<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 20 Sep 2026 11:31:33 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்- 20 செப்டம்பர் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-20-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-20-september-2026#comments</comments><guid isPermaLink="false">5c5795cf-d6d8-471d-b522-37ad52a569a3</guid><pubDate>Sun, 20 Sep 2026 03:45:35 +0000</pubDate><atom:updated>2026-09-20T11:07:26.457Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/jup0i7ew/TodayLives2009.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/jup0i7ew/TodayLives2009.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/silver-medal-tamil-nadu-shooter-ilavenil-valarivan-congratulated-by-anbumani">ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு அன்புமணி வாழ்த்து..!. </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/silver-medal-tamil-nadu-shooter-ilavenil-valarivan-congratulated-by-anbumani"> </a>துப்பாக்கி சுடுதல் போட்டியில் இளவேனில் வாலறிவான் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறார்.</p><p> ஆசிய போட்டியில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபில் அணி பிரிவு துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் இந்திய அணி வெள்ளிப்பதக்கம் ..</p> <p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/team-india-enter-final-asian-games-n-womens-cricket">ஆசிய விளையாட்டு: ஷபாலி சதம் - வங்கதேசத்தை சுருட்டி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா</a></p><p>* இந்தியாவின் ஷபாலி வர்மா அதிரடியாக ஆடி சதமடித்து அசத்தினார்.</p><p>* நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்தியா இலங்கையுடன் மோதுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/shivajiganesan-daughter-santhi-dies-mk-stalin-pays-tribute">உடல்நல குறைவால் சிவாஜிகணேசன் மகள் சாந்தி மரணம் - மு.க.ஸ்டாலின் அஞ்சலி!</a></p><p>* சிவாஜி கணேசன் மூத்த மகள் சாந்தி 72 வயதில் உடல்நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் காலமானார்.</p><p>* மு.க.ஸ்டாலின் சிவக்குமார் திரைபிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர் உடல் வளசரவாக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-scrub-typhus-cases-rise-health-officials-urge-precautions">தமிழகத்தில் உண்ணி காய்ச்சல் பரவல்: பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை அறிவுரை...</a></p><p>* தமிழகத்தில் பருவமழை காரணமாக உண்ணி காய்ச்சல் பரவல் அதிகரித்து வண்ணம் உள்ளது.</p><p>* காய்ச்சல் அறிகுறிகளுடன் இருக்கும் நபர்கள், உடனடியாக மருத்துவரை அணுகும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/over-2500-vinayagar-idols-immersed-in-sea-across-chennai-suburbs">சென்னை - புறநகர் பகுதிகளில் 2500 விநாயகர் சிலைகள் இன்று கடலில் கரைப்பு!</a></p><p>* சிலைகளை கடலுக்குள் எடுத்துச் செல்ல கிரேன்கள், டிராலிகள் அமைக்கப்பட்டிருந்தன.</p><p>* ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்கவும், மத உணர்வை புண்படுத்தும் கோஷம் எழுப்பவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/cinema/meesaya-murukku-2-film-explores-struggles-of-music-artists-says-hiphop-aadhi">மீசைய முறுக்கு 2 படம் இசைக் கலைஞர்களின் வாழ்க்கை போராட்டத்தை பேசும் – ஹிப்ஹாப் ஆதி.!.</a></p><p>செப்டம்பர் 25 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது... </p><p> மீசைய முறுக்கு 2 அதைவிட மிகவும் பரந்த கதைக்களத்தைக் கொண்டது என்று தெரிவித்துள்ளார்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/daughter-of-maharashtra-minister-nila-wighe-patil-wins-swedish-parliament-election">மகாராஷ்டிரா அமைச்சரின் உறவினர்"நிலா விகே பாட்டீல்" சுவீடன் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி.!.</a></p><p>மறைந்த மத்திய அமைச்சர் பாலாசாகேப் விகே பாட்டிலின் பேத்தி.</p><p>சுவீடனில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், ஸ்டாக்ஹோம் சிட்டி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். </p> <p><a href="https://www.maalaimalar.com/sports/elavenil-valarivan-clinches-silver-in-the-womens-10m-air-rifle-individual-final-at-the-asian-games">ஆசிய விளையாட்டு: துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளி வென்றார் இளவேனில்</a></p><p>* ஜப்பானில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. </p><p>* தனிநபர் பிரிவில் இந்தியாவின் சோனம் மாஸ்கர் 6வது இடம் பிடித்து வெளியேறினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/seeman-campaigns-for-tharapuram-naam-tamilar-candidate-tomorrow">தாராபுரம் வேட்பாளரை ஆதரித்து நாம் தமிழர் கட்சி சார்பில் நாளை தேர்தல் பரப்புரை: சீமான்...</a> </p><p>*  தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவுக்கு ஆதரவாக சீமான் பிரச்சாரம் செய்ய உள்ளார்.</p><p>* தமிழகத்தில் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நா.த.க சார்பில் தேர்தல் பிரசாரம் நடைபெறவுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/you-paid-for-the-ticket-not-for-us-salman-khan">டிக்கெட்டை தான் விலை கொடுத்து வாங்கினீர்கள், எங்களை அல்ல: பிக்பாஸில் சட்டையை கழற்றிய சல்மான் கான்...</a> </p><p>* பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சல்மான் கான், உடல் எடை தொடர்பான விமர்சனத்திற்கு கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.</p><p>* தியேட்டரில் படம் பார்ப்பதற்கு தான் டிக்கெட்டை விலை கொடுத்து வாங்கினீர்கள், எங்களை அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/iran-sets-7-conditions-for-negotiations-with-us-says-message-is-clear">எங்களுடைய செய்தி தெளிவானது: பேச்சுவார்த்தைக்கு 7 நிபந்தனைகள் விதித்த ஈரான்- அமெரிக்கா ஏற்குமா?</a></p><p>* அமெரிக்காவுக்கு ஈரானின் உரிமைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.</p><p>* எங்களுடைய செய்தி தெளிவானது. சந்தேகத்திற்கு இடமற்றது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/indias-womens-10m-air-rifle-team-has-won">ஆசிய விளையாட்டு: முதல் பதக்கம் வென்ற இந்தியா - துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளி </a></p><p>* ஜப்பானில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. </p><p>* தனிநபர் பிரிவிலும் இந்தியாவின் இளவேனில், சோனம் ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/northeast-monsoon-precautionary-measures-chief-minister-consultation-with-officials-tomorrow">பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார் முதல்வர் விஜய்.</a></p><p>சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்..</p><p>காவிரி படுகை, கடலோர மாவட்ட ஆட்சியர்கள் காணொளி வாயிலாக ஆலோசனையில் பங்கேற்கவுள்ளனர்..</p>  <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-government-revenue-expenditure-and-borrowings-last-five-months-data-released">கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய், செலவு, வாங்கிய கடன் எவ்வளவு?- புள்ளி விவரம் வெளியீடு</a></p><p>* அரசின் செலவுக்கணக்கில், கடன்களுக்காக செலுத்தப்பட்ட வட்டியின் பங்கு ரூ. 25,991 கோடி.</p><p>* ஓய்வூதியத்தின் பங்கு ரூ. 21,008 கோடி.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-once-again-proved-that-he-is-a-careless-politician-mp-cm-mohan-yadav">ராகுல் காந்தி பொறுப்பற்ற அரசியல்வாதி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்: ம.பி. முதல்வர் சாடல்</a></p><p>* அமித் ஷா மகன் எப்படி கிரிக்கெட் சங்கத்தின் தலைவரானார் என்று மாணவர் ஒருவர் கேள்வி கேட்கிறார்- ராகுல் காந்தி</p><p>* நிகழ்ச்சியில் எழுப்பப்பட்ட விவகாரம் குறித்து காந்தி உண்மையான தகவல்களைக் கொண்டிருக்க வேண்டும்- ம.பி. முதல்வர்</p>]]></content:encoded></item><item><title>&apos;வேட்டுவம்&apos; முன்னோட்டத்தைக் கண்டு மருமகளை பாராட்டிய மாமனார் நாகார்ஜுனா!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/sobhita-dhulipala-stuns-in-vettuvam-action-nagarjuna-reacts</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/sobhita-dhulipala-stuns-in-vettuvam-action-nagarjuna-reacts#comments</comments><guid isPermaLink="false">b1b65f0e-960d-4b5a-bfe3-f9c4d037b3b3</guid><pubDate>Sun, 20 Sep 2026 11:30:34 +0000</pubDate><atom:updated>2026-09-20T11:30:34.631Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>Arya,Nagarjuna,sobhita dhulipala,vettuvam,சோபிதா துலிபாலா,வேட்டுவம்,நாகார்ஜுனா</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/0mfqchz4/Vettuvam-Nagarjuna" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vettuvam  - Nagarjuna  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/0mfqchz4/Vettuvam-Nagarjuna?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இயக்குநர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D">பா.ரஞ்சித்</a> இயக்கத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE">ஆர்யா</a>, சோபிதா துலிபாலா, கலையரசன், சபீர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் <strong>'வேட்டுவம்'</strong>.</p><p>தற்காப்புக் கலைகளை மையமாகக் கொண்டு பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் முன்னோட்டம் தற்போது வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.</p><h2>அதிரடி ஆக்‌ஷனில் மிரட்டிய சோபிதா துலிபாலா</h2><p>இப்படத்தில் நடிகை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE">சோபிதா துலிபாலா</a> ஆபத்தான சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல், மிகத் தீவிரமாக நடித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, "இப்படத்தில் வரும் சண்டைக் காட்சிகளை நான் ஒரு பெரிய சவாலாக எடுத்துக் கொண்டேன். </p><p>இதற்காகப் பாரம்பரிய உடற்பயிற்சிகள் மற்றும் தற்காப்புக் கலைகளில் கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. </p><p>ஒத்திகையின் போது, ஒவ்வொரு சண்டைக் காட்சியையும் நாங்களே நேரடியாக (டூப் இல்லாமல்) செய்வதை உறுதிப்படுத்திக் கொண்டோம். என்று கூறினார்.</p><h2>நெகிழ்ந்து பாராட்டிய மாமனார் நாகார்ஜுனா</h2><p>சோபிதா துலிபாலாவின் இந்த அசாத்திய உழைப்பையும், அர்ப்பணிப்பையும் பார்த்து வியந்த அவரது மாமனாரும், தெலுங்குத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமுமான <strong>நடிகர் </strong><em><a href="https://www.maalaimalar.com/topic/nagarjuna">நாகார்ஜூனா </a></em>, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் மருமகளைப் பாராட்டி நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.</p><p>அதில் அவர் கூறியிருப்பதாவது, "வாவ்... இந்த வேட்டுவம் படத்தின் கதைக்களம் மற்றும் அதை உருவாக்கப்பட்ட விதம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. சோபிதா, நீங்கள் இதற்காகப் பல மடங்கு கடுமையான உழைப்பைக் கொட்டியிருப்பது நன்றாகத் தெரிகிறது. </p><p>பார்ப்பதற்கு காட்சிகள் அனைத்தும் மிகவும் அருமையாக இருக்கின்றன. இத்திரைப்படத்தைக் திரையில் காண நான் ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று தெரிவித்தார்.</p><h2><strong>ரசிகர்களின் எதிர்பார்ப்பு</strong></h2><p>தற்காப்புக் கலையை மையமாகக் கொண்டு பா.ரஞ்சித் இயக்கியுள்ள விதம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இப்படம் டிசம்பரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>அதே வேளையில், தனது மருமகளின் கலைப் பயணத்திற்கும், அவரது முயற்சிக்கும் மாமனார் நாகார்ஜுனா மனதார வாழ்த்து தெரிவித்துள்ள இந்தச் செய்தி, தற்போது சினிமா வட்டாரங்களிலும் ரசிகர்கள் மத்தியிலும் வைரலாகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு விரைவில் அரசியல் கட்சியாக மாறும்- அண்ணாமலை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/we-the-leaders-movement-to-soon-transform-into-political-party-annamalai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/we-the-leaders-movement-to-soon-transform-into-political-party-annamalai#comments</comments><guid isPermaLink="false">ab522152-8232-4d3a-a180-71ea322fc50c</guid><pubDate>Sun, 20 Sep 2026 11:29:47 +0000</pubDate><atom:updated>2026-09-20T11:29:47.810Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,அண்ணாமலை,annamalai,We the Leaders,வீ த லீடர்ஸ்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/1xvgtdsq/annamalai.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Annamalai]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/1xvgtdsq/annamalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை காமராஜர் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி மகா சுசீந்திரன் தலைமையில் நடந்தது. ஜி.ராஜ்குமார் முன்னிலை வகித்தார். </p><p>இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-</p><p> தமிழக முதல்வர் லண்டன் சென்று முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு பதிலாக கோவை, மதுரை உள்ளிட்ட மாணவர்களுக்கு வந்து இங்கு இங்குள்ள தொழில் அதிபர்களை சந்தித்து தொழிலை விரிவுபடுத்த என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும், அதற்காக அரசு 50 சதவீதம் மானியம் வழங்கும் என்றெல்லாம் உறுதி அளித்தாலே தொழில் மேம்படும். பொருளாதார வளர்ச்சி மிக்க நாடாக நம் நாடு உருவெடுக்கும். </p><p>முதலமைச்சர் லண்டனுக்கு சென்றது தேவையற்றது. மேலும் நாம் ஆட்சிக்கு வந்தால் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88" rel="nofollow">இந்து சமய அறநிலைத்துறை</a>யை எடுப்போம்.  மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா சினிமா தியேட்டரில் பிளாக் டிக்கெட் விற்பது போன்று நிலையில் இருந்தது.</p><p>பச்சை டோக்கன் வைத்திருப்பவர்கள் அங்கே அமருங்கள், சிவப்பு டோக்கன் வைத்திருப்பவர்கள் இங்கே அமருங்கள் என்று நிலை இருந்தது.</p><p>மாட வீதிகள் வி.ஐ.பி.க்களின் வாகன காப்பகமாக தான் இருந்தது. ஸ்ரீரங்கம் கோவில் முன்பாக கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை என்றெல்லாம் வாசகம் இருக்கிறது.</p><p>இதை உடனடியாக எடுக்க வேண்டும் என்பதே நமது குரல். நாம் இயக்கத்தில் இருப்பவர்கள் அனைவரும் லீடரே, இது தான் உண்மையான புரட்சி. </p><p>‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு விரைவில் அரசியல் கட்சியாக மாறும். ஜல்லிக்கட்டு தொடர்பாக எம்.எல்.ஏ. பேசிய விவகாரத்தில் முதலமைச்சர் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும்.</p><p>விரைவில் மகளிர் காண பாதுகாப்பு குறித்து மகளிர் மாநாடு நமது இயக்கத்தின் சார்பில் நடைபெற இருக்கிறது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பிரதமரை விமர்சித்து மேடை நாடகம்: கோமாளிகளின் கட்சியாக மாறிய காங்கிரஸ்- பாஜக சாடல்</title><link>https://www.maalaimalar.com/news/national/stage-play-criticising-pm-congress-turned-into-party-of-clowns-bjp-jibe</link><comments>https://www.maalaimalar.com/news/national/stage-play-criticising-pm-congress-turned-into-party-of-clowns-bjp-jibe#comments</comments><guid isPermaLink="false">a40dfecb-ce39-4c5f-9110-7d842388aaf7</guid><pubDate>Sun, 20 Sep 2026 11:13:55 +0000</pubDate><atom:updated>2026-09-20T11:13:55.974Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rahul Gandhi,BJP,பாஜக,Congress,காங்கிரஸ்,Prime Minister Modi,பிரதமர் நரேந்திர மோடி,எம்பி ராகுல் காந்தி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/k3cu2p94/rahul.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Congress Rahul Gandhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/k3cu2p94/rahul.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது எக்ஸ் பக்கத்தில், "காங்கிரஸ் கட்சி இப்போது நகைச்சுவையாளர்கள் மற்றும் கோமாளிகளின் கட்சியாக மாறிவிட்டது" என்று பதிவிட்டு கடுமையாக தாக்கியுள்ளார். </p><p>மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு நடை மற்றும் செயல்பாடுகளை கிண்டல் செய்து நகைச்சுவை நாடகம் நடத்தப்பட்டது தேசிய அளவில் பெரும் அரசியல் புயலை கிளப்பியுள்ளது. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியுடன் மேடையை பகிர்ந்து கொண்ட நகைச்சுவை நடிகர் புல்கித் மணி, பிரதமரை விமர்சிக்கும் வகையில் நடித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பாஜக தலைவர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.</p><h2>கோ<strong>மாளிகளின் கட்சி பாஜக</strong> </h2><p>இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள<a href="https://www.maalaimalar.com/news/national/bmw-car-plunges-off-mumbai-coastal-road-bridge-3-students-killed-one-critical"> பாஜக </a>தேசிய செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.கேசவன், இந்த நாடகம் மலிவான மற்றும் அருவருப்பான முறையில் நடத்தப்பட்டதாக விமர்சித்துள்ளார். நாகரிகமுள்ள மற்றும் சரியான சிந்தனை கொண்ட எந்தவொரு நபரும் இதுபோன்ற தரமற்ற நகைச்சுவைகளை ரசிக்க மாட்டார்கள் என்றும், ராகுல் காந்தியின் இதுபோன்ற நடவடிக்கைகள் இளைஞர்களிடம் இருந்து அவரை மேலும் தூர விலக்கியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.</p><p>அதேபோல, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது எக்ஸ் பக்கத்தில், "காங்கிரஸ் கட்சி இப்போது நகைச்சுவையாளர்கள் மற்றும் கோமாளிகளின் கட்சியாக மாறிவிட்டது" என்று பதிவிட்டு கடுமையாக தாக்கியுள்ளார். மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி மற்றும் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி உள்ளிட்ட பல மூத்த தலைவர்களும் பிரதமரின் மறைந்த தாயார் குறித்து நாடகத்தில் குறிப்பிடப்பட்டதற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.</p><p>இந்தூரில் ராகுல் காந்தி தலைமையில் 'சத்ரோன் கி கூஞ்ச்' (மாணவர்களின் குரல்) என்ற தலைப்பில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நீட் வினாத்தாள் கசிவு, வேலைவாய்ப்பின்மை மற்றும் நாட்டின் கல்வி அமைப்பில் நிலவும் குளறுபடிகள் குறித்து மாணவர்களிடையே நம்பிக்கை ஏற்படுத்தும் நோக்கில் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.</p><p>இந்த நிகழ்ச்சியின் போது, பிரபல மேடை நகைச்சுவை நடிகர் புல்கித் மணி ராகுல் காந்தியுடன் மேடையில் இணைந்து பிரதமர் மோடி வெளிநாட்டுத் தலைவர்களுடன் உரையாடும் விதம், "மை பிரண்ட்" என்று அழைக்கும் ஸ்டைல் மற்றும் அவரின் வெளியுறவு கொள்கைகளை கிண்டல் செய்து மிமிக்ரி செய்து நடித்தார். ராகுல் காந்தியும் இந்த நாடகத்தின் போது மேடையில் சிரித்தபடியே அவரோடு உரையாடிய காட்சிகள் வெளியாகி சர்ச்சையை தீவிரப்படுத்தியுள்ளது.</p><p>பிரதமர் மோடியின் அரசியல் கொள்கைகளை விமர்சிப்பது ஜனநாயக உரிமை என்ற போதிலும், நாட்டின் பிரதமரின் பதவிக்குரிய கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும், தனிப்பட்ட முறையில் அவரது குடும்பத்தினரை குறிப்பிட்டு பேசுவதும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று பாஜக தரப்பில் வாதிடப்படுகிறது. </p><p>அதேவேளையில், இது மாணவர்கள் மத்தியில் நடத்தப்பட்ட சாதாரணமான அரசியல் நகைச்சுவை நாடகம் மட்டுமே என்றும், நாட்டின் நிஜமான பிரச்சனைகளான வேலைவாய்ப்பின்மை மற்றும் கல்வி முறை சீர்கேடு ஆகியவற்றிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே பாஜக இந்த பிரச்சனையைப் பெரிதாக்குகிறது என்றும் காங்கிரஸ் கட்சியினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு அன்புமணி வாழ்த்து..!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/silver-medal-tamil-nadu-shooter-ilavenil-valarivan-congratulated-by-anbumani</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/silver-medal-tamil-nadu-shooter-ilavenil-valarivan-congratulated-by-anbumani#comments</comments><guid isPermaLink="false">50c7270b-63e7-40cb-aaa2-1cc2d41f1714</guid><pubDate>Sun, 20 Sep 2026 11:04:39 +0000</pubDate><atom:updated>2026-09-20T11:04:39.722Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,shooting,துப்பாக்கி சுடுதல்,இளவேனில் வாலறிவன்,Asian Games,ஆசிய விளையாட்டு</media:keywords><media:content height="1080" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/hvqcm7ll/TNPSC-5.png" width="1920"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ anbumani ramadoss]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/hvqcm7ll/TNPSC-5.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>ஆசிய விளையாட்டு போட்டி </h2><p>20-வது ஆசிய விளையாட்டு போட்டியானது ஜப்பானில் உள்ள  ஐய்ச்சி- நகோயாவில் ஆசியப் போட்டி நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. இந்திய நட்சத்திரங்கள் மனு பாக்கா்-பவன் செஹ்ராவத் ஆகியோா் தேசிய கொடி ஏந்தி அணிவகுப்பை தொடங்கி வைத்தனர். </p><p>ஆசியக் கண்டத்தை சேர்ந்த நாடுகள் பங்கேற்கும் இந்த ஆசிய போட்டியனது ஆண்டுக்கு ஒருமுறை நடைப்பெறும். மொத்தம் 11,000 வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.</p><h2>இந்தியா </h2><p>நடந்து வரும் ஆசிய போட்டியில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபில் அணி பிரிவு துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் இந்திய அணி <a href="https://www.maalaimalar.com/sports/lovepreet-bags-silver-after-games-record-in-snatch-at-commonwealth-games">வெள்ளிப்பதக்கம் </a>வென்று சாதனைப் படைத்துள்ளது.</p><p>இந்த நிலையில்  மகளிர் துப்பாக்கி சுடும் பிரிவில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவளனுக்கு பாமக தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/permission-should-not-be-granted-to-an-american-company-to-set-up-an-oil-well-in-the-bay-of-bengal-near-mayiladuthurai-anbumani-ramadoss-urges">அன்புமணி ராமதாஸ்  </a>வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் </p><p>இது குறித்து அவர்  தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது </p><p><a href="https://www.maalaimalar.com/sports/india-beat-pakistan-in-asian-games-2023-667226">ஆசிய விளையாட்டுப் போட்டி</a>துப்பாக்கிச் சுடுதலில் இரண்டாம் வெள்ளி வென்ற தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு வாழ்த்துகள்.</p><p>ஜப்பான் நாட்டின் அய்ச்சி நகோயா நகரில் நடைபெற்று வரும் 20-ஆம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபில் தனிநபர் பிரிவு துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p> <p>ஏற்கனவே இதே போட்டியின் அணி பிரிவில் இரு வீராங்கனைகளுடன் இணைந்து வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவன் ஒரே நாளில் இரண்டாம் பதக்கத்தையும் வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவரது சாதனைப் பயணம் தொடரட்டும்!</p><p>என்று தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>இலங்கை தமிழர்களின் துயரத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- நடிகர் மன்சூர் அலிகான் பேச்சு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81#comments</comments><guid isPermaLink="false">f0a3e7ca-3b3b-4ce3-8562-d088dcb2b18d</guid><pubDate>Sun, 20 Sep 2026 10:38:22 +0000</pubDate><atom:updated>2026-09-20T10:38:22.361Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இலங்கை,Sri Lanka,Sri Lankan Tamils,மன்சூர் அலிகான்,இலங்கை தமிழர்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/3ygrfyjk/MansoorAliKhan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mansoor Ali Khan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/3ygrfyjk/MansoorAliKhan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகர் மன்சூர் அலிகான் பேசுகையில், ஈழத் தமிழர்கள் தமிழ்நாட்டில் மிகவும் துன்பப்படுகிறார்கள். அவர்களின் வேதனையை தீர்க்க வேண்டும் என்றால் தனி ஈழம் தான் ஒரே தீர்வு என்றார்.</p><p>ஈழத்தமிழர் படுகொலை தொடர்பாகவும், யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் நூற்றுக்கணக்கான எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ள நிகழ்வு தொடர்பாகவும் “நீதியின் ஓலம்” என்ற தலைப்பில் சென்னை சேப்பாக்கத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கத்திற்கு ஈழ அகதிகள் பாதுகாப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் வக்கீல் பா.புகழேந்தி தலைமை தாங்கினார். </p><h2><strong>வேல்முருகன்</strong></h2><p>கருத்தரங்கத்தில் கலந்து கொண்டு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் பேசுகையில்,”நான் எம்.எல்.ஏ.ஆக, இருந்தபோது தொடர்ந்து இலங்கை தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுத்து வந்திருக்கிறேன். ஆனால் தமிழீழத்தில் சென்று தலைவரை சந்தித்து அவரோடு உணவு சாப்பிட்டேன் என்று கூறக் கூடியவர்கள் இன்று ஆளுங்கட்சியில் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தற்போது இலங்கை தமிழர் பிரச்சினைக்காக வாய் திறப்பதில்லை. தமிழ்நாட்டில் இலங்கை அகதிகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. சிறப்பு முகாமில் பலர் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.</p><h2><strong>மன்சூர் அலிகான்</strong></h2><p>நடிகர் மன்சூர் அலிகான் பேசுகையில், ஈழத் தமிழர்கள் தமிழ்நாட்டில் மிகவும் துன்பப்படுகிறார்கள். அவர்களின் வேதனையை தீர்க்க வேண்டும் என்றால் தனி ஈழம் தான் ஒரே தீர்வு என்றார்.</p><h2><strong>நிகழ்ச்சி</strong></h2><p>நிகழ்ச்சியில் திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் குணங்குடி அனிபா, தமிழ் தேச மக்கள் கட்சியின் தலைவர் தமிழ்நேயம், இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடாஜே. அப்துல் ரஹீம், நாடு கடந்த தமிழீழ அரசின் பாராளுமன்ற உறுப்பினர் தமிழினியன், வழக்கறிஞர் ஜான்சன் செந்தமிழ் குமரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக செம்மணி புதை குழியில் ராணுவத்தால் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட மக்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>ஊழலை ஒழித்த ஒரே தலைவர் முதலமைச்சர் விஜய்- அமைச்சர் என். ஆனந்த்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-only-leader-who-ended-corruption</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-only-leader-who-ended-corruption#comments</comments><guid isPermaLink="false">6256ef06-97b7-4c7b-9f89-b82ebaa2a5f2</guid><pubDate>Sun, 20 Sep 2026 10:34:35 +0000</pubDate><atom:updated>2026-09-20T10:34:35.780Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Bribe,ஊழல்,முதலமைச்சர் விஜய்,அமைச்சர் என் ஆனந்த்,MInister N Anand</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/yxroyhp8/Anana.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay- Minister N Anand]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/yxroyhp8/Anana.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுராந்தகம் தொகுதி தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் மரகதம் குமர வேலுவை ஆதரித்து பிரசாரக் கூட்டம் நேற்று நடந்தது.</p><p>கூட்டத்தில் அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ராஜ்குமார், தென்னரசு உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.</p><h2>தி.மு.க. - அ.தி.மு.க.</h2><p>இப்போது நாம் தி.மு.க. அதி.மு.க.வை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். இன்னும் கொஞ்ச நாட்களில் 2 கட்சிகளும் இருக்காது. தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் மட்டும் தான் இருக்கும்.</p><h2>முதலமைச்சர் விஜய் வருகை </h2><p>அடுத்த வாரம் முதலமைச்சர் விஜய் உங்களை சந்திக்க வருகிறார். அப்போது பாருங்கள் எப்படி இருக்கும் என்று. சும்மா அப்படி கலகல  என்று இருக்கும்.</p><p>ஊழலை ஒழிக்க முடியாது ஒழிக்க முடியாது என்று சொன்னார்கள். ஆட்சிக்கு வந்து 125 நாட்களில் ஊழலை ஒழித்த ஒரே தலைவர் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்.</p><p>234 தொகுதிகளிலும் முதலமைச்சர் விஜய் முகத்திற்காக மக்கள் ஒத்த ரூபாய் வாங்காமல் அவருக்காக வாக்களித்துள்ளனர்.</p><p>அவர்களுக்கு ஒரு காலமும் நாம் துரோகம் செய்யக்கூடாது. மக்கள் நம்மளை நம்பி வாக்களித்திருக்கிறார்கள். 234 தொகுதிகளிலும் சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் சரி அமைச்சர்களாக இருந்தாலும் சரி தவறு செய்தால் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்ன ஒரே தலைவர் நம் தலைவர் விஜய்.</p><p>கடந்த ஆட்சிகாலங்களில் மாதம் மாதம் ரூ.1350 கோடி கட்சி நிதியாக சென்று கொண்டிருந்தது. இந்த நான்கு மாதத்தில் அந்த ரூ.1350 கோடி எங்கு சென்றது எங்களுக்கு தெரியாது.</p><p>நாங்களும் அதைத் தேடிப் போகவில்லை. ஏன் என்று சொன்னால் அதில் ஒத்த ரூபாய் வாங்கினால் நான் கூட அமைச்சராக இருக்க முடியாது. சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் அமர்ந்திருக்க முடியாது. </p><p>தவறு செய்தால் யாரை வேண்டுமென்றாலும் தூக்கி போட்டுவிட்டு போய்க் கொண்டே இருப்பார் நம் முதலமைச்சர்.</p><p>மக்களுக்கு சேவை செய்வது மட்டும் தான் எங்களது குறிக்கோள். தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைந்த உடன் சுய உதவி குழுக்களுக்கு ரூ.52 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. </p><p>உங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறை வேற்றுவோம். தமிழக வெற்றிக் கழகத்தின் மரகதம் குமரவேல் இருக்கும்போது கடைசி வரை அவரது முகம் சிரித்த முகமாகத் தான் இருக்கும்.</p><p>மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான் எங்களுக்கு இருக்கிறதே தவிர காசு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை. எனவே நீங்கள் அனைவரும் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் மரகதம் குமரவேலுவை வெற்றி பெறச் செய்யுங்கள். </p><p>மதுராந்தகம் தொகுதியை நம் முதலமைச்சர் சிறப்பான தொகுதியாக மாற்றிக் காட்டுவார். தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சர் விஜய் சின்னமான விசில் சின்னத்தில் அனைவரும் வாக்களியுங்கள். நாங்கள் என்றும் மக்களோடு மக்களாக தான் இருப்போம்.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>பஞ்சாபில் காங்கிரஸ் பிரமுகரின் தம்பி சுட்டுக்கொலை: முன்விரோதம் காரணமா? போலீசார் விசாரணை!</title><link>https://www.maalaimalar.com/news/national/congress-leaders-brother-shot-dead-in-punjab-personal-enmity-suspected</link><comments>https://www.maalaimalar.com/news/national/congress-leaders-brother-shot-dead-in-punjab-personal-enmity-suspected#comments</comments><guid isPermaLink="false">aa0760cd-3a3d-45e1-9ea7-f4775bf12a49</guid><pubDate>Sun, 20 Sep 2026 10:33:08 +0000</pubDate><atom:updated>2026-09-20T10:33:08.578Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>துப்பாக்கிச்சூடு,Murder,பஞ்சாப்,Punjab,investigation,congress Sarpanch</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/50irtysu/Murder" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Murder ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/50irtysu/Murder?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D">பஞ்சாப் </a>மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு 27 வயது இளைஞர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொடூரக் கொலைக்கு தனிப்பட்ட பகையே காரணம் என காவல்துறை தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது.</p><h2><strong>சம்பவத்தின் பின்னணி</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">கொல்லப்பட்ட </a>இளைஞர் பாத்தா கிராமத்தைச் சேர்ந்த சுக்ராஜ் சிங் (என்கிற காகா) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் அந்த கிராமத்தின் தற்போதைய காங்கிரஸ் சர்பஞ்ச் (ஊராட்சித் தலைவர்) நவதீப் சிங்கின் தம்பி ஆவார்.</p><p>பாபா ஸ்ரீ சந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, அங்குள்ள குருத்வாராவில் நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க சுக்ராஜ் சிங் சென்றிருந்தார். வழிபாட்டை முடித்துவிட்டு, இரவு சுமார் 8 மணியளவில் தனது கிராமத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p><h2><strong>அடுத்தடுத்து பாய்ந்த குண்டுகள்</strong></h2><p>கிராமத்துச் சாலையில் அவர் வந்து கொண்டிருந்தபோது, மாருதி சுசூகி ஸ்விஃப்ட் காரில் வந்த அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் சுக்ராஜ் சிங்கை வழிமறித்துள்ளனர். </p><p>காரில் இருந்து இறங்கிய நபர்கள், சுக்ராஜை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினர். இதில் பலத்த குண்டுக் காயமடைந்த சுக்ராஜ் சிங், சம்பவ இடத்திலேயே <a href="https://www.maalaimalar.com/topic/murder">துடிதுடித்து </a>உயிரிழந்தார்.</p><h2><strong><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88">போலீஸ் விசாரணை</a></strong></h2><p>தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், சுக்ராஜின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், சம்பவ இடத்திலிருந்து இரண்டு தோட்டாக்களைக் கைப்பற்றியுள்ளனர்.</p><p>இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி அசோக் குமார் சர்மா கூறுகையில், "பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட சுக்ராஜ் சிங் மீது ஏற்கனவே சில குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. </p><p>எனவே, முதற்கட்ட விசாரணையின்படி, இந்த கொலை பழைய தனிப்பட்ட பகை காரணமாக நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்" எனத் தெரிவித்தார்.</p><h2><strong>குடும்பத்தினர் குற்றச்சாட்டு</strong></h2><p>உயிரிழந்த சுக்ராஜ் சிங்கின் அண்ணன் நவதீப் சிங் பேசுகையில், "எனது தம்பி மீது சில மாதங்களுக்கு முன்பு ஷாபூர் ஜாஜன் கிராமத்தில் ஒரு கொலைவெறித் தாக்குதல் நடந்தது. </p><p>அதிலிருந்து அவன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தான். ஆனால், அந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை எந்தவொரு கடுமையான நடவடிக்கையும் எடுக்கவில்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/police-investigaiton">காவல்துறையின் </a>இந்த அலட்சியமே எனது தம்பியின் தற்போதைய மரணத்திற்கு வழிவகுத்துள்ளது" என்று குற்றம் சாட்டினார்.</p><p>தங்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் பஞ்சாப் மாநில மூத்த காவல்துறை அதிகாரிகளுக்கு சுக்ராஜின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மும்பை பாலத்தில் இருந்து பாய்ந்து நொறுங்கிய பிஎம்டபிள்யூ கார்- 3 மாணவர்கள் பலி, ஒருவர் கவலைக்கிடம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/bmw-car-plunges-off-mumbai-coastal-road-bridge-3-students-killed-one-critical</link><comments>https://www.maalaimalar.com/news/national/bmw-car-plunges-off-mumbai-coastal-road-bridge-3-students-killed-one-critical#comments</comments><guid isPermaLink="false">8b1a4a5b-1f8d-40fd-a82d-993c5ea370a2</guid><pubDate>Sun, 20 Sep 2026 10:32:36 +0000</pubDate><atom:updated>2026-09-20T10:32:36.127Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Car accident,மாணவர்கள் பலி,மும்பை,bmw car,Mumbai Bridge,பிஎம்டபிள்யூ கார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/hqk0zkhp/gfhfyf.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Car Accident  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/hqk0zkhp/gfhfyf.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மும்பையின் புதிய அடையாளமாக திகழும் கோஸ்டல் ரோடு பாலத்தில் அதிகாலையில் நிகழ்ந்த அதிவேக பயங்கர விபத்தில், பிஎம்டபிள்யூ ஆடம்பர கார் ஒன்று தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு சுமார் 75 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து நொறுங்கியது. இந்த கோர சம்பவத்தில் காரில் பயணித்த மூன்று கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><h2><strong>தலைகீழாக பாய்ந்த கார்</strong></h2><p>இன்று அதிகாலை 5:00 மணி முதல் 5:20 மணிக்குள் இந்த விபத்து நேரிட்டுள்ளது. மெரைன் டிரைவ் பகுதியிலிருந்து ஹாஜி அலி நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார், லாலா லஜபதிராய் கல்லூரிக்கு எதிரே உள்ள லோட்டஸ் ஜெட்டி அருகே கட்டுப்பாட்டை இழந்தது. அதிவேகமாக வந்த பிஎம்டபிள்யூ கார், பாலத்தின் ஓரத்தில் இருந்த தடுப்புச் சுவரில் மோதி, காற்றில் இரண்டு முறை தலைகீழாகச் சுழன்று, மேம்பாலத்திற்கு கீழே உள்ள கட்டுமான பகுதிக்குள் 75 அடி உயரத்தில் இருந்து பாய்ந்து விழுந்தது. இதில் காரின் முன் பகுதியும் மேல்பகுதியும் உருக்குலைந்து முற்றிலும் சேதமடைந்தன.</p><p>சம்பவம் நடந்த உடனே அருகில் இருந்தவர்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறை காவல்துறையினர் விரைந்து வந்து காரில் இருந்தவர்களை மீட்டு நாயர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், காரை ஓட்டிச் சென்ற சனை குஜார்(21), ஆதித்யா ஜகசானியா(19), தைரியா சேத் (17) இவர்கள் மூவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஓட்டுநருக்கு அருகில் அமர்ந்திருந்த ஆதித்யா ஓஸ்வால் (20/23) என்பவர் படுகாயங்களுடன் தப்பிப்பிழைத்து, நாயர் மருத்துவமனையின் அவசர தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், பலியான மாணவர்கள் அனைவரும் குஜராத்தின் அகமதாபாத் நகரத்தை சேர்ந்தவர்கள் என்றும், மும்பை ஜூஹு பகுதியில் உள்ள புகழ்பெற்ற NMIMS கல்லூரியில் படித்து வந்ததும் தெரியவந்தது. இவர்கள் தங்கிப் படிக்கும் விடுதியிலிருந்து வார இறுதி நாளை கழிப்பதற்காக மெரைன் டிரைவ் பகுதிக்கு சென்றுவிட்டுத் திரும்பியபோது இந்த துயரம் நிகழ்ந்துள்ளது. காரின் உரிமையாளரான சனை குஜாரின் குடும்பத்தினர் தகவல் அறிந்து மும்பை விரைந்துள்ளனர்.</p><p>இந்த கொடூர விபத்தின் சிசிடிவி காட்சிகளைப் பார்த்த காவல்துறையினர், அதிவேகமே விபத்துக்கு முக்கிய காரணம் எனத் தெரிவித்துள்ளனர். காரின் வேகம் மிக அதிகமாக இருந்ததால் ஓட்டுநரால் வளைவில் காரை கட்டுப்படுத்த முடியவில்லை. தார்தேவ் காவல்நிலையத்தின் மூத்த காவல் ஆய்வாளர் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக ஓட்டுநர் மது அருந்தியிருந்தாரா என்பது குறித்தும், வாகனத்தின் உதிரிப்பாகங்கள் பழுது அடைந்ததா என்பது குறித்தும் தடயவியல் நிபுணர்கள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சிவகங்கை இரட்டை கொலை - பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தற்காலிக அரசு வேலை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/double-murder-temporary-government-job-for-the-affected-family</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/double-murder-temporary-government-job-for-the-affected-family#comments</comments><guid isPermaLink="false">e60db036-080c-47e6-9d03-2c6b1bac637b</guid><pubDate>Sun, 20 Sep 2026 10:13:23 +0000</pubDate><atom:updated>2026-09-20T10:13:23.899Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Sivagangai,government job,Double murder,இரட்டை கொலை,அரசுப் பணி,சிவகங்கை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/l49tzkvc/New-Project-2026-09-20T154232.893.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இரட்டை கொலை - பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தற்காலிக அரசு வேலை!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/l49tzkvc/New-Project-2026-09-20T154232.893.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே நடைபெற்ற <a href="https://www.maalaimalar.com/amp/story/news/tamilnadu/sivagangai-district-double-murder-case-13-arrested-including-minor">இரட்டைக் கொலை</a> சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு சுகாதாரத் துறையில் தற்காலிக அரசுப் பணி நியமன ஆணைகளை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.</p><h2>கொலை சம்பவம்</h2><p>கடந்த செப்டம்பர் 16 அன்று சிவகங்கை அருகே பழமலை நகர் பகுதியில் தெய்வேந்திரன் மற்றும் பூப்பாண்டி என்ற இரு இளைஞர்கள் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். </p><p>இவர்களின் உடல்களை வாங்க மறுத்து, இழப்பீடு மற்றும் அரசு வேலை கோரி உறவினர்கள் 4 நாட்களாகத் தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். </p><p>இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில், இன்று (செப்.20) பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தற்காலிகப் பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. </p><h2>13 பேர் கைது</h2><p>இந்த இரட்டை கொலை வழக்கு தொடர்பாக இதுவரை சிறுவன் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>பஞ்சாப்பில் சப்-இன்ஸ்பெக்டரை கொன்ற குற்றவாளி ‘என்கவுன்டர்’</title><link>https://www.maalaimalar.com/news/national/criminal-who-killed-sub-inspector-in-punjab-encountered</link><comments>https://www.maalaimalar.com/news/national/criminal-who-killed-sub-inspector-in-punjab-encountered#comments</comments><guid isPermaLink="false">4437c6f1-4c64-4864-991d-c69e5498fcba</guid><pubDate>Sun, 20 Sep 2026 10:13:20 +0000</pubDate><atom:updated>2026-09-20T10:13:20.743Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பஞ்சாப்,Punjab,encounter,சப் இன்ஸ்பெக்டர்,sub inspector,என்கவுன்டர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/tp6354re/punjab.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Punjab cop- crime]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/tp6354re/punjab.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஹர்ஜித் சிங்கை (வயது 50) மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு தப்பி சென்றனர். </p><p>இந்த நிலையில் போலீஸ் சோதனை சாவடி ஒன்றில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் நிறுத்துமாறு சைகை செய்தனர். ஆனால் அவர்கள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். </p><p>இதையடுத்து போலீசார் தற்காப்புக்காக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு வாலிபர் தப்பி ஓடிவிட்டார்.</p><p>விசாரணையில் சுட்டு கொல்லப்பட்டவர் அமிர்தசரசின் முல்சக் பகுதியைச் சேர்ந்த தீபக் சிங் என்பதும், உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஹர்ஜித் சிங்கை கொன்ற 2 பேரில் ஒருவர் என்பதும் தெரியவந்தது.</p><p>தீபக் சிங்குக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவருடன் தொடர்பு இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாகவும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக செயல்படும் ரஷியா - பிரான்ஸ் அதிபர் எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/world/russia-acting-against-european-countries-macron-warning</link><comments>https://www.maalaimalar.com/news/world/russia-acting-against-european-countries-macron-warning#comments</comments><guid isPermaLink="false">e2019f4f-f221-4804-af5e-7e1bef2b970c</guid><pubDate>Sun, 20 Sep 2026 09:23:20 +0000</pubDate><atom:updated>2026-09-20T09:23:20.120Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Russia,பிரான்ஸ்,France,நேட்டோ,NATO,ரஷியா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/80b3z2tx/Untitled-design-27.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ France Warns of Russian Attacks]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/80b3z2tx/Untitled-design-27.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஐரொப்பிய நாடுகளுக்கு எதிராக ரஷியா தாக்குதல் நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ட்ரோன் மற்றும் இணையவழி தாக்குதல்களில் இருந்து முக்கிய உள்கட்டமைப்புகளையும், பாதுகாப்பு துறையின் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் பாதுகாக்க பிரான்ஸ் உத்தரவிட்டுள்ளது.</p><p>ரஷிய ராணுவம் தனது நிலப்பரப்பை விரிவுபடுத்தும் நோக்கில், ஐரோப்பா நாடுகள் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்று தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டது. </p><h3><strong>பிரான்ஸ் அதிபர்</strong></h3><p>ஐரோப்பா மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தும் வகையில், ரஷியாவின் அச்சுறுத்தல் தீவிரமடைந்துள்ளதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் தெரிவித்துள்ளார்.</p><p>இதன் காரணமாக ட்ரோன் மற்றும் இணையவழித் தாக்குதல்களிலிருந்து முக்கிய உள்கட்டமைப்புகளையும், பாதுகாப்புத் துறையின் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் பாதுகாக்க உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.</p><p>சமீபத்திய வாரங்களில் ரஷியா தனது நடவடிக்கைகளை கணிசமாக அதிகரித்துள்ளதாகவும், ட்ரோன் மற்றும் இணையவழி அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட சம்பவங்களையும் மேக்ரோன் குறிப்பிட்டார்.</p><p>மேலும், தங்கள் நாட்டிற்கு எதிரான ரஷியாவின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.</p><h3><strong>போலந்து பிரதமர்</strong></h3><p>முன்னதாக நேட்டோ உறுப்பு நாடான போலந்தின் மீது ரஷ்யா ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தக்கூடும் என்று உளவுத்துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டுவதாக போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.</p><p>நேட்டோ நாடுகள் கூட்டணியின் கூட்டுப் பாதுகாப்பு உறுதிமொழிகளை சோதிக்கும் வகையில், இத்தகைய தாக்குதல் சூழல்நிலைகளை ரஷியா நடத்தும் என்றும் டஸ்க் கூறினார்.</p><p>வான்வெளி மீறல்கள், சந்தேகிக்கப்படும் நாசவேலைகள் மற்றும் ரஷியாவின் மீது சுமத்தப்பட்ட பிற நடவடிக்கைகள் தொடர்பான சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஐரோப்பிய நாடுகள் தெரிவித்துள்ளன.</p><h3><strong>குற்றச்சாட்டு</strong></h3><p>ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவளித்து வருவதாலும், மேலும் ஐரோப்பிய நாடுகள் தங்களது ராணுவத் தயாரிப்புகளை விரிவுபடுத்தி வருவதாலும், ரஷியா போர் அச்சுறுத்தலில் ஈடுபட்டுள்ளதாக நேட்டோ உறுப்பு நாடுகள் தெரிவித்துள்ளன.</p><h3><strong>ரஷிய அதிபர்</strong></h3><p>இந்த நிலையில் ஐரோப்பாவுடன் போரை ரஷியா விரும்பவில்லை என அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும், ஐரோப்பா எழுப்பிய எச்சரிக்கைகளையும் கவலைகளையும் ரஷியா நிராகரித்துள்ளது.</p><p>இதுகுறித்து ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கூறுகையில், ஐரோப்பிய நாடுகள் மீது ரஷியாவிற்கு எந்தவொரு ஆக்கிரமிப்பு நோக்கங்களும் இல்லை என்றும், மேலும் ஐரோப்பிய அண்டை நாடுகளுடன் உறவுகளை மீட்டெடுக்கவும் ஒத்துழைக்கவும் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.</p><p>ஐரோப்பிய தலைவர்கள் தங்களின் கொள்கைகளை நியாயப்படுத்த, ரஷியாவுடன் போருக்கு தயாராகி வருவதாகவும் புதின் குற்றம்சாட்டினார்.</p><p>மேலும் அவர், நாம் அமைதியாக வாழ்வோம்; இல்லையெனில், நாமும் பதிலடி கொடுக்க நிர்பந்திக்கப்படுவோம், என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>‘ரெட்டி கேங்’ துணையோடு ஆட்சி - முதலமைச்சர் விஜய் குறித்து அப்பாவு விமர்சனம்! </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/governance-with-the-backing-of-the-reddy-gang-appavu-criticizes-chief-minister-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/governance-with-the-backing-of-the-reddy-gang-appavu-criticizes-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">3184afee-8e7c-4012-abd5-f77bae471644</guid><pubDate>Sun, 20 Sep 2026 09:20:36 +0000</pubDate><atom:updated>2026-09-20T09:20:36.240Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,அப்பாவு,tvk,appavu,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/symbsyow/New-Project-2026-09-20T144934.739.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘ரெட்டி கேங்’ துணையோடு ஆட்சி - முதலமைச்சர் விஜய் குறித்து அப்பாவு விமர்சனம்! ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/symbsyow/New-Project-2026-09-20T144934.739.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மெத்தனப்போக்கால் தமிழ்நாட்டின் உரிமைகளை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/breakfast-scheme-expansion-chief-minister-to-launch-it-in-thiruvanmiyur-on-the-22nd">முதலமைச்சர் விஜய் </a>பறிகொடுத்து வருவதாக முன்னாள் திமுக சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;</p><p>“தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் அமைப்பதற்கான இடத்தை மூன்று மாதங்களுக்குள் கண்டறிய வேண்டும் என்றும், இந்தி மொழியை கற்க கூடாது என்ற குறுகிய மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும், உச்ச நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது தமிழ்நாட்டிற்கு ஒன்றும் வியப்பாக இல்லை.</p><p>காரணம் தவெக ஆட்சி அமைந்த நாள் முதல் மேகதாது அணை விவகாரம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் விவகாரம் போன்ற வழக்குகளில்  உங்களின்  மெத்தனப் போக்கால் தமிழர்களின் உரிமைகளை  தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் பறிகொடுத்து வருகிறார் தமிழ்நாடு முதலமைச்சர். </p><h2>சரணாகதி</h2><p>“தங்களின் டெல்லி எஜமான் பாஜகவின்” நன் மதிப்பை பெறுவதற்காக உச்ச நீதிமன்றத்தில் உரிய ஆதாரங்களுடன் வாதிடாமல் தமிழ்நாட்டை அவமதிப்பதும், தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிப்பதும், ஒன்றிய அரசு தரவேண்டிய கல்வி நிதியை கேட்டுப் பெறாமல் கள்ள மவுனம் சாதிப்பதும், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில்  ஒன்றிய அரசின் முடிவுக்கு ஒப்புதல் என்று தொடர்ந்து நேரடியாக ஒன்றிய அரசிடம் சரணாகதி அடைந்து விட்டீர்கள்! </p><h2>கல்லாப்பெட்டி கூட்டணி</h2><p>ஆட்சிக்கு வந்த உங்களுக்கு கொள்கையோ, தமிழ் பற்றோ, தமிழ்நாட்டின் மீது பற்றோ, தமிழ்நாட்டு மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்ற மனப்பான்மையோ இல்லாமல், தங்களை சுற்றி இருக்கும் “ரெட்டி கேங் துணையோடு” ஆட்சி, அதிகாரம் மற்றும் பணம் மீது மோகம் கொண்டு பாஜகவின் உதவியோடு ஆட்சி அமைத்து சில கல்லாப்பெட்டி கட்சிகளின் கூட்டணியோடு ஆட்சியில் தொடரும் விஜய் அவர்களே! </p><p>சிலரை சிலநாள் ஏமாற்றலாம்! பலரை பல நாள் ஏமாற்றலாம்! எல்லோரையும் எல்லா நாளும் ஏமாற்ற முடியாது! </p><p>உங்கள் மக்கள் விரோத போக்கை தமிழ்நாட்டு மக்கள் அடையாளம் கண்டுவிட்டார்கள். உங்கள் அரசியல் ஆட்டத்திற்கு விரைவில் தமிழ்நாட்டு மக்கள் முடிவுகட்ட தயாராகி விட்டார்கள்!” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>IIT மாணவன் தற்கொலை விவகாரம் - பேராசிரியர் மீது வழக்கு பதிந்த போலீசார்!</title><link>https://www.maalaimalar.com/news/national/iit-mumbai-student-suicide-professor-booked-by-police</link><comments>https://www.maalaimalar.com/news/national/iit-mumbai-student-suicide-professor-booked-by-police#comments</comments><guid isPermaLink="false">0f4ff128-fa40-42f6-9c8e-695988ce8c25</guid><pubDate>Sun, 20 Sep 2026 08:49:03 +0000</pubDate><atom:updated>2026-09-20T08:49:03.168Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>student protest,mumbai,மும்பை,Caste discrimination,IIT,Mumbai Police,Sahil Wakode,ChatGPT Copy Case</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/46qzaagj/Mumbai-IIT" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mumbai IIT]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/46qzaagj/Mumbai-IIT?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88">மும்பை </a>ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் சாகில் வாகோடே (வயது 20) என்ற மாணவர் எனர்ஜி அன்ட் சயின்ஸ் துறையில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். கடந்த 17ந்தேதி வகுப்பறையில் நடந்த தேர்வை மாணவர் சாகில் வாகோடே எழுதினார்.</p><h2>மாணவர் தற்கொலை</h2><p>தேர்வில்<a href="https://www.maalaimalar.com/topic/chatgpt"> சாட் ஜி.பி.டி</a>.யை பயன்படுத்தி காப்பி அடித்ததாக கூறப்படுகிறது. இதை கண்டுபிடித்த ஆசிரியர்கள் சாகில் வாகோடேவை கண்டித்தனர். இதனால் மனமுடைந்த அவர் கல்லூரி விடுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.</p><p>மாணவர் தற்கொலை விவகாரத்தில் மும்பை<a href="https://www.maalaimalar.com/topic/iit-bombay"> ஐ.ஐ.டி.</a> நிர்வாகத்தை கண்டித்து கல்வி நிறுவன வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டனர்.</p><h2>தந்தை புகார்</h2><p>இந்த நிலையில் <a href="https://www.maalaimalar.com/news/national/iit-student-dies-by-suicide-after-using-chatgpt-in-exam">மாணவர் சாகில் வாகோடே தற்கொலை</a> செய்த சம்பவம் தொடர்பாக அவரது தந்தை ரவீந்திர சக்ரதார் ​​வான்கடே மும்பை போலீசில் புகார் செய்தார். </p><p>அதில் சாதி ரீதியாக தனது மகனை மிரட்டியதாக பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.</p><h2>இதுகுறித்து அவர் தனது புகாரில் கூறி இருப்பதாவது:-</h2><p>எனது மகன் சாகில், விடுதியில் தங்கி இருந்து மும்பை ஐ.ஐ.டி.யில் படித்து வந்தார். கல்லூரியின் முதல் ஆண்டு சுமூகமாக சென்றது.</p><p>2-ம் ஆண்டில்தான் அவருக்கு பிரச்சினைகள் தொடங்கின. கடந்த 3 மாதங்களாக சாகில் கடுமையான மன உளைச்சலுக்கும், சாதி கொடுமைகளுக்கும் உள்ளாக்கப்பட்டார்.</p><h2><strong>நடவடிக்கை</strong></h2><p>சாகில் தேர்வு எழுதிய போது பேராசிரியர் சூர்ய நாராயண் துல்லா தேர்வு மையத்தில் கண்காணிப்பு பணியில் இருந்தார். மும்பை ஐ.ஐ.டி. இயக்குனரின் தூண்டுதலின் பேரில் அவர் எனது மகனை சாதி பெயரை சொல்லி திட்டியுள்ளார். </p><p>தான் ஒரு தாழ்ந்த சாதியை சேர்ந்தவன் என்பதால், தன்னை பொய் வழக்கில் எளிதாக சிக்க வைத்துவிட முடியும் என்று பேராசிரியர் சூர்யநாராயண் துல்லா ஏற்கனவே மிரட்டியதாக சாகில் ஒருமுறை என்னிடம் தெரிவித்துள்ளார். </p><p>எனவே என் மகனை தற்கொலைக்கு தூண்டியதற்கு சூர்யநாராயண் துல்லாவே காரணம். அவர் மீதும், மற்ற உயர் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது புகாரில் கூறி இருந்தார்.</p><h2><strong>தாயார் குற்றச்சாட்டு</strong></h2><p>முன்னதாக சாகிலின் தாயாரும் தனது மகன் துன்புறுத்தப்பட்டதாக குற்றம் சாட்டி இருந்தார். அவர் கூறுகையில் ‘என் மகன் கொல்லப்பட்டு விட்டான். அவன் கடுமையாக துன்புறுத்தப்பட்டுள்ளான். எங்களுக்கு நீதி வேண்டும்’ என்று கூறியுள்ளார்.</p><p>இந்த புகாரின் அடிப்படையில் மாணவரை தற்கொலைக்கு தூண்டியதாக பேராசிரியர் சூர்ய நாராயண் துல்லா மீது மும்பை வழக்குப்பதிவு செய்துள்ளனர். முதல் தகவல் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற 2 பேரின் பெயர்களை போலீசார் வெளியிடவில்லை.</p><p>இந்த விசாரணை குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D">மும்பை போலீஸ்</a> வட்டாரங்கள் தெரிவித்தன.</p>]]></content:encoded></item><item><title>யூடியூபர் இர்பான் கார் மோதி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.30.69 லட்சம் நிவாரணம் வழங்க நீதிமன்றம் உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/youtuber-irfan-luxury-car-accident-court-awards-rs-30-69-lakh-compensation</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/youtuber-irfan-luxury-car-accident-court-awards-rs-30-69-lakh-compensation#comments</comments><guid isPermaLink="false">cd047178-59a0-49e9-83ce-da46b102f89f</guid><pubDate>Sun, 20 Sep 2026 08:47:52 +0000</pubDate><atom:updated>2026-09-20T08:47:52.580Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Youtuber Irfan,யூடியூபர் இர்பான்,Irfan car accident,Small Causes  Court,இர்பான்,சிறு வழக்குகள் நீதிமன்றம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/oi7j7epm/irfab.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ IRFAN]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/oi7j7epm/irfab.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இர்பானுக்குச் சொந்தமான அதிநவீன சொகுசு கார் மோதியதில்,  பத்மாவதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p>கடந்த 2023-ஆம் ஆண்டுபிரபல யூடியூபர் முகமது இர்பானின் கார் மோதி பெண் ஒருவர் உயிரிழந்த வழக்கில், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.30.69 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><p>கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம், தஞ்சாவூரிலிருந்து சென்னை நோக்கி ஜி.எஸ்.டி சாலையில் சென்று கொண்டிருந்த போது, செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் நகராட்சி அலுவலகம் அருகே சாலையை கடக்க முயன்ற பத்மாவதி (55) என்ற பெண் மீது <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/new-film-certification-guidelines-india">இர்பானுக்குச்</a> சொந்தமான அதிநவீன சொகுசு கார் மோதியது. இதில் பத்மாவதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2><strong>காப்பீட்டுத் தொகை</strong></h2><p>இச்சம்பவம் குறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இந்த விபத்து தொடர்பான வழக்கு சென்னை சிறு வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், விபத்தில் உயிரிழந்த பத்மாவதியின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.30.69 லட்சம் வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. காரின் காப்பீட்டு நிறுவனம் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பு இந்த நிவாரணத் தொகையை உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>செயற்கை நுண்ணறிவுக்கு புதிய பெயர் சூட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டம்!</title><link>https://www.maalaimalar.com/news/world/trump-plan-to-rename-artificial-intelligence</link><comments>https://www.maalaimalar.com/news/world/trump-plan-to-rename-artificial-intelligence#comments</comments><guid isPermaLink="false">ca90277c-8f82-4a48-aab5-474dfd45048f</guid><pubDate>Sun, 20 Sep 2026 08:26:34 +0000</pubDate><atom:updated>2026-09-20T08:26:34.621Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Artificial Intelligence,Donald Trump,டொனால்ட் டிரம்ப்,TRUTH Social,செயற்கை நுண்ணறிவு,Superior Intelligence,எக்ஸ்ட்ரீம் இன்டெலிஜென்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/ugloxw06/trump.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Donald Trump]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/ugloxw06/trump.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வேகமாக வளர்ந்து வரும் இந்த தொழில்நுட்ப புரட்சிக்கு மிகவும் கம்பீரமான மற்றும் சரியான பெயரை தேர்வு செய்ய மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>செயற்கை நுண்ணறிவு என்ற சொல் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பொருத்தமானதாக இல்லை என்றும், அதற்கு புதிய மற்றும் நேர்த்தியான பெயர் சூட்டப்பட வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் யோசனை தெரிவித்துள்ளார்.</p><h2><strong>'செயற்கை நுண்ணறிவு' சொல் தவறானது</strong></h2><p>தனது சமூக வலைத்தளமான ட்ரூத் சோஷியல் மற்றும் 'எக்ஸ்' தளங்களில் இது தொடர்பாக பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "செயற்கை நுண்ணறிவு" என்ற வார்த்தை துல்லியமற்றதாகவும், நேர்த்தியற்றதாகவும் பலரால் கருதப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். வேகமாக வளர்ந்து வரும் இந்த தொழில்நுட்ப புரட்சிக்கு மிகவும் கம்பீரமான மற்றும் சரியான பெயரை தேர்வு செய்ய மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><h2>3 புதிய பெயர்<strong>கள் பரிந்து</strong>ரை</h2><p>ஏஐ-க்கு பதிலாக மாற்றுப் பெயர்களை பரிந்துரைத்து டிரம்ப் இணையதளத்தில் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பைத் தொடங்கியுள்ளார். அதில் அவர் முன்வைத்துள்ள மூன்று பெயர்கள்:</p><p>* சுப்பீரியர் இன்டெலிஜென்ஸ் </p><p>* எக்ஸ்ட்ரீம் இன்டெலிஜென்ஸ் </p><p>* சுப்ரீம் இன்டெலிஜென்ஸ் </p><p>இந்த மூன்று பெயர்களில் எது மிகவும் சிறந்தது என்பதற்கு மக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்யுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>செயற்கை நுண்ணறிவுத் துறையின் வளர்ச்சியை அமெரிக்க அரசு எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது என்றும், சீனாவுடனான தொழில் நுட்பப் போட்டியில் அமெரிக்கா தொடர்ந்து முன்னிலை வகிக்கும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், ஏஐ தொழில்நுட்ப முறைகேடுகளை கண்காணிக்க 'ஏஐ ஃபோர்ஸ்' என்ற புதிய அரசு அமைப்பை உருவாக்க இருப்பதாகவும், இதற்காக விரைவில் ஒரு சிறப்பு அதிகாரியை நியமிக்கப்போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஆந்திர கடற்கரையில் ரோட்டோர கடையில் பெண்ணிடம் முரிமிக்சர் வாங்கி சுவைத்த சந்திரபாபு நாயுடு </title><link>https://www.maalaimalar.com/news/national/chief-minister-n-chandrababu-naidu-who-was-at-rk-beach</link><comments>https://www.maalaimalar.com/news/national/chief-minister-n-chandrababu-naidu-who-was-at-rk-beach#comments</comments><guid isPermaLink="false">11560122-e56d-411f-a61b-728a2562f555</guid><pubDate>Sun, 20 Sep 2026 08:24:23 +0000</pubDate><atom:updated>2026-09-20T08:24:23.492Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ChandraBabu Naidu,சந்திரபாபு நாயுடு,ஆந்திர கடற்கரை,Andhra coast</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/7jktijr4/chandrababu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chandrababu Naidu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/7jktijr4/chandrababu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதல்- மந்திரி தனது கடையில் மிக்சர் வாங்கி சாப்பிட்டதும் மகிழ்ந்த அவர் சந்திரபாபு நாயுடுவுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அந்த பெண்ணிடம் உரையாடிய சந்திரபாபு நாயுடு அவரது குடும்ப வருமானம், குடும்பம் பற்றி கேட்டார். அப்போது அந்தப் பெண் தனியாக வாழ்ந்து உழைத்து பிழைப்பு நடத்தி வருவதாக தெரிவித்தார்.</p><p>அதிர்ஷ்டம் யாருக்கு, எப்போது தேடி வரும் என்று சொல்ல முடியாது. அப்படி தான் ஆந்திராவின் விசாகப்பட்டினம் ஆர்.கே. கடற்கரையில் முரிமிக்சர், மாங்காய் விற்ற பெண்ணுக்கும் அதிர்ஷ்டம் தேடி வந்துள்ளது.</p><h2><strong>கடற்கரை</strong></h2><p>அந்த கடற்கரையில் பல ஆண்டுகளாக தற்காலிக கடை நடத்தி வரும் அந்த பெண்மணி வழக்கம் போல் நேற்றும் கடை நடத்தினார்.</p><h2><strong>பிளாஸ்டிக்</strong></h2><p>அந்த கடற்கரையில் சுவர்ண ஆந்திரா- ஸ்வச்ச ஆந்திரா என்ற கடற்கரை தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. கடலில் கலக்கும் பிளாஸ்டிக், கடல் அடியில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் மற்றும் மீன்பிடி வலைகள் உள்ளிட்டவை அகற்றப்பட உள்ளது. 1200 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்ற திட்டமிடப்பட்டு உள்ளனர்.</p><h2>சந்திரபாபு நாயுடு</h2><p>பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் மீனவர்களுக்கு உடனடியாக அதை டிஜிட்டல் மூலம் எடை போட்டு ஊக்கத் தொகையும் வழங்கப்படுகிறது. இது மீனவர்களுக்கு கூடுதல் வருமானம் ஈட்டவும் உதவுகிறது. இந்த பணிகளை ஆய்வு செய்ய முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடு ஆர்.கே. கடற்கரைக்குச் சென்றார்.</p><h2><strong>முரிமிக்சர்</strong></h2><p>கடல் மணலில் நடந்த படியே அந்த பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கடற்கரையில் முரிமிக்சர் விற்றுக் கொண்டிருந்த அந்தப் பெண் மணி அவரது கண்ணில் பட்டார். அவரிடம் சென்று முரிமிக்சரை வாங்கி சுவைத்தார். முதல்- மந்திரி தனது கடையில் மிக்சர் வாங்கி சாப்பிட்டதும் மகிழ்ந்த அவர் சந்திரபாபு நாயுடுவுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அந்த பெண்ணிடம் உரையாடிய சந்திரபாபு நாயுடு அவரது குடும்ப வருமானம், குடும்பம் பற்றி கேட்டார். அப்போது அந்தப் பெண் தனியாக வாழ்ந்து உழைத்து பிழைப்பு நடத்தி வருவதாக தெரிவித்தார்.</p><p>அதைக் கேட்ட <a href="https://www.maalaimalar.com/topic/சந்திரபாபு-நாயுடு">சந்திரபாபு நாயுடு</a> உடனடியாக அந்த பெண்ணிற்கு அரசின் ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>”துரோகம் பழகு” படத்தின் இரண்டாவது பார்வையை வெளியிட்டார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி..! 
</title><link>https://www.maalaimalar.com/cinema/cm-rangasamy-releases-second-look-of-thurogam-pazhagu</link><comments>https://www.maalaimalar.com/cinema/cm-rangasamy-releases-second-look-of-thurogam-pazhagu#comments</comments><guid isPermaLink="false">83e327e7-1466-4d3e-8554-9c6925d34a23</guid><pubDate>Sun, 20 Sep 2026 08:22:55 +0000</pubDate><atom:updated>2026-09-20T08:22:55.389Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>புதுச்சேரி முதல்வர்,என் ரங்கசாமி,Dhrogam Pazhagu,துரோகம் பழகு,Dhakshan Vijay,N. Rangaswamy</media:keywords><media:content height="1062" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/u6nk18yl/a55ab0da-69c9-49b5-a770-4c60ddce3a85.jfif" width="1600"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dhrogam Pazhagu ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/u6nk18yl/a55ab0da-69c9-49b5-a770-4c60ddce3a85.jfif?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா (Cinema)</category><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>துரோகம் பழகு </h2><p> சீயோன் ராஜா இயக்கத்தில் ,சி. பியூலா மகிழ் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய தமிழ் திரைப்படம் தான் துரோகம் பழகு . </p><h2>முதல் பார்வை </h2><p>படத்தின் முதல் பார்வையை இயக்குநர் எஸ்.வி. சேகர், ஆர்.கே. செல்வமணி, நட்டி நட்ராஜ், ராம்கி, பூனம் பாஜ்வா, இனியா, நந்திதா ஸ்வேதா மற்றும் அஷ்மிதா சிங் ஆகிய திரையுலகப் பிரபலங்கள் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் இணைந்து வெளியிட்டிருந்தனர்.</p><p>படத்தின் முதல் பார்வை வெளியாகி  படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது.இந்த நிலையில் படத்தின் இரண்டாவது பார்வையானது  தற்போது வெளியாகி உள்ளது.</p> <h2>இரண்டாவது பார்வை </h2><p>துரோகம்  பழகு திரைப்படத்தின் இரண்டாவது பார்வையை புதுச்சேரி முதல்வர்  என்.ரங்கசாமி அவர்கள் வெளியிட்டு படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.</p><h2>பாராட்டு </h2><p>சினிமாவில் பொதுநலன் சார்ந்த கருத்தை மையமாகக் கொண்டிருக்கும் இப்படத்தின் நாயகன் தக்க்ஷன் விஜய் அவர்களையும் முதலமைச்சர் அவர்கள் பாராட்டினார். </p><p>மேலும், திரைப்படத்தின் ரஃப் கட் காட்சிகளைப் பார்வையிட்ட முதலமைச்சர்  படக்குழுவினரின் பணியை வெகுவாகப் பாராட்டியதோடு, திரைப்படத்தின் முழுக் குழுவினரின் கடின உழைப்பிற்கும் தனது வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்தார்.</p><h2>விரைவில் </h2><p>துரோகம் பழகு திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது.  இதனைத் தொடர்ந்து திரைப்படம் வெகு விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>உடல்நல குறைவால் சிவாஜிகணேசன் மகள் சாந்தி மரணம் - மு.க.ஸ்டாலின் அஞ்சலி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/shivajiganesan-daughter-santhi-dies-mk-stalin-pays-tribute</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/shivajiganesan-daughter-santhi-dies-mk-stalin-pays-tribute#comments</comments><guid isPermaLink="false">67013919-901d-4152-98b7-ce7381c8fb8d</guid><pubDate>Sun, 20 Sep 2026 08:19:43 +0000</pubDate><atom:updated>2026-09-20T08:19:43.109Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Sivaji Ganesan,MK Stalin,condolence,Sivakumar,Shanthi Theatre,Sivaji Family,Shanthi</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/pfxde57l/Sivaji-Ganesan-Daughter-Shanthi-Death" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sivaji Ganesan Daughter Shanthi Death - MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/pfxde57l/Sivaji-Ganesan-Daughter-Shanthi-Death?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/sivaji-ganesan">சிவாஜி கணேசனின்</a> மூத்த மகள் சாந்தி (வயது 72). அவரது கணவர் நாராயணசாமி. சாந்தி கடந்த 10 நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.</p><p>இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று அதிகாலை மரணம் அடைந்தார்.</p><p>சாந்தியின் மரணம் சிவாஜி குடும்பத்தினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.</p><p>சாந்தியின் உடல் வளசரவாக்கம் மேற்கு காமகோடி நகர், அருணாகிரி தெருவில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுஉள்ளது.</p><h2>மு.க.ஸ்டாலின் அஞ்சலி</h2><p>தி.மு.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/mk-stalin">மு.க. ஸ்டாலின்</a> காவேரி ஆஸ்பத்திரிக்கு சென்று சாந்தியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.</p><p>அவருடன் மனைவி துர்கா ஸ்டாலின், தலைமை நிலையச்செயலாளர் பூச்சி முருகன், முன்னாள் அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/anbil-mahesh-poyyamozhi">அன்பில் மகேஷ் பொய்யாமொழி</a>, முன்னாள் எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோரும் சென்று இருந்தனர்.</p><h2>தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-</h2><p>“தலைவர் கலைஞரும் - நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் நட்புக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்கள். காலத்தால் கரையாத அவர்களது நட்பின் பாசம், இரு குடும்பங்களையும் தலைமுறைகள் கடந்த உறவாகப் பிணைத்திருக்கிறது. </p><p>அந்தப் பாசப் பிணைப்பில் எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே அன்பு பாராட்டி வந்த சகோதரி சாந்தியின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.</p><p>அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புச் சகோதரியை இழந்து ஆற்றொணாத் துயரில் வாடும் அவரது கணவர் நாராயணசாமி, மகள்கள் விஜி லட்சுமி, சத்யவதி, சகோதரர்கள் ராம்குமார், பிரபு உள்ளிட்ட குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அவர் கூறி உள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/sivakumar">நடிகர் சிவக்குமார்</a> மற்றும் திரை பிரபலங்களும் நேரில் சென்று சாந்தி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.</p><p>சென்னை அண்ணா சாலையில் சிவாஜிகணேசன் தனது மகள் பெயரில்தான் சாந்தி தியேட்டரை கட்டி இருந்தார். இந்த தியேட்டரில் பல்வேறு வெற்றி படங்கள் திரையிடப்பட்டும் உள்ளது. </p><p>சென்னை அண்ணா சாலையில் முக்கிய அடையாளமாக சாந்தி தியேட்டர் பெயர் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>ஆசிய விளையாட்டு: ஷபாலி சதம் - வங்கதேசத்தை சுருட்டி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/team-india-enter-final-asian-games-n-womens-cricket</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/team-india-enter-final-asian-games-n-womens-cricket#comments</comments><guid isPermaLink="false">c0f5616f-5993-4124-ae53-43a7a372f699</guid><pubDate>Sun, 20 Sep 2026 08:02:41 +0000</pubDate><atom:updated>2026-09-20T08:02:41.762Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,Bangladesh,வங்கதேசம்,Asian Games,ஆசிய விளையாட்டு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/4ysc2gjt/shafali.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ shafali varma]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/4ysc2gjt/shafali.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஆசிய விளையாட்டின் பெண்கள் கிரிக்கெட்டில் வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா.</strong></em></p><p>ஆசிய விளையாட்டில் பெண்கள் கிரிக்கெட்டின் அரையிறுதி போட்டிகள் ஜப்பானில் நடைபெற்றது.</p><p>ஜப்பானின் நிஷின் நகரில் இன்று நடைபெற்ற 2-வது அரையிறுதி போட்டியில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது. </p><h2>ஷபாலி அதிரடி சதம்</h2><p>அதன்படி, முதலில் ஆடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா அதிரடியாக ஆடி 49 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 40 ரன்கள் எடுத்தார்.</p><p>இதையடுத்து, 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. இந்திய அணியினரின் துல்லிய பந்துவீச்சில் சிக்கி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.</p><p>தொடக்க வீராங்கனை திலாரா அக்தர் அதிகபட்சமாக 27 ரன்கள் எடுத்தார்.</p><p>இறுதியில், வங்கதேச அணி 15.4 ஓவரில் 81 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 114 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.</p><h2>தீப்தி சர்மா அசத்தல்</h2><p>இந்தியாவின் தீப்தி சர்மா, நந்தினி சர்மா தலா 3 விக்கெட்டும், ஸ்ரீசரணி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p>நாளை மறுதினம் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்திய அணி இலங்கை அணியுடன் மோதுகிறது.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலுக்கு பா.ஜனதா எதிர்ப்பு: உடனே ரத்து செய்யும்படி தேர்தல் ஆணையத்தில் புகார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/byelection-bjp-complaint-against-tvk-star-campaigners-list</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/byelection-bjp-complaint-against-tvk-star-campaigners-list#comments</comments><guid isPermaLink="false">38dc7b9a-a897-4049-8686-2885a871b7f9</guid><pubDate>Sun, 20 Sep 2026 08:00:52 +0000</pubDate><atom:updated>2026-09-20T08:00:52.071Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,தவெக,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/poz4ebqd/TVKVijay0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தவெக கூட்டணி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/poz4ebqd/TVKVijay0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இடைத்தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கும் த.வெ.க.-வின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள நிலையில் பாஜக எதிர்ப்பு தெரிவித்து புகார் அளித்துள்ளது.</p><p>தமிழக பா.ஜனதா செயலாளர் கராத்தே தியாகராஜன் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி உள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழகத்தில் நடைபெற உள்ள மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் பிரசாரம் செய்வதற்காக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.</p><p>இந்த நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் தமிழக வெற்றிக்கழகத்தினுடைய நட்சத்திர பேச்சாளர்களாக தமிழக முதல்-அமைச்சர்   விஜய்யுடன் காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, துரை வைகோ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காதர் மொகிதீன், வி.சி.க. கட்சியைச் சார்ந்த ரவிக்குமார் எம்.பி, வன்னி அரசு மற்றும் சிந்தனை செல்வன் போன்ற பிற கட்சிகளின் தலைவர்கள் பெயர்கள் இடம் பெற்று உள்ளன. </p><p>நட்சத்திர பேச்சாளர்களை பொருத்தவரை அந்தந்த கட்சியை சார்ந்த தலைவர்களை மட்டுமே நட்சத்திர பேச்சாளர்களாக அறிவிக்க முடியும் என்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தினுடைய பிரிவு 77-ல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>பிற கட்சிகளை சேர்ந்தவர்கள் பெயர்</h2><p>இப்படி சட்டத்தினுடைய பிரிவு தெளிவாக குறிப்பிட்டு இருக்கும்போது, தமிழக தேர்தல் ஆணையம் த.வெ.க. கொடுத்துள்ள 40 பேர் கொண்ட நட்சத்திர வேட்பாளர் பட்டியலில் பிற கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய பேர்களைக் கொண்ட அந்த பட்டியலை தமிழக வெற்றி கழகத்தினுடைய நட்சத்திர பேச்சாளர்களாக அங்கீகரித்து உள்ளது.</p><p>இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை கேலிக்கூத்தாக்கும் செயலாக உள்ளது. சட்டத்தின்படி நடக்க வேண்டிய தேர்தல் ஆணையத்தையும் சட்டத்தையும் கேலிக் கூத்தாக்கி ஆளும் கட்சியான த.வெ.க.வுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளது.</p><p>ஏற்கனவே இதே போன்று ஆம்ஆத்மி கட்சி அதன் உறுப்பினர் அல்லாத வரை நட்சத்திர வேட்பாளராக அறிவித்த விவகாரத்தில் சர்ச்சை எழுந்து, பிறகு கட்சியின் உறுப்பினர் அல்லாதவர் நட்சத்திர பேச்சாளராக இருக்க முடியாது என்ற நிலை உருவானது.</p><p>எனவே உடனடியாக தேர்தல் ஆணையம் த.வெ.க.வுக்கு 2026 மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக த.வெ.க.வுக்க அங்கீகரித்துள்ள நட்சத்திர பேச்சாளர் பட்டியலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறி உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் உண்ணி காய்ச்சல் பரவல்: பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை அறிவுரை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-scrub-typhus-cases-rise-health-officials-urge-precautions</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-scrub-typhus-cases-rise-health-officials-urge-precautions#comments</comments><guid isPermaLink="false">92c6f3f1-ce74-4c17-8f50-74eb61f37d58</guid><pubDate>Sun, 20 Sep 2026 07:52:06 +0000</pubDate><atom:updated>2026-09-20T07:52:06.534Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Dengue,Ministry of Health and Family Welfare,டெங்கு,சுகாதாரத் துறை,Unni fever,உண்ணி காய்ச்சல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/sa701w2w/Untitled-design-26.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Unni Fever]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/sa701w2w/Untitled-design-26.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் உண்ணி காய்ச்சல் பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத் துறை இயக்குநர் அறிவுரை வழங்கியுள்ளார்.</p><p>தமிழகத்தில் உண்ணி காய்ச்சல் பரவலாக அதிகரித்து வரும் நிலையில், ஆகஸ்ட் முதல் ஜனவரி வரை உண்ணி காய்ச்சல் பரவல் அதிகமாக இருக்கும் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">தமிழக சுகாதார துறை</a> இயக்குநர் தெரிவித்துள்ளார். </p><p>தமிழ்நாட்டில் பருவநிலை மாற்றம், வடகிழக்கு பருவமழையால் டெங்கு மற்றும் உண்ணி காய்ச்சல் ஆங்காங்கே பரவலாக காணப்படுகிறது.</p><h3><strong>சுகாதாரத் துறை இயக்குநர்</strong></h3><p>இந்நிலையில் இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம் கூறுகையில், பருவமழை காரணங்களால் பல்வேறு வகையான நோய் பாதிப்புகள் மக்களிடையே பரவலாக கண்டறியப்பட்டு வருகிறது.</p><p>தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் இல்லாமல், பலவிதமான காய்ச்சல்கள் பரவி வருகிறது. இதில் ஒருவகையான காய்ச்சலாக, தற்போது ‘ஸ்க்ரம் டைபஸ்’ (scrub typhus) என்று அழைக்கப்படும் உண்ணி காய்ச்சல் அதிகரித்த வண்ணம் உள்ளது.</p><p>இந்த வகையான காய்ச்சல் ’ஓரியண்டியா சுட்சுகாமுஷி’ என்ற பாக்டீரியா தொற்றால் ஏற்படுகிறது. இந்தவகையான பாக்டீரியாக்கள் புல் மற்றும் புதர்களில் காணப்படும் ஒட்டுண்ணியாக வாழ்கிறது.</p><p>இந்த பாக்டீரியா முன்பு காட்டுப் பகுதிகளில் இருந்து பரவியது; ஆனால் தற்போது பருவநிலை மாற்றம் காரணமாக பரவலாக அனைத்து இடங்களிலும் அதிகரித்த வண்ணம் உள்ளது.</p><p>இந்த காய்ச்சல் பாதிப்பின் போது, பாதிப்புக்குள்ளான நபர்களுக்கு உடல்வழி, சோர்வு, பசியின்மை போன்ற அறிகுறிகள் காணப்படும். </p><p>இந்த வகையான ஏதாவது ஒரு அறிகுறிகள் ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட நபர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.</p><p>மேலும் இந்த காய்ச்சல் தொடர்பாக பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை, ஆனால் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வடக்கு அந்தமான் கடல் பகுதியில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/pressure-area-forming-over-andaman-sea</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/pressure-area-forming-over-andaman-sea#comments</comments><guid isPermaLink="false">af23afef-5c6d-404f-927e-f6c1f901f473</guid><pubDate>Sun, 20 Sep 2026 07:47:48 +0000</pubDate><atom:updated>2026-09-20T07:47:48.069Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>IMD,இந்திய வானிலை ஆய்வு மையம்,Low pressure,குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி,அந்தமான்,Andaman sea</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/j51rft9y/chennaimeteorological.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/j51rft9y/chennaimeteorological.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது.</p><p>வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p>இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-</p><h2><strong>வடக்கு அந்தமான்</strong></h2><p>வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது.</p><h2><strong>காற்றழுத்த தாழ்வு மண்டலம்</strong></h2><p>அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், வருகிற 22-ந்தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்று, வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.</p><h2><strong>பலத்த மழை</strong></h2><p>இதன் காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை, கடலூர், கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் இன்றும் நாளையும் இடி, மின்னல், காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.</p><h2><strong>சென்னை</strong></h2><p>சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சிவகங்கை, ஈரோடு, ராமநாதபுரம், நாமக்கல், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், கரூர், புதுக்கோட்டை, மற்றும் நாகை மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.</p><h2><strong>மீனவர்கள்</strong></h2><p>தென் தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். சூறாவளி காற்று வீசக்கூடிய பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை - புறநகர் பகுதிகளில் 2500 விநாயகர் சிலைகள் இன்று கடலில் கரைப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/over-2500-vinayagar-idols-immersed-in-sea-across-chennai-suburbs</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/over-2500-vinayagar-idols-immersed-in-sea-across-chennai-suburbs#comments</comments><guid isPermaLink="false">d178c33b-9e6f-4557-a1e4-089b9b29605c</guid><pubDate>Sun, 20 Sep 2026 07:46:47 +0000</pubDate><atom:updated>2026-09-20T07:46:47.340Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Beach,Vinayagar Chaturthi,விநாயகர் சதுர்த்தி 2026,Ganesh Visarjan 2026,விநாயகர் சிலை கரைப்பு,2500 Idols Immersion</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/zbprmdwi/Vinayagar-idol-immersion" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vinayagar idol immersion]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/zbprmdwi/Vinayagar-idol-immersion?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">விநாயகர் சதுர்த்தி விழா</a> கடந்த 14-ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.</p><p>அன்றைய தினம் சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும், பொதுநல அமைப்பினரும் விநாயகர் சிலைகளை வைத்து வழிப்பட்டனர்.</p><h2><strong>விநாயகர் சிலைகள் கரைப்பு</strong></h2><p>மாநிலம் முழுவதும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெரிய சிலைகள் மற்றும் சிறிய சிலைகள் என 1 லட்சத்துக்கும் அதிகமான சிலைகள் நிறுவப்பட்டு தினமும் பூஜைகள் செய்யப்பட்டு வந்தன.</p><p>ஒவ்வொரு நாளும் விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தி பாடல்களும் இசைக்கப்பட்டன. இதுபோன்று பொது இடங்களில் வைக்கப்பட்ட சிலைகளை நேற்றும், இன்றும் நீர்நிலைகளில் கரைப்பதற்கு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">போலீசார் </a>அனுமதி அளித்து இருந்தனர். </p><p>இதன்படி சென்னை உட்பட பல்வேறு இடங்களிலும்<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D"> விநாயகர் சிலைகள்</a> நேற்று முதல் கரைக்கப்பட்டன.</p><p>சென்னையில் நேற்று சுமார் 200 சிலைகள் கடலில் கரைக்கப்பட்டது. தாம்பரம், ஆவடி, சென்னை மாநகர பகுதிகளில் இருந்து இந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு பலத்த பாதுகாப்புடன் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கடற்கரைகளில் கரைக்கப்பட் டன.</p><h2><strong>பிரமாண்ட ஊர்வலம்</strong></h2><p>சென்னை மாநகரில் 1,562 விநாயகர் சிலைகளும், தாம்பரம் கமிஷனர் அலுவலக பகுதியில் 636 விநாயகர் சிலைகளும், ஆவடி கமிஷனர் அலுவலகத்துக்கு உட்பட்ட எல்லைகளில் சுமார் 761 சிலைகளும் நிறுவப்பட்டிருந்த நிலையில் நேற்று கரைத்தது போக மீதமுள்ள அத்தனை சிலைகளும் இன்று கடலில் கரைக்கப்பட்டது.</p><p>இதையொட்டி பிரமாண்ட ஊர்வலமும் நடைபெற்றது. விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்வதற்கு போலீசார் வழிதடங்களையும் அறிவித்து இருந்தனர்.</p><p>இப்படி போலீஸ் தரப்பில் அனுமதிக்கப்பட்ட வழிதடங்கள் வழியாக மட்டுமே விநாயகர் சிலை ஊர்வலத்தை நடத்த வேண்டும் என்று விழா குழுவினருக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.</p><p>இதன்படி சென்னையில் இன்று 1500-க்கும் அதிகமான சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு, திருவொற்றியூர் போன்ற கடற்கரை பகுதிகளில் கரைக்கப்பட்டது.</p><h2><strong>தாம்பரம்-ஆவடி</strong></h2><p>தாம்பரம் கமிஷனர் அலுவலக பகுதிக்கு உட் பட்ட புறநகர் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 600 -க்கும் மேற்பட்ட சிலைகளும், ஆவடி பகுதியில் நிறுவப்பட்டிருந்த 700 -க்கும் மேற்பட்ட சிலைகளும் பாலவாக்கம் மற்றும் கோவளம் கடற்கரைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு கரைக்கப்பட்டது.</p><p>இதேபோன்று ஆவடி கமிஷனர் அலுவலக எல்லைகளில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் அனைத்தும் பழவேற்காடு, எண்ணூர், காட்டுப்பள்ளி ஆகிய 3 இடங்களில் கரைக்கப்பட்டன.</p><p>இதன்மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று 9 இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 2500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.</p><h2><strong>23 ஆயிரம் போலீசார்</strong></h2><p>சென்னையில் 16,500 போலீசாரும், ஆவடி பகுதியில் 1,500 போலீசாரும், தாம்பரம் பகுதியில் 1,300 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.</p><p>கடற்கரை பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக கிரேன்கள் வரவழைக்கப்பட்டு போலீசாரும் குவிக்கப்பட்டு இருந்தனர். சிலைகளை கடலுக்குள் எடுத்து செல்வதற்காக கடற்கரை மணல் பரப்பில் டிராலிகள் அமைக்கப்பட்டு இருந்தன.</p><p>அதில் சிலைகளை கிரேன் மூலம் தூக்கி வைத்து கடலுக்குள் கொண்டு செல்லப்பட்டன. பின்னர் விநாயகர் சிலைகளை விழா ஏற்பாட்டாளர்கள் கரைத்தனர்.</p><h2><strong>போலீஸ் கமிஷனர்கள்</strong></h2><p>போலீஸ் கமிஷனர்கள் அமல்ராஜ் (சென்னை), பிரேமானந்த் சின்ஹா (தாம்பரம்), செந்தில் குமார் (ஆவடி) ஆகியோரது மேற் பார்வையில் விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் சிலை கரைப்பு ஆகியவற்றை கூடுதல் கமிஷனர்கள், இணை ஆணையர்கள், துணை கமிஷனர்கள் மற்றும் உதவி கமிஷனர்கள் ஆகியோர் கண்காணித்தனர்.</p><p>அந்தந்த பகுதிகளை சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.</p><p>சிலைகள் கரைக்கப்பட்ட இடங்களில் தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆகியவையும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. சென்னை மெரினா கடற்கரையில் குதிரை படைகள் மூலமாகவும், கடற்கரை மணலில் செல்லும் ரோந்து வாகனத்திலும் போலீசார் கண்காணித்தார்கள்.</p><h2><strong>பழவேற்காடு</strong></h2><p>பழவேற்காடு மற்றும் காட்டுப்பள்ளி கடற்கரை பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் சிலைகளை கரைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருந்தனர்.</p><p>துணை கமிஷனர் மகேஸ்வரி தலைமையில் 100 -க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.</p><h2><strong>பட்டாசு வெடிக்க தடை</strong></h2><p>விநாயகர் ஊர்வலத்திலும் சிலைகளை கரைக்கும் இடங்களிலும் பட்டாசுகள் வெடிப்பதற்கு தடைவிதிக் கப்பட்டு இருந்தது. சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்றவர்கள் மாற்று மதத்தினரை அவமதிக்கும் வகையில் எந்தவித கோஷங்களையும் எழுப்பக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.</p><p>இதனை போலீசார் முழு மையாக கண்காணித்து தேவையில்லாத வகையில் கோஷம் எழுப்பியவர்களை கண்டித்தனர். விநாயகர் ஊர்வலம் செல்லும் பாதைகள் அனைத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மீசைய முறுக்கு 2 படம் இசைக் கலைஞர்களின் வாழ்க்கை போராட்டத்தை பேசும் – ஹிப்ஹாப்  ஆதி.!
</title><link>https://www.maalaimalar.com/cinema/meesaya-murukku-2-film-explores-struggles-of-music-artists-says-hiphop-aadhi</link><comments>https://www.maalaimalar.com/cinema/meesaya-murukku-2-film-explores-struggles-of-music-artists-says-hiphop-aadhi#comments</comments><guid isPermaLink="false">c46be62b-8253-4203-a966-361f769c6633</guid><pubDate>Sun, 20 Sep 2026 07:34:43 +0000</pubDate><atom:updated>2026-09-20T07:34:43.162Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Hiphop Tamizha Adhi,ஹிப்ஹாப் தமிழா ஆதி,Meesaya Murukku 2,மீசைய முறுக்கு 2,கானா இசை</media:keywords><media:content height="853" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/3v9dmc2i/WhatsApp-Image-2026-09-20-at-11.34.12-AM.jpeg" width="1280"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ meesaya murukku 2]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/3v9dmc2i/WhatsApp-Image-2026-09-20-at-11.34.12-AM.jpeg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா (Cinema)</category><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மீசையா முறுக்கு 2 </h2><p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/local-identity-global-recognition-the-rise-of-tamil-hip-hop-adi">ஹிப் ஹாப்  தமிழா</a> இயக்கி நடித்துள்ள படம் மீசைய முறுக்கு திரைப்படம் .  குஷ்பு சுந்தர்.சி மற்றும் ஏ.சி..எஸ் அருண்குமார் தயாரிப்பில்  திரைப்படமானது உருவாகியிருக்கிறது. </p><p>படத்தின் உலகளாவிய திரையங்க வெளியீட்டை முன்னிட்டு சென்னையில் மீசைய முறுக்கு 2 படக்குழுவினர் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைப்பெற்றது.</p><p>இதனைத் தொடர்ந்து படத்தின் பிரமாண்டமான புரமோஷன் பயணம் தொடங்கவுள்ளது.</p> <h2>கதாபாத்திரங்கள் </h2><p>மீசைய முறுக்கு 2 திரைப்படத்தில் கதாப்பாத்திரங்களாக ஹிப்ஹாப் ஆதி, கெத்திகா சர்மா, சைத்ரா ஜெ. ஆச்சார், ரம்யா ரங்கநாதன், பாபா பாஸ்கர், கருணாஸ், நாசர் மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர்.</p> <p>இந்த நிகழ்ச்சியில் பேசிய ஹிப்ஹாப் கூறியதாவது</p><p> மிகக் குறுகிய காலத்தில் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறுவதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி. குறிப்பாக, நமது தயாரிப்பாளர் சுந்தர் சி சார் அவர்களுக்கு இது மிகவும் முக்கியமான ஒரு தருணம் என்பதால், இந்த நிகழ்வு எனக்கு கூடுதல் அர்த்தம் கொண்டதாக இருக்கிறது என்று  தெரிவித்துள்ளார்.</p><h2>வித்தியாசம் </h2><p>மீசைய முறுக்கு வுக்கும் <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/hiphop-aathi-meesaiya-murukku-2-trailer-released">மீசைய முறுக்கு 2 </a>வுக்கும் உள்ள வித்தியாசம் குறித்து இயக்குநர் ஆதி கூறும்போது</p><p>மீசைய முறுக்கு என்னுடைய வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு பயோபிக். ஆனால், மீசைய முறுக்கு 2 அதைவிட மிகவும் பரந்த கதைக்களத்தைக் கொண்டது என்று தெரிவித்துள்ளார்.</p><p>இது இசை, இசைக் கலைஞர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கையைப் பற்றிய உலகளாவிய கதை. இசையைத் தங்களது வாழ்க்கைப் பாதையாகத் தேர்ந்தெடுக்கும் மனிதர்களின் கனவுகள், போராட்டங்கள், பயணங்கள் மற்றும் உணர்வுகளை இப்படம் பேசுகிறது.என்று தெரிவித்தார் </p><h2>கானா கலைஞர்கள்</h2><p>முக்கியமாக மீசைய முறுக்கு 2 திரைப்படம் முக்கியமான அம்சங்களில் ஒன்றாக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-crime-two-gaana-singers-hacked-to-death-by-helmet-wearing-gang-eps-slams-police-for-law-and-order-failure">கானா </a>கலைஞர்களின் உலகமும் அவர்களது வாழ்க்கையும் இடம்பெற்றுள்ளது. தங்களது வாழ்வில் எதிர்கொள்ளும் அனுபவங்களையும் போராட்டங்களையும் பாடல்களின் வழியாக வெளிப்படுத்தும் கலைஞர்களின் உலகத்தை இப்படம் பதிவு செய்திருப்பதாக  தெரிவித்துள்ளார்.</p><h2>ரசிகர்களை சந்திக்கும் படக்குழு </h2><p>செப்.25ம் தேதி முதல் மீசைய முறுக்கு 2 திரைப்படம்  வெளியாக இருக்கும் நிலையில் படத்திற்கான <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/cancel-kantara-chapter-1-promotional-event-790893">புரமோஷன் </a>பயணம் தொடங்கவுள்ளது. அதன்படி </p><p>கோயம்புத்தூர், மதுரை மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் படக்குழுவினர் ரசிகர்களை நேரில் சந்திக்க உள்ளனர்.</p><h2>நன்றி </h2><p>இந்தப் படத்தை உருவாக்குவதற்கும், மக்களிடம் கொண்டு செல்வதற்கும் உறுதுணையாக இருந்த சுந்தர் சி சார் மற்றும் குஷ்பு மேடம் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும்</p><p>அவர்களின் ஆதரவும் வழிகாட்டுதலும் இந்தப் படத்தின் உருவாக்கத்தில் மிகப்பெரிய பங்காற்றியுள்ளது என்று கூறி நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>புதிய தலைமைச் செயலகம் அமைக்க முதலமைச்சர் இன்னும் முடிவு செய்யவில்லை- ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-has-not-yet-decided-on-constructing-a-new-secretariat-aadhav-arjuna</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-has-not-yet-decided-on-constructing-a-new-secretariat-aadhav-arjuna#comments</comments><guid isPermaLink="false">870d39ac-90e7-4e09-9002-e23576ba4fa2</guid><pubDate>Sun, 20 Sep 2026 07:18:09 +0000</pubDate><atom:updated>2026-09-20T07:18:09.052Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Aadhav Arjuna,ஆதவ் அர்ஜுனா,தலைமைச் செயலகம்,New Secretariat,புதிய தலைமைச் செயலகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/pw37vtdl/adhavarjuna.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Aadhav Arjuna]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/pw37vtdl/adhavarjuna.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மீனவ சகோதரர்களே, சகோதரிகளே தலைமைச் செயலகம் விஷயத்தில் இன்னும் முதலமைச்சர் எந்த முடிவும் எடுக்கவில்லை. தலைமைச் செயலகமா? மீனவ மக்களின் வாழ்க்கையா? என்றால் கண்டிப்பாக மீனவ மக்கள் பக்கம்தான் எங்கள் முதலமைச்சர் நிற்பார்.</p><p>பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு எதிராக மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கம்யூனிஸ்டு கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.</p><h2><strong>அமைச்சர் </strong>ஆதவ் அர்ஜுனா</h2><p>இந்த நிலையில் இடைத்தேர்தலையொட்டி மதுராந்தகம் தொகுதியில் நடந்தபாக முகவர்கள் கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசும்போது, புதிய தலைமைச் செயலகம் திட்டம் குறித்து பேசியதாவது:-</p><h2><strong>தலைமைச் செயலகம்</strong></h2><p>தலைமைச் செயலகம், செக்ரடரியேட் அதை எல்லோரும் அரசியல் ஆக்குகிறார்கள். நாம் அதை செய்துவிடுவோம், இதை செய்துவிடுவோம் என்று பேசுகிறார்கள். பொதுவாக ஒரு திட்டம் அறிவிக்கும் போது அதற்கான இடம்குறித்து விரிவான திட்ட அறிக்கை (டி.பி.ஆர்.) பெறுவது வழக்கம். அதன் பிறகுதான் இடத்தை தேர்ந்தெடுப்போம். எனவே அந்த ரிப்போர்ட் வந்த பிறகுதான் அதை அங்கு கட்டலாமா? வேண்டாமா? என்று முடிவு செய்வார் முதலமைச்சர்.</p><h2><strong>முதலமைச்சர்</strong></h2><p>எனவே மீனவ சகோதரர்களே, சகோதரிகளே தலைமைச் செயலகம் விஷயத்தில் இன்னும் முதலமைச்சர் எந்த முடிவும் எடுக்கவில்லை. தலைமைச் செயலகமா? மீனவ மக்களின் வாழ்க்கையா? என்றால் கண்டிப்பாக மீனவ மக்கள் பக்கம்தான் எங்கள் முதலமைச்சர் நிற்பார்.</p><h2><strong>சட்டசபை</strong></h2><p>இன்னொன்று சொல்கிறேன். ஜெயித்து முடித்த பிறகு அவர் தி.மு.க., அ.தி.மு.க. என்று பார்ப்பது கிடையாது. எல்லோருக்கும் நல்லது செய்யுங்கள் என்கிறார். சட்டசபையில் தி.மு.க.வினர் அன்றைக்கு திடீரென சபாநாயகர் முன்பு தர்ணா செய்ததை நீங்கள் எல்லோரும் பார்த்திருப்பீர்கள். தர்ணாவில் ஈடுபட்ட ஒரு தி.மு.க. எம்.எல்.ஏ.வால் தரையில் இருந்து எழுந்திருக்க முடியவில்லை. அவர் பாவம் என்று முதலமைச்சர் விஜய் கை கொடுத்து தூக்கி விட்டார்.</p><h2><strong>தி.மு.க. போராட்டம்</strong></h2><p>நமது முதலமைச்சரை எதிர்த்து தி.மு.க. போராட்டத்தில் ஈடுபட்ட நேரத்தில் நம்முடைய முதலமைச்சர் அவர்களை கைதூக்கி விடுகிறார். இதுதான் எங்கள் அண்ணன். இவ்வளவு தான் எங்கள் அரசியல். பழி வாங்கும் அரசியல் எங்களுக்கு இல்லை. கம்யூனிஸ்டுகள் நம்மைப் பற்றி பேசுவது வருத்தமாக உள்ளது.</p><h2><strong>தி.மு.க. ஆட்சி</strong></h2><p>தி.மு.க. ஆட்சி நடந்த போது தி.மு.க.வினர் கமிஷன் வாங்கினார்களா? இல்லையா? என்பதை கம்யூனிஸ்டு கட்சியினர் மனசாட்சியோடு சொல்ல வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>சவுதிக்கு ஆதரவாக பாகிஸ்தான், துருக்கி செயல்பட்டால் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்: ஹவுதி எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/world/houthis-threaten-iron-fist-if-pakistan-turkey-back-saudi</link><comments>https://www.maalaimalar.com/news/world/houthis-threaten-iron-fist-if-pakistan-turkey-back-saudi#comments</comments><guid isPermaLink="false">be84bf11-c3a4-4d85-8410-5f39c130fc67</guid><pubDate>Sun, 20 Sep 2026 06:55:42 +0000</pubDate><atom:updated>2026-09-20T06:55:42.918Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>துருக்கி,Turkey,Houthi,ஹவுதி,மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம்,Mecca Defense Pact</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/zj1mwsgd/Untitled-design-25.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Houthis threaten Pakistan-Turkey military support]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/zj1mwsgd/Untitled-design-25.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சவுதி அரேபியாவுக்கு ஆதரவாக மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் துருக்கி ராணுவ உதவிகளை வழங்குவதாக அறிவித்ததை தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் துருக்கி நாடுகளுக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p><h3><strong>மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தம்</strong></h3><p>சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் ஆகஸ்ட் 2026-ஆம் ஆண்டு மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் கையெழுத்திட்டது. </p><p>இந்த ஒப்பந்தத்தின்படி, அந்நிய நாடுகள் ஏதாவது ஒரு உறுப்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்தும் போது, மற்ற உறுப்பு நாடுகள் தாக்குதல் நடத்தும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டது.</p><p>இதையடுத்து ஏமன் நாட்டில் முக்கிய நகரங்களை கைப்பற்றும் நோக்கில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF">ஹவுதிகள்</a> தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஏமனுக்கு ஆதரவாக சவுதி அரேபியா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் சவுதி அரேபியா மீது ஹவுதி தாக்குதல் நடத்தி வருகிறது.</p><h3><strong>சவுதி விமான நிலையத்தை தாக்கிய ஹவுதிகள்</strong></h3><p>இந்த தாக்குதலில் நேற்று சவுதியின் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில், ஹவுதிகள் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து சவுதிக்கு ஆதரவாக ராணுவ உதவிகளை வழங்குவதாக துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சர் ஹக்கான் ஃபிடான் தெரிவித்தார்.</p><p>மேலும் அவர் மெக்கா ஒப்பந்தத்தின் அடிப்படையில் ராணுவ கடமைகளை நிறைவேற்றுவதில் துருக்கி நாட்டிற்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லை எனவும் தெரிவித்தார்.</p><h3><strong>ஹவுதி எச்சரிக்கை</strong></h3><p>இந்த நிலையில் மூத்த ஹவுதி அதிகாரி முகமது அல்-புகைதி பாகிஸ்தான் மற்றும் துருக்கி நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p>இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், பாகிஸ்தான் மற்றும் துருக்கி மேற்கொள்ளும் நேரடி ராணுவ தலையீடு, கடுமையான ராணுவ நடவடிக்கைக்கு வழிவகுக்கும் என எச்சரித்தார்.</p><p>சவுதி தலைமையிலான ராணுவ நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார தடைகளுக்கு எதிராக தாங்கள் தற்காப்பு நிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.</p><h3><strong>இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்</strong></h3><p>இருப்பினும், சவுதிக்கு ஆதரவாக பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இணைந்தால், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு இரும்புக்கரம் கொண்டு பதிலடி கொடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.</p><p>பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் ராணுவ செயல்பாடுகளை தவிர்த்து, இரு நாட்டினரும், இந்த போரில் தலையிடாமல் இருக்கும்படியும் அவர் எச்சரித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மகாராஷ்டிரா அமைச்சரின் உறவினர் சுவீடன் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி.! </title><link>https://www.maalaimalar.com/news/world/daughter-of-maharashtra-minister-nila-wighe-patil-wins-swedish-parliament-election</link><comments>https://www.maalaimalar.com/news/world/daughter-of-maharashtra-minister-nila-wighe-patil-wins-swedish-parliament-election#comments</comments><guid isPermaLink="false">784c6a53-3ba9-4243-a657-60d4dfdf5259</guid><pubDate>Sun, 20 Sep 2026 06:46:23 +0000</pubDate><atom:updated>2026-09-20T06:46:23.874Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நாடாளுமன்ற தேர்தல்,ஸ்வீடன்,நிலா  விகே பாட்டில்,Nila Vikhe Patil,Swedish Parliament</media:keywords><media:content height="225" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/4aiiv9xb/nila-vikhe-patil.avif" width="400"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Swedish Parliament]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/4aiiv9xb/nila-vikhe-patil.avif?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மகாராஷ்டிராவுடன் தொடர்பு</h2><p>நிலா விகே படேல் சுவீடனில் பிறந்தவர். எனினும், தனது சிறு வயதின் பெரும்பகுதியை மகாராஷ்டிராவின் அகமதுநகரில் கழித்துள்ளார்.</p><p>அவர் மகாராஷ்டிராவை சேர்ந்த கல்வியாளர் அசோக் விகே படேலின் மகளும்  மறைந்த முன்னாள் மத்திய மந்திரி பாலாசாகேப் விகே படேலின் பேத்தியும், மகாராஷ்டிரா மந்திரி ராதாகிருஷ்ண விகே படேலின் சகோதரி மகளும் ஆவார்.</p><p>ஆசியாவின் முதல் கூட்டுறவு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-says-sugarcane-cultivation-must-be-increased-to-ensure-the-continued-operation-of-the-padalam-cooperative-sugar-mill">சர்க்கரை</a> ஆலையின் நிறுவனரான வித்தல்ராவ் விகே பாட்டிலின் கொள்ளுப் பேத்தி.</p><h2>நிலா விகே</h2><p> நிலா  விகே பாட்டில் சுவீடனில் பிறந்தவர் ஆவார். கோதென்பர்க் வணிகப் பள்ளியில் பொருளாதாரம் மற்றும் சட்டத்தில் இளங்கலைப் பட்டமும், எம்பிஏ பட்டமும் பெற்றுள்ளார். மேலும், மாட்ரிட்டில் உள்ள கம்ப்ளூட்டென்ஸ் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்துள்ளார்.</p><p>2020 முதல், அவர் ஒரு உலகளாவிய சேவை வலையமைப்பான பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அங்கு அவர் உத்தி, மேலாண்மை, தொழில்நுட்பம் மற்றும் இடர் ஆலோசனை சேவைகளை வழங்கி வருகிறார்.</p><h2>தேர்தலில் வெற்றி</h2><p>மகாராஷ்டிராவை சேர்ந்த நிலா விகே படேல் சுவீடன் நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுவீடனில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், ஸ்டாக்ஹோம் சிட்டி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.</p><p>41 வயதான நிலா விகே படேல், சுவீடன் நாட்டின் 349 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில் கிரீன் கட்சி சார்பில் எம்.பி.யாக செயல்பட உள்ளார்.</p><h2>குழந்தைகள் நலன்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/national/india-sweden-agree-to-elevate-ties-to-strategic-partnership-as-pm-modi-holds-talks-with-swedish-counterpart">சுவீடன் </a>நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து பேசிய நிலா, குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க இருப்பதாக தெரிவித்தார்.</p><p>வாக்களிக்க முடியாதவர்களின் குரலாக இருக்க விரும்புகிறேன். ஒவ்வொரு குழந்தைக்கும் நல்ல எதிர்காலத்துக்கான வாய்ப்பு கிடைக்கும் சமூகத்தை உருவாக்க பங்களிக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.</p><p>தொடர்ந்து பேசிய நிலா இயற்கையை பாதுகாத்தலில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் . தூய்மையான குடிநீர், <a href="https://www.maalaimalar.com/news/world/natural-underground-museum-to-rise-in-europe-by-2027">இயற்கை</a> வளங்களை பாதுகாத்தல் மற்றும் மனிதர்களால் ஏற்படும் இயற்கை பேரழிவுகளை குறைத்தல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று  கூறியுள்ளார்</p><h2>இந்தியாவை  நேசிக்கிறேன்</h2><p>சுவீடனில் வாழ்ந்து வந்தாலும் இந்தியாவுடனான தனது தொடர்பு தொடர்ந்து இருப்பதாக நிலா கூறியுள்ளார்.</p><p>இந்தியாவில் எனக்கு நெருங்கிய நண்பர்கள் நிறைபேர் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.எனது தாத்தாவை மிகவும் நினைத்துக் கொள்கிறேன். அவர் எனக்கு 15 வயதாக இருந்தபோது மாநில பட்ஜெட்டை படிக்கச் சொன்னார். அவரை பெருமைப்படுத்துவேன் என்று நம்புகிறேன்" என நிலா தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வெளிநாட்டு முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்- காளியம்மாள் பேட்டி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/white-paper-on-foreign-investment-must-be-released-kaliyammal</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/white-paper-on-foreign-investment-must-be-released-kaliyammal#comments</comments><guid isPermaLink="false">2370796c-dd35-4194-ba5d-ae7152b321fb</guid><pubDate>Sun, 20 Sep 2026 06:43:21 +0000</pubDate><atom:updated>2026-09-20T06:43:21.298Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அதிமுக,காளியம்மாள்,வெள்ளை அறிக்கை,White paper,Kaliyammal</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/6oc0s0es/kali.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kaliyammal]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/6oc0s0es/kali.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வெளிநாடு செல்லும்போது தொழில்துறை அமைச்சரை ஏன் அழைத்துச் செல்லவில்லை? இந்திய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய லண்டன் செல்ல வேண்டிய அவசியம் என்ன? மக்கள் வரிப்பணத்தை விரயம் செய்யாமல், இது குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.</p><p>புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அக்கட்சியின் கொள்கை பரப்பு துணைச்செயலாளர் காளியம்மாள் நிருபர்களிடம் கூறியதாவது:-</p><h2><strong>சட்டம்-ஒழுங்கு சீர்கேடு</strong></h2><p>தமிழகத்தில் 24 மணி நேரத்தில் 8 கொலைகள் நடக்கும் அளவுக்குச் சட்டம்-ஒழுங்கு மிக மோசமான சூழ்நிலையில் உள்ளது. வெறுமனே சினிமாவில் செய்வது போல ஆக்‌ஷன் காட்டுவதோ, ரீல்ஸ் பண்ணுவதோ ஆட்சியை வெற்றிகரமாக நடத்திவிட முடியாது. இதற்கு போதிய அனுபவம் தேவை.</p><h2><strong>முதலமைச்சர் விஜய்</strong></h2><p>முதலமைச்சர் விஜய் வெளிநாட்டுக்கு சென்று வெறும் 12,300 கோடி ரூபாய் மட்டுமே முதலீட்டை ஈர்த்துள்ளார். ஆனால் தொழில்துறை அமைச்சரோ இங்கேயே ரூ.1 லட்சம் கோடி ஈர்த்துள்ளதாகக் கூறுகிறார். வெளிநாடு செல்லும்போது தொழில்துறை அமைச்சரை ஏன் அழைத்துச் செல்லவில்லை? இந்திய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய லண்டன் செல்ல வேண்டிய அவசியம் என்ன? மக்கள் வரிப்பணத்தை விரயம் செய்யாமல், இது குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.</p><h2><strong>மக்கள் ஏமாற்றம்</strong></h2><p>தி.மு.க.வும் நாங்களும் தான் போட்டியாளர்கள் என்ற கட்டமைப்பை நிறுவ த.வெ.க. நினைக்கிறது. ஆனால் அ.தி.மு.க. 1.30 கோடிக்கும் அதிகமான தொண்டர்களை கொண்ட இயக்கம். சுறா படத்தில் மீனவர்களுக்காகப் பேசிய விஜய், இன்று நொச்சிக்குப்பம் மக்களை காலி செய்ய பார்க்கிறார். த.வெ.க.வுக்கு வாக்களித்த மக்கள் இன்று ஏமாற்றம் அடைந்துள்ளனர்.</p><h2><strong>இடைத்தேர்தல்</strong></h2><p>பா.ம.க.வின் முடிவுக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். அவர்கள் எங்களோடு வந்தால் பலம், வரவில்லை என்றாலும் அவர்களின் முடிவை ஏற்கிறோம். அ.தி.மு.க. மக்கள் நலனுக்காகத் தொடர்ந்து போராடி வருகிறது. இடைத்தேர்தலில் மக்கள் அ.தி.மு.க.வுக்கு நல்ல தீர்ப்பை வழங்குவார்கள்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ஆசிய விளையாட்டு: துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளி வென்றார் இளவேனில்</title><link>https://www.maalaimalar.com/sports/elavenil-valarivan-clinches-silver-in-the-womens-10m-air-rifle-individual-final-at-the-asian-games</link><comments>https://www.maalaimalar.com/sports/elavenil-valarivan-clinches-silver-in-the-womens-10m-air-rifle-individual-final-at-the-asian-games#comments</comments><guid isPermaLink="false">5a145e76-ac79-41b9-8172-f26bc8602efa</guid><pubDate>Sun, 20 Sep 2026 06:32:42 +0000</pubDate><atom:updated>2026-09-20T06:32:42.665Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>shooting,துப்பாக்கிச்சுடுதல்,Elavenil Valarivan,இளவேனில் வாலறிவன்,Asian Games,ஆசிய விளையாட்டு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/hm9lz30t/elavenil.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ elevenil]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/hm9lz30t/elavenil.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஆசிய விளையாட்டு போட்டியின் துப்பாக்கிச் சுடுதலில் தமிழகத்தின் இளவேனில் வாலறிவன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.</strong></em></p><p>ஜப்பானில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மகளிர் துப்பாக்கிச் சுடுதல் போட்டி இன்று நடைபெற்றது.</p><p>இதில் 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவில் இந்தியாவின் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D">இளவேனில் வாலறிவன்</a> இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.</p><p>தனிநபர் இறுதிப்போட்டியில் தமிழகத்தின் இளவேனில் வாலறிவன் 252.4 புள்ளிகள் எடுத்து இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இது இந்தியாவுக்கான 2வது பதக்கம் ஆகும்.</p><p>ஒரே நாளில் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு கிடைத்த 2வது பதக்கம் ஆகும். சீன வீராங்கனை முதல் இடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.</p><p>ஏற்கனவே, இளவேனில் வாலறிவன், சோனம் மாஸ்கர், விதர்ஷா வினோத் ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் அணி வெள்ளி வென்றது குறிப்பிடத்தக்கது.</p><p>தனிநபர் பிரிவில் இந்தியாவின் சோனம் மாஸ்கர் 6வது இடம் பிடித்து வெளியேறினார்.</p>]]></content:encoded></item><item><title>சோதனை ஓட்டம் முடிந்து பழனியில் 22-ம் தேதி முதல் மீண்டும் ரோப் கார் இயக்கம்: கோவில் நிர்வாகம் தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-rope-car-to-restart-from-22nd-following-successful-test-run</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-rope-car-to-restart-from-22nd-following-successful-test-run#comments</comments><guid isPermaLink="false">ef840141-b43e-442c-970f-ce019f3177b7</guid><pubDate>Sun, 20 Sep 2026 06:03:05 +0000</pubDate><atom:updated>2026-09-20T06:03:05.483Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பழனி கோவில்,பழனி கோவில் ரோப் கார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/qwlzi3bm/RopeCar0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பழனி கோவில் ரோப் கார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/qwlzi3bm/RopeCar0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் யானைப்பாதை, படிப்பாதை வழியாக நடந்து மலைக்கோவிலுக்கு செல்கின்றனர். இதுதவிர குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் சிரமமின்றி சென்று வர மின் இழுவை ரெயில், ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது.</p><p>இதில் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு 3 நிமிடத்தில் சென்று விடலாம் என்பதாலும், இயற்கை எழில் கொஞ்சும் பழனி மலையை கண்டு ரசிக்கலாம் என்பதாலும் ரோப்காரில் செல்ல சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வம் காட்டி வருகின்றனர்.</p><p>பக்தர்கள் பாதுகாப்புக்காக ரோப்கார் மாதத்திற்கு ஒரு நாளும், வருடத்திற்கு 1 மாதமும் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுவது வழக்கம்.</p><h2>பராமரிப்பு பணிகள்</h2><p>அதன்படி இந்த ஆண்டு கடந்த ஜூலை 20-ம்தேதி முதல் ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பக்தர்கள் பாதுகாப்பு கருதி ரோப்கார் தொடர்பான அனைத்து எந்திரங்களும் என்.டி.டி. பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. மேலும் கொல்கத்தாவில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு சாப்ட் பொருத்தப்பட்டு, கியர் பாக்ஸ் பராமரிப்பு பணியும் நடந்தது. மேலும் கடந்த 16-ம் தேதி புதிய பெட்டிகளை பொருத்தி, மணல் மூட்டைகள், கற்களை வைத்து சோதனை ஓட்டம் நடைபெற்றது.</p><p>ரோப்கார் கீழ்நிலைய பெருந்திட்ட பணிகளில் எந்திரங்கள் உள்ள பகுதிகளில் புதிய மேற்கூரை, பால்சீலிங், பக்கவாட்டு சுவர்களில் கிரானைட் பதித்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றது. மராமத்து பணிகள் முடிவடைந்த நிலையில் வல்லுனர்குழு ஆய்வும் முடிந்துள்ளது. இதனை தொடர்ந்து நாளை மறுநாள் (22ம் தேதி) முதல் மீண்டும் ரோப்கார் சேவை பக்தர்கள் பயன்பாட்டிற்கு தொடங்கும் என பழனி கோவில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.</p><h2>அலைமோதிய பக்தர்கள்</h2><p>வார விடுமுறையான இன்று கேரளாவில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பழனி சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.</p><p>இதனால் பஸ் நிலையம், அடிவாரம், கிரிவீதி, யானைப்பாைத, படிப்பாதை, மின் இழுவை ரெயில் நிலையம் ஆகியவற்றில் கூட்டம் அலைமோதியது. பராமரிப்பு பணி காரணமாக ரோப்கார் நிறுத்தப்பட்டுள்ளதால் மின் இழுவை ரெயில் நிலையத்தில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து மலைக்கோவிலுக்கு சென்றனர். மேலும் யானைப்பாதை, படிப்பாதை வழியாக சென்ற பக்தர்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் கடைகளுக்கு புதிதாக 25 மதுபான வகைகள் அறிமுகம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/25-new-liquor-varieties-introduced-at-tasmac-shops</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/25-new-liquor-varieties-introduced-at-tasmac-shops#comments</comments><guid isPermaLink="false">ef7b4da3-3b00-4d76-b02c-7d3a18c95903</guid><pubDate>Sun, 20 Sep 2026 05:21:17 +0000</pubDate><atom:updated>2026-09-20T05:21:17.998Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டாஸ்மாக் கடை,டாஸ்மாக்,மதுபான வகைகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/unm9hk88/tasmac.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ tasmac shop]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/unm9hk88/tasmac.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>“டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் புதிய வகை மதுபானம், பீர் விற்பது தொடர்பாக 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில், 25 புதிய மது வகைகள் தேர்வு செய்யப்பட்டு, விலை நிர்ணயம் செய்யும் பணி நடந்து வருகிறது. டாஸ்மாக் இயக்குநர்கள் குழுக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் பெறப்பட்ட பிறகு, மதுக்கடைகளில் புதிய வகை மதுபானங்கள் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும்” என்றனர்.</p><h2><strong>டாஸ்மாக் கடை</strong></h2><p>தமிழகத்தில் 4,000 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு  தமிழகத்தில் தயாரிக்கப்படும் 174 மது வகைகள், 40 பீர் வகைகள், 4 ஒயின் வகைகள் மற்றும் பிற மாநில மது​பானங்களில் 6 மது வகைகள், 5 பீர், 5 ஒயின் வகைகள் விற்கப்படுகின்றன. 538 வெளிநாட்டு ரக மது வகைகளை டாஸ்மாக் நிறுவனம் இறக்குமதி செய்து, வணிக வளாகங்களில் உள்ள மதுக்கடைகளில் விற்பனை செய்கிறது.</p><h2><strong>டாஸ்மாக் அதிகாரிகள்</strong></h2><p>டாஸ்மாக் கடைகளில் அவ்வப்போது புதிய மது வகைகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. அந்த வகையில், புதிய மது வகைகளை அறிமுகம் செய்வது தொடர்பாக மதுபான உற்பத்தியாளர்களுடன் டாஸ்மாக் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, 25 புதிய மது வகைகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.</p><h2><strong>புதிய மது வகைகள்</strong></h2><p>இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், “டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் புதிய வகை மதுபானம், பீர் விற்பது தொடர்பாக 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில், 25 புதிய மது வகைகள் தேர்வு செய்யப்பட்டு, விலை நிர்ணயம் செய்யும் பணி நடந்து வருகிறது. டாஸ்மாக் இயக்குநர்கள் குழுக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் பெறப்பட்ட பிறகு, மதுக்கடைகளில் புதிய வகை மதுபானங்கள் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும்” என்றனர்.</p><h2><strong>டாஸ்மாக் சில்லறை விற்பனை</strong></h2><p>டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளுக்கு சரக்கு அனுப்பும் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை முதல், ஒவ்வொரு கடையின் உண்மையான தேவை மற்றும் கோரிக்கையின் அடிப்படையில் மட்டுமே சரக்கு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு நடைமுறையில் இருந்த அனைத்து சப்ளையர்களின் சரக்குகளையும் சமமாகப் பிரித்து வழங்கும் முறை முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் விற்பனையாகாமல் தேங்கும் சரக்குகள் குறைவதுடன், அதிகம் விற்பனையாகும் பிராண்டுகள் தேவைக்கேற்ப கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஹவுதி தாக்குதல்: சவுதிக்கு உதவிக்கரம் நீட்ட துருக்கி முடிவு- காரணம் என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/world/turkey-ready-to-provide-military-aid-to-saudi-arabia-under-mecca-agreement-says-foreign-minister</link><comments>https://www.maalaimalar.com/news/world/turkey-ready-to-provide-military-aid-to-saudi-arabia-under-mecca-agreement-says-foreign-minister#comments</comments><guid isPermaLink="false">23cc44e2-ecc8-401f-8ce3-5177ef5bc137</guid><pubDate>Sun, 20 Sep 2026 05:21:09 +0000</pubDate><atom:updated>2026-09-20T05:21:09.731Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>துருக்கி,Turkey,Saudi Arabia,சவுதி அரேபியா,Houthi,ஹவுதி,மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம்,Mecca Defense Pact</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/0wixqhv4/Untitled-design-24.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Turkey offers military support to Saudi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/0wixqhv4/Untitled-design-24.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சவுதி அரேபியாவில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் நேற்று ஹவுதிகள் ஏவுகணைகளை வீசி நடத்திய தாக்குதலை அடுத்து, மெக்கா ஒப்பந்தத்தின் கீழ் சவுதிக்கு ராணுவ உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக துருக்கி தெரிவித்துள்ளது.</p><p>ஏமன் நாட்டில் முக்கிய கடல் போக்குவரத்து வழித்தடமான பால்-அல்-மண்டேப் ஜலசந்தியை கைப்பற்றும் நோக்கில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF">ஹவுதி கிளர்ச்சியாளர்கள்</a> தாக்குதல் நடத்தி வருகின்றன. ஹவுதிகளுக்கு எதிரான போர் நடவடிக்கைகளை சமாளிக்க முடியாமல் சவுதி அரேபியா திணறி வருகிறது. </p><h3><strong>சவுதி அரேபியா திணறல்</strong></h3><p>மேலும் சவுதி அரேபியாவுக்கு எந்தவொரு நாடும் போர் நடவடிக்கைகளில் ஆதரவளிக்காத சூழலில், அதன் முக்கிய நகரங்கள் ஹவுதிகளின் தாக்குதலுக்கு இரையாகி வருகின்றன.</p><p>சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் ஹவுதிகள் நேற்று பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தின.</p><h3><strong>சவுதி அரேபியா கண்டனம்</strong></h3><p>இதையடுத்து ஹவுதிகளின் தாக்குதல் சம்பவத்திற்கு சவுதி அரேபியாவின் செய்தி தொடர்பாளர் துர்கி அல்-மாலிகி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “சனிக்கிழமை அதிகாலையில் ஹவுதி குழுவால் ரியாத் நகரை நோக்கி ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணையை சவுதி அரேபியாவின் விமானப்படை வெற்றிகரமாக இடைமறித்து அழித்தது.</p><p>பிஷா, தாயிஃப், ஃபராசான் மற்றும் யான்பு ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் பொது உள்கட்டமைப்புகளை குறிவைத்து ஹூதிகள் தாக்குதலை நடத்த முயன்றனர். </p><p>ஆனால் அந்த தாக்குதல்கள் வான் பாதுகாப்பு அமைப்புகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன” என்று அவர் பதிவிட்டார்.</p><h3><strong>ஹவுதி விளக்கம்</strong></h3><p>சவுதி மீதான தாக்குதல் குறித்து ஹவுதி ராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சரீ கூறுகையில், சமீபத்திய சவுதி தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாகவே அதிக எண்ணிக்கையிலான பாலிஸ்டிக் மற்றும் குரூஸ் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளார்.</p><p>இந்த நிலையில் ‘மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தின்’ கீழ், சவுதி அரேபியாவிற்கு ராணுவ உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக துருக்கி தெரிவித்துள்ளது.</p><h3><strong>துருக்கி ஆதரவு</strong></h3><p>இதுகுறித்து துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் ஹக்கான் ஃபிடான் கூறுகையில், “சவுதி அரேபியாவின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை மீது மிகக் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படுவதை நாங்கள் காண்கிறோம். எங்கள் கூட்டணியில் ஒரு ஒப்பந்தம் உள்ளது.</p><p>அவர்களுக்கு சில ராணுவத் தேவைகள், குறிப்பாக சில தொழில்நுட்பப் பிரச்சினைகள் இருக்கலாம். </p><p>அவற்றை நிறைவேற்றுவதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை” என்று அவர் தெரிவித்தார்.</p><p>மேலும் சவுதி மற்றும் ஹவுதி, இரு தரப்பினரும் சண்டையை முடிவுக்கு கொண்டுவரும் முன்மொழிவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.</p><p>இந்த மோதல் போக்கால் ஏற்படும் பொருளாதார விளைவுகளை சமாளிப்பது நாளுக்கு நாள் கடினமாகி வருவதாகவும் துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>”வெல்கம் பேபி கேர்ள்” : ரன்வீர் சிங்- தீபிகா படுகோன் தம்பதிக்கு இரண்டாவது பெண் குழந்தை..! </title><link>https://www.maalaimalar.com/cinema/welcome-baby-girl-ranveer-singh-deepika-padukone-second-daughter</link><comments>https://www.maalaimalar.com/cinema/welcome-baby-girl-ranveer-singh-deepika-padukone-second-daughter#comments</comments><guid isPermaLink="false">5a65b638-43e0-4031-bb6d-2a8e575a652e</guid><pubDate>Sun, 20 Sep 2026 05:01:32 +0000</pubDate><atom:updated>2026-09-20T05:01:32.887Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Bad Girl,Deepika Padukone,ரன்வீர் சிங்,தீபிகா படுகோனே,Ranveer Singh,பெண் குழந்தை</media:keywords><media:content height="225" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/u4zfy3t0/FotoJet-20-2026-09-3f6ce405f74331cfdb4421d8fdb62c6d-1200x675.avif" width="400"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Deepika Padukone and Ranveer Singh ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/u4zfy3t0/FotoJet-20-2026-09-3f6ce405f74331cfdb4421d8fdb62c6d-1200x675.avif?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா (Cinema)</category><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>பேபி கேர்ள்</h2><p>நட்சத்திர தம்பதிகளான தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் தம்பதியினருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.</p><p>இதனை <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/dua-padukone-singh-to-become-a-big-sister-deepika-and-ranveer-announce-the-new-arrival">தீபிகா படுகோன்</a> தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து  இந்த மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார். 'வெல்கம் பேபி கேர்ள்' என்று எழுதப்பட்ட ஒரு கால்பாதத்தின் புகைப்படத்தை தீபிகா படுகோன் பகிர்ந்துள்ளார்.</p><h2>பெற்றோர் </h2><p> கடந்த 2018 ல் திருமணம் செய்துகொண்ட   தீபிகா படுகோன்  <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/kantara-controversy-ranveer-singh-offers-prayers-at-mysores-chamundeshwari-temple-following-high-court-order">ரன்வீர் சிங் </a>தம்பதியினர் 2024-ஆம் ஆண்டுமுதல் பெண் குழந்தையான துவாவை வரவேற்று பெற்றோர் ஆகியிருந்தனர்.</p><p>இதற்கு முன்னர் மூத்த மகள் துவா பிறந்ததையும் இருவரும் சமூக வலைத்தளத்தில் ஒன்றாக அறிவித்து மகிழ்ச்சியை தெரிவித்திருந்தனர்.</p><h2>இரண்டாவது குழந்தை</h2><p> தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங், தங்களது இரண்டாவது கர்ப்பம் குறித்த செய்தியை ஏப்ரல் 19, 2026 அன்று , ஒன்றாக  இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் அறிவித்தனர்.அந்த அறிவிப்பில், அவர்களது மகள் துவாபடுகோன் சிங், கர்ப்பப் பரிசோதனையில் பாசிட்டிவ் முடிவு வந்ததை கையில் வைத்திருக்கும் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.</p><p> தற்போது தங்களின் இரண்டாவது <a href="https://www.maalaimalar.com/news/national/husband-brutally-assaults-wife-right-at-the-hospital-after-she-gives-birth-to-a-baby-girl">குழந்தை </a>பிறப்பை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.குழந்தையின்பிறப்பிற்கு திரை நட்சத்திரங்கள் ,ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர். துவா இப்போது ஒரு சின்ன தங்கைக்கு அக்கா ஆகியிருக்கிறாள், என்று நடிகை கீர்த்தி சனோன் வாழ்த்துகளை தெரவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>எங்களுடைய செய்தி தெளிவானது: பேச்சுவார்த்தைக்கு 7 நிபந்தனைகள் விதித்த ஈரான்- அமெரிக்கா ஏற்குமா?</title><link>https://www.maalaimalar.com/news/world/iran-sets-7-conditions-for-negotiations-with-us-says-message-is-clear</link><comments>https://www.maalaimalar.com/news/world/iran-sets-7-conditions-for-negotiations-with-us-says-message-is-clear#comments</comments><guid isPermaLink="false">00eb30b6-f115-4312-bed3-dce5a6b4f455</guid><pubDate>Sun, 20 Sep 2026 04:50:31 +0000</pubDate><atom:updated>2026-09-20T04:50:31.414Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>US Iran war,அமெரிக்கா ஈரான் போர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/dj0xqad6/Iran0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமெரிக்கா- ஈரான் போர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/dj0xqad6/Iran0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை தொடர 7 நிபந்தனைகள் வைக்கிறோம் என ஈரான் தெரிவித்துள்ளது.</p><p>அமெரிக்கா- ஈரான் இடையிலான கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடங்கியது. பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் போரை நிறுத்த முயற்சி மேற்கொண்டன. இதன் விளைவாக இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஹார்முஸ் ஜலசந்தியை நிர்வகிப்பதில் உடன்பாடு எட்டப்படாததால், போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததாக இரு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.</p><h2>சவுதி மீது தாக்குதல் நடத்தும் ஹவுதி</h2><p>அதன்பின் அமெரிக்கா மற்றும் ஈரான் பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சிக்குழு சவுதி அரேபியாவை தாக்க தொடங்கியுள்ளது. மத்திய கிழக்கு பகுதி முழுவதும் ஹவுதி தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.</p><p>அமெரிக்கா- ஈரான் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உடன்பாடு எட்டப்பட்டால்தான் மத்திய கிழக்கு பகுதியில நிலவும் பதற்றம் முடிவுக்கு வரும் என்ற நிலை உள்ளது.</p><p>இந்த நிலையில் அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தைக்கு ஈரான் 7 நிபந்தனைகளை விதித்துள்ளது.</p><h2>7 நிபந்தனைகள்- எங்களுடைய செய்தி தெளிவானது</h2><p>இது தொடர்பாக ஈரானின் உயரிய தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் மொஹ்சென் ரெசாய் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிப்பதாவது:-</p><p>எங்களுடைய செய்தி தெளிவானது. சந்தேகத்திற்கு இடமற்றது. அமெரிக்கா தான் உருவாக்கியுள்ள இக்கட்டான சூழலிலிருந்து விடுபடவும், அதில் மேலும் சிக்கிக் கொள்வதை தவிர்க்கவும் விரும்பினால், ஈரானின் உரிமைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. அமெரிக்காவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தை நடைபெற வேண்டுமென்றாலும் நாங்கள்  நிபந்தனைகள் முன்வைக்கிறோம்.</p><p>இவ்வாறு மொஹ்சென் ரெசாய் தெரிவித்துள்ளார்.</p><p>அதேவேளையில் 7 நிபந்தனைகள் என்ன? என்பதை அவர் தெரிவிக்கவில்லை. அதேவேளையில் ஈரானின் கோரிக்கைகளை அமெரிக்கா ஏற்குமா? என்று தெரியவில்லை.</p>]]></content:encoded></item><item><title>ஆசிய விளையாட்டு பெண்கள் கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இலங்கை</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/srilanka-womens-team-enter-final-asian-games-cricket</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/srilanka-womens-team-enter-final-asian-games-cricket#comments</comments><guid isPermaLink="false">24b2a0c0-c3d9-4760-be9f-f723f8c22d45</guid><pubDate>Sun, 20 Sep 2026 04:48:58 +0000</pubDate><atom:updated>2026-09-20T04:48:58.009Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இலங்கை,srilanka,பாகிஸ்தான்,Pakistan,Asian Games,ஆசிய விளையாட்டு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/lkbwssm0/chamari.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ chamari athapaththu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/lkbwssm0/chamari.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஆசிய விளையாட்டில் பெண்கள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது இலங்கை.</strong></em></p><p>ஆசிய விளையாட்டில் பெண்கள் கிரிக்கெட்டின் அரையிறுதி போட்டிகள் ஜப்பானில் நடந்து வருகின்றன.</p><h2>முதல் அரையிறுதி</h2><p>ஜப்பானின் நிஷின் நகரில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் இலங்கை, பாகிஸ்தான் வீராங்கனைகள் மோதினர். டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணி பவுலிங் தேர்வு செய்தது. </p><p>அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்தது. ஆயிஷா ஜபார் 71 ரன்னும், ஷபார் ஜுல்பிகர் 54 ரன்னும் எடுத்தனர்.</p><p>3வது விக்கெட்டுக்கு ஆயிஷா ஜபார் - ஷபார் ஜுல்பிகர் ஜோடி 115 ரன்கள் சேர்த்தது.</p><p>இதையடுத்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனை கேப்டன் சமாரி அடப்பட்டு ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார்.</p><h2>சமாரி அடப்பட்டு அதிரடி</h2><p>சமாரி அடப்பட்டு அரை சதம் கடந்து 50 பந்தில் 6 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 83 ரன்கள் குவித்தார்.</p><p>ஹாசினி பெரேரா அவருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் 42 ரன்னில் அவுட்டானார்.</p><p>இறுதியில், இலங்கை அணி 17.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியது.</p><p>மற்றொரு அரையிறுதியில் இந்தியா, வங்கதேசம் ஆகிய அணிகள் மோதி வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>டாடா சியரா லெஜண்ட் சீரிஸ் இந்தியாவில் அறிமுகம் - முழு விவரங்கள்</title><link>https://www.maalaimalar.com/automobilenews/car/tata-sierra-legend-series-launched-in-india</link><comments>https://www.maalaimalar.com/automobilenews/car/tata-sierra-legend-series-launched-in-india#comments</comments><guid isPermaLink="false">0aef381f-5927-4efb-a350-9c945f3634ed</guid><pubDate>Sun, 20 Sep 2026 04:25:00 +0000</pubDate><atom:updated>2026-09-20T04:25:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Car,டாடா மோட்டார்ஸ்,Tata Motors,கார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/uc52fidy/Tata-Sierra.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tata Sierra]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/uc52fidy/Tata-Sierra.png?w=280" width="280"></media:thumbnail><category>கார் (Automobile)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டாடா சியராவில் ஏராளமான மாடல்கள் வழங்கப்பட்டாலும், தற்போது அந்நிறுவனம் ஒரு படி மேலே சென்று, குறைந்த விலை மாடல்களில் கூடுதல் அம்சங்களை சேர்த்துள்ளது. ஸ்டான்டர்டு ஸ்மார்ட்+ மாடலின் விலை ரூ. 11.49 லட்சமாக இருக்கும் நிலையில், இந்த மாடல்களின் விலை ரூ. 11.99 லட்சமாக உள்ளது. </p><p>இது போன்ற கூடுதல் விலையே இந்த மாடல்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போதுள்ள மாடல்கள், லெஜண்ட் சீரிஸ் மாடல்களுடன் தொடர்ந்து விற்பனை செய்யப்படும். அனைத்து லெஜண்ட் சீரிஸ் மாடல்களிலும் 'L' என்ற பின்னொட்டு இடம்பெறும்.</p><h2>லெஜன்ட் சீரிஸ் அம்சங்கள்:</h2><p>டாடா சியரா லெஜண்ட் சீரிஸ்: ஸ்மார்ட்+ எல் – ப்யூர் எல் – ப்யூர் எல் (ஓ) – ப்யூர்+ எல் – அட்வென்ச்சர்+ எல். ஸ்மார்ட்+ எல் இந்த வேரியன்ட் வரிசையைக் கொண்டுள்ளது. இந்த வேரியன்ட்டிற்கான அம்சங்களில் இப்போது ஸ்டீயரிங்கில் பொருத்தப்பட்ட கண்ட்ரோல்கள், தானாக மடியும் ORVM-கள் மற்றும் லெதரெட் கேபின் மெட்டீரியல்கள் ஆகியவை அடங்கும்.</p><p>பியூர் எல் வேரியன்ட், 10.25-இன்ச் சென்டர் ஸ்கிரீன், வயர்லெஸ் கனெக்டிவிட்டி, கைடெட் லைன்ஸ் கொண்ட ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, டிரைவ் மோட்கள், TPMS மற்றும் உயரத்தை சரிசெய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை போன்ற கூடுதல் அம்சங்களுடன் ஒரு படி மேலே செல்கிறது. பியூர் எல் (ஓ) வேரியன்ட்டின் அடிப்படையில், வாய்ஸ் கண்ட்ரோல் மற்றும் பனோரமிக் சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள் மற்றும் ரெயின் சென்சிங் வைப்பர்கள் ஆகியவை கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.</p><h2>ப்யூர் + எல் அம்சங்கள்:</h2><p>ப்யூர் + எல் மாடலில் முழுமையான லெதரெட் இன்டீரியர், வென்டிலேட்டெட் முன்பக்க இருக்கைகள், ஆறு விதங்களில் சரிசெய்யக்கூடிய பவர் டிரைவர் இருக்கை, பாஸ் மோடு, டூயல்-ஜோன் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், ஒன்-டச் ஆன்டி-பிஞ்ச் விண்டோ (டிரைவர்), 65W USB-C சார்ஜர்கள், பூட் லேம்ப் மற்றும் பின்புற டிஃபாகர் ஆகியவை உள்ளன.</p><p>முந்தைய மாடலின் அம்சங்களுடன், அட்வென்ச்சர்+ எல் மாடலானது 360° கேமராக்கள், பிளைண்ட்-ஸ்பாட் மானிட்டரிங், பார்க்கிங் சென்சார்கள், LED ஃபாக் லைட்கள், FSD, டெரெய்ன் மோட்கள், 12.3-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட், 10.25-இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆம்பியன்ட் மூட் லைட்கள், வயர்லெஸ் சார்ஜிங், ஆர்ம்ரெஸ்டுடன் கூடிய பின் இருக்கை வரிசை, அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்கள், 60:40 ஸ்ப்ளிட்-ஃபோல்ட் மற்றும் ரெக்லைன், மற்றும் குளிரூட்டப்பட்ட க்ளோவ்பாக்ஸ் ஆகிய கூடுதல் அம்சங்களைக் கொண்டுள்ளது.</p><p>டாடா சியரா லெஜண்ட் சீரிஸ் இயந்திர ரீதியாக மாற்றமின்றி தொடர்கிறது. இதில் 1.5-லிட்டர் ரெவோட்ரான் (105bhp/145Nm), டர்போ TGDi (158bhp/255Nm) மற்றும் டீசல் (116bhp/260Nm) என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. அட்வென்ச்சர்+ வேரியண்ட்டில் புதிய 7DCT ஆப்ஷனும் கிடைக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>ஆசிய விளையாட்டு: முதல் பதக்கம் வென்ற இந்தியா - துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளி </title><link>https://www.maalaimalar.com/sports/indias-womens-10m-air-rifle-team-has-won</link><comments>https://www.maalaimalar.com/sports/indias-womens-10m-air-rifle-team-has-won#comments</comments><guid isPermaLink="false">410bf864-130c-4a23-9835-579fabb7395e</guid><pubDate>Sun, 20 Sep 2026 04:22:39 +0000</pubDate><atom:updated>2026-09-20T04:22:39.410Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>shooting,இந்திய மகளிர் அணி,துப்பாக்கிச்சுடுதல்,Asian Games,Indian womens,ஆசிய விளையாட்டு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/lim0mdia/sonam.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ shooting]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/lim0mdia/sonam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஆசிய விளையாட்டு போட்டியில் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய மகளிர் அணி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது.</strong></em></p><p>ஜப்பானில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மகளிர் துப்பாக்கிச் சுடுதல் போட்டி இன்று நடைபெற்றது.</p><p>இதில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய மகளிர் அணி வெள்ளி வென்று அசத்தியது.</p><p>இளவேனில் வாலறிவன், சோனம் மாஸ்கர், விதர்ஷா வினோத் ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் அணி வெள்ளி வென்றது.</p><p>இது இந்தியாவுக்கான முதல் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>துப்பாக்கிச் சுடுதலில் சீனா தங்கப் பதக்கமும், ஜப்பான் வெண்கலப் பதக்கமும் வென்றது.</p><p>தனிநபர் பிரிவிலும் இந்தியாவின் இளவேனில், சோனம் ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார் முதல்வர் விஜய்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/northeast-monsoon-precautionary-measures-chief-minister-consultation-with-officials-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/northeast-monsoon-precautionary-measures-chief-minister-consultation-with-officials-tomorrow#comments</comments><guid isPermaLink="false">9983140e-4790-4f9c-84d9-55392dc22302</guid><pubDate>Sun, 20 Sep 2026 04:19:03 +0000</pubDate><atom:updated>2026-09-20T04:19:03.279Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,வடகிழக்கு பருவமழை,டெல்டா,Delta,monsoon</media:keywords><media:content height="415" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/8aufkj4w/images-17.jfif" width="739"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ cm vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/8aufkj4w/images-17.jfif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>வடகிழக்கு பருவமழை </h2><p>பொதுவாக தமிழகத்தில்  அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மாதங்களில்  வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைகிறது.</p><p>தமிழகத்தின் மொத்த ஆண்டு மழையளவில் பெரும்பகுதி இந்த வடகிழக்கு  பருவமழையில் தான் கிடைக்கிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-released-water-from-mettur-dam-for-delta-irrigation">டெல்டா</a> மற்றும் இதர மாவட்டங்களின் சாகுபடிப் பணிகளுக்கு இப்பருவமழை மிகவும் மிக முக்கியத்துவம் வாய்ந்த நீர் ஆதரமாக இந்த பருவமழை இருக்கிறது.</p><h2>முன்னெச்சரிக்கை </h2><p>இந்த நிலையில் வடகிழக்கு பருவமழையானது தொடங்க உள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பாதுக்காப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது </p><h2>முதல்வர் ஆலோசனை </h2><p>வடகிழக்கு பருவழையானது தொடங்க இருக்கும் நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன நாளை ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்வர் விஜய்</a>.</p><p>காவிரி படுகை, கடலோர மாவட்ட ஆட்சியர்கள் காணொளி வாயிலாக ஆலோசனையில் பங்கேற்கவுள்ளனர்.</p><p> துறைகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல். </p>]]></content:encoded></item><item><title>ராகுல் காந்தி பொறுப்பற்ற அரசியல்வாதி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்: ம.பி. முதல்வர் சாடல்</title><link>https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-once-again-proved-that-he-is-a-careless-politician-mp-cm-mohan-yadav</link><comments>https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-once-again-proved-that-he-is-a-careless-politician-mp-cm-mohan-yadav#comments</comments><guid isPermaLink="false">634f152a-2a66-4112-a6cb-16d6dd52f36a</guid><pubDate>Sun, 20 Sep 2026 03:37:20 +0000</pubDate><atom:updated>2026-09-20T03:37:20.667Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,மோகன் யாதவ்,Mohan Yadav</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/kqzwxjno/RahulGandhiMohanYadav001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல் காந்தி- மோகன் யாதவ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/kqzwxjno/RahulGandhiMohanYadav001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி Chhatron ki Goonj என்ற பெயரில் நாடுமுழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் மாணவர்களை சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார். அந்த வகையில் நேற்று மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் மாணவர்களை சந்தித்தார்.</p><h2>அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:-</h2><p>அமித் ஷா மகன் எப்படி கிரிக்கெட் சங்கத்தின் தலைவரானார் என்று மாணவர் ஒருவர் கேள்வி கேட்கிறார். மற்றொரு மாணவர் இந்தியாவின் ஒட்டுமொத்த வணிகச் சூழலையும் இரண்டு தனிநபர்கள் எவ்வாறு தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர் என்று ஒரு மாணவர் கேட்கிறார். மேலும், நீதித்துறை மற்றும் மற்ற அமைப்புகள், அவர்களுடைய வேலையை செய்வதில் ஏன் தோல்வியடைந்து விட்டன அல்லது தேர்தல் ஆணையம் அதன் வேலையை செய்யவில்லை என்று கேள்வி கேட்கின்றனர்.</p><h2>சிஸ்டத்திற்கு மாணவர்கள் தேவையில்லை</h2><p>அதனால்தான் இந்த அமைப்புக்கு மாணவர்கள் தேவையில்லை. அதற்குத் தேவை குருட்டு விசுவாசிகள். ஒரு குருட்டு விசுவாசி என்பவன் மாணவனுக்கு நேர் எதிரானவன். ஒரு மாணவர் கேள்விகளை எழுப்பி ஆர்வத்துடன் இருக்கும் வேளையில், ஒரு குருட்டு விசுவாசி தனக்கே உரிய ஒரு மாய உலகில் வாழ்கிறார். அமைப்பு ஒட்டுமொத்த நாட்டையும் தன்வசப்படுத்தியுள்ளது.</p><p>அமைப்பு (System) முறை மாணவர்களை கண்டு அச்சுறுத்தலை உணர்கிறது. ஏன்? ஏனெனில் மாணவர்கள் கேள்விகளைக் கேட்கிறார்கள்.</p><p>இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.</p> <p>ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு மத்திய பிரதேச முதல்வர் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக மத்திய பிரதேச மாநில முதல்வர் மோகன் யாதவ் கூறியதாவது:-</p><p>அந்த நிகழ்ச்சியில் எழுப்பப்பட்ட விவகாரம் குறித்து காந்தி உண்மையான தகவல்களைக் கொண்டிருக்க வேண்டும். போதுமான தயாரிப்பு ஏதுமின்றி மத்திய பிரதேசத்திற்கு வந்து அவர் தனது நிகழ்ச்சிகளை நடத்திய விதம், அவர் ஒரு பொறுப்பற்ற அரசியல்வாதி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. இது அவரது இயல்புக்கு ஏற்றதாகவே உள்ளது.</p><h2>ராகுல் காந்தி கேள்விக்கு காங்கிரசிடம் பதில் இருக்க வேண்டும்</h2><p>காங்கிரஸின் அரசியல் வரலாற்றில், அக்கட்சியின் அரசுகள் நான்கு முதல் ஐந்து தலைமுறைகளாக நாட்டையும் மாநிலங்களையும் ஆட்சி செய்துள்ளன. இந்தக் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் அவரிடம் பதில்கள் இருக்க வேண்டும்.</p><p>உதாரணமாக, அவர் கல்வி முறையைப் பற்றிப் பேசினால், இந்திய மருத்துவக் கவுன்சிலின் (MCI) படி மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் நிலை என்னவாக இருந்தது? மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஒரு விமான நிலையத்தை கூட கட்டவில்லை.</p><p>இவ்வாறு மோகன் யாதவ் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item></channel></rss>