஊரக மருத்துவ நலத்துறை</h2><p>இதேபோன்று, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி, ஊரக மருத்துவ நலத்துறை மற்றும் பொது மருத்துவம் மற்றும் நோய் தடுப்பு துறை ஆகிய துறைகளின் இயக்குநர் பொறுப்புகளுக்கு தற்போதுவரை பதவி உயர்வின் மூலம் மருத்துவர்களால் நிரப்பப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. தற்போது, இந்த பொறுப்புகளுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நேரடியாக நியமனம் செய்ய ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.</p><p>இது மருத்துவத்துறையை சார்ந்த பணிகளை வேறு துறையில் பயின்றவர்களால் திறம்பட நிர்வகிக்க வாய்ப்பில்லை. எனவே, மேற்கண்ட 3 துறைகளிலும் தற்போதைய நிலையையே தொடர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.</p><p>இவ்வாறு பெ. சண்முகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வடகிழக்குப் பருவமழை: முழு வீச்சில் தயாராகிறது பெருநகர சென்னை மாநகராட்சி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/northeast-monsoon-chennai-corporation-prepares</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/northeast-monsoon-chennai-corporation-prepares#comments</comments><guid isPermaLink="false">e310e33f-78d3-4302-b05b-d7dd799b800a</guid><pubDate>Wed, 12 Aug 2026 10:52:21 +0000</pubDate><atom:updated>2026-08-12T10:52:21.690Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Northeast Monsoon,சென்னை மாநகராட்சி,Flood Damage,வெள்ளப் பாதிப்பு,Greater chennai corporation,வடகிழக்குப் பருவமழை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/bd4vniu8/chennai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Greater Chennai Corporation ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/bd4vniu8/chennai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் வரவிருக்கும் வடகிழக்குப் பருவமழைக் காலத்தை எதிர்கொள்ளவும், பொதுமக்கள் பாதிப்படைவதைத் தவிர்க்கவும் பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு முழுத் தயார் நிலையில் இயங்கி வருகிறது. மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய எதிர்பாராத பாதிப்புகளுக்கு உடனடி தீர்வு காணும் வகையில் மாநகராட்சி முழுவதும் உயர் எச்சரிக்கை நிலை விடுக்கப்பட்டுள்ளது.</p><h2>உபகரணங்கள் <strong>மற்றும் இயந்திர</strong>ங்கள் தயார் நிலை</h2><p>மழைக்காலத்தில் வழக்கமாக ஏற்படும் நீர் தேக்கம் மற்றும் மரக்கிளைகள் முறிந்து விழுதல் போன்ற புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அனைத்து விதமான கனரக உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மழைக் காலங்களில் உடனடியாகப் பயன்படுத்தப்படும் ரம்பங்கள், மரம் அறுக்கும் கருவிகள், மின்சாரத் தேவைகளுக்கான ஜெனரேட்டர்கள், கழிவுநீர் மற்றும் மழைநீரை விரைவாக உறிஞ்சி வெளியேற்றும் அதிநவீன மோட்டார் பம்புகள் மற்றும் கனரக வாகனங்கள் ஆகியவை பயன்பாட்டிற்குத் தயாராக நிறுத்தப்பட்டுள்ளன.</p><h2>பாதிப்புகளை உடனுக்குடன் <strong>சரி செய்யத் தி</strong>ட்டம்</h2><p>மழைநீர் தேங்கும் இடங்களில் இருந்து தண்ணீரை உடனடியாக உறிஞ்சி வெளியேற்ற அதிக திறன் கொண்ட மோட்டார் பம்புகள் மாநகராட்சியின் பல்வேறு மண்டலங்களில் தயார் நிலையில் உள்ளன. சுரங்கப்பாதைகளில் நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பலத்த காற்றினால் சாலைகளில் முறிந்து விழும் மரங்களை நொடிப் பொழுதில் அகற்றி, போக்குவரத்தைச் சீரமைக்க சிறப்பு மீட்புக் குழுக்களும் இயந்திரங்களுடன் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.</p><h2>துறைகள் <strong>ஒருங்கிணைப்பு</strong> மற்றும் கண்காணிப்பு</h2><p>சென்னை மாநகராட்சி, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், மின்சார வாரியம் ஆகியவை இணைந்த மீட்பு ஒத்திகைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மழைக்கால நிவாரணப் பணிகள் மற்றும் அவசரக் கட்டுப்பாட்டு அறைகள் மூலம் பொதுமக்களின் புகார்களை 24 மணி நேரமும் பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெள்ளப் பாதிப்பு அதிகம் ஏற்படக்கூடிய தாழ்வானப் பகுதிகளில் முதல் நிலை மீட்பர்களும் முன்னெச்சரிக்கையாகத் தயார்படுத்தப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>அரசினர் தீர்மானம் அவசியமற்றது!- டி.டி.வி.தினகரன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-says-government-resolution-is-unnecessary</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-says-government-resolution-is-unnecessary#comments</comments><guid isPermaLink="false">f44c21b5-f8d2-4c85-836e-b0fa6815afcb</guid><pubDate>Wed, 12 Aug 2026 10:33:13 +0000</pubDate><atom:updated>2026-08-12T10:33:13.355Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>AMMK,அமமுக,டிடிவி தினகரன்,TTTV Dhinakaran,தொகுதி மறுவரையறை,Delimitation</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/wzwnxrae/TTVDhinakaran001.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ டி.டி.வி.தினகரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ டி.டி.வி.தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/wzwnxrae/TTVDhinakaran001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தொகுதி மறுவரையறை தொடர்பாக மத்திய அரசு எந்த ஒரு மசோதாவையும்  நாடாளுமன்றத்தில் கொண்டு வராத நிலையில் அதனை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டிருக்கும் அரசினர் தீர்மானம் அவசியமற்றது!</strong></em></p><p>அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>நாடாளுமன்ற மக்களவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 ஆகவே இருக்க வேண்டும், மாநிலங்களுக்கான விகிதாச்சார அளவில் தற்போதைய நிலையிலேயே தொடர வேண்டும் உள்ளிட்டவை அடங்கிய <a href="https://www.maalaimalar.com/topic/தொகுதி-மறுவரையறை">தொகுதி மறுவரையறை</a> தொடர்பான அரசினர் தனித்தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் இன்று கொண்டு வந்துள்ளார்.</p><p>மத்திய அரசு, தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இதுவரை வெளியிடாத நிலையில், காவிரி நீர், மேகதாது அணை, விவசாயிகள் பெற்ற முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி, மின் கட்டணத்தில் குளறுபடி, போதைப் பொருட்களின் தாராளப்புழக்கம்  மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு போன்ற தமிழகத்தின் தற்போதைய தலையாய பிரச்சனைகளை மறைக்க, தொகுதி மறுவரையறை தொடர்பாக எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டியதோடு, தற்போது சட்டமன்றத்தில் அரசினர் தனித் தீர்மானம் என்ற மற்றொரு நாடகத்தையும் தவெக அரசு அரங்கேற்றியுள்ளது.</p><p>தமிழகம் வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி தொகுதி மறுவரையறை தொடர்பாக பேசிவிட்டுச் சென்ற அடுத்த வாரமே எம்.பி.க்கள் கூட்டம், அதற்கு அடுத்த வாரமே அரசினர் தீர்மானம் என அவசரகதியில் அடுத்தடுத்து நடைபெறும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது, ஆளும் தவெக அரசை காங்கிரஸ் கட்சிதான் இயக்குகிறதோ? என்ற சந்தேகம் அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.</p><p>பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை அனைவரும் ஏற்றுக்கொண்ட நிலையில், தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு உட்பட எந்தவொரு மாநிலமும் பாதிக்கப்படாது என்பதோடு, நாடாளுமன்றத்தில் தற்போதுள்ள தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் 7.18 சதவிகிதத்திலிருந்து 7.23 சதவிகிதமாக அதிகரிக்கும் என மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெளிவுபடுத்திய பின்பும், தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு பாதிப்படையும் என்ற விஷமத்தனமான பிரசாரத்தை தமிழக மக்கள் மத்தியில் தற்போது தவெக அரசு திட்டமிட்டு பரப்புவது கடும் கண்டனத்திற்குரியது.</p><p>எனவே, கடந்த மூன்று மாத கால தவெக ஆட்சியில் தினந்தோறும் எழும் மக்கள் பிரச்சனைகளைத் திசைதிருப்பவும், காவிரி நீர் மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் தனது இயலாமையை மறைக்கவும், இதுபோன்ற தற்போதைய அவசியமற்ற விஷயங்களை சட்டமன்றத்தில் கொண்டு வந்து காலத்தை வீணாக்காமல், தமிழகத்தின் தலையாய பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட வேண்டும் என தவெக அரசையும், அதன் முதலமைச்சர் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item></channel></rss>