<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 01 Sep 2026 03:26:46 +0000</lastBuildDate><item><title>டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-opening-mettur-dam-today-for-delta-irrigation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-opening-mettur-dam-today-for-delta-irrigation#comments</comments><guid isPermaLink="false">427091d5-926c-4ef7-b4dd-790c137e4fe8</guid><pubDate>Tue, 01 Sep 2026 03:21:41 +0000</pubDate><atom:updated>2026-09-01T03:21:41.413Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,மேட்டூர் அணை,Mettur Dam,டெல்டா பாசனம்,Delta Irrigation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/wkjvmtox/metturdam.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay - Mettur dam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/wkjvmtox/metturdam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மேட்டூர் அணையில் இருந்து இன்று டெல்டா பாசனத்திற்கு முதலமைச்சர் விஜய் தண்ணீர் திறந்து வைக்கிறார். இதற்காக அவர் சேலம் செல்வதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது.</strong></em></p> <h2>மேட்டூர் அணை</h2><p>டெல்டா விவசாயிகளின் உயிர் மூச்சான <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">மேட்டூர் அணை </a>மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர். திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர் உள்பட 13 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சரிவர மழை பெய்யாத காரணத்தால் குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கப்படவில்லை.</p> <p>ஆனால் கடந்த 2 வாரங்களாக கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்தது. </p><p>இதனால் அணையின் நீர்மட்டம் 90 அடியை தாண்டியதை தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து செப்டம்பர் 1-ந்தேதி தண்ணீர் திறந்துவிடப்படும் என்றும், அந்த தண்ணீர் 45 நாட்கள் திறந்துவிடப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது.</p> <h2>இன்று தண்ணீர் திறப்பு</h2><p>நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 91.15 அடியை எட்டி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 501 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.</p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>இந்தநிலையில், மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு இன்று காலை தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதற்காக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-important-measures-starting-with-an-increase-in-the-milk-procurement-price">முதலமைச்சர் விஜய்</a> சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் காலை 10.30 மணிக்கு சேலம் செல்கிறார். ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்திற்கு செல்லும் அவர், அங்கிருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக மேட்டூர் செல்கிறார். பின்னர் அவர் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைக்கிறார். முதலமைச்சர் விஜய் சேலம் செல்வதையொட்டி மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.</p> <h2>ஒகேனக்கல்</h2><p>நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து நேற்று காலை 10 மணி நிலவரப்படி வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>வரும் 10-ந்தேதி பிரிட்டன் செல்லும் முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-to-visit-britain-on-the-10th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-to-visit-britain-on-the-10th#comments</comments><guid isPermaLink="false">744f8d39-c67c-4904-9c24-b3433ea36b50</guid><pubDate>Tue, 01 Sep 2026 03:12:53 +0000</pubDate><atom:updated>2026-09-01T03:12:53.106Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,TN Govt,தமிழக அரசு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/914u6r1p/vijay08.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/914u6r1p/vijay08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் விஜய் தலைமையிலான உயர்மட்டக் குழு செப்டம்பர் 10-ஆம் தேதி பிரிட்டன் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ளது.</strong></em></p><p>தமிழ்நாட்டுக்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வருகிற 10-ந்தேதி முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">விஜய்</a> பிரிட்டனுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். முதலமைச்சர் விஜய் தலைமையிலான தொழில்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் வருகிற 10-ந்தேதி பிரிட்டன் சென்று செப்டம்பர் 16-ந்தேதி வரை சுற்றுப்பயணம் செய்ய உள்ளது.  இந்த பயணத்தின் போது பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் தொழில் அதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களைச் சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க  வருமாறு அழைப்பு விடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. </p><p>முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-changed-his-seat-again">விஜய்</a> வெளிநாட்டுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. </p><h2><strong>செமிகான் மாநாடு</strong></h2><p>இதனிடையே, செமிகண்டக்டர், செயற்கை நுண்ணறிவு (AI), சிப் தயாரிப்பு உள்ளிட்ட நவீன தொழில் நுட்பத் துறைகளில் ஈடுபட்டுள்ள பல நாட்டு நிறுவனங்கள் பங்கேற்கும் ‘செமிகான்’ (Semicon) மாநாடு இந்த வாரம் தைவானில் நடைபெறுகிறது.</p><p>இதில் பங்கேற்பதற்காகத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழுவினர் வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி தைவான் புறப்பட்டுச் செல்கின்றனர். இம்மாநாட்டின் மூலம் உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களின் முதலீடுகளைத் தமிழ்நாட்டை நோக்கி ஈர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>தென் மாநிலங்களுக்கு இடையே தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் கடும் போட்டி நிலவி வரும் சூழலில், தமிழக அரசின் இந்த அடுத்தடுத்த வெளிநாட்டுப் பயணங்கள் புதிய வேலைவாய்ப்புகளையும் தொழில் வளர்ச்சியையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு - ஓட்டல் உரிமையாளர்கள் அதிர்ச்சி</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/commercial-lpg-gas-cylinder-prices-hiked</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/commercial-lpg-gas-cylinder-prices-hiked#comments</comments><guid isPermaLink="false">7bc3cb65-284c-4452-b43c-52fcb476a040</guid><pubDate>Tue, 01 Sep 2026 02:50:24 +0000</pubDate><atom:updated>2026-09-01T02:50:24.208Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Commercial cylinder,சிலிண்டர் விலை,Gas cylinder,Cooking Gas Cylinder,வணிக சிலிண்டர் விலை உயர்வு,சமையல் கியாஸ் சிலிண்டர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/03/06/27240275-lpg.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Commercial gas cylinder ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/03/06/27240275-lpg.webp?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னையில் 19 கிலோ எடைகொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 10.50 உயர்ந்துள்ளது.</strong></em></p> <h2>எண்ணெய் நிறுவனங்கள்</h2><p>சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலைகளை நிர்ணயித்து வருகின்றன. இதில் சமையல், வணிக கியாஸ் சிலிண்டர்களின் விலைகளை மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைத்து வருகின்றன.</p> <h2>சிலிண்டர் விலை நிலவரம்</h2><p>இன்று மாதத்தின் முதல் நாள் என்பதால், சிலிண்டர் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது.</p> <h2>வணிக சிலிண்டர் விலை உயர்வு</h2><p>அதன்படி, சென்னையில் 19 கிலோ எடைகொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 10.50 உயர்ந்து, ரூ.2,916.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p>வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.957.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p>இதனால் ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் சிறு வணிகர்கள் பெரிதும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர்.</p>  ]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-and-diesel-price-in-chennai-1-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-and-diesel-price-in-chennai-1-september-2026#comments</comments><guid isPermaLink="false">9889b72d-b1f8-45c1-abe0-b8b234e71986</guid><pubDate>Tue, 01 Sep 2026 02:28:55 +0000</pubDate><atom:updated>2026-09-01T02:28:55.861Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,கச்சா எண்ணெய்,Crude oil,பெட்ரோல் டீசல் விலை,Pertrol Diesel Prices</media:keywords><media:content height="576" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/for3wnkv/maalai-malar2026-08-211xkldom8maalai-malar2026-08-14alj4ing3maalai-malar2026-07-28zqvhuwkktn-2.avif" width="1024"><media:title type="html"><![CDATA[ பெட்ரோல், டீசல் விலை]]></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல், டீசல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/for3wnkv/maalai-malar2026-08-211xkldom8maalai-malar2026-08-14alj4ing3maalai-malar2026-07-28zqvhuwkktn-2.avif?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் போரினால் மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p> <h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.</p> <h2>இன்றைய பெட்ரோல், டீசல் விலை</h2><p>அந்த வகையில் இன்றைய (1.9.2026 - (செவ்வாய்க்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 1.9.2026 - இந்த ராசிக்காரர்கள் முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள்</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-1-september-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-1-september-2026#comments</comments><guid isPermaLink="false">ecc1908f-3d24-47de-ac92-931faeba976f</guid><pubDate>Tue, 01 Sep 2026 02:00:42 +0000</pubDate><atom:updated>2026-09-01T02:00:42.139Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/13/20002724-rasi1.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/13/20002724-rasi1.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் உண்டு.</p><h2>ரிஷபம்</h2><p>யோகமான நாள். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு பற்றிய தகவல் வரலாம். வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.</p> <h2>மிதுனம்</h2><p>முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள். வேலைப்பளுவின் காரணமாக உத்தியோகத்திலிருந்து விடுபடலாமா என்று யோசிப்பீர்கள்.</p><h2>கடகம்</h2><p>தொழில் ரீதியாக எடுத்த முயற்சிக்கு நண்பர்களின் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் தற்காலிகப் பணி நிரந்தரப் பணியாக மாறலாம்.</p> <h2>சிம்மம்</h2><p>விமர்சனங்களால் ஏற்பட்ட விரிசல் மறையும் நாள். வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். பழைய கடன்கள் தீரும். உத்தியோகப் பிரச்சனை முடிவிற்கு வரும்.</p><h2>கன்னி</h2><p>முயற்சியில் தடைகள் ஏற்படும் நாள். திட்டமிட்ட காரியங்களில் மாற்றம் செய்வீர்கள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். நட்பு பகையாகலாம்.</p> <h2>துலாம்</h2><p>துணையாக இருப்பவர்கள் தோள்கொடுத்து உதவும் நாள். பொருளாதார வளர்ச்சி உண்டு. தன்னைச் சார்ந்தவர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள்.</p><h2>விருச்சிகம்</h2><p>வருமானம் திருப்தி தரும் நாள். அலைபேசி வழித்தகவல் ஆதாயம் தரும். உத்தியோகத்திலிருந்து விருப்ப ஓய்வில் வெளிவருவது பற்றிச் சிந்திப்பீர்கள்.</p> <h2>தனுசு</h2><p>வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சி கைகூடும். பழைய கடன்களைக் கொடுத்து மகிழ்வீர்கள்.</p><h2>மகரம்</h2><p>குடும்பச்சுமை கூடும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். கூடுதல் சம்பளத்துடன் கூடிய வேலை தேடி வரும்.</p> <h2>கும்பம்</h2><p>வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி அகலும் நாள். வரவும் செலவும் சமமாகும். ஆபரண சேர்க்கை உண்டு. அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சி ஆதாயம் தரும்.</p><h2>மீனம்</h2><p>காரிய வெற்றி ஏற்படும் நாள். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர். காலை நேரத்திலேயே கலகலப்பான தகவல் வந்து சேரும்.</p> ]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 1 செப்டம்பர் 2026: ஸ்ரீ வாஞ்சியம் முருகப் பெருமான் பவனி
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-1-september-2026-srivanjiyam-muruga-peruman-bhavani</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-1-september-2026-srivanjiyam-muruga-peruman-bhavani#comments</comments><guid isPermaLink="false">6cfeca0b-7ff7-47df-b6f6-dc30f2a18445</guid><pubDate>Tue, 01 Sep 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-09-01T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/09/12/18517495-muruga7.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/09/12/18517495-muruga7.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆவணி-15 (செவ்வாய்க்கிழமை)</p><p>பிறை : தேய்பிறை</p><p>திதி :  சதுர்த்தி காலை 7.56 மணி வரை பிறகு பஞ்சமி</p><p>நட்சத்திரம் : அசுவினி பின்னிரவு 3.32 மணி வரை பிறகு பரணி</p><p>யோகம் :  சித்தயோகம்</p> <p>ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை</p><p>எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை</p><p>சூலம் : வடக்கு</p><p>நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை</p> <h2>முருகர் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்</h2><p>திருச்செந்தூர் ஸ்ரீ முருகப் பெருமான் கேடயச் சப்பரத்திலும், இரவு பல்லக்கிலும் திருவீதியுலா. பெருவயல் ஸ்ரீ முருகப்பெருமான் பவனி வரும் காட்சி. சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம். </p> <p>திருநெல்வேலி சமீபம் 3-ஆம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்த மாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் திருக்கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல், ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமான் பவனி. </p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - ஆர்வம்</p><p>ரிஷபம் - தேர்ச்சி</p><p>மிதுனம் - வரவு</p><p>கடகம் - உழைப்பு</p><p>சிம்மம் - முயற்சி</p><p>கன்னி - ஜெயம்</p> <p>துலாம் - போட்டி</p><p>விருச்சிகம் - ஆக்கம்</p><p>தனுசு - அனுகூலம்</p><p>மகரம் - நன்மை</p><p>கும்பம் - மேன்மை</p><p>மீனம் - கடமை</p> ]]></content:encoded></item><item><title>அடுத்த வாரம் ரிலீஸ்: ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த சர்தார் 2 டிரெய்லர் வெளியீடு</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/sardar-2-trailer-launched</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/sardar-2-trailer-launched#comments</comments><guid isPermaLink="false">a77c3910-75e7-4751-a444-438df778ad64</guid><pubDate>Tue, 01 Sep 2026 01:29:50 +0000</pubDate><atom:updated>2026-09-01T01:29:50.631Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Karthi,கார்த்தி,Sardar 2,சர்தார் 2,PS Mithran,பிஎஸ் மித்ரன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/bprdzbtz/Sardar-2-Trailer.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sardar 2 Trailer Poster]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/bprdzbtz/Sardar-2-Trailer.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவர்  நடிப்பில் உருவாகி இருக்கும் ‘<a href="https://www.maalaimalar.com/topic/sardar-2">சர்தார் 2</a>’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியாக இருக்கிறது. </p><p>இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ <a href="https://www.maalaimalar.com/cinema">திரைப்படம்</a> ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது. </p><p>‘சர்தார் 2’ திரைப்படத்தில் கார்த்தி அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் கார்த்தியுடன் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.</p><h2>சாம் சி.எஸ். 100:</h2><p>இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். சாம் சி.எஸ். இசையமைக்கும் 100-வது திரைப்படம் ‘சர்தார் 2’ என்பதால், படத்தின் இசை மீதும் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் ‘சர்தார் 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், அறிமுக வீடியோ மற்றும் டீசர் வெளியாகி வைரலானது.</p><p>இதைத் தொடர்ந்து இந்தப் படத்தின் முதல் பாடலாக ‘மயில்வீரா’ சமீபத்தில் வெளியானது. தமிழ் கடவுளான முருகனை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடல், பக்தி கலந்த இசையுடன் அமைந்துள்ளது.</p><h2>ரிலீஸ் அப்டேட்:</h2><p>முதல் அறிவிப்பு வெளியானதில் இருந்தே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து உருவாகி இருக்கும் ‘சர்தார் 2’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.</p><p>அடுத்த வாரம் திரைப்படம் வெளியாவதை ஒட்டி நடிகர் கார்த்தியின் ‘சர்தார் 2’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ‘சர்தார் 2’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டது.</p> <figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/jpvb4l2RIXU"></iframe></figure>]]></content:encoded></item><item><title>அமெரிக்க ராணுவ செயலாளர் டான் டிரிஸ்கோல் பதவி விலகுகிறார் - வெள்ளை மாளிகை தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/world/army-secretary-dan-driscoll-is-stepping-down</link><comments>https://www.maalaimalar.com/news/world/army-secretary-dan-driscoll-is-stepping-down#comments</comments><guid isPermaLink="false">380e3a71-b0e1-4498-8af6-98f9ae75f2bf</guid><pubDate>Tue, 01 Sep 2026 01:16:14 +0000</pubDate><atom:updated>2026-09-01T01:16:14.319Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராணுவம்,டொனால்டு டிரம்ப்,Donald Trump,அமெரிக்கா,us,US Army Secretry</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/mycf86cn/daniel-driscoll.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Daniel Driscoll]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/mycf86cn/daniel-driscoll.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அதிபர் <a href="https://www.maalaimalar.com/topic/donald-trump">டொனால்டு டிரம்ப்</a> நிர்வாகத்தின் கீழ் உயர்மட்ட ராணுவ தலைவர் ஒருவர் வெளியேறும் சமீபத்திய நிகழ்வாக, ராணுவ செயலாளர் டான் டிரிஸ்கோல் 18 மாத பணிக்கு பிறகு பதவி விலகுவதாக வெள்ளை மாளிகை அறிவித்தது.</p><p>துணை அதிபர் <a href="https://www.maalaimalar.com/topic/jd-vance">ஜே.டி. வான்ஸ்</a> நண்பரான டிரிஸ்கோலின் வெளியேற்றத்திற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை; இருப்பினும், பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் உடனான கருத்து வேறுபாடுகள் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.</p><p>ராணுவத் தலைமையகத்தில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான மாற்றங்களின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது; குறிப்பாக ராணுவத்தில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. </p><h2>வெள்ளை மாளிகை அறிக்கை:</h2><p>"வரலாற்று சிறப்புமிக்க ராணுவ நடவடிக்கைகளின் போது சிறந்த தலைமைத்துவத்தை வழங்கியது, தயார்நிலை மற்றும் தாக்குதல் திறனுக்கு மீண்டும் முக்கியத்துவம் அளித்தது, ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு உதவியது மற்றும் பலவற்றின் மூலம் 'அமெரிக்காவை மீண்டும் வலிமையாக்குதல்' என்ற அதிபர் டிரம்ப் நோக்கத்தை ராணுவ துறையில் முன்னெடுப்பதில் செயலாளர் டிரிஸ்கோல் மிகவும் திறம்பட செயல்பட்டுள்ளார்," என்று வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் அன்னா கெல்லி ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.</p><p>"முப்படைகளின் தலைமை தளபதி மற்றும் பாதுகாப்புச்செயலாளர் ஆகியோருடன் இணைந்து அவர் ஆற்றிய பணிகளால், அமெரிக்க ராணுவம் முன்னெப்போதையும் விட வலிமையாக உள்ளது," என்றும் அவர் மேலும் கூறினார்.</p><h2>ராணுவ அதிகாரி தகவல்:</h2><p>பொதுவெளியில் கருத்து தெரிவிக்க அனுமதி இல்லாத நிலையில், பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், ராணுவத்தின் தற்போதைய நிலை குறித்து அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் டிரிஸ்கோல் பேசியதாகவும், பின்னர் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்ததாகவும் தெரிவித்தார். அந்த அதிகாரி கூடுதல் விவரங்களை வழங்கவில்லை.</p><p>டிரிஸ்கோலின் ராஜினாமா குறித்த தகவல் முன்னதாக 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' இதழில் வெளியானது. டிரிஸ்கோலின் வெளியேற்றத்திற்கு முன்னதாக, அவருடன் நெருக்கமாக இருந்த ஒருவர் ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டதும், அவர் முன்னெடுத்த டிரோன் திட்டம் கைவிடப்பட்டதும் நிகழ்ந்துள்ளன.</p>]]></content:encoded></item><item><title>போரை முடிவுக்குக் கொண்டுவர உதவ வேண்டும் - பிரதமர் மோடியை சந்தித்த ஈரான் அதிபர் வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/world/iran-president-meets-pm-modi-seeks-help-to-end-war</link><comments>https://www.maalaimalar.com/news/world/iran-president-meets-pm-modi-seeks-help-to-end-war#comments</comments><guid isPermaLink="false">5f9daa47-e70f-4c2f-acfb-815e1b47a1a7</guid><pubDate>Mon, 31 Aug 2026 23:47:10 +0000</pubDate><atom:updated>2026-08-31T23:47:10.546Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ஈரான்,Iran,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/vownhfzr/PM-Modi-and-Masoud-Pezeshkian.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi and Masoud Pezeshkian]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/vownhfzr/PM-Modi-and-Masoud-Pezeshkian.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிஷ்கெக்கில் நடைபெற்ற SCO உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக ஈரானிய அதிபர் மசூத் பெசஸ்கியானை சந்தித்த <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">பிரதமர் மோடி</a>, கடல்வழி போக்குவரத்து மற்றும் வர்த்தக சுதந்திரத்தை வலியுறுத்தினார். </p><p>மேலும், எந்த சூழ்நிலையிலும் பொதுமக்கள், வணிக கப்பல்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கான உள்கட்டமைப்பு மற்றும் மாலுமிகள் பாதிக்கப்படக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/world">அமெரிக்க</a> தடைகள் குறித்த அச்சுறுத்தல் இருந்தபோதிலும், இரு தலைவர்களும் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.</p><h2>பெசஸ்கியான் வலியுறுத்தல்:</h2><p>சுமார் இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற தங்களின் முதல் இருதரப்பு சந்திப்பில், ஹார்முஸ் நீரிணை மற்றும் சபஹார் துறைமுக ஒத்துழைப்பு உள்ளிட்ட மேற்கு ஆசியாவின் நிலவரம் குறித்து இருவரும் விவாதித்தனர். போரில் ஈடுபட்டுள்ள தரப்பினரை அப்பாதையில் இருந்து விலக்க, இந்தியாவின் "பரந்த" தொடர்புகளை பயன்படுத்துமாறு பெசஸ்கியான் மோடியிடம் கேட்டுக்கொண்டார்.</p><p>அதிகரித்து வரும் பதற்றங்கள் குறித்து கவலை தெரிவித்த பிரதமர் மோடி, இந்தப் பகுதியில் நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரும்பும் அதே வேளையில், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பதன் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தினார்.</p><h2>பிரிக்ஸ்-இல் இருதரப்பு சந்திப்பு:</h2><p>போர் மற்றும் ரத்தக் களரிப் பாதையில் இருந்து சம்பந்தப்பட்ட தரப்பினரை விலக்க இந்தியாவின் "பரந்த" தொடர்புகளைப் பயன்படுத்துமாறு அவர் மோடியை வலியுறுத்தினார். அரசியல், பொருளாதாரம், அறிவியல், கலாச்சாரம் மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த பிற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் அதிபர் அழைப்பு விடுத்தார்; இது தடைகளின் தாக்கத்தை தணித்து, உறவை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.</p><p>மோடியும் பெசஸ்கியானும் கடைசியாக 2024-ல் கசானில் நடைபெற்ற பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டின் போது இருதரப்பு சந்திப்பை நடத்தினர். இந்த சந்திப்பு, பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்த இரு தலைவர்களுக்கும் வாய்ப்பளித்தது.</p><p>பல்வேறு துறைகளில் ஈரானுடனான நீண்டகால "நட்பை" வலுப்படுத்துவதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை மோடி அடிக்கோடிட்டு காட்டினார். "எதிர்காலத்தில் எங்கள் வர்த்தக வரம்பை விரிவுபடுத்தவும் பன்முகப்படுத்தவும் விரும்புகிறோம். பிராந்தியத்தில் நிலவும் சூழல் குறித்தும் நாங்கள் விவாதித்தோம்.</p>]]></content:encoded></item><item><title>எம். எஸ். பாஸ்கர் நடிப்பில்  ‘விடியும் காத்திரு’… மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ms-bhaskar-starrer-vidiyum-kaathiru-1st-look-out</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ms-bhaskar-starrer-vidiyum-kaathiru-1st-look-out#comments</comments><guid isPermaLink="false">db89b297-642e-448f-8603-7187886233ca</guid><pubDate>Mon, 31 Aug 2026 21:46:34 +0000</pubDate><atom:updated>2026-08-31T21:46:34.146Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MS bhaskar,எம்எஸ் பாஸ்கர்,விடியும் காத்திரு,Vidiyum Kaathiru</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/a1ys2cfz/vidiyum-kathiru.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ vidiyum kathiru FL]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/a1ys2cfz/vidiyum-kathiru.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/ms-bhaskar">எம்.எஸ். பாஸ்கர்</a> நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘விடியும் காத்திரு’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.</p><p>Friends Production House நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை பி.எம். ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். அயோத்தி வளர்மதி இணைத் தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். இயக்குநர்கள் பாலா மற்றும்  மிஷ்கின் படங்களின் கதை விவாதங்களில் பங்காற்றிய ஆர். அரவிந்த ராஜன், தனது முதல் திரைப்படமாக ‘விடியும் காத்திரு’ படத்தை இயக்கியுள்ளார்.</p><h2>படக்குழு விவரம்:</h2><p>எம்.எஸ். பாஸ்கர் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் அம்ஜதா ஷெரின் முதன்மை பெண்கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், காவலர் கதாபாத்திரத்தில் கோபி அயோத்தி, பேபி ஶ்ரீஜிதா, ராகேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.</p><p>சுவாரஸ்யமான க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படம், ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைக்கும் வகையிலான பரபரப்பான திரைக்கதையுடன், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படமாக உருவாகி வருகிறது. </p><p>ஒரு கொலை நடந்த வீட்டிற்குள் செல்லும் இரண்டு காவல் அதிகாரிகளுக்கு அங்கு நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களை மையமாக வைத்து இப்படத்தின் திரைக்கதை பின்னப்பட்டுள்ளது.</p><h2>இறுதிக்கட்ட பணிகள்:</h2><p>இந்தப் படத்திற்கு சி. சத்யா இசையமைக்கிறார். ஜி. தாமோதரன் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். சண்டைக் காட்சிகளை மெட்ரோ மகேஷ் அமைக்க, ஐஸ்வர்யா நடன அமைப்பாளராக பணியாற்றுகிறார். ராஜன் வழிவிட்டான் கலை இயக்கத்தை கவனிக்கிறார்.</p><p>சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/israel-kills-5-civilians-in-fresh-airstrikes-in-gaza</link><comments>https://www.maalaimalar.com/news/world/israel-kills-5-civilians-in-fresh-airstrikes-in-gaza#comments</comments><guid isPermaLink="false">2b0416c1-477f-4bc6-929c-42a4851a13b3</guid><pubDate>Mon, 31 Aug 2026 21:02:23 +0000</pubDate><atom:updated>2026-08-31T21:02:23.652Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காசா,இஸ்ரேல்,gaza,Israel</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/65q41hso/gaza-atacked.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ gaza atacked]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/65q41hso/gaza-atacked.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/gaza">காசா</a> நகரை சுற்றியுள்ள பகுதிகளில் திங்கள்கிழமை நடந்த இஸ்ரேலிய வான்வழி தாக்குதல்களில் ஐந்து பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் மருத்துவமனையும் மீட்பு குழுவினரும் தெரிவித்தனர். மேலும், ஹமாஸ் "ராணுவ இயக்கத்தினரை" குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.</p><p>"காசா நகர நகராட்சி பூங்காவிற்கு அருகில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் நுழைவாயிலை குறிவைத்து நடத்தப்பட்ட இஸ்ரேலிய வான்வழி தாக்குதலை தொடர்ந்து, இரண்டு உடல்கள் தங்களுக்கு கிடைத்துள்ளதாக" காசா நகரில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனை தெரிவித்தது.</p><p>மருத்துவனை தகவல்:</p><p>காசா நகரின் தென்மேற்கே உள்ள டெல் அல்-ஹவா பகுதியில், பொதுமக்கள் வாகனம் ஒன்றை குறிவைத்து இஸ்ரேலிய ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டதன் விளைவாக, மேலும் மூன்று சடலங்களும் பலர் காயங்களுடன் மீட்கப்பட்டதாக மருத்துவமனை தெரிவித்தது.</p><p>ஹமாஸின் அதிகாரத்தின் கீழ் மீட்பு சேவையாக செயல்படும் குடிமை பாதுகாப்புப் பிரிவு, இரண்டு தாக்குதல்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையை ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியது.</p><p>ஆயுத விநியோகம்:</p><p>குடிமை பாதுகாப்பு துறையால் பகிரப்பட்ட படங்களில், இரண்டாவது தாக்குதலுக்கு இலக்கான, முற்றிலுமாக சிதைந்து, உருக்குலைந்த உலோகத்தால் ஆன கறுத்துப்போன ஓடாக மாறியிருந்த காரை, அதை சுற்றி பொதுமக்கள் கூட்டம் கூடியிருக்க, பணியாளர்கள் ஆய்வு செய்வது காட்டப்பட்டது.</p><p>ஏ.எஃப்.‌பி. தொடர்பு கொண்டபோது, ​​இஸ்ரேலிய இராணுவம், இரு தாக்குதல்களிலும் "ஹமாஸின் இராணுவ பிரிவான எஸ்ஸெடின் அல்-கஸ்ஸாம் படைப்பிரிவுகளை சேர்ந்தவர்களை தாக்கியதாக கூறியது.</p><p>பின்னர் அது, இறந்தவர்களில் ஒருவரை உமர் முகமது ரோஷ்டி சரஜ் என அடையாளம் கண்டதுடன், அவர் ஹமாஸுக்கு ஆயுதங்களை வழங்கியதாகவும் கூறியது. "பயங்கரவாதிகள் ஏற்படுத்திய அச்சுறுத்தலை அகற்றுவதற்காக அவர்கள் தாக்கப்பட்டனர்," என ராணுவ அறிக்கை ஒன்று தெரிவித்தது.</p><h2>தொடர் தாக்குதல்:</h2><p>அமெரிக்காவின் ஆதரவுடன் 2025 அக்டோபரில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தபோதிலும், காசா பகுதியில் வன்முறை ஓயவில்லை. தீவிரவாதிகள் எனக் கூறும் பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் தொடர்ந்து குறிவைத்து தாக்கி வருகிறது.</p><p>2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் நடத்திய முன்னெப்போதும் இல்லாத தாக்குதலே காசா போரைத் தூண்டியது. அந்த அமைப்பின் அச்சுறுத்தல்களை ஒழித்தே ஆக வேண்டும் என இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>உடல்நிலை மோசடைந்ததால் சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே மருத்துவமனையில் அனுமதி</title><link>https://www.maalaimalar.com/news/national/anna-hazare-admitted-to-icu-in-mumbai-due-to-viral-infection</link><comments>https://www.maalaimalar.com/news/national/anna-hazare-admitted-to-icu-in-mumbai-due-to-viral-infection#comments</comments><guid isPermaLink="false">c76c9a10-6f6e-4504-8249-b7ddbd2efd4b</guid><pubDate>Mon, 31 Aug 2026 20:02:26 +0000</pubDate><atom:updated>2026-08-31T20:02:26.427Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஐசியூ,Anna Hazare,ICU,Viral infection,வைரஸ் தொற்று,அண்ணா ஹசாரே</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/ox7ezpy5/Anna-Hazare.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anna Hazare]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/ox7ezpy5/Anna-Hazare.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>புகழ்பெற்ற சமூக ஆர்வலர் <a href="https://www.maalaimalar.com/topic/anna-hazare">அண்ணா ஹசாரே</a> உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, அவர் திங்களன்று பம்பாய் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டார்.</p><p>மருத்துவ வட்டாரங்களின்படி, 87 வயதான அண்ணா ஹசாரே ஆரம்பத்தில் தனது சொந்த கிராமமான ரலேகன் சித்திக்கு அருகிலுள்ள ஒரு மருத்துவ நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். </p><p>இருப்பினும், கடுமையான <a href="https://www.maalaimalar.com/topic/viral-infection">வைரஸ் தொற்று</a>, நீரிழப்பு மற்றும் சிறுநீரகச் செயல்பாட்டு பரிசோதனைகள் தொடர்பான சிக்கல்களை தொடர்ந்து, மேம்பட்ட மருத்துவ சிகிச்சைக்காக அவர் மும்பைக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டார்.</p><h2>தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிப்பு:</h2><p>ஹசாரே தற்போது கௌதம் பன்சாலியின் பராமரிப்பில் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர் கண்காணிப்பில் உள்ளார். மருத்துவ நிபுணர்கள் விரிவான நோயறிதல் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர், மேலும் அறிக்கைகளின் அடிப்படையில் சிகிச்சைத் திட்டம் முடிவு செய்யப்படும். அவரது முக்கிய உடல் அறிகுறிகள் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.</p><p>நாடு முழுவதிலும் இருந்து ஆதரவாளர்களும் நலம் விரும்பிகளும் கவலை தெரிவித்துள்ளனர், மேலும் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர். முழுமையான மருத்துவ பரிசோதனைகள் முடிந்தவுடன், அவரது உடல்நிலை குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>சமூக சீர்திருத்தவாதி:</h2><p>ஹசாரே இந்தியாவின் மிக முக்கியமான ஊழல் எதிர்ப்புப் போராளிகளில் மற்றும் சமூக சீர்திருத்தவாதிகளில் ஒருவர். நீர்வள மேம்பாடு, காடு வளர்ப்பு, கிராமப்புற தன்னிறைவு மற்றும் போதை ஒழிப்பு ஆகியவற்றில் முன்னோடி முயற்சிகளை மேற்கொண்டு, மகாராஷ்டிராவில் உள்ள தனது சொந்த கிராமமான ரலேகன் சித்தியை ஒரு முன்மாதிரி கிராமமாக மாற்றியதற்காக அவர் அங்கீகாரம் பெற்றார்.</p><p>தனது உண்ணாவிரத போராட்டங்கள் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI) மற்றும் ஜன லோக்பால் மசோதாவை அமல்படுத்துவதற்காக வாதிட்ட இயக்கங்கள் மூலம் அவர் தேசிய அளவில் புகழ் பெற்றார். </p><p>சமூகத்திற்கும் கிராமப்புற மேம்பாட்டிற்கும் அவர் ஆற்றிய சேவையை பாராட்டி, இந்திய அரசு அவருக்கு 1992-இல் பத்ம பூஷன் விருதையும், மகாராஷ்டிர பூஷன் உட்பட எண்ணற்ற விருதுகளையும் வழங்கி கௌரவித்தது.</p><p>நீட் தேர்வு உட்பட, தேர்வு வினாத்தாள் கசிவு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள் மத்தியில் பரவலான போராட்டங்கள் வெடித்ததை தொடர்ந்து, அப்போதைய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கோரி, ஹசாரே ஜூலை 2026-இல் பிரதமர் நரேந்திர மோடிக்கு பகிரங்க அறிக்கைகளை வெளியிட்டதுடன், ஒரு முறையான கடிதத்தையும் எழுதினார்.</p>]]></content:encoded></item><item><title>டெல்லியில் NEET போராட்டக்காரர்கள் மீதான FIR-களை ரத்து செய்ய அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது</title><link>https://www.maalaimalar.com/news/national/govt-moves-sc-to-quash-firs-against-neet-protesters-in-delhi-cjp</link><comments>https://www.maalaimalar.com/news/national/govt-moves-sc-to-quash-firs-against-neet-protesters-in-delhi-cjp#comments</comments><guid isPermaLink="false">2a14379d-3cd8-40f6-8a6d-968ce8aa2a24</guid><pubDate>Mon, 31 Aug 2026 19:09:39 +0000</pubDate><atom:updated>2026-08-31T19:09:39.852Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,அரசு,Govt,neet protest,உச்சநீதிமன்றம்,CJP,நீட் போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/7e0rn7ma/Neet-Protest.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Neet Protest - File Pic]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/7e0rn7ma/Neet-Protest.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் <a href="https://www.maalaimalar.com/topic/neet-exam">நீட்</a> போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட FIR-களை (முதல் தகவல் அறிக்கைகள்) ரத்து செய்யக் கோரி அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. மேலும், எதிர்காலத்தில் அவர்கள் குறிவைக்கப்படவோ அல்லது துன்புறுத்தப்படவோ மாட்டார்கள் என்றும் உறுதியளித்துள்ளது என்று <a href="https://www.maalaimalar.com/topic/CJP">சி.ஜே.பி.</a> தெரிவித்தது. அதேவேளையில், மற்ற மாநிலங்களில் உள்ள பா.ஜ.க.-என்.டி.ஏ. அரசுகளும் இதேபோன்ற நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அது வலியுறுத்தியது.</p><p>"டெல்லி தொடர்பான அனைத்து FIR-களையும் ரத்து செய்ய அரசு மனு தாக்கல் செய்துள்ளது; எதிர்காலத்திலும் அவர்கள் குறிவைக்கப்படவோ அல்லது துன்புறுத்தப்படவோ மாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. நாங்கள் நிலைமையை கண்காணித்து வருகிறோம்," என்று சி.ஜே.பி.யின் தலைமை செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.</p><h2>உச்சநீதிமன்றம் ஒப்புதல்:</h2><p>டெல்லி காவல்துறை தாக்கல் செய்த இந்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான போராட்டங்களின்போது பதிவு செய்யப்பட்ட 13 FIR-களை ரத்து செய்யவும், வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க, போராட்ட இடத்தில் இருந்த 2,873 பேர் மீது புதிய FIR-ஐ பதிவு செய்ய அனுமதி கோரியும் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p>இந்த விவகாரம் அவசர விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்போது, ​​தானும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மற்றும் பிற சி.ஜே.பி. உறுப்பினர்களும் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராவோம் என்று தாஸ் கூறினார். மற்ற மாநிலங்களில் உள்ள பாஜக-என்.டி.ஏ. அரசுகளும் இதேபோன்ற மனுக்களை தாக்கல் செய்யும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.</p><h2>சி.ஜே.பி. ஆதரவளிக்கும்:</h2><p>நீட் விவகாரத்தைத் தொடர்ந்து உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு குறித்தும் முன்னேற்றம் ஏற்படும் என்று சி.ஜே.பி. எதிர்பார்ப்பதாக தாஸ் கூறினார்.</p><p>போராட்டம் தொடர்பான நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு சி.ஜே.பி. தொடர்ந்து ஆதரவாக நிற்கும் என்று அவர் கூறினார். </p><p>"நாங்கள் அனைத்து இளைஞர்களுக்கும், ஒவ்வொரு மாணவருக்கும் தொடர்ந்து ஆதரவாக நிற்போம். அரசின் கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ளும்போது அவர்களை ஒருபோதும் தனித்து விடமாட்டோம்," என்று அவர் கூறினார்.</p><p>கடந்த மூன்று நாட்களில் அரசுப் பிரதிநிதிகள் குழு ஒன்று தன்னைச் சந்தித்து முன்னேற்ற அறிக்கைகளை வழங்க புதுச்சேரிக்கு வந்திருந்ததாக தாஸ் கூறினார். தனது காணொளி அறிக்கையில், அரசுப் பிரதிநிதிகள் குழுவுடனான பேச்சுவார்த்தையில் FIR-கள் மற்றும் இழப்பீடு தொடர்பான விவகாரங்களும் அடங்கும் என்று தாஸ் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>உ.பி. பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டது மிகுந்த வேதனையளிக்கிறது: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு</title><link>https://www.maalaimalar.com/news/national/president-murmu-distressed-loss-of-lives-due-to-up-firecracker-factory-explosion</link><comments>https://www.maalaimalar.com/news/national/president-murmu-distressed-loss-of-lives-due-to-up-firecracker-factory-explosion#comments</comments><guid isPermaLink="false">cf70cba6-f216-4b2f-ad2e-da986254b517</guid><pubDate>Mon, 31 Aug 2026 18:23:06 +0000</pubDate><atom:updated>2026-08-31T18:23:06.489Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>UP,திரவுபதி முர்மு,உத்தர பிரதேசம்,President Murmu,வெடிவிபத்து,factory explosion</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/8gl5ozlp/UP-Explosion-and-Prez.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ UP Explosion and Prez]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/8gl5ozlp/UP-Explosion-and-Prez.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national">உத்தர பிரதேச</a> மாநிலத்தில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டது மிகுந்த வேதனையளிப்பதாக கூறிய குடியரசு தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/droupadi-murmu">திரவுபதி முர்மு</a>, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.</p><p>உத்தர பிரதேசத்தின் கௌசாம்பி மாவட்டத்தில் திங்கள்கிழமை மதியம் நிகழ்ந்த இந்த பயங்கர வெடிவிபத்தில், பட்டாசு ஆலை கட்டிடம் மற்றும் அருகில் இருந்த ஆறு வீடுகள் தரைமட்டமானதில், எட்டு குழந்தைகள் உட்பட பதினொரு பேர் உயிரிழந்தனர்; மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த ஆலையின் உரிமம் 2024-ஆம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டிருந்தது.</p><h2>எக்ஸ் தள பதிவு:</h2><p>"உத்தர பிரதேசத்தின் கௌசாம்பி மாவட்டத்தில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்ட செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. துரதிர்ஷ்டவசமான இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்," என்று திரவுபதி முர்மு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p>இடிபாடுகளுக்கு அடியில் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில், பெரிய அளவிலான மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. </p><p>தேசிய பேரிடர் மீட்பு படை (NDRF), மாநில பேரிடர் மீட்பு படை (SDRF), காவல்துறை, தீயணைப்பு துறை மற்றும் விமானப்படை பிரிவினர் சம்பவ இடத்தில் பணியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். உயிரிழந்த அனைவரும் அந்த ஆலைக்கு அருகிலேயே வசித்து வந்தவர்கள் என்று அதிகாரிகள் கூறினர்.</p><h2>கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்:</h2><p>கௌசாம்பி மாவட்ட ஆட்சியர் அமித் பால் கூறுகையில், மனோரி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் இந்த வெடிவிபத்து நிகழ்ந்ததாகவும், அதன் தாக்கத்தால் ஆலைக்கு அருகில் இருந்த ஐந்து முதல் ஆறு வீடுகள் வரை இடிந்து விழுந்ததாகவும் தெரிவித்தார்.</p><p>"இந்த ஆலைக்கு 2019-இல் வெடிபொருள் பயன்பாட்டுக்கான உரிமம் வழங்கப்பட்டது; இது 2026 வரை செல்லுபடியாகும் வகையில் இருந்தது. இருப்பினும், 2024-இல் அந்த உரிமம் ரத்து செய்யப்பட்டது. </p><p>உரிமம் ரத்து செய்யப்பட்ட பிறகும் ஆலை எவ்வாறு தொடர்ந்து இயங்கியது என்பதை கண்டறியவும், ஒவ்வொரு நிலையிலும் பொறுப்பை நிர்ணயிக்கவும் விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்," என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>நேபாள பெருவெள்ளத்திற்கு GLOF நிகழ்வு காரணமல்ல; பனிப்பாறைச் சரிவே காரணம் - விஞ்ஞானிகள் புதிய அறிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/world/glof-event-not-the-cause-of-nepals-massive-floods-glacier-collapse-is-the-reason-new-report-by-scientists</link><comments>https://www.maalaimalar.com/news/world/glof-event-not-the-cause-of-nepals-massive-floods-glacier-collapse-is-the-reason-new-report-by-scientists#comments</comments><guid isPermaLink="false">71ae2e3c-5fc6-4ee3-94e9-7407be8b3400</guid><pubDate>Mon, 31 Aug 2026 17:00:00 +0000</pubDate><atom:updated>2026-08-31T17:00:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Nepal Floods,நேபாள வெள்ளம்,பனிப்பாறை ஏரி உடைப்பு,பனிப்பாறை சரிவு,Glacier collapse,GLOF</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/ahc35ihf/New-Project-2026-08-31T200311.325.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நேபாள பெருவெள்ளத்திற்கு GLOF நிகழ்வு காரணமல்ல; பனிப்பாறைச் சரிவே காரணம் - விஞ்ஞானிகள் புதிய அறிக்கை!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/ahc35ihf/New-Project-2026-08-31T200311.325.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கிற்கு வழக்கம் போலக் கூறப்படும் பனிப்பாறை ஏரி உடைப்பு வெள்ளம் அல்லது வழக்கமான நிலநடுக்கம் காரணம் அல்ல என்றும், </p><p>மாறாக இமயமலையின் லங்டாங் லிரங் (Langtang Lirung) சிகரத்தில் ஏற்பட்ட இமாலய பனிப்பாறை சரிவுதான் முக்கியக் காரணம் என்றும் நேபாள விஞ்ஞானிகள் புதிய தகவலை வெளியிட்டுள்ளனர்.</p><h2>நேபாள பெருவெள்ளம் </h2><p>கடந்த வாரம் நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 900த்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 3000த்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். ஆறு நாட்களாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.</p><h2>வெள்ளப்பெருக்குக்கு காரணம் என்ன?</h2><p>இந்த திடீர் வெள்ளப் பெருக்குகள், முதலில் <a href="https://www.maalaimalar.com/news/world/95-dead-rapidly-melting-himalayas-did-an-earthquake-pave-the-way-for-disaster-what-caused-the-floods-in-nepal">நிலநடுக்கத்தால் பனிப்பாறைகள் உடைந்து விழுந்து ஏற்பட்டது</a> எனக் கூறப்பட்டது. </p><p>புவி வேகமாக வெப்பமடைந்து வருவதால் பனிப்பாறைகள் உருகி அந்த நீர் பனிப்பாறைகளின் அடிப்பகுதிக்குச் சென்று, அதன் பிடிப்பை தளர்த்தி, நிலநடுக்கம் ஏற்பட்டதும் ஒட்டுமொத்த பனிப்பாறையும் சரிந்து விழ வழிவகுத்ததாக கூறப்பட்டது. </p><p>ஆனால் அங்கு நிலநடுக்கம் ஏற்படவில்லை, பனிப்பாறைகள் விழுந்த அதிர்வே என கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து இது ஒரு  GLOF நிகழ்வாக இருக்கலாம் என நம்பப்பட்டது. </p><p>ஆனால் இது ஒரு GLOF இல்லை என்றும், அதற்கான எந்த ஆதாரத்தையும் செயற்கைக்கோள் படங்கள் காட்டவில்லை என்று நேபாள விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. </p><h2>GLOF என்றால் என்ன?</h2><p>பனியாற்று ஏரி வெடிப்பு வெள்ளம் (Glacial Lake Outburst Flood - GLOF) என்பது பனிப்பாறைகள் உருகுவதால் உருவாகும் ஏரிகள் திடீரென உடைந்து, அதில் உள்ள நீர் பெருக்கெடுத்துப் பாய்ந்து ஏற்படுத்தும் ஒரு பேரழிவு வெள்ளம் ஆகும். </p><p>மலைப் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகும்போது, அந்த நீர் பனிப்பாறையின் முன்பகுதியிலோ அல்லது அருகிலோ தேங்கி ஏரியாக மாறும். </p><p>இந்த ஏரியைச் சுற்றி மண், பனிக்கட்டிகள் மற்றும் பாறைக்கழிவுகள் ஒரு இயற்கையான அணை போலச் செயல்பட்டு நீரைத் தடுத்து நிறுத்தியிருக்கும். இந்த இயற்கை அணை திடீரென உடையும்போது GLOF ஏற்படுகிறது.</p><h2>அப்போது உண்மையான காரணம் என்ன?</h2><p>இந்த வெள்ளப்பெருக்கிற்கு திடீர் பனிப்பாறை சரிவே காரணம் என முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. லாங்டாங் லிருங் சிகரத்தின் வடக்குப் பகுதியிலிருந்து பனிப்பாறைகள் சரியத் தொடங்கியதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். </p><h2>விஞ்ஞானிகளின் கூற்றுப்படி,</h2><p>“பனிச்சரிவினால் ஏற்பட்ட நில அதிர்வு ஒரு வலுவான நிலநடுக்க சமிக்ஞையை (M5.2 ரிக்டர் அளவில்) உருவாக்கியது. சீனா மற்றும் நேபாள எல்லைக்கு இடைப்பட்ட லெண்டே கோலா பகுதியில், 5200 மீட்டர் உயரத்தில் இருந்து பனி மற்றும் பாறைகளுடன் கூடிய பனிச்சரிவு இடிபாடுகளுடன் சுமார் 2930 மீட்டர் உயரத்திற்கு கீழே இறங்கியது.</p><p>இது 2270 மீட்டர் செங்குத்தாக கீழே சரிந்து, அதிவேக இடிபாட்டுப் பாய்வை ஏற்படுத்தியது.” என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.</p><p>மேலும் அந்த பனி மற்றும் பாறை இடிபாடுகளின் தொகுதி, வெறும் ஏழு நிமிடங்களுக்குள் சுமார் 22 கிலோமீட்டர் தூரம் பயணித்து அஸ்வகந்தா பகுதியை அடைந்ததாகவும், அப்போது அது மணிக்கு தோராயமாக 167 கிலோமீட்டர் சராசரி வேகத்தை எட்டியதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது. </p><p>சரிந்து விழுந்த இடிபாடுகள் ஆற்றின் குறுக்கே தற்காலிகமாகப் பாதையை அடைத்ததால், ஆங்காங்கே <strong>இரண்டு தற்காலிக ஏரிகள்</strong> உருவாயின. இதனால் ஆற்றின் போக்கே மாறியுள்ளது. </p><h2>பேரிடருக்கு முன்பு குறைந்த நீர்மட்டம்</h2><p>இந்த பேரிடர் நிகழ்வதற்குச் சற்று முன்னதாக ரசுவாகாதி மற்றும் சப்ருபெசி ஆறுகளின் நீர்மட்டம் திடீரெனக் குறைந்துள்ளது. பனிச்சரிவு இடிபாடுகள் ஆற்றை அடைக்கத் தொடங்கியதன் ஆரம்பக்கட்ட அறிகுறி இது என்பதை விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். </p><h2>பனிப்பாறை ஏரி உடைப்பு அல்ல</h2><p>ஒரு பிரம்மாண்டமான பனிப்பாறைத் தொகுதி, அதன் அடிப்படையான பாறைப் படுக்கையுடன் சேர்ந்து பெயர்ந்து, லெண்டே ஆற்றுப் படுகைக்குள் செங்குத்தாக விழுந்ததைச் செயற்கைக்கோள் படங்களும் சுட்டிக்காட்டின. இது, இந்த வெள்ளம் பனிப்பாறை ஏரி உடைப்பால் ஏற்பட்ட ஒன்றல்ல என்பதை மேலும் நிரூபிக்கிறது.</p><p>"காவோஃபென்-1 (GF-1), சார் (SAR), சென்டினல் (Sentinel), பிளானட்ஸ்கோப் (PlanetScope) மற்றும் லேண்ட்சாட் (Landsat) உள்ளிட்ட பல செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்ததில், திபெத் பிராந்தியத்தின் மேல் பகுதியில் மூன்று பனிப்பாறை ஏரிகள் இருப்பது தெரியவந்துள்ளது. </p><p>இருப்பினும், பனிப்பாறை ஏரி உடைந்ததற்கான எந்தவொரு சான்றோ அல்லது அறிகுறியோ கண்டறியப்படவில்லை" என்று அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.</p><p>வெள்ளம் ஏற்பட்ட அன்று பெரிய அளவில் மேகவெடிப்பு எதுவும் நிகழவில்லை என்றும் அந்த ஆய்வு மேலும் தெரிவிக்கிறது. ஒருவேளை அப்படி ஏதேனும் நடந்திருந்தால், அது ஆற்றின் நீர்மட்டத்தில் எதிரொலித்திருக்கும்; ஆனால், வெள்ளம் ஏற்படுவதற்கு முன்பாக ஆற்றின் நீர்மட்டம் உண்மையில் குறைந்தே காணப்பட்டது. எனவும் அறிக்கை தெரிவிக்கிறது.</p><p><strong>நேபாள சுற்றுச்சூழல் சங்கத்தின் </strong>பரிந்துரையின் கீழ் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நேற்று (ஆக.30) இந்த அறிக்கையை நேபாள விஞ்ஞானிகள் குழு அளித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெறுவதாக மெஸ்ஸி அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/sports/messi-announces-retirement-from-international-football</link><comments>https://www.maalaimalar.com/sports/messi-announces-retirement-from-international-football#comments</comments><guid isPermaLink="false">04a04d03-7866-4609-9b9d-91a2e9c3ccac</guid><pubDate>Mon, 31 Aug 2026 15:58:13 +0000</pubDate><atom:updated>2026-08-31T15:58:13.634Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Lionel Messi,லியோனல் மெஸ்ஸி,argentina,அர்ஜென்டினா,international retirement,சர்வதேச ஓய்வு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/jqqckwoi/New-Project-2026-08-31T205616.866.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெறுவதாக மெஸ்ஸி அறிவிப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/jqqckwoi/New-Project-2026-08-31T205616.866.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கால்பந்து ஜாம்பவான், அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரரான <a href="https://www.maalaimalar.com/sports/will-messi-retire-after-the-world-cup">லியோனல் மெஸ்ஸி</a> சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து தனது அதிகாரப்பூர்வ ஓய்வை அறிவித்துள்ளார்</p><p>இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்.,</p><p>இறுதிப் போட்டி முடிந்து இவ்வளவு காலம் ஆன நிலையில், நீண்ட யோசனைக்குப் பிறகு, நான் தேசிய அணிக்காக விளையாடுவதிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன் என்பதை அனைவருக்கும் அறிவிக்க விரும்புகிறேன்.</p><p>இது ஒரு வேதனையான முடிவு, எனது ஆன்மாவின் ஆழம் வரை மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது. ஆனால், அதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை நான் உணர்கிறேன். </p><p>நாம் அனைத்தையும் சாதித்த இந்தக் கடந்த சில ஆண்டுகளில் மட்டுமல்ல, அதற்கு முன்பும் கூட, என்னிடம் இருந்த அனைத்தையும் நான் எப்போதும் கொடுத்தேன் என்று உங்களிடம் சத்தியம் செய்கிறேன். </p><p>இந்தச் சீருடைக்காகவும், கால்பந்தின் மூலம் உங்களை மகிழ்ச்சியாகவும், அர்ஜென்டினா அணியைச் சேர்ந்தவராக இருப்பதில் பெருமையாகவும் உணர வைப்பதற்காகவும் நான் எப்போதும் போராடி, என்னிடம் இருந்த அனைத்தையும் கொடுத்தேன்.</p><p>காலம் குறைந்து வருகிறது, அத்தியாயங்கள் முடிவுக்கு வருகின்றன, இது என்னை மிகவும் காயப்படுத்தும் ஒரு அத்தியாயம். தேசிய அணியில் ஒரு அங்கமாக இருப்பதை நான் நேசித்தேன், நேசித்திருக்கிறேன், எப்போதும் நேசிப்பேன். </p><p>என்னிடம் இருந்த அனைத்தையும் கொடுத்துவிட்டேன்; கொடுப்பதற்கு என்னிடம் எதுவும் மீதமில்லை, மேலும், இங்கு இருக்கத் தகுதியான சில சிறந்த இளம் வீரர்கள் உருவாகி வருகிறார்கள்.</p><p>கடந்த 20 ஆண்டுகளாக நீங்கள் காட்டிய அனைத்து அன்புக்கும் நன்றி. மைதானத்தில் இருந்து உங்கள் குரலைக் கேட்பதை மிகவும் மிஸ் செய்வேன். இனி நான் உங்களில் ஒருவனாக, வெளியிலிருந்து உங்களை உற்சாகப்படுத்தி ஆதரவளிப்பேன் (மகிழ்ச்சியான மற்றும் கடினமான என அனைத்து நேரங்களிலும் உங்களுடன் உடன் இருப்பேன் - குறிப்பாக கடினமாக நேரங்களில்)</p><p>எப்போதும் என்னுடன் இருந்து, இந்த அழகான, ஆனாலும் மிகவும் கடினமான பயணத்தில் என்னுடன் வந்த என் குடும்பத்தினருக்கு நன்றி. இந்தப் பாதையைப் பகிர்ந்துகொண்ட ஒவ்வொரு பயிற்சியாளருக்கும், சக வீரருக்கும், நிர்வாகிகளுக்கும் நன்றி. மறக்க முடியாத நினைவுகளையும், தருணங்களையும் நான் என்னுடன் எடுத்துச் செல்கிறேன்.</p><p>ஒரு காலத்தில் நாம் கனவு மட்டுமே கண்ட தருணங்களை, என் சக வீரர்களுடன் சேர்ந்து உங்களுக்கு வழங்கிய மன அமைதியுடனும், பெருமையுடனும் நான் விடைபெறுகிறேன். உங்கள் அனைவருடனும் பயணித்தது ஒரு அற்புதமான அனுபவம். நான் உங்களை நேசிக்கிறேன்!</p><p>என்னை அர்ஜென்டினாக்காரனாக உருவாக்கிய இறைவனுக்கு நன்றி.</p><p>வெற்றி பெற வாழ்த்துகள்!</p><p>இறுதிப் போட்டிக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஜூலை 21 அன்று இந்த வார்த்தைகளை எழுதினேன். என் தந்தைக்கு நடந்த சம்பவத்திற்குப் பிறகு, இன்று முன்பை விட நான் இந்த முடிவில் உறுதியாக இருந்தேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><h2><strong>போட்டிகள் &amp; கோல்கள்:</strong> </h2><p>அர்ஜென்டினா அணிக்காக <strong>207 போட்டிகளில் விளையாடி 125 கோல்களை</strong> அடித்துள்ளார். இதன் மூலம் நாட்டின் அதிக போட்டிகளில் விளையாடிய மற்றும் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். </p><h2><strong>இறுதிப் போட்டி:</strong> </h2><p>ஜூலை 2026 பிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியிடம் அர்ஜென்டினா 1-0 எனத் தோல்வியடைந்ததே மெஸ்ஸியின் கடைசி சர்வதேச போட்டியாகும். </p><h2>முன்பே கணிக்கப்பட்ட முடிவு</h2><p>பிஃபா உலகக் கோப்பை 2026 தொடரின் இறுதிப்போட்டிக்கு பின்னர் மெஸ்ஸி ஓய்வை<del> </del>அறிவிக்க உள்ளார் என முன்னரே செய்திகள் வெளியாகின. காரணம் இன்ஸ்டாகிராமில்இதற்கு முன்னதான சிலப் பதிவுகளில் 2006 முதல் தற்போது வரையிலான சில புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.</p><p>அப்போதே ரசிகர்களுக்கு சந்தேகம் எழுந்திருந்தது. இதனைத்தொடர்ந்து அர்ஜெண்டினா அணித் தோல்வி, அவர் தந்தை இறந்தது உள்ளிட்ட சம்பவங்கள் இந்த ஓய்வு முடிவுக்கு வழிவகுத்ததாக கூறப்படுகிறது. </p> ]]></content:encoded></item><item><title>இங்கிலாந்துக்கு எதிராக படுதோல்வி: இரண்டு முக்கிய வீரர்களை நாடு திரும்ப கேட்டுக்கொண்டு பாகிஸ்தான்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/pakistan-test-crisis-two-stars-asked-to-return-home-after-england-debacle</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/pakistan-test-crisis-two-stars-asked-to-return-home-after-england-debacle#comments</comments><guid isPermaLink="false">fa8b05ee-eb2d-41b4-aa8b-035cfba81604</guid><pubDate>Mon, 31 Aug 2026 15:04:15 +0000</pubDate><atom:updated>2026-08-31T15:04:15.983Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Mohammad Rizwan,இமாம் உல் ஹக்,Imam ul Haq,முகமது ரிஸ்வான்,ENG vs PAK</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/g68ghiqq/PakistanTeam.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பாகிஸ்தான் அணி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/g68ghiqq/PakistanTeam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது. இரண்டாவது போட்டியில் 194 ரன்களில் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடரை 0-2 என இழந்துள்ளது. 3-வது போட்டி வருகிற 9-ந்தேதி (செப்டம்பர்) நடைபெற இருக்கிறது.</p><h2>முகமது ரிஸ்வான்</h2><p>இந்த நிலையில் விக்கெட் கீப்பரான முகமது ரிஸ்வான் மற்றும் தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் ஆகியோரை சொந்த நாடு திரும்ப பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு கேட்டுக் கொண்டுள்ளது.</p><h2>இமாம்-உல்-ஹக்</h2><p>இமாம்-உல்-ஹக் 2-வது போட்டியின் முதல் நாளில் காயம் காரணமாக வெளியேறினார். பாகிஸ்தான் மோசமான நிலையில் இருந்தபோதிலும் பேட்டிங் செய்ய வரவில்லை. 3-வது நாள் ஆட்டத்தின்போது, த்ரோடவுன் பயிற்சி மேற்கொண்டார். அப்போது காலில் டேப் அணிந்து வந்திருந்தார். இதை வர்ணனையாளர் விமர்சித்திருந்தார். இதற்கிடையே அவர் தனக்கு காயம் ஏற்பட்டதாக பொய் சொல்லியுள்ளார் என சர்ச்சை எழுந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கோயம்பேட்டிற்கு குறைந்த வரத்து... உயர்ந்த வெங்காயம் விலை - காரணம் என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/low-arrivals-at-koyambedu-soaring-onion-prices-what-is-the-reason</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/low-arrivals-at-koyambedu-soaring-onion-prices-what-is-the-reason#comments</comments><guid isPermaLink="false">4a51aed7-af51-414c-807c-ddc86f1f72fc</guid><pubDate>Mon, 31 Aug 2026 14:30:39 +0000</pubDate><atom:updated>2026-08-31T14:30:39.228Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Koyambedu,Onion prices,கோயம்பேடு,வெங்காய விலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/ki56uf3e/New-Project-2026-08-31T200019.900.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கோயம்பேட்டிற்கு குறைந்த வரத்து... உயர்ந்த வெங்காயம் விலை - காரணம் என்ன?]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/ki56uf3e/New-Project-2026-08-31T200019.900.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாக வரும் வரத்து குறைந்துள்ளதால், சென்னையில் வெங்காயத்தில் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. </p><p>மத்திய அரசு வெங்காயம் அனுப்பி வைக்கவில்லை என்றால், ஒரு கிலோ ரூ.100ஐத் தொடும் என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>வழக்கமாக ஒரு நாளைக்கு 1600 டன் வெங்காயம் வரும் என்றும், தற்போது ஒரு நாளைக்கு 600 முதல் 800 டன் வெங்காய வரத்தே இருப்பதாகவும் இதனால் ஒரு கிலோ வெங்காயம் ரூ.20ல் இருந்து ரூ.60 வரைக்கும், சில்லறை விலையில் ரூ.80 வரைக்கும் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><h2>கிலோ ரூ.100</h2><p>“கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு, நகரில் வெங்காய விலை உயர்வு காணப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு வரை மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தெலங்கானாவிலிருந்து வரத்து சீராக இருந்தது, அதன் பிறகு வரத்து குறைந்துவிட்டது,” என்று கோயம்பேடு மொத்த வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் பி. சுகுமாரன் தெரிவித்தார். </p><p>இதே நிலையில் சென்றால் அடுத்த 15 நாட்களில் விலை கிலோவிற்கு ரூ.100 என உயரக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.</p><h2>மத்திய அரசின் நடவடிக்கை</h2><p>தமிழ்நாட்டில் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு மகாராஷ்டிராவின் நாசிக்கில் இருந்து சென்னைக்கு 840 முதல் 850 டன் வெங்காயத்தை அனுப்பியுள்ளது.</p><p>மத்திய கிடங்கு கழகம் மூலம் ‘கண்டா எக்ஸ்பிரஸ்’ என்ற சிறப்புச் சரக்கு ரயில் வாயிலாக இந்த வெங்காயம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><p>சென்னையில் இருந்து லாரிமூலம் தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்லப்பட்டு, விநியோகிக்கப்படும். </p><p>இந்த வெங்காயம் நாபெட் (NAFED), என்சிசிஎப் (NCCF) மற்றும் கேந்திரிய பண்டார் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் பொதுமக்களுக்கு கிலோ ரூ.35 என்ற மானிய விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.</p><h2>திடீர் விலை உயர்வு ஏன்?</h2><p>மகாராஷ்டிராவின் நாசிக் மற்றும் கர்நாடகாவின் பெல்லாரி மற்றும் தெலங்கானாவில் இருந்து கோயம்பேட்டிற்கு வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது. </p><p>நாசிக் மற்றும் பல்லாரியில் பெய்த கனமழையால் அங்கு விநியோகம் பாதிக்கப்பட்டு, சென்னைக்கு வரத்து குறைந்துள்ளது. </p><p>அடுத்த 10 முதல் 15 நாட்களில் அங்கு விநியோகம் அதிகமானால் மீண்டும் வரத்து சுமூகமாகி இயல்புநிலை திரும்பும் என கோயம்பேடு வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். </p>]]></content:encoded></item><item><title>இணையவசதி இல்லாதவர்களுக்கும் டிஜிட்டல் பரிவர்த்தனை: ஃபீச்சர் போன்களுக்கான ‘UPI 123Pay’ சேவையை அறிமுகம் செய்தது PhonePe!</title><link>https://www.maalaimalar.com/news/national/digital-payments-without-internet-phonepe-launches-upi-123pay-for-feature-phones</link><comments>https://www.maalaimalar.com/news/national/digital-payments-without-internet-phonepe-launches-upi-123pay-for-feature-phones#comments</comments><guid isPermaLink="false">29111c80-8a46-4a65-8f7d-8706eafa31b6</guid><pubDate>Mon, 31 Aug 2026 14:10:52 +0000</pubDate><atom:updated>2026-08-31T14:10:52.988Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PhonePe,LAVA,Nokia,UPI 123Pay,போன்பே நிறுவனம்,யுபிஐ 123பே,டிஜிட்டல் பரிவர்த்தனை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/awx18n8k/pone.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PhonePe  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/awx18n8k/pone.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இணையவசதி இல்லாத Feature Phone பயனர்களும் இனி எளிதாக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்காக, ஃபோன்பே நிறுவனம் '<a href="https://www.maalaimalar.com/news/world/apple-ceo-tim-cook-steps-down-ends-15-year-tenure">யுபிஐ 123பே</a>' என்ற புதிய சேவையைத் தொடங்கியுள்ளது. ஸ்மார்ட்போன் பயன்படுத்தாத நாட்டின் சுமார் 20 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை வசதியைக் கொண்டு சேர்க்கும் நோக்கில் இச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>இந்தச் சேவை முற்றிலும் எஸ்.எம்.எஸ் அடிப்படையிலான தொழில்நுட்பக் கட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் பலவீனமான 2ஜி நெட்வொர்க் சிக்னல் இருக்கும் கிராமப்புறங்களிலும், தொலைதூரப் பகுதிகளிலும் கூட எவ்வித தடையுமின்றி பணப்பரிவர்த்தனைகளை மிகவும் பாதுகாப்பாகவும் விரைவாகவும் செய்ய முடியும்.</p><h2>முன்னணி நிறு<strong>வனங்களுடன்</strong> கூட்டு</h2><p>நோக்கியா, ஹெச்.எம்.டி, லாவா மற்றும் ஐட்டெல் போன்ற பிரபல ஃபீச்சர் போன் தயாரிப்பு நிறுவனங்களுடன் ஃபோன்பே கைகோர்த்துள்ளது. இதன் மூலம் புதிய ஃபீச்சர் போன்களிலேயே இந்தச் சேவை முன்பே நிறுவப்பட்டு பயனர்களுக்குக் கிடைக்கும்.</p><p>இந்தச் சேவையின் மூலம் பயனர்கள் நபர்-க்கு-நபர் மற்றும் வணிகர்களுக்கான கட்டணங்களைச் செலுத்த முடியும். கேமரா வசதி கொண்ட ஃபீச்சர் போன்கள் மூலம் கியூ.ஆர் குறியீடுகளையும் ஸ்கேன் செய்யலாம். மேலும், வங்கிக் கணக்கை நிர்வகித்தல், இருப்புத் தொகையைச் சரிபார்த்தல் மற்றும் பரிவர்த்தனை வரலாற்றைப் பார்த்தல் போன்ற வசதிகளும் இதில் அடங்கும்.</p><p>முதல்முறை பயன்படுத்தும் பயனர்களுக்கு உதவும் வகையில், தமிழ் உட்பட 12 இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் வழிகாட்டும் குரல்வழி செயற்கை நுண்ணறிவு  உதவி மையமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாகப் பயன்பாட்டுக் கட்டணங்கள் செலுத்துதல் மற்றும் ரீசார்ஜ் செய்யும் வசதிகளும் இதில் சேர்க்கப்படவுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>அஜித்குமாரின் &apos;GLADIATORS&apos; ஆவணப்படம்: அதிகாலை 1 மணிக்கு அழைத்துப் பாராட்டிய அஜித்- இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நெகிழ்ச்சி!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ajith-kumar-gladiators-documentary-gv-prakash-call</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ajith-kumar-gladiators-documentary-gv-prakash-call#comments</comments><guid isPermaLink="false">0fa1dccd-a583-4a6b-a204-2d0238d4ad7d</guid><pubDate>Mon, 31 Aug 2026 13:43:05 +0000</pubDate><atom:updated>2026-08-31T13:43:05.231Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>GV Prakash Kumar,Ajith Kumar,அஜித் குமார்,ஜி.வி.பிரகாஷ் குமார்,GLADIATORS,கிளாடியேட்டர்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/w94nivlj/ajith.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ajith Kumar-GV Prakash kumar  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/w94nivlj/ajith.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித் குமாரின் தொழில்முறை ரேசிங் பயணத்தை மையமாக வைத்து '<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/kayadu-lohar-box-office-double-dhamaka-i-am-game-immortal">கிளாடியேட்டர்ஸ்</a>' எனும் பிரம்மாண்ட ஆவணப்படம் தயாராகி வருகிறது. இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கும் இத்திரைப்படத்தை அஜித் குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீசஸ் மற்றும் ஷாலினி அஜித்குமாரின் கோல்டன் டிரோபி ஃபிலிம் புரொடக்ஷன் இணைந்து தயாரிக்கின்றன. அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தைத் தொடர்ந்து, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணப்படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.</p><h2>அதிகாலை வ<strong>ந்த அழைப்பு</strong></h2><p>தனது 'இம்மார்ட்டல்' திரைப்பட விளம்பர நிகழ்வின் போது ஜி.வி.பிரகாஷ் 'கிளாடியேட்டர்ஸ்' அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். நள்ளிரவு 1 மணியளவில் போடிம் செயலி வழியாக அஜித்திடமிருந்து தனக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாக அவர் தெரிவித்தார். </p><p>படத்தின் டிரெய்லர் மற்றும் பின்னணி இசையைக் கேட்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்த அஜித், ஜி.வி.பிரகாஷின் உழைப்பைப் பாராட்டி நன்றி கூறியதுடன் "உங்களை நிச்சயம் பெருமைப்படுத்துவேன்" என்றும் உறுதியளித்துள்ளார். இந்த நெகிழ்ச்சியான வார்த்தைகள் அன்றைய இரவு முழுவதும் தன்னை தூங்கவிடாமல் உற்சாகப்படுத்தியதாக ஜி.வி.பிரகாஷ் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இப்படம் வெறும் ரேசிங் விளையாட்டைப் பற்றியது மட்டுமல்லாமல், அஜித்தின் தனிப்பட்ட சிந்தனைகள் மற்றும் அவரது சர்வதேச ரேசிங் கனவை வெளிப்படுத்தும் ஆவணப் பதிவாக இருக்கும். அஜித் தனது சொந்த முயற்சியிலும் முதலீட்டிலும் இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளதால், இது காலத்தைக் கடந்து நிற்கும் ஒரு முக்கியப் படைப்பாக அமையும் என இசையமைப்பாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.</p><h2><strong>திரையரங்கு வெளியீடு</strong> </h2><p>சர்வதேச பந்தய களங்களில் அஜித்தும் அவரது அணியினரும் சந்தித்த சவால்களைத் தொகுத்து உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லருக்கு 'UA 13+' தணிக்கைச் சான்றிதழ் கிடைத்துள்ளது. முன்னதாக அஜித்தின் பிறந்தநாளையொட்டி வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்த இத்திரைப்படம், தற்போது திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>15 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-government-orders-the-transfer-of-15-ips-officers</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-government-orders-the-transfer-of-15-ips-officers#comments</comments><guid isPermaLink="false">7de31164-f4c0-4d14-960d-53b850941fb1</guid><pubDate>Mon, 31 Aug 2026 13:41:52 +0000</pubDate><atom:updated>2026-08-31T13:41:52.023Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,Tamil Nadu government,IPS officers,ஐபிஎஸ் அதிகாரிகள்,பணியிட மாற்றம்,transfers</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/3st9ezix/New-Project-2026-08-31T191126.957.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 15 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/3st9ezix/New-Project-2026-08-31T191126.957.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் 15 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார். </p><ul><li><p>அதன்படி, தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக ஏ.நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். </p></li><li><p>பட்டுக்கோட்டை உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக பி.அங்கிதா நியமனம் செய்யப்பட்டுள்ளார். </p></li><li><p>நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக எஸ்.அஸ்வினி நியமிக்கப்பட்டுள்ளார். </p></li><li><p>திருநெல்வேலி ஊரக உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக பிஸ்வாஜித் பண்டா நியமனம் செய்யப்பட்டுள்ளார். </p></li><li><p>கடலூர் மாவட்டம், சிதம்பரம் உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக டிஜே. சத்ரிய கவின் நியமிக்கப்பட்டுள்ளார்.</p></li></ul><ul><li><p>திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக எஸ்.இன்பா நியமிக்கப்பட்டுள்ளார். </p></li><li><p>திண்டுக்கல் உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக பி.மஞ்சுமா நியமிக்கப்பட்டுள்ளார். </p></li><li><p>நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக மண்ணம் சுஜித் சம்பத் நியமிக்கப்பட்டுள்ளார்.</p></li><li><p>தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக நீல் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். </p></li><li><p>ராமநாதபுரம் உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக கே.நேகா நியமிக்கப்பட்டுள்ளார்.</p></li></ul><ul><li><p>நாகப்பட்டினம் உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக பிரியங்கா பார்கவ் நியமிக்கப்பட்டுள்ளார். </p></li><li><p>திருவண்ணாமலை ஊரக உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக ராகுல் வி கோபால் நியமிக்கப்பட்டுள்ளார். </p></li><li><p>விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக சைந்தானே ஸ்வப்னிலா அனில் நியமிக்கப்பட்டுள்ளார். </p></li><li><p>மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக தனூ சிங் நியமிக்கப்பட்டுள்ளார். </p></li><li><p>மதுரை மாநகரம், அண்ணா நகர் சரகத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக ஆஷிஷ் புனியா நியமிக்கப்பட்டுள்ளார்.</p></li></ul>]]></content:encoded></item><item><title>பாஜக-வில் பசு பாதுகாப்புக்கே முன்னுரிமை: மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் மெகபூபா முப்தி சாடல்</title><link>https://www.maalaimalar.com/news/national/bjp-prioritises-cow-protection-over-womens-safety-mehbooba-on-delhi-gang-rape-of-16-year-old</link><comments>https://www.maalaimalar.com/news/national/bjp-prioritises-cow-protection-over-womens-safety-mehbooba-on-delhi-gang-rape-of-16-year-old#comments</comments><guid isPermaLink="false">0c4a66cd-c844-4ae0-ba52-f4656c9623bf</guid><pubDate>Mon, 31 Aug 2026 13:23:44 +0000</pubDate><atom:updated>2026-08-31T13:23:44.052Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Mehbooba Mufti,கூட்டுப் பாலியல் வன்கொடுமை,gang rape,minor student</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/8ie304eg/Mufti0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மெகபூபா முப்தி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/8ie304eg/Mufti0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி கவலை தெரிவித்துள்ளார்.</p><h2>சமூக வலைதள பதிவு</h2><p>இதுதொடர்பாக ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>பாஜகவின் இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பை விட பசுப் பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது.</p><p>பசுவதை செய்ததாக வெறும் சந்தேகத்தின் பேரிலேயே, மக்கள் கும்பல்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். ஆனாலும், கற்பழிப்பு, பாலியல் வன்முறை மற்றும் கொடூரங்களிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் விஷயத்தில், தண்டனை பெற்ற குற்றவாளிகள் தொடர்ந்து பரோலில் வெளிவருவதோடு மட்டுமல்லாமல், முழுமையான ஆதரவையும் பெறுகின்றனர்.</p> <p>பசுக்களின் பெயரால் நடக்கும் சட்டவிரோதச் செயல்களுக்குச் செலவிடப்படும் ஆற்றலில் பாதியையாவது பெண்களின் பாதுகாப்பிற்காகச் செலவிட்டால், இந்தியா ஒவ்வொரு மகளுக்கும், சகோதரிக்கும், தாய்க்கும் மிகவும் பாதுகாப்பான இடமாக இருக்கும்.</p><p>இவ்வாறு மெகபூபா முப்தி குறிப்பிட்டுள்ளார்.</p><p>டெல்லியில் ஓடும் படுக்கை வசதி கொண்ட பேருந்தில் 16 வயது பள்ளி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகத்தான் மெகபூபா முப்தி பாஜக அரசை கடுமையாக சாடியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>உத்தரப்பிரதேசத்தில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 5 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்</title><link>https://www.maalaimalar.com/news/national/massive-fireworks-factory-explosion-in-uttar-pradesh-5-killed-over-20-injured</link><comments>https://www.maalaimalar.com/news/national/massive-fireworks-factory-explosion-in-uttar-pradesh-5-killed-over-20-injured#comments</comments><guid isPermaLink="false">1f720411-8c12-4b50-97a3-afe28632a5c2</guid><pubDate>Mon, 31 Aug 2026 13:07:55 +0000</pubDate><atom:updated>2026-08-31T13:07:55.424Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Uttar Pradesh,வெடிவிபத்து,பட்டாசு ஆலை வெடிவிபத்து,firecracker factory,firecracker explosion,உத்தரப்பிரதேச மாநிலம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/tgjfc0m1/fire-crack.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ firecracker explosion ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/tgjfc0m1/fire-crack.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/worlds-largest-iceberg-a23a-ends-40-year-history">உத்தரப்பிரதேச மாநிலம்</a> கெளசாம்பி மாவட்டத்தின் பிப்ரி காவல் எல்லைக்குட்பட்ட மனோரி கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு தயாரிப்பு ஆலையில் இன்று காலை சுமார் 11 மணியளவில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தீவிர சிகிச்சைக்காகப் பரிந்துரைக்கப்பட்டவர்கள் பிரயாக்ராஜில் உள்ள எஸ்.ஆர்.என் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருடன், அருகிலுள்ள மனோரி விமானப்படை தளத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வீரர்களும் இணைந்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர். 10-க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடிபாடுகள் அகற்றும் பணி நடைபெறுகிறது. விபத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு, உத்தரப்பிரதேச பயங்கரவாத எதிர்ப்புப் படை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.</p><h2>ரெயில் <strong>போக்குவரத்து</strong> பாதிப்பு</h2><p>வெடிவிபத்தின் அதிர்வால் ஆலையை சுற்றியிருந்த 5-க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக இடிந்து தரைமட்டமாகின. அருகிலுள்ள டெல்லி-ஹவுரா ரெயில் பாதையில் பாதுகாப்பு கருதி ரெயில் போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டு, வந்தே பாரத் மற்றும் விரைவு ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன. உயர் அழுத்த மின் கம்பிகள் சேதமடைந்ததால் மின் விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்திற்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அபு தாபியில் 4 கோடி ரூபாய்க்கு ஏலம் போன அரிய வகை கழுகு</title><link>https://www.maalaimalar.com/news/world/rare-falcon-was-sold-rs-4-crores-auction-in-abu-dhabi</link><comments>https://www.maalaimalar.com/news/world/rare-falcon-was-sold-rs-4-crores-auction-in-abu-dhabi#comments</comments><guid isPermaLink="false">0de0374b-432e-407f-9006-c75169d6aca3</guid><pubDate>Mon, 31 Aug 2026 13:06:11 +0000</pubDate><atom:updated>2026-08-31T13:06:11.421Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Abu Dhabi,அபுதாபி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/djut9gxy/WhiteFalcon.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அரியவகை கழுகு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/djut9gxy/WhiteFalcon.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அபுதாபியில் சர்வதேச வேட்டை மற்றும் குதிரையேற்ற கண்காட்சி நடந்து வருகிறது. இந்த கண்காட்சி ஏலத்தில் ரூ.4 கோடிக்கு அரிய வகை வெள்ளை நிற பால்கன் (கழுகு) விற்கப்பட்டுள்ளது.</p><h2>குதிரையேற்ற கண்காட்சி</h2><p>அபுதாபி தேசிய கண்காட்சி மைய குழுமத்தின் சார்பில் கடந்த 28-ந்தேதி முதல் சர்வதேச வேட்டை மற்றும் குதிரையேற்ற கண்காட்சி நடந்து வருகிறது. இதில் அமீரக பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் வேட்டை மற்றும் குதிரையேற்றம் தொடர்பான சாதனங்கள், தயாரிப்புகளை பல்வேறு நிறுவனங்கள் கண்காட்சி அரங்குகளில் காட்சிப்படுத்தி உள்ளன.</p><h2>55 முன்னணி பண்ணைகள்</h2><p>அதேபோல் பல்வேறு விலங்குகளும், பறவைகளும் ஏலத்தில் விடப்படுகின்றன. நடப்பு ஆண்டில் உள்நாடு மற்றும் சர்வதேச அளவிலான 55 முன்னணி பால்கன் பறவை பண்ணைகள் பங்கேற்றுள்ளன.</p><h2>ரூ.3 கோடியே 90 லட்சத்திற்கு ஏலம்</h2><p>தேசிய கண்காட்சி மைய குழுமத்தின் சார்பில் கோலாகலமாக நடந்து வரும் சர்வதேச வேட்டை மற்றும் குதிரையேற்ற கண்காட்சியில், அமெரிக்காவில் வளர்க்கப்பட்ட 'கார்மூஷா பியூர் அல்ட்ரா வொயிட்' ரக வெள்ளை பால்கன் (கழுகு) ரூ.3 கோடியே 90 லட்சத்திற்கு விறுவிறுப்பான ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.</p><h2>வெள்ளை நிறம்</h2><p>நடப்பு ஆண்டின் கண்காட்சி ஏலத்தில் மிக அதிக விலைக்கு விற்பனையான பெருமையை இந்த அரிய பறவை பெற்றுள்ளது. தூய்மையான வெள்ளை நிறம், 1 கிலோ எடை மற்றும் 16.5 அங்குலம் நீளம் கொண்ட இந்த கம்பீரமான பறவை, அதன் அழகிய தோற்றத்தினால் உலக முழுவதிலும் இருந்து வந்திருந்த பறவை ஆர்வலர்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>குழாய் உடைந்து சாலையில் ஆறாக ஓடிய குடிநீர்: வாகன ஓட்டிகள் கடும் அவதி..!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurai-drinking-water-pipe-breaks-motorists-suffer</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurai-drinking-water-pipe-breaks-motorists-suffer#comments</comments><guid isPermaLink="false">6e9a3d64-ab9c-42e6-9a61-647f133ac32d</guid><pubDate>Mon, 31 Aug 2026 12:54:42 +0000</pubDate><atom:updated>2026-08-31T12:54:42.467Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மதுரை,குடிநீர் குழாய் உடைப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/h1iglqjx/DrinkingWater001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தண்ணீர் குழாய் உடைப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/h1iglqjx/DrinkingWater001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை மாவட்டம் சோழவந்தான் திருவேங்கடம் பள்ளிவாசல் பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த குடிநீர் குழாய் சோழவந்தானிலிருந்து திருமங்கலம் வழியே செல்கிறது. இது கடந்த 3 நாட்களுக்கு முன்பு உடைந்து பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி சாலையில் பெருகி கொண்டிருக்கிறது. இதனால் அந்த வழியே செல்லும் பொதுமக்களும் வாகனஓட்டிகளும் சிரமப்பட்டு சாலையை கடந்து செல்கின்றனர்.</p><h2>பொதுமக்கள் குற்றச்சாட்டு</h2><p>இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள மக்கள் பெரும் வேதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குடிநீர் குழாய் உடைந்தது பற்றி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் அதனை சரி செய்ய எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>40 ஆண்டுகால வரலாற்றை நிறைவு செய்த உலகின் மிகப்பெரிய பனிப்பாறை A23a!</title><link>https://www.maalaimalar.com/news/world/worlds-largest-iceberg-a23a-ends-40-year-history</link><comments>https://www.maalaimalar.com/news/world/worlds-largest-iceberg-a23a-ends-40-year-history#comments</comments><guid isPermaLink="false">1f2cb26c-bc5d-48a6-8087-d32a79698c93</guid><pubDate>Mon, 31 Aug 2026 12:47:44 +0000</pubDate><atom:updated>2026-08-31T12:47:44.271Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தோனேசியா,பனிப்பாறை,பாலி தீவு,அண்டார்டிகா,island of Bali,Weddell Sea,US National Ice Center,A23a</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/7bk9zsxo/iceberg.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[   island of Bali]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/7bk9zsxo/iceberg.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலகின் மிகப்பெரிய பனிப்பாறையாக அறியப்பட்ட 'A23a', தெற்குப் பெருங்கடலின் வெப்பமான நீரினாலும் கடல் நீரோட்டங்களினாலும் உருகி, தற்போது முழுமையாக மறைந்துவிட்டது. சுமார் 40 ஆண்டுகள் நீடித்த இதன் வரலாற்றுப் பயணம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. &nbsp; </p><h2><strong>பனிப்பாறையின் தோற்றம்</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/news/world/trump-demands-all-canadian-companies-doing-business-with-the-us-move-to-america-immediately">அண்டார்டிகாவின் ஃபில்ச்னர் </a>பனித் தட்டிலிருந்து 1986-ஆம் ஆண்டு உடைந்து தனியாகப் பிரிந்த இந்த பனிப்பாறை, 1991-ஆம் ஆண்டில் A23a என்று பெயரிடப்பட்டது. ஆரம்பத்தில் இது சுமார் 4,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டிருந்தது. இது இந்தோனேசியாவின் பாலி தீவின் அளவிற்கு அல்லது இந்தியாவின் கோவா மாநிலத்தின் பரப்பளவிற்கு நிகரானது. &nbsp; </p><h2><strong>மூன்று தசாப்த கால முடக்கம்</strong> </h2><p>பிரிந்த பிறகு, வெட்டல் கடலின் தரைப்பகுதியில் சிக்கியதால், சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நகராமல் ஒரே இடத்தில் முடங்கி இருந்தது. பின்னர் 2020-ஆம் ஆண்டில் கடல் நீரோட்டம் காரணமாக மீண்டும் நகரத் தொடங்கி, தெற்குப் பெருங்கடலை நோக்கிப் பயணித்தது. &nbsp; </p><p>2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில் வெப்பமான கடற்பகுதிகளை அடைந்தபோது, இந்த பனிப்பாறை வேகமாகக் கரையத் தொடங்கியது. பெரிய பனிப்பாறைகள் சிறு சிறு துண்டுகளாக உடைந்து சிதறின. அமெரிக்க தேசிய பனி மையம் மற்றும் நாசா ஆகியவை செயற்கைக்கோள் மூலம் இதைக் கண்காணித்து வந்த நிலையில், தற்போது A23a பனிப்பாறை முழுமையாக உருகி மறைந்துவிட்டதாக ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். &nbsp;A23a பனிப்பாறை தனது பயணத்தின் மூலம் கடல்சார் உயிரினங்களுக்கும் அறிவியல் ஆராய்ச்சிக்கும் பெருமளவில் உதவியுள்ளது. &nbsp; </p>]]></content:encoded></item><item><title>நீட் தேர்வு போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/central-government-files-petition-in-supreme-court-seeking-orders-to-withdraw-cases-against-neet-exam-protesters</link><comments>https://www.maalaimalar.com/news/national/central-government-files-petition-in-supreme-court-seeking-orders-to-withdraw-cases-against-neet-exam-protesters#comments</comments><guid isPermaLink="false">30edb287-cfea-42a7-88d6-c7378e348c7b</guid><pubDate>Mon, 31 Aug 2026 12:41:46 +0000</pubDate><atom:updated>2026-08-31T12:41:46.260Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,Supreme Court,உச்ச நீதிமன்றம்,Protesters,போராட்டக்காரர்கள்,NEET Paper Leak,நீட் தேர்வு வினாத்தாள் கசிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/2pop537l/New-Project-2026-08-31T181038.682.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நீட் தேர்வு போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/2pop537l/New-Project-2026-08-31T181038.682.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியா முழுவதும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற போராட்டக்காரர்களுக்கு எதிராக, காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.</p><p>போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான முதல் தகவல் அறிக்கைகளை ரத்து செய்ய, தனது சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்துமாறு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தைக் கோரியுள்ளது. இந்த வழக்கை நாளை (ஆக.31) உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது. </p><h2>3 கோரிக்கைகள்</h2><p>நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட கல்வித்துறையில் நடைபெற்ற குளறுபடிகளை கண்டித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ஜூன்.20ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தை தொடங்கியது. </p><p>இந்த போராட்டம் நாடுதழுவியதாக மாறிய நிலையில், மத்திய அரசு போராட்டக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் போராட்டக்குழுவினர் போராட்டத்தை கைவிட மூன்று கோரிக்கைகளை முன்வைத்தனர். </p><p>அப்போது மத்திய கல்வியமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்யவேண்டும், நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கவேண்டும், போராட்டத்தில் ஈடுபட்டோர்மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்துசெய்ய வேண்டும் உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை வைத்தது.</p><h2>பேரணி அறிவிப்பு</h2><p>இதில் தர்மேந்திர பிரதான் ராஜினாமா மட்டுமே நிறைவேற்றப்பட்டது. மற்ற இரண்டு கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை. இதனைத்தொடர்ந்து கோரிக்கைகளை நிறைவேற்றாத மத்திய அரசை கண்டித்து செப்.5ம் தேதி <a href="https://www.maalaimalar.com/news/national/central-government-fails-to-fulfill-promises-cockroach-janata-party-announces-rally-for-september-5">கரப்பான்பூச்சி கட்சி பேரணி</a> அறிவித்துள்ளது. </p><p>இந்நிலையில்  போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>கழிவறை இருக்கையின் கீழ் 6 அடி நீள நாகப்பாம்பு: குருகிராமில் பரபரப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/gurugram-home-toilet-six-foot-cobra-rescued</link><comments>https://www.maalaimalar.com/news/national/gurugram-home-toilet-six-foot-cobra-rescued#comments</comments><guid isPermaLink="false">a9254b75-7254-4488-a954-49f7bd548d41</guid><pubDate>Mon, 31 Aug 2026 12:39:06 +0000</pubDate><atom:updated>2026-08-31T12:39:06.005Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>haryana,குருகிராம்,ஹரியானா,Wild life Rescue,Snake Safety,Monsoon Alert,Cobra In Toilet</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/d8hfgt4n/Cobra-In-Toilet" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Cobra In Toilet ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/d8hfgt4n/Cobra-In-Toilet?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஒரு வீட்டின் கழிவறையிலிருந்து வந்த தொடர் சீறல் சத்தத்தை அடுத்து, அங்கு 6 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் வகை நாகப்பாம்பு மறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>நடந்தது என்ன?</h2><p>குருகிராமின் கர்ஹௌலி கலான் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் கழிவறைக்குள் இருந்து நீண்ட நேரமாக விசித்திரமான சீறல் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்துள்ளது. சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், கழிவறைக்குள் தேடியும் முதலில் பாம்பு எங்கு இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.</p><p>பாம்பு ஏதோ ஒரு இடுக்கில் மறைந்திருப்பதை உணர்ந்த குடும்பத்தினர், உடனடியாக வனவிலங்கு பாதுகாவலரான அனில் காண்டாஸ் என்பவருக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர்.</p><h2>உடைத்து எடுக்கப்பட்ட கழிவறை இருக்கை</h2><p>சம்பவ இடத்திற்கு வந்த அனில் காண்டாஸ், கழிவறை இருக்கையை மெதுவாகத் தட்டிப் பார்த்துள்ளார். </p><p>அப்போது உள்ளே இருந்த பாம்பின் சீறல் சத்தம் மேலும் பலமாக இருந்தது.பாம்பு கழிவறை இருக்கையின் கீழ் உள்ள குறுகிய இடைவெளியில் சிக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது.</p><p>இதையடுத்து, வேறு வழியின்றி கழிவறை இருக்கை முழுமையாக உடைக்கப்பட்டது. உள்ளே மறைந்திருந்த ஆக்ரோஷமான, மிகவும் விஷத்தன்மை வாய்ந்த கண்ணாடி விரியன் பாம்பு வெளியே தெரிந்தது. </p><p>மிகவும் சவாலான மற்றும் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு, மீட்புக் குழுவினர் அந்தப் பாம்பை பத்திரமாக மீட்டு, குடியிருப்புப் பகுதியிலிருந்து துரமாகக் கொண்டு சென்று விடுவித்தனர்.</p><h2>பாம்புகள் குடியிருப்புக்குள் நுழையக் காரணம் என்ன?</h2><p>அண்மைக் காலமாக குருகிராமில் பாம்புகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது குறித்து வனவிலங்கு பாதுகாவலர் அனில் காண்டாஸ் சில முக்கிய காரணங்களைப் பகிர்ந்துள்ளார்.</p><p>இது குறித்து அவர் கூறுகையில்,வேகமாக வளர்ந்து வரும் நகரமயமாக்கல் மற்றும் கட்டுமானப் பணிகள் காரணமாக, காடுகளும் விளைநிலங்களும் வேகமாக அழிந்து வருகின்றன.</p><p>இயற்கை வாழிடங்கள் அழிவதால் பாம்புகளுக்குத் தேவையான இயற்கை உணவுகள் கிடைப்பதில்லை. இதனால், அவை எலிகள் மற்றும் பிற சிறு உயிரினங்களைத் தேடி மனிதர்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைகின்றன. </p><p>குருகிராமில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சுமார் 70 பாம்புகள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று மாதங்களில் இந்த எண்ணிக்கை 200-ஐத் தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2>பொதுமக்களுக்கான எச்சரிக்கையும் விழிப்புணர்வும்!</h2><p>தற்போது பருவமழைக்காலம் என்பதால் பொதுமக்கள் அனைவரும் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>பாம்புகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அனில் காண்டாஸ் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.</p><p>இரவு நேரங்களில் பொதுமக்கள் யாரும் தரையில் படுத்து உறங்குவதைத் தவிர்க்க வேண்டும்.</p><p>தூங்கும் போது கட்டாயம் கொசுவலைகளைப் பயன்படுத்த வேண்டும் வீட்டில் இருக்கும் உணவுகளை எப்போதும் பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும். </p><p>உணவுப் பொருட்கள் சிதறிக் கிடந்தால் எலிகள் வரும், எலிகளைத் தேடி பாம்புகளும் வீட்டிற்குள் நுழையும். ஒருவேளை பாம்பு கடித்துவிட்டால், எவ்வித நாட்டு வைத்தியத்தையோ அல்லது வீட்டு வைத்தியத்தையோ நம்பி நேரத்தை வீணடிக்கக் கூடாது. </p><p>உடனடியாகப் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று பாம்பு விஷமுறிவு மருந்து செலுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளராக இருக்க முடியும்- வைகோ</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vaiko-says-rahul-gandhi-fit-for-pm-role</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vaiko-says-rahul-gandhi-fit-for-pm-role#comments</comments><guid isPermaLink="false">cb1c95ef-d4f5-4ef6-84d1-eb45bcb0e7fc</guid><pubDate>Mon, 31 Aug 2026 12:36:58 +0000</pubDate><atom:updated>2026-08-31T12:36:58.187Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,MDMK,மதிமுக,பிரதமர் வேட்பாளர்,PM Candidate</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/5gn46oif/vaiko.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MDMK Leader Vaiko]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/5gn46oif/vaiko.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><p>ராகுல் காந்தியை பிரதமராக ஏற்றுக் கொள்ளாவிட்டால் பதவியை ராஜினாமா செய்வோம் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் ராஜேஷ் குமார் கூறுகிறார்.</p><p>தமிழக முதலமைச்சரின் கற்பனையில் கூட அவருக்கு இதுபோன்ற கருத்து இருக்காது.</p><p>அமைச்சர்கள் இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும். ராகுல்காந்தி தான் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D" rel="nofollow">பிரதமர் வேட்பாளர்</a> அகில இந்திய அளவில் நடைபெறும் தேர்தலில் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளராக கண்டிப்பாக இருக்க முடியும்.</p><p>இந்தியா கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை வகிப்பதால் காங்கிரஸ் வேட்பாளர் தான் பிரதமர் வேட்பாளராக முடியும்.</p><p>மேலும், இதுபோன்று சர்ச்சைக்குரிய கருத்து களை அமைச்சர்கள் தெரிவிக்காமல் இருக்க முதலமைச்சர், அவர்களிடம் வலியுறுத்த வேண்டும்.</p><h2>ஊழலற்ற அரசு</h2><p>தமிழகத்தில் மிகப்பெரிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழக ஆட்சியை முதலமைச்சர் ஜோசப் விஜய் ஊழலற்ற அரசாக நடத்தி வருகிறார். இதுவரை ஒவ்வொரு துறையிலும் கப்பம் கட்டித்தான் பணிகள் நடைபெறும் என்ற நிலை இருந்தது. தற்போது அந்த நிலை முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.</p><p>எந்த அலுவலகத்துக்கு சென்றாலும் பொதுமக்கள் பணம் கொடுக்க வேண்டிய தேவை இல்லை. எந்தத் துறையிலும் கமிஷன் இல்லாமல் நேர்மையான நிர்வாகம் நடைபெற்று வருகிறது.</p><h2>த.வெ.க. ஆட்சிக்கு 80 மதிப்பெண்</h2><p>100 நாட்களை கடந்துள்ள தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்கு 100-க்கு 80 மதிப்பெண்கள் வழங்குகிறேன். ஊழலை முழுமையாக ஒழிப்பது சாதாரணமான காரியம் அல்ல. அது இமயமலையை நகர்த்துவது போன்ற கடினமான பணி.</p><p>அதே நேரத்தில் தமிழக அரசு ஊழலை ஒழிக்கும் நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எனது நற்சான்றை தமிழக அரசுக்கு வழங்குகிறேன்.</p><p>அரசின் நிர்வாகத்தில் எந்தவிதமான முறைகேடு</p><p>களுக்கும் இடம் கொடுக்க மாட்டோம் என்ற தமிழக அரசு நிலைப்பாடு வர வேற்கத்தக்கது.</p><p>அவ்வாறு முறைகேடுகள் நடை பெற்றால் சம்பந்தப்பட்ட வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சில மூத்த அதிகாரிகள் அரசுக்கு முழுமையாக ஒத்து ழைக்கவில்லை என்பது எனது கருத்து.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>‘சட்டவிரோத நடுவர் மன்றம்’: சிந்து நதி நீர் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை நிராகரித்தது இந்தியா!</title><link>https://www.maalaimalar.com/news/national/illegal-tribunal-india-rejects-the-verdict-of-the-indus-waters-tribunal</link><comments>https://www.maalaimalar.com/news/national/illegal-tribunal-india-rejects-the-verdict-of-the-indus-waters-tribunal#comments</comments><guid isPermaLink="false">f1b7ced9-e53a-4d1f-9c77-9cd03af0c70d</guid><pubDate>Mon, 31 Aug 2026 12:16:06 +0000</pubDate><atom:updated>2026-08-31T12:16:06.188Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,indus waters treaty,சிந்து நதிநீர் ஒப்பந்தம்,World Banks Court of Arbitration,உலக வங்கியின் நடுவர் மன்றம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/5gd7oxlt/New-Project-2026-08-31T171300.106.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘சட்டவிரோத நடுவர் மன்றம்’: சிந்து நதி நீர் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை நிராகரித்தது இந்தியா!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/5gd7oxlt/New-Project-2026-08-31T171300.106.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச நடுவர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இந்தியா அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளது. </p><p>மேலும், 1960 ஆம் ஆண்டின் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் விதிகளை மீறி உலக வங்கியால் இந்த நீதிமன்றம் “சட்டவிரோதமாக அமைக்கப்பட்டது” என்றும், அதன் தீர்ப்புகள் எதற்கும் சட்டபூர்வமான அங்கீகாரம் இல்லை என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><h2>திட்டவட்டமாக நிராகரிக்கிறோம்</h2><p>ஒப்பந்தத்தின் விதிமுறைகளை அப்பட்டமாக மீறி உலக வங்கியால் இந்த 'நடுவர் மன்றம்' அமைக்கப்பட்டது. </p><p>சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட இந்த அமைப்பு இதற்கு முன் வெளியிட்ட அனைத்து அறிவிப்புகளையும் இந்தியா எவ்வாறு உறுதியாக நிராகரித்ததோ, அதேபோலவே தற்போதைய தீர்ப்பையும் இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. </p><h2>எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது</h2><p>இந்தியாவின் இறையாண்மை சார்ந்த முடிவுகள் குறித்துத் தீர்ப்பளிக்க இந்த 'நடுவர் மன்றத்திற்கு' எவ்வித அதிகார வரம்பும் இல்லை. இதன் தற்போதைய அல்லது எதிர்கால அறிவிப்புகள், இந்தியா மேற்கொண்டு வரும் திட்டங்கள் தொடர்பான இந்தியாவின் நடவடிக்கைகளில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. என இந்தியா தெரிவித்துள்ளது. </p><h2>ஒப்பந்தம் இடைநிறுத்தம்</h2><p>பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, எல்லையோரப் பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் அளிக்கும் ஆதரவைக் கண்டித்து, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. </p><p>பாகிஸ்தான் பயங்கரவாதத்தை முற்றிலுமாக நிறுத்தும் வரை, இந்த ஒப்பந்தத்தின் கீழ் உள்ள கடமைகளை நிறைவேற்ற இந்தியா கடமைப்படவில்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாகக் கூறியுள்ளது.</p><p>இதனைத்தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் சிந்து நதிநீர் தீர்ப்பாயத்தை நாடியது.</p><h2>நடுவர் நீதிமன்றம் கூறியது என்ன?</h2><p>பஹல்காம் தாக்குதலை காரணம் காட்டி சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ளதை ஏற்க முடியாது என நடுவர் நீதிமன்றம் தெரிவித்தது. </p><p>எந்த காரணத்தாலும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்துவதையோ அல்லது ரத்து செய்வதையோ நியாயப்படுத்த முடியாது என்று கூறிய நடுவர் நீதிமன்றம், இந்தியா ஒப்பந்தத்தின் கீழ் உள்ள தனது கடமைகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.</p><p>மேலும் மேற்கு நதிகளில், அதாவது ஜம்மு-காஷ்மீர் பிராந்தியத்தில் இந்தியா கட்டி வரும் நீர்மின் நிலையங்களின் கட்டுமானப் பணிகளை குறிப்பிட்ட வரம்பிற்குள் வைத்திருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.</p><p>அணைக்கட்டுகளில் தண்ணீரைத் தேக்கி வைக்கும் இந்தியாவின் அதிகபட்ச கொள்ளளவு மற்றும் வடிவமைப்புகள் பாகிஸ்தானின் நீர் உரிமைகளைப் பாதிக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளது. </p><h2>2027 ஜூலையில் நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை</h2><p>மேலும் இந்தியாவின் இந்தத் திட்டங்கள் தொடர்பாக ஆய்வுசெய்ய நிபுணர் குழு ஒன்றையும் நீதிமன்றம் அமைக்க உத்தரவிட்டுள்ளது. </p><p>உலக வங்கியால் நியமிக்கப்படும் இந்த நடுநிலை நிபுணர் குழு, இந்தியாவின் இந்த நீர்மின் திட்டங்களின் தொழில்நுட்ப வடிவமைப்பு ஒப்பந்த விதிகளுக்கு உட்பட்டுத்தான் உள்ளதா என்பதை ஆய்வு செய்யும்.</p><p>இந்த ஆய்வின் இறுதி அறிக்கை மற்றும் முடிவுகள் சூலை 2027-க்குள் வழங்கப்படும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.</p><h2>எந்த மாற்றமும் இல்லை</h2><p>தீர்ப்பாயத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, சிந்து நீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது குறித்த <a href="https://www.maalaimalar.com/news/world/indus-waters-treaty-india-rules-out-return-to-status-quo-links-future-to-pakistans-anti-terror-action">இந்தியாவின் முடிவு தொடர்ந்து அமலில் இருக்கும்</a> என இந்தியா தெரிவித்தது.</p><h2>சிந்து நதிநீர் தீர்ப்பாயம்</h2><p>சிந்து நதிநீர் தீர்ப்பாயம் என்பது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே 1960-ஆம் ஆண்டு கையெழுத்தான சிந்து நதிநீர் ஒப்பந்தம் தொடர்பான சர்ச்சைகளைத் தீர்ப்பதற்காக நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள நிரந்தர நடுவர் நீதிமன்றத்தின் கீழ் செயல்படும் ஒரு அமைப்பாகும்.</p>]]></content:encoded></item><item><title>உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இங்கிலாந்து அணி 6-வது இடத்துக்கு முன்னேற்றம்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/world-test-championship-england-moves-to-6th-place</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/world-test-championship-england-moves-to-6th-place#comments</comments><guid isPermaLink="false">cd276260-cb55-4a7a-97f8-2806239646ed</guid><pubDate>Mon, 31 Aug 2026 11:37:03 +0000</pubDate><atom:updated>2026-08-31T11:37:03.096Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>World Test Championship,உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்,ENG vs PAK</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/8aezs1si/JoeRoot001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜோ ரூட்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/8aezs1si/JoeRoot001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இங்கிலாந்து முன்னேற்றம்</h2><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/lords-test-england-beat-pakistan">பாகிஸ்தான்</a> அணி இங்கிலாந்து சென்று 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே லீட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 103 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இதன் மூலம் 3 டெஸ்ட் கொண்ட தொடரை இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 9-ந்தேதி பர்மிங்காமில் தொடங்குகிறது.</p><p>பாகிஸ்தானை 2-வது டெஸ்டில் வீழ்த்தியன் மூலம் இங்கிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 6-வது இடத்துக்கு முன்னே றியது. அந்த அணி 34.44 சதவீத புள்ளிகள பெற்றுள்ளது. இலங்கை அணி 7-வது இடத்துக்கு (33.33 புள்ளிகள்) பின் தங்கியது.</p><h2>பாகிஸ்தான்</h2><p>பாகிஸ்தான் அணி கடைசி இடமான 9-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி 16.67 சதவீத புள்ளிகளை பெற்றுள்ளது. 19.05 புள்ளியில் இருந்து அந்த அணி பின் தங்கியது.</p><p>இங்கிலாந்து அணிக்கு இன்னும் 4 டெஸ்டுகள் உள்ளது. இதில் வெற்றி பெற்றாலும் மற்ற அணிகளை நம்பிதான் அந்த அணி நிலை இருக்கிறது.</p><h2>முதல் இடத்தில் ஆஸ்திரேலியா</h2><p>ஆஸ்திரேலியா முதல் இடத்திலும் (80.00 புள்ளிகள்) தென் ஆப்பிரிக்கா 2-வது இடத்திலும் (75.00), நியூசிலாந்து 3-வது இடத்திலும் (72,22) வங்காள தேசம் 4-வது இடத்திலும் (55.56), இந்தியா 5-வது இடத்திலும் (51.52) உள்ளன. முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இந்திய அணிக்கு இன்னும் 7 டெஸ்ட் போட்டிகள் எஞ்சியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>சர்வதேச சவால்களுக்கு மத்தியிலும் சாதனை: முதல் காலாண்டில் இந்திய ஜிடிபி 7.8% வளர்ச்சி!</title><link>https://www.maalaimalar.com/news/national/india-gdp-surges-7-8-first-quarter-amid-global-challenges</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-gdp-surges-7-8-first-quarter-amid-global-challenges#comments</comments><guid isPermaLink="false">804597e9-8124-4525-88ed-cb34bebea5e2</guid><pubDate>Mon, 31 Aug 2026 11:25:22 +0000</pubDate><atom:updated>2026-08-31T11:25:22.121Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,Crude oil,கச்சா எண்ணெய்,,India&apos;s GDP grow,Reuters,இந்திய ஜிடிபி,மூலதனச் சந்தை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/x5mqh7bt/GDP.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ India's GDP grow ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/x5mqh7bt/GDP.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலகளாவிய பொருளாதார மந்தநிலை, புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் எரிபொருள் விலை உயர்வு போன்ற பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், நடப்பு 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் - ஜூன்) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 7.8 சதவீதமாக உயர்ந்து அசத்தியுள்ளது. இது பொருளாதார நிபுணர்கள் மற்றும் ரிசர்வ் வங்கியின் எதிர்பார்ப்புகளை விட மிக அதிகம்.</p><h2>எதிர்பார்ப்புகளை மிஞ்<strong>சிய வளர்ச்சி விகி</strong>தம்</h2><p>பொருளாதார நிபுணர்கள் மற்றும் <a href="https://www.maalaimalar.com/news/world/trump-says-canadian-companies-face-no-tariffs-in-us">ராய்ட்டர்ஸ் </a>கருத்துக் கணிப்புகள் இக்காலகட்டத்தில் வளர்ச்சி 7.1 சதவீதமாக இருக்கும் என்றே கணித்திருந்தன. கடந்த 2025-26 நிதியாண்டின் இதே ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நாட்டின் வளர்ச்சி 6.9 சதவீதமாக மட்டுமே இருந்தது. தற்போது பதிவாகியுள்ள 7.8 சதவீத உயர்வு, இந்திய பொருளாதாரம் வலுவான வேகத்தில் இயங்கி வருவதை உறுதி செய்துள்ளது.</p><p>சர்வதேச அளவில் நிலவும் வணிக நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியிலும், உள்நாட்டு நுகர்வு தேவைகள் வலுவாக இருந்தது இந்த வளர்ச்சிக்கு முக்கிய தூணாக அமைந்தது. மேலும், அரசாங்கத்தின் உள்கட்டமைப்பு மூலதனச் செலவினங்கள், உற்பத்தித்துறை மற்றும் கட்டுமானத்துறை ஆகியவற்றில் காணப்பட்ட வேகமான வளர்ச்சி நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த உதவியது. </p><p>வங்கி கடன் தேவை மற்றும் மூலதனச் சந்தையின் எழுச்சி காரணமாக இத்துறை 12.1% என்ற இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்து முன்னணியில் உள்ளது. உள்நாட்டு தேவை அதிகரிப்பால் உற்பத்தித் துறை 9.2% வளர்ச்சியடைந்துள்ளது. பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்ட போதிலும், விவசாயம் மற்றும் சார்ந்த துறைகள் 3.6% நிலையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.</p><p>இந்த சாதனை தொடக்கமானது நாட்டின் பொருளாதாரத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளது. இருப்பினும், கச்சா எண்ணெய் விலை உயர்வு, பணவீக்க அழுத்தம் மற்றும் சர்வதேச சந்தைகளில் நிலவும் போர்ப் பதற்றங்கள் ஆகியவை வரும் காலாண்டுகளில் கவனிக்கப்பட வேண்டிய சவால்களாக இருக்கும். தனியார் முதலீடுகள் மேலும் அதிகரிக்கும் பட்சத்தில், இந்த வேகமான பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து தக்கவைக்க முடியும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>திமுகவிற்கு எதிராக மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி மக்களை ஏமாற்றும் தவெக அரசு: ஆதவ் அர்ஜூனா - செந்தில் பாலாஜி இடையே வெடித்த மோதல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-is-deceiving-the-public-by-creating-a-false-impression-against-the-dmk-clash-erupts-between-aadhav-arjuna-and-senthil-balaji</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-is-deceiving-the-public-by-creating-a-false-impression-against-the-dmk-clash-erupts-between-aadhav-arjuna-and-senthil-balaji#comments</comments><guid isPermaLink="false">9fc644a8-5506-42a4-8476-cf34ef8c815a</guid><pubDate>Mon, 31 Aug 2026 11:10:40 +0000</pubDate><atom:updated>2026-08-31T11:10:40.848Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>senthil balaji,செந்தில் பாலாஜி,Tasmac,டாஸ்மாக்,அமைச்சர் ஆதவ் அர்ஜூனா,Minister Aadav Arjuna</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/o8uqgcs2/New-Project-2026-08-31T163741.004.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திமுகவிற்கு எதிராக மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி மக்களை ஏமாற்றும் தவெக அரசு: ஆதவ் அர்ஜூனா - செந்தில் பாலாஜி இடையே வெடித்த மோதல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/o8uqgcs2/New-Project-2026-08-31T163741.004.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று பெரும் விவாதம் வெடித்தது. அப்போது அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது;</p><h2>நினைத்தால் ஒரேநாளில் மதுவிற்கு தடை</h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadhav-arjuna-indictment-mayors">அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</a>: தமிழ்நாட்டை 5 மண்டலங்களாக பிரித்தால், வட மண்டலத்தில்தான் டாஸ்மாக் விற்பனை அதிகம் நடக்கிறது. அங்கு வறுமையும், வேலைவாய்ப்பின்மையும் அதிகம் இருப்பதால் விற்பனை அதிகம் நடக்கிறது. </p><p>கடந்த ஆட்சியில் இருந்த ஒரு அமைச்சர், உடல்வலிக்காக பலர் குடிக்கின்றனர் எனக்கூறுகிறார், விளையாட்டுத்துறையில் இருப்பவர்கள் உடல்வலி எனக்கூறி விட்டு மதுவை எடுத்துக்கொள்ள முடியுமா?</p><p>இன்று ஒரேநாளில் மதுவிற்பனையை தடை செய்யலாம் என்று நினைத்தால்கூட, பெண்களுக்கு எதிராகத்தான் அதன் விளைவு திரும்பும். இதை சரிசெய்ய மறுவாழ்வு மையங்களை உருவாக்க வேண்டும். போர்க்கால அடிப்படையில் மறுவாழ்வு மையங்களை அமைக்க வேண்டும்.</p><p>சினிமாத்துறை, டாஸ்மாக் துறையில் ஊழல் நடந்துள்ளது. (ஆதவ் அர்ஜூனாவின் பேச்சால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.)</p><p>உடனே அமைச்சரின் பேச்சுக்கு பதிலளித்து செந்தில் பாலாஜி பேசினார். </p><h2>பெயரளவில், பேப்பர் அளவில் இல்லை, உண்மையாக 603 மதுக்கடைகள் மூடல்</h2><p>செந்தில் பாலாஜி: திமுகவின் கொள்கையும் பூரண மதுவிலக்கே. அதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை. அதனால்தான் படிப்படியாக 603 கடைகளை குறைத்தோம். அது வெறும் பெயரளவில், பேப்பர் அளவில் இல்லை. முழுமையாக அந்த கடைகள் மூடப்பட்டன.</p><p>அந்த பட்டியலை அமைச்சர் துறைசார்ந்த செயலர்களிடம் வாங்கிப் பார்த்துகொள்ளலாம். பொதுப்பணித்துறை அமைச்சர் ஊழல், ஊழல் என்றுக் கூறுகிறார். நான் ஒன்றை சட்டமன்றத்தில் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் வெறும் வழக்குகளை மட்டும்தான் தற்போது போட்டுள்ளீர்கள்.</p><h2>உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகள் வெளிவரும்</h2><p>திமுகமீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தவேண்டும். மக்களிடம் கெட்டப்பெயரை உருவாக்கவேண்டும் என்பதற்காக ஒரு மாயையை உருவாக்குகிறீர்கள். பூதக்கண்ணாடி போட்டு தேடுகிறீர்கள். இப்போது உங்கள் அரசு நடக்கிறது. நன்றாக விசாரிக்கலாம், தீவிர விசாரிக்கலாம், நீதிமன்றத்தில் உங்கள் ஆதாரங்களை சமர்பிக்கலாம். </p><p>நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர்தான் யார் போட்டது தவறான வழக்கு, உண்மைக்கு புறம்பானது, திரித்து கூறப்பட்டது என்பது தெரியவரும். நீதிமன்றம் இறுதிமுடிவை எடுக்கும். கடந்த காலங்களில் தவறுகள் நடந்தது என்பதைப்போல ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி, மக்கள் மத்தியில் கடந்த ஆட்சிக்கு ஒரு அவப்பெயரை ஏற்படுத்த இந்த அரசு முயற்சிக்கிறது. </p><p>நீங்கள் போட்டுள்ள இந்த வழக்கு உண்மைக்கு புறம்பானது. நீதிமன்றத்தில் இதை சட்டப்படி எதிர்கொண்டு, நீங்களும் எதிர்கொள்ளுங்கள், நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபின் மக்களுக்கு புரியும்.</p>]]></content:encoded></item><item><title>ராஜஸ்தானில் சோகம்: கோயில் குளத்தில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி</title><link>https://www.maalaimalar.com/news/national/rajasthan-dholpur-temple-pond-drowning-four-family-members-dead</link><comments>https://www.maalaimalar.com/news/national/rajasthan-dholpur-temple-pond-drowning-four-family-members-dead#comments</comments><guid isPermaLink="false">f94e0050-3245-44b3-adaf-a85585c48450</guid><pubDate>Mon, 31 Aug 2026 11:02:29 +0000</pubDate><atom:updated>2026-08-31T11:02:29.527Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rajasthan,dholpur,Dholpur Temple tank,Hiraman Baba pond,ராஜஸ்தான் மாநிலம்,தோல்ப்பூர்,ஹிராமன் பாபா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/dbpo4pje/RAJASTHAN.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dholpur Temple tank]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/dbpo4pje/RAJASTHAN.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராஜஸ்தான் மாநிலம் தோல்ப்பூர் மாவட்டத்தில் புனித நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/chris-gayle-pays-floral-tribute-at-oommen-chandys-grave-in-kerala">தோல்ப்பூர் மாவட்டம்</a> நாதூவாபுரா கிராமத்தைச் சேர்ந்த ரவி குமார் (21), அவரது சகோதரிகள் மனோரமா (22), போட்டோ (25) மற்றும் அவர்களின் உறவினர் பெண் நிஷா (18) ஆகிய நால்வரும் பிர்ஜா கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற ஹிராமன் பாபா திருக்கோயிலுக்குச் சென்றிருந்தனர். ரக்ஷா பந்தனை முன்னிட்டு சனிக்கிழமை இரவு (ஆகஸ்ட் 29) நடைபெற்ற சிறப்பு கோயில் வழிபாடுகள் மற்றும் திருவிழா நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இவர்கள் அங்கு சென்றுள்ளனர்.</p><h2>நீரில் மூ<strong>ழ்கிய சோகம்</strong></h2><p>நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் கோயில் வளாகத்தை ஒட்டியுள்ள ஹிராமன் பாபா குளத்தில் பக்தர்கள் நீராடத் தொடங்கினர். அப்போது ரவி குமார் எதிர்பாராதவிதமாக குளத்தின் ஆழமான பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கத் தொடங்கினார். கரை ஓரத்தில் நீராடிக்கொண்டிருந்த அவரது சகோதரிகளும் உறவினரும் ரவி தவிப்பதைக் கண்டு, அவரைக் காப்பாற்ற உடனடியாக ஆழமான பகுதிக்குக் குதித்தனர். ஆனால், நீரின் ஆழம் மற்றும் வேகம் காரணமாக நால்வராலும் கரை திரும்ப முடியாமல் நீரில் மூழ்கினர்.</p><p>சம்பவ இடத்திலிருந்த பக்தர்கள் மற்றும் கிராம மக்கள் உடனடியாக மீட்பு முயற்சியில் ஈடுபட்டனர். அங்காய் காவல் நிலைய அதிகாரி கிருபால் சிங் தலைமையிலான காவல் துறையினரும் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.கிராமவாசிகளின் உதவியோடு சில மணி நேரத்திலேயே மனோரமா, போட்டோ மற்றும் நிஷா ஆகிய மூன்று பெண்களின் உடல்களும் குளத்திலிருந்து மீட்கப்பட்டன.</p><p>நீரில் மூழ்கிய ரவி குமாரின் உடலை மீட்க சுமார் 6 மணி நேரம் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு, காலை 10 மணியளவில் கண்டெடுக்கப்பட்டது. இதேபோல நீரில் மூழ்கி தவித்த மேலும் நான்கு பக்தர்களை கிராம மக்கள் சமயோசிதமாகச் செயல்பட்டு பத்திரமாக மீட்டனர்.</p><p>மீட்கப்பட்ட நான்கு பேரின் உடல்களும் உடனடியாக சர்மாத்துரா அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்குப் பிறகு உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன. பண்டிகை நாளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரின் உயிர்கள் பறிபோனது நாதூவாபுரா கிராம மக்களை சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>Apple நிறுவனத்தின் CEO பதவியில் இருந்து விலகுகிறார் டிம் குக்: 15 ஆண்டுகால வரலாற்றுப் பயணம் நிறைவு!</title><link>https://www.maalaimalar.com/news/world/apple-ceo-tim-cook-steps-down-ends-15-year-tenure</link><comments>https://www.maalaimalar.com/news/world/apple-ceo-tim-cook-steps-down-ends-15-year-tenure#comments</comments><guid isPermaLink="false">c6d4e581-a34e-442a-8512-f89f6197f06f</guid><pubDate>Mon, 31 Aug 2026 10:38:37 +0000</pubDate><atom:updated>2026-08-31T10:38:37.111Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிம் குக்,Tim Cook,John Turness,Apple CEO,ஸ்டீவ் ஜோப்ஸால்,ஜான் டர்னஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/for42pwz/ceo.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tim Cook-John Turness]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/for42pwz/ceo.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டிம் குக் தலைமையில் 350 பில்லியன் டாலராக இருந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 5 டிரில்லியன் டாலரை எட்டியது. </p><p>உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) பதவியில் இருந்து டிம் குக் விலகுகிறார். கடந்த 15 ஆண்டுகளாக நிறுவனத்தை வழிநடத்திய இவர், செப்டம்பர் 1 முதல் நிர்வாகத் தலைவராக செயல்படுவார். இவருக்குப் பதிலாக, ஆப்பிள் நிறுவனத்தின் ஹார்டுவேர் இன்ஜினியரிங் பிரிவின் மூத்த துணைத் தலைவராகப் பணியாற்றிய ஜான் டர்னஸ் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்கிறார்.</p><h2>செய<strong>ல்பாட்டுத் திறனில் புதி</strong>ய மைல்கல்</h2><p>1998-இல் ஸ்டீவ் ஜோப்ஸால் சர்வதேச செயல்பாட்டுப் பிரிவின் மூத்த துணைத் தலைவராக <a href="https://www.maalaimalar.com/news/world/roman-telescope-sent-to-space-to-study-universe-nasa">ஆப்பிள் நிறுவனத்தில்</a> டிம் குக் இணைக்கப்பட்டார். விநியோகச் சங்கிலி மேலாண்மை மற்றும் உற்பத்தி முறையில் அவர் கொண்டு வந்த சீர்திருத்தங்கள், பொருட்கள் தேக்கமடைவதைக் குறைத்து நிறுவனத்தின் செயல்பாட்டுச் செலவை கணிசமாகக் குறைத்தன.</p><h2>5 டிரில்லியன் டால<strong>ர் வரை வளர்ச்</strong>சி</h2><p>2011-இல் ஸ்டீவ் ஜோப்ஸின் மறைவுக்குப் பின் தலைமைப் பொறுப்பை ஏற்ற டிம் குக், ஆப்பிள் நிறுவனத்தை ஒரு பெரிய நிதிப் பேரரசாக மாற்றினார். அவரது தலைமையில் 350 பில்லியன் டாலராக இருந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 5 டிரில்லியன் டாலரை எட்டியது. மேலும், ஆப்பிள் வாட்ச், ஏர்பாட்ஸ், விஷன் புரோ போன்ற புதிய சாதனங்களையும், ஆப்பிள் மியூசிக், ஐகிளவுட் உள்ளிட்ட சேவைகள் மூலம் வருவாயைப் பெருக்கும் உத்திகளையும் அறிமுகப்படுத்தினார்.</p><p>செப்டம்பர் 1 முதல் புதிய சிஇஓ-வாகப் பொறுப்பேற்கும் ஜான் டர்னஸ், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பப் போட்டி மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலி சார்ந்த சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆப்பிள் நிறுவனத்தின் நிர்வாக மாற்றத்தில் இது மிக முக்கியமான கட்டமாகக் கருதப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>பேரழிவுகளும்..., 26-ந்தேதியும்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/catastrophes-and-the-26th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/catastrophes-and-the-26th#comments</comments><guid isPermaLink="false">60b0f2bd-f24c-431e-81d9-bd8ec11c9168</guid><pubDate>Mon, 31 Aug 2026 10:26:52 +0000</pubDate><atom:updated>2026-08-31T10:26:52.500Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Tsunami,சுனாமி,nepal flood,நேபாள வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/igok57md/diaster.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ இயற்கை பேரழிவுகள்]]></media:title><media:description type="html"><![CDATA[ இயற்கை பேரழிவுகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/igok57md/diaster.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெரும்பாலான <a href="https://www.maalaimalar.com/topic/இயற்கை-பேரழிவு">பேரழிவுகள்</a> 26-ந்தேதி–யிலேயே நடந்துள்ளன. அதன் விவரம்-</p><p>2001-ம் ஆண்டு  ஜனவரி 26 : புஜ் / குஜராத் நிலநடுக்கம் (இந்தியா)</p><p>2003 டிசம்பர்26: பாம் நிலநடுக்கம் (ஈரான்)</p><p>2004 டிசம்பர் 26: இந்தியப் பெருங்கடல் சுனாமி (இந்தோனேசியா, இந்தியா, இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள்)</p><p>2005 ஜூலை 26: மும்பை பெருவெள்ளம் (இந்தியா)</p><p>2006 மே 26: ஜாவா/யோக்யகர்த்தா நிலநடுக்கம் (இந்தோனேசியா இந்த நாளிலும் தாக்கம் நீடித்தது)</p><p>2006 டிசம்பர் 26: ஹெங்சுன் நிலநடுக்கம் (தைவான்)</p><p>2006 மே 26: ‘ஐலா’ புயலின் தாக்கம் &amp; கடுமையான வெள்ளப்பெருக்கு (இந்தியா, பங்களாதேஷ்)</p><p>2015 அக்டோபர் 26: இந்து குஷ் நிலநடுக்கம் (ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா)</p><p>2018 ஆகஸ்ட்26: ஈரான்-ஈராக் எல்லை நிலநடுக்கம் (ஈரான்)</p><p>2019 டிசம்பர் 26: ‘பான்போன்’ (உர்சுலா) சூறாவளிப் புயல் (பிலிப்பைன்ஸ்)</p><p>2022 செப்டம்பர் 26: ‘நொரு’ (கார்டிங்) சூறாவளிப் புயல் (பிலிப்பைன்ஸ்)</p><p>2024 மே 26: ‘ரெமால்’ சூறாவளிப் புயல் (இந்தியா &amp; பங்களாதேஷ்)</p><h2><strong>இந்தியாவை உலுக்கிய 3 மிகப்பெரிய பேரழிவுகள்</strong> </h2><p>2001 ஜனவரி 26 குஜராத் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவான இந்த மிகச்சக்திவாய்ந்த நிலநடுக்கம், குஜராத்தின் புஜ் மற்றும் கட்ச் பகுதிகளை ஒட்டுமொத்தமாக உருக்குலைத்தது. சுமார் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாயின; பல லட்சக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமாகின.</p><p>2004 டிசம்பர் 26 இந்தியப் பெருங்கடல் சுனாமி: சுமத்ரா அருகே கடலுக்கு அடியில் ஏற்பட்ட 9.1 முதல் 9.3 வரையிலான அதிதீவிர நிலநடுக்கம், ஆழிப்பேரலையாக உருவெடுத்தது. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மற்றும் அந்தமான்-நிகோபார் கடலோரப் பகுதிகளைச் சூறையாடியதோடு, இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளையும் சீரழித்தது. இந்த கோரத் தாண்டவத்தில் உலகளவில் சுமார் 2,30,000 பேர் உயிரிழந்தனர்.</p><p>2005 ஜூலை 26 மும்பை பெருவெள்ளம்: மும்பையில் பெய்த வரலாறு காணாத மழை, நகரத்தையே ஸ்தம்பிக்க வைத்தது. சாண்டாக்குரூஸ் பகுதியில் ஒரே நாளில் 944 மி.மீ மழை பதிவாகி பேரழிவை ஏற்படுத்தியது. மராட்டிய மாநிலம் முழுவதும் 1,000க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.</p><p>நவீன இந்திய வரலாற்றின் மிகப்பெரிய பேரழிவுகளாகப் பார்க்கப்படும் இந்த மூன்றும் வெறும் 4½ ஆண்டுகளுக்குள்ளேயே, அதுவும் 26-ந் தேதியுடன் தொடர்பு கொண்டுள்ளன. இது ஒரு மர்மத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. எனினும் இது அறிவியல் பூர்வமாக உண்மையல்ல; இது ஒரு தற்செயல் நிகழ்வு என்று அறிஞர்கள் கூறுகின்றனர். </p><p>இது தொடர்பாக விஞ்ஞானிகள் கூறுகையில்,  வரலாற்றில்  மிகப்பெரிய இயற்கை பேரழிவுகள் மாதத்தின் பிற தேதிகளிலும் அதிகமாக நடந்துள்ளன.</p><p>உதாரணத்திற்கு 1960-ம் ஆண்டு மே மாதம் 22-ந்தேதி சிலி நிலநடுக்கம்,  2011-ம் ஆண்டு மார்ச் 11-ந்தேதி ஜப்பான் சுனாமி, 2015-ம் ஆண்டு ஏப்ரல் 25-ல் நேபாள நிலநடுக்கம், 2005-ம் ஆண்டு அக்டோபர் 8-ந்தெடெஹி  காஷ்மீர் நிலநடுக்கம் போன்றவற்றை கூறலாம். </p><p>நிலநடுக்கம், புயல், சுனாமி மற்றும் எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை சீற்றங்கள் பூமியின் புவித்தட்டு நகர்வுகள் மற்றும் வானிலை மாற்றங்களால் ஏற்படுகின்றன. </p><p>நாட்காட்டியின் தேதிகளுக்கும், புவியியல் மாற்றங்களுக்கும் எந்தவித அறிவியல் தொடர்பும் இல்லை. எனவே, 26-ந் தேதிக்கும் இயற்கை சீற்றங்களுக்கும் இடையே எவ்வித அறிவியல் தொடர்பும் இல்லை; இது முற்றிலும் ஒரு தற்செயலான ஒற்றுமையே என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>2026-ம் ஆண்டு இயற்கை பேரிடர்கள், உயிரிழப்பு அதிகரிப்பு: உலகம் அஞ்சி நடுங்கும் 26-ந்தேதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/2026-rise-in-natural-disasters-and-fatalities-the-26th-that-has-the-world-trembling-in-fear</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/2026-rise-in-natural-disasters-and-fatalities-the-26th-that-has-the-world-trembling-in-fear#comments</comments><guid isPermaLink="false">27239df4-48e3-4721-8aca-d2af0a658590</guid><pubDate>Mon, 31 Aug 2026 10:18:37 +0000</pubDate><atom:updated>2026-08-31T10:18:37.588Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>nepal flood,நேபாள வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/94q7jjxj/nepal.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நேபாள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள்]]></media:title><media:description type="html"><![CDATA[ நேபாள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/94q7jjxj/nepal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இனியாவது இயற்கையோடு இணைந்து பயணிப்போம் என்ற உறுதியுடன் இயற்கையை பாதுகாக்க வேண்டிய கட்டாய சூழல் உருவாகி உள்ளது.</strong></em></p><h2><strong>2026-ம் ஆண்டு...</strong></h2><p>வெள்ளம்… புயல்… நிலநடுக்கம்… வெப்பம்… உருகும் பனிப்பாறைகள் என  இந்த ஆண்டு இயற்கை பேரழிவுகள் அதிகம் கொண்ட ஆண்டாகவே அமைந்துள்ளது. இந்த பேரழிவுகள் தனித்தனி சம்பவங்களா? அல்லது வேகமாக மாறிவரும் நமது பூமியின் புதிய முகமா? 2026-ம் ஆண்டின் மீதமுள்ள மாதங்கள் எதைக் கொண்டு வரப்போகின்றன? என்ற அச்ச உணர்வு பலருக்கு ஏற்பட்டு உள்ளது. இது விஞ்ஞானிகளையும் சற்று அதிர்ச்சி அடைய செய்துள்ளது எனலாம். </p><p>அதிலும் 26-ந்தேதி சற்று அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.  ஒரு மாதத்தில் மற்ற தேதிகளைப் போலவே 26-ந் தேதியும் சாதாரணமான நாள் தான்.  ஒவ்வொரு தேதிக்கும் ஒவ்வொரு விதமான தன்மை, ஜோதிட ரீதியாக, எண்ணியல் ரீதியாக கிரகங்களின் ஆளுமை இருக்கும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, உலகையே உலுக்கிய சில, மிகப்பெரிய இயற்கைப் பேரழிவுகளின் தேதிகளைத் பார்க்கும்போது, ‘26’ என்ற எண் மீண்டும் மீண்டும் கவனத்தை ஈர்க்கிறது.</p><p>உலக வரலாற்றில் நிகழ்ந்த பல முக்கிய பேரழிவுகளை உற்றுநோக்கினால், அவற்றின் பின்னணியில் 26 என்ற எண் மீண்டும் மீண்டும் இடம்பெற்றிருக்கிறது.</p><p>2026-ம் ஆண்டின் ஆரம்பமே தென்னாபிரிக்காவுக்கு பெரும் சோகத்துடன் தொடங்கியது. மொசம்பிக், தென்னாபிரிக்கா, ஜிம்பாப்வே  உள்ளிட்ட நாடுகளில் பல வாரங்களாக கொட்டித் தீர்த்த மழையால் ஆறுகள் கரைபுரண்டு பெருவெள்ளம் ஏற்பட்டது. சில பகுதிகளில் ஒரு வருடத்தில் பெய்ய வேண்டிய மழை சில நாட்களுக்குள் பெய்ததாக ஆய்வுகள் தெரிவித்தன. சுமார் 200 பேர் உயிரிழந்ததுடன், நூறாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். காலநிலை மாற்றமும் லா நினா வானிலை மாற்றமும் மழையின் தீவிரத்தை அதிகரித்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.</p><p>அதற்கு அடுத்ததாக மடகாஸ்கர். பிப்ரவரி மாதத்தில் 10 நாட்கள் இடைவெளியில் 2 புயல்கள் அந்தத் தீவைத் தாக்கின. முதலில் பிதியா சூறாவளி; அதைத் தொடர்ந்து மிகவும் சக்திவாய்ந்த ஜிசானி  சூறாவளி. ஜிசானி சூறாவளியால் மட்டும் குறைந்தது 59 பேர் உயிரிழந்தனர்.  800-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். 4 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர்.  பிதியா புயல் மேலும் 14 உயிர்களைப் பறித்திருந்தது.</p><p>மார்ச் மாதம் கொங்கோவின் ருபாயா பகுதியில் உள்ள கோல்டன் சுரங்கத்தில் கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 200-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அவர்களில் சுமார் 70 பேர் குழந்தைகள். மண்ணுக்கடியில் கனிமத்தைத் தேடிச் சென்றவர்கள், சில நொடிகளில் மண்ணுக்குள்ளேயே புதைந்து போனார்கள்.</p><p>2026-ன் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இயற்கைப் பேரழிவாக வெப்பத்தை கூறலாம். இந்த கோடையில் ஐரோப்பா தொடர்ச்சியாக 4 கடுமையான வெப்ப அலைகளை எதிர்கொண்டது. பல இடங்களில் வெப்பநிலை 40 பாகை செல்சியசைக் கடந்தது.  ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் கிடைத்துள்ள தகவல்களின்படி, வெப்ப அலைகள் இடம்பெற்ற காலங்களில் வழக்கமாக நிகழ்வதைவிட 35 ஆயிரம் அதிக மரணங்கள் பதிவாகியுள்ளன. இது நேரடியாக வெப்ப அலையால் ஏற்பட்ட மரணங்கள் அல்ல. கடும் வெப்பமானது இதயம் மற்றும் சுவாச நோய்கள் போன்ற ஏற்கனவே உள்ள உடல்நலப் பிரச்சினைகளை மோசமாக்குவதாலும் நிகழ்கிறது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம்.</p> <p>அடுத்து வெனிசுலாவில்  ஜூன் 24-ந்தேதி சில நொடிகள் இடைவெளியில் 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவு கொண்ட 2 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் நாட்டை உலுக்கின. குறிப்பாக கராகஸ் மற்றும் லா குவைரா பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதில்  6,125 பேர் உயரிழந்தனர். சுமார் 61,000 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். 2026-இல் இதுவரை பதிவான மிகக் கொடிய நிலநடுக்கப் பேரழிவு இதுவாகும்.</p><p>ஆகஸ்ட் 15 அன்று இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்காரா பகுதியை 7.7 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியது. அதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான தொடர் அதிர்வுகள் பதிவாகின. குறைந்தது 100 பேர் உயிரிழந்தனர்; 73,000-க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்தன; சுமார் 180,000 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.</p><p>இந்த பேரழிவுகளின் பட்டியலில் தற்போது புதிதாக இணைந்திருப்பது <a href="https://www.maalaimalar.com/topic/நேபாள-வெள்ளம்">நேபாள</a> – திபெத் எல்லையின் இமயமலைப் பேரழிவு. இதில் இதுவரை 800 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. </p><p>கடந்த 26-ந்தேதி லாங்டாங் லிருங் அருகிலுள்ள பனிப்பாறையின் ஒரு பெரிய பகுதி உடைந்து, நூற்றுக்கணக்கான மீட்டர் கீழே பள்ளத்தாக்கில் சரிந்தது. பனி, பாறை, சேறு ஆகியவை பெரும் பனிப்பாறைச் சரிவாக மாறி ஆற்றுக்குள் பாய்ந்தன. பின்னர் அது பலத்த திடீர் வெள்ளமாக மாறி பொங்கிவந்து கிராமங்கள், வீடுகள், பாலங்கள், மின் திட்டங்களை அடித்துச் சென்றது.</p><p>ஆரம்பத்தில் இது நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவு என்று செய்திகள் வெளியாகின. ஆனால் பின்னர் அமெரிக்க புவியியல் ஆய்வு மையமானது, இது நிலநடுக்கத்தால் உருவானது அல்ல; பனிப்பாறையும் பாறைகளும் பெருமளவில் சரிந்ததால் உருவான அதிர்வே நிலநடுக்கம் போல பதிவானது என்று தெளிவுபடுத்தியது.</p><p>உலகம் எதை நோக்கி செல்கிறது. ஒருகாலத்தில் இயற்கையின் ஓட்டத்தில் பயணித்த ஆறுகள், இன்று மனிதனின் திட்டங்களுக்கேற்ப கட்டுப்படுத்தப்படுகின்றன. மலையைக் குடைந்து சாலைகள் அமைக்கப்படுகின்றன.  சுற்றுலா மற்றும் வணிகத்திற்காக மலைப்பகுதிகளில் கட்டுமானங்கள் பெருகுகின்றன. இயற்கையை வெல்லலாம் என்று நினைத்த மனிதனின் தந்திரம், இயற்கை சீற்றத்தின் முன் தவிடு பொடியாகிறது. இனியாவது இயற்கையோடு இணைந்து பயணிப்போம் என்ற உறுதியுடன் இயற்கையை பாதுகாக்க வேண்டிய கட்டாய சூழல் உருவாகி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பஞ்சாபில் காதலித்து கரம்பிடித்த இளைஞர் ஆணவக்கொலை- பெண் வீட்டார் வெறியாட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/national/honour-killing-in-punjab-young-man-murdered-for-love</link><comments>https://www.maalaimalar.com/news/national/honour-killing-in-punjab-young-man-murdered-for-love#comments</comments><guid isPermaLink="false">7b1bbd71-96e3-4004-94b5-08bff9104a5d</guid><pubDate>Mon, 31 Aug 2026 10:08:28 +0000</pubDate><atom:updated>2026-08-31T10:08:28.847Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Punjab,ஆணவக்கொலை,Honor killing in Punjab,Tarn Taran,Rampage,பஞ்சாப் மாநிலம்,தார்ன் தரான் பகுதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/ms3jgrma/HONOUR.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Honor killing in Punjab]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/ms3jgrma/HONOUR.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தன் தங்கையை அழைத்துச் சென்ற ஆத்திரத்தில் இருந்த பெண் வீட்டார், ஜக்ஜீத் சிங்கை பழிவாங்கத் திட்டம் தீட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/shock-in-delhi-newborn-baby-rescued-from-roadside">பஞ்சாப் மாநிலம்</a> தார்ன் தரான் பகுதியில் 22 வயதான ஜக்ஜீத் சிங் எனும் இளைஞர் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p><h2>காதல் <strong>திருமணம்</strong> </h2><p>கொல்லப்பட்ட ஜக்ஜீத் சிங், சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு தன் காதலியை வீட்டை விட்டு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால், இவர்களது திருமணத்திற்கு அப்பெண்ணின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். தன் தங்கையை அழைத்துச் சென்ற ஆத்திரத்தில் இருந்த பெண் வீட்டார், ஜக்ஜீத் சிங்கை பழிவாங்கத் திட்டம் தீட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.</p><h2>கத்திகளுடன் பா<strong>ய்ந்த அண்ணன்க</strong>ள்</h2><p>நேற்று ஜக்ஜீத் சிங் பேருந்து நிலையம் அருகே நின்றுகொண்டிருந்தபோது, பெண்ணின் சகோதரர்களான ஜஸ்ப்ரீத் சிங் மற்றும் ஹர்ப்ரீத் சிங் ஆகிய இருவரும் திடீரென கத்திகளுடன் பாய்ந்து தாக்குதல் நடத்தினர். சரமாரியாக வெட்டப்பட்டதில் பலத்த காயமடைந்த ஜக்ஜீத் சிங் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>போலீசா<strong>ர் வழக்குப் பதி</strong>வு</h2><p>தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறை அதிகாரி, ஜக்ஜீத் சிங்கின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். இக்கொலை குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பியோடிய சகோதரர்களான ஜஸ்ப்ரீத் சிங் மற்றும் ஹர்ப்ரீத் சிங்கை தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஆணவக்கொலை கோணத்தில் இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>52 கோவில்களில் நாளை முதல் செல்போன்களுக்கு தடை- அமைச்சர் ரமேஷ் பேட்டி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-ramesh-says-ban-on-mobile-phones-in-52-temples-starting-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-ramesh-says-ban-on-mobile-phones-in-52-temples-starting-tomorrow#comments</comments><guid isPermaLink="false">fa9f7287-1ec5-42a7-a095-066dcb9b7767</guid><pubDate>Mon, 31 Aug 2026 09:59:37 +0000</pubDate><atom:updated>2026-08-31T09:59:37.320Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Temples,கோவில்கள்,செல்போன் தடை,cellphone ban,அமைச்சர் ரமேஷ்,Minister Ramesh</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/seghg5eb/cellphoneban.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ செல்போன்களுக்கு தடை]]></media:title><media:description type="html"><![CDATA[ செல்போன்களுக்கு தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/seghg5eb/cellphoneban.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பெரிய கோவில்களில் சுமார் 20 ஆயிரம் செல்போன்கள் வைத்திருக்கும் வகையில் பாதுகாப்பு பெட்டக வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.</strong></em> </p><p>தமிழ்நாட்டில் உள்ள கோவில்களின் புனிதத் தன்மை மற்றும் ஆன்மிக சூழலை பாதுகாக்கும் வகையில், கோவிலுக்குள் செல்போன் பயன்படுத்துவதற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் பல கோவில்களில் பக்தர்கள் செல்போன்கள் மூலம் புகைப்படம், வீடியோ, செல்பி எடுக்கிறார்கள். </p><h2><strong>புகார்கள்</strong></h2><p>மேலும் ரீல்ஸ் உள்ளிட்ட வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்வதாகவும் இந்து சமய அறநிலையத்துறைக்கு புகார்கள் வந்தன.</p><p>இதனால் கோவிலுக்கு வழிபாடு செய்ய வரும் பிற பக்தர்களுக்கு அசவுகரியம் ஏற்படுவதுடன், கோவில்களின் புனிதத்தன்மையும் பாதிக்கப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்தது.</p><h2><strong>தடை செய்யப்படும்</strong></h2><p>இதையடுத்து, தமிழகத்தில் உள்ள கோவில் நிர்வாகங்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருந்தார். அதில், ‘செப்டம்பர் 1-ந்தேதி முதல், முதுநிலை திருக்கோவில்களில் பக்தர்கள் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">செல்போன்</a> கொண்டு செல்வது முழுமையாக தடை செய்யப்படும். </p><p>முக்கிய பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களை கோவிலுக்குள் சென்று வீடியோ அல்லது புகைப்படம் எடுக்க ஊடகங்களுக்கு அனுமதி வழங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சினிமா பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கோவிலுக்கு வந்தால் ஒரு நாளுக்கு முன்பாகவே தகவல் தெரிவிக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார்.</p><p>அதன்படி தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான அனைத்து கோவில்களிலும் நாளை (1-ந்தேதி) முதல் செல்போன்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுகிறது. </p><h2><strong>பாதுகாப்பு பெட்டகம்</strong></h2><p>கோவிலுக்குள் செல்லும் முன்பு பக்தர்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பாக ஒப்படைக்க நுழைவு வாயில் மற்றும் காலணி பாதுகாப்பு மையம் உள்ளிட்ட இடங்களுக்கு அருகில் செல்போன் பாதுகாப்பு பெட்டக வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஒவ்வொரு கோவிலிலும் உள்ள வசதிக்கு ஏற்ப இந்த பாதுகாப்பு பெட்டக வசதி அமைக்கப்பட்டு உள்ளது.</p><p>பக்தர்களிடம் இருந்து செல்போன்களை பெற்று பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு ஒரு செல்போனுக்கு ரூ.5 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதற்கான ரசீதும் வழங்கப்பட உள்ளது. மேலும் கோவில் வளாகத்திற்குள் செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற வாசகம் அடங்கிய அறிவிப்பு பலகைகள் கோவில் நுழைவு வாயில் மற்றும் கோவிலுக்கு வெளியில் வைக்கப்பட்டு உள்ளது.</p><h2><strong>அறிவிப்பு</strong></h2><p>ஒலிபெருக்கி மூலமாகவும் செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை பக்தர்களுக்கு அறிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பக்தர்களிடம் இருந்து செல்போன்களை பெற்று பாதுகாப்பாக வைப்பதற்கும், பக்தர்கள் திரும்பி செல்லும்போது அவற்றை ஒப்படைப்பதற்கும் தேவையான பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவில் வளாகத்திற்குள் செல்போன் பயன்படுத்துவது, புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது உள்ளிட்ட செயல்களை கண்காணிக்க போதிய எண்ணிக்கையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த விதிகளை மீறி புகைப்படம் அல்லது வீடியோ எடுக்கும் பக்தர்கள் மீது போலீசில் புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.</p><h2><strong>நடவடிக்கை</strong></h2><p>கோவில்களில் புகைப்படம், வீடியோ எடுத்து வலைதளங்களில் வெளியிடப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றால் அதற்கு பொறுப்பான அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.</p><p>மேலும் சினிமா பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரும்போது கோவிலுக்குள் வீடியோ அல்லது புகைப்படம் எடுக்க ஊடகங்களுக்கு அனுமதி வழங்குவது முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகள் அனைத்து கோவில்களிலும் முறையாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள், அறங்காவலர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு உரிய அறிவுரைகளை மண்டல இணை ஆணையர்கள் வழங்கி உள்ளனர்.</p><h2><strong>சினிமா பிரபலங்கள்</strong></h2><p>மேலும் பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது பொது பக்தர்களுக்கு எவ்வித அசவுகரியமும் ஏற்படாத வகையிலும், கோவில்களின் புனிதத்தன்மை, மரபு மற்றும் ஒழுங்கு பாதிக்காத வகையிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.</p><p>சினிமா பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கோவிலுக்கு வருகை தருவது தெரியவந்தால், ஒரு நாளுக்கு முன்பாகவோ அல்லது தகவல் கிடைத்த உடனேயோ, அவர்கள் வரவிருக்கும் கோவில், வருகை நேரம், அவர்களுடன் வருபவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட முழுமையான விவரங்களை ஆணையர் அலுவலகத்திற்கு கட்டாயம் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.</p><h2><strong>பெரிய கோவில்</strong></h2><p>முன்கூட்டியே அனுமதி பெற்றவர்கள் அல்லது பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக அவசியமான அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மட்டுமே பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இந்த நடைமுறைகள் அனைத்துமே பெரிய கோவில்களில் நாளை முதல் அமலுக்கு வர உள்ளன.</p><p>சென்னை வடபழனி முருகன் கோவில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில், குன்றத்தூர் முருகன் கோவில், மாங்காடு காமாட்சி அம்மன் கோவில், பெரியபாளையம் பவானி அம்மன் கோவில், வல்லக்கோட்டை முருகன் கோவில், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், ஏகாம்பரநாதர் கோவில், திருவள்ளூர் வீரராகவர் கோவில், திருத்தணி முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நாளை முதல் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுகிறது.</p><h2><strong>திருச்செந்தூர்</strong></h2><p>மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தற்போது இந்த கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளது. மேலும் திருச்செந்தூர் முருகன் கோவில், பழனி முருகன் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், நெல்லையப்பர் கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், மதுரை அழகர் கோவில், கோவை கோணியம்மன் கோவில், சேலம் கோட்டை மாரியம்மன் கோவில், ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் உள்ளிட்ட பெரிய கோவில்களில் நாளை முதல் செல்போன்கள் கொண்டு செய்ய தடை விதிக்கப்படுகிறது.</p><h2><strong>அமைச்சர் ரமேஷ்</strong></h2><p>கோவில்களுக்குள் செல்போன்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுவது குறித்து இந்து சமய அறநிலையத்துறை <a href="https://www.maalaimalar.com/topic/அமைச்சர்-ரமேஷ்">அமைச்சர் ரமேஷ்</a> இன்று, மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-</p><p>தமிழகத்தில் உள்ள பெரிய கோவில்களில் நாளை (1-ந்தேதி) முதல் செல்போன்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுகிறது. முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள 52 கோவில்களில் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது. இதற்காக கோவில்களில் செல்போன் பாதுகாப்பு பெட்டகம் அமைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம்.</p><h2><strong>தங்கும் அறைகள்</strong></h2><p>உள்ளூர் பக்தர்கள் தங்கள் வீடுகளிலும், வெளியூர் பக்தர்கள் தாங்கள் தங்கி இருக்கும் விடுதி அறைகளிலும் செல்போன்களை வைத்து விட்டு தரிசனம் செய்ய செல்லலாம். மேலும் கார்கள் உள்ளிட்ட வாகனங்களிலும் செல்போன்களை வைத்து விட்டு கோவிலுக்கு வரலாம். </p><p>அப்படி முடியாத பட்சத்தில் கோவில்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் செல்போனை கொடுத்து விட்டு செல்லலாம். தரிசனம் முடிந்து வரும்போது அதனை பாதுகாப்பாக பெற்று செல்லலாம்.</p><p>செல்போன்களை தாங்கள் தங்கி இருக்கும் அறைகளில் வைத்து விட்டு வருமாறு கூறுவதற்கு முக்கிய காரணம் உள்ளது. உதாரணமாக பெரிய கோவில்களில் சுமார் 20 ஆயிரம் செல்போன்கள் வைத்திருக்கும் வகையில் பாதுகாப்பு பெட்டக வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். </p><h2><strong>தவிக்க நேரிடும்</strong></h2><p>திருவிழா காலங்கள் மற்றும் முக்கிய நாட்களில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்தால் அவர்கள் செல்போனை வைக்க இடமில்லாமல் தவிக்க நேரிடும். இதனால் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்படும். இதனை தவிர்க்கவே அறைகளிலோ அல்லது கார்களிலோ செல்போன்களை வைக்குமாறு அறிவுறுத்துகிறோம்.</p><p>பக்தர்கள் மூலஸ்தானத்தில் உள்ள சாமி சிலை முன்பு ரீல்ஸ் எடுப்பது மற்றும் அதை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>கோவில்களில் சினிமா பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மூலஸ்தானத்தில் சாமி தரிசனம் செய்யும் போது, ஊடகத்தினர் அங்கு வரை சென்று புகைப்படம் எடுக்கிறார்கள். இனி அதற்கும் அனுமதி இல்லை. </p><p>எனவே பிரபலங்களை கோவிலுக்கு வெளியே கோபுரம் தெரியும்படி புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். கோவில் வளாகத்துக்குள் சென்று புகைப்படம் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>விழா காலங்கள்</strong></h2><p>விழா காலங்கள் மற்றும் கோவில்களில் முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் போது பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்தினர் கோவிலுக்குள் சென்று நிகழ்ச்சிகளை புகைப்படம் எடுக்கவும், வீடியோ எடுக்கவும் விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கப்படும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>டெல்லியில் ஓடும் படுக்கை வசதி கொண்ட பேருந்தில் 16 வயது பள்ளி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை! </title><link>https://www.maalaimalar.com/news/national/16-year-old-schoolgirl-gang-raped-on-a-sleeper-bus-in-delhi</link><comments>https://www.maalaimalar.com/news/national/16-year-old-schoolgirl-gang-raped-on-a-sleeper-bus-in-delhi#comments</comments><guid isPermaLink="false">d2dd2a7f-3fd0-4fce-9c6f-215150470ab9</guid><pubDate>Mon, 31 Aug 2026 09:58:04 +0000</pubDate><atom:updated>2026-08-31T09:58:04.522Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>பள்ளி மாணவி,கூட்டுப் பாலியல் வன்கொடுமை,gang rape,டெல்லி காவல்துறை,Sleeper Bus,minor student,படுக்கை வசதி கொண்ட பேருந்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/8g80mwxf/New-Project-2026-08-31T145042.553.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டெல்லியில் ஓடும் ஸ்லீப்பர் பேருந்தில் 16 வயது பள்ளி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை! ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/8g80mwxf/New-Project-2026-08-31T145042.553.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் ஸ்லீப்பர் பேருந்தில் (படுக்கை வசதி கொண்ட பேருந்து) 16 வயது மாணவி ஓட்டுநர் மற்றும் நடத்துநரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>ஆக.4ம் தேதி உத்தப் பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி கருத்து வேறுபாடு காரணமாக, தனது குடும்பத்தினருக்குத் தெரிவிக்காமல் வீட்டை விட்டு வெளியேறி, நொய்டாவில் உள்ள தனது உறவினரைப் பார்க்கச் சென்றுள்ளார். </p><p>அப்போது கனமழை மற்றும் இருள் காரணமாக கிரேட்டர் நொய்டாவில் பாரி சௌக் என்ற இடத்தில் இறங்கியுள்ளார். அப்போது இந்த படுக்கை வசதிக் கொண்ட பேருந்து காலியாக அப்பகுதி வழியாக சென்றுள்ளது.</p><p>கனமழையில் சிக்கிக்கொண்ட மாணவி உதவிக்காக சைகை காட்டி பேருந்தை நிறுத்தியுள்ளார். பேருந்தும் நிறுத்தப்பட்டு, நொய்டா செக்டர்-63க்குச் செல்வதாகக் கூறி, ஓட்டுநரும் நடத்துநரும் மாணவியை ஏற்றிச் சென்றுள்ளனர். </p><p>பேருந்தில் ஏறிய சிறிதுநேரத்திலேயே நடத்துநர் மாணவியிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். உடனே மாணவி கூச்சலிட அவரை கொலைசெய்து விடுவதாக மிரட்டி இருவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். </p><p>பின்னர் மாணவியை நள்ளிரவில் காஷ்மீர் கேட் பேருந்து முனையத்திற்கு அருகிலுள்ள ரிங் ரோட்டில் இறக்கிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். அச்சமடைந்த மாணவி காஷ்மீர் கேட் காவல் நிலையத்தை தொடர்புகொண்டு புகாரித்துள்ளார். </p><p>மாணவியின் புகாரை வைத்து விசாரணையைத் தொடங்கிய காவல்துறை திமர்பூரில் உள்ள ஒரு பேருந்து நிறுத்துமிடத்தில் இருந்து குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் கைது செய்துள்ளனர். </p><p>மேலும், குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட படுக்கை வசதி கொண்ட பேருந்தையும் பறிமுதல் செய்து, தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.</p><p>அந்தப் பேருந்து பரி சௌக்கிலிருந்து காஷ்மீர் கேட் வரை சுமார் 47 கிலோமீட்டர் தூரம் சென்றுள்ளது. பேருந்தில் ஸ்கீரின் போடப்பட்டிருந்ததால் உள்ளே நடந்தவற்றை அவ்வழியே சென்றவர்களால் பார்க்க முடியவில்லை. இதனால் மாணவி கூச்சலிட்டதும் வெளியே சென்றவர்களுக்கு கேட்கவில்லை.</p><p>தொடர்ந்து போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item></channel></rss>