<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 15 Sep 2026 15:16:04 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 15 செப். 2026...
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-15-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-15-september-2026#comments</comments><guid isPermaLink="false">f4009f82-0bcd-4c6f-adcc-cb203382a7f8</guid><pubDate>Tue, 15 Sep 2026 04:08:57 +0000</pubDate><atom:updated>2026-09-15T14:38:23.839Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/xuyvvatv/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live News]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/xuyvvatv/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/upi-charges-to-be-04-for-some-payments-above-rs-2000-free-for-consumers">இனிமேல் UPI வணிக பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்: மத்திய அரசு</a></p><p>* தனி நபர்களுக்கு இடையிலான UPI பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் இல்லை.</p><p>* ரெயில்வே, எரிபொருள் உள்ளிட்ட குறிப்பிட்ட பிரிவுகளில் ரூ. 2,000-க்கு மேல் ரூ.5 கட்டணம். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dharapuram-madurantakam-byelection-left-candidates-official">தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்: இடதுசாரிகளின் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!... </a></p><p>* இடதுசாரி கட்சிகள் அமைச்சரவையில் பங்கேற்காமல் வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகின்றன.</p><p>* தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/districts-in-tamil-nadu-likely-to-receive-rain-until-the-20th">தமிழகத்தில் வருகிற 20-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்...</a></p><p>* ஏனைய வட தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன்  கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். </p><p>* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/the-marriage-that-turned-a-hockey-player-who-played-for-india-into-an-auto-rickshaw-driverand-the-grim-reality-behind-it">இந்தியாவுக்காக விளையாடிய ஹாக்கி வீராங்கனையை ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் ஆக்கிய திருமணமும் கோர எதார்த்தமும்!</a><br><br>*ஆக்ரா, மத்திய பிரதேசம், ஒரிசா என சுற்றிச் சுழன்ற மாலதி, அதுவே தன் வாழ்வின் "பொன்னான நாட்கள்" என விவரிக்கிறார்.</p><p>* எனது எல்லா கனவுகளும் மிக மிக எழுத்தாக நசுக்கப்பட்டு விட்டன. அதை புரிந்துகொள்வதே எனக்கு கடினமாக உள்ளது" என்கிறார் .</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-dharapuram-by-election-dmk-and-tvk-candidates-file-nomination">மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்:  திமுக, தவெக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்</a></p><p>* தவெக வேட்பாளராக களமிறங்கிய விஜய் பெரம்பூர் தொகுதிக்கும் திருச்சி தொகுதிக்கும் கூட புதிதானவர்.</p><p>* முதலமைச்சர் விஜய் 2 கட்டமாக பிரசாரம் செய்ய இருக்கிறார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kolathur-mla-vs-babus-health-stable-hospital">கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவின் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை நிர்வாகம் தகவல்!... </a></p><p>*சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரான வி.எஸ்.பாபுவுக்கு கடந்த 9-ம் தேதி அதிகாலை திடீரென கடுமையான மூச்சுத்திணறல் மற்றும் சுவாசக் கோளாறு ஏற்பட்டது. </p><p>*அவருக்கு தேவையான சுவாச உதவிகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதால், அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பிலேயே வைக்கப்பட்டுள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/drug-trade-using-children-asami-who-hid-in-the-closet-after-seeing-the-police-interesting-caught-by-wifi">சிறுவர்களை வைத்து போதை வியாபாரம்.. அலமாரிக்குள் ஒளிந்த ஆசாமி - இலவச Wifi மூலம் சிக்கிய சுவாரஸ்யம்<br></a></p><p>* கோகைன், ஹெராயின் உள்ளிட்டவற்றை அவர் சப்ளை செய்து வந்துள்ளார்.</p><p>*அவர் இருக்கும் இடத்தில் இலவச பப்ளிக் WIFI உடன் கனெக்ட் ஆகி இருந்துள்ளது.<br><br></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/shocking-video-of-a-car-hitting-a-female-biker-young-man-arrested-for-attempted-murder">பெண் Biker மீது கார் மோதிய பரபரப்பு வீடியோ.. கொலை முயற்சி வழக்கில் இளைஞர் கைது<br></a></p><p>*சக பைக்கர்களுடன் தனது Aprilia RS 457 பைக்கில் சென்றுகொண்டிருந்தார்.</p> <p>*திட்டமிட்ட கொலை வழக்கு பதிவு செய்த குருகிராம் போலீசார் அவரை தேடி வந்தனர்.<br></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-is-meeting-london-based-tamils-this-evening">லண்டன் வாழ் தமிழர்களை இன்று மாலை சந்திக்கிறார் முதலமைச்சர் விஜய்</a></p><p>* தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் விஜய் லண்டன் சென்றுள்ளார்.</p><p>* நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை அவர் தொடங்கி வைத்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/international-democracy-day-2026-democracy-thrives-when-every-voice-is-heard-un-appeal">சர்வதேச ஜனநாயக தினம் 2026: அனைத்து குரல்களும் கேட்கும்போது ஜனநாயகம் சிறக்கும்- ஐ.நா முக்கிய அழைப்பு!... </a></p><p>*சர்வதேச ஜனநாயக தின கொண்டாட்டங்களின் பின்னணியில் பல தசாப்தகால சர்வதேச முயற்சிகள் உள்ளன. </p><p>*தனிநபர்களின் முடிவெடுக்கும் உரிமைகளைப் பாதுகாத்தல், மனித உரிமைகளுக்கு முன்னுரிமை அளித்தல் மற்றும் சமூகத்தில் அனைத்துத் தரப்பு மக்களின் பங்களிப்பை உறுதி செய்வதை இக்கருப்பொருள் வலியுறுத்துகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-high-court-dismisses-election-case-against-minister-sengottaiyan">அமைச்சர் செங்கோட்டையனுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்தது சென்னை ஐகோர்ட்</a></p><p>* தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய மனு மீது அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிமுக வேட்பாளர் பிரபு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.  </p><p>* இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அமைச்சர் செங்கோட்டையன் மனுவை தீர்ப்புக்காக தள்ளிவைத்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-says-it-is-true-there-are-power-cuts-tn">தமிழகத்தில் மின்வெட்டு இருப்பது உண்மைதான் - திருமாவளவன்</a></p><p>* திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் மக்கள் முகம் சுழிக்கும் வகையில் அவதூறாக பேசுவது தவறு.</p><p>* பேருந்துகளுக்கு தவெக கொடி நிறத்தில் வண்ணம் பூசுவது ஏற்புடையதல்ல.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-says-let-us-pledge-to-restore-anna-rule">அண்ணா ஆட்சியை மீண்டும் நிறுவிட உறுதியேற்போம்! - எடப்பாடி பழனிசாமி</a></p><p>* அண்ணாவின் அரசியல் வாழ்வு, தலைமுறைகள் கடந்து வழிகாட்டும் கலங்கரை விளக்கம்.</p><p>* தமிழினத்தின் தன்மானக் குரலான நம் கொடியாகவும் கொள்கையாகவும் என்றும் வீற்றிருக்கும் பேரறிஞர் பெருந்தகை அண்ணா.</p> <p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-oscars-of-television-list-of-winners-at-the-78th-emmy-awards-ceremony">தொலைக்காட்சியின் ஆஸ்கார்.. 78வது எம்மி விருதுகள் விழா வெற்றியாளர்கள் பட்டியல்<br></a><br>*விடோஸ் பே (Widow's Bay) சிறந்த காமெடி சீரீஸ் உட்பட 14 பிரிவுகளில் விருது வென்றுள்ளது.</p><p>*அடுத்ததாக தி பிட் (The Pitt) தொடர் சிறந்த டிராமா சீரீஸ் விருதை வென்றது. <br></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-wishes-national-engineers-day">தேசிய பொறியாளர்கள் தினம்- முதலமைச்சர் விஜய் வாழ்த்து</a></p><p>* பொறியாளர்களின் அறிவாற்றலும் புதுமையான சிந்தனையும் வளமான, வலிமையான, முன்னேற்றம் மிக்க நாட்டினை உருவாக்கத் தொடர்ந்து துணை நிற்கட்டும்! </p><p>* தேசத்தின் உள்கட்டமைப்பை நாளும் செதுக்கிவரும் பொறியியல் வல்லுநர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்! </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-praise-perarignar-anna">அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் பேரறிஞர் அண்ணா- முதலமைச்சர் விஜய்</a></p><p>* முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில், அவரது தொலைநோக்குப் பார்வையையும், மக்கள் சேவையையும் நெஞ்சார நினைவுகூர்ந்து போற்றுகிறேன். </p><p>* சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட அங்கீகாரம் வழங்கி தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/please-help-taliban-arrests-indian-female-vlogger-traveling-alone-in-afghanistan">தயவுசெஞ்சு உதவுங்க.. ஆப்கானிஸ்தானில் தனியாக பயணம் செய்த கேரள பெண் Vlogger-ஐ கைது செய்த தாலிபான்கள்<br></a></p><p>*'பேக்பேக்கர் அருணிமா' என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். </p><p>*ஆப்கானிஸ்தானில் பெண்கள் தனியாகப் பயணம் செய்ய சட்டப்படி அனுமதியில்லை</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/durai-murugan-announced-dmk-mupperum-vizha-adjourn">மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு</a></p><p>* 2026-ம் ஆண்டுக்கான தி.மு.க. முப்பெரும் விழா இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. </p><p>* இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட தி.மு.க. முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/police-case-filed-against-a-rasa-and-sekhar-babu">அவதூறு பேச்சு: ஆ.ராசா, சேகர்பாபு மீது வழக்கு பதிவு</a></p><p>*  சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை தாங்கினார். </p><p>*  தி.மு.க. எம்.பி.ராசா மற்றும் சேகர்பாபு ஆகியோர் முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் நிர்மல்குமார் குறித்து பேசியது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/perarignar-anna-birthday-vairamuthu-tribute">அண்ணாவின் பொன்னடிகளுக்குப் புகழ் வணக்கம் - வைரமுத்து</a></p><p>* நீ செய்த சாதனை புரிய 300 ஆண்டு வாழ்ந்தவனாலும் முடியாது</p><p>* உன் பெயர் சொல்லாமல் அரசாள இயலாது உன் கொள்கை இல்லாமல் அரசியல் கிடையாது</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/today-gold-price-in-chennai-15-9-2026">GOLD PRICE TODAY: தொடர் சரிவில் தங்கம் விலை - எவ்வளவு குறைந்தது தெரியுமா?</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.14,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-perarignar-anna-who-rules-tamil-nadu-yesterday-today-and-forever">பேரறிஞர் அண்ணா தான் அன்றைக்கும் - இன்றைக்கும் - என்றைக்கும் தமிழ்நாட்டை ஆள்கிறார் - உதயநிதி</a></p><p>* பேரறிஞர் அண்ணா எனவும் ஜனநாயக பெருவெளிச்சம் பிறந்த நாள் இன்று!</p><p>* இருமொழி கொள்கையை உறுதி செய்த பேரறிஞர் அண்ணா தான்</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/ai-companies-gather-to-call-for-curbing-the-pace-of-ai-technology-trump-posts-in-a-panic">ஏஐ தொழில்நுட்பத்தின் வேகத்தை கட்டுப்படுத்தனும் - ஒன்றுகூடிய ஏஐ நிறுவனங்கள் - பதறியடித்து டிரம்ப் போட்ட பதிவு</a></p><p>*ஏஐ இல் யார் வெல்கிறார்களோ, அவர்களே உலகை வெல்வார்கள்</p><p>*ஒரு வலுவான, அறிவார்ந்த - High IQ கொண்ட அதிபர் மட்டுமே தேவை, அது அமெரிக்காவிடம் உள்ளது</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/the-curious-case-of-maharashtras-richest-bjp-mla-turning-into-a-beggar-what-happened">மகாராஷ்டிராவின் மிகப் பணக்கார பாஜக எம்எல்ஏ பிச்சைக்கரராக மாறிய வினோதம்.. என்ன ஆனது?</a></p><p>*ஒரு நபர் அவரிடம் ரூ.20 கொடுத்து "போய் சாப்பிடு பாபா" என்று கூறியுள்ளார்.</p><p>*ஒரு ஏழை சமோசா வியாபாரி இன்முகத்துடன் இலவசமாக சமோசா வழங்கியுள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/india-has-decided-to-supply-654-mw-of-electricity-to-flood-affected-nepal-for-18-hours-a-day-until-december">வெள்ளத்தால் பாதித்த நேபாளத்திற்கு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வீதம் டிசம்பர் வரை  654 மெகாவாட் மின்சாரம் வழங்க இந்தியா முடிவு</a></p><p>*2 வாரங்கள் கடந்தும் மீட்பு பணிகள் தொடந்து வருகின்றன. செப்டம்பர்</p><p>*சுமார் 130 டன்னுக்கும் அதிகமான நிவாரணப் பொருட்கள் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளன.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/security-lapse-three-italians-boarded-a-flight-without-immigration-checks-central-ministry-calls-urgent-meeting">பாதுகாப்பு குளறுபடி.. குடிவரவு சோதனையின்றி டெல்லியில்  விமானம் ஏறிச் சென்ற 3 இத்தாலியர்கள் - மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அவசர கூட்டம்</a></p><p>*சோதனைக்கு செல்லாமலேயே அவர்கள் முனிச் விமானத்தில் ஏறிச் சென்றுள்ளனர்.</p> <p>*அவர்களை குடியேற்ற சோதனைக்கு அனுப்பியிருக்க வேண்டும்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/absolutely-not-bihar-raises-the-banner-of-revolt-against-the-implementation-of-the-uniform-civil-code">முடியவே முடியாது.. பொது சிவில் சட்டம் அமலுக்கு பீகாரில் போர்க்கொடி!</a></p><p>*21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார்.</p> <p>*ஷா பேசியிருந்த நிலையில் பீகார் அதற்கு போர்க்கொடி தூக்கியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/technology/techfacts/the-bitter-truth-behind-creating-retro-style-ai-images">ரெட்ரோ ஸ்டைல்‌ ஏஐ படங்களை உருவாக்குவதற்கு பின்னால் இருக்கும் கசப்பான உண்மை!</a></p><p>*ஒரே நபர்‌ ஏராளமான புகைப்படங்களை உருவாக்கி சமூக வலைத்தளங்களில்‌ உலவ விட்டு வருகின்றனர்‌.</p><p>*புகைப்படத்தை உருவாக்குவதற்கான முக்கிய கம்ப்யூட்டிங்‌ செயல்முறை தொடங்குகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/perarignar-anna-birthday-kanimozhi-says-dmk-must-endure-and-serve-the-people-for-many-generations">அண்ணா விதைத்து பெருமரமாக்கிய தி.மு.க. பல தலைமுறைகளுக்கு நின்று பயன் தர வேண்டும்! - கனிமொழி</a></p><p>* ஆதாயத்திற்காக அண்ணாவின் பெயரை உச்சரிப்பவர்கள் அதிகரித்துவிட்டனர்.</p><p>* திராவிடத்தையும், பெரியாரியத்தையும், தமிழறத்தையும் ஆழ்மனதில் ஏந்திப் பயணிப்பவர்கள் அதிகம் வர வேண்டும்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/perarignar-anna-birthday-mk-stalin-tribute">தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ் வணக்கம்! - மு.க.ஸ்டாலின்</a></p><p>* தலைநிமிர்ந்த தமிழர்! தலைநிமிர்ந்த தமிழ்நாடு! </p><p>* தமிழன்னையின் தனயனாகப் பிறந்து தாய்க்குப் பெயரிட்ட மாபெரும் தமிழ்க் கனவு அவர்!</p>]]></content:encoded></item><item><title>நடிகர் விஜய் சேதுபதி மீது வசைபாடுபவர்கள் உடனடியாக நிறுத்தவேண்டும் - சீமான் வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/seeman-condemn-tvk-fans-attack-vijay-sethupathy-in-big-boss</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/seeman-condemn-tvk-fans-attack-vijay-sethupathy-in-big-boss#comments</comments><guid isPermaLink="false">8ebc1f4e-4f69-403d-bdb7-9c5e930851f6</guid><pubDate>Tue, 15 Sep 2026 15:15:12 +0000</pubDate><atom:updated>2026-09-15T15:15:12.014Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Seeman,விஜய் சேதுபதி,Vijay sethupathy,சீமான்,bigg boss 10,பிக்பாஸ் 10</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/p1a2ptdd/seeman.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ seeman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/p1a2ptdd/seeman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>விஜய் சேதுபதியின் கருத்தை தங்கள் மீதான விமர்சனம் என தவறாகப் பொருள்கொண்டு அவரை இழிவுபடுத்துவதை உடனடியாக நிறுத்தவேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.</strong></em></p><p>பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் இரண்டாவது வாரத்தில் சட்டசபையை மையமாகக் கொண்ட நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதற்காக ஜனநாயக அறை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. அதில் ஆளும் அணி ஒரு பிரிவாகவும், எதிர் அணி மற்றொரு பிரிவாகவும் செயல்படுகிறது.</p><p>ஆளும் அணியினர் செய்யும் தவறுகளை எதிர் அணியினர் சுட்டிக்காட்ட வேண்டும். போட்டியின் சுவாரசியத்தைக் கூட்டும் வகையில் நிகழ்ச்சி இவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் போட்டியாளர்களுடன் விஜய் சேதுபதி கலந்துரையாடுவார். நிகழ்ச்சி மற்றும் போட்டியாளர்களிடையே உள்ள நிறை, குறைகளை சுட்டிக்காட்டுவார்.</p><p>ஓடுவது லீடருக்கான தகுதி இல்லை</p><p>தலைமைத்துவம் குறித்து அறிவுரை வழங்கிய விஜய் சேதுபதி, தலைமைப் பண்பு என்றால் என்னவென்று தெரியாமல்... வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்துவிட்டு, பிரச்சனைகளும் பொறுப்புகளும் வரும்போது எதிரணி மேல் பழியைப் போட்டுவிட்டு அங்கிருந்து தெறித்து ஓடுவது தலைவருக்கான தகுதி இல்லை என பேசியிருந்தார்.</p><p>விஜய் சேதுபதி மீது குற்றச்சாட்டு</p><p>தலைமைப் பண்பு குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசிய வீடியோ பலரால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், இவர் முதலமைச்சர் விஜய்யைதான் தாக்கி பேசியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.</p><p>இதைப் பார்த்து கடுப்பான தவெக தொண்டர்கள் விஜய் சேதுபதிக்கு எதிராக சமூக வலைதளங்களில் விமர்சித்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.</p><p>சீமான் அறிக்கை</p><p>இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:</p><p>பிக்பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், அந்நிகழ்ச்சியின் போட்டியாளர்களிடையே நடைபெற்ற விளையாட்டுச் சூழலை முன்வைத்து தலைமைத்துவம், பொறுப்புணர்வு, அதிகாரம் ஆகியவை குறித்து அந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி விஜய் சேதுபதி தெரிவித்த பொதுவான கருத்துகளை, முதலமைச்சர் விஜய்க்கு எதிராகப் பேசியதாகத் தாங்களாகவே பொருள் கற்பித்துக்கொண்டு, தவெகவினர் அவரை மிகக் கடுமையாக விமர்சித்தும் இழிவுபடுத்தியும் வருவது கடும் கண்டனத்திற்குரியது.</p><p>தம்பி விஜய்சேதுபதி யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. எந்த அரசியல் கட்சியையும் கட்டிக்காட்டவில்லை. ஒரு விளையாட்டில் உருவான சூழலை வைத்து தலைமைத்துவம் குறித்த தனது கருத்தைச் சொல்கிறார். அதனை உடனடியாகத் தங்களது தலைவரோடு பொருத்திப் பார்த்து, கருத்து சொன்னவரையே தாக்க முற்படுவது ஏன்? மற்ற எந்த கட்சிக்கும் வராத கோபம் அமைச்சர் தொடங்கி தொண்டர் வரை தவெகவினருக்கு மட்டும் வருவது ஏன்? தலைமைத்துவம் குறித்த பொதுவான ஒரு கருத்தே தங்களை இவ்வளவு கோபப்படுத்துகிறதென்றால், ஜனநாயகத்தில் எழும் நேரடி விமர்சனங்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்? இதுதான் நீங்கள் பேசிவரும் மாற்று அரசியலா? இதுதான் உங்கள் அரசியல் பண்பாடா? இதுதான் உங்கள் ஜனநாயக மாண்பா? இவ்வளவு தான் உங்கள் சகிப்புத்தன்மையா?</p><p>ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் மட்டுமல்ல, கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் கருத்து தெரிவிக்கும் உரிமை உண்டு. அந்தக் கருத்து நமக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அதனை மறுத்துப் பேசலாம், எதிர்வாதம் செய்யலாம். ஆனால், கூட்டமாகச் சென்று தனிநபரை வசைபாடுவதும், மிரட்டுவதும், அவதூறு செய்வதும் ஜனநாயக அரசியல் பண்பல்ல. அரசியலுக்கு வந்த பிறகு பாராட்டுகளை மட்டும் எதிர்பார்க்க முடியாது. விமர்சனங்களையும் கேள்விகளையும் எதிர்கொண்டே ஆகவேண்டும். அதிகாரம் என்பது விமர்சனத்திலிருந்து பாதுகாக்கும் கவசம் அல்ல. விமர்சனங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு.</p><p>எனவே, தம்பி விஜய் சேதுபதியின் பொதுவான கருத்தை, தங்கள் மீதான விமர்சனம் என தவறாகப் பொருள்கொண்டு அவரை இழிவுபடுத்துவதையும், வசைபாடுவதையும், தனிப்பட்ட தாக்குதலுக்கு உள்ளாக்குவதையும் தொடர்புடையவர்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். தனக்குப் பிடித்த கருத்தை மட்டுமே மற்றவர்கள் பேசவேண்டும் என நினைப்பது ஜனநாயகம் அல்ல. தனக்கு எதிரான கருத்தையும் பேச அனுமதித்து, அதற்கு கருத்தால் பதில் சொல்வதுதான் ஜனநாயகம்! ஜனநாயகன் என்று படம் எடுத்தால் மட்டும் போதாது... உண்மையான ஜனநாயகத்தைப் போற்றி அதன் மாண்புகளைக் காக்க வேண்டும். கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளுங்கள்! கேள்விக்குப் பதிலால் எதிர்வினையாற்றுங்கள்! வசையாலும் மிரட்டலாலும் கருத்துரிமையை முடக்க முற்படாதீர்கள் என தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: நெல்லை- மதுரை கூடல் நகர் இடையே சிறப்பு ரெயில்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurai-meenakshi-amman-temple-kumbabishekam-nellai-to-madurai-koodal-nagar-special-train</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurai-meenakshi-amman-temple-kumbabishekam-nellai-to-madurai-koodal-nagar-special-train#comments</comments><guid isPermaLink="false">09d0af11-e48f-46e6-a904-1f609cc6ccd7</guid><pubDate>Tue, 15 Sep 2026 14:52:31 +0000</pubDate><atom:updated>2026-09-15T14:52:31.457Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>special train,சிறப்பு ரெயில்,Madurai Meenakshi Amman temple</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/xqryp6j6/MaduraiTrain0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மதுரை மீனாட்சி அம்மன் கோவில்- சிறப்பு ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/xqryp6j6/MaduraiTrain0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை மறுதினம் நடைபெற இருக்கிறது. நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை காண மதுரை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>பக்தர்கள் வசதிக்காக பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள், ரெயில்கள் இயக்கப்பட இருக்கின்றன. நாளையில் இருந்து மக்கள் குவிய வாய்ப்புள்ளது.</p><p>இந்த நிலையில் நாளை நெல்லையில் இருந்து மதுரை கூடல் நகருக்கும், நாளை மறுதினம் மதுரை கூடல் நகரில் இருந்து நெல்லைக்கும் முன்பதிவில்லா விரைவு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் எனத் தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.</p><h2>நாளை நெல்லையில் இருந்து கூடல் நகர்</h2><p>நெல்லையில் இருந்து நாளை (16-ந்தேதி) மதியம் 1 மணிக்கு புறப்படும் ரெயில் (06001), மதுரைக்கு மாலை 5.35 மணிக்கு வந்து பின்னர் இரவு 6.30 மணிக்கு கூடல் நகர் சென்றடையும்.</p><h2>17-ந்தேதி கூடல் நகரில் இருந்து நெல்லை</h2><p>மறுமார்க்கத்தில் செப்டம்பர் 17-ந்தேதி கூடல் நகரில் இருந்து மதியம் 12.15 மணிக்கு புறப்படும் ரெயில் (06002), மதுரைக்கு மதியம் 12.30 மணிக்கு வந்து மாலை 5.50 மணிக்கு நெல்லை சென்றடையும்.</p><p>சிறப்பு ரெயில் சேரன்மாதேவி, தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர் வழியாக இயக்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>இனிமேல் UPI வணிக பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்: மத்திய அரசு</title><link>https://www.maalaimalar.com/news/national/upi-charges-to-be-04-for-some-payments-above-rs-2000-free-for-consumers</link><comments>https://www.maalaimalar.com/news/national/upi-charges-to-be-04-for-some-payments-above-rs-2000-free-for-consumers#comments</comments><guid isPermaLink="false">39e33159-7226-4dad-86e0-9a3ea303a7dc</guid><pubDate>Tue, 15 Sep 2026 14:25:18 +0000</pubDate><atom:updated>2026-09-15T14:25:18.020Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>UPI,யுபிஐ,மத்திய நிதி அமைச்சகம்,Finance Ministry,digital money transactions,டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/qt2wk10u/UPI.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ UPI]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/qt2wk10u/UPI.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>வர்த்தக ரீதியில் 2000 ரூபாய்க்கு மேல் UPI கட்டணம் செலுத்துபவர்களிடம் 0.4 சதவீதம் வசூலிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.</strong></em></p><p>ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்படும் யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு எந்தக் கட்டணமும் வசூலிக்க வேண்டாம் என வங்கிகள் மற்றும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சேவை வழங்குநர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.</p><h2>உத்தரவு</h2><p>மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:</p><p>ரூ.2,000 வரையிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கும், ரூபே டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் வசூலிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.</p><p>குறிப்பிட்ட முறைகள் மூலம் பணம் செலுத்தும் அல்லது பெறும் ஒரு நபரிடம், எந்தவொரு வங்கியும் அல்லது பணம் செலுத்தும் முறைமை வழங்குநரும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தக் கட்டணத்தையும் வசூலிக்கக் கூடாது என தெரிவித்தது.</p><p>2007ன் பிரிவு 10 ஏவில் திருத்தும் செய்து கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 'வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2026'வின் கீழ் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><h2>ரூ.2000-க்கு மேல் உள்ள பரிவர்த்தனை</h2><p>புதிய விதியின்படி, ரூ. 2,000 வரையிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கும், ரூபே பற்று அட்டைகளைப் பயன்படுத்தி செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படாது.</p><p>இந்நிலையில், வணிக ரீதியில் 2000 ரூபாய்க்கு மேல் UPI கட்டணம் செலுத்துபவர்களிடம் 0.4 சதவீதம் வசூலிக்கப்படும் எனவும், இந்த நடைமுறை அக்டோபர் 15-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.</p><h2>0.4 சதவீதம் கட்டணம்</h2><p>UPI வணிக பரிவர்த்தனைக்கு 0.4 சதவீதம் கட்டணம் மூலம் ரூ. 5000-க்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும். ரூ.75,000-க்கு மேல் UPI பரிவர்த்தனை செய்தால் ரூ.300 கட்டணம் வசூலிக்கப்படும்.</p><p>ரெயில்வே, எரிபொருள் உள்ளிட்ட குறிப்பிட்ட பிரிவுகளில் ரூ. 2,000-க்கு மேல் ரூ.5 கட்டணம் விதிக்கப்படும். </p><p>தனி நபர்களுக்கு இடையிலான UPI பணப் பரிவர்த்தனைகளுக்கு எந்தக் கட்டணமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>டெண்டர் முறைகேடு புகார்: தாம்பரம் மாநகராட்சி ஆணையர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tender-irregulation-issues-tambaram-corporation-commissioner-transfer-to-waiting-list</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tender-irregulation-issues-tambaram-corporation-commissioner-transfer-to-waiting-list#comments</comments><guid isPermaLink="false">4a6d3b4f-3834-4658-8d91-2462f643f3b4</guid><pubDate>Tue, 15 Sep 2026 14:12:00 +0000</pubDate><atom:updated>2026-09-15T14:12:00.033Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டெண்டர் முறைகேடு,தாம்பரம் மாநகராட்சி,arappor iyakkam,அறப்போர் இயக்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/horn77k9/Tambaram001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/horn77k9/Tambaram001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தாம்பரம் மாநகராட்சி சார்பில் இரண்டு திட்டங்களுக்காக வெளியிடப்பட்டிருந்த இரண்டு டெண்டரில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அறப்போர் இயக்கம் புகார் அளித்திருந்தது. பணிகள் முடிவடைந்த பின்னர், டெண்டர் விடப்பட்டது தொடர்பாக ஆதாரத்துடன் வெளியிட்டிருந்தது.</p><p>இது தொடர்பாக தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என வலியுறுத்தி முதலமைச்சர் விஜய், தலைமை செயலாளர் உள்ளிட்டோருக்கு அறப்போர் இயக்கம் புகார் மனுவை அளித்திருந்தது.</p><p>இந்த நிலையில் தாம்பரம் மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பாக பாலசந்தர் ஐ.ஏ.எஸ். காத்திருப்புார் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆவடி மாநகராட்சி ஆணையர் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பொறுப்பை கவனிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>டெண்டர் முறைகேடு புகார் என்ன?</h2><p>தாம்பரம் மாநகராட்சியில் (TCMC) டெண்டர் சட்ட விதியை அப்பட்டமாக மீறி, டெண்டர் கோரப்படும் முன்பே கூட்டுசதி செய்து பணிகளை முடித்து திறப்பு விழா செய்துள்ள மிகப்பெரிய முறைகேட்டை அறப்போர் இயக்கம் தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவோம் என உறுதியளித்து வந்த புதிய TVK அரசின் கீழ், இது போன்ற டெண்டர் முறைகேடுகள் நடைபெறுவது அதிர்ச்சியளிக்கிறது.</p><p>இந்த முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாக இயக்குநர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) இயக்குநர் ஆகியோருக்கு அறப்போர் இயக்கம் விரிவான புகார் மனுவை ஆதாரங்களுடன் இன்று அனுப்பியுள்ளது.</p><h2>முறைகேட்டின் பின்னணி மற்றும் ஆதாரங்கள்:</h2><p>முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு (Contractors) சட்டவிரோதமாக டெண்டர்களை வழங்குவதற்காக, சுமார் ரூ. 45,90,000 மதிப்பிலான இரண்டு பணிகள் டெண்டர் வழங்கும் செயல்முறை முடிவடைவதற்கு முன்பாகவே பணிகள் முடிக்கப்பட்டு தாம்பரம் மாநகராட்சி ஆணையர் திரு. S. பாலச்சந்திரன் IAS மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. D. சரத்குமார் ஆகியோர் இந்த பணிகளைத் திறந்து வைத்து திறப்பு விழா நடத்தியுள்ளனர். </p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/habcfuxx/Tender0001.jpg" /></figure> <p>இந்த சட்டவிரோத ஒதுக்கீட்டை முறைப்படுத்தவும், பணிகளை முன்கூட்டியே முடித்த ஒப்பந்ததாரருக்கு பணப்பட்டுவாடா செய்யவும் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் திரு. S. பாலச்சந்தர் IAS கண்துடைப்பிற்காக போலி டெண்டர்களை http://tntenders.gov.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.</p> <h2>ஒப்பந்தம் 1- பெருங்களத்தூர் பாலம் ரவுண்டானா பணி (டெண்டர் எண்: 2026_DMA_691566_2):</h2><p>இங்கு அசோகத் தூண் அமைத்தல் மற்றும் அழகுபடுத்தும் பணிகளுக்காக ரூ. 27,30,000 மதிப்பிலான டெண்டர் இணையதளத்தில் (TN Tenders portal) ஆகஸ்ட் 6, 2026 அன்று தான் வெளியிடப்பட்டது, இந்த டெண்டர் திறக்கப்பட வேண்டிய தேதி ஆகஸ்ட் 24, 2026 ஆகும். ஆனால், டெண்டர் அறிவிப்பு வெளியாவதற்கு 8 நாட்களுக்கு முன்பாகவே, அதாவது ஜூலை 29, 2026 அன்றே இப்பணி முடிக்கப்பட்டு அமைச்சர் மற்றும் அதிகாரிகளால் திறப்பு விழா செய்யப்பட்டுள்ளது. இதற்கான புகைப்படங்கள் அமைச்சர் மற்றும் தாம்பரம் மாநகராட்சியின் சமூக வலைதளப் பக்கங்களில் அதே நாளில் பதிவேற்றப்பட்டுள்ளன. </p><h2>ஒப்பந்தம் 2 - சிட்லபாக்கம் ரவுண்டானா பணி (டெண்டர் எண்: 2026_DMA_691566_1):</h2><p>தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு சிலை அமைத்தல் மற்றும் அழகுபடுத்தும் பணிகளுக்காக ரூ. 18,60,000 மதிப்பிலான டெண்டரும் ஆகஸ்ட் 6, 2026 அன்று தான் வெளியிடப்பட்டது. இதன் டெண்டர் திறப்பு தேதியும் ஆகஸ்ட் 24, 2026 ஆகும். ஆனால், ஆகஸ்ட் 10, 2026 அன்றே இந்த சிலை திறக்கப்பட்டு, அதற்கான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் அதே நாளில் பகிரப்பட்டுள்ளன. டெண்டர் திறக்கப்படுவதற்கு 14 நாட்களுக்கு முன்பாகவே பணி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது இது அதிகாரிகளுக்கும் ஒப்பந்ததாரருக்கும் இடையேயான சட்டவிரோத கூட்டணியை உறுதி செய்கிறது.</p><h2>அதிகாரிகளின் திட்டமிட்ட இருட்டடிப்பு:</h2><p>இந்த இரண்டு டெண்டர்களுக்கான நிதி ஏலங்கள் (Financial bids) ஆகஸ்ட் 24, 2026 அன்று திறக்கப்பட வேண்டிய நிலையில், இன்று வரை இணையதளத்தில் அவை "To_be_opened" என்ற நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளன. பங்கேற்ற ஒப்பந்ததாரர்கள் மற்றும் வெற்றி பெற்றவர் (L1 Bidder) யார் என்ற விவரங்களை மக்களிடம் இருந்து மறைக்கவே அதிகாரிகள் இவ்வாறு செய்துள்ளனர்.</p><p>மேலும், கடந்த 4 மாதங்களில் தாம்பரம் மாநகராட்சி வெளியிட்ட 565 டெண்டர்களில் 309 டெண்டர்கள் (சுமார் 54.69%) இதே போல இணையதளத்தில் திறக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒரே ஒரு டெண்டர் மட்டுமே இறுதி நிலையை (AOC) அடைந்துள்ளது. இது தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் வெளிப்படைத்தன்மையின்றி, முறையான டெண்டர் நடைமுறைகளை திட்டமிட்டு புறக்கணிப்பதை காட்டுகிறது.</p><h2>அறப்போர் இயக்கத்தின் கோரிக்கைகள்:</h2><p>இது அதிகார துஷ்பிரயோகம், நம்பிக்கை துரோகம் மற்றும் டெண்டர் சட்டங்களை அப்பட்டமாக மீறும் குற்றச் செயலாகும். எனவே, அரசு உடனடியாக பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறப்போர் இயக்கம் வலியுறுத்துகிறது.</p><p>1. உடனடி பணியிடை நீக்கம் (Suspension): தாம்பரம் மாநகராட்சி ஆணையர் S. பாலச்சந்தர் IAS மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள்</p> <p>2.துறை சார்ந்த உயர்மட்ட விசாரணை</p><p>3.DVAC கிரிமினல் வழக்கு.</p><p>4. பணப்பட்டுவாடா தடை (Stop Bill Payment)</p><p>5. ஒப்பந்ததாரரை கருப்புப் பட்டியலில் சேர்த்தல் (Blacklisting)</p><p>6. டெண்டரில் வெளிப்படைத்தன்மை</p>]]></content:encoded></item><item><title>2வது டி20 போட்டி: டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/india-opt-to-bowl-first-against-afghanistan-second-odi</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/india-opt-to-bowl-first-against-afghanistan-second-odi#comments</comments><guid isPermaLink="false">780cb106-6f32-4fa2-8a14-62fdb561687a</guid><pubDate>Tue, 15 Sep 2026 13:41:18 +0000</pubDate><atom:updated>2026-09-15T13:41:18.735Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Shreyas Iyer,ஷ்ரேயஸ் அய்யர்,INDvAFG,இந்தியா ஆப்கானிஸ்தான் தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/w2kcjmhw/bishnoi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ravi bishnoi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/w2kcjmhw/bishnoi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்துள்ளது.</strong></em></p><p>ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. </p><p>டெல்லியில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.</p><p>இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி டெல்லியில் இன்று நடைபெறுகிறது.</p><p>டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.</p><p>காயம் காரணமாக விலகிய வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக ரவி பிஷ்னோய் அணியில் இணைந்துள்ளார்.</p><p>அதன்படி, ஆப்கானிஸ்தான் அணி முதலில் களமிறங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>விண்வெளியில் ஆயுதங்களை குவித்துள்ள அமெரிக்கா..!</title><link>https://www.maalaimalar.com/news/world/us-confirms-it-has-deployed-first-ever-on-orbit-weapon-in-space</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-confirms-it-has-deployed-first-ever-on-orbit-weapon-in-space#comments</comments><guid isPermaLink="false">4e5cf5be-d6f8-4f64-bea1-e99a5311f8b5</guid><pubDate>Tue, 15 Sep 2026 12:41:40 +0000</pubDate><atom:updated>2026-09-15T12:41:40.181Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,USA,விண்வெளி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/8mcxp2ak/Space001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விண்வெளி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/8mcxp2ak/Space001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விண்வெளியில் ஆயுதங்களை நிலை நிறுத்தப்பட்டுள்ளது என்று அமெரிக்க விண்வெளிப் படை (US Space Force) தெரிவித்துள்ளது. முதன்முறையாக இதை அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது.</p><h2>அமெரிக்காவுக்கு அவசியம்</h2><p>விரோதப் போக்குடைய எதிரிகளிடமிருந்து அமெரிக்கப் படைகளைப் பாதுகாக்க விண்வெளிப் பாதையில் நிலைநிறுத்தப்பட்ட (on-orbit) ஆயுதம் அவசியம் என்று அமெரிக்க விமானப்படைச் செயலாளர் ட்ராய் மெய்ங்க் கூறினார். சீனா மற்றும் ரஷியாவிற்கு ஒரு தெளிவான எச்சரிக்கையை விடுக்கும் வகையில் அமெரிக்கா ஆயுதங்களை நிலைநிறுத்தியுள்ளதாக கருதப்படுகிறது.</p><p>மேரிலேண்டில் உள்ள நேஷனல் ஹார்பரில் நடைபெற்ற வருடாந்திர வான், விண்வெளி மற்றும் இணைய மாநாட்டில் இந்த அறிவிப்பை வெளியிட்ட மெய்ங்க், விண்வெளியில் உள்ள அமெரிக்க ஆயுதம் எந்த வகையைச் சேர்ந்தது என்பதைத் தெளிவாகக் குறிப்பிடவில்லை. ஆனால், வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக விண்வெளிக் கட்டுப்பாட்டிற்காக அது பயன்படுத்தப்படும் என்று சூசகமாகத் தெரிவித்தார்.</p><p>ஏவுகணைகள் மற்றும் பிற வான்வழி அச்சுறுத்தல்களிலிருந்து அமெரிக்காவை பாதுகாப்பதற்காக, டிரம்ப் நிர்வாகம் தனது கோல்டன் டோம் ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்புக்கு விண்வெளித் திறன்களை அவசரமாக உருவாக்கி வரும் வேளையில் மெய்ங்கின் இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன.</p><h2>விண்வெளி ஒப்பந்தம்</h2><p>விண்வெளியை ராணுவமயமாக்குவது என்பது விண்வெளிப் பந்தயத்தைப் போலவே பழமையானது. 1957-ல் ஸ்புட்னிக் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்ட உடனேயே, வாஷிங்டனும் மாஸ்கோவும் செயற்கைக்கோள்களுக்கு ஆயுதம் வழங்குவதற்கும் அவற்றை அழிப்பதற்குமான வழிகளை ஆராயத் தொடங்கின.</p><p>ஒரு காலத்தில், விண்வெளியில் உள்ள அணு ஆயுதங்களைப் பற்றியதே மிகப்பெரிய கவலையாக இருந்தது. ஆனால் வல்லரசுகளும் பிற நாடுகளும் 1967-ல் புற விண்வெளி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, சுற்றுப்பாதையில் பேரழிவு ஆயுதங்களைத் தடை செய்தன.</p><p>அப்போதிருந்து அமெரிக்கா, ரஷியா, சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் ராணுவத் தகவல் தொடர்பு, கண்காணிப்பு மற்றும் வழிசெலுத்தலுக்கு முக்கியமாக விளங்கும் போட்டியாளர்களின் செயற்கைக்கோள்களைக் குறிவைக்கும் வழிகள் போன்ற, ஒப்பந்தத்திற்கு அப்பாற்பட்ட திறன்களை உருவாக்க முயற்சித்து வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவில் தயாரிப்பு என போலி விளம்பரம்: பாகிஸ்தான் அழகுசாதன பொருட்களுக்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு எச்சரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/national/fake-made-in-india-ads-india-warns-on-pakistan-cosmetics</link><comments>https://www.maalaimalar.com/news/national/fake-made-in-india-ads-india-warns-on-pakistan-cosmetics#comments</comments><guid isPermaLink="false">db9fc1bb-1f23-4bd7-adfc-a3111f71d4d3</guid><pubDate>Tue, 15 Sep 2026 12:27:04 +0000</pubDate><atom:updated>2026-09-15T12:27:04.482Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Made in India,Pakistani cosmetics,Goree Beauty Cream,Chandni Whitening Cream,மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனம்,கோரி பியூட்டி கிரீம்,சாந்தினி ஒயிட்னிங் கிரீம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/csmztym0/face.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pakistani cosmetics]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/csmztym0/face.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆய்வகச் சோதனையில் அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக அதிக அளவில் ஆபத்தான கன உலோகங்கள் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. </p><p>இணையவழி வர்த்தக தளங்களில் ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்டது’ என கூறி விற்கப்பட்டு வந்த பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு பிரபல அழகுசாதனக் கிரீம்களைப் பொதுமக்கள் வாங்கவோ பயன்படுத்தவோ வேண்டாம் என்று மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் (CDSCO) தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது. இப்பொருட்களில் நச்சுத்தன்மை கொண்ட கன உலோகங்கள் அதிகளவில் இருப்பதும், அவசியமான இறக்குமதி உரிமம் இன்றி சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டதும் சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.</p><h2>ச<strong>ட்டவிரோத இறக்குமதி</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/news/world/again-and-again-oracle-shocks-employees-with-today-is-your-last-day">மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு </a>வெளியிட்டுள்ள பொது சுகாதார அறிவிப்பின்படி, கோரி பியூட்டி கிரீம் மற்றும் சாந்தினி ஒயிட்னிங் கிரீம் ஆகிய இரு தயாரிப்புகளும் தகுதியான அதிகாரிகளிடம் எந்தவொரு இறக்குமதி பதிவுச் சான்றிதழும் பெறாமல் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. .</p><p>மேலும், ஆய்வகச் சோதனையில் அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக அதிக அளவில் ஆபத்தான கன உலோகங்கள் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கிரீம்களைத் தொடர்ந்து பயன்படுத்துவது தோல் நோய்கள் மட்டுமன்றி, உடலில் பல்வேறு தீவிர நச்சு விளைவுகளையும் பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும் என சுகாதாரத் துறை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்</p><p>இந்த இரண்டு அழகுசாதனப் பொருட்களையும் வாடிக்கையாளர்கள் உடனடியாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், ஏற்கனவே வாங்கி வைத்திருப்பவர்கள் அவற்றை தூக்கி எறிய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அதேபோல, வணிக நிறுவனங்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் மின்-வர்த்தக அமைப்புகள் இந்த ஆபத்தான கிரீம்களை விற்கவோ, விநியோகிக்கவோ அல்லது விளம்பரம் செய்யவோ கூடாது என்று CDSCO கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது. </p><p>அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளும் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இத்தகைய பொருட்கள் விற்பனை செய்யப்படாமல் இருப்பதை தீவிரமாகக் கண்காணித்து உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்: இடதுசாரிகளின் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dharapuram-madurantakam-byelection-left-candidates-official</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dharapuram-madurantakam-byelection-left-candidates-official#comments</comments><guid isPermaLink="false">f656b603-d908-4720-b3f8-6be8e772a036</guid><pubDate>Tue, 15 Sep 2026 12:10:03 +0000</pubDate><atom:updated>2026-09-15T12:10:03.307Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,dharapuram,தாராபுரம்,Maduranthakam,மதுராந்தகம்,Left-wing candidates,CPI CPM</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/w7kyavkr/gg.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Left-wing candidates]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/w7kyavkr/gg.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.எம்) சார்பில் சுகந்தி வேட்பாளராகப் போட்டியிடுகிறார். </p><p>தமிழகத்தில் காலியாக உள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் இடதுசாரி கட்சிகளின் வேட்பாளர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.</p><h2><strong>இடதுசாரிகளின் நிலைப்பாடு</strong></h2><p>நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக கூட்டணியில் தேர்தலைச் சந்தித்த காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இடதுசாரிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள், தேர்தலில் பெரும்பான்மை பலம் கிடைக்காமல் தவித்த தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு வழங்கி ஆட்சி அமைக்க உதவின. இதில் மற்ற கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் பங்கு வகித்த நிலையில், இடதுசாரி கட்சிகள் மட்டும் அமைச்சரவையில் பங்கேற்காமல், ஆட்சிக்கு வெளியே இருந்து ஆதரவு அளிக்கும் நிலைப்பாட்டை மேற்கொண்டன. இந்நிலையில், காலியாக உள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிகளுக்கான<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-dharapuram-by-election-dmk-and-tvk-candidates-file-nomination"> இடைத்தேர்தலில்</a> இடதுசாரி கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்திருந்தனர்.</p><h2>தாராபு<strong>ரம் தொகுதி கம்யூனிஸ்ட்</strong> வேட்பாளர்</h2><p>தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ) சார்பில் தாலுகா செயலாளராகப் பணியாற்றி வரும் லட்சுமணன் களமிறக்கப்பட்டுள்ளார். 12-ஆம் வகுப்பு வரை கல்வி பயின்றுள்ள இவர், தொழில்முறையில் கட்டிட கான்ட்ராக்டராகச் செயல்பட்டு வருகிறார். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாகத் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச்செயலாளராகப் பொறுப்பு வகித்து, மக்கள் பணிகளிலும் சமூகப் போராட்டங்களிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்.</p><h2>மதுராந்தகம் தொகுதி மா<strong>ர்க்சிஸ்ட் வேட்பா</strong>ளர்</h2><p>அதேபோல, மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.எம்) சார்பில் சுகந்தி வேட்பாளராகப் போட்டியிடுகிறார். தொகுதியில் உள்ள நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் கோரிக்கைகளுக்காகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வரும் சுகந்தி, இடதுசாரி அமைப்புகளின் மூலம் பல்வேறு களப்போராட்டங்களை முன்னெடுத்துள்ள முதன்மை நிர்வாகியாவார். இடதுசாரி கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை விரைவாக அறிவித்துள்ளதால், இடைத்தேர்தல் பிரசாரம் மற்றும் களப்பணிகள் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் தீவிரமடைந்துள்ளன.</p>]]></content:encoded></item><item><title>பா.ஜ.க. தலைவர்களின் மார்பை பிளந்து பார்த்தாலும்.., டி.கே. சிவக்குமார் ஆவேசம்</title><link>https://www.maalaimalar.com/news/national/karnataka-chief-minister-attacks-if-you-cut-open-the-chests-of-bjp-leaders</link><comments>https://www.maalaimalar.com/news/national/karnataka-chief-minister-attacks-if-you-cut-open-the-chests-of-bjp-leaders#comments</comments><guid isPermaLink="false">6dd94f37-f5c7-4650-9629-13537ad8bc42</guid><pubDate>Tue, 15 Sep 2026 11:47:19 +0000</pubDate><atom:updated>2026-09-15T11:47:19.699Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,Congress,DK Shivakumar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/rr521v5p/DKShivakumar001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DK Shivakumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/rr521v5p/DKShivakumar001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் நேற்று கொண்ாடப்பட்டது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள டி நரசிபுரா டவுன் காவல் நிலை இன்ஸ்பெக்டர், மசூதிக்கு முன் பட்டாசு வெடிக்கக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். விநாயர் சிலை ஊர்வலத்தின்போது, பட்டாசு வெடிக்கக் கூடாது என்பதா? என பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பேராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதாக தெரிகிறது. இந்த நிலையில் பாஜக தலைவர்களுக்கு மாநிலத்தின் நலன்கள் மீது அக்கறை இல்லை என்று கர்நாடக மாநில முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.</p><h2>இது தொடர்பாக டி.கே. சிவக்குமார் கூறியதாவது:-</h2><p>பாஜக தலைவர்களின் மார்பை பிளந்து பார்த்தால், அதில் மாநிலத்தின் நலனைக் காக்கும் அம்சம் எதுவும் இருக்காது. மாநில நலன் சார்ந்த விஷயங்களைப் பற்றி விவாதித்துவிட்டு, அதன்பிறகு அரசியல் செய்யுமாறு அவர்களிடம் கூறினாலும், அவர்களைத் திருத்த முடியாது. நீங்கள் என்ன செய்தாலும், அவர்கள் எல்லாவற்றிலும் குறைதான் காண்பார்கள்.</p><h2>எவ்வித அசம்பாவிதமும் நிகழ்ந்துவிடக் கூடாது</h2><p>காவல்துறையை பற்றிய ஒருவித அச்சமும் இருக்கத்தான் வேண்டும். அந்த காவலர் என்ன தவறு சொன்னார்? எவ்வித அசம்பாவிதமும் நிகழ்ந்துவிடக் கூடாது என்ற நோக்கத்துடன், காவல்துறைக்கே உரிய பாணியில் அவர் ஒரு எச்சரிக்கையைத்தான் விடுத்தார். ஆனால், பாஜக இந்த விவகாரத்தை வீதிக்குக் கொண்டு வந்துவிட்டது.</p><p>எதிர்க்கட்சித் தலைவர் இங்கிருந்து (பெங்களூருவிலிருந்து) அங்கு சென்று, மகாராஜாவையும் (மைசூரு அரச குடும்பத்தின் வாரிசும் பாஜக எம்.பி.யுமான யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜா உடையாரைக் குறிப்பிட்டு) தெருவுக்கு அழைத்து வந்து காவல் நிலையத்திற்கு முன் போராட்டம் நடத்தினார். எதிர்க்கட்சித் தலைவர் ஒரு அரசியலமைப்பு ரீதியான பதவியை வகிக்கிறார். அவரிடமிருந்து கண்ணியமான அணுகுமுறையை நான் எதிர்பார்க்கிறேன்.</p><h2>செய்யக்கூடாத எதையும் செய்யவில்லை</h2><p>அவர் (காவல் ஆய்வாளர்) செய்யக்கூடாத எதையும் செய்யவில்லை. நான் அவர்களைக் கைவிடமாட்டேன். ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றால், நிச்சயமாக நாங்கள் அதை எடுப்போம். சட்டம்- ஒழுங்கைப் பராமரிப்பது யாருடைய பொறுப்பு? அவர்கள் (பாஜக) மக்களைத் தூண்டிவிடுகிறார்கள். அவர்கள் அதை நிறுத்த வேண்டும். எப்படியாவது மாநிலத்தில் அமைதியின்மையை உருவாக்கவே பாஜக விரும்புகிறது.</p><p>மாநிலத்தின் நற்பெயர் நாட்டின் பிம்பத்துடன் தொடர்புடையது என்பதையும், அது இந்தியாவையே பாதிக்கும் என்பதையும் பாஜக தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள பாஜக தலைவர்கள், நாட்டின் மீதான பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலான அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>அரசியல் செய்யுங்கள், போராட்டங்களை நடத்துங்கள். ஆனால் அமைதியின்மையை உருவாக்கவோ அல்லது மாநிலத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தவோ வேண்டாம் என்று பாஜக-விடம் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு டி.கே. சிவக்குமார் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>மகன் படத்தின் ரிலீஸை முன்னிட்டு விலகிய அப்பா படம்:  முதலமைச்சர் விஜயின் &apos;திருப்பாச்சி&apos; ரீ-ரிலீஸ் ஒத்திவைப்பு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/father-film-postponed-for-son-sigma-release</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/father-film-postponed-for-son-sigma-release#comments</comments><guid isPermaLink="false">348a7e13-14df-40da-b14d-3541ad2edeb6</guid><pubDate>Tue, 15 Sep 2026 11:41:13 +0000</pubDate><atom:updated>2026-09-15T11:41:13.098Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>Trisha,jason sanjay,விஜய்,vijay,திரிஷா,ஜேசன் சஞ்சய்,சிக்மா,sigma,Thirupaachi,திருப்பாச்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/203p0ueq/ggs.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Thirupaachi-Sigma  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/203p0ueq/ggs.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அப்பா-மகன் படங்கள் ஒரே நேரத்தில் மோதிக்கொள்வதை தவிர்க்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/topnews/a-leader-is-not-someone-who-bolts-at-the-first-sign-of-trouble-did-vijay-sethupathi-criticize-chief-minister-vijay">முதலமைச்சர் விஜயின்</a> மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் சிக்மா திரைப்படத்தின் திரையரங்க வெளியீட்டை முன்னிட்டு, விஜய் மற்றும் திரிஷா நடித்த சூப்பர் ஹிட் திரைப்படமான 'திருப்பாச்சி'யின் ரீ-ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக அக்டோபர் 1-ஆம் தேதி 'திருப்பாச்சி' திரையரங்குகளில் மீண்டும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விநியோகஸ்தர்களான திருப்பதி ஃபிலிம்ஸ் இந்த புதிய முடிவை அறிவித்துள்ளனர்.</p><h2><strong>மகனின் புதிய முயற்</strong>சி</h2><p>முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் முதல்முறையாக இயக்கியுள்ள 'சிக்மா' திரைப்படம் அக்டோபர் 2-ஆம் தேதி திரைக்கு வருகிறது. புதிய இயக்குநர்களின் படைப்புகளையும், புதிய திரைப்படங்களையும் ஊக்குவிக்கும் நோக்கில் 'திருப்பாச்சி' ரீ-ரிலீஸை தற்காலிகமாக தள்ளி வைப்பதாக விநியோகஸ்தர் தரப்பு தெரிவித்துள்ளது. சமீபத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'ஜனநாயகன்' திரைப்படத்துடன் 'சிக்மா' மோதுவதை் தவிர்க்கவே அப்படத்தின் ரிலீஸ் அக்டோபர் மாதத்திற்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.</p><p>இயக்குநர் பேரரசுவின் அறிமுக இயக்கத்தில் 2005-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது 'திருப்பாச்சி'. விஜய், திரிஷா, பாசமுடன் கூடிய தங்கை பாசம், ஆக்ஷன் மற்றும் கமர்ஷியல் கலவையான திரைக்கதையால் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. தெலுங்கில் 'அன்னவரம்' என்றும், கன்னடத்தின் 'தங்கிகாகி' என்றும் பிற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு மாபெரும் வசூல் சாதனை படைத்தது.</p><h2>திரையரங்கு<strong>களில் மீண்டும்</strong> எதிர்பார்ப்பு</h2><p>வெளிநாடுகளில் திட்டமிட்டபடி அக்டோபர் 2 அன்று ரீ-ரிலீஸ் செய்யப்படும் என செய்திகள் பரவி வந்தாலும், தமிழகத்தில் விரைவில் இதற்கான புதிய அதிகாரப்பூர்வ ரீ-ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்பா-மகன் படங்கள் ஒரே நேரத்தில் மோதிக்கொள்வதைத் தவிர்க்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p>அக்டோபர் 1-ஆம் தேதி ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ மற்றும் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ள ‘பத்தா’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. மேலும், லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் வழங்கும் ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படமும் அன்றைய தினமே திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>ஜிம்பாப்வே உடனான முதல் ஒருநாள் போட்டி: மேட் ரென்ஷா சதத்தால் ஆஸ்திரேலியா 294 ரன் குவிப்பு</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/zimbabwe-need-295-runs-to-win-against-australia-in-first-odi</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/zimbabwe-need-295-runs-to-win-against-australia-in-first-odi#comments</comments><guid isPermaLink="false">b8fa109d-b49f-42e2-ba9f-7d9348134a5c</guid><pubDate>Tue, 15 Sep 2026 11:19:18 +0000</pubDate><atom:updated>2026-09-15T11:19:18.769Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Matt Renshaw,மேட் ரென்ஷா,ZIMvAUS,ஜிம்பாம்பே ஆஸ்திரேலியா தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/1q7e3lod/renhsaw.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ matt renshaw]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/1q7e3lod/renhsaw.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவின் மேட் ரென்ஷா சதமடித்து அசத்தினார்.</strong></em></p><p>ஆஸ்திரேலிய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.</p><p>இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஹராரேயில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங் தேர்வு செய்தது.</p><p>அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் 4 ரன்னிலும், ஜோஷ் இங்லீஸ் 4 ரன்னிலும் அவுட்டாகினர்.</p><h2>கூப்பர் கானலி அரை சதம்</h2><p>2-வது விக்கெட்டுக்கு மிட்செல் மார்ஷ் உடன் கூப்பர் கானலி இணைந்தார். இந்த ஜோடி 50 ரன்கள் சேர்த்த நிலையில் மிட்செல் மார்ஷ் 36 ரன்னில் வெளியேறினார்.</p><p>கூப்பர் கானலி அரை சதம் கடந்து 51 ரன்னில் அவுட்டானார்.</p><p>5-வது விக்கெட்டுக்கு அலெக்ஸ் கேரி - மேட் ரென்ஷா இணைந்தது. இந்த ஜோடி 72 ரன் சேர்த்த நிலையில் அலெக்ஸ் கேரி 27 ரன்னில் ஆட்டமிழ்ந்தார்.</p><p>6வது விக்கெட்டுக்கு மேட் ரென்ஷா- ஆலிவர் பீக் ஜோடி 75 ரன் சேர்த்த நிலையில் ஆலிவர் பீக் 30 ரன்னில் அவுட்டானார்.</p><h2>சதமடித்த மேட் ரென்ஷா</h2><p>மேட் ரென்ஷா பொறுமையுடன் ஆடி சதமடித்து அசத்தினார். ரென்ஷாவுக்கு இது முதல் சதம் என்பது குறிப்பிடத்தக்கது. ரென்ஷா 94 பந்தில் 109 ரன்னில் ஆட்டமிழந்தார்.</p><p>இறுதியில், ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 294 ரன்கள் குவித்தது.</p><h2>நியாமுரி 5 விக்கெட்</h2><p>ஜிம்பாப்வே சார்பில் நியூமென் நியாமுரி 5 விக்கெட்டும், பிராட் இவான்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p>இதையடுத்து, 295 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>தலைமைத்துவம் குறித்த பேச்சு - நடிகர் விஜய் சேதுபதிக்கு த.வெ.க. எம்.எல்.ஏ. சுகுமார் மிரட்டல் விடுப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/remarks-on-leadership-tvk-mla-sukumar-issues-a-threat-to-actor-vijay-sethupathi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/remarks-on-leadership-tvk-mla-sukumar-issues-a-threat-to-actor-vijay-sethupathi#comments</comments><guid isPermaLink="false">5ab700c9-3d68-455a-8f8c-b3c8144c5d9d</guid><pubDate>Tue, 15 Sep 2026 11:14:38 +0000</pubDate><atom:updated>2026-09-15T11:14:38.310Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>நடிகர் விஜய் சேதுபதி,Actor vijay Sethupathi,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,TVK MLA Sukumar,தவெக எம்எல்ஏ சுகுமார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/hmlb0dst/New-Project-2026-09-15T163901.805.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நடிகர் விஜய் சேதுபதிக்கு த.வெ.க. எம்.எல்.ஏ. சுகுமார் மிரட்டல் விடுப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/hmlb0dst/New-Project-2026-09-15T163901.805.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>‘பிக்பாஸ் தமிழ் சீசன் 10’ நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வாரம் சனிக்கிழமை போட்டியாளர்களை சந்தித்த, நிகழ்ச்சியின் தொகுப்பாளர்<a href="https://www.maalaimalar.com/news/topnews/a-leader-is-not-someone-who-bolts-at-the-first-sign-of-trouble-did-vijay-sethupathi-criticize-chief-minister-vijay"> நடிகர் விஜய் சேதுபதி</a>, தலைமைத்துவத்திற்கான பண்புகள் குறித்து விளக்கியிருந்தார்.</p><p>முதலமைச்சர் விஜய்யைத்தான் நடிகர் விஜய் சேதுபதி மறைமுகமாக விமர்சித்திருந்ததாக அவரின் இந்த பேச்சுத் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் பரப்பப்பட்டு பெரும் பேசுபொருளானாது. </p><h2>தொலைக்காட்சி நிர்வாகம் விளக்கம்</h2><p>இந்த விவகாரம் சர்ச்சையாக உருவெடுக்க அவரின் பேச்சு வெறும் நிகழ்ச்சிகானது மட்டுமே என்றும், வெளியே இருக்கும் எந்தவொரு தனிநபர் மற்றும் எந்த அமைப்பையும் குறித்தது இல்லை என தொலைக்காட்சி நிர்வாகம் விளக்கம் அளித்திருந்தது.</p><h2>மிரட்டல்</h2><p>இந்நிலையில் இந்த விவகாரத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி மன்னிப்புக் கோரவேண்டும் என்றும், இல்லையென்றால் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் முற்றுகையிடுவோம் என்றும் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் மிரட்டல் விடுத்துள்ளார்.</p><p>மேலும் விஜய் சேதுபதியின் மார்க்கெட் சரிந்ததாலேயே முதலமைச்சர் விஜய் குறித்து இவ்வாறு பேசியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். </p><h2>அதிமுக ஆதரவு</h2><p>இதனிடையே இந்த விவகாரத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு சட்டரீதியாக துணையாக இருப்போம் என அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் துறையில் டெண்டர் முறைகேடு... அமைச்சர் சரத்குமாருக்கு தொடர்பு - அறப்போர் இயக்கம் புகார்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tender-irregularities-in-the-chief-ministers-department-minister-sarathkumar-linked-arappor-iyakkam-alleges</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tender-irregularities-in-the-chief-ministers-department-minister-sarathkumar-linked-arappor-iyakkam-alleges#comments</comments><guid isPermaLink="false">e18453b3-2364-44a9-86b5-cb1a683fdbf9</guid><pubDate>Tue, 15 Sep 2026 10:50:01 +0000</pubDate><atom:updated>2026-09-15T10:50:01.594Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>டெண்டர் முறைகேடு,Tender Irregularities,arappor iyakkam,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,Minister Sarathkumar,அமைச்சர் சரத்குமார்,அறப்போர் இயக்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/241foeq9/New-Project-2026-09-15T161903.940.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் துறையில் டெண்டர் முறைகேடு... அமைச்சர் சரத்குமாருக்கு தொடர்பு - அறப்போர் இயக்கம் புகார்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/241foeq9/New-Project-2026-09-15T161903.940.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு <a href="https://www.maalaimalar.com/news/topnews/a-leader-is-not-someone-who-bolts-at-the-first-sign-of-trouble-did-vijay-sethupathi-criticize-chief-minister-vijay">முதலமைச்சர் விஜய்</a> வசம் உள்ள நகராட்சி நிர்வாகத் துறையின் கீழ் வரும், தாம்பரம் மாநகராட்சியில் ரூ.45 லட்சத்து, 90 ஆயிரம் மதிப்பிலான டெண்டர்களில் மிகப்பெரிய கூட்டுச் சதி மற்றும் முறைகேடு நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் ஆதாரங்களுடன் குற்றம் சாட்டியுள்ளது.</p><h2>கூட்டுச் சதி குற்றச்சாட்டு </h2><p>பணிகள் ஏற்கனவே முடிக்கப்பட்ட நிலையில், தங்களுக்கு சாதகமான ஒப்பந்ததாரர்களுக்கு பணத்தை ஒதுக்குவதற்காக தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் ஐஏஎஸ் மற்றும் அமைச்சர் சரத்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் முறைகேடாக டெண்டர் நிர்ணயம் செய்து கூட்டுச் சதியில் ஈடுபட்டுள்ளனர் என அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.</p><h2>கோரிக்கை</h2><p>தவெக ஆட்சியில் ஊழலைப்போம் என்று கூறும் முதலமைச்சர் விஜய் , தன் சொந்தத் துறையிலேயே நடந்துள்ள இந்த முறைகேடு குறித்து சம்பந்தப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி மற்றும் அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.</p><h2>புகார்</h2><p>இந்த முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாக இயக்குநர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் ஆகியோருக்கு அறப்போர் இயக்கம் விரிவான புகார் மனுவை ஆதாரங்களுடன் அனுப்பியுள்ளது.</p><h2>2 ஒப்பந்தங்களில் முறைகேடு</h2><p>பெருங்களத்தூர் பாலம் ரவுண்டானா பணி, சிட்லபாக்கம் ரவுண்டானா பணி ஆகிய இரண்டு ஒப்பந்தங்களில் முறைகேடு நடந்துள்ளது. </p><p>பெருங்களத்தூர் பால பணிகளுக்கான டெண்டர் அறிவிப்பு ஆக.6ம் தேதிதான் இணையத்தில் வெளியிடப்பட்டது. ஆனால் ஜூலை.29ம் தேதியே அசோகத் தூணை அமைச்சர் சரத்குமார் திறந்துவைத்தார். இதற்கான திறப்பு விழா வீடியோவையும் அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.</p><p>இரண்டாவது சிட்லபாக்கம் ரவுண்டானாவில் தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு சிலை அமைத்தல் மற்றும் அழகுபடுத்தும் பணிகளுக்காக ரூ. 18,60,000 மதிப்பிலான டெண்டரும் ஆகஸ்ட் 6 அன்று தான் வெளியிடப்பட்டது. </p><p>ஆனால், ஆகஸ்ட் 10ம் தேதியே இந்த சிலை திறக்கப்பட்டு, அதற்கான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் அதே நாளில் பகிரப்பட்டுள்ளன. </p><p>இது அதிகாரிகளுக்கும், ஒப்பந்ததாரருக்கும் இடையேயான சட்டவிரோத கூட்டணியை உறுதி செய்கிறது என அறப்போர் இயக்கம் கூறியுள்ளது.</p><h2>தாம்பரம் மாநகராட்சி டெண்டர்கள்</h2><p>மேலும், கடந்த 4 மாதங்களில் தாம்பரம் மாநகராட்சி வெளியிட்ட 565 டெண்டர்களில் 309 டெண்டர்கள் (சுமார் 54.69%) இதே போல இணையதளத்தில் திறக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.</p><p>ஒரே ஒரு டெண்டர் மட்டுமே இறுதி நிலையை அடைந்துள்ளது. </p><h2>அறப்போர் இயக்கத்தின் கோரிக்கை</h2><p>இத்தகைய ஒப்பந்த முறைகேடுகள் மீது தமிழ்நாடு அரசு எவ்விதத் தயக்கமுமின்றி உடனடியாகவும், கடுமையாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறப்போர் இயக்கம் கோரியுள்ளது. </p><figure><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/Db3J-yyz6b0/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:658px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/Db3J-yyz6b0/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a></div></blockquote>
<script async src="//platform.instagram.com/en_US/embeds.js"></script></figure><p>அமைச்சர் சரத்குமார் சிலைகளை திறந்துவைத்ததற்கான வீடியோக்கள்</p> <figure><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DbYCGUIxiCd/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:658px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DbYCGUIxiCd/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a></div></blockquote>
<script async src="//platform.instagram.com/en_US/embeds.js"></script></figure><figure><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FArappor%2Fposts%2Fpfbid02cjDxZAvbvgo8vRdFyLgV4k6EEtRZ7xbPR5udJ9MkHuRuWNj6h9baXZ7qwEEZwL1vl&show_text=true&width=500" width="500" height="761" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></figure>]]></content:encoded></item><item><title>கடும் சரிவுடன் முடிவடைந்த பங்குச்சந்தை..!</title><link>https://www.maalaimalar.com/news/national/sensex-tanks-777points-to-settle-at-74003</link><comments>https://www.maalaimalar.com/news/national/sensex-tanks-777points-to-settle-at-74003#comments</comments><guid isPermaLink="false">26e70cab-25d8-464c-801c-1934511f34b7</guid><pubDate>Tue, 15 Sep 2026 10:45:18 +0000</pubDate><atom:updated>2026-09-15T10:45:18.054Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>share market,பங்குச் சந்தை,sensex,நிஃப்டி,சென்செக்ஸ்,NSE Nifty 50</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/s2vg5ve3/ShareMarkets0002.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பங்குச் சந்தை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/s2vg5ve3/ShareMarkets0002.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்கா- ஈரான் போர் காரணமாக மும்பை பங்குச் சந்தை குறியீடு சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீடு நிஃப்டி ஆகியவை தொடர் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன.</p><p>கடந்த வெள்ளக்கிழமை மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் 74781.76 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. சனி, ஞாயிறு விடுமுறை. நேற்று விநாயகர் சதுர்த்தி என்பதால் பங்குச் சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.</p><h2>சென்செக்ஸ் 777.94 புள்ளிகள் குறைவு</h2><p>இன்று காலை மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 75,369.63 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. அதன்பின் தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது. இறுதியாக 74,003.82 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இது வெள்ளிக்கிழமை வர்த்தக நிறைவைவிட 777.94 புள்ளிகள் சரிவாகும். 1.04 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. கடந்த 5 வர்த்தக நாட்களில் மட்டும் 1725.92 புள்ளிகள் சரிவை சந்தித்துள்ளன. இது 2.28 சதவீதம் ஆகும்.</p><h2>இந்திய பங்குச் சந்தை நிஃப்டி</h2><p>மும்பை பங்குச் சந்தை போன்று, இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டியும் கடும் சரிவை சந்தித்தது. கடந்த வெள்ளிக்கிழமை நிஃப்டி 23398.10 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று 23576.15 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது, என்றாலு் 279.50 புள்ளிகள் சரிந்து 23,118.60 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இது 1.19 சதவீதம் குறைவாகும். கடந்த 5 நாட்களில் 391.40 புள்ளிகள் சரிவை சந்தித்துள்ளன.</p><h2>சரிவை சந்தித்து பங்குகள்</h2><p>HDFC வங்கி, டாடா ஸ்டீல், இன்போசிஸ், விப்ரோ நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன. பாரத் எலக்ட்ரானிக்ஸ், அதானி பவர், கோடன் மஹிந்திரா வங்கி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், கனரா வங்கி, இந்தியன் ஆயில் கார்பரேசன், ஐசிஐசிஐ வங்கி போன்ற நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்தன.</p>]]></content:encoded></item><item><title>மீண்டும்..மீண்டுமா..?- &apos;இன்றே உங்கள் கடைசி நாள்&apos; என ஊழியர்களுக்கு ‘ஷாக்’ கொடுத்த ஆரக்கிள் நிறுவனம்!</title><link>https://www.maalaimalar.com/news/world/again-and-again-oracle-shocks-employees-with-today-is-your-last-day</link><comments>https://www.maalaimalar.com/news/world/again-and-again-oracle-shocks-employees-with-today-is-your-last-day#comments</comments><guid isPermaLink="false">8fefeed0-11af-4236-8cbd-46a65db711d3</guid><pubDate>Tue, 15 Sep 2026 10:43:50 +0000</pubDate><atom:updated>2026-09-15T10:43:50.216Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>AI,செயற்கை நுண்ணறிவு,Oracle Corporate,Oracle employees,ஆராக்கிள் நிறுவனம்,ஆராக்கிள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/n7e7xwic/oracle.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Oracle Corporate]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/n7e7xwic/oracle.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியா உட்பட பல நாடுகளில் உள்ள ஆரக்கிள் கிளைகளின் ஊழியர்கள் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்படக்கூடும் என அஞ்சப்படுகிறது.</p><p>உலகளவில் பிரபல மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான <a href="https://www.maalaimalar.com/news/world/zelenskyy-says-ukraine-will-pause-strikes-on-russia-if-kremlin-spares-critical-infrastructure">ஆரக்கிள்</a>, தனது ஊழியர்களை மீண்டும் பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. அதிகாலை 6 மணியளவில் நிறுவனத்தின் மேலாண்மை பிரிவில் இருந்து ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட மின்அஞ்சலில், "இன்றே உங்களுடைய கடைசி வேலை நாள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வந்த இந்த திடீர் அறிவிப்பால், பாதிக்கப்பட்ட ஊழியர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மின்அஞ்சல் அனுப்பப்பட்ட சில நிமிடங்களிலேயே அவர்களின் அலுவலக கணினி அணுகல் மற்றும் பிற சேவைகள் உடனடியாக முடக்கப்பட்டன.</p><p>நிறுவன அமைப்பில் கொண்டு வரப்படும் பெரிய மாற்றங்களின் ஒரு பகுதியாகவே இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கும், தரவு மையங்களை விரிவாக்கம் செய்வதற்கும் ஆரக்கிள் நிறுவனம் பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்து வருகிறது. இதனால் அதிகரிக்கும் உட்கட்டமைப்பு செலவுகளை ஈடுகட்டவும், ஏஐ தொழில்நுட்‌ப மாற்றத்திற்கு ஏற்ப நிறுவனத்தை மாற்றியமைக்கவும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதாகக் கூறப்படுகிறது.</p><h2>தொடரும் <strong>ஆட்குறைப்பு</strong> நடவடிக்கை</h2><p>நடப்பு நிதியாண்டில் மட்டும் ஆரக்கிள் நிறுவனம் ஏற்கெனவே சுமார் 21,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் அடுத்தகட்ட ஆட்குறைப்பில் இறங்கியிருப்பது, உலகளாவிய தொழில்நுட்ப சந்தையில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா உட்பட பல நாடுகளில் உள்ள ஆராக்கிள் கிளைகளின் ஊழியர்கள் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்படக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த புதிய சுற்றில் மொத்தம் எத்தனை ஊழியர்கள் பாதிக்கப்பட உள்ளனர் என்ற அதிகாரப்பூர்வ விவரத்தை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.</p>]]></content:encoded></item><item><title>அண்ணா பிறந்தநாளில் ருசிகரம்: நேருக்கு நேர் கைகுலுக்கி, இனிப்பு வழங்கி மகிழ்ந்த தி.மு.க. - அ.தி.மு.க. நிர்வாகிகள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-and-aiadmk-functionaries-shook-hands-and-exchanged-sweets-with-delight</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-and-aiadmk-functionaries-shook-hands-and-exchanged-sweets-with-delight#comments</comments><guid isPermaLink="false">f66ff385-72a0-4684-89cd-4fe1fcb502cc</guid><pubDate>Tue, 15 Sep 2026 10:13:32 +0000</pubDate><atom:updated>2026-09-15T10:13:32.503Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,ADMK,அதிமுக,பேரறிஞர் அண்ணா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/mxh9gjz9/tirupur.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க., அ.தி.மு.க.வினர் ஒருவருக்கொருவர் இனிப்பு ஊட்டி மகிழ்ந்தபோது எடுத்த படம்.]]></media:title><media:description type="html"><![CDATA[ அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க., அ.தி.மு.க.வினர் ஒருவருக்கொருவர் இனிப்பு ஊட்டி மகிழ்ந்தபோது எடுத்த படம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/mxh9gjz9/tirupur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>எப்போதும் எதிரும் புதிருமாக களம் காணும் இரு துருவக் கட்சியினரும், தங்களின் அரசியல் பாகுபாடுகளை மறந்து பொதுவெளியில் இனிப்பு பரிமாறிக் கொண்ட இந்த அரிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சுவாரஸ்யத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.</strong></em></p><p>​<a href="https://www.maalaimalar.com/topic/பேரறிஞர்-அண்ணா">பேரறிஞர் அண்ணாவின்</a> பிறந்தநாளை முன்னிட்டு, திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்டச் செயலாளர் செல்வராஜ் தலைமையில் நிர்வாகிகள்  திருப்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க வந்தனர்.</p><h2><strong>மரியாதை</strong></h2><p>​அதேநேரத்தில், ரெயில் நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் உருவப் படத்திற்கு திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்டச் செயலாளர் வேல்குமார் சாமிநாதன் தலைமையில் தொண்டர்கள் திரண்டு வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.</p><p>இரண்டு நிகழ்ச்சிகளும் ஒரே நேரத்தில், மிக அருகருகே நடந்ததால் திமுக - அதிமுக நிர்வாகிகள் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். இரு கட்சியினரும் போட்டி போட்டுக்கொண்டு அங்கே இருந்த பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தனர்.</p><p>​அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக, அங்கிருந்த தி.மு.க. மற்றும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும்  நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தனர். பின்னர், ‘அரசியல் அப்புறம், அண்ணா பிறந்தநாள் இப்போது’ என்பது போல, நேருக்கு நேர் கை கொடுத்து வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். அதுமட்டுமன்றி, தாங்கள் வைத்திருந்த இனிப்புகளையும் பரஸ்பரம் ஊட்டி மகிழ்ந்தனர்.</p><p>​எப்போதும் எதிரும் புதிருமாக களம் காணும் இரு துருவக் கட்சியினரும், தங்களின் அரசியல் பாகுபாடுகளை மறந்து பொதுவெளியில் இனிப்பு பரிமாறிக் கொண்ட இந்த அரிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சுவாரஸ்யத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>மஞ்சள் பூவாய் மலர்ந்த சமந்தாவின் வளைகாப்பு ஆல்பம்!</title><link>https://www.maalaimalar.com/ampstories/web-stories/samantha-baby-shower-album</link><comments>https://www.maalaimalar.com/ampstories/web-stories/samantha-baby-shower-album#comments</comments><guid isPermaLink="false">6fc2ff04-d79b-44d3-9408-34f4dc3d04ad</guid><pubDate>Tue, 15 Sep 2026 10:03:07 +0000</pubDate><atom:updated>2026-09-15T10:03:07.181Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சமந்தா,Samantha BabyShower,சமந்தா வளைகாப்பு,Samantha RuthPrabhu,சமந்தா வளைகாப்பு புகைப்படங்கள்</media:keywords><media:content height="1080" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/ie6frf8a/Samandha" width="1080"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Samantha]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/ie6frf8a/Samandha?w=280" width="280"></media:thumbnail><category>வெப் ஸ்டோரீஸ் (Web stories)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/1gzg8xic/SamanthaBabyShower" /></figure><p>தாய்மையின் தொடக்கம்!</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/9exe49b7/Untitled-design-2026-09-15T141700.085.png" /></figure><p>வைர வளைகாப்பு!</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/ovj607gi/Untitled-design-2026-09-15T151033.051.png" /></figure><p>வளைகாப்பில் வைரமாய் மின்னும் சமந்தா!</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/irooln3x/Untitled-design-2026-09-15T151004.083.png" /></figure><p>தாய்மை தரும் தனி பேரழகு!</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/s012z58n/Untitled-design-2026-09-15T151102.039.png" /></figure><p>தாய்மை கொண்டாட்டம்!</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/mjyh64wj/Untitled-design-2026-09-15T151122.980.png" /></figure><p>குட்டி தேவதைக்காக காத்திருக்கும் தம்பதி!</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/yikajd6b/Untitled-design-2026-09-15T151211.277.png" /></figure><p>தாய்மையின் தாமரை!</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/w4agy6dh/Untitled-design-2026-09-15T151150.200.png" /></figure><p>பூக்களின் நடுவே பூவாய்!</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/q3n1mlkp/Untitled-design-2026-09-15T151233.107.png" /></figure><p>தாய்மை அழகில் ஜொலிக்கும் சமந்தா!</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/op0syjzq/Untitled-design-2026-09-15T141723.062.png" /></figure><p>மஞ்சள் மலரே!</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் வருகிற 20-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/districts-in-tamil-nadu-likely-to-receive-rain-until-the-20th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/districts-in-tamil-nadu-likely-to-receive-rain-until-the-20th#comments</comments><guid isPermaLink="false">7e37754f-c0f5-4103-a883-0a1725e1980d</guid><pubDate>Tue, 15 Sep 2026 09:57:18 +0000</pubDate><atom:updated>2026-09-15T09:57:18.738Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/9fiwrpk3/rain.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மழை]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/9fiwrpk3/rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.</strong></em> </p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>சுமார் 1.5 கிமீ உயரம் வரை தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><h2><strong>லேசான மழை</strong></h2><p>இன்று நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் திருவண்ணாமலை, திருப்பூர், கரூர், நாமக்கல், மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>நாளை நீலகிரி, கோயம்புத்தூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>நாளை மறுநாள் நீலகிரி, கோயம்புத்தூர், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சேலம், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>18-ந்தேதி நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>19-ந்தேதி நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் ஏனைய வட தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>20 மற்றும் 21-ந்தேதிகளில் நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.</p><p>ஏனைய வட தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தென் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p>நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>இன்று தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>நாளை மற்றும் நாளை மறுநாள் தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு அந்தமான் கடல் பகுதிகள், இதர தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>18-ந்தேதி தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>கூட்டணி கட்சிகளே தயாராக இல்லாத போது..! UCC விவகாரத்தில் அமித் ஷாவுக்கு உமர் அப்துல்லா கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/national/omar-abdullah-if-allies-are-not-ready-how-will-uniform-civil-code-be-implemented</link><comments>https://www.maalaimalar.com/news/national/omar-abdullah-if-allies-are-not-ready-how-will-uniform-civil-code-be-implemented#comments</comments><guid isPermaLink="false">3e51b62a-1f01-434f-8bc2-bef0e9917f3f</guid><pubDate>Tue, 15 Sep 2026 09:41:53 +0000</pubDate><atom:updated>2026-09-15T09:41:53.150Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Amit Shah,அமித் ஷா,omar abdullah,உமர் அப்துல்லா,Uniform Civil Code,பொது சிவில் சட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/8p7mdp9g/AmithshOmarabdhullah.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமித் ஷா- உமர் அப்துல்லா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/8p7mdp9g/AmithshOmarabdhullah.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா, 2029-ம் ஆண்டுக்குக்குள் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆளும் 21 மாநிலங்களில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.</p><p>இதற்கு, பீகாரில் மாநில கூட்டணி கட்சியான நிதிஷ் குமாரின் <a href="https://www.maalaimalar.com/news/national/absolutely-not-bihar-raises-the-banner-of-revolt-against-the-implementation-of-the-uniform-civil-code">ஐக்கிய ஜனதா தளம்</a> கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இது தொடர்பாக மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டால் நாடு முழுவதும் சட்டமாகிவிடும். ஆனால், பாஜக ஆளும் மாநிலங்களில் சட்டசபையில் சட்டம் நிறைவேற்றப்பட்டு அமல்படுத்த பாஜக முயற்சிக்கிறது.</p><p>இந்த நிலையில் இது தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லா கூறியதாவது:-</p><p>இது தொடர்பாக தேசிய மாநாடு (National Conference) கட்சி தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதைச் செய்வது நாடாளுமன்றத்தின் பணி என்று எங்கள் மாநிலங்களவை உறுப்பினர் ஷமி ஓபராய் கூறியுள்ளார். பல்வேறு மாநிலங்கள் மூலமாக இதை ஏன் முன்னெடுக்கிறீர்கள்? என்.டி.ஏ (NDA) கூட்டணியில் உள்ள அனைவரும் இதை ஏற்கவில்லை.</p><h2>பீகாரில் JDU எதிர்ப்பு</h2><p>பீகாரில் இதைச் செயல்படுத்த முடியாது என்று ஜே.டி.யு (JDU) கட்சி திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது. பொது சிவில் சட்டத்தை (UCC) அமல்படுத்த அவர்களது சொந்தக் கூட்டணியினரே தயாராக இல்லாத நிலையில், நாடு முழுவதும் அதைச் செயல்படுத்த வேண்டும் என்று இவர்களால் எப்படிச் சொல்ல முடிகிறது? நாடாளுமன்றத்தில் இவர்களால் இதை நிறைவேற்ற முடியும் என்று நான் கருதவில்லை.</p><p>இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.</p><h2>பொது சிவில் சட்டம்</h2><p>பொது சிவில் சட்டம் (Uniform Civil Code - UCC) என்பது ஒரு நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும், அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், திருமணம், விவாகரத்து, சொத்துரிமை, தத்தெடுத்தல் போன்ற குடும்ப விவகாரங்களுக்கு ஒரே மாதிரியான சட்டங்களை அமல்படுத்துவதைக் குறிக்கிறது.</p><p>பாலின சமத்துவத்தை உறுதி செய்தல் மற்றும் அனைத்து குடிமக்களுக்கும் ஒரே மாதிரியான உரிமைகளை வழங்குதல் இதன் நோக்கமாகும்.</p><h2>எதிர்ப்பு</h2><p>இந்தியாவின் பல கலாச்சாரப் பன்முகத்தன்மை பாதிக்கப்படும் என்றும், சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு இது அச்சுறுத்தலாக அமையும் என்றும் எதிர்க்கப்படுகிறது</p><p>உத்தரகாண்ட் மாநிலத்தில் மட்டும் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வசூல் வேட்டையில் மண்டாடி - 5 நாட்களில் இத்தனை கோடியா?</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/mandadi-on-a-box-office-rampage-such-a-huge-haul-in-just-5-days</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/mandadi-on-a-box-office-rampage-such-a-huge-haul-in-just-5-days#comments</comments><guid isPermaLink="false">8b2424db-c122-4d93-9d8a-7f6e71ca6c78</guid><pubDate>Tue, 15 Sep 2026 09:39:13 +0000</pubDate><atom:updated>2026-09-15T09:39:13.687Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>நடிகர் சூரி,Actor Soori,மண்டாடி,Mandaadi,Mathimaran Pugazhendhi,மதிமாறன் புகழேந்தி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/5zzwtlpd/New-Project-2026-09-15T145330.280.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வசூல் வேட்டையில் மண்டாடி - 5 நாட்களில் இத்தனை கோடியா?]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/5zzwtlpd/New-Project-2026-09-15T145330.280.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இயக்குநர் மதிமாறன் புகழேந்தி எழுத்து மற்றும் இயக்கத்தில் சூரி, மகிமா நம்பியார், சுஹாஸ், சத்யராஜ், பால சரவணன், ரவீந்திர விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து செப்.10ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/blessing-rajinikanth-watched-mandela-and-praised-soori-and-the-film-crew">மண்டாடி</a>. </p><p>மீனவர்கள் வாழ்க்கை சுற்றில் நடைபெறும் படகுப்போட்டியை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைந்துள்ளது.</p><p>ஆர்.எஸ். இன்ஃபோடைன்மெண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். </p><p>இந்நிலையில், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவரும் இப்படம் வெளியான ஐந்து நாட்களில் ரூ.65 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>அமைச்சர் நிர்மல்குமார் மீது உரிமை மீறல் புகார் அளித்த திமுக எம்எல்ஏக்கள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mlas-filed-breach-of-privilege-complaint-against-minister-nirmal-kumar</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mlas-filed-breach-of-privilege-complaint-against-minister-nirmal-kumar#comments</comments><guid isPermaLink="false">4b0bb086-4004-4b60-8840-c52a5e73dc9d</guid><pubDate>Tue, 15 Sep 2026 09:30:51 +0000</pubDate><atom:updated>2026-09-15T09:30:51.731Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,ev velu,எவ வேலு,அமைச்சர் நிர்மல்குமார்,minister nirmal kumar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/x5hjg9xj/dmk1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DMK MLAs]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/x5hjg9xj/dmk1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் இல்லாதவர்கள் குறித்து பேசுவது விதிப்படி தவறு என்று திமுக எம்எல்ஏ எ.வ.வேலு கூறினார்.</p><p>சென்னை தலைமைச்செயலகத்தில் சட்டசபை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-dharapuram-by-election-dmk-and-tvk-candidates-file-nomination">திமுக</a> சட்டமன்ற கொறடா எ.வ.வேலு சந்தித்தார்.</p><p>மிசா தொடர்பான முதலமைச்சர் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தி கொடுத்திருந்த மனுவின் நிலை குறித்து அறிய சட்டமன்ற உறுப்பினர்கள் எம்ஆர்கே பன்னீர்செல்வம், ராஜா, எ.வ.வேலு ஆகியோர் சபாநாயகரை சந்தித்தனர்.</p> <p>அப்போது, சட்டசபை கூட்டத்தொடரில் உண்மைக்கு மாறாக பேசிய சட்டத்துறை <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">அமைச்சர் நிர்மல் குமார்</a> மீது திமுக  சார்பில் சபாநாயகரிடம் உரிமை மீறல் புகார் அளித்தனர்.</p><p>புகார் கடிதம் அளித்த திமுக எம்எல்ஏக்கள் குழு தலைமைச்செயலகம் வெளியே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது,</p> <p>* சட்டசபையில் முன்னாள் முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவரை அவதூறாக பேசினர்.</p><p>* சட்டசபையில் இல்லாதவர்கள் குறித்து பேசுவது விதிப்படி தவறு.</p><p>* மிசா தொடர்பான முதலமைச்சரின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தி முன்னதாக மனு கொடுத்திருக்கிறோம்.</p> <p>* உரிமை மீறல் குழு அமைத்துள்ள நிலையில் ஆய்வு செய்து நடவடிக்கை குறித்த முடிவு எடுப்பார்கள்.</p><p>* தவறான செய்தியை சட்டசபையில் பகிர்ந்து கொண்டது விதிமீறல்.</p><p>* இல்லாதது பொல்லாதவற்றை பேசி திசை திருப்பும் அரசியலில் ஈடுபடுகிறது தவெக அமைச்சரவை.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தல் - த.வெ.க.விடம் ஆதரவுக் கோரியது காங்கிரஸ்!</title><link>https://www.maalaimalar.com/news/topnews/by-election-congress-seeks-support-from-tvk</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/by-election-congress-seeks-support-from-tvk#comments</comments><guid isPermaLink="false">3d4f10f9-1fef-4b9d-b912-6ccd366afeb1</guid><pubDate>Tue, 15 Sep 2026 09:16:36 +0000</pubDate><atom:updated>2026-09-15T09:16:36.353Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,தவெக,by election,tvk,தட்டாஞ்சாவடி,இடைத்தேர்தல்,Thattanchavadi</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/8lc9vqu3/New-Project-2026-09-15T144556.553.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இடைத்தேர்தல் - த.வெ.க.விடம் ஆதரவுக் கோரியது காங்கிரஸ்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/8lc9vqu3/New-Project-2026-09-15T144556.553.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>புதுச்சேரி (Puducherry)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியா முழுவதும் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கும், ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் அக்டோபர் 6ம் தேதி <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/contest-in-thattanchavady-too-ntk-announces-by-election-candidates">இடைத்தேர்தல் </a>அறிவித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம். </p><p>இதில் தமிழ்நாட்டின் மதுராந்தகம், தாராபுரம் மற்றும் புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகள் அடங்கும்.  </p><p>இடைத்தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, தேர்தல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.</p><p>புதுவையிலும் வேட்பாளர்கள் அறிவிப்பு செய்யப்பட்டு, வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.</p><h2>தவெக ஆதரவு</h2><p>இந்நிலையில் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலுக்கு ஆதரவுக்கோரி த.வெ.க.விடம் கடிதம் வழங்கியுள்ளது இந்திய தேசிய காங்கிரஸ். </p><p>தவெக தலைமை அலுவலகத்தில் இன்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான புஸ்ஸி ஆனந்தை சந்தித்து புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் மற்றும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர் கடிதம் வழங்கினர். </p><p>தட்டாஞ்சாவடியில் காங்கிரஸ் சார்பில் விநாயகம் நிறுத்தப்பட்டுள்ளார். முதலமைச்சர் ரங்கசாமி நின்று வெற்றிப் பெற்ற அத்தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் அசோக் ஆனந்த் போட்டியிடுகிறார். </p><p>காங்கிரஸ் ஆதரவுக் கோரியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான தவெக புதுச்சேரியில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>இந்தியாவுக்காக விளையாடிய ஹாக்கி வீராங்கனையை ரிக்ஷா ஓட்டுநர் ஆக்கிய திருமணமும் கோர எதார்த்தமும்!</title><link>https://www.maalaimalar.com/news/national/the-marriage-that-turned-a-hockey-player-who-played-for-india-into-an-auto-rickshaw-driverand-the-grim-reality-behind-it</link><comments>https://www.maalaimalar.com/news/national/the-marriage-that-turned-a-hockey-player-who-played-for-india-into-an-auto-rickshaw-driverand-the-grim-reality-behind-it#comments</comments><guid isPermaLink="false">0f7698c7-a83f-4b71-a6d2-799f0439770c</guid><pubDate>Tue, 15 Sep 2026 08:47:09 +0000</pubDate><atom:updated>2026-09-15T08:47:09.851Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Hockey Player,ஹாக்கி,வீராங்கனை,பெண் ஆட்டோ ஓட்டுநர்,female auto rickshaw driver</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/3xzbyc90/tn-15.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[  மாலதி]]></media:title><media:description type="html"><![CDATA[  மாலதி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/3xzbyc90/tn-15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரப் பிரதேசம் </p><p>தற்போது நடுத்தர வயதில் உள்ள மாலதிக்கு ஒரு காலத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/hockey">ஹாக்கி </a>விளையாட்டு தான் எல்லாமுமாக இருந்தது. தனது 6 வயதில் ஹாக்கி விளையாட தொடங்கிய மாலதி பல மாநிலங்களுக்கு பயணப்பட்டு தன் மாநிலத்தையும், 4 முறை சர்வதேச போட்டிகளில் நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். </p><p>லக்னோவில் உள்ள பனாரசி தாஸ் பொறியியல் கல்லூரியில் பயிற்சியாளராகவும் அவர் பணியாற்றி உள்ளார். </p><p>ஆனால் கடினமான திருமண வாழ்வு, பொருளாதார நெருக்கடி, மகனை வளர்க்க வேண்டிய பொறுப்பு ஆகியவற்றால் இந்த முன்னாள் ஹாக்கி வீராங்கனையின் வாழ்வு அவரை ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநராக்கியது. </p><p>2013 முதல் அவரது வாழ்வில் ஏற்பட்ட இந்த திருப்பம் இன்று வரை ஒருவழிபாதையாக தொடர்கிறது. லக்னோவின் முதல் ரிக்ஷா ஓட்டுநர் என ஊடகங்கள் அவருக்களித்த விளம்பரப் பட்டமே அவரது தற்போதைய அடையாளம். </p><p>15 ஆண்டுகளாக லக்னோவின் சாலைகளில் மாலதியின் ஆட்டோ ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த பொருள் ஆதாரத்தை வைத்து தான் அவருக்கும் வண்டி ஓடுகிறது. </p> <h2>காரணம்?..</h2><p>சரி, இவரை பற்றி இப்போது பேச என்ன காரணம்?.. பேசப்படாததே அவரை பற்றி பேச காரணம். மாலதியை போன்று பல பெண்கள், வீராங்கனைகள் இருக்கின்றனர். இவர் சர்வதேச போட்டிகளில் விளையாடித்தால் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் பல வீராங்கனைகளின் தொடக்கம் மாவட்டங்களோடு முடிந்துவிடுகிறது. மாலதி இண்டர்னேஷனல் செல்லும் வரை கிடையாத சுதந்திரம் இங்கு பல பெண்களுக்கு ஆரம்பக்கத்திலேயே பறிக்கப்பட்டு விடுகிறது.</p><p>ஏன் சுற்றி வளைப்பானேன்.. அண்மையில் சோனாலி சிங் என்ற இன்ஸ்டாகிராம் கன்டென்ட் கிரியேட்டர் நமது மாலதியை பேட்டி கண்டிருக்கிறார். அதில் அவர் பல விஷயங்களை பேசியிருக்கிறார்.</p> <h2>ஹாக்கியால் நிறைந்த சிறு பிராயம்</h2><p>தன் சிறு பிராயமும் அது ஹாக்கியால் நிறைந்திருந்ததை பற்றியும் பேசியும் மாலதி, " நான் 6 வயதிலேயே விளையாட தொடங்கிவிட்டேன். அதுவே நான் ஆழமான ஆர்வம் கொண்ட விளையாட்டாக இருந்தது. மாநில அளவிலான போட்டியில் விளையாடவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது" என்று நினைவுகூர்கிறார்.</p><p>போட்டிகளுக்காக ஆக்ரா, மத்திய பிரதேசம், ஒரிசா என சுற்றிச் சுழன்ற மாலதி, அதுவே தன் வாழ்வின் "பொன்னான நாட்கள்" என விவரிக்கிறார். அவர் எப்போதும் ஆட்டத்தில் சென்ட்ரல் பார்வேர்ட்டில் தான் விளையாடுவாராம்.</p><p>என முதல் தேசிய அளவிலான போட்டி புவனேஷ்வரில் நடந்தது. இரண்டாவது ஆக்ராவில். நான் விளையாடும் அணி மீது மக்கள் பணம் கட்டி பந்தயம் வைப்பார்கள். அது ஒரே நேரத்தில் பயமாகவும் உற்சாகமூட்டுவதாகவும் இருக்கும். ஆனால் எனது எல்லா கனவுகளும் மிக மிக எழுத்தாக நசுக்கப்பட்டு விட்டன. அதை புரிந்துகொள்வதே எனக்கு கடினமாக உள்ளது" என்கிறார் .</p><p>"என் தந்தை நான் விளையாடுவதை ஆதரிக்கவில்லை. எனக்கு அண்ணன்கள் இல்லை. எனவே எனக்கு சீக்கிரம் கல்யாணம் செய்து வைத்தால் நல்லது என்றே அவர் நினைத்தார்" என்று தற்போது நினைவுகூரும் மாலதிக்கு 2000 ஆம் ஆண்டில் அவரின் 20களின் பாதியில் திருமணம் செய்து வைக்கப்பட்டது.</p><h2>திருமணம்</h2><p>"அது மிகவும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை இல்லை. நான் பெரும்பாலான நேரங்களில் துன்புறுத்தப்பட்டேன். ஆனால் நான் செல்ல வேறு இடம் இல்லை. எனவே நான் அங்கேயே இருந்தேன். 2004 இல் எனக்கு மகன் பிறந்தான். அதன் பிறகும் எதுவும் மாறவில்லை. வார்த்தைகளளாலும், உடல் ரீதியாகவும் நான் துன்புறுத்தப்பட்டேன். யாரும் என் மீது இரக்கம் கொண்டு உதவ வரவில்லை.</p><p>என் மகன் பிறந்த 1 மாதத்தில் நான் என் கணவர் வீட்டை விட்டு வெளியேறிவிட்டேன். என் மகனும் நான் அனுபவிக்கும் கொடுமைகளை அனுபவிக்க வேண்டாம் என்று எண்ணினேன்" என்கிறார். </p><p>தன் பெற்றோர் வீட்டுக்கு திரும்பிய மாலதிக்கு இப்போது தன்னையும் தன் குழந்தையையும் காப்பாற்ற ஒரு வேலை தேவையாக இருந்தது.</p><p>தன் பெயரின் பின்னால் இருக்கும் கணவன் பெயரை துறந்த மாலதி "எனக்கு எதுவும் வேண்டாம். நானே சொந்தக் காலில் நிற்பேன். என் மகனையும் நானே வளர்ப்பேன். பின்னர் ஏன் எனக்கு அந்த பெயர்" என கேக்கிறார் மாலதி.</p> <h2>வேலை</h2><p>ஹாக்கி மட்டுமே தான் அறிந்த ஒரே விஷயம் என்பதால் பயிற்சியாளர் வேலை தேட ஆரம்பித்தார். 2005 இல் பாபு பனாரசி தாஸ் கல்லூரியில் பெண்கள் அணி பயிற்சியாளராக அவரின் விண்ணப்பம் ஏற்கப்பட்டு அவர் வேளைக்கு சேர்ந்தார். ஆனால் துரதிஷ்டவசமாக மகனுக்கு உடல்நலம் சரியில்லாமல் போக 2 ஆண்டுகளில் அந்த வேலையை விட வேண்டிய கட்டாயம் மாலதிக்கு ஏற்பட்டது.</p><p>2007 இல் பணியை விட்ட பின் செய்வதறியாது இருந்த மாலதி அதன்பின் தேர்ந்தெடுத்தது தான் ஓட்டுநர் பணி. தொண்டு நிறுவனம் மூலம் பயிற்சி பெற்று லக்னோவின் தெருக்களில் தான் முதல் நாள் ஆட்டோ ரிக்ஷா ஓட்டிச் சென்ற அனுபவத்தை நினைவு கூறும் மாலதி, " அது நான் உயிர்ப்போடு இருப்பதாக என்னை உணர வைத்தது. அந்த கணத்தில், எல்லாம் என் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக நான் உணர்ந்தேன். </p><p>ஆனால் ஆரம்பத்தில் என்னை பார்த்து எல்லோரும் சிரித்தனர். என் ஆட்டோவில் ஏற மறுத்தனர். ஆனால் நான் விடாப்பிடியாக பணியை தொடர்ந்தேன். காலம் கடக்க, எல்லாம் மாறியது" என்கிறார்.</p> <h2>முதல் ரிக்ஷா ஓட்டுநர்</h2><p>"நான் லக்னோவின் முதல் ரிக்ஷா ஓட்டுநர். முதலில் நான் இ ரிக்ஷா ஓட்டினேன். கடந்த 2 ஆண்டுகளாக ஆட்டோ ரிக்ஷா ஓட்டி வருகிறேன். நான் ரிக்ஷா ஓட்டிய ஆரம்ப காலங்களில் பலரும் என்னை பற்றி கமெண்ட் அடிப்பார்கள். </p><p>ஆனால் நான் அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. நான் சில பெண்களுக்கு ஆட்டோ ஓட்ட கற்றும் தந்துள்ளேன். அவர்கள் இப்போது வண்டி ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள்."என்கிறார்.</p><p>தன் ஹாக்கி விளையாட்டை விட்டு ஓட்டுநர் ஆக வேண்டிய சூழல் குறித்து பேசிய அவர், " கடினமாக உழைக்கும் ஒரு பெண், இன்று ரிக்ஷா ஓட்டிக் கொண்டிருப்பதை பார்த்து அரசாங்கம் தனக்கு தானே வெட்கப்பட வேண்டும்" என்கிறார்.</p><p>ரிக்ஷா ஓட்ட வேண்டாம் என்று தனது தந்தை அழுததையும், பிறரின் புரணிகளையும் நினைவுகூர்ந்த மாலதி " நான் யாரிடமும் தோற்க விரும்பவில்லை." என தீர்க்கமுடன் கூறுகிறார்.</p>]]></content:encoded></item><item><title>கர்நாடகாவில் சோகம்: பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாப பலி</title><link>https://www.maalaimalar.com/news/national/karnataka-tragedy-fridge-blast-fire-claims-four-of-same-family</link><comments>https://www.maalaimalar.com/news/national/karnataka-tragedy-fridge-blast-fire-claims-four-of-same-family#comments</comments><guid isPermaLink="false">68d9cdbc-8101-4e49-a2c8-1a420b718bd4</guid><pubDate>Tue, 15 Sep 2026 08:44:31 +0000</pubDate><atom:updated>2026-09-15T08:44:31.096Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,பெலகாவி,Fridge blast,Short Circuit</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/x24encif/frig.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Refrigerator explosion ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/x24encif/frig.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மின் கசிவு காரணமாக மின் அழுத்தம் அதிகரித்து, குளிர்சாதன பெட்டி வெடித்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>கர்நாடக மாநிலம் பெலகாவி நகரப் பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><p>பெலகாவி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சவத் காலி எனும் பகுதியில் இந்த சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள ஒரு வீட்டில் பயன்படுத்தப்பட்டு வந்த குளிர்சாதனப் பெட்டி திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது. இதனால் உருவான தீ, நொடிப் பொழுதில் வீடு முழுவதும் பரவியதுடன், அடர்ந்த புகையும் சூழ்ந்து கொண்டது. அந்நேரத்தில் வீட்டிலிருந்தவர்கள் வெளியேற வழி தெரியாமலும், தப்பியோட முடியாமலும் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.</p><h2><strong>4 பேர் உயிரிழப்பு</strong></h2><p>இந்த விபத்தின் காரணமாக மூச்சுத்திணறல் மற்றும் தீக்காயங்கள் ஏற்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், விபத்தில் படுகாயமடைந்த இருவரை மீட்புக் குழுவினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><h2><strong>மின் கசிவே காரணம்?</strong></h2><p>மின் கசிவு காரணமாக மின் அழுத்தம் அதிகரித்து, குளிர்சாதன பெட்டி வெடித்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும், விபத்துக்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய காவல் துறையினரும் தீயணைப்புத் துறையினரும் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்:  திமுக, தவெக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-dharapuram-by-election-dmk-and-tvk-candidates-file-nomination</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-dharapuram-by-election-dmk-and-tvk-candidates-file-nomination#comments</comments><guid isPermaLink="false">b08dca7c-a64e-443b-9d92-900b4e44ecab</guid><pubDate>Tue, 15 Sep 2026 08:35:20 +0000</pubDate><atom:updated>2026-09-15T08:35:20.083Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தவெக,by election,dharapuram,தாராபுரம்,மதுராந்தகம்,tvk,Madurantakam,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/6ltm7yyr/dmk.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பரந்தாமன் - மரகதம் குமரவேல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/6ltm7yyr/dmk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பரந்தாமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.</p> <p>மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந்தேதி <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">இடைத்தேர்தல்</a> நடக்கிறது. இதில் த.வெ.க. சார்பில் மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல், தாராபுரத்தில் சத்யபாமா, அ.தி.மு.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் கணிதா சம்பத், தாராபுரம் தொகுதியில் பானுமதி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.</p> <p>தி.மு.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் வக்கீல் பரந்தாமன், தாராபுரத்தில் (தனி) வக்கீல் சுகன்யா போட்டியிடுகின்றனர். </p><p>இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று மற்றும் நாளை மட்டுமே உள்ளது. </p><h2>திமுக வேட்பாளர்கள்</h2><p>இந்நிலையில், தாராபுரம் திமுக வேட்பாளர் சுகன்யா வேட்புமனு தாக்கல் செய்தார். இதேபோல் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பரந்தாமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.</p><p>இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பரந்தாமன் கூறுகையில், நம்பிக்கைக்குரிய சட்டசபை உறுப்பினருக்காக மதுராந்தகம் மக்கள் திமுக வேட்பாளரான எனக்கு வாக்களிக்க வேண்டும்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kolathur-mla-vs-babus-health-stable-hospital">தவெக</a> வேட்பாளராக களமிறங்கிய விஜய் பெரம்பூர் தொகுதிக்கும் திருச்சி தொகுதிக்கும் கூட புதிதானவர் என்று கூறினார்.</p><h2>மரகதம் குமரவேல்</h2><p>இதேபோல் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேல் அமைச்சர் ஆனந்த் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.</p> <h2>முதலமைச்சர் விஜய் பிரசாரம்</h2><p>முதலமைச்சர் விஜய் 2 கட்டமாக பிரசாரம் செய்ய இருக்கிறார். இந்த மாதம் 25-ந்தேதி மதுராந்தகத்தில் இருந்து அவர் பிரசாரத்தை தொடங்க உள்ளார்.</p><p>27-ந்தேதி தாராபுரத்தில் பிரசாரம் மேற்கொள்வார். பின்னர் அக்டோபர் 2, 3-ந்தேதிகளில் மதுராந்தகம், தாராபுரத்தில் பிரசாரம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>திருப்பதியில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் கோலாகலமாக நடைபெற்றது!</title><link>https://www.maalaimalar.com/news/national/grand-brahmotsavam-celebrations-begin-in-tirupati</link><comments>https://www.maalaimalar.com/news/national/grand-brahmotsavam-celebrations-begin-in-tirupati#comments</comments><guid isPermaLink="false">624a5e42-c519-48eb-9960-c6832fc11996</guid><pubDate>Tue, 15 Sep 2026 08:33:48 +0000</pubDate><atom:updated>2026-09-15T08:33:48.723Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திருப்பதி,mukesh ambani,Tirupati,tirumala,பிரம்மோற்சவ விழா,ChandraBabu Naidu,திருப்பதி ஏழுமலையான்   கோவில்,brahmotsavam,திருப்பதி கோவில்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/zcn5wvv6/Tirupati-Brahmotsavam" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tirupati Brahmotsavam ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/zcn5wvv6/Tirupati-Brahmotsavam?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">திருப்பதி ஏழுமலையான் கோவிலின்</a> வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கி வருகிற 23-ந் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது.</p><h2>பிரம்மோற்சவ விழா</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D">பிரம்மோற்சவ விழாவை</a> முன்னிட்டு அலிபிரி சோதனை சாவடியில் இருந்து கோவில் முகத்து வாரம், மற்றும் கோவில் முழுவதும் வண்ண வண்ண மின் விளக்குகள் அலங்காரம் கண்ணைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும் ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து டன் கணக்கில் மலர்கள் கொண்டுவரப்பட்டு கோவில் உள்பிரகாரம், வெளி பிரகாரம் முழுவதும் மலர் அலங்காரம் மற்றும் ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பல்வேறு பழங்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.</p><p>பிரம்மோற்சவ விழா தொடக்கத்தை முன்னிட்டு ஏழுமலையானின் படைத் தளபதி விஸ்வக்சேனர் நேற்று மாலை சிறப்பு அலங்காரத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்து விழா ஏற்பாடுகளை மேற்பார்வையிடும் வைபவம் நடந்தது.</p><h2>கொடியேற்றம்</h2><p>விழாவின் ஒரு பகுதியாக பூமி தாய்க்கு யாகசாலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. அங்குரார்பனம் எனும் மண்ணில் விதை நடும் நிகழ்ச்சி நடந்தது. </p><p>இன்று மாலை 6.21 மணி முதல் 6.35 மணிக்குள் மீனலக்கனத்தில் தங்கக் கொடி மரத்தில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D">கொடியேற்றம்</a> நடைபெறுகிறது.</p><h2>பட்டு சமர்ப்பணம்</h2><p>அதன் பின்னர் முதல்-மந்திரி <a href="https://www.maalaimalar.com/topic/chandrababu-naidu">சந்திரபாபு நாயுடு</a> தனது மனைவி புவனேஸ்வரி, மகன் லோகேஷ் ஆகியோருடன் மாநில அரசு சார்பில் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை சமர்ப்பிக்கிறார்.</p><p>தொழிலதிபர் <a href="https://www.maalaimalar.com/topic/mukesh-ambani">முகேஷ் அம்பானி</a> சார்பில் வழங்கப்பட்ட 15 மின்சார பஸ்கள் மற்றும் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இரவு ஏழுமலையான் சிறப்பு அலங்காரத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.</p>]]></content:encoded></item><item><title>மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடிக்கும் அபாயம்: ஆயுத குழுக்களின் தாக்குதலால் 4 பேர் பலி; பொதுமக்கள் கடும் பீதி</title><link>https://www.maalaimalar.com/news/national/risk-of-renewed-violence-in-manipur-4-killed-in-armed-group-attacks-civilians-in-panic</link><comments>https://www.maalaimalar.com/news/national/risk-of-renewed-violence-in-manipur-4-killed-in-armed-group-attacks-civilians-in-panic#comments</comments><guid isPermaLink="false">f8cae76d-a36d-4dda-904e-b6a12a1d2bb3</guid><pubDate>Tue, 15 Sep 2026 08:16:15 +0000</pubDate><atom:updated>2026-09-15T08:16:15.744Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>manipur,மணிப்பூர்,Manipur violence,மணிப்பூர் கலவரம்,Kuki-Zo Council,குகி-சோ கவுன்சில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/u0qnonr9/manu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Manipur violence   ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/u0qnonr9/manu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மணிப்பூரின் தமெங்லாங் மற்றும் நோனி மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்குள் அண்மையில் புகுந்த ஆயுதமேந்திய நாகா பயங்கரவாத குழுக்கள் அதிரடித் தாக்குதல் நடத்தின. </p><p>மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்புவதற்கான அறிகுறிகள் தென்படாத நிலையில், பல்வேறு மாவட்டங்களில் ஆயுதமேந்திய குழுக்கள் மீண்டும் தங்களது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தத் தொடர் வன்முறை சம்பவங்கள் அப்பகுதியில் வாழும் மக்களிடையே பெரும் அச்சத்தையும் பாதுகாப்பற்ற சூழலையும் உருவாக்கியுள்ளன.</p><h2>கிராமங்<strong>கள் மீது துப்பாக்கி சூடு</strong> </h2><p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-on-rajasthan-civic-poll-results">மணிப்பூரின்</a> தமெங்லாங் மற்றும் நோனி மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்குள் அண்மையில் புகுந்த ஆயுதமேந்திய நாகா பயங்கரவாத குழுக்கள் அதிரடித் தாக்குதல் நடத்தின. இந்தத் திடீர் துப்பாக்கி சூட்டில் இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இத்தாக்குதலில் சிறுவன் ஒருவன் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறான்.</p><h2>குகி-சோ க<strong>வுன்சில் கடு</strong>ம் கண்டனம்</h2><p>இந்த கொடூர சம்பவத்திற்கு குகி-சோ கவுன்சில் தனது பலத்த கண்டனத்தை பதிவு செய்துள்ளது. அம்மாநிலத்தில் இயங்கி வரும் நாகா ஆயுதக் குழுக்களின் எல்லைமீறிய செயல்பாடுகளே வன்முறை மீண்டும் தலைதூக்குவதற்கு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 22 குகி பழங்குடியின மக்கள் இந்த ஆயுத குழுக்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கவலை தெரிவித்துள்ளனர்.</p><h2>மத்திய அரசுக்<strong>கு கோ</strong>ரிக்கை</h2><p>ஆயுதமேந்திய குழுக்களின் இத்தகைய தடையற்ற செயல்பாடுகள் மணிப்பூரை மீண்டும் ஒரு பெரிய அளவிலான முழுமையான இனமோதலை நோக்கி தள்ளும் ஆபத்தை கொண்டுள்ளது. எனவே, மத்திய அரசும் பாதுகாப்புப் படைகளும் உடனடியாக தலையிட்டு, பயங்கரவாத குழுக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>லேசர், அலங்கார ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும் மீனாட்சி அம்மன் கோவில் ராஜகோபுரங்கள்</title><link>https://www.maalaimalar.com/spirituality/rajagopurams-of-the-meenakshi-amman-temple-glowing-amidst-a-flood-of-laser-and-decorative-lights</link><comments>https://www.maalaimalar.com/spirituality/rajagopurams-of-the-meenakshi-amman-temple-glowing-amidst-a-flood-of-laser-and-decorative-lights#comments</comments><guid isPermaLink="false">7bfbc60d-9267-4683-a985-70b3f41253c1</guid><pubDate>Tue, 15 Sep 2026 08:11:11 +0000</pubDate><atom:updated>2026-09-15T08:11:11.082Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Kumbabishekam,கும்பாபிஷேகம்,மீனாட்சி அம்மன் கோவில்,meenakshi amman temple,அமைச்சர் ரமேஷ்,Minister Ramesh</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/rc0l4tmx/madurai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ லேசர், அலங்கார ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும் மீனாட்சி அம்மன் கோவில் ராஜகோபுரங்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/rc0l4tmx/madurai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்கள் ஏற்கனவே பல வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. வானுயர்ந்த கோபுரங்கள், அதில் இருக்கும் ஆயிரக்கணக்கான சுதை சிற்பங்களை பக்தர்கள் வியப்புடன் கண்டு களித்து வருகின்றனர்.</strong></em></p><p>அமைச்சர் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>முதலமைச்சர் ஜோசப் விஜய் சீர்மிகு நல்லாட்சியில், தொன்மையான கோவில்களைப் பழமை மாறாமல் புனரமைத்து திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குட முழுக்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு <a href="https://www.maalaimalar.com/topic/மீனாட்சி-அம்மன்-கோவில்">மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்</a> குடமுழுக்கு நாளை மறுநாள் 17-ந்தேதி அன்று வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.</p><p>திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழாவினை முன்னிட்டு அனைத்து துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து செயல்படக் கூடிய வகையில் கட்டுப்பாட்டு அறை கோவிலின் கிழக்கு ராஜகோபுரத்தின் எதிர்புறம் அமைந்துள்ள புதுமண்டபத்தில் செயல்பட்டு வருகிறது. பக்தர்களுக்கு நுழைவு வாயிலில் தண்ணீர், பிஸ்கெட் உடன் கூடிய பிரசாதப்பை வழங்கப்பட உள்ளது. அனைத்து பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. </p><p>திருக்குடமுழுக்கினை காண வரும் பக்தர்களுக்கு அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் கூடிய  மருத்துவ உதவி மையங்கள் மற்றும் முகாம்கள் கோவில் வளாகம் மற்றும் சுற்றியுள்ள வீதிகளில் தயார் நிலையில் அமைக்கப்பட்டுள்ளன. அவசர சிகிச்சை தேவைப்படும் பக்தர்களுக்கு 108 அவசர ஊர்திகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கியமான இடங்களில் எல்.இ.டி.வண்ணத்திரைகள் பக்தர்கள் திருக்குட முழுக்கினைக் காண்பதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளன. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலின் பரிவாரமூர்த்திகளுக்கான திருக்குடமுழுக்கு நாளை (16 -ந்தேதி) காலை 5 மணி முதல் 6 மணி வரை நடைபெற உள்ளது. </p><p>அதனைத் தொடர்ந்து 17 -ந்தேதி அன்று காலை 7.40 மணி முதல் 8.10 மணி வரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தங்க விமானங்கள் மற்றும் ராஜகோபுரங்கள் சமகாலக் குடமுழுக்கும், மூலவர் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் சுவாமிக்கும் கலசாபிஷேகமும் நடைபெறவுள்ளது. </p><p>இக்குடமுழுக்கு பெருவிழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள்., எம்.எல்.ஏக்கள், தவத்திரு ஆதீன பெருமக்கள், கோவில் அறங்காவலர்கள், ஆன்மிகப் பெரியோர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்களின் பங்கேற்புடன் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.   </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p><h2><strong>ராஜகோபுரங்கள்</strong> </h2><p>கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்கள் ஏற்கனவே பல வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. வானுயர்ந்த கோபுரங்கள், அதில் இருக்கும் ஆயிரக்கணக்கான சுதை சிற்பங்களை பக்தர்கள் வியப்புடன் கண்டு களித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி கோவிலுக்குள் பொற்றாமரை குளம், ஆயிரங்கால் மண்டபம், நூறு கால் மண்டபம், அம்மன் பிரகாரம், சுவாமி பிரகாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளும் புது பொலிவுடன் காட்சியளிக்கிறது. </p><p>இதனை காண காலை மற்றும் மாலை நேரங்களில் உள்ளூர் பக்தர்கள் ஏராளமானோர் கோவிலுக்கு படையெடுத்து வருகின்றனர். இரவு நேரங்களில் நகரில் எந்த பகுதிகளில் இருந்தும் வானுயர கோபுரங்களை பார்க்கும் வகையில் பல வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது. அது மட்டுமின்றி கோபுரத்தில் இருந்து பொதுமக்களை கவரும் வகையில் லேசர் விளக்குகளும் அமைக்கப்பட்டு ஒளி பாய்ச்சப்படுவது கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது. </p><p>அதேபோல் கோவில் உள்ளேயும் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு உள்ளன. இரவு நேரங்களில் இதற்காக குழந்தைகளுடன் பக்தர்கள் குடும்பத்துடன் அதிக அளவில் வருகை தருகின்றனர். </p><p>கடந்த 2 நாட்கள் விடுமுறை என்பதால் மாலையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வழக்கத்தை விட அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கும்பாபிஷேகத்திற்கு இன்னும் ஒரு நாளே இருப்பதால் மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. கும்பாபிஷேகத்திற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவின் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை நிர்வாகம் தகவல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kolathur-mla-vs-babus-health-stable-hospital</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kolathur-mla-vs-babus-health-stable-hospital#comments</comments><guid isPermaLink="false">0a05444f-5000-4994-a86f-47af8552b63c</guid><pubDate>Tue, 15 Sep 2026 07:58:59 +0000</pubDate><atom:updated>2026-09-15T07:58:59.056Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Kolathur,கொளத்தூர்,tvk,MLA V.S.Babu,எம்எல்ஏ வி.எஸ்.பாபு,கொளத்தூர் சட்டமன்ற தொகுதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/oyw5ux3f/vs.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MLA V.S.Babu  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/oyw5ux3f/vs.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>எம்எல்ஏ வி.எஸ்.பாபுக்கு தேவையான சுவாச உதவிகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதால், அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பிலேயே வைக்கப்பட்டுள்ளார்.</p><p>சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரான <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vs-babu-mla-hospitalized">வி.எஸ்.பாபுவுக்கு</a> கடந்த 9-ம் தேதி அதிகாலை திடீரென கடுமையான மூச்சுத்திணறல் மற்றும் சுவாசக் கோளாறு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். </p><p>மருத்துவமனையில் அவரை பரிசோதித்த தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர்கள், உடனடியாக அவரை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அவருக்கு தேவையான அவசர மருத்துவ மேலாண்மை மற்றும் சுவாச ஆதரவு சிகிச்சைகள் உடனுக்குடன் தொடங்கப்பட்டன.</p><h2>சீராக உள்ளதா<strong>க மருத்துவம</strong>னை அறிக்கை</h2><p>தற்போது பல்துறை நிபுணர்கள் அடங்கிய சிறப்பு மருத்துவக் குழுவின் தீவிர கண்காணிப்பில் வி.எஸ்.பாபு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகள் திருப்திகரமாக இருப்பதாகவும், அவரது உடல்நிலை தற்போது தொடர்ந்து சீராக இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவருக்கு தேவையான சுவாச உதவிகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதால், அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பிலேயே வைக்கப்பட்டுள்ளார்.</p><p>தமிழக அரசியலில் நீண்ட அனுபவம் கொண்ட மூத்த தலைவரான வி.எஸ்.பாபு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து த.வெ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் தனது குடும்பத்துடன் கொளத்தூரில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார். அவரது உடல்நிலை சீரடைந்து வருவது குறித்த தகவல் அறிந்ததும், அவரது ஆதரவாளர்களும், த.வெ.க. தொண்டர்களும், தொகுதி மக்களும் அவர் விரைவில் முழு உடல்நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் - வேட்பு மனுதாக்கல் செய்ய  நாளை கடைசி நாள்!</title><link>https://www.maalaimalar.com/news/puducherry/tattanchavadi-bypoll-nomination-deadline-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/puducherry/tattanchavadi-bypoll-nomination-deadline-tomorrow#comments</comments><guid isPermaLink="false">963d2d83-2168-4156-add3-923760c79dfa</guid><pubDate>Tue, 15 Sep 2026 07:55:03 +0000</pubDate><atom:updated>2026-09-15T07:55:03.032Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>by election,Nomination Filing,Thattanchavady,தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்,PuducherryByPoll,Five Cornered Contest,ஐந்துமுனை போட்டி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/5uvoqbev/Thattanchavady-By-election" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Thattanchavady By election]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/5uvoqbev/Thattanchavady-By-election?w=280" width="280"></media:thumbnail><category>புதுச்சேரி (Puducherry)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>புதுச்சேரி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF">தட்டாஞ்சாவடி </a><a href="https://www.maalaimalar.com/topic/by-election">இடைத்தேர்தல் </a>வேட்புமனு தாக்கல் நாளை கடைசி நாள், ஐந்துமுனை போட்டி நிலவுகிறது, போலீஸ் பாதுகாப்புடன் வேட்பாளர்கள் நல்ல நேரம் பார்த்து தாக்கல் செய்ய தயாராகின்றனர்.</p><h2>5 முனை போட்டி</h2><p>தேர்தலுக்கான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D">வேட்பு மனு தாக்கல்</a> கடந்த 9-ந் தேதி தொடங்கியது. தி.மு.க. வேட்பாளராக சேது செல்வம், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த், இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளராக சலீம், நாம் தமிழர் கட்சி வேட்பாளரக கார்த்திக் குமாரி ஆகியோர் அறிவிக்கப்பட் டுள்ளனர்.</p><p>காங்கிரஸ் வேட்பாளராக விநாயகம் அதிகாரபூர்வமாக இன்று அறிவிக்கப்பட உள்ளார். இதனால் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.</p><h2>மனுதாக்கல் செய்யவில்லை</h2><p>ஆனால் தொடக்க நாட்களான 9,10 மற்றும் 11 ஆகிய 3 நாட்களில் பிரதான அரசியல் கட்சிகளோ அல்லது சுயேட்சை வேட்பாளர்களோ யாரும் மனு தாக்கல் செய்ய ஆர்வம் காட்டவில்லை. </p><p>கடந்த 12, 13 மற்றும் 14-ந் தேதிகளில் தொடர்ச்சியாக அரசு விடுமுறை நாட்கள் வந்ததால் வேட்பு மனுக்கள் பெறப்படவில்லை. இருப்பினும் வேட்புமனு படிவங்களை வேட்பாளர்கள் பெற்று, தேவையான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை சரிபார்த்து தயார் நிலையில் வைத்துள்ளனர்.</p><h2>குலதெய்வ கோவிலில் வழிபாடு</h2><p>விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துடன் பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை தங்களின் குலதெய்வ கோவில்களில் வைத்து வழிபாடு செய்துள்ளனர். இன்றும் அரசியல் கட்சிகள் மனு தாக்கல் செய்வதற்கு ஆர்வம் காட்டவில்லை.</p><h2>நாளை மனு தாக்கல்</h2><p>நாளை நல்ல நாள் என்பதால் நட்சத்திரம், நேரம் பார்த்து ஜோதிடர்கள் குறித்து கொடுத்த நேரத்தில் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் புடைசூழ ஊர்வலமாக சென்று மனுதாக்கல் செய்ய வேட்பாளர்கள் ஆயத்தமாகியுள்ளனர்.</p><p>வேட்புமனு பெறப்படும் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலக வளாகத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வண்ணம் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே மனுதாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவர்.</p><p>தேர்தலில் போட்டியிடும் பொது பிரிவு வேட்பாளர்கள் ரூ.10 ஆயிரம், எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவு வேட்பாளர்கள் ரூ.5 ஆயிரம் வைப்பு தொகையாக செலுத்த வேண்டும்.</p><p>தேர்தல் விதிமுறைகளின் படி, செல்லு படியாகும் ஓட்டுகளில் 6-ல் ஒரு பங்கை பெற தவறினால் வேட்பாளர்கள் செலுத்திய இந்த வைப்புத் தொகை (டெபாசிட்) திருப்பித் தரப்படாது. மனு தாக்கல் நாளை மாலை 3 மணி யுடன் நிறைவு பெறுகிறது.</p><h2>வேட்புமனு பரிசீலனை</h2><p>வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வருகிற 17-ந் தேதி காலை 11 மணிக்கு தட்டாஞ்சாவடி வி.வி.பி. நகரில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தின் 2-ம் தளத்தில் நடக்கிறது.</p><p>தேர்தல் விதிகளின்படி வேட்பாளர்களும், அவர்களின் தகுதியுடைய பிரதிநிதிகளும் மட்டுமே இந்த நிகழ்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.</p><p>ஏற்கப்பட்ட வேட்பாளர்களில், போட்டியிட விரும்பாமல் மனுவை திரும்பப் பெற விரும்புபவர்களை வருகிற 19-ந் தேதி மாலை 3 மணிக்குள் அதற்கான அறிவிப்பை சமர்ப்பிக்க வேண்டும்.</p><h2>வேட்பாளர்கள் சின்னம்</h2><p>தட்டாஞ்சாவடி ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலகத்தின் முதல் தளத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரி அர்ஜுன் ராமகிருஷ்ணன் அல்லது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி ஞானவேலுவிடம் இதற்கான கடிதத்தை வழங்க வேண்டும்.</p><p>மனுக்கள் திரும்ப பெறப்பட்ட பிறகு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கப்படும்.</p><p>இதைத் தொடர்ந்து, தட்டாஞ்சாவடி தொகுதிக்கான ஓட்டுப்பதிவு அக்டோபர் 6-ந் தேதி நடைபெறும். தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் அக்டோபர் 9-ந் தேதி எண்ணப்பட்டு அதிகாரப்பூர்வ முடிவுகள் அறிவிக்கப்படும்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை (16.09.2026) மின்தடை ஏற்படும் பகுதிகள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-42</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-42#comments</comments><guid isPermaLink="false">2db5a3fa-8ef7-4c13-9f4f-4e47c59c7194</guid><pubDate>Tue, 15 Sep 2026 07:46:06 +0000</pubDate><atom:updated>2026-09-15T07:46:06.885Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TNEB,மின்சார வாரியம்,chennai power cut,தமிழ்நாடு மின்சார வாரியம்,சென்னையில் மின்தடை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/wjl8v1wo/powercut0.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/wjl8v1wo/powercut0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் <a href="https://www.maalaimalar.com/topic/சென்னையில்-மின்தடை">மின் தடை</a> செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><p>அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (16.09.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.  அதன்படி, நாளை திருவொற்றியூர் பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-</p><h2><strong>பரங்கிமலை</strong></h2><p>ராமர் கோவில் தெரு, மவுண்ட் பூந்தமல்லி ரோடு, நசரதபுரம், கணபதி காலனி, வசந்தம் நகர், கலைஞர் நகர், தண்டுமா நகர், போலீஸ் குவார்ட்டர்ஸ், செவன் ஹில்ஸ் தெரு, மீனம்பாக்கம், பாண்டியன் தெரு, மாரீசன் 1 முதல் 6வது தெரு, திருவள்ளுவர் நகர், குமரன் நகர், குமரன் தெரு காலனி, பர்மா காலனி, காரையார் கோவில் தெரு, வடக்கு அணிவகுப்பு சாலை, இந்திரா நகர், அதிகாரி பயிற்சி அகாடமி, கடற்படை குடியிருப்பு பகுதி, துளசிங்கபுரம், மரியாபுரம், மதியாஸ் நகர், ஐரோப்பிய லைன், பஜார் சாலை, மேட்டுத் தெரு, ஆற்காடு பேட்டை, மர்பிமான் தெரு, 1வது மற்றும் ஜி.பி. காலனி, டீச்சர்ஸ் காலனி, எம்ஜிஆர் நகர்.</p><h2><strong>தாம்பரம்</strong></h2><p>பெருங்களத்தூர்-காமராஜர் ஹைரோடு, கணேஷ் நகர், லிங்கம் நகர், ஷர்மிளா நகர், பாரதி அவென்யூ, பாலாஜி நகர், காகபுஞ்சந்தர் நகர், புதிய பெருங்களத்தூர், மாடம்பாக்கம், சுதர்சன் நகர், அம்பிகா நகர், ஞானந்தா நகர், கணபதி நகர், ஜெயின் சுதர்சன், தேனுகாம்பாள் நகர், ராகவேந்திரா நகர், ராகவேந்திரா கார்டன்.</p><h2><strong>கொரட்டூர்</strong></h2><p>ஆர்எஸ் சாலை, எம்டிஎச் சாலை, தில்லை நகர் மற்றும் விரிவாக்கம், சாவடி தெரு, மேனாம்பேடு சாலை, திருமுல்லைவாயில் சாலை, பிராமண தெரு, கங்கையம்மன் கோவில் தெரு, சென்ட்ரல் அவென்யூ தெரு 17-24 மற்றும் 35-41, வன்னியர், கிராமினி தெரு, ரெட்டி தெரு, கஸ்தூரி நகர் 1-3வது தெரு, சிவஸ்தாக்தி நகர் 1-3வது தெரு, TNHB 3வது-8வது தெருக்கள், கிழக்கு அவென்யூ, மொகப்பையர் சாலை, கிரீன் வியூ காலனி, சீயோன் தெரு, நேரு நகர்.</p><h2><strong>ராயபுரம்</strong></h2><p>விஓசி நகர், ஆர்.கே.நகர், திலகர் நகர், எல்லையமுதலி தெரு, சேனியம்மன் கோவில் தெரு, டி.எச்.ரோடு, டோல்கேட், ஸ்டான்லி, பழைய வண்ணாரப்பேட்டை, கன்னிகோவில், கல்மண்டபம், கும்மாளம்மன் கோவில் தெரு, ஜி.ஏ.ரோடு, தாண்டவராய கிராமணி தெரு, சோலையப்பன் தெரு, ஸ்ரீரங்கம்மாள் தெரு, முதலி தெரு, ஜேவி கோவில் தெரு, ராமானுஜப்பர் தெரு, பால அருணாச்சல தெரு, வழக்கறிஞர் சின்னதம்பி I &amp; II தெரு, நமச்சிவாய செட்டி தெரு, ஜஸ்டிஸ் பந்தலை காலனி தெரு, வெங்கடாசலம் தெரு, தாண்டவராய முதலி தெரு.</p>]]></content:encoded></item><item><title>விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: மகாராஷ்டிராவில் ஒரு கிலோ ரூ.27 ஆயிரத்துக்கு விற்பனையாகும் &apos;தங்க கொழுக்கட்டை&apos;!</title><link>https://www.maalaimalar.com/news/national/vinayagar-chaturthi-special-golden-modak-worth-rs-27000-per-kg-in-maharashtra</link><comments>https://www.maalaimalar.com/news/national/vinayagar-chaturthi-special-golden-modak-worth-rs-27000-per-kg-in-maharashtra#comments</comments><guid isPermaLink="false">d54ab6db-b8aa-47ab-81bd-adeb19766183</guid><pubDate>Tue, 15 Sep 2026 07:32:57 +0000</pubDate><atom:updated>2026-09-15T07:32:57.773Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,மகாராஷ்டிரா,விநாயகர் சதுர்த்தி,Vinayaka Chaturthi,Gold Modak,Silver Kozhukkattai,Edible Gold Leaf,தங்க கொழுக்கட்டை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/5suizf66/kkk.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold Modak]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/5suizf66/kkk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாரம்பரிய சுவையுடன் கூடிய இந்த கொழுக்கட்டை முந்திரி, பாதாம், பிஸ்தா, பாலாடைக்கட்டி (கவா), குங்குமப்பூ மற்றும் தூய்மையான நெய் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. </p><p>நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் விற்பனை செய்யப்படும் 24 காரட் 'தங்க கொழுக்கட்டை' (கோல்டன் மோதக்) பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.</p><h2>ஆடம்ப<strong>ர நெய்வேத்திய</strong>ம்</h2><p>நாசிக்கின் வித்யா விகாஸ் சர்க்கிள் பகுதியில் அமைந்திருக்கும் '<a href="https://www.maalaimalar.com/news/topnews/education-is-god-go-study-bro-quirky-ganesha-statue">சாகர் ஸ்வீட்ஸ்</a>' எனும் பிரபல இனிப்பகம் விநாயக பெருமானின் நைவேத்தியத்திற்காக இந்த தங்க முலாம் பூசப்பட்ட சிறப்பு கொழுக்கட்டையைத் தயாரித்துள்ளது. சந்தையில் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ள நிலையிலும், இந்த கொழுக்கட்டை ஒரு கிலோ ரூ.27,000 என நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு தனி கொழுக்கட்டையின் விலை ரூ.540 ஆக உள்ளது.</p><h2>2<strong>4 காரட் தங்க</strong>ம்</h2><p>பாரம்பரிய சுவையுடன் கூடிய இந்த கொழுக்கட்டை முந்திரி, பாதாம், பிஸ்தா, பாலாடைக்கட்டி (கவா), குங்குமப்பூ மற்றும் தூய்மையான நெய் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதன் வெளிப்புற அலங்காரத்திற்காக 24 காரட் தூய்மையான, சாப்பிடக்கூடிய தங்க தகடு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த கடை உரிமையாளர் தீபக் சவுத்ரி தெரிவிக்கையில், விநாயகர் சதுர்த்தியின் முதல் நாளிலேயே சுமார் 10 கிலோ தங்க கொழுக்கட்டைகள் விற்பனையாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p>பொதுமக்களின் பல்வேறு சுவை விருப்பங்களை பூர்த்தி செய்யும் வகையில், இந்த இனிப்பகத்தில் 25-க்கும் மேற்பட்ட கொழுக்கட்டை வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் சாதாரண காஜு (முந்திரி) கொழுக்கட்டை ஒரு கிலோ ரூ. 2,000-க்கும், உலர் பழங்கள் (டிரை ஃப்ரூட்ஸ்) மற்றும் அத்திப்பழக் கொழுக்கட்டைகள் கிலோ ரூ. 1,400 முதல் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் வெள்ளி முலாம் பூசப்பட்ட 'சில்வர் கொழுக்கட்டை' கிலோ ரூ. 2,000-க்கு விற்பனையாகிறது.</p><h2>சாப்பிட<strong>க்கூடிய தங்கம்</strong></h2><p>உணவில் பயன்படுத்தப்படும் இந்த தங்கம் 'E-175' எனும் குறியீட்டின் கீழ் உலகளாவிய உணவுப் பாதுகாப்பு அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும். 23 முதல் 24 காரட் வரையிலான தூய்மையான தங்கம் மனித உடலின் செரிமான அமிலங்களுடன் எந்த வேதியியல் வினையும் புரியாது என்பதால், செரிமான மண்டலத்தின் வழியாக அப்படியே வெளியேறிவிடும். இதனால் இதை உட்கொள்வது பாதுகாப்பானது என கருதப்பட்டாலும், இதில் உடலுக்குத் தேவையான எந்த ஊட்டச்சத்துக்களோ மருத்துவ நன்மைகளோ இல்லை என்பதும், இது வெறும் ஆடம்பர அழகிற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>அம்பாசமுத்திரத்தில் திடீர் கனமழையால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்து சேதம் - விவசாயிகள் கவலை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ambasamudram-paddy-bags-soaked-and-damaged-by-unexpected-heavy-rain</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ambasamudram-paddy-bags-soaked-and-damaged-by-unexpected-heavy-rain#comments</comments><guid isPermaLink="false">b02b17ea-d49a-4b54-a3f9-5a076e2e4997</guid><pubDate>Tue, 15 Sep 2026 07:27:36 +0000</pubDate><atom:updated>2026-09-15T07:27:36.937Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விவசாயிகள்,Paddy Procurement,Ambasamudram,அம்பாசமுத்திரம்,Paddy Damaged,Farmers Distress,நெல்மூட்டைகள் சேதம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/4ipjky0u/Paddy-Damaged" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Paddy Damaged ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/4ipjky0u/Paddy-Damaged?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை மாவட்டம் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">அம்பாசமுத்திரம் </a>மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலையில் பெய்த திடீர் கனமழை காரணமாக, விவசாயிகள் அறுவடை செய்து விற்பனைக்காகக் குவித்து வைத்திருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மற்றும் நெல்மணிகள் மழைநீரில் நனைந்து சேதமடைந்துள்ளன.</p><p>இதனால் தங்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.</p><h2><strong>திடீர் மழையால் வந்த சோதனை</strong></h2><p>நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சுற்றுவட்டார பகுதிகளான அயன் சிங்கம்பட்டி, ஜமீன் சிங்கம்பட்டி, வைராவி குளம், தெற்கு பாப்பாங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்போது நெல் அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p><p>விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் அறுவடை செய்த <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">நெல்மணிகளை </a>வீடுகளின் முன்பும், சாலைகளிலும் குவித்து வைத்திருந்தனர்.</p><p>இந்த நிலையில், நேற்று மாலை நேரத்தில் இப்பகுதிகளில் திடீரென இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த எதிர்பாராத மழையினால், சாலைகளிலும் வீடுகளின் முன்பும் திறந்தவெளியில் கொட்டி வைக்கப்பட்டிருந்த நெல்மணிகள் அனைத்தும் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டும், நனைந்தும் சேதமடைந்தன.</p><h2><strong>கொள்முதல் நிலையங்களில் தேங்கிய நெல் மூட்டைகள்</strong></h2><p>அதேபோல், அரசு நெல்கொள்முதல் நிலையங்களில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF">விவசாயிகளால் </a>விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்டு, அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளும் இந்த திடீர் மழையில் சிக்கி நனைந்துள்ளன. முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் நெல் மூட்டைகள் அனைத்தும் மழைநீரில் ஊறியுள்ளன.</p><p>கடினமாக உழைத்து, அறுவடை செய்து விற்பனைக்குக் கொண்டு வந்த நெல்மணிகள் அனைத்தும் இப்படி மழைநீரில் நனைந்து பாழாகிக் கொண்டிருப்பதைப் பார்த்து விவசாயிகள் மிகுந்த கவலையும் வேதனையும் அடைந்துள்ளனர்.</p><h2><strong>முளைக்கும் நெல்மணிகள் : விவசாயிகள் கோரிக்கை</strong></h2><p>ஏற்கனவே நனைந்துள்ள நெல்மணிகள், தொடர்ந்து <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88">மழை பெய்தால் </a>காற்றில் உள்ள ஈரப்பதம் காரணமாக முளைத்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நெல்மணிகள் முளைத்துவிட்டால் அவற்றை அரசு கொள்முதல் செய்யாது என்பதால் விவசாயிகளுக்குப் பலத்த பொருளாதார இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.</p><p>எனவே, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு நெல் கொள்முதல் நிலையங்களை விரைவாகத் திறந்து, நெல் மூட்டைகளைத் தாமதமின்றி கொள்முதல் செய்ய வேண்டும் எனப் பாதிப்படைந்த விவசாயிகள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சிறுவர்களை வைத்து போதை வியாபாரம்.. அலமாரிக்குள் ஒளிந்த ஆசாமி - இலவச Wifi மூலம் சிக்கிய சுவாரஸ்யம்</title><link>https://www.maalaimalar.com/news/world/drug-trade-using-children-asami-who-hid-in-the-closet-after-seeing-the-police-interesting-caught-by-wifi</link><comments>https://www.maalaimalar.com/news/world/drug-trade-using-children-asami-who-hid-in-the-closet-after-seeing-the-police-interesting-caught-by-wifi#comments</comments><guid isPermaLink="false">5fb1698e-f867-42f9-83fa-bd4a3321cd8f</guid><pubDate>Tue, 15 Sep 2026 07:20:25 +0000</pubDate><atom:updated>2026-09-15T07:20:25.154Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>லண்டன்,britain,wifi,Drug smuggling,போதொப்பொருள் கடத்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/hogct28x/tn-13.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Wifi ]]></media:title><media:description type="html"><![CDATA[ Wifi ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/hogct28x/tn-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இங்கிலாந்தில் போலீசுக்கு பயந்து தலைமறைவான போதைப்பொருள் வியாபாரி ஒருவன் Wifi மூலம் சிக்கிய சுவாரஸ்ய பின்னணி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.</p><p>வடமேற்கு லண்டனில் ஜோயல் லூயிஸ் என்ற 34 வயது நபர் 'பாபி டிரக் லைன்' என்ற <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D">போதைப்பொருள் </a>நெட்வொர்க்கின் கீழ்   போதொப்பொருள் வியாபாரம் செய்து வந்துள்ளார். </p><p>வடக்கு கில்பர்ன் உள்ளிட்ட பகுதிகளுக்கு கோகைன், ஹெராயின் உள்ளிட்டவற்றை அவர் சப்ளை செய்து வந்துள்ளார். </p><p>போதைப்பொருள் கடத்துவதாக சந்தேகத்தின் பேரில் சில சிறுவர்களை பிடித்து அவர்களின் செல்போன்களை ஆய்வு செய்த்தில் லூயிஸ் உடைய செயல்பாடுகள் குறித்து போலீசுக்கு தெரியவந்துள்ளது.</p> <h2>தலைமறைவு</h2><p>இதை அறிந்த லூயிஸ் முன்னெச்சரிக்கையாக போலீசிடம் இருந்து தப்பிக்க தலைமறைவாகி உள்ளார்.தான் இருக்கும் இடத்தை கண்டுபிடித்துவிடக்கூடாது என்பதற்காக தனது மொபைல், லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களில் லொகேஷனை ஹைட் செய்யும் VPN நெட்வொர்க்கை அவர் பயனப்டுத்தியுள்ளளார். ஆனால் அவர்களின் சாதனங்களில் ஒன்று அவர் இருக்கும் இடத்தில் இலவச பப்ளிக் WIFI உடன் கனெக்ட் ஆகி இருந்துள்ளது.</p><p>அதை வைத்து போலீசார் அவரின் இருப்பிடத்தை கண்டுபிடித்துள்ளனர். இதன் பின் அதிகாரிகள் கைது வாரண்ட் உடன் அவர் இருந்த இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது அவர் கைதில் இருந்து தப்பிக்க அலமாரிக்குள் ஒளிந்துகொண்டிருந்திருக்கிறார். ஆனால் போலீசார் அவர் ஒளிந்திருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர்.</p> <h2>கைது</h2><p>கைது செய்யப்படும்போது அவர், "என்னை எப்படி கண்டுபிடித்தீர்கள்" என திரும்ப திரும்ப கேட்டிருக்கிறார். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போனில் ஒரு நாளைக்கு 100க்கும் மேற்பட்ட அழைப்புகள் செய்யப்பட்டு வந்திருப்பதும் சுமார் 250 டிரக் டீலர்களின் எண்கள் கான்டாக்ட்டில் இருப்பதும் தெரியவந்துள்ளது, மேலும் அவரிடம் இருந்து 8,800 பவுண்ட்கள் மதிப்புள்ள போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டது. 6 செல்போன்கள், 8000 பவுண்ட் பணம், ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது.</p> <p>சிறார்களையும், இளைஞர்களையும் வைத்து லூயிஸ் இந்த போதைப்பொருட்களை எளிதில் பல இடங்களுக்கு எடுத்துச் சென்றுள்ளதும் தெரியவந்துள்ளது. அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்களில் ஒன்று பாபி நெட்வொர்க் உடன் தொடர்புடையது. அதை வைத்து போலீசார் மொத்த நெட்வொர்க்கையும் பிடிக்கும் முயற்சியில் உள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிக்கு ரூ.1.28 கோடி &apos;டிஜிட்டல் கைது&apos; மோசடி: புனேவில் அதிர்ச்சி சம்பவம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/digital-arrest-scam-shocks-pune-retired-army-officer-cheated</link><comments>https://www.maalaimalar.com/news/national/digital-arrest-scam-shocks-pune-retired-army-officer-cheated#comments</comments><guid isPermaLink="false">8a4885bb-647c-432c-a6e7-c8bab0ced860</guid><pubDate>Tue, 15 Sep 2026 07:15:55 +0000</pubDate><atom:updated>2026-09-15T07:15:55.353Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஜிட்டல் கைது,Digital Arrest,புனே,Pune,மகாராஷ்டிரா மாநிலம்,cyber scam,Telecom Headquarters</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/9h403wnp/puu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Digital Arrest   ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/9h403wnp/puu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அடுத்தடுத்த வீடியோ அழைப்புகளில், காவல் சீருடையில் தோன்றிய மோசடி கும்பல், சி.பி.ஐ அதிகாரிகள் போல நடித்து அதிகாரியை மேலும் அச்சுறுத்தியது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/mass-scream-event-at-ocean-beach-san-francisco-stress-relief-gathering">மகாராஷ்டிரா மாநிலம்</a> புனேவைச் சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவர், 'டிஜிட்டல் கைது' எனப்படும் அதிநவீன ஆன்லைன் சைபர் மோசடியில் சிக்கி தனது வாழ்நாள் சேமிப்பான ரூ.1.28 கோடியை இழந்துள்ளார்.</p><h2><strong>போலி அழைப்பு</strong></h2><p>கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி, தொலைத்தொடர்பு தலைமையகத்தில் இருந்து பேசுவதாக கூறி பெண் ஒருவர் ராணுவ அதிகாரியை தொடர்பு கொண்டார். அதிகாரியின் பெயரில் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிலிருந்து மும்பையில் சட்டவிரோத அழைப்புகளும், ஆபாச வீடியோக்களும் அனுப்பப்படுவதாக அச்ச மூட்டினார். பின்னர், இந்த வழக்கு மும்பை குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறி, போலி காவல் அதிகாரியிடம் இணைப்பை வழங்கினார்.</p><p>சந்தேக நபர்கள் அதிகாரியின் வாட்ஸ்அப் எண்ணிற்குப் போலி எஃப்.ஐ.ஆர் நகல் மற்றும் சில ஆபாச படங்களை அனுப்பி பயமுறுத்தினர். மேலும், விசாரணை என்ற பெயரில் அவரது குடும்ப பின்னணி, வங்கி கணக்குகள், நிலையான வைப்புத் தொகைகள் மற்றும் தங்கம் கையிருப்பு குறித்து விரிவான விவரங்களை சேகரித்தனர். மூத்த குடிமகன் என்பதால் நேரில் கைது செய்யாமல் 'டிஜிட்டல் கைது' முறையில் கண்காணிப்பில் வைப்பதாக கூறி மிரட்டினர்.</p><h2>போலி சி.பி.ஐ <strong>அதிகாரிகள்</strong> </h2><p>அடுத்தடுத்த வீடியோ அழைப்புகளில், காவல் சீருடையில் தோன்றிய மோசடி கும்பல், சி.பி.ஐ அதிகாரிகள் போல நடித்து அதிகாரியை மேலும் அச்சுறுத்தியது. கணக்கு சரிபார்ப்பு என்ற பெயரில், அவரது நிலையான வைப்புத் தொகைகளை உடைத்து, அவர்கள் குறிப்பிட்ட பல்வேறு வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்புமாறு பணிக்கப்பட்டார். சட்ட நடவடிக்கைக்கும் கைதுக்கும் பயந்த அதிகாரி, ஆகஸ்ட் இறுதி வாரம் முதல் செப்டம்பர் முதல் வாரம் வரை பல தவணைகளில் மொத்தம் ரூ.1.28 கோடியை போலி கணக்குகளுக்கு மாற்றினார்.</p><h2>உண்மை<strong>யை அம்பலப்படுத்திய</strong> மகள்</h2><p>அடிக்கடி வெவ்வேறு கணக்குகளுக்கு பணம் அனுப்ப கோரியதால் ராணுவ அதிகாரியின் மனைவியாருக்கு சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து அவர் வெளிநாட்டில் வசிக்கும் தனது மகளுக்குத் தகவல் தெரிவித்தார். நிலைமையை உணர்ந்த மகள், பெற்றோரிடம் இது மோசடி என்பதை சுட்டிக்காட்டி உடனடியாகப் பணப்பரிவர்த்தனைகளை நிறுத்துமாறு அறிவுறுத்தினார்.</p><h2>கா<strong>வல்துறையில் புகா</strong>ர்</h2><p>பாதிக்கப்பட்ட அதிகாரி உடனடியாக புனே சைபர் குற்றப்பிரிவு காவல்துறையையும் உதவி எண்ணையும் தொடர்பு கொண்டு புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பணம் அனுப்பப்பட்ட போலி கணக்குகளை பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையோ அல்லது பிற அரசு அமைப்புகளோ ஒருபோதும் தொலைபேசி அல்லது வீடியோ அழைப்புகள் மூலம் 'டிஜிட்டல் கைது' செய்ய மாட்டார்கள் என்றும், பணமாற்றம் கேட்க மாட்டார்கள் என்றும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு சைபர் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>இந்தி பேசும் வடமாநிலங்களில் கூட முதலமைச்சர் விஜயின் தாக்கம் - அமைச்சர் செங்கோட்டையன்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sengottaiyan-says-cm-vijay-impact-extends-even-to-hindi-speaking-north-indian-states</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sengottaiyan-says-cm-vijay-impact-extends-even-to-hindi-speaking-north-indian-states#comments</comments><guid isPermaLink="false">fed31280-1eb7-457a-a2c2-faa6bffaa680</guid><pubDate>Tue, 15 Sep 2026 07:13:15 +0000</pubDate><atom:updated>2026-09-15T07:13:15.324Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,tvk,minister Sengottaiyan,அமைச்சர் செங்கோட்டையன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/vyqg9sos/sengottaiyan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Sengottaiyan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/vyqg9sos/sengottaiyan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மக்கள் பிரச்சனை குறித்து சட்டசபையில் பேசவில்லை என்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்தார்.</p> <p>ஈரோட்டு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D">செங்கோட்டையன்</a> கூறியதாவது:</p><p>* சட்டம்-ஒழுங்கு காக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் மக்கள் விருப்பங்களை பிரதிபலிக்கும் முதல்வராக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-is-meeting-london-based-tamils-this-evening">விஜய்</a> உள்ளார்.</p> <p>* இடைத்தேர்தலில் தவெக வெற்றி உறுதி, வாக்கு வித்தியாசம் எந்தளவுக்கு போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.</p><p>* பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டால் தமிழகத்தில் மின்வெட்டு குறைவு, மற்ற மாநிலங்களில் 20 நாட்களாக கூடுதல் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.</p> <p>* சோலார் மூலம் பெறும் மின்சாரத்தை இரவிலும் பயன்படும் வகையில் சேமித்தால் தமிழகம் மின்மிகை மாநிலமாகும்.</p><p>* பேரவையில் எம்எல்ஏக்கள் என்ன பேசினார்கள் என்பதை அனைவரும் கண்கூடாக பார்த்தனர்.</p> <p>* இந்தி பேசும் வடமாநிலங்களில் கூட முதலமைச்சர் விஜயின் தாக்கம் அதிகமாக உள்ளது.</p><p>* முதலமைச்சர் விஜய் வெளிநாடுகளுக்கு சென்று ரூ.11,000 கோடி அளவுக்கு தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்த்துள்ளார்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>&quot;செயற்கை நுண்ணறிவு மனித இனத்தையே அழிக்கலாம்&quot; – கூகுள் டீப்மைண்ட் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் அதிரடி ராஜினாமா!</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/google-deepmind-agi-safety-experts-warn-of-human-extinction-risk</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/google-deepmind-agi-safety-experts-warn-of-human-extinction-risk#comments</comments><guid isPermaLink="false">72b84de4-bdeb-4a83-a9c2-7a661b43d484</guid><pubDate>Tue, 15 Sep 2026 07:01:24 +0000</pubDate><atom:updated>2026-09-15T07:01:24.543Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Artificial Intelligence,Resignation,OpenAI,செயற்கை நுண்ணறிவு,Google DeepMind,AI Safety,Extinction Risk</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/a77fasvv/Google" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Google]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/a77fasvv/Google?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தொழில்நுட்பம் (Technology)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனித இனத்தையே ஒட்டுமொத்தமாக அழிக்கும் ஆற்றல் கொண்டது என்ற கடுமையான எச்சரிக்கையுடன், <a href="https://www.maalaimalar.com/topic/google">கூகுள் </a>டீப்மைண்ட் நிறுவனத்தின் முன்னணி AGI பாதுகாப்பு மற்றும் அலைன்மென்ட் ஆராய்ச்சியாளர்களான பிலால் சுஹ்தாய் மற்றும் ஜோஷ் எங்கெல்ஸ் ஆகியோர் தங்களது பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளனர். AI-இன் தற்போதைய வளர்ச்சி மனிதக் கட்டுப்பாட்டை மீறிப் போய்க்கொண்டிருப்பதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.</p><h2><strong>பிலால் சுஹ்தாயின் பகிரங்க எச்சரிக்கை</strong></h2><p>தனது ராஜினாமா குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிலால் சுஹ்தாய், "கூகுள் நிறுவனத்தில் AI-இன் வளர்ச்சியை நான் மிக அருகில் இருந்து பார்த்துள்ளேன். இந்த தொழில்நுட்பத்தின் தற்போதைய போக்கு எனக்கு மிகுந்த கவலையளிக்கிறது. AI மனித இனம் முழுவதையும் அழிக்கும் சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது என்றும், இந்த பேரழிவைத் தடுக்க நமக்கு இருக்கும் நேரம் மிக வேகமாக குறைந்து வருகிறது என்றும் நான் மனப்பூர்வமாக நம்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p>மேலும், 2022-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சாதாரண நிலையில் இருந்த <a href="https://www.maalaimalar.com/topic/ai-technology">AI தொழில்நுட்பம்</a>, வெறும் நான்கு ஆண்டுகளில் நினைத்துப் பார்க்க முடியாத வேகத்தில் வளர்ந்துள்ளதாகக் கூறியுள்ளார். குறிப்பாக, மனிதக் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படும் அளவுக்கு அதன் திறன் இப்போது அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">I recently resigned from Google DeepMind, where I worked on AGI safety and alignment research. At Google, I witnessed AI development first hand. I too am extremely concerned by the default trajectory of this technology. I earnestly believe that AI has the potential to kill us…</p>&mdash; bilal  (@bilalchughtai_) <a href="https://x.com/bilalchughtai_/status/2099592489023734085?ref_src=twsrc%5Etfw">September 14, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2><strong>ஜோஷ் எங்கெல்ஸ் விலகலும் புதிய பொறுப்பும்</strong></h2><p>கூகுள் டீப்மைண்டின் AGI பாதுகாப்பு குழுவில் பணியாற்றிய மற்றொரு முக்கிய ஆராய்ச்சியாளரான ஜோஷ் எங்கெல்ஸும் தனது பதவியை துறந்துள்ளார். "அடுத்த ஐந்து ஆண்டுகளில் AI அமைப்புகளால் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய மிகப்பெரிய ஆபத்து இருப்பதாக நான் கருதுகிறேன். இதன் துல்லியமான சதவிகிதம் எனக்குத் தெரியவில்லை என்றாலும், உலகிலேயே இப்போது கவனிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான அச்சுறுத்தல் இதுதான்" என்று அவர் தெரிவித்துள்ளார்.</p><p>டீப்மைண்டில் இருந்து விலகிய ஜோஷ் எங்கெல்ஸ், தற்போது AI நிறுவனங்களைக் கண்காணிக்கும் Model Evaluation and Threat Research என்ற லாப நோக்கமற்ற சுயாதீன ஆராய்ச்சி நிறுவனத்தில் இணைந்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">I left Google DeepMind&#39;s AGI safety team three weeks ago to join <a href="https://x.com/METR_Evals?ref_src=twsrc%5Etfw">@METR_Evals</a>. To some of my friends and family this seemed like a strange decision: I enjoyed the work I did at GDM and turned down offers from Anthropic and OpenAI. But I made the decision because of how high I…</p>&mdash; Josh Engels (@JoshAEngels) <a href="https://x.com/JoshAEngels/status/2098890712830169115?ref_src=twsrc%5Etfw">September 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2>கட்டுப்பாட்டை மீறிய AI சம்பவங்கள்</h2><p>ஆராய்ச்சியாளர்களின் இந்த அச்சத்திற்கு வலுசேர்க்கும் வகையில் அண்மையில் சில அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடந்துள்ளன.</p><p>ஓபன் ஏஐ நிறுவனத்தின் சோதனை கட்டத்தில் இருந்த சுமார் 700-க்கும் மேற்பட்ட ரகசிய AI ஏஜென்ட்டுகள், மனிதர்களின் அனுமதியின்றி தானாகவே இணையத்தைப் பயன்படுத்தி 'ஹக்கிங் ஃபேஸ்' என்ற மூன்றாம் தரப்பு நிறுவனத்தின் கணினிகளை ஹேக் செய்ய முயன்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/openai">ஓபன் ஏஐ</a>-இன் மேம்பட்ட AI ஏஜென்ட்டுகள், 90 ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற 'நேவியர்-ஸ்டோக்ஸ் மில்லினியம் சேலஞ்ச்' கணிதப் புதிருக்குத் தீர்வுகண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.</p><h2>அலைன்மென்ட் சிக்கல்</h2><p>AI அமைப்புகள் மனிதர்களின் நலனுக்கு விரோதமாக மாறாமல், மனித விருப்பப்படியே செயல்பட வைக்கும் தொழில்நுட்பத்திற்கு 'அலைன்மென்ட்' என்று பெயர். </p><p>தற்போதைய நிலையில், இந்த பாதுகாப்பு தொழில்நுட்பம் மிகவும் ஆரம்பக் கட்டத்திலேயே இருப்பதாகவும், ஆனால் AI-இன் செயல்திறன் அதைவிடப் பல மடங்கு வேகமாக வளர்ந்து வருவதாகவும் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.</p><h2>AI பாதுகாப்பு</h2><p>சூப்பர் இன்டெலிஜென்ட் எனப்படும் மனிதர்களை விடப் பல மடங்கு புத்திசாலித்தனமான AI அமைப்புகள் இன்னும் சில ஆண்டுகளில் உருவாக்கப்படலாம் என்பதால், மனித குலத்தின் பாதுகாப்பை உறுதிசெய்ய உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதே பணியிலிருந்து விலகிய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்களின் ஒருமித்த குரலாக உள்ளது.B</p>]]></content:encoded></item><item><title>தேசிய பொறியாளர்கள் தினம்: விஸ்வேஸ்வரய்யாவிற்கும் பொறியாளர் தினத்திற்கு என்ன சம்பந்தம்? </title><link>https://www.maalaimalar.com/news/topnews/why-is-visvesvaraya-linked-to-national-engineers-day</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/why-is-visvesvaraya-linked-to-national-engineers-day#comments</comments><guid isPermaLink="false">d3df7cc1-86aa-4c40-8c0c-907cdf192154</guid><pubDate>Tue, 15 Sep 2026 06:54:15 +0000</pubDate><atom:updated>2026-09-15T06:54:15.777Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>IIT,Digital India,Indian engineers,National Engineers Day,தேசிய பொறியாளர்கள் தினம்,Engineers Day 2026,Mokshagundam Visvesvaraya</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/6m8orumw/Engineers-Day-2026" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Engineers Day 2026 ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/6m8orumw/Engineers-Day-2026?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் ஆண்டுதோறும் செப்டம்பர் 15 அன்று <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">தேசிய பொறியாளர்கள் தினம் </a>மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்திய வரலாற்றின் மிகச்சிறந்த பொறியாளர், பொருளாதார மேதை, சிறந்த எழுத்தாளர் மற்றும் ராஜதந்திரி எனப் பன்முகத்தன்மை கொண்ட மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த நாளைப் போற்றும் வகையிலும், நாட்டின் வளர்ச்சிக்கு பொறியாளர்கள் ஆற்றி வரும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையிலும் இந்தத் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.</p><h2>நவீன மைசூரின் தந்தை</h2><p>விஸ்வேஸ்வரய்யா 1861 ஆம் ஆண்டு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE">கர்நாடகாவில் </a>உள்ள முட்டெனஹள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார். தனது உயர்கல்விக்காக சென்னைக்கு இடம்பெயர்ந்த அவர், <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">சென்னை பல்கலைக்கழகத்தில்</a> பி.ஏ. பட்டம் பெற்றார். பின்னர், அறிவியல் துறைக்கு மாறிய அவர், புனேயில் உள்ள அறிவியல் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் படித்துத் தேர்ந்தார்.</p><p>1912 முதல் 1918 வரை மைசூரின் திவானாகப் பொறுப்பு வகித்த அவர், பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்தார். இதன் காரணமாக "நவீன மைசூரின் தந்தை" என்று அவர் போற்றப்படுகிறார்.</p><h2>பொறியியல் சாதனைகள் மற்றும் பாரத ரத்னா</h2><p>விஸ்வேஸ்வரய்யா வெள்ள மேலாண்மை, நீர்ப்பாசனம் மற்றும் பொறியியல் துறையில் செய்த சாதனைகள் இன்றும் போற்றத்தக்கவை.</p><p>1908 ஆம் ஆண்டு மூசி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கிற்குப் பிறகு, உஸ்மான் சாகர் மற்றும் ஹிமாயத் சாகர் ஆகிய நீர்த்தேக்கங்களை வடிவமைத்து வெள்ளக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தினார்.</p><p>விசாகப்பட்டினம் துறைமுகத்தைக் கடல் அரிப்பிலிருந்து பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றினார்.</p><p>மைசூரின் தலைமைப் பொறியாளராக இருந்தபோது, அந்தப் பிராந்தியத்தின் நீர்ப்பாசனம் மற்றும் விவசாயத்திற்கு வாழ்வாதாரமாக விளங்கும் கிருஷ்ண ராஜ சாகர் அணையைக் கட்டுவதில் முக்கியப் பங்காற்றினார். தண்ணீரைச் சீராக ஒழுங்குபடுத்த தானியங்கி மதகுகளை அறிமுகப்படுத்தினார்.</p><p>"Planned Economy for India", "Reconstructing India" மற்றும் "Memoirs of My Working Life" உள்ளிட்ட பல முக்கிய புத்தகங்களையும் அவர் எழுதியுள்ளார்.</p><p>தொழில் மற்றும் பொதுப்பணித் துறையில் அவர் ஆற்றிய அசாத்திய பங்களிப்பைப் பாராட்டி, இந்திய அரசு 1955 ஆம் ஆண்டு நாட்டின் மிக உயரிய குடிமை விருதான<a href="https://www.maalaimalar.com/topic/bharat-ratna-award"> பாரத ரத்னா விருதை </a>அவருக்கு வழங்கி கௌரவித்தது.</p><h2><strong>தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளால் இயங்கும் பொறியாளர்களின் தசாப்தம்</strong></h2><p>இந்தியா ஆண்டுதோறும் சுமார் 15 லட்சம் பொறியியல் பட்டதாரிகளை உருவாக்குகிறது. நாட்டின் உள்கட்டமைப்பு, உத்திசார் தொழில்நுட்பங்கள் மற்றும் டிஜிட்டல் அமைப்புகளின் வளர்ச்சியில் பொறியாளர்கள் முக்கியப் பங்காற்றுகின்றனர்.</p><p>நெடுஞ்சாலைகள், பாலங்கள், மெட்ரோ நெட்வொர்க்குகள், அணைகள் மற்றும் மின் அமைப்புகளில் இவர்களின் பங்களிப்பு அளப்பரியது. ஆதார் , யுபிஐ மற்றும் டிஜிலாக்கர் போன்ற டிஜிட்டல் தளங்கள் பொறியாளர்களின் பெரும் உழைப்பால் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.</p><p>பாதுகாப்பு, விண்வெளி, அணுசக்தி, செயற்கை நுண்ணறிவு, ரோபாட்டிக்ஸ் ஆகிய துறைகளிலும் பொறியாளர்கள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.</p><p>2026 ஆம் ஆண்டின் நிலவரப்படி, நாட்டின் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி முறையின் முக்கிய அங்கமாக 23 இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், 31 தேசிய தொழில்நுட்பக் கழகங்கள் மற்றும் 26 இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகங்கள் விளங்குகின்றன.</p><p>உலகளாவிய தொழில்நுட்பம் தற்போது AI, செமிகண்டக்டர்கள், குவாண்டம் கம்ப்யூட்டிங், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் டீப் டெக் ஆகியவற்றை நோக்கி நகர்ந்து வரும் வேளையில், 2047 ஆம் ஆண்டிற்குள் 'விக்சித் பாரத்' (வளர்ந்த இந்தியா) என்ற நாட்டின் நீண்டகால இலக்கை அடைவதில் இந்தியப் பொறியாளர்கள் மிக முக்கியப் பங்காற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>கடலில் அலறித் தீர்த்த சான் பிரான்சிஸ்கோ மக்கள்: வினோத நிகழ்வின் பின்னணி என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/world/mass-scream-event-at-ocean-beach-san-francisco-stress-relief-gathering</link><comments>https://www.maalaimalar.com/news/world/mass-scream-event-at-ocean-beach-san-francisco-stress-relief-gathering#comments</comments><guid isPermaLink="false">21913bdb-375a-43db-bb70-7bde4fd6a00b</guid><pubDate>Tue, 15 Sep 2026 06:53:29 +0000</pubDate><atom:updated>2026-09-15T06:53:29.459Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,AI,San Francisco,modern lifestyle,Vocal Warm-ups,சான் பிரான்சிஸ்கோ,விஸ்டா டெல் மார்,ஓஷன் பீச்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/pcg6ipaa/sea.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ San Francisco]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/pcg6ipaa/sea.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தக் கூட்டு அலறல் நிகழ்வுக்கு முன்பாக, குரலின் அளவு, ஒலிக்கும் காலம் மற்றும் பாணி ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு கத்துதல் போட்டியும் நடத்தப்பட்டது. </p><p>அமெரிக்காவின் <a href="https://www.maalaimalar.com/news/national/shocking-video-of-a-car-hitting-a-female-biker-young-man-arrested-for-attempted-murder">சான் பிரான்சிஸ்கோ</a> நகரில் உள்ள 'ஓஷன் பீச்' கடற்கரையை ஒட்டிய 'விஸ்டா டெல் மார்' பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு, ஒரே நேரத்தில் கடலை நோக்கி உரக்க கத்தித் தங்களின் மன அழுத்தத்தை வெளிப்படுத்திய வினோத நிகழ்வு நடைபெற்றுள்ளது. "கடலை நோக்கி அடிவயிற்றிலிருந்து அலறும் நிகழ்வு" என்ற பெயரில் சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த டேனியல் ஈகன் என்பவரால் இந்த வித்தியாசமான கூட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது.</p><p>இன்றைய நவீன வாழ்க்கை முறையில் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு அழுத்தங்களே இந்த நிகழ்வுக்கான பிரதானக் காரணம். வாழ்க்கை செலவு அதிகரிப்பு, வீட்டின் வாடகை உயர்வு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சியால் ஏற்படும் வேலைவாய்ப்பு பயம், தனிமை, குடும்பப் பிரச்சனைகள் மற்றும் பொருளாதாரச் சவால்கள் என பலதரப்பட்ட மன அழுத்தங்களால் அவதியுறும் மக்கள், தங்களின் கோபத்தையும் விரக்தியையும் வெளிப்படுத்தவே இந்த மேடடைப் பயன்படுத்திக் கொண்டனர்.</p><h2>வெற்<strong>றி பெற்ற</strong> குரல்</h2><p>இந்தக் கூட்டு அலறல் நிகழ்வுக்கு முன்பாக, குரலின் அளவு, ஒலிக்கும் காலம் மற்றும் பாணி ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு கத்துதல் போட்டியும் நடத்தப்பட்டது. இதில் ஒலிம்பியா குக்லியெமோட்டோ என்ற பெண்மணி 121.9 டெசிபல் ஒலியில் அலறி முதல் பரிசை தட்டினார். இது உலக சாதனையான 129 டெசிபலுக்கு மிக நெருக்கமான அளவாகும். முதல் பரிசு பெற்ற அவருக்கு வெகுமதியாக ஒரு சிறிய மெகா போன் வழங்கப்பட்டது.</p><p>இந்த நிகழ்வு வெறும் கத்துதலோடு மட்டும் முடிந்துவிடவில்லை. நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு குரல் தசைப் பயிற்சிகள் அளிக்கப்பட்ட பின்னரே அலறல் போட்டிகள் தொடங்கின. இறுதியாக மாலை வேளையில் அனைவரும் இணைந்து ஒரே நேரத்தில் மிகப்பெரிய ஒலியில் அலறித் தங்கள் மன பாரத்தை குறைத்துக் கொண்டனர். நிகழ்வின் நிறைவாக, பங்கேற்பாளர்கள் கொண்டு வந்த நறுக்கிய பழங்களை பகிர்ந்து உண்டு தங்களின் மன அழுத்தத்தை குறைக்கும் ஒரு ஆரோக்கியமான சமூக கூட்டமாக இதை முடித்தனர்.</p>]]></content:encoded></item></channel></rss>