<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 09 Sep 2026 09:12:28 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 9 செப். 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-9-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-9-september-2026#comments</comments><guid isPermaLink="false">e412a312-48cc-4e33-837f-678856202328</guid><pubDate>Wed, 09 Sep 2026 04:10:24 +0000</pubDate><atom:updated>2026-09-09T09:08:40.367Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/oqgphfis/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live news]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/oqgphfis/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dharapuram-by-election-election-king-padmarajan-files-nomination-for-256th-time">தாராபுரம் இடைத்தேர்தல்: 256-வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்தார் 'தேர்தல் மன்னன்’ பத்மராஜன்</a></p><p>* மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.</p><p>* தேர்தல் மன்னன்' என்று அழைக்கப்படும் மேட்டூரைச் சேர்ந்த கே. பத்மராஜன் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்.&nbsp;</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/paranthaman-says-dmk-cadres-have-a-strong-presence-on-ground-therefore-victory-is-certain">திமுகவினர் களத்தில் வலுவாக இருப்பவர்கள்... அதனால் வெற்றி நிச்சயம் - வேட்பாளர் பரந்தாமன்</a></p><p>* தவெக ஆட்சியில் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர்.</p><p>* தவெக அரசின் அவலங்களை வீடு வீடாக சென்று எடுத்துக்கூறி வெற்றி பெறுவோம்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-to-hold-statewide-protest-over-cm-vijays-remarks-in-assembly" rel="nofollow">முதலமைச்சர் விஜயின் ஆணவப் பேச்சைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்- திமுக அறிவிப்பு </a></p><p>* 'தெரியாமல் ஓட்டுப் போட்டுவிட்டோம்' என்று மக்கள் வருந்திச் சொல்லி வருகிறார்கள்.</p><p>* அமைச்சர் பதவி தருவதாக ஏமாற்றி குதிரை பேரம் நடத்தி, முதலமைச்சராகியிருக்கிறார் நடிகர் விஜய்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/action-initiated-to-identify-and-demolish-a-dangerous-building-in-chennai">சென்னையில் ஆபத்தான கட்டிடத்தை அடையாளம் கண்டு இடிக்க நடவடிக்கை- வழிகாட்டு நடைமுறைகள் வெளியீடு</a></p><p>* டெல்லியில் மாணவர் தங்கு விடுதி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.</p><p>* சென்னையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி வழிகாட்டு நடைமுறைகளை வெளியிட்டுள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/alcaraz-lose-qf-in-us-open-tennis">அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 4.30 மணி நேரம் போராடி பென் ஷெல்டனிடம் வீழ்ந்த அல்காரஸ்</a></p><p>* அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.</p><p>* இந்தப் போட்டி சுமார் 4 மணி நேரம் 28 நிமிடங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/risk-of-severe-service-disruption-due-to-banks-remaining-closed-for-four-days">4 நாட்கள் வங்கிகள் மூடப்படுவதால் சேவை கடுமையாக பாதிக்கும் அபாயம்</a></p><p>* கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வங்கிகளுக்கு பிரதி மாதம் சனி, ஞாயிறு விடுமுறை விட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டது. </p><p>* நாடு முழுவதும் உள்ள ஒரு லட்சம் வங்கி கிளைகளை மூடி  ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தை கூட்டமைப்பு அறிவித்து உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/8th-pay-panel-consultation-over-3-5-million-central-govt-staff-may-benefit">8-வது ஊதியக் குழு கூட்டம்: 35 லட்சத்துக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு கிடைக்குமா?... </a></p><p>*மத்திய அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வத் தகவல்களின்படி, 2026 மார்ச் 1 நிலவரப்படி இந்தியாவில் சுமார் 35.77 லட்சம் சிவில் மத்திய அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். </p><p>*ஊழியர்கள் மத்தியில் 8-வது ஊதியக் குழுவின் ‘ஃபிட்மென்ட் ஃபேக்டர்’ எவ்வளவு இருக்கும் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/hogenakkal-boat-operate-after-24-days">ஒகேனக்கல்லில் 24 நாட்களுக்கு பிறகு பரிசல் இயக்க அனுமதி - சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி</a></p><p>* ஒகேனக்கல் சுற்றுலாத்தளத்தில் மீண்டும் பரிசல் பயணம் களைகட்டத் தொடங்கியுள்ளது.</p><p>* மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 91.50 அடியாக இருந்தது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-constituency-by-elections-nomination-filing-begins">மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் - வேட்பு மனு தாக்கல் தொடங்கியது</a></p><p>* தினமும் காலை 11 மணிக்கு தொடங்கி 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.</p><p>* வேட்பு மனு தாக்கல் தொடங்கி உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்ய தீவிரமாகி உள்ளன.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/bank-employees-nationwide-strike-on-11th-demanding-five-day-workweek-and-various-demands">5 நாள் வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் 11-ம்தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம்... </a></p><p>*தேசிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற வாய்ப்பளிக்க வேண்டும்.</p><p>*செப்டம்பர் 11 வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து, கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-consult-with-2-constituency-district-secretaries">மதுராந்தகம்-தாராபுரம் இடைத்தேர்தல்: 2 தொகுதி மாவட்ட செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை</a></p><p>* 2 தொகுதி இடைத்தேர்தலில் மும்முனை போட்டி நிலவும் என்பதால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது பற்றி விரிவான ஆலோசனை நடத்தினார்.</p><p>* இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி உள்ளதால் வேட்பாளராக  யாரை நிறுத்தலாம் என்பது பற்றியும் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/andhra-government-appoints-chiranjeevi-daughter-to-key-post">ஆந்திர அரசாங்கத்தில் நடிகர் சிரஞ்சீவியின் மகளுக்கு கிடைத்த உயரிய பொறுப்பு!... </a></p><p>*விஜயவாடா இந்திரகீலாத்ரி மலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஸ்ரீ துர்கா மல்லேஸ்வர சுவாமி வர்லா தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழுவில் சிறப்பு அழைப்பாளராக சுஷ்மிதா நியமிக்கப்பட்டுள்ளார். </p><p>*சிரஞ்சீவியின் சகோதரர் பவன் கல்யாண் ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வராகப் பதவி வகித்து வருகிறார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/anthropic-researcher-warns-humanity-may-end-by-2030">2030-க்குள் மனித குலம் அழியும்: ஆந்த்ரோபிக் ஆய்வாளர் ராஜினாமா செய்து வெளியிட்ட திடுக்கிடும் தகவல்!... </a></p><p>*இந்த தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியை யாரும் குறைவாக மதிப்பிடக் கூடாது. </p><p>*ஓபன்ஏஐ நிறுவனத்தில் இதன் நாகரிக ஆபத்துகள் குறித்து இன்னும் முழுமையான விழிப்புணர்வு ஏற்படவில்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-9-9-2026">GOLD PRICE TODAY: அதிரடியாக குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p>* தங்கத்தின் விலை சவரனுக்கு  ரூ.1,000 குறைந்து ரூ.1,13,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-strict-implementation-of-the-anti-smoking-law">ஆண்டுக்கு 3.25 லட்சம் பேர் உயிரிழப்பு: புகைத்தடை சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்!- அன்புமணி வலியுறுத்தல்</a></p><p>* இந்தியாவில் இந்த அளவுக்கு நிலைமை மோசமடைந்திருப்பதற்கு மிக முக்கியக் காரணம் பொது இடங்களில் புகை பிடிப்பது கட்டுப்படுத்தப்படாதது தான். </p><p>* சமூக அக்கறை சிறிதும் இல்லாமல் பொது இடங்களில் புகைப்பிடிக்கும் வழக்கம் இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/topnews/odisha-forest-rescue-raises-orangutan-trafficking-suspicions">ஒடிசா வனப்பகுதியில் 5 அரிய வகை ஒராங்குட்டான் குட்டிகள் மீட்பு: வனவிலங்கு கடத்தல் கும்பலின் சதியா?... </a></p><p>*ஒராங்குட்டான்கள் இந்தியாவில் இயற்கையாக வாழும் உயிரினம் அல்ல.</p><p>*இந்தோனேசியா மற்றும் மலேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளின் அடர்ந்த மழைக்காடுகளை மட்டுமே பூர்வீகமாகக் கொண்டவை. </p><p>1.33 லட்சம் களிமண் சிலைகள் இலவசமாக விநியோகம்- மாநகராட்சி புதிய முயற்சி</p><p>* களிமண் விநாயகர் சிலைகளை விநியோகிப்பதற்காக, நகரம் முழுவதும் 34 பகுதிகளில் அதிகாரிகள் சிறப்பு விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.</p><p>* 1.33 லட்சம் களிமண் சிலைகளில், 53,000 சிலைகள் ஒரு அடி உயரமும், 80 ஆயிரம் சிலைகள் 8 அங்குல உயரமும் கொண்டவை. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-no-need-hq-in-pattinapakkam">நெருக்கடியான பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் வேண்டாம்- அன்புமணி ராமதாஸ்</a></p><p>* ஓர் அரசின் கட்டுப்பாட்டு அறையாக திகழ்வது தலைமைச் செயலகம் தான். </p><p>*  தமிழக அரசுக்கு புதிய தலைமைச் செயலகம் தேவை என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து கிடையாது.  </p><p><a href="https://www.maalaimalar.com/sports/netflix-aims-to-secure-global-broadcast-rights-for-asian-t20-cricket">ஆசிய டி20 கிரிக்கெட் போட்டி - உலகளாவிய ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றும் நோக்கில் ‘நெட்ஃபிளிக்ஸ்’ தீவிரம்...</a></p><p>*  இந்தியா-ஜப்பான் மோதும் ஆசிய டி20 கிரிக்கெட் பயிற்சி போட்டி செப்டம்பர் 22 நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>* இந்த டி20 கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 10 அணிகள் கலந்துகொள்ள உள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/1000-years-dust-gas-lion-nebula-photo-released-by-nasa">1,000 ஆண்டுகளாக தூசி மற்றும் வாயுக்களால் உருவான ‘சிங்க நெபுலா’ - புகைப்படத்தை வெளியிட்ட நாசா... </a></p><p>* நட்சத்திரங்கள் வெளியேற்றும் அயனியாக்கப்பட்ட வாயு மற்றும் தூசிக்களால் உருவான தோற்றம் கோள் நெபுலா எனப்படுகிறது.</p><p>* நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி சிங்க நெபுலாவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.  </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-constituency-by-elections-filing-of-nomination-begins-today">மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் - வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்</a></p><p>* செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. </p><p>* மதுராந்தகம் (தனி) சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 285 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.</p>]]></content:encoded></item><item><title>தாராபுரம் இடைத்தேர்தல்: 256-வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்தார் &apos;தேர்தல் மன்னன்’ பத்மராஜன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dharapuram-by-election-election-king-padmarajan-files-nomination-for-256th-time</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dharapuram-by-election-election-king-padmarajan-files-nomination-for-256th-time#comments</comments><guid isPermaLink="false">5176c4c0-1b32-4401-ab08-f05041017518</guid><pubDate>Wed, 09 Sep 2026 08:55:52 +0000</pubDate><atom:updated>2026-09-09T08:55:52.138Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>by election,dharapuram,தாராபுரம்,Election King Padmarajan,இடைத்தேர்தல்,தேர்தல் மன்னன் பத்மராஜன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/pejyhzfv/padmarajan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Election King Padmarajan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/pejyhzfv/padmarajan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>‘தேர்தல் மன்னன்' பத்மராஜன் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்.</p><h2>மதுராந்தகம், தாராபுரம் தொகுதி</h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/paranthaman-says-dmk-cadres-have-a-strong-presence-on-ground-therefore-victory-is-certain">மதுராந்தகம்</a>, தாராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. </p><p>இந்நிலையில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. தினமும் காலை 11 மணிக்கு தொடங்கி 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.</p> <h2>வேட்புமனு தாக்கல்</h2><p>இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் வருகிற 16-ந்தேதி வரை நடைபெறுகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 17-ந்தேதி நடைபெறும். வேட்புமனுக்களை திரும்ப பெற 19-ந்தேதி கடைசி நாள் ஆகும். அக்டோபர் 6-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும். அக்டோபர் 9-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.</p> <h2>தேர்தல் மன்னன்</h2><p>இந்நிலையில், ‘தேர்தல் மன்னன்' என்று அழைக்கப்படும் மேட்டூரைச் சேர்ந்த கே. <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D%20">பத்மராஜன் </a>தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் இன்று தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.</p> <p>1988-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டு வரும் பத்மராஜன், சமீபத்தில் மேல்சபை தேர்தலுக்கு (255-வது முறை) மனுத்தாக்கல் செய்திருந்தார். தற்போது தாராபுரம் இடைத்தேர்தலில் அவர் 256-வது முறையாக வேட்பு மனுவை அளித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.17.29 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகள் - வங்கி மேலாளர் கைது</title><link>https://www.maalaimalar.com/news/national/fake-currency-worth-rs-17-29-crore-seized-at-punjab-national-bank-manager-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/national/fake-currency-worth-rs-17-29-crore-seized-at-punjab-national-bank-manager-arrested#comments</comments><guid isPermaLink="false">19aedd30-9f85-4002-bf38-4d1697a7d063</guid><pubDate>Wed, 09 Sep 2026 08:53:10 +0000</pubDate><atom:updated>2026-09-09T08:53:10.711Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>fake currency,பஞ்சாப் நேஷனல் வங்கி,கள்ள நோட்டுகள்,Punjab National Bank</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/75d6z4bi/Untitled-design-44.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PNB fake currency racket]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/75d6z4bi/Untitled-design-44.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரப் பிரதேசத்தில் செயல்பட்டு வரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூபாய் 17.29 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகளை புலனாய்வு துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இதையடுத்து அந்த வங்கியின் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான மூன்று வங்கி ஊழியர்களுக்கு எதிராக அதிகாரிகள் தேடுதல் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">உத்தரப் பிரதேசம்</a> மாநிலம் சஹாரன்பூரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் ரூபாய் 17.29 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகளை தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். </p><p>இந்த விசாரணையில் கடந்த ஜூலை 6 அன்று, பணப் பரிமாற்ற வலையமைப்பு மூலம் சஹாரன்பூரிலிருந்து இந்திய ரிசர்வ் வங்கியின் ஜெய்ப்பூர் அலுவலகத்திற்கு ரூபாய் 111 கோடி ரொக்கம் அனுப்பப்பட்டுள்ளது. </p><h3>வங்கி மேலாளர் கைது</h3><p>பணத்தில் ரூ. 500 கள்ள நோட்டுகளைக் கொண்ட 1,900 கட்டுகளும், ரூ. 200 கள்ள நோட்டுகளைக் கொண்ட 800 கட்டுகளும் இருந்ததாகக் கூறப்படுகிறது.</p><p>இந்த வழக்கில் பி.என்.பி வங்கியின் ஜகத்ரி கிளை மேலாளரான அமித் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.</p><p>இதைத்தொடர்ந்து சிரேஷ்ட கோட்ட மேலாளர் ரவி குமார் கான்சே மற்றும் சோபியா மார்க்கெட் பணப் பெட்டக மேலாளர் சுஷில் குமார் ஆகியோரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.</p><h3>அதிகாரிகள் சோதனை</h3><p>அதனைத் தொடர்ந்து, புலனாய்வுக் குழு அதிகாரிகள் மூன்று வங்கியின் மேலாளர்களின் இல்லங்களில் சோதனை நடத்தி, மின்னணு சாதனங்களையும் ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.</p><p>நேபாள எல்லைக்கு அருகிலோ அல்லது எல்லையை கடந்தோ செயல்படும் குழுக்களுடன், வங்கி மேலாளர்கள் மூவருக்கும் தொடர்பு இருந்ததா என்பதை அறிவதற்காக, அவர்களின் தொடர்புகளையும் நடமாட்டங்களையும் காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.</p><h3><strong>வங்கி மேலாளர்களுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்</strong></h3><p>இந்த நிலையில் இடைநீக்கம் செய்யப்பட்ட வங்கி மேலாளர்கள் நேபாளத்திற்கு தப்பி செல்லக்கூடும் என்பதால், அவர்களுக்கு எதிராக புலனாய்வு துறை அதிகாரிகள் தேடுதல் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.</p><p>வங்கியின் பணப் பெட்டிக்குள் பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டுகள் எவ்வாறு புழக்கத்திற்குள் வந்தன என்பது குறித்தும், அவற்றில் சில பின்னர் முறையான வங்கி வழிமுறைகள் வழியாகப் பரிமாற்றம் செய்யப்பட்டிருக்க முடியுமா என்பது குறித்தும் தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>&apos;TVK 2026&apos; பைக் நம்பருடன் ரெட்ரோ லுக்: சோஷியல் மீடியாவை கலக்கும் சிபி சத்யராஜின் புகைப்படம்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/tvk-2026-bike-number-retro-look-cibi-sathyaraj-photo</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/tvk-2026-bike-number-retro-look-cibi-sathyaraj-photo#comments</comments><guid isPermaLink="false">3632bc67-2104-43c8-a0e5-ab72f2e7ede7</guid><pubDate>Wed, 09 Sep 2026 08:49:44 +0000</pubDate><atom:updated>2026-09-09T08:49:44.236Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ரெட்ரோ,தமிழக வெற்றி கழகம்,Sibiraj,சிபி சத்யராஜ்,TVK 2026,Retro look</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/igjpd3de/tvj.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sibiraj ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/igjpd3de/tvj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சிபி சத்யராஜின் புதிய திரைப்படத்திற்கான விளம்பர உத்தியா அல்லது ஏதேனும் ரகசிய குறியீடா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.</p><p>தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிபி சத்யராஜ், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகின்றன. 80-களின் ரெட்ரோ பாணியில் எடுக்கப்பட்டுள்ள இந்த புகைப்படங்களில், அவர் பழங்காலத்து பைக் ஒன்றில் கெத்தாக அமர்ந்திருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆடை வடிவமைப்பு முதல் சிகை அலங்காரம் வரை அனைத்தும் 80-களின் காலக்கட்டத்தை நினைவுபடுத்தும் வகையில் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளன.</p><h2>ரசிகர்களின் <strong>கண்ணில் சிக்கிய '</strong>TVK 2026'</h2><p>இந்த புகைப்படங்களில் மிகவும் சுவாரசியமான விஷயமே அந்த பைக்கின் பதிவு எண் பலகைதான். அதில் '<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/when-jason-sanjay-started-speaking-the-hall-shook-with-tvk-tvk">TVK 2026</a>' என்று குறிப்பிடப்பட்டுள்ளது ரசிகர்களின் புருவங்களை உயர்த்த வைத்துள்ளது. தமிழக அரசியலில் 'TVK' (தமிழக வெற்றி கழகம்) என்ற பெயர்  பெரும் பேசுபொருளாகி வரும் சூழலில், 2026 சட்டமன்ற தேர்தலை சுட்டிக்காட்டும் விதமாக இந்த பதிவெண் அமைந்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுதியுள்ளது.</p><h2>புதிய பட அ<strong>றிவிப்பா?</strong></h2><p>சமூக வலைத்தளங்களில் இந்த புகைப்படத்தை பகிர்ந்து வரும் ரசிகர்கள், இது சிபி சத்யராஜின் புதிய திரைப்படத்திற்கான விளம்பர உத்தியா அல்லது ஏதேனும் ரகசிய குறியீடா என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், 80-களின் பின்னணியில் உருவாகும் ஒரு வரலாற்று காலத்து கதைக் களத்தில் அவர் நடிக்கிறாரா என்ற எதிர்பார்ப்பும் திரை உலகில் உருவாகியுள்ளது.</p><h2>இணையத்தில் <strong>குவியும் லைக்ஸ்</strong> </h2><p>சிபி சத்யராஜின் இந்த வித்தியாசமான ரெட்ரோ தோற்றம் அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. புகைப்படங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக்ஸ்களையும், நூற்றுக்கணக்கான கமெண்ட்களையும் பெற்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டிங் லிஸ்டில் இடம் பிடித்துள்ளது. புகைப்படத்தின் பின்னணியில் உள்ள உண்மைத் தகவலை அறிய ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகும் 80 கிட்ஸ் ஏ.ஐ. புகைப்படங்கள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ai-generated-photos-of-80s-kids-are-trending-on-social-media</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ai-generated-photos-of-80s-kids-are-trending-on-social-media#comments</comments><guid isPermaLink="false">d5a0fb62-3d91-43fe-a5cc-6abe90fadcde</guid><pubDate>Wed, 09 Sep 2026 08:46:07 +0000</pubDate><atom:updated>2026-09-09T08:46:07.183Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>AI,Social Medias,ஏஐ,AI Photos,ஏஐ புகைப்படங்கள்,சமூக வலைத்தளங்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/acouu3pk/AIphotos.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நடிகர் சதீஷ் முதலமைச்சர் விஜய்யுடன் இருப்பது போன்ற இளம்வயது புகைப்படம்-  எடப்பாடி பழனிசாமியின் இளம் வயது புகைப்படம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/acouu3pk/AIphotos.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>80 கிட்ஸ் ஏ.ஐ. புகைப்படங்களை 80களில் வெளியான ரஜினி, கமல் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் அணிந்திருப்பது போன்ற ஸ்டைலான உடைகளுடன் உருவாக்கி வருகின்றனர்.</strong></em> </p><h2><strong>சமூக வலைத்தளங்கள்</strong></h2><p>இன்றைய இளம் தலைமுறையினர் <a href="https://www.maalaimalar.com/topic/ஏஐ">சமூக வலைதளங்களில்</a> சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்கள். அதே நேரத்தில் அவர்களுக்கு போட்டியாக பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் வயது வித்தியாசமின்றி பலரும் மூழ்கி கிடப்பதையும் காண முடிகிறது.</p><p>இப்படி முகநூலில் பல்வேறு விஷயங்கள் புகைப்படங்களோடு டிரெண்டிங் ஆவது வழக்கம். இதற்கு முன்பு ஜிப்லி புகைப்படங்கள் கார்ட்டூன் வடிவில் வெளியாகி சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து இருந்தது.</p><h2><strong>லைக்குகள்</strong></h2><p>இந்த நிலையில் தற்போது 80 கிட்ஸ் ஏ.ஐ. புகைப்படங்களை 80களில் வெளியான ரஜினி, கமல் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் அணிந்திருப்பது போன்ற ஸ்டைலான உடைகளுடன் உருவாக்கி வருகின்றனர். அனைத்து தரப்பினரும் தங்களது இளம்வயது புகைப்படங்கள் ஏ.ஐ. மூலமாக உருவாக்கி தங்களது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைக்குகளை பெற்று வருகிறார்கள்.</p><p>தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் சதீஷ் முதலமைச்சர் விஜய்யுடன் இருப்பது போன்ற இளம்வயது தோற்றத்தை உருவாக்கி வெளியிட்டுள்ளார். அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப சமூக வலைதள பக்கத்தில் முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் இளம் வயது புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அவர் புல்லட்டில் அமர்ந்து இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு 80 டிரெண்டிங் என்று பதிவிட்டுள்ளனர்.</p><p>இதே போன்று நடிகர்-நடிகைகள் பலரும், அரசியல் பிரமுகர்களும் ஏ.ஐ. புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜயின் ஆணவப் பேச்சைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்- திமுக அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-to-hold-statewide-protest-over-cm-vijays-remarks-in-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-to-hold-statewide-protest-over-cm-vijays-remarks-in-assembly#comments</comments><guid isPermaLink="false">3e18b694-8daa-452b-a0ab-eef498e586ee</guid><pubDate>Wed, 09 Sep 2026 08:40:50 +0000</pubDate><atom:updated>2026-09-09T08:40:50.285Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,DMK,திமுக,dmk protest,கண்டன ஆர்ப்பாட்டம்,முதலமைச்சர் விஜய்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/wvo9k5f8/Anna-arivalayam.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anna Arivalayam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/wvo9k5f8/Anna-arivalayam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜயின் ஆணவப் பேச்சைக் கண்டித்து தி.மு.க. சார்பில் 12ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>திரையுலக மோகம், கவர்ச்சி மூலமாக மக்களை மயக்கி, போலியான பிம்பத்தை சமூக ஊடகங்களின் மூலமாகக் கட்டமைத்து - குழந்தைகளை ஏமாற்றி குடும்பத்துக்குள் குழப்பங்களை ஏற்படுத்தி – போலி வாக்குறுதிகள் அளித்து ஆட்சியைக் கைப்பற்றி - அதுவும் ஆட்சி அமைக்கும் வலிமையைப் பெறமுடியாத மைனாரிட்டி நிலைமை என்பதால் - தி.மு.க. கூட்டணியில் வென்றவர்களுக்கு அமைச்சர்கள் பொறுப்புகளைக் கொடுத்து அவர்களது ஆதரவைப் பெற்று  - அதிமுக சார்பில் வென்றவர்களுக்கும் அமைச்சர் பதவி தருவதாக ஏமாற்றி குதிரை பேரம் நடத்தி, முதலமைச்சராகியிருக்கிறார் நடிகர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D" rel="nofollow">விஜய்</a>.</p><p>இப்பொறுப்புக்கு வந்த பிறகு பொறுப்பை உணர்ந்து செயல்பட்டாரா? என்றால் இல்லை. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஒரு சில வாக்குறுதிகளை அரைகுறையாகச் செய்து ஏமாற்றி வருகிறார்.  திராவிட மாடல் ஆட்சி மூலமாக கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களால் கொண்டு வரப்பட்ட திட்டங்களை நிறுத்தினார். நிறுத்த முடியாத திட்டங்களுக்கு பெயரை மாற்றி, ஸ்டிக்கர் ஒட்டும் வேலையைச் சிறப்பாகச்  செய்து வருகிறார்.</p><p>கொலை - கொள்ளை அதிகமாகிவிட்டது. போதை பொருள் நடமாட்டமும் - பாலியல் வன்முறையும் அதிகமாகிவிட்டது. பல்வேறு குற்றச்செயல்களில் த.வெ.க. நிர்வாகிகளே சிக்கி வருகிறார்கள். அதற்கு எந்த நடவடிக்கை எடுக்காமல், அவர்களை பாதுகாக்கும் வேலையில் ஈடுபடுகிறார்கள்.</p><p>'தெரியாமல் ஓட்டுப் போட்டுவிட்டோம்' என்று மக்கள் வருந்திச் சொல்லி வருகிறார்கள். இதில் இருந்து திசை திருப்புவதற்காக தனது டயலாக் சூட்டிங் மேடையாக தமிழ்நாடு சட்டமன்றத்தை முதலமைச்சர் மாற்றி விட்டார்.</p><p>திராவிட முன்னேற்றக் கழகத்தையும், ஐந்து முறை இந்த நாட்டை ஆண்ட முதலமைச்சர் தலைவர் கலைஞரையும் - இந்தியாவின் புகழை தோகா மாநாட்டில் நிலைநாட்டிய பொருளாதார மேதை முரசொலி மாறனையும், திருமணம் ஆன ஐந்தே மாதத்தில், 23 வயதில்<a href="https://www.maalaimalar.com/search?q=%20MISA" rel="nofollow"> MISA </a>(Maintenance of Internal Security Act) அவசரநிலைச் சட்டத்தில் கைதாக்கப்பட்டு சிறைச்சாலை சித்திரவதைகளை அனுபவித்து, ஓராண்டு காலம் சிறையில் இருந்த தியாகத்தைச் செய்த தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தியாகத்தை  கொச்சைப்படுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் விஜய் பேசிய பேச்சு கடுமையான கண்டனத்துக்குரியது. அரசியல் உலகில் இத்தகைய அருவெறுப்பான உரையை சட்டமன்றம் கண்டிருக்காது.</p><p>அவரது உரை மூலமாக சட்டமன்றத்தின் மாண்பு – மரபு - வரலாறு இவை அனைத்தும் காற்றில் பறக்கிறது. படங்களாக அந்த அவையில் நிற்கிறவர்கள் தலைகவிழ்ந்து கண்ணீர் வடித்திருப்பார்கள்.</p><p>சில அமைச்சர்கள்   சட்டமன்றத்தில் தான் பேசுவது தவறு என்று தெரிந்தே பேசி,  'மீம்ஸ்', 'ரீல்ஸ்'-ஐ வெளியிடுகிறார்கள். நேரலை மூலமாக மக்களை சென்றடைந்த பிறகு அதை ஒப்புக்கு அவைக்குறிப்பில் இருந்து நீக்கிக் கொள்கிறார்கள்.   இப்படியாக தந்திர மேடையாக சட்டசபையை த.வெ.க. அரசு பயன்படுத்துகிறது.</p><p>ஆட்சியின் தோல்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தப்பித்துக் கொள்ள, கொச்சையான பேச்சுகளைப் பேசும் தரமற்ற மனிதராக முதலமைச்சர் விஜய் மாறியிருக்கிறார்.  இவரது இப்பேச்சைக் கண்டிக்கும் வகையில், தி.முக.. சார்பில் வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் வருகிற 12.09.2026 சனிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்”  நடைபெறும்.</p><p>இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில்  மாவட்டச் செயலாளர்கள் - நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் -  மாநில - மாவட்ட நிர்வாகிகள் - ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழகச் செயலாளர்கள் - நிர்வாகிகள்,  அனைத்து சார்பு அணிகளில் உள்ள நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும்  கழக உடன்பிறப்புகள்  அனைவரும் கலந்து கொண்டு  முதலமைச்சரின் ஆணவப் பேச்சைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>திமுகவினர் களத்தில் வலுவாக இருப்பவர்கள்... அதனால் வெற்றி நிச்சயம் - வேட்பாளர் பரந்தாமன்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/paranthaman-says-dmk-cadres-have-a-strong-presence-on-ground-therefore-victory-is-certain</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/paranthaman-says-dmk-cadres-have-a-strong-presence-on-ground-therefore-victory-is-certain#comments</comments><guid isPermaLink="false">75eea6da-c35e-431a-869d-ad04d7e9825d</guid><pubDate>Wed, 09 Sep 2026 08:36:38 +0000</pubDate><atom:updated>2026-09-09T08:36:38.688Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,dharapuram,தாராபுரம்,Maduranthakam,மதுராந்தகம்,பரந்தாமன்,Paranthamen</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/dj4gaqxh/paranthaman.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DMK Candidate Paranthamen]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/dj4gaqxh/paranthaman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளிலும்  வெற்றி பெற்று அதனை திமுகவின் வசமாக்குவோம் என்று  மதுராந்தகம் தொகுதி திமுக வேட்பாளர் பரந்தாமன் கூறினார்.</p>  <p>மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. </p><p>இந்நிலையில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. தினமும் காலை 11 மணிக்கு தொடங்கி 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.</p> <p>இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் வருகிற 16-ந்தேதி வரை நடைபெறுகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 17-ந்தேதி நடைபெறும். வேட்புமனுக்களை திரும்ப பெற 19-ந்தேதி கடைசி நாள் ஆகும். அக்டோபர் 6-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும். அக்டோபர் 9-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.</p> <p>இதற்கிடையே, அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பிரதிநிதிகளுடன் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/by-elections-in-two-constituencies-dmk-candidates-announced">தி.மு.க.</a> தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். </p><p>இதனையடுத்து வரும் இடைத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் பரந்தாமன், தாராபுரம் தொகுதியில் சுகன்யா போட்டியிடுவதாக திமுக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.</p>  <p>மதுராந்தகம் தொகுதி இடைத்தர்தலில் திமுக சட்டத்துறை இணைச்செயலாளர் பரந்தாமன் போட்டியிடுகிறார். தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில்<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-consult-with-2-constituency-district-secretaries"> திமுக</a> சார்பில் வழக்கறிஞர் சுகன்யா போட்டியிடுகிறார்.</p><p>இந்நிலையில் மதுராந்தகம் தொகுதி திமுக வேட்பாளர் பரந்தாமன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p> <p>* தவெக ஆட்சியில் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர்.</p><p>* இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளிலும்  வெற்றி பெற்று அதனை திமுகவின் வசமாக்குவோம்.</p><p>* தவெக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்துக்கூறி வெற்றி பெற்று வெற்றிக்கனியை தலைவரிடம் சமர்பிப்போம்.</p> <p>* மதுராந்தகம் வெற்றியை திமுக தலைமைக்கு சமர்பிப்போம்.</p><p>* தவெக ஆட்சியில் மின்கட்டணம் உயர்ந்துள்ளது.</p><p>* தவெக அரசின் அவலங்களை வீடு வீடாக சென்று எடுத்துக்கூறி வெற்றி பெறுவோம்.</p><p>* திமுகவினர் களத்தில் வலுவாக இருப்பவர்கள், அதனால் வெற்றி நிச்சயம்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் ஆபத்தான கட்டிடத்தை அடையாளம் கண்டு இடிக்க நடவடிக்கை- வழிகாட்டு நடைமுறைகள் வெளியீடு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/action-initiated-to-identify-and-demolish-a-dangerous-building-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/action-initiated-to-identify-and-demolish-a-dangerous-building-in-chennai#comments</comments><guid isPermaLink="false">03e40ea5-907a-4d95-bf31-d39b404aa83e</guid><pubDate>Wed, 09 Sep 2026 08:30:15 +0000</pubDate><atom:updated>2026-09-09T08:30:15.706Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Corporation,சென்னை மாநகராட்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/1k6ituja/building.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஆபத்தான கட்டிடத்தை அடையாளம் கண்டு இடிக்க நடவடிக்கை]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆபத்தான கட்டிடத்தை அடையாளம் கண்டு இடிக்க நடவடிக்கை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/1k6ituja/building.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>டெல்லியில் மாணவர் தங்கு விடுதி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து  சென்னையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி வழிகாட்டு நடைமுறைகளை வெளியிட்டுள்ளது.</strong></em> </p><p>பருவமழை காலம் தொடங்க இருப்பதால் ஆபத்தான கட்டிடங்களை அடையாளம் கண்டு அதனை  இடிக்க வேண்டுமென்று <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">மாநகராட்சி</a> கமிஷனர் சமீரன் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-</p><h2><strong>ஆபத்தான கட்டிடங்கள்</strong></h2><p>சென்னை மாநகராட்சியில் ஆபத்தான கட்டிடங்களை அடையாளம் காணுதல், கட்டடத்தில் வசிப்பவர்கள், வழிப்போக்கர்கள் மற்றும் அருகில் உள்ள கட்டிடங்களில் வசிப்பவர்களுக்கு ஏற்படும் ஆபத்தைத் தடுக்க வேண்டும்.</p><p>விரிவான வழிகாட்டுதல்கள், கடமைகள் மற்றும் பொறுப்புகள், பழுதடைந்த சிதிலமடைந்த கட்டிடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக வழங்கப்படுகின்றன. உதவி பொறியாளர், இளநிலைப் பொறியாளர் ஆகியோர் தங்களுக்குரிய வார்டுகளுக்குள் உள்ள ஆபத்தான கட்டடங்களை, வழக்கமான தள ஆய்வுகளின்போது அடையாளம் கண்டு, அந்த விவரங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.</p><h2><strong>நீதிமன்ற வழக்கு</strong></h2><p>கட்டடத்தின் தன்மை, வயது மற்றும் தற்போதைய நிலை ஆகியவற்றை மதிப்பீடு செய்வதற்காக, அந்த இடத்தை பொறியாளர்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும். அந்த சொத்து அல்லது கட்டிடம் தொடர்பாக உரிமையாளர் மற்றும் வாடகைதாரர்களுக்கிடையே ஏதேனும் நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதா என்பதை அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும்.</p><p>நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருந்தாலோ அல்லது நீதிமன்றத்தால் குறிப்பிட்ட உத்தரவு ஏதேனும் பிறப்பிக்கப்பட்டிருந்தாலோ, அந்த உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.</p><p>கட்டிடத்தின் கட்டமைப்பு நிலைத்தன்மையை உறுதியாக மதிப்பிட முடியாத நிலையில், பொதுப்பணித்துறை, அண்ணா பல்கலைக்கழகம் அல்லது சென்னை ஐ.ஐ.டி. ஆகியவற்றில் ஏதேனும் ஒரு நிறுவனத்திற்கு அனுப்பி, முறையான கட்டமைப்பு நிலைத்தன்மைச் சான்றிதழ் பெற வேண்டும்.</p><p>பெறப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் கட்டிடத்திற்கு பழுது பார்ப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தால், அந்த பணிகளின் அளவைப் பொறுத்து நியாயமான காலக்கெடுவிற்குள் அவற்றை மேற்கொள்ளுமாறு கட்டட உரிமையாளருக்கு அறிவுறுத்த வேண்டும். </p><p>உரிமையாளர் அந்த அறிவிப்பின்படி நடவடிக்கை எடுக்கத் தவறினால், சென்னை மாநகராட்சியால் அந்த கட்டடம் இடிக்கப்படும். மேலும், கட்டிடத்தை இடிப்பதற்காக மாநகராட்சிக்கு ஏற்பட்ட செலவுகள்  கட்டட உரிமையாளரிடம் இருந்து வசூலிக்கப்படும்.</p><p>ஆபத்தான கட்டடத்தை காலி செய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மீறும் அல்லது காலி செய்ய மறுக்கும் எந்த நபரையும், காவல் துறை அதிகாரிகளின் உதவியுடன் அங்கிருந்து வெளியேற்றலாம். </p><p>இவ்வாறு அவர் கூறி உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.9,825 கோடி நிதி திரட்டும் அதானி ஏர்போர்ட்ஸ் நிறுவனம்: உலகளாவிய முதலீட்டாளர்களுடன் ஒப்பந்தம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/adani-airports-raises-rs-9825-crore</link><comments>https://www.maalaimalar.com/news/national/adani-airports-raises-rs-9825-crore#comments</comments><guid isPermaLink="false">05d6bd69-7896-4d3a-8bcf-ac5f6a75022c</guid><pubDate>Wed, 09 Sep 2026 08:30:12 +0000</pubDate><atom:updated>2026-09-09T08:30:12.430Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விமான நிலையம்,Adani Airports,அதானி ஏர்போர்ட்ஸ்,Airport Infrastructure,Adani Enterprises Ltd</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/1qxi83qt/Adani-Airports" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Adani Airports ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/1qxi83qt/Adani-Airports?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D">குஜராத் </a>மாநிலம் அகமதாபாத்தில் அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட், சர்வதேச மற்றும் உள்நாட்டு முன்னணி முதலீட்டாளர்களிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 9,825 கோடி) நிதியை முதன்மைப் பங்குகள் மூலம் திரட்டுவதற்கான இறுதி ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது.</p><p>இந்த முதலீட்டாளரின் மூலம், அதானி ஏர்போர்ட்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ.1.5 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>முதலீடு செய்யும் முன்னணி நிறுவனங்கள்</h2><p>டெமாசெக், பிளாக்ராக், ஆல்ஃபா வேவ் குளோபல் மற்றும் பிரேம்ஜி இன்வெஸ்ட் ஆகிய முக்கிய நிறுவனங்கள் அடங்கிய ஒரு முதலீட்டுக் கூட்டமைப்பு, <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF">அதானி </a>ஏர்போர்ட்ஸ் நிறுவனத்தில் மூன்று கட்டங்களாக புதிய பங்குகளைப் பெறவுள்ளது. </p><p>இந்த முதலீட்டின் இறுதி கட்டம் ஜூலை 2027க்குள் நிறைவடைய உள்ள நிலையில், இதன் மூலம் அதானி ஏர்போர்ட்ஸ் நிறுவனத்தில் இந்த கூட்டமைப்பிற்கு மொத்தம் 5.54 சதவீத பங்குகள் கிடைக்கும்.</p><h2>இந்த நிதி எதற்காகப் பயன்படுத்தப்படும்?</h2><p>இதில் திரட்டப்படும் ரூ.9,825 கோடி நிதி மூன்று முக்கிய திட்டங்களுக்காகப் பயன்படுத்தப்பட உள்ளது.</p><p> முதலாவதாக, ஆண்டுக்கு கிட்டத்தட்ட 20 கோடி பயணிகள் வந்து செல்லும் வகையில் விமான நிலைய உள்கட்டமைப்பை நவீனப்படுத்துதல் மற்றும் விரிவாக்கம் செய்தல்.</p><p>இரண்டாவதாக, <a href="https://www.maalaimalar.com/topic/international-airport">விமான நிலையங்களை</a> ஒட்டியுள்ள பகுதிகளில் முதற்கட்டமாக 22 மில்லியன் சதுர அடி பரப்பளவில் வணிக மற்றும் குடியிருப்பு பயன்பாட்டு இடங்களை உள்ளடக்கிய பிரம்மாண்ட அதானி ஏர்போர்ட் சிட்டி ரியல் எஸ்டேட் வளாகங்களை உருவாக்குதல்.</p><p>மூன்றாவதாக, தரைவழி கையாளுதல் மற்றும் விமானப் போக்குவரத்து அல்லாத இதர வணிக செயல்பாடுகளை அடுத்த கட்டத்திற்கு மேம்படுத்துதல் ஆகிய பணிகளுக்காக இந்த நிதி முழுமையாகப் பயன்படுத்தப்படும்.</p><h2>நிறுவனத்தின் முக்கியப் புள்ளிகள் கூறுவது என்ன?</h2><p>"இந்தக் கூட்டுத்தொழில் அதானி ஏர்போர்ட்ஸ் தளத்தை உருவாக்குவதில் ஒரு முக்கிய மைல்கல். </p><p>இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறை, நாட்டின் GDP வளர்ச்சிக்கு மிக முக்கியமான உந்துசக்தியாக உள்ளது. இந்த முதலீட்டின் மூலம் உலகின் முன்னணி ஒருங்கிணைந்த விமான நிலைய தளமாக நாங்கள் உருவெடுப்போம்."</p><p>"இந்திய நுகர்வோரின் வாங்கும் திறன் அதிகரித்து வரும் வேளையிலும், நாட்டின் முக்கிய நகரங்களில் எங்களது நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்கள் பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தி வரும் சூழலிலும், அதானி ஏர்போர்ட்ஸை உலகின் மிகப்பெரிய விமான நிலைய தளமாக மாற்றுவதே எங்களது இலக்கு" என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அருண் பன்சால் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நீதிமன்ற உத்தரவை மீற எவ்வளவு தைரியம்?- கிரேட்டர் நொய்டா நீதிபதிக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/national/supreme-court-raps-greater-noida-judge-for-defying-order-on-student-arrests</link><comments>https://www.maalaimalar.com/news/national/supreme-court-raps-greater-noida-judge-for-defying-order-on-student-arrests#comments</comments><guid isPermaLink="false">d843bc4a-a9e0-4e06-9a6c-2c94a0d4436f</guid><pubDate>Wed, 09 Sep 2026 08:28:20 +0000</pubDate><atom:updated>2026-09-09T08:28:20.563Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,Greater Noida,CJP,உச்சநீதிமன்ற நீதிபதி,Chief Justice Surya Kanth,கிரேட்டர் நொய்டா,தலைமை நீதிபதி சூரிய காந்த்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/10h18cor/surya.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chief Justice Surya Kanth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/10h18cor/surya.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இது தொடர்பாகக் கௌதம புத்தா நகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட நிர்வாக நீதிபதியிடம் விளக்கம் கேட்கப்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.</p><p>டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்ற மாணவர்களுக்கு எதிராக எந்தவொரு கடுமையான அல்லது பிடியாணை நடவடிக்கைகளையும் எடுக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் செப்டம்பர் 1-ம் தேதி தெளிவான உத்தரவைப் பிறப்பித்திருந்தது. </p><p>இந்நிலையில், கிரேட்டர் நொய்டாவில் உள்ள கௌதம புத்தா பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவர் அக்ஷத் திரிபாதிக்கு ரூ.5 லட்சம் பிணைப்பத்திரம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் தெளிவான உத்தரவையும் மீறிச் செயல்பட்ட கிரேட்டர் நொய்டா நிர்வாக நீதிபதியின் இந்த நடவடிக்கைக்கு இந்திய தலைமை நீதிபதி சூரிய காந்த் தலைமையிலான அமர்வு மிகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.</p><h2>நீதிமன்றத்<strong>தின் தடையை</strong>யும் மீறி அனுப்பப்பட்ட நோட்டீஸ்</h2><p>கௌதம புத்தா பல்கலைக்கழக மாணவர் அக்ஷத் திரிபாதி, டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற 'காக்ரோச் ஜனதா கட்சி' அமைப்பின் போராட்டத்தில் மாணவர்களைப் பங்கேற்கத் தூண்டியதாகவும், அரசுக்கு எதிரான கருத்துகளைப் பரப்பியதாகவும் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/8th-pay-panel-consultation-over-3-5-million-central-govt-staff-may-benefit">நொய்டா </a>காவல்துறையினர் அறிக்கை அளித்திருந்தனர். இதன் அடிப்படையில், கிரேட்டர் நொய்டா நிர்வாக நீதிபதி செப்டம்பர் 4 அன்று நோட்டீஸ் ஒன்றை அனுப்பினார். அதில், அமைதியை நிலைநாட்ட ரூ.5 லட்சத்திற்கான தனிப்பட்ட பிணைப்பத்திரத்தையும், தலா ரூ.5 லட்சத்திற்கு இரு நபர் உத்தரவாதத்தையும் ஏன் வழங்கக் கூடாது என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.</p><p>இருப்பினும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவு ஏற்கனவே அமலில் இருந்ததாலும், நொய்டா காவல்துறையின் விசாரணையில் அந்தத் தகவல் தவறானது என்றும், நோட்டீஸ் அனுப்பப்பட்ட காலத்தில் மாணவர் விடுமுறைக்காகத் தனது சொந்த ஊரில் இருந்தார் என்றும் தெரியவந்ததையடுத்து, அந்த நோட்டீஸ் அடுத்தநாளே திரும்பப் பெறப்பட்டது.</p><h2>தலைமை நீதி<strong>பதியின்</strong> சீற்றம்</h2><p>இந்த விவகாரத்தை மூத்த வழக்கறிஞர் பிஸ்வஜித் பட்டாச்சார்யா, தலைமை நீதிபதி சூரிய காந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி மற்றும் வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் முறையிட்டார். மாணவர்கள் மீது எந்தவிதக் கட்டுப்பாடோ அல்லது சட்ட நடவடிக்கையோ எடுக்கக் கூடாது என்று செப்டம்பர் 1-ல் அரசியலமைப்புச் சட்டத்தின் 142-வது பிரிவைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவைப் பிறப்பித்ததை சுட்டிக்காட்டிய வழக்கறிஞர், இத்தகைய நடவடிக்கைகள் மாணவர்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்துவதோடு நீதிமன்ற அவமதிப்பாகும் என்றும் வாதிட்டார்.</p><p>முறையீட்டைக் கேட்ட தலைமை நீதிபதி சூரிய காந்த், "எங்கள் உத்தரவை மீறி நோட்டீஸ் அனுப்ப ஒரு நீதிபதிக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்? எந்தவொரு மாணவருக்கும் எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று நாங்கள் மிகத் தெளிவாகக் கூறியிருந்தோம். உச்சநீதிமன்ற உத்தரவை மீற எந்தவொரு நீதிபதிக்கும் அதிகாரமில்லை" என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.</p><h2>விளக்கம் <strong>கேட்க உச்சநீதிமன்</strong>றம் முடிவு</h2><p>மாணவர் மீதான நோட்டீஸ் திரும்பப் பெறப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவு தெளிவாக இருந்தும் மாநில நிர்வாகம் இவ்வாறு செயல்பட்டது குறித்து அதிருப்தி வெளியிட்ட நீதிபதிகள், இந்தச் சம்பவத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளனர். இது தொடர்பாகக் கௌதம புத்தா நகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட நிர்வாக நீதிபதியிடம் விளக்கம் கேட்கப்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும், இந்தச் சம்பவம் குறித்த முழுமையான விவரங்கள் மற்றும் நோட்டீஸின் நகலை நீதிமன்றப் பதிவேட்டில் தாக்கல் செய்யுமாறு மனுதாரரின் வழக்கறிஞருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை வேடிக்கை பார்க்கும் தவெக அரசு..! மதுரை மாணவன் கொலை விவகாரத்தில் திமுக எம்.பி கனிமொழி கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-seeks-uncompromising-investigation-students-body-in-sewage-pond</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-seeks-uncompromising-investigation-students-body-in-sewage-pond#comments</comments><guid isPermaLink="false">364cf0f1-562a-48a1-a923-56cad4e5af8c</guid><pubDate>Wed, 09 Sep 2026 08:19:24 +0000</pubDate><atom:updated>2026-09-09T08:19:24.033Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,கனிமொழி எம்பி,Kanimozhi MP,student death,பள்ளி மாணவன் உயிரிழப்பு,கழிவுநீர் குட்டை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/h5xsyzxp/kanimozhi-MP.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DMK MP Kanimozhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/h5xsyzxp/kanimozhi-MP.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>"சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் தவெக அரசின் அலட்சியப் போக்கால் இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகப் போகின்றன?</p><p>மதுரை அருகே காணாமல் போன 11ம் வகுப்பு மாணவன் கொலை செய்யப்பட்டதற்கான தடயங்களுடன் கழிவுநீர் குட்டையில் சடலமாக மீட்கப்பட்டது குறித்து சமரசமற்ற விசாரணை நடத்த வேண்டும்" என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். </p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள் எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>மதுரை ஆனையூர் அருகே காணாமல் போன 11ஆம் வகுப்பு மாணவன் கழிவுநீர் குட்டையில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், உடற்கூறு ஆய்வில் அவர் தாக்கப்பட்டு <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88" rel="nofollow">கொலை</a> செய்யப்பட்டதற்கான தடயங்கள் கிடைத்துள்ளதாக தெரிகிறது.</p><p>சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் தவெக அரசின் அலட்சியப் போக்கால் இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகப் போகின்றன என்ற கேள்வி எழுகிறது.</p><p>மாணவனின் மரணம் தொடர்பாக சமரசமற்ற விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>4 நாட்கள் வங்கிகள் மூடப்படுவதால் சேவை கடுமையாக பாதிக்கும் அபாயம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/risk-of-severe-service-disruption-due-to-banks-remaining-closed-for-four-days</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/risk-of-severe-service-disruption-due-to-banks-remaining-closed-for-four-days#comments</comments><guid isPermaLink="false">1f0a0b4a-2a1e-414d-a173-73b460fd6f2c</guid><pubDate>Wed, 09 Sep 2026 08:13:16 +0000</pubDate><atom:updated>2026-09-09T08:13:16.757Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>சேவை பாதிப்பு,Banks Strike,Banks Closed,வங்கிகள் வேலை நிறுத்தம்,வங்கிகள் மூடல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/gh85sdju/bank.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ வங்கி மூடல்]]></media:title><media:description type="html"><![CDATA[ வங்கி மூடல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/gh85sdju/bank.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>4 நாட்கள் தொடர்ச்சியாக பணங்களை நிரப்புவதற்கான வாய்ப்பு இல்லை. அதனால் பெரும்பாலான ஏ.டி.எம்.கள் பணம் இல்லாமல் செயல் இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.</strong></em></p><p>வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் <a href="https://www.maalaimalar.com/topic/வங்கிகள்">வேலை நிறுத்தம்</a> நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் நடைபெறுகிறது.</p><p>பொதுத்துறை வங்கிகள் தனியார் வங்கிகள், கூட்டுறவு, கிராமிய வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள், மேலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கிறார்கள். </p><p>நாடு முழுவதும் உள்ள ஒரு லட்சம் வங்கி கிளைகளை மூடி ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தை கூட்டமைப்பு அறிவித்து உள்ளது.</p><p>இந்த வேலை நிறுத்தத்தையொட்டி வங்கிகள் தொடர்ந்து 4 நாட்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. வேலை நிறுத்தம் நடக்கின்ற (வெள்ளிக்கிழமை) வங்கிகள் முழுமையாக மூடப்படுகிறது. மறுநாள் (சனிக்கிழமை) வங்கிகளுக்கு விடுமுறை நாளாகும். 13-ந்தேதி  (ஞாயிற்றுக்கிழமை) பொது விடுமுறையாகும். 14-ந்தேதி (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி அரசு விடுமுறையாகும். 3 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் வங்கிகள் முழுமையாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.</p><p>வார இறுதி நாள் தொடங்கி வாரத்தின் முதல் நாள் வரை 4 நாட்கள் வங்கிகள் மூடப்படுகின்ற நிலை ஏற்பட்டு இருப்பதால் சேவை கடுமையாக பாதிக்கப்படும். அனைத்து வங்கிகளிலும் பணம் மற்றும் காசோலை பரிவர்த்தனை முடங்கக்கூடும். பல்லாயிரக்கணக்கான காசோலை பரிமாற்றங்கள்  நடைபெறாமல் பாதிப்பு ஏற்படும்.</p><p>பணம் டெபாசிட் செய்தல், எடுத்தல், அந்நிய செலாவணி பரிமாற்றம் உள்ளிட்ட வர்த்தக பணிகள் இதனால் பாதிக்கும் சூழல் உள்ளது. மேலும் ஏ.டி.எம்.களும் முடங்கக்கூடிய நிலை உருவாகும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 4 நாட்கள் தொடர்ச்சியாக பணங்களை நிரப்புவதற்கான வாய்ப்பு இல்லை. அதனால் பெரும்பாலான ஏ.டி.எம்.கள் பணம் இல்லாமல் செயல் இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.</p><p>இது குறித்து அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாசலம் கூறியதாவது:- </p><p>நாடு முழுவதும் 7 லட்சம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வங்கிகளுக்கு பிரதி மாதம் சனி, ஞாயிறு விடுமுறை விட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு அதனை அமல்படுத்த மறுத்து வருகிறது.</p><p>மேலும் வங்கி ஊழியர்கள் அதிகாரிகள் மற்ற கோரிக்கைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க நிர்வாகம் மற்றும் அரசு தயக்கம் காட்டுகிறது. </p><p>எனவே நாளை மறுநாள் அனைத்து  வங்கிகளும்  மூடப்பட்டு ஊழியர்கள் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் வங்கிக் கிளைகள் செயல்படாது. சேவை கடுமையாக பாதிக்கும். ஏ.டி.எம். மையங்களும் இயங்குவதற்கு வாய்ப்பில்லை.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><p>இதற்கிடையில் அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கமும் இந்த போராட்டத்தில் ஈடுபடுகிறது. இதை தவிர வருகிற 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை 3 நாட்கள் வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாக சங்கத்தின் பொதுச்செயலாளர் ரோஷன் கார்க்கி தெரிவித்து உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 4.30 மணி நேரம் போராடி பென் ஷெல்டனிடம் வீழ்ந்த அல்காரஸ்</title><link>https://www.maalaimalar.com/sports/tennis/alcaraz-lose-qf-in-us-open-tennis</link><comments>https://www.maalaimalar.com/sports/tennis/alcaraz-lose-qf-in-us-open-tennis#comments</comments><guid isPermaLink="false">b29d7caf-24a5-4f37-9e83-fd12dfa5d557</guid><pubDate>Wed, 09 Sep 2026 08:07:33 +0000</pubDate><atom:updated>2026-09-09T08:07:33.803Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Carlos Alcaraz,கார்லோஸ் அல்காரஸ்,US Open Tennis,அமெரிக்க ஓபன் டென்னிஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/grmqyov7/alcaraz.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ carlos alcaraz]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/grmqyov7/alcaraz.jpg?w=280" width="280"></media:thumbnail><category>டென்னிஸ் (Tennis)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் காலிறுதி சுற்றில் போராடி தோல்வி அடைந்தார்.</strong></em></p><p>கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.</p><p>ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.</p><p>இன்று அதிகாலை நடைபெற்ற போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் பென் ஷெல்டன் உடன் மோதினார்.</p><p>இதில் சிறப்பாக ஆடிய <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D">அல்காரஸ்</a> முதல் செட்டை 7-6 (7-5) என வென்றார். இதற்கு பதிலடியாக ஆடிய பென் ஷெல்டன் அடுத்த இரு செட்களை 6-1, 6-3 என கைப்பற்றினார்.</p><p>இதில் சுதாரித்துக் கொண்ட அல்காரஸ் 4வது செட்டை 6-1 என வென்றார்.</p><p>வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டிலும் அல்காரஸ் கடும் நெருக்கடி கொடுத்தார். ஆனாலும் அதிரடியாக ஆடிய பென் ஷெல்டன் 7-6 (10-7) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.</p><p>இதன்மூலம் அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.</p><p>இந்தப் போட்டி சுமார் 4 மணி நேரம் 28 நிமிடங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.</p><p>வரும் 12-ம் தேதி நடைபெற உள்ள அரையிறுதியில் பென் ஷெல்டன், சக நாட்டு வீரரான பிரான்சிஸ் தியாபேவை சந்திக்கிறார்.</p>]]></content:encoded></item><item><title>விசா மோசடி புகார் - அமெரிக்காவில் காக்னிசன்ட் நிறுவனத்திற்கு தடை</title><link>https://www.maalaimalar.com/news/world/visa-fraud-complaint-temporary-ban-on-cognizant-in-us</link><comments>https://www.maalaimalar.com/news/world/visa-fraud-complaint-temporary-ban-on-cognizant-in-us#comments</comments><guid isPermaLink="false">ddde683d-f228-48ae-9691-dee8f65417e4</guid><pubDate>Wed, 09 Sep 2026 08:06:05 +0000</pubDate><atom:updated>2026-09-09T08:06:05.942Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Donald Trump,Green Card,டொனால்ட் டிரம்ப்,காக்னிசன்ட்,Cognizant,கிரீன் கார்டு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/c4d8is5n/Untitled-design-42.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Cognizant PERM green card]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/c4d8is5n/Untitled-design-42.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு நிரந்தர வசிப்பிட உரிமை பெறுவதற்காக காக்னிசன்ட் நிறுவனம் விசா மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து, காக்னிசன்ட் நிறுவனத்தின் நிரந்தர தொழிலாளர் விண்ணப்பங்களை அமெரிக்கா இடை நிறுத்தி வைத்துள்ளது.</p><h3><strong>காக்னிசன்ட் நிறுவனம்</strong></h3><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">காக்னிசன்ட் நிறுவனம்</a> 1994-இல் சென்னையில் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது இதன் தலைமையகம்  அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சியில் செயல்பட்டு வருகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE">அமெரிக்காவின்</a> மிகப்பெரிய H- 1B நிதியுதவி வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக காக்னிசன்ட் நிறுவனம் உள்ளது.  </p><p>இந்த நிறுவனம் திட்ட மின்னணு மறு ஆய்வு மேலாண்மை (PERM, Program Electronic Review Management) என்ற நடைமுறையின் மூலம் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு அமெரிக்காவில் நிரந்தர வசிப்பிட உரிமையை (கிரீன் கார்டு) வாங்கி தருகிறது.</p><p>பெர்ம்(PERM) என்பது அமெரிக்க முதலாளிகள் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு நிரந்தர வசிப்பிட உரிமையை வழங்குவதற்கு தொழிலாளர் துறையிடம் இருந்து, ஒப்புதல் பெறும் ஒரு செயல்முறையாகும்.</p><p>இந்த செயல்முறையின் ஒரு பகுதியாக, அந்த வேலைக்கு தகுதியான நபர்கள் அமெரிக்காவில் யாரும் இல்லை என்பதை அமெரிக்க நிறுவனத்தின் முதலாளிகள் உறுதிப்படுத்த வேண்டும்.</p><p>மேலும் ஒரு வெளிநாட்டு தொழிலாளியை பணியமர்த்துவதன் மூலம் அமெரிக்க தொழிலாளர்களின் ஊதியமோ அல்லது அவர்களின் வேலைகளையோ எந்த வகையிலும் பாதிக்காது என்பதையும் முதலாளிகள் உறுதிப்படுத்த வேண்டும்.</p><h3><strong>டொனால்ட் டிரம்ப் - கிரீன் கார்டு</strong></h3><p>அமெரிக்காவில் விசா மோசடி குற்றச்சாட்டுகளுக்கு எதிராக அதிபர் டொனால்டு டிரம்ப், தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார்.</p><h3><strong>அமெரிக்கா குற்றச்சாட்டு</strong></h3><p>இந்த நிலையில், வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு நிரந்தர வசிப்பிட உரிமை வழங்குவதற்காக காக்னிசன்ட் மற்றும் கிளவுடெரா நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க தொழிலாளர் துறை அதிகாரி அந்தோனி எஸ்போசிட்டோ தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் கூறுகையில், காக்னிசன்ட் நிறுவனத்தின் பெர்ம் தாக்கல் பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு கைவிலங்கு காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>இந்த நிறுவனங்களின் எச்-1பி மற்றும் பெர்ம் திட்டங்கள் தொடர்பான மோசடி குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை முடிவடையும்வரை, இந்திய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனம் தாக்கல் செய்யும் பெர்ம் விண்ணப்பங்கள் இடை நிறுத்தப்படும் என்று கூறியுள்ளார்.</p><p>இந்த விசா திட்டங்களை டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ மற்றும் எச்.சி.எல் போன்ற இந்திய ஐடி நிறுவனங்களும் சார்ந்திருப்பதால், இந்த நடவடிக்கை நிறுவனங்கள் மீதான கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>உலகளவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 தலைவர்கள் யார்.. யார்..?</title><link>https://www.maalaimalar.com/news/world/top-5-highest-paid-world-leaders</link><comments>https://www.maalaimalar.com/news/world/top-5-highest-paid-world-leaders#comments</comments><guid isPermaLink="false">96fad3cf-30d2-43d7-8ab0-78e18b6cd91a</guid><pubDate>Wed, 09 Sep 2026 08:04:10 +0000</pubDate><atom:updated>2026-09-09T08:04:10.346Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Donald Trump,அந்தோணி அல்பானீஸ்,டொனால்ட் டிரம்ப்,John Lee,ஜான் லீ,highest-paid leaders,Lawrence Wong,லாரன்ஸ் வோங்,கை பெர்மெலின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/qmp3y5et/TOP.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Top 5 highest-paid leaders]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/qmp3y5et/TOP.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலகிலேயே மிக அதிக சம்பளம் வாங்கும் அரசுத் தலைவராக சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் முதலிடத்தில் உள்ளார்.</p><p>உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் படிகள் குறித்து எப்போதும் பொதுமக்களிடையே பெரும் ஆர்வம் நிலவி வருகிறது. அரசு நிர்வாகத்தை சீராக நடத்துவதற்கும், திறமையான நபர்களை அரசியலுக்கு ஈர்ப்பதற்கும் சில நாடுகள் தங்கள் நாட்டின் தலைவர்களுக்கு மிகப்பெரிய அளவிலான ஊதியத்தை வழங்குகின்றன. அந்த வகையில், சர்வதேச அளவில் மிக அதிக ஆண்டு சம்பளம் பெறும் முதன்மை டாப் 5 உலகத் தலைவர்களின் விவரங்கள் இதோ:</p><h2>1. சிங்க<strong>ப்பூர் பிரதமர்:</strong> லாரன்ஸ் வோங்</h2><p>உலகிலேயே மிக அதிக சம்பளம் வாங்கும் அரசுத் தலைவராக சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் முதலிடத்தில் உள்ளார்.</p><p>ஆண்டு வருமானம்: 3.6 மில்லியன் சிங்கப்பூர் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.26.9 கோடி / அமெரிக்க மதிப்பில் 2.8 மில்லியன் டாலர்)</p><p>சமீபத்தில் சிங்கப்பூர் அரசு அமைச்சர்கள் மற்றும் தலைவர்களுக்கான ஊதிய அமைப்பை மாற்றியமைத்தது. இதன்படி, லாரன்ஸ் வோங்கின் ஆண்டு ஊதியம் 64 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. தமக்கு உயர்த்தப்பட்ட கூடுதல் ஊதியத் தொகையை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நற்பணி மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.</p><h2>2. ஹாங்<strong>காங் தலைமை நிர்</strong>வாகி: ஜான் லீ</h2><p>பட்டியலில் இரண்டாவது இடத்தில் ஹாங்காங்கின் தலைமை நிர்வாகியான ஜான் லீ இருக்கிறார். ஆண்டு வருமானம் சுமார் 7,19,000 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.6.03 கோடி)ஆசியாவின் முக்கிய நிதி மையமாகத் திகழும் ஹாங்காங்கில், அரசு உயர் அதிகாரிகளுக்கு தனியார் துறைக்கு இணையான ஊதியம் வழங்கப்படுகிறது.</p><h2>3.சுவிட்சர்லாந்<strong>து அதிபர்: கை பெர்மெலி</strong>ன்</h2><p>ஐரோப்பிய கண்டத்தில் அதிக சம்பளம் பெறும் உலகத் தலைவராக சுவிட்சர்லாந்து நாட்டின் அதிபர் கை பெர்மெலின் திகழ்கிறார். ஆண்டு வருமானம் சுமார் 6,06,000 <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/8th-pay-panel-consultation-over-3-5-million-central-govt-staff-may-benefit">அமெரிக்க டாலர் </a>(இந்திய மதிப்பில் சுமார் ரூ.5.08 கோடி) சுவிட்சர்லாந்தின் சுழற்சி முறை அதிபர் ஆட்சி அமைப்பில், நாட்டின் கூட்டாட்சி கவுன்சில் உறுப்பினர்களுக்கு உயரிய ஊதியம் மற்றும் படிகள் வழங்கப்படுகின்றன.</p><h2>4.அமெரிக்க அதிபர்: <strong>டொனால்ட் டி</strong>ரம்ப்</h2><p>உலகின் மிக சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றான அமெரிக்காவின் அதிபருக்கு நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. ஆண்டு வருமானம் 4,00,000 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3.35 கோடி) அமெரிக்க அதிபரின் அடிப்படைச் சம்பளம் சட்டப்படி நிலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தவிர, வெள்ளை மாளிகை இருப்பிடம், பாதுகாப்பு மற்றும் பயணங்களுக்கான பிரத்யேக படிகளும் வழங்கப்படுகின்றன.</p><h2>5. ஆஸ்திரேலிய பிரத<strong>மர்: அந்தோணி</strong> அல்பானீஸ்</h2><p>டாப் 5 பட்டியலில் ஐந்தாவது இடத்தில் ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமர் உள்ளார். ஆண்டு வருமானம் சுமார் 3,95,000 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3.31 கோடி)</p><p>ஆஸ்திரேலியாவின் பாராளுமன்ற ஊதியக் குழுவின் வழிகாட்டுதலின்படி நாட்டின் பிரதமருக்கான இந்த உயரிய ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியா பிரதமர் நரேந்திர மோடி ரூ.33.60 லட்சம் சம்பளம் வாங்குகிறார். </p><p>சிங்கப்பூர் போன்ற நாடுகள் தங்கள் நாட்டு அமைச்சர்களுக்கும் தலைவர்களுக்கும் மிக அதிக ஊதியம் வழங்குவதற்கு முக்கியக் காரணமாக, தனியார் துறையில் இருக்கும் சிறந்த தொழில்முறை நிபுணர்களையும், திறமையான தலைவர்களையும் அரசு நிர்வாகத்திற்குள் கொண்டு வருவது. உயரிய ஊதியம் வழங்குவதன் மூலம் அரசு உயர் பதவிகளில் ஊழல் நடப்பதற்கான வாய்ப்புகளை முற்றிலுமாகத் தடுப்பது போன்றவை முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>வளர்ச்சி அடையாத மண்டை ஓட்டுடன் பிறந்த குழந்தை - இங்கிலாந்து மருத்துவர்கள் சாதனை </title><link>https://www.maalaimalar.com/news/world/baby-born-with-underdeveloped-skull-uk-doctors-achievement</link><comments>https://www.maalaimalar.com/news/world/baby-born-with-underdeveloped-skull-uk-doctors-achievement#comments</comments><guid isPermaLink="false">189ab24d-6dd3-430b-9f7e-b13181566df1</guid><pubDate>Wed, 09 Sep 2026 08:02:33 +0000</pubDate><atom:updated>2026-09-09T08:02:33.755Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>England,மண்டை ஓடு,Skull,இங்கிலாந்து   அரசு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/i4494g1g/Untitled-design-43.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Doctors use nitinol coils to reshape underdeveloped baby skull]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/i4494g1g/Untitled-design-43.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இங்கிலாந்தில் புதிதாக பிறந்த குழந்தைக்கு தலையின் மண்டை ஓடு முழுவதுமாக வளர்ச்சியடையாத நிலையில், அறுவை சிகிச்சை நிபுணர்கள் மண்டை ஓட்டிற்குள் துருப்பிடிக்காத கம்பி சுருள்களை பொறுத்தி, எலும்புகளுக்கு இடையிலான இடைவெளிகளை அகலப்படுத்தி சிகிச்சை அளித்துள்ளனர்.</p><h3><strong>குறைபாட்டுடன் பிறந்த குழந்தை</strong></h3><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">இங்கிலாந்தில்</a> டெர்பிஷையரை சேர்ந்த ரேரி பார்ட்டர் என்ற ஆண் குழந்தை பிறக்கும் போது சஜிடல் கிரானியோசினோஸ்டோசிஸ் (sagittal craniosynostosis) என்ற குறைபாட்டுடன் பிறந்துள்ளது.  </p><p>இந்த வகையான குறைபாட்டின் மூலம், குழந்தையின் மண்டை ஓட்டில் உள்ள எலும்புகள் பிறப்பதற்கு முன்பே ஒன்றிணைந்து மூளையின் இயல்பான விரிவாக்கத்தை தடுத்துள்ளது.</p><p>இந்த வகை குறைபாட்டுடன் பிறந்த குழந்தைக்கு, வளர்ச்சி தாமதங்கள், பார்வை குறைபாடு, சுவாச கோளாறு மற்றும் செவித்திறன் குறைபாடுகள் காணப்படுகின்றன.</p><p>இந்த வகையான குறைபாடுகள் 2,000 குழந்தைகளில் ஒரு குழந்தையை பாதிப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.</p><h3><strong>மருத்துவமனையில் சிகிச்சை</strong></h3><p>இதையடுத்து அந்த குழந்தைக்கு கிரேட் ஓர்மண்ட் ஸ்ட்ரீட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, லண்டன் பல்கலைக்கழக கல்லூரி வல்லுநர்களுடன் இணைந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.</p><p>குழந்தைக்கு நிக்கல்-டைட்டானியம் கலப்பு உலோகமான நைட்டினோலில் இருந்து, உருவாக்கப்பட்ட துருப்பிடிக்காத சுருள்களை கொண்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.</p><p>மேலும் மருத்துவர்கள் சி.டி-ஸ்கேன் மூலம் கிடைக்கப்பெற்ற முப்பரிமாண ஆய்வு மூலம், நைட்டினால் சுருளை துல்லியமான அளவில் பொருத்தினர்.</p><p>இந்த நெகிழித் தன்மையுள்ள சுருளானது, குழந்தை வளரும்போது நைட்டினால் உலோகம் இயற்கையாகவே தன்னை தகவமைத்து கொள்ள அனுமதிக்கிறது.</p><h3><strong>மருத்துவர்கள் சாதனை</strong></h3><p>சிகிச்சை குறித்து மருத்துவர்கள் கூறுகையில், “இந்த தொழில்நுட்பம் அதிகளவிலான துல்லியத்தை அளித்து, சிகிச்சையின் கால அளவை 45 நிமடங்களில் குறைத்தது.</p><p>குழந்தைக்கு ரத்த மாற்றங்களின் தேவையை குறைத்து,  எதிர்காலத்தில் கூடுதல் சீரமைப்பு நடைமுறைகளை தடுக்கிறது.</p><p>இரண்டு மாதங்களுக்கு பிறகு குழந்தையின் மண்டை ஓடு, வெற்றிகரமாக அதன் இலக்கு நிலைக்கு விரிவடைந்ததும், அந்த சுருள் கம்பிகள் அகற்றப்பட்டும்” என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.</p><h3><strong>தாயார் நெகிழ்ச்சி</strong></h3><p>இங்கிலாந்து மருத்துவர்கள் மேற்கொண்ட சிகிச்சை குறித்து குழந்தையின் தாயார் கூறுகையில், “அவன் மற்ற சிறுவர்களை போலவே வளர்ச்சி அடைந்து வருகிறான். மேலும் அவன் பெரியவன் ஆனதும், அவனைப் பற்றி சொல்வதற்கு ஒரு அருமையான கதை அவனிடம் இருக்கும்” என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>2 தொகுதிகளில் இடைத்தேர்தல்- திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/by-elections-in-two-constituencies-dmk-candidates-announced</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/by-elections-in-two-constituencies-dmk-candidates-announced#comments</comments><guid isPermaLink="false">e6a7695e-4197-44b1-b8ce-3ae3891595a5</guid><pubDate>Wed, 09 Sep 2026 07:38:29 +0000</pubDate><atom:updated>2026-09-09T07:38:29.966Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,by election,வேட்புமனு தாக்கல்,DMK Candidates,இடைத்தேர்தல்,திமுக வேட்பாளர்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/is5rlcv0/DMK.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DMK Candidates]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/is5rlcv0/DMK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>ராஜினாமா</h2><p>மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிக்கு அடுத்த மாதம் 6-ந்தேதி <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D" rel="nofollow">இடைத்தேர்தல்</a> நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் கடந்த மே மாதம் 25-ந்தேதி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்துவிட்டார். </p><p>இதேபோல் தாராபுரம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த சத்தியபாமாவும் தனது எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தார்.</p><p>அ.தி.மு.க. வெற்றி பெற்ற இந்த இரு தொகுதிகளிலும் தி.மு.க. கணிசமான வாக்குகளை பெற்றிருந்தது. அதனால் இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டியிடுவது பற்றி இன்று முடிவு எடுக்கப்பட்டது.</p><h2>விரிவான ஆலோசனை</h2><p>இதற்காக காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் சுந்தர், அதே போல் திருப்பூர் மாவட்டக் கழக செயலாளர் இள பத்மநாபன், முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் மற்றும் தொகுதி பிரதிநிதிகளுடன் தி.மு.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-consult-with-2-constituency-district-secretaries" rel="nofollow">மு.க.ஸ்டாலின்</a> அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினர்.</p><p>2 தொகுதி இடைத்தேர்தலில் மும்முனை போட்டி நிலவும் என்பதால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது பற்றி விரிவான ஆலோசனை நடத்தினார்.</p><p>இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி உள்ளதால் வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்பது பற்றியும் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.</p><h2>திமுக வேட்பாளர்கள்</h2><p>இந்நிலையில், வரும் இடைத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் பரந்தாமன், தாராபுரம் தொகுதியில் சுகன்யா போட்டியிடுவதாக திமுக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மதுராந்தகம் தொகுதி இடைத்தர்தலில் திமுக சட்டத்துறை இணைச்செயலாளர் பரந்தாமன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளார்.</p><p>தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் வழக்கறிஞர் சுகன்யா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திருச்செந்தூர் கோவில் ஆவணித்திருவிழா தேரோட்டம் - வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்</title><link>https://www.maalaimalar.com/spirituality/tiruchendur-temple-avani-therottam</link><comments>https://www.maalaimalar.com/spirituality/tiruchendur-temple-avani-therottam#comments</comments><guid isPermaLink="false">fee92be5-7ccd-4059-852d-942ca380773b</guid><pubDate>Wed, 09 Sep 2026 07:36:07 +0000</pubDate><atom:updated>2026-09-09T07:36:07.435Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,வழிபாடு,Tiruchendur Temple,திருச்செந்தூர் கோவில்,worship,avani therottam,ஆவணித்திருவிழா தேரோட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/9ce1xqbb/tiruchendur.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tiruchendur temple avani therottam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/9ce1xqbb/tiruchendur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் எழுப்பி தேரை இழுத்து வழிபட்டனர்.</p> <h2>திருச்செந்தூர் கோவில்</h2><p>திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித்திருவிழா கடந்த 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது</p><h2>பச்சை சாத்தி</h2><p>விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 5-ம்திருவிழா அன்று குடவருவாயில் தீபாராதனையும், 7-ம் திருவிழா காலையில் சுவாமி சண்முகர் வெட்டிவேர் சப்பரத்திலும், மாலையில் சிகப்பு சாத்தி கோலத்தில் சிவன் அம்சமாக எழுந்தருளி ரத வீதிகளில் வீதியுலா வந்து மேலக்கோவில் சேர்தல் நடந்தது.</p> <p>8-ம் திருவிழாவான நேற்று முன்தினம் காலை வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் பிரம்மன் அம்சமாக சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி வீதியுலா வந்து மேலக்கோவில் சேர்தல் நடந்தது. தொடர்ந்து அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்று, பகல் 12 மணிக்கு பச்சைக் கடைசல் சப்பரத்தில் சுவாமி சண்முகர் விஷ்ணு அம்சமாக பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து மேலக்கோவில் சேர்தல் நடந்தது.</p> <h2>தேரோட்டம்</h2><p>விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.</p> <h2>அரோகரா கோஷம்</h2><p>காலை 7.05 மணிக்கு விநாயகர் தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டு 7.30 மணிக்கு நிலையம் வந்து சேர்ந்தது. 7.45 மணிக்கு சுவாமி தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டு 8.45 மணிக்கு நிலையம் வந்து சேர்ந்தது. தொடர்ந்து அம்பாள் தேர் நிலையத்தில் புறப்பட்டு ரதவீதிகள் வழியாக வந்து நிலையம் சேர்ந்தது. தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் எழுப்பி தேரை இழுத்து வழிபட்டனர்.</p> <p>12-ம் திருவிழாவான நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு சுவாமி - அம்பாள் மஞ்சள் நீராட்டு கோலத்தில் ரதவீதிகள் வழியாக வந்து வடக்கு ரத வீதியில் உள்ள 14 ஊர் செங்குந்தர் மண்டகப்படி வந்து அங்கு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்று சுவாமியும்- அம்பாளும் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி ரத வீதிகளில் உலா வந்து மேலக்கோவில் சேர்தல் நடைபெற்று திருவிழா நிறைவு பெறுகிறது.</p><p>தேரோட்டத்தை முன்னிட்டு திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>8-வது ஊதியக் குழு கூட்டம்: 35 லட்சத்துக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு கிடைக்குமா? </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/8th-pay-panel-consultation-over-3-5-million-central-govt-staff-may-benefit</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/8th-pay-panel-consultation-over-3-5-million-central-govt-staff-may-benefit#comments</comments><guid isPermaLink="false">55d6e3ca-197a-472a-9467-cbd5288bf04f</guid><pubDate>Wed, 09 Sep 2026 07:20:17 +0000</pubDate><atom:updated>2026-09-09T07:20:17.332Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,Government employees,8th Pay Commission,Fitment Factor,8-வது ஊதியக் குழு கூட்டம்,ஃபிட்மென்ட் ஃபேக்டர்,ஓய்வூதியதாரர் அமைப்புகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/ti1fwn4g/ff.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 8th Pay Commission ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/ti1fwn4g/ff.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, 2026 மார்ச் 1 நிலவரப்படி இந்தியாவில் சுமார் 35.77 லட்சம் சிவில் மத்திய அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். </p><p>மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பள உயர்வு, படிகள் மற்றும் ஓய்வூதிய மாற்றங்கள் குறித்த ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட 8-வது மத்திய ஊதியக் குழுவின் மாநில அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் சென்னையில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. </p><h2>சென்னையி<strong>ல் நடந்த க</strong>லந்தாய்வு கூட்டம்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/national/bank-employees-nationwide-strike-on-11th-demanding-five-day-workweek-and-various-demands">மத்திய அரசு ஊழியர் சங்கங்கள்</a>, ஓய்வூதியதாரர் அமைப்புகள், ரெயில்வே மற்றும் பாதுகாப்புத் துறைப் பிரதிநிதிகளுடனான இரண்டு நாள் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டத்தை 8-வது ஊதியக் குழு சென்னையில் நடத்தியது. நேற்று (செப்டம்பர் 7) மற்றும் நேற்று முன்தினம் (செப்டம்பர் 8)  நடந்த இக்கூட்டத்தில், ஊழியர் அமைப்புகள் தங்களது கோரிக்கைகள், ஊதிய முரண்பாடுகள் மற்றும் அகவிலைப்படி சீரமைப்பு குறித்த கருத்துகளைக் குழுவிடம் நேரடியாக அளித்தன. சென்னை கூட்டத்தைத் தொடர்ந்து, செப்டம்பர் 9 அன்று புதுச்சேரியிலும் இந்த ஆலோசனைக் கூட்டம் தொடர்கிறது.</p><h2>எத்தனை பேர் பயன் <strong>அடைவார்</strong>கள்</h2><p>மத்திய அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ் தகவல்களின்படி, 2026 மார்ச் 1 நிலவரப்படி இந்தியாவில் சுமார் 35.77 லட்சம் சிவில் மத்திய அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அதேபோல், பாதுகாப்புத் துறையைத் தவிர்த்து 2025 டிசம்பர் 31 நிலவரப்படி சுமார் 33.76 லட்சம் ஓய்வூதியதாரர்களும் குடும்ப ஓய்வூதியதாரர்களும் உள்ளனர். இந்த ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வரும்போது, ஓய்வூதியதாரர்கள் மற்றும் பணியாளர்கள் என ஒட்டுமொத்தமாக ஒரு கோடிக்கும் அதிகமானோர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>ஊதிய உ<strong>யர்வு நில</strong>வரம்</h2><p>ஊழியர்கள் மத்தியில் 8-வது ஊதியக் குழுவின் ‘ஃபிட்மென்ட் ஃபேக்டர்’ எவ்வளவு இருக்கும் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 6-வது ஊதியக் குழுவில் 1.86 ஆகவும், 7-வது ஊதியக் குழுவில் 2.57 ஆகவும் இருந்த இந்த காரணி, 8-வது ஊதியக் குழுவில் மேலும் அதிகரிக்கக்கூடும் என ஊகங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், மத்திய அரசோ அல்லது ஊதியக் குழுவோ இதுகுறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ முடிவையோ அல்லது இறுதியான ஊதிய உயர்வு அளவையோ அறிவிக்கவில்லை. எனவே, இணையதளங்களில் உலா வரும் அதிகாரப்பூர்வமற்ற எண்களை ஊழியர்கள் நம்ப வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p>மத்திய அரசால் 2025 நவம்பர் 3 அன்று அமைக்கப்பட்ட இந்த 8-வது ஊதியக் குழுவிற்கு, தனது இறுதி பரிந்துரை அறிக்கையைச் சமர்ப்பிக்க 18 மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2027 ஆம் ஆண்டு மே அல்லது ஜூன் மாதத்திற்குள் இக்குழு தனது பரிந்துரைகளை அரசிடம் வழங்கிவிடும் எனக் கருதப்படுகிறது. அரசாங்கம் அறிக்கையைப் பரிசீலித்து இறுதி முடிவெடுத்த பின்னரே புதிய ஊதியக் கட்டமைப்பு அமலுக்கு வரும் தேதியும் அரியர்ஸ் விவரங்களும் அதிகாரப்பூர்வமாகத் தெரியவரும்.</p>]]></content:encoded></item><item><title>ஆப்பிளின் பிரம்மாண்ட &apos;Surprise and Shine&apos; விழா இன்று:  Foldable iPhone Ultra, iPhone 18 Pro max, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் வெளியீடு</title><link>https://www.maalaimalar.com/technology/apple-surprise-and-shine-today-foldable-iphone-ultra-and-iphone-18-pro-max-launch</link><comments>https://www.maalaimalar.com/technology/apple-surprise-and-shine-today-foldable-iphone-ultra-and-iphone-18-pro-max-launch#comments</comments><guid isPermaLink="false">74306768-302a-4c94-834d-17d063cb80e3</guid><pubDate>Wed, 09 Sep 2026 06:56:15 +0000</pubDate><atom:updated>2026-09-09T06:56:15.661Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஐபோன் 18 ப்ரோ,ஆப்பிள் நிறுவனம்,Foldable iPhone Ultra,Surprise and Shine,John Ternus,iPhone 18 Pro max,சர்ப்ரைஸ் அண்ட் ஷைன்,ஐபோன் 18</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/c65lsl8n/iphob.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Foldable iPhone Ultra]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/c65lsl8n/iphob.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தொழில்நுட்பம் (Technology)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆப்பிளின் புதிய தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள ஜான் டர்னஸ் தலைமையேற்று நடத்தும் முதல் முக்கிய ஆப்பிள் நிகழ்வு இது.</p><p>தொழில்நுட்ப உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் பிரம்மாண்ட “<a href="https://www.maalaimalar.com/technology/newgadgets/xiaomi-18-fold-launched-with-200mp-camera-price-features">சர்ப்ரைஸ் அண்ட் ஷைன்</a>” நேரலை நிகழ்வு இன்று நடைபெறுகிறது. கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் பார்க் தலைமையகத்தில் நடைபெறும் இந்த நிகழ்வில், ஐபோன் 18 வரிசை போன்கள் மற்றும் ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் மாடல் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிளின் புதிய தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள ஜான் டர்னஸ் தலைமையேற்று நடத்தும் முதல் முக்கிய ஆப்பிள் நிகழ்வு இது என்பதால், உலகெங்கிலும் உள்ள தொழில்நுட்ப விரும்பிகளிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.</p><p>இந்திய நேரப்படி இன்று இரவு 10:30 மணிக்கு இந்த பிரம்மாண்ட நிகழ்வு தொடங்குகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம், ஆப்பிள் டிவி ஆப் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் வழியாக பயனர்கள் இந்த நிகழ்வை நேரலையாகக் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p><h2>ஆப்<strong>பிளின் முதல் Fold</strong>able iPhone Ultra</h2><p>இந்த நிகழ்வின் மிக முக்கியமான சிறப்பம்சமாக ஆப்பிள் அறிமுகப்படுத்தவுள்ள முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 'ஐபோன் அல்ட்ரா' இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புத்தக வடிவில் மடிக்கும் அமைப்பைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், விரிக்கும் போது 7.8 இன்ச் ஓஎல்இடி திரை கொண்டதாகவும், வெளிப்புறத்தில் 5.4 முதல் 5.5 இன்ச் வரையிலான கவர் திரையைக் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. டைட்டானியம் சட்டகத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த போன், விரிந்த நிலையில் 4.5 மிமீ தடிமனும், மடிந்த நிலையில் 9 மிமீ தடிமனும் கொண்டிருக்கும்.</p><p>இதில் முக அங்கீகாரத்திற்கு (Face ID) பதிலாக, பவர் பட்டனில் கைரேகை சென்சார் (Touch ID) வழங்கப்பட வாய்ப்புள்ளது. மேலும், இதில் 2 நானோமீட்டர் தொழில்நுட்பத்தில் உருவான ஏ20 புரோ சிப்செட், 12ஜிபி ரேம், 48 மெகாபிக்சல் இரட்டை கேமராக்கள் மற்றும் 4,900mAh முதல் 5,800mAh வரையிலான பேட்டரி திறன் இடம்பெறலாம். சந்தையில் இதன் ஆரம்ப விலை $1,999 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,90,000) முதல் $2,299 வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>ஐபோன் 1<strong>8 புரோ மற்றும்</strong> 18 புரோ மேக்ஸ்</h2><p>ஐபோன் 18 புரோ மாடல் 6.3 இன்ச் திரையுடனும், ஐபோன் 18 புரோ மேக்ஸ் மாடல் 6.9 இன்ச் திரையுடனும் வெளிவரவுள்ளன. இவை இரண்டிலும் மிக அதிநவீன ஏ20 புரோ 2என்எம் சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஐபோன் 18 புரோவின் முதன்மை கேமராவில் ஒளியின் அளவிற்கு ஏற்ப மாற்றி அமைக்கும் 'வேரியபிள் அபெர்ச்சர்' தொழில்நுட்பம் சேர்க்கப்பட்டுள்ளது. </p><p>திரையின் மேல் பகுதியில் உள்ள டைனமிக் ஐலேண்ட் அளவும் 35 சதவீதம் வரை குறைக்கப்படலாம். ஐபோன் 18 புரோ மேக்ஸ் மாடலில் வழக்கத்தை விட பெரிய 5,567mAh பேட்டரி வழங்கப்பட வாய்ப்புள்ளது. ஐபோன் 18 புரோவின் தொடக்க விலை சுமார் ரூ.1,23,000 ($1,299) ஆகவும், புரோ மேக்ஸ் மாடலின் விலை சுமார் ரூ.1,32,000 ($1,399) ஆகவும் நிர்ணயிக்கப்படலாம்.</p><h2>ஆப்பிள் வாட்<strong>ச் சீரிஸ் மற்</strong>றும் ஏர்பாட்ஸ்</h2><p>ஐபோன் மாடல்கள் மட்டுமின்றி, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 12 மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 4 ஆகிய புதிய கடிகார மாடல்களும் இந்த விழாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இதில் புதிய சுகாதார கண்காணிப்பு அம்சங்கள் மற்றும் செராமிக் கேஸ் விருப்பங்கள் சேர்க்கப்படலாம். அத்துடன், இதய துடிப்பைக் கண்காணிக்கும் திறன் கொண்ட புதிய ஏர்பாட்ஸ் 5 சாதனமும், ஸ்மார்ட் ஹோம் பயன்பாட்டிற்கான புதிய ஆப்பிள் டிவி 4கே மற்றும் ஹோம் பாட் மினி சாதனங்களும் அறிமுகமாக வாய்ப்புள்ளது.</p><h2>27 மென்<strong>பொருள் புதுப்பி</strong>ப்பு</h2><p>மடிக்கக்கூடிய ஐபோன்களுக்கு ஏற்ற மல்டிடாஸ்கிங் மற்றும் பிரத்யேக மென்பொருள் அமைப்புகளுடன் கூடிய ஐஓஎஸ் 27 (iOS 27) அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதியை ஆப்பிள் அறிவிக்கும். இந்த புதிய சாதனங்களுக்கான முன்பதிவு செப்டம்பர் 12 அன்று தொடங்கி, செப்டம்பர் 18 முதல் நேரடி விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் முதல் கட்டத்திலேயே ஐபோன் 18 புரோ மாடல்கள் விற்பனைக்கு வரவுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>ஒகேனக்கல்லில் 24 நாட்களுக்கு பிறகு பரிசல் இயக்க அனுமதி - சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/hogenakkal-boat-operate-after-24-days</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/hogenakkal-boat-operate-after-24-days#comments</comments><guid isPermaLink="false">c288bf01-0509-4c76-b71a-75ae4c8dc64e</guid><pubDate>Wed, 09 Sep 2026 06:44:15 +0000</pubDate><atom:updated>2026-09-09T06:44:15.198Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,Mettur Dam,Hogenakkal,boat service,பரிசல் இயக்கம்,ஒகேனக்கல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/22dx8e5f/hogenakkal.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Hogenakkal]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/22dx8e5f/hogenakkal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஒகேனக்கல்லில் 24 நாட்களுக்கு பிறகு பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து பரிசல் ஓட்டிகள் பரிசல்களை இயக்கத் தொடங்கினர்.</p><p>கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரிநீர் காரணமாக நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணை நீர்மட்டம் 92 அடியை தாண்டியது. இதையடுத்து கடந்த 1-ந் தேதி முதல் காவிரி டெல்டா பாசனத்துக்கும், நேற்று முன்தினம் மதியம் முதல் கிழக்கு, மேற்கு கால்வாய் கரையோர மக்களுக்கு குடிநீர் தேவைக்காகவும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.</p> <h2>பரிசல் இயக்க அனுமதி</h2><p>நீர்வரத்து குறைந்ததை தொடர்ந்து <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%92%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D">ஒகேனக்கல்லில்</a> மீண்டும் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. கடந்த 24 நாட்களுக்கு பிறகு பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து பரிசல் ஓட்டிகள் பரிசல்களை இயக்கத் தொடங்கினர். நீண்ட நாட்களுக்குப் பிறகு பரிசல் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு கிடைத்ததால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் பரிசலில் பயணம் செய்தனர். இதனால் ஒகேனக்கல் சுற்றுலாத்தளத்தில் மீண்டும் பரிசல் பயணம் களைகட்டத் தொடங்கியுள்ளது.</p> <h2>மேட்டூர் அணை </h2><p>மேலும் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து சரிய தொடங்கியது. அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் திறக்கப்பட்டு வருவதால் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%20">மேட்டூர் அணையின்</a> நீர்மட்டம் குறைந்து வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 91.50 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4822 கனஅடியாக குறைந்து வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து குடிநீர், பாசனத்துக்கு வினாடிக்கு 12ஆயிரத்து 400 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 54.38 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>5 நாள் வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் 11-ம்தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம்</title><link>https://www.maalaimalar.com/news/national/bank-employees-nationwide-strike-on-11th-demanding-five-day-workweek-and-various-demands</link><comments>https://www.maalaimalar.com/news/national/bank-employees-nationwide-strike-on-11th-demanding-five-day-workweek-and-various-demands#comments</comments><guid isPermaLink="false">e98000c2-3b38-4ec3-be7b-2e64b573e360</guid><pubDate>Wed, 09 Sep 2026 06:31:21 +0000</pubDate><atom:updated>2026-09-09T06:31:21.979Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வங்கி ஊழியர்கள்,Bank employees,Bank Employees Strike,வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்,Indian Banks&apos; Association,National Pension System</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/d0uobwc2/bank.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bank employees strike  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/d0uobwc2/bank.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>செப்டம்பர் 11 வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து, கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. </p><p>வங்கிகளின் கூட்டமைப்பான 'யுனைடெட் போரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ்' (UFBU), வாரத்தில் 5 நாட்கள் வேலை மற்றும் ஊதிய சீரமைப்பு உள்ளிட்ட நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி செப்டம்பர் 11-ம் தேதி நாடு தழுவிய ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. தொழிலாளர் நலத்துறை மற்றும் இந்திய வங்கிகள் சங்கத்துடன் நடைபெற்ற சமரசப் பேச்சுகளி‌ல் உடன்பாடு எட்டப்படாததால் போராட்டத்தை திட்டமிட்டபடி நடத்த வங்கி ஊழியர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.</p><h2>5 நாள் வ<strong>ங்கி வேலைத்திட்டம்</strong></h2><p>திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 40 நிமிடங்கள் கூடுதல் நேரம் பணியாற்றுவதற்கு ஊழியர்கள் ஒப்புக்கொண்ட நிலைகளிலும், அனைத்து சனிக்கிழமைகளுக்கும் விடுமுறை அளிக்கும் 5 நாள் <a href="https://www.maalaimalar.com/news/national/andhra-government-appoints-chiranjeevi-daughter-to-key-post">வங்கி வேலை</a> கோரிக்கை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது.</p><h2>ஊக்கத்<strong>தொகை சீர</strong>மைப்பு</h2><p>அனைத்து வங்கி ஊழியர்களுக்கும் சமமான ஊக்கத்தொகை வழங்கும் பழைய முறையை மாற்றி, உயர் அதிகாரிகளுக்கு மட்டும் அதிக ஊக்கத்தொகை அளிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட பாகுபாடான புதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது. பயனாளிகளின் ஓய்வூதியத் தொகையை தற்போதைய விலைவாசிக்கு ஏற்ப உயர்த்துவதுடன், தேசிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.</p><h2>ஊக்க<strong>த்தொகை இடை</strong>நிறுத்தம்</h2><p>வங்கி சங்கங்களின் தொடர் எதிர்ப்பை அடுத்து, பொதுத்துறை வங்கிகளின் உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்படவிருந்த செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மத்திய நிதியமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறை அறிவித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து வரவிருக்கும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ள போதிலும், 5 நாள் வேலை உள்ளிட்ட பிரதான கோரிக்கைகளில் தெளிவான அறிவிப்பு வராததால் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற போரட்டம் அழைப்பு விடுத்த அமைப்புகள் மறுத்துவிட்டன.</p><p>செப்டம்பர் 11 வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து, கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் செப்டம்பர் 28 முதல் 30 வரை தொடர்ந்து 3 நாட்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தமும், அக்டோபர் 26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டமும் நடைபெறும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 11 வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தம் மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் வார இறுதி விடுமுறை நாட்களால், பொதுத்துறை வங்கிகளில் காசோலை பரிவர்த்தனை மற்றும் பணப்பரிமாற்றம் உள்ளிட்ட நேரடி சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஜேசன் சஞ்சய் பேச தொடங்கியதும் TVK... TVK... என அதிர்ந்த அரங்கம்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/when-jason-sanjay-started-speaking-the-hall-shook-with-tvk-tvk</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/when-jason-sanjay-started-speaking-the-hall-shook-with-tvk-tvk#comments</comments><guid isPermaLink="false">b01e6f3d-45a2-41a1-bab4-000d215ef727</guid><pubDate>Wed, 09 Sep 2026 06:30:31 +0000</pubDate><atom:updated>2026-09-09T06:30:31.385Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,jason sanjay,tvk,ஜேசன் சஞ்சய்,சிக்மா,sigma</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/z90kjvc1/sanjay.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஜேசன் சஞ்சய்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஜேசன் சஞ்சய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/z90kjvc1/sanjay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>உங்கள் எல்லோராலும் ‘சிக்மா’ படத்துடன் இணைந்துக் கொள்ள முடியும் என நம்புவதாக ஜேசன் சஞ்சய் தெரிவித்தார்.</strong></em> </p><p>முதலமைச்சர் விஜய் மகன் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AF%8D">ஜேசன் சஞ்சய்</a> இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் படம் ‘சிக்மா’. படத்தில் கதாநாயகனாக சந்தீப் கிஷன் நடித்துள்ளார். வருகிற அக்டோபர் 2-ந்தேதி படம் திரைக்கு வருகிறது. இதையொட்டி படத்தின் முன்னோட்ட விழா சேலத்தில் நடந்தது. விழாவில் ஜேசன் சஞ்சய் பேசியதாவது:-</p><p>முதலில் என் குடும்பத்துக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். (இவ்வாறு அவர் கூறியதும் கூட்டத்தில் இருந்து டி.வி.கே., டி.வி.கே என சப்தம் எழுந்தது.) இதை கேட்டதும் ஜேசன் சஞ்சய் கட்டை விரலை உயர்த்தி காட்டினார். சிக்மா நான் டைரக்‌ஷன் பண்ணிய முதல் படம் அக்டோபர் 2-ந்தேதி திரைக்கு வருகிறது. நம் எல்லோருக்கும் சிக்மா ‘மூவ்மென்ட்’ இருந்திருக்கும். </p><p>அதாவது பெரிய கஷ்டத்தில் விழுந்திருப்போம். அப்போது நாம் எடுத்த ஒரு முடிவினால் அதில் இருந்து எப்படியாவது எழுந்து வந்து நம் மொத்த வாழ்க்கையும் மாறி இருக்கும். அப்படிப்பட்ட சராசரி மனிதனின் வாழ்க்கையில் நடப்பதுதான் இந்த ‘<a href="https://www.maalaimalar.com/topic/சிக்மா">சிக்மா</a>’. உங்கள் எல்லோராலும் இந்த படத்துடன் இணைந்துக் கொள்ள முடியும் என நான் நம்புகிறேன்.</p><p>தொடர்ந்து அவரிடம் தொகுப்பாளர் கேட்ட கேள்விகளுக்கு ஜேசன் சஞ்சய் அளித்த பதில்கள் வருமாறு:-</p><p>நீங்கள் தியேட்டரில் பார்த்த முதல் படம்?</p><p>‘திருமலை’ படம். அப்போ எனக்கு 3 வயது.</p><p>டைரக்டர் ஆக வேண்டும் என தோன்ற வைத்த படம்?</p><p>‘சிட்டி ஆப் கார்ட்’ என்ற படம்தான் என்னை ரொம்ப இன்ஸ்பயர் பண்ணியது.</p><p> முதல் முதலில் அதிகாரப்பூர்வமாக டைரக்டர் ஆகி விட்டேன் என்று யாரிடம் சொன்னீர்கள்?</p><p>எங்கள் அம்மாவிடம் சொன்னேன். அம்மாவுக்கு பெரிய சந்தோஷம்.</p><p>கல்லூரியில் 60 சதவீதம் அட்டெண்டன்ஸ் இருந்தால் டீச்சரை எப்படி சமாளிப்பீர்கள்?</p><p>60 சதவீதம் அட்டென்டன்ஸ் கம்மியா? எனக்கு தெரிந்து இல்லை. நான் 40 தாண்ட மாட்டேன் என்று நினைக்கிறேன். நீங்க யாரும் இதை பாலோ பண்ண வேண்டாம் (மாணவர்களை நோக்கி).</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>இன்ஸ்டாவில் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம் விளம்பரங்கள்- மெட்டாவுக்கு சம்மன்</title><link>https://www.maalaimalar.com/news/national/instagram-child-sexual-abuse-ads-meta-summoned</link><comments>https://www.maalaimalar.com/news/national/instagram-child-sexual-abuse-ads-meta-summoned#comments</comments><guid isPermaLink="false">f6c50ab0-324d-4882-9d21-1584e9c7469a</guid><pubDate>Wed, 09 Sep 2026 06:26:42 +0000</pubDate><atom:updated>2026-09-09T06:26:42.056Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Instagram,Meta,Child abuse,பாலியல் துஷ்பிரயோகம்,இன்ஸ்டாகிராம்,மெட்டா சம்மன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/gv30dbmc/insta.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ META CEO (INDIA)]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/gv30dbmc/insta.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மெட்டா இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவர் இன்று (புதன்கிழமை) நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.</p><p>இன்ஸ்டாகிராம் தளத்தில் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்தை உள்ளடக்கியதாக கூறப்படும் விளம்பரங்கள் தொடர்பாக மெட்டா நிறுவனத்திடம் விளக்கம் பெறுமாறு மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%8D" rel="nofollow">அஸ்வினி வைஷ்ணவ்</a> அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.</p><p>இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக மெட்டா நிறுவனத்திடம் ஆணையம் விளக்கம் கேட்டிருந்தது.</p><p>இந்த விவகாரத்தில் மெட்டா இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவர் இன்று (புதன்கிழமை) நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.</p><p>ஆன்லைன் தளங்கள் மூலம் குழந்தைகள் பாலியல் சுரண்டல் தொடர்பான உள்ளடக்கங்கள் கிடைப்பதாகவும், அவை விளம்பரப்படுத்தப்படுவதாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய அரசு ஏற்கனவே மெட்டா நிறுவனத்திடம் விளக்கம் கோரியது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் - வேட்பு மனு தாக்கல் தொடங்கியது
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-constituency-by-elections-nomination-filing-begins</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-constituency-by-elections-nomination-filing-begins#comments</comments><guid isPermaLink="false">61a4fd50-a9ee-46af-a4cb-51b3bffcdf1f</guid><pubDate>Wed, 09 Sep 2026 06:19:44 +0000</pubDate><atom:updated>2026-09-09T06:19:44.184Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>by election,dharapuram,தாராபுரம்,Maduranthakam,மதுராந்தகம்,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/53cu51d1/petition.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/53cu51d1/petition.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. </p> <h2>தாராபுரம் தொகுதி</h2><p>தமிழக சட்டசபைக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தேர்தல் நடந்தது. இதில், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சத்தியபாமா வெற்றி பெற்றார். ஆனால் அவர், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, அந்த தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. தாராபுரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.</p>  <h2>வேட்பு மனு தாக்கல்</h2><p>மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந்தேதி <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">இடைத்தேர்தல்</a> நடைபெற உள்ளது. </p><p>இந்நிலையில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. தினமும் காலை 11 மணிக்கு தொடங்கி 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.</p> <p>இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் வருகிற 16-ந்தேதி வரை நடைபெறுகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 17-ந்தேதி நடைபெறும். வேட்புமனுக்களை திரும்ப பெற 19-ந்தேதி கடைசி நாள் ஆகும். அக்டோபர் 6-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும். அக்டோபர் 9-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.</p> <h2>தேர்தல் நடத்தை விதிகள் அமல்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/maduranthakam-constituency-facing-a-by-election-for-the-first-time">மதுராந்தகம்</a> மற்றும் தாராபுரம் தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும். </p><p>தாராபுரம் (தனி) தொகுதி இடைத்தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் நடத்தும் அதிகாரியும், ஆர்.டி.ஓ.வுமான பெலிக்ஸ்ராஜா தலைமையிலான அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.</p> <h2>கட்டுப்பாட்டு அறை</h2><p>மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான புகார்கள் தொலைபேசி வாயிலாக பெறப்பட்டு, அவற்றின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை 1950, 1800-425-7088, 044-27427412 ஆகிய தொலைபேசி எண்களில் எந்த நேரமும் தெரிவிக்கலாம்.</p> <h2>தேர்தல் ஆணையம்</h2><p>தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், அரசு மற்றும் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள், விளம்பர பதாகைகள் உள்ளிட்டவற்றை அகற்றப்பட்டு வருகின்றன.</p><p>மேலும், வேட்பாளர்கள் அல்லது அரசியல் கட்சிகள் பிரசார கூட்டங்கள் நடத்துதல், ஒலிபெருக்கி பயன்படுத்துதல், வாகன ஊர்வலம் நடத்துதல், தற்காலிக கட்சி அலுவலகம் அமைத்தல் உள்ளிட்டவற்றுக்கு தேர்தல் ஆணையத்தின் இணையதள செயலி மூலம் விண்ணப்பித்து முன் அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p> <p>வேட்பு மனு தாக்கல் தொடங்கி உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்ய தீவிரமாகி உள்ளன.</p><p>மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் எம்எல்ஏ கணிதா சம்பத் விருப்ப மனு தாக்கல் செய்தார்.</p> ]]></content:encoded></item><item><title>மதுராந்தகம்-தாராபுரம் இடைத்தேர்தல்: 2 தொகுதி மாவட்ட செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-consult-with-2-constituency-district-secretaries</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-consult-with-2-constituency-district-secretaries#comments</comments><guid isPermaLink="false">dc53b8fb-6550-4993-abb9-b36be2feed16</guid><pubDate>Wed, 09 Sep 2026 06:15:56 +0000</pubDate><atom:updated>2026-09-09T06:15:56.738Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,by election,dharapuram,தாராபுரம்,Maduranthakam,மதுராந்தகம்,முக ஸ்டாலின்,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/evc2fb7o/MKStalin002.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/evc2fb7o/MKStalin002.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டியிடுவது குறித்து 2 தொகுதி மாவட்டச் செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.</strong></em></p><h2><strong>ராஜினாமா</strong></h2><p>மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிக்கு அடுத்த மாதம் 6-ந்தேதி <a href="https://www.maalaimalar.com/topic/இடைத்தேர்தல்">இடைத்தேர்தல்</a> நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் கடந்த மே மாதம் 25-ந்தேதி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்துவிட்டார். இதே போல் தாராபுரம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த சத்தியபாமாவும் தனது எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில்  இணைந்தார்.</p><p>அ.தி.மு.க. வெற்றி பெற்ற இந்த இரு தொகுதிகளிலும் தி.மு.க. கணிசமான வாக்குகளை பெற்றிருந்தது. அதனால் இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டியிடுவது பற்றி இன்று முடிவு எடுக்கப்படுகிறது.</p><h2><strong>விரிவான ஆலோசனை</strong></h2><p>இதற்காக காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் சுந்தர், அதே போல் திருப்பூர் மாவட்டக் கழக செயலாளர் இள பத்மநாபன், முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் மற்றும் தொகுதி பிரதிநிதிகளுடன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினர். 2 தொகுதி இடைத்தேர்தலில் மும்முனை போட்டி நிலவும் என்பதால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது பற்றி விரிவான ஆலோசனை நடத்தினார்.</p><p>இந்த தேர்தலில் த.வெ.க., அ.தி.மு.க.வை எதிர்த்து களம் காண வேண்டி இருப்பதால் தேர்தல் வியூகத்துக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி மாவட்டச் செயலாளர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.</p><p>இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி உள்ளதால் வேட்பாளராக  யாரை நிறுத்தலாம் என்பது பற்றியும் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.</p>]]></content:encoded></item><item><title>ஆந்திர அரசாங்கத்தில் நடிகர் சிரஞ்சீவியின் மகளுக்கு கிடைத்த உயரிய பொறுப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/andhra-government-appoints-chiranjeevi-daughter-to-key-post</link><comments>https://www.maalaimalar.com/news/national/andhra-government-appoints-chiranjeevi-daughter-to-key-post#comments</comments><guid isPermaLink="false">3c0b926b-f86d-4334-878e-f80c532901cd</guid><pubDate>Wed, 09 Sep 2026 05:55:22 +0000</pubDate><atom:updated>2026-09-09T05:55:22.234Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பவன் கல்யாண்,Chiranjeevi,ஆந்திர அரசு,நடிகர் சிரஞ்சீவி,ChandraBabu Naidu,Andhra Government,Konidela Sushmita,கொனிடெலா சுஷ்மிதா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/bu57lmrj/cheeran.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chiranjeevi-Konidela Sushmita ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/bu57lmrj/cheeran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரபல திரைப்பட நடிகரும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமுமான சிரஞ்சீவியின் மகளும் திரைப்பட தயாரிப்பாளருமான கொனிடெலா சுஷ்மிதாவுக்கு ஆந்திரப் பிரதேச அரசு முக்கியமான புதிய பொறுப்பு ஒன்றை வழங்கியுள்ளது.</p><p>விஜயவாடா இந்திரகீலாத்ரி மலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஸ்ரீ துர்கா மல்லேஸ்வர சுவாமி வர்லா தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழுவில் சிறப்பு அழைப்பாளராக சுஷ்மிதா நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக ஆந்திர மாநில தேவாலய மற்றும் அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர் கே.கன்ன பாபு இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை பிறப்பித்துள்ளார்.</p><p>இந்த நியமனத்தின் மூலம் தேவஸ்தானத்தின் மேம்பாட்டுப் பணிகளிலும், பக்தர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும் சுஷ்மிதா முக்கியப் பங்கு வகிப்பார். மேலும், கோயில் அறங்காவலர் குழுவிற்கும் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கும் தனது அனுபவத்தின் அடிப்படையில் ஆலோசனைகளை வழங்குவார். தொடர்ந்து, நவராத்திரி மற்றும் முக்கிய திருவிழாக்கள், ஜாத்திரை காலங்களில் கோயிலின் நிர்வாக நடவடிக்கைகளுக்குத் தேவையான முழு ஒத்துழைப்பையும் வழங்கி உதவுவார்.</p><h2><strong>நன்றி தெரிவித்த </strong>சு<strong>ஷ்மிதா</strong></h2><p>தனக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள சுஷ்மிதா, முதல்வர் <a href="https://www.maalaimalar.com/news/national/rajnath-singh-said-sri-lanka-a-close-friend-india-stands-by-it">என்.சந்திரபாபு நாயுடு</a> மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் ஆனம் ராம்நாராயண ரெட்டி ஆகியோருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். கனக துர்க்கை அம்மனின் சேவையில் மிகுந்த பக்தியுடனும் நேர்மையுடனும் பணியாற்றுவேன் என அவர் உறுதி அளித்துள்ளார்.</p><h2>சிரஞ்<strong>சீவி குடும்பத்தி</strong>ன் ஆதிக்கம்</h2><p>சிரஞ்சீவி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் திரைப்படத் துறை மட்டுமன்றி தெலுங்கு மாநிலங்களின் ஆன்மீக மற்றும் அரசியல் தளங்களிலும் தீவிரமாக இயங்கி வருகின்றனர். சிரஞ்சீவியின் சகோதரர் பவன் கல்யாண் ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வராகப் பதவி வகித்து வருகிறார். மற்றொரு சகோதரர் நாகபாபு சட்ட மேலவை உறுப்பினராக உள்ளார். </p><p>சிரஞ்சீவியின் மனைவி சுரேகா கொனிடெலா, சமீபத்தில் தெலங்கானாவில் உள்ள புகழ்பெற்ற யாதகிரி குட்டா லக்ஷ்மி நரசிம்ம சுவாமி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். திரைத்துறையில் ஆடை வடிவமைப்பாளராகவும் தயாரிப்பாளராகவும் வெற்றி நடைபோடும் சுஷ்மிதா கொனிடெலா, தற்போது ஆந்திர அரசு வழங்கியுள்ள இந்த ஆன்மீகப் பொறுப்பின் மூலம் பொதுவாழ்விலும் தனது புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அமேசானில் மாதத்திற்கு சுமார் ரூ.4 லட்சம் சம்பளத்தை உதறிவிட்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்த பொறியாளர்</title><link>https://www.maalaimalar.com/news/national/engineer-quits-rs-4-lakh-amazon-job-joins-indian-army</link><comments>https://www.maalaimalar.com/news/national/engineer-quits-rs-4-lakh-amazon-job-joins-indian-army#comments</comments><guid isPermaLink="false">1fa84c6d-77af-4b5e-90fd-6b1d8c43f531</guid><pubDate>Wed, 09 Sep 2026 05:46:55 +0000</pubDate><atom:updated>2026-09-09T05:46:55.731Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமேசான்,Amazon,software engineer,Indian Army officer,இந்திய ராணுவ அதிகாரி,பொறியாளர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/v7j8s2uk/Untitled-design-41.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Engineer Tiwari joined Indian Army]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/v7j8s2uk/Untitled-design-41.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 27 வயதான சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர், அமேசான் நிறுவனத்தில் மாதம் சுமார் 4 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்கி கொண்டிருந்த நிலையில், தற்போது அந்த வேலையை விட்டுவிட்டு இந்திய ராணுவ பணியில் சேர்ந்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">உத்தரப் பிரதேசம்</a> மாநிலம் லக்னோவை பூர்வீகமாக கொண்ட 27 வயதான திவாரி தனது பள்ளிப்படிப்பை கேந்திரியா வித்யாலயாவில் முடித்துவிட்டு, பின்னர் சண்டிகரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். </p><p>இதையடுத்து வருடத்திற்கு சுமார் 46 லட்சம் ரூபாய் சம்பளத்தில் அமேசான் கிளவுட் நிறுவனத்தில் அவர் பொறியாளராக பணியில் சேர்ந்தார். </p><h3><strong>திவாரியின் தந்தை</strong></h3><p>திவாரியின் தந்தையான ராஜ் குமார் திவாரி, <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D">இந்திய ராணுவத்தில்</a> 36 ஆண்டுகள் பணியாற்றினார். சிறுவயதில் இருந்தே தனது தந்தையை பார்த்து வளர்ந்த திவாரிக்கு, ஆயுத படையில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.</p><p>திவாரியை பொறுத்தவரை அதிக வருமான தரும் ஒரு பணியை விட, ஒழுக்கம், தியாகம் மற்றும் சேவை ஆகியவற்றில் ஈடுபடும் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணமே அதிகாக இருந்துள்ளது.</p><p>இதன்காரணமாக இவர் தனது பொறியாளர் வேலையை விட்டுவிட்டு, விண்வெளி துறையின் முன்னணி நிறுவனமான ஏர்பஸ்ஸால்-இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.</p><p>இருப்பினும் இந்திய ராணுவத்திற்கு அதிகாரியாக சேர்வதற்காக, திவாரி மேற்கொண்ட முயற்சிகள் முதலில் தோல்வியடைந்தன.</p><h3>பீகார் அதிகாரிகள் பயிற்சி மையம்</h3><p>இறுதியில் பீகார் மாநிலம் கயாவில் உள்ள அதிகாரிகள் பயிற்சி மையத்தில், திவாரி ராணுவ அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, மூத்த துணை அதிகாரியாக பணி நியமனம் செய்யப்பட்டார்.</p><p>திவாரியை பொறுத்தவரையில் வெற்றி என்பது எப்போதுமே சம்பளத்தின் அளவை கொண்டு அளவிடப்படாமல், உண்மையிலேயே தனது மனது விரும்பும் ஒன்றை துரத்திச் செல்வதில் தான் இருக்கிறது என்பதை உணர்த்துவதாக உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தள்ளிப்போகிறதா... தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்?- அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thaaimaman-thanga-modhiram-scheme-delay-arun-raj-explanation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thaaimaman-thanga-modhiram-scheme-delay-arun-raj-explanation#comments</comments><guid isPermaLink="false">aefec534-103e-4254-a579-d45785989d3f</guid><pubDate>Wed, 09 Sep 2026 05:34:43 +0000</pubDate><atom:updated>2026-09-09T05:34:43.794Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,Minister Arunraj,TN Goldring scheme</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/bpypvbrt/AR.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Arunraj]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/bpypvbrt/AR.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குழந்தைகளுக்கு அதிகளவு தேவைப்படுவதால் போன் மாரோ (Bone Marrow) தானம் செய்ய முன்வரவேண்டும் என அமைச்சர் அருண்ராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.</p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88" rel="nofollow">ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை</a>யில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜாவை, அமைச்சர் அருண் ராஜ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.</p><p>இதைதொடர்ந்து, செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- </p><p>எலும்பு மஜ்ஜை தானம்</p><p>குழந்தைகளுக்கு அதிகளவு தேவைப்படுவதால் போன் மாரோ (Bone Marrow) தானம் செய்ய முன்வரவேண்டும் என அமைச்சர் அருண்ராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.</p><p>எலும்பு மஜ்ஜை தானம் செய்ய தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனையிலும் அதற்கான பதிவு தொடங்கப்பட உள்ளது.</p><p>ரத்த தானம், கண் தானம்போல் ஸ்டெம்செல் தானத்திற்கான முன்பதிவும் தொடங்கப்பட உள்ளது.</p><p>தமிழ்நாட்டு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள பிரச்சனை சரி செய்யப்படும், தரம் உயர்த்தப்படும்.</p><h2>தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்</h2><p>தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் வழங்கப்பட உள்ள தங்கத்தில் எவ்வித குறையும் இருக்காது.</p><p>916 தங்கம் தானா? என முறையாக சோதனை செய்த பின்னரே தங்க மோதிரம் திட்டத்திற்கு தங்கம் அனுப்பப்படும்.</p><p>தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் தரப்படும் மோதிரத்தையும் பயனாளர்கள் சோதனை செய்து கொள்ளலாம்.</p><p>தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் வரும் 15ம் தேதி தொடங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.</p><p>முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் காரணமாக தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடங்குவது தள்ளிப்போகிறது.</p><p>ஏற்கனவே நிர்ணயித்த தேதியில் திட்டத்தை தொடங்க முடியவில்லை. இத்திட்டம் தொடங்கும் தேதி குறித்து அதிகாரப்பூர்வமாக பின்னர் அறிவிக்கப்படும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>2030-க்குள் மனித குலம் அழியும்: ஆந்த்ரோபிக் ஆய்வாளர் ராஜினாமா செய்து வெளியிட்ட திடுக்கிடும் தகவல்!</title><link>https://www.maalaimalar.com/news/world/anthropic-researcher-warns-humanity-may-end-by-2030</link><comments>https://www.maalaimalar.com/news/world/anthropic-researcher-warns-humanity-may-end-by-2030#comments</comments><guid isPermaLink="false">9d44d867-a6b8-4ab7-9192-a02e049fdcbd</guid><pubDate>Wed, 09 Sep 2026 05:29:01 +0000</pubDate><atom:updated>2026-09-09T05:29:01.669Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Artificial Intelligence,செயற்கை நுண்ணறிவு,ஆந்த்ரோபிக்,Jacob Coxey,Anthropic researcher,ஜேக்கப் காக்சன்,சூப்பர் இன்டலிஜென்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/0ti08eq3/ai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jacob Coxey]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/0ti08eq3/ai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஓபன்ஏஐ நிறுவனத்தில் இதன் நாகரிக ஆபத்துகள் குறித்து இன்னும் முழுமையான விழிப்புணர்வு ஏற்படவில்லை.</p><p>செயற்கை நுண்ணறிவுத் துறையில் முன்னணி நிறுவனங்களான ஆந்த்ரோபிக் மற்றும் ஓபன்ஏஐ ஆகிய இரண்டிலும் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பணியாற்றிய 27 வயதான முன்னணி ஆய்வாளர் ஜேக்கப் காக்சன், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள விரிவான பதிவில், செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் மனித உயிர்களுடன் பேராபத்தான சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாகக் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.</p><h2>மனித குலத்<strong>திற்கான பே</strong>ராபத்து</h2><p>செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் அனைத்தும் பொறுப்பற்ற முறையில், தங்களை தாங்களே மேம்படுத்திக் கொள்ளும் '<a href="https://www.maalaimalar.com/news/topnews/odisha-forest-rescue-raises-orangutan-trafficking-suspicions">சூப்பர் இன்டலிஜென்ஸ்</a>' அமைப்புகளை உருவாக்கும் போட்டியில் தீவிரமாக இயங்கி வருகின்றன. இந்த தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியை யாரும் குறைவாக மதிப்பிடக் கூடாது. மிக விரைவிலேயே மனித ஆற்றலை மிஞ்சும் வகையில் உருவாகும் இந்த அமைப்புகள், எதையும் ஹேக் செய்யவும், ஒரே இரவில் எந்தவொரு துறையிலும் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தவும், நிஜ உலக வளங்களைக் கைப்பற்றக்கூடிய ஆற்றலையும் பெறும் திறன் கொண்டவை.</p><h2>எலான் மாஸ்<strong>க் கருத்து</strong></h2><p>செயற்கை நுண்ணறிவுத் துறையில் இருக்கும் முக்கியத் தலைவர்களும் மூத்த ஆய்வாளர்களும், இந்த தொழில்நுட்பம் இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் மனித சமூகத்தையே அழித்துவிடும் என்று தனிப்பட்ட முறையில் நம்புகின்றனர். ஓபன்ஏஐ நிறுவனத்தில் இதன் நாகரிக ஆபத்துகள் குறித்து இன்னும் முழுமையான விழிப்புணர்வு ஏற்படவில்லை. </p><p>அதேசமயம், ஆந்த்ரோபிக் நிறுவனத்தில் இதன் அபாயங்கள் தெரிந்திருந்தாலும், போட்டியில் தாங்கள் பின் தங்கிவிடக் கூடாது என்ற பயம் காரணமாகவே அவர்கள் தொடர்ந்து இதில் ஆபத்தான வேகத்தில் இயங்கி வருகின்றனர். முன்னதாக ஆந்த்ரோபிக் நிறுவனத்தைக் கடுமையாக விமர்சித்து வந்த தொழிலதிபர் எலான் மாஸ்க், அந்நிறுவனமே தற்போது செயற்கை நுண்ணறிவுத் துறையில் முன்னணியில் இருப்பதாக ஒப்புக் கொண்டுள்ளார்.</p><h2>ஆந்த்ரோபிக் நிறு<strong>வனத்தின்</strong> அறிக்கை</h2><p>காக்சனின் இந்த வெளிப்படையான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் அலைன்மென்ட் சயின்ஸ் பிரிவின் தலைவர் ஈவான் ஹூபிங்கர், காக்சன் கூறிய கருத்து உண்மையானதுதான் என்று உறுதிப்படுத்தியுள்ளார். அடுத்த பத்து ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவால் மனித குலத்திற்கு ஆபத்து ஏற்பட 10 சதவீதத்திற்கும் அதிகமான வாய்ப்புகள் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், சூப்பர் இன்டலிஜென்ஸ் தொழில்நுட்பத்தைக் கட்டுப்படுத்துவதற்கான சரியான பாதுகாப்புத் திட்டங்கள் இன்னும் முழுமையாக உருவாக்கப்படவில்லை என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கம்பீரமாக தோற்றமளிக்கும் சூரியநாராயண சுவாமி
</title><link>https://www.maalaimalar.com/spirituality/surya-narayana-swamy-temple-in-domlur</link><comments>https://www.maalaimalar.com/spirituality/surya-narayana-swamy-temple-in-domlur#comments</comments><guid isPermaLink="false">5643941b-8af9-4bdc-8b62-3b0a4723ea8c</guid><pubDate>Wed, 09 Sep 2026 05:24:16 +0000</pubDate><atom:updated>2026-09-09T05:24:16.373Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,வழிபாடு,worship,Surya Narayana Swamy Temple,Domlur,சூரியநாராயண சுவாமி கோவில்,டோம்லூர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/glet8q2a/suryanarayanar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ surya narayanar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/glet8q2a/suryanarayanar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஒவ்வொரு ஆரம்பகால நாகரிகமும் சூரியனின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தன. இயற்கையின் அந்த மாபெரும் சக்தியைப் போற்றி வணங்குவதற்கான வழிகளையும், முறைகளையும் அவர்கள் கண்டறிந்திருந்தனர். இந்து சமயத்தில் சூரியனின் சிறப்பை உணர்ந்து, தெய்வமாகப் போற்றி வந்துள்ளனர்.</p> <p>காலங்காலமாக சூரியக் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிகப் புகழ்பெற்ற கோவில்கள் அமைந்துள்ள நாடாக இந்தியா திகழ்கிறது. சுமார் 30 ஆண்டுகளுக்கு கிழக்கு பெங்களுருளின் டோம்லூர் பகுதியில் சூரியக் கடவுளுக்காக மிகவும் கலைநயமிக்க ஒரு கோவில் கட்டப்பட்டது. </p> <figure><img alt="கோவில் பிரகாரம்" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/xkqcon2d/temple.jpg" /></figure><p>அமைதியான குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள அமைந்துள்ள இக்கோவில் கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. இது சோழர் கால கட்டிடக்கலை பாணியிலான கோபுரத்தைக் கொண்டுள்ளது. கோவில் வளாகத்திற்குள் நுழையும்போது, பாரம்பரியமான கொடிமரத்தைக் காணலாம். சற்று முன்னே சென்றால், சீரான வடிவில் அமைக்கப்பட்ட சிறிய படிக்கட்டுகள் உள்ளன. படிக்கட்டுகளில் மேலே ஏறும்போது தேர் வடிவிலான அழகான கோவில் காட்சி அளிப்பதை காண முடியும். அந்தக் கல் தேர் ஒரு சுவாரசியமான கண்ணாடிப் பூச்சைக் கொண்டுள்ளது. அதன் வழியாக ராமர், லட்சுமணர், சீதை மற்றும் அனுமன் ஆகியோரின் சிலைகளைக் காணலாம்.</p> <p>இந்தத் தேருக்கு நேர் முன்பாகவே முதன்மை தெய்வத்திற்கான கருவறை அமைந்துள்ளது. கருவறையில், ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் அமர்ந்திருக்கும் சூரிய பகவானின் மூன்றரை அடி உயரத்தியான சிலையைக் காணலாம். மூலயர் பத்ரிநாத்தில் இருந்து கொண்டுவரப்பட்டவர். இவர் மிகவும் ஒளிமயமாகவும், கம்பீரமாகவும் காட்சியளிக்கிறார்.</p> <p>தினசரி பூஜைகள், நாளொன்றுக்கு இருமுறை பாரம்பரிய முறையில் நடைபெறுகின்றன. இது தவிர, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மற்றும் சூரிய நாட்காட்டியின்படி ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளிலும் சிறப்புப் பூஜைகள் நடத்தப்படுகின்றன.</p> <p>சூரியநாராயண சுவாமியின் தரிசனம் கிடைத்த பிறகு, நம் கோவிலை வலம் வரலாம். கோவிலில் இரண்டு வரிசை பிரதட்சணப் பாதைகள் உள்ளன. பிரதட்ணத்திற்கான உட்பாதை முதன்மைச் சன்னிதியைச் சுற்றி அமைந்துள்ளது.சூரியக் கடவுளின் சன்னிதியைச் சுற்றியுள்ள மூன்று சுவர்களில் முறையே பிரம்மா, விஷ்ணு மற்றும் மகேஸ்வரன் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். இம்மும்மூர்த்திகளின் இருபுறமும் யானைகள், குதிரைகள் மற்றும் தேவதைகள் போன்ற உருவங்களின் அழகிய சிற்பங்கள் வரிசையாகச் செதுக்கப்பட்டுள்ளன.</p> <p>பிரதட்சண பாதை நான்கு அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. விநாயகர், வைஷ்ணவி, உக்ர நரசிம்மர், சரஸ்வதி, ஷேஷசாயி ஆகியோருக்கு சிறிய சன்னிதிகள் உள்ளன. அவர்கள், பிரதட்சணத்தின் உள்பாதையில் செல்லும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். வெளிப்புற பிரதட்சணப் பாதையின் சுவர்களில் புராணக் கதைகளை விவரிக்கும் பெரிய அளவிலான ஓவியங்கள் உள்ளன. கோவிலின் ஒவ்வொரு தூணும் காலத்தால் அழியாத உருவங்களின் சிற்பங்களைத் தாங்கியுள்ளது. </p> <p>இந்த வலம் நிறைவடைந்ததும், நலக்கிரகங்களுக்கான ஒரு பெரிய சன்னிதியை அடையலாம். அங்கு ஒவ்வொரு கிரகமும் தங்கள் தேவியருடன் இணைந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர் கோவில் தரிசனத்தை முடித்த பிறகு, அமைதியான மற்றும் தூய்மையான வளாகத்தில் ஓய்வெடுக்கலாம்.</p> <p>இக்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். குறிப்பாக, மாசி மாதத்தில் நடைபெறும் எட்டு நாள் திருவிழாவான பிரம்மோற்சவத்தின்போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதிகரித்து வரும் கூட்டத்திற்கு மத்தியிலும் 'சுத்தம் இறைத்தன்மைக்கு இணையானது' என்ற கோட்பாடு, இக்கோவிலில் முழுமையாகப் பிரதிபலிக்கிறது.</p><p>பெங்களூருவில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. இந்திராநகர் மெட்ரோ நிலையத்தில் இருந்து வெறும் பத்துநிமிடத் தொலைவில் உள்ளதால், எளிதாகச் செல்ல முடிகிறது.</p> ]]></content:encoded></item><item><title>ஆண்டுக்கு 3.25 லட்சம் பேர் உயிரிழப்பு: புகைத்தடை சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்!- அன்புமணி வலியுறுத்தல் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-strict-implementation-of-the-anti-smoking-law</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-strict-implementation-of-the-anti-smoking-law#comments</comments><guid isPermaLink="false">acf23728-6c5a-4d2d-acaa-2f0069c14ebd</guid><pubDate>Wed, 09 Sep 2026 05:23:28 +0000</pubDate><atom:updated>2026-09-09T05:23:28.852Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/tm4yv6lq/anbumani.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/tm4yv6lq/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் இன்னும் தீவிரமாகவும், கடுமையாகவும் செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்வதான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>இந்தியாவில் பிறர் புகைத்து விடும் சிகரெட் புகையை சுவாசிப்பதால் கடந்த 2023-ஆம் ஆண்டில் மட்டும்  3.25 லட்சம் பேர் உயிரிழந்ததாக உலக அளவில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது. நாட்டில் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகும் கூட,  சிகரெட் புகையை சுவாசிப்பதால் ஏற்படும் உயிரிழப்புகள் மிகப்பெரிய அளவில் அதிகரித்திருப்பது கவலையளிக்கிறது.</p><h2><strong>ஆபத்து</strong></h2><p>இங்கிலாந்திலிருந்து வெளிவரும் லான்செட் குழுமத்தின் ஆன்லைன் மருத்துவ இதழான The Lancet Public Health-இல் வெளியாகியுள்ள ஆய்வுக்கட்டுரையில் பிறர் புகைத்து விடும் சிகரெட் புகையை சுவாசிப்பதால்  2023-ஆம் ஆண்டில் மட்டும் 3 லட்சத்து 25,600 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 1990-ஆம் ஆண்டில் இதே முறையில் ஏற்பட்ட 2 லட்சத்து 17,700 உயிரிழப்புகளுடன் ஒப்பிடும் போது இது 49.56% அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்களின் உயிரிழப்பு விகிதல் 61.74 விழுக்காடும், பெண்களின் உயிரிழப்பு  38.35 விழுக்காடும் அதிகரித்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதே காலக்கட்டத்தில் பிறர் புகைத்து விடும் புகையை சுவாசிக்கும் நிலைக்கு தள்ளப்படுவோரின் எண்ணிக்கை 37.50 கோடியில் இருந்து 44.40 கோடியாக வெறும் 18.40% மட்டுமே அதிகரித்துள்ள நிலையில், உயிரிழப்போரின் எண்ணிக்கை மட்டும் சுமார் 50% அளவுக்கு அதிகரித்திருப்பது தான் இந்த விவகாரத்தின் தீவிரத்தையும், ஆபத்தையும் உணர்த்தியுள்ளது.</p><p>இந்தியாவில் இந்த அளவுக்கு நிலைமை மோசமடைந்திருப்பதற்கு மிக முக்கியக் காரணம் பொது இடங்களில் புகை பிடிப்பது கட்டுப்படுத்தப்படாதது தான். சமூக அக்கறை சிறிதும் இல்லாமல் பொது இடங்களில் புகைப்பிடிக்கும் வழக்கம் இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. அவ்வாறு புகைப்பவர்கள் வெளியிடும் புகையை சுவாசிக்கும் அப்பாவி மக்கள், குறிப்பாக குழந்தைகளும், பெண்களும் மிகக்கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்தக் கொடுமைக்கு முடிவு கட்டும் நோக்கத்துடன் தான், 2004-09 காலத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்த போது,  பொது இடங்களில் புகைப்பிடிப்பதை  தடை செய்யும் சட்டத்தைக் கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையில் நிறைவேற்றி 2008-ஆம் ஆண்டு தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 2-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தினேன். அதன்பிறகு தான் திரையரங்குகள், உணவகங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் பெண்களும், குழந்தைகளும்  பிறர் புகைத்து வெளியிடும் புகையை சுவாசிக்காமல் நடமாடும் ஆரோக்கியமான சூழ்நிலை உருவானது.</p><p>பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை இயற்றியது மத்திய அரசு என்றாலும் கூட, அதை நடைமுறைப்படுத்தும் கடமையும், பொறுப்பும் மாநில அரசுகளுக்குத் தான் இருக்கிறது. ஆனால், எந்த மாநிலத்திலும் இந்தச் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதையே இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.</p><p>எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட 02.10.2008 முதல் கடந்த 2024 மார்ச் 31-ஆம் நாள் வரையிலான பதினைந்தரை ஆண்டுகளில் 3.89 லட்சம் பேர் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டு, ரூ.6.83 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு வெறும் 68 பேர் மட்டும் தான் பொது இடங்களில் புகைப்பிடித்ததாகக் கூறி அவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது; அவர்களில் ஒவ்வொருவரிடமிருந்து சராசரியாக ரூ.177 மட்டும் தான் தண்டமாக வசூலிக்கப்பட்டிருக்கிறது என்பதிலிருந்தே இந்தச் சட்டம்  எவ்வளவு அலட்சியமாக செயல்படுத்தப்படுகிறது என்பதை உணரலாம்.</p><p>2024-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இப்போது வரையிலான காலத்தில் இந்த சட்டத்தின்படி எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்த விவரங்கள் நடப்பாண்டுக்கான மருத்துவத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் சேர்க்கப்படவில்லை. இதனால், இந்த சட்டத்தின் அடிப்படையில், பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புதிய அரசு விரும்பவில்லையோ என்று தோன்றுகிறது.</p><p>நேரடியாக புகைப்பிடிப்பதால் என்னென்ன தீமைகள் ஏற்படுமோ, அவை அனைத்தும் பிறர் புகைத்து விடும் சிகரெட் புகையை சுவாசிப்பவர்களுக்கும் ஏற்படும் என்று மருத்துவ வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். சிகரெட்  புகையில் கலந்துள்ள நிகோட்டின் என்ற வேதிப்பொருளை உள்ளிழுக்கும் போது, அது மூளைக்கும், இதயத்திற்கும் செல்லும் இரத்த நாளங்களில் படிந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. அதனால், இதய நோய், பக்கவாதம், நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (Chronic Obstructive Pulmonary Disease - COPD), ஆஸ்துமா, நுரையீரல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், நீரிழிவு நோய் உள்ளிட்ட நோய்களும் சிகரெட் புகையை மக்கள் சுவாசிப்பதால் ஏற்படுகின்றன. இந்த நோய்களால் அதிகம் பாதிக்கப்படுவோர் பெண்களும், குழந்தைகளும் தான்.</p><p>பெண்களும், குழந்தைகளும் எந்தத் தவறும் செய்யாதவர்கள். பொதுவெளிகளில் யாரோ சிலர் சட்டவிரோதமாக சிகரெட் புகைத்து வெளியிடும் புகையை சுவாசித்த ஒரே பாவத்திற்காக ஆண்டுக்கு ஒரு லட்சத்து 56,900 பெண்கள் உயிரிழக்கும் கொடுமையை மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கக் கூடாது. எனவே, பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் இன்னும் தீவிரமாகவும், கடுமையாகவும் செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.</p>]]></content:encoded></item><item><title>‘கள்’ இறக்கப் பரிந்துரை - நயினார் நாகேந்திரன் வரவேற்பு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-welcome-recommendations-to-palmwine</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-welcome-recommendations-to-palmwine#comments</comments><guid isPermaLink="false">1dda40c6-a219-47f3-99af-06bde9157832</guid><pubDate>Wed, 09 Sep 2026 05:08:13 +0000</pubDate><atom:updated>2026-09-09T05:08:13.162Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,நயினார் நாகேந்திரன்,தமிழக அரசு,கள்</media:keywords><media:content height="350" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/16fk7oo8/NainarNagendran.jpg" width="615"><media:title type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/16fk7oo8/NainarNagendran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மண்ணின் மணம் மாறாத மாண்பினைத் தழுவி, இயற்கை அன்னை தந்த கொடையான 'கள்' இறக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் பரிந்துரையைத் தமிழக பாஜக சார்பில் மனமுவந்து வரவேற்கிறேன்.</strong></em> </p><p>தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/நயினார்-நாகேந்திரன்">நயினார் நாகேந்திரன்</a> எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><h2><strong>தார்மீக வெற்றி</strong></h2><p>மண்ணின் மணம் மாறாத மாண்பினைத் தழுவி, இயற்கை அன்னை தந்த கொடையான 'கள்' இறக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் பரிந்துரையைத் தமிழக பாஜக சார்பில் மனமுவந்து வரவேற்கிறேன். மண்ணின் மைந்தர்களான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தவும், கிராமப்புறப் பொருளாதாரத்தில் புதிய ஒளியேற்றவும் இந்தப் பரிந்துரை ஒரு நல்வாய்ப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.</p><p>இரசாயனக் கலப்புள்ள மது அரக்கனுக்கு எதிராக  பா.ஜ.க. தொடுத்த அறப்போர்களில், "மக்களின் உயிரைக் குடிக்கும் நச்சு மதுவை ஒழித்து, மண்ணின் பானமான கள்ளை அனுமதிக்க வேண்டும்" என்ற முழக்கம் எப்போதும் ஓங்கி ஒலித்துள்ளது. கள்ளுக்கு ஆதரவாக நான் தொடர்ந்து வாதிட்டும் வந்துள்ளேன். இந்நிலையில் இன்றைய ஆணையத்தின் பரிந்துரை மூலம் பாஜகவின் நீண்டகாலப் போராட்டத்திற்கு ஒரு தார்மீக வெற்றி கிடைத்துள்ளது.</p><p>எனவே, விவசாயிகளின் வாடிய முகத்தில் புன்னகை பூக்கவும், கள்ளச்சாராய மரணங்கள் என்னும் கருநிழல் தமிழகத்தை விட்டு விலகவும்,  த.வெ.க.  அரசு இந்தப் பரிந்துரையை வெறும் காகிதத்தோடு நிறுத்திவிடக் கூடாது. காலம் தாழ்த்தாமல், உரிய பாதுகாப்பு விதிகளுடன் கள் இறக்கவும், சந்தைப்படுத்தவும் உடனடியாக அனுமதி வழங்கி, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் 'வசந்தத்தை' ஏற்படுத்த வேண்டும் எனத் தமிழக முதல்வர் விஜயை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">‘கள்’ இறக்கப் பரிந்துரைத்துள்ள நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் அறிக்கையை வரவேற்கிறேன்!<br><br>மண்ணின் மணம் மாறாத மாண்பினைத் தழுவி, இயற்கை அன்னை தந்த கொடையான &#39;கள்&#39; இறக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் பரிந்துரையைத் தமிழக பாஜக சார்பில் மனமுவந்து வரவேற்கிறேன்.…</p>&mdash; Nainar Nagenthran (@NainarBJP) <a href="https://x.com/NainarBJP/status/2097536838433206628?ref_src=twsrc%5Etfw">September 9, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>ஒடிசா வனப்பகுதியில் 5 அரிய வகை ஒராங்குட்டான் குட்டிகள் மீட்பு: வனவிலங்கு கடத்தல் கும்பலின் சதியா?</title><link>https://www.maalaimalar.com/news/topnews/odisha-forest-rescue-raises-orangutan-trafficking-suspicions</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/odisha-forest-rescue-raises-orangutan-trafficking-suspicions#comments</comments><guid isPermaLink="false">04e987cb-32e1-4b0b-8cd0-9fb9592f708f</guid><pubDate>Wed, 09 Sep 2026 05:06:02 +0000</pubDate><atom:updated>2026-09-09T05:06:02.394Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,orangutan infants,Orangutans,Odisha forest,ஒடிசா வனப்பகுதி,ஒராங்குட்டான்,ஒராங்குட்டான் குட்டிகள்,பாலசோர் மாவட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/rpzk2cqq/korangu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ orangutan infants]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/rpzk2cqq/korangu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p>வனத்துறை அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சட்டவிரோத சர்வதேச கடத்தல் கும்பல் மூலம் கப்பல் அல்லது வாகனங்கள் வாயிலாக இவை கொல்கத்தா வழியே கொண்டு வரப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. </p><p>ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் போகராய் பகுதியில் உள்ள ரணகதா வனப்பகுதியில், மரக்கிளைகளில் ஐந்து சிறிய விலங்குகள் தாவி விளையாடுவதை அப்பகுதி கிராம மக்கள் கண்டனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. </p><p>சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், மீட்புப் பணிகளை மேற்கொண்டு அந்த 5 விலங்குகளையும் பாதுகாப்பாக மீட்டனர். அப்போதுதான் மீட்புக் குழுவினருக்கு அந்த பேரதிர்ச்சி காத்திருந்தது. மீட்கப்பட்ட ஐந்து விலங்குகளும் இந்திய காடுகளில் காணப்படாத அரிய வகை '<a href="https://www.maalaimalar.com/news/national/corporations-new-initiative-free-distribution-of-133-lakh-clay-idols">ஒராங்குட்டான்</a>' குட்டிகள் என்பது தெரியவந்தது.</p><h2>தென்கி<strong>ழக்கு ஆசியா</strong>வின் பூர்வீகம்</h2><p>ஒராங்குட்டான்கள் இந்தியாவில் இயற்கையாக வாழும் உயிரினம் அல்ல. இவை இந்தோனேசியா மற்றும் மலேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளின் அடர்ந்த மழைக்காடுகளை மட்டுமே பூர்வீகமாகக் கொண்டவை. இவை தானாக வழிதவறி இந்திய எல்லைக்குள் நுழைய எவ்வித இயற்கை வழியோ அல்லது வனப்பாதை இணைப்போ கிடையாது. சர்வதேச அளவில் மிகக் கடுமையாக அழிவின் விளிம்பில் உள்ள இந்த உயிரினங்கள், சர்வதேச வனவிலங்கு கடத்தல் கும்பல் மூலம் கடல் வழியாகக் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என பலமான சந்தேகம் எழுந்துள்ளது.</p><h2>போலீஸ் சோ<strong>தனைக்கு அஞ்சி</strong> கைவிடப்பட்டதா</h2><p>வனத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், சட்டவிரோத சர்வதேச கடத்தல் கும்பல் மூலம் கப்பல் அல்லது வாகனங்கள் வாயிலாக இவை கொல்கத்தா வழியே கொண்டு வரப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. </p><p>தேசிய நெடுஞ்சாலை 16-க்கு அருகே இவை மீட்கப்பட்டுள்ளதால், சோதனைச் சாவடிகள் அல்லது காவல்துறையின் தீவிர ரோந்து பணிக்கு அஞ்சிய கடத்தல்காரர்கள், பிடிபடாமல் தப்பிப்பதற்காக இந்த குட்டிகளை வனப்பகுதியில் வீசிவிட்டுச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பன்னாட்டுச் சந்தையில் ஒரு ஒராங்குட்டான் குட்டியின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என்பதால், பெரிய அளவிலான சட்டவிரோத நெட்வொர்க் இதன்பின்னால் இயங்கி வரலாம்.</p><h2>நந்தன்கானன் உ<strong>யிரியல் பூங்கா</strong>வுக்கு மாற்றம்</h2><p>மீட்கப்பட்ட 5 ஒராங்குட்டான் குட்டிகளில் 2 பெண் மற்றும் 3 ஆண் குட்டிகள் அடங்கும். வனத்துறை கால்நடை மருத்துவக் குழு உடனடியாக அவற்றுக்கு உடல் பரிசோதனை மேற்கொண்டு, பழங்கள் மற்றும் நீர்ச்சத்து பானங்களை வழங்கி பராமரித்து வருகிறது. நான்கு குட்டிகள் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ள நிலையில், ஒரு குட்டிக்கு நீர்ச்சத்து குறைபாடு காரணமாகத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்காலிகப் பராமரிப்பிற்குப் பிறகு, இந்த ஐந்து குட்டிகளும் புபனேஸ்வரில் உள்ள புகழ்பெற்ற 'நந்தன்கானன் உயிரியல் பூங்காவிற்கு' கொண்டு செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் வைக்கப்பட உள்ளன.</p><p>இச்சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, ஒடிசா மாநில வனத்துறை மத்திய வனவிலங்கு குற்றக்கட்டுப்பாட்டுப் பிரிவின் உதவியை நாடியுள்ளது. மாநில வனத்துறையின் சிறப்புப் படையும், WCCB அதிகாரிகளும் இணைந்து சர்வதேச கடத்தல் கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் வேறு ஏதேனும் அரிய வகை விலங்குகள் கைவிடப்பட்டுள்ளதா என்பதை அறிய வனப்பகுதியில் தேடுதல் வேட்டையும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>642 கி.மீ. ரேன்ஜ் வழங்கும் புது போர்ஷே எலெக்ட்ரிக் கார்... இந்தியா வெளியீடு எப்போ தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/automobilenews/newautomobile/porsche-cayenne-electric-india-launch-on-september-30</link><comments>https://www.maalaimalar.com/automobilenews/newautomobile/porsche-cayenne-electric-india-launch-on-september-30#comments</comments><guid isPermaLink="false">1d5bd5f4-1290-47b1-b67f-bb56ce4d0232</guid><pubDate>Wed, 09 Sep 2026 04:52:00 +0000</pubDate><atom:updated>2026-09-09T04:52:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>எலெக்ட்ரிக் கார்,Porsche,போர்ஷே,Electric Car</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/m4wu5tmo/Porsche-Cayenne-Electric.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Porsche Cayenne Electric]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/m4wu5tmo/Porsche-Cayenne-Electric.png?w=280" width="280"></media:thumbnail><category>இது புதுசு (Automobile)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/porsche">போர்ஷே</a> நிறுவனம் தனது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட போர்ஷே Cayenne எலெக்ட்ரிக் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் போர்ஷே இந்த காரின் விலை விவரங்களை அறிவித்தது. அதன்படி இந்திய சந்தையில் போர்ஷே Cayenne எலெக்ட்ரிக் மாடலின் விலைகள் ரூ. 1.77 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என தொடங்குகிறது.</p><p>இந்திய வெளியீடு மற்றும் விலையை தொடர்ந்து போர்ஷே தனது Cayenne எலெக்ட்ரிக் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. அந்த வகையில் போர்ஷே Cayenne எலெக்ட்ரிக் மாடல் இந்திய சந்தையில் செப்டம்பர் 30-ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த எஸ்.யூ.வி. மாடல் ஸ்டான்டர்டு மற்றும் டர்போ எலெக்ட்ரிக் என இருவித வேரியண்ட்களில் கிடைக்கும்.</p><h2>Cayenne எலெக்ட்ரிக் அம்சங்கள்:</h2><p>அளவீடுகளில் புதிய போர்ஷே Cayenne எலெக்ட்ரிக் மாடல் 4985 மில்லிமீட்டர் நீளம், 1980 மில்லிமீட்டர் அகலம் மற்றும் 1674 மில்லிமட்டர் உயரம் கொண்டுள்ளது. இதன் வீல்பேஸ் 3023 மில்லிமீட்டரில் உள்ளது. தோற்றத்தில் இந்த கார் வழக்கமான முன்புற கிரில் நீக்கப்பட்டு ரீடிசைன் செய்யப்பட்ட பம்ப்பர் கொண்டிருக்கிறது. முன்புறம் மூடப்பட்ட பேனலில் பம்ப்பர் இடம்பெற்றுள்ளது.</p><p>பக்கவாட்டில் இந்த மாடல் தற்போது விற்பனையில் உள்ல மாடலை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இந்த கார் தற்போது 20-22 இன்ச் அலாய் வீல் ஆப்ஷன்களுடன் வரும் என்று தெரிகிறது. இதன் வீல்கள் ஏரோடைனமிக் டிசைன் கொண்டிருப்பதால், காரின் ஒட்டுமொத்த ரேன்ஜ்-ஐ அதிகப்படுத்தும்.</p><p>இத்துடன் காரின் பின்புறம் அதிகளவில் மாற்றங்கள் செய்யப்பட்டு, சற்றே கூர்மையான டெயில் லைட் செட்டப், மெல்லிய எல்.இ.டி. லைட் பார் வழங்கப்படுகிறது. இதன் பின்புற பம்ப்பரின் கீழ்புறத்தில் பிளாக்டு-அவுட் டிஃப்யூசர் வழங்கப்படுகிறது. உள்புறத்தில் பட்டன்கள் எதுவும் இல்லாத சென்டர் கன்சோல் மற்றும் அதன் கீழ்புறத்தில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. ஸ்கிரீன் அளவுகளை பொருத்தவவரை 14.5 இன்ச் சற்றே வளைந்த இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் மற்றும் 14.9 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி ஹெட்-அப் டிஸ்ப்ளே உள்ளது.</p><p>இத்துடன் 14-ஸ்பீக்கர்கள் கொண்ட போஸ் சவுண்ட் சிஸ்டம், 20 ஸ்பீக்கர்கள் கொன்ட ஹார்மன் கார்டன் சிஸ்டம் விரும்புவோர் தேர்வு செய்யும் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.</p><h2>பேட்டரி மற்றும் ரேன்ஜ்:</h2><p>புதிய போர்ஷே Cayenne எலெக்ட்ரிக் மாடலில் 113 கிலோவாட் ஹவர் பேட்டரி யூனிட் மற்றும் டூயல் எலெக்ட்ரிக் மோட்டார்கள் உள்ளன. இத்துடன் ஆல்-வீல் டிரைவ் செட்டப் வவங்கப்படுகிறது. இதன் ஸ்டான்டர்டு மாடல் 642 கிலோமீட்டர்கள் வரையிலும், ஸ்போர்ட் டர்போ எலெக்ட்ரிக் வேரியண்ட் அதிகபட்சம் 623 கிலோமீட்டர்கள் வரையிலும் செல்லும் என தெரிகிறது.</p><p>இந்த எஸ்.யூ.வி. மாடலில் அடாப்டிவ் ஏர் சஸ்பென்ஷன் கொண்டுள்ளது. இத்துடன் ரியர் வீல் ஸ்டீரிங் விரும்புவோர் தேர்வு செய்யும் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. புதிய Cayenne எலெக்ட்ரிக் மாடல் 11 கிலோவாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்ட முதல் போர்ஷே கார் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.</p><p>செயல்திறனை பொருத்தவரை இந்த காரின் ஸ்டான்டர்டு மாடல் 402 ஹெச்.பி. பவர், 835 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்துகிறது. இந்த வேரியண்ட் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 4.8 நொடிகளில் எட்டுவதோடு, அதிகபட்சம் மணிக்கு 230 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும்.</p><p>இதன் டர்போ எலெக்ட்ரிக் வேரியண்ட் 1140 ஹெச்.பி. பவர் மற்றும் 1150 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்துகிறது. இந்த வேரியண்ட் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 2.5 நொடிகளில் எட்டுவதோடு, அதிகபட்சம் மணிக்கு 260 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும்.</p>]]></content:encoded></item><item><title>ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க உளவு நீர்மூழ்கி கப்பல் -  சுற்றிவளைத்து வீடியோ வெளியிட்ட ஈரான் </title><link>https://www.maalaimalar.com/news/world/us-spy-submarine-seized-by-iran-in-hormuz-strait</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-spy-submarine-seized-by-iran-in-hormuz-strait#comments</comments><guid isPermaLink="false">13a26569-cca3-47db-9ddc-de49d5442667</guid><pubDate>Wed, 09 Sep 2026 04:48:32 +0000</pubDate><atom:updated>2026-09-09T04:48:32.881Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,America,ஈரான்,Iran,Hormuz,ஹார்முஸ்  ஜலசந்தி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/e7e0ct4z/Untitled-design-40.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ US unmanned spy submarine]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/e7e0ct4z/Untitled-design-40.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் நாட்டை சேர்ந்த இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படை, ஹார்முஸ் ஜலசந்தியில் உளவு பணியில் ஈடுபட்டிருந்த ‘டைவ் எல்டி’ என்ற அமெரிக்க ஆளில்லா உளவு நீர்மூழ்கி கப்பலை கைப்பற்றி உள்ளதாக தெரிவித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">ஈரானின்</a> புரட்சிகர பாதுகாப்பு படையினர் அமெரிக்க போர்க்கப்பல்கள் மீது சமீபத்தில் தாக்குதலை நடத்தினர். இதற்கு பதிலடி தரும் விதமாக ஐந்து ஈரானிய கச்சா எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி அழித்தது.     </p><h3><strong>அமெரிக்கா குற்றச்சாட்டு</strong></h3><p>ஈரானின் வர்த்தக விமான நிறுவனங்கள் நீண்ட காலமாக, இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படையினரின் ஆயுதங்களை கொள்முதல் செய்வதற்கும், அதனை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கும் பயன்படுத்தி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.</p><p>மேலும் 27 ஈரானிய விமான நிறுவனங்களை தனது சிறப்பு குடிமக்கள் பட்டியலில் அமெரிக்கா இணைத்துள்ளது. இதன்மூலம் ஈரானின் மற்ற அனைத்து விமான நிறுவனங்களையும் அமெரிக்கா தாக்கும் என மறைமுகமாக தெரிவித்துள்ளது.</p><h3><strong>அமெரிக்க மத்திய கட்டளை பிரிவு</strong></h3><p>இதையடுத்து ஈரான் மீதான தாக்குதல் குறித்து அமெரிக்காவின் மத்திய கட்டளை பிரிவு (CENTCOM) கூறுகையில், கடந்த இரண்டு நாட்களில் அமெரிக்க போர்க்கப்பலை பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்க ஈரான் முயற்சி மேற்கொண்டது.</p><p>இந்த முயற்சிகளுக்கு பதிலடியாகவே தாங்கள் தாக்குதல்கள் நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை பிரிவு தெரிவித்துள்ளது.</p><h3><strong>அமெரிக்க உளவு நீர்மூழ்கி கப்பல்</strong></h3><p>இதையடுத்து அமெரிக்க ராணுவத்தின் மிகவும் நவீனமான திறன்மிக்க ஆளில்லா நீர்மூழ்கி உளவு கப்பலை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">ஹார்முஸ் ஜலசந்தியில்</a> ஈரான் கைப்பற்றியுள்ளது.</p><p>இந்த நீர்மூழ்கி கப்பலானது மேல் தளத்திற்கு திரும்பாமல் 10 நாட்கள் வரை செயல்படக்கூடியது என்றும் 6,000 மீட்டர் ஆழம் வரையில் மூழ்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அன்டுரிலின் என்ற இணையதளம் தெரிவித்துள்ளது.</p><p>இதுகுறித்து இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படையின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான செபா நியூஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘டைவ் எல்டி’ என்ற ஆளில்லா நீர்மூழ்கி கப்பலை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது.</p><p>மேலும் ஹார்முஸ் ஜலசந்திக்கு மேல் பறந்த MQ-9 ரீப்பர் ட்ரோன் ஒன்றை தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தியதாகவும் தெரிவித்துள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Footage released by Iranian media shows what the IRGC claims is an American Dive-LD unmanned submarine captured today. Iran says the vessel is now in its possession. <a href="https://t.co/POWlEHHnd5">pic.twitter.com/POWlEHHnd5</a></p>&mdash; Open Source Intel (@Osint613) <a href="https://x.com/Osint613/status/2097390208249389519?ref_src=twsrc%5Etfw">September 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h3><strong>அமெரிக்கா அறிக்கை</strong></h3><p>ஈரான் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து, அமெரிக்க ராணுவம் ஒரு பதில் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், பிராந்திய கடல் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டிருந்த போது, ஒரு நாளுக்கு முன்பு அமெரிக்க ஆளில்லா விமானங்களில் ஒன்று செயல் இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளது.</p><p>மேலும் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன் குறித்து கூறுகையில், தரவுகளை சேகரிக்கவோ அல்லது ரகசிய சோனார் மற்றும் ரேடார் கருவிகள், அந்த ட்ரோனில் இடம்பெறவில்லை என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.</p><h3><strong>ஈரான் ஜனாதிபதி</strong></h3><p>இந்த நிலையில் ஆக்கிரமிப்பாளர்கள் வருந்தும் வரை, ஈரான் தனது எதிர்ப்பை வலிமையுடன் தொடரும் என ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஸ்கி தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ஈரான் அரசு எப்போதுமே போரை எதிர்த்து தான் வந்துள்ளது.</p><p>போர் வெறியை தவிர்ப்பதன் மூலம், மக்களின் நலன்களை பாதுகாத்து, நாட்டில் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என ஈரான் நம்புகிறது.</p><p>இருப்பினும், ஈரான் இன்றுவரை ஆக்கிரமிப்புக்கு எதிராக துணிச்சலுடன் போராடி கொண்டு தங்கள் நாட்டை தற்காத்து வருகிறது. மேலும் ஆக்கிரமிப்பாளர்கள் முழுமையாக வருந்தும் வரை, ஈரான் இந்த எதிர்ப்பை வலிமையுடன் தொடரும்.</p><p>ஈரான் தனது நாட்டு மக்களின் உரிமைகளின் பாதுகாவலராக என்றும் நிலைத்திருக்கும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY: அதிரடியாக குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்
</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-9-9-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-9-9-2026#comments</comments><guid isPermaLink="false">a5ad12c5-1fde-4db1-83e3-d0c4711aaf1f</guid><pubDate>Wed, 09 Sep 2026 04:38:03 +0000</pubDate><atom:updated>2026-09-09T04:38:03.848Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/09/18/18796924-gold4.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/09/18/18796924-gold4.webp?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தங்கம் விலை கிராமுக்கு ரூ.125 குறைந்து ரூ.14,145-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><h2>தங்கம் விலை </h2><p>தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. </p><p>சென்னையில் கடந்த 1-ந்தேதி தங்கம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 175-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 400-க்கும் விற்பனையானது. இதனை தொடர்ந்து 2-ந்தேதி தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.225 குறைந்து, ரூ.13 ஆயிரத்து 950-க்கும், சவரனுக்கு ரூ.1,800 சரிந்து ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 600-க்கும் விற்றது. </p><h2>தங்கம் விலையில் ஏற்ற இறக்கம்</h2><p>அதனை தொடர்ந்து 3-ந்தேதி தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு 290 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 240 ரூபாய்க்கும் சவரனுக்கு 2,320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 920-க்கு விற்பனையானது. </p> <p>அதனை தொடர்ந்து 4-ந்தேதி சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து சவரன் ரூ.1,14,880-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதை அடுத்து 5-ந்தேதி அதிரடியாக கிராமுக்கு 170 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14,190-க்கும் சவரனுக்கு ரூ.1,360 குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 520-க்கு விற்பனையானது. 6-ந்தேதி ஒரு கிராம் ரூ.14,190-க்கும், ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 520-க்கு விற்பனையானது.</p> <p>நேற்று முன்தினம் தங்கம் ரூ.14 ஆயிரத்து 130-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 40-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று கிராமுக்கு ரூ.140 அதிகரித்து ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 270-க்கும், சவரனுக்கு ரூ.1,120 அதிகரித்து ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 160-க்கும் விற்பனையாகியது.</p> <h2>தங்கம் விலை நிலவரம்</h2><p>இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு  ரூ.1,000 குறைந்து ரூ.1,13,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.125 குறைந்து ரூ.14,145-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><h2>வெள்ளி விலை</h2><p>வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்</h2><p>08-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.114,160</p><p>07-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,040</p><p>06-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,520</p><p>05-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,520</p><p>04-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,880</p> <h2>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்</h2><p>08-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>07-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>06-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>05-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>04-08-2026- ஒரு கிராம் ரூ.255</p> ]]></content:encoded></item><item><title> 132 கி.மீ. ரேன்ஜ் வழங்கும் கைனடிக்  எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்: சூப்பர் அப்டேட்!</title><link>https://www.maalaimalar.com/automobilenews/bike/132-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%80-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D</link><comments>https://www.maalaimalar.com/automobilenews/bike/132-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%80-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D#comments</comments><guid isPermaLink="false">2e460186-39d2-4b67-9a6e-f78e8c0cb40a</guid><pubDate>Wed, 09 Sep 2026 04:19:00 +0000</pubDate><atom:updated>2026-09-09T04:19:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Electric Scooter,Kinetic,கைனடிக்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/uxny64st/kinetic-DX-Plus.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/uxny64st/kinetic-DX-Plus.png?w=280" width="280"></media:thumbnail><category>பைக் (Automobile)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கைனடிக் நிறுவனம், தனது புகழ்பெற்ற DX எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒரு பெரிய பேட்டரி மற்றும் கூடுதல் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தியுள்ளது. புதிய DX+ 3.1 kWh மாடல், அன்றாட பயணங்களை மிகவும் நடைமுறைக்கு ஏற்றதாக மாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது. </p><p>இந்த ஸ்கூட்டரில் இப்போது 3.1 kWh LFP பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, இது 132 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் (IDC) வழங்கும் என கூறப்படுகிறது. நடைமுறையில் எதிர்பார்க்கப்படும் ரேன்ஜ் சுமார் 105–110 கி.லோமீட்டர்களாக இருக்கும் என்று கைனடிக் கூறுகிறது.</p><h2>சிறப்பு அம்சங்கள்:</h2><p>ஹப்-இல் பொருத்தப்பட்ட BLDC மோட்டாரில் இருந்து 3.8 kW பீக்-பவர் பெறப்படுகிறது. இந்த ஸ்கூட்டரில் ரேன்ஜ் மற்றும் பவர் என இரண்டு ரைடிங் மோட்கள் உள்ளன. மேலும், K-கோஸ்ட் டெக், வேகத்தை குறைக்கும்போது ஆற்றலை மீட்டெடுக்க ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங்கை வழங்குகிறது.</p><p>DX+ மாடல், அசல் கைனடிக் DX-இன் முழு-உலோக பாடியை தக்க வைத்து கொண்டுள்ளது, ஆனால் ரிவர்ஸ் வசதியுடன் கூடிய பார்க் அசிஸ்ட், ஈஸி சார்ஜ், டெலிமேட்டிக்ஸ் மற்றும் IP67 சான்று பெற்ற டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்பட நவீன அம்சங்களை சேர்த்துள்ளது. இது குயிக் சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது, சுமார் மூன்று மணி நேரத்தில் 0–80 சதவீதம் சார்ஜ் ஆகிவிடும் எனக் கூறப்படுகிறது.</p><h2>விலை விவரங்கள்:</h2><p>புதிய வேரியண்டில் பயன்பாட்டுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதன்படி இந்த மாடலின் இருக்கைக்கு அடியில் 37 லிட்டர் ஸ்டோரேஜ், 165 மில்லிமீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் இரு முனைகளிலும் 12-இன்ச் ட்யூப்லெஸ் டயர்கள் ஆகியவை இதில் உள்ளன. முன்பக்கத்தில் 220 மில்லிமீட்டர் டிஸ்க் மற்றும் பின்பக்கத்தில் 130 மில்லிமீட்டர் டிரம் மூலம் பிரேக்கிங் கையாளப்படுகிறது.</p><p>கைனடிக் DX 3 kWh மாடலின் விலை ரூ. 1.19 லட்சம், அதே சமயம் DX+ 3.1 kWh மாடலின் விலை ரூ. 1.28 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். DX+ மாடல் பிளாக், சில்வர், புளூ, வைட் மற்றும் ரெட் என ஆகிய ஐந்து வண்ணங்களில் கிடைக்கிறது, அதே சமயம் DX மாடலில் பிளாக் மற்றும் சில்வர் ஆகிய விருப்பங்கள் உள்ளன.</p><p>கைனடிக் நிறுவனம், DX+ மாடலுக்கு ரூ. 3,000 சலுகை மற்றும் ரூ. 8,999 மதிப்புள்ள நீட்டிக்கப்பட்ட வாரண்டி உள்ளிட்ட பண்டிகைக்கால சலுகைகளையும் வழங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஆசிய டி20 கிரிக்கெட் போட்டி - உலகளாவிய ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றும் நோக்கில் ‘நெட்ஃபிளிக்ஸ்’ தீவிரம்</title><link>https://www.maalaimalar.com/sports/netflix-aims-to-secure-global-broadcast-rights-for-asian-t20-cricket</link><comments>https://www.maalaimalar.com/sports/netflix-aims-to-secure-global-broadcast-rights-for-asian-t20-cricket#comments</comments><guid isPermaLink="false">7c312042-837b-489f-bd7a-67dad864664f</guid><pubDate>Wed, 09 Sep 2026 04:07:13 +0000</pubDate><atom:updated>2026-09-09T04:07:13.716Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>T20 Cricket,டி20 கிரிக்கெட்,Shreyas Iyer,Asian Games,ஸ்ரேயாஸ் ஐயர்,ஆசிய விளையாட்டு போட்டி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/4be0v4v6/Untitled-design-39.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Asia T20 Broadcast Rights]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/4be0v4v6/Untitled-design-39.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்த ஆண்டிற்கான ஆசிய டி-20 கிரிக்கெட் போட்டிகளை இந்தியாவில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பும் உரிமைகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில், இதன் உலகளாவிய ஒளிபரப்பு உரிமைகளை நெட்ஃபிளிக்ஸ் ஸ்ட்ரீமிங் நிறுவனம் கைப்பற்றக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>2026-ஆம் ஆண்டிற்கான ஆண்கள் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF">ஆசிய விளையாட்டு போட்டி</a> செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 3 வரை ஜப்பான் நாட்டில் நடைபெற உள்ளது. </p><h3><strong>ஆசிய டி20 கிரிக்கெட் போட்டி</strong></h3><p>இந்த டி20 கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 10 அணிகள் கலந்துகொள்ள உள்ளது. செப்டம்பர் 24 முதல் 26 வரையில் தகுதி சுற்று போட்டிகள் நடைபெற உள்ளன. </p><p>அதையடுத்து நடைபெறும் காலிறுதி போட்டியில், நேரடியாக தகுதி பெற்றுள்ள நடப்பு ஆசிய சாம்பியனான இந்திய கிரிக்கெட் அணி விளையாட உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D">ஸ்ரேயாஸ் ஐயர்</a> தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஜப்பான் அணிக்கு எதிராக செப்டம்பர் 22 அன்று ஒரு சிறப்பு போட்டியில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இதுகுறித்து ஜப்பான் கிரிக்கெட் சங்கத்தின் தலைமை செயல் அதிகாரி கூறுகையில், இந்த வரலாற்று சிறப்புமிக்க டி20 போட்டிக்காக இந்திய கிரிக்கெட் அணியை ஜப்பானுக்கு அழைத்து வருவது, ஜப்பானின் கிரிக்கெட் வளர்ச்சிக்கு ஒரு திருப்புமுறையாக அமையும் என்று கூறினார்.</p><h3><strong>இந்திய ஒளிபரப்பு உரிமை</strong></h3><p>ஆசிய டி20 கிரிக்கெட் போட்டிக்கான டிஜிட்டல் உரிமையை ஃபேன் கோட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதேபோன்று இந்தியாவில் அதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.</p><h3><strong>உலகளாவிய ஒளிபரப்பு உரிமை</strong></h3><p>இந்த நிலையில், ஆசிய டி20 போட்டிக்கான உலகளாவிய ஒளிபரப்பு உரிமைகளை பெறுவதில் நெட்ஃபிளிக்ஸ், அமேசான், யூடியூப் மற்றும் DAZN ஆகிய முன்னணி ஸ்ட்ரீமிங் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.</p><p>இதற்கான ஏலங்கள் ஒரே நாளில் திறக்கப்படுவதால், நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் அதன் உலகளாவிய ஒளிபரப்பு உரிமைகளை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>நெருக்கடியான பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் வேண்டாம்- அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-no-need-hq-in-pattinapakkam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-no-need-hq-in-pattinapakkam#comments</comments><guid isPermaLink="false">9128e893-0c38-4af6-8f3f-688d0310bde9</guid><pubDate>Wed, 09 Sep 2026 03:58:15 +0000</pubDate><atom:updated>2026-09-09T03:58:15.130Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,பட்டினப்பாக்கம்,புதிய தலைமை செயலகம்,pattinapakkam</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/xwlu6gvz/anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/xwlu6gvz/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்நாட்டுக்கான தலைமைச் செயலகம், சட்டப்பேரவைச் செயலகம் ஆகியவற்றையும்  சென்னைக்கு வெளியில் ஒருங்கிணைந்த நிர்வாக நகரமாக உருவாக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>சாதகங்களை விட பாதகங்களே அதிகம்</strong></h2><p>தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவைக்கு 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய வளாகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அவர்கள் அறிவித்திருந்த நிலையில், பட்டினப்பாக்கம் பகுதியில் அந்த வளாகம் அமைக்கப்படவிருப்பதாக ஊடகங்களில் அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த செய்திகள் உண்மையாக இருந்தால் அது தொலைநோக்குப் பார்வையற்றதாகவே இருக்கும்.</p><p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 3-ஆம் தேதி அவை விதி எண் 110இன் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் விஜய் அவர்கள், தலைமைச் செயலகம், சட்டப்பேரவைச் செயலகம் மற்றும் அனைத்துத் துறை அலுவலகங்கள் அடங்கிய நிர்வாக வளாகம் ரூ.1200 கோடி செலவில், 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படும் என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து கடந்த சில நாள்களாகவே சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலக வளாகம் அமைக்கப்படும் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. அந்தப் பகுதியில் வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான 21.37 ஏக்கர் நிலம், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 0.93 ஏக்கர் நிலம், வருவாய்த் துறையில் ஆவணங்கள் இல்லாத 1.20 ஏக்கர் நிலம் உள்பட மொத்தம் 26.36 ஏக்கர் பரப்பளவில் 15 மாடி கட்டிடமாக புதிய வளாகம் அமைக்கப்படும்; அதில் அனைத்து வசதிகளும் இடம் பெறும் என்று ஊடகங்களில் வெளியான செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தமிழக அரசுக்கு <a href="https://www.maalaimalar.com/topic/புதிய-தலைமை-செயலகம்">புதிய தலைமைச் செயலகம்</a> தேவை என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து கிடையாது.  கடந்த 25 ஆண்டுகளாகவே புதியத் தலைமைச் செயலகத்திற்கான தேடல் நீடித்துக் கொண்டே இருக்கிறது.  ஆனாலும், இடம் அடையாளம் காண்பது முதல் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் 80%க்கும் கூடுதலான பணிகள் முடிந்த நிலை வரை பல்வேறு கட்டங்களில் அம்முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், இப்போது புதிய அரசால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது. எனினும், புதிய தலைமைச் செயலக வளாகம் பட்டினப்பாக்கத்தில் தான் அமையும் என்றால் அதனால் ஏற்படும் சாதகங்களை விட பாதகங்களே அதிகம்.</p><h2><strong>நெரிசல்</strong></h2><p>பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதில் உள்ள மிகப்பெரிய சிக்கல் போக்குவரத்து நெரிசல் ஆகும். சாந்தோம் சாலையிலும், பசுமைவழிச் சாலையிலும் ஏற்கனவே கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படும் நிலையில், அதை சமாளிப்பதற்காகத் தான் லூப் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் தான் புகழ்பெற்ற சாந்தோம் தேவாலயம், புகழ்பெற்ற பள்ளிக் கூடங்கள், பத்திரப்பதிவுத்துறை தலைவர் அலுவலகம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்கள் உள்ளன. இவற்றுடன் புதிய தலைமைச் செயலகமும் அமைக்கப்பட்டால் அப்பகுதியில் சமாளிக்க முடியாத அளவுக்கு நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ளது.</p><p>அடுத்ததாக, புதிய தலைமைச் செயலகம், சட்டப்பேரவை வளாகம், அனைத்துத் துறை அலுவலங்களைக் கொண்ட வளாகம் அமைக்க இப்போது அடையாளம் காணப்பட்டிருப்பதாகக் கூறப்படும் 26.36 ஏக்கர் நிலம் போதுமானதல்ல. மொத்தம் 20 லட்சம் சதுர அடி பரப்பளவிலான வளாகம் 15 மாடிக் கட்டிடமாக கட்டப்படும்  என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், எப்.எஸ்.ஐ விதிகளின்படி அதற்கேற்ற வகையில் காலி இடமும், பசுமைப் பரப்பும் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இவை தவிர ஓர் தலைமைச் செயலக வளாகம் செயல்படும் இடத்தில், தீயவிப்பு நிலையம், அவசர மருத்துவ வசதிகள், உணவகங்கள், வாகன நிறுத்துமிடங்கள், பொதுப்போக்குவரத்து வசதிகள் உள்ளிட்டவை ஏற்படுத்தித் தரப்பட வேண்டியது கட்டாயமாகும். இத்தகைக் கட்டமைப்பு வசதிகளையும் இப்போது அடையாளம் காணப்பட்டுள்ள இடத்தில் ஏற்படுத்தினால், இப்போதுள்ள தலைமைச் செயலக வளாகத்தில் ஏற்பட்டதைப் போன்ற இட நெருக்கடி மிக விரைவில் புதிய வளாகத்திலும் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.</p><h2><strong>பாமகவின் கோரிக்கை</strong></h2><p>புதிய தலைமைச் செயலகம் அமைப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் விஜய் அவர்கள்,  புதிய வளாகம் அடுத்த நூறாண்டுகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் அமையும் என்று தெரிவித்தார். முதலமைச்சரின் இந்த கனவு நிறைவேற வேண்டும் என்றால், அதற்கு பட்டினப்பாக்கம் பொருத்தமான இடம் அல்ல என்பது தான் எனது கருத்து. முதலமைச்சர் விஜய் அவர்கள் தொலைநோக்குப் பார்வையுடன் இதற்காக சென்னைக்கு வெளியில் குறைந்தது 500 முதல் 1000 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த நிர்வாக நகரத்தை  அமைப்பதற்கான முன்னேற்பாடுகளைத் தொடங்க வேண்டும் என்பது தான் பாமகவின் கோரிக்கை ஆகும்.</p><p>ஓர் அரசின் கட்டுப்பாட்டு அறையாக திகழ்வது தலைமைச் செயலகம் தான். அத்தகைய தலைமைச் செயலகத்தில் இடம் பற்றாக்குறையாக உள்ளது; அதனால் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை உலகம்  முழுவதும் ஜனநாயகம் தழைக்கத் தொடங்கிய கடந்த ஒரு நூற்றாண்டாக ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது. உலகின் பல நாடுகளில் அதற்கானத் தீர்வு ஒருங்கிணைந்த நிர்வாக நகரம் அமைப்பதாகவே இருந்திருக்கிறது. இந்த விஷயத்தில் ஒட்டுமொத்த உலகத்திற்கும் இந்தியா தான் வழிகாட்டியாக இருந்துள்ளது.</p><p>ஆங்கிலேயர் ஆட்சியில், 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரசின் தலைமைச் செயலகம் கொல்கத்தாவில்  இருந்து  தில்லிக்கு மாற்றப்பட்டது. அப்போது மொகலாயர் ஆட்சியின் தலைநகரமாக இருந்த தில்லியில் போதிய இட வசதிகள் இல்லாததால், புதுதில்லி என்ற நிர்வாக நகரத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டு அதற்கு 1911-ஆம் ஆண்டு திசம்பர் 12-ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. 1932-ஆம் ஆண்டில் திறப்பு விழா செய்யப்பட்ட அந்த நகரத்தில் தான் ஆங்கிலேயர் காலம் தொடங்கி இன்று வரை அரசின் தலைமைச் செயலகம், சுதந்திர இந்தியாவின் நாடாளுமன்றம், குடியரசுத் தலைவர் மாளிகை, உச்சநீதிமன்றம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.</p><p>மலேஷியாவில் இதே போன்ற சிக்கல் ஏற்பட்ட போது, கோலாம்பூரில் இருந்து 34 கி.மீ தொலைவில் உள்ள புத்ரஜெயாவில் புதிய தலைமைச் செயலகம் உருவாக்கப்பட்டு 1999-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. தென் அமெரிக்காவின் பிரேசில் இன்னும் ஒரு படி மேலே சென்று தலைநகரத்தையே ரியோடி ஜெனிரோ நகரத்திலிருந்து 928  கி.மீ தொலைவில் பிரேசிலியா என்ற புதிய நிர்வாக நகரத்தை உருவாக்கி அங்கு மாற்றியது.</p><p>2001-ஆம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பேற்ற ஜெயலலிதா கிழக்குக் கடற்கரை சாலையில் ஒருங்கிணைந்த நிர்வாக நகரத்தை அமைக்க வேண்டும் என்று திட்டமிட்டார். இந்த முன்னுதாரணங்களை பின்பற்றி தமிழ்நாட்டுக்கான தலைமைச் செயலகம், சட்டப்பேரவைச் செயலகம் ஆகியவற்றையும்  சென்னைக்கு வெளியில் ஒருங்கிணைந்த நிர்வாக நகரமாக உருவாக்க வேண்டும்.</p><p>அதில் தலைமைச் செயலகம், சட்டப்பேரவைச் செயலகம், அனைத்துத் துறை தலைமை அலுவலகங்கள், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கான மாளிகைகள், அரசு ஊழியர்களுக்கான குடியிருப்புகள், மெட்ரோ ரயில் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்து வசதிகள், தேசிய, உலகத் தலைவர்கள் வருகை தருவதற்கு வசதியாக ஹெலிகாப்டர் இறங்கு தளங்கள்,  தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவைச் செயலகத்தில் பணியாற்றும் செயலாளர்கள் நிலையிலான இ.ஆ.ப அதிகாரிகள் தொடங்கி கடைநிலைப் பணியாளர்கள் வரை அனைத்துப் பணியாளர்களின் பிள்ளைகள் படிப்பதற்குத் தேவையான பள்ளிகள், கல்லூரிகள், உள் விளையாட்டு அரங்குகள், வணிக வளாகங்கள் என ஒரு நகரத்திற்கு என்னென்ன அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் தேவையோ, அவை அனைத்தையும்  கட்டமைத்துக் கொடுக்கவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item></channel></rss>