<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 16 Aug 2026 08:41:36 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்- 16 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-16-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-16-august-2026#comments</comments><guid isPermaLink="false">114f1354-2cfc-439f-8ee1-fbc2ae5ae0a8</guid><pubDate>Sun, 16 Aug 2026 03:20:30 +0000</pubDate><atom:updated>2026-08-16T08:26:38.925Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/4rqpglxc/TodayLive001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இன்றைய முக்கிய செய்திகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/4rqpglxc/TodayLive001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/p-shanmugam-urges-tn-govt-condemn-karnataka-govt-fake-encounter-of-3-tamilans-in-the-karnataka-forest">கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: தமிழக அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்- பெ. சண்முகம் வலியுறுத்தல்</a></p><p>* துப்பாக்கிச் சூட்டுக் கொலையை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.</p><p>* சம்பந்தப்பட்ட வனத்துறையினரைப் பணிநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/match-delayed-due-to-rain-in-second-day-for-srilanka-india-match">இந்தியா, இலங்கை இடையிலான முதல் டெஸ்ட்:  மழையால் பாதிப்பு</a></p><p>* சிறப்பாக விளையாடிய தேவ்தத் படிக்கல் 134 பந்துகளில் சதம் விளாசினார்.</p><p>* மழையால் ஆட்டம் தொடங்குவதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/bangladesh-beat-australia-in-first-test">டார்வின் டெஸ்ட்: ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் நொறுக்கியது வங்கதேசம்-சாதனை வெற்றி</a></p><p>* வங்கதேசம் 2வது இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 57 ரன்கள் எடுத்து வென்றது.</p><p>* ஹசன் மகமது ஆட்ட நாயகன் விருது வென்றார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/mob-baying-for-her-shashi-tharoor-backs-mahua-moitra-after-late-night-eviction-bid">நடுராத்திரியில் விருந்தினர் மாளிகையில் இருந்து வெளியேற்ற முயற்சி: மஹுவா மொய்த்ரா எம்.பி. குற்றச்சாட்டு</a></p><p>* மாலை 6.15 மணியளவில் நான் சர்க்யூட் ஹவுஸ் அறைக்குச் சென்றேன். ஊழியர்கள் எனக்கு வழக்கமாக ஒதுக்கப்படும் அறைக்கு என்னை அழைத்துச் சென்றனர்.</p><p>* அந்த அறை தங்குவதற்குத் தயாராக வைக்கப்பட்டிருந்தது. மாலை 7 மணிக்கு எனது அறைக்குத் தேநீர் கொண்டு வரப்பட்டது. இரவு 9.20 மணிக்கு இரவு உணவு அங்கேயே பரிமாறப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/president-murmu-pm-modi-pay-tribute-to-vajpayee" rel="nofollow">வாஜ்பாய் நினைவு நாள்: ஜனாதிபதி, பிரதமர் மோடி மலரஞ்சலி</a></p><p>* டெல்லியில் உள்ள நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மலரஞ்சலி செலுத்தினார்.</p><p>* டெல்லியில் உள்ள நினைவிடத்தில் டெல்லி முதலமைச்சர் ரேகா அஞ்சலி.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/8000-cusecs-flow-in-hogenakkal-cauvery" rel="nofollow">ஒகேனக்கல் ஆற்றில் 8,000 கனஅடி நீர் வரத்து..!- பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை</a></p><p>* தமிழகத்திற்கு 800 கனஅடி வீதம் நீர் திறக்கப்படுகிறது.</p><p>* குடிநீர் தேவைக்காக 2000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cannot-fool-the-youth-mr-prime-minister-manickam-thakur-criticism-on-sengottai-speech" rel="nofollow">இளைஞர்களை ஏமாற்ற முடியாது Mr. Prime Minister!- செங்கோட்டையில் பிரதமரின் உரை குறித்து மாணிக்கம் தாகூர் விமர்சனம்</a></p><p>* நேற்றைய மோடியின் பேச்சுக்கும், நிஜமான கள யதார்த்தத்திற்கும் எவ்வளவு பெரிய இடைவெளி!</p><p>* ரூ.63,000 கோடியில் தொடங்கப்பட்ட பிரதமரின் பயிற்சித் திட்டம் (PMIS) முற்றிலும் முடங்கிக் கிடக்கிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/myanmar-approves-return-of-3-lakh-rohingya" rel="nofollow">3 லட்சம் ரோஹிங்கியா அகதிகளை மீண்டும் ஏற்கிறது மியான்மர்</a></p><p>* தாய் நாட்டிற்கு அழைத்து வர வங்காளதேசத்துடன் இணைந்து மியான்மர் அரசு தீவிரமாகப் பணியாற்றி வருகிறது.</p><p>*  3 லட்சத்திற்கும் அதிகமான அகதிகள் மியான்மரின் ராகினே மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/south-railway-revenue-up-8-84-percent-in-2025-26" rel="nofollow">2025-26ம் நிதியாண்டில் தெற்கு ரெயில்வேயில்  ரூ.13,778 கோடி வருவாய்- பொதுமேலாளர் சுப்பாராவ்</a></p><p>* நடப்பு நிதியாண்டில் ஜூலை மாதம் வரை 13.48 மில்லியன் டன்களை எட்டியுள்ளோம்.</p><p>* 2025-26-ம் ஆண்டில் 42.184 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-aiadmk-alliance-not-possible-says-mp-kanimozhi" rel="nofollow">திமுக-அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை..!- திமுக எம்பி கனிமொழி</a></p><p>* பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குக்கூட பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.</p><p>*  தூத்துக்குடியிலேயே தொடர்ந்து இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/asish-banerjee-mamata-banerjee-close-aide-found-dead-at-trinamool-office">முன்னாள் அமைச்சர் கட்சி அலுவலகத்தில் சடலமாக கண்டெடுப்பு: மம்தாவுக்கு நெருக்கமானவர்..!</a></p><p>* கல்வி மற்றும் விவசாயத்துறை அமைச்சராகவும் மம்தா பானர்ஜி அரசின் கீழ் பணியாற்றியுள்ளார்.</p><p>* இந்த வருடம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக-வின் துருபா சஹாவிடம் தோல்வியடைந்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/india-beat-wales-in-hockey-world-cup">உலகக் கோப்பை ஹாக்கி: வேல்ஸ் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது இந்தியா</a></p><p>* இந்திய அணி டி பிரிவில் இடம்பெற்று உள்ளது.</p><p>* கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் இரு கோல்கள் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/chepauk-super-gillies-moves-in-second-place-in-tnpl-points-table">டிஎன்பிஎல்: புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது சேப்பாக்</a></p><p>* முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.</p><p>* மதுரை பாந்தர்ஸ் அணி 4 வெற்றியுடன் 8 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/djokovic-lose-second-round-in-cincinnati-open-tennis">சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி</a></p><p>* சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.</p><p>* முன்னணி வீரர்கள் நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/withdraw-coalition-support-jharkhand-protesters-demand-from-rahul-gandhi">ஜார்க்கண்ட் முதல்வர், ராகுல் காந்தி உருவ பொம்பை எரிப்பு: 20-ந்தேதி சோரன் வீடு முற்றுகை போராட்டம்- மாணவர்கள் அறிவிப்பு</a></p><p>* ராகுல் காந்தி மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார். ஆனால், உறுதியான நடவடிக்கை பின்பற்றப்படவில்லை.</p><p>* அதனால் ஹேமந்த் சோரன் ஆட்சிக்கு வழங்கும் ஆதரவை ராகுல் காந்தி திரும்பப் பெற வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>தரக்குறைவான பேச்சுக்காக தமிழக மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள் - நயினார் நாகேந்திரனுக்கு அமைச்சர் ரமேஷ் கண்டனம்! </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/apologize-to-tamil-nadu-people-for-vulgar-speech-ramesh-condemns-nainar-nagendran</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/apologize-to-tamil-nadu-people-for-vulgar-speech-ramesh-condemns-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">b7bfbdbb-066d-4104-8c90-0b4b7da28f62</guid><pubDate>Sun, 16 Aug 2026 08:40:24 +0000</pubDate><atom:updated>2026-08-16T08:40:24.140Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,Apologize,CMVIJAY,அமைச்சர் ரமேஷ்,Minister Ramesh,WomenRespect</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/e0n1f84c/Minister-Ramesh-Nainar-Nagendran" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Ramesh - Nainar Nagendran ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/e0n1f84c/Minister-Ramesh-Nainar-Nagendran?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அப்பாவை காணோம் என்று கூறியதற்கு, விஜய் மற்றும் அவரது குடும்பம் குறித்து அநாகரிகமாக பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.</p><p>இந்நிலையில், <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">நயினார் நாகேந்திரன் </a>பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில் இந்து சமய அறநிலையத்துறை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D">அமைச்சர் ரமேஷ்</a> கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><h2>இது குறித்து அமைச்சர் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-</h2><p>"பெண்களின் பெருமையையும், தாயின் அருமையையும் அறியாத மூன்றாம் தர நபரைப் போல இன்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் பேசியிருப்பது அருவருப்பின் உச்சம்!</p><p>ஒரு அரசியல் கட்சியின் மாநிலத் தலைவராக மட்டுமல்ல, குறைந்தபட்சம் ஒரு சாதாரண மனிதரிடம் இருக்க வேண்டிய நாகரிகம் கூட இல்லாமல், தாய்மார்களும் பெண்களும் முகம் சுளிக்கும் வகையில் அவர் பேசியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.</p><p>பெண்கள் மீதான அவரது தவறான பார்வை அவரது பேச்சில் தெளிவாக வெளிப்படுகிறது. அவர் சார்ந்த அரசியல் கட்சியும் பெண்களை இப்படித்தான் பார்க்கிறதா என்ற கேள்விக்கு, அக்கட்சியின் தேசியத் தலைவர்கள் தான் விளக்கம் அளிக்க வேண்டும். தரக்குறைவான பேச்சுக்காக தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: அன்புமணி கடும் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/three-tamils-shot-dead-in-karnataka-forest-anbumani-condemns</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/three-tamils-shot-dead-in-karnataka-forest-anbumani-condemns#comments</comments><guid isPermaLink="false">84ef203b-6544-4f23-8a80-2389e1d40ff5</guid><pubDate>Sun, 16 Aug 2026 08:29:36 +0000</pubDate><atom:updated>2026-08-16T08:29:36.498Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,anbumani,பாமக,அன்புமணி,#PMK,Fake Encounter,தமிழர்கள் சுட்டுக்கொலை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/9en01wrf/Anbumani.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PMK Leader Anbumani]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/9en01wrf/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்​நாடக மாநிலம், சாம்​ராஜநகர் மாவட்​டத்​தில் காவிரி வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்ட ஷாக்யா என்கிற வனப்​பகுதி உள்​ளது.</p><p>இங்​கு சிலர் சட்​ட​ விரோத​மாக மான்​களை வேட்​டை​யாடு​வ​தாக வனத்​துறை​யினருக்கு தகவல் கிடைத்​துள்ளது. இதனால், வனத்துறையினர் 7 பேர் இரு குழுக்​களாக பிரிந்து கண்​காணிப்பு பணி​யில் ஈடு​பட்​டனர்.</p><p>இந்தநிலையில், தோமை​யார்​பாளை​யத்தை ஒட்​டி​யுள்ள வனப்​பகுதி​யில் நேற்று அதி​காலை 5 மணி​யள​வில் வனத்​துறை​யினர் ரோந்து பணி​யில் ஈடுபட்டனர். அப்​போது, அங்கு மறைந்திருந்த 4 பேர் மீது போலீசார் அதிரடி துப்பாக்கியால் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.</p><p>இந்த தாக்குதலில், ம‌ரியமங்​கலம் கிராமத்தை சேர்ந்த அந்​தோனி​சாமி (50), ஜான்​ரோஸ் பீட்​டர் (42), லாசர் குமார் (33) ஆகிய 3 பேர் உயி​ரிழந்​தனர். படு​கா​யம் அடைந்த மகிமை தாஸ் (48) மைசூரு​வில் உள்ள அரசு மருத்துவமனை​யில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இறந்த மூன்று பேரும் தமிழர்கள் என தெரியவந்துள்ளது.</p><p>இந்நிலையில், இந்த சம்​பவத்​தில் உயி​ரிழந்​தவர்​களின் உறவினர்​கள் மற்​றும் கிராம மக்​கள் பல்வேறு பகுதிகளில் உள்ள வனத்​துறை அலு​வல​கத்தை அடித்து நொறுக்​கி சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>இந்த சம்​பவத்தை கண்​டித்து 100-க்​கும் மேற்​பட்​டோர் மைசூரு, மேட்​டூர், சத்​தி​யமங்​கலம் ஆகிய இடங்​களுக்கு செல்​லும் சாலைகளை மறித்து ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டு வருகின்றனர். இதனால் அங்கு பதற்​றம் ஏற்​பட்​ட​தால் போலீசார் குவிக்​கப்​பட்​டு, பலத்த பாது​காப்​பு போட‌ப்​பட்​டுள்​ளது.</p><p>அன்புமணி கண்டனம்</p><p>கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்</p><p>கொல்லப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை தேவை என்றும், உயிரிழந்தவர்களினம் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் </p><p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் காவிரி வனவிலங்கு சரணாலயத்தை ஒட்டிய வனப்பகுதியில் மான்வேட்டையாடியதாக பொய்யான குற்றச்சாட்டில் அப்பகுதியைச் சேர்ந்த 3 தமிழர்களை கர்நாடக வனத்துறை கொடூரமான முறையில் சுட்டுக்கொலை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. கொல்லப்பட்ட மூவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>கர்நாடக வனத்துறையினரால் கொலை செய்யப்பட்ட  அந்தோணிசாமி, ஜான்ரோஸ் பீட்டர், குமார் ஆகிய மூவரும் முறையே அப்பகுதியில் உள்ள ஜகன்னாததொட்டி, மரியமங்கலம், லாசர்தொட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.</p><p>அவர்கள் மூவரும் எந்த வகையான சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடாத நிலையில் அவர்களை சாக்யா பகுதி வன அலுவலகத்தைச்  சேர்ந்த  வனக்காவலர்கள் கொடூரமாக சுட்டுக் கொலை செய்துள்ளனர்.</p><p>இந்தக் கொலைகளை மறைப்பதற்காக  அவர்கள் மூவரும் மான்களை வேட்டையாட வந்ததாகவும்,  அப்போது வனத்துறையினருடன்  ஏற்பட்ட மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் வனத்துறை  கூறியுள்ளது. இது அப்பட்டமான பொய் என்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.</p><p>அவர்கள் மூவரும் எந்த வகையான சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடாத நிலையில் அவர்களை சாக்யா பகுதி வன அலுவலகத்தைச்  சேர்ந்த  வனக்காவலர்கள் கொடூரமாக சுட்டுக் கொலை செய்துள்ளனர்.</p><p>இந்தக் கொலைகளை மறைப்பதற்காக  அவர்கள் மூவரும் மான்களை வேட்டையாட வந்ததாகவும்,  அப்போது வனத்துறையினருடன்  ஏற்பட்ட மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் வனத்துறை  கூறியுள்ளது. இது அப்பட்டமான பொய் என்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.</p><p>கொல்லப்பட்ட மூவரும் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர்கள் ஆவர். சுமார்  100 ஆண்டுகளுக்கு முன் மேட்டூர் அணை கட்டுவதற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட போது,  வீடுகள் மற்றும் உடமைகளை இழந்து  வாழ்வாதாரம் தேடி கர்நாடகம் மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் மரியமங்கலம் பகுதியில் குடியேறியவர்கள் ஆவர்.</p><p>மரியமங்கலம் காட்டுப்பகுதியில் மான் வேட்டையாடியதற்கோ, இரு தரப்புக்கும் இடையே சண்டை நடந்ததற்கோ எந்த சான்றுகளும் இல்லை. கொல்லப்பட்டவர்கள் துப்பாக்கிகளை வைத்திருந்ததாக கூறப்படுவதிலும் உண்மையில்லை. தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருவதால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.</p><p>கர்நாடக ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாம்ராஜ்நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும்,  மாவட்ட பொறுப்பு அமைச்சருமான  புட்டரங்கா ஷெட்டி,  மதச்சார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்த ஹானூர் சட்டப்பேரவை  உறுப்பினர் மஞ்சுநாத்  ஆகியோர் அதிகாலை நேரத்தில் என்கவுன்டருக்கான தேவை ஏன் வந்தது?  என்று வினா எழுப்பியுள்ளனர். மனித உரிமை ஆர்வலர்களும் வனத்துறையினரின் செயலைக் கண்டித்துள்ளனர்.</p><p>தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக முரண்பட்ட செய்திகள் வெளியாகி வருவதால் உண்மையைக் கண்டறிய மாஜிஸ்திரேட் விசாரணைக்கு ஆணையிடப்பட்டிருப்பதாக  முதலமைச்சர்  டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த விசாரணையில் உண்மை வெளிவராது. இது குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிடப்பட வேண்டும்.</p><p>தமிழர்கள் படுகொலைக்காக கர்நாடக அரசுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் கண்டனம் தெரிவிப்பதுடன், பாதிக்கப்பட்ட மூவரின் குடும்பங்களுக்கும் கர்நாடக அரசிடமிருந்து தலா ரூ.1 கோடி இழப்பீட்டை வாங்கித் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: தமிழக அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்- பெ. சண்முகம் வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/p-shanmugam-urges-tn-govt-condemn-karnataka-govt-fake-encounter-of-3-tamilans-in-the-karnataka-forest</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/p-shanmugam-urges-tn-govt-condemn-karnataka-govt-fake-encounter-of-3-tamilans-in-the-karnataka-forest#comments</comments><guid isPermaLink="false">61a55577-3f12-45dd-bad4-976e8dac4a7f</guid><pubDate>Sun, 16 Aug 2026 08:24:20 +0000</pubDate><atom:updated>2026-08-16T08:24:20.799Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>CPM,Fake Encounter,P Shanmugam,தமிழர்கள் சுட்டுக்கொலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/71hzmw0y/Pshanmugam0002.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெ சண்முகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/71hzmw0y/Pshanmugam0002.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹானூர் தாலுகா தோமையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட விவசாயிகள் வழக்கமாக மாடு மேய்க்கும் வனப்பகுதிக்குள் காணாமல் போன மாடுகளைத் தேடிச் சென்ற அந்தோணி ராஜ், ஜான், குமார் ஆகியோரை கர்நாடக மாநில வனத்துறையினர் நேற்று சுட்டுக் கொலை செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.</p><p>தங்கள் குற்றத்தை மறைக்க, அவர்கள் வேட்டையாடினார்கள் என்று வனத்துறையினர் பொய்யான குற்றச்சாட்டைத் தெரிவிக்கின்றனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டுக் கொலையை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. சம்பந்தப்பட்ட வனத்துறையினரைப் பணிநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும். கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள் என்ற அடிப்படையில், தமிழ்நாடு அரசு தனது கண்டனத்தைக் கர்நாடக அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.</p><p>இவ்வாறு பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.</p><h2>அன்புமணி ராமதாஸ்</h2><p>பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக முரண்பட்ட செய்திகள் வெளியாகி வருவதால் உண்மையைக் கண்டறிய மாஜிஸ்திரேட் விசாரணைக்கு ஆணையிடப்பட்டிருப்பதாக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த விசாரணையில் உண்மை வெளிவராது. இது குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிடப்பட வேண்டும்.</p><p>தமிழர்கள் படுகொலைக்காக கர்நாடக அரசுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் கண்டனம் தெரிவிப்பதுடன், பாதிக்கப்பட்ட மூவரின் குடும்பங்களுக்கும் கர்நாடக அரசிடமிருந்து தலா ரூ.1 கோடி இழப்பீட்டை வாங்கித் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் எனக் குறிப்பிடடுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>டெல்லி-என்.சி.ஆரில் உருவெடுக்கும் &apos;டான்ஸ்பிரீனர்ஸ்&apos;: நடனக் கலையை வணிகமாக மாற்றும் இளைஞர்கள்!</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-ncr-youth-turn-dance-into-business</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-ncr-youth-turn-dance-into-business#comments</comments><guid isPermaLink="false">4d4c8a8d-98eb-47b1-90b0-7a73988465c5</guid><pubDate>Sun, 16 Aug 2026 08:20:35 +0000</pubDate><atom:updated>2026-08-16T08:20:35.674Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டெல்லி,Dancepreneurs,Delhi-NCR,Art of Dance,டான்ஸ்பிரீனர்ஸ்,நடனக் கலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/soqsj6wk/delhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dancepreneurs]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/soqsj6wk/delhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (என்.சி.ஆர்) கலைத் துறையில் ஒரு புதிய பொருளாதாரப் புரட்சி அலை வீசி வருகிறது. இதுவரை வெறும் பொழுதுபோக்காகவும் மேடை நிகழ்ச்சிகளாகவும் மட்டுமே பார்க்கப்பட்ட நடனக் கலையை, தொழிலாண்மையுடன் அணுகி வெற்றிகரமான வர்த்தக நிறுவனங்களாக மாற்றி வருகின்றனர் டெல்லி இளைஞர்கள். இவர்கள் 'டான்ஸ்பிரீனர்ஸ்' என்று அழைக்கப்படுகின்றனர்.</p><h2>நடனத் <strong>துறையில் ச</strong>வால்</h2><p>மேற்கத்திய பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பெற்றவர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிந்த இளைஞர்கள் பலர், தங்கள் பாரம்பரிய தொழில் வாய்ப்புகளைத் துறந்து முழுநேர நடன நிறுவனங்களை நிறுவி வருகின்றனர். </p><p>உதாரணமாக, பிரிட்டனில் உள்ள நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற 24 வயதான காம்னா அரோரா என்ற இளம் பெண், தனது கார்ப்பரேட் வாழ்க்கையை விடுத்து மும்பையில் பிரபல நடன இயக்குநர் ஷியாமக் தாவரின் தொழில்முறை பயிற்சியில் இணைந்தார். சிறுவயதில் வெறும் பொழுதுபோக்காக இருந்த நடனத்தை, தனது உண்மையான இலக்காக உணர்ந்து டெல்லியில் சொந்தமாக நடன ஸ்டுடியோ மற்றும் பயிற்சி மையத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.</p><h2>தொ<strong>ழில்முனைவோராக</strong> மாறும் நடனக் கலைஞர்கள்</h2><p>இன்றைய டான்ஸ்பிரீனர்ஸ் வெறும் நடனம் கற்பிப்பதோடு நின்றுவிடுவதில்லை. அவர்கள் தங்கள் நிறுவனங்கள் மூலமாகப் பல்வேறு நவீன வணிக மாதிரிகளைச் செயல்படுத்துகின்றனர். கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் சிறப்பு நடனப் பயிலரங்குகள் மற்றும் ஜூம்பா, ஏரோபிக்ஸ் போன்ற உடற்பயிற்சி சார்ந்த நடன வகுப்புகள் நடத்தி வருகின்றனர். </p><p>பிரமாண்ட திருமண நிகழ்வுகள் மற்றும் கார்ப்பரேட் கலை நிகழ்ச்சிகளுக்கான தொழில்முறை வடிவமைப்பில் ஈடுபட்டு வருகின்றனர். யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்கள் மூலம் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் மற்றும் உலகளாவிய வாடிக்கையாளர்களை ஈர்த்து அதன் மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர்.</p><h2>எதிர்<strong>கால வாய்ப்புகள்</strong></h2><p>கலைத்துறையை ஒரு தொழிலாக மாற்றுவது எளிதானதாக இருக்கவில்லை என இந்த இளம் தொழில்முனைவோர்கள் தெரிவிக்கின்றனர். ஆரம்பக்கட்ட நிதி திரட்டல், சரியான பயிற்சி இடங்களை அமைத்தல் மற்றும் நடனத்தை ஒரு நிலையான வருவாய் தரும் தொழிலாக சமூகத்தை நம்ப வைப்பது போன்ற பல தடைகளை இவர்கள் கடக்க வேண்டியிருந்தது.</p><p>இருப்பினும், டெல்லி-என்.சி.ஆர் பகுதியில் உள்ள மிகப்பெரிய சந்தை வாய்ப்புகளும், நவீன தலைமுறையினரின் கலை சார்ந்த ஆர்வமும் இவர்களை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. நடனக் கலையை வெறும் கலை வடிவமாக மட்டுமல்லாமல், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ஒரு வலுவான வர்த்தகத் துறையாக மாற்றியமைத்து இந்த 'டான்ஸ்பிரீனர்ஸ்' புதிய வரலாறு படைத்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மைனருக்கு விசா வேண்டுமா? இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதுரகம் வெளியிட்ட முக்கிய அறிவுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/national/us-visa-for-children-minors-of-all-ages-must-attend-interview-us-embassy-tells-indian-parents</link><comments>https://www.maalaimalar.com/news/national/us-visa-for-children-minors-of-all-ages-must-attend-interview-us-embassy-tells-indian-parents#comments</comments><guid isPermaLink="false">3664f711-135d-4c55-8f0a-82e6249c3e99</guid><pubDate>Sun, 16 Aug 2026 08:01:28 +0000</pubDate><atom:updated>2026-08-16T08:01:28.767Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்க தூதரகம்,US embassy</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/s3ee6xjg/USEmbassy001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமெரிக்க தூதரகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/s3ee6xjg/USEmbassy001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவைச் சேர்ந்தவர்கள் வெளிநாட்டிற்கு குறிப்பாக அமெரிக்கா செல்ல வேண்டுமென்றால், இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அமெரிக்கா செல்வதற்கான விசாவை தூதரகம் மூலம் பெறலாம்.</p><h2>மைனர் குழந்தைகளுக்கு விசா கேட்டு விண்ணப்பம்</h2><p>பெற்றோர் தங்களுடைய மைனர் குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டும் என்றாலும் விண்ணப்பிக்க வேண்டும். முன்னதாக, பெற்றோர்கள் தங்களுடைய மைனர் குழந்தைகளை அழைத்துச் செல்ல தேவையில்லை. விண்ணப்பத்தை பூர்த்தி செய்தால் மட்டும் போதுமானது என்று தெரிகிறது.</p><p>இந்த நிலையில் இனிமேல் மைனர் குழந்தைகளுக்கு விசா வேண்டி விண்ணப்பம் செய்யும்போது, அதிகாரிகள் விண்ணப்பத்தை பரிசீலனை செய்யும் போது நேர்காணலுக்காக மைனர் குழந்தைகளை கையோடு அழைத்து வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>பச்சிளம் குழந்தைகள்</h2><p>அது பிறந்த பச்சிளம் குழந்தைகள் என்றாலும் சரி, 17 வயது சிறுவன் மற்றும் சிறுமி என்றாலும் சரி நேரடியாக அழைத்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>அமெரிக்க விசா நடைமுறையில் தூதரக நேர்காணல் ஒரு முக்கியமான பகுதியாகும். இது விண்ணப்பதாரர்களை மதிப்பிட விசா அதிகாரிகளுக்கு உதவுவதுடன் எல்லைப் பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவும் அமைகிறது.</p><h2>எல்லை பாதுகாப்பு முக்கியம் என்கிறது அமெரிக்கா</h2><p>அமெரிக்காவின் எல்லையை பாதுகாப்பாக வைத்திருப்பது மிக முக்கியமானது. விசா நடைமுறையின் மூலம் தேசியப் பாதுகாப்பு மற்றும் பொதுப் பாதுகாப்புக்கான தரநிலைகளைத் தொடர்ந்து நிலைநிறுத்துவதில் அமெரிக்க வெளியுறவுத் துறை உறுதியாக இருக்கிறது என அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.</p><p>சிறு வயதுடைய குழந்தைக்கு அமெரிக்க விசா கோரி விண்ணப்பிக்கும் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள், குழந்தையின் வயதைப் பொருட்படுத்தாமல், திட்டமிடப்பட்ட தூதரக நேர்காணலுக்குக் குழந்தையை அழைத்துச் செல்லத் திட்டமிட வேண்டும்.</p><p>தூதரகத்தின் இந்த சமீபத்திய விளக்கத்தின்படி, கைக்குழந்தை அல்லது குறிப்பிட்ட வயதுக்குட்பட்ட குழந்தை நேரில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளத் தேவையில்லை என்று பெற்றோர்கள் கருதக்கூடாது. விசா நேர்காணலின் போது, ​​தூதரக அதிகாரி நேரில் பார்க்கும் வகையில் அனைத்து சிறு வயது விண்ணப்பதாரர்களும் அங்கு இருக்க வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>சினிமாவில் அறிமுகமானபோது என் பெற்றோருக்கு பயத்தை ஏற்படுத்தியது- நடிகை மமீதா பைஜூ</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/cinimavil-arimukamana-pothu-en-pettrorukku-bayathai-erpathithathu-nadigai-mameetha-paiju</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/cinimavil-arimukamana-pothu-en-pettrorukku-bayathai-erpathithathu-nadigai-mameetha-paiju#comments</comments><guid isPermaLink="false">e050ce46-0977-4d6e-9a2b-3c6d4ae3b543</guid><pubDate>Sun, 16 Aug 2026 07:58:47 +0000</pubDate><atom:updated>2026-08-16T07:58:47.789Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஸ்வநாத் அண்டு சன்ஸ்,நடிகை மமீதா பைஜூ,மமீதா பைஜூ</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/oq0lts88/Mamitha-baiju.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Actress Mamitha baiju]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/oq0lts88/Mamitha-baiju.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் மமீதா பைஜூ. முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து அவர் நடித்த ஜனநாயகன், சூர்யாவுடன் நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ஆகிய படங்கள் தொடர்ந்து வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.</p><p>இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-</p><p>நான் சினிமாவில் நடிக்கப்போவது என் பெற்றோருக்கு தெரிந்ததும் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் அவர்கள் அதை யாரிடமும் காட்டிக் கொள்ளவில்லை.</p><p>நான் எங்கே போகிறேன் என்னுடைய எதிர்காலம் என்ன என்ற உரையாடல்கள் குடும்பத்துக்குள் நடந்தன. அறிமுகம் இல்லாத துறைக்குள் நான் நுழைந்து கொண்டிருந்தேன் எனக்கு யாரையும் தெரியாது.</p><p>சினிமாவில் என் ஆரம்ப நாட்களை நினைத்துப் பார்க்கும்போது மிகவும் பெருமையாக இருந்தது. நான் படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த காலம்.</p><p>என் வாழ்க்கையில் மிகவும் சுவாரசியமான காலகட்டமாகும். அது சற்று மனஅழுத்தமும் ஏராளமான சந்தேகங்களும் நிறைந்த ஒரு காலகட்டமாக இருந்தது.</p><p>அது என் வாழ்வில் தற்போதைய நிலையை விட அதிகமாக நினைவில் வைத்திருக்கும் ஒரு காலகட்டம்.</p><p> இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்காவில் மனிதர்களின் தலைமுடியால் உருவான 10 அடி உயரம் கொண்ட பந்து: ஒப்பனை கலைஞர்கள் சாதனை</title><link>https://www.maalaimalar.com/news/world/68kg-human-hair-ball-nyc</link><comments>https://www.maalaimalar.com/news/world/68kg-human-hair-ball-nyc#comments</comments><guid isPermaLink="false">e8102c29-5fb0-4ec5-bff8-b2a515a2a79c</guid><pubDate>Sun, 16 Aug 2026 07:54:09 +0000</pubDate><atom:updated>2026-08-16T07:54:09.832Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நியூயார்க்,NewYork,தலைமுடி,முடி உதிர்வு,hair loss,tumblehair</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/amh9dpuy/Untitled-design-66.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Newyork human hair sphere]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/amh9dpuy/Untitled-design-66.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மக்கள் தொகை அதிமாக உள்ள மன்ஹட்டான் என்ற பெருநகரம் உள்ளது.</p><p>இந்த பகுதியில் மனிதர்களின் தலைமுடியை கொண்டு உருவாக்கப்பட்ட 10 அடி (3 மீட்டர்) உயரமும் 150 பவுண்டு (68 கிலோ) எடையும் கொண்ட,‘தி டம்பிள்ஹேர்’ என்ற கோள வடிவத்தை உருவாக்கியுள்ளது.</p><p>இந்த உருண்டை கோளமானது CAD இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டெசிமேட்டட் டிசைன்ஸ் நிறுவனங்களின் ஒப்பனை பொருள் வடிவமைப்பாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.</p><p>k18 கூந்தல் பராமரிப்பு நிறுவனம் மற்றும் அன்காமன் கிரியேட்டிவ் ஸ்டுடியோ என்ற நிறுவனங்களுக்காக, மனிதர்களின் தலைமுடியால் உருவாக்கப்பட்ட கோள வடிவம் வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த கோள வடிவம், இளவேனிற் காலத்தில் மனிதர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் ஒரு தவிர்க்கமுடியாத முடி கொட்டுதலுக்கான உருவகமாக காட்சிபடுத்தப்பட்டுள்ளது.</p><p>நியூயார்க் நகரில் உள்ள உள்ளுர் சலூன்களில் இருந்து பெறப்பட்ட மனிதர்களின் உண்மையான தலைமுடி மற்றும் செயற்கையான இழைகளின் கலவையை பயன்படுத்தி கையால் தைக்கப்பட்டுள்ளது.</p><p>தலைமுடியால் உருவாக்கப்பட்ட இந்த கோளத்தை நியூயார்க் நகரின் சாலைகள், பூங்காக்கள் மற்றும் தெருக்களில் வழியாக ஒப்பனை நிறுவன ஊழியர்கள் கொண்டு சென்று, மக்களின் கவனத்தை ஈர்த்தனர்.</p><p>இந்த சந்தை காட்சிபடுத்துதல் மன்ஹட்டான் நகரில் தொடங்கி, மீட்பேக்கிங் என்ற மாவட்டத்தில் முடிவடைந்தது.</p><p>சிகை அலங்கார ஒப்பனை கலைஞர்களின் சந்தைப் படுத்துதல் காட்சி, சமூக வலைதளத்தில் பரவி அமெரிக்க மக்களிடையே பெரும் வரவேற்பையும், கவனத்தையும் பெற்றது.</p>]]></content:encoded></item><item><title>ஜிம்பாப்வே ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து: பலி எண்ணிக்கை 72 ஆக அதிகரிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/death-toll-from-zimbabwe-ferry-disaster-rises-to-72</link><comments>https://www.maalaimalar.com/news/world/death-toll-from-zimbabwe-ferry-disaster-rises-to-72#comments</comments><guid isPermaLink="false">96001bed-ac71-453d-b0bb-4b17614fb191</guid><pubDate>Sun, 16 Aug 2026 07:34:28 +0000</pubDate><atom:updated>2026-08-16T07:34:28.639Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>zimbabwe,ஜிம்பாப்வே,படகு விபத்து,Boat Accident</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/otnmdhyx/boat.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ boat]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/otnmdhyx/boat.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜிம்பாப்வே நாட்டின் கரிபா ஏரியில் அதிக பயணிகளை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்ததில் பலி எண்ணிக்கை 72 ஆக உயர்ந்து உள்ளது.</p><h2>கரிபா ஏரி</h2><p>தென் ஆப்பிரிக்காவில் உள்ள கரிபா ஏரி ஜிம்பாப்வே மற்றும் அதன் அண்டை நாடான ஜாம்பியா ஆகியவற்றுக்கு இடையேயான எல்லையின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது.</p><p>இந்த ஏரி 200 கி.மீ-க்கும் அதிகமான நீளமும், சில இடங்களில் 40 கி.மீ. வரை அகலமும் கொண்டதாக உள்ளது.</p><p>ஜிம்பாப்வே மற்றும் ஜாம்பியா ஆகிய நாடுகள் இந்த ஏரியைப் பகிர்ந்து கொள்கின்றன. அவற்றுக்கு இடையேயான அதிகாரப்பூர்வ எல்லை ஏரியின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது.</p><p>கரிபா ஏரியில் அதிக பயணிகளை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது. இச்சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.</p><p>இந்த விபத்தில் 27 பேர் மாயமாகினர் எனவும், ஏரியில் இருந்து 77 பேர் மீட்கப்பட்டு அங்குள்ள ஒரு தீவுக்கு கொண்டு செல்லப்பட்டனர் என அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்தது. விசாரணையில் அந்தப் படகில் 150 பேர் பயணித்தனர் என கூறப்படுகிறது.</p><h2>மீட்புப் பணிகள்</h2><p>மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது என ஜிம்பாப்வே காவல்துறை தெரிவித்திருந்தது.</p><p>இந்நிலையில், கரிபா ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது. இதில் 18 சிறுவர்களும் அடங்குவர்.</p><h2>தேசிய பேரிடர்</h2><p>படகு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த ஜிம்பாப்வே அதிபர் எமர்சன் நகாவா, இந்தப் படகு விபத்தை தேசிய பேரிடர் என அறிவித்துள்ளார். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர். </p>]]></content:encoded></item><item><title>சின்னத்திரையில் களமிறங்கும் சமந்தா</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/samantha-hosts-cooking-show</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/samantha-hosts-cooking-show#comments</comments><guid isPermaLink="false">74156589-6196-4c76-9847-a5f2538a8d35</guid><pubDate>Sun, 16 Aug 2026 07:26:22 +0000</pubDate><atom:updated>2026-08-16T07:26:22.966Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Cooking Show,samantha,சமந்தா,சமையல் நிகழ்ச்சி,சின்னத்திரை,Television show</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/7teu7wpd/samantha.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Actress Samantha]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/7teu7wpd/samantha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திரையுலகில் முன்னணி கதாநாயகிகள் மற்றும் முன்னாள் கதாநாயகிகள் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றனர்.</p><p>அந்த வகையில் சமந்தாவும் சின்னத்திரையில் ஒளிபரப்பாக இருக்கும் சமையல் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க இருக்கிறார். </p><p>இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிரபல ஓடிடிதளமான சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க் இந்தியா நிறுவனம் நேற்று வெளியிட்டது.</p><p>இதுகுறித்து சமந்தா கூறியதாவது:-</p><p>நான் இதுவரை இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றதில்லை. அதனால் தான் சம்மதித்தேன். நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தவறுகள் செய்வதையும் ஒருவரை ஒருவர் ஆச்சரியப்படுத்துவதையும் பார்ப்பது மிகவும் சுவாரசியமாக இருக்கிறது.</p><p>மேலும் பிரபலங்களின் மற்றொரு பக்கத்தை இந்நிகழ்ச்சியில் காணலாம். </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><figure><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DcDqIeSpyJQ/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:658px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DcDqIeSpyJQ/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a></div></blockquote>
<script async src="//platform.instagram.com/en_US/embeds.js"></script></figure>]]></content:encoded></item><item><title>ரூ.500 கோடி செலவில் நீர்நிலைகள் சீரமைப்பு: அரசுடன் கைகோர்க்க பொதுமக்களுக்கு அமைச்சர் என்.ஆனந்த் அழைப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-500-crore-waterbodies-restoration-minister-n-anandhs-call-to-join-hands-with-government</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-500-crore-waterbodies-restoration-minister-n-anandhs-call-to-join-hands-with-government#comments</comments><guid isPermaLink="false">2a30a7fe-5a6b-4c19-8684-537dbec91caf</guid><pubDate>Sun, 16 Aug 2026 07:09:40 +0000</pubDate><atom:updated>2026-08-16T07:09:40.493Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,Water bodies,நீர்நிலைகள் சீரமைப்பு,அமைச்சர் என் ஆனந்த்,MInister N Anand</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/j3t91jbd/Anand.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister N Anand]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/j3t91jbd/Anand.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வருகிற அக்டோபர் மாதத்தில் தொடங்கும். ஒவ்வொரு ஆண்டும் இந்த பருவமழை காலம் சென்னை மக்களுக்கு பெரும்பாலும் சோதனை காலமாக இருக்கிறது.</p><p>முன்கூட்டியே எவ்வளவு திட்டமிட்டதாக கூறினாலும் மழை போட்டுதாக்கத்தான் செய்யும். இப்போது புதிதாக பொறுப்புக்கு வந்துள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு இந்த பருவமழை சவாலை சந்தித்து சமாளிக்க புதுமையான திட்டத்தை கொண்டு வந்துள்ளது. </p><p>அதன்படி, சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏரிகள், கூவம் ஆறு மற்றும் நீர் நிலைகளை தூர்வாரும் பணிகளை தீவிரமாக தொடங்கி உள்ளது. </p><p>கிராமப்புறங்களில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், தமிழகத்தின் கிராமப்புற நீர்வளத்தைப் பாதுகாத்து மேம்படுத்தும் வகையிலும் மாபெரும் நீர்நிலை புனரமைப்புப் பணிகள் நாளை (17-ந்தேதி)தொடங்கப்பட உள்ளன.</p><p>முதலமைச்சர்  விஜய் உத்தரவின்படி, வளர்ச்சியடைந்த பாரதம்- கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகள் மற்றும் நீர் வரத்துக் கால்வாய்களை புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.</p><p>இதன்படி, மாநிலம் முழுவதும் 10,185 நீர்வரத்துக் கால்வாய்கள் மற்றும் 809 ஏரிகள், குளங்கள், ஊரணிகள் ஆகியவற்றை தூர்வாரி புனரமைக்கும் பணிகள் தொடங்க உள்ளன.</p><p>ரூ.500 கோடி மதிப்பீட்டில் வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக நீர்நிலைகளில் தேங்கியுள்ள மண், கழிவுகள் உள்ளிட்டவற்றை அகற்றி, நீர்வரத்துப் பாதைகளைச் சீரமைப்பதன் மூலம் மழைக்காலத்தில் கிடைக்கும் நீரை அதிகளவில் சேமிக்க முடியும்.</p><p>இதன் மூலம் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளின் நீர்த்தேக்கத் திறன் அதிகரிப்பதுடன், நிலத்தடி நீர்மட்டத்தையும் உயர்த்துவதற்கான வாய்ப்பு ஏற்படும். குறிப்பாக, கிராமப்புறங்களில் விவசாயப் பாசனத்துக்கு தேவையான நீர்வளம் கிடைப்பதற்கும் இந்தப் பணிகள் பெரும் உதவியாக அமையும். மேலும் வெள்ளப் பாதிப்பையும் குறைக்கும்.</p><p>அதீத மழைப்பொழிவு ஏற்படும் நேரங்களில், நீர்வரத்துக் கால்வாய்கள் முறையாகப் பராமரிக்கப்படாமல் இருப்பது காரணமாக மழைநீர் தேங்கி விவசாய நிலங்களிலும் குடியிருப்புப் பகுதிகளிலும் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகிறது.</p><p>தற்போது மேற்கொள்ளப்படும் கால்வாய் தூர்வாரும் பணிகள் மூலம் மழைநீர் தடையின்றி நீர்நிலைகளைச் சென்றடைய வழிவகை செய்யப்படும். இதனால் மழைநீரை சேமிப்பதோடு மட்டுமின்றி, பல்வேறு பகுதிகளில் ஏற்படும் நீர்த்தேக்கம் மற்றும் வெள்ள அபாயத்தையும் குறைக்க முடியும்.</p><h2>பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு</h2><p>தமிழகத்தின் கிராமப்புற நீர்நிலைகளைப் பாதுகாப்பது அரசின் பணியாக மட்டுமின்றி, பொது மக்களின் பங்களிப்பும் அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது. எனவே, இந்தப் புனரமைப்புப் பணிகளில் உள்ளாட்சி அமைப்புகள், ஊர் பொது மக்கள் மற்றும் தன்னார்வ லர்களின் பங்களிப்பும் இடம்பெற உள்ளது.</p><p>முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தலின்பேரில் நடைபெறும் இந்த மாபெரும் பணியில்  அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்  என்.ஆனந்த், அன்புடன் அழைப்பு விடுத்துள்ளார்.</p><h2>பயன்கள் </h2><p>கிராமப்புற நீர்வளத்தை காக்கும் நீண்டகால நடவடிக்கை மழைநீரை வீணாக கடலில் கலக்காமல் சேமித்தல், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல், விவசாயத்துக்கான பாசன வசதியை மேம்படுத்துதல், வெள்ளப்பாதிப்பைத் தடுப்பது என பல்வேறு நோக்கங்களை ஒருங்கிணைத்து இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.</p><p>10,185 வரத்துக் கால்வாய்கள், 809 நீர்நிலைகள் என ஆயிரக்கணக்கான நீர்வள ஆதாரங்கள் ஒரே கட்டமாக புனரமைக்கப்படுவது, தமிழகத்தின் கிராமப்புற நீர்வளப் பாதுகாப்பில் முக்கியமான முன்னெடுப்பாக பார்க்கப்படுகிறது.</p><p>வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக பணிகள் முன்னெடுக்கப்படு வதால், வரும் மழைக் காலத்தில் கிடைக்கும் நீரை முழுமையாகப் பயன்படுத்து வதற்கான அடித்தளமாக உருவாகும்.</p><p>மேற்கண்ட தகவலை நீர்வளத் துறை தெரிவித்து உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>இந்தியா, இலங்கை இடையிலான முதல் டெஸ்ட்:  மழையால் பாதிப்பு</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/match-delayed-due-to-rain-in-second-day-for-srilanka-india-match</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/match-delayed-due-to-rain-in-second-day-for-srilanka-india-match#comments</comments><guid isPermaLink="false">fc390487-9e25-4035-a323-90810c2be047</guid><pubDate>Sun, 16 Aug 2026 07:07:26 +0000</pubDate><atom:updated>2026-08-16T07:07:26.334Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,மழை,SLvIND,இலங்கை இந்தியா தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/sgovyoxv/rain.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ galle]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/sgovyoxv/rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட்டின் 2-வது நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டு உள்ளது.</p><p>இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில், காலே நகரில் நடைபெறும் முதல் டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவெடுத்தது.</p><p>அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 32 ரன்களில் ரன்-அவுட் ஆனார். இந்தப் போட்டியில் கே.எல்.ராகுல் சிறப்பாக விளையாடி 77 ரன்கள் எடுத்தார். காயம் காரணமாக அவர் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். கேப்டன் சுப்மன் கில் 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.</p><h2>முதல் நாள் ஆட்டம்</h2><p>தொடர்ந்து சிறப்பாக ஆடிய விளையாடிய தேவ்தத் படிக்கல் 134 பந்துகளில் சதம் விளாசினார். ஆட்டம் மழையால் இடையிடையே பாதிக்கப்பட்டது.</p><p>முதல் நாள் முடிவில் இந்தியா முதல் இன்னிங்சில் 73 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 288 ரன்கள் எடுத்துள்ளது. ரிஷப் பண்ட் 27 ரன்னும், படிக்கல் 131 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.</p><p>இந்நிலையில், இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்க இருந்தது. காலை 10 மணியளவில் லேசாக தூறல் போட்டது. இதனால், களத்தில் நீர் தேங்காமல் இருப்பதற்காக பாதுகாப்பாக ‘கவர்’ செய்யப்பட்டது. எனினும், அதன்மீது மழை நீர் விழுந்தபடி இருந்தது.</p><h2>உணவு இடைவேளை</h2><p>அவ்வப்போது ஊழியர்கள் அதனை பாதுகாப்பாக வெளியேற்றினர். தொடர்ந்து, மழை தூறிக்கொண்டே இருந்தது. மழையால் ஆட்டம் தொடங்குவதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டது. 11.40 மணியளவில் மதிய உணவுக்கான இடைவேளை விடப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>தொலைந்து போன செருப்பை கண்டுபிடிக்க ChatGPT பயன்படுத்திய நபர்- வைரலாகும் வீடியோ</title><link>https://www.maalaimalar.com/news/national/man-uses-chatgpt-ai-to-find-his-lost-clog</link><comments>https://www.maalaimalar.com/news/national/man-uses-chatgpt-ai-to-find-his-lost-clog#comments</comments><guid isPermaLink="false">926ec478-e28a-4ad4-af75-5176437947aa</guid><pubDate>Sun, 16 Aug 2026 06:50:58 +0000</pubDate><atom:updated>2026-08-16T06:50:58.271Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஏஐ தொழில்நுட்பம்,சாட்ஜிபிடி,ChatGPT</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/jjtz33sf/Clogs0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Clogs]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/jjtz33sf/Clogs0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராஜஸ்தானில் உள்ள உஜ்ஜைனில் இருக்கும் கோவில் மிகவும் பிரசித்து பெற்றது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த கோவிலுக்கு ஒருவர் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். அவர் கோவிலுக்கு வெளியே தனது காலணியை விட்டுச் சென்றுள்ளார்.</p><figure><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DcFxQ1JNCwy/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:658px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DcFxQ1JNCwy/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a></div></blockquote>
<script async src="//platform.instagram.com/en_US/embeds.js"></script></figure><p>கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு, வெளியே வந்துள்ளார். அப்போது, வெளிப்பக்கத்தில் ஆயிரக்கணக்கான காலணிகள் மற்றும் ஷூக்கள் கிடந்துள்ளன. இதில் தனது Clogs வகை செருப்பை அவரால் தேடி கண்டுபிடிக்க முடியவில்லை.</p><p>இதனால் அந்த நபர் ஏ.ஐ. ஆன ChatGPT-யை பயன்படுத்தினார். இந்த செருப்பு குவியலில் இருந்து தனது செருப்பை கண்டுபிடிக்க டிப்ஸ் கொடுக்குமாறு கேட்டுள்ளார். ChatGPT-யும் வழிகாட்டுதல் வழங்க தனது செருப்பை கண்டுபிடித்துள்ளார்.</p><p>இது தொடர்பான வீடியோவை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மிகவும் சாதாரணமான ஒரு சூழலில் செயற்கை நுண்ணறிவு (AI) எவ்வாறு உதவியது என்பதைக் கண்டு பலர் ரசித்த நிலையில், ஏ.ஐ. எதற்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பது தொடர்பாக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களின் பட்டியலை வெளிட்ட தமிழக அரசு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamilnadu-government-releases-list-of-farm-loan-waiver-beneficiaries</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamilnadu-government-releases-list-of-farm-loan-waiver-beneficiaries#comments</comments><guid isPermaLink="false">73c49561-78ea-4c66-aa30-5b053972a550</guid><pubDate>Sun, 16 Aug 2026 06:43:42 +0000</pubDate><atom:updated>2026-08-16T06:43:42.318Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,பயிர்க்கடன்,Crop,Farm Loan Waiver,farm loan,விவசாய பயிர்கடன் தள்ளுபடி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/w3i9vs7d/crop.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Crop ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/w3i9vs7d/crop.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களின் பட்டியலை, தமிழக கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ளது.</p><p>தமிழகத்தில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்களில், பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசு, 2025 மே முதல், இந்த ஆண்டு பிப்ரவரி வரை, கூட்டுறவு நிறுவனங்களில், பயிர்க்கடன் பெற்ற, 14.43 லட்சம் விவசாயிகளின், 5,932 கோடி ரூபாய் பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்தது.</p><p>மாவட்ட வாரியாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயிகள், அவர்களின் தள்ளுபடி தொகை விபரம் ஆகியவை, இணையதளத்தில் 'www.kooturavu.tn.gov.in வெளியிடப்பட்டுள்ளது.</p><p>தமிழகம் முழுதும் உள்ள வி.ஏ.ஓ., அலுவல கங்கள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க அலுவலகங்களில், பயிர்க் கடன்தள் தள்ளுபடி திட்ட பயனாளிகள் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஐரோப்பாவில் 55.6 மீட்டரில் மிக உயரமான மாதா சிலை: போலந்து நாட்டில் திறப்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/polish-village-unveils-europes-tallest-virgin-mary-monument</link><comments>https://www.maalaimalar.com/news/world/polish-village-unveils-europes-tallest-virgin-mary-monument#comments</comments><guid isPermaLink="false">ba7f8e10-a56f-454b-ba01-4e1329fcb13d</guid><pubDate>Sun, 16 Aug 2026 06:33:24 +0000</pubDate><atom:updated>2026-08-16T06:33:24.095Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>போலந்து,Poland,mary statue,europe tallest statue,மேரி சிலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/kmyirrr2/Untitled-design-65.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஐரோப்பாவின் உயரமான கன்னி மேரி சிலை போலந்தில் திறப்பு]]></media:title><media:description type="html"><![CDATA[ Poland mary statue]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/kmyirrr2/Untitled-design-65.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>போலந்து நாட்டில் உள்ள கொனோடோபி என்ற சிறிய கிராமத்தில், நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட ஒரு விழாவில், கன்னி மேரியின் பிரம்மாண்டமான சிலை திறந்து வைக்கப்பட்டது.</p><p>போலந்தின் முன்னாள் அதிபரும், கம்யூனிச எதிர்ப்பு சாலிடாரிட்டி கட்சியின் (anti-communist Solidarity party) தலைவருமான லெக் வலேசா கன்னி மேரி சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்டார். </p><p>அப்போது பேசிய அவர், தனது கத்தோலிக்க நம்பிக்கையுடன் தொடங்கிய ஒரு பயணத்தின் முடிவை இந்த கன்னி மேரி சிலை குறிப்பதாக கூறினார்.</p><p>55.6 மீட்டர் உயரம் கொண்ட இந்த நினைவுச் சின்னம், ஐரோப்பாவிலேயே மிக உயரமான கன்னி மேரி சிலை என்று நம்பப்படுகிறது. </p><p>இதன் திறப்பு விழாவில் கத்தோலிக்கத் திருப்பலி, பாரம்பரிய போலந்து இசை மற்றும் கூட்டத்தின் மீது சிவப்பு ரோஜா இதழ்களை தூவிய ஹெலிகாப்டர்கள் ஆகியவை இடம்பெற்றன.</p><p>போலந்து நாட்டை சேர்ந்த கோடீஸ்வர தம்பதிகளான ரோமன் மற்றும் கிராஸினா கார்கோசிக் ஆகியோர் கன்னி மேரிக்கு இந்த நினைவுச்சின்னத்தை அமைக்க உதவினர்.</p><p>மேலும் அவர்கள், கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இது கட்டப்பட்டதாக தெரிவித்தனர். இந்த சிலை குறித்து உள்ளூர் அதிகாரிகள் கூறுகையில், ஒரு புனித யாத்திரைத் தலமாகவும், சுற்றுலா ஈர்ப்பு மையமாகவும் இந்த சின்னம் மாறும் என தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/low-pressure-forms-over-bay-of-bengal</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/low-pressure-forms-over-bay-of-bengal#comments</comments><guid isPermaLink="false">c33e0a3a-d0c2-41d7-9b7f-b2228a269e51</guid><pubDate>Sun, 16 Aug 2026 06:12:55 +0000</pubDate><atom:updated>2026-08-16T06:12:55.484Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,Deep depression,வங்கக்கடல்,bay of bengal,காற்றழுத்த தாழ்வு பகுதி,Indian meterological centre</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/mbd5i0vz/weather.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Weather]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/mbd5i0vz/weather.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய மேலடுக்கு சுழற்சியின் தாக்கத்தால் மேற்குவங்கம்- ஒடிசா பகுதியில் காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளது.</p><p>காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p>கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், ஆகஸ்டு 18ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>மழை </h2><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப்பாதை காரணமாக இன்று முதல் 21-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>சென்னையில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.</p><h2>காற்றழுத்த தாழ்வு பகுதி</h2><p>இந்த நிலையில், வடமேற்கு வங்கக் கடல் மற்றும் மேற்கு வங்கம் - வடக்கு ஒடிசா கடலோரப் பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து 24 மணி நேரத்தில் வலுவடையும் என கணிக்கப்பட்டுள்ளது.</p><p>காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக பருவமழை தீவிரமடைய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் 3 நாட்களுக்கு மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது எனவும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அர்ஜென்டினாவில் தவித்த 30 சிங்கம் மற்றும் புலிகளுக்கு சுதந்திரம்: தென்ஆப்பிரிக்கா, அமெரிக்காவுக்கு மாற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/world/lions-and-tigers-begin-a-long-awaited-rescue-from-a-notorious-argentine-zoo</link><comments>https://www.maalaimalar.com/news/world/lions-and-tigers-begin-a-long-awaited-rescue-from-a-notorious-argentine-zoo#comments</comments><guid isPermaLink="false">82fd4178-b95d-427d-9f95-7beadf52604d</guid><pubDate>Sun, 16 Aug 2026 06:12:29 +0000</pubDate><atom:updated>2026-08-16T06:12:29.489Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>SouthAfrica,தென்ஆப்பிரிக்கா,argentina,அர்ஜென்டினா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/2u2ng9xf/Tigers0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ புலி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/2u2ng9xf/Tigers0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அர்ஜென்டினாவின் தலைநகரான பியூனஸ் அயர்ஸ் (Buenos Aires) நகரில் இருந்து தென்மேற்கே 70 கிமீ தொலைவில் லுஜான் என்ற மிருகக் காட்சி சாலை இயங்கி வந்தது. இந்த Zoo கடந்த 2020-ந்தேதி சுகாதாரமற்ற நிலையில் இயங்குவதாக குற்றம்சாட்டப்பட்டு மூடப்பட்டது. அப்போது 200-க்கும் மேற்பட்ட சிங்கம் மற்றும் புலிகள் வசித்து வந்தன.</p><p>இந்த காட்டு விலங்குகள் மிகவும் சிரமமான, கான்கிரீட் கூண்டுக்குள் அடைக்கப்பட்டு இருந்தன. பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இந்த விலங்குகளை சுகாதாரமான வனவிலங்கு சரணாலயங்களில் சுதந்திரமாக நடமாட நடவடிக்கை எடுத்தன. Four Paws என்ற அமைப்பு முயற்சி மேற்கொண்டதில் தற்போது 30 சிங்கம் மற்றும் புலிகள் தென்ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவுக்கு இடம் பெயர உள்ளன.</p><p>சர்வதேச விலங்கு நல அமைப்பான Four Paws உதவியுடன் கடந்த 2023-ம் ஆண்டு பல விலங்குகள் மற்ற இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. மேலும், பல விலங்குகள் அங்கேயே துன்பத்தை அனுபவித்து வந்த நிலையில், தற்போது இதே அமைப்பு 30 சிங்கம் மற்றும் புலிகளை தென்ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவுக்கு மாற்றுவதற்கான பணிகளை தொடங்கியுள்ளது.</p><p>பெரிய வகையிலான கூண்டுகள் வரவழைக்கப்பட்டு, விலங்குகள் அதில் அடைக்கப்பட்டு தென்ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவுக்கு கொண்டு செல்லும் பணி நடைபெற்று வருகிறது. சிங்கம் மற்றும் புலிகள் தானாகவே கூண்டுக்குள் செல்ல பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனால், சில சிங்கங்கள் மயக்க மருந்து செலுத்தப்பட்டே, கூண்டுக்குள் ஏற்றப்பட்டன.</p><p>இது பணி சாதாரணமானது அல்ல. தென்ஆப்பிரிக்காவுக்கு செல்ல வேண்டுமென்றால் ஜெர்மனியில் உள்ள பிராங்க்பர்ட் அல்லது நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாம் விமான நிலையம் சென்று அங்கிருந்து தென்ஆப்பிரிக்கா கொண்டு செல்லப்பட வேண்டும். அதேபோல் அமெரிக்காவின் கொலராடோவுக்கு சிலி வழியாக செல்ல வேண்டும்.</p><h2>Four Paws அமைப்பின் திட்ட இயக்குநர் லூசியானா டி'அப்ராமோ இது தொடர்பாக கூறியதாவது:-</h2><p>லுஜான் மிருகக்காட்சி சாலையை, அர்ஜென்டினா அதிகாரிகள் பாதுகாப்பு மற்றும் விலங்கு நலன் குறித்த கவலைகள் காரணமாக 2020-ல் மூடினர். அது மூடப்பட்டபோது அங்கு சுமார் 200 சிங்கம் மற்றும் புலிகள் இருந்தன. 2023-ல் ஒரு தீர்வைக் காண ஃபோர் பாஸ் அமைப்பு முதன்முதலில் வந்தபோது ​​112 மட்டுமே எஞ்சியிருந்தன.</p><p>இரண்டு ஆண்டுகளுக்கு பொறுப்பேற்க அனுமதிக்கப்பட்டபோது, ​​அந்த எண்ணிக்கை 62 ஆக குறைந்துவிட்டது. உடல் பருமன், தசை இழப்பு அல்லது ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக, சிறைபிடிக்கப்பட்ட சில விலங்குகளால் நடக்கவே முடியவில்லை. மற்றவை பல் மற்றும் சிறுநீரக நோய்கள், நகங்களை அகற்றுவதால் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் சரியாக ஆறாத காயங்களால் அவதிப்படுகின்றன. அதுவே, அங்கு நிலவும் நெரிசலின் அளவையும், இந்த விலங்குகள் அனுபவித்த நிலைமைகளையும் காட்டுகிறது</p><p>இவ்வாறு டி'அப்ராமோ தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>இரண்டு விமானங்களுக்கு ஒரே எண்கள்: அதிகாரியின் சாமர்த்தியத்தால் நடக்க இருந்த பெரிய விபத்து தவிர்ப்பு..!</title><link>https://www.maalaimalar.com/news/world/two-passenger-planes-nearly-collide-controller-heroic-action</link><comments>https://www.maalaimalar.com/news/world/two-passenger-planes-nearly-collide-controller-heroic-action#comments</comments><guid isPermaLink="false">25a422f7-890e-4b39-988c-4faec7f6933f</guid><pubDate>Sun, 16 Aug 2026 06:02:09 +0000</pubDate><atom:updated>2026-08-16T06:02:09.775Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>airport,விமான நிலையம்,plane crash,விமான விபத்து,American Airlines,அமெரிக்க விமானம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/ki8w7qa1/Untitled-design-64.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விமானங்கள் மோதலை தவிர்த்த கட்டுப்பாட்டாளர்.]]></media:title><media:description type="html"><![CDATA[ Phoenix Airport plane crash]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/ki8w7qa1/Untitled-design-64.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவில் ஃபீனிக்ஸ் நகரில் உள்ள விமான நிலையத்தில் இரண்டு பயணிகள் விமானம் ஒன்றுக்கொன்று மோதிக் கொள்ள இருந்த நிலையில், கட்டுப்பாட்டாளரின் தலையீட்டால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. </p><h3><strong>அமெரிக்கன் ஏர்லைன்ஸ்</strong></h3><p>அரிசோனா மாகாணத்தில் உள்ள ஃபீனிக்ஸ் ஸ்கை ஹார்பர் சர்வதேச விமான நிலையத்திற்கு சிகாகோ நகரத்தில் இருந்து 2482 என்று பெயர் கொண்ட ஒரு பயணிகள் விமானம் வந்து கொண்டிருந்தது. </p><p>அப்போது மோசமான வானிலை காரணமாக சிகாகோ விமானம் வருவதற்கு தாமதமானதால், அடுத்த பயணத்திற்கு தங்கள் விமானத்திற்கு பதிலாக வேறு விமானத்தை பயன்படுத்தும்படி சிகாகோ விமானம் கூறியது.</p><h3><strong>இரண்டு பயணிகள் விமானம்</strong></h3><p>இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் வேறு விமானத்தை ஏற்பாடு செய்து, டிக்கெட் புக் செய்திருந்த பயணிகளிடம் 2482 என்ற மற்றொரு விமானத்தை பயன்படுத்துமாறு அறிவித்தனர்.</p><p>பின்னர் ஃபீனிக்ஸ் விமான நிலையத்தில் இருந்து, பயணிகள் விமானம் புறப்படுவதற்கு தயார் ஆனது. அப்போது மோசமான வானிலை காரணமாக தாமதமாக வந்த விமானம் தரையிரங்க வந்தது.</p><h3>சாமர்த்தியமாக செயல்பட்ட கட்டுப்பாட்டாளர்</h3><p>இதைத்தொடர்ந்து புறப்பட தயாராக இருந்த விமானமும், தரையிரங்க இருந்த விமானமும் ஒன்றுக்கொன்று மோதி விபத்தில் சிக்கிக்கொள்ள இருந்தது. உடனே இதை சுதாரித்துக் கொண்ட விமான நிலைய கட்டுப்பாட்டாளர், வருகையில் உள்ள 2482 விமானம் மற்றும் புறப்படுகின்ற 2482 விமானம் என்று வேறுபடுத்தி காட்டினார்.</p><p>மேலும் விமான நிலைய கட்டுப்பாட்டாளர், வரும் விமானம் புறப்படும் விமானத்திற்கு மேலே நிலைத்திருக்குமாறும், புறப்படும் விமானம் மிக உயரமாக ஏறாமல், அவற்றின் பறக்கும் பாதைகள் இணையும்போது தேவையான செங்குத்து இடைவெளியை கடைபிடிக்குமாறும் அறிவுறுத்தினார்.</p><p>இதனால் இரு விமானிகளும் பல மைல்கள் தொலைவில் இருக்கும்போதே, ஒரு விமானம் மற்ற விமானத்தை அறிந்து கொள்வதை கட்டுப்பாட்டாளர் உறுதி செய்தார்.</p><p>இதையடுத்து விமானங்கள் பாதுகாப்பாக ஒன்றையொன்று கடந்து சென்ற பிறகு, நிலைமையை கையாண்ட விதத்திற்காகக் கட்டுப்பாட்டாளரை விமானிகள் பாராட்டினார்.</p><p>அப்போது அந்த விமானி, நல்ல வேலை என்று கூறினார். அதற்கு கட்டுப்பாட்டாளர், பேரழிவாக இருந்திருக்கலாம், ஆனால் எல்லாம் நல்லபடியாக முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சி என்று கூறி மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்.</p><p>இந்த நிகழ்வு குறித்து கட்டுப்பாட்டாளர் கூறுகையில், “விமான போக்குவரத்து கட்டுப்பாட்டுத் துறையில் 25 ஆண்டுகள் பணியாற்றியது எனக்கு உதவியாக இருந்தது.</p><p>ஒரே அழைப்பு குறியீட்டைக் கொண்ட இரண்டு விமானங்கள் கிட்டத்தட்ட ஒன்றிணைவதை நான் பார்த்ததே இல்லை. அது மிகவும் நம்பமுடியாத ஒன்று,” என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>டார்வின் டெஸ்ட்: ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் நொறுக்கியது வங்கதேசம்-சாதனை வெற்றி</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/bangladesh-beat-australia-in-first-test</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/bangladesh-beat-australia-in-first-test#comments</comments><guid isPermaLink="false">a630d8f9-5d3d-45d1-87dd-53202cd1876f</guid><pubDate>Sun, 16 Aug 2026 05:41:27 +0000</pubDate><atom:updated>2026-08-16T05:41:27.245Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Cameron Green,கேமரூன் கிரீன்,AUSvBAN,Hasan Mahmud,ஆஸ்திரேலியா வங்கதேசம் தொடர்,ஹசன் மகமுது</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/l550ky4z/hasan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ hasan mahmud]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/l550ky4z/hasan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் வங்கதேசம் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.</p><p>ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நஜ்முல் ஹூசைன் ஷான்டோ தலைமையிலான வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது.</p><h2>டார்வின் டெஸ்ட்</h2><p>ஆஸ்திரேலியா-வங்கதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டார்வினில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.</p><h2>ஸ்மித் அரை சதம்</h2><p>அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்கியது. வங்கதேச வீரர்கள் துல்லியமாக பந்துவீசினர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. ஸ்டீவ் ஸ்மித் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து அரை சதம் கடந்து 71 ரன்னில் அவுட்டானார்.</p><p>இறுதியில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 198 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.</p><p>வங்கதேசம் சார்பில் ஹசன் மகமுது 6 விக்கெட்டும், தஸ்கின் அகமது, எபாடட் ஹொசைன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p>தொடர்ந்து ஆடிய வங்கதேசம் முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 426 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக ஆடிய ஹசன் தமிம் சதமடித்து 101 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஷாண்டோ பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 84 ரன்னில் வெளியேறினார்.</p><p>மொமினுல் ஹக் 49 ரன்னில் அவுட்டானார். மெஹிதி ஹசன் அரை சதம் கடந்து 65 ரன்னில் அவுட்டானார். வங்கதேசம் அணி ஆஸ்திரேலியாவை விட 228 ரன்கள் முன்னிலை பெற்றது.</p><h2>ஹேசில்வுட் 6 விக்கெட்</h2><p>ஆஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட் 6 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p>இதையடுத்து, ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சை ஆடியது. மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது. ஸ்டீவ் ஸ்மித் 44 ரன்னில் ஆட்டமிழந்தார். கேமரூன் கிரீன் 43 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். லபுசேன் 31 ரன்னில் வெளியேறினார்.</p><p>இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. கேமரூன் கிரீன் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து சதமடித்து அசத்தினார்.</p><p>அவர் 104 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில், ஆஸ்திரேலியா அணி 2வது இன்னிங்சில் 284 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.</p><p>வங்கதேசம் சார்பில் மெஹிதி ஹசன் 5 விக்கெட்டும், ஹசன் மகமுது 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p>இதையடுத்து, 57 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஹசன் தமிம் டக் அவுட்டானார்.</p><h2>வங்கதேசம் அசத்தல் வெற்றி</h2><p>ஷட்மன் இஸ்லாம் உடன் ஜோடி சேர்ந்த மொமினுல் ஹக் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றது.</p><p>இறுதியில், வங்கதேசம் 2வது இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 57 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.</p><p>ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் முதல் முறையாக வீழ்த்தி வங்கதேசம் சாதனை படைத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காவிரி நீர் விவகாரம்: கர்நாடக பாஜகவினரை நயினார், அன்புமணி தட்டிக் கேட்க வேண்டும்!- மாணிக்கம் தாகூர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-dispute-nainar-and-anbumani-must-question-karnataka-bjp-manickam-thakur</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-dispute-nainar-and-anbumani-must-question-karnataka-bjp-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">04b5bf12-8ff6-4cf5-a171-735058433306</guid><pubDate>Sun, 16 Aug 2026 05:19:58 +0000</pubDate><atom:updated>2026-08-16T05:19:58.193Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,அன்புமணி ராமதாஸ்,மாணிக்கம் தாகூர்,காவிரி நீர்,Manickam Tagore,Cauvery Issue</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/9f0e9ixz/Manic.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nainar Nagendran- Anbumani ramadoss- Manickam Tagore]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/9f0e9ixz/Manic.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டிற்கு நீர் திறந்ததை எதிர்க்கும் கர்நாடக பாஜகவினரை நயினார், அன்புமணி தட்டிக் கேட்க வேண்டும் என காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடக அரசு உரிய தண்ணீரைத் திறக்காததால், முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது.</p><p>ஆணையத்தின் உத்தரவை கர்நாடகா செயல்படுத்தக் கோரிய தமிழக அரசின் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 17-ஆம் தேதி (நாளை) விசாரணைக்கு வரவுள்ள நிலையை உணர்ந்து, தனது நிலையைப் புரிந்துகொண்ட கர்நாடக அரசு தற்போது கபினியிலிருந்து முறைப்படி தண்ணீரைத் திறந்துவிடத் தொடங்கியுள்ளது.</p><p>இந்த மாதத் தொடக்கத்திலேயேபி. எஸ். எடியூரப்பா மற்றும்  பி.ஒய்.விஜயேந்திரா உள்ளிட்ட கர்நாடக பாஜகவினர் தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்கக் கூடாது என்று போராட்டங்களை முன்னெடுத்தனர்.</p><p>தற்போது சட்டப்படி தமிழகத்திற்கு முறைப்படி தண்ணீர் திறந்துவிடப்படும் நிலையிலும், அதைத் தடுத்து நிறுத்த அணை முற்றுகை நாடகங்களை அறிவித்துப் பதற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டிற்குச் சட்டப்படி கிடைக்க வேண்டிய உரிமையைத் தடுத்து நிறுத்தத் துடிக்கும் பாஜகவின் இந்த வன்மமும் தமிழர்களுக்கு எதிரான துரோகமும் மன்னிக்க முடியாதது!</p><p>பாஜகவின் கூட்டணி கட்சிகள் காங்கிரஸ் மீது பழி போடுவதற்கு முன் ஒன்றை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். கர்நாடகத்தில் காங்கிரஸ் முதலமைச்சரே இருந்தாலும் தவறு செய்தால் தமிழகத்தின் உரிமைக்காகத் தட்டிக்கேட்க நாங்கள் ஒருபோதும் தயங்கியதில்லை. </p><p>ஆனால், கர்நாடக பாஜகவினர் தமிழகத்திற்கு எதிராகச் செய்யும் இந்த அப்பட்டமான துரோகத்தைத் தட்டிக்கேட்க முடியாமல் </p><p>நயினார் நாகேந்திரன் அண்ணா எங்கே போனீர்கள்? கூட்டணி கட்சி தலைவர் ராமதாஸ் எங்கே இருக்கிறார்? ஏன் கூனிக் குறுகி மவுனம் காக்கிறீர்கள்?</p><p>தமிழ்நாட்டைப் பற்றியும் நமது விவசாயிகளைப் பற்றியும் இவர்களுக்குக் கவலையே இல்லையா? </p><p>தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் உங்கள் கட்சியினரைக் கண்டிக்க வக்கில்லாமல் இங்கு வந்து அரசியல் நாடகம் நடத்துவதுதான் பாஜகவின் லட்சணமா? </p><p>பாஜகவின் இந்த நயவஞ்சகக் கொல்லைப்புற அரசியலும், இதன் பின்னணியில் உள்ள உண்மைகளும் இப்போது வெளிச்சத்திற்கு வரத் தொடங்கிவிட்டன!</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பான் மசாலா விளம்பரம் விவகாரம்: நடிகர்கள் ஷாருக் கான், அஜய் தேவ்கன் ஆகியோருக்கு FDA நோட்டீஸ்</title><link>https://www.maalaimalar.com/news/national/pan-masala-ad-contract-fda-notice-to-actors-shah-rukh-khan-ajay-devgn</link><comments>https://www.maalaimalar.com/news/national/pan-masala-ad-contract-fda-notice-to-actors-shah-rukh-khan-ajay-devgn#comments</comments><guid isPermaLink="false">d0397a51-2dd7-40f4-bb23-e851a77f7448</guid><pubDate>Sun, 16 Aug 2026 04:58:25 +0000</pubDate><atom:updated>2026-08-16T04:58:25.479Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மகாராஷ்டிரா,Shahrukh Khan,Pan masala,Maharastra,ஷாருக் கான்,உணவு பாதுகாப்புத் துறை,பான் மசாலா,FDA</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/3lntg3sc/Untitled-design-63.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pan Masala Ad Row]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/3lntg3sc/Untitled-design-63.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிரா மாநிலத்தில் தடைசெய்யப்பட்டுள்ள பான் மசாலாவின் விளம்பரத்தில் நடித்து, அதனை மறைமுகமாக பிரபலப்படுத்தியதற்காக, நடிகர்கள் ஷாருக் கான், அஜய் தேவ்கன் மற்றும் டைகர் ஷெராஃப் ஆகியோருக்கு மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.</p><h3><strong>பான் மசாலா தடை</strong></h3><p>மகாராஷ்டிராவில் பான் மசால் மற்றும் குட்கா பயன்பாட்டிற்கு அம்மாநில அரசு முழுவதுமாக தடை விதித்துள்ளது. </p><p>இதையடுத்து கடந்த 2024-ஆம் ஆண்டில் வெளியான, பான் மசாலா நிறுவனத்தின் ஏலக்காய் விளம்பரத்தில் ஷாருக் கான், அஜய் தேவ்கன் மற்றும் டைகஎ ஷெரஃப் ஆகிய மூன்று நடிகர்களும் ஒன்றாக இணைந்து நடித்திருந்தனர்.</p><p>இந்த நிலையில் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்கள் மீதான விளம்பரத்தில் நடித்ததற்காக, மூன்று நடிகர்களுக்கும் விளக்கம் கேட்டு மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.</p><h3><strong>நடிகர்களுக்கு நோட்டீஸ்</strong></h3><p>இந்த மூன்று நடிகர்களுக்கு எதிராகவும் ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதை விவரித்து, 15 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்குமாறும் கூறியுள்ளது.</p><p>மேலும் இந்த மூன்று நடிகர்களும் இந்தவிதமான விளம்பர பிரச்சாரத்தில் பங்கேற்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ளவும், புகையிலை தொடர்பான அனைத்து விளம்பர உள்ளடக்கங்களையும் தங்களது அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்குகளிலிருந்து அகற்றவும் அறிவுறுத்தியுள்ளது.</p><h3><strong>மகராஷ்டிரா உணவு பாதுகாப்புத் துறை</strong></h3><p>இதுகுறித்து மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,</p><p>“குறிப்பிட்ட இந்த விளம்பரத்தை ஆய்வு செய்ததில், மகாராஷ்டிர மாநிலத்தில் உற்பத்தி, சேமிப்பு, போக்குவரத்து, விநியோகம் மற்றும் விற்பனைக்குத் தடைசெய்யப்பட்ட ஒரு பொருளான பான் மசாலாவுடன் முக்கியமாகத் தொடர்புடைய விமல் பிராண்டை அந்த விளம்பரம் ஊக்குவிப்பது முதற்கட்டமாக தெரிகிறது.</p><p>விளம்பரத்தில் ‘விமல் ஏலக்காய்’ என்ற சொற்றொடர், விமல் பான் மசாலா பிராண்டுடன் ஒரு தொடர்பை உருவாக்கும் விதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.</p><p>இது நுகர்வோரைத் தவறாக வழிநடத்தக்கூடும் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருளின் வர்த்தக அடையாளத்தை மறைமுகமாக ஊக்குவிப்பதாக அமையும்,” என்று தெரிவித்துள்ளது.</p><p>மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து பாதுகாப்பு அதிகாரியான துகாராம் முண்டே, நடிகர்களின் விளம்பர ஒப்பந்தங்கள், பிரச்சார சுருக்கங்கள், பணம் செலுத்தும் ஏற்பாடுகள் மற்றும் உரிய கவனம் செலுத்தியதற்கான ஆதாரங்கள் ஆகியவற்றின் முழு நகல்களையும் தங்களுக்கு அனுப்புகுமாறு தெரிவித்துள்ளது.</p><p>மகாராஷ்டிராவில் குட்கா மற்றும் பிற தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.</p><p>பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை காரணம் காட்டி, மகாராஷ்டிராவிற்குள் பான் மசாலா தயாரித்தல், சேமித்தல், விநியோகித்தல் மற்றும் விற்பனை செய்வதை கடுமையாக எதிர்க்கும் வகையில் மாநிலம் முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>மேற்கோள் காட்டப்பட்ட நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களின்படி, தவறான விளம்பரங்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும், மேலும் விளம்பரதாரர்கள் மூன்று ஆண்டுகள் வரை எந்தவொரு விளம்பரத்தையும் தயாரிப்பதற்கு தடை செய்யப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>19-ம் தேதி வரை நீடிக்கும் மழை: சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-weather-heavy-rain-warning-for-chennai-and-neighbouring-districts-till-19</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-weather-heavy-rain-warning-for-chennai-and-neighbouring-districts-till-19#comments</comments><guid isPermaLink="false">37956728-e8e3-40f1-84bf-d6e617e4480f</guid><pubDate>Sun, 16 Aug 2026 04:51:23 +0000</pubDate><atom:updated>2026-08-16T04:51:23.391Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Thiruvallur,சென்னை,Chennai,Heavy Rain,கனமழை எச்சரிக்கை,weather report,திருவள்ளூர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/emb1id6j/rain.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Heavy rain]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/emb1id6j/rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியருப்பதாவது:-</p><p>தமிழக கடலோர பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.</p><p>இதன் காரணமாக தமிழகத்தில் இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழையும், தமிழகத்தின் இதர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.</p><p>நாளை (17-ந்தேதி) செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.</p><p>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருச்சி, புதுக்கோட்டை, சேலம், நாமக்கல், பெரம்பலூர், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் கடலூர் மாவட்டங்க ளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், இதர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.</p><p>வருகிற 18-ந்தேதி செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை யும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக் குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை யும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் உள்ளிட்ட இதர பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.</p><p>வருகிற 19-ந்தேதி நீல கிரி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, சிவகங்கை, புதுக் கோட்டை, திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சீபுரம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.</p><p>இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>நடுராத்திரியில் விருந்தினர் மாளிகையில் இருந்து வெளியேற்ற முயற்சி: மஹுவா மொய்த்ரா எம்.பி. குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/national/mob-baying-for-her-shashi-tharoor-backs-mahua-moitra-after-late-night-eviction-bid</link><comments>https://www.maalaimalar.com/news/national/mob-baying-for-her-shashi-tharoor-backs-mahua-moitra-after-late-night-eviction-bid#comments</comments><guid isPermaLink="false">222e014c-3e53-494f-9e6b-45e71ba0bc6c</guid><pubDate>Sun, 16 Aug 2026 04:51:19 +0000</pubDate><atom:updated>2026-08-16T04:51:19.095Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Shashi Tharoor,சசி தரூர்,மஹுவா மொய்த்ரா,Mahua Moitra,Om Birla,ஓம் பிர்லா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/e8jeh8ki/MahuaMoitra001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mahua Moitra]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/e8jeh8ki/MahuaMoitra001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்.பி.யாக உள்ளவர் மஹுவா மொய்த்ரா. கடந்த 14-ந்தேதி (நேற்று) இரவு மேற் வங்க மாநிலத்தில் உள்ள நாடியா (Nadia) நிர்வாகம், இவர் தங்கியிருந்த அறையை உடனடியாக காலி செய்யும்படி வலியுறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>இது தொடர்பாக நேற்று இரவு மஹுவா மொய்த்ரா இணைய தளத்தில் பதிவிட்டுள்ள செய்தில் "Dear IPU {(Inter-Parliamentary Union- நாடாளுமன்றங்களுக்கு இடையிலான யூனியன்) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உலகளாவிய அமைப்பு}, இந்தியாவில் நான் எம்.பி.யாக உள்ளேன்.</p><p>அதிகாரப்பூர்வ விருந்தினர் மாளிகையில் என்னுடைய அறையில் இருந்து வெளியேறுமாறு இரவு 9.97 மணிக்கு அரசு கேட்டுக்கொண்டது. பின்னர் 10.52 மணிக்கு மீண்டும் வெளியேறுமாறு வலியுறுத்தியது. விருந்தினர் மாளிகை்கு வெளியே பாஜக கூட்டம் என் உயிரை பறிக்க துடித்துக் கொண்டிருந்த வேலையில் இவ்வாறு நான் கட்டாயப்படுத்தப்பட்டேன். இந்தியாவில் ஜனநாயகம் இந்த நிலையில்தான் உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>சசி தரூர் ஆதரவு</h2><p>இந்த நிலையில் மஹுவா மொய்த்ராவுக்கு சசி தரூர் ஆதரவு தெரிவித்து்ளளார். இது தொடர்பாக சசி தரூர் கூறுகையில் "அனைத்து ஜனநாயகக் கட்சியினரும் அவருடன் ஒற்றுமையுடன் நிற்க வேண்டும். ஒரு கும்பல் அவரை தாக்கத் துடித்து கொண்டிருக்கும் நிலையில் அரசு அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.</p><p>ஒரு ஜனநாயகத்தில் இத்தகைய அடிப்படை விஷயங்களை எடுத்துரைக்க வேண்டிய அவசியம் இருக்கக்கூடாது. அதிலும் குறிப்பாக, நமது சுதந்திரப் போராட்டத்தின் உச்சகட்டத்தைக் குறிக்கும் நாளில் இது இன்னும் தேவையற்றது" எனத் தெரிவித்துள்ளார்.</p><h2>மக்களவை சபாநாயகருக்கு கடிதம்</h2><p>இவ்விவகாரத்தில் தலையிடுமாறு கோரி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு மஹுவா மொய்த்ரா கடிதம் எழுதியுள்ளார்.  அந்த கடிதத்தில் "தனக்கு அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்டிருந்த சர்க்யூட் ஹவுஸ் (அரசு விருந்தினர் இல்லம்) அறையை காலி செய்யுமாறு நாடியா மாவட்ட நிர்வாகம் தன்னை வற்புறுத்தியது. இவ்விவகாரத்தை அவசரமாகக் கவனித்து, ஒரு முன்னுதாரணத்தை உருவாக்கி, நாடு முழுவதும் உள்ள பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கண்ணியத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p>அத்துடன், அறையை காலி செய்ய மறுத்ததைத் தொடர்ந்து, சர்க்யூட் ஹவுஸுக்கு வெளியே திரண்டிருந்த பெருந்திரளான மக்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டனர். தனக்கு எதிரான துன்புறுத்தலுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடப்போவதாக கிருஷ்ணாநகர் தொகுதி எம்.பி.யான மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்.</p><p>நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்குப் பிறகு கிருஷ்ணாநகரில் உள்ள சர்க்யூட் ஹவுஸில் இரவு தங்குவதற்காக மொய்த்ரா அங்கு சென்றிருந்தார். ஒரு எம்.பி.யாக அங்கு தங்குவதற்கு தனக்கு உரிமை உண்டு என்று கூறிய அவர், தன்னைத் துன்புறுத்தும் நோக்கத்துடன் நள்ளிரவில் வெளியேறுமாறு மாவட்ட அதிகாரிகள் அழுத்தம் கொடுத்ததாக தெரிவித்தார்.</p> <h2>காலி செய்ய வற்புறுத்தல்</h2><p>"மாலை 6.15 மணியளவில் நான் சர்க்யூட் ஹவுஸ் அறைக்குச் சென்றேன். ஊழியர்கள் எனக்கு வழக்கமாக ஒதுக்கப்படும் அறைக்கு என்னை அழைத்துச் சென்றனர். அந்த அறை தங்குவதற்குத் தயாராக வைக்கப்பட்டிருந்தது. மாலை 7 மணிக்கு எனது அறைக்குத் தேநீர் கொண்டு வரப்பட்டது. இரவு 9.20 மணிக்கு இரவு உணவு அங்கேயே பரிமாறப்பட்டது.</p><p>இரவு 9.47 மணிக்கு, நாடியா மாவட்ட கூடுதல் ஆட்சியரிடமிருந்து (Additional District Magistrate) எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. நான் அந்த இடத்தை காலி செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார். அதற்கான காரணத்தை நான் கேட்டபோது, ​​மேலிடத்திலிருந்து உத்தரவு வந்துள்ளது, தான் அந்தச் செய்தியைத் தெரிவிப்பவர் மட்டுமே என்று அவர் கூறினார்" என்று மஹுவா மொய்த்ரா குற்றம்சாட்டியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வாஜ்பாய் நினைவு நாள்: ஜனாதிபதி, பிரதமர் மோடி மலரஞ்சலி</title><link>https://www.maalaimalar.com/news/national/president-murmu-pm-modi-pay-tribute-to-vajpayee</link><comments>https://www.maalaimalar.com/news/national/president-murmu-pm-modi-pay-tribute-to-vajpayee#comments</comments><guid isPermaLink="false">6b476824-352f-4171-8265-da5858c1ce6d</guid><pubDate>Sun, 16 Aug 2026 04:18:56 +0000</pubDate><atom:updated>2026-08-16T04:18:56.922Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜனாதிபதி,death anniversary,Vajpayee,pm modi,பிரதமர் மோடி,வாஜ்பாய் நினைவு நாள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/85vvemvx/PMO.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/85vvemvx/PMO.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினத்தை ஒட்டி டெல்லியில் உள்ள நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மலரஞ்சலி செலுத்தினார்.</p><p>வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மலர்தூர் அஞ்சலி செலுத்தினர்.</p><p>வாஜ்பாயின் நினைவிடத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லி முதலமைச்சர் ரேகா உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Delhi | Prime Minister Narendra Modi, President Droupadi Murmu, Vice President CP Radhakrishnan, BJP National President Nitin Nabin and other senior leaders attend the prayer meeting at &#39;Sadaiv Atal&#39;, the memorial of former PM Atal Bihari Vajpayee, on his death… <a href="https://t.co/R2bZlJNEgb">pic.twitter.com/R2bZlJNEgb</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2088821241646112935?ref_src=twsrc%5Etfw">August 16, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>2வது இன்னிங்சில் 284 ரன்னுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட்: வங்கதேசம் வெற்றிபெற 57 ரன் தேவை</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/bangladesh-need-57-runs-to-win-against-australia-first-test</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/bangladesh-need-57-runs-to-win-against-australia-first-test#comments</comments><guid isPermaLink="false">50c4d364-c151-4719-a9c5-618801f3c60d</guid><pubDate>Sun, 16 Aug 2026 04:18:49 +0000</pubDate><atom:updated>2026-08-16T04:18:49.388Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Cameron Green,கேமரூன் கிரீன்,Mehidy Hasan Miraz,மெஹிதி ஹசன்,AUSvBAN,Hasan Mahmud,ஆஸ்திரேலியா வங்கதேசம் தொடர்,ஹசன் மகமுது</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/gop939d1/mehidy.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ mehidy hasan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/gop939d1/mehidy.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 298 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.</p><p>ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நஜ்முல் ஹூசைன் ஷான்டோ தலைமையிலான வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது.</p><h2>டார்வின் டெஸ்ட்</h2><p>ஆஸ்திரேலியா-வங்கதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டார்வினில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.</p><h2>ஸ்மித் அரை சதம்</h2><p>அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்கியது. வங்கதேச வீரர்கள் துல்லியமாக பந்துவீசினர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. ஸ்டீவ் ஸ்மித் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து அரை சதம் கடந்து 71 ரன்னில் அவுட்டானார்.</p><p>இறுதியில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 198 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.</p><p>வங்கதேசம் சார்பில் ஹசன் மகமுது 6 விக்கெட்டும், தஸ்கின் அகமது, எபாடட் ஹொசைன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p>தொடர்ந்து ஆடிய வங்கதேசம் முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 426 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக ஆடிய ஹசன் தமிம் சதமடித்து 101 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஷாண்டோ பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 84 ரன்னில் வெளியேறினார்.</p><p>மொமினுல் ஹக் 49 ரன்னில் அவுட்டானார். மெஹிதி ஹசன் அரை சதம் கடந்து 65 ரன்னில் அவுட்டானார். வங்கதேசம் அணி ஆஸ்திரேலியாவை விட 228 ரன்கள் முன்னிலை பெற்றது.</p><h2>ஹேசில்வுட் 6 விக்கெட்</h2><p>ஆஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட் 6 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p>இதையடுத்து, ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சை ஆடியது. மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது. ஸ்டீவ் ஸ்மித் 44 ரன்னில் ஆட்டமிழந்தார். கேமரூன் கிரீன் 43 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். லபுசேன் 31 ரன்னில் வெளியேறினார்.</p><p>இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. கேமரூன் கிரீன் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து சதமடித்து அசத்தினார்.</p><h2>கேமரூன் கிரீன் சதம்</h2><p>அவர் 104 ரன்னில் ஆட்டமிழந்தார்.</p><p>இறுதியில், ஆஸ்திரேலியா அணி 2வது இன்னிங்சில் 284 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.</p><p>வங்கதேசம் சார்பில் மெஹிதி ஹசன் 5 விக்கெட்டும், ஹசன் மகமுது 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p>இதையடுத்து, 57 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஒகேனக்கல் ஆற்றில் 8,000 கனஅடி நீர் வரத்து..!- பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/8000-cusecs-flow-in-hogenakkal-cauvery</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/8000-cusecs-flow-in-hogenakkal-cauvery#comments</comments><guid isPermaLink="false">ce122d1e-24c5-4d47-8398-083e3855f290</guid><pubDate>Sun, 16 Aug 2026 03:45:22 +0000</pubDate><atom:updated>2026-08-16T03:45:22.507Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Cauvery river,நீர் வரத்து அதிகரிப்பு,ஒகேனக்கல் காவிரி ஆறு,parisal,hogenakkal cauvery river,பரிசல் இயக்கத்திற்கு தடை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/54ni1xv5/hogenakkal.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Hogenakkal ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/54ni1xv5/hogenakkal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>ஒகேனக்கல்</h2><p>தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கான நீர் வரத்து 6500 கன அடியிலிருந்து 8000 கன அடியாக உயர்ந்துள்ளது.</p><p>இதன்எதிரொலியால், ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கான நீர்வரத்து 8000 கன அடியாக அதிகரித்ததால் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.</p><h2>மேட்டூர் அணை</h2><p>சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 4385 கன அடியில் இருந்து 6,179 கன அடியாக அதிகரித்துள்ளது.</p><p>மேட்டூர் அணையின் தற்போதைய நீர்மட்டம் 81.31 அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 43.27 மில்லியன் கன அடியாக உள்ளது.</p><p>மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 6,179 கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில் குடிநீர் தேவைக்காக 2000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. </p><p>இதன் எதிரொலியால், ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கான நீர்வரத்து 8000 கன அடியாக அதிகரித்ததால் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.</p><h2>முல்லைப் பெரியாறு அணை</h2><p>முல்லைப் பெரியாறு அணைக்கான நீர்வரத்து 920.30 கன அடியாக உள்ள நிலையில் தமிழகத்திற்கு 800 கனஅடி வீதம் நீர் திறக்கப்படுகிறது.</p><p>முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் 122.95 கனஅடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 3,212.10 மில்லியன் கனஅடியாக உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பனிக்கரடியின் ஆழ்ந்த தூக்கத்தை கெடுத்த நபருக்கு ரூ.5 லட்சம் அபராதம்</title><link>https://www.maalaimalar.com/news/world/tourist-fined-500000-rupees-for-waking-polar-bear-in-svalbard</link><comments>https://www.maalaimalar.com/news/world/tourist-fined-500000-rupees-for-waking-polar-bear-in-svalbard#comments</comments><guid isPermaLink="false">93341fcd-42a1-4533-8130-211f12956328</guid><pubDate>Sun, 16 Aug 2026 03:45:03 +0000</pubDate><atom:updated>2026-08-16T03:45:03.138Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>norway,பனிக்கரடி,PolarBear,நார்வே</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/dxjmtgp0/Untitled-design-62.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நார்வேயில் பனிக்கரடியை தொந்தரவு செய்த சுற்றுலா பயணிக்கு ரூ.5 லட்சம் அபராதம்]]></media:title><media:description type="html"><![CDATA[ Norway Polarbear]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/dxjmtgp0/Untitled-design-62.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நார்வேயின் தீவுக்கூட்டமான ஸ்வால்பார்ட் கடற்கரையில் தூங்கிக் கொண்டிருந்த பனிக்கரடியை படகில் சென்ற நபர் ஒலி எழுப்பி எழுப்பியதற்காக, அவருக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p>வட துருவத்தில் இருந்து சுமார் 620 மைல் தொலைவில் நார்வே நாடு அமைந்துள்ளது. இங்குள்ள தீவுக்கூடமான பனிசூழ்ந்த ஸ்வால்பார்ட் கடற்கரையில் வெள்ளை பனிக்கரடிகள் வாழ்ந்து வருகிறது.</p><p>ஸ்வால்பார்டில் பனிக்கரடிகள் 1972ஆம் ஆண்டு முதல் பாதுகாக்கப்பட்ட இனமாக இருந்து வருகின்றன. மேலும் அவற்றுக்கு இடையூறு விளைவிப்பது கடுமையான சட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h3><strong>நார்வே கடற்கரை</strong></h3><p>இந்த கடற்கரைக்கு உள்ளூர் கப்பலில் சுற்றுலா பயணி ஒருவர் கடந்த வாரத்தில் சென்றுள்ளார். அந்த சமயத்தில் கடற்கரையில் பனிக்கரடி ஒன்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது.</p><p>அப்போது அந்த கரடி நகர்வதை பார்க்க விரும்பிய அந்த நபர், வேண்டுமென்றே கப்பலில் இருந்த ஒலி எழுப்பானை எழுப்பி கரடியை திகிலடைய செய்துள்ளார்.</p><p>இதையடுத்து திடீரென்று எழுப்பப்பட்ட அந்த சத்தத்தால் திகிலடைந்த அந்த கரடி, விழித்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு தப்பி ஓடியுள்ளது.</p><p>இந்த சம்பவத்தை பார்த்த உள்ளூர் காவல்துறை அதிகாரிகள், அவர் மீது வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக ஸ்வால்பார்ட் ஆளுநரான லாரஸ் ஃபெளஸ்-இடம் அழைத்து சென்றனர்.</p><h3><strong>அபராதம் விதிப்பு</strong></h3><p>இந்த வழக்கை விசாரித்த ஆளுநர், “கப்பல் அந்த கரடியை கடந்து சென்றபோது, அதில் பயணம் செய்தவர்கள் உறங்கி கொண்டிருந்த ஒரு பனிக்கரடியை கண்டுள்ளனர்.</p><p>பின்னர் அந்த கப்பலில் இருந்த ஒருவர், அதிகமான ஒலியை எழுப்பி அந்த கரடியை எழுப்பியுள்ளார். இதையடுத்து அந்த கரடி வேறு இடத்திற்கு சென்றுள்ளது.</p><p>ஸ்வால்பார்ட் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின்படி, பனிக்கரடிகளை தேவையின்றி தொந்தரவு செய்வது மற்றும் துரத்துவது அல்லது பிடிக்க முயற்சிப்பது முற்றிலும் சட்டவிரோதமாகும்.</p><p>வனவிலங்குகளின் கடுமையான வாழ்விடத்தில் அவற்றுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துவதையோ அல்லது அவற்றின் இயல்பான நடத்தையை மாற்றுவதையோ சுற்றுலா பயணிகள் தவிர்க்க வேண்டும்.</p><p>மேலும் விலங்குகள் வசிக்கும் இடத்தில் இருந்து பாதுகாப்பான தூரத்தை சுற்றுலா பயணிகள் கடைபிடிக்க வேண்டும் என விதிமுறைகள் வலியுறுத்துகின்றன.</p><p>பனிக்கரடியை தொந்தரவு செய்த நபருக்கு ன் நார்வேஜியன் குரோனர் 50,000 (இந்திய மதிப்பில் ரூ.4.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை) அபராதமாக விதிக்கப்படுகிறது” என்று தீர்ப்பளித்தார்.</p>]]></content:encoded></item><item><title>முன்னாள் அமைச்சர் கட்சி அலுவலகத்தில் சடலமாக கண்டெடுப்பு: மம்தாவுக்கு நெருக்கமானவர்..!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/asish-banerjee-mamata-banerjee-close-aide-found-dead-at-trinamool-office</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/asish-banerjee-mamata-banerjee-close-aide-found-dead-at-trinamool-office#comments</comments><guid isPermaLink="false">c66486f8-c18d-41ba-8df8-20a9201cb771</guid><pubDate>Sun, 16 Aug 2026 03:39:46 +0000</pubDate><atom:updated>2026-08-16T03:39:46.404Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மம்தா பானர்ஜி,Mamata Banerjee,மேற்கு வங்கம்,west bengal,திரிணாமுல் காங்கிரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/rz8uv3cp/AsishBanerjee001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆசிஷ் பானர்ஜி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/rz8uv3cp/AsishBanerjee001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்க மாநிலம் பிர்பம் மாவட்டத்தில் உள்ள ராம்பூர்ஹாட் வசித்து வந்தவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆசிஷ் பானர்ஜி. இவர் தனது வீட்டு அருகில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.</p><p>தூக்கில் தொடங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவரது உடல் உடற்கூறு சோதனைக்கான மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><h3>5 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ஆகிஷ் பானர்ஜி</h3><p>இவர் ராம்பூர்ஹாட்டில் இருந்து ஐந்து முறை எம்.எல்.ஏ.-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். மம்தா பானர்ஜி முதலமைச்சராக இருந்தபோது, துணை சபாநாயகராக பணியாற்றியுள்ளார்.</p><p>இந்த வருடம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக-வின் துருபா சஹாவிடம் தோல்வியடைந்தார். ராம்பூர்ஹாட்டில் உள்ள ஹட்டலபாரா என்ற பகுதியில் வசித்து வந்தார். அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதும், ஏராளமான தொண்டர்கள் அலுவலத்திற்கு வெளியே குவிந்தனர்.</p><h2>முன்னாள் அமைச்சர்</h2><p>அவர் கல்வி மற்றும் விவசாயத்துறை அமைச்சராகவும் மம்தா பானர்ஜி அரசின் கீழ் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>ஆசிஷ் பானர்ஜி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? என போலீசார் தீவிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ஜார்க்கண்ட் முதல்வர், ராகுல் காந்தி உருவ பொம்பை எரிப்பு: 20-ந்தேதி சோரன் வீடு முற்றுகை போராட்டம்- மாணவர்கள் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/withdraw-coalition-support-jharkhand-protesters-demand-from-rahul-gandhi</link><comments>https://www.maalaimalar.com/news/national/withdraw-coalition-support-jharkhand-protesters-demand-from-rahul-gandhi#comments</comments><guid isPermaLink="false">74709515-7901-46f7-b384-7c8d9b0276c9</guid><pubDate>Sun, 16 Aug 2026 03:11:54 +0000</pubDate><atom:updated>2026-08-16T03:11:54.453Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,மாணவர்கள் போராட்டம்,student protest,Hemant Soren,ஹேமந்த் சோரன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/vlsr6so2/StudentProtest0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Student Protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/vlsr6so2/StudentProtest0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/jharkhand-protesters-fir-filed-against-300-people-for-aug-10-violence">ஜார்க்கண்ட்</a> மாநிலத்தில் அரசு நடத்தும் வேலை வாய்ப்புக்கான தேர்வுகளில் முறைகேடு நடைபெற்றதாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுதந்திர தின விழாவான நேற்று தேசியக் கொடியுடன் மிகப்பெரிய பேரணி நடத்தினர்.</p><h2>உருவ பொம்மை எரிப்பு போராட்டம்</h2><p>இன்று ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோரின் உருவ பொம்பை எரிக்கப்படும். வருகிற 20-ந்தேதி ஹேமந்த் சோரன் வீடு முற்றுகை போராட்டம் நடைபெறும் என மாணவர்கள் அறிவித்துள்ளனர். உருவ பொம்மை எரிப்பு மாநிலத்தில் உள்ள 24 மாவட்டங்களிலும் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளது.</p><p>மாணவர்கள் கடந்த 22 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், JPSC-JSSC சீர்திருத்த மஞ்ச் தலைவர் ரவீந்திர பஸ்வான் இது தொடர்பாக கூறியதாவது:-</p><p>நாங்கள் ஆகஸ்ட் 20-ந்தேதி முதலமைச்சரான ஹேமந்த் சோரன் வீட்டை முற்றுகையிடுவோம். எங்களுடன் அரசியல் விளையாட்டு விளையாடும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கேட்கிறோம். ராகுல் காந்தி சொல்வதை ஹேமன் சோரன் கேட்கவில்லை என்றால், ராகுல் காந்தி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற வேண்டும்.</p><p>இவ்வாறு பஸ்வான் தெரிவித்தார்.</p><h2>ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்ய வேண்டும்</h2><p>எங்களுடைய கோரிக்கைகளை அரசு ஏற்கும் வரை நாங்கள் போராட்டத்தை திரும்பப் பெற மாட்டோம். எங்களுடைய கோரிக்கை ரத்து செய்யப்பட்ட தேர்வு உள்பட முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக தேர்வு செயல்முறை குறித்து சுதந்திரமான விசாரணை தேவை.</p><p>இது தொடர்பாக சிபிஐ அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். சந்தேகம் அளிப்பதாக இருக்கும JPSC தேர்வு மற்றும் JSSC-CGL தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்.</p><p>ராகுல் காந்தி மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார். ஆனால், உறுதியான நடவடிக்கை பின்பற்றப்படவில்லை. அதனால் ஹேமந்த் சோரன் ஆட்சிக்கு வழங்கும் ஆதரவை ராகுல் காந்தி திரும்பப் பெற வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>இளைஞர்களை ஏமாற்ற முடியாது Mr. Prime Minister..!- செங்கோட்டையில் பிரதமரின் உரை குறித்து மாணிக்கம் தாகூர் விமர்சனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cannot-fool-the-youth-mr-prime-minister-manickam-thakur-criticism-on-sengottai-speech</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cannot-fool-the-youth-mr-prime-minister-manickam-thakur-criticism-on-sengottai-speech#comments</comments><guid isPermaLink="false">35a37a4f-cfd1-4027-bf5e-64061a8cb7c3</guid><pubDate>Sun, 16 Aug 2026 02:58:24 +0000</pubDate><atom:updated>2026-08-16T02:58:24.277Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணிக்கம் தாகூர்,Independence Day,சுதந்திர தினம்,Manickam Tagore,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/htp16ixw/Manickam-tagore.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Manickam Tagore]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/htp16ixw/Manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>செங்கோட்டையில் வெறும் விளம்பர வெளிச்சத்திற்காக பேசிய பிரதமரே இளைஞர்கள் வாழ்வோடு விளையாடாதீர் எனவும் நிர்வாக சீட்கேட்டை புள்ளிவிவரங்களே அப்பட்டமாக சொல்கின்றன. இளைஞர்களை ஏமாற்ற முடியாது Mr.Prime Minister எனவும் காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>நேற்றைய மோடியின் பேச்சுக்கும், நிஜமான கள யதார்த்தத்திற்கும் எவ்வளவு பெரிய இடைவெளி!</p><p>மோடி அரசின் பிரம்மாண்ட விளம்பரங்களுக்குப் பின்னால் இருக்கும் அவலங்களை, நாடாளுமன்ற நிதிக் குழுவின் 40-வது அறிக்கை தோலுரித்துக் காட்டியுள்ளது.</p><p>5 ஆண்டுகளில் 1 கோடி இளைஞர்களுக்குப் பயிற்சி அளிப்பதாக ரூ.63,000 கோடியில் தொடங்கப்பட்ட பிரதமரின் பயிற்சித் திட்டம் (PMIS) முற்றிலும் முடங்கிக் கிடக்கிறது. </p><p>2024-25 நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட ₹2,000 கோடியில் வெறும் ரூ.29.29 கோடி மட்டுமே செலவழிக்கப்பட்டு, 98.5% நிதி பயன்படுத்தப்படாமல் திருப்பியனுப்பப்பட்டுள்ளது.</p><p>தொழிற்துறையினர் மூலம் 2.45 லட்சம் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாகக் கூறிய நிலையில், சேர்ந்தது வெறும் 16,060 பேர் மட்டுமே. அதிலும் 53.6% பேர் பாதியிலேயே வெளியேறியுள்ளனர். </p><p>சொற்ப உதவித்தொகை, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதிகள் இல்லாததால் கிராமப்புற இளைஞர்களும் பெண் வேட்பாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>செங்கோட்டையில் வெறும் விளம்பர வெளிச்சத்திற்காகப் பேசிவிட்டு, நிதியைப் பயன்படுத்தும் திறனின்றி இளைஞர்களின் வாழ்வோடு விளையாடுவதை மோடி அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். உங்கள் நிர்வாகச் சீர்கேட்டைப் புள்ளிவிவரங்களே அப்பட்டமாகச் சொல்கின்றன. </p><p>இளைஞர்களை ஏமாற்ற முடியாது Mr. Prime Minister!</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பஹல்காம் தாக்குதல் நடைபெற்றதும் பிரதமர் மோடி கேட்ட முதல் கேள்வி: நினைவு கூர்ந்த அஜித் தோவல்</title><link>https://www.maalaimalar.com/news/national/pahalgam-attack-responsible-will-not-be-spared-says-modi-ajit-doval</link><comments>https://www.maalaimalar.com/news/national/pahalgam-attack-responsible-will-not-be-spared-says-modi-ajit-doval#comments</comments><guid isPermaLink="false">019f9d4f-9084-440d-b296-a8d26e514d6c</guid><pubDate>Sun, 16 Aug 2026 02:54:10 +0000</pubDate><atom:updated>2026-08-16T02:54:10.876Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பஹல்காம் தாக்குதல்,ஆபரேஷன் சிந்தூர்,Pahalgam attack,Operation Sindoor,Ajit Doval,அஜித் தோவல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/qrb928xj/Untitled-design-61.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஆபரேஷன் சிந்தூர்]]></media:title><media:description type="html"><![CDATA[ Ajit doval on Operation sindoor]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/qrb928xj/Untitled-design-61.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் கடந்த ஆண்டு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பழிவாங்கும் விதமாக, அதற்கு காரணமானவர்கள் பூமி, வானம் அல்லது நரகம் என எங்கிருந்தாலும் அவர்களை பின்தொடர்ந்து அழிக்குமாறு பிரதமர் மோடி தங்களிடம் கூறியதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்தார்.</p><p>டிஸ்கவரி சேனலில் நேற்று வெளியாகியுள்ள ஆவணத் தொடரான இரண்டு பாகங்கள் கொண்ட “Declassified: Operation Sindoor” நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேட்டி அளித்தார்.</p><p>அப்போது அவர் ஆபரேஷன் சிந்தூரில் நடந்த 88 மணி நேர ராணுவ நடவடிக்கையின் நோக்கம், எதிரி முகாம்களை குறிப்பாக பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய முகாம்களை அழிப்பது தான் என்று கூறினார்.</p><p>கடந்த 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 22 அன்று பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.</p><p>இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து அஜித் தோவல் முதன் முதலாக பேட்டி அளித்தார்.</p><h3><strong>பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்</strong></h3><p>அப்போது அவர் கூறுகையில், “பஹல்காம் தாக்குதல் நடந்த போது, பிரதமர் மோடி சவுதி அரேபியாவில் இருந்தார்.</p><p>பிரதமர் இந்த தாக்குதல் சம்பவம் நடந்தை தொடர்ந்து, சவுதி பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு இந்தியாவிற்கு திரும்பினார். அப்போது இந்திய விமான நிலையத்திலேயே, பிரதமருடன் எங்களுக்கு ஒரு சந்திப்பு நடைபெற்றது.</p><p>முதலில் பிரதமர் மோடி, இந்த தாக்குதலுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்ற அனைத்து உண்மைகளையும் தெரிந்துகொள்ள விரும்பினார்.</p><p>அப்போது அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி இதுதான். ‘இதை செய்தது யார்? இதற்கு பொறுப்பானவர்கள் யார்? குற்றவாளிகள் யார் என்பது நமக்கு மிக தெளிவாக தெரிய வேண்டும். அது உடனடியாக வேண்டும்,’ என்று அவர் கூறினார்.</p><p>மேலும், ‘நாங்கள் அவர்களை துரத்தி செல்வோம். அவர்கள் பூமியில் இருந்தாலும் சரி, வானத்தில் இருந்தாலும் சரி, நரகத்தில் இருந்தாலும் சரி. எங்கிருந்தாலும் அவர்களை மன்னிக்கமாட்டோம்’ என்பதுதான் பிரதமரின் செய்தியாக இருந்தது.</p><p>பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதோ அல்லது பயங்கரவாதிகளுக்கு எதிராக திறம்பட நடவடிக்கை எடுக்க தவறுவதோ எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாத ஒன்று என்பதை பாகிஸ்தான் ராணுவம் உணர வேண்டும் என நாங்கள் விரும்பினோம்.</p><p>ஒருமுறை ஒரு காரியம் தொடங்கிவிட்டால், நமது தேசத்தின் இறையாண்மையை பாதுகாக்க எல்லை வரை செல்ல நாங்கள் தயாராக இருந்தோம்.</p><p>அதற்கு எல்லையே இல்லை, கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை போராடுவோம்.</p><p>ஆபரேஷன் சிந்தூர் உயிர்ப்புடன் இருக்கிறது என்று பிரதமர் கூறும்போது, கடைசி பயங்கரவாதி ஒழிக்கப்படும் போதுதான் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் முடிவடையும் என்பதே பிரதமரின் நோக்கமாக இருந்தது.</p><p>நமது உளவு அமைப்புகளுக்கு நன்றி. அவர்கள் மிகக் குறுகிய நேரத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டதால், எங்களால் ஒரு முடிவுக்கு வர முடிந்தது,” என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>டிஎன்பிஎல்: புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது சேப்பாக்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/chepauk-super-gillies-moves-in-second-place-in-tnpl-points-table</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/chepauk-super-gillies-moves-in-second-place-in-tnpl-points-table#comments</comments><guid isPermaLink="false">6a38040f-9fc7-4dd2-8c72-33b11a0b31e6</guid><pubDate>Sun, 16 Aug 2026 02:43:42 +0000</pubDate><atom:updated>2026-08-16T02:43:42.777Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Points Table,புள்ளிப்பட்டியல்,டிஎன்பிஎல்,tnpl,Chepauk super gillies,சேப்பாக் சூப்பர் கில்லீஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/9kmrf599/CSG.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ chepauk super gillies]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/9kmrf599/CSG.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>8 அணிகள் பங்கேற்கும் 10-வது <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D">டிஎன்பிஎல்</a> டி20 கிரிக்கெட் தொடர் இரு கட்டமாக நடத்தப்படுகிறது.</p><p>முதல் கட்ட ஆட்டங்கள்  திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்திலும், இறுதிப்போட்டி உள்ளிட்ட 2-வது கட்ட ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்திலும் நடக்கிறது.</p><p>நேற்றைய லீக் போட்டியுடன் திண்டுக்கல் ஆட்டங்கள் முடிவடைந்தன. 2வது கட்ட ஆட்டங்கள் சேப்பாக்கத்தில் நாளை மறுதினம் தொடங்க உள்ளது. இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்கள் ஓய்வு நாளாகும்.</p><p>அனைத்து அணிகளும் இதுவரை 5 போட்டிகளில் விளையாடி உள்ளன.</p><h2>புள்ளிப்பட்டியல்</h2><p>இந்நிலையில், டிஎன்பிஎல் தொடரின் புள்ளிப்பட்டியலில் அணிகள் பெற்றுள்ள இடங்களின் விவரம்:</p><p>மதுரை பாந்தர்ஸ் அணி 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளது.</p><p>சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ரன்ரேட் அடிப்படையில் 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடம் பிடித்துள்ளது.</p><p>திருப்பூர் தமிழன்ஸ் 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடமும், நெல்லை ராயல் கிங்ஸ் 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று நான்காவது இடமும் பிடித்துள்ளன.</p><p>நேற்று நடந்த லீக் போட்டியில் திருச்சி அணி 80 ரன்னில் சுருண்டது. இதனால் 2வது இடத்தில் இருந்த அந்த அணி 6 புள்ளியுடன் 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.</p><p>முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>3 லட்சம் ரோஹிங்கியா அகதிகளை மீண்டும் ஏற்கிறது மியான்மர்</title><link>https://www.maalaimalar.com/news/world/myanmar-approves-return-of-3-lakh-rohingya</link><comments>https://www.maalaimalar.com/news/world/myanmar-approves-return-of-3-lakh-rohingya#comments</comments><guid isPermaLink="false">6b93576b-23a2-4b25-baf7-15e812263c74</guid><pubDate>Sun, 16 Aug 2026 02:12:19 +0000</pubDate><atom:updated>2026-08-16T02:12:19.796Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Bangladesh,வங்காளதேசம்,ரோஹிங்கியா அகதிகள்,மியான்மர்,Rohingiya,Myanmmar</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/q6urrj8v/Rohingya.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Refugees]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/q6urrj8v/Rohingya.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மியான்மரில் கடந்த 2017-ம் ஆண்டு ராணுவம் நடத்திய ஒடுக்குமுறை காரணமாக, லட்சக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள் பக்கத்து நாடான வங்காளதேசத்திற்குத் தப்பியோடி முகாம்களில் தஞ்சமடைந்தனர்.</p><p>இந்நிலையில், வங்காளதேசம் வழங்கிய பட்டியலின்படி முதற்கட்டமாக 3 லட்சத்திற்கும் அதிகமான அகதிகள் மியான்மரின் ராகினே மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மியான்மர் அரசு தெரிவித்துள்ளது.</p><p>அங்கு நிலவும் பாதுகாப்புச் சூழல் சீரடைந்தவுடன், இந்த 3 லட்சம் அகதிகளையும் மியான்மர் மீண்டும் தனது நாட்டிற்குள் அனுமதிக்கும் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p><p>பயங்கரவாத பின்னணி கொண்ட சிலர் தவிர, மற்றவர்களைப் படிப்படியாகத் தாய் நாட்டிற்கு அழைத்து வர வங்காளதேசத்துடன் இணைந்து மியான்மர் அரசு தீவிரமாகப் பணியாற்றி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>திமுக-அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை..!- திமுக எம்பி கனிமொழி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-aiadmk-alliance-not-possible-says-mp-kanimozhi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-aiadmk-alliance-not-possible-says-mp-kanimozhi#comments</comments><guid isPermaLink="false">8a8a70a3-2b28-4c92-b725-9de674c09b2f</guid><pubDate>Sun, 16 Aug 2026 01:40:24 +0000</pubDate><atom:updated>2026-08-16T01:40:24.339Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,ADMK,அதிமுக,DMK MP Kanimozhi,திமுக எம்பி கனிமொழி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/o5xfm9qo/kanimozhi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DMK MP Kanimozhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/o5xfm9qo/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>"தமிழகத்தில் தி.மு.க.-அ.தி.மு.க. கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை” என்று கனிமொழி எம்.பி. திட்டவட்டமாக கூறினார்.</p><p>இதுகுறித்து அவர் நேற்று தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><h2>பாலியல் குற்றச்சாட்டு</h2><p>தமிழக வெற்றிக் கழக ஆட்சியில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆளும் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டுகள் எழும்போது, அவர்களை பாதுகாப்பதில் அரசு கவனம் செலுத்துகிறது.</p><p>ஆனால், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நீதி கிடைப்பதில்லை. தூத்துக்குடியிலேயே தொடர்ந்து இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.</p><p>குற்றச்சாட்டுகள் வந்தாலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதோ, கைது செய்வதோ நடை பெறுவதில்லை. பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குக்கூட பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.</p><p>இதுபோன்ற குற்றங்களை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><h2>மத்திய அரசை எதிர்த்து...</h2><p>'எதிர்ப்போம், எதிர்ப்போம்' என்று வாய் வார்த்தையாக கூறுகிறார்களே தவிர, தமிழகத்தை பாதிக்கக்கூடிய பிரச்சினைகளில் மத்திய அரசை எதிர்த்து எதையும் அவர்கள் பேசுவதில்லை என்பதுதான் உண்மை.</p><p>தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரோ, அமைச்சர்களோ இதுவரை மத்திய அரசை எதிர்த்து எந்த கேள்வியையும் எழுப்பியதாக எனக்கு நினைவில்லை.</p><p>2 நாட்களுக்கு முன்பு கனிம வளம் தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தமிழகத்தின் உரிமைகளையும், தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய வருவாயையும் பெரிய அளவில் பாதிக்கக்கூடியது.</p><h2>தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி</h2><p>எந்தவிதமான விவாதமும் இல்லாமல் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து த.வெ.க. அரசு எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.</p><p>தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அந்தத் திட்டங்களை நீட்டித்திருப்பது நிச்சயமாக வாழ்த்துக்குரியது.</p><p>தமிழகத் தில் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி என்பது தமிழக வெற்றிக் கழகத்தின் கனவாக இருக்கலாம். நிச்சயமாக அதற்கு வாய்ப்பு இல்லை.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 16.8.2026 - பிரச்சினைகள் அகலும் நாள்..!</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasipalan-in-tamil-august-16</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasipalan-in-tamil-august-16#comments</comments><guid isPermaLink="false">e934d442-a462-4ddc-a2d7-28d17a62d8c6</guid><pubDate>Sun, 16 Aug 2026 01:39:36 +0000</pubDate><atom:updated>2026-08-16T01:39:36.925Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-19/cju5lvaa/rasi-1.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ ராசிபலன்]]></media:title><media:description type="html"><![CDATA[ Today Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-19/cju5lvaa/rasi-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>செல்போன் வழித்தகவல் சிந்திக்க வைக்கும் நாள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் உண்டு. எதிர்கால நலன் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள்.</p><h2>ரிஷபம்</h2><p>விரயங்கள் கூடும் நாள். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும். உத்தியோகத்தில் உங்கள் பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.</p><h2>மிதுனம்</h2><p>மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தேவையான பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். விவாகப் பேச்சுகள் முடிவாகும்.</p><h2>கடகம்</h2><p>பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். வியாபார முன்னேற்றம் கருதி பயணங்களை மேற்கொள்வீர்கள். உடல்நலம் சீராக ஒரு தொகையைச் செலவிடுவீர்கள்.</p><h2>சிம்மம்</h2><p>நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.</p><h2>கன்னி</h2><p>நண்பர்களால் நன்மை ஏற்படும் நாள். விட்டுப்போன தொடர்புகள் மீண்டும் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் கேட்ட இடத்திற்கு மாறுதல் உண்டு.</p><h2>துலாம்</h2><p>பிரச்சினைகள் அகலும் நாள். பிரபலமானவர்களின் சந்திப்பு உண்டு. சேமிப்பை உயர்த்துவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அன்னிய தேச அழைப்புகள் வரலாம்.</p><h2>விருச்சிகம்</h2><p>விருப்பங்கள் நிறைவேறும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவர்.</p><h2>தனுசு</h2><p>வரன்கள் வாயில் தேடி வந்து சேரும் நாள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள்.</p><h2>மகரம்</h2><p>நண்பர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டு. பொதுவாழ்வில் புகழ் கூடும்.</p><h2>கும்பம்</h2><p>மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.</p><h2>மீனம்</h2><p>உதிரி வருமானங்கள் வந்து சேரும் நாள். தொழில் வளம் சிறப்பாக இருக்கும். புண்ணிய காரியத்திற்கு பொருளுதவி செய்வீர்கள். உத்தியோகத்தில் உயர்வு உண்டு.</p>]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 16 ஆகஸ்ட் 2026: மிலட்டூர் விநாயகப் பெருமான் பவனி</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-16-august-milattur-vinayaga-peruman-bhavani</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-16-august-milattur-vinayaga-peruman-bhavani#comments</comments><guid isPermaLink="false">38d682e7-80f7-423c-9ace-617c30ea9fcf</guid><pubDate>Sun, 16 Aug 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-08-16T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="350" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2023/03/26/1855690-2.webp" width="615"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ vinayaga peruman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2023/03/26/1855690-2.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம் </h2><p>பராபவ ஆண்டு ஆடி-31 (ஞாயிற்றுக்கிழமை) </p><p>பிறை : வளர்பிறை</p><p>திதி : சதுர்த்தி இரவு 8.14 வரை பிறகு பஞ்சமி</p><p>நட்சத்திரம் : உத்திரம் காலை 7.07 வரை பிறகு அஸ்தம்</p> <p>யோகம் : அமிர்தயோகம்</p><p>ராகு காலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை</p><p>எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை</p><p>சூலம் : மேற்கு</p><p>நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை</p> <h2>திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் திருக்கல்யாணம் வைபவம்</h2><p>வளர்பிறை சதுர்த்தி விரதம்.தேரெழுந்தூர் ஸ்ரீ ஞானசம்பந்தர் புறப்பாடு. மிலட்டூர் ஸ்ரீ விநாயகப் பெருமான் பவனி. மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் ஆவணி உற்சவாரம்பம். திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் திருக்கல்யாணம் வைபவம். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் திருவீதியுலா. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் பால் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம். ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. </p> <p>திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமான் பால் அபிஷேகம். வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக் குமார சுவாமிக்கும் அபிஷேகம். காஞ்சி ஸ்ரீ காமாட்சி அம்மன், தஞ்சை புன்னைநல்லூர் ஸ்ரீ மாரியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் அபிஷேகம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - நலம்</p><p>ரிஷபம் - நன்மை</p><p>மிதுனம் - நற்செயல்</p><p>கடகம் - தாமதம்</p><p>சிம்மம் - ஆர்வம்</p><p>கன்னி - உண்மை</p> <p>துலாம் - உழைப்பு</p><p>விருச்சிகம் - இரக்கம்</p><p>தனுசு - விவேகம்</p><p>மகரம் - மகிழ்ச்சி</p><p>கும்பம் - நற்செய்தி</p><p>மீனம் - இன்பம்</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்றைய நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-diesel-price-in-chennai-2</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-diesel-price-in-chennai-2#comments</comments><guid isPermaLink="false">adced6c3-63cf-4e4b-98fc-4b96839cc8be</guid><pubDate>Sun, 16 Aug 2026 01:26:45 +0000</pubDate><atom:updated>2026-08-16T01:26:45.586Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல்,Petrol,diesel,டீசல்</media:keywords><media:content height="576" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/alj4ing3/maalai-malar2026-07-28zqvhuwkktn-2.avif" width="1024"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ petrol, diesel]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/alj4ing3/maalai-malar2026-07-28zqvhuwkktn-2.avif?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் போர் ஓய்ந்து ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டு மத்திய கிழக்கில் இருந்து கச்சா எண்ணெய் வரத்து அதிகரித்த ஒரு சில நாட்களில் மீண்டும் போர் மூண்டுள்ளதால் சர்வதேச கச்சா எண்ணெய் விலைகளில் மீண்டும் தாக்கம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.</p><h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.</p><h2>பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</h2><p>இந்நிலையில், இன்றைய (16.08.2026 - ஞாயிற்றுக்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>2025-26ம் நிதியாண்டில் தெற்கு ரெயில்வேயில்  ரூ.13,778 கோடி வருவாய்- பொதுமேலாளர் சுப்பாராவ்</title><link>https://www.maalaimalar.com/news/national/south-railway-revenue-up-8-84-percent-in-2025-26</link><comments>https://www.maalaimalar.com/news/national/south-railway-revenue-up-8-84-percent-in-2025-26#comments</comments><guid isPermaLink="false">6f12a2ea-2759-43b1-9cdb-fc7004bf0757</guid><pubDate>Sun, 16 Aug 2026 01:21:18 +0000</pubDate><atom:updated>2026-08-16T01:21:18.670Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Southern Railway,General Manager,profit,தெற்கு ரெயில்வே,பொது மேலாளர்,நிதி வருவாய்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/3zyvhzhs/Railway2.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Southern Railway]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/3zyvhzhs/Railway2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தெற்கு ரெயில்வேயில் 2025-26-ம் நிதியாண்டில் ரூ.13,778 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக பொது மேலாளர் சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.</p><h2>கடந்த நிதியாண்டில்...</h2><p>நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தெற்கு ரெயில்வே சார்பில் சென்னை பெரம்பூரில் உள்ள ரெயில்வே மைதானத்தில் தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் சுப்பாராவ் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.</p><p>தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர், ரெயில்வே பாதுகாப்புப் படையினரின் கலாசார நிகழ்ச்சிகள், ரெயில்வே பாதுகாப்புப் படை மோப்ப நாய்கள் சாகசம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. </p><p>இந்த நிகழ்ச்சியில், தெற்கு ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் விபின் குமார், ரெயில்வே பாதுகாப்பு படை ஐ.ஜி.அருள் ஜோதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.</p><p>இதைத்தொடர்ந்து, நிகழ்ச்சியில் பொதுமேலாளர் சுப்பாராவ் பேசியதாவது:-</p><p>தெற்கு ரெயில்வேயில் கடந்த நிதியாண்டில் (2025-26) ரூ.13 ஆயிரத்து 778 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 8.84 சதவீதம் அதிகமாகும். 2025-26-ம் ஆண்டில் 42.184 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டுள்ளது.</p><p>நடப்பு நிதியாண்டில் ஜூலை மாதம் வரை 13.48 மில்லியன் டன்களை எட்டியுள்ளோம்.</p><h2>76.76 கோடி பயணிகள்</h2><p>இதேபோல, கடந்த நிதியாண்டில் 76.76 கோடி பயணிகள் ரெயில் பயணம் மேற்கொண்டுள்ளனர். இது முந்தைய ஆண்டை விட 4.7 சதவீத வளர்ச்சியாகும்.</p><p>39 ஜோடி புதிய ரெயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 7,550 சிறப்பு ரெயில்கள் சேவைகள் இயக்கப்பட்டுள்ளன. 100 ரெயில்களில் நிரந்தரமாக 121 கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.</p><p>31 ஜோடி ரெயில்கள் இலகுரக பெட்டிகளாக (எல்.எச்.பி.) மாற்றப்பட்டுள்ளன. அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 95 ரெயில் நிலையங்களில் 33 ரெயில் நிலையங்கள் பணிகள் முடிந்து பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. 13 முக்கிய நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.</p><h2>3 ஆயிரம் பேருக்கு பணி</h2><p>224 கிலோமீட்டர் வரையில் மின்மயமாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மின்மயமாக்கலை 98 சதவீதமாக உயர்த்தியுள்ளது. கடந்த நிதியாண்டில் ஆர்.ஆர்.பி., ஆர்.ஆர்.சி., சி.ஜி.ஏ., உள்ளிட்ட தேர்வுகள் மூலம் சுமார் 3 ஆயிரம் பேர் ரெயில்வே பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.</p><p>ரெயில்வே பாதுகாப்புப் படையினர் மூலம் கடந்த ஆண்டில் 1,532 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.4.87 கோடி மதிப்பிலான திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. </p><p>ரூ.15.77 கோடி மதிப்பி லான காணாமல் போன உடமைகள் பயணிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ரூ.23.60 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 250 கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>நேருவின் பழைய படங்களை பகிர்ந்து வம்பிழுத்த நிஷிகாந்த் தூபே - பதிலடி கொடுத்த காங்கிரஸ்  </title><link>https://www.maalaimalar.com/news/national/nehru-photo-row-bjp-mp-shares-old-images-congress-slams-misleading-context</link><comments>https://www.maalaimalar.com/news/national/nehru-photo-row-bjp-mp-shares-old-images-congress-slams-misleading-context#comments</comments><guid isPermaLink="false">48e298ba-c74b-4b00-96a3-d2b8b3d70ee0</guid><pubDate>Sun, 16 Aug 2026 00:18:53 +0000</pubDate><atom:updated>2026-08-16T00:18:53.271Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Jawaharlal Nehru,ஜவஹர்லால் நேரு,Nishikant Dubey,நிஷிகாந்த் தூபே</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/3wmwwpzm/tn-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நிஷிகாந்த் தூபே]]></media:title><media:description type="html"><![CDATA[ நிஷிகாந்த் தூபே]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/3wmwwpzm/tn-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கட்டிப்பிடிப்பதே பிரதமர் மோடியின் வெளியுறவுக் கொள்கை என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்திருந்த நிலையில் ஜவஹர்லால் நேருவின் பழைய புகைப்படங்களை பாஜக எம்பி <a href="https://www.maalaimalar.com/news/national/meta-pm-video-removal-row-bjp-mp-demands-direct-apology-from-zuckerberg-warns-it-act-safe-harbour-withdrawal">நிஷிகாந்த் துபே </a>பகிர்ந்துள்ளார். </p><h2>நிஷிகாந்த் துபே</h2><p>நிஷிகாந்த் துபே தனது எக்ஸ் பக்கத்தில், நேரு தனது சகோதரி விஜயலட்சுமி பண்டிட், மருமகள் நயன்தாரா சேகல் மற்றும் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜான் கென்னடி மனைவி ஜாக்குலின் கென்னடி ஆகியோருடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். </p> <p>முன்னதாக இந்திரா காந்தி, பிடல் காஸ்ட்ரோ மற்றும் யாசிர் அராபத் ஆகியோரைக் கட்டியணைக்கும் படங்களையும், நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பிரதமர் மோடியைக் கட்டியணைத்த படத்தையும் துபே பகிர்ந்திருந்தார்.</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/kfgatn7d/tn-12.jpg" /></figure><h2>காங்கிரஸின் பதிலடி</h2><p>நிஷிகாந்த் துபேயின் இந்தப் பதிவிற்குப் பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ், புகைப்படங்கள் அவற்றின் உண்மையான Context இல் இல்லாமல் தவறாக புரிந்துகொள்ளும் வகையில் பகிரப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.</p><p>புகைப்படங்களின் பின்னணியை விளக்கிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட், ஒரு புகைப்படத்தில் நேருவின் சகோதரி விஜயலட்சுமி பண்டிட் அவருடைய கன்னத்தில் அன்புடன் முத்தமிடுகிறார். </p><p>மற்றொரு படத்தில் அவரது மருமகள் நயன்தாரா சேகல் அவர்களுடன் இருக்கிறார்.</p><p>மற்றொன்று, 1962 ஆம் ஆண்டு ஹோலி பண்டிகையின் போது ஜாக்குலின் கென்னடிக்கு நேரு வண்ணம் பூசிய படமே அது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>தலைமை நீதிபதி எச்சரிக்கையை தொடர்ந்து மாணவர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரிய பார் கவுன்சில் தலைவர் -  என்ன நடந்தது?</title><link>https://www.maalaimalar.com/news/national/bci-apology-to-law-students-manan-mishra-withdraws-enrolment-ban-after-nalsar-protest</link><comments>https://www.maalaimalar.com/news/national/bci-apology-to-law-students-manan-mishra-withdraws-enrolment-ban-after-nalsar-protest#comments</comments><guid isPermaLink="false">dc487fd7-5c2c-420f-a26a-bef4a4ff2645</guid><pubDate>Sat, 15 Aug 2026 23:54:00 +0000</pubDate><atom:updated>2026-08-15T23:54:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,சூர்யகாந்த்,Bar Council,பார் கவுன்சில்,உச்சநீதிமன்றம்,Suryakant</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/tspi4019/tn-4.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தலைமை நீதிபதி, பார் கவுன்சில் தலைவர்]]></media:title><media:description type="html"><![CDATA[ தலைமை நீதிபதி, பார் கவுன்சில் தலைவர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/tspi4019/tn-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D"> சூர்யா காந்த் </a>எச்சரித்ததை தொடர்ந்து, ஐதராபாத் சட்டப் பல்கலைக்கழக மாணவர்களிடம்  இந்திய பார் கவுன்சில் தலைவரும் பாஜக எம்.பி.யுமான மனன் குமார் மிஸ்ரா மன்னிப்பு கேட்டுள்ளார்.</p> <h2>பின்னணி</h2><p>தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற NALSAR சட்டப் பல்கலைக்கழகத்தின் 2026 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவிற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரிய காந்த்தை விருந்தினராக அழைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 450க்கும் மேற்பட்ட மாணவர்கள் துணைவேந்தர் மற்றும் நிர்வாகத்திற்கு மனு அனுப்பினர்.</p> <h2>காரணம்</h2><p>இளைஞர்களை கரப்பான்பூச்சிகள் என அழைத்து, ஜூலை 20 அன்று டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின் மீதான காவல்துறை தாக்குதல் குறித்த வழக்கு விசாரணையின்போது, வீடியோ ஆதாரங்களை பார்க்க நேரமில்லை என மறுத்தது ஆகியவற்றை சுட்டிக்காட்டி அவரை அழைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.</p> <h2>தடை</h2><p>இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் அப்பல்கலைக்கழகத்தில் 2026ல் பட்டம் பெறும் மாணவர்கள் எவரையும் மாநில பார் கவுன்சில்களில் வழக்கறிஞராகப் பதிவு செய்யக் கூடாது என மாநில பார் கவுன்சில்களுக்கு <a href="https://www.maalaimalar.com/news/national/nalsar-graduation-row-students-oppose-cji-suryakant-invite-over-remarks-and-protest-case-handling">இந்திய பார் கவுன்சில் </a>தலைவர் மனன் குமார் மிஸ்ரா உத்தரவிட்டார்.</p><p>இத்தடை உத்தரவு மாணவர்களின் தொழில்முறை எதிர்காலத்தைப் பாதிக்கும் என சமூக வலைதளங்களிலும் சட்டத் துறையிலும் கடும் எதிர்ப்பும் விமர்சனங்களும் கிளம்பின.</p>  <h2>எச்சரிக்கை</h2><p>இந்த விவகாரம் குறித்த நீதிமன்ற அமர்வில் பேசிய தலைமை நீதிபதி சூர்யா காந்த், "மாணவர்கள் அமைதியான வழியில் போராட முழு உரிமையுள்ளது. இதில் தலையிட BCIக்கு எந்த உரிமையும் இல்லை. மாணவர்கள் மீது எந்தவொரு ஒழுங்கு நடவடிக்கையோ அல்லது குற்றவியல் நடவடிக்கையோ எடுக்கக் கூடாது" என BCIயை எச்சரித்தார்.</p> <h2>தடை நீக்கம்</h2><p>மனன் குமார் மிஸ்ரா தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்திய இந்திய பார் கவுன்சில், தனது உத்தரவை திரும்பப்பெற்றது.</p><p>பெரும்பான்மையான மாணவர்கள் அப்பாவிகள் என்பதால், "தவறு செய்யாமல் எந்தவொரு மாணவரும் பாதிக்கப்படக் கூடாது" எனக் கூறி, மாணவர்கள் தாங்கள் விரும்பும் மாநில பார் கவுன்சிலில் பதிவு செய்துகொள்ள இந்திய பார் கவுன்சில் அனுமதி அளித்தது.</p> <h2>மன்னிப்பு</h2><p>இந்நிலையில் பார் கவுன்சில் தலைவரும் பாஜக எம்.பி.யுமான மனன் குமார் மிஸ்ரா, சட்ட மாணவர்களுக்கு சுதந்திர தினக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.</p><p>அதில் அவர், ""சமீபத்திய நிகழ்வுகள் மற்றும் எனது வார்த்தைகள்/கடிதம் சட்ட மாணவர்களின் மனதைப் புண்படுத்தியிருந்தால், அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்," எனக் குறிப்பிட்டுள்ளார்.</p> <p>மாணவர்கள் தங்களது சொந்தக் கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்தவும், அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவிக்கவும் அரசியலமைப்புச் சட்டப்படி முழு உரிமை உள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டிள்ளார்.</p><p>பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதும் பங்கேற்காமல் இருப்பதும் மாணவர்களின் தனிப்பட்ட விருப்பம் என்றும், இதில் வெளியாட்களின் அல்லது அரசியல் தலையீடுகள் இருக்கக் கூடாது என்றும் மிஸ்ரா தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.</p>]]></content:encoded></item></channel></rss>