<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 14 Sep 2026 03:43:46 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: விநாயகர் சதுர்த்தி கோலாகலம் - இன்றைய முக்கிய செய்திகள் - 14 செப். 2026 
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-news-live-vinayagar-chaturthi-celebrations-todays-top-stories-14-sep-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-news-live-vinayagar-chaturthi-celebrations-todays-top-stories-14-sep-2026#comments</comments><guid isPermaLink="false">7d27506b-e2d3-4d02-83df-cdf954891d6e</guid><pubDate>Mon, 14 Sep 2026 03:20:45 +0000</pubDate><atom:updated>2026-09-14T03:20:45.647Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/mw3doxae/tn-29.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இன்றைய முக்கிய செய்திகள் - 14 செப். 2026 ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/mw3doxae/tn-29.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/may-all-good-deeds-be-fulfilled-by-lord-ganeshas-grace-says-cm-vijay">விநாயகப் பெருமானின் அருளால் அனைத்து நற்செயல்களும் இனிதே நிறைவேறட்டும்: முதலமைச்சர் விஜய்</a></p><p>*விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் பக்தர்களுக்கு முதலமைச்சர் விஜய் மகிழ்ச்சி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.</p><p>*ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் பெருகட்டும்!</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ganesha-chaturthi-celebrated-with-pomp-and-show-devotees-worship-in-temples-across-tamil-nadu">கோலாகலமாக தொடங்கிய விநாயகர் சதுர்த்தி .. தமிழகம் முழுவதும் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு</a></p><p>* உச்சிஷ்ட மகா கணபதி கோயில், மணக்குள விநாயகர் கோயில் ஆகிய கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்ய ஏராளாமான பக்தர்கள் திரண்டுள்ளனர்.</p><p>*ஆர்வமுடன் பூஜை பொருட்களை வாங்கி கோவில்களுக்கு செல்வதோடு தத்தமது வீடுகளிலும் வழிபாடு செய்து வருகின்றனர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/the-bccis-stance-is-not-to-accept-the-trophy-from-mohsin-naqvi-coach-amol-muzumdar">மோஷின் நக்வியிடம் கோப்பையை வாங்க கூடாது என்பது பிசிசிஐ-யின் நிலைப்பாடு - பயிற்சியாளர் அமோல் முஜும்தார்</a></p><p>*இந்தியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 20 ஓவர்களில் 111 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.</p><p>*மோஷின் நக்வியிடம் கோப்பையை வாங்க மறுத்தன் பின்னணி</p>]]></content:encoded></item><item><title>ஆசிய கோப்பையை 8வது முறையாக வென்று இந்திய மகளிர் அணி சாதனை: பிரதமர் மோடி-குடியரசுத் தலைவர் முர்மு வாழ்த்து!</title><link>https://www.maalaimalar.com/sports/india-women-win-8th-asia-cup-pm-modi-president-murmu-congratulate</link><comments>https://www.maalaimalar.com/sports/india-women-win-8th-asia-cup-pm-modi-president-murmu-congratulate#comments</comments><guid isPermaLink="false">f722418f-3dc2-4d1e-861e-3d3ad2138232</guid><pubDate>Mon, 14 Sep 2026 03:43:17 +0000</pubDate><atom:updated>2026-09-14T03:43:17.245Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>President Murmu,இந்திய மகளிர் அணி,Indian Women&apos;s Team,ஆசிய கோப்பை,Asia Cup,பிரதமர் மோடி.,pm modi,குடியரசுத் தலைவர் முர்மு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/jzsemx8q/asia.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Indian women's team]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/jzsemx8q/asia.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இறுதிப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா ஆகியோர் சிறப்பான அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். </p><p>துபாயில் நடைபெற்ற மகளிர் டி20 ஆசிய கோப்பை 2026 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது. இறுதிப்போட்டியில் இலங்கை அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தனது 8வது ஆசிய கோப்பை பட்டத்தை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. தொடர் முழுவதும் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் களத்தில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணியின் இந்த வெற்றிக்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.</p><h2>மந்தனா-ஷஃபா<strong>லி ஜோடியின் அ</strong>திரடி தொடக்கம்</h2><p>இறுதிப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா ஆகியோர் சிறப்பான அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 129 ரன்கள் சேர்த்து சாதனை படைத்தது. ஷஃபாலி வர்மா 39 பந்துகளில் 68 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 39 பந்துகளில் 59 ரன்களும் குவித்தனர். இறுதிப்பகுதியில் பாரதி புல்மாலியின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் சேர்த்தது.</p><h2>பந்து<strong>வீச்சில் மிரட்டி</strong>ய ஸ்ரீ சரணி-தீப்தி சர்மா</h2><p>184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, இந்திய பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் இமேஷா துலானியை முதல் ஓவரிலேயே கிராந்தி கௌட் அவுட் செய்து அதிர்ச்சி அளித்தார். </p><p>அதன்பின்னர் களமிறங்கிய ஸ்ரீ சரணி 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவருக்கு உறுதுணையாக செயல்பட்ட சுழற்பந்து வீச்சாளர் தீப்தி சர்மா 19 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இறுதியில் இலங்கை அணி 20 ஓவர்களில் 111 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.</p><h2>கு<strong>டியரசுத் தலைவர் -பிர</strong>தமர் வாழ்த்து </h2><p>இந்திய மகளிர் அணியின் இந்த மகத்தான வெற்றியைப் பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "இந்திய கிரிக்கெட்டுக்கு இது ஒரு பெருமையான தருணம். தொடர் முழுவதும் இந்திய மகளிர் அணியின் தன்னம்பிக்கை, நிலைத்தன்மை மற்றும் விளையாட்டுத்திறன் வெளிப்பட்டது. இந்த வெற்றி நாட்டின் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்க பெரும் ஊக்கமாக அமையும்," என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p>குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது எக்ஸ் தளப் பதிவில், "மகளிர் டி20 ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். தொடர் முழுவதும் தோல்வியடையாமல் விளையாடி இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர். குறிப்பாக நாட்டின் மகள்களுக்கு இவர்கள் சிறந்த முன்மாதிரியாக திகழ்கிறார்கள்," என பாராட்டியுள்ளார். பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி மற்றும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி உள்ளிட்ட பல தலைவர்களும் இந்திய அணியின் இந்த சாதனைக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>விநாயகர் சிலை கரைப்பின் தத்துவம்</title><link>https://www.maalaimalar.com/spirituality/worship/vinayagar-chaturthi-worship-5</link><comments>https://www.maalaimalar.com/spirituality/worship/vinayagar-chaturthi-worship-5#comments</comments><guid isPermaLink="false">ff0feaf0-adc9-47b0-a43a-433e244109c2</guid><pubDate>Mon, 14 Sep 2026 03:33:00 +0000</pubDate><atom:updated>2026-09-14T03:33:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,vinayagar,விநாயகர்,Vinayagar Chaturthi 2026,விநாயகர் சதுர்த்தி 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/zlckgm6e/vinayaga.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/zlckgm6e/vinayaga.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வழிபாடு</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணிலிருந்து உருவாக்கப்பட்ட விநாயகரை சில நியமங்களோடு தெய்வீக நிலைக்கு உயர்த்தி, பொன், பொருள், அபிஷேகம், ஆராதனைகள் செய்து நைவேத்தியம் படைத்து தியானித்து பின்னர் மீண்டும் ஐம்பூதங்களில் ஒன்றான நீரிலேயே கரைக்கின்றனர்.</p><p>பல்வேறு வகையான விதத்திலும், பல பொருள்களினாலும் விநாயகரை பிரதிஷ்டைச் செய்வார்கள். சிலர் களிமண்ணாலும் விநாயகரை வடிப்பார்கள். விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடிவிட்டு, மூன்றாம் நாளிலோ அல்லது ஐந்தாம் நாளிலோ அல்லது அடுத்த சதுர்த்தி தினத்திலோ வழிபட்ட விநாயகரை பூஜை செய்து குளத்திலோ, நதியிலோ கரைத்து விடுகின்றனர். இதில், தெய்வீகத் தத்துவமும், மனித வாழ்க்கைத் தத்துவமும் மறைபொருளாக உணர்த்தப்பட்டு இருக்கிறது. </p><h2><strong>ஐம்பூதங்கள்</strong></h2><p>அதாவது, ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணிலிருந்து உருவாக்கப்பட்ட விநாயகரை சில நியமங்களோடு தெய்வீக நிலைக்கு உயர்த்தி, பொன், பொருள், அபிஷேகம், ஆராதனைகள் செய்து நைவேத்தியம் படைத்து தியானித்து பின்னர் மீண்டும் ஐம்பூதங்களில் ஒன்றான நீரிலேயே கரைக்கின்றனர்.</p><h2><strong>விநாயகரின் வழிபாடு</strong></h2><p>இடையிலே தோன்றி, இடையிலேயே மறைந்து விடுகிறது. அதே போல், மனிதனின் வாழ்வும் இப்புவியான மண் மீது தோன்றுகிறது. பிறகு, அவனை (மனிதனை) பலரும் போற்றுகின்றனர். பொன், பொருளாலும், சுக போகங்கள் பெறுகின்றனர். என்றாவது ஒருநாள் உடம்பு மண்ணுக்குள் போகப்போகிறது. அல்லது தீயில் எரிந்து சாம்பலாகி நீரிலே கரையப் போகிறது. எனவே ஞானமும், நற்கல்வியும், நற்செயல்பாடுகளாலும் உன்னை உயர்த்திக்கொள் என்பதை உணர்த்துவதாகும் விநாயகரின் வழிபாடு.</p><h2><strong>களிமண் உருவ தத்துவம்</strong></h2><p>களிமண் உருவ தத்துவம் மேலும் நற்பதவிகளும் கிடைக்கும். புற்று மண்ணால் செய்த பிள்ளையாரை வழிபட்டால் லாபம் கிடைக்கும். விநாயகர் சதுர்த்திக்குப் பூஜைக்கு உகந்த இலைகள். சிவனது பூஜைக்கு செய்யப்படும் அனைத்து இலைகளும், விநாயகரின் பூஜைக்கும் உகந்ததாக இருக்கிறது.வில்வம், அருகம்புல், கரிசலாங்கண்ணி, ஊமத்தை, துளசி, நாயுருவி, வின்னி இலை, செண்பகம், இலந்தை, மாதுளை, மரிக்கொழுந்து, ஜாதி மல்லி, வெள்ளருக்கு ஆகியவைகள் விநாயக சதுர்த்தி பூஜைக்கு உகந்த இலைகள் ஆகும்.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய் ஸ்டைலில் விநாயகர் சிலைகள்: சென்னை கொருக்குப்பேட்டையில் குவியும் ரசிகர்கள்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vinayagar-idols-designed-in-the-likeness-of-chief-minister-vijay-in-chennais-korukkupet</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vinayagar-idols-designed-in-the-likeness-of-chief-minister-vijay-in-chennais-korukkupet#comments</comments><guid isPermaLink="false">5c63894d-fb4f-4535-a476-a3c26f51a10a</guid><pubDate>Mon, 14 Sep 2026 03:14:55 +0000</pubDate><atom:updated>2026-09-14T03:14:55.293Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,விநாயகர் சிலைகள்,Vinayagar idols,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/w1iefyry/vi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vinayagar idols ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/w1iefyry/vi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விநாயகர் சிலைகள், விஜயின் சமீபத்திய திரைப்படத் தோற்றங்கள் மற்றும் அவரது அரசியல் வருகையின் அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. </p><p><a href="https://www.maalaimalar.com/spirituality/best-time-for-vinayaka-chaturthi-pooja-and-immersion">விநாயகர் சதுர்த்தி </a>விழாவையொட்டித் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விதவிதமான தோற்றங்களில் விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டுப் பூஜிப்பது வழக்கம். அந்த வகையில், சென்னையின் கொருக்குப்பேட்டை பகுதியில் முதலமைச்சர் விஜயை மையப்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகின்றன.</p><p>கொருக்குப்பேட்டையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த விநாயகர் சிலைகள், விஜயின் சமீபத்திய திரைப்படத் தோற்றங்கள் மற்றும் அவரது அரசியல் வருகையின் அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. இதில், சட்டப்பேரவையில் ஆக்ரோஷமாகப் பேசுவது போன்ற பாணியில் விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. </p><p>மேலும், தேர்தல் சமயங்களில் சைக்கிளில் சென்று வாக்களித்தது மற்றும் பிரசாரம் செய்ததை நினைவூட்டும் வகையில் சைக்கிள் ஓட்டுவது போல் விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், விஜய் நடித்த 'கில்லி' படத்தின் பிரபல கபடி காட்சியைப் பிரதிபலிக்கும் வகையில் விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.</p><h2>ரசிக<strong>ர்க</strong>ள் வரவேற்பு</h2><p>இந்த வினோதமான மற்றும் கலைநயமிக்க சிலைகளைக் காண அப்பகுதி மக்கள், இளைஞர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் அதிகளவில் திரண்டு வருகின்றனர். 'விஜய் விநாயகர்' என்று அழைக்கப்படும் இந்தச் சிலைகளுடன் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்துச் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். சினிமா மற்றும் அரசியலின் தாக்கம் வழிபாட்டு முறைகளிலும் எதிரொலிப்பது குறித்துச் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பரிமாறப்பட்டு வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>விநாயகப் பெருமானின் அருளால் அனைத்து நற்செயல்களும் இனிதே நிறைவேறட்டும்: முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/may-all-good-deeds-be-fulfilled-by-lord-ganeshas-grace-says-cm-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/may-all-good-deeds-be-fulfilled-by-lord-ganeshas-grace-says-cm-vijay#comments</comments><guid isPermaLink="false">ad882bdc-39fb-411a-856c-e6b5833e6fa7</guid><pubDate>Mon, 14 Sep 2026 03:13:54 +0000</pubDate><atom:updated>2026-09-14T03:13:54.901Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,cm vijay,முதலமைச்சர் விஜய்,Vinayagar Chaturthi 2026,விநாயகர் சதுர்த்தி 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/dpe9cwv3/Untitled-design-55.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay extends Vinayagar Chaturthi greetings]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/dpe9cwv3/Untitled-design-55.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் பக்தர்களுக்கு முதலமைச்சர் விஜய் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.</p><p>தமிழ்நாட்டில் <a href="https://www.maalaimalar.com/topic/விநாயகர்-சதுர்த்தி">விநாயகர் சதுர்த்தியை</a> கொண்டாடும் வகையில் பக்தர் பெருமக்கள் தங்கள் வீடுகளில் விநாயகருக்கு வழிபாடு நடத்தியும், கோவில்களுக்கு சென்று பிரார்த்தனைகளை நடத்தியும் வழிபட்டு வருகின்றனர். </p><p>அந்த வகையில் தமிழகத்தில் விநாயகரை வழிபடும் மக்களுக்கு, தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். </p><h3><strong>விநாயகர் சதுர்த்தி வாழ்த்து</strong></h3><p>இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,</p><p>விநாயகர் சதுர்த்தி திருநாளில், அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இத்திருநாளில் தொடங்கும் அனைத்து நற்செயல்களும் விநாயகப் பெருமானின் அருளால் இனிதே நிறைவேறி, புதிய நம்பிக்கைகள் மலர்ந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் பெருகட்டும்!</p><p>மக்களின் எண்ணங்கள் ஈடேறி, அனைத்து முயற்சிகளும் வெற்றியின் பாதையில் பயணிக்கட்டும்!</p><p>இவ்வாறு விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் பக்தர்களுக்கு, அவர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கோலாகலமாக தொடங்கிய விநாயகர் சதுர்த்தி .. தமிழகம் முழுவதும் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ganesha-chaturthi-celebrated-with-pomp-and-show-devotees-worship-in-temples-across-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ganesha-chaturthi-celebrated-with-pomp-and-show-devotees-worship-in-temples-across-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">968dfb94-7717-46c2-a2a2-1085c2a1005c</guid><pubDate>Mon, 14 Sep 2026 03:00:20 +0000</pubDate><atom:updated>2026-09-14T03:00:20.888Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பிள்ளையார்பட்டி,Pillaiyarpatti,விநாயகர் கோவில்,விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,vinayagar temple</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/21svq8z9/tn-28.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விநாயகர் சதுர்த்தி ]]></media:title><media:description type="html"><![CDATA[ விநாயகர் சதுர்த்தி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/21svq8z9/tn-28.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் விநாயகர் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.</p><p>நாடு முழுவதும் இன்று (விநாயகர் சதுர்த்தி) விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.</p><p>குறிப்பாக தமிழகத்தில் இவ்விழா வருடந்தோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இவ்வாண்டும் விழா கலைகட்டத் தொடங்கியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/spirituality/best-time-for-vinayaka-chaturthi-pooja-and-immersion">விநாயகர் சதுர்த்தியை</a> முன்னிட்டு இன்று காலையிலேயே மாநிலம் முழுவதும் விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் அதிகாலையிலேயே கோவில்களுக்கு வருகை தந்து தரிசனம் செய்து வருகின்றனர். பல்வேறு கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது.</p><h2>வழிபாடு</h2><p>குறிப்பாக பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில், புலியகுளம் முந்தி விநாயகர் கோயில், தாமிரபரணி நதிக்கரை உச்சிஷ்ட மகா கணபதி கோயில், புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் ஆகிய கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்ய ஏராளாமான பக்தர்கள் திரண்டுள்ளனர்.</p><p>மணக்குள விநாயகர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவர் மற்றும் உற்சவருக்குப் பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 21 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும் கலசாபிஷேகமும் செய்யப்பட்டன.</p><p>தொடர்ந்து பல கலை நிகழ்வுகள் நடைபெற உள்ளன. சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளைச் சேர்த்து மொத்தம் 3,000 சிலைகள் வரை நிறுவப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படவுள்ளன.</p><p>விநாயகர் சதுர்த்தியை ஒட்டி தமிழகம் முழுவதும் அலங்கார பொருட்கள் மற்றும் பூ, பழம், வாழை இலை உள்ளிட்ட <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vinayagar-chaturthi-flower-prices-soar">பொருட்களின் விலை</a>யும் அதிகரித்துள்ளது. இருப்பினும் பக்தர்கள் ஆர்வமுடன் பூஜை பொருட்களை வாங்கி கோவில்களுக்கு செல்வதோடு தத்தமது வீடுகளிலும் வழிபாடு செய்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>விநாயகப் பெருமானை வழிபடும் மற்றும் சிலையை கரைப்பதற்கான உகந்த நேரம்</title><link>https://www.maalaimalar.com/spirituality/best-time-for-vinayaka-chaturthi-pooja-and-immersion</link><comments>https://www.maalaimalar.com/spirituality/best-time-for-vinayaka-chaturthi-pooja-and-immersion#comments</comments><guid isPermaLink="false">fffe6188-078d-4e88-b2bc-ce3f2d9dfb72</guid><pubDate>Mon, 14 Sep 2026 02:48:32 +0000</pubDate><atom:updated>2026-09-14T02:48:32.153Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விநாயகர் கோவில்,விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,vinayagar temple,Vinayagar Chaturthi 2026,விநாயகர் சதுர்த்தி 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/a2bygydg/Untitled-design-54.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vinayagar Chaturthi Puja Timings]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/a2bygydg/Untitled-design-54.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்படும் நிலையில், விநாயகரை வாங்கும் நல்ல நேரம் மற்றும் வழிபாட்டு முறைகள் குறித்தும், விநாயகரை கரைப்பதற்கான வழிபாட்டு முறைகள் குறித்தும் ஆன்மீகவியலாளர் தெரிவித்துள்ளனர்.</p><p>விநாயகப் பெருமானின் பிறப்பை கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் உள்ள மக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வணங்கியும், கோவில்களுக்கு சென்று பிரார்த்தனைகளை செய்தும் விநாயகர் சதுர்த்தி தினத்தை கொண்டாடி வருகின்றனர். </p><p>அந்த வகையில் வருடத்திற்கு ஒருமுறை கொண்டாடப்படும் <a href="https://www.maalaimalar.com/topic/விநாயகர்-சதுர்த்தி">விநாயகர் சதுர்த்தி</a> இன்று (14.09.26) காலை 08:41 மணி முதல் தொடங்கி நாளை (15.09.26) காலை 09:22 மணி வரையில் முடியும் வகையில் அமைந்துள்ளது.</p><h3><strong>விநாயகரை வாங்கும் நேரம்</strong></h3><p>விநாயகரை இன்று வாங்கும் நல்ல நேரமாக காலை 09:10 மணி முதல் 10:20 மணிக்குள் இடைப்பட்ட காலம் அமைந்துள்ளது.</p><p>அதேபோன்று விநாயகரை வழிபடும் உகந்த நேரமாக இன்று காலை 09:15 மணி முதல் 10:20 மணியளவிலான இடைப்பட்ட காலம் அமைந்துள்ளது.</p><p>மேலும் இன்று மதியம் 01:00 மணி முதல் 02:00 மணி வரையும், மாலை 06:00 மணி முதல் 08:00 மணி வரையும் விநாயகரை வழிபடும் உகந்த நேரமாக பார்க்கப்படுகிறது.</p><h3><strong>வழிபாட்டு முறைகள்</strong></h3><p>விநாயகரை வழிபடும் பக்தர்கள் தங்கள் வீடுகளில் பாலை காய்ச்சி, அதில் தேன் கலந்து வைத்து நெய் வைத்தியம் பண்ணும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>அவல், பொறி, கடலை மற்றும் தேங்காய் வாங்கி வைத்து பிரார்த்தனை செய்பவர்களும், அதை வாங்கி விநாயகரை வணங்கும்படி ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>சர்க்கரைப் பொங்கல், கொழுக்கட்டை, சுண்டல், அவல் பாயாசம் அல்லது பருப்பு பாயாசம் செய்துவைத்து வி நாயகப் பெருமானை வழிபாடு செய்யலாம்.</p><p>ஒரு அருகம்புல்லை கொண்டு சென்று விநாயகரின் திருவடியில் வைத்து உள்ளமுருகி வணங்கினால், அவர்களின் நல்ல மனதிற்கு ஏற்ப, வேண்டியதை தருபவராக விநாயகர் பெருமான் உள்ளார்.</p><h3><strong>வீடுகளில் விநாயகர்</strong></h3><p>மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வீட்டில் உள்ள மஞ்சள் மற்றும் பச்சரியை பயன்படுத்தி விநாயகரை செய்து உள்ளன்போடு பக்தியுடன் வழிபடும்படி ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>விநாயகரை அருகில் உள்ள கோவில்களுக்கு எடுத்து சென்றும் அல்லது விநாயகரை மொத்தமாக வழிபடும் இடங்களிலும் வைத்து புனிதமான முறையில் கரைக்கும்படி ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.</p><h3><strong>விநாயகரை கரைப்பதற்கு உகந்த நேரம்</strong></h3><p>விநாயகரை ஞாயிற்று கிழமை வாங்கி இருந்தால், அதனை கரைப்பதற்கு உகந்த நேரமாக வியாழக்கிழமை அமைந்துள்ளது. மேலும் வியாழக்கிழமை காலை 08:00 மணி முதல் 09:00 மணி வரையிலும் அல்லது காலை 10:45 மணி முதல் மதியம் 01:00 மணி வரையிலும் கரைப்பதற்கு உகந்த நேரமாக பார்க்கப்படுகிறது.</p><p>விநாயகரை திங்கட் கிழமை வாங்கி இருந்தால், அதனை கரைப்பதற்கு உகந்த நேரமாக புதன்கிழமை அமைந்துள்ளது. மேலும் புதன்கிழமை காலை 09:00 மணி முதல் 10:20 மணி வரை கரைப்பதற்கு உகந்த நேரமாக பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>மோஷின் நக்வியிடம் கோப்பையை வாங்க கூடாது என்பது பிசிசிஐ-யின் நிலைப்பாடு - பயிற்சியாளர் அமோல் முஜும்தார்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/the-bccis-stance-is-not-to-accept-the-trophy-from-mohsin-naqvi-coach-amol-muzumdar</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/the-bccis-stance-is-not-to-accept-the-trophy-from-mohsin-naqvi-coach-amol-muzumdar#comments</comments><guid isPermaLink="false">896561ab-6d78-437c-9b2a-385f91233dd5</guid><pubDate>Mon, 14 Sep 2026 02:32:56 +0000</pubDate><atom:updated>2026-09-14T02:32:56.071Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BCCI,Mohsin Naqvi,Women&apos;s Asia Cup,பிசிசிஐ,மகளிர் ஆசிய கோப்பை,மோஷின் நக்வி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/twzdwmqu/tn-27.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மோஷின் நக்வி, அமோல் முஜும்தார்]]></media:title><media:description type="html"><![CDATA[ மோஷின் நக்வி, அமோல் முஜும்தார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/twzdwmqu/tn-27.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2026 மகளிர் ஆசியக் கோப்பையை வென்ற மகளிர் அணி மோஷின் நக்வியிடம் கோப்பையை வாங்க மறுத்தன் பின்னணி </p><p>துபாயில் நடைபெற்ற 2026 மகளிர் ஆசியக் கோப்பை டி20 இறுதிப்போட்டியில் இலங்கை அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி 8வது முறையாக கோப்பையை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.  </p><p>இருப்பினும், போட்டியின் முடிவில் ஆசியக் கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின்  தலைவருமான மோஷின் நக்வியிடமிருந்து  கோப்பையைப் பெற இந்திய அணி மறுத்துவிட்டது. </p> <h2>போட்டி</h2><p>முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ஷெபாலி வர்மா (68) மற்றும் ஸ்மிருதி மந்தனா (59) இணைந்து 129 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர்.</p><p>இறுதியில் 184 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி, இந்தியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 20 ஓவர்களில் 111 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.</p> <h2>கோப்பையை வாங்க மறுப்பு</h2><p>போட்டி முடிந்த பிறகு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் நக்வியிடமிருந்து கோப்பையைப் பெற முடியாது என்பதில் இந்திய அணி உறுதியாக இருந்தன.</p><p>ஏசிசி துணைத் தலைவர் காலித் அல் ஜரூனி மூலம் கோப்பையை இந்திய அணிக்கு வழங்கலாம், வெற்றி பெற்ற நாட்டின் கிரிக்கெட் வாரியப் பிரதிநிதி கோப்பையை வழங்கலாம் என இந்திய அணி தரப்பு தெரிவித்தது.</p><p>ஆனால், இந்த இரண்டு கோரிக்கைகளையும் நக்வி நிராகரித்து, தான் தான் கோப்பையை வழங்குவேன் என அடம்பிடித்தார்.</p><p>இதன் காரணமாக, இந்திய அணி கோப்பையையோ அல்லது வெற்றிப் பதக்கங்களையோ பெறாமல் விழாவைப் புறக்கணித்தது.</p> <h2>பயிற்சியாளர் சொன்னது என்ன?</h2><p>செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்திய மகளிர் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அமோல் முஜும்தார்</p><p>"இது பிசிசிஐ எடுத்த கொள்கை முடிவு; நாங்கள் எங்கள் வாரியத்தின் முடிவிற்குத் துணை நிற்கிறோம்.</p><p>எங்களைப் பொறுத்தவரை இந்தத் தொடர் முடிந்துவிட்டது. மைதானத்தின் பெரிய திரையிலேயே 'இந்தியா ஆசியக் கோப்பை 2026 சாம்பியன்' என அறிவிக்கப்பட்டுவிட்டது.</p> <p>நாங்கள் சாம்பியன் பட்டம் வென்றதில் மகிழ்ச்சி அடைகிறோம். அடுத்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்." என தெரிவித்தார்.</p><p>2025 ஆண்கள் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியிலும் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான கசப்பால் நக்வியிடம் இந்திய அணி கோப்பையை வாங்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.</p> <h2>மோஷின் நக்வி யார்?</h2><p>மோஷின் சின் நக்வி தற்போது பாகிஸ்தான் நாட்டின் உள்நாட்டமைச்சர் ஆகவும் செயல்பட்டு வருகிறார்.</p><p>ஒரு நாட்டின் உள்நாட்டமைச்சராக இருக்கும் நபர், சர்வதேச ஆசியக் கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் முரண்பாடுகளை உருவாக்குகிறது என்ற விமர்சனம் உள்ளது.</p><p>2025 சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடைபெற்றபோது, பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி அங்கு செல்ல மறுத்தது. அப்போது இந்தியாவிற்கு எதிராகக் கடுமையான கருத்துகளை நக்வி தெரிவித்திருந்தார்.</p><p>"போர் தான் உங்களுடைய பெருமையின் அளவுகோல் என்றால், வரலாறு ஏற்கனவே பாகிஸ்தானின் கைகளில் உங்களுக்கு ஏற்பட்ட அவமானகரமான தோல்விகளைப் பதிவு செய்துள்ளது" என 1999 இல் கார்கில் போரில் இந்தியாவை பாகிஸ்தான் வென்றதுபோல சித்தரித்து நக்வி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>2029-க்குள் என்டிஏ ஆளும்  21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் - அமித் ஷா 
</title><link>https://www.maalaimalar.com/news/national/uniform-civil-code-to-be-implemented-in-all-21-nda-ruled-states-by-2029-amit-shah</link><comments>https://www.maalaimalar.com/news/national/uniform-civil-code-to-be-implemented-in-all-21-nda-ruled-states-by-2029-amit-shah#comments</comments><guid isPermaLink="false">1f9ee204-7308-460e-9d6d-e508fc6a9d71</guid><pubDate>Mon, 14 Sep 2026 01:58:11 +0000</pubDate><atom:updated>2026-09-14T01:58:11.943Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,Amit Shah,அமித் ஷா,பொது சிவில் சட்டம்,UCC</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/lz3jmr7i/tn-26.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமித் ஷா ]]></media:title><media:description type="html"><![CDATA[ அமித் ஷா ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/lz3jmr7i/tn-26.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாஜகவின் என்டிஏ கூட்டணி ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் 2029ஆம் ஆண்டிற்குள் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.</p> <p>மும்பையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/amit-shah">அமித் ஷா</a> இதை தெரிவித்தார். </p><h2>பொது சிவில் சட்டம்</h2><p>வெவ்வேறு மதங்களுக்கு உள்ள விதிவிலக்குகளை ரத்து செய்து திருமணம், விவாகரத்து, வாரிசு உரிமை மற்றும் தத்தெடுப்பு தொடர்பான ஒரே மாதிரியான சட்டத்தை அமல்படுத்துவதே <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">பொது சிவில் சட்டம்</a> ஆகும்.</p><p>பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெறும் மாநிலமான உத்தரகாண்டில் ஏற்கனவே பொது சிவில் சட்டம் அமலில் உள்ளது.</p><p>குஜராத் , மத்தியப் பிரதேசம், அசாம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் அந்தந்த மாநில சட்டமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெற்றுள்ளது.</p><h2></h2><p>கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அவற்றை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகின்றனர்.</p><p>இந்நிலையில் 2029ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பாக, என்டிஏ ஆட்சியிலுள்ள 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அமித் ஷா மும்பையில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.</p> <h2>பொருளாதார வளர்ச்சி</h2><p>தொடர்ந்து பேசிய அமித் ஷா, "2014க்கு முன்னிருந்த ஊழல், வாரிசுஅரசியல் மற்றும்பலவீனமான பொருளாதார நிலையிலிருந்து விடுபட்டு, தற்போது இந்தியா உலகின் முதல் 5 பொருளாதார நாடுகளுக்குள் இணைந்துள்ளது.</p><p>முதல் காலாண்டில் 7.8% ஜிடிபி வளர்ச்சியைப் பதிவு செய்து, சர்வதேச அளவில் முன்னணி பொருளாதார நாடுகளை இந்தியா வழிநடத்துகிறது.</p> <p>'ஆபரேஷன் சிந்தூர்' மற்றும் எதிரிகளின் எல்லைக்குள் சென்று தாக்குவதன் மூலம் இந்தியா பயங்கரவாதத்திற்கு எதிராக பூஜ்ய சகிப்புத்தன்மை கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது.</p><p>நாட்டில் உள்ள சட்டவிரோத ஊடுருவல்காரர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்பதில் அரசு உறுதியாக உள்ளது." என்று தெரிவித்தார்.</p> ]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 14 செப்டம்பர் 2026: விநாயகர் சதுர்த்தி
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-14-september-vinayagar-chaturthi</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-14-september-vinayagar-chaturthi#comments</comments><guid isPermaLink="false">2067c647-f77e-4fdc-ab6a-363fc39ad812</guid><pubDate>Mon, 14 Sep 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-09-14T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/8l505thh/vinayagar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  vinayagar ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/8l505thh/vinayagar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம் </h2><p>பராபவ ஆண்டு ஆவணி-28 (திங்கள்கிழமை)</p><p>பிறை : வளர்பிறை</p><p>திதி : திருதியை காலை 8.40 வரை பிறகு சதுர்த்தி </p><p>நட்சத்திரம் : சித்திரை மாலை 4.12 வரை பிறகு சுவாதி</p><p>யோகம் : சித்த / அமிர்தயோகம்</p> <p>ராகு காலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை</p><p>எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை</p><p>சூலம் : கிழக்கு</p><p>நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை</p> <h2>ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம்</h2><p>சதுர்த்தி விரதம். ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி. தேவக்கோட்டை பிள்ளையார்பட்டி, உப்பூர் கோவில்களில் ஸ்ரீ விநாயகப் பெருமான் தீர்த்தவாரி. திருவலஞ்சுழி ஸ்ரீ சுவேத விநாயகர் ரதோற்சவம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் திருமஞ்சன சேவை. கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதர் அபிஷேகம். </p><p>திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மஹாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீகபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ அராளகேசி அம்பாள் சமேத ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம். தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம்.</p>  <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - புகழ்</p><p>ரிஷபம் - கீர்த்தி</p><p>மிதுனம் - சுபம்</p><p>கடகம் - நட்பு</p><p>சிம்மம் - அன்பு</p><p>கன்னி - சாந்தம்</p> <p>துலாம் - வெற்றி</p><p>விருச்சிகம் - வரவு</p><p>தனுசு - சுகம்</p><p>மகரம் - போட்டி</p><p>கும்பம் - திறமை</p><p>மீனம் - பாராட்டு</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/chennai-fuel-price-update-iran-conflict-pushes-crude-oil-up-todays-petrol-and-diesel-rates-announced-5</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/chennai-fuel-price-update-iran-conflict-pushes-crude-oil-up-todays-petrol-and-diesel-rates-announced-5#comments</comments><guid isPermaLink="false">e5904344-f988-485a-9fa9-24eb21b21b84</guid><pubDate>Mon, 14 Sep 2026 01:19:16 +0000</pubDate><atom:updated>2026-09-14T01:19:16.992Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டீசல் விலை,Diesel price,Petrol Price,பெட்ரோல் விலை,இன்றைய பெட்ரோல் விலை,Todays petrol price</media:keywords><media:content height="576" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/1xkldom8/maalai-malar2026-08-14alj4ing3maalai-malar2026-07-28zqvhuwkktn-2.avif" width="1024"><media:title type="html"><![CDATA[ பெட்ரோல், டீசல் விலை நிலவரம்]]></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல், டீசல் விலை நிலவரம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/1xkldom8/maalai-malar2026-08-14alj4ing3maalai-malar2026-07-28zqvhuwkktn-2.avif?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பெட்ரோல், டீசல் விலை</h2><p>இன்றைய (14.09.2026 - திங்கள்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.76-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/iranian-attack-on-us-warships-will-lead-to-oil-tanker-strikes-us-warns">ஈரான் போரினால்</a> மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p><h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது.</p><p>அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.</p><h2>கச்சா எண்ணெய் விலை</h2><p>இன்று சர்வதேச சந்தையில் பிரனட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 107.65 டாலர் என விற்பனை ஆகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>Today Rasipalan | இன்றைய ராசிபலன் 14.9.2026: இந்த ராசிக்காரர்கள்  எடுக்கும் முடிவு வெற்றி தரும் </title><link>https://www.maalaimalar.com/astrology/todays-horoscope-1492026-decisions-made-by-individuals-of-these-zodiac-signs-will-lead-to-success</link><comments>https://www.maalaimalar.com/astrology/todays-horoscope-1492026-decisions-made-by-individuals-of-these-zodiac-signs-will-lead-to-success#comments</comments><guid isPermaLink="false">afcd6591-37eb-4ba7-95c4-917fdf41e000</guid><pubDate>Mon, 14 Sep 2026 01:01:30 +0000</pubDate><atom:updated>2026-09-14T01:01:30.329Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-04-12/8s8oyr31/astrology.jpg.jpeg" width="1500"><media:title type="html"><![CDATA[ Rasipalan]]></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-04-12/8s8oyr31/astrology.jpg.jpeg?w=280" width="280"></media:thumbnail><category>ராசிபலன்(Rasipalan)</category><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>ஆனந்த வாழ்வமைய ஆனைமுகனை  வழிபட வேண்டிய நாள். எதிர்பார்த்த தகவலொன்று வந்து சேரலாம். சமூகத்தில் உயர்ந்த மனிதர்களின் நட்பு கிட்டும்.</p><h2>ரிஷபம் </h2><p>ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். மதி நுட்பத்தால் மகத்தான காரியமொன்றைச் செய்து முடிப்பீர்கள். வீடு சம்பந்தமாக எடுக்கும் முடிவு வெற்றி தரும்.</p><h2>மிதுனம் </h2><p>இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும் நாள். எடுத்த முயற்சி வெற்றி தரும். உடன்பிறப்புகள் வழியில் உருவான மனக்கசப்புகள் மாறும்.</p> <h2>கடகம்</h2><p>வருமான உயர்விற்கு வழிபிறக்கும் நாள். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியேடுத்து வைப்பீர்கள். உறவினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.</p><h2>சிம்மம்</h2><p>கொடுத்த வாக்கை காப்பாற்றும் நாள். இல்லத்தினர்களின் ஒத்துழைப்போடு இனிய பணிகளைச் செய்து முடிப்பீர்கள்.</p><h2>கன்னி</h2><p>தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். ஆதாயமில்லாத உண்டு. குடும்ப விஷயங்களை முன்றாம் நபரிடம் கொள்ள வேண்டாம்.</p> <h2>துலாம்</h2><p>இடமாற்றம் பற்றிச் சிந்திக்கும் நாள். உள்ளம் மகிழும் சம்பவ இல்லத்தில் நடபெறும். வருமோ, வராதோ என்று நினைத்த பணவரவொன்று கைக்குக் கிடைக்கலாம்.</p><h2>விருச்சகம்</h2><p>வெற்றிகள் குவிய விநயரகை வழிபட வேண்டிய நாள். கண்ணியமிக்கவர்கள் கைக்கொடுத்து உதவுவர். தொழிலில் புதிய பணியாளர்கள் வந்திணைவர்.</p><h2>தனுசு</h2><p>திட்டமிட்ட காரியமொன்றில் திடீர் மாற்றம் ஏற்படும் நாள். உடல் நலத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு உண்டு.</p> <h2>மகரம்</h2><p>அலைபேசி மூலம் ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும் நாள். நினைத்தது நிறைவேறும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் உதவி கிடைக்கும்.</p><h2>கும்பம்</h2><p>துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். பஞ்சாயத்துகளில் நல்ல முடிவு கிடைக்கும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.</p><h2>மீனம்</h2><p>யோசித்துப் செயல்பட வேண்டிய நாள். வீடு மாற்றம் உருவாகும். ஆரோக்கியத்தில் அச்சறுத்தல்கள் ஏற்படும். வாக்குவாதங்கள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.</p>]]></content:encoded></item><item><title>ரஷ்ய டீசல் மீதான தாக்குதல்களை நிறுத்துங்கள் - உக்ரைனுக்கு அதிபர் டிரம்ப் வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/world/trump-calls-on-ukraine-to-halt-strikes-on-russian-diesel-fuel</link><comments>https://www.maalaimalar.com/news/world/trump-calls-on-ukraine-to-halt-strikes-on-russian-diesel-fuel#comments</comments><guid isPermaLink="false">9b9c6ed3-14c4-46fa-9b36-3a778ed15dbe</guid><pubDate>Mon, 14 Sep 2026 00:27:58 +0000</pubDate><atom:updated>2026-09-14T00:27:58.486Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Ukraine,டொனால்டு டிரம்ப்,Donald Trump,உக்ரைன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-26/gewqg8fo/donald.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அதிபர் டிரம்ப்]]></media:title><media:description type="html"><![CDATA[ Donald Trump]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-26/gewqg8fo/donald.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world">ரஷ்யா</a> எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் டீசல் உற்பத்தி மற்றும் விநியோகத்திற்குப் பயன்படுத்தப்படும் பிற உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை அமெரிக்க அதிபர் <a href="https://www.maalaimalar.com/topic/donald-trump">டொனால்டு டிரம்ப்</a> வலியுறுத்தினார்.</p><p>இந்த தாக்குதல்கள் உலகளாவிய பற்றாக்குறையை ஏற்படுத்துவதாக அவர் கூறினார். அமெரிக்காவில் டீசல் விலை வெள்ளிக்கிழமையன்று ஒரு கேலனுக்கு சராசரியாக 6 அமெரிக்க டாலருக்கும் அதிகமாக உயர்ந்து சாதனை படைத்த நிலையில் அவர் இவ்வாறு பேசினார். </p><h2>டீசல் ஏற்றுமதிக்கு தடை:</h2><p>உக்ரைன் பல மாதங்களாக நீண்ட தூரத் தாக்குதல்கள் மூலம் ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையை குறிவைத்து வருகிறது. இதனால் ரஷ்யா முழுவதும் எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நிலை ஏற்பட்டதுடன், ஜூலை மாதத்தில் டீசல் ஏற்றுமதிக்கு மாஸ்கோ தடை விதித்தது; இது ஏற்கனவே பற்றாக்குறை நிலவும் உலக சந்தையில் இருந்து விநியோகத்தை குறைத்தது.</p><p>எனினும், ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் போக்குவரத்தை பாதித்த மோதல்களுக்கு பின்னரும் இந்த உலகளாவிய எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டது. நவம்பரில் நடைபெறவுள்ள இடைக்கால தேர்தல்களில் வாக்களிக்க தயாராகி வரும் அமெரிக்கர்களுக்கு எரிபொருள் விலை உயர்வு பெரும் சுமையாக அமைந்துள்ளது.</p><h2>அதிபர் டிரம்ப் வலியுறுத்தல்:</h2><p>ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனான தனது சமீபத்திய உரையாடலுக்கு பிறகு ஜெலன்ஸ்கியுடன் பேசினாரா என்று செய்தியாளர் ஒருவர் டிரம்ப்பிடம் கேட்டார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக, ரஷ்யா மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு ஜெலன்ஸ்கியை அவர் வலியுறுத்தினார்.</p><p>"திரு. ஜெலென்ஸ்கி ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டும். ரஷ்யாவில் டீசல் எரிபொருள் விநியோகத்தை முடக்கும் நடவடிக்கைகளை அவர் நிறுத்த வேண்டும்," என்று தனது டூன்பெக் கோல்ஃப் கிளப்பில் நடைபெற்ற 'ஐரிஷ் ஓபன்' போட்டியின்போது செய்தியாளர்களிடம் டிரம்ப் கூறினார்.</p><p>"நாங்கள் இது குறித்து திரு. ஜெலென்ஸ்கியிடம் பேசினோம். தாக்குதல் நடத்த வேறு பல இலக்குகள் உள்ளன. டீசல் எரிபொருள் நிலையங்களை தாக்க வேண்டாம்; ஏனெனில் அது பாதிப்பை ஏற்படுத்துகிறது, அது உலகையே பாதிக்கிறது," என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அலெக்சாண்டர் ஸ்வரேவ் தனது 2வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று அசத்தல்</title><link>https://www.maalaimalar.com/sports/tennis/us-open-2026-alexander-zverev-clinches-2nd-grand-slam-title</link><comments>https://www.maalaimalar.com/sports/tennis/us-open-2026-alexander-zverev-clinches-2nd-grand-slam-title#comments</comments><guid isPermaLink="false">7310c502-bb18-4557-b743-91514473ad55</guid><pubDate>Sun, 13 Sep 2026 23:59:54 +0000</pubDate><atom:updated>2026-09-13T23:59:54.065Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அலெக்சாண்டர் ஸ்வரேவ்,Alexander Zverev,அமெரிக்க ஓபன் டென்னிஸ்,US Open 2026</media:keywords><media:content height="2320" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/ls1k4euu/Alexander-Zverev" width="3479"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Alexander Zverev]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/ls1k4euu/Alexander-Zverev?w=280" width="280"></media:thumbnail><category>டென்னிஸ் (Tennis)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் <a href="https://www.maalaimalar.com/sports/tennis">டென்னிஸ்</a> போட்டி நியூ யார்க் நகரில் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி சுற்றில் அலெக்சாண்டர் ஸ்வரேவ் மற்றும் பென் ஷெல்டன் மோதினர். </p><p>இந்தப் போட்டியில் பென் ஷெல்டனை 6-3, 7-6 (7/2), 5-7, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, அலெக்சாண்டர் ஸ்வரேவ் அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றார். இதன் மூலம், தனது இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று, ஃப்ளஷிங் மெடோஸில் ஏற்பட்ட கசப்பான தோல்வியின் நினைவை அவர் துடைத்தெறிந்தார்.</p><h2>இரண்டாவது ஜெர்மானிய வீரர்:</h2><p>2020-இல் அமெரிக்க ஓபன் பட்டத்தை வெல்வதற்கு இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் இருந்தும், டொமினிக் தீமிடம் ஐந்து கடினமான செட்களில் தோல்வியடைந்த, முதல் நிலை வீரரான ஸ்வரேவ், இந்த ஆண்டு வென்ற பிரெஞ்சு ஓபன் பட்டத்துடன் இந்தப் பட்டத்தையும் சேர்த்துக் கொண்டார்.</p><p>23 ஆண்டுகளில் கிராண்ட்ஸ்லாம் கோப்பையை வென்ற முதல் அமெரிக்க வீரர் என்ற பெருமையை ஷெல்டன் பெறும் முயற்சியை அவர் தடுத்தார். 1989-இல் போரிஸ் பெக்கருக்கு பிறகு, ஓபன் எராவில் ஒரே ஆண்டில் இரண்டு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற இரண்டாவது ஜெர்மானிய வீரர் ஸ்வரேவ் ஆவார்.</p><h2>சமாளிக்க திணறிய ஷெல்டன்:</h2><p>நடப்பு சாம்பியனான கார்லோஸ் அல்கராஸுக்கு எதிரான தனது ஐந்து செட் காலிறுதி வெற்றி மற்றும் அரையிறுதியில் சக நாட்டவரான பிரான்சிஸ் டியாஃபோவுக்கு எதிரான பின்தங்கிய நிலையில் இருந்து மீண்டெழுந்து பெற்ற வெற்றி ஆகியவற்றிற்கு பிறகு, ஷெல்டன் தனது வெற்றி வறட்சியை முடிவுக்கு கொண்டு வருவார் என்ற நம்பிக்கை அதிகமாக இருந்தது.</p><p>ஆனால், ஆர்தர் ஆஷ் மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் அமெரிக்க வீரரை வெற்றிபெற செய்ய முயன்றபோதிலும், ஸ்வரேவின் ஆடுகளம் தழுவிய சிறப்பான ஆட்டம் ஷெல்டனுக்குச் சமாளிக்க முடியாததாக இருந்தது.</p>]]></content:encoded></item><item><title>ஆசியக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/national/amit-shah-greets-indian-womens-cricket-team-for-winning-asia-cup</link><comments>https://www.maalaimalar.com/news/national/amit-shah-greets-indian-womens-cricket-team-for-winning-asia-cup#comments</comments><guid isPermaLink="false">b93af372-d369-46f6-9811-de5b0c5e7b2f</guid><pubDate>Sun, 13 Sep 2026 23:29:49 +0000</pubDate><atom:updated>2026-09-13T23:29:49.600Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Amit Shah,அமித் ஷா,Women&apos;s Asia Cup,மகளிர் ஆசிய கோப்பை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/hw6254ko/Amit-Shah-and-IND-W-Team.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Amit Shah and IND W Team]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/hw6254ko/Amit-Shah-and-IND-W-Team.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியைத் திறம்பட வீழ்த்தி, 8-ஆவது முறையாக <a href="https://www.maalaimalar.com/topic/womens-asia-cup">மகளிர் ஆசியக் கோப்பைை</a> வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்தார்.</p><h2>எக்ஸ் தளப் பதிவு:</h2><p>இது குறித்து தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பதிவில் மத்திய அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/amit-shah">அமித் ஷா</a> பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "ஆசிய கிரிக்கெட்டில் இந்தியா மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது. 8-ஆவது மகளிர் ஆசியக் கோப்பையை வென்ற நமது வெற்றியாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். </p><p>இந்தத் தொடர் முழுவதும் உங்கள் அசைக்க முடியாத ஆதிக்கத்தால் தேசத்தையே உற்சாகப்படுத்தியதோடு, லட்சக்கணக்கானோருக்கு உத்வேகம் அளிக்கும் பாதையையும் அமைத்துள்ளீர்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p>ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கோப்பையைக் கைப்பற்றியது.</p><h2>இந்திய அணி திட்டவட்டம்:</h2><p>இதைத் தொடர்ந்து இலங்கையை வென்ற இந்திய அணி, ஆசிய மகளிர் கோப்பையை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் தலைவருமான மொஹ்சின் நக்வியிடம் இருந்து பெற்றுக்கொள்ள மறுத்தது. இந்திய ஆடவர் அணியிடம் ஆசிய கோப்பையை ஒப்படைக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மறுத்த ஓராண்டுக்கு பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p><p>இலங்கைக்கு எதிரான தனது இறுதி வெற்றியை இந்தியா உறுதி செய்துகொண்டிருந்தபோது, ​​ஆட்டத்தின் பிற்பகுதியில் மொஹ்சின் நக்வி பிரமுகர்களுடன் அமர்ந்திருந்ததை கேமராக்கள் பதிவு செய்தன. ஆட்டம் முடிந்து இந்தியா 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றபோது, ​​அவர் பி.சி.சி.ஐ. துணை தலைவர் ராஜீவ் சுக்லா, செயலாளர் தேவாஜித் சைகியா மற்றும் பிறருக்கு அருகில் அமர்ந்திருப்பது காணப்பட்டது.</p><p>மேடையில் இருந்த நக்வி, இரண்டாம் இடத்திற்கான காசோலையை இலங்கை கேப்டன் சமரி அட்டப்பட்டுவிடம் வழங்கினார். அட்டப்பட்டு, ஃபார்வெஸ் மஹரூஃபுடன் பேசிய உடனேயே, பரிசளிப்பு விழா முடிவுக்கு வந்தது.</p>]]></content:encoded></item><item><title>ஏமனில் தீவிரமாகும் மோதல்: சவுதி அரேபியா மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்</title><link>https://www.maalaimalar.com/news/world/fighting-in-yemen-intensifies-houthis-launch-more-attacks-on-saudi-arabia</link><comments>https://www.maalaimalar.com/news/world/fighting-in-yemen-intensifies-houthis-launch-more-attacks-on-saudi-arabia#comments</comments><guid isPermaLink="false">3710a5a9-5447-4451-b413-b0b71f642dfc</guid><pubDate>Sun, 13 Sep 2026 23:06:14 +0000</pubDate><atom:updated>2026-09-13T23:06:14.801Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Saudi Arabia,சவுதி அரேபியா,Yemen,ஏமன்,houthis,ஹவுதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/bwqq1nue/Houthis-launch-more-attacks-on-Saudi-Arabia.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Houthis launch more attacks on Saudi Arabia]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/bwqq1nue/Houthis-launch-more-attacks-on-Saudi-Arabia.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஏமனில் ஞாயிற்றுக்கிழமை மோதல் தீவிரமடைந்தது. செங்கடல் பகுதியில் <a href="https://www.maalaimalar.com/news/world">ஈரான்</a> ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அரசுப் படைகள் தாக்குதல்களைத் தொடங்கின; அதேவேளையில், ஏமன் அரசை ஆதரிக்கும் அண்டை நாடான <a href="https://www.maalaimalar.com/topic/saudi-arabia">சவுதி அரேபியா</a> மீதும் ஹூதிகள் தாக்குதல் நடத்தினர்.</p><p>ஹார்முஸ் நீரிணைக்கு மாற்றாக கருதப்படும் மிக முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதையான 'பாப்-எல்-மண்டேப்' நீரிணையில் உள்ள ஒரு தீவையும், மோகா (Mokha) துறைமுக நகரத்தையும் ஹூதிகள் கைப்பற்றியதன் மூலம் கடந்த வாரம் ஒரு "வலிமிகுந்த" தோல்வியை ஏமன் அரசு சந்தித்தது. இதைத் தொடர்ந்து, செங்கடல் கடற்கரை பகுதிக்குக் கூடுதல் படைகளை அனுப்பப்போவதாக ஏமன் அரசு உறுதியளித்தது.</p><h2>ஈரானுக்கு சாதகமான நிலை:</h2><p>இந்த மோதல் தீவிரமடைவது - குறிப்பாக சவுதியின் எண்ணெய் உள்கட்டமைப்பு மற்றும் செங்கடலில் உள்ள அதன் கப்பல்கள் மீது ஹூதிகள் நடத்தும் தாக்குதல்கள் - உலகளாவிய எண்ணெய் விநியோகம் மற்றும் விலையில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது அமெரிக்காவுடனான போரில் ஈரானுக்கு சாதகமான நிலையை அளிக்கக்கூடும்.</p><p>ஏமன் மீண்டும் ஒரு உள்நாட்டுப் போருக்குள் தள்ளப்படும் அபாயம் உள்ள நிலையில், செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் இருந்து அங்கு நடைபெற்று வரும் சண்டையால் 80,000-க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது.</p><p>செங்கடல் பகுதியில் உள்ள ஹோடைடா மாகாணத்தின் காவ்கா நகரத்தில் இருந்து நள்ளிரவில் தப்பிச் சென்றபோது, ​​ஹூதிகள் அந்நகரை கைப்பற்றுவதற்கு சற்று முன்பு, தனது அருகிலேயே ஒரு மோர்டார் குண்டு விழுந்ததாக பெண் ஒருவர் தெரிவித்தார்.</p><p>"கார்களும் பேருந்துகளும் எரிவதையும், குழந்தைகள் மற்றும் பெண்களின் உடல்கள் சாலையில் கிடப்பதையும் என் கண்களால் பார்த்தேன்; அது ஒரு பயங்கரமான காட்சியாக இருந்தது," என்று அந்தப் பெண் கூறினார். தனது மற்றும் தன் குடும்பத்தினரின் பாதுகாப்பு கருதி அவர் பெயர் குறிப்பிடாமல் பேசினார்.</p><h2>எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தன:</h2><p>தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கும் வகையில், சவுதி அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை மதியம் தெற்கு நகரமான அப்கா மற்றும் காமிஸ் முஷைட் மாகாணத்தில் எச்சரிக்கை சைரன்களை ஒலித்தனர். இவ்விரு பகுதிகளும் சமீபத்திய வாரங்களில் ஹூதிகளால் பலமுறை தாக்கப்பட்டுள்ளன.</p><p>சமீபத்தில் அறிவிக்கப்பட்ட முற்றுகையின் ஒரு பகுதியாக, சவுதியின் எண்ணெய் உள்கட்டமைப்பு மற்றும் கப்பல் போக்குவரத்தை ஹூதிகள் குறிவைத்து வருகின்றனர். </p><p>மற்ற நாடுகளின் வணிகக் கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தல் விடுக்க தங்களுக்கு விருப்பமில்லை என்று ஹூதிகள் கூறியிருந்தாலும், சந்தைகள் எச்சரிக்கையுடனேயே உள்ளன; மேலும் எண்ணெய் விலையும் மீண்டும் உயர்ந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுவதால், மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது - திருமாவளவன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-said-communists-contesting-in-by-elections-wont-affect-alliance</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-said-communists-contesting-in-by-elections-wont-affect-alliance#comments</comments><guid isPermaLink="false">9d8cec7a-593d-4002-a9e2-24849e5788cb</guid><pubDate>Sun, 13 Sep 2026 22:38:52 +0000</pubDate><atom:updated>2026-09-13T22:38:52.943Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>thirumavalavan,திருமாவளவன்,விசிக,vck</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/gkgg9lid/thirumavalavan.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ thirumavalavan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/gkgg9lid/thirumavalavan.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தி.மு.க. நடத்திய போராட்டத்தில் ஆ.ராசா பேசியது அதிர்ச்சியளிப்பதாக <a href="https://www.maalaimalar.com/topic/vck">விடுதலை சிறுத்தைகள்</a> கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும், இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுவதால், மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும அவர் கூறினார்.</p><p>சிவகாசியில் வி.சி.க. தலைவர் தொல். <a href="https://www.maalaimalar.com/topic/thirumavalavan">திருமாவளவன்</a> செய்தியாளர் சந்திப்பில் கூறும் போது, "மனித மாண்புடன் இருக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் சமீபத்தில் வீடியோ மூலம் அறிவுறுத்தி இருந்தார். </p><p>ஆனால், தி.மு.க. போராட்டத்தில் அந்த மாண்பை கடைப்பிடித்ததாகத் தெரியவில்லை. இது த.வெ.க.விற்கு எதிரான கருத்து என்பதைவிட, தி.மு.க.வுக்கு எதிரான கருத்தாகவே எடுத்துக்கொள்ள முடியும்.</p><h2>பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது:</h2><p>நீண்ட நெடிய அரசியல் பாரம்பரியம் கொண்டவர்கள், மற்றவர்களுக்கு வழிகாட்டக்கூடியவர்கள், அவர்கள் அரசியல் நாகரிகத்துக்கு முன்னோடியாக இருக்க வேண்டும். ஆ.ராசா மற்றும் தி.மு.க.வின் முன்னணி பொறுப்பாளர்களின் பேச்சு அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக உள்ளது.</p><p>த.வெ.க.வுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக இடதுசாரிகள் தொடர்ந்து சொல்லி வருகின்றனர். இப்போதும் அதில் உறுதியாக உள்ளனர். </p><p>இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுகிறார்களே தவிர, த.வெ.க.வுக்கு ஆதரவான நிலைப்பாடு என்றோ, தி.மு.க.வுக்கு ஆதரவான நிலைப்பாடு என்றோ சொல்லவில்லை. அது அவர்களுக்கான சுதந்திரம்; அவர்களுக்கான உரிமை. இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுவதால், மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது," என்றார்.</p>]]></content:encoded></item><item><title>உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய ஆண் &apos;ரிகர்வ்&apos; வில்வித்தை வீரர் ஆனார் தீரஜ்</title><link>https://www.maalaimalar.com/sports/dhiraj-scripts-history-becomes-first-indian-male-recurve-archer-to-win-world-cup-final-gold</link><comments>https://www.maalaimalar.com/sports/dhiraj-scripts-history-becomes-first-indian-male-recurve-archer-to-win-world-cup-final-gold#comments</comments><guid isPermaLink="false">86ac738a-4574-4ec2-8ac0-06f577eac5b7</guid><pubDate>Sun, 13 Sep 2026 21:46:46 +0000</pubDate><atom:updated>2026-09-13T21:46:46.149Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>archery,வில்வித்தை,தீரஜ் பொம்மதேவரா,Dhiraj Bommadevara</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/l1q923ja/dhiraj-bommadevara.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dhiraj Bommadevara]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/l1q923ja/dhiraj-bommadevara.png?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முன்னணி இந்திய 'ரிகர்வ்' (recurve) வில்வித்தை வீரரான தீரஜ் பொம்மதேவரா, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஜப்பானின் நகானிஷி ஜுன்யாவை விறுவிறுப்பான 'ஷூட்-ஆஃப்' (shoot-off) சுற்றில் வீழ்த்தி தங்கம் வென்றார். இதன் மூலம், இப்போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய ஆண் 'ரிகர்வ்' வில்வித்தை வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். </p><p>2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் பதக்கம் ஏதுமின்றி திரும்பிய நிலையில், 25 வயதான ராணுவ வீரரும் உலக தரவரிசையில் 10-ஆவது இடத்தில் இருப்பவருமான தீரஜ், இம்முறை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.</p><h2>முதல் இந்திய ஆண் 'ரிகர்வ்' வில்வித்தை வீரர்:</h2><p>காலிறுதி மற்றும் அரையிறுதிச் சுற்றுகளைக் கடந்து வந்த அவர், கடும் போட்டி நிறைந்த ஐந்து சுற்றுகள் கொண்ட ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 20-ஆவது இடத்தில் உள்ள நகானிஷியை 6-5 (28-28, 28-29, 29-28, 28-30, 28-27) என்ற கணக்கில் தோற்கடித்தார். ஆட்டம் 5-5 என சமநிலையில் முடிந்த நிலையில், 'ஷூட்-ஆஃப்' சுற்றில் தீரஜ் 10-9 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.</p><p>இந்த வெற்றியின் மூலம், உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய ஆண் 'ரிகர்வ்' வில்வித்தை வீரராக தீரஜ் திகழ்கிறார்.</p><p>இந்திய ஆண் 'ரிகர்வ்' வில்வித்தை வீரர் ஒருவர் இந்த மதிப்புமிக்க பட்டத்தை வெல்வதற்காக இருந்த 16 ஆண்டுகால காத்திருப்புக்கும் அவர் முற்றுப்புள்ளி வைத்தார். இதற்கு முன், 2010-இல் எடின்பர்க்கில் நடைபெற்ற போட்டியில் ஜெயந்தா தாலுக்தார் வெண்கல பதக்கம் வென்றதே, ஒரு இந்திய ஆண் 'ரிகர்வ்' வில்வித்தை வீரர் வென்ற கடைசிப் பதக்கமாக இருந்தது.</p><h2>பெண்கள் தனிநபர் பிரிவில் தங்கம்:</h2><p>உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தங்கம் வென்ற மற்றொரு இந்தியர் டோலா பானர்ஜி மட்டுமே; அவர் 2007-இல் துபாயில் நடைபெற்ற போட்டியில் பெண்கள் தனிநபர் பிரிவில் தங்க பதக்கம் வென்றிருந்தார்.</p><p>டோலாவின் வெற்றிக்குப் பிறகு, உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் எந்தவொரு இந்தியரும் தங்கம் வெல்லவில்லை.</p><p>இருப்பினும், இந்தியர்களில் அதிக உலகக் கோப்பை இறுதிப் போட்டிப் பதக்கங்களை வென்றவர் தீபிகா குமாரி ஆவார்; அவர் எட்டு முறை இப்போட்டியில் பங்கேற்று ஐந்து வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பாகிஸ்தானின் மொஹ்சின் நக்வியிடம் இருந்து மகளிர் ஆசிய கோப்பையை வாங்க மறுத்தது இந்திய அணி</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/india-womens-team-refuses-to-collect-asia-cup-trophy-from-pakistans-mohsin-naqvi</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/india-womens-team-refuses-to-collect-asia-cup-trophy-from-pakistans-mohsin-naqvi#comments</comments><guid isPermaLink="false">a3302ed8-a1c7-4ac9-9a3f-70fdae8e35ac</guid><pubDate>Sun, 13 Sep 2026 19:46:43 +0000</pubDate><atom:updated>2026-09-13T19:46:43.950Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Womens Asia Cup,மகளிர் ஆசிய கோப்பை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/o5dyb0zl/IND-W-Cap.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ IND W Captain]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/o5dyb0zl/IND-W-Cap.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>துபாயில் நடைபெற்ற <a href="https://www.maalaimalar.com/topic/womens-asia-cup">மகளிர் ஆசிய கோப்பை</a> டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கையை வென்ற பிறகு, இந்திய அணி, ஆசிய மகளிர் கோப்பையை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் தலைவருமான மொஹ்சின் நக்வியிடம் இருந்து பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.</p><p>இந்திய ஆடவர் அணியிடம் ஆசிய கோப்பையை ஒப்படைக்க பாகிஸ்தான் <a href="https://www.maalaimalar.com/sports/cricket">கிரிக்கெட்</a> வாரியத் தலைவர் மறுத்த ஓராண்டுக்குப் பிறகு இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p><h2>பரிசளிப்பு விழா:</h2><p>இலங்கைக்கு எதிரான தனது இறுதி வெற்றியை இந்தியா உறுதி செய்துகொண்டிருந்தபோது, ​​ஆட்டத்தின் பிற்பகுதியில் மொஹ்சின் நக்வி பிரமுகர்களுடன் அமர்ந்திருந்ததை கேமராக்கள் பதிவு செய்தன.</p><p>ஆட்டம் முடிந்து இந்தியா 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றபோது, ​​அவர் பி.சி.சி.ஐ. துணை தலைவர் ராஜீவ் சுக்லா, செயலாளர் தேவாஜித் சைகியா மற்றும் பிறருக்கு அருகில் அமர்ந்திருப்பது காணப்பட்டது.</p><p>மேடையில் இருந்த நக்வி, இரண்டாம் இடத்திற்கான காசோலையை இலங்கை கேப்டன் சமரி அட்டப்பட்டுவிடம் வழங்கினார். அட்டப்பட்டு, ஃபார்வெஸ் மஹரூஃபுடன் பேசிய உடனேயே, பரிசளிப்பு விழா முடிவுக்கு வந்தது.</p><h2>2025 ஆண்கள் ஆசிய கோப்பை இறுதிப் போட்டி:</h2><p>மொஹ்சின் நக்வி தலைமையிலான ஏசிசி, ஆசிய கோப்பை மற்றும் பதக்கங்களையும் கைப்பற்றியதை அடுத்து, ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் பெரும் குழப்பம் நிலவியது. பாகிஸ்தானை நேர்மையாக வீழ்த்திய இந்திய கிரிக்கெட் அணி, மேடைக்கு அழைக்கப்படுவதற்காக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நின்றுகொண்டிருந்தது.</p><p>பாகிஸ்தானுடனான இந்தியாவின் சிக்கலான புவிசார் அரசியல் உறவுகளுக்கு மத்தியில், மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையை பெறப்போவதில்லை என்று இந்திய அணி தெரிவித்து இருந்ததுடன், எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவர் மூலமாகவே கோப்பையை ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரியிருந்தது.</p><h2>நக்வி திட்டவட்டம்:</h2><p>இருப்பினும், நக்வி அந்தக் கோரிக்கையை நிராகரித்து, இந்தியா தன்னிடம் இருந்துதான் கோப்பையைப் பெற வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். இந்திய அணி மேடை ஏறுவதற்காகக் காத்திருந்தபோது, ​​ஏசிசி அதிகாரிகளில் ஒருவர் தரையிலிருந்து கோப்பையை எடுத்ததால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.</p><p>ஏசிசி-யிடமிருந்து இந்தியா இன்னும் கோப்பையைப் பெறவில்லை. இந்நிலையில், நக்வி தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து, கோப்பையை அணித் தலைவர் நேரடியாகத் தன் கைகளிலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறி வருவதால், இந்த இழுபறி தொடர்கிறது.</p>]]></content:encoded></item><item><title>மகளிர் ஆசிய கோப்பை : இலங்கையை வீழ்த்தி 8-ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் அணி</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/india-beat-sri-lanka-by-72-runs-to-clinch-womens-asia-cup-title</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/india-beat-sri-lanka-by-72-runs-to-clinch-womens-asia-cup-title#comments</comments><guid isPermaLink="false">f39e6018-dccf-48f2-a5af-fad1b2da9be9</guid><pubDate>Sun, 13 Sep 2026 18:26:57 +0000</pubDate><atom:updated>2026-09-13T18:26:57.566Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Womens Asia Cup,மகளிர் ஆசிய கோப்பை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/xqlmwjd0/IND-W-Asia-Cup-Champions.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ IND W Asia Cup Champions]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/xqlmwjd0/IND-W-Asia-Cup-Champions.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/womens-asia-cup">மகளிர் ஆசிய கோப்பை</a> இறுதிப் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் அணி.</p><p>10-ஆவது மகளிர் ஆசிய கோப்பை டி20 <a href="https://www.maalaimalar.com/sports/cricket">கிரிக்கெட்</a> தொடர் துபாயில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் இரு பிரிவுகளை சேர்ந்த நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின. </p><p>அரையிறுதி போட்டிகளில் வெற்றி பெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில், இவ்விறு அணிகள் இடையிலான இறுதிப் போட்டி இன்று நடந்தது. </p><h2>இந்திய அணி பேட்டிங்:</h2><p>பரபரப்பான இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணிக்கு தொடக்கம் கொடுத்த ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாளி வெர்மா ஜோடி சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் கவனம் செலுத்தினர். இந்த ஜோடி முறையே 59 மற்றும் 68 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர்.</p><p>அடுத்து களமிறங்கியவர்களில் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 14 ரன்களும் ரிச்சா கோஷ் 17 எடுத்து அவுட் ஆகினர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணி 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்களை எடுத்தது. இலங்கை மகளிர் அணி சார்பில் மித்தாலி அயோத்யா, சமாரி அட்டப்பட்டு மற்றும் சமுடி பிரபோடா தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.</p><h2>இலங்கை சொதப்பல்:</h2><p>இலங்கை மகளிர் அணி 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. இலங்கை அணிக்கு தொடக்கம் கொடுத்த இமெஷா துலானி 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இவருடன் களமிறங்கிய கேப்டன் சமாரி அட்டப்பட்டு நிதானமாக ஆடி 32 பந்துகளில் 36 ரன்களை எடுத்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய விஷ்மி குணரத்ன 22 பந்துகளில் 20 ரன்களை எடுத்தார்.</p><p>மிடில் ஆர்டரில் நிலக்ஷிகா சில்வா 16 பந்துகளில் 22 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இவர்கள் தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இலங்கை மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 111 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால், இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.</p><p>இந்திய மகளிர் அணி சார்பில் ஸ்ரீ சரானி 4 விக்கெட்டுகளையும், தீப்தி ஷர்மா 3 விக்கெட்டுகளையும், க்ரான்டி கௌட், ஷஃபாளி வெர்மா மற்றும் பிரேமா ராவத் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.</p>]]></content:encoded></item><item><title>முதல் டி20: ஆப்கானிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/india-beat-afghanistan-by-7-wickets</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/india-beat-afghanistan-by-7-wickets#comments</comments><guid isPermaLink="false">8ba87ec7-7bc4-423f-a585-13ee44081065</guid><pubDate>Sun, 13 Sep 2026 17:56:01 +0000</pubDate><atom:updated>2026-09-13T17:56:01.541Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>T20 Cricket,டி20 கிரிக்கெட்,india vs afghanistan,இந்தியா-ஆப்கனிஸ்தான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/kvadm2ag/IND-Win.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ IND Win]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/kvadm2ag/IND-Win.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டி20 <a href="https://www.maalaimalar.com/sports/cricket">கிரிக்கெட்</a> போட்டி டெல்லியில் நடைபெற்றது. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இது. </p><h2>வந்தே மாதரம் பாடலுக்கு முன்னுரிமை:</h2><p>இன்றைய போட்டியின் தொடக்கத்தில் தேசிய கீதத்திற்கு முன்பே வந்தே மாதரம் இசைக்கப்பட்டது. வழக்கமாக போட்டி தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் தான் இசைக்கப்படும். ஆனால், இன்றைய போட்டியில் வழக்கத்து மாறாக தேசியம் கீதம் இசைக்கப்படுதற்கு முன்பே வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டது.</p><p>இதைத் தொடர்ந்து இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று முதலில் பந்துவீச தீர்மானித்தார். <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">ஆப்கானிஸ்தான் அணி</a> பேட்டிங் செய்ய களமிறங்கியது. ஆப்கானிஸ்தான் அணிக்காக குர்பாஸும், கேப்டன் இப்ராஹிம் ஜத்ரானும் பேட்டிங் செய்ய வந்தனர்.</p><h2>158 ரன்கள் இலக்கு:</h2><p>இந்திய பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் பேட்டிங் வரிசை தடுமாறியது. ஒரு கட்டத்தில் ஆப்கானிஸ்தான் 43 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. </p><p>இருப்பினும், அஸ்மத்துல்லா உமர்சாயின் அரைசதம், ஆப்கானிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் என்ற ஸ்கோரை எட்ட உதவியது. மேலும் உமர்சாய் 44 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 64 ரன்கள் எடுத்தார்.</p><h2>இந்திய அணி வெற்றி:</h2><p>வெற்றிக்கு 157 ரன்கள் என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா தொடக்க வீரர்களாக களமிறங்கினர். சஞ்சு சாம்சன் 10 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பிறகு களமிறங்கிய இஷான் கிஷன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.</p><p>அபிஷேக் சர்மாவுடன் ஜோடி சேந்த ஆடிய இஷான் கிஷன் 33 பந்துகளில் 42 ரன்களை எடுத்த போது ஆட்டமிழந்தார். மறுமுனையில் அபிஷேக் சர்மா 32 பந்துகளில் 82 ரன்களை எடுத்த போது ஆட்டமிழந்தார். இந்திய அணி 13.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.</p>]]></content:encoded></item><item><title>மகளிர் ஆசிய கோப்பை : இலங்கைக்கு 184 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/womens-asia-cup-india-set-184-runs-as-target-for-sri-lanka-women</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/womens-asia-cup-india-set-184-runs-as-target-for-sri-lanka-women#comments</comments><guid isPermaLink="false">6d791a8c-e904-4563-a841-d4b65dfa02e8</guid><pubDate>Sun, 13 Sep 2026 16:58:59 +0000</pubDate><atom:updated>2026-09-13T16:58:59.591Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Womens Asia Cup,மகளிர் ஆசிய கோப்பை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/v618ts7i/IND-W-Target.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ IND W Target]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/v618ts7i/IND-W-Target.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/womens-asia-cup">மகளிர் ஆசிய கோப்பை</a> இறுதிப் போட்டியில் இலங்கை அணிக்கு 184 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய மகளிர் அணி.</p><p>10-ஆவது மகளிர் ஆசிய கோப்பை டி20 <a href="https://www.maalaimalar.com/sports/cricket">கிரிக்கெட்</a> தொடர் துபாயில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் இரு பிரிவுகளை சேர்ந்த நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின. </p><p>அரையிறுதி போட்டிகளில் வெற்றி பெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில், இவ்விறு அணிகள் இடையிலான இறுதிப் போட்டி இன்று நடந்தது. </p> <h2>இந்திய அணி பேட்டிங்:</h2><p>பரபரப்பான இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணிக்கு தொடக்கம் கொடுத்த ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாளி வெர்மா ஜோடி சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் கவனம் செலுத்தினர். </p><p>இந்த ஜோடி முறையே 59 மற்றும் 68 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கியவர்களில் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 14 ரன்களும் ரிச்சா கோஷ் 17 எடுத்து அவுட் ஆகினர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணி 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்களை எடுத்தது. </p><p>இலங்கை மகளிர் அணி சார்பில் மித்தாலி அயோத்யா, சமாரி அட்டப்பட்டு மற்றும் சமுடி பிரபோடா தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை மகளிர் அணி பேட்டிங் ஆடி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>&quot;ஆஸ்கர் விருதுக்கு தகுதியான படைப்பு&quot; மண்டாடி படத்தை பாராட்டித்தள்ளிய நடிகர் சரத்குமார்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-sarathkumar-praise-mandaadi-movie</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-sarathkumar-praise-mandaadi-movie#comments</comments><guid isPermaLink="false">13cb5dbe-d5f1-4484-9809-04947573bc76</guid><pubDate>Sun, 13 Sep 2026 16:46:37 +0000</pubDate><atom:updated>2026-09-13T16:46:37.008Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>sarathkumar,சரத்குமார்,மண்டாடி,Soori,Mandaadi,சூரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/avy2v9t7/Mandaadi-and-Sarathkumar.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mandaadi and Sarathkumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/avy2v9t7/Mandaadi-and-Sarathkumar.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகர் சூரி நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் "<a href="https://www.maalaimalar.com/topic/mandaadi">மண்டாடி</a>". </p><p>இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் இந்தப் <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews">படம்</a> ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும், திரைத்துறையை சேர்ந்த பலரும் இந்தப் படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர். </p><p>அந்த வரிசையில், நடிகர் சரத்குமார் மண்டாடி படத்தை பாராட்டி தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அதில், இந்தப் படத்தில் நடித்தவர்கள் மற்றும் தொழில்நுட்ப குழு என ஒட்டுமொத்த படக்குழுவையும் பாராட்டியுள்ளார்.</p><h2>கடலிலேயே எடுக்கப்பட்ட படம்:</h2><p>அந்தப் பதிவில், "மண்டாடி திரைப்படத்தைப் பார்த்த பிறகு வார்த்தைகளே வரவில்லை. இந்திய திரையுலகில் இதுவரை முயற்சிக்கப்படாத ஒரு துணிச்சலான படைப்பு இது; கேட்பதற்கு மிகைப்படுத்தப்பட்டதாகத் தோன்றலாம், ஆனால் அதுதான் உண்மை.</p><p>முழுவதுமாக கடலிலேயே படமாக்கப்பட்ட இப்படம், பிரமிக்க வைக்கும் காட்சி அமைப்புகளையும், கடலில் உள்ள சவால்களை எதிர்கொண்ட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் துணிச்சலையும் வெளிப்படுத்துகிறது.</p><p>மனித விழுமியங்கள், அன்பு மற்றும் தியாகங்கள் கலந்த ஒரு எளிய பாய்மர படகு பந்தயமாக தொடங்கி, பல உணர்வுப்பூர்வமான பரிமாணங்களை கொண்ட படமாக இது அமைகிறது.</p><h2>கதாபாத்திரமாக வாழ்ந்து காட்டியுள்ளார்:</h2><p>முழு குழுவினருக்கும், குறிப்பாக இத்திரைப்படத்தை உருவாக்க திட்டமிட்டு சிறப்பாக இயக்கிய இயக்குநர் மதிமாறன் புகழேந்திக்கும் எனது வாழ்த்துகள்.</p><p>நடிகர் சூரி இக்கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டியுள்ளார்; சிறந்த கதையை தேர்ந்தெடுத்து தனது நடிப்பு திறனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அவருக்கு மற்ற நடிகர்களின் சிறப்பான ஒத்துழைப்பும், ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசையும் கூடுதல் பலம் சேர்த்துள்ளன.</p><p>ஆஸ்கர் விருதுக்கு தகுதியான இப்படைப்பை உருவாக்குவதில் துணிச்சலையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்திய தயாரிப்பாளர் எல்ரெட் குமாருக்கும் பாராட்டுகள்," என குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 13 செப். 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-13-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-13-september-2026#comments</comments><guid isPermaLink="false">7d67d6f6-a3ea-4b0e-af90-db4520343c93</guid><pubDate>Sun, 13 Sep 2026 04:34:10 +0000</pubDate><atom:updated>2026-09-13T16:22:22.912Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/cptt0uo4/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ live]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/cptt0uo4/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/rybakina-beat-sabalenka-in-us-open-final">அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சபலென்காவை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ரிபாகினா</a></p><p>* அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.</p><p>* ஆஸ்திரேலிய ஓபன் இறுதிச்சுற்றிலும் எலினா ரிபாகினா சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். </p> <p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/joe-root-breaks-sachin-tendulkar-record-in-test-fifties">சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்த ஜோ ரூட்</a></p><p>* இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார்.</p><p>* அவர் 62 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/a-raja-controversial-speech-kanimozhi-x-post">ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சு: "யாகாவா ராயினும் நாகாக்க.." கனிமொழி எம்பியின் எக்ஸ் பதிவு!... </a></p><p>*திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்பியுமான ஆ.ராசா தெரிவித்த சில கருத்துகள் அரசியல் அரங்கில் கடும் சர்ச்சையை உருவாக்கியது.</p><p>*ஒருவர் எதை காக்கத் தவறினாலும் தன் நாவை அடக்கிக் காக்க வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/jersey-color-controversy-hockey-india-director-suspended">ஜெர்சி நிற சர்ச்சை: ஹாக்கி இந்தியா இயக்குநர் பணியிடை நீக்கம்!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/if-you-do-not-mend-your-ways-you-will-be-set-right-a-raja-expresses-regret-over-his-remarks-about-the-minister">“நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்” - அமைச்சர் குறித்த பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் ஆ. ராசா!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/topnews/a-leader-is-not-someone-who-bolts-at-the-first-sign-of-trouble-did-vijay-sethupathi-criticize-chief-minister-vijay">“பிரச்சனை என்றால் தெறித்து ஓடுபவர் தலைவர் இல்லை” - முதலமைச்சர் விஜய்யை விமர்சித்தாரா விஜய் சேதுபதி?</a></p><p>*பிக்பாஸில் விஜய் சேதுபதி பேசியது, முதலமைச்சர் விஜய்யுடன் தொடர்புப்படுத்தப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-metro-rail-schedule-changed-tomorrow-for-vinayagar-chaturthi">விநாயகர் சதுர்த்தி: நாளை சென்னை மெட்ரோ ரெயில் அட்டவணை மாற்றம்</a></p><p>* இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.</p><p>* இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-london-investments-unknown-edappadi-palaniswami">முதலமைச்சர் விஜய் லண்டனில் முதலீடுகளை ஈர்த்ததாக தெரியவில்லை- எடப்பாடி பழனிசாமி... </a></p><p>*முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணம் குறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, முதலீடுகளை ஈர்ப்பதற்காகவே அவர் லண்டன் சென்றிருக்கிறார் என எந்த தகவலும் வரவில்லை என்றார்.</p><p>*மாநிலம் பல லட்சம் கோடி கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் இந்தச் சூழலில், அவசர கதியில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதை எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார். </p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/left-parties-to-contest-by-election-independently-cpi-to-field-candidate-in-dharapuram">ஐந்துமுனைப் போட்டி: இடைத்தேர்தலை தனித்து களம் காணும் இடதுசாரிகள் - தாராபுரத்தில் சிபிஐ போட்டி!</a></p><p>*மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது.</p><p>*இடதுசாரிகள் ஒண்றிணைந்து இந்த இடைத்தேர்தலை சந்திக்கின்றனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/malaysian-prime-minister-meets-rahul-and-priyanka-congress-releases-video">ராகுல், பிரியங்காவுடன் மலேசிய பிரதமர் சந்திப்பு - வீடியோ வெளியிட்ட காங்கிரஸ் </a></p><p><br>*மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா வந்துள்ளார்.</p><p>*மன்மோகன் சிங் தன் குழந்தைகளின் படிப்புக்கு பணம் செலுத்த முன்வந்ததையும் இப்ராஹிம் நினைவு கூர்ந்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/india-and-china-have-stepped-forward-to-mediate-an-end-to-the-ukraine-russia-war">நாங்க முடிச்சு தர்றோம்.. உக்ரைன் விஷயத்தில் கூடிவந்த இந்தியா, சீனா - ரஷியா சொல்வது என்ன?<br></a></p><p>*அதுவரை புதினிடம் பிரதமர் மோடி கூறியதிலேயே அதுவே சற்று காத்திரமான கருத்தாக இருந்தது.</p><p>*கொண்டு வர பெரு முயற்சி எடுத்தும் பலனளிக்காத சூழலில் இந்த கருத்து வந்துள்ளது.<br></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/missile-attack-on-iranian-ship-near-strait-of-hormuz-one-killed-three-injured">ஹார்முஸ் ஜலசந்தி அருகே ஈரான் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் - ஒருவர் பலி - 3 பேர் காயம் <br></a><br>*ஹார்முஸ் வழியே செல்லும் கப்பல்கள் கடும் அச்சறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றன.</p><p>*ஓமன் மத்தியஸ்தத்தில் ஈரான் மற்றும் பிற அரபு நாடுகள் இடையே நடந்து வருகின்றன.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-stalin-says-dmk-stands-with-people-beyond-polls" rel="nofollow">வெற்றி, தோல்விகளுக்கு அப்பாற்பட்டு மக்களுடன் நிற்பது திமுக..!- உதயநிதி ஸ்டாலின்</a></p><p>* காதல் திருமணத்தில் நிறைய கஷ்டங்கள், சவால்கள் இருக்கும். </p><p>* வரலாற்றிலேயே முதன்முறையாக டம்மி முதலமைச்சரை பார்க்கிறேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/bomb-blast-hits-army-vehicles-on-balochistan-highway-23-soldiers-killed">பலுசிஸ்தான் நெடுஞ்சாலையில் ராணுவ வானங்கள் செல்லும்போது குண்டுவெடிப்பு.. 23 வீரர்கள் பலி </a></p><p>*இந்த நெடுஞ்சாலை கராச்சியை, பலுசிஸ்தானின் தலைநகரான குவெட்டாவுடன் நேரடியாக இணைக்கிறது.</p><p>*பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என சொல்லப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/80-of-people-in-india-eat-non-vegetarian-food-rahul-mocks-the-vegetarian-menu-at-the-brics-summit">இந்தியாவில் 80% மக்கள் அசைவம்.. பிரிக்ஸ் மாநாட்டின் சைவ மெனு பற்றி ராகுல் கிண்டல்</a><br></p><p>*இந்திய அசைவ உணவுகள் மிகவும் சுவையானவை</p><p>* பரிமாறப்பட்ட உணவுகள் குறித்து மக்களவை எதிர்க்கட்சிதலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.<br></p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/one-off-test-south-africa-defeats-namibia-in-the-third-match-as-well-to-clinch-the-series">ஒருநாள் டெஸ்ட்: 3வது போட்டியிலும் நமீபியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய தென் ஆப்பிரிக்கா <br></a></p><p>*36.2 ஓவரில் 156 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.</p><p>* பிஜொன் பொர்டியூன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.<br><br></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/prime-minister-modi-held-bilateral-talks-with-leaders-from-15-countries-in-three-days">3 நாட்களில் 15 உலக நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி!</a> </p><p>*ராஜதந்திரமே போருக்குத் தீர்வு எனப் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.</p><p>*செப்டம்பர் 11 அன்று புதின், பெசெஷ்கியான் மற்றும் ஐ.நா பொதுச்செயலாளரை மோடி சந்தித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/school-friend-meets-pm-modi-in-person-to-seek-help-immediate-action-initiated">என் நிலத்தை அபகரிச்சுட்டாங்க.. பிரதமர் மோடியை நேரில் சந்தித்து உதவி கோரிய பள்ளித் தோழர் - உடனே தொடங்கிய ஆக்ஷன்</a></p><p>*சிபிஐ விசாரணை கோரி பிரதமரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.</p> <p>*சிபிஐ விசாரணை கோரி பிரதமரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.</p>  <p><a href="https://www.maalaimalar.com/news/world/i-dont-care-trump-on-the-talks-between-the-president-of-iran-and-the-prince-of-the-united-arab-emirates-at-the-brics-conference">I Don't Care.. பிரிக்ஸ் மாநாட்டில் ஈரான் அதிபர் - அமீரக இளவரசர் பேச்சுவார்த்தை குறித்து டிரம்ப்<br></a></p><p>*அமெரிக்காவிற்கு சாதகமான ஒப்பந்தம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.</p><p>* அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்குப் பிறகோ அல்லது அதற்கு முன்பாகவோ ஈரானுடனான மோதல் முடிவுக்கு வரும் <br><br></p>]]></content:encoded></item><item><title>முதல் டி20: இந்தியாவுக்கு 157 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/1st-t20-afghanistan-sets-a-target-of-157-runs-for-india</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/1st-t20-afghanistan-sets-a-target-of-157-runs-for-india#comments</comments><guid isPermaLink="false">eb940cc1-7f13-4f2e-9057-8589f4c3e358</guid><pubDate>Sun, 13 Sep 2026 16:19:51 +0000</pubDate><atom:updated>2026-09-13T16:19:51.452Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>T20 Cricket,டி20 கிரிக்கெட்,india vs afghanistan,இந்தியா-ஆப்கனிஸ்தான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/mj2lw5wd/tn-24.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதல் டி20]]></media:title><media:description type="html"><![CDATA[ முதல் டி20]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/mj2lw5wd/tn-24.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. </p><p>இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இதுவாகும்.</p><p>போட்டியின் தொடக்கத்தில் முதல் முறையாக<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D"> வந்தே மாதரம் </a>இசைக்கப்பட்டது. </p><p>இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று முதலில் பந்துவீசத் தீர்மானித்தார்.</p><p>ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. ஆப்கானிஸ்தான் அணிக்காக குர்பாஸும், கேப்டன் இப்ராஹிம் ஜத்ரானும் பேட்டிங் செய்ய வந்தனர்.</p><p>இந்திய பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் பேட்டிங் வரிசை தடுமாறியது. ஒரு கட்டத்தில் ஆப்கானிஸ்தான் 43 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.</p> <p>இருப்பினும், அஸ்மத்துல்லா உமர்சாயின் அரைசதம், ஆப்கானிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் என்ற ஸ்கோரை எட்ட உதவியது. மேலும் உமர்சாய் 44 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 64 ரன்கள் எடுத்தார்.</p><p>வெற்றிக்கு 157 ரன்கள் என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இந்து மத குரு காலில் விழுந்த ஈரான் அதிபர்?.. தூதரகம் தந்த விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/national/did-the-iranian-president-fall-at-the-feet-of-a-hindu-religious-leader-embassy-offers-an-explanation</link><comments>https://www.maalaimalar.com/news/national/did-the-iranian-president-fall-at-the-feet-of-a-hindu-religious-leader-embassy-offers-an-explanation#comments</comments><guid isPermaLink="false">0cc87104-2126-45d3-9ee2-07d2b79a67e2</guid><pubDate>Sun, 13 Sep 2026 16:12:44 +0000</pubDate><atom:updated>2026-09-13T16:12:44.665Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வைரல் வீடியோ,ஈரான்,Iran,BRICS Summit,viral video,பிரிக்ஸ் உச்சிமாநாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/n5eagee1/tn-23.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ வைரல் வீடியோ ]]></media:title><media:description type="html"><![CDATA[ வைரல் வீடியோ ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/n5eagee1/tn-23.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்கு இடையே நடந்த ஒரு நிகழ்ச்சியில், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், இந்து மத தலைவரின் காலில் விழுந்து வணங்கியதாக இணையத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.</p><p>பிரிக்ஸ் மாநாட்டின் இடையே டெல்லியில் உள்ள ஓபராய் ஹோட்டலில் ஈரான் தூதரகம் சார்பில் தொழிலதிபர்கள், மதத் தலைவர்கள் மற்றும் அறிஞர்களுக்கான சிறப்புச் சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.  </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/i-dont-care-trump-on-the-talks-between-the-president-of-iran-and-the-prince-of-the-united-arab-emirates-at-the-brics-conference">ஈரான் அதிபர்</a> மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி பங்கேற்ற நிகழ்ச்சியில் பல்வேறு மதத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.</p><h2>வைரல் வீடியோ</h2><p>இதில் பங்கேற்ற உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த இந்து சமய தலைவரான சுவாமி சதீஷாச்சார்யாவுடன் ஈரான் அதிபர் பெசெஷ்கியான் பேசிக்கொண்டிருக்கும்போது, திடீரெனக் கீழே குனிவது போன்ற வீடியோ வெளியானது.</p><p>ஈரான் அதிபர், இந்து மத தலைவரின் காலைத் தொட்டு ஆசி பெற்றார் எனக் கூறி இந்த வீடியோ வேகமாகப் பரப்பப்பட்டது.</p><p>ஆனால் இதுகுறித்து ஈரான் தூதரக வட்டாரங்கள் விளக்கம் அளித்துள்ளன. அதிபர், தன்னிடம் கொடுக்கப்பட்ட கடிதம் கீழே விழுந்ததால் அதை எடுக்கவே குனித்ததாகவும், அது தவறாக சித்தரிக்கப்பட்டு பரப்பப்டுவதாக விளக்கம் அளித்துள்ளது.  </p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Complete video, As always ziozist in Pak will do everything to frame <a href="https://t.co/vmy7PYvHXV">pic.twitter.com/vmy7PYvHXV</a></p>&mdash; Aizaz dinho (@Aizazdinho) <a href="https://x.com/Aizazdinho/status/2099054990275014796?ref_src=twsrc%5Etfw">September 13, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>பிரிக்ஸ் மாநாட்டில் ஈரான் அதிபர்</h2><p>மறுபுறம் பிரிக்ஸ் மாநாட்டின் இடையே அபுதாபி இளவரசரை சந்தித்த பிறகு பேசிய அதிபர் பெசெஷ்கியான், "ஈரானுக்கு ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிற அண்டை வளைகுடா நாடுகளுடன் எந்தவிதப் பிரச்சனையோ அல்லது பகையோ இல்லை" எனத் தெரிவித்திருந்தார்.</p><p>மேலும், "ஈரான் வளைகுடா நாடுகளுக்கு எதிரானது அல்ல; மாறாக அப்பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களுக்கு எதிரானது மட்டுமே. அமெரிக்கா இங்கு வந்து அமைத்துள்ள தளங்களைப் பயன்படுத்தித் தான் எங்களது தலைவர்கள், தளபதிகள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. அதைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம்" என பெசெஷ்கியான் கூறினார்.</p><h2>புதுடெல்லி பிரகடனம்</h2><p>பிரிக்ஸ் மாநாட்டின் முதல் நாளான நேற்று, பிரிக்ஸ் அமைப்பின் தலைவர்கள் ஒன்றிணைந்து வெளியிட்ட புதுடெல்லி பிரகடனத்தில், மத்திய கிழக்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர்ப் பதற்றம் குறித்துக் கடும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>வளைகுடாப் பிராந்தியத்தில் நிலையான அமைதியை ஏற்படுத்தத் தூதரகப் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர வழிகளையே முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என பிரிக்ஸ் கூட்டமைப்பு அந்த பிரகடனத்தில் கோரியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னைக்கு 3,565 சிறப்பு பேருந்துகள் இயக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/3565-special-government-buses-to-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/3565-special-government-buses-to-chennai#comments</comments><guid isPermaLink="false">64a35e42-3787-4196-8105-f0b29febb695</guid><pubDate>Sun, 13 Sep 2026 15:57:51 +0000</pubDate><atom:updated>2026-09-13T15:57:51.970Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,special bus,சிறப்பு பேருந்து,விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chathurthi</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/gk111i9w/bus.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/gk111i9w/bus.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு நாளை அரசு விடுமுறையாகும். சனி, ஞாயிற்றுக்கிழமை  விடுமுறை நாட்களோடு விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருவதால் 3 நாட்கள் தொடர் அரசு விடுமுறை  கிடைக்கிறது.</p><p>இதனால், வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்பதால்  அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.</p><p>சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திரு நெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு கடந்த வியாழக்கிழமை 585 சிறப்பு பஸ்களும், கடந்த வெள்ளிக்கிழமை 1,255 பஸ்களும், கடந்த 12-ந் தேதி 1,030 பஸ்களும், 13-ந் தேதி  650 பஸ்களும் இயக்கப்பட்டது.</p><p>கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகப் பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு மேற்கண்ட இந்த நாட்களில் 585 பஸ்களும் இயக்கப்படுகிறது.</p><p>பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை நகரங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது.</p> <p>மாத வரத்தில் இருந்து  கள்ளக் குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர், புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தலா 110 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது.</p><p>மேலும் 14-ந்தேதி சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் 765 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.</p><h2>சென்னை திரும்ப சிறப்பு பேருந்துகள்</h2><p>தொடர் விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னைக்கு திரும்ப 3,565 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.</p><p>தமிழகத்தின் பல ஊர்களில் இருந்து நாளை சென்னைக்கு திரும்ப 2,240 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.</p><p>நாளை மறுநாள் சென்னைக்கு 1,325 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>கோழைகள்தான் ஆபாசத்தையும் அவதூறையும் ஆயுதமாக்குவார்கள்..!- திமுகவிற்கு தவெக பதிலடி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/only-cowards-weaponise-obscenity-and-defamation-tvk</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/only-cowards-weaponise-obscenity-and-defamation-tvk#comments</comments><guid isPermaLink="false">b6a94ba9-9d39-4134-b801-4b9d641edb16</guid><pubDate>Sun, 13 Sep 2026 15:16:20 +0000</pubDate><atom:updated>2026-09-13T15:16:20.357Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தவெக,tvk,தவெக ஐடி விங்,TVK It wing</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/xk27xikz/TVK2.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TVK]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/xk27xikz/TVK2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆபாச அரசியல் திமுகவிற்குப் புதிதல்ல என்றாலும், அதனால் அம்பலப்படுவது அவர்கள்தான் என்று <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95" rel="nofollow">திமுக</a>வின் கருத்துக்கு கடுமையாக விமர்சித்து தவெக ஐடி விங் பதிவிட்டுள்ளது.</p><p>தவெக ஐடி விங் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள முடியாதபோதுதான் கோழைகள் ஆபாசத்தையும் அவதூறையும் ஆயுதமாக்குவார்கள். ஆபாச அரசியல் திமுகவிற்குப் புதிதல்ல என்றாலும், அதனால் அம்பலப்படுவது அவர்கள்தான்.</p><p>மாண்புமிகு முதலமைச்சரின் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம், தொண்டர்கள் குறித்து எப்போது கொத்தடிமைகள் ஆபாச வசைபாடத் தொடங்கினார்களோ, அப்போதே அவர்களின் அரசியல் தரம் எவ்வளவு கேவலமானது என்பதை உலகுக்குப் பறைசாற்றிவிட்டார்கள்.</p><p>கடமை, கண்ணியம், கட்டுப்பாடு பற்றி கொத்தடிமைகளுக்கு வகுப்பெடுக்காத கொத்து பரோட்டாவின் இயலாமை, பவளவிழா பாப்பாவின் பகுமானத்தைப் பல் இளிக்க வைக்கிறது.</p><p>ஆபாசநதியையும் வன்மநதியையும் வகைதொகையில்லாமல் ஓடவிட்டு, கீழ்த்தரமான அரசியலைப் பிழைப்பாகக் கொண்டிருப்பதற்கு எதற்கு அரசியலில் இருக்க வேண்டும்?</p><p>அமைதியாக இருக்கிறார்கள், ஆபாசத்தையும் அவதூறையும் வீசி இவர்களை வீழ்த்திவிடலாம் என்று எண்ணினால், மக்கள் மன்றத்தில் மதிப்பிழந்து நிற்கும் பவளவிழா பாப்பா என்பதை எச்சரிக்கையாக அல்ல...</p><p>ரொம்ப டீசென்ட்டா, ரொம்ப அன்பா, ரொம்ப க்யூட்டா, ரொம்ப லவ்வபிள்லா சொல்லிக்கிறோம்!</p><p>இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>I Don&apos;t Care.. பிரிக்ஸ் மாநாட்டில் ஈரான் அதிபர் - அமீரக இளவரசர்  பேச்சுவார்த்தை குறித்து டிரம்ப்   </title><link>https://www.maalaimalar.com/news/world/i-dont-care-trump-on-the-talks-between-the-president-of-iran-and-the-prince-of-the-united-arab-emirates-at-the-brics-conference</link><comments>https://www.maalaimalar.com/news/world/i-dont-care-trump-on-the-talks-between-the-president-of-iran-and-the-prince-of-the-united-arab-emirates-at-the-brics-conference#comments</comments><guid isPermaLink="false">37758cee-8cad-481e-8efa-9b3b18a9bf5a</guid><pubDate>Sun, 13 Sep 2026 15:05:32 +0000</pubDate><atom:updated>2026-09-13T15:05:32.792Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>trump,டிரம்ப்,BRICS Summit,பிரிக்ஸ் உச்சிமாநாடு,Iran War,ஈரான் போர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/2aiuepqr/tn-22.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மீரக இளவரசர், ஈரான் அதிபர், டிரம்ப்   ]]></media:title><media:description type="html"><![CDATA[ மீரக இளவரசர், ஈரான் அதிபர், டிரம்ப்   ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/2aiuepqr/tn-22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரிக்ஸ் மாநாட்டில் ஈரான் அதிபர், ஐக்கிய அரபு அமீரக இளவரசர் சந்திப்பு குறித்து டிரம்ப் கருத்த தெரிவித்துள்ளார்.</p> <p>டெல்லியில் நடைபெற்ற 18வது பிரிக்ஸ்உச்சி மாநாட்டின் இடையே, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/missile-attack-on-iranian-ship-near-strait-of-hormuz-one-killed-three-injured">வளைகுடா நாடுகளில் பதற்றம்</a> நிலவி வரும் சூழலில் நடைபெற்ற இச்சந்திப்பு குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.</p> <h2>டிரம்பின் கருத்து</h2><p>அயர்லாந்துக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அங்கு நடைபெற்ற 'ஐரிஷ் ஓபன்' கோல்ப் தொடரின் இடையே செய்தியாளர்களிடம் பேசினார்.</p><p>அவர் கூறியதாவது, , "வளைகுடா நாடுகள் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை; அது அவர்களின் விருப்பம், எனக்கு அதைப்பற்றி அக்கறை இல்லை (I don't care)" என தெரிவித்தார்.</p><p>ஈரான் அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்திற்கு வரக் கடுமையாக முயற்சிப்பதாகவும், தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கான அழைப்புகளை விடுத்து வருவதாகவும் தெரிவித்த டிரம்ப், அமெரிக்காவிற்கு சாதகமான சரியான ஒப்பந்தம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.</p><p>முன்னதாக, அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்குப் பிறகோ அல்லது அதற்கு முன்பாகவோ ஈரானுடனான மோதல் முடிவுக்கு வரும் எனக் குறிப்பிட்ட டிரம்ப், போர் முடிவுக்கு வந்தவுடன் அமெரிக்காவில் பெட்ரோல் மற்றும் கச்சா எண்ணெய் விலைகள் அதிரடியாக குறையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.</p> <h2>ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான்</h2><p>பிரிக்ஸ் மாநாட்டின் இடையே அபுதாபி இளவரசரை சந்தித்த பிறகு பேசிய அதிபர் பெசெஷ்கியான், "ஈரானுக்கு ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிற அண்டை வளைகுடா நாடுகளுடன் எந்தவிதப் பிரச்சனையோ அல்லது பகையோ இல்லை" எனத் தெரிவித்திருந்தார்.</p><p>மேலும், "ஈரான் வளைகுடா நாடுகளுக்கு எதிரானது அல்ல; மாறாக அப்பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களுக்கு எதிரானது மட்டுமே. அமெரிக்கா இங்கு வந்து அமைத்துள்ள தளங்களைப் பயன்படுத்தித் தான் எங்களது தலைவர்கள், தளபதிகள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. அதைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம்" என பெசெஷ்கியான் கூறினார்.</p> <h2>புதுடெல்லி பிரகடனம்</h2><p>பிரிக்ஸ் மாநாட்டின் முதல் நாளான நேற்று, பிரிக்ஸ் அமைப்பின் தலைவர்கள் ஒன்றிணைந்து வெளியிட்ட புதுடெல்லி பிரகடனத்தில், மத்திய கிழக்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர்ப் பதற்றம் குறித்துக் கடும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>வளைகுடாப் பிராந்தியத்தில் நிலையான அமைதியை ஏற்படுத்தத் தூதரகப் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர வழிகளையே முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என பிரிக்ஸ் கூட்டமைப்பு அந்த பிரகடனத்தில் கோரியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>என் நிலத்தை அபகரிச்சுட்டாங்க.. பிரதமர் மோடியை நேரில் சந்தித்து உதவி கோரிய பள்ளித் தோழர் - உடனே தொடங்கிய ஆக்ஷன்</title><link>https://www.maalaimalar.com/news/national/school-friend-meets-pm-modi-in-person-to-seek-help-immediate-action-initiated</link><comments>https://www.maalaimalar.com/news/national/school-friend-meets-pm-modi-in-person-to-seek-help-immediate-action-initiated#comments</comments><guid isPermaLink="false">f0de3a05-046e-4524-a3b1-031281ae0297</guid><pubDate>Sun, 13 Sep 2026 14:14:46 +0000</pubDate><atom:updated>2026-09-13T14:14:46.825Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,குஜராத்,gujarat,நில அபகரிப்பு,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/64nn40z9/tn-20.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரதமர் மோடி, அஸ்கரலி வோஹ்ரா ]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர் மோடி, அஸ்கரலி வோஹ்ரா ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/64nn40z9/tn-20.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தனக்கு சொந்தமான நிலம் அபகரிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியின் பள்ளித் தோழர் அவரை நேரில் சந்தித்து உதவி கோரியது தெரியவந்துள்ளது.</p> <p>குஜராத் மாநிலம் வட்நகரில் உள்ள பி.என். உயர்நிலைப் பள்ளியில் <a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-warns-against-weaponisation-of-critical-minerals">பிரதமர் மோடியுடன்</a> பயின்ற பள்ளித் தோழர் அஸ்கரலி வோஹ்ரா (81).</p><p>இவர் தனக்குச் சொந்தமான நிலம் ஆக்கிரமிக்கப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி பிரதமரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.</p> <h2>ஆக்கிரமிப்பு</h2><p>மும்பை நகரின் பயந்தர் கிழக்கு நவகார் பகுதியில் அமைந்துள்ள சுமார் 2,810 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நிலத்தை அஸ்கரலி வோஹ்ரா கடந்த 1989ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாகப் பதிவு செய்து வாங்கியுள்ளார்.</p><p>கடந்த 2011ஆம் ஆண்டு தனது நிலம் போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>தனக்கு தெரியாமல் நிலத்தை பிரித்து, 'ஸ்வயம் பில்டர்ஸ்' மற்றும் 'செவன் லெவன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்' ஆகிய இரு கட்டுமான நிறுவனங்களின் பெயருக்கு மாற்றப்பட்டதாக அவர் புகார் தெரிவித்துள்ளார்.</p><p>இந்த நில ஆக்கிரமிப்பில் 'செவன் லெவன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்' நிறுவனத்துடன் தொடர்புள்ள பாஜக எம்.எல்.ஏ நரேந்திர மேத்தாவுக்கு தொடர்பு இருப்பதாக வோஹ்ரா குற்றம் சாட்டியுள்ளார்.</p> <h2>பிரதமருடன் சந்திப்பு</h2><p>பல ஆண்டுகளாக அரசுத் அதிகாரிகளிடமும் காவல் நிலையங்களிலும் முறையிட்டும் தீர்வு கிடைக்காததால், கடந்த செப்டம்பர் 8 அன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்த 81 வயதான வோஹ்ரா, இச்சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்தார்.</p> <h2>விசாரணைக்கு உத்தரவு</h2><p>பிரதமருடனான சந்திப்பை தொடர்ந்து, உள்ளூர் நிர்வாகம் இச்சம்பவத்தில் மின்னல் வேகத்தில் நடவடிக்கையை தொடங்கியுள்ளது.</p><p>புகார் தொடர்பாக வரும் செப்டம்பர் 16ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு 'ஸ்வயம் பில்டர்ஸ்' மற்றும் 'செவன் லெவன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்' ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு உள்ளூர் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் 1,562 விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-1562-vinayagar-idols-permission-for-worship</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-1562-vinayagar-idols-permission-for-worship#comments</comments><guid isPermaLink="false">904d0234-523e-489a-94d8-4bdfad7bd3a1</guid><pubDate>Sun, 13 Sep 2026 14:00:22 +0000</pubDate><atom:updated>2026-09-13T14:00:22.432Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,விநாயகர் சதுர்த்தி,விநாயகர் சிலைகள்,Vinayagar statue,Vinayagar Chathurthi</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/ghikg55y/VC.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vinayagar Chathurthi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/ghikg55y/VC.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பண்டிகைக்கான ஏற்பாடுகள் களைகட்டி வருகின்றன.</p><p>விநாயகர் சிலை வழிபாடுகள், ஊர்வலத்திற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p><p>தமிழகத்தைப் பொறுத்தவரை பொது மக்களுக்கு இடையூறின்றி விழாக்கள் நடத்தவும், சிலைகள் கரைப்பு ஊர்வலத்துக்கான ஏற்பாடுகள் குறித்தும், அந்தந்த மாவட்ட அமைப்பாளர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.</p><p>சுற்றுச்சூழலை பாதிக்கும் ரசாயனப் பொருட்களைத் தவிர்த்து முற்றிலும் இயற்கை பொருட்களால் செய்யப்பட்ட சிலைகளையே வழிபாட்டிற்கு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.</p><p>இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை காவல் எல்லைக்குள் 1,562 சிலைகளை வைத்து வழிபட போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். பாதுகாப்பு பணியில் 16,500 போலீசார் ஈடுபட உள்ளனர்.</p><p>உரிய அனுமதி இல்லாத இடங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபட அனுமதி இல்லை எனவும், கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>3 நாட்களில் 15 உலக நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி!</title><link>https://www.maalaimalar.com/news/national/prime-minister-modi-held-bilateral-talks-with-leaders-from-15-countries-in-three-days</link><comments>https://www.maalaimalar.com/news/national/prime-minister-modi-held-bilateral-talks-with-leaders-from-15-countries-in-three-days#comments</comments><guid isPermaLink="false">59256890-35c7-48aa-bc46-46527474fcd2</guid><pubDate>Sun, 13 Sep 2026 13:49:06 +0000</pubDate><atom:updated>2026-09-13T13:49:06.694Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,BRICS Summit,delhi,பிரிக்ஸ் உச்சிமாநாடு,பிரதமர் மோடி,டெல்லி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/t2ag30ma/tn-19.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடியுடன் தலைவர்கள் ]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடியுடன் தலைவர்கள் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/t2ag30ma/tn-19.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>3 நாட்களில் பிரதமர் மோடி, இந்தியா வருகை தந்த 15 நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.</p><p>டெல்லியில் 18வது<a href="https://www.maalaimalar.com/news/national/brics-summit-modi-warning-on-critical-minerals-in-front-of-xi"> பிரிக்ஸ் உச்சி மாநாடு</a> நேற்று தொடங்கி இன்றுடன் நிறைவடைந்தது. இதில் ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான், சவுதி இளவரசர், தென் ஆப்பிரிக்கா, பிரேசில் ஆகிய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். </p><p>புதின் கடந்த நேற்று முன் தினமே இந்தியா வந்து சேர்ந்தார். அவருடன் அன்றைய தினம் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இவ்வாறு 3 நாட்களில் பிரதமர் மோடி, இந்தியா வருகை தந்த 15 நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.   </p><p>மேலும், பல்வேறு சர்வதேச அமைப்புகளின் தலைவர்களுடனும் அவர் தனியாகக் கலந்துரையாடினார்.  </p><p>வணிகம், முதலீடு, பாதுகாப்பு, எரிசக்தி, தொழில்நுட்பம், முக்கிய கனிமங்கள், மற்றும் உலகளாவிய அமைதி குறித்த விவாதங்கள் இந்தசந்திப்புகளில் பிரதானமாக இடம் பெற்றன.  </p> <h2>வெள்ளிக்கிழமை சந்திப்பு</h2><p>செப்டம்பர் 11 அன்று புதின், பெசெஷ்கியான் மற்றும் ஐ.நா பொதுச்செயலாளரை மோடி சந்தித்தார்.</p><p>ரஷிய அதிபர் புதினுடன் நடந்த பேச்சுவார்த்தையில், இருநாடுகளிடையேயான வர்த்தகத்தை 2030க்குள் 100 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.</p><p>பாதுகாப்பு, விண்வெளி, அணுசக்தி மற்றும் உக்ரைன் - ரஷிய மோதல் குறித்தும் விவாதிக்கப்பட்டது. பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரமே போருக்குத் தீர்வு எனப் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.</p><p>ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் உடனான பேச்சுவார்த்தையில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி, பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பு, கடல்வழி வர்த்தகம் மற்றும் இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு குறித்துப் பேசப்பட்டது.</p><p>ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்ரெஸ் உடனான பேச்சுவார்த்தையில் சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தம் மற்றும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.</p> <h2>சனிக்கிழமை சந்திப்பு</h2><p>செப்டம்பர் 12, நேற்று, இந்தியா வந்து சேர்ந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். 7 ஆண்டுகளுக்கு பிறகு அவர் முதல் முறை இந்தியா வந்துள்ளார்.</p><p>சீன அதிபருடனான பேச்சுவார்த்தையில் எல்லைப் பிரச்சனை, வர்த்தக சமநிலையின்மை மற்றும் விநியோகச் சங்கிலியில் உள்ள இடர்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.</p><p>இருநாடுகளின் வேறுபாடுகள் சர்ச்சைகளாக மாறக்கூடாது என்றும் பரஸ்பர மரியாதை மற்றும் நலன்கள் அடிப்படையில் உறவுகள் தொடர வேண்டும்" எனப் பிரதமர் மோடி சீன அதிபரிடம் வலியுறுத்தினார்.</p> <p>மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் உடன் நடத்திய பேச்சுவார்த்தையில், சேமிகண்டக்டர்,கள், டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் Fintech தொழில்நுட்பம் குறித்துப் பேசப்பட்டது.</p><p>அபுதாபி இளவரசர் ஷேக் காலித் உடனான சந்திப்பில் பாதுகாப்பு, விண்வெளி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பேசப்பட்டது.</p><p>வியட்நாம் மற்றும் எத்தியோப்பியத் தலைவர்களுடன் இருதரப்பு உறவுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடனான தொடர்பை விரிவுபடுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.</p><h2>ஞாயிறு சந்திப்பு</h2><p>மாநாட்டின் கடைசி நாளான இன்று, செப்டம்பர் 13, தென்னாப்பிரிக்க அதிபர் சிறில் ராமபோசா கஜகஸ்தான் அதிபர் காசிம் ஜோமார்ட் தோகாயேவ், பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர், எகிப்து அதிபர் அல் சிசி, புருண்டி, உகாண்டா மற்றும் நைஜீரியப் பிரதிநிதிகளுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.</p><p>இந்த உச்சி மாநாடும், இருதரப்பு சந்திப்புகளும் இந்தியாவின் சர்வதேச ராஜதந்திர உறவுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என கருதப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>திருவள்ளூர் மாவட்டத்தில் 892 விநாயகர் சிலை அமைக்க அனுமதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/892-vinayaka-idols-approved-across-thiruvallur-district</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/892-vinayaka-idols-approved-across-thiruvallur-district#comments</comments><guid isPermaLink="false">67f79f5f-d890-48a8-9abc-0dd92274d5ab</guid><pubDate>Sun, 13 Sep 2026 12:58:44 +0000</pubDate><atom:updated>2026-09-13T12:58:44.775Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Thiruvallur,விநாயகர் சதுர்த்தி,விநாயகர் சிலைகள்,Vinayagar statue,Vinayagar Chathurthi,திருவள்ளூர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/r87mr6b5/Vinayagar-statue.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vinayagar statue]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/r87mr6b5/Vinayagar-statue.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர் மாவட்டத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கவும், ஊர்வலம் நடத்தவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் பல முக்கிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.</p><p>அதன்படி, <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88" rel="nofollow">வருவாய்த் துறை</a>, காவல்துறை, உள்ளாட்சித்துறை, மின்சாரத்துறை மற்றும் தீயணைப்புத்துறை ஆகிய துறைகளிடம் உரிய தடையில்லாச் சான்றும் அனுமதியும் பெற வேண்டும்.</p><p>சிலைகள் சுற்றுச் சூழலுக்கு உகந்த களி மண்ணால் மட்டுமே செய்யப்பட வேண்டும். ரசாயன வர்ணங்கள் அல்லது நச்சுத்தன்மை வாய்ந்த சாயங்களைப் பயன்படுத்தக் கூடாது.</p><p>இதர வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிலையங்கள் அருகில் சிலைகள் வைக்க அனுமதி இல்லை.</p><p>மேலும், சிலைகளின் பாதுகாப்பிற்காக 24 மணி நேரமும் தலா 2 நபர்கள் சுழற்சி முறையில் பணியில் இருக்க வேண்டும்.</p><p>மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் பதாகைகள் வைக்கவோ, கோஷங்கள் எழுப்பவோ கூடாது. மேலும், பட்டாசு வெடிக்கத் தடை உள்ளது.</p><p>இதுபோன்ற பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திருவள்ளூரில் 166 இடங்களிலும் ஊத்துக் கோட்டையில் 239 இடங்களிலும் திருத்தணியில் 294 இடங்களிலும் கும்மிடிப்பூண்டியில் 193 இடங்களிலும் என மொத்தம் 892 இடங்களில் சிலைகள் வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக திருவள்ளூர் காவல் மாவட்டம் சார்பில் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>ஒருநாள் டெஸ்ட்: 3வது போட்டியிலும் நமீபியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய தென் ஆப்பிரிக்கா </title><link>https://www.maalaimalar.com/sports/cricket/one-off-test-south-africa-defeats-namibia-in-the-third-match-as-well-to-clinch-the-series</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/one-off-test-south-africa-defeats-namibia-in-the-third-match-as-well-to-clinch-the-series#comments</comments><guid isPermaLink="false">88c99da8-1ce0-40c4-a28b-0ea97458c0bd</guid><pubDate>Sun, 13 Sep 2026 12:48:40 +0000</pubDate><atom:updated>2026-09-13T12:48:40.320Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தென் ஆப்பிரிக்கா,South Africa,ஒருநாள் தொடர்,ODI Series,Namibia,நமீபியா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/jmvf07ji/tn-18.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஒருநாள் டெஸ்ட்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஒருநாள் டெஸ்ட்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/jmvf07ji/tn-18.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p> நமீபியாவை வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை தென் ஆப்பிரிக்கா முழுமையாக கைப்பற்றியுள்ளது.</p><p>தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நமீபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட <a href="https://www.maalaimalar.com/sports/cricket/2nd-odi-south-africa-beat-namibia-by-157-runs">ஒருநாள் தொடரில் </a>விளையாடி வருகிறது. </p><p>முதல் இரண்டு போட்டிகளில் நமீபியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. </p><p>3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நமீபியா தலைநகர் விந்தோக்கில் இன்று நடைபெற்றது.</p><p>இதில் டாஸ் வென்ற நமீபியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. . </p> <h2>நமீபியா பேட்டிங்</h2><p>அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நமீபியா, தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 36.2 ஓவரில் 156 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.</p><p>அதிகபட்சமாக செனி கிரீன் 33 ரன்கள் சேர்த்தார். தென் ஆப்பிரிக்க கேப்டன் பிஜொன் பொர்டியூன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.</p> <h2>தென் ஆப்பிரிக்கா ஆட்டம்</h2><p>இதையடுத்து, 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது.</p><p>21.3 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு தென் ஆப்பிரிக்கா 157 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் நமீபியாவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றிபெற்றது.</p> <p>தென் ஆப்பிரிக்க தொடக்க வீரர் ஜோர்டன் ஹெர்மன் அதிகபட்சமாக 77 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.</p><p>இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 3-0 என்ற புள்ளி கணக்கில் தென் ஆப்பிரிக்கா முழுமையாக கைப்பற்றியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: கோலங்கள்!</title><link>https://www.maalaimalar.com/ampstories/web-stories/vinayagar-chaturthi-special-rangoli-designs</link><comments>https://www.maalaimalar.com/ampstories/web-stories/vinayagar-chaturthi-special-rangoli-designs#comments</comments><guid isPermaLink="false">3277d8c0-f83a-4867-a62f-00e3aeed9401</guid><pubDate>Sun, 13 Sep 2026 12:43:00 +0000</pubDate><atom:updated>2026-09-13T12:43:00.795Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,Pillayar Kolam,விநாயகர் கோலம்,Vinayagar Rangoli,Festival Kolam,Vinayagar Chaturthi Kolam 2026</media:keywords><media:content height="1080" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/vjuqzd0d/Untitled-design-2026-09-13T175913.100.png" width="1080"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/vjuqzd0d/Untitled-design-2026-09-13T175913.100.png?w=280" width="280"></media:thumbnail><category>வெப் ஸ்டோரீஸ் (Web stories)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/68x1locw/Untitled-design-2026-09-13T174546.414.png" /></figure><p>கலர் பொடி விநாயகர் கோலம்</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/nqutwniy/Untitled-design-2026-09-13T174328.598.png" /></figure><p>சித்தி விநாயகர் ஸ்பெஷல் கோலம்</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/31jx77n9/Untitled-design-2026-09-13T174747.448.png" /></figure><p><strong>கலர் விநாயகர் ரங்கோலி</strong></p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/olwo0s21/Untitled-design-2026-09-13T174922.445.png" /></figure><p>கலர்ஃபுல் விநாயகர் ரங்கோலி டிசைன்</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/rpzsovuo/Untitled-design-2026-09-13T175000.570.png" /></figure><p>வரவேற்பு பிள்ளையார் கோலம்</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/z0iq1mwt/Untitled-design-2026-09-13T175515.224.png" /></figure><p>பூஜா அறைக்கான பச்சரிசி பிள்ளையார் கோலம்</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/kpdnbwig/Untitled-design-2026-09-13T182040.357.png" /></figure><p>ஃப்ரீஹேண்ட் பிள்ளையார் கோலம்</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/rt2rh8k9/Untitled-design-2026-09-13T175025.562.png" /></figure><p><strong>விநாயகர் சதுர்த்தி சிம்பிள் கோலம்</strong></p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/82dum2l3/Untitled-design-2026-09-13T175830.362.png" /></figure><p>புள்ளி வச்ச பிள்ளையார் கோலம்</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவில் 80% மக்கள் அசைவம்.. பிரிக்ஸ் மாநாட்டின் சைவ மெனு பற்றி ராகுல் கிண்டல்
</title><link>https://www.maalaimalar.com/news/national/80-of-people-in-india-eat-non-vegetarian-food-rahul-mocks-the-vegetarian-menu-at-the-brics-summit</link><comments>https://www.maalaimalar.com/news/national/80-of-people-in-india-eat-non-vegetarian-food-rahul-mocks-the-vegetarian-menu-at-the-brics-summit#comments</comments><guid isPermaLink="false">78ec26a1-328a-4369-a90f-85600f5a1306</guid><pubDate>Sun, 13 Sep 2026 12:25:26 +0000</pubDate><atom:updated>2026-09-13T12:25:26.076Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,BRICS Summit,பிரிக்ஸ் உச்சிமாநாடு,சைவம்,அசைவம்,Vegetarianism,non-vegetarianism</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/qqke5hvq/tn-17.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராகுல் ]]></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/qqke5hvq/tn-17.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் நேற்று இரவு விருந்தில் சைவ உணவு வகைகள் மட்டும் பரிமாறப்பட்டது பற்றி மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காநிதி மறைமுகமாக விமர்சித்துள்ளார். </p><p>டெல்லியில் 18வது <a href="https://www.maalaimalar.com/news/national/brics-summit-modi-warning-on-critical-minerals-in-front-of-xi">பிரிக்ஸ்  உச்சி மாநாடு</a> இன்றுடன் நிறைவடைந்தது.  ரஷிய அதிபர் புதின், ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான், சீன அதிபர் ஜி ஜின் பிங், மலேசிய பிரதமர் இப்ராஹிம் உள்ளிட்ட உறுப்பு நாட்டு தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர். </p><p>இந்நிலையில் மாநாட்டின் முதல் நாளான நேற்று இரவு பிரதமர் மோடி ஏற்பாடு செய்திருந்த விருந்தில் பரிமாறப்பட்ட உணவுகள் குறித்து மக்களவை எதிர்க்கட்சிதலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். </p> <h2>ராகுல் பதிவு</h2><p>பிரிக்ஸ் மாநாட்டின் உணவுப் பட்டியல் குறித்து நேரடியாக எதையும் குறிப்பிடாத ராகுல் காந்தி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சகோதரி தயாரித்த 'சோலே பட்டுரே' உணவின் புகைப்படத்தைப் பகிர்ந்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.</p><p>அதில், "ஒரு விஷயத்தை நினைவூட்ட விரும்புகிறேன்: இந்தியாவில் 80 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் அசைவ உணவு சாப்பிடுபவர்கள். இந்திய அசைவ உணவுகள் மிகவும் சுவையானவை; அதேபோல் என் சகோதரி சமைத்த இந்த சோலே பட்டுரேவும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>சர்வதேச தலைவர்கள் பங்கேற்ற ஒரு விருந்தில் இந்தியாவின் பன்முகத் தன்மை கொண்ட உணவுக் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்காமல், முற்றிலும் சைவ உணவுகள் மட்டுமே பரிமாறப்பட்டதைச் சுட்டிக்காட்டும் வகையிலேயே ராகுல் காந்தி இந்தப் பதிவை வெளியிட்டுள்ளதாக எடுத்துக்கொள்ள வேண்டி உள்ளது.</p> <h2>பிரதமரின் பிரிக்ஸ் சைவ விருந்து பட்டியல்</h2><p>பிரதமர் மோடி அளித்த விருந்தில் இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் சிறுதானியங்களை மையமாக கொண்ட பல்வேறு சைவ உணவுகள் உலகத் தலைவர்களுக்குப் பரிமாறப்பட்டன.</p><p>காந்த்வி மில்பெயில்), காளான் கபாப், பனீர் லபாப்தார், குச்சி மார்மிக், காரட் பீன்ஸ் பொரியல், ராகி-சிறுதானிய புலாவு உள்ளிட்டவற்றுடன் பல்வேறு வகையான இந்தியப் பாரம்பரிய இனிப்பு வகைகள்ளும் பரிமாறப்பட்டன.</p><p>இந்த சிறப்பு சைவ விருந்தில் சீன அதிபர் மற்றும் அபுதாபி இளவரசர் ஷேக் காலித் ஆகியோர் பங்கேற்காமல் தவிர்த்து விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.</p> <h2>பாஜக பதிலடி</h2><p>ராகுலின் விமர்சனத்துக்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பதிலடி கொடுத்துள்ளார்.</p><p>பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுக்குப் பரிமாறப்பட்ட உணவு ஒரு அரசியல் பிரச்சினையாக ஆக்கப்படுவதாகவும் பரிமாறப்பட்ட உணவு சுவை, ஊட்டச்சத்து மற்றும் பாரம்பரியம் நிறைந்தது என்று விவரித்தார்.</p><p>விருந்தினர்கள் பரிமாறப்பட்ட இந்திய சைவ உணவு வகைகளை விரும்பி உண்டனர் என்றும் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>விமலின்  ‘சண்டக்காரி’ வெளியீட்டு தேதி அறிவிப்பு </title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/vimals-sandakkari-to-release-after-7-years</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/vimals-sandakkari-to-release-after-7-years#comments</comments><guid isPermaLink="false">397eaf4c-e6df-41fd-b95f-6a689c58e6cb</guid><pubDate>Sun, 13 Sep 2026 12:14:27 +0000</pubDate><atom:updated>2026-09-13T12:14:27.498Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Vimal,விமல்,Shriya Saran,ஸ்ரேயா சரண்,சண்டக்காரி,Sandakkari</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/2mq3tmtp/New-Project-2026-09-13T173413.971.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘சண்டக்காரி’! ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/2mq3tmtp/New-Project-2026-09-13T173413.971.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விமல் மற்றும் ஸ்ரேயா நடிப்பில் உருவாகி உள்ள <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/sandakari-new-movie-update">சண்டக்காரி </a>திரைப்படம் செப்.18ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. </p><p>‘திரிஷ்யம்’ பட இயக்குநர் ஜீத்து ஜோசப்பின் பிஸ்னஸ் மேன் படத்தை தழுவி, இயக்குநர் ஆர். மாதேஷ்  இப்படத்தை இயக்கியுள்ளார். </p><p>மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் கண்டிப்பான பெண் அதிகாரிக்கும் (ஸ்ரேயா), அவருக்குக் கீழ் வேலை செய்யும் விமலுக்கும் இடையே நடக்கும் காதல், மோதல், மற்றும் நகைச்சுவையான சம்பவங்களை மையமாகக் கொண்டு படம் உருவாகி உள்ளது. </p><p>விமல், ஸ்ரேயாவுடன் இணைந்து சத்யன், பிரபு, கே.ஆர். விஜயா, ரேகா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அம்ரிஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கிடுகிடுவென உயர்ந்த பூக்களின் விலை </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vinayagar-chaturthi-flower-prices-soar</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vinayagar-chaturthi-flower-prices-soar#comments</comments><guid isPermaLink="false">484a4efd-89f8-4b69-8a00-6a99fba86ccd</guid><pubDate>Sun, 13 Sep 2026 12:10:16 +0000</pubDate><atom:updated>2026-09-13T12:10:16.317Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>பூக்கள் விலை உயர்வு,Vinayagar Chadurthi,பூஜை மலர்கள்,flower market,மலர் சந்தை,Rise in flower prices</media:keywords><media:content height="414" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/yihsl38x/images-7.jfif" width="738"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ flower price]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/yihsl38x/images-7.jfif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>விநாயகர் சதுர்த்தி</h2><p>நாளை <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-vinayagar-chaturthi-worhip">விநாயகர் சதுர்த்தி</a> கோலகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழாவில் பூஜைக்காக பயன்படுத்தப்படும் மலர்களின் விலை சந்தையில் கணிசமான உய்ர்ந்துள்ளது.</p><h2>விலை உயர்வு </h2><p>முகூர்த்த நாள் மற்றும் விநாயகர் சதுர்த்தி என்பதால் உள்ளூர் சந்தை மற்றும் மாவட்டத்தின் முக்கிய சந்தைகளில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.</p><p>குறிப்பாக,  <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/selvaakkum-mikka-napargal-meethulla-oozhal-vazhakkugalai-visaarippathu-kadinam-chennai-uyarneethimandram-karuthu">சென்னை</a> கோயம்பேடு, திண்டுக்கல், மதுரை, தோவாளை உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கிய சந்தைகளில் பூக்களின் விலைு கணிசமாக உய்ர்ந்துள்ளது. </p><h2>நிர்ணயம்</h2><p>கடந்த வாரம் கிலோ ரூ.500க்கு  விற்பனையான மல்லிகை பூ இன்று ரூ.2000க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், மாலை கட்ட பயன்படும் சம்பங்கி, செவ்வந்தி, ரோஸ், அரளி, செண்டுமல்லி  உள்லிட்ட பூக்களின் விலையும்  கடுமையாக உயர்துள்ளது. மேலும், சாமந்தி ரூ.250-க்கும், முல்லை ரூ.900-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>பலுசிஸ்தான் நெடுஞ்சாலையில் ராணுவ வானங்கள் செல்லும்போது குண்டுவெடிப்பு.. 23 வீரர்கள் பலி </title><link>https://www.maalaimalar.com/news/world/bomb-blast-hits-army-vehicles-on-balochistan-highway-23-soldiers-killed</link><comments>https://www.maalaimalar.com/news/world/bomb-blast-hits-army-vehicles-on-balochistan-highway-23-soldiers-killed#comments</comments><guid isPermaLink="false">60b2fcbd-e278-4b70-9fc9-a6939885f675</guid><pubDate>Sun, 13 Sep 2026 11:43:05 +0000</pubDate><atom:updated>2026-09-13T11:43:05.439Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>குண்டுவெடிப்பு,பாகிஸ்தான்,Pakistan,bomb blast,Balochistan,பலுசிஸ்தான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/lrorv8io/tn-16.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பலுசிஸ்தான் நெடுஞ்சாலையில் குண்டுவெடிப்பு]]></media:title><media:description type="html"><![CDATA[ பலுசிஸ்தான் நெடுஞ்சாலையில் குண்டுவெடிப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/lrorv8io/tn-16.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்புப் படைகள் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.</p> <p>பாகிஸ்தானின் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">பலுசிஸ்தான் </a>மாகாணத்தின் லாஸ்பேலா மாவட்டத்தில் கஷாரி பகுதியில் உள்ள என்25 தேசிய நெடுஞ்சாலை வழியாக பாகிஸ்தானிய எல்லைப் படையை  சேர்ந்த சுமார் 15 கவச வாகனங்கள் வழக்கமான ரோந்துக்காக சென்று கொண்டிருந்தது.</p> <p>வாகான அணிவகுப்பு செல்லும் வழியின் முன்பாக ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வாகனங்கள் நெருங்கியதும் வெடித்துச் சிதறியது. இதில் அனுவகுப்பில் முதலில் சென்றுகொண்டிருந்த வாகனம் தீப்பற்றியது.</p><p>தாக்குதலுக்கு உள்ளான வாகனத்தில் இருந்த வீரர்கள் பலத்த காயமடைந்தனர்.</p><p>ஆரம்பகட்ட தகவல்களின்படி, இந்தத் தாக்குதலில் 23க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று முதற்கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன.</p><p>காயமடைந்த வீரர்கள் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் அருகிலுள்ள பேலா இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என சொல்லப்படுகிறது.</p> <h2>பலூச் விடுதலை ராணுவம்</h2><p>இந்த தாக்குதலுக்குப் பின்னால் பிரிவினைவாத அமைப்பான பலூச் விடுதலை ராணுவம் இருப்பதாக நம்பப்படுகிறது.</p><p>கடந்த சில மாதங்களாக பலூச் விடுதலை ராணுவ அமைப்பு, பாகிஸ்தான் ராணுவ கட்டமைப்புகள், வாகன தொடரணிகள் மீது தாக்குதல் நடத்தும் போக்கு அதிகரித்து வருகிறது.</p><p>முன்னதாக <a href="https://www.google.com/search?q=%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+maalaimalar&amp;oq=%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+maalaimalar&amp;gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOdIBCDQyMjdqMGo3qAIIsAIB8QXsnD_A5Tyosw&amp;sourceid=chrome&amp;source=chrome.ob&amp;ie=UTF-8">இந்த மாத தொடக்கத்திலும்</a> பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனங்கள் மீது நடத்தப்பட்ட இரு வேறு தாக்குதல்களில் 25 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். </p> <h2>நெடுஞ்சாலை நெருக்கடி</h2><p>தாக்குதல் நடைபெற்ற என் 25 தேசிய நெடுஞ்சாலையானது, பலுசிஸ்தான் மாகாணத்தின் பொருளாதார மற்றும் ராணுவ உயிர்நாடியாகக் கருதப்படுகிறது.</p><p>இந்த நெடுஞ்சாலை, நாட்டின் மிகப்பெரிய தொழில் மையமான கராச்சியை, பலுசிஸ்தானின் தலைநகரான குவெட்டாவுடன் நேரடியாக இணைக்கிறது.</p> <p>லாஸ்பெலோ பகுதி கராச்சி எல்லைக்கு மிக அருகில் உள்ளது. மேலும் இந்தச் சாலை கடலோரப் பகுதிகளையும் மேற்கு பலுசிஸ்தானையும் துறைமுகத்துடன் இணைப்பதால், இங்கு அதிக அளவில் ராணுவப் போக்குவரத்து உள்ளது.</p><p>தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்பு காரணங்களுக்காக முழு தேசிய நெடுஞ்சாலையும் உடனடியாக மூடப்பட்டதுடன், சுற்றியுள்ள மலைப்பகுதிகள் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கையும் தொடங்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>TIFF திரைப்பட விழாவில்  திரையிடப்பட்ட கார்த்திக் சுப்பராஜின் &apos;டோரதி&apos;!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/karthik-subbaraj-dorothy-world-premiere-tiff</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/karthik-subbaraj-dorothy-world-premiere-tiff#comments</comments><guid isPermaLink="false">ea5b0402-91b6-41de-9e5f-28800afdbc98</guid><pubDate>Sun, 13 Sep 2026 11:37:19 +0000</pubDate><atom:updated>2026-09-13T11:37:19.655Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Karthik Subbaraj,கார்த்திக் சுப்பாராஜ்,இளையராஜா,டோரதி,Dorothy</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/616gjp1z/WhatsApp-Image-2026-09-12-at-6.15.16-PM.jpeg" width="1600"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TIFF திரைப்பட விழாவில்  திரையிடப்பட்ட கார்த்திக் சுப்பராஜின் 'டோரதி'!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/616gjp1z/WhatsApp-Image-2026-09-12-at-6.15.16-PM.jpeg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>டோரதி</h2><p>கார்த்திக சுப்பராஜ்  இயக்கத்தில் உருவாகியுள்ள 10வது திரைப்படம்  ‘டோரதி’.  இத்திரைப்படத்தில்  சனந்த், ரிஷிகாந்த் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். </p><p>ஜோதி தேஷ்பாண்டே, குணீத் மோங்கா கபூர் மற்றும் அச்சின் ஜெயின் ஆகியோர் இணைந்து தம்மம் ஃபிலிம்ஸ் மற்றும் சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் சார்பில் படத்தை தயாரித்துள்ளனர். </p><h2>டொராண்டோ</h2><p>இத்திரைப்படம் நேற்று (செப்.11) டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் சென்டர்பீஸ் பிரிவில் திரையிடப்பட்டு, வாழ்த்துகளைப் பெற்றுள்ளது.</p><p>இதன் மூலம், சமகாலத் தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜின் படைப்பு சர்வதேச அரங்கில் கவனம் பெற்றுள்ளது.</p><p>பொதுவாக 'சென்டர் பீஸ்' என்பது விழா இடைப்பகுதியில் திரையிடப்படும் மிக முக்கியமான மற்றும் கௌரவமிக்க திரைப்படத்தைக் குறிக்கும், அந்த வகையில் டோரத்தி திரைப்படம் அந்த சிறப்பை பெற்றுள்ளது.</p><h2>பங்கேற்பு </h2><p>டொராண்டோவில் உள்ள ஸ்காட்டியாபேங்க் திரையரங்கில் நடைபெற்ற வெளியீட்டில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுடன் நடிகர்கள் கீர்த்தி சுரேஷ், சனந்த் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர்கள் குணீத் மோங்கா கபூர் மற்றும் அச்சின் ஜெயினும் நிகழ்வில் பங்கேற்றனர்.</p><h2>இது குறித்து இயக்குநர் கூறியதாவது; </h2><p>டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் உலகளவில் முதல் முறையாகத்<sup> </sup>திரையிடப்படுவது எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். நான் சொல்ல விரும்பிய கதையின் உண்மைத்தன்மையை அப்படியே உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு செல்லும் வாய்ப்பை இது கொடுத்துள்ளது. </p><p>மேலும், இளையராஜா சாரின் <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/raja-is-raja-background-score-from-the-movie-dorothy-released">இசை</a> இந்தப் பயணத்துக்குத் துணையாக இருப்பது இந்த திரைப்படத்திற்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளது.” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.</p><h2>இசை </h2><p>டோரதி திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படம் இளையராஜா இசையமைக்கும் 1,540வது படமாகும். </p><p>ஏற்கனவே படத்தின் ‘கல்யாண விருந்து’ மற்றும் ‘முத்துமணி’ ஆகிய பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. படம் செப்.25ம் தேதி வெளியாக உள்ளது. </p>]]></content:encoded></item></channel></rss>