<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 07 Aug 2026 12:25:44 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கியச் செய்திகள்- 7 ஆகஸ்ட் 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-7-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-7-august-2026#comments</comments><guid isPermaLink="false">9e161214-bae4-4b21-8ad3-fb9c9fa000ef</guid><pubDate>Fri, 07 Aug 2026 03:49:59 +0000</pubDate><atom:updated>2026-08-07T12:20:49.884Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/lt2l5fku/speaker.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/lt2l5fku/speaker.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/congress-issues-whip-to-its-mps-in-rs-ls-asks-them-to-be-present-on-aug-10-to-12">மூன்று நாட்கள் பாராளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர்கள் கட்டாயம் இருக்க வேண்டும்: காங்கிரஸ் கொறடா உத்தரவு</a></p><p>* சர்ச்சைக்குரிய வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா 2026 (FCRA Bill) அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படலாம் என வாய்ப்பு</p><p>* அதேபோல் தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்படவும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-edappadi-palanisami-speech-live-not-cut-says-minister-rajmohan">எடப்பாடி பழனிசாமி பேசும்போது நேரலை துண்டிக்கப்பட்டதா?: அமைச்சர் ராஜ்மோகன்</a></p><p>* அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பேசும்போது நேரலை துண்டிக்கப்பட்டது எனக் குற்றம்சாட்டின்னார்.</p><p>* ஒரு நொடி கூட நேரலையில் துண்டிக்கப்படவில்லை. நேரலையில் சென்று கொண்டிருக்கிறது. உங்களுடைய சிரித்த முகத்தை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்- ராஜ்மோகன்</p><h2>சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்</h2><p>பொதுவெளியில் ஆபாசமாகப் பேசிய மார்க்கண்டேயனை கட்சித் தலைமை கண்டித்திருக்க வேண்டும்.</p><p>பொதுவெளியில் மார்க்கண்டேயன் பேசியது மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>அவரிடம் விளக்கம் கேட்டு உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்தார்.</p><p>திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அமைச்சர்கள் கடிதம் மூலம் கோரிக்கை</p><h2>திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் உரை</h2><p>திமுகவின் திட்டங்கள் அனைத்தையும் தவெக ஏற்றுக்கொண்டுள்ளது.</p><p>பனை மேம்பாட்டு இயக்கம் பனை பாதுகாப்பு இயக்கமாக மாறியுள்ளது.</p><p>பட்ஜெட்டில் பெயர் மாற்றம் மட்டும்தான் இருக்கிறது.</p><p>திமுக ஆட்சியில் 25000 கோடி ரூபாய் அளவுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி</p><p>பட்ஜெட்டில் தேடிப் பார்க்கிறேன், இருப்பது போல் இருக்கிறது, கண்ணுக்குப் புலப்படவில்லை.</p><p>கடன் வாங்கி வீட்டிற்கு எடுத்துச் செல்லவில்லை, மக்கள் திட்டங்களுக்கு செலவிட்டுள்ளோம்.</p><p>திமுகவின் திட்டங்கள் அனைத்திலும் முக ஸ்டாலின் இருப்பார் - திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன்</p><p>விருகம்பாக்கம் பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என பிரேமலதா கோரிக்கை.</p><h2>பிரேமலதா விஜயகாந்த்</h2><p>மேகதாது, காவிரி விவகாரத்தில் இரு மாநில முதல்வர்கள் சந்தித்து பேசினால் என்ன?</p><p>காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா செல்ல முதல்வர் விஜய் முடிவெடுத்தது சரிதான்.</p><p>டி.கே.சிவக்குமாரும், விஜயும் இருமாநிலத்தின் புதிய முதல்வர்கள், பேசினால் என்ன? ஏன் தடுக்கிறீர்கள்?</p><p>முதல்வர் கர்நாடகா செல்லும்போது அவமரியாதை ஏற்பட்டால் என்ன செய்வது என்கிறார்கள், அப்படி நடக்க நாங்கள் விட மாட்டோம்.</p><p>முதலமைச்சர் விஜய்க்கு ஒரு தலைகுனிவு ஏற்பட்டால் தமிழக மக்கள் நாங்கள் சும்மா இருப்போமா?</p> <p>விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி இல்லை என்பது ஏமாற்றமாக உள்ளது.</p><p>காவிரி நமது உரிமை, மேகதாதுவில் அணை கட்டக்கூடாது, இதற்காக நாம் ஒன்றிணைய வேண்டும்  - பிரேமலதா</p><h2>பிரேமலதா விஜயகாந்த்</h2><p>மழை பெய்ய தொடங்கிய நிலையில் திறந்தவெளியில் உள்ள நெல்மூட்டைகள் நனைந்து முளைக்கும் அபாயம் உள்ளது. மழை பெய்யும் காலம் என்பதால் நெல்லை சேமிக்க கிடங்குகள் அமைக்க வேண்டும். மழைநீரை சேமித்து தன்னிறைவு பெற்றவர்களாக இருக்க வேண்டும்.</p><p>அனைத்துக்கட்சியினரையும் அழைத்து சென்று பிரதமரை சந்திக்க வேண்டும்.</p><p>நீருக்காக யாரிடமும் கையேந்தாத நிலைக்கு தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்று பிரேமலதா கூறினார்.</p><p>பட்ஜெட் மீதான விவாதத்தில் தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில்,</p><p>மக்கள் விரும்பும் திட்டங்கள் எந்த ஆட்சி வந்தாலும் தொடரப்பட வேண்டும் என்பதே தேமுதிகவின் நிலைப்பாடு. </p><p>திட்டங்களின் பெயர்களை மாற்றுங்கள் மாற்றாதீர்கள், ஆனால் திட்டங்கள் தொடரப்பட வேண்டும்.</p><p>மக்கள் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அவர்களுக்காக தொடரப்பட வேண்டும்.</p><p>விருத்தாச்சலத்தை மாவட்டமாக பட்ஜெட்டில் அறிவிப்பார்கள் என எதிர்பார்த்தேன் என்று கூறினார்.</p> <p>தவெக அளித்த வாக்குறுதிகளில் 4 வாக்குறுதிகள் மட்டும் நிறைவேற்றம் - கணேஷ்</p><p>இபிஎஸ் பேசியபோது நேரலை துண்டிக்கப்பட்டதாக அதிமுக குற்றம் சாட்டிய நிலையில், ஒரு நொடி கூட நேரலை துண்டிக்கப்படவில்லை என அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்தார்.</p> <p>அவையில் இல்லாத அப்பா, மாமனார் என பேசுவதை அவை குறிப்பிலிருந்து நீக்குமாறு கே.என்.நேரு சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார்.</p><h2> ஓ.பன்னீர்செல்வம்</h2><p>தவறான உதாரணங்களை குறிப்பிட்டு பேசி இருக்கிறார் அமைச்சர் ஆதவ்.</p><p>அகில இந்திய அளவில் பாஜக, காங்கிரஸ் என எல்லோருமே கட்சிக்கு நன்கொடை வாங்குகிறார்கள்.  </p><p>கட்சிக்கான நிதியை ஊழல் லஞ்சப்பணமாக கூறியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்குமாறு ஓபிஎஸ் சபாநாயகரிடம் வேண்டுகோள்</p><h2>எ.வ.வேலு</h2><p>தொழிலதிபர் மார்ட்டின் ரூ.900 கோடி கொடுத்தது குறித்து பேரவையில் பேசுவது சரியாக இருக்காது.</p><p>தொழில் என்ற அடிப்படையில் முறையாக அரசிடம் அனுமதி பெற்று தான் திமுகவினர் மது ஆலை நடத்துகின்றனர்.</p><p>தேர்தல் நேரத்தில் அரசியல் இயக்கங்களுக்கு தொழிலதிபர்கள் நன்கொடை அளிப்பது இயல்பு.</p><p>ரூ.900 கோடி வாங்கியது உதயநிதியின் அப்பாவுக்கு நன்றாக தெரியும். அவர் இங்கு இல்லை. அவரிடம் கேட்க சொல்லுங்கள் - ஆதவ்</p><p>உதயநிதி</p><p>திமுக நிதி வாங்கியது தொடர்பாக அவரது மாமனாரிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும்.</p><p>லாட்டரி நிறுவனத்தில் விற்றது யார் என ஆதவின் மாமனாருக்கு தான் தெரியும், அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளட்டும் - அமைச்சர் உதயநிதி</p><p>லாட்டரி நிறுவனத்தில் ரூ.900 கோடி திமுகவினர் வாங்கியது குறித்து உதயநிதி சொல்வாரா? - அமைச்சர் ஆதவ்</p> <p>திமுகவின் பொருளாளர் சாராய ஆலை நடத்துகிறாரா? இல்லையா? </p><p>திமுக லாட்டரி நிறுவனத்திடமிருந்து ரூ.900 கோடி வாங்கியதா? இல்லையா ? - ஆதவ் அர்ஜூனா</p> <p>டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை நீண்ட அறிக்கையை கொடுத்துள்ளது - அருண்ராஜ்</p><p>அதிமுக ஆட்சி காலத்தில் அறிவுரை சொல்ல தவறியது ஏன்?</p><p>ஆதாரமில்லாமல் ஊழல் என்று பேச கூடாது  - எ.வ.வேலு</p><p>மதுவிலக்கை முதலில் கொண்டுவந்தது யார் என நன்றாக தெரியும், அதற்கு வக்காலத்து வாங்காதீர் - செங்கோட்டையன்</p><p>வருடத்தில் எத்தனை கடைகளை குறைக்க போகிறார்கள் என்பதை தெரிவிக்க வேண்டும் - எ.வ.வேலு</p><p>கடந்த ஆட்சியாளர்கள் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என கூறினர். மதுவினால் வரும் வருமானத்தை உயர்த்துவோம் என தவெக கூறாது  - அமைச்சர் விக்னேஷ்</p><p>ஆன்லைனில் மது புக்கிங் செய்யப்படுவது மட்டுமே நடக்கும்.</p><p>ஆன்லைனில் ஆர்டர  செய்தாலும் டாஸ்மாக் கடைக்கு சென்று தான் மதுபானங்களை வாங்க முடியும் - அமைச்சர் விக்னேஷ்</p><p>டாஸ்மாக் கடைகளுக்கு பணம் செல்லாமல் நேரடியாக நிர்வாகத்திற்கு பணம் செல்லும் வகையில் ஆன்லைன் ஆர்டர் - அமைச்சர் விக்னேஷ்</p><h2>அமைச்சர் விக்னேஷ்</h2><p>தவெக ஆட்சியில் மூடப்பட்ட 717 கடைகளின் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது.</p><p>ஆன்லைனில் ஆர்டர் செய்தால் மதுபானம் வீட்டிற்கு டெலிவரி செய்யப்படும் என்பது தவறான தகவல்.</p> <p>திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா சிப்காட் விரிவாக்கம் செய்யப்பட கூடாது. அது விவசாய பகுதி  - பாமக எம்எல்ஏ கணேஷ் குமார். </p><p>மேல்மா விவசாயிகளுடைய கண்ணீருக்கு கூடிய விரைவில் தீர்வு காணப்படும்.  எந்த விவசாயினுடைய அனுமதி இல்லாமல் நிலம் கையகப்படுத்தக்கூடாது என மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. -  அமைச்சர் ஆதவ் அர்ஜுனா </p><p>நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதை தவறாக புரிந்துகொண்டு இந்த அரசு நல்ல பெயர்களை எல்லாம் எடுத்துவிட்டு அதன் மீது ஸ்டிக்கர் ஒட்டி வருகிறது. இவர்களின் பட்ஜெட் ரீல்ஸ் பட்ஜெட். இது வெற்றி அரசு அல்ல, வெட்டி அரசு - வசந்த் கார்த்திகேயன்</p><p>நான் காலேஜ் படிக்கும்போது முதல்வரின் லவ் டுடே படத்தை 6 முறை பார்த்தேன் - திமுக எம்எல்ஏ வசந்த் கார்த்திகேயன் </p> <p>கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை குறைந்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்திடம் போராடித்தான் நீரை பெற்றோம். கர்நாடக அரசு அளித்த விளக்கத்தை தான் அமைச்சர் ஆனந்த் பேரவையில் பதிவு செய்தார் - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</p><p>புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வழியில் ஜெயலலிதாவை போல் தைரியமான முடிவெடுக்கிறார்.</p><p>அம்மா ஆட்சியை மீண்டும் அமைப்போம் எனக்கூறிய அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு அமைச்சர் ஆதவ் விளக்கம்</p><p>தமிழ்நாட்டில் தற்போது நடந்து கொண்டிருப்பதும் ஜெயலலிதாவின் ஆட்சிதான் - அமைச்சர் ஆதவ் விளக்கம்</p><p>திட்டமிட்டு நேரலை துண்டிக்கப்படவில்லை, எதால் நேரலை துண்டிக்கப்பட்டது என்ற காரணம் கண்டறியப்படும் - சபாநாயகர்</p><p>தூய ஆட்சி என சொல்லிக்கொள்ளும் நீங்கள் இபிஎ பேசியபோது நேரலையை துண்டித்தது ஏன்?</p><p>வரும் காலங்களில் அதிமுக சட்டமன்றக்குழு தலைவர் இபிஎஸ் பேசும்போது நேரலை துண்டிக்கப்படக்கூடாது - அக்ரி கிருஷ்ணமூர்த்தி</p> <p>சட்டசபையில் இபிஎஸ் பேசிய போது நேரலை துண்டிக்கப்பட்டதாக அதிமுக குற்றச்சாட்டு.</p><p>அதிமுக, திமுக ஆட்சியில் அம்மா உணவகம் எப்படி இருந்தது என்ற உண்மை மக்களுக்கு தெரியும் - அமைச்சர் ஆதவ்</p><h2>எஸ்.பி.வேலுமணி</h2><p>அம்மா உணவகத்திற்கு அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கவில்லை என அமைச்சர் ஆதவ் கூறியது தவறு.</p><p>இபிஎஸ் தலைமையிலான அதிமுக ஆட்சியில் அம்மா உணவகத்திற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.</p> <p>திமுக, அதிமுக ஆட்சி காலங்களிலும் திட்டங்களுக்கான பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன - செங்கோட்டையன்</p><p>கடந்த ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களுக்கான பெயர்களை மாற்ற கூடாது - எடப்பாடி பழனிசாமி</p><p>திமுக ஆட்சியில் அம்மா உணவகங்கள் செயல்படவில்லை என எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு</p><h2>கே.என்.நேரு விளக்கம்</h2><p>திமுக ஆட்சியில் அம்மா உணவகங்கள் செயல்பட்டது.</p><p>அம்மா உணவகத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று தான் முதல்வராக இருந்த போது ஸ்டாலினும் கூறினார்.</p><p>அதிமுக கொண்டு வந்த அம்மா உணவகத்தை திமுக ஆட்சியிலும் தொடர்ந்து நடத்தினோம், தற்காலிக ஊழியரையும் நீக்கவில்லை.</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</h2><p>திமுக, அதிமுக கொண்டு வந்த திட்டங்களை தவெக அரசு செயல்படுத்தும்.</p><p>தவெக ஆட்சி அமைந்த உடன் அம்மா உணவகம் பெயர் மாற்றாமல் தரத்தை மேம்படுத்தி செயல்படுத்தி உள்ளோம்.</p><p>அம்மா உணவகத்திற்கு நிதி ஒதுக்கி சிறப்பாக செயல்படுத்துகிறது தவெக அரசு.</p><p>திமுக, அதிமுக என யார் ஆட்சியிலும் அறிவிக்கப்பட்ட நல்ல திட்டங்களை தவெக அரசு தரம் உயர்த்தி தொடர்கிறது.</p><p>திமுக ஆட்சியில் அம்மா உணவகங்கள் செயல்படவில்லை.</p><p>ஸ்டிக்கர் என்ற வார்த்தை யாருக்காக உருவானது என்பது தெரியும் - நிர்மல்குமார்</p><h2>அக்ரி கிருஷ்ணமூர்த்தி</h2><p>மாற்றம் மாற்றம் என கூறியது பெயர் மாற்றத்தை தானா?  </p><p>அதிமுக திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி அறிவித்துள்ளது தவெக.</p><p>தாலிக்கு தங்கம் திட்டம் அண்ணனின் சீர் திட்டமாக மாறி உள்ளது. </p><p>நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து தவெக மக்களை ஏமாற்றி உள்ளது. வேளாண் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.  சிறுகுறு விவசாயிகள் கடனை கட்டமுடியாமல் தவித்து வருகின்றனர். சிறுகுறு விவசாயிகளிடம் பாகுபாடு செய்வது ஏற்புடையதல்ல - அக்ரி கிருஷ்ணமூர்த்தி</p><h2>அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி</h2><p>மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் பட்ஜெட்டாக இல்லை.</p><p>நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி மக்கள் நலத்திட்டங்களை நிறுத்த கூடாது.</p><p>மக்களின் கவனக்குறைவால் ஆட்சி பீடத்தில் தவெக அரசு உள்ளது.</p><p>நிதி பற்றாக்குறை இருப்பது தெரிந்து தான் வாக்குறுதி அளித்தீர்கள்.</p><h2>எம்எல்ஏ சரவணன்</h2><p>திமுக அரசு ரூ.3,000 விலையில் வழங்கிய சைக்கிளை தொடர்ந்து பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.</p><p>முன்னாள் ஆட்சியாளர்கள் வழங்கியதை போல் தரமற்று இல்லாமல், ஹெல்மெட், குடிநீர்பாட்டில் வசதியுடன் நவீன சைக்கிள் தரும் புதிய திட்டத்திற்கு வரவேற்பு.</p><p>தவெக அரசு 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு தருவதாக அறிவித்த நவீன சைக்கிள் திட்டத்திற்கு எம்எல்ஏ சரவணன் பாராட்டு தெரிவித்தார்.</p><p>2 மாதத்தில் தவெக அரசு ரூ.20,000 கோடி கடன் வாங்கி உள்ளது. கடன் வாங்காமல் ஆட்சி நடத்த முடியாது - கே.என்.நேரு</p><p>கடன் வாங்கி தான் அத்தனை அரசும் செயல்படும் என நிதித்துறை செயலர் கூறினார் - கே.என்.நேரு</p><p>ஒவ்வொருவரின் தலை மேல் ரூ.1.28 லட்சம் கடன் உள்ளது - அமைச்சர் மரிய வில்சன்</p><h2>அண்ணன் சீர் திட்டம்</h2><p>அண்ணனின் சீர் திட்டத்தை தவெக அரசால் செயல்படுத்த முடியாது. அண்ணனின் சீர் திட்டத்தை செயல்படுத்த 2000 கோடி ரூபாய் தேவைப்படும் - ரகுபதி </p><h2>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி</h2><p>தொகுதி மறுவரையறையில் ஒட்டுமொத்த மாநிலங்களுக்குமே முன்னுதாரணம் திமுக தான்.</p><p>தொகுதி மறுவரையறைக்கு எதிராக 5 மாநில முதல்வர்களுடன் ஆலோசித்து எதிர்ப்பை பதிவு செய்தோம். </p><p>எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து திமுக தலைவர் முடிவெடுப்பார்.</p> <p>தொகுதி மறுவரையறை குறித்து முதல்வர் அழைத்த கூட்டத்திற்கு திமுக உறுப்பினர்கள் வருவார்களா? என உதயநிதி பதில் தரட்டும்- அமைச்சர் ஆதவ்</p><p>அனைத்துக்கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் திமுக பங்கேற்குமா- அமைச்சர் ஆதவ்</p><p>திமுக உறுப்பினர் ரகுபதி அரசியல் மேடை போல் பேசி கொண்டிருக்கிறார் - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>விபி ஜி ராம் ஜி சட்டத்தை திமுக எதிர்த்த நிலையில் தற்போது நடைமுறை படுத்தி உள்ளனர் - ரகுபதி</p><p>ரூ.2 லட்சம் வழங்கும் திட்டம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது - அமைச்சர் அருண்ராஜ்</p><p>விபத்து காப்பீடு திட்டம் குறித்த செய்திகள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை - ரகுபதி</p><p>விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளதா? என ரகுபதி கேள்வி எழுப்பினார்.</p><h2>அமைச்சர் மரிய வில்சன்</h2><p>கசிவு பற்றி ஆய்வு செய்து அதன் அறிக்கை முதல்வரின் டேபிளில் உள்ளது, அவர் சரியான நேரத்தில் வெளியிடுவார்.</p><p>ஆடிட்டிங் முடிந்துவிட்டது, கசிவு என்றால் என்ன என்பது குறித்து சரியான நேரத்தில் முதலமைச்சர் பேசுவார்.</p><p>முதல்வரிடம் நாங்கள் அளித்த அறிக்கையை படிக்கவே உங்களுக்கு 100 நாட்கள் தேவை என ரகுபதிக்கு அமைச்சர் மரிய வில்சன் பதில் அளித்தார்.</p><p>நீங்கள் தந்த பட்ஜெட்டை வைத்து தான் பேசுகிறேன், அப்படி பேசக்கூடாது என்றால் வேறு ஒரு  நிதிநிலை அறிக்கை தாருங்கள் - ரகுபதி</p><p>பழக்க தோஷத்தில் பேசாதீர்கள், ஆதாரத்துடன் பேசுங்கள் என ரகுபதிக்கு அமைச்சர் ஆனந்த் அறிவுறுத்தல்.</p><p>நீர்வளத்துறையில் பில்களை கிளியர் செய்ய கமிஷன் வாங்கியது கடந்த ஆட்சிக்காலம் - அமைச்சர் ஆனந்த்</p><p>நீர்வளத்துறையில் ஒரு பில் பெற 2 சதவீதம் கமிஷன் கேட்கிறார்கள் - ரகுபதி</p><p>முன்னாள் அமைச்சர் ரகுபதியின் கேள்விக்கு அமைச்சர் விஸ்வநாதன் பதில் அளித்தார்.</p><p>அவையில் இல்லாதவர் ஒருவரை பற்றி பேசுவது அவையை மீறிய செயல் என அமைச்சர் விஸ்வநாதன் காட்டம்</p><p>திருப்பதி ஏழுமலையானை தரிசித்துவிட்டு வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் வினோத்.</p><p>திமுக திராவிட மாடல் ஆட்சியை இந்தியா முழுவதும் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் நடத்தியவர் ஸ்டாலின்.</p><p>தகவல் அறியும் உரிமை கமிஷனில் உறுப்பினர் நியமிக்காததால் தகவல்களை மக்கள் அறிய முடியவில்லை என்று  ரகுபதி கூறினார்.</p><p>பிரவின் சக்ரவர்த்தி தமிழகத்தின் கொள்கை வடிவமைப்பாளர் என்ற செய்தி உண்மையா? என்று திமுக கேள்வி எழுப்பியது.</p><p>தமிழகத்திற்கு நியாயமான வரிப்பகிர்வு கோரி சட்டசபையில் அரசினர் தனித்தீர்மானம்</p><p>சட்டசபையில் அரசினர் தனித்தீர்மானத்தை நிதியமைச்சர் மரிய வில்சன் முன்மொழிந்தார்.</p><p>இதையடுத்து நியாயமான வரிப்பகிர்வு கோரி தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் அறிவித்தார்.</p><p>தவெக அரசு கொண்டு வந்த தனிநபர் தீர்மானத்திற்கு திமுக, அதிமுக வரவேற்பு.</p><p>தனிநபர் தீர்மானத்தின் மீது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறுகையில்,</p><p>வளர்ச்சி அடைந்த மாநிலங்களை பாதிக்காத அளவிற்கு நிதி பகிர்வு இருக்க வேண்டும் என்று கூறினார்.</p><p>மாநிலங்களுக்கு 50 சதவீத நிதிப்பகிர்வை உறுதி செய்ய வேண்டும் என திமுக சார்பில் தங்கம் தென்னரசு வலியுறுத்தினார். </p><h2>தங்கம் தென்னரசு</h2><p>நிதி பங்களிப்பு குறைவதால் தமிழகத்தில் நிதி சுமை அதிகரித்துள்ளது. </p><p>தமிழ்நாடு வரியாக செலுத்தும் 1 ரூபாய்க்கு 21 காசுகள் மட்டுமே திரும்ப கிடைக்கிறது. உ.பி.க்கு ரூ.2-க்கு மேல் தரப்படுகிறது. </p><p>தமிழ்நாடு அளிக்கும் பங்களிப்புக்கு ஏற்றவகையில் மத்திய அரசு நிதியை நமக்கு தருவதேயில்லை.</p><p>நிதி பகிர்வில் தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.</p><p>ஒட்டுமொத்த வருவாய் அதிகாரமும் மத்திய அரசிடம் உள்ளது. செலவினம் மட்டும் மாநில அரசின் கையில் உள்ளது - தங்கம் தென்னரசு</p><p>நிதிப்பகிர்வு தொடர்பான தனித்தீர்மானத்தின் மீது திருத்தம்கோரி முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார். அப்போது அவர் கூறுகையில்,</p><p>மாநிலங்களுக்கு 50 சதவீத நிதிப்பகிர்வை உறுதி செய்ய வேண்டும்.</p><p>இந்தியாவிலேயே 2-வது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் உள்ளது.</p><p>மாநில வருவாய்க்கான ஆதாரம் குறையும் சூழல் ஏற்பட்டுள்ளது.</p><p>மத்திய அரசுக்கு செலுத்தப்படும் வரிகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு உரிய நிதிப்பகிர்வு கோரி தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது.</p><p>தமிழ்நாட்டிற்கான நிதிப்பகிர்வை உறுதி செய்ய வலியுறுத்தி நிதியமைச்சர் மரிய வில்சன் தனித்தீர்மானத்தை கொண்டு வந்தார்.</p><h2>அமைச்சர் வினோத்</h2><p>அனைத்து விவசாயிகளையும் பயிர் காப்பீட்டிற்குள் கொண்டு வர முயற்சி.</p><p>பயிர் காப்பீடு கடந்தாண்டை வி நடப்பாண்டில் 44% கூடுதலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>காவிரி நீரை கர்நாடகாவிடமிருந்து பெறுவது பல ஆண்டுகளாக சவாலாகவே உள்ளது.</p><p>சூழலை கருத்தில்கொண்டு மேட்டூர் அணையில் நீர் திறக்கப்படும் - அமைச்சர் ஆனந்த்</p><p>காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எந்த சமரசமும் செய்யாது.</p><p>காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை காக்க நிர்வாக, சட்டரீதியாக தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் ஆனந்த்</p><p>காவிரி நீரை கர்நாடகாவிடமிருந்து பெறுவது பல ஆண்டுகளாக சவாலாகவே உள்ளது.</p><p>காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் கர்நாடகா நீர் திறக்கவில்லை - அமைச்சர் ஆனந்த்</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/7f456r52/anand.jpg" /></figure><p>காவிரி விவகாரத்தில் உறுப்பினர்களின் கருத்திற்கு நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p><p>பேச்சுவார்த்தைக்கு தமிழ்நாடு முதலமைச்சரால் கேட்டு கொள்ளப்பட்டது.</p><p>கர்நாடக முதலமைச்சர் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டாம் என கூறினார்.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/rwllwdmz/sowmiya.jpg" /></figure><p>காவிரி விவகாரம் தொடர்பாக பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி பேசுகையில்,</p><p>கர்நாடக அரசு உரிய காலத்தில் காவிரி நீரை ஒருபோதும் திறந்து விட்டது இல்லை.</p><p>காவிரி நீர் வராத காரணத்தால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>தற்போது கர்நாடகா திறந்து விட்டது உபரிநீரை மட்டும்தான்.</p><p>பேச்சுவார்த்தை முயற்சியே தேவையில்லை. அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என பாமகவும் வலியுறுத்துகிறது என்று கூறினார்.</p><p>உச்சநீதிமன்றத்தில் திமுக அரசு வலுவான வாதங்களை எடுத்து வைக்கவில்லை - அமைச்சர் ஆதவ்</p><p>திமுக ஆட்சியின்போது தமிழக அரசின் மனுக்களை 3 முறை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது ஏன்?</p><p>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி அவைக்கு தவறான தகவலை அளித்துள்ளார் - அமைச்சர் ஆதவ்</p><p>இங்கேயே அனைத்துக்கட்சியினரும் உள்ள நிலையில் இங்கேயே தீர்மானம் நிறைவேற்றலாம் - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>சம்பந்தம் இல்லாத பிரச்சனையை பேசுவதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி காட்டம்</p><p>அமைச்சர் நிர்மல்குமார் காவிரி பிரச்சனையை திசை திருப்ப முயல்கிறார் - உதயநிதி</p><p>முதலமைச்சர் 3 ஆண்டுகளாக யாருக்கும் பயந்தது இல்லை. எம்பிக்கள் கூட்டத்தில் திமுகவினர் பங்கேற்பார்களா? - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>காவிரி பிரச்சனை என்பது தமிழ்நாட்டின் உயிர்நாடி பிரச்சனை. காவிரி விவகாரத்தை சட்டரீதியாக எதிர்கொள்வது தான் தீர்வு. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பேச்சுவார்த்தைக்கு சென்று தீர்வு எட்டப்படவில்லை - சிபிஐ ராமசந்திரன்</p><p>காவிரி விவகாரத்தில் தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்  - செல்லசுவாமி</p><p>முதலமைச்சருக்கு அவமானம் ஏற்பட்டால் அது தமிழ்நாட்டிற்கான அவமானம் - செல்லசுவாமி</p><p>காவிரி நீருக்காக கர்நாடகத்திடம் மண்டியிட தேவையில்லை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்</p><p>அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என தவெக கூட்டணியினரே கூறுகின்றனர். </p><p>கர்நாடக அணையிலே போதிய நீர் இருந்தும் திறக்கப்படவில்லை - இபிஎஸ்</p><p>பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும். மேகதாது அணை தொடர்பான திருத்தத்தை நாங்கள் ஏற்கவில்லை -  இபிஎஸ்</p><h2>முதலமைச்சர் விஜய்</h2><p>காவிரி விவகார பேச்சுவார்த்தையில் அவமானம் ஏற்பட்டால் அதனையும் தமிழக மக்களுக்காக தாங்குவேன்.</p><p>காவிரி விவகாரம் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் உரிய விளக்கம் தருவார்.</p><p>அரசியலே நாங்கள் தான் எனக்கூறுவோருக்கு குறுவை தொகுப்பு தந்தது குறித்து தெரியாமல் போனது எப்படி?</p><p>தினசரி செய்தித்தாள் வாசித்திருந்தால் தெரிந்திருக்கும்.</p><p>கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக நாம் அனைவரும் சேர்ந்து தான் தீர்மானம் நிறைவேற்றினோம். </p><p>காவிரி நதிநீர் மற்றும் மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை நமது அரசு ஒருபோதும் விட்டுத்தராது.</p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>கர்நாடக பயணம் குறித்து யோசித்தது நான் தான், அதற்கு பல விமர்சன கருத்துகள் வந்தன. </p><p>நேர்மறையான விளைவு வரும் என்பதால் தான் பேசித் தீர்க்கும் முடிவு முயற்சி செய்தேன்.</p><p>பகை நாடுகளே பிரச்சனையை பேசி தீர்க்கப் பார்க்கிறோம். பக்கத்து மாநிலத்திடம் பேசி பார்க்க நினைத்தோம் என்று முதலமைச்சர் விஜய் கூறினார்.</p> <p>காவிரி நதிநீர் மற்றும் மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை நமது அரசு ஒருபோதும் விட்டுத்தராது - முதலமைச்சர் விஜய்</p><p>மேகதாது தொடர்பாக அனுமதி அளிக்க கூடாது என பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளோம் - முதலமைச்சர்</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/q3vadxbg/vijay2.jpg" /></figure><p>காவிரி நமக்கு உயிர் ஆதாரம், அதை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் இல்லை - முதலமைச்சர் விஜய்</p><p>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர், விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக பேரவையில் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கி உள்ளோம்.</p><p>முழு தள்ளுபடி என சொல்லிவிட்டு பயிக்கடனை அரைகுறையாக தள்ளுபடி செய்தது ஏன் என அரசு பதில் அளிக்க வேண்டும்.</p><p>டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் தர வேண்டும்.</p><p>தவெக அரசு அமைந்த பின்னர் மேகதாது விவகாரத்தில் அதிக வேகம் காட்டும் கர்நாடகா.</p><p>அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டவேண்டும் என அனைத்து கட்சிகளும் வலியுறுத்துகின்றன என்று கூறினார்.</p> <p>மறைந்த திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் பாக்யராஜ், கவிஞர் மற்றும் எழுத்தாளர் புவியரசு, மறைந்த பின்னணி பாடகி ஜானகி, எழுத்தாளர் பூமணி, முன்னாள் சட்டசபை உறுப்பினர் சுருளிவேல் ஆகியோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இதையடுத்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.</p> <p>தமிழ்நாடு சட்டசபை இன்று கூடியது. சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெற்றது.</p><p>சட்டசபை கூடியதும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் இரங்கல் குறிப்பு வாசித்தார்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/condolence-resolution-for-deceased-celebrities-in-tamil-nadu-assembly" rel="nofollow">தமிழக சட்டமன்றத்தில் மறைந்த பிரபலங்களுக்கு இரங்கல் தீர்மானம்</a></p><p>* மறைந்த பின்னணி பாடகி ஜானகிக்கு பேரவையில் இரங்கல் தீர்மானம்.</p><p>* எழுத்தாளர் பூமணிக்கு பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/centre-says-tamil-nadu-has-not-sought-changes-to-parandur-green-airport-plan">பரந்தூர் விமான நிலைய திட்டத்தை மாற்றியமைக்க தமிழக அரசு கோரவில்லை- நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!</a></p><p>* தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு மத்திய அரசு கொள்கை அளவிலான ஒப்புதலை அளித்தது.</p><p>* தமிழ்நாடு அரசிடம் இருந்து மத்திய அரசுக்கு ஏதேனும் கடிதம் வரப்பெற்றதா? என கேள்வி எழுப்பினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-assembly-to-pass-resolution-on-just-tax-distribution" rel="nofollow">தமிழகத்திற்கு நியாயமான வரிப்பகிர்வு கோரி சட்டசபையில் இன்று தீர்மானம்</a></p><p>* மாநிலத்தின் நியாயமான நிதி நலன்கள் பாதுகாக்கப்படுவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.</p><p>* தேசிய பொருளாதாரத்திற்கு தொடர்ந்து முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-and-sangeetha-divorce-case-hearing-today">முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணை</a></p><p>* சங்கீதா விவாகரத்து கோரி கடந்த ஆண்டு டிசம்பரில் செங்கல்பட்டு முதன்மை அமர்வு  நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.</p><p>* விவாகரத்து கேட்டுள்ள இருவரையும் சமரச மையத்துக்குதான் அனுப்ப வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/80th-independence-day-5-layer-security-at-chennai-airport"> 80-வது சுதந்திர தினம்: சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு</a></p><p>* நாட்டின் 80-வது&nbsp;சுதந்திர தின விழா வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது.</p><p>* விமான நிலையம் வரும் வாகனங்கள் மற்றும் பயணிகள் பலத்த சோதனைக்கு பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.&nbsp;</p> ]]></content:encoded></item><item><title>இந்திய - சீன எல்லைப் பிரச்னைகள்: தூதரக மற்றும் ராணுவ பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுகாண இருநாடுகளும் ஒப்புதல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/india-china-border-issues-both-nations-agree-to-seek-a-resolution-through-diplomatic-and-military-talks</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-china-border-issues-both-nations-agree-to-seek-a-resolution-through-diplomatic-and-military-talks#comments</comments><guid isPermaLink="false">64484378-c931-45ef-8502-f5fcca7ab39e</guid><pubDate>Fri, 07 Aug 2026 12:23:05 +0000</pubDate><atom:updated>2026-08-07T12:23:05.616Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,China,சீனா,border issues,எல்லைப் பிரச்னைகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/xewecfl0/New-Project-2026-08-07T171716.651.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இந்திய - சீன எல்லைப் பிரச்னைகள்: தூதரக மற்றும் ராணுவ பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுகாண இருநாடுகளும் ஒப்புதல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/xewecfl0/New-Project-2026-08-07T171716.651.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சீனாவிற்கும், இந்தியாவிற்கும் இடையே இருக்கும் தீர்க்கமுடியாத எல்லைப் பிரச்னைகளை களைய தூதரக மற்றும் ராணுவ ரீதியிலான வழிமுறைகளை தொடர்ந்து மேற்கொள்ள இருநாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. </p><p>டெல்லியில் நேற்று (ஆக.6) நடைபெற்ற இந்தியா-சீனா எல்லை விவகாரங்கள் குறித்த ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புக்கான செயற்குழுவின் 36வது கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டது. </p><p>கூட்டத்தில் எல்லை நிர்ணயம், எல்லை மேலாண்மை, எல்லைத் தாண்டிய ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இந்தியக் குழுவிற்கு வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜித் கோஷ் தலைமை தாங்கினார். அதே சமயம் சீனத் தரப்பிற்கு சீனாவின் வெளியுறவு அமைச்சகத்தின் எல்லை மற்றும் கடல்சார் விவகாரங்கள் துறையின் தலைமை இயக்குநர் ஹூ யான்சி தலைமை தாங்கினார்.</p><p>எல்லை தாண்டிய ஆறுகள் தொடர்பான நிபுணர் மட்டக் குழுவின் கூட்டம் விரைவில் நடைபெற வேண்டியதன் அவசியமும், மேல்நிலைத் திட்டங்கள் தொடர்பான தொழில்நுட்ப விவரங்களைப் பகிர்ந்துகொள்ளவும் இந்திய தரப்பில் வலியுறுத்தப்பட்டது. </p><h2>35வது WMCC சந்திப்பு</h2><p>முன்னதாக 35வது மேற்கு ஆசிய ஒத்துழைப்பு கவுன்சில் கூட்டம் மே 27 அன்று பெய்ஜிங்கில் நடைபெற்றது. இதில், இரு தரப்பினரும் இந்தியா-சீனா எல்லைப் பகுதியில் நிலவும் சூழ்நிலையை ஆய்வு செய்ததுடன், எல்லைப் பகுதிகளில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பேணுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து திருப்தி தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>மூன்று நாட்கள் பாராளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர்கள் கட்டாயம் இருக்க வேண்டும்: காங்கிரஸ் கொறடா உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/national/congress-issues-whip-to-its-mps-in-rs-ls-asks-them-to-be-present-on-aug-10-to-12</link><comments>https://www.maalaimalar.com/news/national/congress-issues-whip-to-its-mps-in-rs-ls-asks-them-to-be-present-on-aug-10-to-12#comments</comments><guid isPermaLink="false">2cd471a7-7ac9-42e9-998f-89e8bf4735c3</guid><pubDate>Fri, 07 Aug 2026 12:17:48 +0000</pubDate><atom:updated>2026-08-07T12:17:48.945Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,நாடாளுமன்றம்,parliament,தொகுதி மறுவரையறை மசோதா,Delimitation Bill</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/aq0aoqma/Parliament0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நாடாளுமன்றம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/aq0aoqma/Parliament0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மிக முக்கியமான விவகாரங்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதால், மாநிலங்களவை மற்றும் மக்களவையில் உள்ள தங்கள் கட்சி உறுப்பினர்கள் ஆகஸ்ட் 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் அவையில் கட்டாயம் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கொறடாக்கள் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>இந்த மூன்று நாட்களிலும் தங்கள் கட்சி உறுப்பினர்கள் அவையில் இருப்பதை உறுதி செய்யுமாறு இந்தியா (INDIA) கூட்டணியில் உள்ள அனைத்துக் கூட்டணி கட்சிகளிடமும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><h2>தொகுதி வரையறை மசோதா தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்ப்பு</h2><p>சர்ச்சைக்குரிய வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026 (FCRA Bill) அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கும் நிறைவேற்றத்திற்கும் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது என்ற தகவல்களுக்கு மத்தியில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், தொகுதி மறுவரையறை தொடர்பான அரசியலமைப்புத் திருத்த மசோதாவையும் அரசு பரிசீலித்து வருவதாகப் பேசப்படுகிறது.</p><p>மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை கொறடா (Chief Whip) ஜெய்ராம் ரமேஷ் பிறப்பித்த three-line உத்தரவில், "திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் (அதாவது ஆகஸ்ட் 10, 11 மற்றும் 12 தேதிகளில்) மாநிலங்களவையில் மிக முக்கியமான விவகாரங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.</p><p>மாநிலங்களவையில் உள்ள காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அனைவரும், ஆகஸ்ட் 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் (திங்கள், செவ்வாய் மற்றும் புதன்) காலை 11 மணி முதல் அவை ஒத்திவைக்கப்படும் வரை தவறாமல் அவையில் இருக்கவும், கட்சியின் நிலைப்பாட்டை ஆதரிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிக முக்கியமான விஷயமாகக் கருதப்பட வேண்டும்," என்று ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இதேபோன்றதொரு உத்தரவை மக்களவையில் உள்ள கட்சி உறுப்பினர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் தலைமை கொறடா கே. சுரேஷ் பிறப்பித்தார்.</p><h2>தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற 3-ல் 2 பங்கு ஆதரவு தேவை</h2><p>அடுத்த வாரத்திற்கான அரசின் தற்காலிக அலுவல் பட்டியலை குறிப்பிடும்போது, ​​பாராளுமன்ற விவகாரங்களுக்கான இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், FCRA மசோதா மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறையைச் செயல்படுத்துவதற்கான அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.</p><p>FCRA மசோதாவை நிறைவேற்ற எளிய பெரும்பான்மை போதுமானது. ஆனால் அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படுகிறது. அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை இந்தக் கூட்டத்தொடரில் கொண்டுவராவிட்டால் அடுத்த கூட்டத்தொடரில் கொண்டுவரலாம் என்றும், அப்படியிருந்தாலும் 2029 மக்களவைத் தேர்தலுக்குள் அதைச் செயல்படுத்தப் போதுமான நேரம் இருக்கும் என்றும் அரசாங்கத் தரப்பில் ஒரு கருத்து நிலவுகிறது.</p>]]></content:encoded></item><item><title>சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/trailer-for-suriyas-viswanath-and-sons-released</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/trailer-for-suriyas-viswanath-and-sons-released#comments</comments><guid isPermaLink="false">3f1cec38-2d86-4a5b-8044-c4271fa90c7f</guid><pubDate>Fri, 07 Aug 2026 12:04:44 +0000</pubDate><atom:updated>2026-08-07T12:04:44.947Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சூர்யா,suriya,mamitha baiju,மமிதா பைஜூ,vishwanath and sons,விஸ்வநாத் அண்ட் சன்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/jrlze6p1/New-Project-2026-08-07T173422.835.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/jrlze6p1/New-Project-2026-08-07T173422.835.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ, ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளப் படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். </p><p>சித்தாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் டீசர், பாடல்கள் எல்லாம் வெளியாகி நல்ல வரவேற்பைப்  பெற்றுள்ளன. </p><p>குறிப்பாக மமிதாவிற்கும், அவரைவிட 20 வயது அதிகமாக இருக்கும் சூர்யாவுக்கும் இடையே படத்தில் காண்பிக்கப்பட்டுள்ள காதல் காட்சிகள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் படம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாக உள்ளது. </p><p>இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி உள்ளது. </p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/jZHoM2YhFCY"></iframe></figure>]]></content:encoded></item><item><title>டிஎன்பிஎல் 2026: சதத்தை தவறவிட்ட ஆஷிக்: 205 ரன்களைக் குவித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/tirupur-need-206-runs-against-chepauk-in-tnpl-2026</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/tirupur-need-206-runs-against-chepauk-in-tnpl-2026#comments</comments><guid isPermaLink="false">406ce830-4402-4e10-8707-f86a69e20102</guid><pubDate>Fri, 07 Aug 2026 11:50:11 +0000</pubDate><atom:updated>2026-08-07T11:50:11.063Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,Chepauk super gillies,சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி,aashiq,ஆஷிக்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/ltq9os4r/aashiq.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ aashiq]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/ltq9os4r/aashiq.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 10-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. வரும் 28-ம் தேதி வரை இரு கட்டமாக இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.</p><p>மொத்தம் உள்ள 32 ஆட்டங்களில் திண்டுக்கல்லில் 20 போட்டிகளும், சென்னையில் 12 ஆட்டங்களும் நடக்கிறது. 16 மற்றும் 17-ம் தேதி ஓய்வு தினமாகும்.</p><p>முதல் கட்ட போட்டிகள் வரும் 15-ம் தேதி வரை திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி  மைதானத்தில் நடக்கின்றன.</p><h2>டாஸ் வென்ற திருப்பூர்</h2><p>இந்நிலையில், டிஎன்பிஎல் தொடரின் 5-வது லீக் போட்டி திண்டுக்கல்லில் இன்று நடைபெறுகிறது. இதில் திருப்பூர் தமிழன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற திருப்பூர் தமிழன்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.</p><p>அதன்படி, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 21 ரன் சேர்த்த நிலையில் தொடக்க ஆட்டக்காரர் வாசீம் அகமது 16 ரன்னில் அவுட்டானார். </p><p>2வது விக்கெட்டுக்கு இணைந்த கேப்டன் ஜெகதீசன்-ஆஷிக் ஜோடி 57 ரன்கள் எடுத்த நிலையில் ஜெகதீசன் 27 ரன்னில் அவுட்டானார். </p><h2>சதத்தை தவறவிட்ட ஆஷிக்</h2><p>பொறுப்புடன் ஆடிய ஆஷிக் அரை சதம் கடந்தார். அதன்பின் அதிரடியாக ஆடினார். சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆஷிக் 56 பந்தில் 7 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 98 ரன்னில் ஆட்டமிழந்தார். </p><h2>205 ரன்கள் குவிப்பு</h2><p>இறுதியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்துள்ளது. </p><p>திருப்பூர் தமிழன்ஸ் அணி சார்பில் மோகன் பிரசாத், சிலம்பரசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.</p><p>இதையடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மகன்... முடிவுக்கு வந்த விவாகரத்து வழக்கு: விஜய் - சங்கீதா எதிர்காலம் என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/son-puts-an-end-to-rumors-divorce-case-concluded-what-does-the-future-hold-for-vijay-and-sangeetha</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/son-puts-an-end-to-rumors-divorce-case-concluded-what-does-the-future-hold-for-vijay-and-sangeetha#comments</comments><guid isPermaLink="false">33ba657d-0626-425e-b2b4-7ba7ded9818e</guid><pubDate>Fri, 07 Aug 2026 11:42:55 +0000</pubDate><atom:updated>2026-08-07T11:42:55.672Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Sangeetha,ஜோசப் விஜய்,joseph vijay,சங்கீதா,Divorce Petition,விவாகரத்து மனு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/v5d51v91/New-Project-2026-08-07T171220.708.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மகன்... முடிவுக்கு வந்த விவாகரத்து வழக்கு: விஜய் - சங்கீதா எதிர்காலம் என்ன?]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/v5d51v91/New-Project-2026-08-07T171220.708.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய்யிடம் இருந்து விவாகரத்துக் கோரி அவரது மனைவி சங்கீதா சொர்ணலிங்கம் தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெற்றுள்ளார். </p><p>மனுவை திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து வழக்கை முடித்துவைப்பதாக செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் நீண்டநாட்களாக தமிழ்நாட்டில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வந்த வழக்கு முடிவுப் பெற்றுள்ளது. </p><p>வழக்கு இன்று விசாரணைக்கு வந்தநிலையில், லண்டனில் இருக்கும் சங்கீதா காணொலி காட்சி வாயிலாக ஆஜராக நீதிபதியிடம் சுமார் 15 நிமிடங்கள் பேசியதாகவும், அப்போது மனப்பூர்வமாக மனுவை திரும்பப் பெற்றுக்கொள்வதாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. </p><p>இதனைத் தொடர்ந்து, நீதிமன்றம் இந்த விவாகரத்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.</p><h2>மனைவியான ரசிகை </h2><p>வெவ்வெறு மதங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், 1999ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி சென்னையில் இந்து முறைப்படி விஜய்யும், சங்கீதாவும் திருமணம் செய்துகொண்டனர்.  விஜய் கிறிஸ்தவர், சங்கீதா இந்து. விஜய்யின் ரசிகையாக இருந்தப் பெண்ணை, அவரது மணப்பெண்ணாக மாற்றியது விஜய்யின் தந்தை இயக்குநர் சந்திரசேகர்தான்.</p><p>இந்தத் தம்பதியருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். திருமணமான மறுஆண்டே மகன் ஜேசன் சஞ்சயும், 2005-ல் மகள் திவ்யா சாஷாவும் பிறந்தனர். </p><p>இவ்வாறு இப்பந்தம் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் நீடித்தநிலையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம், விஜய்யிடம் இருந்து விவாகரத்துக் கோரி சங்கீதா மனுத்தாக்கல் செய்து விஜய்யின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். ரசிகர்களை தாண்டி இந்தச் செய்தி அப்போது மட்டுமின்றி இன்றுவரை தமிழ் சினிமாத்துறையிலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் பேசுபொருளாக இருந்தது.</p><h2>விவாகரத்து மனுவில் கூறப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள்</h2><p>சங்கீதா சொர்ணலிங்கம் தனது விவாகரத்துக் கோரிய மனுவில், விஜய் நீண்டநாட்களாக மூன்றெழுத்துப் பிரபல நடிகை ஒருவருடன் திருமணத்தைத் தாண்டிய உறவில் இருந்து வருவதாகவும், இது தனக்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாக குறிப்பிட்டிருந்தார்.</p><p>விஜய் உடன் இருக்கும் புகைப்படங்களை நடிகை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி வந்தது தனக்கு மட்டுமின்றி, தனது பிள்ளைகளுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.</p><p>மேலும் இருவருக்கும் இடையே நீண்டநாட்களாகவே இந்த பிரச்னை நிலவிவந்ததாகவும், முன்னரே சங்கீதா விவாகரத்து கோரியதாகவும், இதனால் அவரை விஜய் வீட்டுச்சிறையில் வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார். </p><p>மேலும் இந்த திருமண உறவை ரத்து செய்யக்கோரியதுடன், நிரந்தர ஜீவனாம்சமும், திருமண வீட்டில் தொடர்ந்து வசிக்கும் உரிமையையும் கோரியிருந்தார். </p><h2>மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட வழக்கு</h2><p>விஜய்யின் அரசியல் பிரவேசத்தினாலும், சங்கீதா லண்டனில் இருப்பதாலும், மனுதாரர்கள் ஆஜராகாமல் இந்த விவாகரத்து வழக்கு பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.</p><p>கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற முந்தைய விசாரணையின்போது, ​​இரு தரப்பினரும் ஆஜராகவில்லை. அவர்களுக்காக அவரவர் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.</p><p>இந்நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு சட்டசபைக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும்நிலையில் விஜய் தரப்பில் இருந்து ஆஜராவதில் இருந்து விலக்கு கோரப்பட்டது. ஆனால் சட்டசபை முடிந்தபின் ஆஜராகுமாறு நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.</p><p>மறுபுறம் சங்கீதா காணொலி காட்சி வாயிலாக ஆஜராக நீதிபதி அவரிடம் 15 நிமிடங்கள் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. அதன்போது, வழக்கை தொடர தான் விரும்பவில்லை எனவும், முழு சுயநினைவுடன் விவாகரத்து வழக்கை திரும்பப் பெறுவதாகவும் சங்கீதா தெரிவித்ததாக கூறப்படுகிறது. </p><p>இதனைத்தொடர்ந்து செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றம் இந்த வழக்கை முறைப்படி முடித்து வைத்துள்ளது.</p><h2>வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜேசன் சஞ்சய்</h2><p>விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தான் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக தனியார் ஊடக நிறுவனம் ஒன்றிற்கு சமீபத்தில் பேட்டியளித்திருந்தார். அந்தப் பேட்டியில் தனது தந்தை மற்றும் குடும்பத்தினர் குறித்துப் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பல்வேறு சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்திருந்தார். </p><p>இந்த நேர்காணல் வெளியான சில நாட்களிலேயே, விவாகரத்து மனுவும் வாபஸ் பெறப்பட்டுள்ளது. </p><h2>எதிர்காலம் என்ன?</h2><p>சங்கீதா சொர்ணலிங்கம் விவாகரத்து மனுவை திரும்பப் பெற்றதால், சட்ட நடவடிக்கைகள் முடிவுக்கு வந்தபோதிலும், தம்பதியினர் முறைப்படி சமரசம் செய்துகொண்டனரா அல்லது தொடர்ந்து சேர்ந்து வாழ்வார்களா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.</p><p>இருதரப்பினரும் இதுதொடர்பாக இதுவரை அறிக்கை எதையும் வெளியிடவும் இல்லை.</p>]]></content:encoded></item><item><title>எடப்பாடி பழனிசாமி பேசும்போது நேரலை துண்டிக்கப்பட்டதா?: அமைச்சர் ராஜ்மோகன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-edappadi-palanisami-speech-live-not-cut-says-minister-rajmohan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-edappadi-palanisami-speech-live-not-cut-says-minister-rajmohan#comments</comments><guid isPermaLink="false">8a465eb2-fb70-4b57-8bdc-30cf42426622</guid><pubDate>Fri, 07 Aug 2026 11:29:47 +0000</pubDate><atom:updated>2026-08-07T11:29:47.137Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,EPS,தமிழக சட்டசபை,TN assembly,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/n46vnn99/EPSRajmohan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக சட்டசபை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/n46vnn99/EPSRajmohan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.</p><p>இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது அ.தி.மு.க. கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசினார். அதிமுக கொண்டு வந்த பெரும்பாலான திட்டம் மீண்டும் கொண்டு வரப்பட்டு ஸ்டிக்கர் ஒட்டப்படுவதாக தெரிவித்தார். அப்போது ஸ்டிக்கர் என்பதை குறிப்பிட வேண்டும். அது அவை குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்று சபாநாயகர் வலியுறுத்தினார்.</p><h2>எடப்பாடி பழனிசாமி பேசும்போது நேரலை துண்டிப்பு எனக் குற்றச்சாட்டு</h2><p>பின்னர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பேசும்போது நேரலை துண்டிக்கப்பட்டது எனக் குற்றம்சாட்டின்னார்.</p><p>இது தொடர்பாக ராஜ்மோகன் பதில் அளிக்கையில் "எடப்பாடி பழனிசாமி பேசும்போது நேரலை துண்டிக்கப்பட்டது என்று அதிமுக உறுப்பினர் வேதனைப்பட்டு கூறினார். உடனே, நான் ஓடோடி சென்று, அதிகாரிகளை அழைத்து அதை காட்டச் சொல்லி கண்களால் பார்த்து வந்து பேரவைத் தலைவர் மூலம் தெரிவிக்கிறேன். ஒரு நொடி கூட நேரலையில் துண்டிக்கப்படவில்லை. நேரலையில் சென்று கொண்டிருக்கிறது. உங்களுடைய சிரித்த முகத்தை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்." என்றார்.</p><p>மீண்டும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வெளியே மக்கள் பார்த்துக் கொண்டிருந்தபோது நேரலை துண்டிக்கப்பட்டதாக எங்களிடம் சொன்னார்கள். இங்கு பதிவு செய்யப்பட்டது. வெளியில் ஒளிப்பரப்பு செய்யப்படவில்லை என்பதுதான் நிதர்சமான உண்மை. இதை மறுக்கக் கூடாது" என்றார்.</p><h2>சபாநாயகர் பதில்</h2><p>இதற்கு சபாநாயகர் "நான் அவையில் இருந்து வெளியே சென்றபோது, இதுகுறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டேன். ஒரு நிமிடம் கூட தடையில்லாமல் நேரலையாக சென்றது என்ற தகவலை எனக்கு தெரிவித்து இருக்கிறார்கள். சில வீடுகளில் பார்க்கும்போது தடை ஏற்பட்டிருக்கலாம். இங்கு இருந்து எந்தவொரு உத்தரவோ, தடையும் செய்யும் எண்ணமோ இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY: நகைப்பிரியர்களுக்கு ஷாக்... மாலையில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-hike-today-afternoon</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-hike-today-afternoon#comments</comments><guid isPermaLink="false">46574822-54f8-48c5-a213-112db7bcb785</guid><pubDate>Fri, 07 Aug 2026 11:09:43 +0000</pubDate><atom:updated>2026-08-07T11:09:43.663Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/jwuumnph/gold.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ gold]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/jwuumnph/gold.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காலையில் உயராத தங்கத்தின் விலை மாலையில் கிராமுக்கு 150 ரூபாய் உயர்ந்துள்ளது.</p><p>தங்கம் விலை நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.280-ம், பவுனுக்கு ரூ.2,240-ம் எகிறியது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 480-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 840-க்கும் விற்கப்பட்டது. நேற்று தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்திருந்தது. நேற்று கிராமுக்கு ரூ.270-ம் பவுனுக்கு ரூ.2,160-ம் அதிரடியாக உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,750-க்கும் ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக் கும் விற்பனையானது.</p><h2>இன்றைய தங்கம் விலை</h2><p>இன்று காலை தங்கம் விலையில் மாற்றமில்லை. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.1,10,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் ரூ.13,750-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p><p>தங்கம் விலை இந்த மாதத்தில், அதாவது கடந்த 1-ந் தேதி முதல் நேற்று வரையில் கிராமுக்கு ரூ.530-ம், பவுனுக்கு ரூ.4,240-ம் அதிகரித்துள்ளது.</p><h2>வெள்ளி விலை</h2><p>தங்கம் விலையை போல வெள்ளி விலையும் ஏற்றம் கண்டு வருகிறது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.240-க்கும் ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனையான நிலையில் நேற்று கிராமுக்கு ரூ.10-ம் கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் அதிகரித்து ஒரு கிராம் ரூ.250-க்கும் ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனையானது.</p><p>வெள்ளி விலையும் இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250-க்கும் ஒரு கிலோ ரூ.2,50,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p><h2>மாலையில் உயர்ந்த தங்கம்</h2><p>இந்நிலையில், இன்று மாலை ஆபரண தங்கம் விலை கிராமுக்கு 150 ரூபாயும், சவரனுக்கு 1,200 ரூபாயும் உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் 13,900 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 1,11,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p>வெள்ளி விலை இன்று மாலையும் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250-க்கும் ஒரு கிலோ ரூ.2,50,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பிற்கான சேர்க்கை: பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-chief-minister-vijay-letter-to-pm-modi-for-bvsc-and-ah-degree-admission</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-chief-minister-vijay-letter-to-pm-modi-for-bvsc-and-ah-degree-admission#comments</comments><guid isPermaLink="false">a65220f1-f579-4be5-b29f-d13b82a40bf2</guid><pubDate>Fri, 07 Aug 2026 10:47:48 +0000</pubDate><atom:updated>2026-08-07T10:47:48.754Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>pm modi,பிரதமர் மோடி,முதலமைச்சர் விஜய்,tn cm vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/x287z6d8/PMModiTVKVijay0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர் மோடி- முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/x287z6d8/PMModiTVKVijay0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு (BVSc &amp; AH) பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையானது, மேல்நிலைப் பள்ளித் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் அல்லது அந்தந்த மாநில அரசுகளால் தீர்மானிக்கப்படும் மாணவர் சேர்க்கை அளவுகோல்களின் அடிப்படையில் மட்டுமே நடைபெற வேண்டுமென வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்  கடிதம் எழுதியுள்ளார்.</p><h2>தமிழக முதலமைச்சர் விஜய் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் முதலமைச்சர் விஜய் கூறியிருப்பதாவது:-</h2><p>கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு (BVSc &amp; AH) பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பான மிக முக்கியமான பொருண்மை குறித்து பிரதமர் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.</p><p>இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் சட்டம், 1984-ன் விதிமுறைகளின்படி, அனைத்து கால்நடை மருத்துவக் கல்லூரிகளிலும் கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையானது, பொது நுழைவுத் தேர்வின் (Common Entrance Examination) அடிப்படையில் மையப்படுத்தப்பட்ட கலந்தாய்வு முறை (Centralized Counselling Process) மூலம் இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் பரிந்துரைத்துள்ளதோடு, அதற்கு மாற்று ஏற்பாடாக, மேற்படி 2026-27 கல்வியாண்டு முதல் தனியாக நுழைவுத் தேர்வு நடத்த முடியாத பட்சத்தில், நீட் (NEET UG-2026) தேர்வின் தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறவேண்டும் என இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில், மாநிலங்களுக்கு அறிவுறுத்தியிருப்பது தனது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.</p><p>மேலும், இந்த முன்மொழிவு, தமிழ்நாடு மாநிலத்திற்குப் பல்வேறு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். கால்நடை மருத்துவக் கல்வியானது தமிழகத்தின் வளர்ச்சிக்கான முன்னுரிமைகளில் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது.</p><h2>கால்நடை மருத்துவக் கல்வி என்பது வெறும் தொழில்சார் படிப்பு மட்டுமல்ல</h2><p>கால்நடை மருத்துவக் கல்வி என்பது வெறும் தொழில்சார் படிப்பு மட்டுமல்ல, மாறாக, மாநிலத்தின் கால்நடை பராமரிப்பை வலுப்படுத்துவதற்கும், கால்நடைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், பால்வள மேம்பாட்டினை வலுப்படுத்துவதற்கும், லட்சக்கணக்கான கிராமப்புறக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்குமான நமது முயற்சிகளின் அடித்தளமாகும்.</p><p>இன்று கால்நடை மருத்துவக் கல்வியில் சேர்க்கை பெறும் மாணவர்களே, வரும் ஆண்டுகளில் நமது விவசாயிகளுக்கும், கிராமங்கள் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறைக்கும் சேவை செய்யும் கால்நடை மருத்துவர்களாகவும் உருவெடுக்கிறார்கள்.</p><p>தமிழ்நாடு, மேல்நிலைப் பள்ளித் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தொழிற்கல்விப் படிப்புகளுக்கான சேர்க்கை முறையை பல தசாப்தங்களாக பின்பற்றி வருகிறது என்பதை சுட்டிகாட்டுகிறேன். இந்த முறையானது (Model), திறமையான தொழில்முறை வல்லுநர்களைத் தொடர்ந்து உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், கிராமப்புறங்கள், அரசுப் பள்ளிகள், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் மற்றும் சமூகரீதியாகப் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த தகுதியான மாணவர்களுக்கு, உயர்கல்வியைப் பெறுவதற்கான நியாயமான வாய்ப்பை உறுதிசெய்துள்ளது. இத்தேர்வு முறை, சமூக நீதி, பிராந்திய சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான ஒரு பயனுள்ள கருவியாகச் செயல்பட்டுள்ளது.</p><h2>தேசிய தேர்வுகள் முகமை நீட் தேர்வுகளை நடத்துவதில் பல்வேறு சிக்கல்கள்</h2><p>2007-2008 ஆம் கல்வியாண்டு முதல், தமிழ்நாடு அரசு, தொழிற்கல்விப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்துள்ளது என்றும், குறிப்பாக கிராமப்புற மற்றும் பின்தங்கிய பின்னணியைக் கொண்ட பல திறமையான மாணவர்களுக்கு நுழைவு நிலையில் பெரும் தடைகளை நீட் (NEET) உள்ளிட்ட ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுகள் ஏற்படுத்துகின்றன என்பதை மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.</p><p>தேசியத் தேர்வுகள் முகமை (NTA), நீட் தேர்வுகளை நடத்துவதில் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருவதையும், அண்மையில் சில முறைகேடுகள் காரணமாக, தேர்வை ரத்து செய்துவிட்டு, மறுதேர்வு நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு மேற்படி முகமை ஆளான நிலையில், 2024-ஆம் ஆண்டில் வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணைக்கும் வழிவகுத்தன என்பதையும் கருத்தில்கொண்டு, கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கு நீட் தேர்வை அறிமுகப்படுத்துவது பொருத்தமானதாக இருக்காது.</p><p>பள்ளிப் படிப்பின் மூலம் வெளிப்படும் தகுதியை பிரதிபலிப்பதற்குப் பதிலாக, சிறப்புப் பயிற்சிக்கான வாய்ப்புகள், நிதி ஆதாரங்கள் மற்றும் பலமுறை தேர்வு எழுதுவதற்கான வாய்ப்புகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இதுபோன்ற நுழைவுத் தேர்வுகளில் பெறப்படும் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது என்ற எண்ணத்தை சமீபத்திய ஆண்டுகளின் அனுபவங்கள் மேலும் உறுதிப்படுத்தியுள்ளன.</p><p>இத்தகைய நடைமுறையைக் கால்நடை மருத்துவக் கல்விச் சேர்க்கைக்கும் விரிவுபடுத்துவது என்பது, அதைப் போன்ற பாதிப்புகளையே ஏற்படுத்தும். மேலும், கால்நடை மருத்துவக் கல்வியானது ஒவ்வொரு மாநிலத்தின் வேளாண் மற்றும் கிராமப்புறப் பொருளாதாரத்துடன் இயல்பாகப் பிணைக்கப்பட்டுள்ளது.</p><p>கால்நடை மருத்துவ வல்லுநர்களுக்கான தேவை, இத்துறையில் சேரும் மாணவர்களின் பின்புலம் மற்றும் கால்நடைத் துறையின் வளர்ச்சிக்கான முன்னுரிமைகள் ஆகியவை நாடு முழுவதும், மாநிலத்திற்கு மாநிலம் கணிசமாக மாறுபடுகின்றன. இந்தச் சூழலில், கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அளவுகோல்களைத் தீர்மானிக்கும் உரிமையை அந்தந்த மாநில அரசுகளிடமே விட்டுவிடுவதுதான் சரியானதாக இருக்கும்.</p><p>இத்தகைய அணுகுமுறையே, நமது கூட்டாட்சி அமைப்பை மதிப்பதாக அமைவதோடு, கல்வித் தரத்தைத் தொடர்ந்து உயர்த்தவும், தகுதியான கால்நடை மருத்துவர்கள் உருவாவதை உறுதி செய்யவும் உதவும் என்றும், அதேவேளையில், மாநிலங்கள் தங்களது சமூக பொருளாதார நிலைகளுக்கும் கல்வி அமைப்புகளுக்கும் ஏற்புடைய மாணவர் சேர்க்கைக் கொள்கைகளை உருவாக்கிக் கொள்ளவும் இது வழிவகுக்கும்.</p><p>எனவே, இப்பொருண்மை குறித்து இந்தியப் பிரதமர் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டுமென்று கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர், இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய அறிவுறுத்துமாறும், மேல்நிலைப் பள்ளித் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பிற்கான சேர்க்கையைத் தொடரவோ அல்லது மாணவர் சேர்க்கை அளவுகோல்களை அந்தந்த மாநில அரசுகளே தீர்மானிக்கவே அனுமதிக்க வேண்டும்.</p><p>மேலும், இக்கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்து, கால்நடை மருத்துவக் கல்வியை அனைவரும் சமமாகப் பெறுவதை உறுதி செய்யுமாறும், கிராமப்புற மற்றும் சமூகரீதியாகப் பின்தங்கிய பின்னணியைக் கொண்ட மாணவர்களுக்கான வாய்ப்புகளைப் பாதுகாக்குமாறும், நமது கூட்டாட்சி அமைப்பிற்குள் மாநிலங்களின் தங்களுக்கான சட்டபூர்வ கொள்கை முடிவுகளை எடுக்கும் நிலையை உறுதிசெய்யுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இப்படி முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>‘திட்டங்களில் இருந்து வேண்டுமானால் அவரது பெயரை நீக்கலாம்... ஆனால்’ - கருணாநிதியின் நினைவு நாளில் கனிமொழியின் பதிவு! </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/his-name-might-be-removed-from-the-schemes-but-kanimozhis-post-on-karunanidhis-memorial-day</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/his-name-might-be-removed-from-the-schemes-but-kanimozhis-post-on-karunanidhis-memorial-day#comments</comments><guid isPermaLink="false">ac0b6067-c1f8-4c74-b242-cabd9e2b6434</guid><pubDate>Fri, 07 Aug 2026 10:31:35 +0000</pubDate><atom:updated>2026-08-07T10:31:35.596Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,Kanimozhi,கனிமொழி,Karunanidhi,கருணாநிதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/fq545iq9/New-Project-2026-08-07T160115.147.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘திட்டங்களில் இருந்து வேண்டுமானால் அவரது பெயரை நீக்கலாம்... ஆனால்’ - கருணாநிதியின் நினைவு நாளில் கனிமொழியின் பதிவு! ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/fq545iq9/New-Project-2026-08-07T160115.147.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதியின் நினைவு நாள் இன்று கட்சித் தொண்டர்களால் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் தனது தந்தையின் நினைவு நாளன்று திமுக எம்.பி.கனிமொழி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.</p><p>அந்தப் பதிவில்.,</p><p>“திட்டங்களிலிருந்து அவர் பெயரை நீக்குவது எளிதாக இருக்கலாம். ஆனால், நவீன தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றி எழுத எவராலும் முடியாது.</p><p>அந்த வரலாற்றின் முதல் வரியிலேயே, “இதற்கு விதையிட்டவர் தலைவர் கலைஞர்” என்று எழுதப்பட்டிருக்கிறது!” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர் கருணாநிதி கொண்டு வந்த சில முக்கியத் திட்டங்களையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">திட்டங்களிலிருந்து அவர் பெயரை நீக்குவது எளிதாக இருக்கலாம்.<br>ஆனால், நவீன தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றி எழுத எவராலும் முடியாது.<br><br>அந்த வரலாற்றின் முதல் வரியிலேயே, &quot;இதற்கு விதையிட்டவர் தலைவர் கலைஞர்&quot; என்று எழுதப்பட்டிருக்கிறது!<a href="https://x.com/hashtag/KalaignarForever?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#KalaignarForever</a> <a href="https://t.co/ATYAtJ86MY">pic.twitter.com/ATYAtJ86MY</a></p>&mdash; Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) <a href="https://x.com/KanimozhiDMK/status/2085587231260262611?ref_src=twsrc%5Etfw">August 7, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய்க்கு தலைகுனிவு ஏற்பட்டால் தமிழக மக்கள் நாங்கள் சும்மா இருப்போமா?: பிரேமலதா விஜயகாந்த்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-wont-stay-silent-if-cm-vijay-faces-humiliation-premalatha</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-wont-stay-silent-if-cm-vijay-faces-humiliation-premalatha#comments</comments><guid isPermaLink="false">34a704c3-049f-4aaf-8532-2d6e75fbffc7</guid><pubDate>Fri, 07 Aug 2026 10:14:31 +0000</pubDate><atom:updated>2026-08-07T10:14:31.689Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பிரேமலதா விஜயகாந்த்,Cauvery,TN budget,தமிழக சட்டப்பேரவை,TN assembly,Premalatha Vijayakant,காவேரி,tamilnadu legislative assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/x2ih0p42/Untitled-design-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ காவிரி உரிமைக்காக முதல்வர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த்.]]></media:title><media:description type="html"><![CDATA[ Premalatha Vijayakanth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/x2ih0p42/Untitled-design-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h3><strong>தமிழக சட்டப்பேரவையில் பிரேமலதா</strong></h3><p>தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உரையாற்றினார்.</p><p>அப்போது அவர் கூறுகையில்,</p><p>மக்கள் விரும்பும் திட்டங்கள் எந்த ஆட்சி வந்தாலும் தொடரப்பட வேண்டும் என்பதே தேமுதிகவின் நிலைப்பாடாக உள்ளது.</p><p>திமுக மற்றும் அதிமுக என யார் கொண்டு வந்த திட்டமாக இருந்தாலும், அது தொடர வேண்டும் என்பதே தேமுதிகவின் நிலைப்பாடாக உள்ளது.</p><p>மக்கள் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அவர்களுக்காக தொடர வேண்டும்.</p><p>விருத்தாச்சலத்தை மாவட்டமாக பட்ஜெட்டில் அறிவிப்பார்கள் என எதிர்பார்த்தேன்.</p><h3><strong>மழையில் நனையும் நெல் மூட்டைகள்</strong></h3><p>விருத்தாச்சலத்தை சுற்றியுள்ள கிராமங்களில் மழை காலங்களில் திறந்தவெளியில் உள்ள நெல்மூட்டைகள் நனைந்து முளைக்கும் அபாயம் உள்ளது. மழை பெய்யும் காலம் என்பதால் நெல்லை சேமிக்க கிடங்குகள் அமைக்க வேண்டும்.</p><p>தமிழகத்தில் பெய்யும் மழைநீரை சேமித்து தன்னிறைவு பெற்றவர்களாக நாம் இருக்க வேண்டும். இப்பொழுது மழைக்காலமாக இருப்பதால் அனைத்து ஏரிகளையும் தூர்வாறி, மழைநீரை சேமிக்க வேண்டும்.</p><h3><strong>ஏரிகளை தூர்வார கோரிக்கை</strong></h3><p>நீருக்காக யாரிடமும் கையேந்தாத நிலைக்கு தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும்.</p><p>விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி இல்லை என்பது ஏமாற்றமாக உள்ளது.</p><p>காவிரி நமது உரிமை, மேகதாதுவில் அணை கட்டக்கூடாது, இதற்காக நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.</p><p>மேகதாது, காவிரி விவகாரத்தில் இரு மாநில முதல்வர்கள் சந்தித்து பேசினால் என்ன?</p><p>காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா செல்ல முதல்வர் விஜய் முடிவெடுத்தது சரிதான். டி.கே.சிவக்குமாரும், விஜயும் இருமாநிலத்தின் புதிய முதல்வர்கள், பேசினால் என்ன? ஏன் தடுக்கிறீர்கள்?</p><h3><strong>முதல்வரின் பின்னால் தமிழகம் நிற்கிறது</strong></h3><p>முதல்வர் கர்நாடகா செல்லும்போது அவமரியாதை ஏற்பட்டால் என்ன செய்வது என்கிறார்கள், அப்படி நடக்க நாங்கள் விட மாட்டோம்.</p><p>முதலமைச்சர் விஜய்க்கு ஒரு தலைகுனிவு ஏற்பட்டால் தமிழக மக்கள் நாங்கள் சும்மா இருப்போமா?</p><p>விருகம்பாக்கம் பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடை நீண்ட காலமாக மூடாமல் உள்ளது, அதை அமைச்சர்கள் தலையிட்டு மூடுவதற்கான நடவடிகையில் ஈடுபட வேண்டும்” என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>விவாகரத்து மனுவை திரும்பப் பெற்றார் முதலமைச்சர் மனைவி சங்கீதா!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-ministers-wife-sangeetha-has-withdrawn-the-divorce-petition</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-ministers-wife-sangeetha-has-withdrawn-the-divorce-petition#comments</comments><guid isPermaLink="false">fdba5a8f-9480-407b-8876-6d3e95757805</guid><pubDate>Fri, 07 Aug 2026 10:09:55 +0000</pubDate><atom:updated>2026-08-07T10:09:55.251Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Divorce,விவாகரத்து,Sangeetha,சங்கீதா,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/x77xwnvh/New-Project-2026-08-07T153934.643.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விவாகரத்து மனுவை திரும்பப் பெற்றார் முதலமைச்சர் மனைவி சங்கீதா!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/x77xwnvh/New-Project-2026-08-07T153934.643.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு எதிராக அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை திரும்பப் பெற்றுள்ளார். </p><p>மனு திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு முடித்து வைக்கப்படுவதாக செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றம் தெரிவித்துள்ளது. </p><p>இன்று இந்த விவாகரத்து வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் முதலமைச்சர் விஜய் தரப்பில் ஆஜராக விலக்கு கோரப்பட்டது. ஆனால் நீதிமன்றம், சட்டசபை கூட்டத்தொடர் முடிந்தபின்பு ஆஜராக கோரியிருந்தது. பின்னர் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.</p><p>இந்நிலையில் தற்போது மனுவை திரும்பப் பெற்றுள்ளார் சங்கீதா.</p><h2>விவாகரத்து </h2><p>நடிகர் விஜய் பிரபல மூன்று எழுத்து நடிகை ஒருவருடன் உறவில் இருப்பதாகவும், இதனால் தன்னை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் நீண்டநாட்களாக ஒதுக்கி வந்ததாகவும் குற்றம்சாட்டி அவரின் மனைவி சங்கீதா விவாகரத்துக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். </p><p>கடந்த 2021-ல் இருந்து இந்த பிரச்னை நிலவி வந்ததாகவும் தனது விவாகரத்து மனுவில் குறிப்பிட்டிருந்தார். இது தமிழ்நாடு அரசியல் மற்றும் சினிமாத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தனது மனுவை திரும்பப் பெற்றுள்ளார் சங்கீதா. </p>]]></content:encoded></item><item><title>‘காங்கிரஸ்தான் என்னை விலகுமாறு கேட்டுக்கொண்டது’ -  கர்நாடகா சட்டசபை மேலவைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த பசவராஜ் ஹொரட்டி!</title><link>https://www.maalaimalar.com/news/national/it-was-the-congress-that-asked-me-to-step-down-basavaraj-horatti-who-resigned-as-karnataka-legislative-council-chairman</link><comments>https://www.maalaimalar.com/news/national/it-was-the-congress-that-asked-me-to-step-down-basavaraj-horatti-who-resigned-as-karnataka-legislative-council-chairman#comments</comments><guid isPermaLink="false">d60d128d-a22a-4752-bd84-45ef5d9c4973</guid><pubDate>Fri, 07 Aug 2026 09:23:53 +0000</pubDate><atom:updated>2026-08-07T09:23:53.220Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,கர்நாடகா,Karnataka,Basavaraj Horatti,பசவராஜ் ஹொரட்டி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/6uw452rz/New-Project-2026-08-07T143703.962.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘என்னை ஏன் காங்கிரஸ் விலகச்சொன்னது எனத் தெரியவில்லை’ - சட்டசபைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த பசவராஜ் ஹொரட்டி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/6uw452rz/New-Project-2026-08-07T143703.962.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காங்கிரஸ் கட்சியின் வேண்டுகோளை ஏற்று, கர்நாடக சட்டசபை மேலவைத் தலைவர் பதவியை பசவராஜ் ஹொரட்டி ராஜினாமா செய்தார். இந்த ராஜினாமாவைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்.,</p><p>“ஆளும் கட்சி நான் பதவி விலக வேண்டும் என விரும்புகிறது. முதலமைச்சர் (டி.கே.சிவகுமார்) என்னிடம் தொலைபேசியில் இரண்டு முறை பேசினார். நேற்று, அவர் என்னை நேரில் சந்தித்து, நான் பதவி விலகுமாறு கூறும்படி கட்சியின் மேலிடம் தனக்கு உத்தரவிட்டதாகத் தெரிவித்தார். </p><p>நான் பதவி விலகாவிட்டால், எனக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவோம் என்றும் அவர் கூறினார்.” என தெரிவித்தார்.</p><p>தொடர்ந்து பேசிய அவர், தாம் ‘மரியாதையுடன்’ பதவி விலக விரும்புவதாகவும், ஆகஸ்ட் 14  அன்று ராஜினாமா செய்ய இருந்ததாகவும், இந்த நிகழ்வுகளால் தான் மிகுந்த வேதனை அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் சட்டசபை மேலவைத் தலைவரையும், சட்டமன்ற சபாநாயகரையும் தேர்ந்தெடுப்பது சபையின் தனிப்பட்ட உரிமை என்றும், கட்சியின் மேலவைத் தலைமையின் உரிமையல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார். </p>]]></content:encoded></item><item><title>மேகவெடிப்பால் கடும்பாதிப்பு: பிரதமர் மோடியை சந்தித்து நிவாரண தொகுப்பு கேட்பேன்- உமர் அப்துல்லா</title><link>https://www.maalaimalar.com/news/national/cm-omar-to-personally-take-flood-package-for-rajouri-poonch-with-pm-modi</link><comments>https://www.maalaimalar.com/news/national/cm-omar-to-personally-take-flood-package-for-rajouri-poonch-with-pm-modi#comments</comments><guid isPermaLink="false">6fe65dc1-f493-4274-abbd-bdd0083639cd</guid><pubDate>Fri, 07 Aug 2026 09:21:31 +0000</pubDate><atom:updated>2026-08-07T09:21:31.266Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜம்மு காஷ்மீர்,jammu kashmir,omar abdullah,உமர் அப்துல்லா,heavy rains,pm modi,பிரதமர் மோடி,கனமழை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/el0vcs0y/Omar0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உமர் அப்துல்லா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/el0vcs0y/Omar0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதோடு மேகவெடிப்பு (cloudbursts) ஏற்பட்டு நிலச்சரிவு ஏற்பட்டு பலத்த சேதம் ஏற்பட்டது. இதனால் பலர் உயிரிழந்தனர். வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.</p><p>இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் பாதிக்கப்பட்ட இடத்தை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார். பின்னர், சேதமதிப்புகளை மதிப்பிட்டு, சிறப்பு நிதி வழங்கும்படி பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன் என்று உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.</p><p>வெள்ள பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணம், மறுவாழ்வு மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தபின், செய்தியாளர்களை சந்தித்தார்.</p><h2>அப்போது உமர் அப்துல்லா கூறியதாவது:-</h2><p>சில விஷயங்களை நம்மால் சுயமாக சமாளிக்க முடியும் என்றாலும், சீரமைப்பு பணிகளுக்கான முழுச் செலவையும் ஏற்கும் நிதித்திறன் ஜம்மு காஷ்மீரிடம் இல்லை என்பதே யதார்த்தம். கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்திற்குப் பிறகு, ஜம்மு காஷ்மீருக்காக மத்திய அரசு சுமார் 1400 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத் தொகுப்பிற்கு ஒப்புதல் அளித்தது. இந்த முறையும், நாங்கள் ஒரு விரிவான திட்டத் தொகுப்பைத் தயாரித்து, மத்திய அரசின் உதவியைக் கோருவோம்.</p><h2>பிரதமரை நேரில் சென்று சந்திப்பேன்- உமர் அப்துல்லா</h2><p>வெள்ளம், திடீர் வெள்ளம் மற்றும் மேகவெடிப்பு ஆகியவை இயற்கை பேரிடர்களாகக் கருதப்படுகின்றன. எனவே, மத்திய அரசின் உதவியைக் கோருவதற்கு முன்னதாக இவை குறித்து தனியாக அறிவிப்பு ஏதும் வெளியிடத் தேவையில்லை. மறுசீரமைப்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்கு தேவையான நிதியுதவியைக் கோரும் வகையிலான முன்மொழிவு தயாரானதும், அதை நானே நேரில் சென்று பிரதமரிடம் சமர்ப்பிப்பேன்.</p><p>ஜூலை 19-ந்தேதி கனமழை ஏற்பட்டது நிவாரணம், மறுவாழ்வு மற்றும் சீரமைப்பு ஆகிய 3 வடிவுகளில் மீட்புப் பணி நடைபெற்றது. மனித உயிரிழப்புகளை குறைப்பதே எங்களின் முதல் முன்னுரிமையாக இருந்தது. இந்த மாவட்டத்தில் நான்கு விலைமதிப்பற்ற உயிர்கள் பலியானதை எண்ணி வருந்துகிறோம். மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர்கள் இரவோடு இரவாக உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால், உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருந்திருக்கக் கூடும்.</p><p>உயிரிழப்புகளை குறைப்பதே முதல் முன்னுரிமையாக இருந்தது. அதன்பிறகு, காணாமல் போனவர்களைத் தேடிக் கண்டறிவதன் மூலம் அவர்களை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்தப்பட்டது. தற்போது நாங்கள் மறுவாழ்வு மற்றும் மறுகட்டமைப்புப் பணிக்கான கட்டத்தில் அடியெடுத்து வைக்கிறோம். இக்கட்டத்தில், தற்காலிக மற்றும் நிரந்தர நடவடிக்கைகள் மூலம் சேதமடைந்த உள்கட்டமைப்புகளும் வாழ்வாதாரங்களும் சீரமைக்கப்படும்.</p><h2>SDRF நிவாரணத் தொகையை உயர்த்த முடிவு</h2><p>தற்போதைய SDRF இழப்பீட்டு விகிதங்கள் ஏழு முதல் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்டவை. அதன்பிறகு, பணவீக்கம் மற்றும் கட்டுமானச் செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளன. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மிகவும் யதார்த்தமான இழப்பீடு கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், SDRF நிவாரணத் தொகையை உயர்த்த நாங்கள் முடிவு செய்துள்ளோம்.</p><p>இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் ஊழல் தொடர்பான விவாதம்: சட்டசபையில் உதயநிதி-ஆதவ் அர்ஜூனா காரசார விவாதம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/aadav-arjuna-and-udhayanidhi-stalin-argument-in-tn-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/aadav-arjuna-and-udhayanidhi-stalin-argument-in-tn-assembly#comments</comments><guid isPermaLink="false">70ebe264-0499-4cde-aa84-b6f1f30028b8</guid><pubDate>Fri, 07 Aug 2026 08:54:49 +0000</pubDate><atom:updated>2026-08-07T08:54:49.395Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Udhayanidhi Stalin,உதயநிதி ஸ்டாலின்,ஆதவ் அர்ஜூனா,தமிழக சட்டசபை,Aadhav Arjuna,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/27bw2f5v/arjuna.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ aadav arjuna, udhayanidhi stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/27bw2f5v/arjuna.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் இன்று டாஸ்மாக் ஊழல் தொடர்பான விவாதம் நடைபெற்றது.</p><h2>டாஸ்மாக் ஊழல் தொடர்பான விவாதம்</h2><p>அமைச்சர் விக்னேஷ், டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு கூடுதல் பணம் வசூலிப்பது பற்றி விளக்கம் அளித்தார். </p><p>மேலும், த.வெ.க. ஆட்சியில் மூடப்பட்ட 717 கடைகளின் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் ஆர்டர் செய்தால் மதுபானம் வீட்டிற்கு டெலிவரி செய்யப்படும் என்பது தவறான தகவல். டாஸ்மாக் கடைகளுக்கு பணம் செல்லாமல் நேரடியாக நிர்வாகத்திற்கு பணம் செல்லும் வகையில் ஆன்லைன் ஆர்டர். ஆன்லைனில் மது புக்கிங் செய்யப்படுவது மட்டுமே நடக்கும். ஆன்லைனில் ஆர்டர  செய்தாலும் டாஸ்மாக் கடைக்குச் சென்றுதான் மதுபானங்களை வாங்க முடியும். மதுவினால் வரும் வருமானத்தை உயர்த்துவோம் என தவெக கூறாது என தெரிவித்தார்.</p><p>இடையில் பேசிய அமைச்சர் அருண்ராஜ், டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை நீண்ட அறிக்கையை கொடுத்துள்ளது என தெரிவித்தார்.</p><h2>ஆதவ் அர்ஜூனா-உதயநிதி விவாதம்</h2><p>அப்போது பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, திமுகவின் பொருளாளர் சாராய ஆலை நடத்துகிறாரா? இல்லையா?</p><p>லாட்டரி நிறுவனத்தில் ரூ.900 கோடி திமுகவினர் வாங்கியது குறித்து உதயநிதி சொல்வாரா? என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.</p><p>அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, திமுக நிதி வாங்கியது தொடர்பாக அவரது மாமனாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.</p><p>லாட்டரி நிறுவனத்தில் விற்றது யார் என ஆதவின் மாமனாருக்கு தான் தெரியும், அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளட்டும் என பதில் அளித்தார்.</p><p>ரூ.900 கோடி வாங்கியது உதயநிதியின் அப்பாவுக்கு நன்றாக தெரியும். அவர் இங்கு இல்லை. அவரிடம் கேட்கச் சொல்லுங்கள் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார். இந்த காரசார விவாதத்தால் அவையில் சிறிது கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.</p><p>அதன்பின் பேசிய திமுக கொறடா எ.வ.வேலு, தொழிலதிபர் மார்ட்டின் ரூ.900 கோடி கொடுத்தது குறித்து பேரவையில் பேசுவது சரியாக இருக்காது. தொழில் என்ற அடிப்படையில் முறையாக அரசிடம் அனுமதி பெற்றுதான் திமுகவினர் மது ஆலை நடத்துகின்றனர். தேர்தல் நேரத்தில் அரசியல் இயக்கங்களுக்கு தொழிலதிபர்கள் நன்கொடை அளிப்பது இயல்பு என கூறினார்.</p><p>அவையில் இல்லாத அப்பா, மாமனார் என பேசுவதை அவைக்குறிப்பிலிருந்து நீக்குமாறு நேரு சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார்.</p>]]></content:encoded></item><item><title>எங்கள் திட்டங்களுக்கு தவெக அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது: அதிமுக குற்றச்சாட்டுக்கு அமைச்சர்கள் பதில்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/aiadmk-accuses-dmk-of-sticker-politics-on-welfare-schemes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/aiadmk-accuses-dmk-of-sticker-politics-on-welfare-schemes#comments</comments><guid isPermaLink="false">08d6e277-52dd-42f5-8051-b57a829caf7f</guid><pubDate>Fri, 07 Aug 2026 08:30:58 +0000</pubDate><atom:updated>2026-08-07T08:30:58.326Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அம்மா உணவகம்,தமிழக சட்டப்பேரவை,Amma Unavagam,Agri Krishnamoorthy,அக்ரி கிருஷ்ணமூர்த்தி,tamilnadu legislative assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/sbk9zfs0/Untitled-design-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அதிமுக திட்டங்களுக்கு தவெக அரசு ஸ்டிக்கர்: நலத்திட்டங்கள் மீதான குற்றச்சாட்டு சட்டப்பேரவையில் விவாதம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ Agri krishnamoorthy ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/sbk9zfs0/Untitled-design-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தவெக தேர்தல் அறிவிப்பில் கூறியபடி, விவசாயிகளின் முழு பயிர் கடனும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று அதிமுக எம்.எல்.ஏ அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தினார். </p><h3><strong>தவெக தேர்தல் வாக்குறுதி</strong></h3><p>தமிழக சட்டபேரவையில் பட்ஜெட் மீது நடைபெற்ற விவாதத்தில் அதிமுக எம்.எல்.ஏ அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி உரையாற்றினார்.</p><p>அப்போது அவர், "நிதி பற்றாக்குறைகளை மட்டுமே காரணம் காட்டி, தமிழ்நாட்டு மக்களுக்கான திட்டங்களை நிறுத்தக்கூடாது.</p><p>தமிழ்நாடு அரசின் நிதிநிலையை கருத்தில் கொண்டு தான், தவெக அரசு தேர்தல் அறிக்கையை அறிவித்திருக்கும். அதில் வாக்குகள் வரவேண்டும் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு, தவெக அரசால் செயல்படுத்த முடியாத பல வாக்குறுதிகளை கொடுத்து, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி விட்டார்கள். </p><p>நிதிநிலை அறிக்கையில் புதிய வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கான எந்தவித அறிவிப்பும் இல்லை.</p><p>அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட மழை நீர் சேகரிப்பு திட்டம், குடிமராமத்து திட்டம், அத்திக்கடவு அவினாசி திட்டம் போன்ற பல்வேறு பாசன திட்டங்கள் அதிமுக ஆட்சியின் காலத்தில்தான் அறிமுகம் செய்யப்பட்டன.</p><p>அதிமுக ஆட்சி காலம் விவசாயிகளின் பொற்காலமாக போற்றப்பட்டது.</p><p>முழு கடன் தள்ளுபடி கிடைக்கும் என எதிர்பார்த்த சிறு குறு விவசாயிகள் இன்று கடனை செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.</p><h3><strong>அதிமுக நலத்திட்டங்கள் மீது ஸ்டிக்கர்</strong></h3><p>எனவே தேர்தல் அறிவிப்பில் கூறியபடி, முழுக்கடனையும் தள்ளுபடி செய்யுங்கள் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.</p><p>அதிமுக கொண்டு வந்த பல்வேறு நலத்திட்டங்களை, இந்த அரசு ஸ்டிக்கர் ஒட்டி மீண்டும் தமிழகத்திலே அறிவித்துள்ளது" என்று கூறினார்.</p><p><strong>அமைச்சர் நிர்மல்குமார் பதில்</strong></p><p>இந்த கருத்துக்கு பதில் அளித்த தமிழக அரசின் எரிசக்தி வளங்கள் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், “பல திட்டங்கள் கடந்த 60 முதல் 70 ஆண்டுகளாக இருந்து வருவதுதான்... ஆனால் பெரும்பாலான திட்டங்கள் கடந்த ஆட்சி காலத்தில் நிறுத்தப்பட்டன.</p><p>தற்போது தவெக ஆட்சிக்கு வந்த பிறகு, புது செயல்வடிவம் கொடுக்கப்பட்டு அது செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.</p><h3><strong>அம்மா உணவகம்</strong></h3><p>இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “தவெக ஆட்சியில் திமுக மற்றும் அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட நல்ல திட்டங்களை வரவேற்று, அதனை மேம்படுத்தி வருகிறோம்.</p><p>அம்மா உணவகம் சரியாக செயல்படாமல் இருந்தது. அதன் பெயர் எதையும் மாற்றாமல், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது” என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>நீரிழிவு நோயாளிகளே கவனம்! காலில் வரும் இந்த அறிகுறிகளை தவறவிடாதீர்கள்!</title><link>https://www.maalaimalar.com/health/generalmedicine/diabetic-foot-ulcer-warning-signs-to-never-ignore</link><comments>https://www.maalaimalar.com/health/generalmedicine/diabetic-foot-ulcer-warning-signs-to-never-ignore#comments</comments><guid isPermaLink="false">4f3a934d-2333-46b0-98d0-b6fca7045e43</guid><pubDate>Fri, 07 Aug 2026 08:30:00 +0000</pubDate><atom:updated>2026-08-07T08:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Health,ஆரோக்கியம்,HealthTips,diabetics,நீரிழிவு நோயாளிகள்,உடல்நலம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/c3je1gz3/diabetic.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Diabetics ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/c3je1gz3/diabetic.jpg?w=280" width="280"></media:thumbnail><category>பொது மருத்துவம் (General Medicine)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீரிழிவு நோய் உலகம் முழுவதும் அதிகரித்து வரும் முக்கியமான நாள்பட்ட நோய்களில் ஒன்றாகும். இந்த நோய் உடலில் ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், பல்வேறு உடல் உறுப்புகளையும் பாதிக்கும். குறிப்பாக, நீரிழிவு நோயாளிகளுக்கு கால்களில் ஏற்படும் புண்கள் மிகவும் கவலைக்கிடமான பிரச்சனையாகும். ஆரம்ப நிலையிலேயே சரியான சிகிச்சை பெறாவிட்டால், இந்தப் புண்கள் தீவிர தொற்றாக மாறி, சில நேரங்களில் அறுவை சிகிச்சை அல்லது உறுப்பு அகற்றும் நிலைக்குக் கூட வழிவகுக்கலாம்.</p><h2><strong>புண்கள் வர காரணம்</strong></h2><p>நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு தொடர்ந்து அதிகமாக இருப்பதால், நரம்புகள் மற்றும் ரத்த நாளங்கள் பாதிக்கப்படுகின்றன. இதன் காரணமாக கால்களில் உணர்வு குறைகிறது. சிறிய காயம், கல் குத்துதல், காலணியால் ஏற்படும் உராய்வு அல்லது தீக்காயம் போன்றவை ஏற்பட்டாலும் வலி தெரியாமல் போகலாம். மேலும், ரத்த ஓட்டம் குறைவதால் காயங்கள் விரைவாக ஆறாமல் நீண்ட நாட்கள் புண்களாகவே நீடிக்கின்றன. அதிக ரத்தச் சர்க்கரை காரணமாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைவதால், புண்களில் தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.</p><h2><strong>அறிகுறிகள்</strong></h2><p>நீரிழிவு நோயினால் ஏற்படும் புண்கள் பெரும்பாலும் பாதத்தின் அடிப்பகுதி, விரல்களின் இடைவெளி, குதிகால் மற்றும் விரல் நுனிப் பகுதிகளில் காணப்படுகின்றன. ஆரம்பத்தில் சிறிய சிவப்பு நிறத் தழும்பு அல்லது கொப்புளமாகத் தோன்றும் காயம், கவனிக்கப்படாமல் விட்டால் ஆழமான புண்ணாக மாறக்கூடும். சிலருக்கு புண்ணில் இருந்து சீழ் வெளியேறுதல், துர்நாற்றம், வீக்கம், தோல் நிறம் மாறுதல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம். இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.</p><h2><strong>கால்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்</strong></h2><p>நீரிழிவு நோயால் ஏற்படும் புண்களைத் தடுப்பதற்கு கால்களின் பராமரிப்பு மிகவும் முக்கியமானது. தினமும் கால்களை நன்றாகக் கழுவி உலர்த்த வேண்டும். பாதங்களில் காயம், வெடிப்பு, சிவத்தல் அல்லது வீக்கம் உள்ளதா என்பதை தினமும் கவனிக்க வேண்டும். </p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/9wk4jrtv/feet.jpg" /></figure><p>காலணியின்றி நடப்பதைத் தவிர்க்க வேண்டும். கால்களுக்கு சரியான அளவில் பொருந்தக்கூடிய மென்மையான காலணிகளை அணிவது அவசியம். நகங்களை கவனமாக வெட்ட வேண்டும். சிறிய காயம் ஏற்பட்டாலும் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும்.</p><h2>எ<strong>வ்வாறு கட்டுப்படுத்த வேண்டும்</strong></h2><p>நீரிழிவு நோயாளிகள் ரத்தச் சர்க்கரை அளவை மருத்துவரின் ஆலோசனைப்படி கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிகவும் அவசியம். சத்தான உணவுமுறை, தினசரி உடற்பயிற்சி, போதுமான தண்ணீர் அருந்துதல், புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற பழக்கங்களைத் தவிர்ப்பது ஆகியவை புண்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன. மேலும், கால்களை பரிசோதிப்பதற்காக குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்திப்பதும் முக்கியமானதாகும்.</p><h2><strong>சிகிச்சை முறைகள்</strong> </h2><p>நீரிழிவு நோயினால் ஏற்படும் புண்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது, புண்ணை சுத்தமாக வைத்தல், தொற்றைக் கட்டுப்படுத்த தேவையான மருந்துகளைப் பயன்படுத்துதல், இறந்த திசுக்களை அகற்றுதல் மற்றும் தேவையான கட்டுப்போடுதல் போன்ற சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. சில நேரங்களில் தீவிர தொற்று இருந்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறப்பு சிகிச்சையும் தேவைப்படலாம்.</p><h2><strong>விழிப்புணர்வு அவசியம்</strong></h2><p>நீரிழிவு நோயால் ஏற்படும் புண்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு முக்கிய உடல்நலப் பிரச்சனையாக இருந்தாலும், சரியான முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு மூலம் அவற்றை பெரும்பாலும் தடுக்க முடியும். </p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/vmc6l51r/kk.jpg" /></figure><p>ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, கால்களின் ஆரோக்கியத்தை தினமும் கவனிப்பது மற்றும் சிறிய காயங்களைக் கூட அலட்சியப்படுத்தாமல் உடனடியாக சிகிச்சை பெறுவது ஆகியவை நீரிழிவு நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதோடு, தீவிர சிக்கல்களிலிருந்தும் பாதுகாக்கும்.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-sangeetha-divorce-case-adjourned-again-video-appearance-next-hearing-deferred-without-date</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-sangeetha-divorce-case-adjourned-again-video-appearance-next-hearing-deferred-without-date#comments</comments><guid isPermaLink="false">66c69cfc-3fca-4542-93c7-1518275cc591</guid><pubDate>Fri, 07 Aug 2026 08:17:01 +0000</pubDate><atom:updated>2026-08-07T08:17:01.306Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Divorce,விவாகரத்து,Sangeetha,சங்கீதா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/1sliqrne/tn-44.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விஜய் - சங்கீதா]]></media:title><media:description type="html"><![CDATA[ விஜய் - சங்கீதா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/1sliqrne/tn-44.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-row-tamil-nadu-cm-ready-to-face-humiliation-for-bengaluru-talks-with-karnataka">முதல்வர் விஜய்</a><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-and-sangeetha-divorce-case-hearing-today"> </a>மற்றும் அவரது மனைவியின் விவாகரத்து வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. </p><h2>விவாகரத்து</h2><p>த.வெ.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டநிலையில், சங்கீதா விவாகரத்து கோரி கடந்த ஆண்டு டிசம்பரில் செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.</p><p>சங்கீதா தாக்கல் செய்த மனுவில், கணவர் விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். மேலும், ஜீவனாம்சம் மற்றும் நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வசிப்பதற்கான உரிமையும் வழங்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.</p><p>இந்த மனு கடந்த பிப்​ர​வரி 26-ந்தேதி விசா​ரணைக்கு வந்​த​போது, செங்​கல்​பட்டு முதலா​வது குடும்ப நல நீதி​மன்​றத்​துக்கு மாற்றப்பட்டது. அங்கு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.</p> <h2>நீதிபதி விசாரணை</h2><p>இந்த வழக்கு விசாரணை கடந்த ஜூன் மாதம் 15-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, சங்கீதா தரப்பு வக்கீலிடம் நீங்கள் ஏன்? வக்காலத்து தாக்கல் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினார்.</p><p>மேலும் முதலமைச்சர் விஜய் மற்றும் சங்கீதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வீடியோ கான்பரன்ஸ் மனுவில் மெயில் ஐ.டி. ஏன் குறிப்பிடவில்லை எனவும், விவாகரத்து கேட்டுள்ள இருவரையும் சமரச மையத்துக்குதான் அனுப்ப வேண்டும் என்று கூறி வழக்கை ஆகஸ்டு 7ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.</p> <h2>இன்றைய விசாரணை</h2><p>அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்றிருந்ததால், இந்த வழக்கில் அவர் நேரில் ஆஜராக முடியவில்லை என்று அவரது தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.</p><p>அதேவேளையில், லண்டனில் இருக்கும் சங்கீதா, வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகினார். இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிமன்றம், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டது.</p>]]></content:encoded></item><item><title>கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: அஷ்மிதா சலிஹா, ரக்ஷிதா ராம்ராஜ் அரையிறுதிக்கு முன்னேற்றம்</title><link>https://www.maalaimalar.com/sports/ashmita-chaliha-rakshita-ramraj-enter-sf-in-korea-mastesr-badminton</link><comments>https://www.maalaimalar.com/sports/ashmita-chaliha-rakshita-ramraj-enter-sf-in-korea-mastesr-badminton#comments</comments><guid isPermaLink="false">f8c59ae8-b1b0-4ba0-b965-15b2b2f52215</guid><pubDate>Fri, 07 Aug 2026 08:13:12 +0000</pubDate><atom:updated>2026-08-07T08:13:12.040Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ashmita chaliha,அஷ்மிதா சலிஹா,korea masters badminton,கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/qxx2w8cx/ashmita.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ashmita chaliha]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/qxx2w8cx/ashmita.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கொரியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் தொடர் கொரியாவில் நடந்து வருகிறது.</p><p>இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை தன்வி ஷர்மா, சக நாட்டு வீராங்கனையான ரக்‌ஷிதா ராம்ராஜ் உடன் மோதினார்.</p><p>இதில் சிறப்பாக ஆடிய தன்வி ஷர்மா முதல் செட்டை 21-18 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட ரக்‌ஷிதா ராம்ராஜ் அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 21-19, 21-18 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.</p><p>மற்றொரு போட்டியில் இந்தியாவின் அஷ்மிதா சலிஹா 20-22, 21-15, 21-19 என்ற செட் கணக்கில் ஜப்பானின் ஹீனா அகாச்சியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.</p><p>நாளை நடைபெற உள்ள அரையிறுதியில் ரக்‌ஷிதா ராம்ராஜ், சக நாட்டு வீராங்கனையான அஷ்மிதா சலிஹா உடன் மோதுகிறார்.</p><p>ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், ரவுனக் சவுகான், கிரண் ஜார்ஜ், மிதுன் மஞ்சுநாத், சனீத் தயானந்த், தருண் மன்னேபள்ளி ஆகியோரும் முதல் சுற்றிலேயே தோல்வியைத் தழுவினர்.</p>]]></content:encoded></item><item><title>ஸ்டிக்கர் ஒட்டும் அரசு.. அக்ரி கிரிஷ்ணமூர்த்தியால் அவையில் வெடித்த விவாதம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/opposition-slams-dmk-budget-aiadmk-alleges-broken-promises-and-neglect-of-farmers</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/opposition-slams-dmk-budget-aiadmk-alleges-broken-promises-and-neglect-of-farmers#comments</comments><guid isPermaLink="false">b81895c1-c737-49dc-ac48-cdeca27c8c9b</guid><pubDate>Fri, 07 Aug 2026 08:01:12 +0000</pubDate><atom:updated>2026-08-07T08:01:12.132Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பெயர் மாற்றம்,அம்மா உணவகம்,Amma Unavagam,அக்ரி கிருஷ்ணமூர்த்தி,Agri Krishnamurthy</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/o6r24xar/tn-43.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அக்ரி கிரிஷ்ணமூர்த்தி]]></media:title><media:description type="html"><![CDATA[ அக்ரி கிரிஷ்ணமூர்த்தி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/o6r24xar/tn-43.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தவெக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று முன் தினம் பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் தொடர்ந்து நேற்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். அதன் தொடர்ச்சியாக இன்று<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-debate-dmk-and-thaveg-mlas-clash-over-debt-burden-and-inadequate-allocations"> பட்ஜெட் மீதான விவாதம் </a>நடைபெற்று வருகிறது.</p><h2>அக்ரி கிருஷ்ணமூர்த்தி</h2><p>இதில் அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது, </p><p>"மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் பட்ஜெட்டாக இல்லை. நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி மக்கள் நலத்திட்டங்களை நிறுத்த கூடாது.</p><p>மக்களின் கவனக்குறைவால் ஆட்சி பீடத்தில் தவெக அரசு உள்ளது. நிதி பற்றாக்குறை இருப்பது தெரிந்து தான் வாக்குறுதி அளித்தீர்கள்.</p><p>நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து தவெக மக்களை ஏமாற்றி உள்ளது.  வேளாண் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.  </p><p>சிறுகுறு விவசாயிகள் கடனை கட்டமுடியாமல் தவித்து வருகின்றனர். சிறுகுறு விவசாயிகளிடம் பாகுபாடு செய்வது ஏற்புடையதல்ல. விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.</p><h2>ஸ்டிக்கர்</h2><p>அம்மா மற்றும் எடப்படியார் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட எண்ணற்ற திட்டங்களுக்கு இந்த ஆட்சியில் வெற்றி திட்டம் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகிறது.</p><p>மாற்றம் மாற்றம் என்றீர்கள். இதுதான் மாற்றமா? பள்ளி கல்வித்துறைக்கு நிதி குறைக்கப்பட்டுள்ளது, </p><p>அம்மா ஆட்சியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மிதிவண்டிகள் திட்டம், நவீன பிராண்டட் மிதிவண்டிகள் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. </p><p>எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் தொடர்ந்து வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினி திட்டத்திற்கு வெற்றி மடிக்கணினி திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் வழங்கப்பட்ட மகளிர்களுக்கான விலையில்லா ஆடுகள் வழங்கிய திட்டத்திற்கு வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டம் என மாற்றப்பட்டுள்ளது" என கூறினார். </p><p>அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், ஸ்டிக்கர் என்ற வார்த்தை அவைகுறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவித்தார். </p><h2>ஆதவ் அர்ஜுனா</h2><p>இதன்பின் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "எங்கள் ஆட்சியில் நல்ல திட்டங்களை வரவேற்று அதை அப்படியே செயல்படுத்தி உள்ளோம். அம்மா உணவகத்தைப் பெயர் மாற்றாமல் அப்படியே வைத்துள்ளோம். </p><p>நிதி ஒதுக்கி இன்று ஒவ்வொரு தெருவிலும் அம்மா உணவகம் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. </p><p>கடந்த 5 ஆண்டுகளில் அது எப்படி நடந்தது என்பது உங்களுக்கு தெரியும் " என்றார். </p><h2>கே.என்.நேரு</h2><p>இதற்கு பதிலளித்த திமுக எம்எல்ஏ கே. நெஹ்ரு, "அம்மா உணவகத்தித்கு கடந்த ஆட்சி எவ்வளவு செலவு செய்துள்ளோம் என கணக்கு பார்த்தால் தெரியும். மாவட்ட வாரியாக கணக்குகள் உள்ளன. பேரிடர் காலத்தில் பயன்படுத்தப்பட்டது." என்றார். </p><h2>இபிஎஸ்</h2><p>இதன்பின் வேலுமணி, இபிஎஸ் ஆட்சியில் அம்மா உணவகத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டதாகவும், கடந்த திமுக ஆட்சியில் அம்மா உணவகம் சிறப்பாக செயல்படவில்லை என கூறினார். </p><p>அப்போது, அவர் தவறான தகவலை கூறுவதாகவும், அம்மா உணவகத்திற்கான நிதி நகராட்சிகளில் இருந்து தான் செல்கிறது, தனியே நிதி ஒதுக்கப்படுவதில்லை என தெரிவித்தார். </p><p>விவாதம் தொடர, இபிஎஸ் எழுந்து, பழைய திட்டங்களுக்கு பெயர் மாற்றுவதால் தான் இந்த பிரச்சனையே வருகிறது" என்று சுருக்கமாக கூறி முடித்தார். </p><p>இதற்கு பதில் சொன்ன அமைச்சர் செங்கோட்டையன், கடந்த ஆட்சிகளிலும் பெயர் மாற்றங்கள் பரவலாக நிகழ்ந்துள்ளன என கூறினார். </p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை கூட்டத்தில் திமுக பங்கேற்குமா? - ஆதவ் அர்ஜுனா கேள்விக்கு உதயநிதி பதில்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-stand-on-delimitation-udhayanidhi-answers-athav-arjuna</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-stand-on-delimitation-udhayanidhi-answers-athav-arjuna#comments</comments><guid isPermaLink="false">757d956f-b982-479a-9085-3e6e0aa964b8</guid><pubDate>Fri, 07 Aug 2026 07:23:40 +0000</pubDate><atom:updated>2026-08-07T07:23:40.761Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,Aadhav Arjuna,ஆதவ் அர்ஜுனா,தமிழக சட்டப்பேரவை,தொகுதி மறுவரையறை,Delimitation,tamilnadu legislative assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/gmo7gt9o/Untitled-design-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தொகுதி மறுவரையறையில் திமுக நிலைப்பாடு குறித்து ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பினார்.]]></media:title><media:description type="html"><![CDATA[ Aadhav Arjuna - Udhayanidhi Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/gmo7gt9o/Untitled-design-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88">தமிழக சட்டப்பேரவை</a>யில் நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை குறித்து திமுக எம்.எல்.ஏ எஸ். ரகுபதி சில கேள்விகளை எழுப்பினார். இதற்கு பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE">ஆதவ் அர்ஜுனா</a> பதில் அளித்தார்.</p><p>அப்போது அவர் பேசியதாவது:-</p><p>தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில் லஞ்சம் மிகப்பெரிய குற்றம் என்று அமைச்சர்களிடம் முதலமைச்சர் விஜய் சொல்லி வருகிறார் எனக் கூறினார். </p><h3><strong>தவெக-வில் லஞ்சம் இல்லை</strong></h3><p>அவ்வாறு யாராவது லஞ்சத்தில் ஈடுபட்டால், இங்கு இருக்கும் ஒருவர் கூட அமைச்சராக இருக்க முடியாது என்பதை பதிவு செய்துகொண்டே வருகிறார்.</p><p>இதுவரையிலும் எந்த துறையிலும் அமைச்சர்கள் முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் வரை ஒரு ரூபாய் வாங்கியது கிடையாது.</p><p>எம்.எல்.ஏ ஃபண்ட், பார்டி ஃபண்ட் உள்ளிட்டவை வசூலிக்கப்படவில்லை என்பதை இங்கு நாங்கள் பதிவு செய்கிறோம்.</p><p>மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பில் நாங்கள் அடிபணிந்து விட்டதாக ரகுபதி கூறுகிறார். மேகதாது பிரச்சனைக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் முக்கிய பிரச்சனையாக தொகுதி மறுவரையறை உருவாகிக் கொண்டிருக்கிறது.</p><p>அதற்காகத்தான் தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து கட்சி எம்.பி.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.</p><h3><strong>தொகுதி மறுவரையறையில் திமுக நிலைப்பாடு</strong></h3><p>நாங்கள் எதிர்கட்சித் தலைவரிடம் ஒன்றை மட்டும் கேட்கிறோம். தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள பிரச்சனையை பேச அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினால், திமுக எம்.பி.க்கள் கலந்து கொள்வார்களா? என்று கேட்கிறேன்.</p><p>எங்களுக்கு டெல்லியில் வந்த தகவலின்படி, தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக ஆதரவாகவோ அல்லது எதிர்ப்பு தெரிவிக்காமல் வெளிநடப்பு செய்யவோ வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.</p><p>இவ்வாறு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.</p><h3><strong>உதயநிதி பதில்</strong></h3><p>ஆதவுக்கு பதில் அளித்த <a href="https://www.maalaimalar.com/topic/உதயநிதி-ஸ்டாலின்">உதயநிதி ஸ்டாலின்</a>, "தொகுதி மறுவரையறை விவகாரத்தில் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் முன்மாதிரியாக, அதை முதன்முதலாக பேசியது திராவிட முன்னேற்ற கழகம்தான்.</p><p>கடந்த ஆண்டுகளில் ஐந்து மாநில முதலமைச்சர்களை தமிழகத்திற்கு வரவழைத்து, ஒரு மிகப்பெரிய ஆலோசனை கூட்டத்தை நடத்தி தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதன் முதலில் குரல் கொடுத்த தலைவர் மு.க.ஸ்டாலின்தான்.</p><p>அனைத்துக் கட்சி கூட்டம் தொடர்பான முடிவை எங்கள் கட்சி தலைவர் எடுப்பார்" என்று கூறினார். </p>]]></content:encoded></item><item><title>அண்ணன் சீர் செய்யவே முடியாது.. ஒவ்வொரு தமிழன் தலையிலும் ரூ. 1.28 லட்சம் கடன் - சட்டசபையில் காரசாரம் 
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-debate-dmk-and-thaveg-mlas-clash-over-debt-burden-and-inadequate-allocations</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-debate-dmk-and-thaveg-mlas-clash-over-debt-burden-and-inadequate-allocations#comments</comments><guid isPermaLink="false">c186c13f-e74f-4de5-b4a3-40ab708ec6ce</guid><pubDate>Fri, 07 Aug 2026 07:03:52 +0000</pubDate><atom:updated>2026-08-07T07:03:52.047Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>budget,பட்ஜெட் தொடர்,அண்ணன் சீர் திட்டம்,&apos;Annan Seer&apos; Scheme</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/zd22n5gp/tn-42.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சட்டசபை]]></media:title><media:description type="html"><![CDATA[ சட்டசபை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/zd22n5gp/tn-42.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தவெக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று முன் தினம் பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் தொடர்ந்து நேற்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். அதன் தொடர்ச்சியாக இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.</p><p>இதன்போது பேசிய முன்னாள் அமைச்சரும் திமுக எம்எல்ஏவுமான ரகுபதி பேசுகையில்,</p><h2>ஸ்டாலின் </h2><p>எங்கள் தலைவர் எங்கே இருக்கிறார் என கேட்டவர்களுக்கு அதில் சொல்கிறேன். மகளிர் உரிமை வாங்கும் ஒவ்வொரு பெண்களின் உள்ளத்திலும் எங்கள் தலைவர் இருக்கிறார்கள். விடியல் பயணத்திட்டத்தில் இருக்கிறார். </p><p>விடியலை நீக்கி விட்டீர்கள். ஆனால், விடியல் எங்களால் மீண்டும் கிடைக்கும். நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் அரைகுறையாத்தான் இருக்கிறது. முழுமை பெறவில்லை </p> <h2>அண்ணனின் சீர்</h2><p>அண்ணனின் சீர் திட்டத்தை தவெக அரசால் செயல்படுத்த முடியாது. அண்ணனின் சீர் திட்டத்தை செயல்படுத்த 2000 கோடி ரூபாய் தேவைப்படும். ஆனால் நீங்கள் அந்த திட்டத்திற்கு வெறும் 812 கோடி ரூபாய் தான் ஒதுக்கியுள்ளீர்கள்." என தெரிவித்தார்.</p><h2>கடன்</h2><p>இதைத்தொடர்ந்து பேசிய நிதியமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/fair-tax-share-resolution-tamil-nadu-assembly-passes-special-motion-urging-centre-for-equitable-tax-devolution">மரிய வில்சன்</a>, ஸ்டாலின் எங்கெல்லாம் இருப்பார் என கூறினார்கள். தமிழகத்தில் ஒவ்வொருவரின் தலையிலும் 1.28 லட்சம் ரூபாய் கடனை விட்டுச் சென்றுள்ளீர்கள்" என தெரிவித்தார்.</p> <p>இதற்கு பதிலளித்த திமுக எம்எல்ஏ கேஎன் நேரு, "நீங்கள் ஆட்சிக்கு வந்த பின் 20,000 கோடி கடன் பெற்றுள்ளீர்கள். எவ்வளவு கடன் என்பது அல்ல, எவ்வளவு வளர்ச்சி திட்டம் செய்யப்பட்டுள்ளது என்பதை தன் பார்க்க வேண்டும்.</p><p>60 நாட்களில் 21 ஆயிரம் கோடி கடன் வந்துள்ளது. அரசு முன்னேற்றத்திற்காக தான் கடன் வாங்குகிறது. எவ்வளவு கடன் வாங்கியுள்ளோம் என்பதை பார்க்காதீர்கள், எவ்வளவு திட்டங்கள் செய்திருக்கிறோம் என்பதை தான் பார்க்க வேண்டும்" என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>தவெக அரசில் பிரவீன் சக்ரவர்த்தியின் ஆதிக்கம்?.. ரகுபதி கேள்விக்கு அமைச்சர் விஸ்வநாதன் பதில்  
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/praveen-chakravarty-row-dmk-mla-questions-congress-mps-role-in-tamil-nadu-policy-minister-viswanathan-denies-any-official-position</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/praveen-chakravarty-row-dmk-mla-questions-congress-mps-role-in-tamil-nadu-policy-minister-viswanathan-denies-any-official-position#comments</comments><guid isPermaLink="false">9aa7399f-2269-4e54-ad3a-8f7fae0eab7d</guid><pubDate>Fri, 07 Aug 2026 06:38:21 +0000</pubDate><atom:updated>2026-08-07T06:38:21.405Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ரகுபதி,Raghupathi,பிரவீன் சக்கரவர்த்தி,Praveen Chakravarty,பட்ஜெட் தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/bgwqjtxt/tn-41.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பட்ஜெட் மீதான விவாதம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ பட்ஜெட் மீதான விவாதம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/bgwqjtxt/tn-41.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தவெக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று முன் தினம் பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் தொடர்ந்து நேற்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். அதன் தொடர்ச்சியாக இன்று <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/fair-tax-share-resolution-tamil-nadu-assembly-passes-special-motion-urging-centre-for-equitable-tax-devolution">பட்ஜெட் மீதான விவாதம் </a>நடைபெற்று வருகிறது.</p><p>இதன்போது பேசிய முன்னாள் அமைச்சரும் திமுக எம்எல்ஏவுமான ரகுபதி பேசுகையில், "காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி தமிழ்நாட்டு அரசின் கொள்கைகளை வடிவமைப்பதிலும், ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்குவதாக ஒரு ஆங்கில செய்திநாளிதழில் வந்துள்ளது அது உண்மையா என கேள்வி எழுப்பினார். </p> <h2>அமைச்சர் விஸ்வநாதன் பதில்</h2><p>இதற்கு பதிலளித்த தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள காங்கிரசை சேர்ந்த அமைச்சர் விஸ்வநாதன்,</p><p>பிரவீன் சக்கரவர்த்தி ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த அவையில் அங்கத்தினர் அல்லாதவரை பற்றி பேசுவது என்பது வழக்கத்திற்கு மீறிய செயலாகும்.</p><p>நாடாளுமன்ற உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி அவர்கள் தமிழக அரசின் சார்பாகவோ, அங்கீகாரம் பெற்ற குழுக்களின் சார்பாகவோ எந்த அமைப்பிலும் அங்கத்தினராக இல்லாதவர்.</p> <p>ஊடகங்கள் சமீப காலங்களில் ஒரு செய்தியை பல்வேறு செய்தியாக எழுதிக் கொண்டிருக்கிறது. பத்திரிகையில் வரும் செய்தியை வைத்துக் கொண்டு திமுக முன்னாள் அமைச்சர் சம்பந்தமில்லாத அவையில் இல்லாத நபரை பற்றி கருத்துக்களை சொல்வதை ஏற்புடையதல்ல" என தெரிவித்தார்.</p><p>தவெக – காங்கிரஸ் கூட்டணிக்கு அச்சாரமிட்ட பிரவீன் சக்கரவர்த்தி தவெக சார்பில் மாநிலங்கவளை எம்.பியாக அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எவ்வித சமரசமும் செய்யாது: நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-will-not-compromise-on-cauvery-issue-says-water-resources-minister-anand</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-will-not-compromise-on-cauvery-issue-says-water-resources-minister-anand#comments</comments><guid isPermaLink="false">3d224981-7bc0-4f1b-9852-ebd62e53b534</guid><pubDate>Fri, 07 Aug 2026 06:25:49 +0000</pubDate><atom:updated>2026-08-07T06:25:49.977Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN budget,தமிழக சட்டப்பேரவை,Cauvery Issue,tvk,அமைச்சர் ஆனந்த்,MInister N Anand,TM CM Vijay,காவேரி,tamilnadu legislative assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/79mr9m1r/Untitled-design-4.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Cauvery Issue Stance: Tamil Nadu asserts rights, presses for due water allocation]]></media:title><media:description type="html"><![CDATA[ Minister N Anand]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/79mr9m1r/Untitled-design-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரி நதிநீர் விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு, அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக அமைச்சர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88">தமிழ்நாடு சட்டப்பேரவை</a>யில் இன்று பட்ஜெட் மீதான விவாத உரை நடைபெறுகிறது. அப்போது மேகதாது அணை விவகாரம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளரும், தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான என்.ஆனந்த் உரையாற்றினார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><p>காவிரி நீர் டெல்டா மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாயத்திற்கான மூலமாகவும் உள்ளது.  காவிரி நதிநீர் தொடர்பாக உச்ச நீதிமன்றம் மற்றும் ஒழுங்காற்று ஆணையம் மூலம் தமிழ்நாடு உரிமை நிலை நாட்டப்பட்டுள்ளது.</p><p>இருந்தாலும், <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D">காவிரி நதிநீர்</a> பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்த கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமாரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டு, ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி முடிவு செய்யப்பட்டது.   </p><p>அதற்கிடையில் கர்நாடக முதலமைச்சர் அந்த நாளை பேச்சுவார்த்தைக்கு உகந்த நாள் அல்ல என்றும், வேறு ஒரு நாளில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் கூறியதால், குறிப்பிட்ட நாளில் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.</p><p>ஜூலை 28 அன்று நடைபெற்ற 139வது காவிரி நதி நீர் முறைப்படுத்தும் குழுவில், தமிழ் நாடு தனது உரிமையை வலியுறுத்தியது.  </p><h3><strong>தமிழகத்திற்கு 3500 கனஅடி நீர்</strong></h3><p>இதன்மூலம், 29.07.2026 முதல் 12.087.2026 வரை வினாடிக்கு 3500 கன அடி வீதம் மொத்தம் 4.536 டி.எம்.சி நீர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் காவிரி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும்படி, காவிரி ஒழுங்காற்று ஆணையம் வலியுறுத்தியது.</p><p>ஆனால் கர்நாடகா அறிவுறுத்தலின் பேரில் நீரை அளித்தாலும், பற்றாக்குறை காரணமாக விகிதாசார பங்கீட்டில் 5.379 டி.எம்.சி பற்றாக்குறை இருக்கும் என தமிழ்நாடு சுட்டிக்காட்டியது.</p><p>இருப்பினும் 30.07.2026 அன்று நடந்த காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 54ஆவது கூட்டத்தில், குழுவின் முடிவை ஆணையம் உறுதி செய்தது.</p><p>எனினும் கர்நாடக அரசு இதனை முழுமையாக செயல்படுத்தவில்லை. 3500 கன அடி கிடைக்க வேண்டிய இடத்தில், 144 முதல் 619 கன அடி மட்டுமே கிடைத்தது. இதனால் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டிருந்த பற்றாக்குறை மேலும் அதிகரித்தது.</p><p>எனவே 12.08.2026-க்குள் நீர் வந்து சேருமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிடவும், 01.06.2026 முதல் 28.07.2026 வரை உள்ள நிலுவை நீரை உடனடியாக திறந்து விடவும், பற்றாக்குறை விகிதாசார அளவை ஈடுசெய்யவும் தமிழ்நாடு அரசு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை வலியுறுத்தியது.</p><p>தமிழக முதல்வர் அறிவுறுத்தலின்படி, 03.08.2056 அன்று உச்ச நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p>கர்நாடகாவில் தற்போது நீர் வரத்து அதிகரித்துள்ள போதிலும், 06.08.2026 நிலவரப்படி தமிழ்நாடு பெற்றுள்ள மொத்த நீர் 4.947 டி.எம்.சி மட்டுமே கிடைத்துள்ளது. இதனால் 41.412 டி.எம்.சி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.</p><p><strong>காவிரி விவகாரத்தில் எந்த சமரசமும் கிடையாது</strong></p><p>காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை காக்க நிர்வாக, சட்டரீதியாக தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சூழலை கருத்தில்கொண்டு மேட்டூர் அணையில் நீர் திறக்கப்படும்.</p><p>தமிழ் நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு, காவிரி விவகாரத்தில் உரிய கவனம் செலுத்தி தமிழ்நாட்டின் உரிமையை சிறிதும் விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.</p><p>இவ்வாறு அமைச்சர் என். ஆனந்த் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>நிதி பகிர்வு தீர்மானம்.. திமுக, அதிமுக ஆதரவு - சட்டசபையில் நிறைவேற்றம்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/fair-tax-share-resolution-tamil-nadu-assembly-passes-special-motion-urging-centre-for-equitable-tax-devolution</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/fair-tax-share-resolution-tamil-nadu-assembly-passes-special-motion-urging-centre-for-equitable-tax-devolution#comments</comments><guid isPermaLink="false">2de1b385-8055-4520-8ea1-bfa9aaf5decb</guid><pubDate>Fri, 07 Aug 2026 06:11:36 +0000</pubDate><atom:updated>2026-08-07T06:11:36.277Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Budget session,மரிய வில்சன்,பட்ஜெட் தொடர்,நிதி பகிர்வு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/f21kan6g/tn-40.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சட்டசபை]]></media:title><media:description type="html"><![CDATA[ சட்டசபை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/f21kan6g/tn-40.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தவெக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று முன் தினம் பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் தொடர்ந்து நேற்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். </p><h2>காவிரி விவகாரம் </h2><p>அதன் தொடர்ச்சியாக இன்று  கூடிய அவையில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-dam-row-udhayanidhi-stalin-demands-all-party-meet-in-tamil-nadu-over-karnatakas-fast-tracked-moves">மேகதாது அணை </a>குறித்தும், காவிரி குருவை சாகுபடி பாதிப்பு குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உட்பட பல உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் தந்தனர். அதை சபாநாயகர் பிரபாகர் ஏற்றுக்கொண்டார். </p><p>இதன் மீது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்ற, அவருக்கு முதல்வர் விஜய் பதில் அளித்தார். பின்னர் எடப்பாடி பழனிச்சாமி, சௌமியா அன்புமணி உள்ளிட்டோர் உரையாற்றினர். ஆளும் தரப்பு அமைச்சர்கள் அவர்களுக்கு பதிலளித்து பேசினர். </p><p>இதன்மீது பேசிய திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு,  "மாநிலங்களுக்கு 50 சதவிகித நிதி பகிர்வை உறுதி செய்ய வேண்டும். இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாவது மிகப்பெரிய பொருளாதரத்தைக் கொண்டது. </p><p>மாநில வருவாய்க்கான ஆதாரம் குறையும் சூழல் ஏற்பட்டுள்ளது. செலவு பொறுப்பு மாநிலங்களிடம் உள்ளது. வருவாய் ஆதாரங்கள் மத்திய அரசிடம் உள்ளது. </p><p>மாநிலங்களுக்கான வருவாய் ஆதாரம் குறையும் சூழல் இப்போது உள்ளது. நிதி பகிர்வில் தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. உற்பத்தி துறையில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. </p><p>பெண் தொழிலாளர்களின் பங்களிப்பில் முதல் மாநிலம் தமிழ்நாடு, ஒட்டு மொத்த இந்திய பொருளாதாரத்தின் தூணாக தமிழ்நாடு பொருளாதாரம் உள்ளது. தமிழ்நாட்டிற்கு ஏன் இந்த புறக்கணிப்பு என்பது தான் கேள்வி" எனப் பேசினார்.   </p> <h2>வரி பகிர்வு தீர்மானம்</h2><p>இதைத்தொடர்ந்து தமிழகத்திற்கு நியாயமான வரிப்பகிர்வை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தும் அரசினர் தனித் தீர்மானத்தை அமைச்சர் மரிய வில்சன் முன்மொழிந்தார்.</p><p>அப்போது பேசிய அவர், "மாநிலங்கள் தங்களது பொறுப்புகளைத் திறம்பட நிறைவேற்றுவதற்கு நியாயமான மற்றும் சமமான நிதிப் பகிர்வு முறை இன்றியமையாதது.</p> <p>தமிழ்நாடு தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சி, தொழில் முன்னேற்றம், ஏற்றுமதி, சிறந்த நிதி மேலாண்மை மற்றும் மத்திய அரசால் வசூலிக்கப்படும் வரிகளுக்கு குறிப்பிடத்தக்க அளவில் பங்களிப்பு செய்ததன் மூலம், தேசிய பொருளாதாரத்திற்கு தொடர்ந்து முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. தீர்மானம் மீது விவாதம் நடைபெற்று குரல் வாக்கெடுப்பு நடைபெறும்" என தெரிவித்தார்.</p><p>இதைத்தொடர்ந்து நிதி பகிர்வு தொடர்பாக தவெக அரசு கொண்டு வந்த தீர்மானத்திற்கு திமுக, அதிமுக ஆதரவு அளித்ததன் மூலம் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த அரசு பயப்படுவது ஏன்? - உதயநிதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-dam-row-udhayanidhi-stalin-demands-all-party-meet-in-tamil-nadu-over-karnatakas-fast-tracked-moves</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-dam-row-udhayanidhi-stalin-demands-all-party-meet-in-tamil-nadu-over-karnatakas-fast-tracked-moves#comments</comments><guid isPermaLink="false">6aa45be1-4ad4-413f-8b63-a00bed4f9d62</guid><pubDate>Fri, 07 Aug 2026 05:51:56 +0000</pubDate><atom:updated>2026-08-07T05:51:56.591Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,விஜய்,vijay,Udhayanidhi Stalin,mekedatu dam,மேகதாது அணை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/u6o8empb/tn-39.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ உதயநிதி ]]></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/u6o8empb/tn-39.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தவெக அரசின் முதல் பொது பட்ஜெட் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று வேளாண்மை பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. </p><p>இந்நிலையில் தமிழ்நாடு சட்டசபை இன்று கூடியது. சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெற்றது.</p><p>சட்டசபை கூடியதும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் இரங்கல் குறிப்பு வாசித்தார்.</p><p>மறைந்த திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் பாக்யராஜ், கவிஞர் மற்றும் எழுத்தாளர் புவியரசு, மறைந்த பின்னணி பாடகி ஜானகி, எழுத்தாளர் பூமணி, முன்னாள் சட்டசபை உறுப்பினர் சுருளிவேல் ஆகியோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இதையடுத்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.</p> <h2>உதயநிதி ஸ்டாலின்</h2><p>மேகதாது அணை விவகாரம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.</p><p>அப்போது அவர்,</p><p>"விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக பேரவையில் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கி உள்ளோம்.</p><p>முழு தள்ளுபடி என சொல்லிவிட்டு பயிக்கடனை அரைகுறையாக தள்ளுபடி செய்தது ஏன் என அரசு பதில் அளிக்க வேண்டும்.</p><p>டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் தர வேண்டும்.</p><p>மேகதாது விவகாரத்தில் அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து அவைக்கு விளக்க வேண்டும்.</p><h2>கர்நாடகா அதிக வேகம்</h2><p>தவெக அரசு அமைந்த பின்னர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-row-tamil-nadu-cm-ready-to-face-humiliation-for-bengaluru-talks-with-karnataka">மேகதாது விவகாரத்தில்</a> அதிக வேகம் காட்டுகிறது கர்நாடகா.</p> <p>மேகதாது அணை கட்ட வேண்டும் என கர்நாடக தரப்பில் நிதியமைச்சர் நிர்மலா சந்தித்து நிதி கேட்டுள்ளனர். ஆக.2-ல் பெங்களூருவில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி உள்ளார் கர்நாடக முதல்வர்.</p><p>கர்நாடகம் கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் 5 முன்னாள் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் கர்நாடகா முதலமைச்சர் நேரில் சந்தித்து மேகதாவில் அணை கட்ட நிதி உதவி கோரியிருந்தார். ஜல்சக்தி துறை அமைச்சரையும் சந்தித்து மேகதாது அணைக்கட்ட ஒப்புதல் வழங்க கோரிக்கை விடுத்தார்.</p><p>இப்படி கடந்த ஒரு மாதத்தில் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக பல்வேறு பணிகளை கர்நாடகாவில் உள்ள அனைத்து கட்சிகளும் இணைந்து செயல்படுகிறது.</p> <h2>அனைத்துக்கட்சி கூட்டம்</h2><p>எனவே தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டவேண்டும் என அனைத்து கட்சிகளும் வலியுறுத்துகின்றன.</p><p>அனைத்து கட்சிகளும் இணைந்து மேகதாது அணை கட்டுவதை எதிர்க்கும் வகையில் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்ட நாம் கோரிக்கை விடுத்தோம். ஆனால் அனைத்து கட்சி கூட்டம் நடத்த ஏன் பயப்படுகிறீர்கள் அல்லது ஏன் தயங்குகிறீர்கள்?" என கேள்வி எழுப்பினார். </p>]]></content:encoded></item><item><title>பேச ஒன்றுமில்லை.. அணை கட்ட கூடாது அவ்வளவுதான் - சௌமியா அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-dispute-tamil-nadu-mlas-demand-all-party-meet-over-mekedatu-dam-and-kuruvai-crop-loss</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-dispute-tamil-nadu-mlas-demand-all-party-meet-over-mekedatu-dam-and-kuruvai-crop-loss#comments</comments><guid isPermaLink="false">1b70709c-e61d-4fce-8557-0d4e619fb7ce</guid><pubDate>Fri, 07 Aug 2026 05:39:46 +0000</pubDate><atom:updated>2026-08-07T05:39:46.934Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>mekedatu dam,மேகதாது அணை,Soumya Anbumani,Cauvery Issue,காவிரி விவகாரம்,சௌமியா அன்புமணி</media:keywords><media:content height="576" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/af1s2aw2/maalai-malar2026-08-07rwllwdmzsowmiya.avif" width="1024"><media:title type="html"><![CDATA[ சௌமியா அன்புமணி]]></media:title><media:description type="html"><![CDATA[ சௌமியா அன்புமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/af1s2aw2/maalai-malar2026-08-07rwllwdmzsowmiya.avif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இன்றைய கூட்டம் தொடங்கிய நிலையில் மேகதாது அணை குறித்தும், காவிரி குருவை சாகுபடி பாதிப்பு குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உட்பட பல உறுப்பினர்கள் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-row-tamil-nadu-cm-ready-to-face-humiliation-for-bengaluru-talks-with-karnataka">கவன ஈர்ப்பு தீர்மானம் </a>தந்தனர். அதை சபாநாயகர் பிரபாகர் ஏற்றுக்கொண்டார்.</p><h2>சவுமியா அன்புமணி </h2><p>காவிரி விவகாரம் தொடர்பாக பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி பேசுகையில், </p><p>கர்நாடக அரசு உரிய காலத்தில் காவிரி நீரை ஒருபோதும் திறந்து விட்டது இல்லை. காவிரி நீர் வராத காரணத்தால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது கர்நாடகா திறந்து விட்டது உபரிநீரை மட்டும்தான்.</p><p>அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். சட்ட முன்னெடுப்புகளை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். </p><p>தமிழ்நாட்டில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் தான் அணை கட்ட திட்டமிட்டுள்ளனர். ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழ்நாட்டிற்கு வரக்கூடாது என்று தான் அணை கட்ட திட்டமிட்டுள்ளனர். </p><p>இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும்.  அணை கட்ட வேண்டும், அல்லது கூடாது. அவ்வளவு தான்.   </p><p>நடுவில் என்ன முயற்சி என்ன இருக்கு? நடுவில் முயற்சி செய்வது எல்லாம் தேவையில்லை" என்று தெரிவித்தார். </p> <h2>விஜய்</h2><p>முன்னதாக முதல்வர் விஜய் பேசுகையில், இந்த விவகாரத்தில் பேசுகையில், "பக்கத்துக்கு நாட்டுகிட்டயே பிரச்னையை பேசி தீர்க்க முடியுது. பக்கத்துக்கு ஸ்டேட்டு கிட்ட பேசி பார்க்கலாம்னு நினைச்சேன். </p><p>ஒரு முயற்சியா இதை பண்ணலாம்னு நினைச்சேன்" என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்திற்கு உபரி நீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது: எடப்பாடி பழனிசாமி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/only-surplus-water-released-to-tamilnadu-edappadi-palanisamy</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/only-surplus-water-released-to-tamilnadu-edappadi-palanisamy#comments</comments><guid isPermaLink="false">e4c8bf7d-e2a7-469b-8e3f-1d50e12a1ec6</guid><pubDate>Fri, 07 Aug 2026 05:36:25 +0000</pubDate><atom:updated>2026-08-07T05:36:25.786Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,Cauvery,TN budget,தமிழ்நாடு சட்டப்பேரவை,எடப்பாடி பழனிசமி,Edappadi K Palanisamy,காவேரி,tamilnadu legislative assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/repzqxna/Untitled-design-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Kaveri Water Dispute: Karnataka releases only surplus water to Tamil Nadu despite full reservoirs]]></media:title><media:description type="html"><![CDATA[ Edappadi Palanisamy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/repzqxna/Untitled-design-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக அணைகளில் போதிய நீர் இருந்தும் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை என்றும், இறுதியில் உபரி நீர் மட்டுமே திறக்கப்பட்டதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/எடப்பாடி-பழனிசாமி">எடப்பாடி பழனிசாமி</a> தெரிவித்தார். </p><p>சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாத உரை நடைபெறுகிறது. அப்போது மேகதாது அணை விவகாரம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.  </p><p><strong>அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்கள்</strong></p><p>அவர் பேசியதாவது, "மேகதாது விவகாரம் குறித்து கர்நாடகாவில் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட்டு கருத்து கேட்கப்பட்டு வருகிறது. அதேபோல, தமிழகத்திலும் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி, அவர்களின் கருத்தை கேட்க வேண்டும்.</p><p>அதுனுடன் காவேரி பிரச்சனை வருகின்ற போது, அதை சுமூகமாக தீர்க்க வேண்டும் என்பதற்காக, டெல்டா மாவட்ட பிரதிநிதிகள் அனைவரையும் அழைத்து அவர்களின் கருத்துகளையும் கேட்டு, அதை சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து பிறகு அரசு அதற்கு ஒரு தீர்வு காண வேண்டும். இதுதான் கடந்த காலத்தில் இருந்து பின்பற்றப்படும் வரலாறாக உள்ளது".</p><p><strong>உபரி நீர் மட்டுமே வருகிறது</strong></p><p>"கர்நாடக அரசு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும் போது, பெரும் போராட்டத்திற்கு மத்தியில் தால் தண்ணீர் பெற வேண்டிய நிலை இருக்கின்றது.</p><p>ஆனால் இந்த ஆண்டு கர்நாடக அணைகளில் போதிய அளவில் தண்ணீர் இருந்தும், தண்ணீர் திறக்க மறுக்கப்பட்டது. காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரையின் படி, காவிரி நீர் மேலாண்மை வாரியம் பதினைந்து நாட்களுக்கு தினந்தோறும் 3,500 கன அடி நீர் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டும், தண்ணீர் திறக்கப்படவில்லை.</p><p>அவ்வாறு தண்ணீர் திறக்கப்பட்டு இருந்தால் டெல்டா மாவட்டத்தில் இருக்கக்கூடிய விவசாயிகள் குறுவை சாகுபடி செய்திருப்பார்கள்.</p><p>இப்பொழுது கபினி அணை மற்றும் கர்நாடகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அனைகளும் நிரம்பிவிட்டன. அதனால் தற்போது உபரி நீர் மட்டும்தான் வந்து கொண்டு இருக்கிறது".</p><p>இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது விவகாரம்: தி.மு.க ஆட்சியில் மூன்று முறை மனுக்கள் தள்ளுபடி குறித்து ஆதவ் கேள்வி - கே.என். நேரு பதில் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-cauvery-dispute-three-pleas-rejected-in-supreme-court-heated-assembly-clash-over-stalin-governments-legal-strategy</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-cauvery-dispute-three-pleas-rejected-in-supreme-court-heated-assembly-clash-over-stalin-governments-legal-strategy#comments</comments><guid isPermaLink="false">3ab39143-24fd-488e-b97a-6aea2f1566bf</guid><pubDate>Fri, 07 Aug 2026 05:22:42 +0000</pubDate><atom:updated>2026-08-07T05:22:42.793Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>mekedatu dam,மேகதாது அணை,Aadhav Arjuna,ஆதவ் அர்ஜுனா,Cauvery Issue,காவிரி விவகாரம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/dfewyd2d/tn-38.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஆதவ், நேரு ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆதவ், நேரு ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/dfewyd2d/tn-38.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இன்றைய கூட்டம் தொடங்கிய நிலையில் மேகதாது அணை குறித்தும், காவிரி குருவை சாகுபடி பாதிப்பு குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உட்பட பல உறுப்பினர்கள் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-row-tamil-nadu-cm-ready-to-face-humiliation-for-bengaluru-talks-with-karnataka">கவன ஈர்ப்பு தீர்மானம்</a> தந்தனர். அதை சபாநாயகர் பிரபாகர் ஏற்றுக்கொண்டார்.</p><h2>ஆதவ் அர்ஜுனா</h2><p>இதன் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், </p><p>"எதிர்க்கட்சி தலைவர் அவரின் உரையில் ஒரு தவறான தகவலை கொடுத்தார். </p><p>பிரதமருக்கு ஒரு முறை மட்டும் தான் கடிதம் எழுதியதாக கூற, எதிர் தரப்பினர், இரண்டு முறை கூறினார் என கூச்சலிட திருத்திக்கொண்ட ஆதவ், முதல் முறை ஒரு முறை என்று சொல்லிவிட்டு பின்னர் இரண்டு முறை என்று எதிர்க்கட்சி தலைவர் கூறியதாக தெரிவித்தார். </p><p>அதுமட்டுமில்லாமல் மற்றொரு தவறான தகவல் என்னவென்றால் விவசாயிகளை முதல்வர் விஜய் சந்திக்கவில்லை என கூறினார். </p><p>அவைக்கு ஒரு கூடுதல் தகவலாக இன்று மதியம் டெல்டா விவசாய சங்க பிரதிநிதிகளை மூத்த அமைச்சர்களை முதலில் சந்திக்க சொல்லி பின்னர் 3.30 மணியளவில் அவர்களை முதல்வர் சந்திக்க போன வாரமே அறிவுறுத்தலை வாங்கிவிட்டார். அது ஒரு பாயிண்ட். </p><p>எதிர்க்கட்சி தலைவரை பார்த்து ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்கான விளக்கத்தை அவர் கொடுக்க வேண்டும். </p><p>முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக ஆட்சியில் மேகதாது அணையை கட்டும் திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயார் செய்த நிலையில் அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுதாக்கல் செய்தது. அந்த மனுவை உச்சநீதிமன்றம் கடந்த டிசம்பரில் தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து திமுக அரசு மீண்டும் சீராய்வு மனு தாக்கல் செய்தது. அந்த சீராய்வு மனுவும் கடந்த ஏப்ரல் மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. </p><p>அந்த மனு மீது கவனமாக வலுவாக ஸ்டாலினின் திமுக அரசு தரப்பு வாதிடவில்லை. அதனால் அதுவும் தலைமை நீதிபதி அமர்வால் தள்ளுபடி செய்யப்பட்டது. </p><p>மூன்று முறை தள்ளுபடி செய்ததற்கான காரணத்தை எதிர்கட்சி தலைவர் வழங்க வேண்டும். நாங்க இப்ப தான் வந்திருக்கோம். அவர்கள் ஏன் மூன்று முறை தோற்றார்கள் என கூற வேண்டும்" என கேட்டுக்கொண்டார். </p> <h2>கே.என் நேரு</h2><p>இதற்கு பதிலளித்த திமுக எம்எல்ஏ கே.என் நேரு, "மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்யவில்லை. நீங்கள் கொஞ்சம் அவகாசம் எடுத்துக்கொண்டு வரவேண்டும் என்றுதான் சொன்னார்கள். </p><p>அமைச்சர்கள் முதல்வரை புகழ்ந்து பேசுவது இயல்பு. நீங்கள் நல்லபடியாக ஒரு முடிவை எடுக்க வேண்டுமே ஒழிய சண்டை வளர்க்க கூடாது. மேகதாது விவகாரம் குறித்து ஒற்றுமையை பற்றி பேசும்போது நீங்கள் வேறுபாட்டை பற்றி பேசுகிறீரர்கள்.</p><p>மேகதாது விவகாரத்தில் தலைவர் ஸ்டாலின் எப்போதும் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்துள்ளார் என்பது வரலாறு" என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>மக்களுக்காக அவமானத்தை தாங்க தயார்.. உதயநிதி  கேள்விக்கு முதல்வர் விஜய் பதில்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-row-tamil-nadu-cm-ready-to-face-humiliation-for-bengaluru-talks-with-karnataka</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-row-tamil-nadu-cm-ready-to-face-humiliation-for-bengaluru-talks-with-karnataka#comments</comments><guid isPermaLink="false">7f2a4b52-f422-4151-bdeb-5a11f9807017</guid><pubDate>Fri, 07 Aug 2026 04:53:28 +0000</pubDate><atom:updated>2026-08-07T04:53:28.580Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Udhayanidhi,உதயநிதி,Budget session,பட்ஜெட் தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/8zeaqoyt/tn-37.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விஜய், உதயநிதி  ]]></media:title><media:description type="html"><![CDATA[ விஜய், உதயநிதி  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/8zeaqoyt/tn-37.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/condolence-resolution-for-deceased-celebrities-in-tamil-nadu-assembly">சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் </a>இன்றைய கூட்டம் தொடங்கிய நிலையில் மேகதாது அணை குறித்தும், காவிரி குருவை சாகுபடி பாதிப்பு குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உட்பட பல உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் தந்தனர். அதை சபாநாயகர் பிரபாகர் ஏற்றுக்கொண்டார். </p><p>தீர்மானத்தின் மீது பேசிய உதயநிதி, காவிரி நீர் பிரச்சனையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன் எனவும் பேச்சுவார்த்தை நடத்த விஜய் கர்நாடகா செல்ல இருந்தது உண்மையா என கேள்வி எழுப்பினார். </p> <h2>விஜய் பதில் </h2><p>இதற்கு முதல்வர் விஜய் பதிலளித்து பேசுகையில்,</p><p>"மேகதாது விவகாரத்தில் நாம் அனைவரும் இணைந்து தான் தீர்மானம் நிறைவேற்றி பிரதமருக்கு அனுப்பினோம்.</p><p>நாடாளுமன்ற விவகாரத்தில் மத்திய அமைச்சர் முழு விவரங்களை கூறவில்லை என்பதால் மேகதாதுவுக்கு அனுமதி வழங்கக் கூடாது என அடுத்த நாளே பிரதமருக்கு கடிதம் எழுதினோம்.</p><p>காவிரி பிரச்னையை தீர்க்க ஒரு முயற்சியாக கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தலாமே என நான் நினைத்தேன்.</p><p>காவிரி பிரச்சனையில் பெங்களூரு செல்ல விரும்பியது நான் தான். பக்கத்து நாட்டுடன் உள்ள பிரச்சனையே பேசி தீர்க்கும் போது பக்கத்து மாநிலக்காரர்களிடம் பேசி பார்க்கலாம் என்று தான் இந்த முடிவை எடுத்தேன்.</p><p>அதில் ஒருவேளை அவமானம் நடந்தால் தமிழ்நாட்டு மக்களுக்காக அதையும் தாங்க தயாராக தான் இருக்கேன் என தெரிவித்தேன்.</p><p>காவிரி நதிநீர் மற்றும் மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை நமது அரசு ஒருபோதும் விட்டுத்தராது.</p><p>காவிரி விவகாரம் பற்றி நீர்வளத்துறை அமைச்சர் உரிய விளக்கம் அளிப்பார். முன்ன பின்ன பேப்பர் படித்திருந்தால் நாட்டில் என்ன நடக்குது என்பது தெரிந்திருக்கும்" என தெரிவித்தார்.</p> ]]></content:encoded></item><item><title>ப்ளிப்கார்ட் ஃப்ரீடம் சேல்: நத்திங் ஸ்மார்ட்போன்களுக்கு அதிக தள்ளுபடி அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/flipkart-freedom-sale-nothing-phone-discounts-offers-announced</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/flipkart-freedom-sale-nothing-phone-discounts-offers-announced#comments</comments><guid isPermaLink="false">23ae0a0e-a71c-44fa-9e23-aad010b878ce</guid><pubDate>Fri, 07 Aug 2026 04:34:00 +0000</pubDate><atom:updated>2026-08-07T04:34:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Nothing,நத்திங்,Offers,Flipkart,சலுகைகள்,ப்ளிப்கார்ட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/astgmic4/Flipkart-Nothing-Offers.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Flipkart Offers
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/astgmic4/Flipkart-Nothing-Offers.png?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/flipkart">ப்ளிப்கார்ட்</a> ஃப்ரீடம் சேல் இந்தியாவில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி தொடங்குகிறது. இதில் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட் மற்றும் லேப்டாப்கள் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதனங்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகின்றன. இருப்பினும், ப்ளிப்காரட் நிறுவனம் ஆகஸ்ட் 7-ஆம் தேதி முதல் இந்த சலுகைகளுக்கான முன்கூட்டிய அணுகலை வழங்கும். </p><p>முன்கூட்டிய சலுகைகள் தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, இங்கிலாந்தை சேர்ந்த நத்திங் <a href="https://www.maalaimalar.com/topic/flipkart">ஸ்மார்ட்போன்</a> நிறுவனம், நத்திங் போன் (4a), போன் (4a) ப்ரோ மற்றும் சமீபத்திய போன் (4b) ஆகியவை இந்த விற்பனை நிகழ்வின் போது தள்ளுபடி விலையில் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. </p><h2>ரூ. 6000 சேமிப்பு:</h2><p>வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்பை அதிகரிக்க வழிவகுக்கும். வாங்குபவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகள் மூலம் வங்கி தள்ளுபடி மற்றும் எக்சேஞ்ச் போனஸ்களை பெற முடியும், இதன் மூலம் அவர்கள் ரூ. 6,000 வரை சேமிக்கலாம்.</p><p>கார்ல் பெய் தலைமையிலான நத்திங் நிறுவனம், ப்ளிப்கார்ட் ஃப்ரீடம் சேலின் போது நத்திங் ஃபோன் (4a), ஃபோன் (4a) ப்ரோ மற்றும் ஃபோன் (4b) ஆகியவை தள்ளுபடி விலையில் கிடைக்கும் என்று அறிவித்தது. மேலும், அந்நிறுவனம் தள்ளுபடி மற்றும் சலுகை விவரங்களை வெளியிட்டுள்ளது.</p><p>சமீபத்திய நத்திங் ஃபோன் (4b), கிரெடிட் கார்டு EMI பரிவர்த்தனைகளில் ரூ. 3,000 வரையிலான வங்கி தள்ளுபடியுடன் கிடைக்கும். மாற்றாக, வாங்குபவர்கள் வழக்கமான கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது ரூ. 2,625 வரையிலான வங்கி தள்ளுபடி பெற முடியும்.</p><h2>ரூ. 4,000 தள்ளுபடி:</h2><p>ப்ளிப்கார்ட் ஃப்ரீடம் சேல் மூலம் ரூ. 1,000 வரையிலான எக்சேஞ்ச் போனஸ் வழங்கப்படும், இது நத்திங் போன் (4b)-இன் விலையை ரூ. 30,999 ஆக குறைக்கிறது. நத்திங் போன் (4a) ரூ. 37,999 என்ற விலையில் கிடைக்கும், இதில் கிரெடிட் கார்டு EMI பரிவர்த்தனைகளுக்கு ரூ. 4,000 வரையிலான வங்கித் தள்ளுபடியும், ரூ. 1,000 வரையிலான எக்சேஞ்ச் போனஸ் அடங்கும். </p><p>ஒரு வாடிக்கையாளர் கிரெடிட் கார்டு மூலம் முழுத் தொகையையும் ஒரே நேரத்தில் செலுத்தினால், அவர்களுக்கு ரூ. 3,225 வரையிலான வங்கி தள்ளுபடி வழங்கப்படும்.</p><p>கிரெடிட் கார்டு EMI பரிவர்த்தனைகள் மூலம் நத்திங் போன் (4a) ப்ரோ வாங்கும் போது ரூ. 4,500 வரை வங்கி தள்ளுபடி வழங்கப்படும். </p><p>வாங்குபவர் முழு தொகையையும் ஒரே நேரத்தில் செலுத்த விரும்பினால், வரவிருக்கும் ப்ளிப்கார்ட் ஃப்ரீடம் சேலின் போது தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகள் மூலம் அவர்களுக்கு ரூ. 3,750 வரை வங்கி தள்ளுபடி வழங்கப்படும். மேலும், போன் (4a) ப்ரோவை வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ. 1,500 வரையிலான எக்சேஞ்ச் போனஸ் பெறலாம்.</p>]]></content:encoded></item><item><title>செயின்ட் லூயிஸ் ரேப்பிட் மற்றும் பிளிட்ஸ் செஸ்  போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தா</title><link>https://www.maalaimalar.com/sports/st-louis-rapid-blitz-title-win-boosts-gct-2026-ranking</link><comments>https://www.maalaimalar.com/sports/st-louis-rapid-blitz-title-win-boosts-gct-2026-ranking#comments</comments><guid isPermaLink="false">ede84486-cf7f-447e-a438-031ea4d5d016</guid><pubDate>Fri, 07 Aug 2026 04:33:30 +0000</pubDate><atom:updated>2026-08-07T04:33:30.016Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PragGnanandhaa,பிரக்ஞானந்தா,செஸ் தொடர்,Chess series,கிராண்ட்மாஸ்டர்,Grandmaster</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/bih395zl/tn-36.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரக்ஞானந்தா ]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரக்ஞானந்தா ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/bih395zl/tn-36.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவில் நடைபெற்ற செயின்ட் லூயிஸ் ரேப்பிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் <a href="https://www.maalaimalar.com/topic/praggnanadhaa">பிரக்ஞானந்தா </a>சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். </p><p>அமெரிக்காவில் 5 நாட்கள் நடைபெற்ற இந்தத் தொடரில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 10 வீரர்கள் பங்கேற்றிருந்தனர்.  </p><p>இந்தியாவின் 20 வயது இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா இத்தொடரின் கடைசிக்கு முந்தைய சுற்றில் உஸ்பெகிஸ்தானின் ஜவோகிர் சிந்தரோவை எதிர்கொண்டார். </p><p>பிரக்ஞானந்தா 23 புள்ளிகளுடனும், ஜவோகிர் 21.5 புள்ளிகளுடனும் முதல் இரு இடங்களில் பிடித்த நிலையில், இறுதிச்சுற்றுக்கு முந்தைய சுற்றில் இருவரும் மோதிக் கொண்டனர்.</p><p>இருவரும் சமபலத்துடன் மோதியதால் ஆட்டம் டிராவில் முடிந்தது. எனவே ஒரு சுற்று எஞ்சியிருந்த போதே, மொத்தம் 35 புள்ளிகளில் 23.5 புள்ளிகளைப் பெற்ற பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்றார்.</p><p>பிரக்ஞானந்தா வெல்லும் முதல் ராபிட் அண்ட் பிளிட்ஸ் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>ஜவோகிர் சிண்டாரோவ் 2ஆம் இடம் பிடித்தார். சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு சுமார் ரூ.47 லட்சம் பரிசுத் தொகையையும், 13 ஜிசிடி புள்ளிகளையும் வென்றுள்ளார்.</p><p>இதன் மூலம் 2026ஆம் ஆண்டிற்கான ஜிசிடி சீசன் தரவரிசையில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.</p><p>அடுத்ததக வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி துவங்கும் ஜிசிடி சீசனின் இறுதித் தொடரான சின்க்பீல்ட் கோப்பை தொடரில் பிரக்ஞானந்தா பங்கேற்க உள்ளார்.  </p><p>கடந்த ஜூன் மாதம் ஓஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 தொடரின் 10வது மற்றும் இறுதிச் சுற்றில் ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மரை வீழ்த்திய பிரக்ஞானந்தா, தொடர்ச்சியாக 4 கிளாசிக்கல் வெற்றிகளைப் பதிவு செய்து நார்வே செஸ் பட்டத்தைக் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழக சட்டமன்றத்தில் மறைந்த பிரபலங்களுக்கு இரங்கல் தீர்மானம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/condolence-resolution-for-deceased-celebrities-in-tamil-nadu-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/condolence-resolution-for-deceased-celebrities-in-tamil-nadu-assembly#comments</comments><guid isPermaLink="false">4ea24cd6-39d6-495c-9ca0-399ba44c1f1d</guid><pubDate>Fri, 07 Aug 2026 04:22:06 +0000</pubDate><atom:updated>2026-08-07T04:22:06.565Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,இரங்கல் தீர்மானம்,தமிழக சட்டமன்ற கூட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/4490egos/JCD.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ JCD Prabhakar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/4490egos/JCD.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெற உள்ளது.</p><p>தமிழக சட்டமன்ற கூட்டம் தொடங்கிய நிலையில் மறைந்த பிரபலங்களுக்கு சட்டமன்றத்தில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் இரங்கல் தீர்மானத்தை வாசித்தார்.</p><p>அதன்படி, மறைந்த திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் பாக்கியராஜ், கவிஞர் மற்றும் எழுத்தாளர் புவியரசு மறைவிற்கு இரங்கல் தீர்மானம் வாசித்தார்.</p><p>முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுருளிவேல் மறைவுக்கு சட்டமன்றத்தில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் இரங்கல் குறிப்பு வாசித்தார்.</p><p>மறைந்த பின்னணி பாடகி ஜானகி, எழுத்தாளர் பூமணிக்கு பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்படுகிறது.</p><p>பின்னர் மறைந்த பிரபலங்களுக்கு 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>விபத்தில் எலும்பு முறிவு.. அட்டைப் பெட்டியில் கட்டுப் போட்டு பீகார் அரசு மருத்துவமனை நூதன வைத்தியம் </title><link>https://www.maalaimalar.com/news/national/bihar-govt-hospital-row-cardboard-used-instead-of-plaster-for-fractured-leg-sparks-probe</link><comments>https://www.maalaimalar.com/news/national/bihar-govt-hospital-row-cardboard-used-instead-of-plaster-for-fractured-leg-sparks-probe#comments</comments><guid isPermaLink="false">dfea8937-59e8-4621-8c84-14e8e6341bf7</guid><pubDate>Fri, 07 Aug 2026 04:13:36 +0000</pubDate><atom:updated>2026-08-07T04:13:36.679Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அரசு மருத்துவமனை,Government Hospital,பீகார்,Bihar,வைரல்,viral</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/duo9ub4e/tn-35.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பீகார் ]]></media:title><media:description type="html"><![CDATA[ பீகார் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/duo9ub4e/tn-35.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பீகார் அரசு மருத்துவமனையில் முறிந்த காலிற்கு பிளாஸ்டருக்குப் பதிலாக அட்டைப் பெட்டி வைத்துக் கட்டுப் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><h2>விபத்து </h2><p>பீகார் மாநிலம் பெகுசராய்  மாவட்டத்தில் நவ்கோதி காவல் எல்லைக்குட்பட்ட மகேஷ்வரா கிராமத்தைச் சேர்ந்த குணால் குமார் என்பவர், ஆகஸ்ட் 3 மாலை நடைபெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்தார். </p><p>அவரது கால் முறிந்த நிலையில், அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மஞ்சவுல்<a href="https://www.maalaimalar.com/topic/government-hospital"> அரசு மருத்துவமனையில்</a> சேர்த்தனர்.</p> <h2>சிகிச்சை</h2><p>மருத்துவமனை ஊழியர்கள் அவரது முறிந்த காலின் இருபுறமும் மருந்துப் பொட்டலங்களை வைக்க பயன்படுத்தப்படும் அட்டைப் பெட்டித் துண்டுகளை வைத்து, கயிறு மற்றும் பேண்டேஜ் துணியால் இறுக்கமாகக் கட்டினர்.</p><p>பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை பெகுசராய் சதர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><h2>விளக்கம்</h2><p>இச்சம்பவம் குறித்துப் பேசிய மருத்துவமனையின் பொறுப்பு அதிகாரி டாக்டர் அபினவ் பிரியதர்ஷி, ஊழியர்களின் நடவடிக்கையை நியாயப்படுத்தியுள்ளார்.</p><p>எலும்பு முறியும்போது அப்பகுதி அசையாமல் இருக்க வேண்டியது அவசியம் என்றும், அன்றைய தினம் மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சை நிபுணரோ அல்லது பிளாஸ்டர் போடும் வசதியோ இல்லாததால், நோயாளிக்கு முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்கு அனுப்பவே அங்கு கிடைத்த அட்டைப் பெட்டியைப் பயன்படுத்தியதாகவும் தெரிவித்தார்.</p> <h2>விசாரணை</h2><p>பெகுசராய் சிவில் சர்ஜன் டாக்டர் அசோக் குமார் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p>எந்தச் சூழலில் அட்டைப் பெட்டி பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து ஆராய்ந்து தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>8-வது நினைவு தினம்: கலைஞர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/8th-death-anniversary-mk-stalin-pays-floral-tributes-at-karunanidhi-memorial</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/8th-death-anniversary-mk-stalin-pays-floral-tributes-at-karunanidhi-memorial#comments</comments><guid isPermaLink="false">8fc1b3f7-6334-4353-92ee-fe46084b307d</guid><pubDate>Fri, 07 Aug 2026 04:09:39 +0000</pubDate><atom:updated>2026-08-07T04:09:39.729Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,Karunanidhi,கருணாநிதி நினைவு தினம்,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/3jkdcqs5/mkstalin.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/3jkdcqs5/mkstalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கலைஞர் கருணாநிதியின் 8-வது நினைவுநாளையொட்டி, தி.மு.க. தொண்டர்களும் அரசியல் பிரமுகர்களும் அவரை நினைவுகூர்ந்து வருகின்றனர்.</p><p>தமிழக வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமையாக விளங்கிய முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 8-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது</p> <h2>கலைஞர் கருணாநிதி</h2><p>திருவாரூர் திருக்குவளையில் 1924 ஜூன் 3-ந்தேதி பிறந்தவர் கலைஞர் கருணாநிதி. 1957 முதல் 2018 வரை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர், 40 ஆண்டுகள் <a href="https://www.maalaimalar.com/topic/dmk">தி.மு.க.</a> தலைவர், ஐந்து முறை தமிழகத்தின் முதலமைச்சர் என்று அசைக்க முடியாத ஆட்சி புரிந்தவர். கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ந்தேதி கலைஞர் கருணாநிதி காலமானார். கருணாநிதியின் 8-வது நினைவுநாளையொட்டி, திமுக தொண்டர்களும் அரசியல் பிரமுகர்களும் இன்று அவரை நினைவுகூர்ந்து வருகின்றனர்.</p> <h2>தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்</h2><p>இந்நிலையில் கலைஞர் கருணாநிதி நினைவுநாளையொட்டி தி.மு.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-agriculture-budget-2026-budget-is-merely-another-instance-of-a-name-change">மு.க.ஸ்டாலின்</a> தலைமையில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ள அமைதிப் பேரணி, இன்று காலை சென்னை, அண்ணாசாலை, ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலை அருகிலிருந்து புறப்பட்டது. இதனைத்தொடர்ந்து காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.</p> <p>இந்த அமைதிப் பேரணியில், முன்னாள் அமைச்சர் பெருமக்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக செயலாளர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டக் கழக, பகுதிக் கழக, வட்டக் கழக நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் தி.மு.க.வின் பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.</p>]]></content:encoded></item><item><title>8000mAh பேட்டரியுடன் புது ரெட்மி நோட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்!</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/redmi-note-17-with-8000mah-battery-launched-in-india</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/redmi-note-17-with-8000mah-battery-launched-in-india#comments</comments><guid isPermaLink="false">0e65814e-99f3-4eb6-bc58-ad845a48556c</guid><pubDate>Fri, 07 Aug 2026 03:39:00 +0000</pubDate><atom:updated>2026-08-07T03:39:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Xiaomi,smartphone,ஸ்மார்ட்போன்,சியோமி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/34n1t00r/Redmi-Note-17-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Redmi Note 17]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/34n1t00r/Redmi-Note-17-1.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/xiaomi">சியோமி</a> நிறுவனம் இந்திய சந்தையில் தனது ரெட்மி நோட் 17 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. பெரிய ஸ்கிரீன் மற்றும் அளவில் பெரிய பேட்டரியுடன் இந்த ஸ்மார்ட்போன் கிட்டத்தட்ட டாப் எண்ட் மாடல் போன்ற அனுபவத்தை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.</p><p>புதிய ரெட்மி நோட் 17 ஸ்மார்ட்போன் 6.99 இன்ச் OLED 2396x1080 பிக்சல் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கிறது. </p><p>இந்த <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மார்ட்போன்</a> குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 4 சிப்செட் மூலம் இயங்குகிறது. இத்துடன் 8000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. </p><h2>ரெட்மி நோட் 17 அம்சங்கள்:</h2><p>6.99 இன்ச் 2396x1080 பிக்சல் FHD+OLED டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட்</p><p>ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 4 பிராசஸர்</p><p>அட்ரினோ 613 GPU</p><p>6 ஜிபி, 8 ஜிபி ரேம்</p><p>அதிகபட்சம் 128 ஜிபி மெமரி</p><p>மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி</p><p>ஆண்ட்ராய்டு 16 சார்ந்த சியோமி ஹைப்பர் ஓ.எஸ். 3</p><p>டூயல் சிம் ஸ்லாட்</p><p>50MP பிரைமரி கேமரா, LED ஃபிளாஷ்</p><p>இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்</p><p>டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டன்ட் (IP65)</p><p>5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.1</p><p>யு.எஸ்.பி. டைப் சி</p><p>8000mAh பேட்டரி</p><p>45வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், 22.5 வாட் ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங்</p><h2>விலை விவரங்கள்:</h2><p>புதிய ரெட்மி நோட் 17 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம், 1228 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 27,999 என்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 30,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. </p><p>எனினும், வங்கி சலுகைகளை சேர்க்கும் பட்சத்தில் இந்த ஸ்மார்ட்போனை ரூ. 24,999 முதல் வாங்க முடியும். இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை அமேசான் வலைதளத்தில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி தொடங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>GDN- திரை விமர்சனம்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/gdn-movie-review</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/gdn-movie-review#comments</comments><guid isPermaLink="false">6f3857ba-c5a0-4ade-8544-94fe3b6c5f90</guid><pubDate>Fri, 07 Aug 2026 03:36:46 +0000</pubDate><atom:updated>2026-08-07T03:36:46.613Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Movie review,மாதவன்,Actor Madhavan,திரை விமர்சனம்,GDN,ஜிடிஎன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/h8h88khm/GDN2.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ GDN Movie]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/h8h88khm/GDN2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>கதை</h2><p>'இந்தியாவின் எடிசன்' என்று போற்றப்படும் புகழ்பெற்ற விஞ்ஞானியும், தொழில் அதிபருமான ஜி.டி.என்.நாயுடுவின் வாழ்க்கைப்படம்.</p><p>ஜி.டி.நாயுடுவான மாதவன், இளமைப்பருவம் முதல் விவசாயிகள் மீது பாசம் கொண்டுள்ளார். விவசாயிகளுக்காக சின்னச் சின்ன கருவிகளையும் கண்டுபிடித்து தொழில் புரட்சியையும் சத்தமில்லாமல் அரங்கேற்றுகிறார்.</p><p>இன்னொருபுறம் கடின உழைப்பால் தனது பஸ் தொழிலை விரிவுபடுத்தி மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்குகிறார். மாதவனின் வளர்ச்சியைப் பிடிக்காத ஆங்கிலேயர்கள், வருமான வரித்துறை அதிகாரி ஜெயராம் மூலமாக அவருக்கு குடைச்சல் தருகிறார்கள்.</p><p>போலி ஆவணங்கள் மூலமாக அதிக வரியை மாதவனுக்கு விதிக்கிறார்கள். வரி செலுத்தாதவர் என்ற முத்திரையை உருவாக்கி, அவரது சொத்தை அபகரிக்கவும் சூழ்ச்சி செய்கிறார்கள்.</p><p>இந்தச் சூழ்ச்சியில் இருந்து மாதவன் தப்பினாரா, இல்லையா? என்பதே மீதிக்கதை.</p><h2>நடிகர்கள்</h2><p>ஜி.டி.நாயுடுவாக மாதவன் வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம். உடல்மொழியில் அப்படியே ஜி.டி.நாயுடுவை பிரதிபலித்துள்ள மாதவன் சந்தோஷம், சோகம், வெறுப்பு, அவமானம் என எல்லா பரிமாணங்களையும் காட்டி நல்ல நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.</p><p>சத்யராஜ், ஜெயராமின் அனுபவ நடிப்பு படத்தை தாங்கிப் பிடித்துள்ளது. பிரியாமணி, துஷாரா விஜயன், தம்பி ராமையா, அதிதி பாலன், பிரிகிடா, ஷீலா ராஜ்குமார் என அனைவரது நடிப்பும் சிறப்பு.</p><p>இதுவரை காமெடியில் கலக்கி வந்த கருணாகரன் இந்தப் படத்தில் எடுத்திருக்கும் புதிய பரிமாணம் ரசிக்க வைக்கிறது. நிச்சயம் இனி படங்களில் எதிர்மறை கதாபாத்திரங்களிலும் அவர் பிரகாசிப்பார் என எதிர்பார்க்கலாம்.</p><h2>இயக்கம்</h2><p>உணர்வுப்பூர்வமான காட்சிகள் படத்துக்கு பலம். சில இடங்களில் காட்சிகளுக்கு இடையேயான பிணைப்பு இன்னும் வலுவாக இருந்திருக்கலாம். கணவருக்கு 2-ம் திருமணம் செய்து வைக்கும் பிரியாமணியின் போக்கு புரியவில்லை.</p><p>சில இடங்களில் ஆவணப்படமாக காட்சிகள் நகருகின்றன. ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கையையும், அவரது சாதனைகளையும் இப்போதைய தலைமுறைக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியாக இந்தப் படத்தை இயக்கி கவனம் ஈர்த்துள்ளார், இயக்குனர் கிருஷ்ணகுமார் ராம குமார்.</p><h2>ஒளிப்பதிவு &amp; இசை</h2><p>அரவிந்த் கமலநாதன் ஒளிப்பதிவும், கோவிந்த் வசந்தாவின் இசையும் அந்தக் காலகட்டத்தை கண்முன் நிறுத்துகின்றன.</p>]]></content:encoded></item><item><title>இந்திய சினிமாவில் முதல் முறை... 100 கோடி பார்வைகளைக் கடந்த ராமாயணா டிரெய்லர் </title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ramayana-trailer-hits-1-billion-views-epic-film-with-ranbir-kapoor-and-sai-pallavi-sets-new-record</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ramayana-trailer-hits-1-billion-views-epic-film-with-ranbir-kapoor-and-sai-pallavi-sets-new-record#comments</comments><guid isPermaLink="false">86c11fa2-bdd8-48c5-8866-33c14285c38e</guid><pubDate>Fri, 07 Aug 2026 03:16:14 +0000</pubDate><atom:updated>2026-08-07T03:16:14.927Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Yash,Ramayana,ரன்பீர் கபூர்,Ranbir Kapoor,ராமாயணா,யாஷ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/f0xnf1lw/tn-33.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராமாயணா]]></media:title><media:description type="html"><![CDATA[ ராமாயணா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/f0xnf1lw/tn-33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BE">ராமாயணா </a>திரைப்படத்தின் டிரைலர் 100 கோடி பார்வைகளைக் கடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>ரமேஷ் திவாரி இயக்கத்தில், ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, மற்றும் இராவணனாக யஷ் நடித்துள்ள வரலாற்றுப் படம் ராமாயணா. அனுமன் கதாபாத்திரத்தில் சன்னி தியோல் நடித்துள்ளார்.</p><p>ஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த இதிகாசத் திரைப்படத்தின் முதல் பாகம், 2026 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘ராமாயணா’ படத்தின் டிரெய்லர் கடந்த ஜூலை.30ம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் வெளியானது.</p><p>இப்படம் அடுத்த தீபாவளிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p> <h2>டிரெய்லர்</h2><p>4.09 நிமிடங்கள் நீளமுள்ள இந்த டிரெய்லர், ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக உள்ளது.</p><p>மூன்று உலகங்களுக்கும் தானே அரசன் என்று பெருமையுடன் அறிவித்துக்கொள்ளும் ராவணனின் (யாஷ்) உரையாடலுடன் டிரெய்லர் தொடங்குகிறது.</p><p>ராமரின் (ரன்பீர்) குழந்தைப் பருவம், அசுரர்களுடனான போர்கள் மற்றும் சீதையுடனான திருமணம் போன்ற காட்சிகள் இதில் காட்டப்பட்டுள்ளன.</p><p>அதன்பிறகு, 14 வருட வனவாசம், சீதாராமன் லட்சுமணனுடன் வனத்திற்குச் செல்வது, மற்றும் ராவணன் சீதையைக் கடத்துவது போன்ற முக்கியக் காட்சிகளுடன் இந்த டிரெய்லர் கதையின் மீதான ஆர்வத்தை அதிகரித்தது.</p><p>குறிப்பாக, விஷுவல் எபெக்ட்ஸ் மற்றும் பின்னணி இசை ஆகியவை படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.</p><h2>சாதனை</h2><p>இந்த நிலையில், இந்த டிரெய்லர் யூடியூப் உள்பட அனைத்து சமூக ஊடகங்கள் வாயிலாக 100 கோடி (1 பில்லியன்) பார்வைகளைக் கடந்ததாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. </p><p>இதில், ஹிந்தி டிரெய்லர் மட்டும் யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.</p><p>இதன் மூலம் ராமாயணா இந்திய சினிமாவிலேயே அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் என்கிற சாதனையைப் புரிந்துள்ளது. இப்படம் தீபாவளியை ஒட்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p> <figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/K7zjRJ_0sgk"></iframe></figure>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணை
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-and-sangeetha-divorce-case-hearing-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-and-sangeetha-divorce-case-hearing-today#comments</comments><guid isPermaLink="false">454ae348-88a9-4963-ade3-1cab68ef905d</guid><pubDate>Fri, 07 Aug 2026 03:05:07 +0000</pubDate><atom:updated>2026-08-07T03:05:07.833Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Divorce case,Sangeetha,சங்கீதா,விவாகரத்து வழக்கு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/wt7yisno/vijay1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vijay - Sangeetha]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/wt7yisno/vijay1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கு செங்கல்பட்டு கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.</strong></em></p> <h2>விவாகரத்து கோரி மனு</h2><p>த.வெ.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டநிலையில், சங்கீதா <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">விவாகரத்து கோரி</a> கடந்த ஆண்டு டிசம்பரில் செங்கல்பட்டு முதன்மை அமர்வு  நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.</p><p>சங்கீதா தாக்கல் செய்த மனுவில், கணவர் விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். மேலும், ஜீவனாம்சம் மற்றும் நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வசிப்பதற்கான உரிமையும் வழங்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.</p> <p>இந்த மனு கடந்த பிப்​ர​வரி 26-ந்தேதி விசா​ரணைக்கு வந்​த​போது, செங்​கல்​பட்டு முதலா​வது குடும்ப நல நீதி​மன்​றத்​துக்கு மாற்றப்பட்டது. அங்கு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. </p> <figure><img alt="Vijay - Sangeetha" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/7ncd5hlv/vijay.jpg" /></figure> <h2>நீதிபதி விசாரணை</h2><p>இந்த வழக்கு விசாரணை கடந்த ஜூன் மாதம் 15-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, சங்கீதா தரப்பு வக்கீலிடம் நீங்கள் ஏன்? வக்காலத்து தாக்கல் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினார்.</p> <h2>மெயில் ஐ.டி.</h2><p>மேலும் முதலமைச்சர் விஜய் மற்றும் சங்கீதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வீடியோ கான்பரன்ஸ் மனுவில் மெயில் ஐ.டி. ஏன் குறிப்பிடவில்லை எனவும், விவாகரத்து கேட்டுள்ள இருவரையும் சமரச மையத்துக்குதான் அனுப்ப வேண்டும் என்று கூறி வழக்கை ஆகஸ்டு 7-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.</p><p>இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>பரந்தூர் விமான நிலைய திட்டத்தை மாற்றியமைக்க தமிழக அரசு கோரவில்லை- நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/centre-says-tamil-nadu-has-not-sought-changes-to-parandur-green-airport-plan</link><comments>https://www.maalaimalar.com/news/national/centre-says-tamil-nadu-has-not-sought-changes-to-parandur-green-airport-plan#comments</comments><guid isPermaLink="false">8ba3612d-d12a-4920-84d3-bceedb473d4a</guid><pubDate>Fri, 07 Aug 2026 03:00:52 +0000</pubDate><atom:updated>2026-08-07T03:00:52.628Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,Union Minister,நாடாளுமன்றம்,Parandhur Airport,parliament,பரந்தூர் விமான நிலைய திட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/prpsr9a9/Dhayanithi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dhayanithi maran- Murlidhar Mohol]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/prpsr9a9/Dhayanithi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பரந்தூர் விமான நிலையத்தை மாற்றியமைக்க தமிழக அரசு கோரவில்லை என விமான நிலையம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தயாநிதிமாறன் எம்.பி. எழுப்பிய கேள்விக்கு, மத்திய அமைச்சர் பதில் அளித்துள்ளார்.</p><h2>பரந்தூர் விமான நிலையம்</h2><p>நாடாளுமன்ற மக்களவையில் தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன், பரந்தூர் பசுமை விமான நிலையத்தை தொடர்வது, அதில் மாற்றங்கள் செய்வது அல்லது அதை திரும்பப் பெறுவது தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் இருந்து மத்திய அரசுக்கு ஏதேனும் கடிதம் வரப்பெற்றதா? என கேள்வி எழுப்பினார்.</p><p>இதற்கு பதில் அளித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் இணை அமைச்சர் முரளிதர் மோகல் கூறியதாவது:-</p><h2>கடிதம் வரவில்லை</h2><p>'<a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D" rel="nofollow">பரந்தூர்</a> பசுமை விமான நிலையத்தை மாற்றியமைப்பது அல்லது திரும்பப் பெறுவது தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் இருந்து மத்திய அரசுக்கு கடிதம் எதுவும் வரவில்லை.</p><p>7.4.2025 அன்று பரந்தூரில் பசுமை விமான நிலையத்தை அமைப்பதற்காக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு மத்திய அரசு கொள்கை அளவிலான ஒப்புதலை அளித்தது.</p><p>இந்த கொள்கையின்படி, விமான நிலைய திட்டங்களை செயல்படுத்துவதற்கான பொறுப்பு (மாநில அரசு திட்டத்தை முன்மொழிந்தவராக இருக்கும் பட்சத்தில்) சம்பந்தப்பட்ட மாநில அரசு உள்பட சம்பந்தப்பட்ட விமான நிலைய அமைப்பாளரையே சாரும்.</p><p>விமான நிலைய கட்டுமானத்துக்கான காலக்கெடு நிலம் கையகப்படுத்துதல். கட்டாய அனுமதிகள் பெறுதல், நிதி ஒருங்கிணைப்பு போன்ற பல காரணிகளைச் சார்ந்தே அமையும்' என பதில் அளித்தார்.</p>]]></content:encoded></item></channel></rss>