<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 09 Sep 2026 04:21:48 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 9 செப். 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-9-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-9-september-2026#comments</comments><guid isPermaLink="false">e412a312-48cc-4e33-837f-678856202328</guid><pubDate>Wed, 09 Sep 2026 04:10:24 +0000</pubDate><atom:updated>2026-09-09T04:17:14.065Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/oqgphfis/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live news]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/oqgphfis/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/sports/netflix-aims-to-secure-global-broadcast-rights-for-asian-t20-cricket">ஆசிய டி20 கிரிக்கெட் போட்டி - உலகளாவிய ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றும் நோக்கில் ‘நெட்ஃபிளிக்ஸ்’ தீவிரம்...</a></p><p>*  இந்தியா-ஜப்பான் மோதும் ஆசிய டி20 கிரிக்கெட் பயிற்சி போட்டி செப்டம்பர் 22 நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>* இந்த டி20 கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 10 அணிகள் கலந்துகொள்ள உள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/1000-years-dust-gas-lion-nebula-photo-released-by-nasa">1,000 ஆண்டுகளாக தூசி மற்றும் வாயுக்களால் உருவான ‘சிங்க நெபுலா’ - புகைப்படத்தை வெளியிட்ட நாசா... </a></p><p>* நட்சத்திரங்கள் வெளியேற்றும் அயனியாக்கப்பட்ட வாயு மற்றும் தூசிக்களால் உருவான தோற்றம் கோள் நெபுலா எனப்படுகிறது.</p><p>* நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி சிங்க நெபுலாவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.  </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-constituency-by-elections-filing-of-nomination-begins-today">மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் - வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்</a></p><p>* செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. </p><p>* மதுராந்தகம் (தனி) சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 285 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.</p>]]></content:encoded></item><item><title> 132 கி.மீ. ரேன்ஜ் வழங்கும் கைனடிக்  எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்: சூப்பர் அப்டேட்!</title><link>https://www.maalaimalar.com/automobilenews/bike/132-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%80-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D</link><comments>https://www.maalaimalar.com/automobilenews/bike/132-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%80-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D#comments</comments><guid isPermaLink="false">2e460186-39d2-4b67-9a6e-f78e8c0cb40a</guid><pubDate>Wed, 09 Sep 2026 04:19:00 +0000</pubDate><atom:updated>2026-09-09T04:19:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Electric Scooter,Kinetic,கைனடிக்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/uxny64st/kinetic-DX-Plus.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/uxny64st/kinetic-DX-Plus.png?w=280" width="280"></media:thumbnail><category>பைக் (Automobile)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கைனடிக் நிறுவனம், தனது புகழ்பெற்ற DX எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒரு பெரிய பேட்டரி மற்றும் கூடுதல் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தியுள்ளது. புதிய DX+ 3.1 kWh மாடல், அன்றாட பயணங்களை மிகவும் நடைமுறைக்கு ஏற்றதாக மாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது. </p><p>இந்த ஸ்கூட்டரில் இப்போது 3.1 kWh LFP பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, இது 132 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் (IDC) வழங்கும் என கூறப்படுகிறது. நடைமுறையில் எதிர்பார்க்கப்படும் ரேன்ஜ் சுமார் 105–110 கி.லோமீட்டர்களாக இருக்கும் என்று கைனடிக் கூறுகிறது.</p><h2>சிறப்பு அம்சங்கள்:</h2><p>ஹப்-இல் பொருத்தப்பட்ட BLDC மோட்டாரில் இருந்து 3.8 kW பீக்-பவர் பெறப்படுகிறது. இந்த ஸ்கூட்டரில் ரேன்ஜ் மற்றும் பவர் என இரண்டு ரைடிங் மோட்கள் உள்ளன. மேலும், K-கோஸ்ட் டெக், வேகத்தை குறைக்கும்போது ஆற்றலை மீட்டெடுக்க ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங்கை வழங்குகிறது.</p><p>DX+ மாடல், அசல் கைனடிக் DX-இன் முழு-உலோக பாடியை தக்க வைத்து கொண்டுள்ளது, ஆனால் ரிவர்ஸ் வசதியுடன் கூடிய பார்க் அசிஸ்ட், ஈஸி சார்ஜ், டெலிமேட்டிக்ஸ் மற்றும் IP67 சான்று பெற்ற டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்பட நவீன அம்சங்களை சேர்த்துள்ளது. இது குயிக் சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது, சுமார் மூன்று மணி நேரத்தில் 0–80 சதவீதம் சார்ஜ் ஆகிவிடும் எனக் கூறப்படுகிறது.</p><h2>விலை விவரங்கள்:</h2><p>புதிய வேரியண்டில் பயன்பாட்டுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதன்படி இந்த மாடலின் இருக்கைக்கு அடியில் 37 லிட்டர் ஸ்டோரேஜ், 165 மில்லிமீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் இரு முனைகளிலும் 12-இன்ச் ட்யூப்லெஸ் டயர்கள் ஆகியவை இதில் உள்ளன. முன்பக்கத்தில் 220 மில்லிமீட்டர் டிஸ்க் மற்றும் பின்பக்கத்தில் 130 மில்லிமீட்டர் டிரம் மூலம் பிரேக்கிங் கையாளப்படுகிறது.</p><p>கைனடிக் DX 3 kWh மாடலின் விலை ரூ. 1.19 லட்சம், அதே சமயம் DX+ 3.1 kWh மாடலின் விலை ரூ. 1.28 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். DX+ மாடல் பிளாக், சில்வர், புளூ, வைட் மற்றும் ரெட் என ஆகிய ஐந்து வண்ணங்களில் கிடைக்கிறது, அதே சமயம் DX மாடலில் பிளாக் மற்றும் சில்வர் ஆகிய விருப்பங்கள் உள்ளன.</p><p>கைனடிக் நிறுவனம், DX+ மாடலுக்கு ரூ. 3,000 சலுகை மற்றும் ரூ. 8,999 மதிப்புள்ள நீட்டிக்கப்பட்ட வாரண்டி உள்ளிட்ட பண்டிகைக்கால சலுகைகளையும் வழங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஆசிய டி20 கிரிக்கெட் போட்டி - உலகளாவிய ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றும் நோக்கில் ‘நெட்ஃபிளிக்ஸ்’ தீவிரம்</title><link>https://www.maalaimalar.com/sports/netflix-aims-to-secure-global-broadcast-rights-for-asian-t20-cricket</link><comments>https://www.maalaimalar.com/sports/netflix-aims-to-secure-global-broadcast-rights-for-asian-t20-cricket#comments</comments><guid isPermaLink="false">7c312042-837b-489f-bd7a-67dad864664f</guid><pubDate>Wed, 09 Sep 2026 04:07:13 +0000</pubDate><atom:updated>2026-09-09T04:07:13.716Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>T20 Cricket,டி20 கிரிக்கெட்,Shreyas Iyer,Asian Games,ஸ்ரேயாஸ் ஐயர்,ஆசிய விளையாட்டு போட்டி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/4be0v4v6/Untitled-design-39.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Asia T20 Broadcast Rights]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/4be0v4v6/Untitled-design-39.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்த ஆண்டிற்கான ஆசிய டி-20 கிரிக்கெட் போட்டிகளை இந்தியாவில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பும் உரிமைகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில், இதன் உலகளாவிய ஒளிபரப்பு உரிமைகளை நெட்ஃபிளிக்ஸ் ஸ்ட்ரீமிங் நிறுவனம் கைப்பற்றக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>2026-ஆம் ஆண்டிற்கான ஆண்கள் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF">ஆசிய விளையாட்டு போட்டி</a> செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 3 வரை ஜப்பான் நாட்டில் நடைபெற உள்ளது. </p><h3><strong>ஆசிய டி20 கிரிக்கெட் போட்டி</strong></h3><p>இந்த டி20 கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 10 அணிகள் கலந்துகொள்ள உள்ளது. செப்டம்பர் 24 முதல் 26 வரையில் தகுதி சுற்று போட்டிகள் நடைபெற உள்ளன. </p><p>அதையடுத்து நடைபெறும் காலிறுதி போட்டியில், நேரடியாக தகுதி பெற்றுள்ள நடப்பு ஆசிய சாம்பியனான இந்திய கிரிக்கெட் அணி விளையாட உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D">ஸ்ரேயாஸ் ஐயர்</a> தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஜப்பான் அணிக்கு எதிராக செப்டம்பர் 22 அன்று ஒரு சிறப்பு போட்டியில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இதுகுறித்து ஜப்பான் கிரிக்கெட் சங்கத்தின் தலைமை செயல் அதிகாரி கூறுகையில், இந்த வரலாற்று சிறப்புமிக்க டி20 போட்டிக்காக இந்திய கிரிக்கெட் அணியை ஜப்பானுக்கு அழைத்து வருவது, ஜப்பானின் கிரிக்கெட் வளர்ச்சிக்கு ஒரு திருப்புமுறையாக அமையும் என்று கூறினார்.</p><h3><strong>இந்திய ஒளிபரப்பு உரிமை</strong></h3><p>ஆசிய டி20 கிரிக்கெட் போட்டிக்கான டிஜிட்டல் உரிமையை ஃபேன் கோட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதேபோன்று இந்தியாவில் அதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.</p><h3><strong>உலகளாவிய ஒளிபரப்பு உரிமை</strong></h3><p>இந்த நிலையில், ஆசிய டி20 போட்டிக்கான உலகளாவிய ஒளிபரப்பு உரிமைகளை பெறுவதில் நெட்ஃபிளிக்ஸ், அமேசான், யூடியூப் மற்றும் DAZN ஆகிய முன்னணி ஸ்ட்ரீமிங் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.</p><p>இதற்கான ஏலங்கள் ஒரே நாளில் திறக்கப்படுவதால், நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் அதன் உலகளாவிய ஒளிபரப்பு உரிமைகளை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>நெருக்கடியான பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் வேண்டாம்- அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-no-need-hq-in-pattinapakkam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-no-need-hq-in-pattinapakkam#comments</comments><guid isPermaLink="false">9128e893-0c38-4af6-8f3f-688d0310bde9</guid><pubDate>Wed, 09 Sep 2026 03:58:15 +0000</pubDate><atom:updated>2026-09-09T03:58:15.130Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,பட்டினப்பாக்கம்,புதிய தலைமை செயலகம்,pattinapakkam</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/xwlu6gvz/anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/xwlu6gvz/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்நாட்டுக்கான தலைமைச் செயலகம், சட்டப்பேரவைச் செயலகம் ஆகியவற்றையும்  சென்னைக்கு வெளியில் ஒருங்கிணைந்த நிர்வாக நகரமாக உருவாக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>சாதகங்களை விட பாதகங்களே அதிகம்</strong></h2><p>தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவைக்கு 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய வளாகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அவர்கள் அறிவித்திருந்த நிலையில், பட்டினப்பாக்கம் பகுதியில் அந்த வளாகம் அமைக்கப்படவிருப்பதாக ஊடகங்களில் அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த செய்திகள் உண்மையாக இருந்தால் அது தொலைநோக்குப் பார்வையற்றதாகவே இருக்கும்.</p><p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 3-ஆம் தேதி அவை விதி எண் 110இன் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் விஜய் அவர்கள், தலைமைச் செயலகம், சட்டப்பேரவைச் செயலகம் மற்றும் அனைத்துத் துறை அலுவலகங்கள் அடங்கிய நிர்வாக வளாகம் ரூ.1200 கோடி செலவில், 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படும் என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து கடந்த சில நாள்களாகவே சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலக வளாகம் அமைக்கப்படும் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. அந்தப் பகுதியில் வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான 21.37 ஏக்கர் நிலம், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 0.93 ஏக்கர் நிலம், வருவாய்த் துறையில் ஆவணங்கள் இல்லாத 1.20 ஏக்கர் நிலம் உள்பட மொத்தம் 26.36 ஏக்கர் பரப்பளவில் 15 மாடி கட்டிடமாக புதிய வளாகம் அமைக்கப்படும்; அதில் அனைத்து வசதிகளும் இடம் பெறும் என்று ஊடகங்களில் வெளியான செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தமிழக அரசுக்கு <a href="https://www.maalaimalar.com/topic/புதிய-தலைமை-செயலகம்">புதிய தலைமைச் செயலகம்</a> தேவை என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து கிடையாது.  கடந்த 25 ஆண்டுகளாகவே புதியத் தலைமைச் செயலகத்திற்கான தேடல் நீடித்துக் கொண்டே இருக்கிறது.  ஆனாலும், இடம் அடையாளம் காண்பது முதல் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் 80%க்கும் கூடுதலான பணிகள் முடிந்த நிலை வரை பல்வேறு கட்டங்களில் அம்முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், இப்போது புதிய அரசால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது. எனினும், புதிய தலைமைச் செயலக வளாகம் பட்டினப்பாக்கத்தில் தான் அமையும் என்றால் அதனால் ஏற்படும் சாதகங்களை விட பாதகங்களே அதிகம்.</p><h2><strong>நெரிசல்</strong></h2><p>பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதில் உள்ள மிகப்பெரிய சிக்கல் போக்குவரத்து நெரிசல் ஆகும். சாந்தோம் சாலையிலும், பசுமைவழிச் சாலையிலும் ஏற்கனவே கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படும் நிலையில், அதை சமாளிப்பதற்காகத் தான் லூப் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் தான் புகழ்பெற்ற சாந்தோம் தேவாலயம், புகழ்பெற்ற பள்ளிக் கூடங்கள், பத்திரப்பதிவுத்துறை தலைவர் அலுவலகம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்கள் உள்ளன. இவற்றுடன் புதிய தலைமைச் செயலகமும் அமைக்கப்பட்டால் அப்பகுதியில் சமாளிக்க முடியாத அளவுக்கு நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ளது.</p><p>அடுத்ததாக, புதிய தலைமைச் செயலகம், சட்டப்பேரவை வளாகம், அனைத்துத் துறை அலுவலங்களைக் கொண்ட வளாகம் அமைக்க இப்போது அடையாளம் காணப்பட்டிருப்பதாகக் கூறப்படும் 26.36 ஏக்கர் நிலம் போதுமானதல்ல. மொத்தம் 20 லட்சம் சதுர அடி பரப்பளவிலான வளாகம் 15 மாடிக் கட்டிடமாக கட்டப்படும்  என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், எப்.எஸ்.ஐ விதிகளின்படி அதற்கேற்ற வகையில் காலி இடமும், பசுமைப் பரப்பும் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இவை தவிர ஓர் தலைமைச் செயலக வளாகம் செயல்படும் இடத்தில், தீயவிப்பு நிலையம், அவசர மருத்துவ வசதிகள், உணவகங்கள், வாகன நிறுத்துமிடங்கள், பொதுப்போக்குவரத்து வசதிகள் உள்ளிட்டவை ஏற்படுத்தித் தரப்பட வேண்டியது கட்டாயமாகும். இத்தகைக் கட்டமைப்பு வசதிகளையும் இப்போது அடையாளம் காணப்பட்டுள்ள இடத்தில் ஏற்படுத்தினால், இப்போதுள்ள தலைமைச் செயலக வளாகத்தில் ஏற்பட்டதைப் போன்ற இட நெருக்கடி மிக விரைவில் புதிய வளாகத்திலும் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.</p><h2><strong>பாமகவின் கோரிக்கை</strong></h2><p>புதிய தலைமைச் செயலகம் அமைப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் விஜய் அவர்கள்,  புதிய வளாகம் அடுத்த நூறாண்டுகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் அமையும் என்று தெரிவித்தார். முதலமைச்சரின் இந்த கனவு நிறைவேற வேண்டும் என்றால், அதற்கு பட்டினப்பாக்கம் பொருத்தமான இடம் அல்ல என்பது தான் எனது கருத்து. முதலமைச்சர் விஜய் அவர்கள் தொலைநோக்குப் பார்வையுடன் இதற்காக சென்னைக்கு வெளியில் குறைந்தது 500 முதல் 1000 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த நிர்வாக நகரத்தை  அமைப்பதற்கான முன்னேற்பாடுகளைத் தொடங்க வேண்டும் என்பது தான் பாமகவின் கோரிக்கை ஆகும்.</p><p>ஓர் அரசின் கட்டுப்பாட்டு அறையாக திகழ்வது தலைமைச் செயலகம் தான். அத்தகைய தலைமைச் செயலகத்தில் இடம் பற்றாக்குறையாக உள்ளது; அதனால் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை உலகம்  முழுவதும் ஜனநாயகம் தழைக்கத் தொடங்கிய கடந்த ஒரு நூற்றாண்டாக ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது. உலகின் பல நாடுகளில் அதற்கானத் தீர்வு ஒருங்கிணைந்த நிர்வாக நகரம் அமைப்பதாகவே இருந்திருக்கிறது. இந்த விஷயத்தில் ஒட்டுமொத்த உலகத்திற்கும் இந்தியா தான் வழிகாட்டியாக இருந்துள்ளது.</p><p>ஆங்கிலேயர் ஆட்சியில், 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரசின் தலைமைச் செயலகம் கொல்கத்தாவில்  இருந்து  தில்லிக்கு மாற்றப்பட்டது. அப்போது மொகலாயர் ஆட்சியின் தலைநகரமாக இருந்த தில்லியில் போதிய இட வசதிகள் இல்லாததால், புதுதில்லி என்ற நிர்வாக நகரத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டு அதற்கு 1911-ஆம் ஆண்டு திசம்பர் 12-ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. 1932-ஆம் ஆண்டில் திறப்பு விழா செய்யப்பட்ட அந்த நகரத்தில் தான் ஆங்கிலேயர் காலம் தொடங்கி இன்று வரை அரசின் தலைமைச் செயலகம், சுதந்திர இந்தியாவின் நாடாளுமன்றம், குடியரசுத் தலைவர் மாளிகை, உச்சநீதிமன்றம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.</p><p>மலேஷியாவில் இதே போன்ற சிக்கல் ஏற்பட்ட போது, கோலாம்பூரில் இருந்து 34 கி.மீ தொலைவில் உள்ள புத்ரஜெயாவில் புதிய தலைமைச் செயலகம் உருவாக்கப்பட்டு 1999-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. தென் அமெரிக்காவின் பிரேசில் இன்னும் ஒரு படி மேலே சென்று தலைநகரத்தையே ரியோடி ஜெனிரோ நகரத்திலிருந்து 928  கி.மீ தொலைவில் பிரேசிலியா என்ற புதிய நிர்வாக நகரத்தை உருவாக்கி அங்கு மாற்றியது.</p><p>2001-ஆம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பேற்ற ஜெயலலிதா கிழக்குக் கடற்கரை சாலையில் ஒருங்கிணைந்த நிர்வாக நகரத்தை அமைக்க வேண்டும் என்று திட்டமிட்டார். இந்த முன்னுதாரணங்களை பின்பற்றி தமிழ்நாட்டுக்கான தலைமைச் செயலகம், சட்டப்பேரவைச் செயலகம் ஆகியவற்றையும்  சென்னைக்கு வெளியில் ஒருங்கிணைந்த நிர்வாக நகரமாக உருவாக்க வேண்டும்.</p><p>அதில் தலைமைச் செயலகம், சட்டப்பேரவைச் செயலகம், அனைத்துத் துறை தலைமை அலுவலகங்கள், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கான மாளிகைகள், அரசு ஊழியர்களுக்கான குடியிருப்புகள், மெட்ரோ ரயில் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்து வசதிகள், தேசிய, உலகத் தலைவர்கள் வருகை தருவதற்கு வசதியாக ஹெலிகாப்டர் இறங்கு தளங்கள்,  தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவைச் செயலகத்தில் பணியாற்றும் செயலாளர்கள் நிலையிலான இ.ஆ.ப அதிகாரிகள் தொடங்கி கடைநிலைப் பணியாளர்கள் வரை அனைத்துப் பணியாளர்களின் பிள்ளைகள் படிப்பதற்குத் தேவையான பள்ளிகள், கல்லூரிகள், உள் விளையாட்டு அரங்குகள், வணிக வளாகங்கள் என ஒரு நகரத்திற்கு என்னென்ன அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் தேவையோ, அவை அனைத்தையும்  கட்டமைத்துக் கொடுக்கவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>10,000mAh பேட்டரியுடன் விரைவில் இந்தியா வரும் புது ரெட்மி ஸ்மார்ட்போன்</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/redmi-teases-new-10000mah-phone-for-india</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/redmi-teases-new-10000mah-phone-for-india#comments</comments><guid isPermaLink="false">ef25e7da-11c2-4002-8a98-fe0ca064ae32</guid><pubDate>Wed, 09 Sep 2026 03:37:00 +0000</pubDate><atom:updated>2026-09-09T03:37:00.000Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Xiaomi,smartphone,சியோமி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/w4ruyo3s/REDMI-Note-17-Pro-Max-5G.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ REDMI Note 17 Pro Max 5G]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/w4ruyo3s/REDMI-Note-17-Pro-Max-5G.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/xiaomi">சியோமி</a> நிறுவனம் சமீபத்தில் தனது புது ஸ்மார்ட்போனிற்கான டீசர்களை வெளியிட்டு இருந்தது. டீசர்களில் இந்த ஸ்மார்ட்போன் "மேக்ஸ்" என்று மட்டும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில், சியோமி நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனின் பெயரை உறுதிப்படுத்தி இருக்கிறது. </p><p>அதன்படி புதிய <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மார்ட்போன்</a> ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் என அழைக்கப்படுகிறது. 10,000mAh பேட்டரியுடன் அறிமுகமான முதல் ரெட்மி ஸ்மார்ட்போனாக ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் மாடல் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட சர்வதேச சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டது.</p><h2>ரெட்மி நோட் இந்திய வெளியீடு:</h2><p>புதிய ஸ்மார்ட்போன் வெளியீடு குறித்து ரெட்மி இந்தியா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பதிவில் பகிர்ந்தள்ள டீசரில் புதிய நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன் 10,000mAh பேட்டரி கொண்டிருக்கும் என குறிப்பிட்டுள்ளது. இதுதவிர புதிய டீசரில் ஸ்மார்ட்போன் பற்றிய எந்த விவரங்களும் இடம்பெறவில்லை. மேலும், இந்த ஸ்மார்ட்போன் மேக்ஸ் பிரான்டிங் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.</p><p>சமீபத்தில் 10,000mAh பேட்டரியுடன் ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இதே மாடல் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.</p><h2>எதிர்பார்க்கப்படும் சிறப்பு அம்சங்கள்:</h2><p>புதிய ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் மாடலில் 6.83 இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், அதிகபட்சம் 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், ஸ்னாப்டிராகன் 6 ஜென் 5 பிராசஸர், அதிகபட்சம் 512 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. பேட்டரியை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 10,000mAh சிலிகான் கார்பன் பேட்டரி கொண்டிருக்கும் என்றும் இத்துடன் 100 வாட் சார்ஜிங் வழங்கப்படலாம்.</p><p>மேலும், இந்த ஸ்மார்ட்போன் 27 வாட் ரிவர்ஸ் சார்ஜிங் வழங்கப்படும் என தெரிகிறது. புகைப்படங்களை எடுக்க இந்த ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு சென்சார், 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படலாம். முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட நோட் 15 ப்ரோ பிளஸ் மாடலில் 200MP பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் - வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-constituency-by-elections-filing-of-nomination-begins-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-constituency-by-elections-filing-of-nomination-begins-today#comments</comments><guid isPermaLink="false">49db7356-6110-402b-932c-2b190a94a6d0</guid><pubDate>Wed, 09 Sep 2026 02:52:57 +0000</pubDate><atom:updated>2026-09-09T02:52:57.696Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>by election,dharapuram,தாராபுரம்,Maduranthakam,மதுராந்தகம்,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/o8f0vn26/petition.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/o8f0vn26/petition.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[  <p>மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இதையொட்டி, முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.</p> <h2>தாராபுரம் தொகுதி</h2><p>தமிழக சட்டசபைக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தேர்தல் நடந்தது. இதில், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சத்தியபாமா வெற்றி பெற்றார். ஆனால் அவர், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, அந்த தொகுதி காலியானதாக <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">தேர்தல் ஆணையம் </a>அறிவித்தது. இந்தநிலையில், தாராபுரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.</p> <h2>வேட்புமனு தாக்கல்</h2><p>தாராபுரம் (தனி) தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் வருகிற 16-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் நடத்தும் அதிகாரியும், ஆர்.டி.ஓ.வுமான பெலிக்ஸ்ராஜா தலைமையிலான அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். </p><p>தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இதற்காக தேர்தல் பிரிவு அலுவலகம் அமைக்கப்பட்டு, வேட்புமனு படிவங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. மேலும், பாதுகாப்பு பணிகளுக்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இந்த தொகுதியில் உரிய ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும். இதற்காக 9 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p> <h2>மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி</h2><p>செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் வீரப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் த.வெ.க., தி.மு.க.. அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.</p> <h2>கட்டுப்பாட்டு அறை</h2><p>தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/maduranthakam-constituency-facing-a-by-election-for-the-first-time">மதுராந்தகம்</a> தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இடைத்தேர்தலை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான புகார்கள் தொலைபேசி வாயிலாக பெறப்பட்டு, அவற்றின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை 1950, 1800-425-7088, 044-27427412 ஆகிய தொலைபேசி எண்களில் எந்த நேரமும் தெரிவிக்கலாம்.</p> <h2>வாக்காளர்கள் விவரம்</h2><p>மதுராந்தகம் (தனி) சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 285 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 886 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 8 ஆயிரத்து 738 பெண் வாக்காளர்கள். 65 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 13 ஆயிரத்து 689 வாக்காளர்கள் உள்ளனர்.</p><p>தேர்தல் பணிகளை கண்காணிக்க 9 பறக்கும் படைகள், 9 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.</p> <h2>சுவர் விளம்பரங்கள் அகற்றம்</h2><p>தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், அரசு மற்றும் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள், விளம்பர பதாகைகள் உள்ளிட்டவற்றை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.</p> <p>மேலும், வேட்பாளர்கள் அல்லது அரசியல் கட்சிகள் பிரசார கூட்டங்கள் நடத்துதல், ஒலிபெருக்கி பயன்படுத்துதல், வாகன ஊர்வலம் நடத்துதல், தற்காலிக கட்சி அலுவலகம் அமைத்தல் உள்ளிட்டவற்றுக்கு தேர்தல் ஆணையத்தின் இணையதள செயலி மூலம் விண்ணப்பித்து முன் அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>1,000 ஆண்டுகளாக தூசி மற்றும் வாயுக்களால் உருவான ‘சிங்க நெபுலா’ - புகைப்படத்தை வெளியிட்ட நாசா</title><link>https://www.maalaimalar.com/news/world/1000-years-dust-gas-lion-nebula-photo-released-by-nasa</link><comments>https://www.maalaimalar.com/news/world/1000-years-dust-gas-lion-nebula-photo-released-by-nasa#comments</comments><guid isPermaLink="false">de1bac20-467f-4ae3-9396-d9b461eb8045</guid><pubDate>Wed, 09 Sep 2026 02:28:55 +0000</pubDate><atom:updated>2026-09-09T02:28:55.392Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நாசா,nasa,James Webb Space Telescope,விண்வெளி தொலைநோக்கி,Space Telescope</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/07yl0zib/Untitled-design-38.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ NASA Lion Nebula - Lion]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/07yl0zib/Untitled-design-38.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தூசி மற்றும் வாயுக்களால் உருவான சிங்கத்தின் உருவம் கொண்ட சிங்க நெபுலா என்று அழைக்கப்படும் NGC 2392 -வின் பிரமிக்க வைக்கும் தோற்றத்தை நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளது.</p><p><strong>கோள் நெபுலா</strong></p><p>நடுத்தர நிறை (mass) கொண்ட நட்சத்திரங்கள் தங்கள் வாழ்வின் பிற்பகுதியில் வெளியேற்றும் அயனியாக்கப்பட்ட வாயு மற்றும் தூசிக்களால் உருவான ஒரு தோற்றம் ‘<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE">கோள் நெபுலா</a>’ என்று அழைக்கப்படுகிறது. </p><p>அத்தகைய நட்சத்திரம் அதன் மையத்தில் அணுக்கரு வினைகளை தக்கவைக்க முடியாதபோது, அது நிலையற்றதாகி துடிக்க தொடங்குகிறது. பின்னர் அது தனது வெளிப்புற அடுக்குகளை உதிர்க்கிறது.</p><p>அவை வாயு மற்றும் தூசிக்களால் ஆன ஓடுகளாக மாறி, ‘கோள் நெபுலா’ என்று அழைக்கப்படும் ஒன்றை உருவாக்குகின்றன.</p><p>இதனை நட்சத்திரங்களின் கதிர்வீச்சுகள் வெளிப்புறமாக தள்ளுவதால், வெண் குள்ளன் எனப்படும் மிகவும் வெப்பமான ஒரு மையப்பகுதி எஞ்சி நிற்கிறது.</p><p>சிங்க நெபுலாவில் ஆக்சிஜன் நிறைந்த மைய நட்சத்திரம் இறந்ததை தொடர்ந்து, வெண் குறுங்கோள் ஒன்று எஞ்சி காணப்படுகிறது. அது தன்னை சுற்றியுள்ள பொருட்களை உள்ளிருந்து வெப்பத்தில் உமிழ்ந்து, சிங்கத்தின் முக தோற்றத்தை ஒத்த அயனியாக்கப்பட்ட வாயு குமிழியை உருவாக்குகிறது.</p><h3><strong>வானியலாளர்கள்</strong></h3><p>தொடக்கத்தில் நெபுலா வடிவத்தை பழமையான தொலைநோக்கியின் வழியாக பார்த்த வானியலாளர்கள், இதன் வட்டமான தோற்றம், பச்சை நிற பொருட்களால் காட்சியளிக்கும் யுரேனஸ் மற்றும் நெப்டியூன் போன்ற வாயுக்களால் ஆன பெருங்கோள்களை ஒத்திருப்பதாக கருதினர்.</p><p>ஆனால் அவை நடுத்தர அளவிலான நட்சத்திரங்களின் இறப்பின் போது நிகழும் ஒரு தோற்றமாக உருவானதை வானியலாளர் பின் நாட்களில் கண்டறிந்தனர்.</p><h3><strong>நாசா ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி</strong></h3><p>கடந்த 2000-ஆம் ஆண்டு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE">நாசாவின்</a> ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி, இந்த கோள் நெபுலாவை ஆய்வு செய்திருந்தது. அப்போது அதன் உருவம், சிங்க முகத்தையும் வால்மீன் வடிவ பொருட்களால் ஆன மங்கலான ‘பிடரி மயிர்’ ஒத்த தோற்றத்தையும் கொண்டிருந்தது.</p><h3><strong>ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி</strong></h3><p>இதையடுத்து தற்போது நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி NGC 2392 என்று அழைக்கப்படும் சிங்க நெபுலாவின் புதிய தோற்றத்தை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளது.</p><p>இந்த புகைப்படத்தை எடுப்பதற்காக அண்மை அகச்சிவப்பு (NIRCam) கேமரா மற்றும் நடு அகச்சிவப்பு கருவி (MIRI) ஆகியவற்றை பயன்படுத்தி தெளிவான படத்தை பதிவுசெய்துள்ளது.</p><p>இந்த சிங்க நெபுலாவின் மையத்தில், இறந்து போகும் தருவாயில் உள்ள நட்சத்திரங்களின் எச்சங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் பெட்ரோல், டீசல் விலை - இன்றைய நிலவரம்
</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-and-diesel-price-in-chennai-9-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-and-diesel-price-in-chennai-9-september-2026#comments</comments><guid isPermaLink="false">092a4916-824b-45ca-ae80-c056e5d972e2</guid><pubDate>Wed, 09 Sep 2026 02:13:35 +0000</pubDate><atom:updated>2026-09-09T02:13:35.386Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,கச்சா எண்ணெய்,Crude oil,பெட்ரோல் டீசல் விலை,Pertrol Diesel Prices</media:keywords><media:content height="576" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/awvbgdsi/maalai-malar2026-08-24b0k0t00ltn-32.avif" width="1024"><media:title type="html"><![CDATA[ பெட்ரோல், டீசல் விலை]]></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல், டீசல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/awvbgdsi/maalai-malar2026-08-24b0k0t00ltn-32.avif?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.94-க்கும் டீசல் ரூ.99.71-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. </p><h2>ஈரான் போர்</h2><p>ஈரான் போரினால் மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p> <h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.</p> <h2>இன்றைய பெட்ரோல், டீசல் விலை</h2><p>அந்த வகையில் இன்றைய (9.9.2026 - (புதன்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.94-க்கும் டீசல் ரூ.99.71-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 9.9.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும்</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-9-september-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-9-september-2026#comments</comments><guid isPermaLink="false">09cb1b76-419e-4580-ae17-0b7b10a93620</guid><pubDate>Wed, 09 Sep 2026 01:48:01 +0000</pubDate><atom:updated>2026-09-09T01:48:01.300Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/12/04/22607216-rasipalan.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/12/04/22607216-rasipalan.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>எதிரிகள் விலகும் நாள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு. சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.</p><h2>ரிஷபம்</h2><p>யோகமான நாள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை புதுப்பிக்கும் எண்ணம் உருவாகும். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர்.</p> <h2>மிதுனம்</h2><p>தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். கடின முயற்சிக்குப் பின்னால் காரியங்களில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உண்டு.</p><h2>கடகம்</h2><p>நட்பு வட்டம் விரிவடையும் நாள். உங்கள் யோசனைகளைக் கேட்டு நடந்தவர்கள் பாராட்டுவர். பிள்ளைகளின் கல்யாண முயற்சி கைகூடும்.</p> <h2>சிம்மம்</h2><p>எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். பணவரவு திருப்தி தரும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் ஏற்படும்.</p><h2>கன்னி</h2><p>வாய்ப்புகள் வாயிற் கதவைத் தட்டும் நாள். வளர்ச்சிக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.</p> <h2>துலாம்</h2><p>மகிழ்ச்சி கூடும் நாள். தொழில் முன்னேற்றம் உண்டு. தூரதேசத்திலிருந்து நல்ல செய்தி வந்துசேரலாம். தொலைபேசி வழித்தகவல் ஆதாயம் தரும்.</p><h2>விருச்சிகம்</h2><p>முன்னேற்றம் கூடும் நாள். சகோதர வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பஞ்சாயத்துகள் சாதகமாகும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட சலுகைகள் கிடைக்கும்.</p><h2>தனுசு</h2><p>விருப்பங்கள் நிறைவேற விட்டுக் கொடுத்துச் செல்லவேண்டிய நாள். வேலையாட்களால் பிரச்சனை ஏற்படும். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல் உண்டு.</p><h2>மகரம்</h2><p>தட்டுப்பாடுகள் அகல கட்டுப்பாடுடன் நடந்துகொள்ள வேண்டிய நாள். எதிர்பார்த்த தொகை வந்தாலும் இருமடங்காக செலவு வரும்.</p> <h2>கும்பம்</h2><p>முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். உயர் அதிகாரிகள் உங்களின் செயல்பாடுகளைக் கண்டு ஆச்சரியப்படுவர். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நிலை மாறும்.</p><h2>மீனம்</h2><p>வளர்ச்சி கூடும் நாள். கடனாகக் கொடுத்த தொகை திரும்பக் கிடைக்கும். உறவினர்கள் உதவி கிட்டும். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர்.</p> ]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 9 செப்டம்பர் 2026: இருக்கன்குடி மாரியம்மன் பவனி</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-9-september-2026-irukkankudi-mariamman-bhavani</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-9-september-2026-irukkankudi-mariamman-bhavani#comments</comments><guid isPermaLink="false">1afa8594-7d38-4645-a219-8b8176514b25</guid><pubDate>Wed, 09 Sep 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-09-09T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/03/05/27220541-amman2.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அம்மன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/03/05/27220541-amman2.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆவணி-23 (புதன்கிழமை)</p><p>பிறை : தேய்பிறை</p><p>திதி :   திரயோதசி நண்பகல் 12.33 மணி வரை பிறகு சதுர்த்தசி</p><p>நட்சத்திரம் : ஆயில்யம் மாலை 4.03 மணி வரை பிறகு மகம்</p> <p>யோகம் :  சித்தயோகம்</p><p>ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை</p><p>எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை</p><p>சூலம் : வடக்கு</p><p>நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை</p> <h2>திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலகாபிஷேகம்</h2><p>மாத சிவராத்திரி. திருச்செந்தூர், பெருவயல் கோவில்களில் ஸ்ரீ முருகப் பெருமான் ரதோற்சவம். அதிபத்த நாயனார், புகழ்துணை நாயனார் குரு பூஜை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சனம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு அலங்கார திருமஞ்சனம். விருதுநகர் சமீபம் சதுரகிரி ஸ்ரீ சுந்தரமகாலிங்கம் கோவிலில் பெருந்திருவிழா. இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் பவனி. திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை தலத்தில் அலங்கார திருமஞ்சனம். </p> <p>கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபய பிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலகாபிஷேகம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு. திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாக நாத சுவாமி சிறப்பு அபிஷேகம். சோழவந்தான் ஸ்ரீ ஜனகைமாரியம்மன் பால் அபிஷேகம், அலங்காரம்.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - மாற்றம்</p><p>ரிஷபம் - வெற்றி</p><p>மிதுனம் - கீர்த்தி</p><p>கடகம் - லாபம்</p><p>சிம்மம் - நட்பு</p><p>கன்னி - அனுகூலம்</p> <p>துலாம் - தாமதம்</p><p>விருச்சிகம் - சுகம்</p><p>தனுசு - வரவு</p><p>மகரம் - பயணம்</p><p>கும்பம் - உண்மை</p><p>மீனம் - உழைப்பு</p> ]]></content:encoded></item><item><title>5 ஈரானிய எண்ணெய் கப்பல்கள் அழிக்கப்பட்டன - அமெரிக்க ராணுவம் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/us-military-says-it-destroyed-5-iranian-oil-tankers-after-missile-attacks-on-navy-warship</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-military-says-it-destroyed-5-iranian-oil-tankers-after-missile-attacks-on-navy-warship#comments</comments><guid isPermaLink="false">e46b9454-4a77-4930-9d23-6b316bfa5239</guid><pubDate>Wed, 09 Sep 2026 00:25:53 +0000</pubDate><atom:updated>2026-09-09T00:25:53.729Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஈரான்,Iran,அமெரிக்க ராணுவம்,US military</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/qnpi044i/ships.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Oil Tankers]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/qnpi044i/ships.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சமீபத்திய அமெரிக்கத் தாக்குதல்களை தொடர்ந்து, ஜோர்டானில் உள்ள <a href="https://www.maalaimalar.com/topic/us">அமெரிக்க</a> இலக்குகளை நோக்கி ஈரான் ஏவுகணைகளை ஏவியுள்ளதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p>கடந்த இரண்டு நாட்களில் ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படையினர் ஒரு அமெரிக்க போர்க்கப்பல் மீது நடத்திய இரண்டு தாக்குதல்களை தொடர்ந்து, ஐந்து <a href="https://www.maalaimalar.com/topic/Iran">ஈரான்</a> கச்சா எண்ணெய் கப்பல்களை அழித்ததாக அமெரிக்க ராணுவம் கூறியதற்கு பதிலடியாக இது சமீபத்திய நடவடிக்கையாகும்.</p><p>ஜோர்டான் விமானப்படைத் தளம் மீதான தாக்குதல்கள் குறித்து கேட்டபோது, அமெரிக்க மத்திய கட்டளை பிரிவு, இதுகுறித்து எந்த தகவலும் இல்லை என்று கூறியது.</p><h2>ஈரானிய கப்பல்கள் அழிப்பு:</h2><p>இந்த தாக்குதலில் அழிக்கப்பட்ட ஈரானிய கப்பல்கள், ஓமான் வளைகுடாவில் இருந்த கிவிக், சார்மினார், ஹொரைசன் 1 மற்றும் ரீஸ்கோ ஆகியவை என்று மத்திய கட்டளை பிரிவு கூறியது. ஹார்முஸ் நீரிணையில் உள்ள கார்க் தீவுக்கு அருகில் இருந்த டெரியா என்ற கப்பலையும் அமெரிக்க ராணுவம் அழித்தது.</p><p>தாக்குதல்களுக்கு முன்னர் ஐந்து கப்பல்களின் மாலுமிகளும் கப்பலை விட்டு வெளியேறும்படி கூறப்பட்டதாக மத்திய கட்டளை மையம் தெரிவித்தது.</p><h2>பதிலடி கொடுக்காமல் இருக்க முடியாது:</h2><p>ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படையினர் ஒரு அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் மற்றும் போர்க்கப்பலை தாக்க முயன்றதை தொடர்ந்து, அமெரிக்கபடைகள் மூன்று ஈரானிய எண்ணெய் கப்பல்களை அழித்த மூன்று நாட்களுக்கு பிறகு இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன.</p><p>ஈரானிய அரசு தொலைக்காட்சியும் அமெரிக்க தாக்குதல்களை பற்றி செய்தி வெளியிட்டது. பாரசீக வளைகுடாவில் உள்ள தெற்கு துறைமுகமான ஜஸ்க் மற்றும் கார்க் தீவுக்கு அருகில் குறைந்தது மூன்று ஈரானிய எண்ணெய் கப்பல்களை அமெரிக்க படைகள் தாக்கியதாக அது கூறியது. மாலுமிகள் வெளியேற்றப்பட்டதாகவும் அது தெரிவித்தது.</p><p>ஈரானின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்காமல் இருக்க அமெரிக்கா அனுமதிக்காது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கூறினார்.</p><p>"ஈரான் தொடர்ந்து அமெரிக்க கடற்படை கப்பல்களை தாக்க முயற்சிக்கிறது. ஒவ்வொரு முறையும் அவர்கள் அவ்வாறு செய்யும்போது அல்லது செய்ய முயற்சிக்கும்போது, அவர்கள் எண்ணெய் கப்பல்களை இழக்க நேரிடும். இன்றும் நீங்கள் அதையே மீண்டும் காண்பீர்கள் என்று நான் நினைக்கிறேன்," என்று கொலம்பியா பயணத்தின் போது ஈரானில் நடந்த சமீபத்திய தாக்குதல்கள் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது மார்கோ ரூபியோ கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>இலங்கை நெருக்கமான நட்பு நாடு, இந்தியா அதற்கு துணை நிற்கிறது - அமைச்சர் ராஜ்நாத் சிங்</title><link>https://www.maalaimalar.com/news/national/rajnath-singh-said-sri-lanka-a-close-friend-india-stands-by-it</link><comments>https://www.maalaimalar.com/news/national/rajnath-singh-said-sri-lanka-a-close-friend-india-stands-by-it#comments</comments><guid isPermaLink="false">6426cda7-6d03-4e85-a1cf-bbd676f774a1</guid><pubDate>Tue, 08 Sep 2026 23:47:26 +0000</pubDate><atom:updated>2026-09-08T23:47:26.541Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,இலங்கை,Sri Lanka,Rajnath Singh,ராஜ்நாத் சிங்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/cwurrsrm/Rajnath-Singh.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rajnath Singh ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/cwurrsrm/Rajnath-Singh.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவும் இலங்கையும் நெருங்கிய நண்பர்கள் என்றும், அந்தத் தீவு நாடு நெருக்கடியை எதிர்கொள்ளும் போதெல்லாம் இந்தியா எப்போதும் இலங்கையுடன் உறுதியாக நிற்கும் என்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/rajnath-singh">ராஜ்நாத் சிங்</a> கொழும்பில் தெரிவித்தார்.</p><p>இலங்கைக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர் ராஜ்நாத் சிங், கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு பிறகு பாதுகாப்பு மட்டத்திலான பேச்சுவார்த்தைகளுக்காக <a href="https://www.maalaimalar.com/topic/sri-lanka">இலங்கை</a> சென்ற முதல் இந்திய பாதுகாப்பு அமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 1988-இல் இதுபோன்ற பேச்சுவார்த்தைகளுக்காக இலங்கை சென்ற பாதுகாப்பு அமைச்சர் கே.சி. பந்த் ஆவார். </p><h2>உறுதியுடன் இருக்கிறோம்:</h2><p>"இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு, பகிரப்பட்ட வரலாறு, கலாச்சாரம் மற்றும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. நாங்கள் இன்பத்திலும் துன்பத்திலும் இலங்கையுடன் துணை நிற்போம், மேலும் இரு நாடுகளின் அமைதி, செழிப்பு மற்றும் வளர்ச்சிக்கு உறுதியுடன் இருக்கிறோம்," என்று ராஜ்நாத் சிங் கூறினார்.</p><p>இரு நாடுகளும் நெருங்கிய கலாச்சார மற்றும் நாகரிகப் பிணைப்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன என்றும், அவை இருதரப்பு உறவின் வளர்ச்சிக்கு ஒரு வலுவான அடித்தளத்தை வழங்கியுள்ளன என்றும் அவர் கூறினார். வலுவான பிராந்திய கூட்டணிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், "இங்கு வந்த பிறகு நான் ஒரு சொந்த உணர்வை அனுபவிக்கிறேன்," என்றார்.</p><p>இந்தியாவின் விரிவடைந்து வரும் உலகளாவிய செல்வாக்கையும் பொருளாதார வலிமையையும் அவர் எடுத்துரைத்ததோடு, புலம்பெயர்ந்த இந்தியர்கள் ஆற்றிய பணிகளையும் பாராட்டினார்.</p><p>கொழும்பு புறப்படுவதற்கு முன்பு, ராஜ்நாத் சிங் எக்ஸ் தளத்தில், "எங்களின் நீண்டகாலக் கூட்டாண்மை மற்றும் ஆழமான வரலாற்று, நாகரிக தொடர்புகளுக்கு அப்பால், 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' மற்றும் 'மகாசாகர்' ஆகிய முன்னெடுப்புகளின் கீழ் இலங்கை எங்களின் மிக முக்கியமான பங்காளிகளில் ஒன்றாகும்" என்று பதிவிட்டார்.</p><h2>இந்திய பொருளாதார வளர்ச்சி:</h2><p>வெளிநாடு வாழ் இந்தியர்களிடையே உரையாற்றிய ராஜ்நாத் சிங், இந்தியாவின் விரைவான பொருளாதார மாற்றத்தை எடுத்துரைத்து, உலகின் அதிவேகமாக வளரும் முக்கிய பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா திகழ்வதாகவும், உலகளாவிய வளர்ச்சிக்கு 16% க்கும் அதிகமாகப் பங்களிப்பதாகவும் கூறினார்.</p><p>2014-இல் 2 டிரில்லியன் டாலராக இருந்த இந்தியாவின் பொருளாதாரம், கடந்த பத்தாண்டுகளில் இரட்டிப்பாகி, 4 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தொழில்நுட்ப கோளாறால் 600-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து - பயணிகள் கடும் அவதி</title><link>https://www.maalaimalar.com/news/world/over-600-flights-cancelled-as-air-traffic-control-glitch-disrupts-uk-airports</link><comments>https://www.maalaimalar.com/news/world/over-600-flights-cancelled-as-air-traffic-control-glitch-disrupts-uk-airports#comments</comments><guid isPermaLink="false">a5fc3fe5-458f-436e-b262-f2927aa7f64d</guid><pubDate>Tue, 08 Sep 2026 20:48:32 +0000</pubDate><atom:updated>2026-09-08T20:48:32.065Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Flights Cancelled,விமானம் ரத்து,UK,பிரிட்டன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/i9y635b3/Flights-Grounded.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Flights Grounded]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/i9y635b3/Flights-Grounded.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world">பிரிட்டன்</a> வான்வழி போக்குவரத்துட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, நாடு முழுவதும் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக 600-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக, விமான பயணங்களை கண்காணிக்கும் வலைத்தளமான Flightradar24 தெரிவித்துள்ளது.</p><p>பிரிட்டனின் தேசிய வான்வழி போக்குவரத்து சேவை (NATS), இந்தப் பிரச்சினை அதன் விமான செயலாக்க அமைப்புடன் தொடர்புடையது என்று கூறியது. ஐக்கிய இராச்சியம் முழுவதும் உள்ள விமான நிலையங்களை பாதித்த இந்த பிரச்சினையை தொடர்ந்து, இயல்பு நிலையை மீட்டெடுக்க பொறியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.</p><p>பிரச்சனையை சரிசெய்யும் பணிகள் முழுமை பெறுவதாகவும், தங்கள் விமான அமைப்பு மீண்டு வரத் தொடங்கியுள்ளதாக NATS பின்னர் தெரிவித்தது.</p><h2>625 விமானங்கள் ரத்து:</h2><p>இங்கிலாந்து விமான நிலையங்களுக்கு வரும் அல்லது அங்கிருந்து புறப்படும் குறைந்தது 625 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக Flightradar24 தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட விமான நிலையங்களில் லண்டன் ஹீத்ரோவும் ஒன்றாகும், அதே நேரத்தில் பிரிட்டிஷ் ஏர்வேஸ், ஈஸிஜெட், கே.எல்.எம். மற்றும் லுஃப்தான்சா உள்ளிட்ட விமான நிறுவனங்களும் இடையூறுகளை பதிவு செய்துள்ளன.</p><p>தங்கள் விமானங்கள் ரத்து செய்யப்படுவதற்கு முன்பு, பல மணிநேரம் விமானத்திலேயே சிக்கி தவித்ததாக பல பயணிகள் சமூக வலைதளங்களில் தெரிவித்தனர். மற்றவர்கள், இந்த இடையூறின்போது விமான நிறுவனங்களிடம் இருந்து தகவல் தொடர்பு சரியாக இல்லை என்று புகார் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>நேபாளத்தில் நிலநடுக்கம்:  ரிக்டரில் 5.3 ஆக பதிவானதால் மக்கள் அதிர்ச்சி</title><link>https://www.maalaimalar.com/news/world/earthquake-measuring-53-magnitude-strikes-nepal</link><comments>https://www.maalaimalar.com/news/world/earthquake-measuring-53-magnitude-strikes-nepal#comments</comments><guid isPermaLink="false">d73263db-2a72-456b-a167-1270159b982a</guid><pubDate>Tue, 08 Sep 2026 19:59:00 +0000</pubDate><atom:updated>2026-09-08T19:59:00.986Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாளம்,nepal,Earthquake,நிலநடுக்கம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/02/25/9704530-eqke.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ File Pic: Earthquake Map]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/02/25/9704530-eqke.webp?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாளத்தின் வடமேற்குப் பகுதியில் உள்ள முஸ்தாங் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த <a href="https://www.maalaimalar.com/topic/earthquake">நிலநடுக்கம்</a> ரிக்டரில் 5.3-ஆக பதிவானது.</p><h2>நிலநடுக்கத்தின் மையம்:</h2><p>தேசிய நிலநடுக்கக் கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தகவலின்படி, காத்மாண்டுவில் இருந்து வடமேற்கே 375 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முஸ்தாங் மாவட்டத்தின் லோமந்தாங் பகுதியில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்தது. இந்த நிலநடுக்கம் இரவு 9.53 மணிக்கு ஏற்பட்டது.</p><p>நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. அண்டை மாவட்டங்களான மனாங், டோல்பா மற்றும் மியாக்டி ஆகிய இடங்களிலும் இதன் அதிர்வுகள் உணரப்பட்டன. வட-மத்திய நேபாளத்தில் திடீர் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து முஸ்தாங் மாவட்டம் சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.</p><h2>நேபாள வெள்ள பாதிப்பு:</h2><p>கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதியன்று நேபாள-திபெத் எல்லைக்கு அருகே ஏற்பட்ட பனி மற்றும் பாறை சரிவு காரணமாக திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் போதேகோஷி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வட மற்றும் மத்திய நேபாளம் முழுவதும் வீடுகள், வாகனங்கள், சாலைகள் மற்றும் பாலங்கள் அடித்து செல்லப்பட்டன; மேலும் நீர்மின் திட்டங்களும் சேதமடைந்தன.</p><p>நேற்று (செவ்வாய்க்கிழமை) நிலவரப்படி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,357 ஆக உயர்ந்தது; மேலும் 5,326-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை.</p><h2>பொது மக்களுக்கு எச்சரிக்கை:</h2><p>மற்றொரு நிகழ்வாக, கண்டகி மாகாணத்தின் பர்பத் மாவட்டத்தில் நிலச்சரிவு காரணமாக கிம்ருங் ஆற்றின் ஓட்டம் தடைபட்டுள்ளது. இதனால், ஆற்றின் கீழ் பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் காளிகண்டகி ஆற்றுடன் இணையும் பகுதி வரையிலான மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p>நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணிக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட வெள்ள முன்னறிவிப்பு பிரிவு, கிம்ருங் ஆற்றின் ஓட்டம் தடைபட்டுள்ளதால் வெள்ள அபாயம் உள்ளதாக தெரிவித்தது. பர்பத் மாவட்டத்தில் உள்ள கிம்ருங் ஆறு, மோடி ஆற்றின் துணை ஆறாகும்.</p><p>நயாபுல், பிரேதாந்தி மற்றும் கீழ்நிலப் பகுதிகளில் உள்ள அதனைச் சுற்றியுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அப்பிரிவு வலியுறுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வங்கதேச அதிபருடன் இந்திய தூதர் தினேஷ் திரிவேதி சந்திப்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/indian-high-commissioner-meets-bangladesh-president</link><comments>https://www.maalaimalar.com/news/world/indian-high-commissioner-meets-bangladesh-president#comments</comments><guid isPermaLink="false">e226bf2f-21e5-4c45-9aa2-ffc00d10c237</guid><pubDate>Tue, 08 Sep 2026 19:19:18 +0000</pubDate><atom:updated>2026-09-08T19:19:18.598Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Bangladesh,வங்கதேசம்,இந்திய தூதர்,Indian High Commissioner</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/kllc5yb9/High-Commissioner-greets-President.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ High Commissioner greets President]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/kllc5yb9/High-Commissioner-greets-President.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வங்கதேசத்திற்கான <a href="https://www.maalaimalar.com/news/national">இந்திய</a> தூதர் தினேஷ் திரிவேதி, அந்நாட்டின் அதிபர் மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீரை பங்களாபவனில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்திய தூதர் வங்கதேச அதிபரை சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.</p><p>இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் நிலைநிறுத்தவும், பேச்சுவார்த்தைகள் மூலம் <a href="https://www.maalaimalar.com/topic/bangladesh">வங்கதேசம்</a> மற்றும் இந்தியாவிற்கு இடையேயான தீர்க்கப்படாத பிரச்சினைகளை விரைவாக தீர்க்க வேண்டும் என்று சந்திப்பின் போது வங்கதேச ஜனாதிபதி வலியுறுத்தினார் என வங்கதேச சங்க்பாத் சன்ஸ்தா செய்தி வெளியிட்டுள்ளது.</p><h2>நம்பிக்கையும் நல்லுறவும் அதிகரிக்கும்:</h2><p>"இரு நாட்டு நலன் சார்ந்த விஷயங்கள் நியாயமான மற்றும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகள் மூலம் தீர்க்கப்பட்டால், இரு நாட்டு மக்களிடையே பரஸ்பர நம்பிக்கையும் நல்லுறவும் மேலும் அதிகரிக்கும்," என்று அவர் கூறினார்.</p><p>அந்த அறிக்கையின்படி, கங்கை மற்றும் டீஸ்டா உள்ளிட்ட பொது நதிகளின் நீரில் நியாயமான பங்கை பெறுவதை உறுதிசெய்ய, இந்தியா பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வங்கதேச அதிபர் வலியுறுத்தினார். இது தொடர்பாக அரசாங்கம் நேர்மறையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக திரிவேதி கூறியதாகவும் அந்த அறிக்கை மேலும் தெரிவித்தது.</p><p>வங்கதேசத்துக்கான இந்திய தூதர் அதிபருக்கு தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, வங்கதேச மக்களுக்கு அவர் ஆற்றிவரும் தொடர்ச்சியான சேவை வெற்றி பெற வாழ்த்தினார்.</p><h2>உறவுகளுக்கு சிறப்பு முக்கியத்துவம்:</h2><p>"இந்தக் கலந்துரையாடல், இந்தியாவுக்கும் வங்கதேசத்திற்கும் இடையே பகிரப்பட்ட வரலாறு, நெருங்கிய கலாச்சார பிணைப்புகள் மற்றும் மக்கள் இடையேயான உறவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டப்பட்ட ஆழமான பிணைப்புகளை அடிக்கோடிட்டுக் காட்டியது. இரு இறையாண்மை கொண்ட நாடுகளின் மக்களின் பரஸ்பர நலனுக்காக இருதரப்பு கூட்டாண்மையை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர்கள் வலியுறுத்தினர்," என்று இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><p>தனது மிக நெருங்கிய அண்டை நாடாகவும், ஒரு முக்கிய வர்த்தக மற்றும் மேம்பாட்டு பங்காளராகவும் உள்ள இந்தியாவுடனான உறவுகளுக்கு வங்கதேசம் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது என்று அதிபர் ஆலம்கீர் கூறினார்.</p><p>இறையாண்மை சமத்துவம், தேசிய நலன்கள் மற்றும் கண்ணியம், மக்களின் நலன் ஆகியவற்றை பேணிக்காக்கும் அதே வேளையில், இந்தியாவுடன் மரியாதைக்குரிய, தொலைநோக்குடைய, பரஸ்பர மரியாதை மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் ஒரு கூட்டாண்மையை உருவாக்குவதில் வங்கதேசம் ஆர்வமாக உள்ளது என்று அவர் கூறினார்.</p><p>இரு நாடுகளும் தொடர்ந்து இணைந்து செயல்படும் என இந்திய தூதர் நம்பிக்கை தெரிவித்ததோடு, தமது பொறுப்புகளை நிறைவேற்றுவதில் குடியரசு தலைவரின் ஒத்துழைப்பையும் கோரினார்.</p>]]></content:encoded></item><item><title>மகளிர் ஆசிய கோப்பை: ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தியது வங்கதேச மகளிர் அணி</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/womens-asia-cup-ban-women-beat-uae-w-by-34-runs</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/womens-asia-cup-ban-women-beat-uae-w-by-34-runs#comments</comments><guid isPermaLink="false">3d5a1f05-a291-4f6d-b0ab-71386f566802</guid><pubDate>Tue, 08 Sep 2026 18:23:32 +0000</pubDate><atom:updated>2026-09-08T18:23:32.178Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Womens Asia Cup,மகளிர் ஆசிய கோப்பை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/0667naw9/Ban-W-Win.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bangladesh Womens Win]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/0667naw9/Ban-W-Win.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>துபாயில் நடைபெற்று வரும் மகளிர் ஆசிய கோப்பை டி20 <a href="https://www.maalaimalar.com/sports/cricket">கிரிக்கெட்</a> தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேசம் மகளிர் அணி ஐக்கிய அரபு அமீரகத்தின் மகளிர் அணியை வீழ்த்தி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.</p><p>இன்று நடைபெற்ற க்ரூப் பி பிரிவு ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் மகளிர் அணிகள் களம் கண்டன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.</p> <h2>வங்கதேசம் சுமாரான தொடக்கம்:</h2><p>டாஸ் தோற்ற நிலையில், பேட்டிங் தொடங்கிய வங்கதேசம் மகளிர் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கனையான திலாரா அக்தெர் ரன் ஏதும் எடுக்காமல் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். இவருடன் களமிறங்கிய ஜூரியா ஃபெர்டோஸ் 16 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, சோபனா மொஸ்தரி 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.</p><p>ஒருபக்கம் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்த நிலையில், கேப்டன் நிகர் சுல்தானா மற்றும் ஷர்மின் அக்தெர் ஜோடி நிதானமாக ஆடி ரன் குவிப்பில் கவனம் செலுத்தியது. இந்த ஜோடி முறையே 23 மற்றும் 38 ரன்கள் எடுத்த நிலையில், தங்களது விக்கெட்டை பறிக்கொடுத்தனர். இவர்களை தொடர்ந்து களமிறங்கியவர்களில் நஹிதா அக்தெர் 26 பந்துகளை எதிர்கொண்டு 16 ரன்களை எடுத்தார்.</p><p>ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸ் முடிவில் வங்கதேசம் மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் வெறும் 103 ரன்களை மட்டுமே எடுத்தது. ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் சிறப்பாக பந்துவீசய சுரக்ஷா கோடீ 3 விக்கெட்டுகளையும், இந்துஜா நந்தகுமார் 2 விக்கெட்டுகளையும், அர்ச்சனா சுப்ரியா மற்றும் ஜனனி திருக்குமர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.</p><h2>வங்கதேசம் மகளிர் அணி வெற்றி:</h2><p>104 ரன்கள் எனும் எளிய இலக்கை துரத்திய ஐக்கிய அரபு அமீரகம் மகளிர் அணிக்கு தொடக்கம் கொடுத்த கேப்டன் இஷா ஓஸா 2 ரன்களும், தீர்த்தா சதிஷ் 11 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய சமைரா 8 ரன்களுக்கும், ரினிதா ரஜித் 5 ரன்களுக்கும் நடையை கட்டினர். </p><p>இவர்களை தொடர்ந்து ஆடிய ஹீனா தன் பங்கிற்கு 19 பந்துகளில் 18 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தர். </p><p>இதனால், ஐக்கிய அரபு அமீரகம் மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு வெறும் 69 ரன்களையே எடுத்தது. இதனால், வங்கதேசம் மகளிர் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. </p>]]></content:encoded></item><item><title>டெல்லியின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராகேஷ் மேத்தா தற்கொலை</title><link>https://www.maalaimalar.com/news/national/former-delhi-chief-secretary-rakesh-mehta-commits-suicide</link><comments>https://www.maalaimalar.com/news/national/former-delhi-chief-secretary-rakesh-mehta-commits-suicide#comments</comments><guid isPermaLink="false">8a8d3e9c-2ead-4579-ab75-0238951bc92e</guid><pubDate>Tue, 08 Sep 2026 17:07:41 +0000</pubDate><atom:updated>2026-09-08T17:07:41.671Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தற்கொலை,suicide,delhi,டெல்லி,Rakesh Mehta,ராகேஷ் மேத்தா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/zlfo3pkg/rakesh-mehta.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rakesh Mehta]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/zlfo3pkg/rakesh-mehta.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் ஆட்சிக்காலத்தில் பணியாற்றிய டெல்லியின் முன்னாள் தலைமை செயலாளர் ராகேஷ் மேத்தா, நொய்டாவில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். </p><p>1975-ஆம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரியான ராகேஷ் மேத்தா, தான் எடுத்த இந்த தீவிர முடிவுக்கு "மனநலம் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள்" தான் காரணம் என்று குறிப்பிட்டிருந்த தற்கொலை குறிப்பு ஒன்றை <a href="https://www.maalaimalar.com/news/national">நொய்டா</a> போலீஸார் கைப்பற்றினர். </p><h2>முக்கிய திட்டங்களில் ராகேஷ் மேத்தா பங்கு:</h2><p>செப்டம்பர் 6-ஆம் தேதி நொய்டாவின் செக்டார் 82-ல் உள்ள அவரது இல்லத்தில், அவர் மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாக அவர்கள் கூறினர்.</p><p>74 வயதான மேத்தா, தீட்சித்தின் பதவிக்காலத்தில் மூன்றாண்டுகளுக்கும் மேலாக டெல்லியின் தலைமை செயலாளராக பணியாற்றினார். இவரது பதவிக்காலத்தில் தான் 2010-இல் டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.</p><h2>டெல்லி மாநகராட்சி ஆணையராக ராகேஷ் மேத்தா:</h2><p>நகரின் முக்கிய போக்குவரத்து, மின்சாரம் மற்றும் குடிமை உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்தியதில் மேத்தாவுக்கு முக்கிய பங்கு இருந்தது.</p><p>டெல்லி அரசில் பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், டெல்லி மாநகராட்சியின் (MCD) ஆணையராகவும் பணியாற்றியதாக அவரது முன்னாள் சக ஊழியர்கள் தெரிவித்தனர். இவர் 2007-இல் தலைமை செயலாளராக பொறுப்பேற்று, 2010 நவம்பரில் ஓய்வு பெற்றார். திங்களன்று லோதி சாலை தகன மையத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 3 மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-3-district-collectors-included-14-ias-officers-transferred</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-3-district-collectors-included-14-ias-officers-transferred#comments</comments><guid isPermaLink="false">286c8267-d331-483e-8f1e-8542fe5a6ef3</guid><pubDate>Tue, 08 Sep 2026 15:48:57 +0000</pubDate><atom:updated>2026-09-08T15:48:57.670Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/y6tplyec/TNGovt001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக அரசு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/y6tplyec/TNGovt001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் த.வெ.க. தலைவர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் இன்று 3 மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.</p><p>பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக அப்துல் ரசாக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக நல்லசிவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்ட ஆட்சியராக சரண்யா அரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.</p><h2>முன்னாள் தலைமைச் செயலாளர் முருகானந்தம்</h2><p>முன்னாள் தலைமைச் செயலாளர் முருகானந்தம் டான்சி நிறுவனத்தின் தலைவராக நியமனம். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் செயலாளராக டி. மோகன் நியமனம். சென்னை மாநகராட்சி இணை ஆணையர் (சுகாதாரம்) ஸ்ரேயா சிங், தொழில் கல்வித்துறை கூடுதல் செயலாளராக நியமனம்.</p><p>சிப்காட் நிர்வாக இயக்குநராக வீர் பிரதாப் சிங், திருச்சி மாநகராட்சி ஆணையராக என். பொன்மணி நியமனம். வேலூர் மாநகராட்சி ஆணையராக கேத்தரின் சரண்யா நியமனம்.</p><p>சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநராக ஜெயசீலன் நியமனம். இன்னசென்ட் திவ்யா பள்ளிக் கல்வித்துறை செயலாளராக நியமனம்.</p>]]></content:encoded></item><item><title>“எல்லாவற்றையும் செய்துவிட்டு வீட்டுக்குப்போய் ட்வீட் போடுவது நீங்கள் இன்னும் மாண்புமிகு ஆகவில்லை என்பதையேக் காட்டுகிறது” - திமுக பரந்தாமன் பதிவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/going-home-to-post-a-tweet-after-doing-everything-else-shows-that-you-have-not-yet-become-honourable-posts-dmks-paranthaman</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/going-home-to-post-a-tweet-after-doing-everything-else-shows-that-you-have-not-yet-become-honourable-posts-dmks-paranthaman#comments</comments><guid isPermaLink="false">0b119d33-8c4a-4fed-8718-b48715b73491</guid><pubDate>Tue, 08 Sep 2026 15:32:37 +0000</pubDate><atom:updated>2026-09-08T15:32:37.097Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,பரந்தாமன்,Paranthaman</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/thzd4nge/New-Project-2026-09-08T183521.576.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “எல்லாவற்றையும் செய்துவிட்டு வீட்டுக்குப்போய் ட்வீட் போடுவது நீங்கள் இன்னும் மாண்புமிகு ஆகவில்லை என்பதையேக் காட்டுகிறது” - திமுக பரந்தாமன் பதிவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/thzd4nge/New-Project-2026-09-08T183521.576.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பதிலுரை அளித்த முதலமைச்சர் விஜய், <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/allegation-of-inappropriate-physical-conduct-dmk-lodges-complaint-against-chief-minister-vijay">முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை</a> கேலி செய்யும் வகையில் சைகை ஒன்றை செய்திருந்தார். </p><p>அவரின் இந்த செயலுக்கு பலதரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழ, அது தன்னுடைய எதேச்சயான செயல் எனவும், உள்நோக்கம் கொண்டது இல்லை என்றும் விளக்கமளித்திருந்தார். </p><p>இந்நிலையில் முதலமைச்சர் விஜய்யின் இந்த விளக்கம் தொடர்பாக திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் சமூக வலைதளப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;</p><p>“எல்லாவற்றையும் செய்துவிட்டு பின்பு வீட்டுக்குப்போய் ட்வீட் போடுவது இன்னும் நீங்கள் மாண்புமிகு ஆகவில்லை என்பதையேக் காட்டுகிறது.</p><p>முதல்முறையாக நீங்கள் செய்திருந்தால் உங்களின் இந்த விளக்கத்தை உண்மையென மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.</p><p>ஆனால் தமிழ்நாட்டு சட்டமன்ற வரலாற்றில் யாரும் இதுவரை செய்திராத கீழ்த் தரமான செயலை நீங்கள் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றப்பிறகு இது இரண்டாவது முறையாக செய்திருக்கிறீர்கள்.</p><p>எனவே வேண்டும் என்றே திட்டமிட்டு உள்நோக்கத்துடன் தியாக வரலாற்றுக்கு சொந்தமான தலைவர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்திருக்கிறீர்கள்.</p><p>உழைப்பைத்தந்து, தியாகத்தை தந்து இந்த முதலமைச்சர் பொறுப்புக்கு பல காலம் மக்கள் பணியாற்றிய பின் வந்திருந்தால் இதன் வலிமையை உணர்ந்திருப்பீர்கள்.</p><p>ஊதாரித்தனமான வசனங்கள் பேசி, வலைதள பொய் பரப்புரை மூலம் பதவிக்கு வந்ததால் முதலமைச்சர் பொறுப்பின் மாண்பும், சட்டமன்ற மாண்பும் இன்று தங்களால் கூனிக்குறுகியுள்ளது. இதனால் தமிழ்நாட்டு மக்கள் தலைகுனிந்துள்ளனர்.</p><p>காவல்துறை மானியத்தின் பதிலுரையில் பதிலே இல்லாத பதிலுரையை அளித்த வரலாற்றைப் படைத்த முதலமைச்சர் தாங்கள்.</p><p>எதிர்காலத்தில் சட்டமன்ற நடவடிக்கைகளை அறிந்துக்கொள்ள குறிப்புகளை படிக்கயிருக்கும் அடுத்த தலைமுறையினருக்கு நீங்கள் பதில் அளிக்கத்தெரியாத பொம்மை முதலமைச்சர் என உங்களை நீங்களே பதிவிட்டுவிட்டீர்கள்.</p><p>எனவே பழிப்பதற்கும், திமுகவை குற்றம் சுமத்துவதற்கும் நேரத்தை வீணாக்காமல் மாண்புமிகு முதலமைச்சர் என்னும் உயரிய பொறுப்புணர்ந்து பணியாற்றுங்கள்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.  </p>]]></content:encoded></item><item><title>தொடரின் பாதியில் 7 வீரர்கள் அதிரடி நீக்கம்: பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் சொல்வது என்ன?</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/babar-azam-admission-makes-pakistan-cricket-row-over-7-mid-series-sacking</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/babar-azam-admission-makes-pakistan-cricket-row-over-7-mid-series-sacking#comments</comments><guid isPermaLink="false">96319d2c-c957-44e8-8659-ce93e57f951d</guid><pubDate>Tue, 08 Sep 2026 15:11:25 +0000</pubDate><atom:updated>2026-09-08T15:11:25.005Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>babar azam,பாபர் அசாம்,ENG vs PAK</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/qug7fwut/BaarAzam001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Babar Azam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/qug7fwut/BaarAzam001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இங்கிலாந்து- பாகிஸ்தான் இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது. இதனால் பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான், இமாம்-உல்-ஹக் உள்ளிட்ட ஏழு வீரர்கள் அதிரடியாக நீக்கப்பட்டனர்.</p><p>அத்துடன் தலைமை பயிற்சியாளர் சர்பராஸ் அகமது மற்றும் பந்து வீச்சு பயிற்சியாளர் உமர் குல் ஆகியோரை உடனடியாக நாடு திரும்ப பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சம்மன் அனுப்பியுள்ளது.</p><p>இந்த நிலையில் தொடர் நடந்து கொண்டிருக்கும் போதே, ஏழு வீரர்கள் நீக்கப்பட்டது குறித்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமிடம் கேள்வி எழுப்பப்பட்டது.</p><h2>இதற்கு பாபர் அசாம் கூறியதாவது:-</h2><p>என்னிடம் இது குறித்து கலந்தாலோசிக்கப்படவில்லை. இது எனக்கும் ஒரு புதிய தகவலாகவே இருந்தது. இவையெல்லாம் பற்றி எனக்கு பின்னர்தான் தெரியவந்தது. முடிவுகளை எடுத்தது பிசிபி (PCB) தான், எனவே அவர்களால் இதை உங்களுக்கு இன்னும் சிறப்பாக விளக்க முடியும்.</p><p>இவ்வாறு பாபர் அசாம் கூறினார்.</p><h2>பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு</h2><p>பாபர் அசாமின் கூற்று உண்மையாக இருந்தால், பிசிபி (PCB) ஒருதலைப்பட்சமான முடிவை எடுத்திருக்கிறது என்று அர்த்தம். மே மாதத்தில் ஷான் மசூத் நீக்கப்பட்ட பிறகு, டெஸ்ட் கேப்டனாக பாபர் அசாம் மேற்கொண்ட இரண்டாவது பதவிக்காலத்திலும் பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் கிரிக்கெட் செயல்பாடுகளில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரை பாபர் 1-1 என சமன் செய்தார். ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில், அந்த அணி 2-0 என்ற கணக்கில் யாராலும் முறியடிக்க முடியாத முன்னிலையைப் பெற்றுள்ளது. வெளிநாடுகளில் விளையாடிய கடந்த 11 டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் 10-ல் தோல்வியடைந்துள்ளது.</p><h2>இங்கிலாந்து தொடர்</h2><p>லீட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் விரல் காயத்தால் பாபர் அசாம் பங்கேற்க முடியவில்லை. அவருக்குப் பதிலாக ஆகா அணியை வழி நடத்தினார். ஆனால் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.</p><p>இந்தத் தொடரின் நான்கு இன்னிங்ஸ்களிலும் பாகிஸ்தான் அணியால் 200 ரன்கள் என்ற இலக்கை கூட எட்ட முடியவில்லை. லீட்ஸில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 103 ரன்கள் வித்தியாசத்திலும், லார்ட்ஸில் 194 ரன்கள் வித்தியாசத்திலும் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது.</p>]]></content:encoded></item><item><title>‘மொத ராத்திரி’ படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டிய நடிகர் தனுஷ்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-dhanush-personally-invited-and-appreciated-the-director-of-modha-rathiri</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-dhanush-personally-invited-and-appreciated-the-director-of-modha-rathiri#comments</comments><guid isPermaLink="false">24312b37-9b22-435f-8507-05d3901a4f78</guid><pubDate>Tue, 08 Sep 2026 14:48:21 +0000</pubDate><atom:updated>2026-09-08T14:48:21.545Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>நடிகர் தனுஷ்,actor Dhanush,ரிஷிகாந்த்,மொத ராத்திரி,Rishikanth</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/scopcksk/New-Project-2026-09-08T201716.207.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘மொத ராத்திரி’ படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டிய நடிகர் தனுஷ்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/scopcksk/New-Project-2026-09-08T201716.207.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி எழுத்து மற்றும் இயக்கத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்​தன், ஏ.வெங்​கடேஷ், பானுப்​பிரியா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியானப் படம் <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-silambarasan-praises-modha-rathiri-movie">மொத ராத்திரி</a>. </p><p>மைத்ரி மூவி மேக்​கர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார். ஆக.21ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் தற்போதுவரை நல்ல வரவேற்பை பெற்று ஓடிவருகிறது.</p><p>விருப்பமே இல்லாத இருவர் ஒரு திருமண பந்தத்தில் இணைவதும், திருமண நாளன்று இரவு நடக்கும் நிகழ்வுகளே ‘மொத ராத்திரி’. </p><p>இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் ராஜா கருப்பசாமியை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார் நடிகர் தனுஷ். மேலும் படம் தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்.,</p><p>“மொத ராத்திரி மனதிற்கு இதமான ஒரு திரைப்படம். முதன்முறையாகப் பணியாற்றிய ஒரு குழுவினரின் இந்த அற்புதமான முயற்சியைப் பாராட்டியே ஆக வேண்டும்.</p><p>தயவுசெய்து உங்கள் குடும்பத்தினருடன் திரையரங்குகளில் இப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்!” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>மீண்டும் ப்ளூ கலருக்கு மாறிய இந்திய ஹாக்கி அணியின் ஜெர்சி..!</title><link>https://www.maalaimalar.com/sports/indian-hockey-teams-return-to-traditional-blue-kit-for-asian-games-after-saffron-controversy</link><comments>https://www.maalaimalar.com/sports/indian-hockey-teams-return-to-traditional-blue-kit-for-asian-games-after-saffron-controversy#comments</comments><guid isPermaLink="false">d8971664-dcce-4924-a4a6-0f02be44a47e</guid><pubDate>Tue, 08 Sep 2026 14:27:10 +0000</pubDate><atom:updated>2026-09-08T14:27:10.970Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Hockey India,ஹாக்கி இந்தியா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/6oxvrlrm/HockeyIndia001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஹாக்கி இந்தியா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/6oxvrlrm/HockeyIndia001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் நாடுகளில் சமீபத்தில் உலக கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்றது. பொதுவாக இந்திய ஹாக்கி அணிகள் பாரம்பரியமான ப்ளூ கலர் ஜெர்சி அணிந்து விளையாடுவார்கள்.</p><p>ஆனால், உலக கோப்பையில் காவி கலர் (Orange) ஜெர்சி அணிந்து விளையாடினர். இது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு விளையாட்டிலும் காவியை புகுத்தியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது.</p><p>அத்துடன் ஹாக்கி இந்தியாவில் உள்ள நிர்வாகிகள் மற்றும் குழுவின் ஒப்புதல் இன்றி செயல்படுத்தப்பட்டதாக என கடுமையாக கேள்வி எழுப்பப்பட்டது.</p><p>இதற்கு ஹாக்கி இந்தியாவின் தலைவர் திலிப் திர்கே பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>இந்திய ஒலிம்பிக் சங்கம் (IOA) அணியின் சீருடை நிறங்கள் குறித்து எங்களுக்கு விருப்பத் தேர்வுகளை வழங்கியிருந்தது. அதன்படி, இந்திய அணியின் சீருடைக்கு நீல நிறத்தை ஹாக்கி இந்தியா (Hockey India) முதல் தேர்வாக தேர்ந்தெடுத்தது. ஆரஞ்சு நிறம் இரண்டாவது தேர்வாக இருக்கும்.</p><h2>ஆசிய போட்டி</h2><p>உலகக் கோப்பைக்கு முன்பே, ஆரஞ்சு நிற ஜெர்சி நிரந்தரமானது அல்ல என்றும், எதிர்காலத்தில் அது மாற்றப்படலாம் என்றும் நான் கூறியிருந்தேன். இப்போது, ​​ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக மீண்டும் நீல நிறம் கொண்டுவரப்பட்டுள்ளது. அணி நீல நிற ஜெர்சியில் விளையாடும்.</p><p>ஆசிய போட்டி இந்திய அணிக்கு முக்கியமான தொடராகும். 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதியை உறுதிப்படுத்த முக்கியமானதாக இருக்கும்.</p>]]></content:encoded></item><item><title>தவெக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் - இடதுசாரிகள் புறக்கணிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-alliance-parties-meeting-left-parties-boycott</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-alliance-parties-meeting-left-parties-boycott#comments</comments><guid isPermaLink="false">5ad41596-1a77-4273-96c2-cd0df9ba9bd0</guid><pubDate>Tue, 08 Sep 2026 13:53:25 +0000</pubDate><atom:updated>2026-09-08T13:53:25.561Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,சிபிஐ,CPIM,CPI,ஆலோசனைக் கூட்டம்,Consultative Meeting,tvk,சிபிஎம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/y7nypqwq/New-Project-2026-09-08T192255.158.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தவெக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் - இடதுசாரிகள் புறக்கணிப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/y7nypqwq/New-Project-2026-09-08T192255.158.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என இடதுசாரி கட்சிகள் அறிவித்துள்ளன.</p><p>முதலமைச்சர் விஜய் தலைமையில் நாளை (செப்.9) நடைபெறவுள்ள தவெக கூட்டணிக் கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அமைச்சர்கள் நேரில் சென்று அழைப்பு விடுத்திருந்தனர். </p><p>எனினும், இக்கூட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புறக்கணிப்பதாக கே. பாலகிருஷ்ணன் மற்றும் பெ. சண்முகம் ஆகியோர் உறுதிப்படுத்தினர். அதனைத்தொடர்ந்து தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் பங்கேற்கவில்லை என மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். </p><p>ஆளுநர் ஆட்சி அமையக்கூடாது என்பதற்காகவே வெளியில் இருந்து ஆதரவு அளித்ததாகவும், அமைச்சரவையிலோ அல்லது அவர்களது கூட்டணியிலோ தாங்கள் இல்லை என்றும் தெளிவுப்படுத்தியுள்ளனர். </p><h2>முந்தைய கூட்டமும் புறக்கணிப்பு</h2><p>கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற தவெக-வின் முதலாவது ஆலோசனைக் கூட்டத்தையும் இடதுசாரிகள் புறக்கணித்திருந்தனர். </p><p>இதன் மூலம், தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்தாலும், அக்கட்சியின் அதிகாரப்பூர்வ கூட்டணி சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்க போவதில்லை என்பதில் இடதுசாரிகள் உறுதியாக இருப்பது மீண்டும் தெளிவாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>துலீப் டிராபி இறுதிப்போட்டி: 3ம் நாள் முடிவில் தெற்கு மண்டல அணி 242/6</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/south-zone-242-for-6-wickets-in-end-of-3rd-day-against-east-zone-in-duleep-trophy-final</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/south-zone-242-for-6-wickets-in-end-of-3rd-day-against-east-zone-in-duleep-trophy-final#comments</comments><guid isPermaLink="false">1fbfe24f-5bc6-438e-8585-c87d740732e9</guid><pubDate>Tue, 08 Sep 2026 13:24:57 +0000</pubDate><atom:updated>2026-09-08T13:24:57.297Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>துலீப் டிராபி,Duleep Trophy,south zone,East Zone,கிழக்கு மண்டலம்,தெற்கு மண்டலம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/pyslrt60/padikkal.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ padikkal]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/pyslrt60/padikkal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>துலீப் டிராபி இறுதிப்போட்டியின் மூன்றாவது நாளில் தெற்கு மண்டல அணி 6 விக்கெட்டுக்கு 242 ரன்கள் எடுத்துள்ளது.</strong></em></p><p>துலீப் டிராபி இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை தொடங்கியது. இதில் கிழக்கு மண்டலம், தெற்கு மண்டலம் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற கிழக்கு மண்டலம் அணி பேட்டிங் தேர்வு செய்தது.</p><h2>இஷான் கிஷான் இரட்டை சதம்</h2><p>அதன்படி, முதலில் பேட் செய்த கிழக்கு மண்டலம் அணி முதல் இன்னிங்சில் 708 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. கேப்டன் இஷான் கிஷன் பொறுப்புடன் ஆடி இரட்டை சதம் கடந்தார். அவர் 270 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.</p><h2>குமார் குஷாக்ரா சதம்</h2><p>குமார் குஷாக்ரா சதமடித்து 101 ரன்னில் வெளியேறினார். ஷிகர் மோகன் 85 ரன்னும், அபிமன்யு ஈஸ்வரன் 75 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.</p><p>தெற்கு மண்டல அணி சார்பில் திரிபுரன விஜய் 4 விக்கெட்டும், சமா மிலிந்த், ஷ்ரேயாஸ் கோபால் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p>இதையடுத்து, தெற்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தேவ்தத் படிக்கல் சிறப்பாக ஆடி அரை சதம் கடந்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. கேப்டன் திலக் வர்மா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து ஆடி வருகிறார்.</p><h2>திலக் வர்மா அரை சதம்</h2><p>இறுதியில், மூன்றாம் நாள் முடிவில் தெற்கு மண்டல அணி 6 விக்கெட்டுக்கு 242 ரன்கள் எடுத்துள்ளது. திலக் வர்மா 56 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.</p><p>தெற்கு மண்டல அணி இன்னும் 466 ரன்கள் பின்தங்கி யுள்ளது. இன்னும் 2 நாள் மீதமுள்ள நிலையில் கிழக்கு மண்டல அணியே வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.</p><p>கிழக்கு மண்டல அணி சார்பில் ஷமி, முகேஷ் குமார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.</p>]]></content:encoded></item><item><title>உடல்கேலி செய்கை - முதலமைச்சர் விஜய்மீது திமுக புகார்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/allegation-of-inappropriate-physical-conduct-dmk-lodges-complaint-against-chief-minister-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/allegation-of-inappropriate-physical-conduct-dmk-lodges-complaint-against-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">d5a5f480-2f5c-4d1a-b82f-2786544facdc</guid><pubDate>Tue, 08 Sep 2026 13:11:33 +0000</pubDate><atom:updated>2026-09-08T13:11:33.314Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,மு.க.ஸ்டாலின்,M.k. stalin,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/b0xjtixd/New-Project-2026-09-08T183521.576.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உடல்கேலி செய்கை - முதலமைச்சர் விஜய்மீது திமுக புகார்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/b0xjtixd/New-Project-2026-09-08T183521.576.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p> தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று பேசிய முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேலி செய்யும் வகையில், மிசா சட்டத்தை குறிப்பிட்டு பேசும்போது சைகை ஒன்றை செய்தார்.</p><p>இதற்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழு, தன்னுடைய அந்த செய்கை திட்டமிட்ட உடல்மொழி இல்லை என்றும், தான் பேசும்போது எதார்த்தமாக வெளிப்பட்டது என்றும், யாரையும் புண்படுத்தும் செயல் இல்லை என்றும் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-speech-after-anna-mgr-and-ntr-it-is-vijay">முதலமைச்சர் விஜய்</a> கண்டனம் தெரிவித்துள்ளார். </p><p>இந்நிலையில் முதலமைச்சரின் இந்த செயல்தொடர்பாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் அவை உரிமை மீறல் புகார் மனுவை அளித்துள்ளார் திமுக துணைக் கொறடா கோவி.செழியன்.</p><p>சட்டமன்றத்தில் இல்லாத முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முரசொலி மாறன் குறித்து பேசியது, சர்க்காரியா ஆணையம், நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றி பேசியது ஆகியவை சட்டப்பேரவை விதிகளுக்கு எதிரானது. எனவே, முதலமைச்சர் விஜய்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என உரிமை மீறல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>மேகமலை விசாரணை செப்.22 -க்கு ஒத்திவைப்பு - உச்ச நீதிமன்றம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/megamalai-hill-encroachment-case-hearing-postponed-to-sept-22-supreme-court</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/megamalai-hill-encroachment-case-hearing-postponed-to-sept-22-supreme-court#comments</comments><guid isPermaLink="false">99fdafc3-6a75-4129-be8f-9640a85c5c40</guid><pubDate>Tue, 08 Sep 2026 12:54:49 +0000</pubDate><atom:updated>2026-09-08T12:54:49.928Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,உச்சநீதிமன்றம் உத்தரவு,உச்சநீதிமன்றம்,Megamalai Issue,மேகமலை விவகாரம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/mszy340t/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Megamalai issue]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/mszy340t/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>ஒத்திவைப்பு </h2><p>மேகமலை புலிகள் சரணாலயப் பகுதியில் ஆக்கிரமித்துள்ள பகுதிகளை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்ற விவகாரத்தின் மீதான விசாரணையானது <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/fifteen-new-judges-take-oath-at-madras-high-court">நீதிபதிகள்</a> விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்றத்திற்கு உதவ நியமிக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் வேறோரு அமர்வில் ஆஜரான நிலையில், இந்த வழக்கை தள்ளி வைக்க வழக்கறிஞர் விடுத்த கோரிக்கையை ஏற்று  விசாரணையை செப் 22 க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. </p><h2>மேகமலை விவகாரம்</h2><p>மேகமலை புலிகள் சரணாலயப் பகுதியில் ஆக்கிரமித்துள்ள பகுதிகளை உடனடியாக காலி செய்ய வேண்டும், இலவம் பஞ்சு தோட்டங்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட வேண்டும், அங்கு யாருக்கும் பட்டா வழங்க கூடாது என்றும், மின் மற்றும் நீர் இணைப்புகளை முழுமையாக துண்டிக்க வேண்டும் என்றும் ஏற்கனவே உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது. ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவில்லையென்றால் ராணுவத்தை அனுப்புவோம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. </p><h2>அரசு தரப்பு </h2><p>இந்த விவகாரத்தில், உச்சநீதிமன்றம் அறிவித்ததை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், தமிழ்நாடு அரசுக்கு சிறிது கால அவகாசம் தேவை என்று தனது வாதத்தை அரசு முன்வைத்திருந்தது. இதற்கு <a href="https://www.maalaimalar.com/news/national/retirement-age-of-judges-raised-to-62">உச்சநீதிமன்றம், </a>ஆக்கிரமிப்பாளர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறி உத்தரவிட்டிருந்தது.</p><h2>போராட்டம் </h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/meghamalai-issue-members-debate-the-calling-attention-motion">மேகமலை</a> புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள கிராமங்களில் 4600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் மேகமலை ஆக்கிரமிப்புக்களை ஆகஸ்ட் 28ம் தேதிக்குள் அகற்ற உச்சநீதிமன்றம் கெடு விதித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் விசாரணையானது செப் 22 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு: தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-budget-session-ends-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-budget-session-ends-today#comments</comments><guid isPermaLink="false">e8b49f67-7e6f-4a87-bc72-e03e9e014388</guid><pubDate>Tue, 08 Sep 2026 12:47:47 +0000</pubDate><atom:updated>2026-09-08T12:47:47.650Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,Budget session,TN assembly,JCD Prabhakar,ஜேசிடி பிரபாகர்,பட்ஜெட் கூட்டத்தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/tarx8rnb/JCD.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ jcd prabhakar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/tarx8rnb/JCD.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தமிழக சட்டசபையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.</strong></em></p><p>தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. பட்ஜெட் தாக்கல் நிறைவடைந்து மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.</p><p>சுமார் ஒரு மாத காலமாக நடைபெற்ற கூட்டத்தொடரில் பல்வேறு சுவாரசிய சம்பவங்கள் நடந்தன.</p><h2>தனித்தீர்மானங்கள்</h2><p>சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முதல்வர் விஜய் கொண்டுவந்த தனித் தீர்மானம் உள்பட பல்வேறு தனித்தீர்மானங்கள் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன.</p><p>முதலமைச்சர் விஜய் சக அமைச்சர்களுடன் இருக்கையில் அமர்ந்து சட்டசபை விவாதத்தை கவனித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.</p><h2>திமுகவினர் குண்டுக்கட்டாக வெளியேற்றம்</h2><p>இன்று காலை அமளியில் ஈடுபட்ட தி.மு.க. உறுப்பினர்களை வெளியேற்றும்படி சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் உத்தரவிட்டார். இதையடுத்து அவைக் காவலர்கள் தி.மு.க. உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்றினர்.</p><h2>தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு</h2><p>இந்நிலையில், ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு அடைந்தது. இதையடுத்து, சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தமிழக சட்டசபையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>பண மோசடி வழக்கு: பினராயி விஜயன், அவரது மகள் மீது FIR பதிவு செய்ய கேரளம் டிஜபி-க்கு ED கடிதம்</title><link>https://www.maalaimalar.com/news/national/cmrl-case-ed-writes-to-keralam-dgp-seeking-fir-against-ex-cm-vijayan-daughter-and-son-in-law</link><comments>https://www.maalaimalar.com/news/national/cmrl-case-ed-writes-to-keralam-dgp-seeking-fir-against-ex-cm-vijayan-daughter-and-son-in-law#comments</comments><guid isPermaLink="false">f5ac964d-deb9-47c3-b3e8-5f09e6175b88</guid><pubDate>Tue, 08 Sep 2026 12:40:13 +0000</pubDate><atom:updated>2026-09-08T12:40:13.026Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பினராயி விஜயன்,Pinarayi Vijayan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/bnf0svei/Pinarayivijayan001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வீணா- பினராயி விஜயன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/bnf0svei/Pinarayivijayan001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன். இவரது மகள் வீணா. இவரது ஆட்சிக் காலத்தில் கேரளாவைச் சேர்ந்த சுரங்க நிறுவனமான கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூடைல் லிமிடெட் (CMRL), தகவல் தொழில்நுட்ப ஆலோசனை சேவைகள் என்ற பெயரில் வீணாவின் நிறுவனமான எக்ஸாலஜிக் சொல்யூஷன்ஸ் (Exalogic Solutions) நிறுவனத்திற்கு 2.78 கோடி ரூபாய் மதிப்பிலான முறையற்ற பணப் பரிமாற்றங்களை செய்ததாக அமலாக்கத் துறை (ED) குற்றம் சாட்டியுள்ளது.</p><h2>FIR பதிவு செய்ய டிஜிபிக்கு கடிதம்</h2><p>வீணாவின் நிறுவனம், போலியான பண பரிமாற்றங்களை மேற்கொள்வதற்காக பயன்படுத்தப்பட்ட ஒரு கார்ப்பரேட் கருவி (corporate vehicle) என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.</p><p>இந்த நிலையில் விசாரணை அடிப்படையில் பணமோசடி ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. இதனால் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன், அவரது மகள் வீணா, மருமகன் முகமது ரியாஸ் உள்பட 13 பேர் மீது FIR பதிவு செய்ய வேண்டும் என கேரளம் DGP-க்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது.</p><p>கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூடைல் லிமிடெட் நிறுவனத்திற்கு தகவல் தொழில்நுட்ப ஆலோசனை சேவைகள் வழங்கியது எக்ஸாலஜிக் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனம். இதற்காக CMRL நிறுவனத்தில் இருந்து 2.78 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. எக்ஸாலஜிக் சொல்யூஷன்ஸ் நிறுவனம் (தற்போது இல்லை) பினராயி விஜயன் மகள் வீணா தொடங்கியது. அரசு பணத்தை முறைகேடாக பெறுவதற்காக இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் மூலம் பெறப்பட்ட பணம், முறைகேடாக துபாய்க்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.</p><p>இது தொடர்பாக அமலாக்கத்துறை பல இடங்களில் சோதனை நடத்தியது. அப்போது பண மோசடிக்கான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்தது. அதேவேளையில், தங்கள் கைகள் சுத்தமானவை என்று கேரளம் முதல்வர் பினராயி விஜய் தெரிவித்திருந்தார்.</p><p>FIR பதிவு செய்ய அமலாக்கத்துறை DGP-க்கு கடிதம் எழுதியுள்ள நிலையில், "எங்கள் தரப்பில் எந்த தவறும் நடக்கவில்லை. எந்த வகையான விசாரணையையும் நடத்தலாம் என்று சிபிஐ(எம்) தலைவர் பி.ஏ. முகமது ரியாஸ் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டது: முதலமைச்சர் விஜய் விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-explain-body-languge-is-certain-action-not-planned</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-explain-body-languge-is-certain-action-not-planned#comments</comments><guid isPermaLink="false">da534a84-44fb-4e21-83b6-769ad170c740</guid><pubDate>Tue, 08 Sep 2026 12:20:29 +0000</pubDate><atom:updated>2026-09-08T12:20:29.822Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,Body language,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,உடல்மொழி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/u0i0z3sd/cm-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ cm vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/u0i0z3sd/cm-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மானிய கோரிக்கையின்போது என் பதிலுரையின் இடையே எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டது என முதலமைச்சர் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.</strong></em></p><p>தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று காவல்துறை மானிய கோரிக்கையின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்கினார். ஆனால் அந்த பதிலுரையில் கேள்விகளுக்கான பதில் இடம்பெறாமல், முழுக்க முழுக்க திமுக மீதான விமர்சனங்களே இருந்தன.</p><p>மிசா சட்டத்தில் கைது மற்றும் சர்க்காரியா கமிஷன் அறிக்கையை குறிப்பிட்டு முதலமைச்சர் விஜய் ஆவேசமாக பேசினார். </p><h2>தலைவர்கள் கண்டனம்</h2><p>உருவக் கேலி செய்யும் விதமாக பேசுவது யாராக இருந்தாலும் கண்டனத்திற்கு உரியது. அதை முதலமைச்சரே செய்திருப்பது பொறுப்பற்ற செயலாகும். சட்டமன்றத்தை மக்கள் நலனுக்கு எந்த வகையிலும் எள்ளளவுக்கு கூட உதவாத தனிமனித தாக்குதல்களுக்கான இடமாகவோ அல்லது தங்கள் தலைவரை பாராட்டி பேசும் இடமாகவோ மாற்றுவது முற்றிலும் அறமற்ற செயலாகும் என கம்யூனிஸ்ட் கட்சி உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.</p><h2>தன்னிச்சையாக வெளிப்பட்டது</h2><p>இந்நிலையில், மானிய கோரிக்கையின் போது என்னுடைய பதிலுரையின் இடையே எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டது: என முதலமைச்சர் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள செய்தியில் கூறியுள்ளதாவது:</p><p>சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பிரதமர் மோடி பங்கேற்கும் விழாவில் போலி அடையாள அட்டை, துப்பாக்கியுடன் வந்த வாலிபர் கைது!</title><link>https://www.maalaimalar.com/news/national/fake-id-gun-youth-arrested-at-pm-modi-event</link><comments>https://www.maalaimalar.com/news/national/fake-id-gun-youth-arrested-at-pm-modi-event#comments</comments><guid isPermaLink="false">663fc79d-cca8-43b9-8341-f6abd8c91605</guid><pubDate>Tue, 08 Sep 2026 12:07:21 +0000</pubDate><atom:updated>2026-09-08T12:07:21.644Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,Prime Minister Modi,mumbai,பிரதமர் மோடி.,Bandra Kurla,மகாராஷ்டிர மாநிலம்,மும்பை பாந்த்ரா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/y4sbyvs8/modi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Prime Minister Modi  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/y4sbyvs8/modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தி, துப்பாக்கியுடன் நுழைய முயன்றது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.</p><p>மகாராஷ்டிர மாநிலம் மும்பை பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள <a href="https://www.maalaimalar.com/news/national/people-of-manipur-suffering-both-within-and-outside-state-under-modi-sarkar-kharge">நீதா முகேஷ் அம்பானி</a> கலாச்சார மையத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பிரதமர் வருகையை முன்னிட்டு அந்தப் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பும், தீவிரக் கண்காணிப்பும் போடப்பட்டிருந்தது.</p><h2>போ<strong>லி அடையாள அட்</strong>டை</h2><p>நிகழ்ச்சி வளாகத்தின் நுழைவுப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிரச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, 24 வயதான ரோஹன் பாரேக் என்ற இளைஞர் உள்ளே செல்ல முயன்றார். அவர் தன்னை 'பிரதமர் அலுவலக அதிகாரி' என அறிமுகப்படுத்திக் கொண்டு அடையாள அட்டையைக் காண்பித்துள்ளார். ஆனால், சந்தேகமடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரது அடையாள அட்டையைத் தீவிரமாகப் பரிசோதித்தபோது, அது முற்றிலும் போலி என்பது தெரியவந்தது.</p><h2>துப்பாக்கி<strong>யுடன் சிக்கிய</strong> பாதுகாவலர்</h2><p>ரோஹன் பாரேக் தனியாக வரவில்லை; அவருடன் ஒரு தனியார் பாதுகாவலரும் வந்திருந்தார். சோதனையின் போது அந்தப் பாதுகாவலரிடமிருந்து ஒரு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, இருவரையும் உடனடியாகக் கைது செய்த காவல்துறையினர், அவர்களை பாந்த்ரா குர்லா வளாக காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.</p><h2>போலீசார் தீ<strong>விர விசார</strong>ணை</h2><p>பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தி, துப்பாக்கியுடன் நுழைய முயன்றதன் பின்னணியில் என்ன திட்டம் இருந்தது என்பது குறித்து மும்பை குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>15 ஆண்டுகள் பேத்தியை வளர்த்ததற்கு ரூ.45 லட்சம் கொடு - சொந்த மகன் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சீனத் தாய்!</title><link>https://www.maalaimalar.com/news/world/15-years-raising-granddaughter-45-lakh-rupees-demand</link><comments>https://www.maalaimalar.com/news/world/15-years-raising-granddaughter-45-lakh-rupees-demand#comments</comments><guid isPermaLink="false">4c5a841a-47a9-417f-9de0-a12bbc3c252f</guid><pubDate>Tue, 08 Sep 2026 12:07:07 +0000</pubDate><atom:updated>2026-09-08T12:07:07.809Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>China,சீனா,குழந்தை பராமரிப்பு,Child Care,Grandparenting Fees,Shanghai Court,Unpaid Labour,Parental Responsibility</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/2ugp2fd0/Grand-parenting-Fees" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Grand parenting Fees  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/2ugp2fd0/Grand-parenting-Fees?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குடும்ப உறவுகளுக்கும், கூட்டுக்குடும்பப் பாரம்பரியத்திற்கும் பெயர் போன ஆசியக் கலாச்சாரத்தில், ஒரு வயதான தாய் தனது பேத்தியை வளர்த்துக் கொடுத்ததற்காகத் தன் சொந்த மகனிடமே பராமரிப்புக் கட்டணம் கேட்டு நீதிமன்றப் படிக்கட்டுகளை ஏறியுள்ள வினோத சம்பவம் சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>இந்த விவகாரம், "தாத்தா-பாட்டிகள் பேரக் குழந்தைகளை வளர்ப்பது குடும்பக் கடமையா? அல்லது அதற்கான ஊதியம் வழங்கப்பட வேண்டுமா?" என்ற தேசிய அளவிலான விவாதத்தை உலகளவில் தூண்டியுள்ளது.</p><h2>15 ஆண்டுகால உழைப்பும் குடும்ப மோதலும்</h2><p>கிழக்கு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE">சீனாவைச் </a>சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க 'சு' (Xu) என்ற பெண்மணி, ஷாங்காய் நீதிமன்றத்தில் தனது மகன் 'லியாங்' என்பவருக்கு எதிராக இந்த அதிரடி வழக்கைத் தொடர்ந்துள்ளார்.</p><p>கடந்த 2014-ஆம் ஆண்டில் லியாங் தனது மனைவியை விவாகரத்து செய்தபோது, அவரது மகளுக்கு (சு-வின் பேத்திக்கு) வெறும் 4 வயது மட்டுமே ஆகியிருந்தது.</p><p>விவாகரத்திற்குப் பிறகு, தனது தாயுடன் வசித்து வந்த லியாங், குழந்தையை வளர்க்கும் முழுப் பொறுப்பையும் தாய் 'சு'-விடமே ஒப்படைத்துள்ளார்.</p><p>கடந்த 15 ஆண்டுகளாக அந்தப் பெண்மணி, தனது பேத்தியின் அன்றாட வாழ்க்கைச் செலவுகள், மருத்துவச் செலவுகள் மற்றும் கல்விச் செலவுகள் என அனைத்தையும் தனது சொந்தப் பணத்தில் இருந்தே கவனித்து வந்துள்ளார்.</p><h2>தாயின் குமுறலும் மகனின் வாதமும்</h2><p>பிரச்சனை எப்போது தீவிரமானது என்றால், மகன் லியாங் சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டு, தனது புதிய மனைவியுடன் வீட்டை விட்டு வெளியேறித் தனியாக வாழத் தொடங்கினார். ஆனால், தனது மகளைத் தாயின் பராமரிப்பிலேயே விட்டுச் சென்றுவிட்டார்.</p><p>பொருளாதார நெருக்கடியாலும், முதுமையாலும் பாதிக்கப்பட்ட தாய் சு, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "என் மகனுக்குக் குடும்பப் பொறுப்பு என்பது சிறிதும் இல்லை. </p><p>ஒரு தந்தையாகத் தன் கடமையைச் செய்ய அவன் தவறிவிட்டான். இனிமேல் என்னால் பண உதவி செய்து என் பேத்தியைப் பராமரிக்க முடியாது.</p><p>எனவே, நான் 15 ஆண்டுகள் வளர்த்ததற்கான கட்டணமாக 3,60,000 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 45 லட்சத்திற்கும் மேல்) எனக்கு இழப்பீடாக வழங்க வேண்டும்" என்று கோரியுள்ளார்.</p><p>இதற்குப் பதிலளித்த மகன் லியாங், தனக்கு அப்போது மாதம் ரூ.37,000 மட்டுமே வருமானம் இருந்ததாகவும், தன் சக்திக்கு உட்பட்டு மகளுக்குப் பண உதவி செய்ததாகவும் வாதிட்டுள்ளார்.</p><h2>சீனாவில் தொடரும் 'தாத்தா-பாட்டி கட்டண' வழக்குகள்</h2><p>சீனாவில் இது போன்ற வழக்குகள் தொடர்வது இது முதல் முறையல்ல. பெய்ஜிங் நீதிமன்றத்தில் நடந்த மற்றொரு வழக்கில், 1 வயது முதல் பேத்தியை வளர்த்த தாத்தா-பாட்டி, தங்களது மகன் மற்றும் மருமகளுக்கு எதிராக ரூ. 40 லட்சம் கேட்டு வழக்கு தொடர்ந்தனர்.</p><p>மற்றொரு சம்பவத்தில், ஹுனான் மாகாணத்தைச் சேர்ந்த 59 வயது மூதாட்டி ஒருவர், தனது மகனின் குழந்தையை வெறும் 6 மாதங்கள் கவனித்துக் கொண்டதில் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி, 20 கிலோ உடல் எடையைக் குறைத்து தீவிர மருத்துவ சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டார் இது போன்ற பல வழக்குகள் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.</p><h2>சமூக மற்றும் சட்ட நிபுணர்களின் கருத்து</h2><p>இந்த விவகாரம் குறித்துச் சமூக ஆர்வலர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் பல்வேறு கருத்துகளை முன்வைக்கின்றனர். சீனாவில் கிராமப்புற தொழிலாளர்கள் வேலை தேடி நகரங்களுக்கு இடம்பெயர்வதாலும், நகரங்களில் கணவன்-மனைவி இருவருமே வேலைக்குச் செல்வதாலும், குழந்தைகளைப் பராமரிக்கும் சுமை முதியவர்கள் மீதே விழுகிறது. </p><p>ஒரு காலத்தில் பேரக் குழந்தைகளை வளர்ப்பது பாசத்தின் வெளிப்பாடாகப் பார்க்கப்பட்டது.</p><p>ஆனால் தற்போது அது ஒரு 'ஊதியமில்லா உழைப்பு' என்ற அங்கீகாரத்தைப் பெற்று வருகிறது. ஓய்வூதியம் பெற்று நிம்மதியாக வாழ வேண்டிய வயதில் முதியவர்கள் இந்தச் சுமையைத் தாங்க வேண்டியுள்ளது.</p><p>இது குறித்துப் பேசிய ஷாங்காய் சட்ட வல்லுநர்கள், "இது குடும்ப உறவுகளை வியாபாரமாக்குவது அல்ல, மாறாகப் பொறுப்புகளைத் தெளிவுபடுத்துவதாகும். </p><p>குழந்தைகளை வளர்க்கும் முதல் பொறுப்பு பெற்றோருக்கே உரியது. அவர்களால் முடியாத பட்சத்தில் மட்டுமே தாத்தா-பாட்டி உதவ வேண்டும்" என்று கூறியுள்ளனர்.</p><p>இணையவாசிகளோ, சீனா தனது நாட்டின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க விரும்பினால், முதியவர்களைச் சார்ந்து இருக்காமல், குறைந்த கட்டணத்தில் தரமான அரசு குழந்தை காப்பகங்களை உருவாக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>உக்ரைன் போர், புதிய அணுமின் நிலையம், ஆயுதம் கொள்முதல்: புதின்- பிரதமர் மோடி பேசப்போவது என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/national/russia-will-welcome-indias-efforts-toward-peaceful-resolution-of-ukraine-conflict-peskov</link><comments>https://www.maalaimalar.com/news/national/russia-will-welcome-indias-efforts-toward-peaceful-resolution-of-ukraine-conflict-peskov#comments</comments><guid isPermaLink="false">60e73132-cbfe-4979-9065-6502bd35cba3</guid><pubDate>Tue, 08 Sep 2026 11:42:36 +0000</pubDate><atom:updated>2026-09-08T11:42:36.056Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Putin,புதின்,உக்ரைன் ரஷியா போர்,ukraine russia war,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/us7f9ts2/PutinModi001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரஷிய அதிபர் புதின்- பிரதமர் மோடி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/us7f9ts2/PutinModi001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[  <p>இந்தியாவில் வருகிற 11-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை 18-வது பிரிக்ஸ் மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாடு பாரத் மண்டபத்தில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் ரஷிய அதிபர் புதின் கலந்து கொள்கிறார். மாநாட்டிற்கிடையே, இந்திய பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.</p><p>இது தொடர்பாக ரஷிய அதிபரின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது எங்களுக்கு தெரியும். அது பெருமளவுக்கு எங்கள் நிலைப்பாட்டுடன் ஒத்துப்போகிறது. ஏனெனில், உக்ரைன் விவகாரத்திற்கு அமைதியான வழிகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று நாங்களும் விரும்புகிறோம்.</p><h2>புதிய அணுமின் நிலையம்</h2><p>புதிய அணுமின் நிலையங்களை அமைப்பது குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷியா காத்திருக்கிறது. Su-57 ரக விமானங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்வதும் நிகழ்ச்சி நிரலில் உள்ளது.</p><p>இவ்வாறு பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.</p><h2>அமெரிக்கா 100 சதவீதம் வரி எச்சரிக்கை</h2><p>மேலும், ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கினால் 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது குறித்த கேள்விக்கு, அமெரிக்காவின் அறிவிப்பு சட்டவிரோதம் மற்றும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்றார்.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. பிரமுகர் படுகொலை- 3 பள்ளி மாணவர்கள் அதிரடி கைது</title><link>https://www.maalaimalar.com/news/topnews/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-3-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-3-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81#comments</comments><guid isPermaLink="false">ef28800c-b0f2-48eb-8d06-4b7731cb709d</guid><pubDate>Tue, 08 Sep 2026 11:33:00 +0000</pubDate><atom:updated>2026-09-08T11:33:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கொலை வழக்கு,Murder case,சென்னை,தவெக பிரமுகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/t8hge11a/murderr.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/t8hge11a/murderr.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை பெசன்ட் நகர் வண்ணான்துறை பகுதியைச் சேர்ந்த த.வெ.க. பிரமுகர் கண்ணன். கடந்த 5 ந்தேதி இரவு 9 மணியளவில் ஓடஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><h2><strong>கொலை</strong></h2><p>அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், கண்ணனை விடாமல் விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டிய போது கண்ணனின் நண்பர்கள் கற்களை வீசி தடுக்க முயன்றனர் இருப்பினும் கொலையாளிகள் அவர்களை மிரட்டிவிட்டு கண்ணனை வெட்டி கொன்றனர். இந்தக் கொலை தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பெரும் பதை பதைப்பை ஏற்படுத்தியது.</p><p>இது தொடர்பாக அடையாறு ருக்மணி நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பரணி (20) மற்றும் அவரது நண்பர்களான ராகேஷ், நரேஷ், ஹரிஹரன், மணிகண்டன் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.</p><h2><strong>பழி தீர்த்த பயங்கரம்</strong></h2><p>போலீஸ் விசாரணையில், இந்தக் கொலைக்கு 17 ஆண்டுகால பகையே காரணம் என்பது தெரியவந்தது. கடந்த 2009-ம் ஆண்டு பரணியின் பெரியப்பா சிவா, 2016-ல் பரணியின் தந்தை வேலு ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். தனது தந்தை மற்றும் பெரியப்பாவின் மரணத்திற்கு கண்ணன் தான் முக்கிய காரணம் என்று கருதிய பரணி திட்டம் போட்டு இந்த கொலையை செய்திருப்பது அம்பலமானது. இப்படி பழிக்கு பழியாக கொலை அரங்கேறியது போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. </p><h2><strong>வாக்கு மூலம்</strong></h2><p>“என் தந்தை மற்றும் பெரியப்பாவைக் கொன்ற அவர், சமீபத்தில் ஒரு கட்சியில் சேர்ந்து கொண்டு அந்தப் பகுதியில் பெரிய ஆள் போல வலம் வந்தது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவரை உயிரோடுவிட்டால் மீண்டும் எங்களுக்கு ஆபத்து என்று கருதினேன். அதனால்தான் எனது நண்பர்களுடன் சேர்ந்து அவரைத் தீர்த்துக் கட்டினேன். இப்போதுதான் என் தந்தை மற்றும் பெரியப்பாவின் ஆன்மா சாந்தி அடைந்துள்ளது" என வாக்கு மூலம் அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.</p><h2><strong>3 பள்ளி மாணவர்கள்</strong></h2><p>இதற்கிடையே இந்த கொலை வழக்கில் மேலும் 4 பேர் போலீசில் சிக்கி உள்ளனர் இவர்களில் 3 பேர் பள்ளி மாணவர்கள் ஆவர். கல்லூரி மாணவர் பரணியின் நண்பர்களான இவர்கள் அனைவரும் அவருடன் சேர்ந்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.</p><h2><strong>போலீசார் தீவிர விசாரணை</strong></h2><p>சென்னை மாநகரில் பரபரப்பாக அரங்கேறிய துணிகர கொலை சம்பவத்தில் கல்லூரி மாணவரோடு சேர்ந்து பள்ளி மாணவர்களும் கொலையில் ஈடுபட்டிருக்கும் சம்பவம் போலீசார் மத்தியில் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதைத்தொடர்ந்து கொலையின் முழு பின்னணி குறித்தும் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது பற்றியும் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள். இதில் மேலும் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>‘பில்லா-2’ திரைப்படத்தை இயக்காதது ஏன்? இயக்குநர் விஷ்ணு வர்தன் முதன்முறையாக மனம் திறந்த பேட்டி!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/why-vishnuvardhan-did-not-direct-billa-2-first-time-open-interview</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/why-vishnuvardhan-did-not-direct-billa-2-first-time-open-interview#comments</comments><guid isPermaLink="false">e0a393e5-f4e1-435b-9ae7-7cad55011642</guid><pubDate>Tue, 08 Sep 2026 11:17:52 +0000</pubDate><atom:updated>2026-09-08T11:17:52.031Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Billa 2,Ajith Kumar,அஜித் குமார்,Vishnuvardhan,விஷ்ணு வர்தன்,பில்லா-2</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/38vu9f72/vishnu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Billa 2]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/38vu9f72/vishnu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ் திரையுலகில் அஜித் குமார் நடிப்பில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற 'பில்லா' திரைப்படத்தை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குநராக உயர்ந்தவர் விஷ்ணு வர்தன். அதனைத் தொடர்ந்து அஜித்தை வைத்து 'பில்லா-2' திரைப்படத்தை இயக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. அதே காலகட்டத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பவன் கல்யாணின் 'பஞ்சா' திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகளும் தீவிரமடைந்து வந்தன.</p><p>இரண்டு பெரிய திரைப்படங்களின் படப்பிடிப்பு தேதிகளும் ஒரே நேரத்தில் அமைந்ததால், ஒரே நேரத்தில் இரு திரைப்படங்களையும் இயக்க முடியாத சூழல் இயக்குநருக்கு ஏற்பட்டது. இதனால் ஏதேனும் ஒரு திரைப்படத்தை மட்டுமே தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். தொழில்முறை நேர்மை மற்றும் வாக்களித்த கடமையின் அடிப்படையில் பவன் கல்யாணின் 'பஞ்சா' திரைப்படத்திற்கே முதல் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதால், அப்படத்தை இயக்க முடிவு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>அஜித் <strong>குமாரின் பெருந்த</strong>ன்மை</h2><p>இந்த இக்கட்டான சூழ்நிலை குறித்து நடிகர் அஜித் குமாரிடம் <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/pulavar-teaser-bharathirajas-last-film-unveiled">விஷ்ணு வர்தன்</a> நேரில் விளக்கிக் கூறியபோது, அதனை மிகவும் புரிந்துகொண்டு பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டார். தன்னுடைய சூழ்நிலையை உணர்ந்து அஜித் ஆதரவு அளித்த நிகழ்வை இயக்குநர் விஷ்ணு வர்தன் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளார்.</p><p>விஷ்ணு வர்தன் விலகியதைத் தொடர்ந்து 'பில்லா-2' திரைப்படத்தை சக்ரி டோலெட்டி இயக்கினார். இருப்பினும், அஜித் குமாருடன் விஷ்ணு வர்தன் கொண்டிருந்த நல்லுறவின் காரணமாக, பின்னொரு நாளில் அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து 'ஆரம்பம்' என்ற பிளாக்பஸ்டர் திரைப்படத்தைக் கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>“இது ஒரு செயலிழந்த அரசாங்கம்” - தவெக ஆட்சி குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/this-is-a-dysfunctional-government-edappadi-palaniswami-criticizes-the-tvk-administration</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/this-is-a-dysfunctional-government-edappadi-palaniswami-criticizes-the-tvk-administration#comments</comments><guid isPermaLink="false">bc2b5556-d17d-4ad1-b995-77c28e361ddc</guid><pubDate>Tue, 08 Sep 2026 11:06:59 +0000</pubDate><atom:updated>2026-09-08T11:06:59.581Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,Edappadi Palaniswami,அதிமுக,எடப்பாடி பழனிசாமி,தவெக அரசு,tvk government</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/xipnqmit/New-Project-2026-09-08T163358.893.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “இது ஒரு செயலிழந்த அரசாங்கம்” - தவெக ஆட்சி குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/xipnqmit/New-Project-2026-09-08T163358.893.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அதிமுக பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-could-become-us-president-instead-of-trump-edappadi-palaniswami">எடப்பாடி பழனிசாமி</a> இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்.,</p><h2>சபை நேரம் வீணடிக்கப்படுகிறது</h2><p>சட்டமன்ற நிகழ்வுகள் தொடங்கி உடன் கேள்விநேரம் ஆரம்பிக்கிறது. பின்னர் பிரதான எதிர்க்கட்சியான திமுகவிற்கு பேச வாய்ப்பு வழங்கப்படுகிறது. </p><p>அவர்கள் பேச முற்படும்போது, ஆளுங்கட்சியினர் ஏதாவது ஒரு குற்றச்சாட்டை அவர்கள்மீது சுமத்தி, இருதரப்பினரும் மாறி, மாறி அவை நேரத்தை வீண்டிக்கின்றனர்.</p><p>10 மணிநேரம் அவை நடக்கிறது என பெருமையாக பேசுகின்றனர். ஆனால், அதில் 3 மணிநேரம்தான் மக்களின் பிரச்னை பேசப்படுகிறது. மீதமிருக்கும் 7 மணிநேரம் ஆளும் கட்சியினராலும், எதிர்க்கட்சியினராலும் வீண்டிக்கப்படுகிறது. </p><h2>மூன்றே அமைச்சர்கள்தான்</h2><p>பலதுறைகள் இருந்தாலும், அனைத்து துறைகளுக்கும் பெரும்பாலும் மூன்று அமைச்சர்களே எழுந்து பதில் கூறுகின்றனர். மற்ற அமைச்சர்கள் பதில் சொல்வதில்லை. அந்தந்த துறையின் அமைச்சர்கள், அந்தந்த துறைக்கு பதில் சொல்லவேண்டும். </p><h2>கேள்விகளுக்கு பதிலே இல்லை</h2><p>காவல்துறை, தீயணைப்புத்துறை முதலமைச்சருடையது. வியாழன்கிழமை இத்துறைகள்மீதான விவாதம் நடைபெற்றது. காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக தரப்பில் நான் சில கருத்துகளை பகிர்ந்துகொண்டேன். </p><p>முதலமைச்சர் பதிலுரையின்போது எனது கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. </p><p>ஒரே பதில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். ஆனால், எப்போது என தெரிவிக்கவில்லை.</p><h2>எஃப்கியூஎல் மோசடி</h2><p>மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் எஃப்.க்யூ.எல். மோசடியில் பணத்தை இழந்துள்ளனர். ரூ.1,000 கோடி மக்கள் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதைக் குறிப்பிட்டு பேசினேன். ஆனால் இதற்கு முதலமைச்சர் பதில் அளிக்கவில்லை.</p><p>இப்படி பல கேள்விகளுக்கு பதில் இல்லை. பொருளாதார குற்ற தடுப்புப் பிரிவுகள் சரியாக செயல்படவில்லை. இதனை இந்த அரசு கண்காணிக்க வேண்டும்.</p><h2>நீண்டகால குற்றங்கள்</h2><p>பதிலுரையில் பேசிய முதலமைச்சர், கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் சீண்டல்கள், போதைப்பொருள் குற்றங்கள் எல்லாம் நீண்டகாலமாக இருக்கும் குற்றங்கள், உடனே நிறுத்தமுடியாது என்கிறார். </p><p>அது தவறு. ஒரு பொறுப்புடைய முதலமைச்சர்தான் அவர்கீழ் இருக்கும் காவல்துறையை வைத்து தடுக்கவேண்டும். அவரே இப்படி ஒரு பதிலை வழங்கினால், மக்கள் பிரச்னைகளை யாரிடம் சொல்லமுடியும்? இது ஒரு செயலிழந்த அரசாங்கம்.</p><p>இவர்கள் ஆட்சிக்கு வந்தபிறகு சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. முழுமையாக சீர்கெட்டுவிட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, இந்தநிலை தொடரக்கூடாது. அரசு எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். </p><h2>ஊழல்</h2><p>இந்த ஆட்சி வந்த பிறகுதான் ஊழல் அதிகமாகி உள்ளது. அரசு அலுவலங்களில் நடக்கும் தவறுகள் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் கட்டுபடுத்தப்படும். எல்லா ஆட்சியிலும் லஞ்ச ஒழிப்புத்துறை செயல்பட்டுக் கொண்டுதான் இருந்தது. </p><p>இவர்கள் ஆட்சியில் மட்டும்தான் செயல்படுவதுபோல் பேசுவது. அதற்கு ஒரு ரீல் போடுகிறார்கள். லஞ்சம் இல்லையென்றால், சோதனையின்போது பணம் எவ்வாறு கைப்பற்றப்படுகிறது?</p><p>இந்த ஆட்சியில் லஞ்சம் அதிகரித்துள்ளது. நகராட்சித்துறை முதலமைச்சரின்கீழ் உள்ளது. ஆனால் வேறு அமைச்சர் பதில் சொல்கிறார்? அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் செயல்படுத்தக்கூடிய அமைப்பு நகராட்சி அமைப்பு.</p><p>ஆனால் அத்துறை சரியாக செயல்படுத்தப்படவில்லை. அதனால்தான் இன்று சட்டப்பேரவையில் இவ்வளவு குற்றச்சாட்டுகள் அரசின்மீது. இனியாவது முதலமைச்சர் அவர் துறையை கண்காணிக்க வேண்டும். இது விவசாயிகளை காக்கும் அரசு கிடையாது.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>சபாநாயகருக்கு எதிராக இழிவான பேச்சு: இரண்டு எம்.எல்.ஏ.-க்கள் கைது</title><link>https://www.maalaimalar.com/news/national/two-brs-mlcs-held-over-alleged-remarks-against-telangana-assembly-speaker</link><comments>https://www.maalaimalar.com/news/national/two-brs-mlcs-held-over-alleged-remarks-against-telangana-assembly-speaker#comments</comments><guid isPermaLink="false">bd0b34b2-f2e6-405f-94a8-35cf1f479757</guid><pubDate>Tue, 08 Sep 2026 10:59:21 +0000</pubDate><atom:updated>2026-09-08T10:59:21.047Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Telangana,தெலங்கானா,சபாநாயகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/1kia4hs0/Telangana001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தெலங்கானா சபாநாயகர் கதம் பிரசாத் குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/1kia4hs0/Telangana001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தெலுங்கானா மாநில சட்டசபைக்குள் நேற்று எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.-க்கள் நுழைய முயன்றபோது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது பி.ஆர்.எஸ். மேலவை எம்.எல்.ஏ.-க்கள் தத்தா மதுசூதன் மற்றும் நவீன் குமார், சபாநாயகர் கதம் பிரசாத் குமாருக்கு எதிராக இழிவுப்படுத்தும் வகையில் பேசியதாக தெரிகிறது.</p><p>இது தொடர்பாக சட்டசபை சபாநாயகருக்கான சிறப்புப் பணி ஆதிகாரி, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் அடிப்படையில் இரண்டு எம்.எல்.ஏ.-க்களும் கைது செய்யப்பட்டனர்.</p><p>அவர்கள் (இரண்டு BRS சட்டமன்ற உறுப்பினர்கள்) சபாநாயகரின் நேர்மை, அதிகாரம் மற்றும் அரசியலமைப்பு ரீதியான நடத்தையை பகிரங்கமாக கேள்விக்குட்படுத்தியுள்ளனர். சமூகப் பின்னணி மற்றும் அரசியலமைப்புப் பாத்திரத்தின் காரணமாக அவரை அவமானப்படுத்தவும், இழிவுபடுத்தவும், தரக்குறைவாக நடத்தவும், அவரது தனிப்பட்ட மற்றும் சமூக அந்தஸ்தைக் குறைக்கவும் திட்டமிட்ட சொற்களை வேண்டுமென்றே பயன்படுத்தினர் என புகாரில் கூறப்பட்டிருந்தது.</p><h2>சபாநாயகர் கதம் பிரசாத் குமார்</h2><p>நேற்று தலித் தலைவரான சபாநாயகர் கதம் பிரசாத் குமாருக்கு எதிராக இருவரும் இழிவுப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றம்சாட்டப்பட்டது பெரிய அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது.</p><p>முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, இரண்டு பேரின் கருத்து 4 கோடி மக்களை இழிவுப்படுத்துவதாகும் என்றார். என்றாலும், இருவரும் சபாநாயருக்கு எதிராக எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை என்று தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>பிரதமர் மோடியின் இயலாமையால் மணிப்பூர் மக்கள் மாநிலத்திற்கு உள்ளேயும், வெளியேயும் அவதிப்படுகிறார்கள்: கார்கே</title><link>https://www.maalaimalar.com/news/national/people-of-manipur-suffering-both-within-and-outside-state-under-modi-sarkar-kharge</link><comments>https://www.maalaimalar.com/news/national/people-of-manipur-suffering-both-within-and-outside-state-under-modi-sarkar-kharge#comments</comments><guid isPermaLink="false">a55dc196-cc8d-49db-b062-acaffe35197b</guid><pubDate>Tue, 08 Sep 2026 10:36:51 +0000</pubDate><atom:updated>2026-09-08T10:36:51.376Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>கார்கே,Kharge,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/n2o7uggc/Kharge001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கார்கே]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/n2o7uggc/Kharge001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மணிப்பூரை சேர்ந்த புகழ்பெற்ற இசைக்கலைஞர் சோங்தம் விக்ரம் சிங், டெல்லியில் ஒரு கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான கார்கே, பிரதமர் மோடியை கடுமையாக சாடியுள்ளார்.</p><p>இது தொடர்பாக மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதவியில் கூறியிருப்பதாவது:-</p><p>மோடி அரசின் "இயலாமை" காரணமாக மணிப்பூர் மக்கள் மாநிலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் துன்பத்திற்கு ஆளாகியிருப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செவ்வாய்க்கிழமை குற்றம் சாட்டினார். </p><h2>மணிப்பூர் இசைக்கலைஞர் கொலை</h2><p>மணிப்பூரைச் சேர்ந்த புகழ்பெற்ற இசைக்கலைஞர் சோங்தம் விக்ரம் சிங் ஒரு கும்பலால் இரக்கமின்றி அடித்துக் கொல்லப்பட்டது, பாஜக ஆட்சியின் கீழ் நிலவும் முழுமையான சட்டமின்மையை நினைவூட்டும் மற்றொரு அதிர்ச்சிகரமான நிகழ்வாகும்.</p><p>மாணவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். பெண்கள் தினமும் கொடுமைகளை எதிர்கொள்கின்றனர். வடகிழக்கு இந்தியாவைச் சேர்ந்த மக்கள் பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர். தலித்துகள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளனர்.</p><h2>டெல்லி குற்றங்களின் தலைநகராக மாறியுள்ளது</h2><p>உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கண்காணிப்பில், டெல்லி குற்றங்களின் தலைநகராக மாறியுள்ளது. தேசிய தலைநகரில் குற்றங்கள் மிக அதிக அளவில் நடைபெறுவதை என்சிஆர்பி (NCRB) ஆண்டுதோறும் பதிவு செய்து வருகிறது.</p><p>அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இதற்கு பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மோடி அரசின் இயலாமை காரணமாக மணிப்பூர் மக்கள் தங்கள் மாநிலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அவதிப்படுகின்றனர்.</p><p>இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்</p><p>டெல்லியில் வீட்டிற்கு வெளியே மது அருந்தியபடி சத்தம் எழுப்பியதை தட்டிக்கேட்டதால் மணிப்பூர் இசைக்களைஞர் ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்களின் குரல் அல்ல, பொய்களின் சூழ்ச்சி: காங்கிரசை கிண்டல் செய்த பிரதமர் மோடி</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-mocks-congress-chhatron-ki-goonj-campaign-dubs-it-jooth-ki-goonj</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-mocks-congress-chhatron-ki-goonj-campaign-dubs-it-jooth-ki-goonj#comments</comments><guid isPermaLink="false">65a39026-bb1b-4ae9-bd84-44dfeafcd82e</guid><pubDate>Tue, 08 Sep 2026 09:56:26 +0000</pubDate><atom:updated>2026-09-08T09:56:26.963Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Congress,காங்கிரஸ்,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/8vbefhg0/RahulGandhi0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rahul Gandhi- PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/8vbefhg0/RahulGandhi0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரதமர் மோடி இன்று குஜராத் மாநிலம் வதோதராவில் 35 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான பல்வேறு திட்டங்களை திறந்து வைத்ததுடன், அடிக்கல் நாட்டினார்.</p><h2>அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-</h2><p>எல்லா இடங்களிலும் பொய்யான சூழ்ச்சி மூலம் உங்களை திசை திருப்ப முயற்சிக்கும் மனிதர்களைக் காண்பீர்கள். ஆனால் இன்றைய இளைஞர்கள் உண்மையின் பக்கம் நிற்பார்கள்.</p><p>நாட்டின் இளைஞர்கள் செயற்கை நுண்ணறிவுத் (AI) துறையில் நிபுணர்களாக மாற வேண்டும். அவர்கள் இத்துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.</p><p>சூரிய சக்தி, காற்றாலை, நீர் மின்சாரம் மற்றும் அணுசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்படுவதில் அரசாங்கம் எவ்வளவு தீவிர கவனம் செலுத்தி வருகிறது என்பதை இளைஞர்களால் காண முடிகிறது.</p><p>இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.</p><h2>ராகுல் காந்தியின் மாணவர்கள் குரல் பிரசாரம்</h2><p>காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி மாணவர்களின் குரல் (Chhatron Ki Goonj) என்ற பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார். வினாத்தாள் கசிவு, மாநில வேலைவாய்ப்பு தேர்வில் உள்ள முறைகேடு தொடர்பாக முக்கிய நகரங்களில் உள்ள இளைஞர்களை சந்தித்து உரையாடி வருகிறார்.</p><p>இந்த நிலையில்தான் பிரதமர் மோடி இவ்வாறு கிண்டல் செய்துள்ளார். அதேவேளையில் ராகுல் காந்தியின் முன்னெடுப்பை கண்டு பாஜக அஞ்சுகிறது என்று காங்கிரஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கும் சீமான் - வீடியோ வெளியிட்ட சேயோன் படக்குழு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/seeman-to-act-in-a-film-produced-by-kamal-haasan-seyon-film-crew-releases-video</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/seeman-to-act-in-a-film-produced-by-kamal-haasan-seyon-film-crew-releases-video#comments</comments><guid isPermaLink="false">2ac4ef94-62d5-4655-a5ec-4a6dab036a4f</guid><pubDate>Tue, 08 Sep 2026 09:52:49 +0000</pubDate><atom:updated>2026-09-08T09:52:49.696Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Seeman,சிவகார்த்திகேயன்,Seyon,சேயோன்,சீமான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/9hwwa85o/New-Project-2026-09-08T150413.982.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கும் சீமான்... வீடியோ வெளியிட்ட சேயோன் படக்குழு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/9hwwa85o/New-Project-2026-09-08T150413.982.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>‘தாய் கிழவி’ பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் எழுத்து மற்றும் இயக்கத்தில், <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-song-velum-mayilum-penned-by-sivakarthikeyan-has-been-released">சிவகார்த்திகேயன்</a> நடிக்கும் திரைப்படம் சேயோன். </p><p>பாக்யஸ்ரீ போர்ஸ், பால சரவணன், அருள்தாஸ் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். </p><p>ஆர். மகேந்திரனுடன் இணைந்து நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். அமரனைத் தொடர்ந்து கமல்ஹாசனின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 2வது படம் இதுவாகும்.</p><p>இப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தில் சீமான் இணைந்துள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">சேயோனில் இணைகிறார் செந்தமிழன் சீமான் அவர்கள்<a href="https://x.com/Seeman4TN?ref_src=twsrc%5Etfw">@Seeman4TN</a><a href="https://x.com/hashtag/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#சேயோன்</a> <a href="https://x.com/hashtag/Seyon?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Seyon</a> <a href="https://x.com/hashtag/VetrivelVeeravel?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#VetrivelVeeravel</a> <a href="https://x.com/hashtag/Varendi?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Varendi</a><a href="https://x.com/hashtag/KamalHaasan?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#KamalHaasan</a> <a href="https://x.com/hashtag/Sivakarthikeyan?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Sivakarthikeyan</a><a href="https://x.com/ikamalhaasan?ref_src=twsrc%5Etfw">@ikamalhaasan</a> <a href="https://x.com/Siva_Kartikeyan?ref_src=twsrc%5Etfw">@Siva_Kartikeyan</a> <a href="https://x.com/hashtag/Mahendran?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Mahendran</a> <a href="https://x.com/Dir_SivakumarM?ref_src=twsrc%5Etfw">@Dir_SivakumarM</a> <a href="https://x.com/Music_Santhosh?ref_src=twsrc%5Etfw">@Music_Santhosh</a> <a href="https://x.com/anbariv?ref_src=twsrc%5Etfw">@anbariv</a> <a href="https://x.com/hashtag/BhagyashriBorse?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#BhagyashriBorse</a> <a href="https://x.com/RajbShettyOMK?ref_src=twsrc%5Etfw">@RajbShettyOMK</a> <a href="https://x.com/RKFI?ref_src=twsrc%5Etfw">@RKFI</a> <a href="https://x.com/turmericmediaTM?ref_src=twsrc%5Etfw">@turmericmediaTM</a>… <a href="https://t.co/LPb7BVQR2y">pic.twitter.com/LPb7BVQR2y</a></p>&mdash; Raaj Kamal Films International (@RKFI) <a href="https://x.com/RKFI/status/2097240383927500929?ref_src=twsrc%5Etfw">September 8, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கும் அதிபர் புதின் பிரதமர்  மோடியை சந்திக்கிறார்: கிரெம்ளின் மாளிகை</title><link>https://www.maalaimalar.com/news/world/kremlin-says-pm-modi-to-meet-putin-ahead-of-brics-summit</link><comments>https://www.maalaimalar.com/news/world/kremlin-says-pm-modi-to-meet-putin-ahead-of-brics-summit#comments</comments><guid isPermaLink="false">b95707c8-13ac-49eb-bbac-7ce1ffd05b07</guid><pubDate>Tue, 08 Sep 2026 09:51:38 +0000</pubDate><atom:updated>2026-09-08T09:51:38.271Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Putin,BRICS Summit,பிரிக்ஸ் உச்சி மாநாடு,pm modi,பிரதமர் மோடி,அதிபர் புதின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/9fxuuztp/putin.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ pm modi, putin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/9fxuuztp/putin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் ரஷிய அதிபர் புதின், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார் என கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது.</strong></em></p><p>பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ள பிரிக்ஸ் அமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லியில் வரும் 12 மற்றும் 13-ம் தேதிகளில் நடைபெறுகிறது.</p><h2>பிரிக்ஸ் மாநாடு</h2><p>நான்காவது முறையாக இந்தியா தலைமை தாங்கி மாநாட்டை நடத்துகிறது. இது டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறுகிறது.</p><p>இந்த மாநாட்டில் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது, பொதுவான முன்னுரிமைகள் மற்றும்</p><p>உலகளாவிய, பிராந்திய விவகாரங்கள் குறித்த கருத்துகளைப் பரிமாறிக் கொள்வது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளன.</p><p>இதில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜின்பிங் ஆகியோரும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>அதிபர் புதின் பங்கேற்கிறார் </h2><p>இந்நிலையில், பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்பார் என்றும், பிரதமர் மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது.</p><p>பிரிக்ஸ் மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.</p> ]]></content:encoded></item></channel></rss>