<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 31 Aug 2026 08:35:12 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: தூத்துக்குடியில் புதிய அனல்மின் நிலையம் அமைக்கப்படும்: முதலமைச்சர் விஜய் அறிவிப்பு - 31 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-31-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-31-august-2026#comments</comments><guid isPermaLink="false">8cbab00b-8cfb-4b49-bbe3-619e9e0b783c</guid><pubDate>Mon, 31 Aug 2026 03:46:20 +0000</pubDate><atom:updated>2026-08-31T08:04:14.229Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/2ul5ien7/vijay1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/2ul5ien7/vijay1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நகராட்சியில் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்ற ஆய்வு செய்துவிட்டு அமைச்சர் ரமேஷ் பேச வேண்டும்.</p><p>மல்லாச்சிபுரம் கிராமம் ஊராட்சியில் இருந்த நிலையில் தற்போதுதான் நகராட்சியில் சேர்க்கப்பட்டுள்ளது.</p><p>மல்லாச்சிபுரம் தற்போதுதான் நகராட்சியில் இணைக்கப்பட்டுள்ளது. இன்னும் நடைமுறைக்கு வரவில்லை - கேஎன்.நேரு</p><p>மல்லாச்சிபுரம் ஊராட்சியில் 300 பேர் வசிக்கும் நிலையில் நீர், கழிப்பிடம் சாலை உள்ளிட்ட வசதிகளின்றி அவதி.</p><p>கடந்த ஆட்சியில் திருச்சி மல்லாட்சிபுரத்தில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் இருந்தது.</p><p>தவெக ஆட்சி அமைந்த பிறகு மல்லாச்சிபுரம் மக்களிடம் சென்று கோரிக்கை கேட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன - அமைச்சர் ரமேஷ்</p> <p>கிருதுமால் நதி சாக்கடையாக மாற்றிவிட்டது.</p><p>மதுரையில் கழிவுநீர் அடைப்பு பிரச்சனை அதிகமாக உள்ளது, பாதாள சாக்கடையை மேம்படுத்த வேண்டும் -  எம்எல்ஏ தங்கபாண்டியன்</p><p>திமுக ஆட்சியில் காலத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடிய போதும் வருவாய் அதிகரித்தது எப்படி? என அமைச்சர் வினோத் பதில் கேள்வி</p> <p>717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டும் டாஸ்மாக்கில் அதிக வருவாய் எப்படி என்ற திமுகவினரின் கேள்விக்கு அமைச்சர் வினோத் விளக்கம்</p><p>நிதி ஒதுக்கியதாக கூறுவது தவறு, சென்னை மாநகராட்சிக்கு நிதி ஒதுக்கவில்லை என கறுப்பு உடை அணிந்து வந்தனர் - கே.என்.நேரு</p><p>சென்னை மேயர் அரசுடன் இணைந்து செயல்படுவதில்லை, குற்றச்சாட்டு மட்டும் தான் சொல்கிறார்.</p><p>அனைத்து மாநகராட்சிகளையும் தவெக விரைவில் கைப்பற்றும் - அமைச்சர் ஆதவ்</p><p>இப்போது நடவடிக்கை எடுக்கலாம் என்றால் மேயர்கள், நகராட்சி தலைவர்கள் எங்களுடன் இணைந்து செயல்படுவதில்லை.</p><p>திட்டத்திற்கு நிதி ஒதுக்கினால், அதனை செயல்படுத்தும் இடத்தில் திமுகவை சேர்ந்த பொறுப்பாளர்கள் தான் உள்ளனர் - அமைச்சர் ஆதவ் </p> <p>ஒவ்வொரு நகரிலும் பெண்கள் காலி குடங்களுடன் குடிநீர் லாரியை எதிர்நோக்கி நிற்கின்றனர்.</p><p>ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர் குழாய்கள் மூலம் கொண்டு சேர்க்கப்படவில்லை - அமைச்சர் ஆதவ்</p><p>மக்களின் அடிப்படைத் தேவைகள் ஏதும் முந்தைய ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை - த.வெ.க.</p><p>மத்திய அரசு அறிவுறுத்தலால் கடந்த ஆட்சியில் வரி உயர்த்தப்பட்டது - கே.என்.நேரு</p><p>கடந்த ஆட்சியில் தவறு செய்த யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது. திமுக ஆட்சியில் ஊழல் வெளிவந்தது என்றால் மேலிடத்திற்கு பங்கு சரிவர செல்லாததே காரணம் - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>மதுரையில் மட்டுமல்ல அனைத்து மாநகராட்சிகளிலும் முறைகேடு நடந்துள்ளது - அமைச்சர் ஆதவ்</p><p>கடந்த ஆட்சியில் மாநகராட்சிகளில் ஊழல் நடைபெற்றிருந்தால் நடவடிக்கை எடுங்கள் ரைவில் மாநகராட்சியில் நடந்த முறைகேடுகளை அம்பலப்படுத்துவோம்  - கே.என்.நேரு</p> <p>திமுக ஆட்சியில் குற்றமிழைத்தவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சொத்து வரி முறைகேடு குற்றச்சாட்டில் 5 அதிகாரிகள் நீக்கம் செய்யப்பட்டனர்  - கே.என்.நேரு</p><p>மதுரை மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடு - தவெக எம்எல்ஏ தங்கப்பாண்டி குற்றச்சாட்டு</p><p>பரிமிளகாய், பொய்யூர் கத்தரி, சிதம்பரம் உளுந்து, கருமந்துறை கடுக்காய் உள்ளிட்ட 10 வேளாண் பொருளுக்கு புவிசார் குறியீடு</p><p>அதிக சாகுபடி செய்யும் 40 கரும்பு விவசாயிகள் மகாராஷ்டிரா அழைத்துச் செல்லப்படுவர்.</p><p>பாராமதியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்திற்கு விவசாயிகள் கண்டுணர்வு பயணம் அழைத்துச்செல்லப்படுவர் - அமைச்சர் வினோத்</p> <p>செங்கல்ராயன், திருத்தணி, வேலூர், பெரம்பலூர் சர்க்கரை ஆலைகள் ரூ.6 கோடியில் தானியங்கி மயமாக்கப்படும்.</p><p>285 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு 600 விற்பனை முனையக்கருவிகள் வழங்கப்படும் -  அமைச்சர் வினோத்</p><p>மூங்கில்துறைப்பட்டு, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் ரூ.8.58 கோடியில் மின் மோட்டார்கள் நிறுவப்படும்.</p><p>தேனி வளர்ப்பினை ஊக்கப்படுத்த ரூ.6.84 கோடியில் தேனி வளர்ப்பு பெட்டி விவசாயிகளுக்கு வழங்கப்படும் - அமைச்சர் வினோத்</p> <h2>வேளாண் துறையின் கீழ் அமைச்சர் வினோத் அறிவித்த புதிய அறிவிப்புகள்</h2><p>தஞ்சை, மயிலாடுதுறை, சேலம், திருப்பூர், திருவாரூர் உள்ளிட்ட 9 இடங்களில் புதிய விதை நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும்.</p><p>திருவாரூர், தருமபுரி, ஈரோடு, ராணிப்பேட்டையில் புதிய துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடங்கள் அமைக்கப்படும்.</p> <p>பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான வாசிப்பாளர் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும்.</p><p>வாசிப்பாளருக்கான உதவித்தொகையை 2 மடங்கு உயர்த்தி அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவிப்பு</p><p>செவித்திறன் குறைபாடு உடைய மாணவர்களுக்கு மெய்நிகர் கற்றல் திட்டம் செயல்படுத்தப்படும்.</p><p>6 முதல் 8-ம் வகுப்பு பயிலும் செவித்திறன் குறைபாடு உடைய மாணவர்களுக்கு மெய்நிகர் கற்றல் திட்டம் - அமைச்சர் ஜெகதீஸ்வரி</p> <p>அறிவுசார் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக 3 ஆரம்ப நிலை பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.</p><p>புற உலக சிந்தனையற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு புதிதாக 2 இல்லங்கள் அமைக்கப்படும்.</p><p>அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்காக கடலூர் அரிசிபெரியாங்குப்பம் பகுதியில் ரூ.10 கோடியில் 2 இல்லங்கள் அமைக்கப்படும்  - அமைச்சர் ஜெகதீஸ்வரி</p> <p>மனநலம் பாதிக்கப்பட்டோருக்காக 10 சிறப்பு இல்லங்கள் ரூ.1.82 கோடியில் கட்டப்படும்.</p><p>அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில்பயிற்சி அளிக்க 10 இல்லங்கள் அமைக்கப்படும்.</p><p>முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்காக கூடுதலாக 2 இல்லங்கள் அமைக்கப்படும்  - அமைச்சர் ஜெகதீஸ்வரி</p> <h2>சமூக நலன் மகளிர் உரிமைத்துறை புதிய அறிவிப்புகள்</h2><p>அரசு கட்டடங்களில் குழந்தை மையங்களில் ரூ.12 கோடியில் பாதுகாப்பு அம்சம் மேம்படுத்தப்படும்.</p><p>ஆரம்பகால குழந்தை பராமரிப்பு, ஏஐ கூறுகளுடன் கூடிய கல்விசார் காணொளிகள் உருவாக்கப்படும்.</p><p>உயரக்குறைவு மாற்றுத் திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்படும் - அமைச்சர் ஜெகதீஸ்வரி</p><p>டாஸ்மாக் பணியாளர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.</p><p>கள்ளச்சாராயம் விற்று திருந்தியவர்களுக்கான ரூ.1 லட்சம் நிதி வழங்குவதற்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு.</p><p>போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்திற்கான நிதி ரூ.5 கோடியில் இருந்து ரூ.10 கோடியாக உயர்வு.</p><p>கள்ளாச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க மெத்தனால் பயன்பாட்டு கொள்கை உருவாக்கப்படும் - அமைச்சர் விக்னேஷ்</p><p>மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறையில் அமைச்சர் விக்னேஷ் புதிய அறிவிப்புகள்</p><p>சட்டசபையில் மதுவிலக்கு ஆயத்தீர்வை மானிய கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் விக்னேஷ் 6 புதிய அறிவிப்புகள் வெளியிட்டார்.</p><p>கள்ளச்சாராயம் விற்று திருந்தியவர்களுக்கு தரப்படும் மறுவாழ்வு நிதி ரூ.50,000-லிருந்து ரூ.1 லட்சமாக உயர்வு.</p><p>கள்ளாச்சாராயத்திற்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்த மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு நவீன உபகரணம் வழங்கப்படும்.</p> <p>வார விடுப்பு, ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, முதல்வரை சந்திப்பது தொடர்பாக நல்ல செய்தி வரும்.</p><p>தூய்மைப் பணியாளர்களுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தி மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>காலை சிற்றுண்டிக்கு மாற்றாக பணமாக தருவது பற்றி பரிசீலனை. உணவிற்கு பதில் தூய்மைப் பணியாளர்களுக்கு விரைவில் உணவுப்படி வழங்கப்படும்.</p><p>உடை மாற்றும் அறையுடன் மூடிய பிரத்யேக கழிப்பட வசதி ஏற்படுத்தி தரப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்</p> <p>தூய்மைப் பணியாளர்களுக்காக கழிப்பிடம், உடை மாற்றும் அறைகள் செப்.15-ந்தேதிக்குள் ஏற்படுத்தி தரப்படும்.</p><p>தூய்மைப் பணியாளர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு கையுறை வழங்கப்படும். வரும் காலங்களில் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>பணியின்போது பலியான தூய்மைப் பணியாளர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>பலியான தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தருவது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>அமைச்சர் ராஜ்மோகன் உரை</p><p>தூய்மைப் பணியாளர்கள் உண்மையில் பாவம் தான். அவர்கள் தூய்மை ஊழியர்கள் அல்ல தூய்மை தேவதைகள்.</p><p>போராடும் தூய்மைப் பணியாளர்கள் மீது எந்தவித அடக்குமுறையும் கூடாது என காவல்துறையிடம் கூறப்பட்டுள்ளது. </p><p>தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம்</p><p>தமிழர்களை மீட்பது குறித்து திபெத், சீன அரசுடன் இணைந்து மத்திய அரசு செயல்படுகிறது.</p><p>305 பேர் கைலாஷ் யாத்ரா பயணம் மேற்கொண்டனர். அவர்களில் 220 பேர் பாதுகாப்பாக உள்ளனர் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</p> <p>நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழர்களின் நிலை குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.</p><p>பிற மாநிலம், நாடுகளில் இருந்து சுற்றுலா சென்ற தமிழர்கள் 34 பேர் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன  - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</p><p>கைலாஷ் யாத்திரை சென்றவர்களில் 84 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை.</p><p>வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியை சந்தித்து தமிழர்களை மீட்பது குறித்து ஆலோசித்தோம் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</p><h2>நேபாள பெருவெள்ளம் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உரை</h2><p>நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழர்களை மீட்க ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>கடந்த 28-ந்தேதி 21 தமிழர்கள் டெல்லி அழைத்து வரப்பட்டு சென்னை அனுப்பி வைக்கப்பட்டனர்.</p><h2>அமைச்சர் விஜய் பாலாஜி பதில்</h2><p>மக்களுக்கு பிடித்த பொருளை தரமாக வழங்குவதே எங்களது நோக்கம்.</p><p>பொங்கலுக்கு ஜரிகை வைத்த சேலை வழங்கப்பட உள்ளது.</p><p>பொங்கலுக்கு கொடுக்கும் வேட்டிகளை அமைச்சர்கள் அணிந்து வருவோம்.</p><p>கடந்த ஆட்சியில் கொடுக்கப்பட்ட வேட்டிகளை எதிர்க்கட்சிகள் அணிய வேண்டும்.</p><p>எது தரமான வேட்டி என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.</p> <p>கைத்தறி நெசவாளர்களுக்காக உருவாக்கப்பட்ட திட்டம் தான் விலையில்லா வேட்டி-சேலை திட்டம் - ஆஸ்டின்</p> <p>நெசவாளர் சங்கத்தின்ருக்கு முறையாக அழைப்பு விடுத்து கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தியிருக்க வேண்டும் - ஆஸ்டின் </p><p>8 முழ வேட்டிக்கு மாற்றாக 4 முழ வேட்டி கொடுப்பது குறித்து நெசவாளிகளிடம் கருத்து கேட்கப்படவில்லை - ஆஸ்டின் குற்றச்சாட்டு</p><p>விலையில்லா வேட்டி-சேலை உற்பத்தி குறித்து எம்எல்ஏக்கள் ஆஸ்டின் நித்யானந்தன் பேரவையில் கவனஈர்ப்பு கொண்டு வந்தார்.</p><p>விலையில்லா வேட்டி 8 முழத்திற்கு பதிலாக 4 முழ வேட்டி வழங்கப்படும் என்ற அரசின் ஆணையால் விவசாயிகள் பாதிப்பு - ஆஸ்டின்</p><p>பெஞ்ச் மேல் ஏறி நிற்கும் தண்டனையை நான் வழங்க மாட்டேன்.</p><p>சபாநாயகர் இருக்கையில் முன்னர் அமர்ந்தது போல் அமராமல் இருக்கும் வரை அனைவரையும் அனுமதிக்க தயாராக இருக்கிறேன் - சபாநாயகர்</p><p>பெஞ்ச் மேல் ஏறியும் கவனத்தை ஈர்க்கலாம் என எ.வ.வேலு கூறுகிறார் - தங்கம் தென்னரசு</p><p>பொங்கலுக்கு வழங்கும் இலவச வேட்டி சேலை தொடர்பாக திமுக கவன ஈர்ப்பு தீர்மானம்</p><p>நேரலை வழங்குவது இளைஞர்களுக்கு அரசியல் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. அவைக்குறிப்பில் நீக்கும் அளவுக்கு ஏன் பேச வேண்டும் என எம்எல்ஏக்கள் சிந்திக்கக்கூடாதா? </p><p>நான் கூறிய பின்னும் ஓ.எஸ்.மணியன் நின்றுகொண்டே இருக்கிறார்.</p><p>10 பேர் சேர்ந்து எழுந்து நிற்பதை ஏற்க முடியாது. கொறடா உத்தரவை உறுப்பினர்கள் கேட்க வேண்டும்  சபாநாயகர்</p> <p>உறுப்பினர்கள் என்ன பேசுகிறார்கள் என மக்கள் உன்னிப்பாக கவனிக்கின்றனர். அவை மாண்பை குலைக்கும் எம்எல்ஏக்களை அம்பலப்படுத்துவதில் தவறில்லை என மக்கள் கருத்து. அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது மீம்ஸ் ஆக வருகிறது என புகார் கூறினர் - சபாநாயகர்</p> <p>6 மாதத்தில் ஒலிம்பிக் நகரம் குறித்த நல்ல செய்தி வரும்.</p><p>ஒரு விளையாட்டு நகரத்தை உருவாக்க வேண்டுமெனில் ஒலிம்பிக் தரத்தில் உருவாக்க வேண்டும், அதுதான் அரசின் கொள்கை - அமைச்சர் ஆதவ்</p><p>ஸ்போர்ட்ஸ் சிட்டிக்காக புதிய கட்டமைப்பு கொள்கை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது.</p><p>விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு விடுதிகள் உருவாக்க உள்ளோம் - அமைச்சர் ஆதவ்</p> <p>ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டத்தை ரத்து செய்யவில்லை. அதனை மறுஉருவாக்கம் செய்து வருகிறோம்.</p><p>விளையாட்டு நகரத்தை ஒலிம்பிக் தரத்தில் உருவாக்க வேண்டும்.</p><p>திமுக அரசு அறிவித்த திட்டத் ரத்து செய்யப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கூறிய நிலையில் அமைச்சர் ஆதவ் விளக்கம் அளித்தார்.</p> <p>காஞ்சிபுரம் மதுரமங்கலத்தில் ரூ.175 கோடியில் சிப்காட் மூலம் செமி கண்டெக்டர் நிறுவனம் அமைக்கப்படும்.</p><p>கோவையில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் டிஜிட்டல் நிதி மையம் அமைக்கப்படும் - முதலமைச்சர் விஜய்</p> <p>புதிய அனல் மின், நீர்மின் நிலையங்கள் அமைக்க கடந்த ஆட்சியில் பெரிய அளவிலான நடவடிக்கை முன்னெடுக்கவில்லை.</p><p>தமிழ்நாட்டில் புதிதாக 196 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்.</p><p>தூத்துக்குடியில் ரூ.20,800 கோடியில் தனியார் பங்களிப்புடன் அனல்மின் நிலையம் அமைக்கப்படும்.</p><p>தூத்துக்குடியில் 1,600 மெகாவாட் திறனுடன் அனல்மின் நிலையம் அமைக்கப்படும் - முதலமைச்சர் விஜய்</p> <p>தூத்துக்குடியில் புதிய அனல்மின் நிலையம் அமைக்கப்படும்.</p><p>தூத்துக்குடியில் புதிதாக இரண்டு நியூ தெர்மல் பவர் ஸ்டேஷன் அமைக்கப்படும் - முதலமைச்சர் விஜய்</p><p>பால் கொள்முதல் விலையை உயர்த்தியதால் ஆவினுக்கு ஏற்படும் கூடுதல் செலவை அரசே ஏற்கும் - முதலமைச்சர் விஜய்</p><p>பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று கொள்முதல் விலை ரூ.44 ஆக உயர்த்தி முதலமைச்சர் விஜய் சட்டசபையில் அறிவிப்பு.</p><p>சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்புகளை வெளியிட்டார். </p><p>பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்படும்.</p><p>ஒரு லிட்டர் பால் கொள்முதல் விலை 38 ரூபாயிலிருந்து 41 ரூபாயாக ஏற்கெனவே உயர்த்திய நிலையில் தற்போது ரூ.3 உயர்த்தி அறிவிப்பு.</p><p>எ.வ.வேலு கேட்டுக்கொண்டதன்படி மூத்த உறுப்பினர்களுக்கு முன்வரிசையில் இடம் தருவது குறித்து ஆராய்ந்து முடிவு  எடுக்கப்படும் - சபாநாயகர்</p><p>எந்த கட்சி, சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார்கள் என்ற அடிப்படையில் தான் உறுப்பினர்களுக்கு இடம் ஒதுக்கீடு - சபாநாயகர்</p><p>ஜவாஹிருல்லா, தமிமுன் அன்சாரி போன்ற மூத்த உறுப்பினர்களுக்கு சட்டசபையின் முன்வரிசையில் இடம் வழங்க வேண்டும் - எ.வ.வேலு</p><p>கல்லூரியில் கட்டப்பட்ட படைப்பகம், நூலகம் பயன்பாட்டுக்க கொண்டு வரப்படும் - சேகர்பாபு கேள்விக்கு அமைச்சர் ரமேஷ் பதில்</p><p>புதிய கட்டடம், மாலை நேர வகுப்புகள் தொடங்க முன்னதாகவே நடவடிக்கை தொடங்கப்பட்டு விட்டது - அமைச்சர் ரமேஷ்</p><p>கொளத்தூர் தொகுதி கபாலீஸ்வரர் கல்லூரியில் மாலை நேர வகுப்புகள் தொடங்க வேண்டும், கூடுதல் கட்டடம் தேவை - சேகர் பாபு</p><p>அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தொடக்கப்பள்ளி விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் வன்னி அரசு</p><p>வில்லிவாக்கம் ஒன்றியத்தில் பழங்குடியினர் மட்டும் வசிக்கும் பகுதியில் தொடக்கப்பள்ளி வேண்டும் - எம்எல்ஏ விஜய் பிரபு</p><p>எங்கெல்லாம் சமூக நீதி விடுதிகள் தேவையோ அங்கெல்லாம் கட்டிக்கொடுக்கப்படும்.</p><p>150-க்கும் மேற்பட்ட புதிய சமூக நீதி விடுதிகள் கட்டித்தரப்படும் என அறிவித்துள்ளோம். </p><p>கழிப்பறை வசதியுடன் கூடிய புதிய கட்டடம் விரைந்து கட்டித்தர ஏற்பாடு செய்யப்படும் - ஓ.எஸ்.மணியன் கேள்விக்கு வன்னி அரசு பதில்</p><p>திண்டுக்கல் - குமுளி 4 வழிச்சாலை திட்டம் பரிசீலனையில் உள்ளது. ஆட்சியர், எம்எல்ஏ உடன் கலந்து பேசி கள ஆய்வு மேற்கொண்டு தேவை அறிந்து நிதியை பொறுத்து நடவடிக்கை  எடுக்கப்படும்.</p><p>ஏலகிரியில் வியூ பாயிண்ட் அமைப்பது தொடர்பாக ஆட்சியருடன் கலந்து பேசி நிதிநிலையை பொறுத்து நடவடிக்கை - அமைச்சர் ராஜேஷ்குமார்</p><p>கழிப்பறை வசதியுடன் கூடிய கட்டடம் விரைந்து கட்டித்தர ஏற்பாடு செய்யப்படும் - அமைச்சர் வன்னி அரசு </p><p>ஜெயங்கொண்டம் இளைய பெருமாள் நல்லூரில் உள்ள ஆதிதிராவிட நலத்தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டடம் தேவை - வைத்தியலிங்கம்</p><p>ஜல்லிக்கட்டிற்கு எதிராக எம்எல்ஏ கருப்பையா கூறிய கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் - சபாநாயகர்</p><p>ஜல்லிக்கட்டுக்கு எதிரான கருத்துகளை கூறவில்லை - எம்எல்ஏ கருப்பையா விளக்கம்</p><p>சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக திண்டுக்கல் - குமுளி 4 வழிச்சாலை அமைக்கப்படுமா? - எம்எல்ஏ ஐங்கரன்</p><p>தீர்த்தகிரி மலை அடிவாரத்தில் உள்ள பழைய மடத்தை சுற்றலாத்தலமாக கருதி பாதுகாக்க வேண்டும் - சவுமியா அன்புமணி</p><p>அரூர் தொகுதி தீர்த்தமலையில் உள்ள தீர்த்தகிரீஸ்வரர் கோவில் பகுதியை சுற்றுலாத்தலமாக அறிவிக்க அரசு முன்வருமா? - சம்பத் குமார்</p><p>நினைவிடத்தை தமிழ் பண்பாட்டு மையமாக மாற்றுவது தொடர்பாக அவரது குடும்பத்தாருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>மறைமலை அடிகளார் நினைவிடத்தை புதுப்பித்து தமிழ் பண்பாட்டு மையமாக உருவாக்க அரசு முன்வருமா? - எம்எல்ஏ காமாட்சி கேள்வி</p><p>தஞ்சை தமிழ் பல்கலை. வளாகத்தில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கும் அறிவிப்பு திமுக ஆட்சியில் வெளியிடப்பட்டு நிலுவையில் உள்ளது.</p><p>கடந்த திமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட சோழர் அருங்காட்சியகம் திட்டத்தை கைவிடும் எண்ணம் இல்லை - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>புறவழிச்சாலை தொடர்பான கோரிக்கை முன்பே வந்துள்ளது. திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு விட்டது.</p><p>கிராமப்புற, நகர்ப்புற சாலைகளை நெடுஞ்சாலைகளுடன் முழுமையாக இணைப்பது தொடர்பாக கணக்கு எடுக்கப்படுகிறது - அமைச்சர் ஆதவ்</p><p>ஆலைகள் நிறைந்த தேன்கனிக்கோட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்க புறவழிச்சாலை தேவை - எம்எல்ஏ ராமச்சந்திரன்</p><p>ரூ.139 லட்சத்தில் பொதுப்பணித்துறை மூலம் முதல்கட்ட பணிகள் முடிக்கப்பட்டுள்ளது, விரைவில் திறக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்</p> <p>நாகப்பட்டினம் அரசு அருங்காட்சியகம் புதுப்பிக்கப்பட்டு விரைவில் திறக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்</p> <p>நாகை அருங்காட்சியகத்தை உரிய காலக்கெடு நிர்ணயித்து திறக்க வேண்டும்.</p><p>சோழர்காலத்தை சேர்ந்த ஆனைமங்கலம் செப்பேடுகளை நாகப்பட்டினம் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்த வேண்டும் - ஜவாஹிருல்லா கோரிக்கை</p><p>சாலைப்பணிகள், நெடுஞ்சாலையுடன் பிற சாலைகளை இணைப்பது தொடர்பாக 182 எம்எல்ஏக்கள் கோரிக்கை - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா </p><p>இணைப்பு சாலைகளால் அதிக விபத்துகள் ஏற்படும் நிலையில் உயிரிழப்புகளை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்  - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா </p><p>மதுரை, கம்பம், தேனி, நெல்லை, சென்னை, கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா </p> <p>பாலாற்றின் குறுக்கு உயர்மட்டச்சாலை பரிசீலனையில் உள்ளது - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா </p> <p>பாலாற்றின் குறுக்கு உயர்மட்டச்சாலை அமைக்கப்படுமா? - எம்எல்ஏ தென்றல் குமார்</p> <p>திருப்பூர் வேலாம்பாளையம் வரை 3 கிமீ சாலையில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள வேண்டும் - எம்எல்ஏ சத்தியபாமா கோரிக்கை</p><p>டெல்டா மாவட்டங்கள், தென்மாவட்டங்களில் இன்னும் 2 வழி, ஒரு வழி சாலைகள் அதிகம் உள்ளன.</p><p>சாலை விரிவாக்கத்திற்கு விரைவில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா </p> <p>மூலக்கேள்விக்கு தொடர்புடைய கேள்விகளை மட்டுமே கேளுங்கள் - சபாநாயகர்</p><p>ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி பகுதியில் பைபாஸ் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்தார்.</p><p>சட்டசபையில் வினாக்கள் மற்றும் விடைகள் நேரம் தொடங்கியது.</p><p>தமிழக சட்டசபை 2 நாள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடுகிறது. முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. </p><p>கேள்வி நேரம் முடிந்ததும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது.</p> ]]></content:encoded></item><item><title>நேபாள பெருவெள்ளப் பேரழிவு: பலி எண்ணிக்கை 903 ஆக உயர்வு - 4,250 பேர் மாயம்</title><link>https://www.maalaimalar.com/news/world/nepal-flash-flood-death-toll-rises-903-missing-4250</link><comments>https://www.maalaimalar.com/news/world/nepal-flash-flood-death-toll-rises-903-missing-4250#comments</comments><guid isPermaLink="false">2251b590-5ee3-46ca-aba4-a02b479917d3</guid><pubDate>Mon, 31 Aug 2026 08:32:51 +0000</pubDate><atom:updated>2026-08-31T08:32:51.121Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாளம்,nepal,Death toll rises,Nepal Floods,பலி உயர்வு,நேபாள வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/m6it5k3c/nepal.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nepal]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/m6it5k3c/nepal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>நேபாள பெருவெள்ளம்</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/nepal-flood">நேபாளத்தின்</a> ரசுவா மாவட்டத்தில், பனிப்பாறைகள் உடைந்து போடே கோஷி ஆற்றில் கடந்த 26-ந்தேதி திடீரென பெரு வெள்ளம் ஏற்பட்டது.  இதில் அங்குள்ள சிறு கிராமங்கள், சிறுநகரங்கள் அழிந்தன. பாலங்கள், கட்டிடங்கள் உள்ளிட்டவை அடித்துச் செல்லப்பட்டன.</p> <h2>மீட்பு பணி</h2><p>இந்தியர்கள் உள்பட 30 நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இந்த பெரு வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனார்கள். அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.  மீட்புப் பணியின்போது நாள்தோறும் உடல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களில் மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இன்று 6-வது நாளாக மீட்பு பணி நடைபெற்றது. காணாமல் போனவர்களை தேடும் பணியிலும் சிக்கி தவிப்பவர்களை மீட்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டனர்.</p> <h2>பலி எண்ணிக்கை உயர்வு</h2><p><a href="https://www.maalaimalar.com/news/world/floods-devastate-nepal-teacher-acts-astutely-to-save-1643-lives">நேபாள பெருவெள்ளத்தில்</a> பலியானவர்களின் எண்ணிக்கை 903 ஆக உயர்ந்து உள்ளது. இன்று காலை நிலவரப்படி 903 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. இதை நேபாள அரசு பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்தது.  </p> <p>சித்வான் மாவட்டத்தில் 272 உடல்களும், நவல்பராஷி கிழக்கு மாவட்டத்தில் 207 உடல்களும், நவல்பராஷி மேற்கு மாவட்டத்தில் 151 உடல்களும், கோர்கா மாவட்டத்தில் 62 உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. நுவா கேட்டில் 95, தாடிங்கில் 55, தனஹுவில் 37,  ரசோவாவில் 27 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.</p>  <p>85 பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் 320 வெளிநாட்டினர் உள்பட மொத்தம் 4,247 பேர் காணாமல் போய் இருப்பதாகவும் நேபாள அரசு தெரிவித்துள்ளது. இதுவரை 10,451 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>துலீப் கோப்பையில் வரலாற்று சாதனை: ஈஸ்ட் ஜோன் அணியை வழிநடத்திய 15 வயது வைபவ் சூர்யவன்ஷி</title><link>https://www.maalaimalar.com/sports/historic-feat-in-duleep-trophy-15-year-old-vaibhav-suryavanshi-leads-east-zone</link><comments>https://www.maalaimalar.com/sports/historic-feat-in-duleep-trophy-15-year-old-vaibhav-suryavanshi-leads-east-zone#comments</comments><guid isPermaLink="false">de77d481-996d-4d6e-a2ad-d7d65d3b055e</guid><pubDate>Mon, 31 Aug 2026 08:24:48 +0000</pubDate><atom:updated>2026-08-31T08:24:48.817Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vaibhav Suryavanshi,வைபவ் சூர்யவன்ஷி,இஷான் கிஷன்,கிரிக்கெட்,Duleep Trophy,துலீப் கோப்பை,East Zone team,Captain Suryavanshi</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/ph7u45d5/vaibahv.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Vaibhav Suryavanshi  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/ph7u45d5/vaibahv.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய உள்நாட்டு கிரிக்கெட் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் ஒரு மூத்த முதல் தர அணியை வழிநடத்திய வீரர் என்ற பெருமையை வைபவ் சூர்யவன்ஷி இதன் மூலம் பெற்றார். </p><p>துலீப் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் பெங்களூருவில் சென்ட்ரல் ஜோன் மற்றும் ஈஸ்ட் ஜோன் அணிகள் மோதி வருகின்றன. இப்போட்டியில் ஈஸ்ட் ஜோன் அணியின் கேப்டன் இஷான் கிஷன் விக்கெட் கீப்பிங் செய்தபோது வலது மணிக்கட்டில் பலத்த காயம் அடைந்து மைதானத்தை விட்டு வெளியேறினார். இதையடுத்து, அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி தற்காலிக கேப்டனாகப் பொறுப்பேற்று அணியை வழிநடத்தினார்.</p><h2>மூத்த வீரர்<strong>களை வழிநடத்தி</strong>ய வைபவ்</h2><p>இந்திய உள்நாட்டு<a href="https://www.maalaimalar.com/sports/cricket/deepti-sharma-becomes-leading-womens-t20i-wicket-taker-with-171-scalps"> கிரிக்கெட் வரலாற்றில்</a> மிகக் குறைந்த வயதில் ஒரு மூத்த முதல் தர அணியை வழிநடத்திய வீரர் என்ற பெருமையை வைபவ் சூர்யவன்ஷி இதன் மூலம் பெற்றார். முகமது ஷமி, முகேஷ் குமார், அபிமன்யு ஈஸ்வரன் போன்ற அனுபவம் வாய்ந்த சர்வதேச வீரர்கள் நிறைந்த அணியை 15 வயதில் ஒரு சிறுவன் வழிநடத்தியது மட்டுமன்றி, சரியான முறையில் நடுவரின் முடிவை எதிர்த்துமேல்முறையீடு செய்து விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினார்.</p><h2>57 ஆண்<strong>டுகால சாதனை மு</strong>றியடிப்பு</h2><p>கேப்டன்சி தவிர பேட்டிங்கிலும் வைபவ் சூர்யவன்ஷி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். சென்ட்ரல் ஜோன் அணிக்கு எதிரான இப்போட்டியில் வெறும் 42 பந்துகளில் அரைசதம் அடித்த அவர், 7 சிக்சர்கள் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 81 பந்துகளில் 92 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம், துலீப் கோப்பை வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் (15 ஆண்டுகள் 175 நாட்கள்) அரைசதம் அடித்த வீரர் என்ற 57 ஆண்டுகால சாதனையை (1969-ல் லக்ஷ்மன் சிங் படைத்த சாதனை) முறியடித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது அணை விவகாரம்: கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு 3 வார கால அவகாசம் - உச்ச நீதிமன்றம் உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/national/mekedatu-dam-case-three-weeks-time-for-tamil-nadu-government</link><comments>https://www.maalaimalar.com/news/national/mekedatu-dam-case-three-weeks-time-for-tamil-nadu-government#comments</comments><guid isPermaLink="false">92c7d4f1-cf2b-4649-8e63-df4b8fdcb6ef</guid><pubDate>Mon, 31 Aug 2026 08:19:01 +0000</pubDate><atom:updated>2026-08-31T08:19:01.420Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>mekedatu dam,காவிரி விவகாரம்,Mekedatu issue,மேகதாது அணை திட்டம்,Cauver\WateDispute,TNvsKarnataka</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/qrxq5wcv/Supreme-Court" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Supreme Court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/qrxq5wcv/Supreme-Court?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[  <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">மேகதாது அணை</a> விவகாரத்தில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு மூன்று வார கால அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம்</p><h2>அணை எதிர்ப்பு</h2><p>மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எந்தவித அனுமதியும் வழங்க கூடாது என உத்தரவிடக்கோரியும், காவிரியில் திட்டங்களை செயல்படுத்துவதற்கும், மதிப்பிடுவதற்கும் அனுமதி வழங்கும் வகையில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D">காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு</a> வழங்கப்பட்டுள்ள அதிகாரம் தொடர்பான சுற்றறிக்கை ரத்து செய்யக்கோரியும் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது.</p><h2>தமிழக அரசின் வாதம்</h2><p>இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. </p><p>அப்போது தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் சி.எஸ்.வைத்தியநாதன் மற்றும் உமாபதி ஆஜராகி, காவிரியின் குறுக்கே மேகதாது உள்ளிட்ட எந்த ஒரு திட்டங்களையும் செயல்படுத்துவதற்கு அனுமதி உள்ளிட்டவை வழங்குவதற்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் தொடர்பான விஷயத்தை எதிர்த்து இந்த மனுவை தாக்கல் செய்துள்ளோம்.</p><h2>வழக்கு ஒத்திவைப்பு</h2><p>அதேநேரத்தில் இந்த வழக்கில் கூடுதலாக சில ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டியுள்ளதால் வழக்கை மூன்று வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். </p><p>தமிழக அரசு தரப்பு கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஆவணங்களை தாக்கல் செய்ய மூன்றுக்கு வார கால அவகாசம் வழங்கி வழக்கை ஒத்திவைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>மாற்றுதிறனாளிகள்  நலத்துறையில் 9 புதிய அறிவிப்புகள்- அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்டார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-jegatheswari-unveils-nine-new-measures-for-disabled-welfare</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-jegatheswari-unveils-nine-new-measures-for-disabled-welfare#comments</comments><guid isPermaLink="false">f023259f-69e2-4b15-86ad-af3eb100f533</guid><pubDate>Mon, 31 Aug 2026 08:15:55 +0000</pubDate><atom:updated>2026-08-31T08:15:55.358Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,அமைச்சர் ஜெகதீஸ்வரி,மாற்றுதிறனாளி நலத்துறை,Minister Jagadeeswari,Department of Welfare of the Disabled</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/o85fl5f9/Jagatheeswari.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Jagatheswari]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/o85fl5f9/Jagatheeswari.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் மாற்றுதிறனாளிகள்  நலத்துறையில் 9 புதிய அறிவிப்புகளை அமைச்சர் ஜெகதீஸ்வரி  வெளியிட்டார்.</p><p>அவை வருமாறு: </p><p>1. மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய மின்சார வாகன உதவி</p><p>உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D" rel="nofollow">பெட்ரோல்</a> அல்லது மின்சாரத்தில் இயங்கும் உபகரணம் வழங்கும் திட்டம்</p><p>உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு, அவர்களின் அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் பெட்ரோல் அல்லது மின்சாரத்தில் இயங்கும் உபகரணங்கள் வழங்கப்படும். இதற்காக ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p><p>2. மனநலம் பாதிக்கப்பட்டோருக்காக 10 இல்லங்கள்</p><p>தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் 10 இல்லங்கள் அமைக்க ரூ.1.82 கோடி நிதி</p><p>அரசு நிதியுதவியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான 10 இல்லங்கள் அமைக்கப்படும். இதற்காக ரூ.1.82 கோடி <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81" rel="nofollow">நிதி ஒதுக்கீடு</a> செய்யப்படும்.</p><p>3. அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 தொழிற்பயிற்சி இல்லங்கள்</p><p>அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழிற்பயிற்சியுடன் கூடிய 10 இல்லங்கள் – ரூ.1.77 கோடி ஒதுக்கீடு</p><p>அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழிற்பயிற்சியுடன் கூடிய 10 இல்லங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் அமைக்கப்படும். இதற்காக ரூ.1.77 கோடி நிதி ஒதுக்கப்படும்.</p><p>4. முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கு 2 இல்லங்கள்</p><p>முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக 2 இல்லங்கள் – ரூ.49 லட்சம் நிதி</p><p>முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக, அரசு நிதியுதவியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் 2 இல்லங்கள் அமைக்கப்படும். இதற்காக ரூ.49 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.</p><p>5. மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பயிற்சி மையங்கள்</p><p>மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக 6 ஆண்டு நிலை பயிற்சி மையங்கள் – ரூ.97 லட்சம்</p><p>அறிவுசார் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/sureshkumar-realizes-his-dream-of-studying-medical-at-51" rel="nofollow">மாற்றுத்திறனாளி</a> குழந்தைகளுக்கென 3 ஆண்டு நிலை பயிற்சி மையங்கள், செவித்திறன் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கென 2 ஆண்டு நிலை பயிற்சி மையங்கள், பார்வை மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கென 1 ஆண்டு நிலை பயிற்சி மையம் என மொத்தம் 6 ஆண்டு நிலை பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். இதற்காக ரூ.97 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.</p><p>6. கடலூரில் மாற்றுத்திறனாளிகளுக்காக 2 இல்லங்கள்.</p><p>கடலூரில் 100 பேர் பயன்பெறும் வகையில் 2 இல்லங்கள் – ரூ.10 கோடி நிதி.</p><p>கடலூர் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அறிவுசார் மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 100 பேர் பயன்பெறும் வகையில், 1.5 ஏக்கர் நிலப்பரப்பில் 2 இல்லங்கள் அமைக்கப்படும். இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p><p>7. மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம்</p><p>UDID அட்டை மூலம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் துணையாளருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம்</p><p>தனித்து செல்ல இயலாத மாற்றுத்திறனாளிகள், UDID அட்டையைப் பயன்படுத்தி தங்களுடன் ஒரு துணையாளருடன் மாநகர/நகர தாழ்தள பேருந்துகள், விரைவு பேருந்துகள், டீலக்ஸ், புறநகர் மற்றும் மலைப்பகுதி பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் மேற்கொள்ளும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்படும்.</p><p>8. செவித்திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கு மெய்நிகர் கற்றல்</p><p>செவித்திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கு Virtual Reality Learning திட்டம்</p><p>செவித்திறன் குறைபாடுடைய மாணவர்கள் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் மெய்நிகர் கற்றல் முறையில் கல்வி கற்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.64 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.</p><p>9. பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வாசிப்பாளர் உதவி</p><p>பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வாசிப்பாளர் உதவித்தொகை உயர்வு. பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பாடத்திட்டங்களைப் படிக்க உதவும் வாசிப்பாளருக்கு வழங்கப்படும் உதவித்தொகை உயர்த்தப்படுகிறது.</p><p>2013–14ஆம் ஆண்டிலிருந்து 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.3,000, இளங்கலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ரூ.5,000, தொழில்கல்வி மற்றும் முதுகலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ரூ.6,000 என உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.</p><p>2026–27ஆம் ஆண்டு முதல் இந்த வாசிப்பாளர் உதவித்தொகை மேலும் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஐரோப்பாவின் மிக உயர்ந்த எல்ப்ரஸ் சிகரத்தை அடைந்து சாதனை படைத்த இந்தியப் பெண்: மூவர்ணக் கொடியை ஏற்றி பெருமிதம்!</title><link>https://www.maalaimalar.com/news/world/indian-woman-scales-europes-highest-elbrus-peak-hoists-tricolour</link><comments>https://www.maalaimalar.com/news/world/indian-woman-scales-europes-highest-elbrus-peak-hoists-tricolour#comments</comments><guid isPermaLink="false">a4c1d2bd-11ec-417f-84e7-e972d3a41271</guid><pubDate>Mon, 31 Aug 2026 08:08:20 +0000</pubDate><atom:updated>2026-08-31T08:08:20.042Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மும்பை,europe,Indian Woman,Mountaineering,இமயமலை,ஐரோப்பா,Mount Elbrus,எல்ப்ரஸ் மலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/lcvg1s9y/europe.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mount Elbrus]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/lcvg1s9y/europe.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆகஸ்ட் 15 அதிகாலை 2 மணிக்குத் தொடங்கிய இறுதிப் பயணத்தில், உறைபனி, கடும் புயல் காற்று, இருள் மற்றும் குறைந்த ஆக்சிஜன் அளவு போன்ற கடுமையான சவால்களை ,இவர் எதிர்கொண்டார். </p><p>மலையேறுவதில் தீவிர ஆர்வம் கொண்ட இந்தியாவின் சிவானி மெஹ்ரோத்ரா, ஐரோப்பிய கண்டத்தின் மிக உயர்ந்த சிகரமான எல்ப்ரஸ் மலையை வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்துள்ளார். தெற்கு ரஷியாவில் கடல் மட்டத்திலிருந்து 5,642 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த கரடுமுரடான சிகரத்தின் உச்சியை அடைந்த அவர், ஆகஸ்ட் 15 இந்திய சுதந்திர தினத்தன்று நமது நாட்டின் மூவர்ணக் கொடியை ஏற்றி நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.</p><h2>இமயமலை<strong>ப் பயணம்</strong> </h2><p>உத்தரப் பிரதேசத்தின் சீதாபூர் மாவட்டத்தைப் பூர்விகமாகக் கொண்டு, தற்போது மும்பையில் வசித்து வரும் 43 வயதான சிவானி, 18 வயது மகளின் தாயாராவார். வீட்டுப் பொறுப்புகளை திறம்பட கவனித்துக்கொண்டே மலையேற்றத்தின் மீது கொண்ட தீராத காதலால் இந்த அரிய சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு <a href="https://www.maalaimalar.com/news/national/nepal-flood-crisis-india-sends-685-tonnes-of-relief-materials-via-four-aircraft">எவரெஸ்ட் சிகரத்தின்</a> அடிவாரப் பகுதிக்கு மேற்கொண்ட பயணமே இவருக்கு மலையேற்றத்தில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன் தொடர்ச்சியாக லடாக், காஷ்மீர், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு இமயமலைப் பகுதிகளுக்கும், ஆப்பிரிக்காவின் கிளிமஞ்சாரோ சிகரத்திற்கும் வெற்றிகரமாக மலையேற்றம் சென்றுள்ளார்.</p><h2>தீவி<strong>ரப் பயிற்சி</strong></h2><p>இந்த எல்ப்ரஸ் சிகரப் பயணத்திற்காக ஆகஸ்ட் 8 அன்று மும்பையிலிருந்து புறப்பட்டு, துபாய் வழியாக ரஷ்யாவின் மினரல்னி வோடியைச் சென்றடைந்தார். இறுதி இலக்கை அடைவதற்கு முன்பாக உடலை நிலைநிறுத்திக் கொள்ள 3000, 4000 மற்றும் 4700 மீட்டர் உயரங்களில் சிறப்புப் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆகஸ்ட் 15 அதிகாலை 2 மணிக்குத் தொடங்கிய இறுதிப் பயணத்தில், உறைபனி, கடும் புயல் காற்று, இருள் மற்றும் குறைந்த ஆக்சிஜன் அளவு போன்ற கடுமையான சவால்களை எதிர்கொண்டார். "ருக்னா நஹி ஹாய், சல்தே ரஹ்னா ஹாய்" (நிற்கக் கூடாது, நடந்துகொண்டே இருக்க வேண்டும்) என்ற தாரக மந்திரத்துடன் வெறும் 4.5 மணி நேரத்தில் உச்சியை எட்டினார்.</p><h2>செவன் சமி<strong>ட்ஸ்' உலகச் சாதனை</strong></h2><p>மலையேறுவதற்கு வயது ஒரு தடையல்ல என்றும், முறையான பயிற்சியும் இலக்கை அடையும் உறுதியான எண்ணமுமே முக்கியம் என்றும் சிவானி கூறுகிறார். சொந்தச் சேமிப்பு மற்றும் குடும்பத்தினரின் ஆதரவுடன் இந்தப் பயணங்களை மேற்கொண்டு வரும் இவரது அடுத்த இலக்கு, உலகளவில் புகழ்பெற்ற எவரெஸ்ட் சிகரம் உட்பட அனைத்துக் கண்டங்களின் 7 உயர்ந்த சிகரங்களையும் ('செவன் சமிட்ஸ்') தொட்டு சாதனை படைப்பதாகும்.</p>]]></content:encoded></item><item><title>காவிரி நீர் பங்கீடு: உச்சநீதிமன்றத்தில் தமிழகம் - கர்நாடகா காரசார வாதம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/cauvery-water-sharing-tamil-nadu-karnataka-arguments-supreme-court</link><comments>https://www.maalaimalar.com/news/national/cauvery-water-sharing-tamil-nadu-karnataka-arguments-supreme-court#comments</comments><guid isPermaLink="false">9437a8bc-c15e-42eb-87d7-c3b5b9f08483</guid><pubDate>Mon, 31 Aug 2026 08:04:59 +0000</pubDate><atom:updated>2026-08-31T08:04:59.578Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,mekedatu dam,SupremeCourt,Cauvery,உச்சநீதிமன்றம்,காவிரி,CWMA,Water Dispute</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/mym5361c/Cauvery-WaterDispute" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Cauvery WaterDispute  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/mym5361c/Cauvery-WaterDispute?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்திற்கான நீரை உறுதி செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்திப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் வழக்கு விசாரணை</p><h2><strong>நீர் மறுப்பு</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D">உச்ச நீதிமன்ற </a>அறிவுரை திறன் அடிப்படையில் தமிழகத்திற்கு கூடுதல் நீரை திறந்து விடக் கோரி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் முறையீடு வைத்தோம் ஆனால் அது நிராகரிக்கப்பட்டது.</p><p> தமிழகத்திற்கு வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி வீதம் மட்டுமே 15 நாட்களுக்கு திறக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது அந்த உத்தரவையும் கர்நாடக அரசு முழுமையாக செயல்படுத்துவதில்லை.</p><h2><strong>கர்நாடகா விளக்கம்</strong></h2><p>நீதிபதிகள் ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு செயல்படுத்துகிறதா கர்நாடக அரசு, <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D">காவிரி நீர்</a> மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் காவிரியில் நீர் திறந்து விடப்படுகிறது.</p><p> குறிப்பாக கடந்த சில நாட்களாக காவிரியில் வினாடிக்கு ஒன்பதாயிரம் கன அடிக்கும் அதிகமாகவே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது மேலும் கர்நாடகத்தில் இருக்கும் தண்ணீரின் அளவைப் பொறுத்து கூடுதலாக நீர் திறப்பதற்கும் நாங்கள் முயற்சி எடுப்போம்.</p><p>தற்போது <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE">கர்நாடகாவில் </a>அதிக வறட்சி நிலவு காரணமாக அதிக அளவிலான தண்ணீரை திறந்து விட முடியாத ஒரு சூழல் உள்ளது என்று கர்நாடக அரசு விளக்கமளித்துள்ளது.</p><h2><strong><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">தமிழக அரசின்</a> குற்றச்சாட்டு</strong></h2><p>கர்நாடக அரசு ஆணைய உத்தரவை பின்பற்றவில்லை உச்ச நீதிமன்றம் கொடுத்த உத்தரவின் படியும் தண்ணீர் திறக்க வேண்டிய உத்தரவை அவர்கள் பின்பற்றவில்லை கர்நாடகம் தண்ணீர் திறக்காமல் இருப்பதன் காரணமாக சுமார் 24 லட்சம் ஏக்கருக்கு மேலாக சாகுபடி செய்ய முடியாமல் தமிழகம் பாதிப்படைந்துள்ளது. </p><p>அதே வேளையில் கர்நாடகம் 20 டிஎம்சி நீருக்கு மேலாக மடை மாற்றம் செய்து விவசாயத்திற்கு பயன்படுத்தி உள்ளனர் கர்நாடக அணிகளில் சுமார் 73 டிஎம்சி நீர் இருக்கும் நிலையிலும் தமிழகத்திற்கு உரிய நீரை வழங்க மறுக்கின்றனர்.</p><p> இவ்வாறு தொடர்ச்சியாக நீர் வழங்க மறுப்பதால் தமிழகத்தில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது.</p><h2><strong>உடனடி நிவாரணம்</strong></h2><p>தமிழகத்திற்கு தர வேண்டிய பற்றாக்குறை நீரை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும் 15 நாட்களுக்குப் பிறகுதான் காவிரி மேலாண்மை ஆணையம் மீண்டும் கூட உள்ளது.</p><p> ஆனால் இந்த வாரமே மீண்டும் ஆணையம் ஆலோசனை நடத்தி எங்களது கருத்துக்களை கேட்டு கூடுதல் தண்ணீரை திறக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் இதற்காக உச்சநீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.</p><h2><strong>பாசன முரண்பாடு</strong></h2><p>காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதாக கர்நாடகா சொல்கிறார்கள் ஆனால் அதை அவர்களது பாசன பயன்பாட்டிற்கு தான் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.</p><p>கர்நாடக அரசு அதிகாரிகள் கொடுத்த தகவல்கள் படி பார்த்தாலே அவர்களுடைய விவசாய நிலங்களில் 52 சதவிகித நிலங்களுக்கு தேவையான தண்ணீரை ஏற்கனவே கர்நாடக அரசு திறந்து விட்டுவிட்டது. </p><p>ஆனால் தமிழ்நாடு இன்னமும் ஒரு ஏக்கர் நிலத்திற்கு கூட தண்ணீர் திறக்க முடியாத சூழல் நிலவுகிறது.</p><h2><strong>வழக்கு ஒத்திவைப்பு</strong></h2><p>நீதிபதிகள் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பிறகு இந்த வழக்கை செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கிறோம். செப்டம்பர் 15 ஆம் தேதி என்ற தேதிக்கு முன்பே வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் குறிப்பாக அடுத்த வாரமே மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.</p><p>ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறை காவிரி மேலாண்மை ஆணையம் கூடி முக்கியமான உத்தரவுகளை பிறப்பிக்கிறார்கள் அதில் நாங்கள் ஏன் தலையிட வேண்டும் அடுத்த விசாரணையின் போது தற்போதைய நிலவரம் குறித்து அறிக்கையை தாக்கல் செய்ய கர்நாடகா மற்றும் தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சீனாவில் இரவு விடுதிகள், வங்கிகள் மற்றும் மருத்துவமனைகளில் திருமண பதிவு செய்து கொள்ளலாம்</title><link>https://www.maalaimalar.com/news/world/china-couples-can-register-marriage-in-hotels-banks-hospitals</link><comments>https://www.maalaimalar.com/news/world/china-couples-can-register-marriage-in-hotels-banks-hospitals#comments</comments><guid isPermaLink="false">4831babf-854e-4d21-b2c4-2570d6133d2c</guid><pubDate>Mon, 31 Aug 2026 07:54:58 +0000</pubDate><atom:updated>2026-08-31T07:54:58.412Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>China,சீனா,காதலர் தினம்,Valentine Day,qixi festival,கிஷி திருவிழா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/0jy08knj/Untitled-design-12.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ China marriage registration reform]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/0jy08knj/Untitled-design-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE">சீனாவில்</a> பிறப்பு விகிதம் சரிவை சந்தித்து வரும் நிலையில், புதிதாக திருமணம் செய்யும் தம்பதிகள் தங்களது திருமண செயல்முறையை விரைவாகவும், எளிதாகவும் பதிவு செய்யும் வகையில் மகப்பேறு மருத்துவமனைகள், வங்கிகள் மற்றும் இரவு விடுதிகள் போன்ற வழக்கத்திற்கு மாறான இடங்களில் திருமணத்தை பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  </p><h3><strong>காதலர் தின தம்பதிகள்</strong></h3><p>சீனாவில் சமீபத்தில் நடைபெற்ற கிஷி திருவிழாவில் (காதலர் தின விழா) கலந்துகொண்ட புதுமண தம்பதிகள், ஷாண்டாங் மாகாணத்தில் உள்ள லின்சி மாவட்ட தாய் மற்றும் குழந்தை நல மருத்துவமனையில், சட்டப்பூர்வமாக திருமணம் செய்துகொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>இந்த அறிவிப்பு குறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், இந்த ஏற்பாடு புதுமண தம்பதிகள் தங்கள் திருமணத்தை பதிவு செய்யவும், திருமணத்திற்கு முந்தைய உடல்நல பரிசோதனைகளை மேற்கொள்ளவும், ‘ஒரே இடத்தில் அனைத்து சேவைகளை’ வழங்கும் மையமாகவும் அமைய உள்ளது.</p><p>மேலும், புதுமண தம்பதிகள் கருத்தரிப்பிற்கு முந்தைய ஆலோசனையையும் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.</p><h3><strong>திருமணப் பதிவு மையங்கள்</strong></h3><p>கடந்த மாதம் சீனாவின் தியான்ஜீனில் உள்ள சீன அஞ்சல் சேமிப்பு வங்கியின் ஒரு கிளை, திருமண பதிவு சேவைகளை வழங்கும் நாட்டின் முதல் வங்கியாக மாறியது.</p><p>இதையடுத்து குவாங்சோ பையுன் சர்வதேச விமான நிலையம் திருமண சான்றிதழ்களை வழங்க தொடங்கியது. அதே நேரத்தில், ஷாங்காய்-இல் உள்ள ஒரு இரவு விடுதி சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகளை நடத்தியது.</p><p>மேலும் மெட்ரோ நிலையங்கள், பொது பூங்காக்கள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கோவில்களிலும் திருமணம் செய்துகொள்ளும் நடவடிக்கைகள் அறிமுகம் செய்யப்பட்டன.</p><h3><strong>காரணம்</strong></h3><p>சீனாவில் அதிகரித்து வரும் மக்கள் தொகை காரணமாக, இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>சீனாவில் பிறப்பு விகிதம் சரிவை சந்தித்து வரும் நிலையில், இளைஞர்களை குடும்பமாக ஊக்குவிக்க சீன அதிகாரிகள் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்து வருகின்றனர்.</p><h3><strong>ஆய்வு அறிக்கை</strong></h3><p>சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் ஆவண நடைமுறைகள் எளிதாக்கப்பட்டதைத் தொடர்ந்து, திருமணங்கள் தற்காலிகமாக அதிகரித்த போதிலும், இந்த ஆண்டின் முதல் பாதியில் திருமண பதிவுகள் மேலும் 7.5 சதவீதம் குறைந்துள்ளதாக தரவுகள் தெரிவித்துள்ளன.</p>]]></content:encoded></item><item><title>மீண்டும் இடம் மாறி அமர்ந்த முதலமைச்சர் விஜய் - அன்று செங்கோட்டையன், இன்று ஆதவ் அர்ஜூனா... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-changed-his-seat-again</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-changed-his-seat-again#comments</comments><guid isPermaLink="false">a220595b-54b2-4df9-a289-3df8d207c7a2</guid><pubDate>Mon, 31 Aug 2026 07:44:20 +0000</pubDate><atom:updated>2026-08-31T07:44:20.138Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/3ggcbcdx/vijay02.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மீண்டும் இடம் மாறி அமர்ந்த முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ மீண்டும் இடம் மாறி அமர்ந்த முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/3ggcbcdx/vijay02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதலமைச்சர் விஜய் சக அமைச்சர்களுடன் இருக்கையில் அமர்ந்து சட்டசபை விவாதத்தை கவனிப்பது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழக பட்ஜெட்</a> கூட்டத்தொடர் ஆகஸ்ட் மாதம் 5-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பட்ஜெட் தாக்கல் நிறைவடைந்து மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. ஒரு மாத காலமாக நடைபெறும் கூட்டத்தொடரில் பல்வேறு சுவாரசிய சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. </p><p>வார விடுமுறைக்கு பின் கூடிய இன்றைய கூட்டத்தொடரில் மாற்றுத்திறனாளிகள், நலத்துறை, வேளாண்மை, மதுவிலக்கு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மீதான கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது. மேலும் 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் விலையில்லா வேட்டி சேலை குறித்த கவன ஈர்ப்பு தீர்மானமும் எடுத்துக்கொள்ளப்பட்டது. </p><p>இந்த நிலையில் இன்று சட்டசபையில் விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-important-measures-starting-with-an-increase-in-the-milk-procurement-price">விஜய்</a>, முதலமைச்சருக்கான பிரத்யேக இருக்கையை தவிர்த்து அமைச்சர்களுடன் அமர்ந்து ஆலோசனை நடத்தி விவாதத்தை கவனித்தார். நீர்வளத்துறை அமைச்சர் புஸ்சி ஆனந்த்தின் இருக்கையில் அமர்ந்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுடன் விவாதித்து சபை நடவடிக்கையை கவனித்தார். </p><p>கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தொடரிலும் மானிய கோரிக்கை மீதான விவாத்தில் அமைச்சர் செங்கோட்டையன் அருகே அமர்ந்து முதலமைச்சர் விஜய் விவாதத்தை கவனித்தார். </p><p>முதலமைச்சர் விஜய் சக அமைச்சர்களுடன் இருக்கையில் அமர்ந்து சட்டசபை விவாதத்தை கவனிப்பது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் பணியாளர்களுக்கு செப்டம்பர் 1 முதல் சம்பள உயர்வு- அமைச்சர் வினோத்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vinoth-announces-pay-rise-for-tasmac-staff</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vinoth-announces-pay-rise-for-tasmac-staff#comments</comments><guid isPermaLink="false">2351bd11-8dc2-4aed-84bb-41ddc66f5ba3</guid><pubDate>Mon, 31 Aug 2026 07:41:42 +0000</pubDate><atom:updated>2026-08-31T07:41:42.902Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,Tasmac,அமைச்சர் வினோத்,Minister Vinoth,டாஸ்மாக் பணியாளர்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/sm6ww0ko/minister-Vinoth.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Vinoth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/sm6ww0ko/minister-Vinoth.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>23 ஆண்டுகளாக டாஸ்மாக் கடைகளில் பணியாற்றி வரும் பணியாளர்களை கருத்தில் கொண்டு 4 முறை சங்க பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையின் அடிப்படையில், வரும் செப்.1 முதல் ரூ.33,023 ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் விக்னேஷ் அறிவித்துள்ளார்.</p><p>சட்டசபையில்  அமைச்சர் வினோத் இன்று மானிய கோரிக்கையில்  பேசுகையில் கூறியதாவது:-</p><p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D" rel="nofollow">டாஸ்மாக்</a> நிறுவனத்தின் சில்லறை விற்பனை கடைகளில் 23 ஆண்டுகளாக பணியாற்றி வரும் பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டும் இத்துறையில் எவ்வித முறைகேடுகளும் நடக்காமல் தடுக்கவும் பணியாளர்களின் வாழ்வாதார தேவைகளை கவனத்தில் கொண்டும் இந்த அரசு பொறுப்பேற்ற 100 நாட்களில் நான் நான்கு முறை சங்கப் பிரதிநிதிகள் நேரில் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறேன்.</p><p>அந்த பேச்சு வார்த்தையின் அடிப்படையிலும் டாஸ்மாக் நிர்வாக குழுவின் முடிவின் அடிப்படையிலும் நான் மேலும் சில அறிவிப்புகளை இந்த சட்டமன்ற பேரவையில் வெளியிடுகிறேன்.</p><p>23 ஆண்டுகளாக தொடர்ந்து டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு செப்டம்பர் 1 முதல் ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது 23 ஆண்டுகளாக 2000 ரூபாயில் ஆரம்பித்து கடைசி வரை 14,000 ரூபாய் வரைக்கும் இந்த 23 ஆண்டுகள் அவர்களுக்கு சம்பளம் கொடுத்து இருக்கிறோம் சரியான <a href="https://www.maalaimalar.com/sports/a-first-in-india-mumbai-cricket-association-to-provide-equal-pay-to-male-and-female-players" rel="nofollow">ஊதியம்</a> கொடுக்கணும் என்ற அடிப்படையில் மேற்பார்வையாளர்களுக்கு 33 ஆயிரத்து 23 ரூபாயும் விற்பனையாளர்களுக்கு 30,284 ரூபாயும் உதவி விற்பனையாளர்களுக்கு 28,680 உயர்த்தி வழங்கப்படும்.</p><p>இதன்மூலம் ஆண்டொன்றிற்கு அரசுக்கு ஏற்படும் செலவு ரூ.486.90 கோடி என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். </p><p>டாஸ்மாக் பணியாளர்களுக்கு பண்டிகை முன்பணமாக  புதிய டாஸ்மாக் பணியாளர்களுக்கு பண்டிகை முன்பணமாக ரூ.20000 வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.</p><p>டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஆண்டுக்கு வரும் மூன்று சீருடைகள் துணி மற்றும் தையல் செலவிற்காக ரூ.6000 வழங்கப்படும்</p><p>டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-corporation-sanitation-workers-protest-again-794388" rel="nofollow">தூய்மை பணி</a> மற்றும் அடிப்படை வசதிகளை உறுதி செய்வதற்காக மாதந்தோறும் மாநகரக் கடைகளுக்கு ரூ.5000 நகராட்சி பேரூராட்சி கடைகளுக்கு ரூ.4000 கிராமப்புற கடைகளுக்கு ரூ.3000 சில்லறை செலவினங்களை மேற்கொள்ள வழங்கப்படும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பெட்ரோலில் எத்தனால் கலப்பு விவகாரம்: நிபுணர் குழு அமைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/supreme-court-dismisses-plea-on-ethanol-blend-in-petrol</link><comments>https://www.maalaimalar.com/news/national/supreme-court-dismisses-plea-on-ethanol-blend-in-petrol#comments</comments><guid isPermaLink="false">b1a82377-7966-4ded-ad7e-c11d63b3193b</guid><pubDate>Mon, 31 Aug 2026 07:35:39 +0000</pubDate><atom:updated>2026-08-31T07:35:39.997Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,உச்சநீதிமன்றம் விசாரணை,வாகன பராமரிப்பு,Consumer Rights,EthanolBlending,மனு தள்ளுபடி,Vehicle Maintenance,Petrol Pump Receipts</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/r6lk1gvl/Supreme-Court" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ E20 Petrol]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/r6lk1gvl/Supreme-Court?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெட்ரோல் நிலையங்களில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ரசீதுகளில் எத்தனால் கலவை சதவீதத்தைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் மற்றும் வாகனங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்க வேண்டும் எனக் கோரிய பொதுநல மனுவை <strong><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D">உச்ச நீதிமன்றம்</a> தள்ளுபடி செய்துள்ளது</strong>.</p><p>வழக்கறிஞர் நரேந்திர கோஸ்வாமி தாக்கல் செய்த இந்த மனுவை, நீதிபதிகள் <strong>எம்.எம். சுந்தரேஷ்</strong> மற்றும் <strong>பி.பி. வரலே</strong> ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரணை செய்தது.</p><h2><strong>மனுதாரரின் முக்கியக் கோரிக்கைகள்</strong></h2><p>பெட்ரோல் விநியோகிக்கும் குழாய்கள் மற்றும் வாடிக்கையாளர் ரசீதுகளில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D">எத்தனால் கலவை</a> அளவை தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.</p><p>எத்தனால் கலப்பினால் வாகனங்களின் மைலேஜ், என்ஜின் ஆயுட்காலம் மற்றும் பராமரிப்புச் செலவுகள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யச் சுதந்திரமான நிபுணர் குழுவை அமைக்க வேண்டும்.</p><p>எந்தெந்த வாகன மாடல்களுக்கு இந்த பெட்ரோல் ஏற்றது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தரவுத்தளத்தை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று கோரிக்கைகளை வைத்திருந்தனர்.</p><h2><strong>நீதிமன்றத்தின் உத்தரவு</strong></h2><p>விசாரணையின் போது, நுகர்வோருக்குத் தாங்கள் வாங்கும் எரிபொருளின் கலவையைப் பற்றித் தெரிந்துகொள்ளும் உரிமை உள்ளது என மனுதாரர் வாதிட்டார்.</p><p>இருப்பினும், இந்த விவகாரத்திற்காக நேரடியாக உச்ச நீதிமன்றத்தை அணுகியதை கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தையோ அல்லது உரிய அதிகாரிகளையோ அணுகுமாறு அறிவுறுத்தி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.</p> ]]></content:encoded></item><item><title>கொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கு: மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவின் தீர்ப்பு ஒத்திவைப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kolathur-election-stalin-petition-verdict-postponed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kolathur-election-stalin-petition-verdict-postponed#comments</comments><guid isPermaLink="false">0e8d03ee-930a-4bb3-9e09-7a006c017382</guid><pubDate>Mon, 31 Aug 2026 07:24:09 +0000</pubDate><atom:updated>2026-08-31T07:24:09.616Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,Kolathur,கொளத்தூர்,முக ஸ்டாலின்,தீர்ப்பு ஒத்திவைப்பு,verdict postponed</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/0zb91kfq/MKS.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chennai Highcourt- MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/0zb91kfq/MKS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கொளத்தூர் சட்டசபைத் தேர்தல் தொடர்பாக மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><h2>கொளத்தூர் தொகுதி</h2><p>நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் விஎஸ் பாபு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.</p><p>இந்நிலையில், தொகுதியில் போட்டியிட்டு இரண்டாவது இடத்தை பிடித்த முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த விண்ணப்பத்தை ஏற்று, <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/verification-of-evm-for-kolathur-constituency-has-begun" rel="nofollow">கொளத்தூர் தொகுதி</a>யில், 14 வாக்குப்பதிவு எந்திரங்கள், ஓட்டுக்கு ஒப்புகைச் சீட்டு எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன.</p><h2>மு.க.ஸ்டாலின் மனுத்தாக்கல்</h2><p>அப்போது முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p>அந்த மனுவில், சரிபார்ப்புக்கு எடுக்கப்பட்ட சில வாக்குப்பதிவு எந்திரங்கள், திடீரென கோளாறாகி நின்றுவிட்டன. ஆறு வாக்கு சாவடிகளில்  வாக்குப்பதிவு  எந்திரங்கள் மற்றும் ஓட்டுக்கு ஒப்புகைச் சீட்டு எந்திரங்களான விவிபேடுகளை ஒப்பிட்டுப் பார்த்ததில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டன.</p><p>முறைகேடுகள் நடந்துள்ளதால் அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வி வி பேடுகளை சரி பார்க்க உத்தரவிட வேண்டும்.</p><p>தவெக எம்.எல் ஏ - வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும். என்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.</p><p>இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல், வாக்குப்பதிவு எந்திரங்கள், ஒப்புகைச் சீட்டு எந்திரங்களை சரிபார்க்கக் கோரி, தேர்தல் முடிவுகள் வெளியான மூன்று நாட்களில், அதாவது மே 7-ந்தேதியே விண்ணப்பித்துள்ளதாகவும், ஆனால், தேர்தல் வழக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவான 45 நாட்களுக்கு பிறகே வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டதால், இந்த வழக்கை தாக்கல் செய்வதை தவிர வேறு நிவாரணம் இல்லை என வாதிட்டார்.</p><p>தேர்தல் ஆணையம் தரப்பில், மனுவில் முன் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் விசாரானைக்கு உகந்தவை அல்ல. எம்.எல்.ஏ.வின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/election-case-high-court-warns-chief-minister-vijay-and-aadhav-arjuna">தேர்தல் வழக்கு</a> மட்டுமே தாக்கல் செய்ய முடியும்.</p><p>இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டால் இதே கோரிக்கையுடன் வழக்குகள் தாக்கல் செய்யப்படலாம் என்பதால், இந்த வழக்கை ஏற்கக் கூடாது என வாதிடப்பட்டது.</p><h2>தீர்ப்பு ஒத்திவைப்பு</h2><p>இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஸ்டாலினின் மனு மீதான தீர்ப்பை தள்ளிவைத்தனர்.</p><p>மேலும், வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்ப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்த வழக்கில், 2025-ம்ஆண்டு அதில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டதாக தேர்தல் ஆணையம் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.</p><p>இதையடுத்து, இந்த வழக்கை திரும்பப் பெற்று, புதிய மனு தாக்கல் செய்ய ஸ்டாலின் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. இதை ஏற்று, வழக்கை திரும்பப் பெற நீதிபதிகள் அனுமதியளித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>இலவச வேட்டி திட்டத்தில் 8 முழம் வேட்டிக்கு பதில் 4 முழம் வேட்டி விவகாரம்- ஆஸ்டின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vijay-balaji-repley-to-austin-question</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vijay-balaji-repley-to-austin-question#comments</comments><guid isPermaLink="false">4603eb98-d3df-4c14-9a2b-d5cc524ffde4</guid><pubDate>Mon, 31 Aug 2026 07:23:45 +0000</pubDate><atom:updated>2026-08-31T07:23:45.398Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தவெக,தமிழக சட்டசபை,TN assembly,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/blww1ljq/vijaybalaji.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் விஜய் பாலாஜி]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் விஜய் பாலாஜி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/blww1ljq/vijaybalaji.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மக்கள்  8 முழ  வேஷ்டிக்கு பதிலாக  4 முழ வேஷ்டியை தான் விரும்புகிறார்கள் என்று அமைச்சர் விரிவாக பதில் அளித்தார்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">சட்டசபையில்</a> கவன ஈர்ப்பு தீர்மானத்தில் திமுக எம்.எல்.ஏ.ஆஸ்டின் பேசியதாவது :-</p><p>பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெசவாளர்கள் மூலமாக உற்பத்தி செய்யப்பட்டு இலவசமாக வழங்கப்படும் வேட்டிகளின் அளவை 8 முழத்திலிருந்து 4 முழமாக குறைத்துள்ளது.</p><p>நெசவாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 1983-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் இத்திட்டம் கொண்டுவரப்பட்டு கலைஞர் அந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தினார்  என வரலாற்றைச் சுட்டிக்காட்டினார். </p><p>ஆண்டு முழுவதும் நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போதைய அரசின் புதிய முடிவால் நெசவாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.</p><p>அரசால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நெசவாளர்களின் உண்மை நிலை மற்றும் பாதிப்புகள் மறைக்கப்பட்டுள்ளதாகவும், கைத்தறி நெசவாளர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை எனத் தவறாகச் சித்திரிக்கப்பட்டுள்ளதாகவும் ஆஸ்டின் தெரிவித்தார். பயனாளிகளிடமோ அல்லது நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களிடமோ முறையான அறிவிப்பு கொடுத்துக் கருத்து கேட்புக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை. ஒரு சில அதிகாரிகளால் முறையான நடைமுறைகள் பின்பற்றப்படாமல் 'ஃபார்மாலிட்டி'க்காக மட்டுமே கையெழுத்து பெறப்பட்டுள்ளது.</p><p>நாகர்கோவில், கடலூர், திருச்செங்கோடு, சேலம், காஞ்சிபுரம் ஆகிய 5 சரகப் பகுதிகளில் சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான 8 முழ வேட்டிகள் ஏற்கனவே நெய்யப்பட்டு, இருப்பில் தேங்கியுள்ளன. நாகர்கோவில் சரகத்தில் மட்டும் ரூ.7 கோடி மதிப்பிலான வேட்டிகள் முடங்கியுள்ளன.</p><p>புதிய அரசாணையின்படி 60-ஆம் எண் நூலுக்குப் பதிலாக 40-ஆம் எண் நூலும், 72 இன்ச் அச்சுக்கு பதிலாக 68 இன்ச் அச்சுமாக மாற்றப்பட்டுள்ளதால், நெசவாளர்கள் தங்களது தறிகளை  மாற்றியமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், 7 மாதங்கள் தாமதித்து இத்தகைய புதிய அரசாணையை வெளியிட்டதன் நோக்கம் என்னவென்று கேள்வி எழுப்பிய ஆஸ்டின், பாதிக்கப்பட்ட நெசவாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.</p><p>8 முழ வேட்டிக்கு பதிலாக 4 முழ வேட்டி அறிமுகப்படுத்தப்பட்டதால் தரமும் கூலியும் குறைந்துள்ளதாக நெசவாளர்கள் கவலைப்படுகின்றனர் நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், தேக்கமடைந்துள்ள உற்பத்திப் பொருட்களை அரசு உடனடியாகக் கொள்முதல் செய்து, இந்த அரசாணையைத் தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் என்று ஆஸ்டின் வலியுறுத்தினார்.</p><p>இதற்கு அமைச்சர் விஜய் பாலாஜி பதிலளிக்கையில், மக்களுக்கு பிடித்த பொருளை தரமாக வழங்குவதே எங்களது நோக்கம். பொங்கலுக்கு ஜரிகை வைத்த சேலை வழங்கப்பட உள்ளது. பொங்கலுக்கு கொடுக்கும் வேட்டிகளை அமைச்சர்கள் அணிந்து வருவோம். கடந்த ஆட்சியில் கொடுக்கப்பட்ட வேட்டிகளை எதிர்க்கட்சிகள் அணிய வேண்டும். எது தரமான வேட்டி என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.  மக்கள்  8 முழ  வேஷ்டிக்கு பதிலாக  4 முழ வேஷ்டியை தான் விரும்புகிறார்கள் என்று விரிவாக பதில் அளித்தார்.</p>]]></content:encoded></item><item><title>செம்மஞ்சேரி விளையாட்டு நகரம் திட்டம் ரத்து இல்லை: மறுசீரமைப்பு செய்கிறோம் - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadhav-arjuna-says-chemmancheri-sports-city-project-not-cancelled-we-are-restructuring-it</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadhav-arjuna-says-chemmancheri-sports-city-project-not-cancelled-we-are-restructuring-it#comments</comments><guid isPermaLink="false">4330cd91-b1ee-4588-96e5-fd163705e557</guid><pubDate>Mon, 31 Aug 2026 07:06:38 +0000</pubDate><atom:updated>2026-08-31T07:06:38.717Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,அமைச்சர் ஆதவ் அர்ஜூனா,Minister Aadhav Arjuna</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/7uls85kk/aadhavarjuna.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் ஆதவ் அர்ஜூனா]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ஆதவ் அர்ஜூனா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/7uls85kk/aadhavarjuna.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>புதிய திட்டம் முதலமைச்சரின் ஆய்வில் இருப்பதாகவும், கூடிய விரைவில் தமிழக மக்களுக்கு நல்ல செய்தியை முதலமைச்சர் அறிவிப்பார் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறினார்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபையில்</a> கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக ஆட்சியில் விளையாட்டுத் துறையின் தரத்தை மேம்படுத்தும் வகையில் செம்மஞ்சேரியில் 128 ஏக்கர் பரப்பளவில் ரூ.261 கோடி மதிப்பீட்டில் குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டதாக தெரிவித்தார்.</p><p>மேலும், பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டதைப் போலவே, குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கும் திட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தத் திட்டம் ஏன் கைவிடப்பட்டது என்பது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு வருவதாக உதயநிதி ஸ்டாலின் கூறினார்.</p><p>இதற்கு பதிலளித்த பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, விளையாட்டுத் துறைக்கான மானியக் கோரிக்கையின்போது, விளையாட்டுக்கு அரசு அளித்து வரும் முக்கியத்துவம் குறித்தும், முதலமைச்சர் புதிய விளையாட்டுக் கொள்கையை எவ்வாறு வகுத்து வருகிறார் என்பது குறித்தும் விரிவாக எடுத்துரைத்ததாக தெரிவித்தார்.</p><p>கடந்த 100 ஆண்டுகளில் நாம் ஒலிம்பிக் பதக்கம் பெற்றதே கிடையாது. இதற்காக புதிய திட்டத்தை வகுக்க வேண்டும். அதற்கான அடிப்படை கட்டமைப்பாக 38 மாவட்டங்களிலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான விளையாட்டு விடுதிகள் உருவாக்கப்பட வேண்டும் </p><p>மேலும், உலகத் தரத்தில் 10 ஒலிம்பிக் அகாடமிகள் உருவாக்கப்படும்.</p><p>அதன் தொடர்ச்சியாக, சர்வதேச தரத்தில் ஒலிம்பிக் நகரத்தை உருவாக்கும் நிலையில் அரசு இருப்பதாக தெரிவித்த அமைச்சர், தனக்கு இருந்த விளையாட்டுத் துறை அனுபவத்தின் அடிப்படையில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை  ஆய்வு செய்தபோது, ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் முழுமையாக ரத்து செய்யப்படவில்லை என்றும், மாறாக மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருவதாகவும் விளக்கம் அளித்தார்.</p><p>ஒரு ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்பட்டால் அது ஒலிம்பிக் தரத்தில் இருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் எனக் கூறிய அமைச்சர், 42 வகையான விளையாட்டுகளை சர்வதேச தரத்தில் நடத்தும் வகையில் புதிய டிபிஆர்  தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.</p><p>இந்த புதிய திட்டம் முதலமைச்சரின் ஆய்வில் இருப்பதாகவும், கூடிய விரைவில் தமிழக மக்களுக்கு நல்ல செய்தியை முதலமைச்சர் அறிவிப்பார் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறினார்.</p><p>மேலும், உலகத் தரத்திற்கு ஏற்ற வகையில் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் மறுசீரமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p>தொடர்ந்து, திமுகவின் தேர்தல் அறிக்கையில் ஸ்போர்ட்ஸ் சிட்டி உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான ஒப்பந்தப் பணிகள் 8.1.2026 அன்று கோரப்பட்டதாகவும், கடந்த ஐந்து ஆண்டுகளில் இதற்கான எந்தப் பணியும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அமைச்சர் குற்றம்சாட்டினார். தேர்தலுக்கு முன்புதான் அடிக்கல் நாட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p>முதலமைச்சர் புதிய அறிவிப்பை வெளியிட்டவுடன், அதற்கான பணிகளை ஆறு மாதங்களுக்குள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.</p><p>இதையடுத்து பேசிய உதயநிதி ஸ்டாலின், சென்னைக்கு அருகே 128 ஏக்கர் நிலம் கிடைத்தது சாதாரண விஷயம் அல்ல. பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட பிறகே செம்மஞ்சேரி அருகே ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது” என்றார்.</p><p>இந்தியாவிலேயே முதல்முறையாக பல்வேறு விளையாட்டுகள் இடம்பெறும் வகையில் விளையாட்டு நகரம் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.</p><p>ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் கைவிடப்படவில்லை என்றும், மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில், பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.</p><p>இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, 1994ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்குப் பிறகு சர்வதேச தரத்தில் புதிய விளையாட்டு அரங்கம் உருவாக்கப்படவில்லை எனக் கூறினார்.</p><p>கூடிய விரைவில் பணிகளைத் தொடங்கி, ஐந்து ஆண்டுகளுக்குள் முழுமையாக முடித்து, முதலமைச்சர் அவர்களின் கைகளால் ஒலிம்பிக் தரத்திலான இந்த ஸ்போர்ட்ஸ் சிட்டி திறக்கப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஆண்கள் உலகக் கோப்பை ஹாக்கி  - 4வது முறையாக பட்டத்தை வென்ற ஜெர்மனி</title><link>https://www.maalaimalar.com/sports/mens-hockey-world-cup-germany-win-fourth-title</link><comments>https://www.maalaimalar.com/sports/mens-hockey-world-cup-germany-win-fourth-title#comments</comments><guid isPermaLink="false">6828b3d6-ab6b-4432-9732-6f233c9baeca</guid><pubDate>Mon, 31 Aug 2026 06:55:57 +0000</pubDate><atom:updated>2026-08-31T06:55:57.037Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Germany,hockey,Hockey World Cup,ஹாக்கி உலக கோப்பை,ஹாக்கி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/2vlakvgo/Untitled-design-9.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ German Hockey Team]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/2vlakvgo/Untitled-design-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெல்ஜியத்தில் நடைபெற்று வந்த ஆண்கள் <a href="https://www.maalaimalar.com/topic/உலகக்-கோப்பை-ஹாக்கி">உலகக் கோப்பை ஹாக்கி</a> போட்டியில், ஸ்பெயின் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, ஜெர்மனி அணி தனது நான்காவது பட்டத்தை வென்றது. </p><p>இதன்மூலம் ஆண்கள் உலக கோப்பை ஹாக்கி  போட்டியில் நான்கு முறை பட்டம் வென்ற பாகிஸ்தான் அணியின் சாதனையை ஜெர்மன் அணி சமன் செய்தது.</p><h3><strong>ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை 2026</strong></h3><p>FIH ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை 2026 போட்டி, ஆகஸ்ட் 15 அன்று பெல்ஜியம் நாட்டில் உள்ள வாவ்ரே நகரில் தொடங்கியது.</p><p>இந்த போட்டியில் 16 அணிகள் பங்கேற்ற நிலையில், மொத்தம் 50 போட்டிகள் பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் உள்ள மைதானங்களில் நடத்தப்பட்டன.</p><p>இந்த பதினாறு சர்வதேச அணிகளும் முதல் கட்டமாக நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகளில் விளையாடின. பின்னர் இரண்டாவது சுற்றில் எட்டு அணிகள் வெளியேற்றப்பட்டு முதல் எட்டு இடங்களை பிடித்த அணிகள் மோதின.</p><h3><strong>இந்திய ஹாக்கி அணி</strong></h3><p>இந்திய ஹாக்கி அணி முதல் சுற்றில் நடந்த போட்டியில், ‘டி’ பிரிவில் பங்கேற்று, பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றது.</p><p>இரண்டாவது சுற்றில் விளையாடிய இந்திய அணி, நெதர்லாந்து, அர்ஜெண்டினா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளிடம் தோல்வியுற்று எட்டாவது இடத்தை பிடித்தது.</p><p>இருப்பினும் இந்திய அணியின் கேப்டனான ஹர்மன்பிரீத் சிங், அதிக கோல்களை அடித்த பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தார்.</p><h3><strong>அரை இறுதிப் போட்டி</strong></h3><p>இதையடுத்து நடந்த முதல் அரை இறுதி போட்டியில், ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் ஸ்பெயின் அணி 4-3 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.</p><p>இரண்டாவது அரை இறுதி போட்டியில், ஜெர்மனி மற்றும் அர்ஜெண்டினா அணிகள் மோதின. இந்த போட்டியில் ஜெர்மனி 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.</p><p>மூன்றாவது இடத்திற்கு அர்ஜெண்டினா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் அர்ஜென்டினா 2-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி மூன்றாவது இடத்தை பிடித்தது.</p><h3><strong>இறுதிப் போட்டி</strong></h3><p>இந்த நிலையில் பெல்ஜியத்தின் வாவ்ரே நகரில் உள்ள பெல்ஃபியஸ் மைதானத்தில் நேற்று இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஜெர்மனியை சேர்ந்த மைக்கேல் ஸ்ட்ரூதாஃப் ஆட்டத்தின் 44-வது நிமிடத்தில் ஒரு கோலை அடித்து அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டார்.</p><p>இதையடுத்து இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காத நிலையில், அர்ஜெண்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி, தனது நான்காவது பட்டத்தை வென்றது.</p><p>இதன்மூலம் 2002, 2006, 2023 ஆகிய ஆண்டுகளில் வென்ற பட்டத்தை தொடர்ந்து, இந்த ஆண்டிலும் பட்டத்தை வென்று, உலகக் கோப்பை போட்டியில் நான்கு முறை பட்டம் வென்ற பாகிஸ்தான் அணியின் சாதனையை ஜெர்மனி சமன் செய்தது.</p>]]></content:encoded></item><item><title>கர்நாடகாவில் சைபர் மோசடியில் ரூ.558 கோடியை இழந்த மக்கள் - வெறும் ரூ.1.9 கோடி மட்டுமே மீட்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/karnataka-lost-rs-558-crore-to-cyber-fraud-only-rs-1-9-crore-recovered</link><comments>https://www.maalaimalar.com/news/national/karnataka-lost-rs-558-crore-to-cyber-fraud-only-rs-1-9-crore-recovered#comments</comments><guid isPermaLink="false">51742a19-ab58-44f6-aa3c-d12d7dcb6ea9</guid><pubDate>Mon, 31 Aug 2026 06:55:52 +0000</pubDate><atom:updated>2026-08-31T06:55:52.712Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Karnataka,சைபர் மோசடி,cyber fraud,Priyank Kharge,Cybercrime,online scam,Financial Loss</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/6lcggrkf/Online-Scam" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Online Scam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/6lcggrkf/Online-Scam?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/karnataka">கர்நாடக </a>மாநிலத்தில் நடப்பு 2026-ஆம் ஆண்டில் ஜனவரி முதல் ஜூலை வரையிலான ஏழு மாதங்களில் மட்டும் பொதுமக்கள் சைபர் குற்றவாளிகளிடம் 558 கோடி ரூபாயை பறிகொடுத்துள்ளனர்.</p><p>ஆனால், இதில் அதிர்ச்சியூட்டும் விதமாக வெறும் 1.9 கோடி ரூபாய் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்குத் திரும்பக் கிடைத்துள்ளதாக அம்மாநில உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.</p><h2>மீட்புப் பணியில் தொய்வு: புள்ளிவிவரங்கள்</h2><p>ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/cyber-fraud">சைபர் குற்றங்களால் </a>இழந்த மொத்த தொகை ரூ.558 கோடி ஆகும்.</p><p>இதில் மோசடி நடந்த கணக்குகளில் இருந்து போலீசாரால் முடக்கப்பட்ட தொகை ரூ. 35.9 கோடி என்றாலும், பாதிக்கப்பட்ட மக்களிடம் இதுவரை வெறும் ரூ.1.9 கோடி மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. </p><p>இதன் மூலம் மீட்பு விகிதம் என்பது முடக்கப்பட்ட தொகையில் வெறும் 5% ஆகவும், இழந்த மொத்த தொகையில் மிகக் குறைந்த அளவாக வெறும் 0.4% ஆகவும் மட்டுமே உள்ளதால் மீட்புப் பணியில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது. </p><p>இந்த ஆண்டில் பதிவான வழக்குகளின் அடிப்படையில் மக்கள் ஒரு வழக்கிற்கு சராசரியாக ரூ.11.8 லட்சம் வரை தங்களது பணத்தை இழந்துள்ளனர்.</p><h2>ஆள் பற்றாக்குறை</h2><p>சைபர் குற்றங்கள் பெருமளவில் அதிகரித்து வரும் போதிலும், அதனைக் கையாள்வதில் காவல் துறையில் நிலவும் கடுமையான ஆள் பற்றாக்குறை காரணமாக மாநிலம் முழுவதும் சைபர் கிரைம் பிரிவில் 320 பணியிடங்கள் காலியாக உள்ள சூழலில், குறிப்பாக பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள முதன்மை சைபர் கிரைம் காவல் நிலையத்திலேயே 200 பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளதே பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பணம் திரும்பக் கிடைப்பதில் ஏற்படும் தாமதத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.</p><h2>கடந்த ஆண்டுகளின் ஒப்பீடு (2024 - 2026)</h2><p>கடந்த இரண்டு ஆண்டுகளை விட இந்த ஆண்டு வழக்குகளின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்திருந்தாலும் மக்கள் இழக்கும் சராசரித் தொகை அதிகமாகவே உள்ளது. </p><p>2024-இல் 17,890 வழக்குகளில் ரூ.1,841 கோடி இழக்கப்பட்டு ரூ.183.6 கோடியும், 2025-இல் 10,703 வழக்குகளில் ரூ.1,756.6 கோடி இழக்கப்பட்டு ரூ.76.7 கோடியும் மீட்கப்பட்ட சூழலில், 2026-ஆம் ஆண்டில் இதுவரை ரூ.558 கோடி இழக்கப்பட்டு வெறும் ரூ.1.9 கோடி மட்டுமே மீட்கப்பட்டுள்ளதால், கடந்த மூன்று ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக கர்நாடக மக்கள் ரூ.3,932 கோடியை சைபர் மோசடியில் இழந்துள்ளதும் அதில் இதுவரை வெறும் ரூ.262 கோடி மட்டுமே மீட்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.</p><h2>அரசின் அதிரடி நடவடிக்கை மற்றும் தீர்வு</h2><p>இந்த விவகாரம் குறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/priyank-kharge">பிரியங்க் கார்கே</a> சட்டமன்றத்தில் பேசுகையில், சைபர் குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க அரசு புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகக் கூறியதுடன், சைபர் பிரிவு, வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் அரசு முகமைகளுக்கு இடையே உள்ள ஒருங்கிணைப்பு பலப்படுத்தப்பட்டு விசாரணைக்குத் தேவையான ஆவணங்கள் தாமதமின்றிப் பெறப்படும் என்றும், சட்ட நடைமுறைகளை எளிதாக்கி முடக்கப்பட்ட பணத்தை நீதிமன்ற அனுமதியுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகளை மறுஆய்வு செய்து அவற்றை முன்னுரிமை அடிப்படையில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>மூளை வளர்ச்சி குன்றிய மகனுக்காக கையில் கீபோர்டு வடிவத்தை பச்சைக்குத்திய தாய்</title><link>https://www.maalaimalar.com/news/world/mother-tattoos-keyboard-on-arm-for-autistic-son</link><comments>https://www.maalaimalar.com/news/world/mother-tattoos-keyboard-on-arm-for-autistic-son#comments</comments><guid isPermaLink="false">db6665f7-d9d0-4a94-a114-f96b26f15b50</guid><pubDate>Mon, 31 Aug 2026 06:52:55 +0000</pubDate><atom:updated>2026-08-31T06:52:55.494Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>autism</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/pdx14w0g/Untitled-design-11.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Autism mother’s keyboard tattoo]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/pdx14w0g/Untitled-design-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கனடாவில் <a href="https://www.maalaimalar.com/topic/அமெரிக்கா">மூளை வளர்ச்சி குன்றிய</a> (ஆட்டிசம்) நோயால் பாதிக்கப்பட்ட 11 வயது மகனின் தாயார், தனது கையில் கீபோர்ட் வடிவத்தில் பச்சை ஒன்றை குத்திக் கொண்டார். </p><p>இதன் மூலம் தனது மகன் எந்த சூழ்நிலையிலும் அவன் நினைப்பதை மற்றவர்களிடம் தெரிவிக்க முடியும் என கூறினார்.</p><h3><strong>வேலைசெய்யாமல் போன மின்சாதனம்</strong></h3><p>கனாடாவில் வசித்து வரும் ஜெசிகா என்பவர், மூளை வளர்ச்சி குன்றிய நோயால் பாதிக்கப்பட்ட தனது 11 வயது மகனான ஹண்டர் உடன் சேர்ந்து ஒரு உணவகத்திற்கு உணவருந்த சென்றார்.</p><p>அப்போது ஹண்டர் தனது வார்த்தைகளையும், எண்ணங்களையும் பகிர்ந்து கொள்வதற்காக, அவன் வைத்திருந்த ஒரு எலக்ட்ரிக் கருவியின் பேட்டரி திடீரென தீர்ந்து போனது. இதனால் அவன் என்ன நினைக்கிறான் என்பதை, தனது தாயிடம் வெளிப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது.</p><p>இந்த சூழ்நிலையில் ஹண்டர் ஒரு காகிதத்தை எடுத்து, அதில் ஒரு கீபோர்டை வரைந்து, பிறகு தனக்கு என்ன சாப்பிட வேண்டும் என்பதை தனது தாய்க்கு தெரியப்படுத்தும் வகையில், அந்த வரையப்பட்ட காகிதத்தில் எழுத்துக்களை சுட்டிக்காட்டினான்.</p><p>இந்த காட்சியை பார்த்த ஹண்டரின் தாயார், இதற்கு ஒரு மாற்று தகவல் தொடர்பு சாதனம் தேவை என்பதை உணர்ந்தார்.</p><h3><strong>பச்சை குத்திக்கொண்ட தாய்</strong></h3><p>இதைத்தொடர்ந்து ஜெசிகா தனது கையில் ஒரு கீபோர்டை பச்சை குத்திக் கொள்ள முடிவு செய்தார். மேலும் அந்த கீபோர்டு வடிவிலான டாட்டூவில், ‘மகிழ்ச்சி, சோகம்’ ஆகிய ஸ்மைலி வடிவங்களும், ‘நான் உன்னை விரும்புகிறேன்’ என்ற பொத்தானும் இடம்பெற்றிருந்தன.</p><p>இந்த வடிவத்தை தனது கையில் பச்சை குத்திக்கொண்ட அவரின் தாயார், அதை தனது மகனிடம் முதலில் காண்பித்தார். அப்போது ஹண்டர், தனது தாயின் கையில் வரையப்பட்ட கீபோர்டில், ‘அம்மா’ என்று பதிவுசெய்தான்.</p><p>இதன்மூலம் ஹண்டர் தன்னுடன் எந்தவித சிக்கலும் இல்லாமல் தொடர்பு கொள்ளும் வீடியோவை, ஜெசிகா சமூக வலைதளத்தில் பகிர்ந்தார்.</p><p>இதைத்தொடர்ந்து, ஜெசிகா ஒரு ஆடை நிறுவனத்துடன் இணைந்து, கீபோர்டு வடிவிலான அச்சுகளை தனது சட்டைகளில் அச்சிட்டார்.</p><p>இதன்மூலம், உலகம் முழுவதும் உள்ள ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், தங்களது எண்ணங்களை வீடுகளிலும், மருத்துவமனைகளிலும், பள்ளிகளிலும் வெளிப்படுத்த முடியும் என ஜெசிகா குறிப்பிட்டார்.</p><p>மேலும் தனது உடலில் ஆயிரம் தழும்புகளை பச்சை குத்திக் கொள்வதன் மூலம், தனது மகனுக்கு அவனது எண்ணங்களை வெளிக்காட்ட ஒரு வழி இருக்குமென்றால், தான் உடல் முழுவதும் பச்சை குத்திக்கொள்ள தாயாராக இருப்பதாகவும் ஜெசிகா தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>அவர்கள் தூய்மைப் பணியாளர்கள் அல்ல தூய்மை தேவதைகள்..!- அமைச்சர் ராஜ்மோகன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/they-are-not-cleaners-they-are-cleanliness-angels-minister-rajmohan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/they-are-not-cleaners-they-are-cleanliness-angels-minister-rajmohan#comments</comments><guid isPermaLink="false">97f745b9-55e8-4153-b7cf-3644302d6c51</guid><pubDate>Mon, 31 Aug 2026 06:52:36 +0000</pubDate><atom:updated>2026-08-31T06:52:36.920Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,Sanitary workers,TN assembly,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan,தூய்மை பணியாளர்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/il3s04st/rajmohan1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Rajmohan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/il3s04st/rajmohan1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபை வார விடுமுறைக்குப்பின் இன்று கூடியது. இன்றைய கூட்டத்தொடரில் மாற்றுத்திறனாளிகள், நலத்துறை, வேளாண்மை, மதுவிலக்கு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மீதான கோரிக்கைகளை மீது விவாதம் நடைபெறுகிறது.</p><p>மேலும் 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் விலையில்லா வேட்டி சேலை குறித்த கவன ஈர்ப்பு தீர்மானமும் எடுத்துக்கொள்ளப்படுகிறது.</p><p>முன்னதாக, சட்டசபையில் வினாக்கள் - விடைகள் நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.</p><p>அதன் விவரம் வருமாறு:-</p><p>அமைச்சர் ராஜ்மோகன் உரை:</p><p>தூய்மைப் பணியாளர்கள் உண்மையில் பாவம் தான். அவர்கள் தூய்மை ஊழியர்கள் அல்ல தூய்மை தேவதைகள்.</p><p>போராடும் தூய்மைப் பணியாளர்கள் மீது எந்தவித அடக்குமுறையும் கூடாது என காவல்துறையிடம் கூறப்பட்டுள்ளது. </p><p>பணியின்போது பலியான <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-rajinikanth-praise-to-padma-807774" rel="nofollow">தூய்மைப் பணியாளர்</a> குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>பலியான தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தருவது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>தூய்மைப் பணியாளர்களுக்காக கழிப்பிடம், உடை மாற்றும் அறைகள் செப்.15-ந்தேதிக்குள் ஏற்படுத்தி தரப்படும்.</p><p>தூய்மைப் பணியாளர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு கையுறை வழங்கப்படும். வரும் காலங்களில் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.</p><p>காலை சிற்றுண்டிக்கு மாற்றாக பணமாக தருவது பற்றி பரிசீலனை. உணவிற்கு பதில் தூய்மைப் பணியாளர்களுக்கு விரைவில் உணவுப்படி வழங்கப்படும்.</p><p>உடை மாற்றும் அறையுடன் மூடிய பிரத்யேக கழிப்பட வசதி ஏற்படுத்தி தரப்படும்.</p><p>வார விடுப்பு, ஊதியத்துடன் கூடிய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sarathkumar-speech-in-tn-assembly" rel="nofollow">மகப்பேறு விடுப்பு</a>, முதல்வரை சந்திப்பது தொடர்பாக நல்ல செய்தி வரும்.</p><p>தூய்மைப் பணியாளர்களுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தி மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் .</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பெஞ்ச் மேல் ஏறி கவனத்தை ஈர்க்கலாம்... எ.வ.வேலு- தங்கம் தென்னரசு பேச்சுக்கு புன்னகைத்த முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-smiled-at-the-remarks-made-by-ev-velu-and-thangam-thennarasu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-smiled-at-the-remarks-made-by-ev-velu-and-thangam-thennarasu#comments</comments><guid isPermaLink="false">62c22fd2-cafe-4092-8a97-880c7c20dd05</guid><pubDate>Mon, 31 Aug 2026 06:39:45 +0000</pubDate><atom:updated>2026-08-31T06:39:45.700Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,ev velu,எவ வேலு,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/3qwco2jx/vijay0.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/3qwco2jx/vijay0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சபாநாயகரின் கவனத்தை ஈர்ப்பது தொடர்பாக தி.மு.க. கொறடா எ.வ.வேலு மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் பேசிய போது முதலமைச்சர் விஜய் புன்னகைத்தப்படி இருந்தார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழக சட்டசபை</a> நிகழ்வுகள் நேரலை செய்யப்படும் நிலையில் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டவை ரீல்ஸாக வருகின்றன என கே.என்.நேரு கூறுகையில், சபை நேரலை இளைஞர்கள் உள்ளிட்ட பொதுமக்களை ஈர்த்துள்ளது. அவைக்குறிப்பில் நீக்கும் அளவுக்கு ஏன் பேச வேண்டும் என எம்எல்ஏக்கள் சிந்திக்கக்கூடாதா? உறுப்பினர்கள் என்ன பேசுகிறார்கள் என மக்கள் உன்னிப்பாக கவனிக்கின்றனர். அவை மாண்பை குலைக்கும் எம்எல்ஏக்களை அம்பலப்படுத்துவதில் தவறில்லை என மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த வாரத்தில் உரிமை மீறல் குழு தேர்வு நடைபெறும் என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார். </p><h2><strong>எம்.எல்.ஏ.க்களை கொறடாக்கள் கட்டுப்படுத்த வேண்டும்</strong></h2><p>மேலும் சபாநாயகர் கூறுகையில்,  கூச்சல், குழப்பம் ஏற்படும் போது எம்.எல்.ஏ.க்களை கொடறாக்கள் கட்டுப்படுத்த வேண்டும். உட்காருங்கள் என்று பல முறை நான் கூறிய பின்னும் ஓ.எஸ். மணியன் நின்று கொண்டே இருக்கிறார். சட்டசபை இருக்கையை விட்டு எழுந்து வந்து ஓடி வருவது தவறு என்றார். </p> <p>இதற்கு தி.மு.க. கொறடா எ.வ.வேலு பேசுகையில், நீங்கள் சொன்ன கருத்தை நாங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம். அதில் மாற்றுக்கருத்து இல்லை. பேரவை தலைவரின் கவனத்தை ஈர்ப்பதற்கு நிற்கலாம், கை தூக்கலாம். உறுப்பினர்களின் குரல் சபாநாயகருக்கு கேட்காத போது முன்னால் வந்து சொல்கிறார்கள் என்றார்.</p><p>சபாநாயகர் பேசுகையில், கையை உயர்த்துவதில் தவறில்லை. என் கவனத்தை ஈர்க்க முடியவில்லை என்றால் குரல் கொடுப்பதில் தவறில்லை. நான் சொல்வது ஒரே நேரத்தில் பத்து, பதினைந்து பேர் எழுந்து நின்று குரல் கொடுத்து இவருக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று பரிந்துரைப்பது தேவையில்லை. நானே பார்த்து பார்த்து யாருக்கும் எந்த குறையும் இல்லாமல் வாய்ப்பு தருகிறேன்.  இருக்கையை விட்டு எழுந்து  ஓடி வருவது தவறு என்று தான் சொல்கிறேன் என்றார்.</p><p>திமுக கொறடா எ.வ.வேலு, பேரவைத் தலைவர் சொல்வது எப்போதும் விதிக்குட்பட்டு தான் சொல்கிறீர்கள். நாங்களும் விதிக்கு கட்டுப்பட்டுதான் இருக்கிறோம். சில நேரங்களில் எங்களுடைய பக்கத்தில் இருக்ககூடிய உறுப்பினர்களின் குரல் உங்களுக்கு கேட்கவில்லை என்றால் பக்கத்தில் இருக்கும் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-important-measures-starting-with-an-increase-in-the-milk-procurement-price">உறுப்பினர்கள்</a> உதவியா இருந்து சொல்கிறார்கள். அதுதானே தவிர வேறொன்றும் இல்லை. இதே பேரவையில் பேரவைத் தலைவரின் கவனத்தை ஈர்க்க பெஞ்ச் மேல் ஏறி நின்று இரண்டு கையை தூக்கி கவனத்தை ஈர்த்துள்ளோம் என்றார். </p><p>உடனே  சபாநாயகர் நீங்கள் சொல்லுங்கள் நான் கேட்டுக்கொள்கிறேன். பத்து பேர் சேர்ந்து ஒருவருக்கு பரிந்துரை செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார். </p><p>இதனை தொடர்ந்து பேசிய தங்கம் தென்னரசு, இத்தனை ஆண்டு காலமாக இங்கே இருந்து கையை மட்டும் உயர்த்தினால் உங்கள் கவனத்தை ஈர்க்கலாம் என்று நாங்கள் நம்பிக்கொண்டு இருந்தோம். இன்றைக்குதான் பெஞ்ச் மேல் ஏறியும் கவனத்தை ஈர்க்கலாம் என அண்ணன் எவவேலு மூலம் அறிய கருத்தை புதிய வழிமுறையை எங்களுக்கு காட்டிக்கொடுத்து இருகிறார் என்றார். </p><p>பெஞ்ச் மேல் ஏறி நிற்கும் தண்டனையை நான் வழங்க மாட்டேன். சபாநாயகர் இருக்கையில் முன்பு அமர்ந்தது போல் அமரால் இருந்தால் அனைவரையும் அனுமதிக்க தயாராக இருக்கிறேன் என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கூறினார். </p><p>இவ்வாறு விவாதம் நடைபெற்ற போது முதலமைச்சர் விஜய் புன்னகைத்தப்படி இருந்தார். </p>]]></content:encoded></item><item><title>காஞ்சிபுரம் புதுநகர் வளர்ச்சித் திட்டம் ரத்து!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanchipuram-new-town-development-plan-cancelled</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanchipuram-new-town-development-plan-cancelled#comments</comments><guid isPermaLink="false">9496605b-80e8-4cb9-b1ad-b8e8b671ff80</guid><pubDate>Mon, 31 Aug 2026 06:21:17 +0000</pubDate><atom:updated>2026-08-31T06:21:17.820Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,காஞ்சிபுரம்,Kanchipuram,Development Project,புதுநகர் வளர்ச்சித் திட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/bu7p35vu/VJ.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/bu7p35vu/VJ.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுக ஆட்சியில் வரையறுக்கப்பட்ட காஞ்சிபுரம் புது நகர் வளர்ச்சித் திட்டம் மற்றும் பாரம்பரிய மறுமலர்ச்சித் திட்டத்தை தவெக அரசு ரத்து செய்துள்ளது.</p><p>சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த கடந்த திமுக ஆட்சியில் புதுநகர் வளர்ச்சி திட்டங்களானது செயல்படுத்தப்பட்டது. </p><p>அதன்படி, காஞ்சிபுரம், திருமழிசை, மீஞ்சூர், திருவள்ளூர், மறைமலைநகர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு புதுநகர் வளர்ச்சித் திட்டங்களை அன்றைய திமுக அரசு செயல்படுத்தியது. </p><p>தொடர்ந்து, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் இந்த திட்டங்கள் தொடங்கப்பட்டு, கருத்து கேட்பு கூட்டங்கள் முடிக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இறுதியாக் திட்ட அறிக்கை தயார் செய்யும் நிலைக்கு வந்தது.</p><p>இந்த நிலையில் அதில் ஒரு திட்டத்தை தவெக அரசு ரத்து செய்துள்ளது. அதன்படி கடந்த 2023-ம் ஆண்டு 62.78 சதுர கி.மீ பரப்பளவில் 18 கிராமங்களை உள்ளடக்கி வெளியிடப்பட்ட அந்த அரசிதழை ரத்து செய்து தமிழ்நாடு அரசு மீண்டும் ஒரு அரசிதழை வெளியிட்டுள்ளது.</p><p>இதனால், திருமழிசை, மீஞ்சூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, மறைமலை நகர், திருபெரும்புதூர் ஆகிய புது நகர் வளர்ச்சித் திட்டங்களின் நிலையும் கேள்விக்குறியாகி உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>150-க்கும் மேற்பட்ட புதிய சமூக நீதி விடுதிகள் கட்டித்தரப்படும்- அமைச்சர் வன்னி அரசு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-to-build-over-150-new-social-justice-hostels-vanni-arasu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-to-build-over-150-new-social-justice-hostels-vanni-arasu#comments</comments><guid isPermaLink="false">dbb0f447-400a-4617-9207-a2ed1de20cbe</guid><pubDate>Mon, 31 Aug 2026 06:00:21 +0000</pubDate><atom:updated>2026-08-31T06:00:21.245Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,minister vanni arasu,அமைச்சர் வன்னி அரசு,சமூக நீதி விடுதிகள்,Social justie hostel</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/ztwpw1lh/vanni1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Vanni arasu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/ztwpw1lh/vanni1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபை வார விடுமுறைக்குப்பின் இன்று கூடியது. இன்றைய கூட்டத்தொடரில் மாற்றுத்திறனாளிகள், நலத்துறை, வேளாண்மை, மதுவிலக்கு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மீதான கோரிக்கைகளை மீது விவாதம் நடைபெறுகிறது.</p><p>மேலும் 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் விலையில்லா வேட்டி சேலை குறித்த கவன ஈர்ப்பு தீர்மானமும் எடுத்துக்கொள்ளப்படுகிறது.</p><p>முன்னதாக, சட்டசபையில் வினாக்கள் - விடைகள் நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.</p><p>அதன் விவரம் வருமாறு:-</p><p>ஜல்லிக்கட்டுக்கு எதிரான கருத்துகளை கூறவில்லை - எம்எல்ஏ கருப்பையா விளக்கம்</p><p>ஜல்லிக்கட்டிற்கு எதிராக எம்எல்ஏ கருப்பையா கூறிய கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் - சபாநாயகர்</p> <p>ஜெயங்கொண்டம் இளைய பெருமாள் நல்லூரில் உள்ள ஆதிதிராவிட நலத்தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டடம் தேவை - வைத்தியலிங்கம்</p><p>கழிப்பறை வசதியுடன் கூடிய கட்டடம் விரைந்து கட்டித்தர ஏற்பாடு செய்யப்படும் - அமைச்சர் வன்னி அரசு </p><p>சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக திண்டுக்கல் - குமுளி 4 வழிச்சாலை அமைக்கப்படுமா? - எம்எல்ஏ ஐங்கரன்</p><p>திண்டுக்கல் - குமுளி 4 வழிச்சாலை திட்டம் பரிசீலனையில் உள்ளது. ஆட்சியர், எம்எல்ஏ உடன் கலந்து பேசி கள ஆய்வு மேற்கொண்டு தேவை அறிந்து நிதியை பொறுத்து நடவடிக்கை  எடுக்கப்படும்.</p><p>ஏலகிரியில் வியூ பாயிண்ட் அமைப்பது தொடர்பாக ஆட்சியருடன் கலந்து பேசி நிதிநிலையை பொறுத்து நடவடிக்கை - அமைச்சர் ராஜேஷ்குமார்</p><p>எங்கெல்லாம் சமூக நீதி விடுதிகள் தேவையோ அங்கெல்லாம் கட்டிக்கொடுக்கப்படும். 150-க்கும் மேற்பட்ட புதிய சமூக நீதி விடுதிகள் கட்டித்தரப்படும் என அறிவித்துள்ளோம். </p><p>வில்லிவாக்கம் ஒன்றியத்தில் பழங்குடியினர் மட்டும் வசிக்கும் பகுதியில் தொடக்கப்பள்ளி வேண்டும் - எம்எல்ஏ விஜய் பிரபு</p><p>அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தொடக்கப்பள்ளி விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் வன்னி அரசு</p><p>கொளத்தூர் தொகுதி கபாலீஸ்வரர் கல்லூரியில் மாலை நேர வகுப்புகள் தொடங்க வேண்டும், கூடுதல் கட்டடம் தேவை - சேகர் பாபு</p><p>புதிய கட்டடம், மாலை நேர வகுப்புகள் தொடங்க முன்னதாகவே நடவடிக்கை தொடங்கப்பட்டு விட்டது - அமைச்சர் ரமேஷ்</p><p>கல்லூரியில் கட்டப்பட்ட படைப்பகம், நூலகம் பயன்பாட்டுக்க கொண்டு வரப்படும் - சேகர்பாபு கேள்விக்கு அமைச்சர் ரமேஷ் பதில்</p><p>ஜவாஹிருல்லா, தமிமுன் அன்சாரி போன்ற மூத்த உறுப்பினர்களுக்கு சட்டசபையின் முன்வரிசையில் இடம் வழங்க வேண்டும் - எ.வ.வேலு</p><p>எந்த கட்சி, சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார்கள் என்ற அடிப்படையில் தான் உறுப்பினர்களுக்கு இடம் ஒதுக்கீடு- சபாநாயகர்</p><p>எ.வ.வேலு கேட்டுக்கொண்டதன்படி மூத்த உறுப்பினர்களுக்கு முன்வரிசையில் இடம் தருவது குறித்து ஆராய்ந்து முடிவு  எடுக்கப்படும் - சபாநாயகர்</p><p>இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஒரே வாரத்தில் &apos;டபுள் டமாக்கா&apos;.. அடுத்தடுத்து வெளியாகும் கயாடு லோஹரின் படங்கள்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/kayadu-lohar-box-office-double-dhamaka-i-am-game-immortal</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/kayadu-lohar-box-office-double-dhamaka-i-am-game-immortal#comments</comments><guid isPermaLink="false">87ece8ad-a035-4e12-b532-714d18dd2b4a</guid><pubDate>Mon, 31 Aug 2026 05:55:26 +0000</pubDate><atom:updated>2026-08-31T05:55:26.844Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>துல்கர் சல்மான்,Dulquer salmaan,Kayadu Lohar,I Am Game,Immortal,காயடு லோஹர்,Gvprakash kumar,ஜிவிபிரகாஷ் குமார்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/4nzd2krv/Iam-Game-Immortal" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ I'am Game - Immortal  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/4nzd2krv/Iam-Game-Immortal?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ் திரையுலகில் 'டிராகன்' திரைப்படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D">கயாடு லோஹர்</a>, இந்த வாரம் பாக்ஸ் ஆபீஸில் ஒரு அரிய சாதனையை நிகழ்த்த உள்ளார். </p><p>செப்டம்பர் 3 மற்றும் செப்டம்பர் 4 ஆகிய தேதிகளில், அடுத்தடுத்த நாட்களில் இவரது இரண்டு முக்கியத் திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ளன. </p><p>துல்கர் சல்மான் மற்றும் ஜி.வி. பிரகாஷ் குமார் என தென்னிந்தியாவின் முன்னணி நட்சத்திரங்களுடன் இவர் இணைந்து நடித்துள்ள திரைப்படங்கள் ஒரே வாரத்தில் வெளியாவது சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2><strong>'ஐ ஆம் கேம்' -செப்டம்பர் 3</strong></h2><p>செப்டம்பர் 3-ஆம் தேதி, <a href="https://www.maalaimalar.com/topic/dulquer-salmaan">துல்கர் சல்மான்</a> நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட கேங்ஸ்டர் த்ரில்லர் திரைப்படமான <strong>'<a href="https://www.maalaimalar.com/topic/im-game">ஐ ஆம் கேம்</a>'</strong> உலகளவில் வெளியாகிறது. </p><p>'RDX' திரைப்படப் புகழ் இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் கயாடு லோஹர் மிக முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். </p><p>வேஃபேரர் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கதிர் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர்.</p><h2><strong>'இம்மார்ட்டல்' - செப்டம்பர் 4</strong></h2><p>'ஐ ஆம் கேம்' வெளியான அடுத்த நாளே, அதாவது செப்டம்பர் 4-ஆம் தேதி, <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">ஜி.வி. பிரகாஷ் குமார்</a> - கயாடு லோஹர் கூட்டணியில் உருவாகியுள்ள சூப்பர்நேச்சுரல் ஹாரர் திரைப்படமான <strong>'<a href="https://www.maalaimalar.com/topic/immortal">இம்மார்ட்டல்</a>'</strong> திரைக்கு வருகிறது. </p><p>மாரியப்பன் சின்னா இயக்கத்தில், சாம் சி.எஸ் இசையில் உருவாகியுள்ள இந்த டார்க் ஃபேண்டஸி திரைப்படத்தின் ட்ரைலரை அண்மையில் நடிகர் தனுஷ் வெளியிட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2>எதிர்பார்ப்பு</h2><p>ஒரே வாரத்தில் பேக்-டு-பேக் ரிலீஸாக வெளியாகும் இந்த இரண்டு திரைப்படங்களும் நடிகை கயாடு லோஹரின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான மைல்கல்லாக அமையவுள்ளன.</p><p>கேங்ஸ்டர் ஆக்ஷன் மற்றும் அமானுஷ்ய ஹாரர் என முற்றிலும் மாறுபட்ட இருவேறு பிரம்மாண்ட கதைக் களங்களில், தென்னிந்தியாவின் முன்னணி நட்சத்திரங்களான துல்கர் சல்மான் மற்றும் ஜி.வி. பிரகாஷ் குமார் ஆகியோருடன் இணைந்து அவர் பாக்ஸ் ஆபீஸில் நிகழ்த்தப்போகும் இந்த 'டபுள் டமாக்கா' அதிரடியைக் காண ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் தற்போது மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சட்டம், ஒழுங்கைக் காப்பாற்ற முடியாமல் கைகட்டி வேடிக்கை பார்க்கிறதா தவெக அரசு?- டிடிவி தினகரன் கேள்வி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-indictment-tvk-govt-10</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-indictment-tvk-govt-10#comments</comments><guid isPermaLink="false">d1587066-8929-4534-becf-924f0da34790</guid><pubDate>Mon, 31 Aug 2026 05:49:36 +0000</pubDate><atom:updated>2026-08-31T05:49:36.356Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,AMMK,TTV Dhinakaran,அமமுக,டிடிவி தினகரன்,tvk</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/q1ens4ff/TTVDhinakaran001.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/q1ens4ff/TTVDhinakaran001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு உரிய பதிலளிக்காமல் வேண்டுமென்றே சர்ச்சைகளை உருவாக்கி, அவையின் நேரத்தை வீணடிப்பதிலுமே கவனம் செலுத்தி வருவது வெட்கக்கேடானது.</strong></em></p><p>அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/டிடிவி-தினகரன்">டி.டி.வி.தினகரன்</a> எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><p>பல்லாவரத்தில் விசிக நிர்வாகி வெட்டிக்கொலை, கூடங்குளம் அருகே ரவுடி தலை துண்டித்துக் கொலை, நெல்லை அருகே இளைஞர் படுகொலை, சேலம் அருகே பெண் துண்டு துண்டாக வெட்டிக்கொலை, கள்ளக்குறிச்சியில் தன் வயலுக்கு இரவு காவலுக்குச் சென்ற மூதாட்டி கொலை என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து அரங்கேறியிருக்கும் படுகொலைச் சம்பவங்கள் சட்டம் ஒழுங்கை கேள்விகுறியாக்கியுள்ளதோடு, பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.</p><h2><strong>வெட்கக்கேடானது</strong></h2><p>மக்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு வழங்குவதே அரசு  நிர்வாகத்தின் அடிப்படைக் கடமை என்பதை மறந்து, ஆட்சிக்கு வந்து நூறு நாட்களைக் கடந்த நிலையில் இன்னும் கும்பகர்ணத் தூக்கத்திலேயே இருக்கும் தவெக அரசால், பொதுமக்கள் பொதுவெளியில் சுதந்திரமாக நடமாடவே அச்சப்படும் அவலநிலை உருவாகியுள்ளது.</p><p>தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் குற்றச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தி, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய முதலமைச்சர் விஜய் அவர்கள், சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு உரிய பதிலளிக்காமல் வேண்டுமென்றே சர்ச்சைகளை உருவாக்கி, அவையின் நேரத்தை வீணடிப்பதிலுமே கவனம் செலுத்தி வருவது வெட்கக்கேடானது.</p><p>எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அஞ்சி, தன் வசம் உள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் மானியக் கோரிக்கைகளைக்கூட மற்ற அமைச்சர்களைத் தாக்கல் செய்யச் சொன்ன முதலமைச்சர் விஜய் அவர்கள், தற்போது சீரழிந்திருக்கும் சட்டம்-ஒழுங்கு குறித்து எந்தவிதக் கவலையும் இல்லாமல் இருப்பதைப் பார்க்கும்போது, காவல்துறையையும் மற்றவர்களிடம் ஒப்படைத்துவிட்டாரோ என்ற சந்தேகம் எழுகிறது.</p><p>எனவே, கொலைச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து, சட்டப்படி கடுமையான தண்டனை பெற்றுத்தருவதோடு, தமிழகத்தில் அதலபாதாளத்திற்குச் சென்றிருக்கும் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து கூடுதல் கவனம் செலுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>பால் கொள்முதல் விலை உயர்வு முதல் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-important-measures-starting-with-an-increase-in-the-milk-procurement-price</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-important-measures-starting-with-an-increase-in-the-milk-procurement-price#comments</comments><guid isPermaLink="false">47775e76-9689-42b2-8ab2-814b7e94f4b0</guid><pubDate>Mon, 31 Aug 2026 05:38:46 +0000</pubDate><atom:updated>2026-08-31T05:38:46.474Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/d9khe1ft/vijay.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/d9khe1ft/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கோவையில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் டிஜிட்டல் நிதி மையம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபையில்</a> 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-</p><p>*  பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டார் முதலமைச்சர் விஜய். </p><p>* ஒரு லிட்டர் பால் கொள்முதல் விலை 38 ரூபாயிலிருந்து 41 ரூபாயாக ஏற்கனவே உயர்த்திய நிலையில் தற்போது மேலும் 3ரூபாய் உயர்த்தி அறிவித்துள்ளார். </p><p>* பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று கொள்முதல் விலை ரூ.44 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. </p><p>* பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் 3.15 லட்சத்துக்கம் அதிக பால் உற்பத்தியாளர்கள் பயன் பெறுவர்.</p><p>* பால் கொள்முதல் விலையை உயர்த்தியதால் ஆவினுக்கு ஏற்படும் கூடுதல் செலவை அரசே ஏற்கும் என அறிவிப்பு. </p><p>* தூத்துக்குடியில் புதிய அனல்மின் நிலையம் அமைக்கப்படும். </p><p>* தூத்துக்கடியில் புதிதாக இரண்டு நியூ தெர்மல் பவர் ஸ்டேஷன் அமைக்கப்படும். </p><p>* புதிய அனல் மின், நீர்மின் நிலையங்கள் அமைக்க கடந்த ஆட்சியில் பெரிய அளவிலான நடவடிக்கை முன்னெடுக்கவில்லை. </p><p>* Super Critical Thermal Power Plant ரூ.20,800 கோடியில் நிறுவப்படும். </p><p>* காஞ்சிபுரம் மதுரமங்கலத்தில் ரூ.175 கோடியில் சிப்காட் மூலம் செமி கண்டெக்டர் நிறுவனம் அமைக்கப்படும். </p><p>* புதிய செமி கண்டக்டர் மூலம் புதிதாக 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.</p><p>* தமிழ்நாட்டில் புதிதாக 196 துணை மின்நிலையங்கள் அமைக்கப்படும். </p><p>*  ரூ.1,762 கோடி மதிப்பிட்டில் மின் பகிர்மான மேம்பாடு திட்டம் செயல்படுத்தப்படும். </p><p>* திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் Multi Model Logistics Hub அமைக்கப்படும். </p><p>* கோவையில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் டிஜிட்டல் நிதி மையம் அமைக்கப்படும். </p><p>* திருச்சி மண்டலத்தில் பல்முனை சரக்கு போக்குவரத்து மையம் அமைக்கப்படும். </p><p>இவ்வாறு முதலமைச்சர் விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். </p>]]></content:encoded></item><item><title>தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் திட்டத்தை கைவிடும் எண்ணம் இல்லை- அமைச்சர் ராஜ்மோகன் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajmohan-affirms-chola-museum-project-in-thanjavur-will-not-be-scrapped</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajmohan-affirms-chola-museum-project-in-thanjavur-will-not-be-scrapped#comments</comments><guid isPermaLink="false">d5fc4ee3-bc1d-4c99-865c-87aab0a22182</guid><pubDate>Mon, 31 Aug 2026 05:31:15 +0000</pubDate><atom:updated>2026-08-31T05:31:15.606Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords></media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/y05zvghc/rajmohan.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Rajmohan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/y05zvghc/rajmohan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபை வார விடுமுறைக்குப்பின் இன்று கூடியது. இன்றைய கூட்டத்தொடரில் மாற்றுத்திறனாளிகள், நலத்துறை, வேளாண்மை, மதுவிலக்கு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மீதான கோரிக்கைகளை மீது விவாதம் நடைபெறுகிறது.</p><p>மேலும் 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் விலையில்லா வேட்டி சேலை குறித்த கவன ஈர்ப்பு தீர்மானமும் எடுத்துக்கொள்ளப்படுகிறது.</p><p>முன்னதாக, சட்டசபையில் வினாக்கள் - விடைகள் நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.</p> <p>அதன் விவரம் வருமாறு:-</p><p>ஆலைகள் நிறைந்த தேன்கனிக்கோட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்க புறவழிச்சாலை தேவை என எம்எல்ஏ ராமச்சந்திரன் கேட்டுக்கொண்டார்.</p><p>புறவழிச்சாலை தொடர்பான கோரிக்கை முன்பே வந்துள்ளது. திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டது.</p><p>கிராமப்புற, நகர்ப்புற சாலைகளை நெடுஞ்சாலைகளுடன் முழுமையாக இணைப்பது தொடர்பாக கணக்கு எடுக்கப்படுகிறது என்று <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/national-sports-day-minister-aadhav-arjuna-wishes" rel="nofollow">அமைச்சர் ஆதவ்</a> பதில் அளித்துள்ளார்.</p><p>"தஞ்சை தமிழ் பல்கலை. வளாகத்தில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கும் அறிவிப்பு திமுக ஆட்சியில் வெளியிடப்பட்டு நிலுவையில் உள்ளது.</p><p>கடந்த திமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட சோழர் அருங்காட்சியகம் திட்டத்தை கைவிடும் எண்ணம் இல்லை" என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். </p><p>மறைமலை அடிகளார் நினைவிடத்தை புதுப்பித்து தமிழ் பண்பாட்டு மையமாக உருவாக்க அரசு முன்வருமா? என்று எம்எல்ஏ காமாட்சி கேள்வி எழுப்பினார்.</p><p>இதற்கு பதில் அளித்த <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D" rel="nofollow">அமைச்சர் ராஜ்மோகன்</a>," நினைவிடத்தை தமிழ் பண்பாட்டு மையமாக மாற்றுவது தொடர்பாக அவரது குடும்பத்தாருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். </p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் கேள்வி-நேரம்: தீர்த்தமலை கோவில் மேம்பாடு குறித்து அமைச்சர் பதில்... தாரகை கத்பட்டிற்கு முன்வரிசை இடம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-responds-regarding-theerthamalai-temple-development-priority-spot-for-tharahai-cuthbert</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-responds-regarding-theerthamalai-temple-development-priority-spot-for-tharahai-cuthbert#comments</comments><guid isPermaLink="false">af915c12-dc42-426d-93d4-aecb8d8a5209</guid><pubDate>Mon, 31 Aug 2026 05:22:15 +0000</pubDate><atom:updated>2026-08-31T05:22:15.373Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,தமிழக சட்டசபை,TN assembly,Tharahai Cuthbert,தாரகை கத் பட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/xdasive6/congress.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தாரகை கத் பட்டுக்கு சட்டசபையில் முன் வரிசையில் இடம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ தாரகை கத் பட்டுக்கு சட்டசபையில் முன் வரிசையில் இடம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/xdasive6/congress.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தீர்த்தமலையில் உள்ள தீர்த்தகிரீஸ்வரர் கோவிலை சுற்றுலாத்தலமாக அறிவிப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு நிதிநிலைக்கு ஏற்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார்.</strong></em></p><h2><strong>தாரகை கத் பட்டுக்கு சட்டசபையில் முன் வரிசையில் இடம்</strong> </h2><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபை</a> வாரவிடுமுறைக்கு பின் இன்று கூடியது. இன்றைய கூட்டத்தில், காங்கிரஸ் சட்டசபை குழு தலைவராக தாரகை கத் பட் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் சட்டசபையில் அவருக்கு  முன் வரிசையில்  இடம் கொடுக்கப்பட்டுள்ளது.</p><p>ஆளும் கட்சி வரிசையில் நான்காவது வரிசையில் இருந்த தாரகை கத் பட்,  தற்போது எதிர்க்கட்சி வரிசையில் சட்டமன்ற கட்சி தலைவர்கள் அமரும் முன் வரிசையில் சவுமியா அன்புமணி அருகே அமர்ந்து உள்ளார்.</p><p>சட்டசபையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், தீர்த்த மலையில் உள்ள தீர்த்தகிரீஸ்வரர் கோவிலை சுற்றுலாத்தலமாக அரசு அறிவிக்குமா என சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் கேள்வி எழுப்பினார்.</p><p>இதற்கு பதிலளித்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார், தீர்த்தமலையில் உள்ள தீர்த்தகிரீஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் எனவும், ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் வருகைத்தருவதாக கூறினார். </p><p>மேலும், தீர்த்தமலை அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோவிலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பிடம் உணவு கூடம் போன்றவை செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், வருகை புரியும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் வசதிகள் தேவைப்படும் பட்சத்தில் கள ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட துறை மூலம் விரிவான திட்ட மதிப்பீடு மற்றும் கருத்துரை தயார் செய்து தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவரின்  தலைமையிலும் மாவட்ட சுற்றுலா வளர்ச்சி குழுவின் ஒப்புதலுடன் அரசுக்கு பெறப்படும் நிதி நிலைக்கு ஏற்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>கவினின் 10-வது படம்: &apos;பேர் சொல்லும் பிள்ளை&apos; படப்பிடிப்பு அடுத்த வாரம் மதுரையில் தொடக்கம்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/kavin-10th-film-per-solum-pillai-madurai-shoot-begins-next-week</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/kavin-10th-film-per-solum-pillai-madurai-shoot-begins-next-week#comments</comments><guid isPermaLink="false">7cd182df-e665-4b23-b9f9-561d6da9d9c9</guid><pubDate>Mon, 31 Aug 2026 05:14:09 +0000</pubDate><atom:updated>2026-08-31T05:14:09.135Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Ram Sangaiah,Sanjana Krishnamoorthy,கவின்,actor kavin,Prince Pictures,சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி,Per Sollum Pillai,பேர் சொல்லும் பிள்ளை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/jtvr83f7/Per-Sollum-Pillai" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Per Sollum Pillai ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/jtvr83f7/Per-Sollum-Pillai?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவரான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">கவினின் </a>10- வது திரைப்படம் 'பேர் சொல்லும் பிள்ளை' இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. </p><p>இதனைத் தொடர்ந்து, படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பு அடுத்த வாரம் மதுரையில் தொடங்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><h2><strong>தலைப்புக்கு பின்னால் இருக்கும் சுவாரசியம்</strong></h2><p>1987-ல் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற கிளாசிக் திரைப்படமான 'பேர் சொல்லும் பிள்ளை' படத்தின் தலைப்பு, இந்த புதிய படத்திற்கும் சூட்டப்பட்டுள்ளது. </p><p>பழைய படத்தின் டைட்டிலாக இருந்தாலும், இது முற்றிலும் தற்காலத்திற்கு ஏற்ற ஒரு புதிய மற்றும் சுவாரசியமான கிராமத்துக் கதைக் களம் கொண்ட திரைப்படம் என படக்குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர். </p><p>மேலும் இத்திரைப்படத்தின் மேல் இருக்கும் ஆர்வம் ரசிகர்களிடம் அதிகரித்து வருகிறது.</p><h2><strong>அடுத்தகட்ட படப்பிடிப்பு</strong></h2><p>கடந்த ஜூன் மாதம் பூஜையுடன் தொடங்கப்பட்ட இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, சென்னை மற்றும் செங்கல்பட்டை சுற்றியுள்ள கிராமப்புறப் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்றது. </p><p>இதில் கவின் மற்றும் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">சஞ்சனா </a>சம்பந்தப்பட்ட முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்டன.</p><p>தற்போது முதற்கட்ட படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்த நிலையில், அடுத்த முக்கியக் கட்டமாக மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்த வாரம் முதல் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. </p><p>அதனைத் தொடர்ந்து தேனி போன்ற தென் மாவட்டங்களிலும் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.</p><h2><strong>நட்சத்திர பட்டாளம்</strong></h2><p>'பேர் சொல்லும் பிள்ளை' திரைப்படத்தில் நடிகர் கவின் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக 'லப்பர் பந்து' திரைப்படப் புகழ் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி </a>கதாநாயகியாக நடிக்கிறார். </p><p>மேலும் இத்திரைப்படத்தை 'தண்டட்டி' படத்தை இயக்கிய ராம் சங்கையா கதையை எழுதி இயக்க, பிரின்ஸ் பிக்ஸர்ஸ் சார்பில் S. லக்ஷ்மன் குமார் தயாரிக்கிறார்.</p><p> ஆர். வேல்ராஜ் ஒளிப்பதிவையும், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பையும், G. மதன் படத்தொகுப்பையும், M. கதிரவன் மதி கலை இயக்கத்தையும் மேற்கொள்கின்றனர்.</p><h2><strong>எதிர்பார்ப்பு</strong></h2><p>’டாடா’, ‘ஸ்டார்’ ஆகிய திரைப்படங்களின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, சமீபத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுடன் இணைந்து நடித்த 'ஹாய்' (Hi) திரைப்படத்திலும் தனது இயல்பான நடிப்பால் மக்களின் பேராதரவையும் நல்ல வரவேற்பையும் பெற்று வரும் நடிகர் கவின் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அண்மையில் வெளியாகி வசூல் சாதனை படைத்த 'லப்பர் பந்து' திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ள சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகியாக இப்படத்தில் நடிக்க இருக்கிறார்.</p><p>தமிழ் சினிமாவில் தங்களின் தனித்துவமான நடிப்பால் முத்திரை பதித்து வரும் இவர்கள் இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடிப்பதால், திரையில் இவர்களது புதிய காம்போ மற்றும் புதிய கெமிஸ்ட்ரி எப்படி இருக்கப்போகிறது என்ற ஆர்வம் சினிமா ரசிகர்களிடையே தற்போதே பலமடங்கு அதிகரித்து இவர்களது கூட்டணி மீதான எதிர்பார்ப்பை பெரிதும் தூண்டியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வெல்வதே இலக்கு..!- ஹர்மன்பிரீத் சிங்</title><link>https://www.maalaimalar.com/sports/winning-gold-at-asian-games-main-goal-harmanpreet-singh</link><comments>https://www.maalaimalar.com/sports/winning-gold-at-asian-games-main-goal-harmanpreet-singh#comments</comments><guid isPermaLink="false">837f2b33-7a68-4bff-a9d0-6d0a6bd26e91</guid><pubDate>Mon, 31 Aug 2026 05:12:21 +0000</pubDate><atom:updated>2026-08-31T05:12:21.570Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Champion,Asian Hockey Tournament,ஹர்மன்பிரீத் சிங்,தங்கப் பதக்கம்,ஆசிய விளையாட்டு போட்டி,Harmanpreeth singh</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/x9gx7zum/Harman.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ harmanpreet singh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/x9gx7zum/Harman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடந்த உலகக் கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி லீக் சுற்றில் வேல்ஸ், பாகிஸ்தானை தோற்கடித்தது.</p><p>இங்கிலாந்திடம் வீழ்ந்தது. 2-வது சுற்றில் நெதர்லாந்து, அர்ஜென்டினாவிடம் அடுத்தடுத்து தோல்வியை தழுவி அரை இறுதி வாய்ப்பை இழந்தது. </p><p>பின்னர் நடந்த 7-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் 3-4 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் பணிந்து 8-வது இடம் பெற்றது.</p><p>உலகக் கோப்பை போட்டியில் 1975-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியா பதக்க மேடையை எட்டவில்லை என்ற சோகம் தொடருகிறது.</p><h2>ஹர்மன்பிரீத் சிங்</h2><p>அடுத்து இந்திய ஆக்கி அணி, அடுத்த மாதம் (செப்டம்பர்) 19-ந் தேதி முதல் அக்டோபர் 4-ந் தேதி வரை ஜப்பானின் அய்ச்சி, நகோயாவில் நடைபெறும் 20-வது ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கிறது.</p><p>12 அணிகள் கலந்து கொள்ளும் இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் இந்தோனேசியாவை (செப்.20-ந் தேதி) எதிர்கொள்கிறது.</p><p>உலகக் கோப்பையில் கடைசி ஆட்டத்தில் தோற்ற பிறகு இந்திய ஆக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கூறியதாவது:-</p><p>இரு அணிகளும் (இந்தியா, பெல்ஜியம்) இந்த இடத்துக்கான ஆட்டத்தில் விளையாட விரும்பவில்லை.</p><p>அத்துடன் இரு அணிகளும் ஒரே மனநிலையில் தான் இருந்தன. உலகின் தலைசிறந்த அணிக்கு எதிராக அவர்களது சொந்த ரசிகர்கள் முன்னிலையில் ஆடி, ஒரு அணியாக சிறப்பாக செயல்பட்டது மிகுந்த ஊக்கம் அளிக்கிறது. </p><p>ஆட்டத்தின் 60 நிமிடமும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நாங்கள் பேசிக்கொண்டு இருந்தோம். அதனை இந்த ஆட்டத்தில் நாங்கள் பார்த்தோம். பெல்ஜியம் அணிக்கு எதிராக செயல்பட்ட விதம் மகிழ்ச்சி அளிக்கிறது.</p><p>ஆனால் 8-வது இடத்தை பிடித்ததில் மகிழ்ச்சி இல்லை. ஆனால் இது ஒரு பயணம். தற்போது எங்களது அடுத்த இலக்கு ஆசிய விளையாட்டு போட்டியாகும். </p><p>ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று 2028-ம் ஆண்டு லாஸ்ஏஞ்சல்சில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற விரும்புகிறோம்.</p><p>இந்த தொடரில் நாங்கள் தடுப்பாட்டத்தில் நல்ல பாடம் கற்றுக்கொண்டோம். ஒரு அணியாக தடுப்பாட்டத்தில் சிறப்பாக செயல்படவில்லை என்றால் பெரிய அணிகள் நமக்கு சிக்கலை ஏற்படுத்தும்.</p><p>நாம் தடுப்பாட்டத்தில் இன்னும் வலுவாக இருக்க வேண் டியது அவசியமானதாகும். இந்த ஒரு விஷயத்தில் தான் நாம் பின்தங்கி இருக்கிறோம்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY : தங்கப்பிரியர்களுக்கு இனிப்பான செய்தி! இறங்குமுகத்தில் தங்கம் விலை</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-31-08-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-31-08-2026#comments</comments><guid isPermaLink="false">54bc43e6-cdbc-490b-95eb-5c359560e35c</guid><pubDate>Mon, 31 Aug 2026 04:53:15 +0000</pubDate><atom:updated>2026-08-31T04:53:15.590Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/0f0vre3x/gold07.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ தங்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/0f0vre3x/gold07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.</strong></em> </p><h2><strong>தங்கம் விலை</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/தங்கம்">தங்கம்</a> விலை இம்மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இப்படியாக நீடித்த விலை மாற்றம், கடந்த 6-ந்தேதியில் இருந்து டாப் கியரில் எகிறத் தொடங்கியது.</p><p>கடந்த 1-ந்தேதி ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 220-க்கும், ஒரு சவரன் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 760-க்கு விற்பனை ஆனது. 6-ந்தேதி ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 750-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து விலை அதிகரித்து, கடந்த 24-ந்தேதி ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 30-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்து 240 என்றும் உயர்ந்தது.</p><p>இப்படியாக விலை உயர்ந்து வந்த சூழலில், அதன் பின்னர் சற்று குறையத் தொடங்கியது. கடந்த 27-ந்தேதி கிராமுக்கு ரூ.285-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 280-ம் குறைந்து இருந்தது.</p><p>இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினமும் விலை குறைந்தது. அதன்படி, நேற்றுமுன்தினம் முன்தினம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 800-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 400-க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் நிலவரப்படி, கிராமுக்கு ரூ.295-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 360-ம் சரிந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 505-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 40-க்கும் விற்பனை செய்யப்பட்டது.</p><h2><strong>அதிரடி குறைவு</strong></h2><p>இந்த நிலையில் வார தொடக்க நாளான இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு 135 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 370 ரூபாய்க்கும் சவரனுக்கு 1,080 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 22-ந்தேதியில் இருந்து இன்று வரை தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,910 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. </p><h2><strong>வெள்ளி விலை</strong></h2><p>வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது. </p><h2><strong>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்</strong></h2><p>30-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,040</p><p>29-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,040</p><p>28-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,400</p><p>27-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,800</p><p>26-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,080</p><h2><strong>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>30-08-2026- ஒரு கிராம் ரூ.260</p><p>29-08-2026- ஒரு கிராம் ரூ.260</p><p>28-08-2026- ஒரு கிராம் ரூ.265</p><p>27-08-2026- ஒரு கிராம் ரூ.265</p><p>26-08-2026- ஒரு கிராம் ரூ.265</p>]]></content:encoded></item><item><title>200 கி.மீ. ரேன்ஜ் வழங்கும் புது ஏத்தர் ஸ்கூட்டர் - விலை மற்றும் முழு விவரங்கள்</title><link>https://www.maalaimalar.com/automobilenews/newautomobile/ather-konarc-launched-india-price-details</link><comments>https://www.maalaimalar.com/automobilenews/newautomobile/ather-konarc-launched-india-price-details#comments</comments><guid isPermaLink="false">b5503bb5-64d1-4969-ad7a-c5329ecf812e</guid><pubDate>Mon, 31 Aug 2026 04:38:00 +0000</pubDate><atom:updated>2026-08-31T04:38:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Electric Scooter,எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்,Ather Energy,ஏத்தர் எனர்ஜி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/s6vzhmmg/Ather-Konarc.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ather Konarc]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/s6vzhmmg/Ather-Konarc.png?w=280" width="280"></media:thumbnail><category>இது புதுசு (Automobile)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/ather-energy">ஏத்தர் எனர்ஜி</a> நிறுவனம் இந்திய சந்தையில் கோனார்க் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. புதிய ஏத்தர் கோனார்க் மாடலின் விலை ரூ. 99,999 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது, நிறுவனத்தின் புதிய EL பிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்ட முதல் <a href="https://www.maalaimalar.com/topic/electric-scooter">ஸ்கூட்டர்</a> ஆகும். </p><p>இந்த EL கட்டமைப்பு, வெறும் செயல்திறனை மட்டும் நோக்கமாக கொள்ளாமல், குறைந்த செலவுகள், எளிமையான பராமரிப்பு, சுலபமான சார்ஜிங் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்ற தன்மை ஆகியவற்றை மையமாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><h2>இரண்டு வேரியண்ட்கள்:</h2><p>புதிய ஏத்தர் கோனார்க் S மற்றும் Z ஆகிய இரண்டு லைன்களில் பலவிதமான ரேஞ்ச் ஆப்ஷன்களுடன் வழங்கப்படும். அறிமுக விழாவில் பகிரப்பட்ட வேரியன்ட் விலைகளின்படி, 100 கிலோமீட்டர் IDC ரேஞ்ச் கொண்ட கோனார்க் S மாடலின் விலை ரூ. 99,999 ஆகும். இதேபோல் 125 கிலோமீட்டர் வேரியண்ட்டின் விலை ரூ. 1,21,999 ஆகவும், 161 கிலோமீட்டர் வேரியண்ட் விலை ரூ. 1,44,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.</p><p>200 கிலோமீட்டர் S மாடல் மற்றும் இரண்டு கோனார்க் Z வேரியன்ட்களின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். S மாடல் ஐந்து வண்ணங்களிலும், Z மாடல் நான்கு வண்ணங்களிலும் கிடைக்கும்.</p><h2>அதிநவீன பிரேக்கிங் சிஸ்டம்:</h2><p>ஏத்தர் கோனார்க் மாடலில் 14-இன்ச் முன்பக்க சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் (CBS) கொண்ட முன்பக்க டிஸ்க் பிரேக் பயன்படுத்துகிறது. ஆனால், ஏத்தர் நிறுவனம், ஏஇபிஎஸ் (AeBS) எனப்படும் மேம்பட்ட மின்னணு பிரேக்கிங் சிஸ்டம் மூலம் அதை மேம்படுத்தியுள்ளது.</p><p>ஏஇபிஎஸ், கட்டுப்பாடு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதோடு, 20% வரை அதிகபட்ச பிரேக்கிங் விசையை வழங்க முடியும் என்று ஏத்தர் கூறுகிறது. </p><p>EL பிளாட்ஃபார்ம் முதன்முதலில் காட்சிப்படுத்தப்பட்டபோது, ​​நிறுத்தும் தூரத்தைக் குறைக்கவும், பின் சக்கரம் லாக் ஆவதைக் குறைக்கவும் இந்தத் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியது.</p><h2>இதர அம்சங்கள்:</h2><p>புதிய ஏத்தர் கோனார்க் மாடலில் ஆட்டோஹோல்டு, ஃபால்சேஃப், ஏர்வாக், ப்ளூடூத் கால் மற்றும் மியூசிக் அலர்ட் போன்ற அம்சங்கள் உள்ளது. இத்துடன் ஏத்தர் கனெக்ட், தெஃப்ட் அண்ட் டோ அலெர்ட்கள், ஃபைண்ட் மை ஸ்கூட்டர் மற்றும் ஓ.டி.ஏ. அப்டேட் பெறும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் 31-லிட்டர் அன்டர்சீட் ஸ்டோரேஜ் மற்றும் யு.எஸ்.பி. சி சார்ஜர் வழங்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>தமிழக சட்டசபையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/concerned-ministers-reply-to-members-questions-in-the-tamil-nadu-legislative-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/concerned-ministers-reply-to-members-questions-in-the-tamil-nadu-legislative-assembly#comments</comments><guid isPermaLink="false">cd01505d-2df7-4f7e-8513-6e5578cc95a6</guid><pubDate>Mon, 31 Aug 2026 04:35:25 +0000</pubDate><atom:updated>2026-08-31T04:35:25.164Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan,அமைச்சர் ஆதவ் அர்ஜூனா,Minister Aadhav Arjuna</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/nski2pq5/assembly.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் ஆதவ் அர்ஜூனா- அமைச்சர் ராஜ்மோகன்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ஆதவ் அர்ஜூனா- அமைச்சர் ராஜ்மோகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/nski2pq5/assembly.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நாகப்பட்டினம் அரசு அருங்காட்சியகம் புதுப்பிக்கப்பட்டு விரைவில் திறக்கப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபை</a> வார விடுமுறைக்குப்பின் இன்று கூடியது. இன்றைய கூட்டத்தொடரில் மாற்றுத்திறனாளிகள், நலத்துறை, வேளாண்மை, மதுவிலக்கு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மீதான கோரிக்கைகளை மீது விவாதம் நடைபெறுகிறது. மேலும் 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் விலையில்லா வேட்டி சேலை குறித்த கவன ஈர்ப்பு தீர்மானமும் எடுத்துக்கொள்ளப்படுகிறது. </p><p>முன்னதாக, சட்டசபையில் வினாக்கள் - விடைகள் நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். அதன் விவரம் வருமாறு:-</p><p>முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்</p><p>மதுரை முதல் தேனி செல்லும் சாலையில் உசிலம்பட்டி ஆண்டிபட்டி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது  என்றும்  ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி பகுதியில் பைபாஸ் சாலை அமைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமா ? இதற்கு நெடுஞ்சாலைத்துறை அமைச்சரின் பதில் என்ன என்று கேட்பதற்கு பதிலாக போக்குவரத்து துறை அமைச்சரின் பதில் என்ன என்று ஆதவ் அர்ஜூனாவிடம் கேட்டார்.</p><p>உடனே எழுந்து பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, அண்ணே நான்  நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் என கூறியதால்  சட்டசபையில் சிரிப்பலை ஏற்பட்டது. உடனே ஓ. பி. எஸ். தான் பேசியதை திருத்திக் கொண்டார்.</p><p>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா:- டெல்டா மாவட்டங்கள், தென்மாவட்டங்களில் இன்னும் 2 வழி, ஒரு வழி சாலைகள் அதிகம் உள்ளன. சாலை விரிவாக்கத்திற்கு விரைவில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என்றார். </p><p>எம்எல்ஏ தென்றல் குமார்:- பாலாற்றின் குறுக்கு உயர்மட்டச்சாலை அமைக்கப்படுமா?  என்று கேள்வி எழுப்பினார். </p><p>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா:-  பாலாற்றின் குறுக்கு உயர்மட்டச்சாலை பரிசீலனையில் உள்ளது என்றார்.</p><p>எம்எல்ஏ சத்தியபாமா:- திருப்பூர் வேலாம்பாளையம் வரை 3 கிமீ சாலையில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். </p><p>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா:  மதுரை, கம்பம், தேனி, நெல்லை, சென்னை, கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இணைப்பு சாலைகளால் அதிக விபத்துகள் ஏற்படும் நிலையில் உயிரிழப்புகளை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். சாலைப்பணிகள், நெடுஞ்சாலையுடன் பிற சாலைகளை இணைப்பது தொடர்பாக 182 எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்றார். </p><p>எம்எல்ஏ ஜவாஹிருல்லா:- நாகை அருங்காட்சியகத்தை உரிய காலக்கெடு நிர்ணயித்து திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். </p><p>அமைச்சர் ராஜ்மோகன்:- நாகப்பட்டினம் அரசு அருங்காட்சியகம் புதுப்பிக்கப்பட்டு விரைவில் திறக்கப்படும்.  ரூ.139 லட்சத்தில் பொதுப்பணித்துறை மூலம் முதல்கட்ட பணிகள் முடிக்கப்பட்டுள்ளது, விரைவில் திறக்கப்படும் என்றார். </p>]]></content:encoded></item><item><title>தி.மு.க.வில் இருந்து விலகிய தோப்பு வெங்கடாசலம்: வேறு கட்சியில் இணைய திட்டமா?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thoppu-venkatachalam-quits-dmk</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thoppu-venkatachalam-quits-dmk#comments</comments><guid isPermaLink="false">d8089aec-8e96-45ee-9b7d-76443acacd07</guid><pubDate>Mon, 31 Aug 2026 04:20:01 +0000</pubDate><atom:updated>2026-08-31T04:20:01.785Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,Thoppu Venkatachalam,தோப்பு வெங்கடாசலம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/3m1r9st0/thoou.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தோப்பு வெங்கடாசலம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தோப்பு வெங்கடாசலம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/3m1r9st0/thoou.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கடந்த சட்டமன்ற தேர்தலில் பெருந்துறை தொகுதியில் தி.மு.க. சார்பில் களமிறங்கிய தோப்பு வெங்கடாசலம் தி.மு.க.வில் இருந்து விலகி உள்ளார்.</strong></em> </p><p>சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில் கட்சியில் இருந்து விலகுவதாக கடிதம் மூலம் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D">தோப்பு வெங்கடாசலம்</a> தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், </p><h2><strong>கசப்பான அனுபங்கள்</strong></h2><p>என் மீது நம்பிக்கை வைத்து மாவட்ட கழக பொறுப்பாளராகவும் பெருந்துறை சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராகவும் வாய்ப்பு வழங்கினீர்கள். அதற்கு என்னுடைய நெஞ்சார்ந்த கோடான கோடி நன்றிகளை அன்புடனும் பணிவுடனும் தெரிவித்துக் கொள்கிறேன். </p><p>ஆனால் நான் மாவட்ட கழக செயலாளராக செயல்படுவதற்கும் சட்டசபை தேர்தலில் எனக்கும் என்னுடன் பணியாற்றியவர்களுக்கும் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிற காரணத்தால் இனிமேலும் என்னால் கழகத்தில் பயணிக்க என் மனம் இடம் கொடுக்காத காரணத்தால் எனது அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். </p><p>மேலும் தற்போதைக்கு வேறு எந்த கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை, முயற்சியும் எடுக்கவில்லை. தற்போதைக்கு வேறு கட்சியில் இணையும் மனநிலையில் இல்லை என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். </p><p>முன்பு, அதிமுகவில் இருந்து விலகிய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dissatisfaction-with-dmk-leadership-will-thoppu-venkatasalam-join-aiadmk">தோப்பு வெங்கடாசலம்</a>, திமுக ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>6,000mAh பேட்டரியுடன் விரைவில் வெளியாகும் சியோமி Foldable ஸ்மார்ட்போன்</title><link>https://www.maalaimalar.com/technology/newgadgets/xiaomi-18-fold-to-pack-a-massive-6000mah-battery</link><comments>https://www.maalaimalar.com/technology/newgadgets/xiaomi-18-fold-to-pack-a-massive-6000mah-battery#comments</comments><guid isPermaLink="false">af7fc44b-b175-4e66-a559-1379c993f0f5</guid><pubDate>Mon, 31 Aug 2026 03:48:00 +0000</pubDate><atom:updated>2026-08-31T03:48:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Xiaomi,Foldable Smartphone,மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்,சியோமி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/o1lrumel/Xiaomi-18-Fold.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Xiaomi 18 Fold Teaser]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/o1lrumel/Xiaomi-18-Fold.png?w=280" width="280"></media:thumbnail><category>புதிய கேஜெட்டுகள் (New gadgets)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சியோமி நிறுவனம் தனது சியோமி 18 ஃபோல்டு ஸ்மார்ட்போனினை விரைவில் சீன சந்தையில் அறிமுகம் செய்யும் என்று கூறப்படுகிறது. </p><p>வெளியீட்டை ஒட்டி <a href="https://www.maalaimalar.com/topic/xiaomi">சியோமி</a> நிறுவனம் தனது புது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 3 நானோமீட்டரில் உருவாகி இருக்கும் Xring O3 சிப் கொண்டிருக்கும் என்பதை உறுதிப்படுத்தி விட்டது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போன் LPDDR6 ரேம் கொண்ட முதல் மாடலாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. </p><p>ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்களை சியோமி ஒருபக்கம் வெளியிடும் நிலையில், இந்த மாடல் பற்றிய புது தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. பிரபல டிப்ஸ்டர் பால்டு பாண்டா வெளியிட்டுள்ள தகவல்களில் இந்த <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மார்ட்போன்</a> பேட்டரி மற்றும் சார்ஜிங் விவரங்கள் தெரியவந்துள்ளது.</p><h2>பேட்டரி விவரங்கள்:</h2><p>டிப்ஸ்டர் பகிர்ந்துள்ள தகவல்களின் படி சியோமி 18 ஃபோல்டு மாடலில் 6000mAh பேட்டரி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் இத்தகைய பேட்டரி கொண்டிருக்கும் முதல் அகலமான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெறும்.</p><p>ஒப்பீட்டளவில் பார்க்கும் போது கேலக்ஸி Z ஃபோல்டு 8 மாடலில் 4880mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதே போல் ஹூவாய் ப்யூரா எக்ஸ் வியூ மாடலில் சற்றே பெரிய 5300mAh பேட்டரி யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. பெரிய பேட்டரி மட்டுமின்றி புதிய சியோமி 18 ஃபோல்டு மாடலில் 67 வாட் வயர்டு மற்றும் 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.</p><h2>எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:</h2><p>இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சியோமி 18 ஃபோல்டு மாடலில் 7.6 இன்ச் மடிக்கக்கூடிய ஸ்கிரீன், ஆண்ட்ராய்டு 17 சார்ந்த ஹைப்பர் ஓஎஸ் 4, புகைப்படங்களை எடுக்க 200MP பிரைமரி கேமரா வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படலாம்.</p><p>புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனுடன் சியோமி நிறுவனம் புதிய டேப்லெட் மாடலையும் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிது. இந்த மாடல் சியோமி பேட் 9 ப்ரோ மேக்ஸ் என அழைக்கப்படும் என்றும் இதில் Xring O3 சிப்செட் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>விண்ணில் பாய்கிறது பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள்!- இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி எப்-17 திட்டம் தயார்</title><link>https://www.maalaimalar.com/news/national/earth-observation-satellite-set-to-soar-into-the-sky-isros-gslv-f-17-mission-is-ready</link><comments>https://www.maalaimalar.com/news/national/earth-observation-satellite-set-to-soar-into-the-sky-isros-gslv-f-17-mission-is-ready#comments</comments><guid isPermaLink="false">5fd69504-d78d-4fb4-9949-cabf8e027427</guid><pubDate>Mon, 31 Aug 2026 03:45:16 +0000</pubDate><atom:updated>2026-08-31T03:45:16.702Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ISRO,இஸ்ரோ,இஸ்ரோ விஞ்ஞானிகள்,GSLV F17,ஜிஎஸ்எல்வி எப்17</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/yp4ltrix/GSLV.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஜிஎஸ்எல்வி எப்17]]></media:title><media:description type="html"><![CDATA[ ஜிஎஸ்எல்வி எப்17]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/yp4ltrix/GSLV.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை ஜி.எஸ்.எல்.வி. எப்-17 ராக்கெட்டில் பொருத்தி வருகிற 4-ந்தேதி இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது.</strong></em></p><h2><strong>பூமிக் கண்காணிப்புப் பணி</strong></h2><p>இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B">இஸ்ரோ</a>) தனது மிகவும் லட்சியமிக்க 'ஜூசாட்-1 ஏ என்று அழைக்கப்பட்ட 'இ.ஒ.எஸ். 5' என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை, 'ஜி.எஸ்.எல்.வி. எப்-17 ராக்கெட்டில் பொருத்தி வருகிற (அதாவது செப்டம்பர்) 4-ந்தேதி அதிகாலை 2.55 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவுகிறது.</p><p>இது வழக்கமான குறைந்த புவிச் சுற்றுப்பாதைக்கு மாறாக, சுமார் 36 ஆயிரம் கி.மீ உயரத்தில் உள்ள <a href="https://www.maalaimalar.com/news/national/research-center-on-the-moon-nasa-invites-isro">புவி</a> நிலைச் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது.</p><p>இந்தியத் துணைக்கண்டத்தின் மீது எப்போதும் நிலைத்திருப்பதால், இது இந்தியாவின் நிலப்பரப்பைத் தொடர்ச்சியாகவும், நிகழ்நேரத்திற்கு அருகிலும் படம்பிடித்துக் கண்காணிக்கும். இதில் மல்டி-ஸ்பெக்ட்ரல் மற்றும் ஹைப்பர்-ஸ்பெக்ட்ரல் வகை அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஜி.எஸ்.எல்.வி. ரகத்தில் இது 19-வது ராக்கெட்டாகும்.</p><h2><strong>பேரிடர் மேலாண்மை</strong></h2><p>பேரிடர் மேலாண்மை குறிப்பாக வெள்ளம், புயல், நிலச்சரிவு மற்றும் காட்டுத்தீ போன்ற இயற்கை பேரிடர்களை உடனுக்குடன் கண்காணித்து தகவல்களை வழங்கும். பயிர் வளர்ச்சி, காடுகளின் பரப்பளவு மாற்றம் மற்றும் நீர்நிலைகளின் நிலவரத்தை கண்காணிக்க உதவும்.</p><p>இந்தியாவின் எல்லைப் பகுதிகளை தொடர்ச்சியாக கண்காணித்து, நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு தேவையான முக்கியத் தரவுகளை வழங்கும். இது புவிசார் சுற்றுப்பாதையில் இருந்து இந்தியாவை கண்காணிக்கும் நாட்டின் முதல் ‘இமேஜிங்’ செயற்கைக்கோள் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர். </p>]]></content:encoded></item><item><title>ஜோர்தானில் உள்ள இரண்டு அமெரிக்க விமானப்படை தளங்கள் மீது ஈரான் பதில் தாக்குதல் </title><link>https://www.maalaimalar.com/news/world/iran-missile-attack-two-us-air-bases-jordan</link><comments>https://www.maalaimalar.com/news/world/iran-missile-attack-two-us-air-bases-jordan#comments</comments><guid isPermaLink="false">cacd07c5-e96f-4b5c-a66e-fa0d0307740d</guid><pubDate>Mon, 31 Aug 2026 03:22:17 +0000</pubDate><atom:updated>2026-08-31T03:22:17.576Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Donald Trump,ஈரான்,Iran,டொனால்ட் டிரம்ப்,Mojtaba Khamenei,மொஜ்தபா கமேனி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/k54our7s/Untitled-design-8.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Donald Trump - Mojtaba Khamenei]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/k54our7s/Untitled-design-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D">ஹார்முஸ்</a> ஜலசந்தியில் உள்ள லராக் தீவில் செயல்பட்டு வந்த இரண்டு ஈரானிய ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, ஜோர்தானில் உள்ள இரண்டு அமெரிக்க விமானப்படை தளங்கள் மீது <a href="https://www.maalaimalar.com/topic/ஈரான்">ஈரான்</a> ஏவுகணை தாக்குதலை நடத்தியது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE">அமெரிக்கா</a> நடத்திய தாக்குதலுக்கு, தகுந்த பதிலடி தரப்படும் என்று இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படை எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. </p><h3><strong>லராக் தீவு</strong></h3><p>ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து சுமார் 1,100 கிலோ மீட்டர் தொலைவில் லராக் தீவு அமைந்துள்ளது. இந்த தீவு ஹார்முஸ் ஜலசந்தியின் தெற்கிலும், கெஷம் தீவின் கிழக்கிலும் அமைந்துள்ளது.</p><p>மூலோபய முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழியில், கடல் அணுக்களை கொண்ட ராக்கெட்டுகளை ஏவுவதற்காக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படையினர் ஏவுகணைகளை தயார் செய்து வருவதாக அமெரிக்கா கூறி வந்தது.</p><p>இதையடுத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணையுமாறும், ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி வேண்டுகோள் விடுத்தார்.</p><h3><strong>மொஜ்தபா கமேனி வேண்டுகோள்</strong></h3><p>மேலும் அவர் வெளியிட்ட எழுத்துப்பூர்வமான செய்தியில், “இஸ்லாமிய தேசங்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு என்பது, சொல் ஒற்றுமை, நட்பு மற்றும் நன்மையின் பாதையில் ஒத்துழைப்பை தருவதாகும்.</p><p>எந்த பதவியில் இருப்பவரும், தெரிந்தோ அல்லது தெரியாமலோ, இஸ்லாமியர்களிடையே பிளவை ஏற்படுத்தி மோதல்களை உருவாக்கும் வகையில் எதையாவது செய்தால், அவர் இஸ்லாத்தின் எதிரிகளின் நோக்கத்திற்கு பணியாற்றியவர் ஆவார்” என்று அவர் கூறினார்.</p><p>மேலும், “உங்கள் உண்மையான எதிரியை அடையாளம் கண்டு, அதன் திட்டத்தை புரிந்துகொண்டு அதை எதிர்கொள்ளுங்கள்” என்றும் அவர் கூறினார்.</p><p>முன்னதாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியில் புதிய கண்ணிவெடிகளை பதிக்க முயற்சித்தால், அமெரிக்கா அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்திருந்தார்.</p><p>இதையடுத்து ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி வேண்டுகோள் விடுத்த சில மணி நேரங்களுக்கு பிறகு, நேற்று லராக் தீவில் அமெரிக்கா ஏவுகணை தாக்குதலை நடத்தியது.</p><p>இந்த தாக்குதல் குறித்து இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படை கூறுகையில், பல ராணுவ வீரர்களும், பொதுமக்களும் கொல்லப்பட்டதாக தெரிவித்தது. மேலும் இந்த தாக்குதலுக்கு தகுந்த பதிலடி தரப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது.</p><h3><strong>ஜோர்தானில் தாக்குதல்</strong></h3><p>இந்த நிலையில், ஜோர்தானில் அமைந்துள்ள இரண்டு அமெரிக்க விமானப்படை தளங்களான கிங் ஹுசைன் மற்றும் அல்-அஸ்ரக் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது.</p><p>இந்த தாக்குதல் குறித்து இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படை கூறுகையில், தொழில்நுட்ப மற்றும் பராமரிப்பு வசதிகள் மற்றும் போர் விமான நிலைகளை இந்த ஏவுகணைகள் குறிவைத்ததாக தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயருமா?- வாகன ஓட்டிகள் மத்தியில் மீண்டும் அச்சம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/will-toll-charges-increase-from-midnight-tonight-renewed-anxiety-among-motorists</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/will-toll-charges-increase-from-midnight-tonight-renewed-anxiety-among-motorists#comments</comments><guid isPermaLink="false">918be1a5-27e3-48b3-8d02-ed8806c16f37</guid><pubDate>Mon, 31 Aug 2026 03:10:36 +0000</pubDate><atom:updated>2026-08-31T03:10:36.269Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தேசிய நெடுஞ்சாலை ஆணையம்,National Highways Authority,Toll Gate,சுங்க கட்டணம்,வாகன ஓட்டிகள்,சுங்கச்சாவடி</media:keywords><media:content height="350" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/ypxm96xy/tollgate.jpg" width="615"><media:title type="html"><![CDATA[ சுங்கச்சாவடி]]></media:title><media:description type="html"><![CDATA[ சுங்கச்சாவடி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/ypxm96xy/tollgate.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சுங்கக் கட்டணம் கடந்த ஜூன் மாதம் உயர்த்தப்பட்டதால் இன்று நள்ளிரவு முதல் மீண்டும் உயர்த்தப்படுமா? என்ற அச்சம் வாகன ஓட்டிகளிடம் எழுந்துள்ளது.</strong></em></p><h2><strong>சுங்கக் கட்டணம்</strong></h2><p>இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளும் மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன. இந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நாட்டின் முக்கிய சாலைகளின் கட்டுமானம், பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.</p><p>இந்த சாலைகளில் பயணம் செய்யும் வாகனங்களிடமிருந்து <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF">சுங்கச்சாவடிகள்</a> மூலம் கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கப்படுகிறது. பல தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் பொதுத்துறை மற்றும் தனியார் கூட்டுத்திட்ட முறையில் செயல்படுத்தப்படுவதால், சுங்கச்சாவடிகள் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைக்கப்படுகின்றன. அந்த ஒப்பந்தத்தின்படி, குறிப்பிட்ட காலத்திற்கு வாகனங்களிடமிருந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கும் உரிமை வழங்கப்படுகிறது.</p><h2><strong>வாகன ஓட்டிகள் அச்சம்</strong></h2><p>அந்தவகையில், தமிழ்நாட்டில் மட்டும் 77 சுங்கச்சாவடிகள் உள்ளன. <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ulundurpettai-toll-gate-price-hike">சுங்கக் கட்டணங்கள்</a> ஒவ்வொரு ஆண்டும் மறுபரிசீலனை செய்யப்பட்டு உயர்த்தப்படுவது வழக்கமாக உள்ளது. பொதுவாக 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது. சில இடங்களில் போக்குவரத்து அளவு, சாலை பராமரிப்பு செலவு, பணவீக்கம் உள்ளிட்ட காரணிகளைக் கருத்தில் கொண்டு 15 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படும். தமிழகத்தில் தேர்தல் நடந்ததால் இந்த ஆண்டு ஏப்ரல் கட்டணம் உயர்த்தப்படவில்லை. மாறாக ஜூன் மாதம் கட்டணம் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து செப்டம்பர் 1-ந்தேதி உயர்த்தப்படும் வழக்கம் இருப்பதால், இன்று நள்ளிரவு மீண்டும் உயர்த்தப்படுமா? என்ற அச்சம் வாகன ஓட்டிகளிடம் எழுந்துள்ளது.</p><p>இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரிகளிடம் கேட்ட போது, 'கட்டண உயர்வு குறித்து மத்திய அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை. வந்தால் சுமார் ரூ.5 கட்டண உயர்வு இருக்கும்' என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் விஜய் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-will-open-mettur-dam-tomorrow-for-delta-irrigation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-will-open-mettur-dam-tomorrow-for-delta-irrigation#comments</comments><guid isPermaLink="false">39a6c810-06f8-4822-b1ff-14b5790b4d74</guid><pubDate>Mon, 31 Aug 2026 03:05:06 +0000</pubDate><atom:updated>2026-08-31T03:05:06.351Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,மேட்டூர் அணை,Mettur Dam,டெல்டா பாசனம்,Delta Irrigation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/hb0nkn8c/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mettur dam - CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/hb0nkn8c/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கர்நாடகாவில் இருந்து தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதை அடுத்து மேட்டூர் அணை நீர்மட்டம் 90 அடியை தாண்டியது. டெல்டா பாசனத்துக்காக அணையில் இருந்து தண்ணீரை முதலமைச்சர் விஜய் நாளை திறந்து வைக்கிறார்.</strong></em></p> <h2>மேட்டூர் அணை</h2><p>சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யாத காரணத்தால் மேட்டுர் அணைக்கு வரும் நீரின் அளவு வெகுவாக குறைந்தது.</p> <h2>காவிரி நீர்வரத்து</h2><p>இதனால் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இல்லாததால் குறிப்பிட்ட நாளான ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனிடையே, கர்நாடக மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் மழை காரணமாக அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு பரவலாக தண்ணீர் வருவதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.</p> <h2>மேட்டூர் அணை</h2><p>நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 90.47 அடியை எட்டி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 35 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.</p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>இதனிடையே, <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">மேட்டூர் அணையில்</a> இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதற்காக முதலமைச்சர் விஜய் நாளை சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் செல்கிறார். ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்திற்கு செல்லும் அவர், அங்கிருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக மேட்டூர் செல்கிறார். பின்னர் அவர் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைக்கிறார்.</p> <h2>பாதுகாப்பு ஏற்பாடுகள்</h2><p>முதலமைச்சர் விஜய் சேலம் வருகையையொட்டி மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மேட்டூர் அணையில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/4-children-killed-rs-3-lakh-compensation-announced">முதலமைச்சர் விஜய்</a> வரும் வழிநெடுகிலும் சாலையின் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. </p> <h2>போலீசார் பாதுகாப்பு</h2><p>அதாவது முதலமைச்சர் விஜய்யை பார்க்கும் ஆர்வத்தில் பொதுமக்கள் அதிகளவு வருவார்கள் என்பதால் அவர் செல்லும் வழியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அணையின் வலது கரையில் விழாவுக்காக பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.</p> <h2>ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு</h2><p>கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரத்து 500 கனஅடியில் இருந்து 10 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருப்பதால் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை நேற்று 15-வது நாளாக நீடித்தது.</p> ]]></content:encoded></item><item><title>ரெயில் பயணிகளின் கவனத்திற்கு..! தெற்கு ரெயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/southern-railway-announced-for-special-trains-and-train-service-changed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/southern-railway-announced-for-special-trains-and-train-service-changed#comments</comments><guid isPermaLink="false">055ca3b2-6df6-44af-981f-73dbe635194a</guid><pubDate>Mon, 31 Aug 2026 02:57:15 +0000</pubDate><atom:updated>2026-08-31T02:57:15.548Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Southern Railway,special train,சிறப்பு ரெயில்,தெற்கு ரெயில்வே,ரெயில் சேவை மாற்றம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/1w606y62/train01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ ரெயில்]]></media:title><media:description type="html"><![CDATA[ ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/1w606y62/train01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை சென்ட்ரல்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் மற்றும் சிறப்பு ரெயில்கள் நீட்டிப்பு குறித்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தெற்கு-ரெயில்வே">தெற்கு ரெயில்வே</a> வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>சென்னை கோட்டத்தில் உள்ள பெடாபாரியா மற்றும் நாயுடுபேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் சென்னை சென்ட்ரல்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-</p><p>* சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று (திங்கட்கிழமை), செப்டம்பர் 3,10 ஆகிய தேதிகளில் இரவு 7 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.12840), அதற்கு மாற்றாக சென்ட்ரலில் இருந்து ஒரு மணி நேரம் தாமதமாக இரவு 8 மணிக்கு புறப்பட்டு ஹவுரா செல்லும்.</p><p>* இதேபோல, சென்னை சென்ட்ரலில் இருந்து செப்டம்பர் 5,12 ஆகிய தேதிகளில் இரவு 7 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12840), அதற்கு மாற்றாக சென்ட்ரலில் இருந்து 2 மணி நேரம் தாமதமாக, இரவு 9 மணிக்கு புறப்பட்டு ஹவுரா செல்லும்.</p><h2><strong>போத்தனூர்-சம்பல்பூர் இடையே சிறப்பு ரெயில்</strong></h2><p>ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் இருந்து வருகிற செப்டம்பர் 9-ந்தேதி முதல் நவம்பர் 25-ந்தேதி வரையில் (புதன்கிழமை மட்டும்) காலை 11.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.08311), புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் அதிகாலை 1.30 மணிக்கு போத்தனூர் சென்றடையும். மறுமார்க்கமாக, போத்தனூரில் இருந்து வருகிற செப்டம்பர் 11-ந்தேதி முதல் நவம்பர் 27-ந்தேதி வரையில் (வெள்ளிக்கிழமை மட்டும்) மதியம் 1 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (08312), மறுநாள் இரவு 11.15 மணிக்கு சம்பல்பூர் சென்றடையும்.</p><h2><strong>மதுரை-கான்பூர் சென்ட்ரல் சிறப்பு ரெயில் நீட்டிப்பு</strong></h2><p>உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் சென்ட்ரலில் இருந்து மதுரை செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.01925), வருகிற செப்டம்பர் 2-ந்தேதி முதல் நவம்பர் 25-ந்தேதி வரையில் (புதன்கிழமை மட்டும்) நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக, மதுரையில் இருந்து கான்பூர் சென்ட்ரல் செல்லும் சிறப்பு ரெயில் (01926), வருகிற செப்டம்பர் 5-ந்தேதி முதல் நவம்பர் 28-ந்தேதி வரையில் (சனிக்கிழமை மட்டும்) நீட்டிக்கப்பட்டுள்ளது.</p><p>இவ்வாறு தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>நேபாளத்தில் கட்டிட இடிபாடுகளுக்கு அடியில் அழுகுரல் - சிறுமியை மீட்ட ஆயுதப்படை</title><link>https://www.maalaimalar.com/news/world/nepal-flood-rescue-6-year-old-girl-from-building-debris</link><comments>https://www.maalaimalar.com/news/world/nepal-flood-rescue-6-year-old-girl-from-building-debris#comments</comments><guid isPermaLink="false">73f17a51-5feb-4955-9611-d101273059d7</guid><pubDate>Mon, 31 Aug 2026 02:22:30 +0000</pubDate><atom:updated>2026-08-31T02:22:30.398Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாளம்,nepal,Nepal Floods,nepal army,நேபாள ராணுவம்,நேபாள வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/4ao3mwvl/Untitled-design-7.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nepal Flood Rescue]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/4ao3mwvl/Untitled-design-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பெரு வெள்ள பேரிடருக்கு பிறகு மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு நடந்து வரும் நிலையில், அடர்த்தியான சேறு மற்றும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்த ஆறு வயது சிறுமியை மீட்பு படையினர் உயிருடன் பத்திரமாக மீட்டனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">நேபாளத்தில்</a> சமீபத்தில் கோஷி ஆற்றில் ஏற்பட்ட பெரு வெள்ள பேரிடரில், அங்கு உள்ள ரசுவா மாவட்டம் அதிகமாக பாதிப்புக்குள்ளானது. </p><h3><strong>ஆறு வயது குழந்தை மீட்பு</strong></h3><p>இதையடுத்து ரசுவா மாவட்டத்தில் உள்ள திமுரே கிராமத்தில் மீட்பு பணி நடைபெற்ற போது, கட்டிட இடுபாடுகளுக்கு அடியில் மெல்லிய அழுகுரலை ஆயுத காவல் படையினர் கேட்டுள்ளனர்.</p><p>அப்போது மீட்பு படையினர் விரைந்து செயல்பட்டு, அந்த இடத்தை தோண்ட தொடங்கினர். இதையடுத்து அந்த இடத்தில் மண்ணுக்கு அடியில் சிக்கியிருந்த ஆறு வயது பெண் குழந்தையை மீட்பு படையினர் மீட்டனர்.</p><p>இதைத்தொடர்ந்து மீட்கப்பட்ட குழந்தைக்கு திமுரேயில் உள்ள விமானப்படை எல்லை சாவடியில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். </p><p>ஆனால அந்த குழந்தையின் உடல்நிலை மோசமடைந்ததால், விமானம் மூலம் காத்மாண்டுவுக்கு அழைத்து செல்ல திட்டமிட்டனர்.</p><p>இருப்பினும் மோசமான வானிலை காரணமாக, அந்த விமானம் புறப்பட தாமதமானது.</p><p>பின்னர் வானிலை சீரானதை தொடர்ந்து, ஹெலிகாப்டர் மூலம் அந்த குழந்தையை நேபாள தலைநகர் காத்மாண்டுவுக்கு அழைத்து சென்றனர்.</p><figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Heartfelt thanks to Nepal’s rescue teams. Your courage pulled a 6-year-old from debris after 3 days in Rasuwa floods. You bring hope amid devastation. Heroes. ❤️ <a href="https://t.co/7nHjlZXDHP">https://t.co/7nHjlZXDHP</a></p>&mdash; MemeTales (@MemeTalesStory) <a href="https://x.com/MemeTalesStory/status/2094102652493950981?ref_src=twsrc%5Etfw">August 30, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h3><strong>மருத்துவமனையில் சிகிச்சை</strong></h3><p>காத்மாண்டுவில் உள்ள சிறப்பு மருத்துவமனையில் அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><p>இந்த நிலையில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த ஆறு வயது குழந்தையை மீட்ட மீட்பு படையினரின் செயல் சமூக வலைதளத்தில் பாராட்டுகளை பெற்றுள்ளது.</p><p>நேபாளத்தில் தொடர்ந்து இரவிலும் தேடுதல் பணியில் ஈடுபட்டு வரும் ஆயுத காவல் படை குழுவினருக்கு பயனர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் பெட்ரோல், டீசல் விலை - இன்றைய நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-and-diesel-price-in-chennai-31-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-and-diesel-price-in-chennai-31-august-2026#comments</comments><guid isPermaLink="false">57e22fd9-47a7-476c-9ce9-911c2d870537</guid><pubDate>Mon, 31 Aug 2026 02:14:58 +0000</pubDate><atom:updated>2026-08-31T02:14:58.724Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,கச்சா எண்ணெய்,Crude oil,பெட்ரோல் டீசல் விலை,Pertrol Diesel Prices</media:keywords><media:content height="576" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/wi7y6inv/maalai-malar2026-07-21zb9pki7q%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88.avif" width="1024"><media:title type="html"><![CDATA[ பெட்ரோல் - டீசல் விலை]]></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல் - டீசல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/wi7y6inv/maalai-malar2026-07-21zb9pki7q%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88.avif?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் போரினால் மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p> <h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.</p> <h2>இன்றைய பெட்ரோல், டீசல் விலை</h2><p>அந்த வகையில் இன்றைய (31.8.2026 - (திங்கள்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108.60-க்கும் டீசல் ரூ.100.43-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> ]]></content:encoded></item></channel></rss>