<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 14 Aug 2026 09:23:12 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 14 ஆகஸ்ட் 2026...
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-14-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-14-august-2026#comments</comments><guid isPermaLink="false">af13e0d5-379a-4bc4-aa06-6d0f8775e507</guid><pubDate>Fri, 14 Aug 2026 04:11:55 +0000</pubDate><atom:updated>2026-08-14T08:53:49.898Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/qowhh7gn/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live news]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/qowhh7gn/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ireland-engineer-adopted-a-boy-from-mamallapuram-for-his-education-while-visiting-as-a-tourist">சுற்றுலா வந்தபோது படிப்புக்காக மாமல்லபுரம் சிறுவனை தத்தெடுத்த அயர்லாந்து என்ஜினீயர் </a></p><p>அயர்லாந்து நாட்டை சேர்ந்தவர் மைக்கேல். சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.</p><p>சி.பி.எஸ்.இ. தன் சொந்த செலவில் சிறுவன் சர்வேசை மைக்கேலை சேர்த்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-says-eliminating-alcohol-which-destroys-human-lives-should-be-the-governments-duty">மனிதர்களை ஒழிக்கும் மதுவை ஒழிப்பதே அரசின் கடமையாக இருக்க வேண்டும் - அன்புமணி</a></p><p>* அரசு பள்ளிகளில் மாணவர்களும், மாணவிகளும் மது அருந்துவது இப்போது தான் புதிதாக நடக்கும் ஒன்றல்ல.</p><p>* ஒரு காலத்தில் மதுக்கடைகள் ஊருக்கு வெளியிலும், சுடுகாடுகளுக்கு அருகிலும் தான் விற்பனை செய்யப்படும்.&nbsp;</p><p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/ben-shetton-won-the-title-in-canada-open">கனடா ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் பென் ஷெல்டன்</a></p><p>* கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோவில் நடந்தது</p><p>* பெண்கள் ஒற்றையர் பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/gold-medals-and-cash-awards-for-15-police-officers" rel="nofollow">80-வது சுதந்திர தினம்: 15 காவல் துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் சிறப்புப் பதக்கங்கள் அறிவிப்பு!</a></p><p>* விருதுகள், முதலமைச்சர் விஜய்யால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும்.</p><p>*  தமிழக முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப் பணிப் பதக்கங்கள் வழங்க தேர்வு.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/mitchell-starc-surpasses-kapil-dev-in-test-wickets-key-stats">டெஸ்டில் 435 விக்கெட்: கபில்தேவ் சாதனையை முறியடித்தார் ஸ்டார்க்</a></p><p>* மிட்செல் ஸ்டார்க் 106 டெஸ்டுகளில் விளையாடி 435 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.</p><p>* கபில்தேவ் 131 டெஸ்டில் விளையாடி 434 விக்கெட் எடுத்து 12-வது இடத்தில் உள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/iga-swiatek-won-the-canada-open-title">கனடா ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்வியாடெக்</a></p><p>* கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோவில் நடந்தது.</p><p>* ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் பென் ஷெல்டன் சாம்பியன் பட்டம் வென்றார்.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/6b62221a-9257-4791-9768-a6df9df77d5f">தேசப் பிரிவினை எனும் கருப்பு சரித்திரம்.. நினைவு தினத்தில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்</a></p><p>*மத வன்முறைகளில் தோராயமாக 2 லட்சம் முதல் 20 லட்சம் மக்கள் உயிரிழந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது.</p><p>* சுமார் 1.5 கோடி மக்கள் தங்களது சொந்த வீடுகளை விட்டு வலுக்கட்டாயமாக இடம்பெயர நேரிட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/karur-government-job-cancellation-interim-stay">கரூர் அரசு பணி: மதுரை ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம்!</a></p><p>* கரூர் உயிரிழப்பு: அரசு வேலை ரத்துக்கு மதுரை ஐகோர்ட் உத்தரவு இடைக்கால தடை</p><p>* "அரசு முடிவில் நீதிமன்றம் தலையிடலாமா?" என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/d433f424-d7c6-4cae-b9dd-54826286d05d">ஜப்பானில் வரலாறு காணாத கனமழை - 4 பேர் பலி - ஐவர் படுகாயம்</a></p><p>*20,000க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.</p><p>*ஜப்பான் வரலாற்றிலேயே பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-bjp-secret-alliance-to-escape-cases-says-minister-nirmal-kumar" rel="nofollow">வழக்குகளில் இருந்து தப்பிக்க பாஜகவுடன் திமுக மறைமுக கூட்டணி- அமைச்சர் நிர்மல் குமார்</a></p><p>* தவெக அரசு யாருடன் பேசினாலும் வெளிப்படையாகதான் இருக்கும்.</p><p>* திருச்சி சிவா மத்திய அமைச்சர் ஆக உள்ளதாக கூறப்படுவதை திமுக தற்போது வரை மறுக்கவில்லை. </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/uk-train-derailment-11-injured-as-passenger-train-overturns-near-lewes">இங்கிலாந்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான பயணிகள் ரெயில்</a></p><p>*தெற்கு இங்கிலாந்தின் லூயிஸ் நகருக்கு அருகே நடந்த இந்த விபத்தில் ரெயிலின் 3 பெட்டிகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.</p> <p>*ரெயிலில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/independence-day-cm-vijay-to-hoisting-national-flag-at-fort-tomorrow">சுதந்திர தின விழா - கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் விஜய் நாளை தேசியக்கொடி ஏற்றுகிறார்</a></p><p>* சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. </p><p>* தகைசால் தமிழர் விருதுக்கான பரிசுத் தொகை ரூ. 10 லட்சமாகும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-14-8-2026">GOLD PRICE TODAY: தங்கம் விலை அதிரடி குறைவு - சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.180 குறைந்து ரூ.14,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/us-belgium-diamond-ring-row-senators-probe-if-trump-gift-linked-to-eu-diamond-tariff-waiver">321 வைரங்கள் பதித்த மோதிரம்.. பெல்ஜியத்தில் இருந்து டிரம்புக்கு வந்த பரிசு - உடனே ரத்தான வைர இறக்குமதி வரி - சர்ச்சை</a></p><p>*321 வைரங்கள், மரகதம், மாணிக்கக் கற்கள் மற்றும் 18 கேரட் தங்கத்தால் செய்யப்பட்ட சிறப்பு வாய்ந்த மோதிரம்.</p> <p>*வைரங்களுக்கு வழங்கப்பட்ட வரி விலக்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/nalsar-graduation-row-students-oppose-cji-suryakant-invite-over-remarks-and-protest-case-handling">U Turn அடித்த பார் கவுன்சில்.. தலைமை நீதிபதி வருகையை எதிர்த்த சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தடை நீக்கம்</a></p><p>*மாநில பார் கவுன்சில்களுக்கு இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா உத்தரவிட்டார்.</p><p>* துணைவேந்தர் மற்றும் நிர்வாகத்திற்கு மனு அனுப்பினர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/maharashtra-earthquake-34-magnitude-quake-jolts-nashik-at-dawn-no-major-damage-reported">மகாராஷ்டிரா, இமாச்சல பிரதேசத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்</a></p><p>*மகாராஷ்டிராவில் இன்று அதிகாலை 3.4 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.</p><p>*ஆப்கானிஸ்தானிலும் இன்று அதிகாலை 4:29 மணியளவில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/modis-hug-based-foreign-policy-rahul-hugging-the-congress-leader-what-was-said-about-meloni">மோடியின் கட்டிப்பிடி வெளியுறவு கொள்கை.. காங்கிரஸ் தலைவரை கட்டிப்பிடித்த ராகுல் - மெலோனி குறித்து சொன்ன விஷயம்!</a></p><p>*"என்னை மெலோனி என்று நினைத்து கட்டிப்பிடிக்கவில்லையே?" என்று கேட்டார்</p><p>*மேலும் ஒரு படி மேலே சென்று மேடையிலிருந்த காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீட்சித்தைக் கட்டிப்பிடித்தார்</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/jharkhand-gen-alpha-student-protest-headmaster-transfer-order-cancelled">ஜென் ஆல்பா போராட்டம் வெற்றி.. பள்ளித் தலைமை ஆசிரியர் இடமாற்றம் ரத்து | Jharkhand</a></p><p>*காவல் நிலையத்தின் மீதும் மாணவர்கள் கல்வீச்சு நடத்தினர். இதில் ஒரு காவலர் காயமடைந்தார்</p><p>*வாக்குவாதம் முற்றி அவர் ஒரு மாணவனை அறைந்ததாக கூறப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/praggnanandhaa-suffers-first-loss-vincent-keymer-checkmates-in-sinquefield-cup-round-three">Sinquefield Cup: மூன்றாம் சுற்றில் பிரக்யானந்தா அதிர்ச்சி தோல்வி</a></p><p>*இரண்டாம் சுற்றில் உலக சாம்பியன் ஜெவோகிர் சின்டாரோவை வீழ்த்தினார்.</p><p>*மூன்றாவது சுற்றில் செக்மேட் ஆனார்.<br><br></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/sureshkumar-realizes-his-dream-of-studying-medical-at-51">வயது ஒரு தடையல்ல: 51 வயதில் மருத்துவ கனவை நனவாக்கி சாதித்த மாற்றுத்திறனாளி</a></p><p>* 2022-ம் ஆண்டு மருத்துவப் படிப்பு ஆசை மீண்டும் பொறித்தட்ட நீட் தேர்வை தமிழ் வழியில் எழுதினார்.</p><p>*  2026-ம் ஆண்டு நீட் தேர்வை எழுதி 192 மதிப்பெண் எடுத்திருந்த சுரேஷ்குமார்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/parliament-monsoon-session-rs-175-crore-has-been-lost-so-far">இது முதல் முறை அல்ல... நாடாளுமன்ற முடக்கத்தால் ரூ.175 கோடி வீணடிப்பு</a></p><p>* மக்கள் செலுத்தும் வரிப்பணத்திலேயே சட்டசபைகள் மற்றும் நாடாளுமன்றம் இயங்குகின்றன.</p><p>* நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் செயல்பட ஒரு நிமிடத்துக்கு ரூ.26 லட்சம் செலவு ஆகும். </p> ]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் மதுக்கடைகளில் 11 வகை மதுபானங்கள் விற்பனைக்கு தடை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/11-liquor-brands-banned-in-tasmac</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/11-liquor-brands-banned-in-tasmac#comments</comments><guid isPermaLink="false">02299041-60df-454d-8b69-83354c2a55dd</guid><pubDate>Fri, 14 Aug 2026 08:09:44 +0000</pubDate><atom:updated>2026-08-14T08:09:44.911Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>alcohol,மதுபான விற்பனை,liquor sale,Tasmac,டாஸ்மாக்,மதுக்கடை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/w93lfsb1/TASMAC.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TASMAC]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/w93lfsb1/TASMAC.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் மதுபான உற்பத்தி நிறுவனத்தில் உணவு பாதுகாப்புத்துறை தெற்கு மண்டல அலுவலக அதிகாரிகள் கடந்த 11ம் தேதி ஆய்வு செய்தனர்.</p><p>அப்போது செயற்கை சுவையூட்டும் பொருட்கள் சேர்க்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து அந்த நிறுவனத்தின் 11 வகை மதுபானங்களின் விற்பனையை உடனடியாக நிறுத்த டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.</p><p>இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் கே.நந்தகுமார் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்," டாஸ்மாக் மண்டல மற்றும் மாவட்ட மேலாளர்கள் மற்றும் கிடங்கு மேலாளர்கள், மறு அறிவிப்பு வரும் வரை, சில்லறை விற்பனைக் கடைகளில் 11 வகைகளின் விற்பனையை நிறுத்தவும், மேலும் எப்.எல். 2 மற்றும் எப்.எல். 3 உரிமதாரர்களுக்கு அவற்றின் விற்பனையை நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p>இந்த உத்தரவின் கீழ் வி.எஸ்.ஓ.பி. எக்சா கோல்ட் பிராந்தி, லூயிஸ் வெர்னன்ட் எக்ஸ்ஓ பிளெண்டட் பிரீமியம் பிராந்தி, மெக்டொவல்ஸ் வி.எஸ்.ஓ.பி. பிராந்தி, நம்பர் 1 மெக்டொவல்ஸ் பைன் பிராந்தி, மென்ஸ்கிளப் டீலக்ஸ் பிராந்தி, ஹனி பீ பைன் பிராந்தி, என்ரிகா வி.எஸ்.ஓ.பி. செலக்ட் பிராந்தி, என்ரிகா பிளாட்டினம் ரிசர்வ் எக்ஸ்.ஓ. பிராந்தி, என்ரிகா பிரீமியம் பிரெஞ்ச் பிராந்தி, வீரன் ஸ்பெஷல் பிராந்தி மற்றும் என்ரிகா ஓல்ட் இண்டி கிளாசிக் டார்க் ரம் ஆகிய 11 ரகங்கள் வருகின்றன.</p><p>இவற்றின் விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், விநியோகஸ்தர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் அடையாளம்  நுகர்வோருக்கு விற்கக் கூடாது எனவும் உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டது.</p><p>இது தொடர்பான வழிகாட்டுதல்களை மதுவிலக்கு மற்றும் கலால் ஆணையர்  டாஸ்மாக் நிறுவனத்திற்கு கடிதம் மூலம் அனுப்பி வைத்தார். அதனைத் தொடர்ந்து டாஸ்மாக் நிர்வாகம் இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மனிதர்களை ஒழிக்கும் மதுவை ஒழிப்பதே அரசின் கடமையாக இருக்க வேண்டும் - அன்புமணி
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-says-eliminating-alcohol-which-destroys-human-lives-should-be-the-governments-duty</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-says-eliminating-alcohol-which-destroys-human-lives-should-be-the-governments-duty#comments</comments><guid isPermaLink="false">6e7ec2bf-ff8a-49d7-9303-33794cb6711a</guid><pubDate>Fri, 14 Aug 2026 07:14:31 +0000</pubDate><atom:updated>2026-08-14T07:14:31.689Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,alcohol,டாஸ்மாக் கடைகள்,Tasmac,மதுக்கடைகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/w6ezbdmz/anbumaniramadoss.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anbumani ramadoss]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/w6ezbdmz/anbumaniramadoss.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பா.ம.க. தலைவர் மருத்துவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில்,</p><h2>மது அருந்தும் மாணவிகள்</h2><p>கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நீட், ஜே.இ.இ., கியூட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்கச் சென்ற மாணவிகள் சிலர் வகுப்பறையில் அமர்ந்து துணை உணவுகளுடன் மது அருந்தும் காணொலி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டிய வகுப்பறைகள் மதுக்கூடங்களாக மாறி வருவது மிகவும் கவலையளிக்கிறது.</p> <h2>இளைய சமுதாயம் எங்கே செல்கிறது?</h2><p>அரசு பள்ளிகளில் மாணவர்களும், மாணவிகளும் மது அருந்துவது இப்போது தான் புதிதாக நடக்கும் ஒன்றல்ல. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகவே இத்தகைய நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெறும் நிகழ்வுகள் ஒவ்வொருமுறையும் வெளிவரும் போதெல்லாம் இளைய சமுதாயம் எங்கே செல்கிறது? என்ற கவலையும், அதை விட அதிகமாக, எதிர்காலத் தூண்களாக வளர்த்தெடுக்கப்பட வேண்டிய குழந்தைகளை அரசும், சமூகமும் சீரழிக்கின்றனவே? என்ற ஆத்திரமும் தான் ஏற்படுகின்றன.</p> <h2>என்ன தண்டனை?</h2><p>இத்தகைய நிகழ்வுகளை முற்றிலுமாக தடுக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை. இளைய தலைமுறையினருக்கான பிரதிநிதிகளாக தங்களைக் காட்டிக் கொள்ளும் தவெக ஆட்சியிலும் இத்தகையக் கொடுமைகள் தொடர்கின்றன. அரசு பள்ளியில் மாணவிகள் மது அருந்தியதைத் தடுக்கத் தவறியதற்காக அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், மிகவும் எளிதாக மது கிடைக்கும் சூழலை உருவாக்கிய ஆட்சியாளர்களையும், வகுப்பறையில் அமர்ந்து மது அருந்துவதை ஒரு சாகசமாகக் கருதும் மனநிலையை மாணவர்களிடம் ஏற்படுத்தியவர்களுக்கும் என்ன தண்டனை?</p> <h2>மதுக்கடைகள்</h2><p>ஒரு காலத்தில் மதுக்கடைகள் ஊருக்கு வெளியிலும், சுடுகாடுகளுக்கு அருகிலும் தான் விற்பனை செய்யப்படும். அங்கு மது அருந்துவதற்காக செல்பவர்கள், யார் கண்களிலும் படாமல் பதுங்கி, பதுங்கி தான் செல்வார்கள். அந்த நிலையை மாற்றி பள்ளிகளுக்கும் மக்கள் கூடும் இடங்களுக்கும் அருகில் மதுக்கடைகளை அமைத்து அவற்றுக்கு வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யும் நிலையை உருவாக்கியது யார்? பள்ளிகளுக்கு அருகில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டு விட்டதாக ஆட்சியாளர்கள் அறிவித்த பிறகும் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் குறைந்தது இரு மதுக்கடைகளையாவது கடந்து செல்ல வேண்டிய சூழல் இப்போதும் நிலவுவது யாருடைய தவறு?</p> <h2>ஆன்லைனில் முன்பதிவு</h2><p>ஒழிக்கப்பட வேண்டிய விஷயங்கள் இவ்வளவு இருக்கும்போது, ஆன்லைனில் முன்பதிவு செய்து, வரிசையில் நிற்காமல் எளிதாக மது வாங்குவதற்கான இணையதளத்தை ஆட்சியாளர்கள் உருவாக்கியது தான் சீர்திருத்தமா? என்பன உள்ளிட்ட வினாக்களுக்கு எல்லாம் ஆட்சியாளர்கள் விடையளித்து தீர்வு காண வேண்டும். மனிதர்களை ஒழிக்கும் மதுவை ஒழிப்பதே அரசின் கடமையாக இருக்க வேண்டும்.</p> <h2>மதுவிலக்கு</h2><p>எனவே, மக்களுக்கும், மாணவர்களுக்கு மது எளிதாகக் கிடைப்பதை உடனடியாகத் தடை செய்ய வேண்டும். குறைந்தது ஆண்டுக்கு 1000 மதுக்கடைகளை மூடி, அடுத்த மூன்றாண்டுகளில் தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/independence-day-cm-vijay-to-hoisting-national-flag-at-fort-tomorrow">முதலமைச்சர் விஜய்</a> அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>TNPSC - டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2ஏ தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி - ஆகஸ்ட் 17-ந்தேதி தொடங்குகிறது!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/online-coaching-for-group-2-and-2a-exams-starts-on-august-17</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/online-coaching-for-group-2-and-2a-exams-starts-on-august-17#comments</comments><guid isPermaLink="false">be8e6818-f869-426c-a348-57a4f6e76169</guid><pubDate>Wed, 12 Aug 2026 14:28:38 +0000</pubDate><atom:updated>2026-08-12T14:28:38.382Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>குரூப் 2 தேர்வு,Group 2 Exam,Aatchi Tamil IAS Academy,ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/er06ikfd/New-Project-2026-08-12T200821.586.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/er06ikfd/New-Project-2026-08-12T200821.586.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமி சார்பில், டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2ஏ தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 17-ந்தேதி முதல் தொடங்குகின்றன. </p><h2>குரூப்-2, 2ஏ தேர்வு</h2><p>சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமி, கடந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. </p><p>இங்கு பயிற்சி பெற்ற பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் டி.என்.பி.எஸ்.சி. நடத்திய பல்வேறு தேர்வுகளில் வெற்றி பெற்று அரசுப் பணிகளில் சேர்ந்துள்ளனர்.</p><p>இந்த நிலையில், 2026-ம் ஆண்டுக்கான குரூப்-2, 2ஏ தேர்வுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. இதன் மூலம் உதவி ஆய்வாளர், முதுநிலை ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், இளநிலைக் கண்காணிப்பாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார்பதிவாளர் நிலை-II, சிறை அலுவலர் உள்ளிட்ட மொத்தம் 821 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.</p><figure><img alt="குரூப்-2, 2ஏ தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி - ஆகஸ்ட் 17-ந்தேதி தொடங்குகிறது!" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/03034yk4/New-Project-2026-08-12T195542.631.jpg" /></figure><h2>ஆன்லைன் பயிற்சி</h2><p>நவம்பர் 1-ந்தேதி நடைபெற உள்ள குரூப்-2, 2ஏ முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெறுவதற்குத் தேவையான திட்டமிட்ட பயிற்சியை வழங்கும் வகையில், ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமியில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 17-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்குகின்றன.</p><p>மொத்தம் 75 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்புகள், தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். பயிற்சியின் ஒரு பகுதியாக தொடர் மாதிரித் தேர்வுகள் மற்றும் தேர்வு நோக்கிலான பயிற்சிகள் நடத்தப்படும்.</p><p>மேலும், தேர்வுக்குத் தேவையான ஆதார நூல்கள் மற்றும் இ-புத்தகங்கள் மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் வழங்கப்படும்.</p><p>வெற்றியை இலக்காகக் கொண்டு திட்டமிடப்பட்டுள்ள இந்த பயிற்சி வகுப்பில் சேருவதற்கான பயிற்சிக் கட்டணம் ரூ.12,500 ஆகும்.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/zkg6l6zc/New-Project-2026-08-12T200718.052.jpg" /></figure><h2>முன்பதிவு செய்யலாம்</h2><p>இந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர், ‘TNPSC GROUP II, IIA ONLINE COACHING-2026’ என்று டைப் செய்து, தங்களது பெயர் மற்றும் தொடர்பு விவரங்களை 7550151584 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பி முன்பதிவு செய்யலாம்.</p><p>இந்த தகவலை ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமி இயக்குநர் ச. வீரபாபு தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பி.சி.சி.ஐ. கிரிக்கெட் இயக்குநர் ஆகிறார் விவிஎஸ் லக்ஷ்மண்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/vvs-laxman-set-to-be-named-bcci-director-of-cricket</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/vvs-laxman-set-to-be-named-bcci-director-of-cricket#comments</comments><guid isPermaLink="false">6421d675-7132-4e91-a014-90736f968843</guid><pubDate>Fri, 14 Aug 2026 09:23:02 +0000</pubDate><atom:updated>2026-08-14T09:23:02.177Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Team India,டீம் இந்தியா,vvs laxman,BBCI,விவிஎஸ் லக்ஷ்மண்,பிசிசிஐ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/bj3zrwmd/VVSLaxman001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விவிஎஸ் லக்ஷ்மண்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/bj3zrwmd/VVSLaxman001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்ந்தவர் வி.வி.எஸ். லக்ஷ்மண். இவர் தற்போது பெங்களூருவில் உள்ள பிசிசிஐ-யின் சிறப்பு மையத்தின் தலைவராக உள்ளார். இளம் வீரர்களை கண்டறிந்து இந்த மையத்தில் சிறப்பான பயிற்சி அளிப்பது, இந்திய கிரிக்கெட் அணியில் காயம் அடைந்து சிகிச்சைப் பின் இங்கு வந்து விளையாட்டுக்கான தகுதி பெறுவதற்கான பயிற்சி மேற்கொள்வது (Rehabilitation-உடல் மீட்பு பயிற்சி) போன்ற பணிகளை வி.வி.எஸ். லக்ஷ்மண் மேற்பார்வையிடும் தலைவராக உள்ளார்.</p><h2>பிசிசிஐ கிரிக்கெட் இயக்குநர்</h2><p>இவருடைய பதவிக்காலம் முடிவடைய இருக்கும் நிலையில், பி.சி.சி.ஐ. இரண்டு வருடம் லக்ஷ்மண் பதவிக்காலத்தை நீட்டிக்க முடிவு செய்துள்ளது. இந்த முறை பி.சி.சி.ஐ. கிரிக்கெட் இயக்குநர் என்ற பதவி வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பதவியின் கீழ், இவர் ஏற்கனவே செய்து கொண்டு வரும் பணி அப்படியே தொடருவார். மேலும், ஸ்டாஃப் நியமனம் போன்ற பணிகளையும் மேற்கொள்வார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>அஜித் அகர்கர்</h2><p>அதேவேளையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளராக அஜித் அகர்கர் உள்ளார். இவரது பதவிக்காலமும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், 2027-ம் ஆண்டு ஆப்பிரிக்கா கண்டத்தில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலக கோப்பை தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி இடம் பெறுவது தொடர்பான விவகாரத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். இதனால அகர்கர் பதவிக்காலம் நீடிக்கப்படுமா? என்பது தெரியவில்லை.</p><h2>கவுதம் கம்பீர்</h2><p>கவுதம் கம்பீர் மூன்ற வகை சீனியர் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா, விராட் கோலி விலகிய பிறகு இந்திய அணி மோசமாக விளையாடி வருகிறது. இதனால் டெஸ்ட் அணிக்கு பயிற்சியாளராக தொடர்ந்து நீடிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், இலங்கை தொடரில் இந்திய அணி தோல்வியடைந்தாலும் கவுதம் கம்பீர் தொடர்ந்து தலைமை பயிற்சியாளராக தொடர்வார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.</p><p>இலங்கை தொடருக்கு முன்னதாக பும்ரா, சாய் சுதர்சன், சுப்மன் கில் போன்ற வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதில் பும்ரா, சாய் சுதர்சன் இலங்கை தொடரில் இருந்து வெளியேறினர். இதனால் சிறப்பு மையம், வீரர்களுக்கு காயம் குணம் அடைவதற்கு முன்னதாக விளையாட தகுதி என சான்றிதழ் வழங்கப்படுவதாக விமர்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>ஆடிப்பூரம் விழா: திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் </title><link>https://www.maalaimalar.com/spirituality/aadi-pooram-festival-devotees-darshan-thiruttani-murugan-temple</link><comments>https://www.maalaimalar.com/spirituality/aadi-pooram-festival-devotees-darshan-thiruttani-murugan-temple#comments</comments><guid isPermaLink="false">d7d65646-abb0-40a3-8001-129a3b81b6eb</guid><pubDate>Fri, 14 Aug 2026 09:15:46 +0000</pubDate><atom:updated>2026-08-14T09:15:46.645Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruttani temple,ஆடிப்பூரம்,aadi pooram,திருத்தணி கோவில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/nqzij34b/tiruttani.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ tiruttani temple]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/nqzij34b/tiruttani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>திருத்தணி முருகன்கோவிலில் ஆடிப்பூரம் விழாவை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.</strong></em></p> <h2>திருத்தணி முருகன் கோவில்</h2><p>சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து உடலில் அலகு குத்தி, காவடிகள் சுமந்து வந்து <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">திருத்தணி முருகன் கோவிலில்</a> நேர்த்தி கடன் செலுத்தினர்.</p><h2>ஆடிப்பூர விழா</h2><p>சுமார் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் பால் குடங்கள் சுமந்து வந்து முருகப்பெருமானை வழிபட்டனர். <a href="https://www.maalaimalar.com/spirituality/aadi-pooram-srivilliputhur-andal-temple-therottam">ஆடிப்பூர விழாவை </a>முன்னிட்டு அதிகாலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தங்க கவசம், வைர கிரீடம், பச்சைக்கல் மரகத மாலை அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.</p><h2>பால் குடங்கள், மயில் காவடி</h2><p>ம.பொ.சி. சாலை சன்னதி தெரு, மலையடி வாரத்தில் உள்ள சரவண பொய்கை திருக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வரிசையாக நின்று பம்பை உடுக்கை முழங்க கிராமிய கலை நிகழ்ச்சிகளோடு பக்தர்கள் விரதம் இருந்து பால் குடங்கள், மயில் காவடி, புஷ்பக் காவடிகள், சுமந்தும் உடலில் வேல் அம்பு குத்தியும் பக்தி பெருக்கோடு படிக்கட்டின் வழியாக நடந்து சென்றனர்.</p> <p>பக்தர்கள் கூட்டம் காரணமாக சுமார் 5 மணி நேரம் மலைக்கோவில் தேர் வீதியில் வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசித்தனர்.  விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>டார்வின் டெஸ்டில் ஹசன் தமிம் சதம்: 2ம் நாள் முடிவில் வங்கதேசம் 351 ரன்கள் குவிப்பு</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/bangladesh-351-for-6-in-day-2-against-australia-first-test</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/bangladesh-351-for-6-in-day-2-against-australia-first-test#comments</comments><guid isPermaLink="false">96711855-e42e-4cb2-933b-33d373e8572c</guid><pubDate>Fri, 14 Aug 2026 09:01:22 +0000</pubDate><atom:updated>2026-08-14T09:01:22.506Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Najmul Hossain Shanto,AUSvBAN,நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ,ஆஸ்திரேலியா வங்கதேசம் தொடர்,hasan Tamim,ஹசன் தமிம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/s4szys90/tamim.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ hasan tamim]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/s4szys90/tamim.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டின் 2வது நாள் முடிவில் வங்கதேசம் முதல் இன்னிங்சில் 351 ரன்களைக் குவித்துள்ளது.</p><p>ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நஜ்முல் ஹூசைன் ஷான்டோ தலைமையிலான வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது.</p><h2>டார்வின் டெஸ்ட்</h2><p>ஆஸ்திரேலியா-வங்கதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டார்வினில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.</p><p>அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்கியது. வங்கதேச வீரர்கள் ஆரம்பம் முதலே சிறப்பாக பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.</p><h2>ஸ்மித் அரை சதம்</h2><p>ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து அரை சதம் கடந்தார். அவர் 71 ரன்னில் அவுட்டானார். ஜேக் வெதரால்டு 23 ரன்னும், டிராவிஸ் ஹெட் 22 ரன்னும் எடுத்தனர். 5-வது விக்கெட்டுக்கு இணைந்த ஸ்மித்-கேரி ஜோடி 56 ரன்கள் சேர்த்தது.</p><p>இறுதியில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 198 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.</p><p>வங்கதேசம் சார்பில் ஹசன் மகமுது 6 விக்கெட்டும், தஸ்கின் அகமது, எபாடட் ஹொசைன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p>தொடர்ந்து ஆடிய வங்கதேசம் முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 96 ரன்கள் எடுத்துள்ளது.</p><p>இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. 2வது விக்கெட்டுக்கு இணைந்த ஹசன் தமிம்-மொமினுல் ஹக் ஜோடி102 ரன்களை சேர்த்த நிலையில் மொமினுல் ஹக் 49 ரன்னில் அவுட்டானார்.</p><h2>ஹசன் தமிம் சதம்</h2><p>சிறப்பாக ஆடிய ஹசன் தமிம் சதமடித்து அசத்தினார். அவர் 101 ரன்னில் ஆட்டமிழந்தார்.</p><p>அடுத்து இறங்கிய கேப்டன் ஷாண்டோ பொறுப்புடன் ஆடி அரை சதம்ம் கடந்து 84 ரன்னில் வெளியேறினார்.</p><p>இறுதியில், இரண்டாம் நாள் முடிவில் வங்கதேச அணி 6 விக்கெட்டுக்கு 351 ரன்கள் குவித்துள்ளது. மெஹிதி ஹசன் 32 ரன்னும், ஹசன் மகமுது 13 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.</p><p>வங்கதேசம் அணி ஆஸ்திரேலியாவை விட 153 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.</p><p>ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.</p>]]></content:encoded></item><item><title>ஏடிஎம் வாகன கொள்ளை.. பீகாரில் பக்தர்கள் போல வேடமிட்டு குற்றவாளிகளை பிடித்த கர்நாடக போலீஸ் </title><link>https://www.maalaimalar.com/news/national/karnataka-bank-heist-arrest-guard-killing-robbers-who-stole-98-lakh-nabbed-in-bihar</link><comments>https://www.maalaimalar.com/news/national/karnataka-bank-heist-arrest-guard-killing-robbers-who-stole-98-lakh-nabbed-in-bihar#comments</comments><guid isPermaLink="false">176ebed4-e856-44f7-a0fe-c2b04a8edd58</guid><pubDate>Fri, 14 Aug 2026 08:33:39 +0000</pubDate><atom:updated>2026-08-14T08:33:39.749Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,பீகார்,Bihar,ஏடிஎம் வாகன கொள்ளை,ATM cash van robbery</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/osgdh365/tn-29.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஏடிஎம் வாகன கொள்ளை]]></media:title><media:description type="html"><![CDATA[ ஏடிஎம் வாகன கொள்ளை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/osgdh365/tn-29.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடகாவில் கடந்த ஆண்டு காவலரை கொன்றுவிட்டு வங்கி ஏடிஎம் பணம் ஏற்றிச் சென்ற வாகனத்தை <a href="https://www.maalaimalar.com/news/national/rs711-crore-bengaluru-atm-vehicle-robbery-constable-who-masterminded-it-three-arrested-how-was-it-caught-798755">கொள்ளையடித்த </a>குற்றவாளிகள் பீகாரில் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><h2>கொள்ளை </h2><p>2025, ஜனவரி 16 அன்று கர்நாடக மாநிலம் பிடாரில் உள்ள சிவாஜி சௌக் பகுதியில் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம்மில் பணம் நிரப்ப வந்த வாகனத்தை இலக்கு வைத்து துப்பாக்கியுடன் மோட்டார் சைக்கிளில் முகமூடியுடன் வந்த இருவர் தாக்குதல் நடத்தினர்.</p><p>மிளகாய் பொடியை பொடியைத் தூவி, துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டுச் சுமார் ரூ.98 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.</p><p>இந்தத் தாக்குதலில் கிரி வெங்கடேஷ் என்ற பாதுகாப்பு காவலர் உயிரிழந்தார். சிவகுமார்  என்ற மற்றொரு காவலர் காயமடைந்தார். </p><p>கொள்ளைச் சம்பவம் நடந்த அதே நாளில் மாலையில், ஐதராபாத்தில் பேருந்து ஏற முயன்றபோது சந்தேகமடைந்த டிராவல்ஸ் மேனேஜர் ஜஹாங்கீர் என்பவரையும் இவர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பியுள்ளனர்.</p><p>கர்நாடக போலீசார் சிறப்பு படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். </p> <h2>கைது</h2><p>இந்த கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பீகாரின் வைஷாலி மாவட்டத்தைச் சேர்ந்த அமன் குமார் மற்றும் அவரது கூட்டாளி அலோக் குமார் என போலீசார் கண்டறிந்தனர்.</p><p>கர்நாடகா தவிரத் தெலங்கானா, பீகார் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களிலும் இவர்கள் மீது கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன.</p> <p>இதைத்தொடர்ந்து கர்நாடகக் காவல் துறையைச் சேர்ந்த சிறப்புக் குழுவினர் பீகாரில் உள்ள வைஷாலி மாவட்டத்தில் முகாமமிட்டனர்.</p><p>சந்தேக நபர்களைக் கண்டுபிடிக்க சில அதிகாரிகள் யாத்திரை செல்லும் பக்தர்கள் வேடத்தில் அப்பகுதியில் 20 நாட்களுக்கும் மேலாக உலா வந்து தீவிரமாகக் கண்காணித்தனர்.</p><p>நேற்று முன் தினம் (புதன்கிழமை) அன்று தாமோதர்பூர் கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவரையும் காவல் துறையினர் வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>80-வது சுதந்திர தினம்: 15 காவல் துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் சிறப்புப் பதக்கங்கள் அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/gold-medals-and-cash-awards-for-15-police-officers</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/gold-medals-and-cash-awards-for-15-police-officers#comments</comments><guid isPermaLink="false">bd2384a6-b8b5-424b-b3d8-f17e72062fd9</guid><pubDate>Fri, 14 Aug 2026 08:31:15 +0000</pubDate><atom:updated>2026-08-14T08:31:15.871Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Independence Day,சுதந்திர தினம்,Police department,காவல் துறை அதிகாரிகள்,சிறப்பு பதக்கம்,Special awards</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/l5l2chnl/TN-CM-Vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/l5l2chnl/TN-CM-Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-</p><h2>சிறப்பு பதக்கம்</h2><p>2026-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகள், சார்நிலை அலுவலர்களுக்கு  சிறப்புப் பதக்கங்கள் வழங்கப்படுகிறது.</p><p>புலன் விசாரணைப் பணியில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் கீழ்கண்ட 10 காவல்துறை அதிகாரிகள், சார்நிலை அலுவலர்களுக்கு 2026-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப் பணிப் பதக்கங்கள் வழங்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். </p><p>அவர்கள் விவரம் வருமாறு:-</p><h2>திருவள்ளூர்</h2><p>1. சி.ஜெயஸ்ரீ,  காவல் துணை கண்காணிப்பாளர்,  கும்மிடிபூண்டி  உட்கோட்டம்,   திருவள்ளுர் மாவட்டம்.</p><p>2.  நா.தமிழரசி, காவல் துணை கண்காணிப்பாளர்,  திருவள்ளுர் உட்கோட்டம், திருவள்ளுர்  மாவட்டம்.</p><p>3. கொ.அழகுராஜ், காவல் ஆய்வாளர், சைபர் கிரைம் காவல் நிலையம்,  கோவை மாநகரம்.</p><p>4. ந.தனுசியா, காவல் துணை கண்காணிப்பாளர், ஒருங்கிணைந்த குற்றப் பிரிவு,  குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வு துறை,  திருச்சி மாநகரம்.</p><h2>கோவை-சென்னை</h2><p>5. சே.லதா, காவல் ஆய்வாளர், தனி சிறுவர் காவல் உதவி பிரிவு,  கோவை மாநகரம்.</p><p>6. வி.கோமதி, காவல்துறை உதவி தலை வர், நிர்வாகம்,   காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம், சென்னை.</p><p>7. மா.சித்ரா, காவல் ஆய்வாளர், கைகளத்தூர் காவல் நிலையம்,  பெரம்ப லூர் மாவட்டம்.</p><p>8. ரா.வினதா, காவல் ஆய்வாளர், மேல்மலைய னூர் காவல் நிலையம்,   விழுப்புரம் மாவட்டம்.</p><p>9.கோ.மகாலெட்சுமி, காவல் ஆய்வாளர், மாவட்ட குற்ற பதிவேட்டு கூடம்,   சிவகங்கை மாவட்டம்.</p><p>10. ச.விஜயகுமார், காவல் துணை ஆணையர், மேற்கு, திருநெல்வேலி  மாநகரம்.</p><h2>காவல் பதக்கம்</h2><p>இதே போன்று பொது மக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய கீழ்கண்ட 5 காவல் துறை அதிகாரிகள், சார் நிலை அலுவலர்களுக்கு  2026-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு  அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் வழங்க தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்கள். அவர்கள் விவரம் வருமாறு:-</p><p>1. டாக்டர் வி.சசி மோகன்,  காவல்துறை துணைத் தலைவர், திண்டுக்கல் சரகம்.</p><h2>சென்னை-கரூர்</h2><p>2.தெ.சண்முக பிரியா,  காவல் கண்காணிப்பாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம், மேற்கு சரகம்,  சென்னை. </p><p>3. சி.எம்.ஆர்.மணிமொழியன், துணை காவல் கண்காணிப்பாளர், தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, சென்னை.</p><p>4. க.மதன் மோகன், காவல் ஆய்வாளர் (தொழில் நுட்பம்), மாநில காவல் தலைமை கட்டுப்பாட்டு அறை, சென்னை.</p><p>5. மு.ரவிக்குமார், தலைமை காவலர்-1618, கரூர் நகர காவல் நிலையம்,  கரூர் மாவட்டம்.</p><h2>தங்கப் பதக்கம்</h2><p>விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா 8 கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், ரூ.25 ஆயிரம் ரொக்க வெகுமதியும் வழங்கப்படும்.</p><p>மேற்கண்ட விருதுகள், முதலமைச்சர் விஜய்யால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கனடா ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் பென் ஷெல்டன்</title><link>https://www.maalaimalar.com/sports/tennis/ben-shetton-won-the-title-in-canada-open</link><comments>https://www.maalaimalar.com/sports/tennis/ben-shetton-won-the-title-in-canada-open#comments</comments><guid isPermaLink="false">6739d518-6a13-4ab5-bfbe-8e266a9c24d2</guid><pubDate>Fri, 14 Aug 2026 08:27:30 +0000</pubDate><atom:updated>2026-08-14T08:27:30.259Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Canada Open Tennis,கனடா ஓபன் டென்னிஸ்,ben shelton,பென் ஷெல்டன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/go32n53j/shelton.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ben shelton]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/go32n53j/shelton.jpg?w=280" width="280"></media:thumbnail><category>டென்னிஸ் (Tennis)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கனடா ஓபன் டென்னிஸ் தொடரில் அமெரிக்காவின் பென் ஷெல்டன் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.</p><p>முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொரண்டோ நகரில் நடைபெற்றது.</p><p>இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்று போட்டியில் அமெரிக்காவின் பென் ஷெல்டன், சக நாட்டு வீரரான பிராண்டன் நகஷிமா உடன் மோதினார். </p><p>இதில் சிறப்பாக ஆடிய பென் ஷெல்டன் 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்று அசத்தினார்.</p><p>ஆண்கள் இரட்டையர் பிரிவில் பிரேசிலின் ரபேல் மேடோஸ்-ஆர்லண்டோ லஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.</p><p>இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக் கஜகஸ்தானின் எலினா ரிபாகினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.</p>]]></content:encoded></item><item><title>திருப்பதியில் சாமி தரிசனத்திற்கு 18 மணி நேரம் ஆகிறது</title><link>https://www.maalaimalar.com/news/national/18-hours-for-darshan-tirupati-temple</link><comments>https://www.maalaimalar.com/news/national/18-hours-for-darshan-tirupati-temple#comments</comments><guid isPermaLink="false">e91a49fa-e63e-4f92-8252-0ff37371fd3e</guid><pubDate>Fri, 14 Aug 2026 08:20:56 +0000</pubDate><atom:updated>2026-08-14T08:20:56.191Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirupati temple,Free Darshan,திருப்பதி கோவில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/s911b42e/tirupati.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tirupati temple]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/s911b42e/tirupati.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>திருப்பதியில் சாமி தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.</strong></em></p><h2>திருப்பதி ஏழுமலையான் கோவில்</h2><p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">திருப்பதி ஏழுமலையான் கோவிலில்</a> கடந்த சில நாட்களாக கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. நேற்று காலை முதல் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது.</p><p>ரூ.300 சிறப்பு தரிசனத்தில் வந்த பக்தர்கள் 3 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர். நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்களை வைகுந்தம் அறைகளில் தங்க வைத்து தரிசனத்திற்கு அனுப்பி வைத்தனர். </p> <h2>இலவச தரிசனம்</h2><p>திருப்பதியில் நேற்று 69,082 பேர் தரிசனம் செய்தனர். 26,671 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.09 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது 4.05 லட்சம் லட்டுக்கள் விற்பனையானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>டெஸ்டில் 435 விக்கெட்: கபில்தேவ் சாதனையை முறியடித்தார் ஸ்டார்க்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/mitchell-starc-surpasses-kapil-dev-in-test-wickets-key-stats</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/mitchell-starc-surpasses-kapil-dev-in-test-wickets-key-stats#comments</comments><guid isPermaLink="false">41d11729-5904-4fde-95ee-1bbebb5ce74b</guid><pubDate>Fri, 14 Aug 2026 08:15:16 +0000</pubDate><atom:updated>2026-08-14T08:15:16.898Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மிட்செல் ஸ்டார்க்,Kapil Dev,Mitchell Starc,கபில் தேவ்,AUSvBAN,ஆஸ்திரேலியா வங்கதேசம் தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/45qjspp7/starc.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ mitchell starc]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/45qjspp7/starc.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வங்கதேச அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.</p><p>இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டார்வின் நகரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 198 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.</p><h2>ஹசன் மகமுது 6 விக்கெட்</h2><p>வங்கதேசம் சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஹசன் மகமுது 6 விக்கெட் வீழ்த்தினார்.</p><p>தொடர்ந்து ஆடிய வங்கதேசம் இரண்டாம் நாளில் 6 விக்கெட்டுக்கு 300 ரன்களைக் கடந்து ஆடி வருகிறது.</p><h2>ஸ்டார்க் 435 விக்கெட்</h2><p>ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட் வீழ்த்தினார். அவர் 106 டெஸ்டுகளில் விளையாடி 435 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்</p><p>கபில்தேவ் 131 டெஸ்டில் விளையாடி 434 விக்கெட் எடுத்து 12-வது இடத்தில் உள்ளார்.</p><p>வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். இதன்மூலம் மிட்செல் ஸ்டார்க், கபில் தேவின் சாதனையை முறியடித்துள்ளார்.</p><p>ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் வார்னே 708 விக்கெட்டுடன் முதல் இடத்திலும், நாதன் லயன் 567 விக்கெட்டுடன் 2வது இடத்திலும், மெக்ராத் 563 விக்கெட்டுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.</p><p>இந்த வரிசையில் 435 விக்கெட்டுகளுடன் மிட்செல் ஸ்டார்க் 4-வது இடத்தில் உள்ளார்.</p><p>உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களில் மிட்செல் ஸ்டார்க் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் 9 டெஸ்ட்களில் 48 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>கனடா ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்வியாடெக்</title><link>https://www.maalaimalar.com/sports/tennis/iga-swiatek-won-the-canada-open-title</link><comments>https://www.maalaimalar.com/sports/tennis/iga-swiatek-won-the-canada-open-title#comments</comments><guid isPermaLink="false">4846626b-987c-4da3-a2bf-7a6804181162</guid><pubDate>Fri, 14 Aug 2026 07:54:27 +0000</pubDate><atom:updated>2026-08-14T07:54:27.053Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Iga Swiatek,இகா ஸ்வியாடெக்,Canada Open Tennis,கனடா ஓபன் டென்னிஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/3fvngutb/swiatek.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ iga swiatek]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/3fvngutb/swiatek.jpg?w=280" width="280"></media:thumbnail><category>டென்னிஸ் (Tennis)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொரண்டோ நகரில் நடைபெற்றது.</p><p>மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று இறுதி ஆட்டம் நடைபெற்றது.</p><p>இன்று நடந்த இறுதிச்சுற்று போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக், கஜகஸ்தானின் எலினா ரிபாகினா உடன் மோதினார்.</p><p>இதில் சிறப்பாக ஆடிய இகா ஸ்வியாடெக் 6-2, 6-3 என வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.</p><p>இதேபோல, ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் பென் ஷெல்டன் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.</p><p>ஆண்கள் இரட்டையர் பிரிவில் பிரேசிலின் ரபேல் மேடோஸ்-ஆர்லண்டோ லஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.</p>]]></content:encoded></item><item><title>ஆடிப்பூரம் முன்னிட்டு தோரணமலையில் பெண்கள் மணி அடித்து வேல்பூஜை</title><link>https://www.maalaimalar.com/spirituality/aadipooram-thoranamalai-women-bell-vel-pooja</link><comments>https://www.maalaimalar.com/spirituality/aadipooram-thoranamalai-women-bell-vel-pooja#comments</comments><guid isPermaLink="false">23b44816-1aa4-465d-aab6-72eaab9ebf5f</guid><pubDate>Fri, 14 Aug 2026 07:45:53 +0000</pubDate><atom:updated>2026-08-14T07:45:53.190Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆடி மாதம்,ஆடிப்பூரம்,வேல் பூஜை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/8l08k4ow/Adi-pooram.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Adipooram]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/8l08k4ow/Adi-pooram.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தோரணமலை முருகன் கோவிலில் கடைசி வெள்ளி மற்றும் ஆடிப்பூரத்தையொட்டி பெண்கள் மணி அடித்து வேல்பூஜை செய்தனர்.</p><h2>தோரணமலை</h2><p>தென்காசி மாவட்டம் தோரணமலை முருகன் கோவிலில் தமிழ்மாத கடைசி வெள்ளி அன்று சிறப்பு அபிஷேகம் மற்றும் வருணகலச பூஜை நடைபெறும். இந்த மாதம் கடைசி வெள்ளி மற்றும் ஆடிப்பூரமும் இணைந்து வந்ததால் பூஜையை சிறப்பாக நடத்தினார்கள். ஆடிப்பூரம் என்பதால் இந்த பூஜையில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருந்தது.</p><p>அதிகாலையில் அடிவார வல்லப விநாயகருக்கும், மலைமீதுள்ள முருகப்பெருமானுக்கும் அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. மலையில் உள்ள பத்திரகாளி அம்மனுக்கும், அடிவாரத்தில் உள்ள கன்னிமாரம்மனுக்கும் பூஜை நடந்தது. இதனை அடுத்து முருக பக்தர்கள் 21 பேர் மலைமீதுள்ள சுனையில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்தனர்.</p><p>உற்சவர்கள் முருகன்-வள்ளி, தெய்வானைக்கு பால், சந்தனம், மஞ்சள் உள்பட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன. அதன்பின் மூலவர்கள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மேடையில் எழுந்தருளார்கள்.</p><h2>வருணகலச பூஜை</h2><p>மேடையை சுற்றி வேல்கள் வரிசையாக வைக்கப்பட்டன. அதேபோல் மணிகளும் கட்டி தொங்கவிடப்பட்டு இருந்தன. உற்சவர்களுக்கு பூஜை நடந்தபோது போது பெண்கள் மணிகளை அடித்தபடி வேல்களுக்கும் பூஜை செய்தனர். விவசாயம் செழிக்க வருணகலச பூஜையும் நடந்தது.</p><p>கடையம் பரம வித்யாலயா குருகுலம் மாணவர்கள் 16 பேர் வட இந்திய ஆசான் தலைமையில் தோரணமலைக்கு வந்திருந்தனர். அவர்கள் குழுவாக வேத மந்திரம் சொன்னார்கள். அதன்பின் குருகுல மாணவர்களுக்கு கராத்தே, யோகாக ஆசிரியர் வேல்முருகன் யோகா கற்றுக்கொடுத்தார்.</p><p>தோரணமலையில் அமைக்கப்பட்டு உள்ள நூலகத்தில் 5,576 புத்தகங்கள் உள்ளன. மேலும் தினசரி பத்திரிகைகளும் உள்ளன. கோவிலுக்கு வந்தவர்கள் பலர் நூலகத்திற்கு சென்று படித்தனர். </p><p>விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் காலையில் சிற்றுண்டியும் மதியம் சாப்பாடும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன் செய்திருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>2 வாரத்தில் 3 பெரும் விபத்துகள் தவிப்பு..  சர்ச்சையில் சிக்கிய சிட்னி விமான நிலையம் - விசாரணைக்கு உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/world/sydney-airport-safety-scare-three-near-miss-incidents-trigger-probe-into-air-traffic-control-failures</link><comments>https://www.maalaimalar.com/news/world/sydney-airport-safety-scare-three-near-miss-incidents-trigger-probe-into-air-traffic-control-failures#comments</comments><guid isPermaLink="false">1ce1eb5b-a314-46f4-b9d1-242bb4d1148d</guid><pubDate>Fri, 14 Aug 2026 07:41:51 +0000</pubDate><atom:updated>2026-08-14T07:41:51.504Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Australia,ஆஸ்திரேலியா,plane crash,விமான விபத்து,சிட்னி விமான நிலையம்,Sydney Airport</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/e6092u9e/tn-28.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சிட்னி விமான நிலையம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ சிட்னி விமான நிலையம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/e6092u9e/tn-28.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆஸ்திரேலியாவின் சிட்னி  சர்வதேச <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">விமான நிலையத்தில் </a>கடந்த இரண்டு வாரங்களில் மொத்தம் 3 முறை பெரும் விபத்து தவரிக்கப்பட்டுள்ளது. </p><p>இதுகுறித்து அந்நாட்டின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு  வாரியம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.</p> <h2>சம்பவங்கள்</h2><p>ஆகஸ்ட் 9, ஞாயிறு காலை, வர்ஜின் ஆஸ்திரேலியா என்ற விமானம் ஓடுதளத்தில் புறப்படத் தயாராக இருந்தபோது, விமானக் கட்டுப்பாடு மையம் (ஏர் டிராபிக் கண்ட்ரோல்) தவறான அனுமதி அளித்ததால் குவாண்டாஸ் என்ற மற்றொரு விமானம் குறுக்கே கடக்க முயன்றது.</p><p>வர்ஜின் விமானத்தின் விமானி உடனடி பிரேக் போட்டதால் 1 கி.மீ இடைவெளியில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.</p><p>அதே ஞாயிறு காலை, ஜெட்ஸ்டார் என்ற விமானம் ஓடுதளத்தில் செல்லும் போது, கத்தார் ஏர்வேஸ் விமானத்தின் மீது மோதுவது போல சென்றது. கத்தார் ஏர்வேஸ் விமானி பிரேக் போட்டதால் இந்த விபத்து தவிர்க்கப்பட்டது.</p><p>முன்னதாக ஜூலை 27 அன்று இரண்டு குவாண்டாஸ் விமானங்கள் ஒரே நேரத்தில் புறப்பட அனுமதி அளிக்கப்பட்டதால் மோதும் நிலைக்குச் சென்றன.</p><p>இரண்டு வார இடைவெளிகள் தொடந்து நடந்த இந்த மூன்று பாதுகாப்பு குறைபாடு சம்பவங்கள் சிட்னி விமான நிலையம் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியது.</p> <h2>விசாரணை</h2><p>இதுகுறித்து பேசிய ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் தலைமை ஆணையர் ஆங்கஸ் மிட்செல், "நடக்கக்கூடாத 3 சம்பவங்கள் நடந்துள்ளன. </p><p>சிட்னி விமான நிலையத்தில் அப்போது நிலவிய பணிச்சுமை, கட்டுப்பாட்டு அறையில் இருந்த ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் பயிற்சி முறைகள் குறித்து விரிவாக விசாரிக்கப்படும்" என்றார்.</p><p>ஏர் டிராபிக் கண்ட்ரோலர்களை புதிதாக வேலைக்கு சேர்த்து பயிற்சி அளிக்கும் பணி நடந்து வரும் சூழலில் இந்தத் தவறுகள் நடந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.</p><p>இச்சம்பவங்கள் தொடர்பாக உடனடியாக முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உத்தரவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சுற்றுலா வந்தபோது படிப்புக்காக 5 வயது சிறுவனை தத்தெடுத்த அயர்லாந்து என்ஜினீயர் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ireland-engineer-adopted-a-boy-from-mamallapuram-for-his-education-while-visiting-as-a-tourist</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ireland-engineer-adopted-a-boy-from-mamallapuram-for-his-education-while-visiting-as-a-tourist#comments</comments><guid isPermaLink="false">ffe373a5-cedc-4935-9484-23cfbc87bcfa</guid><pubDate>Fri, 14 Aug 2026 07:39:09 +0000</pubDate><atom:updated>2026-08-14T07:39:09.787Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ireland,அயர்லாந்து,Education,Engineer,என்ஜினீயர்,boy adopted,சிறுவன் தத்தெடுப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/c63c90ia/sudent.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Boy - Michael]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/c63c90ia/sudent.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மாமல்லபுரம் சுற்றுலா வந்தபோது படிப்புக்காக 5 வயது சிறுவனை தத்தெடுத்த அயர்லாந்து என்ஜினீயர்  அவனை ஆரம்ப கல்வி முதல் கல்லூரி வரை படிக்க வைப்பதாக கூறி உறுதி அளித்து அதற்கான உதவிகளை செய்தார்.</strong></em></p> <h2>மைக்கேல் சாப்ட்வேர் என்ஜினீயர்</h2><p>அயர்லாந்து நாட்டை சேர்ந்தவர் மைக்கேல். சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவர் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா செல்லும்போது அங்குள்ள ஏழை குழந்தைகளுக்கு கல்விக்கு உதவுவதை மனிதநேய சேவையாக செய்து வருகிறார். </p> <h2>மாமல்லபுரம் சுற்றுலா </h2><p>கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் மாமல்லபுரம் சுற்றுலா வந்தபோது பூஞ்சேரியை சேர்ந்த ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த சர்வேஸ் (வயது 5) என்ற சிறுவன் ஒருவன் கல்வி கற்க முடியாமல் வறுமையிலும், பொருளாதாரம் இல்லாமலும் சிரமப்படுவதை அறிந்தார். </p><p>இதையடுத்து சிறுவன் சர்வேசை கல்விக்காக மைக்கேல் தத்தெடுத்தார். சிறுவனை ஆரம்ப கல்வி முதல் கல்லூரி வரை படிக்க வைப்பதாக கூறி உறுதி அளித்து அதற்கான உதவிகளை செய்தார்.</p> <h2>சிபிஎஸ்இ </h2><p>இதைத்தொடர்ந்து மாமல்லபுரம் அடுத்த வட கடம்பாடியில் உள்ள தனியார் சி.பி.எஸ்.இ. மேல்நிலைப் பள்ளியில் தன் சொந்த செலவில் சிறுவன் சர்வேசை சேர்த்தார். தொடர்ந்து படிப்பிற்கு தேவையான உபகரணங்கள் அனுப்புவது, போனில் தன்னம்பிக்கை ஊட்டுவது, ஆங்கிலம் சரளமாக பேச ஆன்லைன் பயிற்சி கொடுப்பது என மாணவனை ஊக்கப்படுத்தி வந்தார். </p> <h2>மழலையர் பட்டமளிப்பு விழா</h2><p>இந்த நிலையில் அந்த பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் நன்னடத்தை, எழுத்தழகு, விடுப்பு எடுக்காமை, ஆங்கில உச்சரிப்பு உள்ளிட்ட நற்குணங்களுக்காக சிறுவன் சர்வேசுக்கு மழலையர் பட்டம் வழங்கப்பட்டது. </p> <h2>பட்டமளிப்பு நிகழ்ச்சி</h2><p>இதை நேரில் பார்பதற்காக மைக்கேல் அயர்லாந்து நாட்டில் இருந்து மாமல்லபுரம் வந்தார். பள்ளியில் நடைபெற்ற பட்டமளிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவரை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர். </p><p>மேலும் மைக்கேல், தான் தத்தெடுத்து படிக்க வைக்கும் சிறுவன் சர்வேசை மேடையில் பாராட்டி மகிழ்ந்தார். இந்த சம்பவம் அங்கிருந்த மற்ற மாணவர்களின் பெற்றோர்களை வியக்க வைத்தது.</p>]]></content:encoded></item><item><title>தேசப் பிரிவினை எனும் கருப்பு சரித்திரம்.. நினைவு தினத்தில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்  </title><link>https://www.maalaimalar.com/news/national/partition-horrors-remembrance-day-india-pakistan-division-victims-honoured-and-national-unity-stressed</link><comments>https://www.maalaimalar.com/news/national/partition-horrors-remembrance-day-india-pakistan-division-victims-honoured-and-national-unity-stressed#comments</comments><guid isPermaLink="false">6b62221a-9257-4791-9768-a6df9df77d5f</guid><pubDate>Fri, 14 Aug 2026 07:16:45 +0000</pubDate><atom:updated>2026-08-14T07:16:45.124Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,Independence Day,சுதந்திர தினம்,பிரதமர் மோடி,இந்திய பிரிவினை,Partition of India</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/jq35m68k/tn-27.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரதமர் மோடி ]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர் மோடி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/jq35m68k/tn-27.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஒருங்கிணைந்த இந்தியா சுதந்திரத்தின் போது, இந்தியா - பாகிஸ்தான் என இரு நாடுகளாக பிரிந்தது. </p><p>இந்த பிரிவினையின் போது துயருற்று  தங்களது வாழ்வையும் உயிரையும் இழந்த மக்களின்  நினைவாக ஆண்டுதோறும் ஆகஸ்ட் 14 (இன்று) பிரிவினை கொடுமைகள் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.</p> <h2>பிரிவினை</h2><p>வரலாற்று ஆய்வுகளின்படி, இந்தியா - பாகிஸ்தான் எல்லை வகுக்கப்பட்டபோது சுமார் 1.5 கோடி மக்கள் தங்களது சொந்த வீடுகளை விட்டு வலுக்கட்டாயமாக இடம்பெயர நேரிட்டது.</p><p>மேற்கு பாகிஸ்தான் (தற்போதைய பாகிஸ்தான்) எல்லையான பஞ்சாபிலும், கிழக்கு பாகிஸ்தான் (தற்போதைய வங்கதேசம்) எல்லையான மேற்கு வங்கத்திலும் மதக்கலவரங்கள் மூண்டன.</p><p>கொலை, பாலியல் வன்கொடுமை என பல்வேறு சொல்லொணா துயரங்கள் அரங்கேறின. இதன்போது ஏற்பட்ட மத வன்முறைகளில் தோராயமாக 2 லட்சம் முதல் 20 லட்சம் மக்கள் உயிரிழந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது.</p> <h2>பிரிவினை தினம்</h2><p>ஆகஸ்ட் 14 இத்தினம் அனுசகரிக்கப்படும் என 2021 பிரதமர் மோடி அறிவித்திருந்தார். எதிர்கால சந்ததியினருக்கு நாட்டின் பிரிவினையின் பின்னால் இருக்கும் துயரங்களை அரியச் செய்வதே இத்தினத்தின் நோக்கம்.</p><p>ஆகஸ்ட் 15 நாடு <a href="https://www.maalaimalar.com/topic/independence-day">சுதந்திர தினத்தை </a>கொண்டாடுவதற்கு பின்னால் இப்படியோரு கருப்பு சரித்திரமும் இருப்பதை நினைவுக்கூற இந்நாள் அவசியமாகிறது.</p> <h2>மோடி</h2><p>இவ்வாண்டு பிரிவினை கொடுமைகள் நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பிரிவினையில் இன்னுயிரை இழந்தவர்களுக்கும் அத்தகு கொடூரமான காலகட்டத்தில் இருந்து மீண்டு வந்து நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்டோருக்கும் அஞ்சலி செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.</p><p>மேலும், "மக்களின் துணிச்சலும் பலமும், எப்பேர்ப்பட்ட சவால்களுக்கு மத்தியிலும் இலக்குகளை அடைய முடியும் என்பதை நிருபித்துள்ளது. தேசிய ஒருமைப்பாட்டையும் நல்லிணக்கத்தையும் நாம் மேலும் வலுப்படுத்துவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>8 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை- மர்ம நபர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-police-teams-hunt-8-year-old-assault-suspects</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-police-teams-hunt-8-year-old-assault-suspects#comments</comments><guid isPermaLink="false">49ccc8dd-008e-442f-add3-bb4ebd3e84d1</guid><pubDate>Fri, 14 Aug 2026 07:04:32 +0000</pubDate><atom:updated>2026-08-14T07:04:32.894Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாலியல் வன்கொடுமை,கிருஷ்ணகிரி,Krishnagiri,தனிப்படைகள் அமைப்பு,Sexual Harassment,Special team</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/e1tiz4tv/Krishnagiri.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Krishnagiri Sexual Harassment]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/e1tiz4tv/Krishnagiri.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் பள்ளியிலிருந்து வீடு திரும்பிய 8 வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபர்களைப் பிடிக்கக் போலீசார் சார்பில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.</p><h2>கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை</h2><p>கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த மலை கிராமத்தைச் சேர்ந்த 4-ஆம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமி, கடந்த புதன்கிழமை மாலையில் பள்ளி வகுப்பு முடிந்து மற்ற குழந்தைகளுடன் நடந்து வீடு திரும்பினார். </p><p>மற்ற குழந்தைகள் முன்னதாகவே தங்கள் வீடுகளுக்குச் சென்றுவிட, அந்தச் சிறுமி மட்டும் தனியாக வந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அச்சிறுமியை அருகில் உள்ள புதர் மற்றும் வனப்பகுதிக்குத் தூக்கிச் சென்று கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்தனர்.</p><h2>சிறுமிக்கு தீவிரச் சிகிச்சை</h2><p>வீடு திரும்பிய சிறுமி நடந்த கொடூரத்தை அழுதுகொண்டே தன் பெற்றோரிடம் தெரிவித்தார். இதனையடுத்து உறவினர்கள் குழந்தைகளுக்கான உதவி எண் 1098-க்குத் தகவல் தெரிவித்தனர். </p><p>உடனடியாக அன்று இரவில் 108 அவசர ஊர்தி மூலம் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிறுமி கொண்டு செல்லப்பட்டு, மேல் சிகிச்சைக்காக வியாழக்கிழமை காலையில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிறுமிக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><h2>3 தனிப்படை அமைப்பு</h2><p>இச்சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போக்சோ சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சேலம் சரக டி.ஐ.ஜி சந்தோஷ் ஹதிமானி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜி.எஸ். அனிதா மற்றும் மாவட்ட ஆட்சியர் சி. தினேஷ் குமார் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.</p><p>தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை விரைந்து கைது செய்து சிறையில் அடைக்க, 3 தனிப்படை போலீஸ் அதிகாரிகள் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சர்ச்சைக்குரிய பாடகர் கிறிஸ் பிரவுனுடன் சந்திப்பு: BTS உறுப்பினர்கள் RM, J-Hope மீது நெட்டிசன்கள் கோபம்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/bts-rm-j-hope-face-backlash-over-chris-brown-concert-photo</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/bts-rm-j-hope-face-backlash-over-chris-brown-concert-photo#comments</comments><guid isPermaLink="false">662b88fb-c7ff-41e3-a34c-86d9f3e4d321</guid><pubDate>Fri, 14 Aug 2026 07:01:33 +0000</pubDate><atom:updated>2026-08-14T07:01:33.459Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BTS,bts army,RMBTS,JHOPE,ChrisBrown,கிறிஸ்பிரவுன்,BoycottBTS,ArirangTour</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/i59ztiy3/RM-JHope-ChrisBrown" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  RM - JHope - ChrisBrown]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/i59ztiy3/RM-JHope-ChrisBrown?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலகப் புகழ்பெற்ற கொரிய இசைக்குழுவான <a href="https://www.maalaimalar.com/topic/bts">BTS</a>-ன் முன்னணி உறுப்பினர்கள் ஆர்.எம் மற்றும் ஜே-ஹோப், சர்சைக்குரிய அமெரிக்கப் பாடகர் கிறிஸ் பிரவுனின் கச்சேரியில் கலந்து கொண்டு அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட விவகாரம் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. </p><p>சமூக வலைதளங்களில் இவர்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்கள் தற்போது பெரிதும் கவனிக்க பட்டு வருகிறது</p><figure><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/Db-EHmXllYo/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:658px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/Db-EHmXllYo/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a></div></blockquote>
<script async src="//platform.instagram.com/en_US/embeds.js"></script></figure><h2>சர்ச்சை வெடித்த பின்னணி</h2><p>அமெரிக்க பிரபல பாடகர் கிறிஸ் பிரவுன் மீது கடந்த காலங்களில் கடுமையான பாலியல் குற்றச்சாட்டுகளும், பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகளும் பதிவாகி பெரும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளார். </p><p>தற்போது, கனடாவில் கிறிஸ் பிரவுன் நடத்திய கச்சேரி ஒன்றிற்கு சென்ற ஜே-ஹோப், அங்கு எடுத்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். </p><p>மேலும், ஆர்.எம் மற்றும் ஜே-ஹோப் இருவரும் கிறிஸ் பிரவுனுடன் இணைந்து நெருக்கமாகப் புகைப்படம் எடுத்துக்கொண்டது அவர்களது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.</p><h2>பெண் ரசிகர்களின் ஏமாற்றமும் கொந்தளிப்பும்:</h2><p>BTS குழுவிற்கு உலகம் முழுவதும் 90 சதவீதத்திற்கும் மேல் பெண் ரசிகைகளே உள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்றப் பின்னணி கொண்ட ஒருவரை BTS உறுப்பினர்கள் சந்தித்துக் கொண்டாடுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது எனப் பெண் ரசிகர்கள் குமுறுகின்றனர்.</p><p>"நான் BTS-ஐ மனதார நேசிக்கிறேன், ஆனால் இதுபோன்ற தவறான செயல்களுக்கு அவர்களைக் கண்டித்தே தீருவேன், எனக்கு இந்தச் சம்பவம் பெரும் மன உளைச்சலைத் தருகிறது" என ரசிகர்கள் தங்களின் எக்ஸ் தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். </p><p>சிலர் இவர்களின் பாடல்களைக் கேட்பதையே நிறுத்தப்போவதாகப் புறக்கணிப்புப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Everyone who follows me knows I get called a “HYBE ass-licker,” “BPD defender,” and whatever else because I ALWAYS defend BTS and even HYBE.<br>And I do. I’ll keep defending them in the future when the criticism is ridiculous. But in 9 years of being in this fandom, this is the… <a href="https://t.co/IEUDn6aUwU">pic.twitter.com/IEUDn6aUwU</a></p>&mdash; Yoong⟬⟭na⊙⊝⊜⁷ (@Yoonginapuppy2) <a href="https://x.com/Yoonginapuppy2/status/2087728591907811477?ref_src=twsrc%5Etfw">August 13, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2>ஆதரவாகவும் பேச்சு:</h2><p>மறுபுறம், சில ரசிகர்கள் இவர்களுக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர். "அவர்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரிலேயே கச்சேரிக்குச் சென்றுள்ளனர். </p><p>ஒரு பாடகரின் இசையை ரசிப்பதோ, அவரது கச்சேரிக்குச் செல்வதோ, அவரது கடந்த காலக் குற்றங்களை ஆதரிப்பதாக அர்த்தமாகாது" என்று அவர்கள் வாதிடுகின்றனர்.</p><figure><img alt="BTS" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/g59gcb9p/BTS" /></figure><h2>சுற்றுப்பயணத்தில் பரபரப்பு:</h2><p>தற்போது BTS குழுவினர் தங்களின் 'அரிராங்' ஆல்பத்திற்கான உலகளாவிய இசைப் பயணத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். </p><p>இந்த மாதத்தில் ஆர்லிங்டன், டொராண்டோ, சிகாகோ ஆகிய நகரங்களில் இவர்களின் பிரம்மாண்ட கச்சேரிகள் நடக்கவிருக்கும் சூழலில், இந்தச் சர்ச்சை, BTS குழுவின் பிம்பத்திற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.</p><p>இந்தக் கடுமையான விமர்சனங்கள் குறித்தோ, ரசிகர்களின் பாய்காட் கோரிக்கைகள் குறித்தோ ஆர்.எம் அல்லது ஜே-ஹோப் தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை.</p>]]></content:encoded></item><item><title>ஆடிப்பூர திருவிழா - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்</title><link>https://www.maalaimalar.com/spirituality/aadi-pooram-srivilliputhur-andal-temple-therottam</link><comments>https://www.maalaimalar.com/spirituality/aadi-pooram-srivilliputhur-andal-temple-therottam#comments</comments><guid isPermaLink="false">106d1766-40c7-41ed-a0d9-10de3bb49d51</guid><pubDate>Fri, 14 Aug 2026 06:53:43 +0000</pubDate><atom:updated>2026-08-14T06:53:43.735Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Srivilliputhur Andal temple,ஆடிப்பூரம்,aadi pooram,therottam,தேரோட்டம்,ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/6ql56lvj/andal.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Therottam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/6ql56lvj/andal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>ஆடிப்பூரம்</h2><p>108 வைணவ திருத்தலங்களில் 48-வது ஸ்தலமாக திகழும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டாளின் அவதார தினமான ஆடிப்பூரத்தை கொண்டாடும் வகையில் 10 நாட்கள் இந்த திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. </p> <h2>சயன சேவை</h2><p>விழாவையொட்டி தினமும் ஆண்டாள், ரெங்கமன்னார் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. 5-ம் திருநாளான 10-ந்தேதி 5 கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.</p> <h2>கருட வாகனம்</h2><p>இதில் ஆண்டாள் பெரிய அன்னவாகனம், ரெங்கமன்னார், பெரிய பெருமாள், சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீனிவாச பெருமாள், திருத்தங்கல் அப்பன் ஆகியோர் கருட வாகனங்களிலும், பெரியாழ்வார் சிறிய அன்ன வாகனத்திலும் எழுந்தருளி காட்சி அளித்தனர். 7-ம் திருநாளான நேற்று முன்தினம் இரவு சயனசேவை நிகழ்ச்சி நடைபெற்றது.</p> <h2>ஆடிப்பூர தேரோட்டம்</h2><p><a href="https://www.maalaimalar.com/spirituality/aadi-pooram-3">ஆடிப்பூர திருவிழா</a>வின் சிகர நிகழ்ச்சியாக 9-ம் திருநாளான இன்று (14-ந் தேதி, வெள்ளிக்கிழமை) அதிகாலை 4.35 மணிக்கு மேல் 5.00 மணிக்குள் மேளதாளங்கள் முழங்க கடக லக்னத்தில் ஆண்டாள்-ரெங்கமன்னார் திருத்தேரில் எழுந்தருளினர். </p> <h2>லட்சக்கணக்கான பக்தர்கள்</h2><p>காலை 8.45 மணிக்கு தேரோட்டத்தை அமைச்சர்கள் ஜெகதீஸ்வரி, கீர்த்தனா, கலெக்டர் சுகபுத்ரா வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். இதில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா... கோபாலா... என்ற பக்தி கோஷம் விண்ணை முட்ட தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது கருடன் வானில் வட்டமடித்தது பக்தர்களை பரவசம் அடையச் செய்தது.</p> <h2>அசைந்தாடி வந்து தேர்</h2><p>தேரோட்டத்தை முன்னிட்டு தேர் செல்லும் 4 ரத வீதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தேர் சக்கரங்கள் பதியாத வகையில் இரும்பு பிளேட்டுகள் போடப்பட்டு இருந்தன. அத்துடன் புதியதாக 7 வடங்கள் தேருடன் இணைக்கப்பட்டு இருந்தது. பெண்களுக்கு 2 வடங்கள் ஒதுக்கப்பட்டன. மேலும் வேளாண்மைத்துறை சார்பில் பொக்லைன் எந்திரங்கள் தேரை பின்னால் இருந்து தள்ளியதால் தேரானது பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி வந்தது.</p> <p>அதேபோல் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நகராட்சி நிர்வாகம் சார்பில் செய்து தரப்பட்டிருந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>கரூர் அரசு பணி: மதுரை ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/karur-government-job-cancellation-interim-stay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/karur-government-job-cancellation-interim-stay#comments</comments><guid isPermaLink="false">1f6b3a46-0c4a-4c05-a9ee-bdebef648ac8</guid><pubDate>Fri, 14 Aug 2026 06:48:20 +0000</pubDate><atom:updated>2026-08-14T06:48:20.896Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>SupremeCourt,கரூர்,Highcourt,Karur,Tamilnadu Government,madurai bench,tvk,உச்சநீதிமன்றம்,InterimStay,இடைக்காலதடை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/esw925us/TamilNadu-Government" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TamilNaduGovernment  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/esw925us/TamilNadu-Government?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த செப்டெம்பர் மாதம் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D">கரூரில் நடைபெற்ற</a> தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் 41 பேர் உயிரிழந்தனர். அவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அரசு வேலையை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதலமைச்சர் விஜய்</a> வழங்கினார்.</p><h2>உச்ச நீதிமன்றத்தில் மனு</h2><p>இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இந்த வழக்குகளை விசாரித்த மதுரைக்கிளை, வேலை வழங்கப்பட்ட உத்தரவை ரத்து செய்தது. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்வதற்கும் உத்தரவிட்டது. </p><p>இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் சிலரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.</p><h2>நீதிபதிகள் கேள்வி</h2><p>இந்த வழக்கு இன்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த அரசு வேலையினை ரத்து செய்ய மதுரை கிளையினுடைய உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். </p><p>மேலும், எதிர் மனுதாரர்களான சீனி மற்றும் அகமது ஆகியோரும் பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>இந்த முடிவு அரசு எடுத்த கொள்கை முடிவு, இதை எப்படி நீதிமன்றம் தலையிட முடியும்? பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு ஆணை வழங்கக்கூடாது என்று நீங்கள் எப்படி கூற முடியும்? நீங்கள் யார்? என்று தமிழ்நாடு அரசு சார்பில் நீதிபதிகள் மதுரை கிளை உயர்நீதிமன்றத்தை கேள்வி எழுப்பினர்.</p><h2>விசாரணை ஒத்திவைப்பு</h2><p>தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு குறித்தும், பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் குறித்தும், எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க உத்திரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>ஜப்பானில் வரலாறு காணாத கனமழை - 4 பேர் பலி - ஐவர் படுகாயம் </title><link>https://www.maalaimalar.com/news/world/japan-flood-disaster-triple-typhoons-trigger-record-rains-in-chiba-killing-four-and-disrupting-transport</link><comments>https://www.maalaimalar.com/news/world/japan-flood-disaster-triple-typhoons-trigger-record-rains-in-chiba-killing-four-and-disrupting-transport#comments</comments><guid isPermaLink="false">d433f424-d7c6-4cae-b9dd-54826286d05d</guid><pubDate>Fri, 14 Aug 2026 06:47:29 +0000</pubDate><atom:updated>2026-08-14T06:47:29.996Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>japan,ஜப்பான்,வெள்ளம்,Heavy Rain,floods,கனமழை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/1l8j80ww/tn-26.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஜப்பானில் கனமழை ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஜப்பானில் கனமழை ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/1l8j80ww/tn-26.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/japan">ஜப்பான்</a>, பிலிப்பைன்ஸ் மற்றும் சீனா ஆகிய ஆசிய நாடுகளை ஒரே நேரத்தில் டால்பின், சான் ஹோம், பேய்லூ ஆகிய மூன்று புயல்கள் அடுத்தடுத்துத் தாக்கியுள்ளன.</p><p>இதனால் ஜப்பானில் பெய்த வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். மேலும் ஐவர் பலத்த காயமடைந்தனர். </p> <h2>கனமழை</h2><p>ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகில் உள்ள சிபா மாகாணத்தில் நேற்று மதியம் முதல் மணிக்கு 100 மி.மீ-க்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது.</p><p>இது அங்கு ஆகஸ்ட் மாதம் பொழியும் சராசரி மழையளவை விட 3 மடங்கு அதிகம் என்றும், ஜப்பான் வரலாற்றிலேயே பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p> <h2>வெள்ளம்</h2><p>சிபா மாகாணத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் மூழ்கிய காரில் சிக்கி ஒரு பெண், தெருக்களில் மயங்கி விழுந்த இருவர் உட்பட மொத்தம் 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஐவர் பலத்த காயங்களுடம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.</p> <h2>முடக்கம்</h2><p>1,00,000க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p>20,000க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ரெயில் சேவைகள் மற்றும் முக்கிய நெடுஞ்சாலைகள் முடங்கியுள்ளன.</p><p>விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் சுமார் 7,000 பயணிகள் இரவு முழுவதும் விமான நிலையத்திலேயே முடங்கினர்.</p> <p>மேலும் 1,000க்கும் மேற்பட்டோர் மெட்ரோ ரயில் நிலையங்களில் தஞ்சம் புகுந்தனர்.</p><p>நேற்று விடுக்கப்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ள அபாயம் இன்றும் நீடிப்பதாக உள்ளூர் நிர்வானம் அறிவிய்த்துள்ளது.</p><p>இதனிடையே  இன்று முதல் விமானங்கள் வழக்கம் போல் இயங்கும் என்றும், ரத்து செய்யப்பட வாய்ப்பில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் வார்னிங் - மே 2025-ஐ விட பலமாக பதிலடி கொடுப்போம் என மிரட்டல்</title><link>https://www.maalaimalar.com/news/national/india-pakistan-tensions-shehbaz-sharif-warns-of-stronger-response-over-security-sovereignty-and-water-rights</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-pakistan-tensions-shehbaz-sharif-warns-of-stronger-response-over-security-sovereignty-and-water-rights#comments</comments><guid isPermaLink="false">6b99899f-0be5-4a66-895b-b4ef66674100</guid><pubDate>Fri, 14 Aug 2026 06:22:40 +0000</pubDate><atom:updated>2026-08-14T06:22:40.473Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Pakistan,ஆபரேஷன் சிந்தூர்,shehbaz sharif,Independence Day,ஷெபாஸ் ஷெரீப்,Operation Sindhur,pakistan independence</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/34lachie/tn-25.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஷெபாஸ் ஷெரீப்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஷெபாஸ் ஷெரீப்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/34lachie/tn-25.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாகிஸ்தானின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் நீர் உரிமைகளுக்கு ஆபத்து நேர்ந்தால், மே 2025 இல் கொடுத்ததை விட பலமான பதிலடியை கொடுப்போம் என இந்தியாவிற்கு பாகிஸ்தான் பிரதமர் <a href="https://www.maalaimalar.com/news/world/pakistan-court-grants-bail-to-pm-shehbazs-daughter-and-her-husband-in-graft-case-2">ஷெபாஸ் ஷெரீப்</a> எச்சரிக்கை விடுத்துள்ளார். </p><p>இந்தியா ஆகஸ்ட் 15 (நாளை) சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது போல, பாகிஸ்தான் இன்று (ஆகஸ்ட் 14) தனது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. </p> <h2>நினைவிடம்</h2><p>கடந்த ஆண்டு ஏப்ரலில் பஹல்காமில் 26 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பதிலடியாக இந்தியா மே 7 அன்று ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது. 2 நாட்கள் நீடித்த இந்த மோதல் மே 9 அன்று முடிவுக்கு வந்தது.</p><p>இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 13) தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த ஆண்டு இந்தியாவுடன் நிகழ்ந்த மோதல் மற்றும் அதில் சண்டையிட்ட பாகிஸ்தான் வீரர்களுக்கான யாதிர் ஐ பதா (வெற்றி நினைவிடத்தை) திறந்து வைக்கும் நிகழ்வில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி, பீல்டுக்கு மார்ஷல் அசிம் முனீர் மற்றும் முப்படை தளபதிகள் கலந்துகொண்டனர்.</p> <h2>புகழாரம்</h2><p>இங்கு கடந்த ஆண்டு தாக்குதலின் புகைப்படங்கள் காட்சியப்படுத்தப்பட்டுள்ளன. மோதலில் பாகிஸ்தானே வென்றதாக அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>இந்த நிகழ்வில் பேசிய பிரதமர் ஷெரீப், "யாதிர் ஐ பதா என்பது நமது உறுதிப்பாடு, விடாமுயற்சி மற்றும் எதிரிகள் மீதான நமது ஆயுத படைகளின் ஆதிக்கத்தை பிரதிபலிக்கிறது. நாட்டை காக்கும் சண்டையில் உயிரிழந்த நமது வீரர்களுக்கும், நமது பெருமித்திதிற்குமான நினைவுச்ச்சின்னம் இது " என்றார்.</p> <h2>இந்தியாவுக்கு வார்னிங்</h2><p>"பாகிஸ்தான் அமைதியை விரும்புகிறது. ஆனால் அமைதியை விரும்புவதை பலவீனமாக எடுத்துக்கொள்ள கூடாது. </p><p>கண்ணியத்துடனும் உறுதியுடனும் நாம் அமைதியை நாடுகிறோம். இந்த பிராந்தியத்தில் பாகிஸ்தான் அமைதிக்கான உத்தரவாதமாக விளங்குகிறது.</p><p>ஆனால் பாகிஸ்தானின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் நீர் உரிமைகளுக்கு ஆபத்து நேர்ந்தால், மே 2025 இல் கொடுத்ததை விட பலமான பதிலடியை கொடுப்போம்" என எச்சரித்துள்ளார்.</p><p>பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திய இந்தியா, ஜம்மு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் செல்லும் நீரை கணிசமாக குறைத்துள்ளது. </p><p>இந்த நீரை விவசாயத்துக்கும், குடிநீர் தேவைக்கும் பாகிஸ்தான் பெருமளவில் நம்பியுள்ளதால், நீரை திறந்துவிடும்படி இந்தியாவுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>வந்தே மாதரம் பாடலுக்கு பிறகு தேசியக்கொடி ஏற்றப்படும் - உயர்நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/national-flag-to-be-hoisted-after-vande-mataram-song-high-court-registrar-circular</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/national-flag-to-be-hoisted-after-vande-mataram-song-high-court-registrar-circular#comments</comments><guid isPermaLink="false">485efbe3-49bd-4ac7-aa3a-f6578b394d67</guid><pubDate>Fri, 14 Aug 2026 06:16:42 +0000</pubDate><atom:updated>2026-08-14T06:16:42.367Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வந்தே மாதரம்,Vande Mataram,Madras High Court,சென்னை ஐகோர்ட்,national flag,Independence Day,சுதந்திர தினவிழா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/mwlpae3p/highcourt.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Madras high court - National Flag]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/mwlpae3p/highcourt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><strong>உயர்நீதிமன்றத்தின் சுதந்திர தின கொண்டாட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது குறித்த அறிவிப்பு இல்லை.</strong></p><h2>உயர்நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கை</h2><p>வந்தே மாதரம் பாடல் பாடப்பட்ட பிறகு தேசியக்கொடி ஏற்றப்படும் என உயர்நீதிமன்ற கிளை மற்றும் கீழமை நீதிமன்றங்களுக்கு உயர்நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.</p><p>முதலில் வந்தே மாதரம் பாடலும், தேசியக்கொடி ஏற்றப்பட்டு விழா நிறைவடையும்போது தேசிய கீதமும் பாடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <h2>சுதந்திர தின கொண்டாட்டம்</h2><p>உயர்நீதிமன்றத்தின் சுதந்திர தின கொண்டாட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது குறித்த அறிவிப்பு இல்லை.</p><p>தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்வுகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்தான் முதலில் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஆகஸ்ட் 10-ந்தேதி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.</p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>இந்தியாவின் சுதந்திர தின விழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. </p><p>சென்னை கோட்டை கொத்தளத்தில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/independence-day-cm-vijay-to-hoisting-national-flag-at-fort-tomorrow">முதலமைச்சர் விஜய்</a> நாளை கொடி கம்பத்தில் மூவர்ண தேசியக் கொடியை முதல்முறையாக ஏற்றி வைக்கிறார். </p> <h2>தமிழ்த்தாய் வாழ்த்து</h2><p>சட்டசபையில் தீர்மானம் நிறைவேறிய நிலையில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%90%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D">உயர்நீதிமன்றத்தில்</a> நாளை தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுமா? என்ற தெளிவான அறிவிப்பு எதுவும் இல்லை.</p><p>உயர்நீதிமன்ற பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் வந்தே மாதரம், தேசிய கீதம் குறித்து மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விவசாயிகளின் துயரத்தை பார்க்காமல் அறை மாற்றத்தில் கவனம் செலுத்துகிறார் முதலமைச்சர் விஜய்!- இபிஎஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-prioritises-office-room-change-over-farmers-eps</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-prioritises-office-room-change-over-farmers-eps#comments</comments><guid isPermaLink="false">df79a00e-f168-454f-941a-b85e2a9bd1a9</guid><pubDate>Fri, 14 Aug 2026 06:15:53 +0000</pubDate><atom:updated>2026-08-14T06:15:53.484Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,எடப்பாடி பழனிசாமி,Edappadi pazhanisamy,முதலமைச்சர் விஜய்,tn cm vijay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/asd7as3o/EPS.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Edappadi Pazhanisamy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/asd7as3o/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரி விவகாரத்தை கண்டித்து தஞ்சாவூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p><p>பயிர்க்கடன் தள்ளுபடி, மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்து.</p><p>அப்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-</p><p>காவிரியில் நமக்குரிய நீரை பெற்றுத் தராத தவெக அரசு ரீல்ஸ் போடுவதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறது.</p><p>ரீல்ஸ் மட்டும் போட்டு வரும் தவெக அரசானது விவசாயிகள் மற்றும் மக்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை.</p><p>ரீல்ஸ் போடுவதும் ரீல் விடுவதும் தமிழக வெற்றிக்கழக அரசின் வேலையாக உள்ளது. </p><p>விவசாயிகளுக்கான மும்முனை மின்சாரத்தை முறையாக வழங்காததால் ஒரு லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் வறண்டு கிடக்கின்றன.</p><p>தலைமைச் செயலகத்தில் தனக்கான அறை மாற்றம் தான் முதலமைச்சர் விஜய்க்கு முக்கியம். மக்கள் முக்கியமில்லை.</p><p>நானும் அங்கு இருந்தேன், முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினும் அங்குதான் இருந்தார். ஆனால் தற்போதைய முதல்வர் அறை மாற்றுகிறார்.</p><p>நடிகர் என்பதால் அறை நவீனமயமாக இருக்க வேண்டும் என எதிர்பார்த்து முதலமைச்சர் விஜய் அறையை மாற்றுகிறார்கள்.</p><p>விவசாயிகள் உணவுக்கே வழியின்றி உள்ள நேரத்தில் முதலமைச்சர் விஜய்க்கு அறை மாற்றம்தான் முக்கியமா?</p><p>நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்படும் கர்நாடக அரசு, முதலமைச்சர் விஜய் சென்று பேசினால் நீர் திறக்கும் என்பது நகைச்சுவை. 50 ஆண்டுகாலமாக காவிரி விவகாரத்தில் போராடிக் கொண்டிருக்கிறோம். அந்த வரலாறு தெரியாமல் தவெக அரசு செயல்படுகிறது.</p><p>போராடி, வாதாடி பெற்ற உச்சநீதிமன்ற தீர்ப்பையே கர்நாடகா மதிப்பதில்லை. பேச்சுவார்த்தை நடத்தினால் நீர் திறப்பார்களா?</p><p>வேண்டுமென்று காலம் தாழ்த்துவதற்காகவே கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்த முதலமைச்சர் விஜய் முயற்சிக்கிறார்.</p><p>விவசாயக் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாவிட்டால் தவெக அரசுக்கு விவசாயிகள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.</p><p>கட்சி தொடங்கி மூன்று ஆண்டுகளே ஆகும் நிலையில் தவெகவுக்கு காவிரி போராட்ட வரலாறு எல்லாம் தெரிய வாய்ப்பில்லை. கூட்டணியில் கட்சிகள் கூட அனைத்து கட்சி கூட்டம் கூட்டுமாறு வலியுறுத்தியும் தவெக அரசு கேட்கவில்லை.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவின் 2வது சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்.. நாட்டு மக்களுக்கு சோனம் வாங்சுக் அழைப்பு </title><link>https://www.maalaimalar.com/news/national/india-second-freedom-struggle-sonam-wangchuk-calls-for-peaceful-political-reform</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-second-freedom-struggle-sonam-wangchuk-calls-for-peaceful-political-reform#comments</comments><guid isPermaLink="false">8249749b-bd8a-4007-935a-8a91705d4f03</guid><pubDate>Fri, 14 Aug 2026 05:44:03 +0000</pubDate><atom:updated>2026-08-14T05:44:03.217Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sonam Wangchuk,Independence Day,சுதந்திர தினம்,சோனம் வாங்சுக்,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/b9u5ecgb/tn-24.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சோனம் வாங்சுக்]]></media:title><media:description type="html"><![CDATA[ சோனம் வாங்சுக்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/b9u5ecgb/tn-24.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாளை நாட்டின் 80வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி கல்வியாளர் மற்றும் சமூக செயல்பாட்டாளர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/i-will-end-the-hunger-strike-if-this-single-promise-is-made-sonam-wangchuk">சோனம் வாங்சுக்</a> லடாக்கில் இருந்தபடி வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். </p><p>எக்ஸ் பக்கத்தில் வெளியான அவ்வீடியோவில் பேசும் அவர், அரசியல் சீர்திருத்தத்தித்தை மேற்கொள்ள இந்தியாவின் இரண்டாம் சுதந்திர போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.  </p><p>சுயநலமற்ற, பயமில்லாத நற்பண்புகளுடையவர்களை தலைவர்களாக மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். </p> <h2>புரட்சி</h2><p>"இந்த சுதந்திர தினத்தில், எனக்கு உங்களின் உதவி வேண்டும். இந்தியாவுக்கு ஒரு அமைதியான புரட்சி தேவை. 2047 ஆம் ஆண்டுக்குள் ஒரு மதிப்புமிக்க நாடாக மாறுவதற்கு நாட்டின் தலைவர்கள் எவ்வாறு தேர்ந்தெடுப்படுகிறார்கள் என்பதில் அந்த புரட்சி நிகழ வேண்டும்" என அவர் பேசியுள்ளார்.</p> <h2>குற்ற வழக்குகள்</h2><p>தொடர்ந்து பேசிய அவர், "குற்ற வழக்குகளை கொண்ட அரசியல்வாதிகள் நாட்டின் நம்பகத்தன்மையை இழந்துவருகிறார்கள். நமது நாடாளுமன்ற உறுப்பினர்களில் பாதி பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. அதில் கால் வாசி பேர் மீது கொலை, பாலியல் வன்கொடுமை, ஆள் கடத்தல் வழக்குகள் உள்ளன. நம்பிக்கை பற்றாக்குறை தான் நாட்டின் மிகப்பெரிய பற்றாக்குறையாக மாறியுள்ளதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.</p> <h2>அழைப்பு</h2><p>நாடு நெடுகிலும் உள்ள மக்களுடன் இதுகுறித்து ஆலோசிக்க விரும்புகிறேன். நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கக்கூடியவர்களாக யார் யாரை அவர்கள் கருதுவதாகவும் நான் கேட்டறிய விரும்புகிறேன்.</p><p>இங்கே லடாக்கின் தொலைதூரத்தில் அமர்ந்துகொண்டு நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட தகுதியானவர்கள் யார், அவர்களை எப்படி கண்டறிவது என்பது எனக்கு தெரியவில்லை.</p><p>எனவே மக்கள் தங்கள் பகுதிகளில் அவ்வாறு யாரை மக்கள் பணிக்கு தகுந்தவர்கள் என கருதுகிறீர்களா அவர்களின் பெயர்களை பரிந்துரைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். </p><p>நாம் ஒன்றுசேர்ந்த்து, இந்தியாவின் 2வது சுதந்திர போராட்டத்தை (விடுதலை இயக்கத்தை) தொடங்குவோம். இந்த செய்தியை முடிந்த அளவு மக்கள் தத்தமது மொழிகளில் பெயர்த்து கூடியமட்டும் பரவச் செய்ய வேண்டும்" என கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் சிஜேபி தலைமையில் போராடிய மாணவர்கள் - இளைஞர்களுக்கு ஆதரவாக சோனம் வாங்சுக் 26 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தவர் ஆவார். அவரின் உடல் எடை 10 கிலோவுக்கு மேல் குறைந்தது.</p> <h2>டெல்லி போராட்டம்</h2><p>டெல்லி போலீசாரால் வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். </p><p>ஜூலை 20 நாடாளுமன்றம் பேரணி சென்ற மாணவர்கள் மீது வழக்குப்பதிய மாட்டோம் என மத்திய அமைச்சர் ஜேபி நட்டா அவரை மருத்துவமனையில் சென்று சந்தித்து வாக்குறுதி அளித்த பிறகே அவர் உண்ணாவிரதத்தை கைவிட்டார்.</p><p>தொடர்ந்து சிஜேபி போராட்டத்தின் அழுத்தத்தால் தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.</p> ]]></content:encoded></item><item><title>24 மணி நேரத்தில் ரூ. 2 கோடிக்கு மேல் வசூல் - முன்பதிவிலேயே மாஸ் காட்டிய 
விஸ்வநாத் &amp; சன்ஸ்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/viswanath-and-sons-over-2-crore-tickets-in-24-hours</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/viswanath-and-sons-over-2-crore-tickets-in-24-hours#comments</comments><guid isPermaLink="false">2ffc5918-9527-4de3-ac99-3316d3feedb4</guid><pubDate>Fri, 14 Aug 2026 05:36:55 +0000</pubDate><atom:updated>2026-08-14T05:36:55.403Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சூர்யா,suriya,mamitha baiju,மமிதா பைஜூ,Vishwanath &amp; Sons,GvPrakashkumar,VishwanathAndSons,VenkyAtluri,BookMyShow,BMSCollection,விஸ்வநாதன் &amp; சன்ஸ்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/x66br8kw/VishwanathSons" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vishwanath&Sons]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/x66br8kw/VishwanathSons?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள <a href="https://www.maalaimalar.com/topic/vishwanath-and-sons">விஸ்வநாதன் &amp; சன்ஸ்</a> திரைப்படத்திற்கு, ஆன்லைன் முன்பதிவில் மிகத் தீவிரமாக டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது. </p><p> இன்று ரிலீஸாகியுள்ள நிலையில், தியேட்டர்களில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.</p><h2>டிக்கெட் முன்பதிவு</h2><p>பிரபல நடிகர் சூர்யா நடிக்கும் , இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'விஸ்வநாதன் &amp; சன்ஸ்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. </p><p>தயாரிப்பு நிறுவனமான 'ரவிந்தர் சந்திரசேகரன் - லிப்ரா புரொடக்ஷன்ஸ்' தயாரிப்பில் உருவாகி, ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள <strong>"</strong>விஸ்வநாதன் &amp; சன்ஸ்<strong>"</strong> திரைப்படத்திற்கு, ஆன்லைன் முன்பதிவில் தீவிரமான டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது.</p><h2><strong>வசூல் நிலவரம்:</strong></h2><p>விஸ்வநாதன் &amp; சன்ஸ் படம் இன்று திரைக்கு வந்துள்ள சூழலில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 1,72,230 (172.23K) டிக்கெட்டுகள் ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. </p><p>ஒரு டிக்கெட்டின் சராசரி விலையாக ₹150 கணக்கிடப்பட்டுள்ளது. இதன் ஆன்லைன் தளத்தில் மட்டுமே கடந்த 24 மணி நேரத்தில் தோராயமாக ₹2.5 கோடி வசூலாகி சாதனை படைத்துள்ளது.</p><p>திரையரங்குகளில் இன்று காலை முதலே பாசிட்டிவ் விமர்சனங்கள் வரத் தொடங்கியுள்ளதாலும், வார இறுதி நாட்கள் ஆரம்பமாக உள்ளதாலும், அடுத்தடுத்த காட்சிகளுக்கான டிக்கெட் முன்பதிவு தற்பொழுது மின்னல் வேகத்தில் தீர்ந்து வருகிறது. </p><p>இதனால் வரும் நாட்களில் இந்த வசூல் வேட்டை மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content:encoded></item><item><title>வழக்குகளில் இருந்து தப்பிக்க பாஜகவுடன் திமுக மறைமுக கூட்டணி- அமைச்சர் நிர்மல் குமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-bjp-secret-alliance-to-escape-cases-says-minister-nirmal-kumar</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-bjp-secret-alliance-to-escape-cases-says-minister-nirmal-kumar#comments</comments><guid isPermaLink="false">703c5aed-0189-44d3-ba30-5c83a3e9f34d</guid><pubDate>Fri, 14 Aug 2026 05:20:22 +0000</pubDate><atom:updated>2026-08-14T05:20:22.862Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,DMK,திமுக,அமைச்சர் நிர்மல் குமார்,minister nirmal kumar</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/lusrdzel/Minister-Nirmal-Kumar.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Nirmal Kumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/lusrdzel/Minister-Nirmal-Kumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரச்சனை வரும்போதெல்லாம் திமுகவினர் கூச்சமே இல்லாமல் டெல்லியில் சென்று காலில் விழுவார்கள் என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.</p><p>அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-</p><p>வழக்குகளில் இருந்து வெளிவருவதற்காக பாஜகவுடன் நேரடியாக கூட்டணி வைக்க திமுக முயற்சி செய்தது.</p><p>சொத்துக்களை குடும்பத்தை காப்பதற்காக நேரடியாக கூட்டணி வைக்க திமுக முயன்றது.</p><p>தொகுதி மறுவரையறை குறித்த வாக்கெடுப்பின்போது, அதற்கு எதிராக வாக்களிப்பார்களா இல்லையா என திமுக இப்போதுவரைா சொல்லவில்லை.</p><p>அனைத்திற்கும் ஆதாரம் உள்ளதால், கொஞ்ச நாள் காலம் தள்ளிபோகலாம் ஆனால் வழக்குகளில் இருந்து தப்பிக்க முடியாது.</p><p>கட்சி நிதி எல்லாமே அரசுக்கான நிதியாக மாறியுள்ளதால் ரூ.15,000 கோடி வருவாய்.</p><p>தேநீர் விருந்துக்கு செல்லவில்லை என கனிமொழி கூறுவது நம்பும்படியாக இல்லை. தேநீர் விருந்து நடைபெறும் என கனிமொழிக்கு தெரியாமலா அங்கு சொன்றார்? சீட் மாற்றம் குறித்து அந்த நாளில் தான் பேசவேண்டுமா?</p><p>பிரச்சனை வரும்போதெல்லாம் திமுகவினர் கூச்சமே இல்லாமல் டெல்லியில் சென்று காலில் விழுவார்கள்.</p><p>கடந்த ஆட்சியில் அரசுடன் புிரந்துணர்வு ஒப்பந்தம் நடந்தாலும் அதற்கு பின் குடும்பத்தினருடன் ஒர ஒப்பந்தம்.</p><p>நாளை நடைபெற உள்ள தேநீர் விருந்தில் கலந்து கொள்வது குறித்த தற்போது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.</p><p>கோவையில் மாணவன் கொலை வழக்கில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் தான் கொல்லப்பட்டுள்ளார். கோவை மாணவர், கைது நடவடிக்கை தொடர்கிறது. தவறு எங்கு நடந்தாலும் அதற்கு யார் காரணமாக இருந்தாலும் தவெக ஆட்சியில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>தமிழகத்தில் எங்குமே சொத்து வரி உயர்த்தப்படவில்லை, சொத்து வரியை முறைப்படுத்தி உள்ளோம். திமுக ஆட்சியில் சென்னையில் பெரிய குடியிருப்புகளிலும் சொத்துவரி முறைப்படுத்தப்படாமல் முறைகேடு நடந்துள்ளது.</p><p>மதுரையில் சொத்த வரி முறைகேடு செய்யப்பட்டது. திமுக மேயர் கணவர் கைது செய்யப்பட்டார்.</p><p>தவெக அரசு யாருடன் பேசினாலும் வெளிப்படையாகதான் இருக்கும். மக்கள் நலனுக்காக மட்டுமே மத்திய அரசுடன் பேசுவோம்.</p><p>திருச்சி சிவா மத்திய அமைச்சர் ஆக உள்ளதாக கூறப்படுவதை திமுக தற்போது வரை மறுக்கவில்லை. </p><p>தன்னுடன் எத்தனை பேர் நிற்கிறார்கள் என காண்பிக்கவே எடப்பாடி பழனிசாமி போராட்டம் நடத்துகிறார். </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சுதந்திர தின விழா - கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் விஜய் நாளை தேசியக்கொடி ஏற்றுகிறார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/independence-day-cm-vijay-to-hoisting-national-flag-at-fort-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/independence-day-cm-vijay-to-hoisting-national-flag-at-fort-tomorrow#comments</comments><guid isPermaLink="false">8f0254f4-4302-4a1b-baa2-99c8945e5d4f</guid><pubDate>Fri, 14 Aug 2026 05:11:01 +0000</pubDate><atom:updated>2026-08-14T05:11:01.512Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,national flag,Independence Day,தேசியக்கொடி,சுதந்திர தினவிழா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/2e50uf9z/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ National flag - CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/2e50uf9z/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சுதந்திர தின விழாவையொட்டி தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் விஜய் நாளை தேசியக் கொடியேற்றி உரையாற்றுகிறார்.</strong></em></p> <h2>சுதந்திர தின விழா</h2><p>இந்தியாவின் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE">சுதந்திர தின விழா</a> நாளை (சனிக்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள சென்னை நீலாங்கரை வீட்டில் இருந்து நாளை காலை 8.20 மணிக்கு முதலமைச்சர் விஜய் புறப்படுவார்.</p><p>மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே வரும்போது அவரது காரின் முன்பும், பின்பும் சென்னை காவல்துறையினரின் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அவர் அழைத்து வரப்படுவார்.</p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>சென்னை கோட்டை கொத்தளத்தின் முன்பாக அணிவகுப்பு மரியாதை ஏற்கும் மேடை அருகே <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-vijay-urges-release-of-49-indian-fishermen-held-in-sri-lanka">முதலமைச்சர்</a> காலை 8.35 மணிக்கு வந்திறங்குவார். அங்கு அவரை தலைமைச் செயலாளர் சாய் குமார் வரவேற்பார்.</p><p>பின்னர் அங்கு தென்னிந்திய பகுதிகளின் ராணுவத் தலைமையக படைத்தலைவர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி, தாம்பரம் விமானப்படைத் தள அதிகாரி, கிழக்கு மண்டல கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் ஜெனரல், தமிழக டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம் ஒழுங்கு) ஆகியோரை மரபுப்படி முதலமைச்சருக்கு தலைமைச் செயலாளர் அறிமுகம் செய்து வைப்பார்.</p> <h2>அணிவகுப்பு மரியாதை</h2><p>பின்னர் அணிவகுப்பு மரியாதையை ஏற்கும் மேடைக்கு முதலமைச்சரை தலை மைச் செயலாளர் அழைத்து வருவார். அங்கிருந்தபடி போலீசாரின் அணிவகுப்பு மரி யாதையை முதலமைச்சர் ஏற்பார். அதைத்தொடர்ந்து முதலமைச்சர் விஜய், திறந்த ஜீப்பில் ஏறிச்சென்று போலீஸ் அணிவகுப்பை பார்வையிடுவார்.</p><p>இந்த அணிவகுப்பில் சிறப்பு காவல் படைகள், கேரள சிறப்பு காவல்படை, காவல் பெண் கமாண்டோக்கள், சென்னை பெண்கள் காவல் பிரிவு, கடலோர பாதுகாப்பு குழுமம், நீலகிரி படைப்பிரிவு, குதிரைப்படை போலீசார் பங்கேற்பார்கள்.</p><h2>தேசியக்கொடி ஏற்றுகிறார்</h2><p>பின்னர் கோட்டை கொத்தளத்துக்கு முதலமைச்சர் விஜய் செல்வார். காலை 8.45 மணிக்கு அங்கிருக்கும் கொடி கம்பத்தில் மூவர்ண தேசியக் கொடியை முதல்முறையாக அவர் ஏற்றி வைக்கிறார். அப்போது மூவர்ணத்தில் பலூன்கள் பறக்கவிடப்படும். தேசியக் கொடி ஏற்றப்படும்போது போலீஸ் பேண்டு வாத்தியக் குழுவினர் தேசிய கீதத்தை இசைப்பார்கள்.</p> <p>அதைத்தொடர்ந்து சுதந்திர தின உரையை முதலமைச்சர் விஜய் அங்கிருந்தபடி நிகழ்த்துவார். அப்போது சில புதிய அறிவிப்புகளை அவர் வெளியிடுவார். சுதந்திர போராட்ட தியாகிகள், அவர்களின் வாரிசுகளுக்கான மாதாந்திர ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் ஆகியவற்றை உயர்த்தி அறிவிப்பு வெளியிடுவார்.</p><h2>விருதுகள்</h2><p>அதன் பின்னர் தகைசால் தமிழர் விருது, டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பெயரிலான விருது, துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின் நல் ஆளுமை விருது போன்ற பல விருதுகள் வழங்கப்படும். அவற்றை உரியவர்களுக்கு கோட்டை கொத்தளத்தில் வைத்து முதலமைச்சர் விஜய் வழங்குவார்.</p><p>மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றியோர். அவர்களுக்கு அதிக வேலை வாய்ப்பை வழங்கிய நிறுவனங்கள், மருத்துவர் ஆகியோருக்கான விருதுகளையும் முதலமைச்சர் வழங்குவார். அதைத் தொடர்ந்து சமூகப் பணியாளர்கள் விருது, சிறந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான விருதுகளும் வழங்கப்படும்.</p> <h2>தகைசால் தமிழர்</h2><p>தகைசால் தமிழர் விருதுக்கான பரிசுத் தொகை ரூ. 10 லட்சமாகும். பின்னர் விருது பெற்றவர்களுடன் முதலமைச்சர் விஜய் குழுப் புகைப்படம் எடுத்துக் கொள்வார். அதைத் தொடர்ந்து கோட்டை கொத்தளத்திற்கு அருகே மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு முதலமைச்சர் இனிப்புகளை வழங்குவார்.</p> <h2>சுதந்திர தின விழா</h2><p>சென்னை கோட்டையில் நடக்கும் சுதந்திர தின விழாவை காண மூத்த குடிமக்கள், பொதுமக்கள், மாணவர்கள், பள்ளிக் குழந்தைகள் என பல தரப்பினரும் கோட்டைக்கு வருவார்கள். அவர்களுக்காக அங்குள்ள சாலையின் ஓரத்தில் தடுப்புகள் போடப்பட்டுள்ளன. காலை 9.30 மணியளவில் விழா நிறைவு பெறும். பின்னர் அங்கிருக்கும் பொதுமக்களுக்கு முதலமைச்சர் விஜய், சுதந்திர தின வாழ்த்துகளை கையசைத்து தெரிவித்தபடி காரில் புறப்பட்டுச் செல்வார்.</p> <p>இந்த விழாவுக்கு அழைக்கப்பட்டவர்கள் அமர்வதற்காக கோட்டை கொத்தளத்துக்கு எதிரே அலங்கரிக்கப்பட்ட தனித்தனியான பந்தல்களில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. சபாநாயகர், அமைச்சர்கள், நீதிபதிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சிறப்பு அழைப்பாளர்கள், தியாகிகளின் குடும்பத்தினர். அரசு உயர் அதிகாரிகள் இந்த விழாவில் பங்கேற்பார்கள்.</p> <h2>உளவுத்துறை எச்சரிக்கை</h2><p>இதற்காக கோட்டையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இப்பகுதி இன்று (வெள்ளிக்கிழமை) இரவு முதல் 5 அடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்படுகிறது. அங்கு பாதுகாப்பு மற்றும் அணிவகுப்பு ஒத்திகையும் நேற்று நடைபெற்றது.</p><p>சுதந்திரதின விழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தும்படி மத்திய உளவுத்துறை அனைத்து மாநிலங்களுக்கும் எச்சரிக்கை செய்தி அனுப்பி உள்ளது.</p> <h2>ஒரு லட்சம் போலீசார்</h2><p>அதையொட்டி தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>இங்கிலாந்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான பயணிகள் ரெயில் 
</title><link>https://www.maalaimalar.com/news/world/uk-train-derailment-11-injured-as-passenger-train-overturns-near-lewes</link><comments>https://www.maalaimalar.com/news/world/uk-train-derailment-11-injured-as-passenger-train-overturns-near-lewes#comments</comments><guid isPermaLink="false">2bfdbaff-b595-40dd-8bc0-39de8ed9a512</guid><pubDate>Fri, 14 Aug 2026 05:00:10 +0000</pubDate><atom:updated>2026-08-14T05:00:10.175Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>train accident,ரெயில் விபத்து,England,இங்கிலாந்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/89id8nsf/tn-23.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ இங்கிலாந்து ரெயில் விபத்து ]]></media:title><media:description type="html"><![CDATA[ இங்கிலாந்து ரெயில் விபத்து ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/89id8nsf/tn-23.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இங்கிலாந்தில் பயணிகள் <a href="https://www.maalaimalar.com/topic/train-accident">ரெயில் தடம் புரண்ட விபத்தில்</a> 11 பேர் காயமடைந்தனர்.</p><p>தெற்கு இங்கிலாந்தின் லூயிஸ் நகருக்கு அருகே நடந்த இந்த விபத்தில் ரெயிலின் 3 பெட்டிகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. </p><p>உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3:54 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. </p><h2>விபத்து</h2><p>மொத்தம் 150 பயணிகளை ஏற்றிக்கொண்டு ரெயிலானது லண்டனின் விக்டோரியா நிலையத்திலிருந்து ஈஸ்ட்போர்ன் நோக்கி சென்று கொண்டிருந்தது.</p><p>லூயிஸ் நகருக்கு வெளியே ரெயில் அதிவேகமாகச் சென்றபோது திடீரெனக் குலுங்கி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 3 பெட்டிகள் கவிழ்ந்தன.</p><p>சம்பவ இடத்திற்கு ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் உடனடியாக அனுப்பப்பட்டு மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.</p><p>கவிழ்ந்த பெட்டிகளுக்குள் சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் நடவடிக்கைகளில் மீட்பு படையினர் ஈடுபட்டனர்.</p><p>மீட்கப்பட்ட 11 பேரில் இருவருக்கு லேசான காயங்களும், 2 பேருக்கு பலத்த காயமும், 9 பேருக்கு லேசான காயங்களும் ஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.</p><p>சுமார் 3 மணி நேரத்திற்குள் ரெயிலில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>இந்த விபத்தைத் தொடர்ந்து, லூயிஸ் மற்றும் ஈஸ்ட்போர்ன் உள்ளிட்ட முக்கியப் பாதைகளில் இயக்கப்படும் ரெயில் சேவைகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன. </p><p>விபத்துக்கான முதன்மை காரணம் என்ன என்பது குறித்து போக்குவரத்துத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.   </p>]]></content:encoded></item><item><title>அறிமுக சலுகைகளுடன் விற்பனைக்கு வந்த ரியல்மி ஸ்மார்ட்போன்</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/realme-16x-5g-goes-on-sale-in-india-price-offers</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/realme-16x-5g-goes-on-sale-in-india-price-offers#comments</comments><guid isPermaLink="false">629d98f7-c2c0-45ea-8956-2a82d83cdf0e</guid><pubDate>Fri, 14 Aug 2026 04:45:00 +0000</pubDate><atom:updated>2026-08-14T04:45:00.000Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Realme,ரியல்மி,smartphone,ஸ்மார்ட்போன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/8puzfkpy/Realme-16x-5G.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Realme 16x 5G]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/8puzfkpy/Realme-16x-5G.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய சந்தையில் <a href="https://www.maalaimalar.com/topic/realme">ரியல்மி</a> 16x 5ஜி ஸ்மார்ட்போன் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்த ஸ்மார்ட்போன் அறிமுக சலுகைகளுடன் விற்பனைக்கு வந்துள்ளது. </p><p>புதிய ரியல்மி <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மார்ட்போன்</a> மீடியாடெக் டிமென்சிட்டி 6300 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இது 6 ஜிபி வரையிலான ரேம்  மற்றும் 256 ஜிபி வரையிலான ஸ்டோரேஜ் வசதியை கொண்டுள்ளது. இது 144Hz ரிப்ரெஷ் ரேட் உடன் கூடிய 6.8-இன்ச் டிஸ்ப்ளே  கொண்டுள்ளது. </p><p>கேமராவை பொறுத்தவரை, இதில் 50MP பிரைமரி கேமரா மற்றும் 8 MP செல்ஃபி கேமரா ஆகியவை உள்ளன. ரியல்மி 16x 5ஜி ஆனது 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 7,000mAh பேட்டரி கொண்டுள்ளது. இத்துடன் ரிவர்ஸ் சாரஜிங் மற்றும் பைபாஸ் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.</p><h2>விலை மற்றும் சலுகை விவரங்கள்:</h2><p>இந்தியாவில் ரியல்மி 16x 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸ் வேரியண்ட் (4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி) ரூ. 25,999 என்ற விலையில் தொடங்குகிறது. இதன் 6ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 27,999 என்றும் 6 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 30,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.</p><p>இந்த ஸ்மார்ட்போன் என்ட்யூரன்ஸ் பிரவுன் (Endurance Brown) மற்றும் க்ளோரி வைட் (Glory White) ஆகிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி இந்தியா இணையதளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது.</p><p>அறிமுக சலுகையாக ரூ. 2,000 தள்ளுபடியை பெறலாம். இதனால், இந்த மூன்று வேரியண்ட்களின் விலைகள் முறையே ரூ. 23,999, ரூ. 25,999 மற்றும் ரூ. 28,999 ஆக குறைகிறது. மாற்றாக, வாங்குபவர்கள் கிரெடிட் கார்டு EMI பரிவர்த்தனைகளுக்கு ரூ. 1,000 தள்ளுபடி அல்லது ரூ. 3,000 வரையிலான எக்சேஞ்ச் சலுகையை பெறலாம்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY: தங்கம் விலை அதிரடி குறைவு - சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-14-8-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-14-8-2026#comments</comments><guid isPermaLink="false">53cdaf71-d605-4855-b1e2-1aa880c85956</guid><pubDate>Fri, 14 Aug 2026 04:30:07 +0000</pubDate><atom:updated>2026-08-14T04:30:07.059Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/03/11/10254423-gold.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/03/11/10254423-gold.webp?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றம்-இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த 3-ந்தேதி தங்கம் ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 500 ஆக இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து 11-ந்தேதி தங்கம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 150-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 200-க்கும் விற்பனையானது.</p> <p>12-ந்தேதி ரூ.50 அதிகரித்து கிராம் ரூ.14 ஆயிரத்து 200-க்கும், ரூ.400 அதிகரித்து சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 600-க்கும் விற்பனையானது.  நேற்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1,13,760-க்கும், கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.14,220-க்கும் விற்பனையானது.</p> <h2>தங்கம் விலை குறைவு</h2><p>இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,440 குறைந்து ரூ.1,12,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.180 குறைந்து ரூ.14,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p> <h2>வெள்ளி விலை நிலவரம்</h2><p>தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-</h2><p>13-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,760</p><p>12-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,600</p><p>11-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,200</p><p>10-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,600</p><p>09-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,720</p> <h2>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-</h2><p>13-08-2026- ஒரு கிராம் ரூ.260</p><p>12-08-2026- ஒரு கிராம் ரூ.260</p><p>11-08-2026- ஒரு கிராம் ரூ.260</p><p>10-08-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>09-08-2026- ஒரு கிராம் ரூ.250</p> ]]></content:encoded></item><item><title>Sinquefield Cup: மூன்றாம் சுற்றில் பிரக்ஞானந்தா அதிர்ச்சி தோல்வி 
</title><link>https://www.maalaimalar.com/sports/praggnanandhaa-suffers-first-loss-vincent-keymer-checkmates-in-sinquefield-cup-round-three</link><comments>https://www.maalaimalar.com/sports/praggnanandhaa-suffers-first-loss-vincent-keymer-checkmates-in-sinquefield-cup-round-three#comments</comments><guid isPermaLink="false">3adc59c4-6998-4937-ba77-ebb1bcbbcd9c</guid><pubDate>Fri, 14 Aug 2026 04:29:48 +0000</pubDate><atom:updated>2026-08-14T04:29:48.245Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PragGnanandhaa,பிரக்யானந்தா,செஸ் தொடர்,Chess series</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/ns9uwa7s/tn-22.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரக்ஞானந்தா ]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரக்ஞானந்தா ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/ns9uwa7s/tn-22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் இளம் செஸ் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, 2026 சிங்பீல்ட் கோப்பை போட்டியில் தனது முதல் தோல்வியை சந்தித்துள்ளார். </p><p>கோப்பை தொடரின் மூன்றாவது சுற்றில் ஜெர்மனியின் கிராண்ட்மாஸ்டர் வின்சன்ட் கீமர் உடன் விளையாடிய பிரக்ஞானந்தா, மூன்றாவது சுற்றில் செக்மேட் ஆனார்.</p><h2>தொடர்   </h2><p>இதன் மூலம் மூன்று சுற்றுகளையும் சேர்த்து பிரக்ஞானந்தா 1.5 புள்ளிகளை தன்வசம் வைத்துள்ளார். இன்னும் 6 சுற்றுகள் மிச்சம் உள்ளன.   தற்போது தொடரில் 4ஆம் இடத்தில் அவர் உள்ளார். </p><p>கீமர், பாபியானோ கரவ்னா, சாம் சீவன் ஆகியோரும் அவருடன் நான்காம் இடத்தில் உள்ளனர்.   </p><p>இதே மூன்றாம் சுற்றில் வீஸ்லி சோ, பாபியானோ கரவ்னாவை தோற்கடித்தன் மூலம் மொத்தம் 2.5 புள்ளிகளுடன் தொடரில் முதலிடத்தில் உள்ளார்.  </p><p>அவரை தொடர்ந்து தலா இரண்டு புள்ளிகளுடன் லெவான் அரோனியன் மற்றும் வாசியர் லாக்ரேவ் அடுத்த இடத்தில் உள்ளனர்.   </p><h2>வெற்றி   </h2><p>முன்னதாக கடந்த ஆகஸ்ட் 7 அன்று செயின்ட் லூயிஸ் ராபிட் - பிளிட்ஸ் தொடரை பிரக்ஞானந்தா வென்ற நிலையில் தற்போதைய தோல்வி வந்துள்ளது. </p><p>சிங்பீல்டு கோப்பையை நேர்மறையாக தொடங்கிய பிரக்ஞானந்தா, முதல் சுற்றில் அமெரிக்க கிராண்மாஸ்டர் சாமுவேல் சீவன் உடனான போட்டியை டிரா செய்தார்.  </p><p>இரண்டாம் சுற்றில் உலக சாம்பியன் ஜெவோகிர் சின்டாரோவை வீழ்த்தினார்  பிரக்ஞானந்தா. </p><p>மூன்றாம் சுற்றில் அவர் தோல்வியுற்ற நிலையில் மீதமுள்ள 6 சுற்றுகளில் அவர் தன் புள்ளிகளை உயர்த்தி சிங்பீல்டு கோப்பையில் முதலிடம் பிடித்தால், அவருக்கு 475,000 அமெரிக்க டாலர் பரிசுத்தொகை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>321 வைரங்கள் பதித்த மோதிரம்.. பெல்ஜியத்தில் இருந்து டிரம்புக்கு வந்த பரிசு - உடனே ரத்தான வைர இறக்குமதி வரி - சர்ச்சை</title><link>https://www.maalaimalar.com/news/world/us-belgium-diamond-ring-row-senators-probe-if-trump-gift-linked-to-eu-diamond-tariff-waiver</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-belgium-diamond-ring-row-senators-probe-if-trump-gift-linked-to-eu-diamond-tariff-waiver#comments</comments><guid isPermaLink="false">21515fea-2101-4b48-bd57-dd1e6eb85fca</guid><pubDate>Fri, 14 Aug 2026 04:03:55 +0000</pubDate><atom:updated>2026-08-14T04:03:55.918Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிரம்ப்,வரிவிலக்கு,வைரம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/hs6tg7e5/tn-21.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டிரம்புக்கு வைர மோதிரம்  பரிசு]]></media:title><media:description type="html"><![CDATA[ டிரம்புக்கு வைர மோதிரம்  பரிசு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/hs6tg7e5/tn-21.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த வைர வர்த்தக அமைப்பான ஆண்ட்வெர்ப் வேர்ல்ட் டைமண்ட் சென்டர் (AWDC) மற்றும் நகை வடிவமைப்பாளர் டேவிட் காட்லிப் ஆகியோரால் அமெரிக்க அதிபர் <a href="https://www.maalaimalar.com/topic/donald-trump">டிரம்பிற்கு </a>பரிசளிக்கப்பட்ட வைர மோதிரம் மற்றும் அதைத் தொடர்ந்து ஐரோப்பிய வைரங்களுக்கு வழங்கப்பட்ட வரி விலக்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. </p><h2>பரிசு </h2><p>AWDC செய்தி குறிப்பின்படி, அமெரிக்காவின் 250வது சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் வகையில், 321 வைரங்கள், மரகதம், மாணிக்கக் கற்கள் மற்றும் 18 கேரட் தங்கத்தால் செய்யப்பட்ட சிறப்பு வாய்ந்த மோதிரம் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு வழங்கப்பட்டது. </p><p>இதன் மதிப்பு 25,000 முதல் 35,000 டாலர் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.  </p><h2>வரிவிலக்கு</h2><p>இந்த பரிசு வழங்கப்பட்ட சில வாரங்களிலேயே, ஜூலை 24 அன்று, ஐரோப்பிய இயற்கை வைரங்களை இறக்குமதி செய்ய அமெரிக்க அரசு முழு வரி விலக்கு அளித்தது.</p><p>இந்த வரிவிலக்கு மூலம் பெல்ஜியம் வைர வணிகர்கள் ஆண்டுக்கு சுமார் 200 மில்லியன் வரியை சேமிக்க முடியும்.</p> <h2>அரசியல் சர்ச்சை</h2><p>அமெரிக்க ஜனநாயகக் கட்சி செனட்டர்கள் எலிசபெத் வாரன் மற்றும் ரிச்சர்ட் புளூமெந்தால் ஆகியோர், இந்த விலையுயர்ந்த பரிசு வரி விலக்கு பெறுவதற்காக அளிக்கப்பட்ட லஞ்சமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.</p><p>வெளிநாட்டு அரசு அல்லது அரசு சார்ந்த அமைப்புகளிடமிருந்து அனுமதியின்றி பரிசுகளைப் பெறுவது அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.</p><p>இதனை சுட்டிக்காட்டி இதுகுறித்த விசாரணையில் இறங்கியுள்ளனர். இருவரும், பெல்ஜியம் வைர வர்த்தக அமைப்பான AWDC ற்றும் நகை வடிவமைப்பாளர் டேவிட் காட்லிப் ஆகியோருக்குக் கடிதம் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளனர்.</p><h2>விளக்கம்</h2><p>ராய்ட்டர்ஸ் செய்தி அறிக்கையின்படி, இந்த குற்றச்சாட்டுகளை AWDC முற்றிலும் மறுத்துள்ளது. </p><p>இந்த மோதிரம் அமெரிக்க சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டது என்றும், வரி விலக்கு பற்றிய பேச்சுவார்த்தைக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் விளக்கமளித்துள்ளது.</p><p>வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர், இந்த வரி விலக்கு அமெரிக்கா ஐரோப்பிய யூனியன் இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே செய்யப்பட்டது என்றும், எந்தப் பரிசும் இந்த முடிவை பாதிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வயது ஒரு தடையல்ல: 51 வயதில் மருத்துவ கனவை நனவாக்கி சாதித்த மாற்றுத்திறனாளி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/sureshkumar-realizes-his-dream-of-studying-medical-at-51</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/sureshkumar-realizes-his-dream-of-studying-medical-at-51#comments</comments><guid isPermaLink="false">62a6f917-03f8-4e39-875d-bea1dabc0b04</guid><pubDate>Fri, 14 Aug 2026 03:46:27 +0000</pubDate><atom:updated>2026-08-14T03:46:27.148Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நீட் தேர்வு,Nagapattinam,நாகப்பட்டினம்,Neet exam,மருத்துவ படிப்பு,medical course</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/y885b0c5/medical.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Suresh kumar - Medical Education]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/y885b0c5/medical.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக நேற்று நடைபெற்ற சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் கலந்துகொண்ட ஒருவர் வியப்பை ஏற்படுத்தினார்.</strong></em></p><h2>எம்.பி.பி.எஸ். சீட்</h2><p>நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 51 வயது பூர்த்தி செய்திருக்கும் சுரேஷ்குமார் என்பவர் எம்.பி.பி.எஸ். சீட்டை தட்டிப்பறித்து இளைஞர் பட்டாளத்துடன் படிப்பில் போட்டி போட தயாராகியிருக்கிறார்.</p> <h2>மருத்துவ படிப்பு ஆசை</h2><p>"சாதிக்க வயது ஒரு தடையில்லை" என்பதற்கு சுரேஷ்குமார் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக மாறியுள்ளார். பள்ளிப்படிப்பை முடித்து <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%20%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">மருத்துவ படிப்பை</a> படிக்க ஆசைப்பட்ட சுரேஷ்குமாருக்கு அப்போது அது சாத்தியப்படவில்லை.</p> <h2>மருத்துவ கலந்தாய்வு</h2><p>இந்த நிலையில் 2022-ம் ஆண்டு மருத்துவப் படிப்பு ஆசை மீண்டும் பொறித்தட்ட நீட் தேர்வை தமிழ் வழியில் எழுதினார். ஆனால் அதில் அவரால் சாதிக்க முடியவில்லை. இதையடுத்து கடந்த ஆண்டு மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் தாயும், மகளும் சேர்ந்து மருத்துவ இடங்களை தேர்வு செய்த செய்தி அவருக்கு மேலும் உந்துதலை கொடுத்தது.</p> <h2>நீட் தேர்வு</h2><p>அதன் அடிப்படையில் 2026-ம் ஆண்டு <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">நீட் தேர்வை </a>எழுதி 192 மதிப்பெண் எடுத்திருந்த சுரேஷ்குமார். 2019-ல் நடந்த விபத்தில் அவருக்கு ஏற்பட்ட காயத்தை சுட்டிக்காட்டி மாற்றுத்திறனாளிகள் பிரிவில், நேற்று நடந்த கலந்தாய்வில் பங்கேற்று நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பை தேர்வு செய்திருக்கிறார்.</p><h2>சுரேஷ்குமார்</h2><p>இதுகுறித்து சுரேஷ்குமார் கூறுகையில், 'ரத்த பரிசோதனை மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றி வந்தேன். இப்போது என்னுடைய வேலையை உதறிவிட்டு, படிப்பை தொடர போகிறேன். சொந்த ஊரில் உள்ள கல்லூரியிலேயே படிக்க போகிறேன். நிச்சயம் மருத்துவப் படிப்பை நிறைவு செய்து டாக்டராக வலம் வருவேன்' என்றார்.</p> ]]></content:encoded></item><item><title>மாதம் 100 கோடி பயனர்கள்... மாஸ் காட்டும் கூகுள் Gemini</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/google-celebrates-as-gemini-crosses-1-billion-monthly-users</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/google-celebrates-as-gemini-crosses-1-billion-monthly-users#comments</comments><guid isPermaLink="false">8a34f0af-5164-4671-97c1-b77b05349176</guid><pubDate>Fri, 14 Aug 2026 03:42:00 +0000</pubDate><atom:updated>2026-08-14T03:42:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Google,ஜெமினி,gemini,கூகுள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/tdedf7cq/Google-Gemini.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Google Gemini]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/tdedf7cq/Google-Gemini.png?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/google">கூகுள்</a> நிறுவனத்தின் பிரபல ஏ.ஐ. சேவையான ஜெமினி (Gemini) முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. ஒவ்வொரு மாதமும் 100 கோடிக்கும் (1 பில்லியன்) அதிகமானோர் கூகுள் <a href="https://www.maalaimalar.com/topic/gemini">ஜெமினி</a> சேவையை பயன்படுத்துகின்றனர். </p><p>கூகுள் நிறுவனத்திற்கும், அதன் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த திட்டங்களுக்கும் இது ஒரு மிக முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.</p><p>கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை சமீபத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். ஜெமினி ஏஐ (AI) என்பது நிறுவனத்தின் வளர்ந்து வரும் ஒரு தயாரிப்பு என்று அவர் குறிப்பிட்டார். </p><p>இதன் மூலம், 100 கோடிக்கும் அதிகமான பயனர்களை கொண்ட கூகுளின் தயாரிப்புகளில் ஒன்றாக ஜெமினி இணைந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் 100 கோடி மக்கள் ஜெமினியை பயன்படுத்தி வருவதாக நிறுவனம் கூறுகிறது.</p><h2>வேகமான வளர்ச்சி:</h2><p>ஜெமினி அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, மக்கள் இத்தகைய நுண்ணறிவு உதவியாளர்களை (intelligent assistants) எவ்வளவு விரைவாக ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பதை இது காட்டுகிறது. கூகுளின் பிற தயாரிப்புகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால் ஜெமினி வேகமாக வளர்ந்து வருகிறது.</p><p>கேள்விகளுக்கு பதிலளித்தல், உள்ளடக்கத்தை உருவாக்குதல், படங்களை உருவாக்குதல், கோடிங் (coding) செய்தல் மற்றும் ஆராய்ச்சி செய்தல் போன்ற பணிகளுக்கு மக்கள் ஜெமினியை பயன்படுத்த முடியும்.</p><p>கூகுள் ஜெமினியை மேலும் சக்திவாய்ந்ததாக மாற்றி வருகிறது; இது ஒரு சாதாரண 'சாட்பாட்' மட்டுமல்ல. சிக்கலான பணிகளை கையாளவும், பிற கூகுள் சேவைகளுடன் இணைந்து செயல்பட கூடியதாக ஜெமினியை உருவாக்க நிறுவனம் விரும்புகிறது.</p><h2>கடும் போட்டி:</h2><p>தினமும் 15 கோடிக்கும் (150 மில்லியன்) அதிகமான படங்களை ஜெமினி உருவாக்குவதாக கூகுள் கூறுகிறது. மேலும், ஜெமினியைப் பயன்படுத்துபவர்களில் 63% பேர் குரல் வழி (voice) மூலமாகவே அதனுடன் உரையாடுகிறார்கள். 'ஜெமினி 3.5 ஃப்ளாஷ்' (Gemini 3.5 Flash) போன்ற அம்சங்களை உருவாக்கும் பணியிலும் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இது கோடிங் மற்றும் பிற பணிகளை எளிதாக்கும்.</p><p>ஜெமினி 100 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டிருப்பது ஒரு குறிப்பிடத்தக்க விஷயமாகும். நுண்ணறிவு உதவியாளர்களை உருவாக்கும் நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது; இதில் ஓபன்ஏஐ, கூகுள் மற்றும் ஆந்த்ரோபிக் ஆகியவை அடங்கும்.</p><p>சர்ச், ஆண்ட்ராய்டு, க்ரோம், ஜிமெயில் மற்றும் மேப்ஸ் போன்ற பிரபலமான சேவைகளுடன் ஜெமினி ஒருங்கிணைக்கப்பட்டு இருப்பதால் கூகுள் நிறுவனத்திற்கு ஒரு சாதகமான சூழல் உள்ளது. மக்கள் ஏற்கனவே பயன்படுத்தும் சேவைகளில் நுண்ணறிவுத் திறனை சேர்ப்பதை இது எளிதாக்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஜென் ஆல்பா போராட்டம் வெற்றி.. பள்ளித் தலைமை ஆசிரியர் இடமாற்றம் ரத்து | Jharkhand</title><link>https://www.maalaimalar.com/news/national/jharkhand-gen-alpha-student-protest-headmaster-transfer-order-cancelled</link><comments>https://www.maalaimalar.com/news/national/jharkhand-gen-alpha-student-protest-headmaster-transfer-order-cancelled#comments</comments><guid isPermaLink="false">bd08f826-3f1e-4ce9-94e3-7272ef18aa88</guid><pubDate>Fri, 14 Aug 2026 03:13:58 +0000</pubDate><atom:updated>2026-08-14T03:13:58.437Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜார்க்கண்ட்,ஜென் இசட் போராட்டம்,ஜென் ஆல்பா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/4l90o45c/tn-18.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஜென் ஆல்பா போராட்டம்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஜென் ஆல்பா போராட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/4l90o45c/tn-18.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2010 முதல் 2024 இடையில் பிறந்தவர்கள் ஜென் ஆல்பா தலைமுறை ஆவர். தற்போது ஜென் இசட் போராட்டங்கள் கவனம் பெற்று வரும் வேளையில் ஜார்க்கண்ட்டில் நடைபெற்ற ஜென் ஆல்பா போராட்டம் கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p>ஜார்க்கண்ட் மாநிலம் கர்வா  மாவட்டம் கண்டி பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியரான மலய் சிங் பணிக்கு வந்த இரண்டே மாதங்களில் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார்.</p><p>சாதி பாகுபாடு மற்றும் உள்ளூர் அரசியல் காரணமாகவே தங்களின் தலைமை ஆசிரியர் மாற்றப்பட்டதாகக் குற்றம் சாட்டிய ஜென் ஆல்பா பள்ளி மாணவர்கள் அவரை மீண்டும் அதே பள்ளியில் நியமிக்கக் கோரி 3 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p> <h2>வன்முறை</h2><p>நேற்றைய தினம், கொளுத்தும் வெயிலில் மாணவர்கள் வீதியில் இறங்கி சாலை மறியல் செய்ததோடு, இரண்டு பேருந்துகளில் சென்று துணை ஆணையர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர்.</p><p>உள்ளூர் தலைவர் பிங்கு பாண்டே என்பவர் மாணவர்களை அமைதிப்படுத்த முயன்றபோது வாக்குவாதம் முற்றி அவர் ஒரு மாணவனை அறைந்ததாக கூறப்படுகிறது.</p><p>இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் அவரது வாகனத்தை அடித்து நொறுக்கினர். அவர் பாதுகாப்பு கோரி கண்டி காவல் நிலையத்திற்கு தப்பியோடிய நிலையில், காவல் நிலையத்தின் மீதும் மாணவர்கள் கல்வீச்சு நடத்தினர். இதில் ஒரு காவலர் காயமடைந்தார்.</p> <h2>வெற்றி </h2><p>மாணவர்களின் போராட்டம் தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து, கண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ராகேஷ் சகாய் பேச்சுவார்த்தை நடத்தினார்.</p><p>மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, தலைமை ஆசிரியர் மலய் சிங்கின் இடமாற்ற உத்தரவை அரசு ரத்து செய்து, அவரை மீண்டும் அதே பள்ளியில் பணி அமர்த்தியது.</p><p>ஏற்கனவே ஜார்க்கண்ட் மாநில தேர்வாணைய தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளை கண்டித்து தலைநகர் ராஞ்சியில் ஜென் இசட் <a href="https://www.maalaimalar.com/news/national/jharkhand-protest-cases-registered-against-600-people-including-500-unidentified-students">மாணவர்கள் போராட்டம்</a> நடத்தி வருகிறது.</p><p>கடந்த ஆகஸ்ட் 8 அன்று சட்டமன்றம் நோக்கி பேரணி சென்ற அவர்கள் மீது காவல்துறை மற்றும் மத்திய படை தாக்குதல் நடத்தியது கண்டனத்துக்கு உள்ளாகியது. </p>]]></content:encoded></item><item><title>இது முதல் முறை அல்ல... நாடாளுமன்ற முடக்கத்தால் ரூ.175 கோடி வீணடிப்பு
</title><link>https://www.maalaimalar.com/news/national/parliament-monsoon-session-rs-175-crore-has-been-lost-so-far</link><comments>https://www.maalaimalar.com/news/national/parliament-monsoon-session-rs-175-crore-has-been-lost-so-far#comments</comments><guid isPermaLink="false">6c3a3b73-3943-411c-9364-8448cfc2d37c</guid><pubDate>Fri, 14 Aug 2026 03:13:44 +0000</pubDate><atom:updated>2026-08-14T03:13:44.723Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நாடாளுமன்றம்,monsoon session,மழைக்கால கூட்டத்தொடர்,parliament,எதிர்க்கட்சிகள் அமளி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/wez6ftrv/parliamentnew.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Parliament]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/wez6ftrv/parliamentnew.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் அமளியால் 7 ஆயிரம் நிமிடங்களுக்கு மேல் அவைகள் முடங்கின. இதன் காரணமாக ரூ.175 கோடி மக்கள் பணம் வீணாகி இருப்பதாக மதிப்பிடப்பட்டு உள்ளது.</strong></em></p> <h2>நாடாளுமன்றம்</h2><p>மக்கள் செலுத்தும் வரிப்பணத்திலேயே சட்டசபைகள் மற்றும் <a href="https://www.maalaimalar.com/news/national/rajya-sabha-uproar-kharge-demands-case-over-purification-ritual-after-his-speech">நாடாளுமன்றம்</a> இயங்குகின்றன. இவை, சராசரி ஆண்டுக்கு 2 முறை கூட்டப்பட வேண்டும். ஆனால் நாடாளுமன்றம் பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தொடர் மற்றும் குளிர்கால கூட்டத்தொடர் என ஆண்டுக்கு 3 முறை கூட்டப்பட்டு வருகிறது.</p><p>இந்த கூட்டத்தொடர்கள் முழுமையாக நடைபெற்றால் மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். இடை இடையே முடங்குவதால் பயன் இல்லாமல் போவது மட்டுமின்றி, மக்களின் வரிப்பணமும் வீணாகும்.</p> <h2>19 அமர்வுகள்</h2><p>அந்த வகையில் தற்போது நடந்து முடிந்த மழைக்கால கூட்டத்தொடர், மக்களின் பணம் வீணான வகையில் அமைந்தது. இந்த கூட்டத்தொடர் கடந்த மாதம் 20-ந் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் மொத்தம் 19 அமர்வுகள் நடைபெற்றன.</p><h2>டெல்லி போராட்டம்</h2><p>ஆனால் கூட்டத்தொடர் தொடங்கிய நாளில் இருந்தே நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வந்தன. கூட்டத்தொடரின் தொடக்க நாளில் டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.</p><h2>அமித்ஷா</h2><p>அத்துடன் அயோத்தி ராமர் கோவில் நன்கொடை கையாடல் விவகாரமும் சேர்ந்தது. இதுபோன்ற எல்லா பிரச்சனைகளுக்கும் உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் எதிர்க்கட்சிகள் பொறுப்புக்கூறலை கேட்டன.</p><h2>நாடாளுமன்றம் முடக்கம்</h2><p>இந்த வகையில் நாள்தோறும் போராட்டமாக இருந்தது. ஒருநாள் கூட நாடாளுமன்றம் முழுமையாக நடைபெறவில்லை. ஒத்திவைப்புகளால் அடிக்கடி முடங்கியது. இதனால் கோடிக்கணக்கில் மக்களின் வரிப்பணம் வீணாகி விட்டதாக பலரும் பேசினர்.</p><p>இதுபற்றி ஒரு கணக்கீடு வந்துள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் செயல்பட ஒரு நிமிடத்துக்கு ரூ.26 லட்சம் செலவு ஆகும். இதன்படி ஒரு மணி நேரத்துக்கு ரூ.10 கோடி செலவிடப்படுகிறது. 6 மணிநேரம் கொண்ட ஒருநாள் அமர்வுக்கு ரூ.9 கோடி செலவாகும்.</p> <h2>ரூ.175 கோடி விரயம்</h2><p>தற்போதைய மழைக்கால கூட்டத்தொடரில் நாடாளுமன்ற அவைகள் 7 ஆயிரம் நிமிடங்களுக்கு மேல் முடங்கியிருப்பதாக தெரிகிறது. இதன் காரணமாக ரூ.175.6 கோடி மக்கள் பணம் விரயம் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது.</p><h2>எதிர்க்கட்சிகள் அமளி</h2><p>எதிர்க்கட்சிகளின் அமளியால் முழு கூட்டத்தொடரும் பாதிக்கப்பட்டு இருப்பது இது தான் முதல் முறை அல்ல. இதற்கு முந்தைய ஆட்சிகளிலும் இதுபோன்ற பாதிப்புகள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p> ]]></content:encoded></item><item><title>மகாராஷ்டிரா, இமாச்சல பிரதேசத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம் </title><link>https://www.maalaimalar.com/news/national/maharashtra-earthquake-34-magnitude-quake-jolts-nashik-at-dawn-no-major-damage-reported</link><comments>https://www.maalaimalar.com/news/national/maharashtra-earthquake-34-magnitude-quake-jolts-nashik-at-dawn-no-major-damage-reported#comments</comments><guid isPermaLink="false">ffe33d07-02a1-460d-834c-446195c82c8e</guid><pubDate>Fri, 14 Aug 2026 02:47:41 +0000</pubDate><atom:updated>2026-08-14T02:47:41.956Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,மகாராஷ்டிரா,Earthquake,Afghanistan,ஆப்கானிஸ்தான்,நிலநடுக்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/ciozzxxr/tn-19.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நிலநடுக்கம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ நிலநடுக்கம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/ciozzxxr/tn-19.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிராவில் இன்று அதிகாலை  3.4 ரிக்டர் அளவில் மிதமான <a href="https://www.maalaimalar.com/topic/earthquake">நிலநடுக்கம் </a>ஏற்பட்டுள்ளது. </p><p>மகாராஷ்டிர மாநிலம் நாசிக் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.</p><p>அதிகாலை 5:32 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவானது. </p><p>பூமிக்கு அடியில் சுமார் 3 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p>அதிகாலையில் திடீரென நில அதிர்வு உணரப்பட்டதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.</p><p>இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ அல்லது சொத்துக்களுக்கு பெரிய அளவிலான சேதங்களோ ஏற்பட்டதாக இதுவரை எந்தத் தகவலும் இல்லை.</p><p>முன்னதாக 3 நாட்களுக்கு முன்பாக மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் 1 மணி நேர இடைவெளியில் இரண்டு முறை 3.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது குறிப்பிடத்தக்கது.</p><h2>இமாச்சல பிரதேசம்</h2><p>இதனிடையே இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா பகுதியில் இன்று காலை 6.36 மணியளவில் பூமிக்கு 5 கிலோமீட்டர் ஆழத்தில் 3.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.</p> <h2>ஆப்கானிஸ்தான்</h2><p>இந்தியாவை தவிர்த்து ஆப்கானிஸ்தானிலும் இன்று அதிகாலை 4.29 மணியளவில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. அதைத்தொடர்ந்து அதிகாலை 4.41 மணியளவில் 4.4 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.</p><p>இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ அல்லது சொத்துக்களுக்கு பெரிய அளவிலான சேதங்களோ ஏற்பட்டதாக இதுவரை எந்தத் தகவலும் இல்லை.</p>]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 14.8.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும்
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-14-august-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-14-august-2026#comments</comments><guid isPermaLink="false">83d06c15-d064-4492-9412-2bade3496d84</guid><pubDate>Fri, 14 Aug 2026 02:04:38 +0000</pubDate><atom:updated>2026-08-14T02:04:38.724Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/07/19711867-rasipalan2.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/07/19711867-rasipalan2.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>வெற்றிச் செய்திகள் வீடு தேடி வரும் நாள். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்ட நாளைய பிரச்சனையொன்று நல்ல முடிவிற்கு வரும்.</p><h2>ரிஷபம்</h2><p>புதிய பாதை புலப்படும் நாள். பெற்றோர் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வாகனப் பழுதுகளை சரி செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.</p> <h2>மிதுனம்</h2><p>மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி பெறும்.</p><h2>கடகம்</h2><p>நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிட்டும்.</p> <h2>சிம்மம்</h2><p>யோகமான நாள். நீங்கள் சந்திக்க நினைத்த நபர் உங்கள் இல்லம் தேடிவரலாம். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். வழிபாடுகளில் நம்பிக்கை கூடும்.</p><h2>கன்னி</h2><p>வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். பிரியமான சிலரிடம் மனம் விட்டுப் பேசுவீர்கள். நீண்ட தூரப் பயணம் கைகூடும். எதிர்பாராத தனலாபம் உண்டு.</p> <h2>துலாம்</h2><p>திறமை பளிச்சிடும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளொன்றை வாங்கி மகிழ்வீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும்.</p><h2>விருச்சிகம்</h2><p>நினைத்தது நிறைவேறும் நாள். வருங்கால நலன் கருதி சேமிக்கும் எண்ணம் மேலோங்கும். முயற்சிக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவுவர்.</p> <h2>தனுசு</h2><p>கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். நீண்ட நாளைய பிரச்சனை முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களின் ஆதரவு கிட்டும்.</p><h2>மகரம்</h2><p>உடல் ரீதியான உபாதைகளால் உற்சாகம் குறையலாம். மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசுவதால் சிலரின் அதிருப்திக்கு ஆட்படலாம்.</p> <h2>கும்பம்</h2><p>தடைகள் அதிகரிக்கும் நாள். எந்தவொரு காரியத்தையும் யோசித்து செய்வது உத்தமம். பணத்தைக் கையாளுபவர்களுக்கு கவனம் தேவை.</p><h2>மீனம்</h2><p>சந்தோஷம் அதிகரிக்கும் நாள். அடுத்தவர் நலனில் அக்கறை காட்டுவீர்கள். இடம் வாங்கும் முயற்சி வெற்றி பெறும். மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.</p> ]]></content:encoded></item></channel></rss>