<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 06 Sep 2026 18:40:48 +0000</lastBuildDate><item><title>60 ஆண்டுகளில் முதல்முறை: மோன்சாவில் இத்தாலியன் கிராண்ட் பிரிக்ஸ் வென்ற முதல் இத்தாலிய வீரர் ஆனார் கிமி அன்டோனெல்லி</title><link>https://www.maalaimalar.com/sports/f1-leader-kimi-antonelli-wins-italian-gp</link><comments>https://www.maalaimalar.com/sports/f1-leader-kimi-antonelli-wins-italian-gp#comments</comments><guid isPermaLink="false">ffdd6196-b686-4a9b-a12c-5fdfde986c63</guid><pubDate>Sun, 06 Sep 2026 18:07:18 +0000</pubDate><atom:updated>2026-09-06T18:07:18.226Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>F1,Italian GP,இத்தாலியன் ஜிபி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/weoivtcb/Kimi-Antonelli.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kimi Antonelli]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/weoivtcb/Kimi-Antonelli.png?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>F1-இல் முன்னிலையில் உள்ள கிமி அன்டோனெல்லி, பின்தங்கிய நிலையில் இருந்து அபாரமாக முன்னேறி இத்தாலிய கிராண்ட் பிரிக்ஸ் (GP) <a href="https://www.maalaimalar.com/sports">போட்டியில்</a> வெற்றி பெற்றார்.</p><p>இத்தாலியின் மோன்சாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில், கிமி அன்டோனெல்லி, ஃபார்முலா 1 வரலாற்றிலேயே மிக இளம் வயது சாம்பியன் ஆவதற்கான முக்கிய அடியை எடுத்து வைத்தார்.</p><p>தொடக்க வரிசையில் 19-ஆவது இடத்தில் இருந்து புறப்பட்ட போதிலும், அன்டோனெல்லி இத்தாலிய கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் சீறிப்பாய்ந்து வெற்றி பெற்றார். மெர்சிடிஸ் அணியை சேர்ந்த இவர், முன்னணி இடத்தைப் பிடிக்க 17 சுற்றுகளுக்கும் (laps) குறைவான நேரத்தையே எடுத்துக்கொண்டார்.</p><h2>முதல் இத்தாலிய வீரர்:</h2><p>பந்தயத்தின் மீதமுள்ள நேரம் முழுவதும், தனது அணி வீரரும் சாம்பியன்ஷிப் போட்டியில் தனக்கு கடும் போட்டியாளராக இருப்பவருமான ஜார்ஜ் ரஸ்ஸலுடன் முன்னிலைக்கான கடும் போட்டியில் ஈடுபட்டார். பந்தயம் முடிய மூன்று சுற்றுகள் இருந்த நிலையில் ரஸ்ஸலை முந்தி சென்ற அன்டோனெல்லி, கடந்த 60 ஆண்டுகளில் மோன்சாவில் வெற்றி பெற்ற முதல் இத்தாலிய வீரர் என்ற பெருமையை பெற்றார்.</p><p>பந்தய தூரத்தை கடந்து வெற்றி பெற்ற பிறகு, அணி ரேடியோவில் பேசிய அன்டோனெல்லி, "கடவுளே, இது ஒரு கனவு போல இருக்கிறது. நம்பவே முடியவில்லை, நான் இதை எதிர்பார்க்கவே இல்லை," என்று கூறினார்.</p><p>தொடர்ந்து பேசிய அவர், "நம்பவே முடியவில்லை. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்; இன்று இந்த நிலையில் இருப்பேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை, ஆனால் நாங்கள் அதை சாதித்துவிட்டோம். நான் உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்," என்று தெரிவித்தார்.</p><h2>இரண்டாவது சிறந்த நிகழ்வு:</h2><p>ஒரு கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் மிகக் குறைந்த தொடக்க நிலையில் இருந்து வந்து வெற்றி பெற்றவர்களில் இது இரண்டாவது சிறந்த நிகழ்வாகும். இதற்கு முன், 1983-இல் லாங் பீச் போட்டியில் ஜான் வாட்சன் 22-ஆவது இடத்தில் இருந்து புறப்பட்டு வெற்றி பெற்றிருந்தார்.</p><p>"சிறந்த பந்தயம் இனிமேல்தான் வரவிருக்கிறது. ஆனால், இதுவரை நான் பங்கேற்ற பந்தயங்களிலேயே இது மிக சிறந்தவற்றில் ஒன்று என்றும், இதை நான் என்றென்றும் நினைவில் கொள்வேன் என்றும் உணர்கிறேன்," என்று 20 வயதான அன்டோனெல்லி கூறினார்; இவர் F1-இல் தனது இரண்டாவது சீசனில் போட்டியிடுகிறார்.</p>]]></content:encoded></item><item><title>முத்தரப்பு டி20 தொடர்: ஜிம்பாப்வே அணியை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா அணி சாம்பியன்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/tri-series-t20-south-africa-champions</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/tri-series-t20-south-africa-champions#comments</comments><guid isPermaLink="false">4b68214d-0620-4fce-8752-99729fe80261</guid><pubDate>Sun, 06 Sep 2026 17:10:36 +0000</pubDate><atom:updated>2026-09-06T17:10:36.098Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தென் ஆப்பிரிக்கா,zimbabwe,ஜிம்பாப்வே,South Africa,முத்தரப்பு டி20 தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/b3rcakn8/SA-Win.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ South Africa Winners]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/b3rcakn8/SA-Win.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நமீபியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 <a href="https://www.maalaimalar.com/sports/cricket">கிரிக்கெட்</a> தொடர் கடந்த 28-ஆம் தேதி தொடங்கியது. </p><p>இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணகள் களமிறங்கின. இன்று நடைபெற்ற இந்தப் போட்டியில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE">தென் ஆப்பிரிக்கா</a> அணி ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது.</p><h2>205 ரன்கள் குவிப்பு:</h2><p>நமீபியாவின் தலைநகரான விண்ட்ஹோக்கில் உள்ள மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது.</p><p>தொடக்க ஆட்டக்காரர்களான ஜோர்டன் ஹெர்மன் 29 பந்துகளில் 53 ரன்களும், கானர் 23 பந்துகளில் 32 ரன்களும் சேர்க்க டிவால்ட் பிரெவிஸ் 23 பந்துகளில் 32 ரன்களும் எடுத்தனர்.</p><p>ஜோர்டானின் சகோதரரான ரூபின் ஹார்மன் 16 பந்துகளில் 27 ரன்களும், டுவேன் ஜான்சன் 14 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 23 ரன்களை எடுத்தார். தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்களை எட்டியது. இதனால் ஜிம்பாப்வே 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.</p><h2>ஜிம்பாப்வே சொதப்பல்:</h2><p>சற்றே கடின இலக்கை துரத்திய ஜிம்பாப்வே அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய ப்ரியன் பென்னெட் 6 ரன்களுக்கும், இவருடன் களமிறங்கிய பென் கர்ரன் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். பிறகு களமிறங்கிய இன்னோசன்ட் கயா 9 ரன்களை எடுக்க, இவருடன் ஆடிய வெஸ்லி 6 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர்.</p><p>அடுத்தடுத்து களமிறங்கியவர்களில் கேப்டன் சிக்கந்தர் ராஸா 16 ரன்கள், ரியான் புல் 13 ரன்கள், தடிவான்ஷி 3 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையில், பிராட் எவான்ஸ் களமிறங்கினார். கடின இலக்கை துரத்தும் நிலையில், தொடக்கத்திலேயே விக்கெட்டுகள் சரிந்த போதிலும், இவர் சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் கவனம் செலுத்தினார்.</p><p>இவர் 31 பந்துகளில் 56 ரனகளை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். எனினும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜிம்பாப்வே அணி 18 ஓவர்கள் முடிவில் 157 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால், தென் ஆப்பிரிக்கா அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு, முத்தரப்பு டி20 தொடரின் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.</p>]]></content:encoded></item><item><title>போர்க் கப்பல்களைத் தாக்கினால் ஈரான் எண்ணெய் கப்பல்களை தகர்ப்போம்- அமெரிக்கா எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/world/iranian-attack-on-us-warships-will-lead-to-oil-tanker-strikes-us-warns</link><comments>https://www.maalaimalar.com/news/world/iranian-attack-on-us-warships-will-lead-to-oil-tanker-strikes-us-warns#comments</comments><guid isPermaLink="false">954de0af-d710-4aac-a2f7-4a0fab44fc89</guid><pubDate>Sun, 06 Sep 2026 16:31:47 +0000</pubDate><atom:updated>2026-09-06T16:31:47.017Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,America,Iran,Warship,போர் கப்பல்,ஈரான் எண்ணெய் கப்பல்,oil ship</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/4obsyzzy/gladiators1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Warship ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/4obsyzzy/gladiators1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய கிழக்கு போரில் அமெரிக்கா-ஈரான் இடையே மீண்டும் மோதல் வெடித்து உள்ளது. இதற்கிடையே அமெரிக்க கடற்படை கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.</p><p>இதற்கு பதிலடியாக ஈரானின் 3 எண்ணெய் கப்பல்களை அமெரிக்க ராணுவம் தாக்கி தகர்த்து உள்ளது. இந்த தாக்குதல்கள் தொடர்பான வீடியோவை அமெரிக்க ராணுவம் வெளியிட்டு உள்ளது.</p><p>இந்தநிலையில் ஈரானுக்கு அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-</p><p>அமெரிக்க கடற்படைக் கப்பல்களை ஈரான் தாக்கினால் அந்நாட்டின் எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா அழித்து மூழ்கடிக்கும். அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் அமெரிக்க கடற்படையை நோக்கிச் சுடாமல் இருப்பது தான் அவர்களுக்கு நல்லது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><p>அதேபோல் அமெரிக்கக் கப்பல்களைத் தாக்கினால் ஈரான் அதிக பொருளாதார இழப்பைச் சந்திக்கும் என்று அமெரிக்க மத்திய கட்டளைத் தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் தெரிவித்து உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>லெபனான் மீது இஸ்ரேல் சரமாரி தாக்குதல்.. பெண்கள் உட்பட 4 பேர் பலி - 20 பேர் படுகாயம்</title><link>https://www.maalaimalar.com/news/world/israel-launches-barrage-of-attacks-on-lebanon-4-killedincluding-womenand-20-critically-injured</link><comments>https://www.maalaimalar.com/news/world/israel-launches-barrage-of-attacks-on-lebanon-4-killedincluding-womenand-20-critically-injured#comments</comments><guid isPermaLink="false">1d184a10-cf83-44d3-a9f8-0aa6f0db697d</guid><pubDate>Sun, 06 Sep 2026 16:17:49 +0000</pubDate><atom:updated>2026-09-06T16:17:49.622Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இஸ்ரேல்,Israel,airstrike,வான்வழித் தாக்குதல்,lebanon,லெபனான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/0xvt2lm6/tn-25.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ லெபனான் ]]></media:title><media:description type="html"><![CDATA[ லெபனான் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/0xvt2lm6/tn-25.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>லெபனானில் இன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் காயமடைந்தனர்.</p><p>தெற்கு <a href="https://www.maalaimalar.com/news/world/israels-ongoing-attacks-on-lebanon-death-toll-surpasses-4000">லெபனானின் </a>நபதியே  மாவட்டத்தைக் குறிவைத்து இன்று காலை முதல் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. </p><p>கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவின் மத்யஸ்தத்தில் ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை மீறி இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. </p> <h2>சேதம் </h2><p>லெபனான் சுகாதார அமைச்சகத்தின்படி, நபதியே அல் பெவ்கா பகுதியில் இருவரும், அரப் சலீம் நகரில் இரு பெண்களும் உயிரிழந்தனர். </p><p>அரப் சலீம் பகுதியில் இரு சிறுமிகள் உட்பட 6 பேரும், நபதியேவின் அல் ரஹ்பத் பகுதியில் 8 பேரும், கபார் ரம்மான் பகுதியில் 4 பெண்களும் காயமடைந்துள்ளனர்.</p><p>இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் தொன்மை வாய்ந்த கட்டிடங்கள், முன்னாள் மேயரின் இல்லம், பூங்கா ஆகியவை கடுமையாக சேதமடைந்தன.</p><p>பயன்பாட்டில் இல்லாமல் இருந்த மருத்துவமனை கட்டிடம் இந்தத் தாக்குதலில் முற்றிலும் தரைமட்டமாக்கப்பட்டது.</p><p>சர்வதேச மனிதநேயச் சட்டங்களை மீறி மருத்துவமனை மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை லெபனான் சுகாதார அமைச்சகம் கடுமையாகக் கண்டித்துள்ளது.</p><p>நபதியேவில் அமைந்துள்ள லெபனான் நிதி அமைச்சகத்தின் பிராந்திய அலுவலகக் கட்டிடம் பீரங்கித் தாக்குதலால் பலத்த சேதமடைந்தது.</p> <h2>ஏன் தாக்குதல்?</h2><p>தெற்கு லெபனானில் உள்ள தனது பாதுகாப்பு மண்டலத்தை இலக்கு வைத்து ஹாய்ஸ்புல்லா அமைப்பு இரு வெடிபொருள் நிரப்பப்பட்ட டிரோன்களை ஏவியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.</p><p>இதனை போர்நிறுத்த ஒப்பந்தத்தின் மீறல் எனக் குறிப்பிட்ட இஸ்ரேல் ராணுவம் பதிலடியாக தெற்கு லெபனானில் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது.</p>  <h2>லெபனான் அதிபர் கண்டனம்</h2><p>இந்தத் தாக்குதல்கள் குறித்துப் பேசிய லெபனான் அதிபர் ஜோசப் அவுன், அரசு நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் அபாயகரமான போக்கைக் காட்டுவதாகச் சாடினார்.</p><p>அமெரிக்கா மற்றும் சர்வதேச சமூகம் உடனடியாகத் தலையிட்டு இஸ்ரேலின் தாக்குதல்களை தடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>திரையரங்குகளில் &quot;கிளாடியேட்டர்ஸ்&quot; டிரெய்லர்- ஆரவாரத்துடன் கண்டுகளித்த  அஜித் ரசிகர்கள்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ajith-gladiators-trailer-theatres-fans-cheer</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ajith-gladiators-trailer-theatres-fans-cheer#comments</comments><guid isPermaLink="false">26a7cf0c-3b5d-40db-9542-d6ccc3953a0b</guid><pubDate>Sun, 06 Sep 2026 15:55:16 +0000</pubDate><atom:updated>2026-09-06T15:55:16.471Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>Ajith kumar,டிரெய்லர்,Trailer,அஜித் குமார்,GLADIATORS,கிளாடியேட்டர்ஸ்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/egp45g2r/Gladiators.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gladiators]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/egp45g2r/Gladiators.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>'கிளாடியேட்டர்ஸ்' ஆவணப்படத்தின் சிறப்பு டிரெய்லர் இன்று மாலை திரையரங்குகளில் திரையிடப்பட்டது.</p> <p>தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், 1993-ஆம் ஆண்டு 'அமராவதி' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி, 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.</p><p>சினிமாவுடன் கார் பந்தயத்திலும் தீவிர ஆர்வம் கொண்டுள்ள அஜித், 'குட் பேட் அக்லி' படத்திற்குப் பிறகு மீண்டும் சர்வதேச ரேசிங் போட்டிகளில் முழு கவனம் செலுத்தி வருகிறார். தனது சொந்த அணியான 'அஜித்குமார் ரேசிங்' மூலம் பல்வேறு சர்வதேச தொடர்களில் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகிறார்.</p><h2>ஆவணப்படம்</h2><p>இதற்கிடையே, அஜித்தின் சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'கிளாடியேட்டர்ஸ் - இன் பர்சூட் ஆஃப் சேலஞ்சஸ்' (Gladiators - In Pursuit of Challenges) என்ற ஆவணப்படத்தை இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.</p><p>துபாய், அபுதாபி மற்றும் ஐரோப்பிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் தொடர்களான Asian Le Mans மற்றும் 24H Series போட்டிகளில் அஜித் பங்கேற்ற தருணங்கள் இதில் நேரடியாக பதிவு செய்யப்பட்டுள்ளன. பிலிப் சாரியட் மோட்டார் ஸ்போர்ட் சார்பில் இத்தாலியின் வெனிஸ் நகரத்தில் இந்தாண்டுக்கான 'ஜென்டில்மேன் ஓட்டுநர் விருது' அஜித்துக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.</p><h2>டிரெய்லர் வெளியீடு</h2><p>'கிளாடியேட்டர்ஸ்' ஆவணப்படத்தின் சிறப்பு டிரெய்லர் இன்று மாலை 6.40 மணிக்கு வெளியானது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள தேர்வு செய்யப்பட்ட முக்கிய திரையரங்குகளில் ரசிகர்களுக்காக இந்த டிரெய்லர் திரையிடப்பட்டது.</p><p>3 நிமிடங்களுக்கும் அதிகமான நீளம் கொண்ட இந்த டிரெய்லருக்கு மத்திய தணிக்கை வாரியம் U/A 13 சான்றிதழ் வழங்கியுள்ளது.</p><h2>ரசிகர்கள் உற்சாகம்</h2><p>GLADIATORS ட்ரெய்லரைக் காண ரோகிணி திரையரங்கிற்கு இயக்குநர் சிறுத்தை சிவா வருகை தந்தார். இதேபோல், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் வருகை தந்தார்.</p><p>கிளாடியேட்டர்கள் டிரெய்லரை காண ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். அவர்கள் முன்னிலையில் டிரெய்லர் காட்சியிடப்பட்டது. ரசிகர்கள் ஆரவாரத்துடன் டிரெய்லரை கண்டு ரசித்தனர்.</p><h2>டேர்டெவில்</h2><p>ஆதிக் ரவிச்சந்திரனுடன் மீண்டும் கூட்டணி</p><p>இதற்கிடையே, 'குட் பேட் அக்லி' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் அஜித் மீண்டும் இணைந்துள்ளார்.</p><p>அஜித்தின் 64-வது திரைப்படமாக உருவாகி வரும் இந்தப் படத்திற்கு 'டேர்டெவில்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி அஜித்குமார் தயாரிக்கிறார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/Gladiators?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Gladiators</a> - Trailer.. Made like an Actual film..⭐ Thala <a href="https://x.com/hashtag/Ajithkumar?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Ajithkumar</a>&#39;s Presence always.. AK&#39;s Family is also featured in the trailer.. <a href="https://t.co/pBzPoaJLmH">pic.twitter.com/pBzPoaJLmH</a></p>&mdash; Laxmi Kanth (@iammoviebuff007) <a href="https://x.com/iammoviebuff007/status/2096590833122484596?ref_src=twsrc%5Etfw">September 6, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>மிகுந்த வேதனையளிக்கிறது.. டெல்லி மாணவர் விடுதி இடிந்த விபத்தில் 3 பேர் பலி -  பிரதமர் மோடி இரங்கல்</title><link>https://www.maalaimalar.com/news/national/deeply-distressing-pm-modi-condoles-the-collapse-of-a-student-hostel-in-delhi</link><comments>https://www.maalaimalar.com/news/national/deeply-distressing-pm-modi-condoles-the-collapse-of-a-student-hostel-in-delhi#comments</comments><guid isPermaLink="false">b2e77ba9-c6b9-4faa-a697-480957982375</guid><pubDate>Sun, 06 Sep 2026 15:31:19 +0000</pubDate><atom:updated>2026-09-06T15:31:19.329Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டெல்லி பல்கலைக்கழகம்,பிரதமர் மோடி,டெல்லி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/tjdkk2zg/tn-24.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டெல்லி விபத்து, பிரதமர் மோடி ]]></media:title><media:description type="html"><![CDATA[ டெல்லி விபத்து, பிரதமர் மோடி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/tjdkk2zg/tn-24.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்த விடுதிக் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.</p> <p>டெல்லியின் சத்ய நிகேதன் பகுதியில் அமைந்துள்ள 'ஹாஸ்டல் டேஸ்' என்ற 5 மாடி மாணவர்கள் தங்கும் தனியார் பிஜி விடுதி கட்டிடம் இன்று மதியம் 1:30 மணியளவில் திடீரென <a href="https://www.maalaimalar.com/news/national/one-person-died-in-the-collapse-of-the-delhi-student-hostel-3-people-are-worried-will-pm-modi-explain-this-deepak-question">இடிந்து விழுந்து விபத்து</a>க்குள்ளானது.</p><p>டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்திற்கு அருகில் உள்ள இந்த விடுதியில் தங்கியிருந்த சுமார் 50 டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.</p> <h2>மீட்பு</h2><p>தேசிய பேரிடர் மீட்புப் படை டெல்லி தீயணைப்புத் துறை இணைந்து மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மூன்று பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. </p><p>இடிபாடுகளிலிருந்து 9 மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.</p> <p>அதில் 5 மாணவர்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>சுமார் 20 ஆண்டுகள் பழமையான இந்தக் கட்டிடத்தின் அடித்தளத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்ததே விபத்திற்குக் காரணம் என உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.</p><p>கட்டிடத்தின் உரிமையாளரை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.</p> <h2>பிரதமர் இரங்கல்</h2><p>இந்நிலையில் இந்த விபத்துக்கு பிரதமர் மோடி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.</p><p>அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "டெல்லி சத்ய நிகேதனில் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது. இதில் தங்களது அன்பிற்குரியவரை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.</p><p>காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். அதிகாரிகள் சம்பவ இடத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.</p>  <h2>முதலமைச்சர் ரேகா குப்தா ஆய்வு</h2><p>விபத்து நடந்த இடத்தையும் நிலைமையையும் ஆய்வு செய்த டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, தவறு செய்தவர்கள் தப்ப முடியாது என தெரிவித்துள்ளார்.</p><p>செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "இதுவரை 11 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</p><p>இடிபாடுகளில் சிக்கியுள்ள மாணவர்களின் உயிரைக் காப்பாற்றுவதே எங்களது முன்னுரிமை.</p> <p>இந்தக் கட்டிடம் மிகவும் பழமையானது. அடித்தளத்தில்சில தோண்டும் மற்றும் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தன. அதன் காரணமாகத் தூண் ஒன்று சரிந்து மொத்த கட்டிடமும் இடிந்து விழுந்துள்ளது" என்றார். </p><p>இந்த விபத்திற்கு காரணமான கட்டிடத்தின் உரிமையாளராக இருந்தாலும் சரி அல்லது அரசு அதிகாரியாக இருந்தாலும் சரி, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்பாகத் தப்ப முடியாது" என்று தெரிவித்தார்.</p> <h2>காங்கிரஸ்</h2><p>விபத்து குறித்துக் கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் டேனிஷ் அலி, "பாஜகவின் ஊழலால் டெல்லி மாணவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர்.</p><p>நேற்று தான் பிரதமர் மோடி டெல்லி பல்கலைக்கழகத்திற்கு வந்து சென்றார்.</p><p>ஆனால் அவர் நாட்டின் கல்வி முறை குறித்தோ அல்லது இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்தோ பேசவில்லை, மாறாக அரசியல் பேசி, கேள்வி கேட்பவர்களை 'திமாகி நக்சல்கள்' என அழைத்தார்.</p><p>பிரதமரே, இந்த நாட்டிற்கு நீங்கள் எத்தகைய ஆட்சியை கொடுத்துக்கொண்டிருக்கிறீர்கள்?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>10 ஆண்டு கோரிக்கை நிறைவேற்றம்: ஆனைகட்டியில் வாரச்சந்தையை திறந்து வைத்தார் எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mla-kanimozhi-santhosh-inaugurates-anaikatti-weekly-market</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mla-kanimozhi-santhosh-inaugurates-anaikatti-weekly-market#comments</comments><guid isPermaLink="false">9e0d5e01-6352-4a24-842f-758d171f2083</guid><pubDate>Sun, 06 Sep 2026 15:09:37 +0000</pubDate><atom:updated>2026-09-06T15:09:37.456Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,வாரச்சந்தை,weekly market,tvk,Kanimozhi Santhosh,கனிமொழி சந்தோஷ்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/8uy9w1zf/kanimozhi1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TVK MLA Kanimozhi Santhosh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/8uy9w1zf/kanimozhi1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆனைகட்டியில் மலைவாழ் மக்கள் மற்றும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் புதிய வாரச்சந்தை திறந்து வைக்கப்பட்டது.</p><p>ஆனைகட்டி பகுதி மக்களின் கடந்த 10 ஆண்டுகால கோரிக்கையை கருத்தில் கொண்டு, மலைவாழ் மக்களின் உற்பத்திப் பொருட்களை நேரடியாக விற்பனை செய்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வாரச்சந்தை அமைக்கப்பட்டுள்ளது.</p><p>இதற்கான இடத்தை வாடகைக்கு எடுத்து <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88" rel="nofollow">வாரச்சந்தை</a> செயல்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. </p><p>இந்த முயற்சிக்கு ஒன்றிய செயலாளர் ரஞ்சித் குமார் எடுத்த முயற்சியும் முக்கிய பங்காற்றியது. வாரச்சந்தையை சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் திறந்து வைத்து, பொதுமக்கள் மற்றும் மலைவாழ் மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><p>ஆனைகட்டி மக்கள் மற்றும் மலைவாழ் மக்களின் தொழில் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குத் தமிழக வெற்றிக் கழக அரசு (தவெக அரசு) உறுதுணையாக இருக்கும் என உறுதியளித்தார்.</p><p>மேலும், மலைவாழ் மக்கள் தங்களது உற்பத்திப் பொருட்களை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக விற்பனை செய்யும் வகையில் சந்தை தொடர்ந்து செயல்படுவதற்கான தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><p>இந்த வாரச்சந்தை மூலம் ஆனைகட்டி மற்றும் சுற்றுவட்டார மலைப்பகுதி மக்களுக்கு புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>முத்தரப்பு டி20 தொடர் இறுதிப்போட்டி: ஜிம்பாப்வேவுக்கு 206 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/tri-nation-t20-series-final-south-africa-sets-zimbabwe-a-target-of-206-runs</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/tri-nation-t20-series-final-south-africa-sets-zimbabwe-a-target-of-206-runs#comments</comments><guid isPermaLink="false">082a0a0d-a6eb-4471-b34b-5dd8f9c854bb</guid><pubDate>Sun, 06 Sep 2026 15:03:24 +0000</pubDate><atom:updated>2026-09-06T15:03:24.712Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தென் ஆப்பிரிக்கா,ஜிம்பாப்வே,முத்தரப்பு டி20 தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/ditn4ibi/tn-22.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தென் ஆப்பிரிக்கா]]></media:title><media:description type="html"><![CDATA[ தென் ஆப்பிரிக்கா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/ditn4ibi/tn-22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டியில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா 205 ரன்களை சேர்த்துள்ளது.</p> <p>நமீபியா, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான<a href="https://www.maalaimalar.com/sports/cricket/south-africa-beat-namibia-in-triseries"> முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் </a>கடந்த 28-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.</p><p>முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே அணிகள் இன்று விளையாடி வருகின்றன. </p> <p>நமீபியாவின் தலைநகரான விண்ட்ஹோக்கில் உள்ள மைதானத்தில் நடந்து வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது தென்னாப்பிரிக்கா.</p><p>தொடக்க ஆட்டக்காரர்களான ஜோர்டன் ஹெர்மன் 29 பந்துகளில் 53 ரன்களும், கானர் 23 பந்துகளில் 32 ரன்களும் சேர்க்க டிவால்ட் பிரெவிஸ் 23 பந்துகளில் 32 ரன்களும் எடுத்தார்.</p> <p>ஜோர்டானின் சகோதரரான ரூபின் ஹார்மன் 16 பந்துகளில் 27 ரன்களும், டுவேன் ஜான்சன் 14 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 23 ரன்களும் எடுத்தார்.</p><p>தென்னாப்பிரிக்கா 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்களை எட்டியுள்ளது. ஜிம்பாப்வே 206 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறும்.</p> <h2>நமீபியா-தென் ஆப்பிரிக்கா</h2><p>முன்னதாக நேற்று நடந்த  6வது லீக் ஆட்டத்தில் நமீபியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற நமீபியா அணி பவுலிங் தேர்வு செய்தது. தென் ஆப்பிரிக்கா 228 ரன்கள் குவித்தது. </p><p>229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நமீபியா களமிறங்கியது. </p><p>ஆனால் நமீபியா 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 217 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்றது.</p>]]></content:encoded></item><item><title>டெல்லி மாணவர் விடுதி இடிந்த விபத்தில் ஒருவர் பலி.. 3 பேர் கவலைக்கிடம் - பிரதமர் மோடி இதற்கு விளக்கம் தருவாரா? -  தீப்கே கேள்வி </title><link>https://www.maalaimalar.com/news/national/one-person-died-in-the-collapse-of-the-delhi-student-hostel-3-people-are-worried-will-pm-modi-explain-this-deepak-question</link><comments>https://www.maalaimalar.com/news/national/one-person-died-in-the-collapse-of-the-delhi-student-hostel-3-people-are-worried-will-pm-modi-explain-this-deepak-question#comments</comments><guid isPermaLink="false">c08ef2f6-925a-405f-a42a-93f8029bf9a6</guid><pubDate>Sun, 06 Sep 2026 14:42:53 +0000</pubDate><atom:updated>2026-09-06T14:42:53.851Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,டெல்லி பல்கலைக்கழகம்,delhi university,delhi,பிரதமர் மோடி,டெல்லி,அபிஜித் தீப்கே,Abhijit Deepke</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/0bevlmwd/tn-21.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தீப்கே, விபத்து, மோடி ]]></media:title><media:description type="html"><![CDATA[ தீப்கே, விபத்து, மோடி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/0bevlmwd/tn-21.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்த விடுதிக் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிப்பாரா என சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே கேள்வி எழுப்பியுள்ளார். </p> <p><a href="https://www.google.com/search?q=டெல்லி+maalaimalar&amp;oq=டெல்லி++ma&amp;gs_lcrp=EgZjaHJvbWUqCAgBEEUYJxg7MgYIABBFGDkyCAgBEEUYJxg7MggIAhAAGBYYHjIICAMQABgWGB4yCAgEEAAYFhgeMgYIBRBFGDwyBggGEEUYPDIGCAcQRRg80gEIMjE3NGowajmoAgCwAgA&amp;sourceid=chrome&amp;source=chrome.ob&amp;ie=UTF-8">டெல்லியின் </a>சத்ய நிகேதன் பகுதியில் அமைந்துள்ள 'ஹாஸ்டல் டேஸ்' என்ற 5 மாடி மாணவர்கள் தங்கும் தனியார் பிஜி விடுதி கட்டிடம் இன்று மதியம் 1:30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.</p><p>டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்திற்கு அருகில் உள்ள இந்த விடுதியில் தங்கியிருந்த சுமார் 50 டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.</p> <h2>மீட்பு</h2><p>தேசிய பேரிடர் மீட்புப் படை டெல்லி தீயணைப்புத் துறை இணைந்து மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதுவரை ஒரு உயிரழப்பு பதிவாகியுள்ளது.</p><p>இடிபாடுகளிலிருந்து 6 முதல் 7 மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.</p> <p>அதில் எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டுள்ள 3 மாணவர்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>சுமார் 20 ஆண்டுகள் பழமையான இந்தக் கட்டிடத்தின் அடித்தளத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்ததே விபத்திற்குக் காரணம் என உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.</p><p>கட்டிடத்தின் உரிமையாளரை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.</p> <h2>விமர்சனம்</h2><p>இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீபகே பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.</p><p>அபிஜித் தீபகே வெளியிட்ட எக்ஸ் பதிவில், "<a href="https://www.maalaimalar.com/news/national/for-them-the-glass-is-never-half-full-prime-minister-modi-hits-back-at-criticisms-regarding-gdp">நேற்று பிரதமர் டெல்லி பல்கலைக்கழகத்திற்கு</a> வந்து அரசியல் உரையாற்றினார். 'திமாகி நக்சல்' (அறிவுஜீவி நக்சல்) என்ற வார்த்தையை பயன்படுத்தி அரசியல் விமர்சனம் செய்தார்.</p><p>ஆனால் நமது கல்வி உள்கட்டமைப்பின் நிலை குறித்து மிகக் குறைவாகவே பேசினார். </p><p>இன்று தெற்கு வளாகத்தில் உள்ள விடுதி கட்டிடம் இடிந்து விழுந்து, மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் முழுமையாகத் தெரியவில்லை.</p> <p>சீரழிந்து வரும் உள்கட்டமைப்பு மற்றும் அரசின் அலட்சியப் போக்கிற்கு இந்த நாட்டின் மாணவர்கள் இன்னும் எவ்வளவு காலம் விலைகொடுக்க வேண்டும்?</p><p>பழங்குடியின பகுதிகளில் போதிய பராமரிப்பு இல்லாததால் மாணவர்கள் உயிரிழந்து வரும் நிலையில் நாட்டின் தலைநகரில் படிக்கும் மாணவர்களுக்கே பாதுகாப்பு இல்லை.</p><p>மாணவர்களுக்குப் பாதுகாப்பான வகுப்பறைகளும், பாதுகாப்பான விடுதிகளும், அடிப்படை கண்ணியமும் தேவை.</p> <p>இது மிகவும் அதிகமான கோரிக்கையா? பிரதமர் மீண்டும் டெல்லி பல்கலைக்கழகத்திற்கு வந்து இது எப்படி நடந்தது என்று விளக்கம் அளிப்பாரா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>டெல்லி மாநகராட்சியின் கட்டிடத் துறையில் நிர்வாகப் பொறியாளர் பணிமாற்றத்திற்கு ரூ. 1.25 கோடி லஞ்சம் பெறப்படுவதாகக் குற்றம் சாட்டிய ஆம் ஆத்மி தலைவர் சவுரப் பரத்வாஜ், இத்தகைய ஊழல்களே தொடர் விபத்துகளுக்குக் காரணம் என்றார்.</p><p>போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>போதைப் பொருள் வழக்கு: தொலைக்காட்சி பெண் தொகுப்பாளர் உள்பட 12 பேருக்கு மரண தண்டனை- எகிப்து நீதிமன்றம் தீர்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/death-penalty-for-tv-presenter-and-11-others-in-egypt-drug-trial</link><comments>https://www.maalaimalar.com/news/world/death-penalty-for-tv-presenter-and-11-others-in-egypt-drug-trial#comments</comments><guid isPermaLink="false">e47324eb-93c2-4882-8f3d-c847b1670a37</guid><pubDate>Sun, 06 Sep 2026 14:19:19 +0000</pubDate><atom:updated>2026-09-06T14:19:19.249Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மரண தண்டனை,Drug Case,death sentence,போதைப் பொருள் வழக்கு,egypt court,எகிப்து நீதிமன்றம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/jh98vwt3/TV-Presenter.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Egypt TV Presenter]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/jh98vwt3/TV-Presenter.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>போதைப் பொருள் வழக்கில் தொலைக்காட்சி பெண் தொகுப்பாளர் உள்பட 12 பேருக்கு மரண தண்டனை விதித்து எகிப்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.</p><p>எகிப்தில் போதைப்பொருள் வழக்கில் பிரபல தொலைக்காட்சி <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D" rel="nofollow">பெண் தொகுப்பாளர்</a> சாரா கலிபா உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>போதைப் பொருட்களை  தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களை இறக்குமதி செய்த  குற்றக் கும்பலின் ஒரு பகுதியாக அவர்கள் செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.</p><p>இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. இதில் சாரா கலிபா உள்பட 12 பேருக்கு மரண தண்டனையை எகிப்து கோர்ட்டு விதித்து தீர்ப்பு அளித்து உள்ளது.</p><p>மேலும், 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 7 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.</p><p>இந்தத் தீர்ப்பு கடந்த மாதம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், <a href="https://www.maalaimalar.com/news/world/death-sentence-imposed-on-syrias-former-president" rel="nofollow">மரண தண்டனை</a> வழக்குகளில் நீதிமன்றம், எகிப்தின் தலைமை முப்தியிடமிருந்து கருத்தை  பெற வேண்டும்.</p><p>அதன்படி அந்த கருத்தை பெற்ற பிறகே இந்த மரண தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சதம் கடந்த கேப்டன் கிஷன்.. துலீப் கோப்பை இறுதிப்போட்டி முதல் நாள் முடிவில் கிழக்கு மண்டலம் 385 ரன்கள் குவிப்பு </title><link>https://www.maalaimalar.com/sports/cricket/captain-kishan-crossed-the-century-east-zone-accumulated-385-runs-at-the-end-of-the-first-day-of-the-duleep-cup-final</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/captain-kishan-crossed-the-century-east-zone-accumulated-385-runs-at-the-end-of-the-first-day-of-the-duleep-cup-final#comments</comments><guid isPermaLink="false">5bd4bd4e-5fe9-41e4-9a1f-189fe60183dc</guid><pubDate>Sun, 06 Sep 2026 13:52:35 +0000</pubDate><atom:updated>2026-09-06T13:52:35.609Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Ishan Kishan,இஷான் கிஷன்,Duleep Trophy,துலீப் கோப்பை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/ysj6vvej/tn-20.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கிஷன்]]></media:title><media:description type="html"><![CDATA[ கிஷன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/ysj6vvej/tn-20.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>துலீப் கோப்பை  இறுதிப் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தெற்கு மண்டலம் 79 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 385 ரன்கள் எடுத்துள்ளது. </p> <p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/duleep-trophy-final-today-in-chepauk-ground">துலீப் கோப்பை 2026 </a>இறுதிப் போட்டியின் முதல் நாள் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது.</p><p>தெற்கு மண்டலதுடனான இப்போட்டியில் டாஸ் வென்ற கிழக்கு மண்டல அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.</p> <h2>பேட்டிங்</h2><p>அதன்படி கிழக்கு மண்டலம் சார்பில் தொடக்க வீரர்களாக <a href="https://www.maalaimalar.com/sports/historic-feat-in-duleep-trophy-15-year-old-vaibhav-suryavanshi-leads-east-zone">வைபவ் சூர்யவன்ஷி</a>, அபிமன்யு ஈஸ்வரன் களமிறங்கினர்.</p><p>37 பந்துகளை எதிர்கொண்ட வைபவ் சூர்யவன்ஷி 44 ரன்கள் எடுத்தார். அபிமன்யு ஈஸ்வரன் 72 ரன்கள் ஸ்கோர் செய்தார்.</p><p>ஷிகர் மோகன் (85), மற்றும் குமார் குஷாக்ரா (63) ஆகியோர் அரைசதம் அடித்தனர். சுதீப் குமார் கராமி மொத்தம் 25 பந்துகளை எதிர்கொண்டு ஆறு ரன்கள் மட்டுமே எடுத்தார். குமார் குஷாக்ரா 75 பந்துகளில் 63 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.</p><p>கேப்டன் இஷான் கிஷன் மொத்தம் 135 பந்துகளை எதிர்கொண்டு, 82.22 ஸ்டிரைக் ரேட்டில் ஆட்டமிழக்காமல் சதம் கடந்து 111 ரன்களை எடுத்ததன் மூலம் கவனம் ஈர்த்தார்.</p> <h2>பந்துவீச்சு</h2><p>எதிரணியில் சாமா மிலிந்த் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் ஷிகர் மோகன் ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்தார். ரிபுரானா விஜய், சுதீப் குமார் கராமியை ஆட்டமிழக்கச் செய்தார்.</p><p>அதே நேரத்தில் அபிமன்யு ஈஸ்வரனை படிக்கல் மற்றும் ஜெகதீசன் ஆகியோர் சிறப்பான பார்ட்னர்ஷிப்பில் ரன் அவுட் செய்தனர்.</p><p>ஆனால் தென் மண்டல அணிக்காக விளையாடிய இந்திய அணியின் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் மொத்தம் 14 ஓவர்கள் பந்துவீசி, ஒரு விக்கெட்டைக் கூட எடுக்கவில்லை.</p><h2>முதல் நாள் முடிவு</h2><p>முதல் நாள் ஆட்ட இறுதியில் கிழக்கு மண்டலம் 79 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 385 ரன்கள் எடுத்துள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி 10 அடிக்கு நடைமேடை அவசியமா?- சவுமியா அன்புமணி கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/soumiya-anbumani-questions-10-foot-walkway-around-pallikaranai-marsh</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/soumiya-anbumani-questions-10-foot-walkway-around-pallikaranai-marsh#comments</comments><guid isPermaLink="false">aff7c207-7313-4f8b-a9d9-88859280c8ca</guid><pubDate>Sun, 06 Sep 2026 13:16:20 +0000</pubDate><atom:updated>2026-09-06T13:16:20.091Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,பள்ளிக்கரணை சதுப்பு நிலம்,Sowmya Anbumani,சௌமியா அன்புமணி,pallikaranai marsh</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/ekoco165/sowmya.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dr.Sowmiya Anbumani]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/ekoco165/sowmya.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ரூ.21 கோடி செலவில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி நடைமேடை அமைப்பது அவசியமா என பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>பா.ம.க. எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி இன்று பள்ளிக்கரணை <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2" rel="nofollow">சதுப்பு நில</a> பகுதிகளை பார்வையிட்டார். </p><p>அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-</p><h2>நடைமேடை தேவையா?</h2><p>பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதிகளை அரசு பாதுகாக்க வேண்டும். இதற்கு கம்பி வேலி போட்டால் போதும். ஆனால் ரூ.21 கோடி செலவில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி நடைமேடை அமைக்கிறார்கள்.</p><p>10 அடிக்கு கான்கிரீட் கிரானைட் போட்டு நடைமேடை அமைப்பது அவசியமா? தடுப்பு சுவர் தேவையா? இது வெள்ளம் வரும் பகுதி.</p><p>சுற்றுச்சுவர் கட்டினால் சதுப்பு நில பகுதிக்கு தண்ணீர் செல்லாமல் குடியிருப்பு பகுதிகளுக்கு தண்ணீர் புகுந்து விடும். மக்கள் பாதிக்கப்படுவார்கள்.</p><p>கடலுக்குள் வெள்ளம் செல்ல வழிவகை செய்ய வேண்டுமே தவிர அதை தடுக்க கூடாது. முக்கியமாக ராம்சார் நிலத்தில் எந்த கட்டுமான பணிகளையும் மேற் கொள்ளக் கூடாது. </p><p>அதற்காகத்தான் பசுமை தாயகம் சார்பில் இன்று சதுப்பு நிலப் பகுதிகளை பார்வையிட்டோம். கடன் வாங்கி நடைமேடையும், சுற்று சுவரும் அமைக்கும் திட்டம் மக்களுக்கு தேவையில்லை.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நெய்தல் மீட்சி மற்றும் பாதுகாப்பு பணிகள் என்ற பெயரில், உலக வங்கிக் கடன் ரூ.21 கோடி செலவில், 3 கி.மீ நீளத்திற்கு சுற்றுச்சுவர் மற்றும் நடைபாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சதுப்பு நிலத்தை மீட்பதற்கு பதிலாக, அப்பகுதியில்… <a href="https://t.co/CgeA0vZznG">pic.twitter.com/CgeA0vZznG</a></p>&mdash; Sowmiya Anbumani (@Sowmiyanbumani) <a href="https://x.com/Sowmiyanbumani/status/2096545531032195130?ref_src=twsrc%5Etfw">September 6, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து - உடல் கருகி 22 பேர் உயிரிழப்பு </title><link>https://www.maalaimalar.com/news/world/fire-at-wedding-in-congo-22-people-burned-to-death</link><comments>https://www.maalaimalar.com/news/world/fire-at-wedding-in-congo-22-people-burned-to-death#comments</comments><guid isPermaLink="false">c185dae4-cb75-4039-b45a-b8e7d20efe07</guid><pubDate>Sun, 06 Sep 2026 13:08:28 +0000</pubDate><atom:updated>2026-09-06T13:08:28.119Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கோ,தீவிபத்து,திருமண நிகழ்ச்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/6hho28a2/tn-19.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ காங்கோவில் தீவிபத்து ]]></media:title><media:description type="html"><![CDATA[ காங்கோவில் தீவிபத்து ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/6hho28a2/tn-19.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காங்கோவில் திருமண விழாவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 22 பேர் உயிருடன் கருகி உயிரிழந்தனர்.</p> <p>ஆப்பிரிக்க நாடான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B">காங்கோவின் </a>தலைநகர் கின்ஷாஷாவின் வடக்கு பகுதியில் உள்ள லிங்வாலா மண்டலத்தில் நேற்று முன் தினம் இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. </p><p>நேற்று காலை வரை விடிய விடிய <a href="https://www.maalaimalar.com/news/national/infant-dies-after-fire-in-madhya-pradesh-govt-hospital-nicu-cradle-warmer-short-circuit-sparks-blaze-dozens-of-babies-evacuated-safely">தீ </a>கொழுந்துவிட்டு எரிந்ததாக லிங்வாலா மேயர் நோர்பர்ட் முஷிங்கா தெரிவித்துள்ளார்.</p> <h2>விபத்தின் பின்னணி</h2><p>தீப்பற்றிய கட்டிடத்தின் பாதைகள் மற்றும் சந்துப் பாதைகள் மிகவும் குறுகலாக இருந்ததால், உள்ளே இருந்த மக்கள் உடனடியாக வெளியேற முடியாமல் கட்டிடத்திற்குள்ளேயே சிக்கித் தீயில் கருகினர்.</p><p>பொதுமக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு பலரை வெளியே மீட்டுச் சாலையோரம் கிடத்தினர். அவர்களில் சிலர் காயங்களுடன் தப்பிய நிலையில், பலர் உயிரிழந்தனர்.</p><p>உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 22 ஆக உயர்ந்துள்ள நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.</p> <h2>விசாரணை</h2><p>தீ விபத்துக்கான துல்லியமான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. காங்கோ துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஜாக்குமின் ஷாபானி நேற்று காலை நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.</p><p>கின்ஷாஷாவின் அதிக மக்கள் தொகை கொண்ட நகர்ப்புறப் பகுதிகளில் வறண்ட காலநிலையின் போது இதுபோன்ற தீ விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாகும்.</p> <p>இதேபோல கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் மருத்துவமனை ஒன்றில் ஏசி கம்ப்ரஸர் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பிறந்த குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>உலகில் குழந்தைகளை விட முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - அதிர்ச்சி அறிக்கை </title><link>https://www.maalaimalar.com/news/world/number-of-elderly-people-exceeds-that-of-children-globally-shocking-report</link><comments>https://www.maalaimalar.com/news/world/number-of-elderly-people-exceeds-that-of-children-globally-shocking-report#comments</comments><guid isPermaLink="false">c4c30a17-02b6-405c-a1e5-7e81875c2ebc</guid><pubDate>Sun, 06 Sep 2026 12:52:16 +0000</pubDate><atom:updated>2026-09-06T12:52:16.772Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மக்கள் தொகை,பிறப்பு விகிதம்,Population,birth rate,death rate,இறப்பு விகிதம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/3zkus872/tn-18.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ உலகில் குழந்தைகளை விட முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு]]></media:title><media:description type="html"><![CDATA[ உலகில் குழந்தைகளை விட முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/3zkus872/tn-18.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மனித வரலாற்றிலேயே முதன்முறையாக உலகளவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையை விட முதியோர்களின் எண்ணிக்கை அதிகமாக உயர்ந்துள்ளது.</p> <p>அமெரிக்க <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">மக்கள்தொகை </a>கணக்கெடுப்பு மையம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இந்த மாற்றத்திற்கு இரண்டு முக்கிய காரணங்களை அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.</p> <h2>சரிவடையும் பிறப்பு விகிதம்</h2><p>மாறிவரும் வாழ்க்கை முறை, தாமதமான திருமணம், உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் குடும்பக் கட்டுப்பாடு பற்றிய விழிப்புணர்வு காரணமாக, வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் இரண்டிலும் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D">பிறப்பு விகிதம்</a> கடுமையாகக் குறைந்துள்ளது.</p><h2>அதிகரிக்கும் ஆயுட்காலம்</h2><p>மருத்துவம், ஊட்டச்சத்து, சுகாதார மேம்பாடு மற்றும் பொது சுகாதார நடவடிக்கைகளின் காரணமாக மக்கள் முந்தைய தலைமுறைகளை விட நீண்ட காலம் வாழ்கின்றனர்.</p><p>முன்னதாக ரஷியா, ஜப்பான், தென் கொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே பிரபு விகிதம் குறைவு, முதியோர் மக்கள் தொகை அதிகரிப்பு அதிகம் காணப்பட்ட நிலையில் தற்போது ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்காவின் வளர்ந்து வரும் நாடுகளிலும் வெகுவாக காணப்படுகிறது.</p> <h2>ஏன் பிரச்சனை?</h2><p>முதுமை என்பது பொதுவான கடினமான காலம் என்றாலும், வறுமையில் வாடும் முதியோர்களுக்கும், தனித்து வாழும் முதியோர்களுக்கும் இது மிகவும் சவாலானது என்று அறிக்கை கூறுகிறது.</p><p>குடும்பங்களின் அளவு சுருங்கி, குழந்தைகள் இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பராமரிப்பிற்கு குடும்ப உறுப்பினர்களை சார்ந்திருப்பது பெரிய கவலையாக மாறியுள்ளது.</p><p>முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் புதிய உலகிற்கு ஏற்ப, அரசுகள் தங்களின் பொருளாதாரக் கொள்கைகள், வீட்டுவசதித் திட்டங்கள் மற்றும் சுகாதார மாதிரிகளை உடனடியாக மாற்றியமைக்க வேண்டும் என அறிக்கை வலியுறுத்துகிறது.</p>]]></content:encoded></item><item><title>தவெக பிரமுகர் கொலை: காவல் அதிகாரிகள் இருவர் மீது நடவடிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kannan-murder-case-two-chennai-police-officers-shifted</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kannan-murder-case-two-chennai-police-officers-shifted#comments</comments><guid isPermaLink="false">4a0808f1-09eb-44ac-8b8f-38d8f51ac95e</guid><pubDate>Sun, 06 Sep 2026 12:24:31 +0000</pubDate><atom:updated>2026-09-06T12:24:31.628Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,Murder,கொலை,Police Inspectors,tvk,காவல் ஆய்வாளர்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/ks80mhmw/TVK.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Murder]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/ks80mhmw/TVK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக வெற்றிக் கழக பிரமுகர் கொலை வழக்கு தொடர்பாக காவல் அதிகாரிகள் இருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p>சென்னை அடையாறு காவல் துணை ஆணையர் கார்த்திகேயன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றுப்பட்டுள்ளார்.</p><p>சென்னை அடையாறு சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் ரோகிணியும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.</p><h2>தவெக நிர்வாகி</h2><p>சென்னை அடையாறு சாஸ்திரி நகர் வண்ணாந்துறைப் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95" rel="nofollow">அதிமுக</a>-வில் 174வது தெற்கு வட்டக் செயலாளராக இருந்த கண்ணன், சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்து பணியாற்றி வந்தார்.</p><h2>ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை</h2><p>இந்தநிலையில் நேற்று இரவு (செப்.5) 9 மணி அளவில் வண்ணாந்துறை பகுதியில் சென்று கொண்டிருந்த கண்ணனை மர்ம நபர்கள் சுற்றி வளைத்தனர். அவர்களது கையில் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன.</p><p>இதைபார்த்து அதிர்ச்சியில் உறைந்துபோன கண்ணன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இருப்பினும் ரவுடி கும்பல் கண்ணனை ஓட ஓட விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டியது.</p><p>இதில் நிலைகுலைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார். </p><p>கண்ணன் சமீபத்தில் அ.தி.மு.க.வில் இருந்து விலகி <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-functionarys-murder-udhayanidhi-stalin-criticizes-the-state-of-law-and-order" rel="nofollow">தவெக</a>-வில் இணைந்திருந்ததால், அவரது அரசியல் நடவடிக்கைகள் பிடிக்காமல் எதிராளிகள் தீர்த்து கட்டினார்களா என்கிற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.</p><h2>5 பேர் கைது</h2><p>சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஐந்து பேரை கைது செய்து விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>இது தலைநகரமா, இல்லை கொலைநகரமா..?- திமுக எம்பி கனிமொழி காட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-asks-is-this-a-capital-or-a-murder-city</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-asks-is-this-a-capital-or-a-murder-city#comments</comments><guid isPermaLink="false">f759ca02-0090-45ad-ba32-61349b400cde</guid><pubDate>Sun, 06 Sep 2026 11:55:58 +0000</pubDate><atom:updated>2026-09-06T11:55:58.348Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,கனிமொழி எம்பி,சட்டம் ஒழுங்கு,Kanimozhi MP</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/81wi9b9t/kanimozhi-MP.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DMK MP Kanimozhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/81wi9b9t/kanimozhi-MP.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதற்கும் இந்த கொலை சம்பவங்களே சாட்சி என சென்னையில் நடந்த கொலை சம்பவத்தை விமர்சித்து திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>தலைநகர் சென்னையின் மையப்பகுதியிலேயே ஒருவர் ஓட ஓட விரட்டப்பட்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். கொலை செய்யப்பட்ட நபர் சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பதோடு, அண்மையில்  தவெகவில் இணைந்தவர் எனவும் கூறப்படுகிறது. மேலும், வடமாநிலத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ஒருவரும் போதை கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். </p><p>இது தலைநகரமா, இல்லை கொலைநகரமா என்று எண்ணும் அளவுக்கு அதிர்ச்சி அளிக்கும் கொலைச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.</p><p>முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை முழுவதுமாக செயலிழந்துவிட்டதற்கும், தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதற்கும் இதுவே சாட்சி.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இறுதிச்சடங்கு முடிந்து 15 நாட்களுக்கு பின் &apos;இறந்த&apos; மகன் ஜெயிலில் இருப்பதாக வந்த போன் கால்.. ஆடிப்போன பெற்றோர் </title><link>https://www.maalaimalar.com/news/national/parents-discover-their-son-is-alive-15-days-after-his-funerala-dramatic-turn-of-events-triggered-by-a-single-phone-call</link><comments>https://www.maalaimalar.com/news/national/parents-discover-their-son-is-alive-15-days-after-his-funerala-dramatic-turn-of-events-triggered-by-a-single-phone-call#comments</comments><guid isPermaLink="false">5d4945b3-debd-463e-b4ed-5a9b956afe0a</guid><pubDate>Sun, 06 Sep 2026 11:36:02 +0000</pubDate><atom:updated>2026-09-06T11:36:02.821Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இளைஞர்,பஞ்சாப்,Punjab,funeral,youth,இறுதிச்சடங்கு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/eba835ow/tn-17.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Missing youth ]]></media:title><media:description type="html"><![CDATA[ Missing youth ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/eba835ow/tn-17.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இறந்ததாகக் கருதி இறுதிச் சடங்கு செய்த 15 நாட்களுக்குப் பின் இளைஞர் உயிருடன் வந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/35-years-how-sir-reunited-brothers-in-haryana">பஞ்சாப்</a> மாநிலம் கபூர்தலா பகுதியை சேர்ந்த ரவி குமார் என்ற இளைஞன் ஆகஸ்ட் 5 அன்று வீட்டை விட்டு வெளியேறி மீண்டும் திரும்பவில்லை. </p><p>குடும்பத்தினர் அவரைப் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், ஆகஸ்ட் 11 அன்று கபூர்தலா நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.</p><p>புகார் அளிக்கப்பட்ட சில நாட்களில், எரிக்கப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகக் காவல்துறையினர் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தனர்.</p> <h2>இறுதிச் சடங்கு</h2><p>சடலத்தின் புகைப்படங்களை பார்த்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், இறந்தது ரவி குமார் தான் எனத் தவறாக அடையாளம் காட்டினர்.</p><p>தன் மகன் இறந்துவிட்டதாக நம்பிய குடும்பத்தினர், ஆகஸ்ட் 13 அன்று அந்த உடலுக்கு முறைப்படி தகனம் செய்து இறுதிச் சடங்குகளைச் செய்து முடித்தனர்.</p> <h2>திருப்பம்</h2><p>இறுதிச் சடங்குகள் முடிந்து குடும்பத்தினர் துக்கத்தில் இருந்த நிலையில், செப்டம்பர் 2 அன்று கபூர்தலா மத்திய சிறை ஊழியரிடமிருந்து குடும்பத்தினருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.</p><p>ரவி குமார் என்ற நபர் தங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அந்த ஊழியர் தெரிவித்தார்.</p><h2>பின்னணி</h2><p>சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித் திரிந்ததால் ஜலந்தர் காவல்துறையினரால் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பே ரவி குமார் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிக்கிறார்.</p><p>இந்தத் தகவலால் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்த குடும்பத்தினர், மறுநாள் சிறைக்கு சென்று ரவி குமார் அங்கிருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.</p><p>ரவி குமார் என நினைத்து குடும்பத்தினர் எப் பிணத்தைத் தகனம் செய்தனர் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளதால், அது குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்களின் குரலுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்- ராகுல்காந்தி வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/national/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D</link><comments>https://www.maalaimalar.com/news/national/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D#comments</comments><guid isPermaLink="false">0d59c2f8-7b97-4ca8-8d60-9fc247538d79</guid><pubDate>Sun, 06 Sep 2026 11:19:54 +0000</pubDate><atom:updated>2026-09-06T11:19:54.808Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,Rahul Gandhi,போராட்டம்,உண்ணாவிரதப் போராட்டம்,central government</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-14/ce8zelqt/RahulGAndhi00001.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ ராகுல் காந்தி]]></media:title><media:description type="html"><![CDATA[ Rahul Gandhi ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-14/ce8zelqt/RahulGAndhi00001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2><strong>உண்ணாவிரதப் போராட்டம்</strong></h2><p>மராட்டியத்தில் பழங்குடியின மாணவர்களுக்கான அரசு விடுதிகளில் ஏற்பட்ட மாணவர்களின் உயிரிழப்புகள் மற்றும் முறைகேடுகளைக் கண்டித்து நாசிக் மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக பழங்குடியின மாணவர்கள், மாணவ அமைப்புகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். </p><p>இந்த போராட்டத்துக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த 3-ந்தேதி நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.  </p><h2><strong>இந்த நிலையில் இன்று ராகுல்காந்தி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:-</strong></h2><p>மராட்டியத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் அமைதியான முறையில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதற்குக் காரணம் ஏதோ ஒரு குறிப்பிட்ட தேர்வு அல்லது பணி நியமனம் மட்டுமல்ல, ஒட்டு மொத்த அமைப்பின் மீதான நம்பிக்கையே தகர்க்கப்பட்டிருப்பதுதான் காரணம்.</p><h2><strong>மத்திய அரசு</strong></h2><p>மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி, பா.ஜனதா ஆட்சியின் கீழ் ஒவ்வொரு மாணவரும் கடும் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர்.</p><h2><strong>வினாத்தாள் கசிவு</strong></h2><p>வினாத்தாள் கசிவு, முடக்கப்பட்ட பணி நியமனங்கள், தாங்க முடியாத கல்விச் செலவு, விடுதிகளில் நிலவும் மனிதாபிமானமற்ற சூழல், நச்சுத்தன்மை வாய்ந்த உணவு, நேரடிப் பணப் பரிமாற்றத்திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகள் எனப் பட்டியல் நீள்கிறது. தங்கள் வெற்றிகரமான எதிர்காலத்திற்காக மாணவர்கள் முன்வைக்கும் ஒவ்வொரு கோரிக்கையும் நியாயமானதே. அரசு அவர்களின் குரலுக்குச் செவிசாய்த்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நீதி கிடைக்கும் வரை மாணவர்களின் இந்தக் குரல் மேலும் வலுத்துக்கொண்டே செல்லும்.</p><p>இவ்வாறு ராகுல்காந்தி கூறி உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஜீ நிறுவனர் சுபாஷ் சந்திரா ரூ.1,322 கோடி கடன் முறைகேடு- சிபிஐ வழக்குப்பதிவு  </title><link>https://www.maalaimalar.com/news/national/cbi-registers-case-against-zee-founder-subhash-chandra-over-rs-1322-crore-loan</link><comments>https://www.maalaimalar.com/news/national/cbi-registers-case-against-zee-founder-subhash-chandra-over-rs-1322-crore-loan#comments</comments><guid isPermaLink="false">60774d1c-3f46-4cbe-b6dc-f7cbd4e1b131</guid><pubDate>Sun, 06 Sep 2026 11:05:02 +0000</pubDate><atom:updated>2026-09-06T11:05:02.617Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சிபிஐ,cbi,LIC,எல்.ஐ.சி.,subash chandra,சுபாஷ் சந்திரா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/gt0pcxnf/Untitled-design-30.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ZEEL founder Subhash Chandra]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/gt0pcxnf/Untitled-design-30.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனரான சுபாஷ் சந்திரா, எல்ஐசி ஹவுசிங் ஃபை-னான்ஸ் லிமிடெட் (LICHFL) நிறுவனத்திடமிருந்து ரூ.1,322 கோடி கடனை முறைகேடாகப் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், சிபிஐ அதிகாரிகள் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BF">எல்.ஐ.சி</a> நிறுவனத்திடம் இருந்து 2018 மார்ச் 28 அன்று, வசந்த் சாகர் பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பான் இந்தியா இன்ஃப்ரா ப்ராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் ரூ.500 கோடியை கடனாக பெற்றது. </p><p>இந்த கடன் தொகைக்கு உத்தரவாதமாக ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் (ZEEL) மற்றும் எசெல் குழுமத்தின் நிறுவனரான சுபாஷ் சந்திரா, 2017 மார்ச் 31 நிலவரப்படி தன்னிடம் ரூ.59,113.21 கோடி மதிப்பிலான நிகர சொத்துகள் உள்ளதாக  DJM &amp; Co., வழங்கிய சான்றிதழை எல்.ஐ.சி நிறுவனத்திடம் சமர்ப்பித்தார்.  </p><p>மேலும், இதைத்தொடர்ந்து எல்.ஐ.சி நிறுவனத்திடம் இருந்து, டிஜிட்டல் சப்ஸ்கிரைபர் மேனேஜ்மென்ட் அண்ட் கன்சல்டன்சி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஸ்பிரிட் இன்ஃப்ராபவர் அண்ட் மல்டிவென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் ரூ.480 கோடியை கடனாக பெற்றது.</p><p>இந்த கடன் தொகைக்கு உத்தரவாதமாக சுபாஷ் சந்திரா தன்னிடம் ரூ. 40,562 கோடி மதிப்பிலான நிகர சொத்துக்கள் உள்ளதாக MPJ &amp; Co. வழங்கிய சான்றிதழை எல்.ஐ.சி நிறுவனத்திடம் சான்றிதழை சமர்ப்பித்தார்.</p><p>சுபாஷ் சந்திராவிடம் இருந்து ஆகஸ்ட் 10, 2018 பெறப்பட்ட கடிதத்தின் உத்தரவாதம் அடிப்படையில் எல்.ஐ.சி நிறுவனம், இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் கடன் தொகையை வழங்கியது.</p><p>இதையடுத்து கடன் வாங்கிய வசந்த் சாகர் மற்றும் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் தங்களது கடன் தவணைகளை செலுத்தாமல் போயின.</p><p>இதைத்தொடர்ந்து எல்.ஐ.சி நிறுவனம் சிபிஐ-யில் தாக்கல் செய்த வழக்கில், 2016 ஆம் ஆண்டின் திவால் மற்றும் நொடித்துப்போதல் சட்டத்தின் கீழ், கடன்களுக்கு ஒப்புதல் பெறுவதற்காக LICHFL நிறுவனத்திடம் சந்திரா சமர்ப்பித்த சான்றிதழ்களில் குறிப்பிடப்பட்டிருந்த நிகர சொத்து மதிப்பின் தவறானது என்று குற்றம்சாட்டியது.</p><p>மேலும் சந்திரா, கடன் வாங்கியவர்களான வசந்த் சாகர் பிராப்-பர்டீஸ், பான் இந்தியா இன்ஃப்ராப்ராஜெக்ட்ஸ், டிஜிட்டல் சப்ஸ்கிரைபர் மேனேஜ்மென்ட், ஸ்பிரிட் இன்ஃப்ராபவர் மற்றும் மல்டிவென்ச்சர்ஸ் ஆகியோருடனும், அவர்களின் அதிகாரிகள் மற்றும் இயக்குநர்களுடனும் இணைந்து கூட்டுச்சதி செய்து, எல்.ஐ.சி. எச்.எஃப்.எல் நிறுவனத்திடம் இருந்து கடன்களை முறைகேடாகப் பெற்றுள்ளதாக சிபிஐ-யில் புகார் அளிக்கப்பட்டது.</p><p>கடன் வாங்கியவர்களுக்கு நிதியை வழங்குமாறு LICHFL நிறுவனத்தை ஏமாற்றும் நோக்கில், அவர் தனது நிகர சொத்து மதிப்பை மிகைப்படுத்தி போலி ஆவணங்களை உருவாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டது.</p><p>மேலும் 2024-ஆம் ஆண்டில் சந்திராவின் நிகர சொத்து மதிப்பு ரூ. 31.79 கோடியாக இருந்ததாகவும் சிபிஐ-யில் எல்.சி.சி. எஃப்.எஃப்.எல் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>13 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்துடன் இணைந்த இளைஞர்- கேரளா சென்ற ஜார்க்கண்ட் சிறுவனின் நெகிழ்ச்சிச் சம்பவம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/kerala-youth-reunites-with-family-after-13-years-in-jharkhand</link><comments>https://www.maalaimalar.com/news/national/kerala-youth-reunites-with-family-after-13-years-in-jharkhand#comments</comments><guid isPermaLink="false">dcf10142-ebd7-48f1-beef-76d5961d2a77</guid><pubDate>Sun, 06 Sep 2026 10:53:05 +0000</pubDate><atom:updated>2026-09-06T10:53:05.175Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Jharkhand,ஜார்க்கண்ட்,reunited,கேரளம்,Keralam</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/aq30vk02/Untitled-design-29.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jharkhand Missing Boy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/aq30vk02/Untitled-design-29.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 6 வயதான சிறுவன் ஒருவன் தனது தந்தையை ரெயில் நிலையத்தில் தொலைத்துவிட்டு, வழி தவறி கேரளா செல்லும் ரெயிலில் ஏறியதை தொடர்ந்து, தற்போது 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தனது குடும்பத்தினருடன் இணைந்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D">ஜார்க்கண்ட்</a> மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள ஹரிமாரா கிராமத்தில் 6 வயதான ராஜா கோப் என்கிற சிறுவன் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அப்போது ஒரு நாள் கோப், தனது தந்தையுடன் மேற்கு வங்கத்தில் உள்ள செங்கல் சூளைக்கு வேலைக்காக சென்றார். </p><p>பின்னர், கோப் வழி தவறி தனது தந்தையை தொலைத்துவிட்டு, ஜார்க்கண்ட் ரெயிலில் ஏறுவதற்கு பதிலாக, கேரளம் செல்லும் ரெயிலில் மாறி ஏறினார். </p><h3><strong>வழிதவறிய 6 வயது சிறுவன்</strong></h3><p>இதையடுத்து அவர் எர்ணாகுளத்தில் இறங்கியபோது, குழந்தைகள் உரிமை ஆர்வலர்கள் சிறுவனை மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தனர்.</p><p>6 வயதான கோப், தனது பெற்றோர்களின் பெயரையும், ஜார்க்கண்ட் பெயரையும் மட்டுமே நினைகூர முடிந்தது. அந்த தகவலை வைத்துக் கொண்டு, அவனது குடும்பத்தை கண்டுபிடிப்பது குழந்தை உரிமை ஆர்வலர்களுக்கு கடினமாக இருந்தது.</p><h3><strong>திருச்சூர் குழந்தைகள் நல குழு</strong></h3><p>கேரளாவின் திருச்சூரில் உள்ள குழந்தைகள் நல குழு, தங்களிடம் இருக்கும் சிறுவன் தன்னை ஜார்கண்டின் சாய் வாசா பகுதியை சேர்ந்தவர் என கூறுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தது.</p><p>கோப், ஒரு குன்றின் அருகே உள்ள பள்ளிக்கு அருகில் தனது வீடு அமைந்திருந்தது என்பதை மட்டுமே நினைவு கூர்ந்து விவரிக்க முடிந்தது.</p><p>இதைதொடர்ந்து, தற்போது 19 வயதாகும் கோப், கேரளாவில் கால்பந்தை மையமாக கொண்டு தனது வாழ்க்கையை அமைத்து கொண்டார்.</p><p>கோப் வழங்கிய பெயர்கள் மற்றும் பிற தகவல்களை வைத்து கேரள காவல் நிலைய அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்க்க தொடங்கினர்.</p><h3><strong>காவல் நிலையத்தில் தகவல்</strong></h3><p>மேலும், காவல்துறையினர் இளைஞரின் அடையாளம் மற்றும் பிற தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்பினர். இதையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, இந்த தகவலை வைத்துக் கொண்டு, ஒரு குடும்பம் தங்களது மகனை தொலைத்து விட்டதாக காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தது.</p><p>இதைத்தொடர்ந்து ஜார்க்கண்டை சேர்ந்த சிறப்பு காவல் குழுவினர், கேரளாவில் உள்ள திருச்சூருக்கு வந்து ஆவணங்களை சரிபார்த்து, கோப்பை ஜார்க்கண்டிற்கு அழைத்து சென்றனர்.</p><h3>சொந்த ஊர் திரும்பிய இளைஞர்</h3><p>கோப் இறுதியாக தனது கிராமத்திற்கு திரும்பியபோது, ஒட்டுமொத்த கிராம மக்களும் ஒன்றாக வந்து அவரை வரவேற்றனர். மேலும், இளைஞரின் பள்ளி நண்பர்களும் ஒரு ஊர்வலத்தை ஏற்பாடு செய்தனர்.</p><p>இதையடுத்து பழங்குடியின பெண்கள் பாரம்பரிய நடனமாடி கோப்பை வரவேற்றனர். 13 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பை சந்தித்த அவனின் தாயும், நான்கு சகோதரிகளும் ஆரத்தழுவி அவரை கட்டிக்கொண்டனர்.</p><h3><strong>கோப் தாயார்</strong></h3><p>இந்த நிகழ்வு குறித்து கோப்பின் தாயார் கூறுகையில், "தனது மகன் குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்புவதாக கூறினார். </p><p>இருந்தாலும் கோப்பிற்கு கேரளாவில் கால்பந்து போட்டிகள் இருப்பதாலும், அவன் தனது பள்ளி படிப்பை நிறைவு செய்ய இருப்பதாலும், தனது மகனை தடுக்க போவதில்லை" என தாயார் கூறினார்.</p><h3><strong>இளைஞர் நெகிழ்ச்சி</strong></h3><p>கோப்பிற்கு தனது ‘ஹோ’ என்ற பழங்குடியின மொழி மறந்துவிட்டதாகவும், தற்போது அவருக்கு மலையாளம் மற்றும் இந்தி மொழிகள் மட்டுமே தெரியும் என்றும் கூறினார்.</p><p>மேலும், தனது தந்தை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால், நல்ல வேலைக்கு சென்றுவிட்டு தனது தாயையும், சகோதரிகளையும் கேரளாவிற்கு அழைத்து செல்ல உள்ளதாக கோப் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>ராஜா ராஜாதான்.. டோரதி படத்தின் பின்னணி இசைகள் வெளியீடு</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/raja-is-raja-background-score-from-the-movie-dorothy-released</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/raja-is-raja-background-score-from-the-movie-dorothy-released#comments</comments><guid isPermaLink="false">9f42f28c-5cb7-4c44-bb2c-a1a372160a0b</guid><pubDate>Sun, 06 Sep 2026 10:35:30 +0000</pubDate><atom:updated>2026-09-06T10:35:30.770Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இளையராஜா,Karthik Subbaraj,ilaiyaraaja,டோரதி,Dorothy,கார்த்திக் சுப்பாராஜ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/jlyyoitr/tn-15.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டோரதி OST]]></media:title><media:description type="html"><![CDATA[ டோரதி OST]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/jlyyoitr/tn-15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் இசைஞானி இளையராஜா கூட்டணியில் உருவாகியுள்ள 'டோரதி' திரைப்படத்தின் பின்னணி இசை வெளியாகி உள்ளது. </p><p>மதுரையைப் பின்னணியாகக் கொண்ட '<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF">டோரதி</a>' படத்தில் கீர்த்தி சுரேஷ், சனாந்த், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.</p><p>படத்தை தம்மம் ஃபிலிம்ஸ் சார்பில் கார்த்திக் சுப்பராஜும் இயக்கத்தில், சிக்யா என்டர்டெயின்மென்ட் சார்பில் குனீத் மோங்காவும், ஜியோ ஸ்டுடியோஸ் சார்பில் ஜோதி தேஷ்பாண்டேவும் இணைந்து தயாரித்துள்ளனர்.</p>  <h2>பாடல்கள்</h2><p>அண்மையில் படத்தின் இரண்டாவது பாடலான 'முத்துமணி' படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முன்னதாக முதல் சிங்கிளாக 'கல்யாண விருந்து' பாடலும் 90ஸ் ராஜாவை மீண்டும் கண் முன் காட்டியதாக கொண்டாடப்பட்டது.</p><p>இசைஞானி <a href="https://www.maalaimalar.com/topic/illayaraja">இளையராஜாவின் </a>திரையுலகப் பயணத்தில் இது 1540வது திரைப்படமாகும். 'முத்துமணி' பாடல் முற்றிலும் மாறுபட்ட ஒரு 'ராஜா டிரான்ஸ்' ரக காதல் பாடலாகும். இப்பாடலை இளையராஜாவே எழுதி, பிரபல பின்னணிப் பாடகி சுவேதா மோகனுடன் இணைந்து பாடியுள்ளார்.</p><p>இதனிடையே, டோரதி திரைப்படத்தின் பின்னணி இசைகளையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில், 18 பின்னணி இசைத்துணுக்குகள் இடம்பெற்றுள்ளன.</p><p>முக்கியமாக, இளையராஜாவின் சிறந்த பிஜிஎம்களில் ஒன்றான 'How to name it' ஆல்பத்தில் இடம்பெற்ற 'Do anything' இசை நவீனப்படுத்தப்பட்டு இப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.</p><p>மேலும் இதில் இடம்பெற்றுள்ள, ஏதும் இல்லை, சம்பவம், பிரியாவிடை உள்ளிட்ட பின்னணி இசைத் துணுக்குகள் வரவேற்பை பெற்று வருகின்றன.</p> <h2>ரிலீஸ்</h2><p>இப்படம், உலக அளவில் மிகவும் மதிப்புமிக்க டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் உலகளாவிய முதன்முறைத் திரையிடலுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.</p><p>இப்படத்திற்கு எஸ். திருநாவுக்கரசு ஒளிப்பதிவையும், கணேஷ் சிவா படத்தொகுப்பையும் கவனித்துள்ளனர்.</p><p>டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவின் திரையிடலைத் தொடர்ந்து, 'டோரதி' திரைப்படம் வரும் செப்டம்பர் 25 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.</p> <figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/cqpvzjV6VaA"></iframe></figure>]]></content:encoded></item><item><title>கல்லணையில் இருந்து வினாடிக்கு 3,000 கனஅடி நீர் திறப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ministers-open-3000-cusecs-from-kallanai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ministers-open-3000-cusecs-from-kallanai#comments</comments><guid isPermaLink="false">6db83b9f-e87e-4ef6-ab9a-21743f390201</guid><pubDate>Sun, 06 Sep 2026 10:21:28 +0000</pubDate><atom:updated>2026-09-06T10:21:28.173Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>farmers,விவசாயிகள்,டெல்டா மாவட்டங்கள்,Delta districts,கல்லணை திறப்பு,Kallanai</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/kyqmxbpb/kallanai.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ kallanai]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/kyqmxbpb/kallanai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கல்லணையிலிருந்து காவிரி டெல்டா விவசாயிகளின் பாசனத் தேவைக்காக அமைச்சர்கள் விக்னேஷ் மற்றும் ஷாஜகான் ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்தனர். </p><p>கடந்த 1-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனத்திற்காக தண்ணீரை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்.</p><p>அந்த தண்ணீர் நேற்று முன்தினம் திருச்சி மாவட்டம், முக்கொம்பிற்கு வந்தடைந்தது. அங்கு விவசாயிகள் பூக்கள் தூவி வரவேற்றனர். தொடர்ந்து, <a href="https://www.maalaimalar.com/news/national/cauvery-water-sharing-tamil-nadu-karnataka-arguments-supreme-court" rel="nofollow">காவிரி</a> தண்ணீர் தஞ்சாவூர் மாவட்டம், கல்லணைக்கு நேற்று வந்தடைந்தது.</p><h2>அமைச்சர்கள் திறந்தனர்</h2><p>கல்லணைக்கு வந்த தண்ணீரை காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு, கல்லணை கால்வாய் ஆகிய ஆறுகளில் பிரித்து வழங்குவதற்கான நிகழ்ச்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடந்தது.</p><p>இதற்காக ஏற்கனவே கல்லணையில் உள்ள தலைப்பு பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது.</p><p>இதையடுத்து கல்லணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனத்திற்காக  காவிரியில் வினாடிக்கு 1000 கன அடி, வெண்ணாற்றில் வினாடிக்கு 1000 கன அடி, கொள்ளிடத்தில் 500 கன அடி, கல்லணை கால்வாயில் வினாடிக்கு 500 கன அடி வீதமும் தண்ணீரை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் ரவி, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் ஆகியோர் பொத்தானை அழுத்தி திறந்து வைத்து, சாகுபடி அனைத்தும் நல்ல முறையில் நடைபெற வேண்டும் என ஆறுகளில் பூக்கள், நவதானிங்களை தூவி வணங்கினர்.</p><p>கல்லணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் டெல்டா மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி மேற்கொள்ளப்பட உள்ளது.</p><p>முன்னதாக தண்ணீர் திறந்து விடப்படுவதற்கு முன்பு கல்லணையில் கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில், கருப்பண்ணசாமி கோவில் மற்றும் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%88" rel="nofollow">கல்லணை</a> பூங்காவில் உள்ள ஆதிவிநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன.</p>]]></content:encoded></item><item><title>VIDEO: டெல்லியில் PG விடுதி இடிந்து விழுந்ததால் பரபரப்பு - இடிபாடுகளுக்கு அடியில் பல மாணவர்கள் சிக்கித் தவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/horrific-accident-in-delhi-pg-hostel-collapses-many-students-trapped-under-the-debris</link><comments>https://www.maalaimalar.com/news/national/horrific-accident-in-delhi-pg-hostel-collapses-many-students-trapped-under-the-debris#comments</comments><guid isPermaLink="false">0964eec3-bf79-47da-b571-6dd12c6e4ebc</guid><pubDate>Sun, 06 Sep 2026 09:41:38 +0000</pubDate><atom:updated>2026-09-06T09:41:38.819Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கட்டிட விபத்து,Building Collapse,தங்கும் விடுதி,delhi,PG,டெல்லி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/11j5h3qz/tn-14.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டெல்லி விடுதி விபத்து]]></media:title><media:description type="html"><![CDATA[ டெல்லி விடுதி விபத்து]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/11j5h3qz/tn-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தலைநகர் டெல்லியில் சத்ய நிகேதன் பகுதியில் விடுதி கட்டிடம் ஒன்று இடிந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF">டெல்லி </a>சத்ய நிகேதன் பகுதியில் அமைந்துள்ள அந்த கட்டிடம் PG (Paying guest) தங்கும் விடுதியாக செயல்பட்டு வந்துள்ளது. அங்கு சுமார் 50 மாணவர்கள் வரை தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. </p><p>இந்நிலையில் இன்று மதியம் 1.30 மணி சுமாருக்கு கட்டிடமானது இடிந்து விழுந்துள்ளது. இதில் உள்ளே தங்கியிருந்த பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளனர். </p> <h2>மீட்பு</h2><p>தகவலறிந்து விரைந்த <a href="https://www.maalaimalar.com/news/world/i-was-chanting-hare-krishna-for-9-days-worker-rescued-from-tunnel">மீட்பு படை</a>யினர் உடனடியாக மீட்பு பணிகளை தொடங்கினர். இதுவரை ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏனையோரை மீட்கும் பணிகள் தீவிர கதியில் நடந்து வருகின்றது.</p><p>மீட்பு பணியாளர்களுடன் உள்ளூர் மக்களும் இணைந்து இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>இடிந்து விழுந்த கான்கிரீட் கூரையின் கீழ் நபர் ஒருவர் சிக்கிய நிலையில், அவரை மீட்பு பணியாளர்கள் மீட்க போராடும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Delhi: A building has collapsed near Satya Niketan in South-West Delhi. The fire department received an alert around 1:30 PM. The rescue operation is underway. More details are awaited: Delhi police <a href="https://t.co/lqq8qFIUfE">pic.twitter.com/lqq8qFIUfE</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2096519944762696057?ref_src=twsrc%5Etfw">September 6, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>சத்ய நிகேதன்</h2><p>சத்ய நிகேதன் பகுதியில் பல கல்லூரிகள் அமைந்துள்ளதால் அதனை சுற்றிய பகுதியில் மாணவர்கள் அதிகம் வசித்து வருகின்றனர்.</p><p>எனவே அங்கு பல பிஜிக்கள் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் அதுபோன்றதொரு பிஜி கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது மாணவர்களின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கியுள்ளது.</p><p>தற்போதைய சம்பத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அருகில் இருக்கும் கட்டிடங்களில் வசித்து வருபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் அரசு அதிகாரிகள் ஆட்சி நடைபெறுவதாக கம்யூனிஸ்டுகள் கூறுவது வேடிக்கையானது- அமைச்சர்  விமர்சனம்</title><link>https://www.maalaimalar.com/news/topnews/communists-to-claim-that-the-administration-is-being-run-by-government-officials</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/communists-to-claim-that-the-administration-is-being-run-by-government-officials#comments</comments><guid isPermaLink="false">631097a9-048d-4fa1-a531-184c775a39ca</guid><pubDate>Sun, 06 Sep 2026 09:28:57 +0000</pubDate><atom:updated>2026-09-06T09:28:57.146Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தவெக,tvk,communists,கம்யூனிஸ்டுகள்,அமைச்சர் அருண்ராஜ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/58tn802t/arunraj.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/58tn802t/arunraj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த தி.மு.க. ஆட்சியில் தான் அதிகாரிகளின் ஆட்சி நடைபெற்றது. அப்போதைய முதலமைச்சருக்கு என்ன நடக்கிறது என்றே தெரியாமல் அதிகாரிகள் சொல்வது தான் உலகம் என்று நம்பிய ஆட்சி நடைபெற்றது.</p><p>சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் சிறப்பு குழந்தைகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.</p><p>வெற்றி பெற்ற சிறப்பு குழந்தைகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதக்கம் வழங்கி கவுரவித்தார்.</p><h2><strong>அப்போது அமைச்சர் அருண்ராஜ் பேசியதாவது:-</strong></h2><p>உலகம் அனைவருக்கும் சமமானது, அனைவருக்கும் சம வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதுதான் உண்மையான சமூக நீதி. சிறப்பு குழந்தையின் இயற்கையான வாழ்வையே மறுவாழ்வு என்போம், இப்படித்தான் நம் சமூகத்தின் கட்டமைப்பாக உள்ளது. அனைவருக்கும் சம வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. அவர்களுக்கு தேவையான வாய்ப்பைக் கொடுத்தாலே போதுமானது. ஏழையின் சிரிப்பில் இறைவனை பார்க்கிறேன் என அண்ணா கூறினார்.</p><h2><strong>விமர்சனம்</strong></h2><p>ஒரு குழந்தை ஓடி வந்து அவரது மொழியில் சி எம் என கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். உண்மையாகவே மகிழ்ச்சியாக இருந்தது.</p><p>சிறப்பு குழந்தைகளை சிறு வயதிலேயே கண்டறிய முடியும் அரசு துறையில் இதற்கான திட்டங்களும் உள்ளது. பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்ற தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை அடிப்படையில் அனைவரும் சேர்ந்து அனைவருக்கும் சம வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்போம் என்ற உறுதிமொழியை ஏற்போம்.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p><p>பின்னர் நிருபர்களுக்கு அமைச்சர் அருண்ராஜ் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், திண்டுக்கல் மாவட்டத்தில் இடதுசாரி அமைப்புகளை சேர்ந்த மாணவர்களின் விவரங்களை எடுக்கச் சொன்னதை சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டில் அரசு ஆட்சியாக இல்லாமல் அரசு அதிகாரிகள் ஆட்சி என கம்யூனிஸ்டுகள் விமர்சனம் செய்தது குறித்து கேள்வி எழுப்பினர்.</p><h2><strong>இதற்கு அமைச்சர் அருண்ராஜ் கூறுகையில்,</strong></h2><p>கடந்த தி.மு.க. ஆட்சியில் தான் அதிகாரிகளின் ஆட்சி நடைபெற்றது. அப்போதைய முதலமைச்சருக்கு என்ன நடக்கிறது என்றே தெரியாமல் அதிகாரிகள் சொல்வது தான் உலகம் என்று நம்பிய ஆட்சி நடைபெற்றது.</p><h2><strong>அரசு</strong></h2><p>திண்டுக்கல் மாவட்டத்தில் இடதுசாரி அமைப்புகளைச் சார்ந்த மாணவர்களின் விவரங்களை சேகரிக்க சொன்னது அரசின் கவனத்திற்கு வராமல் நடைபெற்றது என்பதற்கு விளக்கம் கொடுக்கப்பட்டுவிட்டது. அந்த சுற்றறிக்கை அனுப்பியவர்கள் மீது அரசு நடவடிக்கையும் எடுத்து உள்ளது.</p><p>இந்த ஒரு நிகழ்வை மட்டும் வைத்துக்கொண்டு அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் அரசு உள்ளது என சொல்வது வேடிக்கையாக உள்ளது. அரசு அதிகாரிகள், இந்த ஆட்சியை வெளிப்படையான அரசு அமைந்துள்ளது என்பதை அவர்கள் பணியாற்றுவதற்கான வாய்ப்பாக பார்க்கின்றனர். ஒரு சிலர் செய்யும் தவறுகளினால் அனைத்தையும் தவறு என்று சொல்ல முடியாது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>இந்தோனேசியாவை அதிரவைத்த எரிமலை வெடிப்பு.. விமான சேவைகள் ரத்து</title><link>https://www.maalaimalar.com/news/world/volcanic-eruption-rocks-indonesia-flight-services-cancelled</link><comments>https://www.maalaimalar.com/news/world/volcanic-eruption-rocks-indonesia-flight-services-cancelled#comments</comments><guid isPermaLink="false">77dcfa4c-3653-4d41-bb80-7f07a23839a2</guid><pubDate>Sun, 06 Sep 2026 09:22:38 +0000</pubDate><atom:updated>2026-09-06T09:22:38.875Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தோனேசியா,எரிமலை வெடிப்பு,Volcano,Volcanic Eruption,indonesia,எரிமலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/1960c5nc/tn-13.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அனக் கிரகடாவ் எரிமலை வெடிப்பு]]></media:title><media:description type="html"><![CDATA[ அனக் கிரகடாவ் எரிமலை வெடிப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/1960c5nc/tn-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தோனேசியாவில் 'அனக் கிரகடாவ்' எரிமலை வெடித்துச் சிதறியுள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/topic/indonesia">இந்தோனேசியாவில் </a>ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையே உள்ள சுண்டா ஜலசந்தி பகுதியில் 'அனக் கிரகடாவ்'  என்ற எரிமலை அமைந்துள்ளது. </p><h2>எரிமலை வெடிப்பு </h2><p>நேற்று முன் தினம் (வெள்ளிக்கிழமை) முதல் அனக் கிரகடாவ் <a href="https://www.maalaimalar.com/topic/volcanic-eruption">எரிமலையில் </a>லேசான அதிர்வுகள் பதிவாகி வந்த நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3:53 மணிக்கு எரிமலை வெடித்து சிதறியது.</p> <p>செயற்கைக்கோள் படங்களின்படி, எரிமலையிலிருந்து 20,000 அடி மற்றும் 50,000 அடி உயரத்திற்கு இரு மாபெரும் சாம்பல் மேகங்கள் எழும்பி, ஜகார்த்தா, லம்பங் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளுக்குப் பரவின.</p><p>குடியிருப்பு பகுதிகள் எரிமலையிலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ளதால் உடனடி உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.</p><p>இருப்பினும், எரிமலையிலிருந்து 3 கி.மீ சுற்றளவுக்குச் செல்ல வேண்டாம் என மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p> <h2>விமானங்கள் ரத்து</h2><p>தலைநகர் ஜகார்த்தா உள்ளிட்ட 6 முக்கிய விமான நிலையங்களின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.</p><p>இதனால் 58 சர்வதேசச் சேவைகள் உட்பட மொத்தம் 301 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.</p><p>ஜகார்த்தாவின் முக்கிய சர்வதேச விமான நிலையமான 'சுகர்னோ-ஹட்டா' அதிகாலை 5:30 மணி முதல் தற்காலிகமாக மூடப்பட்டது.</p><p>சிங்கப்பூர், ஹாங்காங், சிட்னி, ஆம்ஸ்டர்டாம், சியோல், தோஹா மற்றும் கோலாலம்பூர் ஆகிய நகரங்களுக்கான சர்வதேச விமானச் சேவைகளும், பாலி, சுராபயா போன்ற உள்நாட்டுச் சேவைகளும் பாதிக்கப்பட்டன.</p> <p>இதனால் ஒரே நாளில் சுமார் 22,800 பயணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். நிலைமை சீரடையும் என்ற நம்பிக்கையில் பல பயணிகள் நிலையங்களில் காத்திருந்தனர்.</p><p>"ஒவ்வொரு நடவடிக்கையிலும் பயணிகளின் பாதுகாப்பிற்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது" என இந்தோனேசிய போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p> <h2>அனக் க்ரக்கடாவ் எரிமலை</h2><p>'கிரகடாவ்வின் குழந்தை' என்று அழைக்கப்படும் அனக் கிரகடாவ் எரிமலை, 1883 ஆம் ஆண்டு உலகையே உலுக்கிய 'கிரகடாவ்' எரிமலை வெடிப்பிற்குப் பிறகு, 1927 ஆம் ஆண்டில் கடலுக்கு அடியில் இருந்து புதிதாக உருவாகத் தொடங்கியது.</p><p>2018ஆம் ஆண்டில் இந்த அனக் கிரகடாவ் எரிமலை வெடித்தபோது, அதன் ஒரு பகுதி கடலுக்குள் சரிந்து விழுந்து ஏற்பட்ட நிலச்சரிவால் பயங்கரச் சுனாமி உருவானது. இதில் சுமத்ரா மற்றும் ஜாவா தீவுகளில் 430க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.</p> <p>அன்றிலிருந்து இன்றுவரை இந்த எரிமலை நாட்டின் 2வது மிக ஆபத்தான பகுதி என்ற நிலையிலேயே உள்ளது.</p><p>கடந்த காலங்களிலும் தற்போதும் ஏற்பட்ட இந்த தொடர் வெடிப்புகளால் எரிமலையின் அளவு அதன் ஆரம்ப அளவிலிருந்து கால் பங்காக குறைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>OBC மக்கள் உரிமையை காக்க தீர்மானம் இயற்றுக..!- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-urges-resolution-to-safeguard-obc-rights</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-urges-resolution-to-safeguard-obc-rights#comments</comments><guid isPermaLink="false">69f7b5a9-95f4-4fee-93f1-59e787146cf8</guid><pubDate>Sun, 06 Sep 2026 09:02:34 +0000</pubDate><atom:updated>2026-09-06T09:02:34.345Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,ஓபிசி,OBC,Resolution,முக ஸ்டாலின்,தீர்மானம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/5qwycugn/MKS.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DMK Leader MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/5qwycugn/MKS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்! <a href="https://www.maalaimalar.com/search?q=OBC" rel="nofollow">OBC</a> மக்களின் உரிமையைக் காப்பாற்றச் சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்ற வேண்டும்!</p><p>தற்போது எடுக்கப்பட்டு வரும் #Census2027 கணக்கெடுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தோரைக் கணக்கிட ‘open-ended format to record caste details without a pre-determined drop-down list or standardized menu’ முறையை ஒன்றிய அரசு பயன்படுத்தும் என்று வெளியாகியுள்ள அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது.</p><p>ஓபிசி பட்டியலில் இடம்பெற்றுள்ளவை வகுப்புகள்தானே தவிர, அவை சாதிகள் அல்ல என்று ஒன்றிய அரசு தரப்பில் தரப்பட்டுள்ள விளக்கம் ஏற்புடையது அல்ல!</p><p>மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இடம்பெற்றுள்ள சாதிகளின் பட்டியலைப் பெற்று, தொகுத்து, பதிவேற்றி, அதில் இடம்பெற்றுள்ள சாதிகளில் ஒன்றைத் தெரிவு செய்யும் வாய்ப்பை மக்களுக்கு வழங்கும் வழிமுறையே குழப்பங்களுக்கு இடம் தராது. மாறாக, பொதுமக்கள் கூறும் சாதியின் பெயரைப் பதிவேற்றுவது குழப்பங்களுக்கே வழிவகுக்கும்.</p><p>இதனால் இந்தியாவில் 46 இலட்சம் சாதிகள் இருப்பதாகக் குளறுபடியான கணக்கு வரும் என்ற ஆபத்தைச் சமூகநீதியில் அக்கறை கொண்ட பலரும் சுட்டிக்காட்டுவதை அரசு புறந்தள்ளிவிடக் கூடாது.</p><p>சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் நோக்கமே பட்டியலினச் சமூக மக்களின் எண்ணிக்கையைப் போல, OBC மக்களின் உண்மையான எண்ணிக்கையையும் அவர்களது <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/high-court-madurai-bench-order-educational-institutions-must-not-ask-for-caste-or-religious-details" rel="nofollow">கல்வி</a>, சமுதாய, பொருளாதார நிலைமையையும் அறிந்துகொள்வதுதான்.</p><p>அப்போதுதான் அவர்கள் அதிகாரம் பெறுவதற்கான இடஒதுக்கீட்டுக் கொள்கைகளை வகுக்கவும், அவர்தம் முன்னேற்றத்துக்குத் தேவையான திட்டங்களைத் தீட்டவும் அரசுகளால் இயலும்.</p><p>அப்படி இருக்கையில், ஒன்றிய, மாநில அரசுகளின் OBC சாதிகளின் பட்டியலை வைத்து, அதிலிருந்து மக்கள் சாதிப்பெயரைத் தேர்வு செய்யும் முறையைப் பின்பற்றினால்தான் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படுவதன் நோக்கம் நிறைவேறும்.</p><p>தற்போதைய முறையைத் தொடர்ந்தால், மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்காகச் செலவிடப்படும் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாயும், இலட்சக்கணக்கான அரசு ஊழியர்களின் உழைப்பும் வீணடிக்கப்படும். இதனால் எந்தப் பயனும் இல்லை. இது வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாக அமைந்துவிடும் ஆபத்தைப் புறந்தள்ளக் கூடாது.</p><p>பொருத்தமற்ற விளக்கங்களைக் கூறி, ஒரு தவறை நியாயப்படுத்தாமல், குளறுபடிகளுக்கு இடம் தராமல், சாதிவாரிக் கணக்கெடுப்பின் உண்மையான நோக்கம் நிறைவேறுவதற்கான திருத்த நடவடிக்கைகளை உடனடியாக ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்.</p><p>கோடானுகோடி பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதி உரிமையை உறுதிசெய்து, நீதி வழங்க வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்.</p><p>தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில், நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே இதற்கான சிறப்புத் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/resolution-moved-by-the-chief-minister-passed-unanimously-in-the-legislative-assembly" rel="nofollow">தீர்மானம்</a> நிறைவேற்றி, உரிய அழுத்தத்தை ஒன்றிய அரசுக்கு வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மத்திய பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்த 11 பேர் பலி</title><link>https://www.maalaimalar.com/news/national/11-killed-liquor-in-madhya-pradeshs</link><comments>https://www.maalaimalar.com/news/national/11-killed-liquor-in-madhya-pradeshs#comments</comments><guid isPermaLink="false">cd7748f2-45d0-4596-b2a2-23589716d843</guid><pubDate>Sun, 06 Sep 2026 08:52:39 +0000</pubDate><atom:updated>2026-09-06T08:52:39.895Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய பிரதேசம்,liquor,கள்ளச்சாராயம்,சாராயம்,Madhya Pradeshs</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/e5q47qxf/mayth.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/e5q47qxf/mayth.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கள்ளச்சாராயம் குடித்து 11 பேர் உயிரிழந்த நிலையில் 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து கள்ளச்சாராயம் விற்றவர்களை தேடி வருகின்றனர். </p><p>மத்தியபிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் பண்டா தாலுகா உள்ளது. இதன் அருகே உள்ள 4 கிராமத்தை சேர்ந்தவர்கள் கள்ளச்சாராயம் அருந்தியுள்ளனர். இதில் பலரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவர்களுக்கு தலைவலி, வாந்தி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.</p><h2><strong>மருத்துவமனையில் சிகிச்சை</strong></h2><p>ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே 11 பேர் பலியானார்கள். 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2><strong>கள்ளச்சாராயம்</strong></h2><p>கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்கள் கவ்கர், நவ்ராஜ் மற்றும் பராஜ் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். 4 கிராமங்களை சேர்ந்தவர்களிடமும் மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருவதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.</p><h2><strong>போலீசார் வழக்குப் பதிவு</strong></h2><p>இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து கள்ளச்சாராயம் விற்றவர்களை தேடி வருகிறார்கள். இதுகுறித்து மாநில அரசு தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>2026-ம் ஆண்டிற்கான உலக அழகி பட்டம் வென்றார் டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா</title><link>https://www.maalaimalar.com/news/world/joheirry-mola-of-dominican-republic-wins-miss-world-2026</link><comments>https://www.maalaimalar.com/news/world/joheirry-mola-of-dominican-republic-wins-miss-world-2026#comments</comments><guid isPermaLink="false">4c201cd7-4448-4755-9c1d-9196f822415a</guid><pubDate>Sun, 06 Sep 2026 08:48:58 +0000</pubDate><atom:updated>2026-09-06T08:48:58.449Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>miss world,உலக அழகிப் போட்டி,Dominican Republic,டொமினிகன் குடியரசு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/c5xs8yfk/miss-world.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ miss world]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/c5xs8yfk/miss-world.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>2026-ம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஜோஹெய்ரி மோலா டொமிங்கஸ் வென்றுள்ளார்.</strong></em></p><p>73-வது உலக அழகிப் போட்டியின் இறுதிச்சுற்று வியட்நாமின் நஹா ட்ராங் நகரில் நடந்தது. உலக அழகிப் போட்டி வியட்நாமில் நடத்தப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.</p><p>இந்த ஆண்டு போட்டியில் 111 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில், அவர்களை பின்னுக்குத் தள்ளி 2026-ம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை டொமினிகன் குடியரசைச் சேர்ந்த 24 வயதான ஜோஹெய்ரி மோலா டொமிங்கஸ் வென்றார்.</p><h2>2-வது உலக அழகி</h2><p>இதன்மூலம் டொமினிகன் குடியரசு 44 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உலக அழகி பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது. அந்த நாடு இதற்கு முன்பு 1982-ம் ஆண்டு மரியாசெலா அல்வரெஸ் மூலம் உலக அழகி பட்டத்தை வென்றிருந்தது. இதன்மூலம் ஜோஹெய்ரி மோலா, டொமினிகன் குடியரசின் 2-வது உலக அழகியாகி உள்ளார்.</p><h2>வெளியேறிய இந்தியா</h2><p>ஸ்பெயினைச் சேர்ந்த எலிசபெத் ரெய்னெஸ் முதல் ரன்னர்-அப் பட்டத்தையும், மலேசியாவின் தானுஷியா செட்டி 2-வது ரன்னர்-அப் பட்டத்தையும் பெற்றனர்.</p><p>இந்தியா சார்பில் பங்கேற்ற நிகிதா முதல் 40 இடங்களுக்குள் முன்னேறினார். ஆனால் அவர் முதல் 20 இடங்களுக்குள் தகுதி பெற முடியாமல் போட்டியில் இருந்து வெளியேறினார்.</p><p>கடந்த 2025-ம் ஆண்டு உலக அழகி பட்டத்தை தாய்லாந்தைச் சேர்ந்த ஒபல் சுசாதா சுவாங்ஸ்ரீ வென்றிருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>கிராமசபை கூட்டத்திற்கு 7 நாட்களுக்கு முன்பே  அறிவிப்பு வெளியிட வேண்டும் - முதலமைச்சர் விஜய்க்கு கமல்ஹாசன் கடிதம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/notice-for-the-gram-sabha-meeting-must-be-issued-seven-days-in-advance-kamal-haasan-writes-to-chief-minister-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/notice-for-the-gram-sabha-meeting-must-be-issued-seven-days-in-advance-kamal-haasan-writes-to-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">d90f3568-5ca6-4bda-9caf-cc8c27ca7926</guid><pubDate>Sun, 06 Sep 2026 08:36:40 +0000</pubDate><atom:updated>2026-09-06T08:36:40.315Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>கிராம சபைக் கூட்டம்,GRAM SABHA MEETING,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,கமல்ஹாசன் எம்பி,MP Kamal Haasan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/kv667yyl/New-Project-2026-09-06T140546.889.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கிராமசபை கூட்டத்திற்கு 7 நாட்களுக்கு முன்பே  அறிவிப்பு வெளியிட வேண்டும் - முதலமைச்சர் விஜய்க்கு கமல்ஹாசன் கடிதம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/kv667yyl/New-Project-2026-09-06T140546.889.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கிராம சபைக் கூட்டங்களை வலுப்படுத்துவது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-thai-vazhthu-gets-top-billing-at-government-events-kamal-haasan-welcomes-assembly-resolution">கமல்ஹாசன் </a>தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். </p><p>அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது;</p><p>“தமிழ்நாடு மக்கள் உங்கள் தலைமையின் மீது நம்பிக்கை வைத்து, மாநிலத்தை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பை உங்களிடம் ஒப்படைத்துள்ளனர்.</p><p>உங்கள் தலைமையில், அரசை மக்களிடம் மேலும் நெருக்கமாகக் கொண்டு சேர்க்கும் மக்களாட்சி மற்றும் நிர்வாக அமைப்புகளை மேலும் வலுப்படுத்த ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது.</p><p>வருகிற அக்டோபர்  2-ம் தேதி  நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டங்களில் ஊர் தொடர்பான பிரச்சனைகளை விவாதித்து, உள்ளாட்சி நிர்வாகத்தில் நேரடியாகப் பங்கேற்க முடியும்.</p><p>இது தொடர்பாக, நான் பின்வரும் கோரிக்கைகளைத் தங்களது பரிசீலனைக்கு&nbsp; வழங்குகிறேன்:</p><p>பஞ்சாயத்துப் பிரதிநிதிகளின் மாதாந்திர மதிப்பூதியத்தை கணிசமாக உயர்த்துதல் வேண்டும். தற்போது அவர்களுக்கு வழங்கப்படும்&nbsp;மாதாந்திர மதிப்பூதியமானது&nbsp;மிகவும் குறைவாக உள்ளது. </p><p>உதாரணமாக, கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்களின்&nbsp;மாதாந்திர மதிப்பூதியமானது&nbsp;2021-ல் ரூ.1,000-லிருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்பட்டது.<br></p><ul><li><p>தமிழ்நாடு அரசு இந்த மாதாந்திர மதிப்பூதியத்தை கணிசமாக உயர்த்தப் பரிசீலிக்க வேண்டும். </p></li><li><p>உள்ளூர் டாஸ்மாக் கடைகள் குறித்த முடிவில் கிராம சபைக்கு அதிகாரம் அளித்தல்.</p></li><li><p>கிராம வளர்ச்சித் திட்டமிடலை பொதுமக்கள் உண்மையாகப் பங்கேற்கும் ஒரு செயல்முறையாக மாற்றுதல்.</p></li><li><p>உள்ளாட்சி நிர்வாகத்தில் ஆராய்ச்சி மற்றும் செயல்திறன் மேம்பாட்டை வலுப்படுத்துதல்.</p></li></ul><ul><li><p>கிராம சபைக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின் மீது குறிப்பிட்ட கால வரம்பிற்குள் நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்தல்.</p></li><li><p>தங்கள் தீர்மானங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதை மக்கள் உணரும்போது, கிராம சபையின் மீது நம்பிக்கை அதிகரித்து, மக்கள் பங்கேற்பும் இயல்பாகவே உயரும்.</p></li><li><p>அடிமட்ட அளவில் வலுவான பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை கலாச்சாரத்தை உருவாக்குதல்.</p></li></ul><ul><li><p>காந்தியடிகளின் கிராம ஸ்வராஜ் (கிராம சுயராஜ்யம்) கனவு, அதிகாரம் பெற்ற கிராமங்களையும், பொதுமக்கள் பங்கேற்கும் ஜனநாயகத்தையும் அடிப்படையாகக் கொண்டது. </p></li><li><p>அதற்கு நாம் செலுத்தும் சிறந்த மரியாதை, கிராம நிர்வாகத்தில் தமிழ்நாட்டை இந்தியாவின் ஒரு முன்மாதிரி மாநிலமாக மாற்றுவதுதான்.</p></li><li><p>கிராம சபைக் கூட்டத்திற்கு குறைந்தபட்சம் 7 நாட்களுக்கு முன்பே பொது அறிவிப்பும், விவாதப் பட்டியலும் வெளியிடப்பட வேண்டும் என்ற அரசின் விதியைச் சரியாகப் பின்பற்ற வேண்டும்.</p></li></ul><p>நீங்கள் இந்தக் கோரிக்கைகளைப் பரிசீலித்து, உங்கள் தலைமையில் தமிழ்நாட்டின் கிராம சபைகளை மேலும் வலுப்படுத்தவும், அதிக மக்கள் பங்கேற்பு கொண்டதாகவும், தன்னாட்சி பெற்றதாகவும் மாற்ற நடவடிக்கை எடுப்பீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அமைச்சர் வன்னி அரசின் சகோதரிக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - ஒருவர் உயிரிழப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/explosion-at-firecracker-factory-owned-by-minister-vanniyarasus-sister-one-person-dead</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/explosion-at-firecracker-factory-owned-by-minister-vanniyarasus-sister-one-person-dead#comments</comments><guid isPermaLink="false">5671fc51-2506-4f5d-b942-9df200cd9cd9</guid><pubDate>Sun, 06 Sep 2026 07:30:48 +0000</pubDate><atom:updated>2026-09-06T07:30:48.700Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>வெடிவிபத்து,firecracker factory,பட்டாசு ஆலை,Explosion Accident,Minister Vanniyarasu,அமைச்சர் வன்னியரசு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/x832ox6n/New-Project-2026-09-06T130014.076.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் வன்னி அரசின் சகோதரிக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - ஒருவர் உயிரிழப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/x832ox6n/New-Project-2026-09-06T130014.076.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p> விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஒத்தையால் உள்ள  “சின்னத்தம்பி பைரோடெக்ஸ்” என்ற பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில், மீனம்பட்டியைச் சேர்ந்த மாடசாமி (33) என்ற தொழிலாளி உயிரிழந்தார்.</p><p>வேதிப்பொருட்களைக் கலக்கும் அறையில் ஏற்பட்ட உராய்வு காரணமாக இந்த விபத்து நேரிட்டதாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.</p><p>இந்நிலையில் இந்த ஆலை தமிழ்நாடு சமூக நீதித்துறை அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/it-has-been-created-purely-out-of-sheer-stupidity-vck-general-secretary-sinthanai-selvan">வன்னியரசுவின் </a>சகோதரி எம். ஜெயலட்சுமி என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.</p><h2>போலீஸ் நடவடிக்கை</h2><p>இதனைத்தொடர்ந்து சாத்தூர் தாலுகா போலீசார், அமைச்சர் வன்னியரசுவின் சகோதரி ஜெயலட்சுமி, அவரது மகள் செல்வமாரி, மகன் முரளீஸ்வரன் மற்றும் ஆலை மேற்பார்வையாளர் சூர்யபிரகாஷ் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.</p><p>இதில் மேற்பார்வையாளர் சூர்யபிரகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள மற்ற மூவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.</p><h2>நிவாரணம்</h2><p>இதனிடையே உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் ரூ.4 லட்சம் நிதியுதவி மற்றும் இரங்கலைத் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>“பெரும்பான்மை முட்டாள்தனத்தினாலேயே உருவாக்கப்பட்டிருக்கும்” - விசிக பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/it-has-been-created-purely-out-of-sheer-stupidity-vck-general-secretary-sinthanai-selvan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/it-has-been-created-purely-out-of-sheer-stupidity-vck-general-secretary-sinthanai-selvan#comments</comments><guid isPermaLink="false">92b7858c-248c-41b6-a63d-033e814837c4</guid><pubDate>Sun, 06 Sep 2026 07:16:16 +0000</pubDate><atom:updated>2026-09-06T07:16:16.559Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,விசிக,vck,சிந்தனைச் செல்வன்,Sinthanai selvan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/bmqsup4m/New-Project-2026-09-06T124544.708.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “பெரும்பான்மை முட்டாள்தனத்தினாலேயே உருவாக்கப்பட்டிருக்கும்” - விசிக பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/bmqsup4m/New-Project-2026-09-06T124544.708.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்று வெற்றிப்பெற்ற விசிக, தேர்தலுக்கு பின்னர் தவெக ஆட்சியமைக்க ஆதரவளித்து தற்போது அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளது.</p><p>விசிக சார்பாக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-lashes-out-at-dmk-and-aiadmk-hill-tribes-welfare-issues">அமைச்சர் வன்னியரசு</a> திமுகவை விமர்சிக்கும் வகையில் சட்டசபையில் பேசிவருவது தற்போது திமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.</p><p>இதனால் திமுக மற்றும் விசிக தொண்டர்களிடையே வார்த்தை போர் மூண்டு வருகிறது. இந்நிலையில் விசிகவின் பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு இணையத்தில் கவனம் ஈர்த்துவருகிறது. </p><p>அப்பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;</p><p>“தோல்வியடைந்த ஒரு சமூகம் எப்படியிருக்கும்?" என்று கேட்டபோது, புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் ஆண்டன் செக்கோவ் இப்படி விளக்கினார்:</p><p>தோல்வியடைந்த சமூகங்களில், ஆரோக்கியமாகச் சிந்திக்கும் ஒவ்வொருவனுக்கும் எதிராக ஆயிரம் முட்டாள்கள் களத்தில் இருப்பார்கள்.</p><p>சிந்தனையோடும், கரிசனையோடும் உதிர்க்கப்படும் ஒவ்வொரு சொல்லுக்கும் எதிராக, தீவிரமானதும் முட்டாள்தனமானதுமான ஆயிரம் சொற்கள் உதிர்க்கப்படும்.</p><p>அங்கே பெரும்பான்மை, முட்டாள்தனத்தினாலேயே உருவாக்கப்பட்டிருக்கும்.</p><p>எந்த சமூகத்தில் அற்பமான விஷயங்கள் பெரும் தலைப்புகளாக மாற்றப்பட்டு, நல்லுணர்வான சிந்தனைகள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்டவையாகத் தள்ளி வைக்கப்படுகின்றனவோ, எந்த சமூகத்தில் அதன் களத்தை அற்பர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்களோ அதுவே தோல்வியடைந்த சமூகமாகும் - ஆண்டன் செக்கோவ்”. எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>பஞ்சாப்பில் நெகிழ்ச்சி: சான்றிதழ் சரிபார்ப்பில் 35 ஆண்டுக்கு பின் ஒன்றுசேர்ந்த அண்ணன்-தம்பி</title><link>https://www.maalaimalar.com/news/national/35-years-how-sir-reunited-brothers-in-haryana</link><comments>https://www.maalaimalar.com/news/national/35-years-how-sir-reunited-brothers-in-haryana#comments</comments><guid isPermaLink="false">929b928b-6601-4b38-ae8b-31f5f475c77b</guid><pubDate>Sun, 06 Sep 2026 07:15:49 +0000</pubDate><atom:updated>2026-09-06T07:15:49.940Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வாக்காளர் பட்டியல்,haryana,பஞ்சாப்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/3fcize5v/Haryana.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Haryana]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/3fcize5v/Haryana.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2><strong>பஞ்சாப்</strong></h2><p>பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் சீதாராம். மாற்றுத்திறனாளியான இவர், கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்வாதாரம் தேடி ஹரியானாவில் உள்ள தனது சொந்த ஊரிலிருந்து பஞ்சாப்பிற்கு இடம்பெயர்ந்தார். அங்கு தீவிர முயற்சிக்குப் பிறகு, பஞ்சாப் மாநில அரசுப் பணியில் 'டி' பிரிவில் அவருக்கு வேலை கிடைத்தது. தமக்குக் கிடைத்த வேலையை சார்ந்து, பஞ்சாப்பிலேயே தங்கி தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார் சீதாராம். ஆனால், காலப்போக்கில் சொந்த ஊரில் இருந்த குடும்பத்துடனான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. தம்பி எங்கு இருக்கிறார், உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற விபரம் தெரியாமல் அண்ணன் குடும்பமும், தங்களது அண்ணனை மீண்டும் காண்போமா என்ற ஏக்கத்தில் சீதாராமும் பல ஆண்டுகள் தவித்து வந்தனர்.</p><h2><strong>பள்ளி சான்றிதழ்</strong></h2><p>இந்த நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்.ஆர்.ஜே.) நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வந்தது. இதற்காக தனது பழைய பள்ளி சான்றிதழ் தேவைப்பட்டதால், சீதாராம் சமீபத்தில் ஹரியானா மாநிலம், ஜிந்த் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான மனோகர்பூருக்கு பயணமானார். அங்குள்ள அரசு பள்ளிக்கு சென்று தனது சான்றிதழை கோரியபோது, பள்ளி ஊழியர்கள் பழைய ஆவணங்களை தீவிரமாக தேடினர். அப்போது, சீதாராமின் பழைய குடும்ப விவரங்கள் மற்றும் முகவரி தகவல்கள் ஆவணங்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டன.</p><h2><strong>வாக்காளர் பதிவு</strong></h2><p>உடனடியாக செயல்பட்ட பள்ளி ஊழியர்கள், ஆவணத்தில் இருந்த தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி, சீதாராமின் மூத்த சகோதரரான கிருஷ்ணாவை தொடர்பு கொண்டனர். "உங்கள் தம்பி சீதாராம் இங்கு சான்றிதழ் வாங்க வந்திருக்கிறார்..." என்று அலைபேசியில் கேட்ட அந்த ஒரு வார்த்தை, அண்ணன் கிருஷ்ணாவை உறைய செய்தது. இத்தனை ஆண்டுகள் கழித்து தம்பி உயிரோடு இருக்கிறான் என்ற செய்தி, கிருஷ்ணா குடும்பத்தினரை ஆனந்தக் கண்ணீரில் மூழ்கடித்தது. தகவலறிந்த கிருஷ்ணா, சிறிதும் தாமதிக்காமல் உடனடியாக அங்குள்ள வாக்காளர் பதிவு அதிகாரியை தொடர்பு கொண்டார்.</p><h2><strong>வாக்காளர் பட்டியல்</strong> </h2><p>செய்தி அறிந்த கிருஷ்ணாவின் மனைவி, குழந்தைகள் என அனைவரும் ஓடோடி வந்து, 35 ஆண்டுகளுக்கு பிறகு தம் கண்முன்னே நிற்கும் சீதாராமை கட்டித்தழுவி அழுது, தங்களது பாசத்தை பொழிந்தனர். இதனைத்தொடர்ந்து, சகோதரர்கள் இருவரும் ஒரே வாகனத்தில் புறப்பட்டுச் சென்றனர். 35 வருட இடைவெளிக்கு  பிறகு பிரிந்த குடும்பம் மீண்டும் ஒன்று சேர்ந்த இந்த நெகிழ்ச்சியான சம்பவம், தற்போது சமூக வலை தளங்களில் பரவி பலரையும் நெகிழச் செய்துள்ளது. </p><h2><strong>கூடுதல் உதவி தேர்தல் பதிவு அதிகாரி</strong></h2><p>இதுகுறித்து கூடுதல் உதவி தேர்தல் பதிவு அதிகாரி (ஏ.இ.ஆர்.ஓ.) டாக்டர் ரமேஷ் குமார் கூறுகையில், "தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த நடவடிக்கை, வெறும் அதிகாரப்பூர்வப் பணி மட்டுமல்ல; அது 35 ஆண்டுகளாக பிரிந்திருந்த ஓர் அண்ணன்-தம்பியை மீண்டும் இணைக்கும் பாசப் பாலமாகவும் மாறியுள்ளது. வாழ்க்கையில் திசைமாறிபோன ஒரு குடும்பத்தை மீண்டும் ஒன்று சேர்த்ததில் எங்கள் களப்பணிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக கருதுகிறோம்,"என்று உணர்ச்சி பொங்கத் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>தவெக பிரமுகர் கொலை: ‘வெற்றி சட்டம் -ஒழுங்கு’ நிலை - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-functionarys-murder-udhayanidhi-stalin-criticizes-the-state-of-law-and-order</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-functionarys-murder-udhayanidhi-stalin-criticizes-the-state-of-law-and-order#comments</comments><guid isPermaLink="false">d607f0cc-03b2-4c72-aa71-54d14e366708</guid><pubDate>Sun, 06 Sep 2026 06:56:51 +0000</pubDate><atom:updated>2026-09-06T06:56:51.862Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,தவெக,Udhayanidhi Stalin,tvk,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/65fkfei7/New-Project-2026-09-06T122517.854.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தவெக பிரமுகர் கொலை: ‘வெற்றி சட்டம் -ஒழுங்கு’ நிலை - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/65fkfei7/New-Project-2026-09-06T122517.854.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை அடையாற்றில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/terrible-in-chennai-thaveka-celebrity-was-hacked-to-death-5-people-arrested">தவெக பிரமுகர் கண்ணன்</a> வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்.,</p><p>“நாளை முதலமைச்சர் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் மீது பதிலுரை அளிப்பதற்கு முன்பாக அவரது கட்சிப் பிரமுகர் ஒருவரே தலைநகரில் கொலைக்கு ஆளாகியுள்ளார்.</p><p>அதுவும், தனது உயிருக்குப் பாதுகாப்பு வேண்டி ஆளும் த.வெ.க.வில் இணைந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி சாலையில் ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இதுதான் தமிழ்நாட்டின் ‘வெற்றி சட்டம்-ஒழுங்கு’ நிலை!</p><p>தலைநகரிலேயே சாலையில், இப்படி ஒரு கொலை நடக்கும் அளவு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயிருப்பதை நினைத்து வருந்துவதா?</p><p>இல்லை, சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டியாகத் த.வெ.க. இருப்பதை நினைத்து வருந்துவதா?</p><p>இதற்கும் தி.மு.க.வை எப்படி குற்றம் சொல்லலாம் என யோசிப்பதை நிறுத்திவிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>சென்னையில் பயங்கரம் - தவெக பிரமுகர் ஓட ஓட வெட்டிக்கொலை... 5 பேர் கைது!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/terrible-in-chennai-thaveka-celebrity-was-hacked-to-death-5-people-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/terrible-in-chennai-thaveka-celebrity-was-hacked-to-death-5-people-arrested#comments</comments><guid isPermaLink="false">6eaedc54-719a-4a5c-85a3-a78285f0ef3a</guid><pubDate>Sun, 06 Sep 2026 06:43:40 +0000</pubDate><atom:updated>2026-09-06T06:43:40.673Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>கொலை வழக்கு,Murder case,சென்னை,Chennai,TVK functionary,தவெக பிரமுகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/dgz5jlqx/New-Project-2026-09-06T121240.007.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டபோது]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னையில் பயங்கரம் - தவெக பிரமுகர் ஓட ஓட வெட்டிக்கொலை... 5 பேர் கைது!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/dgz5jlqx/New-Project-2026-09-06T121240.007.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை அடையாறு சாஸ்திரி நகர் வண்ணாந்துறைப் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். அ.தி.மு.க.வில் 174வது தெற்கு வட்டக் செயலாளராக இருந்த கண்ணன், சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்து பணியாற்றி வந்தார்.</p><h2>ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை</h2><p>இந்த நிலையில் நேற்று இரவு (செப்.5) 9 மணி அளவில்  வண்ணாந்துறை பகுதியில் சென்று கொண்டிருந்த கண்ணனை மர்ம நபர்கள் சுற்றி வளைத்தனர்.  அவர்களது கையில் அரிவாள், கத்தி உள்ளிட்ட  பயங்கர ஆயுதங்கள் இருந்தன.</p><p>இதைபார்த்து அதிர்ச்சியில் உறைந்துபோன கண்ணன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இருப்பினும் ரவுடி கும்பல் கண்ணனை ஓட ஓட விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டியது.</p><p>இதில் நிலைகுலைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார். </p><h2>உறவினர்கள் முற்றுகை</h2><p>இது பற்றி தகவல் கிடைத்ததும் சாஸ்திரி நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><p>இதற்கிடையே கண்ணன் கொலை செய்யப்பட்ட தகவல் பரவியதும் அப்பகுதியைச் சேர்ந்த அவரது உறவினர்கள் திரண்டு  முற்றுகை  போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><h2>காரணம் என்ன?</h2><p>போலீசாரின் ரவுடிகள் பட்டியலில்  ஏற்கனவே இடம் பெற்றிருந்த கண்ணன் மீது பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. </p><p>திருவான்மியூர் பகுதியில் நடைபெற்ற கொலை ஒன்றில் பழிக்குப் பழி வாங்கும் வகையில் கண்ணனை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்திருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. </p><p>அதே நேரத்தில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்த கண்ணன் அது தொடர்பான முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. </p><p>கண்ணன் சமீபத்தில் அ.தி.மு.க.வில் இருந்து விலகி தவெக-வில் இணைந்திருந்ததால், அவரது அரசியல் நடவடிக்கைகள் பிடிக்காமல் எதிராளிகள் தீர்த்து கட்டினார்களா என்கிற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.</p><h2>5 பேர் கைது </h2><p>சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஐந்து பேரை கைது செய்து விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>எல்நினோ காலமாற்றம் எதிரொலி: தீ மூட்ட தடை விதித்த ஆஸ்திரேலியா</title><link>https://www.maalaimalar.com/news/world/australias-sydney-city-records-33-degrees-celsius-fire-ban-imposed</link><comments>https://www.maalaimalar.com/news/world/australias-sydney-city-records-33-degrees-celsius-fire-ban-imposed#comments</comments><guid isPermaLink="false">46a891cd-8859-4fc9-a7ed-78bcd3c7fb1c</guid><pubDate>Sun, 06 Sep 2026 06:37:50 +0000</pubDate><atom:updated>2026-09-06T06:37:50.437Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Australia,ஆஸ்திரேலியா,சிட்னி,Sydney,forest fire,காட்டுத்தீ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/ymm8wbkn/Untitled-design-28.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sydney]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/ymm8wbkn/Untitled-design-28.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் எல்நினோ கால மாற்றத்தால் நேற்று திடீரென வீசிய வெப்பக்காற்று வீசியது. இதன் காரணமாக, அந்த பகுதியில் தீ மூட்டுவதற்கு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.</p><p>சிட்னி நகரத்தில் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் நிலவி வருவதால், இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE">ஆஸ்திரேலியாவின்</a> நியூ சவுத் வேல்ஸ் நகரத்தில் வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானதாக வானிலை மையம் தெரிவித்தது. இந்த வெப்பநிலை சராசரியாக நிலவும் அளவை விட 13 டிகிரி செல்சியஸ் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும் சிட்னி விமான நிலையத்தில் நேற்று காலை வேளையின்போது வெப்பநிலை 28.6 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியிருந்தது. இது செப்டம்பர் மாதத்தின் சராசரி அதிகபட்ச வெப்பநிலையை விட 7 டிகிரி அதிகமாகும்.</p><h3><strong>வறண்ட வெப்பமான சூழ்நிலை</strong></h3><p>வெப்பநிலை அதிகரித்து காணப்படுவது தொடர்பாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகையில், காலையில் உருவாக இருக்கும் மிதமான முதல் வலுவான வடமேற்கு காற்று, வறண்ட மற்றும் பருவத்திற்கு ஒவ்வாத வெப்பமான சூல்நிலையுடன் இணைந்து, சிட்னி நகரம் முழுவதும் தீ விபத்து ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ளது.</p><h3><strong>தடை உத்தரவு</strong></h3><p>சிட்னி நகரில் தீ அபாயம் நிகழ்வதற்கு அதிகப்படியான சூழ்நிலைகள் உள்ளதால், மாநில தீயணைப்புத் துறை அதிகாரிகள் தீ மூட்டுவதற்கு முழுமையான தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.</p><p>சுமார் 3 கோடி மக்கள் தொகை கொண்ட சிட்னி நகரில், எல்நினோ காலநிலை மாற்றத்தால் அதிகப்படியான வெப்பமும் வானிலை மாற்றமும் நிலவி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>நான் தவறான நபரை திருமணம் செய்துவிட்டேன்: மனைவியை பிரிந்த பிக்பாஸ் போட்டியாளர் பிரதீப் ஆண்டனி</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/i-married-the-wrong-person-bigg-boss-contestant-pradeep-anthony</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/i-married-the-wrong-person-bigg-boss-contestant-pradeep-anthony#comments</comments><guid isPermaLink="false">c2e26bf2-6fe6-4f69-b680-1b73e0a75258</guid><pubDate>Sun, 06 Sep 2026 06:00:27 +0000</pubDate><atom:updated>2026-09-06T06:00:27.861Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>pradeep antony,பிக்பாஸ்,bigboss,பிரதீப் ஆண்டனி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/ea2zvfts/Untitled-design-27.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pradeep Anthony]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/ea2zvfts/Untitled-design-27.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிக்பாஸ் சீசன் 7-இல் கலந்து கொண்ட போட்டியாளர் பிரதீப் ஆண்டனி, தனது மனைவியை பிரிந்துவிட்டதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டதை தொடர்ந்து, அந்த பதிவு இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">பிக்பாஸ் தமிழ்</a> சீசன் 7-இல் கலந்துகொண்ட நடிகர் பிரதீப் ஆண்டனி, தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், தனது திருமண வாழ்வில் சந்தித்த சவால்களையும், தனது மகளை பிரிந்திருப்பதால் ஏற்பட்ட மன உளைச்சல் குறித்தும் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.</p><h3><strong>பிரதீப் ஆண்டனி - பூஜா தம்பதி</strong></h3><p>பிரதீப் ஆண்டனி மற்றும் பூஜா ஆகியோர் கடந்த 2024-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.</p><p>இதையடுத்து தனது மனைவியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, அவரை பிரிந்து விட்டதாக கடந்த வாரம் சமூக வலைதளத்தில் பிரதீப் பதிவிட்டார்.</p><h3><strong>தவறான நபரை தேர்வு செய்துவிட்டேன்</strong></h3><p>இதுகுறித்து அவர் வெளியிட்ட இன்ஸ்டா பதிவில், “நான் ஒரு தவறு செய்துவிட்டேன். நான் தவறான நபரைத் திருமணம் செய்துகொண்டேன் என்று நினைக்கிறேன், அது அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் என்னை ஒரு மிக மோசமான நபராக மாற்றிவிட்டது.</p><p>எனது மனைவி இன்னும் தனது சொந்த குடும்பத்துடனும் வாழ்க்கையுடனும் வாழ்ந்து கொண்டிருந்தாள். நான் ஒவ்வொரு நாளும் ஒருவரின் வாழ்க்கையை அழித்துக்கொண்டிருப்பது போல் உணர்ந்தேன்.</p><p>இன்னொருவருடன் மகிழ்ச்சியாக வாழ்வதை எப்படி சமாளிப்பது என்று எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை. அது, இரண்டு எதிர் துருவங்கள் ஒவ்வொரு நாளும் மோதிக்கொள்வது போலவும், ஒருவர் எப்படி இருக்கிறாரோ அப்படியே அவரை வெறுப்பது போலவும் இருந்தது. அது எங்கள் இருவருக்கும் நியாயமற்றதாகத் தோன்றியது.</p><p>நான் என் திருமணத்திலிருந்து விலகிச் செல்ல முடிவு செய்துள்ளேன், ஏனென்றால் அந்த உறவில் என்னால் உண்மையிலேயே மூச்சுவிட முடியவில்லை” என்று அவர் பதிவிட்டார்.</p><h3><strong>இணையத்தில் விவாதம்</strong></h3><p>பிரதீப் பதிவிட்ட கருத்துக்கு சமூக வலைதளத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, தனது குடும்பம் பற்றிய தனிப்பட்ட விஷயங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டது தவறு என அவர் தெரிவித்துள்ளார்.</p><p>அதே நேரத்தில் அந்த பதிவு ஒரு உணர்ச்சிவசப்பட்ட தருணத்தில் பதிவிடப்பட்டது என்றும், அந்த தருணத்தில் தான் உணர்ந்ததை வெளிப்படுத்தியதற்காக வருந்தவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><h3><strong>எனக்கு சுயநினைவு உள்ளது</strong></h3><p>இதுகுறித்து பிரதீப் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “யாராவது கவலைப்பட்டால், நான் நலமாக இருக்கிறேன். சமூக ஊடகங்களில் தனிப்பட்ட ஒன்றை பதிவிட்டது என் தவறுதான்.</p><p>ஆனால் அது அந்த தருணத்தின் ஒரு வெளிப்பாடு என்று நினைக்கிறேன், அதற்காக நான் வெட்கப்படவில்லை. விமர்சனங்களைப் பற்றி எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.</p><p>என் வாழ்க்கைக்கான முடிவுகளை எடுக்கும் அளவுக்கு எனக்கு சுயநினைவு இருக்கிறது. நீங்கள் தாராளமாக விமர்சிக்கலாம். நன்றி, உங்களை நேசிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு காவலர் தினம் - முதலமைச்சர் விஜய் வாழ்த்து!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-police-day-chief-minister-vijay-extends-his-wishes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-police-day-chief-minister-vijay-extends-his-wishes#comments</comments><guid isPermaLink="false">19967fd7-7b92-4092-85d5-44f0a189abe5</guid><pubDate>Sun, 06 Sep 2026 05:38:48 +0000</pubDate><atom:updated>2026-09-06T05:38:48.617Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு காவல்துறை,Tamil Nadu Police,காவலர் தினம்,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,Police Day</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/87yk3kn8/New-Project-2026-09-06T110811.801.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாடு காவலர் தினம் - முதலமைச்சர் விஜய் வாழ்த்து!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/87yk3kn8/New-Project-2026-09-06T110811.801.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு காவலர் தினத்தை முன்னிட்டு மாநில<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-wishes-to-teachers-day"> முதலமைச்சர் ஜோசப் விஜய்</a> காவல்துறையினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். காவலர் தினத்திற்கு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது;</p><p>“1859-ஆம் ஆண்டு மெட்ராஸ் மாவட்டக் காவல் சட்டத்தை நிறைவேற்றி, நவீன மற்றும் அமைப்புரீதியான காவல்துறை தோற்றுவிக்கப்பட்ட நாளை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படும் காவலர் நாளை முன்னிட்டு, </p><p>சமூகத்தில் அமைதி நிலவிடவும், சட்டத்தின் ஆட்சி நிலைபெறவும் தன்னலமின்றிப் பணியாற்றிவரும் காவல்துறையினர் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த காவலர் நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>நமது மாநிலத்தில், குற்றங்களைத் தடுத்து, சட்ட ஒழுங்கைப் பேணுவதுடன், ஆபத்தான சூழல்களிலும், பேரிடர் காலங்களிலும் மக்களின் உயிர், உடைமை மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் துணிவுடன் நின்று களப்பணி ஆற்றிவரும் காவல்துறையினரின் வீரமும், தியாகமும் என்றும் போற்றத்தக்கவை. </p><p>காவல்துறையினரின் பணிச்சுமையைக் குறைத்து, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அவர்களின் பணித்திறனை மேம்படுத்தி, காவலர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் தேவையான நலத்திட்டங்களை உறுதிசெய்வதற்கும் நமது அரசு முன்னுரிமை அளிக்கும். </p><p>மக்களும், காவல்துறையுடன் கரம் கோர்த்து, நம்பிக்கையுடனும் நல்லிணக்கத்துடனும் பயணித்து, அமைதியும் பாதுகாப்பும் நிறைந்த உன்னதத் தமிழ்நாட்டை உருவாக்க இந்நாளில் உறுதியேற்போம்!.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>கட்சியை பலப்படுத்த நடவடிக்கை - அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய  ஆலோசனை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/measures-to-strengthen-the-party-edappadi-palaniswami-holds-key-consultation-with-aiadmk-district-secretaries-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/measures-to-strengthen-the-party-edappadi-palaniswami-holds-key-consultation-with-aiadmk-district-secretaries-today#comments</comments><guid isPermaLink="false">07cd5260-311c-4d76-83f2-1f6c24ed2839</guid><pubDate>Sun, 06 Sep 2026 05:14:31 +0000</pubDate><atom:updated>2026-09-06T05:14:31.928Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,Edappadi Palaniswami,அதிமுக,எடப்பாடி பழனிசாமி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/eozh11fi/New-Project-2026-09-06T104341.739.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கட்சியை பலப்படுத்த நடவடிக்கை - அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய  ஆலோசனை!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/eozh11fi/New-Project-2026-09-06T104341.739.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது அக்கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>தோல்வியால் கட்சிக்குள் மோதல்களும் கிளம்பி வருகின்றன. இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-government-will-not-complete-five-years-eddappadi-palaniswami">எடப்பாடி பழனிசாமி </a>மாவட்டம் வாரியாக, கட்சியில் அனைத்து மட்டத்திலும் உள்ள நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறார்.</p><p>அந்தவகையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.</p><p>இந்த ஆலோசனையின் போது சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்தும், விரைவில் நடைபெற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவது பற்றியும் விவாதித்துள்ளார். </p><p>புதிதாக  நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள், ஏற்கனவே பொறுப்பில் உள்ள மாவட்ட செயலாளர்கள் என அனைவரும் இந்த கூட்டத்தில்  கலந்து கொண்டனர். அவர்களுடன் கட்சியின் தலைமை நிர்வாகிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.</p><h2>வெற்றி பெற வேண்டும்</h2><p>அதிமுகவை மீண்டும் வலிமையான இயக்கமாக மாற்றுவதற்கு  மாவட்ட செயலாளர்கள் அனைவரும், கட்சி நிர்வாகிகளுடன்   ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார்.</p><p>அதிமுக எம்எல்ஏக்கள்  6 பேர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ள நிலையில், விரைவில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் மீண்டும் அதிமுகவை வெற்றிப்பெற வைத்து துரோகிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் எனவும் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>தீபாவளி டிக்கெட் முன்பதிவு: சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/diwali-ticket-booking-sold-out-in-minutes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/diwali-ticket-booking-sold-out-in-minutes#comments</comments><guid isPermaLink="false">b7050a88-009b-4e4c-b312-43aee026db2d</guid><pubDate>Sun, 06 Sep 2026 04:34:07 +0000</pubDate><atom:updated>2026-09-06T04:34:07.580Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Diwali,தீபாவளி,Ticket Booking,டிக்கெட் முன்பதிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/vltq48zt/train.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ train]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/vltq48zt/train.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து செல்லும் விரைவு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன.</strong></em></p><p>தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி வருகிறது. அதனால் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர் செல்லும் வகையில் ரெயில்களில் முன்பதிவு தொடங்குகிறது. தற்போது 60 நாளுக்கு முன் முன்பதிவு செய்யக்கூடிய நிலை உள்ளது.</p><p>சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்குச் செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் வந்தே பாரத் ரெயில்களில் பயணம் செய்ய மக்கள் தயாராக உள்ளனர்.</p><h2>முன்பதிவு தொடக்கம்</h2><p>இந்நிலையில்,  தீபாவளி பயணத்திற்காக நவம்பர் 5-ம் தேதி பயணம் செய்ய இன்று காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கியது.</p><h2>விற்றுத் தீர்ந்த டிக்கெட்கள்</h2><p>ரெயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி, சில நிமிடங்களிலேயே அனைத்து பயணச்சீட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.</p><p>நவம்பர் 6-ம் தேதி பயணம் செய்வதற்கு நாளையும், 7-ம் தேதி பயணத்திற்கு நாளை மறுதினமும் முன்பதிவு நடைபெற உள்ளது.</p><p>தீபாவளி பண்டிகை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு திரும்ப வரும் 10-ம் தேதி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம்.</p><p>இதுதவிர பெரும்பாலானவர்கள் ஏஜென்சிகள் மூலமாகவும் ஆன்லைன் வழியாகவும் முன்பதிவு செய்வதற்கு தயாராகி வருகின்றனர்.</p><p>ரெயில்களில் குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பாக குறித்த நேரத்திற்கு செல்ல முடியும் என்பதால் பெரும்பாலானவர்கள் ரெயில் பயணத்தையே விரும்புகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>ஐரோப்பிய கண்டத்திலிருந்து முதல்முறை - ஆர்பிட்டல் ராக்கெட்டை வெற்றிக்கரமாக விண்ணில் செலுத்தியது ஐசர் ஏரோஸ்பேஸ்!</title><link>https://www.maalaimalar.com/news/world/a-first-for-the-european-continent-isar-aerospace-successfully-launches-an-orbital-rocket</link><comments>https://www.maalaimalar.com/news/world/a-first-for-the-european-continent-isar-aerospace-successfully-launches-an-orbital-rocket#comments</comments><guid isPermaLink="false">e0703d4c-bd2b-4be4-b2db-dadf7bfae6bb</guid><pubDate>Sun, 06 Sep 2026 04:25:31 +0000</pubDate><atom:updated>2026-09-06T04:25:31.002Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜெர்மனி,Rocket,Isar Aerospace,orbit,ஐசர் ஏரோஸ்பேஸ்,ஸ்பெக்ட்ரம் ராக்கெட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/acdrteco/New-Project-2026-09-06T061511.909.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஐரோப்பிய கண்டத்திலிருந்து முதல்முறை -  ஆர்பிட்டல் ராக்கெட்டை வெற்றிக்கரமாக விண்ணில் செலுத்தியது ஐசர் ஏரோஸ்பேஸ்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/acdrteco/New-Project-2026-09-06T061511.909.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஐரோப்பிய மண்ணிலிருந்து முதல்முறையாக ஸ்பெக்ட்ரம் <a href="https://www.maalaimalar.com/news/national/a-first-step-for-india-gslv-f17-rocket-successfully-launched-into-space-pm-modi-expresses-pride">ராக்கெட்</a>டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனைப் படைத்துள்ளது ஜெர்மனியைச் சேர்ந்த ஐசர் ஏரோஸ்பேஸ் நிறுவனம்.</p><p>நார்வேயின் ஆர்டிக் பகுதியில் உள்ள ஆண்டோயா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து இந்த 28 மீட்டர் உயரமும், 2 மீட்டர் விட்டமும் கொண்ட ஸ்பெக்ட்ரம் ராக்கெட் நேற்று விண்ணில் ஏவப்பட்டது. </p><p>இது ஸ்பெக்ரம் ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான ஐசர் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் இரண்டாவது முயற்சியாகும். 18 மாதங்களுக்கு முன்பு ஏவப்பட்ட முதல் சோதனை முயற்சி தோல்வியில் முடிந்தது. </p><h2>ஸ்பெக்ட்ரம் ராக்கெட் </h2><p>ஸ்பெக்ட்ரம் ராக்கெட் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான சுமைகளைச் சுமந்து செல்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது புவியின் குறைந்த சுற்றுப்பாதைக்கு சுமார் 1,000 கிலோகிராம் எடையையும், சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதைக்கு சுமார் 700 கிலோகிராம் எடையையும் சுமந்து செல்லும் திறன் கொண்டது.</p><p>இந்த மனிதரில்லா ஸ்பெக்ட்ரம் ராக்கெட், 5 சிறிய செயற்கைக்கோள்களையும் ஒரு தொழில்நுட்ப பரிசோதனை கருவியையும் வெற்றிகரமாக விண்வெளி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளது.</p><p>அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் போன்ற பெரும் நிறுவனங்களுக்கு மாற்றாக, ஐரோப்பாவே சொந்தமாகக் கோள்களை ஏவுவதற்கான தன்னாட்சியைப் பெற இந்த வெற்றி ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.</p>]]></content:encoded></item></channel></rss>