<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 16 Jul 2026 12:21:06 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-16-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-16-july-2026#comments</comments><guid isPermaLink="false">d2c58fb8-0ee8-404c-8bd6-25a23af9564b</guid><pubDate>Thu, 16 Jul 2026 03:36:42 +0000</pubDate><atom:updated>2026-07-16T11:10:44.046Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/0yiond39/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/0yiond39/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/former-minister-ragupathi-explain-admk-alliance-is-possible">அதிமுகவுடன் கூட்டணியா? - முன்னாள் அமைச்சர் ரகுபதி விளக்கம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cbi-to-soon-investigate-armstrong-murder-case">ஆம்ஸ்ட்ராங் கொலையில் சி.பி.ஐ. விரைவில் விசாரணை- முக்கிய பிரமுகர்கள் சிக்குகிறார்கள்</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/51-sixes-3-centurions-when-t20-arithmetic-was-re-written">ஒரே போட்டியில் 3 சதங்கள், 51 சிக்சர்கள்: தெறிக்கவிட்ட மேஜர் லீக் தொடர் எலிமினேட்டர்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/the-government-has-no-intention-of-covering-up-prison-deaths-minister-nirmal-kumar" rel="nofollow">சிறை மரணங்களை மூடி மறைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை- அமைச்சர் நிர்மல்குமார்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/puducherry/convening-of-the-puducherry-legislative-assembly-is-being-postponed">நாளை ஆடிமாதம் தொடக்கம்: புதுவை சட்டசபை கூடுவது தள்ளிபோகிறது</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/toronto-wildfire-smoke-blanket">காட்டுத்தீப் புகை மூட்டம்: உலகின் மிக மோசமான காற்று தரம் கொண்ட நகரமாக மாறிய டொராண்டோ!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/pv-sindhu-enter-qf-round-in-japan-open-badminton">ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் பி.வி.சிந்து</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/color-appalam-bans">அதிக நிறமூட்டிகளை பயன்படுத்தி விற்கப்படும் கலர் அப்பளத்துக்கு தடை- உணவு பாதுகாப்புத்துறை!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/the-controversy-surrounding-the-fmge-exam-is-worrying-tamilachi-thangapandian" rel="nofollow">FMGE தேர்வைச் சுற்றி எழுந்துள்ள சர்ச்சை கவலை அளிக்கிறது..!- தமிழச்சி தங்கபாண்டியன்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anyone-caught-in-corruption-allegations-will-be-stripped-of-their-position-chief-minister-vijay-warns" rel="nofollow">ஊழல் புகார்களில் யார் சிக்கினாலும் பதவி பறிக்கப்படும்..!- முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை</a></p><p><a href="https://www.maalaimalar.com/cinema/movie-review/homer-odyssey-nolan-film-christopher-nolan-reimagines-odysseus-epic-war-torn-journey-on-screen">எப்படி இருக்கிறது 'தி ஒடிஸி..' மகாகாவியத்திற்கு நியாயம் செய்தாரா நோலன்? - திரைவிமர்சனம்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cbcid-investigation-to-rs-100-crore-worth-land-fraud-involving-palani-murugan-temple">பழனி முருகன் கோவிலின் ரூ.100 கோடி நிலம் மோசடி: சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கியது</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cabinet-meeting-begins" rel="nofollow">தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/today-is-the-2nd-match-will-india-win-the-one-day-series-against-england" rel="nofollow">இன்று 2வது ஆட்டம்..! இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றுமா இந்தியா?</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-take-action-party-posts-of-11-cve-shanmugam-supporters-stripped">சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு- எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/punjabi-student-on-uk-visa-stabbed-to-death-in-london-24-year-old-granthdeep-kaur-killed-on-uxbridge-road">நிலத்தை விற்று படிக்க அனுப்பிய பெற்றோர்.. லண்டனில் இந்திய மாணவி கத்தியால் கொடூரமாக குத்திக் கொலை</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/noida-apartment-fire-ev-blast-kills-2-over-100-residents-rescued">சார்ஜ் ஏறும்போது வெடித்த இ-ஸ்கூட்டர்.. நொய்டா கட்டிடத்தில் தீ விபத்து - 2 பேர் பலி - 100-க்கும் மேற்பட்டோர் மீட்பு</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/us-mall-stabbing-indian-muslim-worker-sohail-stabbed-15-times-in-utah-jewelry-store">மதவெறித் தாக்குதல்.. "நீ முஸ்லிமா?" என கேட்டு அமெரிக்க மாலில் இந்திய இளைஞருக்கு 15 முறை கத்திக்குத்து</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/azov-sea-drone-strikes-russian-shipping-halted-exports-disrupted">Sea of Azov: 116 கப்பல்கள் மீது உக்ரைன் தாக்குதல்.. ரஷியாவின் கப்பல் போக்குவரத்து முடக்கம் - ஏற்றுமதி பாதிப்பு</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/day-19-89-kg-weight-loss-wangchuk-calls-for-the-july-20-rally-in-a-feeble-voice-where-is-rahul">19வது நாள்: 8.9 கிலோ எடை இழப்பு.. தளர்ந்த குரலில் ஜூலை 20 பேரணிக்கு வாங்சுக் அழைப்பு - ராகுல் எங்கே?</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-urges-recruitment-notification-for-police-personnel-must-be-released-immediately">காவலர்களுக்கான ஆள்தேர்வு அறிவிப்பை உடனே வெளியிட வேண்டும்!- அன்புமணி வலியுறுத்தல்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-16-7-2026">GOLD PRICE TODAY: தங்கம் விலை சரிவு - இன்றைய நிலவரம்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kudankulam-nuclear-power-plant-data-leaked">கூடங்குளம் அணுமின் நிலைய ரகசிய ஆவணங்கள் கசிந்ததா? - NPCIL விளக்கம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/8-electric-trains-between-beach-and-chengalpattu-cancelled-tomorrow">பயணிகள் கவனத்திற்கு... நாளை 8 மின்சார ரெயில்கள் ரத்து</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-cabinet-meets-today">முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/private-sector-employment-camp-in-guindy-tomorrow-district-collector-malathi-helen-informed">நாளை கிண்டியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியர் தகவல்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/libya-migrant-boat-capsize-over-50-dead-or-missing-in-mediterranean-near-libya">லிபியா அருகே அகதிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்து.. 50 பேர் மாயம் - உயிரிழப்பு என அச்சம்</a></p>]]></content:encoded></item><item><title>2வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு-இந்தியா பேட்டிங்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/england-won-the-toss-opt-to-bowl-first-against-india-in-second-odi</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/england-won-the-toss-opt-to-bowl-first-against-india-in-second-odi#comments</comments><guid isPermaLink="false">3de30172-1161-451d-864d-00c8c7f3d354</guid><pubDate>Thu, 16 Jul 2026 11:45:21 +0000</pubDate><atom:updated>2026-07-16T11:45:21.426Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சுப்மன் கில்,Shubman Gill,ENGvIND,இங்கிலாந்து இந்தியா தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/fdn4i2sp/toss.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ toss]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/fdn4i2sp/toss.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.</p><p>முதலில் நடந்த டி20 தொடரை இங்கிலாந்து 4-0 என வென்றது. முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.</p><p>இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கார்டிப்பில் இன்று நடைபெறுகிறது.</p><p>இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில்லும், இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஹாரி புரூக்கும் செயல்படுகின்றனர்.</p><p>இந்நிலையில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங் செய்கிறது. அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்குகிறது.</p><p>இந்திய அணியில் கே.எல்.ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷன் சேர்க்கப்பட்டுள்ளார்.</p><p>இந்திய அணியின் விவரம் வருமாறு:</p><p>ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷன், ஷ்ரேயஸ் அய்யர், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, குர்னூர் பிரார், பிரசித் கிருஷ்ணா, ஜஸ்பிரீத் பும்ரா.</p>]]></content:encoded></item><item><title>மத்திய அரசுப் பள்ளிகளை ஏன் தடுக்கிறீர்கள்? - தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/why-are-you-blocking-central-government-schools-supreme-court-questions-tamil-nadu-government</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/why-are-you-blocking-central-government-schools-supreme-court-questions-tamil-nadu-government#comments</comments><guid isPermaLink="false">fca7771a-ccd1-4f49-b8a1-37c37ce561f3</guid><pubDate>Thu, 16 Jul 2026 11:26:39 +0000</pubDate><atom:updated>2026-07-16T11:26:39.721Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,Supreme Court,உச்ச நீதிமன்றம்,Government of Tamil Nadu,navodaya schools,நவோதயா பள்ளிகள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/cwmj6e4z/New-Project-2026-07-16T165618.908.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மத்திய அரசுப் பள்ளிகளை ஏன் தடுக்கிறீர்கள்? - தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/cwmj6e4z/New-Project-2026-07-16T165618.908.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் மாவட்டம்தோறும் “ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளியை” நிறுவ வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக்கோரி குமரி மகா சபா என்ற அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.</p><p>அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஜவகர் நவோதயா பள்ளிகளை திறப்பதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்க உத்தரவிட்டது. மேலும் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகள், தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம் 2006ஐ மீறாது என்றுக்கூறி, இரண்டு மாதங்களுக்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் 240 மாணவர்களுக்கு தற்காலிக தங்குமிடத்தை வழங்குமாறும் கடந்த 2017 செப்டம்பர் 11ம் தேதி உத்தரவிட்டது.</p><p>சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து கடந்த 2017ம் ஆண்டு தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதைதொடர்ந்து, அந்த வழக்கு கடந்த 2017 டிசம்பர் 11ம் தேதி விசாரணைக்கு வந்தபோது சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து வழக்கை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.</p><p>இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில் கடந்த ஆண்டு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்படி, கடந்த மார்ச் மாதம் முந்தைய திமுக அரசு தாக்கல் செய்திருந்த பிரமாணப் பத்திரத்தில் நவோதயா பள்ளிகளை தமிழ்நாட்டில் நிறுவ எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டிருந்தது.</p><p>நவோதயா பள்ளிகள் இந்தி, ஆங்கிலம் மற்றும் மாநில மொழி என்ற மும்மொழிக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், இது தமிழ்நாட்டின் இரு மொழிக் கொள்கைக்கு முற்றிலும் எதிரானது.</p><p>இங்கு ஏற்கனவே 38 அதிநவீன மாதிரிப் பள்ளிகள், உறைவிட வசதியுடன் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. 2024-2025 கல்வியாண்டில் மட்டும் இப்பள்ளிகளில் படித்த 1340 மாணவர்கள் அகில இந்தியக் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். </p><p>நவோதயா பள்ளிகள் இல்லாமலேயே தமிழ்நாடு கல்வித் தரம் சிறப்பாக உள்ளது. ஜவகர் நவோதயா போன்ற புதிய பள்ளிகளைத் திறப்பதற்குப் பதிலாக, சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையான 3,548.22 கோடி ரூபாய் கல்வி நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. </p><p>ஆனால் உச்ச நீதிமன்றம், நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் நிறுவுவது தொடர்பாக இடங்களை கண்டறிந்து உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தியது.  இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. </p><p>அப்போது ஆஜரான தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஹரிப்ரியா, ஜவகர் நவோதயா பள்ளி விவகாரம் தொடர்பாக  அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள், அனைத்து மாநிலங்களிலும் ஜவகர் நவோதயா பள்ளிகள் உள்ளன, ஆனால் தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு கிடைக்கும் கல்வியை நீங்கள் ஏன் தடுக்கிறீர்கள்? </p><p>மத்திய அரசு பள்ளிகளை நீங்கள் ஏன் தடுக்கிறீர்கள்? தற்போது தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது எனவே அவர்களின் நிலைப்பாடு என்ன ? உங்களிடம் பள்ளிகள் அமைப்பதற்கான நிலத்தை தானே கண்டறிய கூறுகிறோம், உடனடியாக நவோதயா பள்ளிகளை நிறுவுங்கள் என்றா கூறுகிறோம் ? எனக் தமிழக அரசு தரப்புக்கு கேள்விகளை எழுப்பினர்.</p><p>அதற்கு பதிலளித்த தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், தமிழக அரசு தற்போது இந்த விவகாரம் தொடர்பாக உயர் மட்ட அளவில் ஆலோசனை நடத்தி வருகிறது, எனவே இது தொடர்பாக பதிலை தெரிவிக்க 12 வார கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.</p><p>அரசின் அந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த விசயத்தில் நிலைப்பாட்டை தெரிவிக்க 12 வார கால அவகாசம் வழங்க முடியாது வேண்டுமெனில் 2 வார கால அவகாசம் வழங்குவதாக கூறினர். ஆனால் தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர், இரண்டு வார காலம் என்பது மிகவும் குறுகியது, உயர்மட்ட அளவிலான ஆலோசனை நடத்தி முடிவெடுப்பதற்கு காலம் பிடிக்கும், எனவே குறைந்தபட்சம் மூன்று வார காலம் அவகாசம் அது வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.</p><p>இதனைத்தொடர்ந்து வாதிட்ட எதிர்மனுதாரரான குமரி மகாசாபா தரப்பு வழக்கறிஞர் பிரியதர்ஷினி, ஏற்கனவே தமிழ்நாட்டில் 1500 சி.பி.எஸ்.இ பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் நவோதயா பள்ளிகளை நிறுவுவதற்கு தமிழ்நாடு அரசு மும்மொழிக் கொள்கையை காரணம் காட்டுகிறது.</p><p>ஏற்கனவே பல பள்ளிகளில் மூன்று மொழிகள் கற்பிக்கப்பட்டு வருகிறது, இந்தியும் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ்நாடு அரசு இந்தியை காரணம் காட்டி நவோதயா பள்ளிகளை நிறுவ மறுக்கிறார்கள். இது தமிழ்நாடு மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய தரமான கல்வியை தடுக்கும் செயலாகும் என வாதிட்டார்.</p><p>அப்போது குறுக்கிட்டு பேசிய நீதிபதி ஆர் .மகாதேவன், தமிழ்நாட்டைப் பொறுத்த வரைக்கும் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் இந்தியை எதிர்க்கவில்லை, இந்தி திணிப்பையே எதிர்க்கிறார்கள் எனக் கூறினார்.</p><p>இதனைத்தொடர்ந்து பேசிய நீதிபதி பி.வி. நாகரத்னா, மூன்று மொழிக் கொள்கை என்பது இந்தி மட்டும் கிடையாது. வேறு எந்த மொழியையும் கூட தேர்ந்தெடுத்துக் கொள்ளலாமே என கூறியபோது, குறுக்கிட்டு பேசிய தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர், தற்போது மும்மொழி கொள்கையை மத்திய அரசு கொண்டு வருகிறது. 9ம் வகுப்பு மாணவர்களுக்கு அது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டினார். </p><p>அதற்கு பதிலளித்த நீதிபதி பி.வி.நாகரத்னா, மும்மொழி கொள்கை என்பது இருக்கலாம் , ஆனால் அது 6ம் வகுப்பு முதலே தொடங்கப்பட வேண்டும். அதேவேளையில், 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று மொழிக் கொள்கையை கட்டாயமாக்குவது மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.</p><p>ஒன்பதாம் வகுப்பில் மும்மொழி கொள்கையை அமல்படுத்துவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும். ஏனெனில் அந்த மாணவர்கள் பொதுத்தேர்வை எழுத இருக்கிறார்கள். அவ்வாறு இருக்கையில் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள் என தனது கருத்தை ஆழமாக தெரிவித்தார்.</p><p>இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் ஜவகர் நவோதயா பள்ளிகள் அமைப்பதற்கு இடங்களை கண்டறிவது தொடர்பாக மூன்று வார காலத்திற்குள்ளாக தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை விளக்கமாகப் பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வழக்கறிஞருக்கு ஆணையிட்டு வழக்கை ஆகஸ்ட் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.</p>]]></content:encoded></item><item><title>நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3-ஆக பதிவு</title><link>https://www.maalaimalar.com/news/world/6-3-magnitude-earthquake-strikes-south-island-new-zealand</link><comments>https://www.maalaimalar.com/news/world/6-3-magnitude-earthquake-strikes-south-island-new-zealand#comments</comments><guid isPermaLink="false">3f19aec0-ae84-4ffd-af7b-4f50ba9317b4</guid><pubDate>Thu, 16 Jul 2026 11:20:33 +0000</pubDate><atom:updated>2026-07-16T11:20:33.639Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நியூசிலாந்து,Earthquake,newzealand,Richter scale,நிலநடுக்கம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/6uylx9f3/newzealand.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Newzealand]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/6uylx9f3/newzealand.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நியூசிலாந்தின் தென் தீவுப் பகுதியில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.</p><p>இந்த கடுமையான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.</p><p>டீ அனாவ் நகருக்கு அருகில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தால் கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.   </p><p>மக்கள் உடனடியாக உயரமான இடங்களுக்கு செல்லவும் அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆவின் பால் பாக்கெட்டுகளில் சுய கணக்கெடுப்பு விழிப்புணர்வு வாசகம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/awareness-slogan-on-aavin-milk-packets</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/awareness-slogan-on-aavin-milk-packets#comments</comments><guid isPermaLink="false">61f97418-5da0-47e6-a090-3960d3bf4ff4</guid><pubDate>Thu, 16 Jul 2026 11:19:31 +0000</pubDate><atom:updated>2026-07-16T11:19:31.804Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,aavin milk,ஆவின் பால் பாக்கெட்,Tamilnadu goverment,Self-Enumeration,சுய கணக்கெடுப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/vl3u5dcq/aavin.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Aavin milk pockets]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/vl3u5dcq/aavin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு அரசின் பொது விநியோகம் மற்றும் மக்கள் நல்வாழ்வு சார்ந்த திட்டங்கள் தடையின்றி மக்களைச் சென்றடைவதற்கும், துல்லியமான தரவுகளைப் பெறுவதற்கும் "சுய கணக்கெடுப்பு" முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. </p><p>இம்முறை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், ஆவின் நிறுவனம் ஒரு புதிய முயற்சியைக் கையாண்டுள்ளது.</p><h2><strong>விழிப்புணர்வுப் பின்னணி:</strong></h2><p>பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக, தங்களின் மொபைல் எண்களைக் கொண்டு தாங்களாகவே பதிவு செய்யும் "சுய கணக்கெடுப்பு" நடைமுறை 'ஜூலை 17 முதல் ஜூலை 31 வரை' நடைபெறவுள்ளது.</p><p>இந்தத் தகவலை மாநிலத்தின் கடைக்கோடி குடிமகனுக்கும் கொண்டு சேர்க்கும் எளிய மற்றும் பயனுள்ள வழியாக ஆவின் பால் பாக்கெட்டுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. தினசரி லட்சக்கணக்கான வீடுகளுக்குச் செல்லும் ஆவின் பால் பாக்கெட்டுகளின் மீது, இந்த சுய கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.</p><h2><strong>முக்கிய விவரங்கள்:</strong></h2><p>•வரும் ஜூலை 17 முதல் ஜூலை 31 வரை மட்டுமே இந்த இணையவழிப் பதிவு வசதி திறந்திருக்கும்.</p><p>•பதிவை மேற்கொள்ள குடும்பத் தலைவரின் அல்லது ஒரு தகுதியுடைய உறுப்பினரின் மொபைல் எண் அவசியமாகும்.</p><p>•குறிப்பிட்ட இணையதளத்திற்குச் சென்று மொபைல் எண் மூலம் உள்நுழைந்து (Login), வீடுகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சார்ந்த விவரங்களை எளிமையாகப் பதிவு செய்ய முடியும்.</p><h2><strong>ஆவின் நிறுவனத்தின் முன்முயற்சிக்கு வரவேற்பு:</strong></h2><p>அரசுத் திட்டங்கள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த கணக்கெடுப்புகள் குறித்த தகவல்களைத் தொலைக்காட்சிகள் மற்றும் நாளிதழ்கள் தாண்டி, மக்களின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான பால் பாக்கெட்டுகளின் மூலம் கொண்டு செல்வது மிகச் சிறந்த உத்தியாகப் பார்க்கப்படுகிறது. </p><p>காலையில் பால் வாங்கும் ஒவ்வொரு குடும்பமும் இந்த வாசகத்தைப் படிப்பதன் மூலம், விழிப்புணர்வு அடைந்து விடுபடாமல் தங்களின் விவரங்களைப் பதிவு செய்ய இது பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>அதிமுகவுடன் கூட்டணியா? - முன்னாள் அமைச்சர் ரகுபதி விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/former-minister-ragupathi-explain-admk-alliance-is-possible</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/former-minister-ragupathi-explain-admk-alliance-is-possible#comments</comments><guid isPermaLink="false">25c4734f-66ad-4a09-8e8c-e8f4c1fe1b60</guid><pubDate>Thu, 16 Jul 2026 11:07:50 +0000</pubDate><atom:updated>2026-07-16T11:07:50.764Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>admk alliance,அதிமுக கூட்டணி,cm vijay,முதல்வர் விஜய்,தவெக அரசு,TVK Govt,முன்னாள் அமைச்சர் ரகுபதி,former minister ragupathy</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/qfs4zlcu/ragupathi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ragupathy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/qfs4zlcu/ragupathi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தி.மு.க. முன்னாள் அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p><p>தமிழக மக்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லை. விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>எங்கு சென்றாலும் தவெகவினர் கஞ்சா விற்பனை செய்கிறார்கள். திருமயம் தொகுதியில் தவெகவில் இருக்கக்கூடிய பலர் மணல் கடத்துகிறார்கள். எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என எங்களுக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருக்கிறது என அதிகாரிகள் சொல்கின்றனர்.</p><p>லஞ்சம் வாங்காத விஜய் சார், சிறுவர்களை ஏமாற்றி ஓட்டு வாங்கிய விஜய் சார், அந்த மேலிடம் யார்? உங்கள் ஆட்சியில்தான் இவை அனைத்தும் நடந்து கொண்டிருக்கிறது. முதல்வரே கொஞ்சம் கண்களை விழித்துப்பாருங்கள்.</p><p>எந்த சோதனைகளையும் தாங்கும் இயக்கம் திமுக. ஊழல் மகாசக்தி, பராசக்தியாக முதல்வர் விஜய் இருக்கிறார் என்பதற்கு கரூரும், பழநியும்தான் எடுத்துக்காட்டு.</p><p>தமிழகத்தில் நிரந்தர கூட்டணியும் கிடையாது; நிரந்தர எதிரிகளும் கிடையாது. ஆனால் நாங்கள் அதிமுக பக்கம் போகமாட்டோம். </p><p>தனித்து நின்று வெல்லக் கூடிய அளவுக்கு சக்தி வாய்ந்த இயக்கமாக திமுகவை மாற்றிக் காட்டுவோம். நித்தம் நித்தம் கொலை, கொள்ளை, பாலியல் கொள்ளை நடக்கும் ஆட்சி தவெகவின் ஆட்சி.</p><p>கரூரில் முதல்வர் விஜய் பேசியது ஆணவம், அகங்காரம், இறுமாப்பின் எடுத்துக்காட்டு. அடக்கமாக முதல்வருக்கு ஏற்ற வகையில், அவரின் பேச்சு இல்லை.</p><p>மற்ற மாநிலங்கள் நம்மை பார்த்து கிண்டல் செய்கின்றனர். கூட்டணியில் இருக்கும் தலைவர்கள் இன்று ஒன்றும், நாளை ஒன்றும் பேசுவார்கள்; அதை நாங்கள் பொருட்படுத்துவதில்லை என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>பிரபாஸின் ‘ஃபௌசி’ வெளியீட்டு தேதி அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/release-date-announced-for-prabhass-fauji</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/release-date-announced-for-prabhass-fauji#comments</comments><guid isPermaLink="false">6ab868c3-dfd8-4414-9c49-a4f1cf9c3aa6</guid><pubDate>Thu, 16 Jul 2026 10:56:44 +0000</pubDate><atom:updated>2026-07-16T10:56:44.748Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Prabhas,பிரபாஸ்,Fauzi,பௌசி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/s7ov0iwy/New-Project-2026-07-16T162607.955.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிரபாஸின் ‘பௌசி’ வெளியீட்டு தேதி அறிவிப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/s7ov0iwy/New-Project-2026-07-16T162607.955.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரபாஸ் நடித்துள்ள ஃபௌசி திரைப்படம் டிச.3ம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. சீதா ராமம் புகழ்  ஹனு ராகவபுடி இப்படத்தை இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி சீரிஸ் நிறுவனங்கள் இணைந்து பெரும் பொருட்செலவில் படத்தை தயாரித்துள்ளன.</p><p>இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. இதில் இரண்டாவது பாகம் ஒரு முன்கதையாக இருக்கும் என்று படக்குழு அறிவித்துள்ளது.</p><p>பிரபாஸுக்கு ஜோடியாக இமான்வி கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் பாலிவுட் பிரபலங்களான அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி மற்றும் ஜெயப்பிரதா, பானு சந்தர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விஷால் சந்திரசேகர் படத்திற்கு இசையமைத்துள்ளார். </p><p>பான் இந்தியாப் படமாக தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. </p>]]></content:encoded></item><item><title>பெற்றோர் கொடுத்த பாசிட்டிவ் எனர்ஜி: மனம் திறந்த ஜேசன் சஞ்சய்! </title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/jason-sanjay-interview</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/jason-sanjay-interview#comments</comments><guid isPermaLink="false">91582e53-2412-4805-9e57-6ce53e756f51</guid><pubDate>Thu, 16 Jul 2026 10:37:56 +0000</pubDate><atom:updated>2026-07-16T10:37:56.547Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sundeep-Kishan,jason sanjay,சந்தீப் கிஷன்,ஜேசன் சஞ்சய்,சிக்மா,sigma</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/htmph6wr/jeson-sanjay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jason Sanjay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/htmph6wr/jeson-sanjay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமும், தமிழக முதலமைச்சருமான தளபதி விஜய்யின் மகன் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AF%8D">ஜேசன் சஞ்சய்</a>, லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் 'சிக்மா' திரைப்படத்தின் மூலம் இயக்குநராகத் தனது திரைப்பயணத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளார். </p><p>தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த ஆக்ஷன்-ஹீஸ்ட் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாவது குறித்து ஜேசன் சஞ்சய் அண்மையில் மனம் திறந்துள்ளார்.</p><p>தனது சினிமா பிரவேசம் குறித்துப் பேசிய ஜேசன் சஞ்சய், "நான் சினிமாவில் நுழைவது குறித்து எனது பெற்றோர் (விஜய்-சங்கீதா), தங்கை மற்றும் எனது நண்பர்களிடம் பேசினேன். அவர்கள் அனைவரும் மிகவும் நேர்மறையாக பதிலளித்து, எனக்குள் பெரிய எனர்ஜியை உருவாக்கினார்கள். </p><p>அப்போதுதான் அவர்கள் என் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதை என்னால் முழுமையாக உணர முடிந்தது. 'சிக்மா' படத்தின் படப்பிடிப்பு தளம் கண்டபோது, முன்னணி நடிகர்களான விஜய் சேதுபதி மற்றும் சூரி ஆகியோர் நேரில் வந்து எனக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்" என்றார்.</p><p>திரைப்படக் குடும்ப பின்னணியில் இருந்து வந்ததால், சிறு வயது முதலே படப்பிடிப்பு தளங்களுக்குச் செல்லும் வாய்ப்பு சஞ்சய்க்கு கிடைத்துள்ளது. "சிறுவயதில் இருந்தே பிரீமியர் ஷோக்களில் நிறைய படங்கள் பார்ப்பதுதான் என் மிகப்பெரிய பொழுதுபோக்கு. இப்போது நாம் அனைத்து வகையான உலகத் திரைப்படங்களையும் பார்க்கும் சூழல் உள்ளது. </p><p>நான் எப்போது படம் பார்த்தாலும், அதன் கதை நகர்த்தப்படும் விதம், தொடக்கம் மற்றும் திரைக்கதை அமைப்பு ஆகியவற்றை உற்று கவனிப்பேன். அது எனக்கு ஒரு விளையாட்டு போன்றது. படம் பார்த்து முடித்ததும் என் நண்பர்களிடம் ஓடிச்சென்று, அந்த கதையை மிகுந்த ஆர்வத்துடன் விவரிப்பேன். அங்குதான் ஒரு Storyteller எனது பயணம் தொடங்கியது" என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.</p><h2><strong>அல்போன்ஸ் புத்திரன் வாய்ப்பை மறுத்தது ஏன்?</strong></h2><p>பிரபல இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தன்னை நடிக்க அணுகியது குறித்தும் சஞ்சய் விளக்கம் அளித்துள்ளார். "அல்போன்ஸ் புத்திரன் ஒரு மாபெரும் இயக்குநர். அவர் என்னை ஹீரோவாக நடிக்க அணுகியபோது, சினிமாவில் கேரியரை உருவாக்க வேண்டும் என்ற எண்ணமே என்னிடம் இல்லை. எனக்குள் இருக்கும் திறமை என்ன, நான் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் எனக்குள் தேடல் இருந்தது. </p><p>அதனால், அந்த வாய்ப்பை ஏற்கும் நிலையில் நான் இல்லை. ஒருவேளை கதையைக் கேட்டுவிட்டு 'வேண்டாம்' என்று சொல்லியிருந்தால் அது தவறாக இருந்திருக்கும். அதனால்தான், 'என்னை விட ஒரு பெரிய ஆர்ட்டிஸ்ட் உங்களுக்குக் கிடைப்பார்' என்று அவரிடம் கூறிவிட்டேன். இருப்பினும், என்னை ஒரு ஹீரோவாக அவர் நினைத்ததே எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது."</p><h2><strong>காதல் கதை அல்ல... அதிரடி ஹீஸ்ட் மூவி!</strong></h2><p>சஞ்சய்யின் வயதைக் கணக்கில் கொண்டு, அவர் தனது முதல் படத்தில் ஒரு காதல் கதையைத்தான் கையாள்வார் எனப் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் சஞ்சய் முற்றிலும் மாறுபட்ட ஒரு முடிவை எடுத்துள்ளார். </p><p>"இரண்டு பேருக்கு இடையிலான காதல் கதையை இயக்குவதை விட, ஒரு பெரும் கேங்கைக் கொண்டு ஒரு அட்வென்சர் ஹீஸ்ட் படம் எடுக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் இருந்தது. இந்த கதைக்கு எங்களது முதல் சாய்ஸ் நடிகர் 'சந்தீப் கிஷன்' தான். நான் சொன்ன கதையும், கேரக்டரும், திரைக்கதையும் அவருக்கு மிகவும் பிடித்துப் போனதால் உடனடியாக ஓகே சொல்லிவிட்டார்."</p><h2><strong>நடிப்பு குறித்து சஞ்சய்யின் தற்போதைய முடிவு:</strong></h2><p>ரசிகர்கள் பலரும் ஜேசன் சஞ்சய்யை திரையில் எப்போது ஹீரோவாகப் பார்க்கலாம் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகப் பேசியுள்ளார். </p><p>"எனக்குள் ஒரு நடிகன் இருக்கிறான் என்பது உண்மைதான். படப்பிடிப்பு தளத்தில் நடிகர்களுக்கு காட்சிகளை விவரிக்கும் போது அது வெளிப்படும். ஆனால், நடிப்புப் பக்கமாக கவனம் செலுத்துவதைப் பற்றி 'சிக்மா' திரைப்படம் வெளியான பிறகே யோசிப்பேன்" என்று தெளிவுபடுத்தியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஆம்ஸ்ட்ராங் கொலையில் சி.பி.ஐ. விரைவில் விசாரணை- முக்கிய பிரமுகர்கள் சிக்குகிறார்கள் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cbi-to-soon-investigate-armstrong-murder-case</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cbi-to-soon-investigate-armstrong-murder-case#comments</comments><guid isPermaLink="false">5868d2fc-868c-4a44-b78a-bf4ef73c1fab</guid><pubDate>Thu, 16 Jul 2026 08:42:04 +0000</pubDate><atom:updated>2026-07-16T08:42:04.621Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சிபிஐ,cbi,ஆம்ஸ்ட்ராங்,ஆம்ஸ்ட்ராங் கொலை,Armstrong murder,Armstrong</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/sxglivyv/Armstrong010.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆம்ஸ்ட்ராங்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/sxglivyv/Armstrong010.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.</p><h2><strong>அரசியல் பிரபலங்களுக்கு தொடர்பு</strong></h2><p>சென்னை பெரம்பூர் பகுதியில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><p>இது தொடர்பாக செம்பியம் போலீசார் வழக்கு பதிவு செய்து 27 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்த பிரபல வடசென்னை தாதா நாகேந்திரன் உடல் நலக்குறைவால் காலமானார்.</p><p>இதைத் தொடர்ந்து மற்றவர்கள் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலையில் பல்வேறு முக்கிய பிரமுகர்களுக்கும், அரசியல் பிரபலங்களுக்கும் தொடர்பு இருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.</p><p>இதைத்தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டுமென சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்து ஐகோர்ட்டு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. ஆனால் சி.பி.ஐ. விசாரணையை எதிர்த்து கடந்த தி.மு.க. ஆட்சியில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருந்தது. இதனால் சி.பி.ஐ. விசாரணை நடைபெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது. </p><h2><strong>தடை நீங்கியது</strong></h2><p>இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை ஆட்சி மாற்றத்துக்கு பிறகு தற்போதைய த.வெ.க. அரசு திரும்பப் பெற்றுள்ளது. இதனால் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கான தடை நீங்கி இருக்கிறது.</p><p>இதன் காரணமாக விரைவில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை  கையில் எடுத்து தீவிர விசாரணையில் ஈடுபட இருக்கிறார்கள். இது தொடர்பான ஆவணங்களை செம்பியம் போலீசாரிடம் இருந்து பெற்று இந்த வழக்கில் முழு பின்னணி குறித்தும் விசாரிக்க உள்ளனர்.</p><p>ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் அரசியல் பிரமுகர்கள் சிலருக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ள நிலையில் சி.பி.ஐ. இந்த வழக்கை கையில் எடுக்க இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. </p><p>சி.பி.ஐ. விசாரணை தீவிரமடையும் போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதன் மூலம் 2 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஒரே போட்டியில் 3 சதங்கள், 51 சிக்சர்கள்: தெறிக்கவிட்ட மேஜர் லீக் தொடர் எலிமினேட்டர் </title><link>https://www.maalaimalar.com/sports/cricket/51-sixes-3-centurions-when-t20-arithmetic-was-re-written</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/51-sixes-3-centurions-when-t20-arithmetic-was-re-written#comments</comments><guid isPermaLink="false">c9f92f40-b142-44af-8e35-64c7b5fb449a</guid><pubDate>Thu, 16 Jul 2026 08:37:42 +0000</pubDate><atom:updated>2026-07-16T08:37:42.519Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஸ்டீவ் ஸ்மித்,Nicholas Pooran,Major League Cricket,மேஜர் லீக் கிரிக்கெட்,நிகோலஸ் பூரன்,Steven Smith,andries gous,ஆண்ட்ரீஸ் கவுஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/q7eol80i/smith.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ steve smith, andries gous]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/q7eol80i/smith.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>விளையாட்டு (Sports)</category><content:encoded><![CDATA[ <p>வாஷிங்டன் ப்ரீடம் அணி டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய ரன் சேஸிங் செய்து உலக சாதனை படைத்துள்ளது.</p><p>மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணிக்கு எதிரான எம்.எல்.சி எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளது.</p><p>அமெரிக்காவின் உள்ளூர் டி20 போட்டியான மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.</p><p>இதில் நேற்று நடந்த <em><strong>எலிமினேட்டர்</strong></em> சுற்று ஆட்டத்தில் வாஷிங்டன் பிரீடம் அணியை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி பலப்பரீட்சை நடத்தியது.</p><p>ஓக்லாண்டில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற வாஷிங்டன் பிரீடம் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.</p><p>அதன்படி, முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 266 ரன்களைக் குவித்தது. </p><p>குயின்டன் டி காக் 2 பவுண்டரிகள், 6 சிக்சர் உள்பட 51 ரன் குவித்து ஆட்டமிழ்ந்தார்.</p><p>சிக்சர் மழை பொழிந்த நிகோலஸ் பூரன் 31 பந்தில் தனது சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். அத்துடன், மேஜர் லீக் தொடரில் அதிவேக சதமடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். 13 சிக்சர், 5 பவுண்டரி அடித்த பூரன் 106 ரன்னில் அவுட்டானார். அடுத்து அதிரடியாக ஆடிய பொல்லார்டு 64 ரன் குவித்தார்.</p><p>வாஷிங்டன் பிரீடம் அணி சார்பில் ரச்சின் ரவீந்திரா 4 விக்கெட் வீழ்த்தினார்.</p><p>கடின இலக்கை நோக்கி களமிறங்கிய வாஷிங்டன் பிரீடம் அணி 18.4 ஓவரிலேயே எட்டி டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய ரன் சேசிங் சாதனையைப் படைத்தது. அத்துடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது.</p><p>3வது விக்கெட்டுக்கு இணைந்த ஸ்டீவ் ஸ்மித், ஆண்ட்ரிஸ் கவுஸ் ஜோடி 241 ரன்கள் எடுத்து அணியை வெற்றிபெற வைத்தனர். ஆண்ட்ரிஸ் கவுஸ் 12 சிக்சர், 10 பவுண்டரி உள்பட 132 ரன்னும், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், 9 சிக்சர், 7 பவுண்டரி உட்பட 110 ரன்கள் குவித்தனர்.</p><p>சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி மைதானத்தின் நாலாபுறமும் சிக்சர்களைப் பறக்கவிட்டு அசத்தியது.</p><p>இந்நிலையில், ஆண்கள் டி20 போட்டியில் 3 பேட்ஸ்மேன்கள் சதம் விளாசியது கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். </p><p>நியூயார்க் அணியின் நிகோலஸ் பூரன், வாஷிங்டன் அணியின் ஆண்ட்ரிஸ் கவுஸ், ஸ்டீவ் ஸ்மித் ஆகிய 3 பேரும் சதமடித்து சாதனை படைத்துள்ளனர்.</p><p>முன்னதாக, டி20 கிரிக்கெட் வரலாற்றில் 50-க்கும் மேற்பட்ட போட்டிகளில் தலா 2 சதங்கள் அடிக்கப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>டொராண்டோ ரத யாத்திரை 2026: பக்தி வெள்ளத்தில் மிதந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!</title><link>https://www.maalaimalar.com/news/world/toronto-rath-yatra-2026-grand-jagannath-chariot-festival-draws-thousands-of-devotees-in-downtown</link><comments>https://www.maalaimalar.com/news/world/toronto-rath-yatra-2026-grand-jagannath-chariot-festival-draws-thousands-of-devotees-in-downtown#comments</comments><guid isPermaLink="false">57c10d1a-d1e2-468e-b802-5b53513c9d03</guid><pubDate>Thu, 16 Jul 2026 08:37:24 +0000</pubDate><atom:updated>2026-07-16T08:37:24.934Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>canada,TorontoRathYatra2026,JagannathRathaYatra,HareKrishna,YongeStreetParade,CentreIslandFestival</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/mwha2rbq/TorontoRathYatra2026" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TorontoRathYatra2026  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/mwha2rbq/TorontoRathYatra2026?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கனடாவின் டொராண்டோ மாநகரில், இஸ்கான் அமைப்பின் சார்பில் 54-வது ஆண்டு ரத யாத்திரை தேர்த்திருவிழா பக்திப் பரவசத்துடன் கோலாகலமாக நடந்து முடிந்தது. </p><p>பிரபஞ்சத்தின் அதிபதியான ஜகந்நாதர், தனது அண்ணன் பலதேவர் மற்றும் தங்கை சுபத்ரா தேவியுடன் டொராண்டோவின் முக்கிய வீதிகளில் உலா வந்து மக்களுக்குக் காட்சியளித்தார். இந்த திருவிழா தொடர்ந்து மூன்று நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது.</p><h2><strong>தொடக்கமாக அமைந்த 12 மணி நேர கீர்த்தனை!</strong></h2><p>விழாவின் முதல் நாளான ஜூலை 10 வெள்ளிக்கிழமை அன்று, அவென்யூ ரோடில் உள்ள இஸ்கான் கோவிலில் மஹா கீர்த்தனை நடைபெற்றது. </p><p>காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்ந்து 12 மணி நேரம் நடந்த இந்த பக்தி இசை வழிபாட்டில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தங்களின் பக்தியை வெளிப்படுத்தினர்.</p><h2><strong>யாங் ஸ்ட்ரீட்டை உலுக்கிய பிரம்மாண்ட தேரோட்டம்!</strong></h2><p>விழாவின் இரண்டாம் நாள் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஜூலை 11 சனிக்கிழமை அன்று காலை 11 மணிக்குத் தொடங்கியது. டொராண்டோவின் முக்கிய பகுதியான யாங் மற்றும் எட்வர்ட் ஸ்ட்ரீட் சந்திப்பில் இருந்து புறப்பட்ட 40 அடி உயர மலர் தேர்களை, பல்லாயிரக்கணக்கான சர்வதேச பக்தர்கள் கயிறு பிடித்து இழுத்து கொண்டாடினர்.</p><p>மிருதங்கம், கர்தல் இசையுடன் "ஹரே கிருஷ்ணா" முழக்கமிட்டு, பக்தர்கள் ஆடிய நடனம் டவுன்டவுன் வீதிகளை ஆன்மீக பூமியாக மாற்றியது. இந்த ஊர்வலம் மதியம் 1 மணியளவில் குவீன்ஸ் குவே பகுதியை வந்தடைந்தது.</p><h2><strong>சென்டர் தீவில் ஆன்மிகத் திருவிழா!</strong></h2><p>இரண்டாம் நாள் தேரோட்டத்தைத் தொடர்ந்து, கடந்த  ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) அன்று அங்குள்ள சென்டர் ஏரியை கடந்து சென்டர் தீவுக்கு மாற்றப்பட்டது. அந்த தீவிற்குள் உற்சாகமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் சென்று ஆன்மிக மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். </p><p>விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சுவையான இலவச உணவு (பிரசாதம்) வழங்கப்பட்டது. பிரதான மேடையில் பக்தி பாடல்கள், பரதநாட்டியம் மற்றும் ஆன்மிக நாடகங்கள் அரங்கேறின. </p><p>பொழுதுபோக்கு அம்சங்களாக யோகா, தியானம், வேத புத்தகக் கண்காட்சிகள் மற்றும் குழந்தைகளுக்கான முகம் ஓவியம் போன்றவைகளும் இடம்பெற்றன.</p><h2><strong>போக்குவரத்து ஏற்பாடுகள்..</strong></h2><p>இந்த விழாவை ஒட்டி தீவிற்குச் செல்ல டொராண்டோ நகர படகு சேவை மற்றும் இஸ்கான் அமைப்புடன் இணைந்த சிறப்பு தள்ளுபடி கொண்ட வாட்டர் டாக்ஸி வசதிகள் செய்யப்பட்டிருந்தன. </p><p>வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், பக்தர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.</p><h2><strong>பொதுமக்களுக்கு அழைப்பு..</strong></h2><p>இந்த மாபெரும் திருவிழா டொராண்டோவின் பன்முகத்தன்மையை உலகிற்குக் காட்டும் வகையில் அமைந்தது. இந்த ஆன்மிகப் பணிக்கு நன்கொடை அளிக்க விரும்புபவர்கள் <a href="https://wl.donorperfect.net/weblink/weblink.aspx?name=E348810QE&amp;id=72">www.chariotfest.ca </a>என்ற இணையதளத்தைப் பயன்படுத்தலாம் என இஸ்கான் நிர்வாகம் அறிவித்திருந்தது.</p>]]></content:encoded></item><item><title>&apos;DC&apos; திரைப்படத்திற்கு &apos;A&apos; சான்றிதழ் – ரிலீஸ் தேதி மாற்றம்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/dc-movie-gets-a-certificate-release-date-shifted-to-august-7-worldwide</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/dc-movie-gets-a-certificate-release-date-shifted-to-august-7-worldwide#comments</comments><guid isPermaLink="false">44283edf-e5ea-4139-9675-3518e224ced2</guid><pubDate>Thu, 16 Jul 2026 08:29:31 +0000</pubDate><atom:updated>2026-07-16T08:29:31.959Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>lokeshkanagaraj,DCMovie,ArunMatheswaran,SunPictures,A Certified,DCMovieReleaseDate,TheBloodyValentine</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/fek4dc89/DCMovieReleaseDate" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DCMovieReleaseDate]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/fek4dc89/DCMovieReleaseDate?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முன்னணித் தமிழ்த் திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகும் 'DC' திரைப்படத்தின் தணிக்கை விவரங்கள் மற்றும் புதிய உலகளாவிய ரிலீஸ் தேதியைத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p><h2><strong>தணிக்கைக் குழுவின் அதிரடி 'A' சான்றிதழ்!</strong></h2><p>மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் இத்திரைப்படத்தைப் பார்வையிட்டு, இதற்கு 'A' சான்றிதழ் வழங்கியுள்ளது. 'ராக்கி', 'சாணிக் காயிதம்' போன்ற படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரனின் இயக்கத்தில் உருவான இப்படத்தில் அவரின்  வழக்கமான பாணியில், ரத்தம் தெறிக்கும் அதிரடி சண்டைக் காட்சிகளும், வன்முறைகளும் நிறைந்துள்ளதால் தணிக்கைக் குழு இந்தச் சான்றிதழை வழங்கியுள்ளது.</p><h2><strong>ரிலீஸ் தேதி மாற்றம்..</strong></h2><p>முன்னதாக இத்திரைப்படம் ஜூலை 31 அன்று வெளியாகும் எனத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ஆகஸ்ட் 7 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இப்படம் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/DC?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#DC</a> is certified &#39;A&#39;  <br>Releasing in theatres worldwide from August 7 ! <a href="https://x.com/Dir_Lokesh?ref_src=twsrc%5Etfw">@Dir_Lokesh</a> <a href="https://x.com/ArunMatheswaran?ref_src=twsrc%5Etfw">@ArunMatheswaran</a> <a href="https://x.com/anirudhofficial?ref_src=twsrc%5Etfw">@anirudhofficial</a> <a href="https://x.com/hashtag/WamiqaGabbi?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WamiqaGabbi</a> <a href="https://x.com/isanjkayy?ref_src=twsrc%5Etfw">@isanjkayy</a> <a href="https://x.com/mukesh_DOP?ref_src=twsrc%5Etfw">@mukesh_DOP</a> <a href="https://x.com/hashtag/PrasannaGK?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#PrasannaGK</a> <a href="https://x.com/hashtag/KannanS?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#KannanS</a> <a href="https://x.com/PC_stunts?ref_src=twsrc%5Etfw">@PC_stunts</a> <a href="https://x.com/kabilanchelliah?ref_src=twsrc%5Etfw">@kabilanchelliah</a> <a href="https://x.com/kuchirayar73?ref_src=twsrc%5Etfw">@kuchirayar73</a> <a href="https://x.com/hashtag/DCFromAugust7?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#DCFromAugust7</a> <a href="https://t.co/BzqbZNZEu6">pic.twitter.com/BzqbZNZEu6</a></p>&mdash; Sun Pictures (@sunpictures) <a href="https://x.com/sunpictures/status/2077633930619142314?ref_src=twsrc%5Etfw">July 16, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2><strong>மாற்றத்திற்கான காரணம்..</strong></h2><p>நடிகர் விஜய்யின் இறுதி திரைப்படமான 'ஜன நாயகன்' திரைப்படம் ஜூலை 23 அன்று திரைக்கு வரவுள்ளதால், வசூலை  பாதிக்காத வகையிலும், தியேட்டர்கள் கிடைப்பதில் உள்ள சிக்கல்களை தவிர்க்கவும் 'DC' மற்றும் சில முக்கியமான தமிழ் படங்களின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>'தி பிளடி வேலண்டைன்' – படத்தின் கதைக்களம்..</strong></h2><p>DC படத்திற்கு "தி பிளடி வேலண்டைன்" என்ற அடைமொழி கொடுக்கப்பட்டுள்ளது. கிளாசிக் காவியமான 'தேவதாஸ்' கதையை முற்றிலும் ஒரு நவீன கேங்க்ஸ்டர் காதல் டிராமா பாணியில் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் உருவாக்கியுள்ளார்.</p><p> இதில் லோகேஷ் கனகராஜ் 'தேவதாஸ்' என்ற கதாபாத்திரத்திலும், அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை வாமிகா காபி 'சந்திரா' என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இவர்களுடன் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ளார்.</p><h2><strong>அனிருத்தின் மிரட்டலான இசை..</strong></h2><p>இப்படத்திற்கு 'ராக்ஸ்டார்' அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தில் இடம்பெற்ற 'ராகா ஆப் ரிவெஞ்ச் ' மற்றும் 'ஹேங்கோவா' ஆகிய பாடல்கள் வெளியாகி இணையத்தில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களைக் கவர்ந்து, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>வாங்சுக் உண்ணாவிரதம்: தேவைப்பட்டால் தலையிடுவோம்.. டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் </title><link>https://www.maalaimalar.com/news/national/neet-ugc-protest-sonam-wangchuk-on-19th-day-of-fast-with-deteriorating-health</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-ugc-protest-sonam-wangchuk-on-19th-day-of-fast-with-deteriorating-health#comments</comments><guid isPermaLink="false">5337ebe5-9e72-44f8-a4a9-9ba6792d4a9d</guid><pubDate>Thu, 16 Jul 2026 08:20:44 +0000</pubDate><atom:updated>2026-07-16T08:20:44.299Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>hunger strike,டெல்லி உயர்நீதிமன்றம்,Delhi High Court,Sonam Wangchuk,சோனம் வாங்சுக்,உண்ணாவிரதம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/a2fcm9sq/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சோனம் வாங்சுக்]]></media:title><media:description type="html"><![CDATA[ சோனம் வாங்சுக்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/a2fcm9sq/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு குளறுபடி, யுஜிசி குளறுபடி, சிபிஎஸ்சி விடைத்தாள் திருத்த குளறுபடி என தொடர் குளறுபடிகளால் கல்வித்துறை திணறி வருகிறது.</p><p>இந்த நிர்வாக தோல்விகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் அபிஜித் தீப்கேயின் தலைமையில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.</p><h2>சோனம் வாங்சுக் உடல்நிலை</h2><p>இதில் லடாக் செயல்பாட்டாளரும், கல்வியாளருமான சோனம் <a href="https://www.maalaimalar.com/news/national/day-19-89-kg-weight-loss-wangchuk-calls-for-the-july-20-rally-in-a-feeble-voice-where-is-rahul?fbclid=IwY2xjawTFa1NleHRuA2FlbQIxMQBzcnRjBmFwcF9pZBAyMjIwMzkxNzg4MjAwODkyAAEe7fmyTMmY_I64G9-1EQLzrXE6q54wSYSAj6ZkNfDkJ-Npa7lfhGoG2lgX4dc_aem_IEua5dkjbIMYmzT78YeTjg">வாங்சுக் </a>நடத்தும் நடத்தும் உண்ணாவிரதம் 19வது நாளை எட்டியுள்ளது.</p><p>அவரது உடல் எடை 8.9 கிலோ குறைந்து தற்போது சுமார் 57 கிலோவாக உள்ளது. 59 வயதான அவரின் உடல் ரத்த அழுத்தம் 105/76 mmHg, சர்க்கரை அளவு 80 mg/dL, ஆக்ஸிஜன் அளவு 97% என்ற மோசமான நிலையில் உள்ளது.</p><p>உண்ணாவிரதத்தை கைவிட கோரி அவரை மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், பிரியங்கா காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால், அதிஷி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், சர்வதேச ஆளுமைகள் என பலரும் அறிவுறுத்தி வருகின்றனர்.</p> <h2>தளர்ந்த குரல்</h2><p>ஆனால் உயிருக்கே ஆபத்தான சூழலிலும் தனது உண்ணாவிரதத்தை சோனம் வாங்சுக் கைவிட மறுத்துள்ளார்.</p><p>வரும் ஜூலை 20ல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் நாளில், ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>இதனிடையே நேற்று ஜந்தர் மந்தரில் இருந்து வீடியோ மூலம் பேசிய சோனம் வாங்சுக், நான் நல்ல நிலைமையில் இல்லை, அதேநேரம் மோசமான நிலையிலும் இல்லை. என்னை ஆதரிப்பவர்கள் எனது உண்ணாவிரதத்தை கைவிட வலியுறுத்துவதுக்கு பதிலாக ஜூலை 20 அன்று பாராளுமன்றத்தை நோக்கி செல்லும் பேரணியில் வந்து கலந்துகொள்ளுமாறு தன் தளர்ந்த குரலில் அழைப்பு விடுத்துள்ளார்.</p> <h2>பொது நல மனு மீதான விசாரணை</h2><p>இதனிடையே வாங்சுக்கை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவருக்கு வலுக்கட்டாயமாக உணவூட்டுமாறு மத்திய மற்றும் டெல்லி அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி, சமூக ஆர்வலர், வழக்கறிஞர் ராகேஷ் குமார் சைனி என்பவர் டெல்லி உயர்நீதிதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.</p><p>இந்த மனு மீதான விசாரணை இன்று டெல்லி உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் தேவேந்திர குமார் உபாத்யாய் மற்றும் தேஜஸ் காரியா அமர்வில் நடைபெற்றது.</p><p>வாங்சுக் உடைய உடல்நிலையை தினந்தோறும் கண்காணித்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எந்த ஒரு குடிமகன் உயிரும் விலைமதிப்பற்றது என்றும் நீதிபதிகள் மத்திய அரசை வாய்மொழியாக அறிவுறுத்தினர்.</p><p>இன்றைய அமர்வில் மத்திய அரசு சார்பில் ஆஜானாரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வாங்சுக் உடல்நிலை ஏற்கனவே அரசு மருத்துவர்களாலும், மருத்துவ வல்லுநர்களாலும் கண்காணிப்பட்டு வருவதாகவும், உதவி தேவைப்படும் சூழ்நிலை எழும்பட்சத்தில் மருத்துவர்கள் ஆலோசனையின்படி மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிடும் என்றும் நீதிபதிகளிடம் தெரிவித்தார்.</p><p>இதன்பின் பேசிய நீதிபதிகள், மத்திய அரசு எடுத்துள்ள நிலைப்பாட்டை வரவேற்பதாக கூறி, பொது நல வழக்கை முடித்து வைத்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>சிறை மரணங்களை மூடி மறைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை- அமைச்சர் நிர்மல்குமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-government-has-no-intention-of-covering-up-prison-deaths-minister-nirmal-kumar</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-government-has-no-intention-of-covering-up-prison-deaths-minister-nirmal-kumar#comments</comments><guid isPermaLink="false">d8fef828-ba0e-4386-bf80-727c7c549106</guid><pubDate>Thu, 16 Jul 2026 08:20:42 +0000</pubDate><atom:updated>2026-07-16T08:20:42.873Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நிர்மல் குமார்,தவெக,tvk,minister nirmal kumar</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/4h29jnag/nirmal-kumar.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Nirmal kumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/4h29jnag/nirmal-kumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தலைமைச் செயலகத்தில் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி அளித்தார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><p>திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் கைகோர்த்துக்கொண்டு, தமிழகத்தில் ஆட்சியைத் தங்களுக்குச் சாதகமாக மாற்ற சதி செய்கின்றன.</p><p>பணத்தை வாரி இறைத்து தவெக சட்டமன்ற உறுப்பினர்களை இழுக்க முயற்சி நடக்கிறது. அடுத்த ஒரு வருடத்தில் அதிமுகவும், திமுகவும் கட்சி நடத்த முடியாமல் பாஜகவுடன் கட்சியை இணைத்து விடும்.</p><h2>சிறை மரணங்கள்</h2><p>நாகர்கோவில் சம்பவம் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படுவதில் அரசு உறுதியாக உள்ளது. தவறு செய்த எவர் மீதும் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>சிறை மரணங்களை மூடி மறைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை.</p><p>பழனி நில விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். பழனி நில மோசடி புகாரில் தவெகவினருக்கு தொடர்பு இல்லை. எந்த இடத்திலும் அரசு துணை போகவில்லை.</p><h2>பத்திரப்பதிவுத்துறை புதிய மாற்றங்கள்</h2><p>பத்திரப்பதிவுத் துறையில் முன்பு அமைச்சராக இருந்த மூர்த்தி 'மினிஸ்டர் கட்டிங்' என பணம் வாங்கினார்; ஒவ்வொரு அலுவலகத்திலும் ஆள்போட்டு 'மினிஸ்டர் கட்டிங்' என தொகையை வசூலித்தார் மூர்த்தி.</p><p>பத்திரப்பதிவுத் துறையில் திமுக ஆட்கள்தான் முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>கடந்த ஐந்து ஆண்டுகளாக இரவு 9 மணி வரை நடைபெற்ற பத்திரப்பதிவு நடைமுறைகள் தற்போது முழுமையாகச் சீரமைக்கப்பட்டுள்ளன. புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இனி பத்திரப்பதிவு முறையில் முறைகேடு அல்லது ஊழலில் ஈடுபடும் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி கைது செய்யப்படுவார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.</p><h2>ஒப்பந்தங்கள் ரத்து</h2><p>தற்போதைய ஆட்சியில் பர்சன்டேஜ் கலாச்சாரத்திற்கு இடமில்லை. முந்தைய ஆட்சியில் திருவான்மியூர் - உத்தண்டி மேம்பால ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளதால், அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது.. முறைகேடாக வழங்கப்பட்ட ஒப்பந்தங்களை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>நாளை ஆடிமாதம் தொடக்கம்: புதுவை சட்டசபை கூடுவது தள்ளிபோகிறது</title><link>https://www.maalaimalar.com/news/puducherry/convening-of-the-puducherry-legislative-assembly-is-being-postponed</link><comments>https://www.maalaimalar.com/news/puducherry/convening-of-the-puducherry-legislative-assembly-is-being-postponed#comments</comments><guid isPermaLink="false">3f2d9759-9d2e-4334-b685-4042d4a110cc</guid><pubDate>Thu, 16 Jul 2026 07:54:08 +0000</pubDate><atom:updated>2026-07-16T07:54:08.456Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>puducherry govt,Puducherry Assembly,புதுவை அரசு,puducherry budget,புதுவை சட்டசபை,புதுவை பட்ஜெட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/9arkyysr/puducherry.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ புதுவை சட்டசபை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/9arkyysr/puducherry.jpg?w=280" width="280"></media:thumbnail><category>புதுச்சேரி (Puducherry)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>புதுவை மாநிலத்துக்கு சட்டசபை தேர்தல் நடந்ததால் கடந்த மார்ச் மாதம் முழு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D">பட்ஜெட்</a> தாக்கல் செய்யவில்லை.</p><h2><strong>முழுமையான பட்ஜெட்</strong></h2><p>அதற்கு பதிலாக 5 மாதத்துக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தேர்தல் முடிந்து மீண்டும் என்ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு அமைந்துள்ளது. வரும் ஆகஸ்ட் மாதத்துடன் 5 மாத <a href="https://www.maalaimalar.com/news/puducherry/central-government-approves-puducherry-governments-rs-14300-crore-budget">இடைக்கால பட்ஜெட்</a> காலம் முடிகிறது. இதனால் முழுமையான பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்ய வேண்டும். </p><p>அதேநேரத்தில் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கப்படாமல் உள்ளது. சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தலும் நடத்தப்படவில்லை. இந்நிலையில் மத்திய அரசு புதுவை அரசின் நடப்பு ஆண்டு பட்ஜெட் தொகை ரூ.14 ஆயிரத்து 300 கோடிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் இம்மாத இறுதியில் சட்டசபை கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. </p> <p>ஆனால் நாளை வெள்ளிக்கிழமை ஆடி மாதம் பிறக்கிறது. வழக்கமாக ஆடி மாதத்தில் சுப காரியங்களை தொடங்குவதில்லை. முதல்-அமைச்சர் ரங்கசாமி நாள், நட்சத்திரம் பார்ப்பதில் தீவிர பற்று கொண்டவர். இதனால் ஆடி மாதம் முழுவதும் சட்டசபை கூடுவதற்கு வாய்ப்பில்லை என தெரிகிறது. </p><h2><strong>ரங்கசாமி திட்டம்</strong></h2><p>ஆகஸ்ட் 18-ந்தேதி ஆவணி மாதம் பிறக்கிறது. அப்போதுதான் சட்டசபை கூடும் வாய்ப்பு உள்ளது. இதனிடையே தற்காலிக சபாநாயகர் அன்பழகனை வைத்தே சட்டசபையை நடத்தவும் முதல்-அமைச்சர் ரங்கசாமி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. </p><p>இதுகுறித்து சட்ட வல்லுநர்களுடன் ரங்கசாமி கலந்து பேசியுள்ளார். அப்போது அவர்கள், புதிதாக சபாநாயகர் நியமிக்கும்வரை தற்காலிக சபாநாயகர் பதவியில் நீடிக்கலாம் என கருத்தும் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>காட்டுத்தீப் புகை மூட்டம்: உலகின் மிக மோசமான காற்று தரம் கொண்ட நகரமாக மாறிய டொராண்டோ!</title><link>https://www.maalaimalar.com/news/world/toronto-wildfire-smoke-blanket</link><comments>https://www.maalaimalar.com/news/world/toronto-wildfire-smoke-blanket#comments</comments><guid isPermaLink="false">8fc44d81-f093-41dd-9188-dec8b33fc182</guid><pubDate>Thu, 16 Jul 2026 07:46:31 +0000</pubDate><atom:updated>2026-07-16T07:46:31.707Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கனடா,canada,காட்டுத்தீ,wildfire,Toronto,டொராண்டோ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/jscvijl0/TORONTO.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Toronto Wildfire Smoke]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/jscvijl0/TORONTO.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கனடாவின் மிகப்பெரிய நகரமான டொராண்டோ, காட்டுத்தீ புகையினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த காற்றுத் தர கண்காணிப்பு நிறுவனமான 'IQAir' வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உலகின் மிக மோசமான காற்றுத் தரம் கொண்ட பெரிய நகரங்களின் பட்டியலில் டொராண்டோ முதலிடத்தைப் பிடித்துள்ளது.</p><p>இந்தியாவின் புதுடெல்லி மற்றும் காங்கோ குடியரசின் கின்ஷாசா ஆகிய நகரங்களை விட இங்கு காற்று மாசுபாடு மோசமடைந்துள்ளது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.</p><h2><strong>காட்டுத்தீயின் தீவிரம்:</strong></h2><p>கனடாவின் வடமேற்கு ஒன்டாரியோ பகுதியில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ தீவிரமாக எரிந்து வருகிறது. அங்கிருந்து வீசும் பலத்த காற்று மற்றும் அடர்ந்த புகை மூட்டம் தெற்கு நோக்கி நகர்ந்து ஒட்டுமொத்த டொராண்டோ நகரத்தையும் சூழ்ந்துள்ளது.</p><h2><strong>ஆரஞ்சு நிற வானம்:</strong></h2><p>புகை மூட்டம் காரணமாக டொராண்டோவின் வானம் ஒளிரும் ஆரஞ்சு மற்றும் மங்கிப்போன மஞ்சள் நிறமாக மாறியுள்ளது. இதனால் நகரின் முக்கிய அடையாளமான 'சிஎன் டவர்' கூட தெளிவாகத் தெரியாத அளவுக்குப் புகை சூழ்ந்துள்ளது.</p><h2><strong>கடும் வெப்ப அலை:</strong></h2><p> காற்று மாசுபாட்டுடன் இணைந்து டொராண்டோவில் கடும் வெப்ப அலையும் வீசி வருகிறது. நகரின் மையப்பகுதியில் வெப்பநிலை சுமார் 37.3 டிகிரி செல்சிஸ் ஆகப் பதிவாகியுள்ளது.</p><h2><strong>ஆரஞ்சு எச்சரிக்கை:</strong></h2><p>சுற்றுச்சூழல் அமைப்பான 'என்விரான்மென்ட் கனடா' டொராண்டோவிற்கு மிக உயர்ந்த அபாய அளவைக் குறிக்கும் "10+" காற்றுத் தர குறியீட்டுடன் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>பொதுமக்கள், குறிப்பாக முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் சுவாசப் பிரச்சனை உள்ளவர்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். அவசியமாக வெளியே செல்பவர்கள் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><h2><strong>நிகழ்ச்சிகள் ரத்து:</strong></h2><p>காற்று மாசுபாடு காரணமாக நகரின் பல பொது நீச்சல் குளங்கள், கோடைகால முகாம்கள் மற்றும் புகழ்பெற்ற 'ஃபிஃபா உலகக்கோப்பை ரசிகர் திருவிழா' நிகழ்வுகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.</p><h2><strong>அமெரிக்க நகரங்களுக்கும் பரவும் அச்சுறுத்தல்:</strong></h2><p>கனடாவின் இந்த அடர்ந்த புகை மூட்டம் எல்லையைக் கடந்து அமெரிக்காவின் நியூயார்க், பென்சில்வேனியா, கனெக்டிகட் மற்றும் மாசசூசெட்ஸ் போன்ற வடகிழக்கு மாகாணங்களையும் எட்டியுள்ளது. </p><p>நியூயார்க் மாகாண ஆளுநர் கேத்தி ஹோச்சுல், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். வரும் ஞாயிற்றுக்கிழமை நியூஜெர்சியில் நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியைக் காண லட்சக்கணக்கான ரசிகர்கள் கூடவிருக்கும் நிலையில், இந்த காற்று மாசுபாடு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>மூன்று திருமணங்கள்.. கண்ணீர் விட்டு அழுத அமீர் கான் - நெருங்கிய நண்பர் கூறிய விஷயம்  
</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/bollywood-actor-aamir-khans-third-marriage-60-year-old-marries-47-year-old-gauri-spratt-sparks-online-debate</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/bollywood-actor-aamir-khans-third-marriage-60-year-old-marries-47-year-old-gauri-spratt-sparks-online-debate#comments</comments><guid isPermaLink="false">71ad39f2-3f8c-476e-9480-9c1ebc1464dc</guid><pubDate>Thu, 16 Jul 2026 07:41:55 +0000</pubDate><atom:updated>2026-07-16T07:41:55.947Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமணம்,aamir khan,பாலிவுட்,Bollywood,marriage,அமீர் கான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/y604zrnp/amir-khan.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமீர் கான் ]]></media:title><media:description type="html"><![CDATA[ அமீர் கான் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/y604zrnp/amir-khan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாலிவுட் நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/aamir-khan">அமீர் கானுக்கு</a> தற்போது 60 வயது.  அண்மையில் தனது நீண்ட நாள் தோழியான கௌரி ஸ்ப்ராட் என்பவரை 3வது முறையாகத் திருமணம் செய்து கொண்டார் அமீர் கான். கௌரி ஸ்ப்ராட்க்கு வயது 47. </p><p>ஒரு 47 வயது பெண்ணை 60 வயது நபர் மூன்றாவது திருமணம் செய்துகொண்டது, அதுவும் திருமண வயதில் மகன் இருக்கும்போது செய்துகொண்டது என்பது இணையத்தில் பலரின் விமர்சனத்தை ஈர்த்தது. </p><p>இந்த சூழலில் முன்னர் தன் திருமண வாழ்வில் மணமுடைந்து அமீர் கான் அழுது கண்ணீர் விட்டதாக அவருடன் 35 ஆண்டுகளுக்கும் மேலாக பழகி வரும் நெருங்கிய நண்பர் அமீன் ஹாஜி தெரிவித்துள்ளார்.  </p> <h2>அழுகை</h2><p>அமீன் கூறுகையில்,</p><p>"அமீர் கான் தனது வேலை மீது முழுமையான அர்ப்பணிப்புடன் இருக்கக்கூடியவர். அவர் எதைச் செய்தாலும் நேர்மையாகவும் ஆர்வத்துடனும் செய்வார்.</p><p>ஆனால், அந்த அளவிற்கான வேலை அர்ப்பணிப்பு அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் சில இழப்புகளைக் கொண்டு வந்துவிடுகிறது.</p><p>அப்படிப்பட்ட ஒருவருடன் வாழும்போது, அவருடன் வாழ்பவர் தங்களுக்கு அதிகம் கவனம் கிடைக்கவில்லை என்று சில நேரங்களில் உணரக்கூடும்.</p><p>அவர் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் காதலைக் கண்டுபிடிப்பது குறித்து மக்கள் கேலி செய்கிறார்கள். </p><p>ஆனால், 15 ஆண்டுகள் என்பது மிக நீண்ட காலம். அவர் மனமுடைவை எதிர்கொண்டதை நான் பார்த்திருக்கிறேன். அவர் அழுததையும் நான் பார்த்திருக்கிறேன்.</p><p>வெளியே இருப்பவர்கள் நினைப்பது போல உறவுகள் அவ்வளவு எளிதானவை அல்ல. ஒரு திருமணம் முறிவதற்குக் குறிப்பிட்ட ஒரு நபர் மட்டும்தான் காரணம் என்று கருதுவது தவறானது" என்று கூறியுள்ளார்.</p> <h2>பழைய உறவுகள்</h2><p>அமீரின் பழைய உறவுகள் குறித்து கூறுகையில் அமீன்,</p><p>பலர் ஒரு உறவு தோல்வியடைந்ததும் விரக்தியடைந்து விடுவார்கள். ஆனால் அமீர் அப்படி இல்லை. அவர் எப்போதும் திருமண பந்தத்தை கண்ணியத்துடன் நடத்தியுள்ளார்.</p><p>மக்கள் அவரது தனிப்பட்ட வாழ்க்கையைக் கேலி செய்கிறார்கள், ஆனால் அவர் எவ்வளவு நேர்மையாகவும் நியாயமாகவும் நடந்து கொண்டார் என்பதை அவர்கள் பார்ப்பதில்லை.</p><p>அவரது முன்னாள் மனைவிகளின் குழந்தைகளும் நன்றாகப் பார்த்துக்கொள்ளப்படுவதை அவர் எப்போதும் உறுதி செய்துள்ளார் " என அமீன் குறிப்பிட்டுள்ளார்.</p> <h2>மூன்று திருமணங்கள்</h2><p>அமீர் கானின் முதல் திருமணம் 1986இல் ரீனா தத்தா என்பவருடன் நடந்தது.</p><p>16 ஆண்டுகள் நீடித்த இந்த திருமண வாழ்க்கையில் ஜுனைத் மற்றும் ஈரா ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.</p><p>2005 'லகான்' படப்பிடிப்பின் போது கிரண் ராவை சந்தித்துத் திருமணம் செய்து கொண்டார் அமீர். இவர்களுக்கு ஆசாத் என்ற மகன் உள்ளார்.</p><p>2021ல் இவர்கள் பரஸ்பரம் பிரிவதாக அறிவித்தாலும், இன்றும் நெருங்கிய நண்பர்களாகத் தொடர்ந்து வருகின்றனர்.</p><p>கடந்த ஜூலை 5 கௌரி ஸ்ப்ராட்டை அமீர் கான் தனது இல்லத்தில் மிக எளிமையான முறையில் மூன்றாவது திருமணம் செய்துகொண்டார்.</p><p>இந்தத் திருமணத்தில் அமீரின் குழந்தைகள் ஜுனைத், ஈரா மற்றும் அவரது மருமகன் நூபுர் ஷிகாரே ஆகியோர் கலந்துகொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் பி.வி.சிந்து</title><link>https://www.maalaimalar.com/sports/pv-sindhu-enter-qf-round-in-japan-open-badminton</link><comments>https://www.maalaimalar.com/sports/pv-sindhu-enter-qf-round-in-japan-open-badminton#comments</comments><guid isPermaLink="false">80027eae-c5bf-4144-a0d0-e0e6bfb1e3c9</guid><pubDate>Thu, 16 Jul 2026 07:40:07 +0000</pubDate><atom:updated>2026-07-16T07:40:07.334Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>pv sindhu,பிவி சிந்து,Japan Open Badminton,ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்</media:keywords><media:content height="350" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2024/05/23/2304769-sindhu.webp" width="615"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ pv sindhu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2024/05/23/2304769-sindhu.webp?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது.</p><p>இந்தியா சார்பில் லக்சயா சென், ஆயுஷ் ஷெட்டி, பிவி சிந்து, உன்னதி ஹூடா, சிராக் ஷெட்டி-சாத்விக் ரங்கிரெட்டி ஜோடி, தனிஷா கிரஸ்டோ-துருவ் கபிலா ஜோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p><p>இந்நிலையில், இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீனாவின் ஹான் யூ உடன் மோதினார். </p><p>இதில் சிறப்பாக ஆடிய பி.வி.சிந்து 21-16, 21-14 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.</p><p>முன்னதாக, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென், ஆயுஷ் ஷெட்டியும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் உன்னதி ஹூடா ஆகியோர் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினர்.</p><p>ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி காயத்தால் முதல் சுற்றோடு வெளியேறியது.</p><p>கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ-துருவ் கபிலா ஜோடி இன்று நடந்த 2வது சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினர்.</p>]]></content:encoded></item><item><title>அதிக நிறமூட்டிகளை பயன்படுத்தி விற்கப்படும் கலர் அப்பளத்துக்கு தடை- உணவு பாதுகாப்புத்துறை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/color-appalam-bans</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/color-appalam-bans#comments</comments><guid isPermaLink="false">efb18e55-c917-4aa9-8b00-3cf4aeb3d819</guid><pubDate>Thu, 16 Jul 2026 07:26:15 +0000</pubDate><atom:updated>2026-07-16T07:26:15.666Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Food Safety Department,உடல்நலம்,color appalams,Colored papads,கலர் அப்பளம்,உணவு பாதுகாப்புத்துறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/aozla9ek/Untitled-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ color appalams]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/aozla9ek/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பொதுமக்கள் மற்றும் குறிப்பாகக் குழந்தைகளைக் கவரும் வகையில் கவர்ச்சிகரமான பல வண்ணங்களில் (சிவப்பு, மஞ்சள், பச்சை) விற்கப்படும் கலர் அப்பளங்களில் மற்றும் வத்தல்களில், அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக அதிகமாகவும், சில இடங்களில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் தடைசெய்யப்பட்ட தொழிற்சாலை சாயங்கள் பயன்படுத்தப்படுவதாகப் புகார்கள் எழுந்தன.</p><p>இதனைத் தொடர்ந்து உணவுப் பாதுகாப்புத் துறை நடத்திய ஆய்வகச் சோதனைகளில், சேகரிக்கப்பட்ட பெரும்பாலான மாதிரிகள் பாதுகாப்பற்றவை எனத் தெரியவந்துள்ளது.</p><p>அதிக நிறமூட்டிகள் சேர்க்கப்பட்ட இந்த அப்பளம் மற்றும் வத்தல் வகைகளைத் தொடர்ந்து சாப்பிடுவதால் கடுமையான உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதாக மருத்துவர்களும் அதிகாரிகளும் எச்சரிக்கின்றனர். இந்நிலையில், அடிக்கடி கலர் அப்பளம் சாப்பிட்டால் செரிமான பிரச்சனை, சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>முக்கியமாக குழந்தைகள் இந்த கலர் அப்பளத்தை சாப்பிட்டால் அலர்ஜி மற்றும் கவன சிதறல் உண்டாகலாம் எனவும் உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை செய்துள்ளது  பாரம்பரியமாக உளுந்து, அரிசி உள்ளிட்டவையில் தயாரிக்க கூடிய அப்பளத்தை வாங்கி சாப்பிடுவது நல்லது.</p><p>சந்தைகள், சுற்றுலா தளங்கள் மற்றும் பொருட்காட்சிகள் உள்ளிட்ட இடங்களில் கலர் அப்பளம் விற்பனை செய்ய வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது  நிறமூட்டிகளை பயன்படுத்தி விற்கப்படும் கலர் அப்பளம் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடும் என தமிழக உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது .</p><h2><strong>உறுப்புகள் பாதிப்பு:</strong></h2><p>நீண்ட நாட்களாக இந்தச் செயற்கை நிறமிகளை உட்கொள்வதால் புற்றுநோய் மற்றும் கட்டிகள் ஏற்படும் அபாயம் கணிசமாக அதிகரிக்கிறது.</p><p>இவை செரிமான மண்டலத்தைப் பாதித்து வயிற்றுப் புண் மற்றும் குடல் பாதிப்புகளை உண்டாக்குகின்றன. இந்தத் தரம் குறைந்த சாயங்கள் உடலில் இருந்து எளிதில் வெளியேறாமல் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களில் தங்கி, அவற்றின் செயல்பாட்டைப் பாதிக்கின்றன.</p><p>விதிகளுக்குப் புறம்பாக நிறமூட்டிகள் சேர்த்து அப்பளம் தயாரிக்கும் நிறுவனங்கள் கண்டறியப்பட்டு, அவற்றுக்கு அவசரத் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகின்றன. விதிகளை மீறும் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது குற்றவியல் நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டு லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>சந்தேகத்திற்குரிய அல்லது அதிக அடர் நிறமுள்ள அப்பளங்களைத் தவிர்த்து, இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதே உடலுக்குப் பாதுகாப்பானது.</p>]]></content:encoded></item><item><title>FMGE தேர்வைச் சுற்றி எழுந்துள்ள சர்ச்சை கவலை அளிக்கிறது..!- தமிழச்சி தங்கபாண்டியன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-controversy-surrounding-the-fmge-exam-is-worrying-tamilachi-thangapandian</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-controversy-surrounding-the-fmge-exam-is-worrying-tamilachi-thangapandian#comments</comments><guid isPermaLink="false">58bddaf4-f18c-4fb7-8221-cebf299bc30d</guid><pubDate>Thu, 16 Jul 2026 07:22:08 +0000</pubDate><atom:updated>2026-07-16T07:22:08.880Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தமிழச்சி தங்கபாண்டியன்,Tamizhachi thangapandian,எப்எம்ஜிஇ தேர்வு,FMGE Exam</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/gywhpweq/Tamizhachi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tamizhachi thangapandian]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/gywhpweq/Tamizhachi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற இந்திய மாணவர்கள் மருத்துவப் பணியில் ஈடுபட கட்டாயமாக எழுத வேண்டிய FMGE தேர்வைச் சுற்றி எழுந்துள்ள சர்ச்சை கவலை அளிக்கிறது.</p><p>தேர்வின் கடினத்தன்மை திடீரென உயர்த்தப்பட்டது, வினாத்தாள் அமைப்பில் முன்னறிவிப்பின்றி மாற்றங்கள் செய்யப்பட்டன, அதிகாரப்பூர்வ விடைக்குறிப்பு வெளியிடப்படவில்லை, தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை என தேர்வர்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தீவிரமாக பரிசீலிக்கப்பட வேண்டியவை.</p><p>தேர்வுகளின் தரத்தை உயர்த்துவது அவசியம். அதேநேரத்தில், தேர்வு நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை, முன்கூட்டிய தெளிவான வழிகாட்டுதல்கள் மற்றும் சமமான வாய்ப்புகள் உறுதி செய்யப்படுவதும் அதே அளவிற்கு முக்கியமானது.</p><p>மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளை அலட்சியப்படுத்தாமல், ஒன்றிய அரசு மற்றும் தேசிய தேர்வுகள் வாரியம் (NBEMS) உரிய விளக்கங்களையும், தேவையான நடவடிக்கைகளையும் உடனடியாக </p><p>மேற்கொள்ள வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>எப்படி இருக்கிறது &apos;தி ஒடிஸி..&apos; மகாகாவியத்திற்கு நியாயம் செய்தாரா நோலன்? - திரைவிமர்சனம்</title><link>https://www.maalaimalar.com/cinema/movie-review/homer-odyssey-nolan-film-christopher-nolan-reimagines-odysseus-epic-war-torn-journey-on-screen</link><comments>https://www.maalaimalar.com/cinema/movie-review/homer-odyssey-nolan-film-christopher-nolan-reimagines-odysseus-epic-war-torn-journey-on-screen#comments</comments><guid isPermaLink="false">0bfb40ed-a231-47cd-b863-5f300e3cd6a8</guid><pubDate>Thu, 16 Jul 2026 07:09:44 +0000</pubDate><atom:updated>2026-07-16T07:09:44.393Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திரைவிமர்சனம்,Hollywood,christopher nolan,ஹாலிவுட்,தி ஒடிஸி,கிறிஸ்டோபர் நோலன்,The Odyssey,Film Review</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/2qajqmh1/The-Odyssey.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ The Odyssey
]]></media:title><media:description type="html"><![CDATA[ The Odyssey
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/2qajqmh1/The-Odyssey.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தரவரிசை (Movie Review)</category><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கி.மு. 8 ஆம் நூற்றாண்டில் மகாகவி ஹோமரால் எழுதப்பட்ட மாகாவியம் 'ஒடிஸி'. டிரோஜன் போரில் வென்று டிராய் நகரை கைப்பற்றிய பின்னர் கிரேக்க பேரரசன் ஒடிசியஸ், தனது நாடான இத்தாக்காவுக்கு திரும்பும் பயணத்தை பேசுவதே இக்காவியம். 24 புத்தகங்களாக மொத்தம் 600 பக்கங்களை கொண்டது இது.  </p><p>டிரோஜன் போரில் வென்ற பின்னர் ஒடிசியஸ் அவன் செல்லும் வழியில் சந்தித்த ஆபத்துகளை கடந்து அவனுக்காக காத்திருக்கும் மனைவி பெனிலோப், மகன் டெலிமாச்சோஸ் இடம் எப்படி சென்றடைந்தான் என்பதுவே இதன் கதைக் கரு. போரின் கோரங்கள் துரத்த, வழியில் அவன் சந்திக்கும் அசாதரண தடைகளே கதையின் அச்சாணி. </p> <h2>நோலனின் மேதைமை</h2><p>ஒடிஸி கதையை தழுவி இதன் முன்னரும் பல திரைப்படங்கள் வந்துள்ளன. ஆனால் இப்படி ஒரு உயிர்ப்பான கதையுடன் கிறிஸ்டோபர் நோலனின் திரை மேதைமை இணைந்தால் எப்படி இருக்கும்?.. அதுவே '<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-odyssey-film">தி ஒடிஸி</a>' திரைப்படம்.</p><p>இன்செப்ஷன், இன்டர்ஸ்டெல்லார், டெனெட் உள்ளிட்ட சைன்ஸ் பிக்ஷன் படங்கள் மூலம் அதிகம் அறியப்படும் கிறிஸ்டோபன் நோலனுக்கு புராண கதைக்களம் புதிது. ஆனால் போர்ப் பின்னணி புதிதல்ல.</p><p>இரண்டாம் உலகப்போரை 'டன்கிரிக்' படம் மூலம் கண்முன் காட்டிய நோலன், 'ஓபன்ஹைமர்' மூலம் வெடிகுண்டு கண்டிடுபிடித்த ஓபன்ஹைமரின் மனசாட்சியத்தை முன்வைத்து போரின் கொடூரங்களை பேசியிருந்தார்.</p><p>அந்த வகையில் போர் பின்னணியில் நோலன் எடுக்கும் மூன்றாம் படம் 'தி ஒடிசியஸ்'. எனவே இதை கிறிஸ்டோபர் நோலனின் 'வார் ட்ரையாலஜி' எனலாம்.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/da4cmphv/tn-38.jpg" /></figure><h2>கதை - நடிப்பு</h2><p>கதையின் நாயகன் ஒடிசியஸ் ஆக நடிகர் மேட் டாமன் மிரட்டியுள்ளார். அவரின் வழி, போர், போரின் கொடூரங்களால் உண்டான குற்றவுணர்வு, வீடு திரும்பதுலக்கான பேரவா, வழியில் எதிர்ப்படும் சாகசங்கள் என கதையை நகர்த்துகிறார் நோலன்.</p><p>பல உயிர்களை பலி கொண்டு போரில் பெறும் வெற்றியை வீரம் எனக் கூறும் வரையறை கேள்விக்கு உள்ளாகிறது.</p><p>படத்தில் கையாளப்பட்டுள்ள களம், டிரோஜன் போருக்கு பின் ஒடிஸியஸ் மேற்கொள்ளும் பயணத்துடன் விரிய, அவன் வென்று வந்த போரின் வலிகள் அவனை அழுத்துகிறது. இதை தன் அழுத்தமான நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார் மேட் டாமன். மறுப்புரம் குடும்பத்திடம் சென்றடையும் குறிக்கோள் ஒடிசியஸை முன்னேறிச் செல்ல வைக்கிறது.</p><p>மனைவி பெனிலோப் உடன் ஒடிசியஸ்க்கு இருக்கும் உறவுப் பிணைப்பு படத்தில் பேசப்பட்டுள்ளது. பெனிலோப் ஆக திரையில் தோன்றும் நடிகை அன்னா ஹாத்வே அந்த பிணைப்பை நம்பும்படியாக கடத்தும் பணியை திறம்பட செய்திருக்கிறார். படத்தில் வரும் மற்றொரு பாசப் பிணைப்பு பெனிலோப் தனது மகன் டெலிமாச்சோஸ் உடன் கொண்டது. டெலிமாச்சோஸ் ஆக வரும் டாம் ஹாலண்ட், ஒரு பேரரசனின் மகனாக, தந்தையின் வருகைக்கு காத்திப்பதன் அலைபாய்வை தேர்ந்த முறையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.</p><p>ஆன்டினஸ் இக்கதையின் வில்லன் என ஒரு வகையில் கூறலாம். ஒடிஸியஸ் வருவதற்கு முன், அவன் மகன் டெலிமாச்சோஸை கொன்றுவிட்டு, மனைவி பெனிலோபை தன்வசப்படுத்தி இத்தக்காவை கைப்பற்ற நினைக்கும் கேரக்ட்டர். இதில் நடித்துள்ள ராபர்ட் பேட்டின்சனும் வழக்கம்போல தன் கதாபாத்திரத்தோடு ஒன்றும்படிக்கான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/k9zr5298/tn-37.jpg" /></figure><h2>இயக்கம்</h2><p>பிரமாண்டத்திற்கு பெயர் போனவர் என்பதை நோலன் மீளுமொருமுறை நிரூபித்துள்ளார். </p><p>ஒடிஸியஸின் பயணத்தை அதலபாதாளம் முதல் நெடிதுயர்ந்த மலைகள் வரை, குகைகள், கடல்கள், சுழல்கள் என ஒடிஸியஸின் சாகச பயணத்தை செதுக்கியிருக்கிறார் நோலன்.</p><p>மறுபுறம் இந்த பிரமாண்ட வெளிகளுக்கு நேரெதிராக குறுகிய அறைகள், மாளிகையின் இருள் மூலைகள் என பெனிலோப், டெலிமாச்சோஸ், ஆன்டினஸ் போர்ஷனை பண்ணியிருக்கிறார். இந்த மாறுபட்ட புறச்சூழல்களை அவரவர் பாத்திரங்களின் மனோவிகற்பங்களை வெளிப்படுத்தும் கருவியாக கையாண்டிருக்கிறார் அவர்.</p><p>நூற்றுக்கணக்கான பக்கங்கள் கொண்ட ஒரு கதையில் எதை பிரதானப்படுத்த வேண்டும், எந்த உணர்வுகளை பார்வையாளர்களுக்கு கடத்த வேண்டும் என்ற நோலனின் தெளிவு படம் முழுக்க வெளிப்பட்டு உள்ளது. உறவுச் சிக்கல், எடுக்கப்படும் முடிவுகள், அதன் விளைவுகள், தர்க்கம், வலி, துரோகம், குற்றவுணர்வு, மனவலிமை, மனமுடைவு என 'படம் பேசுகிறது'.</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/d8tn8ixq/tn-39.jpg" /></figure><h2>ஒளிப்பதிவு - படத்தொகுப்பு</h2><p>நோலனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் ஹொயிட் வேன் ஹொய்டெமா ஐந்தாவது முறையாக அவருடன் இணைந்து இப்படத்தில் பணியாற்றியுள்ளார்.</p><p>ஒரு மகா காவியத்தை எப்படி காட்சி அமைப்புகளில் கொண்டு வர வேண்டும் என்பதில் ஹொய்டெமாவும் நோலனும் பெருமதியான அக்கறை எடுத்துக்கொண்டதை படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் உணர முடியும்.</p><p>முழுக்க முழுக்க ஐமேக்ஸ் கேமராக்களால் எடுக்கப்பட்ட காட்சிகளை நேர்த்தியாக எடிட் செய்து படத்தின் சமநிலைக்கு படத்தொகுப்பாளர் ஜெனிபர் லேம் நியாயம் செய்திருக்கிறார்.</p><p>நவீன உலகின் மனிதர்கள் என்ற பிரஞயை உடைத்து ஒரு தொன்ம வாழ்வியலுக்கு படம் நம்மை இட்டுச் செல்கிறது என்றே சொல்லலாம்.</p> <h2>இசை</h2><p>இசையமைப்பாளர் லூட்விக் கோரன்சன் படத்தின் பிரமாண்டத்திற்கும், உணர்வுக்கும் கடத்தியதாக தனது பின்னணி இசையை கோர்த்துள்ளார். எங்கு இசையும், எங்கு அமைதியும் வேண்டும் என்பதை உணர்ந்து செயல்பட்டிருக்கிறார்.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/JLEDwlSZcAI"></iframe></figure>]]></content:encoded></item><item><title>திருவேற்காடு தேவிகருமாரியம்மன் கோவில் வரலாறு</title><link>https://www.maalaimalar.com/spirituality/thiruverkadu-devi-karumariamman-history-and-significance-of-the-famous-shakti-temple</link><comments>https://www.maalaimalar.com/spirituality/thiruverkadu-devi-karumariamman-history-and-significance-of-the-famous-shakti-temple#comments</comments><guid isPermaLink="false">1c930482-57e1-4d91-b9af-74f804386f5f</guid><pubDate>Thu, 16 Jul 2026 07:04:02 +0000</pubDate><atom:updated>2026-07-16T07:04:02.747Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,worship,திருவேற்காடு,கோவில் வரலாறு,devotional,திருவேற்காடு தேவிகருமாரியம்மன் கோவில்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/xw8bqwfp/news-14.png" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/xw8bqwfp/news-14.png?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகம் தாய்தெய்வ வழிபாட்டின் சிறப்பிடமாகத் தொன்றுதொட்டு விளங்கிவரும் பகுதியாகும். சாக்தம் என்ப்படும் தாய் தெய்வ வழிபாடு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காணப்படுகின்றன. அத்தகைய வரிசையில் திருவேற்காடு தேவி கருமாரியம்மன் திருக்கோவில் புகழ் பெற்ற சக்தி தலமாகும்.</p><p>தொண்டை மண்டலத்தில் உள்ள பாடல் பெற்ற தலங்களில் திருவேற்காடு 23வது தலமாகும். நாயன்மார்களில் மூர்க்க நாயனார் அவதரித்த ஊர் திருவேற்காடு என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். வெள்வேல் மரங்கள் மிகுந்த பகுதி என்பதால் இப்பெயர் பெற்றது. இவ்வூர் சென்னைக்கு மேற்குத் திசையில் 18 கி.மீ தொலைவில் உள்ளது.</p><h2>கோவில் அமைப்பு</h2><p>மூலதெய்வமான கருமாரியம்மன் கிழக்குப் பார்த்து அமர்ந்த நிலையில் காணப்படுகின்றாள். கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், முன்மண்டபம் திருச்சுற்று வளாகம் ஆகிய அனைத்தும், தற்காலக் கட்டுமானங்களாகும். </p><p>முதல் திருச்சுற்று தெய்வங்களாகத் திருக்கோயிலின் முன்புறம், கிழக்குத் திசை நோக்கி வலம்புரி விநாயகர் சன்னதியும், வடகிழக்கில் சீனிவாசப்பெருமாள் சன்னதியும், தென் கிழக்கில் நவக்கிரக சன்னதியும், வடமேற்கில் வேற்கண்ணியம்மன் சன்னதியும், வடக்கில் தென்திசை நோக்கி முருகன் சன்னதியும், மரச்சிலையம்மன் சன்னதியும் உள்ளன. </p><p>இரண்டாம் திருச்சுற்று தெய்வங்களாகத், தெற்கில் தென்திசை கடவுளான தட்சிணாமூர்த்தி சன்னதியும், தென் மேற்கில் அங்காள பரமேஸ்வரி சன்னதியும், கிழக்குத் திசை நோக்கி பிரத்தியங்கரா தேவி சன்னதியும், ஏழு அம்மன் சன்னதியும், வள்ளி தெய்வானையுடன்முருகன் சன்னதியும், வடக்குத் திசை நோக்கி துர்க்கை சன்னதியும், தென்திசை நோக்கி பைரவர் சன்னதியும் அமைந்துள்ளன. </p><p>திருக்கோவிலின் கிழக்குப்புறத்தில் ஐந்து நிலை இராஜகோபுரம் அமைந்துள்ளது. இதன் எதிரில் திருநீற்றுப்பொய்கை எனப்படும் திருக்குளம் அமைந்துள்ளது. கோவிலின் வடகிழக்கில் புற்றுக்கோவில் உள்ளது. இரண்டு திருச்சுற்றுடன் கூடிய திருக்கோவிலாகும்.</p><h2>தல வரலாறு</h2><p>பிரளயத்தின் யுகமுடிவில் வெள்ளம் பெருகி உலகை மூழ்கவைத்தப்பின் சிவபெருமான் மீண்டும் உலகைப் படைக்க எண்ணினார். வெள்ளம் வற்றியப்பின் வேதங்களைக் குறிப்பிட்ட இடத்தில் மரங்களாக உருவாக்கினார். அவற்றின் அடியில் லிங்கம் தோன்றியது. லிங்கத்துடன் அன்னையும் தோன்றினாள். </p><p>அன்னையின் அருளால் மீண்டும் தேவர்களும், மும்முர்த்திகளும் தோன்றினர். மீண்டும் அகில அண்ட இயக்கம் ஆரம்பமானது. இவ்வாறு வெள்வேல மரமும், அதனடியில் லிங்கமும், அன்னையும் தோன்றிய இடம் திருவேற்காடு. தேவர்கள் தோன்றிய அவ்விடத்தின் ஒரு பகுதி தேவர் கண்ட மடு என்று அழைக்கப்பட்டது. இந்த வேற்காடு பாலி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. </p><h2>தேவி கருமாரி..</h2><p>இத்தலத்தின் தூணில் தேவி கருமாரியம்மன் அமர்ந்த கோலத்தில் இருப்பதுடன், அகிலமெல்லாம் பக்தர்களைக் காத்து அருள்புரியும் அன்னையாகத் தனித்து, மேல் இரு கரங்களில் டமருகம், திரிசூலமும், கீழ் இரு கரங்களில் கட்கம் கபாலம் ஏந்தி பத்ம பீடத்தின் மீது அமர்ந்த நிலையிலும் ஜுவாலை மகுடத்துடன் சிரசு அம்மனாகவும், இங்கு கோவில் கொண்டிக்கிறார். அம்மனுக்கு நாள்தோறும் ஆறு கால பூஜைகள் நடைபெற்று வருகிறது.</p><h2>திருவிழாக்கள்</h2><p>தைமாத பிரம்மோற்சவம், தைப்பூசம் மற்றும் சித்ரா பௌர்ணமி இலட்சார்ச்சனை விழா, மாசிமகத் திருவிழா, ஆடிப்பெருவிழா, நவராத்திரி விழா, கந்தர்சஷ்டி விழா, தனுர் மாத பூஜை, ஆங்கிலப்புத்தாண்டு மற்றும் தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பூஜைகள் கோலாகலமாக நடைபெறுகிறது.</p><h2>திருவேற்காடு சிறப்புகள்</h2><p>அரவம் தீண்டி மரணம் நிகழா திருத்தலமாக இக்கோவில் விளங்குகிறது. பாலி ஆற்றின் கரையில் இக்கோவில் அமைந்துள்ளது சிறப்பு. ஆதவனுக்கு அன்னை அருள்புரிந்த தலமாகும். இத்தலத்தில் அம்மையப்பன் அகத்தியருக்குத் திருமணக்கோலம் காட்சியளித்துள்ளார்.</p><p>முருகப்பெருமான் இத்தலத்து அன்னையினைத் தொழுது, அவரது திருக்கரத்தால் பெற்ற வேலால் உருவாக்கிய வேலாயுத தீர்த்தம் திருவேற்காட்டில் அமைந்துள்ளது.</p><h2>நடை திறந்திருக்கும் நேரம்</h2><p>காலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை</p><p>(நாள் முழுவதும் நடைசாற்றப்படாமல் இருப்பது திருவேற்காடு தலத்தின் சிறப்பாகும்.)</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/sjs6t459/T50017.avif" /></figure>]]></content:encoded></item><item><title>ஊழல் புகார்களில் யார் சிக்கினாலும் பதவி பறிக்கப்படும்..!- முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anyone-caught-in-corruption-allegations-will-be-stripped-of-their-position-chief-minister-vijay-warns</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anyone-caught-in-corruption-allegations-will-be-stripped-of-their-position-chief-minister-vijay-warns#comments</comments><guid isPermaLink="false">4077737e-1f7c-4c3e-88e8-5d2af007b0b2</guid><pubDate>Thu, 16 Jul 2026 06:42:47 +0000</pubDate><atom:updated>2026-07-16T06:42:47.341Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,Bribe,ஊழல் புகார்,Corruption,tvk,tn cm vijay,முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/v3y1ypwn/TN-CM-Vijay1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/v3y1ypwn/TN-CM-Vijay1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஊழல் புகார்களில் சிக்கினால் பதவி பறிக்கப்படும் என அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><h2>அமைச்சரவைக் கூட்டம்</h2><p>முதலமைச்சர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது.</p><p>பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அறிவிப்புகள் குறித்தும், புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.</p><p>அத்துடன், புதிய திட்டங்கள் தொடங்குவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இதில் பல்வேறு முக்கிய தொழில் திட்டங்களுக்கு அமைச்சரவையின் ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>முதலமைச்சர் எச்சரிக்கை</h2><p>முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஊழல், லஞ்சம் தொடர்பாக  எச்சரிக்கை ஒன்றை விடுத்திருந்தார். </p><p>கூட்டத்தில் அவர்,"ஊழல் லஞ்சம் முறைகேடு ஆகியவற்றில் ஈடுபட்டால் யாராக இருந்தாலும் அமைச்சராக இருந்தாலும், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பதவிகள் பறிக்கப்படும்.</p><p>தவெக ஆட்சி ஊழலற்ற ஆட்சியாக இருக்க வேண்டும் என்றும், ரீல்ஸ் எடுக்கிறேன் என்று அலப்பறை வேண்டாம்" எனவும் அமைச்சர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பழனி முருகன் கோவிலின் ரூ.100 கோடி நிலம் மோசடி: சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கியது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cbcid-investigation-to-rs-100-crore-worth-land-fraud-involving-palani-murugan-temple</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cbcid-investigation-to-rs-100-crore-worth-land-fraud-involving-palani-murugan-temple#comments</comments><guid isPermaLink="false">63c85588-6cbd-4830-b16c-bbfa4d8803ae</guid><pubDate>Thu, 16 Jul 2026 06:34:59 +0000</pubDate><atom:updated>2026-07-16T06:34:59.813Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Palani murugan temple,சிபிசிஐடி,நிலம் மோசடி,Land Cheating,cbcid,பழனி முருகன் கோவில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/z2xqfdyv/palanitemple.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பழனி முருகன் கோவில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/z2xqfdyv/palanitemple.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/பழனி-முருகன்-கோவில்">பழனி</a> அடிவாரம் பூங்கோ ரோட்டில் தண்டபாணி சுவாமிகள் மடம் செயல்பட்டு வந்தது. இந்த மடத்தின் மூலமாக பழனிக்கு வரும் பக்தர்களுக்கு தங்குவதற்கான வசதிகள் செய்து கொடுக்கவும், அன்னதானம் வழங்கவும், பழனி முருகனுக்கு கைங்கர்யம் செய்யவும் இந்து மதத்தை வளர்த்தெடுக்கவும், இந்த இடத்தை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக  தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளை நிறுவப்பட்டது. இந்த மடம் பல ஆண்டுகளாக நிர்வாகிகளால் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்தது. </p><h2><strong>ரூ.100 கோடி</strong></h2><p>தண்டபாணி சுவாமிகள் மறைவுக்கு பின்பு அறக்கட்டளையை நிர்வாகம் செய்தவர்கள் இந்த இடம் எதற்காக கொடுக்கப்பட்டதோ அதனை மாற்றி வணிக ரீதியாக பயன்படுத்த முயற்சி செய்தனர். மேலும் பலரும் இந்த இடத்தை ஆக்கிரமித்து கடைகள் அமைத்தனர். இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடி என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>முறைகேடாக பதிவு</strong></h2><p>இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தண்டபாணி சுவாமிகள் மடத்தை அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. பழனி கோவில் இணை ஆணையராக இருந்த மாரிமுத்துவை தக்கராக நியமித்து மடத்தின் இடத்தை பராமரித்து வந்தனர்.</p><p>தற்போது இந்த இடத்தில் பழனி கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் வாகனங்களை நிறுத்தி செல்லும் வகையில் கட்டணம் இல்லாத வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் தண்டபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான இடத்தை மடத்துக்கு சம்மந்தம் இல்லாத விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகதாஸ் என்பவர் ரூ.2 கோடிக்கு திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் பாப்பன்குளத்தை சேர்ந்த வெள்ளைத்துரை, பழனி டி.கே.என். புதூரைச் சேர்ந்த சேதுபதி ஆகிய இருவருக்கும் கடந்த 6-ந் தேதி பழனி சார்பதிவாளர் அலு வலகத்தில் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார்.</p><h2><strong>விடுப்பில்</strong></h2><p>வழக்கமாக பத்திரப்பதிவு செய்யும் நபரை விடுப்பில் அனுப்பி விட்டு ஜஸ்டின் மணிகண்டன் மூலம் கடந்த 6-ந்தேதி இந்த பத்திரப்பதிவு நடந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி இந்த பத்திரப்பதிவு செய்ய முயன்றபோது அப்போதைய பதிவாளர் ஒத்துழைப்பு அளிக்காததால் முயற்சியை தற்காலிகமாக கைவிட்டுள்ளனர். இதன் பிறகு தான்  கடந்த 3-ந்தேதி பத்திரப்பதிவு அலுவலகத்தில் மீண்டும் இடத்தை பதிய அனுமதி கேட்டு 6-ந்தேதி பத்திரப்பதிவு செய்திருக்கிறார்கள்.</p><h2><strong>புகார் மனு</strong></h2><p>இந்த விவகாரம் பற்றி தெரியவந்ததும் பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, பதிவுத்துறை தலைவர், துணைத் தலைவர், மாவட்ட பதிவாளர் ஆகியோருக்கு முறையான ஆவணங்கள் இன்றி செய்யப்பட்ட பத்திரப்பதிவை ரத்து செய்ய வேண்டும் என மனு அளித்தார். மேலும் மோசடியாக பத்திரப்பதிவு செய்தது குறித்து பழனி அடிவாரம் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தார். </p><p>இதனைத் தொடர்ந்து முறைகேடாக பத்திரப்பதிவு செய்து கொடுத்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ், இடத்தை வாங்கிய சேதுபதி, வெள்ளத்துரை ஆகிய 4 பேர் மீது மோசடி, சதி செய்தல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.</p><h2><strong>மாவட்ட பதிவாளர் நீக்கம்</strong></h2><p>மாவட்ட பதிவுத்துறை சார்பிலும் இந்த பத்திரப் பதிவு தொடர்பாக விசாரணை நடத்தி பதிவுத்துறை தலைவருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பதிவுத்துறை அதிகாரிகள் இந்த விவகாரத்தில் முதல் கட்டமாக அதிரடி நடவடிக்கையை எடுத்து உள்ளனர். இதன்படி முறைகேடாக பத்திரப்பதிவு செய்த பழனி சார்பதிவாளர் ஜஸ்டின்  மணிகண்டன் சஸ்பெண்டு செய்யப்பட்டார். </p><p>மாவட்ட பதிவாளரான சசிகலாவும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு  உள்ளார். அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடைபெற்று வரும் நிலையில் தன்னை கைது செய்ய தடை விதிக்கக்கோரி ஜஸ்டின் மணிகண்டன் மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி நாளை (17-ந்தேதி) இந்த வழக்கை ஒத்திவைத்து அதுவரை ஜஸ்டின் மணிகண்டனை கைது செய்யக் கூடாது என உத்தரவிட்டார்.</p><h2><strong>சி.பி.சி.ஐ.டி. விசாரணை</strong></h2><p>இந்த நிலையில் பழனி கோவில் பத்திர முறைகேடு வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கான உத்தரவை டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் நேற்று மாலை பிறப்பித்தார். இதனை  தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தங்களது விசாரணையை  இன்று அதிரடியாக தொடங்கினர்.</p><h2><strong>பொய்யான தகவல்</strong></h2><p>இதற்கிடையே  இந்த வழக்கில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரை தொடர்புபடுத்தி சமூக வலை தளங்களில் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டது. இது குறித்து சென்னை சைபர் கிரைம் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் 3 சட்டப்பரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து வினோத், சூரியகுமார் என்பவர்களை கைது செய்து மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.</p><p>இந்த வழக்கில் தலைமறைவாக உள்ளவர்களை பிடிக்கும் பணியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக  இறங்கியுள்ளனர். சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் சந்தானலெட்சுமி தலைமையிலான போலீசார் மோசடி குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த மோசடியில் ஈடுபட்ட அனைவர்மீதும் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பத்திரப்பதிவு  மோசடி பின்னணியில் உள்ள அனைவரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட உள்ளனர். </p><p>சி.பி.சி.ஐ.டி. விசாரணை  முடிவில் பத்திரப்பதிவு மோசடி பற்றி அனைத்து பின்னணி தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>குதிரை பேரம் விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/horse-trading-case-judgment-on-case-seeking-cbi-probe-postponed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/horse-trading-case-judgment-on-case-seeking-cbi-probe-postponed#comments</comments><guid isPermaLink="false">7d44469d-1be7-4a11-bb72-e63465997c1d</guid><pubDate>Thu, 16 Jul 2026 06:25:53 +0000</pubDate><atom:updated>2026-07-16T06:25:53.739Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>chennai highcourt,சிபிஐ விசாரணை,Horse Trading,CBI court verdict,குதிரை பேரம் விவகாரம்,தீர்ப்பு ஒத்திவைப்பு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/699izotb/chennai-highcourt.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ chennai highcourt]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/699izotb/chennai-highcourt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குதிரைபேரம் விவகாரம் தொடர்பாக எம்எல்ஏக்கள் அளித்த புகார்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய வழக்கு மீதான தீர்ப்பை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.</p><p>வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்ற நிலையில், ஏன் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்? என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.</p><p>மற்ற புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதற்காக மாட்டுமே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டுமா? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.</p><p>உண்மையை கண்டறிய காவல்துறை நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் சிபிஐக்கு மாற்ற வேண்டியே தேவையில்லை என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>குறுகிய காலத்தில் 100-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் விலகல்.. ராஜினாமா விதிகளை கடுமையாக்கிய இஸ்ரோ</title><link>https://www.maalaimalar.com/news/national/isro-scientists-exit-shock-around-120-key-staff-quit-from-gaganyaan-and-major-missions</link><comments>https://www.maalaimalar.com/news/national/isro-scientists-exit-shock-around-120-key-staff-quit-from-gaganyaan-and-major-missions#comments</comments><guid isPermaLink="false">b01923c0-bd85-4253-8f39-6c4c287f0dc3</guid><pubDate>Thu, 16 Jul 2026 06:20:31 +0000</pubDate><atom:updated>2026-07-16T06:20:31.701Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ISRO,இஸ்ரோ,Resignation,ISRO scientists,ராஜினாமா,இஸ்ரோ விஞ்ஞானிகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/6hsqsb2k/isro.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ இஸ்ரோ]]></media:title><media:description type="html"><![CDATA[ இஸ்ரோ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/6hsqsb2k/isro.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான <a href="https://www.maalaimalar.com/topic/isro">இஸ்ரோவில் </a>ஒரே ஆண்டில் 120 விஞ்ஞானிகள் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இஸ்ரோ ராஜினமா செய்வதற்கான விதிகளை கடுமையாக்கியுள்ளது. </p><h2>விலகல் </h2><p>தகவல்களின்படி, இஸ்ரோவிலிருந்து கடந்த சில மாதங்களில் மட்டுமே 100 முதல் 120 விஞ்ஞானிகள் வரை விலகிள்ளனர். </p><p>இஸ்ரோவில் உள்ள 14,600க்கும் மேற்பட்டோர் தற்போது பணியாற்றி வருகின்றனர். இந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது ராஜினாமாக்களின் எண்ணிக்கை சிறியதாகத் தெரியலாம். </p><p>ஆனால்  ராஜினாமா செய்தவர்கள் அனைவரும் ககன்யான், சந்திராயன் உள்ளிட்ட திட்டங்களில்  முக்கியமான பங்காற்றியவர்கள் என்பதுதான் கவலையளிக்கும் விஷயமாக மாறியுள்ளது. </p><p>இஸ்ரோவின் மிகப்பெரிய மையமான விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் மட்டும் சுமார் 20 பேர் விலகியுள்ளனர். </p><p>இதில் இந்தியாவின் எல்விஎம்3  ராக்கெட் திட்ட இயக்குநர் விக்டர் ஜோசப் அடங்குவார்.</p><p>யு.ஆர். ராவ் செயற்கைக்கோள் மையத்தில் இங்கிருந்து சுமார் 80 விஞ்ஞானிகள் வரை ராஜினாமா செய்துள்ளனர். </p><p>இதில் விண்வெளித் துறைக்கான 'ஸ்பாடெக்ஸ்' திட்ட இயக்குநர் மற்றும் சந்திரயான்3 திட்டத்தில் முக்கியப் பங்கு வகித்த இளம் விஞ்ஞானிகள் அடங்குவர்.</p><p>சந்திரயான் 3 விண்கலம் நிலவில் இறங்குவதை கண்காணிக்கும் குழுவின் திட்ட மேலாளராக இருந்த ஆதித்யா ரல்லபள்ளி  என்பவரும் ராஜினாமா செய்துள்ளார். </p><p>இவர் தான் பலகட்ட சோதனைகளை மேற்கொண்டு விண்கலம் தரையிறங்குவதை உறுதி செய்தவர். </p><p>இஸ்ரோவில் 2012 முதல் 2024 வரை சுமார் 700 ஊழியர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.</p> <h2>இஸ்ரோ நடவடிக்கை</h2><p>விஞ்ஞானிகளின் இந்தத் தொடர் விலகலால் நாட்டின் கௌரவமிக்க விண்வெளித் திட்டங்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க இஸ்ரோ, ராஜினாமா விதிகளை மாற்றியமைத்துள்ளது.</p><p>ககன்யான் உள்ளிட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களில் பணியாற்றும் 'குரூப் ஏ' விஞ்ஞானிகளின் விருப்ப ஓய்வு மற்றும் ராஜினாமா கோரிக்கைகளை இனிமேல் வழக்கமான முறையில் ஏற்றுக்கொள்ளக் கூடாது.</p><p>கடந்த 2020 நவம்பரில் கொண்டுவரப்பட்ட விதியின்படி, விஞ்ஞானிகளின் ராஜினாமா கடிதங்களை ஏற்கும் அதிகாரம் இஸ்ரோவின் அந்தந்த மையங்களின் இயக்குநர்களுக்கே வழங்கப்பட்டிருந்தது.</p><p>தற்போது அந்த அதிகாரம் பறிக்கப்பட்டு, அனைத்து ராஜினாமா விண்ணப்பங்களும் விண்வெளித் துறையின் (DoS) இறுதி முடிவுக்கே அனுப்பப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>சம்பந்தப்பட்ட திட்டங்கள் முடியும் வரை இயக்குநர்கள் இவர்களின் ராஜினாமாவை ஏற்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>இஸ்ரோ தலைவர் பேட்டி</h2><p>இந்தத் தொடர் விலகல்கள் குறித்து இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் அளித்த பேட்டியில்,</p><p>"விஞ்ஞானிகள் விலகுவது என்பது எந்தவொரு நிறுவனத்திலும் நடக்கும் இயல்பான ஒன்றுதான். ஆனால், முக்கியத் திட்டங்கள் இதனால் திடீரெனப் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>யாராவது விலகினாலும், அவர்களுக்குப் பதிலாக வேறு நபர் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வார். இதற்கான மாற்று ஏற்பாடுகளை இஸ்ரோ திறம்படச் செய்து வருகிறது" என்று கூறியுள்ளார்.</p><p>தற்போது இஸ்ரோவின் 2025-26 ஆண்டறிக்கையின்படி, 1,050 புதிய அறிவியல் மற்றும் நிர்வாகப் பணியிடங்களை நிரப்பும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு- எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-take-action-party-posts-of-11-cve-shanmugam-supporters-stripped</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-take-action-party-posts-of-11-cve-shanmugam-supporters-stripped#comments</comments><guid isPermaLink="false">bc90c86b-e675-4f86-ae42-48922ec37de9</guid><pubDate>Thu, 16 Jul 2026 05:38:56 +0000</pubDate><atom:updated>2026-07-16T05:38:56.071Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,Edappadi Palaniswami,அதிமுக,எடப்பாடி பழனிசாமி,சிவி சண்முகம்,CVe Shanmugam</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/ur06w0hi/EdappadiPalaniswami004.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/ur06w0hi/EdappadiPalaniswami004.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க தோல்வி அடைந்து 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால் அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசல் வெடித்து சி.வி.சண்முகம் தலைமையில் ஒரு அணியும், <a href="https://www.maalaimalar.com/topic/எடப்பாடி-பழனிசாமி">எடப்பாடி பழனிசாமி</a> தலைமையில் ஒரு அணியும் என்று அ.தி.மு.க. 2-ஆக பிரிந்தது.</p><h2><strong>சி.வி.சண்முகம்</strong></h2><p>பின்னர் மீண்டும் அ.தி.மு.க. ஒன்றிணைந்த நிலையில், சி.வி.சண்முகம் மட்டும் தனது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்காமல் உள்ளார்.</p><p>இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட புதிய செயலாளராக நியமிக்கப்பட்ட பசுபதி தரப்பினருக்கும், சி.வி.சண்முகம் ஆதரவாளர்களுக்கும் இடையே அடிக்கடி பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது.</p><p>கடந்த சில தினங்களுக்கு முன்பு திண்டிவனம் மற்றும் செஞ்சி பகுதிகளில் மாவட்ட செயலாளர் பசுபதி ஏற்பாட்டில் அ.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.</p><h2><strong>மோதல்</strong></h2><p>அப்போது சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் மற்றும் பசுபதி ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது. குறிப்பாக செஞ்சியில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் கடும் மோதல் வெடித்தது. மாவட்ட செயலாளர் பசுபதியின் ஆதரவாளரை தாக்கி தர, தரவென இழுத்து சென்றதுடன், மாவட்ட செயலாளர் பசுபதியின் காரிலும் கல்வீசப்பட்ட சம்பவத்தால்  பெரும் பரபரப்பு நிலவியது. மேலும் இதுதொடர்பாக மாவட்ட செயலாளர் பசுபதி போலீசிலும் புகார் அளித்துள்ளார்.</p><h2><strong>11 பேரின் கட்சி பதவி பறிப்பு</strong></h2><p>இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி.சண்முகத்திற்கு ஆதரவாக செயல்பட்ட  11 முக்கிய மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகளின் கட்சி பதவிகளை பறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>விழுப்புரம் மாவட்ட கழக இணை செயலாளராக இருந்த ஆனந்தி, மாவட்ட பொருளாளராக இருந்த கே.வி.என்.வெங்கடேசன், மாவட்ட இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளராக உள்ள ஜெயபிரகாஷ், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாஸ்கரன், விழுப்புரம் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் எழில்ராஜ், வல்லம் தெற்கு ஒன்றிய செயலாளர் நடராஜன் என்ற கிருஷ்ணன், மயிலம் மேற்கு ஒன்றிய செயலாளர் விஜயன், ஒலக்கூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒலக்கூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பன்னீர், திண்டிவனம் நகர செயலாளர் ரூபன்ராஜ், மயிலம் மேற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p><p>விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி.சண்முகம் ஆதரவாளர்களுக்கும், மாவட்ட செயலாளர் ஆதரவாளர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது சி.வி.சண்முகம் ஆதரவாளர்களின் கட்சி பதவிகள் பறிக்கப்பட்டுள்ளது விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நடவடிக்கைக்கு சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cabinet-meeting-begins</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cabinet-meeting-begins#comments</comments><guid isPermaLink="false">869f4c21-e089-4aa0-b5ce-24b17e4faff6</guid><pubDate>Thu, 16 Jul 2026 05:37:25 +0000</pubDate><atom:updated>2026-07-16T05:37:25.253Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பொது பட்ஜெட்,TN Assembly meeting,tn cm vijay,தமழிக முதலமைச்சர் விஜய்,தமிழக அமைச்சரவைக் கூட்டம்,General budget</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/rkhpep6m/TN-CM-Vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/rkhpep6m/TN-CM-Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. தமிழக பட்ஜெட் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.</p><h2>முதல் சட்டசபை கூட்டம்</h2><p>தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள த.வெ.க. அரசின் முதல் சட்டசபை கூட்டம் கடந்த மாதம் (ஜூன்) 18-ந் தேதி கவர்னர் அர்லேகர் உரையுடன் தொடங்கியது.</p><p>கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜூன் 19, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தது. நிறைவு நாளில் முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, 4 நாட்கள் நடைபெற்ற சட்டசபை கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.</p><h2>பட்ஜெட் கூட்டத் தொடர்</h2><p>2026-27-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை மீண்டும் கூட இருக்கிறது.</p><p>தமிழகத்தில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் என்பதால், பொதுமக்களை கவரும் புதிய திட்டங்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் இடம் பெறும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.</p><p>நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய புது திட்டங்கள், நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை தொடர்பாக முதலமைச்சர் விஜய், பல துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். வரும் 22-ந்தேதி வரை அவர் ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.</p><h2>அமைச்சரவை கூட்டம் தொடங்கியது..</h2><p>இந்த சூழ்நிலையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்று வருகிறது.</p><p>பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அறிவிப்புகள் குறித்தும், புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.</p><p>அத்துடன், புதிய திட்டங்கள் தொடங்குவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இதில் பல்வேறு முக்கிய தொழில் திட்டங்களுக்கு அமைச்சரவையின் ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>இன்று 2வது ஆட்டம்..! இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றுமா இந்தியா?</title><link>https://www.maalaimalar.com/sports/today-is-the-2nd-match-will-india-win-the-one-day-series-against-england</link><comments>https://www.maalaimalar.com/sports/today-is-the-2nd-match-will-india-win-the-one-day-series-against-england#comments</comments><guid isPermaLink="false">81b055dc-4768-42e2-826d-bd0398a011df</guid><pubDate>Thu, 16 Jul 2026 05:20:19 +0000</pubDate><atom:updated>2026-07-16T05:20:19.736Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,England,one day match,இங்கிலாந்து,ஒரு நாள் தொடர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/edbpc5tq/Eng-vs-Ind.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ England vs India]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/edbpc5tq/Eng-vs-Ind.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி இன்று 2-வது ஆட்டத்தில் களம் காணுகிறது.</p><h2>ஒரு நாள் கிரிக்கெட்</h2><p>இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பர்மிங்காமில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.</p><p>இந்தநிலையில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி கார்டிப்பில் உள்ள சோபியா கார்டன் ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.</p><p>தொடக்க ஆட்டத்தை எடுத்துக் கொண்டால் இங்கிலாந்து நிர்ணயித்த 259 ரன் இலக்கை இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் (80 ரன்), வாஷிங்டன் சுந்தர் (52 ரன்), அக்ஷர் பட்டேல் (57 ரன்) ஆகியோரது அரைசதங்களின் உதவியோடு 45.2 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. </p><p>கேப்டன் சுப்மன் கில் காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் பாதியில் வெளியேறினார். இதனால் இன்றைய ஆட்டத்தில் அவர் ஆடுவது சந்தேகம் தான். ஒருவேளை அவர் உடல்தகுதியை எட்டாவிட்டால் துணை கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் அணியை வழிநடத்துவார்.</p><p>மூத்த வீரர்கள் ரோகித் சர்மா (11 ரன்), விராட் கோலி (5 ரன்) சோபிக்கவில்லை. இன்றைய ஆட்டத்தில் அவர்கள் அசத்துவார்களா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. மற்றபடி அதே உத்வேகத்துடன் தொடரை வசப்படுத்த நமது வீரர்கள் ஆவலுடன் உள்ளனர்.</p><h2>இங்கிலாந்து எப்படி?</h2><p>இங்கிலாந்து அணியில் முதல் ஆட்டத்தில் ஜோ ரூட், லியாம் டாசன் அரைசதம் அடித்தனர். கேப்டன் ஹாரி புரூக் (1 ரன்), ஜோஸ் பட்லர் (5 ரன்), ஜேக்கப் பெத் தேல் (14 ரன்) உள்ளிட்டோர் வேகப்பந்து வீச்சில் அடங்கினர். அதற்கு இன்றைய ஆட்டத்தில் பதிலடி கொடுக்க வரிந்து கட்டுவார்கள் என்பதால், பரபரப்புக்கு பஞ்ச மிருக்காது.</p><h2>அக்ஷர் பட்டேல்</h2><p>கார்டிப் மைதானத்தில் இங்கிலாந்து 17 ஆட்டங்களில் விளையாடி அதில் 10-ல் வெற்றியும், 4-ல் தோல்வியும் கண்டுள்ளது. 3 ஆட்டத்தில் முடிவில்லை. இந்தியா இங்கு 4 ஆட்டங்களில் ஆடி 3-ல் வெற்றி பெற்றிருக்கிறது. விராட் கோலி இங்கு சதம் அடித்துள்ளார்.</p><p>இந்த மைதானத்தில் 13 முறை 300 ரன்களுக்கு மேல் எடுக்கப்பட்டுள்ளன. 2019-ம் ஆண்டு வங்காளதேசத்துக்கு எதிராக இங்கிலாந்து 386 ரன்கள் குவித்தது அதிகபட்சமாகும். ஆடுகளத்தன்மையை பார்க்கும் போது, ரசிகர்கள் ரன்மழையை எதிர்பார்க்கலாம்.</p><h2>மாலை 5.30 மணிக்கு...</h2><p>போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-</p><p>இந்தியா: ரோகித்சர்மா. சுப்மன் கில் (கேப்டன்) அல்லது இஷான் கிஷன், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், வாஷிங்டன் சுந் தர், லோகேஷ் ராகுல். அக்ஷர் பட்டேல், ஷிவம் துபே, குர்னூர் பிரார், ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா.</p><p>இங்கிலாந்து: பென் டக்கெட், ஜேக்கப் பெத்தேல், ஜோ ரூட். ஹாரி புரூக் (கேப்டன்). ஜோஸ் பட்லர், சாம் கர்ரன், வில் ஜாக்ஸ், லியாம் டாசன், ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், ஜோஷ் டாங்கு.</p><p>இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் டென்1, 4, 5 சேனல்கள் நேரடி ஒளி பரப்பு செய்கின்றன.</p>]]></content:encoded></item><item><title>19வது நாள்: 8.9  கிலோ எடை இழப்பு.. தளர்ந்த குரலில் ஜூலை 20 பேரணிக்கு வாங்சுக் அழைப்பு - ராகுல் எங்கே?</title><link>https://www.maalaimalar.com/news/national/day-19-89-kg-weight-loss-wangchuk-calls-for-the-july-20-rally-in-a-feeble-voice-where-is-rahul</link><comments>https://www.maalaimalar.com/news/national/day-19-89-kg-weight-loss-wangchuk-calls-for-the-july-20-rally-in-a-feeble-voice-where-is-rahul#comments</comments><guid isPermaLink="false">4791a4ec-6875-44c2-8790-629ff815a629</guid><pubDate>Thu, 16 Jul 2026 04:59:19 +0000</pubDate><atom:updated>2026-07-16T04:59:19.571Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,Sonam Wangchuk,சோனம் வாங்சுக்,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,Cockroach Janata Party</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/pdxp6aoe/sonam.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Sonam wangchuk, rahul gandhi]]></media:title><media:description type="html"><![CDATA[ Sonam wangchuk, rahul gandhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/pdxp6aoe/sonam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு குளறுபடி, யுஜிசி குளறுபடி, சிபிஎஸ்சி விடைத்தாள் திருத்த குளறுபடி என தொடர் குளறுபடிகளால் கல்வித்துறை திணறி வருகிறது. </p><p>இந்த நிர்வாக தோல்விகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் அபிஜித் தீப்கேயின் தலைமையில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். </p><h2>சோனம் வாங்சுக் உடல்நிலை </h2><p>இதில் லடாக் செயல்பாட்டாளரும், கல்வியாளருமான <a href="https://www.maalaimalar.com/news/national/public-interest-litigation-filed-in-the-delhi-high-court-seeking-to-save-social-activist-sonam-wangchuk">சோனம் வாங்சுக்</a> நடத்தும் நடத்தும் உண்ணாவிரதம் 19வது நாளை எட்டியுள்ளது. </p><p>அவரது உடல் எடை 8.9  கிலோ குறைந்து தற்போது  சுமார் 57 கிலோவாக உள்ளது. 59 வயதான அவரின் உடல் ரத்த அழுத்தம் 105/76 mmHg, சர்க்கரை அளவு  80 mg/dL,  ஆக்ஸிஜன் அளவு  97% என்ற மோசமான நிலையில் உள்ளது. </p><p>உண்ணாவிரதத்தை கைவிட கோரி அவரை மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், பிரியங்கா காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால், அதிஷி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், சர்வதேச ஆளுமைகள் என பலரும் அறிவுறுத்தி வருகின்றனர். </p> <h2>தளர்ந்த குரல்</h2><p>ஆனால் உயிருக்கே ஆபத்தான சூழலிலும் தனது உண்ணாவிரதத்தை சோனம் வாங்சுக் கைவிட மறுத்துள்ளார்.</p><p>வரும் ஜூலை 20ல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் நாளில், ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>இதனிடையே நேற்று ஜந்தர் மந்தரில் இருந்து வீடியோ மூலம் பேசிய சோனம் வாங்சுக், நான் நல்ல நிலைமையில் இல்லை, அதேநேரம் மோசமான நிலையிலும் இல்லை. என்னை ஆதரிப்பவர்கள் எனது உண்ணாவிரதத்தை கைவிட வலியுறுத்துவதுக்கு பதிலாக ஜூலை 20 அன்று பாராளுமன்றத்தை நோக்கி செல்லும் பேரணியில் வந்து கலந்துகொள்ளுமாறு தன் தளர்ந்த குரலில் அழைப்பு விடுத்துள்ளார்.</p> <h2>ராகுல் மௌனம்</h2><p>மற்ற பிரச்சனைகளுக்கும் விமர்சனங்களுக்கும் மௌனம் காப்பது போல சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் குறித்தும் மத்திய பாஜக அரசு மௌனம் காத்து வருகிறது.</p><p>வழக்காக பிரதமர் மோடி பல்வேறு விஷயங்களில் மௌனம் காப்பதாக விமர்சிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் இந்த விவகாரத்தில் மௌனம் காத்து வருகிறார்.</p><p>இந்நேரம் அவர் ஜந்தர் மந்தருக்கு சென்று சோனம் வாங்சுக்கை சந்தித்திருக்க வேண்டும் என பலரும் அபிப்ராயப்பட்டு வருகின்றனர்.</p><p>கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் திப்கே கூறுகையில், "எதிர்க்கட்சித் தலைவர்கள் இங்கு வருகிறார்களா இல்லையா என்பது முக்கியமல்ல.</p><p>இந்த விவகாரத்தில் மத்திய அரசின் மெத்தனப் போக்கும், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவும் தான் முக்கியக் கேள்விகள்" என்றார்.</p><h2>காங்கிரஸ்</h2><p>ஜந்தர் மந்தர் சர்ச்சை ஒருபுறமிருக்க, ராகுல் காந்தி தனது தேசிய அளவிலான மாணவர்களின் குரல் பிரச்சாரத்தின் அடுத்த கட்டத்திற்காக நாளை டேராடூன் செல்கிறார்.</p><p>ராஜஸ்தானின் கோட்டாவிலிருந்து தொடங்கப்பட்ட இந்த இயக்கத்தின் மூலம், நாட்டின் கல்வி மற்றும் தேர்வு முறைகளில் உள்ள குறைபாடுகளை குறித்து மாணவர்களுடன் நேரடியாக கலந்துரையாட உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஐபோன் பயனர்களுக்கு நிம்மதி... வாட்ஸ்அப் கொண்டுவரும் புது மாற்றம்!</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/whatsapp-may-soon-let-iphone-users-back-up-chats-without-icloud</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/whatsapp-may-soon-let-iphone-users-back-up-chats-without-icloud#comments</comments><guid isPermaLink="false">d782468d-852c-43d3-817b-a89bc45518cb</guid><pubDate>Thu, 16 Jul 2026 04:58:00 +0000</pubDate><atom:updated>2026-07-16T04:58:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>WhatsApp,Iphone,வாட்ஸ்அப்,ஐபோன்</media:keywords><media:content height="350" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2022/07/27/1736705-whatsapp.jpg" width="615"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2022/07/27/1736705-whatsapp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஐகிளவுட் ஸ்டோரேஜ் பற்றாக்குறை காரணமாக வாட்ஸ்அப் சாட் பேக்கப் செய்வதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றீர்களா? உங்களுக்காகவே வாட்ஸ்அப் பிரத்யேக சேவையை உருவாக்கி வருகிறது. அதன்படிஆப்பிள் ஐகிளவுட் சேவைக்கு மாற்றாக ஐபோன் பயனர்கள் தங்களது சாட்களை பேக்கப் செய்ய சொந்த கிளவுட் சேவையை உருவாக்கி வருகிறது. </p><p>WABetainfo மூலம் வெளியாகி இருக்கும் இந்த அம்சம் தற்போது ஐ.ஓ.எஸ். பீட்டா வெர்ஷனில் டெஸ்டிங் செய்யப்படுகிறது. இந்த அம்சம் பயனர்கள் எண்ணற்ற ஐகிளவுட் ஸ்டோரேஜை சேமிக்க செய்வதோடு, முழுமையான என்க்ரிப்ஷன் வசதியையும் வழங்குகிறது. </p><p>இதேபோன்ற அம்சம் ஏற்கனவே ஆண்ட்ராய்டு வெர்ஷனிலும் உருவாக்கப்பட்டு வரும் நிலையில், ஐ.ஓ.எஸ். வெர்ஷனிலும் வழங்கப்பட இருக்கிறது. ஆண்ட்ராய்டு வெர்ஷனில் சாட்களை கூகுள் டிரைவ் அல்லாத கிளவுட் தளத்தில் சேமிக்கும் வசதி வழங்கப்பட இருக்கிறது.</p><p><strong>எப்படி இயங்கும்?</strong></p><p>வாட்ஸ்அப் தனது பயனர்கள் சாட்களை ஐகிளவுட் அல்லது வாட்ஸ்அப்-இன் சொந்த சர்வர்களில் பேக்கப் செய்ய வேண்டுமா என இரு ஆப்ஷன்களை காண்பிக்கும். இதில் ஐகிளவுட் டீஃபால்ட் ஆப்ஷனாக இருக்கும். பயனர்கள் இதை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ள முடியும்.</p><p>ஐகிளவுட் பேக்கப்களில் பயனர்கள் தாங்களாகவே என்க்ரிப்ஷன் அம்சத்தை செயல்படுத்த வேண்டிய சூழலில், வாட்ஸ்அப் சர்வர்களில் பேக்கப் செய்யும் போது, இது தானாகவே செயல்படுத்தப்பட்டு இருக்கும். பயனர்கள் இதனை பாஸ்கீ, பாஸ்வொர்டு அல்லது 64-இலக்க என்க்ரிப்ஷன் கீ மூலம் பாதுகாக்க முடியும்.</p><p><strong>ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள்:</strong></p><p>முதற்கட்டமாக வாட்ஸ்அப் தனது பயனர்களுக்கு 2 ஜிபி வரை இலவச கிளவுட் ஸ்டோரேஜ் வழங்க இருக்கிறது. அதன்பிறகு 50 ஜிபி ஸ்டோரேஜ் பெற பயனர்கள் மாதம் 0.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 95 வரை செலுத்த வேண்டியிருக்கும்.</p><p>தற்போது இந்த அம்சம் உருவாக்கப்பட்டு இருக்கும் நிலையில், இது அனைவருக்குமான வெர்ஷனில் கிடைக்க மேலும், சில காலம் ஆகும் என்று எதிர்பார்க்கலாம்.</p>]]></content:encoded></item><item><title>அம்மன் அருள் நிறைந்த ஆடி மாதம்</title><link>https://www.maalaimalar.com/spirituality/aadi-month-amman-worship-2</link><comments>https://www.maalaimalar.com/spirituality/aadi-month-amman-worship-2#comments</comments><guid isPermaLink="false">2d75fdcf-31ab-4a97-9f28-13696357cd5d</guid><pubDate>Thu, 16 Jul 2026 04:50:48 +0000</pubDate><atom:updated>2026-07-16T04:50:48.255Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,வழிபாடு,worship,Amman Worship,அம்மன் வழிபாடு,Aadi Month</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/92ut6i0l/amman5.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Amman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/92ut6i0l/amman5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>பீட மாதம்</h2><p>ஆடி மாதத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறாது என்பதால், சிலர் ஆடி மாதத்தை 'பீடை மாதம்' என்று சொல்வர். ஆனால் அது உண்மையல்ல. அது, அவர்கள் அறியாமையால் சொல்வதாகும். 'பீட மாதம்' என்பதே உண்மையான பெயர் ஆகும். இறைவனை நமது மனமாகிய பீடத்தில் வைத்து வணங்கும் மாதம் என்பதே இதன் பொருள்.</p><p>குலதெய்வ வழிபாடு, கிராம தெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு, சிவ வழிபாடு, சக்தி வழிபாடு, திருமால் வழிபாடு என அனைத்து தெய்வங்களுக்கும் ஏற்ற மாதமாக ஆடி மாதம் உள்ளது. ஆடி மாதத்தில் ஆடி அமாவாசை, ஆடி பவுர்ணமி, ஆடி வெள்ளி, ஆடிப்பூரம், ஆடி சுவாதி, ஆடிப்பெருக்கு, ஆடித் தபசு, கருட பஞ்சமி, நாக சதுர்த்தி போன்ற சிறப்புமிக்க நாட்கள் பல வருகின்றன. மேலும், ஆடி மாதத்தில்தான் பெண்கள் மட்டும் வழிபடும் அவ்வையார் நோன்பும் கடைப்பிடிக்கப்படுகிறது.</p><p>இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆடி மாதத்தின் முதல் நாளிலேயே அருகில் உள்ள அம்மன் கோவில்களுக்கு சென்று அம்மனை வழிபடுவது மிகவும் சிறந்தது. கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள், வீட்டை சுத்தம் செய்து, பூஜையறையில் உள்ள அம்மன் படங்களுக்கு மலர்களால் அலங்கரித்து, விளக்கேற்றி வழிபடலாம். மேலும், அன்னைக்கு பொங்கல், பாயசம் நைவேத்தியமாக படைத்தும், அம்மன் பாடல்களை பாடியும் வழிபட்டு அம்மன் அருளை பெறலாம்.</p><p>ஆடி மாதத்தில் அம்பிகையிடம் வைக்கும் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் என்பதால் மனதார அன்னையை வழிபட்டு மகிழ்ச்சியான வாழ்க்கை அமைய வரம் பெறுவோம்.</p><h2>ஆடி மாதம்</h2><p>தமிழ் மாதங்களில் ஆடி மாதத்திற்கு தனிச் சிறப்பு உண்டு. காரணம் ஆடி மாதம் என்பது அம்மனுக்குரிய மாதமாக கருதப்படுகிறது. ஆடி மாதம் என்றதும் நம் நினைவுக்கு வருவது அம்மன் ஆலயங்களில் ஊற்றப்படும் கூழும், தெருவுக்கு தெரு இருக்கும் அம்மன் கோவில்களில் ஒலிக்கும் அம்மன் பாடல்களும் தான். அந்த அளவுக்கு ஆன்மிக சிறப்பு வாய்ந்த மாதமாக ஆடி மாதம் உள்ளது.</p><h2>சக்தி மாதம்</h2><p>ஆடி மாதத்தை 'சக்தி மாதம்' என்றும், 'அம்மன் மாதம்' என்றும் அழைப்பதுண்டு. ஆடி மாதம் பிறந்ததும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களும் களைகட்டிவிடும். இந்த மாதத்தில் வேத பாராயணங்கள், மந்திரங்கள் ஒலிக்க சிறப்பு வழிபாடுகள், பூஜைகள், தேர்த் திருவிழா, தீமிதி திருவிழா என அனைத்து விதமான உற்சவங்களும் வெகுசிறப்பாக நடைபெறும்.</p><p>இந்து சமயத்தில், சூரியனின் நகர்வை கொண்டு வருடத்தை உத்ராயணம், தட்சிணாயனம் என இரு பிரிவுகளாக பிரித்து வைத்துள்ளனர். சூரியன், தெற்கு திசையில் இருந்து வடக்கு நோக்கி பயணம் செய்யும் காலம், உத்ராயண காலம் ஆகும். தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உத்ராயண காலமாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த காலம் தேவர்களுக்கு பகல் பொழுதாகும்.</p> <p>சூரியன் வடக்கு திசையில் இருந்து தெற்கு நோக்கி பயணம் செய்யும் காலம், தட்சிணாயன காலம் ஆகும். ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தட்சிணாயன காலமாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆறு மாதமும் தேவர்களுக்கு இரவு பொழுதாகும். தட்சிணாயன காலம் தொடங்கும் ஆடி மாதத்தில் சூரியனின் ஆற்றல் அதிகமாக வெளிப்படும் என்கிறார்கள். அதனால்தான் ஆடி மாதத்தில் மந்திரங்கள், வேத பாராயணங்கள், ஜெயங்கள் ஆகியவற்றிற்கு அதிக சக்திகள் உள்ளன.</p><h2>ஆடிப் பட்டம் தேடி விதை</h2><p>உத்ராயண காலத்தில் சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்களை விட, தட்சிணாயன காலத்தில் (ஆடி) சூரியனின் ஒளிக்கதிர்கள் விவசாயத்திற்கு உகந்ததாக இருக்கும். இதன் காரணமாகவே ஆடி மாதத்தில் விதை விதைப்பதை முன்னோர்கள் மேற்கொண்டனர். இதைத்தான் 'ஆடிப் பட்டம் தேடி விதை' என்கிறார்கள்.</p><p>ஆடி மாதத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். அந்த சமயம் தூசிகள் மூலம் நோய்கள் பரவ அதிக வாய்ப்புள்ளன. எனவே, வேப்பிலை, மஞ்சள் கொண்டு அம்மனை வழிபடுவதும், உடலுக்கு குளிர்ச்சி தரும் கூழ் ஊற்றுவதும் பாரம்பரிய முறையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. மேலும், ஆடி மாதத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யும். இதனால் விவசாயம் செழித்து, மக்கள் மகிழ்ச்சியாக இருப்பர். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் ஆடி மாதத்தில் அம்மனுக்கு சிறப்பாக வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.</p> <p>ஆடி மாதத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறாது என்பதால், சிலர் ஆடி மாதத்தை 'பீடை மாதம்' என்று சொல்வர். ஆனால் அது உண்மையல்ல. அது, அவர்கள் அறியாமையால் சொல்வதாகும். 'பீட மாதம்' என்பதே உண்மையான பெயர் ஆகும். இறைவனை நமது மனமாகிய பீடத்தில் வைத்து வணங்கும் மாதம் என்பதே இதன் பொருள்.</p><p>குலதெய்வ வழிபாடு, கிராம தெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு, சிவ வழிபாடு, சக்தி வழிபாடு, திருமால் வழிபாடு என அனைத்து தெய்வங்களுக்கும் ஏற்ற மாதமாக ஆடி மாதம் உள்ளது. ஆடி மாதத்தில் ஆடி அமாவாசை, ஆடி பவுர்ணமி, ஆடி வெள்ளி, ஆடிப்பூரம், ஆடி சுவாதி, ஆடிப்பெருக்கு, ஆடித் தபசு, கருட பஞ்சமி, நாக சதுர்த்தி போன்ற சிறப்புமிக்க நாட்கள் பல வருகின்றன. மேலும், ஆடி மாதத்தில்தான் பெண்கள் மட்டும் வழிபடும் அவ்வையார் நோன்பும் கடைப்பிடிக்கப்படுகிறது.</p><h2>ஆடி மாத வழிபாடு</h2><p>இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆடி மாதத்தின் முதல் நாளிலேயே அருகில் உள்ள அம்மன் கோவில்களுக்கு சென்று அம்மனை வழிபடுவது மிகவும் சிறந்தது. கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள், வீட்டை சுத்தம் செய்து, பூஜையறையில் உள்ள அம்மன் படங்களுக்கு மலர்களால் அலங்கரித்து, விளக்கேற்றி வழிபடலாம். மேலும், அன்னைக்கு பொங்கல், பாயசம் நைவேத்தியமாக படைத்தும், அம்மன் பாடல்களை பாடியும் வழிபட்டு அம்மன் அருளை பெறலாம்.</p><p>ஆடி மாதத்தில் அம்பிகையிடம் வைக்கும் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் என்பதால் மனதார அன்னையை வழிபட்டு மகிழ்ச்சியான வாழ்க்கை அமைய வரம் பெறுவோம்.</p> ]]></content:encoded></item><item><title>காவலர்களுக்கான ஆள்தேர்வு அறிவிப்பை உடனே வெளியிட வேண்டும்!- அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-urges-recruitment-notification-for-police-personnel-must-be-released-immediately</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-urges-recruitment-notification-for-police-personnel-must-be-released-immediately#comments</comments><guid isPermaLink="false">005e99a8-86fc-4dde-b07b-61166c255c4d</guid><pubDate>Thu, 16 Jul 2026 04:35:15 +0000</pubDate><atom:updated>2026-07-16T04:35:15.938Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/68hjkksy/Anbumani.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/68hjkksy/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில்</p><h2><strong>அநீதி</strong></h2><p>தமிழ்நாடு காவல்துறையில் காலியிடங்களின் எண்ணிக்கை மாதத்திற்கு மாதம் அதிகரித்து வரும் நிலையில், 2026-ஆம் ஆண்டில் காவலர்கள் நியமனம் நடைபெறாது என்றும், 2027-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தான் ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்படும் என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. காவல்துறை பணியில் சேர லட்சக்கணக்கான இளைஞர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் வேளையில் ஓராண்டு முழுவதும் காவலர் தேர்வு நடத்தப்படாது என்று அறிவிப்பது பெரும் அநீதியாகும்.</p><p>தமிழ்நாட்டில் காவலர்கள் நியமனத்தை தாமதப்படுத்துவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் காவலர்கள் தேவைப்படும் மாநிலங்களில் தமிழ்நாடு தான் முதன்மை  இடத்தில் உள்ளது. போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவது, பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்தல் ஆகியவை அரசின் முதன்மைக் கடமையாக மாறியுள்ளன. இதற்காக காவல்துறையில் தனிப்பிரிவுகள்  ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவற்றை வலுப்படுத்த போதிய எண்ணிக்கையில் காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். இதற்கு தேவையான காவலர்கள் தமிழக காவல்துறையில் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.</p><h2><strong>உடனடியாக நிரப்பப்பட வேண்டும்</strong></h2><p>01.01.2025-ஆம் நாள் நிலவரப்படி தமிழக காவல்துறையில் அதிகாரிகள் அல்லாத காவலர்கள் பணியிடங்கள் ஒரு லட்சத்து 17,609 ஆகும். தமிழ்நாட்டின் மக்கள்தொகை 8 கோடி எனும் நிலையில், ஒரு லட்சம் மக்களுக்கு 147 காவலர் பணியிடங்கள் மட்டுமே உள்ளன. காவல்துறை தலைமை இயக்குனர் முதல் சார்பு ஆய்வாளர் வரையிலான அதிகாரிகள் பணியிடங்களையும் கணக்கில் கொண்டால் காவல்துறையின் மொத்த பணியிடங்கள் ஒரு லட்சத்து 33,961 ஆகும். இதன்படி பார்த்தால் ஒரு லட்சம் பேருக்கு 167.45 காவல்துறையினர் தான் உள்ளனர். இவற்றில் 10% பணியிடங்கள் காலியாக இருப்பதாகக் கொண்டால், ஒரு லட்சம் மக்களுக்கு  132 காவலர்கள் மட்டும் தான் இருப்பார்கள். இது சட்டம் - ஒழுங்கைக் காக்க எந்த வகையிலும் போதுமானதல்ல.</p><p>ஐக்கிய நாடுகள் அமைப்பின் பரிந்துரைப்படி, ஒரு லட்சம் மக்களுக்கு 222 காவலர்கள் இருக்க வேண்டும். அதன்படி பார்த்தால் தமிழ்நாட்டில் காவலர் பணியிடங்கள் ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 600 ஆக இருக்க வேண்டும். அதற்கு தமிழ்நாட்டில் 60 ஆயிரம் காவலர் பணியிடங்கள் கூடுதலாக ஏற்படுத்தப்பட வேண்டும்.  அதுமட்டுமின்றி, ஏற்கனவே காலியாக உள்ள அனைத்து பணியிடங்களும் உடனடியாக நிரப்பப்பட வேண்டும்.</p><p>ஆனால், தமிழ்நாட்டில் ஏற்கனவே காலியாக உள்ள காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கு கூட எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. தமிழக காவல்துறையில் ஒவ்வொரு ஆண்டும் 3000 முதல் 4000 காவலர்கள் ஓய்வு பெறும் நிலையில் அதனால் ஏற்படும் காலியிடங்களை நிரப்ப ஆண்டுக்கு ஒருமுறை காவலர் நியமனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் அவ்வாறு செய்யப்படுவதில்லை.</p><h2><strong>இன்று வரை முடிவுகள் வெளியிடப்படவில்லை</strong></h2><p>தமிழ்நாட்டில் கடந்த 2023-ஆம் ஆண்டில் காவல்துறை, சிறைத்துறை, தீயவிப்புத்துறை ஆகியவற்றுக்கு மொத்தம் 3359 இரண்டாம் நிலைக் காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதன்பின் 2024-ஆம் ஆண்டில் அடுத்த ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால்,  2023-ஆம் ஆண்டில் அறிவிக்கை செய்யப்பட்ட காலியிடங்களை நிரப்பும் பணியை 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை இழுத்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் அந்த மாதத்தில் தான் பணி நியமன ஆணைகளை வழங்கியது. அதனால், அந்த ஆண்டில் காவலர் ஆள்தேர்வு அறிவிக்கப்படவில்லை.</p><p>அதன்பின் 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 3644 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கை  வெளியிடப்பட்டது. அதற்கான போட்டித் தேர்வு நடத்தப்பட்டு கடந்த ஜனவரி மாதம் முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன்பின் உடற்தகுதித் தேர்வு நடத்தப்பட்டும் கூட இன்று வரை முடிவுகள் வெளியிடப்படவில்லை. அதனால் நடப்பாண்டில் காவலர்கள் நியமனத்திற்கான அறிவிக்கை வெளியாவதற்கு வாய்ப்பில்லை என்பது உறுதியாகிறது.</p><h2><strong>பாதிக்கப்படுவது இளைஞர்கள்தான்</strong></h2><p>தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் நினைத்தால் காவலர் தேர்வு நடைமுறையை 6 மாதங்களில் முடிக்க முடியும். ஆனால், ஆண்டுக்கு ஒருமுறை காவலர் தேர்வு செய்யப்படுவதை தடுப்பதற்காகவே ஆள்தேர்வு நடைமுறை திட்டமிட்டு தாமதப்படுத்தப்படுகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்கள் காவலர்கள் பணிக்காக தங்களை தயார் செய்து காத்திருக்கும் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் தான்.</p><p>தமிழ்நாட்டில் காவலர் பணிக்கான கல்வித் தகுதி 10-ஆம் வகுப்பு ஆகும். அப்பணிக்கான வயது வரம்பு 18 முதல் 26 வரை ஆகும். ஆண்டுக்கு ஒருமுறை காவலர் நியமனம் செய்யப்பட்டால் 18-26 வயது பிரிவில் உள்ளவர்களுக்கு காவலர் தேர்வில் பங்கேற்க 8 முறை வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால்,  இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே காவலர் தேர்வு நடைபெறுவதால் அவர்களுக்கு 4 வாய்ப்புகள் மட்டுமே கிடைக்கின்றன. பலர் பட்டப்படிப்பை முடித்து விட்டு இந்த பணிக்கு விண்ணப்பிப்பதால் 2 அல்லது 3 வாய்ப்புகள் மட்டுமே கிடைக்கின்றன. ஒருவரிடமிருந்து 4 முதல் 6 முறை பணி வாய்ப்புகளை பறிப்பது மிகப்பெரிய அநீதியாகும்.</p><h2><strong>நியாயப்படுத்தவே முடியாது</strong></h2><p>காவலர் பணிக்கான உடற்தகுதிக்கு உடனடியாக தயாராகிவிட முடியாது. அதற்காக குறைந்தது  6 மாதம் முதல் ஓராண்டு வரை பயிற்சி செய்ய வேண்டும். 2026-ஆம் ஆண்டில் காவலர் தேர்வுக்கான அறிவிக்கை வெளியாகும் என பயிற்சியில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும், ஆள்தேர்வு அறிவிக்கை வெளியாகதால் பயிற்சியும், நம்பிக்கையும் வீணாகி விட்டது. இதில் அவர்களின் தவறு எதுவும் இல்லை; ஆனால், தேர்வு வாரியத்தின்  அலட்சியத்திற்கான தண்டனையை அவர்கள் அனுபவிக்க வேண்டியிருப்பதை நியாயப்படுத்தவே முடியாது.</p><p>2025-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட காவலர் தேர்வுக்கான முடிவுகளை, அது தொடர்பான வழக்குகளை முடித்து  உடனடியாக வெளியிட வேண்டும். 2026-ஆம் ஆண்டுக்கான காவலர் நியமன ஆள்தேர்வு அறிவிக்கையை செப்டம்பர் மாதத்தில் வெளியிட வேண்டும். அது சாத்தியமில்லை என்றால் காவலர் பணிக்கான வயது வரம்பை பொதுப் பிரிவினருக்கு 30, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 32,  பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கு 35 ஆக தமிழக அரசு உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY: தங்கம் விலை சரிவு - இன்றைய நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-16-7-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-16-7-2026#comments</comments><guid isPermaLink="false">2534f389-c0ec-401a-8956-6df7106064dc</guid><pubDate>Thu, 16 Jul 2026 04:20:07 +0000</pubDate><atom:updated>2026-07-16T04:20:07.729Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-08/m10l3wdh/gold.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-08/m10l3wdh/gold.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சர்வதேச பொருளாதார சூழல், போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. </p><p>தங்கம் விலையானது நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,05,200-க்கும், கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.13,150-க்கு விற்பனையானது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு  ரூ.240 உயர்ந்து ரூ.1,05,440-க்கும், கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.13,180-க்கும் விற்பனையானது.</p><h2>தங்கம் விலை குறைந்தது</h2><p>இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு  ரூ.240 குறைந்து ரூ.1,05,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.13,150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><h2>வெள்ளி விலை நிலவரம்</h2><p>வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-</h2><p>15-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,440</p><p>14-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,200</p><p>13-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,600</p><p>12-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,400</p><p>11-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,400</p><h2>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-</h2><p>15-07-2026- ஒரு கிராம் ரூ.240</p><p>14-07-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>13-07-2026- ஒரு கிராம் ரூ.240</p><p>12-07-2026- ஒரு கிராம் ரூ.240</p><p>11-07-2026- ஒரு கிராம் ரூ.240</p> ]]></content:encoded></item><item><title>Sea of Azov: 116 கப்பல்கள் மீது உக்ரைன் தாக்குதல்.. ரஷியாவின் கப்பல் போக்குவரத்து முடக்கம் - ஏற்றுமதி பாதிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/azov-sea-drone-strikes-russian-shipping-halted-exports-disrupted</link><comments>https://www.maalaimalar.com/news/world/azov-sea-drone-strikes-russian-shipping-halted-exports-disrupted#comments</comments><guid isPermaLink="false">a331f900-d39b-4600-8dd2-4a63742996b0</guid><pubDate>Thu, 16 Jul 2026 04:02:45 +0000</pubDate><atom:updated>2026-07-16T04:02:45.965Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உக்ரைன் போர்,Russia,Ukraine War,exports,ரஷியா,ஏற்றுமதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/btv97z1d/sea-of-azov.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ sea of azov]]></media:title><media:description type="html"><![CDATA[ sea of azov]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/btv97z1d/sea-of-azov.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/more-than-2-million-military-casualties-in-ukraine-war-report">உக்ரைனின் </a>டிரோன் தாக்குதலால்  அசோவ் கடலில் ரஷியாவின்  கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது. </p><p>அசோவ் கடல் என்பது <a href="https://www.maalaimalar.com/news/world/modi-stopped-russian-nuclear-strike-on-ukraine-claims-polish-deputy-foreign-minister">ரஷியா </a>மற்றும் உக்ரைன் எல்லைகளுக்கு நடுவே அமைந்துள்ள, கெர்ச் நீரிணை வழியாகக் கருங்கடலுடன் இணையும் ஒரு கடலாகும்.</p><h2>போக்குவரத்து நிறுத்தம் </h2><p>இந்நிலையில் உக்ரைனின் தொடர் டிரோன் தாக்குதல்களால் டான் அசோவ் கால்வாய் மற்றும் கெர்ச் நீரிணை வழியாக செல்லும் ரஷ்யக் கப்பல்களின் இயக்கம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. </p><p>செயற்கைக்கோள் படங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் தரவுகள் இதை உறுதிப்படுத்தியுள்ளன. </p> <h2>இலக்கு</h2><p>கடந்த 9 நாட்களில் மட்டும் அசோவ் கடல் பகுதியில் ரஷியாவுக்கு சொந்தமான 116 கப்பல்களை உக்ரைனிய டிரோன்கள் குறிவைத்து தாக்கியுள்ளதாக உக்ரைனின் டிரோன் படைப்பிரிவுத் தளபதி ராபர்ட் ப்ரோவ்டி தெரிவித்துள்ளார்.</p><p>ரஷியாவின் போர்க்கப்பல்கள் மட்டுமின்றி, சரக்குக் கப்பல்களும் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன.</p> <h2>ஏற்றுமதி முடக்கம்</h2><p>ரஷியாவின் எண்ணெய், கோதுமை, சூரியகாந்தி எண்ணெய், எஃகு ஏற்றுமதி இந்த அசோவ் கடல் துறைமுகங்கள் வழியாகவே நடக்கிறது.</p><p>குறிப்பாக ரஷியா தனது நாட்டின் ஒட்டுமொத்த கோதுமை ஏற்றுமதியில் சுமார் 25 சதவீதத்தை இதன் வழியாகவே உலக நாடுகளுக்கு அனுப்பி வைக்கிறது.</p><p>சர்வதேச கோதுமைச் சந்தையில் 20 சதவீத பங்கைக் கொண்டு, உலகின் மிகப்பெரிய கோதுமை ஏற்றுமதியாளராக ரஷியா திகழ்கிறது.</p><p>தற்போதைய கப்பல் போக்குவரத்து முடக்கத்தால் சர்வதேச சந்தையில் கோதுமைக்கான வர்த்தக விலை ஏற்கனவே உயரத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.</p><p>இந்தத் முற்றுகை நீடித்தால் ரஷியாவுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும் என கணிக்கப்படுகிறது.</p><p>மாற்றுப் பாதையாக கருங்கடல் துறைமுகங்களை ரஷியா பயன்படுத்த நினைத்தாலும், அறுவடைக் கால ஏற்றுமதியை தாங்கும் கொள்ளளவு அந்தத் துறைமுகங்களுக்கு இல்லை எனக் கூறப்படுகிறது.</p> <h2>கிரீமியா</h2><p>உக்ரைன் தற்போது ரஷியாவின் விநியோகச் சங்கிலியை உடைக்கும் வியூகத்தைக் கையில் எடுத்துள்ளது.</p><p>ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியா தீபகற்பத்தை ரஷியாவின் பிரதான நிலப்பரப்பில் இருந்து தனிமைப்படுத்துவதும், அசோவ் கடல் வழியாக நடக்கும் ரஷியாவின் வர்த்தக ஏற்றுமதியை முடக்கி அதன் பொருளாதாரத்தை நலிவடைய செய்வதும் தான் உக்ரைனின் முக்கிய நோக்கம்</p><p>அசோவ் கடல் பாதையை 2003 ஒப்பந்தப்படி ரஷியா - உக்ரைன் நாடுகள் பகிர்ந்து வந்தன.</p><p>ஆனால், 2014 இல் கிரிமியாவை ரஷியா கைப்பற்றியதில் இருந்து சர்ச்சை எழுந்தது. 2022 முழு அளவிலான போருக்குப் பின் இதனை ரஷியாவுக்கு சொந்தமான கடல் என அதிபர் புதின் வெளிப்படையாக அறிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>கூடங்குளம் அணுமின் நிலைய ரகசிய ஆவணங்கள் கசிந்ததா? - NPCIL விளக்கம்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kudankulam-nuclear-power-plant-data-leaked</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kudankulam-nuclear-power-plant-data-leaked#comments</comments><guid isPermaLink="false">912f8b8f-f798-4013-b010-ce630a60d7db</guid><pubDate>Thu, 16 Jul 2026 03:58:09 +0000</pubDate><atom:updated>2026-07-16T03:58:09.220Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Kudankulam Nuclear Power Plant,கூடங்குளம் அணுமின் நிலையம்,NPCIL,ரகசிய ஆவணங்கள் கசிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/ci57mfl4/ncpil.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kudankulam Nuclear Power Plant - NPCIL]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/ci57mfl4/ncpil.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான முக்கிய ஆவணங்கள் இணையத்தில் கசிந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>கூடங்குளம் அணுமின் நிலையம்</h2><p>நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷிய நாட்டின் உதவியுடன் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரு அலகுகள் இங்கு தற்போது செயல்பாட் டில் உள்ள நிலையில், மேலும் நான்கு அலகுகளுக்கான கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்தியாவின் அணுமின் தேவையைப் பூர்த்தி செய்வதில் இந்த மின் நிலையம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.</p><h2>ரகசிய ஆவணங்கள் கசிவு?</h2><p>இந்த நிலையில், நேற்று 'வேர்ல்டு லீக்ஸ்' என்ற ஹேக்கர் குழு கூடங்குளம் அணுமின் நிலையத்தின் வரைபடங்கள் மற்றும் உதிரிபாகங்கள் வினியோகிப்பாளர் விவரங்கள் அடங்கிய ரகசிய ஆவணங்களை இணையதளம் மூலம் பொதுவெளியில் வெளியிட்டுள்ளதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் இந்த தகவலை தேசிய அணுசக்தி ஆணையம் மறுத்து உள்ளது.</p><p>இருப்பினும் இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">கூடங்குளம் அணுமின் நிலையம்</a> தொடர்பான ரகசிய ஆவணங்கள் கசிந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p> <h2>பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்</h2><p>இந்த விவகாரம் தொடர்பாக மூத்த அணுசக்தி விஞ்ஞானி ஒருவர் கூறுகையில், இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட தரவு கசிவுக்கும் அணுசக்தி பாதுகாப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது அணுமின் நிலையத்தின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்று தெரிவித்தார்.</p><p>இதுதொடர்பாக NPCIL நிர்வாக இயக்குநர் ராஜேஷ் கூறுகையில், பாதுகாப்பு தகவல்கள் எதுவும் திருடப்படவில்லை. அணு பாதுகாப்பு தொடர்பான எந்த ரகசிய தகவலும் வெளியேறவில்லை. முக்கிய தகவல்கள் கசிந்தது என்பது உண்மையல்ல என்று விளக்கம் அளித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>8000mAh பேட்டரி, 50MP கேமரா... வேறலெவல் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த ரியல்மி!</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/8000mah-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF-50mp-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/8000mah-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF-50mp-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF#comments</comments><guid isPermaLink="false">c4a21a86-f859-4825-94d2-f9409c4b8aca</guid><pubDate>Thu, 16 Jul 2026 03:38:00 +0000</pubDate><atom:updated>2026-07-16T03:38:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Realme,ரியல்மி,smartphone,ஸ்மார்ட்போன்</media:keywords><media:content height="1080" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-15/m6jp734f/17836860553537291f76624c34081b18f4b55c93190e8.png.webp" width="1080"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-15/m6jp734f/17836860553537291f76624c34081b18f4b55c93190e8.png.webp?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் புது ஸ்மார்ட்போனை நார்சோ சீரிஸ் பிரான்டிங்கில் அறிமுகம் செய்தது. நார்சோ 100x என அழைக்கப்படும் புது ஸ்மார்ட்போன் மிட் ரேஞ்ச் பிரிவில் நிலைநிறுத்தப்ட்டுள்ளது. </p><p><strong>சிறப்பம்சங்கள்:</strong></p><p>அம்சங்களை  பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 6.8 இன்ச் HD+ 720x1570 பிக்சல் எல்.சி.டி. பேனல், 144 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 பிராசஸர், ARM Mali G57 GPU, அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ரியல்மி யுஐ 7 வழங்கப்பட்டுள்ளது.</p><p>புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, இரண்டாவது லென்ஸ், 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பிரத்யேக ஏஐ அம்சங்கள் புகைப்படங்களை மேம்படுத்தும் நோக்கில் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 8000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. மேலும், 45வாட் சார்ஜிங், ரிவர்ஸ் சார்ஜிங் வசதி உள்ளது.</p><p>இந்த ஸ்மார்ட்போனின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாக இது மிலிட்டரி தர உறுதித்தன்மைக்கான சான்று பெற்றுள்ளது. இத்துடன் IP65 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி, பின்புறத்தில் ஏ.ஐ. பல்ஸ் எல்.இ.டி. லைட் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனிற்கு இரண்டு ஓ.எஸ். அப்கிரேடுகளும், மூன்று ஆண்டுகள் வரை செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படுகிறது.</p><p><strong>விலை விவரங்கள்:</strong></p><p>புதிய ரியல்மி நார்சோ 100x ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 20,999 என்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 22,999 என்றும் 6 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 24,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.</p><p>அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு வங்கி சலுகைகளின் கீழ் ரூ. 2000 உடனடி தள்ளுபடி மற்றும் கூப்பன் வடிவில் ரூ. 500 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை 22-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அமேசான் வலைதளத்தில் விற்பனைக்கு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>லிபியா அருகே அகதிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்து.. 50 பேர் மாயம் - உயிரிழப்பு என அச்சம்</title><link>https://www.maalaimalar.com/news/world/libya-migrant-boat-capsize-over-50-dead-or-missing-in-mediterranean-near-libya</link><comments>https://www.maalaimalar.com/news/world/libya-migrant-boat-capsize-over-50-dead-or-missing-in-mediterranean-near-libya#comments</comments><guid isPermaLink="false">0bfb5400-6bab-451a-88ae-6bf5c6e29a13</guid><pubDate>Thu, 16 Jul 2026 03:02:26 +0000</pubDate><atom:updated>2026-07-16T03:02:26.714Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அகதிகள்,refugees,படகு கவிழ்ந்து விபத்து,லிபியா,Libya,boat capsize accident</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/whje676r/boat-capsize.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கோப்புப் படம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ கோப்புப் படம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/whje676r/boat-capsize.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வட ஆபிரிக்க நாடான லிபியா அருகே மத்திய தரைக்கடலில்  60 <a href="https://www.maalaimalar.com/news/world/majoritarianism-is-killing-humanity-the-bitter-truth-world-refugee-day-says-777308">அகதிகள் </a>சென்ற படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. </p><h2>விபத்து </h2><p>ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு சுமார் 60 அகதிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட படகு கடந்த செவ்வாய்க்கிழமை லிபியாவின் கிழக்குக் கடலோர நகரான தோப்ருக் அருகே உள்ள பர்தா தீவுக்கு அருகே கவிழ்ந்து விபத்து நேரிட்டுள்ளது.</p><p> இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்படக் குறைந்தது 50 பேர் உயிரிழந்துள்ளனர் அல்லது மாயமாகியுள்ளனர் என்று லிபிய கடலோரக் காவல் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் உயிரோடிருக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. </p><p>விபத்தில் சிக்கியவர்களில் 10 பேர் மட்டும் எப்படியோ நீந்திப் பர்தா தீவை அடைந்து உயிர் தப்பினர். </p><p>கடலில் மூழ்கிய மற்ற அகதிகளைத் தேடும் பணிகளை லிபியக் கடலோரக் காவல் படையினர் தொடர்ந்து தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.</p><h2>லிபியா - கடத்தல் புள்ளி</h2><p>ஐரோப்பிய நாடுகளில் புதிய வாழ்வை தேடி மத்திய தரைக்கடலைக் கடக்க முயலும் அகதிகளுக்கு, லிபியா தொடக்கப் புள்ளயாக உள்ளது.</p><p>கடந்த 2011ல் நேட்டோ ஆதரவு பெற்ற புரட்சியின் மூலம் லிபியாவின் நீண்டகால அதிபரான கடாபி வீழ்த்தப்பட்டு கொல்லப்பட்டார்.</p><p>அதன்பின்னர், அங்கு நிலவி வரும் அரசியல் குழப்பங்களையும் உள்நாட்டுக் கலவரங்களையும் கடத்தல்காரர்கள் சாதகமாக்கிக் கொண்டுள்ளனர்.</p><p>ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வறுமை மற்றும் போர் காரணமாக ஓடிவரும் அகதிகளை ஐரோப்பாவிற்கு அனுப்பும் முக்கிய மையமாக லிபியாவை மாற்றியுள்ளனர்.</p><p>அதிக பணத்தைப் பெற்றுக்கொண்டு, தகுதியற்ற மற்றும் மிகவும் பலவீனமான சிறிய படகுகளில் நூற்றுக்கணக்கான அகதிகளை அடைத்து அனுப்புகின்றனர்.</p><p>இதனால் கடல் பயணத்தின்போது அடிக்கடி விபத்துகள் நேரிட்டு ஆயிரக்கணக்கானோர் பலியாகின்றனர்.</p><h2>அகதிகள் பலி</h2><p>சர்வதேச இடம்பெயர்வு அமைப்பின் தரவுகளின்படி, இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் மே 16 வரையிலான குறுகிய காலத்திற்குள் மட்டும், மத்திய தரைக்கடல் பகுதியில் 800க்கும் மேற்பட்ட அகதிகள் உயிரிழந்துள்ளனர் அல்லது மாயமாகியுள்ளனர்.</p><p>கடந்த ஆண்டு 1,300க்கும் அதிகமான அகதிகள் உயிரிழந்தது அல்லது காணாமல் போனது பதிவாகியுள்ளது.</p><p>கடந்த மாதம் கிழக்கு லிபியக் கடற்கரையில் நேரிட்ட மற்றொரு படகு விபத்தில் 51 அகதிகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை (17.07.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-28</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-28#comments</comments><guid isPermaLink="false">bcf0a430-c401-4afa-98b7-1fc8b8b6071d</guid><pubDate>Thu, 16 Jul 2026 03:01:49 +0000</pubDate><atom:updated>2026-07-16T03:01:49.952Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மின்தடை,TNEB,மின்சார வாரியம்,Power Cut,தமிழ்நாடு மின்சார வாரியம்,சென்னையில் மின்தடை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/0quguze5/powercut0.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/0quguze5/powercut0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை:</p><p>சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் <a href="https://www.maalaimalar.com/topic/சென்னையில்-மின்தடை">மின் தடை</a> செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><p>அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (17.07.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.  அதன்படி, </p><h2><strong>பெசன்ட் நகர்</strong></h2><p>சாஸ்திரி நகர், காமராஜர் சாலை, வால்மீகி தெரு, கலாஷேத்ரா சாலை மற்றும் அவென்யூ, லட்சுமிபுரம், ஸ்ரீ ராம் நகர், குமரகுரு 1 முதல் 4வது தெருக்கள் வரை, பிள்ளையார் கோவில் தெரு, முத்துலட்சுமி தெரு, 1 வது பிரதான சாலை மற்றும் 1 வது அவென்யூ, பீச் ஹோம் அவென்யூ, தாமோதரபுரம் நியூ தெரு. </p><h2><strong>தரமணி</strong></h2><p>இந்திரா நகர், கஸ்தூரிபாய் நகர் 3வது மற்றும் 4வது பிரதான சாலை, 3வது குறுக்குத் தெரு, கெனால் வங்கி சாலை, நேரு நகர் 2 வது முதல் 4 வது பிரதான சாலை வரை, தனலட்சுமி அவென்யூ 1வது முதல் 4 வது தெரு வரை.</p><h2><strong>பல்லாவரம்</strong></h2><p>டிடிகே கம்பெனி, சாவடி தெரு, ஐ.எச்.எப்.டி. பிளாட்ஸ், ஜி.எஸ்.டி. சாலை, பல்லாவரம் பேருந்து நிலையம் முதல் பாண்ட்ஸ் பாலம் வரை, அருந்ததிபுரம், வள்ளுவர் பேட்டை, ரங்கநாதன் தெரு, ஐ.ஜி. சாலை சிக்னல், ரங்கநாதன் சுரங்கப்பாதை அம்பேத்கர் சிலை, கனரா வங்கி.</p><h2><strong>ஆவடி</strong></h2><p>முருகப்பா பாலிடெக்னிக் கல்லூரி, செக் போஸ்ட், என்.எம். சாலை, திருமலைராஜபுரம், நந்தவனம் மேட்டூர், கன்னிகாபுரம், நேரு பஜார் , கஸ்தூரிபாய் நகர்.</p><h2><strong>புழல்</strong></h2><p>சூரப்பட்டு, புழல், ரெட்ஹில்ஸ் மார்க்கெட் சாலை, காவாங்கரை, சண்முகபுரம், கதிர்வேடு, புத்தகரம், மெட்ரோவாட்டர், புழல் சிறை 1 2 மற்றும் 3. </p>]]></content:encoded></item><item><title>பயணிகள் கவனத்திற்கு... நாளை 8 மின்சார ரெயில்கள் ரத்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/8-electric-trains-between-beach-and-chengalpattu-cancelled-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/8-electric-trains-between-beach-and-chengalpattu-cancelled-tomorrow#comments</comments><guid isPermaLink="false">259bea2a-7484-422f-aecb-3698fce6d091</guid><pubDate>Thu, 16 Jul 2026 02:48:25 +0000</pubDate><atom:updated>2026-07-16T02:48:25.382Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Southern Railway,பராமரிப்பு பணி,ரெயில் ரத்து,maintenance work,train cancel,தெற்கு ரெயில்வே</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/05/30/13575884-beachtrain.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chennai Local train]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/05/30/13575884-beachtrain.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87">தெற்கு ரெயில்வே</a> வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>சென்னை எழும்பூர் - விழுப்புரம் வழித்தடத்தில் கூடுவாஞ்சேரி பணிமனையில் நாளை(வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, நாளை இந்த வழித்தடத்தில் 8 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து காலை 11.28, மதியம் 12.02, 12.30, 1.45 ஆகிய நேரங்களில் செங்கல்பட்டுக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.</p><p>மறுமார்க்கமாக செங்கல்பட்டில் இருந்து மதியம் 1.35, 2.15, 3 மணி, 4.25 ஆகிய நேரங்களில் கடற்கரை செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படும். பயணிகளின் வசதிக்காக கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு காலை 11.28, மதியம் 12.02, 12.30, 1.45 ஆகிய நேரத்திலும், தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு மதியம் 2.30, 3.15, 4 மணி, 5.24 ஆகிய நேரத்திலும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item></channel></rss>