<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 01 Aug 2026 23:15:50 +0000</lastBuildDate><item><title>ஆகஸ்ட்  4, மதியம் 12 மணி.. E20 பெட்ரோல் விவகாரத்தில் பிரதமர் இல்லம் நோக்கி பேரணி அறிவித்த கெஜ்ரிவால் </title><link>https://www.maalaimalar.com/news/national/e20-petrol-protest-kejriwal-to-lead-august-4-march-to-pm-residence-against-ethanol-blended-fuel-policy</link><comments>https://www.maalaimalar.com/news/national/e20-petrol-protest-kejriwal-to-lead-august-4-march-to-pm-residence-against-ethanol-blended-fuel-policy#comments</comments><guid isPermaLink="false">fb7b468f-3dae-4f5c-935e-f8c10659eb58</guid><pubDate>Sat, 01 Aug 2026 23:11:00 +0000</pubDate><atom:updated>2026-08-01T23:11:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல்,Petrol,ethanol,Arvind Kejriwal,அரவிந்த் கெஜ்ரிவால்,ஆம் ஆத்மி,Aam Aadmi,எத்தனால்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/w0vwbq64/tn-5.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கெஜ்ரிவால் ]]></media:title><media:description type="html"><![CDATA[ கெஜ்ரிவால் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/w0vwbq64/tn-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>எத்தனால் கலந்த <a href="https://www.maalaimalar.com/news/national/e20-fuel-policy-petrol-would-have-hit-rs125-per-litre-during-iran-war-centre">E20 பெட்ரோல் </a>கொள்கையை எதிர்த்து பிரதமர் இல்லம் நோக்கி ஆகஸ்ட் 4இல் முற்றுகைப் போராட்டத்தை அறிவித்துள்ளார் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால். </p><p>E20 பெட்ரோலை பயன்படுத்த வேண்டும் என மக்கள் மீதான திணிப்பை எதிர்த்து  ஆம் ஆத்மி ஒருங்கிணைத்த  மக்கள் சந்திப்பு  கூட்டம் நேற்று டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப் அருகே நடந்தது. </p><p>இதில் உரையாற்றிய கெஜ்ரிவால், " E20 கொள்கையை திரும்பப்பெற வலியுறுத்தி பிரதமருக்கு அனுப்ப மனுவில் கையெழுத்திடுமாறு ஏற்கனவே கோரியிருந்தேன். </p><p>2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இணையவழியில் கையெழுத்திட்டுள்ளனர். அதன் அச்சு பிரதிகளை எடுத்துள்ளேன். வரும் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4) மதியம் 12:00 மணிக்கு, பிரதமர் இல்லத்திற்கு நேரடியாகச் சென்று இந்த மனுவை வழங்க உள்ளேன்."</p><p>இப்போராட்டத்திற்கு மிகப்பெரிய அளவில் கூட்டம் தேவையில்லை. காவல்துறையின் தடிஅடிக்கு அஞ்சாத, சிறை செல்லத் தயங்காத 100 தொண்டர்களை மட்டுமே என்னுடன் அழைத்துச் செல்ல உள்ளேன்." என தெரிவித்துள்ளார். </p> <h2>கோரிக்கைகள்</h2><p>E20 பெட்ரோல் திட்டத்திற்கு எதிரான இப்போராட்டத்தில் மத்திய அரசுக்கு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.</p><p>பெட்ரோல் பங்குகளில் E20 பெட்ரோல் அல்லது எத்தனால் கலக்கப்படாத சுத்தமான பெட்ரோல் ஆகிய இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற உரிமையை மக்களுக்கு வழங்க வேண்டும். E20 கலப்பு பெட்ரோலின் விலையைசுத்தமான பெட்ரோலை விடக் குறைவாக நிர்ணயிக்க வேண்டும். நாட்டின் ஒட்டுமொத்த பெட்ரோல் விலையையும் லிட்டருக்கு ரூ. 84க்குக் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதே ஆம் ஆத்மியின் கோரிக்கைகள் என அவர் தெரிவித்துள்ளார்.</p><p>இதனிடையே, "ஒரு அமைச்சகம் E20 நல்லது என்கிறது, மற்றொரு அமைச்சகம் பாதிப்பு என்கிறது. முறையான ஆய்வுகள் இல்லாமல் வாகனங்கள் பழுதடைவதையும், மைலேஜ் குறைவதையும் அரசு மறைக்கிறது" எனவும் அவர் அவர் தெரிவித்தார்.</p><h2>மத்திய அரசு விளக்கம்</h2><p>இதனிடையே, E20 பெட்ரோல் குறித்த புகார்களை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.</p><p>கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல்வேறு கட்ட ஆய்வுகள் மற்றும் சோதனை ஓட்டங்களுக்குப் பிறகே E20 எரிபொருள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.</p><p>நாட்டில் தற்போது 20 கோடிக்கும் அதிகமான இருசக்கர வாகனங்களும், 3 கோடிக்கும் அதிகமான கார்களும் எத்தனால் கலந்த பெட்ரோலில் எவ்வித முறையான இயந்திரப் பழுதுகளுமின்றி இயங்கி வருகின்றன.</p><p>E20 பெட்ரோலால் வாகனங்களின் என்ஜின்கள் பரவலாகப் பாதிக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எந்தவொரு நிரூபிக்கப்பட்ட ஆதாரமும் இல்லை என்று அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் போட்டிகள்:  தடகள வீரர் குல்வீர் சிங் வெண்கலம்.. இதுவரை வென்ற இந்திய வீரர்கள் முழு லிஸ்ட்</title><link>https://www.maalaimalar.com/sports/commonwealth-games-double-medal-gulveer-singh-wins-5000m-bronze-indias-39th-medal</link><comments>https://www.maalaimalar.com/sports/commonwealth-games-double-medal-gulveer-singh-wins-5000m-bronze-indias-39th-medal#comments</comments><guid isPermaLink="false">f0ddbaa9-f6cd-4653-99ab-04146ee3830d</guid><pubDate>Sat, 01 Aug 2026 22:08:18 +0000</pubDate><atom:updated>2026-08-01T22:08:18.461Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Commonwealth games,காமன்வெல்த் போட்டி,ATHLETICS,தடகளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/hdpuw6j3/tn-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ குல்வீர் சிங்]]></media:title><media:description type="html"><![CDATA[ குல்வீர் சிங்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/hdpuw6j3/tn-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்து வரும் 23வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்திய தடகள வீரர் குல்வீர் சிங் ஆடவர் 5000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் குல்வீர் சிங் வெண்கலப் பதக்கம் வென்றார்.</p><h2>வெண்கலம்</h2><p>விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் குல்வீர் நான்காவது இடத்திலிருந்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறி, பின்னர் நூலிழையில் மூன்றாவது இடத்தைத் தக்கவைத்து 13 நிமிடம் 24.95 வினாடிகளில் இலக்கை அடைந்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். இது இந்தியாவின் 39வது பதக்கமாகும்.  </p><p>கென்யாவின் மேத்யூ கிப்சும்பா கிப்சாங் 13:23 நிமிட நேரத்தில் தங்கப் பதக்கத்தை வென்றார். ஆஸ்திரேலியாவின் ராபின்சன் , 13:24 நிமிட நேரத்தில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.</p><p>2026 உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் குல்வீர் தற்போது இரண்டு பதக்கங்களைப் பெற்றுள்ளார். </p> <h2>சாதனை</h2><p>முன்னதாக 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி பதக்கம் வென்று அந்த பிரிவில் பதக்கம் வெல்லும் முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை குல்வீர் சிங் படைத்தார்.</p><p>தற்போது 5000 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலம் வென்றதன் மூலம், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் ஒரே ஆண்டில் இரண்டு தடகளப் பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை குல்வீர் சிங் பெற்றார்.</p><p>2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை பதக்கம் வென்ற இந்தியர்கள்</p><h2>தங்கம்</h2><p>மீராபாய் சானு – பெண்கள் 48 கிலோ (பளுதூக்குதல்)</p><p>ஷர்மிளா தன்கர் – பெண்கள் குண்டு எறிதல் F57 (பாரா தடகளம்)</p><p>திலீப் மஹாது காவிட் - ஆண்கள் 100 மீ T47 (பாரா தடகளம்)</p><p>அஸ்மிதா டே - பெண்கள் 48 கிலோ (ஜூடோ)</p><p>ஹர்ஷ் சிங் - ஆண்கள் - 60 கிலோ (ஜூடோ)</p><p>பிரீத்தி பவார் - பெண்கள் 54 கிலோ (குத்துச்சண்டை)</p><p>ஜெய்ஸ்மின் லம்போரியா - பெண்கள் 57 கிலோ (குத்துச்சண்டை)</p><p>சோமன் ரானா - ஆண்கள் குண்டு எறிதல் F57 (பாரா தடகளம்)</p><p>சாக்ஷி சவுத்ரி - பெண்கள் 51 கிலோ (குத்துச்சண்டை)</p><p>பிரியா கங்காஸ் - பெண்கள் 60 கிலோ (குத்துச்சண்டை)</p><p>அருந்ததி சவுத்ரி - பெண்கள் 70 கிலோ (குத்துச்சண்டை)</p><p>சச்சின் சிவாச் - ஆண்கள் 60 கிலோ (குத்துச்சண்டை)</p><p>அங்குஷ் பங்கல் - ஆண்கள் 80 கிலோ (குத்துச்சண்டை)</p> <h2>வெள்ளி</h2><p>ரிஷிகாந்த சிங் – ஆண்கள் 60 கிலோ (பளுதூக்குதல்)</p><p>முத்துப்பாண்டி ராஜா – ஆண்கள் 65 கிலோ (பளுதூக்குதல்)</p><p>ஞானேஸ்வரி யாதவ் – பெண்கள் 53 கிலோ (பளுதூக்குதல்)</p><p>வல்லூரி அஜய் பாபு – ஆண்கள் 79 கிலோ (பளுதூக்குதல்)</p><p>ஹர்ஜிந்தர் கவுர் – பெண்கள் 69 கிலோ (பளுதூக்குதல்)</p><p>சர்வேஷ் குஷாரே – ஆண்கள் உயரம் தாண்டுதல் (தடகளம்)</p><p>குல்வீர் சிங் – ஆண்கள் 10,000 மீ (தடகளம்)</p><p>எம். ஸ்ரீசங்கர் - ஆண்கள் நீளம் தாண்டுதல் (தடகளம்)</p><p>முகமது பாசில் - ஆண்கள் 100 மீ T47 (பாரா தடகளம்)</p><p>லவ்பிரீத் சிங் - ஆண்கள் +110 கிலோ (பளுதூக்குதல்)</p><p>யாமினி மௌர்யா - பெண்கள் -57 கிலோ (ஜூடோ)</p><p>நீரஜ் சோப்ரா - ஆண்கள் ஈட்டி எறிதல் (தடகளம்)</p><p>பிரவீன் சித்ரவேல் - ஆண்கள் மும்முறை தாண்டுதல் (தடகளம்)</p><p>ஜடுமணி சிங் மண்டெங்பாம் - ஆண்கள் 55 கிலோ (குத்துச்சண்டை)</p><p>சுபம் ஜூயல் - ஆண்கள் குண்டு எறிதல் F57 (பாரா தடகளம்)</p><p>லவ்லினா போர்கோஹைன் - பெண்கள் 75 கிலோ (குத்துச்சண்டை)</p><p>நரேந்தர் பெர்வால் - ஆண்கள் +90 கிலோ (குத்துச்சண்டை)</p> <h2>வெண்கலம்</h2><p>ஜந்து குமார் – ஆண்கள் ஹெவிவெயிட் (பாரா பவர்லிஃப்டிங்)</p><p>பிந்தியராணி தேவி – பெண்கள் 58 கிலோ (பளுதூக்குதல்)</p><p>ஷில்பா கே. ஷைலா – பெண்கள் குண்டு எறிதல் F57 (பாரா தடகளம்)</p><p>சீமா கலிராம்னா - பெண்கள் வட்டு எறிதல் (தடகளம்)</p><p>தேஜஸ்வின் சங்கர் - டெகாத்லான் (தடகளம்)</p><p>யாஷ் வீர் சிங் - ஆண்கள் ஈட்டி எறிதல் (தடகளம்)</p><p>செல்வ பிரபு திருமரன் - ஆண்கள் Triple Jump (தடகளம்)</p><p>உன்னதி சர்மா - பெண்கள் -57 கிலோ (ஜூடோ)</p><p>குல்வீர் சிங் - ஆண்கள் 5000 மீட்டர் (தடகளம்)</p> ]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் போட்டிகள்: சச்சின் சிவாச், அங்குஷ் பங்கல் அசத்தல்.. குத்துச்சண்டையில் 7 தங்கம் குவித்த இந்தியா
</title><link>https://www.maalaimalar.com/sports/india-boxing-wins-seven-golds-sachin-and-ankush-clinch-titles-at-glasgow-commonwealth-games</link><comments>https://www.maalaimalar.com/sports/india-boxing-wins-seven-golds-sachin-and-ankush-clinch-titles-at-glasgow-commonwealth-games#comments</comments><guid isPermaLink="false">0df7ffe3-fcdf-4bea-b65a-165266860f6f</guid><pubDate>Sat, 01 Aug 2026 21:05:57 +0000</pubDate><atom:updated>2026-08-01T21:05:57.658Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Commonwealth games,காமன்வெல்த் போட்டி,Boxing,குத்துச்சண்டை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/h7nl8b31/tn-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அங்குஷ் பங்கல், சச்சின் சிவாச் ]]></media:title><media:description type="html"><![CDATA[ அங்குஷ் பங்கல், சச்சின் சிவாச் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/h7nl8b31/tn-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்து வரும் 23வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் <a href="https://www.maalaimalar.com/sports/commonwealth-boxing-india-wins-4-gold-and-1-silver-medals-in-glasgow">குத்துச்சண்டை </a>பிரிவில் இந்தியாவுக்கு பதக்கங்கள் குவிந்து வருகின்றன. </p><h2>சச்சின் சிவாச்</h2><p>ஆடவர் குத்துச்சண்டை 60 கிலோ எடைப்பிரிவில் சச்சின் சிவாச் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். </p><p>நமீபியாவின் டிரையாகின் மார்னிங் என்ட்வெலோவை, 3-2 என்ற புள்ளிக்கணக்கில் சச்சின் தோற்கடித்தார்.  </p><p>சச்சின், தலைக்கு மேல் இருந்து ஒரு சக்திவாய்ந்த கிராஸ் பஞ்ச் குத்து விட்டதால், டிரையாகின் மார்னிங் என்ட்வெலோ தரையில் விழுந்தார். </p><p>நடுவர் எண்ணி முடிக்கும் வரை அவர் எழுந்து கொள்ளாத நிலையில் சச்சின் வென்றதாக அறிவிக்கப்பட்டது.  இது குத்துச்சண்டையில் இந்தியா பெறும் ஆறாவது பதக்கமாகும்.  </p> <h2>அங்குஷ் பங்கல்</h2><p>குத்துச்சண்டையில் இந்தியாவின் ஏழாவது தங்கத்தை அங்குஷ் பங்கல் வென்றுள்ளார்</p><p>80 கிலோ பிரிவில் இங்கிலாந்தைச் சேர்ந்த டிமேஜி ஷிட்டுவை எதிர்த்து போட்டியிட்ட இவர் முதல் சுற்றில் 0-5 என்ற கணக்கில் தோல்வியடைந்தாலும், இரண்டாவது மற்றும் இறுதிச் சுற்றில் நடுவர்களின் மாறுபட்ட தீர்ப்பால் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.</p> <h2>நரேந்தர் பெர்வால்  </h2><p>ஆடவர் 90 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் நரேந்தர் பெர்வால், இங்கிலாந்தின் டமர் தாமஸிடம் 0-5 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.</p> <h2>ஏழு தங்கம்</h2><p>2026 கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய குத்துச்சண்டை அணி ஏழு தங்கம் மற்றும் மூன்று வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளது.</p><p>முன்னதாக பெண்கள் பிரிவில் குத்துச்சண்டையில் அருந்ததி சௌத்ரி, பிரீத்தி பவார், லம்போரியா, சாக்ஷி சௌத்ரி ஆகியோர் தங்கம் வென்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>12 வயது சிறுமிகள் தலையில் தாக்கிய போலீஸ்.. பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என அபிஜித் தீப்கே வலியுறுத்தல் </title><link>https://www.maalaimalar.com/news/national/modi-apology-row-cjp-founder-demands-pm-apologise-for-police-assault-on-12-year-old-girls</link><comments>https://www.maalaimalar.com/news/national/modi-apology-row-cjp-founder-demands-pm-apologise-for-police-assault-on-12-year-old-girls#comments</comments><guid isPermaLink="false">ffdeeb2e-9dfa-4f04-8ab9-56dbf5463da9</guid><pubDate>Sat, 01 Aug 2026 20:03:16 +0000</pubDate><atom:updated>2026-08-01T20:03:16.857Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,பிரதமர் மோடி,CJP,அபிஜித் தீப்கே,சிஜேபி போராட்டம்,Abhijit Deepke</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/3pdnp39l/tn-4.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மோடி ]]></media:title><media:description type="html"><![CDATA[ மோடி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/3pdnp39l/tn-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜூலை 20 நாடாளுமன்றம் பேரணியில் கலந்துகொண்டதற்காக 12 வயது சிறுமிகள் மீது கூட போலீசார்  தாக்குதல் நடத்தியதற்கு பிரதமர் மோடி மன்னிப்பு கோரியாக வேண்டும் என சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே வலியுறுத்தியுள்ளார். </p><h2>மோடி வீடியோ </h2><p>ஜந்தர் மந்தர் போராட்டத்தில் தமக்கு எதிராகவும், தமது மறைந்த தாயார் குறித்தும் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்திய மாணவர்களை மன்னிப்பதாகப் பிரதமர் மோடி இன்ஸ்டாகிராமில் செல்பி <a href="https://www.maalaimalar.com/news/national/rahul-slams-the-prime-minister-for-offering-an-apology-to-studentsan-apology-that-should-have-been-sought-from-him">வீடியோ </a>ஒன்றை வெளியிட்டார். </p><p>அதில், "எனக்கு எதிராகவும், எனது மறைந்த தாயாருக்கு எதிராகவும் எழுப்பப்பட்ட அவதூறு முழக்கங்கள் என்னை ஆழமாகப் காயப்படுத்தின. இருப்பினும், தவறு செய்யும் இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்கும் தண்டனையைத் தேடாமல், அவர்கள் தங்கள் தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ளவும், அவர்களைச் சரியான பாதையில் வழிகாட்டவும் சமூகம் வாய்ப்பளிக்க வேண்டும். நான் அந்த மாணவர்களை மன்னிக்கிறேன்," எனப் பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.</p> <h2>தீப்கே வீடியோ</h2><p>தன்னை இழிவாக பேசிய மாணவர்களை மன்னிப்பதாக மோடி நேற்று முன்தினம் இரவு இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட செல்பி வீடியோவை விமர்சித்து நேற்று தீப்கே எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.</p><p>அதில் பேசும் அவர், "நேற்று(நேற்று முன்தினம்) மோடி ஜி வீடியோவில் அவர் சிறுவர்களை மன்னிப்பதாக கூறியிருந்தார் . இன்றிரவு அவர் மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டு, ஜூலை 20 மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடிக்கு மன்னிப்பு கேட்பார் என நம்புகிறேன்.</p><p>12 வயது சிறுமிகளின் தலையில் போலீஸ் தாக்கியது. பெண்களின் ஆடைகள் கிழிக்கப்ட்டன. பெண்களின் அந்தரங்க உறுப்புகளையும் போலீசார் தாக்கினர். எனவே மோடி, போலீசாரால் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.</p> <h2>ராகுல் பதிவு</h2><p>மாணவர்களை மன்னித்துவிடுவதாக அவர் பேசியதற்கு பதில் அளிக்கும் வகையில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.</p><p>அதில் அவர், "பெற்றோர் தனது பிள்ளையின் மறைவினால் படும் துக்கத்தை விட பெரிய வலி வேறேதுமில்லை. தங்கள் குடும்பத்தில் இளம் வயதுடைய ஒருவரை பறிகொடுத்த வலி அவர்களை விட்டு என்றும் நீங்காது. அதோடு சிதைந்த கல்வி முறை குறித்த தீவிரமான கேள்வியும் அவர்களை விட்டு நீங்காதிருக்கிறது.</p><p>வினாத்தாள் கசிவுகள், தேர்வுகள் ரத்து ஆகியவரை பல வருட கடின உழைப்பை ஒரே இரவில் அழிதந்துவிடுகிறது. நியாயமற்ற ஒரு சிஸ்டத்தை வைத்துக்கொண்டு, நமது மாணவர்கள் நியாயமாக உழைக்க வலியுறுத்தப்படுகின்றனர்.</p><p>இதற்கு மத்தியில் நமது பிரதமருக்கு மாணவர்களை மன்னித்துவிடுவதாக நா கூசாமல் சொல்கிறார். தங்கள் பிள்ளையை இழந்த ஒரு பெற்றோரை கூட அவர் இதுநாள்வரை சந்திக்கவில்லை. வினாத்தாள் கசிவால் தங்கள் எதிர்காலத்தை பறிகொடுத்த ஒரு மாணவருடன் கூட அமர்ந்து அவர் பேசவில்லை. இந்தியாவின்</p><p>மாணவச் செல்வங்களுக்கு அவர் மன்னிப்பு வழங்க தேவையில்லை. அவர் தான் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டியவர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் போட்டிகள்: குத்துச்சண்டையில் மேலும் ஒரு தங்கம்... அருந்ததி சௌத்ரி அசத்தல் 
</title><link>https://www.maalaimalar.com/sports/commonwealth-boxing-india-wins-4-gold-and-1-silver-medals-in-glasgow</link><comments>https://www.maalaimalar.com/sports/commonwealth-boxing-india-wins-4-gold-and-1-silver-medals-in-glasgow#comments</comments><guid isPermaLink="false">ef1812a5-5c0f-411f-8313-a2ccc82dd515</guid><pubDate>Sat, 01 Aug 2026 19:09:33 +0000</pubDate><atom:updated>2026-08-01T19:09:33.365Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Commonwealth games,காமன்வெல்த் போட்டி,குத்துச்சண்டை,boxing,</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/06xofimi/tn-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அருந்ததி சௌத்ரி ]]></media:title><media:description type="html"><![CDATA[ அருந்ததி சௌத்ரி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/06xofimi/tn-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்து வரும் 23வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் <a href="https://www.maalaimalar.com/sports/glasgow-commonwealth-lovlina-borgohain-preeti-pawar-won-gold">குத்துச்சண்டை </a>பிரிவில் இந்தியாவுக்கு 4 தங்கப் பதக்கம், 1 வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. </p><h2>குத்துச் சண்டை </h2><p>குத்துச் சண்டை பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த 10 பேர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.  </p><p>நேற்று மாலை தொடங்கிய போட்டிகளில்,  பிரீத்தி பவார் மற்றும் லம்போரியா ஆகியோர் தங்கம் வென்று அசத்தினர். சாக்ஷி சவுத்ரி 51 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார். </p> <h2>அருந்ததி சவுத்ரி</h2><p>இதையடுத்து மகளிர் 70 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை அருந்ததி சவுத்ரி தங்கம் வென்றுள்ளார்.</p><p>இறுதிப் போட்டியில், இங்கிலாந்தைச் சேர்ந்த தனது எதிராளியான சாண்டெல் ரீடை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி அவர் தங்கப் பதக்கத்தை வென்றார்.</p><h2>லவ்லினா</h2><p>அதேபோல மகளிர் 75 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன், ஆஸ்திரேலிய வீராங்கனையிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை தக்க வைத்தார்.</p><p>காமன்வெல்த் போட்டியில் இதுவரை இந்தியா 11 தங்கம், 16 வெள்ளி, 8 வெண்கலம் என 35 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.</p><p>நேற்று குத்துச்சண்டையில் மட்டும் 10 பதக்கங்களை உறுதி செய்துள்ளனர். இதில் 6 வீராங்கனைகள் மற்றும் 4 வீரர்கள் ஆவார்கள்.</p> ]]></content:encoded></item><item><title>பாகிஸ்தானில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த உலகப்புகழ் மலையேற்ற வீரர்.. யார் இந்த நிர்மல் புர்ஜா?</title><link>https://www.maalaimalar.com/news/world/nepal-climber-nirmal-purja-confirmed-dead-in-karakoram-broad-peak-avalanche</link><comments>https://www.maalaimalar.com/news/world/nepal-climber-nirmal-purja-confirmed-dead-in-karakoram-broad-peak-avalanche#comments</comments><guid isPermaLink="false">85733e94-4ff7-4e73-b851-dbfebe51bafb</guid><pubDate>Sat, 01 Aug 2026 18:20:44 +0000</pubDate><atom:updated>2026-08-01T18:20:44.886Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Pakistan,Avalanche,பனிச்சரிவு,மலையேற்றம்,Mountaineering</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/75wk8kb8/tn.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நிர்மல் புர்ஜா]]></media:title><media:description type="html"><![CDATA[ நிர்மல் புர்ஜா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/75wk8kb8/tn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாளத்தை பூர்வீகமாக கொண்ட புகழ்பெற்ற மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா பாகிஸ்தானில் மலையேற்றத்தின்போது ஏற்பட்ட <a href="https://www.maalaimalar.com/news/world/pakistan-avalanche-nirmal-purja-among-10-climbers-missing-after-broad-peak-snow-slide">பனிச்சரிவில்</a> சிக்கி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. </p><p> கடந்த ஜூலை 30 அன்று பாகிஸ்தானின் கரகோரம் மலைத்தொடரின் பிராட் பீக் சிகரத்தை ஏறுகையில் ஏற்பட்ட பனிச்சரிவில் 'நிம்ஸ் டாய்' என்று அழைக்கப்படும் நிர்மல் புர்ஜா உட்பட 10 கொண்ட குழு காணாமல் போனது.</p><p>தேடுதல் பணிகளின்போது நிர்மல் புர்ஜா உடலுடன் சேர்த்து மேலும் 5 வீரர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மற்றவர்களைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.</p> <h2>பனிச்சரிவு</h2><p>பாகிஸ்தானின் காரகோரம் மலைத்தொடரில் 8,047 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பிராட் பீக் சிகரம் உலகின் 12வது மிக உயரிய சிகரம் ஆகும்.</p><p>ஜூலை 30, நண்பகல் வேளையில் பிராட் பீக் சிகரத்தின் உச்சியை அடையும் நோக்கில், சுமார் 6,600 மீட்டர் உயரத்தில் வீரர்கள் ஏறிக் கொண்டிருந்தபோது இந்த பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.</p><p>பனிச்சரிவுக்கு பின் மலையேற்றக் குழுவினருடனான அனைத்துத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளது.</p><p>பாகிஸ்தான் மலையேற்ற அமைப்பான பாகிஸ்தான் அல்பைன் கிளப் தகவலின்படி, மாயமான 10 பேர் கொண்ட குழுவில் நிர்மல் புர்ஜா உட்பட நேபாளத்தை சேர்ந்த 5 மலையேற்ற வீரர்கள், பாகிஸ்தானின் ஹன்சாவை சேர்ந்த சுஹைல் சாகி, ஓமன் நாட்டை சேர்ந்த நதீரா, அமெரிக்காவை சேர்ந்த மல்லோரி கேஸ், சீனாவை சேர்ந்த வாங் மற்றும் மேலும் ஒரு வெளிநாட்டு மலையேற்ற வீரர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.</p> <h2>யார் இந்த நிர்மல் புர்ஜா?</h2><p>நேபாளத்தில் பிறந்த நிர்மல் புர்ஜா, பிரிட்டிஷ் ராணுவத்தின் கூர்கா படைப்பிரிவிலும், பின்னர் இங்கிலாந்தின் சிறப்புப் படகு சேவையிலும் (SBS) பணியாற்றியவர்.</p><p>2019இல் உலகின் 8,000 மீட்டருக்கு மேற்பட்ட 14 சிகரங்களையும் வெறும் 6 மாதங்களில் ஏறி உலக சாதனை படைத்தார்.</p><p>இவருடைய இந்த சாதனை நெட்பிலிக்ஸின் '14 Peaks: Nothing Is Impossible' என்ற ஆவணப்படமாக வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.</p><p>8,000 மீட்டர் உயரமுள்ள அனைத்து 14 சிகரங்களையும் மூன்று முறை ஏறி முடித்த முதல் மனிதர் என்ற புதிய வரலாற்று சாதனையை படைக்கும் முயற்சியில் அவர் இந்த மலையேற்றத்தை மேற்கொண்டிருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>கத்தாரில் இருந்து LNG ஏற்றிச்சென்ற கப்பல் மீது  ஏவுகணை தாக்குதல்.. ஹார்முஸில் பதற்றம் 
</title><link>https://www.maalaimalar.com/news/world/hormuz-strait-missile-scare-lng-tanker-attacked-amid-rising-us-iran-maritime-tensions</link><comments>https://www.maalaimalar.com/news/world/hormuz-strait-missile-scare-lng-tanker-attacked-amid-rising-us-iran-maritime-tensions#comments</comments><guid isPermaLink="false">696ee06b-93ac-4f9a-85d4-fbd759e2a9e3</guid><pubDate>Sat, 01 Aug 2026 17:47:59 +0000</pubDate><atom:updated>2026-08-01T17:47:59.613Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கத்தார்,Qatar,ஹார்முஸ் ஜலசந்தி,Strait of Hormuz,LNG,எல்என்ஜி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/o7m24alg/tn-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கோப்புப் படம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ கோப்புப் படம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/o7m24alg/tn-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/us-israel-planning-to-bombard-energy-related-targets-in-iran-report">அமெரிக்கா - ஈரான் </a>இடையே நாளுக்கு நாள் போரின் தீவிரம் அதிகரித்து வரும் சூழலில் மத்திய கிழக்கில் இருந்து பிற நாடுகளுக்கு முக்கிய ஏற்றுமதி பாதையாக இருக்கும் ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. </p><p>ஹார்முஸ் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக அமெரிக்காவும், தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக ஈரானும் உரிமை கொண்டாடி வருவகால் கப்பல் போக்குவரத்தில் குழப்பம் ஏற்பட்டு மீண்டும் உலகளாவிய நெருக்கடிக்கு வித்திடத் தொடங்கியுள்ளது. </p><p>இந்நிலையில் கத்தாரில் இருந்து திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்என்ஜி) ஏற்றிச் சென்ற கேஸ்லாக் ஷாங்காய் என்ற டேங்கர் கப்பல், ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும்போது ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. </p> <h2>தாக்குதல்</h2><p>கடந்த ஜூலை 27 வாக்கில் கத்தாரில் எல்என்ஜியை நிரப்பிக்கொண்டு புறப்பட்ட நேற்று (ஜூலை 31) ஹார்முஸ் ஜலசந்தியின் வட புற நுழைவு பாதை அருகே கப்பல் சென்றபோது அதன் சிக்னல் துண்டிக்கப்பட்டது.</p><p>கிரீஸ் நாட்டை சேர்ந்த நிறுவனமொன்றுக்கு சொந்தமானது இக்கப்பல். கப்பல் ஏவுகணையால் தாக்கப்பட்டதை அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது. இதில் யாரும் காயமடையவில்லை என்றும் கப்பலில் ஏவுகணை தாக்குதலால் ஏற்பட்ட தீ உடனடியாக அணைக்கப்பட்டது என்றும் அந்நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.</p><p>இந்த தாக்குதலுக்கு ஈரானோ, ஏமனின் ஹவுதிக்களோ யாரும் பொறுப்பேற்கவில்லை.</p> <h2>தொடர் தாக்குதல்கள்</h2><p>இந்த வார தொடக்கத்தில், புதன் அன்று, கேஸ்லாக் நிறுவனத்தினுடைய கேஸ்லாக் சேலம் என்ற மற்றொரு எல்என்ஜி கப்பல் எகிப்து துறைமுகத்தின் வடக்கே Damietta என்ற இடத்தில் வைத்து தாக்குதலுக்கு உள்ளானது. இந்த தாக்குதலுக்கும் யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.</p><p>முன்னதாக ஜூலை மாத தொடக்கத்தில் கத்தாரை சேர்ந்த எல்என்ஜி டேங்கர் கப்பல் ஹார்முஸில் தாக்குதலுக்கு உள்ளானது. உலகின் 2வது பெரிய எல்என்ஜி ஏற்றுமதியாளராக கத்தார் விளங்குவது குறிப்பிடத்தக்கது.</p><p>இதனிடையே ஹார்முஸ்க்கு அடுத்தபடியாக முக்கிய ஏற்றுமதி பாதையாக விளங்கும் செங்கடலின் பாப் அல் மாண்டெப் ஜலசந்தியில் ஏமனை சேர்ந்த ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக சவுதி அரேபியாவிலிருந்து வரும் கப்பல்கள் அவர்களுக்கு இலக்குகளாகி வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>மன்னிப்பு கேட்க வேண்டிய பிரதமர் மாணவர்களை மன்னிப்பதாக கூறுவது... ராகுல் சாடல்   </title><link>https://www.maalaimalar.com/news/national/rahul-slams-the-prime-minister-for-offering-an-apology-to-studentsan-apology-that-should-have-been-sought-from-him</link><comments>https://www.maalaimalar.com/news/national/rahul-slams-the-prime-minister-for-offering-an-apology-to-studentsan-apology-that-should-have-been-sought-from-him#comments</comments><guid isPermaLink="false">3a885046-3f43-4807-a7e4-fff9f513c796</guid><pubDate>Sat, 01 Aug 2026 17:08:44 +0000</pubDate><atom:updated>2026-08-01T17:08:44.205Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Prime Minister Modi,பிரதமர் மோடி,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/k7rpiozm/tn-1.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரதமர், ராகுல் ]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர், ராகுல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/k7rpiozm/tn-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் உள்ளிட்ட வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லியில் நடந்த போராட்டங்களின்போது பிரதமர் மோடியை இழிவாக பேசியதாக சில இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. </p><h2>மோடி வீடியோ</h2><p>இதனிடையே நேற்று இன்டாவில் செல்பி வீடியோ மூலம் பேசிய பிரதமர் மோடி, "தன்னைப் பற்றியும் தனது தாயை பற்றியும் தவறாக பேசியவர்களை நான் மன்னிக்கிறேன். அவர்கள் நமது நாட்டின் இளம் தலைமுறையினர். அவர்களின் தவறை திருத்தி நல்வழிப்படுத்துவது நம் கடமை" என பேசியிருந்தார். </p><h2>ராகுல் பதிவு</h2><p>இந்நிலையில் மாணவர்களை மன்னித்துவிடுவதாக அவர் பேசியதற்கு பதில் அளிக்கும் வகையில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.</p><p>அதில் அவர், "பெற்றோர் தனது பிள்ளையின் மறைவினால் படும் துக்கத்தை விட பெரிய வலி வேறேதுமில்லை. தங்கள் குடும்பத்தில் இளம் வயதுடைய ஒருவரை பறிகொடுத்த வலி அவர்களை விட்டு என்றும் நீங்காது. அதோடு சிதைந்த கல்வி முறை குறித்த தீவிரமான கேள்வியும் அவர்களை விட்டு நீங்காதிருக்கிறது.</p><p>வினாத்தாள் கசிவுகள், தேர்வுகள் ரத்து ஆகியவரை பல வருட கடின உழைப்பை ஒரே இரவில் அழிதந்துவிடுகிறது. நியாயமற்ற ஒரு சிஸ்டத்தை வைத்துக்கொண்டு, நமது மாணவர்கள் நியாயமாக உழைக்க வலியுறுத்தப்படுகின்றனர்.</p><p>இதற்கு மத்தியில் நமது பிரதமருக்கு மாணவர்களை மன்னித்துவிடுவதாக நா கூசாமல் சொல்கிறார். தங்கள் பிள்ளையை இழந்த ஒரு பெற்றோரை கூட அவர் இதுநாள்வரை சந்திக்கவில்லை. வினாத்தாள் கசிவால் தங்கள் எதிர்காலத்தை பறிகொடுத்த ஒரு மாணவருடன் கூட அமர்ந்து அவர் பேசவில்லை. இந்தியாவின்</p><p>மாணவச் செல்வங்களுக்கு அவர் மன்னிப்பு வழங்க தேவையில்லை. அவர் தான் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டியவர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Nothing is more painful than seeing a parent grieve their child.<br><br>Behind every young life lost is a family carrying pain that will never leave them - and serious questions about a broken education system. <br><br>Leaked papers. Cancelled exams. Years of preparation destroyed overnight.… <a href="https://t.co/nzQE61zP14">pic.twitter.com/nzQE61zP14</a></p>&mdash; Rahul Gandhi (@RahulGandhi) <a href="https://x.com/RahulGandhi/status/2083502109107093610?ref_src=twsrc%5Etfw">August 1, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>சிறுமி மன்னிப்பு </h2><p>இதனிடையே டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி அவதூறாகவும், அசிங்கமான முழக்கங்களையும் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு உள்ளான 15 வயதுச் சிறுமி, இணையத்தில் ஒரு வீடியோ வெளியீட்டின் மூலம்<a href="https://www.maalaimalar.com/news/national/this-is-my-first-and-last-mistake-15-year-old-girl-apologises-for-remarks-against-pm-modi"> பகிரங்க மன்னிப்பு</a> கேட்டுள்ளார்.</p><p>"எனக்கு 15 வயதுதான் ஆகிறது. நான் செய்த தவறு மன்னிப்புக்கு உரியது அல்ல. நான் மிகவும் வெட்கப்படுகிறேன். என்னால் என்னை நிமிர்ந்து கூடப் பார்க்க முடியவில்லை. இதுவே எனது முதல் மற்றும் கடைசித் தவறாக இருக்கும்," என்று கைகளைக் கூப்பியவாறு நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோரினார்.</p>]]></content:encoded></item><item><title>திருப்பதி கோவிலில் வேளாண்மை அறிக்கை நகலுடன் அமைச்சர் சாமி தரிசனம் - இணையத்தில் புயலை கிளப்பிய விவாதம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tiruppati-kovilil-velanmai-nidhi-nilai-arikkai-internettil-kadumaiyana-vivatham</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tiruppati-kovilil-velanmai-nidhi-nilai-arikkai-internettil-kadumaiyana-vivatham#comments</comments><guid isPermaLink="false">7f102b3c-dc4a-4d5d-8fcd-6f48a9628efd</guid><pubDate>Sat, 01 Aug 2026 16:33:51 +0000</pubDate><atom:updated>2026-08-01T16:33:51.700Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Su Venkatesan,Tamilisai Soundararajan,எம்.பி. சு வெங்கடேசன்,Tamilnadu budget,தமிழிசை செளந்தரராஜன்,நிதி நிலை அறிக்கை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/cyhemrm1/Untitled-design-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Political Storm in Tirupati: Minister criticised for taking budget document to temple like an offering]]></media:title><media:description type="html"><![CDATA[ Tamilisai sondararajan and su. venkatesan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/cyhemrm1/Untitled-design-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h3><strong>திருப்பதியில் வேளாண்மை நிதிநிலை அறிக்கை</strong></h3><p>திருப்பதி வெங்கடேஸ்வரர் கோவிலில் தமிழக வேளாண் துறை அமைச்சர் ஆர்.வினோத், வேளாண்மை நிதி நிலை அறிக்கையின் வரைவு நகலை கொண்டு சென்று சாமி தரிசனம் செய்தார்.</p><p>இதையடுத்து தவெக அமைச்சரின், இந்த செயல் இணையத்தில் விவாவதத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h3><strong>சு. வெங்கடேசன் </strong></h3><p>இதுகுறித்து முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. சு.வெங்கடேசன் கூறுகையில், “பட்ஜெட் ஆவணங்கள் கடவுளுக்குச் செய்யப்படும் காணிக்கைகளோ அல்லது ஆன்மீகப் பொருட்களோ அல்ல. </p><p>அவை, பொதுப் பணம் எவ்வாறு செலவிடப்பட வேண்டும் என்பதை விவரிக்கும் அரசியலமைப்பு ஆவணங்கள். ஒரு தனிநபரின் சொந்த நம்பிக்கைகளை வெளிப்படுத்த அரசாங்க ஆவணங்களை வழங்குவது முறையற்றது,” என்று அவர்  கூறினார். </p><p>இதைத்தொடர்ந்து சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜி. சுந்தரராஜன் கூறுகையில், மரிய வில்சன் பொது பட்ஜெட் ஆவணங்களை ஒரு தேவாலயத்திற்கு எடுத்துச் செல்வாரா என்றும் அரசு மதச்சார்பற்றது என்ற உண்மையை மறந்துவிட்டதா? என்றும் கேள்வி எழுப்பினார்.</p><h3><strong>தமிழிசை செளந்தரராஜன் பதிவு</strong></h3><p>இந்நிலையில் வெங்கடேசன் கருத்துக்கு தமிழக முன்னாள் பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை செளந்தரராஜன் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,</p><p>“இந்து மதம் சார்ந்த நம்பிக்கைகளுக்கும் கோயில் சார்ந்த நடவடிக்கைகளுக்கும் இவ்வளவு பொங்கும் வெங்கடேசன் அவர்களே, சாமானிய இந்துக்களின் காணிக்கையை, கோயில் பணத்தை ஏன் அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று கேட்டு இருக்கிறீர்களா?</p><p>அவரவர் நம்பிக்கையில் நீங்கள் தலையிடுவது எந்த வகையில் நியாயம்?,” என்று கேள்வி எழுப்பினார்.</p><h3><strong>சு. வெங்கடேசன் பதில் கேள்வி</strong></h3><p>இந்த பதிவிற்கு எம்.பி. சு. வெங்கடேசன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “அமைச்சரின் வழிபாட்டை இங்கு கேள்விக்கு உட்படுத்தவில்லை. அரசு ஆவணம் பூஜைக்கு உட்படுத்த வேண்டிய பொருளில்லை.</p><p>கோயில் பணத்தை அரசாங்கம் எங்கும் எடுக்கவில்லை. ஆனால், பிரதமர் மோடி திறந்து வைத்த அயோத்தி கோயிலுக்கு பொதுமக்கள் வழங்கிய பணத்தை கடந்த இரண்டு ஆண்டுகளில் 70 முறை திருடியிருக்கிறார்கள். அதன் மதிப்பு சுமார் 200 கோடிக்கும் மேல்.</p><p>இராமனுக்கு செலுத்தப்பட்ட காணிக்கையை களவாடியவர்கள் குறித்து நேற்றுகூட நாடாளுமன்றத்தின் வாயிலில் போராடிவிட்டு வருகிறேன்.</p><p>இராமர் கோயில் திருட்டு குறித்து தேசமே பேசிக்கொண்டிருக்கிறது. நீங்கள் இது வரை பேசியதுண்டா?” என்று மருத்துவர் தமிழிசையின் பதிவிற்கு பதில் அளித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் குத்துச் சண்டையில் இந்தியாவுக்கு மேலும் இரண்டு தங்கப் பதக்கம்</title><link>https://www.maalaimalar.com/sports/commonwealth-games-boxin-priya-ghanghas-sakshi-chaudhary-wons-gold-for-india</link><comments>https://www.maalaimalar.com/sports/commonwealth-games-boxin-priya-ghanghas-sakshi-chaudhary-wons-gold-for-india#comments</comments><guid isPermaLink="false">1185a6c1-0b42-471c-8958-9ded4f74606c</guid><pubDate>Sat, 01 Aug 2026 16:25:23 +0000</pubDate><atom:updated>2026-08-01T16:25:23.069Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>காமன்வெல்த் போட்டி,Boxing,Glasgow,commonwealth game,பாக்சிங் இந்தியா,கிளாஸ்கோ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/qna95w7b/Sakshi0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சாக்ஷி சவுத்ரி- பிரியா கங்காஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/qna95w7b/Sakshi0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் குத்துச் சண்டை பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த 10 இறுதிப் போட்டிக்கு முன்னேறினர். இதனால் 10 பதக்கங்கள் உறுதியானது.</p><p>இந்திய நேரப்படி இன்று மாலை இந்திய வீராங்கனைகள் <a href="https://www.maalaimalar.com/sports/glasgow-commonwealth-lovlina-borgohain-preeti-pawar-won-gold">பிரித்தீ பவார்</a> மற்றும் லம்போரியா ஆகியோர் தங்கம் வென்று அசத்தினர். இந்த நிலையில் தற்போது சாக்ஷி சவுத்ரி 51 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றுள்ளார். இவர் இங்கிலாந்தின் ரூபி ஒயிட்டை 5-0 என வீழ்த்தினார்.</p><h2>பிரியா கங்காஸ்</h2><p>60 கிலோ எடைப்பிரிவில் பிரியா கங்காஸ் கனடா வீராங்கனை மேரி-பத்தோலை 4-1 என வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். குத்துச் சண்டையில் மட்டும் இதுவரை இந்தியாவுக்கு 4 தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.</p><h2>ஜூடோ</h2><p>ஜூடோ போட்டியில் உன்னாதி சர்மா தென்ஆப்பிரிக்கா வீராங்கனை ஸ்கை நோஸ்டரை வீழ்த்தி வெண்கலப்பதக்கம் வென்றார்.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 1 ஆகஸ்ட் 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-1-august-2026-2</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-1-august-2026-2#comments</comments><guid isPermaLink="false">6db1f91d-b4f2-4888-b10e-353b9e4cce34</guid><pubDate>Sat, 01 Aug 2026 05:01:38 +0000</pubDate><atom:updated>2026-08-01T16:09:02.315Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/4ievmxyy/modi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/4ievmxyy/modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/census-operations-begin-across-tamil-nadu-today">தமிழ்நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்</a></p><p>* அனைத்து வீடுகளுக்கும் நேரில் சென்று, 33 கேள்விகளைக் கொண்ட படிவத்தைப் பயன்படுத்தி தகவல்கள் திரட்டப்பட உள்ளன.</p><p>* 1948-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் சட்டப்படி, சேகரிக்கப்படும் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/perunthalaivar-kamarajar-breakfast-scheme-tender-announced">பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் - டெண்டர் அறிவிப்பு</a></p><p>* முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் பெயர் 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்' என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.</p><p>* ரவை, சம்பா ரவை தலா 1,000 மெட்ரிக் டன், சேமியா 1,100 மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது  </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/heavy-rainfall-in-keralam-two-death">கேரளத்தில் மீண்டும் நிலச்சரிவு - 2 பேர் உயிரிழப்பு</a></p><p>* அடூர் மலைப்பகுதியில் அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பெண் ஒருவர் பலியானார். </p><p>* கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை மற்றும் வயநாடு எல்லைப்பகுதிகிளில் நிலச்சரிவால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-1-8-2026">GOLD PRICE TODAY: ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை - இன்றைய நிலவரம் </a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.13,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/this-is-my-first-and-last-mistake-15-year-old-girl-apologises-for-remarks-against-pm-modi">'இதுவே எனது முதல் மற்றும் கடைசி தவறு': பிரதமர் மோடியை விமர்சித்த 15 வயது சிறுமி பகிரங்க மன்னிப்பு!...</a></p><p>*எனக்கு 15 வயதுதான் ஆகிறது. நான் செய்த தவறு மன்னிப்புக்கு உரியது அல்ல. நான் மிகவும் வெட்கப்படுகிறேன். என்னால் என்னை நிமிர்ந்து கூடப் பார்க்க முடியவில்லை.</p><p>*சிறுமி நோய்டாவில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் தனது தாயாருடன் வசித்து வந்த நிலையில், தற்போது அந்த வீடு பூட்டப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/commercial-cylinder-price-reduced-by-rs200" rel="nofollow">வணிக சிலிண்டர் விலை ரூ.200 குறைந்தது!</a></p><p>*  வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.200 குறைந்து ரூ.2,906க்கு விற்பனை.</p><p>*  வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமில்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/tnpl-cricket-ticket-sale-starts-today">டி.என்.பி.எல். கிரிக்கெட் டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்</a></p><p>* போட்டி வருகிற 4-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை 2 கட்டமாக நடத்தப்படுகிறது. </p><p>*  கல்லூரி நுழைவுவாயிலில் அமைக்கப்பட்ட கவுண்ட்டரில் இன்று தொடங்குகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-irregularities-former-md-visakan-missing" rel="nofollow">முறைகேடு விவகாரம்: டாஸ்மாக் முன்னாள் மேலாண் இயக்குனர் விசாகன் தலைமறைவு?</a></p><p>* சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனைகளுடன், செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் வழங்கியுள்ளது.</p><p>* டாஸ்மாக் முறைகேடு புகாரில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட நிலையில் விசாகனை விசாரிக்கத் திட்டம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thoppu-venkatasalam-relieved-from-dmk-post" rel="nofollow">திமுக பொறுப்பில் இருந்து தோப்பு வெங்கடாசலம் விடுவிப்பு</a></p><p>* தோப்பு வெங்கடாச்சலத்திற்கும் முன்னாள் அமைச்சர் முத்துசாமிக்கும் இடையே தொடர்ந்து மோதல்?</p><p>* ஆளுங்கட்சியான தவெகவில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிகின்றன.</p><p>காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சென்னை வருகை-தொண்டர்கள் உற்சாக வரவேற்பு</p><p>* மாலை 4 மணியளவில் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து உரையாடுகிறார்.</p><p>*   நீட் தேர்வால் பலியான 4 மாணவ-மாணவிகளின் பெற்றோரை சந்திப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/swaraj-is-my-birthright-father-of-indian-nationalism">சுயராஜ்யம் எனது பிறப்புரிமை: தேசியவாதத்தின் தந்தை லோக்மான்ய திலகரின் நினைவு தினம் இன்று!... </a></p><p>*மக்களிடையே ஒற்றுமையையும் தேசபக்தியையும் உருவாக்க, வீடுகளுக்குள் முடங்கிக்கிடந்த 'விநாயகர் சதுர்த்தி' வழிபாட்டைப் பொதுமக்களுக்கான விழாவாக மாற்றினார். </p><p>*சிறையில் இருந்த காலத்தில் அவர் எழுதிய 'கீதா ரஹஸ்யம்' என்ற நூல், பகவத் கீதையின் கடமை மற்றும் தியாகக் கருத்துக்களை விளக்கும் ஒரு தலைசிறந்த படைப்பாக இன்றளவும் போற்றப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/delhi-independence-day-drone-ban-till-aug-16">சுதந்திர தின பாதுகாப்பு: டெல்லியில் ஆகஸ்ட் 16 வரை டிரோன்கள் பறக்கத் தடை-காவல்துறை உத்தரவு!... </a></p><p>*இந்த கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 16 ஆம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>*சம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு டெல்லி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/jammu-kashmir-kulgam-attack-on-migrant-workers-two-killed">ஜம்மு-காஷ்மீரில் கொடூரம்: வெளிமாநிலத் தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு-இருவர் பலி... </a></p><p>*பிழைப்பு தேடி காஷ்மீருக்கு வந்த ஏழைத் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்த வன்முறைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>*இத்தாக்குதலில் பலி எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/new-mega-international-airport-in-andhra-pradesh-opened-by-modi" rel="nofollow">இந்தியாவிலேயே மிகப்பெரிய சர்வதேச விமான நிலையம்- ஆந்திராவில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்</a></p><p>* பழங்குடியின பெண்கள் கலந்துகொண்டு தின்ஷா நடனமாடி பிரதமருக்கு உற்சாக வரவேற்பு. </p><p>* பிரதமர் வருகையை முன்னிட்டு நகரம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-tn-decides-to-move-supreme-court-to-secure-cauvery-water-right-move">காவிரியில் நீர் பெற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர தமிழகம் முடிவு: சரியான நடவடிக்கை! - அன்புமணி</a></p><p>* காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீரை உடனடியாக திறந்து விடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக சட்ட அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்திருக்கிறார்.&nbsp;</p><p>* கர்நாடகத்தில் எந்தக் கட்சியின் ஆட்சி நடந்தாலும் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க அம்மாநில முதலமைச்சர்கள் முன்வர மாட்டார்கள் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-issue-mk-stalin-question-to-cm-vijay-all-party-meeting">அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட முடியுமா முடியாதா? - முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி</a></p><p>* கர்நாடகம் சென்றால் காவிரியைக் கையோடு எடுத்துவந்து விடலாம் என்று தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சர் நினைத்தாரோ என்னவோ... </p><p>* தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடச் சொல்லி CWMA உத்தரவிட்டதும் "நீங்கள் இப்போதைக்கு வரவேண்டாம்" என்று கேட்டைச் சாத்திவிட்டார்கள்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-appears-at-thiruvallikeni-police-station-in-dmk-mla-bribery-bargain-case" rel="nofollow">த.வெ.க. எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய வழக்கு: செந்தில் பாலாஜி காவல் நிலையத்தில் ஆஜர்</a></p><p>* செந்தில் பாலாஜி போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடாமல் இருந்து வந்தார்.</p><p>* முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி விசாகன் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/russian-missile-drone-attack-on-ukraine-capital">உக்ரைன் தலைநகர் மீது டிரோன் தாக்குதல் - 3 பேர் பலி!</a></p><p>* கீவ் குடியிருப்புகள் சேதம், வணிக கிடங்குகள் தீப்பற்றி எரிந்தன </p><p>* இடிபாடுகளில் சிக்கிய பலர் படுகாயம், பலி எண்ணிக்கை உயர வாய்ப்பு</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/only-reel-apology-cjp-chief-abhijit-deepke-slams-modi-video">'ரீலில் மட்டும்தானா மன்னிப்பு?'- பிரதமர் மோடியின் வீடியோவுக்கு CJP தலைவர் அபிஜீத் தீப்கே சரமாரி கேள்வி!... </a></p><p>*ஜந்தர் மந்தர் போராட்டத்தில் தமக்கு எதிராகவும், தமது மறைந்த தாயார் குறித்தும் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்திய மாணவர்களை மன்னிப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி இன்ஸ்டாகிராமில் செல்ஃபி வீடியோ ஒன்றை வெளியிட்டார். </p><p>*போராட்டங்களில் பங்கேற்ற சாதாரண மாணவர்கள் மற்றும் குற்றப்பின்னணி இல்லாத இளைஞர்கள் மீதான வழக்குகளை விடுவிக்க வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/august-rain-expected-above-normal-in-tamilnadu" rel="nofollow">தமிழகத்தில் ஆகஸ்டு மாதத்தில் இயல்பை விட அதிக மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்</a></p><p>* மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைப்பொழிவு இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.</p><p>* பசிபிக் பெருங்கடல் பகுதியில் மிதமான  எல்-நினோ சூழல் நிலவுகிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/orange-alert-issued-for-three-districts-today" rel="nofollow">3 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்</a></p><p>* திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. </p><p>* மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/cjp-protest-aftermath-cji-event-postponed-at-last-minute">CJP போராட்டம் எதிரொலி: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் நிகழ்ச்சி கடைசி நிமிடத்தில் ஒத்திவைப்பு!... </a></p><p>*மும்பையில் உள்ள நாட்டின் முன்னணி உயர்கல்வி நிறுவனமான 'டாட்டா சமூக அறிவியல் கழகத்தின்' (TISS) 86வது பட்டமளிப்பு விழா, பாதுகாப்பு மற்றும் போராட்ட அச்சம் காரணமாகக் கடைசி நிமிடத்தில் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p>*நாட்டின் பல மாநிலங்களிலிருந்தும் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் விமானம் மற்றும் ரெயில்கள் மூலம் மும்பை வந்து சேர்ந்துவிட்டனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/el-nino-threat-southwest-monsoon-india-weather-centre-warning">எல் நினோ அச்சுறுத்தல்: இந்தியாவின் தென்மேற்கு பருவமழை மீண்டும் பாதிக்குமா?-வானிலை மையம் எச்சரிக்கை!... </a></p><p>*பசிபிக் பெருங்கடலில் நிலவும் வெப்பநிலை மாற்றத்தால் உருவான 'சூப்பர் எல் நினோ' மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது.</p><p>*இந்தியாவின் விவசாயத்திற்கும் பொருளாதாரத்திற்கும் மிக முக்கிய ஆதாரமாக விளங்குவது தென்மேற்கு பருவமழையாகும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/central-government-released-tax-share-of-rs-4466-crore-to-tamil-nadu">தமிழ்நாட்டிற்கான  ரூ.4,466 கோடி வரிப்பகிர்வு தொகையை விடுவித்தது மத்திய அரசு</a></p><p>* அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.1,09,019 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.</p><p>* பீகாருக்கு ரூ.10,845 கோடி, மத்திய பிரதேசத்திற்கு ரூ.8,010 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-it-wing-indictment-dmk">எரிச்சல் மற்றும் விரக்தி மோடில் அலறும் திமுக- தவெக சாடல்</a></p><p>* ஆட்சியில் இருக்கும்போது சத்தம் போடுவதுபோல சவுண்ட் கொடுத்துவிட்டு, மியூட் மோடுக்குச் சென்று, மியாவ் என்றுகூடச் சத்தம் எழுப்பாத காரியப் பூனைதான் திமுக. </p><p>* கடந்த மே மாதத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட கட்சியாகத் தவிக்கும் திமுக, காவிரி விவகாரத்தில் கபட நாடகமாடுவதை மக்கள் ஏற்கமாட்டார்கள்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/topnews/nature-belongs-to-no-one-karnataka-cm-dk-shivakumar">'இயற்கை யாருக்கும் சொந்தமானது அல்ல..': கடையடைப்பு போராட்டத்தை திரும்ப பெற கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் வலியுறுத்தல... </a></p><p>*அளவிற்கு அதிகமாக நீரைத் தேக்கி வைத்தால் அணை உடைந்தோ அல்லது கரைபுரண்டு ஓடியோ வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நாமே அடித்துச் செல்லப்படும் அபாயம் உள்ளது.</p><p>*காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் வழிகாட்டுதல்கள் மற்றும் அணைகளின் நீர்வரத்து சூழலைக் கருத்தில் கொண்டு, இயல்பான நீர் திறப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rahul-gandhi-warns-factionalism-blocking-congress-progress-in-tamil-nadu">தமிழ்நாட்டில் பல பிரிவுகளாகச் செயல்படும் காங்கிரஸ்: 'உட்கட்சிப் பூசலே வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை'-ராகுல் காந்தி பரபரப்பு.</a>.. </p><p>*தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவே புதிய மாவட்ட செயலாளர்கயை நியமித்துள்ளோம்.</p><p>*அனைத்து கோஷ்டிப் பூசல்களையும் மறந்து அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/e20-fuel-policy-petrol-would-have-hit-rs125-per-litre-during-iran-war-centre">E20 எரிபொருள் கொள்கை: ஈரான் போரின் போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.125 ஆக உயர்ந்திருக்கும்- மத்திய அரசு விளக்கம்!... </a></p><p>*சர்வதேசப் பொருளாதாரப் பாதுகாப்பைக் காரணம் காட்டி E20 கொள்கையை மத்திய அரசு தீவிரமாக நியாயப்படுத்தி வருகிறது.</p><p>*ஒரே வாரத்தில் 4-வது முறையாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அறிக்கை வெளியீட்டுத் தரவுகளுடன் விளக்கம் அளித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/pmk-president-anbumani-ramadoss-how-can-farmers-be-forced-to-repay-crop-loans-with-interest-after-announcing-a-loan-waiver">பயிர்க்கடன் தள்ளுபடி என்று அறிவித்து விட்டு வட்டியுடன் செலுத்த கட்டாயப்படுத்துவதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்</a></p><p>* தமிழக அரசு மற்றும் கூட்டுறவுத் துறையின் தவறான அணுகுமுறையும், நிர்வாகக் குளறுபடிகளும்தான் அனைத்து குழப்பங்களுக்கும் காரணம் ஆகும். </p><p>* இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாகத் தலையிட்டு, உழவர்களிடம் பயிர்க்கடன் தவணைகளைக் கேட்டு தொல்லை கொடுக்கக் கூடாது என கூட்டுறவு சங்கங்களுக்கு ஆணையிட வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-approaches-supreme-court-seeking-immediate-directions-for-release-of-cauvery-water-to-tamil-nadu">காவிரி நீரை உடனடியாக தமிழ்நாட்டிற்கு திறந்து விட உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. அவசர மனு</a></p><p>* கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் நீரையும், பிலிகுண்டுலுவில் கிடைக்கும் நீரின் அளவையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) தினசரி கண்காணித்து, அதன் அமலாக்க நிலையை உச்சநீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு உத்தரவிட வேண்டும்.</p><p>* வழக்கின் உண்மை நிலைகள் மற்றும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, நீதியை நிலைநாட்டுவதற்குத் தேவையான பிற உரிய உத்தரவுகளையும் உச்சநீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-dispute-approaching-supreme-court-only-legal-solution-minister-nirmal-kumar">காவிரி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் திங்கட்கிழமை மனுதாக்கல்-அமைச்சர் நிர்மல் குமார்... </a></p><p>•கர்நாடக அரசியலுக்கு ஆதரவாகத் தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகள் செயல்பட்டு வருவது மிகவும் வருத்தமளிக்கிறது.</p><p>•கர்நாடக அரசியல்வாதிகள் மற்றும் கட்சிகள் தங்களின் அரசியல் லாபத்திற்காகவே தொடர்ந்து காவிரி விஷயத்தில் பிடிவாத போக்கைக் கடைப்பிடித்து வருகின்றன. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-nature-has-prevailed-10000-cusecs-released-from-kabini-dam-water-must-also-be-released-from-the-krishna-raja-sagara-dam">இயற்கை வென்றது: கபினியில் தண்ணீர் திறப்பு- கே.ஆர்.எஸ். அணையிலிருந்தும் தண்ணீர் திறக்க அன்புமணி வலியுறுத்தல்</a></p><p>* கர்நாடகத்தில் காவிரியின் துணை ஆறுகளில் ஒன்றான கபினியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை நிரம்பி வழிவதையடுத்து அங்கிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.</p><p>* இந்த நீர் இன்னும் எவ்வளவு காலத்திற்கு திறக்கப்படும், தமிழகத்தின் தேவைக்கு போதுமானதாக இருக்குமா? என்பதெல்லாம் அடுத்த சில வாரங்களுக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் எவ்வளவு மழை பெய்யும் என்பதைப் பொறுத்தே அமையும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vijayabaskar-mr-vijayabaskar-seek-byelection-ban-lift">இடைதேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனு!</a></p><p>* தடை நீக்கி இடைத்தேர்தல் நடத்த முன்னாள் அமைச்சர்கள் மனு</p><p>* நீதிமன்றம் தடை நீக்குமா என அரசியல் பரபரப்பு</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/commonwealth-games-tn-cm-vijay-money-announce-to-triple-jump-medal-winners">காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்தார் முதல்வர் விஜய்</a></p><p>* ஒரே போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு விளையாட்டு வீரர்கள் பதக்கங்களை வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.</p><p>* இந்த இருவீரர்களும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதிகளில் தங்கி பயின்று, முறையான பயிற்சி பெற்றவர்கள் என்பது தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறைக்குப் பெருமை சேர்ப்பதாகும்.</p>]]></content:encoded></item><item><title>போலி படங்கள் பரவல்: உடனடியாக நிறுத்தப்பட்ட கூகுள் எர்த் ஏ.ஐ. டூல்ஸ்</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/refugees-at-us-mexico-border-google-earth-ai-henk-van</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/refugees-at-us-mexico-border-google-earth-ai-henk-van#comments</comments><guid isPermaLink="false">b98f20c2-917e-4c65-ae83-bf80102f8ea5</guid><pubDate>Sat, 01 Aug 2026 15:34:26 +0000</pubDate><atom:updated>2026-08-01T15:34:26.212Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கூகுள் எர்த்,google earth,nano banana,நானோ பனானா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/lj1fdhqo/Untitled-design-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Google Earth AI Fake Images: Google suspends Nano Banana 2 tool over misinformation fears]]></media:title><media:description type="html"><![CDATA[ Nano Banana 2]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/lj1fdhqo/Untitled-design-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கூகுள் எர்த்-இல் உள்ள செயற்கை நுண்ணறிவு (AI) மூலம், உலகம் எப்படி தோற்றமளிக்கிறது என்பதை மாற்றும் வசதி அறிமுகம் செய்தது கூகுள் நிறுவனம்.</p><h3><strong>கூகுள் எர்த் நானோ பனானா 2</strong></h3><p>கூகுளின் நானோ பனானா 2 என்ற அம்சத்துடன் கூகுள் எர்த் மேம்படுத்தப்பட்டுள்ளது. இது, செயற்கைக்கோள் படங்களை உருவாக்கவும் மாற்றியமைக்கவும் பயனர்களை அனுமதிக்கிறது.</p><p>உலகைப் புதிய கோணத்தில் கற்பனை செய்வதற்கான ஒரு வழியாகவும், வரலாற்றை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கான ஒரு புதிய முயற்சியாகவும் கூகுள் இதை முன்வைக்கிறது.</p><p>நானோ பனானா 2-ஐப் பயன்படுத்தி, ஒரே ஒரு கட்டளையின் மூலம் நீங்கள் கூறுகளைச் சேர்க்கலாம் என்றும் ஓர் இடத்தின் தோற்றத்தை மாற்றலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இதன் மூலமாக போலிப் படங்களை உருவாக்கலாம். அப்படி உருவாக்கப்பட்டு, இணையத் தளத்தில் பகிரப்பட்டால், அந்த படம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.</p><h3><strong>போலி புகைப்படங்கள்</strong></h3><p>இதுகுறித்து செயற்கை நுண்ணறிவு ஆய்வாளர் ஹென்க் வான் கூறுகையில், "ஈரானில் ஒரு அணு உலையையும், காசாவில் குண்டு வெடிப்புக் குழியுடன் கூடிய ஒரு மருத்துவமனையையும் இந்த டூல்ஸ் கொண்டு உருவாக்கினேன்" எனத் தெரிவித்துள்ளார்.</p><p>யாராவது இதை உண்மையான படங்கள் என்று தவறாக நினைத்தால், இந்த இரண்டு காட்சிகளும் இணையத்தில் வைரலாகப் பரவக்கூடும்.</p><p>அதுமட்டுமின்றி, அமெரிக்க- மெக்சிகோ எல்லையில் அகதிகள் பெரிய அளவில் குவிந்திக்கும் படத்தையும் உருவாக்கியுள்ளார். இது போன்ற படங்கள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் என கவலை தெரிவித்தார்.</p><p>கூகுள் எர்த் ஒரு இலவசமாக சேவையை வழங்குவதால், யார் வேண்டுமானாலும் ஒரே ஒரு கட்டளையின் மூலமே குழப்பத்தை உருவாக்க முடியும்.</p><p>உதாரணமாக, சமூக ஊடகங்களில் பரவி வரும் சில படங்கள், 9/11 தாக்குதலைப் போலவே, நியூயார்க் நகரத்தில் உள்ள உலக வர்த்தக மையத்தில் ஒரு விமானம் மோதி நொறுங்குவதைக் காட்சிபடுத்த முடியும்.</p><p>கூகுள் எர்த் ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு முக்கியமான அம்சமாக இருக்கும். இது உலகம் முழுவதிலுமுள்ள செயற்கைக்கோள் படங்களைப் பார்க்கவும், அவற்றை பழைய படங்களுடன் ஒப்பிடவும் உதவுகிறது.</p><p>உதாரணமாக, கடந்த 20 ஆண்டுகளில் ஒரு நகரத்தின் நகர்ப்புற வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இது காட்சிப்படுத்த முடியும்.</p><p>ஆனால், மக்கள் இணையத்தில் போலிக் காட்சிகளை, குறிப்பாக உணர்திறன் மிக்க இடங்களின் போலிக் காட்சிகளை, பரப்பத் தொடங்கினால், அது இணையத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும். தவறான தகவல்கள் இணையத்தில் மிக விரைவாகப் பரவக்கூடும்.</p><h3><strong>கூகுள் நிறுவனம் விளக்கம்</strong></h3><p>இந்த நிலையில் கூகுள் நிறுவனம் பாதுகாப்பு கருதி அந்த சேவையை நிறுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>உலகின் நம்பகமான காட்சிக்காக மக்கள் கூகுள் எர்த்தை தனித்துவமாக நம்புகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். புவிசார் தொழில் வல்லுநர்கள் இந்த அம்சத்தை பல்வேறு பயனுள்ள நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதை நாங்கள் கண்டிருக்கிறோம்.</p><p>இருப்பினும், எங்கள் கொள்கைகளை மீறுவதாகத் தோன்றும் உருவாக்கப்பட்ட படங்களின் ஸ்கிரீன்ஷாட்களை மக்கள் பகிர்வதையும் நாங்கள் பார்த்திருக்கிறோம்.</p><p>எனவே, நாங்கள் வலுவான பாதுகாப்பு வழிமுறைகளைச் செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதால், கூகுள் எர்த்தில் உள்ள இந்த அம்சத்தை நாங்கள் திரும்பப் பெறுகிறோம்.</p><p>உருவாக்கப்பட்ட படங்கள் மற்றவர்கள் பார்ப்பதற்காக பிரதான கூகுள் எர்த் அனுபவத்தில் தோன்றவில்லை என்பதையும், அவை செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டவை என்று வாட்டர்மார்க் செய்யப்பட்டிருந்தன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.</p><p>கூகுளின் மாடல்களில் இருந்து செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தைக் கண்டறிய SynthID உதவினாலும், அது தவறுகளைச் செய்யக்கூடும்.</p><p>சில சந்தர்ப்பங்களில், கூகுள் எர்த்தில் நானோ பனானா வழியாக உருவாக்கப்பட்ட படங்கள், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டவை என்பது ஜெமினியால் கண்டறியப்படவில்ல என்று பயனாளர்களுக்கு தெரியவந்தது” என்று குறிப்பிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்தார் முதல்வர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/commonwealth-games-tn-cm-vijay-money-announce-to-triple-jump-medal-winners</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/commonwealth-games-tn-cm-vijay-money-announce-to-triple-jump-medal-winners#comments</comments><guid isPermaLink="false">d901d2a2-8fec-4423-be01-725821fb0c78</guid><pubDate>Sat, 01 Aug 2026 14:20:49 +0000</pubDate><atom:updated>2026-08-01T14:20:49.354Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>காமன்வெல்த் போட்டி,தவெக விஜய்,Glasgow,commonwealth game,tn cm vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/l05z4o5c/VIjayprice0001.jpg" width="1280"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிரவீன் சித்ரவேல், செல்வ பிரபு- முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/l05z4o5c/VIjayprice0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பவதாவது:-</p><p>ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்றுவரும் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன் சித்ரவேலுக்கும், வெண்கலப் பதக்கம் வென்ற மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த செல்வ பிரபுவுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2>30 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை</h2><p>இவ்வீரர்களின் சாதனையைப் பாராட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக, வெள்ளிப் பதக்கம் வென்ற பிரவீன் சித்ரவேலுக்கு 30 லட்சம் ரூபாயும், வெண்கலப் பதக்கம் செல்வ பிரபுவுக்கு 20 லட்சம் ரூபாயும் வழங்கப்படும்.</p><h2>தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்</h2><p>ஒரே போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு விளையாட்டு வீரர்கள் பதக்கங்களை வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்த இருவீரர்களும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதிகளில்</p><p>தங்கி பயின்று, முறையான பயிற்சி பெற்றவர்கள் என்பது தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறைக்குப் பெருமை சேர்ப்பதாகும்.</p><p>இவர்களின் கடின உழைப்பும், விடாமுயற்சியும், அர்ப்பணிப்பும் வெற்றியைத் தேடித்தந்ததோடு, ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமை அளிக்கிறது. சர்வதேச அரங்கிலும் தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற எனது வாழ்த்துகள்!</p><p>இவ்வாறு முதலமைச்சர் விஜய் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இளைஞர்கள் விரும்பியதை செய்வதற்கான சுதந்திரத்தையே விடுதலை என தவறாக புரிந்து கொள்கிறார்கள்: அஜித் தோவல்</title><link>https://www.maalaimalar.com/news/national/youth-misunderstand-freedom-as-doing-anything-they-want-ajit-doval</link><comments>https://www.maalaimalar.com/news/national/youth-misunderstand-freedom-as-doing-anything-they-want-ajit-doval#comments</comments><guid isPermaLink="false">47d851ab-b238-420f-86ec-ad958fe5c418</guid><pubDate>Sat, 01 Aug 2026 14:08:03 +0000</pubDate><atom:updated>2026-08-01T14:08:03.163Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Ajit Doval,லோக்மான்ய திலக்,அஜித் தோவல்,Lokmanya Tilak</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/o067df42/Untitled-design-9.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Indian Freedom: Ajit Doval warns youth against misinterpreting liberty as doing anything they want]]></media:title><media:description type="html"><![CDATA[ Ajit Doval]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/o067df42/Untitled-design-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சுதந்திரம் என்பது ஒருவர் விரும்பியதைச் செய்வதற்கான உரிமை மட்டுமல்ல என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறினார். </p><p>மேலும், லோக்மான்ய திலகரின் தொலைநோக்குப் பார்வையையும், தேசத்தைக் கட்டமைப்பதில் அவரது பங்களிப்பையும் இளம் தலைமுறையினர் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.</p><h3><strong>லோக்மான்ய திலக் தேசிய விருது</strong></h3><p>மகாராஸ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்ற லோக்மான்ய திலக் தேசிய விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் இந்த ஆண்டுக்கான லோக்மான்யா திலக் விருதை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பெற்றார். </p><p>அப்போது அவர் கூறுகையில், “லோக்மான்ய திலகரின் வாழ்க்கையையும், அவரது ஆளுமையின் ஆழத்தையும் உண்மையாகப் புரிந்துகொள்ள, அந்தக் காலகட்டத்தின் சூழலையும், கட்டுப்பாடுகளையும், அவலமான நிலைமைகளையும் ஒருவர் அறிந்துகொள்ள வேண்டும். </p><p>ஒருவேளை நாமும், குறிப்பாக இளைஞர்களும், முழுமையாகக் கற்பனை செய்து பார்க்க போராடும் யதார்த்தங்கள் தான் இவை.</p><p>ஒவ்வொரு இந்தியரும், குறிப்பாக நமது இளைஞர்கள், அவருடைய வார்த்தைகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.</p><p>இந்தியாவுக்காக அவர் கொண்டிருந்த தொலைநோக்குப் பார்வையையும், அவர் தன்னகத்தே கொண்டிருந்த தேசத்தை கட்டியெழுப்பும் உணர்வையும் கருத்தில் கொள்ள வேண்டும்.</p><h3><strong>இந்தியா அடைந்த சுதந்திரம்</strong></h3><p>இன்றைய இளைஞர்கள், இந்தியா எப்போதுமே இப்படித்தான் இருந்து வந்திருக்கிறது என்று நினைக்கலாம், அல்லது ஒருவர் விரும்பியதைச் செய்வதற்கான வெறும் சுதந்திரத்தையே அவர்கள் விடுதலை எனத் தவறாகப் புரிந்துகொள்ளலாம். ஆனால், சுதந்திரத்தின் உண்மையான அர்த்தம் அதுவல்ல.</p><p>இன்றைய இளைஞர்கள் தங்களை முழுமையாக நாட்டிற்காக அர்ப்பணிக்க வேண்டும். தனிப்பட்ட அல்லது குறுகிய நலன்களை ஒதுக்கி வைத்துவிட்டு, எப்போதும் தேசிய நலனுக்காகவே உழைப்போம் என்று அவர்கள் உறுதியெடுக்க வேண்டும்.</p><p>இத்தகைய நலன்கள் எழுந்தாலும், அவற்றை அவர்கள் புறக்கணிக்க வேண்டும். அந்த விஷயங்கள் இப்போதைக்குக் காத்திருக்கலாம்; தேசத்தைக் கட்டியெழுப்புவதே முன்னுரிமை.</p><p>நமது நாட்டின் வரலாற்றில் ஒரு அரிய வாய்ப்பு காலம் வந்துள்ளது, அதை நாம் நழுவ விடக்கூடாது. இந்த பணியில் நாம் வெற்றி பெற்று, வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத் உருவாக்குவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>&quot;திருட்டுத்தனமா கல்யாணம் பண்ணல..  நாங்க ஏன் பிரிக்கணும்?&quot; - ரவி மோகன், ஆர்த்தி விவகாரத்தில் தாயார் கண்ணீர் பேட்டி!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ravi-mohan-aarthi-court-verdict-mother-emotional-interview</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ravi-mohan-aarthi-court-verdict-mother-emotional-interview#comments</comments><guid isPermaLink="false">077f3c97-76f5-4047-9632-af8ffcefdd21</guid><pubDate>Sat, 01 Aug 2026 14:06:47 +0000</pubDate><atom:updated>2026-08-01T14:06:47.316Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Jayam Ravi,Aarthi,ரவிமோகன்,ஆர்த்தி,CourtVerdict,CelebrityDivorce</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/pvvzm8hd/RaviMohan-Aarthis-Mother" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ RaviMohan - Aarthi's Mother]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/pvvzm8hd/RaviMohan-Aarthis-Mother?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரபல நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ஆகியோரின் குடும்ப விவகாரம் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, ஆர்த்தியின் தாயார் ஊடகங்களுக்கு உணர்ச்சிப்பூர்வமான கண்ணீர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.</p><h2><strong>தாயாரின் உருக்கமான வாதம்:</strong></h2><p>ஊடகவியலாளர்களைச் சந்தித்துப் பேசிய தாயார், தங்கள் குடும்பத்தின் மீதும், தங்களின் மீதும் வைக்கப்படும் விமர்சனங்களுக்குக் கடுமையான மறுப்பு தெரிவித்தார். </p><p>"எந்த ஒரு தாயும் தன் பிள்ளைகளைப் பிரிக்க வேண்டும் என்று ஒருபோதும் நினைக்க மாட்டாள். நாங்கள் ஒன்றும் திருட்டுத்தனமாகவோ அல்லது ரகசியமாகவோ திருமணம் செய்து வைக்கவில்லை. </p><p>சுமார் 10,000 பேரை நேரில் அழைத்து, 10-க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட நிகழ்ச்சிகளை நடத்தித்தான் முறைப்படி இந்தத் திருமணத்தை நடத்தினோம். அப்படி இருக்கும்போது, நாங்கள் ஏன் அவர்களைப் பிரிக்க வேண்டும் என்று நினைக்கப் போகிறோம்?" என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.</p><h2><strong>நீதிமன்றத் தீர்ப்புக்கு நன்றி:</strong></h2><p>தொடர்ந்து பேசிய அவர், இந்தத் குடும்பப் பிரச்சனை தொடர்பான வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்குத் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். </p><p>"இந்த மாதம் முதல் ஆர்த்தி, ரவி மோகன் மற்றும் அவர்களின் குழந்தைகள் ஆரவ் மற்றும் அயான் ஆகியோர் மாதத்திற்கு ஒரு முறை சந்தித்து பேச வேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருந்தது.</p><p>இதுதான் பெற்றோர்களான எங்களுக்கும் இருக்கும் ஆசை நாங்களாக அவர்களை பிரிக்க வேண்டும் என்று ஒரு முறை கூட நினைத்து இல்லை. தங்களுக்கு நியாயமான முறையில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு, "இப்படி ஒரு நல்ல தீர்ப்பைக் கொடுத்ததற்காக அந்த நீதிபதிக்கு எனது பெரிய கும்பிடு" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.</p><h2><strong>பின்னணி:</strong></h2><p>ரவி மோகன் - ஆர்த்தி தம்பதியினருக்கு இடையே நிலவி வந்த குடும்பக் கருத்து வேறுபாடுகள் காரணமாக இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. </p><p>இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் அண்மையில் முக்கிய தீர்ப்பை வழங்கியிருந்தது. இந்தத் தீர்ப்பின் மூலம் தங்களுக்கு நீதி கிடைத்துள்ளதாகக் கருதும் ஆர்த்தியின் தாயார், தங்கள் குடும்பத்தின் மீதான அவதூறுகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இடைதேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijayabaskar-mr-vijayabaskar-seek-byelection-ban-lift</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijayabaskar-mr-vijayabaskar-seek-byelection-ban-lift#comments</comments><guid isPermaLink="false">4cf1ebd3-cb70-4803-b596-b15eb7db22ab</guid><pubDate>Sat, 01 Aug 2026 13:19:11 +0000</pubDate><atom:updated>2026-08-01T13:19:11.530Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசியல்,ByElection,இடைத்தேர்தல்,Ex Minister MR Vijayabaskar,C Vijayabaskar,Election2026</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/ync1syok/C-Vijayabaskar-MR-Vijayabaskar" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ C Vijayabaskar  - MR Vijayabaskar ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/ync1syok/C-Vijayabaskar-MR-Vijayabaskar?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் விராலிமலை மற்றும் கரூர் உள்ளிட்ட 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி, அதிமுக முன்னாள் அமைச்சர்களான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D">சி.விஜயபாஸ்கர்</a> மற்றும்<a href="https://www.maalaimalar.com/topic/mr-vijayabaskar"> எம்.ஆர். விஜயபாஸ்கர் </a>ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனுத் தாக்கல் செய்துள்ளனர்.</p><h2><strong>வழக்கின் பின்னணி:</strong></h2><p>கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை எதிர்த்துத் தொடரப்பட்ட பல்வேறு தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள காரணத்தினால், தமிழகத்தில் காலியாக உள்ள திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கக் கூடாது என கடந்த ஜூலை 10 ஆம் தேதி நீதிமன்றம் தடை விதித்திருந்தது.</p><h2><strong>முன்னாள் அமைச்சர்களின் வாதம்:</strong></h2><p>தற்போது இந்தத் தடையை நீக்கக் கோரி மனுத் தாக்கல் செய்துள்ள முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது மனுவில், "இந்தத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தால், அதனால் எந்தவொரு சிக்கலான சூழ்நிலையும் எழ வாய்ப்பில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p>அதேபோல் எம்.ஆர். விஜயபாஸ்கர் தாக்கல் செய்துள்ள மனுவில், "தேர்தல் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக, மக்கள் பிரதிநிதிகள் (சட்டமன்ற உறுப்பினர்கள்) இல்லாமல் தொகுதி மக்கள் நீண்ட நாட்கள் பாதிக்கப்படக் கூடாது" என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><h2><strong>அரசியல் எதிர்பார்ப்பு:</strong></h2><p>மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால் தொகுதிப் பணிகள் தொய்வடைந்துள்ளதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளன. </p><p>நீதிமன்றம் இந்தத் தடையை நீக்கி இடைத்தேர்தலுக்கு வழிவகுக்குமா என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போதே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறையை ஆதரிப்பவர்கள் தமிழ்நாட்டின் எட்டப்பர்கள்: ராகுல் காந்தி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/constituency-redistribution-supporters-are-ettappans-of-tamil-nadu-rahul-gandhi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/constituency-redistribution-supporters-are-ettappans-of-tamil-nadu-rahul-gandhi#comments</comments><guid isPermaLink="false">7e235c21-1734-420d-a921-0ab63d1db38e</guid><pubDate>Sat, 01 Aug 2026 13:14:37 +0000</pubDate><atom:updated>2026-08-01T13:14:37.776Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Congress,காங்கிரஸ்,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/j1kwv0mc/Untitled-design-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Rahul Gandhi calls BJP plot a threat to Tamil Nadu in Delimitation Betrayal Remark]]></media:title><media:description type="html"><![CDATA[ Rahul Gandhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/j1kwv0mc/Untitled-design-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தொகுதி மறுவரையறைக்கு யார் ஆதரவு அளிக்கிறார்களோ அவர்கள் தமிழ்நாட்டிற்கு எட்டப்பர்களாக இருப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.</p><p>தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி முகாம், மாமல்லபுரத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு சொந்தமான கடற்கரை விடுதியில் கடந்த ஜூலை 23-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.</p><p>இந்த முகாமின் நிறைவு நாளான இன்று ராகுல் காந்தி பங்கேற்று, மாவட்டத் தலைவர்களிடம் கட்சியின் எதிர்கால அரசியல் திட்டங்கள், அமைப்பு வலுப்படுத்தல் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை வழங்கினார்.</p><h3><strong>தொகுதி மறுவரையறை</strong></h3><p>செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி பேசியதாவது:-</p><p>தொகுதி மறுவரையறை என்பது தமிழக மக்களிடம் இருந்து அதிகாரத்தை பறிப்பதாக உள்ளது. இது பாரதிய ஜனதா கட்சியின் சதியாக உள்ளது. </p><p>தமிழ்நாட்டு வரலாற்றில் எட்டப்பர் என்ற பாத்திரம் ஒன்று உள்ளது. எட்டப்பர் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகத்தை விளைவிக்கும் ஒருவராக குறிப்பிடப்படுகிறது.</p><p>தொகுதி மறுவரையறைக்கு யார் ஆதரவு அளித்தாலும், அவர்கள் தமிழ்நாட்டிற்கு துரோகம் விளைவிப்பவர்களாகவே இருக்கிறார்கள்.</p><p>தொகுதி மறுவரையறையை ஆதரிப்பது என்பது தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கும் துரோகம் இழைப்பதற்கு பாரதிய ஜனதா கட்சியை அனுமதிப்பதாக உள்ளது.</p><p>இந்த செயல்களில் ஈடுபடுபவர்கள் 21ஆம் நூற்றாண்டின் எட்டப்பர்களாக இருக்கிறார்கள்.</p><p>தொகுதி மறுவரையறைக்கு எதிராக குரல் கொடுக்கும் தமிழர்களும் மற்றும் தனிப்பெரும் கட்சியாக உள்ள தமிழகத்தை சேர்ந்த கட்சிகளும் தொகுதி மறுவரையறையை மக்களவையில் தோற்கடிக்க வேண்டும்.</p><p>இவ்வாறு செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>இயற்கை வென்றது: கபினியில் தண்ணீர் திறப்பு- கே.ஆர்.எஸ். அணையிலிருந்தும் தண்ணீர் திறக்க அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-nature-has-prevailed-10000-cusecs-released-from-kabini-dam-water-must-also-be-released-from-the-krishna-raja-sagara-dam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-nature-has-prevailed-10000-cusecs-released-from-kabini-dam-water-must-also-be-released-from-the-krishna-raja-sagara-dam#comments</comments><guid isPermaLink="false">e3ca4116-457a-426f-903d-b77361888d10</guid><pubDate>Sat, 01 Aug 2026 12:47:09 +0000</pubDate><atom:updated>2026-08-01T12:47:09.922Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,mekedatu dam,Kabini Dam,கபினி அணை,Cauvery Water Issue</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/sfpgmxco/Anbumani0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கபினி அணை- அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/sfpgmxco/Anbumani0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-</h2><p>கர்நாடகத்தில் காவிரியின் துணை ஆறுகளில் ஒன்றான கபினியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை நிரம்பி வழிவதையடுத்து அங்கிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீர் இன்னும் எவ்வளவு காலத்திற்கு திறக்கப்படும், தமிழகத்தின் தேவைக்கு போதுமானதாக இருக்குமா? என்பதெல்லாம் அடுத்த சில வாரங்களுக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் எவ்வளவு மழை பெய்யும் என்பதைப் பொறுத்தே அமையும். எனினும் இயற்கையின் கொடையால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது நிம்மதியளிக்கிறது.</p><h2>கபினி அணை</h2><p>கபினி அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 2281 அடியாகவும், நீர் இருப்பு 17.50 டி.எம்.சியாகவும் இருந்தது. அணை நிரம்புவதற்கு இன்னும் 3 அடியும், 2 டி.எம்.சி நீருமே தேவை என்ற நிலையில், வினாடிக்கு 11747 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பிற்பகலில் நீர்வரத்து அதிகரித்த நிலையில் நாளைக்குள் அணை நிரம்பி விடும் என்பதால் முன்னெச்சரிக்கையாகவே நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இது இயற்கையின் கொடையே தவிர கர்நாடக அரசின் விருப்பம் அல்ல.</p><h2>ஹாரங்கி அணை</h2><p>காவிரி பாசன மாவட்டங்களுக்கு குறைந்த பட்சம் சம்பா பருவத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்றால் இன்னும் குறைந்தது 40 முதல் 45 டிஎம்சி தண்ணீர் தேவை. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்தால் கபினி அணையிலிருந்து தண்ணீர் வருவதும் நிறுத்தப்பட்டு விடும். அதனால் தமிழகத்திற்கு பயன் கிடைக்காது.</p><p>இன்னொரு அணையான ஹாரங்கி நிரம்பி வழிவதால் அதிலிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. அடுத்த சில நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் என்று தெரிகிறது.</p><h2>கே.ஆர்.எஸ். அணை</h2><p>எனவே, வெள்ளம் போல் வரும் கூடுதல் நீரை சேமித்து வைக்க வசதியாக கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்தும் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும். அதை இன்னும் ஒரு வாரத்திற்கு தொடருவதன் மூலம் தமிழ்நாட்டின் காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடி செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.</p><p>இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>காவிரி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் திங்கட்கிழமை மனுத் தாக்கல்-அமைச்சர் நிர்மல் குமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-dispute-approaching-supreme-court-only-legal-solution-minister-nirmal-kumar</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-dispute-approaching-supreme-court-only-legal-solution-minister-nirmal-kumar#comments</comments><guid isPermaLink="false">801f719c-7dbd-438a-962e-b3981d666cc0</guid><pubDate>Sat, 01 Aug 2026 12:38:18 +0000</pubDate><atom:updated>2026-08-01T12:38:18.598Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Supreme Court,mekedatu dam,Cauvery Issue,அமைச்சர் நிர்மல் குமார்,minister nirmal kumar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/q4cyjvav/nirmal.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Nirmal Kumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/q4cyjvav/nirmal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு உரிய நீரைப் பெற உச்சநீதிமன்றத்தை அணுகுவதே தற்போதுள்ள ஒரே சட்டரீதியான வழிமுறை என்று சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். </p><h2><strong>கர்நாடகத்தின் பிடிவாத போக்கு:</strong></h2><p>செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், "கர்நாடகாவில் எந்த ஆட்சி அமைந்தாலும் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் வழங்கக் கூடாது என்பதில் அவை உறுதியாக செயல்பட்டு வருகின்றன. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளையும் மதிக்காமல் கர்நாடகம் தொடர்ந்து மறுத்து வருகிறது. 100 ஆண்டுகளுக்கும் மேலாக அம்மாநிலத்தின் அரசியலே தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தரக் கூடாது என்பதை மையமாக வைத்தே நகர்கிறது" எனக் குற்றம்சாட்டினார்.</p><h2><strong>மத்திய அரசுக்குக் கண்டனம்:</strong></h2><p>மத்திய ஜல் சக்தி இணை அமைச்சரின் சமீபத்திய கருத்து குறித்து விமர்சித்த அவர், "உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, கீழ்மடை மாநிலமான தமிழ்நாட்டின் ஒப்புதல் இன்றி 0.1 டி.எம்.சி தண்ணீரைக்கூடத் திருப்பிவிடவோ, புதிய அணைகளைக் கட்டவோ முடியாது. இதனைப் புரிந்துகொள்ளாமல் மத்திய அமைச்சர் கர்நாடகாவிற்கு ஆதரவாகப் பேசுவது தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்யும் துரோகம்" என்றார்.</p><h2><strong>தமிழ்நாடு அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை:</strong></h2><p>விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கத் தமிழ்நாடு அரசு உறுதியாக இருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து உரிய நீரைப் பெறுவதற்கான சட்ட நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு தீவிரமாக மேற்கொள்ளும். முதலமைச்சர் சட்ட வல்லுநர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனைகளை நடத்தி வருகிறார். விரைவில் விரிவான சட்ட உத்தி மற்றும் அரசின் அதிகாரப்பூர்வ முடிவுகள் அறிவிக்கப்படும்.</p><h2><strong>மத்திய அரசுக்கு அழுத்தம்</strong>:</h2><p>உச்சநீதிமன்றத்தை நாடுவதுடன், தீர்ப்பாயத்தை வலியுறுத்துவது மற்றும் மத்திய அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் தருவது என அனைத்து சாத்தியக்கூறுகளையும் அரசு பரிசீலித்து வருகிறது.</p><h2><strong>கர்நாடகவுக்கு ஆதரவு:</strong></h2><p>"கர்நாடக அரசியல்வாதிகள் மற்றும் கட்சிகள் தங்களின் அரசியல் லாபத்திற்காகவே தொடர்ந்து காவிரி விஷயத்தில் பிடிவாத போக்கைக் கடைப்பிடித்து வருகின்றன. கர்நாடக அரசியலுக்கு ஆதரவாகத் தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகள் செயல்பட்டு வருவது மிகவும் வருத்தமளிக்கிறது." </p><h2><strong>அரசியல் கட்சிகள் சதி:</strong></h2><p>காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு 17 டிஎம்சி தண்ணீர் கொடுத்திருக்க வேண்டும், காவிரியில் தமிழ்நாட்டிற்கு கர்நாடகா 15 நாட்களுக்கு வினாடிக்கு 2500 கன அடி வீதம் தண்ணீரை திறக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், தவெக அரசு காவிரி நீரை பெற்று விடக்கூடாது என தமிழகத்தில் உள்ள கட்சிகள் அரசியல் செய்கின்றன. எனவே, காவிரி நீரை திறந்து விடக்கோரி வரும் திங்கட்கிழமை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம்.</p> <h2><strong>தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை:</strong></h2><p>தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக வெளியாகும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப்புறம்பானவை என்றும், இந்த ஆண்டு மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று நிர்மல் குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>காவிரி நீரை உடனடியாக தமிழ்நாட்டிற்கு திறந்து விட உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. அவசர மனு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-approaches-supreme-court-seeking-immediate-directions-for-release-of-cauvery-water-to-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-approaches-supreme-court-seeking-immediate-directions-for-release-of-cauvery-water-to-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">eadbdf50-6cff-4f0f-a83a-be2d7cfc1ceb</guid><pubDate>Sat, 01 Aug 2026 12:15:49 +0000</pubDate><atom:updated>2026-08-01T12:15:49.894Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,mekedatu dam,மேகதாது அணை,mekedatu,காவிரி அணை,cauvery dam</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/nn5tszt8/CauveryDam.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காவிரி நீர் விவகாரம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/nn5tszt8/CauveryDam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக மாநில அரசு, தமிழ்நாட்டிற்கு மாதந்தோறும் வழங்க இருக்கும் தண்ணீரை வழங்க மறுத்து வருகிறது. இந்த நிலையில் காவிரி நீரை உடனடியாக தமிழ்நாட்டிற்கு திறந்து விட உச்சநீதிமன்றத்தில் திமுக அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p>இம்மனுக்கள் மூத்த வழக்கறிஞர் பி. வில்சனால் வரைவு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p>திமுக விவசாயிகள் அணி செயலாளர் A.K.S விஜயன் மூலம், சிவில் மேல்முறையீட்டு வழக்கு எண்2453/2007-ல் இடைக்கால மனுவைத் தாக்கல் செய்து, தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை உடனடியாக திறந்துவிட அவசர உத்தரவு பிறப்பிக்கவும், 16.02.2018 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்தவும், காவிரி நீர் ஒழுங்குமுறை குழு (CWRC) மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) வழங்கிய உத்தரவுகளை அமல்படுத்தவும் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது.</p><h2>இந்த மனுவில் மாண்புமிகு உச்சநீதிமன்றத்திடம் பின்வரும் நிவாரணங்கள் கோரப்பட்டுள்ளன:-</h2><p>I. 28.07.2026 அன்று காவிரி நீர் ஒழுங்குமுறை குழு (CWRC) வழங்கியதும், 30.07.2026 அன்று காவிரிநீர் மேலாண்மை ஆணையம் (CWMA) உறுதிசெய்ததுமான உத்தரவை கர்நாடக அரசு உடனடியாக முழுமையாக செயல்படுத்துமாறு உத்தரவிட வேண்டும். அதன்படி, உச்சநீதிமன்றத்தின் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து தொடர்ந்து 15 நாட்களுக்கு தினமும் 3,500 கனஅடி (கியூசெக்ஸ்) தண்ணீர் பிலிகுண்டுலுவில் திறந்துவிடவும், 29.07.2026 முதல் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையையும் ஈடு செய்யுமாறு உத்தரவிட வேண்டும்.</p><h2>கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்</h2><p>II. 26.07.2026 நிலவரப்படி, விகிதாச்சார (Distress Sharing) அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய 9.46 டி.எம்.சி. நீர்பற்றாக்குறையை ஈடு செய்யும் வகையில், 15 நாட்களுக்கு தினமும் சுமார் 7,000 கியூசெக்ஸ் தண்ணீர் பிலிகுண்டுலுவில் கிடைக்குமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.</p><p>III. கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் நீரையும், பிலிகுண்டுலுவில் கிடைக்கும் நீரின் அளவையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) தினசரி கண்காணித்து, அதன் அமலாக்க நிலையை உச்சநீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு உத்தரவிட வேண்டும்.</p><p>IV. வழக்கின் உண்மை நிலைகள் மற்றும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, நீதியை நிலைநாட்டுவதற்குத் தேவையான பிற உரிய உத்தரவுகளையும் உச்சநீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்.</p><p>கர்நாடக அரசு, காவிரி நீர் மேலாண்மை திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள சட்டப்பூர்வ அமைப்புகளின் கட்டாய உத்தரவுகளைப் பின்பற்றாமல் காவிரி நீரைதிறந்துவிட மறுத்துள்ளதால், காவிரி டெல்டாபகுதியைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை இந்த மனுசுட்டிக்காட்டுகிறது.</p><p>விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், உச்சநீதிமன்றத்தின் 16.02.2018 தீர்ப்பை முழுமையாக அமல்படுத்தவும், உடனடி தலையீடு செய்யுமாறு உச்சநீதிமன்றத்திடம் இம்மனு கோருகிறது.</p><p> மேற்கூறிய மேல்முறையீட்டில் திராவிட முன்னேற்ற கழகத்தையும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தையும் (CWMA) ஒரு தரப்பினராக இணைத்துக் கொள்ளுமாறும் திமுக கோரியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கிளாஸ்கோ காமன்வெல்த்: டிரிபிள் ஜம்ப் போட்டியில் தமிழக வீரர்கள் வெள்ளி, வெண்கலப் பதக்கம் வென்று சாதனை</title><link>https://www.maalaimalar.com/sports/glasgow-commonwealth-triple-jump-praveen-chithravel-and-selva-prabhu-won-silver-and-bronze</link><comments>https://www.maalaimalar.com/sports/glasgow-commonwealth-triple-jump-praveen-chithravel-and-selva-prabhu-won-silver-and-bronze#comments</comments><guid isPermaLink="false">a9c7332a-fa83-4d65-b903-8cc8c7caf84d</guid><pubDate>Sat, 01 Aug 2026 11:48:32 +0000</pubDate><atom:updated>2026-08-01T11:48:32.940Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காமன்வெல்த் போட்டி,Glasgow,commonwealth game,கிளாஸ்கோ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/go395o4w/TripleJump0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிரவீன் சித்ரவேல்- செல்வ பிரபு திருமாறன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/go395o4w/TripleJump0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் போட்டியில் இந்தியா சார்பில் பிரவீன் சித்ரவேல் (தமிழ்நாடு), செல்வ பிரபு திருமாறன் (தமிழ்நாடு) ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பிரவீன் சித்ரவேல் வெள்ளிப் பதக்கமும், செல்வ பிரபு வெண்கல பதக்கமும் வென்றனர்.</p><p>கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் எல்டோஸ் பால் மற்றும் அப்துல்லா அபூபக்கர் ஆகியோர் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் வென்றனர். அதன்பின் தற்போது இந்தியாவைச் சேர்ந்த பிரவீன் சித்ரவேல் மற்றும் செல்வ பிரபு திருமாறன் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் வென்றுள்ளனர்.</p><p>ஜமைக்கா வீரர் ஜோர்டன் ஸ்காட் 16.72 மீ. தாண்டி தங்கம் வென்றார். பிரவீன் சித்ரவேல் 16.58மீ தாண்டினார். செல்வ பிரபு திருமாறன் 16.52 மீட்டர் தாண்டினார்.</p><h2>குத்துச்சண்டையில் தங்கம், வெள்ளி</h2><p>குத்துச் சண்டையில் ஆண்களுக்கான 55 கிலோ எடைப்பிரிவில் ஜடுமணி சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார்.</p><p>பெண்களுக்கான போட்டியில் பிரீத்தி பவார், ஜேஸ்மின் லம்போரியா தங்கம் வென்று அசத்தினர். </p><p>பாரா தடகளத்தில் சோனம் ரானா தங்கம், சுபம் ஜெயல் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.</p>]]></content:encoded></item><item><title>பயிர்க்கடன் தள்ளுபடி என்று அறிவித்து விட்டு வட்டியுடன் செலுத்த கட்டாயப்படுத்துவதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/pmk-president-anbumani-ramadoss-how-can-farmers-be-forced-to-repay-crop-loans-with-interest-after-announcing-a-loan-waiver</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/pmk-president-anbumani-ramadoss-how-can-farmers-be-forced-to-repay-crop-loans-with-interest-after-announcing-a-loan-waiver#comments</comments><guid isPermaLink="false">d4161871-0f37-4e35-9474-b8d5e96674b7</guid><pubDate>Sat, 01 Aug 2026 11:19:44 +0000</pubDate><atom:updated>2026-08-01T11:19:44.628Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தவெக அரசு,TVK Govt</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/pa3r95af/Anbumani.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anbumani ramadoss]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/pa3r95af/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களில் உழவர்கள் வாங்கிய பயிர்க்கடன்கள் சில நிபந்தனைகளுடன் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதாக தமிழக அரசு அறிவித்திருக்கும் நிலையில், கடன் பெற்ற விவசாயிகள் அதற்கான தவணைத் தொகையை வட்டியுடன் செலுத்த வேண்டும் என்று கூட்டுறவு சங்கங்கள் அறிவிக்கை அனுப்பியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. வறட்சி பாதிப்பால் ஏற்கனவே வாடிக் கொண்டிருக்கும் விவசாயிகளை இத்தகைய அறிவிக்கைகள் மூலம் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்குவது கண்டிக்கத்தக்கது.</p><h2>வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்</h2><p>மதுரை மாவட்டம் கள்ளந்திரி பகுதியில் உள்ள பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர்க்கடன் பெற்ற  விவசாயிகள் அனைவருக்கும் இந்த அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அந்த அறிவிக்கையில், அரசால் அறிவிக்கப்பட்ட கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடியை பெறுவதற்கு தகுதி பெற்ற உழவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு, அவர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட தொகை அரசால்  விடுவிக்கப்படும் வரை, கடன் பெற்ற உழவர்கள் தவறாமல் தவணை செலுத்த வேண்டும்.</p><p>அவ்வாறு செலுத்தாவிட்டால் அவர்களின் கடன்கள் தவணை தவறிய கடன்களாக கருதப்படும். கடன் தொகை இறுதி செய்யப்பட்டு கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு விடுவிக்கும்போது அந்தத் தொகை சம்பந்தப்பட்ட விவசாயிகளிம் சேமிப்புக் கணக்கில் செலுத்தப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதே போன்று தமிழகத்தின் பல மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்களும் பயிர்க்கடன் பெற்ற உழவர்களுக்கு இதே போன்ற  அறிவிக்கையை அனுப்பியுள்ளன. இதனால் உழவர்கள் பெரும் கவலைக்குள்ளாகியுள்ளனர். தமிழ்நாடு அரசின் இந்த நிர்வாக அணுகுமுறை மிகவும் தவறானது.</p><h2>பயிர்க்கடன் தள்ளுபடி</h2><p>கடந்த காலங்களில் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து சில நாள்களில் அரசாணை பிறப்பிக்கப்படும். அந்த நாளில் உழவர்களின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு விடும். அதற்கான சான்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும். அதனால், உழவர்கள் நிம்மதி அடைவதுடன் அடுத்த பருவத்திற்கு பயிர்க்கடன் பெறுவதற்கும் தகுதி பெறுவார்கள்.</p><p>ஆனால், அதற்கு முற்றிலும் மாறாக, அரசு கடன் தொகையை செலுத்தும் வரை விவசாயிகள் கடன் தவணையை வட்டியுடன் செலுத்த வேண்டும் என்பதும், தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகை உழவர்களின் சேமிப்புக் கணக்கில்தான் செலுத்தப்படும் என்பதும் நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்றாகும்.</p><h2>நேர்மையுடன் செயல்படாத த.வெ.க. அரசு</h2><p>பயிர்க்கடன் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தொடக்கம் முதலாகவே நேர்மையுடன் செயல்படவில்லை. சிறு, குறு விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்த தவெக, ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.50 ஆயிரம் வரையிலான கடன்கள் மட்டுமே முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தது. அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடும்  எதிர்ப்பு தெரிவித்ததால் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் கடன் தொகையின் அளவை ரூ.75 ஆயிரமாக உயர்த்தியது. இப்போது  கடன் தவணையை உடனடியாக செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது.</p><p>தமிழக உழவர்கள் ஏற்கனவே வாழ முடியாத அளவுக்கு துயரத்தில் வாடிக் கொண்டிருக்கின்றனர். நடப்பாண்டில் தென் மேற்கு பருவமழை பொய்த்ததால் தமிழ்நாடு முழுவதும் கடுமையான வறட்சி நிலவுகிறது. வறட்சியால் பாதிக்கப்பட்டு, குறுவை சாகுபடி செய்ய முடியாத விவசாயிகளுக்கு அரசுத் தரப்பில் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், அவர்களை பயிர்க்கடன்களை செலுத்தும்படி கட்டாயப்படுத்துவது மனிதநேயமற்ற செயலாகும்.</p><p>தமிழக அரசு மற்றும் கூட்டுறவுத் துறையின் தவறான அணுகுமுறையும், நிர்வாகக் குளறுபடிகளும்தான் அனைத்து குழப்பங்களுக்கும் காரணம் ஆகும். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாகத் தலையிட்டு, உழவர்களிடம் பயிர்க்கடன் தவணைகளைக் கேட்டு தொல்லை கொடுக்கக் கூடாது என கூட்டுறவு சங்கங்களுக்கு ஆணையிட வேண்டும். கடன் தள்ளுபடி தொகையை உடனடியாக கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பி, பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை உழவர்களுக்கு வழங்க வேண்டும்.</p><p>இவ்வாறு அன்புமணி ராமதாஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>E20 எரிபொருள் கொள்கை: ஈரான் போரின் போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.125 ஆக உயர்ந்திருக்கும்- மத்திய அரசு விளக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/e20-fuel-policy-petrol-would-have-hit-rs125-per-litre-during-iran-war-centre</link><comments>https://www.maalaimalar.com/news/national/e20-fuel-policy-petrol-would-have-hit-rs125-per-litre-during-iran-war-centre#comments</comments><guid isPermaLink="false">6cc925f5-ee91-4aba-bb14-65ef5491282a</guid><pubDate>Sat, 01 Aug 2026 10:55:15 +0000</pubDate><atom:updated>2026-08-01T10:55:15.622Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>என்ன சத்தம் இந்த நேரம் சிறப்பு காட்சி,INDIA,ஈரான்,Iran,Strait of Hormuz,E20 fuel,E20 எரிபொருள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/sxxdvrv9/petrol.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ E20 Fuel  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/sxxdvrv9/petrol.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய அரசு அமல்படுத்தியுள்ள E20 (20% எத்தனால் கலந்த பெட்ரோல்) எரிபொருள் கொள்கைக்கு எதிராக வாகன உரிமையாளர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் மத்தியில் தொடர் சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், மத்திய பெட்ரோலிய அமைச்சகம் முக்கிய விளக்கமளித்துள்ளது.</p><p>அதில், மத்திய கிழக்கில் அமெரிக்கா-ஈரான் போர் உச்சத்தில் இருந்தபோது E20 கொள்கை அமலில் இல்லாதிருந்தால், இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.125 வரை உயர்ந்து பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும் என்று அரசு சுட்டிக்காட்டியுள்ளது.</p><h2><strong>பெட்ரோலிய அமைச்சகம் அறிக்கை:</strong></h2><p>இந்தியாவில் 2023-க்கு முன் உற்பத்தி செய்யப்பட்ட வாகன உரிமையாளர்கள் பலர், E20 பெட்ரோல் பயன்படுத்துவதால் வாகனங்களின் மைலேஜ் குறைவதாகவும், எஞ்சின் பராமரிப்புச் செலவு அதிகரிப்பதாகவும் புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும் எதிர்க்கட்சிகளும் இக்கொள்கைக்கு எதிராகப் போராடி வருகின்றன. இந்த சர்ச்சைகளுக்குப் பதிலளிக்கும் வகையில், ஒரே வாரத்தில் 4-வது முறையாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அறிக்கை வெளியீட்டுத் தரவுகளுடன் விளக்கம் அளித்துள்ளது.</p><h2><strong>ஈரான் போரும் கச்சா எண்ணெய் விலையும்:</strong></h2><p>அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியபோது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றிற்கு $135 (சுமார் ரூ.13,000) ஆக உயர்ந்தது. எத்தனால் கலப்பு இல்லாதிருந்தால் டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.125-ஐத் தொட்டிருக்கும். ஆனால், 20% எத்தனால் கலக்கப்பட்டதால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.94.77 என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டு, நுகர்வோருக்கு லிட்டருக்கு ரூ.30 வரை சேமிப்பு கிடைத்தது.</p><h2><strong>அரசின் விளக்கம்:</strong></h2><p>எத்தனால் பயன்பாட்டால் மைலேஜ் சற்று குறைவதை ஒப்புக் கொண்ட மத்திய அரசு, நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும், சர்வதேசச் சந்தை விலையேற்றத்திலிருந்து நுகர்வோரைக் காக்கவும் இக்கொள்கை மிகவும் முக்கியமானது எனக் குறிப்பிட்டுள்ளது.</p><h2><strong>இறக்குமதி குறைப்பு:</strong></h2><p>இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 85% இறக்குமதியை மட்டுமே நம்பியிருக்கும் சூழலில், உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் எத்தனாலை 20% கலப்பது நாட்டின் அந்நியச் செலாவணியையும் பெருமளவில் சேமிக்கிறது என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது. வாகன உரிமையாளர்களின் புகார்களுக்கு மத்தியில், சர்வதேசப் பொருளாதாரப் பாதுகாப்பைக் காரணம் காட்டி E20 கொள்கையை மத்திய அரசு தீவிரமாக நியாயப்படுத்தி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>வரலாறு எழுதப்படும் போதெல்லாம் அஜித் தோவலின் பெயர் எழுதப்படும்: லோக்மான்ய திலக் விருது வழங்கி அமித் ஷா பாராட்டு</title><link>https://www.maalaimalar.com/news/national/whenever-history-is-written-ajit-doval-will-be-named-amit-shah-praise-at-lokmanya-tilak-award</link><comments>https://www.maalaimalar.com/news/national/whenever-history-is-written-ajit-doval-will-be-named-amit-shah-praise-at-lokmanya-tilak-award#comments</comments><guid isPermaLink="false">a4d5b463-ae4a-45ee-a8fa-ae4ea67c8c44</guid><pubDate>Sat, 01 Aug 2026 10:53:16 +0000</pubDate><atom:updated>2026-08-01T10:53:16.056Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமித் ஷா,Ajit Doval,amith shah,அஜித் தோவல்,Lokmanya Tilak,Bal Gangadhar Tilak,பால கங்காதர திலகர்,லோக்மன்யா திலக்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/x9jn8mli/Untitled-design-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Amit Shah hails Ajit Doval’s key role in India’s national security]]></media:title><media:description type="html"><![CDATA[ Lokmanya Tilak Award]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/x9jn8mli/Untitled-design-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு, இந்த ஆண்டுக்கான லோக்மான்ய திலக் தேசிய விருதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வழங்கினார். </p><h3><strong>லோக்மான்ய திலக் தேசிய விருது</strong></h3><p>லோக்மான்ய திலக் தேசிய விருது என்பது தேச வளர்ச்சி மற்றும் முன்னேற்றத் துறையில் ஆற்றிய பணிகளைக் கௌரவிப்பதற்காக நிறுவப்பட்ட ஒரு தேசிய அளவிலான விருதாகும். </p><p>இது லோக்மான்யா என்று பிரபலமாக அறியப்பட்ட இந்திய தேசியவாதத் தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான பாலகங்காதர திலகரின் பெயரால் அழைக்கப்படுகிறது.</p><p>இந்த விருது ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி லோக்மான்ய திலகரின் நினைவு தினத்தை முன்னிட்டு வழங்கப்பட்டு வருகிறது. </p><p>இந்நிலையில் மகாராஸ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்ற விழாவில், தோவலுக்கு 2026-ஆம் ஆண்டுக்கான லோக்மான்ய திலக் விருதை அமித் ஷா வழங்கினார்.</p><h3><strong>அஜித் தோவலை பாராட்டிய அமித் ஷா</strong></h3><p>பின்னர் அமித் ஷா பேசியதாவது:-</p><p>இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை வலுப்படுத்துவதில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பெரும் பங்கு ஆற்றியுள்ளார்.</p><p>தேசியப் பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் மோடி எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும், டோவல் பின்னணியில் தனது பங்கையும், ஆலோசனையையும் வழங்கியுள்ளார்.</p><p>வரலாறு எழுதப்படும்போதெல்லாம் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டுப் பாதுகாப்பை யாராவது பகுப்பாய்வு செய்தால், அப்போது தெளிவாக அஜித் தோவலுக்கு ஒரு பொன்னான பக்கம் ஒதுக்கி வைக்கப்பட வேண்டும். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை.</p><p>இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எஃகு போன்ற உறுதியான முதுகெலும்பு கொண்ட வெளியுறவுக் கொள்கையாக மாறியுள்ளது. இதை யாராலும் மறுக்க முடியாது. நாம் சுய மரியாதையுடன் சேர்த்து, உலகில் நமது நிலையை வலுப்படுத்தியுள்ளோம்.</p><p>2014-ல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகப் பொறுப்பேற்ற பிறகு, தோவல் பல மூலோபாய யோசனைகளைக் களத்தில் செயல்படுத்த உதவியதுடன், இந்தியாவின் ஆயுதப் படைகளை நவீனமயமாக்குவதிலும், தொழில்நுட்பத்தை வலுப்படுத்துவதிலும், செயல்பாட்டுத் திறனை அதிகரிப்பதிலும், நாட்டின் பாதுகாப்புத் தயார்நிலையை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றினார்.</p><p>அஜித் தோவல் என் வீட்டிற்கு வந்திருந்தது எனக்கு நினைவிருக்கிறது. அவர் அளித்த தகவல்களின் விளைவாக, குஜராத் காவல்துறை அகமதாபாத் குண்டுவெடிப்பு சம்பவத்தை மட்டுமல்ல, நாடு முழுவதும் நடந்த 13 குண்டுவெடிப்பு சம்பவங்களையும் ஒரே நேரத்தில் தீர்த்து வைத்தது. இது ஒரு மிகப்பெரிய சாதனை.</p><p>ஒரு பத்திரிகையாளர் எவ்வளவு அச்சமற்றவராக இருக்க முடியும் என்பதை பால கங்காதர திலகரின் கேசரி பத்திரிக்கையை படித்தால் மட்டுமே உணர முடியும்.</p><p>லோக்மான்ய பாலகங்காதர திலகர் வகுத்த கலாச்சார தேசிய வாதப் பாதையில், இந்தியா இப்போது உறுதியாக முன்னேறி வருகிறது. அந்தப் பயணத்தை யாராலும் பின்னோக்கித் திருப்ப முடியாது.</p><p>அத்தகைய நபர்கள் கௌரவிக்கப்படும்போது, அவர்கள் மீதான சமூகத்தின் நன்றியுணர்வு வெளிப்படுகிறது. </p><p>இன்று அஜித் தோவலுக்கு வழங்கப்பட்டுள்ள திலக் விருது, இந்த நாட்டிற்காக வாழ்ந்து உழைப்பவர்களுக்கு, இது ஒரு பெரும் உத்வேகத்தின் இடமாக அமையும்” என்று அமித் ஷா கூரினார்.</p><h3>அஜித் தோவல்</h3><p>இதைத்தொடர்ந்து பேசிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், “லோக்மான்ய பாலகங்காதர திலகர் பெயர் சூட்டப்பட்ட இந்த விருதுக்கு நான் நன்றி தெரிவித்து, அதனைப் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்.</p><p>பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா போன்ற தலைவர்கள் நமக்குக் கிடைத்திருப்பது பெரும் பாக்கியம்” என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் பல பிரிவுகளாகச் செயல்படும் காங்கிரஸ்: &apos;உட்கட்சிப் பூசலே வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை&apos;-ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rahul-gandhi-warns-factionalism-blocking-congress-progress-in-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rahul-gandhi-warns-factionalism-blocking-congress-progress-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">173dea37-2db9-4612-bffb-1f2cf2070fbd</guid><pubDate>Sat, 01 Aug 2026 10:46:02 +0000</pubDate><atom:updated>2026-08-01T10:46:02.215Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Tamil Nadu,தமிழ்நாடு காங்கிரஸ்,Congress Party,காங்கிரஸ் அணி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/o0xbzbsn/rahul.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rahul Gandhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/o0xbzbsn/rahul.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி முகாம் மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு சொந்தமான கடற்கரை விடுதியில் கடந்த 23-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பயிற்சி முகாமின் நிறைவு நாளான இன்று நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்றார். சென்னை விமான நிலையத்தில் ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். </p><p>இந்த நிறைவு விழாவில் பங்கேற்று பேசிய ராகுல்காந்தி, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு கோஷ்டிகளாகப் பிரிந்து தனித்தனியாகச் செயல்பட்டு வருவது கட்சியின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாகக் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2><strong>உட்கட்சிப் பூசல் தான் பெரிய சவால்:</strong></h2><p>பயிற்சி கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி வலுவடையாததற்குப் பிரதானக் காரணம் உட்கட்சிப் பூசல்களும், பல்வேறு அணிகளாகக் நிர்வாகிகள் தனித்து இயங்குவதுமே ஆகும் என வேதனை தெரிவித்தார். "கட்சியின் உட்கட்சிப் பிரச்சனைகளே காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக உள்ளன" என்று அவர் தனது உரையில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><h2><strong>ஒற்றுமையின் முக்கியத்துவம் :</strong></h2><p>மாநில அளவில் தலைவர்களிடையேயும் தொண்டர்களிடையேயும் ஒருங்கிணைப்பு இல்லாத சூழல் நிலவுவது, களத்தில் கட்சியின் செயல்பாடுகளைப் பாதிப்பதாக மேலிடத்திற்குப் பல்வேறு புகார்கள் சென்ற வண்ணமாக இருந்தன. இந்தச் சூழலில், ராகுல் காந்தியின் இந்த நேரடி விமர்சனம் மற்றும் எச்சரிக்கை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் காரசாரமான விவாதத்தையும் கிளப்பியுள்ளது.</p><p>அரசியல் களத்தில் வலுவான முன்னெடுப்புகளை எடுக்க வேண்டுமானால், தலைவர்கள் தங்கள் சொந்த நலன்களைத் தாண்டி கட்சியின் ஒற்றுமையை முன்னிறுத்த வேண்டும் எனவும், அனைத்து கோஷ்டிப் பூசல்களையும் மறந்து அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவே புதிய மாவட்ட செயலாளர்கயை நியமித்துள்ளோம் என ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் போட்டி: குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனைகள் பிரீத்தி பவார்,  லம்போரியா தங்கம் வென்றனர்</title><link>https://www.maalaimalar.com/sports/glasgow-commonwealth-lovlina-borgohain-preeti-pawar-won-gold</link><comments>https://www.maalaimalar.com/sports/glasgow-commonwealth-lovlina-borgohain-preeti-pawar-won-gold#comments</comments><guid isPermaLink="false">10ffcee2-3e5f-4af6-b9dc-a4c1c336a8b8</guid><pubDate>Sat, 01 Aug 2026 10:39:01 +0000</pubDate><atom:updated>2026-08-01T10:39:01.395Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>காமன்வெல்த் போட்டி,Lovlina Borgohain,Glasgow,லவ்லினா போர்கோஹெய்ன்,commonwealth game,கிளாஸ்கோ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/imsr3w96/GoldMedal.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிரீத்தி பவார்- லம்போரியா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/imsr3w96/GoldMedal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஸ்காட்லாந்தில் நடைபெற்று வரும் கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் பளுதூக்குதலில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பதக்கங்களை குவித்தனர். பளுதூக்குதல் போட்டியில் மட்டும் இந்தியாவுக்கு 1 தங்கம், 6 வெள்ளி, 1 வெண்கலம் என 8 பதக்கங்கள் கிடைத்துள்ளன.</p><h2>குத்துச்சண்டையில் 10 பதக்கங்கள்</h2><p>இன்று குத்துச்சண்டையில் மட்டும் 10 பதக்கங்களை உறுதி செய்துள்ளனர். இதில் 6 வீராங்கனைகள் மற்றும் 4 வீரர்கள் ஆவார்கள்.</p><p>இன்று மதியம் நடைபெற்ற பெண்களுக்கான 54 கிலோ எடைப்பிரிவு குத்துச் சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை பிரீத்தி பவார், கனடாவின் ஸ்கார்லெட் டெல்காடோவை எதிர்கொண்டார். இதில் பிரீத்தி பவார் 5-0 என வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றார்.</p><h2>லம்போரியா</h2><p>இவரைத் தொடர்ந்து ஜாஸ்மின் லம்போரியா 57 கிலோ எடைப்பிரிவில் வடக்கு அயர்லாந்து வீராங்கனை மைக்கேலா வால்ஷை வீழ்த்தி தங்கம் வென்றார்.</p><p>குத்துச் சண்டை போட்டியில் சாக்ஷி சவுத்ரி (51), லவ்லினா போர்கோஹெய்ன் (75), பிரியா கங்காஸ் (60), அருந்ததி சவுத்ரி (70) ஆகிய வீராங்கனைகள் இன்னும் பதக்கம் வெல்ல இருக்கின்றனர். </p><p>அதேபோல் ஆண்கள் பிரிவில் ஜடுமணி சிங் (55), சச்சின் சிவாச் (60), அங்குஷ் பங்கல் (80), நரேந்தர் பெர்வால் (90+) ஆகியோர் பதக்கம் வெல்ல இருக்கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய் கர்நாடகாவிற்கு சென்றால் அவரை கட்டி வைத்து விடுவார்கள்- அனிதா ராதாகிருஷ்ணன் சர்ச்சை பேச்சு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anitha-radhakrishnan-again-controversy-speech</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anitha-radhakrishnan-again-controversy-speech#comments</comments><guid isPermaLink="false">fdef7b80-fd9d-4d42-b60e-cf5ed9670bb2</guid><pubDate>Sat, 01 Aug 2026 10:26:37 +0000</pubDate><atom:updated>2026-08-01T10:26:37.713Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,விஜய்,கர்நாடகா,Karnataka,vijay,அனிதா ராதாகிருஷ்ணன்,Anitha Radhakrishnan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/855fg9b6/anitharadhakrishnan.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அனிதா ராதாகிருஷ்ணன்]]></media:title><media:description type="html"><![CDATA[ அனிதா ராதாகிருஷ்ணன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/855fg9b6/anitharadhakrishnan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தற்போதுள்ள தமிழக முதலமைச்சரால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. ஆடுகிறார் பாடுகிறார். இதைத் தவிர மற்ற எந்த விஷயம் செய்வது இல்லை.</aside><p>தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் தி.மு.க. பாக முகவர்கள் கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் தி.மு.க. அமைச்சரும், திருச்செந்தூர்  தொகுதி எம்.எல்.ஏ.வுமான <a href="https://www.maalaimalar.com/topic/அனிதா-ராதாகிருஷ்ணன்">அனிதா ராதாகிருஷ்ணன்</a> கலந்து கொண்டு தி.மு.க. கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பேசினார். </p><h2><strong>சர்ச்சை பேச்சு</strong></h2><p>அவர் பேசுகையில் முதலமைச்சர் விஜயை விமர்சித்தும், ஒருமையிலும் பேசினார். அவர் பேசியதாவது:-</p><p>தற்போதுள்ள தமிழக முதலமைச்சரால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. ஆடுகிறார் பாடுகிறார். இதைத் தவிர மற்ற எந்த விஷயம் செய்வது இல்லை. தற்போது காவிரி பிரச்சனையில் என்ன பாடு படுது. நான் ஹெலிகாப்டரில் சென்று நேரில் பார்ப்பேன் என்கிறார். முதலமைச்சர் விஜய் கர்நாடகாவிற்கு சென்றால் அவரை அங்கு பிடித்து கட்டி வைத்து விடுவார்கள் என்பதால் ஹெலிகாப்டரில் செல்வேன் என்கிறார். தேவையில்லாமல் அந்த மாநிலத்திற்கு சென்று ஒப்பந்தம் போட்டு நமது மாநிலம் கெட்டுப் போய் விடக்கூடாது. காமராஜர் பெயரை சொல்லி கதை விட்டு ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். இதை நாம் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p><p>ஏற்கனவே முதலமைச்சர் விஜய் குறித்து அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் மீண்டும் முதலமைச்சர் விஜயை விமர்சித்தும், ஒருமையிலும் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&apos;இயற்கை யாருக்கும் சொந்தமானது அல்ல..&apos;: கடையடைப்பு போராட்டத்தை திரும்ப பெற கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் வலியுறுத்தல்!</title><link>https://www.maalaimalar.com/news/topnews/nature-belongs-to-no-one-karnataka-cm-dk-shivakumar</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/nature-belongs-to-no-one-karnataka-cm-dk-shivakumar#comments</comments><guid isPermaLink="false">8c8f894e-a1b8-4095-b329-6a08d81bf644</guid><pubDate>Sat, 01 Aug 2026 10:18:42 +0000</pubDate><atom:updated>2026-08-01T10:18:42.777Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,டி.கே.சிவக்குமார்,காவிரி நீர்,Tamilnadu Government,Cauvery river,CM D.K. Shivakumar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/575ztqyb/DK.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM D.K. Shivakumar ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/575ztqyb/DK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p>காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிமிடம் அதிகளவு நீரைத் தேக்கி வைத்தால் வெள்ள அபாயம் ஏற்படும் என எச்சரித்துள்ள கர்நாடக முதல்வர் <a href="https://www.maalaimalar.com/news/national/dk-shivakumar-says-tn-cm-vijay-should-not-visit-karnataka-in-current-situation">டி.கே. சிவக்குமார்,</a> "இயற்கை யாருக்கும் சொந்தமானது அல்ல" எனக் கூறி, தமிழ்நாட்டிற்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ள கடையடைப்பு போராட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.</p><h2><strong>அணைகளின் தற்போதைய நிலை</strong>:</h2><p>காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் தொடர் கனமழை பெய்து வருவதால், கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் (KRS), கபினி உள்ளிட்ட முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது. அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வரும் நிலையில், பாதுகாப்பு கருதி உபரி நீர் ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.</p><h2><strong>இயற்கையின் விதி:</strong></h2><p>"இயற்கை என்பது குறிப்பிட்ட ஒரு மாநிலத்திற்கோ அல்லது நபருக்கோ சொந்தமானது அல்ல. மழை பொழியும்போது அணைகளில் அளவிற்கு அதிகமாக நீரைத் தேக்கி வைத்தால் அணை உடைந்தோ அல்லது கரைபுரண்டு ஓடியோ வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு நாமே அடித்துச் செல்லப்படும் அபாயம் உள்ளது" எனவே தண்ணீரை நாம் திறந்து விட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.</p><h2><strong>கடையடைப்பு அறிவிப்புக்கு எதிர்ப்பு:</strong></h2><p>காவிரி நீர் திறப்பு மற்றும் அது தொடர்பான சர்ச்சைகளை முன்னிட்டு தமிழ்நாட்டிற்கு எதிராகவும், காவிரி விவகாரத்தைக் கண்டித்தும் அறிவிக்கப்பட்டுள்ள கடையடைப்பு மற்றும் போராட்ட அறிவிப்புகளை அமைதியை விரும்பும் அமைப்புகளும் கன்னட அமைப்புகளும் திரும்பப் பெற வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p><p>காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் (CWRC) வழிகாட்டுதல்கள் மற்றும் அணைகளின் நீர்வரத்து சூழலைக் கருத்தில் கொண்டு, இயல்பான நீர் திறப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இரு மாநில எல்லையோரப் பகுதிகளில் தேவையற்ற பதற்றத்தைத் தவிர்க்கவும், வர்த்தகம் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்கவும் அனைத்துத் தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அம்மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சாதி, மதமற்றவர் என உடனடியாக சான்றிதழ் வழங்க சட்டம் நிறைவேற்ற உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் நடிகர் பார்த்திபன் வழக்கு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/parthiban-seeks-legal-mandate-for-caste-religionless-certification</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/parthiban-seeks-legal-mandate-for-caste-religionless-certification#comments</comments><guid isPermaLink="false">72d31710-2cee-4b92-9d10-5e112ddf55c0</guid><pubDate>Sat, 01 Aug 2026 10:14:57 +0000</pubDate><atom:updated>2026-08-01T10:14:57.342Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>பார்த்திபன்,Parthiban,Chennai High court,சென்னை உயர்நீதிமன்றம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/ous7h7r1/Parthiban.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை உயர்நீதிமன்றம்-பார்த்திபன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/ous7h7r1/Parthiban.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் சாதி, மதமற்றவர் என சான்றிதழ் பெற விரும்புவோருக்கு உடனடியாக சான்று வழங்கும் வகையில் சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என பொதுநல வழக்கில் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>சாதி, மதமற்றவர் என சான்றிதழ் பெற்றுள்ளார் பார்த்திபன்</h2><p>சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் நடிகர் பார்த்திபன் சாதி, மதமற்றவர் சான்றிதழ் பெற்றார். அந்த சான்றிதழை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜராகி காண்பித்தார். அப்போது நீங்கள் மட்டும் பயன் அடைந்தார் போதாது, இதுபோன்று சான்றிதழ் பெற விரும்புவோர் பயனடைய வேண்டும் என்று கூறியிருந்தார்.</p><p>இந்த நிலையில்தான் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் சாதி, மதமற்றவர் என சான்றிதழ் பெற விரும்புவோருக்கு உடனடியாக சான்று வழங்கும் வகையில் சட்டம் இயற்ற அல்லது அரசாணை வெளியிட உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>2025-ம் ஆண்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆளுநருக்கும் அப்போதைய அரசுக்கும் சுமூக உறவு இல்லாததால் சட்டம் இயற்றப்படவில்லை. தற்போது அதுபோன்ற நிலை இல்லை. இதனால் சட்டம் இயற்ற உத்தரவிட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.</p><p>இந்த மனு ஆகஸ்ட் 3-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>குடியுரிமை சரிபார்ப்பு இல்லாமல் வெளிநாட்டு குடிமக்களை நாடு கடத்த முடியாது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/national/no-citizenship-verification-no-deportation-centre-tells-supreme-court</link><comments>https://www.maalaimalar.com/news/national/no-citizenship-verification-no-deportation-centre-tells-supreme-court#comments</comments><guid isPermaLink="false">4ac2c94d-7073-4f1d-905f-c44c938f7aaa</guid><pubDate>Sat, 01 Aug 2026 09:59:31 +0000</pubDate><atom:updated>2026-08-01T09:59:31.167Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>citizenship,அசாம்,Assam,CAA,foreign citizens,வெளிநாட்டவர் குடியுரிமை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/1pna4vyt/Untitled-design-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Deportation Rules: Centre tells Supreme Court foreigners can’t be deported without confirmed citizenship and home country acceptance]]></media:title><media:description type="html"><![CDATA[ Indian citizenship]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/1pna4vyt/Untitled-design-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h3><strong>வெளிநாட்டவர் குடியுரிமை</strong></h3><p>ஒரு வெளிநாட்டவரின் குடியுரிமை சரிபார்க்கப்படாத நிலையில், அவரது சொந்த நாடு அவரது குடியுரிமையை உறுதிசெய்து அவரை ஏற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டாலன்றி, அவரை நாடு கடத்த முடியாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. </p><p>நாடு கடத்தப்படுவதற்கு உடனடி வாய்ப்பு இல்லாதபோதிலும், அசாமில் வெளிநாட்டினர் என அறிவிக்கப்பட்டவர்கள் காலவரையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மத்திய உள்துறை அமைச்சகம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.</p><h3><strong>மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்</strong></h3><p>இதுகுறித்து மத்திய அரசு கூறுகையில், “தேசியம் சரிபார்க்கப்படாத ஒரு வெளிநாட்டவரை, அவரது தேசியம் உறுதிசெய்யப்பட்டாலோ, செல்லுபடியாகும் பயண ஆவணம் வைத்திருந்தாலோ, அல்லது சம்பந்தப்பட்ட தாய்நாட்டின் ஏற்பு கிடைத்தாலோ மட்டுமே அவரது தாய் நாட்டிற்கு நாடு கடத்த முடியும். </p><p>தேசிய சரிபார்ப்பு இல்லாமல் நாடு கடத்தும் நடைமுறையைத் தொடங்க முடியாது. ஒரு வெளிநாட்டவர், செல்லுபடியாகும் பயண ஆவணம் அல்லது கடவுச்சீட்டை வைத்திருந்தாலோ மற்றும் வேறு எந்தக் குற்ற வழக்கும் நிலுவையில் இல்லாவிட்டாலோ,</p><p>தண்டனைக் காலம் அல்லது நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்த பிறகு, சம்பந்தப்பட்ட மாநிலம், யூனியன் பிரதேசம் அல்லது வெளிநாட்டினர் மண்டலப் பதிவு அலுவலகத்தால் அவரை நாடு கடத்த முடியும்.</p><p>ஒருவரை நாடு கடத்துவதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட நாட்டின் தூதரகம் அல்லது உயர் ஆணையத்திடம் இருந்து குடியுரிமை சரிபார்ப்பு செயல்முறையின் மூலம் தேவையான பயண ஆவணத்தைப் பெறுவது அவசியம்,” என்றும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.</p>]]></content:encoded></item><item><title>எரிச்சல் மற்றும் விரக்தி மோடில் அலறும் திமுக- தவெக சாடல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-it-wing-indictment-dmk</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-it-wing-indictment-dmk#comments</comments><guid isPermaLink="false">2e8a4f2a-36f8-48ee-8362-49d7ed6b3c96</guid><pubDate>Sat, 01 Aug 2026 09:55:16 +0000</pubDate><atom:updated>2026-08-01T09:55:16.371Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,தவெக,mekedatu dam,மேகதாது அணை,tvk,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/k4ns9dv2/TVK.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தவெக]]></media:title><media:description type="html"><![CDATA[ தவெக]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/k4ns9dv2/TVK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>ஆட்சியில் இருக்கும்போது சத்தம் போடுவதுபோல சவுண்ட் கொடுத்துவிட்டு, மியூட் மோடுக்குச் சென்று, மியாவ் என்றுகூடச் சத்தம் எழுப்பாத காரியப் பூனைதான் திமுக.</aside><p><a href="https://www.maalaimalar.com/topic/தவெக">தமிழக வெற்றிக்கழக</a> தகவல் தொழில்நுட்ப அணியின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><h2><strong>மக்களாட்சி</strong></h2><p>விவசாயிகள் நலன்களுக்காகவும் கர்நாடக வாழ் தமிழ்ச் சொந்தங்களுக்காகவும் யோசித்துச் செயல்படுவதுதான் மக்கள் விரும்பும் முதல்வர், நம் வெற்றித் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மனசாட்சி உள்ள மக்களாட்சி.</p><p>திமுக போல சுயநலம் கொண்டு தனி ஆவர்த்தனம் செய்யத் துடிப்பவர் இல்லை, எங்கள் வெற்றித் தலைவர்.</p><p> தொடர்ந்து பல ஆண்டுகளாக ஒன்றிய அரசிடம் பேரம் பேசி, பெற வேண்டிய இலாகாக்களைப் பெற்ற போதெல்லாம் காவிரி விவகாரத்திற்காக ஒரு மந்திரி பதவியையாவது, ஒருநாளாவது உதறி இருக்குமா இந்தத் திமுக?</p><h2><strong>மக்கள் ஏற்கமாட்டார்கள்</strong></h2><p>அத்தனை ஆண்டுகளில் ஒருமுறையாவது காவிரிப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண முயன்றிருக்குமா இந்தத் திமுக? அப்போதெல்லாம் பதவியில் ஒட்டிக்கொண்டு சுகம் கண்ட சுயநல இயக்கம்தான் இந்தத் திமுக.</p><p> ஆட்சியில் இருக்கும்போது சத்தம் போடுவதுபோல சவுண்ட் கொடுத்துவிட்டு, மியூட் மோடுக்குச் சென்று, மியாவ் என்றுகூடச் சத்தம் எழுப்பாத காரியப் பூனைதான் திமுக. ஆனால், ஆட்சி பறிபோன பிறகு பாருங்கள் மண், மொழி, மானம் என்று உரிமை முழக்கத்தை எழுப்பி எம்பி எம்பிக் குதிக்கும்.</p><p>எப்போதும் மக்களைத் தூண்டிவிட்டுக் குளிர்காயும் திமுக, இப்போது எரிச்சல் மற்றும் விரக்தி மோடில் அலறிக்கொண்டு இருக்கிறது. கடந்த மே மாதத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட கட்சியாகத் தவிக்கும் திமுக, காவிரி விவகாரத்தில் கபட நாடகமாடுவதை மக்கள் ஏற்கமாட்டார்கள்.</p><p> எனவே, காவிரிப் பிரச்சனையில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-issue-mk-stalin-question-to-cm-vijay-all-party-meeting">ஸ்டாலின்</a> அவர்களின், திமுக ஆட்சி போய்விட்டதே,  தவெக ஆட்சி வந்து விட்டதே என்று வன்மமாகப் பேசாமல் மக்கள் நலன் சார்ந்து உண்மையாகப் பேச வேண்டும். அப்படி அவரால் பேச முடியுமா முடியாதா? என்றால் அவர் உள்மனம் முடியாது என்றுதான் உண்மையான வன்மம் பேசும். இது அவர் மட்டுமன்று, உலகமே அறிந்த உண்மை என்று கூறப்பட்டுள்ளது. </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">விவசாயிகள் நலன்களுக்காகவும்<br>கர்நாடக வாழ் தமிழ்ச் சொந்தங்களுக்காகவும் யோசித்துச் செயல்படுவதுதான் மக்கள் விரும்பும் முதல்வர், நம் வெற்றித் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மனசாட்சி உள்ள மக்களாட்சி.<br><br>திமுக போல சுயநலம் கொண்டு தனி ஆவர்த்தனம் செய்யத் துடிப்பவர் இல்லை,…</p>&mdash; TVK IT Wing Official (@TVKHQITWingOffl) <a href="https://x.com/TVKHQITWingOffl/status/2083479568040751234?ref_src=twsrc%5Etfw">August 1, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>சிக்கன் பிரியாணி சாப்பிடுவதால் குழந்தைகள் கெட்டுப்போய் விடுவார்களா?- அமைச்சர் ராஜ்மோகன் கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajmohan-question-will-children-be-spoiled-by-eating-chicken-biryani</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajmohan-question-will-children-be-spoiled-by-eating-chicken-biryani#comments</comments><guid isPermaLink="false">0379050c-adf1-4ee3-8590-2faba072b8c5</guid><pubDate>Sat, 01 Aug 2026 09:42:52 +0000</pubDate><atom:updated>2026-08-01T09:42:52.826Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Biryani,பிரியாணி,Chicken Biryani,சிக்கன் பிரியாணி,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/m1f84hwx/rajmohan.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் ராஜ்மோகன்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ராஜ்மோகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/m1f84hwx/rajmohan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>கடந்த ஆட்சி காலங்களில் ஆட்சியாளர்கள் சார்ந்த, அரசியல் சார்ந்த புத்தகங்களே நூலகங்களுக்கு வாங்கப்பட்டுள்ளன. இனி அவ்வாறு இல்லாமல் அரசியல் சாராத அனைத்து புத்தகங்களும் வாங்கப்படும்.</aside><p>ஈரோட்டில் பள்ளி கல்வித்துறை <a href="https://www.maalaimalar.com/topic/அமைச்சர்-ராஜ்மோகன்">அமைச்சர் ராஜ்மோகன் </a>நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>ஈரோட்டில் பள்ளிகளில் ஆய்வு செய்தேன். சில பள்ளிகளில் மைதானம், கழிப்பிடம், காற்றோட்டம், விசாலமான வகுப்பறை கூட இல்லாமல் கடந்த ஆட்சியாளர்கள் எப்படி அனுமதி கொடுத்தார்கள் என தெரியவில்லை . இவற்றை ஆய்வு செய்து சீரமைக்க முதலமைச்சர் கூறியுள்ளார் .</p><h2><strong>விரைவில் அறிவிப்பு</strong></h2><p>நான் அறிந்தவரை 50 சதவீத பள்ளிகளில் பி.டி. ஆசிரியர்கள் இல்லை. 250 குழந்தைகள் ஒரு பி.டி.ஆசிரியர் தேவை என்ற நிலையில் ஆயிரம் குழந்தைகள் உள்ள பள்ளிகளில் ஒரு பி.டி. ஆசிரியர் கூட இல்லாததை பார்த்தேன். நூலகர்களும் இல்லை. இவ்விரு பணியிடங்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு வெளிவரும்.</p><p>கடந்த ஆட்சி காலங்களில் ஆட்சியாளர்கள் சார்ந்த, அரசியல் சார்ந்த புத்தகங்களே நூலகங்களுக்கு வாங்கப்பட்டுள்ளன. இனி அவ்வாறு இல்லாமல் அரசியல் சாராத அனைத்து புத்தகங்களும் வாங்கப்படும். அரசு பள்ளிகளில் வாரத்தில் ஒரு நாள் சிக்கன் பிரியாணி குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என முதலமைச்சரிடம் தெரிவித்து அதற்கான ஆய்வு நடந்து வருகிறது.</p><p>அதற்குள் முன்னாள் எம்.பி., .டி .கே .எஸ் .இளங்கோவன், பள்ளிகளில் சிக்கன் பிரியாணி வழங்கினால் அங்குள்ள சைவம் சாப்பிடும் குழந்தைகள் என்ன ஆவார்கள் என கேள்வி எழுப்புகிறார். சிக்கன் பிரியாணி சாப்பிட்டு குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்படும் எனக் கூறும் முதல் நபராக அவரை பார்க்கிறேன். பள்ளிகளில் படிக்கும் 90 சதவீத குழந்தைகள் சிக்கன் சாப்பிடுகின்றனர்.</p><p>சிக்கன் பிரியாணி சாப்பிட்டு ஒரு குழந்தை கெட்டுப் போய் விடுவார்களா என்ன?. அதை உணவாக பார்க்காமல், ஒரு உயிர் பொருளாக, புரோட்டின் உணவாக பார்க்கிறேன். அதில் அரசியலை திணிக்காதீர்கள். விரைவில் முதலமைச்சர் நல்ல முடிவு எடுப்பார் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>எல் நினோ அச்சுறுத்தல்: இந்தியாவின் தென்மேற்கு பருவமழை மீண்டும் பாதிக்குமா?-வானிலை மையம் எச்சரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/national/el-nino-threat-southwest-monsoon-india-weather-centre-warning</link><comments>https://www.maalaimalar.com/news/national/el-nino-threat-southwest-monsoon-india-weather-centre-warning#comments</comments><guid isPermaLink="false">2cb9044e-2423-4731-aabc-ff3e8f2d4c70</guid><pubDate>Sat, 01 Aug 2026 09:23:37 +0000</pubDate><atom:updated>2026-08-01T09:23:37.863Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Southwest Monsoon,தென்மேற்கு பருவமழை,Weather Department,எல் நினோ,இந்திய வானிலை மையம்,El Nino</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/a0v8zwi8/monsoon.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ELNINO-MONSOON]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/a0v8zwi8/monsoon.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு மிக மோசமான மழைப் பற்றாக்குறையுடன் தொடங்கிய நடப்பு தென்மேற்கு பருவமழை, ஜூலை மாதத்தில் ஓரளவு மீண்டெழுந்த நிலையில், தற்போது வலுவடைந்து வரும் 'எல் நினோ' காரணியால் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மீண்டும் மழை பொழிவு குறையக்கூடும் என்று உலக வானிலை அமைப்பு (WMO) மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளன.</p><p>இந்தியாவின் விவசாயத்திற்கும் பொருளாதாரத்திற்கும் மிக முக்கிய ஆதாரமாக விளங்குவது தென்மேற்கு பருவமழையாகும். இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடக்கத்தில் போதிய மழை பெய்யாமல் நாட்டின் பல பகுதிகளில் வறட்சி நிலை ஏற்பட்டது. இருப்பினும், கடந்த மாதத்தில் பெய்த பரவலான கனமழை இந்த பற்றாக்குறையை ஓரளவிற்குச் சரிசெய்தது. </p><p>இந்நிலையில், பசிபிக் பெருங்கடலில் நிலவும் வெப்பநிலை மாற்றத்தால் உருவான 'சூப்பர் எல் நினோ' மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக புதிய சர்வதேச காலநிலை எச்சரிக்கை வெளியாகியுள்ளது.</p><h2><strong>குறைவான மழைப்பொழிவு கணிப்பு:</strong></h2><p>இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஆகஸ்ட் மாதத்தில் வழக்கத்தை விடக் குறைவான மழையே பதிவாக வாய்ப்புள்ளது.</p><h2><strong>உலக வானிலை அமைப்பின் எச்சரிக்கை:</strong></h2><p>ஐக்கிய நாடுகளின் உலக வானிலை அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் 'எல் நினோ' காரணி மிகவும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2><strong>விவசாயிகள் கவலை:</strong></h2><p>இந்தியாவின் இரண்டாம் கட்ட பருவமழை பலவீனமடைந்தால், நாட்டின் முக்கிய விளைபொருட்களான நெல், கரும்பு மற்றும் பருப்பு வகைகளின் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்படலாம் என்று அஞ்சப்படுகிறது.</p><h2><strong>அணை நீர்மட்டம்:</strong></h2><p>ஜூலை மாத மழையால் அணைகளின் நீர்மட்டம் ஓரளவிற்கு உயர்ந்திருந்தாலும், ஆகஸ்ட் மாதத்தில் மழை குறைந்தால் குடிநீர் மற்றும் பாசன நீர் தேவையில் நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது.</p><p>பருவமழையின் முதல் பாதி ஏற்ற இறக்கங்களுடன் நிறைவடைந்துள்ள நிலையில், 'எல் நினோ'வின் தாக்கத்தால் இரண்டாவது பாதி வறட்சியை நோக்கிச் செல்லுமா என்ற அச்சமும், கேள்வியும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் மேலோங்கியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டிற்கான  ரூ.4,466 கோடி வரிப்பகிர்வு தொகையை விடுவித்தது மத்திய அரசு
</title><link>https://www.maalaimalar.com/news/national/central-government-released-tax-share-of-rs-4466-crore-to-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/news/national/central-government-released-tax-share-of-rs-4466-crore-to-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">afd310ea-658e-4b7f-b086-a88dbf01f8e8</guid><pubDate>Sat, 01 Aug 2026 09:04:20 +0000</pubDate><atom:updated>2026-08-01T09:04:20.867Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,TN,central government,தமிழ்நாடு,Tax share,வரிப்பகிர்வு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/lg58ajr5/nirmalasitharaman.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nirmala Sitharaman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/lg58ajr5/nirmalasitharaman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்நாட்டிற்கான  ரூ.4,466 கோடி வரிப்பகிர்வு தொகையை மத்திய அரசு விடுவித்தது.</strong></em></p><p>மூலதன செலவினங்களை விரைவுபடுத்தவும், மேம்பாடு, நலத்திட்டங்கள் தொடர்பான செலவினங்களுக்கு நிதியளிக்கவும் மாநிலங்களுக்கு வரி பகிர்வை <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">மத்திய அரசு</a> விடுவித்துள்ளது.</p><p>அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.1,09,019 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.</p> <h2>மத்திய அரசு</h2><p>28 மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு தொகையை மத்திய அரசு விடுவித்துள்ள நிலையில் அந்த பட்டியலில் தமிழ்நாட்டின் பெயரும் உள்ளது.</p><h2>தமிழ்நாடு</h2><p>தமிழ்நாட்டிற்கு ரூ.4,466 கோடி வரிப்பகிர்வு தொகையை விடுவித்துள்ளது. அதிகபட்சமாக உத்தரபிரதேசத்திற்கு ரூ.19,208 கோடி, பீகாருக்கு ரூ.10,845 கோடி, மத்திய பிரதேசத்திற்கு ரூ.8,010 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>CJP போராட்டம் எதிரொலி: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் நிகழ்ச்சி கடைசி நிமிடத்தில் ஒத்திவைப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/cjp-protest-aftermath-cji-event-postponed-at-last-minute</link><comments>https://www.maalaimalar.com/news/national/cjp-protest-aftermath-cji-event-postponed-at-last-minute#comments</comments><guid isPermaLink="false">ddb4aad4-15e6-4dad-b1cc-584f084af569</guid><pubDate>Sat, 01 Aug 2026 09:01:22 +0000</pubDate><atom:updated>2026-08-01T09:01:22.089Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Surya Kant,CJP,TISS UniverSity,CJP போராட்டம்,தலைமை நீதிபதி சூர்ய காந்த்&apos;</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/oob1merl/tata.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TISS UNIVERSITY-SURYA KANT]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/oob1merl/tata.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மும்பையில் உள்ள நாட்டின் முன்னணி உயர்கல்வி நிறுவனமான 'டாட்டா சமூக அறிவியல் கழகத்தின்' (TISS) 86வது பட்டமளிப்பு விழா, பாதுகாப்பு மற்றும் போராட்ட அச்சம் காரணமாகக் கடைசி நிமிடத்தில் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p>கல்வி நிறுவனத்தின் 86வது பட்டமளிப்பு விழா நாளை நடைபெறுவதாக இருந்தது. இதில் முதன்மை விருந்தினராக இந்திய தலைமை நீதிபதி 'சூர்ய காந்த்' கலந்துகொண்டு உரையாற்றுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு மாணவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிய TISS நிர்வாகம், "எதிர்பாராத சூழ்நிலைகள் காரணமாகப் பட்டமளிப்பு விழா ஒத்திவைக்கப்படுகிறது" என அறிவித்தது.</p><h2><strong>போராட்ட பயம்:</strong></h2><p> நீட் வினாத்தாள் கசிவு மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மைக்கு எதிராகத் தீவிரமாகப் போராடி வரும் 'காக்ரோச் ஜனதா கட்சி'  அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள், தலைமை நீதிபதி சூர்யா காந்த் வருகையின் போது வளாகத்தில் போராட்டம் நடத்தக்கூடும் என்ற உளவுத்துறை மற்றும் காவல்துறை அச்சமே இந்த ஒத்திவைப்புக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.</p><p>பட்டமளிப்பு விழாவுக்கு இரண்டு நாட்களே இருந்த நிலையில், நாட்டின் பல மாநிலங்களிலிருந்தும் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் விமானம் மற்றும் ரெயில்கள் மூலம் மும்பை வந்து சேர்ந்துவிட்டனர். கடைசி நிமிடத்தில் விழா ரத்து செய்யப்பட்டதால் அவர்களது பயணச் செலவு மற்றும் விடுதிச் செலவுகள் வீணாகிப் பெரும் ஏமாற்றத்தைச் சந்தித்துள்ளனர்.</p><h2><strong>நிவாரணம் அளிப்பதாக உறுதி:</strong></h2><p>திடீர் ஒத்திவைப்பால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புகள் மற்றும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, தகுந்த கோரிக்கைகளுக்கு நிதி உதவி/நிவாரணம் வழங்குவது குறித்துப் பரிசீலிப்பதாக TISS நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><h2><strong>மாணவர் அமைப்புகள் கண்டனம்:</strong></h2><p>மாணவர் அமைப்புகள் TISS நிர்வாகத்தின் இந்த முடிவைக் கடுமையாக விமர்சித்துள்ளன. முன்னறிவிப்பின்றி நள்ளிரவில் அனுப்பப்பட்ட இந்த மின்னஞ்சல் மாணவர்களை அவமதிக்கும் செயல் என்றும், நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளன. மாணவர் போராட்டங்களுக்கும் அமைதியற்ற சூழலுக்கும் பயந்து தலைமை நீதிபதி பங்கேற்கவிருந்த உயர்கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவே ஒத்திவைக்கப்பட்டிருப்பது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&apos;சார்பட்டா 2&apos; படப்பிடிப்பு ஆகஸ்டில் தொடக்கம்: நடிகை துஷாரா விஜயன் தகவல்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/sarpatta-2-to-start-shoot-in-august-dushara-vijayan-shares-update</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/sarpatta-2-to-start-shoot-in-august-dushara-vijayan-shares-update#comments</comments><guid isPermaLink="false">84b3e228-6f29-4590-b79b-42b6e5562920</guid><pubDate>Sat, 01 Aug 2026 08:47:48 +0000</pubDate><atom:updated>2026-08-01T08:47:48.699Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பா ரஞ்சித்,Dushara Vijayan,துஷாரா விஜயன்,ஆர்யா,Arya,PARanjith,Sarpatta2,சார்பட்டா2,SarpattaParambarai</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/xsczwksg/Sarpatta2" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sarpatta2 ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/xsczwksg/Sarpatta2?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் உருவான '<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%88">சார்பட்டா பரம்பரை</a>' படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு இந்த ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கவுள்ளது.</p><p>இந்த நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகை துஷாரா விஜயன், படத்தின் ரிலீஸ் திட்டம் குறித்த மிக முக்கியமான மற்றும் சுவாரசியமான தகவல் ஒன்றை அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளார்.</p><h2><strong>தியேட்டர் ரிலீஸ் உறுதி:</strong></h2><p>நேர்காணலில் பேசிய துஷாரா விஜயன், "சார்பட்டா பரம்பரை முதல் பாகம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. ஆனால், 'சார்பட்டா 2' திரைப்படம் கண்டிப்பாக தியேட்டர்களில் பிரம்மாண்டமாக வெளியாகும்" என்பதைத் திட்டவட்டமாக உறுதிப்படுத்தியுள்ளார். </p><p>இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும், பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.</p><h2><strong>முந்தைய பாகத்தின் ஏக்கம்:</strong></h2><p>கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக 'சார்பட்டா பரம்பரை' முதல் பாகம் திரையரங்குகளில் வெளியாகாமல், நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. </p><p>படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றாலும், வடசென்னையின் பாக்ஸிங் உலகத்தை தியேட்டரில் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் ரசிகர்களிடம் நீண்ட நாட்களாக இருந்தது. தற்போது இரண்டாம் பாகம் தியேட்டரில் வெளியாகும் என்ற அறிவிப்பு அந்த ஏக்கத்தைப் பூர்த்தி செய்யும் விதமாக அமைந்துள்ளது. </p><p>மேலும், இந்த இரண்டாம் பாகம் முதல் பாகத்தை விட மிகவும் பிரம்மாண்டமாகவும், சிறப்பாகவும் இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.</p><h2><strong>மீண்டும் '</strong>மாரியம்மா<strong>' அராஜகம்:</strong></h2><p>முதல் பாகத்தில் 'மாரியம்மா' என்ற துணிச்சலான பெண்ணாக நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்த துஷாரா, இந்த பாகத்திலும் தனது கதாபாத்திரம் இன்னும் அழுத்தமாகவும், தீவிரமாகவும் இருக்கும் என்பதை உறுதிபடுத்தியுள்ளர். </p><p>ஆர்யாவுடனான அவரது திரைக்கூட்டணி இந்த முறையும் ரசிகர்களைக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2><strong>சார்பட்டா - முதல் பாகம்:</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D">பா ரஞ்சித்</a> இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் 2021-ல் வெளியான 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம், 1970-களின் வடசென்னை குத்துச்சண்டை கலாச்சாரத்தையும், சார்பட்டா - இடியாப்ப பரம்பரைகளுக்கு இடையிலான கௌரவ மோதலையும் மிக எதார்த்தமாகப் பதிவு செய்தது. </p><p>கபிலன் என்ற எளிய இளைஞன் தடைகளைத் தாண்டி எப்படி சாம்பியனாக உயர்கிறான் என்ற விறுவிறுப்பான கதைக்களம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. நடிகர்களின் மிரட்டலான உடல்மொழி, அழுத்தமான வசனங்கள் மற்றும் சந்தோஷ் நாராயணனின் அதிரடி இசையால் இத்திரைப்படம் ஒட்டுமொத்த இந்திய சினிமா உலகிலும் பேசப்பட்டு, மாபெரும் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது.</p>]]></content:encoded></item><item><title>3 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/orange-alert-issued-for-three-districts-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/orange-alert-issued-for-three-districts-today#comments</comments><guid isPermaLink="false">cace66cc-5456-43a1-a4ef-5abbb9bc1574</guid><pubDate>Sat, 01 Aug 2026 08:30:40 +0000</pubDate><atom:updated>2026-08-01T08:30:40.347Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Heavy Rain,orange alert,ஆரஞ்சு அலர்ட்,பருவமழை,monsoon,கனமழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/0bjnxl3x/orange-alert.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Orange alert]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/0bjnxl3x/orange-alert.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழகத்தின் எல்லைப் பகுதி மாவட்டங்களில் பலத்த <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/august-rain-expected-above-normal-in-tamilnadu" rel="nofollow">மழை</a> பதிவாகி வருகிறது.</p><h2>ஆரஞ்சு அலர்ட்</h2><p>தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்யும் என ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும், திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><h2>மழை தீவிரமடையும்</h2><p>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p>24 மணி நேரத்தில் 11 செ.மீ முதல் 20 செ.மீ வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் ஆகஸ்டு மாதத்தில் இயல்பை விட அதிக மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/august-rain-expected-above-normal-in-tamilnadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/august-rain-expected-above-normal-in-tamilnadu#comments</comments><guid isPermaLink="false">787b88c4-2255-4e08-80e3-7b39979ceaa1</guid><pubDate>Sat, 01 Aug 2026 08:05:49 +0000</pubDate><atom:updated>2026-08-01T08:05:49.186Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Heavy Rain,chennai Meteorological Centre,August,வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை,கனமழை,ஆகஸ்டு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/l2wyrnyg/Rain.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rain]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/l2wyrnyg/Rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. இந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை ஆகிய 2 மாதமும் தென் மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. 21 சதவீதம் இயல்பை விட குறைவாக மழை பெய்து உள்ளது.</p><p>சென்னை உள்பட 34 மாவட்டங்களில் 35 சதவீதம் மழை இயல்பை விட பற்றாக்குறையாக பதிவாகியுள்ளது. </p><p>இந்த நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான ஆகஸ்டு மாத வானிலை முன்னறிவிப்பை சென்னை மண்டல வானிலை மைய இயக்குனர் துரை வெளியிட்டுள்ளார். </p><p>அதில் அவர் கூறியிருப்பதாவது:- </p><p>ஆகஸ்டு  மாதத்தில் வட தமிழ்நாடு பகுதியில் மழை பொழிவு இயல்பானதாகவோ அல்லது இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். தென் கடலோர பகுதியில் இயல்பை விட அதிகமாக இருக்கலாம்.</p><p>வட உள்மாவட்டங்கள், மற்றும் தென் உள்மாவட்டங்களில் மழைப் பொழிவு இயல்பானதாக இருக்கக் கூடும்.</p><h2>வெப்பநிலை </h2><p>ஆகஸ்டு மாதத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான பகுதிகளில் அதிகபட்ச <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88" rel="nofollow">வெப்பநிலை</a>  இயல்பான அளவிலோ அல்லது இயல்பைவிட சற்று அதிகமாகவோ இருக்கக்கூடும்.</p><p>அடிக்கடி மழை பெய்யும் பகுதிகளில் வெப்பநிலை இயல்பான அளவையொட்டி இருக்க வாய்ப்புள்ளது. </p><p>குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பான அளவிலோ அல்லது இயல்பை விட அதிகமாகவோ இருக்கக்கூடும்.</p><p>ஆகஸ்டு முதல் செப்டம்பர் வரை வடகடலோர தமிழக பகுதியில் மழைப்பொழிவு இயல்பானதாகவோ அல்லது இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். தென் கடலோர தமிழகத்தில் மழை இயல்பானதாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கக்கூடும்.</p><h2>மழைப்பொழிவு இயல்பை விட குறைவு</h2><p>வட உள்மாவட்டங்கள் தென் உள்மாவட்டங்களில் மழை பொழிவு இயல்பானதாக இருக்கும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைப்பொழிவு இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.</p><p>ஆகஸ்டு, செப்டம்பர் கால கட்டத்தில் நாடு முழுவதும் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/heavy-rain-raises-dam-levels-in-tamil-nadu" rel="nofollow">மழைப்பொழிவு</a> இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும் என்றாலும் தமிழகத்தின் கிழக்கு பகுதிகளில் குறிப்பிட்ட அளவில் சாதகமான மழைப் பொழிவு இருக்கும் என்றும் அதே வேளையில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இயல்பை விட குறைவான மழையே பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவிக்கிறது.</p><p>பசிபிக் பெருங்கடல் பகுதியில் மிதமான  எல்-நினோ சூழல் நிலவுகிறது. தென்மேற்கு பருவமழைக் காலத்தின் எஞ்சிய நாட்களில் இது மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>&apos;ரீலில் மட்டும்தானா மன்னிப்பு?&apos;- பிரதமர் மோடியின் வீடியோவுக்கு CJP தலைவர் அபிஜீத் தீப்கே சரமாரி கேள்வி!</title><link>https://www.maalaimalar.com/news/national/only-reel-apology-cjp-chief-abhijit-deepke-slams-modi-video</link><comments>https://www.maalaimalar.com/news/national/only-reel-apology-cjp-chief-abhijit-deepke-slams-modi-video#comments</comments><guid isPermaLink="false">35215e69-6d79-4c32-a800-ef882d0a8efc</guid><pubDate>Sat, 01 Aug 2026 07:40:21 +0000</pubDate><atom:updated>2026-08-01T07:40:21.427Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>pm modi,பிரதமர் மோடி,அபிஜீத் தீப்கே,CJP Protest,Abhijit Dipke,காக்ரோச் ஜனதா கட்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/um3zdsf3/abijit.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Abhijit Dipke -PM Modi ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/um3zdsf3/abijit.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து CJP சார்பில் மாணவர்கள், இளைஞர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது  பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது தாயார் குறித்து வார்த்தைகளைப் பயன்படுத்திய மாணவர்களை மன்னிப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி இன்ஸ்டாகிராமில் செல்ஃபி வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோவின் கீழ் 'காக்ரோச் ஜனதா கட்சி' நிறுவனர் அபிஜீத் தீப்கே பிரதமர் மோடியிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.</p><h2><strong>பிரதமர் மோடியின் 'மன்னிப்பு' வீடியோ:</strong></h2><p>ஜந்தர் மந்தர் போராட்டத்தில் தமக்கு எதிராகவும், தமது மறைந்த தாயார் குறித்தும் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்திய மாணவர்களை மன்னிப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி இன்ஸ்டாகிராமில் செல்ஃபி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், "அவதூறுகளால் எதுவும் மாறப்போவதில்லை. </p><p>மாணவர்களைத் தண்டிப்பதோ, நீதிமன்ற வழக்குகளில் இழுப்பதோ அல்லது சமூகத்தில் அவர்களைத் துன்புறுத்துவதோ எந்தத் தீர்வையும் தராது. நான் அவர்களை மன்னிக்க விரும்புகிறேன்... வழிதவறிய மாணவர்களுக்கு நல்வழி காட்டுவோம்" என்று பிரதமர் கூறினார்.</p><h2><strong>அபிஜீத் தீப்கேவின் கேள்வி:</strong></h2><p>பிரதமரின் இந்த வீடியோ பதிவின் கீழ் கருத்துத் தெரிவித்த CJP நிறுவனர் அபிஜீத் தீப்கே, "ரீலில் மட்டும் மன்னிப்பீர்களா அல்லது மாணவர்கள் மீதான வழக்குகளையும் திரும்பப் பெறுவீர்களா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக, வினாத்தாள் கசிவு தடுப்புச் சட்டத் திருத்தம் தொடர்பாகப் பிரதமர் வெளியிட்ட மற்றொரு வீடியோவில், "நாட்டின் எதிர்காலத்தை விட உங்கள் முகப் பொலிவு பிரகாசமாக இருக்கிறது" என்று தீப்கே கிண்டலாகப் பதிவிட்டிருந்தார்.</p><h2><strong>15 வயது சிறுமி மீதான வழக்கு:</strong></h2><p>டெல்லி ஜந்தர் மந்தரில் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது, பிரதமருக்கு எதிராக அவதூறாகப் பேசியதாக நோய்டாவைச் சேர்ந்த 15 வயது சிறுமி மீது 'ஜீரோ எஃப்.ஐ.ஆர்' பதிவு செய்யப்பட்டது.  வழக்கு தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, அச்சிறுமி ஒரு வீடியோ வெளியிட்டு, "இது எனது முதல் மற்றும் கடைசித் தவறு. </p><p>சூழ்நிலை காரணமாக உணர்ச்சிவசப்பட்டுப் பேசிவிட்டேன், என்னை மன்னித்துவிடுங்கள்" என மன்னிப்புக் கோரினார். சிறுமி மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, பா.ஜ.க தலைவர்கள் மற்றும் ஐ.டி விங் உறுப்பினர்கள் மீது இதுபோன்ற அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்படாதது ஏன் என்று CJP கேள்வி எழுப்பியது.</p><h2><strong>வழக்குகள் நிலவரம்:</strong></h2><p>போராட்டங்களில் பங்கேற்ற சாதாரண மாணவர்கள் மற்றும் குற்றப்பின்னணி இல்லாத இளைஞர்கள் மீதான வழக்குகளை விடுவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், மாநில அரசுகள் சில வழக்குகளைத் திரும்பப் பெற்று வருகின்றன. இருப்பினும், வழக்குகள் முழுமையாகத் திரும்பப் பெறப்பட வேண்டும் என CJP வலியுறுத்தி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>உக்ரைன் தலைநகர் மீது டிரோன் தாக்குதல் - 3 பேர் பலி!</title><link>https://www.maalaimalar.com/news/world/russian-missile-drone-attack-on-ukraine-capital</link><comments>https://www.maalaimalar.com/news/world/russian-missile-drone-attack-on-ukraine-capital#comments</comments><guid isPermaLink="false">0c4ce963-832a-4cf2-9aed-12c7650ed4cc</guid><pubDate>Sat, 01 Aug 2026 07:38:44 +0000</pubDate><atom:updated>2026-08-01T07:38:44.836Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Ukraine,ரஷ்யா,கீவ்,உக்ரைன்,DroneAttack,KyivAttack,RussiaUkraineWar,ஏவுகணைதாக்குதல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/vdv1r31h/RussiaUkraineWar" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ RussiaUkraineWar ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/vdv1r31h/RussiaUkraineWar?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE">ரஷ்யா </a>மற்றும்<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D"> உக்ரைன்</a> இடையேயான போர் 4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ்வை குறிவைத்து இன்று அதிகாலை ரஷ்யா மீண்டும் ஒரு பயங்கர ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.</p><p>நேற்று முன் தினம் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் மீது ரஷ்யா சரமாரியாகத் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இன்று அதிகாலை மீண்டும் இந்த வான்வழித் தாக்குதல் அரங்கேறியுள்ளது. </p><p>இன்று நடந்த தாக்குதலில் உக்ரைன் தலைநகரின் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.</p><h2><strong>கீவ் தாக்குதல்</strong></h2><p>இன்று அதிகாலை நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், சொலோமியன்ஸ்கி மாவட்டத்தில் உள்ள 5 மாடி குடியிருப்பு கட்டிடம் ஏவுகணை வீச்சில் பலத்த சேதமடைந்துள்ளது. மேலும் அக்கட்டிடத்தின் முன்பகுதியில் பயங்கர தீ விபத்தும் ஏற்பட்டுள்ளது.</p><p>இது மட்டுமில்லாமல் மற்றொரு குடியிருப்பு கட்டிடத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்கள் இடிந்து விழுந்து முற்றிலும் தரைமட்டமாகின. </p><p>அதேபோல் டார்னிட்ஸ்கி பகுதியில் உள்ள வணிகக் கிடங்கு கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், அவை அனைத்தும் முற்றிலும் தீப்பற்றி எரிந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>உயிரிழப்புகள்</strong></h2><p>ரஷ்யாவின் இந்த அடுத்தடுத்த ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களில் இதுவரை 3 பொதுமக்கள் பலியாகியுள்ளனர். </p><p>மேலும், கட்டிட இடிபாடுகளில் சிக்கியும், தீ விபத்துகளில் சிக்கியும் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். </p><p>காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.</p>]]></content:encoded></item></channel></rss>