<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 11 Sep 2026 11:21:55 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 11 செப். 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-11-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-11-september-2026#comments</comments><guid isPermaLink="false">789700bb-cf5a-4554-8f14-89283a96d916</guid><pubDate>Fri, 11 Sep 2026 04:00:55 +0000</pubDate><atom:updated>2026-09-11T10:10:19.791Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/7tgua07i/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live news]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/7tgua07i/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/prof-salomon-pappaiya-passes-away-cm-vijay-mourns" rel="nofollow">தமிழறிஞர் சாலமன் பாப்பையா மறைவு- முதலமைச்சர் விஜய் இரங்கல்</a></p><p>* சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார்.</p><p>*  அவரது மறைவு தமிழ்கூறு நல்லுலகிற்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/bank-employees-across-country-on-strike-today">வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் இன்று வேலைநிறுத்தம்: பணம்-காசோலை பரிவர்த்தனை முடங்கியது</a></p><p>* வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் நாடு முழுவதும் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.</p><p>* வேலைநிறுத்தத்தால் இன்று மூடப்பட்ட வங்கிகள் தொடர்ந்து மேலும் 3 நாட்கள் மூடப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/dipke-urges-maharashtra-govt-to-talk-to-jarange-warns-against-forcible-intervention">மனோஜ் ஜராங்கேவை யாராவது தொட நினைத்தால்., மகாராஷ்டிரா அரசுக்கு அபிஜீத் தீப்கே எச்சரிக்கை</a></p><p>* மாணவர்களுக்குச் சிறந்த பள்ளிகள், தரமான கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் ஒரு கிராமத்தைக் காட்டுங்கள். </p><p>* இத்தகைய வசதிகளைச் செய்து தருவதில் அரசு தோல்வியடைந்துவிட்டது. அதனால்தான் மனோஜ் ஜரங்கே போராடிக்கொண்டிருக்கிறார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rajinikanth-says-solomon-pappaiah-is-one-who-took-pattimandram-to-common-people">பட்டிமன்றத்தை பாமரர்களிடம் கொண்டு சென்றவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா - ரஜினிகாந்த்</a></p><p>* படித்தவரிடையே இலக்கியத் தரத்தில் இருந்த பட்டிமன்றத்தை பாமரர்களிடமும் ஜனரஞ்சகமாகக் கொண்டு சென்றவர் சாலமன் பாப்பையா.</p><p>* மாபெரும் தமிழ் ஆளுமை பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/solomon-pappaiah-passed-away-vairamuthu-condolences">சிரிக்க வைத்துச் சிந்திக்கவும் வைத்த மேடைக் கலைவாணர் மறைந்துவிட்டார் - வைரமுத்து</a></p><p>* முடிந்துவிட்டதா? பாமரத் தமிழ் மூச்சை நிறுத்திக்கொண்டதா?</p><p>* மதுரைக்கே ஒரு வெறுமை வந்துவிட்டது; மனம் கலங்குகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/pattimandram-judge-solomon-pappaiah-passed-away">பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா காலமானார்</a></p><p>* அறிஞர்கள் இடையே இருந்த பட்டிமன்றத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தவர் சாலமன் பாப்பையா.</p><p>* பாரதியின் கவிதை தொடங்கி கம்பனின் காவியம் வரை பாமரத் தமிழனனுக்கு பக்குவமாய் அறிமுகம் செய்தவர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/the-911-attacks-were-just-the-beginning-what-was-the-massive-plot-osama-bin-laden-had-devised-to-destabilize-the-united-states-much-like-the-soviet-union">9/11 தாக்குதல் ஆரம்பம் தான்.. சோவியத் யூனியன் போல அமெரிக்காவை சீர்குலைக்க ஒசாமா பின்லேடன் வைத்திருந்த மிகப்பெரும் சதித்திட்டம் என்ன?<br></a></p><p>*9/11 தாக்குதலை ஒரு விளம்பரமாகப் பயன்படுத்தி, உலகளாவிய முஸ்லிம்களைத் தனக்கு ஆதரவாகத் திரட்ட பின்லேடன் முயன்றார்.</p><p>*சவூதி அரேபிய அரச குடும்பம் உட்படத் தனது எதிரி நாடுகளின் ஆட்சியாளர்களை வீழ்த்துவது பின்லேடனின் மற்றொரு இலக்காகும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-recalls-swami-vivekanandas-1893-chicago-speech-as-world-marks-5th-anniversary-of-911-attacks">சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி</a></p><p>* சிகாகோ பல்கலைக்கழகத்தில் 1893, செப்டம்பர் 11-ம் தேதி சுவாமி விவேகானந்தர் உரையாற்றினார்.</p><p>* அவரது எழுச்சியூட்டும் வார்த்தைகள் இன்றும் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன என்றார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/today-mahakavi-bharathiyar-memorial-day">மனதில் உறுதி வேண்டும்: இன்று மகாகவி பாரதியார் நினைவு தினம்</a></p><p>* கவிஞர் மட்டுமின்றி எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், விடுதலை வீரர என பல பரிமாணங்கள் கொண்டவர்.</p><p>* இந்த நாளை 'மகாகவி நாள்' என கடைப்பிடிக்கப்படும் என்று முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-reached-london-to-attract-industrial-investments">தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்றடைந்தார் முதலமைச்சர் விஜய் - தமிழர்கள் உற்சாக வரவேற்பு</a></p><p>* முதலீட்டுச் சந்தைகளில், தமிழ்நாட்டின் மீதான முதலீட்டாளர்களின் ஆர்வமும், நம்பிக்கையும் அதிகரித்து வருவதை எடுத்துக் காட்டுகிறது.</p><p>* தமிழ்நாட்டில் உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வாய்ப்புகள் ஏற்படும்.</p> <p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/rybakina-in-number-1-place-in-wta-ranking">டென்னிஸ் தரவரிசை: நம்பர் 1 இடத்தைப் பிடித்த ரிபாகினா</a></p><p>* அரினா சபலென்கா 99 வாரங்கள் முதல் இடத்தில் நீடித்து வந்தார்.</p><p>* சிறு வயது கனவு. அதனை அடைந்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/foreign-workers-60-day-grace-period-for-h-1b-visa-renewal-cancel-trump-action">இந்திய ஊழியர்களுக்கு ஆப்படித்த டிரம்ப்.. H-1B விசா புதுப்பிப்புக்கு வழங்கப்படும் 60 நாள் கெடு ரத்து?</a><br><br>*ஏற்கெனவே விசா கட்டணங்கள் உயர்த்தப்பட்டது.</p><p>*புதிய நிறுவனத்தைத் தேடிக் கொள்ள அவகாசம் வழங்கப்பட்டு வந்தது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/69th-death-anniversary-ministers-pay-homage-at-immanuel-sekaran-memorial">69-வது ஆண்டு நினைவு தினம்: இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அமைச்சர்கள் மரியாதை</a></p><p>* பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. </p><p>* உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் மற்றும் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். </p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/brics-conference-in-delhi-what-is-the-point-p-chidambarams-question-sasi-tharoors-answer-bjp-is-having-fun">டெல்லியில் பிரிக்ஸ் மாநாடு.. என்ன பயன்? என ப.சிதம்பரம் கேள்வி - சசி தரூர் பதில் - காங்கிரசுக்குள் கருத்து வேறுபாடு<br></a><br>*சீன அதிபர் ஜி ஜின் பிங் 7 ஆண்டுகளுக்கு பிறகு அவர் இந்தியா வருகிறார்.</p><p>*ரஷிய அதிபர் புதின் இன்று அதிகாலை டெல்லி வந்தடைந்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sengottaiyan-says-more-parties-will-join-secular-social-justice-victory-alliance">மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும் - அமைச்சர் செங்கோட்டையன் </a></p><p>* தமிழ்நாட்டில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வந்த தளபதி இருக்கும் வரை அவர் தான் நிரந்தர முதலமைச்சர்.</p><p>* பல்வேறு மின் உற்பத்தியாளர்களிடம் பேசி வருகிறோம் விரைவில் மின் உற்பத்தி அதிகரிக்கும்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/fraud-allegations-sheikh-hasinas-daughter-resigns-from-world-health-organization-post">மோசடி குற்றச்சாட்டுகள்.. உலக சுகாதார அமைப்பு பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா மகள்!</a><br><br>*பிப்ரவரி 2024 முதல் அவர் அப்பதவியில் இருந்து வந்தார்.</p><p>*குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு விசாரணை நடந்து வந்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-long-live-great-renown-of-equality-crusader-immanuel-sekaran">சமத்துவப் போராளி இமானுவேல் சேகரனாரின் பெரும்புகழ் வாழ்க! - மு.க.ஸ்டாலின்</a></p><p>* தியாகி இமானுவேல் சேகரனாரின் நூற்றாண்டையொட்டி அவரது பிறந்தநாளினை அரசுவிழாவாகக் கொண்டாட ஆணை</p><p>* இமானுவேல் சேகரனாரின் பணிகளும் தியாகமும் சமத்துவத்தை நோக்கிய நமது முயற்சிகளுக்கு என்றும் துணைநிற்கும்!</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/30-new-ones-added-india-now-possesses-a-total-of-190-nuclear-bombs-report-released">புதிதாக 30.. ஆகமொத்தம் 190 அணு ஆயுதங்கள் இந்தியா வசம் உள்ளது - வெளியான அறிக்கை </a><br><br>*140 முதல் 225 அணுஆயுதங்களை தயாரிப்பதற்குத் தேவையான புளுட்டோனியம் உள்ளது </p><p>*மேலும் 2 புதிய ஏவுதல் அமைப்புகள் இறுதிக்கட்ட உருவாக்கத்தில் உள்ளன</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-11-9-2026">GOLD PRICE TODAY: தங்கம் வாங்குவோருக்கு குட் நியூஸ்: அதிரடியாக குறைந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.240 குறைந்து ரூ.14,015-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/brics-leaders-gather-let-us-deliberate-with-the-global-good-in-mind-prime-minister-modi">BRICS: ஒன்றுகூடும் தலைவர்கள்.. உலக நலனை முன்னிறுத்தி விவாதிப்போம் - பிரதமர் மோடி</a></p><p>*மாநாட்டில் ஈரான் போர் விவகாரம், அதன் பொருளாதார தாக்கம் குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>* ரஷிய அதிபர் புதின் இன்று காலை டெல்லி வந்து சேர்ந்தார். இன்று அவர் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/china-25-dead-in-cargo-ship-fire">சீனாவில் சோகம்.. சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழப்பு</a></p><p>*5 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>* கிங்டாவோ துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/five-earthquakes-struck-india-tibet-and-afghanistan-in-quick-succession">இந்தியா, திபெத், ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள் பதிவு</a></p><p>*அதிகாலை 4:20 மணியளவில் ஆப்கானிஸ்தானிலும் நிலநடுக்கம் பதிவானது.</p><p>*அதிகாலை 4:20 மணியளவில் ஆப்கானிஸ்தானிலும் நிலநடுக்கம் பதிவானது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/85-lakh-bank-employees-across-country-on-strike-today">நாடு முழுவதும் 8½ லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்</a></p><p>* அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை வழங்க வேண்டும் என்ற வங்கி ஊழியர்களின் கோரிக்கையை மத்திய அரசு தொடர்ந்து காலதாமதப்படுத்தி வருகிறது</p><p>* வேறு வழியின்றி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/omni-bus-fares-hiked-for-vinayagar-chaturthi">விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் 4 மடங்கு கட்டணம் உயர்வு</a></p><p>* வருகிற 14-ந் தேதி திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி வருவதால், சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாட்கள் தொடர் விடுமுறையாகி விடுகிறது.&nbsp;</p><p>* சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களில் கட்டணம் 4 மடங்கு வரை அதிகரித்து உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-let-us-honor-and-commemorate-struggles-and-sacrifices-of-martyr-immanuel-sekaran">தியாகி இமானுவேல் சேகரனாரின் போராட்டங்களையும் தியாகங்களையும் போற்றி நினைவு கூர்வோம் - கனிமொழி</a></p><p>* விடுதலைப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனார்  நினைவு நாள் இன்று.</p><p>* இமானுவேல் சேகரன் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகத் திகழ்ந்த டாக்டர் அம்பேத்கருடன் இணைந்து பணியாற்றினார். </p>]]></content:encoded></item><item><title>பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா காலமானார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/pattimandram-judge-solomon-pappaiah-passed-away</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/pattimandram-judge-solomon-pappaiah-passed-away#comments</comments><guid isPermaLink="false">c0aba220-15e6-4e0e-a274-be1a4f1c65bc</guid><pubDate>Fri, 11 Sep 2026 08:25:47 +0000</pubDate><atom:updated>2026-09-11T08:25:47.120Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>மதுரை,madurai,பட்டிமன்றம்,Solomon Pappaiah,pattimandram,சாலமன் பாப்பையா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/lzh38z9d/SolomonPappaiah.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Solomon Pappaiah]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/lzh38z9d/SolomonPappaiah.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா வயது மூப்பு காரணமாக இன்று காலமானார்.</p><h2>சாலமன் பாப்பையா</h2><p>பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார்.</p><p>தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களுக்கு சாலமன் பாப்பையா உரை எழுதி இருக்கிறார்.</p> <h2>கலைமாமணி விருது</h2><p>2000-ம் ஆண்டில் தமிழக அரசின் கலைமாமணி விருதினையும் அவர் பெற்றுள்ளார். பட்டிமன்றத்திற்காக முதல்முறையாக பத்மஸ்ரீ விருதை பெற்றவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா.</p><p>மத்திய அரசின் 4-வது உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை 2021-ம் ஆண்டு பெற்றார் சாலமன் பாப்பையா.</p> <h2>பட்டிமன்றம்</h2><p>அறிஞர்கள் இடையே இருந்த பட்டிமன்றத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தவர் சாலமன் பாப்பையா.</p><p>பாரதியின் கவிதை தொடங்கி கம்பனின் காவியம் வரை பாமரத் தமிழனனுக்கு பக்குவமாய் அறிமுகம் செய்தவர்.</p><p>தனது எளிமையான நகைச்சுவையான அறிவார்ந்த பேச்சால் பட்டிமன்றத்தை உலக அளவில் கொண்டு சேர்த்தவர்.</p> <h2>நகைச்சுவை கதாப்பாத்திரம்</h2><p>பலரும் திரைத்துறையை நோக்கிச் செல்லும் நிலையில் திரைத்துறையினரை பட்டிமன்றம் நோக்கி வரவைத்தவர் பாப்பையா. பட்டிமன்ற நடுவராக மட்டுமல்லாமல் தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் சாலமன் பாப்பையா. சிவாஜி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் சாலமன் பாப்பையா நடித்துள்ளார்.</p><p>மதுரையில் காலமான சாலமன் பாப்பையாவுக்கு மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY: காலையில் குறைந்து மாலையில் உயர்ந்த தங்கம் விலை- தற்போதைய நிலவரம்!</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-today-morning-dip-evening-surge-current-status</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-today-morning-dip-evening-surge-current-status#comments</comments><guid isPermaLink="false">bb37b493-5424-4270-83e1-d03ac6bb81cf</guid><pubDate>Fri, 11 Sep 2026 11:13:44 +0000</pubDate><atom:updated>2026-09-11T11:13:44.408Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>gold rate,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,todays gold rate</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/f9jjgg7f/gold.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold Price]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/f9jjgg7f/gold.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது.</p><p>சென்னையில் கடந்த 1-ந்தேதி தங்கம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 175-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 400-க்கும் விற்பனையானது. இதனை தொடர்ந்து 2-ந்தேதி தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.225 குறைந்து, ரூ.13 ஆயிரத்து 950-க்கும், சவரனுக்கு ரூ.1,800 சரிந்து ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 600-க்கும் விற்றது.</p><p>அதனை தொடர்ந்து 3-ந்தேதி <a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-11-9-2026" rel="nofollow">தங்கம் விலை</a> குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு 290 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 240 ரூபாய்க்கும் சவரனுக்கு 2,320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 920-க்கு விற்பனையானது.</p><p>அதனை தொடர்ந்து 4-ந்தேதி சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து சவரன் ரூ.1,14,880-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதை அடுத்து 5-ந்தேதி அதிரடியாக கிராமுக்கு 170 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14,190-க்கும் சவரனுக்கு ரூ.1360 குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 520-க்கு விற்பனையானது. 6-ந்தேதி ஒரு கிராம் ரூ.14,190-க்கும், ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 520-க்கு விற்பனையானது.</p><p>7-ந்தேதி ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 130-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 40-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 8-ந்தேதி கிராமுக்கு ரூ.140 அதிகரித்து ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 270-க்கும், சவரனுக்கு ரூ.1,120 அதிகரித்து ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 160-க்கும் விற்பனையானது. 9-ந்தேதி சவரனுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.1,13,160-க்கும், கிராமுக்கு ரூ.125 குறைந்து ரூ.14,145-க்கும் விற்பனையானது.</p><p>நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,14,040-க்கும், கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.14,255-க்கும் விற்பனையானது.</p><h2>காலை நிலவரம்</h2><p>இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,920 குறைந்து ரூ.1,12,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.240 குறைந்து ரூ.14,015-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p>வெள்ளி விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><h2>மாலை நிலவரம்</h2><p>சென்னையில் இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,920 குறைந்த நிலையில் தற்போது சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்தது.</p><p>சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,13,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p>இன்று காலை தங்கம் கிராமுக்கு ரூ.240 குறைந்திருந்த நிலையில் தற்போது ரூ.140 உயர்ந்து ரூ.14,155-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p>இதேபோல், வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2.50 லட்சத்திற்கு விற்பனையானது.</p><h2>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்</h2><p>11-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,120</p><p>10-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.114,040</p><p>09-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,160</p><p>08-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.114,160</p><p>07-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,040</p><h2>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்</h2><p>11-09-2026- ஒரு கிராம் ரூ.245</p><p>10-09-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>09-09-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>08-09-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>07-09-2026- ஒரு கிராம் ரூ.255</p>]]></content:encoded></item><item><title>இலக்கிய தமிழை மக்களிடம் எளிமையாக கொண்டு சேர்த்தவர் சாலமன் பாப்பையா..!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/salamon-pappaiya-turning-pattimandram-into-tamil-peoples-celebration</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/salamon-pappaiya-turning-pattimandram-into-tamil-peoples-celebration#comments</comments><guid isPermaLink="false">16e9f6bb-822a-4f1c-b1ff-853efd980147</guid><pubDate>Fri, 11 Sep 2026 10:56:22 +0000</pubDate><atom:updated>2026-09-11T10:56:22.595Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Solomon Pappaiah,சாலமன் பாப்பையா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/dhohhz8t/Solomon.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ solomon pappaiah]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/dhohhz8t/Solomon.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[  <p>சாலமன் பாப்பையாவின் இயற்பெயர் சுந்தரம் சாலமன் பாப்பையா. இவர் 1936-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி பிறந்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற சாலமன் பாப்பையா, பின்னர் மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார்.</p><p>மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராகப் பணியாற்றியவர் சாலமன் பாப்பையா, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பட்டிமன்றங்களில் நடுவராக அமர்ந்து நகைச்சுவை உணர்வுடன் ஆழமான கருத்துகளையும் வெளிப்படுத்தி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். திருக்குறள் உள்ளிட்ட பல்வேறு தமிழ் இலக்கியம் கொண்டாடிய நூல்களுக்கு, சாலமன் பாப்பையா உரை எழுதியிருக்கிறார். தமிழுக்கு அவர் ஆற்றிய தொண்டுக்காக 2000-வது ஆண்டில் தமிழக அரசின் கலைமாமணி விருதினை பெற்றுள்ளார். 2021-ம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதையும் பெற்றவர். பாய்ஸ், சிவாஜி உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களிலும் சாலமன் பாப்பையா நடித்தார்.</p><h2>பேச்சாளர்</h2><p>சாலமன் பாப்பையா பள்ளியில் படிக்கும்போது பல பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு பேசினார். திராவிட இயக்கப் பேச்சாளர்கள் மற்றும் முத்துராமலிங்கத் தேவர், காமராஜர் போன்றோரது பேச்சுக்களால் ஈர்க்கப்பட்டார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் திருவள்ளுவர் கழகத் தலைவராகப் பணியாற்றினார். குன்றக்குடி அடிகளார், இரா. நெடுஞ்செழியன், க. அன்பழகன் போன்றோரது பேச்சரங்குகளை ஒருங்கிணைத்தார். அதன் மூலமும், சா. கணேசன், குன்றக்குடி அடிகளார் போன்றோரது சொற்பொழிவுகளைக் கேட்டும், தொடர் வாசிப்புப் பயிற்சியாலும், தன்னை ஒரு பேச்சாளராக வளர்த்துக் கொண்டார்.</p><p>வகுப்பறையில் மாணவர்களுக்குத் தமிழ் இலக்கியம் கற்பித்த பேராசிரியர், வகுப்பறைக்கு வெளியே அதே இலக்கியத்தை சாதாரண மக்களிடம் எடுத்து செல்லத் தொடங்கினார்.</p><h2>முதல் மேடைப் பேச்சு</h2><p>முதல் மேடைப் பேச்சு 1961-ல் புதுக்கோட்டையில் நிகழ்ந்தது. பாரதி வேதாந்தக் கவிஞனா?, புதுமைக் கவிஞனா? என்ற விவாதத் தலைப்புகளில், புதுமைக் கவிஞனே என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். தொடர்ந்து கல்லூரியில் பணியாற்றிக் கொண்டே பட்டிமன்ற நிகழ்வுகள் பலவற்றில் பேச்சாளராகக் கலந்துகொண்டார். பட்டிமன்ற நடுவராக உயர்ந்தார். பட்டிமன்றம் ராஜா, பாரதி பாஸ்கர் போன்ற தன் குழுவினருடன் தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்து பட்டிமன்ற நிகழ்ச்சிகளை நடத்தினார். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, இலங்கை எனப் பல வெளிநாடுகளில் பட்டிமன்ற நிகழ்ச்சிகளை நடத்தினார். 7000-க்கு மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தினார்.</p><h2>கட்டுரைகள்</h2><p>சாலமன் பாப்பையா பணிகளுக்கு இடையே இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுக் கட்டுரைகளை எழுதினார். அவை தொகுக்கப்பட்டு நூல்களாக வெளிவந்தன. திருக்குறளுக்கு உரை விளக்கம் எழுதினார். மாநாட்டு மலர்கள் பலவற்றிலும் அமுதசுரபி, ஆனந்த விகடன், கல்கி, தினமணி கதிர், குங்குமம், குமுதம் போன்ற இதழ்களிலும் பல்வேறு கட்டுரைகளை எழுதினார். இவருடைய 'உரைமலர்கள்' நூல் பல்கலைக்கழகங்களில் பாட நூலாக வைக்கப்பட்டது.</p><h2>தமிழாய்வு</h2><p>சாலமன் பாப்பையா புறநாநூறு பாடல்கலை புதிய வரிசைப்படி உரையெழுதி வெளியிட்டார். அகநாநூறு மூன்று தொகுதிகளாக உரை எழுதினார்.</p><h2>பட்டிமன்றங்கள்</h2><p>சாலமன் பாப்பையா பட்டிமன்றத்தை கண்டுபிடிக்கவில்லை. அவருக்கு முன்பே தமிழகத்தில் வளமான பட்டிமன்ற மரபு இருந்தது. ஆனால் அந்த வடிவத்தை வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்த்ததில் அவருக்குத் தனித்த இடம் இருக்கிறது.</p><p>ஒரு காலத்தில் இலக்கிய விழாக்கள், கல்லூரிகள், தமிழ் அமைப்புகள் போன்றவற்றை மையமாகக் கொண்டிருந்த பட்டிமன்றம், தொலைக்காட்சி வளர்ச்சிக்குப் பிறகு குடும்ப நிகழ்ச்சியாக மாறியது.</p><p>அந்த மாற்றத்தின் முக்கிய முகமாக சாலமன் பாப்பையா இருந்தார். தீபாவளி, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவரது பட்டிமன்றங்கள் தமிழகக் குடும்பங்களின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவே மாறின.</p><h2>கடினமான தமிழை எளிய தமிழாக்கியவர்</h2><p>சாலமன் பாப்பையாவின் வெற்றிக்கு முக்கியமான காரணம் அவரது மொழிநடை. தமிழ் இலக்கியத்தில் ஆழ்ந்த புலமை இருந்தாலும், மேடையில் அதை வெளிப்படுத்தும்போது மிகக் கடினமான இலக்கிய மொழியை அவர் தேர்வு செய்வதில்லை.</p><p>திருக்குறளையோ, சங்க இலக்கியத்தையோ, கம்பராமாயணத்தையோ எடுத்துக்கொண்டாலும் அன்றாட வாழ்க்கையில் நாம் பார்க்கும் ஒரு சம்பவத்துடன் இணைத்து விளக்குவார்.</p><p>அதற்குள் மதுரைக்கே உரிய இயல்பான பேச்சுத்தமிழும் நகைச்சுவையும் கலந்து வரும். இதன் காரணமாக இலக்கியம் படிக்காதவர்களும் அவர் சொல்லும் இலக்கியக் கருத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை வகுப்பறைகளுக்குள் இருந்த தமிழை கடைக்கோடி மக்களிடம் அறிமுகப்படுத்தியவர்.</p><h2>குடும்பம்</h2><p>இவரது மனைவி ஜெயபாய், ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். கடந்த 2025-ம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். இவருக்கு தியாகமூா்த்தி என்ற மகனும், விமலா என்ற மகளும் உள்ளனா்.</p>]]></content:encoded></item><item><title>விமான நிலையத்திற்கு ஒரு நீதி, சிப் ஆலைக்கு ஒரு நீதியா? பரந்தூர் பகுதியில் 410 ஏக்கர் விளைநிலம் எடுப்பதை கைவிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/one-rule-for-the-airport-and-another-for-the-chip-plant-the-plan-to-acquire-410-acres-of-agricultural-land-in-the-parandur-area-must-be-abandoned-anbumani-ramadoss</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/one-rule-for-the-airport-and-another-for-the-chip-plant-the-plan-to-acquire-410-acres-of-agricultural-land-in-the-parandur-area-must-be-abandoned-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">42943d8b-8b09-491a-bccd-b379b8b56bc2</guid><pubDate>Fri, 11 Sep 2026 10:35:50 +0000</pubDate><atom:updated>2026-09-11T10:35:50.129Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,Parandur Airport,பரந்தூர் விமான நிலையம்,Maduramangalam,SIPCOT Park,மதுரமங்கலம்,சிப்காட் பூங்கா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/mhgyju9w/New-Project-2026-09-11T160516.816.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விமான நிலையத்திற்கு ஒரு நீதி, சிப் ஆலைக்கு ஒரு நீதியா? பரந்தூர் பகுதியில் 410 ஏக்கர் விளைநிலம் எடுப்பதை கைவிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/mhgyju9w/New-Project-2026-09-11T160516.816.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விமான நிலையத்திற்கு ஒரு நீதி, சிப் ஆலைக்கு ஒரு நீதியா? பரந்தூர் பகுதியில் 410 ஏக்கர் விளைநிலம் எடுப்பதை கைவிட வேண்டும் என பாமக தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/secretariat-should-not-be-established-in-congested-pattinapakkam-anbumani-insists">அன்புமணி ராமதாஸ் </a>வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,</p><p>“காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூருக்கு அருகில் உள்ள மதுரமங்கலம் கிராமத்தில் செமிகண்டக்டர் பூங்கா  அமைப்பது உள்ளிட்ட பயன்பாடுகளுக்காக 410 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தும் பணிகளை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தியுள்ளது. </p><p>விளைநிலங்களை கையகப்படுத்தக்கூடாது என்பதற்காக பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிட்ட தவெக அரசு, அதன் எல்லையில் அமைந்துள்ள மதுரமங்கலத்தில் நிலங்களை கையகப்படுத்தி நூற்றுக்கணக்கான உழவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பது அநீதியானதும், கண்டிக்கத்தக்கதும் ஆகும்.</p><h2>கையகப்படுத்துதல் நடவடிக்கை தீவிரம்</h2><p>காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் வட்டம் மதுரமங்கலம் கிராமத்தின் பிரிவு ‘அ’, பிரிவு ‘ஆ’ ஆகிய பகுதிகளில் 410.80 ஏக்கர் புன்செய் விளைநிலங்கள், 11.55 ஏக்கர் புறம்போக்கு நிலங்கள் என மொத்தம் 423.35 ஏக்கர் நிலங்களை புதிய சிப்காட் வளாகம் அமைப்பதற்கு கையகப்படுத்துவதற்கான அரசாணை கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. </p><p>அதன்படி கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களின்  பட்டியல் கடந்த 27.03.2025ஆம் நாள் நாளிதழ்களிலும், 09.03.2026ஆம் நாள் தமிழ்நாடு அரசிதழிலும் வெளியிடப் பட்டிருந்த நிலையில், அதைத் தொடர்ந்து நிலம் கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தியுள்ளது. </p><p>இது குறித்து நிலங்களின் உரிமையாளர்களை ஓரகடம், இருங்காட்டுக்கோட்டை ஆகிய சிப்காட் வளாகங்களின் விரிவாக்கத்திற்கான நிலம் எடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் பிள்ளைப்பாக்கம் சிப்காட் வளாகத்திற்கு அழைத்து முந்தைய திமுக அரசால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு நிலங்களை வழங்கும்படி கட்டாயப்படுத்துவதாக இந்த நிலம் எடுப்பால் பாதிக்கப்படும் விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.</p><h2>புன்செய் நிலங்கள்</h2><p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி அவை விதி எண் 110இன் கீழ் அறிக்கை அளித்த முதலமைச்சர் விஜய், காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலத்தில் சிப்களை தயாரிப்பதற்கான செமி கண்டக்டர் மற்றும் மின்னணு பொருள்கள் உற்பத்திப் பூங்கா ரூ.175 கோடியில் அமைக்கப்படும்; இதற்காக ரூ.2000 கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்படும் என்று அறிவித்தார்.</p><p>அந்தப் பூங்கா அமைப்பதற்காக மதுரமங்கலம் கிராமத்தின் பிரிவு ‘ஆ’ பகுதியில் 14.25 ஹெக்டேர், அதாவது 35.20 ஏக்கர் நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாகவும், அதற்காகவே நிலம் எடுக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.</p><p>மதுரமங்கலம் பகுதியில் கையகப்படுத்தப்படவுள்ள நிலங்கள் புன்செய் நிலங்கள் ஆகும். அவற்றில் மா, தென்னை, தேக்கு உள்ளிட்ட மரங்கள் உள்ளன. அவை தான் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான  உழவர்களுக்கு நீடித்த வாழ்வாதாரமாக திகழ்ந்து வருகின்றன. </p><p>அந்த நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால்  அவற்றின்  உரிமையாளர்களான விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் நிலை ஏற்படும். அதுமட்டுமின்றி, அந்த நிலங்களில் பணியாற்றி வரும் வேளாண் கூலித் தொழிலாளர்களும் வேலை இழந்து வறுமையில் வாடும் நிலை உருவாகும். </p><p>இந்த உண்மைகளை உணர்ந்தும் நிலங்களைப் பறிக்க தவெக அரசு துடிப்பது மனிதாபிமானமற்றது.</p><h2>அரசுக்கு தெரியாமல் இல்லை</h2><p>செமி கண்டக்டர் மற்றும் மின்னணு பொருள்கள் உற்பத்திப் பூங்கா அமைக்கப்படவுள்ள மதுரமங்கலம் கிராமம், பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படவிருந்த 12 கிராமங்களுக்கு மிகவும் அருகில் அமைந்துள்ளது.</p><p>விமான நிலையத்தின் மையப்பகுதியாக கருதப்படும் பரந்தூரில் இருந்து 10 கி.மீ தொலைவிலும், முதலமைச்சர் விஜய் நேரில் சென்ற ஏகனாபுரத்திலிருந்து 5 கி.மீ, விமான நிலையத்தின் கிழக்கு எல்லையான சிங்கிலிப்பாடி  கிராமத்தை ஒட்டியும், வடகிழக்கு எல்லையான குணகரம்பாக்கம் கிராமத்திலிருந்து ஒரு கி.மீ தொலைவிலும்  மதுரமங்கலம் கிராமம் அமைத்திருக்கிறது. </p><p>இந்த உண்மைகள் எதுவும் அரசுக்கு தெரியாமல் இருக்க முடியாது.</p><p>அவ்வாறு இருக்கும் போது பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்பட்டால், விவசாயிகள் பாதிக்கப்படுவர் என்று கூறி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட்ட முதலமைச்சர் விஜய், </p><p>இப்போது மதுரமங்கலத்தில் மட்டும் செமிகண்டக்டர் மற்றும் மின்னணு பொருள்கள் உற்பத்திப் பூங்கா அமைப்பதற்காக உழவர்களின் நிலங்களை பறித்துக் கொண்டு அவர்களை துரத்தியடிப்பது எந்த வகையில் நியாயம்? </p><h2>விமான நிலையம் மாறும்போது, சிப்காட் பூங்கா மாறாதா?</h2><p>விமான நிலையம் அமைப்பதால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் செமிகண்டக்டர் பூங்கா அமைப்பதால் ஏற்படாதா? 5 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலான நிலம் தேவைப்படும் விமான நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற முடியும் போது, </p><p>வெறும் 35 ஏக்கர் நிலம் மட்டுமே தேவைப்படும் செமிகண்டக்டர் பூங்காவையும், 423.35 ஏக்கர் நிலம்  தேவைப்படும் ஒட்டுமொத்த சிப்காட் வளாகத்தையும் வேறு இடத்திற்கு மாற்ற முடியாதா? என்று அங்குள்ள மக்கள் எழுப்பும் வினாக்களுக்கு முதலமைச்சர் விஜய் விடையளிக்க வேண்டும்.</p><h2>பரந்தூர் நீதி, மதுராமங்கலத்திற்கும் கிடைக்க வேண்டும்</h2><p>விவசாயிகள் தான் தமிழ்நாட்டின் முதுகெலும்பு. அவர்கள்தான் உலகிற்கு உணவு படைக்கும் கடவுள்கள். அவர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். பாதிக்கப்படும் உழவர்களுக்கு நீதி வழங்குவதில் பாகுபாடு காட்டக் கூடாது. </p><p>பரந்தூர் விமான நிலையத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் அதே நீதி, அதற்கு மிக அருகில் அமைந்துள்ள  மதுரமங்கலத்தில் செமிகண்டக்டர் பூங்கா அமைப்பதால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கும் வழங்கப்பட வேண்டும்.</p><p>அதற்காக, மதுரமங்கலம் கிராமத்தில் 410 ஏக்கர் வேளாண் நிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். செமிகண்டக்டர் பூங்கா உள்ளிட்ட சிப்காட் வளாகத்தை ஏற்கனவே அரசால் கையகப் படுத்தப்பட்ட நிலங்களிலோ அல்லது அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களிலோ அமைக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>ஏமன் மீதான சவுதி அரேபியாவின் முற்றுகையை முடிவுக்கு கொண்டு வர ஈரான் அழைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/iran-seeks-end-to-saudi-blockade-of-yemen-after-tehran-backed-rebels-take-key-port</link><comments>https://www.maalaimalar.com/news/world/iran-seeks-end-to-saudi-blockade-of-yemen-after-tehran-backed-rebels-take-key-port#comments</comments><guid isPermaLink="false">21f30b10-2416-4bb9-9856-6ec03cbfafae</guid><pubDate>Fri, 11 Sep 2026 10:15:58 +0000</pubDate><atom:updated>2026-09-11T10:15:58.583Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Yemen,ஏமன்,Houthi rebels,செங்கடல்,Red Sea,ஹவுதி கிளர்ச்சியாளர்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/skp69hid/MokhaYemenIran.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஏமனில் உள்ள மோகா துறைமுகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/skp69hid/MokhaYemenIran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>செங்கடலின் தெற்குப் பகுதியில் உள்ள பாப் அல்-மாண்டெப் முக்கியமான ஜலசந்தியாகும். ஹார்முஸ் ஜலசந்திக்கு அடுத்தப்படியாக உலகளவில் 12 சதவீதம் எண்ணெய் போக்குவரத்து இந்த ஜலசந்தி வழியாக நடைபெற்று வருகிறது.</p><p>இந்த ஜலசந்தி ஏமன் நாட்டின் எல்லையில் உள்ளது. இதன் அண்டை நாடு சவுதி அரேபியா ஆகும். எண்ணெய் போக்குவரத்திற்கு சவுதி அரேபியா இந்த ஜலசந்தியை பயன்படுத்தி வருகிறது.</p><h2>ஏமன் உள்நாட்டு போர்</h2><p>கடந்த 2014-ம் ஆண்டு ஏமன் நாட்டில் உள்நாட்டு போர் ஏற்பட்டது. இதில் அரசுக்கும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சி குழுவுக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டன. தலைநகர் ஹவுதி கிளர்ச்சி குழு கைவசம் உள்ளது. என்றாலும் உலக நாடுகள் ஏமன் அரசு ராணுவத்தை அங்கீகரித்துள்ளன.</p><p>ஏமன் படைக்கு சவுதி அரேபியா உதவி செய்ய முன்வந்தது. சர்வதேச அங்கீகாரம் வழங்கப்பட்ட அரசுடன் இணைந்து சவுதி கூட்டுப்படை ஹவுதி கிளர்ச்சிக்குழுக்கு எதிராக சண்டையிட்டு வருகிறது. அத்துடன் பாப் அல்-மாண்டெப் ஜலசந்தியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது.</p><p>கடந்த 2022-ம் ஆண்டு சண்டை சற்று கட்டுக்குள் வந்தது. இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சிக்குழு தாக்குதல் நடத்த தொடங்கியது. இதனால் செங்கடல் வழியாக செல்லும் கப்பல் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது. மீண்டும் பதற்றம் தொற்றிக் கொண்டது.</p><h2>மோகா துறைமுகம்</h2><p>இந்த நிலையில்தான் பாப் அல்-மாண்டெப் ஜலசந்தியில் இருந்து 80 கி.மீ. தொலைவில் இருக்கும் மோகா என்ற துறைமுகத்தை ஹவுதி கிளர்ச்சிக்குழு கைப்பற்றியுள்ளது.</p><h2>பேச்சுவார்த்தைக்கு உதவ தயார் என்கிறது ஈரான்</h2><p>இந்த நிலையில் ஹவுதி கிளர்ச்சிக்குழு மோகா துறைமுகத்தை கைப்பற்றியது குறுித்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகையில் "ஏமனின் இறையாண்மைக்கு கட்டாயம் மரியாதை செலுத்த வேண்டும். இந்த பிரச்சினை முற்றுகை அல்லது ராணுவ கூட்டணிகள் மூலம் தீர்த்துக் கொள்ள முடியாது. பேச்சுவார்த்தைக்கு உதவ நாங்கள் தயாராக இரு்ககிறோம். ஏமன் மீதான சவுதி அரேபியாவின் முற்றுகையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்" எனத் தெரிவித்துள்ளது.</p><p>சவுதி அரேபியா அமெரிக்காவின் கூட்டாளியாகும். ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கடந்த 6 மாதமாக சண்டை நடைபெற்று வரும் நிலையில், சவுதி அரேபியா பேச்சுவார்த்தைக்கு சென்றால் அது ஈரானுக்கு சாதகமாக இருக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளுக்கான தகுதி மதிப்பெண்களை குறைக்க வேண்டும் - மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-urges-the-central-government-to-lower-the-qualifying-marks-for-neet-super-speciality-medical-courses</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-urges-the-central-government-to-lower-the-qualifying-marks-for-neet-super-speciality-medical-courses#comments</comments><guid isPermaLink="false">87488c09-4874-41ad-935a-3da97fb86ecc</guid><pubDate>Fri, 11 Sep 2026 10:11:13 +0000</pubDate><atom:updated>2026-09-11T10:11:13.446Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,Supreme Court,உச்ச நீதிமன்றம்,Centre,மு.க.ஸ்டாலின்,NEET SS,நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/vr7jq5ad/New-Project-2026-09-11T153929.287.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளுக்கான தகுதி மதிப்பெண்களை குறைக்க வேண்டும் - மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/vr7jq5ad/New-Project-2026-09-11T153929.287.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளுக்கான தகுதி மதிப்பெண்களை குறைப்பது குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>இதனை மேற்கோள்காட்டி முந்தைய ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் தகுதி மதிப்பெண்ணை  பூஜ்ஜியமாகக் குறைக்க வேண்டும் என தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-urges-resolution-to-safeguard-obc-rights">மு.க.ஸ்டாலின்</a> வலியுறுத்தியுள்ளார். </p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது; </p><p>“மத்திய அரசின் சுகாதார சேவைகள் தலைமை இயக்குநரகம் தகுதிப் புள்ளிக்கான சதவீத வரம்பைக் குறைக்காததால், நாடு முழுவதும் சுமார் 1,857  ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ மருத்துவப் படிப்பு இடங்கள் காலியாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. </p><p>இதில் தமிழ்நாட்டில் பணியில் உள்ள மருத்துவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 40 இடங்களும் அடங்கும்.</p><p>நேற்று, தமிழ்நாடு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வழக்கில், இந்த சதவீத வரம்பைக் குறைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. </p><p>எனவே, முந்தைய ஆண்டுகளைப் போலவே, இதற்கான வரம்பை 'பூஜ்ஜிய சதவீதத்திற்கு’ குறைக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.</p><p>மருத்துவ இடங்கள் காலியாக இருக்கும்போது, ​​மாநிலங்கள் தங்கள் பணியில் உள்ள மருத்துவர்களுக்கான ஒதுக்கீட்டிற்குத் தகுந்தவாறு சதவீத வரம்பைத் தாங்களாகவே குறைத்துக்கொள்ள மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். </p><p>பொது சுகாதாரம் என்பது மாநிலங்களின் அரசியலமைப்புச் சார்ந்த பொறுப்பாகும்.</p><p>நமது மக்களுக்குக் கூடுதல் சிறப்பு மருத்துவர்கள் தேவைப்படும் சூழலில், நாட்டின் மதிப்புமிக்க சொத்தான மருத்துவ இடங்கள் எதுவும் வீணாக அனுமதிக்கப்படக் கூடாது.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தமிழறிஞர் சாலமன் பாப்பையா மறைவு- முதலமைச்சர் விஜய் இரங்கல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/prof-salomon-pappaiya-passes-away-cm-vijay-mourns</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/prof-salomon-pappaiya-passes-away-cm-vijay-mourns#comments</comments><guid isPermaLink="false">23a549c7-1249-4c1d-a671-cf73ebbc5813</guid><pubDate>Fri, 11 Sep 2026 10:00:51 +0000</pubDate><atom:updated>2026-09-11T10:00:51.199Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>மறைவு,passed away,cm vijay,முதலமைச்சர் விஜய்,சாலமன் பாப்பையா,saloman paapaiya</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/xwuj58jk/salomon.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Soloman pappaiahh- CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/xwuj58jk/salomon.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.</p><p>பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/pattimandram-judge-solomon-pappaiah-passed-away" rel="nofollow">சாலமன் பாப்பையா</a> (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார்.</p><p>இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.</p><p>அந்த வகையில், முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் சாலமன் பாப்பையா மறைவுக்கு இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.</p><p>அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழின் பெருமையையும், தமிழர்களின் வாழ்வியலையும் பட்டிமன்ற மேடைகள் வழியாக உலகறியச் செய்த தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன்.</p><p>தமது நகைச்சுவை கலந்த பேச்சாலும், ஆழ்ந்த தமிழ்ப் புலமையாலும், சமூகச் சிந்தனைகளை எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்ததோடு, பட்டிமன்றங்களை வெறும் பொழுதுபோக்கு நிகழ்வுகளாக அல்லாமல், சிந்தனையைத் தூண்டும் அறிவுத் தளங்களாக மாற்றியதில் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் பங்கு மகத்தானது. அவரது மறைவு தமிழ்கூறு நல்லுலகிற்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும்.</p><p>அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>மனோஜ் ஜராங்கேவை யாராவது தொட நினைத்தால்., மகாராஷ்டிரா அரசுக்கு அபிஜீத் தீப்கே எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/dipke-urges-maharashtra-govt-to-talk-to-jarange-warns-against-forcible-intervention</link><comments>https://www.maalaimalar.com/news/national/dipke-urges-maharashtra-govt-to-talk-to-jarange-warns-against-forcible-intervention#comments</comments><guid isPermaLink="false">1257ecd6-59f2-46b7-b903-fba8f806ef8d</guid><pubDate>Fri, 11 Sep 2026 09:33:56 +0000</pubDate><atom:updated>2026-09-11T09:33:56.664Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மனோஜ் ஜராங்கே பாட்டீல்,மராத்தா இடஒதுக்கீடு,abhijeet dipke,அபிஜீத் தீப்கே,Manoj Jarange</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/4u3mvnsv/AbhijeetDipke001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Manoj Jarange-  Abhijeet Dipke]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/4u3mvnsv/AbhijeetDipke001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என உண்ணாவிரத போராட்டம் நடத்தும் ஜராங்கே உடன் மகாராஷ்டிரா அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜீத் தீப்கே வலியுறுத்தியுள்ளார்.</p><h2>மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு</h2><p>மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கக் கோரி மனோஜ் ஜராங்கே கடந்த 14 நாட்களாக ஜால்னா மாவட்டத்தில் உள்ள அந்தவாலி சாரதி என்ற கிராமத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார். அவரை கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜீத் தீப்கே சந்தித்தார்.</p><h2>பின்னர் அபிஜீத் ஜராங்கே கூறியதாவது:-</h2><p>மகாராஷ்டிர அரசு மனோஜ் ஜராங்கே உடன் பேச்சுவார்த்தை நடத்தி அவருடைய கோரிக்கையை புரிந்து கொள்ள வேண்டும். அவரை வெளியேற்றும் வகையில் தொடுவதற்கு முயற்சிக்கக் கூடாது. ஏனென்றால், இது மகாராஷ்டிரா. அப்படி தொட்டால் விளைவுகள் ஏற்படும்.</p><p>மகாராஷ்டிரா முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?. அவர்களுடைய குழந்தைகளை படிப்பிற்காக வெளிநாட்டிற்கு அனுப்புகிறார்கள். ஏனென்றால், இங்குள்ள பள்ளிகள் அந்த அளவிற்கு தரமானதாக இல்லை.</p><h2>ஜராங்கேவிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்</h2><p>மனோஜ் ஜராங்கேயை நீண்ட காலம் பட்டினி கிடக்க வைக்க அரசு விரும்புகிறதா? நகைச்சுவை நடிகர்களைச் சந்திக்க அரசியல் தலைவர்களுக்கு நேரம் இருக்கிறது, ஆனால் ஜராங்கேயிடம் பேச யாரும் வரவில்லை.</p><p>சோனம் வாங்சுக்கிடம் நடந்ததைப் போல, மனோஜ் ஜரங்கேவிடமும் அதைச் செய்ய முயற்சிக்கக் கூடாது. இது மகாராஷ்டிரா. இங்கே அது பலிக்காது. யாராவது மனோஜ் ஜரங்கையைத் தொட்டால், ஒட்டுமொத்த மகாராஷ்டிராவும் இங்கு (அந்தர்வாலி சரதிக்கு) திரண்டு வரும்.</p><p>மனோஜ் ஜராங்கேவை அவர்கள் சாக விடப்போகிறார்களா? அரசு, முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் இங்கு வந்து மனோஜ் ஜராங்கேவிடம் பேசி, அவரது கோரிக்கைகளைக் கேட்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.  ஏனெனில், அவர் தனக்காக எதையும் கேட்கவில்லை.</p><h2>சிறந்த பள்ளிகள் உள்ள ஒரு கிராமம் உள்ளதா?</h2><p>பிரதமேஷ் தேஷ்முக்கைப் (மகாராஷ்டிரா அரசு நடத்தும் தேர்வுக்காக படித்த தற்கொலை செய்து கொண்ட இளைஞர்) போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழக்கூடாது என்று அரசு விரும்பினால், MPSC மற்றும் மனோஜ் ஜராங்கே எழுப்பியுள்ள பிரச்சினைகளுக்கு அது ஒரு தீர்வைக் காண வேண்டும். அனைவருக்கும் வேலைவாய்ப்பை வழங்க அரசால் இயலாத சூழலில், அவர் இடஒதுக்கீட்டைக் கோருகிறார்.</p><p>மாணவர்களுக்குச் சிறந்த பள்ளிகள், தரமான கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் ஒரு கிராமத்தைக் காட்டுங்கள். இத்தகைய வசதிகளைச் செய்து தருவதில் அரசு தோல்வியடைந்துவிட்டது; அதனால்தான் மனோஜ் ஜரங்கே போராடிக்கொண்டிருக்கிறார்.</p><p>இவ்வாறு அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ் இலக்கிய உலகிற்கும், பட்டிமன்றத் துறைக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு - எடப்பாடி பழனிசாமி
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/irreparable-loss-to-tamil-literary-world-and-debate-field-edappadi-palaniswami</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/irreparable-loss-to-tamil-literary-world-and-debate-field-edappadi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">00905420-5d68-4117-add0-19b1483b8fce</guid><pubDate>Fri, 11 Sep 2026 09:32:48 +0000</pubDate><atom:updated>2026-09-11T09:32:48.748Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Edappadi Palaniswami,எடப்பாடி பழனிசாமி,சாலமன் பாப்பையா,Solomon Pappiah</media:keywords><media:content height="1080" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/pksjtdsn/TNPSC.png" width="1920"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Solomon Pappiah -edappadi palaniswami]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/pksjtdsn/TNPSC.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மறைவு </h2><p> சிறந்த பட்டிமன்ற பேச்சாளரும், தமிழறிஞருமான<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/pattimandram-judge-solomon-pappaiah-passed-away"> சாலமன் பாப்பையா </a>வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். </p><h2>இபிஎஸ் </h2><p>மறைந்த பிரபல பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா இறப்பிறகு அதிமுக பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/news/district/tiruvannamalai-news-admk-condemns-electricity-tariff-hike-demonstration-tomorrow-on-behalf-of-490486">எடப்பாடி பழனிசாமி </a>இரங்கல் தெரிவித்துள்ளார்.</p> <p>இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,</p><p>தமிழின் இனிமையையும், பட்டிமன்றத்தின் சிறப்பையும் தனது தனித்துவமான பேச்சாற்றலால் உலகெங்கும் கொண்டு சேர்த்த </p><p>தமிழறிஞர், பேராசிரியர், பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.</p><p>தனது நகைச்சுவை கலந்த பேச்சால் மக்களைச் சிரிக்க வைத்ததோடு, தமிழ் மொழியின் பெருமையையும், நம் பண்பாட்டின் சிறப்பையும் அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் பேராசியர் சாலமன் பாப்பையா அவர்கள்.</p> <p>அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கும், பட்டிமன்றத் துறைக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.</p><p>அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற இறைவனை வேண்டுகிறேன்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் இன்று வேலைநிறுத்தம்: பணம்-காசோலை பரிவர்த்தனை முடங்கியது</title><link>https://www.maalaimalar.com/news/national/bank-employees-across-country-on-strike-today</link><comments>https://www.maalaimalar.com/news/national/bank-employees-across-country-on-strike-today#comments</comments><guid isPermaLink="false">ffba3462-6f41-49a3-8161-dc671496ec7b</guid><pubDate>Fri, 11 Sep 2026 09:29:17 +0000</pubDate><atom:updated>2026-09-11T09:29:17.537Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,Central govt,Bank Employees Strike,வங்கி ஊழியர்கள் ஸ்ட்ரைக்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/f2mh6g6g/bank.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ bank strike]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/f2mh6g6g/bank.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக பணம், காசோலை பரிவர்த்தனை நாடு முழுவதும் இன்று முடங்கியது.</strong></em></p><p>வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் நாடு முழுவதும் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.</p><h2>ஸ்டிரைக்</h2><p>வாரத்தில் 5 நாட்கள் வேலை, அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறையாக அறிவிக்க வேண்டும், புதிதாக பணிக்குச் சேர்ந்த ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடக்கிறது.</p><p>அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு உள்ளிட்ட 7 சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.</p><p>இந்தியா முழுவதும் ஒரு லட்சம் வங்கிக் கிளைகளில் பணியாற்றும் 8 லட்சம்  ஊழியர்கள், அதிகாரிகள் பணிக்குச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.</p><h2>தமிழகம்</h2><p>தமிழகத்தில் 18,000 கிளைகள் செயல்படுகின்றன. இதில் பணியாற்றும் 60,000 பேர் போராட்டத்தில் பங்கேற்றனர்.</p><p>பொதுத்துறை வங்கிகள் மட்டுமல்லாது தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கி ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் கலந்து  கொண்டதால் வங்கி சேவை  முற்றிலும் முடங்கியது.</p><p>வங்கிக் கிளை மேலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டதால் பெரும்பாலான கிளைகள் மூடப்பட்டு இருந்தன. இதனால் வங்கிகளில் பணம், காசோலை டெபாசிட் செய்தல், பணம் எடுத்தல், காசோலை பரிவர்த்தனை உள்ளிட்ட சேவைகள் முழுவதும் நடைபெறவில்லை. </p><p>இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். வியாபாரிகள், தொழில் நிறுவனங்கள் தங்களது அன்றாட பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாமல் சிரமப்பட்டன.</p><h2>காசோலை முடங்கியது</h2><p>சென்னையில் உள்ள வங்கிகளில் ஊழியர்கள் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டன. நுழைவு வாசல்கள் அடைக்கப்பட்டிருந்தன.</p><p>வங்கி ஊழியர்கள் போராட்டத்தால்  இன்று ஒரு நாள் மட்டும் பல லட்சம் கோடி காசோலை, பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டன.  லட்சக்கணக்கான காசோலைகள் தேங்கின.</p><p>சென்னையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் அருகில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் தலைமையில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்.</p><p>போராட்டத்தின்போது சி.எச்.வெங்கடாசலம் நிருபர்களிடம் கூறியதாவது:</p><p>ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு அதனை நடைமுறைப் படுத்தவில்லை. திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையிலான 5 நாட்கள் வேலை நேரத்தில் 40  நிமிடங்கள் அதிகரிக்கும்படி கேட்டுக் கொண்டோம். இதனைச் செயல்படுத்தாததால் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். </p><p>எங்களது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்டமாக வரும் 28, 29 மற்றும் 30-ம் தேதி அகில இந்திய அளவில் வேலைநிறுத்தம் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.</p><h2>வங்கி சேவை பாதிப்பு</h2><p>இதற்கிடையில், வேலைநிறுத்தத்தால் இன்று மூடப்பட்ட வங்கிகள் தொடர்ந்து மேலும் 3 நாட்கள் மூடப்படுகிறது. அரசு விடுமுறை  காரணமாக 4 நாட்கள் வங்கிகள் செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வங்கி சேவை கடுமையாக பாதிக்கும். ஏ.டி.எம்.கள் பணம் இல்லாமல் செயல்படாத நிலை உருவாகிறது.</p>]]></content:encoded></item><item><title>பட்டிமன்றத்தை பாமரர்களிடம் கொண்டு சென்றவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா - ரஜினிகாந்த்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rajinikanth-says-solomon-pappaiah-is-one-who-took-pattimandram-to-common-people</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rajinikanth-says-solomon-pappaiah-is-one-who-took-pattimandram-to-common-people#comments</comments><guid isPermaLink="false">3c4de154-9f81-4f1b-a3b8-219a1b91ac99</guid><pubDate>Fri, 11 Sep 2026 09:25:10 +0000</pubDate><atom:updated>2026-09-11T09:25:10.217Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Rajinikanth,ரஜினிகாந்த்,Solomon Pappaiah,சாலமன் பாப்பையா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/gnqsm0gk/rajinikanth.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Solomon Pappaiah - Rajinikanth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/gnqsm0gk/rajinikanth.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா மதுரையில் காலமானார்.</p><p>பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/solomon-pappaiah-passed-away-vairamuthu-condolences">சாலமன் பாப்பையா</a> (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் காலமானார். </p><p>அவரது மறைவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கவிஞர் வைரமுத்து, பட்டிமன்ற நடுவர் கு.ஞானசம்பந்தன், அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.</p> <p>இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,</p><p>படித்தவரிடையே இலக்கியத் தரத்தில் இருந்த பட்டிமன்றத்தை பாமரர்களிடமும் ஜனரஞ்சகமாகக் கொண்டு சென்ற மாபெரும் தமிழ் ஆளுமை பேராசிரியர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE">சாலமன் பாப்பையாவின்</a> ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>‘சேயோன்’ இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவு! </title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/second-schedule-of-seyon-wrapped-up</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/second-schedule-of-seyon-wrapped-up#comments</comments><guid isPermaLink="false">63261391-777c-42d8-afeb-bf881b923b04</guid><pubDate>Fri, 11 Sep 2026 09:09:14 +0000</pubDate><atom:updated>2026-09-11T09:09:14.552Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>sivakarthikeyan,சிவகார்த்திகேயன்,Seyon,சேயோன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/626a0t9u/New-Project-2026-09-11T143524.115.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘சேயோன்’ இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவு! ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/626a0t9u/New-Project-2026-09-11T143524.115.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/success-born-of-sooris-hard-work-sivakarthikeyan-praises-the-movie-mandela">சிவகார்த்திகேயன்</a> நடித்து வரும் ‘சேயோன்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கி நிலையில் வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.</p><p>‘தாய் கிழவி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான சிவகுமார் முருகேசன் எழுத்து மற்றும் இயக்கத்தில், கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘சேயோன்’.</p><p>இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ், ராஜ் பி ஷெட்டி, சீமான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பால சரவணன், சிங்கம்புலி, அருள்தாஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். </p><p>படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படம் தீபாவளி அல்லது அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>சிரிக்க வைத்துச் சிந்திக்கவும் வைத்த மேடைக் கலைவாணர் மறைந்துவிட்டார் - வைரமுத்து
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/solomon-pappaiah-passed-away-vairamuthu-condolences</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/solomon-pappaiah-passed-away-vairamuthu-condolences#comments</comments><guid isPermaLink="false">dbe02827-069a-4c66-a033-8fec594bd458</guid><pubDate>Fri, 11 Sep 2026 08:58:37 +0000</pubDate><atom:updated>2026-09-11T08:58:37.832Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Vairamuthu,பட்டிமன்றம்,வைரமுத்து,Solomon Pappaiah,pattimandram,சாலமன் பாப்பையா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/ymvezc0m/vairamuthu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Solomon Pappaiah - Vairamuthu ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/ymvezc0m/vairamuthu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா காலமானார்.</p><p>பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/pattimandram-judge-solomon-pappaiah-passed-away">சாலமன் பாப்பையா</a> (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார்.</p><p>இந்நிலையில் கவிஞர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">வைரமுத்து</a> வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,</p> <p>சாலமன் பாப்பையாவின் </p><p>மறைவு</p><p>உள்ளத்தை உடைக்கிறது</p><p>பாரதி மறைந்தநாளில்</p><p>பாப்பையாவும்</p><p>மறைந்திருக்கிறார்</p> <p>செப்டம்பர் 11</p><p>தமிழுக்கு நல்லநாள்</p><p>இல்லை போலும்</p><p>பட்டிமன்றத் தமிழ்</p><p>முடிந்துவிட்டதா?</p><p>பாமரத் தமிழ்</p><p>மூச்சை நிறுத்திக்கொண்டதா?</p> <p>கல்லூரிகளில்</p><p>பயிற்றுவித்த தமிழைக் </p><p>கடைவீதிக்குக் கொண்டுசேர்த்தவர்</p><p>சாலமன் பாப்பையா</p><p>இந்தக் குளத்தில்</p><p>கல்லெறிந்தவர்கள் நூலில்</p><p>அவர்குறித்தும் எழுதியிருக்கிறேன்</p> <p>சிரிக்க வைத்துச் </p><p>சிந்திக்கவும் வைத்த</p><p>மேடைக் கலைவாணர்</p><p>மறைந்துவிட்டார்</p><p>அவரது நாற்காலி</p><p>காலியாகவே இருக்கும்;</p><p>நிரப்ப முடியாது</p> <p>மதுரைக்கே</p><p>ஒரு வெறுமை வந்துவிட்டது;</p><p>மனம் கலங்குகிறது</p><p>அவரை இழந்து வாடும்</p><p>குடும்பத்தார்க்கும்</p><p>உலகத் தமிழர்களுக்கும்</p><p>ஆழ்ந்த இரங்கல்</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>9/11 தாக்குதல் ஆரம்பம் தான்.. சோவியத் யூனியன் போல அமெரிக்காவை சீர்குலைக்க    ஒசாமா பின்லேடன் வைத்திருந்த மிகப்பெரும் சதித்திட்டம் என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/world/the-911-attacks-were-just-the-beginning-what-was-the-massive-plot-osama-bin-laden-had-devised-to-destabilize-the-united-states-much-like-the-soviet-union</link><comments>https://www.maalaimalar.com/news/world/the-911-attacks-were-just-the-beginning-what-was-the-massive-plot-osama-bin-laden-had-devised-to-destabilize-the-united-states-much-like-the-soviet-union#comments</comments><guid isPermaLink="false">73353bba-e176-48b1-9aef-820e7533ed41</guid><pubDate>Fri, 11 Sep 2026 08:29:07 +0000</pubDate><atom:updated>2026-09-11T08:29:07.684Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,America,அல் கொய்தா,osama bin laden,al-Qaeda,ஒசாமா பின்லேடன்,9/11 தாக்குதல்,9/11 attacks</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/rbomwp6y/tn-17.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/rbomwp6y/tn-17.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>9/11 தாக்குதல் பின் லேடனின் மிகப்பெரிய சதித்திட்டத்தின் ஒரு பகுதி தான் எனவும் அந்த திட்டம் எப்படி தோல்வி அடைந்தது என்பது குறித்தும் பார்ப்போம்.</p> <p>அமெரிக்காவில் 2001 செப்டம்பர் 11 அன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் 25வது ஆண்டு நினைவு தினம் இன்று. </p><h2>9/11 தாக்குதல் </h2><p>2001 செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவில் ஓசாமா பின் லேடன் தலைமையிலான அல் கொய்தா அமைப்பை சேர்ந்த 19 பயங்கரவாதிகள் 4 பயணிகள் விமானங்களை கடத்தினர். </p><p>இரண்டு விமானங்கள் நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்கள் மீதும், மூன்றாவது விமானம் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் மீதும் மோதின. </p><p>நான்காவது விமானத்தை பயங்கரவாதிகளிடம் இருந்து அதிலிருந்த பயணிகள் மீட்க முயன்றபோது விமானம் இலக்கை அடையாமல் பென்சில்வேனியாவில் தரையில் விழுந்து நொறுங்கியது. </p><p>இந்த திட்டமிடப்பட்ட தாக்குதலில் மொத்தம் 2,977 பேர் உயிரிழந்தனர். இது அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான வெளியுறவுக் கொள்கைகளில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியது.</p><p>அல் கொய்தா தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/world/why-did-osama-feel-safe-in-pak-jaishankar-on-islamabads-terror-links-776233">பின் லேடன் </a>2011 மே 2 அன்று பாகிஸ்தானில் பதுங்கியிருந்தபோது அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டது குறிப்பித்தக்கது. </p> <h2>25வது ஆண்டுகள்</h2><p>9/11 தாக்குதலின் 25வது ஆண்டுகள் நிறைவையொட்டி இவ்வாண்டும் அமெரிக்கா முழுவதும் இதில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.</p><p>இந்நிலையில் 9/11 தாக்குதல் பின் லேடனின் மிகப்பெரிய சதித்திட்டத்தின் ஒரு பகுதி தான் எனவும் அந்த திட்டம் எப்படி தோல்வி அடைந்தது என்றும் 'தி கார்டியன்' இதழின் மூத்த பத்திரிகையாளர் ஜேசன் பர்க் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார்.</p> <p>அதில்,</p><h2>பின்லேடனின் திட்டம்</h2><p>9/11 தாக்குதல் மூலம் அமெரிக்காவை ஆப்கானிஸ்தான் போருக்குள் இழுத்து, சோவியத் யூனியனுக்கு நேர்ந்தது போல அதன் பொருளாதாரத்தை சீரழிப்பதே பின்லேடனின் திட்டம் எனப் பரவலாகக் கருதப்பட்டது.</p><p>ஆனால், அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைவதை பின்லேடன் எதிர்பார்க்கவில்லை என்றும், ஏவுகணைத் தாக்குதல்களோடு அமெரிக்கா நிறுத்திக் கொள்ளும் என்றே அவர் தவறாகக் கணக்கிட்டிருந்தார் என்றும் சான்றுகள் காட்டுகின்றன.</p><h2>சோவியத் யூனியன் போல</h2><p>அமெரிக்காவைப் பொருளாதார ரீதியாகப் பலவீனப்படுத்தி, மத்திய கிழக்கிலிருந்து அதை வெளியேறச் செய்வதே பின்லேடனின் இலக்காக இருந்தது.</p><p>அமெரிக்காவை பொருளாதார ரீதியாக ரத்தம் சிந்த வைப்பதாக 2004ல் பின்லேடன் சவால் விட்டிருந்தார்.</p><p>ஆனால் சோவியத் யூனியன் போல அமெரிக்கா வீழவில்லை. மத்திய கிழக்கிலிருந்து தனது படைகளையும் அது முழுமையாக விலக்கிக் கொள்ளவில்லை.</p><p>சவூதி அரேபிய அரச குடும்பம் உட்படத் தனது எதிரி நாடுகளின் ஆட்சியாளர்களை வீழ்த்துவது பின்லேடனின் மற்றொரு இலக்காகும்.</p><h2>இழந்த ஆதரவு</h2><p>9/11 தாக்குதலை ஒரு விளம்பரமாகப் பயன்படுத்தி, உலகளாவிய முஸ்லிம்களைத் தனக்கு ஆதரவாகத் திரட்ட பின்லேடன் முயன்றார்.</p><p>ஆனால், அப்பாவி முஸ்லிம்கள் அதிகளவில் கொல்லப்பட்டதால் அல் கொய்தாவிற்கு எதிராக இஸ்லாமிய உலகிலேயே எதிர்ப்புகள் வலுத்தன.</p><p>அமெரிக்கக் கடற்படையால் கொல்லப்படுவதற்கு சற்று முன்பு, அல் கொய்தா என்ற பெயரையே மாற்றும் அளவிற்கு அமைப்பின் பெயர் சீரழிந்திருந்தது.</p><h2>முடிந்த சகாப்தம்</h2><p>அல் கொய்தா மற்றும் ஐஎஸ்ஐஎஸ் போன்ற அமைப்புகளின் செல்வாக்கு 2019க்குப் பிறகு பெருமளவு சரிந்துவிட்டது.</p><p>தற்போது ஆப்பிரிக்காவின் பலவீனமான மற்றும் அரசு நிர்வாகமற்ற எல்லைப் பகுதிகளிலேயே இவர்களின் செயல்பாடு சுருங்கியுள்ளது.</p><p>அன்றைய அல் கொய்தா அமைப்போடு ஒப்பிடும்போது, தற்போதைய பயங்கரவாத குழுக்களிடம் கரிஸ்மாடிக் தலைவர்கள் எவரும் இல்லை.</p> <p>அமெரிக்காவின் நவீன கண்காணிப்பு மற்றும் தாக்குதல் திறன்களால் அத்தகைய தலைவர்கள் உடனடியாக அழிக்கப்படுவதும் அவர்களின் சகாப்தம் முடிவுக்கு வர முக்கிய காரணமாகும்.</p><p>ஒரு பயங்கரவாத அமைப்பு அழியாமல் உயிர்ப்புடன் இருப்பது மட்டுமே அதன் வெற்றியாகிவிடாது.</p><p>25 ஆண்டுகள் கடந்த நிலையில் அல் கொய்தா இன்னும் இயங்கினாலும், பின்லேடனின் உலகளாவிய கனவுகள் முழுமையாகத் தோல்வியடைந்துவிட்டன என்பதே நிதர்சனம் என தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-recalls-swami-vivekanandas-1893-chicago-speech-as-world-marks-5th-anniversary-of-911-attacks</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-recalls-swami-vivekanandas-1893-chicago-speech-as-world-marks-5th-anniversary-of-911-attacks#comments</comments><guid isPermaLink="false">c7cfbb0b-9e72-4b9f-acb1-bb54be5788cf</guid><pubDate>Fri, 11 Sep 2026 07:59:39 +0000</pubDate><atom:updated>2026-09-11T07:59:39.046Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>pm modi,பிரதமர் மோடி,Swami Vivekanandar,சுவாமி விவேகானந்தர்,chicago speech,சிகாகோ உரை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/qf7si60l/pm-modi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ pm modi, vivakanandar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/qf7si60l/pm-modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சுவாமி விவேகானந்தர் சிகாகோ பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்திய தினம் இன்று என்பதை பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார்.</strong></em></p><p>சுவாமி விவேகானந்தர் கொல்கத்தாவில் 1863-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி பிறந்தவர். இந்து மதத்தை உலகளாவிய மதமாக உயர்த்தியவர் என்று போற்றப்படுகிறார்.</p><p>இந்தியாவின் பாரம்பரியமிக்க வேதாந்த தத்துவங்களையும், யோகாவையும் மேற்கத்திய நாடுகளுக்கு அறிமுகப்படுத்தியதில் மிக முக்கிய பங்காற்றியவர் சுவாமி விவேகானந்தர்.</p><h2>சிகாகோ உரை</h2><p>சிகாகோ பல்கலைக்கழகத்தில் 1893-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி நடந்த ‘சர்வதேச மதங்களின் நாடாளுமன்றம்’ என்ற மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் தனது உரையை, "அமெரிக்காவின் சகோதர சகோதரிகளே" என்ற வாக்கியத்துடன் ஆரம்பித்தார்.</p><p>அவரது உரை அங்கிருந்த சுமார் 7 ஆயிரம் பிரதிநிதிகளின் மனதை வென்றதோடு மட்டுமின்றி, இந்து மதத்திற்கான சர்வதேச அடையாளங்களில் ஒன்றாகவும் மாறியது.</p><h2>எழுச்சியூட்டும் விவேகானந்தர் உரை</h2><p>இந்நிலையில், சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் உரை நிகழ்த்திய தினத்தை பிரதமர் மோடி இன்று நினைவு கூர்ந்துள்ளார். </p><p>இதுதொடர்பாக, பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், 11 செப்டம்பர் 1893, சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் நிகழ்த்திய உரை, இந்தியாவின் நாகரீக நெறிமுறையைப் படம்பிடித்துக் காட்டியது. அவரது எழுச்சியூட்டும் வார்த்தைகள் இன்றும் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன என பதிவிட்டுள்ளார்.</p><h2>25வது ஆண்டு நினைவு நாள்</h2><p>2001 செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதல்களின் 25வது ஆண்டு நினைவு நாளை அமெரிக்கா அனுசரிக்கும் வேளையில், பிரதமர் மோடி விவேகானந்தரின் உரையை மேற்கோள் காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>குண்டு பாய்ந்தாலும் குரல் ஓயவில்லை.. ஓராண்டுக்கு முன் படுகொலை செய்யப்பட்ட சார்லி கிர்க் நினைவை போற்றும் வலதுசாரிகள்</title><link>https://www.maalaimalar.com/news/world/even-though-the-bomb-fell-the-voice-did-not-restright-wingers-honor-the-memory-of-charlie-kirk-who-was-murdered-a-year-ago</link><comments>https://www.maalaimalar.com/news/world/even-though-the-bomb-fell-the-voice-did-not-restright-wingers-honor-the-memory-of-charlie-kirk-who-was-murdered-a-year-ago#comments</comments><guid isPermaLink="false">b40d2636-4d82-4851-ada5-6f2102f12edf</guid><pubDate>Fri, 11 Sep 2026 07:41:40 +0000</pubDate><atom:updated>2026-09-11T07:41:40.889Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>trump,டிரம்ப்,வலதுசாரி,charlie kirk,சார்லி கிர்க்,right wing</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/m8x979q7/tn-16.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[  சார்லி கிர்க்]]></media:title><media:description type="html"><![CDATA[  சார்லி கிர்க்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/m8x979q7/tn-16.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு நெருக்கமான வலதுசாரி செயல்பாட்டாளர் சார்லி கிர்க் கொல்லப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி டிரம்ப் மற்றும் கிர்க் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.</p> <p>அமெரிக்காவில் நவம்பர் மாதம் இடைக்கால தேர்தல் நடைபெற உள்ள சூழலில் அதற்கான குடியரசு கட்சி மாநாடு டல்லாஸில் நேற்று முதல் நடந்து வருகிறது. நேற்று <a href="https://www.maalaimalar.com/topic/donald-trump">டிரம்ப் </a>செப்டம்பர் 10 அங்கு உரையாற்றினார். இடைக்கால தேர்தலில் தங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால் நாட்டில் உள்ள வயது வந்த அனைத்து குடிமக்களுக்கும் ஆளுக்கு 5000 டாலர் தருவதாக அறிவித்தார். </p> <p>இந்நிலையில் மாநாட்டு திடலில் <a href="https://www.maalaimalar.com/topic/charlie-kirk?botrequest=true">சார்லி கிர்க்</a>கிற்கு குடியரசுக் கட்சியினர் தங்கள் அஞ்சலியை செலுத்தினர்.</p><p>டல்லாஸில் உள்ள கூடைப்பந்து மைதானத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான குடியரசுக் கட்சியினர் "சார்லி, சார்லி" என முழக்கமிட்டனர்.</p><p>தொடர்ந்து சார்லி கிர்க்கின் நினைவாக 5 நிமிட அஞ்சலி வீடியோ திரையிடப்பட்டது.</p> <h2>சார்லி கிர்க்</h2><p>சார்லி கிர்க் டர்னிங் பாயிண்ட் யுஎஸ்ஏ என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வந்தவர் ஆவார்.</p><p>கடந்த ஆண்டு செப்டம்பர் 10, உட்டா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிகொண்டிருந்தபோது சார்லி கிர்க் சுட்டுக்கொல்லப்பட்டார்.</p><p>சார்லி கிர்க்கின் மறைவுக்குப் பிறகு, அவரது மனைவி எரிகா கிர்க்டர்னிங் பாயிண்ட் அமைப்பின் தலைமை செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்று, பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்.</p> <p>டர்னிங் பாயிண்ட் அமைப்பின் துணைத் தலைவரும் போதகருமான லூகாஸ் மைல்ஸ் குடியரசு கட்சி மாநாட்டின் மேடையில் பேசுகையில், "ஒரு வருடம் கடந்த போதிலும் அவரது குரல் ஓயவில்லை. மாறாக நமது அமைப்பின் உறுப்பினர்கள் எண்ணிக்கையும் சமூக வலைதளப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளது" என்று கூறினார்.</p> <h2>கொலை வழக்கு</h2><p>சார்லி கிர்க் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 23 வயதான டைலர் ராபின்சன் என்பவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீதான நீதிமன்ற வழக்கு நடந்து வரும் நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.</p><p>கல்லூரி வளாகங்களில் வலதுசாரிச் சிந்தனைகளைப் பரப்புவதில் சார்லி கிர்க் முக்கியப் பங்காற்றினார்.</p><p>இளைஞர்கள் மற்றும் தீவிரக் கிறிஸ்தவப் பழமைவாதிகள் மத்தியில் செல்வாக்குமிக்க தலைவராகவும், டிரம்பின் 'மேக் அமெரிக்கா கிரேட் அகைன்' இயக்கத்தின் முக்கியத் தூணாகவும் அவர் திகழ்ந்தார்.</p><p>கொலை செய்யப்பட்ட அதே உட்டா பல்கலைக்கழக வளாகத்தில், நேற்று மாலை (இந்திய நேரப்படி இன்று அதிகாலை) டர்னிங் பாயிண்ட் அமைப்பு சார்பில் சார்லி கிர்க்கிற்கான சிறப்பு நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது.</p>]]></content:encoded></item><item><title>5 வயதில் உலக சாதனை.. அமெரிக்காவை சேர்ந்த 6 வயது யோகா ஆசிரியர் பற்றி தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/news/world/a-world-record-at-age-5-do-you-know-about-the-6-year-old-yoga-teacher-from-the-us</link><comments>https://www.maalaimalar.com/news/world/a-world-record-at-age-5-do-you-know-about-the-6-year-old-yoga-teacher-from-the-us#comments</comments><guid isPermaLink="false">0db81ac7-190f-4859-8edf-395395154fe0</guid><pubDate>Fri, 11 Sep 2026 07:13:53 +0000</pubDate><atom:updated>2026-09-11T07:13:53.289Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>young girl,Yoga,கின்னஸ் சாதனை,Guinness record,யோகா,சிறுமி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/uw1raqst/tn-14.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பீனிக்ஸ் கிசெல் ஹிக்ஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ பீனிக்ஸ் கிசெல் ஹிக்ஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/uw1raqst/tn-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவை சேர்ந்த பீனிக்ஸ் கிசெல் ஹிக்ஸ் என்ற 6  வயது யோகா ஆசிரியர்  பற்றி தெரியுமா?</p><p>அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டனைச் சேர்ந்தவர் பீனிக்ஸ் கிசெல் ஹிக்ஸ். அவருக்கு வெறும் 6 வயது. </p><p>ஆனால் ஓராண்டுக்கு முன்னதாகவே அதாவது, அவரின் 5 வயதில், சரியாக 5 ஆண்டுகள் மற்றும் 337 நாட்களில் அவர் உலக சாதனை ஒன்றை படைத்திருந்தார். </p><h2>சாதனை </h2><p>இந்த வயதில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட 200 மணிநேர <a href="https://www.maalaimalar.com/health/fitness/healthy-yoga-practice-777831">யோகா </a>ஆசிரியர் பயிற்சி பாடத்தை (Course) வெற்றிகரமாக முடித்து, இந்த இளம் வயதிலேயே சான்றிதழ் பெற்ற, அதாவது அங்கீகரிக்கப்பட்ட யோகா ஆசிரியரானார். இது உலக சாதனை ஆகும்.</p><p>இந்த சாதனையை<a href="https://www.maalaimalar.com/news/national/indian-man-sets-world-record-with-29-foot-long-fingernails"> கின்னஸ் உலக சாதனை </a>அமைப்பு அங்கீகரித்தது.</p><p>கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் அவரின் பெயர் வெளியீட்டின் போது பேசிய அவர், "நான் புதிய விஷயங்களை முயற்சிப்பதையும், கற்றுக்கொள்ளும்போதே மகிழ்ச்சியாக இருப்பதையும் விரும்புகிறேன்.</p> <p>உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் தங்களின் வயது என்னவாக இருந்தாலும், தங்களது கனவுகளைப் பின்தொடர தூண்டுகோலாக இருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.</p><p>இதற்கு முன்பு இந்தியாவின் பிரான்வி குப்தா தனது 7 வயதில் படைத்திருந்த சாதனையை, இந்த ஹூஸ்டன் சிறுமி முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்றடைந்தார் முதலமைச்சர் விஜய் - தமிழர்கள் உற்சாக வரவேற்பு
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-reached-london-to-attract-industrial-investments</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-reached-london-to-attract-industrial-investments#comments</comments><guid isPermaLink="false">cd1c765b-82b3-4ac1-93b0-bb899674569c</guid><pubDate>Fri, 11 Sep 2026 07:04:46 +0000</pubDate><atom:updated>2026-09-11T07:04:46.400Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,லண்டன்,london,தொழில் முதலீடுகள்,Business Investment</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/8l134jbe/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/8l134jbe/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தொழில் முதலீடுகளை ஈர்க்க நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்ற முதலமைச்சர் விஜய் லண்டன் சென்றடைந்தார். </p> <h2>தொழில் முதலீடுகள்</h2><p>முதலமைச்சர் விஜய் தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து பயணம் மேற்கொண்டு உள்ளார். நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டுச் சென்ற முதலமைச்சர் விஜய் நள்ளிரவில் துபாயை சென்றடைந்தார். அங்கிருந்து வேறொரு விமானத்தின் மூலம் இன்று பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் முதலமைச்சர் விஜய் லண்டன் சென்றடைந்தார். </p> <h2>முதலமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு</h2><p>லண்டனில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-to-flag-off-the-car-race-featuring-actor-ajith">முதலமைச்சர் விஜய்க்கு</a> தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு வசித்து வரும் ஏராளமான தமிழர்கள் விஜயை த.வெ.க. கொடியுடன் வரவேற்றனர்.</p><h2>100 நாட்கள்</h2><p>தமிழ்நாட்டை ஆசியாவிலேயே முதலீட்டுக்கு உகந்த முதன்மை மையமாக உருவாக்குவதை தமிழ்நாடு அரசு தனது முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.</p> <h2>தவெக அரசு</h2><p>இதன்படி <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-on-vetri-kazhagam-recognition-and-whistle-symbol-approval">த.வெ.க. </a>அரசு பொறுப்பேற்று 100 நாட்களுக்குள், வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026-ன் வாயிலாக ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. </p> <h2>ஐரோப்பிய நாடுகள்</h2><p>பல்வேறு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் சுமார் 8,491 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டுத் திட்டங்களை முன்வைத்து உள்ளதுடன், அவற்றின் மூலம் சுமார் 5,690 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது, முதலீட்டுச் சந்தைகளில், தமிழ்நாட்டின் மீதான முதலீட்டாளர்களின் ஆர்வமும், நம்பிக்கையும் அதிகரித்து வருவதை எடுத்துக் காட்டுகிறது.</p> <h2>ஏற்றுமதி</h2><p>நடைமுறைக்கு வந்த இந்தியா–பிரிட்டன் விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம், இந்த முன்னெடுப்புகளுக்கு மேலும் வலுசேர்த்துள்ளது. இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த முதல் நாளிலேயே, சென்னையிலிருந்து ஏற்றுமதிப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டதன் வாயிலாக, இந்த ஒப்பந்தத்தைச் செயல்படுத்திய முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு திகழ்கிறது.</p> <h2>முக்கிய நோக்கம்</h2><p>பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனங்கள் நீண்டகாலமாகவே தமிழ்நாட்டில் பொறியியல், நிதிச் சேவைகள் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் குறிப்பிடத்தக்க அளவில் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி ஆலைகளையும், உலகளாவிய திறன் மையங்களையும் நிறுவி செயல்பட்டு வருகின்றன. </p> <p>இத்தகைய உறவுகளை மேலும் வலுப்படுத்துவதும், ஏற்கனவே உள்ள நிறுவனங்களின் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதும், மேம்பட்ட உற்பத்தி, வாகனங்கள் மற்றும் மின்சார வாகனங்கள், மின்னணுவியல் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் ஆகிய துறை களில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதும் முதலமைச்சர் தற்போது மேற்கொள்ளும் இங்கிலாந்து பயணத்தின் முக்கிய நோக்கங்களாகும். இதன்மூலம் தமிழ்நாட்டில் உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வாய்ப்புகள் ஏற்படும்.</p><p>மேலும், தமிழ்நாட்டில் ஏற்கெனவே வலுவாக நிலைபெற்றுள்ள வாகன மற்றும் மின்சார வாகன உற்பத்திச் சூழலை அடிப்படையாகக் கொண்டு, உலகத்தரம் வாய்ந்த ஒரு ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்’ மாநிலத்தில் அமைக்கப்படும் என <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதலமைச்சர் விஜய்</a> சட்டப்பேரவை விதி எண்.110-ன் கீழ் அறிவித்து உள்ளார். இந்த அறிவிப்பை முன்னெடுத்துச் செல்லும் வகையில், உலகின் முன்னணி மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்வையிட்டு, அவற்றின் சிறந்த நடைமுறைகளை அறிந்துகொள்வது பயனுள்ளதாக இருக்கும். இதன் ஒரு பகுதியாக, புகழ்பெற்ற ‘சில்வர்ஸ் டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்’-ஐ பார்வையிடத் திட்டமிடப்பட்டுள்ளது. </p> <h2>வாய்ப்புகள்</h2><p>இதன்மூலம், அங்குள்ள சுற்றுப்பாதை வடிவமைப்பு, பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் இத்தகைய வளாகங்களைச் சிறப்பாகவும் வணிக ரீதியாகவும் செயல்படுத்துவதற்கான சிறந்த நடைமுறைகள் குறித்து விரிவாக அறிந்துகொள்வதுடன், மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்கட்டமைப்பு, விளையாட்டுச் சுற்றுலா மற்றும் அதனுடன் தொடர்புடைய சிறப்பு வாகனத் தொழில்கள் ஆகியவைகளில் உள்ள வாய்ப்புகளையும் அறிந்து கொள்ள இயலும்.</p> <h2>அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</h2><p>லண்டன் சென்றுள்ள குழுவில் பொதுப்பணிகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, தொழில் துறை வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் தீபக் ஜேக்கப், மற்றும் அரசு அலுவலர்கள் இடம் பெற்றுள்ளனர்.</p> <h2>வெளிநாட்டு பயணம்</h2><p>முதலமைச்சர் விஜய் மற்றும் அவருடன் சென்று உள்ள குழுவினர் வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு வருகிற 17-ந்தேதி சென்னை திரும்புகிறார்.</p>]]></content:encoded></item><item><title>மனதில் உறுதி வேண்டும்: இன்று மகாகவி பாரதியார் நினைவு தினம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-mahakavi-bharathiyar-memorial-day</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-mahakavi-bharathiyar-memorial-day#comments</comments><guid isPermaLink="false">8e12a7da-f586-4664-9992-912ad02d0918</guid><pubDate>Fri, 11 Sep 2026 06:56:52 +0000</pubDate><atom:updated>2026-09-11T06:56:52.320Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Bharathiyar,நினைவு தினம்,மகாகவி பாரதியார்,Memorial Day</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/d81kifoe/bharathi.jpg.jpeg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ bharathiyar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/d81kifoe/bharathi.jpg.jpeg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>விடுதலை போராட்ட வீரர் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 105-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.</strong></em></p><p>சுப்பிரமணிய பாரதி 1882-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ம் தேதி திருநெல்வேலி மாவட்டம், எட்டையபுரத்தில் பிறந்தார். இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அன்புடன் அழைக்கப்படுகிறார்.</p><p>தனது பதினொன்றாம் வயதிலேயே கவிதை எழுத ஆரம்பித்தார். இவர் கவிஞர் மட்டுமின்றி எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர்.</p><h2>நினைவு நாள்</h2><p>இவர் தனது 39-ம் வயதில் 1921-ம் வருடம் செப்டம்பர் மாதம் 11-ம் நாள் மறைந்தார். இதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர்  11-ம் தேதி பாரதியின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.</p><p>இந்நிலையில், மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 105-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. பாரதியாரின் சிலைகள் மற்றும் உருவப் படங்களுக்கு பல்வேறு தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.</p><h2>மகாகவி நாள்</h2><p>இந்த நாளை 'மகாகவி நாள்' என கடைப்பிடிக்கப்படும் என்று முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>செங்கடலில் பரபரப்பு: துறைமுக நகரை கைப்பற்றிய ஹவுதி கிளர்ச்சியாளர்கள் - உச்சகட்ட அபாயத்தில் பாப் அல் மாண்டெப் ஜலசந்தி!</title><link>https://www.maalaimalar.com/news/world/tension-in-the-red-sea-houthi-rebels-capture-port-city-bab-el-mandeb-strait-at-extreme-risk</link><comments>https://www.maalaimalar.com/news/world/tension-in-the-red-sea-houthi-rebels-capture-port-city-bab-el-mandeb-strait-at-extreme-risk#comments</comments><guid isPermaLink="false">2a202ac4-1030-404c-9b0c-c088ef186c3c</guid><pubDate>Fri, 11 Sep 2026 06:49:41 +0000</pubDate><atom:updated>2026-09-11T06:49:41.972Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Yemen,ஏமன்,Houthi rebels,செங்கடல்,Red Sea,ஹவுதி கிளர்ச்சியாளர்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/e0gdyo8v/tn-13.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஹவுதி ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஹவுதி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/e0gdyo8v/tn-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஏமன் நாட்டில் சவுதி அரேபிய ஆதரவு பெற்ற அரசுப் படைகளிடமிருந்து முக்கிய செங்கடல் துறைமுக நகரமான மொகாவை ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/yemen">ஏமனில் </a>தலைநகர் சனா உள்ளிட்ட பகுதிகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். </p><p>சவுதி அரேபிய ஆதரவு பெற்ற சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட ஏமன் அரசு தனது கட்டுப்பாட்டில் எஞ்சியுள்ள உள்ள பகுதிகளை தற்காத்துக்கொள்ள போராடி வருகிறது. </p> <p>கடந்த வாரம் முதல் சவுதி ஆதரவு பெற்ற ஏமன் அரசு படைகளுக்கும் ஈரான் ஆதரவு பெற்ற <a href="https://www.maalaimalar.com/news/world/no-need-to-answer-brick-with-stone-pakistan-warns-houthis">ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும்</a> இடையே கடும் மோதல் மூண்டுள்ளது.</p><p>ஆசியா மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் உலகின் மிக முக்கியமான கடல்வழிப்பாதைகளுள் ஒன்றான பாப் அல் மாண்டெப் ஜலசந்தியை கைப்பற்ற ஹவுதிக்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.</p> <h2>இலக்கை நெருங்கிய ஹவுதிக்கள்?</h2><p>இந்த நிலையில் தான் சவுதி ஆதரவு பெற்ற ஏமன் அரசு வசம் இருந்த முக்கிய செங்கடல் துறைமுக நகரமான ஏமனின் மொகா (Mokha) நகரை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதாகி தகவல் வெளியாகியுள்ளது.</p><p>இதன்மூலம் பாப் அல்  மாண்டெப் ஜலசந்தியிலிருந்து வெறும் 75 கிலோமீட்டர் தொலைவிற்குள் ஹவுதி படைகள் முன்னேறியுள்ளன.</p><p>மொகா நகரைக் கைப்பற்ற நள்ளிரவில் நடந்த கடுமையான தாக்குதல்களால் பொதுமக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.</p><p>வீடுகள் மற்றும் உடமைகளை இழந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள், யேமன் சர்வதேச அரசின் தலைமையகமான ஏடன் நகரை நோக்கி தப்பிச் சென்று கொண்டிருக்கின்றனர்.</p> <p>மொகா நகரை மட்டுமின்றி, செங்கடலில் உள்ள முக்கியத் தீவான 'ஜுகார்' (Zuqar) தீவையும் ஏவுகணை தாக்குதல்கள் மூலம் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.</p><p>பதிலடியாக, ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள தாயிஸ், ஹுதைதா, மாரிப் உள்ளிட்ட பகுதிகளில் சவுதி தலைமையிலான கூட்டுப் படைகள் 64 க்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.</p><p>இதனிடையே, நேற்று ஹவுதிகள் சவுதி அரேபியாவின் தெற்குப் பகுதிகளில் உள்ள காமிஸ் முஷைத், அப்ஹா மற்றும் ஜாசான் ஆகிய நகரங்கள் மீது நடத்திய டிரோன் மற்றும் ஏவுகணைகளை தாக்குதலில் 73 பொதுமக்கள் காயமடைந்துள்ளதுடன், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளும் சேதமடைந்துள்ளன.</p><p>கடந்த ஒரு வாரத்தில் நடந்த மோதல்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதுடன், சாலைகளில் காயமடைந்தவர்கள் உதவியின்றி கிடப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.</p> <h2>பாப் அல் மாண்டெப் </h2><p>அமெரிக்கா - ஈரான் போர் காரணமாகப் பாரசீக வளைகுடாவில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தி ஏற்கனவே முடங்கியுள்ளது.</p><p>இதனால் சவுதி அரேபியா தனது கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு செங்கடல் பாதையையே முழுமையாக நம்பியிருந்தது.</p><p>சர்வதேசக் கப்பல் போக்குவரத்திற்கு தடையில்லை என்று ஹவுதி அமைப்பு கூறினாலும், சவூதி அரேபியாவின் எண்ணெய் விநியோகக் கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்துள்ளது.</p><p>இந்த திடீர் மோதல் மற்றும் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடையால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.</p><p>இதனிடையே ஏமன் பகுதிகளைப் பாதுகாக்க அந்நாட்டு அரசு, அரபு மற்றும் சர்வதேச நாடுகளுடன் கோரிக்கை விடுத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பிரிக்ஸ் மாநாடு எதிரொலி: இந்தியா-ஆப்கானிஸ்தான் போட்டி அட்டவணையில் மாற்றமா? </title><link>https://www.maalaimalar.com/sports/cricket/confusion-over-first-afg-ind-t20i-after-delhi-police-request-ddca-statement</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/confusion-over-first-afg-ind-t20i-after-delhi-police-request-ddca-statement#comments</comments><guid isPermaLink="false">efaef6f2-d23b-4178-8065-a398b0f23bb3</guid><pubDate>Fri, 11 Sep 2026 06:17:03 +0000</pubDate><atom:updated>2026-09-11T06:17:03.337Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>முதல் ஒருநாள் போட்டி,BRICS Summit,பிரிக்ஸ் உச்சி மாநாடு,INDvAFG,இந்தியா ஆப்கானிஸ்தான் தொடர்,1st ODI</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/wz6uwyda/afghan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ afghanistan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/wz6uwyda/afghan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில், இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையிலான முதல் போட்டி அட்டவணையில் மாற்றம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.</strong></em></p><p>இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் டெல்லியில் வரும் 13, 15 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. </p><h2>அட்டவணையில் மாற்றமா?</h2><p>இந்நிலையில் பிரிக்ஸ் உச்சி மாநாடு டெல்லியில் நாளை  முதல் 2 நாட்கள் நடைபெறுவதால் இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியது. </p><h2>பிரிக்ஸ் மாநாடு</h2><p>உலக தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பிரிக்ஸ் மாநாட்டுக்கு வருகிறார்கள். மேலும், கிரிக்கெட் போட்டியைப் பார்க்க 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் ரசிகர்கள் வருவார்கள். இதனால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும்.  </p><p>எனவே, 13-ம் தேதி நடைபெற உள்ள முதல் டி20 ஆட்டத்தை தள்ளிவைக்க வேண்டும் என டெல்லி கிரிக்கெட் சங்கத்திற்கு டெல்லி போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் கடிதம் எழுதியுள்ளார். இதனால் அட்டவணையில் மாற்றம் இருக்கலாம் என கூறப்படுகிறது. </p><p>ஆனால் டெல்லி கிரிக்கெட் சங்க நிர்வாகிகளோ போட்டி அட்டவணையில் மாற்றம் இல்லை. திட்டமிட்டபடி போட்டி நடைபெறும்  என தெரிவித்துள்ளனர்.</p><p>இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.)  நிர்வாகி ஒருவர் போட்டியை தள்ளிவைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். </p><p>இதுதொடர்பாக அவர் கூறுகையில், போட்டிக்கான தேதியை மாற்றுவதற்கான வாய்ப்பு இன்னும் முழுமையாக நிராகரிக்கப்படவில்லை. நிலைமை சரியாக அமையாவிட்டால் இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையிலான முதல் ஆட்டம் திங்கட்கிழமைக்கு (14-ம் தேதி) மாற்றப்படலாம் என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>இந்திய ஊழியர்களுக்கு ஆப்படித்த டிரம்ப்..  H-1B விசா புதுப்பிப்புக்கு வழங்கப்படும் 60 நாள் சலுகை காலம் ரத்து?</title><link>https://www.maalaimalar.com/news/world/foreign-workers-60-day-grace-period-for-h-1b-visa-renewal-cancel-trump-action</link><comments>https://www.maalaimalar.com/news/world/foreign-workers-60-day-grace-period-for-h-1b-visa-renewal-cancel-trump-action#comments</comments><guid isPermaLink="false">51450216-34d8-4e66-b53b-843fa0492735</guid><pubDate>Fri, 11 Sep 2026 06:11:29 +0000</pubDate><atom:updated>2026-09-11T06:11:29.903Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>trump,அமெரிக்கா,USA,டிரம்ப்,எச்1பி விசா,H-1B visa</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/4ydd28gg/tn-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டிரம்ப்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிரம்ப்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/4ydd28gg/tn-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவில் வெளிநாட்டு பாண்டியர்களின் எச்1பி விசா புதுப்பிப்பு சலுகை காலத்தை ரத்து செய்யும் முடிவை டிரம்ப் நிர்வாகம் எடுத்துள்ளது. </p><p>அமெரிக்காவில் கடந்த 2025 இல் இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற <a href="https://www.maalaimalar.com/topic/donald-trump">டிரம்ப் </a>வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் குடியேறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்.</p><p>சட்டவிரோத குடியேற்றங்களை முழுவதுமாக தடுக்கும் அதே வேளையில்  சட்டப்பூர்வக் குடியேற்றங்களை மேலும் கட்டுப்படுத்தும் கொள்கையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். </p> <p>அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற தனது கொள்கையின்படி அவரது நிர்வாகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் அங்கு பணிபுரியும், பயிலும் இந்தியர்கள் உட்பட பல்வேறு நாட்டவர்களுக்கு கஷ்டகாலமாக மாறி வருகிறது.</p><p>நிறுவனங்களில் காலியாகும் பணியிடங்களுக்கு அமெரிக்கக் குடிமக்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என அவரது நிர்வானம் நிறுவனங்களை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. </p><p>வெளிநாட்டு ஊழியர்களை பணிக்கமர்த்த விரும்பும் நிறுவனங்கள், அதற்கு இணையான தகுதிவாய்ந்த அமெரிக்க விண்ணப்பதாரர்களை நியமிக்க வேண்டும் என கெடுபிடி காட்டப்படுகிறது. </p><p>ஏற்கெனவே <a href="https://www.maalaimalar.com/news/world/us-proposes-additional-usd-103-lakh-fee-for-h-1b-visa-cap-subject-applications">விசா கட்டணங்கள் உயர்த்தப்பட்டதுடன்</a>, தற்காலிகமாக இமிக்ரண்ட் விசா நேர்காணல்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.</p><h2>H-1B சலுகைக் காலம் ரத்து?</h2><p>இந்நிலையில் வேலை இழக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அவர்களின் H-1B விசாவில் இதுவரை வழங்கப்பட்டு வந்த 60 நாட்கள் சலுகைக் காலத்தை (Grace period) ரத்து செய்யும் திட்டத்தை டிரம்ப் நிர்வாகம் முன்மொழிந்துள்ளது.</p><p>அமெரிக்காவின் பெடரல் பதிவேட்டில் (அரசிதழ்) வெளியிடப்பட்டுள்ள இந்தப் புதிய முன்மொழிவின்படி, H-1B மற்றும் அது தொடர்பான பணி விசா வைத்திருப்பவர்கள் தங்களது வேலையை இழக்கும் பட்சத்தில், உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும்.</p><p>கடந்த 2017ஆம் ஆண்டு முதல் அமலில் இருந்த இந்த 60 நாட்கள் சலுகைக் காலத்தின் மூலம், ஊழியர்கள் தங்களுக்குப் புதிய நிறுவனத்தைத் தேடிக் கொள்ளவோ அல்லது தங்களது குடும்பத்தினருடன் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளைசெய்யவோ அவகாசம் வழங்கப்பட்டு வந்தது. </p><p>புதிய முன்மொழிவு செயல்பாட்டுக்கு வந்தால் இனி அந்த அவகாசம் கிடைக்காது.</p> <h2>இந்தியர்களுக்குப் பின்னடைவு</h2><p>அமெரிக்கத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவைத் துறைகளில் H-1B விசாவைப் பயன்படுத்திப் பணிபுரியும் ஊழியர்களில் இந்தியர்களே அதிகளவில் உள்ளனர்.</p><p>டிசிஎஸ், இன்போசிஸ், எச்சிஎல் டெக், எல்டிஐ மைண்ட்டீரி போன்ற இந்திய ஐடி நிறுவனங்களும், டெலாய்ட் , இடபிள்யூசி, எர்ன்ஸ்ட் அண்ட் யங் போன்ற நிறுவனங்களும் இந்த விசாவை அதிகளவில் பயன்படுத்துகின்றன.</p><p>வேலை இழக்கும் பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருக்கும் என்பதால், அமெரிக்காவில் உள்ள இந்தியப் வல்லுநர்கள் மற்றும் ஐடி நிறுவனங்கள் இடையே இந்த நடவடிக்கை பெரும் கவலையை உருவாக்கியுள்ளது.</p><h2>அடுத்தது என்ன?</h2><p>அமெரிக்காவின் சட்டத்தின்படி ஒரு புதிய விதியை  அமல்படுத்தும்போது அது முதலில் மக்கள் மற்றும் சம்பந்தபட்டவர்கள் கருத்துக்கு 60 நாட்கள் விடப்படும்.</p><p>60 நாட்கள் அவகாசம் முடிந்ததும், பெறப்பட்ட கருத்துகளை உள்துறை பாதுகாப்பு துறை ஆய்வு செய்ய வேண்டும்.</p><p>இதன் அடிப்படையில் முன்மொழியப்பட்ட விதியில் சிறு மாற்றங்களையோ அல்லது தளர்வுகளையோ கொண்டு வர அரசு தீர்மானிக்கலாம்.</p><p>பரிசீலனைக்குப் பிறகு, இறுதி விதி தயாரிக்கப்பட்டு மீண்டும் பெடரல் பதிவேடு அலுவலகம் அதனை வெளியிட்டு நடைமுறைப்படுத்தப்படும்.</p><p>ஆனால் இதை எதிர்த்து பாதிக்கப்புக்குள்ளாவோர் பெடரல் நீதிமன்றங்களில் வழக்கு தொடரலாம். அதை விசாரித்து நீதிமன்றம், அந்த விதிக்கு இடைக்கால தடை விதிக்கலாம்.</p> ]]></content:encoded></item><item><title>69-வது ஆண்டு நினைவு தினம்: இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அமைச்சர்கள் மரியாதை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/69th-death-anniversary-ministers-pay-homage-at-immanuel-sekaran-memorial</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/69th-death-anniversary-ministers-pay-homage-at-immanuel-sekaran-memorial#comments</comments><guid isPermaLink="false">b6b5ec7d-f18b-4f7e-854b-5ad443aeb122</guid><pubDate>Fri, 11 Sep 2026 06:06:22 +0000</pubDate><atom:updated>2026-09-11T06:06:22.596Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Government,தமிழக அரசு,நினைவு தினம்,Memorial Day,Immanuel Sekaran,தியாகி இமானுவேல் சேகரன்,அமைச்சர்கள் மரியாதை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/m5bpz0ta/ministers.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Immanuel sekaran memorial Ministers Pay Homage]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/m5bpz0ta/ministers.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் நிர்மல்குமார், அருண்ராஜ், டி.கே.பிரபு, மதன்ராஜா, ராஜீவ், மற்றும் எம்.எல்.ஏ.க்கள் இமானுவேல் சேகரனார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். </p><h2>இமானுவேல் சேகரனார் நினைவு தினம்</h2><p>ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-long-live-great-renown-of-equality-crusader-immanuel-sekaran">தியாகி இமானுவேல் சேகரனாரின்</a> 69ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. </p><h2>அமைச்சர்கள் மரியாதை</h2><p>இன்று காலை 8 மணி அளவில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அவரது மகள் சுந்தரி பிரபா ராணி மற்றும் இமானுவேல் சேகரன் குடும்பத்தினர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து அவரது சொந்த கிராமமான செல்லூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மரியாதை செலுத்தினர்.</p> <p>இதையடுத்து தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் நிர்மல்குமார், அருண்ராஜ், டி.கே.பிரபு, மதன்ராஜா, ராஜீவ், மற்றும் எம்.எல்.ஏ.க்கள் இமானுவேல் சேகரனார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். </p> <h2>உதயநிதி ஸ்டாலின்</h2><p>தி.மு.க. சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">உதயநிதி ஸ்டாலின்</a>, முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் மற்றும் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.</p><h2>அதிமுக</h2><p>அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.</p><h2>அமைச்சர் வன்னியரசு</h2><p>அதேபோல் அ.ம.மு.க. சார்பில் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அமைச்சர் வன்னியரசு மற்றும் நிர்வாகிகள் மற்றும் பா.ஜ.க., காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.</p> <h2>பலத்த பாதுகாப்பு</h2><p>பாதுகாப்பு பணிக்காக தென்மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் டி.ஐ.ஜி. மணிவண்ணன் உள்ளிட்ட 3 டி.ஐ.ஜி.க்கள், 24 மாவட்ட எஸ்.பி.க்கள், கூடுதல் எஸ்.பி.க்கள், 70 டி.எஸ்.பி.க்கள் உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் சுமார் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>டென்னிஸ் தரவரிசை: நம்பர் 1 இடத்தைப் பிடித்த ரிபாகினா</title><link>https://www.maalaimalar.com/sports/tennis/rybakina-in-number-1-place-in-wta-ranking</link><comments>https://www.maalaimalar.com/sports/tennis/rybakina-in-number-1-place-in-wta-ranking#comments</comments><guid isPermaLink="false">9e9a58a3-f598-40f4-815a-c2cd1970f9a2</guid><pubDate>Fri, 11 Sep 2026 05:58:00 +0000</pubDate><atom:updated>2026-09-11T05:58:00.741Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>எலினா ரிபாகினா,Elena Rybakina,டென்னிஸ் தரவரிசை,WTA Ranking</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/wfr2s8pc/ryba1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rybakina]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/wfr2s8pc/ryba1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>டென்னிஸ் (Tennis)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு முன்னேறிய கஜகஸ்தானின் எலினா ரிபாகினா நம்பர் 1 இடத்தையும் அடைந்தார்.</strong></em></p><p>டென்னிஸ் அரங்கில் சாதித்தவர்களுக்கான தரவரிசை பட்டியலை ஏ.டி.பி. வெளியிட்டது. தற்போது நடந்து வரும் அமெரிக்க ஓபன் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு கஜகஸ்தானின் எலினா ரிபாகினா முன்னேறினார்.</p><h2>ரிபாகினா நம்பர் 1 இடம்</h2><p>இந்நிலையில், இறுதிப்போட்டிக்கு முன்னேறிய கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, ஒரு இடம் முன்னேறி நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளார்.</p><p>இந்த வெற்றியின் மூலம் எலினா ரிபாகினா உலக தரவரிசையில் முதல் முறையாக நம்பர் 1 இடத்துக்கு உயர்ந்தார்.</p><p>27 வயதான ரிபாகினா தரவரிசையில் முதலிடத்தை அலங்கரிக்கும் 30-வது மங்கை. முதல் கஜகஸ்தான் நாட்டவர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார்.</p><p>2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அரியணையில் ஏறி தொடர்ந்து 99 வாரங்கள் 'நம்பர் ஒன்'னாக வலம் வந்த பெலாரசின் அரினா சபலென்கா 2-வது இடத்துக்கு தள்ளப்பட் டார்.</p><h2>சிறு வயது கனவு</h2><p>இதுகுறித்து ரிபாகினா கூறுகையில், 'உலக தரவரிசையில் முதலிடத்தைப் பிடிக்கவேண்டும் என்பது எனது சிறு வயது கனவு. அதனை அடைந்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த தருணத்தை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த சாதனையை எட்ட ஆதரவாக இருந்த எனது பயிற்சி குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்' என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>டெல்லியில் பிரிக்ஸ் மாநாடு.. என்ன பயன்? என ப.சிதம்பரம் கேள்வி - சசி தரூர் பதில் - காங்கிரசுக்குள் கருத்து வேறுபாடு</title><link>https://www.maalaimalar.com/news/national/brics-conference-in-delhi-what-is-the-point-p-chidambarams-question-sasi-tharoors-answer-bjp-is-having-fun</link><comments>https://www.maalaimalar.com/news/national/brics-conference-in-delhi-what-is-the-point-p-chidambarams-question-sasi-tharoors-answer-bjp-is-having-fun#comments</comments><guid isPermaLink="false">4e851d21-c38b-4cf6-8e76-84dc02eaf7b7</guid><pubDate>Fri, 11 Sep 2026 05:37:24 +0000</pubDate><atom:updated>2026-09-11T05:37:24.280Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சசி தரூர்,ப. சிதம்பரம்,பிரிக்ஸ் மாநாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/8lybxlvx/tn-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ப.சிதம்பரம் - சசி தரூர் ]]></media:title><media:description type="html"><![CDATA[ ப.சிதம்பரம் - சசி தரூர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/8lybxlvx/tn-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாடு தொடர்பாக காங்கிரஸ் கட்சியினுள் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.</p> <p>18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு டெல்லியில் உள்ள பார்த் மண்டபத்தில் நாளை (செப்டம்பர் 12) மற்றும் நாளை மறுநாள் (செப்டம்பர் 13) நடைபெறவுள்ளது. </p><p>இதில் கலந்துகொள்ள <a href="https://www.maalaimalar.com/news/national/putin-lands-in-delhi-for-brics-summit">ரஷிய அதிபர் புதின்</a> இன்று அதிகாலை டெல்லி வந்தடைந்தார். இன்று அவர் <a href="https://www.maalaimalar.com/news/national/brics-leaders-gather-let-us-deliberate-with-the-global-good-in-mind-prime-minister-modi">பிரதமர் மோடியை </a>சந்திக்கிறார். </p><p>சீன அதிபர் ஜி ஜின் பிங்கும் விரைவில் வர உள்ளார். 7 ஆண்டுகளுக்கு பிறகு அவர் இந்தியா வருகிறார். </p> <p>ஈரான் அதிபர் பெசஸ்கியான், தென் ஆப்பிரிக்கா, பிரேசில் ஆகிய உறுப்பு நாட்டு தலைவர்களும் வருகை தர உள்ளனர்.</p><p>இந்த மாநாட்டிற்காக டெல்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து காங்கிரஸுக்குள் புகைச்சல் ஏற்பட்டுள்ளது.</p><p>இம்மாநாடு தொடர்பாகக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களிடையே மாறுபட்ட கருத்துகள் எழுந்துள்ளன.</p><p>காங்கிரஸ் எம்பி சசி தரூர் மாநாட்டின் முக்கியத்துவத்தை ஆதரித்துள்ள நிலையில், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் இதனால் கிடைக்கும் பலன்கள் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார்.</p> <h2>ப.சிதம்பரத்தின் கேள்வி</h2><p>கடந்த இரண்டு அல்லது மூன்று பிரிக்ஸ் மாநாடுகளால் நாட்டிற்கு எந்தவொரு தெளிவான அல்லது குறிப்பிடத்தக்கப் பலன்களும் கிடைக்கவில்லை எனப் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.</p><p>இதற்கு பதிலளித்த பாரதிய ஜனதா கட்சி (BJP), காங்கிரஸ் கட்சி நாட்டின் சர்வதேச வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைக் கண்டு எப்போதும் எதிர்மறையான மனநிலையையே வெளிப்படுத்துகிறது என சாடியுள்ளது.</p> <h2>சசி தரூரின் நிலப்பாடு</h2><p>ப. சிதம்பரம் கேள்வியை தொடர்ந்து சசி தரூர் தனது சமூக வலைதள பக்கத்தில் பிரிக்ஸ் மாநாட்டின் முக்கியத்துவம் பற்றி தெரிவித்துள்ளார்.</p><p>பிரிக்ஸ் அமைப்பில் உள்ள 11 உறுப்பு நாடுகள் உலக மக்கள் தொகையில் பெரும் பகுதியையும், உலகளாவிய GDPயில் மார் 41 சதவீதத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.</p><p>எனவே பிரிக்ஸ் அமைப்பு Global South எனப்படும் வளரும் நாடுகளுக்கு மிக முக்கியமான ஒரு சர்வதேச தளமாகும் என சசி தரூர் தெரிவித்துள்ளார்.</p><p>பல நாட்டுத் தலைவர்கள் புதுடெல்லிக்கு வருகை தருவது இந்தியாவின் வெளியுறவு மற்றும் தூதரகப் பலத்தைக் காட்டுகிறது என்றும், இம்மாநாட்டை இந்தியா நடத்துவது நாட்டிற்குப் பெருமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p> <p>மாநாட்டின் முக்கியத்துவத்தைப் பேசிய அதே வேளையில், உறுப்பு நாடுகளுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடுகளையும் சசி தரூர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>பிரிக்ஸ் அமைப்பில் உள்ள 11 நாடுகளும் வெவ்வேறு தேசிய நலன்களைக் கொண்டுள்ளதால், அனைத்து உலகளாவிய விவகாரங்களிலும் பொதுவான ஒரு முடிவை எட்டுவது சவாலானது.</p><p>சமீபத்தில் நடைபெற்ற வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் அனைத்து நாடுகளும் ஏற்கும் வகையிலான கூட்டுப் பிரகடனத்தை வெளியிட முடியாமல் போனதைச் சுட்டிக்காட்டிய தரூர், இந்த உச்சி மாநாட்டில் அனைத்து நாடுகளையும் ஒருங்கிணைத்துச் சீரான முடிவை எடுப்பது இந்தியத் தூதர்களுக்குப் பெரிய சவாலாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும் - அமைச்சர் செங்கோட்டையன் 
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sengottaiyan-says-more-parties-will-join-secular-social-justice-victory-alliance</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sengottaiyan-says-more-parties-will-join-secular-social-justice-victory-alliance#comments</comments><guid isPermaLink="false">2503d104-8d32-45f9-b1ff-ab6eccf7700c</guid><pubDate>Fri, 11 Sep 2026 05:33:34 +0000</pubDate><atom:updated>2026-09-11T05:33:34.951Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,tvk,minister Sengottaiyan,அமைச்சர் செங்கோட்டையன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/w6qmcuae/sengottaiyan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Sengottaiyan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/w6qmcuae/sengottaiyan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணையுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த  செங்கோட்டையன், பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறினார்.</p><p>மயிலாடுதுறையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருவாய் துறை அமைச்சர் கே.ஏ. <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D">செங்கோட்டையன்</a>  வருகை தந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-</p><h2>ஆட்சி கலையும்</h2><p>ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் ஆட்சி கலையும் என்று ஆர்.எஸ்.பாரதி பேசியது குறித்து பதில் அளித்த அவர், தமிழ்நாட்டில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வந்த தளபதி இருக்கும் வரை அவர் தான் நிரந்தர முதலமைச்சர்,  ஆர்.எஸ் பாரதி சொல்வது போல், ஆட்சிக்கு நாட்கள் எண்ணப்படவில்லை, தி.மு.க.வினருக்கு தான் நாட்கள் எண்ணப்படுகின்றன.</p> <h2>இடைத்தேர்தலில் வெற்றி</h2><p>தமிழக இடைத்தேர்தலில் 100 சதவீத வெற்றி வாய்ப்பு எட்டுவோம், தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டு ஏற்படுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், அதனை தீர்ப்பதற்கு தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு மின் உற்பத்தியாளர்களிடம் பேசி வருகிறோம் விரைவில் மின் உற்பத்தி அதிகரிக்கும்.</p> <h2>கம்யூனிஸ்ட் கட்சிகள்</h2><p>கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணையுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த  செங்கோட்டையன், பொறுத்திருந்து பாருங்கள். மேலும் பல கட்சிகள் கூட்டணியில் இணையும் என்று தெரிவித்தார். </p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>தமிழக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/here-is-the-agenda-for-chief-minister-vijays-london-trip-full-details">முதலமைச்சர் விஜய்</a> உடல் மொழி கிண்டல் செய்தது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறிய அமைச்சர், 2017-ம் ஆண்டு அப்போதைய சபாநாயகர் தனபால் அறையில் சேரை இழுத்து கீழே தள்ளி, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் செய்த அராஜகம் எல்லோருக்கும் தெரியும், எனவே, அதனைப் பற்றி எல்லாம் பேச தி.மு.க.வுக்கு தகுதி இல்லை.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மோசடி குற்றச்சாட்டுகள்.. உலக சுகாதார அமைப்பு பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா மகள்!</title><link>https://www.maalaimalar.com/news/world/fraud-allegations-sheikh-hasinas-daughter-resigns-from-world-health-organization-post</link><comments>https://www.maalaimalar.com/news/world/fraud-allegations-sheikh-hasinas-daughter-resigns-from-world-health-organization-post#comments</comments><guid isPermaLink="false">d676b4e0-9798-46ad-b8eb-d50f307fc0d3</guid><pubDate>Fri, 11 Sep 2026 05:05:41 +0000</pubDate><atom:updated>2026-09-11T05:05:41.232Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உலக சுகாதார அமைப்பு,ஷேக் ஹசீனா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/q8huogil/tn-5.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[  சைமா வாசித்]]></media:title><media:description type="html"><![CDATA[  சைமா வாசித்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/q8huogil/tn-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியப் பிராந்திய இயக்குநர் பதவியிலிருந்து ஷேக் ஹசீனாவின் மகள் சைமா வாசித் ராஜினாமா செய்துள்ளார்.</p> <p>வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் <a href="https://www.maalaimalar.com/topic/sheikh-hasina">ஷேக் ஹசீனாவின்</a> மகளான சைமா வாசித் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?botrequest=true">உலக சுகாதார அமைப்பின் </a>தென்கிழக்கு ஆசியப் பிராந்திய இயக்குநர் பதவியிலிருந்து விலகியுள்ளார். </p><p>கடந்த செப்டம்பர் 9 அன்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். </p><p>நிதி மோசடி மற்றும் போலி சுற்றறிக்கை குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு விசாரணை நடந்து வந்தது. </p><p>இதன் தொடர்ச்சியாக இவரை பதவி நீக்கம் செய்வதற்கான பரிந்துரையை உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழு பரிசீலிக்க இருந்த நிலையில் இந்தத் திடீர் ராஜினாமா நிகழ்ந்துள்ளது.</p> <h2>மோசடி பின்னணி</h2><p>நவம்பர் 2023ல் அந்த பிராந்திய இயக்குநர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, பிப்ரவரி 2024 முதல் அவர் அப்பதவியில் இருந்து வந்தார்.</p><p>சீனாவுக்கான பயணச் செலவு தொடர்பான நிதியை கையாடல் செய்ததாகவும், தனது முனைவர் பட்டம் மற்றும் சான்றிதழ்கள் குறித்துத் தவறான தகவல்களை சமர்ப்பித்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.</p> <p>ஷேக் ஹசீனா ஆட்சியில் இருந்த காலத்தில் வங்கதேசத்தில் அதிகாரத்தை பயன்படுத்தி சட்டவிரோதமாக நிலம் வாங்கியதாகவும் அவர் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.</p><p>தொடர் சர்ச்சையால் 2025ல் சம்பளமில்லாத விடுப்பில் அவர் அனுப்பப்பட்டார். அவரை நிரந்தரமாக பதவிநீக்கம் செய்யவதற்காக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸுக்கு அவர் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.</p> <h2>குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு</h2><p>அதில் தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார் சீனப் பயணச் செலவு தொடர்பான பிரச்சினை, தனது உதவியாளரின் நிர்வாகத் தவறால் ஏற்பட்டது என்றும் அதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை என்றும் மறுத்துள்ளார்.</p><p>அதேபோல தனது முனைவர் பட்டம் தொடர்பாக தவறான தகவலை வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டை மறுத்த அவர், ஆட்டிசம் தொடர்பான விழிப்புணர்வுப் பணிகளுக்காக தனக்குக் கௌரவக் முனைவர் பட்டம் மட்டுமே வழங்கப்பட்டதாகவும், அதைத் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.</p><p>மேலும் நில விவகாரம் குறித்து குறிப்பிடுகையில் உலக சுகாதார அமைப்பில் சேருவதற்கு முன்பே வங்கதேசச் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே அந்த நிலத்தை வாங்கியதாகத் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சொந்த மண்ணில் கோகோ காப்பை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறிய ரிபாகினா</title><link>https://www.maalaimalar.com/sports/tennis/rybakina-beat-coco-gauff-in-sf-round-in-us-open-tennis</link><comments>https://www.maalaimalar.com/sports/tennis/rybakina-beat-coco-gauff-in-sf-round-in-us-open-tennis#comments</comments><guid isPermaLink="false">55e8257d-1c56-4151-9c51-3d2ca2259263</guid><pubDate>Fri, 11 Sep 2026 05:05:16 +0000</pubDate><atom:updated>2026-09-11T05:05:16.971Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Elyna Rybakina,எலினா ரிபாகினா,US Open Tennis,அமெரிக்க ஓபன் டென்னிஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/n6pkl77f/elena.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rybakina]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/n6pkl77f/elena.jpg?w=280" width="280"></media:thumbnail><category>டென்னிஸ் (Tennis)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் சொந்த மண்ணிலேயே அமெரிக்காவின் கோகோ காப்பை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா.</strong></em></p><p>கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.</p><p>பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்று போட்டிகள் இன்று நடந்தன.</p><p>முதல் போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப், கஜகஸ்தானின் எலினா <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE">ரிபாகினா</a> உடன் மோதினார்.</p><p>இதில் சிறப்பாக ஆடிய ரிபாகினா 3-6 என முதல் செட்டை இழந்தார். இதில் சுதாரித்துக் கொண்ட ரிபாகினா அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 6-4, 6-4 என கைப்பற்றி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.</p><p>சொந்த மண்ணில் அமெரிக்காவின் கோகோ காப் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.</p><p>நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் சபலென்கா உடன் எலினா ரிபாகினா மோதுகின்றார்.</p>]]></content:encoded></item><item><title>ஜாவா 42 ஆல் ஸ்டார்ஸ் எடிஷன் இந்தியாவில் அறிமுகம் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/automobilenews/bike/jawa-42-all-stars-launched-in-india</link><comments>https://www.maalaimalar.com/automobilenews/bike/jawa-42-all-stars-launched-in-india#comments</comments><guid isPermaLink="false">ef74a9cd-067b-4473-88c5-1e26098e6a54</guid><pubDate>Fri, 11 Sep 2026 04:54:00 +0000</pubDate><atom:updated>2026-09-11T04:54:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Motorcycle,மோட்டார்சைக்கிள்,ஜாவா,Jawa</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/038mpdna/Jawa-42-All-Stars.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jawa 42 All Stars]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/038mpdna/Jawa-42-All-Stars.png?w=280" width="280"></media:thumbnail><category>பைக் (Automobile)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/jawa">ஜாவா</a> 42 ஆல் ஸ்டார்ஸ் எடிஷன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஜாவா பைக்கின் விலை இந்திய சந்தையில் ரூ. 1.85 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஜாவா 42 ஆல் ஸ்டார்ஸ் எடிஷன், பேட்டில் கிரீன், நெபுலா ப்ளூ, மாஸ் கிரே, ஐவரி மற்றும் பிளாக் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. </p><p>இவற்றில் பிளாக் நிற வேரியண்ட் மிக விலை உயர்ந்தது, இதன் விலை ரூ. 1.90 லட்சம் ஆகும். இந்த விலைகள் எக்ஸ்-ஷோரூம் விலைகளாகும். ஜாவா 42 ஆல் ஸ்டார்ஸ், சாதாரண <a href="https://www.maalaimalar.com/topic/bike">பைக் </a>மாடல்களில் இருந்து தோற்றத்தில் முற்றிலும் மாறுபட்டு, மிகவும் கவர்ச்சியாக காட்சியளிக்கிறது.</p><h2>என்ஜின் மற்றும் செயல்திறன்:</h2><p>இயந்திரவியல் ரீதியாக, ஜாவா 42 ஆல் ஸ்டார்ஸ் வழக்கமான மாடலை போன்றதே ஆகும். இதிலும் 294சிசி, லிக்விட்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 7,950 ஆர்.பி.எம்-இல் 26.9 ஹெச்.பி. பவர் மற்றும், 6,000 ஆர்.பி.எம்-இல் 26.8 நியூட்டன் மீட்டர் டார்க் உருவாக்குகிறது. இந்த என்ஜின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.</p><p>பைக்கின் பாடிவொர்க்கின் கீழ், 35mm டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ப்ரீலோட் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய இரட்டை ஷாக் அப்சார்பர்கள் பொருத்தப்பட்ட டபுள் கிராடில் ஃபிரேம் உள்ளது. இந்த பைக், 18-இன்ச் முன்புற மற்றும் 17-இன்ச் பின்புற சக்கரங்களில் இயங்குகிறது. பிரேக்கிங்கிற்கு முன்புறத்தில் 280mm டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 240mm டிஸ்க் வழங்கப்பட்டுள்ளன.</p><p>போட்டியைப் பொறுத்தவரை, ஜாவா 42 ஆல் ஸ்டார்ஸ், ராயல் என்ஃபீல்ட் மீட்டியோர் 350 மற்றும் ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>சமத்துவப் போராளி இமானுவேல் சேகரனாரின் பெரும்புகழ் வாழ்க! - மு.க.ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-long-live-great-renown-of-equality-crusader-immanuel-sekaran</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-long-live-great-renown-of-equality-crusader-immanuel-sekaran#comments</comments><guid isPermaLink="false">6a742ad6-417e-414b-aa3d-8168baf8476d</guid><pubDate>Fri, 11 Sep 2026 04:46:53 +0000</pubDate><atom:updated>2026-09-11T04:46:53.873Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,Immanuel Sekaran,தியாகி இமானுவேல் சேகரன்,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/wnnkt9jf/mkstalin.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Immanuel sekaran - MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/wnnkt9jf/mkstalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பரமக்குடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அவரது நினைவைப் போற்றும் சிறப்பான பணிகளைக் கடந்த 5 ஆண்டு திராவிட மாடல் ஆட்சியில் மேற்கொண்டோம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-let-us-honor-and-commemorate-struggles-and-sacrifices-of-martyr-immanuel-sekaran">தியாகி இமானுவேல்</a> சேகரனாரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. </p><p>இதையொட்டி திமுக தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க.ஸ்டாலின்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>சமத்துவப் போராளி இமானுவேல் சேகரனார் நினைவு நாள்</p> <p>தியாகி இமானுவேல் சேகரனாரின் நூற்றாண்டையொட்டி அவரது பிறந்தநாளினை அரசுவிழாவாகக் கொண்டாட ஆணை, பரமக்குடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் என அவரது நினைவைப் போற்றும் சிறப்பான பணிகளைக் கடந்த 5 ஆண்டு திராவிட மாடல் ஆட்சியில் மேற்கொண்டோம்.</p> <p>நாட்டின் விடுதலைக்காகவும், சமூகத்தில் நிலவிய சாதியக் கொடுமைகளுக்கு எதிராகவும் உறுதியான போராட்டங்களை முன்னெடுத்த இமானுவேல் சேகரனாரின் பணிகளும் தியாகமும் சமத்துவத்தை நோக்கிய நமது முயற்சிகளுக்கு என்றும் துணைநிற்கும்! இமானுவேல் சேகரனாரின் பெரும்புகழ் வாழ்க!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>புதிதாக 30.. ஆகமொத்தம் 190 அணு ஆயுதங்கள் இந்தியா வசம் உள்ளது - வெளியான அறிக்கை 
</title><link>https://www.maalaimalar.com/news/national/30-new-ones-added-india-now-possesses-a-total-of-190-nuclear-bombs-report-released</link><comments>https://www.maalaimalar.com/news/national/30-new-ones-added-india-now-possesses-a-total-of-190-nuclear-bombs-report-released#comments</comments><guid isPermaLink="false">29b244e1-eefb-4630-9c79-3b6df3f7bb8d</guid><pubDate>Fri, 11 Sep 2026 04:43:53 +0000</pubDate><atom:updated>2026-09-11T04:43:53.371Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அணுஆயுதம்,INDIAN ARMY,Nuclear weapon,இந்திய ராணுவம்,அணுகுண்டு,atom bomb</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/uq9gu8ee/tn-4.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அணு ஆயுதங்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ அணு ஆயுதங்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/uq9gu8ee/tn-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியா வசம் 190 அணு ஆயுதங்கள் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.</p><p>அமெரிக்காவை சேர்ந்த Federation of American Scientists என்ற ஆராய்ச்சி மையம் வெளியிட்டஅறிக்கையில் இந்த தகவலை தெரிவித்துள்ளது. </p><h2>அணுகுண்டுகள் </h2><p>அறிக்கையின்படி, இந்தியாவில் ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள ஏவுகணைகளுக்கான 160 <a href="https://www.maalaimalar.com/news/world/responsibility-and-resilience-hiroshima-day-2026-remembering-atomic-bombing-and-call-for-a-peaceful-nuclear-free-world">அணுகுண்டுகள் </a>உள்ளன. </p><p>புதிதாக தயாரிக்கப்பட்டு வரும் ஏவுகணைகளுக்காக மேலும் 30 அணுகுண்டுகள் உருவாக்கப்பட்டு நாட்டின் மொத்த அணுகுண்டு இருப்பு தற்போது 190 ஆக உயர்ந்துள்ளது.</p><p>மேலும் இந்தியா தனது ராணுவத் தேவைகளுக்காக 140 முதல் 225 அணுஆயுதங்களை தயாரிப்பதற்குத் தேவையான புளுட்டோனியத்தை சேமித்து வைத்திருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.   </p> <p>சமீபத்திய அறிக்கையின்படி பாகிஸ்தானிடம் சுமார் 170 அணு ஆயுதங்கள் உள்ள நிலையில், இந்தியாவின் அணுஆயுத இருப்பு அதைவிட அதிகமாக வளர்ந்துள்ளது.</p><p>2 போர் விமானங்கள், 6 தரைவழி பாலிஸ்டிக் ஏவுகணைகள், 1 நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணை என இந்தியா தற்போது 9 வெவ்வேறு வகையான அணுஆயுத ஏவுதல் அமைப்பை பயன்பாட்டில் வைத்துள்ளது.</p><p>மேலும் 2 புதிய ஏவுதல் அமைப்புகள் இறுதிக்கட்ட உருவாக்கத்தில் உள்ளன, அவை விரைவில் முப்படைகளில் இணையவுள்ளன என தெரிவிக்கப்படுகிறது.</p><p>இந்தியா தனது அணுஆயுத தரவுகளை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதில்லை. எனவே அமெரிக்கா வெளியிட்டுள்ள இந்த தகவல்கள் அரசு ஆவணங்கள், செயற்கைக்கோள் புகைப்படங்கள் மற்றும் பொதுவெளியில் கிடைக்கும் தரவுகள் மூலமே மதிப்பிடப்பட்டவை ஆகும்.</p><h2>கல்பாக்கம்</h2><p>பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் 'துருவா' அணு உலைக்குப் பிறகு, தமிழ்நாடு கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் கட்டப்பட்ட 500 மெகாவாட் PFBR அணு உலை இந்த ஆண்டு ஏப்ரலில் தனது முதன்மைக் கட்டத்தை எட்டியுள்ளது.</p><p>இந்த உலை 80% திறனுடன் இயங்கினால், ஆண்டிற்கு சுமார் 140 கிலோ புளுட்டோனியம்-239 ஐ உற்பத்தி செய்ய முடியும். இது ஆண்டிற்கு 35 புதிய அணுஆயுதங்களைத் தயாரிக்கப் போதுமானது.</p><p>கல்பாக்கத்தில் FBR-1 மற்றும் FBR-2 ஆகிய மேலும் இரண்டு வேகப்பெருக்கு அணு உலைகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY: தங்கம் வாங்குவோருக்கு குட் நியூஸ்: அதிரடியாக குறைந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?
</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-11-9-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-11-9-2026#comments</comments><guid isPermaLink="false">a3660614-573c-4b03-9092-ba689b0d9a17</guid><pubDate>Fri, 11 Sep 2026 04:30:26 +0000</pubDate><atom:updated>2026-09-11T04:30:26.465Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/23/26949366-gold.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/23/26949366-gold.webp?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தங்கம் விலை கிராமுக்கு ரூ.240 குறைந்து ரூ.14,015-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p> <p>தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. </p><p>சென்னையில் கடந்த 1-ந்தேதி தங்கம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 175-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 400-க்கும் விற்பனையானது. இதனை தொடர்ந்து 2-ந்தேதி தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.225 குறைந்து, ரூ.13 ஆயிரத்து 950-க்கும், சவரனுக்கு ரூ.1,800 சரிந்து ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 600-க்கும் விற்றது. </p> <p>அதனை தொடர்ந்து 3-ந்தேதி தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு 290 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 240 ரூபாய்க்கும் சவரனுக்கு 2,320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 920-க்கு விற்பனையானது. </p> <p>அதனை தொடர்ந்து 4-ந்தேதி சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து சவரன் ரூ.1,14,880-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதை அடுத்து 5-ந்தேதி அதிரடியாக கிராமுக்கு 170 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14,190-க்கும் சவரனுக்கு ரூ.1360 குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 520-க்கு விற்பனையானது. 6-ந்தேதி ஒரு கிராம் ரூ.14,190-க்கும், ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 520-க்கு விற்பனையானது.</p> <p>7-ந்தேதி ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 130-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 40-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 8-ந்தேதி கிராமுக்கு ரூ.140 அதிகரித்து ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 270-க்கும், சவரனுக்கு ரூ.1,120 அதிகரித்து ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 160-க்கும் விற்பனையானது. 9-ந்தேதி சவரனுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.1,13,160-க்கும், கிராமுக்கு ரூ.125 குறைந்து ரூ.14,145-க்கும் விற்பனையானது.</p> <p>நேற்று தங்கம் விலை சவரனுக்கு  ரூ.800 உயர்ந்து ரூ.1,14,040-க்கும், கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.14,255-க்கும் விற்பனையானது.</p><p>இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு  ரூ.1,920 குறைந்து ரூ.1,12,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.240 குறைந்து ரூ.14,015-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>வெள்ளி விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்</h2><p>10-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.114,040</p><p>09-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,160</p><p>08-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.114,160</p><p>07-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,040</p><p>06-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,520</p> <h2>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்</h2><p>10-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>09-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>08-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>07-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>06-08-2026- ஒரு கிராம் ரூ.255</p> ]]></content:encoded></item><item><title>இந்தியா, திபெத், ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள் பதிவு </title><link>https://www.maalaimalar.com/news/world/five-earthquakes-struck-india-tibet-and-afghanistan-in-quick-succession</link><comments>https://www.maalaimalar.com/news/world/five-earthquakes-struck-india-tibet-and-afghanistan-in-quick-succession#comments</comments><guid isPermaLink="false">d005102c-f8da-4c03-8348-80024ba09cbb</guid><pubDate>Fri, 11 Sep 2026 04:20:37 +0000</pubDate><atom:updated>2026-09-11T04:20:37.886Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நில அதிர்வு,திபெத்,நிலநடுக்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/xe1zgypa/tn-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நிலநடுக்கங்கள் ]]></media:title><media:description type="html"><![CDATA[ நிலநடுக்கங்கள் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/xe1zgypa/tn-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் லடாக், அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 3 மாநிலங்களிலும், அண்டை நாடுகளான திபெத் மற்றும் ஆப்கானிஸ்தானிலும் ஒரே அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.</p><p>நேற்று நள்ளிரவு 12:27 மணியளவில் இந்தியாவிலுள்ள லடாக்கின் லே பகுதியில்  3.7 ரிக்டர்  அளவில் நிலநடுக்கம் பதிவானது.  இந்த <a href="https://www.maalaimalar.com/news/world/earthquake-measuring-53-magnitude-strikes-nepal">நிலநடுக்கம்</a>, பூமிக்கு அடியில் சுமார் 12 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. </p><p>நள்ளிரவில் திடீரென வீடுகள் அதிர்ந்ததால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.</p><p>லடாக்கைத் தொடர்ந்து அசாம் மாநிலத்திலும் அதிகாலை 1:20 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. </p> <p>இது ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆகப் பதிவானதுடன், பூமிக்கு அடியில் 39 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. 3.1 ரிக்டர் அளவு என்பது லேசான நிலநடுக்கப் பிரிவில் வகைப்படுத்தப்பட்டாலும், நள்ளிரவில் ஏற்பட்டதால் மக்கள் கடும் அச்சத்திற்கு ஆளாகினர்.</p><p>இதனைத் தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்தின் அலிபுர்துவார் பகுதியிலும் அதிகாலையில் நில அதிர்வு பதிவானது. ரிக்டர் அளவுகோலில் இது 3.0 ஆகப் பதிவாகியிருந்தது.</p> <h2>திபெத் - ஆப்கானிஸ்தான்</h2><p>இன்று அதிகாலை 4:02 மணியளவில் திபெத் பகுதியில் 4.7 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது பூமிக்கு அடியில் 30 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.</p><p>திபெத் நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த 18 நிமிடங்களில், அதாவது அதிகாலை 4:20 மணியளவில் ஆப்கானிஸ்தானிலும் நிலநடுக்கம் பதிவானது.</p> <p>ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியில் மிக ஆழமாகச் சுமார் 163 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டது.</p><p>பூமிக்கு அடியில் மிக ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்படும்போது அதன் மேலடுக்குத் தாக்கம் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருக்கும் என்பதால் இங்குப் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை.</p> <h2>பாதிப்புகள்</h2><p>அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும், தரவுகளின்படி இவை எதுவும் சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இல்லை.</p><p>நிலநடுக்கத்தின் அளவு 3.0 முதல் 4.7 ரிக்டர் வரை மட்டுமே இருந்ததால், இதுவரை எந்தப் பகுதியிலிருந்தும் உயிர்ச்சேதமோ அல்லது பாதிப்புகளோ பதிவாகவில்லை என தேசிய நிலநடுக்கவியல் மைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>இந்தியாவில் தான் ரூ. 3 லட்சம்... உலகில் மற்ற நாடுகளில் ஐபோன் டுயோ விலை ரூ. 1 லட்சம் வரை கம்மி தான்!</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/cheapest-countries-to-buy-iphone-duo</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/cheapest-countries-to-buy-iphone-duo#comments</comments><guid isPermaLink="false">91c4d49f-2720-42b7-b060-dba9cdde1c12</guid><pubDate>Fri, 11 Sep 2026 04:17:00 +0000</pubDate><atom:updated>2026-09-11T04:17:00.000Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Apple,ஆப்பிள்,Foldable Smartphone,மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/e956hopf/iPhone-Duo-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ iPhone Duo]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/e956hopf/iPhone-Duo-1.png?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/apple">ஆப்பிள்</a> நிறுவனம் ஒருவழியாக தனது மடிக்கக்கூடிய ஐபோனை அறிமுகம் செய்தது. ஐபோன் டுயோ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆப்பிள் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் மாடல் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி இருக்கிறது. </p><p>வழக்கமாக ஆப்பிள் சாதனங்கள் விலை சற்று அதிகமாக நிர்ணயிக்கப்படுவது அனைவரும் அறிந்ததே. எனினும், இந்த முறை ஆப்பிள் தனது <a href="https://www.maalaimalar.com/topic/iphone">ஐபோன்</a> மாடல்களின் விலையை யாரும் எதிர்பாராத வகையில் நிர்ணயித்துள்ளது. இந்தியாவில் 256 ஜிபி ஐபோன் டுயோ மாடலின் ஆரம்ப விலை ரூ. 2,99,900 ஆகும். இதன் மூலம் இதன் விலை ரூ. 3 லட்சம் என்ற இலக்கை அடைய வெறும் ரூ. 100 மட்டுமே குறைவாக உள்ளது. </p><p>இது ஆப்பிள் நிறுவனத்தின் இதுவரை இல்லாத மிகவும் விலை உயர்ந்த ஐபோன் மற்றும் இந்தியாவில் கிடைக்கும் மிகவும் விலை உயர்ந்த ஸமார்ட்போன் ஆகும். விலை விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஐபோன் டுயோ மாடல் இந்தியா தவிர்த்து வேறு எந்த நாடுகளில் குறைந்த விலையில் கிடைக்கும் என்ற கேள்வி எழுகிறது.</p><h2>உலகில் ஐபோன் டுயோவின் விலை எங்கு குறைவாக இருக்கும்?</h2><p>அந்த வகையில், புதிய ஐபோன் டுயோ மாடல் இந்தியாவை விட வேறு எந்தெந்த நாடுகளில் குறைந்த விலையில் கிடைக்கின்றன என்பது பற்றி தொடர்ந்து பார்ப்போம். அமெரிக்காவில், ஐபோன் டுயோ பேஸ் மாடலின் ஆரம்ப விலை 1,999 அமெரிக்க டாலர்கள், அதாவது தோராயமாக ரூ. 1.9 லட்சம் ஆகும். இது ரூ. 1 லட்சத்திற்கும் அதிகமான வித்தியாசம் ஆகும்.</p><p>ஒப்பிடப்பட்ட சந்தைகளில், அமெரிக்கா மிகக் குறைந்த பட்டியலிடப்பட்ட விலையைக் கொண்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கனடா, ஹாங்காங் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை உள்ளன. இந்தியா இந்தப் பட்டியலின் கடைசியில் உள்ளது.</p><p>அமெரிக்கத் தொகையுடன் ஒரு அடிக்குறிப்பும் வருகிறது. 1,999 அமெரிக்க டாலர் விலையில் மாநில விற்பனை வரி சேர்க்கப்படவில்லை, எனவே இறுதித் தொகையானது தொலைபேசி எங்கு வாங்கப்படுகிறது என்பதைப் பொறுத்தது. இருப்பினும், அதைக் கணக்கில் கொண்ட பிறகும், இந்தியாவுடனான வித்தியாசம் கணிசமானதாகவே உள்ளது.</p><p>இந்தியாவில் ஐபோன் டியோ 256ஜிபி மாடலின் ஆரம்ப விலை ரூ. 2,99,900 ஆகும். 512 ஜிபி மாடலின் விலை ரூ. 3,24,900 ஆகவும், 1 டிபி மற்றும் 2 டிபி மாடல்களின் விலை முறையே ரூ. 3,74,900 மற்றும் ரூ. 4,49,900 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு ஸ்மார்ட்போனின் விலை எத்தனை மடங்கு அதிகமாக இருந்தாலும், இது ஒரு கணிசமான தொகையாகும்.</p>]]></content:encoded></item><item><title>மிகக் குறைந்த விலையில் ஸ்பேஷியல் ஆடியோ வசதி கொண்ட விவோ இயர்பட்ஸ் அறிமுகம்</title><link>https://www.maalaimalar.com/technology/newgadgets/vivo-buds-launched-at-rs-1999-in-india-with-spatial-audio</link><comments>https://www.maalaimalar.com/technology/newgadgets/vivo-buds-launched-at-rs-1999-in-india-with-spatial-audio#comments</comments><guid isPermaLink="false">4f243472-5ae4-4c0f-bdcb-0dc07332b440</guid><pubDate>Fri, 11 Sep 2026 03:42:00 +0000</pubDate><atom:updated>2026-09-11T03:42:00.000Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Vivo,Earbuds,விவோ,இயர்பட்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/2xz98frn/Vivo-Buds.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vivo Buds]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/2xz98frn/Vivo-Buds.png?w=280" width="280"></media:thumbnail><category>புதிய கேஜெட்டுகள் (New gadgets)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/vivo">விவோ</a> நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. விவோ பட்ஸ் என அழைக்கப்படும் புதிய இயர்பட்ஸ் தினமும் இயர்பட்ஸ் பயன்படுத்துவோரை குறிவைத்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. </p><p>தலைசிறந்த ஆடியோ, நீண்ட நேர பேட்டரி, அழைப்புகள் மற்றும் கனெக்டிவிட்டி ஆகியவற்றை சிறப்பான டிசைனில் விவோ பட்ஸ் ஒருசேர வழங்குகிறது. நீண்டநேர பயன்பாடுகளின் போதும் அசௌகரியம் ஏற்படாத வகையில், இந்த <a href="https://www.maalaimalar.com/topic/earbuds">இயர்பட்ஸ்</a> குறைந்த எடையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.</p><h2>சிறப்பு அம்சங்கள்:</h2><p>புதிய விவோ பட்ஸ் 10 மில்லிமீட்டர் அதிக ரெசல்யூஷன் ஸ்பீக்கர் டிரைவர் கொண்டிருக்கிறது. இகு அழைப்புகளின் போது குரல் தெளிவாக கேட்பதை உறுதி செய்கிறது. இத்துடன் பயனர்கள் சவுண்ட்-ஐ 10-பேன்ட் EQ கஸ்டமைஸ் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட விவோ ஸ்மார்ட்போன்களுடன் பயன்படுத்தும் போது இந்த இயர்பட்ஸ் ஸ்பேஷியல் ஆடியோ வசதியை ஆதரிக்கிறது.</p><p>இந்த இயர்பட்ஸ் முழு சார்ஜ் செய்தால் 12 மணி நேர பிளேபேக் வழங்குகிறது. இதனுடன் வழங்கப்படும் சார்ஜிங் கேஸ் சேர்க்கும் போது அதிகபட்சம் 50 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்குகிறது. இத்துடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 4 மணி நேர பிளேபேக் வழங்குகிறது.</p><p>இத்துடன் டூயல் மைக் ஏஐ நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் அழைப்புகளின் போது வெளிப்புற சத்தங்களை தடுத்து நிறுத்தும், இதனால் குரல் அதிக தெளிவாக கேட்கும்.</p><h2>விலை மற்றும் விற்பனை விவரங்கள்:</h2><p>புதிய விவோ பட்ஸ் மாடலின் விலை ரூ. 1,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது குறைந்த செலவில் புது இயர்பட்ஸ் வாங்க நினைக்கும் பயனர்களுக்கு ஏற்ற மாடலாக அமைந்துள்ளது. இந்த இயர்பட்ஸ் நீலகிரி கிரீன் மற்றும் பசால்ட் பிளாக் ஆகிய இரு நிறங்களில் கிடைக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>நாடு முழுவதும் 8½ லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/8-5-lakh-bank-employees-across-country-on-strike-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/8-5-lakh-bank-employees-across-country-on-strike-today#comments</comments><guid isPermaLink="false">587acd5d-ae99-4c19-a3cd-2c3a69900965</guid><pubDate>Fri, 11 Sep 2026 03:39:46 +0000</pubDate><atom:updated>2026-09-11T03:39:46.155Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,வேலைநிறுத்தம்,வங்கி ஊழியர்கள்,Bank employees,Bank Strike,central government</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/xl1mnu0j/bank.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bank strike]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/xl1mnu0j/bank.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சனி, ஞாயிறு விடுமுறை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் 8½ லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய முன்னணி அறிவித்துள்ளது.</p><p>சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய முன்னணி ஒருங்கிணைப்பாளரும். அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான எச்.வெங்கடாசலம் நிருபர்களிடம் கூறியதாவது:-</p><h2>மத்திய அரசு</h2><p>வங்கி ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையான அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">மத்திய அரசு</a> தொடர்ந்து காலதாமதப்படுத்தி வருகிறது. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்கினால், அதற்கு ஈடாக வாடிக்கையாளர்களுக்கான வணிக சேவை நேரத்தை கூடுதலாக 40 நிமிடங்கள் அதிகரித்து பணியாற்ற வங்கி ஊழியர்கள் தயாராக இருப்பதாக மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <h2>8½ லட்சம் வங்கி ஊழியர்கள்</h2><p>ஆனால், 24 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த விவகாரம் நிதி அமைச்சகத்திடம் நிலுவையில் உள்ளது. இந்த பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமுகமான தீர்வு காண வேண்டி அரசுக்கு நோட்டீஸ் வழங்கியும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. இதனால். வேறு வழியின்றி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.</p> <h2>வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்</h2><p>இதுதவிர, வங்கிகளில் எழுத்தர் மற்றும் துணை ஊழியர்களை போதுமான அளவில் பணியமர்த்துதல், தேசிய ஓய்வூதியத் திட்டத்தை பழைய ஓய்வூதியத் திட்டமாக மாற்றுதல், பணிக்கொடை உச்சவரம்பை அதிகரித்தல், வங்கிகளில் தொழிலாளர் மற்றும் அதிகாரி இயக்குனர் பதவிகளை வேண்டும் என்றே நிரப்பாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் சுமார் 8½ லட்சம் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D">வங்கி ஊழியர்கள்</a> இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார்.</p> ]]></content:encoded></item><item><title>BRICS: ஒன்றுகூடும் தலைவர்கள்.. உலக நலனை முன்னிறுத்தி விவாதிப்போம் - பிரதமர் மோடி</title><link>https://www.maalaimalar.com/news/national/brics-leaders-gather-let-us-deliberate-with-the-global-good-in-mind-prime-minister-modi</link><comments>https://www.maalaimalar.com/news/national/brics-leaders-gather-let-us-deliberate-with-the-global-good-in-mind-prime-minister-modi#comments</comments><guid isPermaLink="false">65f8ec5a-aa1a-40cb-9277-4ce8815952a9</guid><pubDate>Fri, 11 Sep 2026 03:14:39 +0000</pubDate><atom:updated>2026-09-11T03:14:39.479Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,BRICS Summit,பிரதமர் மோடி,பிரிக்ஸ் மாநாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/c24bjje3/tn-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மோடி]]></media:title><media:description type="html"><![CDATA[ மோடி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/c24bjje3/tn-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரிக்ஸ் மாநாட்டில் உலகத் தலைவர்கள் ஒன்றுகூடி ஆக்கபூர்வமாக பேச உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.</p> <p>இந்தியாவின் தலைமையில் 18வது <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D">பிரிக்ஸ் </a>உச்சி மாநாடு நாளை (செப்டம்பர் 12) மற்றும்  நாளை மறுநாள் (செப்டம்பர் 13) டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறுகிறது. </p><p>2026 ஜனவரி 1 அன்று இந்தியா 4வது முறையாகப் பிரிக்ஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றது.</p><p>இந்த மாநாட்டில் கலந்துகொள்ள <a href="https://www.maalaimalar.com/news/national/putin-lands-in-delhi-for-brics-summit">ரஷிய அதிபர் புதின்</a> இன்று காலை டெல்லி வந்து சேர்ந்தார். இன்று அவர் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். </p><p>சீன அதிபர் ஜி ஜின் பிங் 7 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக இந்தியாவிற்கு வருகை தருகிறார்.  ஈரான் அதிபர் பெசஸ்கியானும் மாநாட்டில் கலந்துகொள்ள வருகிறார்.</p> <h2>பிரதமர் மோடி</h2><p>இதனிடையே பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில்,"அடுத்த சில நாட்களில் உலகெங்கிலும் உள்ள தலைவர்கள் பிரிக்ஸ் மாநாட்டிற்காக ஒன்றுகூடவுள்ளனர்.</p><p>உலக நலனை முன்னிறுத்தி, பல்வேறு முக்கிய விவகாரங்களில் இந்த உச்சி மாநாடு நேர்மறையான மற்றும் அர்த்தமுள்ள விவாதங்களைக் காணும் என்பதில் நான் முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.</p><p>இந்த மாநாட்டில் ஈரான் போர் விவகாரம், அதன் பொருளாதார தாக்கம் குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">All set for BRICS 2026!

@BricsIndia2026 https://t.co/nXqqoBmoAm</p>&mdash; Narendra Modi (@narendramodi) <a href="https://x.com/narendramodi/status/2098026841844138247?ref_src=twsrc%5Etfw">September 10, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>
</figure><h2>பிரிக்ஸ்</h2><p>கோல்ட்மேன் சாக்ஸ் நிதி நிறுவன பொருளாதார நிபுணர் ஜிம் ஓநீல், 2001ல் "BRIC" (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா) என்ற சொல்லை முதன்முறையாகப் பயன்படுத்தினார்.</p><p>2006ல் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்புக்குப் பின், 2009ல் ரஷியாவின் யெகாடெரின்பர்க்கில் முதலாவது உச்சி மாநாடு நடைபெற்றது.</p><p>2010ல் அழைப்பு விடுக்கப்பட்டு, 2011ல் தென்னாப்பிரிக்கா இணைந்தவுடன் 'BRIC' என்பது 'BRICS' ஆக மாறியது.</p> <p>2024 இல் எகிப்து, எதியோப்பியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை முழு உறுப்பு நாடுகளாக இணைந்தன. 2025இல் இந்தோனேசியா 11வது முழு உறுப்பு நாடாக இணைந்தது.</p><p>மலேசியா, தாய்லாந்து, வியட்நாம், பெலாரஸ், நைஜீரியா உள்ளிட்ட நாடுகள் கூட்டாண்மை நாடுகளாக சேர்க்கப்பட்டன.</p><p>வளர்ந்து வரும் மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக ஒத்துழைப்பை வலுப்படுத்துவது பிரிக்ஸ் கூட்டமைப்பின் பிரதான நோக்கங்கள் ஆகும்.</p> ]]></content:encoded></item><item><title>விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் 4 மடங்கு கட்டணம் உயர்வு
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/omni-bus-fares-hiked-for-vinayagar-chaturthi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/omni-bus-fares-hiked-for-vinayagar-chaturthi#comments</comments><guid isPermaLink="false">a4e751d5-93b9-4c47-b0dc-bbd16060fd98</guid><pubDate>Fri, 11 Sep 2026 03:02:32 +0000</pubDate><atom:updated>2026-09-11T03:02:32.915Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Omni Bus,ஆம்னி பஸ்,விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,கட்டணம் உயர்வு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/8r496rta/omnibus.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Omni bus]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/8r496rta/omnibus.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் 4 மடங்கு கட்டணம் உயர்ந்துள்ளது. மதுரை செல்ல அதிகபட்சமாக ரூ.4 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது.</p><h2>லட்சக்கணக்கான மக்கள்</h2><p>தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் தங்களின் கல்வி, வேலை, சுய தொழில், வியாபாரம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக சென்னையில் குடியிருந்து வருகிறார்கள். அவர்கள் விழாக்காலங்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு பஸ் ரெயில்களில் சொந்த ஊருக்கு திரும்புவது வழக்கம். ரெயில்களில் இருக்கைகள் முன்கூட்டியே நிரம்பிவிடுவதாலும், முக்கியமாக விழாக்காலங்களில் சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் தீர்ந்துவிடுவதாலும் பெரும்பாலான மக்கள் பஸ் போக்குவரத்தையே நம்பி இருக்கிறார்கள். இதனை பயன்படுத்திக் கொள்ளும் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-question-tn-govt-for-omni-bus-fare-issue">ஆம்னி பஸ்</a> உரிமையாளர்கள் தங்கள் பஸ் பயண டிக்கெட் விலையை விழாக்காலங்களில் கடுமையாக உயர்த்துவது வழக்கமான ஒன்றாகிவிட்டது.</p> <h2>4 மடங்கு கட்டணம் உயர்வு</h2><p>அந்த வகையில் வருகிற 14-ந் தேதி திங்கட்கிழமை <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">விநாயகர் சதுர்த்தி</a> வருவதால், சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாட்கள் தொடர் விடுமுறையாகி விடுகிறது. இதனால், பெரும்பாலான மக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட உள்ளனர். இதனால், சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களில் கட்டணம் 4 மடங்கு வரை அதிகரித்து உள்ளது.</p> <p>அதாவது, சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.4 ஆயிரத்து 13-ம், கோவைக்கு ரூ.3 ஆயிரத்து 239-ம், நெல்லைக்கு ரூ.3,499-ம், கன்னியாகுமரிக்கு ரூ.3 ஆயிரத்து 882-ம், நாகர்கோவிலுக்கு ரூ.3 ஆயிரத்து 699-ம், ஈரோட்டிற்கு ரூ.2 ஆயிரத்து 580-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><h2>திங்கட்கிழமை கட்டண விவரம்</h2><p>அதே போன்று மறுமார்க்கத்தில் வருகிற 14-ந் தேதி திங்கட்கிழமை பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு வருவதற்கான அதிகபட்ச பஸ் கட்டணம் விவரம் வருமாறு:-</p> <p>மதுரையில் இருந்து சென்னைக்கு ரூ.2 ஆயிரத்து 650-ம், கோவையில் இருந்து சென்னைக்கு ரூ.2 ஆயிரத்து 999-ம், நெல்லையில் இருந்து சென்னைக்கு ரூ.3 ஆயிரத்து 999-ம். கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு ரூ.3 ஆயிரத்து 831-ம், நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு ரூ.3 ஆயிரத்து 599-ம், ஈரோட்டில் இருந்து சென்னைக்கு ரூ.2 ஆயிரத்து 40-ம் தற்போதைய கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>ஒருவேளை இந்த கட்டணங்கள் ஞாயிறு, திங்கட்கிழமைகளில் மக்களின் தேவை அதிகரிப்பை கருத்தில் கொண்டு மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.</p> <h2>நெரிசலுக்கு வாய்ப்பு</h2><p>இதுஒருபுறம் இருக்க, ஏராளமானோர் இன்று தங்கள் சொந்த கார்களிலும், தங்கள் ஊர்களுக்கு படையெடுப்பார்கள் என்பதால் சுங்கச்சாவடிகளில் அதிகளவில் கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. அதேபோன்று, சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களிலும், சென்னை சென்ட்ரலில் இருந்து மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களிலும் இன்று கடுமையான கூட்ட நெரிசல் இருக்கும் என்பது நிதர்சனம். போலீசார் இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஈடுபட்டு உள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>தியாகி இமானுவேல் சேகரனாரின் போராட்டங்களையும் தியாகங்களையும் போற்றி நினைவு கூர்வோம் - கனிமொழி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-let-us-honor-and-commemorate-struggles-and-sacrifices-of-martyr-immanuel-sekaran</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-let-us-honor-and-commemorate-struggles-and-sacrifices-of-martyr-immanuel-sekaran#comments</comments><guid isPermaLink="false">6935146d-9d06-4369-b262-c6cda00a6b45</guid><pubDate>Fri, 11 Sep 2026 02:40:28 +0000</pubDate><atom:updated>2026-09-11T02:40:28.300Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,Kanimozhi,கனிமொழி,Immanuel Sekaran,தியாகி இமானுவேல் சேகரன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/huk31stb/kanimozhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Immanuel Sekaran - Kanimozhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/huk31stb/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இமானுவேல் சேகரனின் நினைவு தினமான இன்று அவரது போராட்டங்களையும் தியாகங்களையும் போற்றி நினைவு கூர்வோம் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். </p> <p>தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. </p><p>இமானுவேல் சேகரன் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பகுதி செல்லூர் எனும் கிராமத்தில் 1924 அக்.9-ந்தேதி பிறந்தார். அவர் ஒரு சமூக நீதிப் போராட்டக்காரரும், சுதந்திரப் போராட்டத் தியாகியும் ஆவார். படுகாத்து குடியிருப்பு கிராமத்தில் பிறந்த இவர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் சுயமரியாதைக்காகவும் தனது இளமைக் காலம் தொட்டே தீவிரமாகக் குரல் கொடுத்தார்.</p> <p>இமானுவேல் சேகரன் தனது 18வது வயதிலேயே இந்திய சுதந்திர இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தேசப்பற்றுடன் செயல்பட்டார்.</p><p>ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, சமூக சமத்துவம் மற்றும் தீண்டாமைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தப் இமானுவேல் சேகரன் பாடுபட்டார்.</p> <p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">இமானுவேல் சேகரன்</a> ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகத் திகழ்ந்த டாக்டர் அம்பேத்கருடன் இணைந்து பணியாற்றினார். மேலும் தமிழகத்தில் ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளுக்காக இயங்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கினார்.</p><p>சாதிய வன்முறைகளின் உச்சகட்டமாக, அவர் தனது 33-வது வயதில் 1957-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந்தேதி அன்று படுகொலை செய்யப்பட்டார்.</p> <p>இமானுவேல் சேகரனின் நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசால் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 11-ந்தேதி அரசு விழாவாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இவருக்கென மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.</p><p>தமிழக அரசியலிலும் சமூக நீதியிலும் இவரது தியாகம் ஒரு வரலாற்று அடையாளமாகக் கருதப்படுகிறது.</p> <p>இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தையொட்டி <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/misa-issue-dmk-vs-tvk-it-wing-crash">திமுக</a> எம்பி கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>சாதிய அடக்குமுறைகளுக்கு எதிராகத் துணிச்சலுடன் போராடி, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகத் தன் இன்னுயிரைத் தியாகம் செய்த விடுதலைப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு நாள் இன்று.</p><p>அவரது போராட்டங்களையும் தியாகங்களையும் போற்றி நினைவு கூர்வோம்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item></channel></rss>