<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 06 Sep 2026 10:24:00 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 6 செப். 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-6-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-6-september-2026#comments</comments><guid isPermaLink="false">80cb69aa-4aef-4fbb-a453-ef4e8bfa288c</guid><pubDate>Sun, 06 Sep 2026 04:08:14 +0000</pubDate><atom:updated>2026-09-06T04:08:14.193Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/6hnlm7jk/New-Project-2026-09-06T101803.596.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/6hnlm7jk/New-Project-2026-09-06T101803.596.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ministers-open-3000-cusecs-from-kallanai" rel="nofollow">கல்லணையில் இருந்து வினாடிக்கு 3,000 கனஅடி நீர் திறப்பு</a></p><p>* டெல்டா மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி.</p><p>* <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ministers-open-3000-cusecs-from-kallanai" rel="nofollow"> </a>கல்லணையில் உள்ள தலைப்பு பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/horrific-accident-in-delhi-pg-hostel-collapses-many-students-trapped-under-the-debris">டெல்லியில் PG விடுதி இடிந்து விழுந்ததால் பரபரப்பு - இடிபாடுகளுக்கு அடியில் பல மாணவர்கள் சிக்கித் தவிப்பு</a></p><p>*சத்ய நிகேதன் பகுதியில் பல கல்லூரிகள் அமைந்துள்ளதால் அதனை சுற்றிய பகுதியில் மாணவர்கள் அதிகம் வசித்து வருகின்றனர்.</p><p>* அங்கு சுமார் 50 மாணவர்கள் வரை தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/volcanic-eruption-rocks-indonesia-flight-services-cancelled">இந்தோனேசியாவை அதிரவைத்த எரிமலை வெடிப்பு.. விமான சேவைகள் ரத்து</a></p><p>*இந்தோனேசியாவில் 'அனக் கிரகடாவ்' எரிமலை வெடித்துச் சிதறியுள்ளது.</p><p>*சாம்பல் மேகங்கள் எழும்பி, ஜகார்த்தா, லம்பங் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளுக்குப் பரவின.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-urges-resolution-to-safeguard-obc-rights" rel="nofollow">OBC மக்கள் உரிமையை காக்க தீர்மானம் இயற்றுக..!- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்</a></p><p>* ஓபிசி பட்டியலில் உள்ளவை வகுப்புகள்தானே தவிர, அவை சாதிகள் அல்ல என்ற மத்திய அரசின் விளக்கம் ஏற்புடையதல்ல.</p><p>*  பொதுமக்கள் கூறும் சாதியின் பெயரைப் பதிவேற்றுவது குழப்பங்களுக்கே வழிவகுக்கும்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/shafali-verma-scripts-history-becomes-youngest-and-fastest-to-3000-womens-t20i-runs">டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 3000 ரன்கள்: ஷபாலி வர்மா சாதனை</a></p><p>* பாகிஸ்தான் அணி 18.1 ஓவரில் 55 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.</p><p>* மகளிர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3,000 ரன்களை கடந்த 16-வது வீராங்கனை ஆவார் ஷபாலி வர்மா.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/diwali-ticket-booking-sold-out-in-minutes">தீபாவளி டிக்கெட் முன்பதிவு: சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன</a></p><p>* ரெயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.</p><p>* நவம்பர் 6-ம் தேதி பயணம் செய்வதற்கு நாளை முன்பதிவு செய்யலாம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/a-first-for-the-european-continent-isar-aerospace-successfully-launches-an-orbital-rocket">ஐரோப்பிய கண்டத்திலிருந்து முதல்முறை - ஆர்பிட்டல் ராக்கெட்டை வெற்றிக்கரமாக விண்ணில் செலுத்தியது ஐசர் ஏரோஸ்பேஸ்!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/petrol-diesel-price-today-in-chennai-2">சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்றைய நிலவரம்</a></p><p>* பெட்ரோல், டீசல் விலைகள் எண்ணெய் நிறுவனங்களால் நிர்ணயிக்கப்படுகின்றன.</p><p>* கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>கல்லணையில் இருந்து வினாடிக்கு 3,000 கனஅடி நீர் திறப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ministers-open-3000-cusecs-from-kallanai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ministers-open-3000-cusecs-from-kallanai#comments</comments><guid isPermaLink="false">6db83b9f-e87e-4ef6-ab9a-21743f390201</guid><pubDate>Sun, 06 Sep 2026 10:21:28 +0000</pubDate><atom:updated>2026-09-06T10:21:28.173Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>farmers,விவசாயிகள்,டெல்டா மாவட்டங்கள்,Delta districts,கல்லணை திறப்பு,Kallanai</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/kyqmxbpb/kallanai.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ kallanai]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/kyqmxbpb/kallanai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கல்லணையிலிருந்து காவிரி டெல்டா விவசாயிகளின் பாசனத் தேவைக்காக அமைச்சர்கள் விக்னேஷ் மற்றும் ஷாஜகான் ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்தனர். </p><p>கடந்த 1-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனத்திற்காக தண்ணீரை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்.</p><p>அந்த தண்ணீர் நேற்று முன்தினம் திருச்சி மாவட்டம், முக்கொம்பிற்கு வந்தடைந்தது. அங்கு விவசாயிகள் பூக்கள் தூவி வரவேற்றனர். தொடர்ந்து, <a href="https://www.maalaimalar.com/news/national/cauvery-water-sharing-tamil-nadu-karnataka-arguments-supreme-court" rel="nofollow">காவிரி</a> தண்ணீர் தஞ்சாவூர் மாவட்டம், கல்லணைக்கு நேற்று வந்தடைந்தது.</p><h2>அமைச்சர்கள் திறந்தனர்</h2><p>கல்லணைக்கு வந்த தண்ணீரை காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு, கல்லணை கால்வாய் ஆகிய ஆறுகளில் பிரித்து வழங்குவதற்கான நிகழ்ச்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடந்தது.</p><p>இதற்காக ஏற்கனவே கல்லணையில் உள்ள தலைப்பு பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது.</p><p>இதையடுத்து கல்லணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனத்திற்காக  காவிரியில் வினாடிக்கு 1000 கன அடி, வெண்ணாற்றில் வினாடிக்கு 1000 கன அடி, கொள்ளிடத்தில் 500 கன அடி, கல்லணை கால்வாயில் வினாடிக்கு 500 கன அடி வீதமும் தண்ணீரை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் ரவி, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் ஆகியோர் பொத்தானை அழுத்தி திறந்து வைத்து, சாகுபடி அனைத்தும் நல்ல முறையில் நடைபெற வேண்டும் என ஆறுகளில் பூக்கள், நவதானிங்களை தூவி வணங்கினர்.</p><p>கல்லணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் டெல்டா மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி மேற்கொள்ளப்பட உள்ளது.</p><p>முன்னதாக தண்ணீர் திறந்து விடப்படுவதற்கு முன்பு கல்லணையில் கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில், கருப்பண்ணசாமி கோவில் மற்றும் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%88" rel="nofollow">கல்லணை</a> பூங்காவில் உள்ள ஆதிவிநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன.</p>]]></content:encoded></item><item><title>VIDEO: டெல்லியில் PG விடுதி இடிந்து விழுந்ததால் பரபரப்பு - இடிபாடுகளுக்கு அடியில் பல மாணவர்கள் சிக்கித் தவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/horrific-accident-in-delhi-pg-hostel-collapses-many-students-trapped-under-the-debris</link><comments>https://www.maalaimalar.com/news/national/horrific-accident-in-delhi-pg-hostel-collapses-many-students-trapped-under-the-debris#comments</comments><guid isPermaLink="false">0964eec3-bf79-47da-b571-6dd12c6e4ebc</guid><pubDate>Sun, 06 Sep 2026 09:41:38 +0000</pubDate><atom:updated>2026-09-06T09:41:38.819Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கட்டிட விபத்து,Building Collapse,தங்கும் விடுதி,delhi,PG,டெல்லி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/11j5h3qz/tn-14.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டெல்லி விடுதி விபத்து]]></media:title><media:description type="html"><![CDATA[ டெல்லி விடுதி விபத்து]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/11j5h3qz/tn-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தலைநகர் டெல்லியில் சத்ய நிகேதன் பகுதியில் விடுதி கட்டிடம் ஒன்று இடிந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF">டெல்லி </a>சத்ய நிகேதன் பகுதியில் அமைந்துள்ள அந்த கட்டிடம் PG (Paying guest) தங்கும் விடுதியாக செயல்பட்டு வந்துள்ளது. அங்கு சுமார் 50 மாணவர்கள் வரை தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. </p><p>இந்நிலையில் இன்று மதியம் 1.30 மணி சுமாருக்கு கட்டிடமானது இடிந்து விழுந்துள்ளது. இதில் உள்ளே தங்கியிருந்த பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளனர். </p> <h2>மீட்பு</h2><p>தகவலறிந்து விரைந்த <a href="https://www.maalaimalar.com/news/world/i-was-chanting-hare-krishna-for-9-days-worker-rescued-from-tunnel">மீட்பு படை</a>யினர் உடனடியாக மீட்பு பணிகளை தொடங்கினர். இதுவரை ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏனையோரை மீட்கும் பணிகள் தீவிர கதியில் நடந்து வருகின்றது.</p><p>மீட்பு பணியாளர்களுடன் உள்ளூர் மக்களும் இணைந்து இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>இடிந்து விழுந்த கான்கிரீட் கூரையின் கீழ் நபர் ஒருவர் சிக்கிய நிலையில், அவரை மீட்பு பணியாளர்கள் மீட்க போராடும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Delhi: A building has collapsed near Satya Niketan in South-West Delhi. The fire department received an alert around 1:30 PM. The rescue operation is underway. More details are awaited: Delhi police <a href="https://t.co/lqq8qFIUfE">pic.twitter.com/lqq8qFIUfE</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2096519944762696057?ref_src=twsrc%5Etfw">September 6, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>சத்ய நிகேதன்</h2><p>சத்ய நிகேதன் பகுதியில் பல கல்லூரிகள் அமைந்துள்ளதால் அதனை சுற்றிய பகுதியில் மாணவர்கள் அதிகம் வசித்து வருகின்றனர்.</p><p>எனவே அங்கு பல பிஜிக்கள் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் அதுபோன்றதொரு பிஜி கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது மாணவர்களின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கியுள்ளது.</p><p>தற்போதைய சம்பத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அருகில் இருக்கும் கட்டிடங்களில் வசித்து வருபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் அரசு அதிகாரிகள் ஆட்சி நடைபெறுவதாக கம்யூனிஸ்டுகள் கூறுவது வேடிக்கையானது- அமைச்சர்  விமர்சனம்</title><link>https://www.maalaimalar.com/news/topnews/communists-to-claim-that-the-administration-is-being-run-by-government-officials</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/communists-to-claim-that-the-administration-is-being-run-by-government-officials#comments</comments><guid isPermaLink="false">631097a9-048d-4fa1-a531-184c775a39ca</guid><pubDate>Sun, 06 Sep 2026 09:28:57 +0000</pubDate><atom:updated>2026-09-06T09:28:57.146Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தவெக,tvk,communists,கம்யூனிஸ்டுகள்,அமைச்சர் அருண்ராஜ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/58tn802t/arunraj.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/58tn802t/arunraj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த தி.மு.க. ஆட்சியில் தான் அதிகாரிகளின் ஆட்சி நடைபெற்றது. அப்போதைய முதலமைச்சருக்கு என்ன நடக்கிறது என்றே தெரியாமல் அதிகாரிகள் சொல்வது தான் உலகம் என்று நம்பிய ஆட்சி நடைபெற்றது.</p><p>சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் சிறப்பு குழந்தைகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.</p><p>வெற்றி பெற்ற சிறப்பு குழந்தைகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதக்கம் வழங்கி கவுரவித்தார்.</p><h2><strong>அப்போது அமைச்சர் அருண்ராஜ் பேசியதாவது:-</strong></h2><p>உலகம் அனைவருக்கும் சமமானது, அனைவருக்கும் சம வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதுதான் உண்மையான சமூக நீதி. சிறப்பு குழந்தையின் இயற்கையான வாழ்வையே மறுவாழ்வு என்போம், இப்படித்தான் நம் சமூகத்தின் கட்டமைப்பாக உள்ளது. அனைவருக்கும் சம வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. அவர்களுக்கு தேவையான வாய்ப்பைக் கொடுத்தாலே போதுமானது. ஏழையின் சிரிப்பில் இறைவனை பார்க்கிறேன் என அண்ணா கூறினார்.</p><h2><strong>விமர்சனம்</strong></h2><p>ஒரு குழந்தை ஓடி வந்து அவரது மொழியில் சி எம் என கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். உண்மையாகவே மகிழ்ச்சியாக இருந்தது.</p><p>சிறப்பு குழந்தைகளை சிறு வயதிலேயே கண்டறிய முடியும் அரசு துறையில் இதற்கான திட்டங்களும் உள்ளது. பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்ற தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை அடிப்படையில் அனைவரும் சேர்ந்து அனைவருக்கும் சம வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்போம் என்ற உறுதிமொழியை ஏற்போம்.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p><p>பின்னர் நிருபர்களுக்கு அமைச்சர் அருண்ராஜ் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், திண்டுக்கல் மாவட்டத்தில் இடதுசாரி அமைப்புகளை சேர்ந்த மாணவர்களின் விவரங்களை எடுக்கச் சொன்னதை சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டில் அரசு ஆட்சியாக இல்லாமல் அரசு அதிகாரிகள் ஆட்சி என கம்யூனிஸ்டுகள் விமர்சனம் செய்தது குறித்து கேள்வி எழுப்பினர்.</p><h2><strong>இதற்கு அமைச்சர் அருண்ராஜ் கூறுகையில்,</strong></h2><p>கடந்த தி.மு.க. ஆட்சியில் தான் அதிகாரிகளின் ஆட்சி நடைபெற்றது. அப்போதைய முதலமைச்சருக்கு என்ன நடக்கிறது என்றே தெரியாமல் அதிகாரிகள் சொல்வது தான் உலகம் என்று நம்பிய ஆட்சி நடைபெற்றது.</p><h2><strong>அரசு</strong></h2><p>திண்டுக்கல் மாவட்டத்தில் இடதுசாரி அமைப்புகளைச் சார்ந்த மாணவர்களின் விவரங்களை சேகரிக்க சொன்னது அரசின் கவனத்திற்கு வராமல் நடைபெற்றது என்பதற்கு விளக்கம் கொடுக்கப்பட்டுவிட்டது. அந்த சுற்றறிக்கை அனுப்பியவர்கள் மீது அரசு நடவடிக்கையும் எடுத்து உள்ளது.</p><p>இந்த ஒரு நிகழ்வை மட்டும் வைத்துக்கொண்டு அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் அரசு உள்ளது என சொல்வது வேடிக்கையாக உள்ளது. அரசு அதிகாரிகள், இந்த ஆட்சியை வெளிப்படையான அரசு அமைந்துள்ளது என்பதை அவர்கள் பணியாற்றுவதற்கான வாய்ப்பாக பார்க்கின்றனர். ஒரு சிலர் செய்யும் தவறுகளினால் அனைத்தையும் தவறு என்று சொல்ல முடியாது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>இந்தோனேசியாவை அதிரவைத்த எரிமலை வெடிப்பு.. விமான சேவைகள் ரத்து</title><link>https://www.maalaimalar.com/news/world/volcanic-eruption-rocks-indonesia-flight-services-cancelled</link><comments>https://www.maalaimalar.com/news/world/volcanic-eruption-rocks-indonesia-flight-services-cancelled#comments</comments><guid isPermaLink="false">77dcfa4c-3653-4d41-bb80-7f07a23839a2</guid><pubDate>Sun, 06 Sep 2026 09:22:38 +0000</pubDate><atom:updated>2026-09-06T09:22:38.875Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தோனேசியா,எரிமலை வெடிப்பு,Volcano,Volcanic Eruption,indonesia,எரிமலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/1960c5nc/tn-13.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அனக் கிரகடாவ் எரிமலை வெடிப்பு]]></media:title><media:description type="html"><![CDATA[ அனக் கிரகடாவ் எரிமலை வெடிப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/1960c5nc/tn-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தோனேசியாவில் 'அனக் கிரகடாவ்' எரிமலை வெடித்துச் சிதறியுள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/topic/indonesia">இந்தோனேசியாவில் </a>ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையே உள்ள சுண்டா ஜலசந்தி பகுதியில் 'அனக் கிரகடாவ்'  என்ற எரிமலை அமைந்துள்ளது. </p><h2>எரிமலை வெடிப்பு </h2><p>நேற்று முன் தினம் (வெள்ளிக்கிழமை) முதல் அனக் கிரகடாவ் <a href="https://www.maalaimalar.com/topic/volcanic-eruption">எரிமலையில் </a>லேசான அதிர்வுகள் பதிவாகி வந்த நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3:53 மணிக்கு எரிமலை வெடித்து சிதறியது.</p> <p>செயற்கைக்கோள் படங்களின்படி, எரிமலையிலிருந்து 20,000 அடி மற்றும் 50,000 அடி உயரத்திற்கு இரு மாபெரும் சாம்பல் மேகங்கள் எழும்பி, ஜகார்த்தா, லம்பங் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளுக்குப் பரவின.</p><p>குடியிருப்பு பகுதிகள் எரிமலையிலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ளதால் உடனடி உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.</p><p>இருப்பினும், எரிமலையிலிருந்து 3 கி.மீ சுற்றளவுக்குச் செல்ல வேண்டாம் என மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p> <h2>விமானங்கள் ரத்து</h2><p>தலைநகர் ஜகார்த்தா உள்ளிட்ட 6 முக்கிய விமான நிலையங்களின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.</p><p>இதனால் 58 சர்வதேசச் சேவைகள் உட்பட மொத்தம் 301 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.</p><p>ஜகார்த்தாவின் முக்கிய சர்வதேச விமான நிலையமான 'சுகர்னோ-ஹட்டா' அதிகாலை 5:30 மணி முதல் தற்காலிகமாக மூடப்பட்டது.</p><p>சிங்கப்பூர், ஹாங்காங், சிட்னி, ஆம்ஸ்டர்டாம், சியோல், தோஹா மற்றும் கோலாலம்பூர் ஆகிய நகரங்களுக்கான சர்வதேச விமானச் சேவைகளும், பாலி, சுராபயா போன்ற உள்நாட்டுச் சேவைகளும் பாதிக்கப்பட்டன.</p> <p>இதனால் ஒரே நாளில் சுமார் 22,800 பயணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். நிலைமை சீரடையும் என்ற நம்பிக்கையில் பல பயணிகள் நிலையங்களில் காத்திருந்தனர்.</p><p>"ஒவ்வொரு நடவடிக்கையிலும் பயணிகளின் பாதுகாப்பிற்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது" என இந்தோனேசிய போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p> <h2>அனக் க்ரக்கடாவ் எரிமலை</h2><p>'கிரகடாவ்வின் குழந்தை' என்று அழைக்கப்படும் அனக் கிரகடாவ் எரிமலை, 1883 ஆம் ஆண்டு உலகையே உலுக்கிய 'கிரகடாவ்' எரிமலை வெடிப்பிற்குப் பிறகு, 1927 ஆம் ஆண்டில் கடலுக்கு அடியில் இருந்து புதிதாக உருவாகத் தொடங்கியது.</p><p>2018ஆம் ஆண்டில் இந்த அனக் கிரகடாவ் எரிமலை வெடித்தபோது, அதன் ஒரு பகுதி கடலுக்குள் சரிந்து விழுந்து ஏற்பட்ட நிலச்சரிவால் பயங்கரச் சுனாமி உருவானது. இதில் சுமத்ரா மற்றும் ஜாவா தீவுகளில் 430க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.</p> <p>அன்றிலிருந்து இன்றுவரை இந்த எரிமலை நாட்டின் 2வது மிக ஆபத்தான பகுதி என்ற நிலையிலேயே உள்ளது.</p><p>கடந்த காலங்களிலும் தற்போதும் ஏற்பட்ட இந்த தொடர் வெடிப்புகளால் எரிமலையின் அளவு அதன் ஆரம்ப அளவிலிருந்து கால் பங்காக குறைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>OBC மக்கள் உரிமையை காக்க தீர்மானம் இயற்றுக..!- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-urges-resolution-to-safeguard-obc-rights</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-urges-resolution-to-safeguard-obc-rights#comments</comments><guid isPermaLink="false">69f7b5a9-95f4-4fee-93f1-59e787146cf8</guid><pubDate>Sun, 06 Sep 2026 09:02:34 +0000</pubDate><atom:updated>2026-09-06T09:02:34.345Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,ஓபிசி,OBC,Resolution,முக ஸ்டாலின்,தீர்மானம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/5qwycugn/MKS.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DMK Leader MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/5qwycugn/MKS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்! <a href="https://www.maalaimalar.com/search?q=OBC" rel="nofollow">OBC</a> மக்களின் உரிமையைக் காப்பாற்றச் சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்ற வேண்டும்!</p><p>தற்போது எடுக்கப்பட்டு வரும் #Census2027 கணக்கெடுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தோரைக் கணக்கிட ‘open-ended format to record caste details without a pre-determined drop-down list or standardized menu’ முறையை ஒன்றிய அரசு பயன்படுத்தும் என்று வெளியாகியுள்ள அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது.</p><p>ஓபிசி பட்டியலில் இடம்பெற்றுள்ளவை வகுப்புகள்தானே தவிர, அவை சாதிகள் அல்ல என்று ஒன்றிய அரசு தரப்பில் தரப்பட்டுள்ள விளக்கம் ஏற்புடையது அல்ல!</p><p>மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இடம்பெற்றுள்ள சாதிகளின் பட்டியலைப் பெற்று, தொகுத்து, பதிவேற்றி, அதில் இடம்பெற்றுள்ள சாதிகளில் ஒன்றைத் தெரிவு செய்யும் வாய்ப்பை மக்களுக்கு வழங்கும் வழிமுறையே குழப்பங்களுக்கு இடம் தராது. மாறாக, பொதுமக்கள் கூறும் சாதியின் பெயரைப் பதிவேற்றுவது குழப்பங்களுக்கே வழிவகுக்கும்.</p><p>இதனால் இந்தியாவில் 46 இலட்சம் சாதிகள் இருப்பதாகக் குளறுபடியான கணக்கு வரும் என்ற ஆபத்தைச் சமூகநீதியில் அக்கறை கொண்ட பலரும் சுட்டிக்காட்டுவதை அரசு புறந்தள்ளிவிடக் கூடாது.</p><p>சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் நோக்கமே பட்டியலினச் சமூக மக்களின் எண்ணிக்கையைப் போல, OBC மக்களின் உண்மையான எண்ணிக்கையையும் அவர்களது <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/high-court-madurai-bench-order-educational-institutions-must-not-ask-for-caste-or-religious-details" rel="nofollow">கல்வி</a>, சமுதாய, பொருளாதார நிலைமையையும் அறிந்துகொள்வதுதான்.</p><p>அப்போதுதான் அவர்கள் அதிகாரம் பெறுவதற்கான இடஒதுக்கீட்டுக் கொள்கைகளை வகுக்கவும், அவர்தம் முன்னேற்றத்துக்குத் தேவையான திட்டங்களைத் தீட்டவும் அரசுகளால் இயலும்.</p><p>அப்படி இருக்கையில், ஒன்றிய, மாநில அரசுகளின் OBC சாதிகளின் பட்டியலை வைத்து, அதிலிருந்து மக்கள் சாதிப்பெயரைத் தேர்வு செய்யும் முறையைப் பின்பற்றினால்தான் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படுவதன் நோக்கம் நிறைவேறும்.</p><p>தற்போதைய முறையைத் தொடர்ந்தால், மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்காகச் செலவிடப்படும் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாயும், இலட்சக்கணக்கான அரசு ஊழியர்களின் உழைப்பும் வீணடிக்கப்படும். இதனால் எந்தப் பயனும் இல்லை. இது வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாக அமைந்துவிடும் ஆபத்தைப் புறந்தள்ளக் கூடாது.</p><p>பொருத்தமற்ற விளக்கங்களைக் கூறி, ஒரு தவறை நியாயப்படுத்தாமல், குளறுபடிகளுக்கு இடம் தராமல், சாதிவாரிக் கணக்கெடுப்பின் உண்மையான நோக்கம் நிறைவேறுவதற்கான திருத்த நடவடிக்கைகளை உடனடியாக ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்.</p><p>கோடானுகோடி பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதி உரிமையை உறுதிசெய்து, நீதி வழங்க வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்.</p><p>தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில், நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே இதற்கான சிறப்புத் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/resolution-moved-by-the-chief-minister-passed-unanimously-in-the-legislative-assembly" rel="nofollow">தீர்மானம்</a> நிறைவேற்றி, உரிய அழுத்தத்தை ஒன்றிய அரசுக்கு வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மத்திய பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்த 11 பேர் பலி</title><link>https://www.maalaimalar.com/news/national/11-killed-liquor-in-madhya-pradeshs</link><comments>https://www.maalaimalar.com/news/national/11-killed-liquor-in-madhya-pradeshs#comments</comments><guid isPermaLink="false">cd7748f2-45d0-4596-b2a2-23589716d843</guid><pubDate>Sun, 06 Sep 2026 08:52:39 +0000</pubDate><atom:updated>2026-09-06T08:52:39.895Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய பிரதேசம்,liquor,கள்ளச்சாராயம்,சாராயம்,Madhya Pradeshs</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/e5q47qxf/mayth.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/e5q47qxf/mayth.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கள்ளச்சாராயம் குடித்து 11 பேர் உயிரிழந்த நிலையில் 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து கள்ளச்சாராயம் விற்றவர்களை தேடி வருகின்றனர். </p><p>மத்தியபிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் பண்டா தாலுகா உள்ளது. இதன் அருகே உள்ள 4 கிராமத்தை சேர்ந்தவர்கள் கள்ளச்சாராயம் அருந்தியுள்ளனர். இதில் பலரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவர்களுக்கு தலைவலி, வாந்தி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.</p><h2><strong>மருத்துவமனையில் சிகிச்சை</strong></h2><p>ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே 11 பேர் பலியானார்கள். 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2><strong>கள்ளச்சாராயம்</strong></h2><p>கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்கள் கவ்கர், நவ்ராஜ் மற்றும் பராஜ் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். 4 கிராமங்களை சேர்ந்தவர்களிடமும் மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருவதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.</p><h2><strong>போலீசார் வழக்குப் பதிவு</strong></h2><p>இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து கள்ளச்சாராயம் விற்றவர்களை தேடி வருகிறார்கள். இதுகுறித்து மாநில அரசு தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>2026-ம் ஆண்டிற்கான உலக அழகி பட்டம் வென்றார் டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா</title><link>https://www.maalaimalar.com/news/world/joheirry-mola-of-dominican-republic-wins-miss-world-2026</link><comments>https://www.maalaimalar.com/news/world/joheirry-mola-of-dominican-republic-wins-miss-world-2026#comments</comments><guid isPermaLink="false">4c201cd7-4448-4755-9c1d-9196f822415a</guid><pubDate>Sun, 06 Sep 2026 08:48:58 +0000</pubDate><atom:updated>2026-09-06T08:48:58.449Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>miss world,உலக அழகிப் போட்டி,Dominican Republic,டொமினிகன் குடியரசு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/c5xs8yfk/miss-world.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ miss world]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/c5xs8yfk/miss-world.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>2026-ம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஜோஹெய்ரி மோலா டொமிங்கஸ் வென்றுள்ளார்.</strong></em></p><p>73-வது உலக அழகிப் போட்டியின் இறுதிச்சுற்று வியட்நாமின் நஹா ட்ராங் நகரில் நடந்தது. உலக அழகிப் போட்டி வியட்நாமில் நடத்தப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.</p><p>இந்த ஆண்டு போட்டியில் 111 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில், அவர்களை பின்னுக்குத் தள்ளி 2026-ம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை டொமினிகன் குடியரசைச் சேர்ந்த 24 வயதான ஜோஹெய்ரி மோலா டொமிங்கஸ் வென்றார்.</p><h2>2-வது உலக அழகி</h2><p>இதன்மூலம் டொமினிகன் குடியரசு 44 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உலக அழகி பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது. அந்த நாடு இதற்கு முன்பு 1982-ம் ஆண்டு மரியாசெலா அல்வரெஸ் மூலம் உலக அழகி பட்டத்தை வென்றிருந்தது. இதன்மூலம் ஜோஹெய்ரி மோலா, டொமினிகன் குடியரசின் 2-வது உலக அழகியாகி உள்ளார்.</p><h2>வெளியேறிய இந்தியா</h2><p>ஸ்பெயினைச் சேர்ந்த எலிசபெத் ரெய்னெஸ் முதல் ரன்னர்-அப் பட்டத்தையும், மலேசியாவின் தானுஷியா செட்டி 2-வது ரன்னர்-அப் பட்டத்தையும் பெற்றனர்.</p><p>இந்தியா சார்பில் பங்கேற்ற நிகிதா முதல் 40 இடங்களுக்குள் முன்னேறினார். ஆனால் அவர் முதல் 20 இடங்களுக்குள் தகுதி பெற முடியாமல் போட்டியில் இருந்து வெளியேறினார்.</p><p>கடந்த 2025-ம் ஆண்டு உலக அழகி பட்டத்தை தாய்லாந்தைச் சேர்ந்த ஒபல் சுசாதா சுவாங்ஸ்ரீ வென்றிருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>கிராமசபை கூட்டத்திற்கு 7 நாட்களுக்கு முன்பே  அறிவிப்பு வெளியிட வேண்டும் - முதலமைச்சர் விஜய்க்கு கமல்ஹாசன் கடிதம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/notice-for-the-gram-sabha-meeting-must-be-issued-seven-days-in-advance-kamal-haasan-writes-to-chief-minister-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/notice-for-the-gram-sabha-meeting-must-be-issued-seven-days-in-advance-kamal-haasan-writes-to-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">d90f3568-5ca6-4bda-9caf-cc8c27ca7926</guid><pubDate>Sun, 06 Sep 2026 08:36:40 +0000</pubDate><atom:updated>2026-09-06T08:36:40.315Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>கிராம சபைக் கூட்டம்,GRAM SABHA MEETING,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,கமல்ஹாசன் எம்பி,MP Kamal Haasan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/kv667yyl/New-Project-2026-09-06T140546.889.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கிராமசபை கூட்டத்திற்கு 7 நாட்களுக்கு முன்பே  அறிவிப்பு வெளியிட வேண்டும் - முதலமைச்சர் விஜய்க்கு கமல்ஹாசன் கடிதம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/kv667yyl/New-Project-2026-09-06T140546.889.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கிராம சபைக் கூட்டங்களை வலுப்படுத்துவது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-thai-vazhthu-gets-top-billing-at-government-events-kamal-haasan-welcomes-assembly-resolution">கமல்ஹாசன் </a>தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். </p><p>அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது;</p><p>“தமிழ்நாடு மக்கள் உங்கள் தலைமையின் மீது நம்பிக்கை வைத்து, மாநிலத்தை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பை உங்களிடம் ஒப்படைத்துள்ளனர்.</p><p>உங்கள் தலைமையில், அரசை மக்களிடம் மேலும் நெருக்கமாகக் கொண்டு சேர்க்கும் மக்களாட்சி மற்றும் நிர்வாக அமைப்புகளை மேலும் வலுப்படுத்த ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது.</p><p>வருகிற அக்டோபர்  2-ம் தேதி  நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டங்களில் ஊர் தொடர்பான பிரச்சனைகளை விவாதித்து, உள்ளாட்சி நிர்வாகத்தில் நேரடியாகப் பங்கேற்க முடியும்.</p><p>இது தொடர்பாக, நான் பின்வரும் கோரிக்கைகளைத் தங்களது பரிசீலனைக்கு&nbsp; வழங்குகிறேன்:</p><p>பஞ்சாயத்துப் பிரதிநிதிகளின் மாதாந்திர மதிப்பூதியத்தை கணிசமாக உயர்த்துதல் வேண்டும். தற்போது அவர்களுக்கு வழங்கப்படும்&nbsp;மாதாந்திர மதிப்பூதியமானது&nbsp;மிகவும் குறைவாக உள்ளது. </p><p>உதாரணமாக, கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்களின்&nbsp;மாதாந்திர மதிப்பூதியமானது&nbsp;2021-ல் ரூ.1,000-லிருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்பட்டது.<br></p><ul><li><p>தமிழ்நாடு அரசு இந்த மாதாந்திர மதிப்பூதியத்தை கணிசமாக உயர்த்தப் பரிசீலிக்க வேண்டும். </p></li><li><p>உள்ளூர் டாஸ்மாக் கடைகள் குறித்த முடிவில் கிராம சபைக்கு அதிகாரம் அளித்தல்.</p></li><li><p>கிராம வளர்ச்சித் திட்டமிடலை பொதுமக்கள் உண்மையாகப் பங்கேற்கும் ஒரு செயல்முறையாக மாற்றுதல்.</p></li><li><p>உள்ளாட்சி நிர்வாகத்தில் ஆராய்ச்சி மற்றும் செயல்திறன் மேம்பாட்டை வலுப்படுத்துதல்.</p></li></ul><ul><li><p>கிராம சபைக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின் மீது குறிப்பிட்ட கால வரம்பிற்குள் நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்தல்.</p></li><li><p>தங்கள் தீர்மானங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதை மக்கள் உணரும்போது, கிராம சபையின் மீது நம்பிக்கை அதிகரித்து, மக்கள் பங்கேற்பும் இயல்பாகவே உயரும்.</p></li><li><p>அடிமட்ட அளவில் வலுவான பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை கலாச்சாரத்தை உருவாக்குதல்.</p></li></ul><ul><li><p>காந்தியடிகளின் கிராம ஸ்வராஜ் (கிராம சுயராஜ்யம்) கனவு, அதிகாரம் பெற்ற கிராமங்களையும், பொதுமக்கள் பங்கேற்கும் ஜனநாயகத்தையும் அடிப்படையாகக் கொண்டது. </p></li><li><p>அதற்கு நாம் செலுத்தும் சிறந்த மரியாதை, கிராம நிர்வாகத்தில் தமிழ்நாட்டை இந்தியாவின் ஒரு முன்மாதிரி மாநிலமாக மாற்றுவதுதான்.</p></li><li><p>கிராம சபைக் கூட்டத்திற்கு குறைந்தபட்சம் 7 நாட்களுக்கு முன்பே பொது அறிவிப்பும், விவாதப் பட்டியலும் வெளியிடப்பட வேண்டும் என்ற அரசின் விதியைச் சரியாகப் பின்பற்ற வேண்டும்.</p></li></ul><p>நீங்கள் இந்தக் கோரிக்கைகளைப் பரிசீலித்து, உங்கள் தலைமையில் தமிழ்நாட்டின் கிராம சபைகளை மேலும் வலுப்படுத்தவும், அதிக மக்கள் பங்கேற்பு கொண்டதாகவும், தன்னாட்சி பெற்றதாகவும் மாற்ற நடவடிக்கை எடுப்பீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அமைச்சர் வன்னி அரசின் சகோதரிக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - ஒருவர் உயிரிழப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/explosion-at-firecracker-factory-owned-by-minister-vanniyarasus-sister-one-person-dead</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/explosion-at-firecracker-factory-owned-by-minister-vanniyarasus-sister-one-person-dead#comments</comments><guid isPermaLink="false">5671fc51-2506-4f5d-b942-9df200cd9cd9</guid><pubDate>Sun, 06 Sep 2026 07:30:48 +0000</pubDate><atom:updated>2026-09-06T07:30:48.700Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>வெடிவிபத்து,firecracker factory,பட்டாசு ஆலை,Explosion Accident,Minister Vanniyarasu,அமைச்சர் வன்னியரசு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/x832ox6n/New-Project-2026-09-06T130014.076.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் வன்னி அரசின் சகோதரிக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - ஒருவர் உயிரிழப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/x832ox6n/New-Project-2026-09-06T130014.076.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p> விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஒத்தையால் உள்ள  “சின்னத்தம்பி பைரோடெக்ஸ்” என்ற பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில், மீனம்பட்டியைச் சேர்ந்த மாடசாமி (33) என்ற தொழிலாளி உயிரிழந்தார்.</p><p>வேதிப்பொருட்களைக் கலக்கும் அறையில் ஏற்பட்ட உராய்வு காரணமாக இந்த விபத்து நேரிட்டதாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.</p><p>இந்நிலையில் இந்த ஆலை தமிழ்நாடு சமூக நீதித்துறை அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/it-has-been-created-purely-out-of-sheer-stupidity-vck-general-secretary-sinthanai-selvan">வன்னியரசுவின் </a>சகோதரி எம். ஜெயலட்சுமி என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.</p><h2>போலீஸ் நடவடிக்கை</h2><p>இதனைத்தொடர்ந்து சாத்தூர் தாலுகா போலீசார், அமைச்சர் வன்னியரசுவின் சகோதரி ஜெயலட்சுமி, அவரது மகள் செல்வமாரி, மகன் முரளீஸ்வரன் மற்றும் ஆலை மேற்பார்வையாளர் சூர்யபிரகாஷ் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.</p><p>இதில் மேற்பார்வையாளர் சூர்யபிரகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள மற்ற மூவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.</p><h2>நிவாரணம்</h2><p>இதனிடையே உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் ரூ.4 லட்சம் நிதியுதவி மற்றும் இரங்கலைத் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>“பெரும்பான்மை முட்டாள்தனத்தினாலேயே உருவாக்கப்பட்டிருக்கும்” - விசிக பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/it-has-been-created-purely-out-of-sheer-stupidity-vck-general-secretary-sinthanai-selvan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/it-has-been-created-purely-out-of-sheer-stupidity-vck-general-secretary-sinthanai-selvan#comments</comments><guid isPermaLink="false">92b7858c-248c-41b6-a63d-033e814837c4</guid><pubDate>Sun, 06 Sep 2026 07:16:16 +0000</pubDate><atom:updated>2026-09-06T07:16:16.559Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,விசிக,vck,சிந்தனைச் செல்வன்,Sinthanai selvan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/bmqsup4m/New-Project-2026-09-06T124544.708.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “பெரும்பான்மை முட்டாள்தனத்தினாலேயே உருவாக்கப்பட்டிருக்கும்” - விசிக பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/bmqsup4m/New-Project-2026-09-06T124544.708.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்று வெற்றிப்பெற்ற விசிக, தேர்தலுக்கு பின்னர் தவெக ஆட்சியமைக்க ஆதரவளித்து தற்போது அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளது.</p><p>விசிக சார்பாக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-lashes-out-at-dmk-and-aiadmk-hill-tribes-welfare-issues">அமைச்சர் வன்னியரசு</a> திமுகவை விமர்சிக்கும் வகையில் சட்டசபையில் பேசிவருவது தற்போது திமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.</p><p>இதனால் திமுக மற்றும் விசிக தொண்டர்களிடையே வார்த்தை போர் மூண்டு வருகிறது. இந்நிலையில் விசிகவின் பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு இணையத்தில் கவனம் ஈர்த்துவருகிறது. </p><p>அப்பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;</p><p>“தோல்வியடைந்த ஒரு சமூகம் எப்படியிருக்கும்?" என்று கேட்டபோது, புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் ஆண்டன் செக்கோவ் இப்படி விளக்கினார்:</p><p>தோல்வியடைந்த சமூகங்களில், ஆரோக்கியமாகச் சிந்திக்கும் ஒவ்வொருவனுக்கும் எதிராக ஆயிரம் முட்டாள்கள் களத்தில் இருப்பார்கள்.</p><p>சிந்தனையோடும், கரிசனையோடும் உதிர்க்கப்படும் ஒவ்வொரு சொல்லுக்கும் எதிராக, தீவிரமானதும் முட்டாள்தனமானதுமான ஆயிரம் சொற்கள் உதிர்க்கப்படும்.</p><p>அங்கே பெரும்பான்மை, முட்டாள்தனத்தினாலேயே உருவாக்கப்பட்டிருக்கும்.</p><p>எந்த சமூகத்தில் அற்பமான விஷயங்கள் பெரும் தலைப்புகளாக மாற்றப்பட்டு, நல்லுணர்வான சிந்தனைகள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்டவையாகத் தள்ளி வைக்கப்படுகின்றனவோ, எந்த சமூகத்தில் அதன் களத்தை அற்பர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்களோ அதுவே தோல்வியடைந்த சமூகமாகும் - ஆண்டன் செக்கோவ்”. எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>பஞ்சாப்பில் நெகிழ்ச்சி: சான்றிதழ் சரிபார்ப்பில் 35 ஆண்டுக்கு பின் ஒன்றுசேர்ந்த அண்ணன்-தம்பி</title><link>https://www.maalaimalar.com/news/national/35-years-how-sir-reunited-brothers-in-haryana</link><comments>https://www.maalaimalar.com/news/national/35-years-how-sir-reunited-brothers-in-haryana#comments</comments><guid isPermaLink="false">929b928b-6601-4b38-ae8b-31f5f475c77b</guid><pubDate>Sun, 06 Sep 2026 07:15:49 +0000</pubDate><atom:updated>2026-09-06T07:15:49.940Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வாக்காளர் பட்டியல்,haryana,பஞ்சாப்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/3fcize5v/Haryana.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Haryana]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/3fcize5v/Haryana.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2><strong>பஞ்சாப்</strong></h2><p>பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் சீதாராம். மாற்றுத்திறனாளியான இவர், கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்வாதாரம் தேடி ஹரியானாவில் உள்ள தனது சொந்த ஊரிலிருந்து பஞ்சாப்பிற்கு இடம்பெயர்ந்தார். அங்கு தீவிர முயற்சிக்குப் பிறகு, பஞ்சாப் மாநில அரசுப் பணியில் 'டி' பிரிவில் அவருக்கு வேலை கிடைத்தது. தமக்குக் கிடைத்த வேலையை சார்ந்து, பஞ்சாப்பிலேயே தங்கி தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார் சீதாராம். ஆனால், காலப்போக்கில் சொந்த ஊரில் இருந்த குடும்பத்துடனான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. தம்பி எங்கு இருக்கிறார், உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற விபரம் தெரியாமல் அண்ணன் குடும்பமும், தங்களது அண்ணனை மீண்டும் காண்போமா என்ற ஏக்கத்தில் சீதாராமும் பல ஆண்டுகள் தவித்து வந்தனர்.</p><h2><strong>பள்ளி சான்றிதழ்</strong></h2><p>இந்த நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்.ஆர்.ஜே.) நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வந்தது. இதற்காக தனது பழைய பள்ளி சான்றிதழ் தேவைப்பட்டதால், சீதாராம் சமீபத்தில் ஹரியானா மாநிலம், ஜிந்த் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான மனோகர்பூருக்கு பயணமானார். அங்குள்ள அரசு பள்ளிக்கு சென்று தனது சான்றிதழை கோரியபோது, பள்ளி ஊழியர்கள் பழைய ஆவணங்களை தீவிரமாக தேடினர். அப்போது, சீதாராமின் பழைய குடும்ப விவரங்கள் மற்றும் முகவரி தகவல்கள் ஆவணங்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டன.</p><h2><strong>வாக்காளர் பதிவு</strong></h2><p>உடனடியாக செயல்பட்ட பள்ளி ஊழியர்கள், ஆவணத்தில் இருந்த தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி, சீதாராமின் மூத்த சகோதரரான கிருஷ்ணாவை தொடர்பு கொண்டனர். "உங்கள் தம்பி சீதாராம் இங்கு சான்றிதழ் வாங்க வந்திருக்கிறார்..." என்று அலைபேசியில் கேட்ட அந்த ஒரு வார்த்தை, அண்ணன் கிருஷ்ணாவை உறைய செய்தது. இத்தனை ஆண்டுகள் கழித்து தம்பி உயிரோடு இருக்கிறான் என்ற செய்தி, கிருஷ்ணா குடும்பத்தினரை ஆனந்தக் கண்ணீரில் மூழ்கடித்தது. தகவலறிந்த கிருஷ்ணா, சிறிதும் தாமதிக்காமல் உடனடியாக அங்குள்ள வாக்காளர் பதிவு அதிகாரியை தொடர்பு கொண்டார்.</p><h2><strong>வாக்காளர் பட்டியல்</strong> </h2><p>செய்தி அறிந்த கிருஷ்ணாவின் மனைவி, குழந்தைகள் என அனைவரும் ஓடோடி வந்து, 35 ஆண்டுகளுக்கு பிறகு தம் கண்முன்னே நிற்கும் சீதாராமை கட்டித்தழுவி அழுது, தங்களது பாசத்தை பொழிந்தனர். இதனைத்தொடர்ந்து, சகோதரர்கள் இருவரும் ஒரே வாகனத்தில் புறப்பட்டுச் சென்றனர். 35 வருட இடைவெளிக்கு  பிறகு பிரிந்த குடும்பம் மீண்டும் ஒன்று சேர்ந்த இந்த நெகிழ்ச்சியான சம்பவம், தற்போது சமூக வலை தளங்களில் பரவி பலரையும் நெகிழச் செய்துள்ளது. </p><h2><strong>கூடுதல் உதவி தேர்தல் பதிவு அதிகாரி</strong></h2><p>இதுகுறித்து கூடுதல் உதவி தேர்தல் பதிவு அதிகாரி (ஏ.இ.ஆர்.ஓ.) டாக்டர் ரமேஷ் குமார் கூறுகையில், "தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த நடவடிக்கை, வெறும் அதிகாரப்பூர்வப் பணி மட்டுமல்ல; அது 35 ஆண்டுகளாக பிரிந்திருந்த ஓர் அண்ணன்-தம்பியை மீண்டும் இணைக்கும் பாசப் பாலமாகவும் மாறியுள்ளது. வாழ்க்கையில் திசைமாறிபோன ஒரு குடும்பத்தை மீண்டும் ஒன்று சேர்த்ததில் எங்கள் களப்பணிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக கருதுகிறோம்,"என்று உணர்ச்சி பொங்கத் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>தவெக பிரமுகர் கொலை: ‘வெற்றி சட்டம் -ஒழுங்கு’ நிலை - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-functionarys-murder-udhayanidhi-stalin-criticizes-the-state-of-law-and-order</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-functionarys-murder-udhayanidhi-stalin-criticizes-the-state-of-law-and-order#comments</comments><guid isPermaLink="false">d607f0cc-03b2-4c72-aa71-54d14e366708</guid><pubDate>Sun, 06 Sep 2026 06:56:51 +0000</pubDate><atom:updated>2026-09-06T06:56:51.862Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,தவெக,Udhayanidhi Stalin,tvk,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/65fkfei7/New-Project-2026-09-06T122517.854.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தவெக பிரமுகர் கொலை: ‘வெற்றி சட்டம் -ஒழுங்கு’ நிலை - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/65fkfei7/New-Project-2026-09-06T122517.854.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை அடையாற்றில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/terrible-in-chennai-thaveka-celebrity-was-hacked-to-death-5-people-arrested">தவெக பிரமுகர் கண்ணன்</a> வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்.,</p><p>“நாளை முதலமைச்சர் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் மீது பதிலுரை அளிப்பதற்கு முன்பாக அவரது கட்சிப் பிரமுகர் ஒருவரே தலைநகரில் கொலைக்கு ஆளாகியுள்ளார்.</p><p>அதுவும், தனது உயிருக்குப் பாதுகாப்பு வேண்டி ஆளும் த.வெ.க.வில் இணைந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி சாலையில் ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இதுதான் தமிழ்நாட்டின் ‘வெற்றி சட்டம்-ஒழுங்கு’ நிலை!</p><p>தலைநகரிலேயே சாலையில், இப்படி ஒரு கொலை நடக்கும் அளவு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயிருப்பதை நினைத்து வருந்துவதா?</p><p>இல்லை, சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டியாகத் த.வெ.க. இருப்பதை நினைத்து வருந்துவதா?</p><p>இதற்கும் தி.மு.க.வை எப்படி குற்றம் சொல்லலாம் என யோசிப்பதை நிறுத்திவிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>சென்னையில் பயங்கரம் - தவெக பிரமுகர் ஓட ஓட வெட்டிக்கொலை... 5 பேர் கைது!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/terrible-in-chennai-thaveka-celebrity-was-hacked-to-death-5-people-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/terrible-in-chennai-thaveka-celebrity-was-hacked-to-death-5-people-arrested#comments</comments><guid isPermaLink="false">6eaedc54-719a-4a5c-85a3-a78285f0ef3a</guid><pubDate>Sun, 06 Sep 2026 06:43:40 +0000</pubDate><atom:updated>2026-09-06T06:43:40.673Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>கொலை வழக்கு,Murder case,சென்னை,Chennai,TVK functionary,தவெக பிரமுகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/dgz5jlqx/New-Project-2026-09-06T121240.007.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டபோது]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னையில் பயங்கரம் - தவெக பிரமுகர் ஓட ஓட வெட்டிக்கொலை... 5 பேர் கைது!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/dgz5jlqx/New-Project-2026-09-06T121240.007.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை அடையாறு சாஸ்திரி நகர் வண்ணாந்துறைப் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். அ.தி.மு.க.வில் 174வது தெற்கு வட்டக் செயலாளராக இருந்த கண்ணன், சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்து பணியாற்றி வந்தார்.</p><h2>ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை</h2><p>இந்த நிலையில் நேற்று இரவு (செப்.5) 9 மணி அளவில்  வண்ணாந்துறை பகுதியில் சென்று கொண்டிருந்த கண்ணனை மர்ம நபர்கள் சுற்றி வளைத்தனர்.  அவர்களது கையில் அரிவாள், கத்தி உள்ளிட்ட  பயங்கர ஆயுதங்கள் இருந்தன.</p><p>இதைபார்த்து அதிர்ச்சியில் உறைந்துபோன கண்ணன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இருப்பினும் ரவுடி கும்பல் கண்ணனை ஓட ஓட விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டியது.</p><p>இதில் நிலைகுலைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார். </p><h2>உறவினர்கள் முற்றுகை</h2><p>இது பற்றி தகவல் கிடைத்ததும் சாஸ்திரி நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><p>இதற்கிடையே கண்ணன் கொலை செய்யப்பட்ட தகவல் பரவியதும் அப்பகுதியைச் சேர்ந்த அவரது உறவினர்கள் திரண்டு  முற்றுகை  போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><h2>காரணம் என்ன?</h2><p>போலீசாரின் ரவுடிகள் பட்டியலில்  ஏற்கனவே இடம் பெற்றிருந்த கண்ணன் மீது பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. </p><p>திருவான்மியூர் பகுதியில் நடைபெற்ற கொலை ஒன்றில் பழிக்குப் பழி வாங்கும் வகையில் கண்ணனை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்திருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. </p><p>அதே நேரத்தில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்த கண்ணன் அது தொடர்பான முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. </p><p>கண்ணன் சமீபத்தில் அ.தி.மு.க.வில் இருந்து விலகி தவெக-வில் இணைந்திருந்ததால், அவரது அரசியல் நடவடிக்கைகள் பிடிக்காமல் எதிராளிகள் தீர்த்து கட்டினார்களா என்கிற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.</p><h2>5 பேர் கைது </h2><p>சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஐந்து பேரை கைது செய்து விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>எல்நினோ காலமாற்றம் எதிரொலி: தீ மூட்ட தடை விதித்த ஆஸ்திரேலியா</title><link>https://www.maalaimalar.com/news/world/australias-sydney-city-records-33-degrees-celsius-fire-ban-imposed</link><comments>https://www.maalaimalar.com/news/world/australias-sydney-city-records-33-degrees-celsius-fire-ban-imposed#comments</comments><guid isPermaLink="false">46a891cd-8859-4fc9-a7ed-78bcd3c7fb1c</guid><pubDate>Sun, 06 Sep 2026 06:37:50 +0000</pubDate><atom:updated>2026-09-06T06:37:50.437Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Australia,ஆஸ்திரேலியா,சிட்னி,Sydney,forest fire,காட்டுத்தீ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/ymm8wbkn/Untitled-design-28.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sydney]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/ymm8wbkn/Untitled-design-28.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் எல்நினோ கால மாற்றத்தால் நேற்று திடீரென வீசிய வெப்பக்காற்று வீசியது. இதன் காரணமாக, அந்த பகுதியில் தீ மூட்டுவதற்கு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.</p><p>சிட்னி நகரத்தில் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் நிலவி வருவதால், இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE">ஆஸ்திரேலியாவின்</a> நியூ சவுத் வேல்ஸ் நகரத்தில் வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானதாக வானிலை மையம் தெரிவித்தது. இந்த வெப்பநிலை சராசரியாக நிலவும் அளவை விட 13 டிகிரி செல்சியஸ் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும் சிட்னி விமான நிலையத்தில் நேற்று காலை வேளையின்போது வெப்பநிலை 28.6 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியிருந்தது. இது செப்டம்பர் மாதத்தின் சராசரி அதிகபட்ச வெப்பநிலையை விட 7 டிகிரி அதிகமாகும்.</p><h3><strong>வறண்ட வெப்பமான சூழ்நிலை</strong></h3><p>வெப்பநிலை அதிகரித்து காணப்படுவது தொடர்பாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகையில், காலையில் உருவாக இருக்கும் மிதமான முதல் வலுவான வடமேற்கு காற்று, வறண்ட மற்றும் பருவத்திற்கு ஒவ்வாத வெப்பமான சூல்நிலையுடன் இணைந்து, சிட்னி நகரம் முழுவதும் தீ விபத்து ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ளது.</p><h3><strong>தடை உத்தரவு</strong></h3><p>சிட்னி நகரில் தீ அபாயம் நிகழ்வதற்கு அதிகப்படியான சூழ்நிலைகள் உள்ளதால், மாநில தீயணைப்புத் துறை அதிகாரிகள் தீ மூட்டுவதற்கு முழுமையான தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.</p><p>சுமார் 3 கோடி மக்கள் தொகை கொண்ட சிட்னி நகரில், எல்நினோ காலநிலை மாற்றத்தால் அதிகப்படியான வெப்பமும் வானிலை மாற்றமும் நிலவி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>நான் தவறான நபரை திருமணம் செய்துவிட்டேன்: மனைவியை பிரிந்த பிக்பாஸ் போட்டியாளர் பிரதீப் ஆண்டனி</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/i-married-the-wrong-person-bigg-boss-contestant-pradeep-anthony</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/i-married-the-wrong-person-bigg-boss-contestant-pradeep-anthony#comments</comments><guid isPermaLink="false">c2e26bf2-6fe6-4f69-b680-1b73e0a75258</guid><pubDate>Sun, 06 Sep 2026 06:00:27 +0000</pubDate><atom:updated>2026-09-06T06:00:27.861Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>pradeep antony,பிக்பாஸ்,bigboss,பிரதீப் ஆண்டனி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/ea2zvfts/Untitled-design-27.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pradeep Anthony]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/ea2zvfts/Untitled-design-27.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிக்பாஸ் சீசன் 7-இல் கலந்து கொண்ட போட்டியாளர் பிரதீப் ஆண்டனி, தனது மனைவியை பிரிந்துவிட்டதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டதை தொடர்ந்து, அந்த பதிவு இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">பிக்பாஸ் தமிழ்</a> சீசன் 7-இல் கலந்துகொண்ட நடிகர் பிரதீப் ஆண்டனி, தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், தனது திருமண வாழ்வில் சந்தித்த சவால்களையும், தனது மகளை பிரிந்திருப்பதால் ஏற்பட்ட மன உளைச்சல் குறித்தும் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.</p><h3><strong>பிரதீப் ஆண்டனி - பூஜா தம்பதி</strong></h3><p>பிரதீப் ஆண்டனி மற்றும் பூஜா ஆகியோர் கடந்த 2024-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.</p><p>இதையடுத்து தனது மனைவியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, அவரை பிரிந்து விட்டதாக கடந்த வாரம் சமூக வலைதளத்தில் பிரதீப் பதிவிட்டார்.</p><h3><strong>தவறான நபரை தேர்வு செய்துவிட்டேன்</strong></h3><p>இதுகுறித்து அவர் வெளியிட்ட இன்ஸ்டா பதிவில், “நான் ஒரு தவறு செய்துவிட்டேன். நான் தவறான நபரைத் திருமணம் செய்துகொண்டேன் என்று நினைக்கிறேன், அது அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் என்னை ஒரு மிக மோசமான நபராக மாற்றிவிட்டது.</p><p>எனது மனைவி இன்னும் தனது சொந்த குடும்பத்துடனும் வாழ்க்கையுடனும் வாழ்ந்து கொண்டிருந்தாள். நான் ஒவ்வொரு நாளும் ஒருவரின் வாழ்க்கையை அழித்துக்கொண்டிருப்பது போல் உணர்ந்தேன்.</p><p>இன்னொருவருடன் மகிழ்ச்சியாக வாழ்வதை எப்படி சமாளிப்பது என்று எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை. அது, இரண்டு எதிர் துருவங்கள் ஒவ்வொரு நாளும் மோதிக்கொள்வது போலவும், ஒருவர் எப்படி இருக்கிறாரோ அப்படியே அவரை வெறுப்பது போலவும் இருந்தது. அது எங்கள் இருவருக்கும் நியாயமற்றதாகத் தோன்றியது.</p><p>நான் என் திருமணத்திலிருந்து விலகிச் செல்ல முடிவு செய்துள்ளேன், ஏனென்றால் அந்த உறவில் என்னால் உண்மையிலேயே மூச்சுவிட முடியவில்லை” என்று அவர் பதிவிட்டார்.</p><h3><strong>இணையத்தில் விவாதம்</strong></h3><p>பிரதீப் பதிவிட்ட கருத்துக்கு சமூக வலைதளத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, தனது குடும்பம் பற்றிய தனிப்பட்ட விஷயங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டது தவறு என அவர் தெரிவித்துள்ளார்.</p><p>அதே நேரத்தில் அந்த பதிவு ஒரு உணர்ச்சிவசப்பட்ட தருணத்தில் பதிவிடப்பட்டது என்றும், அந்த தருணத்தில் தான் உணர்ந்ததை வெளிப்படுத்தியதற்காக வருந்தவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><h3><strong>எனக்கு சுயநினைவு உள்ளது</strong></h3><p>இதுகுறித்து பிரதீப் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “யாராவது கவலைப்பட்டால், நான் நலமாக இருக்கிறேன். சமூக ஊடகங்களில் தனிப்பட்ட ஒன்றை பதிவிட்டது என் தவறுதான்.</p><p>ஆனால் அது அந்த தருணத்தின் ஒரு வெளிப்பாடு என்று நினைக்கிறேன், அதற்காக நான் வெட்கப்படவில்லை. விமர்சனங்களைப் பற்றி எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.</p><p>என் வாழ்க்கைக்கான முடிவுகளை எடுக்கும் அளவுக்கு எனக்கு சுயநினைவு இருக்கிறது. நீங்கள் தாராளமாக விமர்சிக்கலாம். நன்றி, உங்களை நேசிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு காவலர் தினம் - முதலமைச்சர் விஜய் வாழ்த்து!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-police-day-chief-minister-vijay-extends-his-wishes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-police-day-chief-minister-vijay-extends-his-wishes#comments</comments><guid isPermaLink="false">19967fd7-7b92-4092-85d5-44f0a189abe5</guid><pubDate>Sun, 06 Sep 2026 05:38:48 +0000</pubDate><atom:updated>2026-09-06T05:38:48.617Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு காவல்துறை,Tamil Nadu Police,காவலர் தினம்,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,Police Day</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/87yk3kn8/New-Project-2026-09-06T110811.801.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாடு காவலர் தினம் - முதலமைச்சர் விஜய் வாழ்த்து!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/87yk3kn8/New-Project-2026-09-06T110811.801.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு காவலர் தினத்தை முன்னிட்டு மாநில<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-wishes-to-teachers-day"> முதலமைச்சர் ஜோசப் விஜய்</a> காவல்துறையினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். காவலர் தினத்திற்கு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது;</p><p>“1859-ஆம் ஆண்டு மெட்ராஸ் மாவட்டக் காவல் சட்டத்தை நிறைவேற்றி, நவீன மற்றும் அமைப்புரீதியான காவல்துறை தோற்றுவிக்கப்பட்ட நாளை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படும் காவலர் நாளை முன்னிட்டு, </p><p>சமூகத்தில் அமைதி நிலவிடவும், சட்டத்தின் ஆட்சி நிலைபெறவும் தன்னலமின்றிப் பணியாற்றிவரும் காவல்துறையினர் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த காவலர் நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>நமது மாநிலத்தில், குற்றங்களைத் தடுத்து, சட்ட ஒழுங்கைப் பேணுவதுடன், ஆபத்தான சூழல்களிலும், பேரிடர் காலங்களிலும் மக்களின் உயிர், உடைமை மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் துணிவுடன் நின்று களப்பணி ஆற்றிவரும் காவல்துறையினரின் வீரமும், தியாகமும் என்றும் போற்றத்தக்கவை. </p><p>காவல்துறையினரின் பணிச்சுமையைக் குறைத்து, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அவர்களின் பணித்திறனை மேம்படுத்தி, காவலர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் தேவையான நலத்திட்டங்களை உறுதிசெய்வதற்கும் நமது அரசு முன்னுரிமை அளிக்கும். </p><p>மக்களும், காவல்துறையுடன் கரம் கோர்த்து, நம்பிக்கையுடனும் நல்லிணக்கத்துடனும் பயணித்து, அமைதியும் பாதுகாப்பும் நிறைந்த உன்னதத் தமிழ்நாட்டை உருவாக்க இந்நாளில் உறுதியேற்போம்!.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>கட்சியை பலப்படுத்த நடவடிக்கை - அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய  ஆலோசனை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/measures-to-strengthen-the-party-edappadi-palaniswami-holds-key-consultation-with-aiadmk-district-secretaries-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/measures-to-strengthen-the-party-edappadi-palaniswami-holds-key-consultation-with-aiadmk-district-secretaries-today#comments</comments><guid isPermaLink="false">07cd5260-311c-4d76-83f2-1f6c24ed2839</guid><pubDate>Sun, 06 Sep 2026 05:14:31 +0000</pubDate><atom:updated>2026-09-06T05:14:31.928Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,Edappadi Palaniswami,அதிமுக,எடப்பாடி பழனிசாமி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/eozh11fi/New-Project-2026-09-06T104341.739.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கட்சியை பலப்படுத்த நடவடிக்கை - அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய  ஆலோசனை!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/eozh11fi/New-Project-2026-09-06T104341.739.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது அக்கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>தோல்வியால் கட்சிக்குள் மோதல்களும் கிளம்பி வருகின்றன. இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-government-will-not-complete-five-years-eddappadi-palaniswami">எடப்பாடி பழனிசாமி </a>மாவட்டம் வாரியாக, கட்சியில் அனைத்து மட்டத்திலும் உள்ள நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறார்.</p><p>அந்தவகையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.</p><p>இந்த ஆலோசனையின் போது சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்தும், விரைவில் நடைபெற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவது பற்றியும் விவாதித்துள்ளார். </p><p>புதிதாக  நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள், ஏற்கனவே பொறுப்பில் உள்ள மாவட்ட செயலாளர்கள் என அனைவரும் இந்த கூட்டத்தில்  கலந்து கொண்டனர். அவர்களுடன் கட்சியின் தலைமை நிர்வாகிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.</p><h2>வெற்றி பெற வேண்டும்</h2><p>அதிமுகவை மீண்டும் வலிமையான இயக்கமாக மாற்றுவதற்கு  மாவட்ட செயலாளர்கள் அனைவரும், கட்சி நிர்வாகிகளுடன்   ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார்.</p><p>அதிமுக எம்எல்ஏக்கள்  6 பேர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ள நிலையில், விரைவில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் மீண்டும் அதிமுகவை வெற்றிப்பெற வைத்து துரோகிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் எனவும் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>தீபாவளி டிக்கெட் முன்பதிவு: சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/diwali-ticket-booking-sold-out-in-minutes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/diwali-ticket-booking-sold-out-in-minutes#comments</comments><guid isPermaLink="false">b7050a88-009b-4e4c-b312-43aee026db2d</guid><pubDate>Sun, 06 Sep 2026 04:34:07 +0000</pubDate><atom:updated>2026-09-06T04:34:07.580Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Diwali,தீபாவளி,Ticket Booking,டிக்கெட் முன்பதிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/vltq48zt/train.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ train]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/vltq48zt/train.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து செல்லும் விரைவு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன.</strong></em></p><p>தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி வருகிறது. அதனால் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர் செல்லும் வகையில் ரெயில்களில் முன்பதிவு தொடங்குகிறது. தற்போது 60 நாளுக்கு முன் முன்பதிவு செய்யக்கூடிய நிலை உள்ளது.</p><p>சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்குச் செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் வந்தே பாரத் ரெயில்களில் பயணம் செய்ய மக்கள் தயாராக உள்ளனர்.</p><h2>முன்பதிவு தொடக்கம்</h2><p>இந்நிலையில்,  தீபாவளி பயணத்திற்காக நவம்பர் 5-ம் தேதி பயணம் செய்ய இன்று காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கியது.</p><h2>விற்றுத் தீர்ந்த டிக்கெட்கள்</h2><p>ரெயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி, சில நிமிடங்களிலேயே அனைத்து பயணச்சீட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.</p><p>நவம்பர் 6-ம் தேதி பயணம் செய்வதற்கு நாளையும், 7-ம் தேதி பயணத்திற்கு நாளை மறுதினமும் முன்பதிவு நடைபெற உள்ளது.</p><p>தீபாவளி பண்டிகை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு திரும்ப வரும் 10-ம் தேதி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம்.</p><p>இதுதவிர பெரும்பாலானவர்கள் ஏஜென்சிகள் மூலமாகவும் ஆன்லைன் வழியாகவும் முன்பதிவு செய்வதற்கு தயாராகி வருகின்றனர்.</p><p>ரெயில்களில் குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பாக குறித்த நேரத்திற்கு செல்ல முடியும் என்பதால் பெரும்பாலானவர்கள் ரெயில் பயணத்தையே விரும்புகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>ஐரோப்பிய கண்டத்திலிருந்து முதல்முறை - ஆர்பிட்டல் ராக்கெட்டை வெற்றிக்கரமாக விண்ணில் செலுத்தியது ஐசர் ஏரோஸ்பேஸ்!</title><link>https://www.maalaimalar.com/news/world/a-first-for-the-european-continent-isar-aerospace-successfully-launches-an-orbital-rocket</link><comments>https://www.maalaimalar.com/news/world/a-first-for-the-european-continent-isar-aerospace-successfully-launches-an-orbital-rocket#comments</comments><guid isPermaLink="false">e0703d4c-bd2b-4be4-b2db-dadf7bfae6bb</guid><pubDate>Sun, 06 Sep 2026 04:25:31 +0000</pubDate><atom:updated>2026-09-06T04:25:31.002Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜெர்மனி,Rocket,Isar Aerospace,orbit,ஐசர் ஏரோஸ்பேஸ்,ஸ்பெக்ட்ரம் ராக்கெட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/acdrteco/New-Project-2026-09-06T061511.909.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஐரோப்பிய கண்டத்திலிருந்து முதல்முறை -  ஆர்பிட்டல் ராக்கெட்டை வெற்றிக்கரமாக விண்ணில் செலுத்தியது ஐசர் ஏரோஸ்பேஸ்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/acdrteco/New-Project-2026-09-06T061511.909.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஐரோப்பிய மண்ணிலிருந்து முதல்முறையாக ஸ்பெக்ட்ரம் <a href="https://www.maalaimalar.com/news/national/a-first-step-for-india-gslv-f17-rocket-successfully-launched-into-space-pm-modi-expresses-pride">ராக்கெட்</a>டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனைப் படைத்துள்ளது ஜெர்மனியைச் சேர்ந்த ஐசர் ஏரோஸ்பேஸ் நிறுவனம்.</p><p>நார்வேயின் ஆர்டிக் பகுதியில் உள்ள ஆண்டோயா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து இந்த 28 மீட்டர் உயரமும், 2 மீட்டர் விட்டமும் கொண்ட ஸ்பெக்ட்ரம் ராக்கெட் நேற்று விண்ணில் ஏவப்பட்டது. </p><p>இது ஸ்பெக்ரம் ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான ஐசர் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் இரண்டாவது முயற்சியாகும். 18 மாதங்களுக்கு முன்பு ஏவப்பட்ட முதல் சோதனை முயற்சி தோல்வியில் முடிந்தது. </p><h2>ஸ்பெக்ட்ரம் ராக்கெட் </h2><p>ஸ்பெக்ட்ரம் ராக்கெட் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான சுமைகளைச் சுமந்து செல்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது புவியின் குறைந்த சுற்றுப்பாதைக்கு சுமார் 1,000 கிலோகிராம் எடையையும், சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதைக்கு சுமார் 700 கிலோகிராம் எடையையும் சுமந்து செல்லும் திறன் கொண்டது.</p><p>இந்த மனிதரில்லா ஸ்பெக்ட்ரம் ராக்கெட், 5 சிறிய செயற்கைக்கோள்களையும் ஒரு தொழில்நுட்ப பரிசோதனை கருவியையும் வெற்றிகரமாக விண்வெளி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளது.</p><p>அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் போன்ற பெரும் நிறுவனங்களுக்கு மாற்றாக, ஐரோப்பாவே சொந்தமாகக் கோள்களை ஏவுவதற்கான தன்னாட்சியைப் பெற இந்த வெற்றி ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஏமன் மற்றும் ஹவுதிகள் இடையே நடந்த தாக்குதலில் 60 பேர் பலி - பாப் அல் மண்டேப் ஜலசந்தியை கைப்பற்ற ஹவுதிகள் தீவிரம் </title><link>https://www.maalaimalar.com/news/world/houthi-push-to-control-bab-al-mandeb</link><comments>https://www.maalaimalar.com/news/world/houthi-push-to-control-bab-al-mandeb#comments</comments><guid isPermaLink="false">585347f1-27c3-42ea-b8b7-5af0a02095d3</guid><pubDate>Sun, 06 Sep 2026 04:18:50 +0000</pubDate><atom:updated>2026-09-06T04:18:50.660Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஈரான்,Iran,Yemen,ஏமன்,houthis,ஹூதி அமைப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/hhfdpdhi/Untitled-design-26.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Yemen Houthi Offensive]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/hhfdpdhi/Untitled-design-26.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சி இயக்கத்திற்கும் சவுதி அரேபியா ஆதரவை பெற்ற ஏமன் அரசாங்க படைகளுக்கும் இடையே நடந்த மோதலில், 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தனியார் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">ஈரான்</a> ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சி இயக்கத்திற்கும் சவுதி அரேபியா ஆதரவை பெற்ற ஏமன் அரசாங்க படைகளுக்கும் இடையே தாக்குதல் நடந்து வருகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF">ஹவுதி கிளர்ச்சியாளர்கள்</a> 2014-ஆம் ஆண்டு ஏமன் தலைநகரான சனா நகரத்தை கைப்பற்றி, அப்போதைய அரசாங்கத்தை வெளியேற்றினர். </p><p>அதை தொடர்ந்து சவுதி தலைமையிலான கூட்டணி, ஏமன் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கவும், ஈரானின் முக்கிய கூட்டாளியான ஹவுதிகளை எதிர்த்து போராடவும் தொடங்கியது.</p><p>இதையடுத்து ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் ஏமன் அரசாங்க படைகளுக்கும் கடந்த 2022-ஆம் ஆண்டு போர் ஒப்பந்தம் போடப்பட்டது.</p><p>ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சனா நகரத்தில், ஈரான் நாட்டிற்கு சொந்தமான விமானம் ஒன்று தரையிரங்க முயன்றது. அப்போது ஏமன் அரசாங்கம் விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, 2022-ஆம் ஆண்டு போடப்பட்டிருந்த போர் ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது.</p><p>இதைத்தொடர்ந்து இவர்களுக்கு இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து நடந்து வருகிறது.</p><p>இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஏமனில் உள்ள மேற்கு தைஸ் மற்றும் தெற்கு ஹொடைதா பகுதிகளில் ஹவுதிகள் தாக்குதலை நடத்தினர்.</p><h3><strong>60க்கும் மேற்பட்டோர் பலி</strong></h3><p>இந்த தாக்குதலில் ஏமன் அரசாங்க படைகள் மற்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படையை சேர்ந்த 129 பேர் கொல்லப்பட்டனர்.</p><p>இதைத்தொடர்ந்து நேற்று ஏமனின் தென்மேற்கு பகுதியில் ஹவுதிகள் மீண்டும் நடத்திய தாக்குதலில், 26 ஏமன் அரசாங்க படையினரும், 31 ஹூதி கிளர்ச்சியாளர்களும் கொல்லப்பட்டனர்.</p><p>ஏமன் கடற்கரையோர துறைமுக நகரங்களை ஒட்டி அமைந்துள்ள, பாப் அல்-மண்டேப் ஜலசந்தியை கைப்பற்றும் நோக்கில், ஹவுதிகள் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.</p><h3><strong>பாப் அல்-மண்டேப் ஜலசந்தி</strong></h3><p>சூயஸ் கால்வாய்க்கு செல்லும் கப்பல்களுக்கு பாப் அல்-மண்டேப் ஜலசந்தி ஒரு முக்கியமான கடல்வழி தளமாக உள்ளது. உலகளாவிய கடல்வழி வர்த்தகத்தில் சுமார் 10 சதவீதம் இந்த ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது.</p><p>அமெரிக்கா ஈரான் போர் தொடங்கிய பிறகு, சவுதி அரேபியா பல மாதங்களாக எண்ணெய் ஏற்றுமதி செய்ய இந்த பாப் அல்-மண்டேப் ஜலசந்தியை பயன்படுத்தி வருகிறது.</p><h3><strong>ஏடனில் இருந்து கூடுதல் படைகள்</strong></h3><p>மார்ச் 2026 முதல் ஹார்முஸ் ஜலசந்தி கிட்டத்தட்ட மூடப்பட்டதன் விளைவாக ஏற்கனவே கடுமையாக உயர்ந்துள்ள உலகளாவிய பொருட்களின் விலையை, பாப் அல்-மண்டேப் பகுதியில் கப்பல் போக்குவரத்து தடைபட்டால் அது மேலும் அதிகரிக்க செய்யும் என அஞ்சப்படுகிறது.</p><p>ஹவுதிகள் அந்த துறைமுக நகரத்தை மீண்டும் கைப்பற்றி, செங்கடல் கடற்கரையோரமுள்ள முக்கிய பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தால், அது செங்கடலில் நடைபெறும் கடற்படை போக்குவரத்தை கட்டுப்படுத்த அவர்களுக்கு வழிவகை செய்யும்.</p><p>ஹவுதிகளின் தாக்குதல் குறித்து ஏமன் அரசாங்க ராணுவ அதிகாரி கூறுகையில், ஹவுதிகளின் முன்னேற்றத்தை தடுப்பதற்காக ஏமன் நாட்டில் உள்ள ஏடன் நகரத்தில் இருந்து கூடுதல் படைகள் வந்துகொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையின் 2வது விமான நிலையம் - செய்யூர், கும்மிடிப்பூண்டி இடங்களை தேர்வு செய்தது தவெக அரசு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennais-second-airport-cheyyur-and-gummidipoondi-selected-as-sites</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennais-second-airport-cheyyur-and-gummidipoondi-selected-as-sites#comments</comments><guid isPermaLink="false">218e1196-a7a5-4bc2-8e68-e3a1e0687f0e</guid><pubDate>Sun, 06 Sep 2026 03:22:14 +0000</pubDate><atom:updated>2026-09-06T03:22:14.891Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,gummidipoondi,Parandur,Tamil Nadu govt,cheyyur,பரந்தூர்,கும்மிடிப்பூண்டி,Chennais second airport,சென்னையின் 2வது விமான நிலையம்,செய்யூர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/t67fc1og/New-Project-2026-09-06T045534.618.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னையின் 2வது விமான நிலையம் - செய்யூர், கும்மிடிப்பூண்டி இடங்களை தேர்வு செய்தது தவெக அரசு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/t67fc1og/New-Project-2026-09-06T045534.618.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையின் 2வது <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-comment-parandur-airport-project-cancelled">விமானம் நிலையம்</a> அமைக்க செய்யூர் மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய 2 இடங்களை தேர்வு செய்துள்ளது விஜய் தலைமையிலான தவெக அரசு.</p><p>இந்த 2 இடங்களிலும் முதற்கட்ட சாத்தியக்கூறு ஆய்வு நடத்தக் கோரி இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. </p><p>செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செய்யூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் கும்மிடிப்பூண்டிக்கு அருகிலுள்ள மணலூர் ஆகிய இடங்களை இடங்களை ஆய்வு செய்யுமாறு, இந்திய விமான நிலைய ஆணையத்திடம் தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.</p><h2>சென்னைக்கு 2வது விமான நிலையம் </h2><p>சென்னையின் 2-வது சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கான முயற்சி என்பது நேற்று இன்று தொடங்கியதல்ல; அது சுமார் 3 தசாப்தங்களாக தொடர்ந்து வரும் நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட கதையாகும்.</p><p>1999-ல் தேடுதல் தொடங்கியது. அன்று முதல், இன்றுவரை மாறி மாறி அமையும் அரசுகள் பல இடங்களை பார்வையிட்டு, பரிசோதித்து இடத்தை தேர்ந்தெடுத்தாலும், கட்டுமான பணிகள் தொடங்கவில்லை.</p><p>1999-ஆம் ஆண்டிலேயே தேடுதல் பணி தொடங்கிய நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், சென்னையிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தொழில்துறை மையமான ஸ்ரீபெரும்புதூருக்கு அருகில், 4,000 ஏக்கர் பரப்பளவுள்ள ஒரு சாத்தியமான இடத்தை மாநில அரசு 2007-ஆம் ஆண்டில் அடையாளம் கண்டு ஒப்புதல் அளித்தது.  </p><p>இருப்பினும், அரசுக்குச் சொந்தமான நிலம் சுமார் 800 ஏக்கர் மட்டுமே இருந்ததால், தேவையான இன்னும் 3200 ஏக்கர் நிலம் கையகப்படுத்துதல் என்பது சவாலாக அமைந்தது. மேலும் அடுத்து வந்த அரசு என அரசியல் காரணங்களாலும் இந்த இடம் கைவிடப்பட்டது. </p><h2>பரந்தூர் தேர்வு</h2><p>இச்சூழலில் 2021-ல் திமுக ஆட்சி அமைத்தபோது இந்தத் திட்டம் வேகம் பெற்றது. ஸ்ரீபெரும்புதூர் திட்டம் கைவிடப்பட்ட பிறகு, மாநில அரசு திருப்போரூர், பரந்தூர், பண்ணூர் மற்றும் படாளம் ஆகிய இடங்களைப் பட்டியலிட்டது. </p><p>சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டுத் தேவைகளை மதிப்பிட்ட பின்னர், பரந்தூர் மற்றும் அதன் அருகிலுள்ள பண்ணூர் எனத் தேர்வை இரண்டாக குறைத்தது. </p><p>இவ்விரு இடங்களும் சென்னை-பெங்களூரு வழித்தடத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர்-சுங்குவர்சத்திரம் தொழிற்பேட்டைக்கு அருகில் அமைந்திருந்தன. </p><p>இறுதியில் பரந்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டு, மத்திய அரசிடமிருந்து கொள்கை ரீதியான ஒப்புதலையும், இந்திய விமான நிலைய ஆணையத்திடமிருந்து தொழில்நுட்ப-பொருளாதார அனுமதியையும் மாநில அரசுப் பெற்றது. </p><h2>பரந்தூரில் திட்டமிடப்பட்ட கட்டுமானப் பணிகள்</h2><p>பரந்தூரில் முன்மொழியப்பட்ட விமான நிலையம், தமிழ்நாட்டின் மிகப்பெரிய திட்டமிடப்பட்ட உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஒன்றாகும். </p><p>இந்த புதிய விமான நிலையம் 13 கிராமங்களில் 5,746 ஏக்கர் பரப்பளவில் ரூ. 29,143 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட இருந்தது. அமெரிக்காவைச் சேர்ந்த க லூயிஸ் பெர்கர் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த திட்டத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கையையும் தயாரித்தது. </p><p>கட்டுமானப் பணிகள் நான்கு கட்டங்களாகத் திட்டமிடப்பட்டிருந்தன. முதல் கட்டத்திற்கு மட்டும் ரூ.13,854 கோடி செலவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. </p><p>விமான நிலையத்துடன் பல சாலை, மெட்ரோ மற்றும் தளவாடத் திட்டங்களும் திட்டமிடப்பட்டிருந்தன.</p><h2>கிளம்பிய எதிர்ப்பு</h2><p>பரந்தூர் தேர்வு செய்யப்பட்டு, 2022 ஆகஸ்டில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியான உடனேயே போராட்டங்கள் தொடங்கின. காரணம் நிலத்திற்கான இழப்பீட்டைத் தாண்டி, இடப்பெயர்வே மக்களை அதிகம் மனம் நோக செய்தது. </p><p>தலைமுறை, தலைமுறையாக பல தசாப்தங்களாக வாழ்ந்த இடத்தைவிட்டு, தங்களுக்கு உணவிட்ட இடத்தைவிட்டு விலகுவது உயிரை உடம்பிலிருந்து பிடுங்குவத்கு சமமானது. கிராமங்களின் ஒரு பகுதி அல்ல, ஒட்டுமொத்த கிராமங்களும் இடம்பெயர வேண்டிய சூழல் நிலவியது.</p><p>ஆண்டுக்கு முப்போக விளைச்சலை தரும் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்றும், பல நீர்நிலைகளும் பாதிப்புக்குள்ளாகும் என்றும் விவசாயிகளும், சம்பந்தப்பட்ட கிராம மக்களும், சமூக ஆர்வலர்களும் வாதிட்டனர். </p><p>அரசு, நிலத்தின் சந்தை மதிப்பை விட 3.5 மடங்கு அதிக இழப்பீடு வழங்க முன்வந்ததோடு, இடம்பெயரும் குடும்பங்களுக்கு மாற்று இடங்களை வழங்குவதாகவும் உறுதியளித்தது. இருப்பினும்  ஏகனாபுரம் உட்பட 13 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் 4 ஆண்டுகளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>இதில் ஏகனாபுரம் போராட்டத்திற்கு மையக்களமாக அமைந்தது. காரணம் ஏகனாபுரம், முன்மொழியப்பட்ட ஓடுபாதையின் வழித்தடத்தில் நேரடியாக அமைந்திருந்தது.&nbsp; </p><h2>போக்கை மாற்றிய தவெக </h2><p>இச்சூழலில்தான் புதிய கட்சித் தொடங்கிய விஜய்,  ஏகனாபுரம் மக்களை சந்தித்து தங்கள் ஆட்சி அமைந்தால் இத்திட்டம் கைவிடப்படும் தேர்தல் வாக்குறுதியும் அளித்தார். </p><p>அவர் கூறியவாறே நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலை தொடர்ந்து தவெக ஆட்சி அமைந்த நிலையில், பரந்தூரில் முன்மொழியப்பட்ட விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாவும், மாற்று இடங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவித்தார். </p><p>விவசாயிகள், விளைநிலங்கள் மற்றும் நீர்நிலைகளைப் பாதுகாப்பதே இதன் முக்கிய நோக்கம் என தவெக அரசுக்கூறியது. </p><h2>மாற்று இடம் தேர்வு</h2><p>இந்நிலையில் சென்னைக்கு 2-வது விமான நிலையம் அமைப்பதற்கான மாற்று இடங்களாகச் செய்யூர் மற்றும் மணலூர் ஆகிய இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.</p><p>தற்போது இந்த இரண்டு இடங்களிலும் முதற்கட்ட சாத்தியக்கூறுகள் (Pre-feasibility study) குறித்த ஆய்வினை மேற்கொள்ள இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பியுள்ளது. </p><p>அவர்களின் தொழில்நுட்ப அறிக்கை வந்த பிறகே சென்னையின் 2-வது விமான நிலையம் அமையப்போகும் இறுதி இடம் எதென்று முடிவாகும். </p><h2>இருப்பினும் சிக்கல்</h2><p>இடம் தேர்வு செய்யப்பட்டாலும்,  புதிய இடமும் அதே சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நிலம் கையகப்படுத்துதல், இடப்பெயர்வு மற்றும் தேவையான சுற்றுச்சூழல் அனுமதிகளைப் பெறுதல் என இங்கும் பல தடைகளை எதிர்கொள்ள நேரும். </p><p>தற்போது இருக்கும் அதே அரசியல் மற்றும் பொதுமக்களின் ஆதரவைத் தக்கவைத்துக்கொண்டே இத்திட்டத்தை கொண்டு செல்வதுதான் தவெக அரசுக்கு தற்போது இருக்கும் சவாலாகும். </p>]]></content:encoded></item><item><title>பொலிவியா: ராணுவ தளத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் பலி</title><link>https://www.maalaimalar.com/news/world/explosion-at-bolivia-military-base-kills-at-least-10</link><comments>https://www.maalaimalar.com/news/world/explosion-at-bolivia-military-base-kills-at-least-10#comments</comments><guid isPermaLink="false">64e516a9-8bc9-41b8-885b-e1365e8d670e</guid><pubDate>Sun, 06 Sep 2026 03:14:48 +0000</pubDate><atom:updated>2026-09-06T03:14:48.744Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>explosion,வெடிவிபத்து,ராணுவ தளம்,பொலிவியா,Bolivian,army base</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/7c0beea7/New-Project-40.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ blast]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/7c0beea7/New-Project-40.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பொலிவியாவில் உள்ள ராணுவ தளத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.</strong></em></p><p>தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பொலிவியா. அங்குள்ள லா பாஸ் நகரில் இருந்து 30 கி.மீ தொலைவில் ராணுவ தளம் உள்ளது. இந்த ராணுவ தளத்தில் ஏராளமான ராணுவ வீரர்கள் பணியாற்றி வருகின்றனர்.</p><h2>10 பேர் பலி</h2><p>இந்நிலையில், இந்த ராணுவ தளத்தில் பீரங்கி படைப்பிரிவில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.</p><p>இந்த வெடி விபத்து குறித்து தகவலறிந்ததும் தீயணைப்பு வீரர்கள், ஆம்புலன்ஸ்கள், மருத்துவ குழுக்கள் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். </p><p>மீட்புக்குழுவினர் விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். </p><p>படுகாயம் அடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.</p><h2>தீவிர விசாரணை</h2><p>பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான பட்டாசு பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த பகுதியில் இருந்தே வெடிவிபத்து தொடங்கிது என தெரிவித்த அதிகாரிகள், வெடி விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மகாராஷ்டிராவில் தயிர் பானை உடைக்கும் போட்டியில் 7 வயது சிறுவன் உட்பட 2 பேர் பலி</title><link>https://www.maalaimalar.com/news/national/seven-year-old-boy-woman-killed-yogurt-pot-competition-maharashtra</link><comments>https://www.maalaimalar.com/news/national/seven-year-old-boy-woman-killed-yogurt-pot-competition-maharashtra#comments</comments><guid isPermaLink="false">ef19204c-de84-47b4-af1f-f0f99b104d1c</guid><pubDate>Sun, 06 Sep 2026 02:44:42 +0000</pubDate><atom:updated>2026-09-06T02:44:42.161Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>mumbai,மும்பை,கிருஷ்ண ஜெயந்தி,krishna jayanthi,Dahi Handi</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/d5q16utj/Untitled-design-25.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Maharashtra Dahi Handi Accident]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/d5q16utj/Untitled-design-25.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிராவில் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடும் விதமாக தயிர் பானை உடைக்கும் போட்டி நடைபெற்றது. அப்போது போட்டியை காண்பதற்காக  கூட்டத்தில் நின்று கொண்டிருந்த இருந்த ஏழு வயது சிறுவன் மற்றும் ஒரு பெண் மீது தூண் சரிந்து விழுந்ததில் இருவரும் உயிரிழந்தனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88">மும்பை</a> மலாட் பகுதியை இளைஞர் குழுவினர், கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடும் விதமாக முன் அனுமதியின்றி தாங்களாகவே திருவிழா ஒன்றை நேற்று கொண்டாடினர். அப்போது அந்த திருவிழாவில் தயிர் பானை உடைக்கும் போட்டி நடைபெற்றது. </p><h3><strong>மும்பை மலாட் பகுதி</strong></h3><p>இந்த போட்டியை காண்பதற்காக மலாட் கிராமத்தில் திரளான மக்கள் ஒன்றாக கூடினர். அப்போது இளைஞர்கள் ஒன்றாக பிரமிட் வடிவத்தில் நின்று, கயிற்றில் தொங்கவிடப்பட்டிருந்த பானையை உடைக்க முயன்றனர்.</p><p>இந்த போட்டியை காண்பதற்காக அந்த கூட்டத்தில் ஏழு வயது சிறுவன் நின்று கொண்டிருந்தான்.</p><h3><strong>தயிர் பானை உடைக்கும் போட்டி</strong></h3><p>தயிர் பானையை தாங்கி கொண்டிருந்த கயிறு, ஒரு மரத்திற்கும் தரைத்தள கட்டிடத்தின் செங்கல் தூணுக்கும் இடையில் கட்டப்பட்டு இருந்தது.</p><p>அந்த சமயத்தில் இளைஞர்கள் பானையை உடைக்க முயன்றபோது, அங்கே இருந்த தூண் ஒன்று சரிந்து கூட்டத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மேல் விழுந்தது.</p><p>இதையடுத்து தூண் சரிந்து கூட்டத்தில் நின்று கொண்டிருந்த சிறுவனின் தலை மீது விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்தவர்கள் சிறுவனை மீட்டு, மால்வானி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.</p><p>இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.</p><h3><strong>புனே பகுதி</strong></h3><p>இதேபோன்று மகராஷ்டிராவில் உள்ள புனே நகரத்தில் நடைபெற்ற தயிர் பானை உடைக்கும் போட்டியில், ஒரு இரும்பு சட்டம் சரிந்து விழுந்ததில், சல்மா சலாவுதீன் பதான் என்ற பெண் உடல் நசுங்கி உயிரிழந்தார்.</p><h3><strong>மகராஷ்டிரா துணை முதலமைச்சர்</strong></h3><p>இந்த துயர சம்பவம் குறித்து மகாராஷ்டிர துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், மனித பிரமிடுகளை அமைக்கும் போது, போட்டியில் கலந்துகொள்பவர்கள் அரசாங்கத்தின் விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>இன்றைய ராசிபலன்: 6.9.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு யோகமான நாள்!</title><link>https://www.maalaimalar.com/Today-Transit/todays-horoscope-692026-an-auspicious-day-for-these-zodiac-signs</link><comments>https://www.maalaimalar.com/Today-Transit/todays-horoscope-692026-an-auspicious-day-for-these-zodiac-signs#comments</comments><guid isPermaLink="false">255b85fb-46b0-4c43-a575-3f54959c87cf</guid><pubDate>Sun, 06 Sep 2026 01:56:27 +0000</pubDate><atom:updated>2026-09-06T01:56:27.174Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords></media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/omjpkisa/New-Project-2026-09-06T043703.323.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இன்றைய ராசிபலன்: 6.9.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு யோகமான நாள்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/omjpkisa/New-Project-2026-09-06T043703.323.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இன்றைய ராசி பலன்கள்</category><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>நிதிநிலை உயர்ந்து நிம்மதி காணும் நாள். நினைத்தது நிறைவேறும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.</p><h2>ரிஷபம்</h2><p>ஆதாயம் தரும் தகவலில் அக்கறை காட்டும் நாள். கல்யாண முயற்சி கைக்கூடும். குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.</p><h2>மிதுனம்</h2><p>உற்சாகமாகப் பணிபுரியும் நாள், பிறர் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். தடைப்பட்ட காரியங்கள் தானாகவே நடைபெறும். வருமானம் உயரும்.</p><h2>கடகம்</h2><p>யோகமான நாள். யோசிக்காமல் செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு உண்டு. பயணம் பலன் தரும்.</p><h2>சிம்மம்</h2><p>மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும். எதிர்பாராத தனலாபம் உண்டு. தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள்.</p><h2>கன்னி</h2><p>வம்பு, வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாள். பெரிய மனிதர்களின் ஆலோசனையால் பிரச்சினையிலிருந்து விடுபடுவீர்கள்.</p><h2>துலாம்</h2><p>நட்பு வட்டம் விரிவடையும் நாள். முன்னேற்றம் கருதி முக்கியப் புள்ளிகளைச் புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுப்பீர்கள்.  உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.</p><h2>விருச்சகம் </h2><p>எதிலும் கவனம் அதிகம் தேவைப்படும் நாள். வீணான குழப்பம் தோன்றும். மற்றவர்களுக்கு பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.</p><h2>தனுசு</h2><p>பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். வியாபாரத்தில் ஆக்கப்பூர்வமான மாற்றங்களைச் செய்வீர்கள். சொத்துகளால் லாபம் உண்டு. திருமணத்தடை அகலும்.</p><h2>மகரம்</h2><p>பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புதியவர்கள் அறிமுகமாவர். வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும். கணிசமான தொகை கைகளில் புரளும்.</p><h2>கும்பம்</h2><p>புதிய பாதை புலப்படும் நாள். அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப்பணி தொடரும். உத்தியோகத்தில் உள்ள நுணுக்கங்களை மேலதிகாரிகள் கற்றுத் தருவர்.</p><h2>மீனம்</h2><p>சிக்கல்கள் விலகிச் சிறப்புகள் வந்து சேரும் நாள். மறதியால் விட்டுப்போன பணிகளை இன்று செய்து முடிப்பீர்கள். வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர்.</p>]]></content:encoded></item><item><title>துலீப் டிராபி இறுதிப்போட்டி: சேப்பாக்கத்தில் தெற்கு-கிழக்கு மண்டலங்கள் இன்று மோதல்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/duleep-trophy-final-today-in-chepauk-ground</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/duleep-trophy-final-today-in-chepauk-ground#comments</comments><guid isPermaLink="false">a095c71f-9840-42bd-8d9c-ccf763d50d8b</guid><pubDate>Sun, 06 Sep 2026 01:48:26 +0000</pubDate><atom:updated>2026-09-06T01:48:26.691Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>துலீப் டிராபி,Duleep Trophy,south zone,East Zone,கிழக்கு மண்டலம்,தெற்கு மண்டலம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/c1tlsmoc/duleep.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ tilak varma, ishan kishan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/c1tlsmoc/duleep.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சேப்பாக்கத்தில் இன்று நடைபெற உள்ள துலீப் டிராபி இறுதிப்போட்டியில் தெற்கு மண்டல அணியும், கிழக்கு மண்டல அணியும் மோத உள்ளன.</strong></em></p><p>இந்தியாவில் நடைபெறும் உள்நாட்டு முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் முக்கியமானது துலீப் டிராபி போட்டியாகும்.</p><h2>இறுதிப்போட்டி</h2><p>இதன் முதல் சீசன் 1961-1962-ல் நடைபெற்றது. தற்போது 63-வது சீசன் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம்  மைதானத்தில் இன்று தொடங்குகிறது. 10-ம் தேதி வரை  5 நாட்கள் இந்தப் போட்டி  நடக்கிறது. இதில் தெற்கு மண்டலம் - கிழக்கு மண்டலம் அணிகள் மோத உள்ளன. </p><h2>திலக் வர்மா</h2><p>தமிழ்நாடு, ஆந்திரா, ஐதராபாத், கர்நாடகா, கேரளம், புதுச்சேரி, கோவா ஆகிய அணிகளின் வீரர்களைக் கொண்டது தெற்கு மண்டலம்.</p><p>இந்த அணிக்கு திலக் வர்மா கேப்டனாக  இருக்கிறார். அவர் ஒரு சதமும், ஒரு அரை சதமும் அடித்து நல்ல பார்மில் உள்ளார். சென்னையைச் சேர்ந்த என்.ஜெகதீசன் விக்கெட் கீப்பராக  உள்ளார். தேவ்தத் படிக்கல், முகமது சிராஜ் போன்ற இந்திய வீரர்கள் தெற்கு மண்டல அணிக்காக விளையாடுகிறார்கள்.  </p><p>தெற்கு மண்டலம் 13 முறை துலீப் டிராபியை வென்றுள்ளது. 14-வது தடவையாக சாம்பியன் பட்டம் வெல்லும் ஆர்வத்தில் இருக்கிறது. அந்த அணி அரையிறுதியில் வடக்கு மண்டலத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. </p><h2>இஷான் கிஷன்</h2><p>கிழக்கு மண்டல அணிக்கு இஷான் கிஷன் கேப்டனாக இருக்கிறார். வைபவ் சூர்யவன்ஷி,  முகமது ஷமி, முகேஷ் குமார் போன்ற சிறந்த வீரர்களும் அந்த அணியில் இருக்கிறார்கள்.</p><p>கிழக்கு மண்டலம் அரையிறுதியில் மத்திய மண்டலத்தை 4  விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்தது. கிழக்கு மண்டலம்  2   தடவை துலீப் டிராபியை வென்றுள்ளது. 3-வது முறையாக  சாம்பியன் பட்டம் வெல்லும் வேட்கையில் உள்ளது.</p><p>அசாம், பீகார், பெங்கால், ஜார்க்கண்ட், ஒடிசா, திரிபுரா ஆகிய மாநில வீரர்களைக் கொண்டது கிழக்கு மண்டலம். </p><h2>அனுமதி இலவசம்</h2><p>இன்று நடைபெற உள்ள இறுதிப்போட்டியை ரசிகர்கள் இலவசமாகப் பார்க்கலாம். காலை 9 மணிக்கு கேட் 4 வழியாக ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்றைய நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/petrol-diesel-price-today-in-chennai-2</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/petrol-diesel-price-today-in-chennai-2#comments</comments><guid isPermaLink="false">1b2161c0-fa69-456c-a509-2d634716949d</guid><pubDate>Sun, 06 Sep 2026 01:35:34 +0000</pubDate><atom:updated>2026-09-06T01:35:34.015Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல்,Petrol,diesel,டீசல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/fagicsjh/tn-4.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ petrol, diesel]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/fagicsjh/tn-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இன்றைய பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</strong></em></p><p>ஈரான் போர் ஓய்ந்து ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டு மத்திய கிழக்கில் இருந்து கச்சா எண்ணெய் வரத்து அதிகரித்த ஒரு சில நாட்களில் மீண்டும் போர் மூண்டுள்ளதால் சர்வதேச கச்சா எண்ணெய் விலைகளில் மீண்டும் தாக்கம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.</p><h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.</p><h2>பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</h2><p>இந்நிலையில், இன்றைய (06.09.2026 - ஞாயிற்றுக்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 6 செப்டம்பர் 2026: அம்மன் கோவில்களில் பால் அபிஷேகம்
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-6-september-2026-amman-temple-milk-abhishekam</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-6-september-2026-amman-temple-milk-abhishekam#comments</comments><guid isPermaLink="false">5e34342b-101a-4ee9-9808-87826ad79717</guid><pubDate>Sun, 06 Sep 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-09-06T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/03/05/27220541-amman2.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அம்மன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/03/05/27220541-amman2.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆவணி-20 (ஞாயிற்றுக்கிழமை)</p><p>பிறை : தேய்பிறை</p><p>திதி :   தசமி இரவு 6.57 மணி வரை பிறகு  ஏகாதசி</p><p>நட்சத்திரம் : திருவாதிரை இரவு 8.06 மணி வரை பிறகு புனர்பூசம்</p><p>யோகம் :  சித்தயோகம்</p> <p>ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை</p><p>எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை</p><p>சூலம் : மேற்கு</p><p>நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை</p> <h2>சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம்</h2><p>பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் காலை வெள்ளி கேடய சப்பரத்திலும் இரவு சிம்ம வாகனத்திலும் பவனி வரும் காட்சி. பெருவயல் ஸ்ரீ முருகப் பெருமான் பவனி. திருச்செந்தூர் ஸ்ரீ முருகப் பெருமாள் உருகுசட்டச் சேவை. திருவலஞ்சுழி ஸ்ரீ சுவேத விநாயகர் உற்சவாரம்பம். ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாளமாமுனிகள் ஸ்ரீ உடையவர் கூடப் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.</p><p>நாட்டரசன்கோட்டை ஸ்ரீ கண்ணுடையநாயகி, காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சியம்மன் இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலை பால் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக் குமார சுவாமிக்கும் அபிஷேகம்.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - போட்டி</p><p>ரிஷபம் - நன்மை</p><p>மிதுனம் - மேன்மை</p><p>கடகம் - மகிழ்ச்சி</p><p>சிம்மம் - களிப்பு</p><p>கன்னி - உவகை</p> <p>துலாம் - ஈகை</p><p>விருச்சிகம் - பரிசு</p><p>தனுசு - ஆர்வம்</p><p>மகரம் - அனுகூலம்</p><p>கும்பம் - புகழ்</p><p>மீனம் - உயர்வு</p> ]]></content:encoded></item><item><title>ராணுவ ரகசியம் கசிவு!.. 50 உயர் அதிகாரிகளுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்திய அமெரிக்க அரசு </title><link>https://www.maalaimalar.com/news/world/military-secret-leak-us-government-conducts-lie-detector-tests-on-50-high-ranking-officials</link><comments>https://www.maalaimalar.com/news/world/military-secret-leak-us-government-conducts-lie-detector-tests-on-50-high-ranking-officials#comments</comments><guid isPermaLink="false">cd180c5f-4399-49a5-a0c0-541f36df1bb5</guid><pubDate>Sun, 06 Sep 2026 00:20:29 +0000</pubDate><atom:updated>2026-09-06T00:20:29.388Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>trump,டிரம்ப்,அமெரிக்க ராணுவம்,US military,Iran War,ஈரான் போர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/2tgids2e/tn-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டிரம்ப் ]]></media:title><media:description type="html"><![CDATA[ டிரம்ப் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/2tgids2e/tn-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ரகசியத் தகவல்கள் கசிந்த நிலையில் அமெரிக்க ராணுவத்தின் 50 உயர் அதிகாரிகளுக்கு டிரம்ப் அரசு உண்மை கண்டறியும் சோதனை நடத்தியுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.</p> <h2>ரகசிய தகவல்கள் </h2><p><a href="https://www.maalaimalar.com/news/world/trump-calls-iran-conflict-small-potatoes">ஈரான் போரின் </a>காரணமாக அமெரிக்க ராணுவத்திடம் ஏவுகணைகள் மற்றும் ஆயுதக் கையிருப்பு குறைந்து வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D">அமெரிக்க ராணுவ</a> தலைமையகமான பென்டகனில் பணியாற்றும் உயர் ராணுவ அதிகாரிகள் மற்றும் சிவில் ஊழியர்களிடம், பத்திரிகையாளர்களுக்கு தகவல்களைக் கசியவிட்டனரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. </p> <h2>சோதனை</h2><p>இந்த நிலையில் ரகசியத் தகவல்களைப் பத்திரிகையாளர்களுக்குக் கசியவிட்டது யார் என்பதைக் கண்டறிய, 50 உயர் அமெரிக்க ராணுவ அதிகாரிகளுக்கு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் உண்மை கண்டறியும் பாலிகிராப் சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.</p><p>ஈரானுடனான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், பென்டகனில் இந்த நடவடிக்கை அமெரிக்க ராணுவ வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.</p> <p>இதுதவிர சமீபத்தில், Stars and Stripes என்ற ராணுவ செய்தித்தாளின் முதன்மை ஆசிரியர் எரிக் ஸ்லாவின் உட்பட மூன்று மூத்த பத்திரிகையாளர்களை பென்டகன் நிர்வாகம் பணிநீக்கம் செய்தது.</p><p>இது குறித்துக் கருத்து தெரிவிக்க மறுத்த பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஷான் பார்னெல், "தேசிய பாதுகாப்பு தொடர்பான ரகசியத் தகவல்கள் கசிவதை பென்டகன் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டு விசாரணை நடத்தி வருகிறது" எனக் கூறினார்.</p> <h2>டிரம்ப் கோபம்</h2><p>அமெரிக்காவிடம் ஆயுதக் பற்றாக்குறை நிலவுவதாக வெளியான செய்திகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்கனவே கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.</p><p>"அமெரிக்கா மிக எளிதாக வெற்றி பெறக்கூடிய ஒரு போரில் நாம் தோற்க வேண்டும் என நினைக்கும் தேசத்துரோகிகளே இத்தகைய தவறான செய்திகளைப் பரப்புகின்றனர். </p><p>அமெரிக்காவிடம் வரம்பற்ற ஆயுதக் கையிருப்பு உள்ளது. நாம் முன்பை விட அதிக அளவில் ஆயுதங்களை உற்பத்தி செய்து சேமித்து வருகிறோம்." என அவர் ஊடக பேட்டி ஒன்றில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>பயணிகள் கவனத்திற்கு.. தீபாவளி ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/attention-passengers-diwali-train-ticket-booking-begins-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/attention-passengers-diwali-train-ticket-booking-begins-today#comments</comments><guid isPermaLink="false">3444cb8e-e967-46bd-bd70-09b88cfcc23f</guid><pubDate>Sun, 06 Sep 2026 00:05:08 +0000</pubDate><atom:updated>2026-09-06T00:05:08.967Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Diwali,தீபாவளி,Ticket Booking,டிக்கெட் முன்பதிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/d1fzi7d2/tn-12.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ரெயில் டிக்கெட் முன்பதிவு]]></media:title><media:description type="html"><![CDATA[ ரெயில் டிக்கெட் முன்பதிவு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/d1fzi7d2/tn-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தீபாவளி பண்டிகை முன்பதிவு இன்று தொடங்குகிறது. </p> <p>சென்னை மற்றும் அதனை ஒட்டிய புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் <a href="https://www.maalaimalar.com/topic/diwali">தீபாவளி </a>பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட செல்வது வழக்கம்.</p><h2>முன்பதிவு</h2><p>இந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி தீபாவளி பண்டிகை வருகிறது. அதனால் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்லும் வகையில் ரெயில்களில் முன்பதிவு தொடங்குகிறது.</p><p>60 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்யக்கூடிய நிலை தற்போது இருப்பதால் தீபாவளி பயணத்திற்கான முன்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.</p><p>சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் வந்தே பாரத் ரெயில்களில் பயணம் செய்ய மக்கள் தயாராக உள்ளனர்.</p><p>நவம்பர் 5-ந்தேதி பயணம் செய்ய இன்று முன்பதிவு தொடங்குகிறது. </p><p>நவம்பர் 6-ந் தேதி பயணம் செய்வதற்கு 7-ந்தேதி (திங்கட்கிழமை)யும் 7ந்தேதி பயணத்திற்கு 8-ந்தேதியும் முன்பதிவு நடைபெற உள்ளது.</p> <p>தீபாவளி பண்டிகை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு திரும்ப வருகிற 10-ந் தேதி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம்.</p><p>தீபாவளி பண்டிகை முன்பதிவு இன்று தொடங்குவதால் குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய மக்கள் முக்கிய ரெயில் நிலையங்களில் நேரடியாக டிக்கெட் பெற தயாராக உள்ளனர்.</p><p>இது தவிர பெரும்பாலானவர்கள் ஏஜென்சிகள் மூலமாகவும் ஆன்லைன் வழியாகவும் முன்பதிவு செய்வதற்கு தயாராகி வருகின்றனர்.</p><p>ரெயில்களில் குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பாக குறித்த நேரத்திற்கு செல்ல முடியும் என்பதால் பெரும்பாலானவர்கள் ரெயில் பயணத்தையே விரும்புகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>ம.பி.யில் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி.. பல லட்ச ரூபாய் சுருட்டிய பெண் - ஒரே வீடியோவில் குட்டு அம்பலம் </title><link>https://www.maalaimalar.com/news/national/fake-ias-officer-caught-in-mp-woman-who-swindled-lakhs-of-rupees-kuttu-ambalam-in-one-video</link><comments>https://www.maalaimalar.com/news/national/fake-ias-officer-caught-in-mp-woman-who-swindled-lakhs-of-rupees-kuttu-ambalam-in-one-video#comments</comments><guid isPermaLink="false">2f9c4f17-c7ef-464b-952c-214fcb412667</guid><pubDate>Sat, 05 Sep 2026 23:37:24 +0000</pubDate><atom:updated>2026-09-05T23:37:24.709Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Madhya Pradesh,மோசடி,Fraud,fake IAS officer,மத்தியப் பிரதேசம்,போலி ஐஏஎஸ் அதிகாரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/s2vm89ft/tn-9.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ திருப்தி ]]></media:title><media:description type="html"><![CDATA[ திருப்தி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/s2vm89ft/tn-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்தியப் பிரதேசத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக நடித்து லட்சக்கணக்கில் மோசடி செய்த இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>மத்தியப் பிரதேசத்தில் தன்னை ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி என்றும் சுற்றுலாத் துறையின் கூடுதல் இயக்குநர் என்றும் பொய் கூறி திருப்தி சிங் ராஜ்புத் என்ற 30 வயது பெண் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF">மோசடியில் </a>ஈடுபட்டு வந்துள்ளார்.</p><h2>வீடியோ வைரல் </h2><p>சமீபத்தில் சிவப்பு நிறப் புடவைகளில் மூன்று பெண்கள் தோன்றும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதில் இருவர் திருப்தி சிங். </p><p>அந்த வீடியோவில், "நாங்கள் மத்தியப் பிரதேச சட்டசபை வளாகத்தில் இருக்கிறோம். எங்கள் சேட்டைகளைப் பார்த்தால் நாங்கள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் என்று யாருக்கும் தெரியாது" என்று கூறிச் சிரிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.</p><p>போபால் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்த வீடியோ சட்டசபையில் எடுக்கப்படவில்லை என்றும், அது மானுடவியல் அருங்காட்சியக வளாகம் ஒன்றில் படமாக்கப்பட்டது என்பதும் தெரியவந்தது.</p><h2></h2><figure><img alt="திருப்தி " src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/7p2c6hip/tn-10.jpg" /><figcaption>திருப்தி </figcaption></figure><h2>வாக்குமூலம்</h2><p>வீடியோவில் இடம்பெற்ற மற்ற இரு பெண்களிடம் விசாரித்தபோது, சிவப்புச் சேலை அணிந்த திருப்தி சிங் ராஜ்புத் தான் தங்களை ஐஏஎஸ் அதிகாரிகள் போல நடிக்கச் சொன்னதாக தெரிவித்தனர்.</p><p>தங்களை ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக்குவதாக நம்ப வைத்து, தலா ரூ. 3 லட்சம் வரை திருப்தி சிங் வாங்கியதாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.</p><p>சுற்றுலாத் துறை சொத்துகளை குத்தகைக்கு விடுவதாகவும், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாகவும் கூறி பலரிடம் திருப்தி சிங் ராஜ்புத் பணம் பறித்து தெரியவந்தது.</p> <p>திருப்தி மீது அசோக் நகர் மற்றும் போபால் காவல் நிலையங்களில் 3 எப்.ஐ.ஆர் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p><p>2025 ஏப்ரல் மாதம் சந்தேரியில் உள்ள அரசு ஹோட்டலில் தங்கி, 4 பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 9.80 லட்சம் மற்றும் ஒரிஜினல் ஆவணங்களை பெற்று ஏமாற்றியதுதான் இவருக்கு எதிராகப் பதிவான முதல் வழக்காகும்.</p> <h2>சோதனை</h2><p>போபாலில் உள்ள திருப்தி சிங்கின் வீட்டில் காவல்துறை நடத்திய சோதனையில், அரசுத் துறைகளின் போலி அடையாள அட்டைகள், லெட்டர் ஹெட்கள், பணி நியமன ஆணைகள், கேடயங்கள், நினைவுப் பரிசுகள், இந்திய அரசு ன்ற வாசகம் பொறிக்கப்பட்ட டொயோட்டா இன்னோவா கார், போலி சி.பி.ஐ அடையாள அட்டை ஆகியவை சிக்கின.</p> <h2>கைது</h2><p>திருப்தியுடன் சேர்த்து அவருக்கு உதவியாக இருந்த அவரது சகோதரர் சுதான்ஷு சிங்கும் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>போலி <a href="https://www.maalaimalar.com/topic/ias">ஐ.ஏ.எஸ் அதிகாரி </a>என்ற பிம்பத்தை நம்பியே திருப்தியை திருமணம் செய்து கொண்டதாக திருப்தியின் கணவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.</p><p>கைது செய்யப்படுவதற்கு முன்பாகத் திருப்தி தனது மடிக்கணினியிலிருந்தபல ஆவணங்களை அழித்துள்ளதை போலிசார் கண்டறிந்துள்ளனர்.</p><p>திருப்திக்கு போலி ஆவணங்களைத் தயாரித்துக் கொடுத்த நபர்களைக் கண்டறிந்துள்ளதாகவும், இதில் வேறு யாரேனும் பின்னணியில் உள்ளனரா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>225 மீட்டர் ஆழம்.. சுரங்கப்பாதையில் 10 நாட்கள் சிக்கித் தவித்த சீன நாட்டவர் பத்திரமாக மீட்பு | Nepal </title><link>https://www.maalaimalar.com/news/world/chinese-national-rescued-safely-after-being-trapped-in-a-tunnel-for-10-days-at-a-depth-of-225-meters-nepal</link><comments>https://www.maalaimalar.com/news/world/chinese-national-rescued-safely-after-being-trapped-in-a-tunnel-for-10-days-at-a-depth-of-225-meters-nepal#comments</comments><guid isPermaLink="false">49369e44-5599-474c-ade2-325708afbb41</guid><pubDate>Sat, 05 Sep 2026 23:25:41 +0000</pubDate><atom:updated>2026-09-05T23:25:41.562Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாளம்,nepal,வெள்ளம்,floods,Nepal Floods,நேபாள வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/r0r48twj/tn-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Nepal]]></media:title><media:description type="html"><![CDATA[ Nepal]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/r0r48twj/tn-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாளத்தில் சுரங்கப்பாதையில் சிக்கிய சீன நாட்டவர் ஒருவர் 10 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்டப்பட்ட அதிசயம் நிகழ்ந்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/nepal">நேபாளத்தில் </a>கடந்த வாரம் புதன்கிழமை (ஆகஸ்ட் 26 ) ரசுவா மாவட்டத்தில் உள்ள கோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளபெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,344 ஆக உயர்ந்துள்ளது. 5,500 க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். </p><p>சீனா-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பிரம்மாண்ட பனிப்பாறை சரிவு காரணமாக நேபாளத்தில் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது. </p><p>நேபாள வரலாற்றிலேயே மிக மோசமான இயற்கை பேரிடர்களில் ஒன்றாக இது மாறியுள்ளது. </p><p> மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இடிபாடுகளுக்கு இடையே பல நாட்களாக சிக்கியிருந்தவர்கள் உயிருடன் மீட்கப்படுவது நம்பிக்கையை வழங்கியுள்ளது. நேற்று 10 நாட்களாக <a href="https://www.maalaimalar.com/news/world/disaster-flood-in-nepal-60-year-old-woman-rescued-alive-after-11-days">உயிரை கையில் பிடித்து காத்திருந்த மூதாட்டி </a>ஒருவர் மீட்கப்பட்டார். </p><h2>சீனர் மீட்பு</h2><p>இந்த வெள்ளப்பெருக்கால் குறைந்தது 12 நீர்மின் திட்ட கட்டுமானங்கள் முற்றிலுமாகச் சேதமடைந்தன.</p><p>கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சுரங்கப்பாதைகளுக்குள்ளும் வேலை தளங்களிலும் சிக்கியுள்ளனர்.</p><p>கடந்த வெள்ளிக்கிழமை அன்று 'திரிசூலி 3A' சுரங்கப்பாதையில் இருந்து இரண்டு நேபாளத் தொழிலாளர்களும் உயிருடன் மீட்கப்பட்டனர்.</p><p>இந்நிலையில் சுரங்கப்பாதையிலிருந்து சீன நாட்டவர் ஒருவர் 10 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ள அதிசயம் நிகழ்ந்துள்ளது.</p> <p>நேபாள ராணுவம் மற்றும் சர்வதேச மீட்புக் குழுவினர் இணைந்து நடத்திய மீட்பு நடவடிக்கையில், ரசுவா மாவட்டத்தில் உள்ள 'அப்பர் திரிசூலி-1' நீர்மின் திட்ட சுரங்கப்பாதைக்குள் இருந்து லூஹைடாவோ என்ற சீன நாட்டவர் மீட்கப்பட்டார்.</p><p>சுரங்கப்பாதையின் 225 மீட்டர் ஆழத்தில் பாறைகள், மண் மற்றும் சேறுகளுக்கு நடுவே இவர் சிக்கியிருந்தார்.</p><p>10 நாட்களாக உள்ளே சிக்கியிருந்த அவர் உடல் முழுவதும் சேறு அப்பிய நிலையில் நேற்று மீட்கப்பட்டார்.</p><p>அவர் ஆரோக்கியமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதலுதவிக்குப் பின் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அவர்களுக்கு பாதி கிளாஸ் என்றுமே காலியாக தான் தெரியும்.. GDP குறித்த விமர்சனங்களுக்கு பிரதமர் மோடி பதிலடி
</title><link>https://www.maalaimalar.com/news/national/for-them-the-glass-is-never-half-full-prime-minister-modi-hits-back-at-criticisms-regarding-gdp</link><comments>https://www.maalaimalar.com/news/national/for-them-the-glass-is-never-half-full-prime-minister-modi-hits-back-at-criticisms-regarding-gdp#comments</comments><guid isPermaLink="false">03b4cb95-7c50-4bbc-9442-5585a41f3494</guid><pubDate>Sat, 05 Sep 2026 22:24:18 +0000</pubDate><atom:updated>2026-09-05T22:24:18.012Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,Economic growth,பொருளாதார வளர்ச்சி,Employment,பிரதமர் மோடி,வேலைவாய்ப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/wqwv72j7/tn-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[  பிரதமர் மோடி ]]></media:title><media:description type="html"><![CDATA[  பிரதமர் மோடி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/wqwv72j7/tn-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த விமர்சனங்களுக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார். </p><p>டெல்லியில் உள்ள ஸ்ரீ ராம் வணிகவியல் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் நேற்று <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF">பிரதமர் மோடி</a> உரையாற்றினார்.</p><p>அவர் பேசியதாவது, "ஏப்ரல் - ஜூன் காலாண்டில் இந்தியா பதிவு செய்துள்ள 7.8 சதவீத GDP வளர்ச்சி விகிதம், மேற்காசிய போர் மற்றும் உலகளாவிய வர்த்தக பாதிப்புகளுக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரத்தின் உறுதியை வெளிப்படுத்துகிறது.</p><p>இந்தியா வளர்வது மட்டுமல்லாமல், புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி வருகிறது</p><p>முன்பு இந்தியாவை மிகவும் பலவீனமான ஐந்து பொருளாதாரங்களில் ஒன்று என்ற நிலைக்கு தள்ளியவர்களால், இன்று இந்தியா உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளதை சகித்துக் கொள்ள முடியவில்லை" என்றார்.</p><h2>பாதி கிளாஸ்</h2><p>தொடர்ந்து 2013 தான் பேசிய 'பாதி கிளாஸ்" உதாரணத்தை நினைவுகூர்ந்த அவர், "சிலர் ஒரு கிளாஸைப் பாதி நிரம்பியுள்ளதாகவும், சிலர் பாதி காலியாக உள்ளதாகவும் பார்க்கின்றனர். ஆனால் நான் அந்த கிளாஸ் பாதி நீராலும் பாதி காற்றாலும் முழுமையாக நிரம்பியுள்ளதாக கருதுகிறேன்.</p> <p>2013இல் நாட்டின் நிலைமையை எதிர்மறையாகப் பார்த்தவர்கள் இன்றும் அதே கண்ணோட்டத்திலேயே நாட்டைக் காண்கிறார்கள்.</p><p>அவர்களைப் பொறுத்தவரை, அந்த கிளாஸ் எப்போதும் பாதி காலியாகவே இருக்கும். நான் கிளாஸைப் பற்றிப் பேசுகிறேன் வேறெதுவும் காலியாக இருப்பது குறித்துப் பேசவில்லை." என்றார் </p><h2>ரிப்போர்ட் கார்டு</h2><p>தொடர்ந்து பேசிய அவர், " நான் எனது ரிப்போர்ட் கார்டுடன் உங்கள் முன் வந்துள்ளேன். உண்மையின் கர்ஜனைக்கு முன்னால் பொய்களின் எதிரொலி நிற்க முடியாது.</p> <p>2013இல் நான் மேக் இன் இந்தியா குறித்துப் பேசியபோது பலர் அதைக் கேலி செய்தனர். இன்று அதன் பிராண்ட் மதிப்பை உலகம் காண்கிறது.</p><p>2014இல் பெரும்பாலான செல்போன்களை இறக்குமதி செய்த இந்தியா, இன்று ரூ. 2.5 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள கைப்பேசிகளையும் ஏற்றுமதி செய்து வருகிறது.</p><p>இந்தியா உலகளாவிய உற்பத்தி மையமாகவும், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளின் மையமாகவும் உருவெடுத்து வருகிறது" என்றார்.</p>]]></content:encoded></item><item><title>உலக வரைபடத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்யும் ஐ.நா. தீர்மானம் இந்தியாவின் ஆதரவுடன் நிறைவேற்றம் </title><link>https://www.maalaimalar.com/news/world/un-resolution-to-address-global-map-imbalances-passed-with-indias-support</link><comments>https://www.maalaimalar.com/news/world/un-resolution-to-address-global-map-imbalances-passed-with-indias-support#comments</comments><guid isPermaLink="false">dc880714-7825-4860-8d1f-8e504ba17ed6</guid><pubDate>Sat, 05 Sep 2026 21:29:57 +0000</pubDate><atom:updated>2026-09-05T21:29:57.483Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Africa,ஐநா தீர்மானம்,UN resolution,world map,ஆப்பிரிக்கா,உலக வரைபடம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/ebox254m/tn-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ உலக வரைபடம்  
]]></media:title><media:description type="html"><![CDATA[ உலக வரைபடம்  
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/ebox254m/tn-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலக வரைபடத்தை சீரமைக்கும் ஐக்கிய நாடுகள் பொது சபையின் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளித்துள்ளது. </p><p>உலக வரைபடத்தை சீரமைக்கும் ஐக்கிய நாடுகள் பொது சபையின் தீர்மானம் பெரும்பான்மையுடன் நிறைவேறியுள்ளது.</p><p>ஆப்பிரிக்க யூனியனின் ஆதரவுடன் டோகோ நாடு கொண்டு வந்த இத்தீர்மானத்திற்கு 193 உறுப்பினர்களைக் கொண்ட பொதுசபையில் 164 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. இத்தீர்மானத்திற்கு இந்தியா தனது ஆதரவை அளித்துள்ளது.</p><p>அமெரிக்கா மட்டுமே இத்தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தது. செர்பியா, எஸ்டோனியா, ஜார்ஜியா, லிதுவேனியா, மால்டோவா, உக்ரைன் ஆகிய 6 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் விலகியிருந்தன.</p> <h2>வரைபடத்தில் பிழை</h2><p>16ஆம் நூற்றாண்டில் கடல் பயணங்களுக்கு வழிகாட்டியாக உருவாக்கப்பட்ட '<a href="https://www.maalaimalar.com/news/world/cartographic-colonialism-call-to-adopt-the-equal-earth-map-vote-at-the-un-today">மெர்கேட்டர் வரைபடம்</a>' துருவப் பகுதிகளுக்கு அருகில் உள்ள நாடுகளைப் தேவையின்றி மிகப்பெரியதாகவும், ஆப்பிரிக்கா மற்றும் தென்னமெரிக்கா போன்ற பிராந்தியங்களை சிறியதாகவும் காட்டுகிறது.</p><p>மெர்கேட்டர் வரைபடத்தில் கிரீன்லாந்தும் ஆப்பிரிக்காவும் ஒரே அளவில் காட்சியளிக்கின்றன. ஆனால் நிஜத்தில், ஆப்பிரிக்கா கிரீன்லாந்தை விட 14 மடங்கு பெரிய நிலப்பரப்பாகும்.</p><h2>காலனித்துவம்</h2><p>மெர்கேட்டர் வரைபட முறை, மேற்கத்திய நாடுகள் சார்ந்த ஒரே மாதிரியான சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டது என்று வரலாற்றாசிரியர்களும் புவியியலாளர்களும் பல ஆண்டுகளாகக் கூறி வருகின்றனர்.</p><p>சமூக ஆர்வலர்களும் இதையே வழிமொழிந்துள்ளதுடன், சிலர் இதற்கு Cartographic colonialism என்றும் பெயரிட்டுள்ளனர்.</p><h2>ஈக்வல் எர்த்</h2><p>வரைபடத்தில் இந்த சமநிலையற்ற தன்மையை சரிசெய்து, கண்டங்களை அவற்றின் உண்மையான அளவில் காட்டும் வகையில் 2018 இல் உருவாக்கப்பட்ட Equal Earth வரைபடப்த்தின் பயன்பாட்டை ஊக்குவிப்பதே இத்தீர்மானத்தின் முதன்மை நோக்கமாகும்.</p><p>மெர்கேட்டர் வரைபடங்களை இது முற்றிலுமாகத் தடை செய்யவில்லை என்றாலும், சரியான பரப்பளவைக் காட்டும் வரைபடங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வலியுறுத்துகிறது.</p><p>வரைபட உருவாக்கத்தில் துல்லியத்தைக் கொண்டுவரும் நோக்கத்தை வரவேற்பதாக வாக்கெடுப்பின்போது இந்தியா தெரிவித்தது.</p><p>உலகளவில்<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%90%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88"> ஐ.நா. தீர்மானங்கள்</a> அமல்படுத்த முடியாதவை என்றாலும், கல்வி, தொழில்நுட்பம் மற்றும் ஆளுகை ஆகியவற்றில் மெர்கேட்டர் வரைபடத்தை இனி அதிகம் பயன்படுத்தாமல் ஈக்வல் எர்த் வரைபடத்தை அதிகம் பயன்படுத்த முடியும்.</p>]]></content:encoded></item><item><title>ஆட்சி மாறியதால் கடிக்காதே என கொசுக்களிடம் சொல்ல முடியாது.. டெங்கு பரவல் குறித்து மேற்கு வங்க அமைச்சர் கருத்து</title><link>https://www.maalaimalar.com/news/national/you-cannot-tell-mosquitoes-not-to-bite-just-because-the-government-has-changedwest-bengal-ministers-remarks-on-the-spread-of-dengue</link><comments>https://www.maalaimalar.com/news/national/you-cannot-tell-mosquitoes-not-to-bite-just-because-the-government-has-changedwest-bengal-ministers-remarks-on-the-spread-of-dengue#comments</comments><guid isPermaLink="false">28ec3401-d9a2-4e69-a4e9-0f45ba2486ca</guid><pubDate>Sat, 05 Sep 2026 20:51:52 +0000</pubDate><atom:updated>2026-09-05T20:51:52.570Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மேற்கு வங்கம்,சுவேந்து அதிகாரி,Suvendu Adhikari,dengue fever,west bengal,டெங்கு காய்ச்சல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/y4p9hr74/tn-4.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மேற்கு வங்க அமைச்சர்]]></media:title><media:description type="html"><![CDATA[ மேற்கு வங்க அமைச்சர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/y4p9hr74/tn-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்கத்தில் கொசுக்களால் பரவும் டெங்கு உள்ளிட்ட நோய்களின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அம்மாநில அமைச்சர் அக்னிமித்ரா பால் பேசியுள்ள கருத்து விவாதபொறுப்பாகி வருகிறது.</p><p>சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு பின் மேற்கு வங்கத்தில் முதல்வர் <a href="https://www.maalaimalar.com/topic/suvendu-adhikari">சுவேந்து அதிகாரி </a>தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது அமைச்சரவையில் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக அக்னிமித்ரா பால் உள்ளார்.</p><p>செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்த அக்னிமித்ரா பால், "அரசாங்கம் மாறிவிட்டது என்பதற்காக மட்டும் கொசுக்களை கடிக்காதே என்று சொல்ல முடியாது" என்றார்.</p><p>கொசுக்களை அடக்க முடியாது என்பதால், இந்தச் சூழ்நிலையை சமாளிக்க அரசாங்கம் வேறு வழிகளில் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர் மேலும் கூறினார்.</p><h2>டெங்கு பரவல்</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">மேற்கு வங்கத்தில்</a> கொசுக்கடி காரணமாக டெங்கு காய்ச்சலின் தாக்கம் தீவிரமாக உள்ளது. கடந்த சில வாரங்களில் மட்டும் 4,000 க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>நிலைமை கட்டுப்பாட்டிற்குள் உள்ளதாகவும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது என்றும் முதலமைச்சர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.</p><p>டெங்கு பரவல் காலத்தில் மாணவர்கள் உடல் முழுவதையும் மூடும் வகையில் ஆடைகளை அணிந்து பள்ளிக்கு வர அனுமதிக்க வேண்டும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சரத்வத் முகர்ஜி பள்ளிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.</p> <h2>அக்னிமித்ரா பால் சர்ச்சை</h2><p>கடந்த வாரம், கொல்கத்தாவின் பார்க் ஸ்ட்ரீட் பகுதியில் நடைபாதையில் தனது குழந்தைக்குப் பால் சூடாக்கிக் கொண்டிருந்த ஒரு வீடற்ற பெண்ணை அக்னிமித்ரா பால் திட்டும் காணொளி ஒன்று வெளியானது.</p><p>"நடைபாதையில் குழந்தைக்குப் பால் சூடாக்குகிறாயா? பார்க் ஸ்ட்ரீட்டிலா? இங்கே குடும்பம் நடத்த உனக்கு யார் அனுமதி கொடுத்தது?" என்று பால் கேட்பது அந்தக் காணொளியில் இடம்பெற்றிந்தது. பின்னர் கொல்கத்தா காவல்த்துறையினர் அந்த குடும்பத்தினரை அங்கிருந்து விரட்டியதும் விமர்சனத்துக்கு உள்ளானது.</p><p>அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, முதலமைச்சர் சுவேந்து அதிகாரி நேரில் சென்று அந்தப் பெண்ணை சந்தித்து இருப்பிடம் வழங்குவதாக உறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>மசூதி இடிப்பு - உத்தரப் பிரதேசத்தில் வெடித்த அரசியல் சர்ச்சை</title><link>https://www.maalaimalar.com/news/national/early-morning-stealth-mosque-demolition-political-controversy-erupts-in-uttar-pradesh</link><comments>https://www.maalaimalar.com/news/national/early-morning-stealth-mosque-demolition-political-controversy-erupts-in-uttar-pradesh#comments</comments><guid isPermaLink="false">32d4d7df-82cd-42a3-a059-057231a40b83</guid><pubDate>Sat, 05 Sep 2026 19:58:57 +0000</pubDate><atom:updated>2026-09-05T19:58:57.720Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Uttar Pradesh,அகிலேஷ் யாதவ்,Akhilesh Yadav,Yogi Adityanath,உத்தரப் பிரதேசம்,யோகி ஆதித்யநாத்,மசூதி இடிப்பு,Mosque demolition</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/vjnliy94/tn-1.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அகிலேஷ் யாதவ், மசூதி இடிப்பு, யோகி ]]></media:title><media:description type="html"><![CDATA[ அகிலேஷ் யாதவ், மசூதி இடிப்பு, யோகி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/vjnliy94/tn-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரப் பிரதேசத்தின் சகாரன்பூரில் நேற்று அதிகாலையில் மசூதி ஒன்று இடிக்கப்பட்ட விவகாரம் அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">உத்தரப் பிரதேச </a>மாநிலம் சகாரன்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்திருந்த மசூதியை மாவட்ட நிர்வாகம் நேற்று அதிகாலை 5 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடித்துத் தள்ளியுள்ளது. </p><h2> இடிப்பு </h2><p>சகாரன்பூர் ஆட்சியர் அலுவலகத்தின் 5 பிரதான நுழைவு வாயில்களையும் பூட்டி, யாரையும் உள்ளே அனுமதிக்காமல் அதிகாரிகள் இடிப்புப் பணியை முடித்தனர். </p><p>அரசு நிலத்தில் இருந்த ஆக்கிரமித்து கட்டடப்பட்டிருந்ததாலேயே  கட்டுமானத்தை அகற்றியதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <h2>பின்னணி</h2><p>இந்த மசூதி அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாகக் கூறி 2025-இல் பஜ்ரங் தள் அமைப்பின் தலைவர் விகாஸ் தியாகி மனுத் தாக்கல் செய்தார்.</p><p>விசாரணைக்குப் பின், ஜூலை 16 அன்று அந்த மசூதி ஆக்கிரமிப்புக் கட்டிடம் என உறுதிசெய்து, அதை இடிக்கச் சகாரன்பூர் நகர மெஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார்.</p><p>இந்த உத்தரவை எதிர்த்து மசூதி கமிட்டி மாவட்ட நீதிமன்றத்தை அணுகிய நிலையில், செப்டம்பர் 2 அன்று நீதிமன்றம் அவர்களின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது.</p> <h2>அவசர அவசரமாக</h2><p>மசூதி கமிட்டி உயர் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறுவதைத் தடுப்பதற்காகவே அரசு அதிகாலையில் இந்த இடிப்பு நடவடிக்கையை அவசர அவசரமாக மேற்கொண்டுள்ளது என எதிர்க்கட்சிகள், யோகி ஆதித்யநாத் அரசு மீது குற்றம் சாட்டியுள்ளன.</p> <h2>குற்றச்சாட்டு </h2><p>ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி, "பாஜக அரசுக்கு '<a href="https://www.maalaimalar.com/news/national/india-pakistan-diplomatic-row-india-rejects-zardaris-remarks-over-alleged-demolition-of-historic-mosque">மசூதி</a>' என்ற வார்த்தை மீதே வெறுப்பு உள்ளது.</p><p>பாதிக்கப்பட்டவர்கள் உயர் நீதிமன்றத்திற்கு செல்வதைத் தடுக்கவே அதிகாலையில் திருட்டுத்தனமாக இடித்துள்ளனர். மசூதி கமிட்டிக்குத் தேவையான அனைத்துச் சட்ட உதவிகளையும் நாங்கள் வழங்குவோம்." என சாடியுள்ளார்.</p><p>சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், "பாதிக்கப்பட்டவர்கள் உயர் நீதிமன்றத்தையோ அல்லது உச்ச நீதிமன்றத்தையோ அணுக ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அரசின் உத்தரவுக்கு ஏற்ப அதிகாரிகளும் கூட்டுச் சேர்ந்து நீதியைத் தடுத்துள்ளனர். பிற மதங்களை மதிக்காதவர்கள் ஒருபோதும் சனாதனிகளாக இருக்க முடியாது." என தெரிவித்துள்ளார்.</p> <h2>பதற்றம்</h2><p>இதனிடையே பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் சகாரன்பூர் சரக டி.ஐ.ஜி அபிஷேக் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p><p>இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால் காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>மாஸ்கோவில் அமெரிக்க 
பிரதிநிதிகள்.. 3 நாட்களுக்கு உக்ரைன் தலைநகர் மீது தாக்குதலை நிறுத்த புதின் உத்தரவு </title><link>https://www.maalaimalar.com/news/world/us-delegation-in-moscow-putin-orders-a-three-day-halt-to-attacks-on-the-ukrainian-capital</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-delegation-in-moscow-putin-orders-a-three-day-halt-to-attacks-on-the-ukrainian-capital#comments</comments><guid isPermaLink="false">9a1b72ba-4464-4ee5-8686-1c8ae55f1426</guid><pubDate>Sat, 05 Sep 2026 18:59:29 +0000</pubDate><atom:updated>2026-09-05T18:59:29.398Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உக்ரைன் போர்,Russia,Putin,புதின்,Ukraine War,ரஷியா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/xuym80ry/tn-5.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமெரிக்க பிரதிநிதிகளுடன் புதின் சந்திப்பு ]]></media:title><media:description type="html"><![CDATA[ அமெரிக்க பிரதிநிதிகளுடன் புதின் சந்திப்பு ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/xuym80ry/tn-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமைதி பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க தூதரகள் ரஷியா சென்றுள்ள நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை 3 நாட்களுக்கு நிறுத்த ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D">உக்ரைன்</a>, ஐரோப்பாவின் <a href="https://www.maalaimalar.com/topic/nato">நேட்டோ </a>கூட்டமைப்பில் இணைய முயற்சிப்பது தங்களது எல்லைப் பாதுகாப்புக்கு ஆபத்து என கூறி அந்நாடு மீது கடந்த 2022 பிப்ரவரியில் <a href="https://www.maalaimalar.com/topic/russia">ரஷியா </a>போர் தொடுத்தது. </p><p>5வது ஆண்டாக போர் முடிவின்றி தொடர்ந்து வருகிறது. உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகளும், ரஷியாவுக்கு சீனா, வடகொரிய நாடுகளும் ஆதரவு வழங்கி வருகின்றன. </p><p>கடந்த ஆண்டு தொடக்கத்தில் மீண்டும் அமெரிக்க அதிபரான டிரம்ப், உக்ரைன் - ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வர பல முயற்சிகளை மேற்கொண்டார். </p><p>இருப்பினும் போர் முடிந்தபாடில்லை. இரு நாடுகளும் பரஸ்பரம் டிரோன் தாக்குதல்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. </p><p>கடந்த சில நாட்களாக உக்ரைனின் தலைநகர் கீவ் மீது ரஷியா சரமாரி தாக்குதலை தொடுத்து வந்தது. </p> <h2>மாஸ்கோ</h2><p>இதனிடையே உக்ரைன் - ரஷியா போரை நிறுத்தும் புதிய முயற்சியாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் சிறப்புத் தூதர்களான ஸ்டீவ் விட்காப்மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் மாஸ்கோ சென்றடைந்துள்ளனர்.</p><p>அவர்களை ரஷிய அதிபரின் சிறப்புத் தூதர் கிரில் டிமிட்ரிவ் நேற்று வரவேற்றார்.</p><p>தொடர்ந்து, ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளினில் புதின், விட்காப் மற்றும் குஷ்னர் ஆகியோரை சந்தித்துப் பேசி உள்ளார்.</p><p>அமெரிக்கக் குழுவின் இந்த வருகையை முன்னிட்டு, உக்ரைன் தலைநகர் கீவ் மீதான தாக்குதல்களை சனிக்கிழமை இரவு முதல் 3 நாட்களுக்குத் தற்காலிகமாக நிறுத்திவைக்க ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.</p><p>இதனிடையே, நேற்று அன்று ரஷிய வான்வெளியில் உக்ரைனுக்கு சொந்தமான 53 டிரோன்களைகண்டறிந்து அழித்ததாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p> <h2>புதிய முயற்சி</h2><p>ஐந்து ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவிடம் வலுவான புதிய திட்டம் ஒன்று உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று முன் தினம் தெரிவித்திருந்தார்.</p><p>மாஸ்கோ பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, அமெரிக்கத் தூதர்கள் இருவரும் இன்று உக்ரைன் சென்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.</p> <p>இருப்பினும், இந்தப் பேச்சுவார்த்தை மூலம் உடனடியாகப் போருக்குத் தீர்வு காண்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என்றே அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.</p><p>உக்ரைன் உரிமை கோரும் 4 பிராந்தியங்களின் முழுப் நிலப்பரப்பையும் ரஷியாவிடம் ஒப்படைக்க வேண்டும், நேட்டோ அமைப்பில் இணைவதற்கான திட்டத்தை உக்ரைன் முற்றிலும் கைவிட வேண்டும் என்பதே ரஷியாவின் நிபந்தனையாக உள்ளது.</p><p>கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற கடைசி அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியால் மோதல் முற்றிய நிலையில் தற்போதைய அமெரிக்க தூதர்களின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>பெண்கள் ஆசிய கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/womens-asia-cup-team-india-secures-a-magnificent-victory-over-pakistan</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/womens-asia-cup-team-india-secures-a-magnificent-victory-over-pakistan#comments</comments><guid isPermaLink="false">77ce5c47-0e8c-441b-a1b2-a5971cecaec4</guid><pubDate>Sat, 05 Sep 2026 18:15:04 +0000</pubDate><atom:updated>2026-09-05T18:15:04.596Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,Pakistan,இந்தியா பாகிஸ்தான்,Womens Asia Cup,பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/pciwj53j/tn-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பெண்கள் ஆசிய கோப்பை:]]></media:title><media:description type="html"><![CDATA[ பெண்கள் ஆசிய கோப்பை:]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/pciwj53j/tn-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>10வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் தனது கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது.</p><h2>ஆசிய கோப்பை</h2><p>10-வது <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D">பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் </a>துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.</p><p>லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.</p> <h2>அரையிறுதி</h2><p>ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள 7 முறை சாம்பியனான இந்திய அணி, தனது முதல் ஆட்டத்தில் தாய்லாந்தையும், 2வது ஆட்டத்தில் ஹாங்காங்கையும் வீழ்த்தி அரையிறுதியை எட்டியது.</p><h2>இந்தியா பாகிஸ்தான்</h2><p>இந்நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக்கில் பரம எதிரியான பாகிஸ்தானுடன் இன்று மோதியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.</p> <h2>பாகிஸ்தான் பேட்டிங்</h2><p>பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்களான முனீபா அலி மற்றும் ஷவால் சுல்பிகார் முதல் நான்கு ஓவர்களில் 23 ரன்கள் எடுத்தனர்.</p><p>இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர்கள் முதல் நான்கு ஓவர்களை வீசியும் விக்கெட் எதுவும் எடுக்கத் தவறினர்.</p><p>ஐந்தாவது ஓவரில், ஷெபாலி வர்மா முனீபா அலியை ஆட்டமிழக்கச் செய்தார். அதற்கடுத்த ஓவரிலேயே, ஸ்ரீ சரணி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.</p><p>ஸ்ரீ சரணி மொத்தம் 3 விக்கெட்டுகளையும் தீப்தி ஷர்மா 2 விக்கெட்டுகளையும், ஷெபாலி வர்மா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.</p><p>பாகிஸ்தான் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 18.1 ஓவர்களில் 55 ரன்களுக்கு சுருண்டது. டி20 போட்டிகளில் பாகிஸ்தான் மகளிர் அணி எடுத்த மிகக் குறைந்த ஸ்கோர் இதுவாகும்.</p> <h2>ஸ்ரீ சரணி சாதனை</h2><p>ஸ்ரீ சரணியும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆசியக் கோப்பையில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை (34) எடுத்தவர்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். பூனம் யாதவ் 35 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.</p> <h2>இந்தியா பேட்டிங்</h2><p>56 ரன்கள் என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ஷெபாலி வர்மா, முதல் பந்திலேயே ஒரு சிக்ஸர் அடித்தார். அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்து, அவர் டி20 சர்வதேசப் போட்டிகளில் 3000 ரன்களை நிறைவு செய்தார்.</p><p>இந்த ஆட்டத்தில் இரண்டாவது ஓவரில், பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா, ஷெபாலி (12) மற்றும் பிரதிகா ராவல் (4) ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்தார். ஸ்மிருதி மந்தனாவை (9) எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்தார்.</p> <p>ஆனால் பின்னர் களமிறங்கிய பின்னர் ஹர்மன்பிரீத் மற்றும் தீப்தி ஷர்மா இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தனர். </p><p>இந்திய அணி 56 ரன்கள் என்ற இலக்கை 8.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு விரட்டிப் பிடித்து அபார வெற்றி பெற்றுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>ஜம்மு காஷ்மீரில் அதிரடி காட்டிய பாதுகாப்பு படை .. லஷ்கர் இ தொய்பா தளபதி சுட்டுக் கொலை</title><link>https://www.maalaimalar.com/news/national/encounter-in-jammu-and-kashmir-lashkar-e-taiba-commander-shot-dead</link><comments>https://www.maalaimalar.com/news/national/encounter-in-jammu-and-kashmir-lashkar-e-taiba-commander-shot-dead#comments</comments><guid isPermaLink="false">84a552e0-a989-48ed-b6be-16ad38bb2a39</guid><pubDate>Sat, 05 Sep 2026 17:46:18 +0000</pubDate><atom:updated>2026-09-05T17:46:18.490Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>terrorists,ஜம்மு காஷ்மீர்,Lashkar-e-Taiba,லஷ்கர் இ தொய்பா,Jammu &amp; Kashmir,பயங்கரவாதிகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/o6dlo4cn/tn-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ யாசிர்]]></media:title><media:description type="html"><![CDATA[ யாசிர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/o6dlo4cn/tn-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டரில் லஷ்கர் இ தொய்பா தளபதி யாசிர் சுட்டுக்கொல்லப்பட்டான்.</p><h2>யார் இந்த யாசிர்?</h2><p>2025ஆம் ஆண்டு <a href="https://www.maalaimalar.com/news/national/pahalgam-attack-responsible-will-not-be-spared-says-modi-ajit-doval">பஹல்காமில் </a>நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலின் முக்கியச் சூத்திரதாரிகளில் ஒருவன் 'ஹாஷிம் மூசா' என்றழைக்கப்படும் சுலைமான் மூசா. இவன் <a href="https://www.maalaimalar.com/news/world/lashkar-commander-qari-saeed-abdul-aziz-dies-mysteriously-in-pakistan-amid-poisoning-suspicions">லஷ்கர் இ தொய்பா </a>அமைப்பின் முக்கியத் தளபதி ஆவான்.</p><p>பஹல்காம் தாக்குதல் நடந்த சில மாதங்களிலேயே, ஸ்ரீநகரின் டாச்சிகாம் காட்டுப்பகுதியில் இந்தியப் படையினர் நடத்திய என்கவுண்டரில் மூசா சுட்டுக்கொல்லப்பட்டான்.</p><p>இந்த சுலைமான் மூசாவுடைய குழுவில் இருந்தவன் யாசிர். சுமார் ஒரு ஆண்டுக்கு முன்பு அக்குழுவிலிருந்து பிரிந்த யாசிர், தளபதி அந்தஸ்துடன் தனிப்படையாக இயங்கி வந்தான்.</p> <h2>என்கவுண்டர் </h2><p>மத்திய காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தில் உள்ள யூஸ்மார்க் மலைப்பகுதியில் இவனது நடமாட்டம் அதிகரித்துள்ளதை உளவுத்துறை கண்டறிந்தது.</p><p>உளவுத்துறை தகவலின் அடிப்படையில், இந்திய ராணுவத்தின் சிறப்புப் படையினர் மற்றும் ராஷ்ட்ரீய ரைபிள்ஸ் படையினர் இன்று அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.</p><p>அப்போது பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து நடத்திய தாக்குதலில் யாசிர் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளான்.</p> <h2>விசாரணை</h2><p>காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், யாசிரின் வீழ்ச்சி லஷ்கர் அமைப்புக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.</p><p>கொல்லப்பட்ட யாசிருடன் தொடர்பில் இருந்த பிற பயங்கரவாதிகள், சமீபத்திய பயங்கரவாத சம்பவங்களில் அவனுக்கு இருந்த பங்கு குறித்துப் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>30 இடங்களில் சோதனை.. 241 ஆவணங்களை பறிமுதல் செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை  - கே.என்.நேரு சொன்னது என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/raids-at-30-locations-anti-corruption-department-reports-seizure-of-241-documents-what-did-kn-nehru-say</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/raids-at-30-locations-anti-corruption-department-reports-seizure-of-241-documents-what-did-kn-nehru-say#comments</comments><guid isPermaLink="false">c2546ad8-fb28-438c-9013-4a4294b0e049</guid><pubDate>Sat, 05 Sep 2026 17:07:08 +0000</pubDate><atom:updated>2026-09-05T17:07:08.207Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,kn nehru,லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை,DVAC Raid</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/nnmfzu96/tn.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கே.என்.நேரு ]]></media:title><media:description type="html"><![CDATA[ கே.என்.நேரு ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/nnmfzu96/tn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுக முன்னாள் அமைச்சர் கே என் நேருவுக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் பிற்பகல் வரை நடைபெற்ற சோதனையில் 241 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.</p><p>தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.</p><h2>கே.என். நேரு வீட்டில் சோதனை</h2><p>அந்த வகையில் இன்று முன்னாள் அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dvac-raids-19-locations-linked-to-former-minister-kn-nehru">கே.என்.நேருவின்</a> சென்னை, திருச்சி வீடுகள் மற்றும் அவரது சகோதரர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள்.</p> <h2>சென்னை</h2><p>சென்னை மைலாப்பூர் மற்றும் திருச்சி தில்லைநகர் ஆகிய இடங்களில் உள்ள <a href="https://www.maalaimalar.com/topic/kn-nehru">கே.என். நேருவுக்கு</a> சொந்தமான இடங்களில் வீடுகளுக்கு இன்று காலை 7 மணி அளவில் சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினார்கள். திருவான்மியூர், அடையாறு, அண்ணா நகர், ராஜா அண்ணாமலைபுரம் ஆகிய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.</p><p>ராஜா அண்ணாமலை புரத்தில் கே.என். நேருவின் தம்பி ரவிச்சந்திரனுக்கு சொந்தமான தனியார் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திலும் சோதனை நடந்தது. இதேபோன்று திருச்சி, கோவை என மொத்தம் 19 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.</p><p>கே.என். நேரு, தி.மு.க. ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது அந்த துறை சார்பில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டது.</p><p>இந்த டெண்டர் ஒதுக்கீட்டில் தான் முறைகேடு நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையிலேயே இன்றைய சோதனை நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.</p> <h2>திருச்சி</h2><p>திருச்சி தில்லைநகர் 5-வது கிராசில் உள்ள கே.என். நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., மணிகண்டன் தலைமையிலான 10 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் இன்று காலை 7.30 மணியில் இருந்து சோதனையில் ஈடுபட்டனர். வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையிலும் அங்குலம் அங்குலமாக சோதனையிட்டனர். முக்கிய ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.</p> <h2>கோவை</h2><p>கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள கள்ளிமடை பகுதியில் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் வீடு மற்றும் அலுவலகம் உள்ளது. அதேபோன்று கோவை, மசக்காளி பாளையத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு உள்ளது. இந்த வீடுகள் மற்றும் அலுவலகத்திற்கு இன்று காலை கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் துணை சூப்பிரண்டு ராஜேஷ் தலை மையில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் காலை 7 மணிக்கு அதிரடியாக நுழைந்தனர்.</p><p>ஒவ்வொரு பகுதிக்கும் தலா 4 லஞ்ச ஒழிப்பு போலீசார் வீதம் சென்று அங்கு வீடு மற்றும் அலுவலகத்தில் அனைத்து பகுதிகளிலும் சோதனை செய்தனர்.</p> <h2>பறிமுதல்</h2><p>சோதனையின் முடிவில் கிடைத்த தகவல்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.</p><p>அதன்படி கே.என்.நேருவுக்கு தொடர்புடைய இடங்களில் நடத்திய சோதனையில் 241 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.</p><p>அறிக்கையின்படி, தமிழகத்தில் கோவை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 30 இடங்களில் நடந்த சோதனையில் 241 ஆவணங்கள், மின்னணு சாட்சியங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.</p><p>நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் பல்வேறு ஒப்பந்தங்களில் முறைகேடு என்ற புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.</p> <h2>கே. என். நேரு பேட்டி</h2><p>இதனிடையே திருச்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.</p><p>அப்போது அவர், "என் வீட்டில் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்றது. சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை.</p><p>லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தோம். என்னை பொறுத்தவரை நான் எந்த தவறும் செய்யவில்லை. எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்தை அணுகி சட்டப்படி வெல்வோம்.</p><p>சட்டசபையில் அரசை நோக்கி நான் கேள்வி எழுப்புவதால் என்னை மிரட்டுவதற்காக கூட இது போன்ற சோதனையை அவர்கள் செய்யலாம். இந்த சோதனை பழிவாங்கும் நடவடிக்கை" என தெரிவித்தார்.</p> ]]></content:encoded></item></channel></rss>