<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 10 Sep 2026 17:11:57 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 10 செப். 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-10-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-10-september-2026#comments</comments><guid isPermaLink="false">cd1c0430-b0bb-4648-93d3-063900150d82</guid><pubDate>Thu, 10 Sep 2026 04:09:14 +0000</pubDate><atom:updated>2026-09-10T15:10:12.863Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/sjr5yp31/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live News]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/sjr5yp31/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/england-all-out-453-runs-in-first-innings-against-pakistan-in-3rd-test">3வது டெஸ்டில் 5 வீரர்கள் அரை சதம்: இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 453 ரன்கள் குவிப்பு</a></p><p>* பாகிஸ்தான் அணியை விட 320 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது இங்கிலாந்து.</p><p>* இங்கிலாந்து அணி சார்பில் ஹாரி புரூக், ஜேமி ஸ்மித் உள்பட 5 பேர் அரை சதம் கடந்தனர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-on-vetri-kazhagam-recognition-and-whistle-symbol-approval" rel="nofollow">27 மாதங்களில் மிகப்பெரிய அங்கீகாரம்..!- மக்களுக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் விஜய் நெகிழ்ச்சி</a></p><p>* 35% வாக்குகளுடன் தனிப்பெரும் கட்சியாகத் த.வெ.க.வை உயர்த்திப் பிடித்தீர்கள்.</p><p>* தமிழகம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக அறிவித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/districts-in-tamil-nadu-likely-to-receive-rain-until-the-16th">தமிழகத்தில் வருகிற 16-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்... </a></p><p>* ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-question-tn-govt-for-omni-bus-fare-issue">ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தவெக அரசும் ஆதரிக்கிறதா?- கூடுதல் கொள்ளை தான் மாற்றமா?- அன்புமணி கேள்வி</a></p><p>* வரும் 14-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னைக்கு  திரும்ப திருச்சியிலிருந்து ரூ.4499, மதுரையிலிருந்து ரூ.4899, கோவையிலிருந்து ரூ.4799 வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.</p><p>* தமிழக அரசு இனியாவது விழித்துக் கொண்டு தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/historic-deal-before-brics-summit-russia-plans-to-sell-105-passenger-planes-in-india">பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு முன்பாக வரலாற்று ஒப்பந்தம்: இந்தியாவில் 105 பயணிகள் விமானங்களை விற்பனை செய்ய ரஷியா திட்டம்!... </a></p><p>*இந்தியாவில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களை இணைக்கும் பிராந்திய வான்வழிப் போக்குவரத்து மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. </p><p>*இந்த பிரம்மாண்ட ஒப்பந்தத்தின் கீழ் ரஷியாவின் IL-114-300 ரக டர்போப்ராப் பயணிகள் விமானங்கள் இந்திய சந்தைக்கு வரவுள்ளன.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/east-zone-clinches-the-duleep-trophy">துலீப் டிராபி: 13 ஆண்டுக்கு பிறகு சாம்பியன் பட்டம் வென்றது கிழக்கு மண்டலம்</a></p><p>* கிழக்கு மண்டலம் முதல் இன்னிங்சில் 708 ரன்கள் குவித்தது.</p><p>* ஆட்ட நாயகன் விருது இஷான் கிஷனுக்கும், தொடர் நாயகன் விருது திலக் வர்மாவுக்கும் வழங்கப்பட்டது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-question-to-tn-govt-for-tiruvottiyur-youth-murder-case">புகார் கொடுத்த மறுநாளே வாலிபர் படுகொலை: இதுதான் சட்டம் - ஒழுங்கை காக்கும் அழகா?- அன்புமணி கேள்வி</a></p><p>* சென்னையில் கடந்த சில நாள்களுக்கு முன் ஆளும் தவெக நிர்வாகி உள்ளிட்ட இருவர் ஒரே நாளில் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். </p><p>* உயிருக்கு பாதுகாப்பு கேட்பவர்களுக்கு ஆதரவாக இல்லாமல், கொலை மிரட்டல் விடுப்பவர்களுக்கு ஆதரவாக செயல்படுவது தான் காவல்துறையின் கொள்கையா? </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-says-communist-parties-support-tvk-alliance">த.வெ.க. கூட்டணிக்கு கம்யூனிஸ்டு கட்சிகளின் ஆதரவு உண்டு - திருமாவளவன் </a></p><p>* த.வெ.க. ஆட்சி 5 ஆண்டு காலம் நீடிப்பதற்கு இடது சாரி கட்சிகளின் ஆதரவு உண்டு.</p><p>* மிசா ஒடுக்குமுறைக்கு ஆளானவர் மு.க.ஸ்டாலின் தனது உடல் மொழி எதேச்சையானது என முதலமைச்சர் விஜய் விளக்கம் அளித்து விட்டார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thaimaman-gold-ring-scheme-case-madras-high-court-dismisses-challenging-gold-ring-contract">தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் - டெண்டர் வழங்கியதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி</a></p><p>* டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என்று பொற்கொல்லர் ராஜ் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல்.</p><p>* தங்க மோதிரத்தை செய்து மாநிலம் முழுவதும் உள்ள 107 மையங்களுக்கு ஹால்மார்க் முத்திரையுடன் அனுப்ப வேண்டும் என டெண்டர் விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/misa-issue-dmk-vs-tvk-it-wing-crash">மிசா விவகாரம்: திமுக Vs தவெக ஐடி விங் மோதல்</a></p><p>* வரலாற்றில் நிலைத்து நிற்கும் மாபெரும் தியாகத்தை உருவ கேலி செய்த உங்களின் கேடுகெட்ட அற்பத்தனத்தை தமிழ்நாட்டு மக்கள் காரித் துப்புகிறார்கள்.</p><p>* நீங்கள் விமர்சிக்கும் அந்த 'கட்டுமரம்', இந்தியாவின் பல அரசியல் சுனாமிகளையே நெஞ்சை நிமிர்த்தி எதிர்கொண்டு தமிழ்நாட்டைக் காத்தது மாபெரும் வரலாறு!</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/the-voice-of-the-goddess-who-prevents-suicide-lakshmi-saves-the-lives-of-many-even-when-unable-to-walk">தற்கொலையை தடுக்கும் தேவதையின் குரல்.. நடக்க இயலாத நிலையிலும் பலரின் உயிரைக் காப்பாற்றும் லட்சுமி!<br></a></p><p>*இன்று (செப்டம்பர் 10) உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.</p><p>* வேறெதையும் விட மிக மிக அவசியமான ஒன்றாக உருவெடுத்துள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-first-sit-in-existing-legislative-assembly-and-serve-people">இருக்கின்ற சட்டசபையில் அமர்ந்து முதலில் மக்கள் பணியாற்றுங்கள் - கனிமொழி</a></p><p>* சட்டம் ஒழுங்கு பற்றி பதில் அளிக்காத முதலமைச்சர் விஜய் பஞ்ச் டயலாக்கையும் பழைய கதைகளையும் பேசுகிறார்.</p><p>* தற்போது நடைபெறும் இடைத்தேர்தல் என்பது தேவையில்லாத ஒன்று.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/election-commission-recognized-state-political-party-for-tvk">அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியானது த.வெ.க.: உறுதி செய்தது தேர்தல் ஆணையம்</a></p><p>* தமிழகத்தில் மாநில அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 6 இல் இருந்து 7-ஆக உயர்ந்துள்ளது.</p><p>* திமுக, அதிமுக, சிபிஐ, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர், தேமுதிக ஆகிய 6 கட்சிகள் மாநில அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆகும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-and-dharapuram-by-elections-admk-and-naam-tamilar-katchi-candidates-to-be-announced-soon">மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுக - நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் விரைவில் அறிவிப்பு</a></p><p>* அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டு வருகிறது.</p><p>* நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்போது மதுரையில் சேயோன் படப்பிடிப்பில் உள்ளார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/duraimurugan-says-history-will-repeat-itself-through-by-election">இடைத்தேர்தல் மூலம் வரலாறு திரும்பும் - துரைமுருகன்</a></p><p>* 2 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.&nbsp;</p><p>* எம்.ஜி.ஆர். ஆளுங்கட்சியாக இருந்த காலத்திலேயே அண்ணாநகர், மயிலாடுதுறை தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/trump-promises-5000-per-person-to-the-public-if-they-vote-for-the-republican-party-in-the-midterm-elections">இடைக்கால தேர்தலில் வெற்றி பெறச் செய்தால் ஆளுக்கு 5000 டாலர் - நாட்டு மக்களுக்கு டிரம்ப் வாக்குறுதி</a></p><p>*அதிபர் பதவியேற்று 2 ஆண்டுகள் முடிவடையும் போது இடைக் காலத் தேர்தல் (Midterm Election) நடக்கிறது.</p><p>*,000 டாலர் ( 4.4 லட்சம் ரூபாய்) வழங்கப்போவதாக அதிரடி வாக்குறுதியை அளித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-ask-question-to-tn-govt">கள்ளச்சாராய சாவுகள் குறித்த விசாரணை ஆணைய அறிக்கை மீது நடவடிக்கை என்ன?- அரசுக்கு அன்புமணி கேள்வி</a></p><p>* ஆளும் கட்சியான திமுக, இதில் திமுகவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைத்ததுடன், என் மீது அவதூறு வழக்கு தொடரப்போவதாகவும் அச்சுறுத்தல் விடுத்தனர். </p><p>* தமிழ்நாட்டில் இப்போதுள்ள 4038 மதுக்கடைகளையும் படிப்படியாக மூடி, அடுத்த இரு ஆண்டுகளில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vs-babu-mla-hospitalized">வி.எஸ்.பாபு எம்.எல்.ஏ. ஆஸ்பத்திரியில் அனுமதி</a></p><p>* சென்னை கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து த.வெ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வி.எஸ்.பாபு.</p><p>* மார்பு சளி பாதிப்பு காரணமாக வி.எஸ்.பாபு எம்.எல்.ஏ.வை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/announcement-of-candidates-for-the-secular-social-justice-victory-alliance">மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்- மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு</a></p><p>* மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>* நம் வெற்றி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுத் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/fire-on-passenger-boat-in-the-philippines-5-dead-87-missing">பிலிப்பைன்ஸில் பயணிகள் படகில் தீ விபத்து.. 5 பேர் பலி - 87 பேர் மாயம்</a></p><p>*இதுவரை 42 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.</p><p>*87 பேரைக் காணவில்லை என அந்நாட்டுக் கடலோரக் காவல் படை இன்று தெரிவித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/putin-to-visit-india-for-brics-summit-three-russian-military-aircraft-arrive-for-preparatory-and-security-operations">பிரிக்ஸ் மாநாட்டுக்கு இந்தியா வரும் புதின்.. முன்னெச்சரிக்கை பணிகளுக்கு 3 ரஷிய ராணுவ விமானங்கள் வருகை<br></a><br>*இந்தியாவின் தலைமையின் கீழ் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.</p> <p>*ரஷிய அதிபர் புதின், பிரேசில், தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-10-9-2026">GOLD PRICE TODAY: மீண்டும் ஏற்றத்தில் தங்கம் விலை! - இன்றைய நிலவரம்</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.14,255-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-another-brutal-murder-in-chennai">சென்னையில் மீண்டும் ஒரு கொடூர கொலை- என்ன பதில் வைத்திருக்கிறார் முதலமைச்சர்?: உதயநிதி</a></p><p>* காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டால் கொலை செய்யப்படுவார்கள் என்ற புதிய வரலாற்றை இந்த Circus ஆட்சியாளர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.</p><p>* தலைநகரில் மீண்டும் ஒரு கொலை நடக்காமல் இருப்பதற்கு தேவையான கடுமையான நடவடிக்கையை இந்த அரசு எடுக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். </p><p><a href="https://maalai-malar.quintype.com/story/46482b36-cf18-4d8f-b85e-6d948c78e90a">கணவன் மனைவியுடன் கட்டாய உறவு கொள்வது பாலியல் வன்கொடுமை குற்றமா? - உச்சநீதிமன்றம் சொன்னது இதுதான்</a></p><p>*கணவனால் கட்டாயப் பாலியல் உறவுக்கு உட்படுத்தப்படும் பெண் சந்தேகத்திற்கு இடமின்றி பாதிக்கப்பட்டவரே </p><p>*நாங்கள் நிச்சயமாக பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்குவோம்.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/c0a6b263-0dad-4f60-b584-9621b723bb3d">பாகிஸ்தானில் ஆப்கான் மாணவர்கள் மருத்துவம் பயில தடை.. ஏற்கனவே படித்து வரும் மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு</a></p><p>*படிப்பை நிறைவு செய்யும் தருவாயில் இருக்கும் பல நூற்றுக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.</p><p>*உடனடியாக தாயகம் திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/5be92010-e19b-4447-a4f9-35ec13094301">VIDEO: வங்கதேசத்தில் ராணுவ பயிற்சின்போது சீன தயாரிப்பு பீரங்கி வெடித்து விபத்து - 2 வீரர்கள் பலி</a></p><p>*வங்கதேச ராணுவம் இதனை நீண்ட காலமாகப் பயன்படுத்தி வருகிறது.</p><p>*2 வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/97d84f96-1449-43af-89c9-086e404098d1">SIR: பாரத ரத்னா பெற்றவருக்கே இந்த நிலைமையா?.. தேர்தல் ஆணையத்தின் கிடுக்குபிடியில் 92 வயது விஞ்ஞானி</a></p><p>*16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் நடந்து வருகிறது.</p><p>*நன்கறியப்பட்ட பிரபலங்களும் சிக்கலை சந்தித்து வருகின்றனர்.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/af314040-a47a-4091-8eea-f052c3a066e1">சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</a></p><p>*சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p><p>*இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/9b814c8d-4771-4bd0-b5f0-cf843398997d">குஜராத்: கட்டுமானப் பணியின்போது இடிந்து விழுந்த சாரம்.. சிக்கித் தவித்த 13 பேர் மீட்பு</a></p><p>*மீட்கும் பணி நள்ளிரவையும் தாண்டி தீவிரமாக நடைபெற்றது.</p><p>* அங்கிருந்த பெரிய கிரேன் ஒன்றும் இடிபாடுகளின் மீது சாய்ந்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-another-murder-in-chennai-cm-vijay-planning-hero-style-stunt">சென்னையில் மீண்டும் ஒரு கொலை! - முதலமைச்சர் விஜய் ஹீரோ சாகசம் காட்ட திட்டமா?: கனிமொழி</a></p><p>* தலைநகர் சென்னையில் மீண்டும் ஒரு கொலை!</p><p>* நாள்தோறும் தொடரும் கொலை கொள்ளை சம்பவங்களால் ஒரு சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-releases-video-regarding-misa-atrocities">வீட்ல சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்? - 'மிசா' கொடுமைகள் குறித்து மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியீடு</a></p><p>* யார் என்னை கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்ற முடியாது.</p><p>* விதவிதமான ரீல்ஸ் போட்டு ஒரு தலைமுறையையே வீணாக்கி வருகிறீர்கள்.</p>]]></content:encoded></item><item><title>அரசு நிகழ்ச்சிகளில் &apos;வந்தே மாதரம்&apos; பாடலின் 2 சரணங்களை மட்டுமே பாட வேண்டும் - கர்நாடகா உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/national/karnataka-govt-orders-singing-of-only-2-vande-mataram-stanzas-at-state-programmes</link><comments>https://www.maalaimalar.com/news/national/karnataka-govt-orders-singing-of-only-2-vande-mataram-stanzas-at-state-programmes#comments</comments><guid isPermaLink="false">8be99fd7-dfc7-48ca-a3aa-4924f9bd4a94</guid><pubDate>Thu, 10 Sep 2026 17:07:19 +0000</pubDate><atom:updated>2026-09-10T17:07:19.536Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,வந்தே மாதரம்,Vande Mataram</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/rdtytzsu/DK-Shivakumar.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DK Shivakumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/rdtytzsu/DK-Shivakumar.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குடியரசுத் தலைவர், துணைக்குடியரசுத் தலைவர், பிரதமர் அல்லது ஆளுநர் ஆகியோர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளைத் தவிர, கர்நாடக அரசு நடத்தும் பிற நிகழ்ச்சிகளில் 'வந்தே மாதரம்' பாடலின் முதல் இரண்டு சரணங்களை மட்டுமே பாட வேண்டும் என்று அம்மாநிலத்திலுள்ள காங்கிரஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. </p><p>மாநிலத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களில் 'வந்தே மாதரம்' பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்து மாநில அமைச்சரவை எடுத்த முடிவை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p><p>காங்கிரஸ் செயற்குழு தீர்மானம்:</p><p>தேசிய கீதமான 'ஜன கண மன' மற்றும் 'வந்தே மாதரம்' ஆகிய இரண்டும் ஒன்றாக இசைக்கப்படும்போது, ​​'வந்தே மாதரம்' பாடலின் அனைத்து 6 சரணங்களையும் பாட வேண்டும் என்று கடந்த ஜனவரி மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது. 'வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் மத்திய அரசு இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தது.</p><p>இருப்பினும், 'வந்தே மாதரம்' பாடல் தொடர்பாக 1937-ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக் கடைப்பிடிக்க காங்கிரஸ் செயற்குழு ஆகஸ்ட் 19 அன்று முடிவு செய்தது; அந்தத் தீர்மானத்தின்படி, கட்சியின் நிகழ்ச்சிகளில் தேசியப் பாடலின் முதல் இரண்டு சரணங்கள் மட்டுமே பாடப்பட வேண்டும்.</p><p>கட்சி நிகழ்ச்சிகளில் 'வந்தே மாதரம்' பாடலை முழுமையாக பாடாமல் அவமதிப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் மீது பா.ஜ.க. குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.</p><p>உள்துறை அமைச்சகம் வழிகாட்டுதல்கள்:</p><p>செப்டம்பர் 8 தேதியிட்ட மாநில அரசின் உத்தரவின் முன்னுரையில், இந்திய தேசிய இயக்கத்தின் போது தேசியம், ஒற்றுமை மற்றும் தேசபக்தியை வளர்ப்பதில் 'வந்தே மாதரம்' பாடல் முக்கிய பங்காற்றியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>தேசிய பாடலின் அதிகாரப்பூர்வ வடிவம் மற்றும் பல்வேறு அரசு மற்றும் பொது விழாக்களில் அதனைப் பாடுவதற்கான அல்லது இசைப்பதற்கான நெறிமுறைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வழிகாட்டுதல்களை வெளியிட்டிருந்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.</p><p>தேசிய பாடலை இசைப்பதற்கும், கூட்டாக பாடுவதற்கும் ஏற்ற நிகழ்வுகளை அந்த வழிகாட்டுதல்கள் குறிப்பிடுகின்றன என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நடிகர் அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-to-flag-off-the-car-race-featuring-actor-ajith</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-to-flag-off-the-car-race-featuring-actor-ajith#comments</comments><guid isPermaLink="false">69495474-cebc-433d-be87-4f4fc990448f</guid><pubDate>Thu, 10 Sep 2026 15:57:50 +0000</pubDate><atom:updated>2026-09-10T15:57:50.893Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>actor Ajith Kumar,நடிகர் அஜித்குமார்,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,Le Mans Cup</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/965fnm1w/New-Project-2026-09-10T210959.115.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நடிகர் அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/965fnm1w/New-Project-2026-09-10T210959.115.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரிட்டனில் நடைபெறும் 'Michelin Le Mans Cup' கார் பந்தயத்தை தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இந்த சர்வதேச கார் பந்தயத்தில் நடிகரும், ரேஸருமான அஜித்குமாரின் கார் பந்தயக்குழு பங்கேற்கிறது. </p><h2>முதலமைச்சரின் பயணம் </h2><p>தமிழ்நாட்டின்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-first-official-foreign-trip-to-leave-for-london-tonight">முதலமைச்சர் விஜய் </a>செப்டம்பர் 10 முதல் 16 ஆம் தேதி வரை பிரிட்டன் பயணம் மேற்கொள்கிறார். இன்று இரவு லண்டன் புறப்பட்டார்.</p><p>இந்த அரசுமுறைப் பயணத்தின் ஒரு பகுதியாக, அவர் இப்போட்டியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பந்தயத்தைத் தொடங்கி வைக்கிறார். </p><p>ஒரே சமயத்தில் முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணமும், நடிகர் அஜித்தின் கார் பந்தயமும் அமைந்திருப்பதால், இவ்விரு திரையுலக ஜாம்பவான்களும் நேரில் சந்தித்துக் கொள்ளும் இந்த தருணம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">A special guest will be waving the green flag at Silverstone this weekend!  C. Joseph VIJAY<br><br>The Indian actor and Chief Minister of Tamil Nadu <a href="https://x.com/actorvijay?ref_src=twsrc%5Etfw">@actorvijay</a>, will be joining us to support our Indian drivers in the UK and officially start the <a href="https://x.com/hashtag/SilverstoneRound?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#SilverstoneRound</a> in front of the… <a href="https://t.co/pZiZOKy7yW">pic.twitter.com/pZiZOKy7yW</a></p>&mdash; Le Mans Cup (@LeMansCup) <a href="https://x.com/LeMansCup/status/2098050030162559409?ref_src=twsrc%5Etfw">September 10, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>பிபாஷா பாசு வாங்கிய புரோட்டீன் பவுடர் முழுவதும் ‘புழுக்கள்’ - நடிகை ப்ரீத்தி ஜிந்தா ஆதரவு</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/bipasha-basu-finds-worms-in-protein-powder-preity-zinta-backs-her</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/bipasha-basu-finds-worms-in-protein-powder-preity-zinta-backs-her#comments</comments><guid isPermaLink="false">fb7b31e8-737c-4c2b-b648-9469b082f05c</guid><pubDate>Thu, 10 Sep 2026 15:31:41 +0000</pubDate><atom:updated>2026-09-10T15:31:41.532Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>பிபாஷா பாசு,Preity Zinta,உணவு பாதுகாப்பு துறை,ப்ரீத்தி ஜிந்தா,FDA,Bipasha basu</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/74tgj31e/Untitled-design-52.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bipasha Basu protein powder]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/74tgj31e/Untitled-design-52.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாலிவுட் நடிகை பிபஷா பாசு, தான் புதிதாக வாங்கிய புரோட்டீன் பவுடர் முழுவதும் சிறு புழுக்கள் இருந்ததாக புகைப்படம் எடுத்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டு, உரிய நடவடிக்கை எடுக்குமாறு உணவு பாதுகாப்பு துறை அதிகாரியை டேக் செய்துள்ளார்.</p><p><strong>புரோட்டீன் பவுடரில் புழுக்கள்</strong></p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88">நடிகை பிபாஷா பாசு</a> சமீபத்தில் ஐசோபியூர் என்ற புரோட்டீன் பவுடரை புதிதாக வாங்கியுள்ளார். அவர் அதை சாப்பிடுவதற்காக திறந்தபோது, உள்ளே சிறு சிறு புழுக்கள் அதிகளவில் இருந்துள்ளன.</p><p>இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அதை விடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். மேலும் மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையராக துகாராம் முண்டேவை டேக் செய்து, நீங்கள் தான் எங்கள் ஒரே நம்பிக்கை என்றும் பதிவிட்டார்.</p><p>மேலும் நீங்கள் நடவடிக்கை எடுக்கும் போதுதான் நாங்கள் வாங்கும் பொருட்களில் கெட்டுப்போன மற்றும் கலப்படம் செய்யப்பட்ட பொருட்கள் இருக்காது என்றும் அவர் பதிவிட்டார்.</p><h3><strong>உணவு பாதுகாப்புத் துறை</strong></h3><p>இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலானதை அடுத்து, மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் முண்டே, மும்பை மற்றும் பிற இடங்களில் உள்ள ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் பிற உணவு நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார்.</p><p>அப்போது அவர் பால் மற்றும் பன்னீர் போன்ற பொருட்களில் கலப்படம் நடந்ததாக கூறப்படும் விதிமீறல்கள் தொடர்பான ஆய்வுகளையும் நடத்தினார்.</p><p>மேலும் அவர் அரசாங்கத்தின் உத்தரவுகளை பின்பற்றாத பல நிறுவனங்களின் உரிமங்களையும் ரத்து செய்தார்.</p><h3><strong>நடிகை ப்ரீத்தி ஜிந்தா ஆதரவு</strong></h3><p>இதையடுத்து பிபாஷா பாசு வெளியிட்ட பதிவுக்கு ஆதரவளிக்கும் வகையில், மும்பையில் நடந்த விழா ஒன்றில் நடிகை ப்ரீத்தி ஜிந்தா கருப்பு நிற டீ-ஷர்ட் ஒன்றை அணிந்து வந்தார்.</p><p>அவர் அணிந்து வந்த டீ-ஷர்ட்டில் ‘டீம் துகாராம் முண்டே’ என்று எழுதியிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/iokjkppf/Untitled-design-53.jpg" /></figure><h3><strong>நடிகை ட்விங்கிள் கன்னா பதிவு</strong></h3><p>அதேபோன்று பிபாஷா பாசுவுக்கு ஆதரவாக நடிகை ட்விங்கிள் கன்னாவும், சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.</p><p>அவர் அந்த பதிவில், “ஒரு அரசு அதிகாரி தனது வேலையை செய்வதை பார்ப்பது, உண்மையிலேயே அரிதான ஒன்றாக உள்ளது” என்று அரசாங்க அதிகாரிகளை கிண்டல் செய்யும் வகையில் பதிவிட்டிருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>3வது டெஸ்டில் 5 வீரர்கள் அரை சதம்: இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 453 ரன்கள் குவிப்பு</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/england-all-out-453-runs-in-first-innings-against-pakistan-in-3rd-test</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/england-all-out-453-runs-in-first-innings-against-pakistan-in-3rd-test#comments</comments><guid isPermaLink="false">8ed8d24d-d4fc-4e4d-95a9-3d878502332a</guid><pubDate>Thu, 10 Sep 2026 15:02:59 +0000</pubDate><atom:updated>2026-09-10T15:02:59.888Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஹாரி புரூக்,Harry Brook,ENGvPAK,இங்கிலாந்து பாகிஸ்தான் தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/aq5kk2ku/lawrance.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ brook, lawrance]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/aq5kk2ku/lawrance.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பாகிஸ்தானுக்கு எதிரான 3வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 453 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.</strong></em></p><p>இங்கிலாந்து, பாகிஸ்தான் இடையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. முதல் இரு போட்டிகளில் பாகிஸ்தான் அணி படுதோல்வியை சந்தித்தது.</p><p>இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.</p><h2>133 ரன்னுக்கு ஆல் அவுட்</h2><p>அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். சவுத் ஷகீல் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து 43 ரன்னில் அவுட்டானார்.</p><p>இறுதியில், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 133 ரன்களுக்கு சுருண்டது.</p><p>இங்கிலாந்து சார்பில் ஜோஷ் டங் 4 விக்கெட்டும், ஆலி ராபின்சன், ஜோப்ரா ஆர்ச்சர் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><h2>எமிலோ கே, ஹாரி புரூக் அரை சதம்</h2><p>இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் எமிலோ கே பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். </p><p>4வது விக்கெட்டுக்கு இணைந்த எமிலோ கே - ஹாரி புரூக் ஜோடி 104 ரன்கள் சேர்த்த நிலையில் எமிலோ கே 60 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய ஹாரி புரூக் அரை சதம் கடந்து 52 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்கு156 ரன்கள் எடுத்திருந்தது.</p><h2>மேலும் 3 வீரர்கள் அரை சதம்</h2><p>இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ஆரம்பம் முதலே இங்கிலாந்து வீரர்கள் அதிரடியாக ஆடி ரன்களைக் குவிக்கத் தொடங்கினர். ஹாரி புரூக் 70 ரன்னில் அவுட்டானார்.</p><p>டான் லாரன்ஸ் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 65 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ஜேமி ஸ்மித் அதிரடியாக ஆடி அரை சதமடித்து 69 ரன்னில் வெளியேறினார்.</p><p>கடைசி கட்டத்தில் இறங்கிய ஆலி ராபின்சனும் தன் பங்குக்கு அரை சதம் கடந்து 50 ரன்னில் அவுட்டானார். ஜோப்ரா ஆர்ச்சர் 32 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.</p><p>இறுதியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 453 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணியை விட 320 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது இங்கிலாந்து.</p><p>பாகிஸ்தான் சார்பில் ரசவுல்லா 4 விக்கெட்டும், முகமது அலி, இம்ரான் ரந்தவா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p>]]></content:encoded></item><item><title>செங்கலுக்கு கல்லால் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை - ஹவுதிகளுக்கு  பாகிஸ்தான் எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/world/no-need-to-answer-brick-with-stone-pakistan-warns-houthis</link><comments>https://www.maalaimalar.com/news/world/no-need-to-answer-brick-with-stone-pakistan-warns-houthis#comments</comments><guid isPermaLink="false">f4b39199-2fea-4562-b770-f764290878de</guid><pubDate>Thu, 10 Sep 2026 14:45:01 +0000</pubDate><atom:updated>2026-09-10T14:45:01.208Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Pakistan,ஈரான்,Iran,Yemen,ஏமன்,houthis,ஹவுதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/chmnxm81/Untitled-design-51.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pakistan warns Houthis]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/chmnxm81/Untitled-design-51.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் தெற்கு நகரங்களில் தாக்குதல் நடத்தியதை அடுத்து, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் ஹவுதிக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><h3><strong>மெக்கா பாதுகாப்பு கூட்டணி</strong></h3><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE">சவுதி அரேபியாவில்</a> உள்ள மெக்காவில் கடந்த மாதம் பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் மெக்கா பாதுகாப்பு கூட்டணி என்ற அமைப்பு ஒன்றை தொடங்கினர். </p><p>இந்த அமைப்பின் மூலம், மூன்று உறுப்பு நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின்மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்கு மற்ற உறுப்பு நாடுகள் தாக்குதல் நடத்தும் என ஒப்பந்தம் போடப்பட்டது.</p><h3><strong>தாக்குதல் சம்பவம்</strong></h3><p>இதையடுத்து கடந்த செவ்வாய்கிழமை அன்று சவுதி விமானப்படை தளம் மற்றும் அதன் அருகிலுள்ள நகரங்களில் உள்ள எண்ணெய் உள்கட்டமைப்புகள் மீது <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">ஹவுதி கிளர்ச்சியாளர்கள்</a> ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தினர்.</p><p>இதற்கு பதிலடியாக ஏமன் நாட்டில் உள்ள ஹவுதி அமைப்புகள் மீது சவுதி அரேபியா வான்வழி தாக்குதலை நடத்தியது.  இதையடுத்து சவுதி அரேபியாவின் தெற்கு நகரங்களான அப்ஹா, கமிஸ் முஷைத் மற்றும் ஜசான் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர்.</p><h3><strong>பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்</strong></h3><p>இந்த நிலையில் ஏமனில் நிலவும் தாக்குதல் சம்பவம் சவுதி அரேபியாவின் எல்லைக்குள் பரவினால், மெக்கா பாதுகாப்பு கூட்டணியின் சார்பில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தும் என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “இது ஒரு கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் என்பதில் எந்தவிதமான குழப்பமும் இல்லை.</p><p>இந்த கூட்டணியில் உள்ள ஒரு உறுப்பு நாட்டிற்கு எதிராக ஏதேனும் ஆக்கிரமிப்பு நடந்தால், மூன்று உறுப்பு நாடுகளும் பதிலடி கொடுக்கும்.</p><p>ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை தொடர்ந்தால், ஆக்கிரமிப்பை எதிர்கொள்வதற்கான இந்த ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வரும்.</p><p>ஹவுதி கிளர்ச்சியாளர்களை அரசு சாரா சக்திகள் என்றும், அமெரிக்காவுடனான தற்போதைய மோதலில் ஈரானின் நிலைப்பாட்டிற்கு ஏமன் உட்பட இஸ்லாமிய நாடுகளின் மத்தியில் அனுதாபம் நிலவுகின்றது.</p><p>இவ்வாறு இருக்கும்போது அந்த உணர்வுகளை கெடுத்து மோதலை விரிவுபடுத்த அனுமதிக்க வேண்டாம். ஒவ்வொரு தாக்குதலுக்கும் ராணுவ நடவடிக்கை அவசியமின்றி மெக்கா கூட்டணி ஒரு தடுப்பாகச் செயல்பட முடியும்.</p><p>செங்கலுக்குக் கல்லால் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை. பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கியின் ஒருங்கிணைந்த ராணுவத் திறன்களே ஒரு தடுப்பாகச் செயல்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.</p><h3><strong>பாகிஸ்தான் பிரதமர்</strong></h3><p>பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், சவுதி அரேபியாவின் மீதான ஹவுதி தாக்குதல்களை, கோழைத்தனமானவை என்று கூறினார்.</p><p>மேலும் சவூதி அரேபியாவுடன் பாகிஸ்தான் தளராத ஒற்றுமையுடன் நிற்பதாகவும், அந்த நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான ஆதரவை மீண்டும் தங்கள் நாடு உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.</p><h3><strong>ஹவுதி குற்றச்சாட்டு</strong></h3><p>ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வடமேற்கு ஏமன் பகுதிகளில், சவூதி சமீபத்தில் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலடியாகவே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>மேலும், அல் ஹஸ்ம் நகரில் உள்ள சிறைச்சாலை மீது சவூதி அரேபியா குண்டுவீசித் தாக்கியதில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டதாகவும் ஹவுதி அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ. நியமனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kaundampalayam-tvk-mla-kanimozhi-santhosh-get-additional-responsibility</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kaundampalayam-tvk-mla-kanimozhi-santhosh-get-additional-responsibility#comments</comments><guid isPermaLink="false">f635baaf-11c3-4d4f-bdd4-515b4e867f96</guid><pubDate>Thu, 10 Sep 2026 14:36:20 +0000</pubDate><atom:updated>2026-09-10T14:36:20.758Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கவுண்டம்பாளையம்,தவெக எம்எல்ஏ,TVK MLA,Kanimozhi Santhosh,கனிமொழி சந்தோஷ்,kaundampalayam</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/z2gdxgwc/kani.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ kanimozhi santhosh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/z2gdxgwc/kani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்நாடு சட்டப்பேரவையின் சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.</strong></em></p><p>கவுண்டம்பாளையம் தொகுதி தவெக எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் கனிமொழி சந்தோஷ்.</p><p>இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையின் சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><h2>கூடுதல் பொறுப்பு</h2><p>இந்தப் புதிய பொறுப்புக்கு நன்றி தெரிவித்து கனிமொழி சந்தோஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:</p><p>தமிழ்நாடு சட்டப்பேரவையின் சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக என்னைத் தேர்வு செய்து, கூடுதல் பொறுப்பு வழங்கிய முதலமைச்சர் விஜய்க்கும், சட்டப்பேரவைத் தலைவர் JCD பிரபாகருக்கும் எனது மரியாதையுடன் கூடிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>ஜனநாயகத்தின் மாண்பை முன்னிறுத்தி செயல்படுவதற்கான மற்றுமொரு வாய்ப்பாக இந்தப் பொறுப்பை கருதுகிறேன்.</p><p>சட்ட விதிகள் தொடர்பான முக்கிய விவகாரங்களைப் பொறுப்புணர்வுடன் அணுகி, சட்டப்பேரவை செயல்பாடுகளின் சிறப்பை வலுப்படுத்தும் வகையில் தனது பங்களிப்பை வழங்குவேன்.</p><p>தனக்கு வழங்கப்பட்டுள்ள இந்தக் கூடுதல் பொறுப்பை முழு அர்ப்பணிப்புடனும் பொறுப்புணர்வுடனும் நிறைவேற்றி முன்னெடுத்துச் செல்வேன் என தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் - ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/maternal-uncle-gold-ring-scheme-case-challenging-the-awarding-of-the-tender-to-joyalukkas-dismissed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/maternal-uncle-gold-ring-scheme-case-challenging-the-awarding-of-the-tender-to-joyalukkas-dismissed#comments</comments><guid isPermaLink="false">e08b6ae2-e6ce-44be-9f62-42da6da62bf0</guid><pubDate>Thu, 10 Sep 2026 14:33:23 +0000</pubDate><atom:updated>2026-09-10T14:33:23.782Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழ்நாடு அரசு,சென்னை உயர் நீதிமன்றம்,Madras High Court,Vijay Gold Ring scheme,தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/t64o8t0b/New-Project-2026-09-10T200248.696.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் - ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தள்ளுபடி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/t64o8t0b/New-Project-2026-09-10T200248.696.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thaaimaman-thanga-modhiram-scheme-delay-arun-raj-explanation">தாய்மாமன் தங்க மோதிர திட்டத்துக்கான</a> டெண்டரை ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்துக்கு வழங்கியதை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  </p><h2>தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்</h2><p>அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராமில் (22 கேரட்) தங்க மோதிரம் அளிக்கும் திட்டத்துக்கான டெண்டர் ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. </p><p>இந்த திட்டத்தின் கீழ் 4 லட்சத்து 41 ஆயிரத்து 667 தங்க மோதிரங்களை கொள்முதல் செய்வதற்கான டெண்டரை தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் கோரியுள்ளது. </p><p>இந்நிலையில் ஒரு பைசாவில் தங்க மோதிரம் செய்துதர முன்வந்தத ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்துக்கு வழங்கிய டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என சென்னையைச் சேர்ந்த பொற்கொல்லர் ராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். </p><p>இந்த வழக்கு தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், தங்க மோதிரத்தை செய்து மாநிலம் முழுவதும் உள்ள 107 மையங்களுக்கு ஹால்மார்க் முத்திரையுடன் அனுப்ப வேண்டும் என டெண்டர் விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>தங்கம் தரமற்றதாக இருக்கும்</h2><p>ஹால்மார்க் முத்திரைப் பெறுவதற்கு ஒரு நகைக்கு 45 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியுள்ள சூழலில், 4 லட்சத்து 41 ஆயிரத்து 667 தங்க மோதிரங்களை 4 ஆயிரத்து 465 ரூபாய்க்கு செய்து தருவதாக செய்வதாக ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் கூறியிருப்பது, வணிக ரீதியாக சாத்தியமற்றது. </p><p>இதை, அனுமதித்தால் அந்த நகைகள் தரமானதாக இருக்காது. மேலும் மருத்துவ சேவைக் கழகம், மருந்துப் பொருட்கள் கொள்முதல் செய்வதில்தான் நிபுணத்துவம் பெற்றது, அந்த கழகத்துக்கு தங்கத்தைப் பற்றி என்ன தெரியும் என்று வாதிடப்பட்டது. </p><h2>அரசுக்குதான் லாபம்</h2><p>அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மனுதாரர் திட்டத்தை எதிர்த்தும், டெண்டரை எதிர்த்தும்தான் வழக்குத் தொடர முடியுமே தவிர, டெண்டர் வழங்கியதை எதிர்த்து வழக்கு தொடர முடியாது. </p><p>இதன்மூலம், அரசுக்குதான் லாபம் வரும் என்றும் ஒருவேளை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் ஏராளமான தங்கம் உள்ளதால் இந்த தொகையை அவர்கள் குறிப்பிட்டிருக்கக்கூடும். </p><p>நகை தரமாக இல்லாவிட்டால், டெண்டரை அதிகாரிகள் ரத்து செய்வார்கள். இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.</p><p>இந்த வழக்கில் விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் என தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>பெண்கள் ஆசிய கோப்பை அரையிறுதி: டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு- இந்தியா முதலில் பேட்டிங்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/bangladesh-won-the-toss-opt-to-bowl-first-against-india-in-sf-in-womens-asia-cup</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/bangladesh-won-the-toss-opt-to-bowl-first-against-india-in-sf-in-womens-asia-cup#comments</comments><guid isPermaLink="false">63c6e722-641f-4968-a3fe-beec3d2b9981</guid><pubDate>Thu, 10 Sep 2026 14:16:11 +0000</pubDate><atom:updated>2026-09-10T14:16:11.653Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா,வங்கதேசம்,INDvBAN,Womens Asia Cup,பெண்கள் ஆசிய கோப்பை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/jtn3z2dx/toss.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ kaur]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/jtn3z2dx/toss.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பெண்கள் ஆசிய கோப்பை தொடரின் அரையிறுதியில் டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்தது. இதனால் இந்திய அணி முதலில் களமிறங்குகிறது.</strong></em></p><p>துபாயில் பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. கடந்த 28-ம் தேதி தொடங்கிய இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, ஹாங்காங் அணிகளும், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா அணிகளும் இடம்பெற்றன.</p><p>லீக் சுற்றுகளின் முடிவில் ஏ, பி பிரிவுகளில் முதல் இரு இடங்களைப் பெற்ற அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன.</p><p>அதன்படி, இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.</p><h2>முதல் அரையிறுதி</h2><p>இந்நிலையில், துபாயில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதியில் வங்கதேச அணி இந்தியாவை எதிர்கொள்கிறது. டாஸ் வென்ற வங்கதேசம் அணி பவுலிங் தேர்வு செய்தது.</p><p>இதையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்ய களமிறங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் - அ.தி.மு.க வேட்பாளர்கள் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/aiadmk-candidates-announced-for-tamil-nadu-byelections</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/aiadmk-candidates-announced-for-tamil-nadu-byelections#comments</comments><guid isPermaLink="false">f6b8dd8a-a3df-4a6b-ace0-36d6b972d3f6</guid><pubDate>Thu, 10 Sep 2026 13:37:06 +0000</pubDate><atom:updated>2026-09-10T13:37:06.549Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,சட்டமன்ற தொகுதி,Legislative Assembly,bye election,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/g7d8vhh0/Untitled-design-50.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ADMK bye election candidate]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/g7d8vhh0/Untitled-design-50.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தனது கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது.</p><p>தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான</a> வேட்பாளர்களை திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் தமிழக வெற்றி கழகம் ஏற்கனவே வெளியிட்டிருந்தது. </p><p>திராவிட முன்னேற்ற கழகம் சார்பில், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் பரந்தாமன் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் சுகன்யா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.</p><p>தமிழக வெற்றி கழகம் சார்பில் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் மரகதம் குமரவேல், மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் சத்யாபாமா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.</p><h3><strong>அதிமுக வேட்பாளர்கள் பட்டியல்</strong></h3><p>இந்த நிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் கணிதா சம்பத் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் பானுமதி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>ஒற்றைத் தலைவலி: காரணங்கள், அறிகுறிகள், தடுக்கும் வழிகள் பற்றி ஒரு பார்வை</title><link>https://www.maalaimalar.com/health/generalmedicine/migraine-causes-symptoms-prevention-overview</link><comments>https://www.maalaimalar.com/health/generalmedicine/migraine-causes-symptoms-prevention-overview#comments</comments><guid isPermaLink="false">acba9887-f966-4012-a798-2d2172298cee</guid><pubDate>Thu, 10 Sep 2026 13:21:49 +0000</pubDate><atom:updated>2026-09-10T13:21:49.882Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Health,Health Tips,ஆரோக்கியம்,தலைவலி,Migraine,ஒற்றைத் தலைவலி,உடல்நலம்,migraine headache</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/8ql6qa4q/art.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Migraine]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/8ql6qa4q/art.jpg?w=280" width="280"></media:thumbnail><category>பொது மருத்துவம் (General Medicine)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஒற்றைத் தலைவலி அல்லது மைக்ரேன் என்பது சாதாரண தலைவலியைக் காட்டிலும் அதிக தீவிரமாகவும், அன்றாட செயல்பாடுகளை பாதிக்கும் வகையிலும் ஏற்படக்கூடிய நரம்பியல் பிரச்சனையாகும். பொதுவாக தலையின் ஒரு பகுதியில் துடிப்பது போன்ற வலி ஏற்படும். சிலருக்கு இருபுறமும் வலி இருக்கலாம். தலைவலியுடன் குமட்டல், வாந்தி, வெளிச்சம் மற்றும் அதிக சத்தத்தைத் தாங்க முடியாத நிலை போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம்.</p><h2>ஒற்றைத் தலைவலி ஏ<strong>ன் ஏற்படுகிற</strong>து?</h2><p>ஒற்றைத் தலைவலிக்கான ஒரே ஒரு காரணம் என்று குறிப்பிட முடியாது. மூளையில் ஏற்படும் நரம்பியல் மாற்றங்கள் மற்றும் மரபியல் காரணிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சிலருக்கு குடும்பத்தில் மைக்ரேன் பாதிப்பு இருந்தால் அவர்களுக்கும் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கலாம். அதிக மன அழுத்தம், போதிய தூக்கமின்மை, நீண்ட நேரம் உணவு சாப்பிடாமல் இருப்பது, அதிக நேரம் திரையைப் பார்ப்பது, அதிக சத்தம், அதிக வெளிச்சம், உடலில் நீர்ச்சத்து குறைதல் போன்றவை சிலருக்கு தலைவலியைத் தூண்டக்கூடும்.</p><h2>முக்கிய அறி<strong>குறிகள் என்</strong>ன?</h2><p>ஒற்றைத் தலைவலியின் போது தலையின் ஒரு பகுதியில் துடிப்பது அல்லது துடித்துக்கொண்டிருப்பது போன்ற வலி ஏற்படலாம். இந்த வலி சில மணி நேரங்கள் முதல் சில நாட்கள் வரை நீடிக்கலாம். இதனுடன் குமட்டல், வாந்தி, தலைச்சுற்றல், வெளிச்சத்தைப் பார்க்க முடியாத நிலை, அதிக சத்தத்தைத் தாங்க முடியாமை, வாசனைகளால் தலைவலி அதிகரித்தல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். </p><figure><img alt="Migraine" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/i92d57re/aaaa.jpg" /></figure><p>சிலருக்கு தலைவலி தொடங்குவதற்கு முன்பு கண்களுக்கு முன் மின்னல் அல்லது ஒளிக்கீற்றுகள் தெரிவது, பார்வையில் சில மாற்றங்கள் ஏற்படுவது, கை அல்லது முகத்தில் முள் குத்துவது போன்ற உணர்வு ஏற்படுவது போன்ற “ஆரா” அறிகுறிகளும் இருக்கலாம்.</p><h2>எந்த காரணி<strong>கள் தலைவலி</strong>யைத் தூண்டும்?</h2><p>ஒவ்வொருவருக்கும் தலைவலியைத் தூண்டும் காரணிகள் மாறுபடும். மன அழுத்தம், தூக்க நேரத்தில் ஏற்படும் மாற்றம், உணவைத் தவிர்ப்பது, அதிக காபி அல்லது கஃபீன் உட்கொள்வது, மதுபானம், நீர்ச்சத்து குறைபாடு, கடுமையான வாசனை, அதிக வெப்பம் அல்லது வெளிச்சம் போன்றவை சிலருக்கு தூண்டுதலாக இருக்கலாம். பெண்களில் மாதவிடாய் காலத்தைச் சுற்றியுள்ள ஹார்மோன் மாற்றங்களும் சிலருக்கு மைக்ரேன் ஏற்படுவதற்குக் காரணமாக இருக்கலாம்.</p><h2>சாதாரண <strong>தலைவலியிலி</strong>ருந்து எப்படி வேறுபடும்?</h2><p>சாதாரண தலைவலி பெரும்பாலும் லேசான அல்லது மிதமான அழுத்தம் போன்ற உணர்வை ஏற்படுத்தலாம். ஆனால் மைக்ரேன் தலைவலி துடிப்பது போன்ற தீவிர வலியாக இருந்து, அன்றாட வேலைகளையே செய்ய முடியாத அளவுக்கு பாதிக்கக்கூடும். மேலும், மைக்ரேன் ஏற்பட்டிருக்கும்போது நடப்பது அல்லது உடல் இயக்கம் செய்வதால் வலி அதிகரிக்கலாம். குமட்டல், வாந்தி மற்றும் வெளிச்சம் அல்லது சத்தத்தைத் தவிர்க்க வேண்டும் என்ற உணர்வும் ஏற்படலாம்.</p><h2>ஒற்றைத் த<strong>லைவலியைத் த</strong>டுப்பது எப்படி?</h2><p>தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, சரியான நேரத்தில் உணவு சாப்பிடுவது, போதுமான தூக்கம் பெறுவது போன்ற எளிய பழக்கங்கள் பலருக்கு உதவக்கூடும். தினசரி தூக்கம் மற்றும் உணவு நேரத்தை முடிந்தவரை ஒரே மாதிரியாக வைத்திருப்பதும் பயனுள்ளதாக இருக்கும். </p><figure><img alt="Migraine" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/dk92c3hs/aaaaaaaaaaa.jpg" /></figure><p>மன அழுத்தத்தைக் குறைக்க நடைப்பயிற்சி, தியானம், மூச்சுப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளலாம். நீண்ட நேரம் கணினி அல்லது செல்போன் பயன்படுத்த வேண்டியிருந்தால் இடையிடையே கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். எந்த உணவு அல்லது சூழ்நிலைக்குப் பிறகு தலைவலி ஏற்படுகிறது என்பதைப் பதிவு செய்து வைத்துக் கொள்வது, தனிப்பட்ட தூண்டுதல்களைக் கண்டறிய உதவும்.</p><h2>எப்போது மரு<strong>த்துவ</strong>ரை அணுக வேண்டும்?</h2><p>தலைவலி அடிக்கடி ஏற்படுகிறது, வழக்கத்தைவிட அதிகமாகிறது அல்லது வலி நிவாரண மருந்துகளை அடிக்கடி எடுத்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டால் மருத்துவரை அணுகுவது அவசியம். அடிக்கடி ஏற்படும் மைக்ரேனுக்கு மருத்துவர் தடுப்பு சிகிச்சையையும் பரிந்துரைக்கலாம். </p><p>திடீரென வாழ்க்கையில் ஏற்பட்ட மிகக் கடுமையான தலைவலி, தலைவலியுடன் மயக்கம், பேசுவதில் சிரமம், ஒரு பக்க கை அல்லது கால் பலவீனம், பார்வை இழப்பு, குழப்பம், காய்ச்சல் மற்றும் கழுத்து இறுக்கம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அவசர மருத்துவ உதவியை நாட வேண்டும். ஒற்றைத் தலைவலி வாழ்க்கையை பாதிக்கக்கூடியதாக இருந்தாலும், அதைத் தூண்டும் காரணிகளைக் கண்டறிந்து, வாழ்க்கைமுறை மாற்றங்களையும் தேவையான மருத்துவ சிகிச்சையையும் பின்பற்றுவதன் மூலம் பலரால் அதை கட்டுப்படுத்த முடியும்.</p>]]></content:encoded></item><item><title>சீனாவில் லைபீரிய நாட்டு கப்பல் தீப்பிடித்து விபத்து - 20 பேர் பலி... ஐவர் மாயம்!</title><link>https://www.maalaimalar.com/news/world/liberian-flagged-ship-catches-fire-in-china-20-dead-five-missing</link><comments>https://www.maalaimalar.com/news/world/liberian-flagged-ship-catches-fire-in-china-20-dead-five-missing#comments</comments><guid isPermaLink="false">93bde65e-644e-4ad7-aa92-430d98386607</guid><pubDate>Thu, 10 Sep 2026 13:10:18 +0000</pubDate><atom:updated>2026-09-10T13:10:18.942Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>China,சீனா,fire accident,சரக்கு கப்பல்,லைபீரியா,தீவிபத்து,Liberian ship</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/7g0vvm6o/New-Project-2026-09-10T183919.684.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சீனாவில் லைபீரிய நாட்டு கப்பல் தீப்பிடித்து விபத்து - 20 பேர் பலி... ஐவர் மாயம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/7g0vvm6o/New-Project-2026-09-10T183919.684.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கிழக்கு <a href="https://www.maalaimalar.com/news/world/china-plans-to-use-humanoid-robots-in-war">சீனா</a>வில் உள்ள கிங்டாவ் துறைமுகத்தில் பழுதுபார்க்கும் பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த ‘ஓஷன் மெலடி’ என்ற வெளிநாட்டு சரக்குக் கப்பலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், மேலும் 5 பேரைக் காணவில்லை எனவும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>இன்று காலை சுமார் 11 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. 11 மணியளவில் தீப்பற்றிய நிலையில், 2.30 மணிக்கு அணைக்கப்பட்டுள்ளது. </p><p>மொத்தம் 42 பேர் கப்பலில் இருந்தநிலையில், அவர்களில் 12 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். ஐந்து பேர் காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><h2>லைபீரியக் கப்பல்</h2><p>623 அடி நீளமுள்ள இந்த உலர் சரக்குக் கப்பல், லைபீரியா நாட்டினுடையது என்றும், 20 ஆண்டுகால பழமையான கப்பல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>ஆக.31ம் தேதி பழுது பணிக்காக கிங்டாங் துறைமுகம் வந்த கப்பல், அப்போதிலிருந்து கப்பல் கட்டும் தளத்திலேயே இருந்துள்ளது.</p><p>இந்தக் கப்பல் கட்டும் தளம், அரசுக்குச் சொந்தமான சீனா ஸ்டேட் ஷிப்பிங் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>லாட்டரியில் 20 ஆண்டுகளாக ஒரே நம்பர்களை வாங்கிய பெண் : திடீரென விழுந்த ரூ1. 30 கோடி!</title><link>https://www.maalaimalar.com/news/world/woman-buys-same-lottery-numbers-for-20-years-wins-rs-1-30-crore</link><comments>https://www.maalaimalar.com/news/world/woman-buys-same-lottery-numbers-for-20-years-wins-rs-1-30-crore#comments</comments><guid isPermaLink="false">4163c25f-e9ad-4bee-b3d0-0102985380ee</guid><pubDate>Thu, 10 Sep 2026 13:04:44 +0000</pubDate><atom:updated>2026-09-10T13:04:44.715Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,America,லாட்டரி,Lottery,ஜாக்பாட்,Maryland,மேரிலாண்ட்,JackpotWinner,BonusMatch5,20Years</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/93b5oiu6/Lottery" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Lottery  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/93b5oiu6/Lottery?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE">அமெரிக்காவின் </a>மேரிலாண்ட் மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தான் வாங்கி வந்த ஒரே நம்பர்களை கொண்ட மூன்று டிக்கெட்டுகளுக்கு மொத்தமாக இந்திய மதிப்பில் சுமார் ரூ1.30 கோடிக்கும் மேல் பரிசு விழுந்துள்ளது.</p><h2>20 ஆண்டுக்கால நம்பிக்கை</h2><p>மேரிலாண்டின் ஒயிட் பிளைன்ஸ் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த 20 வருடங்களாக 'போனஸ் மேட்ச் 5' என்ற <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81">லாட்டரி </a>விளையாட்டில் தனக்கென சில குறிப்பிட்ட எண்களைத் தேர்ந்தெடுத்து, தொடர்ந்து அதே எண்களையே பயன்படுத்தி வந்துள்ளார்.</p><p>சமீபத்தில் அங்குள்ள உள்ளூர் மதுபானக் கடையில் அதே எண்களைப் பயன்படுத்தி, ஒரே குலுக்கலுக்காக மூன்று வெவ்வேறு டிக்கெட்டுகளை அவர் வாங்கியுள்ளார்.</p><h2>நம்ப முடியாத அதிர்ஷ்டம்</h2><p>குலுக்கல் முடிவுகள் வெளியானபோது, அந்தப் பெண் தேர்ந்தெடுத்த எண்கள் அப்படியே பொருந்திப் பரிசு விழுந்திருந்தது. ஆனால், தனுக்குத்தான் பரிசு விழுந்துள்ளதா என்பதை அவரால் உடனடியாக நம்ப முடியவில்லை.</p><p>இதுகுறித்து அவர் கூறுகையில், "எனக்கு லாட்டரி எண்களைப் பார்த்ததும் முதலில் அதிர்ச்சியில் என்ன செய்வதென்றே தெரியவில்லை.</p><p>உடனே <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81">லாட்டரி </a>விளையாடும் பழக்கமுள்ள என் சகோதரியை அழைத்து, எண்களைச் சரியாகப் படிக்குமாறு கூறினேன்" என்றார்.</p><p>அவரது சகோதரி சரிபார்த்துவிட்டு, அவர் வாங்கிய மூன்று டிக்கெட்டுகளுக்குமே தலா ரூ. 45 லட்சத்திற்கும் மேல் மொத்தம் ரூ.1.30 கோடி ஜாக்பாட் அடித்துள்ளதை உறுதிப்படுத்தினார்.</p>]]></content:encoded></item><item><title>2000 ரூபாய்க்காக 7 மாத கர்ப்பிணி மனைவியை அடித்துக் கொன்ற கணவன்! தடுக்க வந்த தாய்க்கும் தாக்குதல்</title><link>https://www.maalaimalar.com/news/national/husband-beats-to-death-7-month-pregnant-wife-over-2000-rupees</link><comments>https://www.maalaimalar.com/news/national/husband-beats-to-death-7-month-pregnant-wife-over-2000-rupees#comments</comments><guid isPermaLink="false">65e5f13c-9dfc-4d51-8099-2aada324a36b</guid><pubDate>Thu, 10 Sep 2026 13:03:04 +0000</pubDate><atom:updated>2026-09-10T13:03:04.247Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Uttar Pradesh,கர்ப்பிணி மனைவி கொலை,Pregnant woman killed,உத்தரப் பிரதேச மாநிலம்,Hardoi District,ஹர்டோய் மாவட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/2vijvqvm/GGGGG.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pregnant woman killed ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/2vijvqvm/GGGGG.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தில் பணத் தகராறு காரணமாக 7 மாத கர்ப்பிணி மனைவியை கணவனே மூங்கில் தடியால் அடித்துக் கொன்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/businessman-mystery-murder-daughter-in-law-plot-over-cctv-surveillance">ஹர்டோய் மாவட்டம்</a> பில்கிராம் காவல் எல்லைக்குட்பட்ட மயோரா கிராமத்தைச் சேர்ந்த விஷால் பால் என்பவருக்கும், 24 வயதான கிரண் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ள நிலையில், கிரண் தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். தொழிலாளியாக வேலை செய்து வந்த விஷால், இரு தினங்களுக்கு முன்பு கொடுத்த பணத்திற்கு மனைவி கிரணிடம் கணக்கு கேட்டுள்ளார்.</p><h2>தடுக்க வந்த மா<strong>மியார் மீதும்</strong> தாக்குதல்</h2><p>கைவசம் இருந்த ரூ.2,000 தொகையை உடனடியாகச் செலவழிக்காமல் குடும்பத்தின் எதிர்காலத் தேவைகளுக்காகச் சேமிக்க வேண்டும் என்று கிரண் கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த விஷால், மதுபோதையில் மூங்கில் தடியால் கிரணை கொடூரமாகத் தாக்கத் தொடங்கினார். இதைக் கண்டு பதறிய விஷாலின் தாய் பிரேமா சண்டையைத் தடுக்க முயன்றபோது, அவரையும் விஷால் தாக்கி வீட்டை விட்டு வெளியே தள்ளியுள்ளார்.</p><h2>உத<strong>விக்கு வராத அக்கம் ப</strong>க்கத்தினர்</h2><p>பயத்தில் அலறிய மாமியார் பிரேமா, அக்கம் பக்கத்தினரிடம் உதவி கேட்டு ஓடியுள்ளார். ஆனால் விஷாலின் கோபத்திற்குப் பயந்து யாரும் உதவிக்கு வரவில்லை. இறுதியில் 112 என்ற அவசர உதவி எண்ணிற்குத் தொடர்பு கொண்டு காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் மற்றும் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வந்து ஆபத்தான நிலையிலிருந்த கிரணை மீட்டு பில்கிராம் சமூக சுகாதார மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.</p><h2>மருத்துவ<strong>மனையில் பரிதாப மரணம்</strong></h2><p>மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட கிரணைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து தலைமறைவான குற்றவாளி விஷாலைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி கைது செய்தனர். பிரேதப் பரிசோதனைக்காக உடலைக் கைப்பற்றிய போலீசார், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title> VIDEO- &apos;An Ordinary Man&apos; படத்தின் ஃபர்ஸ்ட்  ப்ரோமா பாடல் வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/news/topnews/video-an-ordinary-man-first-promo-song-release</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/video-an-ordinary-man-first-promo-song-release#comments</comments><guid isPermaLink="false">2e9368ae-67fa-4ae1-978a-cdf37bf771ba</guid><pubDate>Thu, 10 Sep 2026 12:46:03 +0000</pubDate><atom:updated>2026-09-10T12:46:03.652Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>Ravi Mohan,ரவி மோகன்,நடிகர் யோகி பாபு,An Ordinary Man,Ravi Mohan&apos;s Birthday,ரவி மோகன் பிறந்தநாள்,அன் ஆர்டினரி மேன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/01wb39i4/yogi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ An Ordinary Man]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/01wb39i4/yogi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><content:encoded><![CDATA[ <p>பிறந்தநாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, படத்தின் முதல் பாடலான 'Higher' ப்ரொமோ பாடல் அதிகாரப்பூர்வமாக இன்று வெளியானது. </p><p>நடிகரும் இயக்குனருமான ரவி மோகன் தனது பிறந்தநாளைக் கொண்டாடும் இவ்வேளையில், அவர் இயக்கும் '<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-journey-with-ajith-elevated-me-editor-vijay-velukkutti">An Ordinary Man</a>' திரைப்படத்தின் படக்குழுவினர் அவருக்குச் சிறப்பு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். </p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/xy1zIvU5FwM?list=RDxy1zIvU5FwM"></iframe></figure><p>இதனை முன்னிட்டு, திரைப்படத்தின் சிறப்பு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை வெளியீடு செய்து படக்குழுவினர் தங்களது அன்பைப் பகிர்ந்து கொண்டனர்.</p><h2>யோகி பா<strong>பு கதாநாயகன்</strong></h2><p>முழுக்க முழுக்க நகைச்சுவை மற்றும் குடும்பப் பின்னணியைக் கொண்டு உருவாகும் இப்படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கிறார். 'கோமாளி' படப்பிடிப்பின் போதே யோகி பாபுவிடம், தான் இயக்கும் முதல் படத்தில் அவரையே கதாநாயகனாக்குவதாக ரவி மோகன் உறுதியளித்திருந்தார். அதைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  </p><h2>இன்று மாலை <strong>வெளியாகிற</strong>து Higher ப்ரொமோ பாடல்</h2><p>பிறந்தநாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, படத்தின் முதல் பாடலான 'Higher' ப்ரொமோ பாடல் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியானது. கெனிஷா பிரான்சிஸ் இசையமைத்துள்ள இந்த ப்ரொமோ பாடல், ரசிகர்களுக்குப் பிறந்தநாள் விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  திரையுலகில் இயக்குநராகப் புதிய பயணத்தைத் தொடங்கும் ரவி மோகனுக்கு, 'An Ordinary Man' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியளிக்கும் எனத் திரை வட்டாரங்கள் வாழ்த்தி வருகின்றன.  </p>]]></content:encoded></item><item><title>27 மாதங்களில் மிகப்பெரிய அங்கீகாரம்..!- மக்களுக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் விஜய் நெகிழ்ச்சி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-on-vetri-kazhagam-recognition-and-whistle-symbol-approval</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-on-vetri-kazhagam-recognition-and-whistle-symbol-approval#comments</comments><guid isPermaLink="false">d40d6bf7-b20f-4cf6-af14-7a31b127adf9</guid><pubDate>Thu, 10 Sep 2026 12:30:14 +0000</pubDate><atom:updated>2026-09-10T12:30:14.587Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,Election Commission,தேர்தல் ஆணையம்,tvk,cm vijay,முதலமைச்சர் விஜய்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/o1io2ajx/TN-CM-Vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/o1io2ajx/TN-CM-Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக வெற்றிக் கழகத்தை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதற்கு முதலமைச்சர் விஜய் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம்.</p><p>முப்பதாண்டுகளுக்கும் மேலாக அளவற்ற அன்பை வாரி வழங்கி, வாழ்வில் கிடைத்தற்கரிய ஓர் உயரிய இடத்தைப் பேரன்புடன் தந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவனாக, உறவாக, மகனாக, அண்ணனாக, தம்பியாக ஒவ்வோர் இல்லத்திலும் உள்ளத்திலும் ஒரு நிரந்தர இடத்தை வழங்கி, தாயன்புடன் தாங்கி வருகின்றீர்கள். </p><p>எல்லாவற்றையும் அளித்த ஒட்டுமொத்தத் தமிழக மக்களுக்கும் உலகத் தமிழ் உறவுகளுக்கும் என் நன்றியை எப்படித் திருப்பிச் செலுத்துவது என்று யோசித்தோம். அதன் வெளிப்பாடாகவே, உங்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே 2024-இல் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கினோம்.</p><p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF" rel="nofollow">மதச்சார்பற்ற சமூக நீதி</a>க் கொள்கையுடன் அரசியல் களம் கண்டே 27 மாதங்கள்தான் ஆகின்றது. ஆனால் அதற்குள், தமிழக அரசியல் வரலாற்றில் எவருக்கும் கிடைத்திராத ஒரு பேரதிசயத்தை, கடந்த சட்டமன்றத் தேர்தலில் நிகழ்த்திக் காட்டினீர்கள். </p><p>35% வாக்குகளுடன் தனிப்பெரும் கட்சியாகத் த.வெ.க.வை உயர்த்திப் பிடித்தீர்கள். உங்கள் தீர்ப்பை மதித்த ஜனநாயக சக்திகளின் ஆதரவுடன் இதோ இன்று, தமிழக மக்களின் முதல் சேவகனாக, முதலமைச்சராக உங்கள் விஜய். ஊழலற்ற, நேர்மையான நிர்வாகத்தை லட்சியமாகக் கொண்டு, மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி அமைத்து, தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆட்சியை நிறுவிக் காட்டி இருக்கிறோம்.</p><p>மக்களே… என் சொந்தங்களே… தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு பேரதிசயத்தை நீங்கள் நிகழ்த்திக் காட்டினீர்கள். அதன் வெளிப்பாடாக, இந்தியத் தேர்தல் ஆணையம் உங்கள் தமிழக வெற்றிக் கழகத்தை, தமிழகம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக அறிவித்துள்ளது.</p><p>ஜனநாயகப் புரட்சியை சத்தமில்லாமல் நிகழ்த்திய உங்கள் விசில் சின்னத்தையும் த.வெ.க.வின் சின்னமாக அங்கீகரித்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.</p><p>மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையுடன் நம்மை நம்புகிற ஒட்டுமொத்த மக்களுக்கான நன்றிக்கடன் பணி என்றென்றும் தொடரும்.</p><p>இந்த வேளையில், பேருழைப்பைத் தந்து கழகம் காக்கும் தோழர்களையும் நிர்வாகிகளையும் நெகிழ்வுடன் நினைத்துப் பார்க்கிறேன். அனைவருக்கும் நன்றி! நன்றி! நன்றி!</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>யூடியூப் மூலம் சாண்ட்விச் செய்ய கற்றுக்கொண்டு மாதத்திற்கு ரூ.25 லட்சம் சம்பாதிக்கும் இளைஞர்</title><link>https://www.maalaimalar.com/news/national/young-man-earns-rs-25-lakh-a-month-selling-sandwiches-learned-from-youtube</link><comments>https://www.maalaimalar.com/news/national/young-man-earns-rs-25-lakh-a-month-selling-sandwiches-learned-from-youtube#comments</comments><guid isPermaLink="false">360a7d6a-76d5-42fa-ae33-0a6911202670</guid><pubDate>Thu, 10 Sep 2026 12:13:32 +0000</pubDate><atom:updated>2026-09-10T12:13:32.567Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தொழிலதிபர்,Sandwich,Entrepreneur,டோஃபு சாண்ட்விச்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/f4fq8z66/Untitled-design-48.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bhopal street food success story]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/f4fq8z66/Untitled-design-48.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்தியப் பிரதேசத்தில் ஒரு இளைஞர் தள்ளுவண்டி கடையில் சாண்ட்விச் விற்பனை செய்து, அதன்மூலம் மாதத்திற்கு ரூபாய் 25 லட்சம் வருமானம் ஈட்டுவதாக எக்ஸ் தளத்தில் பயனர் பதிவிட்ட கருத்து வைரலாகியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">மத்தியப் பிரதேசத்தில்</a> உள்ள போபால் நகரத்திற்கு சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு அபிஷேக் சாஹூ என்பவர் குடிபெயர்ந்தார். </p><h3><strong>ப்ரவுசிங் செண்டர்</strong></h3><p>அந்த இளைஞர் முதலில் ஒரு சிறிய ப்ரவுசிங் செண்டரை தொடங்கினார். இந்த கடையில் பெரிதளவில் வருமானம் இல்லாததால், ஆரம்பித்த ஓராண்டுக்குள் அந்த செண்டர் மூடும் நிலைக்கு வந்தது.</p><p>முதலில் தான் ஆரம்பித்த தொழில் தோல்வியில் முடிந்தாலும், சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவரை தூண்டியது.</p><p>இதையடுத்து சாஹூ யூடியூப் மூலம் சாண்ட்விச் போன்ற உடனடி உணவுகளை தயாரிப்பது குறித்து கற்றுக் கொண்டார்.</p><h3><strong>ஹரி ஹர் சாண்ட்விச்</strong></h3><p>இதற்கு முதலில் அவருக்கு ஒரு சிறிய தள்ளுவண்டி தேவைப்பட்டது. அதற்கு போதுமான அளவில் தன்னிடம் பணம் இல்லாததால் 30,000 ரூபாயை அவர் கடனாக வாங்கினார்.</p><p>சாஹூவிற்கு உணவு வியாபாரத்தில் முன் அனுபவம் இல்லாத போதிலும், யூடியூப் மூலம் சமையல் குறிப்புகளை கற்றுக்கொண்டு வாடிக்கையாளர்களுக்கு சாண்ட்விச் உணவுகளை விற்பனை செய்ய தொடங்கினார்.</p><p>ஹரி ஹர் சாண்ட்விச் என்று பெயிரடப்பட்ட அந்த உணவு சிற்றுண்டி, காலப்போக்கில் அதிகளவிலான வாடிக்கையாளர்களை ஈர்த்தது.</p><h3><strong>மாதம் ரூ.25 லட்சம் வருமானம்</strong></h3><p>இந்த சிற்றுண்டி கடையில் பொதுவாக 600க்கும் மேற்பட்ட சாண்ட்விச்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், மேலும் வார இறுதி நாட்களில் 1,000க்கும் மேற்பட்ட சாண்ட்விச்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் பயனர் ஒருவர் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.</p><p>மேலும் போபாலில் மக்கள் நடமாட்டம் அதிக உள்ள பகுதிகளில் அமைந்துள்ள இந்த சிற்றுண்டி கடை, சுமார் 25 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டுவதாகவும் அந்த அவர் தெரிவித்துள்ளார்.</p><h3><strong>பயனர்கள் வாழ்த்து</strong></h3><p>சாஹூ ஆரம்பித்த சிற்றுண்டி குறித்து எக்ஸ் தளத்தில் பயனர் வெளியிட்ட பதிவிற்கு பல்வேறு தரப்பினரும் கருத்துகளை பதிவிட்டனர்.</p><p>அந்த பதிவில் ஒரு பயனர், ‘தோல்வியடைந்த ஜெராக்ஸ் கடையில் இருந்து மாதம் ரூ.25 லட்சம் வருமான ஈட்டும் தெருவோர உணவு வியாபாரம் வரை’ என்று குறிப்பிட்டு வாழ்த்துகளை கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஆந்திர பாணியில் ஆட்சியைக் கவிழ்க்கும் ஆதவ் அர்ஜூனா? - லண்டன் பயணம் குறித்து அப்பாவு பகீர் கருத்து! </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/is-aadhav-arjuna-plotting-to-topple-the-government-andhra-style-appavu-makes-a-sensational-remark-regarding-the-london-trip</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/is-aadhav-arjuna-plotting-to-topple-the-government-andhra-style-appavu-makes-a-sensational-remark-regarding-the-london-trip#comments</comments><guid isPermaLink="false">a9608cfd-2c7c-45db-bbc8-2d5812aa1b07</guid><pubDate>Thu, 10 Sep 2026 12:08:12 +0000</pubDate><atom:updated>2026-09-10T12:08:12.896Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,அப்பாவு,appavu,என்.டி.ராமாராவ்,N.T. Rama Rao,அமைச்சர் ஆதவ் அர்ஜூனா,Minister Aadhav Arjuna</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/ze8bumaa/New-Project-2026-09-10T173652.160.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆந்திர பாணியில் ஆட்சியைக் கவிழ்க்கும் ஆதவ் அர்ஜூனா? - லண்டன் பயணம் குறித்து அப்பாவு பகீர் கருத்து! ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/ze8bumaa/New-Project-2026-09-10T173652.160.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆந்திரா பாணியில் ஆட்சி கவிழ்ந்துவிடுமோ என்ற பயத்தில் பொதுப்பணித்துறை ஆதவ் அர்ஜூனாவையும், லண்டன் பயணத்திற்கு அழைத்துச் செல்கிறீர்களா? என முதலமைச்சர் விஜய்க்கு, முன்னாள் தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;</p><h2>கல்லாப்பெட்டிக் கூட்டணி</h2><p>“தவெக ஆட்சி அமைந்த 100 நாட்களுக்குள் மக்களின் கோபம், இளைஞர்களின் அதிருப்தி, பெண்களின் சாபம், விவசாயிகளின் கண்ணீர், அரசு ஊழியர்களின் ஆவேசம் ஆகியவற்றால் செல்வாக்கு சரிந்து வருவதை உணர்ந்து,</p><p> இடைத்தேர்தலில் பழைய பருப்பு வேகாது என்பதற்காக உங்களால் “கல்லாப்பெட்டிகூட்டணி” என்று வர்ணிக்கப்பட்ட  கட்சிகளை அழைத்து  “மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக்கூட்டணி” என்று பெயர் மாற்றம் செய்ததாலேயே மக்களின்  செல்வாக்கை பெற்றுவிடலாம் என்று கனவு காணாதீர்கள் முதலமைச்சர் சார்? </p><p>நேற்று தங்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் முடிந்த பின்பு கூட்டத்தின்  நோக்கம் குறித்தோ, பிரதமர் வேட்பாளர் குறித்தோ, இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்தோ பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேச துணிவில்லாமல், கூட்டணி கட்சித்தலைவர்கள் தங்கள் விருப்பப்படி கருத்து சொல்லிக் கொள்ளுங்கள் என்று அவர்களை அவமதித்திருப்பது, உங்கள் “நரித்தனத்தின் வெளிப்பாடு” என்பது  நாட்டுமக்களுக்கு நன்றாக தெரியும் முதலமைச்சர் சார்? </p><h2>நாகரிகமில்லா...</h2><p>இந்தியாவில் அரசியல் அமைப்புச் சட்டம், பத்திரிகை சுதந்திரம், கருத்து சுதந்திரம் மக்களின் உரிமைகளுக்கு  எதிராக இந்திரா காந்தியால் கொண்டுவரப்பட்ட நெருக்கடி நிலையை அன்றைய முதலமைச்சர் கருணாநிதி எதிர்த்து குரல் கொடுத்ததால்  முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டு சிறையில் சித்திரவதை அனுபவித்த தியாக வரலாற்றை சட்டமன்றத்தில் கேலி செய்து கூத்தடிக்கும் பண்பில்லா, அறிவில்லா, நாகரிகமில்லா, கூத்தாடிக்கு முதலமைச்சர் பதவி ஒரு கேடா ? </p><h2>ஆந்திர பாணியில் ஆட்சி கவிழ்ப்பு</h2><p>ஒருமுறை ஆந்திர முன்னாள் முதலமைச்சர் மறைந்த என்.டி.இராமராவ் வெளிநாடு பயணம் சென்று திரும்புவதற்குள் சந்திரபாபு நாயுடு ஆட்சியை கவிழ்த்து முதலைமைச்சர் ஆனது போல் </p><p>ஆதவ்அர்ஜூனா முதலமைச்சராகி விடக்கூடாது என்ற பயத்தில் உங்களோடு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-first-official-foreign-trip-to-leave-for-london-tonight">லண்டன் அழைத்து செல்கிறீர்களா முதலமைச்சர் சார்</a>?” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>பட்டினப்பாக்கத்தில் முன்மொழியப்பட்ட தலைமைச் செயலகத் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் - அரசுக்கு சிபிஐ வலியுறுத்தல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-proposed-secretariat-project-at-pattinapakkam-must-be-immediately-abandoned-cpi-urges-the-government</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-proposed-secretariat-project-at-pattinapakkam-must-be-immediately-abandoned-cpi-urges-the-government#comments</comments><guid isPermaLink="false">01d74bee-3aa3-45ff-8a47-f5cb9e9248ef</guid><pubDate>Thu, 10 Sep 2026 11:45:30 +0000</pubDate><atom:updated>2026-09-10T11:45:30.572Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சிபிஐ,CPI,பட்டினப்பாக்கம்,New Secretariat,pattinapakkam,M. Veerapandian,மு. வீரபாண்டியன்,புதிய தலைமைச் செயலகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/l8pcoxvy/New-Project-2026-09-10T171458.218.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பட்டினப்பாக்கத்தில் முன்மொழியப்பட்ட தலைமைச் செயலகத் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் - அரசுக்கு சிபிஐ வலியுறுத்தல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/l8pcoxvy/New-Project-2026-09-10T171458.218.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/secretariat-should-not-be-established-in-congested-pattinapakkam-anbumani-insists">பட்டினப்பாக்கத்தில்</a> முன்மொழியப்பட்ட தலைமைச் செயலகத் திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;</p><h2>முன்மொழிவு தவறானது</h2><p>பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலக வளாகம் அமைப்பதற்கான தமிழ்நாடு அரசின் முன்மொழிவு தவறானது. </p><p>மீனவ மக்களின் வாழ்வாதார உரிமைகள், சுடலோரச் சூழலியல், காலநிலைப் பாதிப்புகள், பொதுமக்களின் கடற்கரை அணுகல் மற்றும் அரசின் முக்கியமான நிர்வாக நிறுவனத்தின் பாதுகாப்பு ஆகியவை பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கும். </p><p>தமிழ்நாடு அரசு இம்முன்மொழிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்துகிறது.</p><h2>9 பகுதிகளுக்கு பாதிப்பு</h2><p>முல்லைக்குப்பம், சீனிவாசபுரம், ராஜீவ்காந்தி நகர், பவானி குப்பம், இருதயபுரம், செல்வராஜபுரம், டூமிங் குப்பம், நொச்சி நகர் மற்றும் நொச்சிக்குப்பம் உள்ளிட்ட ஒன்பது மீனவக் குடியிருப்புகள், முன்மொழியப்பட்ட இடத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அமைந்துள்ளன.</p><p>சுற்றியுள்ள மீனவக் குடியிருப்புகளின் மக்கள், கடலை வெறும் குடியிருப்புப் பகுதியாக மட்டும் சார்ந்திருக்கவில்லை. அது அவர்களின் வாழ்வாதாரத்தின் அடித்தளமாகவும், பொது வளமாகவும் உள்ளது. </p><h2>முடங்கும் மீன் தொழில்கள்</h2><p>மீன்பிடித்தல், படகுகளின் இயக்கம், மீன் இறக்குதல், வலைகள் மற்றும் மீன்களை உலர்த்துதல், மீன் விற்பனை, சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு மீன்பிடி சார்ந்த தொழில்கள் இக்கடலோரப் பகுதியைச் சார்ந்தே நடைபெறுகின்றன.</p><p>இத்தகைய குறுகிய கடலோரப் பகுதியில் மிகப்பெரிய நிர்வாக வளாகம், அதனுடன் சாலைகள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகள் அமைக்கப்படுவது, ஏற்கனவே நெருக்கடிக்குள்ளாகியுள்ள கடலோரப் பகுதியை மேலும் பாதிக்கும். </p><p>1,500-க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் இடம்பெயர வேண்டிய நிலைக்கும், பொருளாதார ரீதியாகவும், வாழ்வாதார ரீதியாகவும் பாதிக்கப்படும் நிலைக்கும் தள்ளப்படுவர்.</p><p>உயர் பாதுகாப்பு கொண்ட அரசின் தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்றத்தின் வருகையால் தடுப்புகள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாகவும், முக்கியப் பிரமுகர்களின் வாகனப் போக்குவரத்து, காவல்துறை மற்றும் பாதுகாப்புப் பணியமர்த்தல் போன்றவை தவிர்க்க முடியாததாகும். </p><h2>கட்டுப்படுத்தப்படும் அபாயம்...</h2><p>இதன் விளைவாக மக்களுக்கு பொதுவாகச் சொந்தமான கடற்கரைப் பகுதி படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்ட நிர்வாக பாதுகாப்பு வளாகமாக மாறும் அபாயம் உள்ளது.</p><p>மேலும் காலநிலை அவசரநிலை நிலவும் இன்றைய சூழலில் இத்தகைய இடத்தில் தலைமைச் செயலகம் அமைப்பது பொருத்தமற்றதும், ஆபத்தானதுமாகும். </p><p>சென்னையின் கடலோரப் பகுதிகள் புயல்கள், சுடல் எழுச்சி, வெள்ளம், கடலோர அரிப்பு மற்றும் கடல் மட்ட உயர்வு போன்றவற்றால் அதிகரித்து வரும் ஆபத்தை எதிர்கொள்கின்றன.</p><p>எனவே, அரசு பாதுகாப்பான மாற்று இடங்களை ஆய்வு செய்ய வேண்டும். சுற்றுச்சூழல் ஆவணங்களில், இப்பரந்த கடலோரப் பகுதி சுற்றுச்சூழல் பாதிப்புக்கு எளிதில் உள்ளாகும் பகுதிகளும் ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் முட்டையிடும் பகுதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.</p><p>முன்மொழியப்படும் வளாகத்தை பசுமை வளாகம் என்று அழைப்பதால் மட்டும் அது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகிவிடாது.</p><p>நிலையான வளர்ச்சி என்பது பசுமைக் கட்டிடத்தை உருவாக்குவதில் தொடங்குவதில்லை; சுற்றுச்சூழல் மற்றும் சமூக ரீதியாக பொருத்தமான இடத்தைத் தேர்ந்தெடுப்பதில்தான் தொடங்குகிறது.</p><h2>நவீன கட்டமைப்பு அவசியம்... ஆனால்</h2><p>மாநிலத்திற்கு நவீன நிர்வாகக் கட்டமைப்பு தேவைப்படலாம். ஆனால் நிர்வாக நவீனமயமாக்கல் என்ற பெயரில் உணர்திறன் மிக்க கடலோரப் பகுதியை ஆக்கிரமிப்பதும், மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதும், பொதுமக்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதும், ஜனநாயகப் பொது வெளியைச் சுருக்குவதும் ஏற்றுக்கொள்ள முடியாது.</p><p>எனவே, தமிழ்நாடு அரசு பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகத் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் திட்டவட்டமாக வலியுறுத்துகிறது. </p><p>பாதுகாப்பான, சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் சமூக ரீதியாகப் பொருத்தமான மாற்று இடங்களை அரசு பரிசீலிக்க வேண்டும்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&apos;ஹைக்கூ&apos; திரைப்படத்தின் டீசரை வெளியிட்ட ஹரிஷ் கல்யாண் - ரிலீஸ் தேதி அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/haikoo-movie-teaser-released-by-harish-kalyan-release-date-announced</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/haikoo-movie-teaser-released-by-harish-kalyan-release-date-announced#comments</comments><guid isPermaLink="false">531ea85b-3394-4309-b108-c68c238d13ee</guid><pubDate>Thu, 10 Sep 2026 11:16:13 +0000</pubDate><atom:updated>2026-09-10T11:16:13.122Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>Netflix,Harish Kalyan,Sridevi,Haiku Movie,ஹைக்கூ,Aegan,Femina George,Yuvaraj Chinnasamy,Vision Cinema House</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/5s9z9fpj/Haiku-Movie" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Haiku Movie]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/5s9z9fpj/Haiku-Movie?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில், இளம் நடிகர் ஏகன் நடிப்பில் உருவாகியுள்ள புத்துணர்ச்சியான காதல் திரைப்படமான ‘ஹைக்கூ’ படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் மற்றும் ரிலீஸ் தேதி வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.</p><p>தமிழ் சினிமாவின் முன்னணி ரொமாண்டிக் ஸ்டார்<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D"> ஹரிஷ் கல்யாண்</a> இந்த கவித்துவமான டீசரை தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.</p><h2><strong>பின்னணி இசையில் மிரட்டிய சித்து குமார்</strong></h2><p>இப்படத்தின் காதல் உணர்வுகளுக்கு இசையமைப்பாளர் சித்து குமாரின் பின்னணி இசை கூடுதல் உயிர் கொடுத்துள்ளது. குறிப்பாக, கிளாசிக்கல் ராகங்களுடன் இணைந்த மென்மையான வயலின் இசையும், நவீன ஃபியூஷன் இசையும் டீசரின் இதமான காட்சியமைப்புகளுடன் அழகாகப் பொருந்துகின்றன.</p><p>குறுகிய நேரத்தில், பார்வையாளர்களை ஒரு வண்ணமயமான காதல் உலகிற்குள் அழைத்துச் செல்லும் மயக்கும் இசை அனுபவத்தை இந்த <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20">டீசர் </a>வழங்குகிறது.</p><h2><strong>புத்துணர்ச்சியான திரைக்கதை அணுகுமுறை</strong></h2><p>ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் திரைப்படங்கள் மத்தியில், மீண்டும் தூய்மையான காதல் கதைகள் தமிழ் சினிமா ரசிகர்களிடையே தனி கவனம் பெற்று வருகின்றன. </p><p>அந்த வரிசையில், எழுத்தாளரும் இயக்குநருமான யுவராஜ் சின்னசாமியின் புதுமையான திரை அணுகுமுறை, அனைவருக்கும் பரிச்சயமான காதல் உணர்வுகளை மிகவும் புத்துணர்ச்சியுடன் தருகிறது.</p><p>‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்தின் எதார்த்த நடிப்புக்குப் பிறகு, இதில் முற்றிலும் கூலான, நவீன மற்றும் அப்பாவித்தனம் நிறைந்த சிட்டி இளைஞனாக ஏகன் நடித்துள்ளார்.</p><p>அவருக்கு இணையாக ஸ்ரீதேவியும், அழுத்தமான தோற்றத்தில் ஃபெமினா ஜார்ஜும் தங்களது அழகான நடிப்பால் கவனம் ஈர்க்கின்றனர்.</p><p>இளம் நடிகர்கள், வண்ணமயமான காட்சிகள் மற்றும் மனதை வருடும் இசை ஆகியவற்றுடன், இந்தப் படம் காதல் திரைப்படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2><strong>படப்பிடிப்பு முடியும் முன்பே நெட்பிளிக்ஸ் ஒப்பந்தம்</strong></h2><p>இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில், ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் திரையரங்க வெளியீட்டுக்குப் பிந்தைய டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை முன்னணி ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ், படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைவதற்கு முன்பே கைப்பற்றியுள்ளது.</p><p>படத்தின் புதுமையான கதை மற்றும் தனித்துவமான திரை அணுகுமுறை ஓடிடி தளத்தின் கவனத்தை ஈர்த்ததைத் தொடர்ந்து, இந்த டிஜிட்டல் உரிமை கணிசமான பெரும் தொகைக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/vQGJWBJvpu4"></iframe></figure><h2><strong>பிரம்மாண்ட தயாரிப்பு மற்றும் தொழில்நுட்பக் குழு</strong></h2><p>இப்படத்தை டாக்டர் டி. அருளானந்து மற்றும் மாத்யூ அருளானந்து ஆகியோர் விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனத்தின் சார்பில் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளனர். </p><p>ஹரி ஹரன் ராம் கூடுதல் திரைக்கதையில் பங்களித்துள்ளார். பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவை மேற்கொள்ள, சக்தி பிரணேஷ் படத்தொகுப்பைக் கவனித்துள்ளார்.</p><p>பிரேம் கலை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.</p><p>காதல் உலகத்தின் அழகிய அனுபவத்தை ரசிகர்களுக்குத் தியேட்டரில் வழங்கத் தயாராகியுள்ள ‘ஹைக்கூ’ திரைப்படம் வரும் அக்டோபர் 23 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சிறார் சமூக வலைதளப் பயன்பாட்டிற்கு பெற்றோர் அனுமதி கட்டாயம்: உச்சநீதிமன்றம் அதிரடி நோட்டீஸ்</title><link>https://www.maalaimalar.com/news/national/supreme-court-notice-on-parental-consent-for-children-social-media-use</link><comments>https://www.maalaimalar.com/news/national/supreme-court-notice-on-parental-consent-for-children-social-media-use#comments</comments><guid isPermaLink="false">aa5dce5f-74aa-4625-8a90-863f1aeb9020</guid><pubDate>Thu, 10 Sep 2026 11:09:30 +0000</pubDate><atom:updated>2026-09-10T11:09:30.961Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,Supreme Court,social media,முகநூல்,சமூக வலைதளங்கள்,உச்சநீதிமன்றம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/m14d68rq/SOC.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Social media]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/m14d68rq/SOC.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முகநூல், ஸ்நாப்சாட் போன்ற முன்னணி சமூக வலைதள நிறுவனங்கள் 13 வயதடைந்த குழந்தைகளுக்கே கணக்கு தொடங்க அனுமதி அளிக்கின்றன.</p><p>18 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தவும், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் கட்டாய அனுமதியை நடைமுறைப்படுத்தவும் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியுள்ளது. தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு, இந்த விவகாரம் குறித்து விரிவான விளக்கமளிக்குமாறு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/businessman-mystery-murder-daughter-in-law-plot-over-cctv-surveillance">இந்திய ஒப்பந்தச் சட்டம் </a>1872-ன் படி, 18 வயதுக்குட்பட்ட நபர்கள் சட்டரீதியாக எந்தவொரு ஒப்பந்தத்திலும் ஈடுபட முடியாது. இருப்பினும், முகநூல், ஸ்நாப்சாட் போன்ற முன்னணி சமூக வலைதள நிறுவனங்கள் 13 வயதடைந்த குழந்தைகளுக்கே கணக்கு தொடங்க அனுமதி அளிக்கின்றன. இது இந்திய சட்டவிதிகளுக்கு முரணாக அமைவதோடு, சிறார்களின் தனிநபர் தரவுப் பாதுகாப்பிற்கும் கேள்விக்குறியை ஏற்படுத்துகிறது என்று மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.</p><h2>மின்-கேஒய்<strong>சி மற்றும் வய</strong>து சரிபார்ப்பு முறை</h2><p>சிறார்கள் தவறான தகவல்களை வழங்கி சமூக வலைதளங்களில் நுழைவதைத் தடுக்க, மின்னணு முறையில் ஆவணங்களைச் சரிபார்க்கும் (e-KYC) கடுமையான கட்டுப்பாட்டு அமைப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரின் சரிபார்க்கப்பட்ட அனுமதி இல்லாமல் சிறார்களுக்குச் சொந்தமான கணக்குகளைச் செயல்பட அனுமதிக்கக் கூடாது என்றும், கல்வி சார்ந்த பயன்பாடுகளுக்கு மட்டுமே பெற்றோர் கட்டுப்பாட்டில் அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>சமூக வலைதளங்களின் கட்டுப்பாடற்ற பயன்பாட்டால் சிறார்கள் இணையவழி சுரண்டல், பாலியல் துன்புறுத்தல், இணையவழி அச்சுறுத்தல் மற்றும் தவறான வழிகாட்டுதல்களுக்கு ஆளாக நேரிடுகிறது என மனுதாரர் சுட்டிக்காட்டினார். இந்த விவகாரத்தைக் கேட்ட நீதிபதிகள், இந்தியாவில் சிறார்களின் டிஜிட்டல் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும் அவர்களைப் பாதுகாக்கவும் தகுந்த பாதுகாப்பு வழிமுறைகள் மிகவும் அவசியம் என்பதை ஒப்புக்கொண்டனர்.</p><p>தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-ல் தகுந்த திருத்தங்களை மேற்கொண்டு அல்லது புதிய வழிகாட்டுதல்களை உருவாக்கி சிறார்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்காவில் கார் என்ஜின் பகுதியில் 4 அடி நீளமுள்ள மலைப்பாம்பு : இணையத்தில் வெளியான வீடியோ</title><link>https://www.maalaimalar.com/news/world/four-foot-snake-found-in-car-engine-owner-shocked</link><comments>https://www.maalaimalar.com/news/world/four-foot-snake-found-in-car-engine-owner-shocked#comments</comments><guid isPermaLink="false">5376020d-d2a9-4b90-96b6-8a2e37b3b259</guid><pubDate>Thu, 10 Sep 2026 11:00:41 +0000</pubDate><atom:updated>2026-09-10T11:00:41.399Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,America,snake,மலைப்பாம்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/75djag3u/Untitled-design-47.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 4-Foot Snake Found in Car Engine]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/75djag3u/Untitled-design-47.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் என்ஜினுக்குள் நான்கு அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று இருந்தது கண்டறியப்பட்டதையடுத்து, விலங்குகள் மீட்பு குழுவினர் மலைப்பாம்பை பிடித்து சென்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE">அமெரிக்காவின்</a> விஸ்கான்சின் மாகாணத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த விண்டி டக், தனது வாகனத்தை வழக்கம் போல வீட்டிற்கு வெளியே நிறுத்தி இருந்தார். </p><p>அப்போது உரிமையாளர் கார் என்ஜினை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, அதில் விசித்திரமான அசைவுகளை கண்டுள்ளார்.</p><p>கார் என்ஜினுக்குள் சரியான வெளிச்சம் இல்லாததால், முதலில் அதை அவர் ஒரு அழுக்கான குழாய் என்று நினைத்துள்ளார்.</p><p>பின்னர் அது அசையத் தொடங்கி, அவரை நோக்கி சீறியுள்ளது, அப்போது தான் அவருக்கு அது ஒரு 4 அடி நீளமுள்ள மலைப்பாம்பு என்று தெரியவந்துள்ளது.</p><p>இதையடுத்து கார் என்ஜினுக்குள் பதுங்கி இருந்த மலைப்பாம்பை பிடிப்பதற்காக, மில்வாக்கி பகுதியில் உள்ள விலங்குகள் மீட்பு குழுவிடம் கார் உரிமையாளர் தகவல் தெரிவித்தார்.</p><p>தகவலறிந்து வந்த மீட்பு குழுவினர், காரின் முன்பக்கத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு, பாம்பு வெளியே நகரும்படி ஒரு நீள கம்பால் மலைப்பாம்பை சீண்டினர்.</p><p>இதைத்தொடர்ந்து பல மணி நேரத்திற்கு பிறகு, கார் என்ஜின் பகுதியில் மறைந்து கொண்டிருந்த மலைப்பாம்பு வெளியே வந்தது.</p><p>பின்னர் மீட்புக் குழுவினர் அந்த மலைப்பாம்பை பிடித்து விலங்குகள் கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு கொண்டு சென்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தென்கொரியாவில் விவாகரத்து கோரிய மனைவிக்கு ரூ.14,000 கோடி வழங்க நீதிமன்றம் உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/world/south-korea-court-orders-17000-crore-to-wife-in-divorce</link><comments>https://www.maalaimalar.com/news/world/south-korea-court-orders-17000-crore-to-wife-in-divorce#comments</comments><guid isPermaLink="false">dac5fdf2-831c-4c9a-8bd6-221d0bddf4ec</guid><pubDate>Thu, 10 Sep 2026 10:55:08 +0000</pubDate><atom:updated>2026-09-10T10:55:08.114Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தென் கொரியா,Divorce case,SouthKorea,விவாகரத்து வழக்கு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/38opx1on/Untitled-design-46.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Seoul court grants second wife Lee massive share of assets]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/38opx1on/Untitled-design-46.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தென்கொரியாவில் வீடியோ கேம் அதிபரின் மனைவி விவகாரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், கணவரின் சொத்துகளில் இருந்து சுமார் ரூ. 14,000 கோடி மதிப்புள்ள பங்குகளை மனைவியின் பெயரில் மாற்றவும், மேலும் ரொக்கமாக ரூ. 461 கோடியை வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE">தென்கொரியா</a> நாட்டில் தொழிலதிபரான குவோன் ஹியூக் பின், கடந்த 2002-ஆம் ஆண்டில் ஸ்மைல்கேட் என்ற வீடியோ கேம் நிறுவனத்தை ஆரம்பித்தார். </p><p>இந்த நிறுவனம் உலகளவில் மிகவும் வெற்றிகரமான கேமிங் நிறுவனங்களில் ஒன்றாக பிரபலமடைந்ததை தொடர்ந்து, இவரின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 60,000 கோடியாக உயர்ந்தது.</p><p>வீடியோ கேம் அதிபரான குவோன், முதலில் ரோ என்பவரை திருமணம் செய்திருந்தார். இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த நிலையில், விவாகரத்து கோரி ரோ நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.</p><h3><strong>முதல் மனைவி ரோ</strong></h3><p>இதையடுத்து தொழிலதிபரின் பங்குகளில் முதல் மனைவியான ரோவின் பங்கு மற்றும் செயல்பாடுகளை சுட்டிக்காட்டி, சொத்தில் மூன்றில் ஒரு பங்கை பெற ரோ-வுக்கு உரிமை உண்டு என்று சியோல் நீதிமன்றம் கூறியது.</p><p>இதையடுத்து தொழிலதிபரின் முதல் மனைவி ரோவுக்கு சுமார் 6,000 கோடி ரூபாயை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><h3><strong>இரண்டாவது மனைவி லீ</strong></h3><p>இந்த நிலையில் தொழிலதிபர் திருமணம் செய்த இரண்டாம் மனைவியான லீ என்பவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.</p><p>இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தபோது தான் நிறுவனத்தின் ஆரம்பகால நிர்வாகத்திற்கு மறைமுகமாக பங்களித்திருப்பதாக கூறி, கணவரின் சொத்தில் தனக்கும் உரிமை உண்டு என நீதிமன்றத்தில் வாதிட்டார்.</p><h3><strong>நீதிமன்றம் உத்தரவு</strong></h3><p>இதையடுத்து சியோல் நீதிமன்றம் தொழிலதிபரின் இரண்டாம் மனைவியான லீ என்பவருக்கு, ஸ்மைல்கேட் நிறுவனத்தின் ரூ.17,761 கோடி மதிப்புள்ள, 35 சதவீத பங்குகளை மாற்றி தரும்படி உத்தரவிட்டது.</p><p>மேலும் லீ-க்கு ரொக்கமாக 461 கோடி ரூபாய் வழங்கவும் சியோல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் வருகிற 16-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/districts-in-tamil-nadu-likely-to-receive-rain-until-the-16th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/districts-in-tamil-nadu-likely-to-receive-rain-until-the-16th#comments</comments><guid isPermaLink="false">9f9aabd6-09b4-453a-8acf-07017f49b588</guid><pubDate>Thu, 10 Sep 2026 10:21:51 +0000</pubDate><atom:updated>2026-09-10T10:21:51.854Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/24cp1500/rain005.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மழை]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/24cp1500/rain005.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.</strong></em></p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>சுமார் 0.9 கிமீ உயரத்தில் தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><h2><strong>லேசான மழை</strong> </h2><p>இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>12-ந்தேதி மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தென் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>13 மற்றும் 14-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>15-ந்தேதி விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>16-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>இதனிடையே இன்று முதல் 14-ந்தேதி வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p>நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p>]]></content:encoded></item><item><title>இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.190 கோடி வருவாய் இழப்பு- காரணம் இதுதான்!</title><link>https://www.maalaimalar.com/sports/sri-lanka-cricket-board-loses-right-to-host-womens-champions-trophy-faces-190-crore-revenue-loss</link><comments>https://www.maalaimalar.com/sports/sri-lanka-cricket-board-loses-right-to-host-womens-champions-trophy-faces-190-crore-revenue-loss#comments</comments><guid isPermaLink="false">ee2854d4-57e5-470d-a1ad-6ce8b8b73c68</guid><pubDate>Thu, 10 Sep 2026 10:16:37 +0000</pubDate><atom:updated>2026-09-10T10:16:37.323Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Cricket,கிரிக்கெட்,இலங்கை கிரிக்கெட் வாரியம்,மகளிர் சாம்பியன்ஸ் டிராபி,womens champion trophy,srilanka cricket board</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/t6lvp1qj/SLK.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ womens champions trophy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/t6lvp1qj/SLK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலாவது  ஐ.சி.சி. சாம்பியன்ஸ்  டிராபி மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 14-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை நடை பெறுகிறது. 6 நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டி மும்பை, வதோ ராவில் நடத்தப்படுகிறது.</p><h2>இலங்கையில் இருந்து மாற்றம்</h2><p>இந்த போட்டியை இலங்கையில் நடத்த முதலில் முடிவு செய்யப்பட்டது. அரசியல் காரணங்களுக்காக <a href="https://www.maalaimalar.com/news/world/rajnath-singh-meets-sri-lankan-president-discusses-regional-security" rel="nofollow">இலங்கை</a>யில் நடைபெற இருந்த போட்டி  இந்தியாவுக்கு மாற்றப்பட்டது.</p><p>இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் நிர்வாகிகள் தேர்வு செய்யாததால் இந்த மாற்றம் இருந்ததாக கூறப்பட்டது.</p><p>சாம்பியன்ஸ் டிராபி மகளிர் கிரிக்கெட் போட்டியை நடத்தும் பணிகளுக்கான ஏற்பாடுகளையும் இலங்கை வாரியம் செய்யவில்லை என்று தெரிகிறது.</p><h2>ரூ.190 கோடி இழப்பு</h2><p>ஐ.சி.சி. அறிமுக மகளிர் சாம்பியன்ஸ் டிராபியை நடத்தும் உரிமையை இழந்த தால் இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.190 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதை இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் பிரகாஷ் ஷாப்டர் தெரிவித்தார். </p><p>அவர் மேலும் கூறும் போது,"போட்டியை நடத்து வதற்கான போட்டிக் கட்டணம் கொடுக்கப்பட இருந்தது. ரூ.19 கோடி என நம்புகிறேன். அதே சம யத்தில் இலங்கை கிரிக்கெட் வாரிய மும் தொடக்கத்தில் இருந்து மைதானங்களைச் சரிசெய்ய வேண்டியுள்ள தால் செலவு ஏற்பட இருந்தது" என்றார்.</p><p>ஷம்மி சிவாவின் ராஜினாமாவைத் தொடர்ந்து தற்போதைய இடைக்கால கமிட்டியை இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் கடந்த ஏப்ரலில் அமைத்தார்.</p><p>இந்த புதிய கமிட்டியினர் ஊழல் இல்லாத உள்ளூர் நிர்வாகிகளை நியமிக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். அதனால் ஐ.சி.சி. மகளிர் சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்த முடியாமல் போய்விட்டது என்று விளக்கம் அளித்துள்ளது.</p><p>ஏற்கனவே கடந்த 2024-ல் ஏற்பட்ட அரசியல் காரணங்களால் ஐ.சி.சி. தொடரை நடத்தும் வாய்ப்பையும் இலங்கை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>ரூ.3 லட்சத்தில் புதிய &apos;iPhone Duo&apos;: பாங்காக் சென்று வாங்கியும் பணத்தை மிச்சப்படுத்தலாம்! ஒரு சுவாரஸ்யக் கணக்கீடு</title><link>https://www.maalaimalar.com/technology/new-iphone-duo-for-rs-3-lakh-you-can-save-money-by-buying-it-in-bangkok</link><comments>https://www.maalaimalar.com/technology/new-iphone-duo-for-rs-3-lakh-you-can-save-money-by-buying-it-in-bangkok#comments</comments><guid isPermaLink="false">6433c766-9242-49e3-a1c1-33d520df4ec9</guid><pubDate>Thu, 10 Sep 2026 10:08:14 +0000</pubDate><atom:updated>2026-09-10T10:08:14.293Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா,பாங்காக்,Bangkok,Indian,ஆப்பிள் நிறுவனம்,iPhone Duo,ஐபோன் டுவோ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/yrfnt848/iphone.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ iPhone Duo  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/yrfnt848/iphone.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தொழில்நுட்பம் (Technology)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் ஐபோன் டுவோ மாடலின் ஆரம்ப விலை (256GB storage) ரூ.2,99,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. </p><p>ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மடிப்புத் திறனுடைய போனான 'ஐபோன் டுவோ' மாடலைச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய போன் தொழில்நுட்ப உலகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், இந்தியாவில் இதன் அதிகப்படியான விலை நுகர்வோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.</p><h2><strong>இந்தியாவில் உச்சகட்ட வி</strong>லை</h2><p>இந்தியாவில் <a href="https://www.maalaimalar.com/technology/mobilephone/new-apple-ceo-unveils-latest-iphone-lineup">ஐபோன் டுவோ</a> மாடலின் ஆரம்ப விலை (256GB storage) ரூ.2,99,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் உயர் ரக 2TB மாடலின் விலை ரூ.4,49,900 வரை செல்கிறது. அதிகபட்ச இறக்குமதி வரிகள் மற்றும் பிற உள்ளூர் வரிகள் காரணமாக உலக நாடுகளிலேயே இந்தியாவில்தான் இதன் விலை மிக அதிகமாக உள்ளது.</p><h2>பாங்<strong>காக் சுற்றுலா</strong></h2><p>தாய்லாந்தின் பாங்காக்கில் இதன் ஆரம்ப விலை 78,999 தாய் பாட் (சுமார் ரூ. 2,30,000) ஆகும். இந்தியாவில் விற்கும் விலையை விட தாய்லாந்தில் ரூ.70,000 குறைவாக உள்ளது. ஒரு நபர் இந்தியாவில் இந்த போனை வாங்குவதற்குப் பதிலாக பாங்காக் சென்று, இரண்டு நாட்கள் தங்கி, போனை வாங்கி வந்தாலும் பணத்தை மிச்சப்படுத்த முடியும் என்பதைப் பின்வரும் கணக்கீடு உணர்த்துகிறது.</p><p>* தாய்லாந்தில் ஐபோன் டுவோ விலை: ரூ. 2,30,000</p><p>* டெல்லியிலிருந்து பாங்காக் இருவழி விமானக் கட்டணம்: ரூ.30,000</p><p>* இரண்டு நாட்கள் ஹோட்டல் தங்குமிடம்: ரூ.10,000</p><p>* உணவு மற்றும் இதர செலவுகள்: ரூ.15,000</p><p>* மொத்த செலவு: ரூ.2,85,000</p><p>இந்தியாவில் போனின் விலையான ரூ.2,99,900 உடன் ஒப்பிடும்போது, பாங்காக்கிற்குச் சென்று 2 நாட்கள் சுற்றுலா முடித்துத் திரும்பினாலும் ரூ.14,900 வரை சேமிக்க முடியும்.</p><p>அமெரிக்காவில் இதன் ஆரம்ப விலை சுமார் ரூ.1.90 லட்சமாக உள்ளது. அதேபோல் ஹாங்காங்கில் ரூ.2.12 லட்சத்திற்கும், துபாயில் ரூ.2.20 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெளிநாடுகளுக்கு அடிக்கடி பயணிக்கும் இந்தியர்கள், தங்களின் பயணத்தின்போதே இத்தகைய விலையுயர்ந்த மின்னணு சாதனங்களை வாங்குவது கூடுதல் நன்மையைத் தரும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>உத்தர பிரதேசத்தில் அரசு மருத்துவர்கள் இனி 70 வயது வரை பணியாற்றலாம் – மாநில அரசின் புதிய முடிவு!</title><link>https://www.maalaimalar.com/news/national/uttar-pradesh-extends-govt-doctors-service-reappointment-allows-practice-up-to-age-70</link><comments>https://www.maalaimalar.com/news/national/uttar-pradesh-extends-govt-doctors-service-reappointment-allows-practice-up-to-age-70#comments</comments><guid isPermaLink="false">5e652059-66b9-4bb2-b958-846b8119a638</guid><pubDate>Thu, 10 Sep 2026 10:06:05 +0000</pubDate><atom:updated>2026-09-10T10:06:05.484Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Uttar Pradesh,உத்தரபிரதேசம்,government doctors,Public Health,Retirement Age Extended,Doctor Shortage</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/uzap5p43/Government-Doctors" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Government Doctors ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/uzap5p43/Government-Doctors?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">உத்தர பிரதேச</a> மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிலவி வரும் மருத்துவர்கள் பற்றாக்குறையைப் போக்குவதற்காக, அரசு மருத்துவர்கள் ஓய்வு பெற்ற பிறகும் 70 வயது வரை பணியாற்றும் வகையில் மறு நியமனம் செய்ய அம்மாநில அரசு அதிரடி முடிவை எடுத்துள்ளது.</p><h2><strong>மருத்துவர்கள் பற்றாக்குறைக்கு தீர்வு</strong></h2><p>இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக உத்தர பிரதேசம் திகழ்கிறது. இங்குள்ள <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88">அரசு மருத்துவமனைகள்</a>, ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் சமுதாய சுகாதார மையங்களுக்கு தினமும் லட்சக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.</p><p>அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கையைக் கையாளுவதற்கும், தகுதியான நிபுணத்துவ மருத்துவர்களின் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கும் இந்த புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.</p><h2><strong>65-லிருந்து 70 ஆக உயர்வு</strong></h2><p>தற்போது நடைமுறையில், உத்தர பிரதேச அரசு மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயது 65 ஆக உள்ளது. புதிய திட்டத்தின்படி, 65 வயதை எட்டி ஓய்வு பெறும் தகுதியான மருத்துவர்கள், தங்களின் விருப்பத்தின் பேரில் மறு நியமனம் மூலம் 70 வயது வரை தங்களது சேவையைத் தொடரலாம் என்று<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81"> மத்திய அரசு</a> கூறியுள்ளது.</p><h2><strong>ஆணை பிறப்பிக்கும் பணிகள் தீவிரம்</strong></h2><p>இதுகுறித்து உத்தர பிரதேச மாநில சுகாதார அமைச்சரும், துணை முதல்வருமான <strong>பிரஜேஷ் பதக்</strong> கூறுகையில், "மாநிலத்தின் அரசு சுகாதாரக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தவும், மூத்த மற்றும் நிபுணத்துவ மருத்துவர்களின் மருத்துவ அனுபவத்தை ஏழை எளிய நோயாளிகளுக்கு முழுமையாகக் கொண்டு சேர்க்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. </p><p>இதற்கான அரசாணையை வெளியிடும் பணிகளைச் சுகாதாரத் துறை தற்போது தீவிரமாகத் தொடங்கியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.</p><p>இந்த மறு நியமன முறையின் மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற அரசு மருத்துவமனைகளில் மூத்த மருத்துவர்களின் வழிகாட்டுதல்களும், தடையற்ற மருத்துவச் சேவைகளும் பொதுமக்களுக்குத் துரிதமாகக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>இளையராஜாவின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் - டெல்லி உயர் நீதிமன்றத்தில் ‘சரிகம’ நிறுவனம் மனுத்தாக்கல்!</title><link>https://www.maalaimalar.com/news/topnews/saregama-files-petition-in-delhi-high-court-seeking-attachment-of-ilaiyaraajas-assets</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/saregama-files-petition-in-delhi-high-court-seeking-attachment-of-ilaiyaraajas-assets#comments</comments><guid isPermaLink="false">386c3f8a-2af8-46d0-af94-4fec884296d7</guid><pubDate>Thu, 10 Sep 2026 09:55:27 +0000</pubDate><atom:updated>2026-09-10T09:55:27.946Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இளையராஜா,Delhi HC,டெல்லி உயர் நீதிமன்றம்,ilaiyaraaja,Saregama,சரிகம</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/04u2n8ox/New-Project-2026-09-10T152211.436.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இளையராஜாவின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் - டெல்லி உயர் நீதிமன்றத்தில் ‘சரிகம’ நிறுவனம் மனுத்தாக்கல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/04u2n8ox/New-Project-2026-09-10T152211.436.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><content:encoded><![CDATA[ <p>இசைஞானி <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/why-work-with-young-directors-ilaiyaraaja-emotional-answer-to-karthik-subbaraj">இளையராஜா</a>வுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி,‘சரிகம’ நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. </p><p>நீதிமன்றம் விதித்த பதிப்புரிமை இடைக்காலத் தடையை மீறி, இளையராஜா பாடல்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகக் கூறி இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.</p><h2>சொத்துகளை பறிமுதல் செய்க...</h2><p>அந்த மனுவில், விதிமீறலில் ஈடுபட்டதற்காக இளையராஜாவை சிவில் சிறையில் அடைக்கவும், அவரது அசையும் மற்றும் அசையா சொத்துகளை பறிமுதல் செய்யவும் சரிகம நிறுவனம் கோரியுள்ளது. </p><p>மேலும், பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை விற்பனை செய்து, அதன் மூலம் கிடைக்கும் தொகையை சரிகம நிறுவனத்திடம் ஒப்படைக்க அதிகாரி ஒருவரை நியமிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.</p><h2>நீதிமன்ற தடை உத்தரவு என்ன?</h2><p>இளையராஜா இசையமைத்த 134 திரைப்படங்களின் பாடல்களுக்கு உரிமை கொண்டாடவோ, அவற்றைப் பயன்படுத்தவோ அல்லது பிறருக்கு உரிமம் வழங்கவோ கூடாது என பிப்ரவரி 13 அன்று டெல்லி உயர் நீதிமன்றம் ஒரு இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்திருந்தது. </p><p>இந்த இடைக்கால உத்தரவை ரத்து செய்யக்கோரி இளையராஜா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து, ஜூலை 1 அன்றும் அந்த உத்தரவை உறுதி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p>திரைப்படத் தயாரிப்பாளர்களிடமிருந்து அந்தப் பாடல்களின் முறையான பதிப்புரிமையைப் பெற்றுள்ளதாக ‘சரிகம’ தரப்பில் வாதிடப்பட்டது. </p><h2>வழக்கின் பின்னணி</h2><p>இந்தத் தடையையும் மீறி, அமேசான் மியூசிக், ஐடியூன்ஸ், ஜியோசாவன் மற்றும் ஸ்பாட்டிஃபை, யூடியூப் போன்ற தளங்களில் இளையராஜா தரப்பு பட்டியல்களின் கீழ் அந்தப் பாடல்கள் தொடர்ந்து கிடைக்கப் பெற்று வருகின்றன என்று சரிகம குற்றம் சாட்டியுள்ளது.</p><h2>நீதிமன்றத்தின் தற்போதைய நடவடிக்கை</h2><p>இந்நிலையில் இன்று சரிகம நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், சரிகம நிறுவனத்தின் புகாருக்கு பதிலளிக்குமாறு இளையராஜாவிற்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டு, வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தவெக அரசும் ஆதரிக்கிறதா?- கூடுதல் கொள்ளை தான் மாற்றமா?- அன்புமணி கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-question-tn-govt-for-omni-bus-fare-issue</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-question-tn-govt-for-omni-bus-fare-issue#comments</comments><guid isPermaLink="false">0eb3c820-4ea6-4297-9b32-3a345f827d2f</guid><pubDate>Thu, 10 Sep 2026 09:45:00 +0000</pubDate><atom:updated>2026-09-10T09:45:00.327Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,Omni Bus,ஆம்னி பேருந்து,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/77zw122a/anbumani.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்- ஆம்னி பேருந்து]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்- ஆம்னி பேருந்து]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/77zw122a/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழக அரசு இனியாவது விழித்துக் கொண்டு தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையையொட்டி சென்னையிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல திட்டமிட்டிருக்கும் நிலையில், அதைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் ஆம்னி பேருந்துகள் வரலாறு காணாத கட்டணக் கொள்ளையில்  ஈடுப்பட்டிருக்கின்றன. அதைத் தடுக்க வேண்டிய கடமையையும், பொறுப்பையும் கொண்ட தமிழக அரசு, இந்தக் கட்டணக் கொள்ளைக்கு எதிராக இதுவரை பெயரளவில் கூட எச்சரிக்கை விடுக்காதது கண்டிக்கத்தக்கது.</p><h2><strong>சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டம்</strong></h2><p>தமிழ்நாட்டில் வரும் 14-ஆம் தேதி விநாயகர்  சதுர்த்தி கொண்டாடப்படவுள்ளதையொட்டி அரசு விடுமுறை  விடப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய இரு நாள்களான சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் 3 நாள்கள் தொடர் விடுமுறையைக் கொண்டாடும் வகையில், வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வாழும் மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.  இதைப் பயன்படுத்திக் கொண்டு நாளை செப்டம்பர் 11-ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு சென்னையில் இருந்து புறப்படும் ஆம்னி பேருந்துகளில் திருச்சிக்கு ரூ.3,999 வரையிலும்,  மதுரைக்கு ரூ.4000 வரையிலும்,  கோவைக்கு ரூ.6154  வரையிலும் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.</p><p>வரும் 14-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னைக்கு  திரும்ப திருச்சியிலிருந்து ரூ.4499, மதுரையிலிருந்து ரூ.4899, கோவையிலிருந்து ரூ.4799 வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சென்னையிலிருந்து 300 கி.மீ.க்கும் குறைந்த தொலைவில் உள்ள கும்பகோணத்திற்கு செல்ல ரூ.3179 வரையிலும், அங்கிருந்து சென்னை திரும்ப ரூ.3419 வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  இந்த கட்டண விகிதத்தில் 4 பேர் கொண்ட குடும்பம் திருச்சிக்கு சென்று வர வேண்டும் என்றால் பேருந்துக்காக  ரூ.34 ஆயிரம் வரை செலவழிக்க வேண்டும். இது சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பும் மக்களில் 90 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை விட  அதிக தொகையாகும்.  வரலாறு காணாத கட்டணக் கொள்ளைக்கு எடுத்துக்காட்டு இது தான்.</p><p>இந்தக் கட்டணக் கொள்ளையை தனியார் ஆம்னி பேருந்துகள் ரகசியமாகக் கூட செய்யவில்லை.  இந்தக் கட்டண விவரங்கள் ஆன்லைன் முன்பதிவு இணைய தளங்களில்  வெளியிடப்பட்டு முன்பதிவுகள் செய்யப்பட்டு வருகின்றன. அனைத்து ஊடகங்களிலும் இந்தக்கட்டணக் கொள்ளை தொடர்பாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனாலும் இந்தக் கட்டணக் கொள்ளையைத் தடுக்க தவெக அரசு எதுவும் செய்யவில்லை.</p><p>திமுக ஆட்சியில் இருந்த ஐந்தாண்டுகளிலும் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் கொள்ளை கொடிகட்டி பறந்தது. இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியும், பிற கட்சிகளும் கண்டனம் தெரிவிக்கும் போது, பெயரளவுக்காகவாவது கட்டணக் கொள்ளையை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதைப் போல  திமுக அரசு  காட்டிக் கொண்டது.  ஆனால், தவெக அரசு அதையும்  செய்யவில்லை. மாறாக, திமுக ஆட்சியில்  தனியார் ஆம்னி பேருந்துகளில் வசூலிக்கப்பட்டதை விட 20% முதல் 50% வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  இது தான் தவெக ஆட்சியில்  ஏற்பட்ட மாற்றமா?</p><p>தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை  ஆட்சியாளர்கள் தடுக்க வேண்டும்; அதற்காக கட்டண நிர்ணயக் குழுவை அமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பல முறை ஆணையிட்டிருக்கிறது. ஆனால், கடந்த காலங்களில் அந்த ஆணைகள் மதிக்கப்படவில்லை. ஆனால், தூய சக்தி என்று கூறிக் கொள்ளும் தவெக ஆட்சியிலும் அதே நிலை  தொடர்வது கவலையளிக்கிறது.  தமிழக அரசு இனியாவது விழித்துக் கொண்டு தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு முன்பாக வரலாற்று ஒப்பந்தம்: இந்தியாவில் 105 பயணிகள் விமானங்களை விற்பனை செய்ய ரஷியா திட்டம்!</title><link>https://www.maalaimalar.com/news/world/historic-deal-before-brics-summit-russia-plans-to-sell-105-passenger-planes-in-india</link><comments>https://www.maalaimalar.com/news/world/historic-deal-before-brics-summit-russia-plans-to-sell-105-passenger-planes-in-india#comments</comments><guid isPermaLink="false">fb52dd41-d840-4987-8a8a-0adcd784cd26</guid><pubDate>Thu, 10 Sep 2026 09:36:23 +0000</pubDate><atom:updated>2026-09-10T09:36:23.415Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,Russia,BRICS Summit,பிரிக்ஸ் உச்சிமாநாடு,ரஷியா,Pinnacle Air</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/sn550g7p/air.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pinnacle Air]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/sn550g7p/air.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களை இணைக்கும் பிராந்திய வான்வழிப் போக்குவரத்து மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. </p><p>வரவிருக்கும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு முன்னோடியாக டெல்லியில் நடைபெற்று வரும் Innoprom.India தொழில்முறை கண்காட்சியில் ரஷியாவின் யுனைடெட் ஏர்கிராப்ட் கார்ப்பரேஷன் நிறுவனம், இந்திய விமான நிறுவனங்களுடன் சுமார் 105 பிராந்திய பயணிகள் விமானங்களை வழங்குவதற்கான முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. இது இரு நாடுகளுக்கு இடையேயான சிவில் விமானப் போக்குவரத்து உறவில் ஒரு பெரிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.  </p><h2>இந்திய விமா<strong>ன நிறுவனங்களின்</strong> பங்களிப்பு</h2><p>இந்த பிரம்மாண்ட ஒப்பந்தத்தின் கீழ் ரஷியாவின் IL-114-300 ரக டர்போப்ராப் பயணிகள் விமானங்கள் இந்திய சந்தைக்கு வரவுள்ளன. இதன்படி பினாகள் ஏர் நிறுவனம் 50 விமானங்களையும், ஏர் கேரளா நிறுவனம் 20 விமானங்கள் வரையிலும் வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன. மேலும் <a href="https://www.maalaimalar.com/news/world/trump-promises-5000-per-person-to-the-public-if-they-vote-for-the-republican-party-in-the-midterm-elections">Sleek Aviation </a>நிறுவனத்துடன் 35 விமானங்களை வழங்குவதற்கும், அந்த நிறுவனத்தின் தளத்தில் முழுமையான விமான சிமுலேட்டர் பயிற்சியகத்தை அமைப்பதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.  </p><h2>உள்நாட்டி<strong>லேயே தயாரிக்</strong>கும் முயற்சி</h2><p>பிராந்திய விமானங்களை நேரடியாக வழங்குவதோடு மட்டுமல்லாமல், ரஷியாவின் SJ-100 ரக 100 இருக்கைகள் கொண்ட பயணிகள் விமானங்களை இந்தியாவில் உரிமம் பெற்று தயாரிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளும் தீவிரமடைந்துள்ளன. இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான ஹெச்.ஏ.எல் (Hindustan Aeronautics Limited) நிறுவனத்துடன் இணைந்து இந்த விமானங்களின் பாகங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பது மற்றும் பராமரிப்புச் சேவைகளை வழங்குவது குறித்த பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.  </p><h2>மேக் இன் இந்<strong>தியா திட்ட</strong>த்திற்கு ஊக்கம்</h2><p>இந்தியாவில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களை இணைக்கும் பிராந்திய வான்வழிப் போக்குவரத்து மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. அதற்கு ஏற்ற வகையில் 64 முதல் 70 இருக்கைகள் கொண்ட IL-114-300 விமானங்கள் குறைந்த செலவில் இயக்கக்கூடியவையாக இருக்கும். மேலும் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின்கீழ் விமானப் பராமரிப்பு மற்றும் பாகங்கள் தயாரிக்கும் வசதிகள் இந்தியாவில் அமைவது உள்ளூர் வேலைவாய்ப்புகளையும் விண்வெளித் துறைத் திறன்களையும் மேம்படுத்தும்.  </p> ]]></content:encoded></item><item><title>துலீப் டிராபி: 13 ஆண்டுக்கு பிறகு சாம்பியன் பட்டம் வென்றது கிழக்கு மண்டலம்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/east-zone-clinches-the-duleep-trophy</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/east-zone-clinches-the-duleep-trophy#comments</comments><guid isPermaLink="false">c8d273a8-267a-4b55-b585-704eb2ea3263</guid><pubDate>Thu, 10 Sep 2026 09:32:00 +0000</pubDate><atom:updated>2026-09-10T09:32:00.989Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Ishan Kishan,இஷான் கிஷன்,திலக் வர்மா,Tilak Varma,துலீப் டிராபி,Duleep Trophy,East Zone,கிழக்கு மண்டலம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/x7edthl6/kishan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ishan kishan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/x7edthl6/kishan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>துலீப் டிராபி தொடரில் 13 ஆண்டுக்கு பிறகு கிழக்கு மண்டல அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.</strong></em></p><p>துலீப் டிராபி இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை தொடங்கியது. இதில் கிழக்கு மண்டலம், தெற்கு மண்டலம் அணிகள் மோதின. டாஸ் வென்ற கிழக்கு மண்டலம் அணி பேட்டிங் தேர்வு செய்தது.</p><h2>இஷான் கிஷான் இரட்டை சதம்</h2><p>அதன்படி, முதலில் பேட் செய்த கிழக்கு மண்டலம் அணி முதல் இன்னிங்சில் 708 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. கேப்டன் இஷான் கிஷன் பொறுப்புடன் ஆடி இரட்டை சதம் கடந்தார். அவர் 270 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். குமார் குஷாக்ரா சதமடித்து 101 ரன்னில் வெளியேறினார்.</p><p>தெற்கு மண்டல அணி சார்பில் திரிபுரன விஜய் 4 விக்கெட்டும், சமா மிலிந்த், ஷ்ரேயாஸ் கோபால் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p>அடுத்து ஆடிய தெற்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தேவ்தத் படிக்கல் அரை சதம் கடந்து 62 ரன்னில் அவுட்டானார்.</p><h2>சதத்தை தவறவிட்ட திலக் வர்மா</h2><p>கேப்டன் திலக் வர்மா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 99 ரன்னில் வெளியேறினார்.</p><p>இறுதியில், தெற்கு மண்டலம் அணி முதல் இன்னிங்சில் 336 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கிழக்கு மண்டல அணியை விட 372 ரன்கள் பின்தங்கியது தெற்கு மண்டல அணி.</p><p>கிழக்கு மண்டல அணி சார்பில் முகேஷ் குமார் 3 விக்கெட்டும், ஷமி, குரேஷி, ஷிகர் மோகன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.</p><p>இதையடுத்து, கிழக்கு மண்டல அணி 2வது இன்னிங்சில் களமிறங்கியது. 13 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து கிழக்கு மண்டல அணி தடுமாறியது.</p><h2>இஷான் கிஷன் 80</h2><p>இஷான் கிஷன், ஷிகர் மோகன் ஜோடி பொறுப்புடன் ஆடியது. ஷிகர் மோகன் அரை சதம் கடந்து 52 ரன்னில் ஆட்டமிழந்தார். 3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 126 ரன்கள் சேர்த்தது. இஷான் கிஷன் 80 ரன்னில் அவுட்டானார். 6வது விக்கெட்டுக்கு குமார் குஷாக்ரா-குரேஷி ஜோடி 52 ரன்கள் சேர்த்தது.</p><h2>சதமடித்த குரேஷி</h2><p>இந்நிலையில், ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. குஷாக்ரா 46 ரன்னில் அவுட்டானார். குரேஷி பொறுப்புடன் ஆடி சதம் கடந்தார். அவருக்கு அன்குல் ராய் ஒத்துழைப்பு கொடுத்து அரை சதம் கடந்தார். அவர் 64 ரன்னில் வெளியேறினார்.</p><p>7-வது விக்கெட்டுக்கு குஷாக்ரா - அன்குல் ராய் ஜோடி 150 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.</p><p>இறுதியில், கிழக்கு மண்டல அணி 2வது இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 388 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. குரேஷி 116 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதனால் ஆட்டம் சமனில் முடிந்தது.</p><p>இதன்மூலம் முதல் இன்னிங்சில் லீட் பெற்ற கிழக்கு மண்டல அணி 13 ஆண்டுக்கு பிறகு சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.</p><p>ஆட்ட நாயகன் விருது இஷான் கிஷனுக்கும், தொடர் நாயகன் விருது திலக் வர்மாவுக்கும் வழங்கப்பட்டது.</p> ]]></content:encoded></item><item><title>டெல்லியில் லாரியில் இருந்து கீழே விழுந்து வெடித்த ஆக்சிஜன் சிலிண்டர் – ஒருவர் பலி, 4 பேர் படுகாயம்!</title><link>https://www.maalaimalar.com/news/topnews/oxygen-cylinder-explodes-after-fall-from-truck-in-delhi-one-killed-four-injured</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/oxygen-cylinder-explodes-after-fall-from-truck-in-delhi-one-killed-four-injured#comments</comments><guid isPermaLink="false">a372ac2e-b481-442b-b68a-8918e6e8cb5c</guid><pubDate>Thu, 10 Sep 2026 09:28:07 +0000</pubDate><atom:updated>2026-09-10T09:28:07.224Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>cylinder explosion,delhi,Employee dies,டெல்லி,Tragic Incident,ஆக்சிஜன் சிலிண்டர்,Industrial Accident</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/adajb08j/Cylinder-Explosion" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Cylinder Explosion  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/adajb08j/Cylinder-Explosion?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p>தென்கிழக்கு <a href="https://www.maalaimalar.com/topic/delhi">டெல்லியின் </a>ஓக்லா தொழில்பேட்டை பகுதி - 1 இல் உள்ள ஒரு தனியார் வணிகக் குடோனில் ஆக்சிஜன் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது. </p><p>இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார் மற்றும் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.</p><h2>எப்படி நடந்தது?</h2><p>காசியாபாத்திலிருந்து ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு வந்த மினி லாரியிலிருந்து, ஊழியர்கள் சிலிண்டர்களைக் கீழே இறக்கிக் குடோனுக்குள் மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். </p><p>அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு சிலிண்டர் லாரியிலிருந்து நழுவி கீழே விழுந்ததில், அது பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.</p><h2>பாதிப்புகள்</h2><p>இந்த வெடிப்பின் தாக்கத்தால் அருகில் வேலை செய்துகொண்டிருந்த மோஹித் சிங் (35) என்ற ஊழியர் உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.</p><p>படுகாயமடைந்த மற்ற 4 ஊழியர்கள் உடனடியாக மீட்கப்பட்டு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8E%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88">டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்</a> தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>நடவடிக்கை</h2><p>பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாமல் அலட்சியமாக இருந்ததாகக் கூறி, டெல்லி போலீசார் குடோன் உரிமையாளரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>புகார் கொடுத்த மறுநாளே வாலிபர் படுகொலை: இதுதான் சட்டம் - ஒழுங்கை காக்கும் அழகா?- அன்புமணி கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-question-to-tn-govt-for-tiruvottiyur-youth-murder-case</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-question-to-tn-govt-for-tiruvottiyur-youth-murder-case#comments</comments><guid isPermaLink="false">9426f389-e534-4ea7-aab0-93f120494af8</guid><pubDate>Thu, 10 Sep 2026 09:27:05 +0000</pubDate><atom:updated>2026-09-10T09:27:05.153Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,வாலிபர் கொலை,youth murder</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/zjonvev3/Anbumaniramadoss01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/zjonvev3/Anbumaniramadoss01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னையில் இனியும் இத்தகைய கொலைகள் நடக்காத வகையில் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த பிரதீப் ராஜ் என்ற துறைமுக ஒப்பந்த பணியாளர்  அவரது வீட்டிற்கு அருகிலேயே  கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். சென்னையில் இத்தகைய கொலைகள் அதிகரித்து வருவது அச்சமும், கவலையும் அளிக்கிறது. கொல்லப்பட்ட பிரதீப் ராஜின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2><strong>பொய் வழக்கு</strong></h2><p>பிரதீப் இராஜின் பெற்றோர் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் கடன் வாங்கியது தொடர்பாக  இரு தரப்புக்கும் இடையே  பகை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் தரப்பிலிருந்து தமக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக  காவல்துறையில்  பிரதீப் இராஜ் புகார் செய்திருக்கிறார். சில வாரங்களுக்கு முன் இது தொடர்பாக திருவொற்றியூர் காவல் நிலையத்திலும், துணை ஆணையரிடமும் அவர் புகார் அளித்த நிலையில், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையினர், பிரதீப் இராஜையே பொய் வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.</p><p>அதைத் தொடர்ந்து நேற்று முன்நாள் திருவொற்றியூர் காவல் நிலையத்தில்  தமது உயிருக்கு அச்சுறுத்தல் விடப்படுவது குறித்து  பிரதீப் இராஜ் மீண்டும் புகார் செய்துள்ளார். அப்போதும் அதன் மீது நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளர், தமக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக ஊடகங்களிடம் பிரதீப் இராஜ் குற்றஞ்சாட்டியிருந்தார். அதற்கு அடுத்த நாளான நேற்றிரவு பிரதீப் இராஜ் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார்.</p><p>பிரதீப் இராஜ் அளித்த புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்க முடியும். ஆனால்,  நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியவர்களுக்கு ஆதரவாக  பிரதீப் இராஜையே காவல் ஆய்வாளர் மிரட்டியது தான் எதிரிகளுக்கு துணிச்சலைக் கொடுத்துள்ளது.  உயிருக்கு பாதுகாப்பு கேட்பவர்களுக்கு ஆதரவாக இல்லாமல், கொலை மிரட்டல் விடுப்பவர்களுக்கு ஆதரவாக செயல்படுவது தான் காவல்துறையின் கொள்கையா? இந்த  விஷயத்தில் கடமையை செய்யத் தவறிய ஆய்வாளர் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>சென்னையில் கடந்த சில நாள்களுக்கு முன் ஆளும் தவெக நிர்வாகி உள்ளிட்ட இருவர் ஒரே நாளில் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். அந்த பதட்டம் தணியும் முன்பே அடுத்தக் கொலை நிகழ்ந்துள்ளது. இதனால் அச்சமடைந்துள்ள மக்கள், இது தான் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் அழகா?  என வினா எழுப்புகின்றனர்.  சென்னையில்  இனியும் இத்தகைய கொலைகள் நடக்காத வகையில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க அரசும், காவல்துறையும் நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தொழிலதிபர் மர்ம கொலை: சிசிடிவி கண்காணிப்பால் ஆத்திரமடைந்து மருமகளே தீட்டிய சதித்திட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/national/businessman-mystery-murder-daughter-in-law-plot-over-cctv-surveillance</link><comments>https://www.maalaimalar.com/news/national/businessman-mystery-murder-daughter-in-law-plot-over-cctv-surveillance#comments</comments><guid isPermaLink="false">a02b5d3c-cec9-4fe5-8711-e0cde303458d</guid><pubDate>Thu, 10 Sep 2026 09:18:58 +0000</pubDate><atom:updated>2026-09-10T09:18:58.038Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Uttar Pradesh,கான்பூர்,Kanpur,business man murder,உத்தரப் பிரதேச மாநிலம்,தொழிலதிபர் கொலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/m5ux1enj/kill.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Business man Murder  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/m5ux1enj/kill.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாமனாரை கொலை செய்வதற்காகத் தனது வீட்டில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர் ஒருவரையும், மற்றொரு நபரையும் கூலிப்படையாக ஷாலு அமர்த்தியுள்ளார். </p><p>உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் முன்னணி தொழிலதிபரான வினீத் மின்சா பகுதியில் உள்ள தனது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்தத் திடீர் மரணம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.</p><h2>கொ<strong>ள்ளை நாடகம் முறி</strong>யடிப்பு</h2><p><a href="https://www.maalaimalar.com/news/world/controversy-erupts-over-trumps-lavish-gifts-to-white-house-female-aides">தொழிலதிபர் கொலை</a> செய்யப்பட்ட இடத்தில் சோதனை செய்த காவல்துறையினருக்குத் தொடக்கத்தில் இது அடையாளம் தெரியாத நபர்களால் நடந்த கொள்ளைச் சம்பவமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், வீட்டில் இருந்த பணமோ அல்லது விலைமதிப்பற்ற நகைகளோ எதுவும் திருடப்படவில்லை என்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதனால், குடும்பத்திற்குள் ஏற்பட்ட மோதல் அல்லது முன்விரோதம் காரணமாகவே இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை முடுக்கப்பட்டது.</p><h2>சி<strong>சிடிவி கேமரா பதிவு</strong></h2><p>போலீசாரின் தீவிர விசாரணையில், வினீத் மின்சாவின் மருமகள் ஷாலு மின் மீது சந்தேகம் வலுத்தது. விசாரணையில், வீட்டில் வினீத் மின்சா பொருத்தியிருந்த சிசிடிவி கேமராக்கள் மூலம் தன்மீது எப்போதும் தீவிர கண்காணிப்பு செலுத்தப்பட்டு வந்ததும், குடும்பத்தின் நிதி விஷயங்களில் தனக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததும் ஷாலுவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது தெரியவந்தது. இதனால், தன் மாமனாரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.</p><h2>கொ<strong>லை நடக்கும்போதே கொ</strong>ண்டாட்டம்</h2><p>மாமனாரை கொலை செய்வதற்காகத் தனது வீட்டில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர் ஒருவரையும், மற்றொரு நபரையும் கூலிப்படையாக ஷாலு அமர்த்தியுள்ளார். சம்பவத்தன்று அவர்கள் வீட்டிற்குள் புகுந்து வினீத் மின்சாவைக் கொலை செய்தபோது, வெளியில் எந்தச் சந்தேகமும் வராத வகையில் ஷாலு பார்ட்டியில் ஈடுபட்டுக்கொண்டிருந்துள்ளார். கொலை நடந்த பின்னர், ஒன்றும் அறியாதவர் போல் அழுது நாடகமாடியுள்ளார்.</p><h2> சிசிடிவி <strong>ஆதாரங்களால் கைதான மரு</strong>மகள்</h2><p>கொலை நடைபெற்ற இடத்தில் கைப்பற்றப்பட்ட ஆதாரங்கள், தொலைபேசி அழைப்புப் பதிவுகள்  மற்றும் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து காவல்துறையினர் ஆய்வு செய்தனர். இறுதியில், ஷாலுவுக்கும் கூலிப்படைக்கும் இடையேயான தொடர்பை உறுதி செய்த போலீசார், மருமகள் ஷாலுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. கூட்டணிக்கு கம்யூனிஸ்டு கட்சிகளின் ஆதரவு உண்டு - திருமாவளவன் 
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-says-communist-parties-support-tvk-alliance</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-says-communist-parties-support-tvk-alliance#comments</comments><guid isPermaLink="false">55f79639-88a9-4fcd-91b8-c10f1f4670e3</guid><pubDate>Thu, 10 Sep 2026 09:14:15 +0000</pubDate><atom:updated>2026-09-10T09:14:15.875Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,thirumavalavan,திருமாவளவன்,vijay,tvk,MISA,மிசா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/116gjazi/tirumavalavan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Thirumavalavan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/116gjazi/tirumavalavan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-</p><p>இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ் கட்சி ஆகிய 2 கட்சிகளும் கடந்த ஜூலை 1-ந் தேதி நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்திலும் பங்கேற்கவில்லை. ஆனால் த.வெ.கவுக்கு எங்கள் ஆதரவு உண்டு என்ற கருத்தை ஏற்கனவே தெளிவுபட கூறியிருக்கிறார்கள். இப்போதும் அதே நிலைபாட்டில் தான் 2 கட்சிகளும் உள்ளன. த.வெ.க. ஆட்சி 5 ஆண்டு காலம் நீடிப்பதற்கு இடது சாரி கட்சிகளின் ஆதரவு உண்டு. அதில் எந்த தயக்கவும் இல்லை என்ற கருத்தை அவர்கள் உறுதிபட தெரிவித்து இருக்கிறார்கள். </p> <p>தேர்தல் கூட்டணி தொடர்பாக எந்த நிலைப்பாட்டையும் இப்போதைக்கு அவர்கள் எடுக்கவில்லை. </p><p>தேர்தல் நேரத்தில் தொகுதி உடன்பாடு வைத்துக் கொள்வதில் எந்த நெருடலும் இல்லை. அது குறித்து தேர்தல் நேரத்தில் அறிவிப்போம் என்று இரு தரப்பிலும் 2 கட்சிகளின் தலைவர்களும் கூறியிருக்கிறார்கள். எனவே புதிதாக உருவாகி இருக்கிற மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணிக்கு இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி ஆகிய 2 கட்சிகளின் ஆதரவு உண்டு என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/misa-issue-dmk-vs-tvk-it-wing-crash">மிசா</a> ஒடுக்குமுறைக்கு ஆளானவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-releases-video-regarding-misa-atrocities">மு.க.ஸ்டாலின்</a> தனது உடல் மொழி எதேச்சையானது என முதலமைச்சர் விஜய் விளக்கம் அளித்து விட்டார்.</p><p>புதிய தலைமை செயலகம் கட்டுவது தொடர்பாக அந்த பகுதி மக்களின் கருத்துக் களை கேட்டறிந்து இந்த முடிவை நடைமுறைப்படுத்த வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>சூரியின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி - மண்டாடி படத்தை பாராட்டிய சிவகார்த்திகேயன்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/success-born-of-sooris-hard-work-sivakarthikeyan-praises-the-movie-mandela</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/success-born-of-sooris-hard-work-sivakarthikeyan-praises-the-movie-mandela#comments</comments><guid isPermaLink="false">065420bd-9e4f-4e4b-ad0f-985c10fc10b5</guid><pubDate>Thu, 10 Sep 2026 09:06:55 +0000</pubDate><atom:updated>2026-09-10T09:06:55.389Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>sivakarthikeyan,மண்டாடி,Soori,Mandaadi,சிவகார்த்திகேயன்,சூரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/48685dm9/New-Project-2026-09-10T143541.503.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சூரியின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி - மண்டாடி படத்தை பாராட்டிய சிவகார்த்திகேயன்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/48685dm9/New-Project-2026-09-10T143541.503.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இயக்குநர் மதிமாறன் புகழேந்தி மற்றும் நடிகர் சூரி கூட்டணியில் உருவாகி இன்று (செப்.10) திரையரங்குகளில் வெளியாகி கவனம் ஈர்த்துவரும் படம் <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-teaser-for-sooris-mandadi-has-been-released">மண்டாடி</a>. </p><p>படத்தில் சூரியுடன் மஹிமா நம்பியார், நடிகர்கள் சத்யராஜ், சுஹாஷ், ரவீந்திர விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். </p><p>மீனவர்களின் வாழ்க்கை பின்னணியை அடிப்படையாக கொண்டும், அவர்களுக்குள் நடக்கும் படகுப்போட்டியின் அடிப்படையிலும் மண்டாடி திரைக்கதை அமைந்துள்ளது.</p><p>ஆர்.எஸ்.இன்போடைன்மெண்ட் நிறுவனம் தயாரித்து இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். படம் இன்று வெளியான நிலையில் ரசிகர்கள் பலரும் நல்ல விமர்சனத்தை அளித்து வருகின்றனர். </p><p>இந்நிலையில் இப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயனும் பாராட்டியுள்ளார். படம் தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர்.,</p><p>“மண்டாடி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. சூரி அண்ணனின் கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் தளராத அர்ப்பணிப்புக்கு உண்மையான பலன் கிடைத்துள்ளது.</p><p>நல்ல கதை எப்போதும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்! இந்த மாபெரும் வெற்றிக்கு என் அன்பு அண்ணனுக்கும், ஒட்டுமொத்தக் குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் - டெண்டர் வழங்கியதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thaimaman-gold-ring-scheme-case-madras-high-court-dismisses-challenging-gold-ring-contract</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thaimaman-gold-ring-scheme-case-madras-high-court-dismisses-challenging-gold-ring-contract#comments</comments><guid isPermaLink="false">bac3c362-9378-48ab-9259-07f7647f6bf4</guid><pubDate>Thu, 10 Sep 2026 08:59:29 +0000</pubDate><atom:updated>2026-09-10T08:59:29.733Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Madras High Court,சென்னை ஐகோர்ட்,தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்,thaimaman gold ring scheme</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/538ec4k6/highcourt.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Madras High Court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/538ec4k6/highcourt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நகை தரமாக இல்லாவிட்டால் டெண்டரை அதிகாரிகள் ரத்து செய்வார்கள். இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.</p><p>அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராமில் (22 கேரட்) <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thaaimaman-thanga-modhiram-scheme-delay-arun-raj-explanation">தங்க மோதிரம்</a> அளிக்கும் திட்டத்துக்கான டெண்டர் ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.</p><p>இந்த திட்டத்தின் கீழ் 4 லட்சத்து 41 ஆயிரத்து 667 தங்க மோதிரங்களை கொள்முதல் செய்வதற்கான டெண்டரை தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் கோரியுள்ளது.</p> <p>ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்துக்கு வழங்கிய டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னையை சேர்ந்த பொற்கொல்லர் ராஜ் என்பவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%90%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D">சென்னை ஐகோர்ட்டில்</a> வழக்கு தாக்கல் செய்திருந்தார்.</p><p>இந்த வழக்கு தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், 'தங்க மோதிரத்தை செய்து மாநிலம் முழுவதும் உள்ள 107 மையங்களுக்கு ஹால்மார்க் முத்திரையுடன் அனுப்ப வேண்டும் என டெண்டர் விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> <p>ஹால்மார்க் முத்திரை பெறுவதற்கு ஒரு நகைக்கு ரூ.45 கட்டணம் செலுத்த வேண்டியுள்ள சூழலில், 4 லட்சத்து 41 ஆயிரத்து 667 தங்க மோதிரங்களை, ரூ.4,465 ரூபாய்க்கு சப்ளை செய்வதாக ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் கூறியிருப்பது, வணிக ரீதியாக சாத்தியமற்றது. இதை, அனுமதித்தால் அந்த நகைகள் தரமானதாக இருக்காது. மேலும் மருத்துவ சேவைகள் கழகம், மருந்து பொருட்கள் கொள்முதல் செய்வதில்தான் நிபுணத்துவம் பெற்றது. அந்த கழகத்துக்கு தங்கத்தை பற்றி என்ன தெரியும்' என்று வாதிடப்பட்டது.</p> <p>அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'மனுதாரர் திட்டத்தை எதிர்த்தும், டெண்டரை எதிர்த்தும்தான் வழக்கு தொடர முடியுமே தவிர, டெண்டர் வழங்கியதை எதிர்த்து வழக்கு தொடர முடியாது. இதன்மூலம், அரசுக்குதான் லாபம் வரும். ஒருவேளை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் ஏராளமான தங்கம் உள்ளதால் இந்த தொகையை அவர்கள் குறிப்பிட்டிருக்கக்கூடும். நகை தரமாக இல்லாவிட்டால், டெண்டரை அதிகாரிகள் ரத்து செய்வார்கள். இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல' எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.</p><p>இந்த வழக்கில் விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. கூட்டணியின் பெயரில் மட்டும்தான் மதச்சார்பின்மை- தமிழிசை சவுந்தரராஜன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/secularism-only-in-title-tamilisai-soundararajan-criticises-dmk-led-front</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/secularism-only-in-title-tamilisai-soundararajan-criticises-dmk-led-front#comments</comments><guid isPermaLink="false">787662fd-0d26-421c-acaf-362f4847d985</guid><pubDate>Thu, 10 Sep 2026 08:44:30 +0000</pubDate><atom:updated>2026-09-10T08:44:30.320Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,tamizhisai soundararajan,tvk,தமிழிசை சவுந்தரராஜன்,TVK alliance,தவெக கூட்டணி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/wjtz00h9/tamizhisai.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tamilisai soundararajan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/wjtz00h9/tamizhisai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>த.வெ.க. கூட்டணியின் பெயரில் மட்டும்தான் மதச்சார்பின்மை உள்ளதாக முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.</p><p>த.வெ.க. தலைமையில் உருவாகி இருக்கும் புதிய கூட்டணி பற்றி தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டு உள்ள வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>மதச்சார்பற்ற <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF" rel="nofollow">சமூகநீதி</a> வெற்றிக் கூட்டணியில் பெயரில் மட்டுமே மதச் சார்பின்மை, செயல்பாட்டில் முழுக்க குழப்பம். புதுச்சேரி மற்றும் தமிழ் நாட்டிற்கான இடைத் தேர்தலை முன்னிட்டு ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என்று ஒரு கூட்டணியை அறிவித்திருக்கிறார்கள்.</p><p>ஆனால், ஐ.யு.எம்.எல். போன்ற கட்சிகளை கூட்ட ணியில் வைத்துக்கொண்டு, இதை எப்படி ‘மதச்சார்பற்ற கூட்டணி’ என்று அழைக்க முடியும்? மதச்சார்பின்மை என்பது பெயரில் வைத்துக் கொள்ளும் அடையாள மல்ல.</p><p>அனைத்து மதங்களையும் சமமாக அணுகும் கொள்கையாக இருக்க வேண்டும். கொள்கையில் குழப்பம், கூட்டணியில் குழப்பம், பிரதமர் வேட்பாளரில் குழப்பம், மாநில உரிமையில் தோல்வி- ஒட்டுமொத்த மாக இது ஒரு ‘குழப்பமான கூட்டணி’. எனவே, இதை ‘மனிதா பிமானமற்ற, சமூகநீதியற்ற, கொள்கையற்ற குழப்பக் கூட்டணி’ என்றுதான் மக்கள் பார்ப்பார்கள்.</p><p>இவ்வாறு அதில் கூறி உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மிசா விவகாரம்: திமுக Vs தவெக ஐடி விங் மோதல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/misa-issue-dmk-vs-tvk-it-wing-crash</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/misa-issue-dmk-vs-tvk-it-wing-crash#comments</comments><guid isPermaLink="false">2c50ed07-c4c5-4c34-a76e-fed54a2ff48e</guid><pubDate>Thu, 10 Sep 2026 08:41:28 +0000</pubDate><atom:updated>2026-09-10T08:41:28.723Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,தவெக,விஜய்,vijay,tvk,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/xxtsek07/dmk.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்- விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/xxtsek07/dmk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>வரலாற்றில் நிலைத்து நிற்கும் மாபெரும் தியாகத்தை உருவ கேலி செய்த உங்களின் கேடுகெட்ட அற்பத்தனத்தை தமிழ்நாட்டு மக்கள் காரித் துப்புகிறார்கள்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">தி.மு.க.</a> தகவல் தொழில்நுட்ப அணியின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><p>எச்சில் பழம் பொறுக்கும் அணில்கள் கண்ணை மூடிக்கொண்டால், உழைப்பாலும் தியாகத்தாலும் கட்டமைக்கப்பட்ட திமுகவின் வரலாறு இருண்டு போய்விடாது! ஊர் முழுவதும் பொய்யைப் பரப்பும் சாக்கடைக் கூட்டத்தை அம்பலப்படுத்த அரசியல் நாகரிகத்தோடு எங்கள் தலைவர் அளித்த விளக்கம், அந்தத் தற்குறிகளுக்கானது அல்ல; அவர்களின் பொய்யை நம்பி அப்பாவி மக்கள் மீண்டும் ஒருமுறை ஏமாந்து விடக்கூடாது என்பதற்காகத்தான்.</p><p>வரலாறு, தியாகம் என்றால் என்னவென்றே தெரியாமல், சமூக வலைதளங்களில் பொய்யையும் அவதூறையும் வாந்தியெடுக்கும் Abuser பொறுக்கிகள் நடத்தும் கட்சிதான் தவெக என்பதை மறுபடியும் தாங்கள் எடுத்த வாந்தியால் நிரூபித்து இருக்கிறார்கள்.</p><h2><strong>ரத்தம் சிந்திய நிஜம்!</strong></h2><p>மூளையும் மூஞ்சியும் இல்லாமல், தந்தையின் தயவால் சினிமாவில் வளர்ந்து, ஏசி கேரவனுக்குள் பவுடர் பூசி, 'டூப்' வைத்துச் சண்டை போட்ட இந்தத் தற்குறிக்கு, சிறைக் கொட்டடியில் MISA கைதிகள் போலீசாரின் பூட்ஸ் காலால் மிதிபட்டுச் சிந்திய ரத்தத்தின் மதிப்பு எப்படித் தெரியும்?</p><p>பத்திரிகையாளர்களை நேருக்கு நேர் சந்திக்கத் துப்பில்லாமல், சட்டமன்றத்தில் கேட்ட கேள்விக்கான பதிலுரைக்கு மூன்று நாட்கள் மனப்பாடம் செய்து, கேமரா முன்னால் கத்தி, கதறி நடிக்கும் தற்குறிக்கு நிஜ வலிகளின் உணர்வு எப்படிப் புரியும்? மிசா தியாகம் என்பது, சினிமாவில் நடிப்பது போல, பின்னாடி கையை வைத்து தடவிக்கொண்டு பஞ்சு மெத்தையில் உருள்வதல்ல; அது கொள்கை உறுதி மாறாமல், சிறைச்சாலையின் இரும்புக் கம்பிகளுக்கிடையே ரத்தம் சிந்திய நிஜம்!</p><p>Call sheet காப்பியையும், வருமானத்தை மறைத்து வாங்கிய 'IT Raid' காப்பியையும், வசனகர்த்தாக்கள் எழுதிக்கொடுக்கும் Script பேப்பரையும் மட்டுமே பார்த்துப் பழகிய மூளையே! உனக்கு எமர்ஜென்சி காலத்தில் நடந்த மிசா கொடூரங்களை ஆவணப்படுத்திய இஸ்மாயில் கமிஷன் அறிக்கை எனும் வரலாற்று ஆவணத்தைப் படித்துப் புரிந்துகொள்ளும் வக்கு எங்கே இருக்கப் போகிறது?</p><p>முத்தமிழறிஞர் கலைஞர் அணிந்திருந்த 'மஞ்சள் துண்டு', இந்த மாநிலத்தின் சமூகநீதியைக் காத்த சுயமரியாதைக் குறியீடு! ஆனால், இந்த 'டம்மி' முதலமைச்சரின் மேக்கப்பை கலைத்துவிட்டால், உள்ளே மிஞ்சுவது வெற்று அரசியல் சூனியமும், நிர்வாகத் திறமையின்மையும்தான்.</p><p>நீங்கள் விமர்சிக்கும் அந்த 'கட்டுமரம்', இந்தியாவின் பல அரசியல் சுனாமிகளையே நெஞ்சை நிமிர்த்தி எதிர்கொண்டு தமிழ்நாட்டைக் காத்தது மாபெரும் வரலாறு! அதில் ஒன்றுதான் எங்கள் தலைவரும் கழக உடன்பிறப்புகளும் MISA சிறைவாசத்தை எதிர்கொண்ட எமர்ஜென்சி எனும் நெருக்கடி நெருப்பாறு. </p><h2><strong>காகிதக் கப்பல் மூழ்கும்</strong></h2><p>கொள்கை, சித்தாந்தம் எதுவும்  இல்லாமல், தியாகிகளைக் கொச்சைப்படுத்தி அரசியல் செய்ய நினைக்கும் உங்கள் அநாகரிகச் சாக்கடையிலேயே, தவெக எனும் காகிதக் கப்பல் மூழ்கும். </p><p>இதோ அந்த எமர்ஜென்சி காலத்து மிசா சிறைவாசம்  தொடர்பான வராலற்று ஆதாரங்கள். குரைக்கும் விலங்குகளே கவ்விக் கொண்டு ஓடுங்கள்.</p><p>வரலாற்றில் நிலைத்து நிற்கும் மாபெரும் தியாகத்தை உருவ கேலி செய்த உங்களின் கேடுகெட்ட அற்பத்தனத்தை தமிழ்நாட்டு மக்கள் காரித் துப்புகிறார்கள்.</p><p>காரணம், இந்த ஆவணங்களில் உள்ள பதிவுகளை அவர்கள் தங்கள் நெஞ்சில் பதிய வைத்திருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">எச்சில் பழம் பொறுக்கும் அணில்கள் கண்ணை மூடிக்கொண்டால், உழைப்பாலும் தியாகத்தாலும் கட்டமைக்கப்பட்ட திமுகவின் வரலாறு இருண்டு போய்விடாது! ஊர் முழுவதும் பொய்யைப் பரப்பும் சாக்கடைக் கூட்டத்தை அம்பலப்படுத்த அரசியல் நாகரிகத்தோடு எங்கள் தலைவர் அளித்த விளக்கம், அந்தத் தற்குறிகளுக்கானது… <a href="https://t.co/b9ONe1zPvC">pic.twitter.com/b9ONe1zPvC</a></p>&mdash; DMK IT WING (@DMKITwing) <a href="https://x.com/DMKITwing/status/2097949053216846160?ref_src=twsrc%5Etfw">September 10, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>தற்கொலையை தடுக்கும் தேவதையின் குரல்.. நடக்க இயலாத நிலையிலும் பலரின் உயிரைக் காப்பாற்றும் லட்சுமி!</title><link>https://www.maalaimalar.com/news/national/the-voice-of-the-goddess-who-prevents-suicide-lakshmi-saves-the-lives-of-many-even-when-unable-to-walk</link><comments>https://www.maalaimalar.com/news/national/the-voice-of-the-goddess-who-prevents-suicide-lakshmi-saves-the-lives-of-many-even-when-unable-to-walk#comments</comments><guid isPermaLink="false">6137199e-912a-4319-b834-a37733fcec90</guid><pubDate>Thu, 10 Sep 2026 08:34:54 +0000</pubDate><atom:updated>2026-09-10T08:34:54.620Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தற்கொலை,suicide,உலக தற்கொலை தடுப்பு தினம்,World Suicide Prevention Day,தற்கொலை தடுப்பு மையம்,Suicide Prevention Center</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/mfk5mcjd/tn-14.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ லட்சுமி நரசம்மா ]]></media:title><media:description type="html"><![CDATA[ லட்சுமி நரசம்மா ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/mfk5mcjd/tn-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலக தற்கொலை தடுப்பு தினமான இன்று, தற்கொலை தடுப்பு மையத்தில் பணியாற்றும் லட்சுமி நரசம்மா என்ற தேவதை பற்றி காண்போம். </p><p>இன்று (செப்டம்பர் 10)  உலக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/families-being-torn-apart-by-increasing-number-of-suicides-764533">தற்கொலை </a>தடுப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.  </p><p>இத்தினத்தின் கருப்பொருள் "<a href="https://www.maalaimalar.com/news/puducherry/puducherry-ranks-7th-in-suicide-cases-in-india">தற்கொலை </a>பற்றிய கருத்தாக்கத்தை மாற்றுவோம்", "தற்கொலை பற்றிய உரையாடலைத் தொடங்குவோம்" என்பவையாகும். </p><p>உலகளவில், குறிப்பாக இந்தியாவில் நாள்தோறும் பதிவாகும் தற்கொலைகள் எண்ணிக்கை கவலையளிக்கும் வகையில் அதிகரித்து வருகிறது. </p><p>குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள் அழுத்தத்தை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் போக்கு இந்தியாவில் அண்மைக் காலமாக அதிகம் காணப்படுகிறது. </p><p>எனவே தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்ற விழிப்புணர்வு தற்காலத்தில் வேறெதையும் விட மிக மிக அவசியமான ஒன்றாக உருவெடுத்துள்ளது. </p> <h2>தற்கொலைகளின் மூல காரணம்</h2><p>பெரும்பாலான தற்கொலைகள், குறிப்பாக இளைஞர்களின் தற்கொலைகளில் உள்ள பொதுவான விஷயம், அவர்கள் அந்த கணத்தில் தங்களின் பிரச்னையை கேட்பார் யாரும் இல்லை, நாம் உலகில் தனித்து விடப்பட்டுள்ளோம் என்று நினைப்பது தான்.</p><p>அவர்களின் இந்த எண்ணத்தை போக்க, அவர்களின் பிரச்சனையை முன்னறிந்து கேட்பது அவசியம். அவர்களே சில நேரம் யாரிடமாவது பேசினால் மன ஆறுதல் பெறலாம் என நினைப்பதுண்டு. ஆனால் அதற்கான சூழல் வாய்க்காமல் போவதும் தற்கொலைகள் நிகழ காரணம்.</p><h2>குரல்கள்</h2><p>அவ்வாறானவர்களிடம் அவர்களின் பிரச்னையை கேட்டறிந்து ஆறுதல் சொல்ல ஆலோசனை அளிக்க அரசு சார்பிலும், தன்னார்வ நிறுவனங்கள் சார்பிலும் தற்கொலை தடுப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் செயல்படும் உதவி எண்கள் வாயிலாக மன நல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.</p><p>அவ்வாறு தாங்கள் அழைத்துப் பேசும்போது மறுமுனையில் இருந்து ஆறுதலாக பேசுபர்களின் குரல்களை மட்டுமே தற்கொலை எண்ணம் கொண்டவர்கள் கேட்டிருப்பார்கள். </p><p>பின்னொரு கணத்தில் அந்த குரலே தங்களை தங்கள் வாழ்வின் இக்கட்டான கணத்தில் தாங்கள் எடுக்கவிருந்த விபரீத முடிவில் இருந்து காத்திருக்கின்றன என்பதை பலர் உணரலாம்.</p><p>ஆனால் அந்த குரல்கள் யாருடைவை, அவர்கள் எவ்வாறான வாழ்க்கையை வாழ்கின்றனர் என்பது பெரும்பாலும் சிந்திக்கப்படுவதில்லை. ஆனால் முகமறியா அவர்களே பலரின் உயிரைக் காப்பாற்றிய, காப்பாற்றி வரும் தேவதைகள்.</p><p>அப்படியான ஒரு தேவதையே ஐதராபாத்தை சேர்ந்த 55 வயதான லட்சுமி நரசம்மா.</p><p>பலரது வாழ்வை தற்கொலையில் இருந்து காத்துள்ள லட்சுமியின் சொந்த வாழ்க்கையே, வாழ்வின் கஷ்டங்களை எப்படி கடந்து வருவது என்ற படிப்பினையை வழங்குவதாக விளங்குகிறது.</p><h2>லட்சுமி நரசம்மாவின் கதை</h2><p>லட்சுமி நரசம்மா தனது 20வது வயதிலிருந்தே Rheumatoid Arthritis எனும் முடக்குவாத நோயினால் பாதிக்கப்பட்டவர் ஆவார்.</p><p>நோயின் தீவிரத்தால் 10 ஆண்டுகளாக உடல் செயலிழப்பு ஏற்பட்டு நடக்கவும் முடியாத நிலையில் வாழ்ந்து வரும் லட்சுமி நரசம்மா, தங்கள் வாழ்வில் ஒரு குறுகிய புள்ளியில் முடங்கி விபரீத முடிவை எட்டுபவர்களை ஆற்றுப்படுத்தி அவர்களின் வாழ்வை முன்னோக்கி நகர்த்த உதவுகிறார்.</p><p>கடந்த 2024 வரை லட்சமியும் ஒரு வித மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்தபோதோலும் தனது பக்கத்து வீட்டுக்காரர் அளித்த ஊக்கத்தினால் தன்னார்வ ஆலோசகராகப் பயிற்சி பெற்றார்.</p><p>தற்கொலை தடுப்பு உதவி மையமான '1Life' எண்களைத் தொடர்பு கொண்டு மன உளைச்சலில் பேசுபவர்கள் பலருக்கு, மறுமுனையில் தங்களுக்கு ஆறுதல் அளிக்கும் 55 வயதான லட்சுமி நரசம்மா கடந்த 10 ஆண்டுகளாக நடக்கக்கூட முடியாமல் முடங்கியுள்ளார் என்ற உண்மை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.</p> <h2>உயிர் காக்கும் தேவதை</h2><p>"மற்றவர்களின் துன்பங்களைக் கேட்கும்போது என் சொந்த வலி மிகவும் சிறியதாகத் தோன்றுகிறது. பிரச்சனைகளை மட்டுமே சிந்தித்து மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்ளத் துணிகிறார்கள், அந்த எண்ணத்திற்குத் தடை போடுவதே எங்கள் வேலை. எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வு உண்டு." என கூறுகிறார் நரசம்மா.</p><p>கடந்த ஒன்றரை ஆண்டுகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட அழைப்புகளைப் பேசி லட்சுமி நரசம்மா பல உயிர்களை காத்துள்ளார்.</p><p>வேலை கிடைக்காததாலும், காதலித்த பெண்ணை மணக்க குடும்பத்தினர் எதிர்த்ததாலும் மன அழுத்தத்தில் இருந்த இளைஞருக்கு நம்பிக்கையளித்து, தோல்வி என்பது தற்காலிகமானது எனப் புரியவைத்து வாழ்வின் மீதான விருப்பத்தை மீட்டுத் தந்துள்ளார்.</p> <p>தொழில் தோல்வியால் குடும்பத்தாரால் மதிக்கப்படவில்லை என எண்ணி தற்கொலை எண்ணத்திற்குத் தள்ளப்பட்ட நபருக்கு, சிறுகச் சிறுக மீண்டும் ஒரு புதிய வேலையை தொடங்கி வாழ்க்கையை மீட்டெடுக்க வழிகாட்டியுள்ளார்.</p><p>இவ்வாறாக, விவசாயியான கணவர் மற்றும் பிள்ளைகளின் உறுதியான ஆதரவோடு, லட்சுமி நரசம்மா இன்று  நூற்றுக்கணக்கானோருக்கு நம்பிக்கையின் முகவரியாக செயல்பட்டு வருகிறார்.</p>]]></content:encoded></item></channel></rss>