<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 02 Aug 2026 05:33:57 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்- 2 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-2-august-2026-2</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-2-august-2026-2#comments</comments><guid isPermaLink="false">48999084-21c9-4682-8ced-862e589bbdef</guid><pubDate>Sun, 02 Aug 2026 04:01:11 +0000</pubDate><atom:updated>2026-08-02T05:31:57.859Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/f9fzok5j/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Today Live News]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/f9fzok5j/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/trump-says-us-halts-military-attack-on-iran">ஈரானுக்கு எதிரான ராணுவத் தாக்குதலை ரத்து செய்தது அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!... </a></p><p>*உலகின் நன்மைக்காகவும், ஈரானின் எதிர்கால வாழ்விற்காகவும் இந்த தாக்குதலை நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்டுள்ளேன்.</p><p>*அமெரிக்கப் படைகள் இரண்டாம் உலகப்போருக்குப் பின் இல்லாத அளவிற்குத் தயாராக இருக்கின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/special-camp-today-to-register-fingerprints-of-left-out-ration-cardholders">ரேசன் கடைகளில் விடுபட்டவர்கள் கைவிரல் ரேகையை பதிவு செய்ய இன்று சிறப்பு முகாம்</a></p><p>* மத்திய அரசு குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கையை வைத்து உணவு பொருட்களை ஒதுக்கீடு செய்து வருகிறது.</p><p>* இதனால் பயனாளிகளின் உண்மைத் தன்மையை அறிய கைவிரல் ரேகை அல்லது கருவிழிரேகை பதிவு செய்வது என்பது கட்டாயம்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/mumbai-indians-have-denied-hardik-pandya-negotiations-with-csk-or-other-outfits-at-present">ஹர்திக் பாண்ட்யா விடுவிப்பா? - மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் விளக்கம்</a></p><p>* கடந்த 3 சீசனிலும் மும்பை இந்தியன்ஸ் அணி ஏமாற்றம் அளித்தது.</p><p>* ஹர்திக் பாண்ட்யாவை வாங்க பெரும்பாலான அணிகள் ஆர்வம் காட்டி வருகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/gautam-gambhir-warned-questions-will-be-asked-with-india-in-tough-fight-for-wtc-final-spot">உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்கு முன்னேறனும், இல்லைனா... எச்சரித்த கம்பீர்</a></p><p>* அனைவரிடமும் கேள்விகள் கேட்கப்படும்.</p><p>* ஏனென்றால், நாம் சொந்த மண்ணில் தோற்றிருக்கிறோம். </p><p><a href="https://www.maalaimalar.com/sports/india-jump-to-fourth-after-day-10-australia-continue-to-lead-medal-standings">காமன்வெல்த் விளையாட்டு: டாப் 5 பட்டியலில் சட்டென முன்னேறிய இந்தியா</a></p><p>* இந்திய அணி இதுவரை 13 தங்கப் பதக்கம் வென்றுள்ளது.</p><p>* காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்றுடன் நிறைவடைய உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kabini-dam-water-release-cut-to-10000-cusecs-warning-to-riverbank-residents-continues">கபினி அணையில் நீர் திறப்பு 10,000 கன அடியாக குறைப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை தொடர்கிறது!... </a></p><p>*இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முயற்சித் நிலையில் இயற்கையே தற்போது கைகொடுத்துள்ளது.</p><p>*கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீர், கர்நாடக-தமிழக எல்லையான 'பிலிகுண்டுலு' பகுதி வழியாக தமிழகத்திற்கு வந்தடையும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-cm-vijay-offers-condolences-on-iuml-president-kader-mohideen-sons-death">IUML தேசியத் தலைவர் காதர் மொகிதீன் மகன் மறைவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்</a></p><p>தனது அன்பு மகனை இழந்து தவிக்கும் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்தின் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p>]]></content:encoded></item><item><title>தைபே ஓபன் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் தன்வி ஷர்மா</title><link>https://www.maalaimalar.com/sports/tanvi-sharma-won-the-title-in-taipae-open-badminton</link><comments>https://www.maalaimalar.com/sports/tanvi-sharma-won-the-title-in-taipae-open-badminton#comments</comments><guid isPermaLink="false">e721b675-778f-48aa-872c-aa2ba2d38b4a</guid><pubDate>Sun, 02 Aug 2026 05:31:20 +0000</pubDate><atom:updated>2026-08-02T05:31:20.655Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tanvi sharma,தன்வி ஷர்மா,taipae open badminton,தைபே ஓபன் பேட்மிண்டன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/x0cuj18t/tanvi-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ tanvi sharma]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/x0cuj18t/tanvi-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தைபே ஓபன் பேட்மிண்டன் தொடர் தைவானின் தைபேயில் நடைபெற்று வருகிறது.</p><h2>தன்வி ஷர்மா அசத்தல்</h2><p>இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்றில் இந்தியாவின் தன்வி ஷர்மா, வியட்நாமின் நியூயென் து லின் உடன் மோதினார்.</p><p>இதில் ஆரம்பம் முதலே தன்வி ஷர்மா அதிரடியாக ஆடினார்.</p><p>சிறப்பாக ஆடிய தன்வி ஷர்மா முதல் செட்டை 21-16 என வென்றார். </p><h2>சாம்பியன் பட்டம்</h2><p>இதேபோல், விறுவிறுப்பாக ஆடிய தன்வி ஷர்மா இரண்டாவது செட்டையும் 21-16 என கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.</p><p>இந்தியாவின் மற்றொரு வீராங்கனையான உன்னதி ஹூடா அரையிறுதியில் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ் காலிறுதியி தோல்வி அடைந்தார். ஆண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய ஜோடி தோல்வி அடைந்தது. </p>]]></content:encoded></item><item><title>ஈரானுக்கு எதிரான ராணுவத் தாக்குதலை ரத்து செய்தது அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/world/trump-says-us-halts-military-attack-on-iran</link><comments>https://www.maalaimalar.com/news/world/trump-says-us-halts-military-attack-on-iran#comments</comments><guid isPermaLink="false">7084d266-1a15-4c42-b3c6-614e1b228eba</guid><pubDate>Sun, 02 Aug 2026 05:29:26 +0000</pubDate><atom:updated>2026-08-02T05:29:26.317Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Donald Trump,அமெரிக்கா,America,ஈரான்,Iran,டொனால்ட் டிரம்ப்,Strait of Hormuz</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/xt0rn6tg/trump.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Donald Trump  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/xt0rn6tg/trump.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் மீது நடத்த திட்டமிட்டிருந்த பெரிய அளவிலான ராணுவத் தாக்குதலை அமெரிக்கா தற்காலிகமாக ரத்து செய்துள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.</p><h2><strong>அமைதி ஒப்பந்தத்திற்கான முன்நிபந்தனைகள்:</strong></h2><p>தமது சமூக வலைதளமான Truth Social-இல் இது குறித்து பதிவிட்டுள்ள டிரம்ப், ஒரு ஒப்பந்தத்திற்கான அடிப்படை வரைமுறைகள் எட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். </p><h2><strong>ஹார்முஸ் நீரிணை திறப்பு:</strong></h2><p>சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் நீரிணையை ஈரான் உடனடியாகவும் முழுமையாகவும் திறக்க வேண்டும் என்றும், ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும் என்றும், இந்த அமைதி முயற்சிக்கு இஸ்ரேல் நாடும் ஒப்புதல் அளித்துள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.</p><h2><strong>டிரம்பின் எச்சரிக்கை:</strong></h2><p>தாக்குதல் ரத்து செய்யப்பட்டாலும், ஈரான் மிக விரைவாக இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையையும் டிரம்ப் விதித்துள்ளார். "உலகின் நன்மைக்காகவும், ஈரானின் எதிர்கால வாழ்விற்காகவும் இந்த தாக்குதலை நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்டுள்ளேன். ஆனால், இந்த ஒப்பந்தம் மிக விரைவாக எட்டப்பட வேண்டும். அமெரிக்கப் படைகள் இரண்டாம் உலகப்போருக்குப் பின் இல்லாத அளவிற்குத் தயாராக இருக்கின்றன" என டிரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளார்.</p><h2><strong>சவுதி அரேபியாவின் தலையீடு:</strong> </h2><p>அமெரிக்கா தாக்குதலைத் தீவிரப்படுத்த ஆயத்தமான நிலையில், சவுதி இளவரசர் முஹம்மது பின், டிரம்பை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தி பதற்றத்தைத் தணிக்குமாறு கோரிக்கை விடுத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><h2><strong>ஈரானின் எச்சரிக்கை:</strong></h2><p>சமீபகாலமாக அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணிக்கும் ஈரானுக்கும் இடையே போர் பதற்றம் உச்சத்தை எட்டியிருந்தது. ஈரான் மீது புதிய தாக்குதல்கள் நடத்தப்பட்டால் அதற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி எச்சரித்திருந்தார்.</p><p>இந்நிலையில்தான், சவுதி அரேபியா உள்ளிட்ட பிராந்திய நாடுகளின் தலையீட்டால் இந்த பேச்சுவார்த்தை சூழல் உருவாகியுள்ளது. ஒப்பந்தம் விரைவாக முடிவுக்கு வராவிட்டால், மீண்டும் தாக்குதல் நடத்த அமெரிக்கா தயங்காது என்பதை டிரம்ப் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ரேசன் கடைகளில் விடுபட்டவர்கள் கைவிரல் ரேகையை பதிவு செய்ய இன்று சிறப்பு முகாம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-camp-today-to-register-fingerprints-of-left-out-ration-cardholders</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-camp-today-to-register-fingerprints-of-left-out-ration-cardholders#comments</comments><guid isPermaLink="false">384670cd-ccb6-431c-b8aa-3e46d3c62264</guid><pubDate>Sun, 02 Aug 2026 05:26:18 +0000</pubDate><atom:updated>2026-08-02T05:26:18.972Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,Ration Card,ரேசன் கடைகள்,ரேசன் கார்டு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/b8xsi8or/RationCard001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைவிரல் ரேகை பதிவு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/b8xsi8or/RationCard001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய அரசு குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கையை வைத்து உணவு பொருட்களை ஒதுக்கீடு செய்து வருகிறது. இதனால் பயனாளிகளின் உண்மைத் தன்மையை அறிய கைவிரல் ரேகை அல்லது கருவிழிரேகை பதிவு செய்வது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து ரேசன் கடைகளிலும் இன்று விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களின் கைவிரல் ரேகையை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.</p><p>தமிழ்நாட்டில் 2 கோடியே 20 லட்சத்திற்கும் அதிகமான ரேசன் கார்டுகள் உள்ளன. இந்த கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் தங்களது கை விரல் ரேகையை ரேசன் கடைக்கு சென்று பதிவு செய்வது அவசியம் என்று அரசு அறிவித்திருந்தது.</p><h2>சிறப்பு முகாம்</h2><p>கை விரல் ரேகை அல்லது கருவிழி பதிவை மேற்கொள்ள ஏற்கனவே பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்பட்டு இருந்தது. அதன்படி பலர் கைவிரல் ரேகையை பதிவு செய்திருந்தனர். இதைத் தொடர்ந்து இன்று விடுபட்ட பயனாளிகளுக்கு ரேகையை பதிவு செய்ய தமிழ்நாடு முழுவதும் ரேசன் கடைகளில் இன்று சிறப்பு முகாம் நடைபெற்றது.</p><p>இதில் ஏராளமானோர் சென்று கைவிரல் ரேகையை பதிவு செய்தனர். பணி நிமித்தமாக வேறு ஊர்களில் இருப்பவர்கள் அங்கு அருகில் உள்ள எந்த ரேசன் கடைக்கும் சென்று கைவிரல் ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். அவ்வாறு செல்பவர்கள் ஆதார் அட்டை நகலையும் கொண்டு செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.</p><h2>இது குறித்து உணவுத்துறை அதிகாரி கூறியதாவது:-</h2><p>மத்திய அரசு குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கையை வைத்து உணவு பொருட்களை ஒதுக்கீடு செய்து வருகிறது. இதனால் பயனாளிகளின் உண்மைத் தன்மையை அறிய கைவிரல் ரேகை அல்லது கருவிழிரேகை பதிவு செய்வது என்பது கட்டாயம்.</p><p>அப்போதுதான் எவ்வளவு உணவுப் பொருள் தேவை என்பதை அறிந்து அதற்கேற்ப ஒதுக்கீடு செய்ய முடியும். ஆனால் சிலர் ரேசன் கார்டுகளில் இறந்தவர்களின் பெயர்களை இன்னும் நீக்காமல் வைத்துள்ளனர். எனவே அவற்றை சரி செய்ய ரேசன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் கைரேகை பெறப்படுகிறது.</p><p>அப்போதுதான் உண்மைத்தன்மை தெரிய வரும். எனவே கைரேகை பதியாதவர்களுக்கு ஒரு சிறப்பு வாய்ப்பாக இன்று ரேசன் கடைகளில் சிறப்பு முகாம் மாலை 6 மணி வரை நடத்தப்படுகிறது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.</p><p>இவ்வாறு அதிகாரி தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>நானும் கோட் ஷூட் போட்டால்.., முதல்வர் விஜயை சீண்டிய விஜய பிரபாகரன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/if-i-wear-coat-suit-too-vijay-prabhakaran-jabs-cm-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/if-i-wear-coat-suit-too-vijay-prabhakaran-jabs-cm-vijay#comments</comments><guid isPermaLink="false">35c745ba-bd37-4140-8e82-900991004501</guid><pubDate>Sun, 02 Aug 2026 04:57:39 +0000</pubDate><atom:updated>2026-08-02T04:57:39.328Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMDK,Vijaya Prabhakaran,DK Sivakumar,Cauvery</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/75gl7g5f/Untitled-design-4.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Cauvery Protest Politics: Vijay Prabhakaran slams CM Vijay over Karnataka issue]]></media:title><media:description type="html"><![CDATA[ Vijay Prabhakaran]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/75gl7g5f/Untitled-design-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h3><strong>விஜய பிரபாகரன் ஆவேசம்</strong></h3><p>காவிரியில் மேகதாது அணை கட்ட துடிக்கும் கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக சார்பில் ஒகேனக்கல் காவிரி அருகே போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் கலந்து கொண்டார். </p><p>அப்போது அவர் பேசியதாவது:-</p><p>முன்னாள் தி.மு.க. ஆட்சியை போடோ ஷூட் நடத்துவதாக கூறினார்கள். ஆனால் இன்றைக்கு இருக்கக்கூடிய, நமது முதல்வர் விஜய் அவர்கள் என்ன செய்கிறார்?. ஒகேனக்கலுக்கு வந்து ஏன் உங்களால் மக்களை சந்திக்க முடியவில்லை. </p><p>கடந்த ஐ.பி.எல். போட்டியில் கோப்பை வென்றபோது, விராட் கோலியை கர்நாடகாவிற்கு வரும்படி அம்மாநில முதல்வர் கூறினார். அன்றைக்கு அங்கு பல உயிரிழப்புகள் நிகழ்ந்தன. அப்போதும் நிலைமை மோசமாகத்தான் இருந்தது.</p><h3><strong>காவிரி பிரச்சனை</strong></h3><p>ஆனால் முதல்வர் விஜயை தற்போது மட்டும் கர்நாடகாவிற்கு வரவேண்டாம், நிலைமை மோசமாக இருக்கிறது என்று டி.கே. சிவகுமார் கூறுகிறார்.</p><p>தனது வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணித்த ஒரே தலைவர் விஜயகாந்த் தான்.</p><p>இன்றைக்கு நானும் கோட் ஷூட் கண்ணாடி எல்லாம் போட்டால், நானும் அழகாகதான் இருப்பேன். முதல்வர் விஜய் கர்நாடகாவிற்கு முதலில் செல்லுங்கள்.</p><p>இன்றைக்கு ஜனநாயகன் ஓடவில்லை என்றால் மட்டும் எல்லாரும் கண்ணீர் விடுகிறார்கள் என்று முதல்வர் கூறுகிறார். தவெக கட்சியை சேர்ந்தவர்கள் எல்லாரும் கர்நாடகாவை நோக்கி ஓடு ஓடு என்று ஓடுங்கள்.</p><p>உண்மையான வேட்டைக்காரன் வீரப்பன் இல்லாதது வருத்தமாக உள்ளது. அவர் தான் உண்மையான வேட்டைக்காரர்.</p><p>இன்றைக்கு வீரப்பன் இல்லை, ஆனால் நான் உங்களுடன் கடைசி வரை இருப்பேன்.</p><p>இந்த காவிரி உங்களுக்கு மட்டும் அல்லது எங்களுக்கு மட்டும் கிடையாது. நாம் அனைவருக்கும் பொதுவானது.</p><h3><strong>நீட் தேர்வு போராட்டம்</strong></h3><p>நீட் தேர்விற்கு எதுக்கு சீன் போடுகிறீர்கள். இதை நாம் பின்னால் பிரதமர் மோடியிடம் கேட்கலாம். இன்றைக்கு கர்நாடகாவில் ஆட்சி நடத்துவது காங்கிரசாக உள்ளது.</p><p>இன்றைக்கு திமுக-வால் வென்ற காங்கிரஸ் கட்சி, தவெக பக்கம் உள்ளது. இந்த நிலையில் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலத்திலும் காங்கிரஸ்தான் ஆட்சியில் உள்ளது.</p><p>எனவே இந்த பிரச்சனைக்கு ராகுல் காந்திதான் பதில் கூற வேண்டும், மோடி கிடையாது. இப்படித்தான் நம்ம மக்களை திருப்புகிறார்கள்.</p><p>அதற்காக பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு என்ற சொல்ல வரவில்லை. பிரதமர் மோடியும் இந்த பிரச்சனைக்கு தீர்வு கொண்டு வர வேண்டும்.</p><p>நீட் தேர்விற்கு எதிராக போராடிய அபிஜீத் தீப்கேவிடம் நான் ஒன்றை கேட்கிறேன். டெல்லி வரை போராட முடிந்த உன்னால், தமிழ்நாட்டிற்குள் நுழைய முடியவில்லை.</p><p>ஏனென்றால் முட்டாள்கள் அங்கே அதிகம், தமிழ்நாட்டில் அறிவாளிகள்தான் அதிகமாக உள்ளனர். முட்டாள் கூட்டத்தை நீங்கள் ஏமாற்றலாம், ஆனால் அறிவாளிகள் கூட்டத்தை ஏமாற்ற முடியாது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ஹர்திக் பாண்ட்யா விடுவிப்பா? - மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/mumbai-indians-have-denied-hardik-pandya-negotiations-with-csk-or-other-outfits-at-present</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/mumbai-indians-have-denied-hardik-pandya-negotiations-with-csk-or-other-outfits-at-present#comments</comments><guid isPermaLink="false">8d941829-1de0-469e-b919-4f5344a988ca</guid><pubDate>Sun, 02 Aug 2026 04:54:53 +0000</pubDate><atom:updated>2026-08-02T04:54:53.677Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Hardik Pandya,ஹர்திக் பாண்ட்யா,Mumbai Indians,மும்பை இந்தியன்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/eu1ccviv/pandya.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ pandya]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/eu1ccviv/pandya.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்ட்யா இடம் பிடித்துள்ளார். இவர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சென்று, பின்னர் 2024 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பினார். அப்போது கேப்டனாக நியமிக்கப்பட்டார். மும்பை அணியில் அவருக்கு சக வீரர்களால் சரியான மரியாதை கிடைக்கவில்லை. அதைவிட அந்த அணி சிறப்பாக செயல்படவில்லை. வீரர்கள் அறையில் அடிக்கடி சலசலப்பு ஏற்பட்டது.</p><h2>கடந்த 3 சீசனில் மும்பை இந்தியன்ஸ் ஏமாற்றம்</h2><p>2024-ல் 10-வது இடத்தை பிடித்தது. 2025-ல் பிளேஆஃப் வரை சென்றது. 2026 சீசனில் மிகவும் மோசமான நிலையை எட்டியது. இதனால் ஹர்திக் பாண்ட்யா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேற முயன்றார். அதேவேளையில் மும்பை இந்தியன்ஸ் அணியும் அவரை விடுவிடுக்க முடிவு செய்தது.</p><h2>ஹர்திக் பாண்ட்யாவுக்கு போட்டி</h2><p>ஹர்திக் பாண்ட்யாவை வாங்க (Trade) பெரும்பாலான அணிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. தற்போது இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் பேசி வருதாக தகவல் வெளியானது.</p><h2>மும்பை இந்தியன்ஸ் விளக்கம்</h2><p>இந்நிலையில், வீரர்களின் Trade தொடர்பாக தற்போது வரை எந்த அணியுடனும் பேச்சுவார்த்தையில் மும்பை அணி ஈடுபடவில்லை.</p><p>அணியின் செயல் திறன் ஆய்வு தற்போது நடைபெற்று வருகிறது. இது முழுமையாக நிறைவடைந்த பின்னரே, அணியின் மற்ற முடிவுகளை மும்பை அணி எடுக்கவுள்ளது என தகவல் வெளியாகியது.</p>]]></content:encoded></item><item><title>எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்ற வேண்டாம்: ஹிருத்திக் ரோஷனுக்கு பதிலடி கொடுத்த கங்கனா ரனாவத்</title><link>https://www.maalaimalar.com/news/national/eriyum-neruppil-ennai-ootra-ventaam-hrithik-roshankku-pathiladi-kodutha-kangana-ranavath</link><comments>https://www.maalaimalar.com/news/national/eriyum-neruppil-ennai-ootra-ventaam-hrithik-roshankku-pathiladi-kodutha-kangana-ranavath#comments</comments><guid isPermaLink="false">15c2d355-d5fe-4c42-a00f-ef192239b943</guid><pubDate>Sun, 02 Aug 2026 04:42:50 +0000</pubDate><atom:updated>2026-08-02T04:42:50.399Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Kangana Ranaut,கங்கனா ரனாவத்,hrithik roshan,ஹிரித்திக் ரோஷன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/w09oql5i/Untitled-design-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Kangana Ranaut slams Hrithik Roshan: warns him not to fuel ongoing social media fire]]></media:title><media:description type="html"><![CDATA[ Kangana Ranaut slams Hrithik Roshan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/w09oql5i/Untitled-design-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சமூக வலைத்தளத்தில் பழைய விவகாரங்களை குறித்து பதிவிடுவதற்கு கண்டனம் தெரிவிக்காததற்காக ஹிருத்திக் ரோஷன் மீது கங்கனா ரனாவத் சாடியுள்ளார்.</p><h3><strong>சாரி ஹிருத்திக் ரோஷன் என்ற ஹேஷ்டேக்</strong></h3><p>சாரி ஹிருத்திக் ரோஷன் என்ற டிரெண்டிங் ஹேஷ்டேக்கில் தனக்கு எதிராக மோசமான கருத்துகளுக்கு கண்டனம் தெரிவிக்காமல், ஆமோதிக்கும் வகையில் கருத்து பதிவிடுவது சரியான அல்ல என ஹிருத்திக் ரோஷனுக்கு கங்கனா ரனாவத் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சராக இருந்து தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. </p><p>போராட்டம் காரணமாக தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினமா செய்தார். இதனால் சிஜேபி தனது போராட்டத்தை முடித்துக் கொண்டது.</p><p>இந்த போராட்டம் தொடர்பாக சிஜேபிக்கு எதிராக பாஜக எம்.பி. கங்கனா ரனாவத், மாணவர்களுக்கு எதிராக கடுமையான வகையில் வார்த்தையை பயன்படுத்தினார். இதனால் அவருக்கும் சிஜேபி கட்சி செய்தி தொடர்பாளருமான சௌரவ் தாஸ் வார்த்தைப்போர் நடைபெற்றது.</p><p>அப்போது, காக்ரோச் ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் செளரவ் தாஸ் கூறுகையில், “என் நண்பர்கள் என்னிடம், நீங்கள் இளம் ஹிருத்திக் ரோஷன் போல இருக்கிறீர்கள்.</p><p> ஒருவேளை அதனால்தான் கங்கனா உங்களைத் தாக்குகிறார், என்று சொன்னார்கள்” என்று ஜோக்கிற்காக கூறியிருந்தார்.</p><p>இதையடுத்து சமூக வலைதளத்தில் ‘சாரி ஹிருத்திக்’ என்ற ஹேஷ்டேக் வைரலானது. அப்போது பலர் கங்கனா ரனாவத்- ஹரிதிக் ரோஷன் இடையில் 2016-ல் நடைபெற்ற மோதலை குறித்து கருத்து தெரிவித்து வந்தனர். </p><h3><strong>ஹிருத்திக் ரோஷன் வேண்டுகோள்</strong></h3><p>இதனால் மக்கள் சமூக ஊடகக் கருத்துக்களைப் பின்பற்ற வேண்டாம் என்று நடிகர் ஹிருத்திக் ரோஷன் கேட்டுக்கொண்டார்.</p><p>இதற்கிடையே பிரெட்டி பேர்டி (Freddy Birdy) என்பவர் உலகம் ஹிரிதிக் ரோஷனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இன்ஸ்டா ஸ்டோரியில் குறிப்பிட்டிருந்தார்.</p><p>அதற்கு ஹிரிதிக் ரோஷன் “என் நண்பரே, உங்களுக்கு 'B'-ஐ இனி பிடிக்கவில்லை என்பதற்காக 'A'-க்கு ஆதரவளிப்பது என்பது, நமது சமூகத்தைப் பீடித்துள்ள ஒரு பெரிய அமைப்பு ரீதியான பிரச்சினையின் ஒரு சிறிய பகுதி மட்டுமே.</p><p>அதற்கான சூழல் சரியானதாகவும், உண்மைகளின் அடிப்படையில் அமைந்ததாகவும் இருக்கும் தருணத்திற்காக நான் காத்திருப்பேன். அது நியாயமாக இருக்கும். ஆனால், இப்போது யார்தான் இதைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள்?” என்று பதிவிட்டார்.</p><p>தனது பழைய கதை குறித்து சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிக்கப்படுவதற்கு, எதிர்ப்பு தெரிவிக்காமல் அதற்கு கூடுதல் கவனம் செலுத்தும் வகையில் ஹரிதிக் ரோஷன் கருத்து பதிவிட்டுள்ளதாக கங்கனா ரனாவாத் சாடியுள்ளார்.</p><h3><strong>கங்கனா ரனாவத் பதிலடி</strong></h3><p>நடிகர் ஹிருத்திக் ரோஷனின் இந்த பதிவிற்கு கங்கனா வெளியிட்ட பதிவில், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதை நிறுத்திவிட்டு, உங்கள் துணையை சங்கடப்படுத்துவதை நிறுத்துங்கள் என்று கூறினார்.</p><p>இதுகுறித்து கங்கனா தனது பதிவில், “அன்புள்ள ஹிருத்திக், உங்கள் சரியான துணையான சபா ஆசாத்தை நீங்கள் கண்டறிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நீங்களும் அவரும் ஜோடியாக அழகாக இருக்கிறீர்கள். </p><p>மேலும், இதுபோன்ற கருத்துக்கள் மூலம் என்னை சீண்ட வேண்டாம். ஹிருத்திக் ரோஷனின் கருத்துக்கள் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல இருக்கிறது.</p><p>நீங்கள் ஒரு உறுதியான உறவில் இருக்கிறீர்கள், இப்படி ஒரு பெண்ணைக் கிண்டல் செய்வது உங்களுக்குப் பொருந்தாது. மாறாக, உங்கள் பெயரைப் பயன்படுத்தி என்னைத் துன்புறுத்தி, கொடுமைப்படுத்தும் அனைவரையும் நீங்கள் கண்டிக்க வேண்டும். </p><p>எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதையும், உங்கள் துணையை அவமானப்படுத்துவதையும் நிறுத்துங்கள். நல்லறிவு மேலோங்கி, நீங்கள் நியாயமற்ற கருத்துக்களை கூறுவதை நிறுத்துவீர்கள் என்று நம்புகிறேன்” என்று கங்கனா பதிவிட்டார்.</p><p>முன்னதாக கடந்த 2016-ஆம் ஆண்டு நடிகை கங்கனா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தனது முட்டாள் முன்னாள் காதலன் என்று குறிப்பிட்டு இருந்தார். இதனால் இருவருக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டது. அதன்பின் தற்போது இந்த விவகாரம் தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருப்பதியில் காதலியுடன் ஹர்திக் பாண்டியா சாமி தரிசனம்: மொட்டை அடித்து சிறப்பு பிரார்த்தனை!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/hardik-pandya-head-shave-prayer-with-girlfriend-at-tirupati</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/hardik-pandya-head-shave-prayer-with-girlfriend-at-tirupati#comments</comments><guid isPermaLink="false">6693f1a5-5e44-417e-bd95-28659f654d29</guid><pubDate>Sun, 02 Aug 2026 04:35:48 +0000</pubDate><atom:updated>2026-08-02T04:35:48.702Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Hardik Pandya,Tirupati temple,ஹர்திக் பாண்டியா,Mahika Sharma,திருப்பதிகோயில்,மஹிகா சர்மாவுடன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/jtczbs8p/hardik.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Hardik Pandya -Mahika Sharma ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/jtczbs8p/hardik.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்-ரவுண்டர் 'ஹர்திக் பாண்டியா', ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் தனது காதலியான மாடல் அழகி 'மஹிகா சர்மாவுடன்' சேர்ந்து இன்று காலை சாமி தரிசனம் செய்தார்.</p><h2><strong>மொட்டை அடித்து வழிபாடு:</strong></h2><p>திருப்பதிக்கு வருகை தந்த ஹர்திக் பாண்டியா, தன் நேர்த்திக்கடனைச் செலுத்தும் விதமாக மொட்டை அடித்துத் தனது புதிய தோற்றத்தில் ஏழுமலையானை தரிசித்தார்.</p><h2><strong>காதலியுடன் சாமி தரிசனம்:</strong></h2><p>இன்று காலை நடைபெற்ற சுப்ரபாத சேவையின் போது, தன் காதலி மஹிகா சர்மாவுடன் கலந்துகொண்ட பாண்டியா, சுவாமி தரிசனம் செய்து சிறப்புப் பிரார்த்தனையில் ஈடுபட்டார்.</p><h2><strong>கோயில் நிர்வாகம் மரியாதை:</strong></h2><p>தரிசனம் முடித்துத் திரும்பிய இருவருக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க ஆசி வழங்கி, ஸ்ரீவாரி தீர்த்தப் பிரசாதங்களை வழங்கினர்.</p><h2><strong>வைரலாகும் புகைப்படங்கள்:</strong></h2><p>மொட்டை தலையுடன் காதலியுடன் சாமி தரிசனம் செய்த ஹர்திக் பாண்டியாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.</p><h2><strong>ரசிகர்கள் வரவேற்பு:</strong> </h2><p>கோயில் வளாகத்தில் பாண்டியாவைக் கண்ட ரசிகர்கள் மற்றும் பக்தர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு புகைப்படங்கள் மற்றும் செஃல்பி எடுத்துக்கொண்டனர். ஐபிஎல் மற்றும் வரவிருக்கும் சர்வதேசக் கிரிக்கெட் தொடர்களுக்கு முன்பாக, ஆன்மீகப் பயணமாகத் திருமலைக்கு வந்து பாண்டியா சாமி தரிசனம் செய்து நேர்த்திக்கடனைச் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>கபினி அணையில் நீர் திறப்பு 10,000 கன அடியாக குறைப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kabini-dam-water-release-cut-to-10000-cusecs-warning-to-riverbank-residents-continues</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kabini-dam-water-release-cut-to-10000-cusecs-warning-to-riverbank-residents-continues#comments</comments><guid isPermaLink="false">2d4860d1-2c2e-4f21-89de-7b70324dedf8</guid><pubDate>Sun, 02 Aug 2026 04:20:00 +0000</pubDate><atom:updated>2026-08-02T04:20:00.971Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Karnataka,Tamil Nadu government,Cauvery,Kabini Dam,கபினி அணை,காவிரி நதிநீர்,கர்நாடகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/3m3lmmn3/gabuini.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kabini Dam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/3m3lmmn3/gabuini.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விவசாயத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அணையில் போதிய நீர் இல்லாததால் மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. காவிரி நதிநீர் ஆணைய உத்தரவுபடி தமிழகத்துக்குரிய நீரை திறந்துவிட கர்நாடகம் மறுத்து வருவதால் டெல்டா மாவட்டங்கள் வறண்டு வருகின்றன.</p><p>இந்த விவகாரம் தற்போது இரு மாநிலங்களுக்கு இடையே பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. இதற்கிடையே தமிழகத்துக்கு 4 டி.எம்.சி. (நாள் ஒன்று 3500 கனடி வீதம் 15 நாட்களுக்கு) நீர் திறந்துவிட கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இதற்கு கர்நாடகம் மறுத்துவிட்டது. தொடர்ந்து கன்னட அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கிடையே இந்த பிரச்சனைக்கு தீர்வு காண இயற்கையே தற்போது கைகொடுத்துள்ளது.</p><p>கபினி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்தது.</p><h2><strong>தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு:</strong></h2><p>கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி உயரம் கொண்ட கபினி அணையில் நேற்று முன்தினம் 2,282 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 11,747 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணை நிரம்பும் தருவாயில் இருந்ததால், அணையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் காவிரியில் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது.</p><h2><strong>நீர்த் திறப்பு நிலவரம்:</strong></h2><p>காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் வயநாடு பகுதியில் பெய்து வந்த கனமழையின் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்தது. கபினி அணையில் இருந்து நேற்றிரவு 25 ஆயிரம் கன அடியாக திறக்கப்பட்ட நிலையில்,  இன்று காலை நிலவரப்படி காவிரி ஆற்றில் விநாடிக்கு 10,000 கன அடியாக குறைக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.</p><h2><strong>தமிழக எல்லைக்கு நீர்வரத்து:</strong></h2><p>கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீர், கர்நாடக-தமிழக எல்லையான 'பிலிகுண்டுலு' பகுதி வழியாக தமிழகத்திற்கு வந்தடையும்.</p><h2><strong>மேட்டூர் அணைக்கு எதிர்பார்ப்பு:</strong></h2><p>இந்த உபரிநீர் அடுத்த சில நாட்களில் சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு  வந்து சேரும் என நீர்வளத் துறை அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளனர். காவிரி ஆற்றுப் படுகை மற்றும் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ அல்லது கால்நடைகளை மேய்க்கவோ வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் மற்றும் நீர்வளத் துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் விளையாட்டு: டாப் 5 பட்டியலில் சட்டென முன்னேறிய இந்தியா</title><link>https://www.maalaimalar.com/sports/india-jump-to-fourth-after-day-10-australia-continue-to-lead-medal-standings</link><comments>https://www.maalaimalar.com/sports/india-jump-to-fourth-after-day-10-australia-continue-to-lead-medal-standings#comments</comments><guid isPermaLink="false">bbffb37b-8139-4b0e-a517-1567bad6ec37</guid><pubDate>Sun, 02 Aug 2026 04:18:16 +0000</pubDate><atom:updated>2026-08-02T04:18:16.542Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்திய அணி,Commonwealth games,பதக்க பட்டியல்,Medal List,காமன்வெல்த் விளையாட்டு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/qbi0maw6/medal-list.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ boxers]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/qbi0maw6/medal-list.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 126 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்று விளையாடி வருகிறது.</p><h2>4வது இடத்துக்கு முன்னேறிய இந்தியா</h2><p>இந்நிலையில், பத்தாவது நாள் முடிவில் இந்திய அணி 13 தங்கம், 17 வெள்ளி மற்றும் 9 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களை வென்று நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.</p><p>இதில் குத்துச் சண்டையில் மட்டும் இந்தியா 7 தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.</p><p>இந்திய தடகள வீரர் குல்வீர் சிங் 10,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளி மற்றும் 5,000 மீட்டர் ஓட்டப் பந்தய பிரிவில் வெண்கலம் என மொத்தம் இரண்டு பதக்கங்களைப் பெற்றுள்ளார்.</p><h2>தமிழக வீரர்கள்</h2><p>இதேபோல், ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் போட்டியில் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன் சித்ரவேல் வெள்ளி பதக்கமும், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த செல்வ பிரபு வெண்கலப் பதக்கமும் வென்றனர்.</p><p>தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக, வெள்ளிப் பதக்கம் வென்ற பிரவீன் சித்ரவேலுக்கு 30 லட்சம் ரூபாயும், வெண்கலப் பதக்கம் வென்ற செல்வ பிரபுவுக்கு 20 லட்சம் ரூபாயும் வழங்கப்படுகிறது.</p><h2>பதக்கப் பட்டியல்- டாப் 5 நாடுகளின் விவரம் வருமாறு:</h2><p>ஆஸ்திரேலியா: 158 பதக்கம் (65 தங்கம், 41 வெள்ளி, 52 வெண்கலம்)</p><p>இங்கிலாந்து: 102 பதக்கம் (26 தங்கம், 41 வெள்ளி, 35 வெண்கலம்)</p><p>கனடா: 59 பதக்கம் (18 தங்கம், 20 வெள்ளி, 21 வெண்கலம்)</p><p>இந்தியா: 39 பதக்கம் (13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம்)</p><p>ஸ்காட்லாந்து: 38 பதக்கம் (13 தங்கம், 8 வெள்ளி, 17 வெண்கலம்)</p><p>காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்றுடன் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>IUML தேசியத் தலைவர் காதர் மொகிதீன் மகன் மறைவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-cm-vijay-offers-condolences-on-iuml-president-kader-mohideen-sons-death</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-cm-vijay-offers-condolences-on-iuml-president-kader-mohideen-sons-death#comments</comments><guid isPermaLink="false">8723cf6d-e1da-437b-a9d8-ff77d931cfb7</guid><pubDate>Sun, 02 Aug 2026 03:35:56 +0000</pubDate><atom:updated>2026-08-02T03:35:56.443Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>காதர் மொய்தீன்,முதலமைச்சர் விஜய்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/y58sv7jc/TNCMVijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கே.எம். காதர் மொகிதீன் மகன் மறைவு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/y58sv7jc/TNCMVijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>தமிழக முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-</h2><p>இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனின் மூத்த மகன் மருத்துவர் கே.எம்.கே. கலீலூர் ரஹ்மான் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.</p><p>தனது அன்பு மகனை இழந்து தவிக்கும் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்தின் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு முதலமைச்சர் விஜய் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள பதில் கூறியிருப்பதாவது:-</h2><p>இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன் சாஹிப் அவர்களின் மூத்த மகனார் டாக்டர் கே.எம். கல்லீலுர் ரஹ்மான் மறைவெய்திய செய்தி அறிந்து மிகுந்த வருத்தமும், துயரமும் அடைந்தேன்.</p><p>அன்பு மகனை இழந்து வாடும் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன் சாஹிப் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு செல்வப்பெருந்தகை குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சிட்டி ஓபன் டென்னிஸ்: இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் டெய்லர் பிரிட்ஸ்</title><link>https://www.maalaimalar.com/sports/tennis/taylor-fritz-enter-final-round-in-citi-open-tennis</link><comments>https://www.maalaimalar.com/sports/tennis/taylor-fritz-enter-final-round-in-citi-open-tennis#comments</comments><guid isPermaLink="false">ec6e9cb3-bf2a-4317-af42-a0f717772c4e</guid><pubDate>Sun, 02 Aug 2026 03:17:21 +0000</pubDate><atom:updated>2026-08-02T03:17:21.169Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Taylor Fritz,டெய்லர் பிரிட்ஸ்,சிட்டி ஓபன் டென்னிஸ்,Citi open tennis</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/0iynjg0g/fritz.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ fritz]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/0iynjg0g/fritz.jpg?w=280" width="280"></media:thumbnail><category>டென்னிஸ் (Tennis)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சிட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.</p><p>இதில் இன்று அதிகாலை நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், சக நாட்டு வீராங்கனையான பிராண்டன் நகஷிமா உடன் மோதினார்.</p><p>இதில் சிறப்பாக ஆடிய டெய்லர் பிரிட்ஸ் 6-3, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.</p><p>இதேபோல் இன்று நடந்த மற்றொரு அரையிறுதியில் சிலியின் அலெக்சாண்ட டபிலோ, ஸ்பெயினின் ரபேல் ஜோடார் உடன் மோதினார்.</p><p>இதில் சிறப்பாக ஆடிய சிலி வீரர் முதல் செட்டை 7-6 (8-6) என வென்றார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிரடியாக ஆடிய ரபேல் ஜோடார் 6-4 என 2வது செட்டைக் கைப்பற்றினார்.</p><p>வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் ரபேல் ஜோடார் 6-4 என வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.</p><p>இன்று நள்ளிரவு நடைபெற உள்ள இறுதிச்சுற்றில் ஸ்பெயினின் ரபேல் ஜோடார், அமெரிக்காவின் டெய்ல்ஸ் பிரிட்ஸ் உடன் மோதுகிறார்.</p>]]></content:encoded></item><item><title>பெரு நாட்டில் சுற்றுலா பயணிகள் சென்ற விமானம் விபத்து: 13 பேர் உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/peru-tourist-plane-crash-13-killed</link><comments>https://www.maalaimalar.com/news/world/peru-tourist-plane-crash-13-killed#comments</comments><guid isPermaLink="false">13977b34-e331-452c-a2c3-c09b3e4b0e2d</guid><pubDate>Sun, 02 Aug 2026 02:47:04 +0000</pubDate><atom:updated>2026-08-02T02:47:04.446Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>plane crash,விமான விபத்து,பெரு,Peru,tourists killed,சுற்றுலா பயணிகள் பலி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/a4lo28qs/Untitled-design-1.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Peru Tourist Flight Crash: 13 killed as Nazca lines sightseeing plane crashes in field]]></media:title><media:description type="html"><![CDATA[ Peru Tourist Flight Crash]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/a4lo28qs/Untitled-design-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெரு நாட்டில், நாஸ்கா நகருக்கு அருகில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் ஒன்று வயல்வெளியில் விழுந்து நொறுங்கியதில் 13 பேர் உயிரிழந்தனர்.</p><h3><strong>பெரு நாட்டில் விமான விபத்து</strong></h3><p>இந்த விபத்து குறித்து நாஸ்கா அதிகாரிகள் வெளியிட்ட செய்தியில், விபத்தில் சிக்கிய அந்த விமானம் சுற்றுலாப் பயணிகளை நாஸ்கா கோடுகளைச் சுற்றிப் பார்ப்பதற்காக அழைத்துச் சென்றது. </p><p>நாஸ்கா கோடுகள் என்பவை, நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பெரு நாட்டில் உள்ள பழங்குடி மக்களால், பாலைவனத்தில் செதுக்கப்பட்ட விரிவான புவிக்கோட்டு படங்களின் தொகுப்பாகும். </p><p>இந்தக் கோடுகள் விலங்குகளின் உருவங்களை உருவாக்குகின்றன. அவற்றை விமானங்கள் அல்லது கண்காணிப்பு கோபுரங்களில் இருந்து மட்டுமே முழுமையாக ரசிக்க முடியும்.</p><h3><strong>சுற்றுலா பயணிகள் பலி</strong></h3><p>இந்த காட்சியை பார்ப்பதற்காக இகா நகரிலிருந்து விமானம் ஒன்று நேற்று புறப்பட்டது. இந்த விமானத்தில் 11 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், இரண்டு விமானப் பணியாளர்களும் இருந்தனர்.</p><p>இந்த விமானம் திடீரென வயல்வெளியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விபத்தில் விமானத்தில் இருந்த 13 பேரும் உயிரிழந்தனர்.</p><p>அந்த விமானத்தில் ஜெர்மானியை சேர்ந்த இரண்டு பேர்களும், ஸ்பெயினை சேர்ந்த இரண்டு பேர்களும் மற்றும் ஏழு இத்தாலி சுற்றுலாப் பயணிகளும் இருந்ததாக பெருவின் வர்த்தக மற்றும் சுற்றுலா அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><p>இந்த விபத்து குறித்து விமான நிறுவனம் இணையதளத்தில் வெளியிட்ட செய்தியில், கடந்த 14 ஆண்டுகளாக செஸ்னா கிராண்ட் கேரவன் விமானங்களைப் பயன்படுத்தி நாஸ்கா எல்லைக் கோடுகளின் மீது ரம்மியமான விமானப் பயணங்களை சுற்றுலா பயணிகளுக்கு வழங்கி வருகிறோம் என்று தெரிவித்துள்ளது.</p><p>இதையடுத்து விமான விபத்து ஏற்பட்ட காரணம் குறித்து பெரு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தைபே ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் தன்வி ஷர்மா</title><link>https://www.maalaimalar.com/sports/tanvi-sharma-enter-final-round-in-taipae-open-badminton</link><comments>https://www.maalaimalar.com/sports/tanvi-sharma-enter-final-round-in-taipae-open-badminton#comments</comments><guid isPermaLink="false">fc3dd942-f5bd-4bfd-9087-b8899415bed2</guid><pubDate>Sun, 02 Aug 2026 02:42:24 +0000</pubDate><atom:updated>2026-08-02T02:42:24.815Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tanvi sharma,தன்வி ஷர்மா,taipae open badminton,தைபே ஓபன் பேட்மிண்டன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/usr9es3w/tanvi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ tanvi sharma]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/usr9es3w/tanvi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தைபே ஓபன் பேட்மிண்டன் தொடர் தைவானின் தைபேயில் நடைபெற்று வருகிறது.</p><p>இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் இந்தியாவின் தன்வி ஷர்மா, சீன தைபே வீராங்கனையான ஹூயாங் யு ஹூன் உடன் மோதினார்.</p><p>இதில் அதிரடியாக ஆடிய தன்வி ஷர்மா 21-17, 21-11 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.</p><p>மற்றொரு போட்டியில் இந்தியாவின் உன்னதி ஹூடா, வியட்நாமின் நியுயென் தை லின் உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய வியட்நாம் வீராங்கனை 21-15, 21-18 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் இந்தியாவின் உன்னதி ஹூடா தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.</p><p>இன்று நடைபெறும் இறுதிச்சுற்றில் இந்தியாவின் தன்வி ஷர்மா, வியட்நாமின் நியுயென் தை லின் உடன் மோதுகிறார்.</p>]]></content:encoded></item><item><title>நீட் தகுதி மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு 4-ந்தேதி தொடங்குகிறது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mbbs-medical-counselling-for-admission-to-medical-courses-begins-on-4th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mbbs-medical-counselling-for-admission-to-medical-courses-begins-on-4th#comments</comments><guid isPermaLink="false">87682301-6a94-4357-b136-bb3cd034e112</guid><pubDate>Sun, 02 Aug 2026 02:30:41 +0000</pubDate><atom:updated>2026-08-02T02:30:41.636Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மருத்துவ கவுன்சிலிங்,MBBS Counselling</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/kk6mtb2r/MBBS0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மருத்துவக் கல்லூரி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/kk6mtb2r/MBBS0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தகுதி மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு 4-ந்தேதி தொடங்கி நடைபெறும் என்று மத்திய மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளது.</p><h2>72,627 மாணவர்கள் விண்ணப்பம்</h2><p>தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்க tnmedicalselection.org என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவித்து இருந்தது. அதன்படி கடந்த 23-ந்தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டு 70 ஆயிரத்து 486 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.</p><p>மேலும் விண்ணப்பிக்க கடந்த 26-ந்தேதி காலை 10 மணி முதல் 27-ந்தேதி பிற்பகல் 3 மணி வரையில் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டது. இதில் 2,141 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அந்த வகையில் மொத்தம் 72 ஆயிரத்து 637 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.</p><p>மருத்துவ படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு எப்போது நடைபெறும் என்று விண்ணப்பித்த மாணவர்களும், அவர்களது பெற் றோர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.</p><h2>முதற்கட்ட கலந்தாய்வு</h2><p>இந்த நிலையில் நாடு முழுவதும், நீட் தகுதி மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் எம்.பி.பி.எஸ். பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான பட்டியலை மத்திய மருத்துவ கவுன்சில் வெளியிட்டுள்ளது.</p><p>அதன்படி, முதற்கட்ட அகில இந்திய மருத்துவ கலந்தாய்வு வருகிற 4-ந்தேதி தொடங்கி 17-ந்தேதி வரை நடைபெற உள்ளது. மாநில அளவிலான கலந்தாய்வு வருகிற 13-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி, 4 கட்ட கலந்தாய்வு மற்றும் மாணவர்கள் கல்லூரிகளில் சேருவதற்கான கால அவகாசம் அக்டோபர் 10-ந்தேதி வரை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ள 72 ஆயிரத்து 627 மாணவர்களின் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் தரவரிசை பட்டியல் விரைவில் வெளியிடப்பட்டு கலந்தாய்வு அட்டவணையை மருத்துவ கல்வி இயக்ககம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்கு முன்னேறனும், இல்லைனா... எச்சரித்த கம்பீர்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/gautam-gambhir-warned-questions-will-be-asked-with-india-in-tough-fight-for-wtc-final-spot</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/gautam-gambhir-warned-questions-will-be-asked-with-india-in-tough-fight-for-wtc-final-spot#comments</comments><guid isPermaLink="false">86a66523-6236-4ef3-b442-560d37c66fd2</guid><pubDate>Sun, 02 Aug 2026 02:23:35 +0000</pubDate><atom:updated>2026-08-02T02:23:35.007Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்திய அணி,கவுதம் கம்பீர்,WTC final,உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்,WTC,Gautham Gambhir</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/nozwtr53/gambir.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ gambhir]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/nozwtr53/gambir.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான பந்தயத்தில் இந்தியா நீடிக்க வேண்டும் என்றால் அடுத்து வரும் 9 போட்டிகளில் குறைந்தபட்சம் 7 போட்டிகளில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.</p><h2>இறுதிப்போட்டிக்கு முன்னேற...</h2><p>உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை இந்திய அணி 9 போட்டிகள் விளையாடியுள்ளது. இதில் ஒரு போட்டி டிரா, 4 வெற்றி, 4 தோல்வி அடைந்துள்ளது. இதன் வெற்றி சதவீதத்தின் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது.</p><p>இன்னும் இந்திய அணிக்கு 9 போட்டிகள் உள்ளது. இதில் குறைந்தபட்சம் 7 போட்டிகளில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. இந்திய அணி இந்த 9 போட்டிகளில் இலங்கை, நியூசிலாந்து,ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது.</p><p>இலங்கையில் 2 போட்டிகளிலும், அதனை தொடர்ந்து நியூசிலாந்தில் 2 போட்டிகளிலும், கடைசியாக சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 போட்டிகளிலும் விளையாட உள்ளது.</p><p>இந்நிலையில், முன்னாள் வீரரான தீப்தாஸ் குப்தா கூறியதாவது:</p><p>கம்பீர் ஒரு கடுமையான சோதனையை எதிர்கொள்கிறார்.</p><p>ஒரு விஷயம் நியாயமானது: அவரிடம் (கம்பீரிடம்) கேள்விகள் கேட்கப்படும். அணி சரியாக விளையாடாதபோது, ​​தனிப்பட்ட முறையில் கேள்விகள் கேட்கப்படும்.</p><h2>அனைவரிடமும் கேள்விகள் கேட்கப்படும்</h2><p>அணியின் பயிற்சியாளர், கேப்டன் மற்றும் அணியுடன் தொடர்புடைய அனைவரிடமும் கேள்விகள் கேட்கப்படும். ஏனென்றால், நாம் சொந்த மண்ணில் தோற்றிருக்கிறோம். 2011-12-க்குப் பிறகு நியூசிலாந்தில் தொடரை இழந்தோம், தொடர்ந்து தோற்றுக்கொண்டே இருந்தோம். நாம் சொல்வதுபோல் 3 தொடர்களில் இரண்டை இழந்துள்ளோம். எனவே, அழுத்தம் இருக்கும்.</p><p>நாம் குறிப்பிடும் அனைத்து வீரர்களுக்கும் அழுத்தத்தின் கீழ் எப்படி விளையாடுவது என்றும், அதை எப்படி கையாள்வது என்றும் தெரியும் என்பதையும் சொல்வது முக்கியம். ஆனால், சுப்மன் மீதும், இந்திய வீரர்கள் மீதும் அழுத்தம் இருக்கும். அது மிகவும், மிகவும் முக்கியமானது.</p><p>அவர்கள் மாற்றம் பற்றிப் பேசுவதால், அந்த மாற்றக் காலகட்டத்தில் ஒரு திசையைக் காண்பது மிகவும் முக்கியம். அந்த மாற்றம், நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்குப் பிறகு தொடங்கியது என வைத்துக்கொள்வோம். பின்னர் இங்கிலாந்து தொடர் மற்றும் அதுபோன்றவை வந்தன. அங்கிருந்துதான் அது தொடங்கியது.</p><p>முதலில் எளிதான டெஸ்ட் தொடர் என எதுவும் இல்லை. குறிப்பாக, ஒரு மாற்றத்தின் வழியாகச் சென்று கொண்டிருக்கும் இந்திய டெஸ்ட் அணியைப் பார்க்கும்போது ​என்ன நடந்தாலும் ஒரு எளிதான டெஸ்ட் போட்டிகூட இல்லை.</p><p>கடந்த காலங்களில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்வது மிகவும் கடினமான இடமாக இருந்துள்ளது. குறிப்பாக தற்போதைய இந்தச் சூழ்நிலைகளில். எனவே, உலக டெஸ்ட் போட்டியைப் பார்க்கும்போது இது சுவாரஸ்யமாக இருக்கும் என நினைக்கிறேன். </p><h2>கடினமான பணி</h2><p>இன்னும் 9 டெஸ்ட் போட்டிகள் மீதமுள்ளன என நினைக்கிறேன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5, இலங்கைக்கு எதிராக 2 மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக 2. நான் தவறாகக் கணிக்கவில்லை என்றால், தோராயமாகச் சொல்வதானால், உலக டெஸ்ட் போட்டியின் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற ஒன்பதில் ஏழு போட்டிகளில் வெற்றிபெற வேண்டும் என நினைக்கிறேன். எனவே, அதுவே ஒரு கடினமான பணி.</p><p>அதற்கும் மேலாக, இலங்கையில் இலங்கையுடனும், நியூசிலாந்தில் நியூசிலாந்துடனும் போட்டிகள் உள்ளன. இவை கடினமான சவால்கள். இந்தக் காலகட்டத்தில், எந்தச் சூழ்நிலையிலும், எந்தத் தொடரையோ அல்லது எதிரணியையோ சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>ரஷிய உணவகத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல்? : 3 பேர் உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/russia-restaurant-bomb-blast-3-killed-ukraine-blamed</link><comments>https://www.maalaimalar.com/news/world/russia-restaurant-bomb-blast-3-killed-ukraine-blamed#comments</comments><guid isPermaLink="false">b39bdc9f-ee95-4703-9c62-590a9f1837b7</guid><pubDate>Sun, 02 Aug 2026 02:14:39 +0000</pubDate><atom:updated>2026-08-02T02:14:39.567Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மாஸ்கோ,Russia,Moscow,Ukraine,ரஷியா,உக்ரைன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/81il5fsd/Untitled-design.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Russia Restaurant Blast: 3 killed in Moscow Italian eatery, Russia blames Ukraine]]></media:title><media:description type="html"><![CDATA[ Russia, Moscow]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/81il5fsd/Untitled-design.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாஸ்கோவில் உள்ள ஒரு இத்தாலிய உணவகத்தில் நாட்டு வெடிகுண்டு வெடிக்கப்பட்டதில் மூன்று பேர் கொல்லப்பட்டு, 21 பேர் காயமடைந்துள்ளதாக ரஷிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><h3><strong>ரஷியாவில் வெடி விபத்து</strong></h3><p>ரஷியாவின் தலைநகர் அருகிலுள்ள குட்ரின்ஸ்காயா சதுக்கத்தில் புகழ்பெற்ற ஸ்டாலின் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களில் ஒன்றில் அமைந்துள்ள ஒரு உணவகத்தில், நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று வந்தது.</p><p>இந்த நிகழ்ச்சி நடந்த உணவகத்திற்குள் வெடிபொருட்களை எடுத்துக்கொண்டு இரவு 8 மணியளவில் பெண் ஒருவர்  நுழைய முயன்றுள்ளார். அப்போது அவரை அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.</p><p>இதையடுத்து அந்த பெண் வைத்திருந்த வெடிகுண்டு வெடித்ததில், அவர் உள்பட பாதுகாப்பு ஊழியர் மற்றும் உணவகத்திற்கு வந்திருந்த ஒருவர் உயிரிழந்தனர்.</p><p>இந்த தாக்குதல் எதற்காக நடத்தப்பட்டது என்பது குறித்து தேசிய பயங்கரவாத எதிர்ப்பு குழு தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருந்தினர் பட்டியலை வெளியிடவில்லையும், இந்த தாக்குதல் சம்பவத்தில் இலக்கு யார் என்பது குறித்தும் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.</p><p>இதுகுறித்து ரஷிய ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், நிகழ்ச்சி நடைபெற்ற அந்த நிறுவனத்தின் சமையலறையில் வெடிப்பு நிகழ்ந்ததாகக் கூறியுள்ளது.</p><p>இதையடுத்து அந்த பகுதியை சுற்றியுள்ள சாலைகள் சிறிது நேரம் மூடப்பட்டன. நகரத்தின் வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பொது சேவைகள் ரத்து செய்யப்பட்டது.</p><h3><strong>ரஷியா குற்றச்சாட்டு</strong></h3><p>சமீபத்திய ஆண்டுகளில், ரஷிய தலைநகரிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பல மூத்த ரஷ்ய ராணுவ அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.</p><p>அந்தத் தாக்குதல்களுக்கு உக்ரைன் தான் காரணம் என்று ரஷியா குற்றம் சாட்டியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அணை எப்படி இரண்டே நாட்களில் நிரம்பியது? சி.பி.எம். சண்முகம் கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kabini-dam-how-did-the-dam-fill-up-in-just-two-days-cpm-shanmugam-asks</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kabini-dam-how-did-the-dam-fill-up-in-just-two-days-cpm-shanmugam-asks#comments</comments><guid isPermaLink="false">6acfcd40-874a-4846-927f-4501ee55a9f9</guid><pubDate>Sun, 02 Aug 2026 02:02:46 +0000</pubDate><atom:updated>2026-08-02T02:02:46.426Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Kabini Dam,கபினி அணை,Cauvery Water Issue,காவிரி நீர்  பிரச்சனை,பெ சண்முகம்,P Shanmugam</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-29/8c8nn4q9/P-Shanmugam.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CPM P Shanmugam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-29/8c8nn4q9/P-Shanmugam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரி கண்காணிப்புக் குழு கண்காணிக்கும் லட்சணம் இதுதானா? எப்படி இருப்பினும் இயற்கை வென்றது என பெ. சண்முகம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p>காவிரியில் தமிழகத்திற்கு தேவையான நீரை கர்நாடக அரசு திறந்துவிட மறுப்பு தெரிவித்தது. இதனால் மேட்டூர் அணை வரண்டு காணப்படுகிறது. <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-nature-has-prevailed-10000-cusecs-released-from-kabini-dam-water-must-also-be-released-from-the-krishna-raja-sagara-dam">காவிரி</a> மேலாண்மை ஆணையம் நாள் ஒன்றுக்கு 3500 கனஅடி விதம், 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக மாநில அரசுக்கு உத்தரவிட்டது.</p><p>அப்போது அணைகளில் தண்ணீர் இல்லை. தண்ணீர் திறந்து விட முடியாது என்று அம்மாநில முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்தார்். மேலும், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என்று அங்குள்ள எதிர்க்கட்சிகள் மற்றும் கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று போராட்டம் நடத்தினர்.</p><h2>கனமழை</h2><p>இதற்கிடையே கபினி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை மழை பெய்து வருகிறது. இதனால் கபினி அணைக்கு அதிக அளவில் நீர் வந்தது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பிற்காக நேற்று மாலை 5 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. பின்னர் இது 10 ஆயிரம், 25 ஆயிரம் கனஅடி நீர் என அதிகரித்தது.</p><p>குடிநீருக்கே தண்ணீர் இல்லை என்று கர்நாடக மாநில முதல்வர் டி.கே. சிவக்குமார் தெரிவித்தார். தற்போது உடனடியாக அணை நிரம்பியது எப்படி? என சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><h2>இது தொடர்பாக பெ. சண்முகம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-</h2><p>கர்நாடகாவில் உள்ள கபினி அணையிலிருந்து இன்று (நேற்று) வினாடிக்கு 10,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டிருக்கிறது. விரைவில் அணை நிரம்பும் என்று கர்நாடக முதலமைச்சரே சொல்லியிருக்கிறார்.</p><h2>காவிரி கண்காணிப்புக் குழு</h2><p>காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டிற்கு 3,500 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டபோது, கர்நாடக அணைகளில் தண்ணீரே இல்லை, குடிநீருக்கே பற்றாக்குறை ஏற்படும் என்று கூறி கர்நாடக அரசின் பிரதிநிதிகள் தண்ணீர் திறந்து விட முடியாது என்றனர்.</p><p>இரண்டு நாட்களில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அணை எப்படி இரண்டே நாட்களில் நிரம்பியது? காவிரி கண்காணிப்புக் குழு கண்காணிக்கும் லட்சணம் இதுதானா? எப்படி இருப்பினும் இயற்கை வென்றது!</p><p>இவ்வாறு பெ. சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 2 ஆகஸ்ட் 2026: சங்கடஹர சதுர்த்தி
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-2-august-2026-sangada-hara-chaturthi</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-2-august-2026-sangada-hara-chaturthi#comments</comments><guid isPermaLink="false">ba97a484-811e-4097-86fb-113c992978ba</guid><pubDate>Sun, 02 Aug 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-08-02T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/04/25884892-vinayagar4.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ vinayagar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/04/25884892-vinayagar4.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆடி-17 (ஞாயிற்றுக்கிழமை)</p><p>பிறை : தேய்பிறை</p><p>திதி :  சதுர்த்தி இரவு 10.08 மணி பிறகு பஞ்சமி</p><p>நட்சத்திரம் : பூரட்டாதி இரவு 9.14 வரை பிறகு உத்திரட்டாதி</p> <p>யோகம் :  சித்த / அமிர்தயோகம்</p><p>ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை</p><p>எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை</p><p>சூலம் : மேற்கு</p><p>நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை</p> <h2>சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம்</h2><p>சங்கடஹர சதுர்த்தி. சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் நூதன மின்விளக்கு அலங்கார விருஷப வாகனத்தில் திருவீதியுலா. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சனம். பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர், திருவலஞ்சுழி ஸ்ரீ சுவேத விநாயகர், திருநாரையூர் ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார், உச்சிப்பிள்ளையார் ஸ்ரீ மாணிக்க விநாயகர் கோவில், உப்பூர் ஸ்ரீ வெயிலுகந்த விநாயகர் கோவில்களில் காலை ஹோமம், அலங்காரம்.</p> <p>சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர் பெருமாள் கோவில்களில் காலை திருமஞ்சனம். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் சிறப்பு அபிஷேகம்.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - லாபம்</p><p>ரிஷபம் - உதவி</p><p>மிதுனம் - நட்பு</p><p>கடகம் - துணிவு</p><p>சிம்மம் - ஆர்வம்</p><p>கன்னி - ஜெயம்</p> <p>துலாம் - புகழ்</p><p>விருச்சிகம் - பாசம்</p><p>தனுசு - நிம்மதி</p><p>மகரம் - அமைதி</p><p>கும்பம் - யோகம்</p><p>மீனம் - போட்டி</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்றைய நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/petrol-diesel-price-status-in-chennai-today-2</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/petrol-diesel-price-status-in-chennai-today-2#comments</comments><guid isPermaLink="false">e6f19bda-e792-4e19-8672-52397c9232fa</guid><pubDate>Sun, 02 Aug 2026 01:00:03 +0000</pubDate><atom:updated>2026-08-02T01:00:03.415Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல்,Petrol,பெட்ரோல் டீசல் விலை,diesel,Petrol and diesel price,டீசல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/zqvhuwkk/tn-2.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ petrol, diesel]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/zqvhuwkk/tn-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் போர் ஓய்ந்து ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டு மத்திய கிழக்கில் இருந்து கச்சா எண்ணெய் வரத்து அதிகரித்த ஒரு சில நாட்களில் மீண்டும் போர் மூண்டுள்ளதால் சர்வதேச கச்சா எண்ணெய் விலைகளில் மீண்டும் தாக்கம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.</p><h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.</p><h2>பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</h2><p>இந்நிலையில், இன்றைய (02.08.2026 - ஞாயிற்றுக்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>Today Rasipalan | இன்றைய ராசிபலன் 2.8.2026: இவர்களுக்கு யோகமான நாள்</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasipalan-282026-in-tamil</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasipalan-282026-in-tamil#comments</comments><guid isPermaLink="false">739e0a28-82ba-41a0-af8c-37a4784e90af</guid><pubDate>Sun, 02 Aug 2026 00:50:16 +0000</pubDate><atom:updated>2026-08-02T00:50:16.984Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-30/e831d3ae/rasi-2.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-30/e831d3ae/rasi-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>வளர்ச்சி கூடும் நாள். வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். நாட்டுப்பற்று மிக்கவர்களின் நட்பு கிட்டும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.</p><h2>ரிஷபம்</h2><p>யோகமான நாள். சொத்துகளால் லாபம் உண்டு. இல்லத்தில் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். தொழில் தொடர்பாக எடுத்த முயற்சி வெற்றி பெறும்.</p><h2>மிதுனம்</h2><p>பாராட்டும் புகழும் கூடும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். உடல்நலத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.</p><h2>கடகம்</h2><p>யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். எந்தக் காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்ய செயலாது.</p><h2>சிம்மம்</h2><p>மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் விலகும். பகல் இரவாகப் பாடுபட்டதற்கேற்ற பலன் கிடைக்காது. மறதியால் விட்டுப்போன பணிகளை மீண்டும் தொடர்வீர்கள்.</p><h2>கன்னி</h2><p>வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும் நாள். கடன் சுமை குறைய எடுத்த முயற்சி பலன் தரும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.</p><h2>துலாம்</h2><p>சிந்திக்காது செய்த காரியங்களில் கூட சிறப்படையும் நாள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.</p><h2>விருச்சிகம்</h2><p>வருமானம் திருப்தி தரும் நாள். வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். பிள்ளைகளால் பெருமை சேரும்.</p><h2>தனுசு</h2><p>தடைபட்ட காரியங்கள் தானாக நடைபெறும் நாள். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர்.</p><h2>மகரம்</h2><p>திட்டமிட்ட பணிகள் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.</p><h2>கும்பம்</h2><p>நேற்றைய பிரச்சனை இன்று முடிவிற்கு வரும் நாள். நினைத்த காரியம் கைகூடும். பிரார்த்தனைகள் பலித்ததென்று சொல்லி மகிழ்வீர்கள்.</p><h2>மீனம்</h2><p>வரவு திருப்தி தரும் நாள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர்.</p>]]></content:encoded></item><item><title>மக்களை &apos;எறும்புகள்&apos; என சொல்பவர்கள் எல்லாம் நீதிபதிகள் ஆகிறார்கள் - உச்சநீதிமன்ற நீதிபதி வேதனை  </title><link>https://www.maalaimalar.com/news/national/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88</link><comments>https://www.maalaimalar.com/news/national/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88#comments</comments><guid isPermaLink="false">c0a33b4a-f257-4cb8-9147-229c90be4328</guid><pubDate>Sun, 02 Aug 2026 00:16:54 +0000</pubDate><atom:updated>2026-08-02T00:16:54.272Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,judge,Collegium,கொலீஜியம்,உச்சநீதிமன்றம்,நீதிபதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/pq6dvpy3/tn-9.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[  உஜ்ஜல் புயான் ]]></media:title><media:description type="html"><![CDATA[  உஜ்ஜல் புயான் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/pq6dvpy3/tn-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீதிபதிகள் நியமனத்தில் பின்பற்றப்படும் கொலீஜியம் முறையை <a href="https://www.maalaimalar.com/topic/supreme-court">உச்ச நீதிமன்ற</a> நீதிபதி உஜ்ஜல் புயான் கடுமையாக விமர்சித்துள்ளார்.</p><p>நீதிபதிகளின் நியமனம் அல்லது பதவி உயர்வுக்கான எந்தவொரு காரணமும் வெளிப்படையாக குறிப்பிடப்படாதது குறித்து அவர் கேள்வி எழுப்பி உள்ளார். </p><p>Vidhi Centre for Legal Policy என்ற சட்ட ஆராய்ச்சி மையம் நடத்திய கலந்துரையாடலில் பேசிய அவர்,  </p><h2>எறும்புகள்</h2><p>"காரணங்களை வெளிப்படையாக அறிவிக்காததால், சிறப்பாகப் பணியாற்றிய தகுதியான நீதிபதிகளின் உழைப்பு அங்கீகரிக்கப்படாமல் போகிறது.</p><p>பொதுமக்களுக்கும் சட்டத் துறைக்கும் ஒரு குறிப்பிட்ட நீதிபதி ஏன் தேர்வு செய்யப்பட்டார் என்பதை தெரிந்துகொள்ள உரிமை உள்ளது.</p><p>நியமன நடைமுறையில் தெளிவான காரணங்கள் இல்லாதது, எதிர்காலத்தில் குறிப்பிட்ட சமூக மக்களை 'எறும்புகள்' எனக் குறிப்பிடும் அளவுக்கு பொறுப்பற்ற நபர்கள் நீதித்துறைக்குள் நுழைய வழிவகுக்கும். அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான கருத்துகளே அவர்களிடம் இருந்து வெளிப்படும். </p><p>பொதுமக்களின் நம்பிக்கையை தொடர்ந்து தக்கவைக்க நியமனங்களில் முறையான விவாதமும் வெளிப்படைத்தன்மையும் அவசியம்." என தெரிவித்தார். </p><p>2024 இல்  அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியின் சர்ச்சை கருத்தை மறைமுகமாக குறிப்பிட்டு அவர் இவ்வாறு பேசியுள்ளார். </p> <h2>கொலீஜியம்</h2><p>அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டம் குறித்த விசாரணையின் போது, நீதிபதிகளே நீதிபதிகளைத் தேர்வு செய்யும் கொலீஜியம் முறை குறித்தும், அதில் அரசின் தலையீடு குறித்தும் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் நீதிபதிகள் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>ஆகஸ்ட்  4, மதியம் 12 மணி.. E20 பெட்ரோல் விவகாரத்தில் பிரதமர் இல்லம் நோக்கி பேரணி அறிவித்த கெஜ்ரிவால் </title><link>https://www.maalaimalar.com/news/national/e20-petrol-protest-kejriwal-to-lead-august-4-march-to-pm-residence-against-ethanol-blended-fuel-policy</link><comments>https://www.maalaimalar.com/news/national/e20-petrol-protest-kejriwal-to-lead-august-4-march-to-pm-residence-against-ethanol-blended-fuel-policy#comments</comments><guid isPermaLink="false">fb7b468f-3dae-4f5c-935e-f8c10659eb58</guid><pubDate>Sat, 01 Aug 2026 23:11:00 +0000</pubDate><atom:updated>2026-08-01T23:11:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல்,Petrol,ethanol,Arvind Kejriwal,அரவிந்த் கெஜ்ரிவால்,ஆம் ஆத்மி,Aam Aadmi,எத்தனால்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/w0vwbq64/tn-5.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கெஜ்ரிவால் ]]></media:title><media:description type="html"><![CDATA[ கெஜ்ரிவால் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/w0vwbq64/tn-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>எத்தனால் கலந்த <a href="https://www.maalaimalar.com/news/national/e20-fuel-policy-petrol-would-have-hit-rs125-per-litre-during-iran-war-centre">E20 பெட்ரோல் </a>கொள்கையை எதிர்த்து பிரதமர் இல்லம் நோக்கி ஆகஸ்ட் 4இல் முற்றுகைப் போராட்டத்தை அறிவித்துள்ளார் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால். </p><p>E20 பெட்ரோலை பயன்படுத்த வேண்டும் என மக்கள் மீதான திணிப்பை எதிர்த்து  ஆம் ஆத்மி ஒருங்கிணைத்த  மக்கள் சந்திப்பு  கூட்டம் நேற்று டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப் அருகே நடந்தது. </p><p>இதில் உரையாற்றிய கெஜ்ரிவால், " E20 கொள்கையை திரும்பப்பெற வலியுறுத்தி பிரதமருக்கு அனுப்ப மனுவில் கையெழுத்திடுமாறு ஏற்கனவே கோரியிருந்தேன். </p><p>2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இணையவழியில் கையெழுத்திட்டுள்ளனர். அதன் அச்சு பிரதிகளை எடுத்துள்ளேன். வரும் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4) மதியம் 12:00 மணிக்கு, பிரதமர் இல்லத்திற்கு நேரடியாகச் சென்று இந்த மனுவை வழங்க உள்ளேன்."</p><p>இப்போராட்டத்திற்கு மிகப்பெரிய அளவில் கூட்டம் தேவையில்லை. காவல்துறையின் தடிஅடிக்கு அஞ்சாத, சிறை செல்லத் தயங்காத 100 தொண்டர்களை மட்டுமே என்னுடன் அழைத்துச் செல்ல உள்ளேன்." என தெரிவித்துள்ளார். </p> <h2>கோரிக்கைகள்</h2><p>E20 பெட்ரோல் திட்டத்திற்கு எதிரான இப்போராட்டத்தில் மத்திய அரசுக்கு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.</p><p>பெட்ரோல் பங்குகளில் E20 பெட்ரோல் அல்லது எத்தனால் கலக்கப்படாத சுத்தமான பெட்ரோல் ஆகிய இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற உரிமையை மக்களுக்கு வழங்க வேண்டும். E20 கலப்பு பெட்ரோலின் விலையைசுத்தமான பெட்ரோலை விடக் குறைவாக நிர்ணயிக்க வேண்டும். நாட்டின் ஒட்டுமொத்த பெட்ரோல் விலையையும் லிட்டருக்கு ரூ. 84க்குக் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதே ஆம் ஆத்மியின் கோரிக்கைகள் என அவர் தெரிவித்துள்ளார்.</p><p>இதனிடையே, "ஒரு அமைச்சகம் E20 நல்லது என்கிறது, மற்றொரு அமைச்சகம் பாதிப்பு என்கிறது. முறையான ஆய்வுகள் இல்லாமல் வாகனங்கள் பழுதடைவதையும், மைலேஜ் குறைவதையும் அரசு மறைக்கிறது" எனவும் அவர் அவர் தெரிவித்தார்.</p><h2>மத்திய அரசு விளக்கம்</h2><p>இதனிடையே, E20 பெட்ரோல் குறித்த புகார்களை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.</p><p>கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல்வேறு கட்ட ஆய்வுகள் மற்றும் சோதனை ஓட்டங்களுக்குப் பிறகே E20 எரிபொருள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.</p><p>நாட்டில் தற்போது 20 கோடிக்கும் அதிகமான இருசக்கர வாகனங்களும், 3 கோடிக்கும் அதிகமான கார்களும் எத்தனால் கலந்த பெட்ரோலில் எவ்வித முறையான இயந்திரப் பழுதுகளுமின்றி இயங்கி வருகின்றன.</p><p>E20 பெட்ரோலால் வாகனங்களின் என்ஜின்கள் பரவலாகப் பாதிக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எந்தவொரு நிரூபிக்கப்பட்ட ஆதாரமும் இல்லை என்று அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் போட்டிகள்:  தடகள வீரர் குல்வீர் சிங் வெண்கலம்.. இதுவரை வென்ற இந்திய வீரர்கள் முழு லிஸ்ட்</title><link>https://www.maalaimalar.com/sports/commonwealth-games-double-medal-gulveer-singh-wins-5000m-bronze-indias-39th-medal</link><comments>https://www.maalaimalar.com/sports/commonwealth-games-double-medal-gulveer-singh-wins-5000m-bronze-indias-39th-medal#comments</comments><guid isPermaLink="false">f0ddbaa9-f6cd-4653-99ab-04146ee3830d</guid><pubDate>Sat, 01 Aug 2026 22:08:18 +0000</pubDate><atom:updated>2026-08-01T22:08:18.461Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Commonwealth games,காமன்வெல்த் போட்டி,ATHLETICS,தடகளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/hdpuw6j3/tn-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ குல்வீர் சிங்]]></media:title><media:description type="html"><![CDATA[ குல்வீர் சிங்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/hdpuw6j3/tn-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்து வரும் 23வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்திய தடகள வீரர் குல்வீர் சிங் ஆடவர் 5000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் குல்வீர் சிங் வெண்கலப் பதக்கம் வென்றார்.</p><h2>வெண்கலம்</h2><p>விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் குல்வீர் நான்காவது இடத்திலிருந்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறி, பின்னர் நூலிழையில் மூன்றாவது இடத்தைத் தக்கவைத்து 13 நிமிடம் 24.95 வினாடிகளில் இலக்கை அடைந்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். இது இந்தியாவின் 39வது பதக்கமாகும்.  </p><p>கென்யாவின் மேத்யூ கிப்சும்பா கிப்சாங் 13:23 நிமிட நேரத்தில் தங்கப் பதக்கத்தை வென்றார். ஆஸ்திரேலியாவின் ராபின்சன் , 13:24 நிமிட நேரத்தில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.</p><p>2026 உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் குல்வீர் தற்போது இரண்டு பதக்கங்களைப் பெற்றுள்ளார். </p> <h2>சாதனை</h2><p>முன்னதாக 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி பதக்கம் வென்று அந்த பிரிவில் பதக்கம் வெல்லும் முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை குல்வீர் சிங் படைத்தார்.</p><p>தற்போது 5000 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலம் வென்றதன் மூலம், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் ஒரே ஆண்டில் இரண்டு தடகளப் பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை குல்வீர் சிங் பெற்றார்.</p><p>2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை பதக்கம் வென்ற இந்தியர்கள்</p><h2>தங்கம்</h2><p>மீராபாய் சானு – பெண்கள் 48 கிலோ (பளுதூக்குதல்)</p><p>ஷர்மிளா தன்கர் – பெண்கள் குண்டு எறிதல் F57 (பாரா தடகளம்)</p><p>திலீப் மஹாது காவிட் - ஆண்கள் 100 மீ T47 (பாரா தடகளம்)</p><p>அஸ்மிதா டே - பெண்கள் 48 கிலோ (ஜூடோ)</p><p>ஹர்ஷ் சிங் - ஆண்கள் - 60 கிலோ (ஜூடோ)</p><p>பிரீத்தி பவார் - பெண்கள் 54 கிலோ (குத்துச்சண்டை)</p><p>ஜெய்ஸ்மின் லம்போரியா - பெண்கள் 57 கிலோ (குத்துச்சண்டை)</p><p>சோமன் ரானா - ஆண்கள் குண்டு எறிதல் F57 (பாரா தடகளம்)</p><p>சாக்ஷி சவுத்ரி - பெண்கள் 51 கிலோ (குத்துச்சண்டை)</p><p>பிரியா கங்காஸ் - பெண்கள் 60 கிலோ (குத்துச்சண்டை)</p><p>அருந்ததி சவுத்ரி - பெண்கள் 70 கிலோ (குத்துச்சண்டை)</p><p>சச்சின் சிவாச் - ஆண்கள் 60 கிலோ (குத்துச்சண்டை)</p><p>அங்குஷ் பங்கல் - ஆண்கள் 80 கிலோ (குத்துச்சண்டை)</p> <h2>வெள்ளி</h2><p>ரிஷிகாந்த சிங் – ஆண்கள் 60 கிலோ (பளுதூக்குதல்)</p><p>முத்துப்பாண்டி ராஜா – ஆண்கள் 65 கிலோ (பளுதூக்குதல்)</p><p>ஞானேஸ்வரி யாதவ் – பெண்கள் 53 கிலோ (பளுதூக்குதல்)</p><p>வல்லூரி அஜய் பாபு – ஆண்கள் 79 கிலோ (பளுதூக்குதல்)</p><p>ஹர்ஜிந்தர் கவுர் – பெண்கள் 69 கிலோ (பளுதூக்குதல்)</p><p>சர்வேஷ் குஷாரே – ஆண்கள் உயரம் தாண்டுதல் (தடகளம்)</p><p>குல்வீர் சிங் – ஆண்கள் 10,000 மீ (தடகளம்)</p><p>எம். ஸ்ரீசங்கர் - ஆண்கள் நீளம் தாண்டுதல் (தடகளம்)</p><p>முகமது பாசில் - ஆண்கள் 100 மீ T47 (பாரா தடகளம்)</p><p>லவ்பிரீத் சிங் - ஆண்கள் +110 கிலோ (பளுதூக்குதல்)</p><p>யாமினி மௌர்யா - பெண்கள் -57 கிலோ (ஜூடோ)</p><p>நீரஜ் சோப்ரா - ஆண்கள் ஈட்டி எறிதல் (தடகளம்)</p><p>பிரவீன் சித்ரவேல் - ஆண்கள் மும்முறை தாண்டுதல் (தடகளம்)</p><p>ஜடுமணி சிங் மண்டெங்பாம் - ஆண்கள் 55 கிலோ (குத்துச்சண்டை)</p><p>சுபம் ஜூயல் - ஆண்கள் குண்டு எறிதல் F57 (பாரா தடகளம்)</p><p>லவ்லினா போர்கோஹைன் - பெண்கள் 75 கிலோ (குத்துச்சண்டை)</p><p>நரேந்தர் பெர்வால் - ஆண்கள் +90 கிலோ (குத்துச்சண்டை)</p> <h2>வெண்கலம்</h2><p>ஜந்து குமார் – ஆண்கள் ஹெவிவெயிட் (பாரா பவர்லிஃப்டிங்)</p><p>பிந்தியராணி தேவி – பெண்கள் 58 கிலோ (பளுதூக்குதல்)</p><p>ஷில்பா கே. ஷைலா – பெண்கள் குண்டு எறிதல் F57 (பாரா தடகளம்)</p><p>சீமா கலிராம்னா - பெண்கள் வட்டு எறிதல் (தடகளம்)</p><p>தேஜஸ்வின் சங்கர் - டெகாத்லான் (தடகளம்)</p><p>யாஷ் வீர் சிங் - ஆண்கள் ஈட்டி எறிதல் (தடகளம்)</p><p>செல்வ பிரபு திருமரன் - ஆண்கள் Triple Jump (தடகளம்)</p><p>உன்னதி சர்மா - பெண்கள் -57 கிலோ (ஜூடோ)</p><p>குல்வீர் சிங் - ஆண்கள் 5000 மீட்டர் (தடகளம்)</p> ]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் போட்டிகள்: சச்சின் சிவாச், அங்குஷ் பங்கல் அசத்தல்.. குத்துச்சண்டையில் 7 தங்கம் குவித்த இந்தியா
</title><link>https://www.maalaimalar.com/sports/india-boxing-wins-seven-golds-sachin-and-ankush-clinch-titles-at-glasgow-commonwealth-games</link><comments>https://www.maalaimalar.com/sports/india-boxing-wins-seven-golds-sachin-and-ankush-clinch-titles-at-glasgow-commonwealth-games#comments</comments><guid isPermaLink="false">0df7ffe3-fcdf-4bea-b65a-165266860f6f</guid><pubDate>Sat, 01 Aug 2026 21:05:57 +0000</pubDate><atom:updated>2026-08-01T21:05:57.658Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Commonwealth games,காமன்வெல்த் போட்டி,Boxing,குத்துச்சண்டை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/h7nl8b31/tn-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அங்குஷ் பங்கல், சச்சின் சிவாச் ]]></media:title><media:description type="html"><![CDATA[ அங்குஷ் பங்கல், சச்சின் சிவாச் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/h7nl8b31/tn-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்து வரும் 23வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் <a href="https://www.maalaimalar.com/sports/commonwealth-boxing-india-wins-4-gold-and-1-silver-medals-in-glasgow">குத்துச்சண்டை </a>பிரிவில் இந்தியாவுக்கு பதக்கங்கள் குவிந்து வருகின்றன. </p><h2>சச்சின் சிவாச்</h2><p>ஆடவர் குத்துச்சண்டை 60 கிலோ எடைப்பிரிவில் சச்சின் சிவாச் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். </p><p>நமீபியாவின் டிரையாகின் மார்னிங் என்ட்வெலோவை, 3-2 என்ற புள்ளிக்கணக்கில் சச்சின் தோற்கடித்தார்.  </p><p>சச்சின், தலைக்கு மேல் இருந்து ஒரு சக்திவாய்ந்த கிராஸ் பஞ்ச் குத்து விட்டதால், டிரையாகின் மார்னிங் என்ட்வெலோ தரையில் விழுந்தார். </p><p>நடுவர் எண்ணி முடிக்கும் வரை அவர் எழுந்து கொள்ளாத நிலையில் சச்சின் வென்றதாக அறிவிக்கப்பட்டது.  இது குத்துச்சண்டையில் இந்தியா பெறும் ஆறாவது பதக்கமாகும்.  </p> <h2>அங்குஷ் பங்கல்</h2><p>குத்துச்சண்டையில் இந்தியாவின் ஏழாவது தங்கத்தை அங்குஷ் பங்கல் வென்றுள்ளார்</p><p>80 கிலோ பிரிவில் இங்கிலாந்தைச் சேர்ந்த டிமேஜி ஷிட்டுவை எதிர்த்து போட்டியிட்ட இவர் முதல் சுற்றில் 0-5 என்ற கணக்கில் தோல்வியடைந்தாலும், இரண்டாவது மற்றும் இறுதிச் சுற்றில் நடுவர்களின் மாறுபட்ட தீர்ப்பால் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.</p> <h2>நரேந்தர் பெர்வால்  </h2><p>ஆடவர் 90 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் நரேந்தர் பெர்வால், இங்கிலாந்தின் டமர் தாமஸிடம் 0-5 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.</p> <h2>ஏழு தங்கம்</h2><p>2026 கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய குத்துச்சண்டை அணி ஏழு தங்கம் மற்றும் மூன்று வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளது.</p><p>முன்னதாக பெண்கள் பிரிவில் குத்துச்சண்டையில் அருந்ததி சௌத்ரி, பிரீத்தி பவார், லம்போரியா, சாக்ஷி சௌத்ரி ஆகியோர் தங்கம் வென்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>12 வயது சிறுமிகள் தலையில் தாக்கிய போலீஸ்.. பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என அபிஜித் தீப்கே வலியுறுத்தல் </title><link>https://www.maalaimalar.com/news/national/modi-apology-row-cjp-founder-demands-pm-apologise-for-police-assault-on-12-year-old-girls</link><comments>https://www.maalaimalar.com/news/national/modi-apology-row-cjp-founder-demands-pm-apologise-for-police-assault-on-12-year-old-girls#comments</comments><guid isPermaLink="false">ffdeeb2e-9dfa-4f04-8ab9-56dbf5463da9</guid><pubDate>Sat, 01 Aug 2026 20:03:16 +0000</pubDate><atom:updated>2026-08-01T20:03:16.857Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,பிரதமர் மோடி,CJP,அபிஜித் தீப்கே,சிஜேபி போராட்டம்,Abhijit Deepke</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/3pdnp39l/tn-4.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மோடி ]]></media:title><media:description type="html"><![CDATA[ மோடி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/3pdnp39l/tn-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜூலை 20 நாடாளுமன்றம் பேரணியில் கலந்துகொண்டதற்காக 12 வயது சிறுமிகள் மீது கூட போலீசார்  தாக்குதல் நடத்தியதற்கு பிரதமர் மோடி மன்னிப்பு கோரியாக வேண்டும் என சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே வலியுறுத்தியுள்ளார். </p><h2>மோடி வீடியோ </h2><p>ஜந்தர் மந்தர் போராட்டத்தில் தமக்கு எதிராகவும், தமது மறைந்த தாயார் குறித்தும் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்திய மாணவர்களை மன்னிப்பதாகப் பிரதமர் மோடி இன்ஸ்டாகிராமில் செல்பி <a href="https://www.maalaimalar.com/news/national/rahul-slams-the-prime-minister-for-offering-an-apology-to-studentsan-apology-that-should-have-been-sought-from-him">வீடியோ </a>ஒன்றை வெளியிட்டார். </p><p>அதில், "எனக்கு எதிராகவும், எனது மறைந்த தாயாருக்கு எதிராகவும் எழுப்பப்பட்ட அவதூறு முழக்கங்கள் என்னை ஆழமாகப் காயப்படுத்தின. இருப்பினும், தவறு செய்யும் இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்கும் தண்டனையைத் தேடாமல், அவர்கள் தங்கள் தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ளவும், அவர்களைச் சரியான பாதையில் வழிகாட்டவும் சமூகம் வாய்ப்பளிக்க வேண்டும். நான் அந்த மாணவர்களை மன்னிக்கிறேன்," எனப் பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.</p> <h2>தீப்கே வீடியோ</h2><p>தன்னை இழிவாக பேசிய மாணவர்களை மன்னிப்பதாக மோடி நேற்று முன்தினம் இரவு இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட செல்பி வீடியோவை விமர்சித்து நேற்று தீப்கே எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.</p><p>அதில் பேசும் அவர், "நேற்று(நேற்று முன்தினம்) மோடி ஜி வீடியோவில் அவர் சிறுவர்களை மன்னிப்பதாக கூறியிருந்தார் . இன்றிரவு அவர் மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டு, ஜூலை 20 மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடிக்கு மன்னிப்பு கேட்பார் என நம்புகிறேன்.</p><p>12 வயது சிறுமிகளின் தலையில் போலீஸ் தாக்கியது. பெண்களின் ஆடைகள் கிழிக்கப்ட்டன. பெண்களின் அந்தரங்க உறுப்புகளையும் போலீசார் தாக்கினர். எனவே மோடி, போலீசாரால் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.</p> <h2>ராகுல் பதிவு</h2><p>மாணவர்களை மன்னித்துவிடுவதாக அவர் பேசியதற்கு பதில் அளிக்கும் வகையில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.</p><p>அதில் அவர், "பெற்றோர் தனது பிள்ளையின் மறைவினால் படும் துக்கத்தை விட பெரிய வலி வேறேதுமில்லை. தங்கள் குடும்பத்தில் இளம் வயதுடைய ஒருவரை பறிகொடுத்த வலி அவர்களை விட்டு என்றும் நீங்காது. அதோடு சிதைந்த கல்வி முறை குறித்த தீவிரமான கேள்வியும் அவர்களை விட்டு நீங்காதிருக்கிறது.</p><p>வினாத்தாள் கசிவுகள், தேர்வுகள் ரத்து ஆகியவரை பல வருட கடின உழைப்பை ஒரே இரவில் அழிதந்துவிடுகிறது. நியாயமற்ற ஒரு சிஸ்டத்தை வைத்துக்கொண்டு, நமது மாணவர்கள் நியாயமாக உழைக்க வலியுறுத்தப்படுகின்றனர்.</p><p>இதற்கு மத்தியில் நமது பிரதமருக்கு மாணவர்களை மன்னித்துவிடுவதாக நா கூசாமல் சொல்கிறார். தங்கள் பிள்ளையை இழந்த ஒரு பெற்றோரை கூட அவர் இதுநாள்வரை சந்திக்கவில்லை. வினாத்தாள் கசிவால் தங்கள் எதிர்காலத்தை பறிகொடுத்த ஒரு மாணவருடன் கூட அமர்ந்து அவர் பேசவில்லை. இந்தியாவின்</p><p>மாணவச் செல்வங்களுக்கு அவர் மன்னிப்பு வழங்க தேவையில்லை. அவர் தான் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டியவர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் போட்டிகள்: குத்துச்சண்டையில் மேலும் ஒரு தங்கம்... அருந்ததி சௌத்ரி அசத்தல் 
</title><link>https://www.maalaimalar.com/sports/commonwealth-boxing-india-wins-4-gold-and-1-silver-medals-in-glasgow</link><comments>https://www.maalaimalar.com/sports/commonwealth-boxing-india-wins-4-gold-and-1-silver-medals-in-glasgow#comments</comments><guid isPermaLink="false">ef1812a5-5c0f-411f-8313-a2ccc82dd515</guid><pubDate>Sat, 01 Aug 2026 19:09:33 +0000</pubDate><atom:updated>2026-08-01T19:09:33.365Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Commonwealth games,காமன்வெல்த் போட்டி,குத்துச்சண்டை,boxing,</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/06xofimi/tn-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அருந்ததி சௌத்ரி ]]></media:title><media:description type="html"><![CDATA[ அருந்ததி சௌத்ரி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/06xofimi/tn-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்து வரும் 23வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் <a href="https://www.maalaimalar.com/sports/glasgow-commonwealth-lovlina-borgohain-preeti-pawar-won-gold">குத்துச்சண்டை </a>பிரிவில் இந்தியாவுக்கு 4 தங்கப் பதக்கம், 1 வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. </p><h2>குத்துச் சண்டை </h2><p>குத்துச் சண்டை பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த 10 பேர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.  </p><p>நேற்று மாலை தொடங்கிய போட்டிகளில்,  பிரீத்தி பவார் மற்றும் லம்போரியா ஆகியோர் தங்கம் வென்று அசத்தினர். சாக்ஷி சவுத்ரி 51 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார். </p> <h2>அருந்ததி சவுத்ரி</h2><p>இதையடுத்து மகளிர் 70 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை அருந்ததி சவுத்ரி தங்கம் வென்றுள்ளார்.</p><p>இறுதிப் போட்டியில், இங்கிலாந்தைச் சேர்ந்த தனது எதிராளியான சாண்டெல் ரீடை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி அவர் தங்கப் பதக்கத்தை வென்றார்.</p><h2>லவ்லினா</h2><p>அதேபோல மகளிர் 75 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன், ஆஸ்திரேலிய வீராங்கனையிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை தக்க வைத்தார்.</p><p>காமன்வெல்த் போட்டியில் இதுவரை இந்தியா 11 தங்கம், 16 வெள்ளி, 8 வெண்கலம் என 35 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.</p><p>நேற்று குத்துச்சண்டையில் மட்டும் 10 பதக்கங்களை உறுதி செய்துள்ளனர். இதில் 6 வீராங்கனைகள் மற்றும் 4 வீரர்கள் ஆவார்கள்.</p> ]]></content:encoded></item><item><title>பாகிஸ்தானில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த உலகப்புகழ் மலையேற்ற வீரர்.. யார் இந்த நிர்மல் புர்ஜா?</title><link>https://www.maalaimalar.com/news/world/nepal-climber-nirmal-purja-confirmed-dead-in-karakoram-broad-peak-avalanche</link><comments>https://www.maalaimalar.com/news/world/nepal-climber-nirmal-purja-confirmed-dead-in-karakoram-broad-peak-avalanche#comments</comments><guid isPermaLink="false">85733e94-4ff7-4e73-b851-dbfebe51bafb</guid><pubDate>Sat, 01 Aug 2026 18:20:44 +0000</pubDate><atom:updated>2026-08-01T18:20:44.886Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Pakistan,Avalanche,பனிச்சரிவு,மலையேற்றம்,Mountaineering</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/75wk8kb8/tn.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நிர்மல் புர்ஜா]]></media:title><media:description type="html"><![CDATA[ நிர்மல் புர்ஜா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/75wk8kb8/tn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாளத்தை பூர்வீகமாக கொண்ட புகழ்பெற்ற மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா பாகிஸ்தானில் மலையேற்றத்தின்போது ஏற்பட்ட <a href="https://www.maalaimalar.com/news/world/pakistan-avalanche-nirmal-purja-among-10-climbers-missing-after-broad-peak-snow-slide">பனிச்சரிவில்</a> சிக்கி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. </p><p> கடந்த ஜூலை 30 அன்று பாகிஸ்தானின் கரகோரம் மலைத்தொடரின் பிராட் பீக் சிகரத்தை ஏறுகையில் ஏற்பட்ட பனிச்சரிவில் 'நிம்ஸ் டாய்' என்று அழைக்கப்படும் நிர்மல் புர்ஜா உட்பட 10 கொண்ட குழு காணாமல் போனது.</p><p>தேடுதல் பணிகளின்போது நிர்மல் புர்ஜா உடலுடன் சேர்த்து மேலும் 5 வீரர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மற்றவர்களைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.</p> <h2>பனிச்சரிவு</h2><p>பாகிஸ்தானின் காரகோரம் மலைத்தொடரில் 8,047 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பிராட் பீக் சிகரம் உலகின் 12வது மிக உயரிய சிகரம் ஆகும்.</p><p>ஜூலை 30, நண்பகல் வேளையில் பிராட் பீக் சிகரத்தின் உச்சியை அடையும் நோக்கில், சுமார் 6,600 மீட்டர் உயரத்தில் வீரர்கள் ஏறிக் கொண்டிருந்தபோது இந்த பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.</p><p>பனிச்சரிவுக்கு பின் மலையேற்றக் குழுவினருடனான அனைத்துத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளது.</p><p>பாகிஸ்தான் மலையேற்ற அமைப்பான பாகிஸ்தான் அல்பைன் கிளப் தகவலின்படி, மாயமான 10 பேர் கொண்ட குழுவில் நிர்மல் புர்ஜா உட்பட நேபாளத்தை சேர்ந்த 5 மலையேற்ற வீரர்கள், பாகிஸ்தானின் ஹன்சாவை சேர்ந்த சுஹைல் சாகி, ஓமன் நாட்டை சேர்ந்த நதீரா, அமெரிக்காவை சேர்ந்த மல்லோரி கேஸ், சீனாவை சேர்ந்த வாங் மற்றும் மேலும் ஒரு வெளிநாட்டு மலையேற்ற வீரர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.</p> <h2>யார் இந்த நிர்மல் புர்ஜா?</h2><p>நேபாளத்தில் பிறந்த நிர்மல் புர்ஜா, பிரிட்டிஷ் ராணுவத்தின் கூர்கா படைப்பிரிவிலும், பின்னர் இங்கிலாந்தின் சிறப்புப் படகு சேவையிலும் (SBS) பணியாற்றியவர்.</p><p>2019இல் உலகின் 8,000 மீட்டருக்கு மேற்பட்ட 14 சிகரங்களையும் வெறும் 6 மாதங்களில் ஏறி உலக சாதனை படைத்தார்.</p><p>இவருடைய இந்த சாதனை நெட்பிலிக்ஸின் '14 Peaks: Nothing Is Impossible' என்ற ஆவணப்படமாக வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.</p><p>8,000 மீட்டர் உயரமுள்ள அனைத்து 14 சிகரங்களையும் மூன்று முறை ஏறி முடித்த முதல் மனிதர் என்ற புதிய வரலாற்று சாதனையை படைக்கும் முயற்சியில் அவர் இந்த மலையேற்றத்தை மேற்கொண்டிருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>கத்தாரில் இருந்து LNG ஏற்றிச்சென்ற கப்பல் மீது  ஏவுகணை தாக்குதல்.. ஹார்முஸில் பதற்றம் 
</title><link>https://www.maalaimalar.com/news/world/hormuz-strait-missile-scare-lng-tanker-attacked-amid-rising-us-iran-maritime-tensions</link><comments>https://www.maalaimalar.com/news/world/hormuz-strait-missile-scare-lng-tanker-attacked-amid-rising-us-iran-maritime-tensions#comments</comments><guid isPermaLink="false">696ee06b-93ac-4f9a-85d4-fbd759e2a9e3</guid><pubDate>Sat, 01 Aug 2026 17:47:59 +0000</pubDate><atom:updated>2026-08-01T17:47:59.613Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கத்தார்,Qatar,ஹார்முஸ் ஜலசந்தி,Strait of Hormuz,LNG,எல்என்ஜி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/o7m24alg/tn-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கோப்புப் படம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ கோப்புப் படம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/o7m24alg/tn-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/us-israel-planning-to-bombard-energy-related-targets-in-iran-report">அமெரிக்கா - ஈரான் </a>இடையே நாளுக்கு நாள் போரின் தீவிரம் அதிகரித்து வரும் சூழலில் மத்திய கிழக்கில் இருந்து பிற நாடுகளுக்கு முக்கிய ஏற்றுமதி பாதையாக இருக்கும் ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. </p><p>ஹார்முஸ் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக அமெரிக்காவும், தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக ஈரானும் உரிமை கொண்டாடி வருவகால் கப்பல் போக்குவரத்தில் குழப்பம் ஏற்பட்டு மீண்டும் உலகளாவிய நெருக்கடிக்கு வித்திடத் தொடங்கியுள்ளது. </p><p>இந்நிலையில் கத்தாரில் இருந்து திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்என்ஜி) ஏற்றிச் சென்ற கேஸ்லாக் ஷாங்காய் என்ற டேங்கர் கப்பல், ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும்போது ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. </p> <h2>தாக்குதல்</h2><p>கடந்த ஜூலை 27 வாக்கில் கத்தாரில் எல்என்ஜியை நிரப்பிக்கொண்டு புறப்பட்ட நேற்று (ஜூலை 31) ஹார்முஸ் ஜலசந்தியின் வட புற நுழைவு பாதை அருகே கப்பல் சென்றபோது அதன் சிக்னல் துண்டிக்கப்பட்டது.</p><p>கிரீஸ் நாட்டை சேர்ந்த நிறுவனமொன்றுக்கு சொந்தமானது இக்கப்பல். கப்பல் ஏவுகணையால் தாக்கப்பட்டதை அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது. இதில் யாரும் காயமடையவில்லை என்றும் கப்பலில் ஏவுகணை தாக்குதலால் ஏற்பட்ட தீ உடனடியாக அணைக்கப்பட்டது என்றும் அந்நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.</p><p>இந்த தாக்குதலுக்கு ஈரானோ, ஏமனின் ஹவுதிக்களோ யாரும் பொறுப்பேற்கவில்லை.</p> <h2>தொடர் தாக்குதல்கள்</h2><p>இந்த வார தொடக்கத்தில், புதன் அன்று, கேஸ்லாக் நிறுவனத்தினுடைய கேஸ்லாக் சேலம் என்ற மற்றொரு எல்என்ஜி கப்பல் எகிப்து துறைமுகத்தின் வடக்கே Damietta என்ற இடத்தில் வைத்து தாக்குதலுக்கு உள்ளானது. இந்த தாக்குதலுக்கும் யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.</p><p>முன்னதாக ஜூலை மாத தொடக்கத்தில் கத்தாரை சேர்ந்த எல்என்ஜி டேங்கர் கப்பல் ஹார்முஸில் தாக்குதலுக்கு உள்ளானது. உலகின் 2வது பெரிய எல்என்ஜி ஏற்றுமதியாளராக கத்தார் விளங்குவது குறிப்பிடத்தக்கது.</p><p>இதனிடையே ஹார்முஸ்க்கு அடுத்தபடியாக முக்கிய ஏற்றுமதி பாதையாக விளங்கும் செங்கடலின் பாப் அல் மாண்டெப் ஜலசந்தியில் ஏமனை சேர்ந்த ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக சவுதி அரேபியாவிலிருந்து வரும் கப்பல்கள் அவர்களுக்கு இலக்குகளாகி வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>மன்னிப்பு கேட்க வேண்டிய பிரதமர் மாணவர்களை மன்னிப்பதாக கூறுவது... ராகுல் சாடல்   </title><link>https://www.maalaimalar.com/news/national/rahul-slams-the-prime-minister-for-offering-an-apology-to-studentsan-apology-that-should-have-been-sought-from-him</link><comments>https://www.maalaimalar.com/news/national/rahul-slams-the-prime-minister-for-offering-an-apology-to-studentsan-apology-that-should-have-been-sought-from-him#comments</comments><guid isPermaLink="false">3a885046-3f43-4807-a7e4-fff9f513c796</guid><pubDate>Sat, 01 Aug 2026 17:08:44 +0000</pubDate><atom:updated>2026-08-01T17:08:44.205Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Prime Minister Modi,பிரதமர் மோடி,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/k7rpiozm/tn-1.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரதமர், ராகுல் ]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர், ராகுல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/k7rpiozm/tn-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் உள்ளிட்ட வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லியில் நடந்த போராட்டங்களின்போது பிரதமர் மோடியை இழிவாக பேசியதாக சில இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. </p><h2>மோடி வீடியோ</h2><p>இதனிடையே நேற்று இன்டாவில் செல்பி வீடியோ மூலம் பேசிய பிரதமர் மோடி, "தன்னைப் பற்றியும் தனது தாயை பற்றியும் தவறாக பேசியவர்களை நான் மன்னிக்கிறேன். அவர்கள் நமது நாட்டின் இளம் தலைமுறையினர். அவர்களின் தவறை திருத்தி நல்வழிப்படுத்துவது நம் கடமை" என பேசியிருந்தார். </p><h2>ராகுல் பதிவு</h2><p>இந்நிலையில் மாணவர்களை மன்னித்துவிடுவதாக அவர் பேசியதற்கு பதில் அளிக்கும் வகையில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.</p><p>அதில் அவர், "பெற்றோர் தனது பிள்ளையின் மறைவினால் படும் துக்கத்தை விட பெரிய வலி வேறேதுமில்லை. தங்கள் குடும்பத்தில் இளம் வயதுடைய ஒருவரை பறிகொடுத்த வலி அவர்களை விட்டு என்றும் நீங்காது. அதோடு சிதைந்த கல்வி முறை குறித்த தீவிரமான கேள்வியும் அவர்களை விட்டு நீங்காதிருக்கிறது.</p><p>வினாத்தாள் கசிவுகள், தேர்வுகள் ரத்து ஆகியவரை பல வருட கடின உழைப்பை ஒரே இரவில் அழிதந்துவிடுகிறது. நியாயமற்ற ஒரு சிஸ்டத்தை வைத்துக்கொண்டு, நமது மாணவர்கள் நியாயமாக உழைக்க வலியுறுத்தப்படுகின்றனர்.</p><p>இதற்கு மத்தியில் நமது பிரதமருக்கு மாணவர்களை மன்னித்துவிடுவதாக நா கூசாமல் சொல்கிறார். தங்கள் பிள்ளையை இழந்த ஒரு பெற்றோரை கூட அவர் இதுநாள்வரை சந்திக்கவில்லை. வினாத்தாள் கசிவால் தங்கள் எதிர்காலத்தை பறிகொடுத்த ஒரு மாணவருடன் கூட அமர்ந்து அவர் பேசவில்லை. இந்தியாவின்</p><p>மாணவச் செல்வங்களுக்கு அவர் மன்னிப்பு வழங்க தேவையில்லை. அவர் தான் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டியவர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Nothing is more painful than seeing a parent grieve their child.<br><br>Behind every young life lost is a family carrying pain that will never leave them - and serious questions about a broken education system. <br><br>Leaked papers. Cancelled exams. Years of preparation destroyed overnight.… <a href="https://t.co/nzQE61zP14">pic.twitter.com/nzQE61zP14</a></p>&mdash; Rahul Gandhi (@RahulGandhi) <a href="https://x.com/RahulGandhi/status/2083502109107093610?ref_src=twsrc%5Etfw">August 1, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>சிறுமி மன்னிப்பு </h2><p>இதனிடையே டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி அவதூறாகவும், அசிங்கமான முழக்கங்களையும் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு உள்ளான 15 வயதுச் சிறுமி, இணையத்தில் ஒரு வீடியோ வெளியீட்டின் மூலம்<a href="https://www.maalaimalar.com/news/national/this-is-my-first-and-last-mistake-15-year-old-girl-apologises-for-remarks-against-pm-modi"> பகிரங்க மன்னிப்பு</a> கேட்டுள்ளார்.</p><p>"எனக்கு 15 வயதுதான் ஆகிறது. நான் செய்த தவறு மன்னிப்புக்கு உரியது அல்ல. நான் மிகவும் வெட்கப்படுகிறேன். என்னால் என்னை நிமிர்ந்து கூடப் பார்க்க முடியவில்லை. இதுவே எனது முதல் மற்றும் கடைசித் தவறாக இருக்கும்," என்று கைகளைக் கூப்பியவாறு நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோரினார்.</p>]]></content:encoded></item><item><title>திருப்பதி கோவிலில் வேளாண்மை அறிக்கை நகலுடன் அமைச்சர் சாமி தரிசனம் - இணையத்தில் புயலை கிளப்பிய விவாதம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tiruppati-kovilil-velanmai-nidhi-nilai-arikkai-internettil-kadumaiyana-vivatham</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tiruppati-kovilil-velanmai-nidhi-nilai-arikkai-internettil-kadumaiyana-vivatham#comments</comments><guid isPermaLink="false">7f102b3c-dc4a-4d5d-8fcd-6f48a9628efd</guid><pubDate>Sat, 01 Aug 2026 16:33:51 +0000</pubDate><atom:updated>2026-08-01T16:33:51.700Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Su Venkatesan,Tamilisai Soundararajan,எம்.பி. சு வெங்கடேசன்,Tamilnadu budget,தமிழிசை செளந்தரராஜன்,நிதி நிலை அறிக்கை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/cyhemrm1/Untitled-design-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Political Storm in Tirupati: Minister criticised for taking budget document to temple like an offering]]></media:title><media:description type="html"><![CDATA[ Tamilisai sondararajan and su. venkatesan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/cyhemrm1/Untitled-design-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h3><strong>திருப்பதியில் வேளாண்மை நிதிநிலை அறிக்கை</strong></h3><p>திருப்பதி வெங்கடேஸ்வரர் கோவிலில் தமிழக வேளாண் துறை அமைச்சர் ஆர்.வினோத், வேளாண்மை நிதி நிலை அறிக்கையின் வரைவு நகலை கொண்டு சென்று சாமி தரிசனம் செய்தார்.</p><p>இதையடுத்து தவெக அமைச்சரின், இந்த செயல் இணையத்தில் விவாவதத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h3><strong>சு. வெங்கடேசன் </strong></h3><p>இதுகுறித்து முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. சு.வெங்கடேசன் கூறுகையில், “பட்ஜெட் ஆவணங்கள் கடவுளுக்குச் செய்யப்படும் காணிக்கைகளோ அல்லது ஆன்மீகப் பொருட்களோ அல்ல. </p><p>அவை, பொதுப் பணம் எவ்வாறு செலவிடப்பட வேண்டும் என்பதை விவரிக்கும் அரசியலமைப்பு ஆவணங்கள். ஒரு தனிநபரின் சொந்த நம்பிக்கைகளை வெளிப்படுத்த அரசாங்க ஆவணங்களை வழங்குவது முறையற்றது,” என்று அவர்  கூறினார். </p><p>இதைத்தொடர்ந்து சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜி. சுந்தரராஜன் கூறுகையில், மரிய வில்சன் பொது பட்ஜெட் ஆவணங்களை ஒரு தேவாலயத்திற்கு எடுத்துச் செல்வாரா என்றும் அரசு மதச்சார்பற்றது என்ற உண்மையை மறந்துவிட்டதா? என்றும் கேள்வி எழுப்பினார்.</p><h3><strong>தமிழிசை செளந்தரராஜன் பதிவு</strong></h3><p>இந்நிலையில் வெங்கடேசன் கருத்துக்கு தமிழக முன்னாள் பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை செளந்தரராஜன் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,</p><p>“இந்து மதம் சார்ந்த நம்பிக்கைகளுக்கும் கோயில் சார்ந்த நடவடிக்கைகளுக்கும் இவ்வளவு பொங்கும் வெங்கடேசன் அவர்களே, சாமானிய இந்துக்களின் காணிக்கையை, கோயில் பணத்தை ஏன் அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று கேட்டு இருக்கிறீர்களா?</p><p>அவரவர் நம்பிக்கையில் நீங்கள் தலையிடுவது எந்த வகையில் நியாயம்?,” என்று கேள்வி எழுப்பினார்.</p><h3><strong>சு. வெங்கடேசன் பதில் கேள்வி</strong></h3><p>இந்த பதிவிற்கு எம்.பி. சு. வெங்கடேசன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “அமைச்சரின் வழிபாட்டை இங்கு கேள்விக்கு உட்படுத்தவில்லை. அரசு ஆவணம் பூஜைக்கு உட்படுத்த வேண்டிய பொருளில்லை.</p><p>கோயில் பணத்தை அரசாங்கம் எங்கும் எடுக்கவில்லை. ஆனால், பிரதமர் மோடி திறந்து வைத்த அயோத்தி கோயிலுக்கு பொதுமக்கள் வழங்கிய பணத்தை கடந்த இரண்டு ஆண்டுகளில் 70 முறை திருடியிருக்கிறார்கள். அதன் மதிப்பு சுமார் 200 கோடிக்கும் மேல்.</p><p>இராமனுக்கு செலுத்தப்பட்ட காணிக்கையை களவாடியவர்கள் குறித்து நேற்றுகூட நாடாளுமன்றத்தின் வாயிலில் போராடிவிட்டு வருகிறேன்.</p><p>இராமர் கோயில் திருட்டு குறித்து தேசமே பேசிக்கொண்டிருக்கிறது. நீங்கள் இது வரை பேசியதுண்டா?” என்று மருத்துவர் தமிழிசையின் பதிவிற்கு பதில் அளித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் குத்துச் சண்டையில் இந்தியாவுக்கு மேலும் இரண்டு தங்கப் பதக்கம்</title><link>https://www.maalaimalar.com/sports/commonwealth-games-boxin-priya-ghanghas-sakshi-chaudhary-wons-gold-for-india</link><comments>https://www.maalaimalar.com/sports/commonwealth-games-boxin-priya-ghanghas-sakshi-chaudhary-wons-gold-for-india#comments</comments><guid isPermaLink="false">1185a6c1-0b42-471c-8958-9ded4f74606c</guid><pubDate>Sat, 01 Aug 2026 16:25:23 +0000</pubDate><atom:updated>2026-08-01T16:25:23.069Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>காமன்வெல்த் போட்டி,Boxing,Glasgow,commonwealth game,பாக்சிங் இந்தியா,கிளாஸ்கோ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/qna95w7b/Sakshi0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சாக்ஷி சவுத்ரி- பிரியா கங்காஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/qna95w7b/Sakshi0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் குத்துச் சண்டை பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த 10 இறுதிப் போட்டிக்கு முன்னேறினர். இதனால் 10 பதக்கங்கள் உறுதியானது.</p><p>இந்திய நேரப்படி இன்று மாலை இந்திய வீராங்கனைகள் <a href="https://www.maalaimalar.com/sports/glasgow-commonwealth-lovlina-borgohain-preeti-pawar-won-gold">பிரித்தீ பவார்</a> மற்றும் லம்போரியா ஆகியோர் தங்கம் வென்று அசத்தினர். இந்த நிலையில் தற்போது சாக்ஷி சவுத்ரி 51 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றுள்ளார். இவர் இங்கிலாந்தின் ரூபி ஒயிட்டை 5-0 என வீழ்த்தினார்.</p><h2>பிரியா கங்காஸ்</h2><p>60 கிலோ எடைப்பிரிவில் பிரியா கங்காஸ் கனடா வீராங்கனை மேரி-பத்தோலை 4-1 என வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். குத்துச் சண்டையில் மட்டும் இதுவரை இந்தியாவுக்கு 4 தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.</p><h2>ஜூடோ</h2><p>ஜூடோ போட்டியில் உன்னாதி சர்மா தென்ஆப்பிரிக்கா வீராங்கனை ஸ்கை நோஸ்டரை வீழ்த்தி வெண்கலப்பதக்கம் வென்றார்.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 1 ஆகஸ்ட் 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-1-august-2026-2</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-1-august-2026-2#comments</comments><guid isPermaLink="false">6db1f91d-b4f2-4888-b10e-353b9e4cce34</guid><pubDate>Sat, 01 Aug 2026 05:01:38 +0000</pubDate><atom:updated>2026-08-01T16:09:02.315Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/4ievmxyy/modi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/4ievmxyy/modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/census-operations-begin-across-tamil-nadu-today">தமிழ்நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்</a></p><p>* அனைத்து வீடுகளுக்கும் நேரில் சென்று, 33 கேள்விகளைக் கொண்ட படிவத்தைப் பயன்படுத்தி தகவல்கள் திரட்டப்பட உள்ளன.</p><p>* 1948-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் சட்டப்படி, சேகரிக்கப்படும் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/perunthalaivar-kamarajar-breakfast-scheme-tender-announced">பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் - டெண்டர் அறிவிப்பு</a></p><p>* முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் பெயர் 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்' என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.</p><p>* ரவை, சம்பா ரவை தலா 1,000 மெட்ரிக் டன், சேமியா 1,100 மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது  </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/heavy-rainfall-in-keralam-two-death">கேரளத்தில் மீண்டும் நிலச்சரிவு - 2 பேர் உயிரிழப்பு</a></p><p>* அடூர் மலைப்பகுதியில் அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பெண் ஒருவர் பலியானார். </p><p>* கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை மற்றும் வயநாடு எல்லைப்பகுதிகிளில் நிலச்சரிவால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-1-8-2026">GOLD PRICE TODAY: ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை - இன்றைய நிலவரம் </a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.13,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/this-is-my-first-and-last-mistake-15-year-old-girl-apologises-for-remarks-against-pm-modi">'இதுவே எனது முதல் மற்றும் கடைசி தவறு': பிரதமர் மோடியை விமர்சித்த 15 வயது சிறுமி பகிரங்க மன்னிப்பு!...</a></p><p>*எனக்கு 15 வயதுதான் ஆகிறது. நான் செய்த தவறு மன்னிப்புக்கு உரியது அல்ல. நான் மிகவும் வெட்கப்படுகிறேன். என்னால் என்னை நிமிர்ந்து கூடப் பார்க்க முடியவில்லை.</p><p>*சிறுமி நோய்டாவில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் தனது தாயாருடன் வசித்து வந்த நிலையில், தற்போது அந்த வீடு பூட்டப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/commercial-cylinder-price-reduced-by-rs200" rel="nofollow">வணிக சிலிண்டர் விலை ரூ.200 குறைந்தது!</a></p><p>*  வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.200 குறைந்து ரூ.2,906க்கு விற்பனை.</p><p>*  வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமில்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/tnpl-cricket-ticket-sale-starts-today">டி.என்.பி.எல். கிரிக்கெட் டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்</a></p><p>* போட்டி வருகிற 4-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை 2 கட்டமாக நடத்தப்படுகிறது. </p><p>*  கல்லூரி நுழைவுவாயிலில் அமைக்கப்பட்ட கவுண்ட்டரில் இன்று தொடங்குகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-irregularities-former-md-visakan-missing" rel="nofollow">முறைகேடு விவகாரம்: டாஸ்மாக் முன்னாள் மேலாண் இயக்குனர் விசாகன் தலைமறைவு?</a></p><p>* சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனைகளுடன், செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் வழங்கியுள்ளது.</p><p>* டாஸ்மாக் முறைகேடு புகாரில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட நிலையில் விசாகனை விசாரிக்கத் திட்டம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thoppu-venkatasalam-relieved-from-dmk-post" rel="nofollow">திமுக பொறுப்பில் இருந்து தோப்பு வெங்கடாசலம் விடுவிப்பு</a></p><p>* தோப்பு வெங்கடாச்சலத்திற்கும் முன்னாள் அமைச்சர் முத்துசாமிக்கும் இடையே தொடர்ந்து மோதல்?</p><p>* ஆளுங்கட்சியான தவெகவில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிகின்றன.</p><p>காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சென்னை வருகை-தொண்டர்கள் உற்சாக வரவேற்பு</p><p>* மாலை 4 மணியளவில் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து உரையாடுகிறார்.</p><p>*   நீட் தேர்வால் பலியான 4 மாணவ-மாணவிகளின் பெற்றோரை சந்திப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/swaraj-is-my-birthright-father-of-indian-nationalism">சுயராஜ்யம் எனது பிறப்புரிமை: தேசியவாதத்தின் தந்தை லோக்மான்ய திலகரின் நினைவு தினம் இன்று!... </a></p><p>*மக்களிடையே ஒற்றுமையையும் தேசபக்தியையும் உருவாக்க, வீடுகளுக்குள் முடங்கிக்கிடந்த 'விநாயகர் சதுர்த்தி' வழிபாட்டைப் பொதுமக்களுக்கான விழாவாக மாற்றினார். </p><p>*சிறையில் இருந்த காலத்தில் அவர் எழுதிய 'கீதா ரஹஸ்யம்' என்ற நூல், பகவத் கீதையின் கடமை மற்றும் தியாகக் கருத்துக்களை விளக்கும் ஒரு தலைசிறந்த படைப்பாக இன்றளவும் போற்றப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/delhi-independence-day-drone-ban-till-aug-16">சுதந்திர தின பாதுகாப்பு: டெல்லியில் ஆகஸ்ட் 16 வரை டிரோன்கள் பறக்கத் தடை-காவல்துறை உத்தரவு!... </a></p><p>*இந்த கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 16 ஆம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>*சம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு டெல்லி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/jammu-kashmir-kulgam-attack-on-migrant-workers-two-killed">ஜம்மு-காஷ்மீரில் கொடூரம்: வெளிமாநிலத் தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு-இருவர் பலி... </a></p><p>*பிழைப்பு தேடி காஷ்மீருக்கு வந்த ஏழைத் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்த வன்முறைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>*இத்தாக்குதலில் பலி எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/new-mega-international-airport-in-andhra-pradesh-opened-by-modi" rel="nofollow">இந்தியாவிலேயே மிகப்பெரிய சர்வதேச விமான நிலையம்- ஆந்திராவில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்</a></p><p>* பழங்குடியின பெண்கள் கலந்துகொண்டு தின்ஷா நடனமாடி பிரதமருக்கு உற்சாக வரவேற்பு. </p><p>* பிரதமர் வருகையை முன்னிட்டு நகரம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-tn-decides-to-move-supreme-court-to-secure-cauvery-water-right-move">காவிரியில் நீர் பெற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர தமிழகம் முடிவு: சரியான நடவடிக்கை! - அன்புமணி</a></p><p>* காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீரை உடனடியாக திறந்து விடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக சட்ட அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்திருக்கிறார்.&nbsp;</p><p>* கர்நாடகத்தில் எந்தக் கட்சியின் ஆட்சி நடந்தாலும் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க அம்மாநில முதலமைச்சர்கள் முன்வர மாட்டார்கள் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-issue-mk-stalin-question-to-cm-vijay-all-party-meeting">அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட முடியுமா முடியாதா? - முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி</a></p><p>* கர்நாடகம் சென்றால் காவிரியைக் கையோடு எடுத்துவந்து விடலாம் என்று தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சர் நினைத்தாரோ என்னவோ... </p><p>* தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடச் சொல்லி CWMA உத்தரவிட்டதும் "நீங்கள் இப்போதைக்கு வரவேண்டாம்" என்று கேட்டைச் சாத்திவிட்டார்கள்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-appears-at-thiruvallikeni-police-station-in-dmk-mla-bribery-bargain-case" rel="nofollow">த.வெ.க. எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய வழக்கு: செந்தில் பாலாஜி காவல் நிலையத்தில் ஆஜர்</a></p><p>* செந்தில் பாலாஜி போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடாமல் இருந்து வந்தார்.</p><p>* முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி விசாகன் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/russian-missile-drone-attack-on-ukraine-capital">உக்ரைன் தலைநகர் மீது டிரோன் தாக்குதல் - 3 பேர் பலி!</a></p><p>* கீவ் குடியிருப்புகள் சேதம், வணிக கிடங்குகள் தீப்பற்றி எரிந்தன </p><p>* இடிபாடுகளில் சிக்கிய பலர் படுகாயம், பலி எண்ணிக்கை உயர வாய்ப்பு</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/only-reel-apology-cjp-chief-abhijit-deepke-slams-modi-video">'ரீலில் மட்டும்தானா மன்னிப்பு?'- பிரதமர் மோடியின் வீடியோவுக்கு CJP தலைவர் அபிஜீத் தீப்கே சரமாரி கேள்வி!... </a></p><p>*ஜந்தர் மந்தர் போராட்டத்தில் தமக்கு எதிராகவும், தமது மறைந்த தாயார் குறித்தும் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்திய மாணவர்களை மன்னிப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி இன்ஸ்டாகிராமில் செல்ஃபி வீடியோ ஒன்றை வெளியிட்டார். </p><p>*போராட்டங்களில் பங்கேற்ற சாதாரண மாணவர்கள் மற்றும் குற்றப்பின்னணி இல்லாத இளைஞர்கள் மீதான வழக்குகளை விடுவிக்க வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/august-rain-expected-above-normal-in-tamilnadu" rel="nofollow">தமிழகத்தில் ஆகஸ்டு மாதத்தில் இயல்பை விட அதிக மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்</a></p><p>* மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைப்பொழிவு இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.</p><p>* பசிபிக் பெருங்கடல் பகுதியில் மிதமான  எல்-நினோ சூழல் நிலவுகிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/orange-alert-issued-for-three-districts-today" rel="nofollow">3 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்</a></p><p>* திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. </p><p>* மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/cjp-protest-aftermath-cji-event-postponed-at-last-minute">CJP போராட்டம் எதிரொலி: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் நிகழ்ச்சி கடைசி நிமிடத்தில் ஒத்திவைப்பு!... </a></p><p>*மும்பையில் உள்ள நாட்டின் முன்னணி உயர்கல்வி நிறுவனமான 'டாட்டா சமூக அறிவியல் கழகத்தின்' (TISS) 86வது பட்டமளிப்பு விழா, பாதுகாப்பு மற்றும் போராட்ட அச்சம் காரணமாகக் கடைசி நிமிடத்தில் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p>*நாட்டின் பல மாநிலங்களிலிருந்தும் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் விமானம் மற்றும் ரெயில்கள் மூலம் மும்பை வந்து சேர்ந்துவிட்டனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/el-nino-threat-southwest-monsoon-india-weather-centre-warning">எல் நினோ அச்சுறுத்தல்: இந்தியாவின் தென்மேற்கு பருவமழை மீண்டும் பாதிக்குமா?-வானிலை மையம் எச்சரிக்கை!... </a></p><p>*பசிபிக் பெருங்கடலில் நிலவும் வெப்பநிலை மாற்றத்தால் உருவான 'சூப்பர் எல் நினோ' மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது.</p><p>*இந்தியாவின் விவசாயத்திற்கும் பொருளாதாரத்திற்கும் மிக முக்கிய ஆதாரமாக விளங்குவது தென்மேற்கு பருவமழையாகும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/central-government-released-tax-share-of-rs-4466-crore-to-tamil-nadu">தமிழ்நாட்டிற்கான  ரூ.4,466 கோடி வரிப்பகிர்வு தொகையை விடுவித்தது மத்திய அரசு</a></p><p>* அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.1,09,019 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.</p><p>* பீகாருக்கு ரூ.10,845 கோடி, மத்திய பிரதேசத்திற்கு ரூ.8,010 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-it-wing-indictment-dmk">எரிச்சல் மற்றும் விரக்தி மோடில் அலறும் திமுக- தவெக சாடல்</a></p><p>* ஆட்சியில் இருக்கும்போது சத்தம் போடுவதுபோல சவுண்ட் கொடுத்துவிட்டு, மியூட் மோடுக்குச் சென்று, மியாவ் என்றுகூடச் சத்தம் எழுப்பாத காரியப் பூனைதான் திமுக. </p><p>* கடந்த மே மாதத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட கட்சியாகத் தவிக்கும் திமுக, காவிரி விவகாரத்தில் கபட நாடகமாடுவதை மக்கள் ஏற்கமாட்டார்கள்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/topnews/nature-belongs-to-no-one-karnataka-cm-dk-shivakumar">'இயற்கை யாருக்கும் சொந்தமானது அல்ல..': கடையடைப்பு போராட்டத்தை திரும்ப பெற கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் வலியுறுத்தல... </a></p><p>*அளவிற்கு அதிகமாக நீரைத் தேக்கி வைத்தால் அணை உடைந்தோ அல்லது கரைபுரண்டு ஓடியோ வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நாமே அடித்துச் செல்லப்படும் அபாயம் உள்ளது.</p><p>*காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் வழிகாட்டுதல்கள் மற்றும் அணைகளின் நீர்வரத்து சூழலைக் கருத்தில் கொண்டு, இயல்பான நீர் திறப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rahul-gandhi-warns-factionalism-blocking-congress-progress-in-tamil-nadu">தமிழ்நாட்டில் பல பிரிவுகளாகச் செயல்படும் காங்கிரஸ்: 'உட்கட்சிப் பூசலே வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை'-ராகுல் காந்தி பரபரப்பு.</a>.. </p><p>*தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவே புதிய மாவட்ட செயலாளர்கயை நியமித்துள்ளோம்.</p><p>*அனைத்து கோஷ்டிப் பூசல்களையும் மறந்து அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/e20-fuel-policy-petrol-would-have-hit-rs125-per-litre-during-iran-war-centre">E20 எரிபொருள் கொள்கை: ஈரான் போரின் போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.125 ஆக உயர்ந்திருக்கும்- மத்திய அரசு விளக்கம்!... </a></p><p>*சர்வதேசப் பொருளாதாரப் பாதுகாப்பைக் காரணம் காட்டி E20 கொள்கையை மத்திய அரசு தீவிரமாக நியாயப்படுத்தி வருகிறது.</p><p>*ஒரே வாரத்தில் 4-வது முறையாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அறிக்கை வெளியீட்டுத் தரவுகளுடன் விளக்கம் அளித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/pmk-president-anbumani-ramadoss-how-can-farmers-be-forced-to-repay-crop-loans-with-interest-after-announcing-a-loan-waiver">பயிர்க்கடன் தள்ளுபடி என்று அறிவித்து விட்டு வட்டியுடன் செலுத்த கட்டாயப்படுத்துவதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்</a></p><p>* தமிழக அரசு மற்றும் கூட்டுறவுத் துறையின் தவறான அணுகுமுறையும், நிர்வாகக் குளறுபடிகளும்தான் அனைத்து குழப்பங்களுக்கும் காரணம் ஆகும். </p><p>* இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாகத் தலையிட்டு, உழவர்களிடம் பயிர்க்கடன் தவணைகளைக் கேட்டு தொல்லை கொடுக்கக் கூடாது என கூட்டுறவு சங்கங்களுக்கு ஆணையிட வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-approaches-supreme-court-seeking-immediate-directions-for-release-of-cauvery-water-to-tamil-nadu">காவிரி நீரை உடனடியாக தமிழ்நாட்டிற்கு திறந்து விட உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. அவசர மனு</a></p><p>* கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் நீரையும், பிலிகுண்டுலுவில் கிடைக்கும் நீரின் அளவையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) தினசரி கண்காணித்து, அதன் அமலாக்க நிலையை உச்சநீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு உத்தரவிட வேண்டும்.</p><p>* வழக்கின் உண்மை நிலைகள் மற்றும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, நீதியை நிலைநாட்டுவதற்குத் தேவையான பிற உரிய உத்தரவுகளையும் உச்சநீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-dispute-approaching-supreme-court-only-legal-solution-minister-nirmal-kumar">காவிரி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் திங்கட்கிழமை மனுதாக்கல்-அமைச்சர் நிர்மல் குமார்... </a></p><p>•கர்நாடக அரசியலுக்கு ஆதரவாகத் தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகள் செயல்பட்டு வருவது மிகவும் வருத்தமளிக்கிறது.</p><p>•கர்நாடக அரசியல்வாதிகள் மற்றும் கட்சிகள் தங்களின் அரசியல் லாபத்திற்காகவே தொடர்ந்து காவிரி விஷயத்தில் பிடிவாத போக்கைக் கடைப்பிடித்து வருகின்றன. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-nature-has-prevailed-10000-cusecs-released-from-kabini-dam-water-must-also-be-released-from-the-krishna-raja-sagara-dam">இயற்கை வென்றது: கபினியில் தண்ணீர் திறப்பு- கே.ஆர்.எஸ். அணையிலிருந்தும் தண்ணீர் திறக்க அன்புமணி வலியுறுத்தல்</a></p><p>* கர்நாடகத்தில் காவிரியின் துணை ஆறுகளில் ஒன்றான கபினியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை நிரம்பி வழிவதையடுத்து அங்கிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.</p><p>* இந்த நீர் இன்னும் எவ்வளவு காலத்திற்கு திறக்கப்படும், தமிழகத்தின் தேவைக்கு போதுமானதாக இருக்குமா? என்பதெல்லாம் அடுத்த சில வாரங்களுக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் எவ்வளவு மழை பெய்யும் என்பதைப் பொறுத்தே அமையும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vijayabaskar-mr-vijayabaskar-seek-byelection-ban-lift">இடைதேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனு!</a></p><p>* தடை நீக்கி இடைத்தேர்தல் நடத்த முன்னாள் அமைச்சர்கள் மனு</p><p>* நீதிமன்றம் தடை நீக்குமா என அரசியல் பரபரப்பு</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/commonwealth-games-tn-cm-vijay-money-announce-to-triple-jump-medal-winners">காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்தார் முதல்வர் விஜய்</a></p><p>* ஒரே போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு விளையாட்டு வீரர்கள் பதக்கங்களை வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.</p><p>* இந்த இருவீரர்களும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதிகளில் தங்கி பயின்று, முறையான பயிற்சி பெற்றவர்கள் என்பது தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறைக்குப் பெருமை சேர்ப்பதாகும்.</p>]]></content:encoded></item><item><title>போலி படங்கள் பரவல்: உடனடியாக நிறுத்தப்பட்ட கூகுள் எர்த் ஏ.ஐ. டூல்ஸ்</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/refugees-at-us-mexico-border-google-earth-ai-henk-van</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/refugees-at-us-mexico-border-google-earth-ai-henk-van#comments</comments><guid isPermaLink="false">b98f20c2-917e-4c65-ae83-bf80102f8ea5</guid><pubDate>Sat, 01 Aug 2026 15:34:26 +0000</pubDate><atom:updated>2026-08-01T15:34:26.212Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கூகுள் எர்த்,google earth,nano banana,நானோ பனானா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/lj1fdhqo/Untitled-design-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Google Earth AI Fake Images: Google suspends Nano Banana 2 tool over misinformation fears]]></media:title><media:description type="html"><![CDATA[ Nano Banana 2]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/lj1fdhqo/Untitled-design-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கூகுள் எர்த்-இல் உள்ள செயற்கை நுண்ணறிவு (AI) மூலம், உலகம் எப்படி தோற்றமளிக்கிறது என்பதை மாற்றும் வசதி அறிமுகம் செய்தது கூகுள் நிறுவனம்.</p><h3><strong>கூகுள் எர்த் நானோ பனானா 2</strong></h3><p>கூகுளின் நானோ பனானா 2 என்ற அம்சத்துடன் கூகுள் எர்த் மேம்படுத்தப்பட்டுள்ளது. இது, செயற்கைக்கோள் படங்களை உருவாக்கவும் மாற்றியமைக்கவும் பயனர்களை அனுமதிக்கிறது.</p><p>உலகைப் புதிய கோணத்தில் கற்பனை செய்வதற்கான ஒரு வழியாகவும், வரலாற்றை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கான ஒரு புதிய முயற்சியாகவும் கூகுள் இதை முன்வைக்கிறது.</p><p>நானோ பனானா 2-ஐப் பயன்படுத்தி, ஒரே ஒரு கட்டளையின் மூலம் நீங்கள் கூறுகளைச் சேர்க்கலாம் என்றும் ஓர் இடத்தின் தோற்றத்தை மாற்றலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இதன் மூலமாக போலிப் படங்களை உருவாக்கலாம். அப்படி உருவாக்கப்பட்டு, இணையத் தளத்தில் பகிரப்பட்டால், அந்த படம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.</p><h3><strong>போலி புகைப்படங்கள்</strong></h3><p>இதுகுறித்து செயற்கை நுண்ணறிவு ஆய்வாளர் ஹென்க் வான் கூறுகையில், "ஈரானில் ஒரு அணு உலையையும், காசாவில் குண்டு வெடிப்புக் குழியுடன் கூடிய ஒரு மருத்துவமனையையும் இந்த டூல்ஸ் கொண்டு உருவாக்கினேன்" எனத் தெரிவித்துள்ளார்.</p><p>யாராவது இதை உண்மையான படங்கள் என்று தவறாக நினைத்தால், இந்த இரண்டு காட்சிகளும் இணையத்தில் வைரலாகப் பரவக்கூடும்.</p><p>அதுமட்டுமின்றி, அமெரிக்க- மெக்சிகோ எல்லையில் அகதிகள் பெரிய அளவில் குவிந்திக்கும் படத்தையும் உருவாக்கியுள்ளார். இது போன்ற படங்கள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் என கவலை தெரிவித்தார்.</p><p>கூகுள் எர்த் ஒரு இலவசமாக சேவையை வழங்குவதால், யார் வேண்டுமானாலும் ஒரே ஒரு கட்டளையின் மூலமே குழப்பத்தை உருவாக்க முடியும்.</p><p>உதாரணமாக, சமூக ஊடகங்களில் பரவி வரும் சில படங்கள், 9/11 தாக்குதலைப் போலவே, நியூயார்க் நகரத்தில் உள்ள உலக வர்த்தக மையத்தில் ஒரு விமானம் மோதி நொறுங்குவதைக் காட்சிபடுத்த முடியும்.</p><p>கூகுள் எர்த் ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு முக்கியமான அம்சமாக இருக்கும். இது உலகம் முழுவதிலுமுள்ள செயற்கைக்கோள் படங்களைப் பார்க்கவும், அவற்றை பழைய படங்களுடன் ஒப்பிடவும் உதவுகிறது.</p><p>உதாரணமாக, கடந்த 20 ஆண்டுகளில் ஒரு நகரத்தின் நகர்ப்புற வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இது காட்சிப்படுத்த முடியும்.</p><p>ஆனால், மக்கள் இணையத்தில் போலிக் காட்சிகளை, குறிப்பாக உணர்திறன் மிக்க இடங்களின் போலிக் காட்சிகளை, பரப்பத் தொடங்கினால், அது இணையத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும். தவறான தகவல்கள் இணையத்தில் மிக விரைவாகப் பரவக்கூடும்.</p><h3><strong>கூகுள் நிறுவனம் விளக்கம்</strong></h3><p>இந்த நிலையில் கூகுள் நிறுவனம் பாதுகாப்பு கருதி அந்த சேவையை நிறுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>உலகின் நம்பகமான காட்சிக்காக மக்கள் கூகுள் எர்த்தை தனித்துவமாக நம்புகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். புவிசார் தொழில் வல்லுநர்கள் இந்த அம்சத்தை பல்வேறு பயனுள்ள நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதை நாங்கள் கண்டிருக்கிறோம்.</p><p>இருப்பினும், எங்கள் கொள்கைகளை மீறுவதாகத் தோன்றும் உருவாக்கப்பட்ட படங்களின் ஸ்கிரீன்ஷாட்களை மக்கள் பகிர்வதையும் நாங்கள் பார்த்திருக்கிறோம்.</p><p>எனவே, நாங்கள் வலுவான பாதுகாப்பு வழிமுறைகளைச் செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதால், கூகுள் எர்த்தில் உள்ள இந்த அம்சத்தை நாங்கள் திரும்பப் பெறுகிறோம்.</p><p>உருவாக்கப்பட்ட படங்கள் மற்றவர்கள் பார்ப்பதற்காக பிரதான கூகுள் எர்த் அனுபவத்தில் தோன்றவில்லை என்பதையும், அவை செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டவை என்று வாட்டர்மார்க் செய்யப்பட்டிருந்தன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.</p><p>கூகுளின் மாடல்களில் இருந்து செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தைக் கண்டறிய SynthID உதவினாலும், அது தவறுகளைச் செய்யக்கூடும்.</p><p>சில சந்தர்ப்பங்களில், கூகுள் எர்த்தில் நானோ பனானா வழியாக உருவாக்கப்பட்ட படங்கள், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டவை என்பது ஜெமினியால் கண்டறியப்படவில்ல என்று பயனாளர்களுக்கு தெரியவந்தது” என்று குறிப்பிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்தார் முதல்வர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/commonwealth-games-tn-cm-vijay-money-announce-to-triple-jump-medal-winners</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/commonwealth-games-tn-cm-vijay-money-announce-to-triple-jump-medal-winners#comments</comments><guid isPermaLink="false">d901d2a2-8fec-4423-be01-725821fb0c78</guid><pubDate>Sat, 01 Aug 2026 14:20:49 +0000</pubDate><atom:updated>2026-08-01T14:20:49.354Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>காமன்வெல்த் போட்டி,தவெக விஜய்,Glasgow,commonwealth game,tn cm vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/l05z4o5c/VIjayprice0001.jpg" width="1280"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிரவீன் சித்ரவேல், செல்வ பிரபு- முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/l05z4o5c/VIjayprice0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பவதாவது:-</p><p>ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்றுவரும் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன் சித்ரவேலுக்கும், வெண்கலப் பதக்கம் வென்ற மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த செல்வ பிரபுவுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2>30 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை</h2><p>இவ்வீரர்களின் சாதனையைப் பாராட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக, வெள்ளிப் பதக்கம் வென்ற பிரவீன் சித்ரவேலுக்கு 30 லட்சம் ரூபாயும், வெண்கலப் பதக்கம் செல்வ பிரபுவுக்கு 20 லட்சம் ரூபாயும் வழங்கப்படும்.</p><h2>தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்</h2><p>ஒரே போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு விளையாட்டு வீரர்கள் பதக்கங்களை வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்த இருவீரர்களும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதிகளில்</p><p>தங்கி பயின்று, முறையான பயிற்சி பெற்றவர்கள் என்பது தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறைக்குப் பெருமை சேர்ப்பதாகும்.</p><p>இவர்களின் கடின உழைப்பும், விடாமுயற்சியும், அர்ப்பணிப்பும் வெற்றியைத் தேடித்தந்ததோடு, ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமை அளிக்கிறது. சர்வதேச அரங்கிலும் தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற எனது வாழ்த்துகள்!</p><p>இவ்வாறு முதலமைச்சர் விஜய் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இளைஞர்கள் விரும்பியதை செய்வதற்கான சுதந்திரத்தையே விடுதலை என தவறாக புரிந்து கொள்கிறார்கள்: அஜித் தோவல்</title><link>https://www.maalaimalar.com/news/national/youth-misunderstand-freedom-as-doing-anything-they-want-ajit-doval</link><comments>https://www.maalaimalar.com/news/national/youth-misunderstand-freedom-as-doing-anything-they-want-ajit-doval#comments</comments><guid isPermaLink="false">47d851ab-b238-420f-86ec-ad958fe5c418</guid><pubDate>Sat, 01 Aug 2026 14:08:03 +0000</pubDate><atom:updated>2026-08-01T14:08:03.163Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Ajit Doval,லோக்மான்ய திலக்,அஜித் தோவல்,Lokmanya Tilak</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/o067df42/Untitled-design-9.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Indian Freedom: Ajit Doval warns youth against misinterpreting liberty as doing anything they want]]></media:title><media:description type="html"><![CDATA[ Ajit Doval]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/o067df42/Untitled-design-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சுதந்திரம் என்பது ஒருவர் விரும்பியதைச் செய்வதற்கான உரிமை மட்டுமல்ல என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறினார். </p><p>மேலும், லோக்மான்ய திலகரின் தொலைநோக்குப் பார்வையையும், தேசத்தைக் கட்டமைப்பதில் அவரது பங்களிப்பையும் இளம் தலைமுறையினர் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.</p><h3><strong>லோக்மான்ய திலக் தேசிய விருது</strong></h3><p>மகாராஸ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்ற லோக்மான்ய திலக் தேசிய விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் இந்த ஆண்டுக்கான லோக்மான்யா திலக் விருதை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பெற்றார். </p><p>அப்போது அவர் கூறுகையில், “லோக்மான்ய திலகரின் வாழ்க்கையையும், அவரது ஆளுமையின் ஆழத்தையும் உண்மையாகப் புரிந்துகொள்ள, அந்தக் காலகட்டத்தின் சூழலையும், கட்டுப்பாடுகளையும், அவலமான நிலைமைகளையும் ஒருவர் அறிந்துகொள்ள வேண்டும். </p><p>ஒருவேளை நாமும், குறிப்பாக இளைஞர்களும், முழுமையாகக் கற்பனை செய்து பார்க்க போராடும் யதார்த்தங்கள் தான் இவை.</p><p>ஒவ்வொரு இந்தியரும், குறிப்பாக நமது இளைஞர்கள், அவருடைய வார்த்தைகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.</p><p>இந்தியாவுக்காக அவர் கொண்டிருந்த தொலைநோக்குப் பார்வையையும், அவர் தன்னகத்தே கொண்டிருந்த தேசத்தை கட்டியெழுப்பும் உணர்வையும் கருத்தில் கொள்ள வேண்டும்.</p><h3><strong>இந்தியா அடைந்த சுதந்திரம்</strong></h3><p>இன்றைய இளைஞர்கள், இந்தியா எப்போதுமே இப்படித்தான் இருந்து வந்திருக்கிறது என்று நினைக்கலாம், அல்லது ஒருவர் விரும்பியதைச் செய்வதற்கான வெறும் சுதந்திரத்தையே அவர்கள் விடுதலை எனத் தவறாகப் புரிந்துகொள்ளலாம். ஆனால், சுதந்திரத்தின் உண்மையான அர்த்தம் அதுவல்ல.</p><p>இன்றைய இளைஞர்கள் தங்களை முழுமையாக நாட்டிற்காக அர்ப்பணிக்க வேண்டும். தனிப்பட்ட அல்லது குறுகிய நலன்களை ஒதுக்கி வைத்துவிட்டு, எப்போதும் தேசிய நலனுக்காகவே உழைப்போம் என்று அவர்கள் உறுதியெடுக்க வேண்டும்.</p><p>இத்தகைய நலன்கள் எழுந்தாலும், அவற்றை அவர்கள் புறக்கணிக்க வேண்டும். அந்த விஷயங்கள் இப்போதைக்குக் காத்திருக்கலாம்; தேசத்தைக் கட்டியெழுப்புவதே முன்னுரிமை.</p><p>நமது நாட்டின் வரலாற்றில் ஒரு அரிய வாய்ப்பு காலம் வந்துள்ளது, அதை நாம் நழுவ விடக்கூடாது. இந்த பணியில் நாம் வெற்றி பெற்று, வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத் உருவாக்குவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>&quot;திருட்டுத்தனமா கல்யாணம் பண்ணல..  நாங்க ஏன் பிரிக்கணும்?&quot; - ரவி மோகன், ஆர்த்தி விவகாரத்தில் தாயார் கண்ணீர் பேட்டி!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ravi-mohan-aarthi-court-verdict-mother-emotional-interview</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ravi-mohan-aarthi-court-verdict-mother-emotional-interview#comments</comments><guid isPermaLink="false">077f3c97-76f5-4047-9632-af8ffcefdd21</guid><pubDate>Sat, 01 Aug 2026 14:06:47 +0000</pubDate><atom:updated>2026-08-01T14:06:47.316Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Jayam Ravi,Aarthi,ரவிமோகன்,ஆர்த்தி,CourtVerdict,CelebrityDivorce</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/pvvzm8hd/RaviMohan-Aarthis-Mother" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ RaviMohan - Aarthi's Mother]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/pvvzm8hd/RaviMohan-Aarthis-Mother?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரபல நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ஆகியோரின் குடும்ப விவகாரம் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, ஆர்த்தியின் தாயார் ஊடகங்களுக்கு உணர்ச்சிப்பூர்வமான கண்ணீர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.</p><h2><strong>தாயாரின் உருக்கமான வாதம்:</strong></h2><p>ஊடகவியலாளர்களைச் சந்தித்துப் பேசிய தாயார், தங்கள் குடும்பத்தின் மீதும், தங்களின் மீதும் வைக்கப்படும் விமர்சனங்களுக்குக் கடுமையான மறுப்பு தெரிவித்தார். </p><p>"எந்த ஒரு தாயும் தன் பிள்ளைகளைப் பிரிக்க வேண்டும் என்று ஒருபோதும் நினைக்க மாட்டாள். நாங்கள் ஒன்றும் திருட்டுத்தனமாகவோ அல்லது ரகசியமாகவோ திருமணம் செய்து வைக்கவில்லை. </p><p>சுமார் 10,000 பேரை நேரில் அழைத்து, 10-க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட நிகழ்ச்சிகளை நடத்தித்தான் முறைப்படி இந்தத் திருமணத்தை நடத்தினோம். அப்படி இருக்கும்போது, நாங்கள் ஏன் அவர்களைப் பிரிக்க வேண்டும் என்று நினைக்கப் போகிறோம்?" என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.</p><h2><strong>நீதிமன்றத் தீர்ப்புக்கு நன்றி:</strong></h2><p>தொடர்ந்து பேசிய அவர், இந்தத் குடும்பப் பிரச்சனை தொடர்பான வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்குத் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். </p><p>"இந்த மாதம் முதல் ஆர்த்தி, ரவி மோகன் மற்றும் அவர்களின் குழந்தைகள் ஆரவ் மற்றும் அயான் ஆகியோர் மாதத்திற்கு ஒரு முறை சந்தித்து பேச வேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருந்தது.</p><p>இதுதான் பெற்றோர்களான எங்களுக்கும் இருக்கும் ஆசை நாங்களாக அவர்களை பிரிக்க வேண்டும் என்று ஒரு முறை கூட நினைத்து இல்லை. தங்களுக்கு நியாயமான முறையில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு, "இப்படி ஒரு நல்ல தீர்ப்பைக் கொடுத்ததற்காக அந்த நீதிபதிக்கு எனது பெரிய கும்பிடு" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.</p><h2><strong>பின்னணி:</strong></h2><p>ரவி மோகன் - ஆர்த்தி தம்பதியினருக்கு இடையே நிலவி வந்த குடும்பக் கருத்து வேறுபாடுகள் காரணமாக இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. </p><p>இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் அண்மையில் முக்கிய தீர்ப்பை வழங்கியிருந்தது. இந்தத் தீர்ப்பின் மூலம் தங்களுக்கு நீதி கிடைத்துள்ளதாகக் கருதும் ஆர்த்தியின் தாயார், தங்கள் குடும்பத்தின் மீதான அவதூறுகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இடைதேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijayabaskar-mr-vijayabaskar-seek-byelection-ban-lift</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijayabaskar-mr-vijayabaskar-seek-byelection-ban-lift#comments</comments><guid isPermaLink="false">4cf1ebd3-cb70-4803-b596-b15eb7db22ab</guid><pubDate>Sat, 01 Aug 2026 13:19:11 +0000</pubDate><atom:updated>2026-08-01T13:19:11.530Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசியல்,ByElection,இடைத்தேர்தல்,Ex Minister MR Vijayabaskar,C Vijayabaskar,Election2026</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/ync1syok/C-Vijayabaskar-MR-Vijayabaskar" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ C Vijayabaskar  - MR Vijayabaskar ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/ync1syok/C-Vijayabaskar-MR-Vijayabaskar?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் விராலிமலை மற்றும் கரூர் உள்ளிட்ட 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி, அதிமுக முன்னாள் அமைச்சர்களான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D">சி.விஜயபாஸ்கர்</a> மற்றும்<a href="https://www.maalaimalar.com/topic/mr-vijayabaskar"> எம்.ஆர். விஜயபாஸ்கர் </a>ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனுத் தாக்கல் செய்துள்ளனர்.</p><h2><strong>வழக்கின் பின்னணி:</strong></h2><p>கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை எதிர்த்துத் தொடரப்பட்ட பல்வேறு தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள காரணத்தினால், தமிழகத்தில் காலியாக உள்ள திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கக் கூடாது என கடந்த ஜூலை 10 ஆம் தேதி நீதிமன்றம் தடை விதித்திருந்தது.</p><h2><strong>முன்னாள் அமைச்சர்களின் வாதம்:</strong></h2><p>தற்போது இந்தத் தடையை நீக்கக் கோரி மனுத் தாக்கல் செய்துள்ள முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது மனுவில், "இந்தத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தால், அதனால் எந்தவொரு சிக்கலான சூழ்நிலையும் எழ வாய்ப்பில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p>அதேபோல் எம்.ஆர். விஜயபாஸ்கர் தாக்கல் செய்துள்ள மனுவில், "தேர்தல் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக, மக்கள் பிரதிநிதிகள் (சட்டமன்ற உறுப்பினர்கள்) இல்லாமல் தொகுதி மக்கள் நீண்ட நாட்கள் பாதிக்கப்படக் கூடாது" என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><h2><strong>அரசியல் எதிர்பார்ப்பு:</strong></h2><p>மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால் தொகுதிப் பணிகள் தொய்வடைந்துள்ளதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளன. </p><p>நீதிமன்றம் இந்தத் தடையை நீக்கி இடைத்தேர்தலுக்கு வழிவகுக்குமா என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போதே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறையை ஆதரிப்பவர்கள் தமிழ்நாட்டின் எட்டப்பர்கள்: ராகுல் காந்தி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/constituency-redistribution-supporters-are-ettappans-of-tamil-nadu-rahul-gandhi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/constituency-redistribution-supporters-are-ettappans-of-tamil-nadu-rahul-gandhi#comments</comments><guid isPermaLink="false">7e235c21-1734-420d-a921-0ab63d1db38e</guid><pubDate>Sat, 01 Aug 2026 13:14:37 +0000</pubDate><atom:updated>2026-08-01T13:14:37.776Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Congress,காங்கிரஸ்,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/j1kwv0mc/Untitled-design-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Rahul Gandhi calls BJP plot a threat to Tamil Nadu in Delimitation Betrayal Remark]]></media:title><media:description type="html"><![CDATA[ Rahul Gandhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/j1kwv0mc/Untitled-design-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தொகுதி மறுவரையறைக்கு யார் ஆதரவு அளிக்கிறார்களோ அவர்கள் தமிழ்நாட்டிற்கு எட்டப்பர்களாக இருப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.</p><p>தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி முகாம், மாமல்லபுரத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு சொந்தமான கடற்கரை விடுதியில் கடந்த ஜூலை 23-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.</p><p>இந்த முகாமின் நிறைவு நாளான இன்று ராகுல் காந்தி பங்கேற்று, மாவட்டத் தலைவர்களிடம் கட்சியின் எதிர்கால அரசியல் திட்டங்கள், அமைப்பு வலுப்படுத்தல் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை வழங்கினார்.</p><h3><strong>தொகுதி மறுவரையறை</strong></h3><p>செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி பேசியதாவது:-</p><p>தொகுதி மறுவரையறை என்பது தமிழக மக்களிடம் இருந்து அதிகாரத்தை பறிப்பதாக உள்ளது. இது பாரதிய ஜனதா கட்சியின் சதியாக உள்ளது. </p><p>தமிழ்நாட்டு வரலாற்றில் எட்டப்பர் என்ற பாத்திரம் ஒன்று உள்ளது. எட்டப்பர் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகத்தை விளைவிக்கும் ஒருவராக குறிப்பிடப்படுகிறது.</p><p>தொகுதி மறுவரையறைக்கு யார் ஆதரவு அளித்தாலும், அவர்கள் தமிழ்நாட்டிற்கு துரோகம் விளைவிப்பவர்களாகவே இருக்கிறார்கள்.</p><p>தொகுதி மறுவரையறையை ஆதரிப்பது என்பது தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கும் துரோகம் இழைப்பதற்கு பாரதிய ஜனதா கட்சியை அனுமதிப்பதாக உள்ளது.</p><p>இந்த செயல்களில் ஈடுபடுபவர்கள் 21ஆம் நூற்றாண்டின் எட்டப்பர்களாக இருக்கிறார்கள்.</p><p>தொகுதி மறுவரையறைக்கு எதிராக குரல் கொடுக்கும் தமிழர்களும் மற்றும் தனிப்பெரும் கட்சியாக உள்ள தமிழகத்தை சேர்ந்த கட்சிகளும் தொகுதி மறுவரையறையை மக்களவையில் தோற்கடிக்க வேண்டும்.</p><p>இவ்வாறு செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>இயற்கை வென்றது: கபினியில் தண்ணீர் திறப்பு- கே.ஆர்.எஸ். அணையிலிருந்தும் தண்ணீர் திறக்க அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-nature-has-prevailed-10000-cusecs-released-from-kabini-dam-water-must-also-be-released-from-the-krishna-raja-sagara-dam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-nature-has-prevailed-10000-cusecs-released-from-kabini-dam-water-must-also-be-released-from-the-krishna-raja-sagara-dam#comments</comments><guid isPermaLink="false">e3ca4116-457a-426f-903d-b77361888d10</guid><pubDate>Sat, 01 Aug 2026 12:47:09 +0000</pubDate><atom:updated>2026-08-01T12:47:09.922Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,mekedatu dam,Kabini Dam,கபினி அணை,Cauvery Water Issue</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/sfpgmxco/Anbumani0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கபினி அணை- அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/sfpgmxco/Anbumani0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-</h2><p>கர்நாடகத்தில் காவிரியின் துணை ஆறுகளில் ஒன்றான கபினியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை நிரம்பி வழிவதையடுத்து அங்கிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீர் இன்னும் எவ்வளவு காலத்திற்கு திறக்கப்படும், தமிழகத்தின் தேவைக்கு போதுமானதாக இருக்குமா? என்பதெல்லாம் அடுத்த சில வாரங்களுக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் எவ்வளவு மழை பெய்யும் என்பதைப் பொறுத்தே அமையும். எனினும் இயற்கையின் கொடையால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது நிம்மதியளிக்கிறது.</p><h2>கபினி அணை</h2><p>கபினி அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 2281 அடியாகவும், நீர் இருப்பு 17.50 டி.எம்.சியாகவும் இருந்தது. அணை நிரம்புவதற்கு இன்னும் 3 அடியும், 2 டி.எம்.சி நீருமே தேவை என்ற நிலையில், வினாடிக்கு 11747 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பிற்பகலில் நீர்வரத்து அதிகரித்த நிலையில் நாளைக்குள் அணை நிரம்பி விடும் என்பதால் முன்னெச்சரிக்கையாகவே நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இது இயற்கையின் கொடையே தவிர கர்நாடக அரசின் விருப்பம் அல்ல.</p><h2>ஹாரங்கி அணை</h2><p>காவிரி பாசன மாவட்டங்களுக்கு குறைந்த பட்சம் சம்பா பருவத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்றால் இன்னும் குறைந்தது 40 முதல் 45 டிஎம்சி தண்ணீர் தேவை. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்தால் கபினி அணையிலிருந்து தண்ணீர் வருவதும் நிறுத்தப்பட்டு விடும். அதனால் தமிழகத்திற்கு பயன் கிடைக்காது.</p><p>இன்னொரு அணையான ஹாரங்கி நிரம்பி வழிவதால் அதிலிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. அடுத்த சில நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் என்று தெரிகிறது.</p><h2>கே.ஆர்.எஸ். அணை</h2><p>எனவே, வெள்ளம் போல் வரும் கூடுதல் நீரை சேமித்து வைக்க வசதியாக கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்தும் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும். அதை இன்னும் ஒரு வாரத்திற்கு தொடருவதன் மூலம் தமிழ்நாட்டின் காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடி செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.</p><p>இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item></channel></rss>