<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 23 Jul 2026 07:23:33 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-23-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-23-july-2026#comments</comments><guid isPermaLink="false">e797383a-6bd9-4d05-9425-4f0d2f466313</guid><pubDate>Thu, 23 Jul 2026 04:50:50 +0000</pubDate><atom:updated>2026-07-23T07:21:57.172Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/ewiqj4ir/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/ewiqj4ir/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/parks-and-car-parking-facilities-under-flyovers-in-chennai-city">சென்னை மாநகரில் உள்ள மேம்பாலங்களின் கீழ் பகுதிகளில் பூங்காக்கள்- கார் பார்க்கிங் வசதி: மாநகராட்சி திட்டம்</a></p><p>* சிவானந்தா சாலையில் உள்ள பறக்கும் ரெயில் பாலத்தின் கீழே விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய சிறுவர் பூங்கா அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.</p><p>* வடக்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் 20 மின்சார வாகன சார்ஜிங் மையங்களும், பொதுக் கழிப்பறைகளும் கட்டப்பட உள்ளன.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/express-trains-will-be-operated-from-tambaram-starting-in-august">எழும்பூரில் 3-வது கட்ட மறுசீரமைப்பு பணி: எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆகஸ்டு முதல் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகிறது</a></p><p>* மறுசீரமைப்பு பணிகள் தொடங்கும்போது புறநகர் மின்சார ரெயில் சேவை பாதிக்காமல் வேறு நடைமேடைக்கு மாற்ற வேண்டி உள்ளது. </p><p>* புறநகர் மின்சார ரெயில்  சேவையில் பாதிப்பு ஏற்படாமல் ரெயில்களை இயக்குவது குறித்து ஏற்கனவே ஆலோசிக்கப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/rising-covid-19-infections-in-andhra-pradesh">ஆந்திராவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று - 32 பேர் பாதிப்பு</a></p><p>* கொரோனா தொற்று பாதித்து சிகிச்சையில் இருந்த 4 பேர் இறந்தனர். </p><p>* விசாகப்பட்டினம், ராஜ முந்திரியில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. </p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-announced-condemnation-protest-in-parangipettai-on-29th">பரங்கிப்பேட்டையில் 29-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு</a></p><p>* கடலூர் மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது.</p><p>* கடலில் கிணறுகள் அமைக்க இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் அனுமதி கோரியுள்ளது.&nbsp;</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/hyderabad-conjoined-twins-face-hurdles-in-taking-bank-exam">ஐதராபாத்தில் தலை ஒட்டி பிறந்த சகோதரிகள் வங்கி தேர்வு எழுதுவதில் சிக்கல்</a></p><p>* ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் வீணா, வாணி. தலை ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள். </p><p>* இரட்டையர்கள் பாரத ஸ்டேட் வங்கியின் பயிற்சி அதிகாரி பணிகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். </p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/us-iran-conflict-trump-warns-of-strikes-on-iran-bridges-and-power-plants-over-hormuz-attacks">ஹார்முஸில் கப்பல்களை தாக்கினால் ஈரானின் பாலங்கள், மின் நிலையங்கள் தகர்க்கப்படும் - டிரம்ப் புது எச்சரிக்கை</a></p><p>*கடந்த 11 நாட்களில் அமெரிக்க தாக்குதல்களால் 53 பேர் உயிரிழந்துள்ளனர்</p><p>*ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் தொடர்ச்சியாக 12வது இரவாக நேற்றிரவு நீடித்தது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protests-anna-hazare-urges-pm-modi-seeks-ministerial-accountability">அமைச்சர் ராஜினாமா செய்வதால் அரசு பலவீனமடையாது - பிரதமர் மோடிக்கு அண்ணா ஹசாரே கடிதம்</a></p><p>*இதுவரை 22 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர் என்பது மிகுந்த வேதனையளிக்கிறது.</p><p>*இதனை வெறும் சட்டஒழுங்கு பிரச்சனையாக அரசு அணுகக் கூடாது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-delhi-violence-raf-woman-officers-cockroach-remark-sparks-outrage">போராடும் இளைஞர்களை கிண்டலடித்த அதிரடிப்படை பெண் அதிகாரிக்கு குவியும் கண்டனம்.. பெண்கள் மீதான தாக்குதலை எப்படி நியாப்படுத்தலாம்? என கேள்வி</a></p><p>*ஒரு பெண்ணாக இருந்துகொண்டு, பெண் போராட்டக்காரர்கள் மீது ஆண்கள் நடத்தும் கொடூரத் தாக்குதலை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?</p><p>* தங்களைத்தானே திருத்திக்கொள்ள முடியாது; அவர்கள் நாட்டைத் திருத்த வருகிறார்களாம்</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-fast-track-court-plan-opposed-by-cockroach-janata-party" rel="nofollow">பிரதமர் மோடியின் அறிவிப்பை நிராகரித்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி</a></p><p>* இளைஞர் நலன் மற்றும் எதிர்காலத்தைவிட முக்கியமானது எதுவும் இல்லை.</p><p>* வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றமிழைத்த அனைவரும் தண்டிக்கப்படுவர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-dmk-is-poised-to-take-up-the-fight-against-neet">நீட்டுக்கு எதிராக தி.மு.க. வாள் தூக்கி நிற்கும்- உதயநிதி ஸ்டாலின்</a></p><p>* அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக் கனவைச் சிதைப்பதே நீட் போன்ற நுழைவுத்தேர்வுகளின் உண்மையான நோக்கம்! </p><p>* தடையை உடைப்பதற்கான படையாக திமுக என்றைக்கும் முன் வரிசையில் வாள் தூக்கி நிற்கும் என்று கூறியுள்ளார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-slams-pm-modi-for-ruining-youths-future" rel="nofollow">இளைஞர்களின் எதிர்காலத்தை மிக அதிகமாக சீர்குலைத்தவர் பிரதமர் மோடி..!- ராகுல் காந்தி</a></p><p>* கல்வி முறையை அழிப்பவர்களை பாதுகாத்து அவர்களை ஊக்குவித்தவர் பிரதமர் மோடி.</p><p>*மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-23-07-2026">GOLD PRICE TODAY: தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.13,500-க்கு விற்பனையாகிறது.</p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-its-time-to-abolish-neet">நீட் தேர்வை ஒழிக்க வேண்டிய நேரம் இது - மு.க.ஸ்டாலின் </a></p><p>* நீட் தேர்வு கற்றலின் மையத்தை பள்ளிகளில் இருந்து பயிற்சி மையங்களுக்கு மாற்றி உள்ளது.</p><p>* நீட் தேர்வின் பிரச்சனை எப்போதுமே நடைமுறை சார்ந்தது மட்டுமல்ல, அது கட்டமைப்பு ரீதியானது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-says-fast-track-courts-to-ensure-swift-and-stringent-punishment-for-those-involved-in-paper-leaks">வினாத்தாள் கசிவு விவகாரம்: விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்படும் - பிரதமர் மோடி</a></p><p>* இளைஞர் நலன் மற்றும் எதிர்காலத்தைவிட முக்கியமானது எதுவும் இல்லை.</p><p>* வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றமிழைத்த அனைவரும் தண்டிக்கப்படுவர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/japan-selling-human-refrigerator-for-heat-relief">அப்பாடா... வந்துவிட்டது... மனிதர்களுக்கான 'பிரிட்ஜ்' -  உடல் வெப்பநிலையை 10 நிமிடங்களில் குறைக்கும்</a></p><p>* உடல் அளவுக்கு அதிகமாக குளிருவதை தடுக்க 20 நிமிடங்களில் இது தானாகவே இயங்குவதை நிறுத்திவிடும். </p><p>* சாதாரண ஏ.சி.க்களை விட பாதியளவு மட்டுமே மின்சாரத்தை பயன்படுத்துகிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tenders-for-perunthalaivar-kamarajar-breakfast-scheme">பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்திற்கு டெண்டர் கோரியது நகராட்சி நிர்வாக துறை</a></p><p>* த.வெ.க. அரசு, முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்துள்ளது.</p><p>* முதலமைச்சரின் காலை உணவு திட்டத்துக்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/after-mgr-an-actors-film-releasing-after-becoming-chief-minister-history-created-by-vijay">எம்ஜிஆருக்கு பிறகு... முதலமைச்சரான பின் வெளியாகும் நடிகரின் படம் - விஜய் படைத்த வரலாறு</a></p><p>* தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் இன்றைய வெளியீட்டை திருவிழாவாக கொண்டாடினர். </p><p>* இன்று வெளியாகி உள்ள திரைப்படத்தை நேற்று இரவே கொண்டாடத் தொடங்கிய விஜய் ரசிகர்கள், சென்னை நகரின் முக்கிய திரையரங்குகளை உற்சாகத்தின் உச்சத்துக்கு கொண்டு சென்றனர். </p><p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/jana-nayagan-movie-release-across-tamilnadu">வெளியானது ‘ஜன நாயகன்’... ஆரவாரத்தில் ரசிகர்கள்</a></p><p>* ‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்’ என்ற டைட்டில் காடுடன் படம் வெளியானது.</p><p>* திரைப்பிரபலங்கள் பலரும் ‘ஜன நாயகன்’ படத்தை காண திரையரங்கிற்கு வருகை தந்தனர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-indictment-congress">நீட்டுக்கு எதிராக காங்கிரஸ் போராடுவது கேலிக்கூத்து- டிடிவி தினகரன்</a></p><p>* பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் போராட்டம் நடத்திய ராகுல்காந்தியை கைது செய்திருப்பது ஜனநாயகப் படுகொலை என கூறுவது முன்பின் முரணாக தெரியவில்லையா ?</p><p>* மாணவ, மாணவியர்களின் நலனை காக்கும் போராட்டம் அல்ல என்பதை நாட்டு மக்கள் அனைவரும் நன்கு அறிவர் என்பதை இந்நேரத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.</p> ]]></content:encoded></item><item><title>மெரினா கடற்கரையில் போலீசார் குவிப்பு - சோதனைக்கு பின்னரே மக்கள் அனுமதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/heavy-security-at-marina-beach</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/heavy-security-at-marina-beach#comments</comments><guid isPermaLink="false">1a104067-af83-4991-865e-3d6346655e05</guid><pubDate>Thu, 23 Jul 2026 07:23:21 +0000</pubDate><atom:updated>2026-07-23T07:23:21.053Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Marina Beach,மெரினா கடற்கரை,நீட் தேர்வு,Neet exam,CJP Protest,நீட் தேர்வு வினாத்தாள் கசிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/xafj5noq/marina.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மெரினா கடற்கரை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/xafj5noq/marina.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நீட் முறைகேடு விவகாரத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரினா கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.</strong></em></p><h2>நீட் வினாத்தாள் கசிவு</h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-dmk-is-poised-to-take-up-the-fight-against-neet">நீட்</a> வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த மாதம் 20-ந் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்திரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களிடம் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது.</p> <h2>மாணவர்கள் போராட்டம்</h2><p>கடந்த 20-ந்தேதி போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம் நோக்கி நடத்திய பேரணி பெரிய வன்முறையில் முடிந்தது. இந்த விவகாரத்தை முன்னெடுத்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரசார் நடத்திய போராட்டம் பா.ஜ.க.வுக்கு பெரிய சவாலாக அமைந்தது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>இந்நிலையில் மெரினா கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.</p><p>சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த இருப்பதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவியது. </p> <h2>போலீசார் குவிப்பு</h2><p>இதையடுத்து மெரினா கடற்கரை பகுதியில் 2 துணை ஆணையர் தலைமையில் 300 காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.</p><p>மெரினா செல்லும் மக்கள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். பீக் ஹவர்ஸில் மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. </p><p>மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் தவிர்த்து வேறு யாரும் செல்கிறார்களா? என்று போலீசார் கண்காணித்து வருகின்றனர். போராட்டக்காரர்கள் மெரினாவிற்குள் சென்று விடக்கூடாது என்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சான் டியேகோ காமிக்-கானில் &apos;ராமாயணம்&apos; டிரெய்லர் வெளியீடு: இந்தியாவில்  ரிலீஸ் எப்போது?</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ramayanam-trailer-unveiled-at-san-diego-comic-con-india-release-date</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ramayanam-trailer-unveiled-at-san-diego-comic-con-india-release-date#comments</comments><guid isPermaLink="false">bf806a15-cb43-4532-a3e6-30147fca9ec8</guid><pubDate>Thu, 23 Jul 2026 07:20:10 +0000</pubDate><atom:updated>2026-07-23T07:20:10.201Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sai Pallavi,சாய் பல்லவி,Ramayana,ரன்பீர் கபூர்,Ranbir Kapoor,ராமாயணம்,San Diego Comic-Con,சான் டியேகோ காமிக்-கான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/ydgq3vvq/ranbeer.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ranbir Kapoor  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/ydgq3vvq/ranbeer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் மிகப்பிரம்மாண்ட காவியத் திரைப்படமான 'ராமாயணம்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டிற்கான அதிகாரப்பூர்வ விவரங்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படத்தின் டிரெய்லர், அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் புகழ்பெற்ற 'சான் டியேகோ காமிக்-கான்'நிகழ்ச்சியில் முதலில் திரையிடப்படவுள்ளது.</p><h2><strong>சான் டியேகோ காமிக்-கானில் சிறப்புத் திரையிடல்:</strong></h2><p>அமெரிக்காவின் சான் டியேகோ நகரில் நடைபெறும் இந்த சர்வதேசப் பாப் கலாச்சார விழாவில், 4,800 பேர் அமரக்கூடிய 'பால்ரூம் 20' அரங்கில் 'ராமாயணம்' குழுவின் சிறப்புப் பேனல் நடைபெறவுள்ளது.</p><p>இந்த நிகழ்ச்சியில், நடிகர்கள் ரன்பீர் கபூர், யாஷ், இயக்குநர் நிதேஷ் திவாரி, தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா ஆகியோர் நேரடியாகப் பங்கேற்கின்றனர். உலகளாவிய பார்வையாளர்களுக்கு இந்திய இதிகாசத்தை எடுத்துரைப்பது, படத்தின் பிரம்மாண்ட உருவாக்க முறை மற்றும் கதாபாத்திர வடிவமைப்பு குறித்து இக்குழுவினர் கலந்துரையாடவுள்ளனர்.</p><h2><strong>இந்தியாவில் டிரெய்லர் வெளியாகும் தேதி மற்றும் நேரம்:</strong></h2><p>காமிக்-கான் நிகழ்வில் சிறப்புப் பதிப்பு திரையிடப்பட்ட பிறகு, நாளை (ஜூலை 24) அன்று உலகளவில் இத்திரைப்படத்தின் டிரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியாகும். நாளை காலை 8:00 மணி முதல் 10:00 மணிக்குள்ளாக அனைத்து டிஜிட்டல் தளங்கள் மற்றும் திரையரங்குகளில் டிரெய்லர் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.</p><h2><strong>AI தொழில்நுட்பத்துடன் ஆங்கில பதிப்பு:</strong></h2><p>உலகளாவிய சந்தையைக் கவரும் வகையில், காமிக்-கான் நிகழ்வில் இத்திரைப்படத்தின் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்ட டிரெய்லர் திரையிடப்படுகிறது. இதில் சர்வதேச பார்வையாளர்களுக்கு ஏற்றவாறு, நடிகர்களின் உதட்டசைவை சரியாகப் பொருத்துவதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><h2><strong>பிரம்மாண்ட நட்சத்திரப் பட்டாளம்:</strong></h2><p>இந்திய சினிமா வரலாற்றிலேயே மிகப்பிரம்மாண்டமான நட்சத்திரப் பட்டாளம் இத்திரைப்படத்தில் இணைந்துள்ளது. இப்படத்தில் ஸ்ரீ ராமராக ரன்பீர் கபூர், சீதா தேவியாக சாய் பல்லவி, இராவணனாக யாஷ், அனுமனாக சன்னி தியோல், லக்ஷ்மணனாக  ரவி துபே, மண்டோதரியாக காஜல் அகர்வால் என பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இப்படத்தில் இணைந்துள்ளது ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை  ஏற்படுத்தியுள்ளது. இவர்களுடன் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து படத்திற்கு இசையமைக்கின்றனர்.</p><h2><strong>படத்தின் கதைக்களம் &amp; ரிலீஸ் தேதி:</strong></h2><p>தர்மம், தியாகம் மற்றும் கடமையை மையமாகக் கொண்ட ஸ்ரீ ராமருக்கும், பேரரசும் பேராற்றலும் கொண்ட இராவணனுக்கும் இடையேயான பிரம்மாண்ட மோதலை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படம்  தீபாவளி பண்டிகையை ஒட்டி (நவம்பர் 8, 2026)உலகமெங்கும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை மாநகரில் உள்ள மேம்பாலங்களின் கீழ் பகுதிகளில் பூங்காக்கள்- கார் பார்க்கிங் வசதி: மாநகராட்சி திட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/parks-and-car-parking-facilities-under-flyovers-in-chennai-city</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/parks-and-car-parking-facilities-under-flyovers-in-chennai-city#comments</comments><guid isPermaLink="false">ac5fd1c2-a9bc-4dca-97ce-24c2962eb5cf</guid><pubDate>Thu, 23 Jul 2026 07:20:06 +0000</pubDate><atom:updated>2026-07-23T07:20:06.860Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Corporation,சென்னை மாநகராட்சி,பூங்காக்கள்,வாகன நிறுத்துமிடம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/zrvku9q7/chennaicorporation.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ சென்னை மாநகராட்சி]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை மாநகராட்சி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/zrvku9q7/chennaicorporation.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>ஒவ்வொரு இடத்திற்கும் வெவ்வேறு தேவைகள் இருப்பதால் அதற்கேற்ப வடிவமைப்புகள் திட்டமிடப்பட்டு வருவதாகவும் இந்த பணிகள் விரைவில் செய்து முடிக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.</aside><p>சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள மேம்பாலங்கள் போக்குவரத்தை எளிதாக்கினாலும் மேம்பாலத்தின் கீழ் பகுதி சரிவர பராமரிக்கப்படாமல் குப்பை கிடங்குகளாக காட்சி அளிக்கின்றன.</p><p>இவற்றை சுத்தமாக வைத்திருக்கவும், பூங்காக்கள் அமைக்கவும் <a href="https://www.maalaimalar.com/topic/சென்னை-மாநகராட்சி">மாநகராட்சி</a> திட்டமிட்டு வருகிறது.</p><h2><strong>வாகன நிறுத்துமிடம்</strong></h2><p>தியாகராய நகரில் ஜி.என்.ஷெட்டி சாலையில் உள்ள கலைவாணர் மேம்பாலம் மற்றும் வடக்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தின் கீழ் பகுதிகளில் தலா 10 கார்கள் மற்றும் 40 இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகள் கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>இதில் கலைவாணர் மேம்பாலத்தின் கீழே, நடைபாதையுடன் சிறுவர் விளையாட்டு பகுதி உருவாக்கப்பட உள்ளது. வடக்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் 20 மின்சார வாகன சார்ஜிங் மையங்களும், பொதுக் கழிப்பறைகளும் கட்டப்பட உள்ளன.</p><p>ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் வாகன நிறுத்துமிடங்கள், புரசைவாக்கம் டவுட்டன் மேம்பாலத்தில் வாகன நிறுத்துமிடங்கள் அமைய உள்ளது. இந்த வாகன நிறுத்துமிடம் இலவசமாக இருக்கும்.</p><h2><strong>மாநகராட்சி திட்டம்</strong></h2><p>சிவானந்தா சாலையில் உள்ள பறக்கும் ரெயில் பாலத்தின் கீழே விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய சிறுவர் பூங்கா அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.</p><p>மியூசிக் அகாடமி மேம்பாலம், பீட்டர்ஸ் சாலை, ரங்கராஜபுரம் மேம்பாலம், ஜி.கே.மூப்பனார் சாலை, பாந்தியன் ரோடு மேம்பால பகுதியில் அலங்கார விளக்கு வசதியுடன் இருக்கைகளும் அமைக்கப்பட உள்ளது.</p><p>இது பற்றி மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ஒவ்வொரு இடத்திற்கும் வெவ்வேறு தேவைகள் இருப்பதால் அதற்கேற்ப வடிவமைப்புகள் திட்டமிடப்பட்டு வருவதாகவும் இந்த பணிகள் விரைவில் செய்து முடிக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>எழும்பூரில் 3-வது கட்ட மறுசீரமைப்பு பணி: எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆகஸ்டு முதல் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகிறது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/express-trains-will-be-operated-from-tambaram-starting-in-august</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/express-trains-will-be-operated-from-tambaram-starting-in-august#comments</comments><guid isPermaLink="false">7fc352b6-b21a-4e4a-98ad-2cced5bc1b22</guid><pubDate>Thu, 23 Jul 2026 07:02:27 +0000</pubDate><atom:updated>2026-07-23T07:02:27.858Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Egmore railway station,எழும்பூர் ரெயில் நிலையம்,Express trains,தாம்பரம் ரெயில் நிலையம்,எக்ஸ்பிரஸ் ரெயில்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/n4ddlpy9/tambaram.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தாம்பரம் ரெயில் நிலையம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/n4ddlpy9/tambaram.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பெரும்பாலான ரெயில்கள் எழும்பூரில் இருந்து இயக்கப்படுகிறது. அவற்றில் சில ரெயில்களை மட்டும் தாம்பரத்தில் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.</aside><h2><strong>எழும்பூர் ரெயில் நிலையம்</strong></h2><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/எழும்பூர்-ரெயில்-நிலையம்">எழும்பூர் ரெயில் நிலையத்தில்</a> மறு சீரமைப்பு பணிகள் ரூ.840 கோடியில் நடைபெற்று வருகின்றன.  விமான நிலையம் போல ரெயில் நிலையத்தை மாற்றவும் பயணிகளுக்கு கூடுதலான வசதிகள் அளிக்கவும் திட்டமிடப்பட்டு 5 கட்டங்களாக இப்பணிகள் நடந்து வருகிறது. </p><p>நடைமேடைகள், பிரமாண்ட நடை மேம்பாலங்கள், பயணிகள் காத்திருக்கும் பகுதி, ஓய்வுஅறைகள், ஓட்டல்கள், வணிகப் பகுதிகள்,  எஸ்கலேட்டர், லிப்ட் வசதி உள்ளிட்ட  பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்படுகிறது. </p><p>இந்த சீரமைப்பு பணிகளுக்காக அவ்வப்போது ரெயில் இயக்கத்தில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. தாம்பரத்தில் இருந்து ஒரு சில ரெயில்கள் இயக்கப்பட்டன. </p><h2><strong>இரும்பு பாலம்</strong></h2><p>இந்த நிலையில் 3-வது கட்டமாக இரும்பு நடை மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.  500 மெட்ரிக் டன் எடைக்கும் அதிகமான கிரேன்கள் பயன்படுத்தப்பட்டு இரும்பு ராடர்கள் பாலமாக நிறுவப்படுகிறது. தற்போது காந்தி இர்வின் சாலையில் எழும்பூர் ரெயில் நிலைய தாம்பரம் வழித்தட தொடக்கத்தில் இருந்து முதல் 5 நடைமேடைகளில் இரும்பு பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. </p><p>அந்தப் பாலம் 18 மீட்டர் அகலத்துடனும் 120 மீட்டர் நீளத்துடனும் அமைய உள்ளது. அதன்படி எழும்பூர் ரெயில் நிலைய 6-வது நடைமேடையில் இருந்து இரும்பு பாலம் புறநகர் மின்சார ரெயில்கள் செல்லும் 10 மற்றும் 11-வது நடைமேடை  வரையிலான பணிகள் ஓரிரு வாரங்களில் தொடங்க இருக்கிறது. </p><h2><strong>புறநகர் மின்சார ரெயில் சேவை</strong></h2><p>இந்தப் பணிகள் தொடங்கும்போது புறநகர் மின்சார ரெயில் சேவை பாதிக்காமல் வேறு நடைமேடைக்கு மாற்ற வேண்டி உள்ளது. புறநகர் மின்சார ரெயில்  சேவையில் பாதிப்பு ஏற்படாமல் ரெயில்களை இயக்குவது குறித்து ஏற்கனவே ஆலோசிக்கப்பட்டது.</p><p>அதன்படி ஆகஸ்ட் மாதம் முதல் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் சிலவற்றை தாம்பரத்தில் இருந்து தென் மாவட்டத்திற்கு இயக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பெரும்பாலான ரெயில்கள் எழும்பூரில் இருந்து இயக்கப்படுகிறது. அவற்றில் சில ரெயில்களை மட்டும் தாம்பரத்தில் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. </p><p>இந்த நிலையில் இரும்பு நடைமேம்பால பணியை சென்னை ரெயில்வே கோட்ட மேலாளர் சைலேந்திர சிங் நேற்று ஆய்வு செய்தார். அவரிடம் பணிகள் நடைபெறும் நிலை குறித்தும் அதற்காக 5 மற்றும் 6 ஆகிய நடைமேடைகளுக்கு புறநகர் மின்சார ரெயில்களை மாற்றி இயக்குவது குறித்தும் ரெயில்வே பொறியாளர்கள் விளக்கிக் கூறினார்கள்.</p><p>இந்த ஆய்வின்போது தெற்கு ரெயில்வே கூடுதல் மேலாளர் செந்தில்குமார், எழும்பூர் ரெயில் நிலைய இயக்குனர் ஜெயகாந்தன், பொறியாளர் லோகநாயகி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>அறந்தாங்கி சுபா தியேட்டரில் திரைக்கு முன் முள்வேலி- &apos;ஜன நாயகன்&apos; பார்க்க வந்த ரசிகர்கள் அதிர்ச்சி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/fans-shocked-by-barbed-wire-fence-in-front-of-screen-at-arantangi-theatre</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/fans-shocked-by-barbed-wire-fence-in-front-of-screen-at-arantangi-theatre#comments</comments><guid isPermaLink="false">abeba1b9-6f65-4f7e-bc2f-986fc912429c</guid><pubDate>Thu, 23 Jul 2026 06:47:58 +0000</pubDate><atom:updated>2026-07-23T06:47:58.477Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தியேட்டர்,Theatre,aranthangi,அறந்தாங்கி,JanaNayagan,ஜனநாயகன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/uorsjjo2/Theatre.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Theatre in Aranthangi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/uorsjjo2/Theatre.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா தியேட்டரில் இன்று வெளியான '<a href="https://www.maalaimalar.com/cinema/movie-review/jana-nayagan-movie-review" rel="nofollow">ஜன நாயகன்</a>' திரைப்படம் திரையிடப்பட்டது. முதல் நாள் காட்சியை காண ஏராளமான ரசிகர்கள் திரையரங்கிற்கு வருகை தந்தனர்.</p><p>இந்நிலையில், வழக்கமாக இல்லாத வகையில் திரைக்கு முன்பகுதியில் முள் வேலி (பேரிகேட்) அமைக்கப்பட்டிருந்தது. இதனால் திரைக்கு அருகில் சென்று கொண்டாட்டங்களில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.</p><p>திரைக்கு முன் முள் வேலி அமைக்கப்பட்டிருப்பதை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். </p><p>ரசிகர்களின் பாதுகாப்பு மற்றும் திரையரங்கின் சொத்துகளை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது</p><p>இந்த விவகாரம் அறந்தாங்கி திரைப்பட ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆந்திராவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று - 32 பேர் பாதிப்பு </title><link>https://www.maalaimalar.com/news/national/rising-covid-19-infections-in-andhra-pradesh</link><comments>https://www.maalaimalar.com/news/national/rising-covid-19-infections-in-andhra-pradesh#comments</comments><guid isPermaLink="false">1404eebb-5d42-4839-9a80-89c7c19e4385</guid><pubDate>Thu, 23 Jul 2026 06:41:43 +0000</pubDate><atom:updated>2026-07-23T06:41:43.079Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Andhra Pradesh,ஆந்திர பிரதேசம்,கொரோனா வைரஸ்,Covid 19</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/2fxfe3k7/covid19.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Covid-19]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/2fxfe3k7/covid19.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஆந்திரா மாநிலம் முழுவதும் இதுவரை 32 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</strong></em> </p><h2>கொரோனா தொற்று</h2><p>ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலர் கடும் காய்ச்சல், சளி, இருமல் தொற்று பாதிப்புக்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வந்தனர். சிகிச்சைக்கு வந்தவர்களின் சளி மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனத்தின் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைத்தனர். ஆய்வில் அவர்களுக்கு ஓமிக்கிரான் ஆர்.எப் 5 வைரஸ் தொற்று இருப்பது தெரிய வந்தது.</p> <h2>மக்கள் அச்சம்</h2><p>இதேபோல் சிகிச்சைக்கு வந்த 19 பேருக்கு <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81">கொரோனா தொற்று</a> இருப்பது தெரிய வந்தது. மத்திய சுகாதாரத்துறை மாநில அரசுக்கு கொரோனா வார்டுகளை தயார் செய்ய வேண்டும். முக கவசம், சானிடைசர் சிகிச்சைக்கு தேவையான மருந்துகளை தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிட்டது. கொரோனா தொற்று பாதித்து சிகிச்சையில் இருந்த 4 பேர் இறந்தனர். </p> <h2>கொரோனா பாதிப்பு உயர்வு</h2><p>இந்த நிலையில் விசாகப்பட்டினம் மற்றும் ராஜ முந்திரியில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஆந்திரா மாநிலம் முழுவதும் இதுவரை 32 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திராவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>ஜன நாயகன்- திரை விமர்சனம்</title><link>https://www.maalaimalar.com/cinema/movie-review/jana-nayagan-movie-review</link><comments>https://www.maalaimalar.com/cinema/movie-review/jana-nayagan-movie-review#comments</comments><guid isPermaLink="false">568b1423-53ee-4e9a-8858-5c751a278acd</guid><pubDate>Thu, 23 Jul 2026 06:40:10 +0000</pubDate><atom:updated>2026-07-23T06:40:10.629Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Jana Nayagan,ஜன நாயகன்,விஜய்,vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/m2hijmo1/jananayagan001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/m2hijmo1/jananayagan001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தரவரிசை (Movie Review)</category><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2><strong>கதை</strong></h2><p>ஒரு கொலை வழக்கில் சிறை தண்டனை கைதியாக இருக்கிறார் நாயகன் <a href="https://www.maalaimalar.com/topic/ஜன-நாயகன்">விஜய்</a>. அந்த சிறையில் உள்ள ஒரு பெரும்புள்ளியைத் தப்பிக்க வைக்க போலியான ஜெயில் கலவரத்தை நடத்த திட்டம் தீட்டுகிறார்கள். நாயகன் அதை முறியடிப்பதால் போலீஸ் அதிகாரியான கௌதம் வாசுதேவ் மேனனுக்கு நாயகன் மேல் நல் அபிப்ராயம் ஏற்படுகிறது. இதனால் நாயகனக்கு உதவி செய்யும் போலீஸ் அதிகாரி கௌதம் வாசுதேவ் மேனன் உயர் அதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாகிறார். ஒரு விபத்திலும் இறந்து போகிறார்.</p><p>கௌதம் மேனனின் விருப்பப்படி அவரது மகளான மமிதா பைஜூவை ராணுவத்தில் சேர்த்து விட துடிக்கிறார் விஜய். அவருக்கு தொடர் பயிற்சிகள் அளித்து அவரை ராணுவத்தில் சேர்த்து விட முயற்சிகளை மேற்கொள்கிறார்.</p><p>இன்னொரு புறம் ஆப்பிரிக்காவில் பல கொலைகளை அரங்கேற்றி அந்த நாட்டையே சுடுகாடாக மாற்றிவிடும் பாபி தியோல் ஒரு பெரிய சதி திட்டத்தை இந்தியாவில் செயல்படுத்த முயற்சிக்கிறார். இந்திய கடற்படையை தாக்கி இந்தியாவுக்குள் நுழைகிறார்.</p><p>இந்த சூழலில் பாபி தியோலுக்கு எதிராக தெரிந்தும் தெரியாமலும் ஒரு விஷயத்தில் மாட்டிக்கொள்ளும் மமிதா பைஜூவை, கொலை செய்ய பாபி தியோல் முடிவு செய்கிறார். அவரை காப்பாற்றுவதற்காக மீண்டும் ஆயுதத்தை கையில் எடுக்கிறார் விஜய்.</p><p>மமிதா பைஜூவுக்கு பாதுகாவலராக இருக்கும் விஜய் பற்றி தெரிந்து பாபி தியோல் அதிர்கிறார். விஜய்யை பழி தீர்க்கத் துடிக்கிறார்.</p><p>பாபி தியோல் யார்? அவரது பின்னணி என்ன? விஜய்க்கும், அவருக்கும் உண்டான மோதல் என்ன? இந்தியாவில் அவர் செய்யத் துடிக்கும் சதி திட்டம் என்ன? இதை விஜய் முறியடித்தாரா, இல்லையா? என்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை சொல்கிறது பரபரப்பான மீதி கதை.</p><h2><strong>நடிகர்கள்</strong></h2><p>ஒன் மேன் ஆர்மியாக கதையை தாங்கி பிடித்துள்ளார் விஜய். ஆக்ரோஷமாகட்டும் மகளிடம் பாசம் காட்டுவதாகட்டும் இரு வேறு பரிமாணங்களில் மிரட்டியுள்ளார். நடனத்திலும் தான் மாஸ் என்பதை காட்டியுள்ளார். விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் உறுதி.</p><p>ஜெயில் அதிகாரியாக கவுதம் வாசுதேவ் மேனன் காட்டும் கம்பீரம் கனகச்சிதம். ஆங்கிலம் அதிகம் பேசாமல் நார்மல் தமிழ் பேசுவது சிறப்பு.</p><p>அழகான கதாநாயகியாக வந்து போகிறார் பூஜா ஹெக்டே. காதல் காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார். துறுதுறு நடிப்பால் கவர்கிறார் மமிதா பைஜூ.</p><p>வில்லத்தனத்தில் பாபி தியோல் மிரட்டுகிறார். பிரியாமணி, சுனில் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். பிரகாஷ் ராஜ், கஜராஜ் என அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.</p><h2><strong>இசை</strong></h2><p>அனிருத் இசை ஆட்டம் போட வைக்கிறது. பாடல்கள் அனைத்தும் இனிமை. குறிப்பாக, தளபதி கச்சேரி, ராவண மவண்டா பாடல்கள் சிலிர்ப்பூட்டுகிறது.</p><p>விறுவிறுப்பான காட்சிகள் படத்துக்கு பலம் சேர்க்கிறது.</p><p>விஜய் என்ற கூர்மையான ஆயுதத்தை மிகவும் பதமாக கூர் தீட்டி ஆக்ஷன் விருந்து படைத்துள்ளார் இயக்குனர் எச்.வினோத். இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் காட்சிகளாக அமைந்துள்ளன.</p><p>தளபதி பட்டைய கிளப்பிவிட்டார். </p>]]></content:encoded></item><item><title>செங்கடலில் சவுதி எண்ணெய் டேங்கர் கப்பல்கள் மீது ஹவுதிக்கள் தாக்குதல்  </title><link>https://www.maalaimalar.com/news/world/red-sea-tensions-houthi-strike-on-saudi-oil-tankers-disrupts-key-shipping-lanes</link><comments>https://www.maalaimalar.com/news/world/red-sea-tensions-houthi-strike-on-saudi-oil-tankers-disrupts-key-shipping-lanes#comments</comments><guid isPermaLink="false">3d190ec6-02f1-4052-8909-a25aae455eff</guid><pubDate>Thu, 23 Jul 2026 06:37:57 +0000</pubDate><atom:updated>2026-07-23T06:37:57.517Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Saudi Arabia,சவுதி அரேபியா,Houthi rebels,வணிக கப்பல்,ஹவுதி கிளர்ச்சியாளர்கள்,commercial ship</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/aaujkeul/tn-27.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கோப்புப் படம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ கோப்புப் படம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/aaujkeul/tn-27.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/trump-posts-comparing-with-previous-wars">ஈரான் </a>மீதான தாக்குதலை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ள நிலையில் மத்திய கிழக்கில் மீண்டும் முழு அளவிலான போர் மூண்டுள்ளது. </p><p>இந்த சூழலில் ஏமனில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். </p><p>சவுதி அரேபியாவின் அல் சுகைக் பகுதிக்கு தென்மேற்கே  சுமார் 70 நாட்டிக்கல் மைல் தொலைவில் செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த 2 எண்ணெய் டேங்கர் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  </p><p>இது சவுதியில் இருந்து எண்ணெய் ஏற்றிச் சென்றுகொண்டிருந்த கப்பல்கள் என்று கூறப்படுகிறது. </p><p>இந்த தாக்குதலை ரிட்டன் கடல்சார் வர்த்தக அமைப்பு  உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>ஹார்முஸ்க்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்த பாப் எல் மண்டேப் ஜலசந்திக்கு அருகே இந்த  தாக்குதல் நடந்துள்ளது </p><p>அதிர்ஷ்டவசமாக இந்தத் தாக்குதலில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p> <h2>ஹவுதிக்கள் முற்றுகை</h2><p>சவூதி அரசு தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை முற்றுகையிட்டுள்ளதாகக் குற்றம் சாட்டிய ஹவுதிகள், சவுதிக்கு சொந்தமான கப்பல்களுக்கு கடல்சார் தடையை விதிப்பதாக இரு நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தனர். அதன் தொடர்ச்சியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.</p> <h2>கப்பல் போக்குவரத்து பாதிப்பு</h2><p>கப்பல் போக்குவரத்து கண்காணிப்பகமான Kpler வெளியிட்ட அறிக்கையின்படி,</p><p>பாதுகாப்பு சூழல் வேகமாகச் சீர்குலைந்து வருவதால், ஹோர்முஸ் ஜலசந்தி மற்றும் பாப் எல் மண்டேப் ஜலசந்தி ஆகிய இரு முக்கிய பாதைகள் வழியிலான கப்பல் போக்குவரத்து கணிசமாகக் குறைந்துள்ளது.</p><p>ஹவுதிகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து ஏடன் வளைகுடா அருகே பயணித்துக் கொண்டிருந்த பல வணிகக் கப்பல்கள் தங்களது பயணத்தை நிறுத்திவிட்டுத் திரும்பியுள்ளன.</p><h2>பொருளாதாரப் பாதிப்பு</h2><p>இந்த முக்கிய கடல்சார் பாதைகளில் தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்களால், உலகளாவிய சரக்குக் கப்பல்களின் பாதைகள் மாற்றப்பட்டு வருகின்றன.</p><p>இதன் காரணமாகச் சரக்குக் கட்டணம் கடுமையாக உயர்ந்து, சர்வதேச எரிபொருள் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.</p><h2>ஹார்முஸ் எச்சரிக்கை</h2><p>இதனிடையே ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களை தாகினால், ஈரானின் பாலங்கள், மின் நிலையங்கள் தரைமட்டமாக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். </p><p>கண்ணுக்கு கண் என்று தங்கள் கொள்கை மூலம் தாங்களும் பதிலடி தருவோம் என ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்..!- நடிகர் சூர்யா வேண்டுகோள்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-surya-asks-fans-not-to-celebrate-birthday</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-surya-asks-fans-not-to-celebrate-birthday#comments</comments><guid isPermaLink="false">9f02e5b5-7cf8-492d-b691-e88f2f80d6bc</guid><pubDate>Thu, 23 Jul 2026 06:32:38 +0000</pubDate><atom:updated>2026-07-23T06:32:38.980Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சூர்யா,Suriya,நடிகர் சூர்யா,actor surya,சூர்யா பிறந்தநாள்,Surya Birthday</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/kco470vp/Surya.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Actor Suriya]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/kco470vp/Surya.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p><p>நீட் தேர்வு முறைகேட்டிற்கு எதிராக டெல்லியில் மாணவரகள் போராடுவதை சுட்டிக்காட்டி நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். போராடும் மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p><h2>நடிகர் சூர்யா பிறந்தநாள்</h2><p>தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சூர்யா இன்று தனது 51வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.</p><p>நேருக்கு நேர் திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் சூர்யா, இதுவரை 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதின் தனக்கென ஓர் இடத்தை பிடித்துள்ளார்.</p><p>1997ல் நேருக்கு நேர் படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து, நந்தா, காக்க காக்க, பிதாமகன், பேரழகன், மாயாவி, கஜினி, சில்லுனு ஒரு காதல், வேல், வாரணம் ஆயிரம், அயன், ஆதவன், சிங்கம், ஏழாம் அறிவு, மாற்றான், சிங்கம் 2, அஞ்சான், மாஸ், 24, தானா சேர்ந்த கூட்டம், காப்பான், சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன், விக்ரம் (கௌரவ தோற்றம்), கங்குவா, கருப்பு உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களில் நடித்துள்ளார். </p><h2>விஸ்வநாதன் அண்டு சண்ஸ்</h2><p>‘கருப்பு’ திரைப்படம் சூர்யாவுக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. இந்தப் படத்துக்குப் பிறகு ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.</p><h2>நீட் போராட்டம்</h2><p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த மாதம் 20-ந் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்திரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.</p><p>இவர்களது போராட்டம் நேற்று 33-வது நாளை எட்டியது. இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களிடம் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது.</p><h2>சூர்யா வேண்டுகோள்</h2><p>இந்நிலையில், நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களும், திரைத்துறையினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  </p><p>இதுதொடர்பாக விடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தனது பிறந்தநாளை எந்த விதத்திலும் கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்ததாக அவரது ரசிகர் மன்றம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பரங்கிப்பேட்டையில் 29-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-announced-condemnation-protest-in-parangipettai-on-29th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-announced-condemnation-protest-in-parangipettai-on-29th#comments</comments><guid isPermaLink="false">78cca09f-dfcb-4cca-a7cc-461789708c57</guid><pubDate>Thu, 23 Jul 2026 06:12:38 +0000</pubDate><atom:updated>2026-07-23T06:12:38.131Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,Edappadi Palaniswami,அதிமுக,எடப்பாடி பழனிசாமி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2023/09/29/1958097-eps.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Edappadi Palaniswami]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2023/09/29/1958097-eps.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em>ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதை எதிர்த்து கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் 29-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.</em></p><p>அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF">எடப்பாடி பழனிசாமி</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p> <h2>இந்துஸ்தான் ஆயில் நிறுவனம்</h2><p>கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பரங்கிப்பேட்டை கடற்கரையில் சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில், 4 புதிய கடல்சார் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைத்து கச்சா எண்ணெய் எடுப்பதற்காக இந்துஸ்தான் ஆயில் நிறுவனம், தமிழ்நாடு அரசு மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையத்தின் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது.  </p><p>முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நல்லாசியோடு நடைபெற்ற எனது தலைமையிலான ஆட்சியில், கடலூர் மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது.</p> <h2>த.வெ.க. அரசு</h2><p>ஆனால் தற்போது, கடலில் இக்கிணறுகள் அமைக்க இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் அனுமதி கோரியுள்ளது.  மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு, சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட பரங்கிப்பேட்டை கடற்கரையில் இந்துஸ்தான் ஆயில் நிறுவனம், ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைத்து கச்சா எண்ணெய் எடுப்பதற்கு த.வெ.க. அரசு அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்தியும், குதிரைபேர ஆட்சி நடத்தி வரும் த.வெ.க. அரசைக் கண்டித்தும், அ.தி.மு.க. ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டத்தின் சார்பில் வருகின்ற 29-ந் தேதி (புதன்கிழமை) காலை 10 மணியளவில், பரங்கிப்பேட்டையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.</p>  <p>இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், ஜெயலலிதா பேரவைச் செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான உதயகுமார் தலைமையிலும், அமைப்புச் செயலாளரும், கடலூர் தெற்கு மாவட்ட செயலாளருமான சொரத்தூர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., கடலூர் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தாமோதரன்,  கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.   </p> <p>இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், கடலூர் கிழக்கு, வடக்கு, தெற்கு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தலைமை நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும் என  கேட்டுக்கொள்கிறேன்.  </p><p>இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>30 வருடங்கள் முன் வினாத்தாள் கசிவை எதிர்த்துப் போராடி போலீஸ் தாக்குதலில் காயமுற்ற தர்மேந்திர பிரதான்.. இன்று அதே சர்ச்சையில்! </title><link>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protests-students-demand-resignation-of-dharmendra-pradhan-over-exam-scam</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protests-students-demand-resignation-of-dharmendra-pradhan-over-exam-scam#comments</comments><guid isPermaLink="false">36a90374-deaa-4e1f-b80d-486e5a3bd9ae</guid><pubDate>Thu, 23 Jul 2026 06:02:52 +0000</pubDate><atom:updated>2026-07-23T06:02:52.314Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,question paper leak,வினாத்தாள் கசிவு,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/umtm0rnp/tn-26.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தர்மேந்திர பிரதான்]]></media:title><media:description type="html"><![CDATA[ தர்மேந்திர பிரதான்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/umtm0rnp/tn-26.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தொடர் தேர்வு முறைகேடுகளால் நிர்வாக தோல்விக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி டெல்லியில்<a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-fast-track-court-plan-opposed-by-cockroach-janata-party"> சிஜேபி </a>கட்சி தலைமையில் இளைஞர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக போராடி வருகின்றனர். </p><p>கல்வியாளர் சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டம் 25வது நாளை எட்டியுள்ளது. கடந்த ஜூலை 20 பாராளுமன்றம் நோக்கி பேரணி சென்ற இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் அடக்குமுறையில் ஈடுபட்டது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் சுமார் 60 போராட்டக்காரர்கள் காயமுற்றனர். </p><p>இதனால் மத்திய அரசுக்கு நெருக்கடி அதிகரித்து வரும் சூழலில் தர்மேந்திர பிரதானே ஒரு காலத்தில் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடி காவல்துறை தாக்குதலில் காயமுற்றவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.  </p> <h2>போராட்டம்</h2><p>1990களில் பாஜகவின் மாணவர் அமைப்பான பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பின் மாணவர் தலைவராக தர்மேந்திர பிரதான் இருந்தார்.</p><p>1994 முதல் 1997 வரை அவர் இரண்டு முறை ஏபிவிபி அமைப்பின் தேசியச் செயலாளராகப் பொறுப்பு வகித்தார்.</p><p>1997 இல் ஒடிசாவில் ஜானகி வல்லப் பட்நாயக் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற போது.</p><p>அங்குள்ள உயர்கல்வித் தேர்வுகளில் வினாத்தாள் கசிந்ததாக புகார்கள் எழுந்தன. அதை எதிர்த்து மாநில தலைமைச் செயலகம் மற்றும் முதலமைச்சர் இல்லம் அருகே நடைபெற்ற பிரம்மாண்ட மாணவர் போராட்டத்தில் தர்மேந்திர பிரதான் முன்னின்று பங்கேற்றார்.</p><p>புவனேஸ்வரில் உள்ள RMD கல்லூரியின் தற்போதைய முதல்வரும், அன்று தர்மேந்திர பிரதானின் ஜூனியராகப் போராட்டத்தில் பங்கேற்றவருமான ராவ் என்பவர் அந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ளார்.</p> <p>அவர் கூறுகையில், "அன்று ஒடிசா அரசுக்கு எதிராகப் போராட நாங்கள் தலைமைச் செயலகத்திற்குச் சென்றோம். எங்களுடன் சுமார் 1,500 மாணவர்கள் திரண்டனர். அமைதியான முறையில் போராட்டம் நடத்திய எங்கள் மீது காவல்துறையினர் கடுமையான தடியடி நடத்தினார்கள். அந்தத் தடியடியில் தர்மேந்திர பிரதானும் காயமடைந்தார்." என்று தெரிவித்தார்.</p><p>அன்று வினாத்தாள் கசிவை எதிர்த்துத் தடியடி வாங்கிய மாணவர் தலைவரான தர்மேந்திர பிரதான், இன்று நாட்டின் கல்வி அமைச்சராகப் பொறுப்பில் இருக்கும் போது அதே வினாத்தாள் கசிவுப் புகாரில் அவருக்கு எதிராகவே போராட்டம் நடைபெறுவது நகைமுரணமாக பார்க்கப்படுகிறது.</p><p>ஒரு காலத்தில் தான் எதற்காகப் போராடினாரோ, இன்று அதே விவகாரத்தில் பொறுப்பேற்காமல் அவர் இருந்து வருவதும் பலராலும் ஒப்பப்பட்டு வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>பிரதமர் மோடியின் அறிவிப்பை நிராகரித்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-fast-track-court-plan-opposed-by-cockroach-janata-party</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-fast-track-court-plan-opposed-by-cockroach-janata-party#comments</comments><guid isPermaLink="false">8aea37bb-d966-4a55-860f-2b4b12cea2f7</guid><pubDate>Thu, 23 Jul 2026 05:51:02 +0000</pubDate><atom:updated>2026-07-23T05:51:02.486Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>pm modi,பிரதமர் மோடி,Cockroach Janata Party,சிஜேபி,CJP,கரப்பான் பூச்சி ஜனதா கட்சி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/4idzxnr8/CJP.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CJP]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/4idzxnr8/CJP.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வினாத்தாள் கசிவு விவகாரத்தை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பை கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிராகரித்துள்ளது.</p><h2>போராட்டம்</h2><p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த மாதம் 20-ந் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்திரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.</p><p>இவர்களது போராட்டம் நேற்று 33-வது நாளை எட்டியது. இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களிடம் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது.</p><p>கடந்த 20-ந் தேதி இந்த போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம் நோக்கி நடத்திய பேரணி பெரிய வன்முறையில் முடிந்தது. இந்த விவகாரத்தை முன்னெடுத்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரசார் நடத்திய போராட்டம் பா.ஜ.க.வுக்கு பெரிய சவாலாக அமைந்தது.</p><p>போலீஸ் தடியடியில் பல இளைஞர்கள் காயம் அடைந்த பிறகும் ஜந்தர் மந்தரில் இன்னும் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><h2>பிரதமர் மோடி</h2><p>இதுதொடர்பாக <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF" rel="nofollow">பிரதமர் மோடி</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>* இளைஞர் நலன் மற்றும் எதிர்காலத்தைவிட முக்கியமானது எதுவும் இல்லை.</p><p>* மாணவர்களின் நலனை பாதுகாக்க தொடர் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் விரைவு நீதிமன்றம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>* தேர்வுத்தாள் கசிவில் தொடர்புடையோருக்கு கடும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும்.</p><p>* வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேவையான அனைத்து நடவடிக்கை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>* வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றமிழைத்த அனைவரும் தண்டிக்கப்படுவர்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கண்டிப்பாக பதவி விலக வேண்டும் என பிரதமரின் எக்ஸ் தள பதிவை குறிப்பிட்டு காக்ரோஜ் ஜனதா தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நீட்டுக்கு எதிராக தி.மு.க. வாள் தூக்கி நிற்கும்- உதயநிதி ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-dmk-is-poised-to-take-up-the-fight-against-neet</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-dmk-is-poised-to-take-up-the-fight-against-neet#comments</comments><guid isPermaLink="false">fb879081-8f7c-48b2-b4f7-fa00e1a355b7</guid><pubDate>Thu, 23 Jul 2026 05:32:17 +0000</pubDate><atom:updated>2026-07-23T05:32:17.761Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,நீட் தேர்வு,Neet exam,CJP Protest</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/fp93vmen/udhayanidhistalin004.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/fp93vmen/udhayanidhistalin004.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, கிராமப்புற, அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக் கனவைச் சிதைப்பதே நீட் போன்ற நுழைவுத்தேர்வுகளின் உண்மையான நோக்கம்! என்று கூறியுள்ளார்.</aside><h2><strong>போராட்டம் தீவிரம்</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">நீட்</a> வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். </p><h2><strong>உண்மையான நோக்கம்!</strong> </h2><p>இந்த நிலையில், தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆங்கில நாளிதழுக்கு எழுதிய கட்டுரையை மேற்கொள்காட்டி எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், </p><p>நீட் தேர்வில் மட்டுமல்ல, #NEET தேர்வே மோசடிதான் என்பதை படம்பிடித்துக் காட்டுகிறது கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின்</p><p>அவர்களின் இன்றைய @the_hindu Op-Ed கட்டுரை!</p><p>ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, கிராமப்புற, அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக் கனவைச் சிதைப்பதே நீட் போன்ற நுழைவுத்தேர்வுகளின் உண்மையான நோக்கம்! </p><p>அந்தத் தடையை உடைப்பதற்கான படையாக திமுக என்றைக்கும் முன் வரிசையில் வாள் தூக்கி நிற்கும் என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">NEET தேர்வில் மட்டுமல்ல, <a href="https://x.com/hashtag/NEET?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#NEET</a> தேர்வே மோசடிதான் என்பதை படம்பிடித்துக் காட்டுகிறது கழகத்தலைவர் <a href="https://x.com/mkstalin?ref_src=twsrc%5Etfw">@mkstalin</a> அவர்களின் இன்றைய <a href="https://x.com/the_hindu?ref_src=twsrc%5Etfw">@the_hindu</a> Op-Ed கட்டுரை!<br><br>ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, கிராமப்புற, அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக் கனவைச் சிதைப்பதே NEET… <a href="https://t.co/ZHTG4sN6Wg">pic.twitter.com/ZHTG4sN6Wg</a></p>&mdash; Udhay (@Udhaystalin) <a href="https://x.com/Udhaystalin/status/2080155596410724566?ref_src=twsrc%5Etfw">July 23, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>முன்னதாக, மாணவர்கள் போராட்டம் தொடர்பாக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-its-time-to-abolish-neet">மு.க.ஸ்டாலின்</a> கூறியிருந்ததாவது:- தொடர்ந்து நடைபெற்று வரும் மாணவர்கள் போராட்டம் மத்திய அரசுக்கு ஒரு விழிப்புணர்வு அழைப்பாக அமைய வேண்டும். மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது. நீட் தேர்வை ஒழிக்க வேண்டிய நேரம் இது என்று கூறியிருந்தார். </p>]]></content:encoded></item><item><title>சீனா ஓபன்  காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சிந்து அதிர்ச்சி தோல்வி - பழிதீர்த்கொண்ட சீன வீராங்கனை </title><link>https://www.maalaimalar.com/sports/pv-sindhu-exits-china-open-after-three-game-loss-to-chen-yufei</link><comments>https://www.maalaimalar.com/sports/pv-sindhu-exits-china-open-after-three-game-loss-to-chen-yufei#comments</comments><guid isPermaLink="false">eb30950a-855a-427f-803a-7ec740c62c59</guid><pubDate>Thu, 23 Jul 2026 05:30:06 +0000</pubDate><atom:updated>2026-07-23T05:30:06.325Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>pv sindhu,பிவி சிந்து,China Open,பேட்மிட்டன்,badminton,சீனா ஓபன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/j5k2t0v3/tn-25.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சிந்து ]]></media:title><media:description type="html"><![CDATA[ சிந்து ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/j5k2t0v3/tn-25.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, சீனா ஓபன் பேட்மிண்டன் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினார். </p><p>இன்று நடந்த ஒரு விறுவிறுப்பான போட்டியில், உலகின் நான்காம் நிலை வீராங்கனையும் சீன நட்சத்திரமுமான சென் யுபெய், சிந்துவை 16-21, 22-20, 21-18 என்ற புள்ளி கணக்கில் தோற்கடித்தார்.</p><h2>ஆட்டம் </h2><p>ஒரு மணி நேரம் 29 நிமிடங்கள் நீடித்த இந்தப் போட்டியில், இருவரும் இறுதிவரை கடுமையாகப் போராடினர்.</p><p>முதல் சுற்றில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றிலும் சிந்து முன்னிலையில் இருந்தார். அவருக்கு 4 மேட்ச் பாயிண்டுகள் கிடைத்தும், அதை அவரால் புள்ளியாக மாற்ற முடியாமல் போனது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.</p><p>வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட யுபெய், இரண்டாவது ஆட்டத்தை வென்று, போட்டியை மூன்றாவது ஆட்டத்திற்குக் கொண்டு சென்றார். </p> <p>மூன்றாவது ஆட்டத்திலும் இரு வீராங்கனைகளும் கடுமையாகப் போராடிய போதிலும், இறுதியில் யுபெய் தேவையான புள்ளிகளைப் பெற்று வென்றார்.</p><p>இதன் மூலம், கடந்த வாரம் நடைபெற்ற ஜப்பான் ஓபன் அரையிறுதியில் சிந்துவிடம் அடைந்த தோல்விக்கு யுபெய் பழி தீர்த்துக்கொண்டார்.</p><p>இந்தத் தோல்வியுடன், சீனா ஓபனில் சிந்துவின் போராட்டம் முடிவுக்கு வந்தது.</p><p>சமீபத்தில் ஜப்பான் ஓபன் பட்டத்தை சிந்து வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.</p> <h2>ஜப்பான் ஓபன் சாம்பியன் </h2><p>பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் யுபெய்யை வீழ்த்தி <a href="https://www.maalaimalar.com/sports/pv-sindhu-clinches-japan-open-badminton-championship">ஜப்பான் ஓபன்</a> தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார் பி.வி.சிந்து.</p><p>இறுதிப்போட்டியில் அகானே யமாகுச்சி உடன் மோதினார்.</p><p>இதில் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய பி.வி.சிந்து 21-17, 21-17 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்று அசத்தினார்.</p><p>ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் பெற்றவரான பிவி சிந்து கடந்த 2 ஆண்டாக சர்வதேச பட்டம் எதுவும் வெல்லாத நிலையில், தற்போது ஜப்பான் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.</p><p>பி.வி.சிந்து கடந்த 2024ம் ஆண்டில் சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஐதராபாத்தில் தலை ஒட்டி பிறந்த சகோதரிகள் வங்கி தேர்வு எழுதுவதில் சிக்கல்</title><link>https://www.maalaimalar.com/news/national/hyderabad-conjoined-twins-face-hurdles-in-taking-bank-exam</link><comments>https://www.maalaimalar.com/news/national/hyderabad-conjoined-twins-face-hurdles-in-taking-bank-exam#comments</comments><guid isPermaLink="false">094e778d-7ed3-4624-9528-8cc00c1baa6b</guid><pubDate>Thu, 23 Jul 2026 05:21:36 +0000</pubDate><atom:updated>2026-07-23T05:21:36.597Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>SBI,twins,பாரத ஸ்டேட் வங்கி,இரட்டையர்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/9kv1r9q3/twins.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ twins veena and vani]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/9kv1r9q3/twins.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em>பாரத ஸ்டேட் வங்கியின் பயிற்சி அதிகாரி பணிகளுக்கு விண்ணப்பித்துள்ள தலை ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்கு ஒரே தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தாலும் அறைகள் வேறு ஒதுக்கப்பட்டுள்ளன.</em></p><p>தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் வீணா, வாணி. தலை ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள். இவர்கள் அமீர்பேட்டை அருகே உள்ள சிசு விஹார் என்ற அரசு இல்லத்தில் வசித்து வருகின்றனர். </p><p>அவர்கள் கடந்த ஆண்டு பி.காம் வணிகப் பகுப்பாய்வுப் படிப்பை சிறப்புத் தகுதியுடன் முடித்தனர். </p> <p>தற்போது பாரத ஸ்டேட் வங்கியின் பயிற்சி அதிகாரி பணிகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். முதல்நிலைத் தேர்வு ஆகஸ்ட் 1-ந்தேதி நடைபெற உள்ளது. அவர்கள் தங்களது தேர்வு நுழைவுச் சீட்டுகளையும் பெற்றுள்ளனர். </p><p>அவர்கள் அப்துல்லாபூர்மெட்டில் உள்ள டி.சி.எஸ் அயான் டிஜிட்டல் மையத்தில் தேர்வு எழுத வேண்டும். அவர்களுக்கு ஒரே தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தாலும், அறைகள் வெவ்வேறாக ஒதுக்கப்பட்டுள்ளன. </p><p>தலை ஒட்டி உள்ளதால் அவர்களால் தனித்தனியாக அமர்ந்து தேர்வு எழுத முடியாது. எனவே ஒரே அறையில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>இளைஞர்களின் எதிர்காலத்தை மிக அதிகமாக சீர்குலைத்தவர் பிரதமர் மோடி..!- ராகுல் காந்தி</title><link>https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-slams-pm-modi-for-ruining-youths-future</link><comments>https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-slams-pm-modi-for-ruining-youths-future#comments</comments><guid isPermaLink="false">2e1175c7-c29a-4f0e-bc87-c2a06da1761a</guid><pubDate>Thu, 23 Jul 2026 05:21:34 +0000</pubDate><atom:updated>2026-07-23T05:21:34.669Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Congress,காங்கிரஸ்,சிஜேபி,CJP</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/xu4astp4/RG.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi - Rahul gandhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/xu4astp4/RG.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இளைஞர்களின் எதிர்காலத்தை மிக அதிகமாக சீர்குலைத்தவர் பிரதமர் மோடி என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.</p><p>இளைஞர் எதிர்காலத்தை சீரழிக்க முயன்றோர் தப்ப முடியாது என பிரதமர் மோடி பதிவிட்ட நிலையில் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.</p><p>கல்வி முறையை அழிப்பவர்களை பாதுகாத்து அவர்களை ஊக்குவித்தவர் பிரதமர் மோடி.</p><p>மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.</p><p>இளைஞர் எதிர்காலத்தை சீர்குலைத்ததற்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.</p><h2>போராட்டம்</h2><p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த மாதம் 20-ந் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்திரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவர்களது போராட்டம் நேற்று 33-வது நாளை எட்டியது. இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களிடம் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது.</p><p>கடந்த 20-ந் தேதி இந்த போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம் நோக்கி நடத்திய பேரணி பெரிய வன்முறையில் முடிந்தது. </p><p>இந்த விவகாரத்தை முன்னெடுத்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரசார் நடத்திய போராட்டம் பா.ஜ.க.வுக்கு பெரிய சவாலாக அமைந்தது.</p><p>போலீஸ் தடியடியில் பல இளைஞர்கள் காயம் அடைந்த பிறகும் ஜந்தர் மந்தரில் இன்னும் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><h2>ராகுல் காந்தி பதிலடி</h2><p>இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>இளைஞர்களின் எதிர்காலத்தை மிகவும் சீர்குலைத்தவர் நீங்கள்தான்.</p><p>எங்கள் கல்வி முறையை முழுமையாகக் கைப்பற்றி அழிப்பதை நீங்கள் அனுமதித்து ஊக்குவித்தீர்கள் - மேலும் அதற்குக் காரணமான ஒவ்வொருவரையும் பாதுகாத்தீர்கள்.</p><p><strong>மாணவர்களின் கோரிக்கைகள் தெளிவாக உள்ளன:</strong></p><p>1. தர்மேந்திர பிரதானைப் பதவியிலிருந்து நீக்குங்கள்.</p><p>2. மாணவர்களிடம் மன்னிப்புக் கேளுங்கள்.</p><p>3. அவர்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>பிரதமர் மோடி பதிவு</h2><p>முன்னதாக, பிரதமர் மோடி போராட்டம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.</p><p>அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-</p><p>* இளைஞர் நலன் மற்றும் எதிர்காலத்தைவிட முக்கியமானது எதுவும் இல்லை.</p><p>* மாணவர்களின் நலனை பாதுகாக்க தொடர் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் விரைவு நீதிமன்றம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>* தேர்வுத்தாள் கசிவில் தொடர்புடையோருக்கு கடும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும்.</p><p>* வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேவையான அனைத்து நடவடிக்கை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>* வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றமிழைத்த அனைவரும் தண்டிக்கப்படுவர்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY: தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-23-07-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-23-07-2026#comments</comments><guid isPermaLink="false">7204631f-494e-4837-a88f-93b8a21cce67</guid><pubDate>Thu, 23 Jul 2026 04:51:38 +0000</pubDate><atom:updated>2026-07-23T04:51:38.481Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/09/29/19323366-gold.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/09/29/19323366-gold.webp?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சர்வதேச பொருளாதார சூழல், போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. இதனால் தங்கம் விலை ஏற்றமும், இறக்கமுமாக காணப்படுகிறது.</p><p>சென்னையில் நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.13,220-க்கும், சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.1,05,760 -க்கும் விற்பனையானது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு  ரூ.1,680 உயர்ந்து ரூ.1,07,440-க்கும், கிராமுக்கு ரூ.210 உயர்ந்து ரூ.13,430-க்கும் விற்பனையானது. </p> <h2>தங்கம் விலை உயர்வு</h2><p>இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு  ரூ.560 உயர்ந்து ரூ.1,08,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.13,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><h2>வெள்ளி விலை நிலவரம்</h2><p>வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-</h2><p>22-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,07,440</p><p>21-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,760</p><p>20-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,200</p><p>19-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,080</p><p>18-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,080</p> <h2>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-</h2><p>22-07-2026- ஒரு கிராம் ரூ.245</p><p>21-07-2026- ஒரு கிராம் ரூ.240</p><p>20-07-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>19-07-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>18-07-2026- ஒரு கிராம் ரூ.235</p> ]]></content:encoded></item><item><title>வேற லெவல் அறிமுக சலுகைகளுடன் விற்பனைக்கு வந்த விவோ ஸ்மார்ட்போன்</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/vivo-t5-lite-5g-sale-begins-in-india</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/vivo-t5-lite-5g-sale-begins-in-india#comments</comments><guid isPermaLink="false">932704a6-a83c-491a-a618-01f8932df555</guid><pubDate>Thu, 23 Jul 2026 04:51:00 +0000</pubDate><atom:updated>2026-07-23T04:51:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vivo,smartphone,ஸ்மார்ட்போன்,விவோ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/2s20ot9p/vivo.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vivo T5 Lite 5G]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/2s20ot9p/vivo.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விவோ நிறுவனம் இந்திய சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்த <a href="https://www.maalaimalar.com/topic/vivo">விவோ</a> T5 லைட் ஸ்மாரட்போனின் விற்பனை துவங்கியது. பட்ஜெட் பிரிவில் நிலை நிறுத்தப்பட்டுள்ள விவோ T5 லைட் மாடல் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 பிராசஸர், 6500mAh பேட்டரியுடன் வருகிறது. </p><p>இருவித நிறங்களில் கிடைக்கும் விவோ T5 லைட் <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மாரட்போன்</a> 50MP பிரைமரி கேமரா, IP65 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி மற்றும் 44 வாட் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறது.</p><h2>விவோ T5 லைட் அம்சங்கள்:</h2><p>அம்சங்களை பொருத்தவரை புதிய விவோ T5 லைட் 5ஜி மாடல் 6.74 இன்ச் HD+ 720x1600 பிக்சல் LCD பேனல், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியுடன் கிடைக்கிறது.</p><p>புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 0.08MP இரண்டாவது லென்ஸ், 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. புதிய விவோ T5 லைட் ஸ்மார்ட்போன் 6500mAh பேட்டரி மற்றும் 44 வாட் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறது. புதிய ஸ்மார்ட்போன் IP65 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியுடன் வருகிறது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.</p><h2>விலை விவரங்கள்:</h2><p>விவோ T5 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 19,999 என்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி ரூ. 21,999 என்றும் 6 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் ரூ. 24,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டுவிலைட் ஷேடோ மற்றும் வேவ் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.</p><p>அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் ஹெச்.டி.எப்.சி., எஸ்.பி.ஐ. அல்லது ஆக்சிஸ் வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ூ. 1500 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் அதிகபட்சம் மூன்று மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>அமைச்சர் ராஜினாமா செய்வதால் அரசு பலவீனமடையாது - பிரதமர் மோடிக்கு அன்னா ஹசாரே கடிதம்   
</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protests-anna-hazare-urges-pm-modi-seeks-ministerial-accountability</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protests-anna-hazare-urges-pm-modi-seeks-ministerial-accountability#comments</comments><guid isPermaLink="false">b2c3a096-9d34-4cf5-9592-7ebe10b37f4f</guid><pubDate>Thu, 23 Jul 2026 04:49:51 +0000</pubDate><atom:updated>2026-07-23T04:49:51.940Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Anna Hazare,pm modi,neet protest,CJP Protest,சிஜேபி போராட்டம்,அண்ணா ஹசாரே,NEET Protest Updates</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/0xgh8ksi/Modi.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரதமர் மோடி, அண்ணா ஹசாரே ]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர் மோடி, அண்ணா ஹசாரே ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/0xgh8ksi/Modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வு   வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் காரணமாக டெல்லியில் சிஜேபி தலைமையில் இளைஞர்களின் <a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-delhi-violence-raf-woman-officers-cockroach-remark-sparks-outrage">போராட்டம்</a> தீவிரமடைந்துள்ளது. </p><p>அவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. </p><p>கடந்த ஜூலை 20 அன்று பாராளுமன்றம் நோக்கி பேரணி சென்றவர்கள் மீது காவல்துறை மற்றும் மத்திய படையினர் நடத்திய தாக்குதல் கண்டனத்தை குவித்து வருகிறது. </p><p>இந்நிலையில், சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். </p><p>அன்னா ஹசாரே தனது கடிதத்தில், </p><h2>அமைச்சர் ராஜினாமா செய்தால் அரசு பலவீனமடையாது: </h2><p>வழக்கமாக ஏதேனும் ஊழல் அல்லது முறைகேடு நடந்தால் கீழ்மட்ட அதிகாரிகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், ஒரு துறையின் ஒட்டுமொத்தத் தோல்விக்கு அதன் உயர் தலைமையே இறுதிப் பொறுப்பேற்க வேண்டும்.</p><p>தவறு நடக்கும் போது சம்பந்தப்பட்ட அமைச்சர் பொறுப்பேற்று ராஜினாமா செய்தால் அரசு பலவீனமடையாது.  </p><p>மாறாக, நிர்வாகத்தில் பொறுப்புக்கூறல் அதிகரிக்கும். இது மற்ற அமைச்சர்களுக்கும் ஒரு தெளிவான எச்சரிக்கையாக அமைந்து, அரசின் செயல்பாட்டை மேலும் பொறுப்புமிக்கதாக மாற்றும்.</p> <h2>22 மாணவர்கள்  தற்கொலை </h2><p>2024இல் நீட் வினாத்தாள் கசிவு புகார்கள் எழுந்தன. அதே நிலை இந்த ஆண்டும் தொடர்வதால் சுமார் 22 லட்சம் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>தேர்வுகள் ரத்து செய்யப்படுவது மற்றும் மறுதேர்வு குறித்த நிச்சயமற்ற தன்மையால் மாணவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.</p><p>ஊடக அறிக்கைகளின்படி, இதுவரை 22 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர் என்பது மிகுந்த வேதனையளிக்கிறது.</p><p>அரசு வேலைவாய்ப்புகளில் ஏற்படும் தாமதம், வினாத்தாள் கசிவுகள் மற்றும் வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றால் நாட்டின் இளைஞர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.</p><p>இதனை வெறும் சட்டஒழுங்கு பிரச்சனையாக அரசு அணுகக் கூடாது.</p> <h2>சோனம் வாங்சுக்</h2><p>டெல்லியில் உண்ணாவிரதம் இருந்த சோனம் வாங்சுக் மீது காவல்துறை நடத்திய பலப்பிரயோகம், அவரை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய விதம் வேதனையளிக்கிறது.</p><p>அடக்குமுறையைக் கையாளாமல், அரசின் பிரதிநிதிகளை அனுப்பி அவர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும்.</p><p>ஜனநாயக மற்றும் காந்திய வழியில் போராடும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கைகளைப் பொறுமையுடன் கேட்டு, பரஸ்பர நம்பிக்கையுடன் பேச்சுவார்த்தை நடத்திப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும்" என பிரதமர் மோடியை வலியுறுத்தியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நீட் தேர்வை ஒழிக்க வேண்டிய நேரம் இது - மு.க.ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-its-time-to-abolish-neet</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-its-time-to-abolish-neet#comments</comments><guid isPermaLink="false">9e5d783a-a69f-48d5-b982-750e66d19749</guid><pubDate>Thu, 23 Jul 2026 04:33:52 +0000</pubDate><atom:updated>2026-07-23T04:33:52.050Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,நீட் தேர்வு,Neet exam,முக ஸ்டாலின்,CJP Protest,நீட் தேர்வு வினாத்தாள் கசிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/j7vwg76b/mkstalin1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/j7vwg76b/mkstalin1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நீட் தேர்வை முற்றிலுமாக ஒழிப்பதற்கான நேரம் இது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.</strong></em> </p><p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த மாதம் 20-ந் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்திரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவர்களது <a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-says-fast-track-courts-to-ensure-swift-and-stringent-punishment-for-those-involved-in-paper-leaks">போராட்டம்</a> நேற்று 33-வது நாளை எட்டியது. இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களிடம் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது.</p> <p>கடந்த 20-ந்தேதி இந்த போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம் நோக்கி நடத்திய பேரணி பெரிய வன்முறையில் முடிந்தது. இந்த விவகாரத்தை முன்னெடுத்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரசார் நடத்திய போராட்டம் பா.ஜ.க.வுக்கு பெரிய சவாலாக அமைந்தது. போலீஸ் தடியடியில் பல இளைஞர்கள் காயம் அடைந்த பிறகும் ஜந்தர் மந்தரில் இன்னும் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p> <p>இந்நிலையில் நீட் தேர்வை முற்றிலுமாக ஒழிப்பதற்கான நேரம் இது என திமுக தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/neet-and-justice-cannot-exist-together-mk-stalin">மு.க.ஸ்டாலின்</a> தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>* நீட் 3 முக்கிய வாக்குறுதிகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. 1. சுமையைக் குறைத்தல், 2. வணிகமயமாக்கலை ஒழித்தல், 3. தரத்தை மேம்படுத்துதல். இந்த ஒவ்வொரு அம்சத்திலும் நீட் தோல்வியடைந்துள்ளது.</p> <p>* நீட் தேர்வு கற்றலின் மையத்தை பள்ளிகளில் இருந்து பயிற்சி மையங்களுக்கு மாற்றி உள்ளது, அவ்வளவு தான்.</p><p>* நீட் தேர்வின் பிரச்சனை எப்போதுமே நடைமுறை சார்ந்தது மட்டுமல்ல, அது கட்டமைப்பு ரீதியானது. சமீபத்திய நிகழ்வுகள் அதை உறுதிப்படுத்தியுள்ளன.</p><p>* தொடர்ந்து நடைபெற்று வரும் மாணவர்கள் போராட்டம் மத்திய அரசுக்கு ஒரு விழிப்புணர்வு அழைப்பாக அமைய வேண்டும். மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது. நீட் தேர்வை ஒழிக்க வேண்டிய நேரம் இது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>போராடும் இளைஞர்களை கிண்டலடித்த அதிரடிப்படை பெண் அதிகாரிக்கு குவியும் கண்டனம்.. பெண்கள் மீதான தாக்குதலை எப்படி நியாயப்படுத்தலாம்? என கேள்வி </title><link>https://www.maalaimalar.com/news/national/neet-protest-delhi-violence-raf-woman-officers-cockroach-remark-sparks-outrage</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-protest-delhi-violence-raf-woman-officers-cockroach-remark-sparks-outrage#comments</comments><guid isPermaLink="false">cb2d2d5c-21f0-4019-a3ad-c2927eec25a3</guid><pubDate>Thu, 23 Jul 2026 04:28:41 +0000</pubDate><atom:updated>2026-07-23T04:28:41.133Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>CJP Protest,அபிஜித் தீப்கே,Abhijit Dipke,சிஜேபி போராட்டம்,ஆர்ஏஎப்,RAF</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/eokfhyyz/tn-23.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ இடது - சோனியா செஹ்ராவத்]]></media:title><media:description type="html"><![CDATA[ இடது - சோனியா செஹ்ராவத்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/eokfhyyz/tn-23.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி கட்சி தலைமையில் நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக ஒரு மாதத்தை கடந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. </p><p>கடந்த ஜூலை 20 அன்று நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்ற இளைஞர்கள் மீது டெல்லி போலீசார், ரேபிட் ஆக்சன் போர்ஸ் (ஆர்ஏஎப்) அதிரடிப் படை  உள்ளிட்ட மத்திய படையினர் லத்திகளால் <a href="https://www.maalaimalar.com/amp/story/news/national/neet-protest-clashes-tear-gas-injuries-and-internet-suspension-in-central-delhi">சரமாரியாக தாக்குதல் </a>நடத்தினர். கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர். பெல்லட் துப்பாக்கியும் பய்னபடுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. </p><p>அமைதியான முறையில் அணிவகுத்து வந்த இளைஞர்கள் மீதான இந்த கோர தாக்குதல்  பல தரப்பில் இருந்தும் கண்டனங்களை குவித்து வருகிறது. </p><p>இதனிடையே இந்த தாக்குதலில் அங்கம் வகித்த ஆர்ஏஎப்  அதிரடிப்படை பெண் அதிகாரி சோனியா செஹ்ராவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட் பதிவு பெரும் சர்ச்சையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>"தங்களைத்தானே திருத்திக்கொள்ள முடியாது; அவர்கள் நாட்டைத் திருத்த வருகிறார்களாம்!"  என ஒரு இறந்த கரப்பான்பூச்சியின் படத்துடன் அவர் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.</p><figure><img alt="சோனியா செஹ்ராவத் பதிவு " src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/u6ulww70/tn-22.jpg" /><figcaption>சோனியா செஹ்ராவத் பதிவு </figcaption></figure><h2>கண்டனம்</h2><p>போராட்டக்காரர்களை இழிவுபடுத்துவதாகவும், காவல்துறையின் கொடூரத் தாக்குதலை நியாயப்படுத்துவதாகவும் இது அமைந்துள்ளதாக சிஜேபி குற்றம் சாட்டியுள்ளது.</p><p>"அவர் எங்களைக் கரப்பான் பூச்சிகளாகப் பார்க்கிறார்; ஆனால் கரப்பான் பூச்சிகள் ஒருபோதும் அழிவதில்லை" என்று எக்ஸ் தளத்தில் அவ்வமைப்பு பதிவிட்டுள்ளது.</p><p>திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா இந்த பதவியை பகிர்ந்து, "எங்கள் குழந்தைகளைக் கரப்பான் பூச்சிகள் என்று அழைக்கும் இந்த அதிகாரி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.</p> <h2>தீப்கே கேள்வி</h2><p>ஜூலை 20 பேரணியின் போது, ஒரு வாகனத்தின் மீது நின்ற சிஜேபி நிறுவனர் அபிஜீத் திப்கே, அதிகாரி சோனியா செஹ்ராவத்திடம்,</p><p>"ஒரு பெண்ணாக இருந்துகொண்டு, பெண் போராட்டக்காரர்கள் மீது ஆண்கள் நடத்தும் கொடூரத் தாக்குதலை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? ஒரு பெண் போராட்டக்காரரின் நெஞ்சில் தாக்கியதாகக் கூறுகிறாரே, இது நியாயமா?" என்று கேள்வி எழுப்பினார்.</p><p>இருப்பினும், மற்ற அதிகாரிகளைப் போலல்லாமல், சோனியா செஹ்ராவத் தனது கருத்துகளை மிகவும் அமைதியாகவும் பொறுமையாகவும் கேட்டதாக அபிஜீத் திப்கே பாராட்டு தெரிவித்தார்.</p> <h2>சோனியா செஹ்ராவத் மறுப்பு</h2><p>தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கமளித்த சோனியா செஹ்ராவத்,</p><p>"எனது கட்டுப்பாட்டில் உள்ள வீரர்கள் யாருமே வேண்டுமென்றோ அல்லது தற்செயலாகவோ பெண் போராட்டக்காரர்களைத் தாக்கவில்லை. அவர்கள் பெண்களைப் பாதுகாக்கும் வகையில் பயிற்சி பெற்றவர்கள்.</p><p>கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது, இடைவெளி விட்டு நிற்குமாறு நான் வேண்டுகோள் விடுத்தேன். ஆனால் கூட்டத்திற்குப் பின்னால் இருந்தவர்கள் தள்ளியதால் மூன்று பெண்கள் கீழே விழுந்தனர். நெரிசலில் தான் அவர்களுக்குக் காயம் ஏற்பட்டதே தவிர, எனது வீரர்கள் அவர்களைத் தாக்கவில்லை."</p><p>போராட்டக்காரர்கள் கற்களையும் காலணிகளையும் வீசியதில் நானும் எனது வீரர்களும் காயமடைந்தோம். எனது தலைக்கவசத்தைக் கழற்றி வீசினர்; ஒரு வீரரைக் கூட்டத்திற்குள் இழுத்துச் சென்றனர்.</p><p>அத்தகைய சூழலில் தற்காப்புக்காகவே நாங்கள் செயல்பட வேண்டியிருந்தது. 12 வயது சிறுமியைக் கூடப் பாதுகாப்பற்ற முறையில் போராட்டத்திற்கு அழைத்து வந்திருந்தனர்; அந்தச் சிறுமியை மீட்பதே எங்களுக்கு முதன்மைப் பணியாக இருந்தது" என்றார்.</p> <h2>யார் இந்த சோனியா செஹ்ராவத்?</h2><p>சிஆர்பிஎப் - மத்திய காவல் படையின் கீழ் இயங்கும் ஆர்ஏஎப் திரடிப் படையில் உதவி கமாண்டன்ட்டாகப் பணியாற்றும் சோனியா செஹ்ராவத், சமூக வலைத்தளங்களில் மிகவும் புகழ்பெற்றவர்.</p><p>இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 6.21 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பாளர்களைக் கொண்டுள்ள இவர், தனது உடற்பயிற்சி வீடியோக்கள், நடன ரீல்ஸ்கள் மற்றும் ராணுவப் பயிற்சி தொடர்பான பதிவுகளைத் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.</p>]]></content:encoded></item><item><title>எம்ஜிஆருக்கு பிறகு... முதலமைச்சரான பின் வெளியாகும் நடிகரின் படம் - விஜய் படைத்த வரலாறு</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/after-mgr-an-actors-film-releasing-after-becoming-chief-minister-history-created-by-vijay</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/after-mgr-an-actors-film-releasing-after-becoming-chief-minister-history-created-by-vijay#comments</comments><guid isPermaLink="false">740cc428-9c38-4835-b911-17714e7b5d1b</guid><pubDate>Thu, 23 Jul 2026 04:21:16 +0000</pubDate><atom:updated>2026-07-23T04:21:16.375Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Jana Nayagan,ஜன நாயகன்,விஜய்,vijay,MGR,எம்ஜிஆர்,JanaNayagan,JanaNayaganRelease</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/m9qe4pn8/jananayagan.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ எம்ஜிஆர்- விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ எம்ஜிஆர்- விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/m9qe4pn8/jananayagan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தமிழக அரசியலிலும் சினிமாத்துறையிலும் எம்.ஜி.ஆருக்குப் பிறகு, தற்போது முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நிலையில் ஒரு நடிகரின் திரைப்படம் வெளியாவது விஜய் மூலமாக சுமார் 50 ஆண்டுகள் கழித்து மீண்டும் நிகழ்ந்துள்ளது.</aside><h2><strong>ஜன நாயகன்</strong></h2><p>எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள '<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9C%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D">ஜனநாயகன்</a>' திரைப்படம் பல்வேறு சிக்கல்களை கடந்து உலகம் முழுவதும் இன்று வெளியானது. </p><p>தமிழக முதலமைச்சரும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருமான விஜய்யின் திரைப்பயணத்திற்கு மகுடம் சூட்டும் படமாகவும், அவரது இறுதித் திரைப்படமாகவும் வெளியாகும் இந்தப் படத்தை வரவேற்க ரசிகர்கள் பல மாதங்களாக காத்திருந்த நிலையில், வெளியீட்டுக்கு முந்தைய இரவே சென்னை நகரம் முழுவதும் திருவிழா கோலம் பூண்டது.</p><h2><strong>திருவிழா</strong></h2><p>இன்று வெளியாகி உள்ள திரைப்படத்தை நேற்று இரவே கொண்டாடத் தொடங்கிய விஜய் ரசிகர்கள், சென்னை நகரின் முக்கிய திரையரங்குகளை உற்சாகத்தின் உச்சத்துக்கு கொண்டு சென்றனர். இரவு நேரம் என்பதையே மறக்கடிக்கும் வகையில் ரசிகர்களின் ஆரவாரம், மேளதாளங்கள், ஆட்டம்-பாட்டம் என திரையரங்குகள் முன்பு திருவிழா சூழல் நிலவியது.</p><p>அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கி தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய், தனது திரைப்பயணத்தை '<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/jana-nayagan-movie-release-across-tamilnadu">ஜனநாயகன்</a>' திரைப்படத்துடன் நிறைவு செய்கிறார் என்பதால், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக, தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் இன்றைய வெளியீட்டை திருவிழாவாக கொண்டாடினர். </p><h2><strong>எம்.ஜி.ஆருக்கு பிறகு</strong></h2><p>இதனிடையே, தமிழக அரசியலிலும் சினிமாத்துறையிலும் எம்.ஜி.ஆருக்குப் பிறகு, தற்போது முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நிலையில் ஒரு நடிகரின் திரைப்படம் வெளியாவது விஜய் மூலமாக சுமார் 50 ஆண்டுகள் கழித்து மீண்டும் நிகழ்ந்துள்ளது.</p><p>1977 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, அவர் நடிப்பில் உருவான 'மீனவ நண்பன்' (1977 அக்டோபர்) மற்றும் 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' (1978) ஆகிய திரைப்படங்கள் வெளியாகின.</p><p>அதேபோல், தற்போதைய தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, அவர் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>வினாத்தாள் கசிவு விவகாரம்: விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்படும் - பிரதமர் மோடி
</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-says-fast-track-courts-to-ensure-swift-and-stringent-punishment-for-those-involved-in-paper-leaks</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-says-fast-track-courts-to-ensure-swift-and-stringent-punishment-for-those-involved-in-paper-leaks#comments</comments><guid isPermaLink="false">a2e2949b-1cd7-4cb5-8c03-f092023c46a4</guid><pubDate>Thu, 23 Jul 2026 04:08:50 +0000</pubDate><atom:updated>2026-07-23T04:08:50.116Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Neet exam,pm modi,பிரதமர் மோடி,நீட் வினாத்தாள் கசிவு,CJP Protest,விரைவு நீதிமன்றம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/9dkmu47a/modi1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/9dkmu47a/modi1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>வினாத்தாள் கசிவு விவகாரத்தில் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.</strong></em> </p><h2>போராட்டம்</h2><p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த மாதம் 20-ந் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்திரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவர்களது போராட்டம் நேற்று 33-வது நாளை எட்டியது. இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களிடம் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது.</p> <p>கடந்த 20-ந் தேதி இந்த போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம் நோக்கி நடத்திய பேரணி பெரிய வன்முறையில் முடிந்தது. இந்த விவகாரத்தை முன்னெடுத்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரசார் நடத்திய <a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-clashes-tear-gas-injuries-and-internet-suspension-in-central-delhi">போராட்டம்</a> பா.ஜ.க.வுக்கு பெரிய சவாலாக அமைந்தது. போலீஸ் தடியடியில் பல இளைஞர்கள் காயம் அடைந்த பிறகும் ஜந்தர் மந்தரில் இன்னும் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p> <p>இதுதொடர்பாக <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF">பிரதமர் மோடி</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>* இளைஞர் நலன் மற்றும் எதிர்காலத்தைவிட முக்கியமானது எதுவும் இல்லை.</p><p>* மாணவர்களின் நலனை பாதுகாக்க தொடர் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் விரைவு நீதிமன்றம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>* தேர்வுத்தாள் கசிவில் தொடர்புடையோருக்கு கடும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும்.</p> <p>* வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேவையான அனைத்து நடவடிக்கை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>* வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றமிழைத்த அனைவரும் தண்டிக்கப்படுவர்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை (24.07.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-32</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-32#comments</comments><guid isPermaLink="false">71e0bf3b-3fad-4e78-a7f1-6796ad1682b0</guid><pubDate>Thu, 23 Jul 2026 03:47:59 +0000</pubDate><atom:updated>2026-07-23T03:47:59.415Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மின்தடை,TNEB,தமிழக மின்சார வாரியம்,Power Cut,தமிழ்நாடு மின்சார வாரியம்,சென்னையில் மின்தடை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/zyjhqqpm/powercut1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/zyjhqqpm/powercut1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் <a href="https://www.maalaimalar.com/topic/சென்னையில்-மின்தடை">மின் தடை</a> செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><p>அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (24.07.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.  அதன்படி, </p><h2><strong>வேளச்சேரி</strong></h2><p>100 அடி புறவழிச்சாலை, வேளச்சேரி பிரதான சாலை, தேவி கருமாரியம்மன் நகர், வெங்கடேஸ்வரா நகர் 1-வது முதல் 4-வது தெரு வரை, டேவ் பிளாட், பாலகிருஷ்ணா தெரு, திருவள்ளூர் தெரு, கம்பர் தெரு, பாபா கார்டன், வீனஸ் காலனி, காமராஜர் தெரு, டான்சி நகர் மற்றும் முழு வி.ஜி.பி. செல்வா நகர்.</p><h2><strong>ஆவடி</strong></h2><p>சி.டி.எச் சாலை, கவரபளையம், சிந்து நகர், காந்தி நகர், டி.ஆர்.ஆர் நகர், தனலட்சுமி நகர், எம்.ஆர்.எப். நகர், நாசர் பிரதான சாலை, மோசஸ் தெரு.</p><h2><strong>பூவிருந்தவல்லி</strong></h2><p>ஜெ.ஜெ. நகர், குமரன் நகர், லீலாவதி நகர், ஏரிக்கரை சாலை, ஆவடி பிரதான சாலை.</p><h2><strong>மாங்காடு</strong></h2><p>மலையம்பாக்கம் பாரி கார்டன், ராயல் சிட்டி, சக்தி நகர், ரஹ்மத் நகர், எல்.கே.பி. நகர், பிள்ளையார் கோவில் தெரு, அபி எஸ்டேட், ஸ்ரீனிவாச நகர், ஜனனி நகர், நேரு தெரு, காமராஜர் தெரு, வசந்தபுரி பேஸ் I மற்றும் II, ராம் நகர்.</p><h2><strong>தாம்பரம்</strong></h2><p>மாடம்பாக்கம் நூத்தஞ்சேரி பிரதான சாலை, நூத்தஞ்சேரி லிங்க் சாலை, சபாபதி நகர், ஜோதி நகர், மாணிக்கம்நகர், வேங்கைவாசல், பாலா கார்டன் மற்றும் விரிவாக்கப் பகுதி.</p><h2><strong>புழல்</strong></h2><p>மதானக்குப்பம், புத்தகரம், பெருமாள் நகர், ஆண்டாள் கோவில் தெரு, சண்முகபுரம், சிவப்பிரகாசம் நகர், நேதாஜி நகர், லட்சுமி அம்மன் நகர்.</p><h2><strong>போரூர்</strong></h2><p>சிக்கராயபுரம், கணபதி நகர், அஷ்டலக்ஷ்மி நகர், ஹரி அவென்யூ, மாசிலாமணி நகர், லட்சுமி அவென்யூ, மாந்தியம்மன் கோவில் தெரு, மங்களாபுரம், கே.கே.நகர், தென் காலனி, சபரி நகர், பாலாஜி நகர், கார்த்திக் பேலஸ், ஆர்.சி. பேலஸ், திருமுருகா மண்டபம், குன்றத்தூர் பிரதான சாலை, எம்.ஜி.ஆர். சிலை பஸ் ஸ்டாப், மேட்டு தெரு, பஜனை கோவில் தெரு, காந்தி தெரு, சிவன்தாங்கல், ஆஞ்சநேயர் கோவில் தெரு, அம்பாள் நகர், லீலாவதி நகர், குமாரசாமி நகர், ஐடியா கம்பெனி.</p><h2><strong>ஐ.டி. காரிடார்</strong></h2><p>எழில் நகர், கண்ணகி நகர், வி.பி.ஜி அவென்யூ, ராயல் அவென்யூ, குமரன் குடில், தேவராஜ் அவென்யூ, மவுண்ட்பேட்டன் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, என்.ஜி.கே அவென்யூ, செயலக காலனி, பார்த்தசாரதி நகர், அன்னை பார்வதி நகர், தேவராஜ் நகர், ஸ்ரீ நகர், மகாத்மா காந்தி நகர், கற்பக விநாயகர் நகர், கணேஷ் நகர், திருவள்ளுவர் நகர், ராமலிங்க நகர், பாரதி தெரு, அண்ணா தெரு, நாராயணா நகர், கோபிநாத் அவென்யூ, ஈஞ்சம்பாக்கம், கஸ்தூரிபாய் நகர்.</p><h2><strong>அடையாறு</strong></h2><p>எல்.பி. சாலை, 1-வது முதல் 4-வது பரமேஸ்வரன் நகர், சாஸ்திரி நகர் 1-வது அவென்யூ, 1-வது முதல் 3-வது பத்மநாபன் நகர், இந்திரா நகர், சீனிவாசமூர்த்தி அவென்யூ, திருவேங்கடம் தெரு, 1-வது குறுக்குத் தெரு, கே.பி. நகர், அண்ணா அவென்யூ.</p><h2><strong>பெசன்ட் நகர்</strong></h2><p>கங்கை தெரு, அப்பர் தெரு, டைகர் வரதாச்சாரியார் தெரு, அருண்டேல் கடற்கரை சாலை, கடற்கரை சாலை, ருக்மணி சாலை விரிவாக்கப்பகுதி, அஷ்டலட்சுமி கார்டன், ஓடை குப்பம், திடீர் நகர், கோஸ்டல் சாலை, திருமுருகன் தெரு, வைகை தெரு, பாரி தெரு, காவேரி தெரு.</p><h2><strong>கொட்டிவாக்கம்:</strong></h2><p>நியூ கடற்கரை சாலை மற்றும் விரிவாக்கப்பகுதி, சிட்ரஸ் ஹோட்டல், திருவள்ளுவர் நகர் 2-வது மற்றும் 7-வது பிரதான சாலை, 36-வது, 58-வது மற்றும் 59-வது குறுக்குத் தெரு, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், தாமரை ஹவுசிங் போர்டு, பேவாட்ச் புல்வார்டு, வாட்டர்லேண்ட் டிரைவ்.</p><h2><strong>கோவிலம்பாக்கம்</strong></h2><p>ஏழுமலை சாலை, வடிவேல் நகர், கோபால் நகர், பெருமாள் நகர், பார்த்தசாரதி சாலை, ஜெய்கணேஷ் நகர், பொன்னியம்மன் கோவில் தெரு, அபிநாதன் நகர், விஜயலட்சுமி நகர், தமிழன் தெரு, பாலகிருஷ்ணா தெரு, அவிவா என்க்ளேவ், பாலராமன் தெரு, பிள்ளையார் கோவில் தெரு.</p><h2><strong>அம்பத்தூர்</strong></h2><p>என்.ஆர்.எஸ். சாலை, பல்லா தெரு, டி.வி.எஸ். நகர், கண்டிகை தெரு, அக்ரஹாரம், சீனிவாசபுரம், செந்தில் நகர், ஐயப்பன் நகர், சீனிவாச நகர், தயாளன் நகர், கணேஷ் நகர், பாபா நகர், கடப்பா சாலை, வனசக்தி நகர், மூகாம்பிகை நகர், மதானக்குப்பம், பெருமாள் கோவில் தெரு மற்றும் ஆர்.கே. சிண்டிகேட்.</p>]]></content:encoded></item><item><title>ரூ. 37,999 விலையில் புது கேலக்ஸி வாட்ச் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்!</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/samsung-galaxy-watch-ultra2-galaxy-watch9-unveiled</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/samsung-galaxy-watch-ultra2-galaxy-watch9-unveiled#comments</comments><guid isPermaLink="false">11bc25c6-350c-4e10-81b4-c61b3faf7480</guid><pubDate>Thu, 23 Jul 2026 03:39:00 +0000</pubDate><atom:updated>2026-07-23T03:39:00.000Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Smartwatch,ஸ்மார்ட்வாட்ச்,Samsung,சாம்சங்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/yrglkkkx/gxly-tch.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Galaxy Watch Ultra 2 and Galaxy Watch 9]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/yrglkkkx/gxly-tch.png?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா 2 மற்றும் கேலக்ஸி வாட்ச் 9 மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இரு மாடல்களிலும் அளவில் பெரிய பேட்டரி, அதிக பிரகாசமான டிஸ்ப்ளே, ஏ.ஐ. சார்ந்த உடல் ஆரோக்கிய அம்சங்கள், மேம்பட்ட ஹார்டுவேர் அம்சங்களுடன் உருவாக்கப்பட்டு இருக்கிறது.</p><p>கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா 2 மாடல் விளையாட்டுத்துறையை சேர்ந்தவர்களுக்கு பயன்தரும், கேலக்ஸி வாட்ச் 9 மாடல் அனைவரும் பயன்படுத்து ஏதுவாக அன்றாட உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் அம்சங்களுடன் வருகிறது. புதிய அணியக்கூடிய சாதனங்கள் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3, சீரிஸ் 11 மற்றும் பிக்சல் வாட்ச் 5 மாடல்களுக்கு போட்டியாக அமைகின்றன.</p><h2>வாட்ச் அல்ட்ரா 2 அம்சங்கள்:</h2><p>கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா 2 மாடல் 47 மில்லிமீட்டர் அளவில் டைட்டானியம் கேஸ், சஃபையர் க்ரிஸ்டல் டிஸ்ப்ளே, 800mAh பேட்டரி கொண்டுள்ளது. இது முந்தைய அல்ட்ரா மாடலில் இருந்ததை விட 35 சதவீதம அளவில் பெரியது ஆகும். இதில் 1.52 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 498x498 பிக்சல் ஸ்கிரீன், குவால்காம் ஸ்னாப்டிராகன் SDW6100 பிராசஸர், 2 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரியுடன் கிடைக்கிறது.</p><p>இத்துடன் எல்.டி.இ. ப்ளூடூத் 6.0, டூயல் ஃப்ரீக்வன்சி ஜி.பி.எஸ்., என்.எப்.சி., வைபை, 10ATM, IP69K, MIL-STD-810H மற்றும் EN13319 சான்றுகளுடன் வருகிறது.</p><h2>வாட்ச் 9 அம்சங்கள்:</h2><p>கேலக்ஸி வாட்ச் 9 மாடல் 40 மில்லிமீட்டர் மற்றும் 44 மில்லிமீட்டர் என இருவித அளவுகளில் கிடைக்கிறது. இத்துடன் அலுமினியம் கேஸ், சஃபையர் க்ரிஸ்டல் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதன் 44 மில்லிமீட்டர் மாடல் 1.47 இன்ச் 480x480 சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 40 மில்லிமீட்டர் மாடலில் 1.34 இன்ச் 438x438 பேனலுடன் கிடைக்கிறது.</p><p>இரு மாடல்களிலும் ஸ்னாப்டிராகன் SDW6100 பிராசஸர், 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, முறையே 445mAh மற்றும் 390mAh பேட்டரிகள் வழங்கப்படுகின்றன. அல்ட்ரா 2 மாடலை போன்றே கேலக்ஸி வாட்ச் 9 மாடலும் வியர் ஓ.எஸ். மூலம் இயங்குகிறது.</p><h2>விலை விவரங்கள்:</h2><p>கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா 2 ரூ. 64,999</p><p>கேலக்ஸி வாடச் 9 (40mm) ரூ. 37,999</p><p>கேலக்ஸி வாட்ச் 9 (44mm) ரூ. 40,999</p><p>புதிய கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா 2 மற்றும் கேலக்ஸி வாட்ச் 9 மாடல்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>வெளியானது ‘ஜன நாயகன்’... ஆரவாரத்தில் ரசிகர்கள்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/jana-nayagan-movie-release-across-tamilnadu</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/jana-nayagan-movie-release-across-tamilnadu#comments</comments><guid isPermaLink="false">a395f0b3-7d63-4544-b41b-c8d50105f525</guid><pubDate>Thu, 23 Jul 2026 03:35:09 +0000</pubDate><atom:updated>2026-07-23T03:35:09.375Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Jana Nayagan,ஜன நாயகன்,விஜய்,vijay,H Vinod,எச் வினோத்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/xtuutigf/jananayagan.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஜனநாயகன் பட காட்சி]]></media:title><media:description type="html"><![CDATA[ ஜனநாயகன் பட காட்சி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/xtuutigf/jananayagan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்’ என்ற டைட்டில் காடுடன் படம் வெளியானது.</aside><h2><strong>8 ஆயிரம் திரையரங்குகள்</strong></h2><p>எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் '<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9C%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D">ஜனநாயகன்</a>' திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. தமிழகத்தில் மட்டும் இப்படம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. உலகம் முழுவதும் 8 ஆயிரம் வரையிலான திரையரங்குகளில் படம் திரையிடப்பட்டது. </p><p>இந்தப்படம் ஏற்கனவே சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிடப்பட்டு இருந்தாலும், விஜய் நடித்துள்ள கடைசி படம் என்பதால் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.</p><h2><strong>முதலமைச்சர் விஜய்</strong></h2><p>தமிழகத்திற்கு முன்னதாகவே கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் ‘ஜன நாயகன்’ படம் வெளியானது. அப்போது ‘மாண்புமிகு தமிழ்நாடு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-enjoyed-watching-the-movie-jana-nayagan">முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்’ </a>என்ற டைட்டில் கார்டுடன் படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. </p><h2><strong>கோட்சூட்</strong></h2><p>இப்போது வெளியாகி இருக்கும் ‘ஜன நாயகன்’ படத்தில் நிறைய புது விஷயங்களை புகுத்தி இருக்கிறார்கள். அதாவது கோட்சூட் போட்டு கலக்கி கொண்டிருக்கும் முதலமைச்சர் விஜய்யின் இப்போதைய தோற்றத்தையும், படத்தில் ஆங்காங்கே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.</p><h2><strong>டிக்கெட் விலை</strong></h2><p>இப்படத்துக்கு தமிழகத்தில் மட்டுமே குறைந்த கட்டணத்தில் டிக்கெட் வழங்கப்படுகிறது. சென்னையில் ரூ.183 முதல் ரூ.190 வரை டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. கொச்சியில் ரூ.700 வரையிலும், டெல்லியில் ரூ.900 வரையிலும், மும்பையில் ரூ.1,000 வரையிலும், பெங்களூருவில் ரூ.2,500 வரையிலும் டிக்கெட் விற்பனையாகிறது.</p><h2><strong>திரைப்பிரபலங்கள்</strong></h2><p>‘ஜன நாயகன்’ படம் வெளியாவதற்கு முன்பு திரையரங்குகளில் கூடிய ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் ஆட்டம் பாடலுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் திரைப்பிரபலங்கள் பலரும் ‘ஜன நாயகன்’ படத்தை காண திரையரங்கிற்கு வருகை தந்தனர்.</p><h2><strong>ரசிகர்கள் கொண்டாட்டம்</strong></h2><p>கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள்...</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Chennai, Tamil Nadu: Fans of Actor and Tamil Nadu Chief Minister C Joseph Vijay gather outside the Rohini Theatre in Koyambedu ahead of the release of the movie &#39;Jana Nayagan&#39; in theatres worldwide today. <a href="https://t.co/GP084Br2z7">pic.twitter.com/GP084Br2z7</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2080113189870882844?ref_src=twsrc%5Etfw">July 23, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Chennai, Tamil Nadu: Fans of Actor and Tamil Nadu Chief Minister C Joseph Vijay gather outside the Rohini Theatre in Koyambedu ahead of the release of the movie &#39;Jana Nayagan&#39; in theatres worldwide today. <a href="https://t.co/ofkIMDFdBK">pic.twitter.com/ofkIMDFdBK</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2080108239652606208?ref_src=twsrc%5Etfw">July 23, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Chennai, Tamil Nadu: Fans of Actor and Tamil Nadu Chief Minister C Joseph Vijay reach Rohini Theatre in Koyambedu on their cars and bikes wrapped with posters of the actor. <br><br>Vijay&#39;s movie &#39;Jana Nayagan&#39; is releasing in theatres worldwide today. <a href="https://t.co/0P7H7GJbo4">pic.twitter.com/0P7H7GJbo4</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2080114315424854515?ref_src=twsrc%5Etfw">July 23, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>கோவையில் உள்ள கற்பகம் காம்ப்ளக்ஸ் முன்பு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Coimbatore, Tamil Nadu: Fans of Actor and Tamil Nadu Chief Minister C Joseph Vijay dance and celebrate outside the Karpagam Complex ahead of the release of the movie &#39;Jana Nayagan&#39; in theatres worldwide today. <a href="https://t.co/qGZtqZnHD1">pic.twitter.com/qGZtqZnHD1</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2080118060909007205?ref_src=twsrc%5Etfw">July 23, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>கோழைகள்.. அமைச்சரை மாற்றுவதால் எதுவும் மாறாது, அரசியல் மாற்றமே தீர்வு - இளைஞர்கள் மீதான தாக்குதலுக்கு நடிகர் கிஷோர் கண்டனம் </title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/neet-protest-police-crackdown-actor-kishore-slams-bjp-government-over-youth-assault-in-delhi</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/neet-protest-police-crackdown-actor-kishore-slams-bjp-government-over-youth-assault-in-delhi#comments</comments><guid isPermaLink="false">2251c44d-d707-4c48-ae18-bf99a60ac0f0</guid><pubDate>Thu, 23 Jul 2026 03:25:53 +0000</pubDate><atom:updated>2026-07-23T03:25:53.673Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PM  Modi,Aadukalam Kishore,ஆடுகளம் கிஷோர்,பிரதமர் மோடி,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/dv9dyie6/tn-21.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கிஷோர் ]]></media:title><media:description type="html"><![CDATA[ கிஷோர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/dv9dyie6/tn-21.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக கடந்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைமையில் இளைஞர்கள் கடந்த ஜூன் 20 போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஜூலை 20 அன்று பாராளுமன்றம் நோக்கி பேரணி சென்ற இளைஞர்கள் மீது போலீசார் மற்றும் மத்திய படையினர் கடுமையான <a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-clashes-tear-gas-injuries-and-internet-suspension-in-central-delhi">தாக்குதல் </a>நடத்தினர். </p><p>தடிகளால் அடித்தும், கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும் காவல்துறையினர் இளைஞர்களை தாக்கியது  பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனங்களை குவித்து வருகிறது. மேலும் டெல்லியில் நடக்கும் போராட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுவதும் நேற்று பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது. </p><p>அந்த வகையில் பெங்களூரில் நடந்த போராட்டத்தில் நடிகர் ஆடுகளம் கிஷோர் கலந்துகொண்டார். </p><p>இதனிடையே வீடியோ ஒன்றை வெளியிட்டு டெல்லி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள அவர் அதில் மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். </p> <h2>வீரர்கள் Vs கோழைகள்</h2><p>வீடியோவில் அவர் கூறியதாவது, "அன்பு, அமைதி, ஒற்றுமை மற்றும் அகிம்சையை வலியுறுத்தும் எனதருமை இளைஞர் படைக்கு வீரவணக்கம்.</p><p>திருப்பித் தாக்காமல், அடி வாங்குவதற்குக் கூட மிகப்பெரிய தைரியம் வேண்டும். உங்களை விட வீரம்மிக்க படை எதுவுமே இருக்க முடியாது.</p><p>உங்களை அடிக்கும் காவல்துறையினரும், ஆர்எஸ்எஸ் குண்டர்களும் கோழைகள். வன்முறையைக் கையிலெடுப்பவர்கள் மட்டுமே கோழைகளாக இருக்க முடியும்.</p> <h2>மோடி மனிதப் பிறவி அல்ல</h2><p>சிறு குழந்தைகள் மீது அவர்கள் காட்டிய இந்த கொடூரம், பிரதமர் மோடி தான் ஒரு 'மனிதப் பிறவி அல்ல' என்று கூறியதை நிரூபிக்கும் வகையில் உள்ளது. சிறிதளவாவது மனிதநேயம் கொண்ட எவரும் குழந்தைகள் மீது இப்படி ஒரு கொடூரத் தாக்குதலுக்கு உத்தரவிட மாட்டார்கள்." எனத் தெரிவித்தார்.</p><p>மேலும் பேசிய கிஷோர், "காந்தி படுகொலை, கோத்ரா கலவரம் முதல் கௌரி லங்கேஷ் படுகொலை வரை வன்முறையையும் வெறுப்பையும் வரலாறாகக் கொண்ட இந்த அரசிடமிருந்து நாம் பெரிதாக எதையும் எதிர்பார்க்க முடியாது.</p> <h2>தேசத்துரோகிகள்</h2><p>இதுபோதாதென்று, தங்களின் 'கோடி மீடியாக்கள்' , ஐடி செல்கள் மற்றும் அந்த்பக்த்-களை பயன்படுத்திபிஞ்சுக் குழந்தைகளையும் 'தேசத்துரோகிகள்' என்று சித்தரித்துப் பொய்களைப் பரப்புகிறார்கள்.</p><p>இந்த அரசில் இருப்பவர்கள் யாரும் தங்களது தவறுகளை ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை. அரசின் தோல்வியால் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறக்கூடப் பிரதமர் மோடிக்கு நேரமில்லை. ஒரு வார்த்தை கூட அவர் பேசவில்லை.</p><p>மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இரும்பு முள்கள் பொறித்த லத்திகளுடன் ஆட்களை ஏவிப் பிஞ்சுக் குழந்தைகளை அடிக்க வைக்கிறார்.</p> <h2>அரசியல் மாற்றம்</h2><p>ஒரே ஒரு கல்வி அமைச்சர் ராஜினாமா செய்வதால் மட்டும் நமது கல்வி முறை மாறிவிடாது. இந்த முழு அமைப்பும் ஊழல் நிறைந்ததாகவும், பொறுப்பற்றதாகவும் உள்ளது. ஒரு அரசியல் மாற்றம் மட்டுமே ஒட்டுமொத்த அமைப்பையும் மாற்ற முடியும்.</p><p>எனவே, இந்தப்போராட்டத்தை நாம் தேர்தல் வரை கொண்டு செல்ல வேண்டும். சாதிகள், மதங்களின் பெயரால் வாக்களிக்காமல், இந்த அரசியலவாதிகளின் ஒவ்வொரு செயலுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் வாக்குகள் மூலம் அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நீட்டுக்கு எதிராக காங்கிரஸ் போராடுவது கேலிக்கூத்து- டிடிவி தினகரன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-indictment-congress</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-indictment-congress#comments</comments><guid isPermaLink="false">9407e7b9-cc0a-44d6-bd7f-b368176dfa11</guid><pubDate>Thu, 23 Jul 2026 03:14:46 +0000</pubDate><atom:updated>2026-07-23T03:14:46.944Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,AMMK,அமமுக,டிடிவி தினகரன்,நீட் தேர்வு,Neet exam,TTTV Dhinakaran,CJP Protest</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/uckry6sc/TTVDhinakaran001.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ டிடிவி தினகரன்
]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/uckry6sc/TTVDhinakaran001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>எவ்வித அனுமதியும் பெறாமல் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் போராட்டம் நடத்திய ராகுல்காந்தியை கைது செய்திருப்பது ஜனநாயகப் படுகொலை என கூறுவது முன்பின் முரணாக தெரியவில்லையா ? என்று டி.டி.வி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.</aside><p>அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>அரசியல் ஆயுதம்</strong></h2><p>2010 ஆம் ஆண்டு, மத்தியில் ஆட்சியில் இருந்த போது மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு என்ற கருத்தை உருவாக்கி, <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">நீட் தேர்விற்கு</a> அடித்தளத்தை அமைத்துக் கொடுத்த காங்கிரஸ் கட்சி,  இன்று அதே நீட் தேர்வுக்கு எதிராக  தெருக்களில் இறங்கிப் போராடுவது மாணவ, மாணவியர்களின் உணர்வுகளை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தும் கீழ்த்தரமான செயலாகவே பார்க்கவேண்டியுள்ளது.</p><p>நீட் தேர்வை எதிர்த்து தற்போது போலிப் போராட்டம் நடத்தும் காங்கிரஸ், 2010 ஆம் ஆண்டு தான் ஆட்சியில் இருந்த போது நீட் தேர்வு அறிமுகப்படுத்த முயன்றது தவறு என்பதை தற்போதாவது ஒப்புக்கொள்கிறதா ? அல்லது அப்போது எடுத்த முடிவு சரி என்றால் தற்போதைய <a href="https://www.maalaimalar.com/news/national/delhi-police-holds-high-level-meetings-after-protest-violence">போராட்டங்கள்</a> அரசியல் காரணங்களுக்காகவா ? என்பதை நாட்டு மக்களுக்கு முதலில் விளக்க வேண்டும்.</p><h2><strong>ஜனநாயகப் படுகொலை</strong></h2><p>தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக சாலைகளில் இறங்கி போராடிய மாணவர்கள் மீது காவல்துறையை ஏவி, வலுக்கட்டாயமாக கைது செய்து விட்டு, பொதுமக்களுக்கு எத்தகைய சிரமத்தையும் ஏற்படுத்தாமல், முறையாக முன் அனுமதி பெற்று அதற்குரிய இடத்தில் அமைதியாக போராடலாம் என அதிகாரத் தொணியில் பதிலளிக்கும் தவெக அரசு, டெல்லியில் மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் இல்லம் முன்பாக எவ்வித அனுமதியும் பெறாமல் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் போராட்டம் நடத்திய ராகுல்காந்தி அவர்களை கைது செய்திருப்பது ஜனநாயகப் படுகொலை என கூறுவது முன்பின் முரணாக தெரியவில்லையா ?</p><p>தனது கடந்தகால தவறுகளையும், முடிவுகளையும் மூடி மறைத்து, மாணவ, மாணவியர்களின் எதிர்கால நலன் எனும் முகமுடியை அணிந்து கொண்டு காங்கிரஸ் கட்சியினர் முன்னெடுக்கும் இப்போராட்டம், மாணவ, மாணவியர்களை தூண்டிவிட்டு அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியே தவிர, மாணவ, மாணவியர்களின் நலனை காக்கும் போராட்டம் அல்ல என்பதை நாட்டு மக்கள் அனைவரும் நன்கு அறிவர் என்பதை இந்நேரத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>அப்பாடா... வந்துவிட்டது... மனிதர்களுக்கான &apos;பிரிட்ஜ்&apos; -  உடல் வெப்பநிலையை 10 நிமிடங்களில் குறைக்கும்</title><link>https://www.maalaimalar.com/news/world/japan-selling-human-refrigerator-for-heat-relief</link><comments>https://www.maalaimalar.com/news/world/japan-selling-human-refrigerator-for-heat-relief#comments</comments><guid isPermaLink="false">470a533f-bdc6-49f6-ac7a-95d04856117b</guid><pubDate>Thu, 23 Jul 2026 03:01:06 +0000</pubDate><atom:updated>2026-07-23T03:01:06.418Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>japan,ஜப்பான்,Human refrigerator,மனிதர்களுக்கான பிரிட்ஜ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/2nvf4ly5/fridge.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Human refrigerator ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/2nvf4ly5/fridge.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஜப்பானில் கடும் கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க மனிதர்களுக்கான பிரிட்ஜ் உருவாக்கப்பட்டு இருக்கிறது.</strong></em> </p><p>ஜப்பானில் உள்ள குளிர்பான வெண்டிங் மெஷின் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு, ஒரு மனிதன் உட்காரும் அளவில் ஒரு பெட்டிபோல உருவாக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த பெட்டியின் உட்புற வெப்பநிலை எப்போதும் 15 செல்சியஸ் (59 டிகிரி) ஆக பராமரிக்கப்படும். தனிநபர் உள்ளே சென்று நாற்காலியில் அமர்ந்ததும், 5 செல்சியஸ் (41 டிகிரி) குளிர்ந்த காற்று நேரடியாக உங்கள் தலை, கழுத்து, தோள்பட்டை மற்றும் முதுகுப்பகுதியில் வீசும். வெறும் 5 நிமிடங்களில் உடலில் உள்ள வெப்பம் தணிந்து, 10 நிமிடங்களுக்குள் உடலின் வெப்பநிலையை இயல்பு நிலைக்கு இந்த மெஷின் கொண்டு வருகிறது.</p> <p>உடல் அளவுக்கு அதிகமாக குளிருவதை தடுக்க 20 நிமிடங்களில் இது தானாகவே இயங்குவதை நிறுத்திவிடும். சாதாரண ஏ.சி.க்களை விட பாதியளவு மட்டுமே மின்சாரத்தை பயன்படுத்துகிறது. </p><p>தற்போது <a href="https://www.maalaimalar.com/news/national/former-japan-minister-says-indian-officials-caused-bullet-train-project-delay">ஜப்பானின்</a> நகராட்சி அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பொதுமக்கள் மற்றும் ஊழியர்களின் பயன்பாட்டிற்காக இவை வைக்கப்பட்டு வருகின்றன. இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.9 லட்சம் (1.5 மில்லியன் ஜப்பானிய யென்) என சொல்லப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்திற்கு டெண்டர் கோரியது நகராட்சி நிர்வாக துறை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tenders-for-perunthalaivar-kamarajar-breakfast-scheme</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tenders-for-perunthalaivar-kamarajar-breakfast-scheme#comments</comments><guid isPermaLink="false">fec1387f-c209-4120-886f-c049790d5435</guid><pubDate>Thu, 23 Jul 2026 02:46:59 +0000</pubDate><atom:updated>2026-07-23T02:46:59.383Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Breakfast Scheme,காலை உணவு திட்டம்,தவெக அரசு,tvk government</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/wa6sibrh/food.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Breakfast Scheme]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/wa6sibrh/food.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் என்று தமிழக அரசு பெயர் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.</strong></em> </p><p><em><strong>பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்தில் உணவு வழங்குபவர்களை தேர்வு செய்ய டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.</strong></em></p> <h2>சத்துணவு திட்டம்</h2><p>தமிழகத்தில் ஒவ்வொரு கட்சியும் ஆட்சி அமைக்கும்போதெல்லாம், சில முக்கிய திட்டங்களை புதிதாக பொலிவுபடுத்துவது வழக்கம். அதில் முதன்மை பெறும் திட்டம், சத்துணவு திட்டமாகும்.</p><p>ஏழை மாணவர்களையும் பள்ளிக்கு அழைத்து வரும் வகையில், மதிய உணவு திட்டத்தை. முதலமைச்சராக இருந்த காமராஜர் கொண்டு வந்தார். அந்த திட்டம் மூலம் அதிகமான ஏழை மாணவர்கள் பள்ளிக்கு வரத் தொடங்கினர். எனவே அந்த திட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.</p> <h2>காமராஜர்</h2><p>காமராஜருக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த கட்சிகள், அந்த திட்டத்தை பொலிவுபடுத்த தொடங்கின. அந்த வகையில், எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது 1982-ம் ஆண்டு ஜூலையில், அனைத்து மாணவர்களுக்குமான சத்துணவு திட்டமாக அதை கொண்டு வந்தார். முதலமைச்சராக இருந்த கருணாநிதி, சத்துணவோடு முட்டையையும் சேர்த்து வழங்க உத்தரவிட்டார். ஜெயலலிதா ஆட்சியில் இந்த திட்டம் மேலும் மேம்படுத்தப்பட்டது.</p> <h2>தி.மு.க. ஆட்சி</h2><p>மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்த கடந்த தி.மு.க. ஆட்சியில் முற்றிலும் புதிய வகையில், மாணவர்களுக்கு காலையில் உணவு வழங்குவதற்காக முதலமைச்சர் காலை உணவு திட்டம் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது.</p><p>இந்த திட்டத்தின் கீழ் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை அரசு தொடக்கப்பள்ளிகளில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. பின்னர் அந்த திட்டம் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இந்த திட்டம் மூலம் 37 ஆயிரத்து 447 பள்ளிகளில் படிக்கும் 19 லட்சத்து 34 ஆயிரத்து 230 மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.</p> <h2>த.வெ.க. அரசு</h2><p>தற்போது புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள த.வெ.க. அரசு, முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்துள்ளது. அதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. அந்த வகையில் 15 ஆயிரத்து 454 பள்ளிகளில் படிக்கும் 15 லட்சத்து 14 ஆயிரத்து 274 மாணவர்கள் பயனடைவார்கள்.</p> <h2>காமராஜர் பெயர்</h2><p>இந்த நிலையில், முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. முதலமைச்சரின் காலை உணவு திட்டத்துக்கு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-morning-foods-scheme-name-chang">பெருந்தலைவர் காமராஜர்</a> காலை உணவு திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது.</p><h2>முதலமைச்சர் விஜய்</h2><p>அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ந் தேதி முதல், காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.</p> <p>ஏற்கனவே உள்ள நடைமுறைகளின் அடிப்படையில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. மாணவ, மாணவிகளின் வருகை மற்றும் உணவு சாப்பிடுகிறவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், ஒரு மாணவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.12.71 என்ற செலவில், 210 வேலை நாட்களுக்காக ரூ.343.55 கோடியை செலவிட நிதி அனுமதியை அரசு அளித்துள்ளது.</p><h2>டெண்டர் அறிவிப்பு</h2> <p>இந்நிலையில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்தில் உணவு வழங்குபவர்களை தேர்வு செய்ய டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.</p><p>டெண்டரில், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், நகர்ப்புற வாழ்வாதார குழு, சமூக சேவை அமைப்புகள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>ஜம்மு காஷ்மீர்: பரபரப்பான சந்தையில் காவலரை சுட்டுக் கொன்ற பயங்கரவாதி - அதிர்ச்சி  சிசிடிவி காட்சி </title><link>https://www.maalaimalar.com/news/national/jammu-kashmir-terror-attack-head-constable-shot-dead-in-anantnag-lal-chowk-cctv-footage-surfaces</link><comments>https://www.maalaimalar.com/news/national/jammu-kashmir-terror-attack-head-constable-shot-dead-in-anantnag-lal-chowk-cctv-footage-surfaces#comments</comments><guid isPermaLink="false">a5de8cab-8683-4f13-af19-4c415c75d78c</guid><pubDate>Thu, 23 Jul 2026 02:40:50 +0000</pubDate><atom:updated>2026-07-23T02:40:50.846Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜம்மு காஷ்மீர்,Terrorist attack,பயங்கரவாத தாக்குதல்,CCTV,சிசிடிவி,Jammu  Kashmir</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/84i1a46s/tn-19.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சிசிடிவி காட்சி ]]></media:title><media:description type="html"><![CDATA[ சிசிடிவி காட்சி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/84i1a46s/tn-19.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக்கில் லால் சௌக் என்ற பரபரப்பான சந்தையில் பணியில் இருந்த காவலர் பயங்கரவாதியால் சுட்டுக்கொல்லப்பட்டதன சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.  </p><h2> சம்பவம் </h2><p>நேற்று மதியம் 12:30 மணியளவில் அனந்த்நாக் லால் சௌக் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு  நடந்து வந்த பயங்கரவாதி ஒருவன், காவலரின் மிக அருகில் வந்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு, சந்தைக் கூட்டத்திற்குள் புகுந்து தப்பி ஓடினான். </p><p>தாக்குதலில் படுகாயமடைந்த ஆஷிக் ஹுசைன் குரேஷி (35) என்ற ஹெட் கான்ஸ்டபிள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  </p> <h2>பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு</h2><p>இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக <a href="https://www.maalaimalar.com/news/world/indus-waters-treaty-india-rules-out-return-to-status-quo-links-future-to-pakistans-anti-terror-action">பாகிஸ்தானை </a>தளமாகக் கொண்டு செயல்படும் லஷ்கர் இ தொய்பாவின் நிழல் அமைப்பான 'தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட்' சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது. </p><h2>தேடுதல் வேட்டை</h2><p>தாக்குதலைத் தொடர்ந்து அனந்த்நாக் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பாதுகாப்புப் படையினர் உடனடியாகத் தங்கள் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.</p><p>தப்பிச் சென்ற பயங்கரவாதியைப் பிடிக்க அப்பகுதியில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு, பிரதான சாலைகளில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p>தாக்குதலின் கொடூரமான சிசிடிவி காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பரப்ப வேண்டாம் என்றும், தடையை மீறுபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துறை எச்சரித்துள்ளது.</p><p>ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆண்டு பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதன்பின்னர் வெளிப்படையாக நடத்தப்பட்ட முதல் தாக்குதலும் அதனால் நேரும் உயிரிழப்பும் இதுவாகும். </p><h2>உமர் அப்துல்லா கண்டனம்</h2><p>அமர்நாத் யாத்திரை நடைபெற்று வரும் சூழலில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா மற்றும் ஆளுநர் மனோஜ் சின்ஹா ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.</p><p>"இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு நாம் பயந்துவிட மாட்டோம். மனிதநேயத்திற்கு எதிரான இத்தகைய செயல்களுக்குப் பலமாகப் பதிலடி கொடுக்கப்படும்" என்று உமர் அப்துல்லா சூளுரைத்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஹார்முஸில் கப்பல்களை தாக்கினால் ஈரானின் பாலங்கள், மின் நிலையங்கள்  தகர்க்கப்படும்  - டிரம்ப் புது எச்சரிக்கை  </title><link>https://www.maalaimalar.com/news/world/us-iran-conflict-trump-warns-of-strikes-on-iran-bridges-and-power-plants-over-hormuz-attacks</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-iran-conflict-trump-warns-of-strikes-on-iran-bridges-and-power-plants-over-hormuz-attacks#comments</comments><guid isPermaLink="false">e9ec0c7e-476a-4459-b718-aab362a3312d</guid><pubDate>Thu, 23 Jul 2026 02:18:12 +0000</pubDate><atom:updated>2026-07-23T02:18:12.767Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>trump,டிரம்ப்,Iran War,ஈரான் போர்,ஹார்முஸ் ஜலசந்தி,Strait of Hormuz</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/x8ipu2ju/trump.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ trump]]></media:title><media:description type="html"><![CDATA[ trump]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/x8ipu2ju/trump.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்கா - ஈரான் இடையே போர் உச்சக்கட்டத்தில் நடந்து வரும் சூழலில் ஹார்முஸ் ஜலசந்தியில் தாக்குதல் நடத்தினால் ஈரானின் பலன்களையும், மின் நிலையங்களையும் தகர்த்து அழிப்போம் என <a href="https://www.maalaimalar.com/news/world/trump-posts-comparing-with-previous-wars">அதிபர் டிரம்ப்</a> எச்சரித்துள்ளார். </p><p>ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் தொடர்ச்சியாக 12வது இரவாக நேற்றிரவு நீடித்துள்ளது.  </p><p>போர் தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 11 நாட்களில் அமெரிக்க தாக்குதல்களால் 53 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் ஈரானிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பதிலடியாக, பஹ்ரைன், குவைத் மற்றும் பிற வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.</p> <h2>எச்சரிக்கை</h2><p>இந்த சூழலில் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பதிவில் வெளியிட்டுள்ள எச்சரிக்கை பதவில், "இனிவரும் நாட்களில், ஹார்முஸ் ஜலசந்தியில் பயணிக்கும் எந்தவொரு கப்பல் மீதும் ஈரான் ஏவுகணை, ராக்கெட் அல்லது டிரோன் தாக்குதல் நடத்தினால், அதற்குப் பதிலடியாக ஈரானின் ஒரு பாலம் அல்லது ஒரு மின் நிலையத்தை அமெரிக்கப் படைகள் குண்டுவீசி அழிக்கும். தலைநகர் தெஹ்ரான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள உள்கட்டமைப்புகளும் இதில் அடங்கும்." எனத் தெரிவித்துள்ளார்.</p><p>ஈரானுடன் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட அமெரிக்காவிற்கு விருப்பமில்லை என்று தெரிவித்த டிரம்ப், விரைவில் அந்த ரகசிய அணு உலை மையம் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.</p><p>மறுபுறம் போரின்போது மத்திய கிழக்கில் கொல்லப்பட்டு, டெலாவேரில் உள்ள ஒரு விமானப்படைத் தளத்தில் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட நான்கு அமெரிக்க வீரர்களுக்கு அதிபர் டொனால்டு <a href="https://www.maalaimalar.com/news/world/trump-pays-respects-to-4-us-service-members-killed-in-middle-east">டிரம்ப் அஞ்சலி</a> செலுத்தினார்.</p><p>செல்லும் வழியில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இந்தச் சடங்கை "ஒரு அதிபராக செய்வதற்கு மிகவும் கடினமான காரியங்களில் ஒன்று" என்று குறிப்பிட்டார்.</p><h2>கச்சா எண்ணெய் விலை உயர்வு</h2><p>உலகளவில் வர்த்தகம் செய்யப்படும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவில் சுமார் 20% ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது.</p><p>இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்த பிறகு, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை உலகச் சந்தையில் பீப்பாய்க்கு 94 டாலராக உயர்ந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் பெட்ரோல், டீசல் விலை - இன்றைய நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/chennai-today-petrol-and-diesel-prices</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/chennai-today-petrol-and-diesel-prices#comments</comments><guid isPermaLink="false">fd97a627-a177-4dbb-b762-71f895f814f3</guid><pubDate>Thu, 23 Jul 2026 01:54:06 +0000</pubDate><atom:updated>2026-07-23T01:54:06.981Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,கச்சா எண்ணெய்,பெட்ரோல் டீசல் விலை,Petrol and Diesel Prices,Crude oil Petrol</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/kp3cnufb/petrol-diesel.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ petrol - diesel ]]></media:title><media:description type="html"><![CDATA[ petrol - diesel ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/kp3cnufb/petrol-diesel.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/marco-rubio-iran-demands-strait-of-hormuz-would-set-a-dangerous-precedent-tells-asian-leaders">ஈரான் போரினால்</a> மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.</p><h2>எண்ணெய் நிறுவனங்கள்</h2><p>இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது. கச்சா எண்ணெய்யை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது.</p><p>அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.</p> <h2>பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்</h2><p>அந்த வகையில் இன்று (23.07.2026 - வியாழக்கிழமை)க்கான பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.76-க்கும், டீசல் ரூ. 99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p>அதேவேளை, இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><h2>கச்சா எண்ணெய்</h2><p>இன்று சர்வதேச சந்தையில் பிரனட் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 95 டாலர் என விற்பனை ஆகி வருகிறது.</p><p>வரும் நாட்களில் போர் மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுவதால் விலை மேலும் உயரக்கூடும். இதனால் வாகன ஓட்டிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.</p><p>மத்திய அரசு உலக சந்தை நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 23.7.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு திருமண பேச்சு முடிவாகும்</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-23-july-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-23-july-2026#comments</comments><guid isPermaLink="false">1d40210f-bff3-4246-b82b-9fb1954a70d9</guid><pubDate>Thu, 23 Jul 2026 01:49:54 +0000</pubDate><atom:updated>2026-07-23T01:49:54.658Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/12/31/24009369-rasipalan1.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/12/31/24009369-rasipalan1.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>ராசிபலன்(Rasipalan)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். இளைய சகோதரத்தால் இனிய செய்தியொன்று வந்து சேரும்.</p><h2>ரிஷபம்</h2><p>திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். சேமிப்பை உயர்த்துவதில் ஆர்வம் காட்டுவீர்கள். மதிப்பும், மரியாதையும் உயரும்.</p><h2>மிதுனம்</h2><p>தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். தொழிலில் பழைய கூட்டாளிகள் விலகுவர். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.</p><h2>கடகம்</h2><p>பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும்.</p> <h2>சிம்மம்</h2><p>யோகமான நாள். பிரபலமானவர்களின் சந்திப்பால் பிரச்சனைகள் முடிவிற்கு வரும். எடுத்த காரியங்களை எளிதில் செய்து முடிப்பீர்கள்.</p><h2>கன்னி</h2><p>திறமை பளிச்சிடும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் நன்மை உண்டு.</p><h2>துலாம்</h2><p>முன்னேற்றம் ஏற்படும் நாள். பக்கபலமாக இருப்பவர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் அகலும். அரைகுறையாக நின்ற பணிகளை துரிதமாக செய்து முடிப்பீர்கள்.</p><h2>விருச்சிகம்</h2><p>யோகமான நாள். திருமணப் பேச்சு முடிவாகும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பர்.</p> <h2>தனுசு</h2><p>பிரியமானவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். மகிழ்ச்சிக்குரிய தகவல் வந்து சேரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மனதில் இடம்பிடிப்பீர்கள்.</p><h2>மகரம்</h2><p>யோசித்து செயல்பட வேண்டிய நாள். முன்னேற்றம் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். புண்ணிய காரியங்களுக்காக செலவு செய்வீர்கள்.</p><h2>கும்பம்</h2><p>முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும். பிள்ளைகள் குடும்பப் பொறுப்புணர்ந்து செயல்படுவர்.</p><h2>மீனம்</h2><p>தடைகளும் தாமதங்களும் ஏற்படும் நாள். தனவரவில் தட்டுப்பாடு உருவாகும். குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்வது நல்லது.</p> ]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 23 ஜூலை 2026: குரு பகவானுக்கு திருமஞ்சனம்
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-23-july-2026-guru-bhagavan-tirumanjanam</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-23-july-2026-guru-bhagavan-tirumanjanam#comments</comments><guid isPermaLink="false">7330f0f1-201e-4c7e-812d-d62b66621e71</guid><pubDate>Thu, 23 Jul 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-07-23T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/08/27/17757023-gurubhagavan1.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Guru Bhagavan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/08/27/17757023-gurubhagavan1.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆடி-7 (வியாழக்கிழமை)</p><p>பிறை : வளர்பிறை</p><p>திதி :   நவமி காலை 10.33 வரை பிறகு தசமி</p><p>நட்சத்திரம் : விசாகம் மறுநாள் 5.05 மணி வரை பிறகு அனுஷம்</p> <p>யோகம் :  சித்தயோகம்</p><p>ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை</p><p>எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை</p><p>சூலம் : தெற்கு</p><p>நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை</p> <h2>குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெருமான் அபிஷேகம்</h2><p>திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் ராமாவதாரக் காட்சி. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளி சப்பரத்தில் பவனி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குரு பகவானுக்கு திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். </p> <p>திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சன சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெருமான் அபிஷேகம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஸ்ரீ உடையவர் கூட புறப்பாடு. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - சாதனை</p><p>ரிஷபம் - தனம்</p><p>மிதுனம் - கீர்த்தி</p><p>கடகம் - சாந்தம்</p><p>சிம்மம் - பக்தி</p><p>கன்னி - திடம்</p> <p>துலாம் - அமைதி</p><p>விருச்சிகம் - போட்டி</p><p>தனுசு - சலனம்</p><p>மகரம் - பாராட்டு</p><p>கும்பம் - பணிவு</p><p>மீனம் - பண்பு</p> ]]></content:encoded></item><item><title>டெல்லியில் காவல்துறை - போராட்டக்காரர்கள்  இடையே நள்ளிரவில் மீண்டும் மோதல் - கண்ணீர் புகைகுண்டு வீச்சு
</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-protest-clashes-tear-gas-injuries-and-internet-suspension-in-central-delhi</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-protest-clashes-tear-gas-injuries-and-internet-suspension-in-central-delhi#comments</comments><guid isPermaLink="false">bcb046ac-49ef-4301-a3c6-2a22fd7a777d</guid><pubDate>Thu, 23 Jul 2026 01:17:40 +0000</pubDate><atom:updated>2026-07-23T01:17:40.384Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மோதல்,clash,delhi,டெல்லி,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/t7i7qy6o/cjp.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ delhi protest]]></media:title><media:description type="html"><![CDATA[ delhi protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/t7i7qy6o/cjp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் காவலர்கள், போராட்டக்காரர்கள் இடையே நேற்று நள்ளிரவு மீண்டும் வெடிதுள்ளது. </p><h2>போராட்டம் </h2><p>நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலமையில் கடந்த ஜுன் 20 முதல் இளைங்கர்கள் போராட்டம் நடத்தி வருகின்றன்ர். </p><p>இதில் கல்வியாளர் <a href="https://www.maalaimalar.com/news/national/wangchuk-says-will-end-fast-if-centre-promises-no-action-against-protesters">சோனம் வாங்சுக் </a>கடந்த 25 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். கடந்த சனிக்கிழமை அவர் டெல்லி போலீசாரால் வலுகட்டாயமாக தூக்கிச் செல்லபட்டு மருத்துவமனையில் அனுமதிகபட்டார். </p><p>இதனிடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான கடந்த ஜுலை 20, திங்கள்கிழமை, நாடாளுமன்றம் நோக்கி இளைஞர்கள் நடத்திய பேரணியை கலைக்க போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகைகுண்டுகளை பயன்படுத்தியும் தாக்குதல் நடத்தினர். </p><p>இதில் போராட்டகாரர்கள் 60 பேர் காயமடைந்தனர். குறிப்பாக இளம் பெண் ஒருவர் வென்டிலேட்டர் சிகிச்சை பெறும் சூழல் ஏற்பட்டது. அவர் உடல்நிலை தற்போது சீரடைந்து வருவதாக மருதுவர்கள் தெரிவிதுள்ளனர்.  </p> <h2>புதிய தாக்குதல்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/national/ready-to-hold-a-debate-in-parliament-on-the-neet-issue-jp-nadda">சிஜேபி போராட்டம்</a> ஜந்தர் மந்தரில் தொடர்ந்து வரும் சூழலில் அருகில் உள்ள சன்சத் மார்க்மற்றும் கனாட் பிளேஸ் பகுதிகளில் நேற்று இரவு போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.</p><p>சன்சத் மார்க்கில் உள்ள பார்க் ஹோட்டல் அருகே திரண்ட போராட்டக்காரர்கள் கட்டுப்பாட்டை மீறிச் சென்றதால், கூட்டத்தைக் கலைக்கக் காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.</p><p>கோபமடைந்த போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதுடன், கனாட் பிளேஸ் பிரதான சாலை வரை அவர்களைத் துரத்திச் சென்றனர்.</p><p>இந்த வன்முறையில் 2 உதவி ஆணையர்கள், ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு ஹெட் கான்ஸ்டபிள் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் என மொத்தம் 5 காவல்துறையினர் காயமடைந்துள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவிதுள்ளது.</p> <h2>இணைய சேவை துண்டிப்பு</h2><p>பதற்றத்தைத் தணிக்க மத்திய டெல்லியின் சில பகுதிகளில் இணையதள சேவைகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.</p><p>அரசின் உத்தரவுப்படி, ஜந்தர் மந்தரைச் சுற்றியுள்ள 1.5 கிலோமீட்டர் சுற்றளவில் நேற்று (புதன்கிழமை) மாலை 6 மணி முதல் இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணி வரை இணையச் சேவைகள் முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டன.</p><p>நாடளுமன்றம் அமைந்துள்ள இடத்திற்கு அருகே மத்திய படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.</p> <h2>சிஜேபி வேண்டுகோள்</h2><p>போராட்டம் வன்முறையாக மாறுவதைத் தடுக்க, சிஜேபி அமைப்பின் தன்னார்வலர்கள் காவல்துறையின் பேருந்துகளின் மீது நின்று ஒலிபெருக்கி மூலம் போராட்டக்காரர்களிடம் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.</p><p>மேலும், போராட்டம் நடக்கும் பாதைகளில் கிடந்த கற்களைப் போராட்டக்காரர்கள் எடுத்து வீசாதவாறு, சிஜேபி தொண்டர்களே சாலைகளில் கிடந்த கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.</p> <h2>சோனம் வாங்சுக் வீடியோ</h2><p>மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளசோனம் வாங்சுக் வெளியிட்ட புதிய வீடியோவில், "போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது அரசு எந்தவித சட்டப்பூர்வ அல்லது பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்காது என உறுதியளித்தால், நான் எனது உண்ணாவிரதத்தை உடனடியாக முடித்துக் கொள்ளத் தயார்" எனக் கூறியுள்ளார்.</p> <h2>நடிகை ஆயிஷா கான் கைது</h2><p>இதனிடயே இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மும்பையில் போராட்டம் நடைபெற்ற இடதிற்கு சென்று குரல் எழுப்பிய நடிகை ஆயிஷா கானை மும்பை போலீசார் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றிச் சென்று காவலில் எடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>அசாம் வெள்ளம்: ஒரே நாளில் 10 பேர் உயிரிழப்பு, மொத்தம் 6.53 லட்சம் பேர் பாதிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/assam-flood-10-people-die-in-one-day-over-653-lakh-affected</link><comments>https://www.maalaimalar.com/news/national/assam-flood-10-people-die-in-one-day-over-653-lakh-affected#comments</comments><guid isPermaLink="false">c8886d39-def0-4b68-9054-aed560eb5004</guid><pubDate>Thu, 23 Jul 2026 00:29:47 +0000</pubDate><atom:updated>2026-07-23T00:29:47.398Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உயிரிழப்பு,Death toll,Assam Flood,அசாம் வெள்ளம்</media:keywords><media:content height="2700" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/i6aoxf3k/PTI07222026000337B.jpg" width="4800"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Assam Floods]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/i6aoxf3k/PTI07222026000337B.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அசாம் மாநிலத்தின் 11 மாவட்டங்களை <a href="https://www.maalaimalar.com/topic/assam-floods">வெள்ளம் </a>கடுமையாக பாதித்துள்ளது. நேற்று (புதன்கிழமை) ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்ததுடன், 6.53 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த சில நாட்களுக்கு மேலும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், நிலைமை சீரடைவதற்கான அறிகுறிகள் குறைந்துள்ளன.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/assam">அசாம் </a>மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (ASDMA) தகவலின்படி, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் 24 மணி நேரத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து, இந்த ஆண்டு வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இதுவரை 41-ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக குவஹாத்தியில் ஒருவர் உயிரிழந்திருந்தார்.</p><p>சிவசாகர் மற்றும் ஜோர்ஹாட் மாவட்டங்களில் தலா மூன்று பேரும், சாரைடியோவில் இருவர், கார்பி ஆங்லாங் மற்றும் தேமாஜியில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது. </p><h2>ஆரஞ்சு எச்சரிக்கை:</h2><p>இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று கனமழைக்கான 'ஆரஞ்சு எச்சரிக்கை' விடுத்து, மக்களை பேரிடருக்கு தயாராக இருக்குமாறு அறிவுறுத்தியது. மேலும், சில இடங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் அடுத்த நான்கு நாட்களுக்கு 'மஞ்சள் எச்சரிக்கை' விடுக்கப்பட்டுள்ளது.</p><p>சிவசாகர், சாரைடியோ, தேமாஜி, திப்ருகர், கோலாகாட், ஹோஜாய், ஜோர்ஹாட், காம்ரூப், காம்ரூப் பெருநகரம், கார்பி ஆங்லாங் மற்றும் நாகான் ஆகிய மாவட்டங்களில் 6,53,100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தினசரி வெள்ள அறிக்கை தெரிவிக்கிறது.</p><h2>மொத்த பாதிப்பு:</h2><p>சிவசாகர் மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது; அங்கு சுமார் நான்கு லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். சாரைடியோவில் சுமார் 1.11 லட்சம் பேரும், ஜோர்ஹாட்டில் 97,000-க்கும் மேற்பட்டோரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>செவ்வாய்க்கிழமை வரை, 12 மாவட்டங்களில் சுமார் 5.65 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தனர்.</p><p>அறிக்கையின்படி, அசாம் முழுவதும் 939 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன; 24,897.27 ஹெக்டேர் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளன. மாநில நிர்வாகம் 10 மாவட்டங்களில் 487 தங்குமிடங்கள் மற்றும் நிவாரண விநியோக மையங்களை இயக்கி வருவதாகவும், இதன் மூலம் 24,418 பேருக்குப் பராமரிப்பு மற்றும் உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.</p><p>ராணுவம், NDRF, SDRF, தீயணைப்பு மற்றும் அவசரச் சேவைப் பிரிவு, காவல்துறை மற்றும் சிவில் அமைப்புகள் ஆகியவை சாரைடியோ, கோலாகாட், ஜோர்ஹாட், கார்பி ஆங்லாங் மற்றும் சிவசாகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 8,500-க்கும் மேற்பட்ட மக்களை மீட்டுள்ளதாக அது மேலும் தெரிவித்தது.</p>]]></content:encoded></item><item><title>வினாத்தாள் கசிவு தீவிரமான பிரச்சனை; பாதிக்கப்பட்டவர்களுக்காக வருந்துகிறேன்: சல்மான் கான்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/paper-leak-serious-issue-my-heart-goes-out-to-those-hurt-said-salman-khan</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/paper-leak-serious-issue-my-heart-goes-out-to-those-hurt-said-salman-khan#comments</comments><guid isPermaLink="false">c66f295e-09d8-46dd-b03c-ea64a3e7d5fd</guid><pubDate>Wed, 22 Jul 2026 23:49:46 +0000</pubDate><atom:updated>2026-07-22T23:49:46.395Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சல்மான் கான்,salman khan,paper leak,வினாத்தாள் கசிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/e3zzb2nf/salman-khan.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சல்மான் கான்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/e3zzb2nf/salman-khan.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வினாத்தாள் கசிவு விவகாரத்தை ஒரு தீவிரமான பிரச்சனையாக குறிப்பிட்ட நடிகர் சல்மான் கான், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும், அமைதியான முறையில் போராடியபோது பாதிக்கப்பட்டவர்களுக்காகத் தனது ஆழ்ந்த வருத்தத்தையும் அவர் வெளிப்படுத்தினார். </p><p>தங்கள் எதிர்காலத்திற்காகவும், சிறந்த மற்றும் கல்வியறிவு மிக்க இந்தியாவை உருவாக்குவதற்காகவும் கடினமாகப் படிப்பதில் அர்ப்பணிப்பு, நேர்மை மற்றும் ஆர்வத்தை வெளிப்படுத்திய மாணவர்களின் நிலைப்பாட்டை அவர் வெகுவாக பாராட்டினார்.</p><h2>எக்ஸ் தள பதிவு:</h2><p>"இது மிகவும் அமைதியான ஒரு போராட்டமாக இருந்தது; இது வன்முறையாக மாறியது மிகவும் வருத்தமளிக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காகவும் அவர்களின் குடும்பத்தினருக்காகவும் நான் வருந்துகிறேன். வினாத்தாள் கசிவு என்பது மிக தீவிரமான ஒரு பிரச்சனை. சிறந்த கல்வி முறைக்காக நம் நாட்டு மாணவர்கள் ஒன்றிணைந்திருப்பதையும், அவர்களின் பெற்றோர் அவர்களுக்கு ஆதரவளித்திருப்பதையும் காண்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.</p><p>இந்த போராட்டம் சரியான அணுகுமுறை; மாணவர்கள் இதை அமைதியான முறையில் முன்னெடுத்துள்ளனர். இது மிகவும் துணிச்சலான மற்றும் வீரமிக்க செயல். கல்வியின் மீது மிகுந்த ஆர்வமும் உந்துதலும் கொண்ட இந்த தலைமுறை இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும்.</p><p>இந்தப் பிரச்சனை மாணவர்களுக்கும் கல்வி முறைக்கும் இடையிலான ஒன்று; இது அரசியல் ரீதியாக திசைதிருப்பப்படக் கூடாது. இதற்கான முழுப் பெருமையும் நம் நாட்டு மாணவர்களையே சாரும். அரசாங்கமும் அவர்களுக்கு தேவையான அனைத்து ஆதரவையும் அளித்து, வலுவான கல்வி முறையை உருவாக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இது இரு தரப்புக்கும் நன்மை பயக்கும் ஒரு சூழலாகும். ஒரு சாதகமான முடிவை எதிர்பார்த்து பிரார்த்திக்கிறேன்," என்று நடிகர் சலமான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.</p><h2>பிரபலங்கள் ஆதரவு:</h2><p>நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக மாணவர்கள் நடத்திய போராட்டங்களுக்கு, நசீருதீன் ஷா, ரத்னா பதக் ஷா, ஷபனா ஆஸ்மி, பிரகாஷ் ராஜ், ராஜ்குமார் ராவ், ரேவதி, டொவினோ தாமஸ் மற்றும் அனுராக் காஷ்யப் உள்ளிட்ட திரைப்பட துறையை சேர்ந்த பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.</p><p>இருப்பினும், 'கான்' நட்சத்திரங்கள் மூவரில் (ஷாருக் கான், சல்மான் கான், அமீர் கான்) இந்த விவகாரம் குறித்துப் பேசிய முதல் நபர் சல்மான் கான் ஆவார்.</p><p>பல்வேறு தேர்வுகளில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் காரணமாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி 'காக்ரோச் ஜனதா பார்ட்டி' நடத்திய 'சலோ சன்சத்' (நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணி) போராட்டத்தின்போது, ​​தலைநகரில் போராட்டக்காரர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்த இரண்டு நாட்களுக்கு பிறகு இவரது இந்தப் பதிவு வெளியாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மத்திய கிழக்கில் கொல்லப்பட்ட 4 அமெரிக்க வீரர்களுக்கு டிரம்ப் அஞ்சலி</title><link>https://www.maalaimalar.com/news/world/trump-pays-respects-to-4-us-service-members-killed-in-middle-east</link><comments>https://www.maalaimalar.com/news/world/trump-pays-respects-to-4-us-service-members-killed-in-middle-east#comments</comments><guid isPermaLink="false">acffee61-c069-4d22-a587-03e9c57d1224</guid><pubDate>Wed, 22 Jul 2026 23:02:42 +0000</pubDate><atom:updated>2026-07-22T23:02:42.907Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டொனால்டு டிரம்ப்,Donald Trump,மத்திய கிழக்கு,Middle East</media:keywords><media:content height="3201" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/kkuy0bvn/AP07222026000571B.jpg" width="4800"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டொனால்டு டிரம்ப்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/kkuy0bvn/AP07222026000571B.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய கிழக்கில் கொல்லப்பட்டு, டெலாவேரில் உள்ள ஒரு விமானப்படைத் தளத்தில் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட நான்கு அமெரிக்க வீரர்களுக்கு அதிபர் <a href="https://www.maalaimalar.com/topic/donald-trump">டொனால்டு டிரம்ப்</a> அஞ்சலி செலுத்தினார்.</p><p>டோவர் விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற கண்ணியமான உடல் ஒப்படைப்பு நிகழ்வின்போது, ​​விமானத்தில் இருந்து நான்கு உடல்கள் எடுத்து செல்லப்பட்டபோது அதிபர் டிரம்ப் வணக்கம் செலுத்தினார். </p><p>இந்த சடங்கு, ஒரு தலைமை தளபதியின் மிகவும் சோகமான கடமைகளில் ஒன்றாகும். பிப்ரவரியில் <a href="https://www.maalaimalar.com/topic/Iran">ஈரான்</a> மீதான போரை தொடங்கியதில் இருந்து டிரம்ப் கலந்துகொண்ட மூன்றாவது நிகழ்வு இதுவாகும்.</p><h2>கடினமான காரியம்:</h2><p>துயரத்தில் இருக்கும் குடும்பத்தினரை டிரம்ப் தனிப்பட்ட முறையில் சந்திக்க திட்டமிடப்பட்டிருந்தது. டோவருக்கு செல்லும் வழியில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இந்தச் சடங்கை "ஒரு அதிபராக செய்வதற்கு மிகவும் கடினமான காரியங்களில் ஒன்று" என்று குறிப்பிட்டார்.</p><p>குடும்பத்தினருக்கான தனது செய்தியில், "நாங்கள் உங்களை நேசிக்கிறோம். உங்கள் குழந்தையை நாங்கள் நேசிக்கிறோம். இதில் விளையாட்டும் இல்லை, வேறு எதுவும் இல்லை - அது அவர்களுடைய குழந்தை," என்று டிரம்ப் கூறினார்.</p><p>பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்சத் மற்றும் கூட்டு படை தலைவர் ஜெனரல் டான் கெய்ன் உள்ளிட்ட நிர்வாக அதிகாரிகள் அதிபர் டிரம்ப் உடன் வந்திருந்தனர். செனட்டர் தாம் டில்லிஸ் மற்றும் செனட்டர் கிறிஸ் கூன்ஸ் ஆகியோரும் உடனிருந்தனர்.</p><p>இந்த சடங்கின் போது, ​​அமெரிக்க கொடியால் போர்த்தப்பட்டு, வீரமரணம் அடைந்த வீரர்களின் உடல்களைக் கொண்ட பெட்டிகள், அவர்களை ஏற்றி வந்த இராணுவ விமானத்தில் இருந்து, தளத்தில் உள்ள சவக்கிடங்குக்குக் கொண்டு செல்ல காத்திருக்கும் வாகனங்களுக்கு எடுத்து செல்லப்பட்டன.</p><h2>ஒப்படைப்பு:</h2><p>ஜோர்டானில் ஈரானிய ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்களின் உடல்கள், இந்த கண்ணியமான உடல் ஒப்படைப்பின் போது திருப்பி ஒப்படைக்கப்பட்டன.</p><p>ஜோர்டான் தாக்குதல்களுக்குப் பிறகு காணாமல் போன வீரர் என்று நம்பப்படும் மூன்றாவது படை வீரரின் உடலும், ஈராக்கில் ஈரானிய ஆளில்லா விமான வெடிப்பில் கொல்லப்பட்ட ஒரு வீரரின் உடலும் திருப்பி ஒப்படைக்கப்பட்டன. ஜோர்டானில் கொல்லப்பட்ட வீரர்கள், ஹவாயின் ஈவா பீச்சைச் சேர்ந்த 25 வயதான டைலர் ஜேம்ஸ் ஃபீஹான் மற்றும் டெக்சாஸின் கரோல்டனைச் சேர்ந்த 19 வயதான இசபெல்லா கோன்சலஸ் என பாதுகாப்புத் துறையால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p>ஜோர்டான் தாக்குதல்களுக்குப் பிறகு காணாமல் போன வீரர், நியூயார்க்கின் ஓசோன் பார்க்கைச் சேர்ந்த 28 வயதான ஏஞ்சல் எஸ் ராம்பேர்சாட் என பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. ஈராக்கில் கொல்லப்பட்ட வீரர், வடக்கு கரோலினாவின் ஸ்பிரிங் லேக்கில் வசித்து வந்த 30 வயதான மைக்கேல் இம்மானுவேல் ஸ்விண்டன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p>]]></content:encoded></item></channel></rss>