<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 25 Jul 2026 11:50:30 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-25-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-25-july-2026#comments</comments><guid isPermaLink="false">d2490f83-5c37-441d-8937-34c77d9fb209</guid><pubDate>Sat, 25 Jul 2026 05:14:22 +0000</pubDate><atom:updated>2026-07-25T11:46:11.135Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/8cnfoez2/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/8cnfoez2/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/congratulations-to-students-across-the-country-we-are-proud-of-you-rahul-gandhi">நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு பாராட்டுகள்: உங்களால் பெருமை கொள்கிறோம்- ராகுல் காந்தி</a></p><p>* தர்மேந்திர பிரதான் ராஜினாமா</p><p>* மேலும் 3 கோரிக்கைகளை முன்வைத்துள்ளது CJP</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/stalin-congratulates-pmk-founder-ramadoss-as-he-retires-from-politics">பா.ம.க நிறுவனர் ராமதாஸூக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!... </a></p><p>இன்று தனது 88வது பிறந்தநாளைக் கொண்டாடும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும்  தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/dharmendra-pradhan-quits-a-look-back-at-his-political-career">மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த தர்மேந்திர பிரதான்: அரசியலில் கடந்து வந்த பாதை</a></p><p>* 2000-ம் ஆண்டு ஒடிசா மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார்.</p><p>* 2004-ம் ஆண்டு நடைபெற்ற 14-வது மக்களவை தேர்தலில் போட்டியிட்டு முதன்முறையாக எம்.பி. ஆனார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/its-a-victory-of-democracy-cjp-gen-z-youth-sonam-wangchuk-praise">IT'S A Victory OF DEMOCRAZY-CJP, Gen Z இளைஞர்களுக்கு சோனம் வாங்சுக் பாராட்டு!... </a></p><p>சோனம் வாங்சுக், இந்த வெற்றியை இளைஞர்களின் ஒற்றுமைக்குக் கிடைத்த வெற்றி எனப் பாராட்டியுள்ளார். இளைஞர்களின் இந்தத் துணிச்சலான ஜனநாயகப் போராட்டம் நாட்டிற்கே முன்மாதிரியாக உள்ளது என அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rain-likely-chance-to-chennai-4">சென்னையில் மழைக்கு வாய்ப்பு...</a></p><p>* ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>* தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/compensation-of-rs-1-crore-for-families-of-deceased-students">சிஜேபி தலைவர் மேலும் மூன்று கோரிக்கைகள்</a></p><p>* உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு</p><p>* மாணவர்கள் மீது எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கை ரத்து செய்யப்பட வேண்டும் </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/students-protest-victory-dharmendra-pradhan-resigns">மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா!</a></p> <p>* நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நெருக்கடி முற்றியதால் ராஜினாமா.</p><p>* பிரதமர் மோடிக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/kanhaiya-kumar-arrested-after-clash-with-officer-at-delhi-kerala-house">அதிகாரியுடன் வாக்குவாதம்: டெல்லி கேரளா ஹவுஸில் காங்கிரஸ் தலைவர் கண்ணையா குமார் அதிரடி கைது!</a></p> <p>* கேரளா ஹவுஸில் அதிகாரியுடன் வாக்குவாதம், டெல்லி போலீசால் கைது.</p><p>* அமித் ஷாவின் அராஜகம் என கன்ஹையா கடும் கண்டனம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/sonam-wangchuk-confronts-police-at-safdarjung-hospital">'என்னை கைது செய்யுங்கள்': மருத்துவமனையில் போலீசாரிடம் சோனம் வாங்சுக் வாக்குவாதம்!... </a></p><p>வைரலான வீடியோவில், சோனம் வாங்சுக்  அவரை வழிமறித்த காவல்துறை அதிகாரியிடம், "என்னை கைது செய்யுங்கள். 3 மணி நேரமாக என்னை ஏன் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறீர்கள்? நான் மன அழுத்தத்தால் இறந்தால் அதற்கு நீங்களே பொறுப்பு" என ஆவேசமாகப் பேசுவது பதிவாகியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-says-transfer-of-dharmendra-pradhan-to-another-portfolio-is-unacceptable">தர்மேந்திர பிரதானை வேறு துறைக்கு மாற்றுவதை ஏற்க முடியாது- ராகுல் காந்தி</a></p><p>* மோடியின் மந்திரிசபையில்  அவரை கல்வித்துறையில் இருந்து வேறு துறைக்கு மாற்றுவதே இதற்கான தீர்வு என்று பேசப்பட்டு வருகிறது. </p><p>* தர்மேந்திர பிரதானை அங்கிருந்து மாற்றுவது, பின்னுக்குத் தள்ளுவது அல்லது முன்னுக்கு கொண்டு வருவது போன்ற எந்தவொரு விவாதத்திற்கும் இடமில்லை.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/spacex-starship-13th-test-flight-marks-new-space-history-milestone">ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் 13-வது சோதனை ஓட்டம் வெற்றி! விண்வெளி வரலாற்றில் புதிய சாதனை!</a></p> <p>* 20 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.</p><p>* ஸ்டார்ஷிப் இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பாக தரையிறங்கியது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/cjp-protest-pakistan-social-media-accounts-blocked-delhi-police-warning">CJP போராட்டம்: பாகிஸ்தான் சமூக வலைதள கணக்குகள் முடக்கம்-டெல்லி காவல்துறை எச்சரிக்கை!... </a></p><p>இன்றைய பேச்சுவார்த்தையின் முடிவைப் பொறுத்து CJP தங்களின் அடுத்தகட்ட போராட்ட அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-airport-phase-2-completion-union-minister-murlidhar-mohol" rel="nofollow">சென்னை விமான நிலைய 2-ம் கட்ட பணிகள் டிசம்பரில் முடிவடையும்..!- மத்திய அமைச்சர் முரளிதர மகாலி</a></p><p>* மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார்.</p><p>* ரூ.14 கோடி செலவில் மாற்றங்கள் செய்யும் பணியும் தொடங்கி நடைபெற்று வருகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cmrl-floats-tender-for-dpr-to-extend-metro-line-from-kilambakkam-to-chengalpattu">கிளாம்பாக்கம்-செங்கல்பட்டு மெட்ரோ ரெயில் விரிவாக்கம்: திட்ட அறிக்கை டெண்டர் வெளியீடு</a></p><p>* 15.46 கி.மீ. இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.</p><p>* இத்திட்டத்திற்கு ரூ.9,335 கோடி செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/anahat-singh-first-indian-to-reach-world-junior-final-since-2005">உலக ஜூனியர் ஸ்குவாஷ்: 20 ஆண்டுக்கு பின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அனாஹத் சிங்</a></p><p>* இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா கடந்த 2005-ம் ஆண்டில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார்.</p><p>* கடந்த ஆண்டு நடந்த சாம்பியன்ஷிப் போட்டியில் அனாஹத் சிங் வெண்கலப் பதக்கம் வென்றார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kamal-haasan-says-there-is-no-place-for-guns-and-lathi-charges-in-gandhis-land">துப்பாக்கிகள், தடியடிகளுக்கு காந்தியின் மண்ணில் இடமில்லை- கமல்ஹாசன்</a></p><p>*  பாதுகாப்பு படையினர் மற்றும் பொது சொத்துக்கள் மீதான தாக்குதல்களும் நேர்மையாக விசாரிக்கப்பட வேண்டும்.</p><p>* இப்போது, ​​உரையாடல் நீடித்த சீர்திருத்தத்திற்கு வழிவகுப்பதை நாம் உறுதி செய்வோம். முன்னால் உள்ள பாதை நீண்டது, ஆனால் இந்தியர்கள் அதை ஒன்றாகவே கடக்க வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rameswaram-fishermen-strike-for-demanding-the-release-of-fishermen-arrested-by-srilanka">இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரி ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்</a></p><p>* மீனவர்கள் சிறை பிடிப்பு விவகாரம் ராமேசுவரத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.</p><p>* மீனவர்களுக்கு வரும் 6-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/gukesh-praggnanandhaa-vaishali-to-spearhead-indian-challenge-in-chess-olympiad">செஸ் ஒலிம்பியாட்: குகேஷ், பிரக்ஞானந்தா உள்பட 10 பேர் கொண்ட இந்திய அணி தேர்வு</a></p><p>* ஹங்கேரியில் நடந்த செஸ் ஒலிம்பியாட்டில் இரு பிரிவிலும் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. </p><p>* பெண்கள் பிரிவில் கோனெரு ஹம்பி, தமிழகத்தின் வைஷாலி உள்பட பலர் தேர்வாகினர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-and-brother-appear-at-thiruvallikeni-police-station-in-rs-35-crore-bribery-case" rel="nofollow">ரூ.35 கோடி பேரம் வழக்கு: திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜரான செந்தில் பாலாஜியிடம் விசாரணை நிறைவு!</a></p><p>*  செந்தில் பாலாஜியும், அவரது தம்பி அசோக் குமாரும் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். </p><p>* இருவரும் வழக்கு விசாரணையின்போது தலைமறைவாகக் கூடாது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/assam-deluge-claims-61-lives-705000-people-impacted">அசாமில் தொடரும் பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 61 ஆக உயர்வு-7 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு... </a></p><p>பக்கத்து மாநிலமான நாகாலாந்தில் ஏற்பட்ட திடீர் மேகவெடிப்பு காரணமாகவே அசாமின் பல மாவட்டங்களில் இந்த அளவுக்குப் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/technology/anthropic-claude-opus-5-new-ai-breakthrough">AI-ல் புதிய பாய்ச்சல்: ஆந்திரோபிக் நிறுவனத்தின் 'Claude Opus 5' அதிகாரப்பூர்வமாக வெளியீடு!... </a></p><p>செயற்கை நுண்ணறிவு (AI) ஆராய்ச்சியில் முன்னணி வகிக்கும் 'ஆந்திரோபிக்' நிறுவனம், தனது அடுத்த தலைமுறை முதன்மை AI மாடலான 'Claude Opus 5'-ஐ உலகளவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ramadoss-announced-retiring-from-politics-starting-today">இன்று முதல் அரசியல் துறவறம்- ராமதாஸ்</a></p><p>* தலைசுற்றல் இருந்ததால் 20 நாட்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தேன் என்றார்.</p><p>* பா.ம.க.வை இனி அன்புமணி பார்த்துக்கொள்வார் என்று ராமதாஸ் கூறியபோது விழாவில் கூடியிருந்த தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். </p><p><a href="https://www.maalaimalar.com/sports/pm-modi-greets-indian-lifter-jandukumar-for-commonwealth-bronze" rel="nofollow">காமன்வெல்த் போட்டியில் வெண்கலம்- இந்திய வீரர் ஜண்டுகுமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து</a></p><p>* வலிமையை அதிகரிப்பதற்காக மட்டுமே பளு தூக்கும் பயிற்சியை மேற்கொண்டார்.</p><p>*  130.9 புள்ளிகளை பெற்று பதக்க மேடையில் இடம்பிடித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/central-to-gummidipoondi-train-service-change">இன்றும், நாளையும் சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி மின்சார ரெயில் சேவையில் மாற்றம்</a></p><p>* கும்மிப்பூண்டி- மூர் மார்க்கெட்  இரவு 10.30 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி- பொன்னேரி இடைய ரத்து செய்யப்பட்டுள்ளது. </p><p>* கும்மிடிப்பூண்டியில் புறப்பட்டு மூர் மார்க்கெட் வரக்கூடிய மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி-பொன்னேரி இடையே இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/andhra-devotees-dies-idukku-pillaiyar-temple-cave">திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோவில் குகையில் சிக்கி ஆந்திர பக்தர் பலி </a></p><p>* குகை  வடிவத்தில் உள்ள கோவில் பகுதியில் படுத்தபடி நுழைந்தார். உடல் பருமன் அதிகம் என்பதால் குகையில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தார். </p><p>* உடல் பருமன் மற்றும் சுவாச பிரச்சனை உள்ள பக்தர்கள் இடுக்கு பிள்ளையார் கோவிலில் உள்ள குகை போன்ற பகுதியில் புகுந்து வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/puducherry/thirumavalavan-says-we-are-the-reason-for-the-dmk-winning-a-large-number-of-constituencies">தி.மு.க. அதிக தொகுதிகள் வெற்றிக்கு நாங்கள் தான் காரணம் - திருமாவளவன் பேச்சு</a></p><p>* மகாத்மா காந்தி பெயரில் இருந்த 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை மாற்றியது பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு. </p><p>* த.வெ.க. ஆட்சியில் விசிகவுக்கு முக்கியத்துவம் தந்துவிடக்கூடாது என்றுதான் இப்போதும் சிலர் இருக்கின்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minor-boy-allegedly-forced-into-sex-8-month-pregnant-girl-booked-under-pocso" rel="nofollow">சிறுவனை கட்டாயப்படுத்தி பாலியல் உறவு- கர்ப்பமான இளம்பெண் போக்சோ சட்டத்தின் கீழ் கைது</a></p><p>* சிறுவனின் தாயார் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.</p><p>* புகாரின் பேரில் இளம்பெண் மீது போலீசார்&nbsp;<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B">போக்சோ</a>&nbsp;வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.&nbsp;</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/third-round-talks-today-in-center-and-cjp-party-members">தர்மேந்திர பிரதான் பதவி விலகுவாரா? - இன்று மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை</a></p><p>* மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவுடனான முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.</p><p>* மாணவர்கள் போராட்டம் தற்போது இந்தியா முழுவதும் தீவிரமடைந்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/amarnath-yatra-resumes-after-6-day-weather-halt-over-6000-pilgrims-leave-jammu">சீரடைந்த வானிலை: 6 நாளுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது அமர்நாத் யாத்திரை</a></p><p>* அமர்நாத் யாத்திரை கடந்த 19-ம் தேதி நிறுத்தி வைக்கப்பட்டது.</p><p>* 223 வாகனங்கள் கொண்ட அணிவகுப்பில் 18வது குழு பயணித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/delhi-metro-curbs-enter-4th-day-18-stations-closed-today-as-security-tightens-over-neet-protests">நீட் தேர்வு போராட்டம் எதிரொலி: டெல்லியில் 4-வது நாளாக மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடல்</a></p><p>* கூட்டம் அதிகரிப்பதை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>* இன்று காலை 7.30 மணி முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை 18 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்படுகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-questions-when-chief-minister-will-break-silence-on-custodial-deaths" rel="nofollow">தொடரும் காவல் மரணங்கள்.. முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது?- மு.க.ஸ்டாலின் கேள்வி</a></p><p>* Accountability, Apology – முதலமைச்சருக்குப் பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில் இருக்கிறதா?</p><p>* முதலமைச்சரானதும் அதைக் கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்?</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/jyothika-backs-students-protest-against-neet-scam" rel="nofollow">பதவி விலகுங்கள் தர்மேந்திர பிரதான் - நடிகை ஜோதிகா இன்ஸ்டா பதிவு</a></p><p>* நான் பொறுப்புணர்வுடன் நிற்கிறேன்!</p><p>* நான் ஒரு ஜனநாயக இந்தியாவிற்காக நிற்கிறேன்!</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/youth-wont-be-fooled-by-empty-promises-and-repression-manickam-thakur" rel="nofollow">வெற்று வாக்குறுதிகளாலும், அடக்குமுறைகளாலும் இளைஞர்களை ஏமாற்ற முடியாது!- மாணிக்கம் தாகூர்</a></p><p>* கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி நீக்கம் செய்க!</p><p>* பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் அரசு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-slams-third-spot-for-tamil-thai-anthem-at-manonmaniam-sundaranar">மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடமா?- அன்புமணி கண்டனம்</a></p><p>* தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மூன்றாவது இடத்திற்கு  திட்டமிட்டு தள்ளுவது கண்டிக்கத்தக்கது.</p><p>*   ஆளுனர் மாளிகை கட்டாயப்படுத்துவது அப்பட்டமான அதிகார வெளிப்பாடு ஆகும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/south-korean-tycoon-ordered-to-pay-6200-crore-divorce-settlement" rel="nofollow">முன்னாள் மனைவிக்கு ரூ.6,200 கோடி இழப்பீடு: தென்கொரிய தொழிலதிபருக்கு சியோல் ஐகோர்ட் அதிரடி உத்தரவு!</a></p><p>* நிறுவனத்தின் பங்குகளை விற்காமல், முழு தொகையையும் ரொக்கமாக கொடுக்க உத்தரவு.</p><p>*  பரபரப்பான விவாகரத்து வழக்கில் சியோல் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/congress-leader-manickam-tagore-urges-removal-of-dharmendra-pradhan" rel="nofollow">தர்மேந்திர பிரதானை உடனடியாக பதவி நீக்கம் செய்யுங்கள்- மாணிக்கம் தாகூர்</a></p><p>* 21 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.</p><p>* கேள்வித்தாள் கசிவு நடந்ததை மத்திய கல்வி அமைச்சரே ஒப்புக்கொண்டார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-25-07-2026">GOLD PRICE TODAY : வார இறுதிநாளில் உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p>* நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.270-ம், சவரனுக்கு ரூ.2,160-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 230-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 840-க்கும் விற்பனை செய்யப்பட்டது.</p><p>* ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/sanam-shetty-indictment-to-fake-is-student-protest-taking-place-at-balan-illam-in-chennai">சென்னை பாலன் இல்லத்தில் நடக்கும் மாணவர்கள் போராட்டம் போலியானது- சனம் ஷெட்டி குற்றச்சாட்டு</a></p><p>* இந்த மேடையை அரசியலாக மாற்றினால் அதற்கு நான் ஆதரவு தெரிவிக்கமாட்டேன். இவர்கள் ஜனநாயகத்துக்காக போராடவில்லை. </p><p>* டெல்லியில் என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியாது. நான் அங்கு போகவில்லை. இப்போதும் சொல்கிறேன். </p> <p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/zim-v-ind-match-today">ஜிம்பாப்வேக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்- இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் ஆதிக்கம் தொடருமா?</a></p><p>* ஜிம்பாப்வேக்கு எதிராக இன்று நடக்கும் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தும் வேட்கையுடன் இந்திய அணி களம் காணுகிறது.... </p><p> * தொடரை இழக்காமல் இருக்க ஜிம்பாப்வே முடிந்த வரை கடுமையாக போராடுவார்கள் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பு நிறைந்ததாக அமையும் என நம்பலம்.</p>]]></content:encoded></item><item><title>டெல்லி சிஜேபி போராட்டக்காரர்களுடன் மத்திய அரசு 3-வது கட்ட பேச்சுவார்த்தை!</title><link>https://www.maalaimalar.com/news/national/central-government-third-round-talks-with-cjb-protesters-in-delhi</link><comments>https://www.maalaimalar.com/news/national/central-government-third-round-talks-with-cjb-protesters-in-delhi#comments</comments><guid isPermaLink="false">5da1a17a-0152-4432-9f11-b44d5ac48bc1</guid><pubDate>Sat, 25 Jul 2026 11:47:25 +0000</pubDate><atom:updated>2026-07-25T11:47:25.913Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜேபி நட்டா,JPNadda,DharmendraPradhan,CJPProtest,CockroachJantaParty,EducationMinisterResigns,StudentProtest2026</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/c1pbc92s/JPNadda-CJP" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ JPNadda - CJP ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/c1pbc92s/JPNadda-CJP?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வு முறைகேடு மற்றும் கல்விச் சீர்திருத்தங்களை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் போராடி வரும் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' பிரதிநிதிகளுடன் மத்திய அரசு தனது 3-வது கட்ட அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை இன்று நடத்துகிறது.</p><p>மத்திய சுகாதாரத் துறை மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE">ஜே.பி.நட்டா</a> மற்றும் சிஜேபி பிரதிநிதிகளுக்கு இடையே ஏற்கனவே இருமுறை பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துள்ள நிலையில், இன்றைய 3-வது கட்ட சந்திப்பு மிக முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.</p><h2>முதல்கட்டப் பேச்சுவார்த்தை</h2><p>சிஜேபி அமைப்பினர் நாடாளுமன்றத்தை நோக்கி நடத்திய 'சலோ சன்சாத்' பேரணியில் போலீசாருடன் கடுமையான மோதல் வெடித்தது. டெல்லியில் நிலவிய அசாதாரண சூழ்நிலையைத் தொடர்ந்து அரசு பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்தது.</p><p>ஜூலை 20 அன்று மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவை சிஜேபி பிரதிநிதிகள் முதன்முறையாக சந்தித்தனர். சிஜேபி தரப்பில் கொடுக்கப்பட்ட கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் நட்டா, கோரிக்கைகளை ஆலோசித்து முடிவெடுப்பதாகக் கூறி, தற்காலிகமாகப் போராட்டத்தை வாபஸ் பெறக் கேட்டுக்கொண்டார். </p><p>ஆனால், சிஜேபி போராட்டத்தைத் தொடர்ந்தது.</p><h2>இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை</h2><p>சோனம் வாங்சுக் தனது 26 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டதை அடுத்து, ஜந்தர் மந்தருக்கு வெளியே 'Constitution Club' என்ற நடுநிலையான இடத்தில் பேச அரசு ஒப்புக்கொண்டது.</p><p>நேற்று மதியம் மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோரை சிஜேபி முதன்மை செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் சந்தித்தனர். </p><p>சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், சிஜேபியின் 3 முக்கிய கோரிக்கைகளில் 2 கோரிக்கைகளை (மாணவர்கள் மீதான எஃப்.ஐ.ஆர் வழக்குகளைத் திரும்பப் பெறுதல் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குதல்) அமைச்சர் ஜே.பி.நட்டா கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டார். </p><p>கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா குறித்து இறுதி முடிவு எடுக்க இன்று மதியம் வரை அரசு அவகாசம் கேட்டது.</p><h2>மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை</h2><p>அரசு கேட்ட அவகாசத்தின்படி, இன்று மதியம் 3-வது கட்ட பேச்சுவார்த்தை தொடங்குவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.</p><p>அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா கடிதத்தைப் பிரதமர் மோடிக்கு அனுப்பியதைத் தொடர்ந்து, இன்று 3-வது நாளாக அமைச்சர் ஜே.பி.நட்டா முன்னிலையில் சிஜேபி பிரதிநிதிகளுடன் 3-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. </p><p>தேசிய தேர்வு முகமை மறுசீரமைப்பு மற்றும் தேர்வு தேதிகள் குறித்த இறுதி கட்ட முடிவுகள் இந்தப் பேச்சுவார்த்தையில் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு பாராட்டுகள்: உங்களால் பெருமை கொள்கிறோம்- ராகுல் காந்தி</title><link>https://www.maalaimalar.com/news/national/congratulations-to-students-across-the-country-we-are-proud-of-you-rahul-gandhi</link><comments>https://www.maalaimalar.com/news/national/congratulations-to-students-across-the-country-we-are-proud-of-you-rahul-gandhi#comments</comments><guid isPermaLink="false">ecd696cd-ee3a-4d52-908b-75c6a500b973</guid><pubDate>Sat, 25 Jul 2026 11:44:10 +0000</pubDate><atom:updated>2026-07-25T11:44:10.154Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,CJP Protest,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/c8d3zbt5/RahulGandhi2507.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rahul Gandhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/c8d3zbt5/RahulGandhi2507.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வு வினாத்தாள் லீக் விவகாரத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் ஜந்தர் மந்தரில் கடந்த 20-ந்தேதி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.</p><h2>நாடாளுமன்றம் முற்றுகை போராட்டம்</h2><p>இவர்கள் கடந்த 20-ந்தேதி நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் பேரணியை நடத்தினர். அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தனர். தடுப்பை மீறிச் செல்ல முயன்றதால் போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். கண்ணீர் புகைக்குண்டுகளும் வீசினர். இதில் பல மாணவர்கள் காயம் அடைந்தனர்.</p><p>இதனால் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். <a href="https://www.maalaimalar.com/news/national/dharmendra-pradhan-quits-a-look-back-at-his-political-career">தர்மேந்திர பிரதான்</a> ராஜினாமா செய்யும் வரை போராட்டம் தொடரும். அவர் ராஜினாமா செய்யவில்லை என்றால் பிரதமர் மோடி ராஜினாமா செய்யக்கோரி போராடுவேம் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தெரிவித்தது.</p><h2>மேலும் 3 கோரிக்கைகள் வைத்த கரப்பான்பூச்சி ஜனதா தளம்</h2><p>இதனைத்தொடர்ந்து மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. இரண்டு கட்ட பேச்சுவார்த்தை முடிந்த நிலையில், இன்று 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது. அதற்கு முன்னதாக இன்று மதியம் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.</p><p>தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்த போதிலும், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜீத் தீப்கே போராட்டத்தை வாபஸ் பெறப்படாது. மேலும், 3 கோரிக்கைகளை நிறைவேற்றினால்தான் போராட்டம் கைவிடப்படும் என்று தெரிவித்தார்.</p><p>தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய பின், கராப்பான்பூச்சி ஜனதா தளம் மற்றும் மத்திய அரசு இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.</p><p>இந்த நிலையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, "நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு பாராட்டுக்கள். உங்கள் அனைவரையும் நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். 20-ந்தேதி மாணவர்களுக்கு எதிராக அடக்கு முறையை கையாண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யக்கூடாது என 3 கோரிக்கைகளை வைத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பா.ம.க நிறுவனர் ராமதாஸூக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/stalin-congratulates-pmk-founder-ramadoss-as-he-retires-from-politics</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/stalin-congratulates-pmk-founder-ramadoss-as-he-retires-from-politics#comments</comments><guid isPermaLink="false">44a52a62-9613-4ca3-9559-3e5d683f63cb</guid><pubDate>Sat, 25 Jul 2026 11:22:34 +0000</pubDate><atom:updated>2026-07-25T11:22:34.061Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,M.K.Stalin,Dr.Ramadoss,மு.க.ஸ்டாலின்,மருத்துவர் ராமதாஸ்,பா.ம.க</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/hvcoqo6z/sta.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dr.Ramadoss - M.K.Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/hvcoqo6z/sta.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளையும் நல்வாழ்த்துச் செய்தியையும் தெரிவித்துள்ளார்.</p><p>இன்று தனது 88வது பிறந்தநாளைக் கொண்டாடும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.</p><h2><strong>அரசியலில் இருந்து ஓய்வு அறிவிப்பு:</strong></h2><p>தனது பிறந்தநாளை முன்னிட்டு, "இன்று முதல் அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன்; இனி அரசியல் பேச மாட்டேன், அரசியலில் தலையிடவும் மாட்டேன்" என மருத்துவர் ராமதாஸ் அதிரடியாக ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கட்சியின் முழு பொறுப்புகளையும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கவனித்துக் கொள்வார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><h2><strong>மு.க.ஸ்டாலின் வாழ்த்து:</strong></h2><p>சமூகநீதிக்கான பல போராட்டங்களை முன்னெடுத்து, முக்கிய குரலாக ஒலித்து வந்த மருத்துவர் ராமதாஸ்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தீவிர அரசியலில் இருந்து அவர் ஓய்வு பெறத் தீர்மானித்துள்ள நிலையில், அவரது ஓய்வுக்காலம் மனநிறைவோடும், நல்ல உடல் ஆரோக்கியத்தோடும், மகிழ்ச்சியோடும் அமைய வாழ்த்துவதாக மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த தர்மேந்திர பிரதான்: அரசியலில் கடந்து வந்த பாதை</title><link>https://www.maalaimalar.com/news/national/dharmendra-pradhan-quits-a-look-back-at-his-political-career</link><comments>https://www.maalaimalar.com/news/national/dharmendra-pradhan-quits-a-look-back-at-his-political-career#comments</comments><guid isPermaLink="false">1cb28e7a-6886-4f60-871f-b073d823094e</guid><pubDate>Sat, 25 Jul 2026 10:53:46 +0000</pubDate><atom:updated>2026-07-25T10:53:46.517Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,CJP Protest,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-08/miy1b09z/cjp.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dharmendra Pradhan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-08/miy1b09z/cjp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் லீக் விவகாரத்தில் பொறுப்பேற்று, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று <a href="https://www.maalaimalar.com/news/national/compensation-of-rs-1-crore-for-families-of-deceased-students">கரப்பான்பூச்சி ஜனதா கட்சி</a> சார்பில் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது. பின்னர் இது மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டமாக மாறியது.</p><h2>தர்மேந்திர பிரதான் ராஜினாமா</h2><p>கடந்த 20-ந்தேதி நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் பேரணியை நடத்தினர். அப்போது போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். கண்ணீர் புகைக்குண்டுகள் வீசினர். இதில் பலர் காயம் அடைந்தனர். இதனால் நாடு முழுவதும் மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்றது.</p><p>இந்த நிலையில் இன்று மத்திய அமைச்சரான தர்மேந்திர பிரதான், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.</p><h2>தர்மேந்திர பிரதான் அரசியலில் கடந்து வந்த பாதையை பார்ப்போம்...</h2><p>ஒடிசா மாநிலத்தில் இருந்து வந்த மூத்த அரசியல்வாதிகள் ஒருவர் தர்மேந்திர பிரதான். இவர் கல்லூரி காலத்தில் ஏபிவிபி-யில் செயல்பாட்டராக முதன்முதலில் தன்னை இணைத்துக் கொண்டார். 1998-ல் பாஜக-வின் இணைந்தார்.</p><p>1993-ல் ABVP மாநில செயலாளராகவும், 1995-ல் தேசிய பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார். முதன்முதலில் 2000-த்தில் அதிகாரப்பூர்வமாக அரசியலில் நுழைந்தார். ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார். 2000 முதல் 2004-ம் ஆண்டு வரை எம்.எல்.ஏ.-வாக இருந்துள்ளார். இந்த சமயத்தில் பாஜக-வின் இளைஞர் அணி (2001) தலைவராகவும், 2002-ல் தேசிய செயலாளராகவும் இருந்துள்ளார்.</p><h2>2004-ல் மக்களவை எம்.பி.யாக தேர்வு</h2><p>2004-ம் ஆண்டு நடைபெற்ற 14-வது மக்களவை தேர்தலில் போட்டியிட்டு முதன்முறையாக எம்.பி. ஆனார். இதே வருடத்தில் பாஜக யுவ மோர்ச்சா {(Bharatiya Janata Yuva Morcha (BJYM)} தேசிய தலைவராக நியமிக்கப்பட்டார்.</p><p>பாராளுமன்றத்தில் பலவேறு கமிட்டி மற்றும் நாடாளுமன்ற அமைப்புகளில் பணியாற்றியுள்ளார்.</p><p>2004-ல் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அவர் மனுக்கள் மீதான குழு மற்றும் எரிசக்தி துறைக்கான குழு ஆகியவற்றில் உறுப்பினராக இருந்தார்.</p><p>ஆகஸ்ட் 2007 முதல் எனர்ஜி துறைக்கான நிலைக்குழுவின் உறுப்பினராகப் பணியாற்றினார்.</p><p>2012 மற்றும் 2014-க்கு இடைப்பட்ட காலத்தில் அரசு உறுதிமொழிகள் குழுவின் உறுப்பினராக இருந்தார்.</p><p>மே 2012 முதல் அக்டோபர் 2013 வரை, தொலைத்தொடர்பு உரிமங்கள் மற்றும் அலைக்கற்றை (spectrum) ஒதுக்கீடு மற்றும் விலை நிர்ணயம் தொடர்பான விவகாரங்களை ஆய்வு செய்த கூட்டு நாடாளுமன்றக் குழுவிலும் பணியாற்றினார்.</p><p>அவர் ஏப்ரல் 2012 முதல் 2018 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். மேலும் ஜூன் 2024-ல் 18-வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.</p><p>பிரதான் பல ஆண்டுகளாக மத்திய அரசில் பல்வேறு முக்கியத் துறைகளைக் கையாண்டு வந்துள்ளார்.</p><p>செப்டம்பர் 2017-ல், அவர் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சராகவும், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.</p><p>மே 2019 முதல் ஜூலை 2021 வரை, அவர் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சராகவும், எஃகு துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.</p><h2>கல்வித்துறை அமைச்சர்</h2><p>ஜூலை 7, 2021 அன்று கல்வித்துறை அமைச்சராகவும், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றது அவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது.</p><p>ஜூன் 2024-ல் 18-வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜூன் 9, 2024 அன்று அவர் மத்தியக் கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.</p><p>ஒடிசா சட்டமன்றத்தின் சிறந்த சட்டமன்ற உறுப்பினருக்கான விருதான 'உத்கல்மணி கோபபந்து பிரதிபா சம்மான்' விருதும் பிரதானுக்கு வழங்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>Gen Z இளைஞர்களுக்கு சோனம் வாங்சுக் பாராட்டு! IT&apos;S A Victory OF DEMOCRAZY என ட்வீட்!  </title><link>https://www.maalaimalar.com/news/national/its-a-victory-of-democracy-cjp-gen-z-youth-sonam-wangchuk-praise</link><comments>https://www.maalaimalar.com/news/national/its-a-victory-of-democracy-cjp-gen-z-youth-sonam-wangchuk-praise#comments</comments><guid isPermaLink="false">c76c344b-d8d3-4fce-b6ac-223239a1637e</guid><pubDate>Sat, 25 Jul 2026 10:52:28 +0000</pubDate><atom:updated>2026-07-25T10:52:28.046Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>NeetExam,சோனம் வாங்சுக்,கரப்பான் பூச்சி ஜனதா கட்சி,SonamWangchuk,CJPProtest,நீட்தேர்வுமுறைகேடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/jdsj9jew/SON.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ SonamWangchuk]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/jdsj9jew/SON.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட்  வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், 'மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்'.</p><p>இப்போராட்டத்தில் முன்னணியில் நின்று குரல் கொடுத்த Gen Z இளைஞர்களுக்கு, சமூக ஆர்வலர் 'சோனம் வாங்சுக்' தனது வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.</p><h2><strong>தர்மேந்திர பிரதான் ராஜினாமா:</strong></h2><p>நீட் தேர்வு கசிவு விவகாரத்தில் மாணவர்களின் தொடர் போராட்டம் மற்றும் எதிர்க்கட்சிகளின் அழுத்தத்தைத் தொடர்ந்து தர்மேந்திர பிரதான் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் சமர்ப்பித்தார். "மாணவர்களின் எதிர்காலம், நாட்டின் ஒற்றுமை மற்றும் கல்வி முறையின் மீதான நம்பிக்கையைக் காக்கவே இந்த முடிவை எடுத்துள்ளேன்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2><strong>Gen Z இளைஞர்களின் தீவிரப் போராட்டம்:</strong></h2><p>டெல்லி ஜந்தர் மந்தர் உள்ளிட்ட இடங்களில் கடந்த சில வாரங்களாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அமைப்புகள்  தீவிர முற்றுகைப் போராட்டங்களை நடத்தி வந்தன. கல்வி அமைச்சரின் ராஜினாமா, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிவாரணம் மற்றும் போராட்டக்காரர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர்.</p><h2><strong>சோனம் வாங்சுக் வாழ்த்து:</strong></h2><p>மாணவர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக 26 நாட்கள் உண்ணாநோன்பு இருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், இந்த வெற்றியை இளைஞர்களின் ஒற்றுமைக்குக் கிடைத்த வெற்றி எனப் பாராட்டியுள்ளார். இளைஞர்களின் இந்தத் துணிச்சலான ஜனநாயகப் போராட்டம் நாட்டிற்கே முன்மாதிரியாக உள்ளது என அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20: ஜிம்பாப்வே பந்து வீச்சு தேர்வு</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/second-t20-against-india-zimbabwe-opts-to-bowl</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/second-t20-against-india-zimbabwe-opts-to-bowl#comments</comments><guid isPermaLink="false">84eedd7c-f780-4342-a5ab-2a8368857c18</guid><pubDate>Sat, 25 Jul 2026 10:42:19 +0000</pubDate><atom:updated>2026-07-25T10:42:19.925Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Team India,டீம் இந்தியா,INDvsZIM</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/0k0xrtgb/ShreyasIyer0003.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Shreyas Iyer]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/0k0xrtgb/ShreyasIyer0003.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய டி20 அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போடடிகள் கொண்ட தொடரில், கடந்த 23-ந்தேதி நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.</p><p>இன்று 2-வது போட்டி நடக்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ஜிம்பாப்வே அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.</p><h2>ஜிம்பாப்வே அணி:-</h2><p>பிரையன் பென்னெட், பென் கர்ரன், டியோன் மையர்ஸ், சிகந்தர் ரசா (கேப்டன்), ரியான் பர்ல், வெஸ்லி மாதேவெரே, ததிவனாஷே மருமானி (விக்கெட் கீப்பர்), பிராட் எவன்ஸ், நிவ்மேன் நியாம்ஹுரி, ரிச்சார்ட் என்கரவா, பிளெசிங் முசாரபானி.</p><h2>இந்திய அணி:-</h2><p>வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), திலக் வர்மா, ரங்கு சிங், ஷிவம் துபே, ரவி பிஷ்னோய், பிரின்ஸ் யாதவ், யாஷ் தாகூர், மயங்க் யாதவ்.</p>]]></content:encoded></item><item><title>பா.ம.க நிறுவனர் ராமதாஸூக்கு முதலமைச்சர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-extends-birthday-greetings-to-pmk-founder-ramadoss</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-extends-birthday-greetings-to-pmk-founder-ramadoss#comments</comments><guid isPermaLink="false">41460b05-ca3d-49a4-a90c-182aeb3ea123</guid><pubDate>Sat, 25 Jul 2026 10:38:22 +0000</pubDate><atom:updated>2026-07-25T10:38:22.950Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Ramadoss,பிறந்தநாள் வாழ்த்து,birthday wish,ராமதாஸ்,முதலமைச்சர் விஜய்,tn cm vijay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/hsuqpn4i/TN-CM.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ramadoss- TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/hsuqpn4i/TN-CM.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று தனது 88-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் ராமதாஸூக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.</p><p>இந்நிலையில், முதலமைச்சர் விஜய் பாமக நிறுவனர் ராமதாஸூக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.</p><h2>நீண்ட ஆயுளுடன்..</h2><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.</p><p>தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் பல்லாண்டு வாழ உளமார வாழ்த்துகிறேன்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>இன்று முதல் துறவறம்</h2><p>விழுப்புரம் தனியார் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சியில் மனைவியுடன் ராமதாஸ் பங்கேற்றார். விழா மேடையில் மனைவி மற்றும் மகனுடன் அமர்ந்து ராமதாஸ் பேசியதாவது:-</p><p>* எனது 88-வது பிறந்தநாளான இன்று முதல் அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன்.</p><p>* அரசியல் பேசமாட்டேன், அரசியலில் தலையிட மாட்டேன், பா.ம.க.வை இனி அன்புமணி பார்த்துக்கொள்வார்.</p><p>* தலைசுற்றல் இருந்ததால் 20 நாட்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தேன் என்றார்.</p><p>பா.ம.க.வை இனி அன்புமணி பார்த்துக்கொள்வார் என்று ராமதாஸ் கூறியபோது விழாவில் கூடியிருந்த தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் மழைக்கு வாய்ப்பு... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rain-likely-chance-to-chennai-4</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rain-likely-chance-to-chennai-4#comments</comments><guid isPermaLink="false">b5261caa-0845-4636-9a6e-24efdd1fbb6f</guid><pubDate>Sat, 25 Jul 2026 10:26:34 +0000</pubDate><atom:updated>2026-07-25T10:26:34.216Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/x7sgssci/rain005.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மழை]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/x7sgssci/rain005.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.</aside><h2><strong>மிதமான மழை</strong></h2><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில்,</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.</p><p>இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>27-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>31-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><h2><strong>வெப்பநிலை</strong></h2><p>இதனிடையே நாளை முதல் 29-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p>நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>நாளை மற்றும் நளை மறுநாள் அந்தமான் கடல் பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோர பகுதிகள், மத்திய வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>28 மற்றும் 29-ந்தேதிகளில் மத்திய வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>தர்மேந்திர பிரதான் ராஜினாமா எதிரொலி- சென்னையில் கொண்டாட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-erupts-in-celebration-after-union-education-minister-dharmendra-pradhan-resigns</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-erupts-in-celebration-after-union-education-minister-dharmendra-pradhan-resigns#comments</comments><guid isPermaLink="false">97d7383d-776f-4e31-ad15-1d7338bd14c3</guid><pubDate>Sat, 25 Jul 2026 10:00:34 +0000</pubDate><atom:updated>2026-07-25T10:00:34.777Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,Resignation,neet protest,ராஜினாமா,நீட் போராட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/86p9bxfn/pradhan.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dharmendra pradhan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/86p9bxfn/pradhan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்விற்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று ராஜினாமா செய்துள்ளார். இதன் எதிரொலியால் சென்னையில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டுள்ளது.</p><h2>தொடர் போராட்டம்</h2><p>நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வந்தனர்.</p><p>இந்தப் போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வந்ததால் போராட்டம் வலுவடைந்தது. மேலும், போராட்டக் களத்தில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இரு தரப்பிலும் காயங்களும் ஏற்பட்டன.</p><h2>வாங்சுக் உண்ணாவிரதம்</h2><p>இவ்விவகாரம் தொடர்பாக 20 நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதம் இருந்துவந்த சமூக போராளி சோனம் வாங்சுக், தனது உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று முன்தினம் நிறைவு செய்தார். மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா அவரைச் சந்தித்து மத்திய அரசு எடுக்க இருக்கும் நடவடிக்கைகள் குறித்து தெரிவித்ததை அடுத்து இந்தப் போராட்டத்தை அவர் முடித்துக்கொண்டதாக கூறப்படுகிறது.</p><h2>ராஜினாமா</h2><p>நீட் தேர்விற்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். </p><p>தேசிய அளவில் கடந்த 10 நாட்களாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பதவி விலக வலியுறுத்தி மாணவர்களின் போராட்டம் விரிவடைந்து வந்த சூழலில், பாதுகாப்பு காரணங்கள் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>ராஜினாமா</h2><p>நீட் தேர்விற்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். </p><p>தேசிய அளவில் கடந்த 10 நாட்களாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பதவி விலக வலியுறுத்தி மாணவர்களின் போராட்டம் விரிவடைந்து வந்த சூழலில், பாதுகாப்பு காரணங்கள் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>சென்னையிலும் கொண்டாட்டம்</h2><p>மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமாவை அடுத்து சென்னை தி.நகா் பாலன் இல்லத்தில் 6ஆவது நாளாக போராடி வரும் போராட்டக்காரா்கள் வெற்றி முழக்கமிட்டு கொண்டாடி வருகின்றனர்.</p><p>மேலும், அடுத்த 2 நாட்களில் நீட் ரத்து என்ற அறிவிப்பை கேட்கவிருக்கிறோம், அதுவரை போராட்டம் தொடரும் என போராட்டக்குழு அறிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு.. மத்திய அரசுக்கு அபிஜீத் தீப்கே மூன்று கோரிக்கைகள்..</title><link>https://www.maalaimalar.com/news/national/compensation-of-rs-1-crore-for-families-of-deceased-students</link><comments>https://www.maalaimalar.com/news/national/compensation-of-rs-1-crore-for-families-of-deceased-students#comments</comments><guid isPermaLink="false">4911fcdf-548a-4a16-9fca-45ea035aa707</guid><pubDate>Sat, 25 Jul 2026 09:55:30 +0000</pubDate><atom:updated>2026-07-25T09:55:30.193Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>abhijeet dipke,அபிஜீத் தீப்கே,சிஜேபி,CJP Protest,CJP,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/59ztlcaj/Untitled-design-65.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Abhijit Dipke demands ₹1 crore compensation]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/59ztlcaj/Untitled-design-65.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேசிய அளவில் நீட் தேர்விற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று ராஜினாமா செய்துள்ளார்.  </p><p>மத்திய கல்வி அமைச்சர் பிரதமர் நரேந்திர மோடிக்கு ராஜினாமா கடிதம் எழுதியுள்ளார்.</p><p>இந்நிலையில் இந்த நிகழ்விற்கு காக்ரோச் ஜனதா கட்சியினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும் மூன்று கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை தங்களின் போராட்டம் தொடரும் எனவும் அக்கட்சியின் தலைவர் அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார்.</p><h3><strong>அபிஜீத் தீப்கே கோரிக்கை:</strong></h3><p>இதுகுறித்து சிஜேபி-யின் நிறுவனர் அபிஜீத் தீப்கே கூறுகையில், “இந்தியாவில் ஜனநாயகம் உயிர்ப்புடன் இருப்பதற்கு, இந்த நிகழ்வே சான்றாக உள்ளது. தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துள்ளார்.</p><p>நீங்கள் பயப்படாமல், இந்த அரசுக்கு அடிபணியாமல் இருந்தால், எங்களால் யார் ராஜினாமாவையும் ஏற்றுக்கொள்ள முடியும் என்பதற்கு இந்த ராஜினாமா சான்று.</p><p>இளைஞர்கள் பயப்படத் தேவையில்லை. இது ஜனநாயகம், அவர் ராஜினாமா செய்துவிட்டார். ஆனால் எங்களுக்கு இன்னும் இரண்டு கோரிக்கைகள் உள்ளன.</p><p>நாங்கள் இப்படியே போகமாட்டோம். இந்த நீட் வினாத்தாள் கசிவில் பல மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்</p><p>அவர்களின் குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அது அவர்களின் குடும்பங்களுக்கு கிடைக்க வேண்டும்.</p><p>இரண்டாவதாக கடந்த 20ஆம் தேதி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>மூன்றாவதாக டெல்லி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்க கூடாது.</p><p>இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எங்களுக்கு எழுத்து பூர்வமாக எழுதி தரவேண்டும். இதை நிறைவேற்றுதாக உறுதியளிக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.</p><p>நினைவில் கொள்ளுங்கள் கரப்பான் பூச்சிகளுடன் விளையாடாதீர்கள்” என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பழனி கோவில் நிலம் ரூ.100 கோடி என்பதே எனக்கு தெரியாது- அமைச்சர் ரமேஷ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-ramesh-says-i-was-not-even-aware-that-the-palani-temple-land-was-worth-rs-100-crore</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-ramesh-says-i-was-not-even-aware-that-the-palani-temple-land-was-worth-rs-100-crore#comments</comments><guid isPermaLink="false">e2c32241-9183-4000-b67a-2f90074362d3</guid><pubDate>Sat, 25 Jul 2026 09:32:39 +0000</pubDate><atom:updated>2026-07-25T09:32:39.936Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Palani temple,அமைச்சர் ரமேஷ்,Minister Ramesh,பழனி கோவில் நில மோசடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/7vrblo17/Ramesh.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் ரமேஷ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ரமேஷ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/7vrblo17/Ramesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>நீட் தேர்வை முழுமையாக அகற்ற வேண்டும் என்றும், கல்வி மீண்டும் மாநில பட்டியலுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்பதே த.வெ.க. அரசின் நிரந்தர தீர்வாகவும் நிலைப்பாடாகவும் உள்ளது.</aside><p>திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து இந்து சமய அற நிலையத்துறை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D">அமைச்சர் ரமேஷ்</a>, திருச்சி கலெக்டர் பிரதிக் தாயளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.</p><h2><strong>எலி தொல்லை</strong></h2><p>பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>சமயபுரம் கோவிலில் பணியில் இருந்த மணியக்காரர் பழனி வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளதாக எழுந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை நேர்மையாக நடைபெற்று குற்றங்களை கண்டறியும் பொருட்டு, நிர்வாக ரீதியான நடவடிக்கையாக அவர் தற்காலிகமாகச் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார். </p><p>விசாரணையின் முடிவில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் உரிய மேல்நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>அரசு மருத்துவமனைகளில் எலி நடமாட்டம் குறித்த புகார்கள் தொடர்பாக உரிய ஆய்வுகள் நடத்தப்பட்டு, உள்கட்டமைப்பில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. </p><h2><strong>பழனி விவகாரம்</strong> </h2><p><a href="https://www.maalaimalar.com/topic/பழனி-கோவில்-நில-மோசடி">பழனி கோவில்</a> நிலப்பதிவு விவகாரத்தில் தன் மீதும், அரசின் மீதும் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை. பழனியில் ஒரு நிலம் உள்ளது.  அந்த நிலத்தின் மதிப்பு ரூ.100 கோடி மதிப்பு பெறும் என இந்த வழக்கிற்கு  பிறகுதான் எனக்குத் தெரியும்.  அதற்கு முன்பு அதன் மதிப்பு எனக்கு தெரியாது. </p><p>ஜூன் 30-ந்தேதியே இந்து சமய அறநிலையத் துறை மூலம்  மேல்முறையீடு செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் மூலம் அந்த நிலம் மீட்கப்பட்டுள்ளது. நிலப்பதிவு ஜூலை 7-ந்தேதி நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தை உடனடியாக சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று முதலமைச்சரிடம் கூறியது நான்தான். </p><h2><strong>மாணவர்கள் போராட்டம்</strong> </h2><p>தற்போது சி.பி.சி.ஐ.டி. முதற்கட்ட விசாரணையை நடத்தி வருகின்றனர். உண்மையான குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டங்களுக்கு அரசு நியாயமான ஆதரவைத் தெரிவித்துள்ளதாக முதலமைச்சர் தனது இணையதளத்தில் தெளிவாக  பதிவிட்டு உள்ளார். </p><p>நீட் தேர்வை முழுமையாக அகற்ற வேண்டும் என்றும், கல்வி மீண்டும் மாநில பட்டியலுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்பதே த.வெ.க. அரசின் நிரந்தர தீர்வாகவும் நிலைப்பாடாகவும் உள்ளது. மாணவர்களின் போராட்டத்தை அரசு மதிக்கிறது. ஆனால், இதற்குள் புகுந்து முதலமைச்சருக்கு எதிராகத் திசைதிருப்ப முயல்பவர்களை அரசு உரிய முறையில் எதிர் கொள்ளும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்கள் போராட்டம் வெற்றி.. ராஜினாமா செய்தார் தர்மேந்திர பிரதான்!</title><link>https://www.maalaimalar.com/news/national/students-protest-victory-dharmendra-pradhan-resigns</link><comments>https://www.maalaimalar.com/news/national/students-protest-victory-dharmendra-pradhan-resigns#comments</comments><guid isPermaLink="false">f8d698f6-ab87-4aaf-afbb-f8ff4209a8c3</guid><pubDate>Sat, 25 Jul 2026 09:08:41 +0000</pubDate><atom:updated>2026-07-25T09:08:41.173Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/fqm6w1an/Untitled-design-64.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Union Education Minister Dharmendra Pradhan resigns ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/fqm6w1an/Untitled-design-64.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்விற்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று ராஜினாமா செய்துள்ளார்.  </p><p>தேசிய அளவில் கடந்த 10 நாட்களாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பதவி விலக வலியுறுத்தி மாணவர்களின் போராட்டம் விரிவடைந்து வரும் சூழலில், பாதுகாப்பு காரணங்கள் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார். அவர் அந்த கடிதத்தில்,</p><p>கடந்த 10 நாட்களாக நாட்டில் நடந்து வரும் சம்பவங்கள் தனக்கு மிகுந்த வேதனையை கொடுப்பதாக உள்ளது.</p><p>இளைஞர்கள் குழப்பமான மனநிலையில் சிக்குவதையோ, தேசவிரோத சக்திகள் இந்த சூழலை பயன்படுத்துவதையோ தவிர்க்க வேண்டும் என்பதுதான் எனது முதன்மையான நோக்கம். </p><p>மாணவர்கள் சட்ட சிக்கலில் நேரத்தை வீணடிக்காமல், படிப்பிலும் தொழில் வாய்ப்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.</p><p>தனக்கு வழிகாட்டியாக இருந்து, அத்தனை ஆதரவுகளையும் அளித்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சரவை சகாக்களுக்கும், அதிகாரிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். </p><p>பூரி ஜெகநாதரின் ஆசியுடன், ஒடிசா மக்கள் மற்றும் இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக நான் தொடர்ந்து பணியாற்றுவேன். </p><h3><strong>தொடர் போராட்டம்</strong></h3><p>நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். </p><p>இந்தப் போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருவதால் போராட்டம் வலுவடைந்துள்ளது. மேலும், போராட்டக் களத்தில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்  காரணமாக இரு தரப்பிலும் காயங்களும் ஏற்பட்டுவருகின்றன.</p><h3><strong>20 நாட்களுக்கும் மேலாக வாங்சுக் உண்ணாவிரதம்</strong></h3><p>இவ்விவகாரம் தொடர்பாக 20 நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதம் இருந்துவந்த சமூக போராளி சோனம் வாங்சுக், தனது உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று முன்தினம் நிறைவு செய்தார். மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா அவரைச் சந்தித்து மத்திய அரசு எடுக்க இருக்கும் நடவடிக்கைகள் குறித்து தெரிவித்ததை அடுத்து இந்தப் போராட்டத்தை அவர் முடித்துக்கொண்டதாக கூறப்படுகிறது.</p><p><strong>கரப்பான் பூச்சி கட்சியினர் உற்சாக முழக்கம்</strong></p><p>தர்மேந்திர பிரதான் ராஜினாமா அறிவிப்பு வெளியானதையடுத்து, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் உற்சாக முழக்கம் எழுப்பினர்.</p>]]></content:encoded></item><item><title>&apos;என்னை கைது செய்யுங்கள்&apos;: மருத்துவமனையில் போலீசாரிடம் சோனம் வாங்சுக் வாக்குவாதம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/sonam-wangchuk-confronts-police-at-safdarjung-hospital</link><comments>https://www.maalaimalar.com/news/national/sonam-wangchuk-confronts-police-at-safdarjung-hospital#comments</comments><guid isPermaLink="false">7fbf156a-4038-4208-b292-a6c8a7a7db5d</guid><pubDate>Sat, 25 Jul 2026 08:45:14 +0000</pubDate><atom:updated>2026-07-25T08:45:14.291Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>NeetExam,Sonam Wangchuk,நீட் தேர்வு முறைகேடு,சோனம் வாங்சுக்,காக்ரோச் ஜனதா கட்சி,CJPProtest</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/dxts1hdl/SONAM.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sonam Wangchuk ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/dxts1hdl/SONAM.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி ஜந்தர் மந்தரில் 'காக்ரோச் ஜனதா கட்சி' மற்றும் மாணவர் அமைப்புகள் நடத்தி வரும் போராட்டத்தின் போது 26 நாட்கள் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக், டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் காவல்துறையினருடன் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2><strong>காவல்துறையுடன் மோதல்:</strong></h2><p>வைரலான வீடியோவில், சோனம் வாங்சுக் நீல நிற சட்டையுடன் தனது மனைவியுடன் மருத்துவமனை நடைபாதையில் நடந்து வரும்போது, அவரை வழிமறித்த காவல்துறை அதிகாரியிடம், "என்னை கைது செய்யுங்கள். 3 மணி நேரமாக என்னை ஏன் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறீர்கள்? நான் மன அழுத்தத்தால் இறந்தால் அதற்கு நீங்களே பொறுப்பு" என ஆவேசமாகப் பேசுவது பதிவாகியுள்ளது.</p><h2><strong>தரையமர்ந்து போராட்டம்:</strong></h2><p>காவல்துறையினர் அவரை வெளியேற அனுமதிக்காததால், ஆத்திரமடைந்த சோனம் வாங்சுக் மருத்துவமனை தரையிலேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். பின்னர் தான் வெளியிட்ட யூடியூப் வீடியோவில் பேசிய வாங்சுக், "சப்தர்ஜங் மருத்துவமனையில் என்னை ஒரு கைதியைப் போல நடத்தினார்கள். வடகொரியாவில் இருப்பது போன்ற உணர்வே ஏற்பட்டது" எனக் குற்றம் சாட்டியுள்ளார்.</p><h2><strong>சப்தர்ஜங் மருத்துவமனை நிர்வாகத்தின் விளக்கம்:</strong></h2><p>வீடியோ வைரலானதைத் தொடர்ந்து சப்தர்ஜங் மருத்துவமனை நிர்வாகம் அளித்துள்ள அதிகாரப்பூர்வ விளக்கம்  அளித்துள்ளது. அதில்,</p><h2><strong>உயர் நீதிமன்ற உத்தரவு நகல்:</strong></h2><p>சோனம் வாங்சுக்கை அவர் விரும்பும் தனியார் மருத்துவமனைக்கு மாற்ற டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதாக ஊடகங்களில் செய்திகள் வந்தன. அதன் அடிப்படையில் அவர் உடனடியாக மருத்துவமனையை விட்டு வெளியேற முயன்றார்.</p><h2><strong>எழுத்துப்பூர்வ உத்தரவு தாமதம்:</strong></h2><p>இருப்பினும், உயர் நீதிமன்றத்தின் எழுத்துப்பூர்வமான அதிகாரப்பூர்வ உத்தரவு நகல் மருத்துவமனை நிர்வாகத்திற்கு வந்து சேரும் வரை அவரை சட்டப்பூர்வமாக வெளியே அனுப்ப முடியாது என்பதால், காவல்துறை அவரைத் தடுத்து நிறுத்தியதாக மருத்துவமனை தெளிவுபடுத்தியுள்ளது. உத்தரவு நகல் கிடைத்த பிறகே அவர் விடுவிக்கப்பட்டார்.</p><h2><strong>உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு:</strong></h2><p>நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக 26 நாட்களாகப் போராடி வந்த சோனம் வாங்சுக், மத்திய அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தை மற்றும் போராட்டக்காரர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது என்ற உறுதியைத் தொடர்ந்து தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.</p><p>நீதிமன்ற உத்தரவின் நகல் கைக்குக் கிடைக்காததால் ஏற்பட்ட தாமதமே இந்த வாக்குவாதத்திற்குக் காரணம் என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ள நிலையில், இந்த வீடியோ இணையத்தில் தொடர்ந்து கவனம் பெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>அதிகாரியுடன் வாக்குவாதம்: டெல்லி கேரளா ஹவுஸில் காங்கிரஸ் தலைவர் கண்ணையா  குமார் அதிரடி கைது!</title><link>https://www.maalaimalar.com/news/national/kanhaiya-kumar-arrested-after-clash-with-officer-at-delhi-kerala-house</link><comments>https://www.maalaimalar.com/news/national/kanhaiya-kumar-arrested-after-clash-with-officer-at-delhi-kerala-house#comments</comments><guid isPermaLink="false">77c2b78e-0b5e-46df-a9a3-f238bf74bc5e</guid><pubDate>Sat, 25 Jul 2026 08:40:16 +0000</pubDate><atom:updated>2026-07-25T08:40:16.896Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,RahulGandhi,Amitshah,கண்ணையா குமார்,NEETProtest,KanhaiyaKumar,KeralaHouse</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/5fyav392/KanhaiyaKumar" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ KanhaiyaKumar  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/5fyav392/KanhaiyaKumar?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் பொறுப்பாளரான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">கண்ணையா குமார்</a>, நேற்று டெல்லி போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>டெல்லியில் உள்ள கேரளா ஹவுஸ் வளாகத்தில் அங்குள்ள உயர் அதிகாரியுடன் ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதத்தை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>நடந்தது என்ன?</h2><p>கேரளா ஹவுஸ் வட்டாரங்களின்படி, கண்ணையா குமார் தனது நண்பர் ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த அறைக்காக கேரளா ஹவுஸ் சென்றுள்ளார். ஆனால், அங்கு காலியாக அறைகள் எதுவும் இல்லை என ஊழியர்கள் மறுத்துள்ளனர்.</p><p>இது குறித்து விளக்கம் கேட்பதற்காக கேரளா ஹவுஸ் ஆணையர் புனீத் குமாரை கன்ஹையா குமார் அணுகியுள்ளார்.</p><p>அப்போது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உறைவிட ஆணையர் புனீத் குமார் டெல்லி போலீசாருக்குத் தகவல் கொடுத்து, கண்ணையா குமாரை வளாகத்தில் இருந்து வெளியேற்றுமாறு புகார் அளித்தார்.</p><p>அந்தப் புகாரின் அடிப்படையில் டெல்லி போலீசார் அவரை சம்பவ இடத்திலேயே கைது செய்தனர்.</p><h2>"ஆளுநர்தான் ராஜா" - கண்ணையா குமார் காட்டம்</h2><p>கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்ட போது செய்தியாளர்களிடம் பேசிய கண்ணையா குமார், கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் கேரள இல்லத்திற்கு வருவார் என்று தனக்குத் தெரிவிக்கப்பட்டதாக செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் அவர், "ஆளுநர் வருகிறார், ஆளுநர் ஒரு ராஜா" என்றும் குறிப்பிட்டார்.</p><p>மேலும், "நான் எனது நண்பரைச் சந்திக்கவே இங்கு வந்தேன். என்னை எதற்குக் கைது செய்கிறார்கள்? இது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் டெல்லி போலீசாரின் அராஜகப் போக்கு" என்று கடுமையாகச் சாடினார்.</p><p>தற்போது அவர் தென்மேற்கு டெல்லியில் உள்ள ஜாஃபர்பூர் கலான் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார்.</p><h2>பின்னணி</h2><p>கேரளா ஹவுஸ் அமைந்துள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் நீட் தேர்வு முறைகேடுகள், வினாத்தாள் கசிவு மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றுக்கு எதிராக மாணவர்களைத் திரட்டி கண்ணையா குமார் சமீப காலமாகத் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார். </p><p>"மோடி அரசு நாட்டின் கல்வி முறையை ஐசியு-வில் தள்ளிவிட்டது" என்று குற்றம் சாட்டி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி வருகிறார்.</p>]]></content:encoded></item><item><title>தர்மேந்திர பிரதானை வேறு துறைக்கு மாற்றுவதை ஏற்க முடியாது- ராகுல் காந்தி</title><link>https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-says-transfer-of-dharmendra-pradhan-to-another-portfolio-is-unacceptable</link><comments>https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-says-transfer-of-dharmendra-pradhan-to-another-portfolio-is-unacceptable#comments</comments><guid isPermaLink="false">53762ecd-ed28-4fd3-8f20-e0bf968db3cc</guid><pubDate>Sat, 25 Jul 2026 08:38:07 +0000</pubDate><atom:updated>2026-07-25T08:38:07.903Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Congress,காங்கிரஸ்,தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,CJP Protest</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/g428kes9/rahulgandhi.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ ராகுல் காந்தி]]></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல் காந்தி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/g428kes9/rahulgandhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தர்மேந்திர பிரதானை அங்கிருந்து மாற்றுவது, பின்னுக்குத் தள்ளுவது அல்லது முன்னுக்கு கொண்டு வருவது போன்ற எந்தவொரு விவாதத்திற்கும் இடமில்லை என்று கூறியுள்ளார்.</aside><p>பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று  போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-</p><h2><strong>வேறு துறை</strong></h2><p>மாணவர்களுக்கு 3 கோரிக்கைகள் உள்ளன. அவை சமரசத்திற்கு இடமில்லாத கோரிக்கைகள்.  ஊழல்வாதியும், திறமையற்றவரும், பொறுப்பற்றவருமான மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானை பதவியில் இருந்து நீக்க வேண்டும்  என்பதே முதலாவது கோரிக்கை. </p><p>மோடியின் மந்திரிசபையில்  அவரை கல்வித்துறையில் இருந்து வேறு துறைக்கு மாற்றுவதே இதற்கான தீர்வு என்று பேசப்பட்டு வருகிறது. இது  மாணவர்களுக்கு ஏற்புடையதல்ல. யாருக்கும் ஏற்புடையதல்ல. இதற்கு  காரணம், ஊழலுக்கும், இந்தியக் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு நேர்ந்துள்ள நிலைமைக்கும் <a href="https://www.maalaimalar.com/news/national/third-round-talks-today-in-center-and-cjp-party-members">தர்மேந்திர பிரதான்</a> தான் ஒரு அடையாளமாக  திகழ்கிறார்.</p><h2><strong>நீக்கப்பட வேண்டும்</strong></h2><p>நாட்டின் மிக மதிப்புமிக்க சொத்தான மாணவர்களையும், அவர்களின் எதிர்காலத்தையும் அழித்ததற்கான அடையாளமாக அவர் இருக்கிறார். எனவே, <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">தர்மேந்திர பிரதானை</a> அங்கிருந்து மாற்றுவது, பின்னுக்குத் தள்ளுவது அல்லது முன்னுக்கு கொண்டு வருவது போன்ற எந்தவொரு விவாதத்திற்கும் இடமில்லை. தர்மேந்திர பிரதான் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும்.</p><p>இரண்டாவதாக போராட்டத்தின் போது இளம்பெண் காயமடைந்தார். நேற்று நான் உங்களுக்குக் கண்ணில் குண்டு பாய்ந்த ஒரு இளைஞரைக் காட்டினேன். அதுபோலவே, தடியடியால் கால்களும், தலைகளும் உடைக்கப்பட்ட, உடலில் பெல்லட் குண்டுகள் பாய்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர். இதைச் செய்தவர்கள், அதாவது இதைத் திட்டமிட்டவர்கள், செயல்படுத்தியவர்கள், தண்டிக்கப்பட வேண்டும்.</p><h2><strong>மன்னிப்பு கேட்க வேண்டும்</strong></h2><p>மூன்றாவது கோரிக்கை என்னவென்றால், இந்த செயல்களைச் செய்யும் ஒட்டுமொத்த அமைப்பின் தலைவரான பிரதமர் மோடி, மாணவர்கள் நாட்டின் எதிர்காலத்திற்கு இழைத்த செயல்களுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும்.</p><p>மாணவர்களையும், இளைஞர்களையும் தாக்குவது இந்த அமைப்புதான். நான் அவர்களிடம் பேசும்போது சொன்னேன். கவலைப்படாதீர்கள். இந்திய அரசாங்கத்தின் ஒட்டு மொத்த வலிமையோ அல்லது அரசாங்கத்தில் உள்ள ஒவ்வொரு தனிநபரோ நினைத்தாலும், உங்களை அங்கிருந்து (போராட்டக் களத்திலிருந்து) அசைக்க முடியாது.</p><p>அவர்கள் (அரசாங்கம்) என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். அவர்கள் தடுக்க நினைத்தாலோ, மிரட்ட நினைத்தாலோ, எதை வேண்டுமானாலும் செய்யலாம். நாங்கள் பின்வாங்கப் போவதில்லை. அவர்கள்தான் இந்தியாவின் எதிர்காலம். மோடி இந்தியாவின் கடந்தகாலம். அவரால் இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாது. கடந்த காலத்தால் ஒரு போதும் எதிர்காலத்தை எதிர்த்துப் போராட முடியாது.</p><p>இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>CJP போராட்டம்: பாகிஸ்தான் சமூக வலைதள கணக்குகள் முடக்கம்-டெல்லி காவல்துறை எச்சரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/national/cjp-protest-pakistan-social-media-accounts-blocked-delhi-police-warning</link><comments>https://www.maalaimalar.com/news/national/cjp-protest-pakistan-social-media-accounts-blocked-delhi-police-warning#comments</comments><guid isPermaLink="false">e37fed5d-05a0-486b-ab71-bc45d4bc9a3e</guid><pubDate>Sat, 25 Jul 2026 08:22:02 +0000</pubDate><atom:updated>2026-07-25T08:22:02.354Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,NeetExam,நீட் வினாத்தாள் கசிவு,CJP Protest,காக்ரோச் ஜனதா கட்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/vkftipgp/delhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  CJP Protest ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/vkftipgp/delhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக, டெல்லி ஜந்தர் மந்தரில் 'காக்ரோச் ஜனதா கட்சி' மற்றும் மாணவர் அமைப்புகள் நடத்தி வரும் தொடர் போராட்டத்தைப் பயன்படுத்தி, வதந்திகளையும் தவறான தகவல்களையும் பரப்பிய 400-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் பின்னணி கொண்ட சமூக வலைதள கணக்குகளை டெல்லி காவல்துறை கண்டறிந்து முடக்கியுள்ளது.</p><h2><strong>போலி செய்திகள் மூலம் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு:</strong> </h2><p>மத்திய மாவட்ட டெல்லி காவல்துறை துணை ஆணையர் ரோஹித் ராஜ்பீர் சிங் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது,</p><h2><strong>400+ கணக்குகள் முடக்கம்:</strong></h2><p>மாணவர் போராட்டத்தை முதன்மைப்படுத்தி, போலியான செய்திகள் மற்றும் எடிட் செய்யப்பட்ட வீடியோக்களைப் பரப்பி அமைதியைக் குலைக்க முயன்ற 400-க்கும் மேற்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த சமூக வலைதளக் கணக்குகள் முடுக்கப்பட்டுத் தடை செய்யப்பட்டுள்ளன.</p><h2><strong>பொதுமக்களுக்கு வேண்டுகோள்:</strong></h2><p>அடையாளம் தெரியாத அல்லது சரிபார்க்கப்படாத சமூக வலைதளக் கணக்குகளில் வரும் தகவல்களைப் பார்த்து மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தூண்டப்பட வேண்டாம் என காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.</p><h2><strong>கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள்:</strong></h2><p>போராட்டம் நடைபெறும் ஜந்தர் மந்தர் பகுதியில் அசம்பாவிதங்களைத் தவிர்க்க, பல அடுக்கு இரும்புத் தடுப்புகள் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுப் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், குற்றப் பின்னணி கொண்டவர்களைக் கண்டறிய புகைப்பட அங்கீகார கேமராக்கள்  மூலம் தீவிர கண்காணிப்பு நடத்தப்பட்டு வருகிறது.</p><h2><strong>மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை:</strong></h2><p>மத்திய அரசுக்கும் CJP பிரதிநிதிகளான சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோருக்கும் இடையே இன்று 3-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை CJP உறுதியாகக் கோரி வருகிறது. ஆனால், "பொறுப்பிலிருந்து விலகி ஓடுவது தீர்வாகாது; மக்களுக்கு அளித்த வாக்குறுதியை அரசு நிறைவேற்றும்" என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><h2><strong>எதிர்க்கட்சிகள் கண்டனம்:</strong></h2><p>மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர், மாணவர் போராட்டங்களை ஒடுக்க முனையும் அரசு, வினாத்தாள் கசிவைத் தடுக்கத் தவறிவிட்டதாகக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.</p><p>போலி தகவல்கள் பரப்புவதைத் தவிர்க்குமாறு எச்சரித்துள்ள டெல்லி காவல்துறை, ஜந்தர் மந்தரில் பாதுகாப்பை உச்சகட்ட அளவில் பலப்படுத்தியுள்ளது. இன்றைய பேச்சுவார்த்தையின் முடிவைப் பொறுத்து CJP தங்களின் அடுத்தகட்ட போராட்ட அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் 13-வது சோதனை ஓட்டம் வெற்றி! விண்வெளி வரலாற்றில் புதிய சாதனை!</title><link>https://www.maalaimalar.com/news/world/spacex-starship-13th-test-flight-marks-new-space-history-milestone</link><comments>https://www.maalaimalar.com/news/world/spacex-starship-13th-test-flight-marks-new-space-history-milestone#comments</comments><guid isPermaLink="false">f734e383-e0fe-43d7-b860-4e78afe4671e</guid><pubDate>Sat, 25 Jul 2026 08:21:24 +0000</pubDate><atom:updated>2026-07-25T08:21:24.414Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>SpaceX,Starship,ஸ்டார்ஷிப்,nasa,ElonMusk,ஸ்பேஸ்எக்ஸ்,RocketLaunch</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/b597loh4/SpaceX" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ SpaceX ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/b597loh4/SpaceX?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஸ்டார்பேஸ் ஏவுதளத்தில் இருந்து, உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான '<a href="https://www.maalaimalar.com/topic/starship">ஸ்டார்ஷிப்</a>' தனது 13-வது சோதனை ஓட்டத்திற்காக நேற்று மாலை 6:50 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.</p><p>சுமார் 400 அடி (122 மீட்டர்) உயரமுள்ள இந்த ராக்கெட், விண்வெளி வரலாற்றில் பல முக்கிய மைல்கற்களை எட்டியுள்ளது.</p><h2><strong>விண்வெளியில் சாட்டிலைட் வெளியீடு</strong></h2><p>ராக்கெட் ஏவப்பட்ட 10 நிமிடங்களில், விண்கலம் மணிக்கு 26,400 கி.மீ வேகத்தை எட்டியது. இந்த சோதனையின் முக்கிய அங்கமாக, விண்வெளியில் முதன்முறையாக புதிய ரக 20 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோளை ஸ்டார்ஷிப் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது.</p><p>இதன் மூலம் சாதராண மொபைல் போன்களுக்கு நேரடியாக விண்வெளியில் இருந்து அதிவேக இணைய சேவை வழங்கும் எலான் மாஸ்க்கின் திட்டம் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.</p><h2><strong>இந்தியப் பெருங்கடலில் விழுந்த விண்கலம்</strong></h2><p>செயற்கைக்கோள்களை நிலைநிறுத்திய பிறகு, ராக்கெட்டின் கீழ் பாகமான 'சூப்பர் ஹெவி பூஸ்டர்' பூமிக்குத் திரும்பியது. </p><p>கடந்த மே மாதம் நடந்த சோதனையை விட, இந்த முறை அதிக இன்ஜின்கள் இயக்கப்பட்ட போதிலும், பூஸ்டர் எதிர்பார்த்ததை விட அதிக வேகத்துடன் மெக்சிகோ வளைகுடாவில் மோதி சேதமடைந்தது என <a href="https://www.maalaimalar.com/topic/spacex">ஸ்பேஸ் எக்ஸ்</a> தெரிவித்துள்ளது.</p><p>மறுபுறம், ஸ்டார்ஷிப்பின் மேல் பகுதி விண்கலம் பூமியின் வளிமண்டலத்திற்குள் பாதுகாப்பாக நுழைந்து, திட்டமிட்டபடி இந்தியப் பெருங்கடலில் மென்மையாக விழுந்து தனது ஒரு மணி நேரப் பயணத்தை நிறைவு செய்துள்ளது.</p><h2><strong>எதிர்காலத் திட்டங்கள்</strong></h2><p>இந்த புதிய 'வெர்ஷன் 3' ஸ்டார்ஷிப் ராக்கெட், விண்வெளியில் ஆயிரக்கணக்கான AI (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்ப செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தவும், நாசாவின் ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் மூலம் மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பவும் மிக முக்கியப் பங்காற்றவுள்ளது.</p><p>பூஸ்டர் தரையிறங்குவதில் சிறு பின்னடைவு ஏற்பட்டாலும், 2023 முதல் ஸ்பேஸ்எக்ஸ் மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளில் இந்த 13-வது சோதனை ஓட்டம் ஒரு மாபெரும் வெற்றியாகக் கருதப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை விமான நிலைய 2-ம் கட்ட பணிகள் டிசம்பரில் முடிவடையும்..!- மத்திய அமைச்சர் முரளிதர மகாலி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-airport-phase-2-completion-union-minister-murlidhar-mohol</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-airport-phase-2-completion-union-minister-murlidhar-mohol#comments</comments><guid isPermaLink="false">0701eed1-8ac1-4df6-86e1-506c38ae16ba</guid><pubDate>Sat, 25 Jul 2026 08:20:52 +0000</pubDate><atom:updated>2026-07-25T08:20:52.180Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை விமான நிலையம்,chennai airport,2ம் கட்ட பணி,மத்திய அமைச்சர் முரளிதர மகாலி,union minister muralidhara Mahali</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/deeylnvh/chennai-airport.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chennai airport- murlidhar mohol]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/deeylnvh/chennai-airport.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை விமான நிலைய விரிவாக்க பணிகள் 2 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக சுமார் 2476 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, விமான நிலையத்தை நவீன மயமாக்கி தரம் உயர்த்தப்பட்டு கட்டப்பட்டு வருகிறது.</p><h2> ரூ.10,762.08 கோடி ஒதுக்கீடு</h2><p>அதன்படி, கடந்த 2023-ம் ஆண்டு சென்னை விமான நிலையத்தில் முதல்கட்டமாக ஆண்டுக்கு சுமார் 23 மில்லியன் பயணிகள் கையாளும் திறன் கொண்ட பணிகள் முடிக்கப்பட்டு அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார்.</p><p>அதை தொடர்ந்து தற்போது வரை விமான நிலையத்தில் 2-ம் கட்டமாக 2 ஆண்டுக்கு சுமார் 35 மில்லியன் பயணிகளை கையாளும் வகையில் சுமார் 10,762.08 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.</p><h2>ரூ. 236.75 கோடி செலவு</h2><p>இது தொடர்பாக தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து விமான போக்குவரத்து துறை அமைச்சர் முரளிதர மகாலி பேசுகையில்,"கடந்த 5 ஆண்டுகளில் விமான நிலைய உள்கட்டமைப்புக்காக சுமார் 236.75 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.</p><p>சென்னை விமான நிலையத்தில் விமான நேர ஒதுக்கீட்டில் எந்தத் தட்டுப்பாடும் இல்லை. கடந்த 2022-23-ம் ஆண்டு முதல் பயணிகள் போக்குவரத்தின் அடிப்படையில் சென்னை விமான நிலையம் தொடர்ந்து நாட்டின் ஐந்தாவது பரபரப்பான விமான நிலையமாக இருக்கிறது" என்று கூறினார்.</p><h2>தி.மு.க. எம்.பி. வில்சன் கேள்வி</h2><p>மேலும் தி.மு.க. எம்.பி.  வில்சனின் கேள்விக்கு பதிலளித்த அவர்,"திருச்சி விமான நிலையத்தில் ரூ.80 கோடி செலவில் கட்டப்படும் புதிய ஏ.டி.சி. கோபுரம் மற்றும் தொழில்நுட்பத் பகுதிகள் 76 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டது.</p><p>மேலும், கோவை விமான நிலையத்தில் புதிதாக கையகப்படுத்தப்பட்ட நிலத்தைச் சுற்றி ரூ.51 கோடி மதிப்பில் எல்லைச் சுவர் கட்டும் பணியும், ஏற்கனவே உள்ள முனைய கட்டிடத்தில் ரூ.14 கோடி செலவில் மாற்றங்கள் செய்யும் பணியும் தொடங்கி நடைபெற்று வருகிறது" என்றார்.</p>]]></content:encoded></item><item><title>துப்பாக்கிகள், தடியடிகளுக்கு காந்தியின் மண்ணில் இடமில்லை- கமல்ஹாசன் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kamal-haasan-says-there-is-no-place-for-guns-and-lathi-charges-in-gandhis-land</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kamal-haasan-says-there-is-no-place-for-guns-and-lathi-charges-in-gandhis-land#comments</comments><guid isPermaLink="false">cc2400e2-5a7b-45bf-931d-4327efd57b23</guid><pubDate>Sat, 25 Jul 2026 08:07:38 +0000</pubDate><atom:updated>2026-07-25T08:07:38.370Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Makkal Needhi Maiam,நீட் தேர்வு,Neet exam,kamal haasan,கமல்ஹாசன்,மக்கள் நீதி மய்யம்,CJP Protest</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/gfrwlkj3/kamalhaasan.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ கமல்ஹாசன்]]></media:title><media:description type="html"><![CDATA[ கமல்ஹாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/gfrwlkj3/kamalhaasan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>இப்போது, ​​உரையாடல் நீடித்த சீர்திருத்தத்திற்கு வழிவகுப்பதை நாம் உறுதி செய்வோம். முன்னால் உள்ள பாதை நீண்டது, ஆனால் இந்தியர்கள் அதை ஒன்றாகவே கடக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.</aside><h2><strong>காந்தி மண்ணில் இடமில்லை...</strong> </h2><p>மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>மோதலுக்கு பதிலாக உரையாடல் இடம்பெறுவதை கண்டு மகிழ்ச்சி. கருத்து வேறுபாட்டிற்கு உரையாடல் அவசியம். இதுவே ஜனநாயகத்தின் செயல் வடிவம். பெல்லட் குண்டு துப்பாக்கிகள், மின் அதிர்ச்சி தடியடிகள் மற்றும் ஆணிகள் பதிக்கப்பட்ட தடிகளுக்கு காந்தியின் மண்ணில் இடமில்லை.</p><h2><strong>வினாத்தாள் கசிவு...</strong></h2><p>அதேபோல், பாதுகாப்பு படையினர் மற்றும் பொது சொத்துக்கள் மீதான தாக்குதல்களும் நேர்மையாக விசாரிக்கப்பட வேண்டும். பொறுப்புக்கூறல் பாரபட்சமாக இருக்கக்கூடாது. இந்த தருணமும் வாய்ப்பும் வினாத்தாள் கசிவுகளை விட பெரியது. தேர்வுகளின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கவும், கல்வி சார்ந்த மன அழுத்தத்தை குறைக்கவும், கல்வியை நவீனமயமாக்கவும் 3 மாத கால செயல் திட்டத்துடன் கூடிய, கல்வி மற்றும் தேர்வு சீர்திருத்தத்திற்கான ஒரு தேசிய ஆணையத்தை நான் வலியுறுத்துகிறேன்.</p><p>மேலும், ஒரு முக்கியத்துவம் வாய்ந்த <a href="https://www.maalaimalar.com/topic/நீட்-தேர்வு">தேர்வினால்</a> ஏற்படும் மனித இழப்புகளை இளம் அனிதாவின் மரணம் முதன்முதலில் வெளிப்படுத்திய தமிழ்நாட்டின் குரலையும் இந்த ஆணையம் கேட்க வேண்டும். அரசாங்கம் இதில் ஈடுபட முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. </p><p>இப்போது, ​​உரையாடல் நீடித்த சீர்திருத்தத்திற்கு வழிவகுப்பதை நாம் உறுதி செய்வோம். முன்னால் உள்ள பாதை நீண்டது, ஆனால் இந்தியர்கள் அதை ஒன்றாகவே கடக்க வேண்டும். </p><p>இவ்வாறு அவர் கூறி உள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Glad to see dialogue replacing confrontation. Dissent deserves dialogue. This is democracy in action.<br><br>Pellet guns, electric shock batons and nail-studded lathis have no place in the land of Bapu. <br><br>Equally, attacks on security personnel and public property must be examined…</p>&mdash; Kamal Haasan (@ikamalhaasan) <a href="https://x.com/ikamalhaasan/status/2080897683481596084?ref_src=twsrc%5Etfw">July 25, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>அசாமில் தொடரும் பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 61 ஆக உயர்வு-7 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/assam-deluge-claims-61-lives-705000-people-impacted</link><comments>https://www.maalaimalar.com/news/national/assam-deluge-claims-61-lives-705000-people-impacted#comments</comments><guid isPermaLink="false">e08682d3-e45a-479f-ab6b-20f3abb9542c</guid><pubDate>Sat, 25 Jul 2026 07:50:05 +0000</pubDate><atom:updated>2026-07-25T07:50:05.886Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Himanta Biswa Sarma,cloudburst,மேகவெடிப்பு,ஹிமந்த பிஸ்வா சர்மா,Assam Floods,அசாம் பெருவெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/inhiflag/assam.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Assam Floods  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/inhiflag/assam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அசாம் பெருவெள்ளம்  மாநிலத்தில் தொடரும் கனமழை மற்றும் பெருவெள்ளம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 14 பேர் உயிரிழந்த நிலையில், வெள்ளத்திற்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை '61' ஆக உயர்ந்துள்ளது. அம்மாநிலத்தின் 12 மாவட்டங்களைச் சேர்ந்த '7.05 லட்சத்திற்கும்' அதிகமான மக்கள் பெருவெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>வெள்ளப் பெருக்கு காரணமாக இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிவசாகர் மாவட்டத்தில் ஒருவர் காணாமல் போயுள்ளார். 37 வருவாய் வட்டங்களில் உள்ள 856 கிராமங்களைச் சேர்ந்த '7,05,000-க்கும் மேற்பட்டோர்' வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். மாநில அரசால் அமைக்கப்பட்ட 363 நிவாரண முகாம்களில் 3.15 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். </p><p>அவர்களுக்கு உணவு, தப்பிப்பிழைப்பதற்கான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தேசிய பேரிடர் மீட்புப் படை , மாநில பேரிடர் மீட்புப் படை  மற்றும் உள்ளூர் அதிகாரிகள் இணைந்து கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளத்தில் சிக்கிய சுமார்  1,000 பேரை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.</p><h2><strong>கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள்:</strong></h2><p>அசாமில் பல மாவட்டங்கள் நீரில் மூழ்கியுள்ள நிலையில், சிவசாகர், சரைடியோ, ஜோர்ஹாட் 3 ஆகிய மாவட்டங்கள் மிக மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ளன. மேலும் கோலாகாட், திப்ரூகர், ஹோஜாய், நகோன், பிஸ்வநாத், தேமாஜி, சோனித்பூர், கம்ரூப் (மெட்ரோ) மற்றும் கர் பி ஆங்லாங் ஆகிய மாவட்டங்களிலும் வெள்ளநீர் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.</p><p>மேலும், சுமார் 56,606 ஹெக்டேர் விவசாய நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கி, பயிர்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 17,107 கால்நடைகள் மற்றும் கோழிகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மேலும் 3.34 லட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் தீவனமும் தங்குமிடமும் இன்றி பாதிக்கப்பட்டுள்ளன.</p><h2><strong>முதலமைச்சர் நேரில் ஆய்வு:</strong></h2><p>அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெர்கான் பகுதியில் அமைக்கப்பட்ட நிவாரண முகாமிற்கு நேரில் சென்று மீட்புப் பணிகளைப் பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வெள்ள நிலைமை மிகவும் தீவிரமாக உள்ளது. இறப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும். </p><p>பக்கத்து மாநிலமான நாகாலாந்தில் ஏற்பட்ட திடீர் மேகவெடிப்பு காரணமாகவே அசாமின் பல மாவட்டங்களில் இந்த அளவுக்குப் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டார். தற்போது பிரம்மபுத்திரா நதியும் அதன் துணை நதிகளும் பல இடங்களில் அபாயக் கட்டத்தைத் தாண்டிப் பெருக்கெடுத்து ஓடுவதால், மீட்புக் குழுவினர் தொடர்ந்து தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கிளாம்பாக்கம்-செங்கல்பட்டு மெட்ரோ ரெயில் விரிவாக்கம்: திட்ட அறிக்கை டெண்டர் வெளியீடு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cmrl-floats-tender-for-dpr-to-extend-metro-line-from-kilambakkam-to-chengalpattu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cmrl-floats-tender-for-dpr-to-extend-metro-line-from-kilambakkam-to-chengalpattu#comments</comments><guid isPermaLink="false">942c968a-de40-4498-94f6-218c0cfdce60</guid><pubDate>Sat, 25 Jul 2026 07:47:42 +0000</pubDate><atom:updated>2026-07-25T07:47:42.331Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Metro Rail,செங்கல்பட்டு,chengalpattu,Kilambakkam,மெட்ரோ ரெயில்,கிளாம்பாக்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/6iik9jw0/metro-rail.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ metro rail]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/6iik9jw0/metro-rail.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் புறநகர் பகுதி மக்களையும் இணைக்கும் வகையில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. </p><h2>டெண்டர்</h2><p>தற்போது சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பஸ்நிலையம் வரை திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. </p><p>இந்நிலையில், கிளாம்பாக்கம்-செங்கல்பட்டு இடையே மெட்ரோ ரெயில் சேவையை நீட்டிக்க திட்டமிடப்பட்டு அதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி உள்ளன. சென்னை புறநகர் மக்களின் நீண்டகால கோரிக்கையான இந்தத் திட்டத்திற்கு தற்போது டெண்டர் கோரப்பட்டுள்ளது.</p><p>சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வரை திட்டமிட்டு இருக்கும் வழித்தடத்தில் நீட்சியாக செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்படுகிறது. இந்தப் பாதை டபுள் டக்கர் பாதையாக  அமைவது சிறப்பாகும். </p><p>அதன்படி கிளாம்பாக்கம்-செங்கல்பட்டு இடையே நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டு இருக்கும் 6 வழி உயர்மட்ட மேம்பால சாலையுடன் இந்த மெட்ரோ பாதை அமைய உள்ளது. </p><p>இந்தத் திட்டத்திற்கான அறிக்கை தயாரிக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் எண்ணிக்கை, திட்டத்தின் தோராய நிதி மதிப்பு, ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டிய இடங்கள், மண்ணின் தன்மை ஆகியவற்றை ஆய்வுசெய்து இந்த அறிக்கை தயாரிக்கப்படும்.</p><p>இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறியதாவது: </p><p>செங்கல்பட்டு விரிவாக்க மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பஸ் நிலையம் தடையற்ற சாலை போக்குவரத்துடன் மெட்ரோ ரெயில் இணைப்பு வழங்கப்படும். வெளிவட்ட சாலையுடன் இணைப்புக்காக தாம்பரம் அருகே இடைநிலை சாய்வு பாதைகள் முன்மொழியப்பட்டுள்ளன.</p><p>இந்த மேம்பாட்டு சாலை நேரடியாக கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்படும். பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் வரை நீட்டிக்கப்பட்ட பாதை செல்லும்.</p><h2>திட்ட மதிப்பீடு ரூ.9,335 கோடி </h2><p>கிளாம்பாக்கம், சென்னை விமான நிலையம், தாம்பரம் ரெயில் நிலையம் முக்கிய போக்குவரத்து பகுதியை இணைக்கும் வகையில் இத்திட்டம் இருக்கும். 15.46 கி.மீ. இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் 13 உயர்மட்ட ரெயில் நிலையங்கள் இடம் பெறும். மேம்பாட்டு சாலைகள் உள்ளிட்ட இத்திட்டத்திற்கு ரூ.9,335 கோடி செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது</p>]]></content:encoded></item><item><title>இயக்குனர் அமீர் முந்தைய ஆட்சியில் கோமாவில் இருந்தாரா?- டைரக்டர் பேரரசு கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/perarasu-indictment-director-ameer</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/perarasu-indictment-director-ameer#comments</comments><guid isPermaLink="false">79228ab0-a510-49be-8c52-fb5dc6e394bd</guid><pubDate>Sat, 25 Jul 2026 07:43:57 +0000</pubDate><atom:updated>2026-07-25T07:43:57.200Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணவர்கள் போராட்டம்,நீட் தேர்வு,Neet exam,பேரரசு,Perarasu,ameer,அமீர்,CJP Protest</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/q1bi1ifq/perarasu.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமீர்- பேரரசு]]></media:title><media:description type="html"><![CDATA[ அமீர்- பேரரசு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/q1bi1ifq/perarasu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>நீட்டுக்கு எதிரான போராட்டத்தில் அரசியல் நுழைந்து ஏழை மாணவர்களின் வாழ்க்கையை கெடுத்து விட கூடாது என்பதுதான் என் வேண்டுகோள் என இயக்குனர் பேரரசு தெரிவித்துள்ளார்.</aside><h2><strong>தகுதி அடிப்படையில்...</strong></h2><p>இயக்குனர் பேரரசு கூறியிருப்பதாவது:-</p><p><a href="https://www.maalaimalar.com/topic/நீட்-தேர்வு">நீட்</a> எதிர்ப்பு போராட்டம், டெல்லி ஆகட்டும், தமிழ்நாடு ஆகட்டும் இது முழுக்க முழுக்க மாணவர்கள் போராட்டமாக தெரியவில்லை. தமிழகத்தில் காலகாலமாக யார் பாரதிய ஜனதாவை எதிர்த்து கொண்டிருக்கிறார்களோ அவர்கள்தான் முன்னின்று போராட்டம் நடத்துகின்றனர். நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட எந்த ஒரு மாணவரின் குரலாக இந்த போராட்டம் இல்லை. போராட்டத்தில் சாதிதான் பேசப்படவில்லை. மாணவர்கள் பிரச்சனை பேசப்படுகிறது. தகுதி அடிப்படையில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. </p><p>ஆசிரியர் பணிக்கு, துறைமுகம், ரெயில்வே போன்று ஒவ்வொரு பணிக்கும் தேர்வு நடத்தப்படுகிறது. அதுபோல் உயிரை காக்கக் கூடிய மருத்துவ துறைக்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. அங்கு தகுதியானவர்கள் வந்தாக வேண்டும். இதற்கு முன்பு மருத்துவக் கல்லூரிகளில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு இடம் இருக்கா? பணம் கொடுப்பவர்களுக்குதான் இடம். </p><h2><strong>வேண்டுகோள்</strong></h2><p>நீட்டுக்கு எதிரான போராட்டத்தில் அரசியல் நுழைந்து ஏழை மாணவர்களின் வாழ்க்கையை கெடுத்து விட கூடாது என்பதுதான் என் வேண்டுகோள். நீட் வினாத்தாள் வெளியானது தவறுதான். அந்த விஷயத்தை வெளியிட்டு நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்தது மட்டுமின்றி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கையும் மத்திய அரசு எடுத்துள்ளது.</p><p>கடந்த ஆட்சியின் போதே  நீட் தேர்வு இருந்தது. இப்போது ஆட்சி மாறியதும் எதிர்ப்பு தெரிவிக்கும் இயக்குனர் அமீர் அன்று கோமாவில் இருந்தாரா? மீண்டும் நீட் தேர்வு நடத்தும் போது தேர்வில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளின் செலவை மத்திய அரசு ஏற்க வேண்டும். எனவே நீட் எதிர்ப்பு போராட்டம் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் குறிப்பாக ஏழை மாணவர்களுக்கும் எதிரான போராட்டம். இது நீட்டுக்கு எதிரானது அல்ல. நாட்டுக்கு எதிரானது என்றார்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.35 கோடி பேரம் வழக்கு: திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜரான செந்தில் பாலாஜியிடம் விசாரணை நிறைவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-and-brother-appear-at-thiruvallikeni-police-station-in-rs-35-crore-bribery-case</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-and-brother-appear-at-thiruvallikeni-police-station-in-rs-35-crore-bribery-case#comments</comments><guid isPermaLink="false">ae414c55-09fe-4ece-9512-c692e6f6043f</guid><pubDate>Sat, 25 Jul 2026 07:43:20 +0000</pubDate><atom:updated>2026-07-25T07:43:20.984Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,senthil balaji,செந்தில் பாலாஜி,tvk,பேரம் வழக்கு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/wscef67d/Senthil-balaji.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ex Minister Senthil balaji]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/wscef67d/Senthil-balaji.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது. அந்த கட்சியின் தலைவரான விஜய் முதலமைச்சர் ஆனார். இதை தொடர்ந்து விஜய் ஆட்சியை கவிழ்ப்பதற்கு பேரம் நடத்தப்பட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பரபரப்பான தகவல்கள் வெளியானது.</p><h2>ரூ.35 கோடி</h2><p>ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜாவை அணுகி சிலர் சட்டமன்றத்தில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க ரூ.35 கோடி தருவதாக ஆசைகாட்டி உள்ளனர்.</p><p>இது தொடர்பாக இளையராஜா எம்.எல்.ஏ. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.</p><h2>செந்தில் பாலாஜி</h2><p>இந்த விவகாரத்தில் தி.மு.க. முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் குமார் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது.</p><p>இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அசோக் குமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்காக இருவருக்கும் திருவல்லிக்கேணி போலீசார் கரூர் சென்று சம்மனும் அளித்தனர்.</p><p>இதையடுத்து இருவரும் தலைமறைவாக இருந்தபடியே ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனுதாக்கல் செய்தனர். கடந்த 8-ந்தேதி இருவருக்கும் சென்னை ஐகோர்ட்டு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.</p><p>முன்ஜாமீன் உத்தரவு நகல் கிடைத்த 15 நாட்களுக்குள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்து ரூ.25000-க்கான சொந்த ஜாமீனும், அதே தொகைக்கான இரு நபர் ஜாமீனும் செலுத்த வேண்டும். </p><p>மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தினமும் காலை 10.30 மணி, மாலை 5.30 மணிக்கும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தது.</p><p>இதன்படி செந்தில் பாலாஜியும், அசோக் குமாரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்து முன்ஜாமீன் பெற்றனர். </p><h2>இன்று ஆஜர்</h2><p>இதனை தொடர்ந்து  செந்தில் பாலாஜியும், அவரது தம்பி அசோக்குமாரும் இன்று காலை 10.30 மணி அளவில் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் ஆஜரானார்கள். இருவரும் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி முதல் நாளான இன்று கையெழுத்து போட்டனர். அவர்களுடன் வக்கீல்களும் உடன் வந்திருந்தனர். இதன் காரணமாக திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.</p><h2>கலைக்க கூடாது</h2><p>மறு உத்தரவு வரும் வரை திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட வேண்டும் என்று கோர்ட்டு நிபந்தனை விதித்து இருப்பதால் செந்தில் பாலாஜி தினமும் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.</p><p>செந்தில் பாலாஜியும், அவரது தம்பி அசோக் குமாரும் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இருவரும் வழக்கு விசாரணையின்போது தலைமறைவாகக் கூடாது. வழக்கு தொடர்பான ஆதாரங்கள், சாட்சிகளை கலைக்கக் கூடாது என்று ஐகோர்ட்டு தெரிவித்து உள்ளது.</p><p>நிபந்தனைகளை மீறினால் விசாரணை நீதிமன்றம் சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனவும்  கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><h2>விசாரணை நிறைவு</h2><p>ஆட்சி கவிழ்ப்பு சதி தொடர்பாக 2 மணி நேரத்திற்கு மேலாக செந்தில்பாலாஜியிடம் திருவல்லிக்கேணி போலீசார் நடத்திய விசாரணை நிறைவு பெற்றுள்ளது.</p><p>விசாரணை முடிந்து வந்தவரிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பும்போது,“செய்தியாளர்களிடம் பிறகு பேசுகிறேன்” என கூறிவிட்டு செந்தில் பாலாஜி நகர்ந்து சென்றார்.</p>]]></content:encoded></item><item><title>5-வது மாடியில் இருந்து குதித்து மருத்துவ மாணவி தற்கொலை!</title><link>https://www.maalaimalar.com/news/national/medical-student-dies-by-suicide-jumping-from-5th-floor</link><comments>https://www.maalaimalar.com/news/national/medical-student-dies-by-suicide-jumping-from-5th-floor#comments</comments><guid isPermaLink="false">6a059e56-88b4-41ab-bc27-035ca3aae105</guid><pubDate>Sat, 25 Jul 2026 07:24:53 +0000</pubDate><atom:updated>2026-07-25T07:24:53.466Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தற்கொலை,suicide,Telangana,Medical student,தெலுங்கானா,மருத்துவ மாணவி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/2ftbkbiy/suicide.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Medical student suicide attempt]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/2ftbkbiy/suicide.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தெலுங்கானா மாநிலம், மெட்சல் மாவட்டம், கீசரா, மேற்கு காந்தி நகரை சேர்ந்தவர் தீக்ஷிதா (வயது26). இவர் பெங்களூரில் உள்ள மருத்துவ கல்லூரியில் முதுகலை கண் மருத்துவம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.</p><p>நேற்று வீட்டில் இருந்த தீக்ஷிதா திடீரென 5-வது மாடிக்கு சென்றார். அங்கிருந்து கீழே குதித்தார். படுகாயம் அடைந்த தீக்ஷிதா ரத்த வெள்ளத்தில் துடி துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.</p><p>போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீக்ஷிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><p>மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>உலக ஜூனியர் ஸ்குவாஷ்: 20 ஆண்டுக்கு பின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த அனாஹத் சிங்</title><link>https://www.maalaimalar.com/sports/anahat-singh-first-indian-to-reach-world-junior-final-since-2005</link><comments>https://www.maalaimalar.com/sports/anahat-singh-first-indian-to-reach-world-junior-final-since-2005#comments</comments><guid isPermaLink="false">f02816cb-fa04-4dcd-bd94-6333273571b4</guid><pubDate>Sat, 25 Jul 2026 07:24:35 +0000</pubDate><atom:updated>2026-07-25T07:24:35.198Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>anahat singh,அனாஹத் சிங்,World Junior Squash,உலக ஜூனியர் ஸ்குவாஷ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/2elrex7d/anahat.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ anahat singh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/2elrex7d/anahat.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>க​ன​டா​வின் ஆன்​டாரியோ நகரில் உலக ஸ்கு​வாஷ் ஜூனியர் தனி​நபர் சாம்​பியன்​ஷிப் நடை​பெற்று வரு​கிறது.</p><p>இதில் பெண்கள் பிரிவு அரையிறுதி சுற்​றில் உலகத் தரவரிசை​யில் 20-வது இடத்​தில் உள்ள இந்​தி​யா​வின் அனாஹத் சிங், எகிப்​தின் பார்ப் சமே உடன் மோதி​னார்.</p><p>இந்த மோதலில் அனாஹத் சிங் 11-3, 8-11, 11-4, 11-6 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று முதல் முறையாக இறுதிச்சுற்​றுக்கு முன்னேறி​னார்.</p><p>முன்னதாக, இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா கடந்த 2005-ம் ஆண்டில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார்.</p><p>கடந்த ஆண்டு நடந்த சாம்பியன்ஷிப் போட்டியில் அனாஹத் சின் வெண்கலப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>கோவையில் பரபரப்பு சம்பவம்: கோனியம்மன் கோவிலில் உண்டியல் பணத்தை திருடிய 4 ஊழியர்கள் கைது </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/koniamman-temple-hundiyal-money-theft-4-arrest</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/koniamman-temple-hundiyal-money-theft-4-arrest#comments</comments><guid isPermaLink="false">ce17bf03-a292-44f2-a111-51f5d046eb33</guid><pubDate>Sat, 25 Jul 2026 07:24:12 +0000</pubDate><atom:updated>2026-07-25T07:24:12.148Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Arrest,கைது,உண்டியல் பணம் திருட்டு,koniamman temple,கோனியம்மன் கோவில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/l8h579zo/koniamman.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/l8h579zo/koniamman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவிலில் உண்டியல் திருட்டில் ஈடுபட்டு ஊழியர்கள் கைதான சம்பவம் கோவையில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</aside><p>கோவை நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவில் உள்ளது. கோவையின் காவல் தெய்வமாக கருதப்படும் கோனியம்மன் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து வழிபட்டு செல்கிறார்கள். </p><p>ஆடி மாத வெள்ளிக்கிழமை மற்றும் திருவிழா நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். தற்போது ஆடி மாதம் என்பதால் அம்மனை வழிபட கோவிலில் கூட்டம் அலைமோதி வருகிறது. </p><h2><strong>உண்டியல் பணம் திருட்டு</strong> </h2><p>இத்தகைய புகழ்பெற்ற இந்த கோவிலில் உண்டியல் திருட்டு சம்பவம் நிகழ்ந்ததும், கோவில் ஊழியர்களே இத்தகை இழிவான செயலில் ஈடுபட்டதும் பக்தர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியில் உள்ளது. </p><p>கோனியம்மன் கோவில் வளாகத்தில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக மொத்தம் 9 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் திருப்பணிக்கு பக்தர்களிடம் நன்கொடை வசூலிக்கும் விதமாக ஒரு உண்டியல் உள்ளது. சமீபத்தில் நடந்த தேர்த்திருவிழாவை முன்னிட்டு 6 இடங்களில் தற்காலிக உண்டியல் வைக்கப்பட்டிருந்தது. </p><p>மொத்தம் இருந்த 16 உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையை எண்ணும் பணி கடந்த 15-ந் தேதி கோவில் வளாகத்தில் அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது. கோவில் ஊழியர்கள் மட்டுமல்லாமல் பக்தர்கள், தன்னார்வலர்கள் இணைந்து உண்டியல் பணத்தை எண்ணினர். அப்போது ஒரு உண்டியலை திறக்காமலேயே ஊழியர்கள் சிலர் அதில் இருந்த பணத்தை திருடி விட்டதாக பக்தர் ஒருவர் சென்னையில் உள்ள அறநிலையத்துறை அலுவலகத்தில் புகார் செய்தார். </p><h2><strong>அதிகாரி விசாரணை</strong> </h2><p>அதன்பேரில் அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. நேற்று இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷ்குமார் கோவிலுக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். கோவில் வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் அனைத்தும் ஆய்வு செய்து விசாரிக்கப்பட்டது. </p><p>விசாரணையில் உண்டியல் பணம் திருடப்பட்டது உண்மை என தெரியவந்தது. இந்த விவகாரத்தில் கோவில் சீட்டு விற்பனையாளராக பணியாற்றிய பாலசுப்பிரமணியன், அலுவலக உதவியாளர் சரவணன், பிரதீப்குமார், பூசாரி கிருஷ்ணராஜ் ஆகியோர் கூட்டு சேர்ந்து செயல்பட்டது தெரியவந்தது. </p><p>உண்டியல் எண்ணும் பணியின்போது ஒரு உண்டியலில் உள்ள காணிக்கை பணத்தை எடுக்காமல் ஏற்கனவே எண்ணப்பட்ட உண்டியல்களோடு அதனை சேர்த்து மறைத்து வைத்திருக்கின்றனர். இதை அதிகாரிகள் கவனிக்கவில்லை. பின்னர் அந்த உண்டியலை டிராலியில் எடுத்துச் சென்று கலையரங்கத்துக்கு பின்னால் வைத்து அதில் இருந்த பணத்தை எடுத்து பையில் போட்டு எடுத்துச் சென்று இருக்கிறார்கள். </p><h2><strong>4 ஊழியர்கள் கைது</strong> </h2><p>மொத்தம் அதில் ரூ.31 ஆயிரம் பணம் இருந்துள்ளது. அந்த பணத்தை ஊழியர் பாலசுப்பிரமணியன் தனது வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார். பின்னர் 4 பேரும் சேர்ந்து பங்கு வைத்துக் கொண்டுள்ளனர். விசாரணையில் 4 பேரும் பணம் திருடியதை ஒப்புக்கொண்டனர். </p><p>இதுதொடர்பாக கோவில் செயல் அலுவலர் குமார் உக்கடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் ஊழியர்கள் பாலசுப்பிரமணியன், சரவணன், பிரதீப்குமார், கிருஷ்ணராஜ் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். </p><p>இவர்களில் பாலசுப்பிரமணியம் கேரளாவைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது. கோவை பீளமேடு பகுதியில் தங்கியிருந்து வேலைக்கு வந்து சென்றுள்ளார். சரவணன் பேரூரைச் சேர்ந்தவர், பிரதீப் குமார் ரத்தினபுரியில் வசித்து வருகிறார். கிருஷ்ணராஜ் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர். இவர்கள் 4 பேரையும் இன்று போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். </p><p>பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவிலில் உண்டியல் திருட்டில் ஈடுபட்டு ஊழியர்கள் கைதான சம்பவம் கோவையில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>AI-ல் புதிய பாய்ச்சல்: ஆந்திரோபிக் நிறுவனத்தின் &apos;Claude Opus 5&apos; அதிகாரப்பூர்வமாக வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/technology/anthropic-claude-opus-5-new-ai-breakthrough</link><comments>https://www.maalaimalar.com/technology/anthropic-claude-opus-5-new-ai-breakthrough#comments</comments><guid isPermaLink="false">3125cdd8-b573-4bc8-9523-b14224e89505</guid><pubDate>Sat, 25 Jul 2026 07:18:42 +0000</pubDate><atom:updated>2026-07-25T07:18:42.007Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Artificial Intelligence,செயற்கை நுண்ணறிவு,ஆந்திரோபிக்,Anthropic,Claude Opus 5,கிளவுட் ஓபுஸ் 5</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/15a895ai/api.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Claude Opus 5]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/15a895ai/api.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தொழில்நுட்பம் (Technology)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>செயற்கை நுண்ணறிவு (AI) ஆராய்ச்சியில் முன்னணி வகிக்கும் 'ஆந்திரோபிக்' நிறுவனம், தனது அடுத்த தலைமுறை முதன்மை AI மாடலான 'Claude Opus 5'-ஐ உலகளவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>முந்தைய Opus 4.8 மாடலின் அதே விலை நிர்ணயத்தில், Fable 5 மாடலுக்கு இணையான அதீத திறனை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய மாடல், கணினி கோடிங், வணிக ஆட்டோமேஷன் மற்றும் நீண்டநேர ஏஜென்டிக் பணிகளில் புதிய சாதனையை படைத்துள்ளது.</p><h2><strong>சர்வதேச API கட்டண விவரங்கள்:</strong></h2><p>ஆந்திரோபிக் நிறுவனம் தனது API பயன்பாட்டுச் செலவை முந்தைய தலைமுறை மாடலை விட உயர்த்தாமல் அப்படியே வைத்துள்ளது. அதிகாரப்பூர்வமாக அமெரிக்க டாலரில் கட்டணம் விதிக்கப்பட்டாலும், உலகம் முழுவதிலும் உள்ள உருவாக்குநர்களின் வசதிக்காகப் பல்வேறு சர்வதேச நாணயங்களில் இதன் தோராயமான மதிப்பு கீழே அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>செயற்கை நுண்ணறிவு (AI) சேவைகளில் 1 மில்லியன் (10 லட்சம்) டோக்கன்களுக்கு வசூலிக்கப்படும் உள்ளீடு (Input) மற்றும் வெளியீடு (Output) கட்டண விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, அமெரிக்க டாலரில் 1 மில்லியன் Input Tokens-க்கு $5, Output Tokens-க்கு $25 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p>அதேபோல், இந்திய மதிப்பில் இது தோராயமாக ரூ.435 (Input) மற்றும் ரூ.2,175 (Output) ஆகும். மேலும், யூரோவில்  €4.30 / €21.50, பிரிட்டிஷ் பவுண்டில் £3.70 / £18.50, ஜப்பானிய யெனில் ¥740 / ¥3,700 என தோராயமான கட்டண மதிப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த தொகைகள் நாணய மாற்று விகிதங்களுக்கு ஏற்ப மாறக்கூடிய தோராயமான மதிப்புகளாகும்.</p><h2><strong>கூடுதல் சலுகை:</strong></h2><p>Prompt Caching தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் வழக்கமான உள்ளீட்டுக் கட்டணத்தில் 60% முதல் 80% வரை கட்டணச் சலுகையைப் பெற முடியும். மேலும், அதிவேகப் பதில்களுக்கு 'Fast Mode' அம்சமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p><h2><strong>Claude Opus 5-முக்கிய சிறப்பம்சங்கள்:</strong></h2><h3><strong>1 Million Token Context Window:</strong></h3><p>ஒரே நேரத்தில் சுமார் 7,500 பக்கங்களைக் கொண்ட புத்தகத்தையோ அல்லது முழுமையான மென்பொருள் குறியீடுகளையோ பகுப்பாய்வு செய்யும் திறன் கொண்டது.</p><h2><strong>128,000 Output Capacity:</strong></h2><p>மிக நீண்ட அறிக்கைகள், முழுமையான அப்ளிகேஷன் குறியீடுகள் மற்றும் விரிவான ஆவணங்களை ஒரே பதிலில் உருவாக்கும்.</p><h2><strong>சிந்திக்கும் திறன் கட்டுப்பாடு:</strong> </h2><p>டெவலப்பர்கள் AI சிந்திக்கும் ஆழத்தை தங்கள் தேவைக்கேற்ப மாற்றியமைக்கலாம். எளிய பணிகளுக்கு வேகமாகவும், சிக்கலான கணக்குகளுக்கு ஆழமான பகுப்பாய்வுடனும் இயங்கும்.</p><h2><strong>Agentic Coding SOTA:</strong> </h2><p>எண்ட்-டு-எண்ட் மென்பொருள் உருவாக்குவதில், மனிதர்கள் செய்யும் சோதனைகளைத் தானே செய்து பார்த்து தவறுகளைத் திருத்தும் திறனில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.</p><h2><strong>PDF &amp; Visual Analysis:</strong></h2><p>வரைபடங்கள், தரவுத் தாள்கள், சிக்கலான PDF ஆவணங்கள் மற்றும் UI டிசைன்களை மிகத் துல்லியமாகப் புரிந்து கொள்ளும்.</p><h2><strong>செயல்திறன் ஒப்பீடு:</strong></h2><p>சர்வதேச அளவில் AI மாடல்களை மதிப்பிடும் முக்கியத் தேர்வுகளில் Claude Opus 5 வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.இதில், Frontier-Bench  43.3%  புள்ளிகள் பெற்று சந்தையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது (Fable 5-ன் 33.7%-ஐ விட இது கணிசமாக அதிகம்). ARC-AGI-3  30.2% மதிப்பெண் பெற்று, இதுவரை வெளியான AI மாடல்களிலேயே மிக உயர்ந்த புள்ளியைப் பெற்றுள்ளது.</p><h2><strong>உயிரி தொழில்நுட்பம்:</strong></h2><p>ஆர்கானிக் கெமிஸ்ட்ரி மற்றும் புரோட்டீன் கட்டமைப்பு கணிப்புகளில் முந்தைய Opus 4.8-ஐ விட 10.2% கூடுதல் துல்லியத்தை வழங்குகிறது.</p><h2><strong>யாரெல்லாம், எங்கு அணுகலாம்?</strong> </h2><p>டெவலப்பர்கள் உடனடியாக API விசைகளைப் பயன்படுத்தி உருவாக்கத் தொடங்கலாம். Claude Max சந்தாதாரர்களுக்கு இதுவே முதன்மை இயல்புநிலை மாடலாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 'Claude Pro' மற்றும் 'Team' பயனர்களுக்கும் நேரடியாகக் கிடைக்கிறது. அமேசான் நிறுவனத்தின் 'Amazon Bedrock (AWS)' மற்றும் பிற முன்னணி கிளவுட் தளங்களில் உடனடியாகக் கிடைக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>இன்று முதல் அரசியல் துறவறம்- ராமதாஸ் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ramadoss-announced-retiring-from-politics-starting-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ramadoss-announced-retiring-from-politics-starting-today#comments</comments><guid isPermaLink="false">3d55457e-d27d-4a87-92c5-8645733dba8e</guid><pubDate>Sat, 25 Jul 2026 07:10:14 +0000</pubDate><atom:updated>2026-07-25T07:10:14.164Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Ramadoss,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,ராமதாஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/t6m7ye6i/ramadoss.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராமதாஸ் பேசிய போது எடுத்த படம்.]]></media:title><media:description type="html"><![CDATA[ ராமதாஸ் பேசிய போது எடுத்த படம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/t6m7ye6i/ramadoss.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>பா.ம.க.வை இனி அன்புமணி பார்த்துக்கொள்வார் என்று ராமதாஸ் கூறியபோது விழாவில் கூடியிருந்த தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.</aside><p>பா.ம.க. நிறுவனர் டாக்டர் <a href="https://www.maalaimalar.com/topic/ராமதாஸ்">ராமதாஸ்</a> இன்று தனது 88-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி தந்தை ராமதாசை சந்தித்து பா.ம.க. தலைவர் அன்புமணி வாழ்த்து பெற்றார். </p><p>இதனை தொடர்ந்து விழுப்புரம் தனியார் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சியில் மனைவியுடன் ராமதாஸ் பங்கேற்றார். விழா மேடையில்  மனைவி மற்றும் மகனுடன் அமர்ந்து ராமதாஸ் பேசியதாவது:- </p><p>* எனது 88-வது பிறந்தநாளான இன்று முதல் அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன். </p><p>* அரசியல் பேசமாட்டேன், அரசியலில் தலையிட மாட்டேன், பா.ம.க.வை இனி அன்புமணி பார்த்துக்கொள்வார். </p><p>* தலைசுற்றல் இருந்ததால் 20 நாட்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தேன் என்றார். </p><p>பா.ம.க.வை இனி அன்புமணி பார்த்துக்கொள்வார் என்று ராமதாஸ் கூறியபோது விழாவில் கூடியிருந்த தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். </p>]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் போட்டியில் வெண்கலம்- இந்திய வீரர் ஜண்டுகுமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/sports/pm-modi-greets-indian-lifter-jandukumar-for-commonwealth-bronze</link><comments>https://www.maalaimalar.com/sports/pm-modi-greets-indian-lifter-jandukumar-for-commonwealth-bronze#comments</comments><guid isPermaLink="false">4dfa587e-549b-49a2-95f7-fee069509c7c</guid><pubDate>Sat, 25 Jul 2026 07:08:12 +0000</pubDate><atom:updated>2026-07-25T07:08:12.637Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காமன்வெல்த் போட்டி,pm modi,Common Wealth,பிரதமர் மோடி,ஜண்டுகுமார்,Jandukumar</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/tsxk4nmm/PM-Modi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/tsxk4nmm/PM-Modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காமன்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீரர் ஜண்டுகுமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். </p><h2>வெண்கல பதக்கம்</h2><p>போலியோ, வறுமை மற்றும் பல வருடங்களாக செய்த பல்வகை வேலைகள் நிறைந்த குழந்தை பருவத்தை கடந்து, இந்தியாவின் ஜண்டு குமார், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் ஆடவர் ஹெவிவெயிட் பாரா பவர்லிஃப்டிங் பிரிவில் வெண்கல பதக்கத்தை வென்று அசத்தினார். இதன் மூலம் அவர் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்று தந்தார்.</p><p>28 வயதான இவர், 181 கிலோ மற்றும் 190 கிலோ எடைகளை வெற்றிகரமாக தூக்கி, 130.9 புள்ளிகளை பெற்று பதக்க மேடையில் இடம்பிடித்தார். 196 கிலோ எடைப் பிரிவில் தனது இறுதி முயற்சியில் அவர் தோல்வியடைந்தார். </p><h2>வெற்றி மகுடம்</h2><p>ஐந்து வயதில் போலியோ நோயால் பாதிக்கப்பட்ட குமார், பீகாரின் நாலந்தா மாவட்டத்தில் உள்ள ஹர்னாட் கிராமத்தில், குடும்பத்தை காப்பாற்றுவதற்காக தன் பெற்றோருடன் காய்கறிகள் விற்க உதவினார். அந்த சூழலில் இருந்து அவர் அடைந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு அவரது இந்த வெற்றி மகுடம் சூட்டியது.</p><p>குறைந்த நிதி ஆதரவுடன், குமார் ஆரம்பத்தில் 2010 முதல் 2012 வரை, குண்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதலில் முயற்சி செய்வதற்கு முன்பு, வலிமையை அதிகரிப்பதற்காக மட்டுமே பளு தூக்கும் பயிற்சியை மேற்கொண்டார். இறுதியில், அவர் மாற்றுத்திறனாளிகளுக்கான பளுதூக்குதலில் தனது உண்மையான திறமையைக் கண்டறிந்தார்.</p><h2>பிரதமர் மோடி வாழ்த்து</h2><p>ஆண்களுக்கான ஹெவிவெயிட் பாரா பவர்லிஃப்டிங் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று, #CWG2026-ல் இந்தியாவின் பதக்கப் பட்டியலைத் தொடங்கி வைத்துள்ள ஜண்டு குமாரின் செயல்பாடு அபாரமானது! அவருக்கு வாழ்த்துகள்.</p><p>அவரது இந்தச் சாதனை, அளவற்ற வலிமை, தளராத உறுதி மற்றும் பல ஆண்டுகால ஒழுக்கமான முயற்சி ஆகியவற்றின் வலிமையான பிரதிபலிப்பாகும். </p><p>ஒவ்வொரு சவாலையும் வென்று சர்வதேச அரங்கில் சிறந்து விளங்குவதன் மூலம், அவர் ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமைப்படுத்தியுள்ளார் மற்றும் எண்ணற்ற இந்தியர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளார்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">A spectacular performance by Jhandu Kumar, who has opened India’s medal tally at the <a href="https://x.com/hashtag/CWG2026?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CWG2026</a> by winning a Bronze in the Men’s Heavyweight Para Powerlifting event! Congratulations to him. His achievement is a powerful reflection of immense strength, unwavering determination and… <a href="https://t.co/kMdkU6RRAF">pic.twitter.com/kMdkU6RRAF</a></p>&mdash; Narendra Modi (@narendramodi) <a href="https://x.com/narendramodi/status/2080873132559323405?ref_src=twsrc%5Etfw">July 25, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரி ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rameswaram-fishermen-strike-for-demanding-the-release-of-fishermen-arrested-by-srilanka</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rameswaram-fishermen-strike-for-demanding-the-release-of-fishermen-arrested-by-srilanka#comments</comments><guid isPermaLink="false">90d3f55d-6789-4385-bdf2-2d20d8e6afc2</guid><pubDate>Sat, 25 Jul 2026 06:53:33 +0000</pubDate><atom:updated>2026-07-25T06:53:33.025Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rameswaram Fishermen strike,Fishermen strike,மீனவர்கள் வேலை நிறுத்தம்,ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/iolzxnve/boat.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ boat]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/iolzxnve/boat.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 22-ம் தேதி மீன் பிடிக்கச் சென்ற ஒரு விசைப்படகும், அதில் இருந்த 9 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கச்சத்தீவு அருகே கைது செய்தது.</p><h2>6-ம் தேதி வரை காவல்</h2><p>இலங்கை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்ட மீனவர்களிடம் அந்நாட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் 9 பேரும் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு வரும் 6-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.</p><p>மீனவர்கள் சிறை பிடிப்பு விவகாரம் ராமேசுவரத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் இதுதொடர்பாக மீனவர் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது.</p><p>இந்தக் கூட்டத்தில்  இலங்கை கடற்படை கைதுசெய்த  மீனவர்களை மத்திய அரசும், மாநில அரசும் உடனே விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.</p><p>மீனவர்களையும் படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று (சனிக்கிழமை) அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது, மீனவர்கள் பிரச்சனை  குறித்து முதலமைச்சர் மற்றும் மீன்வளத்துறை அமைச்சரைச் சந்தித்து முறையிட ஏற்பாடு செய்ய வேண்டும். </p><p>இந்திய மற்றும் இலங்கை மீனவர்களின் பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்து இனி வரும் காலங்களில் பிரச்சனை இல்லாமல் மீன் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.</p><p>மீனவர் சங்க கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு களின்படி ராமேசுவரத்தில் இன்று ஒருநாள் மீனவர்கள் அடை யாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.</p><h2>மீனவர்கள் வேலைநிறுத்தம்</h2><p>இதன் காரணமாக ராமேசுவரம் துறைமுகம் மற்றும் மீன்பிடி இறங்கு தளங்களில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாமல் படகுகளை கரையோரம் நங்கூரம் விட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. வேலை நிறுத்தம் காரணமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>இன்றும், நாளையும் விடுமுறை நாள் என்பதால் மீன் வர்த்தகம் அதிகளவில் நடைபெறும். ஆனால் வேலைநிறுத்தம் காரணமாக ராமேசுவரத்தில் மீன்வரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால் வார இறுதி நாட்களில் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>இன்றும், நாளையும் சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி மின்சார ரெயில் சேவையில் மாற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/central-to-gummidipoondi-train-service-change</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/central-to-gummidipoondi-train-service-change#comments</comments><guid isPermaLink="false">80e8a6e4-824a-456e-95cd-a2c5d9fa42f1</guid><pubDate>Sat, 25 Jul 2026 06:46:30 +0000</pubDate><atom:updated>2026-07-25T06:46:30.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மின்சார ரெயில்,train service change,Electric Trains,electric trains cancelled,ரெயில் சேவை மாற்றம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/i3dvd5af/train.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மின்சார ரெயில்]]></media:title><media:description type="html"><![CDATA[ மின்சார ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/i3dvd5af/train.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>கும்மிடிப்பூண்டியில் புறப்பட்டு மூர் மார்க்கெட் வரக்கூடிய மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி-பொன்னேரி இடையே இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.</aside><h2><strong>பராமரிப்பு பணிகள்</strong></h2><p>சென்னை சென்ட்ரல்- கூடூர்  பிரிவில் கும்மிடிப்பூண்டி யார்டில் நேற்று முதல் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இந்த பணிகள்  இன்றும், நாளையும் நடக்கிறது. </p><p>இதையொட்டி கும்மிடிப் பூண்டி மார்க்கத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/மின்சார-ரெயில்">மின்சார ரெயில்</a> சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சில ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. </p><h2><strong>மின்சார ரெயில் ரத்து</strong></h2><p>இரவு 9.45 மணிக்கு  புறப்படும் மூர் மார்க்கெட்- கும்மிடிப்பூண்டி மின்சார ரெயில் பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி இடையே ரத்து  செய்யப்பட்டு உள்ளது. இரவு 11.20 மணிக்கு புறப்படும் மூர் மார்க்கெட்-  கும்மிடிப்பூண்டி மின்சார ரெயில்  பொன்னேரி- கும்மிப்பூண்டி இடையே ரத்து செய்யப்பட்டு உள்ளது. </p><p>இரவு 10.35 மணிக்கு புறப்படும். மின்சார ரெயில் மீஞ்சூர்-கும்மிடிப்பூண்டி இடையே  பகுதி சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. கும்மிப்பூண்டி- மூர் மார்க்கெட்  இரவு 10.30 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி- பொன்னேரி இடைய ரத்து செய்யப்பட்டுள்ளது. </p><p>அதிகாலை 3.50 மணிக்கு கும்மிடிப்பூண்டியில் இருந்து புறப்பட்டு மூர் மார்க்கெட்டுக்கு வரும் மின்சார ரெயில் கும்மிப்பூண்டி- மீஞ்சூர் இடையே இன்றும் நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. </p><p>அதிகாலை 4.50 மணிக்கு கும்மிடிப்பூண்டியில் புறப்பட்டு மூர் மார்க்கெட் வரக்கூடிய மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி-பொன்னேரி இடையே இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோவில் குகையில் சிக்கி ஆந்திர பக்தர் பலி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/andhra-devotees-dies-idukku-pillaiyar-temple-cave</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/andhra-devotees-dies-idukku-pillaiyar-temple-cave#comments</comments><guid isPermaLink="false">c5e4ca33-be97-40b6-8fdc-7d4a61556508</guid><pubDate>Sat, 25 Jul 2026 06:34:48 +0000</pubDate><atom:updated>2026-07-25T06:34:48.222Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை கோவில்,Tiruvannamalai temple,கிரிவலப்பாதை,ஆந்திர பக்தர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/eowzdqbp/andhra.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ இடுக்கு பிள்ளையார் கோவில் குகை போன்ற பகுதி வழியாக பக்தர்கள் வெளியே வரும் காட்சி.]]></media:title><media:description type="html"><![CDATA[ இடுக்கு பிள்ளையார் கோவில் குகை போன்ற பகுதி வழியாக பக்தர்கள் வெளியே வரும் காட்சி.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/eowzdqbp/andhra.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>உடல் பருமன் மற்றும் சுவாச பிரச்சனை உள்ள பக்தர்கள் இடுக்கு பிள்ளையார் கோவிலில் உள்ள குகை போன்ற பகுதியில் புகுந்து வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.</aside><h2><strong>இடுக்கு பிள்ளையார் கோவில்</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/திருவண்ணாமலை-கோவில்">திருவண்ணாமலை</a> கிரிவலப்பாதையில் இடுக்கு பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. </p><p>இந்த கோவிலில் சிறிய குகை போன்ற அமைப்பில் 3 வாசல்கள் உள்ளன. பின் வாசல் வழியாக ஒருக்களித்து படுத்தவாறு உள்ளே நுழைந்து, மெல்லமாக கைகளை ஊன்றியவாறு நகர்ந்து முன் வாசல் வழியாக வெளியே வரவேண்டும். </p><p>குகை போன்ற பகுதியில் இருந்து வெளியே வந்த உடன் நந்தி இருக்கும். பக்தர்கள் நந்தி பகவானையும், இடுக்கு பிள்ளையாரையும் வணங்கி செல்கின்றனர். பெரும்பாலான கிரிவல பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று இடுக்கு பிள்ளையார் கோவில் குகையில் நுழைந்து வெளியே வழிபட்டு செல்கின்றனர்.</p><h2><strong>ஆந்திர பக்தர்</strong></h2><p>இந்த நிலையில் நேற்று இரவு ஆந்திராவை சேர்ந்த மணிக்குமார் (வயது 36) என்பவர் தனது குடும்பத்துடன் கிரிவலம் சென்றார். சுமார் 11 மணியளவில் இடுக்கு பிள்ளையார் கோவிலுக்கு மணிக்குமார் வந்தார். </p><p>குகை  வடிவத்தில் உள்ள கோவில் பகுதியில் படுத்தபடி நுழைந்தார். உடல் பருமன் அதிகம் என்பதால் குகையில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தார். </p><p>பின்னர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினார். இதனை கண்ட சக பக்தர்கள் மயங்கி கிடந்தவரை போராடி வெளியே கொண்டு வந்தனர். </p> <p>108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மணிக்குமார் வரும் வழியிலே இறந்துவிட்டதாக கூறினர். இதை கேட்ட மணிக்குமார் குடும்பத்தினர் கதறி அழுதனர். </p><p>இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். </p><p>உடல் பருமன் மற்றும் சுவாச பிரச்சனை உள்ள பக்தர்கள் இடுக்கு பிள்ளையார் கோவிலில் உள்ள குகை போன்ற பகுதியில் புகுந்து வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>நீட் போராட்டத்துக்கு பெற்றோர் தங்களது குழந்தைகளை அனுப்ப வேண்டாம்- நடிகர் ரஞ்சித்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/dont-send-children-to-neet-protests-actor-ranjith</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/dont-send-children-to-neet-protests-actor-ranjith#comments</comments><guid isPermaLink="false">b2324948-56a7-47d8-94c4-73c189bbbaba</guid><pubDate>Sat, 25 Jul 2026 06:33:13 +0000</pubDate><atom:updated>2026-07-25T06:33:13.244Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணவர்கள் போராட்டம்,student protest,நடிகர் ரஞ்சித்,Actor Ranjith,neet protest,நீட் போராட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/bs6kwe7n/Actor-Ranjith.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Actor Ranjith]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/bs6kwe7n/Actor-Ranjith.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூரில் நடிகர் ரஞ்சித் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><p>ஆன்மிகம் நிறைந்த இந்த பூமியில் கலாசாரத்தை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் தகவல் பரப்புவது அதிகரித்துள்ளது.<a href="https://www.maalaimalar.com/search?q=%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81" rel="nofollow"> நீட் தேர்வு</a> வினாத்தாள் கசிந்தது என்பது கண்டிக்கத்தக்கது. இதற்கான கோரிக்கையை மத்திய அரசு ஏற்காவிட்டால் போராட்டம் நடத்துவது நியாயமானது.</p><p>ஆனால் இந்த போராட்டங்களில் அரசியல் பேசுவது  போன்றவற்றை பார்க்கும்போது அப்பாவி மாணவர்களை பலிகடாவாக்குவது போல் உள்ளது. போராட்டத்தில் அரசியல் கலக்கக்கூடாது. இதுபோன்ற போராட்டங்களுக்கு தங்கள் பிள்ளைகளை பெற்றோர் அனுப்ப வேண்டாம். முழுக்க, முழுக்க அரசியல் கலந்துவிட்டது.</p><p>​இந்த விவகாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுத்து, வரும் காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுக்கப்படும் என்று <a href="https://www.maalaimalar.com/news/national/pm-thanks-people-for-responses-positive-suggestions-received-for-midnight-video" rel="nofollow">பிரதமர் மோடி</a> தெரிவித்துள்ளார். அதற்கு பிறகும் போராட்டம் நடத்துவது அர்த்தமற்றது.</p><p>தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்குச் செயல்படத் தேவையான கால அவகாசத்தை வழங்க வேண்டும். </p><p>குறைகளை மட்டுமே சுட்டிக்காட்டாமல், அவர்களின் மக்கள் பணிகளை உற்றுநோக்க வேண்டும். சமூக ஊடகங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மூலம் பரப்பப்படும் எதிர்மறைச் செய்திகள் மாணவர்கள் மத்தியில் தேவையற்ற பதற்றத்தையும் வன்முறை எண்ணங்களையும் தூண்டுகிறது.</p><p>​இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தி.மு.க. அதிக தொகுதிகள் வெற்றிக்கு நாங்கள் தான் காரணம்- திருமாவளவன் பேச்சு</title><link>https://www.maalaimalar.com/news/puducherry/thirumavalavan-says-we-are-the-reason-for-the-dmk-winning-a-large-number-of-constituencies</link><comments>https://www.maalaimalar.com/news/puducherry/thirumavalavan-says-we-are-the-reason-for-the-dmk-winning-a-large-number-of-constituencies#comments</comments><guid isPermaLink="false">65d8928c-6a3c-4232-a4c3-b4c2c73eb9e9</guid><pubDate>Sat, 25 Jul 2026 06:23:24 +0000</pubDate><atom:updated>2026-07-25T06:23:24.917Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தவெக,thirumavalavan,திருமாவளவன்,Viduthalai chiruthaigal katchi,tvk,விடுதலை சிறுத்தைகள் கட்சி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/17a3ci6f/thirumavalavan03.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ திருமாவளவன்]]></media:title><media:description type="html"><![CDATA[ திருமாவளவன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/17a3ci6f/thirumavalavan03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>புதுச்சேரி (Puducherry)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>த.வெ.க. ஆட்சியில் விசிகவுக்கு முக்கியத்துவம் தந்துவிடக்கூடாது என்றுதான் இப்போதும் சிலர் இருக்கின்றனர்.</aside><p>விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/திருமாவளவன்">திருமாவளவன் </a>பிறந்தநாளையொட்டி உளுந்துார்பேட்டையில் வருகிற ஆகஸ்டு 17-ந் தேதி தமிழ் தேசிய எழுச்சி மாநாடு நடக்கிறது.</p><p>இதையொட்டி கட்சியின் சிறப்பு செயற்குழு கூட்டம் புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடந்தது. கூட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது:- </p><h2><strong>ஆட்சியில் பங்கு</strong></h2><p>சட்டசபை தேர்தலுக்கு முன்பும் பின்பும் விடுதலை சிறுத்தை கட்சியை இலக்காக வைத்து ஒரு சில அரசியல் இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் ஆட்சிக்கு ஆதரவு கோரியும் ஒரு சில நாள்கள் கழித்துதான் ஆதரவு அளித்தோம்.  மேலும், ஆட்சியிலும் பங்கேற்றோம். இது தொடர்பாக விவாதித்து தான் விடுதலை சிறுத்தை கட்சி முடிவு எடுத்தது. இந்த ஜனநாயக மரபை விடுதலை சிறுத்தை கட்சி  பின்பற்றுகிறது என்ற அணுமுறையைக் கூட ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு மனமில்லை. சரியான முடிவைதான் விடுதலை சிறுத்தை கட்சி எடுத்திருக்கிறது. </p><h2><strong>பஞ்சு மிட்டாய் தலைவர்கள்</strong></h2><p>மேலும் சமகாலத்தில் இயக்கம் கண்டவர்கள் வேறு ஒரு கட்சியில் கரைந்து போய்விட்டார்கள். மருத்துவர் ராமதாஸ் தலித் தலைவர்களை பஞ்சு மிட்டாய் தலைவர்கள் என்று கூறுவார். பஞ்சு மிட்டாய் பார்க்க பெரிய பிம்பமாகத் தெரியும். ஆனால் ஒன்றுமில்லாமல் இருக்கும். அதுபோன்றது அல்ல விடுதலை சிறுத்தை கட்சி.</p><h2><strong>நாங்கள் காரணம்</strong></h2><p>நடந்து முடிந்த தேர்தலில் தி.மு.க. 60 பேருக்கு போட்டியிட வாய்ப்புக் கொடுக்கவில்லை. ஆனால்  விடுதலை சிறுத்தை கட்சி  3 பேருக்குதான் போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை. அதை பெரிதாக்கி இந்த கட்சியை உடைக்க சிலர் முயற்சி செய்தனர். அது பலிக்கவில்லை. மேலும், தி.மு.க. அதிக தொகுதிகள் வெற்றிக்கு விடுதலை சிறுத்தை கட்சி தான் காரணம். இதற்கு ஆதாரம் இருக்கிறது. </p><p>அ.தி.மு.க.வுக்கு 47 இடங்கள்தான் கிடைத்தன. அந்த கட்சிக்கு சுமார் 20 இடங்கள் இழப்பு. நாம் தமிழர் கட்சிக்கு 8 சதத்திலிருந்து 4 சதம்தான் வாக்கு கிடைத்தது. பா.ஜனதா 11.5 சதத்திலிருந்து 2.5 சதமாகக் குறைந்துவிட்டது. எல்லோருக்கும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. அதையெல்லாம் யாரும் பேசவில்லை. த.வெ.க. ஆட்சியில் விசிகவுக்கு முக்கியத்துவம் தந்துவிடக்கூடாது என்றுதான் இப்போதும் சிலர் இருக்கின்றனர்.</p><h2><strong>தடை ஏன் கோரவில்லை</strong></h2><p>டெல்லியில் கரப்பான் பூச்சி கட்சி நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி போராட்டம் நடத்துகின்றனர். அவர்களைச் சந்தித்து ஏன் நாடு முழுவதும் நீட் தேர்வுக்குத்தடை கோரவில்லை என்று கேட்டதற்கு, அடுத்த நகர்வு என்று சொன்னார்கள். </p><p>முதலில் இருந்தே இந்தத் தேர்வு முறையே வேண்டாம் என்று கூறிவரும் கட்சி விடுதலை சிறுத்தை கட்சி. இந்த நீட் தேர்வு முறை காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது. அதனால் காங்கிரஸ் கட்சியினர் நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள்.</p><p>மகாத்மா காந்தி பெயரில் இருந்த 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை மாற்றியது பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு. அது போன்று காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்களின் பெயரை மாற்றியது இந்த பா.ஜனதா அரசு. அப்படியென்றால் நீட் தேர்வை இந்த பா.ஜனதா அரசு ஒழிக்க வேண்டியதுதானே. பாஜக அதைச் செய்யாது, அதில் சுகம் கண்டுவிட்டது. </p><p>இவ்வாறு திருமாவளவன் பேசினார். </p><p>கூட்டத்தில், ரவிக்குமார் எம்.பி. , முன்னாள் எம்.எல்.ஏ. சிந்தனை செல்வன், புதுவை முதன்மைச் செயலர் அரிமா தமிழன் உட்பட பலர் பேசினர். விசிக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>சிறுவனை கட்டாயப்படுத்தி பாலியல் உறவு- கர்ப்பமான இளம்பெண் போக்சோ சட்டத்தின் கீழ் கைது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minor-boy-allegedly-forced-into-sex-8-month-pregnant-girl-booked-under-pocso</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minor-boy-allegedly-forced-into-sex-8-month-pregnant-girl-booked-under-pocso#comments</comments><guid isPermaLink="false">e3236d67-7f9b-4db0-ac7b-6b56a419c118</guid><pubDate>Sat, 25 Jul 2026 06:12:19 +0000</pubDate><atom:updated>2026-07-25T06:12:19.034Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாலியல் உறவு,போக்சோ வழக்கு,இளம்பெண் கைது</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/v29gtkld/Women.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pregnant women arrest under POCSO]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/v29gtkld/Women.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள ஆற்றூர் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளம்பெண் ஒருவர் உடல்நல குறைவு காரணமாக சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு சென்றார்.</p><p>அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்தபோது இளம்பெண் 8 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து டாக்டர்கள் இளம்பெண்ணிடம் கணவர் குறித்த விவரத்தை கேட்டனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.</p><p>இதனால் சந்தேகம் அடைந்த டாக்டர்கள் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதை தொடர்ந்து மகளிர் போலீசார் மருத்துவமனைக்கு வந்து இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது இளம்பெண்ணின் கர்ப்பம் குறித்து பல தகவல்கள் தெரியவந்தது.</p><h2>கட்டாய பாலியல் உறவு</h2><p>அதாவது அந்த இளம்பெண் விமான பணியாளர்கள் தொடர்பான ஒரு ஆண்டு பட்டய படிப்புக்காக குழித்துறையில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் சேர்ந்துள்ளார். அதே பாடப்பிரிவில் களியக்காவிளை பகுதியை சேர்ந்த 17 வயதுடைய ஒரு சிறுவனும் சேர்ந்துள்ளார். அந்த பாடப்பிரிவில் இவர்கள் 2 பேர் மட்டுமே படித்துள்ளனர்.</p><p>இதனால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நெருக்கம் அதிகரித்தது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தனர். சம்பவத்தன்று இளம்பெண் களியக்காவிளையில் உள்ள சிறுவனின் வீட்டுக்கு பெற்றோர் இல்லாத நேரத்தில் சென்றுள்ளார். அப்போது இளம் பெண்ணின் கட்டாயத்தின் பேரில் இருவரும் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81" rel="nofollow">பாலியல் உறவு</a> கொண்டுள்ளனர். இதேபோன்ற நிலை பலமுறை தொடர்ந்து நடந்துள்ளது.</p><h2>இளம்பெண் மீது போக்சோ வழக்கு</h2><p>இதன் காரணமாக இளம்பெண் கர்ப்பமானார். எனினும் கர்ப்பமானதை அவர் பெற்றோரிடம் கூறாமல் இருந்து வந்தார். இதை தொடர்ந்து 8 மாதங்கள் கடந்த நிலையில் இளம்பெண் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போதுதான் அவர் கர்ப்பமானது தெரியவந்தது.</p><p>இதையடுத்து சிறுவனின் வீட்டுக்கு சென்று அவனை கட்டாயப்படுத்தி பாலியல் உறவில் ஈடுபட்டதாக சிறுவனின் தாயார் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.</p><p>அந்த புகாரின் பேரில் இளம்பெண் மீது போலீசார் <a href="https://www.maalaimalar.com/news/national/on-bail-telangana-man-kills-wife-children-teen-he-assaulted-and-her-family" rel="nofollow">போக்சோ</a> வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது இளம்பெண் 8 மாத கர்ப்பிணியாக இருப்பதால் அவர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>உஷார்! ஊக்கத்தொகை என்ற பெயரில் புதுவகை மோசடி: ஊறுகாய் வியாபாரியின் பணத்தை அபேஸ் செய்த மர்ம நபர்கள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/police-investigation-to-merchant-money-cheating</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/police-investigation-to-merchant-money-cheating#comments</comments><guid isPermaLink="false">f42c13e7-a762-42cd-aa35-194e72ae7e7e</guid><pubDate>Sat, 25 Jul 2026 05:57:41 +0000</pubDate><atom:updated>2026-07-25T05:57:41.592Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>போலீசார் விசாரணை,money cheating,பண மோசடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/9jgzj0p0/cyber.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/9jgzj0p0/cyber.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>மகன் படிப்புக்கு ஊக்கத்தொகை வந்துள்ளதாக கூறி ஊறுகாய் வியாபாரியின் வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் பணம் 'அபேஸ்' செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.</aside><h2><strong>படிப்புக்கு ஊக்கத்தொகை</strong></h2><p>சென்னை கொடுங்கையூர் எம்.ஜி.ஆர். நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் முத்து காமாட்சி (வயது 50). இவர், மளிகை கடைகளுக்கு ஊறுகாய் வினியோகம் செய்து வருகிறார். இவரது மகன் மகாலிங்கம். இவர், கோட்டூர்புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம்ஆண்டு படித்து வருகிறார்.</p><p>இந்தநிலையில், முத்து காமாட்சியின் செல்போனுக்கு மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு, உங்கள் மகனின் படிப்புக்காக ரூ.48 ஆயிரத்து 500 ஊக்கத்தொகை வந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், அந்த பணத்தை பெற்றுக்கொள்ள குறிப்பிட்ட செல்போன் எண்ணில் இருந்து அனுப்பிய கியூ.ஆர்.கோடை ஸ்கேன் செய்யுமாறு கூறினார்.</p><h2><strong>பணம் 'அபேஸ்'</strong></h2><p>இதை உண்மை என நம்பிய முத்து காமாட்சி, அந்த கியூ.ஆர்.கோடை ஸ்கேன் செய்தபோது, அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்து 250 மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.</p><p>அதன்பிறகுதான் மர்மநபர் தன்னிடம் நூதன முறையில் பேசி வங்கி கணக்கில் உள்ள பணத்தை 'அபேஸ்' செய்தது தெரியவந்தது. இதுபற்றி அவர் கொடுத்த புகாரின்பேரில் புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஊறுகாய் வியாபாரியின் வங்கி கணக்கில் இருந்து, நூதன முறையில் பணத்தை திருடிய மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தர்மேந்திர பிரதான் பதவி விலகுவாரா? - இன்று மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை</title><link>https://www.maalaimalar.com/news/national/third-round-talks-today-in-center-and-cjp-party-members</link><comments>https://www.maalaimalar.com/news/national/third-round-talks-today-in-center-and-cjp-party-members#comments</comments><guid isPermaLink="false">83b7c160-46d8-4fca-a9a8-ee3fbffd2e4f</guid><pubDate>Sat, 25 Jul 2026 05:37:36 +0000</pubDate><atom:updated>2026-07-25T05:37:36.415Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணவர்கள் போராட்டம்,தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,நீட் தேர்வு,Neet exam,CJP Protest</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/a5x4k31z/pradhan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ dharmendra pradhan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/a5x4k31z/pradhan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் கரப்பான்பூச்சி கட்சி தொடங்கிய நீட் தேர்வுக்கு எதிரான மற்றும் தர்மேந்திர பிரதான் பதவி விலகல் தொடர்பான போராட்டம் தற்போது இந்தியா முழுவதும் தீவிரமடைந்துள்ளது.</p><p>இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கரப்பான்பூச்சி கட்சியினருடன் இரு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.</p><h2>மந்திரி பதவி விலக கோரிக்கை</h2><p>மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவுடனான முதல்கட்ட பேச்சுவார்த்தையில் தர்மேந்திர பிரதான் பதவி விலகல், நீட் தேர்வால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம், உயர்கல்வித்துறையில் சீர்த்திருத்தங்களை மேற்கொள்ளுதல் என 3 கோரிக்கைகளை கரப்பான்பூச்சி கட்சியினர் முன்வைத்தனர்.</p><p>நேற்று 2-வது முறையாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை இரு தரப்பினருக்கும் பொதுவாக அரசியல் சாசன கிளப்பில் நடைபெற்றது. அரசாங்கம் தரப்பில் சுகாதார மந்திரி ஜே.பி.நட்டா, பிரதமர் அலுவலக மந்திரி ஜிதேந்திர சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். கரப்பான் பூச்சி ஜனதா தரப்பில் இருந்து அதன் செய்தி தொடர்பாளர்கள் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் பங்கேற்றனர். கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது.</p><p>இந்தப் பேச்சுவார்த்தையின்போது தர்மேந்திர பிரதானின் பதவி விலகல் கோரிக்கை சமரசத்திற்கு அப்பாற்பட்டது என சி.ஜே.பி. தேசிய செய்தித் தொடர்பாளர்கள் சௌரவ் தாஸ் மற்றும் அஷுதோஷ் ரங்கா ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அமைச்சர்களிடம் தெரிவித்தனர்.</p><h2>அவகாசம் கேட்ட மத்திய அரசு</h2><p>இதுதொடர்பாக ஆலோசிக்க நாளை (இன்று) மதியம் வரை மத்திய அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. </p><h2>3வது கட்ட பேச்சுவார்த்தை</h2><p>இந்நிலையில், இன்று பிற்பகல் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.</p>]]></content:encoded></item><item><title>தொடரும் காவல் மரணங்கள்.. முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது?- மு.க.ஸ்டாலின் கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-questions-when-chief-minister-will-break-silence-on-custodial-deaths</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-questions-when-chief-minister-will-break-silence-on-custodial-deaths#comments</comments><guid isPermaLink="false">df6c0002-9f9b-4f1e-82fd-17b9fbce5e7e</guid><pubDate>Sat, 25 Jul 2026 05:15:40 +0000</pubDate><atom:updated>2026-07-25T05:15:40.243Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,Lockup death,முக ஸ்டாலின்,முதலமைச்சர் விஜய்,tn cm vijay,காவல் மரணங்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/yb9ejem8/Vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay- Ex CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/yb9ejem8/Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவல் மரணங்கள் தொடரும் நிலையில் முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது என்று முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-</p><p>தொடரும் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D" rel="nofollow">காவல் மரணங்கள்</a>. முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது?</p><p>எதிர்க்கட்சியாக இருக்கும் போது, “Sorry சொன்னால் போதுமா?” என என்னைப் பார்த்து வீராவேசமாக கேட்டவர், முதலமைச்சரானதும் அதைக் கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்?</p><p>Accountability, Apology – முதலமைச்சருக்குப் பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில் இருக்கிறதா?</p><p>உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக் கூட மனமிரங்காத படுபாதக த.வெ.க. அரசுக்கு வன்மையான கண்டனங்கள்!</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பதவி விலகுங்கள் தர்மேந்திர பிரதான் - நடிகை ஜோதிகா இன்ஸ்டா பதிவு</title><link>https://www.maalaimalar.com/news/national/jyothika-backs-students-protest-against-neet-scam</link><comments>https://www.maalaimalar.com/news/national/jyothika-backs-students-protest-against-neet-scam#comments</comments><guid isPermaLink="false">0d4995d9-bae9-4720-91a4-f0a090d494f6</guid><pubDate>Sat, 25 Jul 2026 04:58:10 +0000</pubDate><atom:updated>2026-07-25T04:58:10.377Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜோதிகா,Jyothika,neet protest,CJP Protest,சிஜேபி போராட்டம்,நீட் போராட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/i078vcr7/Jyothika.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Actress Jyothika]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/i078vcr7/Jyothika.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் முறைகேட்டை கண்டித்து டெல்லியில் கரப்பான்பூச்சி கட்சியினர் நடத்தும் போராட்டத்திற்கு நடிகை ஜோதிகா ஆதரவு தெரிவித்துள்ளார்.</p><p>நீட் முறைகேட்டுக்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஜோதிகா பதிவிட்டுள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தர்மேந்திர பிரதான், பதவி விலகுங்கள். ராஜினாமா செய்யுங்கள்.</p><p>நான் மாணவர்களுடனும் நமது தேசத்தின் எதிர்காலத்துடனும் துணையாக நிற்கிறேன்!</p><p>நான் பொறுப்புணர்வுடன் நிற்கிறேன்!</p><p>நான் ஒரு ஜனநாயக இந்தியாவிற்காக நிற்கிறேன்!</p><p>நான் ஒரு சீர்திருத்தக் கல்விக்காக நிற்கிறேன்!</p><p>சோனம் வாங்சுக், அபிஜீத் திப்கே, சௌரவ் தாஸ் மற்றும் தாய்மார்களாகிய நாங்கள் எங்கள் குழந்தைகளை உங்களைப் போல வளர்க்க விரும்புகிறோம்..</p><p>தடையின்றி வெளிப்படையாக இருக்கும் ஜென் Z தலைமுறையினரே, உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறோம்..</p><p>நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்ததுதான் இந்தியா என்பதை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள்..</p><p>அழுத்தத்தை உடைத்ததற்கு நன்றி.. எங்களை அச்சமற்றவர்களாக மாற்றியதற்கு நன்றி சிஜேபி</p><p>ஜெய் ஹிந்த்</p><p>இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item></channel></rss>