<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 29 Jul 2026 10:23:48 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-29-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-29-july-2026#comments</comments><guid isPermaLink="false">b15702b0-04b5-4c16-acc1-8fc7df5584b1</guid><pubDate>Wed, 29 Jul 2026 04:49:34 +0000</pubDate><atom:updated>2026-07-29T10:17:29.315Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/g9qg65my/WhatsApp-Image-2026-07-29-at-12.26.56-PM.jpeg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/g9qg65my/WhatsApp-Image-2026-07-29-at-12.26.56-PM.jpeg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-decided-to-provide-loans-worth-rs-7000-crore">சிங்கப்பெண்கள் மேம்பாட்டு திட்டம்: ரூ.7 ஆயிரம் கோடி கடன் வழங்க முதலமைச்சர் விஜய் முடிவு</a></p><p>* இளம்பெண்கள், நலிவடைந்த சமூகத்தினர் தொழில் தொடங்குவதற்காக, தொழில் முனைவோர் கடன்களை வழங்க, கூட்டுறவு துறை முடிவு செய்து உள்ளது. </p><p>* இளம்பெண்கள், நலிவடைந்த பிரிவினருக்கு ரூ.7 ஆயிரம் கோடி கடன் வழங்கும் அறிவிப்பு வருகிற பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/india-urges-end-to-attacks-on-ships-in-hormuz-strait-at-un-security-council" rel="nofollow">ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும்..!- ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா வலியுறுத்தல்</a></p><p>* சிறிய அமைதிக்கு பிறகு, தாக்குதல்கள் மீண்டும் தொடங்கியது மிகவும் கவலையளிக்கிறது.</p><p>*  ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் மீதான தாக்குதல்களில் பல இந்தியர்கள் காயமடைந்தனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/sooryavanshi-takes-big-strides-in-t20i-rankings">ஐசிசி டி20 தரவரிசை: ஜெட் வேகத்தில் உச்சம் தொட்ட சூர்யவன்ஷி</a></p><p>* ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் சுப்மன் கில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.</p><p>* நியூசிலாந்தின் டேரில் மிட்செல் இரண்டாவது இடத்தை தக்கவைத்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-travelling-metro-train">மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் முதலமைச்சர் விஜய்...</a></p><p>* சென்னை மெட்ரோ ரெயிலின் 2-ம் கட்ட வழித்தடமான போரூர்-பூந்தமல்லி இடையிலான ஆளில்லா மெட்ரோ ரெயிலில் ஏறி பூந்தமல்லி செல்கிறார்.</p><p>* முதலமைச்சர் விஜய் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வதால் பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-handed-over-appointment-orders-to-126-individuals-selected-for-government-jobs">அரசு வேலைக்கு தேர்வான 126 பேருக்கு பணி நியமன ஆணைகள் - முதலமைச்சர் விஜய் வழங்கினார்</a></p><p>* தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பல்வேறு பணி இடங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 48 நபர்களுக்கும் பணிநியமன ஆணைகளை வழங்கினார். </p><p>* முதலமைச்சர் விஜய் பணிநியமன ஆணைகளை வழங்கி, அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். </p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/black-sea-ukraine-port-attack-indian-sailors-trapped" rel="nofollow">உக்ரைன் துறைமுகத்தில் தாக்குதல்- கப்பலில் 13 இந்திய மாலுமிகள் தவிப்பு</a></p><p>*  இந்திய மாலுமிகள் எளிதில் தாக்கப்படக்கூடிய இலக்குகளாக விடப்படக்கூடாது. </p><p>* விரைவாக  நாடு திரும்ப ஏற்பாடு செய்யுமாறு கேட்டு கொள்கிறோம்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/hs-prannoy-enter-second-round-in-taipae-open-badminton">தைபே ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் இந்திய வீரர்கள் வெற்றி</a></p><p>* தைபே ஓபன் பேட்மிண்டன் தொடர் தைவானில் நடந்து வருகிறது.</p><p>* இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், தருண் மன்னேபள்ளி வெற்றி பெற்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/venus-williams-lose-first-round-in-citi-open-tennis">சிட்டி ஓபன் டென்னிஸ்: வீனஸ் வில்லியம்ஸ் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி</a></p><p>* சிட்டி ஓபன் டென்னிஸ் தொடர் வாஷிங்டனில் நடந்து வருகிறது.</p><p>* இரண்டாவது சுற்று போட்டிகள் இன்று நடைபெற உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/west-indies-beat-pakistan-in-90-runs-in-first-test">டிரினிடாட் டெஸ்ட்: 90 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்</a></p><p>* 2வது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜெய்டன் சீல்ஸ் 5 விக்கெட் வீழ்த்தினார்.</p><p>* ஆட்ட நாயகன் விருது ஜஸ்டின் கிரீவ்ஸ்க்கு வழங்கப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-re-elected-as-pmk-president">பா.ம.க. தலைவராக அன்புமணி மீண்டும் தேர்வு</a></p><p>* பாமக நிறுவனர் ராமதாசின் பிறந்தநாளில் அன்புமணி அவரை சந்தித்து வாழ்த்து பெற்றார். </p><p>* மாமல்லபுரத்தில் உள்ள விடுதியில் பாமக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-government-consider-decision-to-hand-tasmac-shops-back-to-private-sector">டாஸ்மாக் கடைகளை மீண்டும் தனியாரிடம் ஒப்படைக்க முடிவு? - தமிழ்நாடு அரசு ஆலோசனை</a></p><p>* தமிழ்நாட்டில் தற்போது டாஸ்மாக் நிறுவனத்தின் கீழ் 4,048 சில்லறை மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. </p><p>* மாநில அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித் தரும் துறைகளில் டாஸ்மாக் முக்கியமான ஒன்றாகும்.</p>  <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-mekedatu-dam-issue-let-us-unite-avoid-politicizing-matter">மேகதாது அணை விவகாரம்: அரசியல் சாயம் பூசுவதை தவிர்த்து ஒன்றிணைவோம்! - மாணிக்கம் தாகூர்</a></p><p>* தமிழகத்திற்கு பாஜ.க. அரசு செய்த மிகப்பெரிய துரோகமாகும்.</p><p>* ஆட்சியை இழந்ததை சகித்துக் கொள்ள முடியாத நிலையிலுள்ள தி.மு.க. மேகதாது பிரச்சனையில் அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-high-court-orders-fir-against-youtubers-over-defamation-of-seeman">சீமான் குறித்து அவதூறு பேச்சு: யூடியூபர்கள் பிஸ்மி, தமிழன் கோகுல் மீது வழக்குப் பதிவு செய்ய உயர் நீதிமன்றம் அதிரடி உத்தர... </a></p><p>*சீமான் குறித்து இவ்வளவு கொச்சையாகப் பேசியும் காவல் துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் பாரபட்சம் காட்டுகிறது.</p><p>* வழக்குத் தொடர்பான முதற்கட்ட அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/respect-the-power-of-youth-rahul-gandhi-speech-in-lok-sabha" rel="nofollow">இளைஞர்களின் சக்திக்கு மரியாதை கொடுங்கள்..!- மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச்சு</a></p><p>* என்னை எதிர்கொள்ள அமித்ஷாவுக்கு துணிச்சல் இல்லை.</p><p>* மக்களவையில் முட்டாள்கள் என்ற வார்த்தையை ராகுல்காந்தி பேசியதற்கு பாஜக எம்பிக்கள் கடும் கண்டனம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/assam-flood-tragedy-75-dead">அசாம் வெள்ளப் பேரழிவு – உயிரிழப்பு 75 ஆக உயர்வு!</a></p><p>* 81 நிவாரண முகாம்களில் 32,477 பேர் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்</p><p>* உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 9 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ஹிமந்தபிஸ்வாசர்மா </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/o-panneer-selvam-likely-chance-join-to-tvk">த.வெ.க.வில் இணையும் ஓபிஎஸ்? தி.மு.க.வில் விழும் முதல் விக்கெட்?</a></p><p>* 2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவுக்கு பிறகு அரசியல் களத்தில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் நடைபெற்று வருகி்னறன. </p><p>* 2029-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் த.வெ.க. சார்பில் களம் இறக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/delhi-student-protest-opposition-uproar-in-parliament-jp-nadda-sharp-response">டெல்லி மாணவர் போராட்டம்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி-ஜே.பி. நட்டா காரசார பதில்!...</a></p><p>*காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, பாஜக ஆட்சியில் நாட்டின் "ஜனநாயகமும் மக்களும் பாதுகாப்பாக இல்லை" என்று குற்றம் சாட்டினார். </p><p>*செயல்பாட்டாளர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் கைது செய்யப்படுவதும் தடுத்து வைக்கப்படுவதும் வழக்கமான ஒன்றுதான்" என்று வாதிட்டார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-questions-vijay-on-army-to-protect-women-from-tvk-officials">தவெக நிர்வாகிகளிடம் இருந்து பெண்களை காக்க எந்தப் படையை அமைக்கப் போகிறார் விஜய்? - நயினார் நாகேந்திரன்</a></p><p>* மேற்கு மாவட்டச் செயலாளர்  விஜய் மோகன் மீது, இளம்பெண் ஒருவர் அளித்துள்ள புகார்கள் கடும் அதிர்ச்சி.</p><p>* சட்டரீதியான மற்றும் கட்சி ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்!</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/case-registered-against-senthil-balaji">டாஸ்மாக் நிதி முறைகேடு - செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு?</a></p><p>* புதிய அரசு டாஸ்மாக் வருவாயில் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய செயல்பாட்டைத் தொடங்குமாறு உத்தரவிட்டுள்ளது. </p><p>* கரூரில் செந்தில் பாலாஜி வீடு, நண்பர்கள் வீடுகள் உள்ளிட்ட 6 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-consult-with-chicken-biryani-with-nutritious-meal-for-government-school-students">அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுடன் சிக்கன் பிரியாணி- முதலமைச்சர் விஜய் பரிசீலனை</a></p><p>* உடற்கல்வி, ஓவியம் கணினி அறிவியல் மற்றும் தையல் உள்ளிட்ட பாடங்களில் மொத்தம் 11,773 பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.</p><p>* சங்கங்கள் முன் வைத்துள்ள கோரிக்கை மனுக்களை பிரத்தியேக சாப்ட்வேர் மூலம் பதிவேற்றம் செய்து டிஜிட்டல் மயமாக்கப்படும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-super-speciality-medical-seats-lost-mk-stalin-questions-dmk-government" rel="nofollow">தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு- மு.க.ஸ்டாலின் கண்டனம்</a></p><p>* எதிர்கால தமிழ்நாட்டில் தொண்டாற்ற இருந்த 151 உயர்சிறப்பு அரசு மருத்துவர்களை இழந்திருக்கிறோம்.</p><p>* லட்சக்கணக்கான தமிழ்நாட்டு மக்களின் உயிர்ப்பிரச்சினை இது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/massive-earthquake-in-japan-death-toll-rises-to-13">ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு-வணிக வளாக இடிபாடுகளில் தீவிர மீட்புப் பணி!... </a></p><p>*நேற்று பிற்பகல் குமாமோட்டோ பகுதியில் ரிக்டர் அளவில் 7.1 ஆகப் பதிவு செய்யப்பட்டது.</p><p>*கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதால், அவர்களை மீட்கும் பணிகள்  தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/commonwealth-games-president-murmu-congratulates-silver-medalists-kulveer-singh-harjinder-kaur">காமன்வெல்த் போட்டி: வெள்ளிப் பதக்கம் வென்ற குல்வீர் சிங், ஹர்ஜிந்தர் கவுருக்கு குடியரசுத் தலைவர் முர்மு வாழ்த்து!</a></p><p>*குல்வீர் சிங்கின் இந்த வெள்ளிப் பதக்கம் காமன்வெல்த் போட்டிகளின் இந்தப் பிரிவில் இந்தியாவின் முதல் பதக்கமாகப் பதிவாகியுள்ளது.</p><p>*குத்துச்சண்டை போட்டிகளில் மூன்று இந்திய வீரர்கள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவிற்கு மேலும் 3 பதக்கங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dvac-raid-at-41-locations-across-tamil-nadu">தமிழ்நாடு முழுவதும் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை</a></p><p>தி.நகர் தணிகாசலம் சாலையில் உள்ள மதுபான நிறுவனம் தொடர்புடைய இடத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.</p><p>திமுக எம்பி டி.ஆர்.பாலுவுக்குச் சொந்தமான மதுபான ஆலையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். </p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/privatizing-liquor-shops-will-only-increase-alcohol-abuse-anbumani" rel="nofollow">மதுக்கடைகளை தனியாருக்கு தாரை வார்ப்பது மதுப் புழக்கத்தை மேலும் அதிகரிக்கவே செய்யும்..!- அன்புமணி</a></p><p>* மீண்டும் பழைய நடைமுறைக்கே செல்வது சீர்திருத்தம் அல்ல... மாறாக சீர்கேடாகத்தான் கருதப்படும்.</p><p>* தனியார் மதுக்கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டால் தமிழ்நாட்டில் மது வெள்ளமாக பாயும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-says-nature-aligned-culture-drives-tiger-protection" rel="nofollow">இயற்கையோடு இயைந்த கலாச்சாரமே புலிகள் பாதுகாப்பிற்கு காரணம்- பிரதமர் மோடி</a></p><p>* உலகப் புலி எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 70% இந்தியாவில்தான் உள்ளது.</p><p>* மனித-வனவிலங்கு மோதலைக் குறைப்பதிலும் இந்தியா தனது உறுதிப்பாட்டைத் தொடர்கிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/verification-of-evm-for-kolathur-constituency-has-begun">கொளத்தூர் தொகுதி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி தொடங்கியது</a></p><p>* மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ள 14 வாக்குச்சாவடிகளில் பதிவான மின்னணு எந்திரங்கள் ஆய்வு செய்யப்படும். </p><p>* ஒவ்வொரு நாளும் 2 வாக்குச்சாவடிகளுடைய எந்திரங்கள் ஆய்வு செய்யப்படும்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-29-07-2026">GOLD PRICE TODAY: தங்கம் விலையில் தொடர் சரிவு: இன்றைய நிலவரம்</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.13,155-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/southwest-monsoon-16-percent-deficit-in-tamil-nadu">தென்மேற்கு பருவமழை - தமிழகத்தில் 16 சதவீதம் குறைவு</a></p><p>* நாடு முழுவதும் மழைப் பற்றாக்குறை 15.5 சதவீதமாக குறைந்துள்ளது.</p><p>* அந்தமான்-நிக்கோபார் தீவுகளில் 6 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது.&nbsp;</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vigilance-raid-senthil-balajis-karur-residence">கரூரில் செந்தில் பாலாஜி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை</a></p><p>* செந்தில் பாலாஜியின் வீட்டில் காலை 7 மணி முதல் சோதனை நடைபெற்று வருகிறது.</p><p>* செந்தில் பாலாஜியின் பெற்றோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/mumbai-popular-clubs-licenses-cancelled-health-violations-food-safety-action">மும்பை பிரபல கிளப்புகளின் உரிமங்கள் ரத்து: சுகாதாரக் குறைபாடு காரணமாக உணவு பாதுகாப்புத்துறை அதிரடி நடவடிக்கை!... </a></p><p>*உணவுகள் தயாரிக்கப்படும் சமையலறைப் பகுதிகளில் கரப்பான் பூச்சிகள், ஈக்கள் மற்றும் பிற பூச்சிகளின் நடமாட்டம் அதிக அளவில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.</p><p>*பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் உறுப்பினர்களாக இருக்கும் முன்னணி கிளப்புகளிலேயே இத்தகைய சுகாதாரச் சீர்கேடுகள் கண்டறியப்பட்டது பொதுமக்கள் மற்றும் உறுப்பினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/us-senate-russia-sanctions-bill-risk-100-percent-tariffs-on-india-china">அமெரிக்க செனட் சபையில் ரஷியா மீதான தடைகள் மசோதா: இந்தியா, சீனாவிற்கு 100% வரி விதிக்கும் அபாயம்!... </a></p><p>*அமெரிக்க செனட் சபையில் (Senate) ரஷியா மற்றும் ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்கும் புதிய சட்ட மசோதா முதற்கட்ட வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது.</p><p>* ரஷிய எண்ணெயைக் கள்ளத்தனமாகக் கடத்தும் கப்பல்கள் மற்றும் அவற்றுக்குத் துணைபுரியும் நிதி நிறுவனங்கள் மீது தடை விதிக்கப்படும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/paid-menstrual-leave-for-women-high-court-orders-interim-report-to-government">பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு: இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!... </a></p><p>*இந்த வழக்கு விசாரணையை வருகிற ஆகஸ்ட் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.</p><p>*கர்நாடகா, பீகார் மற்றும் ஒடிசா போன்ற சில மாநிலங்களில் ஏற்கனவே மாதவிடாய் விடுப்பு குறித்த கொள்கைகள் நடைமுறையில் உள்ளன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/dharmendra-pradhan-quits-over-neet-gets-rousing-odisha-reception">தர்மேந்திர பிரதானுக்கு ஒடிசாவில் பிரம்மாண்ட வரவேற்பு: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு!... </a></p><p>*தொண்டர்கள் அவருக்கு ஆதரவாக பதாகைகளை ஏந்தியும், "தர்மேந்திர பிரதான் ஜிந்தாபாத்" என கோஷமிட்டும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.</p><p>*பாஜகவினர் விழா எடுத்து வரவேற்பு அளிப்பது தவறான முன்மாதிரி என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/police-open-fire-in-pakistan-occupied-kashmir-20-killed-50-injured">பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போலீசார் துப்பாக்கிச் சூடு: 20 பேர் உயிரிழப்பு; 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!... </a></p><p>**காவல்துறையின் இந்த கொடூரத் தாக்குதலால் அப்பகுதியில் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. </p><p>*பல இடங்களில் தொலைத்தொடர்புச் சேவைகள் முடக்கப்பட்டு, ராணுவத்தின் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/postal-charges-to-change-from-the-1st">தபால் கட்டணம் 1-ந் தேதி முதல் மாற்றம்- விரைவு சேவைக்கு புதிய கட்டணங்கள் அறிவிப்பு</a></p><p>* பொதுமக்கள் மற்றும் மொத்த வாடிக்கையாளர்களுக்காக '24 விரைவு தபால்' மூலம் அனுப்பப்படும் பொருட்கள் 24 மணி நேரத்துக்குள் வழங்கப்படும்.</p><p>* சேவைகள் தற்போது டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் ஐதராபாத் ஆகிய 6 நகரங்களில் மட்டுமே கிடைக்கின்றன.</p>]]></content:encoded></item><item><title>‘காவிரி விவகாரம் தொடர்பாக என்னை சந்திக்க முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்’ - டி.கே.சிவகுமார்</title><link>https://www.maalaimalar.com/news/national/chief-minister-vijay-has-written-a-letter-seeking-to-meet-me-regarding-the-cauvery-issue-dk-shivakumar</link><comments>https://www.maalaimalar.com/news/national/chief-minister-vijay-has-written-a-letter-seeking-to-meet-me-regarding-the-cauvery-issue-dk-shivakumar#comments</comments><guid isPermaLink="false">464c14ec-06c6-4b30-9c1a-833ab12904ea</guid><pubDate>Wed, 29 Jul 2026 10:22:54 +0000</pubDate><atom:updated>2026-07-29T10:22:54.968Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Cauvery Issue,காவிரி விவகாரம்,முதலமைச்சர் விஜய்,Karnataka CM DK Shivakumar,கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/jdjtf4yn/New-Project-2026-07-29T154101.022.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “தற்போது தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது... விஜய்யிடம் பேசிவிட்டேன்” - டி.கே. சிவகுமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/jdjtf4yn/New-Project-2026-07-29T154101.022.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரி ஒழுங்காற்றுக்குழு தமிழ்நாட்டிற்கு 3,500 கன அடி தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவிற்கு உத்தரவிட்ட நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர்.,</p><p>“நீர்ப்பாசன விவகாரம் தொடர்பாக, நேற்று அவர்கள் சிறிதளவு தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்று ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளனர். அது குறித்த விவரங்கள் எங்களுக்கு இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வது குறித்து அமைச்சர் எம்.பி. பாட்டீல் உள்ளிட்ட எங்கள் அமைச்சர்கள் மற்றும் அனைத்து அதிகாரிகளுடனும் நான் ஆலோசனை நடத்தியுள்ளேன்.</p><p>இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளோம். அதன்பிறகு ஒரு முடிவை எடுப்போம். அந்த நடவடிக்கைக்குப் பிறகு, நான் பெங்களூரு சென்றதும் எதிர்க்கட்சித் தலைவர்களையும் சந்தித்துப் பேசுவேன்.</p><p>இதற்கிடையில், சில விஷயங்கள் குறித்து என்னிடம் நேரில் வந்து பேசுவதற்குத் தமிழ்நாடுத் தரப்பிலிருந்தும் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலாளரும் எனக்குக் கடிதம் எழுதியுள்ளார்; தொலைபேசியிலும் என்னிடம் பேசியுள்ளனர். </p><p>அவர்களை மரியாதையுடன் நடத்துவதும், அவர்களுக்குச் சேர வேண்டியதை வழங்குவதும் எங்கள் கடமையாகும்.'சரி, வாருங்கள்' என்று நான் அவர்களிடம் கூறியுள்ளேன். அதோடு, நமது மாநிலத்தின் காவிரிப் படுகைப் பகுதிகள் குறித்தும் நான் ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளேன்; அப்பகுதிகளை ஆய்வு செய்வதற்கு ஹெலிகாப்டர்களை ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளேன்.” என தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>சிங்கப்பெண்கள் மேம்பாட்டு திட்டம்: ரூ.7 ஆயிரம் கோடி கடன் வழங்க முதலமைச்சர் விஜய் முடிவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-decided-to-provide-loans-worth-rs-7000-crore</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-decided-to-provide-loans-worth-rs-7000-crore#comments</comments><guid isPermaLink="false">2becb775-6771-4523-8502-586826f5239f</guid><pubDate>Wed, 29 Jul 2026 10:16:12 +0000</pubDate><atom:updated>2026-07-29T10:16:12.130Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,சிங்கப்பெண்கள் மேம்பாட்டு திட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/vh3ytw33/Vijay07.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/vh3ytw33/Vijay07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>இளம்பெண்கள், நலிவடைந்த பிரிவினருக்கு ரூ.7 ஆயிரம் கோடி கடன் வழங்கும் அறிவிப்பு வருகிற பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.</aside><h2><strong>ஆலோசனை</strong></h2><p>தமிழக பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் தலைமைச் செயலகத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">முதலமைச்சர் விஜய்</a> தலைமையில் ஆய்வு கூட்டம் தினமும் நடைபெற்று வருகிறது.</p><p>இதில் கூட்டுறவு துறை தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில், ரேஷன் கடைகள் மேம்பாடு, வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்பாக முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார். </p><h2><strong>கூட்டுறவு துறை முடிவு</strong> </h2><p>இதனைத் தொடர்ந்து, சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, ‘சிங்கப் பெண்கள் மேம்பாட்டு திட்டம்’ என்ற பெயரில் இளம்பெண்கள், நலிவடைந்த சமூகத்தினர் தொழில் தொடங்குவதற்காக, தொழில் முனைவோர் கடன்களை வழங்க, கூட்டுறவு துறை முடிவு செய்து உள்ளது. </p><p>இதற்காக இந்த ஆண்டில் சுய உதவி குழுக்களுக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.</p><p>இது தொடர்பாக  முதலமைச்சரின் அறிவுறுத்தல் படி, சிங்கப்பெண்கள் மேம்பாட்டு திட்டம் என்ற பெயரில் இளம்பெண்கள், நலிவடைந்த பிரிவினருக்கு ரூ.7 ஆயிரம் கோடி கடன் வழங்கும் அறிவிப்பு வருகிற பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் பல்வேறு கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் கடன், நகைக் கடன், சுய உதவிக்குழு கடன், சிறு வணிக கடன் உள்ளிட்ட பல வகையான கடன்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும்..!- ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/world/india-urges-end-to-attacks-on-ships-in-hormuz-strait-at-un-security-council</link><comments>https://www.maalaimalar.com/news/world/india-urges-end-to-attacks-on-ships-in-hormuz-strait-at-un-security-council#comments</comments><guid isPermaLink="false">fc36bae8-6dbe-418c-8779-2a9064f9d7e2</guid><pubDate>Wed, 29 Jul 2026 10:02:49 +0000</pubDate><atom:updated>2026-07-29T10:02:49.101Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,UN Security Council,ஐநா பாதுகாப்பு சபை,ஹார்முஸ் ஜலசந்தி,straight of hormuz,</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/c9aj10y6/UN.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Parvathaneni Harish]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/c9aj10y6/UN.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் மீதான தாக்குதலை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்</p><p>ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா வலியுறுத்தி உள்ளது.</p><p>ஐ.நா. பாதுகாப்பு சபையில் நடந்த விவாதத்தில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி பார்வதனேனி ஹரிஷ் பேசியதாவது:-</p><p>மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நடந்து வரும் மோதலில் ஏற்பட்ட  சிறிய அமைதிக்கு பிறகு, தாக்குதல்கள் மீண்டும் தொடங்கியது மிகவும் கவலையளிக்கிறது.</p><p>பதற்றத்தை உடனடியாகத் தணிக்குமாறு இந்தியா அழைப்பு விடுக்கிறது. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் மீதான தாக்குதல்களில் பல இந்தியர்கள் காயமடைந்தனர், ஒரு இந்தியர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். மேலும், ஒருவர் காணாமல் போய் உள்ளார்.</p><p>மாலுமிகளை இலக்காகக் கொண்டு நடத்தப்படும் வன்முறைச் செயல்களையும், ஹார்முஸ் ஜலசந்தி போன்ற சர்வதேச நீர்வழிகள் வழியாகச் சுதந்திரமான மற்றும் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் செயல்களையும் இந்தியா தொடர்ந்து கண்டித்து வருகிறது. </p><p>இப்பிராந்தியத்தில் வணிகக் கப்பல்கள் மற்றும் பொதுமக்களுக்கான உள்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு நடத்தப்படும் தாக்குதல்கள் முடிவுக்கு வர வேண்டும். </p><p>சர்வதேச சட்டங்களுக்கு இணங்க, இப்பிராந்தியத்தின் சர்வதேச நீர்வழிகள் வழியாகச் சுதந்திரமான மற்றும் தடையற்ற கப்பல் போக்குவரத்து மற்றும் வர்த்தகம் ஆகியவை மிக விரைவில் மீண்டும் உறுதி செய்யப்பட வேண்டும். </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>‘போராட்டத்தில் ஈடுபடும் பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமையை விரும்புகிறார்கள்’ - ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் மோகன்தாஸ் சர்ச்சை பேச்சு!</title><link>https://www.maalaimalar.com/news/national/women-participating-in-protests-desire-gang-rape-rss-supporter-mohandass-controversial-statement</link><comments>https://www.maalaimalar.com/news/national/women-participating-in-protests-desire-gang-rape-rss-supporter-mohandass-controversial-statement#comments</comments><guid isPermaLink="false">8c4dcd16-1bae-41d7-9fb9-3f9c676bb3b5</guid><pubDate>Wed, 29 Jul 2026 09:55:58 +0000</pubDate><atom:updated>2026-07-29T09:55:58.135Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Protesters,போராட்டக்காரர்கள்,RSS ideologue TG Mohandas,ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதி,டிஜி மோகன்தாஸ்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/pk04jf5s/New-Project-2026-07-29T145853.893.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘போராட்டத்தில் ஈடுபடும் பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமையை விரும்புகிறார்கள்’ - ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் மோகன்தாஸ் சர்ச்சை பேச்சு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/pk04jf5s/New-Project-2026-07-29T145853.893.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒற்றை விமர்சனத்தால் உருவாகி, தற்போது ஒட்டுமொத்த நாட்டையும் திரும்பி பார்க்க வைத்திருக்கும் இயக்கம் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி. </p><p>அரசியல் கட்சிகள்கூட அமைதியாக இருந்தநிலையில், நைய்யாண்டி இயக்கமாக உருவான ஒரு அமைப்பு, டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டத்தை தொடங்கி, அந்தப் போராட்டத்தில் வெற்றியும் கண்டுள்ளது. </p><h2>அமைச்சர் ராஜினாமா</h2><p>மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை முன்னிறுத்தி ஜூன்.20ம் தேதி தொடங்கிய போராட்டம், பிரதான் மத்திய கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து  ஜூலை.25 முடிவுக்கு வந்தது. </p><p>கிட்டத்தட்ட 36 நாட்கள் நடைபெற்ற இப்போராட்டம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கவனம் ஈர்த்தது. இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் கலந்துகொண்டனர். </p><p>இதனிடையே இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பாஜக மற்றும் வலதுசாரி கொள்கைகளை ஆதரிப்பவர்கள் என பலரும் கடுமையாக விமர்சித்திருந்தனர். அந்த வகையில் கேரளாவைச் சேர்ந்த, ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதியும், பா.ஜ.க அறிவுசார் பிரிவின் முன்னாள் தலைவருமான டி.ஜி. மோகன்தாஸ் கடுமையாக விமர்சித்திருந்தார்.  </p><h2>நானாக இருந்திருந்தால் சுட்டிருப்பேன்</h2><p>"பத்ரிகா" யூடியூப் சேனலில் அவர் வெளியிட்ட வீடியோக்களில்.,</p><p>அதிகாரம் தன் கையில் இருந்திருந்தால், அந்தப் பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, மூன்று முறை எச்சரிக்கை விடுத்து, அதன்பிறகும் கலைந்து செல்லாவிடில் <strong>"அவர்களை சுட்டிருப்பேன்"</strong> என்று கூறியுள்ளார்.  </p><p>இந்த துப்பாக்கிச்சூட்டில் சிலர் இறப்பார்கள், சிலர் காயமடைவார்கள், நான்கு மணி நேரத்தில் நிலைமை சரியாகிவிடும், அதன் பிறகு உடல்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வேன் என்றும் தெரிவித்திருந்தார். </p><p>தொடர்ந்து போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் குறித்துப் பேசிய மற்றொரு வீடியோவில்,</p><p>போராட்டங்களில் கலந்துகொள்ளும் முற்போக்கு, மதச்சார்பற்ற மற்றும் இடதுசாரிப் பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமையை விரும்புகிறார்கள் என்றும், அங்கு பாலியல் வன்கொடுமைகள் நடந்தாலும் அவர்கள் புகார் அளிக்க மாட்டார்கள் என்றும் மிகவும் மோசமான, இழிவான தனது கேவலமான மனநிலையை, புரிதலை வெளிப்படுத்தியிருந்தார்.</p><h2>ஆர்.எஸ்.எஸ். விளக்கம்</h2><p>மோகன்தாஸின் இந்த கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்து அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு மற்றும் பிற அமைப்புகள் அளித்த புகாரின் பேரில், திருவனந்தபுரம் சைபர் போலீஸார் அவர்மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.</p><p>இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்ததைத் தொடர்ந்து, மோகன்தாஸ் அமைப்பின் எந்தவொரு பொறுப்பிலும் இல்லை என்றும், அவர் கூறிய கருத்துக்கள் அனைத்தும் அவருடைய <strong>சொந்தக் கருத்துக்கள் மட்டுமே</strong> என்றும், அதற்கும் தங்கள் அமைப்புக்கும் எவ்விதத் தொடர்புமில்லை என்றும் ஆர்.எஸ்.எஸ். தெரிவித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>ஐசிசி டி20 தரவரிசை: ஜெட் வேகத்தில் உச்சம் தொட்ட சூர்யவன்ஷி</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/sooryavanshi-takes-big-strides-in-t20i-rankings</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/sooryavanshi-takes-big-strides-in-t20i-rankings#comments</comments><guid isPermaLink="false">311b22b2-875d-463d-a349-337a24f94684</guid><pubDate>Wed, 29 Jul 2026 09:54:24 +0000</pubDate><atom:updated>2026-07-29T09:54:24.810Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வைபவ் சூர்யவன்ஷி,ஐசிசி தரவரிசை,ICC Ranking,Vaibhav Sooryavanshi</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/p249k3mm/vaibhav.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ sooryavanshi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/p249k3mm/vaibhav.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஐசிசி வெளியிட்டுள்ள டி20 தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் வைபவ் சூர்யவன்ஷி அசுர வேகத்தில் முன்னேறி டாப் 50 பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.</p><h2>சூர்யவன்ஷி அசத்தல்</h2><p>டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் சூர்யவன்ஷி 230 இடங்கள் முன்னேறி 48வது இடம் பிடித்துள்ளார்.</p><p>சமீபத்தில் நடந்த ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரில் சூர்யவன்ஷி அதிரடியாக ஆடியதே இந்த முன்னேற்றத்துக்கு காரணம் ஆகும்.</p><p>முதலிடத்தில் இந்தியாவின் இஷான் கிஷனும், மூன்றாவது இடத்தில் அபிஷேக் சர்மாவும், ஆறாவது இடத்தில் திலக் வர்மாவும் உள்ளனர்.</p><h2>சுப்மன் கில் மீண்டும் முதலிடம்</h2><p>இதேபோல், ஒருநாள் கிரிக்கெட்டுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் சுப்மன் கில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.</p><p>நியூசிலாந்தின் டேரில் மிட்செல் இரண்டாவது இடத்தை தக்கவைத்துள்ளார்.</p><p>விராட் கோலி (3-வது இடம்), ரோகித் சர்மா (4-வது இடம்) ஆகியோர் அதே இடங்களில் நீடிக்கின்றனர். ஆப்கானிஸ்தானின் இப்ராகிம் சட்ரன் 5வது இடத்தில் உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>VIDEO: மெட்ரோ ரெயிலில் பயணித்த முதலமைச்சர் விஜய்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-travelling-metro-train</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-travelling-metro-train#comments</comments><guid isPermaLink="false">064f7579-92e2-4eda-90d2-583da9c7d502</guid><pubDate>Wed, 29 Jul 2026 09:51:31 +0000</pubDate><atom:updated>2026-07-29T09:51:31.338Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Metro Train,மெட்ரோ ரெயில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/4ysifqav/vijay0.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/4ysifqav/vijay0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>சென்னை மெட்ரோ ரெயிலின் 2-ம் கட்ட வழித்தடமான போரூர்-பூந்தமல்லி இடையிலான ஆளில்லா மெட்ரோ ரெயிலில் ஏறி பூந்தமல்லி செல்கிறார்.</aside><h2><strong>ஆய்வு</strong></h2><p>முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்</a> சென்னை மாநகரில் நடைபெறும் பல்வேறு திட்டப் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் இன்று மாலை 4 மணி அளவில் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து ஆய்வு செய்ய உள்ளார்.</p><p>இதற்காக தலைமைச் செயலகத்தில் இருந்து காரில் புறப்பட்டு அண்ணாசாலை வந்த முதலமைச்சர் விஜய் ஓமந்தூரார் மெட்ரோ ரெயில் நிலையம் சென்று மெட்ரோவில் பயணம் செய்தார். நந்தனம் மெட்ரோ ரெயில் நிலையம் வரை பயணம் செய்யும் அவர் அங்கு இறங்கி மெட்ரோ ரெயில் தலைமையகம் மற்றும் கட்டுப்பாடு மையத்திற்கு சென்று அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்கிறார்.</p><p>அதன்பிறகு அங்கிருந்து காரில் ஏறி கிண்டி கத்திப்பாரா செல்கிறார். அங்கு பூந்தமல்லி ரோட்டில் நடைபெறும் மெட்ரோ கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.</p><h2><strong>ஆளில்லா மெட்ரோ ரெயில்</strong></h2><p>பின்னர் அங்கிருந்து காரில் போரூர் செல்கிறார். சென்னை மெட்ரோ ரெயிலின் 2-ம் கட்ட வழித்தடமான போரூர்-பூந்தமல்லி இடையிலான ஆளில்லா மெட்ரோ ரெயிலில் ஏறி பூந்தமல்லி செல்கிறார். பின்னர் அங்கிருந்து மீண்டும் ஆளில்லா ரெயிலில் போரூர் வரை பயணிக்கிறார். போரூரில் இறங்கி கார் மூலம் வீட்டுக்கு திரும்புகிறார்.</p> <h2><strong>பாதுகாப்பு</strong></h2><p>முதலமைச்சர் விஜய் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வதால் பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.</p><figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Chief Minister C. Joseph Vijay purchased a ticket to travel on the Chennai Metro Rail. <a href="https://t.co/Mj9hm8jQUn">pic.twitter.com/Mj9hm8jQUn</a></p>&mdash; TVK Virtual Warriors HQ (@TVKWarriorsHQ) <a href="https://x.com/TVKWarriorsHQ/status/2082406872175489127?ref_src=twsrc%5Etfw">July 29, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>அரசு வேலைக்கு தேர்வான 126 பேருக்கு பணி நியமன ஆணைகள் - முதலமைச்சர் விஜய் வழங்கினார்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-handed-over-appointment-orders-to-126-individuals-selected-for-government-jobs</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-handed-over-appointment-orders-to-126-individuals-selected-for-government-jobs#comments</comments><guid isPermaLink="false">2a49bc42-3545-45b8-8efb-667f5fdaee54</guid><pubDate>Wed, 29 Jul 2026 09:31:08 +0000</pubDate><atom:updated>2026-07-29T09:31:08.157Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TNPSC,விஜய்,தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்,cm vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/bewdw12s/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் விஜய் வழங்கினார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/bewdw12s/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>தலைமைச் செயலகத்தில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-consult-with-chicke%E0%AE%AFn-biryani-with-nutritious-meal-for-government-school-students">முதலமைச்சர் விஜய்</a> இன்று மனித வள மேலாண்மைத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம், தொகுதி–I பணிகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 78 நபர்களுக்கும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பல்வேறு பணி இடங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 48 நபர்களுக்கும் பணிநியமன ஆணைகளை வழங்கினார். </p> <p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்</a> மூலம், தொகுதி-I பணிகளுக்கு 28 துணை ஆட்சியர்கள், 7 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், 19 உதவி ஆணையர்கள் (வணிக வரி), 15 உதவி இயக்குநர்கள் (ஊரக வளர்ச்சி), 3 மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர்கள் மற்றும் 6 உதவி ஆணையர்கள் (தொழிலாளர்) என மொத்தம் 78 நபர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதில், தொழிலாளர் நலத்துறையின் உதவி ஆணையர் (தொழிலாளர்) பணியிடம் முதன்முறையாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி-I-இல் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.  </p> <p>மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்  ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் மூலம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில், 40 உதவி பொறியாளர்கள், 6 சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் மற்றும் 2 நூலகர்கள் தரம்-II என மொத்தம் 48 நபர்கள் தெரிவு செய்யப்பட்டு உள்ளனர். </p><h2>தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்</h2><p>அதனடிப்படையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம், தொகுதி–I பணிகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 78 நபர்களுக்கும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பல்வேறு பணியிடங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 48 நபர்களுக்கும் முதலமைச்சர் விஜய் இன்று பணிநியமன ஆணைகளை வழங்கி, அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். </p> <p>நிகழ்ச்சியில், மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் ராஜீவ், தலைமைச் செயலாளர் மு.சாய்குமார், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, மனித வள மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் சி. சமயமூர்த்தி, இ.ஆ.ப., தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவர் அனுராக் மிஷ்ரா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>உக்ரைன் துறைமுகத்தில் தாக்குதல்- கப்பலில் 13 இந்திய மாலுமிகள் தவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/black-sea-ukraine-port-attack-indian-sailors-trapped</link><comments>https://www.maalaimalar.com/news/world/black-sea-ukraine-port-attack-indian-sailors-trapped#comments</comments><guid isPermaLink="false">c329ac20-8718-46cf-9a51-994661e4809c</guid><pubDate>Wed, 29 Jul 2026 09:29:22 +0000</pubDate><atom:updated>2026-07-29T09:29:22.016Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Attack,உக்ரைன் ரஷியா தாக்குதல்,கருங்கடல்,Indian sailors,இந்திய மாலுமிகள்,russia ukrain war,ukraine port</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/y9zbi5o6/Attack.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Russia-ukraine attack]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/y9zbi5o6/Attack.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ரஷியா- உக்ரைன் இடையேயான போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் கருங்கடலில் உள்ள உக்ரைன் துறை முகத்தில் இருந்து புறப்பட்ட சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 4 இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர். </p><p>அதேபோல் கருங்கடல் பகுதியில் ரஷிய எல்லைக்குட்பட்ட கடலில் பயணித்த கப்பல் மீது நடந்த தாக்குதலில் ஒரு இந்திய மாலுமி பலியானார்.</p><p>இந்த நிலையில் உக்ரைன் துறைமுகத்தில் நடந்த தாக்குதல் காரணமாக அங்கு நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் இருக்கும் 13 இந்திய மாலுமிகள் உள்பட 15 பேர் சிக்கி தவித்து வருகிறார்கள். கருங்கடல் பகுதியில் உள்ள உக்ரைனின் சோர்னோ– மோர்ஸ்க் துறைமுகம் அருகே ஏவுகணை, டிரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. </p><p>இந்த துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள எம்.வி. அமீர்1 என்ற சரக்கு கப்பலில் 13 இந்திய மாலுமிகள் உள்பட 15 பேர் உள்ளனர். அந்த கப்பல் அருகே தீவிர தாக்குதல்கள் நடைபெற்றன. இதனால் கப்பல் இருக்கும் பகுதியில் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. </p><p>இதுதொடர்பான வீடியோ வெளியாகி இருக்கிறது. தாக்குதல்கள் காரணமாக கப்பலில் 13 இந்திய மாலுமிகள் உள்பட 15 பேர் சிக்கி தவித்து வருகிறார்கள்.</p><p>இதையடுத்து மத்திய அரசுக்கு இந்திய மாலுமிகள் சங்கம் கோரிக்கை ஒன்றை விடுத்து உள்ளது. </p><p>இது தொடர்பாக அந்த சங்கம் கூறும்போது,"உக்ரைன் துறைமுகத்தில் கப்பலுக்கு மிக அருகில் தொடர்ச்சியாக டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. </p><p>எந்த நேரத்திலும் கப்பல் நேரடியாகத் தாக்கப்படலாம் என்ற அச்சத்தில் பணியாளர்கள் உள்ளனர். எனவே மத்திய அரசு, கப்பல் உரிமையாளர்கள், கப்பல் பதிவு செய்யப்பட்ட நாட்டின் நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் உடனடியாகப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்து, அவர்களை விரைவாக  நாடு திரும்ப ஏற்பாடு செய்யுமாறு கேட்டு கொள்கிறோம்.</p><p>மோதல் நடைபெறும் பகுதிகளில் இந்திய மாலுமிகள் எளிதில் தாக்கப்படக்கூடிய இலக்குகளாக விடப்படக்கூடாது. இதில் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்து உள்ளது.</p><p>இந்த நிலையில் உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:-</p><p>இந்திய மாலுமிகள் உள்ள எம்.வி. அமீர்1 கப்பல் தொடர்பான விவகாரம் எங்கள் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு நாங்கள் மிக உயர்ந்த முன்னுரிமை அளித்து வருகிறோம். கப்பலில் உள்ள அனைத்து இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய சம்பந்தப்பட்ட அனைவருடனும் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்.</p><p>இவ்வாறு தெரிவித்து உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>இது இந்தியா அல்ல, பிரான்ஸ்: இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு ரூ.2 கோடி அபராதம் - பின்னணி என்ன? </title><link>https://www.maalaimalar.com/news/national/this-is-france-not-india-infosys-fined-2-crore-what-is-the-backstory</link><comments>https://www.maalaimalar.com/news/national/this-is-france-not-india-infosys-fined-2-crore-what-is-the-backstory#comments</comments><guid isPermaLink="false">f0a21960-3ace-419b-af49-cdfb1f78d664</guid><pubDate>Wed, 29 Jul 2026 09:25:01 +0000</pubDate><atom:updated>2026-07-29T09:25:01.627Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Infosys,இன்ஃபோசிஸ்,employee working time,தொழிலாளர் வேலை நேரம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/f213rvmg/New-Project-2026-07-29T143101.647.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இது இந்தியா அல்ல, பிரான்ஸ்: இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு ரூ.2 கோடி அபராதம் - பின்னணி என்ன? ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/f213rvmg/New-Project-2026-07-29T143101.647.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரான்ஸ் நாட்டின் தொழிலாளர் நலச்சட்டங்களுக்கு இணங்காததால், இந்தியாவின் இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு சுமார் ரூ.2 கோடி அபராதம் விதித்துள்ளது அந்நாட்டு தொழிலாளர் நல ஆணையம். </p><p>நிறுவனத்தின் வேலை நேரங்களைப் பதிவு செய்யும் முறை, அந்நாட்டின் தொழிலாளர் விதிமுறைகளை பின்பற்றவில்லை எனக் கூறப்படுகிறது. ஊழியர்கள் உள்நுழையும் மற்றும் வெளியேறும் நேரங்கள் முறையாகப் பதியப்படவில்லை; வேலை நேரப் பதிவுகளை தணிக்கை செய்யவோ அல்லது ஆய்வுக்கு உட்படுத்தவோ தகுந்த ஆதாரங்கள் இல்லை.</p><p>சில குறிப்பிட்ட பிரிவு ஊழியர்களின் கூடுதல் பணி நேரத்தை நிறுவனத்தின் மென்பொருளால் கண்காணிக்க முடியவில்லை போன்ற குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவை துல்லியமாக பதிவு செய்யப்படவில்லை என இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. </p><h2>பிரெஞ்சு சட்டம் கூறுவது என்ன?</h2><p>பிரெஞ்சு தொழிலாளர் சட்டத்தின்படி, முதலாளிகள் ஊழியர்களின் வேலை நேரங்கள் குறித்த துல்லியமான பதிவுகளைப் பராமரிக்க வேண்டும் . அங்கு வாரத்திற்கு 35 மணி நேரம் மட்டுமே வேலை நேரமாக அனுமதிக்கப்படுகிறது.</p><p>ஊழியர்களின் தினசரி, வாராந்திர ஓய்வு நேரங்கள் மற்றும் கூடுதல் வேலைக்கான ஊதியம் ஆகியவை சட்டப்படி துல்லியமாக ஆவணப்படுத்தப்பட வேண்டும். </p><h2>இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பதில்</h2><p>இந்த அபராதம் தங்களது நிதிநிலை, செயல்பாடுகள் அல்லது பிற வணிக நடவடிக்கைகளில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது. </p><h2>இந்தியா அல்ல, பிரான்ஸ்</h2><p>இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் என். ஆர். நாராயண மூர்த்தி, இந்திய இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று கூறிய கருத்து ஏற்கனவே இந்தியாவில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. </p><p>இந்நிலையில், பிரான்சில் ஊழியர்களைப் பாதுகாக்கும் சட்டங்களின்படி இன்போசிஸ் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டதால், சமூக வலைதளங்களில் <strong>"இது இந்தியா அல்ல, பிரான்ஸ்"</strong> என தலைப்பிடப்பட்டு, இந்த செய்தி இணையவாசிகளால் பரப்பப்பட்டு வருகிறது. </p>]]></content:encoded></item><item><title>வயிற்றுப் புண்கள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?-மருத்துவர்கள் அறிவுறுத்தல்!</title><link>https://www.maalaimalar.com/health/generalmedicine/how-to-prevent-stomach-ulcers-doctors-explain</link><comments>https://www.maalaimalar.com/health/generalmedicine/how-to-prevent-stomach-ulcers-doctors-explain#comments</comments><guid isPermaLink="false">f366b8eb-a8ea-445b-ac42-0d245503ae5f</guid><pubDate>Wed, 29 Jul 2026 09:23:24 +0000</pubDate><atom:updated>2026-07-29T09:23:24.947Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Health,ஆரோக்கியம்,HealthTips,உடல்நலம்,stomach ulcers,Peptic Ulcer,வயிற்றுப் புண்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/xdaq41ea/art.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ stomach ulcers]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/xdaq41ea/art.jpg?w=280" width="280"></media:thumbnail><category>பொது மருத்துவம் (General Medicine)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வயிற்றுப் புண்கள் என்பது இரைப்பை அல்லது சிறுகுடலின் ஆரம்பப் பகுதியில் உள்ள உள் சவ்வில் ஏற்படும் புண்களாகும். மருத்துவ ரீதியாக இது "பெப்டிக் அல்சர்" என்று அழைக்கப்படுகிறது.</p><p>ஒருகாலத்தில் அதிக கார உணவுகளை உட்கொள்வதால் மட்டுமே வயிற்றுப் புண்கள் ஏற்படுகின்றன என்று நம்பப்பட்டாலும், தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி Helicobacter pylori (H. pylori) என்ற பாக்டீரியா தொற்று மற்றும் வலி நிவாரண மருந்துகளை நீண்டகாலம் பயன்படுத்துவது முக்கிய காரணங்களாகக் கண்டறியப்பட்டுள்ளது. சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை பெற்றால், வயிற்றுப் புண்களை முழுமையாகக் குணப்படுத்த முடியும்.</p><h2><strong>வயிற்றுப் புண்கள் ஏற்படுவதற்கான காரணங்கள்:</strong></h2><p>வயிற்றில் இயல்பாக சுரக்கும் அமிலம் உணவை ஜீரணிக்க உதவுகிறது. இந்த அமிலத்திலிருந்து வயிற்றின் உள் சவ்வைப் பாதுகாக்க ஒரு பாதுகாப்பு அடுக்கு உள்ளது. இந்த பாதுகாப்பு பாதிக்கப்படும்போது அமிலம் நேரடியாக உள் சவ்வை தாக்கி புண்களை உருவாக்குகிறது. H. pylori பாக்டீரியா தொற்று, இபுபுரோஃபென், ஆஸ்பிரின் போன்ற வலி நிவாரண மருந்துகளை நீண்டகாலம் பயன்படுத்துவது, அதிக புகைப்பிடித்தல், மதுபானப் பழக்கம், மன அழுத்தம், ஒழுங்கற்ற உணவுப் பழக்கம் மற்றும் சில அரிய மருத்துவ நிலைகள் ஆகியவை வயிற்றுப் புண்கள் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கின்றன.</p><h2><strong>வயிற்றுப் புண்களின் அறிகுறிகள்:</strong></h2><p>வயிற்றின் மேல் பகுதியில் எரிச்சலுடன் கூடிய வலி வயிற்றுப் புண்களின் முக்கிய அறிகுறியாகும். இந்த வலி வெறும் வயிற்றில் அதிகமாகவும், சிலருக்கு உணவு சாப்பிட்ட பிறகு குறைவதாகவும் இருக்கும். வயிற்று உப்புசம், நெஞ்செரிச்சல், அடிக்கடி ஏப்பம் வருதல், குமட்டல், வாந்தி, பசியின்மை மற்றும் உடல் எடை குறைதல் போன்ற அறிகுறிகளும் காணப்படலாம். </p><figure><img alt="Peptic Ulcer" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/o9013ja1/ul.jpg" /></figure><p>சிலருக்கு ரத்த வாந்தி, கருப்பு நிற மலம் அல்லது திடீர் கடுமையான வயிற்று வலி போன்ற தீவிர அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். இவை புண் தீவிரமடைந்ததற்கான எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கலாம்.</p><h2><strong>நோயைக் கண்டறியும் முறைகள்:</strong></h2><p>மருத்துவர் நோயாளியின் அறிகுறிகள் மற்றும் மருத்துவ வரலாற்றை ஆய்வு செய்த பிறகு தேவையான பரிசோதனைகளை பரிந்துரைப்பார். H. pylori தொற்றைக் கண்டறிய ரத்தம், மலம் அல்லது மூச்சுப் பரிசோதனை செய்யப்படலாம். சிலருக்கு எண்டோஸ்கோபி மூலம் இரைப்பையின் உள் பகுதியை நேரடியாகப் பார்த்து புண் உள்ளதா என்பதை உறுதி செய்வார்கள். தேவையான சூழ்நிலையில் திசு மாதிரியும் எடுத்து ஆய்வு செய்யப்படலாம்.</p><h2><strong>சிகிச்சை முறைகள்:</strong></h2><p>வயிற்றுப் புண்களுக்கு காரணமான அமிலச் சுரப்பைக் குறைக்கும் மருந்துகள் மற்றும் H. pylori தொற்று இருந்தால் அதற்கான ஆன்டிபயாட்டிக் மருந்துகள் வழங்கப்படுகின்றன. மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை முழுமையாக எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம். சிகிச்சை காலத்தில் வலி நிவாரண மாத்திரைகளை தேவையில்லாமல் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். புகைப்பிடித்தல் மற்றும் மதுபானப் பழக்கத்தை நிறுத்துவது குணமடையும் வேகத்தை அதிகரிக்கும் என மருத்துவர்கள் அறிவுருத்தியுள்ளனர்.</p><h2><strong>உணவுப் பழக்கத்தில் கவனிக்க வேண்டியவை:</strong></h2><p>வயிற்றுப் புண்கள் உள்ளவர்கள் நேரம் தவறாமல் சீரான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிக எண்ணெய், காரம் மற்றும் மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அளவோடு சாப்பிடுவது நல்லது. காய்கறிகள், பழங்கள், முழுதானியங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்வது வயிற்று ஆரோக்கியத்திற்கு உதவும். போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும், காபி மற்றும் குளிர்பானங்களை அளவோடு அருந்துவதும் நல்ல பழக்கமாகும்.</p><h2><strong>வயிற்றுப் புண்களைத் தடுக்கும் வழிகள்:</strong></h2><p>வலி நிவாரண மருந்துகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் தொடர்ந்து பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். புகைப்பிடித்தல் மற்றும் மதுபானப் பழக்கத்தை நிறுத்துவது அவசியம். சுத்தமான உணவு மற்றும் குடிநீரைப் பயன்படுத்துவதன் மூலம் H. pylori தொற்று ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கலாம். மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, போதுமான தூக்கம் மற்றும் உடற்பயிற்சியை வழக்கமாகக் கடைப்பிடிப்பதும் வயிற்று ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுகிறது.</p><p>வயிற்றுப் புண்கள் என்பது சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை பெற்றால் முழுமையாகக் குணப்படுத்தக்கூடிய ஒரு நோயாகும். தொடர்ந்து வயிற்று வலி, நெஞ்செரிச்சல் அல்லது ஜீரணக் கோளாறுகள் இருந்தால் அவற்றை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுக வேண்டும். சீரான உணவுப் பழக்கம், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் மருத்துவரின் ஆலோசனைகளைப் பின்பற்றுவதன் மூலம் வயிற்றுப் புண்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைத்து, நல்ல ஜீரண ஆரோக்கியத்தைப் பேண முடியும்</p>]]></content:encoded></item><item><title>துணிக்கடையில் கைவரிசை - ‘திரீ ரோஸஸ்’ திருட்டு கும்பல் கைது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/theft-clothing-store-three-roses-gang-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/theft-clothing-store-three-roses-gang-arrested#comments</comments><guid isPermaLink="false">f63606e9-0215-42f2-afb5-fbef569448c5</guid><pubDate>Wed, 29 Jul 2026 09:13:45 +0000</pubDate><atom:updated>2026-07-29T09:13:45.417Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>robbery,women arrested,திருட்டு கும்பல் கைது</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/7vs2ob3q/arrested.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/7vs2ob3q/arrested.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>துணிக்கடையில் கைவரிசை காட்டிய 3 பெண்களையும் போலீசார் கையும் களவுமாக மடக்கி பிடித்தனர்.</strong></em></p><h2>'த்ரீ ரோஸஸ்’ திருட்டு கும்பல்</h2><p>மத்திய பிரதேசத்தை சேர்ந்த 3 பெண்கள் அடங்கிய குழு தென்னிந்தியாவில் தொடர்ச்சியாக திருட்டு வேலையில் ஈடுபட்டு வந்தது.  இதனால் இவர்களுக்கு ‘த்ரீ ரோஸஸ்’ பெண்கள் திருட்டு கும்பல் என்று போலீசார் பெயர் வைத்தனர். சென்னை மாம்பலத்தில் உள்ள துணிக்கடைகளில் 2 இடங்களில் இந்த கும்பல் கைவரிசை காட்டிவிட்டு தப்பியது. இதையடுத்து அந்த பெண்களின் புகைப்படத்தை புதுச்சேரி காவல்துறைக்கு தமிழக, ஆந்திரா போலீசார் அனுப்பி வைத்தனர்.</p> <h2>புதுச்சேரியில் திருட்டு</h2><p>இந்த நிலையில் தேடப்பட்டு வந்த இந்த 3 பெண்களும் புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள பிரபல துணிக்கடையில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்களை கையும் களவுமாக பிடிக்க போலீசார் திட்டமிட்டனர். இதற்காக மாறுவேடத்தில் துணிக்கடைக்குள் போலீசார் நுழைந்தனர். அங்கு அந்த 3 பெண்களையும் போலீசார் கையும் களவுமாக மடக்கி பிடித்தனர். </p><h2>பெண்கள் கைது</h2><p>புதுச்சேரி போலீசார் கைதான 3 பெண்களையும் சென்னை மாம்பலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். </p><p>இதையடுத்து 3 பேரையும் மாம்பலம் போலீசார் சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.</p>]]></content:encoded></item><item><title>பா.ம.க. தலைவராக அன்புமணி மீண்டும் தேர்வு
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-re-elected-as-pmk-president</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-re-elected-as-pmk-president#comments</comments><guid isPermaLink="false">6bdf0271-72db-46ae-b1c2-67e4bfa5e5c8</guid><pubDate>Wed, 29 Jul 2026 08:44:50 +0000</pubDate><atom:updated>2026-07-29T08:44:50.482Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Ramadoss,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,ராமதாஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/g09dl9k1/anbumaniramadoss.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anbumani ramadoss]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/g09dl9k1/anbumaniramadoss.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பொதுக்குழு கூட்டத்தில் பாமக தலைவராக அன்புமணி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.</strong></em></p><h2>ராமதாஸ் பிறந்தநாள்</h2><p>கடந்த சில தினங்களுக்கு முன்பு பாமக நிறுவனர் ராமதாசின் பிறந்தநாளில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி</a> அவரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.  </p><p>இதையடுத்து, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ராமதாஸ், இனி பாமக தலைவராக அன்புமணி இருப்பார் என்றும் கூறியிருந்தார்.</p> <h2>பாமக பொதுக்குழு கூட்டம்</h2><p>இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள விடுதியில் பாமக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. </p><p>இந்தக் கூட்டத்தில், பாமக தலைவராக அன்புமணி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். பொதுச்செயலாளராக வடிவேல் ராவணன், பொருளாளராக திலகபாமா மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான அறிவிப்பு பொதுக்குழுவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.</p> ]]></content:encoded></item><item><title>சீமான் குறித்து அவதூறு பேச்சு: யூடியூபர்கள் பிஸ்மி, தமிழன் கோகுல் மீது வழக்குப் பதிவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-high-court-orders-fir-against-youtubers-over-defamation-of-seeman</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-high-court-orders-fir-against-youtubers-over-defamation-of-seeman#comments</comments><guid isPermaLink="false">2b4d253c-c9ef-4a35-ae0c-2bc0adca44e9</guid><pubDate>Wed, 29 Jul 2026 08:21:55 +0000</pubDate><atom:updated>2026-07-29T08:21:55.776Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Seeman,சென்னை உயர் நீதிமன்றம்,Madras High Court,சீமான்,YouTuber Bismi,Tamilan Gokul,யூடியூபர் பிஸ்மி,தமிழன் கோகுல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/w79ibbuw/seeman.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Seeman-YouTuber Bismi ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/w79ibbuw/seeman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து இணையதளங்களில் அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாக யூடியூபர்கள் பிஸ்மி மற்றும் தமிழன் கோகுல் ஆகிய இருவர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை  உத்தரவிட்டதையடுத்து, மதுரை சைபர் கிரைம் போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். </p><p>நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை இலக்கு வைத்து யூடியூபர்களான பிஸ்மி மற்றும் தமிழன் கோகுல் ஆகியோர் மிகவும் கொச்சையாகவும், தரக்குறைவாகவும், அவதூறாகவும் வீடியோக்களை வெளியிட்டுப் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது.</p><p>இதுகுறித்து வழக்கறிஞர் தீரன் திருமுருகன் என்பவர் கடந்த ஜூலை 3-ஆம் தேதி காவல் துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித FIR-ம் பதிவு செய்யப்படவில்லை. அரசியல் உள்நோக்கத்துடன் செய்யப்படும் இந்த அவதூறுப் பரப்புரைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தீரன் திருமுருகன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.</p><h2>நீ<strong>திமன்றத்தில் நடைபெற்ற விசாரணை:</strong></h2><p>இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் நில விவகாரம் தொடர்பாக அமைச்சர் ரமேஷ் ரூ.100 கோடி பெற்றதாகப் பேசிய நபர் மீது காவல் துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தது. ஆனால், சீமான் குறித்து இவ்வளவு கொச்சையாகப் பேசியும் காவல் துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் பாரபட்சம் காட்டுகிறது" என்று குற்றம்சாட்டினார்.</p><h2><strong>பாரபட்சமான நடவடிக்கை:</strong></h2><p>மனுதாரரின் வாதத்தைக் கேட்ட நீதிபதி விக்டோரியா கௌரி, காவல் துறையின் செயல்பாட்டிற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். "ஆளும் கட்சி தரப்புக்கோ அல்லது அரசுக்கோ எதிராகப் பேசினால் உடனே நடவடிக்கை எடுத்து கைது செய்கிறீர்கள். அதற்கு உங்களிடம் அதிகாரம் உள்ளது. ஆனால் மற்ற தலைவர்கள் விவகாரத்தில் மட்டும் ஏன் இந்தத் தாமதம்? காவல் துறை பாரபட்சமாகச் செயல்படுகிறதா?" என்று கேள்வி எழுப்பினார்.</p><h2><strong>அரசியல் தலைவர் குறித்த பார்வை:</strong></h2><p>ஒரு தலைவரைப் பற்றி மிகவும் அசிங்கமாகவும் அவதூறாகவும் பேசுவதை நீதிமன்றம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. சீமானைப் பொறுத்தவரை தேர்தலில் வெற்றி பெறலாம் அல்லது தோற்கலாம்; ஆனால் தற்போதைய சூழலில் அவர் தமிழகத்தின் தவிர்க்க முடியாத ஒரு முக்கிய அரசியல்வாதியாக உருவாகியுள்ளார்" எனக் குறிப்பிட்ட நீதிபதி, அவரைப் பற்றி யூடியூபர்கள் மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்திருப்பதை ஏற்கவே முடியாது எனத் தெரிவித்தார்.</p><h2><strong>நீதிமன்றத்தின் இறுதி உத்தரவு:</strong></h2><p>வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில்,</p><p>1.சீமான் குறித்து அவதூறாகப் பேசிய யூடியூபர்கள் பிஸ்மி மற்றும் தமிழன் கோகுல் மீது சைபர் கிரைம் காவல் துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.</p><p>2. வழக்குத் தொடர்பான முதற்கட்ட அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.</p><p>3. இணையதளங்களில் மற்றும் யூடியூப்பில் பரப்பப்பட்டுள்ள அந்த அவதூறு வீடியோக்களை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என உத்தரவு பிறப்பித்தார்.</p><p>இதனையடுத்து, சீமான் குறித்து அவதூறாக பேசிய யூடியூபர்கள் பிஸ்மி மற்றும் தமிழன் கோகுல் மீது மதுரை சைபர் கிரைம் போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் கடைகளை மீண்டும் தனியாரிடம் ஒப்படைக்க முடிவு? - தமிழ்நாடு அரசு ஆலோசனை
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-government-consider-decision-to-hand-tasmac-shops-back-to-private-sector</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-government-consider-decision-to-hand-tasmac-shops-back-to-private-sector#comments</comments><guid isPermaLink="false">bb520e38-14d2-4688-8632-79b4205e79ad</guid><pubDate>Wed, 29 Jul 2026 08:21:05 +0000</pubDate><atom:updated>2026-07-29T08:21:05.543Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,TN Government,Tasmac,டாஸ்மாக்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/pkagd1ln/tasmc.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/pkagd1ln/tasmc.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டாஸ்மாக் கடைகளை தனியாரிடம் ஒப்படைக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.</p><h2>மதுபான கடைகள்</h2><p>தமிழ்நாட்டில் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு, மதுபான கடைகள் தனியாருக்கு ஏலம் மற்றும் குலுக்கல் முறையில் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், பல இடங்களில் பெரிய வியாபாரிகள் கூட்டு சேர்ந்து ஏலத்தை கட்டுப்படுத்தியதாக அரசுக்கு தகவல்கள் வந்தன. இதனால் ஏலம் எடுப்பதில் போட்டி குறைந்து, அரசுக்கு கிடைக்க வேண்டிய உரிமக் கட்டண வருவாயும் பாதிக்கப்பட்டது.</p> <h2>ஜெயலலிதா</h2><p>இதையடுத்து கடந்த 2003-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு, தனியார் மதுபான கடைகளின் உரிமங்களை ரத்து செய்து, அதே ஆண்டு நவம்பர் 29-ந்தேதி முதல் சில்லறை விற்பனையை டாஸ்மாக் மூலம் அரசின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.</p> <p>தனியார் ஏல முறையில் இருந்த முறைகேடுகளை தடுக்கவும், அரசின் வருவாயை அதிகரிக்கவும், மதுபான விற்பனையை ஒழுங்குபடுத்தவும், சட்டவிரோத விற்பனை மற்றும் கள்ளச் சாராயத்தை கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாகவும், நிர்வாக ரீதியாகவும் காரணங்கள் கூறப்பட்டன. </p><p>பின்னர் சில ஆண்டுகளில், <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D">டாஸ்மாக்</a> மாநில அரசின் மிகப்பெரிய வருவாய் ஆதாரங்களில் ஒன்றாக மாறிய நிலையில் ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் தமிழ் நாட்டில் உள்ளது போல் மது விற்பனையை அரசே ஏற்று நடத்துவது குறித்து ஆலோசித்து வந்தது.</p> <h2>தமிழ்நாடு அரசு</h2><p>இந்த நிலையில் 23 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது, டாஸ்மாக் கடைகளை தனியாரிடம் ஒப்படைக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதன் முதல் கட்டமாக மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மட்டும் தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது. இதற்கு தேவையான மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை சட்டத்திருத்த மசோதா, வரவிருக்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p> <h2>தனியாரிடம் ஒப்படைப்பு</h2><p>தமிழ்நாட்டில் தற்போது <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/case-registered-against-senthil-balaji">டாஸ்மாக்</a> நிறுவனத்தின் கீழ் 4,048 சில்லறை மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. மாநில அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித் தரும் துறைகளில் டாஸ்மாக் முக்கியமான ஒன்றாகும். 2025-26ம் ஆண்டுக்கான மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை கொள்கை விளக்க குறிப்பின்படி, 2024–-25 நிதியாண்டில் மது பானங்களுக்கான ஆயத் தீர்வை வரி மற்றும் மதிப்பு கூட்டு வரி மூலம் மட்டும் ரூ.48,344 கோடி வருவாய் மாநில அரசுக்கு கிடைத்து உள்ளது. </p><p>இந்த ஆண்டும் கூடுதல் வரி விதிப்பு மூலம் மேலும் அதிக வருவாய் ஈட்ட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. டாஸ்மாக் கடைகளை தனியாரிடம் ஒப்படைப்பதால் ஏற்படக்கூடிய வருவாய் இழப்பை ஈடுகட்ட, புதிய வருவாய் ஆதாரங்களை கண்டறியவும் தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.</p>]]></content:encoded></item><item><title>இளைஞர்களின் சக்திக்கு மரியாதை கொடுங்கள்..!- மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச்சு</title><link>https://www.maalaimalar.com/news/national/respect-the-power-of-youth-rahul-gandhi-speech-in-lok-sabha</link><comments>https://www.maalaimalar.com/news/national/respect-the-power-of-youth-rahul-gandhi-speech-in-lok-sabha#comments</comments><guid isPermaLink="false">802d1d4b-571d-41e7-bf9d-8868e5b1b4f1</guid><pubDate>Wed, 29 Jul 2026 08:07:49 +0000</pubDate><atom:updated>2026-07-29T08:07:49.976Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,மக்களவை,Loksabha,பொதுத்தேர்வு சட்டத்திருத்த மசோதா</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/h7irkvik/Rahul-handhi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rahul gandhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/h7irkvik/Rahul-handhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பொதுத்தேர்வு சட்டத்திருத்த மசோதா மீதான விவாதத்தில் மக்களவையில் ராகுல் காந்தி உரையாற்றினார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><p>இளைஞர்களின் தன்னெழுச்சி போராட்டத்தை கொச்சைப்படுத்துவதா?</p><p>அனைத்து கட்சியினரும் மாணவர்களின் உணர்வுகளை புரிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.</p><p>இளைஞர்கள் கோபத்தினால் போராட்டத்தில் ஈடுபடவில்லை, ஆதங்கத்தினால் தான் போராடினர்.</p><p>இளைஞர்களின் சக்திக்கு மரியாதை கொடுங்கள். வீதிகளில் இறங்கி போராடிய இளைஞர்களின் ஆற்றல் மற்றும் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.</p><p>நாட்டின் எதிர்காலம் எதை நோக்கி செல்கிறது என்ற சந்தேகம் எழுகிறது. </p><h2>பெருமைப்படும் போராட்டம்</h2><p>இந்தியர்கள் ஒவ்வொருவரும் பெருமை கொள்ளும் வகையில் டெல்லியில் NEET முறைகேட்டுக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது.</p><p>பிறர் குரலை கேட்க மறுப்போரை இன்றைய தலைமுறையினர் முட்டாள்கள் என்கின்றனர். முட்டாள்கள் மட்டுமே எங்கள் குரலுக்கு செவிமடுக்க மறுப்பர் என இளைஞர்கள் கூறுகின்றனர்.</p><p>அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களை கடவுளாக நினைத்துக் கொள்கின்றனர். தங்களுக்கு எல்லாம் தெரியும் என நினைத்துக் கொண்டிருப்பவர்கள் முட்டாள்கள்.</p><p>30 லட்சம் ரூபாய் செலுத்த பணக்காரர்கள் வினாத்தாள் பெறுகின்றனர், ஏழை மாணவர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர்.</p><p>ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்டவர்களே துணை வேந்தராக உள்ளனர்.</p><p>கல்வி விவகாரத்தில் தர்மேந்திர பிரதான் எதிரி இல்லை, ஆர்எஸ்எஸ் தான் உண்மையான எதிரி. நமது நாட்டின் கல்வி அமைப்புகளை ஆர்எஸ்எஸ் இயக்குகிறது.</p><p>என்னை நேருக்கு நேராக எதிர்கொள்ளும் துணிச்சல் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு இல்லை. தைரியம் இருந்தால் அமித்ஷா நாடாளுமன்றத்திற்கு வரட்டும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><p>மக்களவையில் முட்டாள்கள் என்ற வார்த்தையை ராகுல்காந்தி பேசியதற்கு பாஜக எம்பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.</p><h2>அமைச்சர் ரிஜிஜூ கண்டனம்</h2><p>முட்டாள் என குறிப்பிட்டு மக்களவையில் ராகுல் காந்தி பேசியதற்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ரிஜஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>அப்போது கூறிய அவர்,"நாடாளுமன்றத்தில் தவிர்க்கப்பட வேண்டிய வார்த்தைகளை ராகுல் காந்தி பயன்படுத்துகிறார்" என்றார்.</p><h2>சபாநாயகர் அறிவுறுத்தல்</h2><p>பொதுத்தேர்வு மசோதா குறித்து மட்டும் பேசவும், அவை மாண்பை குறைக்கும் வார்த்தை பேசாதீர் எனவும் ராகுலுக்கு சபாநாயகர் அறிவுறுத்தினார்.</p><p>மேலும்,"மசோதா குறித்து மட்டும் பேச வேண்டும், மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்து பேசாதீர்" எனவும் ராகுலுக்கு மீண்டும் சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார்.</p>]]></content:encoded></item><item><title>5 வயது குழந்தை ஃபேக் வீடியோ வருகிறது, ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை: சி.வி. சண்முகம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/5-year-old-child-fake-video-circulates-rule-changes-but-scene-unchanged-cv-shanmugam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/5-year-old-child-fake-video-circulates-rule-changes-but-scene-unchanged-cv-shanmugam#comments</comments><guid isPermaLink="false">3aa630da-d162-4bf4-9609-8e6d005d4517</guid><pubDate>Wed, 29 Jul 2026 07:42:51 +0000</pubDate><atom:updated>2026-07-29T07:42:51.333Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,ADMK,அதிமுக,சிவி சண்முகம்,tvk,CVShanmugam</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/2z7ydm24/Untitled-design-12.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Fake Video Row: Ex-minister C.V. Shanmugam slams circulation of bottle video involving 5-year-old child]]></media:title><media:description type="html"><![CDATA[ C.V. Shanmugam ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/2z7ydm24/Untitled-design-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h3><strong>சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு</strong></h3><p>பெண்கள் குறித்து தரக்குறைவாக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டபோது, அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என முன்னாள் அதிமுக அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">சி.வி.சண்முகம்</a> குற்றம்சாட்டியுள்ளார். </p><p>இதுகுறித்து அவர் கூறுகையில்:-</p><p>எனக்கு மிகப்பெரிய மன உளைச்சல் ஏற்பட்டிருக்கிறது. குடும்பத்திலே ஒரு மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். </p><p>வாழ்க்கையே இன்றைக்கு கேள்விக்குறியாக்கப்பட்டு இருக்கிறது. திருமணமான பெண்கள் மட்டுமல்ல, தன் தாயை ஏன் இப்படி செய்தீர்கள்.   </p><h3><strong>அதிமுகவில் பெண்களுக்கு மரியாதை இல்லை</strong></h3><p>ஜெயலலிதாவால் கட்டி காப்பாற்றப்பட்ட இந்த இயக்கத்திலே என் தந்தை மறைவிற்கு பிறகு, என் அம்மா அரசியல் பயணத்தை தொடர்ந்தார்.</p><p>பெண்களுக்கு மரியாதை கொடுக்கிற இந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திலே, பெண்கள் இழிவாக நடத்தப்படுகிறார்கள்.</p><p>இதுவரை திமுக உள்ளிட்ட எந்தவொரு கட்சியும் குடும்ப பெண்களை தரம் தாழ்ந்து அவர்களுக்கு எதிராக யாரும் செயல்பட்டது இல்லை.</p><p>அம்மாவை பின்பற்றி வந்த லட்சக்கணக்கான பெண்களுக்கு இன்றைக்கு ஏற்பட்டிருக்கிற நிலைமையை பார்த்தால், அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் மோசமாக உள்ளது.</p><p>எனக்கும் <a href="https://www.maalaimalar.com/topic/எடப்பாடி">எடப்பாடி</a>க்கும் கட்சிக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் உங்கள் தலைமையின் கீழ், அம்மாவிற்காக இந்த இயக்கத்திற்கு உழைத்து கொண்டிருக்கிற பெண்களை தரக்குறைவாக மானபங்கப்படுத்தும் நபர்களை, நீங்கள் ஊக்குவித்து கொண்டிருக்கிறீர்கள்.</p><h3><strong>ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை</strong></h3><p>இதையெல்லாம் விட பெண்களை காப்பாற்ற வேண்டிய இந்த காவல்துறையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பது வருத்தமாக உள்ளது. இந்த அரசு ஒரு மாற்றத்திற்கான அரசாக மக்களால் கொண்டு வரப்பட்டது.</p><p>தற்பொழுது உள்ள முதலமைச்சரும் பெண்களுக்கு பாதுகாப்பு தருவேன் என்று கூறுகிறார். சிங்கப்பெண் அதிரடிப்படை  முதல்வர் இன்றைக்கு உருவாக்கி இருக்கிறார்.</p><p>ஆனால் விழுப்புரம் மாவட்டத்தின் நிலைமை மிக மோசமாக உள்ளது. பெண்கள் தைரியமாக பொது வாழ்க்கைக்கு வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள்.</p><p>நல்லாட்சி தரவேண்டும் என்று முதல்வர் நினைக்கிறார், ஆனால் கீழ் உள்ள அலுவலர்கள் மாறவில்லை. ஆட்சி மாறிவிட்டது, ஆனால் காட்சி மாறவில்லை. இன்னும் காவல்துறை தன்னை திருத்திக்கொள்ளவில்லை. மாற்றிக்கொள்ளவில்லை.</p><h3><strong>நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர்</strong></h3><p>31.03.2026 மற்றும் 11.07.2026 செஞ்சியில் ஒரு புகார், 12.06.2026 மற்றும் 21.07.2026 விழுப்புரத்தில் ஒரு புகார் என பல புகார்கள் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ளன.</p><p>ஐந்து வயது குழந்தையின் கையில் ஒரு பாட்டிலை கொடுத்து ஃபேக் வீடியோவை பரப்பி உள்ளனர். இது எந்த விதத்தில் நியாயம்.</p><p>இவ்வாறு முன்னாள் எம்.எல்.ஏ. சி.வி.சண்முகம் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>அசாம் வெள்ளப் பேரழிவு – உயிரிழப்பு 75 ஆக உயர்வு!</title><link>https://www.maalaimalar.com/news/national/assam-flood-tragedy-75-dead</link><comments>https://www.maalaimalar.com/news/national/assam-flood-tragedy-75-dead#comments</comments><guid isPermaLink="false">73f8be8b-1d23-47a9-8d9f-bca4ad2d729e</guid><pubDate>Wed, 29 Jul 2026 07:39:01 +0000</pubDate><atom:updated>2026-07-29T07:39:01.175Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அசாம்,Assam,NDRF,அசாம்  வெள்ளம்,AssamFloods,HimantaBiswaSarma,ஹிமந்தபிஸ்வாசர்மா,FloodReliefFund</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/h25rfifv/AssamFloods" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ AssamFloods ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/h25rfifv/AssamFloods?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D">அசாம்</a> மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கால் ஒட்டுமொத்த மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது. </p><p>தற்போதைய நிலவரப்படி, இந்த இயற்கை பேரிடரில் பலியானோரின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது.</p><h2>4.45 லட்சம் மக்கள் பாதிப்பு</h2><p>அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, நேற்று சிவசாகர் மாவட்டத்தின் நாசிரா வருவாய் வட்டத்தில் வெள்ள நீரில் மூழ்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். </p><p>இதன் மூலம் தற்போது மொத்த உயிரிழப்பு 75 ஆக அதிகரித்துள்ளது. 4.45 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். </p><p>தற்போது சிவசாகர், சராடியோ, கோலாகாட், ஜோர்ஹாட், நகோன், சோனித்பூர் மற்றும் காம்ரூப் மெட்ரோபாலிட்டன் ஆகிய 7 மாவட்டங்கள் தொடர்ந்து வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.</p><p>21 வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட 622 கிராமங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. அதிகபட்சமாக சராடியோ மாவட்டத்தில் 1.42 லட்சம் மக்களும், சிவசாகரில் 97,000 மக்களும், ஜோர்ஹாட்டுகில் 57,000 மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். </p><p>சுமார் 45,341 ஹெக்டேர் பரப்பளவிலான விவசாயப் பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. கோலாகாட் மாவட்டத்தில் உள்ள தன்சிரி ஆறு அபாயக் கட்டத்தைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.</p><h2>நிவாரணத் தொகை 9 லட்சம்</h2><p>பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா பல்வேறு முக்கிய சலுகைகளையும், வரலாற்றுச் சிறப்புமிக்க நிவாரணத் திட்டங்களையும் அறிவித்தார். </p><p>இனி வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நிவாரணம் பெற பிரேத பரிசோதனை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. சம்பந்தப்பட்ட வட்டார அதிகாரி வழங்கும் சான்றிதழே போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>வழக்கமாக வழங்கப்படும் ₹4 லட்சம் அரசு நிவாரணத்துடன், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து கூடுதலாக ₹5 லட்சம் சேர்க்கப்பட்டு, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு மொத்தம் ₹9 லட்சம்வழங்கப்படும். </p><p>வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனவர்கள், ஒரு மாதத்திற்குள் மீட்கப்படாவிட்டால் அவர்களது குடும்பத்திற்கும் இதே ₹9 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Our teams are preparing specialised food kits on a war footing for every family affected by <a href="https://x.com/hashtag/AssamFloods?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#AssamFloods</a>.<br><br>Each kit contains essential supplies, including rice, dal, salt &amp; oil. They are being packed and dispatched round the clock to ensure timely delivery. <a href="https://t.co/T4a3s1jnc0">pic.twitter.com/T4a3s1jnc0</a></p>&mdash; Himanta Biswa Sarma (@himantabiswa) <a href="https://x.com/himantabiswa/status/2082081137304961082?ref_src=twsrc%5Etfw">July 28, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2>ரொக்க உதவி மற்றும் இரட்டிப்பு உதவித்தொகை</h2><p>மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சிவசாகர், சராடியோ, ஜோர்ஹாட் மற்றும் கோலாகாட் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சம் குடும்பங்களுக்கு, உடனடி வீட்டுச் செலவுகளுக்காக 15000 ரூபாய் இடைக்கால நிதி உதவி நேரடியாக அவர்களது வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும்.</p><p>இந்த 4 மாவட்டங்களில் உள்ள திட்டப் பயணிகளுக்கு ஆகஸ்ட் மாதத்திற்கான உதவித்தொகை ரூபாய் 1250-ல் இருந்து 2500 ஆக இரட்டிப்பாகி வழங்கப்படும் என்றும் ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார்.</p><h2>கல்வி நிதியுதவி மற்றும் கட்டணத் தள்ளுபடி</h2><p>வெள்ளத்தால் கல்வி பாதிக்கப்பட்ட சிவசாகர் மற்றும் சராடியோ மாவட்ட மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வாங்க சிறப்பு நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>மேல்நிலைப்பள்ளி பயிலும் மாணவர்களுக்கு ரூ.1000, இளங்கலை கல்லூரி பயிலும் மாணவர்களுக்கு ரூ.3000, முதுகலை கல்லூரி பயிலும் மாணவர்களுக்கு ரூ.5000 வழங்கப்படும் என்றும் வெள்ளத்தில் சான்றிதழ்களை இழந்த மாணவர்களுக்கு, நகல் மதிப்பெண் சான்றிதழ்கள் வாங்குதற்கான கட்டணங்கள் அனைத்தும் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="hi" dir="ltr"> असम की बाढ़ — पानी में सिर्फ घर नहीं डूबे, न जाने कितने सपने भी बह गए… <br><br>कभी-कभी किसी आपदा की तस्वीरें देखकर शब्द साथ छोड़ देते हैं।<br><br>कहीं एक माँ अपने बच्चे को सीने से लगाए सुरक्षित जगह की तलाश में है… कहीं बुजुर्ग उस घर को पानी में डूबते देख रहे हैं, जिसे उन्होंने जिंदगी…</p>&mdash; SURINDER JEET KAUR (ਸੁਰਿੰਦਰ ਜੀਤ ਕੌਰ) सुरिंदर जीत (@ACP_SURINDER_K) <a href="https://x.com/ACP_SURINDER_K/status/2082199907340001486?ref_src=twsrc%5Etfw">July 28, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2>நிதி சேகரிப்பு மற்றும் மீட்புப் பணிகள் தீவிரம்</h2><p>கடந்த 10 நாட்களில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.26 கோடிக்கும் மேல் நிதி வந்து சேர்ந்துள்ளது. இதில் 4610 தனிநபர்கள் வழங்கிய ரூ.60 லட்சம் சிறு நன்கொடைகளும் அடங்கியுள்ளன. </p><p>தற்போது ராணுவம், விமானப்படை, என்.டி.ஆர்.எஃப் , எஸ்.டி.ஆர்.எஃப் மற்றும் தீயணைப்புத் துறையினர் உள்ளூர் தன்னார்வலர்களுடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மொத்தம் 81 நிவாரண முகாம்களில் 32 ஆயிரத்து 477 மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.</p><h2>அடுத்தகட்ட நடவடிக்கை:</h2><p>வருகிற ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் வீடுகள், பயிர்கள், கால்நடைகள் மற்றும் மீன்வளத் துறைகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து விரிவான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, உரிய இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் உறுதி அளித்துள்ளார்.</p><p>மறுபுறம், அகில அசாம் மாணவர் சங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பொருட்களை வழங்கி வருவதுடன், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் நேரில் வந்து வெள்ளச் சேதங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>28 வயது மாணவரா? உன் வயதில் 2 தேசிய விருது வாங்கியுள்ளேன்: பயனற்றவன் என சிஜேபி தாஸை விளாசிய கங்கனா ரனாவத்</title><link>https://www.maalaimalar.com/news/national/you-are-useless-do-nothing-people-kangana-ranaut-slams-gen-z</link><comments>https://www.maalaimalar.com/news/national/you-are-useless-do-nothing-people-kangana-ranaut-slams-gen-z#comments</comments><guid isPermaLink="false">3bfc1a59-7f8c-42a7-b843-7af0d07fda40</guid><pubDate>Wed, 29 Jul 2026 07:37:39 +0000</pubDate><atom:updated>2026-07-29T07:37:39.270Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Kangana Ranaut,கங்கனா ரனாவத்,சிஜேபி,CJP,Saurav Das,செளரவ் தாஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/fgxbku1g/Untitled-design-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Kangana criticises Saurav Das and calls Gen Z protesters gutter generation]]></media:title><media:description type="html"><![CDATA[ Kangana Ranaut ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/fgxbku1g/Untitled-design-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாஜக எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரனாவத், ஜென் Z போராட்டக்காரர்கள் குறித்த தனது கருத்துக்களை விமர்சித்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸுக்கு பதிலடி கொத்துள்ளார்.</p><h3><strong>சிஜேபியை தாக்கிய கங்கனா ரனாவத்</strong></h3><p>இதுகுறித்து கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், செளரவ் தாஸ் என்ற மாணவரின்  அடையாளத்தைக் கேள்விக்கு உட்படுத்தி, அவரது சாதனைகளை தனது இத்தனை ஆண்டு வெற்றிகளோடு ஒப்பிட்டு பதிலளித்துள்ளார்.</p><p>கங்கனா வெளியிட்ட பதிவில், “இந்த நபரை கூகுளில் தேடிப் பார்த்தேன். அவருக்கு 28 வயது, அவர் எப்படி தன்னை ஒரு மாணவர் என்று கூறிக்கொள்கிறார் என்றே எனக்குத் தெரியவில்லை. </p><p>நான் இரண்டு ஆண்டுகளாக அரசியலில் இருந்தாலும், கடந்த 20 ஆண்டுகளாக பொது வாழ்வில் தான் இருந்து வருகிறேன்.</p><p>ஒரு புதிய நாடாளுமன்ற உறுப்பினராக எனக்குக் கிடைத்த அத்தனை பணிகளாலும் நான் சற்று தடுமாறினேன். </p><p>ஏனென்றால் நான் ஒரு திரைப்படத் தயாரிப்பாளர், கலைஞர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தொழில்முனைவோர் ஆகிய பணிகளில் ஈடுபட்டு வந்தேன்.</p><p>இந்த 28 வயதில் நான் இரண்டு தேசிய விருதுகளை வாங்கினேன். ஆனால், அவரைப் போன்ற முற்றிலும் பயனற்ற, வேலையில்லாத ஒருவரால், எந்த வயதிலும், எல்லா நேரங்களிலும் பெரும் தேவை இருப்பதன் அர்த்தத்தை ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது.</p><p>அன்புள்ள சௌரவ், உங்கள் பிரச்சினைகள் தனிப்பட்டவை, நீங்கள் ஒரு மாணவர் அல்ல. முற்றிலும் பயனற்றவர், வாருங்கள் ஏதாவது ஒரு திறமையைக் கற்றுக்கொள்வதில் இருந்து தொடங்குவோம். அது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும்” என்று கங்கனா தெரிவித்தார்.</p><h3><strong>சிஜேபி-கங்கனா வாக்குவாதம்</strong></h3><p>நீட்-யூஜி தேர்வு குறித்து எழுந்த சர்ச்சையில், தர்மேந்திர பிரதானின் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, மத்திய அரசின் நடவடிக்கைக்கு கங்கனா ஆதரவு தெரிவித்தார்.</p><p>அரசின் கல்வி சீர்த்திருத்தங்களையும், தேர்வு முறையை வலுப்படுத்தும் நோக்கில் குழு அமைக்கப்பட்டதையும் அவர் பாராட்டினார்.</p><p>மேலும் அவர் நீட் தேர்விற்கு எதிராக போராடிய இளைய தலைமுறையினர் மற்றும் சௌரவ் தாஸ் ஆகியோர்களை ‘சாக்கடைத் தலைமுறை’ என்றும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.</p><p>இதையடுத்து கங்கனா குறித்து செளரவ் தாஸ் கூறுகையில், “ஜென் Z, ஜென் ஆல்ஃபா அல்லது இளைய தலைமுறையினர், கங்கனாவின் கருத்துக்களைப் பெரிதாக எடுத்துக்கொண்டதாகத் தாம் நம்பவில்லை. </p><p>பொது வாழ்வில் இருக்கும் நபர்கள் தங்கள் மொழியில் கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்” என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க.வில் இணையும் ஓபிஎஸ்? தி.மு.க.வில் விழும் முதல் விக்கெட்?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/o-panneer-selvam-likely-chance-join-to-tvk</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/o-panneer-selvam-likely-chance-join-to-tvk#comments</comments><guid isPermaLink="false">29466895-3d93-4d05-97cc-4b09d350c67f</guid><pubDate>Wed, 29 Jul 2026 07:36:57 +0000</pubDate><atom:updated>2026-07-29T07:36:57.974Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தவெக,O Panneer Selvam,tvk,ஓ பன்னீர்செல்வம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/7q7jkvrm/OPS.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/7q7jkvrm/OPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவுக்கு பிறகு அரசியல் களத்தில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் நடைபெற்று வருகி்னறன. தற்போது அடுத்த பரபரப்பான திருப்பமாக அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் தி.மு.க.வில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம் விரைவில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. </p><p>கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, எடப்பாடி பழனிசாமியுடனான மோதல் காரணமாக அ.தி.மு.க.வில் இருந்து <a href="https://www.maalaimalar.com/topic/ஓ-பன்னீர்செல்வம்">ஓ.பன்னீர்செல்வம்</a> வெளியேற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதத்தில் அவர் தி.மு.க.வில் இணைந்தார். ஆனால், தேர்தலில் தி.மு.க. தோல்வியடைந்து எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாலும், தி.மு.க.வில் இதுவரை அவருக்கு எந்தவொரு முக்கியப் பதவியும் வழங்கப்படாததாலும் ஓ.பி.எஸ். கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.</p><h2><strong>த.வெ.க.வில் இணைய முடிவு</strong></h2><p>இந்த நிலையில், தற்போதுள்ள தமிழக அரசியல் சூழ்நிலையில், த.வெ.க.வில் சென்று இணைவதே சிறந்தது என்று ரவீந்திரநாத் தனது தந்தை ஓ.பன்னீர்செல்வத்திடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு ஓ.பன்னீர்செல்வமும் பச்சைக்கொடி காட்டிவிட்டதாக கூறப்படுகிறது. தேர்தலுக்கு முன்பே ஓ.பன்னீர்செல்வம் த.வெ.க.வில் இணைய வேண்டும் என்பதே அவருடைய மகன் ரவீந்திரநாத்தின் விருப்பமாக இருந்தது. </p><p>ஓ.பன்னீர்செல்வம் சம்மதம் தெரிவித்ததை அடுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, த.வெ.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆகியோரிடம் ரவீந்திரநாத் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிகிறது.</p><h2><strong>த.வெ.க. சம்மதித்தது ஏன்?</strong></h2><p>அமைச்சர்கள் இருவரும் ஓ.பன்னீர்செல்வத்தின் விருப்பத்தை முதலமைச்சர் விஜய்யிடம் கூற, அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலையில், தென்மாவட்டங்களில்தான் த.வெ.க. வலுகுறைந்து காணப்படுகிறது. அதற்கு, முக்கிய அரசியல் முகம் அங்கு இல்லை என்று சொல்லப்படுகிறது. எனவே, அந்தக் குறையை ஓ.பன்னீர்செல்வம் மூலம் தீர்த்துக்கொள்வதுடன், கட்சியையும் வலுப்படுத்த முடியும் என்று த.வெ.க. தலைமை கருதுகிறது.</p><h2><strong>விரைவில் ராஜினாமா</strong></h2><p>முன்னாள் முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் இருந்ததால், த.வெ.க.வில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கவும் முதலமைச்சர்  விஜய் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. விரைவில், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் ஓ.பன்னீர்செல்வம் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடைத்தேர்தலில் அதே தொகுதியில் த.வெ.க. சார்பில் மீண்டும் போட்டியிட ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார்.</p><h2><strong>நாடாளுமன்ற தேர்தல்</strong></h2><p>மேலும் 2029-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் த.வெ.க. சார்பில் களம் இறக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.</p><p>ஓ.பன்னீர்செல்வம் த.வெ.கவில் இணைவதன் மூலம் தேர்தலுக்கு பிறகு தி.மு.க.வில் இருந்து விலகி த.வெ.கவில் இணையும் முதல் நபர் ஆவார். சட்டசபை தேர்தல் முடிவுக்கு பிறகு அ.தி.மு.க. மற்றும் மற்ற கட்சிகளில் இருந்து விலகி த.வெ.க.வில் பலர் இணைந்துள்ள நிலையில், தி.மு.க.வில் இருந்து யாரும் இதுவரை விலகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>டெல்லி மாணவர் போராட்டம்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி-ஜே.பி. நட்டா காரசார பதில்!</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-student-protest-opposition-uproar-in-parliament-jp-nadda-sharp-response</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-student-protest-opposition-uproar-in-parliament-jp-nadda-sharp-response#comments</comments><guid isPermaLink="false">dbfb448f-970e-4388-a00f-bb31515b9e3e</guid><pubDate>Wed, 29 Jul 2026 07:34:56 +0000</pubDate><atom:updated>2026-07-29T07:34:56.039Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நாடாளுமன்றம்,ஜே.பி. நட்டா,JPNadda,parliament,டெல்லி மாணவர் போராட்டம்,Delhi student protests</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/bav1jb0b/jb-nadda.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ J.P.Nadda]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/bav1jb0b/jb-nadda.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின் போது காவல் துறை மேற்கொண்ட கடுமையான நடவடிக்கையைக் கண்டித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் (மக்களவை மற்றும் மாநிலங்களவை) எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.</p><p>கடந்த 20ஆம் தேதி அன்று ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற மாணவர் தலைவர்களில் ஒருவரான ஐஷி கோஷ்-ஐ கைது செய்வதற்காக டெல்லி காவல் துறையினர், சிபிஐ(எம்) (CPI-M) கட்சியின் தேசியத் தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தை மாநிலங்களவை எம்பி ஜான் பிரிட்டாஸ் அவையில் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார்.</p><p>ஒரு தேசியக் கட்சியின் தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்து காவல் துறை நடவடிக்கை எடுத்ததை தான் நேரில் தட்டிக்கேட்டதாகவும், அதற்கு 2021-ஆம் ஆண்டு ஜேஎன்யு வளாகத்தில் நடைபெற்ற போராட்டம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார். </p><p>எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்குவதற்காகவே இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகக் குற்றம் சாட்டிய அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதுகுறித்து அவையில் விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.</p><h2><strong>எதிர்க்கட்சிகளின் கடும் குற்றச்சாட்டுகள்:</strong></h2><p>காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, பாஜக ஆட்சியில் நாட்டின் "ஜனநாயகமும் மக்களும் பாதுகாப்பாக இல்லை" என்று குற்றம் சாட்டினார். போராட்டங்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராக அளவுக்கு அதிகமான பலத்தைப் பிரயோகித்த அதிகாரிகள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் சுதந்திரமாக உலா வருவதாகக் கூறி, அரசின் பொறுப்பற்ற தன்மையைக் கேள்வி எழுப்பினார்.</p><h2><strong>அகிலேஷ் யாதவ்:</strong></h2><p>டெல்லி மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்பட்டு அடக்குமுறை கையாளப்பட்டதைச் சுட்டிக்காட்டிய <strong>அகிலேஷ் யாதவ்</strong>, "டெல்லியில் நடந்த சம்பவம் அவசரநிலையை விடவும் மிக மோசமானது" எனக் கடுமையாகச் சாடினார்.</p><h2><strong>மக்களவையில் அமளி:</strong></h2><p>மக்களவையிலும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுவதற்கு முன்பாக, முறைகேடு தடுப்பு மசோதா மீதான விவாதத்திற்கு நடுவே எதிர்க்கட்சி எம்பிக்கள் மத்திய அரசுக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் எதிராக முழக்கங்களை எழுப்பினர். அவை ஒழுங்கிற்குத் திரும்பாவிட்டால் ஒத்திவைக்கப்படும் என சபாநாயகர் எச்சரித்தார்.</p><h2><strong>பாஜக தரப்பில் ஜே.பி. நட்டா பதில்:</strong></h2><p>எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துப் பேசிய மாநிலங்களவைத் தலைவரும், மத்திய அமைச்சருமான ஜே.பி. நட்டா காவல் துறையின் நடவடிக்க நியாயப்படுத்திப் பேசினார்.</p><h2><strong>சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு:</strong></h2><p>சட்டம் மற்றும் ஒழுங்கைக் கட்டுக்குள் கொண்டு வரக் காவல் துறை தேவையான நடவடிக்கைகளை எடுப்பது இயல்பானது என்றும், அதில் தவறில்லை என்றும் அவர் தெரிவித்தார்.</p><p>அரசியல் மற்றும் போராட்டங்களில் இறங்கத் துணியும் மாணவர்கள், அதுபோன்ற சூழ்நிலைகளில் காவல் துறையின் நடவடிக்கைகளைச் சந்திக்கவும் தயாராக இருக்க வேண்டும் என்றார். அவசரநிலைக் காலத்தை நினைவுகூர்ந்த அவர், தாம் ஒரு மாணவர் தலைவராக இருந்தபோது வகுப்பறையிலிருந்தே இரண்டு முறை காவல் துறையால் கைது செய்யப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டதைச் சுட்டிக்காட்டி, "செயல்பாட்டாளர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் கைது செய்யப்படுவதும் தடுத்து வைக்கப்படுவதும் வழக்கமான ஒன்றுதான்" என்று வாதிட்டார்.</p><p>பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் நேரில் விளக்கமளிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதால், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் இந்த விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கேரளாவில் பள்ளி ஆசிரியர்கள் மூலம் போதைப்பொருள் கடத்தல்! இதுவரை 3 ஆசிரியர்கள் கைது!</title><link>https://www.maalaimalar.com/news/national/third-school-teacher-arrested-in-kerala-drug-trafficking-case</link><comments>https://www.maalaimalar.com/news/national/third-school-teacher-arrested-in-kerala-drug-trafficking-case#comments</comments><guid isPermaLink="false">79890045-d8ba-4146-8ffa-f76f673006c9</guid><pubDate>Wed, 29 Jul 2026 07:29:39 +0000</pubDate><atom:updated>2026-07-29T07:29:39.225Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>போதைப்பொருள் கடத்தல்,Narcotics,Operation Toofan,ஆபரேஷன் தூஃபான்,கேரளா பள்ளி ஆசிரியர்,kerala school teacher</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/v2wmhu89/Untitled-design-9.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ School Teacher Arrested Under Operation Thoofan]]></media:title><media:description type="html"><![CDATA[ Kerala Teachers Held in Drug Racket]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/v2wmhu89/Untitled-design-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரளா கோழிக்கோட்டில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில், மேலும் ஒரு பள்ளி ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்தனர்.</p><p><strong>ஆபரேஷன் தூஃபான்</strong></p><p>கேரளாவில் போதை பொருட்களுக்கு எதிராக ‘ஆபரேஷன் தூஃபான்’ என்ற நடவடிக்கை சமீபத்தில் தொடங்கப்பட்டது. இந்த நடவடிக்கையில் இதுவரையில் 8109 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 8721 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>இதையடுத்து பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிபுரியும் சில நபர்கள் போதைப்பொருட்களை பயன்படுத்துவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. </p><p>சமீபத்தில் செயற்கை போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட ஒருவர் அளித்த வாக்குமூலத்தில், பள்ளி ஆசிரியர்களுக்கு தொடர்பு இருப்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர்.</p><p>இதைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஆசிரியர்களின் வங்கிக் கணக்குகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.</p><p>கடந்த சில மாதங்களில் ஆசிரியர்களின் வங்கிக் கணக்குகளில் சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பெரும் நிதிப் பரிவர்த்தனைகளும், அவர்களின் ஆடம்பரமான வாழ்க்கை முறையும் காவல்துறைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தின.</p><p>இதையடுத்து அவர்கள் கணக்கில் பெருமளவிளான பணப் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டது உறுதிபடுத்தப்பட்டது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கீர்த்தனா கே.சி மற்றும் கே. காவ்யா ஆகிய ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.</p><p><strong>பள்ளி ஆசிரியர்கள் கைது</strong></p><p>இந்நிலையில் பேரம்பரா பகுதியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த 30 வயதான வி.பி. நீஷ்மா என்பவரை காவல்துறை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர்.</p><p>கேரள காவல்துறையால் கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள், பள்ளிகளில் நடைபெறும் போதைப்பொருள் எதிர்ப்பு நடன நிகழ்ச்சிகளிலும் தீவிரமாகப் பங்கேற்று வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>இவர்கள் அனைவரும் அப்பகுதியில் உள்ள பல்வேறு பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர்கள் செயற்கை போதைப்பொருட்களையும் பயன்படுத்தி வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><h3><strong>கேரள காவல்துறை நடவடிக்கை</strong></h3><p>மேலும் இதுகுறித்து வடகரா ஆய்வாளர் ஏ.வி. தினேஷ் கூறுகையில், “வாடிக்கையாளர்களுக்கு செயற்கை போதைப்பொருட்களை விநியோகிக்கும் கும்பலில் ஆசிரியர்களும் அங்கம் வகித்துள்ளனர்.</p><p>அவர்கள் சமூக ஊடகக் குழுக்களைப் பயன்படுத்தி, கியூஆர்(QR) குறியீடுகளை பகிர்ந்து ஆன்லைனில் பணம் பெற்றுள்ளனர்.</p><p>இந்த போதைப்பொருள் விற்பனைக்கு வளைகுடா நாட்டைச் சேர்ந்த ஒரு கைபேசி எண்ணும் பயன்படுத்தப்பட்டுள்ளது.</p><p>ஆசிரியர்கள் பெங்களூருக்கு அடிக்கடி பயணம் செய்தது மற்றும் மங்களூரில் உள்ள சில நபர்களுடன் அவர்களுக்கு உள்ள தொடர்புகள் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>துப்பாக்கி சுடுதலில் வெண்கலம் - இன்னும் கொஞ்சம் முயற்சித்திருக்கலாம் என பாக்கர் பதிவு!</title><link>https://www.maalaimalar.com/sports/bronze-in-shooting-mixed-emotions-manu-bhaker</link><comments>https://www.maalaimalar.com/sports/bronze-in-shooting-mixed-emotions-manu-bhaker#comments</comments><guid isPermaLink="false">40cfac70-d118-4101-84c3-9c48569c5127</guid><pubDate>Wed, 29 Jul 2026 07:24:36 +0000</pubDate><atom:updated>2026-07-29T07:24:36.399Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Manu Bhaker,ISSF world cup,Hangzhou,மானு பாக்கர்,துப்பாகிச்சுடுதல்,ஹாங்சோ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/q1cxsl7u/Untitled-design-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ mixed emotions in 25m pistol at Hangzhou World Cup]]></media:title><media:description type="html"><![CDATA[ Manu Bhaker wins bronze]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/q1cxsl7u/Untitled-design-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h3><strong>உலகக்கோப்பை துப்பாகிச்சுடுதல்</strong></h3><p>சீனாவின் ஹாங்சோவ் நகரில் 2026 உலகக்கோப்பை துப்பாகிச் சுடும் போட்டி நடைபெற்று வருகிறது.</p><p>இந்த போட்டியில் ரைபிள்/பிஸ்டல்/ஷாட்கன் ஆகிய பிரிவுகளில் வீரர்கள் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர்.</p><p>மொத்தம் 61 நாடுகள் கலந்துகொண்ட இந்த துப்பாக்கிச்சுடும் போட்டியில், 1 தங்கம், 1 வெள்ளி மற்றும் 2 வெண்கலத்துடன் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த வாரம் தொடங்கிய துப்பாக்கிச்சுடும் போட்டி, இன்றுடன் நிறைவு பெறுகிறது.</p><h3><strong>மனு பாக்கர் பதிவு</strong></h3><p>இந்நிலையில் பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் கலந்துகொண்ட மனு பாக்கர், வெண்கலப் பதக்கம் வென்றார்.</p><p>இதுகுறித்து அவர் கூறுகையில், “எனக்கு கலவையான உணர்வுகள் உள்ளது. முன்னேற்றத்தில் மகிழ்ச்சி அடைந்தாலும், என்னால் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்புகிறேன்.</p><p>மற்றொரு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது எனக்குக் கலவையான உணர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.</p><p>எனது செயல்திறனை மேம்படுத்த முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சி, ஆனால் அதே நேரத்தில், நான் இன்னும் சிறப்பாகச் செய்திருக்க முடியும் என்பதும் எனக்குத் தெரியும்,” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p>அவர் மேலும் கூறும்போது, “கடின உழைப்பின் பலனைப் பார்ப்பதுதான் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னும் முன்னேறுவதற்கு நிறைய இடமுள்ளது.</p><p>அதுவே என்னை ஊக்கத்துடன் வைத்திருக்கிறது. ஒவ்வொரு அடியாக முன்னேறுவோம். எனக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.</p><p>எனது குழுவினர், எனது குடும்பத்தினர் மற்றும் உங்கள் ஒவ்வொருவருக்கும் நீங்கள் அளித்த அசைக்க முடியாத அன்புக்கும் ஆதரவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்” என்றும் மனு பாக்கர் கூறியுள்ளார்.</p><h3><strong>இஷா சிங்</strong></h3><p>முன்னதாக மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் கலந்துகொண்ட இஷா சிங் தங்க பதக்கம் வென்றார்.</p><p>சீனாவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஈஷா 40 ஹிட்களுடன் ஆதிக்கம் செலுத்திய பொழுது, பாகர் 28 ஹிட்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.</p><p>இந்தியா சார்பில் துப்பாக்கி சுடுதலில் கலந்துகொண்ட ராஹி சர்னோபத், சிம்ரன்பிரீத் கவுர் பிரார் மற்றும் அபித்ன்யா அசோக் பாட்டீலும் சிறப்பான போட்டியை வெளிப்படுத்தினர்.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது அணை விவகாரம்: அரசியல் சாயம் பூசுவதை தவிர்த்து ஒன்றிணைவோம்! - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-mekedatu-dam-issue-let-us-unite-avoid-politicizing-matter</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-mekedatu-dam-issue-let-us-unite-avoid-politicizing-matter#comments</comments><guid isPermaLink="false">b71565d7-9ec1-42dd-b0bf-83bd9bc3b159</guid><pubDate>Wed, 29 Jul 2026 07:18:10 +0000</pubDate><atom:updated>2026-07-29T07:18:10.640Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,mekedatu dam,மேகதாது அணை,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-05-27/4aij1kwd/manickamtagore.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-05-27/4aij1kwd/manickamtagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், </p><h2>கர்நாடக அரசு</h2><p>மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் ராஜ்பூஷன் நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போது, கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்ற தீர்ப்பில் எந்த தடையும் இல்லை என்று பேசியது தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 5.2.2007 இல் காவிரி நடுவர்மன்றமும், 16.2.2018 இல் உச்சநீதிமன்றமும் வழங்கிய இறுதி தீர்ப்பின்படி காவிரி படுகை மாநிலங்களை பாதிக்கிற வகையில் எந்தவிதமான கட்டுமானப் பணிகளையும் கர்நாடக அரசு மேற்கொள்ளக் கூடாது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. </p> <p>இந்நிலையில் பா.ஜ.க. அமைச்சர் கர்நாடக அரசுக்கு ஆதரவாக பேசியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமைந்துள்ளது. </p><h2>டெல்டா விவசாயிகள்</h2><p>நடுவர்மன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் மூலம் தமிழகம் போராடிப் பெற்ற உரிமைகளின் அடிப்படையில் ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்பட வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் எவ்வளவு வழங்க வேண்டுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கர்நாடக அரசு இந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ள மறுப்பதோடு, வழங்க வேண்டிய தண்ணீர் மறுக்கப்படுவதால் காவிரி டெல்டா விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். </p> <p>இந்நிலையில் காவிரி நீரின் அளவை நிர்ணயிக்கும் பிலிகுண்டுலுவிற்கு 4 கி.மீ. தூரத்திற்கு மேலே கிருஷ்ணராஜசாகர் அணைக்கு கீழே ரூபாய் 9000 கோடி செலவில் 67.15 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட அணையை மேகதாதுவில் கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்வதை தமிழ்நாடு எந்த நிலையிலும் ஏற்றுக் கொள்ளாது. மேகதாதுவில் அணை கட்டப்படுமேயானால், காவிரிப் படுகை வறண்ட பாலைவனமாக மாற வழிகோலும் என தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும், விவசாய சங்கங்களும் ஒருமித்த குரலில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. </p> <h2>தமிழக அரசு</h2><p>மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராக தமிழக அரசு 2018 இல் உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கும்போது, 2019 நவம்பர் 22 ஆம் தேதி கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட விரிவான திட்ட அறிக்கையை மத்திய பா.ஜ.க. அரசிடம் சமர்ப்பித்தது. விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதியும் வழங்கப்பட்டது. இது தமிழகத்திற்கு பாஜ.க. அரசு செய்த மிகப்பெரிய துரோகமாகும். </p> <h2>உதயநிதி ஸ்டாலின்</h2><p>இந்நிலையில், <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">மேகதாதுவில் அணை</a> கட்டுவதை தடுத்து நிறுத்துவதற்கு தமிழக அரசு சட்டரீதியாக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிற சூழலில் த.வெ.க.வும், காங்கிரஸ் கட்சியும் இணைந்து தமிழகத்தின் நலன்களை தாரை வார்த்ததாக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-indictment-cm-vijay-2">உதயநிதி ஸ்டாலின்</a> அவர்கள் பேசியிருப்பதை அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட செயலாகவே கருத வேண்டும். ஆட்சியை இழந்ததை சகித்துக் கொள்ள முடியாத நிலையிலுள்ள தி.மு.க. மேகதாது பிரச்சனையில் அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறது. </p> <h2>பரஸ்பர குற்றச்சாட்டு</h2><p>கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் உரிமைக்குரல் எழுப்பியிருக்கிறார்கள். தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் ஒட்டுமொத்த குரலாக ஒலித்து கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டும் திட்டத்தை முறியடிக்க ஓரணியில் திரள வேண்டுமே தவிர, பரஸ்பர குற்றச்சாட்டுக்களை எழுப்புவது தமிழகத்தின் நிலையை பலவீனப்படுத்தும். </p> <h2>அரசியல் சாயம்</h2><p>கர்நாடகத்தில் யார் ஆட்சி செய்தாலும் அவர்கள் எல்லோருமே தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராகவே தான் கடந்த காலங்களில் பேசியிருக்கிறார்கள், செயல்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் மேகதாது பிரச்சனையில் அரசியல் சாயம் பூசுவதை தவிர்த்து தமிழக அரசு எடுக்கின்ற அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்பதே நமது உரிமையை மீட்டெடுப்பதற்கு உரிய வாய்ப்பாக அமையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>VIDEO- &apos;Spider-Man: Brand New Day&apos;-Rotten Tomatoes தளத்தில் 91% மதிப்பெண் பெற்று சாதனை! </title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/spider-man-brand-new-day-91-percent-on-rotten-tomatoes-video</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/spider-man-brand-new-day-91-percent-on-rotten-tomatoes-video#comments</comments><guid isPermaLink="false">52276f3d-591a-456d-b3a1-ff562b28fe94</guid><pubDate>Wed, 29 Jul 2026 07:08:17 +0000</pubDate><atom:updated>2026-07-29T07:08:17.447Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spiderman,Tom Holland,ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே,Sadie Sink,டாம் ஹாலண்ட்,Rotten Tomatoes,ரோட்டன் டொமேட்டோஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/w75gm6e4/spider-man.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/w75gm6e4/spider-man.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஹாலிவுட் நடிகர் டாம் ஹாலண்ட் நடிப்பில் உருவாகியுள்ள '<a href="https://www.maalaimalar.com/topic/ஸ்பைடர்மேன்">ஸ்பைடர் மேன்</a>: பிராண்ட் நியூ டே' திரைப்படம் உலகளவில் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே விமர்சகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. </p><p>படத்தின் சிறப்பு திரையிடலுக்குப் பிறகு வெளிவந்துள்ள முதல் விமர்சனங்களின் அடிப்படையில், சர்வதேச அளவில் புகழ்பெற்ற Rotten Tomatoes இணையதளத்தில் இத்திரைப்படம் 91% நேர்மறை விமர்சன மதிப்பெண்களைப் பெற்று அசத்தியுள்ளது.</p><h2><strong>சாதனை படைக்கத் தயாராகும் ஸ்பைடர் மேன்:</strong></h2><p>ஹாலிவுட் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' திரைப்படம், அதிகாரப்பூர்வமாக திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னதாகவே உலகளவில் பேராதரவைப் பெற்று வருகிறது. </p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/daXaTug8rL4"></iframe></figure><p>சமீபத்தில் நடைபெற்ற உலகளாவிய சிறப்புத் திரையிடலுக்கு பிறகு, சமூக வலைத்தளங்களில் படத்தைப் பற்றிய நேர்மறையான கருத்துகள் குவிந்து வருகின்றன.</p><h2><strong>Rotten Tomatoes மதிப்பெண்:</strong></h2><p>திரைப்பட விமர்சன வலைத்தளங்களில் ஒன்றான ரோட்டன் டொமேட்டோஸில், இத்திரைப்படம் முதலில் 93% மதிப்பெண்களுடன் கணக்கைத் தொடங்கியது. தொடர்ந்து பல முன்னணி விமர்சகர்களின் விமர்சனங்கள் வந்த பிறகு, தற்போது 91% மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.</p><p>டாம் ஹோலண்ட் நடிப்பில் வெளியான ஸ்பைடர் மேன் திரைப்பட வரிசையில், இது இரண்டாவது மிக உயர்ந்த விமர்சன மதிப்பெண்களைப் பெற்ற படமாக உருவெடுத்துள்ளது. முந்தைய ஸ்பைடர் மேன் படங்களான Spider-Man: Homecoming 92%, Spider-Man: Far From Home 91%, மற்றும் Spider-Man: No Way Home 93% மதிப்பெண்களைப் பெற்றிருந்தது.</p><h2><strong>விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் வரவேற்பு:</strong></h2><p>இப்படத்தில் டாம் ஹோலண்டின் நடிப்பு மிகவும் பாராட்டும் வகையில் அமைந்துள்ளதாக திரை விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை வெளியான ஸ்பைடர் மேன் திரைப்படங்களிலேயே இதுவே மிகச் சிறந்த படம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.</p><p>படத்தின் சுவாரசியமான திரைக்கதை மாற்றங்கள் மற்றும் நடிகை சேடி சிங்கின் கதாபாத்திர வளர்ச்சி ஆகியவை ரசிகர்களுக்குப் பெரும் ஆச்சரியத்தையும் திருப்தியையும் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.</p><h2><strong>Box Office வசூல் கணிப்பு:</strong></h2><p>சிறப்பான விமர்சனங்கள் வெளியாகி வருவதால், இப்படத்திற்கான வர்த்தக எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.  வட அமெரிக்காவில் மட்டும் சுமார் 4,300 திரையரங்குகளில் வெளியாகும் இத்திரைப்படம், முதல் வார இறுதியில் $260 மில்லியன் முதல் $280 மில்லியன் டாலர் வரை வசூலிக்கும் என்று 'வெரைட்டி' இதழ் கணித்துள்ளது. ரசிகர்களின் வரவேற்பு அதிகரிக்கும் பட்சத்தில், இத்தொகை $300 மில்லியன் டாலரை எட்டக்கூடும் என பாக்ஸ் ஆபீஸ் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.</p><h2><strong>சோனி நிறுவனத்தின் கணிப்பு:</strong></h2><p>தயாரிப்பு நிறுவனமான சோனி ஆரம்பத்தில் $190 மில்லியன் முதல் $195 மில்லியன் டாலர் வரை மட்டுமே வசூலிக்கும் என்று கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது உலகளவில் இத்திரைப்படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பைப் பார்க்கும்போது, பாக்ஸ் ஆபீஸில் பல புதிய சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>தவெக நிர்வாகிகளிடம் இருந்து பெண்களை காக்க எந்தப் படையை அமைக்கப் போகிறார் விஜய்? - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-questions-vijay-on-army-to-protect-women-from-tvk-officials</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-questions-vijay-on-army-to-protect-women-from-tvk-officials#comments</comments><guid isPermaLink="false">625af444-e45a-4acd-b363-7a2a07fd8988</guid><pubDate>Wed, 29 Jul 2026 07:07:52 +0000</pubDate><atom:updated>2026-07-29T07:07:52.878Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,பெண்கள் பாதுகாப்பு,tvk,Womens safety</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/wk55ddqi/Nainar.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nainar Nagendran]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/wk55ddqi/Nainar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தவெகவில் பதவி வாங்கித் தருவதாக கூறி அத்துமீறுவதாக ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலர் மீது பெண் புகார் அளித்துள்ள நிலையில், தனது கட்சி நிர்வாகிகளிடம் இருந்து பெண்களை காக்க எந்தப் படையை அமைக்கப் போகிறார் விஜய்? என்று பாஜக மாநில தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D" rel="nofollow">நயினார் நாகேந்திரன்</a> தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- </p><p>தனது கட்சி நிர்வாகிகளிடம் இருந்து பெண்களைக் காக்க எந்தப் படையை அமைக்கப் போகிறார் விஜய் அவர்கள்?</p><h2>நடவடிக்கை இல்லை</h2><p>கட்சியில் பதவி வாங்கித் தருவதாகக் கூறி தன்னை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டுவதாகவும், தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், தனது பெண் குழந்தையையும் பாலியல் ரீதியாக விமர்சித்ததாகவும் தவெகவின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர்  விஜய் மோகன் மீது, இளம்பெண் ஒருவர் அளித்துள்ள புகார்கள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன. </p><p>அதுமட்டுமன்றி, பாதிக்கப்பட்ட பெண் பலமுறை புகார் அளித்தும் கூட, இதுவரை விஜய் மோகன் கைது செய்யப்படவில்லை என்று வெளியாகியுள்ள தகவல், தமிழகக் காவல்துறையின் நேர்மையின் மீதும், அதை தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இயக்கும் முதல்வரின் நிர்வாகத் திறன் மீதும் கடும் சந்தேகத்தை எழுப்புகிறது.</p><h2>பக்கம் பக்கமாக வசனம்</h2><p>எனவே, தனது சொந்தக் கட்சிக்குள் இத்தனை காமுகர்களை பாதுகாத்து வைத்துக் கொண்டு, பெண்களின் பாதுகாப்பைப் பற்றி பக்கம் பக்கமாக வசனம் பேசுவதில் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை என்பதை முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் உணர வேண்டும். </p><p>பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய தவெக நிர்வாகி விஜய் மோகன் மீது உடனடியாக சட்டரீதியான மற்றும் கட்சி ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்!</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் நிதி முறைகேடு - செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/case-registered-against-senthil-balaji</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/case-registered-against-senthil-balaji#comments</comments><guid isPermaLink="false">f39217e3-f215-48f4-997e-50695971dbb9</guid><pubDate>Wed, 29 Jul 2026 06:37:08 +0000</pubDate><atom:updated>2026-07-29T06:37:08.431Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>senthil balaji,செந்தில் பாலாஜி,டாஸ்மாக் ஊழல்,Tasmac,லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை,DVAC Raid</media:keywords><media:content height="576" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-28/vliba3ju/SenthilBalaji0001.jpg" width="1024"><media:title type="html"><![CDATA[ செந்தில் பாலாஜி]]></media:title><media:description type="html"><![CDATA[ செந்தில் பாலாஜி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-28/vliba3ju/SenthilBalaji0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.</strong></em></p><p>தமிழ்நாட்டில் தற்போது 4,048 பதிவு செய்யப்பட்ட டாஸ்மாக் விற்பனை நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.102 கோடி அளவுக்கு முறைசாரா வழிகள் மூலம் டாஸ்மாக் வருவாய் 'கட்சி நிதி' என்ற பெயரில் திசை திருப்பப்பட்டு வந்ததாகவும், இதன் காரணமாகக் கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநில அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.3,600 கோடியைத் தொட்டிருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.</p> <p>இது குறித்து மூத்த அரசு அதிகாரிகள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில், புதிய அரசு டாஸ்மாக் வருவாயில் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய செயல்பாட்டைத் தொடங்குமாறு உத்தரவிட்டுள்ளது. அத்துடன், காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் நடைமுறையை மறுஆய்வு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. </p><h2>முதலமைச்சர் விஜய்</h2><p>டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் கிடைக்கும் ஒவ்வொரு ரூபாய் வருவாயும் முறையாக அரசின் கருவூலத்திற்கு வந்து சேருவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.</p> <h2>தேர்தல் வாக்குறுதி</h2><p>மேலும், தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் இயங்கி வந்த 717 மதுபான விற்பனை நிலையங்களை தமிழக அரசு மூடியுள்ளது. </p><p>அதேபோல், தமிழ்நாட்டில் இயங்கும் டாஸ்மாக்கின் மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் முழுவதிலும் நீண்ட காலமாகச் செயல்பட்டு வந்த அதிகாரப்பூர்வமற்ற பண வசூல் அமைப்புகளை முழுமையாகக் கலைத்துவிட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.</p> <h2>லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை</h2><p>இந்நிலையில் தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் தொடர்பாக மாநிலம் முழுவதும் 41 இடங்களில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dvac-raid-at-41-locations-across-tamil-nadu">லஞ்ச ஒழிப்புத்துறை</a> அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். டாஸ்மாக்கில் நீண்ட காலமாகச் செயல்பட்டு வரும் அதிகாரப்பூர்வமற்ற பண வசூல் அமைப்புகளைக் கலைக்க உத்தரவிடப்பட்டிருந்த சூழ்நிலையில் இந்தச் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.</p> <p>கரூர், சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள தொடர்புடைய இடங்கள் மற்றும் அதிகாரிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சோதனை நடைபெறுகிறது. கரூரில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF">செந்தில் பாலாஜி</a> வீடு, நண்பர்கள் வீடுகள் உள்ளிட்ட 6 இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்தி வருகின்றனர்.</p><p>புதுக்கோட்டை கல்லாக்கோட்டையில் கால்ஸ் தனியார் மதுபான ஆலை, சென்னை தி.நகர் தணிகாசலம் சாலையில் உள்ள மதுபான நிறுவனம் தொடர்புடைய இடத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.</p> <p>கோவை மாவட்டத்தின் பீளமேடு, பொள்ளாச்சி, நரசிம்மநாயக்கன்பாளையம், நவகரை ஆகிய 4 டாஸ்மாக் கிடங்குகள் மற்றும் மதுபான ஆலையில் லஞ்ச ஒழிப்புச் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், மன்னார்குடியில் அமைந்துள்ள திமுக எம்பி டி.ஆர்.பாலுவுக்குச் சொந்தமான மதுபான ஆலையிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். </p><h2>வழக்குப்பதிவு</h2><p>இந்நிலையில், டாஸ்மாக் நிதி முறைகேடு தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுடன் சிக்கன் பிரியாணி- முதலமைச்சர் விஜய் பரிசீலனை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-consult-with-chicken-biryani-with-nutritious-meal-for-government-school-students</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-consult-with-chicken-biryani-with-nutritious-meal-for-government-school-students#comments</comments><guid isPermaLink="false">405cb81e-2168-4501-867a-6103e698ef49</guid><pubDate>Wed, 29 Jul 2026 06:35:18 +0000</pubDate><atom:updated>2026-07-29T06:35:18.699Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,அரசு பள்ளி மாணவர்கள்,Biryani,பிரியாணி,Govt School Students</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/piok6zsb/biryani.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/piok6zsb/biryani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>முதலமைச்சருடன் கலந்து பேசி அதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்து விரைவில் சத்துணவு பட்டியலில் சிக்கன் பிரியாணி இடம் பெறலாம் என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.</aside><h2><strong>கோரிக்கை</strong></h2><p>அனைத்து ஆசிரியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை நடத்தினார். சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் மாணவர் நலன் சார்ந்த கோரிக்கைகளை முன் வைத்தனர். </p><p>அப்போது சில சங்கங்கள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவில் வாரத்திற்கு ஒருமுறையாவது சிக்கன் பிரியாணி வழங்க வேண்டும் என  வலியுறுத்தினர். </p><h2><strong>பரிசீலனை</strong></h2><p>சத்துணவில் சிக்கன் பிரியாணி வழங்குவதற்கான கோரிக்கை குறித்து அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார். </p><p>மேலும் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">முதலமைச்சருடன்</a> கலந்து பேசி  அதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்து விரைவில் சத்துணவு பட்டியலில் சிக்கன் பிரியாணி இடம் பெறலாம் என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறினார். </p><p>இது தவிர பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரமாக்குதல் ஆசிரியர் தகுதி தேர்வின் தகுதி மதிப்பெண்களை குறைத்தல், இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய திருத்தம் மற்றும் பழைய ஊதிய முறையை மீட்டெடுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர். </p><p>சங்கங்கள் முன் வைத்துள்ள கோரிக்கை மனுக்களை பிரத்தியேக சாப்ட்வேர் மூலம் பதிவேற்றம் செய்து டிஜிட்டல் மயமாக்கப்படும். கோரிக்கைகள் வகைப்படுத்தப்பட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த தகவல்கள் சம்பந்தப்பட்ட சங்கங்களுக்கு தெரிவிக்கப்படும் என்று  அமைச்சர் கூறினார். </p><p>உடற்கல்வி, ஓவியம் கணினி அறிவியல் மற்றும் தையல் உள்ளிட்ட பாடங்களில் மொத்தம் 11,773 பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களை பணி நிரந்தர செய்ய வேண்டும் என்று சங்கத் தலைவர் செந்தில் குமார் வலியுறுத்தினார்.</p>]]></content:encoded></item><item><title>ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு-வணிக வளாக இடிபாடுகளில் தீவிர மீட்புப் பணி!</title><link>https://www.maalaimalar.com/news/world/massive-earthquake-in-japan-death-toll-rises-to-13</link><comments>https://www.maalaimalar.com/news/world/massive-earthquake-in-japan-death-toll-rises-to-13#comments</comments><guid isPermaLink="false">35b7b952-c61c-47b2-b3cf-258e2b5fdea0</guid><pubDate>Wed, 29 Jul 2026 06:25:42 +0000</pubDate><atom:updated>2026-07-29T06:25:42.143Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Japan earthquake,ஜப்பான்  நிலநடுக்கம்,sanae takaichi,Kumamoto,Aeon Mall,குமாமோட்டோ,ஏயோன் மால்,சனே தாகைச்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/1fjnp7hk/Japan-Earthquake.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Japan Earthquake]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/1fjnp7hk/Japan-Earthquake.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தென்மேற்கு ஜப்பானின் கியூஷு பிராந்தியத்தில் உள்ள குமாமோட்டோ மாகாணத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்குப் பலியானோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதால், அவர்களை மீட்கும் பணிகள்  தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p><h2><strong>நிலநடுக்கத்தின் அளவு:</strong></h2><p>நேற்று பிற்பகல் குமாமோட்டோ பகுதியில் ரிக்டர் அளவில் 7.1 ஆகப் பதிவு செய்யப்பட்ட இந்த நிலநடுக்கம், ஜப்பானிய நில அதிர்வு அளவுகோலில் மிக உயர்ந்த அளவான 7-ஐத் தொட்டது. நிலநடுக்கத்தின் தீவிரத்தால் வீடுகள், கட்டடங்கள், பாலங்கள் மற்றும் வீதிகள் பலத்த சேதமடைந்தன. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, சில மணிநேரங்களிலேயே திரும்பப் பெறப்பட்டது.</p><h2><strong>எரிவாயு வெடிப்பு:</strong></h2><p>கஷிமா நகரில் உள்ள பிரபலமான 'ஏயோன் மால்' வணிக வளாகத்தில், நிலநடுக்கம் ஏற்பட்ட சுமார் ஒரு மணி நேரத்திற்குள் பயங்கர வெடிவிபத்து நிகழ்ந்தது. சமையல் எரிவாயு கசிவு காரணமாக இந்த வெடிப்பு நிகழ்ந்திருக்கலாம் எனக் சந்தேகிக்கப்படுகிறது. இதன்காரணமாக, வணிக வளாகத்தின் இரண்டாம் தளம் இடிந்து விழுந்தது. </p><p>இங்கு நிகழ்ந்த விபத்தில் 20 வயதுடைய இரு பெண்கள் உட்படப் பல உயிரிழப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இடிபாடுகளுக்குள் சிலர் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுவதால், மீட்புக் குழுவினர் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், யாட்சுஷிரோ நகரில் உள்ள நிப்பான் பேப்பர் தொழிற்சாலையின் புகைபோக்கி சரிந்து விழுந்ததில் பல தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.</p><h2><strong>ஜப்பான் பிரதமரின் அறிவிப்பு:</strong></h2><p>இதுகுறித்து ஜப்பான் பிரதமர் சனே தாகைச்சி, நிலநடுக்கத்தில் 13 பேர் உயிரிழந்திருப்பதை அரசு உறுதி செய்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் உதவிக்காகக் காத்திருக்கிறார்கள். இது உண்மையிலேயே நேரத்திற்கு எதிரான ஓட்டம். சாத்தியமான அனைத்து வளங்களையும் பயன்படுத்தி ஒவ்வொரு உயிரையும் காப்பாற்ற அரசு தீவிரமாகச் செயல்படும். என தெரிவித்துள்ளார்.</p><h2><strong>களத்தில் 4,600 மீட்புப் பணியாளர்கள்:</strong></h2><p>தற்காப்புப் படை , காவல்துறை மற்றும் தீயணைப்புப் படையைச் சேர்ந்த '4,600-க்கும் மேற்பட்ட வீரர்கள்' மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுமார் '2,600,000 மக்கள்' பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 450-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் 9,000-க்கும் அதிகமான மக்கள் தங்கியுள்ளனர். </p><p>நிலநடுக்கப் பகுதியில் வெப்பநிலை '35°C' வரை உயர்ந்துள்ளதால், முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு மின் இயற்றிகள் , ஏர்-கண்டிஷனர்கள், குடிநீர் மற்றும் உணவுப் பொருட்கள் தடங்கலின்றி கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p><h2><strong>இயல்பு வாழ்க்கை பாதிப்பு:</strong></h2><p>கியூஷு ஷிங்கான்சென் புல்லட் ரயில் சேவைகள் தண்டவாளச் சேதத்தால் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன. 36,000-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. குறைக்கடத்தி (Semiconductor) உற்பத்தி நிறுவனமான TSMC மற்றும் ஹோண்டா போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்களது உற்பத்தி அலகுகளின் செயல்பாட்டைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.</p><p>அடுத்த சில நாட்களுக்குப் பலமான தொடர் நில அதிர்வுகள் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஜப்பான் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு- மு.க.ஸ்டாலின் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-super-speciality-medical-seats-lost-mk-stalin-questions-dmk-government</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-super-speciality-medical-seats-lost-mk-stalin-questions-dmk-government#comments</comments><guid isPermaLink="false">810f7fec-13f3-43f6-ac50-eb3133393d23</guid><pubDate>Wed, 29 Jul 2026 06:24:15 +0000</pubDate><atom:updated>2026-07-29T06:24:15.254Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,முக ஸ்டாலின்,தவெக அரசு,TVK Govt,சூப்பர் ஸ்பெஷாலிட்டி,Super speciality hospital</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/fepz56k8/mks.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN EX CM MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/fepz56k8/mks.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்களை தவெக அரசு காற்றில் பறக்கவிட்டுவிட்டதாக முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் அவர்," <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D" rel="nofollow">உயர் சிறப்பு மருத்துவ இடங்கள்</a> வழக்கில் தமிழ்நாடு அரசு நியமித்த மூத்த வழக்கறிஞர்கள் ஏன் ஆஜராகவில்லை. அதி முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் தவெக அரசு தொடக்கம் முதல் அலட்சியம்.</p><p>மிகுந்த முக்கியவத்துவம் வாய்ந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர்கள் நியமிப்பதில் கூட ஏன் தாமதம்?" என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>ஆறாண்டுகளுக்கு முன் இதே நாளில், இந்தியா முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீட்டைத் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95" rel="nofollow">தி.மு.க. </a>போராடிப் பெற்றுத் தந்தது. ஆனால் இன்றோ, மருத்துவப் படிப்பில் தமிழ்நாட்டின் இடங்களை இழக்கும் செய்தி வந்திருக்கிறது.</p><h2>அலட்சியம் ஏன்?</h2><p>தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட த.வெ.க. அரசு; உச்சநீதிமன்றத்தில் வாய்பொத்தி நின்ற தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள்</p><p>தமிழ்நாடு அரசு நியமித்த மூத்த வழக்கறிஞர்கள் ஏன் ஆஜராகவில்லை?</p><p>மிகுந்த முக்கியத்துவம் கொண்ட இந்த வழக்கில் தொடக்கம் முதல் அலட்சியம் ஏன்? மூத்த வழக்கறிஞரை நியமிப்பதில் கூட ஏன் தாமதம்?</p><h2>சரண்டன் ஏன்?</h2><p>நியாயம் நம் பக்கம் இருந்தும் நீதிமன்றத்தில் எந்த வலுவான வாதங்களையும் எடுத்து வைக்காமல் 'சரண்டர்' ஆனதன் பின்னணி என்ன?</p><p>அகில இந்திய கவுன்சிலிங்கின் இரண்டாம் சுற்று நடைபெறுவதற்கு முன்னரே, மாநிலக் கலந்தாய்வை அவசரமாக நடத்தி 151 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவித்தது திட்டமிட்டே செய்யப்பட்டதா?</p><h2>மறுசீராய்வு மனு என்ன ஆனது?</h2><p>தமிழ்நாட்டுக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் அகில இந்தியத் தொகுப்புக்கு மாற்றப்படுவதை எதிர்த்து, கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் சிறப்புத் <a href="https://www.maalaimalar.com/news/national/revanth-reddy-telangana-assembly-lower-minimum-age-to-contest-ls-assembly-polls-to-21" rel="nofollow">தீர்மானம்</a> நிறைவேற்ற வலியுறுத்தியும் செய்யாதது ஏன்?</p><p>29-05-2026 உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனு என்ன ஆனது? </p><p>இப்படி பல கேள்விகளை இதனால் பாதிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவர்கள் எழுப்புகிறார்கள்.</p><p>எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் தொண்டாற்ற இருந்த 151 உயர்சிறப்பு அரசு <a href="https://www.maalaimalar.com/news/national/student-injured-in-delhi-protest-is-stable-say-doctors" rel="nofollow">மருத்துவர்</a>களை இழந்திருக்கிறோம். லட்சக்கணக்கான தமிழ்நாட்டு மக்களின் உயிர்ப்பிரச்சினை இது.</p><p>த.வெ.க. அரசு இதில் உரிய விளக்கத்தை நம் அரசு மருத்துவர்களுக்கும் மக்களுக்கும் அளித்தாக வேண்டும்!</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் போட்டி: வெள்ளிப் பதக்கம் வென்ற குல்வீர் சிங், ஹர்ஜிந்தர் கவுருக்கு குடியரசுத் தலைவர் முர்மு வாழ்த்து!</title><link>https://www.maalaimalar.com/sports/commonwealth-games-president-murmu-congratulates-silver-medalists-kulveer-singh-harjinder-kaur</link><comments>https://www.maalaimalar.com/sports/commonwealth-games-president-murmu-congratulates-silver-medalists-kulveer-singh-harjinder-kaur#comments</comments><guid isPermaLink="false">ad3a6ba1-848e-4f99-bc3c-7bf53a9d75e6</guid><pubDate>Wed, 29 Jul 2026 05:59:01 +0000</pubDate><atom:updated>2026-07-29T05:59:01.258Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>President Murmu,Commonwealth games,காமன்வெல்த் விளையாட்டு,குடியரசுத் தலைவர் முர்மு,Gulveer Singh,Harjinder Kaur,குல்வீர் சிங்,ஹர்ஜிந்தர் கவுர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/0q2f5z88/GAUR.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Harjinder Kaur]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/0q2f5z88/GAUR.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கிளாஸ்கோ <a href="https://www.maalaimalar.com/topic/காமன்வெல்த்">காமன்வெல்த்</a> விளையாட்டுப் போட்டிகளில் (CWG 2026) வெள்ளிப் பதக்கங்களை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்த இந்திய தடகள வீரர் குல்வீர் சிங் மற்றும் பளுதூக்கும் வீராங்கனை ஹர்ஜிந்தர் கவுர் ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.</p><h2><strong>வரலாற்றுச் சாதனை:</strong></h2><p>காமன்வெல்த் போட்டியின் ஆண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பதக்கம் வெல்லும் முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை குல்வீர் சிங் படைத்துள்ளார். மகளிருக்கான 69 கிலோ எடைப்பிரிவில் ஹர்ஜிந்தர் கவுர் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.</p><h2><strong>குல்வீர் சிங் 10,000 மீட்டர் ஓட்டம்:</strong></h2><p>ஆண்களுக்கான 10,000 மீட்டர் இறுதிப் போட்டியில் குல்வீர் சிங் 27 நிமிடங்கள் 49.78 விநாடிகளில் இலக்கைக் கடந்து இரண்டாம் இடம் பிடித்தார். </p><figure><img alt="GULVEER SINGH" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/lbuyrmc9/GULVEER-SIMGH.jpg" /></figure><p>ஆஸ்திரேலியாவின் கை ராபின்சன் முதல் இடத்தைப் பிடித்த நிலையில், குல்வீர் சிங்கின் இந்த வெள்ளிப் பதக்கம் காமன்வெல்த் போட்டிகளின் இந்தப் பிரிவில் இந்தியாவின் முதல் பதக்கமாகப் பதிவாகியுள்ளது.</p><h2><strong>ஹர்ஜிந்தர் கவுர் (பளுதூக்குதல்):</strong></h2><p>மகளிருக்கான 69 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்ட பஞ்சாபைச் சேர்ந்த ஹர்ஜிந்தர் கவுர், ஸ்னாட்ச் பிரிவில் 101 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க்  பிரிவில் 126 கிலோவும் என மொத்தம் '227 கிலோ' எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இப்போட்டியின் போது ஸ்னாட்ச் பிரிவில் காமன்வெல்த் சாதனை அளவை இருமுறை முறியடித்துப் புதிய சாதனை படைத்தார்.</p><h2><strong>குடியரசுத் தலைவர் பாராட்டு:</strong></h2><p>இது தொடர்பாக குடியரசுத் தலைவர் முர்மு அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியாகியுள்ள பதிவில், "கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான 10,000 மீட்டர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று, அப்பிரிவில் இந்தியாவிற்கான முதல் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ள குல்வீர் சிங்கிற்கு எனது வாழ்த்துகள். </p><figure><img alt="President Droupadi Murmu" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/rai7cub5/MURMU.jpg" /></figure><p>உங்களது சாதனையால் நாடு பெருமிதம் கொள்கிறது. எதிர்காலத்தில் மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறேன்."</p><p>மேலும், பளுதூக்கும் வீராங்கனை ஹர்ஜிந்தர் கவுரை வாழ்த்திப் பேசிய குடியரசுத் தலைவர், "மகளிருக்கான 69 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஹர்ஜிந்தர் கவுருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். உங்களது திறம்படக் கூடிய ஆட்டத்தால் இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளீர்கள். தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகிறேன்," எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>மேலும், அன்றைய நாளில் இந்தியா மேலும் சில சிறப்பான வெற்றிகளைப் பதிவு செய்தது. குத்துச்சண்டை போட்டிகளில் மூன்று இந்திய வீரர்கள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவிற்கு மேலும் மூன்று பதக்கங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>மதுக்கடைகளை தனியாருக்கு தாரை வார்ப்பது மதுப் புழக்கத்தை மேலும் அதிகரிக்கவே செய்யும்..!- அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/privatizing-liquor-shops-will-only-increase-alcohol-abuse-anbumani</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/privatizing-liquor-shops-will-only-increase-alcohol-abuse-anbumani#comments</comments><guid isPermaLink="false">63bd09c1-8128-4ac8-93cc-0f1afb07ad00</guid><pubDate>Wed, 29 Jul 2026 05:54:11 +0000</pubDate><atom:updated>2026-07-29T05:54:11.343Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani ramadoss,liquor shop,அன்புமணி  ராமதாஸ்,Tasmac,டாஸ்மாக்,மதுக்கடைகள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/pa3r95af/Anbumani.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anbumani ramadoss]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/pa3r95af/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அரசு மதுக்கடைகளை தனியாருக்கு தாரை வார்ப்பது மதுப் புழக்கத்தை மேலும் அதிகரிக்கவே செய்யும் என்றும், மதுக்கடைகளை மூடுவது தான் முழுமையான தீர்வு என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-</p><h2>கண்டனம்</h2><p>தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 4048 மதுக்கடைகளில்  நகரப்பகுதிகளில் உள்ள சுமார் 2500 <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88" rel="nofollow">மதுக்கடை</a>களை மட்டும் தனியார் மயமாக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்திகள் உண்மையாக இருந்தால் தமிழக அரசின் முடிவு கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும். </p><h2>முழு மதுவிலக்கு</h2><p>தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை படிப்படியாக மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு அரசின் இலக்காக இருக்க வேண்டும். இந்த இலக்கை நோக்கிய பயணத்தில் இடது புறம் திரும்புவதோ, வலதுபுறம் திரும்புவதோ அல்லது  'U' வளைவில் திரும்புவதோ மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.</p><h2>மூட்டைப்பூச்சி</h2><p>தமிழ்நாடு அரசே மது விற்பனை செய்கிறது என்ற அவமானத்தை போக்க வேண்டும்; மதுக்கடைகளில் கூடுதல் விலை வசூலிக்கப்படுவதை கட்டுப்படுத்த முடியவில்லை என்பன போன்றவைதான் தமிழ்நாடு அரசின் இந்த முடிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இது <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF" rel="nofollow">மூட்டைப்பூச்சி</a>க்கு பயந்து வீட்டை கொழுத்துவதற்கு ஒப்பானதாகும். </p><h2>மானக்கேடு</h2><p>அரசே மது விற்பனை செய்கிறது என்பது மானக்கேடானது. இந்த இழுக்கை போக்குவதற்கான தீர்வு அனைத்து மதுக்கடைகளையும் மூடி முழு மதுவிலக்கை ஏற்படுத்துவதுதானே தவிர மதுக்கடைகளை தனியாரிடம் தாரை வார்ப்பது அல்ல. </p><h2>தனியார் மதுக்கடைகள்</h2><p>தமிழ்நாட்டில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/public-protest-in-mukhabar-newly-opened-liquor-store-closed-708372" rel="nofollow">தனியார் மதுக்கடை</a>கள் செயல்பட்டு வந்த போது அவற்றில் சட்ட விரோதமாக மது வணிகம் செய்யப்பட்டது, ஓர் இடத்தில் உரிமம் பெற்றுக்கொண்டு, இப்போது செயல்படும் சந்துக்கடைகளைப் போல பல இடங்களில் கிளைகள் திறந்து மது விற்பனை செய்யப்பட்டது, மதுக்கடைகளிலேயே கள்ளச்சாராயமும் விற்பனை செய்யப்பட்டது உள்ளிட்ட காரணங்களால்தான் தனியார் மதுக்கடைகள் மூடப்பட்டு 2002-03 -ம் ஆண்டில் அரசு மதுக்கடைகள் திறக்கப்பட்டன. </p><h2>சீர்திருத்தம் அல்ல சீர்கேடு</h2><p>இருபத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அந்த முடிவை மாற்றி மீண்டும் பழைய நடைமுறைக்கே செல்வது சீர்திருத்தம் அல்ல... மாறாக சீர்கேடாகத்தான் கருதப்படும்.</p><p>தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்தே, தமிழ்நாட்டில் மதுக்கடைகளை தனியார் மயமாக்குவதற்கும், வெளி மாநிலங்களில் இருந்து மதுவை கொள்முதல் செய்து விற்பனை செய்வதற்கும் ஒரு லாபி தீவிரமாக முயன்று வருவதாக  செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. </p><h2>தமிழகத்தில் மது வெள்ளம் பாயும்</h2><p>இருப்பினும் தமிழ்நாட்டின் ஒற்றை அதிகார மையம் நான்தான் என்று முதலமைச்சர் விஜய் அவர்கள் மீண்டும் மீண்டும் கூறி வந்ததால் அப்படி நடக்க வாய்ப்பில்லை என்று மதுவிலக்கு ஆதரவாளர்கள் நம்பினார்கள். ஆனால் இப்போது வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. </p><p>தனியார் மதுக்கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டால் தமிழ்நாட்டில் மது வெள்ளமாக பாயும்.சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் இன்னும் அதிக அளவில் மதுவுக்கு அடிமையாவார்கள். </p><p>அப்படியொரு நிலை ஏற்பட அரசே வழிவகுக்கக் கூடாது. எனவே தமிழ்நாட்டில் மதுக்கடைகளை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு முழுவதும் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dvac-raid-at-41-locations-across-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dvac-raid-at-41-locations-across-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">a5806076-7162-444b-b0ca-820da09a8534</guid><pubDate>Wed, 29 Jul 2026 05:39:38 +0000</pubDate><atom:updated>2026-07-29T05:39:38.153Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>senthil balaji,TN,Vigilance raid,செந்தில்பாலாஜி,தமிழ்நாடு,லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/kyi2iot8/raid1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/kyi2iot8/raid1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[  <p><em><strong>தமிழகம் முழுவதும் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.</strong></em></p><p>டாஸ்மாக் கடைகளுக்கான மதுபானம் கொள்முதலில் கட்சி நிதி அளித்தது தொடர்பாக தமிழகம் முழுவதும் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.</p> <p>கரூர், சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள தொடர்புடைய இடங்கள் மற்றும் அதிகாரிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இந்த சோதனை நடைபெறுகிறது</p><p>கரூரில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vigilance-raid-senthil-balajis-karur-residence">செந்தில் பாலாஜி</a> வீடு, நண்பர்கள் வீடுகள் உள்ளிட்ட 6 இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்தி வருகின்றனர்.</p> <p>புதுக்கோட்டை கல்லாக்கோட்டையில் கால்ஸ் தனியார் மதுபான ஆலை, சென்னை தி.நகர் தணிகாசலம் சாலையில் உள்ள மதுபான நிறுவனம் தொடர்புடைய இடத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.</p><p>கோவை மாவட்டத்தின் பீளமேடு, பொள்ளாச்சி, நரசிம்மநாயக்கன்பாளையம், நவகரை ஆகிய 4 டாஸ்மாக் கிடங்குகள் மற்றும் மதுபான ஆலையில் லஞ்ச ஒழிப்புச் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், மன்னார்குடியில் அமைந்துள்ள திமுக எம்பி டி.ஆர்.பாலுவுக்குச் சொந்தமான மதுபான ஆலையிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். </p> <h2>மதுபான ஆலையில் சோதனை </h2><p>புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அடுத்துள்ள கல்லாக்கோட்டையில் இயங்கி வரும் தனியார் மதுபான உற்பத்தி ஆலையிலும் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். </p><p>இதையடுத்து அந்த ஆலையில் பணியாற்றும் 600க்கும் மேற்பட்ட ஊழி யர்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் மதுபாட்டில்களை ஏற்றி செல்ல வந்த 20க்கும் மேற்பட்ட லாரிகள் வெளியே அனுப்பப்படாமல் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தொடர் சோதனை நடைபெற்று வருவதால் அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். </p> ]]></content:encoded></item><item><title>தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி?-முதல்வர் விஜய்யின் ஜோதிடர் கணிப்பு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/if-dhanush-enters-politics-will-dmk-aiadmk-be-wiped-out-astrologer-predicts</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/if-dhanush-enters-politics-will-dmk-aiadmk-be-wiped-out-astrologer-predicts#comments</comments><guid isPermaLink="false">db5ed34e-abe9-4669-a51b-8fc761b41082</guid><pubDate>Wed, 29 Jul 2026 05:30:16 +0000</pubDate><atom:updated>2026-07-29T05:30:16.031Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நடிகர் தனுஷ்,முதல்வர் விஜய்,Ricky Rathan Pandit,Chief Minister Vijay,Dhanush enters politics,ரிக்கி ராதன் பண்டிட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/shjy72gg/dhanush.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dhanush enters politics ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/shjy72gg/dhanush.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் அரசியலுக்குள் களமிறங்கினால், அது தமிழக அரசியலின் பாரம்பரியக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கிவிடும் என்று பிரபல ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் அதிரடியான கணிப்பை வெளியிட்டுள்ளார்.</p><h2><strong>விஜய்-தனுஷ் இடையேதான் போட்டியா?</strong></h2><p>சமீபத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல், வரவிருக்கும் தேர்தல்களில் நடிகர் விஜய்யின் அரசியல் எழுச்சியை எதிர்கொள்ள, தமிழகத்தின் பிரதான திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகியவை கூட்டணி அமைக்கும் சூழல் உருவாகலாம் எனக் கூறியிருந்தார். அந்த வரிசையில், தற்போது நடிகர் தனுஷின் அரசியல் எதிர்காலம் குறித்தும் தனது சுவாரசியமான கணிப்புகளைப் பகிர்ந்துள்ளார்.</p><h2><strong>இரண்டாம் இடம் உறுதி:</strong></h2><p>தனுஷ் அரசியலில் ஈடுபடத் தீர்மானித்தால், தமிழக அரசியலில் வழக்கமாக உள்ள பிரதான எதிர்க்கட்சி இடமான 2-வது இடத்தை அவர் மிக எளிதாகப் பிடித்துவிடுவார். எதிர்காலத்தில் தமிழக அரசியல் களம் என்பது இரு முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் தனுஷ் இடையேயான நேரடிப் போட்டியாக மாறுவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளன.</p><h2><strong>2031-ல் புதிய கூட்டணி:</strong></h2><p>விஜய்யின் வருகை மற்றும் தனுஷின் அரசியல் நுழைவு ஆகியவை திராவிடக் கட்சிகளின் அடித்தளத்தை அசைக்கும் என்பதால், வரும் 2031-ம் ஆண்டு தேர்தலில் திமுக மற்றும் அதிமுக இணைந்து கூட்டணி அமைக்கும் நிலைக்குத் தள்ளப்படலாம்.</p><h2><strong>ஜாதக ஆய்வு மற்றும் யோகம்:</strong></h2><p>நடிகர் தனுஷின் ஜாதகத்தை நேரடியாகத் தான் ஆய்வு செய்துள்ளதாகக் குறிப்பிட்ட ஜோதிடர் ரிக்கி ராதன், அவரது ஜாதகத்தில் அரசியலில் மிகப்பெரிய உயரத்தை எட்டுவதற்கான உன்னதமான யோகம் மிக வலுவாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்த யோகங்கள் சாதகமாக இருந்தாலும், தீவிர அரசியலில் இறங்குவது குறித்த இறுதி முடிவை எடுக்க வேண்டியது நடிகர் தனுஷின் தனிப்பட்ட விருப்பம் மட்டுமே என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p>நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் அரசியல் களம் கண்டுள்ள நிலையில், தனுஷ் குறித்து ஜோதிடர் கணித்துள்ள இந்தத் தகவல் சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பரவலான விவாதத்தை உருவாக்கியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இயற்கையோடு இயைந்த கலாச்சாரமே புலிகள் பாதுகாப்பிற்கு காரணம்- பிரதமர் மோடி</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-says-nature-aligned-culture-drives-tiger-protection</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-says-nature-aligned-culture-drives-tiger-protection#comments</comments><guid isPermaLink="false">ea620cbd-1dc2-47ee-ae51-f438a677e804</guid><pubDate>Wed, 29 Jul 2026 05:19:47 +0000</pubDate><atom:updated>2026-07-29T05:19:47.870Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>புலி,tiger,pm modi,பிரதமர் மோடி,Internation tiger day,சர்வதேச புலிகள் தினம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/s6i1adii/Pm-modi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tiger-PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/s6i1adii/Pm-modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D" rel="nofollow">சர்வதேச புலிகள் தினம்</a></h2><p>சர்வதேச புலிகள் தினம் ஆண்டுதோறும் ஜூலை 29 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. புலிகளின் பாதுகாப்பு, அவற்றின் வாழிடங்களைப் பாதுகாத்தல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது இதன் முக்கிய நோக்கங்களாக பார்க்கப்படுகிறது.</p><p>கடந்த 2010ம் ஆண்டு ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் இந்த தினம் உருவாக்கப்பட்டது.</p><p>புலிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து வருவதைத் தடுத்து, அவற்றைப் பாதுகாக்க இந்த நாள் கொண்டுவரப்பட்டது.  புலிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து வருவதைத் தடுத்து, அவற்றைப் பாதுகாக்க இந்த நாள் கொண்டுவரப்பட்டது. உலகில் உள்ள காட்டுப் புலிகளில் 75%-க்கும் அதிகமானவை இந்தியாவில் தான் வாழ்கின்றன. 2022-க்குள் புலிகளின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக உயர்த்த வேண்டும் என்ற சர்வதேச இலக்கை இந்தியா காலக்கெடுவிற்கு முன்பே சாதித்துக் காட்டியது.</p><p>சமீபத்திய கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 3,167-க்கும் அதிகமான காட்டுப் புலிகள் உள்ளன.</p><h2>பிரதமர் மோடி</h2><p>இந்நிலையில் சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு <a href="https://www.maalaimalar.com/news/national/pm-thanks-people-for-responses-positive-suggestions-received-for-midnight-video" rel="nofollow">பிரதமர் மோடி</a> தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.</p><p>அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-</p><p>புலிப் பாதுகாப்பில் நமது வனத்துறைப் பணியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பாதுகாவலர்களின் முயற்சிகளும், அர்ப்பணிப்பும் முக்கியப் பங்காற்றியுள்ளன.</p><p>அந்த உணர்வோடு, உள்ளூர் சமூகங்களுக்கு வலுவூட்டுவதிலும், மனித-வனவிலங்கு மோதலைக் குறைப்பதிலும் இந்தியா தனது உறுதிப்பாட்டைத் தொடர்கிறது.</p><p>உலகப் புலி தினத்தை முன்னிட்டு அனைத்து வனவிலங்கு ஆர்வலர்களுக்கும் வாழ்த்துக்கள். உலகப் புலி எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 70% இந்தியாவில்தான் உள்ளது என்பதில் இந்திய மக்கள் பெருமிதம் கொள்கிறார்கள்.</p><p>இயற்கையோடு இயைந்து வாழும் நமது பல நூற்றாண்டுகள் பழமையான கலாச்சாரத்தால் உத்வேகம் பெற்று, நமது மக்களின் கூட்டு மனவுறுதியால் இந்தியாவின் புலிப் பாதுகாப்பு முயற்சிகள் உந்தப்படுகின்றன.</p><p>அறிவியல் அடிப்படையிலான பாதுகாப்பு, சமூகப் பங்கேற்பு மற்றும் புலிப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றிற்கான எங்கள் உறுதிப்பாட்டையும் நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>இந்தியாவின் முக்கியப் புலி காப்பகங்கள்</h2><p>இந்தியாவில் தற்போது 54-க்கும் மேற்பட்ட புலி காப்பகங்கள் உள்ளன.</p><p>ஜிம் கார்பெட்- உத்தரகாண்ட்</p><p>கான்ஹா- மத்திய பிரதேசம்</p><p>ரந்தம்பூர்- ராஜஸ்தான்</p><p>சுந்தரவனக் காடுகள்- மேற்கு வங்கம்</p><p>பந்திப்பூர்- கர்நாடகா</p>]]></content:encoded></item><item><title>மக்கள் தொகை கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்துவோம் - இளையராஜா</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ilaiyaraaja-says-we-will-successfully-conduct-the-census</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ilaiyaraaja-says-we-will-successfully-conduct-the-census#comments</comments><guid isPermaLink="false">4312e2e9-7294-46a7-9126-77954ddfd3e7</guid><pubDate>Wed, 29 Jul 2026 05:02:09 +0000</pubDate><atom:updated>2026-07-29T05:02:09.096Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இளையராஜா,Census,ilaiyaraaja,மக்கள் தொகை கணக்கெடுப்பு,Census 2027</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/42qkanob/ilaiyaraaja.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/42qkanob/ilaiyaraaja.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2><strong>மக்கள் தொகை கணக்கெடுப்பு</strong></h2><p>இந்தியாவின் 16வது <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">மக்கள் தொகை கணக்கெடுப்பின்</a> முதல் கட்டமாக இணையதளம் வழியாக சுய கணக்கெடுப்பு செய்யும் பணியானது கடந்த 17-ந்தேதி தமிழ்நாட்டில் தொடங்கியுள்ளது. இதையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், அவரின் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்து, பொதுமக்களையும் தங்களின் தரவுகளை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அதனை தொடர்ந்து பொதுமக்கள் பலரும் தங்களின் தரவுகளை இணையதளத்தில் பதிவு செய்து வருகின்றனர். </p> <p>இந்த நிலையில், மக்கள்தொகை கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்துவோம் என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,</p><h2><strong>முழு ஒத்துழைப்பு</strong></h2><p>இசை மனிதர்களை ஒன்றிணைப்பதைப் போல, மக்கள் தொகைக் கணக்கெடுப்பும் நாட்டின் முன்னேற்றத்திற்கு உறுதியான அடித்தளத்தை அமைக்கிறது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027-இல் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>சுயக் கணக்கெடுப்பு (Self-Enumeration) 17.07.2026 முதல் 31.07.2026 வரை நடைபெறுகிறது. இந்தக் காலப்பகுதியில் https://se.census.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் தங்களது குடும்ப விவரங்களை சுயமாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.</p><p>அதனைத் தொடர்ந்து 01.08.2026 முதல் 30.08.2026 வரை நடைபெறும் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/census-operations-government-orders-a-ban-on-the-transfer-of-officials-until-august-31">வீட்டுப் பட்டியலிடல்</a> (HLO) கட்டத்தில் வருகை தரும் கணக்கெடுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.</p><p>துல்லியமான மக்கள்தொகைத் தகவல்கள் நாட்டின் சிறந்த திட்டமிடல் மற்றும் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைகின்றன. அனைவரும் இணைந்து மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027-ஐ வெற்றிகரமாக நடத்துவோம் என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">இசை மனிதர்களை ஒன்றிணைப்பதைப் போல, மக்கள் தொகைக் கணக்கெடுப்பும் நாட்டின் முன்னேற்றத்திற்கு உறுதியான அடித்தளத்தை அமைக்கிறது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027-இல் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.<br><br>சுயக் கணக்கெடுப்பு (Self-Enumeration)… <a href="https://t.co/9E1DQWb55l">pic.twitter.com/9E1DQWb55l</a></p>&mdash; Ilaiyaraaja (@ilaiyaraaja) <a href="https://x.com/ilaiyaraaja/status/2082308087587983435?ref_src=twsrc%5Etfw">July 29, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>கொளத்தூர் தொகுதி - மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி தொடங்கியது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/verification-of-evm-for-kolathur-constituency-has-begun</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/verification-of-evm-for-kolathur-constituency-has-begun#comments</comments><guid isPermaLink="false">d9e12ec6-d607-4607-8316-ade7de747f31</guid><pubDate>Wed, 29 Jul 2026 04:53:53 +0000</pubDate><atom:updated>2026-07-29T04:53:53.181Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,Kolathur Constituency,முக ஸ்டாலின்,கொளத்தூர் தொகுதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/f3aeo6u5/kolathur.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kolathur Constituency EVM verification]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/f3aeo6u5/kolathur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 14 வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி தொடங்கியது.</strong></em></p><h2>மு.க.ஸ்டாலின் கோரிக்கை மனு</h2><p>சட்டமன்ற தேர்தல்களில் சென்னை கொளத்தூர் தொகுதியில் (2011, 2016, 2021) 'ஹாட்ரிக்' வெற்றியை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவு செய்திருந்தார். ஆனால் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் த.வெ.க. வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் தோல்வி அடைந்தார். </p> <h2>தேர்தல் ஆணையம்</h2><p>கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட 14 வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்கு எந்திரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் மு.க.ஸ்டாலின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டிருந்தது.</p><p>அதனடிப்படையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தேர்தல் அலுவலர்கள் இன்று முதல் ஆய்வு செய்ய உள்ளனர்.</p><h2>தேர்தல் அதிகாரி தகவல்</h2><p>இதுகுறித்து தமிழக தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில்,</p><p>பொதுவாகவே தேர்தல் முடிந்த பின்னர், தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்கள் தொகுதிக்குட்பட்ட குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் குளறுபடிகள் ஏற்பட்டது. குறித்தோ, வேறு ஏதாவது முக்கிய காரணங்களை குறிப்பிட்டு மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைப்பார்கள். அதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு முழுமையாக ஆய்வு செய்யும். அதன்படி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின்பு வந்துள்ள கோரிக்கை மனுக்கள் குறித்து ஆராயப்பட்டது.</p> <p>இதில் முன்னாள் முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க.ஸ்டாலின்</a> அளித்துள்ள மனுவும் அடங்கும். கொளத்தூர் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எண்ணிக்கை முடிந்தவுடன் அவை 'சீல்' வைக்கப்பட்டு சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  தி.மு.க. முகவர்கள், தேர்தல் நடத்தும் அதிகாரி முன்னிலையில் இந்த எந்திரங்கள் சரி பார்க்கப்படும் என்று அவர் கூறி இருந்தார்.</p>  <h2>கொளத்தூர் தொகுதி</h2><p>இந்நிலையில் சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 14 வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் (EVM) சரிபார்ப்பு பணி தொடங்கியது. சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள கிடங்கில் கொளத்தூர் தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி தொடங்கியது.</p> <h2>சென்னை மாநகராட்சி ஆணையர்</h2><p>கொளத்தூர் தொகுதி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் முன்னிலையில் நடைபெறுகிறது.</p><p>திமுக சார்பில் என்.ஆர்.இளங்கோ, சட்டத்துறை துணை செயலாளர் சந்துரு, தவெக வழக்கறிஞர் அருண், வி.எஸ்.பாபு உதவியாளர் வந்துள்ளனர்.</p> <p>மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ள 14 வாக்குச்சாவடிகளில் பதிவான மின்னணு எந்திரங்கள் ஆய்வு செய்யப்படும். இன்று முதல் 7 நாட்களுக்கு இப்பணி நடைபெறும். ஒவ்வொரு நாளும் 2 வாக்குச்சாவடிகளுடைய எந்திரங்கள் ஆய்வு செய்யப்படும்.</p><p>இதேபோன்று புகார்கள் வந்துள்ள காஞ்சிபுரம், உத்திரமேரூர், செங்கல்பட்டு உள்ளிட்ட தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் இன்று முதல் தொடங்கி நடைபெற உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>மும்பை பிரபல கிளப்புகளின் உரிமங்கள் ரத்து: சுகாதாரக் குறைபாடு காரணமாக உணவு பாதுகாப்புத்துறை அதிரடி நடவடிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/national/mumbai-popular-clubs-licenses-cancelled-health-violations-food-safety-action</link><comments>https://www.maalaimalar.com/news/national/mumbai-popular-clubs-licenses-cancelled-health-violations-food-safety-action#comments</comments><guid isPermaLink="false">6907596f-1c94-43fe-a219-09591bf4796a</guid><pubDate>Wed, 29 Jul 2026 04:51:57 +0000</pubDate><atom:updated>2026-07-29T04:51:57.716Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>mumbai,மும்பை,Cricket Club of India,The Willingdon Sports Club,FSSAI Licences,தி கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியா,தி வில்லிங்டன் ஸ்போர்ட்ஸ் கிளப்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/3po6g5pp/mumbai-club.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Cricket Club of India  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/3po6g5pp/mumbai-club.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மும்பையிலுள்ள மிகவும் பிரபலமான மற்றும் பழமை வாய்ந்த கிளப்புகளில் நடத்தப்பட்ட சோதனையில், உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிகளில் கடுமையான மீறல்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, 5 முன்னணி கிளப்புகளின் உணவு உரிமங்களை ரத்து செய்து மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன், முறையான உரிமம் இன்றி செயல்பட்டு வந்த மற்றொரு பிரபல விளையாட்டு கிளப்பின் உணவு விநியோக சேவையை முற்றிலும் நிறுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.</p><h2><strong>உரிமம் ரத்து செய்யப்பட்ட முக்கிய கிளப்புகள்:</strong></h2><p>கடந்த ஜூலை 27 அன்று மும்பை மாநகர் முழுவதும் உள்ள கிளப்புகள், உணவகங்கள் மற்றும் உணவகக் கூடங்களில்  எஃப்.டி.ஏ அதிகாரிகள் தீவிர ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர். இதில், தி கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியா, தி வில்லிங்டன் ஸ்போர்ட்ஸ் கிளப், எம்.ஐ.ஜி கிரிக்கெட் கிளப், ஆர்.கே. ஜூஹு ஜிம்கானா, அபர்ணா ஜூஹு ஜிம்கானா ஆகிய 5 புகழ்பெற்ற கிளப்புகளின் உணவு உரிமங்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.</p><h2><strong>பூச்சிகள் மற்றும் ஈக்கள் தொல்லை:</strong></h2><p>FDA அதிகாரிகளின் சோதனையின் போது சமையலறை மற்றும் உணவு சேமிப்புப் பகுதிகளில் பல்வேறு தீவிர சுகாதார சீர்கேடுகள் கண்டறியப்பட்டன. உணவுகள் தயாரிக்கப்படும் சமையலறைப் பகுதிகளில் கரப்பான் பூச்சிகள், ஈக்கள் மற்றும் பிற பூச்சிகளின் நடமாட்டம் அதிக அளவில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.</p><h2>சு<strong>காதாரமற்ற பராமரிப்பு:</strong></h2><p>உணவுப் பொருட்களை முறையான வெப்பநிலையில் சேமித்து வைக்காதது மற்றும் சமையலறை உபகரணங்கள் தூய்மையாகப் பராமரிக்கப்படாதது கண்டுபிடிக்கப்பட்டது. உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட தூய்மை வழிகாட்டுதல்கள் எதையும் இந்த உயர்முனை கிளப்புகள் முறையாகப் பின்பற்றவில்லை.</p><h2>பி<strong>ற கிளப்புகள் மீதான நடவடிக்கை:</strong></h2><p>மலாடு மேற்கில் செயல்பட்டு வரும் கோரேகாவ் ஸ்போர்ட்ஸ் கிளப் FSSAI உரிமம் எதுவுமின்றி இயங்கி வந்தது தெரியவந்ததை அடுத்து, அங்கு உணவு சேவைகளை உடனடியாக நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 7 நிறுவனங்களில், ஒரு உணவகத்திற்குச் சுகாதார நிலையை மேம்படுத்த அவகாசம் வழங்கி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.</p><h2><strong>உணவு பாதுகாப்புத் துறையின் எச்சரிக்கை:</strong></h2><p>நகரத்தின் உயர்மட்டப் பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் உறுப்பினர்களாக இருக்கும் முன்னணி கிளப்புகளிலேயே இத்தகைய சுகாதாரச் சீர்கேடுகள் கண்டறியப்பட்டது பொதுமக்கள் மற்றும் உறுப்பினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவுப் பாதுகாப்பு விதிகளில் எவ்வித சமரசமும் செய்யப்பட மாட்டாது என்றும், அனைத்து குறைபாடுகளும் நிவர்த்தி செய்யப்பட்டு, மறுஆய்வு செய்யப்பட்ட பின்னரே இந்த கிளப்புகளின் உரிமங்களை மீண்டும் புதுப்பிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் FDA அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தபால் கட்டணம் 1-ந் தேதி முதல் மாற்றம்- விரைவு சேவைக்கு புதிய கட்டணங்கள் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/postal-charges-to-change-from-the-1st</link><comments>https://www.maalaimalar.com/news/national/postal-charges-to-change-from-the-1st#comments</comments><guid isPermaLink="false">85601d3b-6e41-46fb-804c-de1c9f4f11a0</guid><pubDate>Wed, 29 Jul 2026 04:45:56 +0000</pubDate><atom:updated>2026-07-29T04:45:56.454Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Indian posts,இந்திய தபால் துறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/t9cb0745/indianpost.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Indian Post]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/t9cb0745/indianpost.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தபால் கட்டணம் 1-ந்தேதி முதல் மாற்றம் செய்யப்பட உள்ளது. 24 மணி, 48 மணி நேர விரைவு சேவைக்கு புதிய கட்டணங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.</aside><h2><strong>ஆவணங்கள்</strong></h2><p>இந்திய தபால் துறை, விரைவு தபால் சேவைகளுக்கான புதிய கட்டணங்களை அறிவித்துள்ளது. மேலும், முதல் முறையாக 'ஆவணம்' மற்றும் 'பார்சல்' ஆகியவற்றுக்கு தெளிவான வரையறைகளையும் வெளியிட்டு உள்ளது. இந்த புதிய கட்டணங்கள் வருகிற 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகின்றன. இந்த புதிய விதிகளின்படி, மறுவிற்பனை மதிப்பு இல்லாத கடிதங்கள் மற்றும் அச்சிடப்பட்ட ஆவணங்கள் குறைந்த கட்டணத்தில் அனுப்பப்படலாம். </p><p>வணிகப்பொருட்கள் மற்றும் மறுவிற்பனை செய்யக்கூடிய பொருட்கள் அனைத்தும் பார்சல் பிரிவில் சேர்க்கப்படும். வங்கி பாஸ்புத்தகம், காசோலை புத்தகம், வங்கி கணக்கு அறிக்கை, பான் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் உள்ளிட்ட ஆவணங்கள் “ஆவணம்” பிரிவில் இடம்பெறும். </p><p>அதேபோல், 500 கிராம் வரை எடையுள்ள ராக்கி உறைகள், வாழ்த்து அட்டைகள் மற்றும் வணிக மதிப்பு இல்லாத அச்சிடப்பட்ட பொருட்களும் இந்த பிரிவில் சேர்க்கப்படும். இதற்கு அப்பாற்பட்ட அனைத்து பொருட்களும் பார்சல் பிரிவில் வகைப்படுத்தப்படும்.</p><h2><strong>6 நகரங்கள்</strong></h2><p>பொதுமக்கள் மற்றும் மொத்த வாடிக்கையாளர்களுக்காக '24 விரைவு தபால்' மூலம் அனுப்பப்படும் பொருட்கள் 24 மணி நேரத்துக்குள் வழங்கப்படும். '48 விரைவு தபால்' மூலம் அனுப்பப்படும் பொருட்கள் 48 மணி நேரத்துக்குள் வழங்கப்படும். இந்த சேவைகள் தற்போது டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் ஐதராபாத் ஆகிய 6 நகரங்களில் மட்டுமே கிடைக்கின்றன.</p><p>24 மணி நேர விரைவு தபால் சேவையில், பொதுமக்களுக்கான கட்டணம் பொருளின் எடை மற்றும் தூரத்தை பொறுத்து ரூ.38 முதல் ரூ.186 வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 50 கிராமுக்கும் குறைவான பொருளை உள்ளூர் முகவரிக்கு அனுப்ப ரூ.38, இந்தியாவின் பிற பகுதிகளுக்கு அனுப்ப ரூ.94 வசூலிக்கப்படும். 48 மணி நேர விரைவு தபால் சேவைக்கான கட்டணம் பொதுமக்களுக்கு ரூ.61 முதல் ரூ.121 வரை இருக்கும். மொத்த வாடிக்கையாளர்களுக்கு 24 மணி நேர ரூ.38 முதல் ரூ.100 வரையும், 48 மணி நேர சேவைக்கான கட்டணம் ரூ.48 முதல் ரூ.72 வரையும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய நடைமுறையால் ஆவணங்கள் மற்றும் பார்சல்களை தனித்தனியாக வகைப்படுத்தி, அதற்கேற்ற கட்டணத்தில் அனுப்பும் வசதி கிடைக்கும் என்று தபால் துறை தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இது லிஸ்ட்-லயே இல்லையே... ஸ்மார்ட்வாட்ச் பிரிவில் களமிறங்கும் நத்திங்!</title><link>https://www.maalaimalar.com/technology/newgadgets/nothing-smartwatch-reportedly-in-development-could-launch-in-september</link><comments>https://www.maalaimalar.com/technology/newgadgets/nothing-smartwatch-reportedly-in-development-could-launch-in-september#comments</comments><guid isPermaLink="false">2c87a41e-9047-4fdd-b2e3-be260f4cacb8</guid><pubDate>Wed, 29 Jul 2026 04:34:00 +0000</pubDate><atom:updated>2026-07-29T04:34:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Smartwatch,ஸ்மார்ட்வாட்ச்,Nothing,நத்திங்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/2qnqg54a/cmf-watch-3-pro-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஸ்மார்ட்வாட்ச்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/2qnqg54a/cmf-watch-3-pro-1.png?w=280" width="280"></media:thumbnail><category>புதிய கேஜெட்டுகள் (New gadgets)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நத்திங் நிறுவனம் சர்வதேச சந்தையில் பல்வேறு நாடுகளில் தனது வியாபாரத்தை நிறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தது. சமீபத்தில் இந்த தவல்களில் துளியும் உண்மையில்லை என <a href="https://www.maalaimalar.com/topic/nothing">நத்திங்</a> நிறுவனத்தின் இணை நிறுவனர் தெரிவித்து இருந்தார். </p><p>இந்த நிலையில், நத்திங் நிறுவனம் ஸ்மார்ட்வாட்ச் பிரிவில் களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல்கள் உண்மையாக்ம பட்சத்தில் நத்திங் நிறுவனத்தின் <a href="https://www.maalaimalar.com/topic/smartwatch">ஸ்மார்ட்வாட்ச்</a> மாடல் வருகிற செப்டம்பர் மாத வாக்கில் அறிமகம் செய்யப்படலாம் ன கூறப்படுகிறது.</p><h2>நத்திங் வாட்ச் விவரங்கள்:</h2><p>நத்திங் நிறுவனம் தனது ஸ்மார்ட்வாட்ச் மாடலிலும் டிரான்ஸ்பேரன்ட் டிசைன் வழங்கும் என்று கூறப்படுகிறது. விலையை பொருத்தவரை இந்த மாடல் 300 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 29,000) குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.</p><p>முதற்கட்டமாக இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடல் சீன தந்தையிலும், தேர்வு செய்யப்பட்ட இதர நாடுகளிலும் நத்திங் ஸ்மார்ட்வாட்ச் படிப்படயாக அறிமுகம் செய்யப்படலாம். இந்த தகவல் கிட்டத்தட்ட உண்மையாகும் பட்சத்தில் இது நத்திங் சாதனங்கள் பிரிவில் தற்போது நிலவி வரும் பெரும் இடைவெளியை பூர்த்தி செய்யும்.</p><h2>சி.எம்.எஃப். பிரான்டிங்:</h2><p>ஸ்மார்ட்போன் தொடங்கி ஆடியோ சாதனங்கள், அக்சஸரீக்கள் என நத்திங் நிறுவனம் தொடர்ச்சியாக தனத சாதனங்கள் எண்ணிக்கையை விரிவுப்படுத்திக் கொண்டே தான் வருகிறது. இதுவரை ஸ்மார்ட்வாட்ச்களை பொருத்தவரை நத்திங் நிறுவனம் தனது பட்ஜெட் சாதனங்கள் பிரான்டான சி.எம்.எஃப். பிரான்டிங்கிலேயே விற்பனை செய்து வருகிறது.</p><p>இந்திய சந்தையில் சி.எம்.எஃப். தற்போது இரண்டு ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இவை சிஎ..ஃப். வாட்ச் 2 ப்ரோ மாடல் ரூ. 4,999 அல்லது ரூ. 5,499 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர சி.எம்.எஃப். சமீபத்தில் வாட்ச் 3 ப்ரோ மாடலை அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 7,499 என நிர்ணயம் செய்தது.</p><p>அம்சங்களை பொருத்தவரை சி.எம்.எஃப். தனது ஸ்மார்ட்வாட்ச்களில் AMOLED டிஸ்ப்ளே, பில்ட்-இன் ஜி.பி.எஸ்., ப்ளூடூத் காலிங மற்றும் அதிகபட்சம் 13 நாட்கள் வரை பேட்டரி பேக்கப் வழங்கும் என்று தெரிகிறது.</p>]]></content:encoded></item></channel></rss>