<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 03 Sep 2026 03:35:42 +0000</lastBuildDate><item><title>இந்தியாவில் மிவி நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் - பெயர் மற்றும் சிப்செட் விவரங்கள் வெளியீடு</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/mivi-one-5g-confirmed-as-companys-first-smartphone-in-india</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/mivi-one-5g-confirmed-as-companys-first-smartphone-in-india#comments</comments><guid isPermaLink="false">62e1fff5-f31b-4eb3-a9a0-7667ebffa5d0</guid><pubDate>Thu, 03 Sep 2026 03:34:00 +0000</pubDate><atom:updated>2026-09-03T03:34:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>smartphone,Mivi,மிவி,ஸ்மார்ட்போன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/ycqfu1mq/Mivi-One-5G.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mivi One 5G]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/ycqfu1mq/Mivi-One-5G.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மிவி நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்போனின் டீசர்களை வெளியிட தொடங்கியது. அந்த வகையில், மிவி நிறுவனத்தின் முதல் <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மார்ட்போன்</a> ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர மிவி நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் 'மிவி ஒன் 5ஜி' என்ற பெயரில் அழைக்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. </p><p>பெயர் மட்டுமின்றி புதிய ஸ்மார்ட்போனில் வழங்கப்பட உள்ள சிப்செட் பற்றிய விவரங்களையும் மிவி நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது. இதற்காக அந்நிறுவனம் டீசர் வெளியிட்டுள்ளது. மேலும், இதுபற்றிய தகவல் <a href="https://www.maalaimalar.com/topic/flipkart">ப்ளிப்கார்ட்</a> தளத்தில் உருவாக்கப்பட்டு இருக்கும் பிரத்யேக வலைப்பக்கத்திலும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.</p><h2>விரைவில் இந்திய வெளியீடு:</h2><p>ப்ளிப்கார்ட் தளத்தின் மைக்ரோசைட் விவரங்களின் படிி மிவி ஒன் 5ஜி மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்த ஸ்மார்ட்போன் 5ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் என்றும் இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 5ஜி சிப்செட் வழங்குவதும் உறுதியாகி உள்ளது.</p><p>இவற்றுடன் புதிய மிவி ஒன் 5ஜி மாடல் கிரீன் நிறம் கொண்டிருப்பதும் இதன் வளைந்த கார்னர்களை கொண்டிருப்பதும் உறுதியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் டீசர்களில் “Pretty Powerful” எனும் டேக்லைன் வருகிறது. அந்த வகையில், வரும் நாட்களில் இந்த ஸ்மார்ட்போனின் இதர விவரங்களை மிவி நிறுவனம் வெளியிடும் என்று எதிர்பார்க்கலாம்.</p><h2>விலை விவரங்கள்:</h2><p>சமீபத்தில் வெளியான தகவல்களின் படி மிவி ஒன் 5ஜி மமாடலின் விலை இந்திய சந்தையில் ரூ. 15,000-க்கும் குறைவாகவே தொடங்கும் என்று கூறப்பட்டது. எனினும், இந்த மாடல் அறிமுகமாகும் போது தான் இதன் சரியான விலை பற்றிய விவரங்கள் வெளியாகும்.</p><p>மிவி நிறுவனம் ஏற்கனவே இயர்போன், சவுண்ட்பார், ப்ளூடூத் ஸ்பீக்கர், ஹோம் தியேட்டர் சிஸ்டம் உள்ளிட்ட சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில், மிவி நிறுவனத்தின் புதிய ஒன் 5ஜி அந்நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் மாடலாக அறிமுகம் செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>வந்தே பாரத், வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில ரெயில்கள் தாமதம்: தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/southern-railway-announced-some-trains-including-the-vande-bharat-and-vaigai-express-are-delayed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/southern-railway-announced-some-trains-including-the-vande-bharat-and-vaigai-express-are-delayed#comments</comments><guid isPermaLink="false">7614e0d9-2d59-4123-b6e9-a68f29a23ce5</guid><pubDate>Thu, 03 Sep 2026 03:18:52 +0000</pubDate><atom:updated>2026-09-03T03:18:52.513Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Southern Railway,Express trains,தெற்கு ரெயில்வே,எக்ஸ்பிரஸ் ரெயில்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/a8lyhohr/train01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ ரெயில்]]></media:title><media:description type="html"><![CDATA[ ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/a8lyhohr/train01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள பேரணி பணிமனையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் சில ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தெற்கு-ரெயில்வே">தெற்கு ரெயில்வே</a> வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள பேரணி பணிமனையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் சில ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-</p><p>* எழும்பூரில் இருந்து இன்று (3-ந்தேதி), நாளை (4-ந்தேதி), நாளை மறுநாள் (5-ந்தேதி) ஆகிய தேதிகளில் மாலை 3.10 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.20665), 20 நிமிடம் தாமதமாக நெல்லை சென்றடையும்.</p><p>* எழும்பூரில் இருந்து இன்று (3-ந்தேதி), நாளை (4-ந்தேதி), நாளை மறுநாள் (5-ந்தேதி) ஆகிய தேதிகளில் மதியம் 1.15 மணிக்கு புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் (12635), 1 மணி நேரம் 50 நிமிடம் தாமதமாக மதுரை சென்றடையும்.</p><p>* தாம்பரத்தில் இருந்து இன்று (3-ந்தேதி) மதியம் 2 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06109), 1 மணி நேரம் 30 நிமிடம் தாமதமாக திருவனந்தபுரம் சென்ட்ரல் சென்றடையும்.</p><p>* தாம்பரத்தில் இருந்து நாளை (4-ந்தேதி) இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06059), 1 மணி நேரம் 30 நிமிடம் தாமதமாக போடிநாயக்கனூர் சென்றடையும்.</p><p>* புதுச்சேரியில் இருந்து நாளை (4-ந்தேதி) மற்றும் 6 ஆகிய தேதிகளில் மதியம் 12.45 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (17654), 2 மணி நேரம் 20 நிமிடம் தாமதமாக தெலுங்கானா மாநிலம் காச்சிகுடா சென்றடையும்.</p><p>* புதுச்சேரியில் இருந்து வருகிற 6-ந்தேதி மதியம் 2.20 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில் (16112), 30 நிமிடம் தாமதமாக திருப்பதி சென்றடையும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அறம், கடமை, பக்தி... உயர்ந்த தத்துவங்களை உணர்த்தும் கிருஷ்ணர் அவதாரம்
</title><link>https://www.maalaimalar.com/spirituality/krishna-jayanthi-worship-4</link><comments>https://www.maalaimalar.com/spirituality/krishna-jayanthi-worship-4#comments</comments><guid isPermaLink="false">68aa93cb-ffe4-4e09-a526-5bc90e2742a1</guid><pubDate>Thu, 03 Sep 2026 03:18:08 +0000</pubDate><atom:updated>2026-09-03T03:18:08.158Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,வழிபாடு,கிருஷ்ணர்,worship,கிருஷ்ண ஜெயந்தி,krishna jayanthi,krishnar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/hhhk9tmm/krishnar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ krishna jayanthi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/hhhk9tmm/krishnar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>கிருஷ்ணர் அவதாரம்</h2><p>உலகில் அநீதி தலைதூக்கும் போதெல்லாம், தர்மத்தை நிலைநாட்ட இறைவன் பூமியில் அவதரிப்பான் என்பது பகவத்கீதையின் உபதேசம் ஆகும். அதன்படி, திருமாலின் அவதாரமான கிருஷ்ணரின் வாழ்க்கை, மக்களின் மனதை மிகவும் கவர்ந்த ஒன்றாகும். தெய்வீக குணங்கள் முழுமையாக வெளிப்பட்ட அவதாரம் என்பதால், கிருஷ்ணரின் அவதாரம் 'பூர்ணவதாரம்' (முழுமையான அவதாரம்) என்று கருதப்படுகிறது.</p> <h2>கோகுலாஷ்டமி</h2><p>கிருஷ்ணரின் அவதாரம், மனித குலத்திற்கு வாழ்வியல் நெறிகளையும், அறம், கடமை, பக்தி ஆகியவற்றின் உயர்ந்த தத்துவங்களையும் உணர்த்துகிறது. இத்தகைய மகத்தான கீதோபதேசத்தை வழங்கிய கண்ணனின் பிறப்பைத் தான் பக்தர்கள் கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி எனப் பல பெயர்களில் உலகெங்கும் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர். </p> <h2>தேவகி - வசுதேவர்</h2><p>ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் இணைந்த தினத்தில், நள்ளிரவு வேளையில் மதுரா நகரச் சிறைச்சாலையில் தேவகி - வசுதேவரின் எட்டாவது மகனாக கிருஷ்ணர் அவதரித்தார். கொடுங்கோலன் கம்சனை வதம் செய்து, உலகில் தர்மத்தை நிலைநாட்டுவதற்காக திருமால் கண்ணனாக அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன.</p> <h2>நந்தகோபர் - யசோதை</h2><p>கண்ணன் பிறந்ததும், தந்தையான வசு தேவர் அவரை தலையில் சுமந்தபடி, நள்ளிரவில் கொட்டிய பெருமழையையும் பொருட்படுத்தாமல் யமுனை நதியைக் கடந்து ஆயர்பாடியில் உள்ள நந்தகோபர் -யசோதையின் இல்லத்தில் சேர்த்தார். அங்கு வளர்ந்த பாலகிருஷ்ணர், தனது பிஞ்சுப் பருவத்திலேயே எண்ணற்ற லீலைகளைப் புரிந்து அனைவரது உள்ளங்களையும் கொள்ளைக்கொண்டார்.</p> <h2>குழந்தைப் பருவம் </h2><p>கிருஷ்ணரின் வசீகரமான புல்லாங்குழல் இசையால் மனிதர்கள் மட்டுமின்றி, விலங்குகளும் ஈர்க்கப்பட்டன. வெண்ணெய் திருடி உண்பது, ஆயர்குலச் சிறுவர்களுடன் விளையாடியது என அவரது குழந்தைப் பருவம் குறும்புதனங்கள் நிறைந்தவை. அதேவேளையில், தன்னை அழிக்க வந்த பல்வேறு அசுரர்களை அழித்து மக்களைக் காத்தார்.</p> <h2>கோபமுற்ற இந்திரன்</h2><p>கிருஷ்ணரின் வேண்டுகோளின் படி, தனக்குச் செய்யவேண்டிய வழிபாடு மறுக்கப்பட்டதால், கோபமுற்ற இந்திரன் கோகுலத்தில் பெருமழையைப் பொழிவித்தபோது, கிருஷ்ணன் கோவர்தன மலையை தன் சுண்டு விரலால் குடை போலத் தூக்கி, மக்களை பாதுகாத்தார். பின்னர் மதுராவுக்குச் சென்று கம்சனை வதம் செய்து, தர்மத்தை நிலைநாட்டினார். இவ்வாறு குழந்தைப் பருவத்திலேயே தமது தெய்வீக ஆற்றலால் உலகைக் காத்த கண்ணன், பக்தர்களின் உள்ளங்களில் என்றும் நீங்காத இடம் பிடித்த இறைவனாகத் திகழ்கிறார்.</p> <h2>கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு</h2><p>கிருஷ்ண ஜெயந்தி நாளில், கிருஷ்ணர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகளும், பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். வீட்டின் நுழைவாசலில் இருந்து பூஜை அறை வரை அரிசி மாவினால் குழந்தை கிருஷ்ணரின் திருவடிகளை வரைந்து, "கண்ணன் நம் வீட்டிற்குள் எழுந்தருளுகிறார்” என்ற நம்பிக்கையுடன் அவரை வரவேற்பார்கள். வீடுகளையும், பூஜை அறைகளையும் மலர்கள் மற்றும் மாவிலைத் தோரணங்களால் அழகுபடுத்தி, கிருஷ்ணரின் திருவுருவத்துக்கு புத்தாடை அணிவித்து, நெற்றியில் திலகம் சாற்றி வழிபடுவர்.</p> <h2>நைவேத்தியங்கள்</h2><p>கண்ணனுக்கு உகந்ததாகக் கருதப்படும் வெண்ணெய், தயிர், அவல், சீடை, முறுக்கு, அப்பம், நாவல் பழம் உள்பட பல்வேறு நைவேத்தியங்களைப் படைத்து சிறப்பு பூஜைகள் செய்வார்கள். கோவில்களில் உறியடித் திருவிழாவும், வழுக்கு மரம் ஏறுதல் போன்ற போட்டிகளும் மிகுந்த உற்சாகத்துடன் நடத்தப்படும். குழந்தைகள், கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமணிந்து கண்ணனின் லீலைகளை நினைவூட்டும் வகையில் மகிழ்ச்சியாக உலா வருவர்.</p><p>மேலும், சில பகுதிகளில் உயரத்தில் கட்டப்பட்ட தயிர்க்குடத்தை இளைஞர்கள் குழுவாகச் சேர்ந்து உடைக்கும் 'தஹி ஹண்டி விழாவும் களைகட்டும். இவ்வாறு பக்தி, மகிழ்ச்சி, பாரம்பரியம் ஆகியவை ஒன்றிணைந்து, கிருஷ்ண ஜெயந்தி விழாவைச் சிறப்பிக்கின்றன.</p> <h2>கண்ணனின் திருவடி</h2><p>கிருஷ்ண ஜெயந்தி என்பது ஒரு அவதாரத்தின் பிறப்பைக் கொண்டாடும் விழா மட்டுமல்ல; அன்பு, பக்தி, தர்மம், கடமை ஆகியவற்றை நம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை நினைவூட்டும் புனித நாளாகும். தர்மத்தின் வழிகாட்டியாக விளங்கிய கண்ணனின் திருவடிகளைப் போற்றி, அவரது அருளையும் நல்லெண்ணத்தையும் நம் வாழ்வில் வளர்ப்போம்.</p>]]></content:encoded></item><item><title>கிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறைகளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 4,060 சிறப்பு பஸ்கள் இயக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/4060-special-buses-operated-across-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/4060-special-buses-operated-across-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">a6e4f214-afac-4d89-a389-1991a22aacc4</guid><pubDate>Thu, 03 Sep 2026 03:03:05 +0000</pubDate><atom:updated>2026-09-03T03:03:05.841Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு பஸ்கள்,TN Govt,தமிழக அரசு,special bus,வார விடுமுறை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/n2rkunr9/Buskilampakkam.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ சிறப்பு பஸ்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ சிறப்பு பஸ்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/n2rkunr9/Buskilampakkam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் 6-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 805 சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.</strong></em></p><p>தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><h2><strong>சிறப்பு பஸ்கள்</strong></h2><p>கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 3-ந்தேதி வியாழக்கிழமை (இன்று) 910 <a href="https://www.maalaimalar.com/topic/சிறப்பு-பஸ்கள்">பஸ்களும்</a>, 4-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று 740 பஸ்களும், 5-ந்தேதி (சனிக்கிழமை) 880 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><h2><strong>கோயம்பேடு</strong></h2><p>சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 3-ந் தேதி வியாழக்கிழமை 210 பஸ்களும், 4-ந் தேதி வெள்ளிக்கிழமை 115 பஸ்களும், 5-ந் தேதி சனிக்கிழமை 115 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><h2><strong>மாதவரம்</strong></h2><p>மாதவரத்திலிருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, போளூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு 3-ந்தேதி முதல் 5-ந் தேதி வரை தலா 95 பஸ்களும் சிறப்பு பஸ்களாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் 6-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 805 சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஈரானுக்கு உதவினால்.. பிரதமர் மோடி - பெசெஷ்கியான் சந்திப்பு பற்றி மார்கோ ரூபியோ பகிரங்கம்</title><link>https://www.maalaimalar.com/news/world/marco-rubio-speaks-out-on-pm-modi-pezeshkian-meeting-regarding-aid-to-iran</link><comments>https://www.maalaimalar.com/news/world/marco-rubio-speaks-out-on-pm-modi-pezeshkian-meeting-regarding-aid-to-iran#comments</comments><guid isPermaLink="false">2f6c7d09-64ef-4c15-8661-f720fa8dc96a</guid><pubDate>Thu, 03 Sep 2026 03:01:47 +0000</pubDate><atom:updated>2026-09-03T03:01:47.138Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,மார்கோ ரூபியோ,Marco Rubio,Iran War,பிரதமர் மோடி,ஈரான் போர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/cterobcb/tn-14.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரதமர் மோடி,பெசெஷ்கியான், மார்கோ ரூபியோ ]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர் மோடி,பெசெஷ்கியான், மார்கோ ரூபியோ ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/cterobcb/tn-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF">பிரதமர் மோடி</a>, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானை சந்தித்துப் பேசியதன் பின்னணியில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். </p><h2>எச்சரிக்கை </h2><p>ஊடக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்,  "இந்தியாவுக்கும் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">ஈரானுக்கும் </a>இடையே வர்த்தக ஒப்பந்தம் எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. </p><p>இருப்பினும், ஈரானுக்கு தடைகளை தவிர்க்க எந்தவொரு நாடும் உதவக்கூடாது என்பதில் அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் மிகவும் தெளிவாக உள்ளது. </p><p>ஈரானின் பயங்கரவாதம் மற்றும் அணு ஆயுதத் திட்டங்களுக்கு வருவாய் ஈட்டித் தரும் வழிகளை உருவாக்கும் நாடுகள் மீதும் நாங்கள் தடைகளை விதிக்க வேண்டியிருக்கும்" என தெரிவித்துள்ளார். </p> <h2>ஆப்பரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்</h2><p>கடந்த ஆகஸ்ட் 24 அன்று அமெரிக்க நிதிச் செயலாளர் ஸ்காட் பெசென்ட், ஈரானின் பொருளாதாரப் பாதைகளை அடைப்பதற்காக "ஆப்பரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்" என்ற திட்டத்தை அறிவித்தார்.</p><p>இதன்மூலம் ஈரானுடன் வணிகம் செய்யும் நாடுகள் இரண்டாம் கட்டப் பொருளாதார தடைகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p> <h2>மோடி - பெசெஷ்கியான் சந்திப்பு</h2><p>கடந்த ஆகஸ்ட் 31 அன்று கிர்கிஸ்தானின் பிஷ்கேக் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டின் இடையே பிரதமர் மோடி, ஈரான் அதிபர் பெசெஷ்கியானை சந்தித்துப் பேசினார்.</p><p>சந்திப்பில், இந்தியா - ஈரான் இடையேயான பாரம்பரிய நட்புறவை வலுப்படுத்துதல் மற்றும் இருதரப்பு வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்துதல் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.</p><p>மத்திய கிழக்கில் நிலவும் பதற்றங்கள், சர்வதேசக் கப்பல் போக்குவரத்து மற்றும் மாலுமிகள் பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.</p><h2>மோடி பதிவு</h2><p>இது குறித்து பின்னர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, "ஈரானுடனான நீண்டகால நட்புறவை பல்வேறு துறைகளில் வலுப்படுத்த மீண்டும் உறுதிபூண்டுள்ளோம்.</p><p>வரும் காலத்தில் நமது வர்த்தகக் கூடையை விரிவுபடுத்த விரும்புகிறோம். பிராந்தியத்தில் நிலையான அமைதியை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும்" எனக் குறிப்பிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கிச்சூடு..  2 பேர் பலி - பலர் காயம் </title><link>https://www.maalaimalar.com/news/world/shooting-at-an-apartment-complex-in-the-us-2-dead-several-injured</link><comments>https://www.maalaimalar.com/news/world/shooting-at-an-apartment-complex-in-the-us-2-dead-several-injured#comments</comments><guid isPermaLink="false">b7c40dcd-f026-4a19-96c8-48ea90349f66</guid><pubDate>Thu, 03 Sep 2026 02:14:58 +0000</pubDate><atom:updated>2026-09-03T02:14:58.597Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,துப்பாக்கிச்சூடு,USA,shooting,மினியாபோலிஸ்,Minneapolis</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/ct3a86en/tn-13.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ துப்பாக்கிச்சூடு]]></media:title><media:description type="html"><![CDATA[ துப்பாக்கிச்சூடு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/ct3a86en/tn-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/america">அமெரிக்காவின் </a>மினியாபோலிஸ் நகரின் மையப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடத்தப்பட்ட <a href="https://www.maalaimalar.com/news/world/two-killed-in-school-shooting-in-southern-philippines">துப்பாக்கிச் சூட்டில்</a> இரண்டு பேர் உயிரிழந்தனர். </p><h2>துப்பாக்கிச்சூடு </h2><p>உள்ளூர் நேரப்படி மாலை 5.45 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. </p><p>அதைத் தொடர்ந்து அங்கு விரைந்த போலீசார் அப்பகுதியை சுற்றி வளைத்தனர். </p><p>சம்பவம் நடந்த பகுதியைச் சுற்றி அடுக்குமாடி குடியிருப்பு, மினியாபோலிஸ் மாநாட்டு மையம், ஹோட்டல்கள் மற்றும் ஒரு மருத்துவமனை ஆகியவை அமைந்துள்ளன.</p> <p>அடுக்குமாடி குடியிருப்பில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.</p><p>முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் உள்ள சென்ட் தாமஸ் பல்கலைக்கழகத்தின் வளாகம் உடனடியாக மூடப்பட்டது.</p><h2>பாதிப்பு</h2><p>துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 6 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் இருவர் உள்ளூர் போலீசார் என தெரியவந்துள்ளது.</p><p>தாக்குதல் நடத்திய நபரும் போலீசார் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. </p><h2>விசாரணை</h2><p>இச்சம்பவம் குறித்து எப்.பி.ஐ இயக்குநர் காஷ் படேல் தனது எக்ஸ் தளத்தில், "மினியாபோலிஸில் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் குறித்து எப்.பி.ஐ தீவிரமாக கண்காணித்து வருகிறது. </p><p>உள்ளூர் போலிசாருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் எங்களது சிறப்புப் படையினர் வழங்குவார்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.</p><p>துப்பாக்கிச் சூடு நடத்திய நபரின் பின்னணி என்ன, தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது குறித்துப் போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 3.9.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு பணத்தேவைகள் பூர்த்தியாகும்
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-3-september-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-3-september-2026#comments</comments><guid isPermaLink="false">d26bfb04-8196-4106-a6af-bacd92c9ac9e</guid><pubDate>Thu, 03 Sep 2026 02:05:11 +0000</pubDate><atom:updated>2026-09-03T02:05:11.701Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/10/19854207-rasi2.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/10/19854207-rasi2.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>திடீர் முன்னேற்றம் ஏற்படும் நாள். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும். மற்றவர்களின் விமர்சனங்களை மறந்து செயல்படுவது நல்லது.</p><h2>ரிஷபம்</h2><p>தாராளமாகச் செலவிட்டு மகிழும் நாள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். ஆரோக்கியம் சீராகும்.</p> <h2>மிதுனம்</h2><p>விருப்பங்கள் நிறைவேறும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது.</p><h2>கடகம்</h2><p>முன்னேற்றம் கூடும் நாள். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். சகோதர ஒத்துழைப்பு உண்டு. தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவுவர்.</p> <h2>சிம்மம்</h2><p>திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும் நாள். தேவைக்கேற்ற பணம் தேடிவரும். நண்பர்கள் நம்பிக்கைக்குரியவர்களாக நடந்து கொள்வர்.</p><h2>கன்னி</h2><p>காலை நேரத்தில் கவனம் தேவைப்படும் நாள். விரயம் உண்டு. அன்னிய தேசத்திலிருந்து உத்தியோகம் சம்பந்தமாக அழைப்புகள் வரலாம்.</p> <h2>துலாம்</h2><p>யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். கையாளும் பொருட்களில் கவனம் தேவை. வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். வருமானப் பற்றாக்குறை ஏற்படும்.</p><h2>விருச்சிகம்</h2><p>காரிய வெற்றி ஏற்படும் நாள். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமையைக் கண்டு மேலதிகாரிகள் வியப்பர்.</p> <h2>தனுசு</h2><p>தேக்க நிலை மாறி தெளிவு பிறக்கும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக்கொள்வீர்கள்.</p><h2>மகரம்</h2><p>வருமானம் வரும் வழியைக் கண்டு கொள்ளும் நாள். தொழிலில் இருந்த மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும்.</p> <h2>கும்பம்</h2><p>பிரச்சனைகளிலிருந்து விடுபடும் நாள். பிள்ளைகள் வழியில் பெருமையான தகவல் வந்துசேரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும்.</p><h2>மீனம்</h2><p>புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும். பழைய வாகனத்தைக் கொடுத்து புதிய வாகனம் வாங்குவீர்கள்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/todays-petrol-and-diesel-prices-in-chennai-3</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/todays-petrol-and-diesel-prices-in-chennai-3#comments</comments><guid isPermaLink="false">cf7b98df-d0da-4820-b3e4-7204822f7ffa</guid><pubDate>Thu, 03 Sep 2026 01:41:13 +0000</pubDate><atom:updated>2026-09-03T01:41:13.444Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,கச்சா எண்ணெய்,Crude oil,பெட்ரோல் டீசல் விலை,Petrol and Diesel Prices</media:keywords><media:content height="614" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/ue09tstx/maalai-malar2026-08-275rumntr2maalai-malar2026-08-18b0nhpc4wmaalai-malar2026-08-11blbkipxnmaalai-malar2026-08-08eyp4pp4lpetrol.avif" width="1024"><media:title type="html"><![CDATA[ பெட்ரோல், டீசல் விலை ]]></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல், டீசல் விலை ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/ue09tstx/maalai-malar2026-08-275rumntr2maalai-malar2026-08-18b0nhpc4wmaalai-malar2026-08-11blbkipxnmaalai-malar2026-08-08eyp4pp4lpetrol.avif?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/us-iran-conflict-iran-missile-strike-on-jordan-base">ஈரான் போரினால் </a>மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p> <h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. </p><p>அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.</p> <h2>இன்றைய பெட்ரோல், டீசல் விலை</h2><p>அந்த வகையில் இன்றைய (03.09.2026 - வியாழக்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கச்சா எண்ணெய் விலை</h2><p>இன்று சர்வதேச சந்தையில் பிரனட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 95.28 டாலர் என விற்பனை ஆகி வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 3 செப்டம்பர் 2026: கிருத்திகை
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-3-september-2026-kiruthigai</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-3-september-2026-kiruthigai#comments</comments><guid isPermaLink="false">13a65496-f48c-4f09-aac8-30b859d87477</guid><pubDate>Thu, 03 Sep 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-09-03T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/01/29/25562822-murugar.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Murugan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/01/29/25562822-murugar.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆவணி-17 (வியாழக்கிழமை)</p><p>பிறை : தேய்பிறை</p><p>திதி :  சப்தமி பின்னிரவு 2.08 மணி வரை பிறகு அஷ்டமி</p><p>நட்சத்திரம் : கார்த்திகை நள்ளிரவு 12.56 மணி வரை பிறகு ரோகிணி</p> <p>யோகம் :  மரணயோகம்</p><p>ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை</p><p>எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை</p><p>சூலம் : தெற்கு</p><p>நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை</p> <h2>தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு</h2><p>கிருத்திகை விரதம். திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் தங்க மயில் வாகனத்தில் புறப்பாடு. வேலூர் மாவட்டம் ரத்தினகிரியில் ஸ்ரீ பாலமுருகருக்கு தங்க ரதக்காட்சி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை மைசூர் மண்டபம் எழுந்தருளல். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோயிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. </p> <p>குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமான் அபிஷேகம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஸ்ரீ உடையவர் கூட புறப்பாடு. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - சாந்தம்</p><p>ரிஷபம் - உதவி</p><p>மிதுனம் - பணிவு</p><p>கடகம் - பக்தி</p><p>சிம்மம் - கடமை</p><p>கன்னி - சுகம்</p> <p>துலாம் - விருத்தி</p><p>விருச்சிகம் - சுபம்</p><p>தனுசு - நன்மை</p><p>மகரம் - அனுகூலம்</p><p>கும்பம் - வெற்றி</p><p>மீனம் - ஊக்கம்</p> ]]></content:encoded></item><item><title>துணை அதிபருக்கு நெருங்கிய அமெரிக்க ராணுவ செயலாளர் ராஜினாமா.. பாதுகாப்பு செயலாளர் பார்த்த வேலை</title><link>https://www.maalaimalar.com/news/world/us-secretary-of-defense-don-driscoll-resigns-controversy-continues-in-the-pentagon</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-secretary-of-defense-don-driscoll-resigns-controversy-continues-in-the-pentagon#comments</comments><guid isPermaLink="false">3de0c5d7-79dc-42b6-b7a6-e1db06a8c285</guid><pubDate>Thu, 03 Sep 2026 01:07:27 +0000</pubDate><atom:updated>2026-09-03T01:07:27.798Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டொனால்டு டிரம்ப்,Donald Trump,அமெரிக்க ராணுவம்,US army</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/puqnlu7f/tn-12.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஜெ.டி. வான்ஸ், டான் டிரிஸ்கோல், பீட் ஹெக்செத் 
 ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஜெ.டி. வான்ஸ், டான் டிரிஸ்கோல், பீட் ஹெக்செத் 
 ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/puqnlu7f/tn-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/army-secretary-dan-driscoll-is-stepping-down">அமெரிக்க ராணுவ </a>செயலாளர் டான் டிரிஸ்கோல் 18 மாத பணிக்கு பிறகு பதவி விலகியுள்ளார். நேற்று தனது பணியில் கடைசி நாளாக இருக்கும் என அறிவித்திருந்தார். </p><h2>விலகல்</h2><p>இந்த வாரம் தனது ராஜினாமாவை சமர்ப்பிப்பதற்கு முன்பாக அதிபர் டொனால்ட் டிரம்பிடம் ராணுவத்தின் நிலைமை குறித்து அவர் பேசியதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/us-iran-conflict-iran-missile-strike-on-jordan-base">ஈரானுக்கு</a> எதிரான ராணுவ தாக்குதல்களை அமெரிக்கா மீண்டும் தொடங்கியுள்ள சூழலில் இவரது விலகல் நிகழ்ந்துள்ளது.</p><h2>காரணம்</h2><p>துணை அதிபர் ஜே.டி. வான்ஸுக்கு நெருக்கமானவராகவும், நாடாளுமன்றத்தில் குடியரசு மற்றும் ஜனநாயக ஆகிய இரு கட்சிகளின் ஆதரவைப் பெற்றவராகவும் கருதப்படுபவர் டிரிஸ்கோல்</p><p>துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் நண்பரான டிரிஸ்கோலின் வெளியேற்றத்திற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.</p><p>இருப்பினும், பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் உடனான கருத்து வேறுபாடுகள் தான் இதற்கு காரணம் என கூறப்படுகிறது.</p><p>முன்னதாக கடந்த திங்களன்று வெள்ளை மாளிகை இவரது விலகலை உறுதிசெய்தது.</p><p>இதன்பிறகு பேசிய டிரிஸ்கோல், டிரம்ப் மற்றும் ஹெக்செத் நிர்வாகத்தின் கீழ் பணியாற்றியது வாழ்நாளின் பெருமை என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p>இவருக்குப் பதிலாக தற்காலிகமாகக்கூட யார் பொறுப்பேற்பார்கள் என்பது அறிவிக்கப்படவில்லை.</p><h2>பென்டகன் சர்ச்சை</h2><p>அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனில் அண்மை காலமாக சர்ச்சை நிலவி வருகிறது. </p><p>கடந்த ஏப்ரல் மாதம், டிரிஸ்கோலின் ஆதரவாளராகக் கருதப்பட்ட ராணுவத்தின் உயர் அதிகாரி ஜெனரல் ரான்டி ஜார்ஜை பாதுகாப்புச் செயலாளர் ஹெக்செத் பதவியிலிருந்து நீக்கினார்.</p><p>அதைத் தொடர்ந்து தற்காலிக தலைமை அதிகாரியாகப் பொறுப்பேற்ற ஜெனரல் கிறிஸ்டோபர் லாநேவ், டிரிஸ்கோல் ஆதரித்த டிரோன் நவீனமயமாக்கல் திட்டத்தை சமீபத்தில் ரத்து செய்தார்.</p><p>கடந்த ஆண்டு பொறுப்பேற்றதில் இருந்து, ஜெனரல் ஜார்ஜைத் தவிர 10க்கும் மேற்பட்ட மூத்த ஜெனரல்கள் மற்றும் அட்மிரல்களை எவ்வித விளக்கமும் அளிக்காமல் ஹெக்செத் பதவியிலிருந்து நீக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>டிரிஸ்கோலின் ராஜினாமாவை தொடர்ந்து ஹெக்செத் மீது குடியரசு மற்றும் ஜனநாயக கட்சி என இரு கட்சிகளில் உள்ளவர்களாலும் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.</p> ]]></content:encoded></item><item><title>அரசியல் துறவறம்: போஸ்டர் வைத்து மீண்டும் உறுதிப்படுத்திய மருத்துவர் ராமதாஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ramadoss-affirms-political-retirement-again</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ramadoss-affirms-political-retirement-again#comments</comments><guid isPermaLink="false">7b7128f0-6bbf-4d52-a4c3-1a8ea943a0bb</guid><pubDate>Thu, 03 Sep 2026 00:33:43 +0000</pubDate><atom:updated>2026-09-03T00:33:43.080Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>பாமக,Ramadoss,ராமதாஸ்,அரசியல் துறவறம்,PMK Party</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/0lb7mvi7/Ramadoss.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ramadoss]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/0lb7mvi7/Ramadoss.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அரசியல் துறவறம் மேற்கொண்டுள்ளதால் தன்னை சந்திப்பவர்கள் அரசியல் பேசவேண்டாம் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் <a href="https://www.maalaimalar.com/topic/ramadoss">ராமதாஸ்</a> மீண்டும் அறிவித்துள்ளார்.</p><p>2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே நிலவி வந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து பா.ம.க. நிறுவர் ராமதாஸ் தான் அரசியல் துறவறம் மேற்கொள்வதாக அறிவித்து இருந்தார்.</p><h2>அரசியல் பேசவேண்டாம்:</h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu">விழுப்புரம்</a> மாவட்டம், திண்டிவனம் வட்டம், கோனேரிக்குப்பத்தில் உள்ள சரஸ்வதி கல்லூரியில் கடந்த ஜீலை 25-ஆம் தேதி நடைபெற்ற தனது பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற ராமதாஸ், நான் இன்று முதல் அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன். கட்சிப் பணிகளை அன்புமணி பார்த்துக்கொள்வார். என்னிடம் இனி யாரும் அரசியல் பேசவேண்டாம் என அறிவித்தார்.</p><p>இதைத்தொடர்ந்து, திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் ஓய்வில் இருந்து வருகிறார். கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் அவரை சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.</p><h2>அறிவிப்பு பதாகை:</h2><p>அரசியல் குறித்த கோரிக்கையை தொடர்ந்து தைலாபுரம் தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பதாகையில், பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் அரசியல் துறவறம் மேற்கொண்டுள்ளதால், பார்வையாளர்கள் தயவு செய்து அரசியல் பேசவேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.</p><p>இத்துடன் அந்த பதாகையில், தினந்தோறும் காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பார்வையாளர்கள் சந்திக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ராமதாஸின் அரசியல் துறவறம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.</p><h2>முடிவுக்கு வந்த மோதல்:</h2><p>முன்னதாக பா.ம.க.வில் யாருக்கு அதிகாரம் என்பதில் மருத்துவர் ச.ராமதாஸ்- அன்புமணி ஆகியோரிடையே மோதல் போக்கு உருவானது. இதையடுத்து இருவரும் தனித் தனியாக கட்சிப் பணிகளை மேற்கொண்டு வந்தனர். கட்சியின் நிர்வாகிகளையும் தனித் தனியாக அறிவித்தனர். இதனால் கட்சியினரிடையே பிளவு ஏற்பட்டது. பா.ம.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அதிருப்திக்குள்ளாகினர்.</p><p>இந்நிலையில், 2026 சட்டப்பேரவை தேர்தல் முடிவுக்கு பின்னர் அன்புமணி ராமதாஸ் தனது குடும்பத்தினருடன் தைலாபுரம் தோட்டத்துக்கு வந்து மருத்துவர் ராமதாஸ்- சரஸ்வதி தம்பதியினரிடம் ஆசி பெற்ற நிலையில், தந்தை - மகன் இடையே இருந்து வந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது.</p>]]></content:encoded></item><item><title>கல்வி என்பது சலுகையல்ல, ஒவ்வொரு மாணவரின் உரிமை - ராகுல் காந்தி</title><link>https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-meets-delegation-of-tribal-students-in-nashik</link><comments>https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-meets-delegation-of-tribal-students-in-nashik#comments</comments><guid isPermaLink="false">5b29904a-e9e4-403f-92a8-4f649d4cbf5d</guid><pubDate>Thu, 03 Sep 2026 00:09:12 +0000</pubDate><atom:updated>2026-09-03T00:09:12.873Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Nashik,Tribal Students,நாசிக்,பழங்குடி மாணவர்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/sdjy931s/Rahul-Gandhi.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rahul Gandhi with Students]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/sdjy931s/Rahul-Gandhi.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national">மகாராஷ்டிரா</a> மாநிலத்தின் நாசிக் நகருக்கு சென்றிருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பழங்குடியின மாணவர் குழுவொன்றை சந்தித்து பேசினார். இக்குழுவில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களும் அடங்குவர். </p><p>அப்போது பேசிய அவர், கல்வி என்பது ஒரு சலுகை அல்ல, மாறாக இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாணவரின் உரிமை என்று குறிப்பிட்டார். மேலும், விளிம்புநிலை சமூகங்களைசேர்ந்த மாணவர்கள் நிர்வாக அமைப்பால் புறக்கணிக்கப்பட கூடாது என்றும் அவர் கூறினார்.</p><p>மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான <a href="https://www.maalaimalar.com/topic/rahul-gandhi">ராகுல் காந்தி</a>, ஒவ்வொரு மாணவருக்கும் கண்ணியமான, பாதுகாப்பான மற்றும் கல்விக்கு உகந்த சூழலில் படிப்பதற்கான உரிமை உண்டு என்று கூறினார். </p><h2>எக்ஸ் தள பதிவு:</h2><p>இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, "இன்று மகாராஷ்டிராவின் நாசிக்கில், பழங்குடியின மாணவர் குழுவொன்றை சந்தித்தேன்; இதில் தங்கள் கோரிக்கைகளுக்காக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களும் அடங்குவர். அவர்களின் பிரச்சினைகளையும் கோரிக்கைகளையும் நான் கவனமாகக் கேட்டறிந்தேன்.</p><p>விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் நிர்வாக அமைப்பால் புறக்கணிக்கப்பட கூடாது; அவர்களுக்கு அமைப்பின் ஆதரவும் சாத்தியமான அனைத்து உதவிகளும் தேவை," என்று காந்தி குறிப்பிட்டார்.</p><h2>கல்வி ஒவ்வொரு மாணவரின் உரிமை:</h2><p>கல்வி என்பது சலுகையல்ல; அது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாணவரின் உரிமை என்றும் அவர் மேலும் கூறினார்.</p><p>பழங்குடியினருக்கான ஆசிரம பள்ளிகளின் நிலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து அந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.</p><p>நேற்று (புதன்கிழமைய) நாசிக்கில் இருந்த ராகுல் காந்தி, மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சியின் மாவட்ட அளவிலான தலைவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, ​​கட்சியின் கொள்கைகளில் உறுதியாக நிற்கவும், மக்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்யவும் அவர் அவர்களை வலியுறுத்தினார்.</p>]]></content:encoded></item><item><title>3000 பேரை பலி வாங்கிய எபோலா - காங்கோவில் தொடரும் சோகம்</title><link>https://www.maalaimalar.com/news/world/congos-ebola-outbreak-shows-no-signs-of-slowing-as-deaths-top-3000</link><comments>https://www.maalaimalar.com/news/world/congos-ebola-outbreak-shows-no-signs-of-slowing-as-deaths-top-3000#comments</comments><guid isPermaLink="false">55312d22-b76b-4aec-a2e2-a17cb6a1f4fc</guid><pubDate>Wed, 02 Sep 2026 23:52:21 +0000</pubDate><atom:updated>2026-09-02T23:52:21.950Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உயிரிழப்பு,காங்கோ,Congo,Death toll,Ebola,எபோலா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/5ndfxhdd/Congo-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Congo Ebola Outbreak]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/5ndfxhdd/Congo-1.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காங்கோவில் <a href="https://www.maalaimalar.com/topic/ebola">எபோலா</a> நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை விட, நோய் பரவும் வேகம் மிக அதிகமாக உள்ளது. சமீபத்திய அரசுத் தரவுகளின்படி, 6,100-க்கும் மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளில் 3,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world">காங்கோ</a> சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, மே மாத மத்தியில் இது உலகளாவிய சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்பட்டதில் இருந்து, 6,186 உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளும், 3,007 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. வரலாற்றிலேயே மிக வேகமாக பரவும் எபோலா பாதிப்பாக இது நீடிக்கிறது.</p><h2>பாதுகாப்பற்ற சூழல்:</h2><p>புனியாவை சேர்ந்த ஜீன்-கிளாட் ஆங்வான்சியா, பாதுகாப்பற்ற சூழல் காரணமாக இட்டுரி மாகாணத்தில் நோய்த்தொற்று தீவிரமாக உள்ள மாம்பாசா பகுதியில் இருந்து வெளியேறியதாக கூறினார். அங்கு சுகாதார பணியாளர்களை அரிதாகவே காண முடிவதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் முறையாக கையாளப்படாதது பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p>நோய்த்தொற்றின் பரவல் வேகம் மக்களின் வாழ்க்கையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. புனியாவில் பொது போக்குவரத்து வாகன ஓட்டுநராக பணியாற்றும் பாபி பரகா, தனது வாகனத்தில் ஏற்றி செல்லும் பயணிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.</p><h2>இறப்பு விகிதம் மிக அதிகம்:</h2><p>"இந்த நோய் அனைவரையும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது; அன்றாட வாழ்க்கை மிகவும் மந்தமடைந்துள்ளது. நாங்கள் அச்சத்தில் உள்ளோம்," என்று அவர் கூறினார்.</p><p>சமீபத்திய வாரங்களில் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. கடந்த வாரம் வடக்கு கிவு பகுதியில் இரண்டு புதிய சுகாதார மண்டலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன; இப்பகுதியில் மற்ற பாதிக்கப்பட்ட மாகாணங்களை விட இறப்பு விகிதம் மிக அதிகமாக உள்ளது. இந்த வைரஸ் தற்போது ஆறு மாகாணங்களுக்கு பரவியுள்ளது.</p><p>வைரஸை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் "நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை எட்டவில்லை" என்றும், பல சுகாதார மண்டலங்களில் நோய் வேகமாகப் பரவுவது "நோய்த்தொற்றின் கட்டுப்பாடற்ற பரவலை" குறிக்கிறது என்றும் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையம் (CDC) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 1,243-ஆக உயர்வு</title><link>https://www.maalaimalar.com/news/world/nepal-tibet-flood-death-toll-rises-to-1243</link><comments>https://www.maalaimalar.com/news/world/nepal-tibet-flood-death-toll-rises-to-1243#comments</comments><guid isPermaLink="false">068f73db-8e61-4653-8347-133335a95129</guid><pubDate>Wed, 02 Sep 2026 21:56:08 +0000</pubDate><atom:updated>2026-09-02T21:56:08.204Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உயிரிழப்பு,Death toll,Nepal Floods,நேபாள வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/ucgt0hfr/Nepal-floods-death-toll.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nepal floods death toll]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/ucgt0hfr/Nepal-floods-death-toll.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/nepal-floods">நேபாளம்</a>-திபெத் எல்லை பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,243-ஆக அதிகரித்துள்ளது. இமயமலை நாடான நேபாளத்தில், போட்டேகோஷி நதிக்கரையோரம் உள்ள சுரங்கப்பாதைகள் மற்றும் நிலத்தடி மின் நிலையங்களில் சிக்கியிருக்கலாம் என கருதப்படுபவர்களை மீட்கும் பணியில், மீட்புக் குழுவினர் மழை மற்றும் இடிபாடுகளுக்கு மத்தியிலும் போராடி வருகின்றனர்.</p><p>கடந்த வாரம் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் காணாமல் போன உள்ளூர் மக்களின் குடும்பத்தினர் அடையாள ரீதியிலான இறுதிச் சடங்குகளை நடத்திய நிலையில், இந்த பேரிடருக்கும் பருவநிலை மாற்றத்திற்கும் உள்ள தொடர்பை சர்வதேச சமூகத்திடம் வலுவாக எடுத்துரைக்க வேண்டும் என்று பிரதமர் பலேந்திர ஷா வலியுறுத்தினார்.</p><h2>உடல்கள் மீட்பு:</h2><p>வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எட்டு மாவட்டங்களில் இருந்து மேலும் பல உடல்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து <a href="https://www.maalaimalar.com/topic/death-toll">பலி எண்ணிக்கை</a> 1,222-ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில், நாட்டின் பல நகரங்கள் மற்றும் கிராமங்களை வெள்ளம் புரட்டிப்போட்ட ஒரு வாரத்திற்குப் பிறகும் 4,875 பேர் காணாமல் போயுள்ளதாக நேபாளக் காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>பாதுகாப்புப் படையினர் சித்வான் மாவட்டத்தில் 348 உடல்களையும், நவல்ப்பராசி கிழக்கில் 218, நவல்ப்பராசி மேற்கில் 208 மற்றும் நுவாகோட்டில் 155 உடல்களையும் மீட்டுள்ளனர். இதேபோல், ரசுவாவில் 127, கோர்காவில் 69, தடிங்கில் 60 மற்றும் தனஹுவில் 38 உடல்கள் மீட்கப்பட்டதாக தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.</p><h2>11,000 பேர் மீட்பு:</h2><p>காணாமல் போனவர்களில் 583 பேர் வெளிநாட்டினர் ஆவர். நேபாள ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் இதுவரை ஹெலிகாப்டர்கள் மற்றும் தரைவழிப் பாதைகள் மூலம் 11,993 பேரை மீட்டுள்ளனர். தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக சுமார் 21,314 பாதுகாப்புப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.</p><p>ஆகஸ்ட் 26 அன்று நேபாளம்-திபெத் எல்லைக்கு அருகே ஏற்பட்ட பனி மற்றும் பாறைச் சரிவால் உருவான திடீர் வெள்ளம், வடக்கு மற்றும் மத்திய நேபாளத்தில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களைச் சீரழித்தது; இது பெரும் அழிவையும் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போன நிலையையும் ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>பாகிஸ்தானில் நூற்றாண்டு பழைய கோவில் இடிக்கப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/world/india-condemns-century-old-temples-demolition-in-pakistan</link><comments>https://www.maalaimalar.com/news/world/india-condemns-century-old-temples-demolition-in-pakistan#comments</comments><guid isPermaLink="false">5d6021fa-d61b-4b0e-bd83-916a842a6c3f</guid><pubDate>Wed, 02 Sep 2026 21:12:04 +0000</pubDate><atom:updated>2026-09-02T21:12:04.020Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,பாகிஸ்தான்,Pakistan,temple,கோயில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/7eolx9z7/Randhir-Jaiswal.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Randhir Jaiswal]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/7eolx9z7/Randhir-Jaiswal.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாகிஸ்தானின் நரோவால் பகுதியில் இந்து கோவில் ஒன்று அழிக்கப்பட்டதாக கூறப்படுவதை இந்தியா திட்டவட்டமாக கண்டித்ததுடன், இந்த சம்பவம் குறித்து <a href="https://www.maalaimalar.com/news/world">இஸ்லாமாபாத்</a> உடனடியாக விசாரணை நடத்தி, பொறுப்பானவர்களை முழுமையாக பொறுப்பேற்க செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியது.</p><p>"அவமதிக்கப்பட்ட கோயிலை" மீட்டெடுக்க பாகிஸ்தான் உடனடியாக தீர்வு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், தனது சிறுபான்மை குடிமக்கள் அனைவரின் பாதுகாப்பு, நலன் மற்றும் நல்வாழ்வையும், அவர்களின் கலாச்சார பாரம்பரியத்தையும் உறுதிசெய்யும் தனது முதன்மை கடமையை நிறைவேற்ற வேண்டும் என்றும் <a href="https://www.maalaimalar.com/news/national">இந்தியா</a> கூறியுள்ளது.</p><h2>இந்தியா கடும் கண்டனம்:</h2><p>"பாகிஸ்தானின் நரோவால் மாவட்டத்தில் உள்ள சிராஜ் கிராமத்தில், வரலாற்று சிறப்புமிக்க இந்து கோவில் ஒன்று அழிக்கப்பட்டதாக வந்துள்ள கவலையளிக்கும் செய்திகளை நாங்கள் ஆழ்ந்த வருத்தத்துடன் கவனத்தில் கொண்டுள்ளோம். நூற்றாண்டு பழமையான சிறுபான்மையினர் வழிபாட்டு தலத்திற்கு எதிரான இந்த கண்டிக்கத்தக்க நாசவேலையை நாங்கள் திட்டவட்டமாக கண்டிக்கிறோம்," என்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால் கூறினார்.</p><p>"அதிகாரிகளின் வெளிப்படையான அக்கறையின்மையும், இந்த நூற்றாண்டு பழமையான கோயிலை பாதுகாக்க தவறியதும் கவலை அளிக்கிறது," என்று அவர் கூறினார்.</p><h2>இந்தியா வலியுறுத்தல்:</h2><p>பாகிஸ்தானில் சிறுபான்மை சமூகங்கள் தொடர்ந்து எதிர்கொள்ளும் 'பாதிக்கப்படக்கூடிய தன்மை' மற்றும் அவர்களின் மத சுதந்திரங்கள், வழிபாட்டு தலங்கள் மீதான 'கொடுமையான மீறல்கள்' ஆகியவற்றுக்கு இதுபோன்ற சம்பவங்கள் ஒரு 'கடுமையான நினைவூட்டலாக' உள்ளன என்று ஜெயஸ்வால் கூறினார்.</p><p>இந்தச் சம்பவம் குறித்து விரைவான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தி, இதற்கு பொறுப்பானவர்கள் முழுமையாக பொறுப்பேற்க செய்ய வேண்டும் என பாகிஸ்தான் அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.</p><p>"மேலும், பாகிஸ்தான் அரசாங்கம் அவமதிக்கப்பட்ட கோயிலை மீட்டெடுக்கவும், தனது சிறுபான்மை குடிமக்கள் அனைவரின் பாதுகாப்பு, நலன் மற்றும் நல்வாழ்வையும், அவர்களின் கலாச்சார பாரம்பரியத்தையும் உறுதிசெய்யும் தனது முதன்மைக் கடமையை நிறைவேற்றவும் உடனடி நிவாரண நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ஹீரோயின் மாளவிகா மோகனன் நம்ம ஊர் மோனிகா பெலூச்சி போல் இருந்தார் - சர்தார் 2 விழாவில் நடிகர் கார்த்தி</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-karthi-said-malavika-mohanan-is-like-monica-belluci-of-our-native</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-karthi-said-malavika-mohanan-is-like-monica-belluci-of-our-native#comments</comments><guid isPermaLink="false">1a29857e-b712-4a09-9cc9-0048838e1574</guid><pubDate>Wed, 02 Sep 2026 19:25:48 +0000</pubDate><atom:updated>2026-09-02T19:25:48.940Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Karthi,கார்த்தி,Malavika Mohanan,மாளவிகா மோகனன்,Sardar 2,சர்தார் 2</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/lwmpydps/Karthi.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Karthi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/lwmpydps/Karthi.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஐ.வி.ஒய். என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ். லக்ஷ்மன் குமார் மற்றும் இஷான் சக்சேனா தயாரிப்பில் இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் தயாராகி உள்ள '<a href="https://www.maalaimalar.com/topic/sardar-2">சர்தார் 2</a>' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. </p><p>இந்நிகழ்வில் நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/suriya">சூர்யா</a>, ரவி மோகன், இயக்குநர் மோகன் ராஜா, சுந்தர் சி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பிரமாண்டமாக நடந்த இந்த விழாவில் நடிகர் கார்த்தி படத்தின் கதாநாயகி மாளவிகா மோகனன் பற்றி பேசினார்.  </p><h2>சிலர் மட்டுமே நினைப்பார்கள்:</h2><p>அப்போது பேசிய நடிகர் கார்த்தி, ''தமிழ் சினிமா என்பது பொழுதுபோக்கிற்காக மட்டுமல்ல. தமிழ் சினிமா - தமிழ்நாட்டின் அடையாளமாக இருக்கிறது. இங்கு நாம் அனைவரும் 40 மதிப்பெண் எடுத்தால் போதும் அல்லது 50 மதிப்பெண் எடுத்தால் போதும். ஆனால் நூறு மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று சிலர் மட்டும் தான் நினைப்பார்கள்.</p><p>இந்தப் படத்தின் குழு அப்படி 100 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறது. 100 மதிப்பெண்ணிற்கு எழுதுவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. அதை இந்த படக் குழு கடினமாக உழைத்து உருவாக்கி இருக்கிறார்கள்.</p><h2>மாளவிகா நம்ம ஊர் மோனிகா:</h2><p>சர்தார் முதல் பாகத்தில் காதல் காட்சிகளை இயக்குநர் வைத்திருந்தார். சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் என்ற உடன் காதல் காட்சிகள் பிரம்மாண்டமானதாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஹீரோயின் மாளவிகா மோகனன் என்று சொன்னவுடன், அவர்கள் நம்ம ஊர் மோனிகா பெலூச்சி போன்று இருந்தார்கள்.</p><p>அவர்களுக்கு பயங்கரமான காஸ்டியூம் கொடுத்து, அவர்களுடன் ரசிகர்கள் என்ஜாய் செய்வதற்கான காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ‌இது தொடர்பாக இயக்குநரிடம் கேட்டபோது, 'அவர் என் சாரா கதாபாத்திரம் அப்படிப்பட்டதல்ல' என விளக்கம் அளித்தார். ஏனெனில் படத்தில் சாரா கதாபாத்திரம் எனக்கு பாஸ்.</p><p>ஆஷிகா ரங்கநாத்- மிக திறமையான டான்சர். ஆனால் இந்த படத்தில் நாங்கள் அவரை அதிகமாக ஓட வைத்திருக்கிறோம். இவர் ஒரு ஸ்டார் மெட்டீரியல். கமர்சியல் ஹீரோயின். அவர்களை அழைத்து வந்து இயக்குநர் இந்த படத்தில் ஒரு சிறந்த நடிகையாக மாற்ற முயற்சி செய்திருக்கிறார்," என்றார்.</p>]]></content:encoded></item><item><title>ஹார்முஸ் நீரிணை பெயரை மாற்ற டிரம்ப் பரிந்துரை</title><link>https://www.maalaimalar.com/news/world/trump-suggests-renaming-hormuz-as-trump-strait</link><comments>https://www.maalaimalar.com/news/world/trump-suggests-renaming-hormuz-as-trump-strait#comments</comments><guid isPermaLink="false">4bf4c790-3a41-42ab-a0ec-f95b5cc04bc3</guid><pubDate>Wed, 02 Sep 2026 18:44:26 +0000</pubDate><atom:updated>2026-09-02T18:44:26.389Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டொனால்டு டிரம்ப்,Donald Trump,Strait of Hormuz,ஹார்முஸ் நீரிணை,Trump Strait,டிரம்ப் நீரிணை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/ejvb3yes/Trump-Strait-Map.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Trump Strait]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/ejvb3yes/Trump-Strait-Map.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரானுடனான போருக்கு மத்தியில் முக்கிய நீர்வழிப்பாதை சர்ச்சைக்குரியதாக நீடித்து வரும்போதிலும், <a href="https://www.maalaimalar.com/news/world">அமெரிக்க</a> அதிபர் டொனல்டு டிரம்ப் ஹார்முஸ் நீரிணைக்கு 'டிரம்ப் நீரிணை' எனப் பெயர் மாற்றுமாறு பரிந்துரைத்தார்.</p><h2>பெயரை மாற்ற முடிவு?</h2><p>"இப்போது அது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதால், ஹோர்முஸ் நீரிணையின் பெயரை <a href="https://www.maalaimalar.com/topic/donald-trump">டிரம்ப்</a> நீரிணை என்று மாற்றிவிடலாமா? அமெரிக்காவை போலவே, அதுவும் முன்னெப்போதையும் விட 'சூடாக' இருக்கும்!" என்று டிரம்ப் தனது 'ட்ரூத்' சமூக வலைதளத்தில் கூறினார்.</p><p>கனடாவுடனான வர்த்தக போருக்கு மத்தியில், ஒன்டாரியோ ஏரியை 'அமெரிக்கா ஏரி' எனப் பெயர் மாற்றுமாறு டிரம்ப் உத்தரவிட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, அவர் முன்மொழிந்த சமீபத்திய புவியியல் பெயர் மாற்றம் இதுவாகும்.</p><h2>அமெரிக்கா வளைகுடா:</h2><p>மேலும், 2025 ஜனவரியில் மீண்டும் பதவியேற்ற தனது முதல் நாளிலேயே, டிரம்ப் மெக்சிகோ வளைகுடாவிற்கு "அமெரிக்கா வளைகுடா" என பெயர் மாற்றினார். முந்தைய பல பெயர் மாற்றங்கள், 80 வயதான அமெரிக்க அதிபரின் மேலோட்டமான கேளிக்கையான பேச்சுகளாக தொடங்கி, பின்னர் அவரே அவற்றை நிஜமாக்கி காட்டின.</p><p>டிரம்ப் சமீப வாரங்களில் ஹார்முஸ் நீரிணையின் மீது இறையாண்மையை கோருவதாக மீண்டும் மீண்டும் அச்சுறுத்தல் விடுத்து வருவதுடன், அந்த நீர்வழியை ஒரு "புதிய அமெரிக்க பிரதேசம்" என காட்டும் வரைபடத்தையும் வெளியிட்டுள்ளார்.</p><h2>எண்ணெய் விலைகள் உயர்வு:</h2><p>ஆனால், கடந்த பிப்ரவரி மாத இறுதியில் இஸ்ரேலுடன் இணைந்து டிரம்ப் தொடங்கிய போருக்கு பதிலடியாக, உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் கடந்து செல்லும் அந்த முக்கிய பாதையை ஈரான் திறம்பட மூடிவிட்டது.</p><p>ஈரான் புதிய கண்ணிவெடிகளை பதிக்கும் முயற்சிகள் செய்வதாக டிரம்ப் கூறியதற்கு பதிலடியாக, செவ்வாயன்று ஹார்முஸ் நீரிணைக்கு அருகே அமெரிக்க படைகள் புதிய தாக்குதல்களை தொடங்கியதை அடுத்து, எண்ணெய் விலைகள் மீண்டும் உயர்ந்து வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>மகளிர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை நடத்தும் இந்தியா</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/india-to-host-inaugural-womens-champions-trophy-in-mumbai-vadodara-in-2027</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/india-to-host-inaugural-womens-champions-trophy-in-mumbai-vadodara-in-2027#comments</comments><guid isPermaLink="false">5caf6fb8-2a8f-42c8-ae55-37131277246d</guid><pubDate>Wed, 02 Sep 2026 17:28:56 +0000</pubDate><atom:updated>2026-09-02T17:28:56.791Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,Women&apos;s Champions Trophy,மகளிர் சாம்பியன்ஸ் கோப்பை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/h0i1rv57/IND-W-team.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ IND W team]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/h0i1rv57/IND-W-team.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2027-ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள முதலாவது <a href="https://www.maalaimalar.com/topic/icc">ஐசிசி</a> (ICC) மகளிர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இந்தியா நடத்தவுள்ளது. பிப்ரவரி 14 முதல் 28 வரை நடைபெறவுள்ள இத்தொடரில் மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்கின்றன. இந்தப் போட்டிகள் மும்பை மற்றும் வதோதரா நகரங்கள் இணைந்து நடத்தவுள்ளன. </p><p>ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய அணிகள் பங்கேற்கும் இந்த தொடரை, மும்பையில் உள்ள '<a href="https://www.maalaimalar.com/sports/cricket">கிரிக்கெட்</a> கிளப் ஆஃப் இந்தியா' மற்றும் வதோதரா சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஆகியவை நடத்தவுள்ளதாக ஐ.சி.சி. அறிவித்தது.</p><h2>போட்டி விவரம்:</h2><p>இத்தொடரில் பாகிஸ்தான் பங்கேற்காது. ஜூலை 6-ஆம் தேதி வரையிலான ஐ.சி.சி. மகளிர் டி20 சர்வதேச அணிகளின் தரவரிசையில் உள்ள இடங்களின் அடிப்படையில் பங்கேற்கும் ஆறு அணிகள் தேர்வு செய்யப்பட்டன. </p><p>இத்தொடர் 'ரவுண்ட்-ராபின்' (round-robin) முறையில் நடைபெறும்; இதில் ஒவ்வொரு அணியும் மற்ற ஐந்து அணிகளுடன் மோதும். லீக் சுற்றின் முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிப்ரவரி 28 அன்று நடைபெறும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.</p><p>இத்தொடரை நடத்தும் உரிமை முதலில் இலங்கைக்கு வழங்கப்பட்டு இருந்தது. ஆனால், ஐ.சி.சி. அறிவுறுத்திய நிர்வாக சீர்திருத்தங்களை இலங்கை கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து செயல்படுத்தி வருவதால், தற்போது இந்த உரிமம் இந்தியாவுக்கு மாற்றப்பட்டுள்ளது.</p><h2>மூன்று நாடுகள் பரிசீலனை:</h2><p>ஜூலை மாதம் நடைபெற்ற வருடாந்திர கூட்டத்தில், இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகம் குறித்து ஐ.சி.சி. வாரியம் கவலை தெரிவித்திருந்தது. திருத்தப்பட்ட அரசியலமைப்பை ஏற்றுக்கொள்வதில் இலங்கை கிரிக்கெட் வாரியம் முன்னேற்றம் கண்டு வருவதாக குறிப்பிட்ட அதே வேளையில், விரைவில் தேர்தல்களை நடத்த வேண்டியதன் அவசியத்தையும் ஐ.சி.சி. வலியுறுத்தியது. மேலும், தற்காலிகமாக ஐ.சி.சி. வாரியக் கூட்டங்களில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் பிரதிநிதித்துவம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.</p><p>மாற்று நடத்துநர்களாக பரிசீலிக்கப்பட்ட வங்கதேசம், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை, ஐ.சி.சி.யின் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பீட்டு அளவுகோல்களின்படி ஆய்வு செய்த பிறகு இந்தியா பரிந்துரைக்கப்பட்டது. இந்த முடிவு பின்னர் ஐ.சி.சி. வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டது.</p><p>2025 மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையை நடத்திய பிறகு, மற்றொரு முக்கிய மகளிர் கிரிக்கெட் தொடரை நடத்தும் வாய்ப்பு இதன் மூலம் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. ஆண்டுதோறும் ஒரு முக்கிய மகளிர் கிரிக்கெட் தொடரை நடத்த வேண்டும் என்ற ஐ.சி.சி. முயற்சியின் ஒரு பகுதியாக இந்த சாம்பியன்ஸ் கோப்பை அமைவதுடன், மகளிர் கிரிக்கெட் காலண்டரில் மற்றொரு முக்கிய போட்டியாகவும் இது இணைகிறது.</p>]]></content:encoded></item><item><title>கோயில்களில் செல்போனுக்கு தடை: மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தும் கதை - அண்ணாமலை விமர்சனம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-cellphones-in-temples-like-burning-down-the-house-to-get-rid-of-bedbugs-annamalais-criticism</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-cellphones-in-temples-like-burning-down-the-house-to-get-rid-of-bedbugs-annamalais-criticism#comments</comments><guid isPermaLink="false">a910fe96-aff8-4b56-8313-ff18957530de</guid><pubDate>Wed, 02 Sep 2026 16:33:48 +0000</pubDate><atom:updated>2026-09-02T16:33:48.225Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>அண்ணாமலை,தமிழ்நாடு அரசு,Temples,Government of Tamil Nadu,annamalai,கோயில்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/fffzfrwy/New-Project-2026-09-02T220309.237.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கோயில்களில் செல்போனுக்கு தடை: மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தும் கதை - அண்ணாமலை விமர்சனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/fffzfrwy/New-Project-2026-09-02T220309.237.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள 52 முதுநிலைத் திருக்கோயில்களில், நேற்று முதல் செல்போன் கொண்டு செல்வதற்கு தீவிர தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. </p><p>மேலும் பக்தர்கள் தங்களின் மொபைல் போன்களை பிரத்யேக கவுண்டர்களில் பாதுகாப்பாக ஒப்படைக்க ஒரு போனுக்கு ரூ. 5 வீதம் டோக்கன் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.</p><p>இந்த டோக்கன் கட்டணமுறையால் பக்தர்கள் நீண்ட வரிசையில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், இதற்கு பலதரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துவருகின்றன. </p><p>இந்நிலையில் கோயில்களுக்கு செல்போன் எடுத்து செல்லக்கூடாது என்ற விதிமுறையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டும் என ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்.,</p><p>“கோயில்களில் மொபைல் போன் கொண்டு செல்லக் கூடாது என்ற விதிமுறையால், ரூ.5 டோக்கன் பெறுவதற்கே நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நிம்மதியாக தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு, இந்த ஏற்பாடு தேவையற்ற பதற்றத்தையும் சிரமத்தையும் ஏற்படுத்துகிறது.</p><p>மக்களின் ஆன்மிக நம்பிக்கையையும், வழிபாட்டு உரிமையையும் எளிதாக்குவதற்குத்தான் கோயில் நிர்வாக விதிமுறைகள் இருக்க வேண்டும். கோயிலுக்குச் செல்வதையே யோசிக்க வைக்கும் அளவுக்கு அவை சிரமங்களை உருவாக்கக் கூடாது. </p><p>யாரோ ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக, லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்துவது, மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டையே கொளுத்திய கதையாக மாறிவிடக் கூடாது. </p><p>எனவே, தமிழ்நாடு அரசு இந்த விதிமுறையை உடனடியாக மறுபரிசீலனை செய்து, பக்தர்களுக்கு தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்தும் இந்த நடைமுறையைத் திரும்பப் பெற வேண்டும். </p><p>கோயில்கள் மக்களுக்கு நிம்மதியையும் இறைநம்பிக்கையையும் தரும் இடங்களாக இருக்க வேண்டும். பதற்றத்தையும் நீண்ட வரிசைகளையும் உருவாக்கும் இடங்களாக அல்ல.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>கொளத்தூர் வெற்றி: மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kolathur-victory-verdict-tomorrow-in-the-case-filed-by-mk-stalin</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kolathur-victory-verdict-tomorrow-in-the-case-filed-by-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">46823b6d-d3ad-4b12-8041-5b30047e1c27</guid><pubDate>Wed, 02 Sep 2026 16:09:34 +0000</pubDate><atom:updated>2026-09-02T16:09:34.383Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை உயர் நீதிமன்றம்,Madras High Court,Kolathur,கொளத்தூர்,மு.க.ஸ்டாலின்,M.k. stalin</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/9622m586/New-Project-2026-09-02T205930.794.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கொளத்தூர் வெற்றி: மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/9622m586/New-Project-2026-09-02T205930.794.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில், <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/what-authority-does-the-dgp-have-to-ban-cockfighting-madras-high-court-asks">சென்னை உயர் நீதிமன்றம் </a>நாளை (செப்டம்பர் 3) தீர்ப்பளிக்க உள்ளது. </p><p>உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் காலை 10.30 மணிக்கு இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. </p><h2>மனுவின் கோரிக்கை</h2><p>நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதைச் செல்லாது என அறிவிக்கக் கோரி அத்தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார்.  </p><p>மேலும், கொளத்தூர் தொகுதியின் அனைத்து விவிபாட் சீட்டுகளையும் எண்ணி, தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார்.</p><h2>நீதிமன்ற நடவடிக்கை</h2><p>தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கின் விசாரணையை முடித்து அண்மையில் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான இரண்டு வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-high-court-orders-the-quashing-of-two-cases-against-edappadi-palaniswami</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-high-court-orders-the-quashing-of-two-cases-against-edappadi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">81a0750e-f06a-41b2-a82b-b47c2ab4ddaa</guid><pubDate>Wed, 02 Sep 2026 15:53:13 +0000</pubDate><atom:updated>2026-09-02T15:53:13.479Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Edappadi Palaniswami,எடப்பாடி பழனிசாமி,சென்னை உயர் நீதிமன்றம்,Madras High Court</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/drh8ymgq/New-Project-2026-09-02T212123.540.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான இரண்டு வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/drh8ymgq/New-Project-2026-09-02T212123.540.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட இரண்டு வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>சேலம் டவுன் காவல் நிலையத்துக்கு உட்பட்ட, நாட்டாண்மை கட்டடம் முன்பு கடந்த 2021-ஆம் ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகளை மீறி அப்போதைய தி.மு.க. அரசைக் கண்டித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.</p><p>காவல்துறையின் உரிய அனுமதி இன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக எடப்பாடி பழனிசாமி மற்றும் இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சேலம் டவுன் காவல்துறையினர் கடந்த 2021-ஆம் ஆண்டில் வழக்குப்பதிவு செய்தனர்.</p><p>இதேபோல், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதி, சேலம் டவுன் காவல் நிலையத்துக்கு உட்பட்ட கோட்டை மைதானத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சாலையை வழிமறித்து, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக மீண்டும் சேலம் டவுன் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.</p><p>இதனைத் தொடர்ந்து, சேலம் டவுன் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த இரண்டு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.</p><p>இந்த மனுக்கள் உயர் நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன் இன்று (செப்டம்பர் 2) விசாரணைக்கு வந்தன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அரசியல்வாதிகளுக்கு போராட்டம் நடத்த உரிமை உண்டு எனக்கூறி, எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான இரண்டு வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>இயக்குநர் அமீர் கதாநாயகனாக நடிக்கும் ‘மாகாளி’ - முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/magali-starring-director-ameer-as-the-lead-first-look-poster-released</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/magali-starring-director-ameer-as-the-lead-first-look-poster-released#comments</comments><guid isPermaLink="false">7f03210c-5504-4a54-8081-74f9d337d964</guid><pubDate>Wed, 02 Sep 2026 15:21:06 +0000</pubDate><atom:updated>2026-09-02T15:21:06.786Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>mari selvaraj,மாரி செல்வராஜ்,ameer,அமீர்,மாகாளி,maakali</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/1kv6itoy/New-Project-2026-09-02T204214.360.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இயக்குநர் அமீர் கதாநாயகனாக நடிக்கும் ‘மாகாளி’ - முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/1kv6itoy/New-Project-2026-09-02T204214.360.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இயக்குநர் அமீர் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘மாகாளி’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரும் வெளியாகி உள்ளது. </p><p>இப்படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ், அவரது மனைவி திவ்யா மாரி செல்வராஜ் இணைந்து தங்களது சொந்த தயாரிப்பு நிறுவனமான நவ்வி ஸ்டுடியோஸ் கீழ் தயாரிக்கின்றனர். </p><p>பரியேறும் பெருமாள், கர்ணன் மற்றும் மாமன்னன் ஆகிய படங்களில் மாரி செல்வராஜிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அறிமுக இயக்குநர் எஸ்.பி.அரவிந்த் இப்படத்தை எழுதி, இயக்கியுள்ளார். </p><p>இப்படத்தில் ஸ்வாசிகா மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் படத்திற்கு இசையமைத்துள்ளார். </p><p>படம் குறித்த பிற அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>ஜிடிபி வளர்ச்சி 7.8 சதவீதம் அல்ல, நடப்பு விலையில் 2.5 சதவீதத்திற்கும் குறைவு: முன்னாள் நிதிச் செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் குற்றச்சாட்டு!</title><link>https://www.maalaimalar.com/news/national/india-gdp-growth-claims-challenged-ex-finance-secretary-subhash-chandra-garg-says-real-growth-below-2-5-percent</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-gdp-growth-claims-challenged-ex-finance-secretary-subhash-chandra-garg-says-real-growth-below-2-5-percent#comments</comments><guid isPermaLink="false">75ae1f00-656b-4ac2-8289-866df011e835</guid><pubDate>Wed, 02 Sep 2026 15:19:43 +0000</pubDate><atom:updated>2026-09-02T15:19:43.298Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>narendra modi,ஜிடிபி வளர்ச்சி,GDP,GDP Growth,மோடி,Subhash Chandra,சுபாஷ் சந்திர கார்க்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/bvcctfq5/suba.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Subhash Chandra]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/bvcctfq5/suba.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் இது குறித்து விளக்கிய சுபாஷ் சந்திர கார்க், கடந்த ஆண்டின் முதல் காலாண்டிற்கான நடப்பு விலை ஜிடிபி தரவுகளை அரசு பெருமளவில் மாற்றியமைத்து திருத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். </p><p>இந்தியாவின் <a href="https://www.maalaimalar.com/news/national/100-billion-dollar-fcnr-deposits-boost-indias-forex-reserves">உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி</a> (GDP) முதல் காலாண்டில் 7.8 சதவீதமாகப் பதிவாகியுள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்கள் முதல் பார்வையில் ஈர்க்கக்கூடியதாகத் தெரிந்தாலும், உண்மையான பொருளாதார நிலவரம் முற்றிலும் வேறாக உள்ளது என்று நாட்டின் முன்னாள் நிதிச் செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் கூறியுள்ளார். மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த புள்ளிவிவரங்களின் பின்னணியில் உள்ள கணக்கீடுகள் குறித்து தீவிரமாக ஆராய வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2><strong>'ஜிடிபி' மாயாஜாலம்</strong></h2><p>ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் இது குறித்து விளக்கிய சுபாஷ் சந்திர கார்க், கடந்த ஆண்டின் முதல் காலாண்டிற்கான நடப்பு விலை ஜிடிபி தரவுகளை அரசு பெருமளவில் மாற்றியமைத்து திருத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். முந்தைய ஆண்டின் ஜிடிபி மதிப்பில் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் வரை குறைக்கப்பட்டதால், நடப்பு ஆண்டின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் செயற்கையாக அதிகரித்து 10.3 சதவீத நாமினல் வளர்ச்சியாகக் காட்டப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.</p><h2>உண்<strong>மையான வளர்</strong>ச்சி 2.5 சதவீதத்திற்கும் குறைவு</h2><p>மத்திய அரசு முந்தைய ஆண்டின் ஜிடிபி எண்களை கீழ்நோக்கி மாற்றியமைக்காமல் இருந்திருந்தால், நடப்பு விலையில் இந்தியாவின் உண்மையான வளர்ச்சி விகிதம் வெறும் 2.5 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்திருக்கும் என கார்க் கணக்கிட்டுக் காட்டியுள்ளார். அடிப்படை எண்களை மாற்றியமைத்ததன் மூலமே 7.8 சதவீத உண்மை வளர்ச்சி சாத்தியமானது போல் தோற்றம் அளிப்பதாகவும், எனவே இந்த 7.8 சதவீத வளர்ச்சி எண் உண்மையான பொருளாதார நடவடிக்கைகளைப் பிரதிபலிக்கிறதா என்பதில் தமக்கு வலுவான சந்தேகம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>மத்திய அ<strong>ரசைத் தாக்கும் எதிர்க்கட்சி</strong>கள்</h2><p>முன்னாள் நிதிச் செயலாளரின் இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மத்திய மோடி அரசின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. விளம்பரங்கள் மூலம் புள்ளிவிவரப் படத்தை வேண்டுமானால் அழகாக்க முடியுமே தவிர, நாட்டின் உண்மையான பொருளாதார நிலையை மாற்ற முடியாது என்று காங்கிரஸ் தலைவர்கள் சாடியுள்ளனர். எனினும், இந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ள மத்திய புள்ளியியல் அமைச்சகம், புதிய அடிப்படை ஆண்டு மாற்றங்களின் அடிப்படையிலேயே கணக்கீடுகள் முறைப்படி செய்யப்பட்டுள்ளதாகவும், 7.8 சதவீத ஜிடிபி வளர்ச்சி முற்றிலும் சரியானது என்றும் விளக்கமளித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வித்யூத் ஜம்வால் வில்லனாக நடித்துள்ள ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்ஸ்’ படத்தின் டிரெய்லர் வெளியானது!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-trailer-for-the-movie-street-fighters-featuring-vidyut-jammwal-as-the-villain-has-been-released</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-trailer-for-the-movie-street-fighters-featuring-vidyut-jammwal-as-the-villain-has-been-released#comments</comments><guid isPermaLink="false">b1b2bf8e-d7ca-41d0-8199-e8af4e513fa0</guid><pubDate>Wed, 02 Sep 2026 15:00:47 +0000</pubDate><atom:updated>2026-09-02T15:00:47.371Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Vidyut Jammwal,Capcom,கேப்காம்,Street Fighter,வித்யூத் ஜம்வால்,ஸ்ட்ரீட் ஃபைட்டர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/jedgx803/New-Project-2026-09-02T201739.284.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வித்யூத் ஜம்வால் வில்லனாக நடித்துள்ள ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்ஸ்’ படத்தின் டிரெய்லர் வெளியானது!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/jedgx803/New-Project-2026-09-02T201739.284.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேப்காம் நிறுவனத்தின் புகழ்பெற்ற வீடியோ கேமை அடிப்படையாகக் கொண்டு உருவாகி உள்ள ஹாலிவுட் திரைப்படம் ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்ஸ்’. </p><p>டி.ஜே.ஃபிக்ஸ்மேன் எழுதியுள்ள இப்படத்தை கிடாவோ சகுராய் இயக்கியுள்ளார். இப்படத்தை லெஜண்டரி பிக்சர்ஸ் நிறுவனம் கேப்காம் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. </p><p>இத்திரைப்படத்தில் ஆண்ட்ரூ கோஜி, நோவா சென்டினியோ, காலினா லியாங், ஜேசன் மோமோவா மற்றும் டபிள்யூ.டபிள்யூ.இ புகழ் ரோமன் ரெயின்ஸ் உள்ளிட்ட பல முன்னணி உலகளாவிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.</p><p>இத்திரைபடத்தில் வில்லனாக நடிப்பதன் மூலம் ஹாலிவுட் அறிமுகத்தைப் பெறுகிறார் இந்திய நாயகன் வித்யூத் ஜம்வால். </p><p>இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் அக்டோபர் 16ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. அதில் தல்சிம் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜம்வாலின் சண்டைக் காட்சிகள் இணையத்தில் பெரும் பாராட்டைப் பெற்று வருகின்றன. </p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/kner4TIobe8"></iframe></figure>]]></content:encoded></item><item><title>வெளிநாடு வாழ் இந்தியர்களின் 100 பில்லியன் டாலர் முதலீடு: வரலாற்று உச்சத்தை தொட்டது இந்திய ரிசர்வ் வங்கி!</title><link>https://www.maalaimalar.com/news/national/100-billion-dollar-fcnr-deposits-boost-indias-forex-reserves</link><comments>https://www.maalaimalar.com/news/national/100-billion-dollar-fcnr-deposits-boost-indias-forex-reserves#comments</comments><guid isPermaLink="false">d4a968fe-53f9-4cc5-8690-10378ab788bc</guid><pubDate>Wed, 02 Sep 2026 14:30:39 +0000</pubDate><atom:updated>2026-09-02T14:30:39.760Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>RBI,NRI,இந்திய ரிசர்வ் வங்கி,FCNR,Non-Resident Indians,வெளிநாடு வாழ் இந்தியர்கள்,எஃப்.சி.என்.ஆர்,வைப்புநிதித் திட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/x8nmbu35/fcnr.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ FCNR  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/x8nmbu35/fcnr.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் ரூபாயின் மதிப்பு சரிவு போன்ற பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியில், இந்த 100 பில்லியன் டாலர் நிதியோட்டம் இந்திய பொருளாதாரத்திற்குப் பெரும் பலமாக உருவெடுத்துள்ளது. </p><p>வெளிநாடு வாழ் இந்தியர்களைக் கவரும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்திய 'எஃப்.சி.என்.ஆர்(பி)' வைப்புநிதித் திட்டம் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது. வெறும் மூன்று மாதங்களில் 100 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக முதலீடுகள் குவிந்ததைத் தொடர்ந்து, திட்டமிட்ட காலக்கெடுவுக்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே இத்திட்டத்தை ரிசர்வ் வங்கி நிறைவு செய்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/topnews/india-rs-20000-crore-crypto-fraud-sc-says-extradite-main-accused-subhash-sharma">ரிசர்வ் வங்கியின்</a> இந்த வெளிநாட்டுச் செலாவணி அல்லாத வங்கி வைப்புத் திட்டம் ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டு செப்டம்பர் 30 வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் 80 பில்லியன் டாலர் வரை மட்டுமே முதலீடு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 31 அன்றே 100 பில்லியன் டாலரைத் தாண்டி சாதனை படைத்தது. அதிகப்படியான நிதியோட்டத்தைக் கையாளவும், எதிர்காலப் பொருளாதார சமநிலையைப் பேணவும் ஆகஸ்ட் 31 தேதியே ரிசர்வ் வங்கி நிறைவு செய்துள்ளது.</p><h2>வரலாறு கா<strong>ணாத கையி</strong>ருப்பு</h2><p>சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் ரூபாயின் மதிப்பு சரிவு போன்ற பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியில், இந்த 100 பில்லியன் டாலர் நிதியோட்டம் இந்திய பொருளாதாரத்திற்குப் பெரும் பலமாக உருவெடுத்துள்ளது. இதன் விளைவாக இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 729.3 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற எக்காலத்தும் இல்லாத வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சத்தை எட்டியுள்ளது.</p><p>எஃப்.சி.என்.ஆர்(பி) திட்டத்தின் கீழ் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களது டாலர் சேமிப்புகளை இந்திய வங்கிகளில் வட்டி இழப்பின்றி டெபாசிட் செய்ய வழிவகை செய்யப்பட்டது. இந்த பிரம்மாண்ட டாலர் வரத்து இந்திய ரிசர்வ் வங்கிக்குச் அந்நியச் செலாவணி சந்தையில் தலையிட்டு, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பை வலுப்படுத்தவும், நாட்டின் கணக்கு பற்றாக்குறையைச் சீர்செய்யவும் மிகப்பெரிய பலத்தை வழங்கியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக ராமச்சந்திரன் நியமனம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/singai-ramachandran-appointed-as-head-of-tamil-nadu-startup</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/singai-ramachandran-appointed-as-head-of-tamil-nadu-startup#comments</comments><guid isPermaLink="false">68830cc1-2b2f-4383-9bd3-3727c4bd17e0</guid><pubDate>Wed, 02 Sep 2026 14:29:47 +0000</pubDate><atom:updated>2026-09-02T14:29:47.225Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>StartupTN,Singai Ramachandran,சிங்கை ராமச்சந்திரன்,Ramanathan,ஸ்டார்ட்அப் தமிழ்நாடு,ராமநாதன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/6zcv4wlx/New-Project-2026-09-02T194059.364.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாடு ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் தலைவராக சிங்கை ராமச்சந்திரன் நியமனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/6zcv4wlx/New-Project-2026-09-02T194059.364.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அதிமுகவில் இருந்து விலகி அண்மையில் தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். </p><p>அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மற்றும் மாணவர் அணிச் செயலாளராகப் பணியாற்றிய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/singai-ramachandran-who-left-the-aiadmk-joins-the-tvk">சிங்கை ராமச்சந்திரன்</a>, அக்கட்சியின் சார்பில் 2024 மக்களவைத் தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிட்டார்.</p><p>கடந்த ஜூலை மாதம் அதிமுகவிலிருந்து விலகிய இவர், கடந்த மாதம் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.</p><p>இந்நிலையில் தமிழ்நாடு அரசு அவருக்கு இந்தப் பொறுப்பை வழங்கியுள்ளது. இவரது தந்தை சிங்கை கோவிந்தராசும் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ ஆவார்.</p><h2>ராமநாதன் பதவி விலகல்</h2><p>கடந்த ஜூன் மாதம் ஸ்டார்ட்அப்டிஎன் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பதவிகளிலிருந்து சிவராஜ ராமநாதன் ராஜினாமா செய்தார். </p><p>இவரின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட தவெக தலைமையிலான அரசு தொழில்துறை ஆணையரும், தொழில்கள் மற்றும் வர்த்தகத் துறை இயக்குநருமான எல். நிர்மல் ராஜூக்கு இந்தப் பொறுப்பை கூடுதலாக வழங்கியது.</p><p>இந்நிலையில் அண்மையில் இணைந்த சிங்கை ராமச்சந்திரனுக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>‘வீரபாண்டியன் நலமுடன் உள்ளார்’ - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/veerapandian-is-in-good-health-communist-party-of-india-statement</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/veerapandian-is-in-good-health-communist-party-of-india-statement#comments</comments><guid isPermaLink="false">5b69f8d9-eff4-4175-92dd-43943f2aae0f</guid><pubDate>Wed, 02 Sep 2026 14:04:23 +0000</pubDate><atom:updated>2026-09-02T14:04:23.604Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,Communist Party of India,M. Veerapandian,மு. வீரபாண்டியன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/kp79srzg/New-Project-2026-09-02T193401.452.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘வீரபாண்டியன் நலமுடன் உள்ளார்’ - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/kp79srzg/New-Project-2026-09-02T193401.452.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் நலமுடன் உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு அறிக்கை விடுத்துள்ளது.</p><p>உடல்நலன் குறித்து வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;</p><p>“இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் 31.08.2026 அன்று மாலை டெல்லிக்கு சென்றிருந்தார். </p><p>டெல்லியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நேற்று (01.09.2026) நடைபெற்ற பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திலும், இன்றும், நாளையும் நடைபெறும் கட்சியின் தேசியக் குழுக் கூட்டத்திலும் பங்கேற்பதற்காக அவர் சென்றிருந்தார்.</p><p>இந்நிலையில் நேற்று (01.09.2026) அதிகாலையில் ஏற்பட்ட தலைச்சுற்றல் மற்றும் மயக்கத்தின் காரணமாக டெல்லியில் உள்ள சஃப்தர்ஜங் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றபின்பு, உடனடியாக சென்னை திரும்பி நேற்று மாலை 03.00 மணிக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.</p><p>மருத்துவர்களின் சிகிச்சைகளுக்குப் பிறகு அவருக்கு ஏற்பட்ட தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் தற்பொழுது குறைந்துள்ளது. உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.</p><p>இன்று மாலையோ அல்லது நாளை காலையோ அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆக உள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>ரஷிய வான்வெளியைத் தவிர்க்குமாறு ஜெலன்ஸ்கி எச்சரிக்கை: &apos;அரசு பயங்கரவாதம்&apos; என புதின் கடும் கண்டனம்!</title><link>https://www.maalaimalar.com/news/world/zelensky-warns-on-russian-airspace-putin-slams-state-terrorism</link><comments>https://www.maalaimalar.com/news/world/zelensky-warns-on-russian-airspace-putin-slams-state-terrorism#comments</comments><guid isPermaLink="false">3abbb204-0da9-449a-9996-df823cca4106</guid><pubDate>Wed, 02 Sep 2026 13:58:20 +0000</pubDate><atom:updated>2026-09-02T13:58:20.119Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Russia,Putin,Zelenskyy,ஜெலென்ஸ்கி,ரஷியா,உக்ரைன்,State Terrorism,புடின்,அரசு பயங்கரவாதம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/ueyjzjmd/putin.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Putin -Zelenskyy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/ueyjzjmd/putin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2022-இல் போர் தொடங்கியதில் இருந்தே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் விமானங்கள் ரஷிய வான்வெளியைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து வருகின்றன. </p><p>உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து நடத்தி வரும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ரஷிய எல்லைக்குள் இருக்கும் ராணுவ இலக்குகள் மீது உக்ரைன் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், ரஷியாவின் வான்வெளி இனி வணிகரீதியான பயணிகள் விமானங்களுக்கு பாதுகாப்பற்றதாக மாறிவிட்டது என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி சர்வதேச விமான நிறுவனங்களுக்கும் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p>ட்ரோன்கள் நிறைந்த வான்வெளியில் பயணிகள் விமானங்கள் பறப்பது பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்றும், <a href="https://www.maalaimalar.com/news/world/us-iran-conflict-iran-missile-strike-on-jordan-base">உக்ரைன் </a>நேரடியாகப் பயணிகள் விமானங்களை இலக்கு வைக்கவில்லை என்றாலும், ரஷியாவின் வான்வெளி நடைமுறையில் மூடப்படும் நிலையை நோக்கிச் செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக மாஸ்கோ மற்றும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் போன்ற நகரங்களுக்கு இன்னும் சேவைகளை வழங்கி வரும் சர்வதேச விமான நிறுவனங்கள் இந்த எச்சரிக்கையைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><h2>'பேச்<strong>சுவார்த்தைக்</strong>கு வழியில்லை' </h2><p>ஜெலென்ஸ்கியின் இந்த எச்சரிக்கைக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய புதின், பயணிகள் விமானப் போக்குவரத்தை அச்சுறுத்தும் வகையில் பேசுவது "அரசு பயங்கரவாதம்" என்று சாடினார்.</p><p>பயங்கரவாதிகளுடன் ரஷியா ஒருபோதும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தாது என்று திட்டவட்டமாகக் கூறிய புதின், உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மற்றும் பொருளாதார இலக்குகள் மீது ரஷியப் படைகள் தீவிரமான மற்றும் பெரிய அளவிலான பதிலடித் தாக்குதல்களைத் தொடரும் என்றும் எச்சரித்துள்ளார்.</p><p>2022-இல் போர் தொடங்கியதில் இருந்தே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் விமானங்கள் ரஷிய வான்வெளியைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து வருகின்றன. இருப்பினும், சீனா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா போன்ற நாடுகளைச் சேர்ந்த சில விமான நிறுவனங்கள் ஆசிய-ஐரோப்பிய வழித்தடங்களுக்காக ரஷிய வான்வெளியை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன.</p><p>தற்போது உக்ரைனின் நீண்டதூர ட்ரோன்கள் ரஷிய எல்லைக்குள் ஆழமாக ஊடுருவித் தாக்குதல் நடத்தி வருவதால், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஏவுகணைகளின் குறுக்கீடால் வணிக விமானங்கள் பெரும் ஆபத்தைச் சந்திக்க நேரிடும் என சர்வதேச விமானப் போக்குவரத்து வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>25 ஆண்டுக்குப் பின் இணைந்த பிரபுதேவா - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி: &apos;மூன்வாக்&apos; ரிலீஸ் தேதி அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/after-25-years-prabhudeva-ar-rahman-reunite-moonwalk-release-date-announced</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/after-25-years-prabhudeva-ar-rahman-reunite-moonwalk-release-date-announced#comments</comments><guid isPermaLink="false">6d0099d0-cbe2-4519-ab83-e7f0b1bd654b</guid><pubDate>Wed, 02 Sep 2026 13:54:42 +0000</pubDate><atom:updated>2026-09-02T13:54:42.390Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>Prabhu Deva,Moon Walk,AR Rahman,ஏஆர் ரஹ்மான்,யோகி பாபு,Yogi Babu,பிரபுதேவா,மூன்வாக்,Diwali 2026,Behindwoods</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/wwbf9vj1/Moon-walk" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Moon walk  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/wwbf9vj1/Moon-walk?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>25 ஆண்டுகளுக்குப் பின் பிரபுதேவா - <a href="https://www.maalaimalar.com/topic/ar-rahman">ஏ.ஆர்.ரஹ்மான் </a>கூட்டணியில் உருவாகியுள்ள 'மூன்வாக்' படம் தீபாவளி 2026-ல் ரிலீஸ் ஆகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் 5 பாடல்களை பாடி நடித்துள்ளார், யோகி பாபு 16 வேடங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p>தமிழ் திரையுலகில் ‘காதலன்’, ‘மின்சார கனவு’, ‘லவ் பேர்ட்ஸ்’, ‘மிஸ்டர் ரோமியோ’ போன்ற பிளாக்பஸ்டர் படங்களுக்குப் பிறகு, 25 ஆண்டுகள் கழித்து நடனப்புயல் <a href="https://www.maalaimalar.com/topic/prabhu-deva">பிரபுதேவா </a>மற்றும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய இருபெரும் ஆளுமைகள் மீண்டும் இணையும் 'மூன்வாக்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>ரிலீஸ் தேதி</strong></h2><p>ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள '<a href="https://www.maalaimalar.com/topic/moon-walk">மூன்வாக்</a>' இத்திரைப்படம் 2026 தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.</p><p>இத்திரைப்படம் ஒரு முழுமையான நகைச்சுவை, நடனம் மற்றும் குடும்பக் கொண்டாட்டப் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. பிரபல ஊடக நிறுவனமான பிகைண்ட்வுட்ஸ் -ன் நிறுவனரும் சிஇஓ-வுமான மனோஜ் என்.எஸ் இயக்குநராக அறிமுகமாகும் முதல் திரைப்படம் இதுவாகும்.</p><h2><strong><a href="https://www.maalaimalar.com/topic/ar-rahman">ஏ.ஆர்.ரஹ்மான்</a>!</strong></h2><p>இந்தத் திரைப்படத்தின் மிக முக்கிய சிறப்பம்சமாக, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதோடு மட்டுமின்றி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். </p><p>அதில் குறைவான நேரத்தில் மட்டும் நடித்திருப்பதாக சமீபத்திய வீடியோ ஒன்றில் அவரே கூறியிருந்தார்.</p><h2><strong>5 பாடல்களையும் பாடிய இசைப்புயல்</strong></h2><p>இப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இந்த 5 பாடல்களையும் ஏ.ஆர்.ரஹ்மானே சொந்தக் குரலில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு பாடலும் ஒரு குறிப்பிட்ட திருவிழா அல்லது கொண்டாட்டத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. </p><p>ஏற்கனவே வெளியான 'ஏது', 'மக்கரீனா' மற்றும் 'டிங்கா' ஆகிய பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், பிரபுதேவா மற்றும் ரஹ்மான் இணைந்து தோன்றும் அடுத்த பாடல் விரைவில் வெளியாகவுள்ளது.</p><h2><strong>16 வேடங்களில் அசத்தும் யோகி பாபு</strong></h2><p>இப்படத்தின் நகைச்சுவைக்கு வலு சேர்க்கும் வகையில் நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81">யோகி பாபு</a> ஒரு புதிய சாதனையை செய்துள்ளார். இந்த படத்தில் அவர் 16 வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். </p><p>இதுகுறித்து ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய யோகி பாபு, "இயக்குநர் மனோஜ் கதை சொல்லும் போது எனக்கு ஒரே ஒரு கதாபாத்திரம் தான் இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் ஸ்கிரிப்டில் எனக்கு 16 வெவ்வேறு வேடங்கள் இருப்பதை அறிந்து வியப்படைந்தேன்" என்று தெரிவித்துள்ளார்.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/ddycsCiZ4OM"></iframe></figure><h2><strong>நட்சத்திரப் பட்டாளம்</strong></h2><p>பிரபுதேவா, யோகி பாபு ஆகியோருடன் அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், சாட்ஸ், நிஷ்மா செங்கப்பா, சுஷ்மிதா நாயக், ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன், தீபா சங்கர் உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளமே இதில் இணைந்து நடித்துள்ளனர்.</p><p>மனோஜ் என்.எஸ், திவ்யா மனோஜ் மற்றும் பிரவீன் ஏலக் ஆகியோர் இணைந்து பிகைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். அனூப் வி ஷைலஜா ஒளிப்பதிவு செய்ய, ரேமண்ட் டெரிக் கிராஸ்டா படத்தொகுப்பு செய்துள்ளார்.</p><h2><strong>தீபாவளிப் பந்தயம்</strong></h2><p>'<a href="https://www.maalaimalar.com/topic/moon-walk">மூன்வாக்</a>' திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது. </p><p>2026 தீபாவளி ரேஸில் சூர்யாவின் 47-வது திரைப்படம் மற்றும் சிலம்பரசனின் 'அரசன்' ஆகிய படங்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டாலும், இதுவரை அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் தேதியை அறிவித்த ஒரே திரைப்படம் 'மூன்வாக்' மட்டுமே என்றும் தெரியவந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>“மின்மினிப் பூச்சிகள் நிரந்தரம் கிடையாது; சூரியன்தான் நிரந்தரம்... நிலைத்து நிற்கும்” - மு.க.ஸ்டாலின்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/fireflies-are-not-permanent-the-sun-alone-is-permanent-it-endures-mk-stalin</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/fireflies-are-not-permanent-the-sun-alone-is-permanent-it-endures-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">18f9eb73-bf86-488f-b7bb-fac3c38589a4</guid><pubDate>Wed, 02 Sep 2026 13:51:19 +0000</pubDate><atom:updated>2026-09-02T13:51:19.460Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,மு.க.ஸ்டாலின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/697l8lxq/New-Project-2026-09-02T191731.964.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “மின்மினிப் பூச்சிகள் நிரந்தரம் கிடையாது; சூரியன்தான் நிரந்தரம்... நிலைத்து நிற்கும்” - மு.க.ஸ்டாலின்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/697l8lxq/New-Project-2026-09-02T191731.964.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மறுசீரமைப்பு பிரதிநிதிகள் கூட்டம் இன்று காணொலி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின்.,</p><p>“நாட்டிலேயே முதன்முதலில் ஆட்சியைக் பிடித்த மாநிலக் கட்சி, சாதனைகள் பல படைத்த கட்சி என்ற பெருமை நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இருக்கிறது. அதற்குக் காரணம், அப்படியே தேங்கி நின்றுவிடாமல், காலத்திற்கு ஏற்ற மாதிரி நாம் அப்டேட் ஆகி, அப்கிரேட் ஆவதுதான்.</p><p>‘மாற்றங்கள் நம்மிலிருந்துதான் தொடங்க வேண்டும்’ என்று சொல்லி, திமுக 2.0-விற்கான பயணத்தை இப்போது நாம் தொடங்கியிருக்கிறோம்.</p><p>நடந்து முடிந்த தேர்தலில் நமக்கு ஏற்பட்ட பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்து, வெற்றிப் பாதைக்கு நாம் திரும்ப வேண்டும் என்று பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்துக் கொண்டு இருக்கிறோம்.</p><p>முதலில், கள ஆய்வுக் குழுவை அனுப்பி, நிர்வாகிகளிடம் கருத்து கேட்டோம். ஆன்லைனில் தொண்டர்களிடம் கருத்து கேட்டோம். அதில் வந்த அறிக்கையையெல்லாம் நான் முழுமையாகப் படித்தேன்.</p><p>அதில் வந்த கருத்துகளின் அடிப்படையில், கட்சியின் கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீரமைப்புகளைப் பரிந்துரை செய்ய, கட்சி மறுசீரமைப்புக் குழுவை அமைத்தோம். அந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், செயற்குழுவில் பல்வேறு தீர்மானங்களைக் கொண்டு வந்தோம்.</p><p>அதன் தொடர்ச்சியாக, கடந்த 28-ஆம் தேதி 110 மாவட்டங்களை அறிவித்தோம். இந்தச் செயல்பாட்டின் அடுத்த கட்டப் பணியைச் சிறப்பாகச் செய்ய நேற்று முன்தினம், தலைமைக் கழகப் பிரதிநிதிகளாக உங்கள் அனைவரையும் அறிவித்திருக்கிறோம்.</p><p>கழக மறுசீரமைப்புக்கான தலைமைக் கழகப் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டிருக்கின்ற நீங்கள், என்னுடைய கண்களாகவும், காதுகளாகவும் மாவட்டங்களுக்குச் சென்று, எந்தவித பாகுபாடுகளும் பார்க்காமல் எந்தவித அழுத்தங்களுக்கும் அடிபணியாமல், கொடுக்கப்பட்டிருக்கின்ற பணிகளைச் சரியாகச் செய்துவிட்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.</p><p>நீங்கள் அனைவரும் உங்களுக்குப் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கின்ற மாவட்டங்களுக்குச் சென்று, மாவட்டச் செயற்குழுக் கூட்டத்திற்கு முன்னிலை வகித்து, அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்டு, மறுசீரமைப்புக் குழு வகுத்துத் தந்துள்ள வழிமுறைகளின்படி கழக அமைப்புகளை உருவாக்க வேண்டும்.</p><p>முக்கியமாக நீங்கள் சென்று முதலில் சொல்ல வேண்டியது என்னவென்றால்,“கிளை முதல் தலைமை வரைக்குமான பொறுப்புகளுக்குத் தேர்தல்தான் நடக்கப்போகிறது என்று தலைவர் சொல்லிவிட்டார். அது அனைத்துமே சுதந்திரமான, நேர்மையான தேர்தலாகத்தான் நடைபெறும். </p><p>அப்போதுதான் புதிய நிர்வாகிகள், இளைஞர்கள் பொறுப்புகளுக்கு வருவார்கள். அதற்கு நீங்கள் தான் ஒத்துழைக்க வேண்டும். அப்போதுதான் நாம் அனைவரும் சேர்ந்து பாடுபட்டு வளர்த்த கட்சியை, அடுத்த நூறு ஆண்டுகளுக்குக் கொண்டு செல்ல முடியும்” என்று சொல்ல வேண்டும்.</p><p>அதேபோல், செயற்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்களின் அடிப்படையில், வயது வரம்பு காரணமாகவும், ஒருவர் எத்தனை முறை பதவியில் இருக்கலாம் என்ற வரம்பு காரணமாகவும் பலருக்கும் இப்போது இருக்கும்பொறுப்புகள் பறிபோகும்.</p><p>“அவர்கள் யாரையும் தலைவர் கைவிடப் போவதில்லை. அவர்கள் அனைவருக்கும் அவர்கள் தகுதிக்கேற்ற வேறு பொறுப்புகளை வழங்கும் வகையில் தலைவர் முடிவெடுப்பார்” என்பதையும் மாவட்டச் செயற்குழுக் கூட்டங்களில் எடுத்துச் சொல்லுங்கள்.</p><p>வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி கழக அமைப்புகள் பிரிக்கப்படுவதை உறுதி செய்து, அனைவரின் ஒப்புதலையும் பெற்று தலைமைக் கழகத்தில் ஒப்படைக்கும் பணியை அடுத்த 15 நாட்களில் விரைந்து முடித்துத் தர வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இதையெல்லாம் நீங்கள் செய்து முடித்த பிறகுதான் உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்க முடியும். அடித்தளம் வலிமையாக இருந்தால்தான் கட்டிடம் உறுதியாக இருக்கும். </p><p>வேர்கள் வலிமையாக இருந்தால்தான் ஆலமரம் உறுதியாக நிற்கும். அதுபோல நம்முடைய கழகக் கட்டமைப்புதான் நம்மைத் தாங்கி நிற்கும். அந்த ஆணிவேரைப் பலப்படுத்தும் பெரும் பொறுப்பு உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.</p><p>இன்றைக்கு காலையில் மறுசீரமைப்புக் குழுவின் வழிகாட்டு நெறிமுறைகள் தலைமைக் கழகத்தின் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும். அதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் தங்கம் தென்னரசு அவர்களிடம் கேளுங்கள்.</p><p>கொள்கை அற்ற, கட்டமைப்பு அற்ற கட்சிகள் வரும் – போகும். மின்மினிப் பூச்சிகள் நிரந்தரம் கிடையாது; சூரியன்தான் நிரந்தரம்! நிலைத்து நிற்கும்!</p><p>கட்டமைப்பைப் பலப்படுத்தி, கொள்கைப் பயணத்தைத் தொடர்வோம்! இன்று நாம் செய்யும் பணிகள் நாளை வரலாறாய் நிலைத்து நிற்கும்!</p><p>கழகத்தை மறுசீரமைப்போம்!</p><p>மீண்டு வருவோம்! மீண்டும் வெல்வோம்!</p><p>நன்றி! வணக்கம்!” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>எங்களை தற்குறி என்றனர், தற்குறி இப்போது அம்புக்குறியாக மாறி தீய சக்தியை அழித்துள்ளது-அமைச்சர் ஸ்ரீநாத்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/they-called-us-target-now-arrow-destroys-evil-forces-minister-srinath</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/they-called-us-target-now-arrow-destroys-evil-forces-minister-srinath#comments</comments><guid isPermaLink="false">5f8e9512-0c76-45bd-acfa-62494c2ede6a</guid><pubDate>Wed, 02 Sep 2026 13:40:56 +0000</pubDate><atom:updated>2026-09-02T13:40:56.774Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,assembly,சட்டசபை கூட்டத்தொடர்,TNAssembly,Minister Srinath,அமைச்சர் ஸ்ரீநாத்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/wg867gfy/sri.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Srinath]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/wg867gfy/sri.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாநில எல்லைப் பகிர்வு தொடர்பான இந்தச் சிக்கலில் உடனடியாகத் தலையிட்டு, ஆந்திர அரசோடு பேசி விசைப் படகுகளையும் மீனவர்களையும் பாதுகாப்பாக மீட்க மூத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் உரையாற்றிய  அமைச்சர் ஸ்ரீநாத், தமிழகக் கடலோரப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்தச் சூழலில், அண்மையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களின் மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மத்திய அரசுக்கு அவசரக் கடிதம் எழுதியுள்ளார். </p><p>சர்வதேச கடல் எல்லைக் கட்டுப்பாட்டை மீறியதாகக் கூறி மீனவர்கள் மீது விதிக்கப்படும் கடுமையான தண்டனைகள் அவர்களின் வாழ்வாதாரத்தை முடக்குவதாகவும், இதற்கு நிரந்தர தூதரகத் தீர்வை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் காண வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2> 8 வி<strong>சைப் படகுகள்</strong> மீட்பு முயற்சி</h2><p>இலங்கை எல்லைப் பிரச்சனை ஒருபுறம் இருக்க, ஆந்திர மாநில எல்லைப் பகுதிக்கு உட்பட்ட கடல் பகுதியில் மீன்பிடித்ததாகக் கூறி, தமிழகத்தைச் சேர்ந்த 8 விசைப் படகுகளையும் அதில் இருந்த மீனவர்களையும் ஆந்திரக் கடலோரக் காவல் படையினர் அண்மையில் சிறைபிடித்துள்ளனர். மாநில எல்லைப் பகிர்வு தொடர்பான இந்தச் சிக்கலில் உடனடியாகத் தலையிட்டு, ஆந்திர அரசோடு பேசி விசைப் படகுகளையும் மீனவர்களையும் பாதுகாப்பாக மீட்க மூத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><h2>"தற்குறி இப்<strong>போது அம்புக்குறியா</strong>க மாறியுள்ளது"</h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/premalatha-vijayakanth-says-if-ministers-also-accompany-us-to-the-constituencies-they-will-clearly-understand-the-peoples-issues">சட்டப்பேரவை </a>விவாதத்தின் போது எதிர்த்தரப்பினர் மற்றும் அரசியல் விமர்சகர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் ஸ்ரீநாத், அரசியல் களத்தில் தங்களை அற்பமாகப் பேசியவர்களுக்கும் விமர்சித்தவர்களுக்கும் காட்டமான பதிலடியைக் கொடுத்தார். "எங்களை தற்குறி என்று சிலர் கேலி செய்து எள்ளி நகையாடினார்கள். ஆனால், அந்தத் தற்குறி தான் இப்போது கூர்மையான அம்புக்குறியாக மாறி, மக்கள் விரோத மற்றும் தீய சக்திகளை அழித்து வீழ்த்தியுள்ளது," என்று பேரவையில் ஆவேசமாகத் தெரிவித்தார்.</p><h2>ஊழல் சக்திகளுக்<strong>கு எதிரான</strong> எச்சரிக்கை</h2><p>தொடர்ந்து உரையாற்றிய அவர், கடந்த காலங்களில் நிர்வாகச் சீர்கேட்டிலும் ஊழல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்ட தலைவர்களுக்கு இந்த ஆட்சி மாற்றம் ஒரு பாடமாக அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டார். தங்களை தற்குறி எனக் விமர்சித்தவர்கள், தற்போது தங்களின் ஊழல் தவறுகளுக்காகப் பயந்து நடுங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எவ்வித சமரசமும் இன்றி ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என்றும் உறுதியளித்தார்.</p>]]></content:encoded></item><item><title>அயோத்தி ராமர் கோயிலின் அறக்கட்டளைக்கு சிஇஓ-வாக ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல்  ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! </title><link>https://www.maalaimalar.com/news/national/retired-air-marshal-jitendra-mishra-appointed-as-ceo-of-the-ayodhya-ram-temple-trust</link><comments>https://www.maalaimalar.com/news/national/retired-air-marshal-jitendra-mishra-appointed-as-ceo-of-the-ayodhya-ram-temple-trust#comments</comments><guid isPermaLink="false">d9a779de-6e1e-441a-bc16-8790b894b94b</guid><pubDate>Wed, 02 Sep 2026 13:34:44 +0000</pubDate><atom:updated>2026-09-02T13:34:44.901Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>CEO,Ram temple trust,Jeetendra Mishra,ராமர் கோயில் அறக்கட்டளை,தலைமைச் செயல் அதிகாரி,ஜிதேந்திர மிஸ்ரா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/du58lc8r/New-Project-2026-09-02T190425.432.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அயோத்தி ராமர் கோயிலின் அறக்கட்டளைக்கு சிஇஓ-வாக ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல்  ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/du58lc8r/New-Project-2026-09-02T190425.432.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையின்  (ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை) முதல் தலைமைச் செயல் அதிகாரியாக ஜிதேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். அயோத்தியில் நடைபெற்ற அறக்கட்டளைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. </p><p>இப்பதவிக்காக பெறப்பட்ட 5,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைப் பரிசீலித்து, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பிரமோத் கோஹ்லி தலைமையிலான 3 பேர் கொண்ட தேர்வுக்குழு இறுதியாக இவரை தேர்வு செய்துள்ளது.</p><p>ஜிதேந்திர மிஸ்ரா இந்திய விமானப்படையில் ஏர் மார்ஷலாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். </p><p>சமீபத்தில் கோயில் உண்டியல் காணிக்கை மற்றும் நிதி நிர்வாகத்தில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, நிர்வாக வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க இந்த சிஇஓ பதவி உருவாக்கப்பட்டுள்ளது. </p><p>புதிய சிஇஓ கோயிலின் ஒட்டுமொத்த நிர்வாகம், பக்தர்களுக்கான வசதிகள், கூட்ட நெரிசல் மேலாண்மை, பணியாளர்கள் மற்றும் நிதிச் செயல்பாடுகளைக் கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்மீக மற்றும் மத சடங்குகளில் அவர் தலையிட மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>மேலும் அறக்கட்டளையின் இடைக்காலப் பொதுச் செயலாளர் கிருஷ்ண மோகனுக்குப் பதிலாக, தற்போது அதன் பொருளாளராக இருக்கும் கோவிந்த் தேவ் கிரி, பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மகேஷ் பக்சந்த்கா புதிய பொருளாளராக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>எதற்கு இந்த திடீர் நியமனம்?</h2><p>ராமர் கோயில் அறக்கட்டளையின் நன்கொடை கையாடல் தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து அதன் நிர்வாக பொறுப்புகளை கவனிக்க இந்த பொறுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இதுவரை எட்டுபேர் கைது செய்யப்பட்டுள்ளநிலையில், பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சம்பத் ராய் ராஜினாமா செய்துள்ளார்.</p><p>மேலும் இரண்டு அறங்காவலர்களும் தங்களது பணியை ராஜினாமா செய்துள்ளனர்.</p><p>இந்நிலையில் அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ், சுவாமி கமல்நாயன் தாஸ், தற்காலிக பொதுச் செயலாளர் டாக்டர் கிருஷ்ண மோகன், அறங்காவலர் மஹந்த் தினேந்திர தாஸ், பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி உள்ளிட்டோர் கலந்து ஒரு கூட்டத்தைக் கூட்டி இந்த சிஇஓ பதவியை கொண்டு வந்துள்ளனர். </p><h2>யார் இந்த மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா?</h2><p>உத்தரப் பிரதேசத்தின் தியோரியாவைச் சேர்ந்த மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா பல்வேறு விருதுகளைப் பெற்ற ஒரு ஓய்வுபெற்ற இந்திய விமானப்படை அதிகாரி ஆவார். 38 ஆண்டுகளாக விமானப்படை பிரிவில் பணியாற்றியுள்ளார்.</p><p>இவர்தான் ஆபரேஷன் சிந்துர் நடவடிக்கையின் போது இந்தியாவின் மேற்கு விமானப் படைப் பிரிவுக்குத் தலைமை தாங்கினார். </p>]]></content:encoded></item><item><title>தங்கக் கொள்முதல் மற்றும் வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்க பிரதமர் மோடி வலியுறுத்துவது ஏன்? சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விளக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/modis-call-to-cut-gold-buying-and-overseas-trips-sridhar-vembu-on-the-economic-reasons</link><comments>https://www.maalaimalar.com/news/national/modis-call-to-cut-gold-buying-and-overseas-trips-sridhar-vembu-on-the-economic-reasons#comments</comments><guid isPermaLink="false">173fdaa3-deef-4963-9a94-1bb1995e1d19</guid><pubDate>Wed, 02 Sep 2026 12:36:57 +0000</pubDate><atom:updated>2026-09-02T12:36:57.250Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா,Prime Minister Modi,Sridhar Vembu,ஸ்ரீதர் வேம்பு,ZOHO,GDP,பிரதமர் மோடி,சோஹோ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/qlj3bdmq/sri.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sridhar Vembu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/qlj3bdmq/sri.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் ஜிடிபி 7.8 சதவீத என்ற வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தாலும், நாடு தனது அந்நியச் செலாவணி கையிருப்பை எச்சரிக்கையுடன் கையாள வேண்டியது அவசியம் என்று ஸ்ரீதர் வேம்பு சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (GDP) 7.8 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையிலும், தங்கம் வாங்குவது, வெளிநாட்டுச் சுற்றுலா செல்வது மற்றும் வெளிநாடுகளில் திருமணங்களை நடத்துவது ஆகியவற்றைக் குறைத்துக் கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார். பிரதமரின் இந்த வேண்டுகோளுக்குப் பின்னணியில் உள்ள பொருளாதாரக் காரணங்கள் குறித்து 'சோஹோ' நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விரிவான விளக்கம் அளித்துள்ளார்.</p><p>இந்தியாவின் ஜிடிபி 7.8 சதவீத என்ற வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தாலும், நாடு தனது அந்நியச் செலாவணி கையிருப்பை எச்சரிக்கையுடன் கையாள வேண்டியது அவசியம் என்று <a href="https://www.maalaimalar.com/news/national/tech-professionals-must-learn-sales-to-succeed-sridhar-vembu">ஸ்ரீதர் வேம்பு</a> சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு நாட்டின் பொருளாதாரம் வேகமடையும் போது, இறக்குமதிக்கான தேவையும் கூடவே அதிகரிக்கும். இந்தியா தற்போதும் கணிசமான அளவு எரிசக்தி மற்றும் அதிநவீன தொழில்நுட்ப சாதனங்களுக்காக பிற நாடுகளை சார்ந்துள்ளதால், அந்நியச் செலாவணியைப் பாதுகாப்பது நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மிக முக்கியமானது என அவர் தெரிவித்துள்ளார்.</p><p>ஜப்பான், தென்கொரியா, தைவான் மற்றும் சீனா ஆகிய கிழக்காசிய நாடுகள் தங்களது அதிவேக வளர்ச்சிக் கட்டத்தில் இருந்தபோது, இதேபோன்று அந்நியச் செலாவணியைச் சேமிப்பதில் மிகக் கடுமையாகச் செயல்பட்டதாக ஸ்ரீதர் வேம்பு நினைவு கூர்ந்துள்ளார். இந்தியாவின் ஏற்றுமதி கணிசமாக உயர்ந்து வந்தாலும், அந்த ஏற்றுமதிப் பொருட்களின் தயாரிப்பிற்குத் தேவையான அதிநவீன இயந்திரங்கள், சிபியு , ஜிபியு மற்றும் மென்பொருட்களை இந்தியா இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. எனவே தங்கம் வாங்குதல் மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் மூலமாக அந்நியச் செலாவணி வெளியேறுவதைக் கட்டுப்படுத்துவது அவசியமாகிறது.</p><h2>சுயசார்<strong>பு இலக்கு</strong></h2><p>இந்தியாவின் தற்போதைய சூழ்நிலையை வேகமாக வளர்ந்து வரும் ஒரு நிறுவனத்துடன் ஒப்பீட்டுப் பேசியுள்ளார் ஸ்ரீதர் வேம்பு. ஒரு நிறுவனம் தனது தொழில் விரிவாக்கத்திற்கு முதலைச் சேமித்து முதலீடு செய்வதைப் போல, இந்தியாவும் தன் வளர்ச்சிக்குத் தேவையான மூலதனத்தைப் பாதுகாக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் எரிசக்தி உற்பத்தியில் தன்னிறைவு பெற்று, அதிநவீன தொழில்நுட்பங்களை சொந்தமாக உருவாக்கும் வரை இந்த அந்நியச் செலாவணி பாதுகாப்பு முறை அவசியமானது என்றும், அதற்குச் சில தசாப்தங்கள் ஆகலாம் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கியச் செய்திகள் - 2 செப். 2026 </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-2-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-2-september-2026#comments</comments><guid isPermaLink="false">83338c15-7a2e-4b27-825a-a67aff274e36</guid><pubDate>Wed, 02 Sep 2026 03:53:36 +0000</pubDate><atom:updated>2026-09-02T12:35:29.985Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/ubfkhzxf/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/ubfkhzxf/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய்யின் சாதனைகளை ஆந்திரா, கேரளா, கர்நாடகா மட்டுமல்ல, அனைத்து வடமாநிலங்களும் கூர்ந்து கவனித்து வருகின்றனர். தளபதி விஜய் போல, நமக்கும் ஒரு முதல்வர் அமையமாட்டாரா என அனைவரும் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்- பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி.</p><h2>பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி </h2><p>சினிமா படங்களை தான் பிறமொழிகளில் டப்பிங் செய்து மக்கள் பார்த்து ரசிப்பதை கண்டிருக்கிறேன். ஆனால் எங்கள் தலைவரின் சட்டமன்ற உரையையும், பொதுகூட்ட பேச்சையும் டப்பிங் செய்து பிறமொழி பேசும் வேற்று மாநிலத்தினரும் கேட்கின்றனர்.</p><p>நான் தடுமாறிக்கொண்டிருந்தபோது, எனது அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டதா என்று நினைத்தபோது, என்னைத் தூக்கிப்பிடித்து வருவாய்த் துறை அமைச்சராக்கி அழகு பார்த்தவர் இன்றைய முதலமைச்சர்- அதிமுக எம்.எல்.ஏ ராகேஷின் பேச்சுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில்.</p><h2>சங்கராபுரம் அதிமுக எம்எல்ஏ ராகேஷ்</h2><p>அதிமுகவும் தவெகவும் ஒன்று என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். ஒரு தலைவர் கொண்டு வரும் திட்டம், அடுத்த 50 ஆண்டுகளுக்குப் பேசப்பட வேண்டும். அதை எங்கள் தலைவர் செய்துள்ளார். </p><p>இன்று உங்களுக்குக் கிடைத்திருக்கும் வருவாய்த் துறை அமைச்சர், சபாநாயகர் எல்லாமே நாங்கள் கொடுத்ததுதான். தமிழகத்தில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக அதிமுக விளங்கி வருகிறது.</p><h2>அமைச்சர் நிர்மல் குமார்</h2><p>கலைஞர் தன் வழக்குக்காக கண்ணை மூடிக்கொண்டு கச்சத்தீவை தாரை வார்த்தார். கைவிட்டுப் போன பிறகு தீர்மானம் போட்டு என்ன பயன்?</p><p>உண்மையை சொன்னால் திமுகவினருக்கு கோபம் வருகிறது, Reels போடுவதற்காக பேசுகிறோம் என்கிறார்கள். மக்களுக்கு செய்த துரோகத்தைதான் சொல்கிறோம்.</p><h2>முன்னாள் அமைச்சர் கோவி.செழியன்</h2><p>எங்கள் உறுப்பினர் படகு பிரச்சினையைப் பற்றித்தான் பேசினார். ஆனால், நீர்வளத்துறை அமைச்சர் கச்சத்தீவு என்று Open செய்தார். அவர் Open செய்துவிட்டு சிரித்துக்கொண்டிருந்த காட்சியும் தெரியும். சட்டத்துறை அமைச்சரும் நீண்ட நேரம் இதுகுறித்து விளக்கமளித்தார்.</p><p>விவாதம் முறையாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, அதைத் திசைதிருப்ப வேண்டும் என்றால், ஒரு தலைப்புச் செய்தியைச் சொல்ல வேண்டும். அது குறித்து சட்டத்துறை அமைச்சர் கருத்து சொல்ல வேண்டும். நாங்கள் எழுந்து அதற்கு எதிர்வினையாற்ற வேண்டும். </p><p>பின்னர், அந்தக் காட்சியைப் புகைப்படம் எடுத்து, வெளியில் அவர்கள் அமைதியாகப் பேசுவது போலவும், திமுக உறுப்பினர்கள் கொந்தளிப்பது போலவும் ஒரு Reels வெளியிடுவதற்காகத்தான் கச்சத்தீவு பிரச்சினையைப் பயன்படுத்துகிறார்கள்</p><p>எங்கள் பகுதியை மட்டும் காட்டாமல், ஆளுங்கட்சியினரையும் காட்டினால்தான் அவர்களின் செயல் என்ன என்பது வெளியே புரியும்.</p> <h2>காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் தாரகை கத்பர்ட்</h2><p>கச்சத்தீவு 285 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம். அதை கொடுத்துவிட்டு 25 லட்சம் ஏக்கர் கொண்ட வாட்ஜ் பேங்க் (Wadge Bank) வாங்கினோம். அதனால் எவ்வளவு வளம் கிடைக்கிறது? முதல் ஒப்பந்தத்தை மட்டும் பேசுகிறார்கள், இரண்டாவது ஒப்பந்தத்தை பற்றி ஏன் பேசுவதில்லை?</p><p>கச்சத்தீவை கொடுத்ததே திமுக தான் என அமைச்சர் என்.ஆனந்த் கூறு. திமுகவினர் ஆக்ரோஷமாக அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் பின் நடந்த உரையாடல்</p><h2>திமுக கொறடா எ.வ.வேலு</h2><p>கச்சத்தீவு குறித்து இந்த சபையில் பலமுறை விவாதித்துவிட்டோம். காங்கிரஸ் கட்சியின் பிரதமர் இந்திராகாந்தி தான் கச்சத்தீவை வழங்கினார்.</p><h2>அமைச்சர் நிர்மல்குமார்</h2><p>கச்சத்தீவை தாரை வார்க்க அன்றைய மத்திய அரசு முடிவு செய்த போது, அன்று இருந்த மாநில அரசு என்ன செய்தது? கருணாநிதியிடம் ஆலோசனை செய்த பிறகு தான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. வழக்கை காட்டி மிரட்டி தான், அவர்களை ஒப்புக் கொள்ள வைத்தனர்.</p><h2>நாமக்கல் தவெக எம்எல்ஏ திலீப் </h2><p>Work like a horse, live like a hermit ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதாவது புரவி(குதிரை) போல வேலை செய்ய வேண்டும், துறவி போல வாழ வேண்டும் என்று சொல்வார்கள். புரவி போல தமிழக மக்களுக்காக உழைக்கிறார், அவரது வாழ்க்கையில் துறவி போல எளிமையாக இருக்கிறார்.</p><h2>நாமக்கல் தவெக எம்எல்ஏ திலீப்</h2><p>நல்லவர்களை காப்பாற்றவும், தீயோரை ஒதுக்கி தர்மத்தை நிலைநாட்ட அவ்வப்போது தோன்றுவேன் என கண்ணபிரான் சொன்னது போல, தமிழகத்தின் அவதார புருஷனாக அவதரித்து, கடந்தகால ஆட்சியை அகற்றியுள்ளார் முதலமைச்சர் விஜய்.</p><p>பாமக சட்டமன்ற குழுத் தலைவர் சௌமியா அன்புமணிக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்ததற்கு நன்றி," என பாமக எம்எல்ஏ சிவக்குமார் பேச, குறுக்கிட்டு எழுந்த சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா, "நடிகர் கமல் தலைமை ஏற்று நடத்தும் கட்சி மக்கள் நீதி மய்யம், நான் தலைமை தாங்கும் கட்சியின் பெயர் மனிதநேய மக்கள் கட்சி என்பதை கூறிக்கொள்கிறேன்" என தெரிவித்தார். இதை கேட்டு, பாமகவினர் உள்ளிட்ட அனைவரும் சிரித்தனர்.</p><h2>அமைச்சர் ஸ்ரீநாத்</h2><p>மீன்வளக் கூட்டுறவுச் சங்கங்கள் தங்களுக்குப் பொருத்தமான வணிக நடவடிக்கைகளை மேற்கொண்டு, சொந்த வருவாயை ஈட்டும் வகையில் வலுப்படுத்தப்படும்.</p><p>20,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பயனடையும் வகையில், 18 மீன்வளக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு ஆதரவளிக்கப்படும்.</p><p>TAFCOFED வாயிலாக 55 மீன்வளக் கூட்டுறவுச் கூட்டுறவுச் சங்கங்கள் ‘மீன் வளர்ப்போர் மற்றும் உற்பத்தியாளர் அமைப்புகளாக (FFPOS) வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளன. </p><p>தமிழ்நாட்டின் 50 கடலோர கிராமங்களுக்கு உட்பட்ட பொருத்தமான கடற்பகுதியில் செயற்கை மீன் உறைவிடங்கள் அமைக்கப்படும்.</p><p>மீன் பிடிக்க கடலுக்குச்சென்ற காணாமல் போகும் மீனவர் குடும்பத்திற்கு வழங்கும் உதவித்தொகை உயர்த்தப்படும்.</p><p>கிருஷ்ணகிரி அரசு மீன் பண்ணைகளில் ரூ.24 லட்சத்தில் மீன் விரலிகள் உற்பத்திப்பிரிவு நிறுவப்படும் - அமைச்சர் ஸ்ரீநாத்</p><p>திருவொற்றியூர் மீன்பிடித் துறைமுகத்தில் அதிநவீன மீன் சந்தை அமைக்கப்படும் - அமைச்சர் ஸ்ரீநாத்</p><p>திருச்சியில் ரூ.34 கோடியில் இறைச்சி பதப்படுத்தும் ஆலை அமைக்கப்படும் - அமைச்சர் கமலி</p><p>பருத்தி பயிர் பாதிப்பு குறித்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கு நாகை எம்எல்ஏ ஜவாஹிருல்லா கவன ஈர்ப்பு தீர்மானம்</p><p>தவெக அரசின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளும் வாபஸ் பெறப்படுமா? - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</p><p>வழக்குகள் வாபஸ் என்பது இதுதான் முதல்முறை என அமைச்சர் கூறியது தவறு. 5,000-க்கும் மேற்பட்ட போராட்டம் சார்ந்த வழக்குகளை ஸ்டாலின் வாபஸ் பெற்றார் - உதயநிதி </p><p>முந்தைய ஆட்சி என்று கூறாமல் வேறு எப்படி கூற முடியும்? - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>முதலமைச்சரின் அறிவிப்பை திமுகவும் வரவேற்கும் - சபாநாயகர்</p><p>முந்தைய ஆட்சியில் வழக்குகள் போடப்பட்டாதா? இல்லை? - சபாநாயகர்</p><p>திமுக ஆட்சியிலும் வழக்குகள் வாபஸ் என்பதற்கு வன்னிஅரசு சாட்சி - எ.வ.வேலு</p><p>முந்தைய அரசு என கூறினால் விவாதம் எழத்தான் செய்யும்  - எ.வ.வேலு</p><p>போராட்டத்தை ஒடுக்குவதற்கு திமுக ஆட்சியில் வழக்குகள் பதிவு - நிர்மல்குமார்</p><p>வரலாற்று சிறப்புமிக்க முதல்வரின் அறிவிப்புக்கு நன்றி.</p><p>முதல்வர் பரந்த உள்ளத்துடன் விவசாயிகள் பக்கம் நின்று அவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற்றுள்ளார்.</p><p>அரசு கூறும்போது நீதிமன்றம் நிச்சயம் விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</p><p>110 விதிகளின் கீழ் முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில் எந்த விதிமீறலும் இல்லை - சபாநாயர் விளக்கம்</p><p>110 விதியின் கீழ் அறிவிப்புகளை மட்டும் தான் முதலமைச்சர் வெளியிட முடியும், வழக்குகளை வாபஸ் பெறும் அறிவிப்பை எப்படி வெளியிடலாம்.</p><p>110 விதியின் கீழ் பேசும் முதல்வர் முந்தைய ஆட்சி குறித்த  தவறான கருத்துகளை எப்படி தெரிவிக்கலாம்?</p><p>ஒரு திட்டத்திற்காக நிலம் எடுக்கும்போது போராட்டங்கள் நடக்கும், நீங்கள் செய்தாலும் அதுதான் நடக்கும்.</p><p>சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க நீதியை நிலைநாட்டத்தான் போராட்டக்காரர்கள் மீது வழக்கு பதியப்பட்டது  - எ.வ.வேலு</p><p>அரசியல் வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்</p><p>நீட் போராட்ட வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட்</p><p>அறிவிப்புகளை வரவேற்க ராமச்சந்திரன் நீட் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான வழக்குகளையும் ரத்து செய்ய கோரிக்கை</p><p>ஒட்டுமொத்த ஆசிரியர்கள், அவர்கள் குடும்பத்தினர் சார்பிலும் முதல்வருக்கு நன்றி கூறுகிறேன் - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>சென்னை கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூரில் ரூ.236 கோடியில் குடிநீர் ஆதாரங்கள் மேம்படுத்தப்படும்.</p><p>கடலூரில் ரூ.8 கோடியில் பாரம்பரிய நடைபாதை அமைக்கப்படும்.</p><p>கன்னியாகுமரி கடற்கரை பகுதியை அழகுப்படுத்த ரூ.50 கோடி ஒதுக்கப்படும்.</p><p>ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவு சான்று பெற ஏற்படும் காலதாமதத்தை தடுக்க டிஜிட்டல் முறையில் வழங்கப்படும்.</p><p>லைசென்ஸ் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும், பயனாளர்கள் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.</p><p>டிஜிட்டல் முறையில் டிரைவிங் லைசென்ஸ், பதிவுச்சான்று வழங்குவதால் தொலைந்து போனாலும் பதிவிறக்கம் செய்யலாம்.</p><p>விவசாயிகள், ஆசிரியர்கள் மீது திமுக ஆட்சியில் பதியப்பட்ட வழக்குகள் ரத்து.</p><p>திருவண்ணாமலை மேல்மா சிப்காட் போராட்ட வழக்குகளும் ரத்து - முதலமைச்சர் விஜய்</p> <p>பள்ளிகளை சுற்றியுள்ள சாலையில் மாணவ, மாணவிகள் நடந்து செல்ல பிரத்யேக நடைபாதை உருவாக்கப்படும்.</p><p>மாநிலம் முழுவதும் ரூ.305 கோடி செலவில் பூங்காக்கள் அமைக்கப்படும்.</p><p>ரூ.335 கோடி செலவில் அரசு பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.</p><p>மதுரை மாநகராட்சியில் 40 ஆண்டுகள் பழமையான பாதாள சாக்கடை திட்டம் ரூ.2,400 கோடியில் மேற்கொள்ளப்படும்.</p><p>நாகர்கோவிலில் ரூ.960 கோடியில் புதிய பாதாள சாக்கடை திட்டம் மேற்கொள்ளப்படும் - முதலமைச்சர் விஜய்</p> <p>சென்னை கீழ்ப்பாக்கத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய திறன் அதிகரிக்கும் திட்டம் ரூ.410 கோடியில் செயல்படுத்தப்படும்.</p><p>சென்னை உட்பட அனைத்து நகரப்பகுதிகளின் சாலைகளும் ரூ.1,850 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும் - முதலமைச்சர் விஜய்</p><p>நாகர்கோவில் மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் புதிய பாதாள சாக்கடை திட்டங்கள் செயல்படுத்தப்படும்.</p><p>ஆவடி நகராட்சியில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் வகையில் ரூ.500 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் - முதலமைச்சர் விஜய்</p> <p>மீஞ்சூரில் ரூ.4,800 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.</p><p>பழமையான 33 குடிநீர் திட்டங்கள் சீரமைக்கப்படும் - முதலமைச்சர் விஜய்</p> <p>சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்புகளை வெளியிட்டார்.</p> <p>பணி நிரந்தரம், ஊதிய உயர்வு கோரிக்கையில் நிர்வாக சிக்கல் மட்டுமின்றி நிதி சிக்கலும் உள்ளது - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>தூய்மைப் பணியாளர்களை சந்தித்து முதலமைச்சர் பேசுவாரா? என தெளிவுபடுத்த வேண்டும்.</p><p>பணி நிரந்தரம் தொடர்பான தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் 15 நாட்களை எட்டியுள்ளது - உதயநிதி ஸ்டாலின்</p><p>மணக்குடி கிராமத்தில் படகு சவாரி செய்ய தனியார் நிறுவனத்திற்கு இதுவரை எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை.</p><p>அனுமதியில்லாமல் படகு சவாரி, சாகச சுற்றுலா மேற்கொள்ளப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ராஜேஷ்</p><p>வணிக ரீதியில் சாகச சுற்றுலா செய்யும் முன்பு சுற்றுலாத்துறையிடம் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும் - அமைச்சர் ராஜேஷ்</p><p>ஆட்கொல்லி புலியை தேடிக்கொண்டிருக்கிறோம் - அமைச்சர் ரஞ்சித் குமார் </p> <p>உதகை அருகே இருவரை கொன்று தின்ற புலியை பிடிக்க வேண்டும் - போஜராஜன்</p> <p>வனவிலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப்பன்றிகளை நீக்க இயலாது - செங்கோட்டையன்</p> <p>மத்திய அரசிடம் வலியுறுத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்கப்படும் - அமைச்சர் ரஞ்சித்குமார்</p><p>வனவிலங்கு பட்டியலில் இருந்து காட்டுப்பன்றியை நீக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் - ராஜேந்திரன்</p><p>காட்டுப்பன்றியை விவசாயிகள் சுட்டுக்கொல்வதாக அமைச்சர் பேரவையில் கூறுவது சரியல்ல. </p><p>பாதுகாக்கப்பட்ட வனவிலங்கான காட்டுப்பன்றியை சுட்டுக்கொல்வதாக கூறுவது அரசின் மீதான நல்லெண்ணத்தை கெடுக்கும் - தங்கம் தென்னரசு</p><p>காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொன்று சிக்கன்போல் விவசாயிகள் சாப்பிடுகிறார்கள், அதை நாம் கண்டுகொள்வதில்லை - அமைச்சர் ரஞ்சித் குமார் </p><p>காட்டுப்பன்றிகளை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் - தளி ராமச்சந்திரன்</p><p>தஞ்சை பெரிய கோவிலில் அன்னதானம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் - எம்எல்ஏ தஞ்சை சரவணன் கேள்விக்கு அமைச்சர் ரமேஷ் பதில்</p> <p>தஞ்சை பெருவுடையார் கோவிலில் தினந்தோறும் அன்னதானம் வழங்க தனியாரையும் அனுமதிக்க வேண்டும் - தஞ்சை சரவணன்</p> <p>அனைத்து கோவில்களையும் ஆய்வு செய்வதற்கு தயார். கோவில்களில் அன்னதான சேவையை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ரமேஷ்</p><p>விருத்தாச்சலத்தை கோவில் நகரமாக அறிவிக்க வேண்டும். அமைச்சர்கள் எங்களுடன் சேர்ந்து தொகுதிக்கு வந்து ஆய்வு செய்ய வேண்டும் - பிரேமலதா</p><p>திருத்தணி முருகன் கோவிலில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை தேவை. </p><p>செவ்வாய் கிழமை தோறும் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை தேவை - எம்எல்ஏ ஹரி கோரிக்கை</p><p>இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த கோரிக்கைகள் - அமைச்சர் ரமேஷ் பதில்</p><p>சொந்த காரணங்களால் சிலர் பணம் வாங்கிக்கொண்டு செயல்படுகிறார்கள். இன்னும் 6 மாதங்களில் பிரச்சனை சரி செய்யப்படும் - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்</p><p>கொரடாச்சேரி பகுதியில் ஒருநாளைக்கு 10 முறை பவர் கட் ஆகிறது - எம்எல்ஏ பூண்டி கலைவாணன் குற்றச்சாட்டு</p><p>சென்னையில் புதிதாக 6 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>15 நிமிடங்களில் மின் வெட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆண்டில் 6,000 டிரான்ஸ்ஃபார்மர்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>குறை மின்னழுத்தப் பிரச்சனை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் நிர்மல்குமார்</p> <p>பத்மநாபபுரம் - மலைக்கிராமங்களில் மின்வசதி இல்லை. துணை மின்நிலையம் அமைத்துத்தர வேண்டும் - செல்லசாமி</p><p>மதுரையில் 6 புதிய துணை மின் நிலையங்களுக்கான பணிகள் நடைபெறுகிறது - அமைச்சர் நிர்மல்குமார்</p> <p>திருத்துறைப்பூண்டியில் 110KV துணை மின்நிலையம் தேவை - எம்எல்ஏ மாரிமுத்து கோரிக்கை</p><p>குறை மின்னழுத்தப் பிரச்சனை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>சென்னையில் தாழ்வாக உள்ள மின்பெட்டிகளை உயர்த்தி வைக்க நடவடிக்கை - அமைச்சர் நிர்மல்குமார்</p> <p>மின்சாரத்துறை தொடர்பாக எம்எல்ஏக்கள் கோரிக்கை - அமைச்சர் நிர்மல்குமார் பதில்</p> <p>நேரடி கொள்முதல் நிலையங்கள் - உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் பதில் அளித்து வருகிறார்</p><p>ஆன்மிகமும் எங்கள் இதயங்களில் இருக்கிறது - ஓ.பன்னீர்செல்வம்</p> <p>எங்களுடைய சட்டசபை உறுப்பினர் கேட்டது உண்மையில் ஜலதோஷம் பற்றி தான் - உதயநிதி</p> <p>பெரியார் இயக்கம் பற்றி பேசிய திமுக தோஷத்தை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் பெரியார் வழி வந்தவர்கள். அறிவியல் பூர்வமாக இந்த பிரச்சனையை அணுகக்கூடியவர்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</p><p>தவெக அரசு அறிவியல் பூர்வமான ஒரு அரசை தான் மேற்கொண்டுள்ளது. தோஷம், பில்லி, சூனியம் அதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. உறுப்பினருக்கு நம்பிக்கை இருந்தால் அதை செய்து கொள்ளலாம். </p><p>ஜலதோஷம் தான் அதிகம் உள்ளது. பாம்புக்கடி தோஷம் எல்லாம் கேள்விப்படவில்லை - அமைச்சர் அருண்ராஜ்</p> <p>பல்வேறு தொகுதிகளில் பாம்புக்கடி இருக்கிறது. அந்த தொகுதிகளில் எல்லாம் தோஷம் உள்ளது. அமைச்சர் நாக தோஷம் கழிப்பதற்கு ஏதாவது பிரார்த்தனை இருந்தால் அதை செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்</p> <p>அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலி பணியிடம் நிரப்பப்படும் - அக்ரி கிருஷ்ணமூர்த்தி கேள்விக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்</p><p>விரைவில் சங்கரன்கோவில் மருத்துவமனை மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படும் - அமைச்சர் அருண்ராஜ்</p><p>சங்கரன்கோவில் மருத்துவமனை புதிய கட்டடத்தை விரைவில் திறந்து வைக்க வேண்டும் - திலீபன் ஜெயசங்கரன்</p><p>விழுப்புரத்தில் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையம் அமைய உள்ளது - அமைச்சர் அருண்ராஜ்</p><p>விழுப்புரத்தில் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையம் அமைய உள்ளது - அமைச்சர் அருண்ராஜ்</p><p>முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரியில் சுற்றுச்சுவர், ஆடிட்டோரியம் ஏசி வசதி, உள் விளையாட்டு அரங்கம் தேவை - சிவக்குமார்</p><p>முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு பட்ஜெட்டில் ஏராளமான அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. </p><p>முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி ஆடிட்டோரியத்திற்கு ஏசி வசதி அமைக்க நடவடிக்கை - அமைச்சர் அருண்ராஜ்</p> <p>தேவை இருப்பின் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் அருண்ராஜ்</p><p>வள்ளியூர் மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். </p><p>ராதாபுரம் தொகுதியில் உள்ள மருத்துவமனையில் மருத்துவ வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் - சதீஷ் கிறிஸ்டோபர்</p><p>ஆம்பூர் மருத்துவமனை பிரசவங்களின் எண்ணிக்கையை ஆய்வு செய்து மகப்பேறு மைய வசதி ஏற்படுத்தப்படும் - அமைச்சர் அருண்ராஜ்</p><p>பண்ருட்டி மருத்துவமனையில் சிடி ஸ்கேன் வசதி தேவை ஏற்படும் பட்சத்தில் ஏற்படுத்தப்படும்.</p><p>பண்ருட்டி மருத்துவமனைக்கு 2 ஃப்ரீசர் பாக்ஸ் வசதி ஏற்படுத்தி தரப்படும் - அமைச்சர் அருண்ராஜ்</p><p>கடலூர் GH கொண்டு செல்லும் வழியில் உயிரிழப்புகள் நிகழ்கின்றன.</p><p>பண்ருட்டி மருத்துவமனையில் சிடி ஸ்கேன் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் - எம்எல்ஏ மோகன்</p> <p>ஏப்ரல் 2026 முதல் ஜூலை 2026 வரை 39 பேர் பாம்பு கடித்து அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர் - அமைச்சர் அருண்ராஜ்</p><p>பாம்பு கடி, விஷ முறிவு மருந்து மருத்துவமனையில் போதிய அளவில் கையிருப்பு உள்ளது - அமைச்சர் அருண்ராஜ்</p> <p>பண்ருட்டி அரசு மருத்துவமனையில் பாம்பு கடி மருந்துகள் தேவை - எம்எல்ஏ மோகன்</p><p>சட்டசபையில் இன்று வினாக்கள் விடைகள் நேரம் முடிந்ததும், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைகளின் மீதான மானியக்கோரிக்கை மீது விவாதங்கள் நடைபெறும்.</p><p>விவாதத்துக்கு பதில் அளித்து பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி, மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், கால்நடை துறை அமைச்சர் கமலி ஆகியோர், துறையின் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.</p> ]]></content:encoded></item><item><title>ஐசிசி தரவரிசை: சரிவை சந்தித்த பும்ரா, சுப்மன் கில்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/gill-bumrah-slip-in-icc-test-rankings-padikkal-moves-up</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/gill-bumrah-slip-in-icc-test-rankings-padikkal-moves-up#comments</comments><guid isPermaLink="false">2f9bc976-4d7f-4c0b-9402-40623160e658</guid><pubDate>Wed, 02 Sep 2026 12:00:14 +0000</pubDate><atom:updated>2026-09-02T12:00:14.484Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சுப்மன் கில்,Shubman Gill,ICC Rankings,ஐசிசி தரவரிசை,Jasprit Bumrah,ஜஸ்பிரித் பும்ரா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/2nnoy6fr/gill.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ gill, bumrah]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/2nnoy6fr/gill.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.</strong></em></p><p>டெஸ்ட் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.</p><h2>பின்தங்கிய கில்</h2><p>சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கை சுற்றுப்பயணத்தில் விளையாடிய 3 இன்னிங்ஸ்களில் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்த சுப்மன் கில், பேட்டிங் தரவரிசையில் இரு இடங்கள் சரிந்து 9-வது இடம் பிடித்துள்ளார்.</p><p>தரவரிசையில் ரிஷப் பண்ட் 7-வது இடத்தில் நீடிக்கிறார். </p><h2>முன்னேறிய படிக்கல்</h2><p>இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது 11-வது இடத்தை தக்கவைத்துக்கொண்டு டாப்-10 பட்டியலுக்கு மிக அருகில் உள்ளார். </p><p>இலங்கைக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 328 ரன்கள் குவித்து, இரு சதங்களை விளாசிய தேவ்தத் படிக்கல் 5  இடம் முன்னேறி 54-வது இடம் பிடித்துள்ளார்.</p><h2>பும்ரா பின்னடைவு</h2><p>பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில் இருந்த பும்ரா தற்போது மூன்றாவது இடத்திற்குச் சரிந்துள்ளார்.</p><p>ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் முதலிடத்திலும், நியூசிலாந்தின் மேட் ஹென்றி இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>ஜோர்டானில் உள்ள அமெரிக்க கடற்படை தளம் மீது ஈரான் ஏவுகணைகள் வீச்சு</title><link>https://www.maalaimalar.com/news/world/us-iran-conflict-iran-missile-strike-on-jordan-base</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-iran-conflict-iran-missile-strike-on-jordan-base#comments</comments><guid isPermaLink="false">1385a9fc-394f-4cac-b27d-b1cfb1627210</guid><pubDate>Wed, 02 Sep 2026 11:54:07 +0000</pubDate><atom:updated>2026-09-02T11:54:07.856Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஈரான்,Iran,missile attack,jordan,ஏவுகணை வீச்சு,ஜோர்டான்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/t7xum5on/jordaan.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ US Navy base]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/t7xum5on/jordaan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்கா-ஈரான் இடையேயான மத்திய கிழக்கு போரில் கடந்த ஒரு மாதமாக மோதல் நடைபெறாமல் இருந்த நிலையில் மீண்டும் இருதரப்பும் தாக்குதலில் ஈடுபட்டன. நேற்று இரவு ஈரான் மீது அமெரிக்கா சரமாரியாக தாக்குதல் நடத்தியது. </p><p>ஈரான் அரசின் 2 எண்ணெய் கப்பல்கள் உள்பட 100 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது. <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%9C%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF" rel="nofollow">ஹோர்முஸ் ஜலசந்தி</a>யில் கண்ணிவெடிகளை ஈரான் புதைக்க முயன்றதால் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்தது.</p><p>இதற்கிடையே சிரிக் நகரின் குஹெஸ்டாக் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திருமண விழா நடந்து கொண்டிருந்தபோது அங்கு அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலின் சிதறல்கள் விழுந்து தாக்கியதில், ஒரு குழந்தை உள்பட 5 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.</p><p>இதுதொடர்பாக ஈரானின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி கூறியதாவது:-</p><p>குஹெஸ்டாக் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் திருமணத்தை குடும்பங்கள் கொண்டாடிக கொண்டிருந்தபோது கொடூரமாகத் தாக்கப்பட்டது.</p><p>இந்தக் கொடூரத்தை இதற்கு முன்னர் நடந்த தொடர் அட்டூழியங்களில் இருந்து பிரிக்க முடியாது என்றார்.</p><p>அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் சூளுரைத்தது. அதன்படி ஜோர்டானின் அகபா பகுதியில் உள்ள அமெரிக்க கடற்படைத் தளத்தின் மீது ஏவுகணை களை ஈரான் ஏவி தாக்குதல் நடத்தியது.</p><p>ஈரானிடமிருந்து வந்த 13 பாலிஸ்டிக் ஏவுகணைகளில்  10 ஏவுகணைகளை வெற்றிகரமாக இடைமறித்ததாகவும் 3 ஏவுகணைகள் மக்கள் வசிக்கும் மையங்களிலிருந்து வெகு தொலைவில் விழுந்ததாகவும் ஜோர்டான் ராணுவம் தெரிவித்தது.</p><p>அதேபோல் பக்ரைன், குவைத்தில் அமெரிக்க தளங்களும் குறிவைக்கப்பட்டன. பதிலடி தாக்குதல் நடத்தினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்திருந்த நிலையில் ஈரான் தாக்குதலை நடத்தியது.</p><p>மேலும், அமெரிக்க படைகளுக்கு மறக்க முடியாத பாடங்களை கற்று கொடுப்போம் என்ற ஈரான் உச்ச தலைவர் மொஜத்பா கமெனி தெரிவித்து உள்ளார்.</p><p>இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில்," ஹோர்முஸ் ஜலசந்தியின் மீது ஏறக்குறைய முழுமையான அமெரிக்காவின் கட்டுப்பாடும், ஈரானின் பொருளாதாரம் முற்றிலுமாகச் சரிந்து கொண்டும் இருக்கும் நமது தற்போதைய நிலையை நான் மிகவும் விரும்புகிறேன்.</p><p>ஈரானிய மக்கள் எப்போது கிளர்ந்தெழுந்து போராடப் போகிறார்கள்? என்று தெரிவித்து உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டின் வரி வசூல் குறைவு... இதே நிலை தொடர்ந்தால் - டி.ஆர்.பி. ராஜா எச்சரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadus-tax-collection-is-low-if-this-trend-continuestrb-rajaa-warns</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadus-tax-collection-is-low-if-this-trend-continuestrb-rajaa-warns#comments</comments><guid isPermaLink="false">2391caef-e912-47d8-8a60-a322007abed1</guid><pubDate>Wed, 02 Sep 2026 11:32:23 +0000</pubDate><atom:updated>2026-09-02T11:32:23.536Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,டிஆர்பி ராஜா,TRB Rajaa,Government of Tamil Nadu,வரி வசூல்,Tax collection</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/061ws30n/New-Project-2026-09-02T170155.867.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாட்டின் வரி வசூல் குறைவு... இதே நிலை தொடர்ந்தால் - டி.ஆர்.பி. ராஜா எச்சரிக்கை!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/061ws30n/New-Project-2026-09-02T170155.867.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டின் வருவாய் நிலை மோசமான நிலையில் இருப்பதாக முன்னாள் திமுக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்.,</p><p>“தமிழ்நாட்டின் வருவாய் இயந்திரம் சிவப்பு எச்சரிக்கை காட்டுகிறது. இதே நிலை தொடர்ந்தால், செலவுகளைக் குறைப்பதா? மேலும் கடன் வாங்குவதா? என்ற கடினமான நிலைக்கு தமிழ்நாடு அரசு விரைவில் தள்ளப்படலாம்!</p><p>ஆகஸ்ட் மாத சரக்கு மற்றும் சேவை வரி புள்ளிவிவரங்கள் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டியவை. 2025 ஆகஸ்டில் ரூ.10,329 கோடியாக இருந்த தமிழ்நாட்டின் வரி வசூல், 2026 ஆகஸ்டில் ரூ.10,189 கோடியாகக் குறைந்துள்ளது.</p><p>அதாவது - 1% சரிவு! </p><p>ஆனால் இதே காலகட்டத்தில்:</p><p>இந்தியா +9%</p><p>கர்நாடகா +13%</p><p>குஜராத் +15%</p><p>தெலங்கானா +16%</p><p>உத்தரப் பிரதேசம் +19%</p><p>மகாராஷ்டிரா +8%</p><p>தமிழ்நாடு மட்டும் -1%!</p><p>சாதாரண மக்களுக்கு இந்த சேவை மற்றும் சரக்கு வரி எண்ணைப் பற்றி ஏன் கவலை இருக்க வேண்டும்? ஏனென்றால், தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாயில் சுமார் 38% மாநில சரக்கு மற்றும் சேவை வரி மூலமாக மட்டுமே வருகிறது !</p><p>வளர்ச்சிப் பணிகளுக்கு அதிக நிதி ஒதுக்கவேண்டும். ஆனால் அதே நேரத்தில் கடன் சுமையையும் கட்டுப்படுத்த வேண்டும். இந்தக் கணக்கு சரியாக வர வேண்டுமென்றால் அரசின் வருவாய் கட்டாயம் வளர வேண்டும்.</p><p>ஆனால் ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி காட்டுவதோ அதற்கு நேர் எதிரான -1% சரிவு!</p><h2>தமிழ்நாட்டை மட்டும் கடந்து செல்லமுடியாது</h2><p>“ஒரு மாத புள்ளிவிவரத்தை வைத்து ஒரு வருடத்திற்கான போக்கைத் தீர்மானிக்க முடியாது” என்று சிலர் சொல்லலாம். உண்மைதான். </p><p>ஆனால் இந்தியா +9% வளரும்போது, நம்மோடு போட்டியிடும் முக்கிய மாநிலங்கள் அனைத்தும் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்யும்போது, தமிழ்நாடு மட்டும் -1%-ல் இருப்பதை சாதாரணமாகக் கடந்து செல்ல முடியாது.</p><p>இது நிச்சயம் ஒரு முக்கிய எச்சரிக்கை! </p><h2>அரசு விளக்க வேண்டும்</h2><p>இந்த நிலை தொடர்ந்தால், பற்றாக்குறையாகும் பணத்தை எங்கிருந்து கொண்டு வரப் போகிறார்கள்?</p><p>மேலும் கடன் வாங்கப் போகிறார்களா? வேறு வரிகளை உயர்த்தப் போகிறார்களா?</p><p>அல்லது சாலைகள், உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கான செலவுகளைக் குறைக்கப் போகிறார்களா? வருவாய் இல்லாமல் பட்ஜெட் வெறும் காகிதக் கணக்குதான்! </p><p>இந்த -1% GST சரிவு ஒரு தொடர்கதையாக மாறுவதை தமிழ்நாடு தாங்க முடியாது! இது கட்டுப்படுத்த முடியாத சரிவாக மாறுவதற்கு முன்பாவது இன்றைய தவெக அரசு விழித்துக்கொள்ளுமா?</p><p>இந்த சரிவிக்கு என்ன காரணம் என்று அரசு தெளிவாக சொல்லவேண்டும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நேபாள வெள்ளப் பேரழிவு: பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று நிவாரணம் வழங்கி ஆறுதல் கூறிய நடிகர் சோனு சூட்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/nepal-flood-disaster-actor-sonu-sood-relief-efforts</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/nepal-flood-disaster-actor-sonu-sood-relief-efforts#comments</comments><guid isPermaLink="false">0946ab05-e6db-49dd-b0ef-82e7078d7e68</guid><pubDate>Wed, 02 Sep 2026 11:01:23 +0000</pubDate><atom:updated>2026-09-02T11:01:23.110Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>actor sonu sood,நடிகர் சோனு சூட்,nepal flood,நேபாள வெள்ளப் பேரழிவு,Nepal flood disaster,காத்மாண்டு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/odpfp7ep/sonu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Actor Sonu Sood  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/odpfp7ep/sonu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திரைத்துறையில் முன்னணி நடிகராகவும், சமூக சேவையில் நிஜ வாழ்வு நாயகனாகவும் திகழும் சோனு சூட், கடுமையான வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ள நேபாள நாட்டிற்கு நேரில் சென்று மக்களுக்கு உதவியுள்ளார். தனது <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/jailer-2-release-date-unchanged-official-announcement-from-sun-pictures">சோனு சூட்</a> அறக்கட்டளை சார்பாக நிவாரணப் பொருட்களைக் கொண்டு சென்றுள்ள அவர், வெள்ளத்தால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் நேரில் களமிறங்கியுள்ளார்.</p><p>நேபாள நாட்டின் திரிசூலி பஜார் மற்றும் அதனை சுற்றியுள்ள வெள்ள பாதிப்புக்குள்ளான பகுதிகளைச் சுற்றிப் பார்த்த சோனு சூட், அங்குள்ள மக்களைச் சந்தித்து அவர்களின் கவலைகளைக் கேட்டறிந்தார். திரிசூலி ஆற்றின் கரையில் நின்று பேசிய அவர், இந்த வெள்ளப்பெருக்கு கற்பனை செய்ய முடியாத மிகப்பெரிய இழப்பையும், உடைந்த வீடுகளையும், பாதிக்கப்பட்ட குடும்பங்களையும் விட்டுச் சென்றுள்ளதாக மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார்.</p><h2><strong>"நேபாள மக்கள் தனித்து இல்லை"</strong> </h2><p>நிவாரணப் பணிகளின் போது ஊடகங்களிடம் பேசிய சோனு சூட், நேபாள நாட்டு மக்கள் இந்த இக்கட்டான நேரத்தில் தங்களை தனிமையாக உணர வேண்டாம் என்றும், உணவு, தங்குமிடம் மற்றும் மீண்டும் தங்கள் வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்கான அனைத்து உதவிகளையும் செய்யத் தாம் உறுதியேற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார். வீடுகளையும் குடும்பங்களையும் இழந்து தவிக்கும் மக்களுக்கு புதிய விடியலை ஏற்படுத்தித் தருவதே தமது நோக்கம் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.</p><p>காத்மாண்டுவிற்குச் சென்று நிவாரணப் பொருட்களை நேரடியாக விநியோகம் செய்து வரும் சோனு சூட்டுடன் சேர்ந்து நடிகை மனிஷா கொய்ராலா, அருண் கோவில் உள்ளிட்ட பல திரை பிரபலங்களும் நேபாள மக்களுக்குத் தங்களின் ஆதரவை வழங்கி வருகின்றனர். தற்போதைய தகவல்களின்படி வெள்ளத்திற்குப் பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையின் கரமாகச் செயல்படும் சோனு சூட்டின் இந்த முயற்சிக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>புதிய பரிணாமத்தில் அர்ஜுன் தாஸ் - ரசிகர்கள் பாராட்டு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/arjun-das-romantic-turn-in-once-more-wins-audience</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/arjun-das-romantic-turn-in-once-more-wins-audience#comments</comments><guid isPermaLink="false">bfe49f4a-7b8b-4d0d-8f3e-74447d529b2c</guid><pubDate>Wed, 02 Sep 2026 11:00:41 +0000</pubDate><atom:updated>2026-09-02T11:00:41.323Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>Aditi Shankar,Arjun Das,அர்ஜுன் தாஸ்,Once More,அதிதி ஷங்கர்,ஒன்ஸ் மோர்,Vignesh Srikanth</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/exk0djo5/Arjun-Das-Aditi-Shankar" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Arjun Das - Aditi Shankar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/exk0djo5/Arjun-Das-Aditi-Shankar?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வில்லன் போன்ற கதாபாத்திரங்களில் மிரட்டிய <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அர்ஜுன் தாஸ்</a>, தற்போது 'ஒன்ஸ் மோர்' படத்தில் காதல் நாயகனாக மாறியதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.</p><h2><strong>அசத்தலான காதல் நாயகன்</strong></h2><p>'<a href="https://www.maalaimalar.com/topic/once-more">ஒன்ஸ் மோர்</a>' திரைப்படத்தில் அர்ஜுன் தாஸின் புதிய சாக்லேட் பாய் கதாபாத்திரத்தை பார்த்த நெட்டிசன்கள், 'கைதி', 'மாஸ்டர்' போன்ற படங்களில் மிரட்டலான வில்லன் கதாபாத்திரங்களில் நடித்த அவரா இப்படி கணீர் குரலை வைத்துக் கொண்டு மிகவும் க்யூட்டாகவும் மென்மையாகவும் காதல் செய்கிறார் என்று வியந்து பாராட்டி வருகின்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D">அதிதி ஷங்கருடன்</a> அவர் இணைந்து நடித்துள்ள ரொமாண்டிக் காட்சிகள் மற்றும் ஆன்-ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி மிகவும் புத்துணர்ச்சியாகவும் ரசிக்கும்படியாகவும் இருப்பதாகவும், ஆக்ஷன் ஜானரைத் தாண்டி ஒரு லவ்வர் பாயாகத் தங்களை முழுமையாகக் கவர்ந்து தனக்குள் இருக்கும் அசாத்தியமான பல்துறை நடிப்புத் திறமையை அவர் மீண்டும் நிரூபித்துவிட்டார் என்றும் சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.</p><h2><strong>ஒன்ஸ் மோர்</strong></h2><p>அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் எழுத்து மற்றும் இயக்கத்தில், மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி அன்று வெளியான ஒன்ஸ் மோர் திரைப்படம் வெளியானது.</p><p>கடந்த கால காதல் தோல்வியின் வலியால் இனி காதலே வேண்டாம் என்று ஒதுங்கி வாழும் ரகு (அர்ஜுன் தாஸ்) மற்றும் அவனது வாழ்க்கையில் நுழைந்து மீண்டும் அவனுக்குள் காதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்த முயலும் கலகலப்பான அஞ்சலி (அதிதி ஷங்கர்) ஆகிய இருவருக்கும் இடையே நடக்கும் ஒரு அழகான காதல் மற்றும் எமோஷனல் பயணமாகும்.</p><p>ஹிஷாம் அப்துல் வஹாபின் இசை மற்றும் கச்சிதமான முதல் பாதி ஆகியவை படத்திற்கு பெரும் பலமாக இருந்தாலும், இரண்டாம் பாதியின் மெதுவான திரைக்கதை சற்று தொய்வை ஏற்படுத்தினாலும், ஒட்டுமொத்தமாக உறவுகளின் முதிர்ச்சியையும் காதலுக்கு 'ஒன்ஸ் மோர்' இரண்டாவது வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதையும் அழகாகப் பேசும் ஒரு ஃபீல்-குட் ரொமாண்டிக் என்டர்டெய்னராக இப்படம் தியேட்டர்களில் வெற்றி நடை போடுகிறது.</p><h2><strong>பாக்ஸ் ஆபீஸ் வசூல்</strong></h2><p>திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் 'ஒன்ஸ் மோர்' திரைப்படம், பாக்ஸ் ஆபீஸிலும் சிறப்பான தொடக்கத்தைப் பெற்றுள்ளது. </p><p>Sacnilk வலைத்தளத்தின் தகவல்படி, இப்படம் வெளியான முதல் 3 நாட்களிலேயே ரூ.1 கோடிக்கும் அதிகமான வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>ஜாஜர் ரெயில்வே தண்டவாளம் அருகே பறவை ஆர்வலரின் கண்டுபிடிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/discovery-of-red-backed-shrike-near-jhajjar-railway-track</link><comments>https://www.maalaimalar.com/news/national/discovery-of-red-backed-shrike-near-jhajjar-railway-track#comments</comments><guid isPermaLink="false">0f3a809b-c2e7-4c07-80bc-594a61b0a324</guid><pubDate>Wed, 02 Sep 2026 10:46:16 +0000</pubDate><atom:updated>2026-09-02T10:46:16.084Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>haryana,ஹரியானா,Jhajjar Bird,ஜாஜர் பறவை,Red-backed Shrike,ரெட்-பாக்டு ஸ்ட்ரைக்,Siberian Bird,சைபீரிய பறவை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/cp8e21r6/Jhajjar-Bird" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jhajjar Bird]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/cp8e21r6/Jhajjar-Bird?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/haryana">ஹரியானா </a>ஜாஜர் ரெயில் தண்டவாளம் அருகே ராகேஷ் அஹ்லாவத் ரெட்-பாக்டு ஸ்ட்ரைக் பறவையை கண்டறிந்தார். இது சைபீரியாவிலிருந்து வழிதவறி வந்த இளம் பறவை என்று கண்டறியப்பட்டது.</p><p>ஹரியானா மாநிலம் ஜாஜர் மாவட்டத்தின் டிகல் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே, பறவை ஆர்வலரான ராகேஷ் அஹ்லாவத் என்பவர் தனது வழக்கமான பறவை கண்காணிப்பு பயணத்தின் போது ரெட்-பாக்டு ஸ்ட்ரைக் இந்த அரிய பறவையைக் கண்டறிந்துள்ளார்.</p><p>அங்குள்ள ஒரு புதரின் மீது அமர்ந்திருந்த இந்த பறவையின் தனித்துவமான தோற்றம் அவரை உடனடியாகக் கவர்ந்தது.</p><h2>வித்தியாசமான பறவை</h2><p>இதுகுறித்து ராகேஷ் அஹ்லாவத் கூறுகையில், "பொதுவாக நமது பகுதியில் நாம் காணும் ஸ்ட்ரைக் பறவைகள் நீண்ட வாலையும், பழுப்பு நிற முதுகையும் கொண்டிருக்கும். </p><p>ஆனால், ரெட்-பாக்டு ஸ்ட்ரைக்  பறவை முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. இதன் மேல் பகுதி பழுப்பு நிறத்திலும், கீழ் பகுதி வெளிறிய நிறத்திலும், உடல் முழுவதும் செதில் போன்ற கருமையான அமைப்புகளையும் கொண்டிருந்தது." என்றார். </p><p>மேலும், இந்தப் பறவை தனது வாலை அடிக்கடி விரித்து மேல்நோக்கியும் கீழ்நோக்கியும் அசைத்த விசித்திரமான நடத்தையும் அவரது கவனத்தை ஈர்த்துள்ளது.</p><h2>ரஷ்யாவில் இருந்து வந்த குட்டி வேட்டைக்காரன்</h2><p>இந்த ரெட்-பாக்டு ஸ்ட்ரைக் பறவைகள் மத்திய <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE">ரஷ்யா </a>மற்றும் சைபீரியா போன்ற குளிர்ந்த பகுதிகளில் இருந்து இலையுதிர்காலமான செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இந்தியாவுக்குப் புலம்பெயர்கின்றன. </p><p>இந்தியாவில் இவை வழக்கமாக <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D">குஜராத்தின் </a>கட்ச் பகுதியில்தான் அதிகம் காணப்படும்.</p><h2>பறவையின் சிறப்பம்சங்கள்</h2><p>இவை சிறிய அளவிலான வேட்டைப் பறவைகளாகும். முட்கள் நிறைந்த புதர்கள் மற்றும் திறந்தவெளிப் பிரதேசங்களில் அமர்ந்து கொண்டு பெரிய பூச்சிகள், சிறிய பறவைகள் மற்றும் எலிகளை வேட்டையாடும்.</p><p>வேட்டைப் பறவையாக இருந்தாலும், இவை புதர்களில் மிக அமைதியாக அமர்ந்திருக்கக் கூடியவை. இதனால் எளிதில் மனிதர்களின் கண்களுக்குத் தட்டுப்படாது.</p><p>ஜாஜரில் காணப்பட்ட இந்த பறவை இன்னும் முழு வளர்ச்சியடையாத இளம் பறவையாகும். இது தனது வழக்கமான பயணப் பாதையிலிருந்து வழிதவறி ஹரியானாவிற்குள் நுழைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.</p><h2>ஹரியானாவின் முதல் அதிகாரப்பூர்வ பதிவு</h2><p>டெல்லி பறவைகள் சங்கத்தின் மூத்த பறவை ஆய்வாளரான பங்கஜ் குப்தா இதுகுறித்து தெரிவிக்கையில், "ஹரியானாவில் ரெட்-பாக்டு ஸ்ட்ரைக் பறவை ஆவணப்படுத்தப்படுவது இதுவே முதல் முறை என்பதால், இது பறவையியல் துறையில் ஒரு மிக முக்கியமான பதிவாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p>ரெயில்வே தண்டவாளத்தின் ஓரங்களில் உள்ள முள் புதர்கள் மற்றும் திறந்தவெளிகள் இந்த பறவைகள் வேட்டையாடுவதற்கு ஏற்ற சூழலை வழங்கியதால், இது தற்காலிகமாக இங்கு தங்கியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.</p>]]></content:encoded></item></channel></rss>