<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 15 Aug 2026 17:25:27 +0000</lastBuildDate><item><title>VIDEO: அட்டாரி - வாகா எல்லையில் கோலாகலமாக நடந்த கொடியிறக்க நிகழ்ச்சி</title><link>https://www.maalaimalar.com/news/national/india-pakistan-border-ceremony-attari-wagah-marks-80th-independence-day-with-grand-flag-lowering-and-cultural-events</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-pakistan-border-ceremony-attari-wagah-marks-80th-independence-day-with-grand-flag-lowering-and-cultural-events#comments</comments><guid isPermaLink="false">b68bd6c2-e037-46cb-ad2d-fa7fae0f18f3</guid><pubDate>Sat, 15 Aug 2026 16:58:20 +0000</pubDate><atom:updated>2026-08-15T16:58:20.566Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சுதந்திர தினம்,அட்டாரி வாகா எல்லை,பிஎஸ்எப்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/0z3rrskb/tn-1.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கொடியிறக்க நிகழ்ச்சி]]></media:title><media:description type="html"><![CDATA[ கொடியிறக்க நிகழ்ச்சி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/0z3rrskb/tn-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின்  <a href="https://www.maalaimalar.com/news/national/andhara-police-si-unfurls-100-metre-tricolour-atop-mount-elbrus-on-independece-day">80வது சுதந்திர தினம்</a> நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. </p><p>பஞ்சாப்பில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையான அட்டாரி-வாகாவில் இன்று மாலை கொடியிறக்க நிகழ்வு இனிதே நடைபெற்று முடிந்துள்ளது. </p> <h2>கலை நிகழ்ச்சிகள்</h2><p>கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற இந்நிகழ்வை ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்.</p><p>பஞ்சாபி பாரம்பரிய நடனமாடி ஆண் மற்றும் பெண் கலைஞர்கள் அசத்தினர்</p><p>மாணவர்களின் ஜிம்னாஸ்டிக்ஸ் சாகசங்கள், தற்காப்புக் கலைக் அரங்கேற்றம் ஆகியவை பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Punjab: Beating retreat ceremony at the Attari-Wagah border in Amritsar on Independence Day today. <a href="https://t.co/FVTvyM1SGS">pic.twitter.com/FVTvyM1SGS</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2088583262004519394?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><figure><blockquote class="twitter-tweet"><p lang="hi" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> पंजाब: आज स्वतंत्रता दिवस के अवसर पर अमृतसर में अटारी-वाघा बॉर्डर पर बीटिंग रिट्रीट समारोह अत्यंत उत्साह के साथ आयोजित किया गया। <a href="https://t.co/rEQJOBKnvt">pic.twitter.com/rEQJOBKnvt</a></p>&mdash; ANI_HindiNews (@AHindinews) <a href="https://x.com/AHindinews/status/2088596401295126827?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>பிஎஸ்எப்</h2><p>சிறப்பு விருந்தினராக எல்லை பாதுகாப்பு படையான பிஎஸ்எப் டி.ஐ.ஜி எஸ்.எஸ். சண்டேல் கலந்துகொண்டார்.</p><p>எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களின் வழக்கமான கம்பீரமான அணிவகுப்பு விழாவுக்கு அணி சேர்த்தது.</p> <p>வீரர்கள் மிடுக்குடன் அணிவகுத்துச் செல்ல இவ்வாண்டு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">சுதந்திர தின நிறைவை </a>உணர்த்தும் விதமாக தேசியக்கொடி இறக்கும் நிகழ்வு நடைபெற்றது.</p><p>இந்த விழாவின் போது, அட்டாரி சோதனைச் சாவடியில் புதிதாக அமைக்கப்பட்ட டிஜிட்டல் வீடியோ திரைச் சுவர் திறக்கப்பட்டது.</p><p>இதேபோல் நாட்டின் பிற எல்லைகளிலும் கொடியிறக்க நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இந்தோனேசியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 40 ஆக அதிகரிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/buildings-collapse-as-77-earthquake-strikes-indonesia-killing-40</link><comments>https://www.maalaimalar.com/news/world/buildings-collapse-as-77-earthquake-strikes-indonesia-killing-40#comments</comments><guid isPermaLink="false">6bf6b137-aabd-4378-8e3a-af05b79b6e42</guid><pubDate>Sat, 15 Aug 2026 16:06:26 +0000</pubDate><atom:updated>2026-08-15T16:06:26.528Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Earthquake,இந்தோனேசியா,indonesia,நிலநடுக்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/gk7oui9p/quake.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ quake]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/gk7oui9p/quake.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தோனேசியாவில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.</p><p>இந்தோனேசியாவில் இன்று காலை சக்திவாய்ந்த <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">நிலநடுக்கம்</a> ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவானது.</p><p>நாட்டின் கிழக்கு பகுதியில் புளோரஸ் தீவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சுமார் 11 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியானது.</p><p>பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக அப்பகுதியில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டனர். அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் அது திரும்பப் பெறப்பட்டது.</p><p>அந்த தீவின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கத்தின் தாக்கம் ஏற்பட்டது. இந்தத் தீவுக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருவது வழக்கம்.</p><p>நிலநடுக்கத்தால் அங்கு பல்வேறு கட்டிடங்களும் சேதம் அடைந்துள்ளன. நிலநடுக்கம் உணரப்பட்டதும் உயரமான கட்டிடத்தின் மீது மக்கள் ஏறி உள்ளனர்.</p><p>நிலநடுக்கத்தால் பலர் தீவிர காயமடைந்துள்ளனர். மேலும், பலர் இடிபாடுகளுக்கு இடையே சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.</p><p>கடந்த 1992-ம் ஆண்டில் இந்த தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி அலைகள் எழுந்தன. அதில் சிக்கி சுமார் 2,500 பேர் உயிரிழந்தனர் என்பது  குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>டிஎன்பிஎல்: அதிரடியில் மிரட்டிய சச்சின்: 201 ரன்கள் குவித்தது கோவை கிங்ஸ்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/trichy-grand-cholas-needs-202-runs-to-win-against-kovai-kings-in-tnpl-2026</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/trichy-grand-cholas-needs-202-runs-to-win-against-kovai-kings-in-tnpl-2026#comments</comments><guid isPermaLink="false">2f713eb3-7f07-40c3-acb7-e9c904aa72ef</guid><pubDate>Sat, 15 Aug 2026 15:58:19 +0000</pubDate><atom:updated>2026-08-15T15:58:19.935Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,Trichy Grand Cholas,திருச்சி கிராண்ட் சோழாஸ்,கோவை கிங்ஸ்,kovai Kings</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/vmmmmti9/kovai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ kovai kings]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/vmmmmti9/kovai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி அணிக்கு எதிரான போட்டியில் கோவை கிங்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 201 ரன்கள் குவித்துள்ளது.</p><p>10-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் அடுத்த நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி  மைதானத்தில் நடந்து வருகிறது.</p><h2>திருச்சி கிராண்ட் சோழாஸ்</h2><p>இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 20-வது லீக் ஆட்டத்தில் கோவை கிங்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற திருச்சி அணி பவுலிங் தேர்வு செய்தது.</p><p>அதன்படி, கோவை கிங்ஸ் அணி முதலில் களமிறங்கியது. ஆரம்பம் முதலே அந்த அணி அதிரடியில் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் அவுட்டாகினர்.</p><h2>சச்சின் அதிரடி</h2><p>3வது களமிறங்கிய பாலசுப்ரமணியன் சச்சின் அதிரடியில் மிரட்டினார். அவர் 45 பந்தில் 4 சிக்சர், 6 பவுண்டரிகளை விளாசினார்.</p><p>6-வது விக்கெட்டுக்கு இணைந்த சச்சின் - மாதவ பிரசாத் ஜோடி சூறாவளியாய் சுழன்றடித்தது. இந்த ஜோடி 43 பந்தில் 75 ரன்கள் குவித்தது.</p><p>இறுதியில், கோவை கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன்களைக் குவித்தது. மாதவ பிரசாத் 38  ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார்.</p><p>இதையடுத்து, 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் அணி களமிறங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 15 ஆகஸ்ட் 2026...</title><link>https://www.maalaimalar.com/news/topnews/today-news-in-tamil-live-updates-15-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/today-news-in-tamil-live-updates-15-august-2026#comments</comments><guid isPermaLink="false">c6da5784-7244-49ec-aad8-b0af519a1d11</guid><pubDate>Sat, 15 Aug 2026 01:53:31 +0000</pubDate><atom:updated>2026-08-15T15:23:49.053Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/umtv98iy/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live News]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/umtv98iy/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி ராஜ்காட்டில் உள்ள தேசத்தந்தை மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Prime Minister Narendra Modi pays floral tributes to the Father of the Nation, Mahatma Gandhi, at Rajghat on the 80th Independence Day<br><br>(Video source: PM Modi/ YouTube) <a href="https://t.co/xIcfLPeDol">pic.twitter.com/xIcfLPeDol</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2088441067771494821?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>நாட்டின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி.</p><p>டெல்லியில் உள்ள செங்கோட்டைக்கு வந்தடைந்த பிரதமர் மோடியை பாதுகாப்புத்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங் வரவேற்றார்.</p><p>நாட்டின் சுதந்திர தினவிழாவை ஒட்டி டெல்லி கடமைப்பாதையில் பிரதமர் மோடிக்கு முப்படை, காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை </p><p>13-வது முறையாக தேசியக்கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களிடையே உரையாற்ற  உள்ளார் பிரதமர் மோடி.</p><p>சுதந்திர தினவிழா கொண்டாட்ட வரலாற்றில் முதன்முறையாக டெல்லி செங்கோட்டையில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டது.</p><p>டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி.</p><p>நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையில் பிரதமர் மோடி ஏற்றி வைத்த தேசியக்கொடிக்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.</p><p>செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Delhi: Prime Minister Narendra Modi hoists the National Flag at Red Fort on the 80th Independence Day. <br><br>The hoisting of the National Flag was synchronised with the 21-Gun Salute by the gunners of the 1721 Field Battery (Ceremonial). The ceremonial battery, utilising the… <a href="https://t.co/rbaiIKQpPU">pic.twitter.com/rbaiIKQpPU</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2088448119566676389?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி.</p><p>வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த  ஒரு நிகழ்வை இந்தியா கண்டு கொண்டிருக்கிறது.</p><p>நாட்டு மக்கள் அனைவரது இல்லங்களிலும் இன்று மூவர்ண கொடி பறந்து கொண்டிருக்கிறது.</p><p>வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டை அனைவரும் கொண்டாடி கொண்டிருக்கிறோம்.</p><p>நாட்டின் விடுதலைக்காக எண்ணற்றோர் உயிர் தியாகம் செய்துள்ளனர்.</p><p>கனவுகள் உயர்வாக இருக்கும்போது தான் திறன்களும் உயர்ந்ததாக இருக்கும்.</p><p>நாம் கண்ட மிகப்பெரிய கனவுகள் தான் தற்போது நமது எண்ணங்களை விரிவாக்கி உள்ளது.</p><p>உலகம் இன்று நம்மை பார்க்கும் விதம் மாறி உள்ளது - பிரதமர் மோடி</p><p>நாட்டில் எலக்ட்ரானிக் பொருட்களின் உற்பத்தி 7 மடங்கு உயர்ந்துள்ளது.</p><p>தேசத்தின் அனைத்து பிரிவு மக்களும் நாட்டை முன்னேற்றி கொண்டிருக்கின்றனர் - பிரதமர் மோடி</p><p>12 ஆண்டுகளில் இந்தியாவின் டிஜிட்டல் பண பரிவர்த்தனை 100 சதவீதத்தை எட்டி உள்ளது.</p><p>நமது வாழ்வில் பெரிதாக சாதிக்க வேண்டும் எனில் ஒவ்வொரு இந்தியரும் கனவு காண வேண்டும் - பிரதமர் மோடி</p><p>இந்தியா அனைத்து நாடுகளுக்கும் முன்னோடியாக சென்று கொண்டிருக்கிறது - பிரதமர் மோடி</p><p>2047-ல் 100 ஜிகாவாட் அணுசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி</p><p>இந்தியா தற்சார்பு அடைய வேண்டியது காலத்தின் கட்டாயம் - பிரதமர் மோடி</p><p>நமது நாட்டின் டிஜிட்டல் பரிவர்த்தனை கடந்த 12 ஆண்டுகளில் 100 மடங்கு அதிகரித்துள்ளது - பிரதமர் மோடி</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Delhi: From the ramparts of the Red Fort, Prime Minister Narendra Modi says, &quot;... Over the past 12 years, countless citizens—whether Dalits, the downtrodden, the marginalized, or tribals; whether rural or urban dwellers; the poor or the middle class; youth or the… <a href="https://t.co/YT8btWXU6S">pic.twitter.com/YT8btWXU6S</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2088452942542365128?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>அனைவரது மனதிலும் மூவர்ணம் நிறைந்துள்ளது. நாடெங்கிலும் வந்தே மாதரம் பாடல் எதிரொலிக்கிறது - பிரதமர் மோடி</p><p>அனைத்து பிரிவு மக்களும் நாட்டை முன்னேற்றி கொண்டிருக்கின்றனர். நமது கனவுகளை தடுத்து நிறுத்துவது சாத்தியமற்றது - பிரதமர் மோடி</p><p>இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 4 மடங்கு உயர்ந்துள்ளது. </p><p>மிகப்பெரிய செமி கண்டக்டர் ஆலைகள் வர உள்ளன - பிரதமர் மோடி</p><p>ஒவ்வொரு இந்தியரும் இணைந்து இந்தியா வளர்ச்சி அடைந்த நாடு என்ற கனவை 2047-ம் ஆண்டில் நனவாக்குவோம் - பிரதமர் மோடி</p><p>கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா பல்வேறு வரலாற்று சாதனைகளை படைத்துள்ளது  - பிரதமர் மோடி பெருமிதம்</p><p>நாட்டு மக்கள் 25 கோடி பேர் வறுமையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் - பிரதமர் மோடி</p><p>உற்பத்தி துறையில் மேலும் வளர்வது கட்டாயம் - பிரதமர் மோடி</p><p>உலகளவில் ஈர்க்கும் வகையில் பொருட்களை தயாரிக்க வேண்டும் - பிரதமர் மோடி</p><p>நமது தேவைகளுக்காக பிற நாடுகளை எப்போதும் சார்ந்திருக்க முடியாது. நாம் தற்சார்பு அடைய வேண்டியது காலத்தின் கட்டாயம் - பிரதமர் மோடி</p><p>வரும் 2047-ம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் அணுசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி</p><p>40-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம். வர்த்தக ஒப்பந்தத்தால் மீனவர்கள், விவசாயிகள் பயன் - பிரதமர் மோடி</p><p>நாம் கண்ட மிகப்பெரிய கனவுகள் நமது எண்ணங்களை விரிவாக்கி உள்ளது. கனவு உயர்வாக இருந்தால் திறனும் உயரும் - பிரதமர் மோடி</p><p>சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியேற்றுவதற்காக முதலமைச்சர் விஜய் வருகை.</p><p>திறந்தவெளி வாகனத்தில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பினை பார்வையிடுகிறார் முதலமைச்சர் விஜய்</p><p>முதலமைச்சர் விஜய்க்கு முப்படை மற்றும் சிறப்பு காவல் படை உள்ளிட்ட படையினர் அணிவகுப்பு மரியாதை.</p><p>தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய் கோட்டை கொத்தளத்தில் முதன்முறையாக தேசியக்கொடி ஏற்றினார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Tamil Nadu Chief Minister C Joseph Vijay hoists the tricolour at the state Secretariat in Chennai on the occasion of 80th Independence Day. <a href="https://t.co/QFKUtuvUjl">pic.twitter.com/QFKUtuvUjl</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2088466594729214122?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>நாட்டின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்து முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். </p><p>கோட்டையில் கொடியேற்றுவதை பார்க்க வந்துள்ள மக்களுக்கும், என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும் வாழ்த்து - முதலமைச்சர் விஜய்</p><p>லஞ்சம், ஊழலற்ற தமிழகம் என்பதை நோக்கியே நமது தவெக அரசு செயல்பட்டு வருகிறது - முதலமைச்சர் விஜய்</p><p>இந்த விழாவில் என்னை பேச வைத்த உலகம் முழுவதும் உள்ள தமிழக மக்கள், GenZ இளைஞர்களுக்கும் நன்றி - முதலமைச்சர் விஜய்</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/q8bvaih9/vijay3.jpg" /></figure><p>தமிழக மக்கள் நலனுக்காக மட்டுமே நிர்வாக ரீதியாக மத்திய அரசுடன் ஒத்துழைப்பு தருகிறோம்  - முதலமைச்சர் விஜய்</p><p>தமிழக நலனுக்கு எதிராக, மாநில உரிமைக்கு பிரச்சனையாக எது வந்தாலும் தவெக அரசு எதிர்க்கும் - முதலமைச்சர் விஜய்</p> <p>தமிழ்நாட்டை முன்மாதிரி மாநிலமாக்குவதுடன் 2036-ம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவோம் - முதலமைச்சர் விஜய்</p> <p>தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது - முதலமைச்சர் விஜய்</p><p>முன்னாள் படை வீரர்களின் 2 மகள்களுக்கு வழங்கும் திருமண நிதியுதவி ரூ.25,000-ல்  இருந்து ரூ.50,000ஆக உயர்வு - முதலமைச்சர் விஜய்</p> <p>மாற்றுத்திறன் கொண்ட முன்னாள் படைவீரர்களின் குடும்பத்திற்கான மாதாந்திர நிதியுதவி ரூ.5000-ல் இருந்து ரூ.7000 ஆக உயர்வு முதலமைச்சர் விஜய்</p><p>விடுதலை போராட்ட வீரர்கள் ஓய்வூதியம் ரூ.25,000 ஆக உயர்வு - முதலமைச்சர் விஜய்</p><p>எம்.கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருது, நீரிழிவு நோய் நிபுணர் மோகனுக்கு அப்துல் கலாம் விருதை வழங்கினார் முதலமைச்சர் விஜய் </p><p>உலகின் கடினமான மாரத்தானில் ஒன்றான டென்சிங் ஹிலாரி எவரெஸ்ட் மாரத்தானை 2 முறை வென்ற நவ்ஷீனுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கினார் முதலமைச்சர் விஜய்</p><p>முதலமைச்சரின் நல் ஆளுமை விருதை நீலகிரி ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யாவுக்கு வழங்கினார் முதலமைச்சர்</p><p>விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சிருஷ்டி பவுண்டேஷனுக்கு சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான விருதை வழங்கினார் - முதலமைச்சர் விஜய்</p> <p>விருதாளர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார் முதலமைச்சர் விஜய்</p><p>காரில் இருந்து இறங்கி சாலையில் நடந்து சென்றவாறு மக்களை சந்தித்தார் முதலமைச்சர் விஜய்</p><p>சாலையின் இருபுறமும் உள்ள மக்களை பார்த்து கை அசைத்தவாறு நடந்து சென்றார் முதலமைச்சர் விஜய்</p><p>முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள் ஆண்களில் 3 பேருக்கும், பெண்களில் இருவருக்கும் வழங்கப்பட்டது.</p><p>திருப்பூர் இம்மானுவேல் நெல்சன், தூத்துக்குடி சரவண குமார், சேலம் நிர்மல் கதிர்வேலு, மயிலாடுதுறை ராஜேஸ்வரி மகாதேவன், மதுரை சிந்தாவுக்கு முதலமைச்சரின் இளைஞர் விருது வழங்கப்பட்டது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-pledges-to-build-an-india-of-equality-and-social-justice" rel="nofollow">சமத்துவம், சமூகநீதி தழைத்தோங்கும் இந்தியாவை உருவாக்க உறுதி ஏற்போம்- முதலமைச்சர் விஜய்</a></p><p>* சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் விஜய் தேசிய கொடி ஏற்றி வைத்தார். </p><p>* மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/mallikarjun-kharge-rahul-gandhi-skip-independence-day-event-for-2nd-second-consecutive-year">சுதந்திர தின விழாவை 2-வது ஆண்டாக புறக்கணித்த கார்கே, ராகுல் - காரணம் இதுதான்!</a></p><p>* டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.</p><p>* மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி மத்திய மந்திரிக்கு இணையான அந்தஸ்து கொண்டவர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/internet-services-disrupted-in-taiwan">சீன அச்சுறுத்தல்: தைவானில் முடங்கிய இணைய சேவை! போர்க்கால அவசரநிலை சோதனை</a></p><p>*இணையம் மற்றும் 4G/5G நெட்வொர்க் முற்றிலும் முடங்கும் போது, நாட்டின் மக்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு அமைப்புகள் எவ்வாறு தொடர்பில் இருப்பது என்பதைத் தைவான் பரிசோதித்தது. </p><p>*பல பயனர்களுக்கு டிக்டாக் செயலி திறக்கவே இல்லை; இன்ஸ்டாகிராமில் ஒரு மெசேஜ் செல்ல 30 வினாடிகளுக்கு மேல் ஆனதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/equal-opportunity-for-digital-media-centre-removes-12-minute-tv-ad-cap">டிஜிட்டல் ஊடகங்களுக்கு இணையான சமவாய்ப்பு: டிவியின் 12 நிமிட விளம்பரக் கட்டுப்பாட்டை நீக்கியது மத்திய அரசு!... </a></p><p>*தற்போதுள்ள காலகட்டத்தில் டிஜிட்டல் மற்றும் சமூக ஊடக தளங்களில் விளம்பரங்களுக்கு எந்தவித கால வரம்பும் கிடையாது. </p><p>*இதனால் பாரம்பரிய தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு கடும் வருவாய் இழப்பும் சமமற்ற போட்டியும் ஏற்பட்டு வந்தது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/24-hour-turnaround-tasmac-lifts-ban-on-11-enrica-liquor-brands">24 மணி நேரத்திற்குள் மாற்றம்: என்ரிகா நிறுவனத்தின் 11 மதுபான வகைகளுக்கான தடையை நீக்கியது டாஸ்மாக் நிர்வாகம்!... </a></p><p>*11 மதுபான வகைகளையும் சில்லறை விற்பனைக் கடைகளுக்கும், FL-2 மற்றும் FL-3 உரிமம் பெற்ற ஹோட்டல்கள் மற்றும் கிளப்புகளுக்கும் விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.</p><p>*என்ரிகா நிறுவனத்தின் தயாரிப்புகளை மீண்டும் சில்லறை விற்பனை நிலையங்களுக்கு அனுப்பும் பணிகள் தொடங்கியுள்ளன.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/padikkal-century-in-first-innings-against-srilanka-first-test">இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: முதல் சதத்தை பதிவு செய்தார் தேவ்தத் படிக்கல்</a></p><p>* டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.</p><p>* கே.எல்.ராகுல், தேவ்தத் படிக்கல் ஜோடி பொறுப்புடன் ஆடியது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/bangladesh-426-all-out-in-first-innings-against-australia-first-test">டார்வின் டெஸ்டில் வங்கதேசம் 426 ரன்கள் குவிப்பு: 2வது இன்னிங்சிலும் ஆஸ்திரேலியா திணறல்</a></p><p>* வங்கதேசம் முதல் இன்னிங்சில் 426 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.</p><p>* ஆஸ்திரேலிய அணியின் ஜோஷ் ஹேசில்வுட் 6 விக்கெட் வீழ்த்தினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pok-would-have-joined-jammu-and-kashmir-if-omar-abdullah-on-special-status">மாநில அந்தஸ்தை பறிக்காமல் இருந்திருந்தால், PoK மக்கள் ஜம்மு-காஷ்மீருடன் இணைய கிளர்ந்து எழுந்திருப்பார்கள்- உமர் அப்துல்லா</a></p><p>* என்றாவது ஒரு நாள் அந்த இடங்கள் நிரப்பப்படும் என்ற நம்பிக்கையில், சட்டப்பேரவையில் அந்தப் பகுதிக்கான இடங்களை நாங்கள் காலியாக வைத்துள்ளோம்.</p><p>* மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பு ரீதியான உத்தரவாதங்களை மீட்டெடுப்பதற்கும், ஜம்மு-காஷ்மீரை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கும் எங்கள் அரசு உறுதியுடன் உள்ளது. இந்த இலக்குகளை நிறைவேற்ற நாங்கள் பாடுபடுவோம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-change-district-secretary-posts-for-youth-stalin-announcement">இளைஞர்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி - ஸ்டாலின் அறிவிப்பு!</a></p><p>* வயது வரம்பு: 70க்கு மேல் உள்ளவர்கள் நீக்கம், இளைஞர்களுக்கு மாவட்ட பொறுப்பு கிடைக்கும்.</p><p>* புதிய நியமனங்கள்: 78 மாவட்ட செயலாளர்கள் மாற்றம், புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/khushbu-sundar-condemn-nainar-nagendran-against-cm-vijay-speech">அரசியல் விளையாட்டில் பெண்கள் பகடைக்காய்கள் அல்ல: நயினார் நாகேந்திரனுக்கு குஷ்பு கண்டனம்</a></p><p>* எந்த ஒரு தளத்திலும் இத்தகைய கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.</p><p>* ஒரு பெண்ணின் - ஒரு தாயின் - காரணமாகவே நீங்கள் இந்த உலகில் இருக்கிறீர்கள்.</p>]]></content:encoded></item><item><title>அரசியல் விளையாட்டில் பெண்கள் பகடைக்காய் அல்ல: நயினார் நாகேந்திரனுக்கு குஷ்பு கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/khushbu-sundar-condemn-nainar-nagendran-against-cm-vijay-speech</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/khushbu-sundar-condemn-nainar-nagendran-against-cm-vijay-speech#comments</comments><guid isPermaLink="false">1904e4d4-7bc0-4386-93a6-3dff7b9414cf</guid><pubDate>Sat, 15 Aug 2026 14:37:07 +0000</pubDate><atom:updated>2026-08-15T14:37:07.204Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,குஷ்பு,Khushbu,cm vijay,முதல்வர் விஜய்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/syfy9k4n/kushboo.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ khushbu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/syfy9k4n/kushboo.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகையும், பா.ஜ.க. மாநில துணைத் தலைவருமான குஷ்பு பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது தாயார் குறித்து அநாகரிகமாக பேசிய பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.</p><p>'அப்பாவை காணோம்' என்ற முதலமைச்சர் விஜய் பேச்சுக்கு எதிர்வினையாக அவர் அநாகரிகமாகப் பேசியதாக கண்டனங்கள் எழுந்துள்ளன.</p><h2>தரக்குறைவான கருத்து</h2><p>இந்நிலையில் நடிகையும், பா.ஜ.க. மாநில துணைத் தலைவருமான குஷ்பு, பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:</p><p>தமிழக முதலமைச்சரின் தாயார் குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் தெரிவித்த தரக்குறைவான கருத்து அருவருப்பானது. எந்த ஒரு தளத்திலும் இத்தகைய கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.</p><h2>அதிர்ச்சியும், ஏமாற்றமும்</h2><p>எனது தலைவரும் பிரதமருமான நரேந்திர மோடி அவர்கள் எப்போதும் 'நாரி சக்தி' (பெண் சக்தி) குறித்தே பேசி வருகிறார். பெண்களை மிகுந்த மரியாதையுடன் நடத்தி வருகிறார். இத்தகைய கருத்துகள் மிகவும் கீழ்த்தரமானவை.</p><p>பெண்களின் கண்ணியம் மற்றும் நேர்மையை அவமதிப்பதையோ அல்லது கேள்விக்கு உள்ளாக்குவதையோ ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாதவள் நான். எப்போதும் என் கருத்துகளைத் துணிச்சலுடன் வெளிப்படுத்தி வந்துள்ளேன். இதைக் கேட்டு நான் இன்று அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளேன்.</p><h2>பெண்கள் பகடைக்காய் அல்ல</h2><p>கட்சியை விமர்சியுங்கள், மக்களுக்காகக் குரல் கொடுங்கள், அரசு செயல்படத் தவறினால் அதைத் தாக்குங்கள். ஆனால் உங்கள் கருத்தை முன்வைக்க ஒருபோதும் ஒரு பெண்ணைப் பயன்படுத்தாதீர்கள். அரசியல் விளையாட்டில் பெண்கள் பகடைக்காய்கள் அல்ல.</p><p>ஒவ்வொரு கட்சியும், அக்கட்சியின் உறுப்பினர்களும், ஒவ்வொரு ஆணும் ஒரு பெண்ணை அவமதிக்கும் முன் சிந்திக்க வேண்டும். </p><p>நினைவில் கொள்ளுங்கள், ஒரு பெண்ணின் - ஒரு தாயின் - காரணமாகவே நீங்கள் இந்த உலகில் இருக்கிறீர்கள். ஒரு தாய்க்கு இழைக்கப்படும் இத்தகைய அவமரியாதை மிகுந்த வேதனையையும் மனக்காயத்தையும் ஏற்படுத்துகிறது என பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>5 நிமிடம் லேட்: டெலிவரி செய்ய வந்த நபரை சரமாரி தாக்கிய வாலிபர்- வைரலான வீடியோ</title><link>https://www.maalaimalar.com/news/national/delivery-agent-thrashed-by-man-for-arriving-5-minutes-late-assault-caught-on-cctv</link><comments>https://www.maalaimalar.com/news/national/delivery-agent-thrashed-by-man-for-arriving-5-minutes-late-assault-caught-on-cctv#comments</comments><guid isPermaLink="false">587f65d9-f42d-492c-9e88-cee2dfe86814</guid><pubDate>Sat, 15 Aug 2026 14:37:06 +0000</pubDate><atom:updated>2026-08-15T14:37:06.794Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Meerut,மீரட் நகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/wt7a2r1o/Delivery0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தாக்குதல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/wt7a2r1o/Delivery0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராஜஸ்தான் மாநிலம் மீரட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், பிளிங்கிட் நிறுவத்தின் டெலிவரி செய்யும் நபர் (Delivery agent), பொருள் ஒன்றை ஒரு வீட்டில் டெலிவரி செய்வதற்காக கொண்டு செல்கிறார். அவர் பெல்லை அழுத்தியதும், வீட்டில் இருந்து வாலிபர் ஒருவர் வருகிறார். இவர் டெலிவரி நபருடன் சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். பின்னர் திடீரென டெலிவரி செய்ய வந்த நபரின் செல்போனை பறித்துக் கொள்கிறார். அதோடு சரமாரியாக தாக்குகிறார்.</p><h2>வீட்டிற்குள் இழுத்துச் சென்று தாக்குதல்</h2><p>அப்போது, அதேவீட்டில் இருந்து பெண் ஒருவர் வெளியே வருகிறார். அவர் இருவரையும் சமாதானம் செய்யும் எந்த வகையிலான முயற்சியிலும் ஈடுபடவில்லை. பின்னர், அந்த நபரை வாலிபர் அவரை வீட்டிற்குள் இழுத்துச் சென்று அடித்து உதைக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">The couple assaulted the poor delivery guy because of the delay, and is now on the run after the FIR. <br><br>Delivery agents work 12-15 hrs daily for just ₹15-20k in harsh conditions.  Delayed order? There could be traffic, rain, or system issues. Assaulting them shows zero humanity.… <a href="https://t.co/1Yk5FTQbrS">pic.twitter.com/1Yk5FTQbrS</a></p>&mdash; Mr. Rana  (@RanaBharatiye) <a href="https://x.com/RanaBharatiye/status/2088543810745954475?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure> <p>இந்த வீடியோ காவல்துறையின் பார்வைக்கு எட்ட, இது குறித்து விசாரணை நடத்தி டெலிவரி செய்ய வந்த நபர், மற்றும் வாலிபர் யார் என்பதை கண்டுபிடித்தனர். பின்னர், டெலிவரி செய்ய வந்த நபர் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்க, போலீசார் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>டெலிவரி செய்யும் நபர்கள் பல்வேறு இடையூறுகளை எதிர்கொண்டு, சொற்ப வருமானத்திற்காக கஷ்டப்பட்டு வருகின்றனர். 5 நிமிடம், 10 நிமிடம் லேட்டிற்காக தாக்குதல் நடத்தினால் அது மோசமான செயலாகும் என இணையதள வாசிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>இளைஞர்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி - ஸ்டாலின் அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-change-district-secretary-posts-for-youth-stalin-announcement</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-change-district-secretary-posts-for-youth-stalin-announcement#comments</comments><guid isPermaLink="false">7e0e97f5-781c-4b81-8497-b3bc393f1f4c</guid><pubDate>Sat, 15 Aug 2026 14:03:33 +0000</pubDate><atom:updated>2026-08-15T14:03:33.267Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,M.K.Stalin,தமிழக அரசியல்,Secretary,DMK.,மு.க.ஸ்டாலின்,இளைஞர்கள்,youthsDistrict,மாவட்ட செயலாளர்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/3ndomn1f/M.K.-Stalin" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ M.K. Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/3ndomn1f/M.K.-Stalin?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேர்தல் தோல்விக்கு பின்னர் கட்சியில் அதிரடி மாற்றங்களை செய்ய தி.மு.க. தயாராகி வருகிறது. இதுதொடர்பாக வருகிற 22-ந் தேதி நடைபெறும் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக தெரிகிறது.</p><h2><strong>தொண்டர்களின் கருத்துக்கள்</strong></h2><p>நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வி அடைந்தது. இதையடுத்து தேர்தலில் நடந்த தோல்விக்கான காரணங்கள் குறித்தும், கட்சியின் நிர்வாக கட்டமைப்புகளை மாற்றுவது குறித்தும், மாவட்டம் வாரியாக கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் குழு அமைத்து கட்சியில் நிர்வாகிகள், தொண்டர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. </p><p>இவை அனைத்தையும் தொகுக்கப்பட்டு, அறிக்கையாக தயாரித்து திமுக தலைவர் முக ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. அதில் இருக்கும் பல்வேறு பரிந்துரைகள் தெரிவிக்கப்பட்டு இருந்தன. இதன் அடிப்படையில் கட்சியில் நிர்வாக கட்டமைப்புகளை மறுசீரமைப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.</p><h2>புதிய மாவட்ட செயலாளர்கள்</h2><p>தற்போது தி.மு.க.வில் கட்சியில் அமைப்பு ரீதியாக 78 மாவட்ட செயலாளர்கள் இருக்கின்றனர். இதில் சரியான முறையை கடைபிடிக்காதவர்களின் பதவி பறிக்கப்படலாம் என பரபரப்பாக பேசப்படுகிறது.</p><p>தற்போது இருக்கும் மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, புதிய மாவட்ட செயலாளர்களை நியமிப்பது, மாற்று கட்சியில் இருந்து தி.மு.க.வில் இணைந்தவர்களுக்கு பதவி வழங்குவது தொடர்பாக வருகிற 22-ந்தேதி நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு பின் தி.மு.க.வில் அதிரடி மாற்றங்களும், அதிரடி நடவடிக்கையும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2><strong>இளைஞர்களுக்கு வாய்ப்பு</strong></h2><p>இதனிடையே கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்படி, 70 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் இருந்து மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஒரே பதவியில் மூன்று முறைக்கு மேல் இருப்பவர்களும் மாற்றப்படுவர் என்றும், ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளாக 60 வயது வரை இருக்கலாம் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதனால், முன்னாள் அமைச்சர்களின் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.</p><p>தற்போது, எம்.எல்.ஏ.க்களாக உள்ள சீனியர் மாவட்ட செயலாளர்களுக்கு தலைமை நிர்வாகத்தில் முக்கிய பதவிகள் வழங்கப்பட உள்ளன என்றும், துணை பொதுச்செயலாளர்கள், வழிகாட்டுதல் குழு உறுப்பினர்கள், அரசியல் விவகாரக்குழு உறுப்பினர்கள் என நியமிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.</p><p>மேலும் கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் வாயிலாக 40க்கும் மேற்பட்ட புது முகங்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கும் என்றும், இது குறித்து வரும் 22ம் தேதி நடக்கும் தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><h2><strong>தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம்</strong></h2><p>இதனிடையே தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம் வருகிற 22-ந்தேதி காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் நடைபெற உள்ளது. </p><p>கூட்டத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.</p><p>தேர்தல் தோல்விக்கு பின்னர் நடைபெறக்கூடிய முதல் செயற்குழு கூட்டம் இது என்பதாலும், புதிய மாற்றங்கள் ஏற்படலாம் என்பதாலும் கட்சியினர் மத்தியில் இந்த செயற்குழு கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஐரோப்பாவின் உயரமான சிகரத்தில் 100மீ இந்திய தேசியக்கொடியை ஏற்றிய ஆந்திர சப்-இன்ஸ்பெக்டர்</title><link>https://www.maalaimalar.com/news/national/andhara-police-si-unfurls-100-metre-tricolour-atop-mount-elbrus-on-independece-day</link><comments>https://www.maalaimalar.com/news/national/andhara-police-si-unfurls-100-metre-tricolour-atop-mount-elbrus-on-independece-day#comments</comments><guid isPermaLink="false">1d365d54-a233-40f6-984e-c5a90d85e0b7</guid><pubDate>Sat, 15 Aug 2026 13:29:09 +0000</pubDate><atom:updated>2026-08-15T13:29:09.235Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Independence Day,சுதந்திர தினம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/6y83yki2/IndependenceDay001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இந்திய தேசியக் கொடி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/6y83yki2/IndependenceDay001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் 80-வது <a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-hoists-national-flag-red-fort-delhi">சுதந்திர தின விழா</a> கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு இந்தியரும் நாட்டின் மீது வைத்துள்ள தேச பக்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.</p><p>அந்த வகையில் ஆந்திர மாநிலம் எலூரு புறநகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டர் வி. வெங்கடேஸ்வர ராவ் ஐரோப்பியாவின் மிக உயரமான சிகரத்தில் 100மீ தேசியக் கொடியை இன்று காலை ஏற்றியுள்ளார்.</p><p>ஐரோப்பியாவின் மிக உயரமான சிகரம் ரஷியாவில் உள்ள மவுண்ட் எல்ப்ரஸ் ஆகும். இதன் உயரம் 5642 மீட்டர் ஆகும். இந்த சிகரத்தில் வெங்கடேஷ்வர ராவ் பல நாட்களாக ஏறி இன்று காலை உச்சியை அடைத்து தேசியக் கொடியை பறக்கவிட்டுள்ளார்.</p><p>அப்போது தேசிய கீதம் பாடி தனது தேசப்பற்றை வெளிப்படுத்தினார். தனது சாதனையை, பணியின்போது உயிர்த்தியாகம் செய்த காவலர்களுக்கு அவர் அர்ப்பணித்தார்.</p>]]></content:encoded></item><item><title>காலே டெஸ்ட்: படிக்கல் அபார சதம்-முதல் நாள் முடிவில் இந்தியா 288/2</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/india-288-for-2-wickets-in-first-innings-for-end-of-first-day-against-srilanka-first-test</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/india-288-for-2-wickets-in-first-innings-for-end-of-first-day-against-srilanka-first-test#comments</comments><guid isPermaLink="false">7ebe46ce-fc0f-4a2f-9602-e738189b148a</guid><pubDate>Sat, 15 Aug 2026 13:02:40 +0000</pubDate><atom:updated>2026-08-15T13:02:40.707Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Devdutt Padikkal,தேவ்தத் படிக்கல்,SLvIND,இலங்கை இந்தியா தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/g8dae3em/padikal.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ padikkal, KL Rahul]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/g8dae3em/padikal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்தியா 2 விக்கெட்டுக்கு 288 ரன்கள் எடுத்துள்ளது. தேவ்தத் படிக்கல் முதல் சதத்தை பதிவு செய்தார்.</p><p>இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.</p><p>இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.</p><h2>இந்தியா நிதான ஆட்டம்</h2><p>அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். இருவரும் நிதானமாக ஆடினர். அணியின் எண்ணிக்கை 47 ஆக இருக்கும்போது ஜெய்ஸ்வால் 32 ரன்னில் ரன் அவுட்டானார்.</p><h2>கே.எல்.ராகுல் ரிடையர் ஹர்ட்</h2><p>2வது விக்கெட்டுக்கு கே.எல்.ராகுலுடன் தேவ்தத் படிக்கல் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுப்புடன் ஆடினர். தேநீர் இடைவேளையில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது காயம் காரணமாக கே.எல்.ராகுல் ரிடையர் ஹர்ட் முறையில் ஆடவில்லை. கே.எல்.ராகுல்-படிக்கல் ஜோடி 150 ரன்கள் சேர்த்தது.</p><h2>சதமடித்த படிக்கல்</h2><p>சிறப்பாக ஆடிய படிக்கல் தனது முதல் சதத்தைப் பதிவு செய்து அசத்தினார்.</p><h2>சுப்மன் கில் அவுட்</h2><p>தேநீர் இடைவேளைக்குப் பிறகு படிக்கல் உடன் கேப்டன் சுப்மன் கில் களமிறங்கினார். இந்த ஜோடி 39 ரன் சேர்த்த நிலையில் சுப்மன் கில் 16 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ரிஷப் பண்ட் மேலும் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார். </p><p>இறுதியில், முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 73 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 288 ரன்கள் எடுத்துள்ளது. படிக்கல் 131 ரன்னும், ரிஷப் பண்ட் 27 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.</p><p>இலங்கை சார்பில் பிரபாத் ஜெயசூர்யா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.</p>]]></content:encoded></item><item><title>சோனியா காந்தி வந்தே மாதரம் பாடலை நிறுத்த சொன்னதாக பாஜக குற்றச்சாட்டு: மறுத்தது காங்கிரஸ்- நடந்தது என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/national/bjp-claims-sonia-gandhi-tried-to-stop-singing-of-vande-mataram-congress-denies</link><comments>https://www.maalaimalar.com/news/national/bjp-claims-sonia-gandhi-tried-to-stop-singing-of-vande-mataram-congress-denies#comments</comments><guid isPermaLink="false">6ac94525-3bb2-477d-946d-9c2d8c59c5a2</guid><pubDate>Sat, 15 Aug 2026 12:58:55 +0000</pubDate><atom:updated>2026-08-15T12:58:55.606Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>வந்தே மாதரம்,Vande Mataram,சுதந்திர தினம்,Indepndence day,sonia gandhi,சோனியா காந்தி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/wywka2bi/SoniaGandhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காங்கிரஸ் தலைமையகத்தில் சுதந்திர தின விழா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/wywka2bi/SoniaGandhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடு முழுவதும் 80-வது சுதந்திர தினம் கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருட சுதந்திர தினம் வந்தே மாதரம் பாடலுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. முதலில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட வேண்டும். பின்னர் கொடி ஏற்றிய பின் தேசிய கீதம் பாடல் பாடப்பட வேண்டும். இன்று டெல்லி செங்கோட்டையில் வந்தே மாதரம் பாடல் முழுமையாக பாடப்பட்டப் பிறகு பிரதமர் மோடி கொடி ஏற்றினார்.</p><h2>காங்கிரஸ் அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்</h2><p>டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. இதில் அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர்.</p><p>வந்தே மாதரம் பாடல் பாடியபோது, சோனியா காந்தி ஆட்சேபிக்கும் வகையில் செய்கை காட்டினார். அவர் வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பத்திக்குப்பின் உள்ள பத்திகள் பாடப்படுவதை நிறுத்த முயன்றதாக பாஜக சார்பில் விமர்சனம் செய்யப்பட்டது. ஆனால், காங்கிரஸ் இதை மறுத்துள்ளது. காங்கிரஸ் தேசிய தலைவராக மல்லிகார்ஜுன கார்கேவுக்காக நாற்காலி (Chair) கேட்டதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.</p><h2>இது தொடர்பாக பாஜக எம்.பி. சுதான்ஷு திரிவேதி கூறியதாவது:-</h2><p>பிரதமர் நரேந்திர மோடியின் உறுதியான நிலைப்பாடு மற்றும் கோடிக்கணக்கான இந்தியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், வந்தே மாதரம்' பாடல் முழுமையாகப் பாடப்பட்ட முதல் சுதந்திர தினம் இதுவாகும்.</p><p>இருப்பினும் மிகவும் விசித்திரமான, முரண்பாடான மற்றும் துரதிர்ஷ்டவசமான ஒரு காட்சி அங்கு அரங்கேறியது. காங்கிரஸ் அலுவலகத்தில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டுக் கொண்டிருந்தபோது, ​​அக்கட்சியின் உயர்மட்ட தலைவரான சோனியா காந்தி, சூப்பர்-தலைவர் ராகுல் காந்தி மற்றும் தற்போதைய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தங்களுக்குள் பேசிக்கொண்டும், யாரையோ விசித்திரமான மற்றும் ஆட்சேபனைக்குரிய, மரியாதையற்ற விதத்தில் சைகை செய்து அழைத்துக் கொண்டும் இருந்தனர்.</p><p>காங்கிரஸ் கட்சியால் வந்தே மாதரம் என்ற தேசியப் பாடலை ஒருவேளை இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதையே இது உணர்த்துகிறது.</p><p>இவ்வாறு பாஜக எம்.பி. விமர்சித்துள்ளார்.</p><h2>பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா கூறியதாவது:-</h2><p>வந்தே மாதரம் பாடலின் ஆரம்பப் பகுதிகள் பாடப்பட்ட நிலையில், சோனியா காந்தி சற்றே பதற்றமடைந்து, அப்பாடலை முழுமையாக இசைப்பதற்குப் பதிலாக அதை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார். ராகுல் காந்தியும் அப்பாடலை முடித்துவிடுமாறு சைகை செய்வது போல் காணப்பட்டார். இருப்பினும், அப்பாடலைத் தொடர்ந்து இசைக்குமாறு அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">For the first time, the entire ‘Vande Mataram’ was sung at the Congress headquarters on Independence Day.<br><br>After the initial stanzas of Vande Mataram were sung, Sonia Gandhi became agitated and asked for the rendition to be stopped rather than played in full. Rahul Gandhi too… <a href="https://t.co/ITgkkBvStG">pic.twitter.com/ITgkkBvStG</a></p>&mdash; Amit Malviya (@amitmalviya) <a href="https://x.com/amitmalviya/status/2088526437225783323?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure> <p>இதிலுள்ள செய்தி தெளிவாக இருந்தது. அது, புதிய சட்டக் கட்டமைப்பின் கீழ் தேசியப் பாடலை முழுமையாக மதித்து நடக்க வேண்டும். வேண்டுமென்றே அதற்குத் தடையையோ அல்லது இடையூறையோ ஏற்படுத்தினால் அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.</p><p>இறுதியில் அவர்கள் இணங்கி வந்தனர். வந்தே மாதரம் பாடல் முழுமையாகப் பாடப்பட்டது. கலாசார ரீதியாகத் தன்னம்பிக்கை கொண்ட, நாகரிக வேர்களை ஆழமாகக் கொண்ட ஒரு இந்தியாவைக் குறித்த கருத்தாக்கத்துடன், காந்தி குடும்பத்தினரும் காங்கிரஸ் கட்சியினரும் பல தசாப்தங்களாக ஒருவித சங்கடமான உறவையே கொண்டிருந்துள்ளனர். வேடிக்கை என்னவென்றால், சுதந்திர தினத்தன்று அந்தச் சங்கடமான நிலை வெளிப்படையாகத் தெரிந்தது.</p><p>இவ்வாறு அமித் மால்வியா தெரிவித்தார்.</p><h2>பாடல் வரிகள் குறித்த விவாதம்</h2><p>1875-ஆம் ஆண்டில் பங்கிம் சந்திர சட்டர்ஜியால் இயற்றப்பட்ட வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பத்திகள் மட்டுமே 1937-ல் தேசியப் பாடலாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்து பெண் தெய்வங்களைப் பற்றிய குறிப்புகளைக் கொண்டிருந்த மற்ற நான்கு பத்திகள் இதில் சேர்க்கப்படவில்லை. இதற்கு சில பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து அந்த வரிகளை பாடாமல் புறக்கணித்து வந்தனர்.</p><p>இதற்கிடையே பொதுக் கூட்டங்கள், பள்ளிகள் மற்றும் அதிகாரப்பூர்வ அரசு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட இடங்களில் 'வந்தே மாதரம்' பாடலை முழுமையாகப் பாட வேண்டும் என்று கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு உத்தரவிட்டது.</p><p>மேலும், வந்தே மாதரம் பாடலைப் பாடுவதை வேண்டுமென்றே தடுத்தாலோ, இடையூறு செய்தாலோ அல்லது பாடுவதைத் தடுத்தாலோ அது குற்றச்செயல் என்று அறிவிக்கும் மசோதா ஒன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஜனாதிபதியும் ஒப்புதல் வழங்கியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நிவின் பாலி - மமிதா ஜோடி நடித்த  &apos;பெத்லகேம் குடும்ப யூனிட்&apos; படத்தின் டிரெய்லர் வெளியானது!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/nivin-pauly-mamitha-bethlehem-kudumba-unit-trailer-released</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/nivin-pauly-mamitha-bethlehem-kudumba-unit-trailer-released#comments</comments><guid isPermaLink="false">5f90767d-87f8-4a9c-996c-c815ad24b627</guid><pubDate>Sat, 15 Aug 2026 12:25:16 +0000</pubDate><atom:updated>2026-08-15T12:25:16.870Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Mamitha Baiju,nivinpauly,பெத்லகேம்குடும்பயூனிட்,நிவின் பாலி,மமிதாபைஜூ,BethlehemKudumbaUnit</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/dkcwhxkt/BethlehemKudumbaUnit" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ NivinPauly - Mamitha Baiju]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/dkcwhxkt/BethlehemKudumbaUnit?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>‘பிரேமலு’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இயக்குனர் கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படமான <strong>'<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D">பெத்லகேம் குடும்ப யூனிட்</a>' (Bethlehem Kudumba Unit)</strong> அதிகாரப்பூர்வ டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.</p><p>பவானா ஸ்டுடியோஸ் தயாரிப்பில்<a href="https://www.maalaimalar.com/topic/nivin-pauly"> நிவின் பாலி</a> மற்றும்<a href="https://www.maalaimalar.com/topic/mamitha-baiju"> மமிதா பைஜூ</a> முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.</p><h2><strong>வித்தியாசமான கதைக்களம்</strong></h2><p><strong>பெத்லகேம் குடும்ப யூனிட் படத்தின் </strong>டிரெய்லர் முழுக்க முழுக்க நகைச்சுவை மற்றும் குடும்ப எமோஷனல் காட்சிகளால் நிரம்பியுள்ளது. </p><p>கல்லூரியில் படிக்கும் ஆஷ்லி என்ற கதாபாத்திரத்தில் (மமிதா பைஜூ) மற்றும் ஜஸ்டின் கதாபாத்திரத்தில் (நிவின் பாலி) ஆகியோருக்கு இடையே நடக்கும் சுவாரசியமான உரையாடல்களும், ஒரு நடுத்தரக் குடும்பத்தில் நடக்கும் எதார்த்தமான சம்பவங்களும் டிரெய்லரில் கலகலப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. </p><p>பழைய கால இணையதளக் காலகட்ட நினைவுகளையும், தற்கால தலைமுறையின் காதல் ரசனையையும் இணைத்து இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது.</p><h2><strong>நட்சத்திர பட்டாளம் &amp; தொழில்நுட்பக் கலைஞர்கள்</strong></h2><p>மலையாளத் திரையுலகில் கடந்த 2024-ஆம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் பிரபலமாகி ரூ.130 கோடிக்கும் மேல் வசூல் செய்து வரலாற்றுச் சாதனை படைத்த 'பிரேமலு' திரைப்படத்தை இயக்கியவர் கிரிஷ் ஏ.டி. தான் தற்போது 'பெத்லகேம் குடும்ப யூனிட்' படத்தையும் இயக்கியுள்ளார்.</p><p>முன்னணி நட்சத்திரங்களான நிவின் பாலி மற்றும் மமிதா பைஜூ இவர்களுடன் திலீஷ் போத்தன், <a href="https://www.maalaimalar.com/topic/fahadh-fasil">ஃபகத் பாசில் </a>மற்றும் ஷியாம் புஷ்கரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தில் சங்கீத் பிரதாப், சுரேஷ் கிருஷ்ணா, வினய் ஃபோர்ட், ஷியாம் மோகன், பிந்து பணிக்கர் மற்றும் ஸ்ரீந்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். </p><p>மேலும், இந்தத் திரைப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைக்க, அஜ்மல் சாபு ஒளிப்பதிவையும், ஆகாஷ் ஜோசப் வர்கீஸ் படத்தொகுப்பையும் மேற்கொண்டுள்ளனர்.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/fk0JHh1P9H0"></iframe></figure><h2><strong>அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி</strong></h2><p>டிரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இத்திரைப்படம் வரும் <strong>2026 ஆகஸ்ட் 21</strong> அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>மாநில அந்தஸ்தை பறிக்காமல் இருந்திருந்தால், PoK மக்கள் ஜம்மு-காஷ்மீருடன் இணைய கிளர்ந்து எழுந்திருப்பார்கள்- உமர் அப்துல்லா</title><link>https://www.maalaimalar.com/news/national/pok-would-have-joined-jammu-and-kashmir-if-omar-abdullah-on-special-status</link><comments>https://www.maalaimalar.com/news/national/pok-would-have-joined-jammu-and-kashmir-if-omar-abdullah-on-special-status#comments</comments><guid isPermaLink="false">f46f0ee3-1db3-4d8b-842e-9711e4bba273</guid><pubDate>Sat, 15 Aug 2026 12:13:35 +0000</pubDate><atom:updated>2026-08-15T12:13:35.375Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜம்மு காஷ்மீர்,Jammu and Kashmir,omar abdullah,உமர் அப்துல்லா,PoK</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/nf5my0g4/OmarAbdullah001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உமர் அப்துல்லா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/nf5my0g4/OmarAbdullah001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜம்மு- காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, மாநில அந்தஸ்து பறிக்கப்படாமல் இருந்திருந்தால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) மக்கள் ஜம்மு-காஷ்மீருடன் இணையக் கிளர்ந்தெழுந்திருப்பார்கள் என்று அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார்.</p><p>ஸ்ரீநகரில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் உமர் அப்துல்லா உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-</p><p>1947-ல் பாகிஸ்தானிலிருந்து வந்த பழங்குடியின ஊடுருவல்காரர்களை எதிர்த்துப் போராடி, இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்க தீர்மானித்த காஷ்மீர் மக்களின் முடிவை PoK-ல் நிலவும் தற்போதைய சூழல் நியாயப்படுத்தியுள்ளது. ஜனநாயக உரிமைகளைக் கோரியதற்காக பலர் கொல்லப்பட்டும், ஏராளமானோர் காயமடைந்தும், சிறையில் அடைக்கப்பட்டும் உள்ள PoK-ன் நிலைமை தனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது.</p><h2>ஜம்மு-காஷ்மீர் மாநில அந்தஸ்து</h2><p>எல்லையின் மறுபுறம் நிலவும் சூழலைப் பார்க்கும்போது, ​​ஹம்லாவர் கபர்தார், ஹம் காஷ்மீரி ஹைன் தயார் (தாக்குதல் நடத்துபவர்களே எச்சரிக்கை, நாங்கள் காஷ்மீரிகள் தயாராக இருக்கிறோம்) என்று கூறிய நமது முன்னோர்கள் சொன்னது சரிதான் என்பதை நான் உணர்கிறேன்.</p><p>PoK-ல் நிலவும் சூழலைக் கண்டு நான் வேதனை அடைகிறேன். 2019-ல் <a href="https://www.maalaimalar.com/news/world/nyt-india-protests-pakistani-kashmir-reference-in-nyt-report">ஜம்மு-காஷ்மீரின்</a> மாநில அந்தஸ்து மற்றும் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படாமல் இருந்திருந்தால், இன்று PoK மக்கள் ஜம்மு-காஷ்மீருடன் மீண்டும் இணைவதற்காகக் கிளர்ந்தெழுந்திருப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.</p><p>என்றாவது ஒரு நாள் அந்த இடங்கள் நிரப்பப்படும் என்ற நம்பிக்கையில், சட்டப்பேரவையில் அந்தப் பகுதிக்கான இடங்களை நாங்கள் காலியாக வைத்துள்ளோம்.</p><p>மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பு ரீதியான உத்தரவாதங்களை மீட்டெடுப்பதற்கும், ஜம்மு-காஷ்மீரை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கும் எங்கள் அரசு உறுதியுடன் உள்ளது. இந்த இலக்குகளை நிறைவேற்ற நாங்கள் பாடுபடுவோம்</p><p>இவ்வாறு உமர் அப்துல்லா பேசினார்.</p><p>முன்னதாக, 1947-ல் இந்திய ராணுவம் காஷ்மீருக்கு வருவதற்கு முன்பே, பாகிஸ்தான் ஊடுருவல்காரர்களை எதிர்த்துப் போராடவும் தங்கள் தாயகத்தைக் காக்கவும் காஷ்மீர் மக்களுக்குத் தலைமை தாங்கிய தனது தாத்தாவும், ஜம்மு-காஷ்மீரின் முதல் பிரதமருமான ஷேக் முகமது அப்துல்லாவுக்கு உமர்அப்துல்லா அஞ்சலி செலுத்தினார்.</p><p>இதற்கிடையே உமர் அப்துல்லாவின் கருத்துகள் பொறுப்பற்றவை என்று கூறி பாஜக பதிலடி கொடுத்தது.</p><p>"இது முதல்வரின் பொறுப்பற்ற பேச்சு. நமது தேசியக் கொடியைக் கொண்டாடும் இந்தத் தேசிய நாளில் அவர் அரசியல் செய்கிறார். தனது செயல்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் பேச இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் இதை அரசியலுக்காகப் பயன்படுத்திக்கொண்டார்." என்று ஜம்மு- காஷ்மீர் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் பாஜக தலைவருமான சுனில் சர்மா கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: முதல் சதத்தை பதிவு செய்தார் தேவ்தத் படிக்கல்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/padikkal-century-in-first-innings-against-srilanka-first-test</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/padikkal-century-in-first-innings-against-srilanka-first-test#comments</comments><guid isPermaLink="false">a3dc5aac-8ab1-4042-9ce3-c2dc80703a13</guid><pubDate>Sat, 15 Aug 2026 11:17:12 +0000</pubDate><atom:updated>2026-08-15T11:17:12.648Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Devdutt Padikkal,தேவ்தத் படிக்கல்,SLvIND,இலங்கை இந்தியா தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/5zcqdaom/padikkal.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ padikkal]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/5zcqdaom/padikkal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் தேவ்தத் படிக்கல் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.</p><p>இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.</p><p>இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.</p><h2>நிதான ஆட்டம்</h2><p>அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். இருவரும் நிதானமாக ஆடினர்.</p><p>அணியின் எண்ணிக்கை 47 ஆக இருக்கும்போது ஜெய்ஸ்வால் 32 ரன்னில் ரன் அவுட்டானார்.</p><p>2வது விக்கெட்டுக்கு கே.எல்.ராகுலுடன் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D">தேவ்தத் படிக்கல்</a> ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுப்புடன் ஆடினர்.</p><p>தேநீர் இடைவேளை வர இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்தது. கே எல் ராகுல் காயம் காரணமாக ரிடயர் ஹர்ட் முறையில் ஆடவில்லை. கே.எல்.ராகுல் -படிக்கல் ஜோடி 150 ரன்கள் சேர்த்தது.</p><h2>படிக்கல் சதம்</h2><p>சிறப்பாக ஆடிய படிக்கல் தனது முதல் சதத்தைப் பதிவு செய்து அசத்தினார்.</p>]]></content:encoded></item><item><title>எந்த சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றீர்கள்? ஆர்.எஸ்.எஸ். நோக்கி கேள்வி எழுப்பிய பிரியங்க் கார்கே</title><link>https://www.maalaimalar.com/news/national/priyank-kharge-says-my-only-question-to-the-rss-is-this-tell-us-which-freedom-struggle-you-participated</link><comments>https://www.maalaimalar.com/news/national/priyank-kharge-says-my-only-question-to-the-rss-is-this-tell-us-which-freedom-struggle-you-participated#comments</comments><guid isPermaLink="false">2b4134f4-7b3b-4aa9-acd4-629c40944e95</guid><pubDate>Sat, 15 Aug 2026 11:15:35 +0000</pubDate><atom:updated>2026-08-15T11:15:35.244Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>RSS,ஆர்எஸ்எஸ்,Priyank Kharge,பிரியங்க் கார்கே</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/kh9l81zc/PriyankKharge001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிரியங்க் கார்கே]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/kh9l81zc/PriyankKharge001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜூன கார்கேவின் மகனும், கர்நாடக மாநில உள்துறை அமைச்சருமான பிரியங்க் கார்கே அரசு வளாகங்கள் மற்றும் பொதுச் சொத்துகளின் பயன்பாட்டைக் ஒழுங்குபடுத்துவதற்கான கர்நாடக மசோதா 2026 கூறியதாவது:-</p><p>பா.ஜ.க.வினர் ஏன் இப்போது இந்த மசோதாவைக் கண்டு இவ்வளவு அஞ்சுகிறார்கள்? அவர்கள் இந்த மசோதாவைப் பார்த்திருக்கிறார்களா? உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் உத்தரவுகளில் கூறப்பட்டுள்ளவற்றையே நாங்கள் இந்த மசோதாவில் நடைமுறைப்படுத்துகிறோம். அந்த மசோதாவில் எங்காவது ஏதேனும் அமைப்பின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதா? ஏதேனும் சங்கத்தின் பெயர் உள்ளதா? ஏதேனும் நிறுவனத்தின் பெயர் உள்ளதா? அல்லது ஏதேனும் அரசியல் கட்சியின் பெயர் உள்ளதா?</p><h2>பா.ஜ.க.வுக்கு என்ன பிரச்சனை?</h2><p>நீதிமன்றங்களின் உத்தரவுகளைச் சட்டமாக்கினால், அதில் பா.ஜ.க.வுக்கு என்ன பிரச்சனை? ஒழுங்குபடுத்தும் பொறுப்பைக் கொண்ட மாநிலத்தின் உள்துறை அமைச்சர் நான்தான். பல நேரங்களில், உங்கள் வீட்டின் முன் பெரிய விழாவோ அல்லது ஊர்வலமோ நடக்கும்போது, ​யாருடைய அனுமதியுடன் இது நடக்கிறது? இது என்ன? என்று நீங்களே எங்களை அழைத்து கேட்பதில்லையா?.</p><p>அது ஒரு பொது இடம். நீங்கள் எதைச் செய்ய விரும்பினாலும் உங்கள் வீட்டு வளாகத்திலோ அல்லது அலுவலக வளாகத்திலோ செய்துகொள்ளுங்கள். யாருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை. இது ஒரு தடை என்று மசோதாவில் எங்கே சொல்லியிருக்கிறோம்?</p><h2>ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடம் கேட்கும் ஒரு கேள்வி இதுதான்...</h2><p>ஆர்.எஸ்.எஸ். (RSS) அமைப்பிடம் நான் கேட்கும் ஒரே கேள்வி, எந்தச் சுதந்திரப் போராட்டத்தில் நீங்கள் பங்கேற்றீர்கள்? என்பதுதான். பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் அதில் இணைந்து போராடினார்கள். அப்போது நீங்கள் எங்கே இருந்தீர்கள்? தியாகிகளான 500 காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களின் பட்டியலை நான் தருகிறேன். அவர்கள் குறைந்தது 50 பேரின் பட்டியலையாவது தரட்டும்.</p><p>இந்தியப் பிரிவினைக்குப் பிறகு பல மதக் கலவரங்கள் நடந்தபோது, ​​எந்தக் கலவரத்திலாவது நீங்கள் மக்களைப் பாதுகாத்தீர்களா? சொல்லப்போனால், மதக் கலவரங்கள் உங்களால்தான் ஏற்பட்டன. ஆர்.எஸ்.எஸ். அமைப்பைத் தடை செய்ய முடியாது. சந்தோஷ் மற்றும் மோகன் பகவத் கூறியது உண்மைதான். அவர்களைத் தடை செய்ய முடியாது. அதற்குக் காரணம், அவர்கள் முறையாகப் பதிவு கூட செய்யப்படவில்லை என்பதுதான். உங்கள் அமைப்பை நான் தடை செய்ய வேண்டுமானால், முதலில் நீங்கள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டாமா? நீங்கள் பதிவு கூட செய்யப்படாமல் எப்படி உங்கள் செயல்பாடுகளை நடத்தி வருகிறீர்கள்?</p><p>முன்னேற்பாட்டுப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு (Advance Security Liaison) பாதுகாப்பு யாருக்குக் கிடைக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? வெளியுறவுத் துறை அமைச்சகம், இந்தியாவின் உள்துறை அமைச்சர் மற்றும் இந்தியப் பிரதமர் ஆகியோருக்கு அது வழங்கப்படுகிறது. மோகன் பகவத் விஷயத்திலும் அது உள்ளது. அதற்கான செலவு உங்கள் வரிப்பணத்திலிருந்தே மேற்கொள்ளப்படுகிறது.</p><h2>ஆர்எஸ்எஸ் அம்பேத்கர், மகாத்மா காந்தியை விட்டுவைக்கவில்லை</h2><p>எனவே நான் கேட்பது என்னவென்றால், இன்று கலபுரகி (குல்பர்கா) மக்களின் வரிப்பணம் மோகன் பகவத்தின் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தப்படுகிறது. எந்த அடிப்படையில் நீங்கள் அதைச் செய்கிறீர்கள்? இந்த அமைப்பைச் சேர்ந்த 20 லட்சம் பேர் அணிவகுப்பு (route march) நடத்தும்போது கர்நாடகக் காவல்துறை அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது.</p><p>பாகிஸ்தானுடனும் சீனாவுடனும் நாம் உறவு வைத்திருக்க வேண்டும் என்று சொல்வதற்கு அவர்கள் யார்? பிரியங்க் கார்கே ஏதாவது பேசினால், அவர் வீட்டை விட்டு வெளியே வர முடியாதபடி பார்த்துக் கொள்வோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் நேற்று கூறியதை நான் பார்த்தேன். ஏன்? ஆர்எஸ்எஸ் என்ன செய்யப்போகிறது, என்னைச் சுட்டுக் கொல்லப்போகிறதா? நீங்கள் அம்பேத்கரை விட்டுவைக்கவில்லை. காந்தியடிகளையும் விட்டுவைக்கவில்லை. என்னை மட்டும் விட்டுவைப்பீர்களா? ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்பு என்ற எனது கருத்தை அவரகள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். இல்லையா?</p><p>இவ்வாறு பிரியங்க் கார்கே தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>தந்தையின் உடல்நிலை குறைவால் இந்தியா வந்த H-1B விசா ஊழியர் பணிநீக்கம் - அமெரிக்க ஸ்டார்ட்அப் நிறுவனம் நடவடிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/world/us-startup-fires-indian-h1b-employee-as-he-rushes-to-india-for-fathers-treatment</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-startup-fires-indian-h1b-employee-as-he-rushes-to-india-for-fathers-treatment#comments</comments><guid isPermaLink="false">6242f362-e8af-43fe-8167-1a8ffbdebd3a</guid><pubDate>Sat, 15 Aug 2026 10:50:34 +0000</pubDate><atom:updated>2026-08-15T10:50:34.398Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>H-1B visa,பணிநீக்கம்,H-1B விசா,ஸ்டார்ட்அப்,PrayutJain,பிரயுத்ஜெயின்,TechLayoffs,LinkedIn</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/otzbw24c/H1B-VisaCrisis" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ H1B VisaCrisis ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/otzbw24c/H1B-VisaCrisis?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/america">அமெரிக்கா</a>வின் சான் பிரான்சிஸ்கோ நகரைச் சேர்ந்த பிரபல ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்றில், பொறியாளராக பணியாற்றி வந்த இந்தியத் தொழில்நுட்ப வல்லுநர் பிரயுத் ஜெயின் என்பவர் மோசமான முறையில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். </p><p>தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தந்தையைக் கவனித்துக்கொள்ள <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE">இந்தியா</a>விற்கு வந்த நிலையில், அவருக்கு இந்த அதிர்ச்சித் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>உயிர்காக்கும் போராட்டத்தில் தந்தை</strong></h2><p>இந்தியாவில் இருக்கும் பிரயுத் ஜெயினின் தந்தைக்குக் கடுமையான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE">நிமோனியா</a> காய்ச்சல் ஏற்பட்டு, அது தீவிர நுரையீரல் பாதிப்பாக மாறியது. </p><p>இதனால் அவர் மருத்துவமனையில் வென்டிலேட்டர் மற்றும் எக்மோ போன்ற அதிநவீன உயிர்காக்கும் கருவிகளின் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். </p><p>தந்தையை கவனித்துக் கொள்வதற்காகவும், மருத்துவச் செலவுகளை கவனிக்கவும் பிரயுத் கடந்த ஜூலை 12 அன்று அவசரமாக இந்தியா திரும்பினார்.</p><h2><strong>பங்குரிமைக்குச் சில வாரங்களுக்கு முன் துரோகம்</strong></h2><p>பிரயுத் பணிநீக்கம் செய்யப்பட்டதில் உள்ள மிகப்பெரிய அதிர்ச்சி என்னவென்றால், நிறுவனத்தின் பங்குகள் அவருக்குக் கைக்கு வரும் 'ஈக்விட்டி கிளிஃப்' காலத்திற்குச் சில வாரங்களுக்கு முன்பே அவரை வேளையில் இருந்து தூக்கப்பட்டுள்ளார். </p><p>அக்டோபர் மாதம் அவருக்கு இந்த பங்குகள் கிடைத்திருக்க வேண்டும். ஓராண்டு உழைப்பிற்குப் பிறகு பங்குரிமை கிடைக்கும் நேரத்தில், நிறுவனம் இலாப நோக்கத்தோடும் உள்நோக்கத்தோடும் அவரை நீக்கியுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><h2><strong>போன் காலில் வந்த பணிநீக்கம்</strong></h2><p>இந்தியா வந்த நிலையிலும் பிரயுத் நிறுவனத்தின் வேலைகளில் இருந்து முழுமையாக விலகாமல், தந்தையுடன் இருந்தபடியே தொடர்ந்து லேப்டாப்பில் வேலை செய்து வந்துள்ளார். </p><p>ஆனால், ஜூலை 30 அன்று அவருக்கு வந்த ஒரு சாதாரண போன் காலில், "அடுத்த 15 நாட்களில் உங்கள் வேலை முடிகிறது" என்று கூறப்பட்டுள்ளது. </p><p>இதுவரை அவருக்கு முறையான பணிநீக்கக் கடிதம் கூட வழங்கப்படவில்லை இதனால் அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.</p><h2><strong>விசா அந்தஸ்து மற்றும் எதிர்காலம் கேள்விக்குறி</strong></h2><p>பிரயுத் அமெரிக்காவில் <a href="https://www.maalaimalar.com/topic/h-1b-visa">H-1B விசா</a>வில் பணிபுரிந்து வருகிறார். அமெரிக்க சட்டப்படி, இந்த விசாவில் இருப்பவர்கள் வேலையை இழந்தால், அடுத்த 60 நாட்களுக்குள் புதிய வேலையைக் கண்டறிய வேண்டும்; இல்லையெனில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.</p><p>இதுகுறித்து பிரயுத் ஜெயின் கூறுகையில். "எனது தந்தை உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்த நேரத்தில், மருத்துவர்கள் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைதான் ஒரே வழி என்றார்கள். </p><p>மருத்துவ ரீதியாகவும், உணர்வுபூர்வமாகவும், நிதி ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் என் வாழ்க்கையில் எல்லாமே ஒரே நேரத்தில் நெருங்கி விழுவது போல் இருந்தது. ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தை நம்முடைய சொந்த நிறுவனம் போல நினைத்து உழைக்கச் சொல்கிறார்கள்.</p><p>ஆனால் கஷ்ட காலம் வரும்போது ஊழியர்களை துவைத்து தூக்கி எறிகிறார்கள்" என்று வேதனையுடன் லிங்க்ட்இன் பதிவில் தனது ஏமாற்றத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தினார்.&nbsp;</p>]]></content:encoded></item><item><title>&apos;விஸ்வநாத் அண்ட் சன்ஸ்&apos; படத்திற்கு குவியும் பாராட்டு- நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/surya-thanks-for-wishes-for-viswanath-and-sons</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/surya-thanks-for-wishes-for-viswanath-and-sons#comments</comments><guid isPermaLink="false">e7c8bda4-81e1-4452-bb4e-d6b1648bd8b5</guid><pubDate>Sat, 15 Aug 2026 10:33:37 +0000</pubDate><atom:updated>2026-08-15T10:33:37.567Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Surya,Mamitha Baiju,சூர்யா,GvPrakashkumar,VishwanathAndSons,விஸ்வநாதன் &amp; சன்ஸ்,மமிதாபைஜூ</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/gb4qmmvm/Surya" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Surya]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/gb4qmmvm/Surya?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா, <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9C%E0%AF%82">மமிதா பைஜூ </a>நடிப்பில் உருவான "<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D">விஸ்வநாத் அண்ட் சன்ஸ்</a>" திரைப்படம் நேற்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது. </p><p>நீண்ட நாட்களுக்குப் பிறகு சூர்யா குடும்பக் கதையில் நடித்திருப்பதால், படத்திற்கு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.</p><p>திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், தமக்குக் கிடைத்து வரும் வரவேற்பு குறித்து நடிகர் சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் ரசிகர்களுக்காக நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.</p><h2><strong>'சஞ்சய் விஸ்வநாத்'</strong></h2><p>சர்வதேச துப்பாக்கி சுடுதல் வீரரான 'சஞ்சய் விஸ்வநாத்' என்ற கதாபாத்திரத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE">சூர்யா</a> தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். </p><p>காதல், நகைச்சுவை மற்றும் எமோஷனல் காட்சிகள் நிறைந்த இந்தத் திரைப்படம், சுதந்திர தினத்தை முன்னிட்டு வார இறுதியில் குடும்பங்கள் கொண்டாடும் ஒரு 'ஃபீல்-குட்' படமாக மாறியுள்ளது.</p><h2><strong>நன்றி தெரிவித்த சூர்யா</strong></h2><p>திரைத்துறையினரின் வாழ்த்துகளுக்கும், ரசிகர்களின் பேராதரவிற்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக சூர்யா இன்று தனது நன்றியை அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,</p><p><em><strong>"விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்திற்கு நீங்கள் காட்டிய அனைத்து அன்பு, மரியாதை மற்றும் பாசத்திற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்"</strong> </em>என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p>சூர்யாவின் இந்த நெகிழ்ச்சியான பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. </p><p>ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பில், சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ள இப்படம் தியேட்டர்களில் நல்ல வசூலைப் பெற்று வருகிறது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Thank you for all the Love, Respect &amp; Affection for <a href="https://x.com/hashtag/VAS?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#VAS</a> <a href="https://x.com/hashtag/VishwanathandSons?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#VishwanathandSons</a>  <a href="https://t.co/9XJVGeNesf">pic.twitter.com/9XJVGeNesf</a></p>&mdash; Suriya Sivakumar (@Suriya_offl) <a href="https://x.com/Suriya_offl/status/2088503842635755926?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2><strong>சூர்யா தம்பியின் நெகிழ்ச்சி பதிவு</strong></h2><p>குறிப்பாக சூர்யாவின் தம்பியும் நடிகருமான <a href="https://www.maalaimalar.com/topic/karthi">கார்த்தி</a>, <em>"</em>அழகான கதாபாத்திரங்கள் மற்றும் மிகச்சிறப்பான நடிப்பு!! படம் முழுவதும் முகத்தில் புன்னகையை வரவழைத்து, இதயத்தை அன்பால் நிரப்பும் ஒரு முழுமையான திரைப்படம்!! மீண்டும் ஒருமுறை பார்க்க ஆசைப்படுகிறேன்<em>"</em> என்று படக்குழுவினருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/VenkyAtluri?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#VenkyAtluri</a> what writing man…!! Beautiful characters and stunning performances!! A wholesome film that keeps you smiling throughout and fills your heart with love!! Would love to watch it again….Many Congratulations <a href="https://x.com/vamsi84?ref_src=twsrc%5Etfw">@vamsi84</a> for <a href="https://x.com/hashtag/VishwanathAndSons?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#VishwanathAndSons</a>!! <a href="https://x.com/Suriya_offl?ref_src=twsrc%5Etfw">@Suriya_offl</a> your Class… <a href="https://t.co/4i8LDV3nlg">pic.twitter.com/4i8LDV3nlg</a></p>&mdash; Karthi (@Karthi_Offl) <a href="https://x.com/Karthi_Offl/status/2088111203239510354?ref_src=twsrc%5Etfw">August 14, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>சுதந்திர தினத்தில் சிஜேபியின் அதிகாரப்பூர்வ கணக்கு முடக்கம்.. கோழைகள் என சிஜேபி பதிவு</title><link>https://www.maalaimalar.com/news/national/cjps-official-account-suspended-on-independence-day</link><comments>https://www.maalaimalar.com/news/national/cjps-official-account-suspended-on-independence-day#comments</comments><guid isPermaLink="false">09b50f0e-f2dd-4f1b-82b9-2a1a22d22700</guid><pubDate>Sat, 15 Aug 2026 10:26:56 +0000</pubDate><atom:updated>2026-08-15T10:26:56.216Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சுதந்திர தினம்,Independance Day,CJP,சிஜேபி போராட்டம்,account blocked,கணக்கு முடக்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/ra0xuppz/Untitled-design-60.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CJP Instagram]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/ra0xuppz/Untitled-design-60.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சுதந்திர தினமான இன்று தங்களது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கு காலையில் முடக்கப்பட்ட நிலையில், தற்போது அது மீண்டும் சரி செய்யப்பட்டுள்ளதாக <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">கரப்பான்பூச்சி கட்சி</a> (சிஜேபி) தெரிவித்துள்ளது.</p><p>நாடு சுதந்திரம் அடைந்து 80 ஆணடுகள் ஆன நிலையில், ஆகஸ்ட் 15 அன்று எங்கள் கணக்கு முடக்கப்படுவது, சுதந்திர தினத்தன்று எங்கள் குரலை ஒடுக்கும் முயற்சியாக உள்ளது என சிஜேபி கட்சி தெரிவித்துள்ளது.</p><p>இதுகுறித்து சிஜேபி வெளியிட்ட பதிவில், “காக்ரோச் ஜனதா கட்சியை எதிர்ப்பவர்கள் எங்கள் குரலை ஒடுக்க முயற்சிப்பதற்காக நினைக்கிறார்கள். இந்தியாவின் சுதந்திர தினமான இன்று காக்ரோச் ஜனதா கட்சியை அமைதியாக்க முயற்சிப்பது வெட்கக்கேடானது.</p><p>எங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டுள்ள கோழைத்தனமான செயல்களை கண்டு, நாங்கள் அஞ்சமாட்டோம்,”என்று தெரிவித்துள்ளது.</p><p>இந்த முடக்கம் குறித்து சிஜேபி நிறுவனர் அபிஜீத் திப்கே கூறுகையில், “அவர்கள் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்கியுள்ளனர், கோழைகள்!” என்று கூறியுள்ளார்.</p><p>இதையடுத்து இன்றைய தினம் பிற்பகுதியில் தங்கள் கணக்கு மீட்டெடுக்கப்பட்டதாக சிஜேபி தெரிவித்துள்ளது.</p><p>முன்னதாக வேலையின்மை, கல்வி மற்றும் இளைஞர்களிடையே உள்ள கவலைகள் குறித்த கேள்விகளை எழுப்பி, பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் நாட்டின் இளைஞர்களை சந்தித்து பேச வேண்டும் என்று வலியுறுத்தி தனது பிரச்சாரத்தை தொடங்கியிருந்தார்.</p><p>இதைத்தொடர்ந்து தங்கள் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக சிஜேபி தெரிவித்துள்ளது.</p><p>மேலும், அரசு மற்றும் கிராம பள்ளிகளின் நிலை குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள், மாணவர்கள் மற்றும் கல்வி தொடர்பான பிரச்சினைகள் குறித்த போராட்டங்கள் உள்ளிட்ட, சமீப வாரங்களில் சி.ஜே.பி. நடத்தி வரும் தொடர் பிரச்சாரங்களுக்கு மத்தியில் இந்த வகையிலான முடக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் சிஜேபி தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு</title><link>https://www.maalaimalar.com/spirituality/sabariimala-temple-opening-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/spirituality/sabariimala-temple-opening-tomorrow#comments</comments><guid isPermaLink="false">5c651f84-11ed-4fe4-a51c-74d95eb8a887</guid><pubDate>Sat, 15 Aug 2026 10:15:26 +0000</pubDate><atom:updated>2026-08-15T10:15:26.460Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>sabarimalai,சபரிமலை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/e4dxsnkf/sabarimala.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ சபரிமலை கோவில்]]></media:title><media:description type="html"><![CDATA[ சபரிமலை கோவில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/e4dxsnkf/sabarimala.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தினமும் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், அபிஷேகம், கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகளும், அதனைத்தெடர்ந்து நெய் அபிஷேகம், அஷ்டாபிஷேகம், உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட பூஜைகளும் நடத்தப்படும்.</strong></em>  </p><p><a href="https://www.maalaimalar.com/topic/சபரிமலை">சபரிமலை</a> ஐயப்பன் கோவில் நடை மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்கள் மட்டுமின்றி, மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் முதல் 5 நாட்கள் திறக்கப்படும். அந்த நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி ஆவணி மாத பூஜைகளுக்காக நாளை (16-ந்தேதி) மாலை 5 மணிக்கு ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. கோவிலின் தலைமை தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில் சபரிமலை ஐயப்பன் கோவில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி, நடையை திறக்கிறார்.</p><p>நாளை மாலை நடை திறக்கப்பட்ட பிறகு சிறப்பு பூஜைகள் எதுவும் நடக்காது. நாளை மறுநாள்(17-ந்தேதி) மாதாந்திர பூஜை தொடங்குகிறது. அன்று முதல் வருகிற 21-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும். இந்த நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். </p><p>தினமும் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், அபிஷேகம், கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகளும், அதனைத்தெடர்ந்து நெய் அபிஷேகம், அஷ்டாபிஷேகம், உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட பூஜைகளும் நடத்தப்படும்.  </p><p>இந்த பூஜைகள் அனைத்திலும் பக்தர்கள் கலந்துகொள்ளலாம் என்பதால் மாதாந்திர பூஜையின் போதும், பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். சாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் www.sabarimalaonline.org என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து வரவேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.</p><p>முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே மாதாந்திர பூஜையில் பங்கேற்க முடியும். ஆவணி மாத மாதாந்திர பூஜை 21-ந்தேதி முடிவடைகிறது. அன்றைய தினம் இரவு 10 மணிக்கு சிறப்பு பூஜைகள் நிறைவடைந்ததும் அரிவராசனம் பாடப்பட்டு கோவில் நடைசாத்தப்படும். </p><p>இதையடுத்து ஓணம் பண்டிகைக்காக வருகிற 24-ந்தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மீண்டும் திறக்கப்படுகிறது. வருகிற 25-ந்தேதி ஓணம் பூஜைகள் நடக்கின்றன. மறுநாள் (26-ந்தேதி)திருவேணம் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. ஓணம் பண்டிகைக்காக வருகிற 24-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐயப்பன் கோவில் நடை திறந்திருக்கும். </p><p>மாதாந்திர பூஜை மற்றும் ஓணம் பண்டிகையில் பங்கேற்க பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால், நாளை(16-ந்தேதி) முதல் வருகிற 28-ந்தேதி வரை கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருவனந்தபுரம், செங்கன்னூர், பத்தினம் திட்டா, கொட்டாரக்கரை, எருமேலி, புனலூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து பம்பைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. </p>]]></content:encoded></item><item><title>உதயநிதியை தொடர்ந்து நயினார் நாகேந்திரன்.. அரசியல் களத்தில் தொடரும் நாகரிகமற்ற பேச்சுகள்..!- அண்ணாமலை கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/uncivilized-speeches-continue-in-the-political-arena-annamalai-condemns</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/uncivilized-speeches-continue-in-the-political-arena-annamalai-condemns#comments</comments><guid isPermaLink="false">a0fe0110-bcf2-4e53-9392-6f6a945fdfb6</guid><pubDate>Sat, 15 Aug 2026 10:10:35 +0000</pubDate><atom:updated>2026-08-15T10:10:35.885Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அண்ணாமலை,நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,annamalai,முதலமைச்சர் விஜய்,tn cm vijay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/6o0psznc/Nainar.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Annamalai]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/6o0psznc/Nainar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அப்பாவை காணோம் என்று கூறியதற்கு, விஜய் மற்றும் அவரது குடும்பம் குறித்து அநாகரிகமாக பேசிய  பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.</p><p>இந்நிலையில், நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு வீ த லீடர்ஸ் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:- </p><p>தமிழ்நாட்டின் அரசியல் களத்தை அநாகரிகமாக்கும் பேச்சுகள் தொடர்ந்து அரங்கேறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.<a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95" rel="nofollow"> திமுக</a>வின் உதயநிதி ஸ்டாலினைத் தொடர்ந்து, தற்போது தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களும், அரசியல் நாகரிகத்தின் எல்லைகளை மீறி, தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் தாய் குறித்துக் கருத்து கூறியிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. </p><p>அரசியலில் இருப்பவர்கள் தங்கள் வார்த்தைகளுக்கும், செயல்களுக்கும் பொறுப்புடன் இருக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கொள்கைகளை விமர்சிக்கலாம்.  ஆட்சியின் செயல்பாடுகளைக் கேள்வி கேட்கலாம். ஆனால், ஒருவரின் குடும்பத்தினரை, குறிப்பாக அவர்களின் தாயாரை  இழிவுபடுத்தும் வகையில் பேசுவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. </p><p>இந்த வகையிலான தரக்குறைவான கருத்துக்கள், முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே காலாவதியாகிப் போன அரசியல். இன்றைய தமிழக இளைஞர்களுக்கும், வளரும் நமது குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டியது இத்தகைய மூன்றாந்தர அரசியல் அல்ல.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வடகொரியாவின் 81-வது விடுதலை நாள்: தேசோங்சான் தியாகிகள் நினைவிடத்தில் அதிபர் கிம் ஜோங் உன் அஞ்சலி</title><link>https://www.maalaimalar.com/news/world/north-korea-81st-independence-day-kim-jong-un-pays-tribute</link><comments>https://www.maalaimalar.com/news/world/north-korea-81st-independence-day-kim-jong-un-pays-tribute#comments</comments><guid isPermaLink="false">7b6f5f08-e8f0-41c7-896c-c6a96ebfeef7</guid><pubDate>Sat, 15 Aug 2026 10:09:35 +0000</pubDate><atom:updated>2026-08-15T10:09:35.951Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>North korea,வடகொரியா,சுதந்திர தினம்,president kim jong un,Taesongsan Revolutionary,தேசோங்சான் தியாகிகள்,அதிபர் கிம் ஜோங் உன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/5jkymnrl/korea.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ North Korea's 81st Liberation Day]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/5jkymnrl/korea.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று ஜப்பானிய ஆதிக்கத்திலிருந்து கொரிய தீபகற்பம் விடுதலை பெற்றதன் நினைவாக, ஆண்டுதோறும் வடகொரியாவில் ஆகஸ்ட் 15-ஆம் தேதி 'தாயக விடுதலை நாள்' பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படுகிறது. 81-வது  விடுதலை முன்னிட்டு, நாட்டின் வளர்ச்சிக்கும் விடுதலைக்கும் வித்திட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் அரசு சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.</p><h2>தியாகிகள் நி<strong>னைவிடத்தில்</strong> அஞ்சலி</h2><p><a href="https://www.maalaimalar.com/news/world/internet-services-disrupted-in-taiwan">தலைநகர் பியாங்யாங்</a>கில் அமைந்துள்ள தேசோங்சான் புரட்சித் தியாகிகள் நினைவிடத்திற்கு அதிபர் கிம் ஜோங் உன் நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வில் அவரது மனைவி ரி சோல்-ஜூ, மகள் கிம் ஜூ-ஏ மற்றும் வடகொரிய ஆளும் தொழிலாளர் கட்சியின் மூத்த நிர்வாகிகள், ராணுவ உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.</p><h2>சுதந்திரப் <strong>போராட்ட வீரர்களி</strong>ன் தியாகம் </h2><p>நினைவஞ்சலிக்குப் பிறகு பேசிய அதிபர் கிம் ஜோங் உன், அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராக ரத்தம் சிந்திப் போராடிய முதல்கட்ட புரட்சியாளர்களின் தளராத மன உறுதியும் தியாகமுமே வடகொரியாவின் அமைதிக்கும் வளர்ச்சிக்கும் முதன்மை ஆணிவேராக விளங்குவதாகக் குறிப்பிட்டதுடன், அந்தப் போராட்ட உணர்வு தலைமுறை தலைமுறையாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.</p><h2>புதினின் வா<strong>ழ்த்து</strong> செய்தி</h2><p>தொடர்ந்து, இரண்டாம் உலகப் போரின் போது கொரிய விடுதலையில் பங்குவகித்து உயிர்த்தியாகம் செய்த சோவியத் யூனியன் வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள விடுதலை நினைவிடத்திற்கும் கிம் ஜோங் உன் சென்று மரியாதை செலுத்தினார். இதனிடையே, வடகொரியாவின் 81-வது விடுதலை நாளை முன்னிட்டு ரஷிய அதிபர் விளாமிர் புதின், இரு நாடுகளுக்கும் இடையே வரலாற்று ரீதியாக நிலவும் நட்புறவையும் ஒத்துழைப்பையும் சுட்டிக்காட்டி தனது அதிகாரப்பூர்வ வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அரசியல் விரக்தியின் உச்சம்..!- நயினாரின் சர்ச்சை பேச்சுக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/political-frustration-peak-manickam-thakur-slams-nainar-remarks</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/political-frustration-peak-manickam-thakur-slams-nainar-remarks#comments</comments><guid isPermaLink="false">7c59db67-a391-4c69-b720-c5e147420b64</guid><pubDate>Sat, 15 Aug 2026 09:47:28 +0000</pubDate><atom:updated>2026-08-15T09:47:28.086Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore,முதலமைச்சர் விஜய்,tn cm vijay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/66at4uck/manickam-tagore.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Manickam Tagore]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/66at4uck/manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அப்பாவை காணோம் என்று கூறியதற்கு, விஜய் மற்றும் அவரது குடும்பம் குறித்து அநாகரிகமாக பேசிய  பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.</p><p>இதுகுறித்து காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது குடும்பம் குறித்து அநாகரிகமாக பேசிய  பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.</p><p>அரசியல் விரக்தியின் உச்சத்தில் முதலமைச்சர் விஜய் அவர்களையும் அவரது தாயாரையும் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இழிவாகப் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அரசியல் நாகரிகமற்ற முறையில் தரம் தாழ்ந்து பேசுவது இவருக்கு இது முதல் முறையல்ல. தொடர் வாடிக்கையாகிவிட்டது.</p><p>பொதுவெளியில் கவனத்தைப் பெற பெண்களை இழிவுபடுத்தும் , தனது அருவருக்கத்தக்க பேச்சுக்குத் தமிழ்நாட்டு மக்களிடமும் முதலமைச்சரிடமும் உடனடியாக நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>டார்வின் டெஸ்டில் வங்கதேசம் 426 ரன்கள் குவிப்பு: 2வது இன்னிங்சிலும் ஆஸ்திரேலியா திணறல்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/bangladesh-426-all-out-in-first-innings-against-australia-first-test</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/bangladesh-426-all-out-in-first-innings-against-australia-first-test#comments</comments><guid isPermaLink="false">c47b06cc-5439-43b0-81b4-12c41974d312</guid><pubDate>Sat, 15 Aug 2026 09:45:29 +0000</pubDate><atom:updated>2026-08-15T09:45:29.580Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>AUSvBAN,ஆஸ்திரேலியா வங்கதேசம் தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/eizdjrrf/hasun.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ hasun mahmud]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/eizdjrrf/hasun.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டின் 3வது நாள் முடிவில் ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்துள்ளது.</p><p>ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நஜ்முல் ஹூசைன் ஷான்டோ தலைமையிலான வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது.</p><h2>டார்வின் டெஸ்ட்</h2><p>ஆஸ்திரேலியா-வங்கதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டார்வினில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.</p><h2>ஸ்மித் அரை சதம்</h2><p>அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்கியது. வங்கதேச வீரர்கள் ஆரம்பம் முதலே சிறப்பாக பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன. ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து அரை சதம் கடந்தார். அவர் 71 ரன்னில் அவுட்டானார்.</p><p>இறுதியில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 198 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.</p><p>வங்கதேசம் சார்பில் ஹசன் மகமுது 6 விக்கெட்டும், தஸ்கின் அகமது, எபாடட் ஹொசைன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p>தொடர்ந்து ஆடிய வங்கதேசம் முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 426 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக ஆடிய ஹசன் தமிம் சதமடித்து 101 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஷாண்டோ பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 84 ரன்னில் வெளியேறினார்.</p><p>மொமினுல் ஹக் 49 ரன்னில் அவுட்டானார். மெஹிதி ஹசன் அரை சதம் கடந்து 65 ரன்னில் அவுட்டானார்.</p><p>இதன்மூலம் வங்கதேசம் அணி ஆஸ்திரேலியாவை விட 228 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.</p><h2>ஹேசில்வுட் 6 விக்கெட்</h2><p>ஆஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட் 6 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p>இதையடுத்து, ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் ஜேக் வெதரால்டு 4 ரன்னில் அவுட்டானார். டிராவிஸ் ஹெட் 17 ரன்னில் ஆட்டமிழந்தார். லபுசேன் 31 ரன்னில் வெளியேறினார்.</p><p>4வது விக்கெட்டுக்கு இணைந்த ஸ்டீவ் ஸ்மித், கேமரூன் கிரீன் ஜோடி 49 ரன்கள் சேர்த்த நிலையில், ஸ்மித் 44 ரன்னில் ஆட்டமிழந்தார்.</p><p>மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்துள்ளது. கேமரூன் கிரீன் 43 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.</p><p>இன்னும் இரண்டு மீதமுள்ள நிலையில், வங்கதேசம் 67 ரன் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p>வங்கதேசம் சார்பில் ஹசன் மகமுது 2 விக்கெட் வீழ்த்தினார்.</p>]]></content:encoded></item><item><title>VIDEO- மார்வெல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி: &apos;Avengers: Doomsday&apos; ஸ்பெஷல் லுக் வீடியோவை வெளியிட்ட மார்வெல் ஸ்டுடியோஸ்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/marvel-fans-get-a-pleasant-surprise-avengers-doomsday-special-look-video-released-by-marvel-studios</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/marvel-fans-get-a-pleasant-surprise-avengers-doomsday-special-look-video-released-by-marvel-studios#comments</comments><guid isPermaLink="false">c98e5376-4b9d-4c14-860e-3583c32f87c9</guid><pubDate>Sat, 15 Aug 2026 09:38:42 +0000</pubDate><atom:updated>2026-08-15T09:38:42.677Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே,Russo Brothers,Avengers: Doomsday,MCU,Victor von Doom,மார்வெல் சினிமாட்டிக்,டாக்டர் டூம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/90tl6n1f/dommsday.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Avengers: Doomsday  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/90tl6n1f/dommsday.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலகெங்கிலும் உள்ள மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' திரைப்படத்தின் புதிய ஸ்பெஷல் லுக் வீடியோவை மார்வெல் ஸ்டுடியோஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. </p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/X1aFkAkFASk"></iframe></figure><p>அமெரிக்காவில் நடைபெற்ற 'D23 Disney Fan Event' விழாவில், மார்வெல் தலைவர் கெவின் ஃபேகி, நடிகர்கள் ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் எவான்ஸ் மற்றும் ஹேலி அட்வெல் ஆகியோர் மேடையில் இந்த பிரத்யேக வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினர்</p><h2>வி<strong>ல்லன் அவதாரத்தில் ரா</strong>பர்ட் டவுனி ஜூனியர்</h2><p>ஐயர்ன் மேன் கதாபாத்திரத்தின் மூலம் உலகளவில் பேரன்பைப் பெற்ற ராபர்ட் டவுனி ஜூனியர், இத்திரைப்படத்தில் சக்திவாய்ந்த வில்லனான 'டாக்டர் டூம்' கதாபாத்திரத்தில் களமிறங்குகிறார். தற்போது வெளியாகியுள்ள வீடியோவில், அவரது கொடூரமான பின்னணி, முந்தைய காலக்கட்டம் மற்றும் மல்டிவர்ஸ் உலகைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு அவரிடம் இருக்கும் அளப்பரிய ஆற்றல் ஆகியவை மிக பிரம்மாண்டமாகக் காட்டப்பட்டுள்ளன.</p><h2>ஒரே நேர்கோட்டில் <strong>மோதும் 3 மார்</strong>வெல் உலகங்கள்</h2><p>இத்திரைப்படத்தில் அவெஞ்சர்ஸ், ஃபன்டாஸ்டிக் ஃபோர் மற்றும் எக்ஸ்-மேன் ஆகிய மூன்று வெவ்வேறு சூப்பர் ஹீரோ உலகங்களைச் சேர்ந்த கதாநாயகர்கள் ஒரே புள்ளியில் சந்திக்கின்றனர். தோர் (கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்), ரீட் ரிச்சர்ட்ஸ் (பெட்ரோ பாஸ்கல்), சூ ஸ்டார்ம் (வனேசா கெர்பி) மற்றும் ஸ்டீவ் ரோஜர்ஸ் போன்ற முன்னணி கதாபாத்திரங்கள் டாக்டர் டூமின் பேராபத்தை எதிர்கொள்ள ஒன்றாக இணைய உள்ளனர்.</p><h2>திரையர<strong>ங்கு ரிலீஸ் மற்றும் மு</strong>ன்பதிவு</h2><p>ரூஸோ சகோதரர்கள் இயக்கியுள்ள இத்திரைப்படம் வரும் டிசம்பர் 18, 2026 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. ஸ்பெஷல் லுக் வீடியோ வெளியானதுடன், படத்தின் புதிய போஸ்டரும் வெளியிடப்பட்டு, சர்வதேச அளவிலான டிக்கெட் முன்பதிவுகளும் உடனடியாகத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>கர்ம வினைகள், தோஷங்களை நீக்கும் கருட பஞ்சமி வழிபாடு</title><link>https://www.maalaimalar.com/spirituality/garuda-panchami-worship-2</link><comments>https://www.maalaimalar.com/spirituality/garuda-panchami-worship-2#comments</comments><guid isPermaLink="false">e2880a0e-6a91-481b-bc43-7eb98d54e28c</guid><pubDate>Sat, 15 Aug 2026 09:30:00 +0000</pubDate><atom:updated>2026-08-15T09:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,வழிபாடு,worship,garuda panchami,கருட பஞ்சமி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/pmwns61q/garuda-panchami.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Garudan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/pmwns61q/garuda-panchami.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>கருட பஞ்சமி</h2><p>'பெரிய திருவடி' எனப் போற்றப்படும் கருட பகவான் பிறந்த தினமே 'கருட பஞ்சமி' ஆகும். ஆடி மாத அமாவாசைக்கு பின் வரும் பஞ்சமி திதி நாள்தான், 'கருட பஞ்சமி' என்று போற்றப்படுகிறது. இதை 'கருட ஜெயந்தி' என்றும் சொல்வதுண்டு. ஒரு ஆவணி மாத வளர்பிறை பஞ்சமி திதியுடன் கூடிய சுவாதி நட்சத்திரத்தில் கருடன் அவதரித்ததாக கூறப்படுகிறது.</p> <p>மகாவிஷ்ணுவின் கொடியாகவும், வாகனமாகவும், காவலனாகவும் இருப்பவர், கருட பகவான். கருட பஞ்சமி தினத்தன்று, பறவைகளின் தலைவனாக போற்றப்படும் கருட பகவானையும், மகா விஷ்ணுவையும் விரதம் இருந்து வழிபட்டால் பல நன்மைகளை பெறலாம்.</p><h2>காசியப முனிவர்</h2><p>காசியப முனிவருக்கு வினதை, கத்ரு என இரண்டு மனைவிகள் இருந்தனர். கத்ரு மற்றும் வினதை இருவரும் சகோதரிகள் ஆவர். முதல் மனைவியான கத்ருவுக்கு நாகர்களும், இரண்டாம் மனைவியான வினதைக்கு அருணன் மற்றும் கருடன் ஆகியோரும் மகன்களாக இருந்தனர்.</p> <h2>கத்ரு - வினதை</h2><p>ஒரு சமயம் 'உச்சைஸ்வரஸ்' என்ற தெய்வீக குதிரையின் வாலின் நிறம் குறித்து கத்ருவுக்கும், வினதைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாலின் நிறம் வெள்ளை என்று வினதையும், கருப்பு என்று கத்ருவும் வாதிட்டனர். இறுதியில், யார் கூறுவது உண்மையோ அவருக்கு மற்றவர் அடிமையாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.</p> <p>கத்ரு, தன் மகனான கார்க்கோடகன் என்ற கருப்பு நிற பாம்பின் உதவியுடன், குதிரையின் வெள்ளை நிற வாலை சுற்றி, கருப்பாக தோன்றும்படி செய்தார். கத்ருவின் சூழ்ச்சியால், வினதை கத்ருவுக்கு அடிமையானார்.</p><h2>தாய்ப்பாசம்</h2><p>இதை அறிந்த வினதையின் மகனான கருடன், தன் தாயை விடுவிக்க முயன்றார். அதற்கு, தேவர்களிடம் இருந்து அமிர்த கலசத்தை கொண்டுவர வேண்டும் என்று நாகர்கள் நிபந்தனை விதித்தனர். இதையடுத்து கருடன், தன் வீரத்தாலும், பக்தியாலும் தேவர்களை வென்று, அமிர்த கலசத்தை கொண்டு வந்தார். பின்னர், மகாவிஷ்ணுவின் அருளால் வினதையை அடிமைத் தனத்தில் இருந்து விடுவித்தார்.</p> <h2>மகாவிஷ்ணு</h2><p>கருடனின் துணிச்சலையும், தாய்ப் பாசத்தையும் கண்டு மகிழ்ந்த மகாவிஷ்ணு, அவரை தன் வாகனமாக ஏற்றுக்கொண்டார். இதன் நினைவாக கருட பஞ்சமி கொண்டாடப்படுவதாகவும் கூறப்படுகிறது.</p><h2>கருட பஞ்சமி வழிபாடு</h2><p>இந்த ஆண்டு கருட பஞ்சமி, ஆகஸ்டு 17-ந் தேதி திங்கட்கிழமை வருகிறது. அன்றைய தினம் விரதம் இருந்து வழிபடுவது மிகவும் சிறப்பு ஆகும். அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, பூஜையறையை சுத்தம் செய்து, கருடாழ்வார் மற்றும் மகாவிஷ்ணுவின் படங்களை வைத்து பூஜை செய்ய வேண்டும்.</p> <p>இறைவனுக்கு மஞ்சள், குங்குமம், மலர்கள், துளசி சாற்றி, தீபம் ஏற்றி வழிபட வேண்டும். பழங்கள், பாயசம், சர்க்கரைப் பொங்கல் போன்ற நைவேத்தியங்களை படைக்கலாம். அன்றைய தினம் விஷ்ணு மற்றும் கருடன் பாடல்களையும், மந்திரங்களையும் பாராயணம் செய்து வழிபடலாம்.</p><p>கருட பஞ்சமி தினத்தன்று, அமிர்த கலசத்துடன் இருக்கும் கருடனையும், கருட வாகனத்தில் வலம் வரும் பெருமாளையும் தரிசித்தால் மிகவும் விசேஷமாகும். தன்னை எப்போதும் சுமந்துக் கொண்டிருக்கும் கருடனை வழிபடுபவர்களுக்கு மகா விஷ்ணுவின் அருளும் முழுமையாக கிடைக்கும்.</p> <p>கருடனின் திருவருளைப் பெற்று தரும் கருட பஞ்சமி நாளில், கருடனை மனதார வழிபட்டால் கர்ம வினைகளும், தோஷங்களும் விலகும், பகை உணர்வு நீங்கும், பக்தி, நினைவாற்றல் அதிகரிக்கும். பெண்கள் மாங்கல்ய பேறு பெறுவார்கள். இந்நாளில் கருடனை கண்டால் மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.</p> ]]></content:encoded></item><item><title>வரும் 17-ந்தேதி 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-heavy-rain-in-4-districts-on-17th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-heavy-rain-in-4-districts-on-17th#comments</comments><guid isPermaLink="false">5d6220dd-18cb-470b-8275-1393057da1b1</guid><pubDate>Sat, 15 Aug 2026 09:21:47 +0000</pubDate><atom:updated>2026-08-15T09:21:47.188Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,IMD,TN,Heavy Rain,தமிழ்நாடு,கனமழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/06/15/14313826-rain1.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rain
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/06/15/14313826-rain1.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p> <h2>புதுவை மற்றும் காரைக்கால்</h2><p>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/august-rain-expected-above-normal-in-tamilnadu">மழை </a>பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p> <p>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p> <h2>4 மாவட்டங்களில் கன மழை</h2><p>17-ந்தேதி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.</p> <p>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சேலம், நாமக்கல், பெரம்பலூர், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p>  <p>தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் வட உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.</p><p>வட உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p> <h2>சென்னை மற்றும் புறநகர் பகுதி</h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p> <p>நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நயினாரின் சர்ச்சை பேச்சு அருவருக்கத்தக்கது- அமைச்சர் ராஜ்மோகன் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainars-controversial-speech-is-disgusting-minister-rajmohan-condemns</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainars-controversial-speech-is-disgusting-minister-rajmohan-condemns#comments</comments><guid isPermaLink="false">1ad3c2b3-339c-413b-8031-071817d3dfeb</guid><pubDate>Sat, 15 Aug 2026 09:09:59 +0000</pubDate><atom:updated>2026-08-15T09:09:59.330Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,அமைச்சர் ராஜ்மோகன்,அமைச்சர் வினோத்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/w4s75nqx/Raj-mohan.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Raj mohan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/w4s75nqx/Raj-mohan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது குடும்பம் குறித்து அநாகரிகமாக பேசிய  பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.</p><p>இந்நிலையில், சட்டமன்றத்தில் "அப்பாவை காணவில்லை" என <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-says-tvk-government-will-oppose-anything-that-poses-a-threat-to-state-rights" rel="nofollow">முதலமைச்சர்</a> கூறியதற்கு எதிராக நயினார் நாகேந்திரன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு அமைச்சர் ராஜ்மோகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும்," பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நாகரிகமாக பேச வேண்டும்" என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.</p><h2>அமைச்சர் ராஜ்மோகன்</h2><p>பாஜக மாநில தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanniarasu-says-nainar-nagendran-must-apologize-for-his-uncivilized-remark" rel="nofollow">நயினார் நாகேந்திரன்</a> நாகரிகமாக பேச வேண்டும். நயினாரின் சர்ச்சை பேச்சு அருவருக்கத்தக்கது.</p><p>திமுக- பாஜகவின் மறைமுக நட்பு வெளிப்படுகிறது. ஒரு கட்சியின் தலைவராக நயினார் பேசவில்லை.</p><h2>அமைச்சர் வினோத்</h2><p>நயினார் நாகேந்திரன் அநாகரீகமாக பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. வாய்க்கு வந்தபடி பேசுவது அவரது தரத்தை வெளிப்படுத்துகிறது.</p><p>அரசியல் களத்தில், கருத்தை எதிர்கருத்தால் எதிர்கொள்ளத் திராணியில்லை. நயினார் முதல்வரிடமும் தமிழ்நாட்டு மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்.</p><h2>டிஜிபி அலுவலகத்தில் புகார்</h2><p>முதலமைச்சர் மற்றும் அவரது தாயார் குறித்து அநாகரிகமாக பேசிய நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.</p><p>முதலமைச்சர் குறித்து அநாகரிகமாக பேசிய நயினார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டிஜிபி அலுவலகத்தில் ஆன்லைன் வாயிலாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.</p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மீது <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88" rel="nofollow">குற்றவியல் நடவடிக்கை</a> எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் வர்த்தினி தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நயினார் நாகேந்திரன் தமது அநாகரிகமான பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்! - அமைச்சர் வன்னிஅரசு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanniarasu-says-nainar-nagendran-must-apologize-for-his-uncivilized-remark</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanniarasu-says-nainar-nagendran-must-apologize-for-his-uncivilized-remark#comments</comments><guid isPermaLink="false">a39310c7-e973-4a29-9a10-f432241366e4</guid><pubDate>Sat, 15 Aug 2026 08:51:57 +0000</pubDate><atom:updated>2026-08-15T08:51:57.093Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,cm vijay,minister vanni arasu,அமைச்சர் வன்னி அரசு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/n7k728iq/vanniarasu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vanni arasu - Nainar Nagendran]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/n7k728iq/vanniarasu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது குடும்பம் குறித்து நயினார் நாகேந்திரனின் அநாகரிக பேச்சிற்கு அமைச்சர் வன்னி அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.</strong></em></p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-pledges-to-build-an-india-of-equality-and-social-justice">முதலமைச்சர் விஜய்</a> மற்றும் அவரது குடும்பம் குறித்து அநாகரிகமாக பேசிய  பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மீது டிஜிபி அலுவலகத்தில் வழக்கறிஞர் வர்த்தினி ஆன்லைன் வாயிலாக புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள புகாரில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். </p> <h2>வன்னி அரசு</h2><p>இந்நிலையில் முதலமைச்சர் மற்றும் அவரது குடும்பம் குறித்து நயினார் நாகேந்திரனின் அநாகரிக பேச்சிற்கு அமைச்சர் வன்னி அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">அமைச்சர் வன்னி அரசு</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p> <h2>நயினார் நாகேந்திரன்</h2><p>தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் குறித்தும், அவரது குடும்பம் குறித்தும் மிக மோசமான அருவருக்கத்தக்க வகையில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களின் பேசிய அநாகரிகமான பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.</p><p>பாஜக சனாதனிகளிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?</p> <h2>பாஜக</h2><p>காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி குறித்து இந்திய தலைமை அமைச்சர் மோடி பேசாத அவதூறா?</p><p>காஷ்மீரில் 8 வயது ஆசிபாவை கூட்டு பாலியல்  வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேரணி நடத்தி, 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானுவை கூட்டு பாலியல்  வன்கொடுமை செய்த குற்றவாளிகளை விடுதலை செய்து, வரவேற்பு அளித்தவர்கள் தான் பாஜகவினர்.</p> <p>பெண்களுக்கு எதிரான வெறுப்பும், அவதூறும் தான் அவர்கள் பேசும் அரசியலின் அடிப்படை. இதற்கு முன்னரும் நடிகை ஒருவர் குறித்தும் நயினார் அவர்களின் பேச்சு தரம் தாழ்ந்து அமைந்திருந்தது.</p><p>நயினார் நாகேந்திரன் அவர்கள் தமது அநாகரிகமான பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்காவில் வரலாறு காணாத வகையில் குற்ற சம்பவங்கள் குறைந்து வருகிறது: FBI அறிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/world/historic-drop-in-us-crime-fbi-report</link><comments>https://www.maalaimalar.com/news/world/historic-drop-in-us-crime-fbi-report#comments</comments><guid isPermaLink="false">a03a095d-0db5-42bf-9773-360409f7dd55</guid><pubDate>Sat, 15 Aug 2026 08:29:31 +0000</pubDate><atom:updated>2026-08-15T08:29:31.772Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,America,FBI,எஃப்.பி.ஐ.,crime rate,குற்ற சம்பவம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/4zlwz822/Untitled-design-59.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமெரிக்காவில் கொலை மற்றும் வன்முறைகள் குறைவு]]></media:title><media:description type="html"><![CDATA[ USA Crime rate]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/4zlwz822/Untitled-design-59.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்கவில் 1936-ல் இருந்து கொலை மற்றும் வன்முறைக் குற்றங்களின் புள்ளிவிவரங்களை ஆராய்ந்தபோது, நாட்டின் 2025-ஆம் ஆண்டு கொலை விகிதம் வரலாற்றுச் சரிவை எட்டியுள்ளது என்று <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE" rel="nofollow">அமெரிக்கா</a>வின் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ தெரிவித்துள்ளது. </p><p>மேலும், கொலை மற்றும் வன்முறை குற்றங்களின் புள்ளிவிவரங்கள் ஆண்டுக்கு ஆண்டு மிகப்பெரிய சரிவை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த சரிவுக்கான காரணங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், இந்த ஆண்டில் தேசிய அளவில் ஒரு லட்சம் பேருக்கு 4.1 கொலைகள் என்ற விகிதத்தில், FBI வரலாற்றிலேயே மிகக் குறைந்த விகிதமாக 1955 மற்றும் 1956 ஆம் ஆண்டுகளுடன் ஒத்துப்போகிறது.</p><h3><strong>குற்றவியல் நீதிமன்றம் அறிக்கை</strong></h3><p>இதற்கிடையில், குற்றவியல் நீதிமன்றத்தின் அறிக்கை, கொலை விகிதங்கள் தொடர்ந்து குறைந்து வருவதை குறிப்பிட்டு காட்டுகிறது. இது 2026-ல் தேசிய கொலை விகிதம் மற்றொரு வரலாற்று சரிவை எட்டக்கூடும் என்றும் சுட்டிக்காட்டுகிறது.</p><p>அமெரிக்காவில் குற்ற சம்பவங்கள் குறைந்து வருவது குறித்து குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான ஆடம் கெல்ப் கூறுகையில், “கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட மிக முக்கியமான பொது பாதுகாப்பு முன்னேற்றங்களில் இதுவும் ஒன்றாகும்.</p><p>2022-ஆம் ஆண்டிலிருந்து கொலைகள், பாதிக்கும் கீழாக குறைந்துள்ளன. இதன் காரணமாக உயிர்கள் காப்பாற்றப்பட்டு, குடும்பங்கள் மன உளைச்சலிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.</p><p>சமூகங்கள் பாதுகாப்பானதாக உருவாக்கப்பட்டுள்ளன. இது கொண்டாடப்பட வேண்டிய ஒன்றாகும். இந்த குற்ற சம்பவங்கள் வீழ்ச்சி அடைந்ததை விட, அதற்கான காரணங்கள் தெளிவாக தெரியாமல் உள்ளன.</p><p>குற்றவியல் நீதித்துறை செயல்பாடுகள் மற்றும் உத்திகளில் ஏற்படும் மாற்றங்கள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் சமூகம், கலாச்சாரத்தில் ஏற்படும் பரந்த மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு சாத்தியமான காரணிகளை ஆராய்ச்சியாளர்களும் சட்ட அமலாக்க அதிகாரிகளும் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p>ஆனால் எது, எங்கே, யாருக்கு, மற்றும் என்ன சூழ்நிலைகளில் பலனளிக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நாம் புரிந்துகொள்ளாத முன்னேற்றத்தை வீணடிக்கும் அபாயமும் உள்ளது” என்று அவர் கூறினார்.</p><h3><strong>எஃப்.பி.ஐ அறிக்கை</strong></h3><p>இதுகுறித்து FBI இயக்குநர் காஷ் படேல் வெளியிட்ட அறிக்கையில், “வன்முறை குற்றங்களை ஒடுக்குவதற்காக, FBI-யும் களத்தில் உள்ள நமது சட்ட அமலாக்க அதிகாரிகளும் ஆற்றிவரும் மகத்தான பணிக்கு 2025-ஆம் ஆண்டின் குற்றப் புள்ளிவிவரங்கள் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.</p><p>17,000-க்கும் மேற்பட்ட முகமைகள் தரவுகளைச் சமர்ப்பித்துள்ளன. இது 2024-ஆம் ஆண்டை விட 2.4% அதிகமாக உள்ளது.</p><p>5 லட்சம் முதல் 1 மில்லியன் வரையிலான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் கடுமையான குற்றங்கள் பெருமளவில் குறைந்துள்ளன; கொலைகள் 27%, கொள்ளை 23%, பாலியல் வன்கொடுமை 18% மற்றும் வன்முறைக் குற்றங்கள் 15% வரையிலும் குறைந்துள்ளன.</p><p>இதற்கிடையில், வெறுப்புக் குற்றங்கள் ஒட்டுமொத்தமாக 7% குறைந்து, 2024-ல் 11,404 ஆக இருந்த எண்ணிக்கை 2025-ல் 10,606 ஆக சரிந்துள்ளது.</p><p>பணியில் இருந்த சட்ட <a href="https://www.maalaimalar.com/topic/அமலாக்கத்-துறை">அமலாக்கத் துறை </a>அதிகாரிகள் மீதான தாக்குதல்கள் 2025-ஆம் ஆண்டில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டின.</p><p>அந்த ஆண்டில் நடந்த 90,178 தாக்குதல்களில் கால் பங்கு, அதிகாரிகள் கலவர அழைப்புகளுக்குப் பதிலளித்துக் கொண்டிருந்தபோது நிகழ்ந்தன. கடமையில் இருந்தபோது 53 அதிகாரிகள் குற்றவியல் ரீதியாகக் கொல்லப்பட்டனர்” என்று அந்த FBI அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரூ.13,000 கோடி போதைப்பொருள் வழக்கு: ஐக்கிய அமீரகத்தில் பிடிப்பட்ட கடத்தல் மன்னன்</title><link>https://www.maalaimalar.com/news/national/rs-13000-crore-drug-trafficking-case-indian-officials-arrest-accused-in-uae</link><comments>https://www.maalaimalar.com/news/national/rs-13000-crore-drug-trafficking-case-indian-officials-arrest-accused-in-uae#comments</comments><guid isPermaLink="false">57bbcbe2-8513-49b7-94bd-fb92a47b6c4b</guid><pubDate>Sat, 15 Aug 2026 08:26:51 +0000</pubDate><atom:updated>2026-08-15T08:26:51.785Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>போதைப்பொருள் கடத்தல்,narcotics control bureau,virendra singh basoya,வீரேந்திர சிங் பசோயா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/2ze7bb55/Untitled-design-58.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ரூ.13,000 கோடி போதைப்பொருள் மன்னன் UAE-யில் கைது]]></media:title><media:description type="html"><![CDATA[ 13,000 Crore Drug Kingpin Arrested in UAE]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/2ze7bb55/Untitled-design-58.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>போதைப்பொருள் வழக்கில் தேடப்பட்டு வந்த வீரேந்திர சிங் பசோயாவை ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து, <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">போதைப்பொருள் கடத்தல்</a> கட்டுப்பாட்டு பிரிவினர் இந்தியாவிற்கு அழைத்து கொண்டு வந்தனர்.</p><p>இந்தியாவில் இருந்து வெளிநாட்டு சந்தைகளுக்கு பெருமளவு போதைப்பொருள் கடத்திய சம்பவத்தில் பசோயாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் அதிகாரிகள் குற்றம்சாட்டினர்.</p><h3><strong>ரூ.13,000 கோடி போதைப்பொருள் வழக்கு</strong></h3><p>கடந்த 2024 பிப்ரவரி 21 அன்று, புனே காவல்துறை டெல்லியில் திவேஷ் சரண்ஜித் பூட்டானி மற்றும் சந்தீப் குமார் ராஜ்பால் பசோயா ஆகியோரை கைது செய்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த சுமார் 970 கிலோ போதைப்பொருளை பறிமுதல் செய்தது.</p><p>இதுகுறித்து புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், “சர்வதேச சந்தையில் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த சரக்கு, லண்டனுக்கு அனுப்பி விற்பனை செய்யப்பட இருந்தது. </p><p>வீரேந்திர பசோயாவின் தலைமையில் பூட்டானி மற்றும் சந்தீப் குமார் ராஜ்பால் பசோயா ஆகியோர், இந்த போதைப்பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்தும் செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.</p><p>சுமார் ரூ.13,000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக, பசோயா என்பவரை டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவு தேடி வந்தனர்.</p><p>மேலும் அவருடைய மகன் ரிஷப் பசோயாவுக்கு எதிராகவும் இண்டர்போல் அதிகாரிகள் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்தனர்.</p><p>இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தில் டெல்டா லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சந்தீப் ஹனுமான்சிங் யாதவ் மற்றும் நிறுவன மேலாளர் தேவேந்திர ராம்ஃபுல் யாதவ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போதைப்பொருளை ஒரு வழக்கமான வர்த்தக சரக்கு போல் மாற்றி, பாதுகாப்பு சோதனைகளில் மாட்டிக் கொள்ளாதவாறு ஏற்றுமதி செய்தது தெரியவந்தது,” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><h3><strong>மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா</strong></h3><p>இந்த பசோயாவின் கைது நடவடிக்கை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “மோடி அரசு, வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை இடைவிடாமல் தேடிப்பிடித்து, அவர்களை முழுமையாக அழித்து வருகிறது.</p><p>போதைப்பொருட்களுக்கு எதிரான சகிப்புத்தன்மையற்ற கொள்கையில் ஒரு புதிய மைல்கல்லை உருவாக்கும் வகையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து தப்பியோடிய போதைப்பொருள் மன்னன் வீரேந்தர் சிங் பசோயாவை அதிகாரிகள் என்சிபி மீட்டுள்ளது.</p><p>குற்றவாளியை முழுமையாக பின்தொடர்ந்ததன் மூலம், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் எங்கு ஒளிந்திருந்தாலும், இந்திய சட்டத்தின் கரத்திலிருந்து அவர்களால் தப்பிக்க முடியாது என்பதை நமது அமைப்புகள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளன” என்று பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>24 மணி நேரத்திற்குள் மாற்றம்: என்ரிகா நிறுவனத்தின் 11 மதுபான வகைகளுக்கான தடையை நீக்கியது டாஸ்மாக் நிர்வாகம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/24-hour-turnaround-tasmac-lifts-ban-on-11-enrica-liquor-brands</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/24-hour-turnaround-tasmac-lifts-ban-on-11-enrica-liquor-brands#comments</comments><guid isPermaLink="false">f0bc7817-a1ce-4715-ae22-199cfd2bb0b4</guid><pubDate>Sat, 15 Aug 2026 08:22:28 +0000</pubDate><atom:updated>2026-08-15T08:22:28.409Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>FSSAI,Tasmac,டாஸ்மாக் நிர்வாகம்,Brands Enrica,என்ரிகா நிறுவனம்,மதுபானக்கடை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/2pwidhja/TASMAC.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Brands Enrica]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/2pwidhja/TASMAC.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் பிரபல மதுபான உற்பத்தி நிறுவனமான என்ரிகா எண்டர்பிரைசஸ் தயாரிக்கும் 11 வகையான மதுபானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த விற்பனைத் தடையை, உத்தரவிட்ட 24 மணி நேரத்திற்குள்ளேயே டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகத் திரும்பப் பெற்றுள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட பிராண்டுகளின் விற்பனை மற்றும் கிடங்கு விநியோகம் மீண்டும் உடனடியாகச் செயல்பாட்டிற்கு வரவுள்ளது.</p><h2>உணவு <strong>பாதுகாப்புத் து</strong>றை ஆய்வு</h2><p>முன்னதாக, பூந்தமல்லி பகுதியில் இயங்கி வரும் என்ரிகா நிறுவனத்தின் உற்பத்தி வளாகத்தில் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தீவிர ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில், தயாரிப்புகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் செயற்கை சுவையூட்டும் பொருட்கள் சேர்க்கப்பட்டதாகக் கூறி, 10 பிராந்தி வகைகள் மற்றும் 1 ரம் வகை உள்ளிட்ட 11 பிராண்டுகளை உடனடியாகச் சந்தையிலிருந்து திரும்பப் பெற FSSAI பரிந்துரைத்திருந்தது.</p><h2>டாஸ்மாக் நி<strong>ர்வாகத்தின்</strong> முந்தைய நடவடிக்கை</h2><p>FSSAI அமைப்பின் அறிக்கையைத் தொடர்ந்து, <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/11-liquor-brands-banned-in-tasmac">மதுவிலக்கு </a>மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையரின் வழிகாட்டுதலின்படி டாஸ்மாக் மேலாண் இயக்குநர் கே.நந்தகுமார் அனைத்து மண்டல மற்றும் டிப்போ மேலாளர்களுக்கும் அவசரச் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். அதில், குறிப்பிட்ட 11 மதுபான வகைகளையும் சில்லறை விற்பனைக் கடைகளுக்கும், FL-2 மற்றும் FL-3 உரிமம் பெற்ற ஹோட்டல்கள் மற்றும் கிளப்புகளுக்கும் விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.</p><h2>மீண்டும் <strong>விற்பனைக்கு அனும</strong>தி </h2><p>தடை விதிக்கப்பட்ட குறுகிய கால இடைவெளியில், உரிய தெளிவுபடுத்தல்கள் மற்றும் நடைமுறை மறுபரிசீலனைகளுக்குப் பிறகு, அந்த 11 மதுபான வகைகளின் மீதான தடையை நீக்கி டாஸ்மாக் நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து, கிடங்குகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த என்ரிகா நிறுவனத்தின் தயாரிப்புகளை மீண்டும் சில்லறை விற்பனை நிலையங்களுக்கு அனுப்பும் பணிகள் தொடங்கியுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>போதை- வன்முறை கலாசாரத்திற்கு இளைஞர்கள் இடம் கொடுக்கக்கூடாது: ஜி.கே. வாசன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/gk-vasan-says-youth-should-not-give-in-to-the-culture-of-drugs-and-violence</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/gk-vasan-says-youth-should-not-give-in-to-the-culture-of-drugs-and-violence#comments</comments><guid isPermaLink="false">b11f6f15-df47-45b7-b36b-8d7e0a371ebd</guid><pubDate>Sat, 15 Aug 2026 08:12:03 +0000</pubDate><atom:updated>2026-08-15T08:12:03.423Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>GK Vasan,Tamil maanila congress,ஜிகே வாசன்,தமிழ் மாநில காங்கிரஸ்,Independence Day,சுதந்திர தினம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/h1k389wm/vasan.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஆழ்வார்பேட்டையில் உள்ள த.மா.கா. தலைமை அலுவலகத்தில் தலைவர் ஜி.கே.வாசன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆழ்வார்பேட்டையில் உள்ள த.மா.கா. தலைமை அலுவலகத்தில் தலைவர் ஜி.கே.வாசன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/h1k389wm/vasan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சுதந்திரத்தின் பெருமையையும், தியாகிகள் செய்த தியாகத்தையும் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு இளம் தலைமுறையினரிடம் இருக்கிறது.</strong></em></p><p>80-வது சுதந்திர தினத்தையொட்டி ஆழ்வார்பேட்டையில் உள்ள த.மா.கா. தலைமை அலுவலகத்தில் தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/ஜிகே-வாசன்">ஜி.கே.வாசன்</a> தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.</p><p>இந்த நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், ராணி கிருஷ்ணன் நம்பி, விடியல் சேகர், சக்தி வடிவேல், கோவிந்த சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். மக்கள் தலைவர் மூப்பனார் பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது.</p><p>பின்னர் ஜி.கே. வாசன் நிருபர்களிடம் கூறும்போது, </p><p>சுதந்திரத்தின் பெருமையையும், தியாகிகள் செய்த தியாகத்தையும் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு இளம் தலைமுறையினரிடம் இருக்கிறது. இளைய தலைமுறையினர் போதை, வன்முறைக் கலாச்சாரத்திற்கு இடம் கொடுக்கக்கூடாது.  தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாக மாற்றம் ஏற்பட்டு உள்ளது. மக்களின் இந்த விருப்பத்தை வரவேற்போம். மாற்றங்கள் தொடர வேண்டும் என்றார்.</p><p>சிந்தாதிரிப்பேட்டையில் த.மா.கா சார்பில் வட்ட தலைவர் பி.அழகுவேல் தலைமையில் மாநில பொது செயலாளர் முனவர் பாட்ஷா தேசிய கொடியேற்றினார். </p><p>மாநில கொள்கை பரப்பு செயலாளர் வி.எம்.அரவணன் இனிப்புகள் வழங்கினார். இதில் சர்கிள் தலைவர் என்.ஆர்.டி.தயாளன், கே.சந்தானம், புகழேந்தி, ரெக்ஸ் ஜெகன், கிருஷ்ணன், ஆர்.எஸ்.குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>பிரான்ஸில் காட்டுத்தீ: 1,100 ஹெக்டேர் காடுகள் சாம்பல்; 500-க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்!</title><link>https://www.maalaimalar.com/news/world/wildfire-in-france-1100-hectares-burned-over-500-evacuated</link><comments>https://www.maalaimalar.com/news/world/wildfire-in-france-1100-hectares-burned-over-500-evacuated#comments</comments><guid isPermaLink="false">9853bec2-7c44-47f3-940c-e603c300e5f9</guid><pubDate>Sat, 15 Aug 2026 08:05:13 +0000</pubDate><atom:updated>2026-08-15T08:05:13.255Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பிரான்ஸ்,France,காட்டுத்தீ,France Wildfire,Luglon Fire,லுக்லான் தீவிபத்து,France Heatwave</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/wp9x2o2a/France-Wildfire" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ France Wildfire ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/wp9x2o2a/France-Wildfire?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஐரோப்பிய நாடான பிரான்ஸின் தென்மேற்குப் பகுதியில் திடீரெனப் பரவிய <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80">காட்டுத்தீ</a>யால் ஒட்டுமொத்தப் பகுதியும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. </p><p>இதுவரை 1100 ஹெக்டேருக்கும் அதிகமான காடுகள் தீயில் கருகியுள்ள நிலையில், பாதுகாப்பு கருதி 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு அவசரமாக வெளியேறினார்.</p><h2><strong>தீவிரம் அடைந்த வெப்ப அலை</strong></h2><p>இந்த ஆண்டு கோடைகாலத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D">பிரான்ஸ்</a> நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தொடர்ச்சியான வெப்ப அலைகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>காடுகள் வறண்டு, மிக எளிதாகத் தீப்பற்றக்கூடிய "தகரப் பெட்டி" போன்ற சூழலில் இருந்ததே இந்தத் தீ விபத்து மிக வேகமாகப் பரவியதற்குக் முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. </p><p>வியாழக்கிழமை அன்று லேண்ட்ஸ் மாகாணத்தில் இந்த புதிய காட்டுத்தீ உருவாகியுள்ளது.</p><h2><strong>தீயணைப்பு வீரர்களின் போராட்டம்</strong></h2><p>காட்டுத்தீயைக் கட்டுக்குள் கொண்டு வர 500-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் அதிநவீன வாகனங்கள் களமிறக்கப்பட்டுள்ளன. </p><p>நள்ளிரவு நேரத்தில், 'லாண்டஸ் டி காஸ்கோக்னே' இயற்கை பூங்காவில் அமைந்துள்ள 'லுக்லான்' என்ற சிறிய கிராமத்திற்கு மிக அருகில் தீப்பொறிகள் எழும்பின. </p><p>எனினும், தீயணைப்பு வீரர்கள் இரவு முழுவதும் போராடி தீயை கிராமத்திற்குள் நுழைய விடாமல் தடுத்தனர். இதனால் வீடுகள் எதுவும் சேதமடையவில்லை என்றும் கூறினர்.</p><h2><strong>அடுத்த 15 மணி நேரம்</strong></h2><p>நேற்றைய நிலவரப்படி, லுக்லான் கிராமம் முழுவதும் அடர்ந்த கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது. தீயின் வேகம் தற்பொழுது சற்றே குறைந்திருந்தாலும், மதிய நேரத்தில் வெப்பநிலை மீண்டும் 36°C வரை உயரக்கூடும் என்பதால், அணைக்கப்பட்ட தீ மீண்டும் பற்றிக்கொள்ளலாம் எனத் தீயணைப்புத் துறைத் தலைவர் அர்னாட் ஃபாப்ரே கவலை தெரிவித்துள்ளார். </p><p>மாகாண அதிகாரி கில்ஸ் கிளாரூல் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அடுத்த 15 மணி நேரம் நமக்கு மிகவும் சவாலான மற்றும் தீர்க்கமான நேரமாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.</p><h2><strong>வரலாற்றுப் பின்னணி</strong></h2><p>பிரான்ஸ் அதிகாரிகள் தற்பொழுது ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிட்டு வருகின்றனர். </p><p>தென்மேற்கு பிரான்சில் கடந்த 1949-ஆம் ஆண்டிற்குப் பிறகு ஏற்பட்ட மிக மோசமான மற்றும் மிகப்பெரிய காட்டுத்தீ சம்பவங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது என்றும் கூறி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>டிஜிட்டல் ஊடகங்களுக்கு இணையான சமவாய்ப்பு: டிவியின் 12 நிமிட விளம்பரக் கட்டுப்பாட்டை நீக்கியது மத்திய அரசு!</title><link>https://www.maalaimalar.com/news/national/equal-opportunity-for-digital-media-centre-removes-12-minute-tv-ad-cap</link><comments>https://www.maalaimalar.com/news/national/equal-opportunity-for-digital-media-centre-removes-12-minute-tv-ad-cap#comments</comments><guid isPermaLink="false">b8427785-59e0-4ae9-8916-1769af845aa7</guid><pubDate>Sat, 15 Aug 2026 08:00:27 +0000</pubDate><atom:updated>2026-08-15T08:00:27.701Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>central government,digital media,advertising cap,டிஜிட்டல் ஊடகங்கள்,டிவி விளம்பரம்,டிஜிட்டல் மீடியா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/voa7i20a/TV.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ advertising cap ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/voa7i20a/TV.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தொலைக்காட்சி சேனல்கள் ஒரு மணி நேரத்திற்கு 10 நிமிடங்கள் வணிக விளம்பரம் மற்றும் 2 நிமிடங்கள் சுய விளம்பரம் என மொத்தம் 12 நிமிடங்கள் மட்டுமே விளம்பரம் ஒளிபரப்ப வேண்டும் என்ற கட்டுப்பாடு நடைமுறையில் இருந்தது. 2006-ஆம் ஆண்டு <a href="https://www.maalaimalar.com/news/national/national-flag-delivered-by-drone-to-post-office-har-ghar-tiranga-himachal">கேபிள் தொலைக்காட்சி</a> நெட்வொர்க் விதிகளின் கீழ் கொண்டுவரப்பட்ட இந்த விளம்பரக் கட்டுப்பாட்டை தளர்வு செய்து நீக்குவதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p><h2>டிஜிட்டல் ஊட<strong>கங்களுக்கு இணை</strong>யான சமவாய்ப்பு</h2><p>தற்போதுள்ள காலகட்டத்தில் டிஜிட்டல் மற்றும் சமூக ஊடக தளங்களில் விளம்பரங்களுக்கு எந்தவித கால வரம்பும் கிடையாது. இதனால் பாரம்பரிய தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு கடும் வருவாய் இழப்பும் சமமற்ற போட்டியும் ஏற்பட்டு வந்தது. இந்த இடைவெளியைக் குறைத்து, தொலைக்காட்சி ஊடகங்களுக்கும் டிஜிட்டல் தளங்களுக்கு இணையான சமமான வாய்ப்பை வழங்குவதற்காகவும், தொழில் நடத்துவதை எளிதாக்குவதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>தொலைக்காட்சி<strong>த் துறையின் அப</strong>ரிமிதமான வளர்ச்சி</h2><p>கடந்த 2006-ஆம் ஆண்டு இக்கட்டுப்பாடு விதிக்கப்பட்ட போது இந்தியாவில் வெறும் 62 தொலைக்காட்சி சேனல்கள் மட்டுமே இயங்கி வந்தன. ஆனால் தற்போது 900-க்கும் மேற்பட்ட சேனல்கள் செயல்பட்டு வருகின்றன. </p><p>மேலும், கேபிள் டிவி, DTH, HITS மற்றும் IPTV போன்ற நவீன டிஜிட்டல் தொழில்நுட்ப மாற்றங்களால் நேயர்களுக்கு பல நூற்றுக்கணக்கான சேனல்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சந்தையில் போதிய போட்டி நிலவுவதால், இனி சந்தை விதிகளே விளம்பர நேரத்தைத் தீர்மானிக்கும் என அரசு தெளிவுபடுத்தியுள்ளது.</p><h2>உடனடியாக அம<strong>லுக்கு வரு</strong>கிறதா?</h2><p>மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் எடுத்துள்ள இந்த முடிவு, கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க் விதிகள், 1994 திருத்தம் செய்யப்பட்டு மத்திய அரசின் அரசிதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் நாளில் இருந்து நடைமுறைக்கு வரும்.</p>]]></content:encoded></item><item><title>16-வது உலகக் கோப்பை ஆக்கி தொடர் இன்று தொடக்கம்- வேல்ஸ் உடன் மோதும் இந்தியா </title><link>https://www.maalaimalar.com/sports/india-vs-wales-opener-16th-hockey-world-cup-starts-today</link><comments>https://www.maalaimalar.com/sports/india-vs-wales-opener-16th-hockey-world-cup-starts-today#comments</comments><guid isPermaLink="false">f3a7af6e-3683-48ee-9dd8-3721f43967b9</guid><pubDate>Sat, 15 Aug 2026 07:55:14 +0000</pubDate><atom:updated>2026-08-15T07:55:14.315Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய அணி,Indian team,hockey,ஆக்கி,Hockey World Cup,உலகக்கோப்பை ஆக்கி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/4ye6ichp/Hockey.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Hockey]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/4ye6ichp/Hockey.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>16-வது உலக கோப்பை ஆக்கி போட்டியை பெல்ஜியம், நெதர்லாந்து ஆகியவை இணைந்து நடத்துகின்றன. </p><p>இந்த போட்டி இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. 30-ந் தேதி வரை உலக கோப்பை ஆக்கி ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் நடைபெறுகிறது.</p><h2>16 நாடுகள்</h2><p>ஆண்கள் பிரிவில் பங்கேற்கும் 16 நாடுகளும்  4 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. இந்திய அணி டி பிரிவில் இடம்பெற்று உள்ளது. பாகிஸ்தான்,  இங்கிலாந்து  வேல்ஸ் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.</p><p>‘ஏ’ பிரிவில் நெதர்லாந்து, அர்ஜென்டினா, நியூசிலாந்து, ஜப்பான்  ‘பி’ பிரி வில்  நடப்பு சாம்பியன் ஜெர்மனி, பெல்ஜியம், </p><p>பிரான்ஸ், மலேசியா  ‘சி’ பிரிவில்  ஆஸ்திரேலியா, ஸ்பெயின், அயர்லாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் இடம் பெற்று உள்ளன.</p><p>ஒவ்வொரு அணியும்  தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில்  ஒவ்வொரு பிரிவிலும் முதல்  2 இடங்களை பிடிக்கும் அணிகள் அதாவது 8 நாடுகள் 2-வது  சுற்றுக்கு  தகுதி பெறும். </p><p>எஞ்சிய 8 அணிகள்‌ 9 முதல் 16-வது இடங்க ளுக்கான போட்டியில் ஆடும். பெல்ஜியத்தின் வேவ்ரே, நெதர்லாந்தின் ஆம்ஸ்டல்வீன் ஆகிய நகரங்களில் போட்டி நடக்கிறது. மொத்தம் 50  ஆட்டங்கள் நடைபெறுகிறது.</p><h2>இந்தியா - வேல்ஸ் </h2><p>உலக கோப்பை ஆக்கி போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இந்தியா-வேல்ஸ் (‘டி’ பிரிவு) அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு ஆம்ஸ்டல்வீனில் போட்டி  நடக்கிறது.</p><p>ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>ஒலிம்பிக்கில் 8 முறை தங்கம் வென்ற இந்திய அணி உலக கோப்பையில் பெரிதாக சாதிக்கவில்லை. </p><p>1975-ல்  மட்டும் சாம்பியன் ஆனது. அதற்கு பிறகு சோபிக்க முடியவில்லை. 51 ஆண்டுகளுக்கு பிறகு  உலக  கோப்பை  மீண்டும் கிடைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><h2>மற்ற ஆட்டங்கள்</h2><p>இன்று நடைபெறும் மற்ற  போட்டிகளில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி- மலேசியா (மாலை 6), இங்கிலாந்து- பாகிஸ்தான் (இரவு 10.30), பெல்ஜியம்- பிரான்ஸ் (நள்ளிரவு 12.30 மணி) அணிகள் மோதுகின்றன.</p><p>பெண்கள் பிரிவில் நடைபெறும் ஆட்டங்களில் ஆஸ்திரேலியா-ஜப்பான், ஜெர்மனி-ஸ்கார்ட்லாந்து, நெதர்லாந்து-சிலி, அர்ஜென்டினா-அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.</p><p>போட்டிகள் அனைத்தும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>சீன அச்சுறுத்தல்: தைவானில் முடங்கிய இணைய சேவை! போர்க்கால அவசரநிலை சோதனை</title><link>https://www.maalaimalar.com/news/world/internet-services-disrupted-in-taiwan</link><comments>https://www.maalaimalar.com/news/world/internet-services-disrupted-in-taiwan#comments</comments><guid isPermaLink="false">cc9abcfc-fef0-4b85-8eb5-a7e283159721</guid><pubDate>Sat, 15 Aug 2026 07:37:27 +0000</pubDate><atom:updated>2026-08-15T07:37:27.047Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Taiwan,தைவான்,Taiwan  Internet shutdown,Chinese Threat,சீன அச்சுறுத்தல்,தைவான் இணைய சேவை முடக்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/ultxvyl4/TAIWAN.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Taiwan  Internet shutdown]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/ultxvyl4/TAIWAN.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தைவான் நாட்டின் மீது சீனா எந்நேரமும் படையெடுக்கலாம் அல்லது வான்வழித் தாக்குதல்களை நடத்தலாம் என்ற அச்சம் அதிகரித்து வரும் சூழலில், தைவான் அரசு நாடு முழுவதும் தனது வருடாந்திர 'ஹான் குவாங்' சிவில் பாதுகாப்புப் பயிற்சியை நடத்தியுள்ளது. இந்த முறை வழக்கம் போல் நடத்தப்படும் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை சைரன் பயிற்சிகளுடன் சேர்த்து, வரலாற்றிலேயே முதல் முறையாக நாடு தழுவிய அளவில் கைபேசி இணைய வேகத்தை அதிரடியாகக் குறைத்து ‘இணைய முடக்க’ சோதனையையும் தைவான் மேற்கொண்டுள்ளது.</p><h2>டிக்டாக் <strong>முதல் சோஷியல் மீடியா</strong> வரை ஸ்தம்பித்த சேவைகள்</h2><p>இந்தப் பயிற்சியின் போது தைவானின் தலைநகர் தைபே உட்பட முக்கிய பகுதிகளில் இணைய வேகம் மிகக் கடுமையாகக் குறைக்கப்பட்டது. சாதாரண கைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் மட்டுமே வேலை செய்தன. உயர் அலைவரிசை தேவைப்படும் டிக்டாக், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள், வீடியோ ஸ்ட்ரீமிங் சேவைகள் மற்றும் வீடியோ கால்கள் முற்றிலும் செயல்படாமல் முடங்கின. பல பயனர்களுக்கு டிக்டாக் செயலி திறக்கவே இல்லை; இன்ஸ்டாகிராமில் ஒரு மெசேஜ் செல்ல 30 வினாடிகளுக்கு மேல் ஆனதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.</p><h2>சைர<strong>ன் ஒலிகள்</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/news/world/indonesia-hit-by-powerful-7-7-quake-coastal-regions-suffer-severe-damage">வான்வழித் தாக்குதல்</a> சைரன் ஒலித்தவுடன், காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் தெருக்களில் இருந்த மக்களை உடனடியாக அருகில் உள்ள நிலத்தடிப் பாதைகள் மற்றும் வாகனக் காப்பகங்களுக்குச் செல்ல அறிவுறுத்தினர். சில நிமிடங்களிலேயே பரபரப்பான நகர வீதிகள் முற்றிலும் வெறிச்சோடின. அதே நேரத்தில், மக்களின் செல்போன்களுக்கு "தகவல் தொடர்பு உள்கட்டமைப்பு மீதான தாக்குதலைச் சித்தரிக்கும் வகையில் இணைய வேகம் குறைக்கப்படுகிறது" என்ற எச்சரிக்கைச் செய்தியும் அனுப்பப்பட்டது.</p><h2>ரேடியோ <strong>அலைவரி</strong>சை</h2><p>இணையம் மற்றும் 4G/5G நெட்வொர்க் முற்றிலும் முடங்கும் போது, நாட்டின் மக்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு அமைப்புகள் எவ்வாறு தொடர்பில் இருப்பது என்பதைத் தைவான் பரிசோதித்தது. சில தன்னார்வ சிவில் பாதுகாப்பு அமைப்புகள் இணையமே தேவையில்லாத, குறைந்த மின்சாரத்தில் இயங்கும் நீண்டதூர ரேடியோ அலைவரிசைகள் மற்றும் புளூடூத் சாதனங்கள் மூலம் மெசேஜ்களை அனுப்பி வெற்றிகரமாகச் சோதித்தனர். இதன் மூலம் அவசர காலத்தில் அரசின் கட்டளைகளையும் தகவல்களையும் மக்களுக்குக் கொண்டு சேர்க்க முடியும் என்பது உறுதி செய்யப்பட்டது.</p><h2>சைபர் தாக்<strong>குதல் அச்சுறுத்த</strong>ல்</h2><p>தைவானை உலகத்துடன் இணைக்கும் 16 சர்வதேச ஆழ்கடல் இணைய கேபிள்கள் மீது சீனா மறைமுகத் தாக்குதல்களை நடத்தும் அபாயம் உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் சீனக் கப்பல்கள் தைவானின் கடல்சார் கேபிள்களைச் சேதப்படுத்திய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.</p><p>ஒருவேளை போர் மூண்டால், சீனா முதலில் தைவானின் இணையத் தொடர்பையும், ஆழ்கடல் கேபிள்களையும் துண்டித்து, நாட்டை உலகிலிருந்து தனிமைப்படுத்த முயற்சிக்கும் என்பதால், இந்த முன்கூட்டிய டிஜிட்டல் முடக்கப் பயிற்சி மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.</p><h2>உக்ரைன் <strong>போரிலிருந்து க</strong>ற்றுக்கொண்ட பாடம்</h2><p>ரஷிய-உக்ரைன் போரின் போது உக்ரைனின் இணையக் கட்டமைப்புகள் அழிக்கப்பட்ட பிறகு, எலான் மாஸ்க்கின் 'ஸ்டார்லிங்க்' செயற்கைக்கோள் இணையம் அந்நாட்டிற்குப் பெரும் உதவியாக இருந்தது. அதேபோல, தைவானும் குறைந்த புவி சுற்றுப்பாதையில் இயங்கும் செயற்கைக்கோள் இணைய சேவைகளை நாட்டிற்குள் கொண்டு வரச் சட்டத் திருத்தங்களைச் செய்து வருகிறது. எதிரி நாடுகள் இணையத்தைத் துண்டித்தாலும் செயற்கைக்கோள் மூலம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யத் தைவான் நடவடிக்கை எடுத்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>சுதந்திர தின விழாவை 2-வது ஆண்டாக புறக்கணித்த கார்கே, ராகுல் - காரணம் இதுதான்!</title><link>https://www.maalaimalar.com/news/national/mallikarjun-kharge-rahul-gandhi-skip-independence-day-event-for-2nd-second-consecutive-year</link><comments>https://www.maalaimalar.com/news/national/mallikarjun-kharge-rahul-gandhi-skip-independence-day-event-for-2nd-second-consecutive-year#comments</comments><guid isPermaLink="false">af4513c7-a6db-4020-9f49-3b36e55dfd8f</guid><pubDate>Sat, 15 Aug 2026 07:29:07 +0000</pubDate><atom:updated>2026-08-15T07:29:07.354Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Congress,காங்கிரஸ்,mallikarjun kharge,மல்லிகார்ஜூன கார்கே,Independence Day,சுதந்திர தினம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/u02tozgh/rahulgandhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rahul Gandhi - Mallikarjun Kharge]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/u02tozgh/rahulgandhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியும், கார்கேவும் தொடர்ந்து 2-வது ஆண்டாக சுதந்திர தின விழாவில் பங்கேற்கவில்லை.</strong></em></p><h2>பிரதமர் மோடி</h2><p>டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில் <a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-hoists-national-flag-red-fort-delhi">பிரதமர் மோடி</a> தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் தொடர்ந்து 2-வது ஆண்டாக சுதந்திர தின விழாவை புறக்கணித்தனர்.</p> <h2>சுதந்திர தின விழா</h2><p>2024-ம் ஆண்டு நடைபெற்ற <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">சுதந்திர தின விழா</a>வின்போது சர்ச்சை எழுந்தது. மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி மத்திய மந்திரிக்கு இணையான அந்தஸ்து கொண்டவர் ஆவார். செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் வழக்கமான மரபு மற்றும் நெறிமுறைகளுக்கு மாறாக கடைசி வரிசையில் அவருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்தது.</p> <p>ராகுல்காந்திக்கு பின் வரிசையில் இருக்கை ஒதுக்கியது மக்களுக்கு இழைக்கப்பட்ட அவமரியாதை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. அதே நேரத்தில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு இடம் அளிக்கும் வகையில் இருக்கை அமைப்பில் மாற்றம் செய்யப்பட்டதாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் அளித்து இருந்தது.</p> <h2>எதிர்க்கட்சி தலைவர்</h2><p>அரசின் நெறிமுறைகளின்படி இத்தகைய முக்கிய விழாக்களின்போது எதிர்க்கட்சி தலைவர் முன்வரிசையில் அமர வைக்கப்பட வேண்டும் என்பது வழக்கமாகும். இதன் காரணமாகவே ராகுல்காந்தியும், கார்கேவும் தொடர்ந்து 2-வது ஆண்டாக சுதந்திர தின விழாவில் பங்கேற்கவில்லை.</p>]]></content:encoded></item><item><title>நாளை நாக சதுர்த்தி: நாகராஜர்கள் அருளால் தோஷம் நீங்கி வாழ்வு வளம் பெறும் நாள்</title><link>https://www.maalaimalar.com/spirituality/tomorrow-naga-chathurthi-worship</link><comments>https://www.maalaimalar.com/spirituality/tomorrow-naga-chathurthi-worship#comments</comments><guid isPermaLink="false">b3f73337-b750-4be7-9a4e-81547d7b3865</guid><pubDate>Sat, 15 Aug 2026 07:23:06 +0000</pubDate><atom:updated>2026-08-15T07:23:06.222Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வழிபாடு,worship,நாக சதுர்த்தி,naga chaturthi</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/azhwh9yc/NagaChaturthi.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நாக சதுர்த்தி வழிபாடு]]></media:title><media:description type="html"><![CDATA[ நாக சதுர்த்தி வழிபாடு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/azhwh9yc/NagaChaturthi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஜாதகத்தில் உள்ள சர்ப்ப மற்றும் கிரக பீடைகள் தணியும். வீட்டில் அமைதி நிலவும். எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி நல்ல அதிர்ஷ்டம் பெருகும்.</strong></em> </p><p>‘நாகம்’ என்பது இந்து சமயத்தில் வெறும் பாம்பு அல்ல; அது தெய்வீக சக்தியின் அடையாளம். சிவபெருமானின் திருமேனியில் அலங்கரிக்கும் நாகம், மகாவிஷ்ணுவின் ஆதி சேஷன், சுப்ரமணிய சுவாமியின் திருவடியில் அமர்ந்திருக்கும் சர்ப்பம் –இவை அனைத்தும் நாக வழிபாட்டின் உயர்ந்த ஆன்மிக அர்த்தத்தை உணர்த்துகின்றன.</p><p>ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்திய ஆன்மிக மரபில் நாக வழிபாடு சிறப்பாக இருந்து வருகிறது. மனித வாழ்க்கையில் ஏற்படும் திருமணத் தடை, சந்தானப் பிரச்சனை, ராகு-கேது தோஷம், குடும்பத் துன்பம், மனஅமைதியின்மை போன்றவற்றிலிருந்து விடுபட நாக சதுர்த்தி விரதமும் பூஜையும் மிகவும் சக்திவாய்ந்ததாகக் கருதப்படுகிறது.</p><p>இந்த ஆண்டில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">நாக சதுர்த்தி</a> நாளை (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது. இந்த புனித நாளில் பக்தியுடன் நாகராஜர்களை வணங்குவோருக்கு தெய்வ அருள் கிட்டி வாழ்க்கை தடைகள் விலகும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/spirituality/naga-chaturthi-worship-2">நாக சதுர்த்தியின்</a> ஆதாரம் வேதங்கள், மகாபாரதம், புராணங்கள் ஆகியவற்றில் காணப்படுகிறது. காஸ்யப முனிவருக்கும் கத்ரு தேவிக்கும் நாகர்கள் பிறந்தனர். அவர்கள் தெய்வீக சக்தி பெற்றவர்களாக இருந்தாலும், தாயின் கட்டளையை மீறியதால் சாபம் பெற்றதாக புராணம் கூறுகிறது.</p><p>பிற்காலத்தில் தட்சகன் என்ற நாகம் தீண்டியதால் பரீட்சித் மன்னன் இறந்தான். இதனால் துயரமுற்ற ஜனமேஜயன், அனைத்து பாம்புகளையும் அழிக்க சர்ப்பயாகம் செய்தான். அந்த வேள்வியில் எண்ணற்ற நாகங்கள் தீயில் விழுந்து அழியத் தொடங்கின. அப்போது ஆஸ்திக முனிவர் வந்து ஜனமேஜயனை சமாதானப்படுத்தி யாகத்தை நிறுத்தினார். நாக இனத்திற்கு சாப விமோசனம் கிடைத்தது. அந்த அருள் நிகழ்ந்த தினமே நாக சதுர்த்தி எனப் போற்றப்படுகிறது.</p><p>இந்த வரலாறு நமக்கு ஒரு பெரிய ஆன்மிகப் பாடத்தை கற்பிக்கிறது: அழிவை விட கருணை உயர்ந்தது; கோபத்தை விட காப்பதே தெய்வீகமானது. நாகம் என்பது குண்டலினி சக்தியின் அடையாளம். மனித உடலில் உறங்கிக் கிடக்கும் தெய்வீக சக்தி விழிப்பதை நாகம் குறிக்கிறது. அதனால் யோக மரபிலும் நாகத்திற்கு உயர்ந்த இடம் உண்டு.</p><p>சிவன் – நாகாபரணம் அணிந்திருக்கிறார்.  விஷ்ணு – ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டிருக்கிறார். முருகன் – சர்ப்ப சக்தியின் அருளுடன் அருள்பாலிக்கிறார்.  அம்மன் – நாக வடிவ சக்தியாக பல தலங்களில் அருள் பாலிக்கிறார். எனவே நாக வழிபாடு என்பது பயத்தால் செய்யப்படுவது அல்ல; உள்ளுறைந்த தெய்வீக சக்தியை விழிப்பிக்கும் ஆன்மிக சாதனை ஆகும். நாக சதுர்த்தி அனுஷ்டிப்பதற்கான முக்கிய காரணங்கள், நாகதோஷ நிவர்த்தி, ராகு-கேது பீடைகள் குறைதல், திருமணத் தடை நீக்கம், புத்திர பாக்கியம், குடும்ப ஒற்றுமை, மன அமைதி, பித்ரு அருள், கர்ம நிவர்த்தி. சிலருக்கு அடிக்கடி பாம்பு கனவில் தோன்றுதல், நாக உருவம் மீண்டும் மீண்டும் கண்ணில் படுதல், திருமணத் தாமதம், கருச்சிதைவு, சந்தானத் தடை போன்றவை இருந்தால் நாக வழிபாடு செய்யும்படி பெரியவர்கள் கூறுவர். நாக சதுர்த்தி விரதத்தின் பலன்கள் குறித்து சாஸ்திரங்கள் கூறுவது,  திருமண யோகம் கைகூடும், தொடர்ந்து தடைப்பட்ட திருமணங்கள் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது. கணவன்-மனைவி ஒற்றுமை பெருகும் பிரிவு, கருத்து வேறுபாடு, குடும்ப கலக்கம் குறையும். சந்தான பாக்கியம் கிடைக்கும். குழந்தை பாக்கியம் வேண்டி பலர் இந்த விரதத்தை அனுஷ்டிக்கிறார்கள். ராகு-கேது தோஷங்கள் குறையும்.</p><p>ஜாதகத்தில் உள்ள சர்ப்ப மற்றும் கிரக பீடைகள் தணியும். வீட்டில் அமைதி நிலவும். எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி நல்ல அதிர்ஷ்டம் பெருகும். தொழில் மற்றும் வருமான முன்னேற்றம், தடைப்பட்ட காரியங்கள் நடைபெற்று வளம் அதிகரிக்கும். ஆனால் மிக முக்கியமான பலன், பயம் அகலும்; பக்தி பெருகும்; மனம் சுத்தமாகும்.</p><h2><strong>வீட்டிலேயே நாக பூஜை செய்வது எப்படி?</strong></h2><p>அதிகாலை விரைவாக எழுந்து ஸ்நானம் செய்ய வேண்டும். வீட்டின் பூஜை அறையை சுத்தம் செய்ய வேண்டும். கோலம் போட்டு தீபம் ஏற்ற வேண்டும். வெள்ளி, பித்தளை, கல் நாகம் இருந்தால் வைக்கலாம். இல்லையெனில் மஞ்சளால் நாக உருவம் வரையலாம். பூஜை பொருட்கள் மஞ்சள், குங்குமம், சந்தனம், அருகம்புல், அரளி, செவ்வரளி பூ, பால், துள்ளுமாவு, வெல்லம், வாழைப்பழம்,</p><p>“ஓம் நமோ நாகதேவதாப்யோ நம:” என்று 11 முறை ஜபிக்கவும். மஞ்சள், சந்தனம் சாத்தவும். அருகம்புல் சமர்ப்பிக்கவும். பால் அபிஷேகம் செய்யலாம் (அளவோடு). துள்ளுமாவு மற்றும் வெல்லம் நைவேத்தியம் செய்யவும். குடும்ப நலன் வேண்டி பிரார்த்தனை செய்யவும். மாலை நேரத்தில் மீண்டும் தீபம் ஏற்றி நாக ஸ்லோகத்தை ஜபிப்பது சிறப்பு. நாகர் சன்னதி உள்ள கோவில்களில் செய்யும் நாக பூஜைக்கு பால், மஞ்சள், சந்தனம் கொண்டு செல்லலாம். அருகம்புல் மாலை சமர்ப்பிக்கலாம். நாக பிரதிஷ்டை செய்து அர்ச்சனை செய்யலாம். ராகு-கேது சாந்தி பூஜை செய்யலாம். சிலர் 9 வாரங்கள் தொடர்ந்து நாகர் வழிபாடு செய்வார்கள். இது திருமணத் தடை நீக்கத்திற்கு மிகவும் பிரசித்தமான பரிகாரமாக கருதப்படுகிறது. நாக சதுர்த்தி நாளில் செய்ய வேண்டிய மிகப்பெரிய பூஜை, யாரையும் காயப்படுத்தாதிருங்கள். உயிர்களை அன்புடன் காக்குங்கள்.</p><p>மரங்களை நட்டிடுங்கள். முன்னோர்களை நினைத்து பிரார்த்தியுங்கள். மனதில் இருக்கும் கோபத்தை விடுங்கள். நாகர்கள் பூமியின் காவலர்கள் என சாஸ்திரம் கூறுகிறது. பூமியை காப்பவர்களை வணங்கும் போது நம் வாழ்க்கையும் பாதுகாக்கப்படும். இந்த நாக சதுர்த்தி நாளில் நாகராஜர்களின் திருவருளால் திருமணத் தடை நீங்கட்டும், சந்தான பாக்கியம் கிட்டட்டும், குடும்பங்களில் ஒற்றுமை பெருகட்டும், ராகு-கேது பீடைகள் விலகட்டும், நோய்கள் குறையட்டும், மன அமைதி நிலவட்டும், கர்மத் துன்பங்கள் கரையட்டும்.</p><p>அனந்த வாசுகி தட்சக காளிங்க கார்க்கோட காதி நாகராஜர்கள் அனைவரின் அருளால் ஒவ்வொரு பக்தரின் துயரங்களும் நீங்கி, செல்வம், சந்தோஷம், ஆன்மிக முன்னேற்றம், இறையருள் ஆகிய நான்கு பெரும் பேறுகளும் கிடைக்க இறைவனை பிரார்த்தித்து அருள் பெறலாம்.</p>]]></content:encoded></item><item><title>வயது முதிர்ந்த அளவுக்கு அரசியலில் முதிர்ச்சி இல்லை..!- ஆர்.எஸ்.பாரதி பேச்சுக்கு கொந்தளித்த அமைச்சர் ராஜேஷ்குமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajeshkumar-criticizes-rs-bharathi-controversial-remarks</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajeshkumar-criticizes-rs-bharathi-controversial-remarks#comments</comments><guid isPermaLink="false">b16d31c2-2ac6-4055-b1cf-470ccf5352af</guid><pubDate>Sat, 15 Aug 2026 07:16:36 +0000</pubDate><atom:updated>2026-08-15T07:16:36.898Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,RS Bharathi,ஆர்எஸ் பாரதி,அமைச்சர் ராஜேஷ்குமார்,Minister rajeshkumar</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/v92tbia3/Rajesh-kumar.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ RS Bharathi- Minister Rajesh kumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/v92tbia3/Rajesh-kumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அரசியல் பொதுக்கூட்டத்தில் பேசும்போது, "சிறப்பாக செயல்பட்டும் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மா.சுப்பிரமணியம் ஆகியோரை தோற்கடித்தது ஏற்றுக்கொள்ள முடியாதது.</p><p>அவர்களுக்கு வாக்கு அளிக்காதவர்கள் நன்றாக இருக்க மாட்டார்கள்" என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.</p><p>இதுபற்றி அமைச்சர் ராஜேஷ்குமார் கூறியதாவது:- </p><p>ஆர்.எஸ்.பாரதி தி.மு.க.வில் மூத்த தலைவர், வயது முதிர்ந்தவர். அவருக்கு வயது முதிர்ச்சி அடைந்த அளவுக்கு அரசியல் முதிர்ச்சி அடையவில்லை  என்பதையே இது காட்டுகிறது.</p><p>அரசியலில் நீண்ட காலம் பயணித்து வரும் ஆர்.எஸ்.பாரதி போன்றவர்கள் இந்த மாதிரி தரம் தாழ்ந்து கருத்துக்களை தெரிவிப்பது, மக்கள் மத்தி யில் பேசுவது அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் சார்ந்த இயக்கத்துக்கும் இழுக்கை தான் ஏற்படுத்தும்.</p><p>ஜனநாயகத்தில் எவ்வளவோ பெரிய தலைவர்கள் எல்லாம் தோல்வியை தழுவி இருக்கிறார்கள். பெருந்தலைவர் காமராஜர் கூட தோற்கடிக்கப் பட்டிருக்கிறார். அன்னை இந்திரா காந்தியும் தோற்கடிக்கப்பட்டார்.</p><p>ஜனநாயகத்தில் வெற்றி, தோல்வி என்பது சகஜமானது. அதை அரசியல் கட்சிகளால் ஏற்றுக் கொள்ள தங்களை தாங்களே பக்குவப்படுத்தி கொள்ள வேண்டும். வெற்றி பெற்றதும் மக்களை வாயார புகழ்வதும், தோல்வி அடைந்ததும் வாய்க்கு வந்தபடி பேசுவதும் சரியானது அல்ல.</p><p>ஒரு இயக்கம் தோற்றா லும், அந்த இயக்கத்தினுடைய முக்கிய தலைவர்கள் தோற்றாலும், அந்த தோல் விக்கான காரணங்களை ஆய்வு செய்ய வேண்டும்.</p><p>அதன் பின்னர் மக்கள் கருத்து அறிந்து மக்கள் மனதில் இடம் பிடிக்கும் வகையில் தங்கள் செயல்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும். இதுதான் நல்ல அரசியல் தலைவர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் அழகாக இருக்கும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>பிரிட்டிஷ் செஸ் தொடரில் இளம் தலைமுறையின் வரலாற்று சாதனை: 3 இளம் இந்திய வம்சாவளி நட்சத்திரங்கள் முத்திரை!</title><link>https://www.maalaimalar.com/sports/historic-young-indian-origin-stars-shine-at-british-chess-championship</link><comments>https://www.maalaimalar.com/sports/historic-young-indian-origin-stars-shine-at-british-chess-championship#comments</comments><guid isPermaLink="false">58f25b81-c995-4a63-9d1f-706f54d4fec3</guid><pubDate>Sat, 15 Aug 2026 07:14:27 +0000</pubDate><atom:updated>2026-08-15T07:14:27.699Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>British Chess series,Shreyas Royal,Pothana Sivanandan,Supratit Banerjee,பிரிட்டிஷ் செஸ்  தொடர்,ஸ்ரேயாஸ் ராயல்,போதனா சிவநந்தன்,சுப்ரதித் பானர்ஜி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/lbugqaay/chess.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ British Chess series ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/lbugqaay/chess.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இங்கிலாந்தின் கவென்ட்ரி நகரில் உள்ள வார்விக் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 122-வது பிரிட்டிஷ் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் 2026, பிரிட்டிஷ் செஸ் வரலாற்றிலேயே ஒரு புதிய சகாப்தத்தைத் தொடக்கி வைத்துள்ளது. இந்தத் தொடரில் மூத்த கிராண்ட்மாஸ்டர்களை பின்னுக்குத் தள்ளி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 3 இளம் திறமையாளர்கள் வரலாற்று சாதனைகளைப் படைத்துள்ளனர்.</p><h2>17 <strong>வயதில் பிரிட்டிஷ் சாம்</strong>பியன் பட்டம் </h2><p>டெர்ட்ஃபோர்ட் நகரைச் சேர்ந்த 17 வயது கிராண்ட்மாஸ்டர் ஸ்ரேயாஸ் ராயல், ஒட்டுமொத்த <a href="https://www.maalaimalar.com/sports/cricket/shubman-gill-chooses-batting-after-winning-toss-india-vs-sri-lanka-first-test">பிரிட்டிஷ் செஸ் சாம்பியன்ஷிப் </a>பட்டத்தைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். 1989-இல் மைக்கேல் ஆடம்ஸ் தனது 17 வயதில் படைத்த மிக இளம் வயதில் சாம்பியன் பட்டம் வென்ற சாதனையை, ஸ்ரேயாஸ் 2 மாதங்கள் வித்தியாசத்தில் முறியடித்துள்ளார்.</p><p>மொத்தம் 107 சர்வதேச வீரர்கள் பங்கேற்ற இந்த திறந்தநிலை பிரிவில், 9 சுற்றுகளின் முடிவில் 7.5/9 புள்ளிகள் பெற்று தோல்வியே சந்திக்காத ஒரே வீரராக ஸ்ரேயாஸ் மகுடம் சூடினார். இவருக்கு முதன்மை பரிசாக £10,000 (சுமார் 10.5 லட்சம் ரூபாய்) வழங்கப்பட்டது. முன்னணி கிராண்ட்மாஸ்டர் லூக் மெக்ஷேனை வீழ்த்தியும், 9 முறை சாம்பியனான மைக்கேல் ஆடம்ஸுக்கு எதிராக டிராவை பதிவு செய்தும் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.</p><h2>மிக<strong>க் குறைந்த வயதில் பிரிட்டி</strong>ஷ் மகளிர் சாம்பியன்</h2><p>லண்டனைச் சேர்ந்த 11 வயது சிறுமி போதனா சிவநந்தன், பிரிட்டிஷ் மகளிர் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று புதிய வரலாறு படைத்துள்ளார்.  மகளிர் பிரிவில் அயர்லாந்தின் வுமன் கிராண்ட்மாஸ்டர் த்ரிஷா கன்யாமாராலாவை 1.5 - 0.5 என்ற புள்ளிக்கணக்கில் டை-பிரேக் சுற்றில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.</p><p>1939-இல் எலைன் பிரிட்சார்ட் தனது 13 வயதில் படைத்த சாதனையை முறியடித்த போதனா, ஏற்கனவே பிளிட்ஸ் மற்றும் ரேபிட் சாம்பியன் பட்டங்களை வைத்திருந்த நிலையில், தற்போது கிளாசிக்கல் பட்டத்தையும் வென்று 'முப்பரிமாண சாம்பியன்' பட்டம் பெற்றுள்ளார். தொடரில் கிராண்ட்மாஸ்டர் அமித் காசியை வீழ்த்தி ஆச்சரியப்படுத்திய போதனாவின் ஆட்டம், போட்டியின் சிறந்த ஆட்டமாகக் கருதப்பட்டு £100 மதிப்பிலான "அலெக்சாண்டர் விருது" வழங்கி கவுரவிக்கப்பட்டது.</p><h2>12 வயதில் <strong>இன்டர்நேஷனல் மா</strong>ஸ்டர் பட்டம் </h2><p>சட்டன் கிராமர் பள்ளியில் பயிலும் 12 வயது மாணவர் சுப்ரதித் பானர்ஜி, இங்கிலாந்தின் மிக இளம் வயது இன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். பிரிட்டிஷ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தனது 3-வது ஐஎம் நார்மை பூர்த்தி செய்த சுப்ரதித், அடுத்த சில நாட்களிலேயே ஸ்வீடனில் நடைபெற்ற தொடரில் பங்கேற்று 2400 FIDE ரேட்டிங் இலக்கை எட்டி அதிகாரப்பூர்வமாக இன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டத்தைப் பெற்றார். </p><p>இதற்கு முன் இங்கிலாந்தின் லூக் மெக்ஷேன் மற்றும் டேவிட் ஹோவெல் ஆகிய இருவருமே 13 வயது 2 மாதங்களில் ஐஎம் பட்டம் பெற்றிருந்த நிலையில், சுப்ரதித் தனது 12 வயது 5 மாதங்களிலேயே இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.</p><h2>புதிய தலைமு<strong>றையின் ஆதி</strong>க்கம்</h2><p>122 ஆண்டுகால பாரம்பரியம் மிக்க பிரிட்டிஷ் செஸ் தொடரில் 2,000-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த சீசனில், அனுபவமிக்க முன்னணி கிராண்ட்மாஸ்டர்களை பின்னுக்குத் தள்ளி இந்த மூன்று இளம் வீரர்கள் நிகழ்த்தியுள்ள சாதனைகள் இங்கிலாந்து செஸ் வரலாற்றில் ஒரு புதிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் மேலும் ஒரு ஏ.சி. மின்சார ரெயில்- ரெயில்வே கோட்ட மேலாளர் தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/another-ac-electric-train-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/another-ac-electric-train-in-chennai#comments</comments><guid isPermaLink="false">ac3ca49a-46bb-4cfb-b846-cbd3543eb1eb</guid><pubDate>Sat, 15 Aug 2026 06:56:53 +0000</pubDate><atom:updated>2026-08-15T06:56:53.305Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>electric train,மின்சார ரெயில்,ஏசி மின்சார ரெயில்,AC Electric Train</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/yqezq0ym/ACTrain.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ ஏ.சி. மின்சார ரெயில்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஏ.சி. மின்சார ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/yqezq0ym/ACTrain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>புறநகர் மின்சார ஏ.சி. ரெயில் மற்றொன்று தயார் நிலையில் உள்ளது. அதனை எந்த வழித்தடத்தில் இயக்குவது என்று ஆலோசிக்கப்படுகிறது.</strong></em> </p><p>சென்னை கோட்ட ரெயில்வே மேலாளர் சைலேந்திர சிங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- </p><p>2025-26 நிதி ஆண்டில் ரூ.5,038 கோடி மொத்த வருவாய் ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 9.26 சதவீத கூடுதல் வளர்ச்சி ஆகும். சென்னை கோட்டம் 43.2 98 கோடி பயணிகளை ஏற்றி சென்றதுடன் 11.3 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு 6.20 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. </p><p>கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் 3559  சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டதுடன் 1557 கூடுதல் பெட்டிகள்  இணைக்கப்பட்டன. கிளாம்பாக்கம் ரெயில் நிலைய பணிகள் அக்டோபர் மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. புறநகர் <a href="https://www.maalaimalar.com/topic/மின்சார-ரெயில்">மின்சார</a> ஏ.சி. ரெயில் மற்றொன்று தயார் நிலையில் உள்ளது. அதனை எந்த வழித்தடத்தில் இயக்குவது என்று ஆலோசிக்கப்படுகிறது. இன்னும் ஒரு மாதத்தில் புதிய ரெயில் சேவை தொடங்கும்.</p><p>எழும்பூர் ரெயில் நிலைய மறு சிரமைப்பு பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்க திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஒருவேளை 2 மாதம் தாமதமாகலாம். பயணிகளுக்கு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. 26  ரெயில் நிலையங்களில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. 13  ரெயில் நிலையங்களில் புதிதாக வாகனம் நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.  26 லிப்ட்டுகள், 7 எஸ்கலேட்டர் வசதி செய்யப்பட்டுள்ளது. </p><p>மாற்றுத்திறனாளிகளுக்காக 16 ரெயில் நிலையங்களில் அடிப்படையான வசதி செய்யப்பட்டுள்ளது. வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் மின்சார சேவையில் ஆதம்பாக்கம் ரெயில்  நிலையத்தில் ரெயில் நின்று செல்வதற்கான வசதியில் சில குறைபாடுகள் உள்ளன. வளைவான பகுதி என்பதால் ரெயிலில் இருந்து பயணிகள் நடைமேடையில் ஏறி இறங்குவதில்  அதிக சிரமம் உள்ளது. அதனை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.</p><p>தாம்பரம்- கடற்கரை மின்சார ரெயில் இயக்கத்தில் காலை 9 மணி முதல் 10 மணிக்குள் சேத்துப்பட்டு நிலையத்தில் சிக்னல் காரணமாக ரெயில்கள் நீண்ட நேரம் நிறுத்தப்படுகிறது. பாஸ்ட் மின்சார  ரெயிலுக்காக மற்ற மின்சார ரெயில்களை நிறுத்துவதால் ஏற்படும் சிரமங்கள் தெரியவந்துள்ளன. அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.  பேட்டியின் போது கூடுதல் கோட்ட ரெயில்வே மேலாளர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.</p>]]></content:encoded></item></channel></rss>