<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 10 Sep 2026 03:15:42 +0000</lastBuildDate><item><title>வீட்ல சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்? - &apos;மிசா&apos; கொடுமைகள் குறித்து மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியீடு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-releases-video-regarding-misa-atrocities</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-releases-video-regarding-misa-atrocities#comments</comments><guid isPermaLink="false">47935573-4dbd-40f1-a5f5-9b3eb546f8f6</guid><pubDate>Thu, 10 Sep 2026 02:04:13 +0000</pubDate><atom:updated>2026-09-10T02:04:13.289Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,விஜய்,vijay,முக ஸ்டாலின்,MISA,மிசா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/2qnphw2z/mkstalin2.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MK Stalin - Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/2qnphw2z/mkstalin2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>எமர்ஜென்சி காலத்தில் மிசாவில், தான் கைது செய்யப்பட்டதை நினைவுகூர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு உள்ளார்.</p><p>திமுக தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க.ஸ்டாலின்</a> எக்ஸ் தளத்தில், வீட்ல என்னை meet பண்ணப்ப சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-first-official-foreign-trip-to-leave-for-london-tonight">விஜய்</a>? என்று பதிவிட்டு வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில், </p><p>* மிசா காலத்தில் கைது செய்யப்பட்டபோது சிறையில் எங்களுக்கு பல கொடுமைகள் நடந்தது.</p><p> * காவலர்கள் தாக்கியதில் எனது அருமை அண்ணன் சிட்டிபாபு இறந்தார். அவர்கள் தாக்கியதில் எனது தாடை எலும்பு உடைந்தது.</p> <p>* எதிர்த்து போராடுவதும் அதன் விளைவுகளை சந்திப்பதும் எங்களுக்கு புதியது அல்ல.</p><p>* யார் என்னை கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்ற முடியாது.</p><p>* உங்களுக்கு சந்தேகம் இருந்தால் சட்டசபையில் உள்ள நூலகத்திற்கு சென்று எனது போராட்ட வரலாற்றை படித்து பாருங்கள்.</p> <p>* சர்காரியாக கமிஷன் பற்றியும் தலைவர் கலைஞர் பற்றியும் தவறான தகவலை முதலமைச்சர் விஜய் கூறி உள்ளார்.</p><p>* அரசியலுக்காக காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் சொன்ன பொய்யான குற்றச்சாட்டையும் முதலமைச்சர் விஜயும் கூறி உள்ளார்.</p><p>* அமலாக்கத்துறை குற்றம்சாட்டிய 95% வழக்குகளில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல் குற்றம்சாட்டப்பட்டோர் விடுவிக்கப்பட்டனர்.</p> <p>* பெரும்பாலும் அரசியல் பழிவாங்கலுக்காகவே அமலாக்கத்துறை ஏவப்படுவது இங்கு உள்ள எல்லாருக்குமே தெரியும்.</p><p>* தேர்தல் பிரசாரத்தின்போது கடுமையாக விமர்சித்ததற்கு சாரி என்று என்னிடம் கூறினீர்களே?</p><p>* பரவாயில்லை தம்பி. நீங்க இப்போ மாநிலத்தின் முதலமைச்சர். யாரைப்பற்றியும் பேசும்போது கண்ணியத்தோடு பேசுங்கள் என்று சொன்னேன். அதையெல்லாம் மறந்துட்டீங்களே.</p> <p>* தமிழ்நாடு சட்டசபைக்கென ஒரு மாண்பும் மரியாதையும் இருக்கிறது.</p><p>* முதலமைச்சர் விஜய் தமிழ்நாடு சட்டசபையில் தேவையில்லாத சர்ச்சைகளை பேச வேண்டாம்.</p><p>* தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு படுகுழியில் இருக்கிறது.</p><p>* வீட்ல என்னை meet பண்ணப்ப சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்?</p>  <p>* தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றை பற்றி வாய் திறக்காமல் இருப்பது ஏன்?</p><p>* விதவிதமான ரீல்ஸ் போட்டு ஒரு தலைமுறையையே வீணாக்கி வருகிறீர்கள்.</p><p>* வாக்களிக்கவில்லை என்பதற்காக மக்களை திமுகவினர் கைவிட்டு விடக்கூடாது.</p><p>இவ்வாறு அவர் கூறி உள்ளார்.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">வீட்ல என்னை meet பண்ணப்ப சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்? <a href="https://t.co/kzpwXi14L8">pic.twitter.com/kzpwXi14L8</a></p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2097857590516445226?ref_src=twsrc%5Etfw">September 10, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>தமிழக முதல்வராக முதல்முறை: இன்றிரவு லண்டன் செல்கிறார் முதலமைச்சர் விஜய் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-first-official-foreign-trip-to-leave-for-london-tonight</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-first-official-foreign-trip-to-leave-for-london-tonight#comments</comments><guid isPermaLink="false">7c6962bf-d0fb-4796-a968-9003fe8193e4</guid><pubDate>Thu, 10 Sep 2026 00:35:46 +0000</pubDate><atom:updated>2026-09-10T00:35:46.962Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,லண்டன்,london,Investment,முதலீடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/vhzssyg8/Vijay.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/vhzssyg8/Vijay.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu">தமிழ்நாடு</a> முதலமைச்சர் ஜோசப் விஜய் அரசு முறைப் பயணமாக இன்று (செப்.10) இரவு லண்டன் புறப்பட்டுச் செல்கிறார்.</p><p>முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். இந்தப் பயணத்தில் முதலீட்டாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தும் முதல்வர் <a href="https://www.maalaimalar.com/topic/vijay">விஜய்</a>, தமிழகத்தில் முதலீடு செய்ய அவர்களுக்கு அழைப்பு விடுக்கவுள்ளார்.</p><h2>துபாய் வழியாக லண்டன்பயணம்:</h2><p>சென்னை விமான நிலையத்தில் இருந்து இரவு 10 மணியளவில் பயணிகள் விமானத்தில் துபாய் செல்லும் முதலமைடச்சர் விஜய், அங்கிருந்து வேறு விமானத்தில் வெள்ளிக்கிழமை (செப்.11) லண்டன் செல்கிறார்.</p><p>லண்டனில் நடைபெறும் முதலீட்டாளர்கள் சந்திப்பில் முதல்வர் விஜய் பங்கேற்று பல்வேறு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் முதலீட்டாளர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். அப்போது, தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு அவர்களுக்கு அழைப்பு விடுக்கவுள்ளார்.</p><h2>1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்:</h2><p>லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு செப்டம்பர் 16-ஆம் தேதி இரவு புறப்பட்டு, துபாய் வழியாக சென்னைக்கு செப்டம்பர் 17-ஆம் தேதி முதலமைச்சர் விஜய் வந்தடைகிறார்.</p><p>தமிழகத்தை 2036-ஆம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உயர்த்துவதே இலக்கு என தமிழ் நாடு அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் அறிவித்து இருந்த.</p><p>மேலும், தவெக அரசு பொறுப்பேற்ற முதல் 100 நாள்களில் வெற்றி முதலீட்டு மாநாட்டை நடத்தி, 104 நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டு ரூ.1,02,514 கோடி முதலீடுகள் ஈா்க்கப்பட்டு, 1,21,788 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு அரசு ஏற்கெனவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>பாகிஸ்தானில் ஆப்கான் மாணவர்கள் மருத்துவம் பயில தடை.. ஏற்கனவே படித்து வரும் மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/world/afghan-students-banned-from-studying-medicine-in-pakistan-students-who-are-already-studying-are-ordered-to-leave-the-country</link><comments>https://www.maalaimalar.com/news/world/afghan-students-banned-from-studying-medicine-in-pakistan-students-who-are-already-studying-are-ordered-to-leave-the-country#comments</comments><guid isPermaLink="false">c0a6b263-0dad-4f60-b584-9621b723bb3d</guid><pubDate>Thu, 10 Sep 2026 03:10:38 +0000</pubDate><atom:updated>2026-09-10T03:10:38.981Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Pakistan,Afghanistan,மருத்துவக் கல்வி,medical education,ஆப்கானிஸ்தான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/x7wcnitr/tn-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பாகிஸ்தான் ]]></media:title><media:description type="html"><![CDATA[ பாகிஸ்தான் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/x7wcnitr/tn-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாகிஸ்தானில் மருத்துவ கல்லூரிகளில் புதிதாக ஆப்கான் மாணவர்கள் சேர்க்கைக்கு தடை விதித்தும், ஏற்கனவே படித்து வரும் ஆப்கனிஸ்தான் மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசு கறார் உத்தரவு பிறப்பித்துள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/topic/pakistan">பாகிஸ்தான் </a>மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான உறவுகளில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கம் தற்போது கல்வியிலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. </p><p>பாகிஸ்தானில் உள்ள மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் <a href="https://www.maalaimalar.com/topic/afghanistan">ஆப்கானிஸ்தான் </a>மாணவர்களுக்குப் புதிய சேர்க்கை வழங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, ஏற்கனவே படித்து வரும் மாணவர்களும் உடனடியாகத் தாயகம் திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.  </p> <h2>உத்தரவு</h2><p>பாகிஸ்தான் மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கவுன்சில், நடப்பு கல்வியாண்டில் ஆப்கானிஸ்தான் மாணவர்களுக்குப் புதிய சேர்க்கை அல்லது இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என அனைத்து மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கும் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.</p><p>ஏற்கனவே மருத்துவப் படிப்புகளில் சேர்ந்து பயின்று வரும் ஆப்கான் மாணவர்களும் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு நாடு திரும்ப வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.</p> <p>இதனால் குறிப்பாக, படிப்பை நிறைவு செய்யும் தருவாயில் இருக்கும் பல நூற்றுக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.</p><p>இந்த நடவடிக்கை ஆப்கானிஸ்தான் நாட்டினருக்கு மட்டுமே பொருந்தும் என்றும், பிற வெளிநாட்டு மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் பாகிஸ்தான் சுகாதார அமைச்சக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <h2>லாகூர் பல்கலைக்கழகம் நடவடிக்கை</h2><p>லாகூரில் உள்ள கிங் எட்வர்ட் மருத்துவப் பல்கலைக்கழகம் இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்தியுள்ளது.</p><p>அங்கு பயிலும் 22 ஆப்கான் மாணவர்களுக்கு தேவையான நிர்வாக நடைமுறைகளை முடித்து வெளியேற 24 மணி நேரம் கெடு விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>வெளியுறவுத் துறை விளக்கம்</h2><p>இந்த அதிரடி நடவடிக்கைகளுக்கு மத்தியிலும், முறையான பாஸ்போர்ட் மற்றும் தங்குவதற்கான சட்டப்பூர்வ ஆவணங்களை வைத்திருக்கும் ஆப்கான் மாணவர்கள், நடைமுறையில் உள்ள விதிகளின்படி  விசா நீட்டிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சஜ்ஜாத் ஹைதர் கான் தெரிவித்துள்ளார்.</p><p>செல்லுபடியாகும் வீசா இன்றி தங்கியிருப்பவர்கள் சட்டவிரோதமானவர்கள் என கருதப்பட்டு, 'சட்டவிரோத வெளிநாட்டவர் வெளியேற்றத் திட்டத்தின்' கீழ் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p> <h2>பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் </h2><p>பாகிஸ்தானில் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் '<a href="https://www.maalaimalar.com/news/world/suicide-attack-in-pakistan-15-killed-including-12-soldiers">தெஹ்ரிக் இ தாலிபான் பாகிஸ்தான்</a>' பயங்கரவாத அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தான் த புகலிடம் அளிப்பதாக இஸ்லாமாபாத் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகிறது.</p><p>ஆனால், ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் அரசு இக்க குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்து வருகிறது.</p> <p>பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் ராணுவ மோதல்கள் ஒருபுறமிருக்க கடந்த ஓராண்டில் மட்டும் 10 லட்சத்திற்கும் அதிகமான ஆப்கான் குடிமக்கள் பாகிஸ்தானில் இருந்து கட்டாயமாகத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.</p><p>மருத்துவ மாணவர்களுக்கு எதிரான தற்போதைய புதிய உத்தரவு, பாகிஸ்தானில் வசிக்கும் ஆப்கான் குடிமக்கள் மற்றும் மாணவர்கள் மீதான நெருக்கடியை மேலும் அதிகரித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>VIDEO: வங்கதேசத்தில் ராணுவ பயிற்சின்போது சீன தயாரிப்பு பீரங்கி வெடித்து விபத்து - 2 வீரர்கள் பலி</title><link>https://www.maalaimalar.com/news/world/chinese-made-cannon-explodes-during-military-exercise-in-bangladesh-2-soldiers-killed</link><comments>https://www.maalaimalar.com/news/world/chinese-made-cannon-explodes-during-military-exercise-in-bangladesh-2-soldiers-killed#comments</comments><guid isPermaLink="false">5be92010-e19b-4447-a4f9-35ec13094301</guid><pubDate>Thu, 10 Sep 2026 02:37:26 +0000</pubDate><atom:updated>2026-09-10T02:37:26.252Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Bangladesh,வங்கதேசம்,accident,artillery,விபத்து,பீரங்கி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/v29j18sd/tn-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பீரங்கி ]]></media:title><media:description type="html"><![CDATA[ பீரங்கி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/v29j18sd/tn-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வங்கதேசத்தில் பயிற்சியின்போது சீன தயாரிப்பு பீரங்கி வெடித்துச் சிதறியதில் 2 வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/indian-high-commissioner-meets-bangladesh-president">வங்கதேச </a>ராணுவ வீரர்கள் பீரங்கிக்குள் இருந்து துப்பாக்கிச் சூடு பயிற்சி நடத்திக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக வெடித்து விபத்து ஏற்பட்டது. </p><p><a href="https://www.maalaimalar.com/topic/bangaladesh">வங்கதேசத்தின் </a>சட்டோகிராம் பகுதியில் அமைந்துள்ள ஹதாசாரி துப்பாக்கிச் சூடு பயிற்சி மையத்தில் நேற்று நடைபெற்ற ராணுவப் பயிற்சியின் போது இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.</p> <p>இந்த விபத்தில் பீரங்கிக்குள் இருந்த 2 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ராணுவ அதிகாரி ஒருவர் பலத்த காயமடைந்தார்.</p><p>படுகாயமடைந்த அதிகாரி உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் தலைநகர் டாக்காவில் உள்ள கூட்டு ராணுவ மருத்துவமனைக்குக்கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Bangladesh Army’s Chinese-origin Type 59 tank reportedly exploded during a firing exercise, killing 2 crew members and injuring an officer.

Made in China. Used in Bangladesh. Deadly outcome. https://t.co/Gn0FRx5ul4</p>&mdash; Shadow IND (@ShadowIND_IN) <a href="https://x.com/ShadowIND_IN/status/2097611763437252952?ref_src=twsrc%5Etfw">September 9, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>
</figure><h2>ராணுவத்தின் விளக்கம்</h2><p>விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணையை ராணுவம் தொடங்கியுள்ளது.</p><p>தொழில்நுட்பக் கோளாறா, துப்பாக்கிச் சூடு பயிற்சியில் ஏற்பட்ட பிழையா அல்லது வெடிமருந்து கோளாறா என்பது விசாரணைக்குப் பிறகே தெரியவரும் என ராணுவம் தெரிவித்துள்ளது.</p> <h2>சீன பீரங்கி </h2><p>விபத்துக்குள்ளான Type 59 டேங்க், சீனாவினால் வடிவமைக்கப்பட்ட பழமையான முதன்மைப் போர் பீரங்கியாகும். வங்கதேச ராணுவம் இதனை நீண்ட காலமாகப் பயன்படுத்தி வருகிறது.</p><p>இதில் பெரும்பாலான பீரங்கிகள் சீனாவின் உதவியுடன் 'Type 59G Durjoy' என்ற புதிய தரத்திற்கு மேம்படுத்தப்பட்டடு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.</p><p>துப்பாக்கித் திறன் மற்றும் கவசப் பாதுகாப்புகள் மேம்படுத்தப்பட்ட போதிலும், இதன் அடிப்படை கட்டமைப்பு பழமையான தொழில்நுட்பத்தை சார்ந்ததே என்பதால், பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.</p>]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 10.9.2026 - இந்த ராசிக்காரர்கள் சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-10-september-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-10-september-2026#comments</comments><guid isPermaLink="false">3f0a5169-77a8-41d7-869c-cddfb802cecb</guid><pubDate>Thu, 10 Sep 2026 02:20:33 +0000</pubDate><atom:updated>2026-09-10T02:20:33.047Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/omjpkisa/New-Project-2026-09-06T043703.323.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/omjpkisa/New-Project-2026-09-06T043703.323.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>யோகமான நாள். ஊதிய உயர்வு பற்றிய தகவல் உண்டு. குடும்ப உறுப்பினர்கள் உங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்வர். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.</p><h2>ரிஷபம்</h2><p>புகழ்மிக்கவர்களைச் சந்தித்து மகிழும் நாள். இளைய சகோதரத்தின் வழியில் இனிய செய்தி வந்து சேரும். உத்தியோக நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள்.</p> <h2>மிதுனம்</h2><p>உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். மனதிற்கினிய சம்பவங்கள் நடக்கலாம். வியாபார விருத்திக்குப் புதிய கூட்டாளிகளை இணைத்துக் கொள்வீர்கள்.</p><h2>கடகம்</h2><p>வரவு திருப்தி தரும் நாள். மங்கல நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறும். வரவு திருப்தி தரும். அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.</p> <h2>சிம்மம்</h2><p>சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். திட்டமிட்ட காரியமொன்று நடைபெறாவிட்டாலும் திட்டமிடாத காரியமொன்று நடைபெறும்.</p><h2>கன்னி</h2><p>அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் நாள். திடீர் இடமாற்றம் ஒருசிலருக்கு ஏற்படலாம். உத்தியோகத்தில் நேற்று ஏற்பட்ட பிரச்சனை இன்றும் தொடரும்.</p> <h2>துலாம்</h2><p>சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும் நாள். மாற்று மருத்துவம் உடல்நலத்தைச் சீராக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.</p><h2>விருச்சிகம்</h2><p>வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகளும், சம்பள உயர்வும் கிடைக்கும்.</p> <h2>தனுசு</h2><p>யோகமான நாள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும்.</p><h2>மகரம்</h2><p>கடமையில் தொய்வு ஏற்படும் நாள். திட்டமிட்ட காரியம் திசைமாறிச் செல்லும். வாங்கல், கொடுக்கல்களில் கூடுதல் கவனம் தேவை. முன்கோபத்தை தவிர்க்கவும்.</p> <h2>கும்பம்</h2><p>மனக்கலக்கம் அகலும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். குடியிருக்கும் வீட்டால் ஏற்பட்ட பிரச்சனை அகலும்.</p><h2>மீனம்</h2><p>புகழ் கூடும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் கருத்துகளை ஏற்றுக் கொள்வர்.</p> ]]></content:encoded></item><item><title>SIR: பாரத ரத்னா பெற்றவருக்கே இந்த நிலைமையா?.. தேர்தல் ஆணையத்தின் கிடுக்குபிடியில் 92 வயது விஞ்ஞானி</title><link>https://www.maalaimalar.com/news/national/sir-is-this-the-plight-of-even-a-bharat-ratna-awardee-92-year-old-scientist-faces-the-election-commissions-strict-measures</link><comments>https://www.maalaimalar.com/news/national/sir-is-this-the-plight-of-even-a-bharat-ratna-awardee-92-year-old-scientist-faces-the-election-commissions-strict-measures#comments</comments><guid isPermaLink="false">97d84f96-1449-43af-89c9-086e404098d1</guid><pubDate>Thu, 10 Sep 2026 02:13:58 +0000</pubDate><atom:updated>2026-09-10T02:13:58.493Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,Election Commission,Sir,தேர்தல் ஆணையம்,எஸ்ஐஆர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/1wyq9nde/tn-1.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[  சி.என்.ஆர். ராவ் ]]></media:title><media:description type="html"><![CDATA[  சி.என்.ஆர். ராவ் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/1wyq9nde/tn-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாரத ரத்னா விருது பெற்ற விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் சிக்கலை எதிர்கொண்டுள்ளார்.</p> <p><a href="https://www.maalaimalar.com/topic/sir">வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த</a> 3 ஆம் கட்டம் நாடு முழுவதிலும் 16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் நடந்து வருகிறது. </p><p>இதில் பல குளறுபடிகள் பதிவாகி வரும் நிலையில் சாமானியர்கள் மட்டுமின்றி, நன்கறியப்பட்ட பிரபலங்களும் சிக்கலை சந்தித்து வருகின்றனர். </p><h2>நோட்டீஸ்</h2><p>அந்த வகையில், <a href="https://www.maalaimalar.com/topic/karnataka">கர்நாடகாவில் </a>நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியில் , நாட்டின் உயரிய விருதான 'பாரத ரத்னா' பெற்ற மூத்த விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ் பெயரில் பிழை இருப்பதாகக் கூறி நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதாக வெளியான செய்தி விவாதத்தை கிளப்பியுள்ளது.</p><p>பழைய வாக்காளர் பதிவேட்டில் இவரது பெயர் 'Prof CNR Rao' என்று பதிவாகியிருந்த நிலையில், தற்போதைய புதிய கணினி அமைப்பில் ஆங்கிலத்தில் கூடுதல் 'f' சேர்க்கப்பட்டு 'Proff CNR Rao' எனத் தவறாகப் பதிவாகியுள்ளது.</p> <p>கணினி அமைப்பில் உள்ள இந்த  பெயர் முரண்பாடு காரணமாக, பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு அவருக்கு ஆன்லைனில் நோட்டீஸ் அனுப்பட்டதாக தகவல் வெளியானது.</p><h2>விளக்கம்</h2><p>ஆனால் தங்களுக்கு அதிகாரப்பூர்வமாக எந்த நோட்டீஸும் நேரில் வந்து சேரவில்லை என்று சி.என்.ஆர். ராவின் அலுவலகம் தெரிவித்தது.</p><p>சர்ச்சையை தொடர்ந்து விளக்கமளித்த தேர்தல் ஆணையம், 92 வயதான விஞ்ஞானியின் மூப்பையும் பங்களிப்பையும் கருத்தில் கொண்டு அவருக்கு நேரில் ஆஜராகும் நோட்டீஸ் எதுவுமே அனுப்பப்படவில்லை என்றும், தேர்தல் அதிகாரிகளே நேரடியாக அவரது இல்லத்திற்கு சென்று விவரங்களை சரிசெய்து இறுதி வாக்காளர் பட்டியலில் பெயரை தொடர நடவடிக்கை எடுத்துள்ளனர் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.</p><p>முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட், நடிகர் பிரகாஷ் ராஜ், ராம் ஜெத்மலானி, ராகவ் சதா உள்ளிட்டோரும் இதுபோன்ற சிக்கலை சந்தித்துள்ளனர்.</p> <h2>3 ஆம் கட்ட எஸ்ஐஆர்</h2><p>டெல்லி, மகாராஷ்டிரா, அரியானா, ஜார்க்கண்ட், உத்தரகாண்ட் உள்ளிட்ட 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் கடந்த மே 14 அன்று இந்திய தேர்தல் ஆணையம் 3 ஆம் கட்ட சிறப்புத் தீவிர திருத்தத்தைஅறிவித்தது.</p><p>மே 30 முதல் டிசம்பர் 23 வரை நடைபெறும் இந்தப் நடவடிக்கையின் மூலம் சுமார் 36.73 கோடி வாக்காளர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.</p><p>எஸ்ஐஆர் நடைபெறும் மாநிலங்களில் பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டும், எஞ்சிய 13 மாநிலங்களில் 2028 மற்றும் 2029ஆம் ஆண்டுகளிலும் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன.</p><p>முன்னதாக, முதல் மற்றும் இரண்டாம் கட்ட எஸ்ஐஆர் பணிகள் 10 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் நிறைவடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.</p> <h2>சி.என்.ஆர். ரவ்</h2><p>பெங்களூரை சேர்ந்த சி.என்.ஆர். ராவ், நாட்டின் முன்னணி வேதியியல் விஞ்ஞானிகளில் ஒருவர் ஆவார்.</p><p>1976இல் இந்திய அறிவியல் கழகத்தில் (IISc), 'Solid state and Structural chemistry' பிரிவை நிறுவிய இவர், 1984 முதல் 1994 வரை அதன் இயக்குநராகப் பணியாற்றினார்.</p><p>1,600க்கும் மேற்பட்ட சர்வதேச ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ள இவருக்கு, நாட்டின் உயரிய 'பாரத ரத்னா' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.</p><p>இவரை போன்றோரே எஸ்ஐஆர் பணியின்கீழ் சிக்கலை எதிர்கொண்டு வரும் நிலையில் சாமானிய மக்கள் இப்பணியால் அதிக சிரமங்களை சந்திக்க நேர்ந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 10 செப்டம்பர் 2026: சர்வ அமாவாசை
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-10-september-2026-sarva-amavasai</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-10-september-2026-sarva-amavasai#comments</comments><guid isPermaLink="false">1c8c8c1c-acfd-483a-86c3-4701f9067926</guid><pubDate>Thu, 10 Sep 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-09-10T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/yxc5m2ic/amavasai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Amavasai tharpanam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/yxc5m2ic/amavasai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆவணி-24 (வியாழக்கிழமை)</p><p>பிறை : தேய்பிறை</p><p>திதி :   சதுர்த்தசி காலை 10.56 மணி வரை பிறகு அமாவாசை</p><p>நட்சத்திரம் : மகம் பிற்பகல் 3.14 மணி வரை பிறகு பூரம்</p> <p>யோகம் :  அமிர்த / சித்தயோகம்</p><p>ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை</p><p>எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை</p><p>சூலம் : தெற்கு</p><p>நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை</p> <h2>ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம்</h2><p>சர்வ அமாவாசை. இளையான்குடி மாற நாயனார் குருபூஜை. சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ  ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் வெள்ளிக் கேடயத்திலும், மாலை கஜமுக சூரசம்ஹர லீலை. ராமேஸ்வரம், வேதாரண்யம், திருவள்ளூர், திலதைப்பதி திலதர்ப்பணபுரி கோவில்களில் பித்ரு தர்ப்பணம் செய்ய நன்று. திருக்கண்ணபுரம் ஸ்ரீ செளரி ராஜப் பெருமாள் விபீஷணாழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.</p> <p>ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம்: திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை. திருமெய்யம் ஸ்ரீ சத்திய மூர்த்தி புறப்பாடு, ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஸ்ரீ உடையவர் கூட புறப்பாடு.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - கண்ணியம்</p><p>ரிஷபம் - உதவி</p><p>மிதுனம் - ஒற்றுமை</p><p>கடகம் - உறுதி</p><p>சிம்மம் - நிம்மதி</p><p>கன்னி - லாபம்</p> <p>துலாம் - தெளிவு</p><p>விருச்சிகம் - திடம்</p><p>தனுசு - மேன்மை</p><p>மகரம் - நற்செயல்</p><p>கும்பம் - ஆக்கம்</p><p>மீனம் - அன்பு</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/chennai-fuel-price-update-iran-conflict-pushes-crude-oil-up-todays-petrol-and-diesel-rates-announced-3</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/chennai-fuel-price-update-iran-conflict-pushes-crude-oil-up-todays-petrol-and-diesel-rates-announced-3#comments</comments><guid isPermaLink="false">af314040-a47a-4091-8eea-f052c3a066e1</guid><pubDate>Thu, 10 Sep 2026 01:29:54 +0000</pubDate><atom:updated>2026-09-10T01:29:54.387Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டீசல் விலை,Diesel price,Petrol Price,பெட்ரோல் விலை,இன்றைய பெட்ரோல் விலை,Todays petrol price</media:keywords><media:content height="576" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/1xkldom8/maalai-malar2026-08-14alj4ing3maalai-malar2026-07-28zqvhuwkktn-2.avif" width="1024"><media:title type="html"><![CDATA[ பெட்ரோல், டீசல் விலை நிலவரம்]]></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல், டீசல் விலை நிலவரம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/1xkldom8/maalai-malar2026-08-14alj4ing3maalai-malar2026-07-28zqvhuwkktn-2.avif?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பெட்ரோல், டீசல் விலை</h2><p>இன்றைய (10.09.2026 - வியாழக்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/iranian-attack-on-us-warships-will-lead-to-oil-tanker-strikes-us-warns">ஈரான் போரினால்</a> மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p><h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது.</p><p>அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.</p><h2>கச்சா எண்ணெய் விலை</h2><p>இன்று சர்வதேச சந்தையில் பிரனட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 101.27 டாலர் என விற்பனை ஆகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>குஜராத்: கட்டுமானப் பணியின்போது இடிந்து விழுந்த சாரம்.. சிக்கித் தவித்த 13 பேர் மீட்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/gujarat-scaffolding-collapses-during-construction-work-10-workers-trapped-13-rescued</link><comments>https://www.maalaimalar.com/news/national/gujarat-scaffolding-collapses-during-construction-work-10-workers-trapped-13-rescued#comments</comments><guid isPermaLink="false">9b814c8d-4771-4bd0-b5f0-cf843398997d</guid><pubDate>Thu, 10 Sep 2026 01:01:06 +0000</pubDate><atom:updated>2026-09-10T01:01:06.621Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>குஜராத்,gujarat,கட்டிட விபத்து,construction work,கட்டுமான பணி,building  collapse</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/kwg1ihis/tn.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ குஜராத்]]></media:title><media:description type="html"><![CDATA[ குஜராத்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/kwg1ihis/tn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குஜராத்தில் கட்டுமானத்தில் இருந்த வணிக வளாகத்தில் சாரம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் தொழிலாளர்கள் உள்ளே சிக்கயுள்ளனர்.</p> <p>குஜராத் மாநிலம் காந்திநகர் அருகிலுள்ள குடாசன் பகுதியில், 'பாஸ்கி தி எம்பயர்' என்ற வணிக வளாக கட்டுமான பணி நடந்து வந்துள்ளது. </p><p>நேற்று (புதன்கிழமை) இரவு 9:30 மணியளவில் <a href="https://www.maalaimalar.com/news/national/1133-buildings-collapsed-and-98-people-lost-their-lives-in-delhi-over-three-years-residents-living-in-fear">கட்டிடத்தின் </a>தளம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த போது, எடைக் தாங்காமல் சாரக் கூரை சரிந்து விழுந்தது. அப்போது அங்கிருந்த பெரிய கிரேன் ஒன்றும் இடிபாடுகளின் மீது சாய்ந்தது.</p> <h2>தொழிலாளர்கள்</h2><p>இதன்போது பணிபுரிந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் பலரும் <a href="https://www.maalaimalar.com/topic/building-collapse">இடிபாடுகளுக்குள்ளும்</a> கிரேனின் அடியயேயும் சிக்கிக்கொண்டனர்.</p><p>தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளை அகற்றுவதற்காக மற்றொரு பெரிய கிரேன் வரவழைக்கப்பட்டது.</p> <p>இதுவரை இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 12 தொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். </p><p> மேலும் 10 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதால், அவர்களை மீட்கும் பணி நள்ளிரவையும் தாண்டி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  </p><p>இதுவரை இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என மண்டல போலீஸ் ஐஜி வீரேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.  </p><h2>நேரில் ஆய்வு</h2><p>சம்பவ இடத்திற்கு குஜராத் மாநில துணை முதலமைச்சர் ஹர்ஷ் சங்வி மற்றும் காந்திநகர் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் நேரில் சென்று மீட்புப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.</p><p>கட்டிட விபத்து குறித்துக் வழக்குப் பதிவு செய்த காவல்துறை, முறையான பாதுகாப்பு விதிகளுடன் கட்டுமானம் நடைபெற்றதா என்பது குறித்த விசாரணையை தொடங்கியுள்ளது.</p><p>அண்மையில் டெல்லியில் டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்த  5 மாடி பிஜி தங்கும் விடுதி இடிந்து விழுந்த விபத்தில் 7 பேர் கொல்லப்பட்ட நிலையில் தற்போதைய விபத்து அரங்கேறியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஈரான் போர் முடிவுக்கு வரும் காலம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் சொன்ன முக்கிய தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/world/trump-says-iran-wars-going-to-end-immediately-after-the-election</link><comments>https://www.maalaimalar.com/news/world/trump-says-iran-wars-going-to-end-immediately-after-the-election#comments</comments><guid isPermaLink="false">449ac76f-f188-402e-8e83-b9c824d84ca6</guid><pubDate>Thu, 10 Sep 2026 00:21:19 +0000</pubDate><atom:updated>2026-09-10T00:21:19.421Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டொனால்டு டிரம்ப்,Donald Trump,ஈரான்,Iran</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/zyj7zb9g/Donald-Trump.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Donald Trump]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/zyj7zb9g/Donald-Trump.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/iran">ஈரான்</a> போரினால் உயர்ந்துள்ள கச்சா எண்ணெய் விலைகள், அமெரிக்க இடைக்கால தேர்தல்கள் முடியும் வரை குறைய வாய்ப்பில்லை என்று அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். </p><p>மேலும், ஈரான் போர் எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்தும் அமெரிக்க அதிபர் <a href="https://www.maalaimalar.com/topic/donald-trump">டொனால்டு டிரம்ப்</a> கருத்து தெரிவித்துள்ளார்.</p><h2>கச்சா எண்ணெய் விலை உயர்வு:</h2><p>அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்த நிலையில், இன்று கச்சா எண்ணெய் விலைகள் 3%-க்கும் அதிகமாக உயர்ந்தன; இதனால் ஜூலை மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக சர்வதேச 'பிரெண்ட்' கச்சா எண்ணெய் விலை 100 டாலர் என்ற அளவைத் தாண்டியது.</p><p>இடைக்காலத் தேர்தலுக்கான குடியரசுக் கட்சியின் மாநாட்டில் பங்கேற்க டல்லாஸ் நகருக்கு புறப்படுவதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், அமெரிக்காவில் அந்த முக்கியமான தேர்தல்கள் முடிந்த பிறகு ஈரான் இறுதியில் பணிந்துபோகும் என்று தான் நம்புவதாக குறிப்பிட்டார்.</p><h2>போர் முடிவுக்கு வரும் காலம்:</h2><p>"தேர்தல் முடிந்த உடனேயே இந்தப் போர் முடிவுக்கு வரும் என்று நான் நினைக்கிறேன்; ஏனெனில் அவர்களால் இனிமேலும் தாக்குப்பிடிக்க முடியாது," என்று டிரம்ப் கூறினார்.</p><p>இந்தப் போர் தொடங்கியபோது, ​​இது சில வாரங்கள் மட்டுமே நீடிக்கும் என்று அதிபர் கூறியிருந்தார். ஆனால், தற்போது இந்தப் போர் ஏழாவது மாதத்தில் அடியெடுத்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p><h2>அமெரிக்க கப்பல் சுற்றி வளைப்பு:</h2><p>முன்னதாக அமெரிக்க ராணுவத்தின் மிகவும் நவீனமான திறன்மிக்க ஆளில்லா நீர்மூழ்கி உளவு கப்பலை ஹார்முஸ் நீரிணையில் ஈரான் கைப்பற்றியது. இந்த நீர்மூழ்கி கப்பலானது மேல் தளத்திற்கு திரும்பாமல் 10 நாட்கள் வரை செயல்படக்கூடியது என்றும் 6,000 மீட்டர் ஆழம் வரையில் மூழ்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அன்டுரிலின் என்ற இணையதளம் தெரிவித்துள்ளது.</p><p>இதுகுறித்து இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படையின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான செபா நியூஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘டைவ் எல்டி’ என்ற ஆளில்லா நீர்மூழ்கி கப்பலை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தது. மேலும் ஹார்முஸ் நீரிணைக்கு மேல் பறந்த MQ-9 ரீப்பர் டிரோன் ஒன்றை தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தியதாகவும் தெரிவித்தது.</p>]]></content:encoded></item><item><title>ஆப்பிள் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் அறிமுகம்- விலை எவ்வளவு தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/technology/newgadgets/apples-first-foldable-iphone-announced</link><comments>https://www.maalaimalar.com/technology/newgadgets/apples-first-foldable-iphone-announced#comments</comments><guid isPermaLink="false">a73c2e79-72a4-49c5-b122-d95f20289fd0</guid><pubDate>Wed, 09 Sep 2026 21:57:50 +0000</pubDate><atom:updated>2026-09-09T21:57:50.372Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Apple,ஆப்பிள்,iPhone Duo,ஐபோன் டுயோ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/sd7dik9j/iPhone-Duo.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ iPhone Duo]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/sd7dik9j/iPhone-Duo.png?w=280" width="280"></media:thumbnail><category>புதிய கேஜெட்டுகள் (New gadgets)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/apple">ஆப்பிள்</a> நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஐபோன் மாடலை நேற்று (புதன்கிழமை) இரவு நடைபெற்ற 'சர்ப்ரைஸ் அண்ட் ஷைன்' நிகழ்வின் போது உலகளவில் அறிமுகப்படுத்தியது. </p><p>ஐபோன் டுயோ (iPhone Duo) எனப் பெயரிடப்பட்ட இந்த மடிக்கக்கூடிய <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மார்ட்போன்</a>, இரண்டு தனித்துவமான வண்ணத் தேர்வுகளில் விரைவில் விற்பனைக்கு வர உள்ளது. </p><h2>ஐபோன் டுயோ சிறப்பு அம்சங்கள்:</h2><p>ஐபோன் டுயோ, ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய மொபைல் பிராசஸர்: A20 ப்ரோ சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, இது 2nm செயல்முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிப்செட் புதிய ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் ஆகியவற்றிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.</p><p>ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோனில், 48MP பிரைமரி கேமரா கொண்ட இரட்டை பின்புற கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஐபோனில், உட்புறம் மடிக்கக்கூடிய ஸ்கிரீன் மற்றும் கவர் டிஸ்ப்ளே ஆகியவற்றில் கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. பாஸ்போர்ட் போன்ற இந்த மடிக்கக்கூடிய ஐபோன், மேக்சேஃப் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடனும் வருகிறது.</p><p>ஐபோன் டுயோ மாடல் உலகளவில் இசிம் (eSIM) ஆதரவுடன் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. தொலைபேசியின் பேட்டரிக்கு அதிக இடத்தை உருவாக்குவதற்காக, வழக்கமான சிம் கார்டு ஸ்லாட் நீக்கப்பட்டதாக அந்நிறுவனம் கூறியது. இந்த மடிக்கக்கூடிய ஐபோன் மாடலின் உள்புறத்தில் 7.6-இன்ச் சூப்பர் ரெட்டினா XDR மடிக்கக்கூடிய திரை உள்ளது.</p><p>நடுவில் தெரியும் மடிப்புகளை மிகக் குறைவாகக் காட்டவும், பிரதிபலிப்பைக் குறைக்கவும் இதில் பிரத்யேக நானோ டெக்ஸ்சர் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. மேலும், இதன் உள் திரை, அதன் மேல் உயர் வலிமை கொண்ட கண்ணாடியுடன் கூடிய ஒரு பிரத்யேக பாலிமரால் ஆனது.</p><p>ஐபோன் டியோ, 5.4-அங்குல சூப்பர் ரெட்டினா XDR கவர் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த ஐபோனின் வெளிப்புறத் திரை மற்றும் பின்புற பேனலில் செராமிக் ஷீல்ட் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் டுயோவிற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட iOS 27 உடன் வெளியிடப்படும்.</p><h2>ஐபோன் டுயோ இந்திய விலை விவரங்கள்:</h2><p>இந்தியாவில், ஐபோன் டுயோ 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 2,99,900-இல் இருந்து தொடங்குகிறது. இந்த மாடலின் 512 ஜிபி, 1 டிபி மற்றும் 2 டிபி மாடல்களின் விலை முறையே ரூ. 3,24,900, ரூ. 3,74,900 மற்றும் ரூ. 4,49,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐபோன் டுயோ, ஸ்டார் ஒயிட் மற்றும் நைட் ஸ்கை ஆகிய வண்ணத் தேர்வுகளில் வழங்கப்படுகிறது.</p><p>புதிய ஐபோன் டுயோ மாடலுக்கான முன்பதிவுகள் அக்டோபர் 16-ஆம் தேதி தொடங்குகிறது. விற்பனை அக்டோபர் 23-ஆம் தேதி தொடங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார் அரவிந்த் கெஜ்ரிவால்</title><link>https://www.maalaimalar.com/news/national/arvind-kejriwal-unanimously-re-elected-as-aap-national-convenor</link><comments>https://www.maalaimalar.com/news/national/arvind-kejriwal-unanimously-re-elected-as-aap-national-convenor#comments</comments><guid isPermaLink="false">49dce3fc-0062-4e6a-a551-bd986fec9a00</guid><pubDate>Wed, 09 Sep 2026 21:18:52 +0000</pubDate><atom:updated>2026-09-09T21:18:52.275Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Arvind Kejriwal,அரவிந்த் கெஜ்ரிவால்,AAP,ஆம் ஆத்மி கட்சி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/02/26/9756962-kejriwal26022025.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Aravind Kejriwal]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/02/26/9756962-kejriwal26022025.webp?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காணொளி வாயிலாக நடைபெற்ற <a href="https://www.maalaimalar.com/topic/aam-admi-party">ஆம் ஆத்மி</a> கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் 330 உறுப்பினர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், அரவிந்த் கெஜ்ரிவால் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக ஒருமனதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் .</p><p>கட்சி தனது <a href="https://www.maalaimalar.com/news/national">தேசிய</a> செயலாளராக பங்கஜ் குப்தாவைத் தேர்ந்தெடுத்தது, அதே நேரத்தில் என்.டி. குப்தா தேசிய பொருளாளராகத் தொடர்வார். இக்கூட்டத்தில் 23 உறுப்பினர்களை கொண்ட புதிய தேசிய செயற்குழுவும் அமைக்கப்பட்டது.</p><h2>போராட்டத்திற்கு தயாராக இருக்கிறோம்:</h2><p>ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஊடக பொறுப்பாளர் அனுராக் தண்டா, கெஜ்ரிவாலுக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்ததோடு, அவரது தலைமையில் ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்ள கட்சி தயாராக உள்ளது என்றும் கூறினார்.</p><p>"ஆம் ஆத்மி கட்சியின் புதிதாக அமைக்கப்பட்ட தேசிய கவுன்சிலால் தேசிய ஒருங்கிணைப்பாளராக ஒருமனதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் ஜி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் வழிகாட்டுதலின் கீழ், நாங்கள் ஒவ்வொரு போராட்டத்திற்கும் தயாராக இருக்கிறோம்," என்று அனுராக் தண்டா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p>சமீபத்திய ஆண்டுகளில் கட்சி சந்தித்த தேர்தல் பின்னடைவுகளுக்கு பிறகும், தொடர்ந்து கட்சியை வழிநடத்தி வரும் நிலையில் கெஜ்ரிவால் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டெல்லியின் முன்னாள் முதலமைச்சரான கெஜ்ரிவால், வெளிப்படைத்தன்மை, தகவல் அறியும் உரிமை மற்றும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் ஆகியவற்றை மையமாக கொண்ட பல ஆண்டுகால செயல்பாடுகளுக்கு பிறகு அரசியலில் நுழைந்தார்.</p><h2>நன்கொடை வழங்கினார்:</h2><p>தேர்தல் அரசியலில் நுழைவதற்கு முன்பு, பொது விநியோக அமைப்பு, பொதுப் பணிகள், சமூக நலத் திட்டங்கள், வருமான வரி மற்றும் மின்சாரம் தொடர்பான பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக கெஜ்ரிவால் பரிவர்த்தன் என்ற தன்னார்வ அமைப்பை நிறுவினார்.</p><p>அவர் 2006-இல் வருமான வரித் துறையில் இருந்து ராஜினாமா செய்து, தனது ரமோன் மக்சேசே விருது பணத்தை பொது காரண ஆராய்ச்சி அறக்கட்டளையை நிறுவுவதற்காக நன்கொடையாக வழங்கினார்.</p><p>2012 அக்டோபர் 2 அன்று, இந்தியா அகென்ஸ்ட் கரப்ஷன் இயக்கத்தின் மற்ற முன்னாள் உறுப்பினர்களுடன் இணைந்து ஆம் ஆத்மி கட்சியை நிறுவுவதற்கு முன்பே, கெஜ்ரிவால் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் முக்கிய முகங்களில் ஒருவராக உருவெடுத்தார் .</p><p>அவர் 2013-இல் டெல்லி சட்டமன்ற தொகுதியில் தனது முதல் தேர்தலில் போட்டியிட்டு, மூன்று முறை முதலமைச்சராக இருந்த ஷீலா தீட்சித்தை 22,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர்தப்பிய உக்ரைன் அதிபர் - நார்வே பிரதமர் சொன்ன அதிர்ச்சி தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/world/norwegian-pm-says-zelenskys-plane-was-almost-hit-by-drone</link><comments>https://www.maalaimalar.com/news/world/norwegian-pm-says-zelenskys-plane-was-almost-hit-by-drone#comments</comments><guid isPermaLink="false">01e7a843-6a83-4f9e-87fa-11f46087248f</guid><pubDate>Wed, 09 Sep 2026 20:07:08 +0000</pubDate><atom:updated>2026-09-09T20:07:08.497Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>norway,Volodymyr Zelensky,வோலோடிமிர் ஜெலன்ஸ்கி,நார்வே</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/96dulvdw/Volodymyr-Zelensky.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Volodymyr Zelensky]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/96dulvdw/Volodymyr-Zelensky.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நார்வே மன்னர் ஹரால்டின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக, உக்ரைன் அதிபர் <a href="https://www.maalaimalar.com/topic/volodymr-zelensky">வோலோடிமிர் ஜெலென்ஸ்கி</a> மோல்டோவாவில் இருந்து ஓஸ்லோவிற்கு சென்றுகொண்டிருந்த விமானம், டிரோன் ஒன்றால் கிட்டத்தட்ட தாக்கப்பட்டதாக நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோர் தெரிவித்தார்.</p><p>"மோல்டோவாவில் இருந்து புறப்பட்டபோது அவரது விமானம் ஒரு டிரோனால் தாக்கப்பட இருந்தது. அதுதான் அவர் வாழும் யதார்த்தம்," என்று <a href="https://www.maalaimalar.com/news/world">நார்வேயின்</a> பொது ஒளிபரப்பு நிறுவனமான என்.ஆர்.கே-விடம் ஸ்டோர் கூறினார். அவர் அந்தச் சம்பவம் குறித்து வேறு எந்த விவரங்களையும் அளிக்கவில்லை.</p><h2>முக்கிய பேச்சுவார்த்தை:</h2><p>செவ்வாய்க்கிழமை மாலை ஓஸ்லோவிற்கு வந்தடைந்த ஜெலென்ஸ்கி, அங்கு ஸ்டோர், நிதி அமைச்சர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் மற்றும் வெளியுறவு அமைச்சர் எஸ்பென் பார்த் ஈடே ஆகியோருடன், வான் பாதுகாப்பு ஆதரவு உள்ளிட்ட நார்வேயின் ராணுவ உதவி மற்றும் பொதுமக்களுக்கான உதவிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.</p><p>புதன்கிழமை அன்று, ஆகஸ்ட் 28 அன்று 89 வயதில் காலமான மன்னர் ஹரால்டின் இறுதி சடங்கில், ஜெலென்ஸ்கி பல வெளிநாட்டுப் பிரமுகர்களுடன் கலந்துகொண்டார்.</p><p>இறுதி சடங்கிற்கு பிறகு ஜெலென்ஸ்கி நார்வேயை விட்டு வெளியேறி, கனடாவுக்கு சென்று அங்குள்ள தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ஸ்டோர் என்.ஆர்.கே-விடம் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>சாய் அபயங்கர் இசையில் &quot;பத்தா&quot; திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/sai-abhyankkar-musical-baththa-movie-1st-single-magale-out-now</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/sai-abhyankkar-musical-baththa-movie-1st-single-magale-out-now#comments</comments><guid isPermaLink="false">ab86b808-1e02-4c7b-97ac-388499c695ba</guid><pubDate>Wed, 09 Sep 2026 19:19:59 +0000</pubDate><atom:updated>2026-09-09T19:19:59.296Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sai Abhyankkar,சாய் அபயங்கர்,விஜய் சேதுபதி,Vijay sethupathi,Baththa,பத்தா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/22ysge7h/Sai-Abhyankkar-and-Vijay-Sethupathi.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sai Abhyankkar‬ and Vijay Sethupathi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/22ysge7h/Sai-Abhyankkar-and-Vijay-Sethupathi.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/vijay-sethupathi">விஜய் சேதுபதி</a> நாயகனாக நடித்துள்ள "பத்தா" திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது. </p><p>"நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" படத்தை இயக்கிய இயக்குநர் பாலாஜி தரணீதரன் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் "பத்தா" <a href="https://www.maalaimalar.com/cinema">திரைப்படம்</a> உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிகை லிஜோமோல் ஜோஸ் நாயகியாக நடித்துள்ளார்.</p><p>இயக்குநர் அட்லீ தயாரித்துள்ள "பத்தா" படத்துக்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். </p><p>1960-க்களில் நடக்கும் கதைகளத்துடன் உருவாகி வரும் இந்தப் படத்தின் போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.</p><h2>முதல் பாடல்:</h2><p>இந்த நிலையில், பத்தா படத்தின் "மகளே" எனும் முதல் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சாய் அபயங்கர் மற்றும் ஹரிணி இணைந்து பாடியுள்ள இந்தப் பாடலை கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார்.</p><p>ஏற்கெனவே, இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் "இஞ்சி வெல்லம்" படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து வரும் நிலையில், "பத்தா" திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/FhhA5purigQ"></iframe></figure>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடுமா - எம்.பி. துரை வைகோ அளித்த பதில்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/durai-vaiko-answers-on-mdmk-contesting-in-by-elections</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/durai-vaiko-answers-on-mdmk-contesting-in-by-elections#comments</comments><guid isPermaLink="false">3db4e85e-febb-4e74-b84b-445c7991ee41</guid><pubDate>Wed, 09 Sep 2026 18:30:14 +0000</pubDate><atom:updated>2026-09-09T18:30:14.310Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>MDMK,மதிமுக,துரை வைகோ,Durai vaiko,by elections,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/16wij2tx/Durai-Vaiko.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Durai Vaiko]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/16wij2tx/Durai-Vaiko.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ் நாட்டில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 சட்டசபை தொகுதிகளில் தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதன் காரணமாக இந்த தொகுதிகளில் <a href="https://www.maalaimalar.com/topic/by-election">இடைத்தேர்தல்</a> நடத்த முடியாத சூழல் உள்ளது. </p><p>தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இரு தொகுதிகளில் அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ஆ தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் தொடங்கி உள்ளதால் இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியது.</p><h2>எம்.பி. துரை வைகோ பேட்டி:</h2><p>"தமிழகத்தின் இரு தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து எம்.பி துரை வைகோ பதிலளித்துள்ளார். இது குறித்து சென்னை பனையூரில் தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது:-</p><p>மதுராந்தகம், தாராபுரம் இரு தொகுதிகளிலும் ம.தி.மு.க. கடந்த தேர்தலில் போட்டியிடவில்லை. எனவே இந்த இடைத்தேர்தலில் த.வெ.க. வேட்பாளர்கள் தான் போட்டியிட வாய்ப்புள்ளதாக நினைக்கின்றேன். ஆனால் ம.தி.மு.க. கண்டிப்பாக இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை.</p><h2>ம.தி.மு.க. உறுதுணையாக இருக்கும்:</h2><p>வருகின்ற இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி சார்பில் யார் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும் அவரது வெற்றிக்கு ம.தி.மு.க. உறுதுணையாக இருக்கும் என வைகோ அவர்கள் கூட்டத்தில் பேசியுள்ளார்.</p><p>கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த கூட்டணிக்குள் வந்து இருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். இடதுசாரி கட்சிகள் அவர்களது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர். இந்த ஆட்சி தொடரவேண்டும் என அவர்களது ஆதரவை தொடர்ந்து தருகின்றனர். நிச்சயமாக இந்த கூட்டணியில் இடதுசாரி கட்சிகள் இடம்பெறும் என நான் நம்புகிறேன்," என்றார்.</p>]]></content:encoded></item><item><title>இலங்கை அதிபரை சந்தித்து வாழ்த்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்</title><link>https://www.maalaimalar.com/news/world/rajnath-singh-meets-sri-lankan-president-discusses-regional-security</link><comments>https://www.maalaimalar.com/news/world/rajnath-singh-meets-sri-lankan-president-discusses-regional-security#comments</comments><guid isPermaLink="false">56b33f3f-4483-4c0f-9533-bee6a48773e4</guid><pubDate>Wed, 09 Sep 2026 17:19:28 +0000</pubDate><atom:updated>2026-09-09T17:19:28.214Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இலங்கை,Sri Lanka,Rajnath Singh,ராஜ்நாத் சிங்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/o2uto4pt/Rajnath-Singh-with-Sri-Lanka-President.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rajnath Singh with Sri Lanka President]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/o2uto4pt/Rajnath-Singh-with-Sri-Lanka-President.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், <a href="https://www.maalaimalar.com/news/world">இலங்கை</a> அதிபர் அனுர குமார திசாநாயக்கவை சந்தித்து, பிராந்தியத்தின் பாதுகாப்பு, அமைதி மற்றும் செழிப்பை உறுதி செய்வதற்கான வழிகள் உள்ளிட்ட இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக கூட்டாண்மை தொடர்பான விஷயங்கள் குறித்து கலந்துரையாடினார்.</p><p>மூன்று நாள் பயணமாக பாதுகாப்பு அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/rajnath-singh">ராஜ்நாத் சிங்</a> நேற்று (செவ்வாய்க்கிழமை) இலங்கை சென்றடைந்தார். பிரதமர் நரேந்திர மோடி  நல்வாழ்த்துக்களை திசாநாயக்கவுக்கு தெரிவித்த அவர், இரு நாடுகளின் குடிமக்களும் வலுவான வரலாற்று மற்றும் நாகரிக பிணைப்புகளின் அடிப்படையில் ஆழ்ந்த நட்புறவை பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதையும் வலியுறுத்தினார் என பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</p><h2>இலங்கை அதிபருக்கு வாழ்த்து:</h2><p>ராஜ்நாத் சிங், இலங்கை அதிபரின் அரசாங்கம் பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.</p><p>"நாகரிக இரட்டையர்களாகவும், நெருங்கிய அண்டை நாடுகளாகவும், கடல்சார் பங்காளிகளாகவும், இந்தியாவும் இலங்கையும் பிராந்தியத்தின் பாதுகாப்பு, அமைதி, மற்றும் செழிப்பை உறுதி செய்வதற்காக இணைந்து செயல்படும் அதே வேளையில், மக்களின் வளர்ச்சி மற்றும் நலனுக்காகவும் தொடர்ந்து இணைந்து பணியாற்றும் என்பதை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தினர்," என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.</p><h2>எக்ஸ் தள பதிவு:</h2><p>38 ஆண்டுகளில் ஒரு இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். இது குறித்த எக்ஸ் தளப் பதிவில், "இன்று கொழும்பில் இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்கவுடன் ஒரு சுமுகமான மற்றும் மிகவும் பயனுள்ள சந்திப்பு நடைபெற்றது.</p><p>பிரதமர் நரேந்திர மோடி சார்பாக அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, அவரது அரசின் இரண்டு ஆண்டுகால வெற்றிகரமான நிறைவுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தேன்," என்று ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.</p><p>பிரதமர் மோடியுடனான தனது உரையாடல்களை நினைவு கூர்ந்த திசாநாயக்க, இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு பாதகமான எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் இலங்கையின் நிலப்பரப்பு பயன்படுத்தப்படுவதை ஒருபோதும் அனுமதிக்காது என்று மீண்டும் வலியுறுத்தினார் என அந்த அறிக்கை தெரிவித்தது.</p>]]></content:encoded></item><item><title>பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-government-must-abandon-the-decision-to-construct-the-new-secretariat-at-pattinapakkam-ttv-dhinakaran-urges</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-government-must-abandon-the-decision-to-construct-the-new-secretariat-at-pattinapakkam-ttv-dhinakaran-urges#comments</comments><guid isPermaLink="false">635f6d56-d4f1-4cd4-8494-99c05b671605</guid><pubDate>Wed, 09 Sep 2026 16:08:53 +0000</pubDate><atom:updated>2026-09-09T16:08:53.632Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,பட்டினப்பாக்கம்,தலைமைச் செயலகம்,Secretariat,pattinapakkam,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/m3lc0lsh/New-Project-2026-09-09T213812.974.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/m3lc0lsh/New-Project-2026-09-09T213812.974.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/city-corporation-and-district-collector-grant-approval-for-the-new-secretariat-to-be-built-in-pattinapakkam">பட்டினப்பாக்கத்தில்</a> தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், இந்த முடிவை அரசு கைவிட வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். </p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;</p><h2>அவசரகதி தேர்வு </h2><p>புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வரும் தலைமைச் செயலகத்தில் இடநெருக்கடி மற்றும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், நவீன வசதிகளுடன் கூடிய புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டிய அவசியம் இருப்பது உண்மைதான். </p><p>ஆனால், அதற்காக பொதுமக்களுக்கும், அப்பகுதி மீனவ மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இடத்தை அவசரகதியில் தேர்வு செய்வது ஏற்புடையதல்ல.</p><p>நடைபெற்று முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் சென்னையில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்திருந்தார். </p><p>அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், சென்னை பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.</p><h2>அதிம மக்கள்தொகை கொண்ட குடியிருப்புப் பகுதி</h2><p>110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு இதுவரை அரசாணைகள் வெளியிடப்படவில்லை எனக் கூறப்படும் நிலையில், புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான இடத்தை மட்டும் அவசரமாகத் தேர்வு செய்து அரசாணை வெளியிடப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.</p><p>புதிய தலைமைச் செயலகம் அமைக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ள பட்டினம்பாக்கம் பகுதி ஏற்கனவே அதிக மக்கள் தொகை கொண்ட குடியிருப்புகள் நிறைந்த பகுதியாகும். </p><p>மேலும், குறுகிய சாலைகள், போக்குவரத்து நெரிசல், எதிர்காலத்தில் சாலை மற்றும் உள்கட்டமைப்புகளை விரிவுபடுத்துவதற்கான குறைந்த வாய்ப்புகள் ஆகியவை உள்ள நிலையில், அங்கு தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால் கூடுதல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, அப்பகுதி பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்படும்.</p><p>அதுமட்டுமின்றி, பள்ளிகள், கல்லூரிகள், தேவாலயங்கள், உள்ளிட்ட பல்வேறு முக்கிய தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ள அப்பகுதியில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மாணவர்களும் பொதுமக்களும் வந்து செல்கின்றனர். </p><p>இத்தகைய சூழலில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால், அரசு அலுவலர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் என அதிக எண்ணிக்கையிலானோர் வந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு, அப்பகுதியில் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் உருவாக வாய்ப்புள்ளது. </p><h2>மீனவ மக்களின் கோரிக்கை</h2><p>மேலும், புதிய தலைமைச் செயலகம் அமைக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலம், தங்களது பாரம்பரிய பயன்பாட்டில் இருந்து வந்த நிலம் எனவும், அதனை தங்களிடமே ஒப்படைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மீனவ சமுதாய மக்கள் நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். </p><p>இத்தகைய நிலையில், அவர்களின் கோரிக்கைகளை முறையாகக் கேட்டறியாமல் அங்கு தலைமைச் செயலகம் அமைப்பது, அவர்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் பாதிக்கும் நடவடிக்கையாகவே அமையும். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.</p><p>தமிழக அரசின் நிர்வாகத் தலைமையிடமாகவும், ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முக்கிய மையமாகவும் செயல்பட வேண்டிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்யும்போது, பல்வேறு தரப்பினரின் கருத்துகளைக் கேட்டறிவது அவசியமாகும். </p><p>ஆனால், எவருடனும் முறையாகக் கலந்தாலோசிக்காமல், எதிர்க்கட்சிகள்கூட விரிவாக விவாதிக்க முடியாத வகையில் 110 விதியின் கீழ் இத்திட்டத்தை அறிவித்து, தற்போது அவசரகதியில் இடத்தையும் தேர்வு செய்திருப்பது முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் சர்வாதிகார போக்கை வெளிப்படுத்துகிறது.</p><p>எனவே, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கும், போக்குவரத்திற்கும், அப்பகுதி மீனவ மக்களின் வாழ்வாதாரத்திற்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், போதிய இடவசதி, எதிர்கால விரிவாக்கத்திற்கான வாய்ப்பு, சிறந்த போக்குவரத்து வசதி உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான மாற்று இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளராக சேது செல்வம் அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/topnews/thattanchavady-by-election-sethu-selvam-announced-as-dmk-candidate</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/thattanchavady-by-election-sethu-selvam-announced-as-dmk-candidate#comments</comments><guid isPermaLink="false">10da080a-0211-4de1-91ed-8803c7c28e49</guid><pubDate>Wed, 09 Sep 2026 15:33:08 +0000</pubDate><atom:updated>2026-09-09T15:33:08.614Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,by election,Thattanchavady,தட்டாஞ்சாவடி,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/3a7y98nm/New-Project-2026-09-09T203340.335.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளராக சேது செல்வம் அறிவிப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/3a7y98nm/New-Project-2026-09-09T203340.335.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>புதுச்சேரி (Puducherry)</category><content:encoded><![CDATA[ <p>புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் வேட்பாளராக சேது என்ற சேது செல்வம் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். </p><p>தட்டாஞ்சாவடி தொகுதிக்கு அக்.6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. </p><p>தமிழ்நாட்டின் மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் திமுக சார்பில் பரந்தாமன், சுகன்யா ஆகியோர் போட்டியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>இடைத்தேர்தல்</h2><p>தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாமில் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 5 சட்டமன்ற மற்றும் ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>தாராபுரம், மதுராந்தகம், தட்டாஞ்சாவடி, நந்திகிராம், ரெஜிநகர் உள்ளிட்ட 5 சட்டமன்ற தொகுதிகளுக்கும், அசாமின் நாகோன் நாடாளுமன்ற தொகுதிக்கும் அக்டோபர் 6ம் தேதி <a href="https://www.maalaimalar.com/news/national/by-elections-announced-for-6-constituencies-in-india">இடைத்தேர்தல் </a>நடைபெற உள்ளது. </p><p>இந்த ஆறு தொகுதிகளுக்கும் வேட்புமனுத்தாக்கல் செப்.9 தொடங்கும் எனவும், வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் செப்.16 எனவும், வேட்புமனுக்களை பரிசீலனை செய்வதற்கான கடைசி நாள் செப்.17 என்றும், வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி செப்.19 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>வாக்கு எண்ணிக்கை அக்.9ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamilnadu-school-education-announced-quarterly-exam-dates</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamilnadu-school-education-announced-quarterly-exam-dates#comments</comments><guid isPermaLink="false">01de81f8-8845-4f3d-ad8e-4902bef80c3f</guid><pubDate>Wed, 09 Sep 2026 14:56:54 +0000</pubDate><atom:updated>2026-09-09T14:56:54.189Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>School Education Department,பள்ளிக் கல்வித்துறை,quarterly exam,காலாண்டு தேர்வு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/s84q2dib/exam.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ exam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/s84q2dib/exam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>காலாண்டுத் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வி இயக்ககம் இன்று வெளியிட்டது.</strong></em></p><p>அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">காலாண்டு தேர்வு</a> அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஒன்று முதல் 12-ம் வகுப்பு வரையிலான காலாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வி இயக்ககம் இன்று வெளியிட்டுள்ளது.</p><p>இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:</p><p>1 மற்றும் 2-ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 17-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும்.</p><p>3 முதல் 10-ம் வகுப்பு வரை செப்டம்பர் 16-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும்.</p><p>11, 12-ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 16-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தேர்வுக்குப் பிறகு செப்டம்பர் 25-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை காலாண்டு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மதிய உணவு வழங்குவதில் தகராறு: தலைமை ஆசிரியரை அடித்து உதைத்த மாணவர்கள்</title><link>https://www.maalaimalar.com/news/national/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D</link><comments>https://www.maalaimalar.com/news/national/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D#comments</comments><guid isPermaLink="false">bf69ddd9-b72d-4a01-bdd6-a6366aa6c6c6</guid><pubDate>Wed, 09 Sep 2026 14:43:40 +0000</pubDate><atom:updated>2026-09-09T14:43:40.971Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மேற்கு வங்கம்,west bengal</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/e1bs0d6p/Students0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மேற்கு வங்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/e1bs0d6p/Students0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி 150 ஆண்டு கால பழமையான பள்ளிக் கூடம் உள்ளது. இந்த பள்ளிக் கூடத்தில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆசிரியர் தினத்தன்று சிறப்பு மதிய உணவு வழங்கப்படும்.</p><p>அதன்படி நேற்று உணவு வழங்கப்பட்டுள்ளது. அப்போது போதுமான சாப்பாடு மற்றும் சிக்கன் வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் மாணவர்கள் கோபம் அடைந்தனர்.</p><p>அப்போது சாப்பாடு வழங்கும் இடத்திற்கு தலைமை ஆசிரியர் வந்துள்ளார். அவருக்கும் மாணவர்களுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தலைமை ஆசிரியரை கீழே தள்ளிவிட்டு கடுமையாக தாக்கியுள்ளனர்.</p><p>அதோடு மட்டுமல்லாமல் தலைமை ஆசிரியர் அறை, உணவு தயார் செய்யப்படும் அறை ஆகியவற்றையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்க, உடனடியாக அதிரடிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.</p><p>இது தொடர்பாக மாவட்ட பள்ளிகள் ஆய்வாளர் தலைமை ஆசிரியர் அறை, மதிய உணவு தயார் செய்யப்பட்ட இடம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்துள்ளார்.</p><p>இது பள்ளிக் கூடத்தின் உள் விவகாரம். விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது இதுகுறித்து சொல்ல முடியாது என்றார்.</p><p>இந்த பள்ளிக்கூடம் 1876-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் தீபக் பர்மன், பள்ளிக்கூடம் சென்று ஆய்வு செய்வார் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இது தேர்தல் கூட்டணி அல்ல, அரசியலமைப்பை பாதுகாக்கும் கூட்டணி: திருமாவளவன் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-says-it-is-not-election-allaiance-constitution-secured-alliance</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-says-it-is-not-election-allaiance-constitution-secured-alliance#comments</comments><guid isPermaLink="false">5984f5ef-1ea5-461c-96d4-01e26d55efe5</guid><pubDate>Wed, 09 Sep 2026 14:18:09 +0000</pubDate><atom:updated>2026-09-09T14:18:09.352Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>thirumavalavan,திருமாவளவன்,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,தவெக கூட்டணி,TVK allaiance</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/ejjix5xw/thiruma.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ thirumavalavan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/ejjix5xw/thiruma.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இது தேர்தல் கூட்டணி அல்ல, அரசியலமைப்பை பாதுகாக்கும் கூட்டணி என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.</strong></em></p><p>தவெக தலைமையிலான கூட்டணிக்கு “மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி” எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியில் தவெக, காங்கிரஸ், விசிக, மதிமுக, ஐயூஎம்எல் ஆகிய 5 கட்சிகள் இடம்பெற்றுள்ளன.</p><h2>மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி</h2><p>தவெக கூட்டணிக் கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றதை அடுத்து, கூட்டணிக்கான பெயர் அறிவிக்கப்பட்டது.</p><p>மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தலைவர்கள் அனைவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது:</p><p>மதவாத, சாதிவாத சக்திகளுக்கு இந்த மண்ணில் இடமில்லை.</p><p>மதச்சார்பின்மையை அகில இந்திய அளவில் பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது.</p><h2>அரசியலமைப்பை பாதுகாக்கும் கூட்டணி</h2><p>இது வெறும் தேர்தல் கூட்டணி அல்ல, அரசியலமைப்பை பாதுகாக்கும் கூட்டணி என தெரிவித்தார்.</p><p>தொடர்ந்து பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசுகையில், தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணியின் பெயரை ஒருமனதாகத் தேர்வு செய்தோம் என்றார்.</p><h2>தவெக தலைமையில் கூட்டணி</h2><p>ஐயூஎம் எல் கட்சியின் தலைவர் காதர் மொகிதீன் கூறுகையில், தமிழகத்தில் முதன் முறையாக தவெக ஆட்சியில் கூட்டணி அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் என இனி வரும் காலங்களில் தவெக தலைமையில் கூட்டணி தொடரும். முதலமைச்சர் விஜய் தலைமையிலான கூட்டணி இன்றும், என்றும் தொடரும் என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>மதுரையில் ‘சேயோன்’ படப்பிடிப்பு: ரசிகர்களுக்கு ஜிகர்தண்டா வாங்கி கொடுத்த சிவகார்த்திகேயன்! </title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/seyon-shoot-madurai-sivakarthikeyan-treats-fans-jigarthanda</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/seyon-shoot-madurai-sivakarthikeyan-treats-fans-jigarthanda#comments</comments><guid isPermaLink="false">1156700a-69b5-4060-aebc-a5a58a3d1ec6</guid><pubDate>Wed, 09 Sep 2026 14:11:52 +0000</pubDate><atom:updated>2026-09-09T14:11:52.483Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>sivakarthikeyan,madurai,SK 23,சிவகார்த்திகேயன்,Seyon,சேயோன்,Sivakumar Murugesan,Raaj Kamal Films</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/oev519e9/Seyon-Shooting" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Seyon Shooting]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/oev519e9/Seyon-Shooting?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D">சிவகார்த்திகேயன் </a>நடித்து வரும் புதிய திரைப்படம் “சேயோன்”. </p><p>மதுரையை மையமாகக் கொண்ட இத்திரைப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தற்போது மதுரையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.</p><p>இந்நிலையில், படப்பிடிப்பின் இடைவேளையின் போது மதுரை விளக்குத்தூண் பகுதியில் உள்ள ஒரு பிரபலமான ஜிகர்தண்டா கடைக்கு நடிகர் சிவகார்த்திகேயன் திடிரென சென்றுள்ளார்.</p><h2><strong>ரசிகைகளுடன் கலந்துரையாடல்</strong></h2><p>நடிகர் சிவகார்த்திகேயன் ஜிகர்தண்டா சாப்பிட வந்ததை அறிந்ததும், அப்பகுதியில் இருந்த பெண்கள், குழந்தைகள் மற்றும் ஏராளமான ரசிகர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர்.</p><p>அப்போது, தன்னைச் சந்திக்க வந்த ரசிகைகளிடம் சிவகார்த்திகேயன் மிகவும் எளிமையாகவும் கனிவாகவும் பேசினார். </p><p>மேலும் அங்கிருந்த ஒரு குழந்தைக்கு அன்புடன் முத்தமிட்ட அவர், அங்கு கூடியிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குத் தனது சொந்த செலவில் ஜிகர்தண்டா வாங்கி கொடுத்தார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">A Heartwarming moment where <a href="https://x.com/hashtag/Sivakarthikeyan?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Sivakarthikeyan</a> met people during the shooting of <a href="https://x.com/hashtag/Seyon?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Seyon</a>♥️✨ <a href="https://t.co/kvDGnum4IL">pic.twitter.com/kvDGnum4IL</a></p>&mdash; AmuthaBharathi (@CinemaWithAB) <a href="https://x.com/CinemaWithAB/status/2097678897064370608?ref_src=twsrc%5Etfw">September 9, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2><strong>இணையத்தில் வைரலாகும் காட்சிகள்</strong></h2><p>மதுரை மண்ணில் பொதுமக்களுடன் சிவகார்த்திகேயன் இயல்பாகப் பேசி, ஜிகர்தண்டா பருகிய இந்தக் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் மிக வேகமாகப் பரவி வைரலாகி வருகிறது. </p><p>அவரது இந்த அன்பான மற்றும் எளிமையான செயலைக் கண்டு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88">மதுரை </a>மக்கள் மற்றும் இணையவாசிகள் நெகிழ்ந்து பாராட்டி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>“இடைத்தேர்தலுக்கான தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை அறிவிக்கப்படுவார்கள்” - மாணிக்கம் தாகூர்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-alliance-candidates-for-the-by-election-will-be-announced-tomorrow-manickam-tagore</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-alliance-candidates-for-the-by-election-will-be-announced-tomorrow-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">59bdbf77-0adb-40a8-9d6b-a3cd43b01ccb</guid><pubDate>Wed, 09 Sep 2026 13:56:34 +0000</pubDate><atom:updated>2026-09-09T13:56:34.137Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணிக்கம் தாகூர்,Manickam Tagore,ByElection,இடைத்தேர்தல்,TVK alliance,தவெக கூட்டணி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/vr890ywb/New-Project-2026-09-09T192411.614.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “இடைத்தேர்தலுக்கான தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை அறிவிக்கப்படுவார்கள்” - மாணிக்கம் தாகூர்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/vr890ywb/New-Project-2026-09-09T192411.614.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தவெக தலைமையிலான கூட்டணிக்கு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/secular-social-justice-victory-alliance-name-of-the-tvk-led-alliance-announced">மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி</a> எனப் பெயரிடப்பட்டுள்ளது. </p><p>தவெக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தவெக, விசிக, மதிமுக, காங்கிரஸ், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றதைத் தொடர்ந்து இந்த பெயர் அறிவிப்பு வெளியானது. </p><p>இந்த கூட்டணிப் பெயர் அறிவிப்பைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மாணிக்கம் தாகூர், திருமாவளவன், வைகோ, காதர் மொய்தீன், தவெக சார்பில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். </p><p>அப்போது பேசிய காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர்.,</p><p>“இக்கூட்டணி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் செயல்படும். இடைத்தேர்தலுக்கான இக்கூட்டணியின் வேட்பாளர்கள் நாளை அறிவிக்கப்படுவார்கள். </p><p>இடைத்தேர்தல் வெற்றிக்காக கூட்டணி கட்சிகள் இணைந்து பாடுபடும். சமூக நீதி, மதச்சார்பற்ற அடிப்படையில் தமிழ்நாட்டின் நலனுக்காக உருவாக்கப்பட்ட கூட்டணி இது.</p><p>இந்தக் கூட்டணியின் தலைவர் விஜய். இக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளும் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ளோம். தவெகவில் எம்.பி.க்கள் வந்தபின் அவர்களும் இந்தியா கூட்டணியில் இணைவார்கள்.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>3வது டெஸ்ட்: இங்கிலாந்து அசத்தல் பந்துவீச்சு - முதல் இன்னிங்சில் 133 ரன்னுக்கு சுருண்டது பாகிஸ்தான்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/pakistan-all-out-133-runs-in-first-innings-against-england-in-3rd-test</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/pakistan-all-out-133-runs-in-first-innings-against-england-in-3rd-test#comments</comments><guid isPermaLink="false">67838d65-1360-4a20-9c5d-472118e1a410</guid><pubDate>Wed, 09 Sep 2026 13:50:43 +0000</pubDate><atom:updated>2026-09-09T13:50:43.164Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ENGvPAK,இங்கிலாந்து பாகிஸ்தான் தொடர்,josh tongue,ஜோஷ் டங்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/qhm73vk1/josh.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ josh tongue]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/qhm73vk1/josh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 133 ரன்களுக்கு சுருண்டது.</strong></em></p><p>இங்கிலாந்து, பாகிஸ்தான் இடையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. முதல் இரு போட்டிகளில் பாகிஸ்தான் அணி படுதோல்வியை சந்தித்தது.</p><p>இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி போட்டி எட்ஜ்பாஸ்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.</p><h2>இங்கிலாந்து அசத்தல்</h2><p>அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. ஆரம்பம் முதலே இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை திணறடித்தனர்.</p><p>அசான் அவைஸ் 9 ரன்னிலும், அப்துல்லா ஷபீக் 3 ரன்னிலும், ஷான் மசூத் 5 ரன்னிலும், கேப்டன் பாபர் அசாம் வெறும் 7 ரன்னிலும் வெளியேறினர்.</p><p>அந்த அணியின் சவுத் ஷகீல் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து 43 ரன்னில் அவுட்டானார்.</p><p>இறுதியில், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 133 ரன்களுக்கு சுருண்டது.</p><p>இங்கிலாந்து சார்பில் ஜோஷ் டங் 4 விக்கெட்டும், ஆலி ராபின்சன், ஜோப்ரா ஆர்ச்சர் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><h2>ஆலி ராபின்சன் 100 விக்கெட்</h2><p>ஆலி ராபின்சன் தனது 100-வது டெஸ்ட் விக்கெட்டையும் கைப்பற்றினார்.</p>]]></content:encoded></item><item><title>கனவும் நிஜமும் கலந்த மாய உலகம் - மிரட்டும் &quot;ட்ரோன்ஸ்&quot; படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/dreams-and-reality-blend-in-surreal-world-first-look-of-terrifying-drones</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/dreams-and-reality-blend-in-surreal-world-first-look-of-terrifying-drones#comments</comments><guid isPermaLink="false">055c2d86-4b7a-4552-a313-fc1ba956b00f</guid><pubDate>Wed, 09 Sep 2026 13:45:54 +0000</pubDate><atom:updated>2026-09-09T13:45:54.601Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>DRONES,ட்ரோன்ஸ்,Five Star Creations,SiddhiIdnani,SciFi Horror,சயின்ஸ் பிக்ஷன்,Drones First Look</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/34551u37/Drones-FirstLook" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Drones FirstLook]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/34551u37/Drones-FirstLook?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>GM Morgan Films நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் R. ராகவ் மிர்தாத் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் முற்றிலும் அரிதான ஒரு முயற்சியாக உருவாகி வரும் வித்தியாசமான சர்ரியலிஸ்ட் ஃபேண்டஸி திரைப்படம் “ட்ரோன்ஸ்”.</p><p>வித்தியாசமான கற்பனை உலகம், ஹாரர், சயின்ஸ் ஃபிக்ஷன் மற்றும் ஃபேண்டஸி அம்சங்கள் கலந்த இந்தத் திரைப்படத்தின் முழு உரிமையையும் முன்னணி தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர் கதிரேசன் மற்றும் செந்தில் ஆகியோர் வாங்கியுள்ளனர்.</p><p>திரைப்படத்தை தன் குடும்பத்துடன் பார்த்து மிகவும் ரசித்த தயாரிப்பாளர் செந்தில், கதையின் மீதான முழு நம்பிக்கையால் உடனடியாக இதன் உரிமையைக் கைப்பற்றியுள்ளார். </p><p>இதன் மூலம் இப்படம் இந்தியா முழுவதும் பல மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. முன்னதாக இப்படத்தின் மூன்று மிரட்டலான <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D">ஃபர்ஸ்ட் லுக்</a> போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.</p><h2><strong>வினோதமான கதைக்களம்</strong></h2><p>கனவுகளில் மட்டுமே நிகழக்கூடிய விசித்திரமான சம்பவங்கள் நிஜ உலகில் நடந்தால் எப்படி இருக்கும் என்ற சுவாரஸ்யமான கேள்வியை மையமாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. </p><p>ஒரு மேட் சயின்டிஸ்ட் , டிடெக்டிவ், ஏஞ்சல், சூனியக்காரி மற்றும் பல புதிரான சம்பவங்கள் நிறைந்த கற்பனை உலகில் பயணிக்கும் வகையில், தமிழ் சினிமாவில் அரிதாக முயற்சிக்கப்படும் சர்ரியலிஸ்ட் ஃபேண்டஸி பாணியில் இப்படம் மிரட்டலாக உருவாகியுள்ளது.</p><h2><strong>3 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்</strong></h2><p>தற்போது வெளியாகியுள்ள மூன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் படத்தின் விநோதமான உலகத்தை அறிமுகப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.</p><h2><strong>முதல் போஸ்டர் (மாயாஜால உலகம்):</strong> </h2><p>அடர்ந்த காடு, முழுநிலவு, மர்மமான கோட்டை, வௌவால்கள் மற்றும் தேவதை போன்ற உருவங்களுக்கு நடுவே கதாநாயகி காட்சியளிப்பதன் மூலம் ஒரு மாயாஜால ஃபேண்டஸி உலகம் உருவாக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>இரண்டாவது போஸ்டர் (சயின்ஸ் ஃபிக்ஷன்):</strong></h2><p>படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் ஒன்றாக இடம்பெற, அருகில் ட்ரோன், மர்மமான வயதான பெண், வித்தியாசமான சாதனங்கள் என சயின்ஸ் ஃபிக்ஷன் மற்றும் ஃபேண்டஸி கலந்த உலகை வெளிப்படுத்துகிறது.</p><h2><strong>மூன்றாவது போஸ்டர் (ஹாரர் &amp; திகில்):</strong></h2><p>எண்ணற்ற பொம்மைகள் சூழ்ந்த இருண்ட அறையில் ஆக்ரோஷமான தோற்றத்தில் ஒரு சூனியக்காரி இடம்பெற்றிருப்பது படத்தின் ஹாரர் மற்றும் திகில் அம்சங்களை மிரட்டலாக எடுத்துக்காட்டுகிறது.</p><p>மூன்று போஸ்டர்களிலும் மூன்று விதமான மனநிலைகளையும், கதையின் பல அடுக்குகளையும் காட்சிப்படுத்தி படக்குழு ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது.</p><h2><strong>நட்சத்திரப் பட்டாளம்</strong></h2><p>இப்படத்தில் முன்னணி நடிகைகளான சித்தி இத்னானி, அஞ்சலி நாயர் ஆகியோருடன் <a href="https://www.maalaimalar.com/topic/devadarshini">தேவதர்ஷினி</a>, பரிதாபங்கள் புகழ் டிராவிட் செல்வம், விஜய் டிவி புகழ் குரேஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ் மற்றும் இப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகும் ஆர்ஜே தீபக் உள்ளிட்டோர் கதையின் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.</p><h2><strong>தொழில் நுட்பக்குழு</strong></h2><p>தொழில்நுட்ப ரீதியாகவும் பல புதிய முயற்சிகளுடன் உருவாகி வரும் இத்திரைப்படத்திற்கு ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்ய, ஹரி S.R இசையமைக்கிறார். </p><p>மேலும் சதீஸ் சூர்யா படத்தொகுப்பு பணிகளையும், R. கிஷோர் கலை இயக்கத்தையும், ஹர்ஷிகா ராமேஷ் ஆடை வடிவமைப்பையும் கையாண்டு இப்படத்தின் முக்கிய தூண்களாகப் பணியாற்றியுள்ளனர்.</p><h2><strong>ரிலீஸ் அப்டேட்</strong></h2><p>இறுதிக்கட்ட பணிகள் தற்போது மிக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், <strong>“ட்ரோன்ஸ்” படத்தின் இசை மற்றும் டிரெய்லர் விரைவில் வெளியாகவுள்ளது</strong>. ஃபேண்டஸி, சயின்ஸ் ஃபிக்ஷன், ஹாரர் என பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைத்து உருவாகி வரும் இப்படம், ரசிகர்களுக்கு ஒரு புதிய மற்றும் வித்தியாசமான திரையனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>மிக விரைவில் இப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கண்டு ரசிக்கலாம் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தீபாவளிக்கு ரிலீஸ்: சூர்யாவின் 47வது படத்திற்கு ‘SCENE’ எனப் பெயர் வைப்பு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/diwali-release-suriyas-47th-film-titled-scene</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/diwali-release-suriyas-47th-film-titled-scene#comments</comments><guid isPermaLink="false">eb45ebd2-79b5-42f9-8882-b0cfd4421951</guid><pubDate>Wed, 09 Sep 2026 13:26:43 +0000</pubDate><atom:updated>2026-09-09T13:26:43.619Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சூர்யா,jithu madhavan,ஜித்து மாதவன்,Surya,scene,சீன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/o3ns9uis/New-Project-2026-09-09T185114.271.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தீபாவளிக்கு ரிலீஸ்: சூர்யாவின் 47வது படத்திற்கு ‘SCENE’ எனப் பெயர் வைப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/o3ns9uis/New-Project-2026-09-09T185114.271.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ரோமஞ்சம், ஆவேசம் படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/viswanath-sons-box-office-spree">சூர்யா</a> நடிக்கும் 47வது படத்திற்கு ‘சீன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.</p><p>படத்தில் மூத்த நடிகர் லால், லுங்கி பாய்ஸ் ராஜ்பிரியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். </p><p>சூர்யா, ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட், ழகரம் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் படத்திற்கு சுசின் ஷ்யாம் இசையமைக்கிறார்.</p><p>தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6ம் தேதி படம் வெளியாகிறது. படத்தில் நடித்துள்ள நடிகர்கள் மற்றும் பிற அறிவிப்புகள் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/_nuRAflabx8"></iframe></figure>]]></content:encoded></item><item><title>இந்தியாவுக்கு எதிராக எங்கள் மண்ணை பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம்: இலங்கை அதிபர்</title><link>https://www.maalaimalar.com/news/world/would-not-allow-our-soil-to-be-used-for-anti-india-activities-sri-lankan-president-anura-kumara-dissanayake</link><comments>https://www.maalaimalar.com/news/world/would-not-allow-our-soil-to-be-used-for-anti-india-activities-sri-lankan-president-anura-kumara-dissanayake#comments</comments><guid isPermaLink="false">2217b88b-274f-4834-9bf4-2f9f7f2f7128</guid><pubDate>Wed, 09 Sep 2026 13:03:06 +0000</pubDate><atom:updated>2026-09-09T13:03:06.790Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rajnath Singh,Anura Kumara Dissanayake,அனுர குமார திசநாயகே,ராஜ்நாத் சிங்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/14jbmtp4/RajnathSingh0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ராஜ்நாத் சிங்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/14jbmtp4/RajnathSingh0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சீனா வழங்கியுள்ள கடனை இலங்கை அரசால் திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஹம்பன்தோடா துறைமுகத்தை சீனாவுக்கு 99 வருடத்திற்கு குத்தகைக்கு கொடுத்துள்ளது இலங்கை. சுமார் 15 ஆயிரம் ஏக்கரில் இந்த துறைமுகம், அனைத்து வசதிகளுடன் அமைந்துள்ளது.</p><p>இலங்கை துறைமுகத்தில் இருந்து சீனாவின் உளவு கப்பல், இந்தியாவை உளவு பார்ப்பதாக இந்தியா சந்தேகம் அடைந்து வருகிறது. இலங்கையுடன் சீனா நெருக்கம் காட்டுவது இந்தியாவுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறது. இது இந்தியாவின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என எண்ணுகிறது.</p><p>இந்த நிலையில்தான் இலங்கை உடனான உறவை மேம்படுத்தும் வகையில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் 3 நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளார்.</p><p>இவர் இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே-வை சந்தித்தார். அப்போது பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.</p><p>அதன்பின் இலங்கை அதிபர் அனுர குமார திசனாயகே "இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு எங்கள் மண்ணை பயன்படுத்தப்பட அனுமதிக்க மாட்டோம்" என்று உறுதி அளித்துள்ளார்.</p><p>இலங்கை விமானப்படைக்கான L70 ரக பீரங்கிகளை மேம்படுத்துவது மற்றும் இரு நாடுகளின் தேசிய மாணவர் படை (NCC) மற்றும் தேசிய பாதுகாப்பு கல்லூரிகளுக்கு (NDC) இடையிலான ஒத்துழைப்பு ஆகியவை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இரு தரப்பினரும் பரிமாறிக்கொண்டதாக இந்திய பாதுகாப்பத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி - தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/secular-social-justice-victory-alliance-name-of-the-tvk-led-alliance-announced</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/secular-social-justice-victory-alliance-name-of-the-tvk-led-alliance-announced#comments</comments><guid isPermaLink="false">f142f807-f274-410f-934b-70e61b11b55c</guid><pubDate>Wed, 09 Sep 2026 12:50:10 +0000</pubDate><atom:updated>2026-09-09T12:50:10.921Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,TVK alliance,தவெக கூட்டணி,victorious alliance for secularism and social justice,மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/x02i1m9q/New-Project-2026-09-09T181657.630.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி - தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் அறிவிப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/x02i1m9q/New-Project-2026-09-09T181657.630.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தவெக தலைமையிலான கூட்டணிக்கு “மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி” எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இக்கூட்டணியில் தவெக, காங்கிரஸ், விசிக, மதிமுக, ஐயூஎம்எல் ஆகிய 5 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. </p><p>தவெக கூட்டணிக் கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றதைத் தொடர்ந்து கூட்டணிக்கான பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இன்றைய கூட்டத்தில் மாணிக்கம் தாகூர், விஜய், திருமாவளவன், காதர் மொய்தீன், வைகோ ஆகியோர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். </p><p>தவெக ஆட்சியமைக்க ஆதரவளித்த <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-alliance-parties-meeting-left-parties-boycott">இடதுசாரி கட்சிகளான</a> இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை இக்கூட்டணியில் இடம்பெறவில்லை. </p><p>முன்னதாக திமுக தலைமையிலான கூட்டணிக்கு மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி என பெயரிடப்பட்டிருந்தது. </p>]]></content:encoded></item><item><title>விஜய் தேவரகொண்டாவின் ‘ரணபாலி’ டீசர் வெளியானது!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/vijay-deverakondas-ranapali-teaser-released</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/vijay-deverakondas-ranapali-teaser-released#comments</comments><guid isPermaLink="false">4840fb4f-6aa8-41a9-bd9e-462d5606b0e3</guid><pubDate>Wed, 09 Sep 2026 12:39:51 +0000</pubDate><atom:updated>2026-09-09T12:39:51.454Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ராஷ்மிகா மந்தனா,விஜய் தேவரகொண்டா,vijay deverakonda,rashmika,Ranabaali,ரணபாலி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/snbg7gci/New-Project-2026-09-09T180704.735.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விஜய் தேவரகொண்டாவின் ‘ரணபாலி’ டீசர் வெளியானது!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/snbg7gci/New-Project-2026-09-09T180704.735.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இயக்குநர் ராகுல் சங்கிருதயன் இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளப் படம் <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/vijay-devarakonda-rashmika-ranapali-release-date-announcement">ரணபாலி</a>. </p><p>1876 முதல் 1878 வரையிலான ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், தென்னிந்தியாவில் ஏற்பட்ட பஞ்சம் மற்றும் பிரிட்டிஷாரின் அடக்குமுறையால் உயிரிழந்த ஆயிரக்கணக்கான இந்தியர்கள் மற்றும் அவர்களுக்கு எதிரான போராட்டத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.</p><p>மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள இப்படத்திற்கு அஜய் - அதுல் இசையமைத்துள்ளனர்.  தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் இப்படம் வரும் அக்டோபர் 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.</p><p>இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. </p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/bgf9JCHxwnk"></iframe></figure>]]></content:encoded></item><item><title>பயணியின் சூட்கேசில் இருந்த முதலை தலை : இத்தாலியில் அதிர்ச்சி</title><link>https://www.maalaimalar.com/news/world/crocodile-head-found-in-passengers-suitcase-italy</link><comments>https://www.maalaimalar.com/news/world/crocodile-head-found-in-passengers-suitcase-italy#comments</comments><guid isPermaLink="false">42e1e7bc-b601-4a22-a73e-379b546506ec</guid><pubDate>Wed, 09 Sep 2026 12:32:26 +0000</pubDate><atom:updated>2026-09-09T12:32:26.521Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>முதலை,Crocodile,Crocodile Head Seized,முதலை தலை பறிமுதல்,Italy Customs,Turin Airport,Animal Trafficking,Wildlife Smuggling,வனவிலங்கு கடத்தல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/rx4cnn9x/Crocodile-Head" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Crocodile Head]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/rx4cnn9x/Crocodile-Head?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF">இத்தாலியின் </a>துரின் நகரில் உள்ள காசெல்லே விமான நிலையத்தில், பயணி ஒருவரின் சூட்கேசில் இருந்து அழியும் ஆபத்திலுள்ள அபூர்வ வகை முதலையின் தலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.</p><p>இந்தச் சட்டவிரோத கடத்தல் தொடர்பாக முதலையின் தலையை வைத்திருந்த இத்தாலிய நபர் மீது அந்நாட்டு அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.</p><h2>கடத்தல் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?</h2><p>அமெரிக்காவின் மியாமியிலிருந்து இஸ்தான்புல் வழியாக இத்தாலியின் துரின் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">விமான நிலையத்திற்கு</a> அந்த நபர் வந்து இறங்கினார்.</p><p>சர்வதேச அளவில் அழியும் நிலையிலுள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் சட்டவிரோத வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த, இத்தாலியின் நிதி போலீஸ் படையினரும் சுங்கத்துறை அதிகாரிகளும் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். </p><p>அப்போது, அந்நபரின் சாமான்களை சோதனை செய்தபோது முதலையின் தலை கண்டுபிடிக்கப்பட்டது.</p><h2>தப்பித்த தந்திரம்</h2><p>அதிகாரிகளின் கூற்றுப்படி, அந்த முதலையின் தலை முழுமையாக உலர்த்தப்பட்டு, சாதாரண பேக்கிங் பேப்பரால் சுற்றப்பட்டிருந்தது. </p><p>இதனால் அவர் அமெரிக்காவின் பாதுகாப்பு சோதனைகளில் சிக்காமல் எளிதாக ஏமாற்றி எடுத்து வந்துள்ளார்.</p><h2>கடுமையான தண்டனை மற்றும் அபராதம்</h2><p>முறையான சான்றிதழ்கள் அல்லது உரிமம் ஏதுமின்றி, பாதுகாக்கப்பட்ட வனவிலங்குப் பகுதியைச் சேர்ந்த முதலையைக் கடத்தியதாக அந்தப் பயணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் சுமார் ரூ. 2.20 கோடி (இந்திய மதிப்பில்) அபராதம் விதிக்கப்படலாம். அல்லது 6 மாதங்கள் முதல் 1 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.</p><h2>பின்னணி</h2><p>அழியும் நிலையிலுள்ள விலங்குகளை சட்டவிரோத வர்த்தகத்தில் இருந்து பாதுகாப்பதற்காக 1973-ல் கையெழுத்திடப்பட்ட 'வாஷிங்டன் உடன்படிக்கையின்' கீழ் முதலைகள் பாதுகாக்கப்படும் விலங்கினப் பட்டியலில் உள்ளன.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE">அமெரிக்காவின் </a>புளோரிடா மாகாணத்தில் உள்ள நினைவுப் பரிசு கடைகளில் இதுபோன்ற காய்ந்த முதலை தலைகள் பொதுவாக விற்கப்பட்டாலும், அவற்றை சர்வதேச எல்லைகளுக்குக் கடத்துவது சட்டப்படி குற்றமாகும். பல சுற்றுலாப் பயணிகள் இது தெரியாமல் வாங்கி வந்து சிக்கலில் மாட்டிக் கொள்வதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>20 ஆண்டு பனி இழப்புக்கு பின் அண்டார்டிகாவில் தற்காலிக பனிப்பொழிவு அதிகரிப்பு: ஆய்வில் தகவல்!</title><link>https://www.maalaimalar.com/news/world/temporary-snowfall-increase-in-antarctica-after-20-years-of-ice-loss-study-finds</link><comments>https://www.maalaimalar.com/news/world/temporary-snowfall-increase-in-antarctica-after-20-years-of-ice-loss-study-finds#comments</comments><guid isPermaLink="false">57a904ee-96a8-43c7-9719-4c5c9d5f3165</guid><pubDate>Wed, 09 Sep 2026 12:24:20 +0000</pubDate><atom:updated>2026-09-09T12:24:20.697Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>climate change,Global Warming,பனிப்பொழிவு,பருவநிலை மாற்றம்,அண்டார்டிகா,Antarctica,snow fall,Antarctica Ice Gain</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/qaosjb5m/Antarctica-Ice-Gain" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Antarctica Ice Gain]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/qaosjb5m/Antarctica-Ice-Gain?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுக்கு சராசரியாக 140.5 பில்லியன் டன் பனியை இழந்து வந்த அண்டார்டிகா கண்டம், சமீபத்தில் தற்காலிகமாக தனது போக்கை மாற்றி, 2021 முதல் 2023 வரையிலான 22 மாதங்களில் அதிக அளவாக 695 பில்லியன் டன் பனியைப் பெற்றுள்ளது.</p><p>வெப்பமண்டல கடல் பகுதியில் ஏற்பட்ட அசாதாரண வெப்பம், அங்கு கடுமையான பனிப்பொழிவை ஏற்படுத்தியதே இதற்குக் காரணம் என ‘நேச்சர்’ இதழில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வு தெரிவிக்கிறது.</p><h2>ஆய்வில் வெளியிடப்பட்ட முக்கியத் தகவல்கள்</h2><h2>தற்காலிக மாற்றம்</h2><p>2003 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் அண்டார்டிகா தொடர்ந்து பனியை இழந்து கடல் மட்ட உயர்வுக்குக் காரணமாக இருந்தது. ஆனால், ஜூலை 2021 முதல் ஏப்ரல் 2023 வரை இந்த பனி இழப்பு முற்றிலும் தலைகீழாக மாறி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81">பனிப்பொழிவு </a>அதிகரித்தது.</p><p>இதன் காரணமாக 2021 முதல் 2024 வரையிலான அண்டார்டிகாவின் ஒட்டுமொத்த பனி இழப்பு சமநிலை பூஜ்ஜியம் என்று எட்டியுள்ளது.</p><h2>கிழக்கு அண்டார்டிகாவில் பனிப்பொழிவு</h2><p>இந்த பனி அதிகரிப்பு பெரும்பாலும் கிழக்கு அண்டார்டிகா மற்றும் அண்டார்டிக் தீபகற்பப் பகுதிகளில் மட்டுமே நிகழ்ந்துள்ளது.</p><p>குறிப்பாக, குயின் மேரி லேண்ட் மற்றும் வில்கேஸ் லேண்ட் ஆகிய பகுதிகளில் மட்டும் சுமார் 470 பில்லியன் டன் பனி சேர்ந்துள்ளது. அதே நேரத்தில், மேற்கு அண்டார்டிகா பகுதி தொடர்ந்து பனியை இழந்து கொண்டேதான் இருக்கிறது.</p><h2>எப்படி வெப்பமண்டல கடலால் அண்டார்டிகாவில் பனிப்பொழிவு ஏற்பட்டது?</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/pacific-ocean">பசிபிக் பெருங்கடலின்</a> மேற்குப் பகுதி மற்றும் இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதிக்கு இடைப்பட்ட வெப்பமண்டல கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறான வெப்பம் நிலவியது.</p><p>இந்த வெப்பம் வளிமண்டலத்தில் 'ராஸ்பி அலைகள்' என்ற காற்று அலைகளை உருவாக்கியது.</p><p>இந்த அலைகள் அண்டார்டிகாவை நோக்கிப் பயணித்து, கிழக்கு அண்டார்டிகா பகுதியில் ஒரு உயர் அழுத்த மண்டலத்தை உருவாக்கின. </p><p>இந்த வளிமண்டல மாற்றங்களால், இந்தியப் பெருங்கடலில் இருந்து உருவான ஈரப்பதம் 'வளிமண்டல ஆறுகள்' மூலம் தெற்கு நோக்கித் தள்ளப்பட்டு, கிழக்கு அண்டார்டிகாவில் கடுமையான பனிப்பொழிவாகக் கொட்டியது.</p><h2>இது புவி வெப்பமயமாதலின் மீட்சியா?</h2><p>இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் திட்டவட்டமாகக் கூறுகின்றனர். இது அண்டார்டிகா பனி உருகுவதில் இருந்து மீண்டு வருவதற்கான அறிகுறி அல்ல. </p><p>இந்த பனி அதிகரிப்புக்கு மனிதர்களால் ஏற்படும் பருவநிலை மாற்றங்கள் வெறும் 9% மட்டுமே காரணம்.</p><p>மீதமுள்ள 91% இயற்கையான பருவநிலை மாறுபாடுகளாலேயே நிகழ்ந்துள்ளது.</p><p>இத்தகைய கடல் வெப்பமடைதல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் ஒரு தற்காலிக நிகழ்வாகும். </p><p>மேற்கு அண்டார்டிகாவில் கடல் வெப்பத்தால் பனிப்பாறைகள் உருகுவது மற்றும் பனி இழப்பு ஏற்படுவது போன்ற நீண்ட காலப் பாதிப்புகள் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.</p><h2>அண்டார்டிகா எச்சரிக்கை</h2><p>ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களுக்கு அப்பால் வெப்பமண்டலப் பெருங்கடலில் ஏற்படும் மாற்றங்கள் கூட அண்டார்டிகாவின் பனிப்பாறைகளைப் பெருமளவில் பாதிக்கலாம் என்பதை இந்த ஆய்வு நிரூபித்துள்ளது. </p><p>எனினும், உலகளாவிய கடல் மட்ட உயர்வைத் தடுப்பதற்கு இந்த தற்காலிக பனிப்பொழிவு போதுமானது அல்ல என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்</p>]]></content:encoded></item><item><title>இளம் இயக்குநர்களுடன் பணிபுரிவது ஏன்? கார்த்திக் சுப்பராஜின் கேள்விக்கு இளையராஜா நெகிழ்ச்சியான பதில்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/why-work-with-young-directors-ilaiyaraaja-emotional-answer-to-karthik-subbaraj</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/why-work-with-young-directors-ilaiyaraaja-emotional-answer-to-karthik-subbaraj#comments</comments><guid isPermaLink="false">62e948d7-939d-4824-91d3-6938a2afd962</guid><pubDate>Wed, 09 Sep 2026 12:14:04 +0000</pubDate><atom:updated>2026-09-09T12:14:04.786Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Ilaiyaraaja,Karthik Subbaraj,இசைஞானி இளையராஜா,கார்த்திக் சுப்பராஜ்,கீர்த்தி சுரேஷ்,டோரதி,Dorothy</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/7h1m9mzm/ilaya.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ilaiyaraaja-Karthik Subbaraj]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/7h1m9mzm/ilaya.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திரைத்துறையில் பல தசாப்தங்களாகக் கொடிகட்டிப் பறக்கும் இசைஞானி இளையராஜா, தற்போதைய இளம் இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றுவது குறித்த சுவாரசியமான பின்னணியையும், அதற்குப் பின்னால் உள்ள தனது பார்வையையும் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.</p><p>இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த் மற்றும் சனாத் நடிப்பத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/is-hindi-the-national-language-actor-shiva-rajkumar-apologizes">டோரதி</a>’. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் விளம்பர நிகழ்வு ஒன்றில், கே.பாலசந்தர் மற்றும் பாரதிராஜா போன்ற இயக்குநர்களுடன் பணியாற்றிய அனுபவம் கொண்ட நீங்கள், என்னைப் போன்ற இளம் இயக்குநர்களுடன் பணிபுரிய ஒப்புக்கொண்டது ஏன் என்று கார்த்திக் சுப்பராஜ் கேள்வி எழுப்பினார்.</p><p>அதற்குப் பதிலளித்த இளையராஜா, புதிய இயக்குநர்களை ஒரு "வெற்றுப் பாத்திரம்" என்று வர்ணித்தார். "மற்ற இயக்குநர்கள் தங்களின் பாத்திரம் முழுவதும் நிரம்பிய திரவத்துடன் வருகிறார்கள், அதில் நான் புதிதாக என்ன ஊற்ற முடியும்? பாத்திரம் காலியாக இருந்தால் மட்டுமே அதில் எதையாவது நிரப்ப முடியும்" என்று கூறினார்.</p><h2>இசை அறி<strong>வுக்கான ஆதா</strong>ரம்</h2><p>மேலும் தொடர்ந்த அவர், இளம் இயக்குநர்கள் தன்னிடம் வந்து கதைகளைக் கூறி, இசையை இன்னின்ன வழிகளில் அமைக்குமாறு எப்படிக் கேட்க முடியும் என்ற கேள்வியையும் நகைச்சுவையாகவும் தீர்க்கமாகவும் முன்வைத்தார். தற்கால இயக்குநர்கள் நல்ல இசை மற்றும் கெட்ட இசையைப் பிரித்து அறியும் அறிவைப் பெற்றிருப்பதே தனது இசையைக் கேட்டுத்தான் என்றும், தனது படைப்புகளையே அவர்கள் ஒப்பீட்டு அளவுகோலாகக் கொள்கிறார்கள் என்றும் அவர் விளக்கினார்.</p><p>கடவுள் தனக்குக் கொடுத்த இசை ஞானத்தால் தன்னால் படைக்கப்படும் இசையை மீறி வேறு எவராலும் யோசிக்க முடியாது என்று கூறிய இசைஞானி, "இதனை நான் அகந்தையில் சொல்வதாக நினைக்க வேண்டாம், ஏனெனில் அதைத்தான் நான் செய்து கொண்டும் இருக்கிறேன்" என மேடையில் நகைச்சுவையுடன் கூறியபோது அரங்கம் முழுவதும் பலத்த கரகோஷம் எழுந்தது.</p><p>கார்ப்பரேட் அல்லது முறையான இசைப் பயிற்சிகள் ஏதுமின்றி, முற்றிலும் தனது இயல்பான ஆற்றலால் இத்தகைய இசையை உருவாக்கி வருவதை சுட்டிக்காட்டிய அவர், உலகிலேயே தனது இசைக்கு ஈடாக வேறொன்றும் இல்லை என்பதில் தனக்கு இருக்கும் உறுதியை வெளிப்படுத்தினார்.</p><h2>திரைக்<strong>கு வரத் தயாரா</strong>கும் 'டோரதி'</h2><p>இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் இளையராஜா கூட்டணியில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. இத்திரைப்படம் வரும் 25 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பட்டினப்பாக்கத்தில் அமையவுள்ள புதிய தலைமைச் செயலகத்திற்கு மாநகராட்சி, மாவட்ட ஆட்சியர் அனுமதி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/city-corporation-and-district-collector-grant-approval-for-the-new-secretariat-to-be-built-in-pattinapakkam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/city-corporation-and-district-collector-grant-approval-for-the-new-secretariat-to-be-built-in-pattinapakkam#comments</comments><guid isPermaLink="false">967891c8-f083-4abe-bc86-344a110c7791</guid><pubDate>Wed, 09 Sep 2026 12:00:49 +0000</pubDate><atom:updated>2026-09-09T12:00:49.699Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>பட்டினப்பாக்கம்,New Secretariat,pattinapakkam,புதிய தலைமைச் செயலகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/roacbaep/New-Project-2026-09-09T173008.382.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பட்டினப்பாக்கத்தில் அமையவுள்ள புதிய தலைமைச் செயலகத்திற்கு மாநகராட்சி, மாவட்ட ஆட்சியர் அனுமதி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/roacbaep/New-Project-2026-09-09T173008.382.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையின் பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைப்பதற்கு சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், சென்னை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அனுமதி வழங்கியுள்ளனர். </p><h2>முதலமைச்சர் அறிவிப்பு</h2><p>நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, சுமார் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் அலுவலக வளாகம் கட்டப்படும் என்ற அறிவிப்பை 110 விதியின்கீழ் முதலமைச்சர் விஜய் வெளியிட்டார். </p><h2>நிலப்பரப்பு மற்றும் அமைவிடம் </h2><p>தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான 21.37 ஏக்கர் நிலம், மாநகராட்சிக்கு சொந்தமான 0.93 ஏக்கர், வருவாய்த்துறை ஆவணங்கள் இல்லாத சுமார் 1.20 ஏக்கர் மொத்தம் 26.36 ஏக்கர் பரப்பளவில் இந்த புதிய நிர்வாக மையம் அமையவுள்ளது.</p><h2>எதிர்ப்பு </h2><p>பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்க அப்பகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மீனவர்கள், அப்பகுதி மக்கள் மட்டுமின்றி பாமக தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/secretariat-should-not-be-established-in-congested-pattinapakkam-anbumani-insists">அன்புமணி</a> உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.</p><p>காரணம் ஏற்கனவே இட நெரிசலை சந்தித்து வரும் பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால், இன்னும் கூட்ட நெரிசலை சந்திக்க நேரிடும் என வாதிடுகின்றனர்.</p><p>மீனவ மக்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என வாதிடுகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>சரிவை சந்தித்த பங்குச்சந்தை: ஐ.டி., நிதிச்சேவை நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சி..!</title><link>https://www.maalaimalar.com/news/national/sensex-tumbles-813-points-to-3-month-low-amid-escalating-tensions-in-west-asia-oil-price-surge</link><comments>https://www.maalaimalar.com/news/national/sensex-tumbles-813-points-to-3-month-low-amid-escalating-tensions-in-west-asia-oil-price-surge#comments</comments><guid isPermaLink="false">d0cbe68f-de38-4704-8f0a-2c6772e46fb6</guid><pubDate>Wed, 09 Sep 2026 12:00:46 +0000</pubDate><atom:updated>2026-09-09T12:00:46.106Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>share market,NIFTY,BSE Sensex</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/91cuz68r/Sharemarket0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பங்குச் சந்தை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/91cuz68r/Sharemarket0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் சென்செக்ஸ் 813 புள்ளிகள் சரிந்து கடந்த 3 மாதங்களில் குறைந்த புள்ளிகளை எட்டின.</p><p>மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 100 அமெரிக்க டாலருக்கும் அதிகமாக உயர்ந்தது. இதன் தாக்கத்தாலும், தகவல் தொழில்நுட்பம் (IT), நுகர்வோர் பொருட்கள் (FMCG), நிதிச் சேவைகள் மற்றும் எண்ணெய் &amp; எரிவாயு துறைப் பங்குகள் மீதான விற்பனை அழுத்தத்தாலும், முக்கிய பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் தொடர்ந்து மூன்றாவது நாளாகச் சரிந்து, 813 புள்ளிகள் குறைந்து மூன்று மாதக் குறைந்தபட்ச நிலையை அடைந்தது. நிஃப்டி குறியீடு 23,450-க்குக் கீழே சென்று நிறைவடைந்தது.</p><p>30 பங்குகளைக் கொண்ட பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 813.35 புள்ளிகள் அல்லது 1.08 சதவீதம் சரிந்து, இன்றைய குறைந்தபட்ச அளவான 74,764.23-ல் முடிவடைந்தது. இது கடந்த மூன்று மாதங்களில் மிகக் குறைந்த நிறைவு நிலையாகும். கடந்த ஜூன் மாதம் 11-ந்தேதி 73832 புள்ளியாக இருந்தது.</p><h2>நிஃப்டி</h2><p>50 பங்குகளைக் கொண்ட என்எஸ்இ (NSE) நிஃப்டி 203.60 புள்ளிகள் அல்லது 0.86 சதவீதம் சரிந்து, மூன்று மாதக் குறைந்தபட்ச அளவான 23,431.50-ல் முடிவடைந்தது. இக்குறியீடு இதற்கு முன் ஜூன் 11 அன்று இதே அளவை ஒட்டிய நிலையில் முடிவடைந்திருந்தது.</p><p>சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில், ஹெச்.சி.எல். டெக் (HCL Tech) அதிகபட்சமாக 4.55 சதவீதம் சரிந்தது. இன்ஃபோசிஸ் (Infosys) 4.43 சதவீதமும், டெக் மஹிந்திரா (Tech Mahindra) 3.87 சதவீதமும், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) 2.26 சதவீதமும் சரிந்தன. HDFC வங்கி மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகியவையும் சரிவைச் சந்தித்த முக்கிய நிறுவனங்களாகும்.</p><h2>அதானி போர்ட்ஸ்</h2><p>அதானி போர்ட்ஸ் (Adani Ports) 3.67 சதவீதம் உயர்ந்து அதிக லாபம் ஈட்டிய நிறுவனமாகத் திகழ்ந்தது. டாடா ஸ்டீல், ட்ரெண்ட் (Trent) மற்றும் என்டிபிசி (NTPC) ஆகியவையும் லாபம் ஈட்டிய நிறுவனங்கள் ஆகும்.</p><p>உலகளாவிய கச்சா எண்ணெய் விலை அளவுகோலான ப்ரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை 2.67 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 100.5 அமெரிக்க டாலராக அதிகரித்தது.</p><p>சந்தை தரவுகளின்படி, வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FIIs) செவ்வாயன்று ரூ. 123.19 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றனர்.</p><p>நேற்று சென்செக்ஸ் 555.23 புள்ளிகள் (0.73 சதவீதம்) சரிந்து 75,577.58 புள்ளிகளில் நிலைபெற்றது. நிஃப்டி 144.05 புள்ளிகள் (0.61 சதவீதம்) சரிந்து 23,635.10 புள்ளிகளில் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>சொல் ஒன்று, செயல் வேறு..!- வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை வஞ்சிக்கும் தவெக கூட்டணி அரசு- இபிஎஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-alliance-betrays-people-on-promises-eps</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-alliance-betrays-people-on-promises-eps#comments</comments><guid isPermaLink="false">4ec11099-93d4-4e82-831a-d7e6aac6924e</guid><pubDate>Wed, 09 Sep 2026 11:43:57 +0000</pubDate><atom:updated>2026-09-09T11:43:57.672Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,எடப்பாடி பழனிசாமி,Edappadi pazhanisamy,tvk,தவெக அரசு,TVK Govt</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/tk6xx2qq/EPS.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ADMK Edappadi pazhanisamy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/tk6xx2qq/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு முழுவதும் கொள்முதல் செய்வதில் அலட்சியம் காட்டும் தவெக கூட்டணி அரசுக்கு கண்டனம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>ஏய்த்துப் பிழைக்கும் தொழிலை கடந்த நான்கு மாதங்களாக கனகச்சிதமாக செய்து வரும் திஜோசப் விஜய் தலைமையிலான த.வெ.க. கூட்டணி அரசு சொல் ஒன்று, செயல் வேறு என்ற ரீதியில் அனைத்துத் தாப்பு மக்களையும் வஞ்சித்து வருகிறது.</p><p>உரிய நேரத்தில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-release-order-to-karnataka-for-tamil-nadu" rel="nofollow">காவிரி</a>யில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடாததால், குறுவை சாகுபடி முழுமையாக செய்ய முடியாமல் விவசாயிகளின் இன்னலைப் போக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு.</p><p>விவசாயிகளின் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வோம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, விவசாயிகளை ஏமாற்றிய அரசு.</p><p>கடந்த ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் சீர்குலைந்துபோன சட்டம்-ஒழுங்கினை சீர்செய்வோம் என்று மார்தட்டிப் பேசிவிட்டு, தறிகெட்டு ஓடும் குதிரையைப் போல், குற்றச் சம்பவங்கள் மேலும் மேலும் பெருகி வரும் நிலையில் செய்வதறியாது திகைத்து நிற்கும் இந்த பொய்க்கால் அரசு, ஆட்சி இயந்திரத்தை முறையாக சுழற்றத் தெரியாமல், அனுபவமின்மை காரணமாக கை பிசைந்து நிற்கும் இந்த அரசுக்கு, சொல் புத்தியும் இல்லை; சுய புத்தியும் இல்லை என்பதை மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள்.</p><p>காவிரி டெல்டா மாவட்டங்கள் உட்பட பல பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை உரிய நேரத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், கொள்முதல் செய்யாததால் அவைகள் முளைவிட்டு பாழாகி, பாடுபட்டு உழைத்த விவசாயிகளின் உழைப்பு வீணாகிறது என்று கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் விரிவாக நான் எடுத்து வைத்தேன்.</p><p>வெட்ட வெளியில் மழை வெள்ளத்தால் நெல்மணிகள் முளைத்து வீணாய் போனதையும், அதனைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இந்த அரசை வலியுறுத்தினேன்.</p><p>அந்த நேரத்தில், குறைகளைச் சொல்லும் சட்டமன்ற உறுப்பினர்களை சமாதானப்படுத்தும் நோக்கில் த.வெ.க. அமைச்சர்கள் பதில்களை சொன்னார்களே தவிர, வீணாய் போகும் நெல்மணிகளை பாதுகாப்பதற்கு முறையான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>கடந்த சில நாட்களாக திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பெய்த திடீர் மழையினால், சுமார் 2000 ஏக்கர் நிலத்தில் விளைவித்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.</p><p>டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர்-மானம்பாடி, நல்லிச்சேரி மற்றும் பல பகுதிகள், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் மற்றும் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில், கடந்த சில நாட்களாக விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் முழுமையாக கொள்முதல் செய்யப்படாமல் சாலை ஓரங்களில் குவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையில் நனைந்து வீணாகி, விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.</p><p>மயிலாடுதுறை மாவட்டம் நலத்துக்குடி, வழுவூர், கோலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20,000 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம்.</p><p>கடலூர் மாவட்டம்: விருதாச்சலம்</p><p>ராஜேந்திரபட்டினம் - 10,000 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம்.</p><p>காஞ்சிபுரம் மாவட்டம்: சாலவாக்கம் அருகே மேல்பெருமநல்லூர் சுமார் 20,000 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம்.</p><p>செங்கல்பட்டு மாவட்டம்: அச்சிறுபாக்கம் தொழுப்பேடு </p><p>திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையம் சுமார் 50,000 மெட்ரிக் டன் நெல் மழையில் நனைந்து சேதம்.</p><p>வானத்தை வில்லாய் வளைப்போம், விண்மீன்களை பூமிக்கு கொண்டு வந்து மக்களுக்கு வெளிச்சம் தருவோம் என்பதுபோல், முடியாத அனைத்தையும் செய்து காட்டுவோம் என்று வாய்ப்பந்தல் போடுவதை இந்த அரசு இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். </p><p>ஏழை, எளிய மக்களின் வயிற்றுப் பசியை போக்குவது நியாய விலைக் கடைகளில் விலையில்லாமல் வழங்கப்படும் அரிசிதான். அந்த அரிசியின் ஆதாரமாக திகழக்கூடிய நெல்மணிகள் வீணாய் போவதை வேடிக்கை பார்க்கும் இந்த அரசின் போக்கை ஏற்க முடியாது.</p><p>மக்களின் வயிற்றுப் பசியோடு விளையாடும் போக்கை உடனடியாக கைவிட்டு, விவசாயிகள் விளைவித்த நெல்மணிகளை முழுமையாக கொள்முதல் செய்து, விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டுமென்று விளையாட்டு மாடல் த.வெ.க. அரசை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>நெருக்கடியான பட்டினபாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கக் கூடாது - அன்புமணி வலியுறுத்தல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/secretariat-should-not-be-established-in-congested-pattinapakkam-anbumani-insists</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/secretariat-should-not-be-established-in-congested-pattinapakkam-anbumani-insists#comments</comments><guid isPermaLink="false">a7c58c8a-3587-407c-a85d-b5a9bbf625d9</guid><pubDate>Wed, 09 Sep 2026 11:40:56 +0000</pubDate><atom:updated>2026-09-09T11:40:56.514Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தலைமைச் செயலகம்,Secretariat,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/7d6b7m9q/New-Project-2026-09-09T171013.295.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நெருக்கடியான பட்டினபாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கக் கூடாது - அன்புமணி வலியுறுத்தல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/7d6b7m9q/New-Project-2026-09-09T171013.295.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் கட்டப்படும் என முதலமைச்சர் விஜய் சமீபத்தில் அறிவித்தார்.</p><p>அறிவிக்கப்பட்டுள்ள இந்த தலைமைச் செயலகம் சென்னை, பட்டினப்பாக்கத்தில் அமையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/fishermen-oppose-construction-of-secretariat-at-pattinapakkam">பட்டினப்பாக்கத்தில்</a> அமைந்தால், தற்போது இருக்கும் இட நெருக்கடியைவிட அதிகமான சிக்கலை சந்திக்க நேரிடும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார்.</p><p>அப்படி பட்டினப்பாக்கம்தான் இடத்தேர்வு என்றால், அந்த முடிவை அரசு கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,</p><p>“தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவைக்கு 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய வளாகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்த நிலையில், பட்டினப்பாக்கம் பகுதியில் அந்த வளாகம் அமைக்கப்படவிருப்பதாக ஊடகங்களில் அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் வெளியாகி உள்ளன. </p><h2>தொலைநோக்குப் பார்வையற்றது</h2><p>இந்த செய்திகள் உண்மையாக இருந்தால் அது தொலைநோக்குப் பார்வையற்றதாகவே இருக்கும்.</p><p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 3ஆம் தேதி அவை விதி எண் 110இன் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் விஜய், தலைமைச் செயலகம், சட்டப்பேரவைச் செயலகம் மற்றும் அனைத்துத் துறை அலுவலகங்கள் அடங்கிய நிர்வாக வளாகம் ரூ.1,200 கோடி செலவில், 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படும் என்று அறிவித்தார். </p><p>அதைத் தொடர்ந்து கடந்த சில நாள்களாகவே சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலக வளாகம் அமைக்கப்படும் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. </p><p>அந்தப் பகுதியில் வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான 21.37 ஏக்கர் நிலம், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 0.93 ஏக்கர் நிலம், வருவாய்த் துறையில் ஆவணங்கள் இல்லாத 1.20 ஏக்கர் நிலம் உள்பட மொத்தம் 26.36 ஏக்கர் பரப்பளவில் 15 மாடி கட்டிடமாக புதிய வளாகம் அமைக்கப்படும்; </p><p>அதில் அனைத்து வசதிகளும் இடம் பெறும் என்று ஊடகங்களில் வெளியான செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>25 வருட தேடல்</h2><p>தமிழ்நாடு அரசுக்கு புதிய தலைமைச் செயலகம் தேவை என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து கிடையாது.  கடந்த 25 ஆண்டுகளாகவே புதியத் தலைமைச் செயலகத்திற்கான தேடல் நீடித்துக் கொண்டே இருக்கிறது.  </p><p>ஆனாலும், இடம் அடையாளம் காண்பது முதல் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் 80%க்கும் கூடுதலான பணிகள் முடிந்த நிலை வரை பல்வேறு கட்டங்களில் அம்முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், இப்போது புதிய அரசால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது. </p><p>எனினும், புதிய தலைமைச் செயலக வளாகம் பட்டினப்பாக்கத்தில் தான் அமையும் என்றால் அதனால் ஏற்படும் சாதகங்களை விட பாதகங்களே அதிகம்.</p><p>பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதில் உள்ள மிகப்பெரிய சிக்கல் போக்குவரத்து நெரிசல் ஆகும். சாந்தோம் சாலையிலும், பசுமைவழிச் சாலையிலும் ஏற்கனவே கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படும் நிலையில், அதை சமாளிப்பதற்காகத் தான் லூப் சாலை அமைக்கப்பட்டுள்ளது. </p><h2>நெரிசல்</h2><p>அந்தப் பகுதியில் தான் புகழ்பெற்ற சாந்தோம் தேவாலயம், புகழ்பெற்ற பள்ளிக் கூடங்கள், பத்திரப்பதிவுத்துறை தலைவர் அலுவலகம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்கள் உள்ளன. இவற்றுடன் புதிய தலைமைச் செயலகமும் அமைக்கப்பட்டால் அப்பகுதியில் சமாளிக்க முடியாத அளவுக்கு நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ளது.</p><p>அடுத்ததாக, புதிய தலைமைச் செயலகம், சட்டப்பேரவை வளாகம், அனைத்துத் துறை அலுவலங்களைக் கொண்ட வளாகம் அமைக்க இப்போது அடையாளம் காணப்பட்டிருப்பதாகக் கூறப்படும் 26.36 ஏக்கர் நிலம் போதுமானதல்ல.</p><p>மொத்தம் 20 லட்சம் சதுர அடி பரப்பளவிலான வளாகம் 15 மாடிக் கட்டிடமாக கட்டப்படும்  என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், எப்.எஸ்.ஐ விதிகளின்படி அதற்கேற்ற வகையில் காலி இடமும், பசுமைப் பரப்பும் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். </p><p>இவை தவிர ஓர் தலைமைச் செயலக வளாகம் செயல்படும் இடத்தில், தீயவிப்பு நிலையம், அவசர மருத்துவ வசதிகள், உணவகங்கள், வாகன நிறுத்துமிடங்கள், பொதுப்போக்குவரத்து வசதிகள் உள்ளிட்டவை ஏற்படுத்தித் தரப்பட வேண்டியது கட்டாயமாகும்.</p><h2>அடுத்த நூற்றாண்டு தேவை</h2><p>இத்தகைக் கட்டமைப்பு வசதிகளையும் இப்போது அடையாளம் காணப்பட்டுள்ள இடத்தில் ஏற்படுத்தினால், இப்போதுள்ள தலைமைச் செயலக வளாகத்தில் ஏற்பட்டதைப் போன்ற இட நெருக்கடி மிக விரைவில் புதிய வளாகத்திலும் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.</p><p>புதிய தலைமைச் செயலகம் அமைப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் விஜய்,  புதிய வளாகம் அடுத்த நூறாண்டுகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் அமையும் என்று தெரிவித்தார். </p><h2>பொருத்தமான இடம் அல்ல</h2><p>முதலமைச்சரின் இந்த கனவு நிறைவேற வேண்டும் என்றால், அதற்கு பட்டினப்பாக்கம் பொருத்தமான இடம் அல்ல என்பது தான் எனது கருத்து. </p><p>முதலமைச்சர் விஜய் தொலைநோக்குப் பார்வையுடன் இதற்காக சென்னைக்கு வெளியில் குறைந்தது 500 முதல் 1000 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த நிர்வாக நகரத்தை  அமைப்பதற்கான முன்னேற்பாடுகளைத் தொடங்க வேண்டும் என்பது தான் பாமகவின் கோரிக்கை ஆகும்.</p><p>ஓர் அரசின் கட்டுப்பாட்டு அறையாக திகழ்வது தலைமைச் செயலகம் தான். அத்தகைய தலைமைச் செயலகத்தில் இடம் பற்றாக்குறையாக உள்ளது; அதனால் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை உலகம்  முழுவதும் ஜனநாயகம் தழைக்கத் தொடங்கிய கடந்த ஒரு நூற்றாண்டாக ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது.</p><h2>ஒருங்கிணைந்த நிர்வாக நகரம்</h2><p>உலகின் பல நாடுகளில் அதற்கானத் தீர்வு ஒருங்கிணைந்த நிர்வாக நகரம் அமைப்பதாகவே இருந்திருக்கிறது. இந்த விஷயத்தில் ஒட்டுமொத்த உலகத்திற்கும் இந்தியா தான் வழிகாட்டியாக இருந்துள்ளது.</p><p>ஆங்கிலேயர் ஆட்சியில், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரசின் தலைமைச் செயலகம் கொல்கத்தாவில்  இருந்து  டெல்லிக்கு மாற்றப்பட்டது. </p><p>அப்போது மொகலாயர் ஆட்சியின் தலைநகரமாக இருந்த டெல்லியில் போதிய இட வசதிகள் இல்லாததால், புதுடெல்லி என்ற நிர்வாக நகரத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டு அதற்கு 1911ஆம் ஆண்டு திசம்பர் 12ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. </p><p>1932ஆம் ஆண்டில் திறப்பு விழா செய்யப்பட்ட அந்த நகரத்தில் தான் ஆங்கிலேயர் காலம் தொடங்கி இன்று வரை அரசின் தலைமைச் செயலகம், சுதந்திர இந்தியாவின்   நாடாளுமன்றம், குடியரசுத் தலைவர் மாளிகை, உச்ச நீதிமன்றம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.</p><p>மலேஷியாவில் இதே போன்ற சிக்கல் ஏற்பட்ட போது, கோலாம்பூரில் இருந்து 34 கி.மீ தொலைவில் உள்ள புத்ரஜெயாவில் புதிய தலைமைச் செயலகம் உருவாக்கப்பட்டு 1999ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. </p><p>தென் அமெரிக்காவின் பிரேசில் இன்னும் ஒரு படி மேலே சென்று தலைநகரத்தையே ரியோடி ஜெனிரோ நகரத்திலிருந்து 928கி.மீ தொலைவில் பிரேசிலியா என்ற புதிய நிர்வாக நகரத்தை உருவாக்கி அங்கு மாற்றியது.</p><p>2001ஆம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பேற்ற ஜெயலலிதா கிழக்குக் கடற்கரை சாலையில் ஒருங்கிணைந்த நிர்வாக நகரத்தை அமைக்க வேண்டும் என்று திட்டமிட்டார். இந்த முன்னுதாரணங்களை பின்பற்றி தமிழ்நாட்டுக்கான தலைமைச் செயலகம், சட்டப்பேரவைச் செயலகம் ஆகியவற்றையும்  சென்னைக்கு வெளியில் ஒருங்கிணைந்த நிர்வாக நகரமாக உருவாக்க வேண்டும். </p><p>அதில் தலைமைச் செயலகம், சட்டப்பேரவைச் செயலகம், அனைத்துத் துறை தலைமை அலுவலகங்கள், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கான மாளிகைகள், அரசு ஊழியர்களுக்கான குடியிருப்புகள், மெட்ரோ ரயில் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்து வசதிகள், தேசிய, உலகத் தலைவர்கள் வருகை தருவதற்கு வசதியாக ஹெலிகாப்டர் இறங்கு தளங்கள், </p><p>தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவைச் செயலகத்தில் பணியாற்றும் செயலாளர்கள் நிலையிலான இ.ஆ.ப அதிகாரிகள் தொடங்கி கடைநிலைப் பணியாளர்கள் வரை அனைத்துப் பணியாளர்களின் பிள்ளைகள் படிப்பதற்குத் தேவையான பள்ளிகள், கல்லூரிகள், உள் விளையாட்டு அரங்குகள், வணிக வளாகங்கள் என ஒரு நகரத்திற்கு என்னென்ன அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் தேவையோ, அவை அனைத்தையும்  கட்டமைத்துக் கொடுக்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” </p><p>எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு உள்பட 5 மாநில தேர்தலின்போது பாஜக, காங்கிரஸ் கட்சிகள் பெற்ற நிதி எவ்வளவு?</title><link>https://www.maalaimalar.com/news/national/bjp-received-rs-1473-crore-during-last-5-state-polls-over-7-times-more-than-congress</link><comments>https://www.maalaimalar.com/news/national/bjp-received-rs-1473-crore-during-last-5-state-polls-over-7-times-more-than-congress#comments</comments><guid isPermaLink="false">7b85257b-2a2a-4d70-b822-98ace2b5a168</guid><pubDate>Wed, 09 Sep 2026 11:28:19 +0000</pubDate><atom:updated>2026-09-09T11:28:19.840Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,Congress,காங்கிரஸ்,Election Commission of India</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/38xezqrp/BJPCogress.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/38xezqrp/BJPCogress.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேசிய மற்றும் மாநில கட்சிகள் தேர்தலின்போது, கட்சி நிதி (நன்கொடை) பெறுவது உண்டு. இந்த பணம் கட்சிகளுக்கு அக்கவுண்ட் மன்றும் நக்கொடை பத்திரம் மூலமாகவும் வழங்கப்படுகிறது. கடைசியாக தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.</p><h2>பாஜக 1473 கோடி ரூபாய்</h2><p>அப்போது பாஜக தேர்தல் நிதியாக 1473 கோடி ரூபாய் பெற்றுள்ளது. இந்த தொகை அனைத்தும் மத்திய தலைமையகத்திற்கு வந்துள்ளது. அதேவேளையில் காங்கிரஸ் கட்சிக்கு 207 கோடி ரூபாய் மட்டுமே தேர்தல் நிதியாக வந்துள்ளது. தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ள தேர்தல் வரவு செலவு கணக்கு அறிக்கையின் மூலம் இந்த தரவு கிடைக்கப்பெற்றுள்ளது.</p><h2>காங்கிரஸ் கட்சிக்கு 207.17 கோடி ரூபாய்</h2><p>காங்கிரஸ் கட்சிக்கு 207.17 கோடி ரூபாய் கிடைக்கப் பெற்ற நிலையில், 248.55 கோடி ரூபாய் செலவழித்துள்ளது. மார்ச் 15-ந்தேதியில் இருந்து மே 15-ந்தேதி வரையிலான தேர்தல் காலத்தின் வரவு செலவை இது காட்டுகின்றன.</p><p>கேரளம் மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களில் கட்சிகள் செலவழித்துள்ள தொகை எவ்வளவு என்று பாஜக இன்னும்  வெளியிடவில்லை.</p><h2>பாஜக-வின் கையிருப்பு அதிகரிப்பு</h2><p>பா.ஜ.க. செலவு செய்தாலும், மார்ச் 15-ந்தேதி 6,722.6 கோடி ரூபாயாக இருந்த கையிருப்பு, தேர்தலுக்கு பின் மார்ச் 6-ந்தேதி 7627.2 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.</p><p>காங்கிரஸ் கட்சியின் கணக்கில் 169.06 (கையிருப்பு 22.9 கோடி ரூபாய், வங்கி கணக்கில் 146.1 கோடி ரூபாய்) இருந்தது. தேர்தல் முடிவடைந்த பிறகு அந்த தொகை 103.2 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.</p><h2>தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம்</h2><p>தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம் ஆகிய மாநில தேர்தலுக்காக பா.ஜ.க. 159.7 கோடி ரூபாய் செலவழித்துள்ளது. பொதுவான கட்சி பிரச்சாரத்திற்கு மட்டும் 130.4 கோடி ரூபாய் செலவழித்துள்ளது. மீதமுள்ளவை வேட்பாளர்கள் மற்றும் அது தொடர்பான செலவினங்களாகும்.</p><p>அசாம் மாநிலத்திற்கு மட்டும் 96.27 கோடி ரூபாய் செலவழித்துள்ளது. பொதுவான கட்சிப் பிரச்சாரத்திற்கு மட்டும் 76.73 கோடி ரூபாய் செலவழித்துள்ளது. 19.54 கோடி ரூபாய் வேட்பாளர்கள் மற்றும் அது தொடர்பான செலவினங்களாகும்.</p><p>விளம்பரைம் மற்றும் நட்சத்திர வேட்பாளர்களின் டிராவல் ஆகியவற்றிற்கு அதிகப்பட்டியாக செலவினம் செய்யப்பட்டுள்ளது.</p><h2>தமிழ்நாடு</h2><p>தமிழ்நாட்டில் பாஜக 51.56 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. இதில் 44.51 கோடி ரூபாய் பொது பிரசாரம், 7.05 கோடி ரூபாய் வேட்பாளர்கள் செலவினம் ஆகும்.</p><p>புதுச்சேரியில் பாஜக 11.90 கோடி ரூபாய் செலவழித்துள்ளது. இதில் 9.19 கோடி ரூபாய் பொது பிரசாரம், 2.71 கோடி ரூபாய் வேட்பாளர்கள் செலவினம் ஆகும்.</p><p>ஐந்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி பொது பிரசாரம் என்ற வகையில் 143 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது, வேட்பாளர்கள் செலவினம் என 105.55 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.</p><p>காங்கிரஸ் கட்சியின் மத்திய தலைமையகம் 40.52 கோடி ரூபாய் செலவழித்துள்ளது. மாநில காங்கிரஸ் சார்பில் 102.49 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆஸ்திரேலியா `ஏ&apos; அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்தியா `ஏ&apos; அணியில் ஹர்திக் பாண்ட்யா</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/hardik-pandya-named-in-india-a-squad-for-aus-a-one-dayers</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/hardik-pandya-named-in-india-a-squad-for-aus-a-one-dayers#comments</comments><guid isPermaLink="false">91d158f4-3f7e-4a7e-8109-04895a061955</guid><pubDate>Wed, 09 Sep 2026 10:48:13 +0000</pubDate><atom:updated>2026-09-09T10:48:13.109Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Hardik Pandya,ஹர்திக் பாண்ட்யா,BCCI,பிசிசிஐ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/ub5a48fl/HardikPandya002.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஹர்திக் பாண்ட்யா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/ub5a48fl/HardikPandya002.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் <a href="https://www.maalaimalar.com/sports/cricket/hardik-pandya-told-trade-might-not-happen-rohit-sharma-to-pick-next-mi-captain">ஹர்திக் பாண்ட்யா.</a> இவர் கடைசியாக ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். அதன்பின் காயம் காரணமாக இந்திய அணியில் இடம் பெறவில்லை.</p><p>இந்த நிலையில் ஆஸ்திரேலியா `ஏ' அணி ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட இந்தியா வருகிறது. பாண்டிச்சேரியில் போட்டிகள் நடைபெற இருக்கிறது.</p><h2>ஹர்திக் பாண்ட்யா</h2><p>இதற்கான இந்தியா `ஏ' அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டிக்கான இந்தியா `ஏ' அணியில் ஹர்திக் பாண்ட்யா இடம் பிடித்துள்ளார். அவர் உடற்தகுதிக்கு உட்பட்டு அணியில் சேர்க்கப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை தொடர் தொடங்குவதற்கு முன் உடற்தகுதியை நிரூபிக்கவில்லை என்றால், களம் இறங்குவது சந்தேகம்தான்.</p><p>டெஸ்ட் போட்டி செப்டம்பர் 22-ந்தேதியும், செப்டம்பர் 29-ந்தேதியும் தொடங்குகின்றன. ஒருநாள் போட்டி அக்டோபர் 6, 9 மற்றும் 11-ந்தேதிகளிலா் நடக்கிறது.</p><p>ஒருநாள் தொடருக்கான இந்தியா `ஏ' அணிக்கு தேவ்தத் படிக்கல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சாய் சுதர்சன் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.</p><h2>டெஸ்ட் தொடருக்கான இந்திய `ஏ' அணி:-</h2><p>தேவ்தத் படிக்கல் (கேப்டன்), சாய் சுதர்சன் (துணைக்கேப்டன்), அமன் மொகாடே, ஆயுஷ் பாண்டே, யாஷ் ரதோட், ஷெய்க் ரஷீத், குமார் குஷாக்ரா (வி.கீ.), ஷாம்ஷ் முலானி, தனுஷ் கோட்டியான், துஷார் தேஷ்பாண்டே, அன்ஷுலா் கம்போஜ், பிரபுல் ஹிங்கே, என். ஜெகதீசன் (வி.கீ.), நச்சிகேட் புதே, வி.வைசாக்.</p><h2>ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:-</h2><p>ருதுராஜ் கெய்க்வாட் (கே), தேவ்தத் படிக்கல் (துணைக் கேப்டன்), பிரியான்ஷ் ஆர்யா, சாய் சுதர்சன், ரஜத் படிதார், குமார் குஷாக்ரா (வி.கீ.), நிஷாத் சிந்து, விப்ராஜ் நிகம், அர்ஷின் குல்கர்னி, அர்ஷத் கான், நேமன் திர், ஹர்திக் பாண்ட்யா, பிரப்சிம்ரன் சிங் (வி.கீ.), குர்ஜப்நீத் சிங், யாஷ் தாகூர்.</p><p>இதற்கிடையே செப்டம்பர் 27-ந்தேதி முதல் அக்டோபர் 3-ந்தேதி வரை இந்திய சீனியர் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>தனியார் பல்கலை. தொடங்க 100 இல்லை, 12 ஏக்கர் போதும் - யாருக்காக சட்டத் திருத்தம்? - தவெக அரசுக்கு திமுக கேள்வி! </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/why-was-the-land-requirement-for-setting-up-a-private-university-in-chennai-reduced-from-100-acres-to-12-acres-covi-chezhian-of-tvk-questions-the-government</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/why-was-the-land-requirement-for-setting-up-a-private-university-in-chennai-reduced-from-100-acres-to-12-acres-covi-chezhian-of-tvk-questions-the-government#comments</comments><guid isPermaLink="false">38e28103-639b-48e1-b9f2-e680ae04c5c6</guid><pubDate>Wed, 09 Sep 2026 10:47:50 +0000</pubDate><atom:updated>2026-09-09T10:47:50.553Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவி செழியன்,தவெக அரசு,tvk government,Govi Chezhian,Private Universities Act Amendment Bill,தனியார் பல்கலைக்கழகச் சட்டத் திருத்த மசோதா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/zszijdvv/New-Project-2026-09-09T161030.537.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மாதிரிப் படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னையில் தனியார் பல்கலை. தொடங்க 100 இல்லை, 12 ஏக்கர் போதும் - தவெக அரசின் சட்டத் திருத்தத்திற்கு கோவி. செழியன் கண்டனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/zszijdvv/New-Project-2026-09-09T161030.537.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டமன்றக் கூட்டத் தொடரின் கடைசி நாளில் தனியார் பல்கலைக்கழகச் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றியது ஏன்? என திமுக முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கேள்வி எழுப்பியுள்ளார். </p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;</p><p>ஆட்டுக்குத் தாடியை அளந்து வைத்திருப்பது போல் - <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/the-chief-ministers-body-language-goes-against-human-dignity-nirmal-kumar-must-withdraw-his-remarks-thirumavalavan">முதலமைச்சர் விஜய்</a>க்கு “எம்.எல்.ஏ.”க்களை மக்கள் கொடுத்திருக்கும் இந்த நேரத்தில்கூட, த.வெ.க. அரசின் “அடாவடி” மட்டுமல்ல, </p><p>ஆணவ நடவடிக்கைகள் எண்ணற்ற தமிழ்நாட்டு இளைஞர்களின் உயர்கல்விக் கனவைச் சிதைத்துவிடும் என்பதால், நேற்று நிறைவேற்றப்பட்டிருக்கும் “தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகச் சட்டத் திருத்த மசோதா - 2026”க்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2>சட்டத்திருத்த மசோதா</h2><p>நேற்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டுள்ள “தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகச் சட்ட மசோதாவில்”, “தனியார் பல்கலைக்கழகம்” அமைக்க சென்னை மாநகராட்சி எல்லைக்குள் 100 ஏக்கர் நிலம் வைத்திருக்க வேண்டும்; </p><p>சென்னை தவிர மற்ற பகுதிகளில் தனியார் பல்கலைக்கழகம் அமைக்க 50 ஏக்கர் நிலம் வேண்டும் எனவும், “Permanent Endowment Fund” ஆக 50 கோடி ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும் எனவும் இருந்த தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகச் சட்டம், 2019-ஐ அவசர அவசரமாக த.வெ.க. அரசு கூட்டத் தொடரின் கடைசி நாளில் திருத்தி நிறைவேற்றியிருக்கிறது.</p><h2>யாருக்காக 12 ஏக்கராக குறைப்பு?</h2><p>உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் 24.8.2026 அன்றே நடைபெற்று முடிந்துவிட்டது. 15 நாட்கள் கழித்து இப்படியொரு சட்டத் திருத்தத்தைக் கூட்டத் தொடரின் கடைசி நாளில் இவ்வளவு அவசரமாகக் கொண்டு வந்திருப்பது ஏன்?</p><p>இந்தத் திருத்தம் மூலம் சென்னை மாநகர எல்லைக்குள் தனியார் பல்கலைக்கழகம் அமைக்க இருந்த 100 ஏக்கரை 12 ஏக்கர் என அதிரடியாகக் குறைத்திருப்பது யாருக்காக?</p><p>இதுதவிர, மற்ற முனிசிபல் லிமிட் மற்றும் கிராமப்புறங்களில் தனியார் பல்கலைக்கழகம் அமைக்க 50 ஏக்கர் நிலம் தேவை என்றிருந்ததை, முனிசிபல் லிமிட்டிற்குள் 18 ஏக்கராகவும், கிராமப்புறங்களில் 25 ஏக்கராகவும் குறைத்திருப்பதன் உள்நோக்கம் என்ன?</p><p>இப்படி தனியார் பல்கலைக்கழகம் அமைக்கச் செலுத்த வேண்டிய Permanent Endowment Fund 50 கோடி ரூபாயை வெறும் 25 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.</p><h2>4 மாதங்களில்...</h2><p>அது மட்டுமின்றி - இப்படி குறைக்கப்பட்ட 25 கோடி ரூபாய் சலுகை, ஏற்கனவே தனியார் பல்கலைக்கழகமாக அனுமதி அளிக்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் நீட்டிக்கப்படும் என “பின்தேதியிட்ட சலுகை” ஏன் வழங்கப்படுகிறது?</p><p>தனியார் பல்கலைக்கழகம் ஒருவேளை திவாலானால் - அங்கு பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பினை உறுதி செய்யத்தான் இந்த Permanent Endowment Fund உருவாக்கப்பட்டுள்ளது. </p><p>அதைச் சரிபாதியாகக் குறைத்து - ஏன் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பிற்குத் த.வெ.க. அரசு ஆட்சிக்கு வந்த 4 மாதங்களுக்குள் உலை வைக்க வேண்டும்?</p><h2>திட்டமிட்டுச் சட்டத் திருத்தம்</h2><p>“கஜானா காலி” எனக் கூறி மின்கட்டணம், சொத்துவரி என மக்கள் தலையில் “வரி வசூல்” என்ற பாறையைத் தூக்கி வைக்க முயற்சிக்கும் த.வெ.க. அரசு, ஏற்கனவே மாணவர்களின் பெற்றோரிடம் அதீத கட்டண வசூலில் ஈடுபடும் தனியார் பல்கலைக்கழகங்களின் நிதி ஆதாரத்தை வலுப்படுத்த ஏன் திட்டமிட்டுச் சட்டத் திருத்தம் கொண்டு வந்திருக்கிறது?</p><p>நிதிப் பற்றாக்குறையில் உள்ள அரசுப் பல்கலைக்கழகங்களின் நிதி ஆதாரத்தை வலுப்படுத்த முடியாமல், தனியார் பல்கலைக்கழகங்களை ஊக்குவிக்கத்தான் இந்த உயர்கல்வி மானியக் கோரிக்கையில் பல்கலைக்கழகங்களுக்கு 100 கோடி ரூபாய் நிதி குறைக்கப்பட்டதா?</p><p>இப்படித் தளர்வு அளிக்க யார் யார் கோரிக்கை வைத்தார்கள் என்ற விவரமும் இல்லை. அதை அரசு வெளியிடவும் இல்லை!</p><p>புதிய சட்டத் திருத்தம் மூலம் புதிய பொறியியல் கல்லூரிகளும், கலைக் கல்லூரிகளும் “தனியார் பல்கலைக்கழக அந்தஸ்து” கேட்டுப் பெற்று, புற்றீசல் போல் எங்கு பார்த்தாலும் தனியார் பல்கலைக்கழகம் என்ற சூழல் உருவானால், பேரறிஞர் அண்ணா பெயரில் உள்ள பல்கலைக்கழகம் உள்ளிட்ட அரசு கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் என்ன ஆவது?</p><h2>சமூகநீதிக் கொள்கைக்கு வேட்டு</h2><p>ஏற்கனவே எங்கள் ஆட்சியில் தனியார் பல்கலைக்கழகங்கள் அமைக்கச் சலுகை அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை வந்து, அதை நிறைவேற்ற முனைந்தபோது கடும் எதிர்ப்பு வந்த காரணத்தால், மக்களின் கருத்திற்கு மதிப்பளித்து அந்த முயற்சியை எங்கள் திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் அவர்கள் அன்றைய தினம் கைவிட உத்தரவிட்டார்.</p><p>ஆனால், இன்றைக்கோ புதிதாகப் பொறுப்பேற்ற த.வெ.க. அரசு, உயர்கல்வியில் ஏழை, எளிய மாணவர்கள் கலந்தாய்வு மூலம் சேரும் வாய்ப்பைத் தட்டிப் பறித்து - சமூகநீதிக் கொள்கைக்கு ஏன் வேட்டு வைக்கிறது?</p><p>ஆகவே, அரசுப் பல்கலைக்கழகங்களை வலுப்படுத்த வேண்டும் எனவும், இப்படிப் புதிய “தளர்வுக் கொள்கை” அறிவித்துத் தனியார் பல்கலைக்கழகங்களை ஊக்குவித்து, உயர்கல்வியை வணிகமயமாக்கும் தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகச் சட்டத் திருத்த மசோதா, 2026-ஐ த.வெ.க. அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் பதிவுத்துறையில் ரூ.96 கோடி வருவாய் இழப்பு: சி.ஏ.ஜி தணிக்கை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cag-audit-flags-rs-96-crore-loss-in-tamil-nadu-registration-department</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cag-audit-flags-rs-96-crore-loss-in-tamil-nadu-registration-department#comments</comments><guid isPermaLink="false">5c340d2b-b58c-42bb-a794-a1ad96365ac5</guid><pubDate>Wed, 09 Sep 2026 10:46:23 +0000</pubDate><atom:updated>2026-09-09T10:46:23.017Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,Registration department,தமிழக பதிவுத்துறை,CAG audit,சி.ஏ.ஜி தணிக்கை,வருவாய் இழப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/ndl1dcpz/cag.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  CAG]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/ndl1dcpz/cag.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வழிகாட்டல் மதிப்பு தவறாக நிர்ணயம் மற்றும் ஆவணங்கள் தவறாக வகைப்படுத்தப்பட்டதால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.</p><p>தமிழக பதிவுத்துறையில் சொத்து விற்பனை, நிலப் பரிமாற்றம் மற்றும் அதிகாரப் பத்திரப் பதிவுகளின் போது முறையான தணிக்கை இல்லாததால் அரசுக்கு ரூ.95.97 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் தலைமைத் தணிக்கை அதிகாரி (CAG) அறிக்கை தெரிவிக்கிறது. 2023-24 நிதி ஆண்டிற்காக வெளியிடப்பட்ட இந்தத் தணிக்கை அறிக்கையில், பதிவுத்துறையின் செயல்பாடுகள் குறித்துப் பல்வேறு முக்கியக் குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.</p><h2>வருவா<strong>ய் அதிகரித்</strong>தாலும் தொடரும் இழப்புகள்</h2><p>கடந்த 2023-24 ஆம் நிதியாண்டில் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக்கட்டணம் மூலமாக தமிழக அரசு ரூ.19,013.35 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 8.28% அதிகமாகும். இருப்பினும், பதிவுகளின் போது ஆவணங்களைச் சரிபார்ப்பதில் ஏற்பட்ட அலட்சியம் மற்றும் குளறுபடிகள் காரணமாகப் பெருமளவு வருவாய் கசிந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. <a href="https://www.maalaimalar.com/news/national/india-food-safety-crackdown-shocking-findings">தமிழகம் </a>முழுவதும் உள்ள 647 தணிக்கைக்கு உட்பட்ட அலுவலகங்களில், வெறும் 114 அலுவலகங்களில் மட்டுமே மாதிரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 967 வழக்குகளில் ரூ.95.97 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது அம்பலமாகியுள்ளது.</p><h2>சொத்து மதிப்<strong>பு குறைத்</strong>துக் காட்டுதல்</h2><p>605 வழக்குகளில் ஆவணங்கள் தவறாக வகைப்படுத்தப்பட்டதால் அரசுக்கு ரூ.85.84 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 63 வழக்குகளில் சொத்துக்களின் உண்மையான மதிப்பு மறைக்கப்பட்டு, ரூ.1.07 கோடி கட்டணக் குறைவு செய்யப்பட்டுள்ளது. வெண்பேடு மற்றும் வயலாநல்லூர் பகுதிகளில் 14.94 ஏக்கர் நிலம் தொடர்பான 4 பரிவர்த்தனைகள் ரூ.78.66 கோடிக்குக் கிரையம் செய்யப்பட்டுள்ளன. ஆனால், முந்தைய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இதன் மதிப்பு மிக அதிகமாக இருந்தது தெரியவந்துள்ளது. இதன் மூலம் ரூ.71.16 கோடி மதிப்புக் குறைக்கப்பட்டு, அரசுக்கு ரூ.7.83 கோடி வரி இழப்பு ஏற்பட்டுள்ளது.</p><p>அம்பத்தூர் மற்றும் தாமல் பகுதிகளில் ரூ.100.08 கோடி பணப்பரிமாற்றம் நடந்ததற்கான படிவம் 26AS சான்றுகள் இருந்தபோதிலும், பணப் பரிமாற்றமே இல்லாதது போல் அதிகாரப் பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் ரூ.4.99 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நீலாங்கரையில் நிலத்தில் இருந்த கட்டிடத்தின் மதிப்பைக் கணக்கில் காட்டாமல் மறைத்ததால் ரூ.17.55 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.</p><h2>கண்கா<strong>ணிப்பு கு</strong>றைபாடு</h2><p>பதிவுத்துறையில் தணிக்கைக் குழுக்கள் முறையாகச் செயல்படவில்லை என்றும், 2023-24 ஆம் நிதியாண்டில் ஒரு தணிக்கைக் குழுக்கூட்டம் கூட நடத்தப்படவில்லை என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 5,428 உள் தணிக்கைகள் நிலுவையில் உள்ளதாகவும், ரூ.323.7 கோடி மதிப்புள்ள 61,109 தணிக்கைப் பத்திகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதிரியாக ஆய்வு செய்யப்பட்ட 114 அலுவலகங்களிலேயே ரூ.96 கோடி இழப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 533 அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டால் மேலும் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு வெளிவரக்கூடும் என சி.ஏ.ஜி சுட்டிக்காட்டியுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>