<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 10 Aug 2026 10:50:47 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: விவசாயிகள் கடன் தள்ளுபடி - ஊக்கத்தொகை: சட்டசபையில் தவெக – திமுக இடையே காரசார விவாதம்! - 10 ஆகஸ்ட் 2026
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-10-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-10-august-2026#comments</comments><guid isPermaLink="false">1bbee6de-4ec6-459e-bfff-1b842e60b35a</guid><pubDate>Mon, 10 Aug 2026 04:09:30 +0000</pubDate><atom:updated>2026-08-10T10:33:44.070Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/803u20uo/vinoth.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/803u20uo/vinoth.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேட்டூர் அணை திறப்பு எப்போது? விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்வீர்களா? மாட்டீர்களா? என எம்எல்ஏ ராமச்சந்திரன் கேள்வி எழுப்பினார். </p><p>சட்டமன்ற விவாதத்தில் நிதியமைச்சர் இவ்வளவு கோபப்படக்கூடாது என முன்னாள் அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் அவர்,"நிதியமைச்சர் சட்டமன்றத்தில் பேசுவதை பர்சனலாக எடுத்துக்கொள்கிறார். கடையநல்லூர் எம்எல்ஏ தமிழ் மீதுள்ள ஆர்வத்தால் அப்படிக்கூறினார், அவர் அவைக்கு புதியவர்" என விளக்கம் அளித்தார்.</p> <p>சட்டமன்றத்தின் அலுவல் மொழி தமிழோ, ஆங்கிலத்திலோ.. இரு மொழியிலும் பேசலாம் என விதி உள்ளது. தனக்கு எதிரே இருந்தவர் தெலுங்கில் பேசியபோது அனுமதித்து தெலுங்கிலேயே பதில் தந்தவர் ஜெயலலிதா- சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்</p><p>அந்தந்த மாவட்ட பழக்க வழக்கத்திற்கு ஏற்றார்போல் தமிழ் மொழி பேசும் விதம் மாறும்- திமுக எம்எல்ஏ எ.வ.வேலு </p><p>அமெரிக்காவில் இருந்து வந்த பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தபோதும் இந்த நிலைதான் இருந்தது- அமைச்சர் ஆதவ் அர்ஜூனா.</p><p>நிதியமைச்சர் வரும் காலத்தில் பிழையின்றி தமிழில் பட்ஜெட் வாசிக்க வேண்டும் என்று ராஜேந்திரன் கூறியதற்கு அமைச்சர் ராஜ்மோகன் கூறுகையில்,"எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சங்கத்தமிழிலா பேசுகிறார்?" என்றார்.</p><p>தமிழில் நன்றாக பேச அமைச்சர் ராஜ்மோகனிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என ராஜேந்திரன் கூறியதால் அமைச்சர் மரிய வில்சன் ஆவேசமடைந்தார்.</p><p>தனது தமிழ் குறித்து திமுக எம்எல்ஏ பேசியதால் ஆத்திரடைந்த நிதியமைச்சர்,"சாதி ரீதியாக கேலி செய்வது அதிகரித்துள்ளது, தற்போது மொழி ரீதியாக கேலி செய்வதும் அதிகரித்துவிட்டது. என்னால் இப்படிதான் பேச முடியும், வேண்டும் என்றால் ஏற்று கொள்ளுங்கள் யாருக்காகவும் மாற்றிக்கொள்ள மாட்டேன்உங்களுக்காக என் ஸ்டைலை மாற்ற முடியாது" என பதில் அளித்தார்.</p><p>நிதி அமைச்சரின் நிதி நிலை அறிக்கை மிக தெளிவாக இருந்தது  - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</p><p>கடந்த திமுக ஆட்சியில் நீர்வளத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</p><p>பால் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னிலையில் இருக்க காரணம் திமுக, 90 நாட்களில் தவெக எப்படி கொண்டுவர முடியும்.</p><p>விவசாயிகளுக்கு எவ்வளவு இலவச மின் இணைப்புகள் என்ற அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லை - ராஜேந்திரன்</p><p>கைது செய்யப்பட்ட நாளை தனது நாளாக்கியவர் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி.</p><p>கொரோனா பாதித்த நோயாளிகளை நேரில் பார்த்த ஒரே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - ராஜேந்திரன்</p><p>கடையநல்லூர் எம்எல்ஏ ராஜேந்திரன் உரையாற்றினார்.</p><p>மதிமுகவை சேர்ந்த ராஜேந்திரன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டவர். நான் சார்ந்திருக்கும் திமுக சார்பில் நன்றி. மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு நன்றி.</p><p>வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்ய கூடாது என முடிவெடுத்தவன் நான்.</p><p>தமிழுக்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்த பாரதியார் கோட் சூட் அணிந்து தான் வாழ்ந்தார். தமிழ் எங்கள் உயிர் என்பது எங்களது சொல்லில் அல்ல செயலில் இருக்கும், முதல்வர் அத்தகையவர் - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் - பாஜக எம்எல்ஏ</p><p>பட்ஜெட் மீதான விவாதத்தில் பாஜக உறுப்பினர் போஜராஜன் உரையாற்றினார்.</p><p>பேரவைக்கு முதல்வர் வேஷ்டி சட்டையுடன் வருவது பொங்கல், தீபாவளியை போல் ஒரு மகிழ்ச்சி வருகிறது.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானம் நிறைவேற்றி இன்றும் முதல்வர் உள்ளிட்ட அனைவரும் வேட்டி, சட்டையில் வந்திருக்கலாம்.</p><p>இடைவெளி இல்லாமல் சட்டசபை நடப்பதால் உறுப்பினர்களுக்கு உடல்சோர்வு ஏற்பட்டுள்ளது. உடல் சோர்வால் உறுப்பினர்கள் பாதி பேர் வெளியே சென்று விட்டார்கள் - தமிமுன் அன்சாரி</p><p>தேவைப்பட்டால் சட்டசபை மாலை நேரத்திலும் நடத்த முடிவு - சபாநாயகர்</p><p>கடலில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த ஆய்வு நடைபெற்று வருகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தவெக அரசு தடை விதிக்க வேண்டும் - தமிமுன் அன்சாரி </p> <p>காமராஜர் திட்டமிட்ட ராசிமணல் அணை கட்டும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.</p><p>ராசிமணலில் அணை கட்டும் திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்க வேண்டும். ராசிமணலில் அணை கட்டினால் இரு மாநிலத்துக்கு பிரச்சனை ஏற்படாது  - தமிமுன் அன்சாரி </p><p>நீட் தேர்வு  வேண்டாம் என்பது தான் தவெக அரசின் நிலைப்பாடு. அப்படியிருக்கும்போது திக பரப்புரைக்கு அனுமதி மறுத்தது ஏன்?</p><p>புதிய முஸ்லீம்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் சான்று  கிடைக்கும் வகையில் சட்டம் இயற்ற நடவடிக்கை தேவை.</p><p>ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்க வேண்டும் - தமிமுன் அன்சாரி கோரிக்கை</p><h2>தமிமுன் அன்சாரி</h2><p>புதிய சட்டமன்றத்தை கட்டுவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்.</p><p>திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் பயங்கரவாதிகளா?</p><p>நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்களை ஒடுக்கியது நியாயமா?</p><p>சிஏஏ சட்டத்தில் ஈழ தமிழர்களுக்கு குடியுரிமை கொடுக்க வலியுறுத்த வேண்டும்.</p><p>ஈழ தமிழர்கள் தாங்கள் விரும்பும் நாடுகளுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும்.</p><p>காவிரி விவகாரத்தில் மாற்று நடவடிக்கை குறித்து ஏன் பேச கூடாது.</p> <p>பட்ஜெட் மீதான விவாதத்தில் சட்டசபை உறுப்பினர் தமிமுன் அன்சாரி உரையாற்றினார்.</p><p>சட்டசபை விவாதங்களால் அழகுப்படுத்த வேண்டும்.</p><p>விவாதங்களின் முடிவில் வெற்றி பெறுவது மக்களின் கோரிக்கைகளாக இருக்க வேண்டும்.</p><p>சட்டசபை நிகழ்வுகள் நேரடியாக உடனுக்குடன் ஒளிபரப்பப்படுவதால் உறுப்பினர்கள் நேர்த்தியாக பேச வேண்டும்.</p><p>முன்பு பேரவையில் நடந்தது மறுநாள் காலை செய்தி தாளில் வரும். ஆனால் தற்போது நேரலையில் மக்கள் பார்க்கின்றனர்.</p><p>ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியினர் விவாதத்தில் ஈடுபட்டாலும் வெல்வது மக்களாக இருக்க வேண்டும்.</p> <p>சட்டசபை உறுப்பினர்கள் கொடுக்கப்பட்ட நேரத்தில் மட்டும் பேசினால் இப்படி நேரம் இழுக்காது.  உறுப்பினர்கள் தங்கள் புகார்களை ஆதாரத்துடன் வைத்தால் சரியான நேரத்தில் பேசி, அதற்கு பதிலும் சரியாக கிடைக்கும் - சபாநாயகர்</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/2lsd8hib/ministerkeerthana.jpg" /></figure><h2>அமைச்சர் கீர்த்தனா</h2><p>சிப்காட்டிற்கான அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலை உள்ளது. பெருந்துறை சிப்காட்டில் எந்த விதமான பெரிய மாற்றங்களையும் நான் பார்க்கவில்லை.</p><p>நேரு சொன்னதை போல் எவ்வித மாற்றத்தையும் திருச்சி சிப்காட்டில் நான் பார்க்கவில்லை.</p><p>திருச்சி சிப்காட் நன்றாக நடைபெறுவதாக நேரு கூறினார். நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்.</p><p>திமுக அல்வா கொடுத்ததாக பேசிய தவெகவினருக்கு கே.என்.நேரு பதில் அளித்தார்.</p><p>திருச்சியின் பெரிய தொகுதியான மணப்பாறைக்கு கூட்டுக்குடிநீர் திட்டம், தலைமை மருத்துவமனை திமுக ஆட்சியில் கிடைத்தவை.</p><p>புதிய கல்லூரி திறப்பு, கிராமங்களுக்கு புதிய சாலை, சிப்காட்டில் வேலை ஏற்படுத்தியது திமுக ஆட்சியில் தான்.</p><p>புதிதாக வந்த தம்பி... முதல்வர் விஜயிடம் கேட்டு இன்னும் நிறைய செய்யுங்கள். அல்வா என்றெல்லாம் சொல்லாதீர்கள்.</p><h2>மணப்பாறை தவெக எம்எல்ஏ கதிரவன்</h2><p>மணப்பாறை முறுக்கு பிரபலம் என்றாலும் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் மணப்பாறை மக்களுக்கு அல்வாவே அதிகம் கிடைத்தது.</p><p>திமுக ஆட்சியில் மணப்பாறை மக்களுக்கு எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.</p><p>பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.44,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு அனைவரும் வரவேற்பு - மணப்பாறை எம்எல்ஏ கதிரவன்</p><p>நெய்யாறு பிரச்சனை குறித்து முதலமைச்சருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ஆனந்த்</p><p>தமிழக முதலமைச்சரும், கேரள முதலமைச்சரும் பேசி நெய்யாறு பிரச்சனையை தீர்க்க வேண்டும் - பிரவீன்</p><p>விளவங்கோடு தொகுதி மக்களின் பிரச்சனை தீர்க்கப்படும் - அமைச்சர் ஆனந்த்</p><h2>அமைச்சர் ரஞ்சித் குமார்</h2><p>யானை தாக்கி உயிரிழந்த பழங்குடியின நபருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. மனித - விலங்கு மோதலை தடுக்க ஏஐ தொழில்நுட்பம்.</p><p>யானைகள் 3000 கி.மீ. நடந்து செல்லும், அது செல்லும் பாதை காடுகளை வளப்படுத்தும் - அமைச்சர் ரஞ்சித்</p><p>தமிழ்நாடு பட்ஜெட் மீதான விவாதத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ பிரவீன் உரையாற்றினார்.</p><p>மனிதர் - வனவிலங்கு மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>நீலகிரியில் இருந்த புல்லட் ராஜா யானை தற்போது குமரியில் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிப்பு.</p><p>யானை புல்லட் ராஜா குமரிக்கு வந்ததில் இருந்து பொதுமக்கள் மீது அதிகளவில் தாக்குதல்.</p><h2>காங்கிரஸ் எம்எல்ஏ ஜமால் யூனுஸ் உரை</h2><p>காவிரி நீர் விவகாரத்தில் தமிழக உரிமையை மீட்க தவெக அரசுக்கு காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும்.</p><p>65 ஆண்டுகளுக்குப்பின் காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு கிடைத்துள்ளது. நிச்சயம் உறுதுணையாக இருந்து செயல்படுவோம்.</p> <p>காங்கிரஸ் அல்லாத ஆட்சி என கூறிய காமராஜூக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.</p><p>பட்ஜெட் மீதான விவாதத்தில் அமமுக எம்எல்ஏ காமராஜ் உரையாற்றினார்.</p><p>தவெக அரசின் முதல் பட்ஜெட் நல்ல தொடக்கம். வருவாயை பெருக்க அலுவாலியா தலைமையில் குழுவுக்கு வரவேற்பு</p><p>தமிழ்நாடு மீண்டும் மின்மிகை மாநிலமாக மாறும். விவசாயிகள் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யுங்கள். மேலும் ரூ.8,000 கோடி மட்டுமே விவசாய கடன்  உள்ளது. ரூ.8000 கோடி கடனை தவெக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்காக கடன் வாங்கியாவது திட்டங்களை நிறைவேற்றுங்கள்.</p><p>நீங்கள் இருக்கும் வரை நீங்கள் தான் முதலமைச்சர். பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத ஆட்சி மத்தியில் அமைக்க வேண்டும்.</p> <p>முதலமைச்சர் கர்நாடகா செல்ல நினைத்தது தவறானது. உபரி நீரை மட்டும் திறந்து விட தமிழகம் கர்நாடகாவின் வடிகாலா?</p><p>மேகதாது விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என காமராஜ் வேண்டுகோள் விடுத்தார்.</p><p>அதிமுக எம்எல்ஏ காமராஜ் கூறுகையில்,</p><p>தமிழக அரசின் பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு முக்கியத்துவமில்லை. விவசாயம் என்பது வெறும் தொழில் அல்ல, விவசாயிகளின் வாழ்க்கை முறை. மேட்டூர் அணை திறக்கப்படாததால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>கர்நாடகத்திடம் உரிய நீரை கேட்கிறோம், உபரி நீரை அல்ல. தண்ணீர் இல்லை என கூறி 2 நாட்கிில் அணை நிரம்பி விட்டதாக கூறுகின்றனர்.</p> <h2>அமைச்சர் மரிய வில்சன்</h2><p>திமுக அரசு முதல் காலாண்டில் வாங்கிய கடனை விட குறைவாகவே தவெக ஆட்சியில் ரூ.29,881 கோடி கடன்.</p><p>முதல் காலாண்டில் கடன் வாங்கும் தொகையை தவெக அரசு சற்று குறைத்துள்ளது. மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் கடன் அளவை 0.54-ல் இருந்து 0.51 ஆக குறைத்துள்ளோம்.</p><p>கடனை நாங்கள் குறைத்துக்கொண்டே தான் வருகிறோமே தவிர அதிகரிக்கவில்லை.</p><h2>அமைச்சர் மரிய வில்சன்</h2><p>தேர்தல் அறிக்கையில் கூறிய 125 அறிவிப்புகள் தவெக அரசின் முதல் பட்ஜெட்டிலேயே அறிவித்துள்ளோம். துறை ரீதியான மாற்றங்களை முதலமைச்சர் விஜய் கொண்டு வந்துள்ளார். கடனை நாங்கள் குறைத்துக்கொண்டே தான் வருகிறோமே தவிர அதிகரிக்கவில்லை.</p><h2> அதிமுக எம்எல்ஏ காமராஜ்</h2><p>பட்ஜெட் தாக்கல் என்ற பெயரில் வெற்றி என்ற பெயரை ஒவ்வொரு திட்டத்திற்கு சூட்டும் விழா தான் நடைபெற்றது.</p><p>தவெக அரசின் முதல் பட்ஜெட் மீது மக்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் எந்த புதிய திட்டமும் இல்லை.</p><p>மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை, ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர், உதவித்தொகை போன்ற அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம்.</p><p>நிதி நிலையை சரி செய்ய 2 ஆண்டு தேவை என தவெக அரசு சொல்கிறது. ஆனால் 50 ஆண்டு தேவை என நிதித்துறை செயலாளர் கூறுகிறார்.</p><p>நன்னிலம் அதிமுக எம்எல்ஏ காமராஜ் பட்ஜெட் மீதான விவாதத்தில் உரையாற்றினார். </p><p>அதிமுக ஆட்சிக்காலத்தில் விலைவாசி, கடன் கட்டுக்குள் இருந்தன.</p><p>தவெகவின் முதல் பட்ஜெட் என்பதால் எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.</p><p>தவெகவின் வாக்குறுதிகள் பட்ஜெட்டில் அறிவிப்பாக வரவில்லை.</p> <p>கரும்புக்கு என கூட்டுறவு சங்கத்தை உருவாக்கியது மராட்டிய மாநிலம். விரைவில் கரும்பு உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணிக்கு வரும் - அமைச்சர் ஆதவ்</p><h2>சைதாப்பேட்டை எம்எல்ஏ அருள்பிரகாசம்</h2><p>தவெக ஆட்சியில் தமிழ்நாடு மின்னல் வேகத்தில் முன்னேறுகிறது. சட்டமன்ற தேர்தலில் சைதாப்பேட்டையில் மாசுவை நீக்கி தூய்மை கிடைத்துள்ளது.</p><p>நமது மண்ணில் விளையும் கரும்புக்கு சர்க்கரைத்தன்மை குறைவு - முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு</p><p>தவெக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் பழைய கள்ளு. புதிய மொந்தை.</p><p>திமுக அரசின் பட்ஜெட்டை தான் தவெக அரசு அப்படியே வாசிக்கிறது என கிராமத்தில் பேசுகிறார்கள் -  எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</p><p>ரேஷன் கடைகளில் தரமான அரிசி கொடுத்தால் மீண்டும் ஆட்சியை பிடித்து விடலாம் என எம்ஜிஆர் கூறினார்.</p><p>ரேஷன் கடைகளில் தரப்படும் அரிசியை வைத்து ஆட்சியை மதிப்பிடலாம் என எம்ஜிஆர் கூறினார் - சபாநாயகர்</p><p>திறந்த வெளியில் உள்ள 10 லட்சம் நெல் மூட்டைகளை அப்புறப்படுத்த வேண்டும். வறட்சி நிவாரண நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</p><p>கரும்பு உற்பத்தி கடந்த 5 வருடத்தில் 70% குறைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச விலையின்றி தவித்ததால் தவெக அரசு நடவடிக்கை.</p><p>விவசாயிகளுக்கான பொற்கால ஆட்சியாக இந்த 5 ஆண்டு கால ஆட்சியை முதல்வர் விஜய் மாற்றுவார் என அமைச்சர் ஆதவ் திட்டவட்டம்.</p> <h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</h2><p>திமுக ஆட்சியில் இதுவரை ரேஷன் கடைகளில் அரிசி வாங்கி அதை நாம் சமைத்து சாப்பிட்டோமா?</p><p>இலவசமாக தரும் அரிசி சாப்பிட முடியாத நிலையில் உள்ளதால் தான் சன்னரக நெல்லுக்கான ஊக்கத்தொகை உயர்வு. </p><p>திமுகவிற்கு பயிர் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற எண்ணமே கிடையாது.</p><p>கடந்த 5 ஆண்டுகளில் கரும்பு சாகுபடியின் பரப்பளவு குறைந்துள்ளது.</p><h2>சொன்னால் செய்பவர் முதலமைச்சர் விஜய்</h2><p>பிரசாரத்தின்போது விவசாயியாக பிறக்க வேண்டும் என 3 முறை சொன்னார் முதல்வர் விஜய். அதை அடிக்கடி குறிப்பிடுகிறீர்கள்.</p><p>சொன்னால் செய்பவர் முதல்வர். நெல்லுக்கான ஊக்கத்தொகை உயர்த்தி உள்ளார் முதலமைச்சர் விஜய்.</p><p>பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட விவசா சங்கங்களுடன் பேச்சு நடத்திய நிலையில் கரும்பு ஊக்கத்தொகை அறிவித்தார் முதல்வர் - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</p> <h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</h2><p>நீங்கள் 5 வருடங்கள் ஆட்சியில் இருந்தீர்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்து 3 மாதங்கள் தான் ஆகிறது.</p><p>5 வருடங்கள் ஆட்சியில் இருந்த திமுக 3 மாதத்தில் மட்டுமே ஆட்சியில் உள்ள தவெகவுடன் ஒப்பீடு செய்வது நியாயமா?</p><p>200 தொகுதிகளில் வெல்வோம் என அடிக்கடி சொன்ன திமுக, விவசாயக்கடன் தள்ளுபடி பற்றி தேர்தல் அறிக்கையில் பேசவே இல்லை.</p> <p>திமுக ஆட்சியில் தரமான அரிசிகள் வழங்கப்பட்டது. ஆட்சியர் தலைமையிலான குழு தான் நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க அனுமதி அளித்தது - சக்கரபாணி</p><h2>அமைச்சர் வெங்கட்ரமணன்</h2><p>நெல் கொள்முதலுக்கு விவசாயிகளிடம் திமுக ஆட்சியில் கையூட்டு பெறப்பட்டது. திமுக ஆட்சியில் ரேஷனில் தரப்பட்ட அரிசியை பயன்படுத்த முடியவில்லை என மக்களே கூறினர்.</p><p>ரேஷன் அரிசி தொடர்பாக புகார் வரும் நிலையில் அதனை சரிசெய்ய தொடர் நடவடிக்கை எடுக்கிறோம்.</p> <h2>எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</h2><p>வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்களுக்கு பெயர் மாற்றம் நடந்துள்ளது. திமுக 2 லட்சம் மின் இணைப்பு கொடுத்தது விவசாயிகளுக்கு மிகப்பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது. இலவச மின்சாரம் தொடர்பாக அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லை. தவெக ஆட்சியில் மின்சாரமே வரமேட்டேங்குது.</p><p>நுண்ணீர் பாசனத்திட்டம், மும்முனை மின்சாரத்திற்கு திமுக ஆட்சியைவிட கூடுதலாக ரூ.8 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><p>விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் குறித்து மானிய கோரிக்கையில் அறிவிப்பு - நிர்மல்குமார்</p><h2>எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</h2><p>விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை நிறுத்த போகிறதா அரசு? நுண்ணீர் பாசனத்திட்டம், மும்முனை மின்சாரம் திட்டத்திற்கு கடந்த ஆட்சியை விட குறைவான நிதி ஒதுக்கீடு ஏன்?</p><p>வேளாண் துறைக்கு திமுக ஆட்சியை விட ரூ.279 கோடி குறைத்து நிதி ஒதுக்கி உள்ளது தவெக அரசு.</p><p>திமுக ஆட்சியில் வேளாண் துறைக்கான செலவை விட கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.</p><p>அந்த டெக்னிக்கை 10 நிமிடங்கள் முன்பு தான் அண்ணன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் கற்றுக்கொண்டதாக அமைச்சர் ரமேஷ் பதில் அளித்தார்.</p><h2>எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</h2><p>தவெகவினர் படத்தை பார்த்து வந்தவர்கள், திமுகவினர் முரசொலி படித்து வந்தவர்கள். வேளாண்மை துறைக்கு திமுக ஆட்சியை விட குறைவாக ஒதுக்கி உள்ளது தவெக.</p><p>திமுக ஆட்சியில் ஆக்டிங் கிடையாது. ஆக்ஷன் மட்டுமே இருந்தது தவெக எப்படி ஆட்சிக்கு வந்தது என்பது அமைச்சர் பேசும்போது டெக்னிக்  தெரிகிறது.</p> <p>திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட நெல் சேமிப்பு கிடங்குகள் உள்ளிட்டவற்றை பட்டியலிட்டு முன்னாள் அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்தார்.</p><p>நெல் கிடங்குகள் கட்டவில்லை என அமைச்சர் ரமேஷ் தவறாக கூறினார். திமுக ஆட்சியில் 18 மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டன.</p><p>மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்வதற்காக கரும்பு தோட்டத்தில் கான்கிரீட் போடப்பட்டதை சுட்டிக்காட்டி அமைச்சர் ரமேஷ் பேசினார்.</p><h2>அமைச்சர் ரமேஷ்</h2><p>திமுக ஆட்சியில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்ததாக சிறந்த திரைக்கடை எழுதி உள்ளார்  எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.</p><p>ரூ.309 கோடிக்கு நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும் என்ற திமுக வாக்குறுதி என்னாச்சு?</p><p>நெல்லுக்கும் கரும்புக்கும் அரசு ஒரு விலை நிர்ணயித்தால் அதிகாரிகள் ஒரு விலை நிர்ணயித்தார்களே அது தெரியாதா?</p><p>திமுக ஆட்சியில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தார்களா? துன்பப்பட்டார்களா? என்பது அவர்களுக்கே நன்றாக தெரியும்.</p><p>திரைக்கதையை தயார் செய்கிறார் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.</p><p>கிடங்குகள் வேண்டும் என பல ஆண்டுகளாக விவசாயிகள் போராடி வருகின்றனர் -  அமைச்சர் ரமேஷ்</p> <p>திமுக ஆட்சியின் 5 ஆண்டு காலத்தில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.</p><p>பாமகவின் நிழல் பட்ஜெட்டில் இருந்து கருத்துக்களை பெற்றோம் -  எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</p><h2>எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</h2><p>விவசாயிகள் வாங்கிய ரூ.21,000 கோடி கடனை தவெக அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.</p><p>விவசாயக்கடன் முழு தள்ளுபடி என நாங்கள் சொல்லவில்லை. நீங்கள் தான் சொன்னீர்கள்.</p><p>ரூ.21,000  கோடி கடனை தள்ளுபடி செய்கிறோம் எனக்கூறிவிட்டு வெறும் ரூ.6,000 கோடி மட்டுமே தள்ளுபடி செய்துள்ளீர்கள்.</p><p>தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி 1.30 கோடி பெண்களுக் திமுக அரசு உரிமைத்தொகை கொடுத்தது.</p><p>நான் முதல்வன் திட்டத்தால் ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆக அதிகம் பேர் பயிற்சி பெறுகின்றனர்.</p><p>திமுக ஆட்சியில் திடீர் திடீரென மழை பெய்தது. தவெக ஆட்சியில் மழையே பெய்யவில்லை.</p><p>நெல், கரும்பிற்கான ஊக்கத்தொகை தொடர்பாக தவெக - திமுக காரசார விவாதம் நடைபெற்றது.</p><h2>எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</h2><p>எவ்வளவு கடன் தள்ளுபடி செய்ய முடியும் என்பது தெரிந்து தான் வாக்குறுதி அளிக்க வேண்டும்.</p><p>திமுக இடைக்கால பட்ஜெட்டில் கரும்புக்கு ரூ.4000 கொடுப்போம் என கூறி இருந்தோம்.</p><p>திமுக ஆட்சியில் ரூ.19,500 கோடி கடன் தள்ளுபடி செய்தோம். </p> <h2>அமைச்சர் வினோத்</h2><p>விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை படிப்படியாகவே திமுக அரசு உயர்த்தியது.</p><p>திமுக ஆட்சியில் தேர்தல் அறிக்கையில் சொன்னது போல் நெல்லுக்கு ரூ.2500, கரும்பிற்கு ரூ.3500 உயர்த்தி தரவில்லை.</p><p>புதிய ஆட்சி அள்ளி தருவார்கள் என எதிர்பார்த்தனர் விவசாயிகள். ஆனால் கிள்ளி தருகிறீர்கள் - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</p><h2>அமைச்சர் ஆனந்த்</h2><p>வாய்க்கால் தகராறுக்கு கூட சரிசெய்து விட்டீர்களா என இரவு பகல் பாராது போன் செய்கிறார் முதல்வர் விஜய்.</p><p>நாங்களும் தினந்தோறும் டென்ஷனாகத்தான் இருக்கிறோம்.</p><p>கரும்பு டன்னுக்கு ரூ.4,500 கொடுப்போம் என தவெக வாக்குறுதி அளித்தது.</p><p>எங்கள் ஆட்சிக்காலத்தில் அமைச்சர்கள் டென்ஷனாகத்தான் இருப்போம். நீங்கள் ரிலா்்ஸாக இருக்கிறீர்கள் - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</p> <p>கரும்பு டன்னுக்கு ரூ.4000 கொடுத்தது வரலாற்றில் முதல்முறை. விவசாயிகள் நலனுக்காக வரலாறு படைத்துள்ளார்  முதலமைச்சர் விஜய் - செங்கோட்டையன்</p><p>விவசாயிகள் மீது குண்டாஸ் போட்ட ஆட்சி திமுக ஆட்சி - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பிஸியாகவே இருக்கிறார் -எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</p> <p>திமுக உறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உரையாற்றினார்.</p><p>கொள்கையை பேசி பேசி மக்கள் மனதை பிடித்தவர்கள் திராவிட இயக்கத்தினர்.</p><p>பட்ஜெட்டில் மாற்றத்தை காணவில்லை. ஏமாற்றம் தான் மிஞ்சியது.</p><p>கடந்த 5 ஆண்டுகாலம் தமிழகத்தில் விவசாயிகள் போராட்டம் இன்றி வாழ்ந்தார்கள்.</p><p>தமிழக பட்ஜெட் மீதான 2-ம் நாள் விவாதம் தொடங்கியது.</p><h2>முதலமைச்சர் விஜய்</h2><p>தமிழ்நாட்டின் நிதிநிலை சரியாக இல்லை என விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் உரையாற்றினார்.</p><p>நெல், கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். </p><p>நெல் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் சன்னரக நெல்லுக்கு ரூ.2,750 வழங்கப்படும்.</p><p>பொது நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2.600 வழங்கப்படும்.</p><p>கரும்புக்கான ஊக்கத்தொகை ஒரு டன்னுக்கு ரூ.709.50 உயர்த்தி வழங்கப்படும்.</p><p>வரலாற்றிலேயே முதல்முறையாக நெல்லுக்கு ஊக்கத்தொகை ரூ.156 வரை உயர்த்தப்பட்டுள்ளது.</p> <p>முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.</p><p>முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வரவேற்பு</p><p>தனித் தீர்மானத்தை மத்திய அரசு ஏற்காது என்பதால் சட்டமாக இயற்ற வேண்டும் என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ கோரிக்கை.</p><h2>அமைச்சர் ராஜ்மோகன்</h2><p>முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது அமைச்சர் ராஜ்மோகன் உரையாற்றினார்.</p><p>மொழியின் பெயரை தங்கள் பிள்ளைகளுக்கு வைத்து அழகு பார்க்கும் கூட்டம் இது.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்து என்பது உலகத்தாய் வாழ்த்து.</p><p>இனி பொது நிகழ்ச்சிகள், கல்வி நிலையங்கள், எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ  அங்கெல்லாம் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே முதலில் ஒலிக்கும் அதற்காக தீர்மானம் நிறைவேற்றியவர் என்ற சரித்திரத்தில் முதல்வரின் பெயரே நிலைக்கும் அவரை வாழ்த்தும் இந்த தீர்மானத்தை வரவேற்கிறேன்.</p><p>தனித்தீர்மானத்தின் மீது ஐயூஎம்எல் எம்எல்ஏவும் அமைச்சருமான ஷாஜகான் ஆதரவு அளித்து உரையாற்றினார்.</p><p>மொழி உணர்வை சீண்டி பார்க்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது.</p> <p>முதலமைச்சர் கொண்டு வந்துள்ள தனித்தீர்மானத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு அளித்தது.</p><p>மாநில அரசுகள் பின்பற்றும் தனித்துவ விவகாரங்களில் மத்திய அரசின் தலையீடு இருக்கக்கூடாது.</p> <p>தமிழ்த்தாய் வாழ்த்து தனித்தீர்மானத்தின் மீது பாமக எம்எல்ஏ சிவகுமார் உரையாற்றினார்.</p><p>பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதலமைச்சர் இருக்க வேண்டும்.</p><p>பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்களை தமிழக அரசு நியமிக்க வேண்டும்.</p><h2>வன்னி அரசு</h2><p>ஒரே நாடு, ஒரே மொழி என்பதற்காக தேசிய இனங்களின் அடையாளங்களை அழிக்க முயற்சி.</p><p>தமிழர் அடையாளத்தை உலகுக்கு பறைசாற்றும் தீர்மானம் இது.</p><p>தமிழ் தேசியமும் திராவிடமும் வேறு வேறு என பேசும் அபாயகரமான அரசியல்.</p><p>முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானத்தின் மீது அமைச்சர் வன்னிஅரசு உரையாற்றினார். </p><p>முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு விசிக ஆதரவு.</p><p>தமிழ்நாடு, தமிழர் என்ற அரசியல் தான் இன்றும் தொடர்கிறது.</p>   <p>தமிழ்த்தாய் வாழ்த்து தனித்தீர்மானத்தின் மீது காங்கிரஸ் எம்எல்ஏவும் அமைச்சருமான விஸ்வநாதன் உரையாற்றினார்.</p><p>முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் 8.5 கோடி தமிழ் மக்களால் ஏற்கப்பட்டுள்ளது.</p><p>மனேன்மணியம் சுந்தரனார் பல்கலையில் தமிழுக்கு ஏற்பட்ட அவமானம்.</p> <h2>முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்தின் மீது எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.</h2><p>1981-ல் மதுரையில் 5-வது தமிழ்நாட்டை நடத்தியவர் எம்.ஜி.ஆர்.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது யாருக்கும் எதிரான நடவடிக்கை அல்ல.</p><p>தமிழ் என்ற வரும்போது இந்த பேரவை ஒரே குரலில் ஒலிக்க வேண்டும்.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தமிழ்மொழியின் தொன்மை, பண்பாட்டின் அடையாளம்.</p><p>தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனம், அரசு நிறுவனங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்படுவது தமிழர்களின் உணர்வு.</p><p>முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது திமுக எம்எல்ஏ கோவி செழியன் உரையாற்றினார். </p><p>தமிழ்த்தாய் வாழ்த்திற்கு 3-ம் இடம் என்று சொல்லும்போது அவமானமாக இருக்கிறது.</p><p>தமிழ்மொழியை தேசிய மொழியாக்கி செம்மொழியாக்கியவர் கலைஞர் கருணாநிதி.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அரசு அலுவலகங்களில் பாட அரசாணை வெளியிட்டவர் கலைஞர்.</p><p>முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு திமுக ஆதரவு அளித்தது.</p><p>தமிழ்நாட்டில் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடும் வகையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர்</p> <p>1891-ம் ஆண்டு சுந்தரனாரால் இயற்றப்பட்ட மனோன்மணீயம் நாடக நூலின் பாயிரம்.</p><p>1970 நவம்பர் 23-ல் அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என அரசாணை கொண்டுவரப்பட்டது.</p><p>2021 டிச.12-ல் தமிழ்நாட்டின் பாடலாக தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் அளிக்கப்பட்டது.</p><p>பொது நிகழ்ச்சிகளின் தொடக்கத்தின் முதலாக தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும்.</p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>தமிழின் பெருமையை சொல்ல திருக்குறள் ஒன்று போதாதா?</p><p>தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முதலிடம் கொடுப்பது தானே மாநில உரிமை.</p><p>தமிழ் என்று சொன்னாலே ஒட்டுமொத்த தமிழ்நாடே ஒன்றாக வந்து நிற்கும்.</p><p>தமிழ் மொழியின் பெருமைய பாதுகாப்பதில் தவெக அரசு சமரசம் செய்யாது.</p> <h2>முதலமைச்சர் விஜய்  உரை</h2><p>தாய் எப்படி புனிதமோ, அதை போன்றே தாய் மொழியும்.</p><p>தாய் நமக்கு மிகப்பெரிய புனிதம் எனில் நாம் எல்லோரும் போற்றும் தமிழ்த்தாய் பற்றி சொல்லவா வேண்டும்.</p><p>தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் பவர்.</p><p>இந்தியாவின் நெற்றில் இருக்கும் பொட்டு தான தமிழ் மொழி.</p><p>தமிழும், தமிழனும் இல்லாத நாடு ஏது?</p> <p>தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமல்ல, அது நமது உயிர், உணர்வு - முதலமைச்சர் விஜய்</p><p>தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என சட்டசபை ஏகமனதாக தீர்மானிக்கிறது.</p><p>சட்டசபை முன்னாள் உறுப்பினர் சுப்பிரமணியன் என்சிற கோமுகி மணியனுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவதை உறுதி செய்ய தனித்தீர்மானம் கொண்டு வரப்பட இருக்கிறது.</p><p>தமிழ்நாடு சட்டப்பேரவை நிதிநிலை கூட்டத்தொடர் அமர்வு தொடங்கியது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-resolution-priority-tamizh-thai-vazhthu">தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: சட்டசபையில் இன்று தனித்தீர்மானம்</a></p> ]]></content:encoded></item><item><title>மதுரையில் தொடங்கும் சிவகார்த்திகேயனின் &apos;சேயோன்&apos; இரண்டாம் கட்ட படப்பிடிப்பு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/sivakarthikeyan-seyon-madurai-action-drama-shoot</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/sivakarthikeyan-seyon-madurai-action-drama-shoot#comments</comments><guid isPermaLink="false">a2726d41-d876-4693-b700-95d4886d93ef</guid><pubDate>Mon, 10 Aug 2026 10:44:09 +0000</pubDate><atom:updated>2026-08-10T10:44:09.720Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சிவகார்த்திகேயன்,Sivakarthikeyan,Seyon,சேயோன்,Bhagyashri Borse,பாக்யஸ்ரீ போர்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/hev7e1ub/seyon.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sivakarthikeyan's 'Seyon']]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/hev7e1ub/seyon.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகர் சிவகார்த்திகேயனின் பிரம்மாண்ட படமான '<a href="https://www.maalaimalar.com/topic/சேயோன்">சேயோன்</a>' திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், தற்போது அடுத்தகட்டப் படப்பிடிப்பு மதுரையில் கோலாகலமாகத் தொடங்குகிறது.</p><h2>வி<strong>ருமாண்டி பாணி</strong></h2><p>கிராமத்துப் பின்னணியில் உருவாகும் இந்த ஆக்ஷன்-டிராமா திரைப்படத்தில், சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் மக்களால் சாமியாக வழிபடப்படும் ஒரு வித்தியாசமான பாத்திரத்தில் உருவாகி வருகிறது. சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான கிளிம்ப்ஸ் வீடியோவில், 'விருமாண்டி' படத்தின் பாணியில் கிராமத்து திருவிழா பின்னணியும், மக்களின் நம்பிக்கையும் மையக்கருவாகக் காட்டப்பட்டுள்ளது. இயக்குநர் சிவகுமார் முருகேசன், "இது இரு வேறு தெய்வங்களை நம்பும் மக்களின் வாழ்வியலையும் மனித நேயத்தையும் பேசும் கதை" எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p>'அமரன்' படத்தின் ரூ.300 கோடி வசூல் சாதனைக்குப் பிறகு, உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ஆர்.மகேந்திரன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 2-வது படம் இதுவாகும்.  'தாய் கிழவி' படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் இப்படத்திற்கு திரைக்கதை எழுதி இயக்குகிறார். </p><p>துல்கர் சல்மானின் 'காந்தா' படத்திற்குப் பிறகு, நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தமிழில் கமிட்டாகியுள்ள 2-வது படம் இது. சந்தோஷ் நாராயணன் முதன்முறையாக RKFI - சிவகார்த்திகேயன் கூட்டணியில் இசையமைக்கிறார்.</p><h2>ரிலீ<strong>ஸ் திட்ட</strong>ம்</h2><p>மதுரையில் நடைபெறவுள்ள இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் முக்கியமான ஆக்ஷன் சண்டைக்காட்சிகள் மற்றும் கிராமத்துப் பகுதிகள் படமாக்கப்பட உள்ளன. படம் வரும் அக்டோபர் மாதத்தில் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rain-likely-chance-to-chennai-5</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rain-likely-chance-to-chennai-5#comments</comments><guid isPermaLink="false">57affb1f-d167-4536-b976-8583537e951e</guid><pubDate>Mon, 10 Aug 2026 10:26:54 +0000</pubDate><atom:updated>2026-08-10T10:26:54.789Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>IMD,Chennai Rain,சென்னையில் மழை,சென்னை வானிலை ஆய்வு மையம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/ae7mhdlx/rain005.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மழை]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/ae7mhdlx/rain005.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.</strong></em> </p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.</p><p>இதனால் இன்று மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><h2><strong>லேசான மழை</strong> </h2><p>நாளை மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடகடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>12-ந்தேதி மற்றும் 13-ந்தேதிகளில் மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>14-ந்தேதி மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென்தமிழகப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>15-ந்தேதி மற்றும் 16-ந்தேதி மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>இதனிடையே இன்று முதல் 14-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் வட உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>இன்று முதல் 14-ந்தேதி வரை தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடலின் ஒரு சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>ஜெய்ப்பூரில் திடீரென உள்வாங்கும் சாலை: வீடுகளில் விரிசல்- அச்சத்தில் மக்கள்!</title><link>https://www.maalaimalar.com/news/national/jaipur-road-collapse-leaves-residents-in-fear</link><comments>https://www.maalaimalar.com/news/national/jaipur-road-collapse-leaves-residents-in-fear#comments</comments><guid isPermaLink="false">dc7c500e-db7e-4776-8b5d-e1c5df4c8d79</guid><pubDate>Mon, 10 Aug 2026 10:22:09 +0000</pubDate><atom:updated>2026-08-10T10:22:09.926Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>jaipur,Shikariyon Ki Mori,Mohammed Zakariya,ஜெய்பூர்,ஷிகாரியோன் கி மோரி,முகமது ஜக்கரியா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/mandgf9v/shikariyon.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Shikariyon Ki Mori ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/mandgf9v/shikariyon.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜெய்பூர் நகரின் பழைய கோட்டைப் பகுதிக்கு உட்பட்ட போடா நிக்காஸ் சாலையில் அமைந்துள்ள ஷிகாரியோன் கி மோரி பகுதியில், திடீரென சாலை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாலும், வீடுகளில் விரிசல்கள் விழுந்து வருவதாலும் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.</p><h2>சுவர் இடி<strong>ந்து விழுந்தது</strong></h2><p>அப்பகுதியில் ஏற்கனவே ஆபத்தான நிலையில் இருந்த வீடுகளுக்கு ஜெய்பூர் மாநகராட்சி காலி செய்யக் கோரி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்நிலையில், காலி செய்யப்பட்ட வீடு ஒன்றின் சுவர் நேற்று இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக, வீடு முன்கூட்டியே காலி செய்யப்பட்டதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.</p><h2>அதிகாரிகளி<strong>ன் அலட்சிய</strong>ம்</h2><p>சுவர் இடிந்து விழுந்த பிறகும் ஜெய்பூர் மாநகராட்சியின் எந்தவொரு உயர் அதிகாரியோ அல்லது மீட்புக் குழுவினரோ சம்பவ இடத்தைப் பார்வையிட வரவில்லை என்றும், மாநகராட்சியால் நியமிக்கப்பட்ட ஒரு பாதுகாவலர் மட்டுமே அங்கு இருந்ததாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.</p><h2>1000 மணல் <strong>மூட்டைகள் வீ</strong>ண்</h2><p>சுமார் 10 நாட்களுக்கு முன்பு சாலையில் சிறிய பள்ளம் ஏற்பட்டது. மாநகராட்சி ஊழியர்கள் 500-க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளைப் போட்டு அதை அடைக்க முயன்றனர். ஆனால், சமீபத்தில் பெய்த பலத்த மழையால் மணல் அடித்துச் செல்லப்பட்டு பள்ளம் மேலும் பெரிதானது. இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் பயன்படுத்தப்பட்டும், மழைநீரால் மண் அரிப்பு ஏற்பட்டு அருகில் உள்ள மகாதேவ் கோவில் கிணற்றுக்குள் மண் குவிந்து வருகிறது.</p><h2>காலி செ<strong>ய்ய நோட்டீஸ்</strong></h2><p>சாலை தொடர்ந்து உள்வாங்கி வருவதால், இதுவரை 10 முதல் 15 வீடுகளில் பெரிய அளவிலான விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. மாநகராட்சி அதிகாரிகள் இதுவரை 4-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு உடனடியாகக் காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதனால் மேலும் பல குடும்பங்கள் தங்கள் உறவினர்களின் வீடுகளுக்குத் தஞ்சம் புகுந்து வருகின்றன.</p><h2>முன்னா<strong>ள் கவுன்சிலரின்</strong> ஆதங்கம்</h2><p>முன்னாள் கவுன்சிலர் முகமது ஜக்கரியா மற்றும் உள்ளூர்வாசிகள் கூறுகையில், "இங்கு எந்தவித சட்டவிரோதக் கட்டுமானங்களும் மேற்கொள்ளப்படவில்லை. வடிகால் வசதி சரிவர இல்லாததாலும், மழைநீர் சரியாக வெளியேறாததாலும் தான் சாலை உள்வாங்கி மண் அரிப்பு ஏற்படுகிறது. வெறும் மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிகத் தீர்வு காண்பதை விட்டுவிட்டு, பிரச்சனைக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிந்து நிரந்தரத் தீர்வு காண வேண்டும். வீடுகளைக் காலி செய்யச் சொன்னால் நாங்கள் எங்கே செல்வது?" எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.</p><p>தொடர் மழையின் காரணமாக அப்பகுதியில் உள்ள மேலும் பல வீடுகள் பாழாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டுத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை: பதிலி அரசை வைத்து எம்.பி.க்கள் கூட்டம் நடத்தும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அமைதி காப்பது ஏன்? - தயாநிதி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/why-does-the-congress-which-holds-meetings-of-mps-with-a-proxy-government-in-place-remain-silent-in-the-states-where-it-is-in-power-dayanidhi-asks</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/why-does-the-congress-which-holds-meetings-of-mps-with-a-proxy-government-in-place-remain-silent-in-the-states-where-it-is-in-power-dayanidhi-asks#comments</comments><guid isPermaLink="false">58b1b29e-7618-4155-bfdc-0d291db048a2</guid><pubDate>Mon, 10 Aug 2026 10:17:34 +0000</pubDate><atom:updated>2026-08-10T10:17:34.677Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,தயாநிதி மாறன்,Dayanidhi Maran,தொகுதி மறுவரையறை,Constituency Delimitation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/pcowkp1d/New-Project-2026-08-10T154702.760.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பதிலி அரசை வைத்து எம்.பி.க்கள் கூட்டம் நடத்தும் காங்கிரஸ், ஆளும் மாநிலங்களில் அமைதி காப்பது ஏன்? - தயாநிதி கேள்வி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/pcowkp1d/New-Project-2026-08-10T154702.760.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தொகுதி மறுவரையறை விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுவது ஏன் என திமுக எம்.பி. தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸ் ஆளும் எந்த மாநிலங்களிலும் இதுதொடர்பாக எந்த ஆலோசனைக் கூட்டங்களும் நடத்தாதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்.,</p><p>“தமிழ்நாட்டில் மட்டும் தொகுதி மறுவரையறை தேவையில்லை எனும் நாடகம் ஏன்? தங்கள் பதிலி அரசை வைத்து எம்.பி.க்கள் கூட்டம் நடத்தும் காங்கிரஸ், தான் ஆளும் நான்கு மாநிலங்களில் ஏன் அமைதியாக இருக்கிறது? தொகுதி மறுவரையறையை ஆதரித்த ரேவந்த் ரெட்டி அவர்களைக் கேள்வி கேட்கத் துணியுமா?</p><p>த.வெ.க. அரசைத் தூண்டிவிட்டு, தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழ்நாட்டில் எம்.பி.க்கள் கூட்டம் என்று நாடகமொன்றை அரங்கேற்றிய காங்கிரஸ் கட்சியின் உண்மையான நிலைப்பாடுதான் என்ன?</p><p>நியாயமான தொகுதி மறுவரையறை என்ற நிலைப்பாட்டிலிருந்து தொகுதி மறுவரையறை வேண்டாம் என்று அடித்திருக்கும் பல்டி தமிழ்நாட்டில் மட்டும்தானா? இல்லை, அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்துமா?</p><p>அப்படியெனில், காங்கிரஸ் ஆளும் நான்கு மாநிலங்களில் இப்படியான எம்.பி.க்கள் கூட்டத்தை ஏன் நடத்தவில்லை?</p><p>தொகுதி மறுவரையறை தேவையில்லை என்று இங்கு நாடகமிடும் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர்களில் ஒருவரான ரேவந்த் ரெட்டி, தொகுதி மறுவரையறை நடந்தால் தெலங்கானா மாநிலத்தின் பிரதிநித்துவம் அதிகரிக்கும் என்று பேசியிருப்பது ஏன்?</p><p>தொகுதி மறுவரையறையில் தெளிவான நிலைப்பாடின்றி இருக்கும் காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டில் செய்வது அற்ப அரசியல் அன்றி வேறல்ல.</p><p>நச்சுப்பாம்பாக விளங்கும் காங்கிரஸ் கட்சியின் பதிலி அரசை நடத்திக் கொண்டிரும் ரீல்ஸ் கட்சியின் ரீல்களை மக்கள் நம்பமாட்டார்கள்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>காலநிலை மாற்றத்தால் பேரடி வாங்கும் ஐரோப்பிய பொருளாதாரம்: பில்லியன் கணக்கில் குவியும் நிதியிழப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/world/european-economy-hit-hard-by-climate-change-billions-in-losses</link><comments>https://www.maalaimalar.com/news/world/european-economy-hit-hard-by-climate-change-billions-in-losses#comments</comments><guid isPermaLink="false">68b5711a-9483-4861-bfc4-32933659be2d</guid><pubDate>Mon, 10 Aug 2026 10:06:40 +0000</pubDate><atom:updated>2026-08-10T10:06:40.719Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>European,European economy,Danube river,ஐரோப்பிய பொருளாதாரம்,ரைன் நதி,டானூப்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/x3g7ar7o/europe.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ European economy ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/x3g7ar7o/europe.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஐரோப்பிய கண்டத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பதிவாகி வரும் தீவிர வெப்ப அலைகள், கடுமையான வறட்சி மற்றும் காட்டுத்தீ ஆகியவை வெறும் இயற்கை பேரிடராக மட்டுமின்றி, அப்பிராந்தியத்தின் பொருளாதார கட்டமைப்பையே உலுக்கி வருகின்றன. பருவநிலை மாற்றம் என்பது எதிர்காலப் பிரச்சனை என்ற எண்ணத்தை உடைத்து, தற்போதைய நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெருமளவு வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>பொருளாதார <strong>இழப்புகள்</strong> </h2><p>அலையன்ஸ் நிதி அமைப்பின் கணிப்பின்படி, ஜூன் மாதத்தில் வீசிய இருவார வெப்ப அலையால் மட்டுமே ஐரோப்பாவின் ஜிடிபி 0.3% அளவுக்கு (சுமார் 180 பில்லியன் யூரோக்கள்) சரிவைக் கண்டுள்ளது. காலநிலை மாற்றத்தின் நேரடித் தாக்குதலுக்கு உள்ளாகும் ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் பொருளாதாரம் 2030-க்குள் 5% முதல் 7% வரை சுருங்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p>உலகின் மற்ற கண்டங்களை விட ஐரோப்பா மிக வேகமாக வெப்பமடைந்து வருவதால், அரசுகளின் வரவு-செலவுத் திட்டம், நுகர்வோர் விலைவாசி மற்றும் நாட்டின் உள்கட்டமைப்பு ஆகியவை தொடர் நெருக்கடிக்கு உள்ளாகின்றன.</p><h2>கப்பல் போக்கு<strong>வரத்து</strong> மற்றும் வர்த்தக முடக்கம்</h2><p>ஐரோப்பாவின் முக்கிய வணிக நதிகளான ரைன் மற்றும் டானூப் ஆகியவற்றில் நீர்மட்டம் மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது.இதனால் சரக்குக் கப்பல்கள் முழு கொள்ளளவுடன் செல்ல முடியாமல் வர்த்தகம் முடங்கியுள்ளது. ING வங்கியின் கூற்றுப்படி, ரைன் நதிப் போக்குவரத்து தடையால் ஜெர்மனியின் ஜிடிபி 0.3% குறைய வாய்ப்புள்ளது.</p><h2>மின் உற்ப<strong>த்தி முடக்</strong>கம் </h2><p>ஆறுகளில் நீர்மட்டம் சரிந்ததாலும், நீரின் வெப்பநிலை உயர்ந்ததாலும், அணுமின் நிலையங்களைக் குளிரூட்ட நீர் கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது. இதனால் பிரான்ஸ் மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளில் உள்ள பல அணுமின் உலைகள் உற்பத்தியைக் குறைக்கவும், தற்காலிகமாக மூடவும் நிர்பந்திக்கப்பட்டுள்ளன. ஹங்கேரியின் முக்கிய அணுமின் நிலையம் ஒரு வாரம் முடங்கினாலும் நாட்டின் ஜிடிபியில் 0.1% இழப்பு ஏற்படும் என MBH வங்கி தெரிவித்துள்ளது.</p><h2>விவசாய<strong>ம் மற்றும்</strong> உணவுப் பணவீக்கம்</h2><p>கடும் வறட்சியால் மக்காச்சோளம் மற்றும் சூரியகாந்தி விளைச்சல் 6% முதல் 7% வரை சரிந்துள்ளது. பார்சிலோனா சூப்பர் கம்ப்யூட்டிங் மையத்தின் ஆய்வின்படி, இதுபோன்ற வெப்ப அலைகள் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தி, ஐரோப்பிய மண்டலத்தின் பணவீக்கத்தை 0.34% வரை உயர்த்துகின்றன.</p><h2>சுற்றுலாத் து<strong>றையில் ஏற்</strong>படும் மாற்றங்கள் </h2><p>தெற்கு ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், இத்தாலி மற்றும் கிரீஸ் ஆகியவற்றில் வெப்பநிலை 45°C வரை பதிவாவதால், கோடைகால சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. சுற்றுலாப் பயணிகள் தங்களின் பயணங்களை வடக்கு ஐரோப்பிய நாடுகளுக்கோ அல்லது குளிர்ச்சியான மாதங்களுகோ மாற்றியமைப்பதால், தெற்கு ஐரோப்பிய வணிகங்கள் கடும் நஷ்டத்தை எதிர்நோக்குகின்றன.</p><h2>மனித உயி<strong>ரிழப்புக</strong>ள்</h2><p>தீவிர வெப்பத்தால் தொழிலாளர்களின் உற்பத்தித்திறன் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் மட்டுமே வெப்ப அலை காரணமாக 10,000-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.</p><h2>வரி வருவா<strong>ய் சரி</strong>வு</h2><p>தொழில் வர்த்தக முடக்கத்தால் பிரான்ஸ் நாட்டின் வருடாந்திர வரி வருவாய் 1.8% வரையிலும், இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளின் வரி வருவாய் 1.3% வரையிலும் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>வட்டி விகித <strong>நெருக்கடி</strong></h2><p>பேரிடர் நிவாரணம், தீயணைப்பு மற்றும் மின் விநியோக சீரமைப்பு என அவசர கால செலவுகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. ஏற்கனவே அதிகக் கடனில் இருக்கும் பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகள், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள கூடுதல் கடன் வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவதால், ஐரோப்பிய மத்திய வங்கிக்கு வட்டி விகிதங்களைக் கட்டுப்படுத்துவதில் சிக்கல் உருவாகியுள்ளது.</p><p>வெப்ப அலை, வறட்சி மற்றும் காட்டுத்தீ ஆகிய பேரிடர்கள் ஒரே நேரத்தில் தாக்குவதால், ஐரோப்பிய நாடுகள் இனி தற்காலிக நிவாரணங்களை மட்டுமே நம்பியிருக்காமல், நீண்டகால உள்கட்டமைப்பு மாற்றங்களில் பில்லியன் கணக்கில் முதலீடு செய்வது மட்டுமே பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்யும் எனப் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>உலகெங்கும் தமிழ்த்தாயின் புகழ் ஓங்கட்டும்!- முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-says-may-the-glory-of-mother-tamil-rise-high-across-the-world</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-says-may-the-glory-of-mother-tamil-rise-high-across-the-world#comments</comments><guid isPermaLink="false">dd54dbf3-372e-4279-805a-a409c71fb4fe</guid><pubDate>Mon, 10 Aug 2026 09:55:43 +0000</pubDate><atom:updated>2026-08-10T09:55:43.961Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழ்த்தாய் வாழ்த்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/js750yq9/Vijay03.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/js750yq9/Vijay03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ் மொழியின் தொன்மை, தனித்தன்மை, பெருமை, சிறப்பு மற்றும் தமிழர்களின் உணர்வைப் போற்றிப் பாதுகாக்கும் வகையிலான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம்.</strong></em></p><p>தமிழ்நாட்டில் அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">தமிழ்த்தாய் வாழ்த்து</a> முதலில் பாடப்பட வேண்டும் என முதலமைச்சர் விஜய் இன்று சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. </p><p>இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><h2><strong>தமிழ் நம் உயிர்</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-means-swagger-and-power-cm-vijay-speaks-on-the-resolution-regarding-the-tamil-thai-vazhthu">தமிழ்</a> ஒரு மொழி மட்டுமன்று, அது ஒரு சிந்தனை-பண்பாடு-நாகரீகம்-அதோடு தமிழ் நம் உயிர்; தமிழ் நம் உணர்வு என்பதை முழுமையாக உணர்ந்ததே நமது தமிழ்நாடு அரசு.</p><p>மேலும், தமிழ் மொழியின் தொன்மை, தனித்தன்மை, பெருமை, சிறப்பு மற்றும் தமிழர்களின் உணர்வைப் போற்றிப் பாதுகாக்கும் வகையிலான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம், தமிழ்த்தாய்க்குச் செலுத்தப்படும் உயரிய மரியாதையாகும். இத்தீர்மானம் நிறைவேற்றிய இந்நன்னாள் தமிழ்நாட்டின் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.</p><p>இந்தத் தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக ஆதரித்து நிறைவேற்றித் தந்தமைக்காக என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். </p><p>உலகெங்கும் தமிழ்த்தாயின் புகழ் ஓங்கட்டும்!</p><p>தமிழ்நாட்டின் வெற்றிப் பயணம் தொடரட்டும்! என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தமிழ் ஒரு மொழி மட்டுமன்று, அது ஒரு சிந்தனை-பண்பாடு-நாகரீகம்-அதோடு தமிழ் நம் உயிர்; தமிழ் நம் உணர்வு என்பதை முழுமையாக உணர்ந்ததே நமது தமிழ்நாடு அரசு.<br><br>மேலும், தமிழ் மொழியின் தொன்மை, தனித்தன்மை, பெருமை, சிறப்பு மற்றும் தமிழர்களின் உணர்வைப் போற்றிப் பாதுகாக்கும் வகையிலான இந்த…</p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2086745353290965207?ref_src=twsrc%5Etfw">August 10, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>பூனையை காப்பாற்ற முயன்ற போது சோகம்: 8 வயது சிறுவன் பாம்பு கடித்து உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/8-year-old-boy-dies-saving-pet-cat-from-snakebite</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/8-year-old-boy-dies-saving-pet-cat-from-snakebite#comments</comments><guid isPermaLink="false">3b08506d-9902-47ae-9468-e5a02f7b0070</guid><pubDate>Mon, 10 Aug 2026 09:49:18 +0000</pubDate><atom:updated>2026-08-10T09:49:18.465Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Thiruvallur,Snakebite,ஆவடி,Avadi,திருவள்ளூர்,விஷப்பாம்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/tv0l1cke/snakr.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ snakebite  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/tv0l1cke/snakr.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த பிருந்தாவன் நகரைச் சேர்ந்தவர் முருகன். இவரது 8 வயது மகன் நிச்சிஷ், ஆவடி கவுரிப்பேட்டை பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தான். நேற்று காலையில் நிச்சிஷ் தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது மின்சாரம் இல்லாததால் வீட்டின் உட்பகுதி இருட்டாக இருந்துள்ளது. </p><p>இந்நிலையில், திடீரென வீட்டில் இருந்த வளர்ப்புப் பூனை பயங்கரமாகச் சத்தமிட்டு கத்தியுள்ளது. பூனைக்கு ஏதோ ஆபத்து என்பதை உணர்ந்த நிச்சிஷ், அதனைத் தூக்குவதற்காக அருகில் சென்றுள்ளான். அப்போது, பூனையைத் தாக்க வந்த விஷப்பாம்பு ஒன்று எதிர்பாராதவிதமாக சிறுவன் நிச்சிஷைக் கடித்தது.</p><p>பாம்பு கடித்ததில் வலியால் அலறித்துடித்த சிறுவனை, அவனது பெற்றோர் மற்றும் அண்டை வீட்டார் உடனடியாக மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். எனினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்ததாக அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.</p><p>இச்சம்பவம் குறித்து ஆவடி டேங்க் பேக்டரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நான் மட்டும் சட்டமன்றத்துக்கு சென்றிருந்தால் த.வெ.க. எம்.எல்.ஏ.க்களுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கும்- ஆர்.பி. உதயகுமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rb-udhayakumar-says-had-i-alone-gone-to-the-legislative-assembly-tvk-mlas-would-have-suffered-chest-pain</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rb-udhayakumar-says-had-i-alone-gone-to-the-legislative-assembly-tvk-mlas-would-have-suffered-chest-pain#comments</comments><guid isPermaLink="false">54894c4b-a7e2-4c87-9c88-f79d027602db</guid><pubDate>Mon, 10 Aug 2026 09:34:10 +0000</pubDate><atom:updated>2026-08-10T09:34:10.603Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,ADMK,அதிமுக,RB Udhayakumar,ஆர்பி உதயகுமார்,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/miir0drh/RBUdhayakumar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஆர்பி உதயகுமார்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆர்பி உதயகுமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/miir0drh/RBUdhayakumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தற்போதைய சூழலில் என்னைப்போன்றவர்கள் சட்டமன்றத்துக்கு சென்றிருந்தால் த.வெ.க. எம்.எல்.ஏ.க்களுக்கு நெஞ்சு வலியை ஏற்படுத்தி இருப்போம்.</strong></em> </p><p>தேனி மாவட்டம் போடியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அ.தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது. இதற்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் நாராயணசாமி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">ஆர்.பி.உதயகுமார்</a> விழாவில் கலந்து கொண்டு பேசியதாவது:-</p><h2><strong>ஒரு எம்.பி.கூட இல்லாத த.வெ.க. அரசு</strong></h2><p>தமிழகத்தில் இன்னும் ரீல்ஸ் ஆட்சி தான் நடக்கிறது. தமிழக முதல்வருக்கு மேகதாது அணை, காவிரி பிரச்சனை, முல்லைப்பெரியாறு குறித்து ஏதாவது தெரியுமா? இதுபோன்றவர்களைத்தான் தமிழக மக்கள், இளைஞர்கள் தேர்வு செய்து சட்டமன்றத்துக்கு அனுப்பி உள்ளனர்.</p><p>தேனி மாவட்டத்தில் மேகமலை புலிகள் சரணாலயத்தை காரணம் காட்டி வருசநாடு மற்றும் 60-க்கும் மேற்பட்ட கிராம மக்களை வெளியேற்றும் முயற்சி நடந்து வருகிறது. இது குறித்து முதலமைச்சருக்கு ஏதாவது தெரியுமா? தேனி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சருக்காவது தெரியுமா? தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத்தாக்கல் செய்து இங்குள்ள மக்களை காப்பாற்ற வேண்டும். தமிழகத்தில் ஒரு எம்.பி.கூட இல்லாத த.வெ.க. அரசு எம்.பி.க்கள் கூட்டத்தை நடத்துகிறது. </p><h2><strong>வேதனை</strong></h2><p>2029-ல் ஒரே நாடு, ஒரே தேர்தல் நாடு முழுவதும் நடைபெற உள்ளது. அப்போது இந்த ஆட்சி நிச்சயம் இருக்காது. தற்போதைய சூழலில் என்னைப்போன்றவர்கள் சட்டமன்றத்துக்கு சென்றிருந்தால் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rb-udhayakumar-indictment-tvk-govt">த.வெ.க.</a> எம்.எல்.ஏ.க்களுக்கு நெஞ்சு வலியை ஏற்படுத்தி இருப்போம். எதிர்கட்சியின் கேள்விகளுக்கு ஆளும் கட்சியினர் பதில் சொல்லியே ஆக வேண்டும். ஆனால் தற்போதயை அரசுக்கு அது புரியவில்லை. 75 சதவீத மக்கள் ஏன் இந்த அரசுக்கு வாக்களித்தோம் என்ற வேதனையில் உள்ளனர்.</p><p>அ.தி.மு.க.வில் ராஜாபோல் இருந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று தி.மு.க.வில் தரையில் அமர்ந்து போராடும் சாதாரண நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஒற்றுமையுடன் இயங்கி வருகிறது. வருகிற உள்ளாட்சி தேர்தலிலும் ஒற்றுமையுடன் செயல்பட்டு அ.தி.மு.க. வெற்றி பெற பாடுபட வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>அமித் ஷா பதில் அளிக்கும்போது அச்சப்படவோ, அவையில் இருந்து வெளியேறவோ வேண்டாம்: எதிர்க்கட்சிகளுக்கு கிரண் ரஜிஜு வேண்டுகோள்</title><link>https://www.maalaimalar.com/news/national/parliament-kiren-rijiju-amit-shah-gives-his-response-congress-party-and-the-opposition-not-to-be-afraid-or-run-away</link><comments>https://www.maalaimalar.com/news/national/parliament-kiren-rijiju-amit-shah-gives-his-response-congress-party-and-the-opposition-not-to-be-afraid-or-run-away#comments</comments><guid isPermaLink="false">fe6dfb46-368c-4724-99a4-12f5ae6317b1</guid><pubDate>Mon, 10 Aug 2026 09:18:44 +0000</pubDate><atom:updated>2026-08-10T09:18:44.545Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>நாடாளுமன்றம்,Amit Shah,அமித் ஷா,Kiren Rijiju,கிரண் ரிஜிஜு,parliament</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/6wlndx8l/Amitshah1008026.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமித் ஷா- கிரண் ரிஜிஜு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/6wlndx8l/Amitshah1008026.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் முறைகேடு தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/national/students-protest-victory-dharmendra-pradhan-resigns">தர்மேந்திர பிரதான்</a> தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பெருமளவில் ஆதரவு தெரிவித்தனர்.</p><p>இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 20-ந்தேதி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் வகையில் பேரணி மேற்கொண்டனர். அப்போது அவர்கள் காவல்துறையின் தடுப்புகளை மீறி நாடாளுமன்றத்தை நோக்கி செல்ல முயன்றதால் மோதல் ஏற்பட்டது. அப்போது போலீசார்- மாணவர்களுக்கு இடையிலான மோதல் காரணமாக தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு நடத்தப்பட்டது. இதில் மாணவர்கள் மற்றும் போலீசார் காயம் அடைந்தனர்.</p><p>மாணவர்களுக்கு எதிராக போலீசார் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக அமித் ஷா நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இது தொடர்பாக இரு அவைகளிலும் குரல் எழுப்பினர்.</p><p>இந்த நிலையில்தான் கிரண் ரிஜிஜி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிப்பார் என கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.</p><h2>இது தொடர்பாக கிரண் ரிஜிஜு கூறியதாவது:-</h2><p>காங்கிரஸ் கட்சியினருக்கும், ஒட்டுமொத்த எதிர்க்கட்சியினருக்கும் நான் ஒரு வேண்டுகோளை முன்வைக்க விரும்புகிறேன். மத்திய உள்துறை அமைச்சர் தனது பதிலை நாடாளுமன்றத்தில் வழங்கும்போது, தயவுசெய்து அச்சப்பட வேண்டாம். அவையிலிருந்து வெளியேறவோ வேண்டாம் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.</p><h2>கருத்து வேறுபாடுகளை நேருக்கு நேர் எதிர்கொள்வது</h2><p>ஜனநாயகத்தின் அடிப்படை வலிமை என்பது கருத்து வேறுபாடுகளை நேருக்கு நேர் எதிர்கொள்வதில்தான் உள்ளது. ஆளும் தரப்பு பேசும்போது எதிர்க்கட்சியும் அதைக் கேட்டு, அதில் உள்ள உண்மைகள் என்ன, தவறுகள் என்ன, மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அம்சங்கள் என்ன என்பதை தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். பதில் திருப்திகரமாக இல்லாவிட்டால், அதற்குப் பின்னர் வலுவான கேள்விகளையும் ஆதாரங்களையும் முன்வைத்து அரசை பொறுப்புக்கூறச் செய்ய வேண்டும்.</p><p>நாடாளுமன்றம் என்பது வெறும் கோஷங்களை எழுப்புவதற்கான இடம் அல்ல. மக்களின் பிரச்சினைகளை விவாதித்து, அரசின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, உண்மையை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய மிக முக்கியமான ஜனநாயக அமைப்பு. எனவே, உள்துறை அமைச்சர் அளிக்கும் பதிலை முழுமையாகக் கேட்பது எதிர்க்கட்சியின் ஜனநாயகப் பொறுப்பாகும்.</p><h2>விவாதத்தைத் தவிர்ப்பது மக்களுக்கு சரியான செய்தியை அளிக்காது</h2><p>கருத்து வேறுபாடு இருந்தால் அதைக் குரல் கொடுத்து வெளிப்படுத்துங்கள். தவறான தகவல் இருந்தால் உண்மையான தகவல்களுடன் மறுத்துப் பேசுங்கள். அரசின் பதில் போதுமானதாக இல்லை என்றால், அதற்கான விளக்கத்தை கேளுங்கள். ஆனால் விவாதத்தைத் தவிர்ப்பது மக்களுக்கு சரியான செய்தியை அளிக்காது.</p><p>எனவே, காங்கிரஸ் கட்சியும் மற்ற எதிர்க்கட்சிகளும் தைரியமாக இருந்து, உள்துறை அமைச்சரின் பதிலை நேரில் எதிர்கொண்டு, ஜனநாயக ரீதியாக தங்களது கருத்துகளையும் கேள்விகளையும் வலுவாக முன்வைக்க வேண்டும் என்பதே எனது அன்பான வேண்டுகோள்.</p>]]></content:encoded></item><item><title>போலந்து அகதிகளின் நினைவாக மகராஷ்டிராவில் அருங்காட்சியகம்</title><link>https://www.maalaimalar.com/news/national/museum-for-polish-refugees-in-maharashtra-meeting-with-chief-minister</link><comments>https://www.maalaimalar.com/news/national/museum-for-polish-refugees-in-maharashtra-meeting-with-chief-minister#comments</comments><guid isPermaLink="false">23d7f88c-0730-4d71-8f62-265526939eee</guid><pubDate>Mon, 10 Aug 2026 09:08:41 +0000</pubDate><atom:updated>2026-08-10T09:08:41.839Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>போலந்து,Poland,Kolhapur,கோலாப்பூர்,valivade museum,வாலிவாடே அருங்காட்சியகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/4muv5izf/Untitled-design-27.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கோலாப்பூர் வாலிவாடேவில் போலந்து அகதிகள் புகலிடத்தை நினைவுகூரும் மனிதநேய அருங்காட்சியகம் அமைப்பு]]></media:title><media:description type="html"><![CDATA[ India Poland வரலாற்று நட்பு அருங்காட்சியகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/4muv5izf/Untitled-design-27.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இரண்டாம் உலக போரின்போது போலந்து நாட்டை சேர்ந்த ஆயிரக்கணக்கான அகதிகள், புகலிடம் தேடி மகராஷ்டிராவில் உள்ள கோலாப்பூரிருக்கு வந்தனர். </p><p>அப்போது அவர்களுக்கு வழங்கப்பட்ட புகலிடத்தை நினைவுகூரும் வகையில், கோலாப்பூருக்கு அருகில் உள்ள வாலிவாடேவில் ஒரு அருங்காட்சியகம் அமைய உள்ளது.</p><p>இது இந்தியாவுக்கும் போலந்துக்கும் இடையிலான வரலாற்று உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>பஞ்சகங்கா ஆற்றின் கரையில் அமைந்து, சஹ்யாத்ரி மலைத்தொடர்களால் சூழப்பட்டுள்ள மகாராஷ்டிராவின் கோலாப்பூர் நகரம், போலந்து நாட்டுடன் மிகவும் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளது. </p><h3><strong>இரண்டாம் உலகப் போர்</strong></h3><p>ஜெர்மானியப் படையெடுப்பு 1939 செப்டம்பர் 17 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வுகளின் போது, 1939 முதல் 1945 வரை  இரண்டாம் உலக போர் நீடித்தது.</p><p>அதன் விளைவாக ஆயிரக்கணக்கான போலந்து மக்கள் இந்தியாவிற்குள் நுழைந்தனர். அப்போது முதன்முதலில் குஜராத்தில் சுமார் ஆயிரம் போலந்து நாட்டை சேர்ந்த அனாதை குழந்தைகளுக்கான குடியிறுப்பு ஒன்று நிறுவப்பட்டது.</p><p>பின்னர் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உட்பட 5,000 மக்களுக்காக, கோலாப்பூருக்கு அருகிலுள்ள வாலிவாடேவில் போலந்து குடியிருப்பு ஒன்று அமைக்கப்பட்டது.</p><h3><strong>மகாராஷ்டிராவில் அருங்காட்சியகம்</strong></h3><p>இந்த நிலையில் போலந்து நாட்டை சேர்ந்த அகதிகளுக்கு வழங்கப்பட்ட புகலிடத்தை நினைவுகூரும் வகையில், வாலிவாடே மனிதநேய அருங்காட்சியகம் கோலாப்பூரில் அமையவிருக்கிறது.</p><p>கடந்த வாரம், போலந்து நாடாளுமன்ற உறுப்பினரும் மற்ற பிரதிநிதிகளும், கோலாப்பூர் அரச குடும்பத்தை சேர்ந்த யுவராஜ் சம்பாஜி மகாராஜாவுடன் இணைந்து மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸை சந்தித்தனர்.</p><h3><strong>கோலாப்பூர் மகாராஜா யுவராஜ் சம்பாஜி</strong></h3><p>இதையடுத்து அரச குடும்பத்தை சேர்ந்த சம்பாஜி மகாராஜா கூறுகையில், “இந்த தனித்துவமான மனிதாபிமான பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையில் ஆதரவளித்து வரும் மகாராஷ்டிர அரசுக்கு எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.</p><p>போலந்து பிரதமரும் இந்த பகிரப்பட்ட வரலாற்றை மிகவும் உயர்வாக மதிப்பதோடு, தங்களின் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பயணத்தில் இந்தியாவை ஒரு முக்கிய உத்திசார் நட்பு நாடாகவும் கருதுகின்றனர்.</p><p>மேலும் இந்த அருங்காட்சியகம் அமைதி, கருணை மற்றும் சர்வதேச நட்புறவை ஊக்குவிப்பதோடு, இந்த பகிரப்பட்ட பாரம்பரியத்தை வருங்கால சந்ததியினருக்காக பாதுகாக்கவும் முயல்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>கோயில் அறங்காவலர் தேர்வுக்குழுவில் அர்ச்சனா கல்பாத்தி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/archana-kalpathi-on-the-temple-trustee-selection-committee</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/archana-kalpathi-on-the-temple-trustee-selection-committee#comments</comments><guid isPermaLink="false">ba969419-b085-4a37-86c3-03d89746d858</guid><pubDate>Mon, 10 Aug 2026 09:06:03 +0000</pubDate><atom:updated>2026-08-10T09:06:03.229Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்து சமய அறநிலையத்துறை,Temple Trustee,Archana Kalpathi,HR&amp;CE,அர்ச்சனா கல்பாத்தி,கோயில் அறங்காவலர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/foynms2o/New-Project-2026-08-10T143457.808.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கோயில் அறங்காவலர் தேர்வுக்குழுவில் அர்ச்சனா கல்பாத்தி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/foynms2o/New-Project-2026-08-10T143457.808.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் உள்ள கோயில்களுக்கு பரம்பரை சாரா அறங்காவலர்களைத் தேர்வு செய்வதற்கான குழு உறுப்பினர்களில் ஒருவராக பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரம் நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை மூலம் அமைக்கப்பட்டும் இந்தக் குழுவில் இவர் இடம்பெற்றுள்ளார். மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் இக்குழுவிற்குத் தலைமை தாங்குகிறார்.</p><p>இந்தத் தேர்வுக் குழுவில் மொத்தம் 7 பேர் இடம்பெற்றுள்ளனர். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ப.ரா. சம்பத், ஓய்வு பெற்ற மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி டாக்டர் இராமநாதன் மற்றும் ஆன்மீகச் சொற்பொழிவாளர் சுமதி ஸ்ரீ ஆகியோர் இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>இந்தக் குழுவின் பணி</h2><p>கோயில்களின் நிர்வாகம், சொத்துக்களைப் பராமரித்தல் மற்றும் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களைப் பரம்பரை அல்லாத அறங்காவலர்களாக நியமிப்பதே இக்குழுவின் முதன்மைப் பணியாகும்.</p><h2>யார் இந்த அர்ச்சனா கல்பாத்தி?</h2><p>ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும், 'பிகில்', 'கோட்' போன்ற நடிகர் விஜய்யின் பிரம்மாண்டத் திரைப்படங்களின் தயாரிப்பாளராகவும் அறியப்படுகிறார். </p>]]></content:encoded></item><item><title>சொந்த மாவட்டத்திலேயே எடப்பாடி பழனிசாமிக்கு செல்வாக்கு இல்லை..!- சி.வி.சண்முகம் விளாசல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-influence-in-own-district-for-edappadi-palanisamy</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-influence-in-own-district-for-edappadi-palanisamy#comments</comments><guid isPermaLink="false">ac7f1c89-676a-48c6-b8be-277aac588fc5</guid><pubDate>Mon, 10 Aug 2026 08:42:50 +0000</pubDate><atom:updated>2026-08-10T08:42:50.240Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,Edappadi pazhanisamy,CV Shanmugam,சிவி சண்முகம்,TN assembly,தமிழக சட்டமன்ற கூட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/y41210tv/EPS.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ EPS- CV Shanmugam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/y41210tv/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்விக்கு பிறகு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சில அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் இசக்கி சுப்பையா உள்ளிட்ட 6 பேர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்த நிலையில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் சிலர் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். </p><h2>சி.வி.சண்முகம்</h2><p>இந்தநிலையில் நேற்று எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டி எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் அறிக்கை வெளியிட்டிருந்தனர். எடப்பாடி பழனிசாமியின் தன்னிச்சையான முடிவுகளே அ.தி.மு.க. தோல்விக்கு காரனம் என்று அவர்கள் கூறியிருந்தனர்.</p><p>அதற்கு பதிலளிக்கும் விதமாக அ.தி.மு.க. சார்பில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வெளியிட்ட அறிக்கையில்,"சில மாவட்ட செயலாளர்களே அ.தி.மு.க. தோல்விக்கு காரனம் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சி.வி.சண்முகம் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். </p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><h2>தொடர் தோல்வி</h2><p>எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடர் தோல்விகளையே அ.தி.மு.க. சந்தித்துள்ளது. சென்னையில் அ.தி.மு.க. துடைத்து எறியப்பட்டுவிட்டது. </p><p>வலுவான தலைமை வேண்டும் என்பதால் எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தோம். அவரது தலைமையில் அ.தி.மு.க.வால் வெற்றிபெற முடியவில்லை. சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சி தேர்தலில் எதிலும் வெற்றிபெற முடியவில்லை. </p><p>பழனிசாமியின் சொந்த செல்வாக்கில்தான் 47 தொகுதிகளில் வென்றதாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி சொல்கிறார். 47 தொகுதிகள் வெற்றிக்கு எடப்பாடி பழனிசாமி காரணம் என்றால் 187 தொகுதிகளில் அவர் செல்லாக்காசாகி விட்டாரா?. </p><p>வெற்றிபெற்றால் அவர் செல்வாக்கு, தோல்வி அடைந்தால் மாவட்ட செயலாளர்கள் பொறுப்பா? விழுப்புரத்தில் எனக்கு 6 தொகுதிகள் உள்ளன. அதில் 3 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றிபெற்றது. </p><h2>சொந்த மாவட்டத்தில்</h2><p>சொந்த மாவட்டமான சேலத்தில் 7 தொகுதியில் ஏன் அவருக்கு செல்வாக்கு இல்லை? சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் 3 தொகுதிகளில் மட்டும்  அ.தி.மு.க. வென்றுள்ளது.  கூட்டணியில் பா.ம.க. இருந்ததால் வட மாவட்டங்களில் 34 தொகுதிகளில் அ.தி.மு.க. வென்றது. தேர்தல் தோல்விக்கான காரணத்தை என்னால் சொல்ல முடியும். </p><p>தேர்தல் தோல்விக்காக எடப்பாடி பழனிசாமியை ராஜினாமா செய்யுமாறு நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை. தோல்விக்கு பொறுப்பேற்று பல தலைவர்கள் தங்களது பொறுப்புகளை ராஜினாமா செய்துள்ளார்கள். காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல்காந்தி ராஜினாமா செய்தார். </p><p>திருமாவளவனை முதலமைச்சராக்க வேண்டும் என்று மாற்று திட்டத்தை நான் கூறினேன். தி.மு.க.வை எதிர்த்து அரசியல் செய்யும் த.வெ.க.வை ஏன் நாம் ஆதரிக்கக் கூடாது என்று பழனிசாமியிடம் கேட்டேன்.</p><h2> த.வெ.க.வை ஆதரிப்பதில் தவறு இல்லை</h2><p>தி.மு.க. ஆதரவில் பழனிசாமி முதலமைச்சராக முயன்றபோது, தி.மு.க.வை எதிர்க்கும் த.வெ.க.வை ஆதரிப்பதில் தவறு இல்லை.</p><p>தே.மு.தி.க.வை திட்டமிட்டு வெளியேற்றினார். தி.மு.க. வுடன் கூட்டணி பேசவில்லை என்று அவர் சத்தியம் செய்ய முடியுமா? </p><p>அ.தி.மு.க. பொதுச் செயலாளராக அவரே இருக்கட்டும். தோல்விக்கான காரணத்தை ஆராய வேண்டும் என்று கோருகிறோம். தோல்விக்கான காரணங்களை உண்மையாக ஆராயாமல் எங்கள் மீது பழிபோடுவதை நிறுத்துங்கள். தைரியம் இருந்தால் எங்களை அழைத்து பேசுங்கள். </p><p>ஜெயலலிதா அமைச்சரவையில் விவசாயத்துறை அமைச்சராக இருந்தவர் அக்ரிகிருஷ்ணமூர்த்தி. அதிகாரி தற்கொலை செய்த விவகாரத்தில் அவர் மீது வழக்கு பதிந்து அவரை சிறையில் அடைத்தவர் ஜெயலலிதா. </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் ஓராண்டில் ரூ.1,800 கோடி ஆன்லைன் மோசடி: ஈரோடு, கோவையில் பாதிப்பு அதிகம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-loses-rs1800-crore-to-online-scams-in-a-year-erode-coimbatore-most-affected</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-loses-rs1800-crore-to-online-scams-in-a-year-erode-coimbatore-most-affected#comments</comments><guid isPermaLink="false">995deadf-0f1f-4564-a838-09dc9e4f8aad</guid><pubDate>Mon, 10 Aug 2026 08:37:23 +0000</pubDate><atom:updated>2026-08-10T08:37:23.412Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,நிதி மோசடி,Cybercrime,Online Fraud,ஆன்லைன் மோசடி,Erode,cybersecurity,சைபர் குற்றங்கள்,SylendraBabu,சைலேந்திரபாபு,FakeFinance</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/456gtttv/Sylendra-Babu" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sylendra Babu ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/456gtttv/Sylendra-Babu?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/erode">ஈரோடு</a>, கோவை மாவட்டங்களை குறிவைத்து போலி நிதி நிறுவனங்களின் மோசடி மீண்டும் தலைதூக்கியுள்ளது. சைபர் குற்றங்கள் மூலம் ஒரே ஆண்டில் தமிழ்நாட்டில் ரூ.1,800 கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF">ஆன்லைன் மோசடி</a> முதல் போதைப்பொருள் வரை சமூகத்தில் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு முன்னாள் டி.ஜி.பி. <a href="https://www.maalaimalar.com/topic/sylendra-babu">சைலேந்திரபாபு </a>பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><h2>அப்போது அவர் கூறியதாவது:-</h2><p>பொய்யான நிதி நிறுவனங்கள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு டி .ஜி. பி.ஆக இருக்கும் பொழுது 5 நிதி நிறுவனங்களை மூடினோம். </p><p>ஆனால் தமிழகத்தில் துரதிஷ்டவசமாக 5 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நிறுவனங்கள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. இதில் ஈரோடு, கோவை, சேலம் மக்கள்தான் அதிகம் ஏமாற்றப்படுகின்றார்கள்.</p><h2><strong>நிதி நிறுவனம்:</strong></h2><p>ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் ஒரு வருடத்தில் ரூ.3 லட்சம், ரூ 4 லட்சம் கிடைக்கும் என்றெல்லாம் கூறி ரூ.10 லட்சம், ஒரு கோடி, இரண்டு கோடி என முதலீடு பெற்று ஏமாற்றுகின்றனர். </p><p>கணவனுக்கு தெரியாமல் மனைவியும் மனைவிக்கு தெரியாமல் கணவனும் முதலீடு செய்வார்கள். ஆரம்பத்தில் பணத்தை கொடுக்கும் நிதி நிறுவனம் அதிக பணம் கிடைத்ததும் ஏமாற்றி விடுவார்கள்.</p><p>இத்தகைய பெரும் மோசடியில் மக்கள் ஏமாற கூடாது மிகவும் உஷாராக இருக்க வேண்டும்.</p><h2><strong>ரூ.1800 கோடி மோசடி:</strong></h2><p>சைபர் மோசடியில் ஓராண்டில் தமிழ்நாட்டில் 1800 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது மற்ற திருட்டு வழக்குகளில் மொத்தமாக கூட்டினால் 100 கோடி கூட தாண்டாது. </p><p>ஆனால் மொபைல் போன் மூலமாக மட்டும் ஆண்டிற்கு 1800 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. இதற்காகத்தான் சைபர் செக்யூரிட்டி ஹெட் குவாட்டர்ஸ் துவங்கப்பட்டது. </p><p>லட்சக்கணக்கான மக்கள் ஏமாற்ற தயாராக இருக்கிறார்கள் வட இந்தியாவில் இதற்காக ஐ.டி கம்பெனி போன்ற நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. எளிதில் ஏமாறக்கூடாது.</p><h2><strong>காவல் மரணம்:</strong></h2><p>காவல் மரணம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்தே இருக்கிறது. இதில் பெரும்பளவு கட்டுப்படுத்தப்ப ட்டது ஆனாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நிகழ்வுகள் நடந்து வருகிறது. </p><p>இந்த நிகழ்வுகள் காவலர்கள் தாக்கி தான் இறந்தார்களா இயற்கையில் இறந்தார்களா என்பதெல்லா ம் தெரியாது. திருட்டு போன்ற குற்றங்களில் காவல்துறையினருக்கு பாதிக்கப்பட்டவர்கள் அழுத்தம் தருவார்கள் அதை தாங்காமல் காவலர்கள் பலம் பிரயோகிக்கலாம்</p><p>ஆனால் அது பெரும்பாலும் குறைவு காவல் நிலையத்தில் இறந்தால் அவர்கள் குடும்பமும் கஷ்டப்படுகிறது. அதில் காவலர்களும் பாதிக்கப்படுகிறார்கள் அவர்களும் கைது செய்யப்படுகிறார்கள் அவர்கள் குடும்பமும் பாதிக்கப்படுகிறது. </p><p>அனைத்து காவல் நிலையங்களிலும் கேமரா இருக்கிறது 1680 காவல் நிலையங்களிலும் கேமரா இருக்கிறது துன்புறுத்தல் குறைந்து விட்டது .</p><p>இது இல்லாமல் ஆக வேண்டும் நாகரீகமான சமூகமாக இருக்க வேண்டும். காவலர்கள் மீது பொது மக்களுக்கும் நம்பிக்கை வருவதில்லை பாதிக்கப்பட்டார்கள் கொடுக்கும் அழுத்தம் தான் இதற்கு காரணம்.</p><h2>போதை பொருள்:</h2><p>போதை பொருள் புழக்கம் தொடர் நிகழ்வாக உள்ளது 45 ஆண்டுகளுக்கு முன்பு இது போன்ற போதை பொருட்கள் இருந்தன.</p><p>பெரும் அளவில் காவல்துறை கட்டுப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது நான் டிஜிபி ஆக இருக்கும் போது சொத்துக்களை பறிமுதல் செய்தோம் நல்ல அதிகாரிகள் வந்துள்ளார்கள் சில மாற்றங்கள் இருக்கின்றன.</p><p>ஆனால் நூறு சதவீதம் ஒழிக்க வேண்டும். சட்டம் கடுமையாகத் தான் இருக்கிறது இதற்கு பலமுனை தாக்குதல் நடத்த வேண்டும் பள்ளிகள் கல்லூரிகள் சாலைகள் உள்ளிட்ட இடங்களில் இது போன்ற நபர்களை கண்டறிந்து தடுக்க வேண்டும் மனநல நிபுணர்களை நியமிக்க வேண்டும். </p><p>தொடர்ச்சியாக போதை பொருள் பயன்படுத்துவார்கள் மனநல பாதிப்பிற்கு ஆளாகிறார்கள் டி அடிக்சன் மையங்களை பெருமளவில் கொண்டு வர வேண்டும் இதற்கு அதிக அளவு நிதி ஒதுக்க வேண்டும். </p><p>இது மிகப்பெரிய போர் சமுதாயத்தில் டிமாண்ட் இருக்கும்போது சப்ளை எப்படியும் வந்து விடும் இதற்கு பலமுனை தாக்குதல் நடத்த வேண்டும் அப்பொழுதுதான் போதை பொருளை கட்டுப்படுத்த முடியும் என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு:  கொள்முதல் விலையை உயர்த்தாமல் கோடை வெயிலை குறை கூறுவதா?- அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-blaming-the-summer-heat-instead-of-raising-the-procurement-price-for-aavin-milk-shortage</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-blaming-the-summer-heat-instead-of-raising-the-procurement-price-for-aavin-milk-shortage#comments</comments><guid isPermaLink="false">fd9652dc-f4a8-4e82-885f-c69b999fc9e1</guid><pubDate>Mon, 10 Aug 2026 08:33:20 +0000</pubDate><atom:updated>2026-08-10T08:33:20.209Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,aavin milk,ஆவின் பால்,கோடை வெயில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/tsfso6ot/aavinm.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஆவின் பால்- அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆவின் பால்- அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/tsfso6ot/aavinm.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு குறைந்தது ரூ.10 உயர்த்தி, கொள்முதலை அதிகரிக்க வேண்டும். அதன் மூலம் ஆவின் பால் மாநிலம் முழுவதும் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.</p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் ஆவின் பாலுக்கு கடந்த சில நாள்களாக கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. ஏழைகள் மற்றும் குழந்தைகளுக்கு வரப்பிரசாதமாக விளங்கும் ஆவின் பால் அனைத்து மக்களுக்கும் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய அரசு தவறியிருப்பது கவலையளிக்கிறது.</p><p>ஆவின் நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் தினமும் 31 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு வந்தது. சென்னையில் மட்டும் தினமும் 16 லட்சம் லிட்டருக்கும் கூடுதலாக ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில மாதங்களாகவே ஆவின் பால் விற்பனை படிப்படியாக குறைந்து விட்டது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் ஆவின் பால் விற்பனை மூன்றில் ஒரு பங்கு குறைக்கப்பட்டு விட்டதாகவும், சென்னையில் 20% அளவுக்கு குறைக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.</p><h2><strong>தரமான பால்</strong></h2><p>ஆவின் பால் தட்டுப்பாட்டால் தமிழக மக்கள் இரு வகைகளில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். முதலில் ஆவின் நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் பால் தான் ஒப்பீட்டளவில் தூய்மையானதாகவும், கலப்படம் இல்லாததாகவும் உள்ளது. இதனால் மூத்த குடிமக்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆவின் பாலை வழங்கும்படி மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஆனால், ஆவின் பாலுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் குழந்தைகளுக்கும், பெரியோர்களுக்கும் தரமான பாலை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.</p><p>இரண்டாவதாக, ஆவின் பால் விலை தட்டுப்பாட்டால் தனியார் நிறுவன பால்களை அதிக விலை கொடுத்து மக்கள் வாங்க வேண்டியுள்ளது. ஆவின் பாலுடன் ஒப்பிடும் போது தனியார் நிறுவனங்களின் பால் விலை லிட்டருக்கு ரூ.16 முதல் 24 வரை அதிகம் ஆகும். ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் ஏழைகள் மாதத்திற்கு குறைந்தது ரூ.750 வரை கூடுதலாக செலவு செய்ய வேண்டும். இது அவர்களுக்கு பெரும் சுமை.</p><h2><strong>கொள்முதலை அதிகரிக்க முடியாது</strong></h2><p>ஆவின் பாலுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாட்டால் ஏழை மற்றும் நடுத்தர மக்களிடையே பெரும் கவலையும், கோபமும் ஏற்பட்டுள்ள நிலையில், அது குறித்து ஆவின் நிறுவனம் எந்தக் கவலையும் பட்டதாக தெரியவில்லை. கொடைக்காலம் என்பதால் பால் உற்பத்தி குறைந்திருப்பது தான் இந்த தட்டுப்பாட்டுக்கு காரணம் என்று கூறி இந்த விவகாரத்தை மிகவும் எளிதாக கடந்து செல்ல ஆவின் நிறுவனம் முயல்கிறது. இது உண்மையல்ல.</p><p>கடந்த ஐந்தாண்டுகளாகவே ஆவின் பால் கொள்முதல் படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருகிறது. 2021-ஆம் ஆண்டில்  ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் தினமும் 41 லட்சம் லிட்டராக இருந்தது.  2022-ஆம் ஆண்டில்  38 லட்சம் லிட்டர்,  2023-ஆம் ஆண்டில் 30 லட்சம் லிட்டர் என குறைந்த ஆவின் பால் கொள்முதல், இப்போது 28 லட்சம் லிட்டராக குறைந்து விட்டது. அதாவது மூன்றில் இரு பங்காகி விட்டது.</p><p>ஆவின் பால்கொள்முதல் 13 லட்சம் லிட்டர் குறைந்திருப்பதற்கு காரணம் அதன் கொள்முதல் விலைகள் உயர்த்தப்படாதது தான். பசும்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.35, எருமைப்பாலுக்கு  லிட்டர் ஒன்றுக்கு ரூ.44  என்ற அளவில் ஆவின் நிறுவனத்தால் வழங்கப்பட்டு வந்த கொள்முதல் விலையுடன் சேர்த்து லிட்டருக்கு ரூ.3 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தனியார் நிறுவனங்கள் அதை விட லிட்டருக்கு 12 வரை கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்கின்றன. அதற்கு இணையாக ஆவின்  நிறுவனமும் பால் கொள்முதல் விலையை உயர்த்தாமல் அதன் கொள்முதலை அதிகரிக்க முடியாது.</p><p>ஆனால், ஆவின் நிறுவனமும், அரசும் இதை உணரவில்லை.  ஆவின் பால் கொள்முதல் குறையவில்லை  என்றும், கோடை வெப்பத்தால் குறைந்த அளவு மட்டும் தான் உயர்த்தப்பட்டிருப்பதாகவும் காரணம் கூறி வருகிறது. இந்த மாயையில் இருந்து தமிழக அரசு மீள வேண்டும். ஆவின் பால் கொள்முதல் வீழ்ச்சி அடைந்திருப்பதற்கான உண்மையான காரணத்தை அறிந்து கொண்டு உடனடியாக சரி செய்ய வேண்டும்.</p><p>ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு குறைந்தது ரூ.10 உயர்த்தி, கொள்முதலை அதிகரிக்க வேண்டும். அதன் மூலம் ஆவின் பால் மாநிலம் முழுவதும் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் புற்றுநோய் தீவிரம்: மகன் ஹண்டர் பைடன் தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/world/former-us-president-joe-bidens-cancer-worsens-son-hunter-biden-reveals</link><comments>https://www.maalaimalar.com/news/world/former-us-president-joe-bidens-cancer-worsens-son-hunter-biden-reveals#comments</comments><guid isPermaLink="false">5d1878f6-81ee-4f1b-8a10-b4a88abb2951</guid><pubDate>Mon, 10 Aug 2026 08:28:00 +0000</pubDate><atom:updated>2026-08-10T08:28:00.797Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Joe Biden,ஜோ  பைடன்,ஹண்டர் பைடன்,Hunter Biden,prostate cancer,புரோஸ்டேட் புற்றுநோய்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/94zrvo35/Joe-Biden.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Joe Biden  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/94zrvo35/Joe-Biden.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு (83) பரவி வரும் புரோஸ்டேட் புற்றுநோய் மேலும் தீவிரமடைந்து, அவரது எலும்புகள் மற்றும் உடலின் பிற பாகங்களுக்கும் பரவியுள்ளதாக அவரது மகன் ஹண்டர் பைடன் தெரிவித்துள்ளார்.</p><p> 2025 மே மாதம் ஜோ பைடனுக்கு கடுமையான புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது இந்நோய் எலும்புகளுக்குப் பரவியுள்ளதால், அவர் கடுமையான வலியினாலும் உடல்நலக் குறைவாலும் அவதிப்பட்டு வருவதாக ஹண்டர் பைடன் கூறியுள்ளார். பைடனின் புற்றுநோய் திசு பரிசோதனையில் கிளீசன் ஸ்கோர் 9 எனப் பதிவாகியுள்ளது. இது புற்றுநோயின் மிகத் தீவிரமான நிலையைக் (Grade Group 5) குறிக்கிறது.</p><p>கதிர்வீச்சு மற்றும் ஹார்மோன் சிகிச்சைகள் வழங்கப்பட்ட போதிலும், புற்றுநோய் செல்கள் எலும்புகளுக்கு அப்பாலும் பரவி, அவரது உடலை மிகவும் பலவீனப்படுத்தியுள்ளன. இதுகுறித்து அவரது மகன்  ஹண்டர் பைடன் கூறுகையில், "என் தந்தை கடுமையான வலியால் அவதிப்படுவதைப் பார்ப்பது மிகவும் வேதனையாக உள்ளது. இருப்பினும், அவர் தனது மன உறுதியுடன் தொடர்ந்து பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.</p><h2>எலும்<strong>பு முடக்கம் என்றால்</strong> என்ன?</h2><p>புரோஸ்டேட் பகுதியில் உருவாகும் புற்றுநோய் செல்கள், ரத்த ஓட்டம் அல்லது நிணநீர் மண்டலம் வழியாக உடலின் பிற பகுதிகளுக்குப் பரவுவது 'மெட்டாஸ்டாசிஸ்' எனப்படும். புரோஸ்டேட் புற்றுநோய் முதன்முதலில் எலும்புகளிலேயே (குறிப்பாக முதுகெலும்பு, இடுப்பு மற்றும் தொடை எலும்புகள்) அதிகம் பரவுகிறது. புற்றுநோய் செல்கள் எலும்புகளை அடைந்து அதன் வலிமையை இழக்கச் செய்வதால், கடுமையான வலி, எலும்பு முறிவு மற்றும் நடப்பதில் சிரமம் போன்றவை ஏற்படுகின்றன.</p><h2>அ<strong>றிகுறிகள்</strong> </h2><p>* ஆரம்ப கட்டத்தில் புரோஸ்டேட் புற்றுநோய்க்கு பெரிய அறிகுறிகள் இருக்காது.</p><p>* நோய் தீவிரமடைம்போது சிறுநீர் கழிப்பதில் சிரமம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீரில் ரத்தம் வருதல் மற்றும் இடுப்புப் பகுதியில் வலி போன்றவை ஏற்படும்.</p><h2>சிகிச்<strong>சை முறை</strong>கள் </h2><p>புற்றுநோய் எலும்புகளுக்குப் பரவிய பின், அதை முற்றிலுமாக குணப்படுத்துவதை விட நோயின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதும் வலியைக் குறைப்பதுமே முதன்மை சிகிச்சையாக இருக்கும். புற்றுநோய் செல்கள் வளர்வதற்குக் காரணமான டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனைத் தடுக்கும் சிகிச்சை. </p><p>கதிர்வீச்சு சிகிச்சை என்பது எலும்புகளில் ஏற்படும் வலியைக் குறைக்கவும், புற்றுநோய் பரவலைக் கட்டுப்படுத்தவும் வழங்கப்படுகிறது. பிஸ்ஃபோஸ்ஃபோனேட்ஸ் போன்ற மருந்துகள் மூலம் எலும்பு முறிவுகள் தடுக்கப்படுகின்றன.வயது முதிர்வு மற்றும் நோயின் தீவிரம் காரணமாகவும், ஜோ பைடன் தகுந்த மருத்துவக் கண்காணிப்பில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.</p>]]></content:encoded></item><item><title>சவுதி அரேபியா: சோபா தொழிற்சாலையில் தீ விபத்து - 16 வங்கதேச தொழிலாளர்கள் பலி</title><link>https://www.maalaimalar.com/news/world/riyadh-sofa-factory-fire-16-bangladeshi-workers-killed-in-saudi-industrial-blaze</link><comments>https://www.maalaimalar.com/news/world/riyadh-sofa-factory-fire-16-bangladeshi-workers-killed-in-saudi-industrial-blaze#comments</comments><guid isPermaLink="false">d274ec8d-6e7f-4bd8-93b6-d1b8c67a7d8d</guid><pubDate>Mon, 10 Aug 2026 08:17:01 +0000</pubDate><atom:updated>2026-08-10T08:17:01.733Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Bangladesh,fire accident,வங்கதேசம்,Saudi Arabia,தொழிலாளர்கள்,சவுதி அரேபியா,Workers,தீவிபத்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/78q9vudo/tn-12.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கோப்புப் படம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ கோப்புப் படம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/78q9vudo/tn-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சவுதி அரேபியாவின் ரியாத் பகுதியில் உள்ள மூஸா சனய்யா என்ற இடத்தில் இயங்கி வந்த சோபா தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர <a href="https://www.maalaimalar.com/news/world/houthi-group-attacks-saudi-arabia-israeli-media-report">தீவிபத்தில் </a>16 வங்கதேசத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.  </p><h2>விபத்து </h2><p>ரியாத் அருகில் உள்ள சோபா தொழிற்சாலையில் நேற்று உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3:30 மணியளவில் திடீரென தீப்பற்றியது.</p><p>தீ மிக வேகமாக தொழிற்சாலை முழுவதும் பரவியதால், அங்கிருந்த தொழிலாளர்களால் தப்பிக்க முடியாமல் போயுள்ளது.  </p><p> விபத்து குறித்த தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். </p> <h2>வங்கதேசத்தினர்</h2><p>அங்கு பணியாற்றிய 16 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.</p><p>ரியாத்தில் உள்ள வங்கதேசத் தூதரக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு மேற்கொண்டு விவரங்களைச் சேகரித்தனர்.</p><p>உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணவும், சட்டப்பூர்வ நடைமுறைகளை முடித்து உடல்களைத் தாயகம் கொண்டு வரவும் சவுதி அதிகாரிகளுடன் தூதரகம் இணைந்து செயல்பட்டு வருகிறது. </p><p>இச்சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள வங்கதேச வெளியுறவு அமைச்சகம், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதி அளித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நடப்பாண்டில் ரூ.3000, அடுத்த ஆண்டில் ரூ.3500 வீதம் கொள்முதல் விலை வழங்க வேண்டும்!- அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-procurement-price-of-3000-must-be-paid-this-year-and-3500-next-year</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-procurement-price-of-3000-must-be-paid-this-year-and-3500-next-year#comments</comments><guid isPermaLink="false">e8e8a837-7f94-42ee-ab09-ae90eb611199</guid><pubDate>Mon, 10 Aug 2026 08:16:31 +0000</pubDate><atom:updated>2026-08-10T08:16:31.447Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,நெல் கொள்முதல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/yll9voia/anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/yll9voia/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>வரும் அரவைப் பருவத்தில் கரும்புக்கான கொள்முதல் விலையுடன் மாநில அரசின் ஊக்கத் தொகையாக ரூ. 1117  சேர்த்து வழங்க வேண்டும். அதற்கான அறிவிப்பை இப்போதே வெளியிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.</strong></em></p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழ்நாட்டில் நடப்பாண்டில் அரசால் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு மாநில அரசின் சார்பில் வழங்கப்படும் ஊக்கத்தொகை சன்ன ரக நெல்லுக்கு ரூ.289, சாதாரண ரக நெல்லுக்கு ரூ.159 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதேபோல், கடந்த ஆண்டில்  கரும்புக்கான ஊக்கத்தொகை ரூ.709.50 ஆக உயர்த்தப்பட்டு டன்னுக்கு ரூ.4000 ஆக வழங்கப்படும் என்று தவெக அரசு அறிவித்திருக்கிறது. உண்மையில் சாதாரண ரக நெல்லுக்கான ஊக்கத்தொகையை ரூ.28 மட்டும் தான் தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இது போதுமானதல்ல.</p> <p>நெல்லுக்கான ஊக்கத்தொகையை தமிழ்நாடு அரசு பெரிய அளவில் உயர்த்தவில்லை. நடப்பாண்டில் சாதாரண வகை நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,441, சன்ன வகை நெல்லுக்கு ரூ.2,461 கொள்முதல் விலை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அத்துடன் தமிழக அரசின் ஊக்கத்தொகையாக சன்னரக நெல்லுக்கு ரூ.156, சாதாரண ரக நெல்லுக்கு  131 வீதம் கடந்த திமுக ஆட்சியில் வழங்கப்பட்டது. இப்போது தவெக அரசு சாதாரண ரக நெல்லுக்கான ஊக்கத்தொகையை குவிண்டாலுக்கு ரூ.28, <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-increase-in-incentive-payments-for-paddy-and-sugarcane">சன்னரக</a> நெல்லுக்கு ரூ.133 உயர்த்தியிருக்கிறது. இதன் காரணமாக நெல்லுக்கான கொள்முதல் விலை சன்னரக நெல்லுக்கு ரூ.2750, சாதாரண ரக நெல்லுக்கு ரூ.2600 ஆக உயர்ந்திருக்கிறது. இது  போதுமானதல்ல.</p><h2><strong>கூடுதலாக உயர்த்தப்பட வேண்டும்</strong></h2><p>சாதாரண நெல்லுக்கான கொள்முதல் விலையை மத்திய அரசு குவிண்டாலுக்கு ரூ.72 உயர்த்தியுள்ளது. ஆனால், தமிழக அரசு அதன் ஊக்கத்தொகையை, மத்திய அரசால் உயர்த்தப்பட்டதை விட பாதிக்கும் குறைவாகவே உயர்த்தியுள்ளது. சன்னரக நெல்லுக்கான ஊக்கத்தொகை ரூ.289 ஆக உயர்த்தப்பட்டிருப்பதாக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. அரசால் கொள்முதல் செய்யப்படும் நெல் வகைகளில் 95 விழுக்காட்டுக்கும் கூடுதலான நெல்  சாதாரண ரகங்களைச் சேர்ந்தவை ஆகும். அதனால் சாதாரண ரக நெல்லுக்கான கொள்முதல் விலை தான் கூடுதலாக உயர்த்தப்பட வேண்டும்.</p><p>அனைவருக்கும் பயனளிக்கக் கூடிய சாதாரண ரக நெல்லுக்கான ஊக்கத்தொகையை வெறும் ரூ.28 மட்டும்  உயர்த்தி விட்டு, மிகக் குறைந்த அளவில் கொள்முதல் செய்யப்படும் சன்னரக நெல்லுக்கான  ஊக்கத்தொகையை ரூ.133 உயர்த்துவதால் யாருக்கும் பயனில்லை. ஊக்கத்தொகையை உயர்த்தி விட்டோம் என்று கணக்கு காட்டி பெருமிதம் பேசுவதற்காக மட்டும் தான் தமிழக அரசின் இந்த அறிவிப்பு பயன்படும்.</p><p>ஒதிஷாவில் கடந்த ஆண்டு ஒரு குவிண்டால் நெல்லுக்கு  ரூ.800  வீதமும், கேரளத்தில் ரூ.650 வீதமும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. நடப்பாண்டில் அந்த மாநிலங்களில்  ஊக்கத்தொகை இன்னும் கூடுதலாக உயர்த்தப்படலாம். அவற்றுடன் ஒப்பிடும் போது தமிழக அரசால் வழங்கப்படும் ஊக்கத்தொகை போதுமானதல்ல.</p><p>தமிழ்நாட்டில் ஒரு குவிண்டால் நெல் உற்பத்தி செய்ய ரூ.2300 முதல் ரூ.2400 வரை செலவாகிறது. அத்துடன் கூடுதலாக ரூ.200 மட்டும் சேர்த்து கொள்முதல் விலை நிர்ணயிப்பது எந்த வகையிலும் நியாயம் அல்ல. எனவே, நடப்பாண்டில் சாதாரண வகை நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3000 கிடைக்கும் வகையில்  ஊக்கத் தொகையை ரூ.559 ஆக உயர்த்த வேண்டும். அதேபோல், அடுத்த ஆண்டில் தவெகவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டவாறு நெல்லுக்கான கொள்முதல் விலையை ரூ.3500 ஆக உயர்த்த வேண்டும்.</p><p>கரும்புக்கான கொள்முதல் விலையை பொறுத்தவரை 2025- 26 அரவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளில் பதிவு செய்து  வழங்கப்பட்ட கரும்புக்கு மத்திய அரசால்   டன் ஒன்றுக்கு ரூ. 3290.50  கொள்முதல் விலை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அரசின் சார்பில் ஊக்கத்தொகை எதுவும் அறிவிக்கப்படவில்லை. அதற்கு முன் 2024-25ஆம் ஆண்டில் கரும்புக்கு வழங்கப்பட்ட  ஊக்கத் தொகையான ரூ.349 -யுடன்  கூடுதலாக ரூ.360.50  சேர்த்து ரூ.709.50 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த ஆண்டில் கரும்புக்கு டன்னுக்கு ரூ.4000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இந்த ஊக்கத் தொகை அறிவிப்பு விவசாயிகளுக்கு முழுமையான மகிழ்ச்சியை அளிக்காது என்றாலும், மனநிறைவு அளிக்கும்.</p> <p>2026-27 ஆம் ஆண்டுக்கான  அரவைப் பருவம் வரும் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளது. வரும் பருவத்தில் கொள்முதல் செய்யப்படும் கரும்புக்கு மத்திய அரசின் கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ..3383 அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் கடந்த ஆண்டுக்கு தமிழக அரசு அறிவித்த ஊக்கத் தொகையை சேர்த்தால் டன்னுக்கு ரூ.4092 கிடைக்கும். கடந்த ஆண்டுக்கான ஊக்கத்தொகையுடன் நடப்பாண்டில் ரூ.408 உயர்த்தி வழங்கினால் கரும்புக்கு கொள்முதல் விலையாக ரூ.4500 கிடைக்கும். எனவே வரும் அரவைப் பருவத்தில் கரும்புக்கான கொள்முதல் விலையுடன் மாநில அரசின் ஊக்கத் தொகையாக ரூ. 1117  சேர்த்து வழங்க வேண்டும். அதற்கான அறிவிப்பை இப்போதே வெளியிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>&apos;ஹர் கர் திரங்கா&apos; இயக்கம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்!</title><link>https://www.maalaimalar.com/news/national/har-ghar-tiranga-campaign-pm-narendra-modi-appeal-to-nation</link><comments>https://www.maalaimalar.com/news/national/har-ghar-tiranga-campaign-pm-narendra-modi-appeal-to-nation#comments</comments><guid isPermaLink="false">f7eda6c2-2751-46e2-ae6f-d991b77cc56c</guid><pubDate>Mon, 10 Aug 2026 08:10:22 +0000</pubDate><atom:updated>2026-08-10T08:10:22.956Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வந்தே மாதரம்,Vande Mataram,narendra modi,நரேந்திர மோடி,Har Ghar Tiranga,ஹர் கர் திரங்கா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/9dbb7dp8/har-tiranga.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Har Ghar Tiranga ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/9dbb7dp8/har-tiranga.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாட்டின் சுதந்திர தினத்தை ஒட்டி நடைபெறும் ‘ஹர் கர் திரங்கா’ (ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி) இயக்கத்தில் பொதுமக்கள் அனைவரும் உற்சாகத்துடன் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.</p><h2>பிரதமர் மோடி <strong>பதிவு</strong> </h2><p>இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தமது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, "நம் நாட்டின் மூவர்ணக் கொடி நமது பெருமையின் அடையாளம். தேசத்திற்காக எப்போதும் நமது சிறந்த பங்களிப்பை வழங்க அது நமக்கு ஊக்கமளிக்கிறது. அனைத்து குடிமக்களும் #HarGharTiranga இயக்கத்தில் பெருமளவில் பங்கேற்று, 'வளர்ச்சியடைந்த பாரதம்' (Viksit Bharat) படைப்பதற்கான கூட்டு திட்டத்தை புதுப்பிக்க வேண்டும்."</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Our Tricolour is our pride and a constant source of inspiration to always give our best for the nation.<br><br>Let us participate enthusiastically in the <a href="https://x.com/hashtag/HarGharTiranga?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#HarGharTiranga</a> movement and renew our collective resolve to contribute towards building a Viksit Bharat. Glad that this year’s… <a href="https://t.co/XH8Z1JI6my">https://t.co/XH8Z1JI6my</a></p>&mdash; Narendra Modi (@narendramodi) <a href="https://x.com/narendramodi/status/2086418385236324775?ref_src=twsrc%5Etfw">August 9, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2>வந்தே மாதர<strong>ம் பாடலின் 150-வது</strong> ஆண்டு சிறப்பு</h2><p>தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ உருவாக்கப்பட்டதன் 150-வது ஆண்டை நாடு கொண்டாடும் இந்த வேளையில், இந்த ஆண்டுக்கான 'ஹர் கர் திரங்கா' பிரசாரம் 'வந்தே மாதரம்' பாடலுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருப்பது தமக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.</p><h2>பிரசாரத்தின் முக்<strong>கிய அ</strong>ம்சங்கள்</h2><p>நேற்று முதல் 17 வரை நாடு முழுவதும் 'திரங்கா யாத்திரை', பேரணிகள், இசைக்கச்சேரிகள் மற்றும் வந்தே மாதரம் கூட்டுப் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பொதுமக்கள் தேசியக் கொடியுடன் தங்களது சுயபடம் எடுத்து அதிகாரப்பூர்வ இணையதளத்தில்  பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>காவிரி மற்றும் மேகதாது விவகாரத்தால் பதற்றம் :  தமிழக-கர்நாடக எல்லை மூடல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-mekedatu-row-sparks-tamil-nadu-karnataka-border-closure</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-mekedatu-row-sparks-tamil-nadu-karnataka-border-closure#comments</comments><guid isPermaLink="false">7f5e3050-591f-46e8-8ff3-7330c3557bb1</guid><pubDate>Mon, 10 Aug 2026 08:08:52 +0000</pubDate><atom:updated>2026-08-10T08:08:52.150Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,mekedatu,வாட்டாள் நாகராஜ்,Cauveryissue,Vatal Nagaraj Protest,KarnatakaBandh,AttibeleBorder,BorderAlert,தமிழக கர்நாடக எல்லைப் பதற்றம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/btivwsyw/Karnataka-Bandh" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ KarnatakaBandh ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/btivwsyw/Karnataka-Bandh?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரி நீர் பங்கீட்டுப் பிரச்சினை மற்றும் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">மேகதாது</a>வில் புதிய அணை கட்டும் விவகாரம் தொடர்பாக, தமிழக-கர்நாடக எல்லையான ஓசூர் அடுத்த அத்திப்பள்ளியில் இன்று காலை முதல் கன்னட அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>இந்த போராட்டத்தைத் தொடர்ந்து, வரும் ஆகஸ்ட் 13-ம் தேதி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE">கர்நாடகா</a>வில் மாநிலம் தழுவிய 12 மணி நேர முழு அடைப்புப் போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><h2>எல்லையில் இன்று நடந்தது என்ன?</h2><p>கன்னட வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இன்று காலை 11 மணியளவில் அத்திப்பள்ளி எல்லைப் பகுதிக்கு வந்தனர். </p><p>தமிழகத்தில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற லாரிகள், கார்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டன. அதேபோல், கர்நாடகாவில் இருந்து தமிழகம் வரவிருந்த வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை. </p><p>எல்லையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதங்களைத் தடுக்க எல்லையில் இருமாநில போலீஸாரும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>ஆகஸ்ட் 13 கர்நாடகா பந்த்: முக்கியக் காரணங்கள்:</h2><p>கர்நாடகாவில் உள்ள விவசாய மற்றும் கன்னட அமைப்புகள் இணைந்து இந்த மாநிலம் தழுவிய பந்த் போராட்டத்தை அறிவித்துள்ளன. </p><p>இதற்கான 3 முக்கியக் காரணங்கள்: மேகதாது அணைக்குத் தமிழகத்தின் எதிர்ப்பு, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய நீர் தேக்க அணை கட்டும் கர்நாடகாவின் திட்டத்திற்குத் தமிழக அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போடுவதாகக் கன்னட அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. </p><p>மழைப்பொழிவு பற்றாக்குறை மற்றும் காவிரி நீர் திறப்பு, நடப்பு ஆண்டில் கர்நாடகாவில் போதிய மழை இல்லாததால், தங்களின் சொந்த விவசாயத் தேவைகளுக்கே தண்ணீர் இல்லை என்றும், இந்தச் சூழலில் தமிழகத்திற்குக் காவிரித் தண்ணீரைத் திறந்துவிடக் கூடாது என்றும் அம்மாநில விவசாயிகள் கோருகின்றனர்.</p><h2>பந்த் நேரம் மற்றும் அரசு பேச்சுவார்த்தை தோல்வி:</h2><p>ஆகஸ்ட் 13 அன்று காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை இந்த பந்த் அமலில் இருக்கும். தற்போது வரை சுமார் 2,000-க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய கன்னட விழிப்புணர்வு அமைப்புகள், ஆட்டோ சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்கள் ஆதரவு தந்துள்ளன. </p><p>பந்த் நாளுக்குள் இந்த எண்ணிக்கை 3,000-ஐத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், மாநிலத்தின் அமைதியைக் கருதி பந்த் போராட்டத்தைக் கைவிடுமாறு வாட்டாள் நாகராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். </p><p>ஆனால், "எந்தக் காரணத்தைக் கொண்டும் போராட்டத்தைத் திரும்பப் பெற முடியாது" என கன்னட அமைப்புகள் திட்டவட்டமாக மறுத்துவிட்டன.</p><h2>பொதுமக்களுக்கான பாதிப்புகள்: எது இயங்கும்? எது இயங்காது?</h2><p>ஆகஸ்ட் 13 அன்று கர்நாடகாவில் நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டத்தால் KSRTC, BMTC அரசுப் பேருந்துகள், கடைகள், ஹோட்டல்கள், வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகள் முற்றிலும் மூடப்பட வாய்ப்புள்ளதுடன், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான விடுமுறை அறிவிப்பு ஆகஸ்ட் 12 மாலை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆட்டோ, டாக்சி, ஓலா, உபெர் போன்ற வாடகை வாகனங்கள் மிகக் குறைந்த அளவிலேயே இயங்கும் அல்லது முற்றிலும் நிறுத்தப்படலாம். </p><p>இருப்பினும், பெங்களூரு மெட்ரோ ரயில் பலத்த பாதுகாப்புடன் இயங்க வாய்ப்புள்ளதுடன், பொதுமக்களின் நலன் கருதி மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ், மருந்தகங்கள், பால் விநியோகம், காய்கறி மற்றும் பழக் கடைகள் போன்ற அனைத்து அத்தியாவசிய சேவைகளும் எப்போதும் போல தடையின்றி இயங்கும்.</p><h2>பயணிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல்!</h2><p>தமிழகத்தில் இருந்து பெங்களூரு, மைசூர் அல்லது கர்நாடகாவின் பிற பகுதிகளுக்கு ஆகஸ்ட் 13 அன்று செல்லத் திட்டமிட்டிருக்கும் பொதுமக்கள், தங்களின் பயணங்களைத் தள்ளி வைப்பது நல்லது. </p><p>இன்றே எல்லையில் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், லாரி உரிமையாளர்கள் மற்றும் தனியார் வாகன ஓட்டிகள் எல்லை நிலவரத்தைக் கண்காணித்துச் செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>51 வயதிலும் மகேஷ் பாபுவின் இளைமையின் ரகசியம் இதுதான்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/mahesh-babus-youthful-look-plant-based-diet-and-good-health-boost-skin-glow</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/mahesh-babus-youthful-look-plant-based-diet-and-good-health-boost-skin-glow#comments</comments><guid isPermaLink="false">a5c6b8c6-5fda-473e-b55e-37b059de7ba8</guid><pubDate>Mon, 10 Aug 2026 07:59:54 +0000</pubDate><atom:updated>2026-08-10T07:59:54.919Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மகேஷ் பாபு,குடல் ஆரோக்கியம்,சரும பொலிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/00b93273/tn-4.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மகேஷ் பாபு]]></media:title><media:description type="html"><![CDATA[ மகேஷ் பாபு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/00b93273/tn-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>அழகுக் குறிப்புகள் (Beauty)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தெலுங்கு சூப்பர்ஸ்டார்<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/mahesh-babu-birthday-special-varanasi-film-rudra-look-release"> மகேஷ் பாபு </a>நேற்று (ஆகஸ்ட் 9) தனது 51வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.</p><p>51 வயதிலும் அவரது இளமையான தோற்றத்திற்கு அவரின் உணவு முறையே காரணம் மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p> <h2>உணவு கட்டுப்பாடு</h2><p>பேஸ்ட்ரி (கேக் வகை), பர்கர் மற்றும் தயிர் சாதம் ஆகிய மூன்றில் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள் என ஒரு நேர்காணலில் கேட்கப்பட்டபோது, "நான் இவை எதையும் சாப்பிடுவதில்லை. பால் பொருட்கள் மற்றும் ரொட்டிவகைகளை முற்றிலுமாகத் தவிர்க்கிறேன். பர்கர் பக்கமே போவதில்லை" என மகேஷ் பாபு பதிலளித்திருந்தார்.</p><p>அவர் காய்கறிகள் நிறைந்த தாவர அடிப்படையிலான உணவுகளுக்கே முன்னுரிமை அளிக்கிறார்.</p> <figure><img alt=" &apos;வாரணாசி&apos; பட புதிய போஸ்டர் " src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/lffauyqr/tn-5.jpg" /><figcaption> 'வாரணாசி' பட புதிய போஸ்டர் </figcaption></figure><h2>குடல் - தோல் ஒத்திசைவு</h2><p>அமெரிக்காவில் வசிக்கும் பிரபல இரைப்பை குடல் மருத்துவர் டாக்டர் பழனியப்பன் மாணிக்கம் இது குறித்து விளக்குகையில்,</p><p>காய்கறிகளில் உள்ள நார்ச்சத்துக்கள் நமது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு உணவாக அமைகின்றன.</p><p>இந்த நல்ல பாக்டீரியாக்கள் உடலில் ஏற்படும் Inflammation (அழற்சி - வீக்கம்)-ஐ குறைக்கின்றன.</p><p>உடலில் Inflammation குறையும் போது சருமத்தின் பொலிவும் மேம்பட்டு, முதுமை தோற்றம் தள்ளிப்போகிறது. இதை மருத்துவத்தில் Gut-Skin Axis என அழைக்கின்றனர்.</p> <h2>பொலிவுக்கு டிப்ஸ்</h2><p>குடல் ஆரோக்கியத்தை பொறுத்தே சருமப் பொலிவு என கூறப்படும் நிலையில் மருத்துவர் கரண் ராஜன் என்பார் இதற்கு சில ஆலோசனைகளை வழங்குகிறார்.</p><p>பெரும்பாலானோர் நாளொன்றுக்கு 15 கிராமிற்கும் குறைவாகவே நார்ச்சத்து உட்கொள்கின்றனர். ஆனால் ஆரோக்கியமான குடல் செயல்பாட்டிற்குத் தினமும் குறைந்தபட்சம் 30 கிராம் நார்ச்சத்து தேவை.</p> <p>இதற்கு பலவகை காய்கறிகளை உண்ண வேண்டும். கேரட், குடைமிளகாய், தக்காளி போன்ற காய்கறிகளில் உள்ள Carotenoids உடலின் Internal Sun screen செயல்பட்டு சருமத்தின் பளபளப்பை அதிகரிக்கின்றன.</p><p>அடுத்ததாக மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். நாள்பட்ட மன அழுத்தம் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் சமநிலையைக் குலைத்து சருமப் பிரச்சினைகளை உருவாக்குகிறது.</p><p>சுருக்கமாகக் கூறின், சிறந்த சரும ஆரோக்கியம் என்பது நாம் முகத்தில் தடவும் கிரீம்களில் மட்டும் இல்லை. நம் குடலில் உள்ள பாக்டீரியாக்களுக்கு அளிக்கும் உணவிலேயே அடங்கியுள்ளது என்கிறது மருத்துவ உலகம்.</p>]]></content:encoded></item><item><title>&quot;சாமி அமைச்சர்&quot; என்று அழைத்த எம்.ஆர்.கே..!- அவையில் குலுங்கி குலுங்கி சிரித்த முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-assembly-mrk-god-minister-remark-vijay-bursts-into-laughter</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-assembly-mrk-god-minister-remark-vijay-bursts-into-laughter#comments</comments><guid isPermaLink="false">710b9ef5-a107-4f1e-9a4b-673ecf6f3b7e</guid><pubDate>Mon, 10 Aug 2026 07:53:08 +0000</pubDate><atom:updated>2026-08-10T07:53:08.342Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>எம்ஆர்கே பன்னீர்செல்வம்,முதலமைச்சர் விஜய்,tn cm vijay,அமைச்சர் ரமேஷ்,MRK Paneerselvam,Minister Vijay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/3btefm5y/Vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/3btefm5y/Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்,"முன்னாள் முதலமைச்சர்கள் கலைஞராக இருந்தாலும், ஸ்டாலின் ஆக இருந்தாலும் செய்தித்தாளை  பார்த்து காலையிலேயே தொலைபேசியில் அழைப்பார்கள்.</p><p>5 ஆண்டுகளாக நாங்கள் டென்ஷனாகவே இருந்தோம் ஆனால் நீங்கள் ரிலாக்சாக இருக்கிறீர்கள்” என்றார்.</p><p>இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் என்.ஆனந்த்,"சிறிய வாய்க்கால் பிரச்சினையாக இருந்தாலும்   முதலமைச்சர் தொடர்பு கொண்டு பேசுகிறார். பிரச்சினையை சரி செய்து விட்டார்களா என்று போன் செய்து கேட்கிறார்.</p><p>உங்களுக்கு 5 வருடம்தான் டென்ஷன். ஆனால் ஒரு பயத்தோடுதான் பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு தினசரி டென்ஷன்தான் என்று கூறினார்.</p><p>இதனால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது. இந்த உரையாடலை முதலமைச்சர் விஜய் புன்னகைத்தபடி ரசித்தார்.</p><p>சட்டசபையில் பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை எனவும், மாற்றம் வரும் என நினைத்த விவசாயிகளுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியதாக கூறினார்.</p><p>இதற்கு பதிலளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்,"கடந்த ஆட்சியில் ரூ.309 கோடிக்கு நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும் என அறிவித்தது என்ன ஆனது.</p><p>எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் திரைக்கதை, வசனம் பேசுகிறார். விவசாயிகளுக்கு கடந்த ஆட்சியில் நெல்லைச் சேமித்து வைக்க இடமில்லாத நிலை இருந்தது. நெல் கொள்முதலில் முறைகேடுகள் நடைபெற்றதாக விவசாயிகள் தெரிவித்தனர்.</p><p>கரும்புத் தோட்டத்தில் கான்கிரீட் போட்டு நடந்து சென்ற விவசாயி குறித்தும் அவர் எதுவும் கூறவில்லை என்று தெரிவித்தார்.</p><p>தொடர்ந்து பேசிய எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், "தமிழக வெற்றிக் கழகம் எப்படி ஆட்சிக்கு வந்தது என சாமி அமைச்சரை பார்த்தாலே தெரிகிறது" என்றார். </p><p>இந்து சமய அறநிலைதுறை அமைச்சரை சாமி அமைச்சர் என எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறிய நிலையில் இதனை கண்ட  முதலமைச்சர்  விஜய் அவையில் குலுங்கி குலுங்கி சிரித்த சம்பவம் கவனத்தை ஈர்த்தது.</p>]]></content:encoded></item><item><title>பெண்கள் பாலியல் வன்கொடுமையை விரும்புகிறார்கள்.. டெல்லியில் போராடிய மாணவிகள் குறித்த கருத்தால் இந்துத்துவா சித்தாந்தவாதி கைது </title><link>https://www.maalaimalar.com/news/national/hindutva-commentator-arrested-dg-mohandas-held-by-kerala-cyber-crime-for-inflammatory-remarks-on-neet-protest-at-jantar-mantar</link><comments>https://www.maalaimalar.com/news/national/hindutva-commentator-arrested-dg-mohandas-held-by-kerala-cyber-crime-for-inflammatory-remarks-on-neet-protest-at-jantar-mantar#comments</comments><guid isPermaLink="false">0e04ed40-a8ce-4dfd-8b9c-ba96525d6357</guid><pubDate>Mon, 10 Aug 2026 07:41:07 +0000</pubDate><atom:updated>2026-08-10T07:41:07.976Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வலதுசாரி,CJP Protest,சிஜேபி போராட்டம்,அரசியல் விமர்சகர்,Political commentator,right-winger</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/7k34r9rq/tn-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டி.ஜி.மோகன்தாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ டி.ஜி.மோகன்தாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/7k34r9rq/tn-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் வினாத்தாள் கசிவுக்கு  எதிராகப் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் </a>குறித்து அவதூறாகவும் வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசிய இந்துத்துவா சித்தாந்தவாதியும் வலதுசாரி அரசியல் விமர்சகருமான  டி.ஜி.மோகன்தாஸ் கேரளா சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  </p><p> பத்ரிகா  என்ற தனது யூடியூப் சேனலில் ஜூலை 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் அவர் வெளியிட்ட வீடியோக்களில், ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து மோகன்தாஸ் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாக புகார் அளிக்கப்பட்டது.  </p><h2>வீடியோ</h2><p>அந்த வீடியோவில், "நான் மட்டும் பொறுப்பில் இருந்திருந்தால், ஜந்தர் மந்தரைச் சுற்றி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, போராட்டக்காரர்களைக் கலைந்து போக உத்தரவிட்டிருப்பேன். அவர்கள் கேட்காவிட்டால் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டு இருப்பேன். சிலர் உயிரிழந்தாலும் சூழல் சில மணிநேரங்களில் அமைதியாகிவிடும்" என்று அவர் பேசியிருந்தார்.</p><p>மேலும், டெல்லியில் மாணவர்களால் நடத்தப்பட்ட போராட்டம் பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு வழிவகுத்திருக்கும் என்றும், ஆனால் "அதுகுறித்து எந்த புகாரும் வந்திருக்காது, ஏனெனில் போராட்டத்தில் பங்கேற்பவர்கள் பாலியல் வன்கொடுமையை விரும்புகிறார்கள், அதுமட்டுமின்றி, சில பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதை ரசிக்கவும் செய்கிறார்கள்" என வீடியோவில் கொச்சையாக பேசியிருந்தார்.</p><p>இந்த வீடியோக்கள் தொடர்பாக இந்திய மாணவர் சங்கமான எஸ்எப்ஐ மற்றும் அகில இந்திய மாணவர் பெருமன்றம் ஏஐஎஸ்எப் ஆகிய மாணவர் அமைப்புகள் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.</p> <h2>கைது</h2><p>கொச்சி, மட்டான்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து நேற்று மாலையில் கஸ்டடியில் எடுக்கப்பட்ட மோகன்தாஸ், நள்ளிரவில் திருவனந்தபுரம் சைபர் காவல நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டு அதிகாரப்பூர்வமாக கைது செய்யப்பட்டார்.</p><p>வன்முறையைத் தூண்டுதல், பொய்யான தகவல்களைப் பரப்புதல் உள்ளிட்ட பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>சமூக வலைதளங்களில் இருந்து அந்தச் சர்ச்சைக்குரிய வீடியோவை நீக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.</p><p>மோகன்தாஸ் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அசம்பாவிதங்களைத் தவிர்க்கத் திருவனந்தபுரம் சைபர் காவல் நிலையம் மற்றும் நீதிமன்ற பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கலைஞர் உதிரம் சிந்தி வளர்த்த மூத்த பிள்ளை முரசொலி! - மு.க.ஸ்டாலின் பதிவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-tweet-for-murasoli-is-the-eldest-child-nurtured-by-kalaignar-with-his-own-blood</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-tweet-for-murasoli-is-the-eldest-child-nurtured-by-kalaignar-with-his-own-blood#comments</comments><guid isPermaLink="false">960b7eff-a3d7-451c-a465-ca8424b7da6e</guid><pubDate>Mon, 10 Aug 2026 07:24:32 +0000</pubDate><atom:updated>2026-08-10T07:24:32.226Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,murasoli,முரசொலி,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/kyqzv3s9/MKStalin.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/kyqzv3s9/MKStalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பாசறைப் பக்கம் என அறிவாலயத்தின் அறிவாயுதமாகத் திகழும் முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க! அதன் பணிகளில் வெல்க! என்று கூறியுள்ளார்.</strong></em></p><h2><strong>85-வது ஆண்டு</strong></h2><p>‘முரசொலி’ நாளிதழின் 85-வது ஆண்டு விழாவை ஒட்டி அதன் அலுவலகத்திற்கு சென்று தி.மு.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/முக-ஸ்டாலின்">மு.க.ஸ்டாலின்</a> பார்வையிட்டார். இதனை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><p>கழக உடன்பிறப்புகளின் இதயத்துடிப்பு - தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றின் நாட்குறிப்பு - முத்தமிழறிஞர் கலைஞர் உதிரம் சிந்தி வளர்த்த மூத்த பிள்ளை முரசொலி! </p><p>அதன் அலுவலகத்திற்குச் சென்று, என் மூத்த சகோதரனுக்கு 85-ஆவது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தேன்!</p><p>தலைவர் கலைஞர், முரசொலி மாறன், முரசொலி செல்வம் என முரசொலியைத் தொடர்ந்து செழுமையாக வளர்த்தார்கள். நானும் முரசொலிக்காகப் பார்க்காத வேலையே இல்லை என்னும் அளவுக்கு, அனைத்து நிலைகளிலும் பணியாற்றி இருக்கிறேன்.</p><p>அறிவிப்புப் பலகைகளாக மட்டுமே இயங்கும் பல அரசியல் கட்சி இதழ்களுக்கு இடையே, கருத்தாழமிக்க கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், பொங்கல் மலர், பாசறைப் பக்கம் என அறிவாலயத்தின் அறிவாயுதமாகத் திகழும் முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க! அதன் பணிகளில் வெல்க! என்று கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ரேஷன் அரிசியை சமைத்து சாப்பிடும் வகையில் தரம் உயர்த்தவே ஊக்கத்தொகை உயர்வு– அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/subsidy-hike-to-improve-ration-rice-quality-says-minister-athav-arjuna</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/subsidy-hike-to-improve-ration-rice-quality-says-minister-athav-arjuna#comments</comments><guid isPermaLink="false">a02fedf8-789f-4f7b-8eba-ac933ec4fd80</guid><pubDate>Mon, 10 Aug 2026 07:14:47 +0000</pubDate><atom:updated>2026-08-10T07:14:47.466Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆதவ் அர்ஜூனா,TN assembly,தமிழக சட்டசபை கூட்டம்,Adhav Arjuna,முதலமைச்சர் விஜய்,tn cm vijay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/du0lfbrj/Adhav-arjuna.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Adhav Arjuna]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/du0lfbrj/Adhav-arjuna.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் இன்று 2வது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது:-</p><p>நீங்கள் 5 வருடங்கள் ஆட்சியில் இருந்தீர்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்து 3 மாதங்கள் தான் ஆகிறது.</p><p>5 வருடங்கள் ஆட்சியில் இருந்த திமுக 3 மாதத்தில் மட்டுமே ஆட்சியில் உள்ள தவெகவுடன் ஒப்பீடு செய்வது நியாயமா?</p><p>200 தொகுதிகளில் வெல்வோம் என அடிக்கடி சொன்ன திமுக, விவசாயக்கடன் தள்ளுபடி பற்றி தேர்தல் அறிக்கையில் பேசவே இல்லை.</p><p>பிரசாரத்தின்போது விவசாயியாக பிறக்க வேண்டும் என 3 முறை சொன்னார் முதல்வர் விஜய். அதை அடிக்கடி குறிப்பிடுகிறீர்கள்.</p><p>சொன்னால் செய்பவர் முதல்வர். நெல்லுக்கான ஊக்கத்தொகை உயர்த்தி உள்ளார் முதலமைச்சர் விஜய். பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட விவசாய சங்கங்களுடன் பேச்சு நடத்திய நிலையில் கரும்பு ஊக்கத்தொகை அறிவித்தார் முதல்வர்.</p><h2>இலவச ரேஷன் அரிசி </h2><p>திமுக ஆட்சியில் இதுவரை ரேஷன் கடைகளில் அரிசி வாங்கி அதை நாம் சமைத்து சாப்பிட்டோமா?</p><p>இலவசமாக தரும் அரிசி, சாப்பிட முடியாத நிலையில் உள்ளதால் தான் சன்னரக நெல்லுக்கான ஊக்கத்தொகை உயர்வு. ரேஷன் அரிசி வீட்டில் சாப்பிடும் அளவுக்கு தரம் உயர்த்தப்படுவதற்காக தான் நெல்லுக்கான ஊக்கத்தொகை உயர்த்தினார் முதலமைச்சர் விஜய்.</p><p>திமுகவிற்கு பயிர் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற எண்ணமே கிடையாது. கடந்த 5 ஆண்டுகளில் கரும்பு சாகுபடியின் பரப்பளவு குறைந்துள்ளது.</p><p>கரும்பு உற்பத்தி கடந்த 5 வருடத்தில் 70% குறைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச விலையின்றி தவித்ததால் தவெக அரசு நடவடிக்கை.</p><p>விவசாயிகளுக்கான பொற்கால ஆட்சியாக இந்த 5 ஆண்டு கால ஆட்சியை முதல்வர் விஜய் மாற்றுவார் என அமைச்சர் ஆதவ் திட்டவட்டம்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்கா-ஈரான் போரால் விண்ணை தொடும் அத்தியாவசியப்பொருட்கள் விலை!</title><link>https://www.maalaimalar.com/news/world/us-iran-war-sends-essential-prices-soaring</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-iran-war-sends-essential-prices-soaring#comments</comments><guid isPermaLink="false">8db39e12-ae23-446d-a533-8c0b50200207</guid><pubDate>Mon, 10 Aug 2026 07:14:16 +0000</pubDate><atom:updated>2026-08-10T07:14:16.980Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>America,Iran,Pentagon,America iran war,OperationEpicBury,WeaponsShortage,EconomicLoss,DefenseSpending</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/y6ojy3ef/America-Iran-War" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ America Iran War]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/y6ojy3ef/America-Iran-War?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE">அமெரிக்கா</a> மற்றும் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">ஈரான்</a> இடையே கடந்த பிப்ரவரி மாதம் வெடித்த போர், 6 மாதங்களை எட்டவுள்ள நிலையில் உலகப் பொருளாதாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. </p><p>தொடக்கத்தில் ராணுவத் தாக்குதலாக மட்டுமே பார்க்கப்பட்ட இந்த மோதல், தற்போது சாதாரண மனிதனின் அமைதியான வாழ்க்கையிலும், சமையலறையிலும் தன் கொடூரக் கரங்களை நீட்டியுள்ளது. </p><p>ஏவுகணைத் தாக்குதல்களின் சத்தம் ஓய்ந்த பின்னரும், அதன் விளைவாக உருவான விலைவாசி உயர்வும் நிதிப் பற்றாக்குறையும் உலக நாடுகளைத் திணறடித்து வருகின்றன.</p><h2><strong>எரிபொருள் விலை உயர்வு:</strong></h2><p>இந்த போரினால் அமெரிக்க அரசுக்கு ஏற்பட்டுள்ள ராணுவச் செலவுகள் ஒருபுறமிருக்க, சாதாரண நுகர்வோரின் பாக்கெட்டுகளைப் பதம் பார்க்கும் வகையில் எரிபொருள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. </p><p>உலகம் முழுவதும் வணிகக் கப்பல்கள் சென்று வரும் முக்கிய நீர்வழியான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">ஹார்முஸ் நீரிணை</a>யை ஈரான் அடைத்துள்ளதால், சர்வதேச வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நீர்வழியை மீண்டும் திறக்க அமெரிக்காவின் கூட்டாளி நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.</p><h2><strong>பென்டகனில் நிதியிழப்பு ஆயுத பற்றாக்குறை:</strong></h2><p>போர் தீவிரமடைந்துள்ள சூழலில், அமெரிக்காவின் பென்டகன் அமைப்பில் கடுமையான நிதியிழப்பும், ஆயுதப் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. </p><p>இது தொடர்பாக அமெரிக்க அதிபர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D">டொனால்ட் டிரம்ப்</a> மற்றும் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் இடையே கடந்த வாரம் காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டு உள்ளது.</p><h2><strong>செப்டம்பருக்குள் 37.5 பில்லியன் செலவாகும்:</strong></h2><p>கெட்டவர்களை ஒழிக்கப் பணம் தேவைப்படும் என்று பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் கடந்த மார்ச் மாதம் வெளிப்படையாகக் கூறியிருந்தார். </p><p>பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானிய இலக்குகள் மீது நடத்திய கூட்டுத் தாக்குதலுடன் தொடங்கிய இந்தப் போரில், வரும் செப்டம்பர் மாதத்திற்குள் சுமார் 37.5 பில்லியன் டாலர் அளவுக்கு அமெரிக்க வரி செலுத்துவோரின் பணம் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>இதில் ஈரான் நடத்திய தாக்குதலில் சேதமடைந்த அமெரிக்க ராணுவத் தளங்களின் இழப்புகள் சேர்க்கப்படவில்லை.</p><h2><strong>காலியான ஆயுத கிடங்குகள்</strong></h2><p>போரைத் தொடரவும், காலியான ஆயுதக் கிடங்குகளை மீண்டும் நிரப்பவும் 67 பில்லியன் டாலர் கூடுதல் நிதி ஒதுக்குமாறு பீட் ஹெக்செத் கோரிக்கை விடுத்தார். </p><p>இதையேற்று அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை 73 பில்லியன் டாலர் நிதியை ஒப்புக்கொண்டது. இருப்பினும், இதில் முழுத் தொகையும் பாதுகாப்புத் துறைக்கு மட்டும் செல்லாது என்பதால், கோடைக்கால இடைவேளைக்கு முன்பாக அமெரிக்க மேலவை இதைத் தற்காலிகச் செலவின மசோதாவுடன் நிறைவேற்ற அவசரம் காட்டி வருகிறது.</p><h2><strong>வெடிமருந்து செலவு:</strong></h2><p>ஆனால், உண்மையான போர்க்காலச் செலவு இதைவிட மிகவும் அதிகம் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகள் மையத்தைச் சேர்ந்த மார்க் கான்சியன் வெளியிட்ட கணிப்பின்படி, ராணுவப் படைகளின் நிறுத்தம், உபகரண இழப்புகள், எரிபொருள் செலவு மற்றும் அடிப்படைச் சேதங்களை மட்டும் கணக்கிட்டால், இந்தச் செலவு 35.2 பில்லியன் முதல் 42.5 பில்லியன் டாலர் வரை உயரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p><p>இதில் ஏவுகணைகள் மற்றும் வெடிமருந்துகளுக்காக மட்டுமே 26.1 பில்லியன் டாலருக்கும் அதிகமாகச் செலவிடப்பட்டு உள்ளது.</p><h2><strong>ஆயுத இருப்பு குறைந்து செலவு இடைவெளி:</strong></h2><p>இஸ்ரேலைப் பாதுகாக்க அமெரிக்கா தனது அதிநவீன ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளை அதிக அளவில் பயன்படுத்தியதால், அதன் சொந்த ஆயுத இருப்பு பெருமளவில் குறைந்துவிட்டது. </p><p>ஆனால், ஈரான் ஒப்பீட்டளவில் மிகவும் குறைந்த செலவிலான ஆயுதங்களையே பயன்படுத்தியதால், இரு நாடுகளுக்கும் இடையிலான போர்க்காலச் செலவில் மிகப்பெரிய இடைவெளி உருவானது.</p><h2><strong>பொருளாதார சுமை:</strong></h2><p>ஆயுதக் கையிருப்பு குறித்த தவறான தகவல்கள் அளிக்கப்பட்டதாகக் கருதிய அதிபர் டொனால்ட் டிரம்ப், இது குறித்து பீட் ஹெக்செத்திடம் விளக்கம் கேட்டுப் போர்க்கொடி உயர்த்தினார். </p><p>இஸ்ரேலின் பாதுகாப்பிற்காக அமெரிக்கா 200-க்கும் மேற்பட்ட 'தாட்' ரகத் தடுப்பு ஏவுகணைகளைப் பயன்படுத்தியது. இது பென்டகனின் மொத்த இருப்பில் பாதியாகும். </p><p>இதில் ஒரு ஏவுகணையின் விலையே 15 மில்லியன் டாலர் வரை இருக்கும் நிலையில், அவற்றை மீண்டும் தயாரிப்பது பெரும் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தும்.</p><h2><strong>5.6 பில்லியன் ஆயுதங்கள் 2 நாட்களில்:</strong></h2><p>அதேபோல, தோமாஹாக் ரகக் குரூஸ் ஏவுகணைகள் ஒவ்வொன்றும் 2 மில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்பு கொண்டவை. தற்போது இவற்றின் தயாரிப்புச் செலவு இன்னும் அதிகரித் துள்ளதாக ஹார்வர்ட் கென்னடி பள்ளியின் பேராசிரியர் லிண்டா பில்ம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>மேலும், போரின் முதல் இரண்டு நாட்களில் மட்டுமே 5.6 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை பென்டகன் பயன்படுத்தியது. முதல் நான்கு வாரங்களில் 850-க்கும் மேற்பட்ட தோமாஹாக் ஏவுகணைகள் வீசப்பட்டன. </p><p>ஆனால், அமெரிக்காவில் ஆண்டுக்குச் சில நூறு ஏவுகணைகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2><strong>ராணுவ தளங்கள் சேதம்:</strong></h2><p>கடந்த ஜூன் மாதம் அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட இடைக்காலப் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு தாக்குதல்கள் குறைந்தபோதிலும், செலவுகள் குறைந்தபாடில்லை. </p><p>மே மாதத்திற்குள் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களில் 228-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் மற்றும் உபகரணங்கள் ஈரானியத் தாக்குதலால் சேதமடைந்ததாகச் செயற்கைக்கோள் படங்கள் உறுதி செய்கின்றன.</p><p>கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்கத் தளங் களைச் சீரமைக்க 5 பில்லியன் டாலர் வரை செலவாகும் என அமெரிக்கன் என்டர்பிரைஸ் இன்ஸ்டிடியூட் கணித்துள்ளது. மேலும், 42 போர் விமா னங்கள் வரை சேதமடைந்துள்ளதாகக் காங்கிரஸ் ஆராய்ச்சி சேவை தெரிவித்துள்ளது.</p><h2>ஆபரேஷன் எபிக் புரி 38.6 பில்லியன் செலவு:</h2><p>முன்னாள் பென்டகன் அதிகாரியான எலைன் மெக்கஸ்கர் கணக்கீட்டின்படி, 'ஆபரேஷன் எபிக் புரி' போரின் செலவு ஜூன் நிலவரப்படி 38.6 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. </p><p>இது ஒவ்வொரு அமெரிக்கக் குடிமகனின் தலையிலும் தோராயமாக 115 டாலர் கடனைச் சுமத்தியுள்ளது. முன்னாள் ராணுவ வீரர்களின் நலன், புனரமைப்பு மற்றும் கடன் வட்டி என இந்தப் போரின் நீண்டகாலச் செலவு 1 டிரில்லியன் டாலரைத் தாண்டும் என்றும், அமெரிக்க மக்கள் இதன் கடனை பல ஆண்டுகளுக்குச் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் பேராசிரியர் லிண்டா பில்ம்ஸ் எச்சரித்துள்ளார்.</p><h2><strong>அன்றாட வாழ்க்கை பாதிப்பு:</strong></h2><p>ராணுவச் செலவுகள் ஒருபுறமிருக்க, சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையிலும் இந்தப் போர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 'டாக்ஸ்பேயர்ஸ் பார் காமன் சென்ஸ்' அமைப்பின் கொள்கை ஆய்வாளர் கேப் மர்பி கூறுகையில், போரின் நேரடிச் செலவுகளை விட மறைமுகச் செலவுகளே வரும் காலத்தில் அதிகமாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.</p> <h2><strong>குடும்பத்திற்கு 609 டாலர் கூடுதல் செலவு:</strong></h2><p>பிரவுன் பல்கலைக்கழகத்தின் ஆய்வின்படி, போர் தொடங்கியதில் இருந்து அமெரிக்கக் குடும்பங்கள் பெட்ரோல் மற்றும் டீசலுக்காக மட்டும் கூடுதலாக 79.8 பில்லியன் டாலர் செலவிட்டுள்ளன. </p><p>அதாவது ஒரு குடும்பத்திற்குச் சராசரியாக 609 டாலர் கூடுதல் செலவாகி யுள்ளது. மூடிஸ் அனலிட்டிக்ஸ் நிறுவ னத்தின் முதன்மைப் பொருளாதார நிபுணர் மார்க் சாண்டி கூறுகையில், ஒரு சராசரி குடும்பம் இறுதியில் 1,000 டாலர் வரை போர் சார்ந்த செலவுகளுக்காக இழக்க நேரிடும் என்றார்.</p><h2><strong>உயர்ந்த விலை உலக பொருளாதார பாதிப்பு:</strong></h2><p>உயர்ந்துள்ள டீசல் விலை காரணமாகச் சரக்கு போக்குவரத்து, மளிகைப் பொருட்களின் விலை மற்றும் விமானக் கட்டணங்கள் உயர்ந்துள்ளன. </p><p>வரிக் குறைப்புகள் சில நன்மைகளை அளித்தபோதிலும், போரின் தாக்கம் அதை முறியடித்துவிட்டது. ஹார்முஸ் நீரிணை அடைக்கப்பட்டதால் சர்வதேச போக்குவரத்து சந்தை சீர்குலைந்துள்ள நிலையில், இந்த போரின் முழுமையான உலகளாவிய பொருளாதாரப் பாதிப்பை உடனடியாகக் கணிப்பது மிகவும் கடினம் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விபி ஜி ராம் ஜி திட்டம்.. அமலான முதல் மாதத்திலேயே மொத்த ஊரக வேலை நாட்கள் பாதியாக சரிவு</title><link>https://www.maalaimalar.com/news/national/rural-jobs-fall-workdays-under-new-vpg-ramji-scheme-drop-nearly-50-in-first-month</link><comments>https://www.maalaimalar.com/news/national/rural-jobs-fall-workdays-under-new-vpg-ramji-scheme-drop-nearly-50-in-first-month#comments</comments><guid isPermaLink="false">3ece3f3f-ff97-47cf-9006-39616be5caa4</guid><pubDate>Mon, 10 Aug 2026 07:03:59 +0000</pubDate><atom:updated>2026-08-10T07:03:59.159Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,central government,MGNREGA Scheme,விபி ஜி ராம் ஜி,VB G Ram G,ஊரக வேலை உறுதித் திட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/76h003vy/tn-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விபிஜி ராம் ஜி திட்டம்]]></media:title><media:description type="html"><![CDATA[ விபிஜி ராம் ஜி திட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/76h003vy/tn-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு (MGNERA) பதிலாக மத்திய அரசு,<a href="https://www.maalaimalar.com/news/national/mgnrega-renamed-as-vpg-ramji-scheme-sparks-bjp-ruled-states-protest-over-higher-state-funding-burden"> விபி ஜி ராம் ஜி</a> திட்டத்தை கொண்டு வந்தது. </p><h2>விபி ஜி ராம் ஜி </h2><p>மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியும், திட்டத்திற்காக மத்திய - மாநில நிதி பங்கீட்டில் மாற்றம் செய்தும்,வேலை நாட்களை 100 இல் இருந்து 125 நாட்களாக உயர்த்தியும் கொண்டுவரப்பட்ட இந்த விபி ஜி ராம் ஜி திட்டம் கடந்த ஜூலை 1 முதல் அமலுக்கு வந்தது. </p><p>இத்திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ. 1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. </p><p>மகாத்மா காந்தியின் பெயர் நீக்கத்திற்கும் திட்டத்தின் பிற அம்சங்களுக்கும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில் முந்தைய திட்டத்தை விட விபி ஜி ராம் ஜி திட்டம் ஊரக வேலைவாய்ப்பு வழங்குவதில் தொய்வை கண்டுள்ளதாக திட்டம் அமலான கடந்த ஜூலை மாதத்திற்கான தரவுகள் தெரிவிக்கின்றன. </p> <h2>சரிவு</h2><p>MGNREGA திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தும் புதிய சட்டத்தின் கீழ் தடையின்றித் தொடரும் என்றும் மத்திய அரசு உறுதியளித்தபோதும் புதிய திட்டத்தின் கீழ் கடந்த ஒரு மாத முடிவில், ஊரக வேலைநாட்கள் பாதியாக சரிந்துள்ளது.</p><p>கடந்த ஆண்டு அமலில் இருந்த MGNREGA இன் கீழ் இதே ஜூலை மாதம் 100 நாள் வேலைத் திட்டத்தில் 15.33 வேலை நாட்களுக்கான பணி மேற்கொள்ளப்பட்டது.</p><p>ஆனால் அதற்கு மாற்றாக இந்த ஆண்டு அமலான விபி ஜி ராம் ஜி-யின் கீழ் மொத்த வேலை நாட்கள் 7.67 கோடியாக சரிந்துள்ளது. ஜூலை மாதத்தில் 68.94 லட்சம் குடும்பங்கள் மட்டுமே வேலை பெற்றுள்ளன. இது கடந்த ஆண்டை விட 49.94 சதவீதம் குறைவாகும்.</p>  <h2>மறுப்பு</h2><p>ஆனால் திட்ட மாற்றத்தால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் மறுத்துள்ளது. ஜூலை 22 வரை வேலை கோரிய தொழிலாளர்களில் 99.5% பேருக்கு வேலை வழங்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. </p><p>ஆனால் ஜூலை 22 க்கு பின் மாத இறுதியில் வெளியான அதிகாரப்பூர்வ தரவுகள், ஜூலை மாதத்தின் பிற்பகுதியில் வேலைவாய்ப்பு உருவாக்கம் மந்தமடைந்ததை சுட்டிக்காட்டுகின்றன.</p> <h2>மந்தம்</h2><p>அதாவது, திட்டம் தொடங்கப்பட்ட முதல் மாதத்திலேயே, கடந்த ஆண்டை விட சரிபாதி அளவுக்கு வேலை நாட்களின் அளவு சரிந்துள்ளது.</p><p>இந்த வீழ்ச்சி புதிய திட்டத்திற்கு மாறியதால் ஏற்பட்ட தற்காலிகத் தேக்கமா அல்லது கிராமப்புற வேலைவாய்ப்பில் ஏற்பட்டுள்ள பொதுவான மந்தநிலையா என்பது வரும் மாதங்களின் தரவுகள் மூலமே தெரியவரும்.</p>]]></content:encoded></item><item><title>எங்கள் ஆட்சியில் ஆக்டிங் கிடையாது, ஆக்ஷன் மட்டுமே!- சட்டமன்றத்தில் திமுக - தவெக சுவாரசிய விவாதம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/in-our-rule-no-acting-only-action-dmk-tvk-interesting-assembly-debate</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/in-our-rule-no-acting-only-action-dmk-tvk-interesting-assembly-debate#comments</comments><guid isPermaLink="false">ac092886-5a94-49d0-b4d6-fc0f39a3f8c3</guid><pubDate>Mon, 10 Aug 2026 06:47:24 +0000</pubDate><atom:updated>2026-08-10T06:47:24.881Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN budget,TN assembly,அமைச்சர் ரமேஷ்,Minister Ramesh,தமிழக சட்டமன்ற கூட்டம்,பட்ஜெட் விவாதம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/1dq8r81r/Ramesh.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Ramesh- Ex Minister MRK Paneer selvam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/1dq8r81r/Ramesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் இன்று 2வது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய திமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்,"திமுக ஆட்சியில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தனர். ஒரு போராட்டம் கூட நடத்தியது இல்லை" என்றார்.</p><p>இதற்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.</p><p><strong>அமைச்சர் ரமேஷ்:</strong> திரைக்கதையை தயார் செய்கிறார் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். திமுக ஆட்சியில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்ததாக சிறந்த திரைக்கடை எழுதி உள்ளார். கிடங்குகள் வேண்டும் என பல ஆண்டுகளாக விவசாயிகள் போராடி வருகின்றனர்.</p><p>ரூ.309 கோடிக்கு நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும் என்ற திமுக வாக்குறுதி என்னாச்சு?</p><p>நெல்லுக்கும் கரும்புக்கும் அரசு ஒரு விலை நிர்ணயித்தால் அதிகாரிகள் ஒரு விலை நிர்ணயித்தார்களே அது தெரியாதா?</p><p>திமுக ஆட்சியில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தார்களா? துன்பப்பட்டார்களா? என்பது அவர்களுக்கே நன்றாக தெரியும்.</p><p>மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்வதற்காக கரும்பு தோட்டத்திற்குள் கான்கிரீட் போட்டு நடந்த விவசாயியை எம்ஆர்கே பன்னீர்செல்வம்  மறந்துவிட்டார்.</p><p>திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட நெல் சேமிப்பு கிடங்குகள் உள்ளிட்டவற்றை பட்டியலிட்டு முன்னாள் அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்தார்.</p><p><strong>முன்னாள் அமைச்சர் சக்கரபாணி:</strong>  நெல் கிடங்குகள் கட்டவில்லை என அமைச்சர் ரமேஷ் தவறாக கூறினார். திமுக ஆட்சியில் 18 மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டன.</p><p>பின்னர், தவெக எப்படி ஆட்சிக்கு வந்தது என்பது குறித்து அமைச்சர் போசும்போது டெக்னிக் தெரிகிறது என எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசினார்.</p><p>எம்ஆர்கே பன்னர்செல்வம்: தவெகவினர் படத்தை பார்த்து வந்தவர்கள், திமுகவினர் முரசொலி படித்து வந்தவர்கள். வேளாண்மை துறைக்கு திமுக ஆட்சியை விட குறைவாக ஒதுக்கி உள்ளது தவெக.</p><p>திமுக ஆட்சியில் ஆக்டிங் கிடையாது. ஆக்ஷன் மட்டுமே இருந்தது. தவெக எப்படி ஆட்சிக்கு வந்தது என்பது அமைச்சர் பேசும்போது டெக்னிக்  தெரிகிறது.</p><p><strong>அமைச்சர் ரமேஷ்:</strong> அந்த டெக்னிக்கை 10 நிமிடங்கள் முன்பு தான் அண்ணன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் கற்றுக்கொண்டேன்.</p><p><strong>எம்ஆர்கே பன்னர்செல்வம்:</strong> விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை நிறுத்த போகிறதா அரசு? நுண்ணீர் பாசனத்திட்டம், மும்முனை மின்சாரம் திட்டத்திற்கு கடந்த ஆட்சியை விட குறைவான நிதி ஒதுக்கீடு ஏன்?</p><p>வேளாண் துறைக்கு திமுக ஆட்சியை விட ரூ.279 கோடி குறைத்து நிதி ஒதுக்கி உள்ளது தவெக அரசு. திமுக ஆட்சியில் வேளாண் துறைக்கான செலவை விட கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.</p><p>திமுக ஆட்சியை விட தவெக ஆட்சியில் வேளாண் துறைக்கு ரூ.481 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><h2>சாமி அமைச்சர்</h2><p>அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷை சாமி அமைச்சர் என எம்ஆர்கேபி கூறியதால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது. அப்போது, முதலமைச்சர் விஜயும் சிரித்தார்.</p>]]></content:encoded></item><item><title>&quot;தமிழகத்திற்குப் பெருமை! அமெரிக்க  பல்கலைக்கழகத்தில் படிக்க ரூ.3.55 கோடி ஸ்காலர்ஷிப் வென்ற ஈரோடு மாணவர்!&quot;</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/proud-moment-for-tamil-nadu-erode-student-wins-rs-3-55-crore-scholarship-to-study-at-us-university</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/proud-moment-for-tamil-nadu-erode-student-wins-rs-3-55-crore-scholarship-to-study-at-us-university#comments</comments><guid isPermaLink="false">beb40341-edac-4b78-87f0-1e4935ccdd20</guid><pubDate>Mon, 10 Aug 2026 06:33:28 +0000</pubDate><atom:updated>2026-08-10T06:33:28.294Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>scholarship,Erode,Pranav Ilango,பிரணவ் இளங்கோ,Brown University,பிரவுன் பல்கலைக்கழகம்,Ivy League,Scholarship Success,Education Matters,Erode teenager</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/07tftjcm/Erode-Pranav-Ilango" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Erode Pranav Ilango ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/07tftjcm/Erode-Pranav-Ilango?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தின் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81">ஈரோடு</a> மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவர் பிரணவ் இளங்கோ, அமெரிக்காவின் மிக உயரிய மற்றும் புகழ்பெற்ற ‘ஐவி லீக்’ கல்வி நிறுவனங்களில் ஒன்றான ப்ரவுன் பல்கலைக்கழகத்தில் ரூ. 3.55 கோடி முழு கல்வி உதவித்தொகையுடன் படிக்கத் தேர்வாகி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவன்.</p><p>அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான அவரது முழு படிப்புச் செலவு மற்றும் அமெரிக்காவில் தங்கிப் படிப்பதற்கான அனைத்துச் செலவுகளையும் இந்த ஸ்காலர்ஷிப் முழுமையாக ஏற்கும் என்பது.</p><h2>என்ன படிக்கப் போகிறார் பிரணவ்?</h2><p>பிரணவ், ப்ரவுன் பல்கலைக்கழகத்தில் 'பொது சுகாதாரம் மற்றும் பயன்பாட்டு கணிதம்' ஆகிய துறைகளைத் தேர்வு செய்து படிக்கவுள்ளார். </p><p>கணிதம், தொழில்நுட்பம் மற்றும் தரவு அறிவியல் ஆகியவற்றை ஒன்றிணைத்து, உலகின் மிக முக்கியமான பொதுச் சுகாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே இவரது முக்கிய நோக்கமாகும்.</p><h2>சர்வதேச அளவில் குவிந்த வாய்ப்புகள்:</h2><p>பிரணவின் கல்வித் திறமையைப் பாராட்டி அமெரிக்காவின் ப்ரவுன் பல்கலைக்கழகம் மட்டுமின்றி, ஆசியாவின் மிகச் சிறந்த கல்வி நிறுவனமான ஹாங்காங் பல்கலைக்கழகமும் அவருக்கு 100% முழு கல்வி உதவித்தொகையுடன் படிக்க அனுமதி வழங்கியது. இதன் மூலம் உலக அளவில் பிரணவின் திறமைக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.</p><h2>பள்ளிப் பருவமும் உலக சாதனையும்:</h2><p>ஈரோட்டில் உள்ள சிஎஸ் அகாடமியில் பள்ளிப் படிப்பை முடித்த பிரணவ், சிறு வயது முதலே சர்வதேசக் கல்விக்கான தயாரிப்புகளில் ஈடுபட்டு வந்தார். </p><p>தனது 13 வயதிலேயே 'டெக்ஸ்டெரிட்டி குளோபல்' அமைப்பின் தேசிய மாணவர் மேம்பாட்டுத் திட்டத்தில் இணைந்து முறையான வழிகாட்டுதலை பெற்றார். </p><p>கேம்பிரிட்ஜ் சர்வதேசப் பள்ளித் தேர்வுகளில் கணிதப் பாடத்தில் 'உலக அளவில் முதலிடம்' பிடித்து சாதனை படைத்தார்.</p><h2>சமூக நோக்குடன் கூடிய கணித அறிவு:</h2><p>கணிதத்தை வெறும் மதிப்பெண்களுக்கான பாடமாகப் பார்க்காமல், சமூக மாற்றத்திற்கான ஒரு கருவியாக பிரணவ் கருதுகிறார். </p><p>செயற்கை நுண்ணறிவு, புரோகிராமிங் மற்றும் தரவு அறிவியல் மூலம், குறிப்பாக மருத்துவ வசதிகள் மற்றும் துல்லியமான தகவல்கள் கிடைக்காத கிராமப்புற மற்றும் பின்தங்கிய மக்களின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்துவதே தனது நீண்டகால லட்சியம் என்று பிரணவ் தெரிவித்துள்ளார்.</p><h2>வழிகாட்டுதலின் முக்கியத்துவம்:</h2><p>இந்த அசாத்திய வெற்றி குறித்துப் பேசிய பிரணவ், முறையான வழிகாட்டுதலும் கடின உழைப்பும் இருந்தால், எந்தவொரு சிறிய நகரத்தில் இருந்து வரும் மாணவனும் உலக அளவில் பெரிய சாதனைகளைப் படைக்க முடியும் என்பதற்குத் தனது இந்தப் பயணமே சாட்சி என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>விஜய் VS தனுஷ்: தமிழக அரசியலின் புதிய களமும், ஸ்டாலினின் எதிர்காலமும்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-vs-dhanush-the-new-arena-of-tamil-nadu-politics-and-stalins-future</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-vs-dhanush-the-new-arena-of-tamil-nadu-politics-and-stalins-future#comments</comments><guid isPermaLink="false">3eef04c4-d92e-4967-83be-7a41665faed9</guid><pubDate>Mon, 10 Aug 2026 06:27:09 +0000</pubDate><atom:updated>2026-08-10T06:27:09.763Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,விஜய்,vijay,Dhanush,தனுஷ்,முக ஸ்டாலின்,ஜோதிடர் ரத்தன் பண்டிட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/zly97krw/Astrology.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்- நடிகர் தனுஷ்- ஜோதிடர் ரத்தன் பண்டிட்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்- நடிகர் தனுஷ்- ஜோதிடர் ரத்தன் பண்டிட்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/zly97krw/Astrology.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>எதிர்காலத்தில் நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவதற்கான யோகம் இருக்கிறது. அவர் அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கும் காலம் வந்தால் தமிழக அரசியலில் புதிய போட்டி உருவாகும்.</strong></em> </p><p>பிரபல ஜோதிடர் ரத்தன் பண்டிட், அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் தொழில்துறை பிரபலங்களுக்கு பல ஆண்டுகளாக ஜோதிட ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.</p><p>இவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடராக இருந்து முக்கிய ஆலோசனைகளை வழங்கியவர் என்ற பெருமையையும் பெற்றவர். அதேபோல் முதலமைச்சர் விஜய்யுடனும் நீண்டகாலமாக நெருக்கமாக இருந்து வருகிறார்.</p><p>சமீபத்திய தமிழக சட்டசபை தேர்தலின் போது அவரது ஜோதிட கணிப்பு உலகம் முழுவதும் பேசுபொருளானது. தேர்தல் ஆணையம் காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்று அறிவித்து இருந்த நிலையில், அதற்கு முன்பாகவே காலை 9 மணியளவில் பூங்கொத்துடன் விஜய்யை நேரில் சந்தித்து, “வெற்றிக்கு வாழ்த்துகள்” என்று கூறி வாழ்த்து தெரிவித்தார்.</p><p>பின்னர் தேர்தல் முடிவுகள் வெளியானதில் விஜய் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றதை தொடர்ந்து, ரத்தன் பண்டிட்டின் ஜோதிடத் திறன் உலகளவில் கவனம் பெற்றதுடன், அவரது கணிப்பு பரவலாக பேசப்பட்டது.</p><p>இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், ஜோதிடர் ரத்தன் பண்டிட்டுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற அவர் பேசும்போது, தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து மீண்டும் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார். மேலும் அரசியலில் யார் யாரெல்லாம் சாதிப்பார்கள். யாரெல்லாம் ஜொலிக்க மாட்டார்கள் என்றும் அவர் தனது கணிப்பை தெரிவித்தார்.</p><p>விழாவில் ஜோதிடர் ரத்தன் பண்டிட் பேசியதாவது:-</p><h2><strong>முதலமைச்சர் விஜய்</strong> </h2><p>முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்</a> கையில் கட்டி இருக்கும் சிகப்பு கயிறு முருகப்பெருமானின் அருளின் அடையாளம். அந்த சிகப்பு கயிறு வெற்றியையும் உயர்வையும் குறிக்கிறது. முருகனின் அருளால் அவருக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். அவர் எடுத்துள்ள பாதை வெற்றிப் பாதையாக அமையும்.</p><h2><strong>மு.க.ஸ்டாலின்</strong></h2><p>முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இனி வெற்றி யோகம் இல்லை. அவருடைய அரசியல் பயணம் ஓய்வை நோக்கி செல்லும்.</p><h2><strong>உதயநிதி ஸ்டாலின்</strong></h2><p>விஜய் அரசியலுக்கு வரவில்லை என்றால் உதயநிதி ஸ்டாலினுக்கு முதலமைச்சராகும் வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் தற்போதைய சூழலில் அவருக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியே அமையும்.</p><h2><strong>அண்ணாமலை</strong></h2><p>அண்ணாமலைக்கு தமிழக அரசியலில் முதலமைச்சர் யோகம் இல்லை. இனி தமிழக அரசியலில் முக்கிய சக்தியாக இருப்பவர் முதலமைச்சர் விஜய் தான்.</p><h2><strong>நடிகர் தனுஷ்</strong></h2><p>எதிர்காலத்தில் நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/தனுஷ்">தனுஷ்</a> அரசியலுக்கு வருவதற்கான யோகம் இருக்கிறது. அவர் அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கும் காலம் வந்தால் தமிழக அரசியலில் புதிய போட்டி உருவாகும். அதுவரை தமிழக முதலமைச்சர் விஜய்க்கு குறிப்பிடத்தக்க அரசியல் போட்டி இருக்காது. தனுசின் அரசியல் வருகைக்கு பிறகே தமிழக அரசியல் புதிய கட்டத்தை நோக்கி செல்லும்.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p><p>ஜோதிடர் ரத்தன் பண்டிட் பகிர்ந்த இந்த கணிப்புகள் விழாவில் பங்கேற்றவர்களின் கவனத்தை ஈர்த்ததோடு, நிகழ்ச்சி முடிந்த பிறகும் சமூக வலைதளங்களில் பரபரப்பான விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>விடுதி மாடியில் மாணவியின் கழுத்தை கம்பியால் இறுக்கி பாலியல் வன்கொடுமை : பாதுகாப்பு காவலர் அதிரடி கைது!</title><link>https://www.maalaimalar.com/news/national/sexual-assault-of-student-on-ahmedabad-hostel-terrace-security-guard-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/national/sexual-assault-of-student-on-ahmedabad-hostel-terrace-security-guard-arrested#comments</comments><guid isPermaLink="false">af0e6024-b0ab-4225-9735-9da44f5b6674</guid><pubDate>Mon, 10 Aug 2026 06:25:39 +0000</pubDate><atom:updated>2026-08-10T06:25:39.033Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime,பாலியல் வன்கொடுமை,ahmedabad,rape case,women safety,Gujarat:,அகமதாபாத்,CCTVEvidence,PGHostelSafety,PGSecurityGuardArrested</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/8c5384fs/Ahmedabad-Rape-Case" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ahmedabad Rape Case Rape Case ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/8c5384fs/Ahmedabad-Rape-Case?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D">குஜராத் </a>மாநிலம் <a href="https://www.maalaimalar.com/topic/ahmedabad">அகமதாபாத்</a>தில்உள்ள தங்கும் விடுதி ஒன்றின் மொட்டை மாடியில், கல்லூரி மாணவி ஒருவரைப் பாதுகாப்பு காவலர் கம்பியால் கழுத்தை நெரித்து கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>குற்றவாளியான பாதுகாப்பு காவலரை 10 தனிப்படைகள் அமைத்து போலீசார் சில மணி நேரங்களிலேயே கைது செய்துள்ளனர்.</p><h2><strong>பின்னணி:</strong></h2><p>குஜராத் பல்கலைக்கழகத்தில் இன்டீரியர் டிசைனிங் பயின்று வரும் 23 வயது மாணவி ஒருவர், அகமதாபாத் ஆனந்த்நகர் பகுதியில் உள்ள பேயிங் கெஸ்ட் தங்கும் விடுதியில் தங்கியிருந்த போது, கடந்த சனிக்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் பெரும் பாதிப்புக்குள்ளான அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p><h2><strong>மொட்டை மாடியில் நடந்த கொடூரம்</strong></h2><p>மாணவி இரவு நேரத்தில் விடுதியின் மொட்டை மாடிக்கு நடைப்பயிற்சிக்காக சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த பாதுகாப்பு காவலர் தர்மசிங், மாணவியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். </p><p>இதனால் பயந்துபோன மாணவி அங்கிருந்து தப்பிக்க முயற்சிக்க, காவலர் அவரது கழுத்தில் கம்பியை மாட்டி பலமாக இறுக்கியுள்ளார். </p><p>இதனால் மாணவியால் சத்தம் போட முடியாமல் போனது. அதை சாதகமாக்கிக் கொண்டு அந்த நபர் மாணவியைக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.</p><h2><strong>மீட்பு மற்றும் மருத்துவ சிகிச்சை</strong></h2><p>தாக்குதலுக்குப் பின், குற்றவாளி தப்பியோடியதை அடுத்து மாணவி மாடியில் இருந்து சத்தம் போட்டு கீழே இருந்த குடியிருப்புவாசிகளை உதவிக்கு அழைத்துள்ளார். </p><p>பொதுமக்கள் மற்றும் விடுதி நிர்வாகத்தினர் உடனடியாக மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><h2><strong>10 தனிப்படைகள் மூலம் அதிரடி வேட்டை</strong></h2><p>இந்த சம்பவம் குறித்து ஆனந்த்நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படத்தை அடுத்து, <a href="https://www.maalaimalar.com/topic/ahmedabad">அகமதாபாத்</a> குற்றப்பிரிவு மற்றும் உள்ளூர் போலீசாரும் இணைந்து உடனடியாக 10 தனிப்படைகளை அமைத்து தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். </p><p>விடுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தபோது, குற்றவாளி லிப்ட் மூலமாக மாடிக்கு செல்லும் காட்சியும் பதிவாகி இருந்தது.</p><h2><strong>குற்றவாளி குறித்த அதிர்ச்சித் தகவல்</strong></h2><p>கைது செய்யப்பட்ட குற்றவாளி தர்மசிங், உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், அவர் அந்த தங்கும் விடுதியில் பாதுகாப்பு காவலராகச் பணியில் சேர்ந்து சில நாட்களே ஆகியுள்ளது என்பதும் விசாரணையில் வெளிவந்துள்ளது.</p><p>இந்த வழக்கில் பாதுகாப்பு காவலர்களை வேலைக்கு அமர்த்தும் ஏஜென்சியின் பின்னணி மற்றும் அவர்கள் முறையான பின்னணி சரிபார்ப்பு செய்தார்களா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>விவசாயிகளுக்கு அள்ளித் தருவார்கள் என பார்த்தால் கிள்ளித் தருகிறீர்கள்..!- தவெக அரசை சாடிய எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mrk-panneerselvam-says-dmk-promised-to-shower-benefits-on-farmers-but-pinches-them-instead</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mrk-panneerselvam-says-dmk-promised-to-shower-benefits-on-farmers-but-pinches-them-instead#comments</comments><guid isPermaLink="false">4a74e822-5ced-4aff-8bee-71ce56e2a5c4</guid><pubDate>Mon, 10 Aug 2026 06:01:55 +0000</pubDate><atom:updated>2026-08-10T06:01:55.352Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,TN assembly,tvk,எம்ஆர்கே பன்னீர்செல்வம் எம்எல்ஏ,தமிழக சட்டமன்ற கூட்டம்,MRK Paneerselvam</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/jdo70si7/MRK.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Bussy Anand- DMK MLA MRK Panner selvam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/jdo70si7/MRK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபை கூட்டம் விடுமுறைக்கு பின் இன்று கூடியது. அப்போது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றம் அரசு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் கொடுக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.</p><p>இந்த தீர்மானத்திற்கு திமுக, அதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.</p><h2>காரசார விவாதம்</h2><p>இதைதொடர்ந்து, சட்டமன்றத்தில் நெல், கரும்பிற்கான ஊக்கத்தொகை தொடர்பாக தவெக- திமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது.</p><p>அப்போது பேசிய திமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்," திமுக ஆட்சியின் 5 ஆண்டு காலத்தில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். திமுகவின் 5 ஆண்டு கால ஆட்சியில் விவசாயிகள் போராடவே இல்லை" என்றார்.</p><p>இதற்கு, பதிலடி கொடுத்த தவெக அமைச்சர் நிர்மல் குமார்,"5 ஆண்டுகால திமுக ஆட்சியில் விவசாயிகள் மீது குண்டாஸ் போட்டு போராட்டம் ஒடுக்கப்பட்டது" என்றார்.</p><h2>நாங்களும் பிஸிதான்</h2><p><strong>எம்ஆர்கே பன்னீர்செல்வம்:</strong> எந்த போராட்டம் என தெரியாமல் அமைச்சர் பேசுகிறார், அது சிப்காட் தொடர்பான போராட்டம்.</p><p>அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பிஸியாகவே இருக்கிறார். எங்கள் ஆட்சிக்காலத்தில் அமைச்சர்கள் டென்ஷனாகத்தான் இருப்போம், நீங்கள் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்.</p><p><strong>அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்:</strong>  நாங்களும் தினந்தோறும் டென்ஷனாகத்தான் இருக்கிறாம். வாய்க்கால் தகராறுக்கு கூட சரிசெய்துவிட்டீர்களா என இரவு பகல் பாராதுபோன் செய்கிறார் முதலமைச்சர் விஜய்.</p><p><strong>எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்:</strong> புதிய ஆட்சி அள்ளி தருவார்கள் என எதிர்பார்த்தனர் விவசாயிகள், ஆனால் கிள்ளி தருகிறீர்கள். அடுத்த ஜென்மத்தில் விவசாயியாக பிறக்க வேண்டும் என முதலமைச்சர் கூறியதால் விவசாயிகள் நம்பிவிட்டனர்.</p><p>திமுக இடைகால பட்ஜெட்டில் கரும்புக்கு ரூ.4000 கொடுப்போம் என கூறியிருந்தோம். </p><h2>விவசாய ஊக்கத்தொகை</h2><p>அமைச்சர் வினோத்: திமுக ஆட்சியில் தேர்தல் அறிக்கையில் சொன்னதுபோல் நெல்லுக்கு ரூ.2,500, கரும்பிற்கு ரூ.3500 உயர்த்தி தரவில்லை என்றும், விவசாயிகளுக்கான சிறப்பு ஊக்கத்தொகையை படிப்படியாக திமுக அரசு உயர்த்தியது. திமுக படிப்படியாக உயர்த்திய நிலையில் ஒரே ஆண்டில் இந்தளவுக்கு விவசாய ஊக்கத்தொகை உயர்த்தியது தவெக தான்.</p><p>எம்ஆர்கே பன்னீர்செல்வம்: திமுக ஆட்சியில் ரூ.19,500 கோடி கடன் தள்ளுபடி செய்தோம். ரூ.21 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்கிறோம் எனக்கூறிவிட்டு வெறும் ரூ.6000 கோடி மட்டுமே தள்ளுபடி செய்துள்ளீர்கள்.</p><p>விவசாயிகள் வாங்கிய ரூ.21,000 கோடி கடனை தவெக அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயக்கடன் முழு தள்ளுபடி என நாங்கள் சொல்லவில்லை, நீங்கள் தான் சொன்னீர்கள். எவ்வளவு கடன் தள்ளுபடி செய்ய முடியும் என்பது தெரிந்துதான் வாக்குறுதி அளிக்க வேண்டும்.</p><p>தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி 1.30 கோடி பெண்களுக்கு திமுக அரசு உரிமைத்தொகை கொடுத்தது. தவெக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை பட்ஜெட்டில் நிறைவேற்றவில்லை.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தேர்வு முறைகேடு: ஜார்க்கண்ட் சட்டமன்றம் நோக்கி மாணவர்கள் பேரணி.. முதல்வர் வீட்டை முற்றுகையிட முயன்ற எதிர்க்கட்சி தலைவர் கைது</title><link>https://www.maalaimalar.com/news/national/jharkhand-exam-scam-protest-students-march-to-assembly-breaking-barricades-demanding-cbi-probe-into-jpsc-jssc-irregularities</link><comments>https://www.maalaimalar.com/news/national/jharkhand-exam-scam-protest-students-march-to-assembly-breaking-barricades-demanding-cbi-probe-into-jpsc-jssc-irregularities#comments</comments><guid isPermaLink="false">a177da05-1eed-4f3b-bfa9-2ccc8d37d7ac</guid><pubDate>Mon, 10 Aug 2026 05:57:01 +0000</pubDate><atom:updated>2026-08-10T05:57:01.759Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Jharkhand,மாணவர்கள் போராட்டம்,ஜார்க்கண்ட்,Hemant Soren,தேர்வு முறைகேடு,Student protests,exam irregularities</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/xb1vrbkg/tn-9.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஜார்க்கண்ட் ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஜார்க்கண்ட் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/xb1vrbkg/tn-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/3-jharkhand-psc-members-resign-amid-paper-leak-protests">ஜார்க்கண்ட் அரசு தேர்வாணையம்</a> (JPSC) மற்றும் பணியாளர் தேர்வாணையம் (JSSC) நடத்திய அரசுத் தேர்வுகளில் பெரும் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, அம்மாநில மாணவர்கள் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக உண்ணாவிரதம் மற்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர். </p><h2>பேரணி </h2><p>இன்று ஜார்க்கண்ட் சட்டமன்றம் கூடும் நிலையில், மாணவர்கள் அறிவித்தபடி சட்டமன்றம் நோக்கி பேரணியை தொடங்கியுள்ளனர். </p><p>மத்திய படையினர், போலீசார் முன்னரே தயார் நிலையில் நிறுத்தப்பட்டு மாணவர்களை தடுக்க பேரிகேட் தடுப்புகள் நிறுவப்பட்டன.  </p><p>இந்நிலையில் ராஞ்சியில் உள்ள பழைய சட்டமன்றக் கட்டிடத்தில் இருந்து புதிய சட்டமன்றக் கட்டிடத்தை நோக்கிப் போராட்டத்தில் ஈடுபட்ட திரளான மாணவர்கள் பேரணியாகச் சென்றனர்.  </p><p>அப்போது காவல்துறை அமைத்திருந்த பாதுகாப்புத் தடுப்புகளை உடைத்துக் கொண்டு மாணவர்கள் முன்னேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. </p><p>அசம்பாவிதங்களைத் தடுக்கக் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.</p><p>இருப்பினும் மாணவர்கள் தடுப்புகளை தாண்டி பேரணியை தொடரும் முனைப்பில் அணுவகுத்து சென்று கொண்டிருக்கின்றனர். </p> <h2>எதிர்க்கட்சித் தலைவர் கைது</h2><p>இதனிடையே தேர்வு முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி, பாஜகவை சேர்ந்த ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான பாபுலால் மராண்டி ஆகியோர் தலைமையில் பாஜக தொண்டர்கள் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் இல்லத்தின் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>இதையடுத்து, முதல்வர் இல்லத்தின் வெளியே போராட்டம் நடத்திய பாபுலால் மராண்டி உள்ளிட்ட பாஜக தலைவர்களை மாநிலக் காவல்துறை கைது செய்து அப்புறப்படுத்தியது.</p> <h2>பாபுலால் குற்றச்சாட்டு</h2><p>மாணவர்கள் இரண்டு வாரங்களுக்கும் மேலாகத் தீவிரப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், ஜார்க்கண்ட் அரசு அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் தேவையின்றி காலந்தாழ்த்தி வருவதாக பாபுலால் மராண்டி சாடினார்.</p><p>JPSC, JSSC மற்றும் CGL தேர்வுகளில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற மாணவர்களின் முதன்மைக் கோரிக்கையை நிறைவேற்றாமல், மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே மாநில அரசு முயல்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.</p> <h2>பேச்சுவார்த்தை</h2><p>முன்னதாக போராட்டக்குழு பிரதிநிதிகளுடன் ஜார்கண்டின் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்தி மோச்சா அரசு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியது.</p><p>இதில் சர்ச்சைக்குரிய 14வது JPSC சிவில் சர்வீஸ் தேர்வை ரத்து செய்ய நேற்று உடன்பாடு எட்டப்பட்டது. மேலும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விரைவு நீதிமன்றம் மூலம் விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.</p><p>தொடர்ந்து JPSC ஆணையத்தின் மூன்று உறுப்பினர்களும் தங்கள் பதவிகளை நேற்று ராஜினாமா செய்தனர்.</p> <h2>தொடரும் போராட்டம்</h2><p>அரசு தங்கள் கோரிக்கைகளில் 98 சதவீதத்தை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்த போதிலும், மாணவர்கள் போராட்டத்தை திரும்பப் பெற மறுத்துவிட்டனர்.</p><p>மாநில அமைப்புகளின் விசாரணை மீது நம்பிக்கையில்லை என்றும், சிபிஐ மூலமே சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் மாணவர்கள் உறுதியாக உள்ளனர். JSSC-CGL தேர்வில் நடந்த முறைகேடுகளையும் கண்டித்து, அந்தத் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நெல், கரும்பு ஊக்கத்தொகை அதிகரிப்பு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-increase-in-incentive-payments-for-paddy-and-sugarcane</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-increase-in-incentive-payments-for-paddy-and-sugarcane#comments</comments><guid isPermaLink="false">b772a505-490a-4ce4-9260-556eb0e9b0e7</guid><pubDate>Mon, 10 Aug 2026 05:15:48 +0000</pubDate><atom:updated>2026-08-10T05:15:48.099Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/je1eqtza/vijay.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/je1eqtza/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மத்திய அரசு தரும் ஊக்கத்தொகையுடன் சேர்த்து ஒரு டன் கரும்புக்கான ஊக்கத்தொகையாக விவசாயிக்கு ரூ.4000 கிடைக்கும் என்று 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபையில்</a> இன்று கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானத்தை தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்து பேசினார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார். </p><p>இதையடுத்து, முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் பேசியதாவது:-</p><p>* நெல், கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். </p><p>* பொதுரக நெல்லுக்கான கொள்முதல் விலை ரூ.159 அதிகரித்து குவிண்டாலுக்கு ரூ.2,600 வழங்கப்படும். </p><p>* நெல் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் சன்னரக நெல்லுக்கு ரூ.2,750 வழங்கப்படும்.</p><p>* வரலாற்றிலேயே முதல் முறையாக நெல்லுக்கான ஊக்கத்தொகை ரூ.159 வரை உயர்த்தப்பட்டுள்ளது. </p><p>* கரும்புக்கான ஊக்கத்தொகையாக ஒரு டன்னுக்கு ரூ.709.50 வழங்கப்படும்.</p><p>* மத்திய அரசு தரும் ஊக்கத்தொகையுடன் சேர்த்து ஒரு டன் கரும்புக்கான ஊக்கத்தொகையாக விவசாயிக்கு ரூ.4000 கிடைக்கும். </p><p>* விவசாயிகளை நம் அரசு எப்போதும், விட்டுவிடாது, தோளோடு தோளாக ஆதரவாக இருப்போம் என்றார். </p>]]></content:encoded></item><item><title>தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் ஒலிக்கும்.. முதல்வரின் பெயர் சரித்திரத்தில் நிலைக்கும் - அமைச்சர் ராஜ்மோகன் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-thai-vazhthu-resolution-tamil-nadu-assembly-declares-anthem-as-global-mother-tribute</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-thai-vazhthu-resolution-tamil-nadu-assembly-declares-anthem-as-global-mother-tribute#comments</comments><guid isPermaLink="false">1a4e4bef-753b-4c49-8b8c-f6d74f3ba8de</guid><pubDate>Mon, 10 Aug 2026 05:14:18 +0000</pubDate><atom:updated>2026-08-10T05:14:18.545Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>rajmohan,தமிழ்த்தாய் வாழ்த்து,Tamil Thai Vazhthu,ராஜ்மோகன்,தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர்,Tamil Nadu Legislative Assembly session</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/lm6lrc53/tn-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராஜ்மோகன், விஜய் ]]></media:title><media:description type="html"><![CDATA[ ராஜ்மோகன், விஜய் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/lm6lrc53/tn-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இன்று (ஆகஸ்ட் 10) தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் கூட்டத்தில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-means-swagger-and-power-cm-vijay-speaks-on-the-resolution-regarding-the-tamil-thai-vazhthu">தமிழ்த்தாய் வாழ்த்து</a> தொடர்பாக அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.</p><h2>ராஜ்மோகன் பேச்சு </h2><p>இந்த தீர்மானத்தின் மீது பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், </p><p>தாயே தமிழே வணக்கம். தாய்ப் பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும். உலகில் உள்ளவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தாய் மொழியில் பெயர் வைப்பார்கள். ஆனால் தாய் மொழியையே பெயராக வைக்கக்கூடிய கூட்டம் இந்த தமிழ் கூட்டம். </p><p>தமிழரசன், தமிழழகன், தமிழழகி என மொழியின் பெயரையே தங்கள் பிள்ளைகளுக்கு வைத்து அழகுப் பார்க்கக்கூடிய கூட்டம் நம் தமிழ்க்கூட்டம். இந்த கூட்டம் தமிழ் தாயை வாழ்த்தும் பாடல் தான் தமிழ்த்தாய் வாழ்த்து. </p> <h2>தமிழ்த்தாய் வாழ்த்து</h2><p>ஆனால் இது தமிழ்த்தாய்க்கான வாழ்த்து மட்டுமல்ல. இந்த பூமித்தாயை வாழ்த்தும் வாழ்த்து. இந்த நிலம், நிலத்தை சுற்றி கடல், அந்த நீல நிற கடலை புடவையாக சுற்றியிருக்கிறாளாம் பூமித்தாய். 'நீராரும் கடலுடுத்த நிலமடந்தை'. அந்த பூமித்தாய்க்கு ஒரு அழகான முகம். 'சீராரும் வதனமென' வதனம் என்றால் முகம். அந்த சீராரும் வதனம் எதுவென்று பார்த்தால் அது 'திகழ்பரத கண்டமெனில்' இந்த பூமித்தாயின் முகம் பாரதத்தாய், அவளுக்கு சிறு பிறை போன்ற நெற்றி, அது இந்த தென்னிந்தியா, அந்த நெற்றிக்கு அழகு அதில் வைக்கிற ஒரு பொட்டு.</p><p>அது இந்த தமிழ்நாடு என்கிற தாய். அந்த பொட்டு நெற்றிக்கு மட்டுமா, அது வாசமும் தருகிறது. எட்டுத் திக்கும் மணமாக வீசுகிறது. அப்படி எட்டுத் திக்கும் புகழோடு இருப்பவள் தமிழ்த் தாய். இத்தனை காலங்கள் இருந்தால் தாய்க்கு வயதாகும் தானே.</p><h2>உலகத் தாய் வாழ்த்து</h2><p>ஆனால் இத்தனாயிரம் ஆண்டுகள் வளர்ந்த பின்னும் நீ எப்படி இன்னும் இளமையாக இருக்கிறாய்! உன் இளமையை வாழ்த்துகிறேன் என்று, தமிழை, தமிழ்நாட்டை வாழ்த்தி, தென்னிந்தியாவை சொல்லி, பாரத்தாயை வாழ்த்தி, உலகத் தாயையே வாழ்த்தும் இந்த தமிழ்த்தாய் வாழ்த்தை உலகத் தாய் வாழ்த்து என்று சொல்வதில் பெருமிதம் கொள்கிறேன்.</p><p>இருகரம் கூப்பி வணங்கி வாழ்த்துகிறேன். இனி பொது நிகழ்ச்சிகளில், கல்வி நிலையங்களில், எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ, அங்கெல்லாம் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே முதலில் ஒலிக்கும். அதற்காக தீர்மானம் நிறைவேற்றியவர் என்ற சரித்திரத்தில் முதல்வரின் பெயரே நிலைக்கும். அவரை வாழ்த்தி இந்த தீர்மானத்தை வரவேற்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY: வார தொடக்கத்தில் சற்றே குறைந்த தங்கம் விலை</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-today-slight-decline-in-gold-rates-at-start-of-week</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-today-slight-decline-in-gold-rates-at-start-of-week#comments</comments><guid isPermaLink="false">9a767e57-8284-4d6d-bb18-d5a7ccc4dd4f</guid><pubDate>Mon, 10 Aug 2026 05:11:44 +0000</pubDate><atom:updated>2026-08-10T05:11:44.058Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>gold rate,தங்கம் விலை குறைவு,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,todays gold rate,Gold rate reduce</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/4p4ps8ss/Gold.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold Jewellery]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/4p4ps8ss/Gold.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றத்துடன் காணப்படுகிறது. கடந்த வாரம் 3-ந்தேதி சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,06,000-க்கும், கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.13,250-க்கும் விற்பனையானது. 4-ந்தேதி சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,05,600-க்கும், கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.13,200-க்கு விற்பனையானது.</p><p>5-ந்தேதி காலை சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ரூ.1,06,880-க்கும், கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.13,360-க்கும் விற்பனையான நிலையில் மீண்டும் மாலையில் சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.1,07,840-க்கும் கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.13,480 விற்பனையானது. 6-ந்தேதி சவரனுக்கு ரூ.2,160 உயர்ந்து ரூ.1,10,000-க்கும், கிராமுக்கு ரூ.270 உயர்ந்து ரூ.13,750-க்கும் விற்பனையானது. </p><p>7-ந்தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 900-க்கும், சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து,  ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 200-க்கும் விற்பனையானது. 8-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.1,11,720-க்கும், கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.13,965-க்கு விற்பனையானது. நேற்று ஒரு சவரன் ரூ.1,11,720-க்கும், ஒரு கிராம் ரூ.13,965-க்கும் விற்பனையானது.</p><h2>தங்கம் விலை</h2><p>இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.1,11,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.13,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><h2>வெள்ளி விலை நிலவரம்</h2><p>வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி விலை ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><h2>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-</h2><p>09-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,720</p><p>08-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,720</p><p>07-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,200</p><p>06-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,10,000</p><p>05-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,07,840</p><h2>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-</h2><p>09-08-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>08-08-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>07-08-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>06-08-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>05-08-2026- ஒரு கிராம் ரூ.240</p>]]></content:encoded></item><item><title>தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முதலிடம்- தனித்தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/priority-for-tamil-thai-vazhthu-special-resolution-passed-unanimously</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/priority-for-tamil-thai-vazhthu-special-resolution-passed-unanimously#comments</comments><guid isPermaLink="false">ce930b5d-9641-47c1-afcf-c32f7e2359a3</guid><pubDate>Mon, 10 Aug 2026 04:58:42 +0000</pubDate><atom:updated>2026-08-10T04:58:42.444Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly,தமிழ்த்தாய் வாழ்த்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/xak7c49c/JCDPrabhakar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்]]></media:title><media:description type="html"><![CDATA[ சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/xak7c49c/JCDPrabhakar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார்.</strong></em> </p><h2><strong>தனித்தீர்மானம்</strong></h2><p>தமிழக சட்டசபை கூட்டம் விடுமுறைக்கு பின் இன்று கூடியது. அப்போது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றம் அரசு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் <a href="https://www.maalaimalar.com/topic/தமிழ்த்தாய்-வாழ்த்து">தமிழ்த்தாய் வாழ்த்துக்கு</a> முதலிடம் கொடுக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். தனித்தீர்மானத்தை கொண்டு வந்த போது முதலமைச்சர் விஜய் பேசியதாவது:-</p><p>இந்தியாவின் நெற்றியில் இருக்கும் பொட்டு தான் தமிழ் மொழி; தமிழும் தமிழனும் இல்லாத நாடு ஏது?. தமிழ் ஒரு சிந்தனை, தமிழ் அன்பு... தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் பவர்.  ஒரு பெயரே ஒரு சொல்லே வரலாறு என்றால் அது தமிழ்தான். தமிழ் நமது நாகரிகம், பண்பாடு ஒட்டு மொத்த உயிர் மூச்சு.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்தின் பெருமையை பாதுகாப்பதில் தவெக அரசு சமரசம் செய்யாது. தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என்று கூறுவது அரசியல் சார்ந்த விவாதமாக மாற வேண்டிய அவசியம் இல்லை. கட்சி வேறுபாடுகளை கடந்து ஒன்றிணைந்து அனைத்து உறுப்பினர்களும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று பேசினார். </p><h2><strong>ஆதரவு</strong></h2><p>இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து பேசினார். </p><p>இதையடுத்து முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>தமிழ்த்தாய் வாழ்த்து தனித் தீர்மானம் தமிழர் அடையாளத்தை உலகுக்கு பறைசாற்றும்- வன்னி அரசு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-thai-vazhthu-standalone-resolution-to-project-tamil-identity-worldwide-vanni-arasu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-thai-vazhthu-standalone-resolution-to-project-tamil-identity-worldwide-vanni-arasu#comments</comments><guid isPermaLink="false">5c491c1c-0b27-4526-80a0-68f289d1cc1a</guid><pubDate>Mon, 10 Aug 2026 04:55:07 +0000</pubDate><atom:updated>2026-08-10T04:55:07.517Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>resolution passed,தனித்தீர்மானம்,vanni arasu,தமிழ்த்தாய் வாழ்த்து,வன்னி அரசு,Tamilthai vaazhthu</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/649rkbts/vanni-arasu.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Vanni Arasu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/649rkbts/vanni-arasu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து தனித் தீர்மானத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளித்துள்ளது.</p><p>தமிழக சட்டசபை கூட்டம் விடுமுறைக்கு பின் இன்று கூடியது. அப்போது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றம் அரசு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் கொடுக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.</p><p>இந்நிலையில், சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து தனித் தீர்மானத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளிப்பதாக அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-</p><p>முதலமைச்சர் கொண்டு வந்த தமிழ்த்தாய் வாழ்த்து தனித் தீர்மானம் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம்.</p><p>ஒரே நாடு, ஒரே மொழி என்பதற்காக தேசிய இனங்களின் அடையாளங்களை அழிக்க முயற்சி நடைபெற்று வருகிறது.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்து தனித் தீர்மானம் தமிழர் அடையாளத்தை உலகுக்கு பறைசாற்றும் விதமாக உள்ளது.</p><p>இந்து, இந்தி, இந்து ராஷ்டிரியம் என்ற போக்கை எதிர்க்கும் விதமான இந்த தீர்மானத்திற்கு விசிக தரப்பில் ஆதரவு.</p><p>தீர்மானம் குறித்து முதலமைச்சர் பேசியபோது ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் மட்டுமே அதிகமாக கைதட்டி வரவேற்றனர்.</p><p>தனித்தீர்மானம் தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து என்பதால் எதிர்க்கட்சி தரப்புமே கைதட்டி வரவேற்கலாமே..</p><p>தமிழ்தேசியமும், திராவிடமும் ஒன்றென சொல்லும் அபாய சூழலில் தமிழ்த்தாய் வாழ்த்து தனித்தீர்மானம் சிறப்புக்குரியது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முதலிடம்: நாம் அனைவரும் ஒரே குரலாக இருக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி பேச்சு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/priority-for-tamil-thai-vazhthu-admk-supports-the-special-resolution</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/priority-for-tamil-thai-vazhthu-admk-supports-the-special-resolution#comments</comments><guid isPermaLink="false">daa3a564-d614-44a4-8b2e-a08543736a1e</guid><pubDate>Mon, 10 Aug 2026 04:50:16 +0000</pubDate><atom:updated>2026-08-10T04:50:16.356Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,ADMK,Edappadi Palaniswami,அதிமுக,எடப்பாடி பழனிசாமி,vijay,தமிழக சட்டசபை,TN assembly,தமிழ்த்தாய் வாழ்த்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/d8wyciot/EPS.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி பேசியபோது எடுத்த படம்.]]></media:title><media:description type="html"><![CDATA[ சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி பேசியபோது எடுத்த படம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/d8wyciot/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்த்தாய் வாழ்த்து தனித்தீர்மானத்திற்கு அ.தி.மு.க. ஆதரவளிப்பதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  கூறினார்.</strong></em> </p><p>தமிழக சட்டசபை கூட்டம் விடுமுறைக்கு பின் இன்று கூடியது. அப்போது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றம் அரசு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">தமிழ்த்தாய் வாழ்த்துக்கு</a> முதலிடம் கொடுக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். </p><p>முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு தி.மு.க. ஆதரவு தெரிவித்தது. இதுதொடர்பாக தி.மு.க., எம்.எல்.ஏ கோவி. செழியன் தனித்தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/priority-for-tamil-thai-vazhthu-dmk-supports-the-special-resolution">தி.மு.க. வை</a> தொடர்ந்து அ.தி.மு.க.வும் தனித்தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தது. இதுதொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,  </p><h2><strong>தமிழர்கள் உணர்வு</strong></h2><p>தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தமிழ் மொழியின் தொன்மை, பண்பாட்டின் அடையாளம். 1981-ல் மதுரையில் 5-வது தமிழ் மாநாட்டை நடத்தியவர் எம்ஜிஆர். தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனம், அரசு நிறுவனங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்படுவது தமிழர்கள் உணர்வு. தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது நமது தாய்மொழிக்கான மரியாதை; யாருக்கும் எதிரான நடவடிக்கை அல்ல. தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தமிழன்னைக்கான மரியாதை. தமிழுக்கு நாம் செலுத்தும் மரியாதை, தேசப்பற்றும் மொழிப்பற்றும் ஒன்றுக்கொன்று எதிரானது அல்ல. இந்தியர் என்பதில் நாம் பெருமை அடைகிறோம், தமிழர் என்பதில் அதே அளவுக்கு பெருமை அடைகிறோம். அரசியலில் நமக்கு கருத்து வேறுபாடு இருக்கலாம், தமிழ் என்று வரும் போது நாம் அனைவரும் ஒரே குரலாக இருக்க வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்து தனித்தீர்மானத்திற்கு அ.தி.மு.க. ஆதரவளிப்பதாக கூறினார்.</p><p>முன்னதாக, தனித்தீர்மானத்தை கொண்டு வந்த போது முதலமைச்சர் விஜய் பேசியதாவது:-</p><p>இந்தியாவின் நெற்றியில் இருக்கும் பொட்டு தான் தமிழ் மொழி; தமிழும் தமிழனும் இல்லாத நாடு ஏது?. தமிழ் ஒரு சிந்தனை, தமிழ் அன்பு... தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் பவர்.  ஒரு பெயரே ஒரு சொல்லே வரலாறு என்றால் அது தமிழ்தான். தமிழ் நமது நாகரிகம், பண்பாடு ஒட்டு மொத்த உயிர் மூச்சு.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்தின் பெருமையை பாதுகாப்பதில் தவெக அரசு சமரசம் செய்யாது. தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என்று கூறுவது அரசியல் சார்ந்த விவாதமாக மாற வேண்டிய அவசியம் இல்லை. கட்சி வேறுபாடுகளை கடந்து ஒன்றிணைந்து அனைத்து உறுப்பினர்களும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று பேசினார். </p>]]></content:encoded></item><item><title>தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முதலிடம்- தனித்தீர்மானத்திற்கு தி.மு.க. ஆதரவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/priority-for-tamil-thai-vazhthu-dmk-supports-the-special-resolution</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/priority-for-tamil-thai-vazhthu-dmk-supports-the-special-resolution#comments</comments><guid isPermaLink="false">b14f4880-7d05-4252-b173-47cce55749a9</guid><pubDate>Mon, 10 Aug 2026 04:33:44 +0000</pubDate><atom:updated>2026-08-10T04:33:44.710Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly,தமிழ்த்தாய் வாழ்த்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/931z5mim/DMK.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தி.மு.க., எம்.எல்.ஏ கோவி. செழியன் ]]></media:title><media:description type="html"><![CDATA[ தி.மு.க., எம்.எல்.ஏ கோவி. செழியன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/931z5mim/DMK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சட்டசபையில் முதலமைச்சர் கொண்டு வந்த தமிழ்த்தாய் வாழ்த்து தனித்தீர்மானத்திற்கு தி.மு.க. ஆதரவு அளிக்கிறது என்றார்.</strong></em> </p><p>தமிழக சட்டசபை கூட்டம் விடுமுறைக்கு பின் இன்று கூடியது. அப்போது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றம் அரசு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">தமிழ்த்தாய் வாழ்த்துக்கு</a> முதலிடம் கொடுக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். தனித்தீர்மானத்தை கொண்டு வந்த போது முதலமைச்சர் விஜய் பேசியதாவது:-</p><p>இந்தியாவின் நெற்றியில் இருக்கும் பொட்டு தான் தமிழ் மொழி; தமிழும் தமிழனும் இல்லாத நாடு ஏது?. தமிழ் ஒரு சிந்தனை, தமிழ் அன்பு... தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் பவர்.  ஒரு பெயரே ஒரு சொல்லே வரலாறு என்றால் அது தமிழ்தான். <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-means-swagger-and-power-cm-vijay-speaks-on-the-resolution-regarding-the-tamil-thai-vazhthu">தமிழ்</a> நமது நாகரிகம், பண்பாடு ஒட்டு மொத்த உயிர் மூச்சு.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்தின் பெருமையை பாதுகாப்பதில் தவெக அரசு சமரசம் செய்யாது. தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என்று கூறுவது அரசியல் சார்ந்த விவாதமாக மாற வேண்டிய அவசியம் இல்லை. கட்சி வேறுபாடுகளை கடந்து ஒன்றிணைந்து அனைத்து உறுப்பினர்களும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று பேசினார். </p><p>இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு தி.மு.க. ஆதரவு தெரிவித்தது. இதுதொடர்பாக தி.மு.க., எம்.எல்.ஏ கோவி. செழியன் பேசுகையில், </p><p>சட்டசபையில் முதலமைச்சர் கொண்டு வந்த தமிழ்த்தாய் வாழ்த்து தனித்தீர்மானத்திற்கு தி.மு.க. ஆதரவு அளிக்கிறது. தமிழ்தாய் வாழ்த்திற்கு 3-ம் இடம் என்று சொல்லும் போது அவமானமாக இருக்கிறது. தமிழ் மொழியை தேசிய மொழியாக்கி செம்மொழியாக்கியவர் கலைஞர் கருணாநிதி. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அரசு அலுவலகங்களில் பாட அரசாணை வெளியிட்டவர் கலைஞர். தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றியவர் பெயரிலான பல்கலையில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்டது வேதனை. தமிழ்த்தாய் விவகாரத்தில சட்டம் இயற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். </p>]]></content:encoded></item></channel></rss>