<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 19 Aug 2026 07:18:44 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: முதலமைச்சர் விஜய்க்கு புகழ்ச்சி பிடிக்காது: அமைச்சர் ஆதவ் - 19 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-19-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-19-august-2026#comments</comments><guid isPermaLink="false">532f6d4f-39f1-4437-8daa-00952ab7e206</guid><pubDate>Wed, 19 Aug 2026 04:04:15 +0000</pubDate><atom:updated>2026-08-19T07:17:55.676Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/i8txg4tu/aadhav.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/i8txg4tu/aadhav.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>செஞ்சி கோட்டையை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் - சவுமியா அன்புமணி</p><p>மழை நீர் சேமிப்பை கட்டாயமாக்க வேண்டும். பாலாற்றில் 5 அடிக்கு தடுப்பணைகளை கட்ட வேண்டும்.</p><p>தருமபுரி மாவட்டத்தில் ஏரிகளை தூர்வார வேண்டும் - சவுமியா அன்புமணி</p> <p>அத்திக்கடவு - அவிநாசி 2 திட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள நதிகளை முதலில் இணைக்க வேண்டும்.</p><p>காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தை முதலில் செயல்படுத்த வேண்டும். பாலாற்றில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>நந்தன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் - சவுமியா அன்புமணி</p><p>சவுமியா அன்புமணி கோரிக்கையின் படி நீர்நிலைகள் மேப்பிங் செய்யப்படும் - அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்</p><p>கூவத்தில் குப்பை கொட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.</p><p>நல்ல தண்ணீரில் சாக்கடையை கலப்பது சட்டப்படி குற்றம்.</p><p>தாமிரபரணி நதியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>அரசு கட்டிடங்கள் ஏரியில் தான் அமைந்துள்ளன - சவுமியா அன்புமணி</p><h2>சவுமியா அன்புமணி உரை</h2><p>இந்தியாவில் எங்கும் இல்லாத சதுப்பு நிலம் சென்னையில் உள்ளது.</p><p>திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போதும் கூவம் ஆறு மக்கள் பயன்பாட்டில் உள்ளது.</p><p>சென்னைக்கு வந்த பிறகு தான் கூவம் சாக்கடையாக மாறுகிறது.</p><p>நீர் வளம் தான் எதிர்கால தலைமுறைக்கு நாம் வழங்கும் சொத்து - சவுமியா அன்புமணி</p><p>தமிழ்நாட்டின் நீர்வளம் நம் கையைவிட்டு போய்க்கொண்டு இருக்கின்றன - சவுமியா அன்புமணி</p><p>முதலமைச்சர் விஜய் குறித்து புகழ்ந்து பேசிய தவெக எம்எல்ஏ ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு சபாநாயகர் அறிவுரை</p><p>மானிய கோரிக்கை மீதான விவாதம் பற்றி மட்டும் பேச வேண்டும் என சபாநாயகர் அறிவுரை</p><p>நம்முடைய முதலமைச்சர் மற்ற முதலமைச்சர்களை போல் அல்ல - அமைச்சர் ஆதவ்</p><p>முதலமைச்சர் விஜய்க்கு புகழ்ச்சி பிடிக்காது என்பதை  எம்எல்ஏக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் - அமைச்சர் ஆதவ்</p><p>கல்லணை இன்னும் இடிந்து போகவில்லை தரமாக உள்ளது. நமது காலத்தில் தான் அணைகள் இடிந்து விழுகிறது - அமைச்சர் ஆதவ்</p><h2>எ.வ.வேலு உரை</h2><p>திருவண்ணாமலையில் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்தது.</p><p>தென்பெண்ணை ஆற்றில் 56,000 கனஅடி தண்ணீரை தாங்கும் அளவிற்கு பாலம் கட்டப்பட்டது.</p><p>கொள்ளளவை விட பல மடங்கு அதிகமாக தண்ணீர் வந்ததால் மட்டுமே அணை இடிந்தது.</p><p>தென்பெண்ணை ஆற்றில் ரூ.16 கோடியில் கட்டப்பட்ட மேம்பாலம் 3 மாதத்தில் இடிந்தது - அமைச்சர் மரியவில்சன்</p><p>அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பேச்சுக்கு எதிர்ப்பு - திமுக எம்எல்ஏக்கள் அமளி</p><p>கனவு கண்டாலும் கூட திமுக இனி ஆட்சிக்கு வர முடியாது - அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்</p><p>வீட்டின் தரத்திற்கு கட்டும் பயனாளிகள் தான் பொறுப்பு - கே.என்.நேரு</p><p>திமுக ஆட்சியில் கட்டப்பட்ட வீடுகள் நிறைய இடங்களில் இடிந்து தொங்குகிறது. தவெக ஆட்சியில் கட்டப்படும் வீடுகள் 50 ஆண்டுகள் வரை தரமாக இருக்கும் - அமைச்சர் வினோத்</p><p>2016 - 2020 வரை கொரோனா காலம் என்பதால் தான் பசுமை வீடு திட்டத்தை அதிமுக காலத்தில் சரியாக செய்ய முடியவில்லை - எடப்பாடி பழனிசாமி</p><p>பெருமளவு கனிமவள பொருட்கள் அண்டை மாநிலங்களுக்கு எடுத்து செல்வதாக தொடர் புகார் வந்தன.</p><p>கனிம வளத்தை அண்டை மாநிலங்களுக்கு எடுத்து செல்வதற்கு தடை விதித்த ஒரே தமிழக முதல்வர் விஜய் தான்.</p><p>எம்.சாண்ட், ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்கள், குவாரிகள் தொடர்பான மானிய கோரிக்கை விவாதத்தில் சொல்கிறேன் - அமைச்சர் பிரபு</p><p>ஜல்லி,  எம் சாண்ட் தேவை அதிகரிப்பு, பல குவாரிகள் மூடல் காரணமாக கட்டுமான பொருட்கள் விலை உயர்வு.</p><p>எம்.சாண்ட், ஜல்லி உற்பத்தி திறனை அதிகரிக்க தவெக அரசு ஏதேனும் திட்டம் வைத்துள்ளதா? - எடப்பாடி பழனிசாமி</p><p>ரூ.12,000 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் 150 நாட்கள் வேலை கொடுப்பது சாத்தியமில்லை - ஐ.பெரியசாமி</p><p>150 நாட்கள் வேலை அளிக்க வேண்டும் என்றால் ரூ.30,000 கோடி தேவைப்படும்.</p><p>தமிழ்நாட்டில் எந்த நதியும் ஓடவில்லை, அனைத்து பகுதிகளிலும் வறட்சி - ஐ.பெரியசாமி</p><p>மக்களுக்கு சேவையே முதலமைச்சரின் நோக்கம்.</p><p>எதிர்க்கட்சிகளின் ஆலோசனையை ஏற்க தயாராக உள்ளோம் - அமைச்சர் ஆனந்த்</p><h2> ஐ.பெரியசாமி உரை</h2><p>நான் அன்பாக, அக்கறையாக, ஆசையாக பேசியதால் தான் மக்கள் என்னை 7 முறை எம்எல்ஏவாக வெல்ல வைத்துள்ளனர்.</p><p>விபிஜி ராம் திட்டத்தில் 150 நாட்கள் வேலை தருவது சாத்தியமற்றது. ஏட்டு கத்தரிக்காய் கூட்டுக்கு உதவாது என்பது போல் இந்த திட்டம், அரசு அறிவித்தபடி 150 நாள் வேலை தர முடியுமா?</p> <p>3 துறைகளில் நடந்த ஊழல் தொடர்பான அனைத்து ஆதாரங்களும் உரிய நேரத்தில் வெளியிடப்படும் - முதலமைச்சர் விஜய்</p><p>நான் பேசுவேன், ஆனால் இடைத்தேர்தலிலாவது சிலருக்கு நல்லது நடக்க வேண்டுமே என சட்டசபையில் முதலமைச்சர் விஜய் கூறினார்.</p><p>ஊழல் தொடர்பான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அதை வெளியிட வைத்து விடாதீர்கள் - முதலமைச்சர் விஜய்</p><p>ஊழல் தொடர்பான அனைத்தும் ஆதாரங்கள் எனது மேஜையில் அமைச்சர் வைத்துள்ளார் - முதலமைச்சர் விஜய்</p><p>தவறு நடந்து இருக்கலாம் என ஒப்புக்கொண்டதற்கு நன்றி - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>வளமான கிராமங்களை உருவாக்கும் நோக்கத்தில் தான் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டது.</p><p>கொள்கை தலைவர் என சொல்கிறீர்கள், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை தமிழ்நாடு வளர்ச்சி திட்டம் என மாற்றியது நியாயமா? - ஐ.பெரியசாமி</p><p>அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் பெயரை ஏன் மாற்ற வேண்டும்? கொள்கைத் தலைவர் என கூறும் அண்ணா பெயரை மாற்றியது ஏன்? - ஐ. பெரியசாமி</p><h2>ஐ.பெரியசாமி  உரை</h2><p>அலுவலர்கள் தான் தேர்வு செய்கின்றனர். தவறு நடக்கிறது என்பதற்காக திட்டத்தை நிறுத்தக்கூடாது.</p><p>கட்சி, சாதி மத பாகுபாடின்றி விண்ணப்பித்த அனைவருக்கும் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு தருவதற்கு முயற்சி.</p><p>கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், அரசுக்கான இழப்பை குறைக்க உதவும்.</p><p>வீடு பெறும் பயனாளிகளை தேர்ந்தெடுப்பது அதிகாரிகள் அடங்கிய குழு தான்.</p><p>வீடு கட்டும் திட்டத்தில் பல தவறுகள் நடந்துள்ளது என திட்டவட்டமாக நான் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>ஏற்கெனவே வீடு வைத்துள்ளவர்களுக்கு வீடு கட்டப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கியதற்கான ஆதாரம் உள்ளது - அமைச்சர் ஆனந்த்</p><p>திமுக ஆட்சியில் வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கவில்லை - அமைச்சர் ஆனந்த்</p><p>வீடு கட்டும் திட்டத்தில் பெயரை மாற்றி விட்டு வீடுகளின் எண்ணிக்கையை தவெக அரசு குறைத்து விட்டது - ஐ.பெரியசாமி</p><p>தற்போது எம் சாண்ட் விலையை தாறுமாறாக உயர்த்தி உள்ளனர்.</p><p>ஜல்லி விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது - ஐ.பெரியசாமி</p><p>வீடுகள் முறையாக கட்டப்பட்ட ரூ.5 லட்சம் வழங்குகிறது தவெக அரசு - புஸ்ஸி ஆனந்த்</p><p>வீடு கட்ட திமுக ஆட்சியில் கொடுத்த ரூ.3.5 லட்சம் போதுமானதாக இல்லை - புஸ்ஸி ஆனந்த்</p><p>திமுக ஆட்சியில் அனுமதிக்கப்பட்ட வீடுகள் அடித்தளத்துடன் நிற்கின்றன.</p><p>திமுக ஆட்சியில் வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கவில்லை - புஸ்ஸி ஆனந்த்</p><p>திமுக ஆட்சியில வருடத்திற்கு 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன - ஐ.பெரியசாமி </p><p>நீர்வளத்துறை மீதான மானிய கோரிக்கை மீது விவாதம் தொடங்கியது.</p><p>நீர்வளம், ஊரக வளர்ச்சி மானியக் கோரிக்கை - அமைச்சர் ஆனந்த் தாக்கல் செய்தார்</p><p>சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானங்களை விவாதத்தில் எடுக்க வலியுறுத்தி அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு.</p><p>கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து முழக்கங்கள் எழுப்பியவாறு அதிமுகவினர் வெளிநடப்பு.</p><p>சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.</p><p>சட்டசபையில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கியது.</p><h2>அமைச்சர் வன்னி அரசு உரை</h2><p>நாடே மெச்சும் வகையில் முதலமைச்சர் அறிவிப்பு</p><p>ரூ.300 கோடியில் பெரம்பூரில் மருத்துவமனை அமைப்பதற்கு வரவேற்பு.</p><p>வடசென்னை மக்களை குளிர்விக்கும் வகையில் அறிவிப்பு</p> <p>வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு - சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு</p><p>நான் ரெயிலில்தான் சட்டசபைக்கு வந்து செல்கிறேன். வேலையும் கொடுத்து காரும் கொடுக்கும் முதலமைச்சருக்கு நன்றி - எம்எல்ஏ சபரி ஐங்கரன்</p><p>பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை நிறைவேற்றம் - மன்னார்குடி அமமுக எம்எல்ஏ காமராஜ் வரவேற்பு</p><p>பால் கொள்முதல் விலை உயர்வுக்கு திருத்துறைப்பூண்டி இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ மாரிமுத்து வரவேற்பு</p><p>முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி - அமைச்சர் ஷாஜகான்</p><p>முதலமைச்சர் விஜயால் நிறைய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் - அமைச்சர் ராஜ்மோகன்</p> <p>ஏற்கனவே எம்எல்ஏ ஒருவருக்கு அனைத்துப்படிகளும் சேர்த்து ரூ.1.05 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது.</p><p>ஏற்கனவே சட்டமன்ற அமர்வுகள் நடக்கும்போது தினப்படியாக ரூ.500 வழங்கப்பட்டு வருகிறது.</p><p>வாகனத்திற்காக மாதந்தோறும் ரூ.75,000 வாகனப்படியாக வழங்கப்படும்.</p><p>ஒரு உதவியாளரை நியமித்து கொள்ள மாதந்தோறும் ரூ.25,000 வழங்கப்படும் - முதலமைச்சர் விஜய்</p><p>ரூ.351 கோடி மதிப்பீட்டில் செவிலியர் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கப்படும்.</p><p>5 மருத்துவமனைகளில் மண்டல புற்றுநோய் மையங்கள் தொடங்கப்படும் - முதலமைச்சர் விஜய்</p> <p>அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் வழங்கப்படும் - முதலமைச்சர் விஜய்</p><h2>முதலமைச்சர் விஜய் உரை</h2><p>முதலமைச்சர் மருத்துவ காப்பீடு தொகை ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும்.</p><p>7 அரசு மருத்துவ கல்லூரிகளில் திருநங்கைகளுக்கான அறுவை சிகிச்சை வழங்கப்படும்.</p><p>7 புதிய செவிலியர் கல்லூரிகள் அமைக்கப்படும்.</p><p>முதலமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு திட்டம் மேம்படுத்தப்படும்.</p><p>பெரம்பூரில் ரூ.300 கோடியில் 400 படுக்கை கொண்ட பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் - முதலமைச்சர் விஜய்</p><p>ஆவின் பால் கொள்முதல் விலையை ரூ.38 -ல் இருந்து ரூ.41ஆக உயர்த்தி அறிவிப்பு -முதலமைச்சர் விஜய் </p><p>ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.41 ஆக உயர்த்தி முதலமைச்சர் விஜய் அறிவிப்பு.</p><p>பால் உற்பத்தியாளர்கள் நலனை கருத்தில் கொண்டு பால் கொள்முதல் விலை உயர்த்துவது அரசின் கடமை.</p><p>கடந்த காலத்தில் ஆவின் பாலுக்கான கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை - முதலமைச்சர் விஜய்</p><p>சட்டசபையில் விதி 110 கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு வெளியிடுகிறார்.</p><p>ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு</p><p>சட்டசபையில் இன்று நீர்வளம், ஊரக வளர்ச்சி மற்றும் சுற்றுலாத்துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>சட்டசபையில் இன்று முதலமைச்சர் விஜய் வெளியிட்ட 10 முக்கிய அறிவிப்புகள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/10-importatnt-announcements-made-by-cm-vijay-in-the-legislative-assembly-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/10-importatnt-announcements-made-by-cm-vijay-in-the-legislative-assembly-today#comments</comments><guid isPermaLink="false">b376bd66-c011-4e75-8153-d1234172830a</guid><pubDate>Wed, 19 Aug 2026 07:17:08 +0000</pubDate><atom:updated>2026-08-19T07:17:08.898Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/d4js6b08/vijay.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/d4js6b08/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சட்டசபையில் இன்று பேரவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் 10 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-chief-ministers-medical-insurance-coverage-raised-to-rs-25-lakh">முதலமைச்சர் விஜய்</a> பேசியதாவது:-</p><p>உலகில் தான் உற்பத்தி செய்யும் பாலை தனது சந்ததிகளுக்கு மட்டுமின்றி மனிதர்கள் உள்ளிட்ட பிற ஜீவராசிகளுக்கும் வழங்கி உயிரை காக்கும் பசுவை தெய்வமாக போற்றி வளர்த்து வருவது நமது பாரம்பரியத்தின் சிறப்பு. இன்றைய அறிவியல் உலகில் ஒரு லிட்டர் பாலை உற்பத்தி செய்வதற்காக பசுவின் உடலில் சுமார் 500 லிட்டர் ரத்தம் சுத்திகரிக்கப்படுவதாக கூறப்படும் போது, பசுவின் உழைப்பை எண்ணி வியக்க தோன்றுகிறது.</p><p>தமிழ்நாட்டில் 8,800 பால் கூட்டுறவு சங்கங்களில் உள்ள 3 லட்சத்து 16 ஆயிரம்  பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து தினசரி 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு ஆவின் நிறுவனத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 31 லட்சம் லிட்டர் பால் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p><p>தற்போது 4.3 சதவீதம் கொழுப்பு சத்து மற்றும் 8.2 சதவீதம் இதர சத்துக்கள் அடங்கிய ஒரு லிட்டர் பாலுக்கு கொள்முதல் விலையாக 35 ரூபாயும், மாநில ஊக்கத் தொகையாக 1 லிட்டர் பாலுக்கு 3 ரூபாயும் ஆக மொத்தம் ஒரு லிட்டருக்கு கொள்முதல் விலை 38 ரூபாய் 5.11.2022 முதல் வழங்கப்பட்டு வருகிறது.</p><p>அதிகாலை 3 மணிக்கே எழுந்து மாடுகளை சுத்தம் செய்து பால் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களின் உழைப்பையும், தீவனம் மற்றும் வேலையாட்களின் கூலி உள்ளிட்ட அதிகரித்து வரும் செலவுகளையும் கடந்த கால அரசு போதிய அளவில் கருத்தில் கொள்ளவில்லை. உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல் இருந்துள்ளது. </p><h2><strong>ரூ.41 ஆக உயர்வு</strong></h2><p>கடந்த காலத்தில் கொள்முதல் விலை உரிய அளவில் உயர்த்தப்படாத நிலையில் நம் அரசு சந்தித்து வரும் அதிகப்படியான நிதி நெருக்கடியிலும் பால் உற்பத்தியாளர்களின் நலனையும், வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு அவர்களின் உன்னதமான உழைப்பிற்கு உரிய மதிப்பை வழங்கும் வகையில் கொள்முதல் விலையை உயர்த்துவது நமது அரசின் கடமையாகும்.</p><p>தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பால் வழங்கும் 3 லட்சத்து 16 ஆயிரத்துக்கும் மேலான பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையில் பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு கூட்டுறவு சங்கம் மூலமாக 1 ரூபாய் உயர்த்தவும், மேலும் அரசு ஊக்கத் தொகையை 3 ரூபாயில் இருந்து 5 ரூபாயாக உயர்த்தவும் ஆக மொத்தம் ஒரு லிட்டர் கொள்முதல் விலை 38 ரூபாயில் இருந்து 41 ரூபாயாக உயர்த்த அரசு முடிவு செய்து உள்ளது.</p><p>இந்த கொள்முதல் விலை உயர்வால் கூடுதலாக ஒரு மாதத்திற்கு ரூபாய் 30 கோடியும், ஒரு ஆண்டுக்கு ரூபாய் 360 கோடியும் செலவாகும்.</p><h2><strong>சமமான மருத்துவ சேவை</strong></h2><p>ஒரு உயிரின் மதிப்பை அவரது வருமானம் தீர்மானிக்கக் கூடாது. வசதி படைத்தவர், வசதி குறைவானவர் என்ற நிலை மருத்துவத் துறையில் இருக்கக் கூடாது. அனைவருக்கும் சமமான மருத்துவ சேவை எளிதாக கிடைக்க வேண்டும் என்பதில் நமது அரசு உறுதியாக உள்ளது. மருத்துவம் என்பது சலுகை அல்ல. ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை. </p><p>ஒரு மனிதனின் உயிரை காப்பாற்றுவதில் தாமதமாகும் ஒவ்வொரு நொடியும் மிகக் கொடியது. மருத்துவத்தை தேடி வரும் மக்களின் பாதையில் இருக்கும் தடைகளான வறுமை, தொலைவு, மருத்துவர் பற்றாக்குறை, மருந்துகளின் விலை, மருத்துவ விழிப்பு ணர்வு இல்லாமை, காத்திருப்பு, அவசரகால வசதியின்மை போன்றவற்றை படிப்படியாக அகற்றி, ஏழை, பணக்காரர், கிராமம்,  நகரம் என்ற பாகுபாடு இன்றி ஒவ்வொருவருக்கும் தரமான மற்றும் எளிதான மருத்துவ சேவை கிடைக்க செய்வதை முதன்மையான நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது நமது அரசு.</p><p>மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை யில் சில அறிவிப்புகளை சட்டப் பேரவை விதி 110-ன் கீழ் இன்று வெளியிட விரும்புகிறேன்.</p><h2><strong>பன்நோக்கு உயர் சிறப்பு ஆஸ்பத்திரி</strong></h2><p>வடசென்னை மக்களுக்கு உயர்தர மருத்துவ சேவை எளிதில் கிடைக்கும் வகையில் பெரம்பூரில் ரூ.300 கோடி மதிப்பீட்டில்  400 படுக்கைகள் கொண்ட உலகத் தரத்திலான பன்னோக்கு உயர் சிறப்பு ஆஸ்பத்திரி அமைக்கப்படும்.</p><p>முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் இலவச மருத்துவ சிகிச்சைக்கான மருத்துவ காப்பீட்டு தொகை ஆண்டொன்றுக்கு தற்போது உள்ள ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும்.</p><p>திருநங்கையர்களுக்கான மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை சேவைகள் கூடுதலாக சென்னை ஸ்டான்லி, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கல்பட்டு, திருவாரூர், தர்மபுரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 7 அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.</p><h2><strong>7 செவிலியர் கல்லூரிகள்</strong></h2><p>தமிழ்நாட்டில் 2014-ம் ஆண்டுக்கு பிறகு புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படாத நிலையில் தரமான மருத்துவ சேவைக்கு தேவையான செவிலியர், மருந்தியல் மற்றும் துணை மருத்துவ பணியாளர்களை உருவாக்கும் வகையில் அரசு மருத்துவ கல்லூரிகளில் ரூ.351 கோடி மதிப்பீட்டில் கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்படும்.</p><p>7 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்பட்டு 660 பி.எஸ்.சி. செவிலியர் மாணவர்கள் இடங்கள் உருவாக்கப்பட்டு ஏற்கனவே உள்ள செவிலியர் கல்லூரிகள் மற்றும் செவிலியர் பள்ளிகளில் கூடுதலாக 1925 கூடுதல் மாணாக்கர் இடங்கள், இயன்முறை மருத்துவம் உள்ளிட்ட 12 துணை மருத்துவ படிப்புகளில் 2,778 மாணாக்கர் இடங்கள், மருந்தியல் படிப்புகளில் 735 கூடுதல் இடங்கள் என மொத்தம் சுமார் 6,098 கூடுதல் மாணாக்கர் இடங்கள் உருவாக்கப்படும்.</p><h2><strong>புற்றுநோய் பராமரிப்பு இயக்கம்</strong></h2><p>தமிழ்நாட்டில்  அதிகரித்து வரும் புற்றுநோய்களை தடுக்கவும், தரமான சிகிச்சை வழங்கவும் முதலமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு இயக்கம் முதலமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு மிஷன் ரூ.677 கோடியே 44 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.471 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் ஜி+14 தளங்களுடன் ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை பிரிவு அமைக்கப்படும். மேலும் 5 மண்டல புற்றுநோய் மையங்கள், தஞ்சாவூர், கோவை, மதுரை, திருநெல்வேலி மற்றும் விழுப்புரம் ஆகிய மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிகளில்  நிறுவப்படும். முதல்கட்டமாக ராஜாஜி ஆஸ்பத்திரியில் ரூ.84 கோடியில் ஜி+8 தளங்களுடன் மண்டல புற்றுநோய் மையம் தொடங்கப்படும்.</p><p>ரோபாட்டிக் அறுவை சிகிச்சை லீனியர் ஆக்சுலரேட்டர் லினக் கதிர் வீச்சு நவீன கருவிகள் இலக்கு மற்றும் நோய் எதிர்ப்பு சிகிச்சைகளுக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு ரூ.106 கோடியே 17 லட்சம் வழங்கப்படும். டாக்டர்களுக்கு பயிற்சி, நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து ஆதரவு ஆகியவற்றுக்காக ரூ.2 கோடியே 77 லட்சம் அளிக்கப்படும். மேலும் தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் 1.22 லட்சம் பெண்களுக்கு ரூ.8 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் எச்.பி.வி. டி.என்.ஏ. பரி சோதனை மேற்கொள்ளப்படும். மொத்தம் ரூ.673 கோடியே 44 லட்சம் மதிப்பீட்டில் புற்றுநோய் தாக்கத்தில் இருந்து மக்களை காக்கும் வகையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும்.</p><p>பொருளாதார பலம் இல்லாமல் சட்டமன்ற உறுப்பினர்களாக பணியாற்றும் மற்றும் முதன் முதலாக சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தங்களது மக்கள் பணியை தொய்வின்றி தொடருவதற்கும், அவர்கள் தங்களின் தொகுதி பணிகளை திறம்பட மேற்கொள்வதற்கு வசதியாக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.</p>]]></content:encoded></item><item><title>போபாலில் &apos;ஜென் ஆல்பா&apos; பள்ளி மாணவர்கள் வீதியில் இறங்கி போராட்டம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/gen-alpha-students-protest-in-bhopal-over-school-merger-plan</link><comments>https://www.maalaimalar.com/news/national/gen-alpha-students-protest-in-bhopal-over-school-merger-plan#comments</comments><guid isPermaLink="false">0b1ccab4-6c18-4c4b-8612-0cecac126f01</guid><pubDate>Wed, 19 Aug 2026 07:14:49 +0000</pubDate><atom:updated>2026-08-19T07:14:49.118Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>NCERT,கேந்திரிய வித்யாலயா,Bhopal Protest,போபால் போராட்டம்,Gen Alpha Protest,Kendriya Vidyalaya Merger,DMS Bhopal,மாணவர்கள் எதிர்ப்பு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/ifecjnf4/Gen-Alpha-Protest" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gen Alpha Protest ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/ifecjnf4/Gen-Alpha-Protest?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">மத்திய பிரதேச</a> மாநிலம் போபாலில் உள்ள புகழ்பெற்ற பிராந்திய மாதிரிப் பள்ளியை, <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%BE">கேந்திரிய வித்யாலயா </a>சங்கத்துடன் இணைக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிராக, அந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் வீதியில் இறங்கி தங்களின் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.</p><p>மத்திய அரசின் இந்தத் திடீர் முடிவால், பல தசாப்தங்கலாகத் தனித்துவமாகச் செயல்பட்டு வரும் தங்களது நிறுவனத்தின் நோக்கம் முற்றிலும் சிதைந்துவிடும் என்று மாணவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.</p><h2>முழக்கமிட்ட 'ஜென் ஆல்பா' தலைமுறை:</h2><p>போபாலில் உள்ள 'டெமான்ஸ்ட்ரேஷன் மல்டிபர்ப்பஸ் பள்ளி' வளாகத்திற்கு வெளியே திரண்ட நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள், கைகளில் பதாகைகளை ஏந்தி, இணைப்புத் திட்டத்திற்கு எதிராக ஆக்ரோஷமாக முழக்கங்களை எழுப்பினர். </p><p>தற்போதைய நவீனத் தலைமுறையைச் சேர்ந்த பள்ளி சிறுவர்கள், தங்களின் கல்வி உரிமைக்காகவும், பள்ளியின் தனித்துவத்திற்காகவும் திரண்டது போபால் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><h2>போராட்டத்திற்கான காரணம் என்ன?</h2><p>மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் மூலம் கடந்த 1965ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த ரீஜனல் பள்ளிகள் தொடங்கப்பட்டன.</p><p>இந்தியாவின் நான்கு முக்கிய நகரங்களில் (போபால், அஜ்மீர், மைசூர் மற்றும் புவனேஸ்வர்) மட்டுமே இத்தகைய மாதிரிப் பள்ளிகள் நிறுவப்பட்டன. வழக்கமான கல்வி முறையைப் பின்பற்றாமல், புதிய கற்பித்தல் முறைகளை உருவாக்குவதற்கும், கல்வியில் புதுமையான ஆராய்ச்சிகள் மற்றும் சோதனைகளைச் செய்வதற்கும் இந்த ரீஜனல் பள்ளிகள் பிரத்யேகமாகத் தோற்றுவிக்கப்பட்டன. </p><p>தற்போது இந்தப் பள்ளியைப் பொதுவான கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுடன் இணைப்பதன் மூலம், இதன் ஆராய்ச்சித் தன்மையும், தனித்துவமான அடையாளமும் முற்றிலும் அழிந்துவிடும் என்று மாணவர்கள் தரப்பில் கூறிவருகின்றனர்.</p><h2>பள்ளி முதல்வரிடம் மனு - தீவிரமடையும் போராட்டம்:</h2><p>போராட்டத்தின் இறுதியாக, மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பிராந்தியக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் எஸ்.கே. குப்தாவைச் சந்தித்து தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்யும் அதிகாரப்பூர்வக் கோரிக்கை மனுவை அளித்தனர்.</p><p>அந்த மனுவில், "இணைப்புத் திட்டத்தை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். தங்களது பள்ளியை மேலும் வலுப்படுத்தி, கல்வி ஆராய்ச்சி மையமாகவே தொடர அனுமதிக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளனர்.</p><p>மேலும், தங்களது கோரிக்கைகளுக்கு உரிய அதிகாரிகள் உடனடியாகச் செவிசாய்க்கவில்லை எனில், அடுத்தடுத்த கட்டங்களாகத் தங்களது போராட்டத்தை மாநில மற்றும் மத்திய அரசுத் துறைகளை நோக்கித் தீவிரப்படுத்தப் போவதாகவும் பள்ளி மாணவர்கள் எச்சரித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் செல்வதை தடுத்த ஒரே முதல்வர்- அமைச்சர் பிரபு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-blocked-mineral-exports-to-neighbouring-states-says-minister-prabhu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-blocked-mineral-exports-to-neighbouring-states-says-minister-prabhu#comments</comments><guid isPermaLink="false">cd16d219-2c1b-42d5-bd58-2b81a00a46cc</guid><pubDate>Wed, 19 Aug 2026 07:10:00 +0000</pubDate><atom:updated>2026-08-19T07:10:00.126Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,கனிம வளங்கள்,அமைச்சர் பிரபு,Minister Prabhu,Mineral exports</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/wkqq5hmv/Minister-Prabhu.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Prabhu- TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/wkqq5hmv/Minister-Prabhu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் இன்று  ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை மானிய கோரிக்கை மீதான  விவாதத்தில்  திமுக முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி பேசினார் அப்போது அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார். இதற்கு அமைச்சர் என் ஆனந்த் அவ்வப்போது விளக்கம் அளித்தார்.</p><p>அப்போது நடந்த விவாதம்:-</p><p>அமைச்சர் என் ஆனந்த்:- அண்ணனின்  மாவட்டம்  கொடைக்கானலில் தாண்டிக்குடி பகுதிக்கு எங்கள் தலைவர் ஒரு முறை படப்பிடிப்புக்கு சென்றுவிட்டு    கீழே  இறங்கி வரும் போது ஒரு மணி நேரம் தனியாக நடந்து வந்தார். ஆனால் அங்கு ஒரு பகுதியில் சாலை வசதியில்லை. அங்கு நம்ம சொந்த செலவில் சாலை போட்டுவிடலாமா என கேட்டார்.</p><p>அப்போது நம்மை பேனர் வைக்கவே விடமாட்றாங்க. ரோடு எப்படி போடுறதுனு கேட்டேன். நான் பதவியேற்ற 5 வது நாள் அந்த தாண்டிக் குடி கிராமத்திற்கு சாலை போட வேண்டும் என முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து உத்தரவு வந்தது . இன்னிக்கு 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அங்கு வேலை தொடங்கியுள்ளது.</p><p>நூறு நாட்கள் திட்டத்திற்கு ரூ.12,600 கோடி வேண்டும்.  ரூ 7,586 கோடியில் தமிழக அரசு முதல் அமைச்சர் 5057 கோடி ஒதுக்கி இருக்கிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>கண்டிப்பாக 150 நாட்கள் வேலை கொடுக்கப்படும் என்பதை இந்த நேரத்துல நாங்கள் தெரிவித்துகொள்கிறேன். இது செய்ய முடியுமா அப்படி என்றெல்லாம், பணம் இருக்குதா என்றெல்லாம் பார்த்து தான், ஒவ்வொரு திட்டத்தையும் தினந்தோறும் செயல்படுத்தும் முதல்வர் தான் எங்களுடைய முதல்வர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். </p><p>எங்களுக்கு தெரியும் எப்படி பேசணும் இப்ப எப்படி ஆட்சி இருக்கின்றது என்பது.எல்லாம் உங்களுக்கு தெரியும். அதனால அதெல்லாம் கருத்தில் கொண்டு சொல்லுங்கள்.</p><p>மக்களுக்கு சேவை செய்வதற்காக வந்திருக்கிறவர் தான் எங்கள் முதல்வர். அதனால தான் இந்த மாதிரி எல்லாம் தயவு செய்து சொல்லாதீங்க.</p><p>நாங்க எல்லாம் சொல்ல ஆரம்பித் தோம் அப்படின்னா நிறைய விஷயங்கள் நாங்கள் பேச வேண்டியதாக இருக்கும். ஆகவே நீங்கள் எந்த ஒரு ஆலோசனையாக இருந்தாலும் நீங்கள் அதை தாராளமா சொல்லுங்கள் எங்களுடைய முதல்வர் 234 சட்டமன்ற தொகுதிக்கும் முதல்வர்.</p><p>மக்களுக்கு என்ன பிரச்சனை மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து அதை மட்டும் செய்யக்கூடிய முதல்வராக இருப்பார் </p><p> நான் அடிக்கடி  உங்களிடம்  குறுக்கிட சங்கடமாக இருக்குது அதனால தயவு செய்து நீங்கள் எதுவாக இருந்தாலும் எந்த ஒரு விஷயம் ஆனாலும் உங்களுடைய தொகுதி விஷயம் உங்களுடைய மாவட்ட விஷயங்கள் எதுவாக இருந்தாலும் நீங்கள் சொல்லுங்கள் நாங்கள் செய்து தர தயாராக இருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>அமைச்சர் பிரபு :</p><p>இதுவரைக்கும் தமிழக வரலாற்றிலேயே நம்ம மக்களுக்கான சேவையை பூர்த்தி செய்வதற்கு இங்கு உள்ள கனிம வளங்களை நம்ம மக்களுக்கு கொடுக்கணும் அப்படிங்கற ஒரு நோக்கத்தோடு அண்டை மாநிலத்திற்கு செல்லும் கனிம வள த்திற்கு தடை போட்ட ஒரே முதலமைச்சர் நமது தமிழக முதலமைச்சர்.</p><p>இவ்வாறு விவாதம் நடந்தது.</p>]]></content:encoded></item><item><title>தமிழர்கள் படுகொலையை தமிழக அரசு கண்டிக்கக் கூடாதா?: சி.பி.ஐ விசாரணை நடத்த அரசு வலியுறுத்த வேண்டும்!- அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-government-must-insist-on-a-cbi-inquiry-for-tamilis-shotdead-case</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-government-must-insist-on-a-cbi-inquiry-for-tamilis-shotdead-case#comments</comments><guid isPermaLink="false">1aa87ca9-01ae-4b12-837c-a10099f29946</guid><pubDate>Wed, 19 Aug 2026 06:58:16 +0000</pubDate><atom:updated>2026-08-19T06:58:16.395Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,சிபிஐ,cbi,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,தமிழர்கள் சுட்டுக்கொலை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/618hcgzw/Anbumaniramadoss0.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/618hcgzw/Anbumaniramadoss0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கர்நாடகத்தில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று கர்நாடக அரசையும், மத்திய அரசையும் வலியுறுத்த வேண்டும்.</strong></em></p><p>பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>கர்நாடக வனப்பகுதியில் <a href="https://www.maalaimalar.com/topic/தமிழர்கள்-சுட்டுக்கொலை">3 தமிழர்கள்</a> அம்மாநில வனத்துறையினரால் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டது  பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது கர்நாடகத்தின் சட்டம் &amp; ஒழுங்கு சார்ந்த விவகாரம் என்பதால் அது குறித்து தமிழக அரசோ, தமிழக அரசியல் கட்சிகளோ எந்தக் கருத்தும் தெரிவிக்கக்கூடாது என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியிருக்கிறார். தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்காக கண்டனம் தெரிவிக்கவும், சிபிஐ விசாரணை கோரவும் தமிழகத்திற்கு உரிமை இல்லை என்று கூறுவது கண்டிக்கத்தக்கது.</p><h2><strong>ஏற்றுக்கொள்ள முடியாது</strong></h2><p>கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,‘‘எந்த மாநிலமும் இன்னொரு மாநில நிர்வாகத்தில் தலையிட முடியாது. தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது கர்நாடகத்தின் சட்டம் &amp; ஒழுங்கு  பிரச்சனை என்பதால் அதில் தமிழக அரசு தலையிட முடியாது. தமிழ்நாடு அதன் நிர்வாகத்தைப் பார்த்துக் கொள்ளட்டும்; நாங்கள் எங்கள் நிர்வாகத்தைப் பார்த்துக் கொள்கிறோம்’’ எனக் கூறியுள்ளார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது.</p><p>சாம்ராஜ்நகர் மாவட்ட வனப்பகுதியில் 3 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை அம்மாநிலத்தின் சட்டம் &amp; ஒழுங்கு சார்ந்த சிக்கல் என்று கூறுவதே இந்த விவகாரத்தை திசை திருப்பும் செயலாகும். காணாமல் போன மாடுகளை தேடிச் சென்ற 3 தமிழர்கள் கர்நாடக வனத்துறையினரால் கொடூரமான முறையில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்கள். இதற்கு ஒவ்வொரு நாளும் புதிய ஆதாரங்கள் கிடைத்து வருகின்றன. சாம்ராஜ்நகர் மாவட்ட பொறுப்பு அமைச்சர்  புட்டரங்கா ஷெட்டி,  மதச்சார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்த ஹானூர் சட்டப்பேரவை  உறுப்பினர் மஞ்சுநாத்  ஆகியோர் வனத்துறையினரின்  விளக்கத்தை ஏற்க மறுத்திருக்கிறார். அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தமது சொந்த நிதியிலிருந்து தலா ரூ.10 லட்சம் வழங்கியிருக்கிறார்.</p><p>3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்திலிருந்து புத்தம் புதிய காலணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றை உயிரிழந்தவர்களில் ஒருவர் அணிந்திருக்கிறார். கொல்லப்பட்டவர்கள் மான் வேட்டையில் ஈடுபட்டு இருந்தால் புதிய காலணிகள் கரைபடாமல் இருக்க வாய்ப்பில்லை என காவல்துறை அதிகாரிகளில் சிலரே கூறியுள்ளனர். இந்த ஐயங்களை போக்க வேண்டியது கர்நாடக அரசின் கடமை ஆகும். ஆனால், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி வழங்குவதற்கு பதிலாக உண்மையை மூடி மறைக்க கர்நாடக அரசு முயல்கிறது. இத்தகைய தருணத்தில் கொல்லப்பட்ட தமிழர்கள் குடும்பங்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டியது தமிழக அரசு மற்றும் தமிழக அரசியல் கட்சிகளின் கடமை ஆகும். இதை செய்யக்கூடாது என்று சொல்ல இந்தியா சர்வாதிகார நாடும் அல்ல... கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் சர்வாதிகாரியும் இல்லை என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும்.</p><p>ஒரு மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்களோ, ஓர் இனத்தைச் சேர்ந்தவர்களோ இன்னொரு மாநிலத்தில் அல்லது நாட்டில் தாக்கப்படும் போது அல்லது படுகொலை செய்யப்படும் போது, அதைக் கண்டிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்தவும்  பாதிக்கப்பட்டவர்களின் பூர்வீக மாநிலம் அல்லது இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு உண்டு. கடந்த காலங்களில் இலங்கையில் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது அதை தமிழ்நாட்டு அரசும், மக்களும் கண்டித்துள்ளனர். அதைத் தொடர்ந்து ஈழத்தமிழர் சிக்கலில் மத்திய அரசே தலையிட்டு நடவடிக்கை எடுத்த வரலாறு உண்டு. காவிரி பிரச்சினையில் கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்ட போதும் அதை தமிழ்நாடு கண்டித்திருக்கிறது. காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் 1991&amp;92ஆம் ஆண்டில் கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்ட போது, பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களில்  பாட்டாளி மக்கள் கட்சியினர் 05.01.1992-ஆம் நாள் கர்நாடகத்தை நோக்கி அணிவகுத்துச் சென்ற வரலாறு உண்டு.</p> <p>கடந்த பத்தாண்டுகளில் கோவா மாநிலத்தில் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் பலமுறை தாக்கப்பட்ட போது அதற்கு கர்நாடக சட்டப்பேரவையே கண்டனம் தெரிவித்திருக்கிறது. 2008-ஆம் ஆண்டு மும்பையிலும், மராட்டியத்தின் பிற பகுதிகளிலும் பிகாரைச் சேர்ந்தவர்கள் தாக்கப்பட்ட போது, அதற்கு அப்போதைய மத்திய அமைச்சர் லாலுபிரசாத் யாதவ், பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்ததும், அவர்களின் கோரிக்கையை ஏற்று மராட்டிய முதலமைச்சருக்கு அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் அவர்களே  கடுமையான வார்த்தைகளில் கடிதம் எழுதியதும் நடந்தது. அதனால், கர்நாடகத்தில் தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து பேசவும், நீதிக்காக போராடவும் தமிழக அரசுக்கும், மக்களுக்கும் அனைத்து உரிமைகளும் உண்டு.</p><p>எனவே, கர்நாடகத்தில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கர்நாடக அரசு நியாயமான நடவடிக்கை எடுக்கும் என்று இனியும் நம்பிக் கொண்டிருப்பது தவறு ஆகும். இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று கர்நாடக அரசையும், மத்திய அரசையும் வலியுறுத்த வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>கொல்கத்தா ஹோட்டலில் தீ விபத்து.. வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் உட்பட 9 பேர் உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/fire-accident-in-multi-storey-hotel-9-killed-including-bangladeshis</link><comments>https://www.maalaimalar.com/news/national/fire-accident-in-multi-storey-hotel-9-killed-including-bangladeshis#comments</comments><guid isPermaLink="false">c6f27add-2c89-466e-9240-1065efd801ad</guid><pubDate>Wed, 19 Aug 2026 06:53:53 +0000</pubDate><atom:updated>2026-08-19T06:53:53.066Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மேற்கு வங்கம்,கொல்கத்தா,Kolkata,hotel fire accident,west bengal,தீ விபத்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/tvbtkpha/Untitled-design-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து]]></media:title><media:description type="html"><![CDATA[ Kolkata Hotel Fire]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/tvbtkpha/Untitled-design-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">மேற்கு வங்கத்தில்</a> 5 மாடி ஹோட்டலில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு வயது குழந்தை உட்பட ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h3><strong>கொல்கத்தாவில் தீ விபத்து</strong></h3><p>மேற்கு வங்க மாநிலம் கொல்கதாவில் உள்ள ஹோட்டலில் இன்று அதிகாலை 1:45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.</p><p>இதையடுத்து <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">தீ விபத்து</a> ஏற்பட்ட பகுதிக்கு ஐந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு,  காவல்துறையினரும் பேரிடர் மேலாண்மை துறையினரும் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.</p><h3>வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் உயிரிழப்பு</h3><p>இந்த விபத்து குறித்து பேசிய அமைச்சர் கெளஷிக் செளத்ரி, “நாங்கள் இறந்தவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்த முயற்சித்து வருகிறோம். விபத்து ஏற்பட்ட இந்த கட்டிடத்தின் நிலை மிக மோசமாக உள்ளது.</p><p>தீ விபத்தில் நமது நாட்டை சேர்ந்தவர்களும் வங்கதேசத்தை சேர்ந்தவர்களும் உயிரிழந்துள்ளனர்.</p><p>இந்த கட்டிடத்திற்குள் பல ஹோட்டல்கள் உள்ளன. இங்கு என்ன நடக்கிறது என்பதை பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன்.</p><p>தீ விபத்திற்கான காரணம் மின்கசிவாக இருக்கலாம். ஆனால் தடயவியல் பரிசோதனை மூலம்தான் தீ விபத்துக்கான தெளிவான காரணம் தெரியவரும்.</p><p>கட்டிட நிர்வாகம் அடிப்படை பாதுகாப்பு மற்றும் கட்டுமான விதிமுறைகளை பின்பற்றவில்லை. ஹோட்டலின் செயல்பாட்டில் பல முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.</p><h3><strong>மீட்பு நடவடிக்கை</strong></h3><p>கொல்கத்தாவில் நடந்த தீ விபத்து குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஐந்து மாடி கட்டிடத்தில் இருந்து 80 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.</p><p>அடர்த்தியான புகை காரணமாக தீயணைப்பு வீரர்கள் படிக்கட்டுகளில் ஏறி மேல் தளங்களை அடைவது கடினமாக உள்ளது.</p><p>விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. </p><p>சிக்கியவர்களை மீட்பதும், தீ விபத்திற்கான காரணங்களை கண்டறிவதுமே எங்களின் முன்னுரிமையாக உள்ளது.</p><p>கட்டிட உரிமையாளருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவருக்கு எதிரான நடவடிக்கைகளை காவல்துறை தொடங்கி உள்ளது” என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>103 வயதில் ரூ.1.54 லட்சம் நிதி உதவி அளித்த மூதாட்டி - தனது வாழ்நாள் சேமிப்பை அப்படியே வழங்கினார்! </title><link>https://www.maalaimalar.com/news/national/103-year-old-woman-donates-life-savings-for-assam-flood-victims</link><comments>https://www.maalaimalar.com/news/national/103-year-old-woman-donates-life-savings-for-assam-flood-victims#comments</comments><guid isPermaLink="false">57656c8e-3f5e-4615-abb8-f5d42b5b2181</guid><pubDate>Wed, 19 Aug 2026 06:51:21 +0000</pubDate><atom:updated>2026-08-19T06:51:21.129Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நிதியுதவி,Assam Flood,அசாம் வெள்ளம்,kanaklatha das,flood donation,கனக்லதா தாஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/zq750yas/Untitled-design-9.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அசாம் வெள்ள நிதியுதவி]]></media:title><media:description type="html"><![CDATA[ Assam Flood Relief]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/zq750yas/Untitled-design-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D">அசாமில்</a> வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நன்கொடையாக 1.54 லட்சம் ரூபாயை 103 வயது மூதாட்டி அளித்துள்ளார்.</p><h3>கமிஷனர் அலுவலகம் சென்ற மூதாட்டி</h3><p>அசாம் மாநிலம் சிராஜூலியில் உள்ள மஜ்ரோய்மாரி கிராமத்தில் கனக்லதா தாஸ் என்ற மூதாட்டி வசித்து வருகிறார். </p><p>சமீபத்தில் கிழக்கு அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தை தொடர்ந்து, அந்த பகுதியில் உள்ள குடும்பங்களை சேர்ந்தவர்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.</p><p>இதையடுத்து அந்த பகுதி மக்கள் எதிர்கொள்ளும் துயரங்கள் குறித்து அறிந்து, 264 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கமிஷனர் அலுவலத்திற்கு மூதாட்டி சென்றார்.</p><h3>நிதி உதவி</h3><p>தான் பல ஆண்டுகளாக சேமித்த 1.54 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு கமிஷனர் அலுவலத்திற்கு நேரில் சென்றார்.</p><p>அங்கு, ஆணையர் மிருதுல் யாதவை நேரில் சந்தித்து, தனது வாழ்நாள் சேமிப்பில் இருந்து முழுவதுமாக எடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 77 குடும்பங்களுக்கு தலா ரூபாய் 2,000 வீதம் நிதி உதவியாக வழங்கினார்.</p><h3><strong>மூதாட்டியிடம் ஆசி பெற்ற மாவட்ட ஆணையர்</strong></h3><p>மூதாட்டி அளித்த இந்த நிதியுதவி குறித்து மாவட்ட ஆணையர் கூறுகையில், “எனது இத்தனை ஆண்டுகால சேவையில், இத்தகைய தூய்மையான மற்றும் தன்னலமற்ற மனிதநேயமிக்க செயலை நான் அரிதாகவே பார்த்துள்ளேன்.</p><p>உண்மையான கருணை மற்றும் குடிமை பொறுப்பு என்றால் என்ன என்பதை கனகலதா தாஸ் எங்களுக்கு கற்று கொடுத்துள்ளார்.</p><p>இன்று எனக்கு இவர் அளித்த ஆசி, நான் பெறக்கூடிய எந்தவொரு கெளரவத்தையும் விட மதிப்பு வாய்ந்தது” என்று ஆணையர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>திமுக இனி எந்த காலத்திலும் ஆட்சிக்கு வர முடியாது- அமைச்சர் ஆனந்த்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-can-never-come-to-power-again-says-minister-anand</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-can-never-come-to-power-again-says-minister-anand#comments</comments><guid isPermaLink="false">38c1639c-93e7-4356-9864-2ecfcadb9989</guid><pubDate>Wed, 19 Aug 2026 06:46:07 +0000</pubDate><atom:updated>2026-08-19T06:46:07.772Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆதவ் அர்ஜூனா,தமிழக சட்டசபை,TN assembly,Adhav Arjuna,Minister Anand,அமைச்சர் ஆனந்த்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/5o327yst/ANand.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Adhav- Minister Anand-DMK MLA E.V.Velu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/5o327yst/ANand.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் இன்றைய கூநீர்வளம், ஊரக வளர்ச்சி மானியக் கோரிக்கையை அமைச்சர் ஆனந்த் தாக்கல் செய்தார். இதைதொடர்ந்து, நீர்வளத்துறை மீதான மானிய கோரிக்கை மீது விவாதம் தொடங்கியது.</p><p>அப்போது, தமிழக சட்டசபையில் இன்று என்ன கத்தினாலும், கனவு கண்டாலும் திமுக இனி ஆட்சிக்கு வர முடியாது என அமைச்சர் ஆனந்த் கூறியுள்ளார்.</p><p>நாங்கள் யாரும் தவறு செய்ய மாட்டோம் என திரும்ப திரும்ப சொல்கிறேன் என அமைச்சர் ஆனந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.</p><h2>அமைச்சர் மரியவில்சன்</h2><p>திமுக ஆட்சியில் தரமற்ற முறையில் தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்ட பாலம் 3 மாதத்தில் இடிந்தது.</p><h2>திமுக எம்எல்ஏ எ.வ.வேலு</h2><p>வரலாறு காணாத அளவுக்கு மழை, வெள்ளப்பெருக்கு அணை இடிந்தது. வரலாறு காணாத அளவுக்கு நீர் வந்ததநன் கரணமாகத்தான் தென்பெண்ணையில் கட்டப்பட்ட பாலம் இடிந்தது.</p><p>தென்பெண்ணை ஆற்றில் 3 லட்சம் கன அடி நீர் கரைபுரண்டு ஓடியதால்தான் பாலம் இடிந்து விழுந்தது.</p><h2>அமைச்சர் ஆதவ்</h2><p>சோழர் கால கல்லணை இன்றும் தரமாக உள்ளது. நமது காலத்தில் தான் 3 மாதத்தில் பாலம் இடிந்து விழுகிறது.</p>]]></content:encoded></item><item><title>சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு: விஜய் முதலமைச்சராக தமிழகத்தை ஆட்சி செய்யப் போவது எப்போது?- டிடிவி தினகரன் கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-indictment-tvk-govt-6</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-indictment-tvk-govt-6#comments</comments><guid isPermaLink="false">ba661510-c74e-4f2f-a2ce-1063a5780b2c</guid><pubDate>Wed, 19 Aug 2026 06:40:18 +0000</pubDate><atom:updated>2026-08-19T06:40:18.925Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,AMMK,அமமுக,டிடிவி தினகரன்,tvk,TTTV Dhinakaran</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/8or528gb/TTVDhinakaran001.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/8or528gb/TTVDhinakaran001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழக மக்கள் அச்சமின்றி, பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தவெக அரசையும், முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.</strong></em></p><p>அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/டிடிவி-தினகரன்">டி.டி.வி.தினகரன்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>சென்னை வண்ணாரப்பேட்டை தங்கசாலை மேம்பாலம் அருகே உள்ள நகர்ப்புற வாழ்விடக் குடியிருப்புப் பகுதியில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதில், பொதுமக்கள் தங்களது உயிரைப் பாதுகாத்துக் கொள்ளப் பதற்றத்துடன் ஓடியதாக சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள காணொளிக் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன.</p><h2><strong>கவலை</strong> </h2><p>கடந்த இரு நாட்களில் மட்டும் காஞ்சிபுரம் அருகே இரட்டைக் கொலை, திருப்புவனம் அருகே இளைஞர் குத்திக் கொலை, நெய்வேலியில் இளைஞர் வெட்டிக் கொலை, திருப்பூர் அருகே வடமாநில இளைஞர் தலையில் கல்லைப் போட்டுக் கொலை என, தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கொலைச் சம்பவங்கள் நடைபெறாத நாட்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை சந்தி சிரிக்கும் அளவிற்குச் சென்றிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது.</p><p>அதேபோல  சேலம் வாழப்பாடியில் சமூகநீதி விடுதியில் தங்கி பயிலும் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல், தஞ்சாவூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை, சேலம் கொண்டலாம்பட்டியில் 14 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை, ஈரோடு அருகே 85 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது என, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தமிழகத்தில் சர்வசாதாரணமாக அரங்கேறிக் கொண்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.</p><h2><strong>காலக்கொடுமை</strong></h2><p>இப்படி, தினந்தோறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், போதைப்பொருட்களின் தாராளப் புழக்கம் என, ஒட்டுமொத்த தமிழகமும் பதற்றமான சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கும் நிலையில், தவெக அரசும் அதன் முதலமைச்சரும் தங்களது முதல் 100 நாள் அலங்கோல ஆட்சியை சாதனையாக அறிவித்து பல கோடி ரூபாய் செலவில் நாடு முழுவதும் விளம்பரப்படுத்திக் கொண்டிருப்பது காலக்கொடுமையாகும்.</p><p>ஆட்சிப் பொறுப்பேற்ற நாளிலிருந்து கால அவகாசம் தேவை என்பதையும், தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் குற்றச் சம்பவங்களுக்கு முந்தைய ஆட்சியாளர்களே காரணம் என்பதையும் வாடிக்கையாகக் கூறி வரும் தமிழக முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், எப்போது தான் தமிழகத்தை ஆட்சி செய்யத் தொடங்குவார்? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.</p><p>எனவே, குற்றச் சம்பவங்கள் அரங்கேறிய பின்னர் குற்றவாளிகளைக் கைது செய்வதை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல், குற்றங்கள் நடைபெறுவதற்கு முன்பாகவே அவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழக மக்கள் அச்சமின்றி, பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தவெக அரசையும், முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார்... &apos;இன்னோவா&apos; காரா கொடுத்தா நல்லாருக்கும்- அப்ளிகேஷன் போட்ட உறுப்பினர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/assembly-members-thanks-to-cm-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/assembly-members-thanks-to-cm-vijay#comments</comments><guid isPermaLink="false">7b5484dc-445b-4e24-9aa3-036c05fac6fd</guid><pubDate>Wed, 19 Aug 2026 06:24:42 +0000</pubDate><atom:updated>2026-08-19T06:24:42.029Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/a3a6396y/car.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/a3a6396y/car.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழக சட்டசபையில் முதலமைச்சர் இன்று 110 விதியின் கீழ் அறிவித்த அறிவிப்புக்கு சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் மகிழ்ச்சி தெரிவித்து நன்றி கூறினார்கள்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழக சட்டமன்றத்தில்</a> இன்று 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய், எம்எல்ஏக்களுக்கு கார் உள்ளிட்ட  பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.</p><p>அவர் அறிவிப்பை வெளியிடும் போதே விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் ஜோதிமணி பலமுறை எழுந்து கும்பிட்டபடியே நின்று கொண்டிருந்தார். <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/assembly-members-shocking-cm-vijay-announced">முதலமைச்சர்</a> பேசி முடித்ததும் அதன் பின்  ஜோதிமணி பேசியதாவது,</p><p>நான் வைத்த கோரிக்கையை ஏற்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் வழங்குவதாக அறிவித்துள்ள முதலமைச்சர் வாகனத்துக்கு ஓட்டுநர் மட்டுமின்றி மாத வாகன படி ரூ.75,000 அலுவலக உதவியாளருக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்ததை மிகவும் வரவேற்று நன்றி தெரிவிக்கிறேன்.</p><p>நான் கேட்டதை நிறைவேற்றி தந்த முதலமைச்சருக்கும் பேரவை தலைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார். </p><h2><strong>தாரகை கத்பட் (காங்கிரஸ்)</strong></h2><p>முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு  புல்லரிக்கக் கூடிய விஷயம். சட்டசபைக்கு பொருளாதாரப் பின்புறம் இல்லாத சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் வந்துள்ளார்கள். அவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினருக்கான வாகனம்  ஓட்டுனர்களுக்கு  சம்பளம் உதவியாளர்களுக்கான சம்பளம் வழங்கி இருப்பதற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.  இது எதிர்க்கட்சிக்கு கூட சந்தோஷமான ஒரு விஷயம்தான். ஆனால் அவர்களால் வெளிப்படுத்த முடியாது.  நாங்கள் அங்கிருந்தாலும் அதைத்தான் செய்வோம்.</p><p>இந்த அரசு மக்களுக்கான அரசு என்பதை நிரூபித்துள்ளது. முதலமைச்சர் காப்பீடு திட்டம் 5 லட்சம் ரூபாயில் இருந்து 25 லட்ச ரூபாய் உயர்த்தப்பட்டது. அனைத்து மக்களுக்கும் காப்பீடு திட்டத்தை பற்றி விரிவாக தெரிவிக்கப்படும்..</p><p>முதலமைச்சருக்கு காங்கிரஸ்  கட்சியின் சார்பாக எங்களுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார்.</p><h2><strong>செல்லசுவாமி (சி பி எம் )</strong></h2><p>பால் கொள்முதல் விலை அதிகரிப்பு அதேபோல  கார் தொடர்பாக அறிவிப்பு இன்பமாக இருக்கிறது. ஏற்கனவே முன் காலத்தில் ஊதிய உயர்வு கொடுத்த போது இது போன்ற சலுகைகள் வழங்க வேண்டும் என்று கூறிய போதும் மக்களின் வரி பணத்தில் இருந்து கொடுப்பது ஏற்புடையது இல்லை என்று சொல்லுவோம். ஒட்டுமொத்தமாக முதலமைச்சரின் எண்ணத்தை பாராட்டுகிறோம்.</p><p>எங்கள் கட்சியின் நிலைப்பாடு சம்பந்தமாக என்ன என்பதைக் கேட்டு அதை நாங்கள் உட்படுவோம்  அறிவிப்பிற்கு நன்றி கூறுகிறோம்.</p><h2><strong>கல்லாணை (த.வெ.க)</strong></h2><p>மதுரை ராஜாஜி மருத்துவமனை புற்றுநோய் பிரிவு அறிவிப்பிற்கு நன்றி  முதல்வர் கொடுக்கும் காரில் செல்வது மகிழ்ச்சி. அனைத்துக்கும் நன்றி.</p><h2><strong>பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்</strong></h2><p>பால் கொள்முதல் விலையை முதலமைச்சர் ஏற்றி தந்து உள்ளார். மருத்துவ துறையில் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்துள்ளார். எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனமும் உதவியாளரும் வழங்கியுள்ளார். இதற்கு இரு கரங்களைக் கூப்பி வணங்குகின்றோம்.</p><p>இது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமல்ல மறைமுகமாக ஓட்டுநர்களுக்கு வேலைவாய்ப்பு உதவியாளர்களுக்கு வேலை வாய்ப்பு, சுற்றி சுற்றி பம்பரமாய் வேலை செய்வதற்காக புதிய வாகனத்தை தந்துள்ளார். </p><p>என்ன தருவார் எதை தருவார் என்று எண்ணுவதற்கு முன்னே பொன்னை தருவார் பொருளை தருவார். போதாது போதாது என்றால் தன்னையே தரக்கூடிய முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி.</p><h2><strong>சத்தியபாமா (த வெ க )</strong></h2><p>மக்களுக்காக பணியாற்ற வேண்டும். அதில் எந்தவித தொய்வும் ஏற்பட்டுவிடக்கூடாது என முதலமைச்சர் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் கொடுத்தது இன்ப அதிர்ச்சியை வழங்கி உள்ளார். அவருக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2><strong>பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி</strong></h2><p>பால் உற்பத்தியாளரின் கோரிக்கை அறிந்து தாயுள்ளத்தோடு அவர்களுக்கு பால் கொள்முதல் விலையை உயர்த்தியதற்கு நன்றி.</p><h2><strong>மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)</strong> </h2><p>கரும்பு கொள்முதல்களை உயர்த்தியது மட்டுமின்றி பால் கொள்முதல் விலையை உயர்த்தி விவசாயிகளின் வயிற்றில் பால்  வார்த்துள்ளார். அவருக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2><strong>காங்கிரஸ் எம்எல்ஏ</strong></h2><p>கொடுக்குறதுதான் கொடுக்குறீங்க 'இன்னோவா' காரா கொடுத்தா நல்லாருக்கும் என்றார். </p><h2><strong>சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான்</strong></h2><p>பால் கொள் முதல் விலை உயர்வு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்குவது, ஒரே நாளில் அடுத்தடுத்த அறிவிப்புகள் பெறுவதும், மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு முதலமைச்சருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2><strong>பா.ம.க கணேஷ்குமார்</strong></h2><p>சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் மட்டுமில்லாமல் உதவியாளர் என சிறப்பு அறிவிப்பு செய்து இருப்பது வரவேற்கத்தக்கது. அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இருக்க வேண்டும் என்றார். </p><h2><strong>சபாநாயகர்</strong></h2><p>அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தான் வாகனம் தருகிறார்கள்.</p><h2><strong>கணேஷ்குமார்</strong></h2><p>முதலமைச்சருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை  தெரிவித்துக் கொள்கிறேன். மக்களை நோக்கி செல்லும் எங்கள் பயணத்திற்கு வேகம் வழங்கி இருப்பதைதான் நாங்கள் பார்க்கிறோம் என்றார். </p><h2><strong>பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன்</strong></h2><p>கல்லூரியில் காதல் தோல்வியடைந்த எனக்கு வேலையும் இல்லை காரும் இல்லை. தற்போது முதல்வர் எனக்கு வேலையும் வழங்கியிருக்கிறார். காரும் வழங்கியுள்ளார் என்றார்.</p><h2><strong>சமூக நீதி துறை அமைச்சர் வன்னியரசு</strong></h2><p>ரூ. 5 லட்சம் காப்பீட்டை அதிகரித்து கொடுங்கள் என எங்கள் தலைவர் கேட்டதுண்டு அதை அதிகரித்து கொடுத்துள்ளார். இது வரவேற்கத்தக்க ஒன்று என்றார்.</p>]]></content:encoded></item><item><title>நீர்வளம், ஊரக வளர்ச்சி மானியக் கோரிக்கை: திமுக - தவெக இடையே காரசார விவாதம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rural-development-water-resources-grant-request-dmk-tvk-clash</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rural-development-water-resources-grant-request-dmk-tvk-clash#comments</comments><guid isPermaLink="false">d4a0f70b-684f-4c8f-8985-019a74c9c705</guid><pubDate>Wed, 19 Aug 2026 06:04:56 +0000</pubDate><atom:updated>2026-08-19T06:04:56.928Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,I Periyasamy,TN assembly,அமைச்சர் ஐ.பெரியசாமி,Minister Anand,அமைச்சர் ஆனந்த்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/2jwb585h/I-Periyasamy.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister N.Anand- I.Periyasamy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/2jwb585h/I-Periyasamy.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் இன்றைய கூநீர்வளம், ஊரக வளர்ச்சி மானியக் கோரிக்கையை அமைச்சர் ஆனந்த் தாக்கல் செய்தார்.</p><p>இதைதொடர்ந்து, நீர்வளத்துறை மீதான மானிய கோரிக்கை மீது விவாதம் தொடங்கியது.</p><h2>திமுக எம்எல்ஏ ஐ.பெரியசாமி உரை:</h2><p>திமுக ஆட்சியில வருடத்திற்கு 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. திமுக ஆட்சியில் அனுமதிக்கப்பட்ட வீடுகள் அடித்தளத்துடன் நிற்கின்றன.</p><p>தொகையை உயர்த்தி எண்ணிக்கையை குறைத்துவிட்டனர்.</p><h2>அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்:</h2><p>திமுக ஆட்சியில் வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கவில்லை. வீடு கட்ட திமுக ஆட்சியில் கொடுத்த ரூ.3.5 லட்சம் போதுமானதாக இல்லை.</p><p>வீடுகள் முறையாக கட்டப்பட்ட ரூ.5 லட்சம் வழங்குகிறது தவெக அரசு.</p><h2>ஐ.பெரியசாமி: </h2><p>தற்போது எம் சாண்ட் விலையை தாறுமாறாக உயர்த்தி உள்ளனர். ஜல்லி விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.</p><p>வீடு கட்டும் திட்டத்தில் பெயரை மாற்றி விட்டு வீடுகளின் எண்ணிக்கையை தவெக அரசு குறைத்துவிட்டது.</p><h2>அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்:</h2><p>திமுக ஆட்சியில் வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கவில்லை. வீடு கட்டும் திட்டத்தில் பல தவறுகள் நடந்துள்ளது என திட்டவட்டமாக நான் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>ஏற்கெனவே வீடு வைத்துள்ளவர்களுக்கு வீடு கட்டப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கியதற்கான ஆதாரம் உள்ளது.</p><h2>ஐ.பெரியசாமி</h2><p>அலுவலர்கள் தான் தேர்வு செய்கின்றனர். தவறு நடக்கிறது என்பதற்காக திட்டத்தை நிறுத்தக்கூடாது.</p><p>கட்சி, சாதி மத பாகுபாடின்றி விண்ணப்பித்த அனைவருக்கும் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு தருவதற்கு முயற்சி. கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், அரசுக்கான இழப்பை குறைக்க உதவும்.</p><p>வீடு பெறும் பயனாளிகளை தேர்ந்தெடுப்பது அதிகாரிகள் அடங்கிய குழு தான். வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.5 லட்சம் அரசு நிதி தந்தாலும் தற்போது விலை உயர்ந்துள்ளதால் நிதி பற்றாக்குறை தான்.</p><p>வீடு கட்டும் திட்டத்தில் பெயரை மாற்றிவிட்டு வீடுகளின் எண்ணிக்கையை தவெக அரசு குறைத்துவிட்டது.</p><h2>அமைச்சர் ஆனந்த்:</h2><p>திமுக ஆட்சியில் வீடுகள் முழுமையாக கட்டப்படவில்லை. மக்கள் இன்னும் குடிசையில் தான் வசிக்கின்றனர்.</p><h2>ஐ.பெரியசாமி:</h2><p>கொள்கை தலைவர் என சொல்கிறீர்கள், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை தமிழக அரசு வளர்ச்சி திட்டம் என மாற்றியது நியாயமா? மறுமலர்ச்சி திட்டத்தில் அண்ணாவின் பெயரை மாற்றியது வருத்தமாக உள்ளது.</p><h2>அமைச்சர் பிரபு:</h2><p>திமுக ஆட்சியில் ஆண்டுக்கு 100 கோடி மெட்ரிக் ஜல்லி உற்பத்தி, 85 கோடி டன் மெட்ரிக் டன் தான் பயன்படுத்தியுள்ளனர். </p><h2>அமைச்சர் ஆனந்த்:</h2><p>வீடு கட்டும் திட்டத்தில் பல தவறுகள் நடந்துள்ளது என திட்டவட்டமாக நான் தெரிவித்துக் கொள்கிறேன். </p>]]></content:encoded></item><item><title>சத்துணவில் உப்புக்கு பதிலாக டிடர்ஜென்ட் பவுடர் - 40 பள்ளி மாணவர்களின் உடல்நலம் பாதிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/detergent-mistaken-for-salt-in-school-meal-40-students-hospitalised</link><comments>https://www.maalaimalar.com/news/national/detergent-mistaken-for-salt-in-school-meal-40-students-hospitalised#comments</comments><guid isPermaLink="false">1b2b3180-62e6-4a7b-b3e3-297cdda77c4b</guid><pubDate>Wed, 19 Aug 2026 06:01:43 +0000</pubDate><atom:updated>2026-08-19T06:01:43.299Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பீகார்,Bihar,food poisoning,MidDay MealHorror,சத்துணவுவிபத்து,NalandaSchool,DetergentInFood,SchoolStudentsIll,மதியஉணவுஅலட்சியம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/m9373txt/Food-Poisoning" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Food Poisoning ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/m9373txt/Food-Poisoning?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">பீகார் </a>மாநிலம் நாலந்தா மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் வழங்கப்பட்ட மதிய சத்துணவில், உப்புக்கு பதிலாக தவறுதலாக டிடர்ஜென்ட் பவுடர் கலக்கப்பட்டதால், உணவை உண்ட 40-க்கும் மேற்பட்ட <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">பள்ளி மாணவர்கள்</a> கடுமையான வயிற்று வலி மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். </p><p>இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p><h2>என்ன நடந்தது?</h2><p>நாலந்தா மாவட்டம் நூர்சராய் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரசி நடுநிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை மதிய உணவு வழங்கப்பட்டது. அன்றைய தினம் மாணவர்களுக்கு சோயாபீன்ஸ் கூட்டு பரிமாறப்பட்டது.</p><p>உணவை சாப்பிட்ட மாணவர்கள், அதில் உப்பு குறைவாக இருப்பதாக சமையலரிடமும் ஆசிரியர்களிடமும் கூறியுள்ளனர். அப்போது, சமையல் அறையில் இருந்த ஊழியர்கள், உப்புக்கு பதிலாக அங்கிருந்த டிடர்ஜென்ட் பவுடரை தவறுதலாக எடுத்து மாணவர்களுக்குப் பரிமாறியுள்ளனர். </p><p>அது சலவை தூள் என்று தெரியாமல் மாணவர்களும் உணவோடு சேர்த்து அதனைச் சாப்பிட்டுள்ளனர்.</p><h2>மருத்துவமனையில் குவிந்த பெற்றோர்:</h2><p>டிடர்ஜென்ட் பவுடர் கலந்த உணவைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே, மாணவர்களுக்கு அடுத்தடுத்து கடுமையான வயிற்று வலியும், வாந்தியும் ஏற்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 40 மாணவர்கள் மயங்கி விழுந்ததால் பள்ளியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.</p><p>உடனடியாக பள்ளி நிர்வாகத்தினர் அனைத்து மாணவர்களையும் மீட்டு 'பீகார் ஷெரீஃப் மாதிரி மருத்துவமனைக்கு' சிகிச்சைக்காக அவசர அவசரமாக அனுமதித்தனர். </p><p>இந்த தகவல் காட்டுத்தீ போல பரவியதால், அதிர்ச்சியடைந்த பெற்றோர்களும், உறவினர்களும் மருத்துவமனை வளாகத்தில் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.</p><h2>அமைச்சரின் அதிரடி ஆய்வு மற்றும் எச்சரிக்கை:</h2><p>பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நாலந்தா மாவட்ட சிவில் சர்ஜன் டாக்டர் ஜெய் பிரகாஷ் சிங் தலைமையிலான மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். "தற்போது அனைத்து குழந்தைகளும் ஆபத்து கட்டத்தைத் தாண்டி பாதுகாப்பாக உள்ளனர். தொடர்ந்து அவர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்" என்று சிவில் சர்ஜன் தெரிவித்துள்ளார்.</p><p>இச்சம்பவம் குறித்து அறிந்த பீகார் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஷ்ரவண் குமார் நேரடியாக மருத்துவமனைக்கு விரைந்து சென்று, சிகிச்சை பெற்று வரும் மாணவர்களைச் சந்தித்து நலம் விசாரித்தார்.</p><p>செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஷ்ரவண் குமார், "மாணவர்களுக்குத் தரமான சிகிச்சை வழங்க மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. </p><p>பள்ளி மதிய உணவு தயாரிப்பிலும், அதனைப் பரிமாறுவதிலும் இவ்வளவு பெரிய அலட்சியமாகச் செயல்பட்டவர்கள் மீது மிகக் கடுமையான சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதியளித்தார்.</p><h2>கேள்விக்குறியாகும் மாணவர்களின் பாதுகாப்பு:</h2><p>மதிய உணவு சமைக்கும் இடத்தில், உணவுப் பொருட்களுக்கு அருகில் டிடர்ஜென்ட் பவுடர் ஏன் வைக்கப்பட்டது? மற்றும் அதனைச் சோதிக்காமல் மாணவர்களுக்கு எப்படிப் பரிமாறினார்கள் என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். </p><p>ஏழை எளிய அரசுப் பள்ளி மாணவர்களின் உயிருடன் விளையாடிய இந்த அலட்சியப் போக்கு பீகாரில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஊழல் தொடர்பான அனைத்து ஆதாரங்களும் என் மேஜையில் தான் உள்ளது- முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-says-all-the-evidence-regarding-the-corruption-is-right-here-on-my-desk</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-says-all-the-evidence-regarding-the-corruption-is-right-here-on-my-desk#comments</comments><guid isPermaLink="false">1bf8ee24-370a-4881-8166-0d610eecddfa</guid><pubDate>Wed, 19 Aug 2026 05:52:47 +0000</pubDate><atom:updated>2026-08-19T05:52:47.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,I Periyasamy,TN assembly,ஐ பெரியசாமி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/hu5iwaxe/vijay02.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/hu5iwaxe/vijay02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மக்களிடம் என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என்று எனக்கு தெரியும், பேசிவிட்டு தான் வந்துள்ளேன். நான் பேசுவேன், ஆனால் இடைத்தேர்தலிலாலவது சிலருக்கு நல்லது நடக்க வேண்டும் இல்லையா? என்றார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழ்நாடு சட்டசபையில்</a> மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, தி.மு.க. எம்.எல்.ஏ. ஐ. பெரியசாமி பேசுகையில், வீடு கட்டும் திட்டத்தில் பெயரை மாற்றி விட்டு வீடுகளின் எண்ணிக்கையை தவெக அரசு குறைத்து விட்டது என்றார். </p><p>அதற்கு அமைச்சர் ஆனந்த், வீடு கட்டும் திட்டத்தில் பல தவறுகள் நடந்துள்ளது என திட்டவட்டமாக நான் தெரிவித்துக் கொள்கிறேன்  என்றார். அதனை தொடர்ந்து பேசிய எம்.எல்.ஏ. ஐ. பெரியசாமி, அலுவலர்கள் தான் தேர்வு செய்கின்றனர். தவறு நடக்கிறது என்பதற்காக திட்டத்தை நிறுத்தக்கூடாது. கட்சி, சாதி மத பாகுபாடின்றி விண்ணப்பித்த அனைவருக்கும் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு தருவதற்கு முயற்சி. கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், அரசுக்கான இழப்பை குறைக்க உதவும். வீடு பெறும் பயனாளிகளை தேர்ந்தெடுப்பது அதிகாரிகள் அடங்கிய குழு தான் என்று பேசினார். </p><p>இதையடுத்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், </p><p>சமஸ் தொகுத்த ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ புத்தகத்தை எ.வ.வேலு குறிப்பிட்டிருந்தார். விஜய் 100 : ஊழலுக்கு எதிரான ஓர் அடி என சமஸ் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். என்ன பேசினாலும் ஆதாரம் காட்டுங்கள் என எதிர்க்கட்சியினர் சொல்கிறார்கள். கடந்த ஆட்சியில் தவறுகள் ஏற்பட்டிருக்கலாம் என ஒப்புக்கொண்ட ஐ.பெரியசாமிக்கு நன்றி என்றார். </p><p>இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் பேசுகையில், </p><p>முந்தைய ஆட்சியில் 3 துறைகளை ஆய்வு செய்த அறிக்கை என் மேஜையில் உள்ளது. கோப்புகள் என்னிடம் இருப்பதாக நிதியமைச்சர் கூறியிருந்தார். அது உண்மை தான். ஆதாரங்கள் அனைத்தும் என் மேஜையில் தான் உள்ளது. அந்த கோப்புகளை ஓபன் செய்ய வைத்துவிடாதீர்கள், எப்போது திறக்க வேண்டுமோ அப்போது திறப்போம்.  மக்களிடம் என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என்று எனக்கு தெரியும், பேசிவிட்டு தான் வந்துள்ளேன். நான் பேசுவேன், ஆனால் இடைத்தேர்தலிலாலவது சிலருக்கு நல்லது நடக்க வேண்டும் இல்லையா? என்றார். </p><p>எம்எல்ஏ ஐ பெரியசாமி பேசுகையில்,  நான் அன்பாக, அக்கறையாக, ஆசையாக பேசியதால் தான் மக்கள்  என்னை 7 முறை எம்எல்ஏவாக வெல்ல வைத்துள்ளனர் என்றார். </p>]]></content:encoded></item><item><title>பால் கொள்முதல் விலை ரூ.3  உயர்வு போதுமானதல்ல: லிட்டருக்கு குறைந்தது 7 ரூபாயாவது உயர்த்த வேண்டும்!- அன்புமணி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-price-must-be-raised-by-at-least-7-rupees-per-litre</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-price-must-be-raised-by-at-least-7-rupees-per-litre#comments</comments><guid isPermaLink="false">b16f33b7-b906-41d5-8a23-1dc7002b4386</guid><pubDate>Wed, 19 Aug 2026 05:27:54 +0000</pubDate><atom:updated>2026-08-19T05:27:54.025Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,ஆவின் பால் கொள்முதல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/skdyp5yo/anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/skdyp5yo/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு வரவேற்கத்தக்கது என்றாலும் இது போதுமானது அல்ல என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.</strong></em> </p><p>தமிழக சட்டசபையில் இன்று <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-chief-ministers-medical-insurance-coverage-raised-to-rs-25-lakh">முதலமைச்சர் விஜய்</a> 110 விதியின் கீழ், ஆவின் பால் கொள்முதல் விலையை ரூ.38-ல் இருந்து ரூ.41 ஆக உயர்த்தப்படும் என்று அறிவித்தார். </p><p>இதுதொடர்பாக பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>போதுமானது அல்ல</strong></h2><p>தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்படும் பாலின் விலை லிட்டருக்கு  ரூ.3  உயர்த்தப்பட்டிருக்கிறது. பாலுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த கொள்முதல் விலை 35 ரூபாயிலிருந்து 36 ரூபாயாகவும்,  ஊக்கத்தொகை ரூ.3-லிருந்து  ரூ.5 ஆகவும் உயர்த்தப்படும்  என்று  முதலமைச்சர் விஜய் அவர்கள் அறிவித்திருக்கிறார்.  பால் கொள்முதல் விலை உயர்வு வரவேற்கத்தக்கது என்றாலும் இது போதுமானது அல்ல.</p><p>தமிழ்நாட்டில் பால் கொள்முதல் விலை கடந்த 4 ஆண்டுகளாக உயர்த்தப்படாததாலும், தனியார் நிறுவனங்கள் ஆவின் கொள்முதல் விலையை விட  லிட்டருக்கு  ரூ.12 வரை கூடுதலாக வழங்குவதாலும் ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு குறைந்தது ரூ.10 உயர்த்தி வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வந்தது. அந்த அளவுக்கு உயர்த்த முடியாவிட்டாலும் குறைந்தது லிட்டருக்கு  ரூ.7 அளவுக்காவது உயர்த்த அரசு முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>அதிமுக வெளிநடப்பு: தவெக ஆட்சி வந்த வேகத்தில் படுபாதாளத்திற்கு சென்றுவிடும்..!-எடப்பாடி பழனிசாமி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/aiadmk-stages-walkout-edappadi-says-tvk-government-heading-towards-ruin</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/aiadmk-stages-walkout-edappadi-says-tvk-government-heading-towards-ruin#comments</comments><guid isPermaLink="false">c96479d7-33b9-4c83-87b8-7b17d289d52c</guid><pubDate>Wed, 19 Aug 2026 05:23:59 +0000</pubDate><atom:updated>2026-08-19T05:23:59.863Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,ADMK,அதிமுக,எடப்பாடி பழனிசாமி,தமிழக சட்டமன்றம்,TN assembly,tvk</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/eymutj78/EPS.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Edappadi pazhanisami]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/eymutj78/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கவன ஈர்ப்பு தீர்மானங்களை விவாதத்திற்கு எடுக்க மறுத்ததால் அதிமுக எம்எல்ஏக்கள் முழக்கங்கள் எழுப்பி வெளிநடப்பு செய்தனர்.</p><p>கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து முழக்கங்கள் எழுப்பியவாறு அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.</p><p>இதைதொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><p>சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்து 5 நாட்களான பின்னும் விவாதத்திற்கு ஏற்க மறுக்கின்றனர்.</p><p>சவுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர் உடல் தாயகம் கொண்டு வருவது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம்.</p><p>தமிழர்களை காப்போம் என்று சொல்லும் தவெக அரசு சவுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் உடலை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை.</p><p>ஈரானிய கடற்கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக மீனவர் தொடர்பான கவன ஈர்ப்பை விவாதத்திற்கு ஏற்க மறுக்கின்றனர்.</p><p>கடற்கொள்ளையர்கள் சுட்டதில் ஒரு மீனவர் பலியான நிலையில் மேலும் 4 மீனவர்கள் சவுதியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p>அரசாங்கம் நடக்கவில்லை, ரீல்ஸ் மட்டும்தான் போடுகின்றனர். எதற்கு கத்துகிறார்கள் என தெரியாமலேயே கத்துகிறார்கள்.</p><p>எந்த அளவுக்கு வேகமாக தவெக ஆட்சி வந்துள்ளதோ, அதே வேகத்தில் படுபாதாளத்திற்கு சென்றுவிடும்.</p><p>மயிலாடுதுறையைச் சேர்ந்த மீனவர் உடலை மீட்பது தொடர்பான நடவடிக்கை எடுக்காமல் தவெக அரசு தட்டிக் கழிக்கிறது.</p><p>துப்பாக்கிச்சூட்டில் தமிழக மீனவர் உயிரிழப்பு குறித்து பேசும்போது தவெக எம்எல்ஏக்கள் சிரிக்கின்றனர்.</p><p>3 மீனவர்கள் உடல் ஒருவாரமாக தமிழகம் கொண்டுவர முடியாமல் தவிக்கின்றனர். இதைவிட என்ன முக்கியமானது உள்ளது.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY : சற்று குறைந்த தங்கம் விலை- எவ்வளவு தெரியுமா? </title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-19-08-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-19-08-2026#comments</comments><guid isPermaLink="false">61682066-552e-42d9-9247-5178c656669a</guid><pubDate>Wed, 19 Aug 2026 05:17:21 +0000</pubDate><atom:updated>2026-08-19T05:17:21.385Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/osvftska/gold07.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ தங்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/osvftska/gold07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கடந்த 5 நாட்களாக விலைமாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தங்கம்">தங்கம்</a>... என்றால் தற்போது நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாகவே மாறி வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய விலையில் விற்பனை செய்யப்படுவதால் உச்சத்தை தொட்டு விற்பனையாகிறது. ஆடி மாதம் முடிந்து சுபமுகூர்த்த தினங்கள் நிறைந்த ஆவணி மாதம் பிறந்துள்ளதால், இனி வரும் நாட்களில் தங்கத்தின் தேவை அதிகரித்து விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2><strong>சற்று குறைந்த தங்கம் விலை</strong></h2><p>இந்த நிலையில், இந்த வாரத்தில் தொடக்கத்தில் இருந்து அதாவது கடந்த 2 நாட்களாக சற்று உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு 85 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14,205-க்கும் சவரனுக்கு  680 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><h2><strong>வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 250 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது. கடந்த 5 நாட்களாக விலைமாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. </p><h2><strong>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-</strong></h2><p>18-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,320</p><p>17-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,160</p><p>16-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,760</p><p>15-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,760</p><p>14-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,600</p><h2><strong>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-</strong></h2><p>18-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>17-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>16-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>15-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>14-08-2026- ஒரு கிராம் ரூ.255</p>]]></content:encoded></item><item><title>10,000mAh பேட்டரியுடன் விரைவில் அறிமுகமாகும் ரெட்மி நோட் ஸ்மார்ட்போன்</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/redmi-note-17-pro-max-with-10000mah-battery-to-launch-on-august-27</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/redmi-note-17-pro-max-with-10000mah-battery-to-launch-on-august-27#comments</comments><guid isPermaLink="false">ee38aa04-4d25-4fc3-8cdb-67983ca0dcf6</guid><pubDate>Wed, 19 Aug 2026 04:38:00 +0000</pubDate><atom:updated>2026-08-19T04:38:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Redmi,ரெட்மி,smartphone,ஸ்மார்ட்போன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/ne2gxco1/redmi-note-17-pro-max.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ redmi note 17 pro max]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/ne2gxco1/redmi-note-17-pro-max.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/xiaomi">சியோமி</a> நிறுவனம் ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனினை விரைவில் சர்வதேச சந்தைகளில் அறிமுகம் செய்ய இருக்கிறது. </p><p>இந்த நிலையில், ரெட்மி நோட் 17 ப்ரோ <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மார்ட்போன்</a> ஆகஸ்ட் 27-ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களில் சிலவற்றை சியோமி ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது.</p><h2>சிறப்பம்சங்கள்:</h2><p>அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் 10,000mAh அளவில் பெரிய பேட்டரி, 100W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 1.5K AMOLED ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் மாடல் வரவிருக்கும் ரெட்மி நோட் 17 வரிசையில் முதன்மையான மாடலாக இருக்கும். இதன் விலை பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளது.</p><p>ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் 10,000mAh பேட்டரி 'சிலிக்கான்-கார்பன்' பேட்டரி தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்துடன் 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை ஆதரிக்கும் திறன் கொண்டது.</p><h2>டிஸ்ப்ளே:</h2><p>இந்த ஸ்மார்ட்போன் 1.5K ரெசல்யூஷன் கொண்ட 6.83 இன்ச் AMOLED ஸ்கிரீன் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இத்துடன் 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படுகிறது.</p><p>இந்த ஸ்மார்ட்போன் மெல்லிய பெசல்களுடன் கூடிய இந்த CrystalRes AMOLED திரை, சியோமியின் பிரத்யேக தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இதன் மூலம், மல்டிமீடியா மற்றும் கேமிங் பயன்பாடுகளுக்கு இந்த மாடல் மிகவும் ஏற்றதாக அமையும்.</p><p>ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 5 பிராசஸர் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் 12 ஜிபி வரை ரேம் வழங்கப்படும் என்று தெரிகிறது.</p>]]></content:encoded></item><item><title>எம்எல்ஏக்களுக்கு கார்... முதலமைச்சர் அறிவிப்பால் இன்ப அதிர்ச்சி அடைந்த உறுப்பினர்கள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/assembly-members-shocking-cm-vijay-announced</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/assembly-members-shocking-cm-vijay-announced#comments</comments><guid isPermaLink="false">b11e170b-c5d8-493d-991f-8ab14a5ac665</guid><pubDate>Wed, 19 Aug 2026 04:36:03 +0000</pubDate><atom:updated>2026-08-19T04:36:03.579Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/8347zcxc/vijay01.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/8347zcxc/vijay01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சில தினங்களுக்கு முன், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. ஜோதிமணி வாகனம் வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில் நடப்பு சட்டசபை தொடரிலேயே முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> இன்று 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-</p><p>* மக்கள் பணியை தொய்வின்றி தொடர்வதற்கும், தொகுதி பணியை தொடர்ந்து மேற்கொள்ளவும் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் வாகனம் வழங்கப்படும். </p><p>* வாகனத்திற்காக மாதம் தோறும் ரூ.75,000 வாகனப்படி, ஓர் உதவியாளரை நியமித்து ஊதியம் தர மாதத்திற்கு ரூ.25ஆயிரம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். </p><p>சில தினங்களுக்கு முன், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. ஜோதிமணி வாகனம் வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில் நடப்பு சட்டசபை தொடரிலேயே முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. </p><p>முதலமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தனர். </p><p>விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. ஜோதிமணி: அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சருக்கு நன்றி</p><p>அமைச்சர் ராஜ்மோகன்: முதலமைச்சர் விஜயால் நிறைய வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.</p><p>அமைச்சர் ஷாஜகான்: முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி.</p><p>எம்எல்ஏ காமராஜ்: முதலமைச்சர் கொடுக்கும் காரில்தான் செல்வதே கெத்து. </p><p>பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்றனர். </p>]]></content:encoded></item><item><title>Video: கேரள கிரிக்கெட் லீக் 2026: சஞ்சு சாம்சன், மோகன்லால் இணைந்த விளம்பர வீடியோ வைரல்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/kerala-cricket-league-2026-sanju-samson-mohanlal-ad-video-goes-viral</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/kerala-cricket-league-2026-sanju-samson-mohanlal-ad-video-goes-viral#comments</comments><guid isPermaLink="false">cafe9e87-3d91-4c8b-a867-de114cc1845c</guid><pubDate>Wed, 19 Aug 2026 04:29:16 +0000</pubDate><atom:updated>2026-08-19T04:29:16.182Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Mohanlal,Sanju samson,சஞ்சு சாம்சன்,மோகன்லால்,T20Cricket,Kerala Cricket League,KCL 2026,கேரள கிரிக்கெட்லீக்,Kerala Cricket</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/qn9en032/SanjuSamson-Mohanlal" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ SanjuSamson  - Mohanlal ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/qn9en032/SanjuSamson-Mohanlal?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரள கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் <a href="https://www.maalaimalar.com/sports/cricket/sanju-samson-joins-kochi-blue-tigers-in-record-breaking-kcl-2025-bid-779344">கேரள கிரிக்கெட் லீக் </a>டி20 தொடரின் 3-வது சீசன், திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்டு சர்வதேச மைதானத்தில் நாளை மிக பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது.</p><p>இந்தத் தொடருக்கான எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில், இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D">சஞ்சு சாம்சன் </a>மற்றும் மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D">மோகன்லால் </a>ஆகியோர் இணைந்து நடித்துள்ள விளம்பர வீடியோ தற்போது இணைய தளத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது.</p><h2><strong>ஒன்றிணைந்த சினிமா மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள்</strong></h2><p>சஞ்சு சாம்சன் மற்றும் மோகன்லால் என கேரளாவின் இரு மாபெரும் ஆளுமைகள் இந்த விளம்பர வீடியோவில் ஒன்றாகத் தோன்றுவது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.</p><p>இந்த வீடியோவில் சஞ்சு சாம்சன் காரை ஓட்ட, மோகன்லால் அருகில் அமர்ந்து உரையாடுவது போன்ற சுவாரசியமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இவர்களின் இந்த எதிர்பாராத கூட்டணி, சினிமா மற்றும் கிரிக்கெட் ரசிகர்களை இணைத்து சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. </p><p>சமீபத்தில் நடைபெற்ற கேசிஎல் கோப்பை அறிமுக விழாவில் பங்கேற்ற சஞ்சு சாம்சன், கேரளாவின் இளம் கிரிக்கெட் திறமைகளை வெளிக்கொண்டு வர இந்த லீக் ஒரு மிகச்சிறந்த தளம் என்று பெருமிதத்தோடு குறிப்பிட்டுள்ளார்.</p><h2><strong>நாளை தொடங்கும் கிரிக்கெட் திருவிழா</strong></h2><p>இந்த 3-வது சீசன் ஆகஸ்ட் 20 முதல் செப்டம்பர் 5, 2026 வரை நடைபெற உள்ளது. இதில் பல அணிகள் கலந்து கொள்ளவுள்ளன.</p><p>ரசிகர்கள் போட்டிகளை மதியம் 2:00 மணி முதல் நேரலையாக Star Sports 3 தொலைக்காட்சியிலும், JioHotstar ஓடிடி தளத்திலும் நேரடியாகக் கண்டு ரசிக்கலாம்.</p><p>மலையாள திரையுலகின் பிரம்மாண்டமும், கிரிக்கெட் நட்சத்திரத்தின் அனல் பறக்கும் கூட்டணியும் இணைந்து இந்த விளம்பர வீடியோ மூலம் கேரள கிரிக்கெட் லீக்கிற்கான எதிர்பார்ப்பை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Chettan with Ettan! ❤️<a href="https://x.com/hashtag/Mohanlal?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Mohanlal</a>&#39;s unmatched swagger meets <a href="https://x.com/hashtag/SanjuSamson?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#SanjuSamson</a>&#39;s star power in the new <a href="https://x.com/hashtag/KCL?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#KCL</a> ad!  <a href="https://x.com/hashtag/Kerala?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Kerala</a> are you ready for cricket season? <a href="https://x.com/hashtag/KCLPromo?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#KCLPromo</a><br> <a href="https://t.co/Dn8dYIWuuA">pic.twitter.com/Dn8dYIWuuA</a></p>&mdash; Jayaraman (@JournoJRaman) <a href="https://x.com/JournoJRaman/status/2089614609884053509?ref_src=twsrc%5Etfw">August 18, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு தொகை ரூ.25 லட்சமாக உயர்வு- முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-chief-ministers-medical-insurance-coverage-raised-to-rs-25-lakh</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-chief-ministers-medical-insurance-coverage-raised-to-rs-25-lakh#comments</comments><guid isPermaLink="false">ecb2dbba-3c35-4bfb-8858-0d6f17826781</guid><pubDate>Wed, 19 Aug 2026 04:20:41 +0000</pubDate><atom:updated>2026-08-19T04:20:41.220Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/6wp3cc7v/vijay.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/6wp3cc7v/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதலமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு திட்டம் மேம்படுத்தப்படும். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ரூ.470 கோடியில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபை</a> தொடங்கியது. சபை தொடங்கியதும் முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-</p><p>* பெரம்பூரில் ரூ.300 கோடியில் 400 படுக்கை கொண்ட பன்னோன்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும்.</p><p>* முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும். </p><p>* ரூ.351 கோடி மதிப்பீட்டில் செவிலியர் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கப்படும். </p><p>* 7 அரசு மருத்துவ கல்லூரிகளில் திருநங்கைகளுக்கான அறுவை சிகிச்சை வழங்கப்படும். </p><p>* பால் உற்பத்தியாளர்கள் நலனை கருத்தில் கொண்டு பால் கொள்முதல் விலை உயர்த்துவது அரசின் கடமை. கடந்த காலத்தில் ஆவின் பாலுக்கான கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை.</p><p>* ஆவின் பால் கொள்முதல் விலையை ரூ.38-ல் இருந்து ரூ.41 ஆக உயர்த்தப்படும். </p><p>* முதலமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு திட்டம் மேம்படுத்தப்படும். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ரூ.470 கோடியில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும்.</p><p>* 5 மருத்துவமனைகளில் மண்டல புற்றுநோய் மையங்கள் தொடங்கப்படும் என்று தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>திருவண்ணாமலை பக்தர்கள் கவனத்திற்கு... செப்டம்பர் 1-ந்தேதி முதல் வரும் புது ரூல்ஸ்!</title><link>https://www.maalaimalar.com/spirituality/ban-on-carrying-mobile-phones-inside-the-tiruvannamalai-arunachaleswarar-temple-starting-september-1</link><comments>https://www.maalaimalar.com/spirituality/ban-on-carrying-mobile-phones-inside-the-tiruvannamalai-arunachaleswarar-temple-starting-september-1#comments</comments><guid isPermaLink="false">796fa815-ea13-4822-b9f7-76a2c1cca795</guid><pubDate>Wed, 19 Aug 2026 03:54:30 +0000</pubDate><atom:updated>2026-08-19T03:54:30.544Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை கோவில்,செல்போன் தடை,Tiruvannamalai temple,cellphone ban</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/ohus83y7/tiruvannamalai.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ திருவண்ணாமலை கோவில்]]></media:title><media:description type="html"><![CDATA[ திருவண்ணாமலை கோவில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/ohus83y7/tiruvannamalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்குள் வருகிற செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் செல்போன்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கோவில் இணை ஆணையர் பரணிதரன் தெரிவித்துள்ளார்.</strong></em></p><p>கோவில் இணை ஆணையர் பரணிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><h2><strong>செல்போன்களுக்கு தடை</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/திருவண்ணாமலை-கோவில்">திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்</a> பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் சுற்றறிக்கை உத்தரவின்படி அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் வருகிற செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் கோவிலுக்குள் உள்ளே செல்போன்கள் எடுத்துச் செல்வது தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>எனவே, பக்தர்கள் செல்போன் எடுத்து வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.</p><h2><strong>பாதுகாப்பு மையங்கள்</strong></h2><p>மேலும் பக்தர்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பாக வைத்து செல்ல ஏதுவாக கோவிலின் கிழக்கு ராஜகோபுரம் அருகில் 2 இடங்களிலும், வடக்கு அம்மணி அம்மன் கோபுரம் அருகில் 2 இடங்களிலும், தெற்கு திருமஞ்சன கோபுரம் அருகில் ஒரு இடத்திலும் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள மையங்களில் பக்தர்கள் தங்களது செல்போன்களை ரூ.5 கட்டணமாக செலுத்தி ஒப்படைத்துவிட்டு டோக்கன் பெற்றுக் கொள்ளலாம். சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பியவுடன் டோக்கன்களை காண்பித்து பாதுகாப்பு மையங்களில் இருந்து செல்போன்களை பெற்றுக் கொள்ளலாம்.</p><h2><strong>பறிமுதல் செய்யப்படும்</strong></h2><p>இந்த உத்தரவினை மீறி கோவிலுக்குள் மறைமுகமாக எடுத்துச் செல்லும் செல்போன்களை உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டு போலீசாரின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கோவில் நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைக்கு பக்தர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>ஆறு மாதங்களில் 2-ஆவது முறையாக விலையை உயர்த்திய சாம்சங், சியோமி</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/samsung-galaxy-m17-galaxy-f17-prices-in-india-hiked-for-second-time-in-six-months</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/samsung-galaxy-m17-galaxy-f17-prices-in-india-hiked-for-second-time-in-six-months#comments</comments><guid isPermaLink="false">23f56c28-85e1-4e87-8539-314734617420</guid><pubDate>Wed, 19 Aug 2026 03:42:00 +0000</pubDate><atom:updated>2026-08-19T03:42:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Samsung,சாம்சங்,smartphone,ஸ்மார்ட்போன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/2czu0io0/Samsung-Galaxy-M17.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Samsung Galaxy M17]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/2czu0io0/Samsung-Galaxy-M17.png?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/samsung">சாம்சங்</a> நிறுவனத்தின் கேலக்ஸி M17, கேலக்ஸி F17, கேலக்ஸி F70e 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்கள் சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதேபோல் சியோமி நிறுவனத்தின் பேட் 8 மாடலும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. </p><p>இது சியோமி நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் டேப்லெட் மாடல் ஆகும். அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே சாம்சங் மற்றும் <a href="https://www.maalaimalar.com/topic/xiaomi">சியோமி</a> நிறுவனங்கள் தங்களது சாதனங்கள் விலையை இந்திய சந்தையில் உயர்த்தியுள்ளது.</p><p>இந்த சாதனங்களின் விலை உயர்த்தப்படுவது முதல் முறையல்ல. சியோமி பேட் 8 மாடல் கடந்த இரு மாதங்களில் இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல் சாம்சங் கேலக்ஸி F மற்றும் கேலக்ஸி M சீரிஸ் மாடல்கள் கந்த ஆறு மாதங்களில் இரண்டு முறை உயர்த்தப்பட்டுள்ளன.</p><h2>விலை உயர்வு:</h2><p>சாம்சங் கேலக்ஸி M17 5ஜி ஸ்மார்ட்போனின் 4 ஜிபி, 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் மாடல்களின் விலை முறையே ரூ. 1000, ரூ. 2000 மற்றும் ரூ. 3000 உயர்த்தப்பட்டுள்ளன. இதேபோல் கேலக்ஸி F17 5ஜி ஸ்மார்ட்போனின் 6 ஜிபி மற்றும் 8 ஜிபி மெமரி மாடல் விலை முறையே ரூ. 1000 மற்றும் ரூ. 2000 உயர்த்தப்பட்டு இருக்கிறது.</p><p>இதேபோல் சாம்சங் கேலக்ஸி F70e 5ஜி மற்றும் கேலக்ஸி M17e 5ஜி ஸ்மார்ட்போன்களின் 4 ஜிபி மற்றும் 6 ஜிபி மெமரி மாடல்களின் விலை முறையே ரூ. 1000 மற்றும் ரூ. 2000 உயர்த்தப்பட்டு இருக்கிறது. </p><p>விலை உயர்வை தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போன்களின் தொடக்க விலை முறையே ரூ. 17,499 என மாறியுள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ரூ. 13,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.</p><h2>சியோமி டேப்லெட்:</h2><p>சியோமி இந்தியா ஆன்லைன் தளத்தில் சியோமி பேட் 8 மாடலின் புதிய விலை மாற்றப்பட்டுவிட்டது. அதன்படி இந்த டேப்லெட் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 38,999 என மாறியிருக்கிறது. </p><p>இதன் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 43,999 என மாறி இருக்கிறது. முன்னதாக ஜூன் மாத வாக்கில் இரு வேரியண்ட்களின் விலை ரூ. 35,999 மற்றும் ரூ. 38,999 என உயர்த்தப்பட்டது. </p><p>தற்போது இந்த மாடலின் விலை முறையே ரூ. 3000 மற்றும் ரூ. 5000 உயர்த்தப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>மின்வாரிய உபகரணங்கள் கொள்முதலில் மோசடி - 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anti-corruption-department-raids-40-locations</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anti-corruption-department-raids-40-locations#comments</comments><guid isPermaLink="false">d9d6622d-6e8e-46c7-a6c9-4f8c6b869b6d</guid><pubDate>Wed, 19 Aug 2026 03:36:36 +0000</pubDate><atom:updated>2026-08-19T03:36:36.925Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,TNEB,தமிழ்நாடு மின்சார வாரியம்,லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை,DVAC Raid</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/8vgkl34f/transformer.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ transformer]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/8vgkl34f/transformer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>டிரான்ஸ்ஃபார்மர் கொள்முதல் முறைகேடு தொடர்பாக தமிழகம் முழுவதும் சுமார் 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு</a> மின்மாற்றிகள் உள்ளிட்ட  உபகரணங்கள் கொள்முதலில் மோசடி எனப் புகார் எழுந்தது. இதையடுத்து, சென்னை, திருவள்ளூரில் சுமார் 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.</p> <p>மின்வாரியத்திற்கு உபகரணங்கள் வழங்கிய நிறுவனங்களின் உரிமையாளர்கள் வீடுகள் உள்ளிட்ட 40 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. </p><p>சென்னையில் 27 இடங்களில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%20%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%20%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88">லஞ்ச ஒழிப்புத்துறை</a> போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.</p> <p>சென்னை பெருங்குடியில் 4 இடங்கள், அண்ணா நகரில் 3 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.</p><p>திருவள்ளூர், செங்கல்பட்டிலும் 10-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>பாகிஸ்தானில் இருந்து 10,000 பயங்கரவாதிகள் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டு உள்ளனர்: நசீர் மத்னி </title><link>https://www.maalaimalar.com/news/world/10000-terrorists-sent-from-pakistan-to-india-naseer-madni</link><comments>https://www.maalaimalar.com/news/world/10000-terrorists-sent-from-pakistan-to-india-naseer-madni#comments</comments><guid isPermaLink="false">6e72c916-60d6-4729-8c64-07848eed3489</guid><pubDate>Wed, 19 Aug 2026 02:51:44 +0000</pubDate><atom:updated>2026-08-19T02:51:44.688Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Pakistan,பஹல்காம் தாக்குதல்,Pahalgam attack,Lashkar-e-Taiba,லஷ்கர்-இ-தொய்பா,Mumbai attack,மும்பை தாக்குதல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/02a6rxoh/Untitled-design-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நசீர் மத்னி]]></media:title><media:description type="html"><![CDATA[ Nasir Madni]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/02a6rxoh/Untitled-design-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இந்தியாவில் கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு தொடர்புடைய ஹபீஸ் சையத் குறித்து, மதகுரு நசீர் மத்னி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார்.</strong></em></p><h3><strong>மதகுரு மத்னி</strong></h3><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">பாகிஸ்தானில்</a> தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஒரு கூட்டத்தின் மேடை பிரசாரத்தின்போது மதகுரு நசீர் மத்னி கூறுகையில்,</p><p>பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்கு 10,000 பயங்கரவாதிகளை லஷ்கர்-இ-தொய்பா (LeT) அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.</p><p>மதகுரு மத்னியின் கருத்துக்கள், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட லஷ்கர்-இ-தொய்பாவின் பங்கு குறித்தும், அதன் தலைவர் குறித்தும் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><p>இந்தியாவின் பயங்கரவாத வழக்குகளில் தொடர்புடைய ஹபீஸ் சயீத், பாகிஸ்தானை் தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஆவார். இந்த அமைப்பு இந்தியாவிற்கு எதிராக கடந்த ஆண்டுகளில் மிகவும் கொடூரமான தாக்குதல்களை நடத்தியுள்ளது.</p><h3><strong>லஷ்கர்-இ-தொய்பா</strong></h3><p><a href="https://www.maalaimalar.com/topic/லஷ்கர்-இ-தொய்பா">லஷ்கர்-இ-தொய்பா</a> அமைப்பிற்கு அல்-கொய்தா மற்றும் தலிபான்களுடன் தொடர்பு இருந்ததன் காரணமாக, ஐக்கிய நாடுகள் சபை 2005-ல் அந்த அமைப்பிற்கு தடை விதித்தது. பின்னர், 2008-ல் அமெரிக்கா ஹபீஸ் சயீதை உலகளாவிய பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்தது.</p><p>கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதி மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் உட்பட, இந்தியாவின் முக்கிய பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளிலும் ஹபீஸ் சயீத்-இன் பெயர் இடம்பெற்றுள்ளது.</p><p>முன்னதாக ஜூலை மாதம், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் வழக்கு தொடர்பாக சயீதுக்கு எதிராக ஜம்மு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பித்தது.</p><p>இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஆறு பாகிஸ்தானிய குற்றவாளிகளுக்கு எதிராக மும்பை காவல்துறை சட்டமுறைப்படி விசாரணையை தொடங்கியது.</p><h3><strong>மும்பை தாக்குதல்</strong></h3><p>2008-ம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி இரவு, 10 பயங்கரவாதிகள் கடல் வழியாக மும்பைக்குள் நுழைந்து தாஜ் ஓட்டல், ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதல்களை நடத்தினர். அடுத்த நான்கு நாட்களில், அவர்கள் நகரம் முழுவதும் நடத்திய தாக்குதல்களில், 166 பொதுமக்கள் கொல்லப்பட்டு, சுமார் 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.</p><p>மும்பையின் மிகவும் பரபரப்பான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நடந்த இந்த தாக்குதல், இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.</p><p>இதையடுத்து 2025 ஏப்ரல் மாதத்தில் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கிலும் பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சையதின் பெயர் அடிபட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>எங்களை தூக்கிலிட்டாலும் வந்தே மாதரத்தின் முதல் இரண்டு சரணங்களை மட்டுமே பாடுவோம் - கர்நாடக காங்கிரஸ் தலைவர்</title><link>https://www.maalaimalar.com/news/national/hang-us-we-will-sing-only-first-two-verses-of-vande-mataram-karnataka-congress-chief</link><comments>https://www.maalaimalar.com/news/national/hang-us-we-will-sing-only-first-two-verses-of-vande-mataram-karnataka-congress-chief#comments</comments><guid isPermaLink="false">c8f79eff-be88-464e-ac3f-59c0d320a4f1</guid><pubDate>Wed, 19 Aug 2026 02:47:39 +0000</pubDate><atom:updated>2026-08-19T02:47:39.071Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,கர்நாடகா,Karnataka,வந்தே மாதரம்,Vande Mataram,Independence Day,சுதந்திர தினம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/0jacagwa/Untitled-design-5.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஹரி பிரசாத்]]></media:title><media:description type="html"><![CDATA[ Karnataka Congress Leader Hariprasath]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/0jacagwa/Untitled-design-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D">காங்கிரஸ்</a> கட்சி எப்போதுமே வந்தே மாதரத்தின் இரண்டு சரணங்களை மட்டுமே பாடி வந்துள்ளது என்றும் இனிமேலும்  தொடர்ந்து அவ்வாறே பாடும் என்றும் கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.கே. ஹரிபிரசாத் தெரிவித்துள்ளார்.</strong></em></p><h3><strong>வந்தே மாதரம் சர்ச்சை</strong></h3><p>முன்னதாக <a href="https://www.maalaimalar.com/news/national/bjp-claims-sonia-gandhi-tried-to-stop-singing-of-vande-mataram-congress-denies">சுதந்திர தினத்தன்று</a> காங்கிரஸ் தலைமையகத்தில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டபோது, அந்த பாடலை பாடியவர் இரண்டு சரணங்களுக்கு மேல் பாடியபோது, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கையை நீட்டி சைகை காட்டினார்.</p><p>இதையடுத்து வந்தே மாதரம் தேசிய பாடலை, பாடகர்களை முழுமையாக பாட அனுமதிக்காமல் சோனியா காந்தி தடுத்ததாக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டினர்.</p><h3><strong>கர்நாடக காங்கிரஸ் தலைவர்</strong></h3><p>இதையடுத்து இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் ஹரி பிரசாத் கூறுகையில், “அவர்கள் ஏன் ஆசாத் ஹிந்த் ஜிந்தாபாத் அல்லது இன்குலாப் ஜிந்தாபாத் போன்ற முழக்கங்களை எழுப்புவதில்லை என்பதை விளக்கட்டும்.</p><p>வந்தே மாதரத்தின் முழு பதிப்பையும் பாடுமாறு மக்களை கட்டாயப்படுத்துவதன் மூலம், பாரதிய ஜனதா கட்சி ’ஜன கன மன’ என்ற தேசிய கீதத்தை அவமதிக்கிறது.</p><p>வந்தே மாதரத்தை தேசிய கீதமாக மாற்றுவதற்கு சங் பரிவார் திட்டமிட்டு வருகிறது.</p><p>பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் தங்களது அலுவலகங்களில் இந்த பாடலை எத்தனை முறை பாடுகிறது என்பதை தெரிவிக்க வேண்டும்.</p><p>அவர்கள் எங்களை தூக்கில் இடட்டும், நாங்கள் வந்தே மாதரத்தின் முதல் இரண்டு சரணங்களை மட்டுமே பாடுவோம். அந்த பாடலின் இரண்டு சரணங்களுக்கு மேல் நாங்கள் ஒருபோதும் பாடமாட்டோம்.</p><p>ஒவ்வொரு காங்கிரஸ் மாநாட்டிலும் நாங்கள் இரண்டு சரணங்களை மட்டுமே பாடியுள்ளோம்,” என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் பெட்ரோல், டீசல் விலை - இன்றைய நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-and-diesel-price-in-chennai-19-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-and-diesel-price-in-chennai-19-august-2026#comments</comments><guid isPermaLink="false">79fd3e55-8614-485b-b088-059614ec1afe</guid><pubDate>Wed, 19 Aug 2026 01:59:13 +0000</pubDate><atom:updated>2026-08-19T01:59:13.239Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,கச்சா எண்ணெய்,Crude oil,பெட்ரோல் டீசல் விலை,Pertrol Diesel Prices</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/n15pib15/petrol.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல் - டீசல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/n15pib15/petrol.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் போரினால் மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p> <h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.</p> <h2>இன்றைய பெட்ரோல், டீசல் விலை</h2><p>அந்த வகையில் இன்றைய (19.8.2026 - (புதன்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.76-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 19.8.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு இடம் வாங்கும் முயற்சி கைகூடும்</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-19-august-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-19-august-2026#comments</comments><guid isPermaLink="false">21d8eb4d-01b2-4ce8-b070-c231752685ad</guid><pubDate>Wed, 19 Aug 2026 01:49:07 +0000</pubDate><atom:updated>2026-08-19T01:49:07.126Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/26/20636815-rasi2.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/26/20636815-rasi2.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>உற்சாகத்துடன் செயல்படும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழில் சம்பந்தமாக தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.</p><h2>ரிஷபம்</h2><p>பணவரவு திருப்தி தரும் நாள். நண்பர்கள் வழியில் நல்ல தகவல் கிடைக்கும். மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.</p> <h2>மிதுனம்</h2><p>மகிழ்ச்சி கூடும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். பொதுவாழ்வில் நீங்கள் எடுத்த முடிவு மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.</p><h2>கடகம்</h2><p>அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் அனுகூலம் கிடைக்கும் நாள். குடும்பச் செலவுகளில் தாராளம் காட்டுவீர்கள். திடீர் பயணம் தித்திக்க வைக்கும்.</p> <h2>சிம்மம்</h2><p>வெளியுலகத் தொடர்பு விரிவடையும் நாள். வருமானம் திருப்தி தரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். நண்பர்களுக்காக செலவிடும் சூழ்நிலை உருவாகும்.</p><h2>கன்னி</h2><p>தடைகள் விலகும் நாள். தனித்து இயங்க முற்படுவீர்கள். தனவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். அக்கம் பக்கத்து வீட்டாரின் ஆதரவு கிடைக்கும்.</p> <h2>துலாம்</h2><p>கல்யாண முயற்சி கைகூடும் நாள். கடமையில் இருந்த தொய்வு அகலும். ஆரோக்கியம் சீராகும். ஆதாயம் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.</p><h2>விருச்சிகம்</h2><p>வளர்ச்சி கூடும் நாள். வருமானம் திருப்தி தரும். இடம் வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு.</p> <h2>தனுசு</h2><p>தள்ளிப்போன காரியம் தானாக நடைபெறும் நாள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். தொழிலில் ஏற்பட்ட தொய்வு அகலும்.</p><h2>மகரம்</h2><p>தடைகளைக் கண்டு தளர்வடையாத நாள். செல்வந்தர்களின் சந்திப்பால் சில பிரச்சனைகள் தீரும். உத்தியோகத்தில் உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும்.</p> <h2>கும்பம்</h2><p>மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். திட்டமிட்ட காரியங்கள் திசைமாறிச் செல்லும். உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம்.</p><h2>மீனம்</h2><p>வாகனத்தில் செல்லும் பொழுது கவனம் தேவை. வேலையாட்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்லவும். எதிலும் பொறுமையாக முடிவெடுப்பது நல்லது.</p>]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 19 ஆகஸ்ட் 2026: அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் அபிஷேகம்</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-19-august-2026-aruppukottai-muthumariamman-abhishekam</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-19-august-2026-aruppukottai-muthumariamman-abhishekam#comments</comments><guid isPermaLink="false">d684fe0a-c846-4a51-ab81-efa98904c3e6</guid><pubDate>Wed, 19 Aug 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-08-19T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/03/05/27220541-amman2.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அம்மன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/03/05/27220541-amman2.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆவணி-2 (புதன்கிழமை)</p><p>பிறை : வளர்பிறை</p><p>திதி :  சப்தமி இரவு 10.15 மணி வரை பிறகு அஷ்டமி</p><p>நட்சத்திரம் :  சுவாதி காலை 10.24 வரை பிறகு விசாகம்</p> <p>யோகம் :  சித்தயோகம்</p><p>ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை</p><p>எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை</p><p>சூலம் : வடக்கு</p><p>நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை</p> <h2>திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்</h2><p>மதுரை ஸ்ரீ சொக்கநாதர் தருமிக்கு பொற்கிழியருளிய காட்சி. தங்கச் சப்பரத்திலும் யானை வாகனத்திலும் திருவீதியுலா. விருதுநகர் ஸ்ரீசுவாமி கைலாச வாகனத்திலும் அம்பாள் காமதேனு வாகனத்திலும் பவனி. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை தலத்தில் திருமஞ்சனம். </p> <p>கரூரில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர், பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி தலங்களில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு. விருதுநகர் ஸ்ரீ விஸ்வநாதர், வேதாரண்யம் ஸ்ரீ திருமறைக்காடர் தலங்களில் அபிஷேகம், திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாத சுவாமி அபிஷேகம். அருப்புக்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் அபிஷேகம்.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - உயர்வு</p><p>ரிஷபம் - பக்தி</p><p>மிதுனம் - உழைப்பு</p><p>கடகம் - பாசம்</p><p>சிம்மம் - மேன்மை</p><p>கன்னி - சாதனை</p> <p>துலாம் - அன்பு</p><p>விருச்சிகம் - ஆர்வம்</p><p>தனுசு - ஆக்கம்</p><p>மகரம் - விவேகம்</p><p>கும்பம் - சாந்தம்</p><p>மீனம் - உவகை</p> ]]></content:encoded></item><item><title>தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளும் முதலமைச்சர் விஜய்?</title><link>https://www.maalaimalar.com/news/national/south-chief-ministers-conference-cm-vijay-likely-to-attend</link><comments>https://www.maalaimalar.com/news/national/south-chief-ministers-conference-cm-vijay-likely-to-attend#comments</comments><guid isPermaLink="false">6c92a152-8fc3-40f0-970c-5a3523dab5a9</guid><pubDate>Wed, 19 Aug 2026 00:27:32 +0000</pubDate><atom:updated>2026-08-19T00:27:32.969Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Amit Shah,அமித் ஷா,cm vijay,முதலமைச்சர் விஜய்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/7k1ycajg/Vijay07.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/7k1ycajg/Vijay07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய <a href="https://www.maalaimalar.com/news/national">உள்துறை அமைச்சகம்</a> சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. எனினும், கடந்த 2022-ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த மாநாடு நடைபெறாமல் இருந்தது. </p><p>இந்தநிலையில், 31-வது தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு இன்று (புதன்கிழமை) சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள நட்சத்திர தங்கும் விடுதியில் தொடங்குகிறது.</p><p>இந்த மாநாட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்குகிறார். இதில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu">தமிழ்நாடு</a> முதலமைச்சர் விஜய், கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், கேரளம் முதலமைச்சர் திரி சதீசன், தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் பங்கேற்கிறார்கள்.</p><h2>முக்கிய விவகாரங்கள் விவாதம்:</h2><p>தென் மாநில முதலமைச்சர்களுடன், அந்தந்த மாநில தலைமை செயலாளர்கள், உள்துறை செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் மாநாட்டில் கலந்துகொள்கிறார்கள்.</p><p>மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு, பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீடுகள், கூட்டுறவை பலப்படுத்துவது, கட்டமைப்பு மேம்பாடு, நீர்வள பகிர்வு, கல்வி, சுகாதாரம், தக வல் தொழில்நுட்பம், பேரிடர் மேலாண்மை, குற்றங்கள் தடுப்பு, எல்லை பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.</p><h2>சென்னையில் மத்திய அமைச்சர்:</h2><p>தற்போது காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே முரண்பாடுகள் எழுந்துள்ள நிலையில் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று சென்னை வருகிறார்.</p><p>அதன்டி இன்று மாலை 4.50 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலமாக சென்னை புறப்படும் மத்திய அமைச்சர் அமித் ஷா இரவு 7.40 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். விமான நிலையத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் கட்சியினர் வரவேற்கிறார்கள். பின்னர் அவர், கார் மூலம் சாலை மார்க்கமாக கோவளம் செல்கிறார்.</p>]]></content:encoded></item><item><title>ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்த திட்டமும் இல்லை - அதிபர் டிரம்ப்</title><link>https://www.maalaimalar.com/news/world/trump-says-us-has-no-talks-planned-with-iran</link><comments>https://www.maalaimalar.com/news/world/trump-says-us-has-no-talks-planned-with-iran#comments</comments><guid isPermaLink="false">75d137e5-b65f-4c86-8dfc-d67fefe363f4</guid><pubDate>Tue, 18 Aug 2026 23:59:33 +0000</pubDate><atom:updated>2026-08-18T23:59:33.734Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டொனால்டு டிரம்ப்,Donald Trump,ஈரான்,Iran</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-26/gewqg8fo/donald.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அதிபர் டிரம்ப்]]></media:title><media:description type="html"><![CDATA[ Donald Trump]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-26/gewqg8fo/donald.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>"தெஹ்ரான் ஒரு ஒப்பந்தம் செய்யத் தயாராகும் வரை" ஈரானுடனான பேச்சுவார்த்தைகளை நிறுத்தி வைக்குமாறு தனது பேச்சுவார்த்தைக் குழுவிடம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கேட்டுக்கொண்டதாக அல் ஜசீரா நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், தெஹ்ரானுடனான ராஜதந்திர ஈடுபாடு குறித்த நிர்வாகத்தின் நிலைப்பாட்டில் எந்த முரண்பாடும் இல்லை என்றும் அது கூறியுள்ளது.</p><p>அமெரிக்கா ஈரானுடன் "ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளில்" ஈடுபட்டிருந்ததாகவும், ஆனால் மேற்கொண்டு செல்வதற்கு முன்பு டிரம்ப் "காத்திருக்க முடிவு செய்துள்ளார்" என்றும் அதிகாரி ஒருவர் அல் ஜசீராவிடம் தெரிவித்தார்.</p><h2>எந்த முரண்பாடும் இல்லை:</h2><p>ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் குறித்த அமெரிக்க நிர்வாகத்தின் அணுகுமுறையில் எந்த முரண்பாடும் இல்லை என்று அந்த அதிகாரி மேலும் கூறினார். ஹார்முஸ் நீரிணையின் நிலை குறித்து வாஷிங்டனும் தெஹ்ரானும் முரண்பட்ட அறிக்கைகளை வெளியிட்டு வரும் வேளையிலும், இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் பதட்டங்களுக்கு மத்தியிலும் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.</p><p>முன்னதாக, ஹார்முஸ் நீரிணை குறித்த ஈரானின் நிலைப்பாட்டிற்கு டிரம்ப் முரண்பட்டு, கடற்படை முற்றுகை "முழு வீச்சில் அமலில் உள்ளது" என்றும், அதே நேரத்தில் ஹார்முஸ் நீரிணை "திறந்து இருக்கிறது, அது இயங்கிக் கொண்டிருக்கிறது" என்றும் கூறியிருந்தார்.</p><p>ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்ட அதிபர் டிரம்ப், தெஹ்ரானுடன் தற்போது எந்த பேச்சுவார்த்தைகளோ கலந்துரையாடல்களோ நடைபெறவில்லை என்றும், ஹார்முஸ் நீரிணை செயல்பாட்டில் இருப்பதாகவும், கடற்படை கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுவிட்டன அல்லது வெடிக்க செய்யப்பட்டுவிட்டன என்றும் டிரம்ப் கூறினார்.</p><h2>கடுமையான பதிலடி:</h2><p>"ஈரானிய இஸ்லாமிய குடியரசுடன் எந்த பேச்சுவார்த்தைகளோ உரையாடல்களோ நடைபெறவில்லை, அல்லது திட்டமிடப்படவில்லை. கடற்படை முற்றுகை முழு வீச்சில் தொடர்கிறது. ஹார்முஸ் நீரிணை திறந்த நிலையிலேயே இயங்குகிறது," என்று டிரம்ப் கூறினார்.</p><p>இதற்கிடையில், முற்றுகையை நீக்குதல், முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்களை விடுவித்தல் மற்றும் எண்ணெய் மீதான தடைகளை தளர்த்துதல் உள்ளிட்ட 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்கா தனது கடமைகளை நிறைவேற்றும் வரை, ஹார்முஸ் நீரிணையை தெஹ்ரான் மீண்டும் திறக்காது என்று ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் கூறியிருந்தார்.</p><p>அமெரிக்கா தனது வாக்குறுதிகளை மீறுவதாக கூறியதற்குப் பதிலளிக்கும் விதமாக, ஈரானின் இராணுவ மற்றும் இராஜதந்திர வழிமுறைகள் இணைந்து செயல்படும் என்றும், பதற்றம் அதிகரித்தால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் காலிபாஃப் எச்சரித்தார்.</p>]]></content:encoded></item><item><title>மத்திய ஆப்பிரிக்க குடியரசில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து: 30 சுரங்க தொழிலாளர்கள் பலி</title><link>https://www.maalaimalar.com/news/world/gold-mine-collapses-in-central-african-republic-killing-at-least-30-miners</link><comments>https://www.maalaimalar.com/news/world/gold-mine-collapses-in-central-african-republic-killing-at-least-30-miners#comments</comments><guid isPermaLink="false">0a7dd63d-7aaa-43ea-83de-59c0dfdf3f62</guid><pubDate>Tue, 18 Aug 2026 23:27:07 +0000</pubDate><atom:updated>2026-08-18T23:27:07.355Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold Mine,Central African Republic,மத்திய ஆப்பிரிக்க குடியரசு,தங்க சுரங்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/djlz722y/Gold-Mine.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold Mine]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/djlz722y/Gold-Mine.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>சுரங்க விபத்து:</h2><p>மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் மேற்குப் பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அன்று பாரம்பரிய தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில், குறைந்தது 30 சுரங்க தொழிலாளர்கள் உயிரிழந்தனர். </p><p>மேலும் பலர் உள்ளே சிக்கியிருப்பதாக  அதிகாரிகளும் அப்பகுதி மக்களும் தெரிவித்தனர்.</p><p>உயிர் பிழைத்த சுரங்க தொழிலாளர்களில் ஒருவரான ஃப்ளோரியன் ககுவெண்டேவின் கூற்றுப்படி, நானா-மாம்பெரே மாகாணத்தின் அப்பா பகுதியில் இந்த சுரங்கம் இடிந்து விழுந்தது.</p><h2>மீட்பு பணிகள்:</h2><p>உள்ளே சிக்கியிருப்பதாக நம்பப்படும் கூடுதல் சுரங்கத் தொழிலாளர்களை மீட்புக் குழுவினர் தேடி வருவதாகவும், ஆனால் அவர்களை உயிருடன் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் "குறைந்து கொண்டே வருகின்றன" என்று அவர் கூறினார்.</p><p>சுரங்க விபத்து குறித்து பேசிய மாகாணத்தின் துணை மேயர், சுலைமான் பி, மீட்புக் குழுவினரும் அப்பகுதி மக்களும் பல மணி நேரம் போராடி இடிந்து விழுந்த சுரங்கத்தில் இருந்து 30 உடல்களை மீட்டதாகவும், காயமடைந்த சுரங்க தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.</p><h2>குழப்பமான மீட்பு பணி:</h2><p>"இது மிகவும் கொடூரமானது. தங்களால் மீள முடியாத நிலையில் உள்ளவர்களை இந்த படுகுழியிலிருந்து மீட்க உதவுமாறு, அமைப்புகளிடமும் நல்லெண்ணம் கொண்ட அனைத்து மக்களிடமும் நாங்கள் உதவி கோருகிறோம்," என்று பி கூறினார்.</p><p>சம்பவ இடத்தில் இருந்து எடுக்கப்பட்டதாக தோன்றும் காணொளிக் காட்சிகள், அங்கு நடந்த குழப்பமான மீட்பு பணிகளை பதிவு செய்துள்ளன. </p><p>பெரும்பாலும் சேறு படிந்த இளம் ஆண்களும் பெண்களுமான சுரங்க தொழிலாளர்கள், குழியில் இருந்து ஒரு சடலத்தை வெளியே இழுப்பதை காண முடிந்தது. அதே சமயம், டஜன் கணக்கான பிற சுரங்க தொழிலாளர்களும் பணியாளர்களும் அந்த பரந்த இடத்தில் சிதறிக்கிடந்தனர், அவர்களில் சிலர் உதவிக்காகக் கூச்சலிட்டனர்.</p><h2>போதுமான பாதுகாப்பு இல்லை:</h2><p>அரசு செய்தித் தொடர்பாளர் எவரிஸ்ட் என்கமானா, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அனுதாபம் தெரிவித்ததோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும் உதவியும் வழங்க அதிகாரிகள் கடுமையாக உழைத்து வருவதாகவும் கூறினார்.</p><p>மத்திய ஆப்பிரிக்க குடியரசில், பல ஆயிரம் மக்கள் சிறு அளவிலான கனிம அகழ்வு சுரங்க தொழிலில் செய்வதால், அங்கு பாரம்பரிய சுரங்கங்கள் இடிந்து விழுவது சர்வ சாதாரணமாக நிகழ்கிறது. சுரங்க தொழிலாளர்களுக்கு பொதுவாக போதுமான பாதுகாப்பு இல்லாததாலும், இந்த விபத்துகள் பெரும்பாலும் உயிரிழப்பை ஏற்படுத்துவதாலும் இப்பணி அபாயகரமானது.</p>]]></content:encoded></item><item><title>ரத்து செய்யப்பட்ட 44 பணி நியமனத் தேர்வுகளின் பட்டியலை வெளியிட்டது ஜார்க்கண்ட் அரசு</title><link>https://www.maalaimalar.com/news/national/%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-44-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81</link><comments>https://www.maalaimalar.com/news/national/%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-44-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81#comments</comments><guid isPermaLink="false">3c1b696c-f420-4468-b0b2-32bd543bcd8f</guid><pubDate>Tue, 18 Aug 2026 23:00:03 +0000</pubDate><atom:updated>2026-08-18T23:00:03.195Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தேர்வுகள் ரத்து,Jharkhand protest,ஜார்க்கண்ட் போராட்டம்,Exams Cancelled</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/vlamcen1/Jharkhand-protest-4.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jharkhand protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/vlamcen1/Jharkhand-protest-4.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாணவர்களின் போராட்டங்களுக்கு மத்தியில், முறைகேடுகள் காரணமாக ரத்து செய்யப்பட்ட 44 பணி நியமன தேர்வுகளின் பட்டியலை ஜார்க்கண்ட் அரசு வெளியிட்டது.</p><p>இரவு நேரத்தில் எட்டு அறிவிப்புகளை வெளியிட்ட ஜார்க்கண்ட் அரசு, ரத்து செய்யப்பட்ட தேர்வுகளில் 2014-ஆம் ஆண்டு முதல் ஜார்க்கண்ட் பொதுப் பணி ஆணையம் (JPSC) மற்றும் வெளிமுகமை நிறுவனமான 'டி.எஸ்.ஆர். டேட்டா பிராசஸிங் பிரைவேட் லிமிடெட்' (TDPL) ஆகியவற்றால் நடத்தப்பட்ட தேர்வுகள் அடங்கும் என்று தெரிவித்தது.</p><h2>பட்டியல் சுருக்கம்:</h2><p>மருந்து ஆய்வாளர்கள், உதவி பேராசிரியர்கள், துணை ஆட்சியர்கள், பல் மருத்துவர்கள், உதவி பொறியாளர்கள், உரிமையியல் நீதிபதிகள், கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் மற்றும் வன வரம்பு அலுவலர்கள் (Forest Range Officers) உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான தேர்வுகள் இதில் ரத்து செய்யப்பட்டுள்ளன.</p><p>நேற்று (திங்கள்கிழமை) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் முக்கியக் கோரிக்கைகளில் ஒன்றான 'ஜே.எஸ்.எஸ்.சி.-கூட்டுப் பட்டதாரி நிலை' (JSSC-CGL) தேர்வையும், அத்துடன் வெளிமுகமை நிறுவனமான TDPL-ஆல் நடத்தப்பட்ட அனைத்து தேர்வுகள் மற்றும் அதனால் வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளையும் ரத்து செய்வதாக மாநில அரசு அறிவித்தது.</p><h2>முதலமைச்சர் அறிவிப்பு:</h2><p>பணி நியமன தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி மாணவர்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், JSSC-CGL தேர்வு மற்றும் 2014 முதல் வெளிமுகமை நிறுவனமான TDPL-ஆல் நடத்தப்பட்ட அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்வதாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்தார்.</p><p>JSSC-CGL தேர்வு மற்றும் TDPL மூலம் நடத்தப்பட்ட அனைத்துத் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்ததைத் தொடர்ந்து, ஜார்க்கண்ட் அமைச்சர்கள் தீபிகா பாண்டே சிங் மற்றும் இர்பான் அன்சாரி ஆகியோர் முன்னிலையில், ராஞ்சியில் உள்ள சதார் மருத்துவமனையில் மாணவர் தலைவர் தேவேந்திர நாத் மஹ்தோ தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார்.</p><p>மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமிதாப் கௌஷல் தலைமையில் தேர்வு சீர்திருத்த குழு ஒன்றை அமைப்பதாகவும் அவர் அறிவித்தார். பணி நியமனத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டி வரும் வேலை தேடுபவர்கள், சி.பி.ஐ. விசாரணை மற்றும் JSSC-CGL தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்திப் போராடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சூர்யா, கார்த்தி பெரிய நடிகர்கள் அவர்கள் வாழட்டும், ஆனால் எங்களையும் வாழ விடுங்கள் - மன்சூர் அலிகான்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/mansoor-ali-khan-said-let-us-to-live</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/mansoor-ali-khan-said-let-us-to-live#comments</comments><guid isPermaLink="false">3b4746c1-da76-4243-8f99-9d59887b4aa1</guid><pubDate>Tue, 18 Aug 2026 20:51:04 +0000</pubDate><atom:updated>2026-08-18T20:51:04.626Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மன்சூர் அலிகான்,Mansoor Ali Khan,James Vasanthan,ஜேம்ஸ் வசந்தன்,All Pass,ஆல் பாஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/svrh6vw9/Mansoor-Ali-Khan.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mansoor Ali Khan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/svrh6vw9/Mansoor-Ali-Khan.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மைதீன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆல் பாஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று கோலாகலமாக  நடைபெற்றது. வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை ஒன் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் (One Step Entertainment) சார்பில் மோகனா. ஆர் தயாரித்துள்ளார். </p><p>இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி மைதீன் இயக்கியுள்ளார். ‘நிறங்கள் மூன்று’, ‘தருணம்’ உள்ளிட்ட படங்களில் நடித்த துஷ்யந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜனனி, ‘லியோ’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.</p><h2>டிரெய்லர் வெளியீட்டு விழா:</h2><p>இந்தப் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர். அந்த வரிசையில், நடிகர் மன்சூர் அலிகான் பேசும் போது, "‘ஆல் பாஸ்’ அற்புதமான படம், ஜேம்ஸ் வசந்தன் எனக்கு பிடித்த கலைஞர். </p><p>ஒரு திரைப்படத்தில் பணிபுரியும் கலைஞர்களை விளம்பரங்களில் தெரிவது போல விளம்பரம் செய்யுங்கள். அதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இந்தப் படத்தில் தமிழகத்திற்கு நல்ல கதாநாயகன், நாயகி கிடைத்துள்ளார்கள்.</p><p>நான் "கருப்பு" படத்தின் கிளைமாக்ஸில் டான்ஸ் ஆடினேன் ஆனால் அதை அப்படியே தூக்கி விட்டார்கள், என்ன அநிநியாயம் இது. யூடுயூப்பில் வெளியிடுவோம் என்று அதையும் செய்யவில்லை. </p><p>சூர்யா, கார்த்தி பெரிய நடிகர்கள் அவர்கள் வாழட்டும். ஆனால் எங்களையும் வாழ விடுங்கள். நான் பல வருடங்களாக நடிகராக, தயாரிப்பாளராக இருக்கிறேன். எனக்கான நியாயம் கிடைக்க வேண்டும்.</p><p>நீங்களே பாருங்கள். உடனே வாட்ஸ்அப், மீடியா என்று எதை எதையோ வைத்துக்கொண்டு எங்களைப் பற்றி தப்பாக எழுதுகிறார்கள். எங்களுக்கு வேலை கொடுக்கிறார்களோ இல்லையோ, கீழே போய் உட்கார்ந்து கொண்டு, ‘உன் பையன் கஞ்சா அடிக்கிறான், பைத்தியக்காரன்’ என்று என்னென்னவோ பேசிக்கொண்டிருக்கிறார்கள்.</p><h2>உழைப்பை குறைத்து மதிப்பிடக்கூடாது:</h2><p>நான் என்ன நல்ல வேலை செய்தேன் என்று நினைத்தாலும், கீழே போய் அதை கொச்சைப்படுத்தி பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு அதுதான் வேலை. எதையாவது சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ‘ஆல் பாஸ்’ ஒரு அற்புதமான பெயர். </p><p>இந்தப் படத்திற்கு விளம்பரம் செய்யும் ஒவ்வொருவருக்கும் நான் நன்றி சொல்லி கொள்கிறேன். ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரின் உழைப்பும் முக்கியமானது.</p><p>சினிமாவில் வேலை செய்யும் ஒவ்வொருவரையும், விளம்பர மீடியா உள்ளிட்ட அனைவரையும் நான் மதிக்கிறேன். இது என்னுடைய ஊர், என்னுடைய வாழ்க்கை, என்னுடைய சினிமா. ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரும் தங்களுடைய வேலையை உண்மையாகச் செய்தாலே போதும். யாருடைய உழைப்பையும் குறைத்து மதிப்பிடக்கூடாது. நன்றி, வணக்கம், வாழ்த்துகள்” என்றார்.</p>]]></content:encoded></item><item><title>குரு சோமசுந்தரம் சாருடன் சண்டை - பட விழாவில் உண்மையை உடைத்த அனுமோல்</title><link>https://www.maalaimalar.com/photo-gallery/cinema/actress-anumol-said-she-had-fight-with-guru-somasundaram</link><comments>https://www.maalaimalar.com/photo-gallery/cinema/actress-anumol-said-she-had-fight-with-guru-somasundaram#comments</comments><guid isPermaLink="false">557cb784-b374-4c43-80e9-27fae890253a</guid><pubDate>Tue, 18 Aug 2026 20:01:17 +0000</pubDate><atom:updated>2026-08-18T20:01:17.457Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>குரு சோமசுந்தரம்,guru somasundaram,Paris Cafe,அனுமோல்,anumol,பாரிஸ் கஃபே</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/ygh17vjs/Anumol.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anumol]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/ygh17vjs/Anumol.png?w=280" width="280"></media:thumbnail><category>Cinema</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தண்டர் மீடியா கண்மணி ரங்கநாதன் மற்றும் LV என்டர்டெயின்மெனட் வெங்கல் எம். லிங்கேஸ்வரன் இணைந்து தயாரிக்கும் "பாரிஸ் கஃபே" (Paris cafe) <a href="https://www.maalaimalar.com/cinema">திரைப்படம்</a> விரைவில் திரைக்கு வர உள்ளது. </p><p>இந்தப் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம்  மற்றும் அனுமோல் நடித்துள்ளனர். மேலும் அர்ச்சனா குமார், விஜய் விஸ்வா, சாய் விக்கி, நயனா, பிபின் மற்றும் பலர்  நடித்துள்ளனர்.</p><p>பாரிஸ் கஃபே திரைப்படத்தை சராஜ் சீலன் எழுதி இயக்கியுள்ளார். கே இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு சதீஷ் ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். தேசிய விருது வென்ற வி.ஜே. சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.</p><h2>நம்பிக்கை இருந்தது:</h2><p>இதில் கலந்து கொண்டு பேசிய நடிகை அனுமோல், "நான் நடிக்கும் படங்கள் சமுதாயத்திற்கு தேவையான கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடிப்பேன். இயக்குநரிடம் பேசும் போது ஒரு நம்பிக்கை இருந்தது, அதனால் தான் இந்தப் படத்தில் நான் நடித்தேன். </p><p>இந்தப் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் எல்லோரடனும் நடித்தது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு. கே இசையமைப்பாளர் அவருடைய தமிழ் பாட்டை விட மலையாள பாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும்.</p><p>குரு சோமசுந்தரம் கூட நடித்தது சந்தோஷமா இருந்தது. எனக்கு அவர் மீது கோபம் நான் அழகா இல்ல என்ன விட வேற ஒரு ஹீரோயின் அழகா இருக்கங்கன்னு என்கிட்டயே சொல்றாரு இப்ப கூட அவர் கிட்ட சண்டை போட்டேன், ஆனால் அந்த சண்டை அன்பான சண்டைதான். இவர் மீது எனக்கு அதிக மரியாதை இருக்கு. எல்லோரிடமும் ஒரே மாதிரி தான் பழகுவார் . இந்தப் படத்தில் நடித்தது சந்தோஷமாக இருக்கு," என்றார்.</p>]]></content:encoded></item><item><title>அமீரகத்திற்கு குறி வைத்த ஈரான் - 2 ஏவுகணைகளை கண்டறிந்ததாக ஐக்கய அரபு அமீரகம் தகவல்!</title><link>https://www.maalaimalar.com/news/world/uae-detects-2-ballistic-missile-launches-from-iran</link><comments>https://www.maalaimalar.com/news/world/uae-detects-2-ballistic-missile-launches-from-iran#comments</comments><guid isPermaLink="false">91f5636b-bc79-462b-acdc-a30752433efa</guid><pubDate>Tue, 18 Aug 2026 18:56:56 +0000</pubDate><atom:updated>2026-08-18T18:56:56.768Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஐக்கிய அரபு அமீரகம்,UAE,ஈரான்,Iran,ballistic missile,ஏவுகணை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/9dtm1954/UAE.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ UAE]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/9dtm1954/UAE.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world">ஐக்கிய அரபு அமீரகம்</a> 'ஏவுகணை அச்சுறுத்தல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது' என எச்சரித்து, மக்களை பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. </p><p>அந்நாட்டின் தேசிய அவசரகால நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA), தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் நாட்டை குறிவைக்கும் ஏவுகணை அச்சுறுத்தலை கண்டறிந்துள்ளதாக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><h2>ஏவுகணை அச்சுறுத்தல்:</h2><p>"ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள், நாட்டை தாக்கும் ஏவுகணை அச்சுறுத்தலை கண்டறிந்துள்ளன. தயவுசெய்து பாதுகாப்பான இடத்தில் இருங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ வழிகள் மூலம் வெளியிடப்படும் எச்சரிக்கைகள் மற்றும் அறிவிப்புகளை பின்பற்றுங்கள்," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</p><p>மத்திய கிழக்கில் சண்டைகளை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) காலாவதியான ஒரு நாள் கழித்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><h2>உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை:</h2><p>இதற்கிடையில், "தற்போதைய சூழ்நிலை மற்றும் ஏவுகணை அச்சுறுத்தல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அருகிலுள்ள பாதுகாப்பான கட்டிடத்தில் தஞ்சம் அடைய வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>"தற்போதைய சூழ்நிலை மற்றும் ஏவுகணை அச்சுறுத்தல்கள் காரணமாக, உடனடியாக அருகிலுள்ள பாதுகாப்பான கட்டிடத்தில் தஞ்சம் அடையுங்கள்," என உள்துறை அமைச்சகம் தொலைபேசி வாயிலாக விடுத்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டது, அது சிறிது நேரத்திலேயே திரும்பப் பெறப்பட்டது.</p><p>ஈரானில் இருந்து தங்களை நோக்கி ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகளை கண்டறிந்ததாக ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவற்றில் ஒன்று எல்லைக்குட்பட்ட கடல் எல்லைக்குள் விழுந்ததாகவும், மற்றொன்று அதற்கு வெளியே விழுந்ததாகவும் கூறியது. மேலம், எந்தவொரு அச்சுறுத்தலையும் சமாளிக்க ஐக்கிய அரபு அமீரகம் தயாராக இருப்பதாகவும் வலியுறுத்தியது.</p><p>ஒரு நாள் முன்னதாக, ஹார்முஸ் நீரிணையை கடந்து சென்றுகொண்டிருந்த அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்தின் (ADNOC) கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக ஐக்கிய அரபு அமீரகம் சனிக்கிழமை தெரிவித்தது.</p>]]></content:encoded></item><item><title>டிஎன்பிஎல்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான போட்டியில் கோவை கிங்ஸ் வெற்றி</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-kovai-kings-beat-chepauk-super-gillies-by-5-wickets</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-kovai-kings-beat-chepauk-super-gillies-by-5-wickets#comments</comments><guid isPermaLink="false">461f156d-3b7c-43e1-ab94-4d9703093324</guid><pubDate>Tue, 18 Aug 2026 18:02:06 +0000</pubDate><atom:updated>2026-08-18T18:02:06.695Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,Chepauk super gillies,சேப்பாக் சூப்பர் கில்லீஸ்,கோவை கிங்ஸ்,kovai Kings</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/e28w3zqp/Kovai-kings-won.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kovai kings won]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/e28w3zqp/Kovai-kings-won.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>10-ஆவது <a href="https://www.maalaimalar.com/topic/tnpl">டி.என்.பி.எல்.</a> டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முறை தொடரின் அனைத்து போட்டிகளும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.</p><p>இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற 21-ஆவது ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்ஸீஸ் மற்றும் <a href="https://www.maalaimalar.com/topic/kovai-kings">கோவை கிங்ஸ்</a> அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.</p><h2>ராம் அரவிந்த் அபாரம்:</h2><p>சேப்பாக் அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கிய மோகித் ஹரிஹரன் 13 ரன்களும், கேப்டன் நாராயன் ஜெகதீசன் 6 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ஆஷிக் ரன் ஏதும் எடுக்காமல் டக் ஆகி வெளியேறினார்.</p><p>பின்னர் களமிறங்கிய ராம் அரவிந்த் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவருடன் ஆடிய ஸ்வப்நில் சிங் 20 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து களமிறங்கியவர்களில் தினேஷ் ராஜ் மட்டும் 18 பந்துகளில் 32 ரன்களை எடுத்தார். ராம் அரவிந்த் தன் பங்கிற்கு 32 பந்துகளில் 63 ரன்களை விளாசினார்.</p><p>கடைசியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 19.3 ஓவர்களில் 167 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கோவை கிங்ஸ் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஆர்.எஸ். ஆம்ப்ரிஷ் 3 விக்கெட்டுகளையும், மணிமாறன் சித்தார்த் 2 விக்கெட்டுகளையும், திவாகர், கிஷூர் மற்றும் ஜதாவேத் சுப்ரமணியன் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.</p><h2>கோவை கிங்ஸ் வெற்றி:</h2><p>சற்றே எளிய இலக்கை துரத்திய கோவை கிங்ஸ் அணிக்கு தொடக்க வீரர்களான ராதாகிருஷ்ணன் மற்றும் சுரேஷ் லோகேஷ்வர் முறையே 38 மற்றும் 40 ரன்களை எடுத்தனர்.</p><p>அடுத்து களமிறங்கிய பாலசுப்ரமணியனம் சச்சின் 37 ரன்களை எடுத்தார். கேப்டன் ஷாருக் கான் 11 பந்துகளில் 25 ரன்களை எடுத்தார்.</p><p>இதன் மூலம் கோவை கிங்ஸ் அணி 18.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை எடுத்தது. இதன் மூலம் கோவை கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ் தாய் வாழ்த்தை முதலில் பாட தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-bar-on-singing-tamil-anthem-before-vande-mataram-madras-high-court</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-bar-on-singing-tamil-anthem-before-vande-mataram-madras-high-court#comments</comments><guid isPermaLink="false">3238126c-896e-4bed-9149-071b01c586dc</guid><pubDate>Tue, 18 Aug 2026 17:22:21 +0000</pubDate><atom:updated>2026-08-18T17:22:21.449Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>வந்தே மாதரம்,Vande Mataram,Madras High Court,சென்னை உயர்நீதிமன்றம்,Tamil Anthem,தமிழ் தாய் வாழ்த்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/chyem2zt/Chennai-High-Court.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chennai High Court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/chyem2zt/Chennai-High-Court.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் 'தமிழ் தாய் வாழ்த்து' பாடலை முதலில் பாடுவதற்கு எந்த தடையும் இல்லை என்றும், சமீபத்திய மத்திய உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கை மாநில பாடலை பின்னுக்குத் தள்ளவில்லை என்றும் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu">சென்னை</a> உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.</p><p>தமிழகத்தில் அரசின் செயல்பாடுகள் தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்குவதை உறுதி செய்ய உத்தரவு கோரி, சென்னையை சேர்ந்த அனன்யா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்திருந்த பொதுநல வழக்கு விசாரணையின்போது இந்த விளக்கம் அளிக்கப்பட்டது.</p><h2>மத்திய அரசு விளக்கம்:</h2><p>அரசு நிகழ்ச்சிகளை தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கி, தேசிய கீதத்துடன் முடிப்பது தமிழ்நாட்டில் நீண்டகாலமாக பின்பற்றப்படும் ஒரு பாரம்பரியம் என்று மனுதாரர் வாதிட்டார். மனுவின்படி, அரசு நிகழ்ச்சிகள் வந்தே மாதரத்துடன் தொடங்க வேண்டும் என்று கோரும் ஜனவரி 28-ஆம் தேதியிட்ட மத்திய உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கையை ரத்து செய்ய அவர் கோரினார்.</p><p>மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜூலை 9-ஆம் தேதியன்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட புதிய அறிவிக்கையை சுட்டிக்காட்டினார். அந்த அறிக்கையின்படி, வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதம் ஆகியவை அடுத்தடுத்து பாடப்பட வேண்டும் என்றும், தேசிய கீதத்திற்கு முன்னதாக வந்தே மாதரம் பாடப்பட வேண்டும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டது.</p><p>மாநில கீதங்கள் குறித்து அந்த அறிவிப்பில் எதுவும் கூறப்படவில்லை என்றும், தமிழ் தாய் வாழ்த்து கடைசியாக பாடப்பட வேண்டும் என்று அதில் நிபந்தனை விதிக்கப்படவில்லை என்றும் மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.</p><h2>வரிசை குறித்த சர்ச்சை:</h2><p>தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, சென்னை உயர் நீதிமன்றத்தில் சுதந்திர தினத்தன்று இதே வரிசைமுறைதான் பின்பற்றப்பட்டது என்றும், முதலில் தமிழ் வாழ்த்து, அதனைத் தொடர்ந்து வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது என்றும் சுட்டிக்காட்டியது.</p><p>பாரம்பரியமாக அரசு நிகழ்ச்சிகள் தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கும் தமிழ்நாட்டில், பாடல்களின் வரிசை குறித்த சர்ச்சை அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வருகிறது. </p><p>தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனது வழக்கமான உரைக்கு முன்பு தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று முன்னாள் ஆளுநர் ஆர்.என். ரவி வலியுறுத்தியதை அடுத்து, இந்த விவகாரம் மேலும் தீவிரமடைந்தது. இந்த கோரிக்கையை அப்போதைய தி.மு.க. அரசு நிராகரித்தது.</p>]]></content:encoded></item><item><title>இம்ரான் கானை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அனுமதி!</title><link>https://www.maalaimalar.com/news/world/pakistan-supreme-court-grants-permission-to-move-imran-khan-to-a-private-hospital</link><comments>https://www.maalaimalar.com/news/world/pakistan-supreme-court-grants-permission-to-move-imran-khan-to-a-private-hospital#comments</comments><guid isPermaLink="false">47690900-4f0a-488e-ae2b-c9935fd9620b</guid><pubDate>Tue, 18 Aug 2026 16:33:18 +0000</pubDate><atom:updated>2026-08-18T16:33:18.995Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Imran Khan,Pakistan,இம்ரான் கான்,Supreme Court,உச்ச நீதிமன்றம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/9i0ekl13/New-Project-2026-08-18T212939.604.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இம்ரான் கானை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அனுமதி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/9i0ekl13/New-Project-2026-08-18T212939.604.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின் தற்போதைய எதிர்க்கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் நிறுவனருமான இம்ரான் கானை, ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையிலிருந்து இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிஃபா சர்வதேச மருத்துவமனைக்கு 2 நாட்களுக்குள் மாற்றுமாறு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>மேலும் இம்ரான் கானின் சகோதரி டாக்டர் உஸ்மா கான், அவரது தனிப்பட்ட மருத்துவர் டாக்டர் ஃபைசல் சுல்தான் உட்பட அவருக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சையை மேற்பார்வையிட ஒரு மருத்துவக் குழுவை அமைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>குடும்பத்தினர் மருத்துவமனையில் இம்ரான் கானை சந்திக்கலாம் என்றும், வெளிநாட்டில் வசிக்கும் மகன்களுடன் இம்ரான் கான் பேசவும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. </p><h2>என்ன சிகிச்சை?</h2><p>பல ஊழல் வழக்குகள் தொடர்பாக கடந்த 2023 ஆகஸ்ட் முதல் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் இம்ரான் கான் அடைக்கப்பட்டுள்ளார். நீண்டநாட் சிறையில் இருப்பதால் அவருக்கு பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் இருப்பதாகவும், மேலும் சிறையில் அவருக்கு உரிய சிகிச்சைகள் மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.</p><p>இந்த உடல்நலப் பிரச்னைகள் தொடர்பாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அரசு மருத்துவர்கள் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், தனியார் மருத்துவ நிபுணர்களின் சிகிச்சை தேவை என்றும் அவரது குடும்பத்தினரும், கட்சியினரும் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.</p><p>ஆனால் மருத்துவமனையை மாற்றமுடியாது, அதற்கு பதில் ஒரு மருத்துவ குழுவை அமைத்து, அந்தக் குழு அளிக்கும் அறிக்கையை வைத்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம் என இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. </p><p>கடந்த சில மாதங்களாக இதுதொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தநிலையில், கடந்த வாரம் அவரை பரிசோதித்த மருத்துவக்குழு நேற்று மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்தது. </p><h2>இம்ரான் கானின் மருத்துவ அறிக்கை</h2><p>73 வயதான இம்ரான் கான், தனது குடும்பத்தினரை நீண்டநாட்களாக காணததால் அவருக்குக் கடுமையான ரத்த அழுத்தம், மன உளைச்சல் மற்றும் இதயத் துடிப்பில் மாறுபாடுகள் ஏற்பட்டதாக சுட்டிக் காட்டியது. </p><p>மேலும் நாடித்துடிப்பும், இதய நிலையும் இயல்பாக இல்லை என்றும், அவரது முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படத் தொடங்கியிருந்தன என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. </p><h2>வலது கண் பார்வையில் கடுமையான பாதிப்பு</h2><p>மேலும் இம்ரான் கானுக்கு வலது கண்ணில் <strong>CRVO (Central Retinal Vein Occlusion)</strong> என்ற ரத்த நாள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தனது <strong>வலது கண் பார்வையில் சுமார் 85 சதவீதத்தை இழந்துவிட்டார்</strong> என்று அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் முறையிட்டனர். </p><p>சிறையில் இதற்கு உரிய சிறப்பு சிகிச்சை அளிக்கப்படவில்லை என அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.</p><p>இந்த மருத்துவ அறிக்கையைத் தொடர்ந்து மருத்துவமனை மாற்றத்திற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>TNPL: கோவை கிங்ஸ்க்கு 168 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-chepauk-super-gillies-168-runs-targest-to-kovai-kings</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-chepauk-super-gillies-168-runs-targest-to-kovai-kings#comments</comments><guid isPermaLink="false">952103ce-66b9-4a90-8ff0-ce16a961e1de</guid><pubDate>Tue, 18 Aug 2026 15:59:09 +0000</pubDate><atom:updated>2026-08-18T15:59:09.976Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,சேப்பாக் சூப்பர் கில்லீஸ்,CSG,கோவை கிங்ஸ்,kovai Kings</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/629lfx53/CSG0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ராம் அரவிந்த்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/629lfx53/CSG0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு பிரீமியர் லீக் 2027 சீசனின் 21-வது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கில்லீஸ்- கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.</p><p>டாஸ் வென்ற கோவை கிங்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் மோகித் ஹரிஹரன் மற்றும் என். ஜெகதீசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இங்கினர். ஹரிஹரன் 13 ரன்களிலும், என். ஜெகதீசன் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஆஷிக் 0 ரன்னில் ஆட்டமிழந்தார்.</p><h2>ராம் அர்விந்த் அரைசதம்</h2><p>அடுத்து இம்பேக்ட் பிளேயராக வந்த ராம் அர்விந்த் அதிரடியாக விளையாடினார். அவர் 32 பந்தில் 7 பவுண்டரி, 4 சிக்சருடன் 63 ரன்கள் விளாசினார். அதன்பின் ஸ்வப்னில் சிங் (20), அஷ்வந்த் வல்தபா (5), மோகனா பிரசாத் (12) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.</p><p>6.1 ஓவரில் 50 ரன்களை தொட்ட சேப்பாக் சூப்பர் கில்லீஸ், 10 ஓவரில் 100 ரன்களை தொட்டது. ஆனால், கடைசி 10 ஓவரில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததால் 19.3 ஓவரில் 167 ரன்களில் ஆல்அவுட் ஆனது.</p> <p>கோவை கிங்ஸ் அணியில் ஆர்.எஸ். அம்ப்ரிஸ் 3 விக்கெட்டுகளும், மணிமாறன் சித்தார்த் 2 விக்கெட்டுகளும், ஆர். திவாகர், ஜி. கிஷோர், ஜே. சுப்ரமணியன் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p>]]></content:encoded></item><item><title>வேறு மாநிலங்களில் கன்னட மக்கள் பாதிக்கப்பட்டால் கர்நாடகா வாயை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்குமா? - பெ.சண்முகம் கேள்வி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/would-karnataka-remain-a-silent-spectator-if-kannada-people-were-affected-in-other-states-p-shanmugam-asks</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/would-karnataka-remain-a-silent-spectator-if-kannada-people-were-affected-in-other-states-p-shanmugam-asks#comments</comments><guid isPermaLink="false">fd07eabb-b9ab-4ccf-a041-5ac4541d38e4</guid><pubDate>Tue, 18 Aug 2026 15:55:11 +0000</pubDate><atom:updated>2026-08-18T15:55:11.675Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,P. Shanmugam,பெ.சண்முகம்,Chief Minister D.K. Shivakumar,முதலமைச்சர் டி.கே.சிவகுமார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/zrpqwewy/New-Project-2026-08-18T212452.389.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேறு மாநிலங்களில் கன்னட மக்கள் பாதிக்கப்பட்டால் கர்நாடகா வாயை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்குமா? - பெ.சண்முகம் கேள்வி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/zrpqwewy/New-Project-2026-08-18T212452.389.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக வனத்துறையால் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு தலையிடக்கூடாது என கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் பேசியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில்.,</p><p>“கர்நாடக மாநிலத்தில் மூன்று தமிழர்கள் வனத்துறையினரால் கொல்லப்பட்டது தொடர்பாக தமிழ்நாடு தலையிடக் கூடாது என்று கர்நாடக முதலமைச்சர் டி. கே. சிவக்குமார் கூறியிருப்பதற்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். </p><p>உலகில் தமிழ் மக்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு நியாயமும் நீதியும் கிடைக்கக் குரல் கொடுப்பது தமிழ்நாடு தலைவர்கள் மற்றும் அரசின் கடமையாகும்.</p><p>இக்கொலை சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்த தமிழ்நாட்டு முதலமைச்சரை, “உங்கள் வேலையைப் பாருங்கள்” என்று கர்நாடக முதலமைச்சர் கடுமையான வார்த்தைகளில் கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. </p><p>வேறு மாநிலங்களில் கன்னட மொழி பேசும் மக்கள் பாதிக்கப்பட்டால் கர்நாடக அரசு வாயை மூடிக்கொண்டு வேடிக்கைதான் பார்க்குமா என்பதை விளக்க வேண்டுகிறோம்.</p><p>கர்நாடக நிர்வாகத்தில் தமிழ்நாடு தலையிடுவதாகப் பிரச்சனையைத் திசை திருப்புவதை விடுத்து, கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதில் கர்நாடக அரசு கவனம் செலுத்தட்டும்.</p>]]></content:encoded></item></channel></rss>