<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 13 Sep 2026 17:12:00 +0000</lastBuildDate><item><title>மகளிர் ஆசிய கோப்பை : இலங்கைக்கு 184 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/womens-asia-cup-india-set-184-runs-as-target-for-sri-lanka-women</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/womens-asia-cup-india-set-184-runs-as-target-for-sri-lanka-women#comments</comments><guid isPermaLink="false">6d791a8c-e904-4563-a841-d4b65dfa02e8</guid><pubDate>Sun, 13 Sep 2026 16:58:59 +0000</pubDate><atom:updated>2026-09-13T16:58:59.591Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Womens Asia Cup,மகளிர் ஆசிய கோப்பை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/v618ts7i/IND-W-Target.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ IND W Target]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/v618ts7i/IND-W-Target.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/womens-asia-cup">மகளிர் ஆசிய கோப்பை</a> இறுதிப் போட்டியில் இலங்கை அணிக்கு 184 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய மகளிர் அணி.</p><p>10-ஆவது மகளிர் ஆசிய கோப்பை டி20 <a href="https://www.maalaimalar.com/sports/cricket">கிரிக்கெட்</a> தொடர் துபாயில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் இரு பிரிவுகளை சேர்ந்த நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின. </p><p>அரையிறுதி போட்டிகளில் வெற்றி பெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில், இவ்விறு அணிகள் இடையிலான இறுதிப் போட்டி இன்று நடந்தது. </p> <h2>இந்திய அணி பேட்டிங்:</h2><p>பரபரப்பான இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணிக்கு தொடக்கம் கொடுத்த ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாளி வெர்மா ஜோடி சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் கவனம் செலுத்தினர். </p><p>இந்த ஜோடி முறையே 59 மற்றும் 68 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கியவர்களில் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 14 ரன்களும் ரிச்சா கோஷ் 17 எடுத்து அவுட் ஆகினர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணி 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்களை எடுத்தது. </p><p>இலங்கை மகளிர் அணி சார்பில் மித்தாலி அயோத்யா, சமாரி அட்டப்பட்டு மறஅறும் சமுடி பிரபோடா தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை மகளிர் அணி பேட்டிங் ஆடி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>&quot;ஆஸ்கர் விருதுக்கு தகுதியான படைப்பு&quot; மண்டாடி படத்தை பாராட்டித்தள்ளிய நடிகர் சரத்குமார்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-sarathkumar-praise-mandaadi-movie</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-sarathkumar-praise-mandaadi-movie#comments</comments><guid isPermaLink="false">13cb5dbe-d5f1-4484-9809-04947573bc76</guid><pubDate>Sun, 13 Sep 2026 16:46:37 +0000</pubDate><atom:updated>2026-09-13T16:46:37.008Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>sarathkumar,சரத்குமார்,மண்டாடி,Soori,Mandaadi,சூரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/avy2v9t7/Mandaadi-and-Sarathkumar.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mandaadi and Sarathkumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/avy2v9t7/Mandaadi-and-Sarathkumar.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகர் சூரி நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் "<a href="https://www.maalaimalar.com/topic/mandaadi">மண்டாடி</a>". </p><p>இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் இந்தப் <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews">படம்</a> ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும், திரைத்துறையை சேர்ந்த பலரும் இந்தப் படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர். </p><p>அந்த வரிசையில், நடிகர் சரத்குமார் மண்டாடி படத்தை பாராட்டி தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அதில், இந்தப் படத்தில் நடித்தவர்கள் மற்றும் தொழில்நுட்ப குழு என ஒட்டுமொத்த படக்குழுவையும் பாராட்டியுள்ளார்.</p><h2>கடலிலேயே எடுக்கப்பட்ட படம்:</h2><p>அந்தப் பதிவில், "மண்டாடி திரைப்படத்தைப் பார்த்த பிறகு வார்த்தைகளே வரவில்லை. இந்திய திரையுலகில் இதுவரை முயற்சிக்கப்படாத ஒரு துணிச்சலான படைப்பு இது; கேட்பதற்கு மிகைப்படுத்தப்பட்டதாகத் தோன்றலாம், ஆனால் அதுதான் உண்மை.</p><p>முழுவதுமாக கடலிலேயே படமாக்கப்பட்ட இப்படம், பிரமிக்க வைக்கும் காட்சி அமைப்புகளையும், கடலில் உள்ள சவால்களை எதிர்கொண்ட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் துணிச்சலையும் வெளிப்படுத்துகிறது.</p><p>மனித விழுமியங்கள், அன்பு மற்றும் தியாகங்கள் கலந்த ஒரு எளிய பாய்மர படகு பந்தயமாக தொடங்கி, பல உணர்வுப்பூர்வமான பரிமாணங்களை கொண்ட படமாக இது அமைகிறது.</p><h2>கதாபாத்திரமாக வாழ்ந்து காட்டியுள்ளார்:</h2><p>முழு குழுவினருக்கும், குறிப்பாக இத்திரைப்படத்தை உருவாக்க திட்டமிட்டு சிறப்பாக இயக்கிய இயக்குநர் மதிமாறன் புகழேந்திக்கும் எனது வாழ்த்துகள்.</p><p>நடிகர் சூரி இக்கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டியுள்ளார்; சிறந்த கதையை தேர்ந்தெடுத்து தனது நடிப்பு திறனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அவருக்கு மற்ற நடிகர்களின் சிறப்பான ஒத்துழைப்பும், ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசையும் கூடுதல் பலம் சேர்த்துள்ளன.</p><p>ஆஸ்கர் விருதுக்கு தகுதியான இப்படைப்பை உருவாக்குவதில் துணிச்சலையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்திய தயாரிப்பாளர் எல்ரெட் குமாருக்கும் பாராட்டுகள்," என குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 13 செப். 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-13-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-13-september-2026#comments</comments><guid isPermaLink="false">7d67d6f6-a3ea-4b0e-af90-db4520343c93</guid><pubDate>Sun, 13 Sep 2026 04:34:10 +0000</pubDate><atom:updated>2026-09-13T16:22:22.912Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/cptt0uo4/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ live]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/cptt0uo4/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/rybakina-beat-sabalenka-in-us-open-final">அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சபலென்காவை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ரிபாகினா</a></p><p>* அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.</p><p>* ஆஸ்திரேலிய ஓபன் இறுதிச்சுற்றிலும் எலினா ரிபாகினா சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். </p> <p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/joe-root-breaks-sachin-tendulkar-record-in-test-fifties">சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்த ஜோ ரூட்</a></p><p>* இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார்.</p><p>* அவர் 62 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/a-raja-controversial-speech-kanimozhi-x-post">ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சு: "யாகாவா ராயினும் நாகாக்க.." கனிமொழி எம்பியின் எக்ஸ் பதிவு!... </a></p><p>*திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்பியுமான ஆ.ராசா தெரிவித்த சில கருத்துகள் அரசியல் அரங்கில் கடும் சர்ச்சையை உருவாக்கியது.</p><p>*ஒருவர் எதை காக்கத் தவறினாலும் தன் நாவை அடக்கிக் காக்க வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/jersey-color-controversy-hockey-india-director-suspended">ஜெர்சி நிற சர்ச்சை: ஹாக்கி இந்தியா இயக்குநர் பணியிடை நீக்கம்!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/if-you-do-not-mend-your-ways-you-will-be-set-right-a-raja-expresses-regret-over-his-remarks-about-the-minister">“நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்” - அமைச்சர் குறித்த பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் ஆ. ராசா!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/topnews/a-leader-is-not-someone-who-bolts-at-the-first-sign-of-trouble-did-vijay-sethupathi-criticize-chief-minister-vijay">“பிரச்சனை என்றால் தெறித்து ஓடுபவர் தலைவர் இல்லை” - முதலமைச்சர் விஜய்யை விமர்சித்தாரா விஜய் சேதுபதி?</a></p><p>*பிக்பாஸில் விஜய் சேதுபதி பேசியது, முதலமைச்சர் விஜய்யுடன் தொடர்புப்படுத்தப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-metro-rail-schedule-changed-tomorrow-for-vinayagar-chaturthi">விநாயகர் சதுர்த்தி: நாளை சென்னை மெட்ரோ ரெயில் அட்டவணை மாற்றம்</a></p><p>* இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.</p><p>* இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-london-investments-unknown-edappadi-palaniswami">முதலமைச்சர் விஜய் லண்டனில் முதலீடுகளை ஈர்த்ததாக தெரியவில்லை- எடப்பாடி பழனிசாமி... </a></p><p>*முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணம் குறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, முதலீடுகளை ஈர்ப்பதற்காகவே அவர் லண்டன் சென்றிருக்கிறார் என எந்த தகவலும் வரவில்லை என்றார்.</p><p>*மாநிலம் பல லட்சம் கோடி கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் இந்தச் சூழலில், அவசர கதியில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதை எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார். </p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/left-parties-to-contest-by-election-independently-cpi-to-field-candidate-in-dharapuram">ஐந்துமுனைப் போட்டி: இடைத்தேர்தலை தனித்து களம் காணும் இடதுசாரிகள் - தாராபுரத்தில் சிபிஐ போட்டி!</a></p><p>*மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது.</p><p>*இடதுசாரிகள் ஒண்றிணைந்து இந்த இடைத்தேர்தலை சந்திக்கின்றனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/malaysian-prime-minister-meets-rahul-and-priyanka-congress-releases-video">ராகுல், பிரியங்காவுடன் மலேசிய பிரதமர் சந்திப்பு - வீடியோ வெளியிட்ட காங்கிரஸ் </a></p><p><br>*மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா வந்துள்ளார்.</p><p>*மன்மோகன் சிங் தன் குழந்தைகளின் படிப்புக்கு பணம் செலுத்த முன்வந்ததையும் இப்ராஹிம் நினைவு கூர்ந்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/india-and-china-have-stepped-forward-to-mediate-an-end-to-the-ukraine-russia-war">நாங்க முடிச்சு தர்றோம்.. உக்ரைன் விஷயத்தில் கூடிவந்த இந்தியா, சீனா - ரஷியா சொல்வது என்ன?<br></a></p><p>*அதுவரை புதினிடம் பிரதமர் மோடி கூறியதிலேயே அதுவே சற்று காத்திரமான கருத்தாக இருந்தது.</p><p>*கொண்டு வர பெரு முயற்சி எடுத்தும் பலனளிக்காத சூழலில் இந்த கருத்து வந்துள்ளது.<br></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/missile-attack-on-iranian-ship-near-strait-of-hormuz-one-killed-three-injured">ஹார்முஸ் ஜலசந்தி அருகே ஈரான் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் - ஒருவர் பலி - 3 பேர் காயம் <br></a><br>*ஹார்முஸ் வழியே செல்லும் கப்பல்கள் கடும் அச்சறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றன.</p><p>*ஓமன் மத்தியஸ்தத்தில் ஈரான் மற்றும் பிற அரபு நாடுகள் இடையே நடந்து வருகின்றன.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-stalin-says-dmk-stands-with-people-beyond-polls" rel="nofollow">வெற்றி, தோல்விகளுக்கு அப்பாற்பட்டு மக்களுடன் நிற்பது திமுக..!- உதயநிதி ஸ்டாலின்</a></p><p>* காதல் திருமணத்தில் நிறைய கஷ்டங்கள், சவால்கள் இருக்கும். </p><p>* வரலாற்றிலேயே முதன்முறையாக டம்மி முதலமைச்சரை பார்க்கிறேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/bomb-blast-hits-army-vehicles-on-balochistan-highway-23-soldiers-killed">பலுசிஸ்தான் நெடுஞ்சாலையில் ராணுவ வானங்கள் செல்லும்போது குண்டுவெடிப்பு.. 23 வீரர்கள் பலி </a></p><p>*இந்த நெடுஞ்சாலை கராச்சியை, பலுசிஸ்தானின் தலைநகரான குவெட்டாவுடன் நேரடியாக இணைக்கிறது.</p><p>*பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என சொல்லப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/80-of-people-in-india-eat-non-vegetarian-food-rahul-mocks-the-vegetarian-menu-at-the-brics-summit">இந்தியாவில் 80% மக்கள் அசைவம்.. பிரிக்ஸ் மாநாட்டின் சைவ மெனு பற்றி ராகுல் கிண்டல்</a><br></p><p>*இந்திய அசைவ உணவுகள் மிகவும் சுவையானவை</p><p>* பரிமாறப்பட்ட உணவுகள் குறித்து மக்களவை எதிர்க்கட்சிதலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.<br></p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/one-off-test-south-africa-defeats-namibia-in-the-third-match-as-well-to-clinch-the-series">ஒருநாள் டெஸ்ட்: 3வது போட்டியிலும் நமீபியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய தென் ஆப்பிரிக்கா <br></a></p><p>*36.2 ஓவரில் 156 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.</p><p>* பிஜொன் பொர்டியூன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.<br><br></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/prime-minister-modi-held-bilateral-talks-with-leaders-from-15-countries-in-three-days">3 நாட்களில் 15 உலக நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி!</a> </p><p>*ராஜதந்திரமே போருக்குத் தீர்வு எனப் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.</p><p>*செப்டம்பர் 11 அன்று புதின், பெசெஷ்கியான் மற்றும் ஐ.நா பொதுச்செயலாளரை மோடி சந்தித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/school-friend-meets-pm-modi-in-person-to-seek-help-immediate-action-initiated">என் நிலத்தை அபகரிச்சுட்டாங்க.. பிரதமர் மோடியை நேரில் சந்தித்து உதவி கோரிய பள்ளித் தோழர் - உடனே தொடங்கிய ஆக்ஷன்</a></p><p>*சிபிஐ விசாரணை கோரி பிரதமரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.</p> <p>*சிபிஐ விசாரணை கோரி பிரதமரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.</p>  <p><a href="https://www.maalaimalar.com/news/world/i-dont-care-trump-on-the-talks-between-the-president-of-iran-and-the-prince-of-the-united-arab-emirates-at-the-brics-conference">I Don't Care.. பிரிக்ஸ் மாநாட்டில் ஈரான் அதிபர் - அமீரக இளவரசர் பேச்சுவார்த்தை குறித்து டிரம்ப்<br></a></p><p>*அமெரிக்காவிற்கு சாதகமான ஒப்பந்தம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.</p><p>* அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்குப் பிறகோ அல்லது அதற்கு முன்பாகவோ ஈரானுடனான மோதல் முடிவுக்கு வரும் <br><br></p>]]></content:encoded></item><item><title>முதல் டி20: இந்தியாவுக்கு 157 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/1st-t20-afghanistan-sets-a-target-of-157-runs-for-india</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/1st-t20-afghanistan-sets-a-target-of-157-runs-for-india#comments</comments><guid isPermaLink="false">eb940cc1-7f13-4f2e-9057-8589f4c3e358</guid><pubDate>Sun, 13 Sep 2026 16:19:51 +0000</pubDate><atom:updated>2026-09-13T16:19:51.452Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>T20 Cricket,டி20 கிரிக்கெட்,ஆசிய கோப்பை,Asia Cup,india vs afghanistan,இந்தியா-ஆப்கனிஸ்தான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/mj2lw5wd/tn-24.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதல் டி20]]></media:title><media:description type="html"><![CDATA[ முதல் டி20]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/mj2lw5wd/tn-24.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. </p><p>இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இதுவாகும்.</p><p>போட்டியின் தொடக்கத்தில் முதல் முறையாக<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D"> வந்தே மாதரம் </a>இசைக்கப்பட்டது. </p><p>இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று முதலில் பந்துவீசத் தீர்மானித்தார்.</p><p>ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. ஆப்கானிஸ்தான் அணிக்காக குர்பாஸும், கேப்டன் இப்ராஹிம் ஜத்ரானும் பேட்டிங் செய்ய வந்தனர்.</p><p>இந்திய பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் பேட்டிங் வரிசை தடுமாறியது. ஒரு கட்டத்தில் ஆப்கானிஸ்தான் 43 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.</p> <p>இருப்பினும், அஸ்மத்துல்லா உமர்சாயின் அரைசதம், ஆப்கானிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் என்ற ஸ்கோரை எட்ட உதவியது. மேலும் உமர்சாய் 44 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 64 ரன்கள் எடுத்தார்.</p><p>வெற்றிக்கு 157 ரன்கள் என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இந்து மத குரு காலில் விழுந்த ஈரான் அதிபர்?.. தூதரகம் தந்த விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/national/did-the-iranian-president-fall-at-the-feet-of-a-hindu-religious-leader-embassy-offers-an-explanation</link><comments>https://www.maalaimalar.com/news/national/did-the-iranian-president-fall-at-the-feet-of-a-hindu-religious-leader-embassy-offers-an-explanation#comments</comments><guid isPermaLink="false">0cc87104-2126-45d3-9ee2-07d2b79a67e2</guid><pubDate>Sun, 13 Sep 2026 16:12:44 +0000</pubDate><atom:updated>2026-09-13T16:12:44.665Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வைரல் வீடியோ,ஈரான்,Iran,BRICS Summit,viral video,பிரிக்ஸ் உச்சிமாநாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/n5eagee1/tn-23.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ வைரல் வீடியோ ]]></media:title><media:description type="html"><![CDATA[ வைரல் வீடியோ ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/n5eagee1/tn-23.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்கு இடையே நடந்த ஒரு நிகழ்ச்சியில், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், இந்து மத தலைவரின் காலில் விழுந்து வணங்கியதாக இணையத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.</p><p>பிரிக்ஸ் மாநாட்டின் இடையே டெல்லியில் உள்ள ஓபராய் ஹோட்டலில் ஈரான் தூதரகம் சார்பில் தொழிலதிபர்கள், மதத் தலைவர்கள் மற்றும் அறிஞர்களுக்கான சிறப்புச் சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.  </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/i-dont-care-trump-on-the-talks-between-the-president-of-iran-and-the-prince-of-the-united-arab-emirates-at-the-brics-conference">ஈரான் அதிபர்</a> மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி பங்கேற்ற நிகழ்ச்சியில் பல்வேறு மதத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.</p><h2>வைரல் வீடியோ</h2><p>இதில் பங்கேற்ற உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த இந்து சமய தலைவரான சுவாமி சதீஷாச்சார்யாவுடன் ஈரான் அதிபர் பெசெஷ்கியான் பேசிக்கொண்டிருக்கும்போது, திடீரெனக் கீழே குனிவது போன்ற வீடியோ வெளியானது.</p><p>ஈரான் அதிபர், இந்து மத தலைவரின் காலைத் தொட்டு ஆசி பெற்றார் எனக் கூறி இந்த வீடியோ வேகமாகப் பரப்பப்பட்டது.</p><p>ஆனால் இதுகுறித்து ஈரான் தூதரக வட்டாரங்கள் விளக்கம் அளித்துள்ளன. அதிபர், தன்னிடம் கொடுக்கப்பட்ட கடிதம் கீழே விழுந்ததால் அதை எடுக்கவே குனித்ததாகவும், அது தவறாக சித்தரிக்கப்பட்டு பரப்பப்டுவதாக விளக்கம் அளித்துள்ளது.  </p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Complete video, As always ziozist in Pak will do everything to frame <a href="https://t.co/vmy7PYvHXV">pic.twitter.com/vmy7PYvHXV</a></p>&mdash; Aizaz dinho (@Aizazdinho) <a href="https://x.com/Aizazdinho/status/2099054990275014796?ref_src=twsrc%5Etfw">September 13, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>பிரிக்ஸ் மாநாட்டில் ஈரான் அதிபர்</h2><p>மறுபுறம் பிரிக்ஸ் மாநாட்டின் இடையே அபுதாபி இளவரசரை சந்தித்த பிறகு பேசிய அதிபர் பெசெஷ்கியான், "ஈரானுக்கு ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிற அண்டை வளைகுடா நாடுகளுடன் எந்தவிதப் பிரச்சனையோ அல்லது பகையோ இல்லை" எனத் தெரிவித்திருந்தார்.</p><p>மேலும், "ஈரான் வளைகுடா நாடுகளுக்கு எதிரானது அல்ல; மாறாக அப்பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களுக்கு எதிரானது மட்டுமே. அமெரிக்கா இங்கு வந்து அமைத்துள்ள தளங்களைப் பயன்படுத்தித் தான் எங்களது தலைவர்கள், தளபதிகள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. அதைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம்" என பெசெஷ்கியான் கூறினார்.</p><h2>புதுடெல்லி பிரகடனம்</h2><p>பிரிக்ஸ் மாநாட்டின் முதல் நாளான நேற்று, பிரிக்ஸ் அமைப்பின் தலைவர்கள் ஒன்றிணைந்து வெளியிட்ட புதுடெல்லி பிரகடனத்தில், மத்திய கிழக்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர்ப் பதற்றம் குறித்துக் கடும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>வளைகுடாப் பிராந்தியத்தில் நிலையான அமைதியை ஏற்படுத்தத் தூதரகப் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர வழிகளையே முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என பிரிக்ஸ் கூட்டமைப்பு அந்த பிரகடனத்தில் கோரியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னைக்கு 3,565 சிறப்பு பேருந்துகள் இயக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/3565-special-government-buses-to-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/3565-special-government-buses-to-chennai#comments</comments><guid isPermaLink="false">64a35e42-3787-4196-8105-f0b29febb695</guid><pubDate>Sun, 13 Sep 2026 15:57:51 +0000</pubDate><atom:updated>2026-09-13T15:57:51.970Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,special bus,சிறப்பு பேருந்து,விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chathurthi</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/gk111i9w/bus.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/gk111i9w/bus.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு நாளை அரசு விடுமுறையாகும். சனி, ஞாயிற்றுக்கிழமை  விடுமுறை நாட்களோடு விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருவதால் 3 நாட்கள் தொடர் அரசு விடுமுறை  கிடைக்கிறது.</p><p>இதனால், வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்பதால்  அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.</p><p>சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திரு நெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு கடந்த வியாழக்கிழமை 585 சிறப்பு பஸ்களும், கடந்த வெள்ளிக்கிழமை 1,255 பஸ்களும், கடந்த 12-ந் தேதி 1,030 பஸ்களும், 13-ந் தேதி  650 பஸ்களும் இயக்கப்பட்டது.</p><p>கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகப் பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு மேற்கண்ட இந்த நாட்களில் 585 பஸ்களும் இயக்கப்படுகிறது.</p><p>பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை நகரங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது.</p> <p>மாத வரத்தில் இருந்து  கள்ளக் குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர், புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தலா 110 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது.</p><p>மேலும் 14-ந்தேதி சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் 765 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.</p><h2>சென்னை திரும்ப சிறப்பு பேருந்துகள்</h2><p>தொடர் விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னைக்கு திரும்ப 3,565 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.</p><p>தமிழகத்தின் பல ஊர்களில் இருந்து நாளை சென்னைக்கு திரும்ப 2,240 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.</p><p>நாளை மறுநாள் சென்னைக்கு 1,325 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>கோழைகள்தான் ஆபாசத்தையும் அவதூறையும் ஆயுதமாக்குவார்கள்..!- திமுகவிற்கு தவெக பதிலடி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/only-cowards-weaponise-obscenity-and-defamation-tvk</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/only-cowards-weaponise-obscenity-and-defamation-tvk#comments</comments><guid isPermaLink="false">b6a94ba9-9d39-4134-b801-4b9d641edb16</guid><pubDate>Sun, 13 Sep 2026 15:16:20 +0000</pubDate><atom:updated>2026-09-13T15:16:20.357Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தவெக,tvk,தவெக ஐடி விங்,TVK It wing</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/xk27xikz/TVK2.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TVK]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/xk27xikz/TVK2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆபாச அரசியல் திமுகவிற்குப் புதிதல்ல என்றாலும், அதனால் அம்பலப்படுவது அவர்கள்தான் என்று <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95" rel="nofollow">திமுக</a>வின் கருத்துக்கு கடுமையாக விமர்சித்து தவெக ஐடி விங் பதிவிட்டுள்ளது.</p><p>தவெக ஐடி விங் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள முடியாதபோதுதான் கோழைகள் ஆபாசத்தையும் அவதூறையும் ஆயுதமாக்குவார்கள். ஆபாச அரசியல் திமுகவிற்குப் புதிதல்ல என்றாலும், அதனால் அம்பலப்படுவது அவர்கள்தான்.</p><p>மாண்புமிகு முதலமைச்சரின் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம், தொண்டர்கள் குறித்து எப்போது கொத்தடிமைகள் ஆபாச வசைபாடத் தொடங்கினார்களோ, அப்போதே அவர்களின் அரசியல் தரம் எவ்வளவு கேவலமானது என்பதை உலகுக்குப் பறைசாற்றிவிட்டார்கள்.</p><p>கடமை, கண்ணியம், கட்டுப்பாடு பற்றி கொத்தடிமைகளுக்கு வகுப்பெடுக்காத கொத்து பரோட்டாவின் இயலாமை, பவளவிழா பாப்பாவின் பகுமானத்தைப் பல் இளிக்க வைக்கிறது.</p><p>ஆபாசநதியையும் வன்மநதியையும் வகைதொகையில்லாமல் ஓடவிட்டு, கீழ்த்தரமான அரசியலைப் பிழைப்பாகக் கொண்டிருப்பதற்கு எதற்கு அரசியலில் இருக்க வேண்டும்?</p><p>அமைதியாக இருக்கிறார்கள், ஆபாசத்தையும் அவதூறையும் வீசி இவர்களை வீழ்த்திவிடலாம் என்று எண்ணினால், மக்கள் மன்றத்தில் மதிப்பிழந்து நிற்கும் பவளவிழா பாப்பா என்பதை எச்சரிக்கையாக அல்ல...</p><p>ரொம்ப டீசென்ட்டா, ரொம்ப அன்பா, ரொம்ப க்யூட்டா, ரொம்ப லவ்வபிள்லா சொல்லிக்கிறோம்!</p><p>இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>I Don&apos;t Care.. பிரிக்ஸ் மாநாட்டில் ஈரான் அதிபர் - அமீரக இளவரசர்  பேச்சுவார்த்தை குறித்து டிரம்ப்   </title><link>https://www.maalaimalar.com/news/world/i-dont-care-trump-on-the-talks-between-the-president-of-iran-and-the-prince-of-the-united-arab-emirates-at-the-brics-conference</link><comments>https://www.maalaimalar.com/news/world/i-dont-care-trump-on-the-talks-between-the-president-of-iran-and-the-prince-of-the-united-arab-emirates-at-the-brics-conference#comments</comments><guid isPermaLink="false">37758cee-8cad-481e-8efa-9b3b18a9bf5a</guid><pubDate>Sun, 13 Sep 2026 15:05:32 +0000</pubDate><atom:updated>2026-09-13T15:05:32.792Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>trump,டிரம்ப்,BRICS Summit,பிரிக்ஸ் உச்சிமாநாடு,Iran War,ஈரான் போர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/2aiuepqr/tn-22.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மீரக இளவரசர், ஈரான் அதிபர், டிரம்ப்   ]]></media:title><media:description type="html"><![CDATA[ மீரக இளவரசர், ஈரான் அதிபர், டிரம்ப்   ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/2aiuepqr/tn-22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரிக்ஸ் மாநாட்டில் ஈரான் அதிபர், ஐக்கிய அரபு அமீரக இளவரசர் சந்திப்பு குறித்து டிரம்ப் கருத்த தெரிவித்துள்ளார்.</p> <p>டெல்லியில் நடைபெற்ற 18வது பிரிக்ஸ்உச்சி மாநாட்டின் இடையே, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/missile-attack-on-iranian-ship-near-strait-of-hormuz-one-killed-three-injured">வளைகுடா நாடுகளில் பதற்றம்</a> நிலவி வரும் சூழலில் நடைபெற்ற இச்சந்திப்பு குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.</p> <h2>டிரம்பின் கருத்து</h2><p>அயர்லாந்துக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அங்கு நடைபெற்ற 'ஐரிஷ் ஓபன்' கோல்ப் தொடரின் இடையே செய்தியாளர்களிடம் பேசினார்.</p><p>அவர் கூறியதாவது, , "வளைகுடா நாடுகள் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை; அது அவர்களின் விருப்பம், எனக்கு அதைப்பற்றி அக்கறை இல்லை (I don't care)" என தெரிவித்தார்.</p><p>ஈரான் அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்திற்கு வரக் கடுமையாக முயற்சிப்பதாகவும், தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கான அழைப்புகளை விடுத்து வருவதாகவும் தெரிவித்த டிரம்ப், அமெரிக்காவிற்கு சாதகமான சரியான ஒப்பந்தம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.</p><p>முன்னதாக, அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்குப் பிறகோ அல்லது அதற்கு முன்பாகவோ ஈரானுடனான மோதல் முடிவுக்கு வரும் எனக் குறிப்பிட்ட டிரம்ப், போர் முடிவுக்கு வந்தவுடன் அமெரிக்காவில் பெட்ரோல் மற்றும் கச்சா எண்ணெய் விலைகள் அதிரடியாக குறையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.</p> <h2>ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான்</h2><p>பிரிக்ஸ் மாநாட்டின் இடையே அபுதாபி இளவரசரை சந்தித்த பிறகு பேசிய அதிபர் பெசெஷ்கியான், "ஈரானுக்கு ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிற அண்டை வளைகுடா நாடுகளுடன் எந்தவிதப் பிரச்சனையோ அல்லது பகையோ இல்லை" எனத் தெரிவித்திருந்தார்.</p><p>மேலும், "ஈரான் வளைகுடா நாடுகளுக்கு எதிரானது அல்ல; மாறாக அப்பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களுக்கு எதிரானது மட்டுமே. அமெரிக்கா இங்கு வந்து அமைத்துள்ள தளங்களைப் பயன்படுத்தித் தான் எங்களது தலைவர்கள், தளபதிகள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. அதைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம்" என பெசெஷ்கியான் கூறினார்.</p> <h2>புதுடெல்லி பிரகடனம்</h2><p>பிரிக்ஸ் மாநாட்டின் முதல் நாளான நேற்று, பிரிக்ஸ் அமைப்பின் தலைவர்கள் ஒன்றிணைந்து வெளியிட்ட புதுடெல்லி பிரகடனத்தில், மத்திய கிழக்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர்ப் பதற்றம் குறித்துக் கடும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>வளைகுடாப் பிராந்தியத்தில் நிலையான அமைதியை ஏற்படுத்தத் தூதரகப் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர வழிகளையே முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என பிரிக்ஸ் கூட்டமைப்பு அந்த பிரகடனத்தில் கோரியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>என் நிலத்தை அபகரிச்சுட்டாங்க.. பிரதமர் மோடியை நேரில் சந்தித்து உதவி கோரிய பள்ளித் தோழர் - உடனே தொடங்கிய ஆக்ஷன்</title><link>https://www.maalaimalar.com/news/national/school-friend-meets-pm-modi-in-person-to-seek-help-immediate-action-initiated</link><comments>https://www.maalaimalar.com/news/national/school-friend-meets-pm-modi-in-person-to-seek-help-immediate-action-initiated#comments</comments><guid isPermaLink="false">f0de3a05-046e-4524-a3b1-031281ae0297</guid><pubDate>Sun, 13 Sep 2026 14:14:46 +0000</pubDate><atom:updated>2026-09-13T14:14:46.825Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,குஜராத்,gujarat,நில அபகரிப்பு,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/64nn40z9/tn-20.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரதமர் மோடி, அஸ்கரலி வோஹ்ரா ]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர் மோடி, அஸ்கரலி வோஹ்ரா ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/64nn40z9/tn-20.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தனக்கு சொந்தமான நிலம் அபகரிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியின் பள்ளித் தோழர் அவரை நேரில் சந்தித்து உதவி கோரியது தெரியவந்துள்ளது.</p> <p>குஜராத் மாநிலம் வட்நகரில் உள்ள பி.என். உயர்நிலைப் பள்ளியில் <a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-warns-against-weaponisation-of-critical-minerals">பிரதமர் மோடியுடன்</a> பயின்ற பள்ளித் தோழர் அஸ்கரலி வோஹ்ரா (81).</p><p>இவர் தனக்குச் சொந்தமான நிலம் ஆக்கிரமிக்கப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி பிரதமரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.</p> <h2>ஆக்கிரமிப்பு</h2><p>மும்பை நகரின் பயந்தர் கிழக்கு நவகார் பகுதியில் அமைந்துள்ள சுமார் 2,810 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நிலத்தை அஸ்கரலி வோஹ்ரா கடந்த 1989ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாகப் பதிவு செய்து வாங்கியுள்ளார்.</p><p>கடந்த 2011ஆம் ஆண்டு தனது நிலம் போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>தனக்கு தெரியாமல் நிலத்தை பிரித்து, 'ஸ்வயம் பில்டர்ஸ்' மற்றும் 'செவன் லெவன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்' ஆகிய இரு கட்டுமான நிறுவனங்களின் பெயருக்கு மாற்றப்பட்டதாக அவர் புகார் தெரிவித்துள்ளார்.</p><p>இந்த நில ஆக்கிரமிப்பில் 'செவன் லெவன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்' நிறுவனத்துடன் தொடர்புள்ள பாஜக எம்.எல்.ஏ நரேந்திர மேத்தாவுக்கு தொடர்பு இருப்பதாக வோஹ்ரா குற்றம் சாட்டியுள்ளார்.</p> <h2>பிரதமருடன் சந்திப்பு</h2><p>பல ஆண்டுகளாக அரசுத் அதிகாரிகளிடமும் காவல் நிலையங்களிலும் முறையிட்டும் தீர்வு கிடைக்காததால், கடந்த செப்டம்பர் 8 அன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்த 81 வயதான வோஹ்ரா, இச்சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்தார்.</p> <h2>விசாரணைக்கு உத்தரவு</h2><p>பிரதமருடனான சந்திப்பை தொடர்ந்து, உள்ளூர் நிர்வாகம் இச்சம்பவத்தில் மின்னல் வேகத்தில் நடவடிக்கையை தொடங்கியுள்ளது.</p><p>புகார் தொடர்பாக வரும் செப்டம்பர் 16ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு 'ஸ்வயம் பில்டர்ஸ்' மற்றும் 'செவன் லெவன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்' ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு உள்ளூர் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் 1,562 விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-1562-vinayagar-idols-permission-for-worship</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-1562-vinayagar-idols-permission-for-worship#comments</comments><guid isPermaLink="false">904d0234-523e-489a-94d8-4bdfad7bd3a1</guid><pubDate>Sun, 13 Sep 2026 14:00:22 +0000</pubDate><atom:updated>2026-09-13T14:00:22.432Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,விநாயகர் சதுர்த்தி,விநாயகர் சிலைகள்,Vinayagar statue,Vinayagar Chathurthi</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/ghikg55y/VC.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vinayagar Chathurthi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/ghikg55y/VC.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பண்டிகைக்கான ஏற்பாடுகள் களைகட்டி வருகின்றன.</p><p>விநாயகர் சிலை வழிபாடுகள், ஊர்வலத்திற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p><p>தமிழகத்தைப் பொறுத்தவரை பொது மக்களுக்கு இடையூறின்றி விழாக்கள் நடத்தவும், சிலைகள் கரைப்பு ஊர்வலத்துக்கான ஏற்பாடுகள் குறித்தும், அந்தந்த மாவட்ட அமைப்பாளர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.</p><p>சுற்றுச்சூழலை பாதிக்கும் ரசாயனப் பொருட்களைத் தவிர்த்து முற்றிலும் இயற்கை பொருட்களால் செய்யப்பட்ட சிலைகளையே வழிபாட்டிற்கு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.</p><p>இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை காவல் எல்லைக்குள் 1,562 சிலைகளை வைத்து வழிபட போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். பாதுகாப்பு பணியில் 16,500 போலீசார் ஈடுபட உள்ளனர்.</p><p>உரிய அனுமதி இல்லாத இடங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபட அனுமதி இல்லை எனவும், கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>3 நாட்களில் 15 உலக நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி!</title><link>https://www.maalaimalar.com/news/national/prime-minister-modi-held-bilateral-talks-with-leaders-from-15-countries-in-three-days</link><comments>https://www.maalaimalar.com/news/national/prime-minister-modi-held-bilateral-talks-with-leaders-from-15-countries-in-three-days#comments</comments><guid isPermaLink="false">59256890-35c7-48aa-bc46-46527474fcd2</guid><pubDate>Sun, 13 Sep 2026 13:49:06 +0000</pubDate><atom:updated>2026-09-13T13:49:06.694Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,BRICS Summit,delhi,பிரிக்ஸ் உச்சிமாநாடு,பிரதமர் மோடி,டெல்லி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/t2ag30ma/tn-19.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடியுடன் தலைவர்கள் ]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடியுடன் தலைவர்கள் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/t2ag30ma/tn-19.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>3 நாட்களில் பிரதமர் மோடி, இந்தியா வருகை தந்த 15 நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.</p><p>டெல்லியில் 18வது<a href="https://www.maalaimalar.com/news/national/brics-summit-modi-warning-on-critical-minerals-in-front-of-xi"> பிரிக்ஸ் உச்சி மாநாடு</a> நேற்று தொடங்கி இன்றுடன் நிறைவடைந்தது. இதில் ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான், சவுதி இளவரசர், தென் ஆப்பிரிக்கா, பிரேசில் ஆகிய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். </p><p>புதின் கடந்த நேற்று முன் தினமே இந்தியா வந்து சேர்ந்தார். அவருடன் அன்றைய தினம் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இவ்வாறு 3 நாட்களில் பிரதமர் மோடி, இந்தியா வருகை தந்த 15 நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.   </p><p>மேலும், பல்வேறு சர்வதேச அமைப்புகளின் தலைவர்களுடனும் அவர் தனியாகக் கலந்துரையாடினார்.  </p><p>வணிகம், முதலீடு, பாதுகாப்பு, எரிசக்தி, தொழில்நுட்பம், முக்கிய கனிமங்கள், மற்றும் உலகளாவிய அமைதி குறித்த விவாதங்கள் இந்தசந்திப்புகளில் பிரதானமாக இடம் பெற்றன.  </p> <h2>வெள்ளிக்கிழமை சந்திப்பு</h2><p>செப்டம்பர் 11 அன்று புதின், பெசெஷ்கியான் மற்றும் ஐ.நா பொதுச்செயலாளரை மோடி சந்தித்தார்.</p><p>ரஷிய அதிபர் புதினுடன் நடந்த பேச்சுவார்த்தையில், இருநாடுகளிடையேயான வர்த்தகத்தை 2030க்குள் 100 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.</p><p>பாதுகாப்பு, விண்வெளி, அணுசக்தி மற்றும் உக்ரைன் - ரஷிய மோதல் குறித்தும் விவாதிக்கப்பட்டது. பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரமே போருக்குத் தீர்வு எனப் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.</p><p>ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் உடனான பேச்சுவார்த்தையில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி, பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பு, கடல்வழி வர்த்தகம் மற்றும் இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு குறித்துப் பேசப்பட்டது.</p><p>ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்ரெஸ் உடனான பேச்சுவார்த்தையில் சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தம் மற்றும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.</p> <h2>சனிக்கிழமை சந்திப்பு</h2><p>செப்டம்பர் 12, நேற்று, இந்தியா வந்து சேர்ந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். 7 ஆண்டுகளுக்கு பிறகு அவர் முதல் முறை இந்தியா வந்துள்ளார்.</p><p>சீன அதிபருடனான பேச்சுவார்த்தையில் எல்லைப் பிரச்சனை, வர்த்தக சமநிலையின்மை மற்றும் விநியோகச் சங்கிலியில் உள்ள இடர்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.</p><p>இருநாடுகளின் வேறுபாடுகள் சர்ச்சைகளாக மாறக்கூடாது என்றும் பரஸ்பர மரியாதை மற்றும் நலன்கள் அடிப்படையில் உறவுகள் தொடர வேண்டும்" எனப் பிரதமர் மோடி சீன அதிபரிடம் வலியுறுத்தினார்.</p> <p>மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் உடன் நடத்திய பேச்சுவார்த்தையில், சேமிகண்டக்டர்,கள், டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் Fintech தொழில்நுட்பம் குறித்துப் பேசப்பட்டது.</p><p>அபுதாபி இளவரசர் ஷேக் காலித் உடனான சந்திப்பில் பாதுகாப்பு, விண்வெளி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பேசப்பட்டது.</p><p>வியட்நாம் மற்றும் எத்தியோப்பியத் தலைவர்களுடன் இருதரப்பு உறவுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடனான தொடர்பை விரிவுபடுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.</p><h2>ஞாயிறு சந்திப்பு</h2><p>மாநாட்டின் கடைசி நாளான இன்று, செப்டம்பர் 13, தென்னாப்பிரிக்க அதிபர் சிறில் ராமபோசா கஜகஸ்தான் அதிபர் காசிம் ஜோமார்ட் தோகாயேவ், பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர், எகிப்து அதிபர் அல் சிசி, புருண்டி, உகாண்டா மற்றும் நைஜீரியப் பிரதிநிதிகளுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.</p><p>இந்த உச்சி மாநாடும், இருதரப்பு சந்திப்புகளும் இந்தியாவின் சர்வதேச ராஜதந்திர உறவுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என கருதப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>திருவள்ளூர் மாவட்டத்தில் 892 விநாயகர் சிலை அமைக்க அனுமதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/892-vinayaka-idols-approved-across-thiruvallur-district</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/892-vinayaka-idols-approved-across-thiruvallur-district#comments</comments><guid isPermaLink="false">67f79f5f-d890-48a8-9abc-0dd92274d5ab</guid><pubDate>Sun, 13 Sep 2026 12:58:44 +0000</pubDate><atom:updated>2026-09-13T12:58:44.775Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Thiruvallur,விநாயகர் சதுர்த்தி,விநாயகர் சிலைகள்,Vinayagar statue,Vinayagar Chathurthi,திருவள்ளூர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/r87mr6b5/Vinayagar-statue.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vinayagar statue]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/r87mr6b5/Vinayagar-statue.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர் மாவட்டத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கவும், ஊர்வலம் நடத்தவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் பல முக்கிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.</p><p>அதன்படி, <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88" rel="nofollow">வருவாய்த் துறை</a>, காவல்துறை, உள்ளாட்சித்துறை, மின்சாரத்துறை மற்றும் தீயணைப்புத்துறை ஆகிய துறைகளிடம் உரிய தடையில்லாச் சான்றும் அனுமதியும் பெற வேண்டும்.</p><p>சிலைகள் சுற்றுச் சூழலுக்கு உகந்த களி மண்ணால் மட்டுமே செய்யப்பட வேண்டும். ரசாயன வர்ணங்கள் அல்லது நச்சுத்தன்மை வாய்ந்த சாயங்களைப் பயன்படுத்தக் கூடாது.</p><p>இதர வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிலையங்கள் அருகில் சிலைகள் வைக்க அனுமதி இல்லை.</p><p>மேலும், சிலைகளின் பாதுகாப்பிற்காக 24 மணி நேரமும் தலா 2 நபர்கள் சுழற்சி முறையில் பணியில் இருக்க வேண்டும்.</p><p>மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் பதாகைகள் வைக்கவோ, கோஷங்கள் எழுப்பவோ கூடாது. மேலும், பட்டாசு வெடிக்கத் தடை உள்ளது.</p><p>இதுபோன்ற பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திருவள்ளூரில் 166 இடங்களிலும் ஊத்துக் கோட்டையில் 239 இடங்களிலும் திருத்தணியில் 294 இடங்களிலும் கும்மிடிப்பூண்டியில் 193 இடங்களிலும் என மொத்தம் 892 இடங்களில் சிலைகள் வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக திருவள்ளூர் காவல் மாவட்டம் சார்பில் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>ஒருநாள் டெஸ்ட்: 3வது போட்டியிலும் நமீபியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய தென் ஆப்பிரிக்கா </title><link>https://www.maalaimalar.com/sports/cricket/one-off-test-south-africa-defeats-namibia-in-the-third-match-as-well-to-clinch-the-series</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/one-off-test-south-africa-defeats-namibia-in-the-third-match-as-well-to-clinch-the-series#comments</comments><guid isPermaLink="false">88c99da8-1ce0-40c4-a28b-0ea97458c0bd</guid><pubDate>Sun, 13 Sep 2026 12:48:40 +0000</pubDate><atom:updated>2026-09-13T12:48:40.320Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தென் ஆப்பிரிக்கா,South Africa,ஒருநாள் தொடர்,ODI Series,Namibia,நமீபியா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/jmvf07ji/tn-18.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஒருநாள் டெஸ்ட்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஒருநாள் டெஸ்ட்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/jmvf07ji/tn-18.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p> நமீபியாவை வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை தென் ஆப்பிரிக்கா முழுமையாக கைப்பற்றியுள்ளது.</p><p>தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நமீபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட <a href="https://www.maalaimalar.com/sports/cricket/2nd-odi-south-africa-beat-namibia-by-157-runs">ஒருநாள் தொடரில் </a>விளையாடி வருகிறது. </p><p>முதல் இரண்டு போட்டிகளில் நமீபியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. </p><p>3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நமீபியா தலைநகர் விந்தோக்கில் இன்று நடைபெற்றது.</p><p>இதில் டாஸ் வென்ற நமீபியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. . </p> <h2>நமீபியா பேட்டிங்</h2><p>அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நமீபியா, தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 36.2 ஓவரில் 156 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.</p><p>அதிகபட்சமாக செனி கிரீன் 33 ரன்கள் சேர்த்தார். தென் ஆப்பிரிக்க கேப்டன் பிஜொன் பொர்டியூன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.</p> <h2>தென் ஆப்பிரிக்கா ஆட்டம்</h2><p>இதையடுத்து, 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது.</p><p>21.3 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு தென் ஆப்பிரிக்கா 157 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் நமீபியாவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றிபெற்றது.</p> <p>தென் ஆப்பிரிக்க தொடக்க வீரர் ஜோர்டன் ஹெர்மன் அதிகபட்சமாக 77 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.</p><p>இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 3-0 என்ற புள்ளி கணக்கில் தென் ஆப்பிரிக்கா முழுமையாக கைப்பற்றியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: கோலங்கள்!</title><link>https://www.maalaimalar.com/ampstories/web-stories/vinayagar-chaturthi-special-rangoli-designs</link><comments>https://www.maalaimalar.com/ampstories/web-stories/vinayagar-chaturthi-special-rangoli-designs#comments</comments><guid isPermaLink="false">3277d8c0-f83a-4867-a62f-00e3aeed9401</guid><pubDate>Sun, 13 Sep 2026 12:43:00 +0000</pubDate><atom:updated>2026-09-13T12:43:00.795Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,Pillayar Kolam,விநாயகர் கோலம்,Vinayagar Rangoli,Festival Kolam,Vinayagar Chaturthi Kolam 2026</media:keywords><media:content height="1080" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/vjuqzd0d/Untitled-design-2026-09-13T175913.100.png" width="1080"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/vjuqzd0d/Untitled-design-2026-09-13T175913.100.png?w=280" width="280"></media:thumbnail><category>வெப் ஸ்டோரீஸ் (Web stories)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/68x1locw/Untitled-design-2026-09-13T174546.414.png" /></figure><p>கலர் பொடி விநாயகர் கோலம்</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/nqutwniy/Untitled-design-2026-09-13T174328.598.png" /></figure><p>சித்தி விநாயகர் ஸ்பெஷல் கோலம்</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/31jx77n9/Untitled-design-2026-09-13T174747.448.png" /></figure><p><strong>கலர் விநாயகர் ரங்கோலி</strong></p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/olwo0s21/Untitled-design-2026-09-13T174922.445.png" /></figure><p>கலர்ஃபுல் விநாயகர் ரங்கோலி டிசைன்</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/rpzsovuo/Untitled-design-2026-09-13T175000.570.png" /></figure><p>வரவேற்பு பிள்ளையார் கோலம்</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/z0iq1mwt/Untitled-design-2026-09-13T175515.224.png" /></figure><p>பூஜா அறைக்கான பச்சரிசி பிள்ளையார் கோலம்</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/kpdnbwig/Untitled-design-2026-09-13T182040.357.png" /></figure><p>ஃப்ரீஹேண்ட் பிள்ளையார் கோலம்</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/rt2rh8k9/Untitled-design-2026-09-13T175025.562.png" /></figure><p><strong>விநாயகர் சதுர்த்தி சிம்பிள் கோலம்</strong></p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/82dum2l3/Untitled-design-2026-09-13T175830.362.png" /></figure><p>புள்ளி வச்ச பிள்ளையார் கோலம்</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவில் 80% மக்கள் அசைவம்.. பிரிக்ஸ் மாநாட்டின் சைவ மெனு பற்றி ராகுல் கிண்டல்
</title><link>https://www.maalaimalar.com/news/national/80-of-people-in-india-eat-non-vegetarian-food-rahul-mocks-the-vegetarian-menu-at-the-brics-summit</link><comments>https://www.maalaimalar.com/news/national/80-of-people-in-india-eat-non-vegetarian-food-rahul-mocks-the-vegetarian-menu-at-the-brics-summit#comments</comments><guid isPermaLink="false">78ec26a1-328a-4369-a90f-85600f5a1306</guid><pubDate>Sun, 13 Sep 2026 12:25:26 +0000</pubDate><atom:updated>2026-09-13T12:25:26.076Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,BRICS Summit,பிரிக்ஸ் உச்சிமாநாடு,சைவம்,அசைவம்,Vegetarianism,non-vegetarianism</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/qqke5hvq/tn-17.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராகுல் ]]></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/qqke5hvq/tn-17.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் நேற்று இரவு விருந்தில் சைவ உணவு வகைகள் மட்டும் பரிமாறப்பட்டது பற்றி மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காநிதி மறைமுகமாக விமர்சித்துள்ளார். </p><p>டெல்லியில் 18வது <a href="https://www.maalaimalar.com/news/national/brics-summit-modi-warning-on-critical-minerals-in-front-of-xi">பிரிக்ஸ்  உச்சி மாநாடு</a> இன்றுடன் நிறைவடைந்தது.  ரஷிய அதிபர் புதின், ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான், சீன அதிபர் ஜி ஜின் பிங், மலேசிய பிரதமர் இப்ராஹிம் உள்ளிட்ட உறுப்பு நாட்டு தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர். </p><p>இந்நிலையில் மாநாட்டின் முதல் நாளான நேற்று இரவு பிரதமர் மோடி ஏற்பாடு செய்திருந்த விருந்தில் பரிமாறப்பட்ட உணவுகள் குறித்து மக்களவை எதிர்க்கட்சிதலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். </p> <h2>ராகுல் பதிவு</h2><p>பிரிக்ஸ் மாநாட்டின் உணவுப் பட்டியல் குறித்து நேரடியாக எதையும் குறிப்பிடாத ராகுல் காந்தி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சகோதரி தயாரித்த 'சோலே பட்டுரே' உணவின் புகைப்படத்தைப் பகிர்ந்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.</p><p>அதில், "ஒரு விஷயத்தை நினைவூட்ட விரும்புகிறேன்: இந்தியாவில் 80 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் அசைவ உணவு சாப்பிடுபவர்கள். இந்திய அசைவ உணவுகள் மிகவும் சுவையானவை; அதேபோல் என் சகோதரி சமைத்த இந்த சோலே பட்டுரேவும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>சர்வதேச தலைவர்கள் பங்கேற்ற ஒரு விருந்தில் இந்தியாவின் பன்முகத் தன்மை கொண்ட உணவுக் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்காமல், முற்றிலும் சைவ உணவுகள் மட்டுமே பரிமாறப்பட்டதைச் சுட்டிக்காட்டும் வகையிலேயே ராகுல் காந்தி இந்தப் பதிவை வெளியிட்டுள்ளதாக எடுத்துக்கொள்ள வேண்டி உள்ளது.</p> <h2>பிரதமரின் பிரிக்ஸ் சைவ விருந்து பட்டியல்</h2><p>பிரதமர் மோடி அளித்த விருந்தில் இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் சிறுதானியங்களை மையமாக கொண்ட பல்வேறு சைவ உணவுகள் உலகத் தலைவர்களுக்குப் பரிமாறப்பட்டன.</p><p>காந்த்வி மில்பெயில்), காளான் கபாப், பனீர் லபாப்தார், குச்சி மார்மிக், காரட் பீன்ஸ் பொரியல், ராகி-சிறுதானிய புலாவு உள்ளிட்டவற்றுடன் பல்வேறு வகையான இந்தியப் பாரம்பரிய இனிப்பு வகைகள்ளும் பரிமாறப்பட்டன.</p><p>இந்த சிறப்பு சைவ விருந்தில் சீன அதிபர் மற்றும் அபுதாபி இளவரசர் ஷேக் காலித் ஆகியோர் பங்கேற்காமல் தவிர்த்து விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.</p> <h2>பாஜக பதிலடி</h2><p>ராகுலின் விமர்சனத்துக்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பதிலடி கொடுத்துள்ளார்.</p><p>பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுக்குப் பரிமாறப்பட்ட உணவு ஒரு அரசியல் பிரச்சினையாக ஆக்கப்படுவதாகவும் பரிமாறப்பட்ட உணவு சுவை, ஊட்டச்சத்து மற்றும் பாரம்பரியம் நிறைந்தது என்று விவரித்தார்.</p><p>விருந்தினர்கள் பரிமாறப்பட்ட இந்திய சைவ உணவு வகைகளை விரும்பி உண்டனர் என்றும் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>விமலின்  ‘சண்டக்காரி’ வெளியீட்டு தேதி அறிவிப்பு </title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/vimals-sandakkari-to-release-after-7-years</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/vimals-sandakkari-to-release-after-7-years#comments</comments><guid isPermaLink="false">397eaf4c-e6df-41fd-b95f-6a689c58e6cb</guid><pubDate>Sun, 13 Sep 2026 12:14:27 +0000</pubDate><atom:updated>2026-09-13T12:14:27.498Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Vimal,விமல்,Shriya Saran,ஸ்ரேயா சரண்,சண்டக்காரி,Sandakkari</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/2mq3tmtp/New-Project-2026-09-13T173413.971.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘சண்டக்காரி’! ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/2mq3tmtp/New-Project-2026-09-13T173413.971.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விமல் மற்றும் ஸ்ரேயா நடிப்பில் உருவாகி உள்ள <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/sandakari-new-movie-update">சண்டக்காரி </a>திரைப்படம் செப்.18ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. </p><p>‘திரிஷ்யம்’ பட இயக்குநர் ஜீத்து ஜோசப்பின் பிஸ்னஸ் மேன் படத்தை தழுவி, இயக்குநர் ஆர். மாதேஷ்  இப்படத்தை இயக்கியுள்ளார். </p><p>மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் கண்டிப்பான பெண் அதிகாரிக்கும் (ஸ்ரேயா), அவருக்குக் கீழ் வேலை செய்யும் விமலுக்கும் இடையே நடக்கும் காதல், மோதல், மற்றும் நகைச்சுவையான சம்பவங்களை மையமாகக் கொண்டு படம் உருவாகி உள்ளது. </p><p>விமல், ஸ்ரேயாவுடன் இணைந்து சத்யன், பிரபு, கே.ஆர். விஜயா, ரேகா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அம்ரிஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கிடுகிடுவென உயர்ந்த பூக்களின் விலை </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vinayagar-chaturthi-flower-prices-soar</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vinayagar-chaturthi-flower-prices-soar#comments</comments><guid isPermaLink="false">484a4efd-89f8-4b69-8a00-6a99fba86ccd</guid><pubDate>Sun, 13 Sep 2026 12:10:16 +0000</pubDate><atom:updated>2026-09-13T12:10:16.317Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>பூக்கள் விலை உயர்வு,Vinayagar Chadurthi,பூஜை மலர்கள்,flower market,மலர் சந்தை,Rise in flower prices</media:keywords><media:content height="414" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/yihsl38x/images-7.jfif" width="738"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ flower price]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/yihsl38x/images-7.jfif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>விநாயகர் சதுர்த்தி</h2><p>நாளை <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-vinayagar-chaturthi-worhip">விநாயகர் சதுர்த்தி</a> கோலகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழாவில் பூஜைக்காக பயன்படுத்தப்படும் மலர்களின் விலை சந்தையில் கணிசமான உய்ர்ந்துள்ளது.</p><h2>விலை உயர்வு </h2><p>முகூர்த்த நாள் மற்றும் விநாயகர் சதுர்த்தி என்பதால் உள்ளூர் சந்தை மற்றும் மாவட்டத்தின் முக்கிய சந்தைகளில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.</p><p>குறிப்பாக,  <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/selvaakkum-mikka-napargal-meethulla-oozhal-vazhakkugalai-visaarippathu-kadinam-chennai-uyarneethimandram-karuthu">சென்னை</a> கோயம்பேடு, திண்டுக்கல், மதுரை, தோவாளை உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கிய சந்தைகளில் பூக்களின் விலைு கணிசமாக உய்ர்ந்துள்ளது. </p><h2>நிர்ணயம்</h2><p>கடந்த வாரம் கிலோ ரூ.500க்கு  விற்பனையான மல்லிகை பூ இன்று ரூ.2000க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், மாலை கட்ட பயன்படும் சம்பங்கி, செவ்வந்தி, ரோஸ், அரளி, செண்டுமல்லி  உள்லிட்ட பூக்களின் விலையும்  கடுமையாக உயர்துள்ளது. மேலும், சாமந்தி ரூ.250-க்கும், முல்லை ரூ.900-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>பலுசிஸ்தான் நெடுஞ்சாலையில் ராணுவ வானங்கள் செல்லும்போது குண்டுவெடிப்பு.. 23 வீரர்கள் பலி </title><link>https://www.maalaimalar.com/news/world/bomb-blast-hits-army-vehicles-on-balochistan-highway-23-soldiers-killed</link><comments>https://www.maalaimalar.com/news/world/bomb-blast-hits-army-vehicles-on-balochistan-highway-23-soldiers-killed#comments</comments><guid isPermaLink="false">60b2fcbd-e278-4b70-9fc9-a6939885f675</guid><pubDate>Sun, 13 Sep 2026 11:43:05 +0000</pubDate><atom:updated>2026-09-13T11:43:05.439Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>குண்டுவெடிப்பு,பாகிஸ்தான்,Pakistan,bomb blast,Balochistan,பலுசிஸ்தான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/lrorv8io/tn-16.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பலுசிஸ்தான் நெடுஞ்சாலையில் குண்டுவெடிப்பு]]></media:title><media:description type="html"><![CDATA[ பலுசிஸ்தான் நெடுஞ்சாலையில் குண்டுவெடிப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/lrorv8io/tn-16.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்புப் படைகள் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.</p> <p>பாகிஸ்தானின் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">பலுசிஸ்தான் </a>மாகாணத்தின் லாஸ்பேலா மாவட்டத்தில் கஷாரி பகுதியில் உள்ள என்25 தேசிய நெடுஞ்சாலை வழியாக பாகிஸ்தானிய எல்லைப் படையை  சேர்ந்த சுமார் 15 கவச வாகனங்கள் வழக்கமான ரோந்துக்காக சென்று கொண்டிருந்தது.</p> <p>வாகான அணிவகுப்பு செல்லும் வழியின் முன்பாக ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வாகனங்கள் நெருங்கியதும் வெடித்துச் சிதறியது. இதில் அனுவகுப்பில் முதலில் சென்றுகொண்டிருந்த வாகனம் தீப்பற்றியது.</p><p>தாக்குதலுக்கு உள்ளான வாகனத்தில் இருந்த வீரர்கள் பலத்த காயமடைந்தனர்.</p><p>ஆரம்பகட்ட தகவல்களின்படி, இந்தத் தாக்குதலில் 23க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று முதற்கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன.</p><p>காயமடைந்த வீரர்கள் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் அருகிலுள்ள பேலா இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என சொல்லப்படுகிறது.</p> <h2>பலூச் விடுதலை ராணுவம்</h2><p>இந்த தாக்குதலுக்குப் பின்னால் பிரிவினைவாத அமைப்பான பலூச் விடுதலை ராணுவம் இருப்பதாக நம்பப்படுகிறது.</p><p>கடந்த சில மாதங்களாக பலூச் விடுதலை ராணுவ அமைப்பு, பாகிஸ்தான் ராணுவ கட்டமைப்புகள், வாகன தொடரணிகள் மீது தாக்குதல் நடத்தும் போக்கு அதிகரித்து வருகிறது.</p><p>முன்னதாக <a href="https://www.google.com/search?q=%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+maalaimalar&amp;oq=%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+maalaimalar&amp;gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOdIBCDQyMjdqMGo3qAIIsAIB8QXsnD_A5Tyosw&amp;sourceid=chrome&amp;source=chrome.ob&amp;ie=UTF-8">இந்த மாத தொடக்கத்திலும்</a> பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனங்கள் மீது நடத்தப்பட்ட இரு வேறு தாக்குதல்களில் 25 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். </p> <h2>நெடுஞ்சாலை நெருக்கடி</h2><p>தாக்குதல் நடைபெற்ற என் 25 தேசிய நெடுஞ்சாலையானது, பலுசிஸ்தான் மாகாணத்தின் பொருளாதார மற்றும் ராணுவ உயிர்நாடியாகக் கருதப்படுகிறது.</p><p>இந்த நெடுஞ்சாலை, நாட்டின் மிகப்பெரிய தொழில் மையமான கராச்சியை, பலுசிஸ்தானின் தலைநகரான குவெட்டாவுடன் நேரடியாக இணைக்கிறது.</p> <p>லாஸ்பெலோ பகுதி கராச்சி எல்லைக்கு மிக அருகில் உள்ளது. மேலும் இந்தச் சாலை கடலோரப் பகுதிகளையும் மேற்கு பலுசிஸ்தானையும் துறைமுகத்துடன் இணைப்பதால், இங்கு அதிக அளவில் ராணுவப் போக்குவரத்து உள்ளது.</p><p>தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்பு காரணங்களுக்காக முழு தேசிய நெடுஞ்சாலையும் உடனடியாக மூடப்பட்டதுடன், சுற்றியுள்ள மலைப்பகுதிகள் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கையும் தொடங்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>TIFF திரைப்பட விழாவில்  திரையிடப்பட்ட கார்த்திக் சுப்பராஜின் &apos;டோரதி&apos;!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/karthik-subbaraj-dorothy-world-premiere-tiff</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/karthik-subbaraj-dorothy-world-premiere-tiff#comments</comments><guid isPermaLink="false">ea5b0402-91b6-41de-9e5f-28800afdbc98</guid><pubDate>Sun, 13 Sep 2026 11:37:19 +0000</pubDate><atom:updated>2026-09-13T11:37:19.655Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Karthik Subbaraj,கார்த்திக் சுப்பாராஜ்,இளையராஜா,டோரதி,Dorothy</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/616gjp1z/WhatsApp-Image-2026-09-12-at-6.15.16-PM.jpeg" width="1600"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TIFF திரைப்பட விழாவில்  திரையிடப்பட்ட கார்த்திக் சுப்பராஜின் 'டோரதி'!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/616gjp1z/WhatsApp-Image-2026-09-12-at-6.15.16-PM.jpeg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>டோரதி</h2><p>கார்த்திக சுப்பராஜ்  இயக்கத்தில் உருவாகியுள்ள 10வது திரைப்படம்  ‘டோரதி’.  இத்திரைப்படத்தில்  சனந்த், ரிஷிகாந்த் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். </p><p>ஜோதி தேஷ்பாண்டே, குணீத் மோங்கா கபூர் மற்றும் அச்சின் ஜெயின் ஆகியோர் இணைந்து தம்மம் ஃபிலிம்ஸ் மற்றும் சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் சார்பில் படத்தை தயாரித்துள்ளனர். </p><h2>டொராண்டோ</h2><p>இத்திரைப்படம் நேற்று (செப்.11) டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் சென்டர்பீஸ் பிரிவில் திரையிடப்பட்டு, வாழ்த்துகளைப் பெற்றுள்ளது.</p><p>இதன் மூலம், சமகாலத் தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜின் படைப்பு சர்வதேச அரங்கில் கவனம் பெற்றுள்ளது.</p><p>பொதுவாக 'சென்டர் பீஸ்' என்பது விழா இடைப்பகுதியில் திரையிடப்படும் மிக முக்கியமான மற்றும் கௌரவமிக்க திரைப்படத்தைக் குறிக்கும், அந்த வகையில் டோரத்தி திரைப்படம் அந்த சிறப்பை பெற்றுள்ளது.</p><h2>பங்கேற்பு </h2><p>டொராண்டோவில் உள்ள ஸ்காட்டியாபேங்க் திரையரங்கில் நடைபெற்ற வெளியீட்டில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுடன் நடிகர்கள் கீர்த்தி சுரேஷ், சனந்த் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர்கள் குணீத் மோங்கா கபூர் மற்றும் அச்சின் ஜெயினும் நிகழ்வில் பங்கேற்றனர்.</p><h2>இது குறித்து இயக்குநர் கூறியதாவது; </h2><p>டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் உலகளவில் முதல் முறையாகத்<sup> </sup>திரையிடப்படுவது எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். நான் சொல்ல விரும்பிய கதையின் உண்மைத்தன்மையை அப்படியே உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு செல்லும் வாய்ப்பை இது கொடுத்துள்ளது. </p><p>மேலும், இளையராஜா சாரின் <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/raja-is-raja-background-score-from-the-movie-dorothy-released">இசை</a> இந்தப் பயணத்துக்குத் துணையாக இருப்பது இந்த திரைப்படத்திற்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளது.” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.</p><h2>இசை </h2><p>டோரதி திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படம் இளையராஜா இசையமைக்கும் 1,540வது படமாகும். </p><p>ஏற்கனவே படத்தின் ‘கல்யாண விருந்து’ மற்றும் ‘முத்துமணி’ ஆகிய பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. படம் செப்.25ம் தேதி வெளியாக உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் &quot;மோதகம் கொழுக்கட்டை&quot; </title><link>https://www.maalaimalar.com/health/healthyrecipes/vinayagar-chaturthi-special-modhagam-kozhukattai</link><comments>https://www.maalaimalar.com/health/healthyrecipes/vinayagar-chaturthi-special-modhagam-kozhukattai#comments</comments><guid isPermaLink="false">43f6342b-9acc-4d81-aef4-3f6d7b301866</guid><pubDate>Sun, 13 Sep 2026 11:20:58 +0000</pubDate><atom:updated>2026-09-13T11:20:58.283Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விநாயகர் சதுர்த்தி,கொழுக்கட்டை,Vinayagar Chadurthi,Kozhukattai,மோதகம் கொழுக்கட்டை,Modhagam kozhukattai</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/jt3xvp61/kozhukattai.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kozhukattai]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/jt3xvp61/kozhukattai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சமையல் (Cooking Recepies)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சுவையான மோதக கொழுக்கட்டை செய்யும் முறை குறித்து  பார்க்கலாம்.</p><p>விநாயகர் சதுர்த்தி என்றாலே உடனே நம் நினைவுக்கு வருவது மோதகம் கொழுக்கட்டை தான். வெளியே தூய வெள்ளை நிறத்தில் லேசான உவர்ப்புச் சுவையுடன், உள்ளே பொன்னிறத்தில் நாவை ஊற வைக்கும் பூரணத்தை வைத்து செய்யப்படும் மோதக கொழுக்கட்டையிலும் ஒரு தத்துவம் இருக்கிறது.</p><p>அதாவது கொழுக்கட்டையின் மேலே இருக்கும் மாவுப் பொருள் தான் அண்டம். இனிப்பான பூரணம் தான் பிரம்மம். உலக வாழ்க்கை பற்றற்று கடந்து சென்றால் இனிப்பான கடவுளை அடையலாம் என்ற தத்துவத்தை விளக்குவதற்காக இந்த கொழுக்கட்டை விநாயகர் சதுர்த்தியில் வைக்கப்படுகிறது.</p><p>அந்தவகையில் சுவையான மோதக கொழுக்கட்டை எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.</p><h2>தேவையான பொருட்கள்:</h2><p>பச்சரிசி – 200 கிராம்,</p><p>புழுங்கல் அரிசி – 200 கிராம்,</p><p>வெல்லம் – 100 கிராம்,</p><p>ஏலக்காய் – 3 எண்ணம்,</p><p>தேங்காய் – ½ மூடி,</p><p>உப்பு – ¼ டீஸ்பூன்.</p><h2>செய்முறை:</h2><p>முதலில் பச்சரிசி, புழுங்கல் அரிசி இரண்டையும் நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். பின் தண்ணீரை வடித்துவிட்டு ஒரு உலர்ந்த துணியில் போடவும்.</p><p>10 நிமிடங்கள் கழித்து எடுத்து மிக்சியில் நன்றாக இடித்துக் கொள்ள வேண்டும். பின் அடிகனமான பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து வறுத்தெடுக்கவும். மாவானது ஈரப்பதம் நீங்கி உலர்ந்தவுடன் வேறு ஒரு பாத்திரத்தில் கொட்டி ஆற விடவும். பின்னர் வறுத்த மாவினை சல்லடையில் போட்டு சலிக்கவும். இப்போது கொழுக்கட்டை தயாரிக்க மாவு தயார்.</p><p>பின்னர் தேங்காயை துருவி, வெல்லத்தை பொடியாக தட்டிக் கொள்ளவும். பாசிப்பயிற்றை வேகவைத்து ஏலக்காயை தூளாக்கிக் கொள்ளவும். தேங்காய் துருவல், வெல்லம், மசித்த பாசிப்பயிறு, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் கொட்டி ஒருசேர கலக்கவும். இப்போது பூரணக் கலவை தயார்.</p><p>இப்போது கொழுக்கட்டை மாவில் உப்பினைக் கலந்து சூடான தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறி, மாவினை சப்பாத்தி மாவு பதத்திற்கு திரட்ட வேண்டும். </p><p>அதில் இருந்து எலுமிச்சை அளவு மாவினை எடுத்து உருட்டி கிண்ண வடிவில் செய்யவும். அதில் சிறிதளவு பூரணக் கலவையை இட்டு மூடி உருண்டையாக திரட்டவும். அப்படி இல்லையென்றால் கொழுக்கட்டை அச்சில் மாவு மற்றும் பூரணத்தை வைத்து எடுக்கவும்.</p><p>கொழுக்கட்டைகளை திரட்டும்போது பூரணக் கலவை வெளியே வந்துவிடாமல் பார்த்துக் கொள்ளவும். இவ்வாறாக எல்லா மாவினையும் கொழுக்கட்டைகளாக தயார் செய்யவும். </p><p>பின்னர் குக்கர் அல்லது இட்லி பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சூடானவுடன் அதில் கொழுகட்டைகளை போட்டு ஆவி வர நன்கு வேக வைக்க வேண்டும். சுவையான விநாயகர் சதுர்த்தி மோதக கொழுக்கட்டை தயார்.</p>]]></content:encoded></item><item><title>&quot;சிவாஜி அண்ணன் என்னை எப்போதும் &apos;ராசா&apos; என்றுதான் கூப்பிடுவார்&quot; - &apos;லெனின் பாண்டியன்&apos; பட விழாவில் இசைஞானி இளையராஜா நெகிழ்ச்சி!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ilaiyaraja-emotional-at-lenin-pandian-audio-launch</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ilaiyaraja-emotional-at-lenin-pandian-audio-launch#comments</comments><guid isPermaLink="false">0622a6d1-8c2d-4cf4-97ce-86f8695770d1</guid><pubDate>Sun, 13 Sep 2026 11:10:00 +0000</pubDate><atom:updated>2026-09-13T11:10:00.147Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>Sivaji Ganesan,Ilayaraja,இளையராஜா,Lenin Pandiyan,லெனின் பாண்டியன்,Darshan Ganesan</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/huezzrcz/Lenin-Pandiyan" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Lenin Pandiyan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/huezzrcz/Lenin-Pandiyan?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இயக்குநர் டி.டி.பாலச்சந்திரன் இயக்கத்தில், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் '<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D">லெனின் பாண்டியன்</a>'. இப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE">இசைஞானி இளையராஜா</a> இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வருகிற செப்டம்பர் 25-ந் தேதி உலகமெங்கும் திரைக்கு வர இருக்கிறது.</p><p>இதைத் தொடர்ந்து, 'லெனின் பாண்டியன்' திரைப்படத்தின் முன்னோட்ட விழா சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு இசையமைப்பாளர் இளையராஜா நெகிழ்ச்சியான பதிவை கூறியிருந்தார்.</p><h2><strong>"ராசா நீயுமா லேட்டு?" - சிவாஜி கணேசனுடனான சுவாரசிய நினைவு</strong></h2><p>"நான் எப்பொழுதும் காலை 7 மணிக்கு என்னுடைய ஸ்டுடியோ அறையில் இருப்பேன். ஆனால், ஒரு நாள் எதிர்பாராதவிதமாக 5 நிமிடங்கள் தாமதமாக, அதாவது 7.05 மணிக்குச் சென்றேன். </p><p>அப்போது, <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF">சிவாஜி</a> அண்ணன் பக்கத்து அறையில் டப்பிங் பணிக்காக வந்திருந்தார். அவர் எப்பொழுதுமே என்னை 'ராஜா' என்று கூப்பிட மாட்டார். மிகவும் அன்போடு <strong>'ராசா'</strong> என்றுதான் கூப்பிடுவார்.</p><p>அன்று நான் தாமதமாக வந்ததைப் பார்த்த அவர், 'ராசா நீயுமா லேட்டு?' என்று ஆச்சரியமாகக் கேட்டார். அதற்கு நான் அவரிடம், 'அண்ணே, நான் 7 மணிக்கு வருபவன், 5 நிமிடம் தாமதமாகிவிட்டது. </p><p>ஆனால் நீங்கள் 25 வருடங்களுக்கு முன்னதாகவே திரைத்துறைக்கு வந்துவிட்டு, இப்போது என்னை லேட் என்று சொல்கிறீர்களா?' என்று பதிலளித்தேன்," என சிவாஜி கணேசனுடனான தனது பழைய நினைவை மேடையில் பகிர்ந்துகொண்டார்.</p><h2><strong>சிவாஜியின் பெயரை தர்ஷன் கணேசன் காப்பாற்றுவார்</strong></h2><p>தொடர்ந்து பேசிய இளையராஜா, இப்படத்தின் மூலம் அறிமுகமாகும் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசனை மனதாரப் பாராட்டினார். "தர்ஷன் கணேசன் இந்தப் படத்தில் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். </p><p>நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பெயரைத் திரையுலகில் காப்பாற்றும் அளவிற்கு அவருடைய நடிப்பு அமைந்துள்ளது. அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்," என்று கூறினார்.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/Y33WHR-QXac"></iframe></figure><h2>தம்பி கங்கை அமரனை கலாய்த்த 'ராஜா'</h2><p>மேலும், இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள தனது தம்பி கங்கை அமரன் குறித்தும் இளையராஜா கலகலப்பாகப் பேசினார். "என் தம்பி கங்கை அமரன் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். </p><p>அவர் நிஜ வாழ்க்கையில் என்னிடமே எப்போதும் நடித்துக் கொண்டிருப்பார். அவர் இந்தப் படத்திலும் மிக நன்றாக நடித்திருக்கிறார்," என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டுத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.</p><h2><strong>நட்சத்திர பட்டாளம்</strong></h2><p>லெனின் பாண்டியன் திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் தர்சன் கணேசன் மற்றும் அறிமுக கதை நாயகியாக ஷ்ரிதா ராவ் இவர்களுடன் பிரபல இயக்குநர் மற்றும் நடிகர் கங்கை அமரன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BE">நடிகை ரோஜா</a> மற்றும் பிக்பாஸ் அர்ச்சனை உள்ளிட்ட முன்னணி நட்சத்திரப் பட்டாளம் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>வெற்றி, தோல்விகளுக்கு அப்பாற்பட்டு மக்களுடன் நிற்பது திமுக..!- உதயநிதி ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-stalin-says-dmk-stands-with-people-beyond-polls</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-stalin-says-dmk-stands-with-people-beyond-polls#comments</comments><guid isPermaLink="false">5d3bc319-fcbb-4f31-b12d-c5229e636388</guid><pubDate>Sun, 13 Sep 2026 10:52:27 +0000</pubDate><atom:updated>2026-09-13T10:52:27.387Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>udhayanithi stalin,திமுக,உதயநிதி ஸ்டாலின்,தவெக,tvk</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/ji0kn7rt/udhay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Udhayanithi stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/ji0kn7rt/udhay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேர்தல் வெற்றி, தோல்விகளுக்கு அப்பாற்பட்டு மக்களுடன் நிற்கும் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்று எதிர்க்கட்சி தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-indictment-tvk-govt-5" rel="nofollow">உதயநிதி ஸ்டாலின்</a> தெரிவித்துள்ளார்.</p><p>திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-</p><p>காதல் திருமணத்தில் நிறைய கஷ்டங்கள், சவால்கள் இருக்கும். </p><p>வரலாற்றிலேயே முதன்முறையாக டம்மி முதலமைச்சரை பார்க்கிறேன்.</p><p>தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் மின்வெட்டு ஏற்படுகிறது, விலைவாசி உயர்ந்து கொண்டே இருக்கிறது.</p><p>இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பொது மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.</p><p>கடந்த சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.</p><p>பொது மக்களின் பிரச்சனைகள் குறித்து கேள்வி கேட்டால் முதலமைச்சரால் பதில் சொல்ல முடியவில்லை.</p><p>தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்து 4 மாதங்களாகியும் எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>விநாயகர் சதுர்த்தி: கோயம்பேடு மார்க்கெட்டில் களைகட்டிய விற்பனை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/koyambedu-market-vinayagar-chaturthi-pooja-items-sales</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/koyambedu-market-vinayagar-chaturthi-pooja-items-sales#comments</comments><guid isPermaLink="false">4bbb7e4d-34f0-4c59-bba9-583b73772de9</guid><pubDate>Sun, 13 Sep 2026 10:20:25 +0000</pubDate><atom:updated>2026-09-13T10:20:25.657Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>கோயம்பேடு மார்க்கெட்,விநாயகர் சதுர்த்தி,sale,விற்பனை,vinayakar chadhurthi,Koyembedu market</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/90ie3cts/market.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Koyembedu Market]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/90ie3cts/market.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விநாயகர் சதுர்த்தி, பண்டிகை நாளை 14-ந் தேதி கொடுக்கிறது. இதையொட்டி பொது மக்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலை வைத்து பூஜை செய்து வழிபடுவது வழக்கம் அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் முக்கிய சாலை சந்திப்புகளில் பல்வேறு வகையான தோற்றம் கொண்ட விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது.</p><p>பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விநாயகர் சிலை, குடை, மாவிலை, தோரணம், எருக்கம் பூ மாலை, கரும்பு, வாழை கன்று, அவல், பொரி, ஆப்பிள், சாத்துக்குடி, பேரிக்காய் விளாங்காய், வாழை இலை, தேங்காய், வாழைத்தார் உள்ளிட்ட பூஜை பொருட்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்து உள்ளன.</p><p>கடலூர், விழுப்புரம் மற்றும் சேலம் ஆகிய மாவட்டத்தில் இருந்து 50-க்கும் லாரிகளில் கரும்பு கட்டுகளும், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் இருந்து 15-க்கும் மேற்பட்ட லாரிகளில் விளாங்காய், ஆந்திரா மற்றும் கடலூர் ஆகிய பகுதிகளில் இருந்து 100 வாகனங்களில் சோளம்.</p> <p>திருவண்ணாமலை, விழுப்புரம், மற்றும் ஆந்திராவில் இருந்து 50 வாகனங்களில் கரும்பு கட்டுகளும், கொடைக் கானல், ஏற்காடு, தேனி ஆகிய பகுதிகளில் இருந்து 20-க்கும் மேற்பட்ட லாரிகளில் பேரிக்காய், விழுப்புரம் மற்றும் கர்நாடகாவில் இருந்து கொய்யா 20-க்கும் மேற்பட்ட லாரிகளில் பழங்கள்.</p> <p>கடலூர் மற்றும் ஆந்திராவில் இருந்து ஏறத்தாழ 30 லாரிகளில் மஞ்சள் வாழைத்தார்கள், ஆந்திரா, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து 30-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வாழை கன்றுகள், கர்நாடக மாநிலம் மற்றும் பட்டுக்கோட்டை பொள்ளாச்சி, பேராவூரணி ஆகிய பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் தேங்காய் மற்றும் ஆந்திராவில் இருந்து 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் சாத்துக்குடி பழங்கள்.</p><p>திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 30-க்கும் மேற்பட்ட அவல், பொரி, கடலை வியாபாரிகளும் கோயம்பேடு மார்க்கெட்டில் குவிந்துள்ளனர்.</p><p>அதிகாலையில் காய்கறி பழங்கள் பூ மற்றும் பூஜை பொருட்கள் வாங்கி செல்ல ஒரே நேரத்தில் குவிந்த சில்லறை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டத்தால் பூஜை பொருட்களின் விற்பனை களை கட்டியது இதனால் கோயம்பேடு மார்க்கெட்டை ஒட்டியுள்ள “ஏ” மற்றும் “இ” சாலை, கோயம்பேடு- விருகம்பாக்கம் இணைப்பு சாலை, மதுரவாயல் -பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அருண் தலைமையில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு நெரிசலை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.</p><p>வியாபாரி ஒருவர் கூறும்போது:-</p><p>அங்காடி நிர்வாகம் சார்பில் முறையான ஏற்பாடுகள் செய்யவில்லை மேலும் ஒலிபெருக்கி மூலம் கரும்பு உள்ளிட்ட பூஜை பொருட்கள் எங்கெங்கு விற்கப்படுகிறது என்பது பலருக்கும் தெரியவில்லை இதனால் கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தை சுற்றி உள்ள சாலைகளில் ஆங்காங்கே ஏராளமான வாகனங்களில் கரும்பு, சோளம், கம்பு வாழை கன்று உள்ளிட்ட பொருட்கள் அதிகளவில் தேக்கமடைந்த நிலையில் உள்ளது இதனால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும் என்றார்.</p><p>கோயம்பேடு சந்தையில் பூஜை பொருட்கள், பழம் மற்றும் பூக்கள் விற்பனை விலை விபரம் வருமாறு :-</p><p>விநாயகர் சிலை 1அடி-ரூ.250முதல் ரூ350வரை, குடை-ரூ.25, எருக்கம் பூ மாலை ஒன்று-ரூ.50, அருகம்புல் கட்டு ஒன்று-ரூ.40, மாவிலை ஒரு கொத்து-ரூ.20, தோரணம் 4 எண்ணிக்கை- ரூ.30, சோளம் ஒரு மூட்டை (90எண்ணிக்கை) - ரூ.600.</p><p>வெற்றிலை ஒரு கவுளி (80எண்ணிக்கை) -ரூ.80, வாழை இலை ஒன்று-ரூ.15, பூசணிக்காய் -ரூ. 100வரை, தேங்காய் ஒன்று -ரூ.50, மஞ்சள் வாழைத்தார் ஒன்று -ரூ.600வரை, வாழை கன்று ஒரு கட்டு (10 எண்ணிக்கை) ரூ.150, கம்பு கட்டு ஒன்று (50எண்ணிக்கை) -ரூ.150, கரும்பு ஒரு கட்டு (20 எண்ணிக்கை) - ரூ.300முதல் -ரூ.500வரை.</p><p>ஆப்பிள் 1கிலோ ரூ.150, சாத்துக்குடி ஒரு கிலோ-ரூ.70, கொய்யா 1கிலோ- ரூ.150, மாதுளை 1கிலோ -ரூ.200வரை, விளாங்காய் 1கிலோ- ரூ.100, பேரிக்காய் 1கிலோ ரூ.150, களாக்காய் ஒரு படி -ரூ.50, கருப்பங்காய் ஒரு படி -ரூ.50.</p><p>நாவல்பழம் ஒரு படி -ரூ.800, அவல் சிறிய பாக்கெட்-ரூ.10, பொரி 1படி -ரூ.30, கடலை சிறிய பாக்கெட்-ரூ.10, நாட்டு சர்க்கரை சிறிய பாக்கெட்-ரூ.10, சாமந்தி பூ 1கிலோ-ரூ.350வரை, பன்னீர் ரோஜா கிலோ- ரூ.250வரை, சாக்லேட் ரோஜா கிலோ- ரூ.300வரை, மல்லி 1கிலோ- ரூ.1500, முல்லை 1கிலோ- ரூ.900, கனகாம்பரம் 1கிலோ- ரூ.1300, அரளி 1கிலோ- ரூ.400, சம்பங்கி 1கிலோ- ரூ.600.</p>]]></content:encoded></item><item><title>தற்காலிக பணி நியமனத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் 18-ந்தேதி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்!  </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/temporary-appointments-protest-tamil-nadu-nurses-september-18</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/temporary-appointments-protest-tamil-nadu-nurses-september-18#comments</comments><guid isPermaLink="false">c2c2f316-3de3-420f-8e88-d9acf99fe2a3</guid><pubDate>Sun, 13 Sep 2026 10:12:52 +0000</pubDate><atom:updated>2026-09-13T10:12:52.237Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>nurses protest,TN Health Department,மருத்துவத்துறை,செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்,Against Contract Jobs,Permanent Jobs For Nurses,Nurses Agitation,தமிழ்நாடு செவிலியர்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/kzqp4i47/Nurses-Protest" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nurses Protest ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/kzqp4i47/Nurses-Protest?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் காலிப் பணியிடங்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அரசு எடுத்துள்ள முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 18-ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">செவிலியர்கள் </a>மேம்பாட்டு சங்கம் அறிவித்துள்ளது.</p><p>இது தொடர்பாக தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்க மாநிலத் தலைவர் சசிகலா, பொதுச் செயலாளர் சுபின், பொருளாளர் ஹேமச்சந்திரன் ஆகியோர் அறிக்கையை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.</p><h2>தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் அறிக்கை:</h2><p>மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் கடந்த காலங்களில் தேர்வு செய்யப்பட்ட செவிலியர்கள் பணியிடங்களில் தற்போது காலியாக உள்ள 4,724 பணியிடங்களை மாவட்ட நிர்வாகம் மூலம் 11 மாத தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் அரசு நியமிக்க உள்ளது. மாத ஊதியம் ரூ.21 ஆயிரம் இவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88">அரசு மருத்துவமனை</a>களில் கடுமையான செவிலியர் தட்டுப்பாடு ஒரு புறம் இருக்க, சுமார் 4.75 லட்சம் பதிவு செய்யப்பட்ட செவிலியர்கள் தமிழகத்தில் இருக்கும் நிலையில் அவர்களில் பெரும்பாலானோர் அரசு வேலைக்காக காத்திருக்கிறார்கள்.</p><p>இந்த தற்காலிக முறையில் பணி அமர்த்தப்படும் செவிலியர்களுக்கு வரும் காலங்களில் பணி நிரந்தரம் பெறும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. </p><p>இந்த தற்காலிக செவிலியர்கள் பொது சுகாதார துறையின் கீழ் கிராமப் புறங்களில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி அமர்த்தப்படும் நிலையில், கிராமப்புறங்களில் வழங்கப்படும் மருத்துவ சேவையின் தரம் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது.</p><p>மருத்துவத் துறையின் ஊழியர்கள் நிரந்தர தன்மையோடு இருந்தால் மட்டுமே அந்த துறை தொடர்ந்து நிரந்தர தன்மையுடன் இயங்கும் எனவே அரசு, பணியமர்த்தப்படும் ஊழியர்களின் நலனையும் பொது மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு இந்த முடிவை கைவிட வேண்டும். </p><p>அனைத்து பணியாளர்களையும் நிரந்தர தன்மையுடன் பணியமர்த்த வேண்டும். தற்காலிக பணி நிரந்தர ஆணையை திரும்பப் பெறக் கோரி மாவட்ட தலைநகரங்களில் வருகிற 18-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடை பெறுகிறது.</p><p>இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தட்டாஞ்சாவடியிலும் போட்டி - இடைத்தேர்தல் வேட்பாளர்களை அறிவித்தது நாதக!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/contest-in-thattanchavady-too-ntk-announces-by-election-candidates</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/contest-in-thattanchavady-too-ntk-announces-by-election-candidates#comments</comments><guid isPermaLink="false">96399577-bba9-4927-b248-cda564329b8c</guid><pubDate>Sun, 13 Sep 2026 10:11:11 +0000</pubDate><atom:updated>2026-09-13T10:11:11.815Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Seeman,NTK,நாதக,by election,சீமான்,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/knokh2uh/New-Project-2026-09-13T153900.270.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கோப்புப் படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தட்டாஞ்சாவடியிலும் போட்டி - இடைத்தேர்தல் வேட்பாளர்களை அறிவித்தது நாதக!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/knokh2uh/New-Project-2026-09-13T153900.270.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் காலியாக உள்ள 6 தொகுதிகளுக்கு அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் அறிவித்துள்ளது. </p><p>இதில் அசாமின் ஒரு நாடாளுமன்ற தொகுதியும், மேற்கு வங்கம், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின் 5 சட்டமன்ற தொகுதிகளும் அடங்கும். </p><h2>தமிழ்நாட்டில் 2 தொகுதிகள்</h2><p>அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு தமிழ்நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இடைத்தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து தேர்தல் பணிகள் தொடங்கியுள்ளன. தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. </p><h2>3 தொகுதிகளில் போட்டி</h2><p>அந்தவகையில் இத்தேர்தலில் களம் காணும் நாம் தமிழர் கட்சி, மதுராந்தகம், தாராபுரம் மற்றும் புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.</p><p>அதன்படி, தாராபுரத்தில் கார்த்திகாவும், மதுராந்தகத்தில் ஜானகிராமன், தட்டாஞ்சாவடியில் கார்த்திக் குமாரி ஆகியோர் போட்டியிடுகின்றனர். </p><h2>5 முனைப் போட்டி </h2><p>இடைத்தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் 5 முனை போட்டி நிலவுகிறது. ஆளுங்கட்சியான தவெக, பிரதான எதிர்க்கட்சியான திமுக, அதிமுக, நாதக, <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/left-parties-to-contest-by-election-independently-cpi-to-field-candidate-in-dharapuram">இடதுசாரிகள்</a> என ஐந்துமுனை போட்டி நிலவுகிறது. </p><p>இடதுசாரிகள் இன்று தாங்கள் தேர்தலை எதிர்கொள்ள உள்ளதாக அறிவித்த நிலையில், நாளை மறுநாள் (செப்.15) வேட்பாளர்களை அறிவிக்கின்றனர். </p>]]></content:encoded></item><item><title>ஹார்முஸ் ஜலசந்தி அருகே ஈரான் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் - ஒருவர் பலி - 3 பேர் காயம் </title><link>https://www.maalaimalar.com/news/world/missile-attack-on-iranian-ship-near-strait-of-hormuz-one-killed-three-injured</link><comments>https://www.maalaimalar.com/news/world/missile-attack-on-iranian-ship-near-strait-of-hormuz-one-killed-three-injured#comments</comments><guid isPermaLink="false">d08a4657-3ca0-4434-95d5-8c110e739bfb</guid><pubDate>Sun, 13 Sep 2026 10:09:02 +0000</pubDate><atom:updated>2026-09-13T10:09:02.648Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Yemen,ஏமன்,Iran War,ஈரான் போர்,ஹார்முஸ் ஜலசந்தி,Strait of Hormuz</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/iuw9t04i/tn-15.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஹார்முஸ் ஜலசந்தி]]></media:title><media:description type="html"><![CDATA[ ஹார்முஸ் ஜலசந்தி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/iuw9t04i/tn-15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பதற்றம் மிகுந்த ஹார்முஸ் ஜலசந்தியில் இன்று காலை ஈரான் வர்த்தக கப்பல் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மூவர் காயம் அடைந்தனர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/topic/iran-war">அமெரிக்கா - ஈரான்</a> இடையே <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">ஹார்முஸ் ஜலசந்தி </a>கடல்வழிப்பாதையில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது. </p><p>கடந்த சில வாரங்களாக அப்பகுதியில் அமெரிக்க கடற்படை தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. </p><p>மேலும் ஹார்முஸ் வழியே செல்லும் கப்பல்கள் கடும் அச்சறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றன. </p> <p>இந்த சூழலில், "ஈரான் வர்த்தக கப்பல் ஒன்று இன்று காலை 5 மணியளவில் ஹென்கம் மற்றும் கேஷ்ம் தீவுகளின் கரையையொட்டிய பகுதியில் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. ஒரு நபர் கொல்லப்பட்டார். மூன்று பேர் காயமடைந்தனர்" என கேஷ்ம் நகர ஆளுநர் அமீர் தேமௌரி தெரிவித்ததாக ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.</p><p>ஆனால் இந்த தாக்குதல் எங்கிருந்து யாரால் நடத்தப்பட்டது என்பதை குறிப்பிடவில்லை. நேற்று நள்ளிரவில் கேஷ்ம் பகுதியை சுற்றி பல வெடிப்புகள் பதிவாகி உள்ளது. கேஷ்ம், ஹார்முஸ் பகுதியில் உள்ள மிகப்பெரிய தீவு நகரமாகும்.</p>  <p>முன்னதாக ஈரான் - மத்திய கிழக்கு நாடுகளின் பிரதிநிதிகள் ஓமனில் ஒன்றுகூடி ஹார்முஸ் பிரச்சனைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்திய ஒரு நாளுக்கு பின் இந்த தாக்குதல் வந்துள்ளது. ஹார்முஸ் முடக்கத்தால் சர்வதேச நாடுகளுக்கு எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய கிழக்கு நாடுகள் திணறி வரும் சூழலில், ஹார்முஸ் பகுதியில் போக்குவரத்தை சீரமைக்க, தற்காலிகமான ஒரு பாதையை உருவாக்கும் முயற்சிகள் ஓமன் மத்தியஸ்தத்தில் ஈரான் மற்றும் பிற அரபு  நாடுகள் இடையே நடந்து வருகின்றன.</p> <h2>ஹார்முஸ் சிக்கல்</h2><p>மறுபுறம், ஹார்முஸை தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது. ஹார்முஸுக்கு தனது பெயரை சூட்டுவதும், ஹார்முஸில் பயணிக்க அமெரிக்காவுக்கு கட்டணம் செலுத்தும் முறையை கொண்டுவரப்போவதாக அறிவிப்பதும் என அதிபர் டிரம்ப் பல வழிகளில் அந்த பாதையை சொந்தமாக்கிக்கொள்ள முயற்சி எடுத்து வருகிறார்.</p><p>ஆனால் அமெரிக்கா எதிர்பார்த்ததை விட ஈரான் வலுவாக பதிலடி கொடுத்து வருவதால் 6 மாதங்களை கடந்து போர் நீடித்து வருகிறது. அதேநேரம் அமெரிக்க ராணுவம் கடும் பின்னடைவையும் இழப்புகளையும் இந்த போரில் சந்தித்துள்ளது. ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கக்கூடாது என்ற காரணத்திற்காக அமெரிக்கா தொடங்கிய இப்போரின் தற்போதைய பிரதான கவனமாக ஹார்முஸ் மாறியுள்ளது. </p> <p>இந்த ஜலசந்தியில் நடக்கும் மாற்றங்கள் இந்தியா உட்பட சர்வதேச நாடுகளின் எண்ணெய், எரிவாயு நலன்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்த மோதல் உற்று கவனிக்கப்பட்டு வருகிறது.</p><p>மறுபுறம், சவுதி அரேபிய ஆதரவுடன் இயங்கும் ஏமன் அரசு படைகளுடன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மோதலில் ஈடுபட்டு மத்திய கிழக்கில் ஹார்முஸுக்கு பிறகு அதிக முக்கியத்துவம் வாய்ந்த பாப் அல் மாண்டேப் ஜலசந்தியை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது நடந்தால் நிலைமை மேலும் மோசமாகும்.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் 4 இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க ஏற்பாடு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/arrangements-made-to-immerse-vinayagar-idols-at-four-locations-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/arrangements-made-to-immerse-vinayagar-idols-at-four-locations-in-chennai#comments</comments><guid isPermaLink="false">37690713-77e0-4e09-b385-32aaddd4a6f8</guid><pubDate>Sun, 13 Sep 2026 09:56:00 +0000</pubDate><atom:updated>2026-09-13T09:56:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,vinayagar,விநாயகர்,Vinayagar Chaturthi 2026,விநாயகர் சதுர்த்தி 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/xeljbesb/Vinayagarr.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/xeljbesb/Vinayagarr.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[  <p>சென்னையில் 4 இடங்களில் சிலைகளை கரைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.</p><p>சென்னையில் விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்கள் மற்றும் வழித்தடங்கள் சென்னை பெருநகர காவல் ஆணையரகத்திற்குட்பட்ட பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர், பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய 4 கடற்கரை இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p>சென்னையில் 17 வழித் தடங்கள் பிரத்யேகமாக வகைப்படுத்தப்பட்டு, அவ்வழியே விநாயகர் சிலைகளை கொண்டு சென்று சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்பட்டு அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.  சென்னை, நுங்கம்பாக்கம், சிந்தாதரிப்பேட்டை, எழும்பூர், புதுப்பேட்டை, பெரம்பூர், வியாசர்பாடி, ஆர்.கே.நகர், புளியந்தோப்பு, பட்டாளம், சவுகார்பேட்டை, அயனாவரம் ஆகிய இடங்களில் மற்றும் இதன் சுற்றுப்புற இடங்களில் உள்ள விநாயகர் சிலைகள் குறிப்பிட்ட வழித்தடங்கள் வழியாக ஊர்வலமாக சென்று, பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் கடலில் கரைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. </p><p>இதே போல, அடையாறு, திருவான்மியூர் மற்றும் சுற்றுப் புற பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள், நீலாங்கரை பல்கலை நகர் கடலிலும், வடசென்னை பகுதியான தங்கசாலை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம், தண்டையார்பேட்டை பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் காசிமேடு மீன்பிடி துறைமுகம் கடலிலும் கரைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>காதல் கதையில் துருவ் விக்ரம்... புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/dhruv-vikram-in-a-romantic-story-first-look-of-the-new-film-to-be-released-today</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/dhruv-vikram-in-a-romantic-story-first-look-of-the-new-film-to-be-released-today#comments</comments><guid isPermaLink="false">359e4bbd-20b8-4e23-8677-dc78dc3057ca</guid><pubDate>Sun, 13 Sep 2026 09:52:21 +0000</pubDate><atom:updated>2026-09-13T09:52:21.017Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Dhruv Vikram,துருவ் விக்ரம்,mythri movie makers,மைத்ரி மூவி மேக்கர்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/dlse8jh5/New-Project-2026-09-13T151324.661.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காதல் கதையில் துருவ் விக்ரம்... புதியப் பட அறிவிப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/dlse8jh5/New-Project-2026-09-13T151324.661.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் எழுத்து மற்றும் இயக்கத்தில் துருவ் விக்ரம் புதிய காதல் கதை ஒன்றில் நடிக்கிறார். </p><p>இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் எர்னேனி, ரவி சங்கர் ஆகியோர் தயாரிக்கின்றனர்.</p><p>படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாக உள்ளது.  </p><p>பைசன் படத்தின் வெற்றிக்குப் பிறகு துருவ் எந்தப் படத்திலும் இணையாமல் இருக்கிறார். இந்த நிலையில், இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. </p><p>பிரம்மன், ஆதித்யா வர்மா படங்களில் உதவி இயக்குநராக இருந்த கரண் அரவிந்த் குமார் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>டிரம்ப்பை விடுங்க.. நாங்க முடிச்சு தர்றோம்..  உக்ரைன் விஷயத்தில் கூடிவந்த இந்தியா, சீனா - ரஷியா சொல்வது என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/world/india-and-china-have-stepped-forward-to-mediate-an-end-to-the-ukraine-russia-war</link><comments>https://www.maalaimalar.com/news/world/india-and-china-have-stepped-forward-to-mediate-an-end-to-the-ukraine-russia-war#comments</comments><guid isPermaLink="false">a0a26889-6380-4e1b-b6a0-f8cdc676f137</guid><pubDate>Sun, 13 Sep 2026 09:38:11 +0000</pubDate><atom:updated>2026-09-13T09:38:11.784Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உக்ரைன் போர்,புதின்,பிரிக்ஸ் உச்சிமாநாடு,ரஷியா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/onfhc9ai/tn-14.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ புதின், மோடி, ஜி ஜின்பிங்    ]]></media:title><media:description type="html"><![CDATA[ புதின், மோடி, ஜி ஜின்பிங்    ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/onfhc9ai/tn-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உக்ரைன் - ரஷியா போர் முடிவுக்கு மத்தியஸ்தம் செய்ய இந்தியா, சீனா முன்வந்துள்ளது. </p><p>பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும்,<a href="https://www.maalaimalar.com/news/national/brics-summit-modi-warning-on-critical-minerals-in-front-of-xi"> பிரிக்ஸ் மாநாட்டின்</a> இடையே <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D">உக்ரைன் போரை</a> முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தராக இருக்க முன்வந்ததாக ரஷியா தெரிவித்துள்ளது. </p><p>ரஷிய அதிபர் மாளிகை (கிரம்ளின்) செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இதுகுறித்து கூறுகையில், அதிபர் புதின் மத்தியஸ்தம் செய்வதற்கான அவர்களின் தயார்நிலையை பாராட்டியதாக தெரிவித்துள்ளார்.  </p> <p>அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷியா - உக்ரைன் இடையே 2022 முதல் நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர பெரு முயற்சி எடுத்தும் பலனளிக்காத சூழலில் இந்த கருத்து வந்துள்ளது.</p><p>மோடி, புதின், ஜி ஜின்பிங் இடையே உள்ள புரிதலை பிரிக்ஸ் மாநாடு எடுத்துக்காட்டுவதாக சில அரசியல் வல்லுநர்கள் அபிப்பிரயப்படுகின்றனர். குறிப்பாக மூன்று தலைவர்களும் சிரித்தபடி கைகோர்த்து நிற்கும் புகைப்படம் ஒரு செய்தியை சொல்கிறது என்பது அவர்கள் கூற்று. </p><p>இந்த மாநாட்டில் மூவரின் சங்கமம் உலக அரசியல் மேடைக்கு குறிப்பாக டிரம்ப்பினால் பிளவுபட்டுக் கிடக்கும் மேற்கத்திய அரசியல் சூழலுக்கு ஒரு செய்தியை வழங்கியுள்ளது.</p> <h2>ஏன் முக்கியம்?</h2><p>ரஷியாவிக்கும் உக்ரைனுக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தைக்கு உதவுவதாக இந்தியா முன்வருவது இது முதல் முறை அல்ல. ஆனால் இந்த கணத்தில் அதை சொல்வது முக்கியமானதாகிறது. </p><p>ஏனெனில் உக்ரைன் போர் தொடங்கியபின் முதல் முறையாக ரஷியாவில் வரும் செப்டம்பர் 18-20 இல் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. புதினின் ஐக்கிய ரஷிய கட்சி நாடாளுமன்றத்தில் மிக வலுவாகவே உள்ளது.</p><p>சில தினங்கள் முன்பு தான், புதினை தொடர்பு கொண்டு டிரம்ப், உக்ரைன் போரை உடனே முடிக்கும் வழியை பார்க்குமாறு வலியுறுத்தியிருந்தார். </p><p>அவ்வாறு செய்தால் ரஷியாவுடனான அமெரிக்காவின் முறிந்த உறவுகளை மீட்டெடுத்துக்கொள்ளலாம் எனவும் ஆஃபர் கொடுத்திருந்தார்.</p> <p>அதைத்தொடர்ந்து அமெரிக்க தூதர்கள் மாஸ்கோ சென்று புதினை சந்தித்து பேசினார். 5 ஆண்டுகளாக போர் இழுத்துக்கொண்டே செல்வது நல்லதல்ல என அவர்கள் கூறியிருக்கின்றனர். ஆனால் இந்த முயற்சியும் பலனளிக்கவில்லை எனவே கூறப்படுகிறது.</p><p>இந்த சூழலில் உக்ரைன் - ரஷியா இடையே பிரதான இணைப்பு பாலமாக இந்தியா உருவெடுக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. ஏனெனில் இரு நாடுகள் உடனும் சிறப்பான நட்பை பேணும் சொற்ப நாடுகளில் இந்தியாவும் அடக்கம்.</p><p>"மாஸ்கோ, தெஹ்ரான், மேற்குலகம் என அனைத்துடனும் ஒரே நேரத்தில் பேச முடிகிற அரிதான ஆற்றல் இந்தியாவிடம் உள்ளதாக" இண்டிக் ஆராய்ச்சியார்கள் கூட்டமைப்பு இயக்குநர் ஸ்ரீனிவாச பாலகிருஷ்ணன், அண்மையில் சவுத் சைனா மார்னிங் போஸ்ட்டுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.</p> <p>கடந்த சில ஆண்டுகளாக இந்தியா, ரஷியாவின் சலுகை விலை எண்ணெய்யை தனது எரிசக்தி தேவைக்கு அதிகம் சார்ந்துள்ளது. எனவே உக்ரைன் போரை முடிக்க ஆரம்பம் முதலே இந்தியா வலியுறுத்தி வருகிறது.</p><p>கடந்த மாதம் பிஸ்கெக்கில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சந்தித்துக்கொண்டபோதும் புதினிடம் மோடி, முடிவற்ற போர் என்ற நிலைப்பாட்டை கைவிடவும், போர் நடக்கும் ஒவ்வொரு தினமும் மனிதத்தை பின்னோக்கி தள்ளும் ஒரு அடி எனவும் கூறியிருந்தார்.</p> <p>அதுவரை புதினிடம் பிரதமர் மோடி கூறியதிலேயே அதுவே சற்று காத்திரமான கருத்தாக இருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி வந்து சேர்ந்த புதினிடம் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியபோதும், ராஜதந்திர பேச்சுவார்த்தை மூலமே பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் எனவும், அமைதி முயற்சிகளுக்கு உதவ இந்தியா தயாராக உள்ளத்தையும் புதினிடம் தெரிவித்திருக்கிறார்.</p> <p>"இந்தியாவின் நிலைப்பாடு எங்களுக்கு தெரியும். அது எங்களின் நிலைப்பாட்டுடன் அதிகம் ஒத்துப்போக கூடியதே. ஏனெனில் உக்ரைன் பிரச்சனைக்கு அமைதியான முறையில் தீர்வு காணும் முயற்சிக்கு ரஷியா என்றும் தயாராகவே உள்ளது" என கிரம்ளின் முன்னமே தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.</p><p>இதனிடையே, போர் தொடங்கியதில் இருந்து எப்போது நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட புதின் - ஜெலன்ஸ்கி சந்திப்பு வரும் டிசம்பரில் ஜி 20 மாநாட்டின் போது சாத்தியப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>அமெரிக்காவின் மியாமியில் மாநாடு நடக்கிறது. புதின் அங்கு வருகை தந்தால் தானும் வருவதாக ஜெலன்ஸ்கி ஏற்கனவே தெரிவித்துவிட்டார். புதின் எடுக்கும் முடிவிலேயே அனைத்தும் அடங்கியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>நாளை மறுநாள் வேட்பாளர்களை அறிவிக்கும் இடதுசாரிகள் - மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி! </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/left-parties-to-announce-candidates-day-after-tomorrow-cpm-contests-in-madurantakam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/left-parties-to-announce-candidates-day-after-tomorrow-cpm-contests-in-madurantakam#comments</comments><guid isPermaLink="false">c91a6f74-9d0a-4dd5-bf81-715f8a37e434</guid><pubDate>Sun, 13 Sep 2026 09:19:45 +0000</pubDate><atom:updated>2026-09-13T09:19:45.451Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>CPIM,by election,இடைத்தேர்தல்,சிபிஎம்,பெ சண்முகம்,P Shanmugam</media:keywords><media:content height="395" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/0dqzjx4q/WhatsApp-Image-2026-09-13-at-2.35.05-PM.jpeg" width="907"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நாளை மறுநாள் வேட்பாளர்களை அறிவிக்கும் இடதுசாரிகள் - மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/0dqzjx4q/WhatsApp-Image-2026-09-13-at-2.35.05-PM.jpeg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>தனித்துப் போட்டி </h2><p>சமீபத்தில் இடைத்தேர்த்ல் அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளிலும் இடதுசாரி கட்சிகள் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சிகளின் மாநில செயலாளர்கள் அறிவித்துள்ளனர். </p><p>அதன்படி தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதுராந்தகம் தொகுதியில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இதுதொடர்பாக இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம்.,</p><p>“தவெகவிற்கு ஆதரவு  இல்லை என்பதால் திமுகவிற்கு ஆதரவு என்று அர்த்தம் இல்லை. இந்த இடைத்தேர்தல் என்பது திணிக்கப்பட்ட தேர்தலாகவே இருக்கிறது. </p><h2>வேட்பாளர் அறிமுகம்</h2><p>மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் போட்டியிட உள்ள இடதுசாரி வேட்பாளர்கள் நாளை மறுநாள் (செப்.15) அறிவிக்கப்பட உள்ளனர்.” என பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். </p><h2>ஐந்து முனை</h2><p>தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த இடதுசாரி கட்சிகள் இடைத்தேர்தலில் ஆதரவு அளிக்கவில்லை. கம்யூனிஸ்ட கட்சிகள் தனித்து போட்டியிடுவதன் மூலம் ஐந்து முனை போட்டியாக தேர்தல் களம் மாறியிருக்கிறது. இடதுசாரிகளின் இந்த அறிவிப்பால் தேர்தல் களம் பரப்பரப்பாக மாறியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தென் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/imd-warning-heavy-rain-thunderstorm-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/imd-warning-heavy-rain-thunderstorm-today#comments</comments><guid isPermaLink="false">b1db0471-771b-4da3-b653-ea6f0b001270</guid><pubDate>Sun, 13 Sep 2026 09:02:47 +0000</pubDate><atom:updated>2026-09-13T09:02:47.366Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,வானிலை ஆய்வு மையம்,Meteorological Department,கனமழை எச்சரிக்கை,heavy rain warning</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/ienpanq2/rain.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Heavy rain warning ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/ienpanq2/rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாகத் தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தென் தமிழக மாவட்டங்களான மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.</p><h2>இடி மின்னல் <strong>மற்றும்</strong> பலத்த காற்று எச்சரிக்கை</h2><p>கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். மழை பெய்யும் போது தாழ்வான பகுதிகளில் நீர் தேங்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், இடி மின்னல் நிகழும் போது திறந்தவெளிகளிலோ மரங்களின் அடியிலோ நிற்பதைத் தவிர்க்குமாறும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.</p><p>தென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்பதால், கடல் பகுதிகளுக்குச் செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், மாவட்ட நிர்வாகங்கள் சார்பிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>ராகுல், பிரியங்காவுடன் மலேசிய பிரதமர் சந்திப்பு - வீடியோ வெளியிட்ட காங்கிரஸ் </title><link>https://www.maalaimalar.com/news/national/malaysian-prime-minister-meets-rahul-and-priyanka-congress-releases-video</link><comments>https://www.maalaimalar.com/news/national/malaysian-prime-minister-meets-rahul-and-priyanka-congress-releases-video#comments</comments><guid isPermaLink="false">e77f064e-55d3-4393-845f-7180e6777606</guid><pubDate>Sun, 13 Sep 2026 08:59:29 +0000</pubDate><atom:updated>2026-09-13T08:59:29.938Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,malaysia,மலேசியா,BRICS Summit,Anwar Ibrahim,அன்வர் இப்ராஹிம்,பிரிக்ஸ் உச்சிமாநாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/8i8i01ag/tn-13.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராகுல், இப்ராஹிம், பிரியங்கா ]]></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல், இப்ராஹிம், பிரியங்கா ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/8i8i01ag/tn-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரை மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் சந்தித்து பேசியுள்ளார்.</p><p>டெல்லியில் நேற்று தொடங்கிய 18வது <a href="https://www.maalaimalar.com/news/national/brics-summit-modi-warning-on-critical-minerals-in-front-of-xi">பிரிக்ஸ் மாநாடு</a> இன்றுடன் முடிவடைகிறது. இதில் கலந்துகொள்ள ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான், பிரேசில், தென்னாப்பிரிக்கா  ஆகிய உறுப்பு நாட்டு தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். </p><p>குறிப்பாக மலேசிய பிரதமர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D">அன்வர் இப்ராஹிம் </a>பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா வந்துள்ளார். </p><p>இன்று காலை டெல்லியில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோரை அன்வர் இப்ராஹிம் சந்தித்து பேசியுள்ளார். </p><p>அவர்களுடன் காலை உணவு அறுத்தியுள்ளார். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது </p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">LoP Shri <a href="https://x.com/RahulGandhi?ref_src=twsrc%5Etfw">@RahulGandhi</a> and Congress General Secretary Smt. <a href="https://x.com/priyankagandhi?ref_src=twsrc%5Etfw">@priyankagandhi</a> ji met H.E. Dato’ Seri <a href="https://x.com/anwaribrahim?ref_src=twsrc%5Etfw">@anwaribrahim</a>, Prime Minister of Malaysia today.<br><br>New Delhi <a href="https://t.co/EV9PIDizwZ">pic.twitter.com/EV9PIDizwZ</a></p>&mdash; Congress (@INCIndia) <a href="https://x.com/INCIndia/status/2099032104222990816?ref_src=twsrc%5Etfw">September 13, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை</h2><p>பிரிக்ஸ் மற்றும் ஆசியான் கூட்டமைப்பில் மலேசியா முக்கிய கூட்டாளியாக திகழ்ந்து வருகிறது.</p><p>முன்னதாக பிரிக்ஸ் மாநாட்டின் முதல் நாளான நேற்று, மலேசிய பிரதமர் இப்ராஹிமுடன் பிரதமர் மோடி வர்த்தகம், செமிகண்டக்டர், பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் இரு நாட்டு ஒத்துழைப்பு குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.</p>  <h2>மன்மோகன் சிங்கிற்கு பாராட்டு</h2><p>காங்கிரசை சேர்ந்த மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 2024 டிசம்பரில் உயிரிழந்தார். அவருக்கு அப்போது புகழஞ்சலி செலுத்திய இப்ராஹிம் அவரை மதிப்புமிக்க நேசமிகு நண்பர் எனவும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்கை புகழ்ந்தும் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.</p><p>மன்மோகன் சிங் இந்தியாவின் பொருளாதாரத்தில் சீர்திருத்தங்களை மேற்கொண்டு, வலுவான உலக பொருளாதாரத்தை நோக்கி நாட்டை இட்டுச் சென்றார் என கூறியிருந்தார்</p><p>இப்ராஹிம் 1990களில் மலேசியாவின் வர்த்தக அமைச்சராக இருந்தவர். மன்மோகன் சிங் அக்காலத்தில் இந்தியாவின் வர்த்தக அமைச்சராக மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்தங்களை பின்பற்றினார் இப்ராஹிம்.</p> <p>அங்கு அரசியல் நெருக்கடி காலத்தில் தான் ஜெயிலில் இருந்தபோது மன்மோகன் சிங் தன் குழந்தைகளின் படிப்புக்கு பணம் செலுத்த முன்வந்ததையும் இப்ராஹிம் முன்னொரு சமயத்தில் நினைவு கூர்ந்துள்ளார்.</p><p>ஊழலுக்கு எதிரான மன்மோகன் சிங்கின் போராட்டத்தையும் அவர் புகழ்ந்துள்ளார். மன்மோகன் சிங் ஒரு வினோதமான அரசியல்வாதி என்றாலும் உண்மையானவர் என்றும் அவர் எதிர்கால தலைமுறைக்கு உந்துசக்தியாக இருக்கிறார் எனவும் இப்ராஹிம் புகழ் மாலை சூட்டினார்.</p>]]></content:encoded></item><item><title>24 மணி நேரத்தில் 2 மில்லியன் பார்வையாளர்கள் - இணையதளத்தை கலக்கும் &apos;Dhik.Dhik..Dhik…&apos; படத்தின் டீசர்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/24-hours-2-million-viewers-dhik-dhik-dhik-teaser-rocks-the-internet</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/24-hours-2-million-viewers-dhik-dhik-dhik-teaser-rocks-the-internet#comments</comments><guid isPermaLink="false">2a7f5f7a-8d83-4741-971d-2243bd723053</guid><pubDate>Sun, 13 Sep 2026 08:59:22 +0000</pubDate><atom:updated>2026-09-13T08:59:22.743Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>Venkat prabhu,Chandini Tamilarasan,JSK Satishkumar,Kuttram Kadithal 2,Dhik Dhik Dhik,திக் திக் திக்,JSKFilmCorporation</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/veho6435/Dhik-Dhik-Dhik" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dhik Dhik Dhik ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/veho6435/Dhik-Dhik-Dhik?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>'தங்க மீன்கள்', தேசிய விருது பெற்ற 'குற்றம் கடிதல்' போன்ற தரமான வாழ்வியல் கதைகளைத் தயாரித்து தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த முன்னணி தயாரிப்பு நிறுவனமான JSK Film Corporation, தனது அடுத்த படைப்பாக தயாரித்துள்ள த்ரில்லர் திரைப்படம் 'Dhik.Dhik..Dhik…'. </p><p>இப்படத்தின் அதிரடி டீசர் வெளியாகி, 24 மணி நேரத்திற்குள் 2 மில்லியன் பார்வைகளைக் கடந்து இணையதளங்களில் பெரும் சாதனையைப் படைத்து வருகிறது.</p><h2><strong>முன்னணி பிரபலங்களின் ஆதரவு &amp; தியேட்டர் ரிலீஸ்!</strong></h2><p>இப்படத்தின் டீசர் 2 நாட்களுக்கு முன்பு வெளியாகி பலம் சேர்க்கும் வகையில், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் சேதுபதி, <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81">வெங்கட் பிரபு</a>, ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் ஆர்யா ஆகியோர் தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் இதனை வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.</p><p>டிஜிட்டல் தளங்களில் தடம் பதித்து வரும் இந்த டீசர், தற்போது தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளில் பெரிய திரையிலும் திரையிடப்பட்டு வருகிறது. </p><p>தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் இப்போதே இந்த டீசரை பெரிய திரையில் பார்த்து வியந்து வருவதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு இருமடங்காக அதிகரித்துள்ளது.</p><figure><img alt="Chandini Tamilarasan" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/kfaw0sfm/Chandini-Tamilarasan" /></figure><h2><strong>ஒரே இரவில் நடக்கும் சென்னையின் பரபரப்பு கதை!</strong></h2><p>தயாரிப்பாளர் JSK சதீஷ் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் மூலம் ஸ்ரீநிவாசன் சிவாஜிராவ் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இவர் ரகு ராஜகோபாலுடன் இணைந்து படத்தின் விறுவிறுப்பான திரைக்கதையை எழுதியுள்ளார்.</p><p>சென்னையைப் பின்னணியாகக் கொண்டு, ஒரே இரவில் நடக்கும் அதிரடி சஸ்பென்ஸ் கதையாக இப்படம் செதுக்கப்பட்டுள்ளது. பரபரப்பான த்ரில்லர் பாணியில் இருந்தாலும், இன்றைய காலகட்டத்திற்குத் தேவையான மிக முக்கியமான ஒரு சமூகக் கருத்தையும் மற்றும் குடும்ப உணர்வுகளையும் இணைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>நட்சத்திரப் பட்டாளம் மற்றும் தொழில்நுட்பக் குழு</strong></h2><p>இப்படத்தில் பாவெல் நவநீதன், ஜேஎஸ்கே சதீஷ் குமார், சாந்தினி தமிழரசன், சாண்ட்ரா ஆமி மற்றும் பிஜேஷ் நாகேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.</p><p>இப்படத்திற்கு DK இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை ரகு ராஜகோபாலும் படத்தொகுப்பை பிரேம் B -யும் கலை இயக்கத்தை SS சுசி தேவராஜ் ஆகியோர் இப்படத்திற்காக பணியற்றி இருக்கிறார்கள்.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/O3xEmoRyk2s"></iframe></figure><h2><strong>'குற்றம் கடிதல் 2' விரைவில் ரிலீஸ்!</strong></h2><p>ஜேஎஸ்கே ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில் உருவான ‘ஃபையர்’ படத்தைத் தொடர்ந்து, ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் <strong>‘குற்றம் கடிதல் 2’</strong> திரைப்படமும் தற்போது சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. </p><p>இத்திரைப்படமும் மிக விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக தயாரிப்புத் தரப்பில் அறிவித்துள்ளது.</p><p>டீசர் புரமோஷனிலேயே மிரட்டி வரும் 'Dhik.Dhik..Dhik…' படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் மற்றும் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடவுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>ஐந்துமுனைப் போட்டி: இடைத்தேர்தலை தனித்து களம் காணும் இடதுசாரிகள் - தாராபுரத்தில் சிபிஐ போட்டி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/left-parties-to-contest-by-election-independently-cpi-to-field-candidate-in-dharapuram</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/left-parties-to-contest-by-election-independently-cpi-to-field-candidate-in-dharapuram#comments</comments><guid isPermaLink="false">59c18f07-edc6-46ae-bc4d-84a093fd6e82</guid><pubDate>Sun, 13 Sep 2026 08:46:42 +0000</pubDate><atom:updated>2026-09-13T08:46:42.850Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சிபிஐ,by election,CPI,dharapuram,தாராபுரம்,இடைத்தேர்தல்,மு.வீரபாண்டியன்,M Veerapandian</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/3cwnyxeu/New-Project-2026-09-13T141250.695.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இடைத்தேர்தலை தனித்து களம் காணும் இடதுசாரிகள் - தாராபுரத்தில் சிபிஐ போட்டி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/3cwnyxeu/New-Project-2026-09-13T141250.695.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இடைத்தேர்தல்</h2><p>அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்டோபர்.6ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்துள்ளது.</p><p>இத்தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, நாதக போட்டியிடுவதாக அறிவித்து, நாதகவை தவிர மற்ற மூன்று கட்சிகளும் வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது.</p><p>தவெக அரசுக்கு ஆதரவு அளித்தாலும், கூட்டணியில் இடம்பெறாததால் இந்த இடைத்தேர்தலில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cpi-m-to-announce-byelection-support-tomorrow-madurantakam-dharapuram">இடதுசாரிகள் </a>யாருக்கும் ஆதரவு அளிப்பார்கள் என்ற கேள்வி எழுந்தது. </p><p>இந்நிலையில் தேர்தலுக்கு யாருக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை இன்று அறிவிப்பதாக இடதுசாரி கட்சிகள் அறிவித்தன. </p><p>இந்நிலையில் யாருக்கு ஆதரவு என்பதை அறிவிப்பது தொடர்பாக இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார்.</p><h2>எந்தக் கூட்டணியிலும் இல்லை</h2><p>செய்தியாளர்களிடம் பேசிய அவர்., “இடைத்தேர்தல் தொடர்பாக இரண்டு நாட்கள் சிபிஐ செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தற்போது நிலவும் அரசியல் சூழலில் எந்தக் கூட்டணியிலும் இடம்பெறுவதில்லை என்ற முடிவை நீட்டிக்க முடிவு செய்துள்ளோம்.</p><p>ஆளுநர் ஆட்சி வரக்கூடாது என்பதற்காகவே சிபிஐ தவெகவிற்கு ஆதரவு அளித்தது. அமைச்சரவையிலும் நாங்கள் பங்கேற்கவில்லை, கூட்டணியிலும் நாங்கள் பங்கேற்கவில்லை.</p><h2>ஐந்துமுனை போட்டி</h2><p>இது ஒரு திணிக்கப்பட்ட இடைத்தேர்தல். இடதுசாரிகள் இந்த தேர்தலை எதிர்கொள்வது என முடிவு செய்துள்ளோம். சிபிஐ இந்த முடிவை எடுத்தது. மார்க்சிஸ்ட் கட்சி உடன் எங்கள் கருத்தை பகிர்ந்தோம். </p><p>இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாராபுரத்திலும், மார்க்சிஸ்ட் கட்சி மதுராந்தகத்தில் போட்டியிட வேண்டும் என செயற்குழு கூட்டத்தில் நாங்கள் முடிவு செய்துள்ளோம். இந்த செய்தியை பெ.சண்முகமும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்.</p><p>இடதுசாரிகள் கூட்டோடு சிபிஐ தாராபுரத்தில் போட்டியிடுகிறது. நாங்கள் 60,70 ஆண்டுகளாக நாடாளுமன்ற ஜனநாயகத்திற்காக பெரும் பங்களிப்பை செலுத்தியுள்ளது. விழுமியங்களை பற்றி நின்றுள்ளோம். </p><p>உழைக்கும் மக்களின் உரிமைக் குறலாக ஒலித்துள்ளார்கள். எனவே தமிழ் கூறும் நல்லுலகம் இடதுசாரிகளுக்கு இந்தத் தேர்தலில் வாய்ப்பளிக்கும் பட்சத்தில் உழைக்கும் மக்களின் குரலை, ஒடுக்கப்பட்ட எளிய மக்களின் குரலை, தமிழகம் நலன்சார்ந்த குரலை இடதுசாரிகள் சட்டமன்றத்தில் எழுப்புவோம், முழங்குவோம். </p><p>அதற்காக தமிழ் உலகம் எங்களுக்கு ஆதரவு தரவேண்டும்.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>இந்தோனேசியாவில் கடலில் திடீரென மாயமான பயணிகள் கப்பல்: 102 பேர் பத்திரமாக மீட்பு- மீதியுள்ளவர்களை தேடும் பணி தீவிரம்</title><link>https://www.maalaimalar.com/news/world/indonesia-sea-passenger-ship-sudden-disappearance-102-rescued</link><comments>https://www.maalaimalar.com/news/world/indonesia-sea-passenger-ship-sudden-disappearance-102-rescued#comments</comments><guid isPermaLink="false">7c518854-0c45-4c1d-8e6b-4cd173fece14</guid><pubDate>Sun, 13 Sep 2026 08:43:26 +0000</pubDate><atom:updated>2026-09-13T08:43:26.324Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தோனேசியா,passenger ship,indonesia,Virgo Transport 8,Surabaya,சுரபயா,வெர்கோ டிரான்ஸ்போர்ட் 8</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/0kppm0pk/boat.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Virgo Transport 8]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/0kppm0pk/boat.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தோனேசியாவில் 241 பயணிகளுடன் சென்ற பயணிகள் கப்பல் ஒன்று திடீரென கடல் நடுவே கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்து மாயமாகியுள்ள சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சுரபயா துறைமுகத்தில் இருந்து தெற்கு கலிமந்தன் நோக்கி ‘வெர்கோ டிரான்ஸ்போர்ட் 8’ என்ற பயணிகள் கப்பல் புறப்பட்டுச் சென்றது. ஜாவா கடல் பகுதியில் கப்பல் பயணித்துக் கொண்டிருந்தபோது, திடீரென மோசமான வானிலை காரணமாகக் கடல் சீற்றம் அடைந்தது. இதில் கட்டுப்பாட்டு மையத்துடனான தகவல் தொடர்பு முழுமையாகத் துண்டிக்கப்பட்டு, கப்பல் மாயமானது.</p><h2>மீ<strong>ட்புப் பணி</strong>கள்</h2><p>தகவல் அறிந்தவுடன் இந்தோனேசியத் தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர் அதிவிரைவாகச் சம்பவ இடத்திற்கு மீட்புக் கப்பல்கள் மற்றும் படகுகளுடன் விரைந்தனர். தீவிர தேடுதல் நடவடிக்கைகளின் பலனாக, இதுவரை 102 பயணிகள் கடற்படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவ முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.</p><p>மீதமுள்ள 139 பயணிகளைக் கண்டுபிடிப்பதற்காகத் தேடுதல் நடவடிக்கைகள் இரவிலும் இடைவிடாமல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடலோரக் காவல் படை, மீட்புக் குழுக்கள் மற்றும் உள்ளூர் மீனவர்களின் படகுகள் உதவியுடன் ஹெலிகாப்டர்கள் மூலமாகவும் வான்வழித் தேடுதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கப்பலில் பயணித்தவர்களின் குடும்பத்தினர் பெரும் பதற்றத்துடனும் கவலையுடனும் மீட்பு மையங்களில் காத்திருக்கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>செயற்கை நுண்ணறிவை ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது- பிரதமர் மோடி பேச்சு</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-warns-against-weaponisation-of-critical-minerals</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-warns-against-weaponisation-of-critical-minerals#comments</comments><guid isPermaLink="false">06d8e21d-ce76-41d4-bfa7-43799fc12395</guid><pubDate>Sun, 13 Sep 2026 08:24:18 +0000</pubDate><atom:updated>2026-09-13T08:24:18.724Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BRICS Summit,pm modi,பிரிக்ஸ் உச்சிமாநாடு,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/7l2kok2m/BRICS.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/7l2kok2m/BRICS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டிஜிட்டல் வேளாண்மைக்கான பிரிக்ஸ் வலையமைப்பு விவசாயிகளுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். இந்த முன்முயற்சியின் மூலம் செயற்கை நுண்ணறிவு, புவிசார் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு ஆகியவை விவசாயிகளின் தேவைகளுடன் ஒருங்கிணைக்கப்படும். வேளாண்மை துறையில் செயற்கை நுண்ணறிவு உரிய முறையில் பயன்படுத்தப்பட வேண்டும்.</p><p>இந்தியா, ரஷியா, சீனா உள்பட 11 உறுப்பு நாடுகள் மற்றும் 10 நட்பு நாடுகளை கொண்ட பிரிக்ஸ் அமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. </p><h2><strong>உலக தலைவர்கள்</strong></h2><p>இதில் பல்வேறு நாட்டுகள் அதிபர்கள், பிரதமர்கள், துணை அதிபர்கள், மந்திரிகள் மற்றும் பிரதிநிதிகள், சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டு உள்ளனர். உச்சி மாநாட்டில் நேற்று அனைவரையும் உள்ளடக்கிய உலகளாவிய நிர்வாகம் மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் என்ற தலைப்பில் நடந்த அமர்வில் தலைவர்கள் பங்கேற்று உரையாடினர். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.</p><h2><strong>டெல்லி கூட்டு பிரகடனம்</strong></h2><p>மேலும் மாநாட்டின் டெல்லி கூட்டு பிரகடனம் ஒருமனதாக ஏற்று கொள்ளப்பட்டது. 140 அம்சங்களை கொண்ட இந்த பிரகடனத்தில் காசா போர் நிறுத்தம், ஐ.நா.சபையில் சீர்திருத்தங்கள், எல்லை கடந்த பரிவர்த்தனை, எரிசக்தி பாதுகாப்பு, வரி விதிப்புக்கு எதிர்ப்பு, பருவநிலை மாற்றம், பயங்கரவாத எதிர்ப்பு, பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம், அமைதி பேச்சுவார்த்தைகள் மூலம் போர்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும், உள்ளூர் நாணயங்களில் வர்த்தகம் உள்ளிட்டவைகள் இடம்பெற்றன.</p><h2><strong>2-வது நாள் மாநாடு</strong></h2><p>டெல்லி கூட்டு பிரகடனம் ஒருமனதாக ஏற்று கொள்ளப்பட்ட நிலையில் 2-வது மற்றும் கடைசி நாள் பிரிக்ஸ் உச்சி மாநாட்டு இன்று காலை தொடங்கியது. இதைத் தொடர்ந்து பிரிக்ஸ் நாடுகளின் தலைவா்கள், நட்பு நாடுகளின் தலைவா்கள், சிறப்பு அழைப்பாளா்கள் மாநாட்டு நடைபெறும் பாரத் மண்டபத்துக்கு காலை 10 மணி முதல் வரத் தொடங்கினர். அவர்களை பிரதமர் மோடி கைகுலுக்கி வரவேற்றார். அதன்பிறகு தலைவா்கள் அதிகாரப்பூா்வமாக குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.</p><h2><strong>மீள்திறன்</strong></h2><p>பின்னர் ‘மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு, நிலைத்தன்மை, அனைவரையும் உள்ளடக்கிய உலகளாவிய வளா்ச்சிக்கான எதிர் காலத்தை வடிவமைத்தல் என்ற தலைப்பில் அமர்வு நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் மீண்டும் ஓன்றுகூடி ஆலோசனை நடத்தினார்கள்.</p><h2><strong>இந்த அமர்வில் பிரதமர் மோடி பேசியதாவது:-</strong></h2><p>இந்தியாவின் தலைமை யின் கீழ் மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு, நிலைத்ன்மை ஆகிய 4 முக்கிய அம்சங்களில் எங்கள் முழு கவனத்தையும் செலுத்தி உள்ளோம். உங்கள் ஒத்துழைப்பு-ஆதரவுடன், நமது கூட்டுப் பார்வையை அனைவருக்கும் பயனளிக்கும் ஒரு சூழலாக மாற்ற முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.</p><p>இன்று உலகில் பதற்றங் கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இது சாமானிய மக்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே பிரிக்ஸ் குழுவிற்குள் மீள்திறனை வலுப்படுத்து வதற்கு நாங்கள் சிறப்பு முக்கியத்துவம் அளித்து உள்ளோம்.</p><h2><strong>பேரிடர் மேலாண்மை</strong></h2><p>இதன் அடிப்படையில், தொற்றுநோய்களைத் தடுப்பதற்கும் அவற்றை எதிர்கொள்வதற்கும் பிரிக்ஸ் ஒருங்கிணைந்த முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்பு குறித்த ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது. மேலும் பேரிடர் மேலாண்மைக்காக முன்கூட்டியே எச்சரிக்கும் தரவு ஒருங்கி ணைப்பு வழிகாட்டுதல்களும் உருவாக்கப்பட்டுள்ளன. பிரிக்ஸ் தளவாட விநி யோகச் சங்கிலி ஒத்து ழைப்புக் கட்டமைப்பு என்பது நமது விநியோகச் சங்கிலிகளை மேலும் நம்பகமானதாகவும், மீள்திறன் கொண்டதாகவும் மாற்ற உதவும்.</p><h2><strong>செயற்கை நுண்ணறிவு</strong></h2><p>டிஜிட்டல் வேளாண்மைக்கான பிரிக்ஸ் வலையமைப்பு விவசாயிகளுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். இந்த முன்முயற்சியின் மூலம் செயற்கை நுண்ணறிவு, புவிசார் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு ஆகியவை விவசாயிகளின் தேவைகளுடன் ஒருங்கிணைக்கப்படும். வேளாண்மை துறையில் செயற்கை நுண்ணறிவு உரிய முறையில் பயன்படுத்தப்பட வேண்டும்.</p><h2><strong>எதிர்மறை விளைவுகளை</strong></h2><p>தொழில்நுட்பம் மற்றும் முக்கிய கனிமங்களை ஆயுதமாக்குவது நமது கூட்டு முன்னேற்றத்தைத் தடுக்கக்கூடும். பொது வளர்ச்சிக்கு தடைகளை உருவாக்கும். செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) ஆயுதமாக பயன்படுத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும். தொழில்நுட்பத்தின் பலன் அனைத்து தரப்பினருக்கும் சென்றடைய வேண்டும். போர்களால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும்.</p><h2><strong>நம்பிக்கை அதிகரிப்பு</strong></h2><p>பிரிக்ஸ் அமைப்பின் மீதான தெற்குலக நாடுகளின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. தெற்குலக நாடுகள் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ள பிரிக்ஸ் நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பிரிக்ஸ் அமைப்பின் வலிமை என்பது நமது பன்முகத்தன்மை மற்றும் ஒத்துழைப்பில்தான் உள்ளது. நாம் வெவ்வேறு சூழல்களைச் சார்ந்த வர்களாக இருக்கலாம். ஆனால் ஒத்துழைப்பின் மூலம் ஒன்றிணைந்து உயர்ந்து, மனிதகுலத்திற்காக மலர்கிறோம். பல்வேறு கலாச்சாரங்களை இந்த கூட்டம் ஒருங்கிணைத்து உள்ளது. பிரிக்ஸ் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை முன்னெடுக்க வேண்டும்.</p><h2><strong>பிரிக்ஸ்</strong></h2><p>பிரிக்ஸ் அமைப்பின் ஒத்துழைப்பு என்பது அரசாங்கங்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய முயன்று உள்ளோம். இதில் எங்கள் தொழில் முனைவோர்கள், விவசாயிகள், ஆராய்ச்சியாளர்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் சாமானிய மக்களும் தீவிரப் பங்கேற்பாளர்களாக திகழ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.</p><p>இவ்வாறு மோடி பேசினார்.</p><p>இந்த அமர்வு முடிந்த பிறகு டெல்லி கூட்டு பிரகடனம் வெளியிடப்படும். அதனுடன் மாநாடு நிறைவு பெறும்.</p><h2><strong>மோடி பேச்சுவார்த்தை</strong></h2><p>இன்றைய மாநாட்டுக்கு இடையே பிரதமர் மோடி 7 நாட்டு தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில்ரம போசா மற்றும் கஜகஸ்தான், பிலிப்பைன்ஸ், எகிப்து, புருண்டி, உகாண்டா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளின் தலைவர்களை சந்திக்கிறார்.</p>]]></content:encoded></item><item><title>தெற்கு ரயில்வேயில் தொழில் பழகுநர் நியமனம்: தமிழர்களின்  வாய்ப்புகளை பிற மாநிலத்தவர்க்கு தாரைவார்க்கும் சதியை  முறியடிக்க வேண்டும் - அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/apprentice-recruitment-in-southern-railway-the-conspiracy-to-hand-over-opportunities-meant-for-tamils-to-people-from-other-states-must-be-thwarted-anbumani</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/apprentice-recruitment-in-southern-railway-the-conspiracy-to-hand-over-opportunities-meant-for-tamils-to-people-from-other-states-must-be-thwarted-anbumani#comments</comments><guid isPermaLink="false">5ce1adb9-04db-4d43-8122-8d8b5376c536</guid><pubDate>Sun, 13 Sep 2026 08:22:59 +0000</pubDate><atom:updated>2026-09-13T08:22:59.815Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Southern Railway,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தெற்கு ரயில்வே,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/y62a542b/New-Project-2026-09-13T135149.186.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தெற்கு ரயில்வேயில் தொழில் பழகுநர் நியமனம்: தமிழர்களின்  வாய்ப்புகளை பிற மாநிலத்தவர்க்கு தாரைவார்க்கும் சதியை  முறியடிக்க வேண்டும் - அன்புமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/y62a542b/New-Project-2026-09-13T135149.186.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தெற்கு ரயில்வே பணிமனைகளில் காலியாக உள்ள 6,171 தொழில் பழகுநர் பயிற்சி இடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை நியமிக்க வேண்டும் என பாமக தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-ministers-and-members-of-the-legislative-assembly-must-also-disclose-their-asset-details">அன்புமணி ராமதாஸ்</a> வலியுறுத்தியுள்ளார்.</p><p>மேலும் இதற்காக ரயில்வே வாரியத்திற்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் தரவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.</p><p>இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;</p><p>“தெற்கு ரயில்வேயின்  தமிழ்நாடு எல்லைக்குபட்பட்ட பணிமனைகளில்    தொழில் பழகுநர்கள் பயிற்சிக்காக 6,171 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. </p><p>வழக்கமான விதிகளை புறந்தள்ளிவிட்டு, வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிக்கையின் முலம் தமிழ்நாட்டில் உள்ள தொழில் பழகுநர் பயிற்சி இடங்களை பிற மாநிலத்தவருக்கு தாரை வார்க்க  தெற்கு ரயில்வே  முயற்சி செய்வது கண்டிக்கத்தக்கது.</p><h2>6,171 பயிற்சி இடங்கள்</h2><p>தெற்கு ரயில்வேயில் சென்னை, மதுரை, திருச்சி பொன்மலை மத்திய பணிமனை, சேலம், பெரம்பூர் கேரஜ் மற்றும் வேகன் ஒர்க்ஸ், பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ், கோவை, அரக்கோணம் பொறியியல் பணிமனை,  கோவை போத்தனூர் சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு பணிமனை  ஆகிய இடங்களில்  6,171 தொழில் பழகுநர் பயிற்சி இடங்கள் காலியாக உள்ளன.  </p><p>அவற்றை நிரப்புவதற்கு இம்மாதம் 27-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  அதற்கான அறிவிக்கையில் தான்  விதிமீறல்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன. </p><p>22.07.2002 தேதியிட்ட ரயில்வே வாரிய சுற்றறிக்கை மற்றும் 05.05.1984 - தேதியிட்ட  தொழில் பழகுநர் தேர்வு வழிகாட்டி விதிமுறைகளின்படி பணி இடங்களில் இருந்து 100 கி.மீ சுற்றளவில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். </p><p>ஆனால்,  இந்த விதியை மீறி வட இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் தெற்கு இரயில்வேயில்  நியமிக்கப்படுவதற்கு  எதிர்ப்பு எழுந்ததையடுத்து, தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து இருப்பவர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என  2019-ஆம் ஆண்டில் விதிகள் மாற்றப்பட்டன.</p><h2>விதிமீறல்</h2><p>ஆனால், இந்த  விதியும் இப்போது மீறப்பட்டுள்ளது. தொழில் பழகுநர் நியமன அறிவிக்கையில், தமிழ்நாடு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருக்க வேண்டும் என்ற பிரிவு நீக்கப்பட்டுள்ளது.  </p><p>அதுமட்டுமின்றி, தட்சிண கன்னடா பகுதி, ஆந்திராவின் நெல்லூர், சித்தூர் பகுதி மற்றும் கேரளாவில் இருப்பவர்களும், அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவு போன்ற பிற மாநிலங்களில் இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>வேலைவாய்ப்பு உரிமை</h2><p>இதன் மூலம் தமிழ்நாடு இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய தொழில் பழகுனர் பணி பிற மாநிலத்தவருக்கு தாரைவார்க்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதை அனுமதிக்க முடியாது.</p><p>கால் நூற்றாண்டுக்கும் கூடுதலாகவே  தெற்கு தொடர்வண்டித்துறையில் உள்ள பணிகளை பிற மாநிலத்தவர் பறித்துக் கொள்கின்றனர். </p><p>தொழில் பழகுநர் வாய்ப்புகளும் அதே போல் பறிக்கப்பட்டு வந்த நிலையில் தான், நீண்ட போராட்டத்தின் மூலம் 2019-ஆம் ஆண்டில் தமிழ்நாடு இளைஞர்களின் வேலைவாய்ப்பு உரிமை மீட்டெடுக்கப்பட்டது. </p><h2>தமிழ்நாடு அரசு அழுத்தம் தர வேண்டும்</h2><p>அந்த உரிமைக்கு தான் இப்போது மீண்டும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாடு இளைஞர்களின் தொழில் பழகுநர் வாய்ப்புகளை  பறிக்கும் நோக்கம் கொண்ட அறிவிக்கையை  தெற்கு ரயில்வே உடனடியாக ரத்து செய்ய வேண்டும். </p><p>தமிழ்நாடு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள் மட்டும் தான் இந்தப் பொறுப்புக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற விதியை சேர்த்து புதிய ஆள்தேர்வு அறிவிக்கையை  தெற்கு ரயில்வே புதிதாக வெளியிட வேண்டும். இதற்காக ரயில்வே வாரியத்திற்கு தமிழ்நாடு அரசு அழுத்தம்  தர வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>வியட்நாம் ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் இஷாராணி பரூவா அதிர்ச்சி தோல்வி</title><link>https://www.maalaimalar.com/sports/isharani-baruah-lose-final-in-vietnam-open-badminton</link><comments>https://www.maalaimalar.com/sports/isharani-baruah-lose-final-in-vietnam-open-badminton#comments</comments><guid isPermaLink="false">78a4517f-63de-4270-9129-26d913c98bf1</guid><pubDate>Sun, 13 Sep 2026 08:07:41 +0000</pubDate><atom:updated>2026-09-13T08:07:41.647Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>isharani baruah,இஷாராணி பரூவா,vietnam open badminton,வியட்நாம் ஓபன் பேட்மிண்டன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/40rbjd2n/baruah.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ isharani]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/40rbjd2n/baruah.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் இஷாராணி பரூவா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.</strong></em></p><p>வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் தொடர் வியட்நாமில் நடந்து வருகிறது.</p><p>இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் இஷாராணி பரூவா, தாய்லாந்தின் சரன்ரக் விதித்சன் உடன் மோதினார்.</p><p>இதில் சிறப்பாக ஆடிய தாய்லாந்து வீராங்கனை 21-8, 21-15 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.</p><p>இதன்மூலம் இந்தியாவின் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%87%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BE">இஷாராணி பரூவா</a> அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.</p><p>ஆண்கள் ஒற்றையர், பெண்கள் ஒற்றையர், ஆண்கள் இரட்டையர், பெண்கள் இரட்டைய்ர மற்றும் கலப்பு இரட்டையர் என அனைத்துப் பிரிவிலும் இந்திய அணி ஏமாற்றம் அளித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>பாதியில் நின்று மீண்டெழுந்த &apos;தி டார்க் ஹெவன்&apos; திரைப்படம்  - சவால்களை பகிர்ந்த படக்குழுவினர்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/dark-heaven-team-shares-challenges-before-release</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/dark-heaven-team-shares-challenges-before-release#comments</comments><guid isPermaLink="false">2d14d39b-5d20-4122-a526-ed4e546ae971</guid><pubDate>Sun, 13 Sep 2026 08:05:44 +0000</pubDate><atom:updated>2026-09-13T08:05:44.895Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>the dark heaven,தி டார்க் ஹெவன்,Rithvika,crime thriller movie,Balaji Director,Siddhu,Tharshika</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/uoakgsyf/The-Dark-Heaven" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ The Dark Heaven  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/uoakgsyf/The-Dark-Heaven?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் அரங்கில் நடைபெற்ற 'தி டார்க் ஹெவன்' திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழாவில், படம் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் திரையரங்கு அனுபவத்தின் முக்கியத்துவம் குறித்து படக்குழுவினர் தங்களது உணர்வுப்பூர்வமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர். </p><p>இயக்குநர் பாலாஜி இயக்கத்தில், <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">பிக்பாஸ் </a>நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள இந்த நாட்டார் கதை பின்னணி கொண்ட சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் திரைப்படம் வரும் செப்டம்பர் 18 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. </p><h2><strong>நட்சத்திர பட்டாளம்</strong></h2><p>'தி டார்க் ஹெவன்' படத்தில் பிக்பாஸ் புகழ் நட்சத்திரங்கள் சித்து, தர்ஷிகா , <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE">ரித்விகா </a>ஆகியோருடன் , வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால் மற்றும் பலர் நடித்துள்ளனர்.</p><p>இப்படத்திற்கு ஒளிப்பதிவு: மணிகண்டன் பிகே,படத்தொகுப்பு : ராஜா ஆறுமுகம், இசை: சக்தி பாலாஜி, பாடல் வரிகள்: லாவர்தன். கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் ஸ்விஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்துள்ளன.</p><p>கொலையும் கொலை சார்ந்த ஒரு துப்பறியும் கதையாக உருவாகி இருக்கும் இதன் படப்பிடிப்பு திருநெல்வேலி ,ராமநாதபுரம், குற்றாலம் ,முக்கூடல்,தென்காசி போன்ற பகுதிகளில் இதுவரை கேமரா வெளிச்சம் படாத இடங்களில் தேடிப் பிடித்துப் படப்பிடிப்பு செய்துள்ளார்கள்.</p><p>இப்படத்தில் தனது அனுபவங்களை இயக்குனர் மற்றும் படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.</p><figure><img alt="The Dark Heaven  " src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/ex7w3oe4/The-Dark-Heaven" /></figure><h2><strong>இயக்குனர் - பாலாஜி</strong></h2><p>பாதியில் நின்ற படத்தை மீண்டும் எடுத்து முடிப்பது மனரீதியாக பெரும் அழுத்தம் என்றும், அந்த நெருக்கடியில் சரண், கோபால் மற்றும் படக்குழுவினர் உறுதுணையாக இருந்ததாகவும், கடந்த காலத்தை பற்றி கேட்காமல் நடிக்க ஒப்புக்கொண்ட சித்து மீது பெரும் மரியாதை ஏற்பட்டதாகவும் கூறிய இயக்குநர் பாலாஜி, இது நாட்டார் கதையை மையமாக கொண்ட த்ரில்லர் என்றும் ரித்விகாவின் வருகைக்கு பிறகு படத்தின் தரம் உயர்ந்ததாகவும் தெரிவித்தார். </p><p>படத்தைப் பார்த்து விட்டு உங்கள் உங்கள் நேர்மையான விமர்சனங்களைச் சொல்லுங்கள் .நல்லதைக் கேட்டுக்கொள்கிறோம். கேட்டதை மாற்றிக் கொள்கிறோம் என்றும் கூறினார்.</p><h2><strong>நடிகை - ரித்விகா</strong></h2><p>பெரிய படங்களால் தள்ளிப்போன 'தி டார்க் ஹெவன்' செப்.18-ல் உறுதியாக வெளியாகிறது என்றும், ஒரே மாதிரியான த்ரில்லர் படங்களுக்கு மத்தியில் இது வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை தரும் என்றும், ஒரு ஷாட்டுக்காக மணிக்கணக்கில் காத்திருந்து இருமடங்கு உழைப்பை படக்குழு கொடுத்துள்ளதாகவும் நடிகை ரித்விகா தெரிவித்தார்.</p><figure><img alt="The Dark Heaven  " src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/vjx7g5el/The-Dark-Heaven" /></figure><h2><strong>கதை நாயகன் - சித்து</strong></h2><p>சாலிகிராமத்தில் சின்ன வேடங்களுக்காக அலைந்த தனக்கு இதுவே முதல் படம் என்பதே சாதனை என்றும், முதல் படத்திலேயே கிடைத்தற்கரிய காப் ஸ்டோரி - த்ரில்லர் கதாபாத்திரம் கிடைத்தது அதிர்ஷ்டம் என்றும், பழைய கதை பற்றி கவலைப்படாமல் படத்தை மேலே கொண்டு செல்வதில் கவனம் செலுத்தியதாகவும், படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளும் கற்றுக்கொள்ளும் அனுபவமாக இருந்ததாகவும் நாயகன் சித்து தெரிவித்தார்.</p><h2><strong>இசையமைப்பாளர் - சக்தி பாலாஜி</strong></h2><p>நான் ஏற்கெனவே ’உடன்பால்’, ’ஜாக்கி ’ படங்களுக்கு இசையமைத்து இருக்கிறேன். ஆனால் முதல்முறையாக க்ரைம் த்ரில்லர் படத்திற்கு இசையமைத்தது மறக்க முடியாத அனுபவம் என்றும், இப்படம் பெரிய படத்திற்குரிய திரையரங்கு அனுபவத்தை வழங்கும் என்பதால் அனைவரும் திரையரங்கில் வந்து பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.</p><h2><strong>பிக் பாஸ் புகழ் - தர்ஷிகா</strong></h2><p>'தி டார்க் ஹெவன்' தான் தனது முதல் படம் என்றும், த்ரில்லர் படங்கள் மிகவும் பிடிக்கும் என்பதால் இப்படம் அனைவரும் விரும்பும் படமாக இருக்கும் என நம்புவதாகவும், படத்திற்காக அனைவரும் கடினமாக உழைத்துள்ளதால் செப்.18-ல் திரையரங்கில் பார்த்து ஆதரிக்குமாறும் நடிகை தர்ஷிகா கேட்டுக்கொண்டார்.</p><h2><strong>ஒளிப்பதிவாளர் - மணிகண்டன்</strong></h2><p>இயக்குநர் பாலாஜியுடன் 'டி3'க்கு பிறகு இது இரண்டாவது படம் என்றும், க்ரைம் த்ரில்லருக்காக அழகும் மர்மமும் நிறைந்த இடங்களை தேடி கண்டுபிடித்து, வாகனம் செல்ல முடியாத காடு, மலை பகுதிகளுக்கு கருவிகளை சுமந்து சென்று சிரமப்பட்டு படமாக்கியதாகவும், ஆனால் காட்சிகளை பாராட்டும்போது அந்த சிரமம் மறந்து விடுவதாகவும் ஒளிப்பதிவாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தொழில்துறை அமைச்சரின்றி தொழிற்பயணம்: யாரை பார்க்கச் சென்றார் என முதலமைச்சர்தான் கூற வேண்டும் - நயினார் நாகேந்திரன்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/industrial-tour-without-the-industries-minister-only-the-chief-minister-can-say-whom-he-went-to-meet-nainar-nagendran</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/industrial-tour-without-the-industries-minister-only-the-chief-minister-can-say-whom-he-went-to-meet-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">845555ed-e43d-4e56-8205-947402e27db8</guid><pubDate>Sun, 13 Sep 2026 07:58:43 +0000</pubDate><atom:updated>2026-09-13T07:58:43.603Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,Minister Keerthana,அமைச்சர் கீர்த்தனா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/d8b50pn1/New-Project-2026-09-13T132637.629.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தொழில்துறை அமைச்சரின்றி தொழிற்பயணம்: யாரை பார்க்கச் சென்றார் என முதலமைச்சர்தான் கூற வேண்டும் - நயினார் நாகேந்திரன்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/d8b50pn1/New-Project-2026-09-13T132637.629.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலியில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்.,</p><p>“சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து முடிந்துள்ளது. சட்டசபையில் நடந்தவற்றை மக்கள் பார்த்துள்ளனர். பல்வேறு சபாநாயகர்களை இந்த சட்டமன்றம் பார்த்துள்ளது.</p><p>கடந்த காலங்களில் பல இனம், பல மதங்களை சேர்ந்தவர்கள் சபாநாயகர்களாக பணியாற்றிய நிலையில்,  இன்று மதம் சார்ந்த ஒரு சபாநாயகர், மதம் சார்ந்த அமைச்சர்களை சட்டமன்றத்தில் பார்க்க முடிந்தது. இதை நான் சொன்னால் தவறாக முடியும்.</p><p>சட்டமன்ற நிகழ்வை பலர் ரசித்தனர், சிலர் ஆதரித்தனர், நிறைய பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குதிரை பேரத்தால் சட்டமன்ற தேர்தல் முடிந்த 3 மாதத்திலேயே இடைத்தேர்தல்.</p><p>நமது <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-london-investments-unknown-edappadi-palaniswami">முதலமைச்சர் விஜய்</a> லண்டன் சென்றுள்ளார். உடன் யார் யாரோ எல்லாம் சென்றுள்ளதாக கூறுகிறார்கள். உண்மையில் முதலீடுகளை ஈர்க்கத்தான் சென்றுள்ளரா? இந்த 3,4 நாட்களில் எத்தனைப் பேரை சந்திக்க முடியும்? இதெல்லாம் ஒரு கேள்விக்குறி.</p><p>சொந்த வேலைக்காக சென்றுள்ளார் என்றால், நாம் எதுவும் கேட்கமுடியாது. ஆனால் முதலீட்டாளர்களை ஈர்க்க சென்றுள்ளார் என்றால், யார் யாரை சந்தித்தார், எத்தனை கோடி முதலீடு வருகிறது? என்பதை எல்லாம் அவர் அறிவிக்க வேண்டும்.</p><p>இடதுசாரிகள் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கவேண்டும். இல்லையென்றால் அது சந்தர்ப்பவாத அரசியலாக கருதப்படும். ” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item></channel></rss>