<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 17 Jul 2026 04:30:37 +0000</lastBuildDate><item><title>GOLD PRICE TODAY: தொடர் சரிவில் தங்கம்: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-17-7-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-17-7-2026#comments</comments><guid isPermaLink="false">6c0cc3c8-73f7-48ae-8b2f-9b1940e87443</guid><pubDate>Fri, 17 Jul 2026 04:17:53 +0000</pubDate><atom:updated>2026-07-17T04:17:53.296Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-01/jledb4zm/gold05.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-01/jledb4zm/gold05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சர்வதேச பொருளாதார சூழல், போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. </p><p>தங்கம் விலையானது நேற்று முன்தினம் சவரனுக்கு  ரூ.240 உயர்ந்து ரூ.1,05,440-க்கும், கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.13,180-க்கும் விற்பனையானது. நேற்று சவரனுக்கு  ரூ.240 குறைந்து ரூ.1,05,200-க்கும், கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.13,150-க்கு விற்பனையானது.</p><h2>தங்கம் விலை சரிவு</h2><p>இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு  ரூ.400 குறைந்து ரூ.1,04,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.13,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p> <figure><img alt="Silver" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/fanjnwfj/silver.jpg" /></figure> <h2>வெள்ளி விலை நிலவரம்</h2><p>தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-</h2><p>16-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,200</p><p>15-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,440</p><p>14-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,200</p><p>13-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,600</p><p>12-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,400</p><h2>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-</h2><p>16-07-2026- ஒரு கிராம் ரூ.240</p><p>15-07-2026- ஒரு கிராம் ரூ.240</p><p>14-07-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>13-07-2026- ஒரு கிராம் ரூ.240</p><p>12-07-2026- ஒரு கிராம் ரூ.240</p> ]]></content:encoded></item><item><title>ஈரானில் பாலங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் - 7 பேர் பலி.. பஹ்ரைன், கத்தார், குவைத் மீது ஈரான் பதில் தாக்குதல் </title><link>https://www.maalaimalar.com/news/world/iran-airstrikes-on-iran-bridges-us-targets-key-coastal-infrastructure-at-least-7-killed</link><comments>https://www.maalaimalar.com/news/world/iran-airstrikes-on-iran-bridges-us-targets-key-coastal-infrastructure-at-least-7-killed#comments</comments><guid isPermaLink="false">ab304a06-432a-4003-8faf-ac5969c88628</guid><pubDate>Fri, 17 Jul 2026 04:07:07 +0000</pubDate><atom:updated>2026-07-17T04:07:07.073Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,USA,Iran War,ஈரான் போர்,மத்திய கிழக்கு,Middle East</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/r8aiobqw/iran-war.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஈரான் பாலங்களை குறிவைத்து தாக்குதல் ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஈரான் பாலங்களை குறிவைத்து தாக்குதல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/r8aiobqw/iran-war.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>புரிந்துணர்வு முறிந்ததை அடுத்து ஈரான் மீது அமெரிக்கா தொடர் <a href="https://www.maalaimalar.com/news/world/iran-strikes-to-intensify-trump-warns-severe-military-action-on-iran-over-next-three-days">தாக்குதல்களை </a>மேற்கொண்டு வருகிறது. </p><h2>பாலங்கள் மீது தாக்குதல் </h2><p>இன்று அதிகாலையில் ஈரானில் உள்ள பாலங்கள் மற்றும் போக்குவரத்து வழித்தடங்களை குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. </p><p>பிரதானமாக தெற்கு ஈரானில் நடந்த இந்த பாலங்கள் மேக்கேதான் தாக்குதலில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. </p><p> இன்றைய தாக்குதலில் ஈரானிய ராணுவப் போக்குவரத்திற்கு முக்கியமான கடலோரப் பாலங்களையும் உள்கட்டமைப்புகளையும் அழித்ததாகவும் இந்தத் தாக்குதல்கள் மூலம் ஈரானிய கடற்படை நடவடிக்கைகளை முழுமையாக  தடுப்பதே தங்களின் திட்டம் என்றும் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p>இன்றைய தாக்குதல்களுடன் சேர்த்து, கடந்த சில நாட்களில் ஈரானில் அமெரிக்கா நடத்திய தாக்குதல் பொதுமக்கள் 35 பேர் கொல்லப்பட்டதாகவும், 300 பேர் வரை காயமடைந்ததாகவும் ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p> <h2>ஈரான் பதிலடி</h2><p>அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு பதிலடியாக மத்திய கிழக்கில் பஹ்ரைன், குவைத், கத்தார் ஆகிய நாடுகள் மீது ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானிய ஏவுகணைகளை இடைமறித்ததாக கத்தார் உறுதிப்படுத்தியுள்ளது.</p> <h2>மருத்துவமனை மீது தாக்குதல்</h2><p>நேற்று, ஈரானின் தென்மேற்கில் குசெஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ள அஹ்வாஸூ பகுதியில் செயல்பட்டு வரும் புற்றுநோய் சிறப்பு மையமான ஷாஹித் பகாயி <a href="https://www.maalaimalar.com/news/world/us-airstrike-near-iran-cancer-hospital-211-child-patients-evacuated-after-attack">மருத்துவமனைக்கு </a>அருகே  அமெரிக்கா வான்வழித் தாக்குதலை நடத்தியது.</p><p>இதையடுத்து அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தைகள் உட்பட 211 உள்நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.</p><p>ஈரானின் குசெஸ்தான் மாகாணத்தில் உள்ள புற்றுநோய் சிறப்பு மையமான ஷாஹித் பகாயி மருத்துவமனைக்கு அருகே, அமெரிக்க படைகள் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியது.</p><p>இந்த தாக்குதலை அடுத்து மருத்துவமனையில் இருந்த இருநூறுக்கும் மேற்பட்ட நோயாளிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.</p> <h2>எச்சரிக்கை</h2><p>அமெரிக்கா தனது தாக்குதல்களை நிறுத்தவில்லை என்றால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து உள்கட்டமைப்புகளில் அழிப்போம் என ஈரான் ராணுவ பிரிவு செய்தி தொடர்பாளர் கர்னல் எப்ராஹிம் ஜோல்பஹாரி எச்சரித்துள்ளார்.</p><p>தனது இறையாண்மை மீறப்படுவதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்றும், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் பெரும் விலையைக் கொடுக்க நேரிடும் என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சகம் எச்சரித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கலர்ஓ.எஸ்.-இல் இயங்கும் ரியல்மி ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம்?</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/realme-could-replace-realme-ui-with-coloros-17-in-india-report</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/realme-could-replace-realme-ui-with-coloros-17-in-india-report#comments</comments><guid isPermaLink="false">ec521acd-63eb-4c1e-b187-ef50e73abad1</guid><pubDate>Fri, 17 Jul 2026 03:37:00 +0000</pubDate><atom:updated>2026-07-17T03:37:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Realme,ரியல்மி,ColorOS 17,கலர்ஓஎஸ் 17</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/8lhel5qy/rlme.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/8lhel5qy/rlme.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ரியல்மி நிறுவனம் இந்தியாவில் உள்ள தனது ஸ்மார்ட்போன்களில் ரியல்மி யு.ஐ.-க்கு பதிலாக ஒப்போவின் கலர்ஓ.எஸ். 17-ஐ விரைவில் அறிமுகப்படுத்த இருப்தாக தகவல் வெளியாகி உள்ளது. எதிர்கால ஸ்மார்ட்போன்கள் கலர்ஓ.எஸ். 17 உடன் வெளியிடப்படும் என்றும், தகுதியுள்ள தற்போதைய சாதனங்களும் எதிர்கால ஓ.எஸ். அப்டேட்கள் மூலம் இந்த மென்பொருளைப் பெறும் என்றும் ரியல்மி இந்தியா உறுதிப்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. </p><p>இந்த நடவடிக்கை, மென்பொருள் உருவாக்கத்தை எளிமையாக்கவும், மேம்படுத்தல் செயல்முறையை நெறிப்படுத்தவும் உதவும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், எந்த ரியல்மி ஸ்மார்ட்போன் இந்த புதிய இயங்குதளத்துடன் முதலில் அறிமுகமாகும் என்பதை அந்நிறுவனம் வெளியிடவில்லை.</p><p><strong>கலர்ஓ.எஸ். 17:</strong></p><p>ஜிஎஸ்எம்அரினா அறிக்கையின்படி , இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள வரவிருக்கும் ஸ்மார்ட்போன்கள், ரியல்மி யுஐ-க்கு பதிலாக கலர்ஓ.எஸ். 17-இல் இயங்கும் என்று ரியல்மி இந்தியா தெரிவித்துள்ளது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செலவுகளை குறைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, ரியல்மி யுஐ ஒப்போவின் மென்பொருள் தளத்துடன் இணைக்கப்படும் என்று கூறிய முந்தைய அறிக்கையை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><p>தனது ஸ்மார்ட்போன் சீரிஸ் முழுவதும் மென்பொருள் உருவாக்கத்தை நெறிப்படுத்தவும், மென்பொருள் அப்டேட்களை எளிதாக்கவும் இந்த மாற்றம் நோக்கமாக கொண்டுள்ளது என்று ரியல்மி இந்தியா கூறியதாக அந்த அறிக்கை மேலும் தெரிவித்தது. இருப்பினும், கலர்ஓ.எஸ். 17 உடன் முதலில் வெளிவரும் வரவிருக்கும் மாடல் எது என்பதை அந்நிறுவனம் வெளியிடவில்லை.</p><p>ரியல்மி யுஐ மற்றும் கலர்ஓ.எஸ். ஏற்கனவே ஒரே மாதிரியான இடைமுகம் மற்றும் அம்சங்களை கொண்டிருப்பதால், இந்த மாற்றம் ஒட்டுமொத்த பயனர் அனுபவத்தில் பெரிய மாற்றங்களை கொண்டுவர வாய்ப்பில்லை என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது. மேலும், 2020-இல் நிறுவனம் ரியல்மி யுஐ-ஐ அறிமுகப்படுத்துவதற்கு முன்பே, ஆரம்பகால ரியல்மி ஸ்மார்ட்போன்கள் கலர்ஓ.எஸ். உடன் வெளியிடப்பட்டன என்றும் அது சுட்டிக்காட்டியது.</p>]]></content:encoded></item><item><title>நாளை விண்ணில் பாய்கிறது இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!</title><link>https://www.maalaimalar.com/news/national/indias-first-private-orbital-rocket-vikram-1-to-launch-on-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/national/indias-first-private-orbital-rocket-vikram-1-to-launch-on-tomorrow#comments</comments><guid isPermaLink="false">fa52a01f-f477-4aba-99c0-bedd5db41db4</guid><pubDate>Fri, 17 Jul 2026 03:30:53 +0000</pubDate><atom:updated>2026-07-17T03:30:53.805Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ISRO,இஸ்ரோ,ராக்கெட்,Rocket,Rocket Vikram 1,ராக்கெட் விக்ரம் 1</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/hj0ux9gj/rocket.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நாளை விண்ணில் பாய உள்ள தனியார் ராக்கெட்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/hj0ux9gj/rocket.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>'ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பறக்கும் முதல் தனியார் ராக்கெட் விக்ரம்-1 நாளை (சனிக்கிழமை) விண்ணில் ஏவப்படுகிறது' என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.</aside><h2><strong>தனியார் ராக்கெட்</strong></h2><p>தெலுங்கானா மாநிலம் தலைநகர் ஐதராபாத்தை சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் விக்ரம்-1 என்ற ராக்கெட்டை தயாரித்துள்ளது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்திலிருந்து நாளை (சனிக்கிழமை) காலை 11.30 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.</p><p>விக்ரம்-1 ஆனது கிரகா ஸ்பேஸ், காஸ்மோசர்வ், டிகியூப்ட் மற்றும் ஸ்கைரூட்டின் சொந்த ஸ்கோப் ஆகியவற்றிலிருந்து தொழில்நுட்ப விளக்க ஆய்வு கருவிகளை எடுத்துச் செல்கிறது. அத்துடன், காஸ்மோஸ் டயமண்ட்ஸின் கலைப்படைப்பான 'காஸ்மிக் புளூம்' மற்றும் ஒரு மைக்ரோ-ஆர்ட் பீஸ் கொண்டு செல்கிறது.</p><h2><strong>கார்பன் கலவை அமைப்பு</strong></h2><p>விக்ரம்-1 என்பது 7 அடுக்கு உயரமான, பல நிலை சுற்றுப்பாதை ஏவுகணை வாகனமாகும். இது அனைத்து கார்பன் கலவை அமைப்புடன் கட்டப்பட்டது மற்றும் 3டி-அச்சிடப்பட்ட எந்திரங்கள் மற்றும் உயர் உந்துதல் திட எரிபொருள் ராக்கெட் பூஸ்டர்கள் உந்துவிசை அமைப்புகளால் இயக்கப்படுகிறது.</p><p>350 கிலோ எடையுள்ள சிறிய செயற்கைக்கோள்களை குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் முதல் சோதனை விமானம் 60 டிகிரி சாய்வில் 450 கிமீ சுற்றுப்பாதையை இலக்காகக் கொண்டுள்ளது. இந்தவகை ராக்கெட் மூலம் சில நூறு கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களை குறைந்த பூமியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த வடிவமைக்கப்பட்ட ஒரு சிறிய வகை ராக்கெட்டாகும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>மகப்பேறு விடுப்பு - கோர்ட்டுக்கு சென்று உரிமையை நிலைநாட்டிய பேராசிரியை 
</title><link>https://www.maalaimalar.com/news/national/maternity-leave-professor-asserts-her-right-by-going-to-court</link><comments>https://www.maalaimalar.com/news/national/maternity-leave-professor-asserts-her-right-by-going-to-court#comments</comments><guid isPermaLink="false">0ac766f5-a7f1-4dab-933c-daced17e4626</guid><pubDate>Fri, 17 Jul 2026 03:29:17 +0000</pubDate><atom:updated>2026-07-17T03:29:17.770Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Telangana,Professor,pregnant woman,தெலுங்கானா,பேராசிரியை,தெலுங்கானா ஐகோர்ட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/m39e5zmu/pregnantwoman.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pregnant woman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/m39e5zmu/pregnantwoman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகப்பேறு விடுப்பு தொடர்பாக, ஐகோர்ட்டுக்கு சென்று தனக்கான உரிமையை பேராசிரியை ஒருவர் நிலை நாட்டியுள்ளார்.</p><h2>இரட்டை குழந்தைகள்</h2><p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE">தெலுங்கானா</a> மாநிலம் மஞ்செரியல் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்வரூப ராணி (வயது 35), அரசு மகளிர் கலைக்கல்லூரியில் ஆங்கில பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். திருமணமான இவருக்கு கடந்த 2023-ம் ஆண்டு முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தன. இந்தநிலையில் 2-வது முறையாக ஸ்வரூப ராணி கடந்த ஏப்ரல் மாதத்தில் கர்ப்பமானார்.</p> <figure><img alt="Twins" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/6a7yh298/twins.jpg" /></figure> <p>இதையடுத்து தனக்கு மகப்பேறு விடுப்பு வேண்டி அவர் கல்லூரி நிர்வாகத்திடம் விண்ணப்பித்தார். ஆனால், அரசு விதிகளின் படி “இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் மகப்பேறு விடுப்பு கிடையாது" என்ற விதியைக் காட்டி அதிகாரிகள் அவரது விண்ணப்பத்தை அதிரடியாக நிராகரித்தனர்.</p><h2>தெலுங்கானா ஐகோர்ட்டில் வழக்கு</h2><p>அதிகாரிகளின் இந்த உத்தரவை எதிர்த்து ஸ்வரூப ராணி தெலுங்கானா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், "முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறப்பது என்பது இயற்கையான உயிரியல் நிகழ்வு. அதை இரண்டு தனித்தனி பிரசவங்களாகக் கருதக் கூடாது. எனவே எனக்கு விடுப்பு மறுப்பது சட்டவிரோதம்" என்று குறிப்பிட்டிருந்தார்.</p> <p>இந்த வழக்கை தெலுங்கானா ஐகோர்ட்டு நீதிபதி கே.சரத் விசாரணை நடத்தினார். வழக்கு விசாரணையில் பரபரப்பு தீர்ப்பு அளித்து உத்தரவிட்டார். அந்த உத்தரவில், மகப்பேறு விடுப்பு என்பது பெண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும், அவர்கள் தொடர்ந்து பணியில் நீடிப்பதற்கும் கொண்டு வரப்பட்ட நலத்திட்டமாகும். விதிகளை எந்திரத்தனமாகப் பார்க்காமல் மனிதநேயத்தோடு அணுக வேண்டும். முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தால், அதை ஒரே ஒரு பிரசவமாகத்தான் கருத வேண்டும். இரண்டு குழந்தைகளாக கணக்கிட்டு மகப்பேறு விடுப்பை மறுக்கக் கூடாது.</p><h2>அதிரடி தீர்ப்பு</h2><p>சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பைத் தொடர்ந்து, முதல் பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தாலும் அடுத்த பிரசவத்திற்கு விடுப்பு வழங்கலாம் என தமிழ்நாடு அரசு விதிகளில் திருத்தம் செய்துள்ளது. இதனை நாம் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே, மனுதாரருக்கு ஏப்ரல் 14, 2026 முதல் அக்டோபர் 11, 2026 வரையிலான 180 நாட்களுக்கு முழு சம்பளம் மற்றும் இதர படிகளுடன் கூடிய மகப்பேறு விடுப்பை உடனடியாக வழங்க வேண்டும் என்று தெலுங்கானா அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். தெலுங்கானா ஐகோர்ட்டின் இந்த அதிரடி தீர்ப்பு அரசு பெண் ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பராமரிப்பு பணி: நீலகிரி, மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில்களின் நேரம் மாற்றம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/express-trains-time-change-to-nilgiri-and-mangalore</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/express-trains-time-change-to-nilgiri-and-mangalore#comments</comments><guid isPermaLink="false">42de31d8-3243-4dad-bb31-0c8d132d0c38</guid><pubDate>Fri, 17 Jul 2026 03:06:11 +0000</pubDate><atom:updated>2026-07-17T03:06:11.519Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Southern Railway,Express trains,தெற்கு ரெயில்வே,எக்ஸ்பிரஸ் ரெயில்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/duyh0fsf/train01.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/duyh0fsf/train01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87">தெற்கு ரெயில்வேயில்</a> மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகள் காரணமாக, மேட்டுப்பாளையம் - சென்னை மற்றும் மங்களூரு - சென்னை இடையிலான முக்கிய எக்ஸ்பிரஸ் ரெயில்களின் புறப்படும் மற்றும் வருகை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த நேர மாற்றம் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 20-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. மாற்றப்பட்ட புதிய கால அட்டவணையின் விவரங்கள் பின்வருமாறு:</p><h2><strong>மேட்டுப்பாளையம் - சென்னை சென்ட்ரல் நீலகிரி எக்ஸ்பிரஸ்</strong></h2><p>மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வரும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலின் வருகை நேரம் காட்பாடி மற்றும் அரக்கோணம் நிலையங்களில் மாற்றப்பட்டுள்ளது.</p><p><strong>காட்பாடி ரெயில் நிலையம்:</strong> காலை 4.08 மணிக்கு வருவதற்குப் பதிலாக, காலை 3.53 மணிக்கு முன்னதாகவே வந்தடையும்.</p><p><strong>அரக்கோணம் ரெயில் நிலையம்:</strong> காலை 4.53 மணிக்கு வருவதற்குப் பதிலாக, காலை 4.43 மணிக்கு வந்தடையும்.</p><h2><strong>மங்களூரு சென்ட்ரல் - சென்னை சென்ட்ரல் அதிவிரைவு மெயில் எக்ஸ்பிரஸ்</strong></h2><p>மங்களூருவில் இருந்து சென்னை வரும் இந்த ரெயிலின் நேரமும் அரக்கோணம் மற்றும் திருவள்ளூர் நிலையங்களில் சில நிமிடங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.</p><p><strong>அரக்கோணம் ரெயில் நிலையம்:</strong> அதிகாலை 4.40 மணிக்கு வருவதற்குப் பதிலாக, இரண்டு நிமிடங்கள் முன்னதாக அதிகாலை 4.38 மணிக்கு வந்தடையும்.</p><p><strong>திருவள்ளூர் ரெயில் நிலையம்:</strong> காலை 5.05 மணிக்கு வருவதற்குப் பதிலாக, காலை 5.03 மணிக்கு வந்தடையும்.</p><h2><strong>பயணிகள் கவனத்திற்கு</strong></h2><p>அடுத்த மாதம் 20-ஆம் தேதி முதல் இந்த ரெயில்களில் பயணிக்கத் திட்டமிட்டுள்ள பயணிகள், தங்களது பயண நேரத்தை இந்த புதிய கால அட்டவணையின்படி திட்டமிட்டுக் கொள்ளுமாறு தெற்கு ரெயில்வே அறிவுறுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை (18.07.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/power-cut-areas-in-chennai-tomorrow-18-07-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/power-cut-areas-in-chennai-tomorrow-18-07-2026#comments</comments><guid isPermaLink="false">1d4c01cb-161d-44ca-868e-fa73b10b2c3d</guid><pubDate>Fri, 17 Jul 2026 02:51:25 +0000</pubDate><atom:updated>2026-07-17T02:51:25.424Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மின்தடை,TNEB,மின்சார வாரியம்,Power Cut,தமிழ்நாடு மின்சார வாரியம்,சென்னையில் மின்தடை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/3pw84p21/powercut1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/3pw84p21/powercut1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை:</p><p>சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின் தடை</a> செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><p>அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (18.07.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.  அதன்படி, </p><h2><strong>தில்லைகங்காநகர்</strong></h2><p>நங்கநல்லூர், பழவந்தாங்கல், ஜீவன்நகர், சஞ்ஜய்காந்திநகர், வேளச்சேரி, ஆதம்பாக்கம், ஆன்டாள்நகர், வானுவம்பேட்டை, பிருந்தாவன்நகர், மகாலட்சுமிநகர், சாந்தி நகர், புழுதிவாக்கம், உள்ளகரம், ஏ.ஜி.எஸ். காலனி வேளச்சேரி, இ.பி. காலனி, மோகனபுரி, ஆதம்பாக்கம் நியுகாலனி.</p><h2><strong>பஞ்செட்டி</strong></h2><p>அழிஞ்சிவாக்கம், அத்திப்பேடு, இருளிப்பட்டு, ஜனபஞ்சத்திரம் கூட் ரோடு, பெரியபாளையம் சாலை, ஜெகநாதபுரம் சாலை, சாய்கிருபா நகர், விருந்தாவன் நகர், எம்.கே. கார்டன், ஸ்ரீ நகர், எஸ்.வி. பண்ணை, மாலிவாக்கம், அமூர் ஜெகநாதபுரம் சத்திரம், குதிரைப்பள்ளம்.</p><h2><strong>சோழிங்கநல்லூர்</strong></h2><p>எல்காட் அவென்யூ சாலை, மாடல் பள்ளி சாலை கிளாசிக் படிவங்கள், நெடுஞ்செழியன் தெரு, நாராயணசாமி தெரு, படவேட்டம்மன் கோவில் தெரு, பரமேஸ்வரன் நகர், பொன்னியம்மன் கோவில் தெரு, குமரன் நகர், டி.என்.எச்.பி., அலமேலுமங்காபுரம், காந்தி நகர், ஒ.எம்.ஆர்., நூக்காம்பாளையம் சாலை, திருவள்ளுவர் சாலை, பாண்டிச்சேரி பட்டி, செம்மஞ்சேரி, ஜவகர் நகர், சத்யபாமா நகர், ஜே.பி.ஆர்., செயின்ட் ஜோஷப் கல்லூரி, கிராம உயர் சாலை, வேலுநாயக்கர் தெரு, நேரு தெரு, கணேஷ் நகர், மேடவாக்கம் சாலை, விப்ரோ சாலை, அண்ணா தெரு, தேவராஜ் நகர், நியூ குமரன் நகர், எழில் நகர், காந்தி தெரு, எம்.ஜி.ஆர்.தெரு.</p><h2><strong>நங்கநல்லூர்</strong></h2><p>ஷீலா நகர், ஐஸ்வர்யா தெரு, எரிகரை தெரு, ராமகிருஷ்ண ராஜு நகர், நீலமேகம் தெரு, அகத்தியர் தெரு, மணிகண்டன் தெரு, அன்னை தெரசா நகர், ஏழுமலை தெரு, ஏ.ஜி.எஸ். காலனி, பாலாஜி நகர் தெரு, சிவபிரகாசம் நகர், சங்கரா நகர், சங்கரதாஸ் தெரு, நந்தனார் தெரு, முல்லை தெரு, சிவசுப்ரமணியன் தெரு, அம்பிகாபதி தெரு, ராமலிங்க நகர், குப்புசாமி தெரு, கங்கை தெரு, யமுனை தெரு, வைகை தெரு, சொக்கநாதன் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, சிவராமன் தெரு, சதாசிவம் நகர், ராம் குமார் தெரு.</p><h2><strong>பொன்னேரி</strong></h2><p>பஞ்செட்டி, தச்சூர் கூட் ரோடு, அழிஞ்சிவாக்கம், போராக்ஸ், கீழ்மேனி, பெரவள்ளூர், அத்திப்பேடு, நத்தம், ஆண்டார்குப்பம், சத்திரம், மாதவரம், ஆமூர், கோடூர், கே.பி.கே. நகர், சின்னாவரம், வெள்ளோடை, எலியம்பேடு, சின்னகாவனம், பெரியகாவனம், காவல்பட்டி, உப்பளம், டி.வி.பாடி, வெம்பாக்கம், தேவதானம், அன்னுப்பம்பட்டு, ஏ.ஆர். பாளையம், ஆலாடு, பெரும்பேடு, டி.வி.புரம்., உத்தண்டி, கண்டிகை, அரசூர்.</p><h2><strong>திருமுல்லைவாயல்</strong></h2><p>பழைய அலமாதி, அலமாதி ஏ காலனி, வெண்மணி நகர், பால் பண்னை, கோவிந்தபுரம், கிருஷ்ணா நகர்.</p><h2><strong>கோவிலம்பாக்கம்</strong></h2><p>மேடவாக்கம் பிரதான சாலை, எம்.ஜி.ஆர். நகர், ரோஸ் கார்டன், சின்ன கோவிலம்பாக்கம், எஸ். கொளத்தூர் சாலை, ஈச்சாங்காடு தொழிற்பேட்டை, பல்லாவரம் ரேடியல் சாலை.</p><h2><strong>ஒட்டியம்பாக்கம்</strong></h2><p>வேடந்தாங்கல் நகர், ஒட்டியம்பாக்கம் முழுவதும், நேதாஜி நகர், காரணை பிரதான சாலை, ஒட்டியம்பாக்கம் பிரதான சாலை, ஜோன்ஸ், கிரஷர் சாலை.</p><h2><strong>போரூர்</strong></h2><p>பனிமலர் மருத்துவ கல்லூரி, வரதராஜபுரம், யமுனா நகர், கோலப்பன்சேரி, சொக்கநல்லூர்.</p><h2><strong>அடையாறு</strong></h2><p>காந்தி நகர் 4-வது பிரதான சாலை, 2-வது மற்றும் 3-வது கிரசென்ட் பார்க் சாலை, 3-வது பிரதான சாலை, ராமச்சந்திர ஆதித்தனார் சாலை.</p><h2><strong>பூந்தமல்லி</strong></h2><p>டிரன்க் சாலை, ஆஞ்சநேயர் கோவில் தெரு, வைதீஸ்வரன் கோவில் தெரு, ராமானுஜகூடம் தெரு, சுந்தர் நகர், புது தெரு, கங்கா சாரதி நகர், பிள்ளையார் கோவில் தெரு.</p><h2><strong>ஆவடி</strong></h2><p>சோழம்பேடு சாலை, ஸ்ரீ நகர் காலனி, கணபதி நகர், அர்ஜுன நகர், செந்தில் நகர், சீனிவாச நகர், பிருந்தாவனம் அவென்யூ.</p><h2><strong>தாம்பரம்</strong></h2><p>முல்லை நகர், அம்பேத்கர் தெரு, வைகை நகர், காந்தி நகர், பழைய ஸ்டேட் பேங்க் காலனி, ஆர்.டி.ஓ. அலுவலகச் சாலை, காமராஜ் தெரு, காந்தி சாலை.</p><h2><strong>ஈஞ்சம்பாக்கம்</strong></h2><p>பாரதி அவென்யூ, கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் முதல் அக்கரை வரை, வி.ஜி.பி. லேஅவுட், ஷாலிமார் கார்டன், விமலா கார்டன், பெரியார் தெரு, பொதிகை தெரு, முனீஸ்வரன் கோவில் தெரு, கங்கையம்மன் கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, கவுரியம்மன் கோவில் தெரு, ஜெகஜீவன்ராம் அவென்யூ, சோழமண்டல் தேவி நகர், சேஷாத்ரி அவென்யூ, பெத்தல் நகர் 1-வது தெரு, பொன்னுரங்கன் தெரு.</p><h2><strong>நீலாங்கரை</strong></h2><p>கோஹினூர் காம்ப்ளக்ஸ், பாண்டியன் நகர், வெட்டுவாங்கேணி, பே வாட்ச் பார்ம், டீச்சர்ஸ் காலனி, வொர்க்கர்ஸ் எஸ்டேட், ராஜா தெரு, சங்கர் தெரு, பூம்புகார் தெரு, ஜோனி தெரு, கங்கையம்மன் கோவில் தெரு.</p><h2><strong>பல்லாவரம்</strong></h2><p>ஆர்.கே.வி. அவென்யூ, கட்டபொம்மன் நகர், பி.வி. வைத்தியலிங்கம் தெரு.</p><h2><strong>குமணன்சாவடி</strong></h2><p>பெரியார் நகர், அபிராமி நகர், வி.ஜி.என். அவென்யூ, சாந்தி நகர், எஸ்.வி. நகர், ஜீவன் பிரகாஷ் நகர், பூந்தமல்லி பைபாஸ், ரேடியன் மற்றும் ஷோபா அபார்ட்மெண்ட்.</p><h2><strong>காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை</strong></h2><h2><strong>தியாகராயர்நகர்</strong></h2><p>ஆர்.ஏ.புரம், எம்.ஆர்.சி.நகர் பகுதி. போர்ஷோர் எஸ்டேட்டின் ஒரு பகுதி, காந்தி நகரின் ஒரு பகுதி, பி.ஆர்.ஓ. குவார்ட்டர்ஸ், ஆர்.கே.மடம், ஆர்.கே.நகர், ராணி மெய்யம்மை டவர், சத்திய தேவ் அவென்யூ, ட்ரூ வேல்யூ ஹோம்ஸ், ராஜா தெரு, ராபர்ட்சன் லேன், ராஜா கிராமணி கார்டன், கே.வி.பி. கார்டன், அப்பா கிராமணி தெரு, வேலாயுதராஜா தெரு, டி.பி. ஸ்கீம் ரோடு, ராஜா முத்தையா புரம், குட்டிகிராமணி தெரு, காமராஜ சாலை, கஸ்தூரி அவென்யூ, கற்பகம் அவென்யூ, வசந்த் அவென்யூ, சவுத் அவென்யூ, சண்முகபுரம், சாந்தோம் நெடுஞ்சாலை, சத்தியா நகர், அறிஞர் அண்ணாநகர், அன்னை தெரிசா நகர், பெருமாள் கோவில் தெரு, தெற்கு கால்வாய் வங்கி சாலை.</p>]]></content:encoded></item><item><title>சென்னை பூங்கா, குன்னூர் உள்பட 75 ரெயில் நிலையங்களை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்
</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-inaugurate-75-railway-stations-today</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-inaugurate-75-railway-stations-today#comments</comments><guid isPermaLink="false">2d2e973f-e581-4441-b3e2-4ae1a7610f40</guid><pubDate>Fri, 17 Jul 2026 02:44:01 +0000</pubDate><atom:updated>2026-07-17T02:44:01.357Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>railway stations,pm modi,பிரதமர் மோடி,ரெயில் நிலையங்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/05/22/13232361-modi0.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/05/22/13232361-modi0.webp?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அதிநவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட 75 ரெயில் நிலையங்களை <a href="https://www.maalaimalar.com/news/national/looking-forward-to-being-among-people-of-haryana-chandigarh-punjab-said-pm-modi">பிரதமர் மோடி </a>இன்று திறந்து வைக்கிறார்</p><p>'அம்ரித் பாரத்' ரெயில் நிலைய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஏராளமான ரெயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. இதில் ரூ.1,570 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட 75 ரெயில் நிலையங்கள் திறப்புவிழாவுக்கு தயாராகி உள்ளன. அவை இன்று பிற்பகல் 3.40 மணிக்கு<a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF"> பிரதமர் மோடி</a>யால் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கப்படுகிறது.</p><p>இதில் தமிழகத்தில் உள்ள சென்னை பூங்கா மற்றும் குன்னூர், சின்னசேலம் ரெயில் நிலையங்களும் அடக்கம். மத்திய பிரதேசத்தில் உள்ள சாஞ்சி, விதிஷா, அசோக்நகர், சிவ்புரி உள்ளிட்ட 13 ரெயில் நிலையங்களும் திறக்கப்படுகின்றன. நவீன பயணிகள் வசதிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் மற்றும் அந்தந்த பகுதியின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு உள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>உக்ரைன் ராணுவத்தில் டிரோன் போர்முறையை அறிமுகம் செய்த  பாதுகாப்பு அமைச்சர் நீக்கம் - ஜெலன்ஸ்கியின் முடிவுக்கு எதிராக மக்கள் போராட்டம் </title><link>https://www.maalaimalar.com/news/world/ukraine-defense-minister-fired-zelensky-sacks-drone-war-architect-sparking-nationwide-protests</link><comments>https://www.maalaimalar.com/news/world/ukraine-defense-minister-fired-zelensky-sacks-drone-war-architect-sparking-nationwide-protests#comments</comments><guid isPermaLink="false">b4e351ec-b8e9-4bfd-81a0-86c495002854</guid><pubDate>Fri, 17 Jul 2026 02:40:02 +0000</pubDate><atom:updated>2026-07-17T02:40:02.954Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உக்ரைன் போர்,Ukraine War,டிரோன் தாக்குதல்,drone attack,Zelenskyy,ஜெலன்ஸ்கி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/bvgyqfe5/ukraine.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ உக்ரைன் ]]></media:title><media:description type="html"><![CDATA[ உக்ரைன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/bvgyqfe5/ukraine.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ரஷியாவுடன் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D">போரிட்டு </a>வரும்  வேளையில் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சரை அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடியாக நீக்கியுள்ளார். </p><p>உக்ரைன் பாதுகாப்பு அமைச்சராக 35 வயது மிகைலோ பெடோரோ பதவியேற்ற ஆறே மாதங்களில்  அவர் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். </p><h2>மிகைலோ பெடோரோ - டிரோன் நாயகன் </h2><p>உக்ரைன் ராணுவத்தில் நவீன டிரோன் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து ரஷிய எல்லைக்குள் புகுந்து பல தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தியதால் இவர் அங்கு 'டிரோன் போரின் தந்தை' என்று மக்களால் கொண்டாடப்பட்டவர்.</p><h2>நீக்கம் </h2><p>உக்ரைன் ராணுவ தலைமை தளபதி அலக்சாண்டர் சிர்ஸ்கிக்கும், பாதுகாப்பு அமைச்சர் பெடோரோவிற்கும் இடையே போர் வியூகம் தொடர்பாக ஏற்பட்ட மோதலே அவரை <a href="https://www.maalaimalar.com/topic/zelensky">ஜெலன்ஸ்கி </a>நீக்க காரணம் எனக் கூறப்படுகிறது. </p><p>எதிர்காலப் போர் டிரோன்கள் மூலமே நடக்கும் என்று பெடோரோவ் வாதிட, தரைப்படை தான் முக்கியம் என்று தலைமை தளபதி சிர்ஸ்கி பிடிவாதமாக இருந்தார். </p><p>இந்த மோதலில் அதிபர் ஜெலென்ஸ்கி ராணுவத் தலைமையின் பக்கம் சாய்ந்து அமைச்சரை நீக்கியுள்ளார். </p><p>மேலும், ராணுவத் தளவாடக் கொள்முதலில் பெடோரோவ் கொண்டு வந்த டிஜிட்டல் சீர்திருத்தங்கள், பெரிய கார்ப்பரேட் ஒப்பந்ததாரர்களுக்கு  பாதிப்பை ஏற்படுத்தியதால் அவர்களும் இவருக்கு எதிராகத் திரும்பினர்.</p> <h2>மக்கள் போராட்டம்</h2><p>பாதுகாப்பு அமைச்சரின் இந்த நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய அளவில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.</p><p>தலைநகர் கீவ், ஒடேசா, எல்விவ் மற்றும் கார்கிவ் போன்ற முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர்.</p><p>"ராணுவ தலைமை தளபதி சிர்ஸ்கி வெளியேற வேண்டும்" என்று அவர்கள் கோஷமிட்டனர்.</p><p>இந்த நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் விமானப்படையின் துணை கமாண்டர் கர்னல் பாவ்லோ யெலிசரோவ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.</p><p>தற்போதைய சூழலில், தொழில்நுட்ப அமைச்சரின் நீக்கம் போர்க்களத்தில் உக்ரைனின் பலவீனத்தை அதிகரிக்கும் என்று பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>விலகிய எம்.பி.க்கு மிக்க நன்றி.. போகிறவர்கள் ஜூலை 21க்குள் போய்விடுங்கள் - கெடு விதித்த மம்தா</title><link>https://www.maalaimalar.com/news/national/mamata-faces-tmc-split-over-50-mlas-and-20-mps-quit-as-she-urges-rebels-to-leave-before-july-21</link><comments>https://www.maalaimalar.com/news/national/mamata-faces-tmc-split-over-50-mlas-and-20-mps-quit-as-she-urges-rebels-to-leave-before-july-21#comments</comments><guid isPermaLink="false">eccce6af-3bd2-4c70-80fd-2b210f6f8f60</guid><pubDate>Fri, 17 Jul 2026 02:12:18 +0000</pubDate><atom:updated>2026-07-17T02:12:18.758Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மம்தா பானர்ஜி,Mamata Banerjee,மேற்கு வங்கம்,trinamool congress,west bengal,திரிணாமுல் காங்கிரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/8a6oxw7e/tn-45.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மம்தா, கோயல் மல்லிக்]]></media:title><media:description type="html"><![CDATA[ மம்தா, கோயல் மல்லிக்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/8a6oxw7e/tn-45.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்க சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF">மம்தா பானர்ஜி</a>யின் திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாக உடைந்தது. 80 எம்எல்ஏக்களில் 50க்கும் மேற்பட்டோர் தனி அணியாக பிரிந்துள்ளனர். அவர்களுக்கே பாஜகவை சேர்ந்த சட்டமன்ற சபாநாயகர் எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கியுள்ளார். </p><p>மறுபுறம் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் 20க்கும் மேற்பட்டோர் விலகியது மம்தாவுக்கு மேலும் பின்னடைவாக அமைந்தது. தொடர்ந்து பல முக்கிய தலைவர்கள், மம்தாவுக்கு நம்பிக்கைக்குரியவர்களாக இருந்தவர்கள் அடுத்தடுத்து கட்சியில் இருந்து <a href="https://www.maalaimalar.com/news/national/mamata-banerjee-loses-cool-slaps-tmc-worker-amid-post-rally-chaos">விலகி </a>வருகின்றனர். </p><p>இந்த சூழலில் நேற்று பேஸ்புக் லைவில் மம்தா பானர்ஜி பேசியுள்ளார். </p><p>அதில், </p><p>"பாஜக, காவல்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ, சிஐடி உள்ளிட்டவற்றின் அழுத்தம் காரணமாகவோ அல்லது நிலுவையில் உள்ள வழக்குகள் காரணமாகவோ யாராவது கட்சியை விட்டு வெளியேற விரும்பினால், கைகூப்பி வேண்டுகிறேன், தயவுசெய்து ஜூலை 21க்கு முன்பே வெளியேறிவிடுங்கள். </p><p>நாம் கட்டியெழுப்பிய கட்சியின் பெயரைக் கெடுக்க வேண்டாம். நீங்கள் தாராளமாக வெளியேறலாம், இதனால் எங்கள் கட்சி பலவீனமடையாது.</p> <p>யார் வருகிறார்கள், யார் போகிறார்கள் என்பது முக்கியமல்ல. கட்சியில் நீடிப்பவர்களே எங்களின் உண்மையான பலம்.</p><p>ஜூலை 21க்குப் பிறகு நாங்கள் ஒரு புதிய தொடக்கத்தை ஏற்படுத்துவோம்" என்று தெரிவித்துள்ளார்.</p><h2>கோயல் மல்லிக்</h2><p>பிரபல நடிகையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பியுமான கோயல் மல்லிக் தனது மாநிலங்களவை எம்பி பதவியை நேற்று ராஜினாமா செய்துள்ளார்.</p><p>தன் பின்னர் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பூபேந்தர் யாதவைச் சந்தித்துப் பேசியுள்ளார். இது அவர் பாஜகவில் இணையப் போகிறார் என்ற ஊகங்களை வலுப்படுத்தியுள்ளது.</p><p>இருப்பினும், கோயல் மல்லிக்கின் இந்த முடிவு குறித்து பேசிய மம்தா பானர்ஜி, அவருக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p>  <p>மேலும், "1993, ஜூலை 21, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தியாகிகளின் குடும்பத்தினர் கூட மிரட்டப்பட்டு பாஜகவிற்கு அழைத்துச் செல்லப்படுவதாகக் கேள்விப்பட்டேன். அவர்கள் போகலாம், ஆனால் அவர்களின் இதயம் எப்போதும் நம்முடன்தான் இருக்கும் என்பது எனக்குத் தெரியும்." என தெரிவித்துள்ளார்.</p><h2>ஜூலை 21 - தியாகிகள் தினம்</h2><p>1993ல் மேற்கு வங்காளத்தில் ஜோதி பாசு தலைமையிலான இடதுசாரி அரசை எதிர்த்து அப்போது காங்கிரஸ் இளைஞர் அணித் தலைவியாக இருந்த மம்தா பானர்ஜி மாபெரும் பேரணி நடத்தினார்.</p><p>அப்போதைய தேர்தலில் முறைகேடுகள் நடப்பதைத் தடுக்க வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தலைமைச் செயலகம் நோக்கி இந்த பேரணி நடந்தது.</p><p>ஜூலை 21 அன்று கொல்கத்தாவின் வீதிகளில் லட்சக்கணக்கான இளைஞர்கள் திரண்டனர். போராட்டம் தீவிரமடைந்தபோது, கூட்டத்தைக் கலைக்கக் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் காங்கிரசை சேர்ந்த 13 தொண்டர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மமதா பானர்ஜியும் இதில் காயமடைந்தார்.</p><p>இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் இடதுசாரி அரசுக்கு எதிரான மம்தா பானர்ஜியின் போராட்டம் மாநிலம் தழுவிய அளவில் தீவிரமடைந்தது. பிற்காலத்தில் அவர் காங்கிரஸிலிருந்து பிரிந்து 1998 ல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைத் தொடங்க இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவமே அடித்தளமாக அமைந்தது.</p> ]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 17.7.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு வரவு இருமடங்காகும்</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-17-july-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-17-july-2026#comments</comments><guid isPermaLink="false">ac2ea788-62fc-414e-9ba6-5c5e376b3f40</guid><pubDate>Fri, 17 Jul 2026 01:45:49 +0000</pubDate><atom:updated>2026-07-17T01:45:49.781Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/03/13/27322352-rasi-3.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/03/13/27322352-rasi-3.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>ராசிபலன்(Rasipalan)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும் நாள். முடங்கிக்கிடந்த தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் குடும்ப பொறுப்புடன் நடந்து கொள்வர்.</p><h2>ரிஷபம்</h2><p>துயரங்கள் துள்ளி ஓடும் நாள். நேற்றைய சேமிப்பு இன்று செலவிற்கு கைகொடுக்கும். கொள்கைப் பிடிப்பை தளர்த்திக் கொள்வீர்கள்.</p><h2>மிதுனம்</h2><p>எதிர்பாராத வரவால் இனிமை சேரும் நாள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வரும். உடல்நலத்தில் கவனம் தேவை. நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.</p><h2>கடகம்</h2><p>வரவு இருமடங்காகும் நாள். பயணத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். வருங்கால நலன் கருதி திட்டமொன்றைத் தீட்டுவீர்கள்.</p> <h2>சிம்மம்</h2><p>அருகிலிருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். அரைகுறையாக நின்ற பணிகளை மீண்டும் தொடருவீர்கள். முன்னேற்றப்பாதை புலப்படும்.</p><h2>கன்னி</h2><p>முக்கியப் புள்ளிகளின் சந்திப்பு கிடைக்கும் நாள். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். சுபகாரியப் பேச்சுகள் முடிவிற்கு வரும்.</p><h2>துலாம்</h2><p>யோகமான நாள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக் கொள்வர்.</p><h2>விருச்சிகம்</h2><p>காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.</p> <h2>தனுசு</h2><p>நல்ல தகவல் கிடைக்கும் நாள். வியாபார விரோதம் விலகும். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். உத்தியோகத்திலிருந்த இடையூறுகள் அகலும்.</p><h2>மகரம்</h2><p>கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். நேர்மறைச் சிந்தனை தேவை. திடீர் செலவுகளை சமாளிக்க பிறரிடம் கைமாற்று வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம்.</p><h2>கும்பம்</h2><p>நன்மைகள் நடைபெறும் நாள். பெரிய மனிதர்களின் சந்திப்பு உண்டு. தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். நிலையான வருமானத்திற்கு வழியமைத்து கொள்வீர்கள்.</p><h2>மீனம்</h2><p>வம்பு வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாள். உடன்பிறப்புகள் உங்கள் உள்ளமறிந்து நடந்து கொள்வர். பாகப் பிரிவினைகள் சுமூகமாக முடியும்.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்று பெட்ரோல் - டீசல் விலை நிலவரம் </title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/fuel-price-hike-iran-war-and-hormuz-tensions-push-up-chennai-petrol-and-diesel-rates</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/fuel-price-hike-iran-war-and-hormuz-tensions-push-up-chennai-petrol-and-diesel-rates#comments</comments><guid isPermaLink="false">c34f5142-a657-4134-98bd-7a2bd10f3d01</guid><pubDate>Fri, 17 Jul 2026 01:33:20 +0000</pubDate><atom:updated>2026-07-17T01:33:20.919Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கச்சா எண்ணெய்,Crude oil,பெட்ரோல் டீசல் விலை,petrol diesel prices</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/n15pib15/petrol.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பெட்ரோல் - டீசல் விலை ]]></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல் - டீசல் விலை ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/n15pib15/petrol.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் போரினால் மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.</p><h2>எண்ணெய் நிறுவனங்கள்</h2><p>இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது. கச்சா எண்ணெய்யை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது.</p><p>அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.</p> <h2>பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்</h2><p>அந்த வகையில் இன்று (17.07.2026 - வெள்ளிக்கிழமை)க்கான பெட்ரோல், டீசல் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88">விலைப்பட்டியல் </a>வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ.99.55-க்கும் நேற்றைய நிலவரப்படி விற்பனை செய்யப்படுகிறது.</p><p>அதேவேளை, இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கச்சா எண்ணெய்</h2><p>இன்று சர்வதேச சந்தையில் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 85.362 டாலர் என விற்பனை ஆகி வருகிறது.</p><p>வரும் நாட்களில் போர் மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுவதால் விலை மேலும் உயரக்கூடும். இதனால் வாகன ஓட்டிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.</p><p>மத்திய அரசு உலக சந்தை நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 17 ஜூலை 2026: வளர்பிறை சதுர்த்தி விரதம்</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-17-july-2026-chaturthi-viratham</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-17-july-2026-chaturthi-viratham#comments</comments><guid isPermaLink="false">45644b6d-0a99-4811-978b-3f06ffc0725b</guid><pubDate>Fri, 17 Jul 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-07-17T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/09/09/18375563-vinayagar3.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pillaiyar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/09/09/18375563-vinayagar3.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆடி-1 (வெள்ளிக்கிழமை)</p><p>பிறை : வளர்பிறை</p><p>திதி :   திருதியை காலை 10.50 வரை பிறகு சதுர்த்தி</p><p>நட்சத்திரம் : மகம் இரவு 11.24 வரை பிறகு பூரம்</p><p>யோகம் :  மரண / சித்தயோகம்</p><p>ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை</p><p>எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை</p><p>சூலம் : மேற்கு</p><p>நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை</p> <h2>திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை</h2><p>வளர்பிறை சதுர்த்தி விரதம். தட்சிணாயன புண்ணிய காலம். தேரெழுந்தூர் ஸ்ரீ ஞானசம்பந்தர் புறப்பாடு. படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் பவனி. மிலட்டூர் ஸ்ரீ விநாயகப் பெருமான் புறப்பாடு. மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் வெள்ளி அன்ன வாகனத்தில் திருவீதியுலா. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமான் பால் அபிஷேகம். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. </p><p>பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர் புறப்பாடு. லால்குடி ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சனம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சனம். தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை தலங்களில் அபிஷேகம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு, திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - ஓய்வு</p><p>ரிஷபம் - கடமை</p><p>மிதுனம் - வரவு</p><p>கடகம் - ஜெயம்</p><p>சிம்மம் - கீர்த்தி</p><p>கன்னி - உதவி</p><p>துலாம் - கனிவு</p><p>விருச்சிகம் - பாராட்டு</p><p>தனுசு - உயர்வு</p><p>மகரம் - அன்பு</p><p>கும்பம் - லாபம்</p><p>மீனம் - திறமை</p> ]]></content:encoded></item><item><title>மியான்மரில் இருந்து தப்பி ரோஹிங்கியா அகதிகள் சென்ற படகுகள் விபத்து.. 500-க்கும் மேற்பட்டோர் பலி என அச்சம்</title><link>https://www.maalaimalar.com/news/world/rohingya-boat-tragedy-over-500-feared-dead-after-two-refugee-boats-vanish-off-myanmar-coast</link><comments>https://www.maalaimalar.com/news/world/rohingya-boat-tragedy-over-500-feared-dead-after-two-refugee-boats-vanish-off-myanmar-coast#comments</comments><guid isPermaLink="false">a3ed1e40-8c6b-411e-b31b-3006aac5e61d</guid><pubDate>Fri, 17 Jul 2026 01:07:24 +0000</pubDate><atom:updated>2026-07-17T01:07:24.969Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Myanmar,Boat Capsizes,படகு கவிழ்ந்து பலி,ரோஹிங்கியா அகதிகள்,Rohingya Refugees,மியான்மர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/116xaeyy/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ ரோஹிங்கியா அகதிகள் - கோப்புப் படம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ ரோஹிங்கியா அகதிகள் - கோப்புப் படம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/116xaeyy/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மியான்மரில் கடலில் 2 படகுகள் மாயமானதில் 500க்கும் மேற்பட்ட <a href="https://www.maalaimalar.com/topic/rohingya-refugees">ரோஹிங்கியா அகதிகள்</a> பலியாகியிருக்கலாம் என  அஞ்சப்படுகிறது. </p><p>ஐநா தகவல்படி, கடந்த ஜூன் மாத இறுதியில் மியான்மரின் மேற்கு ராகினே மாநிலத்திலிருந்து இரண்டு படகுகள் அகதிகளுடன் புறப்பட்டுள்ளன.</p><h2>விபத்து </h2><p>சுமார் 250 பயணிகளுடன் புறப்பட்ட முதல் படகு படகு, புறப்பட்ட சில நாட்களிலேயே கடலில் தொடர்பை இழந்து மாயமானது.</p><p>சுமார் 280 அகதிகளுடன் சென்ற இரண்டாவது படகு, கடந்த ஜூலை 8 அன்று மியான்மரின் ஆயேயர்வாடி கடற்கரைக்கு அருகே நடுக்கடலில் மூழ்கியதாக நம்பப்படுகிறது.</p><p>மியான்மரின் ராகினே மாநிலத்தில் நிலவி வரும் வன்முறைகளிலிருந்து தப்பித்து வேறு புகலிடம் தேடிச் சென்றவர்கள் இவர்கள்.   </p><p>அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என ஐநா அகதிகள் முகமை  மற்றும் சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு  ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் அச்சம் தெரிவித்துள்ளன.</p><h2>ரோஹிங்கியா அகதிகள்</h2><p>ரோஹிங்கியாக்கள் என்பவர்கள் மியான்மரின் ராகினே மாநிலத்தில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வரும் இஸ்லாமிய சிறுபான்மையினர் ஆவர்.</p><p>மியான்மர் அரசு இவர்களைத் தனது நாட்டின் அதிகாரப்பூர்வ பழங்குடி இனமாக ஏற்பதில்லை. மாறாக, வங்காளதேசத்திலிருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்றே கூறி வருகிறது.</p><p>கடந்த 1982ம் ஆண்டு மியான்மர் அரசு கொண்டு வந்த சட்டத்தின் மூலம் இவர்களின் குடியுரிமை முழுமையாகப் பறிக்கப்பட்டது.</p><p>இதனால் அவர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டு கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, திருமணம் மற்றும் சுதந்திரமாகப் பயணிக்கும் உரிமைகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர்.</p><h2>அரச வன்முறை - அகதிகள்</h2><p>மியான்மரின் அரச வன்முறைக்கு அஞ்சி, தற்போது அண்டை நாடான வங்கதேசத்தின் தற்காலிக முகாம்களில் மட்டும் சுமார் 12 லட்சம் ரோஹிங்கியாக்கள் அடைக்கலமாகியுள்ளனர்.</p><p>ஐநா அகதிகள் முகமையின் அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி, கடந்த 2025 டிசம்பர் 31 நிலவரப்படி இந்தியாவில் சுமார் 22,700 ரோஹிங்கியா அகதிகள் பதிவு செய்துள்ளனர்.</p><p>ஆனால், இந்திய அரசின் மதிப்பீட்டின்படி, ஐநாவிடம் பதிவு செய்யாதவர்களையும் சேர்த்து சுமார் 40,000 ரோஹிங்கியாக்கள் இந்தியாவில் வசித்து வருகின்றனர்.</p><p>இந்தியாவில் ரோஹிங்கியாக்களுக்கென அதிகாரப்பூர்வ அகதிகள் முகாம்கள் எதுவும் நடத்தப்படவில்லை என்றும், சட்டவிரோதமாகத் தங்கியுள்ளவர்களைக் கண்டறிந்து நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p>முகாம்களில் சர்வதேச மனிதாபிமான உதவிகள் குறைந்துவிட்டதாலும், போதிய வாழ்வாதாரம் இல்லாததாலும், அவர்கள் மலேசியா, இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு மரப் படகுகள் மூலம் ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொள்கின்றனர்.</p> <h2>மாயம் - மரணம்</h2><p>ஐநா தரவுகளின்படி, கடந்த 2025ம் ஆண்டில் மட்டும் அந்தமான் கடல் மற்றும் வங்காள விரிகுடாப் பகுதியில் சுமார் 900 ரோஹிங்கியா அகதிகள் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் அல்லது மாயமாகியுள்ளனர்.</p><p>2025ல் மட்டும் 6,500க்கும் மேற்பட்டோர் இத்தகைய ஆபத்தான பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>கொரோனா பாதிப்புக்கு ஒரே மாதத்தில் 4 பேர் உயிரிழப்பு... ஆந்திர சுகாதார ஆணையர் அதிர்ச்சி தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/national/andhra-pradesh-reports-4-covid-19-deaths-12-cases-in-less-than-a-month</link><comments>https://www.maalaimalar.com/news/national/andhra-pradesh-reports-4-covid-19-deaths-12-cases-in-less-than-a-month#comments</comments><guid isPermaLink="false">a0188026-01c9-4251-8226-7f1154761bde</guid><pubDate>Fri, 17 Jul 2026 00:33:50 +0000</pubDate><atom:updated>2026-07-17T00:33:50.057Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Andhra Pradesh,ஆந்திர பிரதேசம்,கொரோனா வைரஸ்,Covid-19</media:keywords><media:content height="512" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/29w3fe5t/Coronavirus.webp" width="767"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/29w3fe5t/Coronavirus.webp?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜூன் 26 முதல் ஜூலை 16 வரை மாநிலம் முழுவதும் 12 பேருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டது என்றும், அவர்களில் இணை நோய்கள் இருந்த நான்கு பேர் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தனர் என்று ஆந்திர பிரதேச மாநில சுகாதார ஆணையர் ஜி. வீரபாண்டியன் தெரிவித்தார்.</p><p>இறந்தவர்கள் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், சிறுநீரக பிரச்சினைகள் மற்றும் பிற நோய்கள் போன்ற கடுமையான இணை நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்று அவர் குறிப்பிட்டார்.</p><p><strong>4 உயிரிழப்புகள்:</strong></p><p>"மாநிலத்தில் ஆங்காங்கே கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. ஜூன் 26 முதல் ஜூலை 16 வரை, 12 பேருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டது, அவர்களில் நான்கு பேர் உயிரிழந்தனர்," என்று வீரபாண்டியன் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.</p><p>நான்கு மரணங்களில், மூன்று கடப்பா மாவட்டத்தை சேர்ந்தவர்களும், ஒன்று காக்கிநாடாவை சேர்ந்தவரும் ஆவர் என்று அவர் கூறினார்.</p><p>ஆணையரின் கூற்றுப்படி, ஆந்திர பிரதேச மாநிலத்தின் 2026-ஆம் ஆண்டின் முதல் கோவிட்-19 தொற்று கடப்பா மாவட்டத்தில் ஜூன் 26 அன்று பதிவானதுடன், ஜூலை 1 முதல் 16-ஆம் தேதிக்குள் மேலும் 11 தொற்றுகள் பதிவாகியுள்ளன.</p><p><strong>நோய் தொற்று:</strong></p><p>நோய்த்தொற்று உள்ளவர்களுடன் நெருக்கமாக பழகிய பின்னர் இருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது. மேலும், அதிகபட்சமாக கடப்பா மாவட்டத்தில் எட்டு பேரும், அதைத் தொடர்ந்து குண்டூரில் இரண்டு பேரும், விசாகப்பட்டினம் மற்றும் காக்கிநாடாவில் தலா ஒருவருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p>"இந்த வழக்குகள் அனைத்தும் ஒரே இடத்திலிருந்து ஏற்பட்ட ஒரு கொத்தாக அல்லாமல், வெவ்வேறு மண்டலங்களில் இருந்து பதிவாகியுள்ளன," என்று வீரபாண்டியன் கூறினார்.</p><p>மேலும், ஜூன் 26 முதல் ஜூலை 15 வரை தென்னிந்திய மாநிலத்தில் 67 கோவிட்-19 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அவற்றில் 11 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டதாகவும், 12-வது தொற்று தமிழகத்தின் வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் (சிஎம்சி) கண்டறியப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>புரி ரத யாத்திரையில் 2 பேர் உயிரிழப்பு... கூட்ட நெரிசல் குறித்து ஒடிசா அரசு விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/national/odisha-government-confirms-2-deaths-denies-stampede-at-puri-rath-yatra</link><comments>https://www.maalaimalar.com/news/national/odisha-government-confirms-2-deaths-denies-stampede-at-puri-rath-yatra#comments</comments><guid isPermaLink="false">240d36ae-0b73-432a-a1cf-0998d761a581</guid><pubDate>Thu, 16 Jul 2026 23:38:28 +0000</pubDate><atom:updated>2026-07-16T23:38:28.505Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஒடிசா,Odisha,stampede,கூட்ட நெரிசல்,Puri Rath Yatra,புரி ரத யாத்திரை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/a8p79wgp/puri.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/a8p79wgp/puri.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாநிலம், நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான யாத்ரீகர்களின் பங்கேற்புடன், புனித கடற்கரை நகரமான புரியில் தொடங்கிய வருடாந்திர ரத யாத்திரை விழாவின் போது, ​​இரண்டு பக்தர்கள் உயிரிழந்ததை ஒடிசா அரசு உறுதி செய்துள்ளது; ஆனால், கூட்ட நெரிசல் போன்ற சம்பவம் எதுவும் நடந்ததாக வெளியான செய்திகளை அது மறுத்துள்ளது.</p><p>முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, மகாபிரபு ஸ்ரீ ஜெகந்நாத், மகாபிரபு பாலபத்ரா, தேவி சுபத்ரா மற்றும் சக்ரராஜ் சுதர்சனன் ஆகியோரின் உலகப் புகழ்பெற்ற ரத யாத்திரை 2026, வியாழக்கிழமை புரியில் மிகுந்த மத உணர்வு, பக்தி மற்றும் முன்மாதிரியான நிர்வாக ஒருங்கிணைப்புடன் கொண்டாடப்பட்டது.</p><p><strong>ஒன்பது லட்சம் பக்தர்கள்:</strong></p><p>மேலும், நாள் முழுவதும் தொடர் மழை மற்றும் மோசமான வானிலை நிலவியபோதிலும், சுமார் எட்டு முதல் ஒன்பது லட்சம் பக்தர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டது, தெய்வங்கள் மீது பக்தர்கள் கொண்டுள்ள இணையற்ற நம்பிக்கையை பிரதிபலிப்பதாக அது மேலும் தெரிவித்தது.</p><p>மூன்று தேர்களை இழுப்பது உட்பட, திருவிழா தொடர்பான அனைத்து புனித சடங்குகளும் திட்டமிட்டபடி சுமுகமாக நடத்தப்பட்டன. கோவர்தன பீடாதிபதி ஜகத்குரு சங்கராச்சாரியாரும் தேர்களுக்கு வந்து பிரார்த்தனை செய்தார். திருவிழாவை வெற்றிகரமாக நடத்துவதற்காக மாநில அரசு விரிவான மற்றும் பல அடுக்கு ஏற்பாடுகளைச் செய்திருந்தது," என்று முதலமைச்சர் அலுவலகம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><p>காவல்துறை, சுகாதாரம், தீயணைப்புத் துறை, ஒடிசா பேரிடர் விரைவு நடவடிக்கைப் படை (ODRAF), தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), போக்குவரத்து, நகராட்சி நிர்வாகம், பொது சுகாதார பொறியியல், எரிசக்தி மற்றும் பிற துறை சார்ந்த அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கி, முன்கூட்டியே விரிவான திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டதாக மாநில அரசு மேலும் தெரிவித்தது.</p>]]></content:encoded></item><item><title>அன்பே டயானா படக்குழுவை பாராட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-sivakarthikeyan-praises-anbe-diana-movie-team</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-sivakarthikeyan-praises-anbe-diana-movie-team#comments</comments><guid isPermaLink="false">1714d7a0-f16d-4b2d-a12f-3e794125acf6</guid><pubDate>Thu, 16 Jul 2026 22:46:40 +0000</pubDate><atom:updated>2026-07-16T22:46:40.174Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>sivakarthikeyan,சிவகார்த்திகேயன்,Anbe Diana,அன்பே டயானா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/mbdjrpgv/ad-sk.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/mbdjrpgv/ad-sk.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழில் "ஜமா" திரைப்படம் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் பாரி இளவழகன். இவர் தற்போது இயக்கி, நடித்துள்ள திரைப்படம் "அன்பே டயானா." </p><p>இந்த திரைப்படத்தின் ரிலீசை ஒட்டி நடிகர் சிவகார்த்திகேயன் "அன்பே டயானா" படக்குழுவை நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார்.</p><p>மில்லியன் டாலர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் இன்று (ஜூலை 17) வெளியாகிறது. இந்தப் படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார். </p><p>முன்னதாக அன்பே டயானா படத்தை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் படக்குழுவை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இது குறித்து படக்குழு சார்பில்  சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.</p><p>அந்த பதிவில், "நீங்கள் உயர்வாக கருதும் ஒருவரிடம் இருந்து மனமார்ந்த பாராட்டு பெறுவதை விட சிறந்த வெகுமதி வேறு எதுவும் இல்லை," என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>அன்பே டயானா திரைப்படத்தில் இயக்குநர் பாரி இளவழகன் இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் ரம்யா ரங்கநதன், சேத்தன், ரோஜா, பரிதாபங்கள் கோபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ராகுல் டிராவிட்-ஐ முந்திய விராட் கோலி</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/virat-kohli-surpasses-rahul-dravid-to-script-historic-odi-milestone</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/virat-kohli-surpasses-rahul-dravid-to-script-historic-odi-milestone#comments</comments><guid isPermaLink="false">fd0b676a-cfaa-4fd2-9353-698388d473c2</guid><pubDate>Thu, 16 Jul 2026 21:50:53 +0000</pubDate><atom:updated>2026-07-16T21:50:53.536Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Virat Kohli,விராட் கோலி,Rahul Dravid,ராகுல் டிராவிட்,ENGvsIND</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/u3o468zw/vk-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/u3o468zw/vk-1.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி புதிய மைல்கல் சாதனையை படைத்துள்ளார். SENA (South Africa, England, New Zealand &amp; Australia) நாடுகளில் அதிக அரைசதங்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். </p><p>இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது விராட் கோலி அடித்த அரைசதம் SENA நாடுகளில் அவர் அடித்த 30-ஆவது அரைசதம் ஆகும். </p><p>இதன் மூலம் விராட் கோலி SENA நாடுகளில் அதிக அரைசதம் அடித்த இந்திய வீரர் ஆகியுள்ளார். இதன் மூலம் இவர் ராகுல் டிராவிட் (29), சச்சின் டெண்டுல்கர் (25), எம்எஸ் தோனி (24) மற்றும் முகமது அசாருதீன் (17) ஆகியோரை முந்தியுள்ளார்.</p><p>கார்டிஃப்-இல் நடைபெறும் 2-ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி 66 பந்துகளில் 65 ரன்களை குவித்தார். இந்த அரைசதம் மூலம் ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் விவ் ரிச்சர்ட்ஸ்-ஐ சமன் செய்தார்.</p><p>இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 233 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்தியா சார்பில் விராட் கோலியை தொடர்ந்து, ஸ்ரேயஸ் அய்யர் 66 ரன்களை குவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஹார்முஸ் நீரிணையை &apos;சிவப்புக் கோடு&apos; என்று அறிவித்த ஈரான்... தாக்குதலை தீவிரப்படுத்தும் அமெரிக்கா..!</title><link>https://www.maalaimalar.com/news/world/us-expands-attacks-on-iran</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-expands-attacks-on-iran#comments</comments><guid isPermaLink="false">78a6118f-ca5d-47f5-8b21-985ad55e4660</guid><pubDate>Thu, 16 Jul 2026 20:58:55 +0000</pubDate><atom:updated>2026-07-16T20:58:55.789Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,ஈரான்,Iran,us,Strait of Horuz</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-08/pnpxsy4v/us-iran-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-08/pnpxsy4v/us-iran-1.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் மீதான தாக்குதல்களை அமெரிக்கா நேற்று (வியாழக்கிழமை) தீவிரப்படுத்தியது. வடக்கு பகுதிகள் வரை தாக்குதல்களை நடத்தியதுடன், இஸ்லாமிய குடியரசான ஈரான் மீதான கடற்படை முற்றுகையை மீற முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட கப்பல் ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்தியது. </p><p>இதற்கு பதிலடியாக, இப்பகுதியில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியது; மேலும் தனது தாக்குதல்கள் தீவிரமடையக்கூடும் என்றும் எச்சரித்தது.</p><p><strong>போர்நிறுத்தம் முறிவு:</strong></p><p>கடந்த மாதம் ஒப்புக்கொள்ளப்பட்ட தற்காலிகப் போர்நிறுத்தம் முறிந்துவிட்டது. ஹார்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டிற்காக அமெரிக்காவும் ஈரானும் மோதி வருவதால், இப்பகுதி கடந்த சில நாட்களாக இரு தரப்பு தாக்குதல்களையும் சந்தித்து வருகிறது. அமெரிக்க தாக்குதல்களில் 35-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஈரானிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.</p><p>சமீபத்திய வன்முறை சுழற்சியில் முதன்முறையாக, ஈரானின் தலைநகரான தெஹ்ரானை சுற்றியுள்ள பகுதிகளிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன; இது அமெரிக்காவின் தாக்குதல் இலக்குகள் விரிவடைந்து வருவதை காட்டுகிறது. கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதியன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது போரைத் தொடங்கியபோது, ​​தெஹ்ரான் கப்பல் போக்குவரத்திற்கு அந்த நீரிணையை மூடியது.</p><p><strong>கச்சா எண்ணெய்:</strong></p><p>இந்த நடவடிக்கை கச்சா எண்ணெய் விலையை வெகுவாக உயர்த்தியதுடன், பேச்சுவார்த்தைகளில் ஈரானுக்கு முக்கிய செல்வாக்கையும் அளித்தது.</p><p>ஈரானிய ராணுவத்தின் 'கதம் அல்-அன்பியா' மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் கர்னல் எப்ராஹிம் ஜோல்ஃபகாரி ஒரு எச்சரிக்கையை விடுத்தார்.</p><p><strong>டிரம்ப் எச்சரிக்கை:</strong></p><p>ஈரானின் பாலங்கள் மற்றும் மின் நிலையங்களை தாக்கக்கூடும் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் மீண்டும் விடுத்து வரும் எச்சரிக்கைகளை அமெரிக்கா செயல்படுத்தினால், இப்பகுதியில் உள்ள "அனைத்து உள்கட்டமைப்புகள்" மீதும் ஈரான் பரவலான தாக்குதல்களை நடத்தக்கூடும் என்று அவர் கூறினார்.</p><p>"எந்த சூழ்நிலையிலும், எந்த வகையிலும், ஒரு வெளிநாட்டு மற்றும் இப்பகுதிக்கு அப்பாற்பட்ட நாடான அமெரிக்கா ஹார்முஸ் நீரிணையில் தலையிட நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இது ஈரானின் அசைக்க முடியாத சிவப்புக் கோடு (red line) ஆகும்," என்று அவர் மேலும் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>ஜோ ரூட் அபாரம்... 2-ஆவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/eng-beat-ind-in-2nd-odi</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/eng-beat-ind-in-2nd-odi#comments</comments><guid isPermaLink="false">2df6c918-0201-4525-a84e-ab3bbd0967b4</guid><pubDate>Thu, 16 Jul 2026 20:11:13 +0000</pubDate><atom:updated>2026-07-16T20:11:13.294Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா,ENGvsIND,இங்கிலாந்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/71sz6l4p/eng-win-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/71sz6l4p/eng-win-1.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இங்கிலாந்து நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு  அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கார்டிஃப்-இல் நடந்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. </p><p>அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தொடக்க வீரர்களான ரோகித் சர்மா (26), சுப்மன் கில் (31) ரன்களை எடுத்தனர். அடுத்து களமிறங்கிய விராட் கோலி 65 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். </p><p><strong>இந்திய அணி ஆல்-அவுட்:</strong></p><p>அடுத்து களமிறங்கியவர்களில் ஸ்ரேயஸ் அய்யர் 66 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இவர்களை தொடர்ந்து களமிறங்கியவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 44 ஓவர்கள் மிடிவில் 233 ரன்களில் ஆட்டமிழந்தது.</p><p>இங்கிலாந்து சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஆர்ச்சர் மற்றும் அட்கின்சன் தலா 3 விக்கெட்டுகளையும், சகிப் முகமது இரு விக்கெட்டுகளையும், சாம் கர்ரன் மற்றும் வில் ஜாக்ஸ் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.</p><p><strong>ஜோ ரூட் அபாரம்:</strong></p><p>234 ரன்களை துரத்திய இங்கிலாந்து அணி ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்தது. எனினும், அந்த அணியின் ஜோ ரூட் சிறப்பாக ஆடி 99 ரன்களை குவிததார். இவர் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த நிலையில், கேப்டன் ஹேரி ப்ரூக் 16 ரன்களும், சாம் கர்ரன் 26 ரன்களும், ஜோஸ் பட்லர் 17 ரன்களும், வில் ஜாக்ஸ் 30 ரன்கள், கஸ் அட்கின்சன் 23 ரன்களும் குவித்தனர்.</p><p>இங்கிலாந்து அணி 44.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 235 ரன்களை குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 சமனாகியுள்ளது. இரு அணிகள் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி வருகிற 19-ஆம்தேதி நடைபெற இருக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>அமைச்சரவை விரிவாக்கம்: காங்கிரஸ் மேலிடத் தலைவர்களுடன் சிவகுமார் மற்றும் சித்தராமையா ஆலோசனை</title><link>https://www.maalaimalar.com/news/national/karnataka-cm-siddaramaiah-discuss-cabinet-expansion-with-top-cong-leaders</link><comments>https://www.maalaimalar.com/news/national/karnataka-cm-siddaramaiah-discuss-cabinet-expansion-with-top-cong-leaders#comments</comments><guid isPermaLink="false">90943c4a-81e4-4fd3-94ee-0c9228b93da5</guid><pubDate>Thu, 16 Jul 2026 19:06:23 +0000</pubDate><atom:updated>2026-07-16T19:06:23.185Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சித்தராமையா,கர்நாடகா,Siddaramaiah,Karnataka</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/y56bib4t/ka-cm.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/y56bib4t/ka-cm.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் மற்றும்  முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா ஆகியோர், மாநில அமைச்சரவை விரிவாக்கம் குறித்து காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர். இந்த விரிவாக்கம் அடுத்த சட்டமன்ற கூட்டத்தொடருக்கு முன்னதாகவே நடைபெற வாய்ப்புள்ளது.</p><p>இந்த இரு தலைவர்களும் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்ததுடன், மாநிலத்திற்கான அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (AICC) பொறுப்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலாவையும் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.</p><p><strong>அமைச்சரவை விரிவாக்கம்:</strong></p><p>இருப்பினும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவசரமாக கர்நாடகாவுக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவரால் சிவகுமார் மற்றும் சித்தராமையாவை சந்திக்க முடியவில்லை.</p><p>"ஆலோசனைகள் இப்போது தான் தொடங்கியுள்ளன. இவை ஆரம்பக்கட்ட ஆலோசனைகள் தான். விரைவில் கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும். கர்நாடக அமைச்சரவையில், சட்டமன்ற சபாநாயகர் பதவி தவிர, 20 இடங்கள் காலியாக உள்ளன. அனைத்து காலி இடங்களையும் நிரப்ப முயற்சி மேற்கொள்ளப்படும்," என்று கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் சுர்ஜேவாலா கூறினார்.</p><p><strong>ஆலோசனை:</strong></p><p>விரிவாக்கம் எப்போது நடைபெறும் என்று கேட்டதற்கு, ஆகஸ்ட் 6-ஆம் தேதி தொடங்கவுள்ள சட்டமன்ற கூட்டத்தொடருக்கு முன்னதாகவே அது நடைபெற வாய்ப்புள்ளதாக அவர் கூறினார்.</p><p>கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.கே. ஹரிபிரசாத் ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். காங்கிரஸ் தலைவர் கார்கே அவசரமாக பெங்களூருவுக்கு செல்ல வேண்டியிருந்ததால், ஓரிரு நாட்களில் ஆலோசனைகள் மீண்டும் தொடரும் என்று அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.</p><p>காங்கிரஸ் தலைவர் திரும்பியதும், மாநில காங்கிரஸ் தலைவர்கள் மேலும் ஆலோசனை நடத்துவார்கள் என்று ஹரிபிரசாத் தெரிவித்தார்.</p><p>ராகுல் காந்தியுடனான சந்திப்புக்குப் பிறகு, சிவகுமார் மற்றும் சித்தராமையா ஆகியோர் சுர்ஜேவாலாவைச் சந்தித்து, அமைச்சரவையில் சேர்க்கப்படக்கூடிய வேட்பாளர்கள் குறித்து விவாதித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>NEET-UG results: நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு- 19 பேர் 720-க்கு 700 மதிப்பெண்கள் பெற்று அசத்தல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-ug-results-out-now-19-candidates-score-700-out-of-720</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-ug-results-out-now-19-candidates-score-700-out-of-720#comments</comments><guid isPermaLink="false">3f74cdf4-5716-4ca9-857b-3dd8d3d6a075</guid><pubDate>Thu, 16 Jul 2026 17:21:04 +0000</pubDate><atom:updated>2026-07-16T17:21:04.735Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நீட் தேர்வு,Neet exam,நீட் தேர்வு முடிவுகள்,NEET-UG results</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-05-22/1c57vjb8/tn-17.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ நீட் தேர்வு]]></media:title><media:description type="html"><![CDATA[ நீட் தேர்வு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-05-22/1c57vjb8/tn-17.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேசியத் தேர்வுகள் முகமை (NTA) இன்று (வியாழக்கிழமை) நீட் இளநிலை (NEET UG 2026) தேர்வு முடிவுகளை வெளியிட்டது. இதில் நாடு முழுவதும் உள்ள இளநிலை மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ் (AYUSH) மற்றும் அது சார்ந்த படிப்புகளில் சேர்வதற்கு 11.21 லட்சம் தேர்வர்கள் தகுதி பெற்றுள்ளனர். </p><p>மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை மற்றும் கலந்தாய்வு அட்டவணை திட்டமிட்டபடி நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு எழுதியவர்கள் இப்போது neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து தங்கள் மதிப்பெண் பட்டியல்களை (scorecards) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். </p><p><strong>முழு பட்டியல்:</strong></p><p>அகில இந்திய தரவரிசை பெற்றவர்கள், மாநில அளவில் முதலிடம் பிடித்தவர்கள், பிரிவு வாரியாக முதலிடம் பிடித்தவர்கள், தகுதி பெறுவதற்கான கட்-ஆஃப் (cut-off) மதிப்பெண்கள் மற்றும் மொழி வாரியான பங்கேற்பு விவரங்கள் அடங்கிய பட்டியல்களையும் NTA வெளியிட்டுள்ளது.</p><p>ஜூன் 21-ஆம் தேதியன்று நடைபெற்ற நீட் 2026 மறுதேர்வில், நாடு முழுவதும் 551 நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள 14 நகரங்களில் அமைக்கப்பட்ட 5,440 தேர்வு மையங்களில் சுமார் 20 லட்சம் தேர்வர்கள் பங்கேற்றனர்.</p><p><strong>பெண்கள் ஆதிக்கம்:</strong></p><p>இத்தேர்வு ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, மராத்தி மற்றும் உருது உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்பட்டது. தகுதி பெற்றவர்களில் 58 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள் ஆவர்; ஆண்களை விடப் பெண்களே அதிக அளவில் தகுதி பெற்றுள்ளனர்.</p><p><strong>சிறந்த மதிப்பெண் பெற்றவர்கள்:</strong></p><p>பஞ்சாப்பை சேர்ந்த ஆர்யன் குப்தா மற்றும் ஹரியானாவை சேர்ந்த பன்சுல் பன்சால் ஆகியோர் 720-க்கு 715 மதிப்பெண்களை பெற்று கூட்டாக முதலிடத்தைப் பிடித்தனர்.</p><p><strong>NTA-வின் தகவலின்படி:</strong></p><ul><li><p>19 தேர்வர்கள் 700-க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றுள்ளனர்</p></li><li><p>138 தேர்வர்கள் 690-க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றுள்ளனர்</p></li><li><p>1,492 தேர்வர்கள் 650 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களை பெற்றுள்ளனர்</p></li><li><p>10,160 தேர்வர்கள் 600 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களை பெற்றுள்ளனர்</p></li><li><p>90,780 தேர்வர்கள் 500 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களை பெற்றுள்ளனர்</p></li></ul>]]></content:encoded></item><item><title>ஹரியானா, சண்டிகர் மக்களை காண ஆவலுடன் காத்திருக்கிறேன் - பிரதமர் மோடி</title><link>https://www.maalaimalar.com/news/national/looking-forward-to-being-among-people-of-haryana-chandigarh-punjab-said-pm-modi</link><comments>https://www.maalaimalar.com/news/national/looking-forward-to-being-among-people-of-haryana-chandigarh-punjab-said-pm-modi#comments</comments><guid isPermaLink="false">a1f16cc5-9391-4ad6-9c59-73fbeeccec86</guid><pubDate>Thu, 16 Jul 2026 17:12:26 +0000</pubDate><atom:updated>2026-07-16T17:12:26.962Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-21/fzdjthpk/PMModi0001.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரதமர் மோடி]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர் மோடி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-21/fzdjthpk/PMModi0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ரெயில்வே, சுகாதாரம், போக்குவரத்து மற்றும் கல்வி தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நாளை (வெள்ளிக்கிழமை) ஹரியானா, சண்டிகர் மற்றும் பஞ்சாப் ஆகிய இடங்களுக்கு செல்ல ஆவலுடன் காத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இந்த திட்டங்கள் மக்களின், குறிப்பாக இளைஞர்களின் வாழ்க்கையில் மிக சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.</p><p>இந்த பயணத்தின்போது, ​​26,000 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவார் மற்றும் நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.</p><p>அத்துடன் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரெயிலையும் கொடியசைத்து தொடங்கி வைப்பார். மேலும், சண்டிகர் மற்றும் ஹரியானாவின் ஜிந்த் ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களிலும் உரையாற்றுகிறார். </p><p><strong>எக்ஸ் பதிவு:</strong></p><p>"ரெயில்வே, சுகாதாரம், கலாச்சாரம், போக்குவரத்து, கல்வி மற்றும் பல துறைகள் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஹரியானா, சண்டிகர் மற்றும் பஞ்சாப் மக்களின் மத்தியில் இருக்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். </p><p>இத்திட்டங்கள் மக்களின், குறிப்பாக நமது 'யுவ சக்தி'யின் (இளைஞர் சக்தியின்) வாழ்க்கையில் மிக சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்," என்று பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p>ஜிந்த் நகரிலிருந்து, ஜிந்த் மற்றும் சோனிபட் ஆகியவற்றை இணைக்கும் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.</p><p><strong>ஹைட்ரஜன் ரெயில்:</strong></p><p>"இத்தகைய ரெயில்களை கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைகிறது. ரெயில்வே துறையில் தூய்மையான தொழில்நுட்பத்தை இந்தியா ஏற்றுக்கொள்வதை உறுதி செய்வதில் இது முக்கிய பங்காற்றும்," என்று அவர் கூறினார்.</p><p>ஜிந்த் நகரில் உள்ள ஏகலவ்யா மைதானத்தில், சுமார் 14,700 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, அவற்றை தொடங்கி வைக்கிறார்.</p><p>ஜிந்த் நகரில் பிற பணிகளும் தொடங்கி வைக்கப்படும் என்றும், அவற்றில் டெல்லி-அமிர்தசரஸ், அம்பாலா-கலா ஆம்ப் (Kala Amb), ஜிந்த்-கோஹானா (Gohana) ஆகியவற்றுக்கு இடையேயான போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதற்கான சாலை மற்றும் ரெயில்வே திட்டங்கள் அடங்கும் என்றும் மோடி குறிப்பிட்டார்.</p><p><strong>வளர்ச்சிப் பணி:</strong></p><p>சண்டிகரில் இருப்பது எப்போதும் மகிழ்ச்சியளிக்கிறது. நாளைய நிகழ்ச்சியின் போது, ​​4,700 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் தொடங்கி வைக்கப்படும் அல்லது அவற்றுக்கு அடிக்கல் நாட்டப்படும்.</p><p>குறிப்பிடத்தக்க பணிகளில், சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (PGIMER) மேம்பட்ட தாய்-சேய் நல மையம் மற்றும் மேம்பட்ட நரம்பியல் அறிவியல் மையம் ஆகியவற்றை தொடங்கி வைப்பதும் அடங்கும். </p><p>இந்த சாலை திட்டங்கள் பஞ்சாப், ஹரியானா, இமாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகியவற்றுக்கு இடையேயான போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும் என்று அவர் கூறினார்.</p><p><strong>தனித்துப் போட்டி:</strong></p><p>ஜலந்தரில் நடைபெறவுள்ள பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பஞ்சாப் மக்களுடன் கலந்துகொள்ள ஆவலுடன் காத்திருப்பதாக பிரதமர் தெரிவித்தார். 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலைத் தனித்துப் போட்டியிட பா.ஜ.க. தயாராகி வரும் நிலையில், பிரதமர் மோடியின் இந்தப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.</p><p>"பஞ்சாப் மாநிலம் பா.ஜ.க.வை நம்பிக்கையுடன் பார்க்கிறது. எங்கள் கட்சியின் வளர்ச்சித் திட்டங்கள், பஞ்சாபில் உள்ள எனது சகோதர-சகோதரிகளுக்கு வளமான வாழ்வையும், 'எளிதான வாழ்க்கை முறையையும்' உறுதி செய்யும்," என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>‘ராகினி 3’ முதல் நாள் படப்பிடிப்பு.. நடிகை தமன்னா எடுத்த புகைப்படம் வைரல்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ragini-3-tamanna-viral-shoot-photo-first-day-filming-still-creates-social-media-buzz</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ragini-3-tamanna-viral-shoot-photo-first-day-filming-still-creates-social-media-buzz#comments</comments><guid isPermaLink="false">69decc21-6e56-48ed-b7ff-7e7a39698c70</guid><pubDate>Thu, 16 Jul 2026 16:43:00 +0000</pubDate><atom:updated>2026-07-16T16:43:00.540Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamannaah,நடிகை தமன்னா,Ragini 3,Ragini mms,ராகினி 3,ராகினி எம்எம்எஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/6rqicnnk/Untitled-design-19.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ragini 3 Tamanna viral shoot photo]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/6rqicnnk/Untitled-design-19.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாலிவுட்டில் வெளியாகி வெற்றியடைந்த ராகினி எம்எம்எஸ் திரைப்படத்தின் மூன்றாவது பாகத்தின் முதல் நாள் படப்பிடிப்பு தளத்தில் நடிகை தமன்னா எடுத்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.</p><p>2011 அன்று வெளியான ராகினி எம்எம்எஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டானது. </p><p>இதைத்தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு வெளியான ராகினி எம்எம்எஸ் 2-ம் பாகத்தில் நடிகை சன்னி லியோன் நடித்தார். </p><p>இதன் வெற்றியை தொடர்ந்து தற்போது சஷாங்கா கோஷ் இயக்கத்தில் அமானுஷ்ய திரில்லராக உருவாகும் ‘ராகினி 3’ படத்தை, பாலாஜி மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது.</p><p>ஷோபா கபூர், ஏக்தா ஆர் கபூர் மற்றும் அமர் புடாலா ஆகியோருடன் இணைந்து குமார் தெளரானி மற்றும் கிரிஷ் குமார் உள்ளிட்டோர் இந்த படத்தை தயாரிக்க உள்ளனர்.</p><p>இந்த படத்தில் நடிகை தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த தொடர் இரவு நேரத்தில் நிகழும் திகில் திரைப்படமாக, காதலர்கள் ரசிக்கும் பொழுதுபோக்கு அம்சமாக உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/wsfr2zti/Untitled-design-20.jpg" /></figure><p>இந்நிலையில் முதல் நாள் படப்பிடிப்பு தளத்தில் நடிகை தமன்னா எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.</p><p>நடிகை தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தமாகியுள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் அதிகரித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - மலிவு விலையில் வெகுஜன மக்களை கவரும் வகையில் அறிமுகம்</title><link>https://www.maalaimalar.com/automobilenews/bike/ather-launches-affordable-electric-scooter-family-friendly-model-debut-in-bengaluru</link><comments>https://www.maalaimalar.com/automobilenews/bike/ather-launches-affordable-electric-scooter-family-friendly-model-debut-in-bengaluru#comments</comments><guid isPermaLink="false">56e0f58a-30f6-48b1-ba90-13756d3bf6f4</guid><pubDate>Thu, 16 Jul 2026 16:40:17 +0000</pubDate><atom:updated>2026-07-16T16:40:17.557Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இ ஸ்கூட்டர்,Ather,ஏத்தர் எனர்ஜி,e-scooter</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/bhyaconw/Untitled-design-21.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ather Electric Scooter]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/bhyaconw/Untitled-design-21.jpg?w=280" width="280"></media:thumbnail><category>பைக் (Automobile)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h3><strong>ஏதர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்:</strong> </h3><p>பெங்களூருவில் தனது புதிய தயாரிப்பான எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஏத்தர் எனர்ஜி நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.</p><p>இந்த மாடல், மலிவு விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவில் நிறுவனத்தின் இருப்பை விரிவுபடுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இந்தப் புதிய ஸ்கூட்டர், ஏத்தரின் மாடுலர் EL பிளாட்ஃபார்மைப் பயன்படுத்தும் முதல் ஸ்கூட்டராக இருக்கும் என கூறப்படுகிறது. </p><p>இந்த வகை ஸ்கூட்டர்கள் அன்றாட நடைமுறைக்கு உகந்த மற்றும் குடும்பத்தை மையமாகக் கொண்ட வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  </p><p>450X உடன் ஒப்பிடுகையில், இந்த புதிய ஸ்கூட்டரில் நீண்ட வீல்பேஸ், அகலமான இருக்கை மற்றும் பெரிய ஃப்ளோர் போர்டு ஆகியவை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இந்த ஸ்கூட்டரில், ஹேண்டில்பாரில் பொருத்தப்பட்ட ஹெட்லைட் மற்றும் முன்பக்க ஏப்ரன் முழுவதும் அகலமான LED DRL இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>மேலும், இது பெரிய 14-இன்ச் முன்பக்க சக்கரத்தையும், பின்பக்கத்தில் சிறிய 12-இன்ச் சக்கரத்தையும் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.</p><p>இந்த ஸ்கூட்டர்கள், 2 kWh முதல் 5 kWh வரையிலான பேட்டரி பேக்குகளைப் பொருத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><p>இந்தப் புதிய ஸ்கூட்டரில் ஸ்விங்ஆர்மில் பொருத்தப்பட்ட மின்சார மோட்டாரும் பயன்படுத்தப்பட உள்ளது.</p><p>முன்பக்க சஸ்பென்ஷன் பணிகளை டெலஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்க ஒற்றை ஷாக் அப்சார்பரும் கையாளும். அதே சமயம், பிரேக்கிங் அமைப்பில் முன்பக்க டிஸ்க் பிரேக்கும், பின்பக்க டிரம் பிரேக்கும் இடம்பெற வாய்ப்புள்ளது.</p><h3><strong>விலை மற்றும் அறிமுகம்:</strong></h3><p>பெங்களூரில் ஆகஸ்ட் 29 அன்று இந்த இ-ஸ்கூட்டரை ஏத்தர் எனர்ஜி நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.</p><p>இதன் விலை ரூபாய் 1 லட்சம் முதல் 1.25 லட்சம் வரையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>கிஷன் தாஸ், சஞ்சனா நடிக்கும் ‘சீ யு’!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/see-you-starring-kishan-das-and-sanjana</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/see-you-starring-kishan-das-and-sanjana#comments</comments><guid isPermaLink="false">ff3d7b02-621a-48eb-a086-08152acf5e47</guid><pubDate>Thu, 16 Jul 2026 16:33:15 +0000</pubDate><atom:updated>2026-07-16T16:33:15.105Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Kishen Das,கிஷன் தாஸ்,Sanjana Krishnamoorthy,சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி,See U,சீ யு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/owj3gjrc/New-Project-2026-07-16T215515.651.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கிஷன் தாஸ், சஞ்சனா நடிக்கும் ‘சீ யு’!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/owj3gjrc/New-Project-2026-07-16T215515.651.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வால் நட்சத்திரம், வஞ்சி போன்ற குறும்படங்களை இயக்கிய சந்தோஷ் ஸ்ரீவட்சன் எழுத்து மற்றும் இயக்கத்தில் கிஷன் தாஸ், சஞ்சனா, எம்.எஸ். பாஸ்கர், கார்த்திக் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளப் படம் ‘சீ யு’.  Zenem இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். </p><p>படத்தை, ஏ.ஆர். என்டர்டெயின்மென்ட் பேனரின் கீழ் இயக்குனர் விஜய், அஜ்மல் கான் மற்றும் ரேயா எச் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். </p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/K5t8LFuAYcU"></iframe></figure>]]></content:encoded></item><item><title>‘சோனம் வாங்சுக்கை கண்டு பிரதமர் மோடி அஞ்சுகிறார்’ - கெஜ்ரிவால் விமர்சனம்</title><link>https://www.maalaimalar.com/news/national/prime-minister-modi-fears-sonam-wangchuk-kejriwals-criticism</link><comments>https://www.maalaimalar.com/news/national/prime-minister-modi-fears-sonam-wangchuk-kejriwals-criticism#comments</comments><guid isPermaLink="false">a1829475-2dda-489f-aeee-8ae83f083940</guid><pubDate>Thu, 16 Jul 2026 16:15:20 +0000</pubDate><atom:updated>2026-07-16T16:15:20.706Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,Arvind Kejriwal,அரவிந்த் கெஜ்ரிவால்,Sonam Wangchuk,பிரதமர் மோடி,சோனம் வாங்சுக்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/955m4b1a/New-Project-2026-07-16T214303.334.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘சோனம் வாங்சுக்கை கண்டு பிரதமர் மோடி அஞ்சுகிறார்’ - கெஜ்ரிவால் விமர்சனம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/955m4b1a/New-Project-2026-07-16T214303.334.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரதமர் மோடி சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை கண்டு அஞ்சுவதாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார். </p><p>டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில், நீட் தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, சோனம் வாங்சுக் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகிறார். </p><p>இந்தப் போராட்டக் களத்திற்கு இன்று நேரில் சென்ற அரவிந்த் கெஜ்ரிவால், வாங்சுக்கிற்கு தனது ஆதரவைத் தெரிவித்தார். தொடர்ந்து போராட்டக் களத்தில் பேசிய கெஜ்ரிவால் தர்மேந்திரப் பிரதானை நீக்கிவிட்டு, சோனம் வாங்சுக்கை கல்வி அமைச்சராக்க வேண்டும் என தெரிவித்தார்.</p><p>மேலும் வாங்சுக் பேச்சை அரசு கேட்கவேண்டும் என்றும், இல்லையென்றால் 2011-ல் நடத்திய அண்ணா ஹசாரேவுடனான போராட்டத்தால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஏற்பட்ட அதே கதியை பாஜக அரசும் சந்திக்கும் என தெரிவித்தார். </p><p>மேலும் வாங்சுக் போன்றவர்கள் கல்வித் துறையில் பெரிய புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டு வந்துவிடுவார்கள் என்ற பயத்தின் காரணமாகவே, பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் மௌனம் காப்பதாக குற்றம் சாட்டினார். </p><p>தொடர்ந்து 19 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை கடுமையாக நலிவடைந்துள்ள நிலையில், அவரது உடல்நிலையைத் தினமும் கண்காணிக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றமும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது</p>]]></content:encoded></item><item><title>இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: 233 ரன்களுக்கு ஆல் அவுட்டான இந்தியா!</title><link>https://www.maalaimalar.com/sports/2nd-odi-against-england-india-all-out-for-233-runs</link><comments>https://www.maalaimalar.com/sports/2nd-odi-against-england-india-all-out-for-233-runs#comments</comments><guid isPermaLink="false">305ceccd-97a2-479f-9d43-dcf1e83e648d</guid><pubDate>Thu, 16 Jul 2026 15:58:18 +0000</pubDate><atom:updated>2026-07-16T15:58:18.209Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா,ஒருநாள் போட்டி,2nd ODI,IND vs Eng,இங்கிலாந்து</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/t2802xg4/New-Project-2026-07-16T211756.863.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: 233 ரன்களுக்கு ஆல் அவுட்டான இந்தியா!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/t2802xg4/New-Project-2026-07-16T211756.863.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிப் பெற்றது.</p><p>அதனைத்தொடர்ந்து இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 44 ஓவர்களில் 233 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.</p><p>இந்திய தரப்பில் ஸ்ரேயாஸ் ஐயர், விராட் கோலி அரைசதம் விளாசினர். இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர், அதில் அட்கின்சன் தலா 3 விக்கெட்டுகளும், வில் ஜாக்ஸ், சாம் கரண் தலா 1 விக்கெட்டும், சாகிப் மஹ்மூத் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். </p><p>இதனைத்தொடர்ந்து இங்கிலாந்து விளையாட உள்ளது. தொடரை வெல்ல அல்லது சமன்செய்ய இப்போட்டியை நிச்சயம் இங்கிலாந்து வெல்ல வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>பழனி கோயில் நில மோசடி: பத்திரப்பதிவுத் துறை சார்பில் விசாரணைக்குழு அமைப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-temple-land-fraud-registration-department-sets-up-inquiry-committee</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-temple-land-fraud-registration-department-sets-up-inquiry-committee#comments</comments><guid isPermaLink="false">3a8af81a-4b60-42a2-95c0-7a7a0551504d</guid><pubDate>Thu, 16 Jul 2026 15:25:38 +0000</pubDate><atom:updated>2026-07-16T15:25:38.125Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Palani temple,inquiry committee,Dhandayuthapani Swami Mutt,தண்டாயுதபாணி கோயில்,பழனி கோயில்,விசாரணைக்குழு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/9behzefp/New-Project-2026-07-16T205514.573.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பழனி கோயில் நில மோசடி: பத்திரப்பதிவுத் துறை சார்பில் விசாரணைக்குழு அமைப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/9behzefp/New-Project-2026-07-16T205514.573.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பழனி முருகன் கோயில் அறக்கட்டளைக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் தனிநபர்களுக்கு முறைகேடாக பத்திரப்பதிவு செய்த வழக்கில், முறைகேடுகளை முழுமையாக ஆய்வு செய்ய 3 பேர் கொண்ட புதிய விசாரணைக் குழு பத்திரப்பதிவுத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. </p><p>இந்தக் குழுவில் கூடுதல் பதிவுத் தலைவர், உதவி பதிவுத் தலைவர், மாவட்ட பதிவாளர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். </p><h2>வழக்கின் பின்னணி</h2><p>பழனி மலையடிவாரத்தில் உள்ள ரூ. 100 கோடி மதிப்புள்ள  தண்டபாணி சுவாமி அறக்கட்டளைக்குச் சொந்தமான 1.40 ஏக்கர் நிலத்தை, அறக்கட்டளை நிர்வாகிகள் எனக் கூறிக்கொண்டு சிலர் வெறும் ரூ. 2 கோடிக்கு இரு தனிநபர்களுக்கு போலி ஆவணங்கள் மூலம் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்துள்ளனர்.</p><p>பின்னர் இந்த ஊழல் கண்டறியப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, இந்த முறைகேடான நிலப் பத்திரப்பதிவை உடனடியாக ரத்து செய்து  உத்தரவிட்டது.</p><p>இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக கூடுதல் பொறுப்பில் இருந்து இந்த பதிவை மேற்கொண்ட கொடைக்கானல் சார்-பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். </p><p>இவர் உட்பட 4 பேர் மீது  கூட்டுச்சதி, ஏமாற்றுதல், போலி ஆவணங்கள் தயாரித்தல் போன்ற பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழ்நாடு டிஜிபியும் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இந்த விசாரணைக்குழுவும் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நாடாளுமன்றத்தில் ஸ்மார்ட் வாட்ச், பென் கேமராக்களை தவிர்க்கவும்: எம்.பி.க்களுக்கு அறிவுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/national/lok-sabha-issues-advisory-on-smartwatches-pen-cameras-for-mps-ahead-of-parliament-monsoon-session</link><comments>https://www.maalaimalar.com/news/national/lok-sabha-issues-advisory-on-smartwatches-pen-cameras-for-mps-ahead-of-parliament-monsoon-session#comments</comments><guid isPermaLink="false">3fa0ad24-63e9-464d-93c4-27928bb0e338</guid><pubDate>Thu, 16 Jul 2026 15:16:22 +0000</pubDate><atom:updated>2026-07-16T15:16:22.947Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>winter session,நாடாளுமன்றம்,குளிர்கால கூட்டத்தொடர்,parliment,ஸ்மார்ட் வாட்ச்,smart watches</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/7ynzp039/parliment.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ parliment]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/7ynzp039/parliment.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடாளுமன்றத்திற்கு வரும்போது எம்.பி.க்கள் ஸ்மார்ட் வாட்ச் அணிவதை தவிர்க்க வலியுறுத்தப்பட்டுள்ளது. </p><p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மழைக்கால கூட்டத்தொடரை கூட்டுவதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார் என மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.</p><p>5 மாநில சட்டசபைத் தேர்தல்களுக்குப் பிறகு தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பரபரப்பான இந்த அரசியல் சூழலில் மழைக்கால கூட்டத்தொடர் கூட இருப்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.</p><p>காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக விலகியுள்ளது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் கட்சி இரண்டாக உடைந்துள்ளது. பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு மத்தியில் கூட்டத்தொடர் கூட உள்ள நிலையில், தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தால் தானாகவே முதல் மந்திரி, பிரதமர் பதவி பறிபோகும் மசோதா உள்ளிட்டவற்றை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. எனவே, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என தெரிகிறது.</p><p>நாட்டில் நிலவும் பிரச்சினைகளை எழுப்பி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கவும் எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன.</p><p>மழைக்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்தும் வகையில் வரும் 19-ம் தேதி காலை 11 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.</p><p>இந்நிலையில், நாடாளுமன்றத்திற்கு வரும்போது எம்.பி.க்கள் ஸ்மார்ட் வாட்ச் மட்டுமின்றி ஸ்மார்ட் கண்ணாடிகள், கேமரா பேனாக்கள் போன்ற நவீன மின்னணு சாதனங்களை தவிர்க்க வேண்டும் என மக்களவை செயலகம் அறிவுறுத்து உள்ளது.</p><p>இத்தகைய நவீன சாதனங்கள் நாடாளுமன்றத்தின் ரகசியங்கள் மற்றும் உறுப்பினர்களின் தனி உரிமைகளை பாதிக்கக் கூடும் எனவும் மக்களவை செயலகம் எச்சரித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘சமூக நீதித்துறை என்ற பெயர் மாற்றத்தை அரசு திரும்பப் பெறவேண்டும்’ - திருமாவளவன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/adi-dravidar-debate-thiruma-asserts-term-is-a-generic-anti-caste-identity-not-a-caste-name</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/adi-dravidar-debate-thiruma-asserts-term-is-a-generic-anti-caste-identity-not-a-caste-name#comments</comments><guid isPermaLink="false">71d02eb9-b241-45e6-9f7a-75b038670059</guid><pubDate>Thu, 16 Jul 2026 14:53:31 +0000</pubDate><atom:updated>2026-07-16T14:53:31.669Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>thirumavalavan,vck,tvk,AdidravidarWelfare,TrichyPressMeet</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/t7jjkann/Untitled-design-2026-07-16T195256.001.png" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘சமூக நீதித்துறை என்ற பெயர் மாற்றத்தை அரசு திரும்பப் பெறவேண்டும்’ - திருமாவளவன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/t7jjkann/Untitled-design-2026-07-16T195256.001.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு, தமிழ்நாட்டின் ‘ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை’யின் பெயரை ‘சமூக நீதித் துறை’ என மாற்றி அரசாணை வெளியிட்டது.</p><p>இந்த பெயர் மாற்றம் தங்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். </p><p>இன்று திருச்சியில் நடைபெற்ற விசிக மண்டல ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், </p><h2><strong>பெயர் மாற்றம் எங்களுக்குப் பெரும் அதிர்ச்சி!</strong></h2><p>“தற்போது ஆதிதிராவிடர் நலத்துறை என்ற பெயரைச் சமூக நீதித்துறை என்று மாற்றிவிட்டார்கள். இந்த நடவடிக்கை எங்களுக்குப் பெரும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது” என்று தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார்.</p><h2><strong>'ஆதிதிராவிடர்' சாதிப் பெயர் அல்ல</strong></h2><p>ஆதிதிராவிடர் என்பது ஒரு சாதிப் பெயர் கிடையாது. அது சாதி ஒழிப்பிற்காகப் பயன்படுத்தப்பட்ட ஒரு பொதுப் பெயர். நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட பெருமைமிகு பெயர். நாங்கள் அந்தப் பெயரை மட்டுமே பயன்படுத்தியிருந்தால், இந்தச் சாதிப் பெயர்களே காலப்போக்கில் மறந்திருக்கும். </p><p>ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இன்று அந்தப் பெயரைச் சுருக்கி, ஏதோ ஒரு குறிப்பிட்ட சாதிக்கான பெயர் போல மாற்றிவிட்டார்கள். நாங்கள் பொருட்படுத்தவில்லை. சாதி பெயரை மாற்ற வேண்டும் என்று அவர்களே மாற்றிவிட்டார்கள். 'சமூக நீதி துறை' என்ற பெயர் எங்களுக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது’ என்று கூறினார்.</p><h2><strong>வன்னி அரசுவின் கோரிக்கை என்ன? – திருமா விளக்கம்</strong></h2><p>அமைச்சர் வன்னி அரசுவின் கோரிக்கையால்தான் பெயர் மாற்றப்பட்டது என்று பரவி வரும் வதந்திகளுக்குத் திருமாவளவன் முற்றுப்புள்ளி வைத்தார்.</p><p>“அரசு தரப்பிடம் வன்னி அரசு வைத்த கோரிக்கை முற்றிலும் வேறானது. ‘நாங்கள் எஸ்சி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் எங்களுக்கு எப்போதும் ஆதிதிராவிடர் நலத்துறையைத்தான் தர வேண்டுமா? ஏன் வேறொரு பொதுத் துறையைத் தரக்கூடாது?’ என்று மட்டும்தான் அவர் கேள்வி எழுப்பினார். </p><p>விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒரு தலித் கட்சி மட்டுமல்ல, அது அனைத்து தரப்பு மக்களுக்காகவும் போராடும் இயக்கம் என்பதை உணர்த்தவே அவர் பொதுவான வேறொரு துறையைக் கேட்டார். ஆனால், வன்னி அரசு சொல்லித்தான் துறையின் பெயர் மாற்றப்பட்டதாக ஒரு தவறான கருத்து பரப்பப்படுகிறது” என விளக்கமளித்தார்.</p><h2><strong>இட ஒதுக்கீடு கிடைப்பதில்லை..</strong></h2><p>7 சமூகம் ஒன்றாக சேர்ந்து அருந்ததியர் என்று வாங்கினார்கள், தேவேந்திர குல வேளாளர்கள் அவர்களும் தங்களது சாதி பெயரை மாற்றி அரசாணையை வாங்கிகொண்டார்கள். மற்ற சாதிகள் அனைத்தும் என்னவாக இருந்தாலும் எஸ்சி பட்டியலில் சிலருக்கு இட ஒதுக்கீடு கிடைப்பதில்லை.</p><h2><strong>விசிக-வின் அதிகாரப்பூர்வ கோரிக்கை மற்றும் நிலைப்பாடு</strong></h2><p>இறுதியாக விசிக-வின் இறுதி முடிவை திட்டவட்டமாக அறிவித்த திருமாவளவன், “அது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியோ அல்லது வன்னி அரசு சொல்லி மாற்றப்பட்டது அல்ல". விசிக-வின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்னவென்றால், தமிழ்நாடு அரசு இந்தத் துறையின் பெயரை மீண்டும் பழையபடி ‘ஆதிதிராவிடர் நலத்துறை’ என்றே மாற்ற வேண்டும். இதில் எங்களுக்கு எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை” என்று அழுத்தமாகக் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சைல்டுலைன் பணியாளர்களுக்கு 2 மாதங்களாக சம்பளம் இல்லை: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/childline-workersudhayanidhi-stalin-condemns</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/childline-workersudhayanidhi-stalin-condemns#comments</comments><guid isPermaLink="false">c2bfb142-c5ae-47ff-a213-897762cf2968</guid><pubDate>Thu, 16 Jul 2026 14:08:21 +0000</pubDate><atom:updated>2026-07-16T14:08:21.700Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,தமிழக அரசு,Childline,Tamil Nadugovernment,சைல்டுலைன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/o33rthd3/udhay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ childline-udhayanidhi stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/o33rthd3/udhay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் தவிப்பிற்குள்ளாகும் மற்றும் பாதிக்கப்படும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் ‘சைல்டுலைன்’ உதவி மைய ஊழியர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. </p><p>இது தொடர்பாக, ஊழியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.</p><p>இந்தியாவில் ஆபத்திலுள்ள குழந்தைகளைக் காக்கவும், அவர்களுக்கு அவசர உதவிகளை வழங்கவும் '1098' என்ற இலவச தொலைபேசி சேவை 'சைல்டுலைன்' என்ற பெயரில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் இயக்கப்பட்டு வந்தது. </p><p>மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் புதிய வழிகாட்டுதல்களின்படி, இந்த சேவை மாநில அரசுகளின் முழுப் பொறுப்பில்  கொண்டுவரப்பட்டது. தமிழ்நாட்டில் கடந்த 2023-ம் ஆண்டு முதல் இந்த அவசர உதவி மையங்களை அரசே நேரடியாகக் கண்காணித்து வருகிறது.</p><p>அரசுத் துறை இந்த சேவையைத் தன் வசம் எடுத்த பிறகு, நிதி ஒதுக்கீட்டில் நிலவும் சுணக்கம் காரணமாகப் பணியாளர்களுக்கு முறையான ஊதியம் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருவதாகக் கூறப்படுகிறது.</p><h2><strong>2 மாத ஊதிய நிலுவை:</strong></h2><p>சைல்டுலைன் அமைப்பில் பணியாற்றும் களப் பணியாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படவில்லை என்று ஊழியர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. இதற்கு முந்தைய மாதங்களிலும் ஊழியர்களுக்கு முழுமையான சம்பளம் வழங்கப்படாமல், 40 சதவீத ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.</p><p>தங்களின் சொற்ப ஊதியத்திலும் பி.எஃப், மருத்துவக் காப்பீடு போன்ற அடிப்படைப் பலன்கள் மற்றும் குழந்தைகள் மீட்புக் பணிகளுக்காகக் களத்தில் செலவிடப்படும் பயணப் படிகள் கூட வழங்கப்படுவதில்லை என ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.</p><h2><strong>எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்:</strong></h2><p>இந்த விவகாரம் குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "குழந்தைகள் நலனுக்கான அமைப்பின் பணியாளர்களுக்கு கடந்த 2 மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சைல்டுலைன் பணியாளர்களின் ஊதியப் பிரச்னையைத் தீர்த்து வைத்து, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு உடனடியாக முன்வர வேண்டும்." என வலியுறுத்தியுள்ளார்.</p><p>குழந்தைகள் கடத்தல், பாலியல் வன்கொடுமைகள், குழந்தைத் தொழிலாளர் முறை மற்றும் குழந்தை திருமணங்களைத் தடுத்து நிறுத்துவதில் சைல்டுலைன் பணியாளர்கள் முதல்நிலை மீட்பர்களாக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.</p><p>இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பின் ஊழியர்களுக்கே ஊதியம் வழங்கப்படாமல் வாழ்வாதாரம் முடங்கினால், அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் பணியை விட்டு விலக நேரிடும். </p><p>இதனால் ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்படும் என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே, அரசு உடனே தலையிட்டு இந்த நிதிப் பற்றாக்குறையைத் தீர்க்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>லாக்கப் மரணங்களுக்கு அரசை குறைகூற முடியாது... காவல்துறை கலாச்சாரத்தில் மாற்றம் வேண்டும் - கார்த்தி சிதம்பரம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-government-cannot-be-blamed-for-custodial-deaths-there-needs-to-be-a-change-in-police-culture-karti-chidambaram</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-government-cannot-be-blamed-for-custodial-deaths-there-needs-to-be-a-change-in-police-culture-karti-chidambaram#comments</comments><guid isPermaLink="false">5c8754e5-c38c-4e6c-af27-c85a1631c38f</guid><pubDate>Thu, 16 Jul 2026 14:03:59 +0000</pubDate><atom:updated>2026-07-16T14:03:59.216Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>காவல்துறை,police,Karti Chidambaram,கார்த்தி சிதம்பரம்,Custodial deaths,லாக்கப் மரணங்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/jp8kt4sq/New-Project-2026-07-16T193257.030.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ லாக்கப் மரணங்களுக்கு அரசை குறைகூற முடியாது... காவல்துறை கலாச்சாரத்தில் மாற்றம் வேண்டும் - கார்த்தி சிதம்பரம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/jp8kt4sq/New-Project-2026-07-16T193257.030.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் இன்று சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், </p><p>“ஒரு அரசுக்கு அவகாசம் கொடுக்கவேண்டும். பட்ஜெட், திட்டங்களை வைத்துதான் தவெக அரசு குறித்துக் கூறலாம். 5 வருடம் நிலையாக தவெக அரசு நடக்கும். அவர்களுக்கு எந்தக் கட்சி எம்.எல்.ஏக்களும் தேவையில்லை. அதிமுக எம்.எல்.ஏக்களின் ராஜினாமாக்களை நான் ஏற்கவில்லை. அது தேவையில்லாதது.</p><p>லாக்கப் மரணம் என்பது ஒவ்வொரு ஆட்சியிலும் நடக்கிறது. இதில் அரசைக் குறைக்கூற முடியாது. இது காவல்துறையின் கலாச்சார சீரழிவு. காவல்துறையினர் இன்னும் காலனித்துவக் காவல் துறையாகவே செயல்படுகிறார்கள். காலனித்துவ மனநிலை காவல்துறைக்கு மாறவேண்டும்.</p><p>காவல்துறை சீர்திருத்தக் குழுவை அரசு அமைக்கவேண்டும். அனைத்து நிலை காவலர்களுக்கும் மறுபயிற்சி அளிக்கவேண்டும். ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது காவல்துறை. அதனால்தான் அவர்கள் இன்னும் இந்த மனநிலையில் இருக்கிறார்கள். </p><p>தவெக நிர்வாகிகள்மீது குற்றச்சாட்டு வந்தால் அரசு நடவடிக்கை எடுக்கிறது. ஊழல் நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை கட்சியில் இருந்து நீக்குகிறார்கள். சமூகத்தில் நடக்கும் அனைத்து குற்றங்களுக்கும் அரசு பொறுப்பேற்க முடியாது. அந்தக் குற்றத்தில் அரசு ஒரு அங்கம் வகிக்கிறது.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>ஈரானில் குழந்தைகள் புற்றுநோய் மருத்துவமனை அருகே அமெரிக்கா வான்வழி தாக்குதல் - 211 நோயாளிகள் வெளியேற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/world/us-airstrike-near-iran-cancer-hospital-211-child-patients-evacuated-after-attack</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-airstrike-near-iran-cancer-hospital-211-child-patients-evacuated-after-attack#comments</comments><guid isPermaLink="false">2aaefd2c-6c67-4167-b056-48301bfcdad5</guid><pubDate>Thu, 16 Jul 2026 14:01:55 +0000</pubDate><atom:updated>2026-07-16T14:01:55.625Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Iran cancer hospital,Iran Foreign Ministry,ஈரான் புற்றுநோய் மருத்துவமனை,ஈரான் வெளியுறவு அமைச்சர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/xnx6ixse/Untitled-design-18.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Iran Cancer Hospital]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/xnx6ixse/Untitled-design-18.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரானின் தென்மேற்கில் அமைந்துள்ள அஹ்வாஸூ பகுதியில் செயல்பட்டு வரும் புற்றுநோய் மருத்துவமனை அருகே அமெரிக்கா வான்வழித் தாக்குதலை நடத்தியது.</p><p>இதையடுத்து அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தைகள் உட்பட 211 உள்நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.  </p><p>ஈரானின் குசெஸ்தான் மாகாணத்தில் உள்ள புற்றுநோய் சிறப்பு மையமான ஷாஹித் பகாயி மருத்துவமனைக்கு அருகே, அமெரிக்க படைகள் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியது.</p><p>இந்த தாக்குதலை அடுத்து மருத்துவமனையில் இருந்த இருநூறுக்கும் மேற்பட்ட நோயாளிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.</p><p>இதைத்தொடர்ந்து மருத்துவமனை சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக ஈரான் செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.</p><figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">⚡️BREAKING: A Children&#39;s Cancer Hospital has been Damaged in U.S. strikes in Southern Iran, and an Evacuation is now underway <a href="https://t.co/uYiUf9Jcde">pic.twitter.com/uYiUf9Jcde</a></p>&mdash; Iran Observer (@IranObserver0) <a href="https://x.com/IranObserver0/status/2077517186424303843?ref_src=twsrc%5Etfw">July 15, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure> <p>இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h3><strong>புற்றுநோய் மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு ஈரான் கண்டனம்:</strong></h3><p>இந்நிலையில் தாக்குதல் குறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட செய்தியில், “நேற்று இரவு ஷாஹித் பகாயி மருத்துவமனைக்கு அருகே அமெரிக்கா நடத்திய தாக்குதலை அடுத்து, மருத்துவமனை காலி செய்யப்பட்டது.</p><p>சுகாதார மையங்களுக்கு எதிராக இஸ்ரேல் செய்யும் அட்டூழியங்களை வெளிப்படுத்தும் வகையில் இந்த மிருகத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.</p><p>மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகளுக்கு கடுமையான கவலையையும் துன்பத்தையும் ஏற்படுத்தி, கீமோதெரபி சிகிச்சை பெற்று வந்த 211 நோயாளிகள் அவசரமாக வெளியேற்ற நிர்பந்திக்கப்பட்டனர்.</p><p>இந்த தாக்குதல் உயிருக்காக போராடும் அப்பாவி குழந்தைகளுக்கு எதிரான ஒரு போர்க்குற்றமாகும்.</p><p>மனித உரிமைகளை இடைவிடாமல் போதித்துவிட்டு, மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்கள் குறிவைக்கப்படுவதை கண்டுகொள்ளாமல் இருப்பவர்கள், தங்களின் அறநெறி நம்பகத்தன்மை இழந்துவிட்டனர்” என்று பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பார்ட்னர்ஷிப்பில் 8,000 ரன்களைக் கடந்த ரோகித் சர்மா-விராட் கோலி ஜோடி</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/ro-ko-is-the-9th-pair-to-complete-8000-partnership-runs-in-international-cricket</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/ro-ko-is-the-9th-pair-to-complete-8000-partnership-runs-in-international-cricket#comments</comments><guid isPermaLink="false">0c6e0267-dd3e-47f8-80ab-992b762feee8</guid><pubDate>Thu, 16 Jul 2026 13:47:05 +0000</pubDate><atom:updated>2026-07-16T13:47:05.521Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rohit sharma,ரோகித் சர்மா,Virat Kohli,விராட் கோலி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/eck28h1w/kohli.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rohit, Kohli]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/eck28h1w/kohli.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>விளையாட்டு (Sports)</category><content:encoded><![CDATA[ <p>இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி கார்டிப்பில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.</p><p>அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், கேப்டன் சுப்மன் கில் இறங்கினர்.</p><p>முதல் விக்கெட்டுக்கு 44 ரன்கள் சேர்த்த நிலையில் சுப்மன் கில் 31 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.</p><p>அடுத்து இறங்கிய விராட் கோலி, ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார். விராட் கோலி தொடக்கம் முதலே ரன் குவிப்பில் ஈடுபட்டார். ரோகித் சர்மா 26 ரன்னில் வெளியேறினார்.</p><p>இந்நிலையில், ரோகித் சர்மா-விராட் கோலி ஜோடி பார்ட்னர்ஷிப்பில் 8000 ரன்களைக் கடந்துள்ளது.</p><p>இந்த ஆட்டத்தில் 2-வது விக்கெட்டுக்கு இந்தியாவின் ரோகித் சர்மா, விராட் கோலி ஜோடி 60 ரன்கள் சேர்த்தது. இதையும் சேர்த்து அவர்கள் பார்ட்னர்ஷிப்பில் 8 ஆயிரம் ரன்களை கடந்துள்ளனர்.</p><p>இந்தியா சார்பில் சச்சின் டெண்டுல்கர்-சவுரவ் கங்குலி ஜோடி 12,400 ரன்னும், ராகுல் டிராவிட்-சச்சின் டெண்டுல்கர் ஜோடி 11,037 ரன்னும் கடந்த ஜோடியாக திகழ்கின்றனர்.</p><p>ரோகித் சர்மா-விராட் கோலி ஜோடி சர்வதேச அளவில் 8000 ரன்களைக் கடந்த 9-வது ஜோடி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>குழந்தைகளுக்கான பாராசிட்டமால் மருந்தில் ஆல்கஹாலா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழக சுகாதாரத்துறை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/alcohol-in-paracetamol-for-children</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/alcohol-in-paracetamol-for-children#comments</comments><guid isPermaLink="false">f3065241-9459-4a3e-a077-aa0e72f420f0</guid><pubDate>Thu, 16 Jul 2026 13:42:19 +0000</pubDate><atom:updated>2026-07-16T13:42:19.902Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Health,தமிழக சுகாதாரத்துறை,பாராசிட்டமால்,உடல்நலம்,Paracetamol Syrup,TnHealth Department</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/fchj2yvo/PARACETOMAL.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Paracetamol for Children]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/fchj2yvo/PARACETOMAL.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குழந்தைகளுக்கான பாராசிட்டமால் மருந்துகளில் அதிகளவில் ஆல்கஹால் கலக்கப்படுவதாகச் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என்றும், பொதுமக்கள் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிரடி விளக்கம் அளித்துள்ளது.</p><p>மருந்துகளின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்துப் பரப்பப்படும் தவறான செய்திகளால் மக்களிடையே தேவையற்ற அச்சம் உருவாவதைத் தடுக்க இந்த அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.</p><h2><strong>சரியான விகிதத்திலேயே ஆல்கஹால் பயன்பாடு:</strong></h2><p>குழந்தைகளுக்கான திரவ வடிவ மருந்துகளில் சில குறிப்பிட்ட மூலப்பொருட்களைக் கரைப்பதற்காகவும், மருந்து கெட்டுப்போகாமல் பாதுகாப்பதற்காகவும் ஆல்கஹால் மிகக் குறைந்த அளவில், பாதுகாப்பான விகிதத்தில் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.</p><h2><strong>60 மி.லி பாட்டிலில் எவ்வளவு உள்ளது?</strong></h2><p>பொதுமக்கள் அச்சப்படும் அளவிற்கு இதில் ஆல்கஹால் இல்லை என்பதைத் தெளிவுபடுத்திய சுகாதாரத்துறை, 60 மி.லி கொள்ளளவு கொண்ட ஒரு பாராசிட்டமால் மருந்து பாட்டிலில் வெறும் 10% மட்டுமே, அதாவது 6 மி.லி அளவுக்கே ஆல்கஹால் பயன்படுத்தப்படுகிறது என்று புள்ளிவிவரங்களுடன் விளக்கியுள்ளது. இந்த அளவு சர்வதேச மருத்துவ விதிமுறைகளின்படி முற்றிலும் பாதுகாப்பானது.</p><h2><strong>95% ஆல்கஹால் என்பதன் நிஜமான அர்த்தம் என்ன?</strong></h2><p>மருந்து பாட்டில்களின் லேபிள்களில் குறிப்பிடப்படும் "95% ஆல்கஹால்" என்ற வார்த்தையை மக்கள் தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர். அது மருந்தில் 95% ஆல்கஹால் கலக்கப்பட்டிருப்பதாக அர்த்தம் அல்ல. மாறாக, அந்த மருந்து தயாரிப்பிற்காகப் பயன்படுத்தப்பட்ட ஆல்கஹாலின் தூய்மைத் தன்மையைக் குறிக்கும் மருத்துவக் குறியீடே அதுவாகும்.</p><p>"மருத்துவக் குறியீடுகளையும், தொழில்நுட்ப வார்த்தைகளையும் தவறாகப் புரிந்துகொண்டு, சமூக வலைத்தளங்களில் தேவையற்ற வதந்திகளைப் பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். </p><p>பொதுமக்கள் தங்களின் குழந்தைகளுக்குக் காய்ச்சல் அல்லது உடல்நலக்குறைவு ஏற்படும் போது, மருத்துவர்களின் முறையான பரிந்துரையின் பேரில் மட்டுமே மருந்தகங்களில் மருந்துகளை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். போலிச் செய்திகளைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை."</p><p>மருந்து கட்டுப்பாட்டு வாரியத்தின் கடுமையான கண்காணிப்பின் கீழேயே அனைத்துக் குழந்தை மருந்துகளும் தயாரிக்கப்பட்டு சந்தைக்கு வருவதால், பெற்றோர்கள் எவ்வித பயமும் இன்றி மருத்துவர்களின் அறிவுரைப்படி மருந்துகளைத் தொடரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது அணைக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் குரலெழுப்புவார்கள் - மு.க.ஸ்டாலின் உறுதி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mps-will-raise-their-voices-against-the-mekedatu-dam-mk-stalin-assures</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mps-will-raise-their-voices-against-the-mekedatu-dam-mk-stalin-assures#comments</comments><guid isPermaLink="false">dcdf47f8-2cdd-4451-be5a-7cbd251ea7de</guid><pubDate>Thu, 16 Jul 2026 13:34:01 +0000</pubDate><atom:updated>2026-07-16T13:34:01.957Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக எம்பிக்கள்,DMK MPs,mekedatu dam,மேகதாது அணை,மு.க.ஸ்டாலின்,M.k. stalin</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/k1qwwzi2/New-Project-2026-07-16T190311.889.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ கோப்புப் படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மேகதாது அணைக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் குரலெழுப்புவார்கள் - மு.க.ஸ்டாலின் உறுதி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/k1qwwzi2/New-Project-2026-07-16T190311.889.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தலைமையில் இன்று அக்கட்சியின் எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் ஆன்லைன் வாயிலாக நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் மேகதாது அணை, நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசு தாக்கல் மீண்டும் தாக்கல் செய்யவுள்ளதாக கூறப்படும் மறுவரையறை மசோதா உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. </p><p>இந்த கூட்டத்தைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், </p><p>“மேகதாது அணை கட்டும் முயற்சிகளுக்கு எதிராகவும், காவிரியில் தமிழ்நாட்டுக்குள்ள நியாயமான உரிமையைக் காக்கவும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரத்துக் குரலெழுப்புவார்கள்.</p><p>ஒன்றிய அரசு கொண்டு வரும் எந்தப் புதிய சட்டமாக இருந்தாலும் மாநில உரிமைகளையும், அரசியலமைப்புச் சட்டத்தினையும் பாதுகாத்திடும் வகையிலேயே திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு இருக்கும்.</p><p>தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சியாய் ஒவ்வொரு திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும் செயல்படுவார்கள்!” என தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>ரூ.150 கோடி குடும்ப சொத்து தகராறு.. குடிபோதையில் தந்தையை சுட்டுக்கொன்ற மகன்</title><link>https://www.maalaimalar.com/news/national/family-property-dispute-son-shoots-father-dead-over-150-crore-land-and-shop-share-in-uttar-pradesh</link><comments>https://www.maalaimalar.com/news/national/family-property-dispute-son-shoots-father-dead-over-150-crore-land-and-shop-share-in-uttar-pradesh#comments</comments><guid isPermaLink="false">a25ec7aa-f75a-4646-9669-359bfd320b91</guid><pubDate>Thu, 16 Jul 2026 13:25:58 +0000</pubDate><atom:updated>2026-07-16T13:25:58.551Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Uttar Pradesh,உத்தர பிரதேசம்,சொத்து தகராறு,Hariom,Propery Dispute,ஹரியோம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/27zvn1ke/Untitled-design-17.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Son shoots father dead over 150 crore property dispute in Uttar Pradesh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/27zvn1ke/Untitled-design-17.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தர பிரதேசத்தில் 150 கோடி ரூபாய் குடும்ப சொத்து பிரச்சனையில் தனது தந்தையை சுட்டுக் கொன்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். </p><p>காசியாபாத்தில் உள்ள மோடிநகர் அடுத்த புதானா கிராமத்தை சேர்ந்த 55 வயதான ஹரியாம் என்பவருக்கு மீனாட்சி என்ற மனைவியும், நிகில், நிஷூ என இரண்டு மகன்களும் உள்ளனர்.</p><p>ஹரியாமிற்கு தேசிய நெடுஞ்சாலை அருகே சொந்தமாக நிலமும், சந்தையில் சொந்தமாக மூன்று கடைகளும் உள்ளன. இதன் மதிப்பு ரூ.150 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.</p><p>சில ஆண்டுகளுக்கு முன்பு, ஹரியாம் இந்த சொத்துக்களை மூன்று பங்காக பிரித்து, தனது மகன்களுக்கு இரண்டு பங்கும், தனது மனைவிக்கு ஒரு பங்குமாக மொத்தம் மூன்று பங்காக பிரித்துள்ளார்.</p><p>இந்த சொத்துக்களை விரைவாக பத்திரம் முடித்து தனது திருமணத்திற்கு முன்பாக தருமாறு தந்தையிடம் நிகில் கூறியுள்ளார்.</p><p>இதையடுத்து சொத்துக்களை விரைவாக பிரித்து கொடுப்பதற்கு ஹரியாம் மறுப்பு தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து சம்பவத்தன்று குடித்துவிட்டு இரவு 11 மணியளவில் மதுபோதையில் நிகில் வீட்டிற்கு வந்துள்ளார்.</p><p>அப்போது தான் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியால் தனது தந்தையை மூன்று முறை சுட்டதில், ஹரியாம் பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p>இந்நிலையில் உயிரிழந்தவரின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் தப்பியோடிய குற்றவாளி நிகிலை பிடிக்க ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டு, பாரதிய நியாய சம்ஹிதா பிரிவு 103-இன் கீழ் முதல் தகவல் அறிக்கையை மோடிநகர் காவல்துறையினர் பதிவு செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்காவில் பணவியல் கொள்கைகளை ஆய்வு செய்ய ரகுராம் ராஜன் உள்ளிட்ட மூன்று இந்தியர்கள்  நியமனம்</title><link>https://www.maalaimalar.com/news/national/us-monetary-policy-panel-raghuram-rajan-asha-sharma-and-raj-chetty-join-key-fed-working-groups</link><comments>https://www.maalaimalar.com/news/national/us-monetary-policy-panel-raghuram-rajan-asha-sharma-and-raj-chetty-join-key-fed-working-groups#comments</comments><guid isPermaLink="false">f85888f3-3935-467f-ae9a-d1b817ea97bb</guid><pubDate>Thu, 16 Jul 2026 13:17:19 +0000</pubDate><atom:updated>2026-07-16T13:17:19.053Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ரகுராம் ராஜன்,raghuram rajan,US Federal Reserve,Asha Sharma,ஃபெடரல் ரிசர்வ்,ஆஷா ஷர்மா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/ewol9mld/Untitled-design-16.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Raghuram Rajan, Asha Sharma and Raj Chetty ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/ewol9mld/Untitled-design-16.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், மைக்ரோசாப்ட் நிர்வாகி ஆஷா ஷர்மா மற்றும் பொருளாதார நிபுணர் ராஜ் ஷெட்டி ஆகியோர்கள் பணவியல் கொள்கைகளை மறுஆய்வு செய்வதற்காக அமெரிக்க மத்திய வங்கியால் அமைக்கப்பட்ட பணிக்குழுக்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். </p><p>புதிதாக நியமிக்கப்பட்ட ஃபெடரல் ரிசர்வ் தலைவர் கெவின் வார்ஷ், தகவல் தொடர்பு, இருப்பு நிலைக் கொள்கை, தரவு, உற்பத்தித்திறன், வேலைவாய்ப்பு மற்றும் பணவியல் கொள்கைகளை ஆய்வு செய்ய ஐந்து பணிக்குழுகளை அறிவித்தார்.</p><p>இந்த குழுக்கள் ஃபெடரல் திறந்த சந்தை குழுவிற்கு பரிந்துரைகளை வழங்கும் என ஃபெடரல் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.</p><h3><strong>ஃபெடரல் ரிசர்வ் பணிக்குழுவில் ரகுராம் ராஜன் உள்ளிட்ட 3 இந்தியர்கள் நியமனம்:</strong></h3><p>ஹார்வர்ட் பொருளாதார நிபுணர் கரேன் டைனன் மற்றும் முன்னாள் ஃபெடரல் ரிசர்வ் ஆளுநர் ஜெர்மி ஸ்டெய்ன் ஆகியோருடன் ரகுராம் ராஜன் இருப்புநிலை கொள்கை பணிக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பொருளாதார நிபுணர் ராஜ் ஷெட்டி, டக் மெக்மில்லன் மற்றும் சிகாகோ பல்கலைக்கழகப் பொருளாதார நிபுணர் கெவின் மர்பி ஆகியோருடன் தரவுப் பணிக்குழுவில் நியமிக்கபட்டார்.</p><p>இதையடுத்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செயல் துணைத் தலைவரும், எக்ஸ்பாக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஆஷா ஷர்மா, மார்க் ஆண்ட்ரீசன் மற்று ஸ்டான்போர்ட் பொருளாதார நிபுணர் சார்லஸ் ஐ ஜோன்ஸ் ஆகியோருடன் உற்பத்தித்திறன் மற்றும் வேலைவாய்ப்புப் பணிக்குழுவில் பணியமர்த்தப்பட்டார்.</p><p>இதுகுறித்து ஃபெடரல் ரிசர்வ் தலைவர் கெவின் வார்ஷ் கூறுகையில், “ஒரு நிறுவனமாக நமது செயல்திறனை மெருகேற்றுவதற்காக, பல்வேறு துறைகளைச் சேர்ந்த தலைசிறந்த அறிஞர்கள் எங்களுடன் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டிருப்பது எனக்குப் பெருமையளிக்கிறது.</p><p>இந்த முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டத்தில் நமது நோக்கங்களை அடைவதற்கு ஃபெட் சிறந்த நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்," என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பயங்கரவாதத்தை எதிர்த்து தொடர்ந்து போராட வேண்டும்- அஜித் தோவல்</title><link>https://www.maalaimalar.com/news/national/we-must-continue-to-fight-terrorism-ajit-doval</link><comments>https://www.maalaimalar.com/news/national/we-must-continue-to-fight-terrorism-ajit-doval#comments</comments><guid isPermaLink="false">ac12cd8c-f1be-47dd-928e-54d39b15f193</guid><pubDate>Thu, 16 Jul 2026 12:41:51 +0000</pubDate><atom:updated>2026-07-16T12:41:51.607Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பயங்கரவாதம்,Terrorist,அஜித் தோவல்,Ajith dhoval</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/kuk9i1m1/Ajith.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ajith Dhoval]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/kuk9i1m1/Ajith.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியா, இலங்கை, வங்காளதேசம், தாய்லாந்து, நேபாளம், மியான்மர் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய அமைப்பு பிம்ஸ்டெக் ஆகும். இந்த அமைப்பில் உள்ள நாடுகளின் பாதுகாப்பு அதிகாரிகளின் 5-வது கூட்டம் டெல்லியில் நடந்தது.</p><p>கூட்டத்துக்கு இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அஜித் தோவல் பேசியதாவது:-</p><p>உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் ஏற்பட்டுள்ள தடங்கல்கள் நமது நாடுகள் அனைத்திற்கும் பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளன. இந்த சூழலில் நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். உலகின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 22 சதவீதமான 170 கோடி மக்கள் இங்கு வசிக்கின்றனர்.</p><p>வங்காள விரிகுடா நம்மை இணைக்கிறது. இது வெறும் புவியியல் ரீதியான இணைப்பு மட்டுமல்ல, ஆயிரம் ஆண்டுகாலப் பகிர்ந்து கொள்ளப்பட்ட பிணைப்புகளால் உருவான ஆழமான நாகரிக மற்றும் கலாச்சார மரபுகளாலும் இணைக்கப்பட்டுள்ளோம்.</p><p>பயங்கரவாதம், எல்லை தாண்டிய குற்றங்கள் மற்றும் இணைய அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவதிலும், கடல்சார் சவால்களை எதிர்கொள்வதிலும் நாம் ஒத்துழைப்பை மேம்படுத்தி வலுப்படுத்தி உள்ளோம்.</p><p>புதிய மற்றும் வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களை ஒன்றிணைந்து எதிர்கொள்ளவும் நாம் தயாராக உள்ளோம்.</p><p>பிராந்திய பாதுகாப்பு, இணைப்பு வசதி, திறன் மேம்பாடு மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பு ஆகிய பிம்ஸ்டெக் அமைப்பின் நீண்டகால இலக்குகள் நமது கூட்டு முயற்சிகளைத் தொடர்ந்து வழிநடத்த வேண்டும்.</p><p>இவ்வாறு அஜித்தோவல் கூறினார்.</p>]]></content:encoded></item></channel></rss>