<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 18 Aug 2026 23:10:42 +0000</lastBuildDate><item><title>ரத்து செய்யப்பட்ட 44 பணி நியமனத் தேர்வுகளின் பட்டியலை வெளியிட்டது ஜார்க்கண்ட் அரசு</title><link>https://www.maalaimalar.com/news/national/%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-44-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81</link><comments>https://www.maalaimalar.com/news/national/%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-44-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81#comments</comments><guid isPermaLink="false">3c1b696c-f420-4468-b0b2-32bd543bcd8f</guid><pubDate>Tue, 18 Aug 2026 23:00:03 +0000</pubDate><atom:updated>2026-08-18T23:00:03.195Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தேர்வுகள் ரத்து,Jharkhand protest,ஜார்க்கண்ட் போராட்டம்,Exams Cancelled</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/vlamcen1/Jharkhand-protest-4.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jharkhand protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/vlamcen1/Jharkhand-protest-4.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாணவர்களின் போராட்டங்களுக்கு மத்தியில், முறைகேடுகள் காரணமாக ரத்து செய்யப்பட்ட 44 பணி நியமன தேர்வுகளின் பட்டியலை ஜார்க்கண்ட் அரசு வெளியிட்டது.</p><p>இரவு நேரத்தில் எட்டு அறிவிப்புகளை வெளியிட்ட ஜார்க்கண்ட் அரசு, ரத்து செய்யப்பட்ட தேர்வுகளில் 2014-ஆம் ஆண்டு முதல் ஜார்க்கண்ட் பொதுப் பணி ஆணையம் (JPSC) மற்றும் வெளிமுகமை நிறுவனமான 'டி.எஸ்.ஆர். டேட்டா பிராசஸிங் பிரைவேட் லிமிடெட்' (TDPL) ஆகியவற்றால் நடத்தப்பட்ட தேர்வுகள் அடங்கும் என்று தெரிவித்தது.</p><h2>பட்டியல் சுருக்கம்:</h2><p>மருந்து ஆய்வாளர்கள், உதவி பேராசிரியர்கள், துணை ஆட்சியர்கள், பல் மருத்துவர்கள், உதவி பொறியாளர்கள், உரிமையியல் நீதிபதிகள், கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் மற்றும் வன வரம்பு அலுவலர்கள் (Forest Range Officers) உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான தேர்வுகள் இதில் ரத்து செய்யப்பட்டுள்ளன.</p><p>நேற்று (திங்கள்கிழமை) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் முக்கியக் கோரிக்கைகளில் ஒன்றான 'ஜே.எஸ்.எஸ்.சி.-கூட்டுப் பட்டதாரி நிலை' (JSSC-CGL) தேர்வையும், அத்துடன் வெளிமுகமை நிறுவனமான TDPL-ஆல் நடத்தப்பட்ட அனைத்து தேர்வுகள் மற்றும் அதனால் வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளையும் ரத்து செய்வதாக மாநில அரசு அறிவித்தது.</p><h2>முதலமைச்சர் அறிவிப்பு:</h2><p>பணி நியமன தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி மாணவர்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், JSSC-CGL தேர்வு மற்றும் 2014 முதல் வெளிமுகமை நிறுவனமான TDPL-ஆல் நடத்தப்பட்ட அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்வதாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்தார்.</p><p>JSSC-CGL தேர்வு மற்றும் TDPL மூலம் நடத்தப்பட்ட அனைத்துத் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்ததைத் தொடர்ந்து, ஜார்க்கண்ட் அமைச்சர்கள் தீபிகா பாண்டே சிங் மற்றும் இர்பான் அன்சாரி ஆகியோர் முன்னிலையில், ராஞ்சியில் உள்ள சதார் மருத்துவமனையில் மாணவர் தலைவர் தேவேந்திர நாத் மஹ்தோ தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார்.</p><p>மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமிதாப் கௌஷல் தலைமையில் தேர்வு சீர்திருத்த குழு ஒன்றை அமைப்பதாகவும் அவர் அறிவித்தார். பணி நியமனத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டி வரும் வேலை தேடுபவர்கள், சி.பி.ஐ. விசாரணை மற்றும் JSSC-CGL தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்திப் போராடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சூர்யா, கார்த்தி பெரிய நடிகர்கள் அவர்கள் வாழட்டும், ஆனால் எங்களையும் வாழ விடுங்கள் - மன்சூர் அலிகான்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/mansoor-ali-khan-said-let-us-to-live</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/mansoor-ali-khan-said-let-us-to-live#comments</comments><guid isPermaLink="false">3b4746c1-da76-4243-8f99-9d59887b4aa1</guid><pubDate>Tue, 18 Aug 2026 20:51:04 +0000</pubDate><atom:updated>2026-08-18T20:51:04.626Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மன்சூர் அலிகான்,Mansoor Ali Khan,James Vasanthan,ஜேம்ஸ் வசந்தன்,All Pass,ஆல் பாஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/svrh6vw9/Mansoor-Ali-Khan.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mansoor Ali Khan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/svrh6vw9/Mansoor-Ali-Khan.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மைதீன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆல் பாஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று கோலாகலமாக  நடைபெற்றது. வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை ஒன் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் (One Step Entertainment) சார்பில் மோகனா. ஆர் தயாரித்துள்ளார். </p><p>இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி மைதீன் இயக்கியுள்ளார். ‘நிறங்கள் மூன்று’, ‘தருணம்’ உள்ளிட்ட படங்களில் நடித்த துஷ்யந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜனனி, ‘லியோ’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.</p><h2>டிரெய்லர் வெளியீட்டு விழா:</h2><p>இந்தப் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர். அந்த வரிசையில், நடிகர் மன்சூர் அலிகான் பேசும் போது, "‘ஆல் பாஸ்’ அற்புதமான படம், ஜேம்ஸ் வசந்தன் எனக்கு பிடித்த கலைஞர். </p><p>ஒரு திரைப்படத்தில் பணிபுரியும் கலைஞர்களை விளம்பரங்களில் தெரிவது போல விளம்பரம் செய்யுங்கள். அதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இந்தப் படத்தில் தமிழகத்திற்கு நல்ல கதாநாயகன், நாயகி கிடைத்துள்ளார்கள்.</p><p>நான் "கருப்பு" படத்தின் கிளைமாக்ஸில் டான்ஸ் ஆடினேன் ஆனால் அதை அப்படியே தூக்கி விட்டார்கள், என்ன அநிநியாயம் இது. யூடுயூப்பில் வெளியிடுவோம் என்று அதையும் செய்யவில்லை. </p><p>சூர்யா, கார்த்தி பெரிய நடிகர்கள் அவர்கள் வாழட்டும். ஆனால் எங்களையும் வாழ விடுங்கள். நான் பல வருடங்களாக நடிகராக, தயாரிப்பாளராக இருக்கிறேன். எனக்கான நியாயம் கிடைக்க வேண்டும்.</p><p>நீங்களே பாருங்கள். உடனே வாட்ஸ்அப், மீடியா என்று எதை எதையோ வைத்துக்கொண்டு எங்களைப் பற்றி தப்பாக எழுதுகிறார்கள். எங்களுக்கு வேலை கொடுக்கிறார்களோ இல்லையோ, கீழே போய் உட்கார்ந்து கொண்டு, ‘உன் பையன் கஞ்சா அடிக்கிறான், பைத்தியக்காரன்’ என்று என்னென்னவோ பேசிக்கொண்டிருக்கிறார்கள்.</p><h2>உழைப்பை குறைத்து மதிப்பிடக்கூடாது:</h2><p>நான் என்ன நல்ல வேலை செய்தேன் என்று நினைத்தாலும், கீழே போய் அதை கொச்சைப்படுத்தி பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு அதுதான் வேலை. எதையாவது சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ‘ஆல் பாஸ்’ ஒரு அற்புதமான பெயர். </p><p>இந்தப் படத்திற்கு விளம்பரம் செய்யும் ஒவ்வொருவருக்கும் நான் நன்றி சொல்லி கொள்கிறேன். ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரின் உழைப்பும் முக்கியமானது.</p><p>சினிமாவில் வேலை செய்யும் ஒவ்வொருவரையும், விளம்பர மீடியா உள்ளிட்ட அனைவரையும் நான் மதிக்கிறேன். இது என்னுடைய ஊர், என்னுடைய வாழ்க்கை, என்னுடைய சினிமா. ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரும் தங்களுடைய வேலையை உண்மையாகச் செய்தாலே போதும். யாருடைய உழைப்பையும் குறைத்து மதிப்பிடக்கூடாது. நன்றி, வணக்கம், வாழ்த்துகள்” என்றார்.</p>]]></content:encoded></item><item><title>குரு சோமசுந்தரம் சாருடன் சண்டை - பட விழாவில் உண்மையை உடைத்த அனுமோல்</title><link>https://www.maalaimalar.com/photo-gallery/cinema/actress-anumol-said-she-had-fight-with-guru-somasundaram</link><comments>https://www.maalaimalar.com/photo-gallery/cinema/actress-anumol-said-she-had-fight-with-guru-somasundaram#comments</comments><guid isPermaLink="false">557cb784-b374-4c43-80e9-27fae890253a</guid><pubDate>Tue, 18 Aug 2026 20:01:17 +0000</pubDate><atom:updated>2026-08-18T20:01:17.457Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>குரு சோமசுந்தரம்,guru somasundaram,Paris Cafe,அனுமோல்,anumol,பாரிஸ் கஃபே</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/ygh17vjs/Anumol.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anumol]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/ygh17vjs/Anumol.png?w=280" width="280"></media:thumbnail><category>Cinema</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தண்டர் மீடியா கண்மணி ரங்கநாதன் மற்றும் LV என்டர்டெயின்மெனட் வெங்கல் எம். லிங்கேஸ்வரன் இணைந்து தயாரிக்கும் "பாரிஸ் கஃபே" (Paris cafe) <a href="https://www.maalaimalar.com/cinema">திரைப்படம்</a> விரைவில் திரைக்கு வர உள்ளது. </p><p>இந்தப் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம்  மற்றும் அனுமோல் நடித்துள்ளனர். மேலும் அர்ச்சனா குமார், விஜய் விஸ்வா, சாய் விக்கி, நயனா, பிபின் மற்றும் பலர்  நடித்துள்ளனர்.</p><p>பாரிஸ் கஃபே திரைப்படத்தை சராஜ் சீலன் எழுதி இயக்கியுள்ளார். கே இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு சதீஷ் ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். தேசிய விருது வென்ற வி.ஜே. சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.</p><h2>நம்பிக்கை இருந்தது:</h2><p>இதில் கலந்து கொண்டு பேசிய நடிகை அனுமோல், "நான் நடிக்கும் படங்கள் சமுதாயத்திற்கு தேவையான கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடிப்பேன். இயக்குநரிடம் பேசும் போது ஒரு நம்பிக்கை இருந்தது, அதனால் தான் இந்தப் படத்தில் நான் நடித்தேன். </p><p>இந்தப் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் எல்லோரடனும் நடித்தது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு. கே இசையமைப்பாளர் அவருடைய தமிழ் பாட்டை விட மலையாள பாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும்.</p><p>குரு சோமசுந்தரம் கூட நடித்தது சந்தோஷமா இருந்தது. எனக்கு அவர் மீது கோபம் நான் அழகா இல்ல என்ன விட வேற ஒரு ஹீரோயின் அழகா இருக்கங்கன்னு என்கிட்டயே சொல்றாரு இப்ப கூட அவர் கிட்ட சண்டை போட்டேன், ஆனால் அந்த சண்டை அன்பான சண்டைதான். இவர் மீது எனக்கு அதிக மரியாதை இருக்கு. எல்லோரிடமும் ஒரே மாதிரி தான் பழகுவார் . இந்தப் படத்தில் நடித்தது சந்தோஷமாக இருக்கு," என்றார்.</p>]]></content:encoded></item><item><title>அமீரகத்திற்கு குறி வைத்த ஈரான் - 2 ஏவுகணைளை கண்டறிந்ததாக ஐக்கய அரபு அமீரகம் தகவல்!</title><link>https://www.maalaimalar.com/news/world/uae-detects-2-ballistic-missile-launches-from-iran</link><comments>https://www.maalaimalar.com/news/world/uae-detects-2-ballistic-missile-launches-from-iran#comments</comments><guid isPermaLink="false">91f5636b-bc79-462b-acdc-a30752433efa</guid><pubDate>Tue, 18 Aug 2026 18:56:56 +0000</pubDate><atom:updated>2026-08-18T18:56:56.768Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஐக்கிய அரபு அமீரகம்,UAE,ஈரான்,Iran,ballistic missile,ஏவுகணை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/9dtm1954/UAE.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ UAE]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/9dtm1954/UAE.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world">ஐக்கிய அரபு அமீரகம்</a> 'ஏவுகணை அச்சுறுத்தல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது' என எச்சரித்து, மக்களை பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. </p><p>அந்நாட்டின் தேசிய அவசரகால நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA), தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் நாட்டை குறிவைக்கும் ஏவுகணை அச்சுறுத்தலை கண்டறிந்துள்ளதாக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><h2>ஏவுகணை அச்சுறுத்தல்:</h2><p>"ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள், நாட்டை தாக்கும் ஏவுகணை அச்சுறுத்தலை கண்டறிந்துள்ளன. தயவுசெய்து பாதுகாப்பான இடத்தில் இருங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ வழிகள் மூலம் வெளியிடப்படும் எச்சரிக்கைகள் மற்றும் அறிவிப்புகளை பின்பற்றுங்கள்," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</p><p>மத்திய கிழக்கில் சண்டைகளை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) காலாவதியான ஒரு நாள் கழித்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><h2>உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை:</h2><p>இதற்கிடையில், "தற்போதைய சூழ்நிலை மற்றும் ஏவுகணை அச்சுறுத்தல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அருகிலுள்ள பாதுகாப்பான கட்டிடத்தில் தஞ்சம் அடைய வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>"தற்போதைய சூழ்நிலை மற்றும் ஏவுகணை அச்சுறுத்தல்கள் காரணமாக, உடனடியாக அருகிலுள்ள பாதுகாப்பான கட்டிடத்தில் தஞ்சம் அடையுங்கள்," என உள்துறை அமைச்சகம் தொலைபேசி வாயிலாக விடுத்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டது, அது சிறிது நேரத்திலேயே திரும்பப் பெறப்பட்டது.</p><p>ஈரானில் இருந்து தங்களை நோக்கி ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகளை கண்டறிந்ததாக ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவற்றில் ஒன்று எல்லைக்குட்பட்ட கடல் எல்லைக்குள் விழுந்ததாகவும், மற்றொன்று அதற்கு வெளியே விழுந்ததாகவும் கூறியது. மேலம், எந்தவொரு அச்சுறுத்தலையும் சமாளிக்க ஐக்கிய அரபு அமீரகம் தயாராக இருப்பதாகவும் வலியுறுத்தியது.</p><p>ஒரு நாள் முன்னதாக, ஹார்முஸ் நீரிணையை கடந்து சென்றுகொண்டிருந்த அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்தின் (ADNOC) கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக ஐக்கிய அரபு அமீரகம் சனிக்கிழமை தெரிவித்தது.</p>]]></content:encoded></item><item><title>டிஎன்பிஎல்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான போட்டியில் கோவை கிங்ஸ் வெற்றி</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-kovai-kings-beat-chepauk-super-gillies-by-5-wickets</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-kovai-kings-beat-chepauk-super-gillies-by-5-wickets#comments</comments><guid isPermaLink="false">461f156d-3b7c-43e1-ab94-4d9703093324</guid><pubDate>Tue, 18 Aug 2026 18:02:06 +0000</pubDate><atom:updated>2026-08-18T18:02:06.695Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,Chepauk super gillies,சேப்பாக் சூப்பர் கில்லீஸ்,கோவை கிங்ஸ்,kovai Kings</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/e28w3zqp/Kovai-kings-won.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kovai kings won]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/e28w3zqp/Kovai-kings-won.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>10-ஆவது <a href="https://www.maalaimalar.com/topic/tnpl">டி.என்.பி.எல்.</a> டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முறை தொடரின் அனைத்து போட்டிகளும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.</p><p>இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற 21-ஆவது ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்ஸீஸ் மற்றும் <a href="https://www.maalaimalar.com/topic/kovai-kings">கோவை கிங்ஸ்</a> அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.</p><h2>ராம் அரவிந்த் அபாரம்:</h2><p>சேப்பாக் அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கிய மோகித் ஹரிஹரன் 13 ரன்களும், கேப்டன் நாராயன் ஜெகதீசன் 6 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ஆஷிக் ரன் ஏதும் எடுக்காமல் டக் ஆகி வெளியேறினார்.</p><p>பின்னர் களமிறங்கிய ராம் அரவிந்த் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவருடன் ஆடிய ஸ்வப்நில் சிங் 20 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து களமிறங்கியவர்களில் தினேஷ் ராஜ் மட்டும் 18 பந்துகளில் 32 ரன்களை எடுத்தார். ராம் அரவிந்த் தன் பங்கிற்கு 32 பந்துகளில் 63 ரன்களை விளாசினார்.</p><p>கடைசியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 19.3 ஓவர்களில் 167 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கோவை கிங்ஸ் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஆர்.எஸ். ஆம்ப்ரிஷ் 3 விக்கெட்டுகளையும், மணிமாறன் சித்தார்த் 2 விக்கெட்டுகளையும், திவாகர், கிஷூர் மற்றும் ஜதாவேத் சுப்ரமணியன் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.</p><h2>கோவை கிங்ஸ் வெற்றி:</h2><p>சற்றே எளிய இலக்கை துரத்திய கோவை கிங்ஸ் அணிக்கு தொடக்க வீரர்களான ராதாகிருஷ்ணன் மற்றும் சுரேஷ் லோகேஷ்வர் முறையே 38 மற்றும் 40 ரன்களை எடுத்தனர்.</p><p>அடுத்து களமிறங்கிய பாலசுப்ரமணியனம் சச்சின் 37 ரன்களை எடுத்தார். கேப்டன் ஷாருக் கான் 11 பந்துகளில் 25 ரன்களை எடுத்தார்.</p><p>இதன் மூலம் கோவை கிங்ஸ் அணி 18.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை எடுத்தது. இதன் மூலம் கோவை கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ் தாய் வாழ்த்தை முதலில் பாட தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-bar-on-singing-tamil-anthem-before-vande-mataram-madras-high-court</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-bar-on-singing-tamil-anthem-before-vande-mataram-madras-high-court#comments</comments><guid isPermaLink="false">3238126c-896e-4bed-9149-071b01c586dc</guid><pubDate>Tue, 18 Aug 2026 17:22:21 +0000</pubDate><atom:updated>2026-08-18T17:22:21.449Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>வந்தே மாதரம்,Vande Mataram,Madras High Court,சென்னை உயர்நீதிமன்றம்,Tamil Anthem,தமிழ் தாய் வாழ்த்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/chyem2zt/Chennai-High-Court.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chennai High Court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/chyem2zt/Chennai-High-Court.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் 'தமிழ் தாய் வாழ்த்து' பாடலை முதலில் பாடுவதற்கு எந்த தடையும் இல்லை என்றும், சமீபத்திய மத்திய உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கை மாநில பாடலை பின்னுக்குத் தள்ளவில்லை என்றும் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu">சென்னை</a> உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.</p><p>தமிழகத்தில் அரசின் செயல்பாடுகள் தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்குவதை உறுதி செய்ய உத்தரவு கோரி, சென்னையை சேர்ந்த அனன்யா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்திருந்த பொதுநல வழக்கு விசாரணையின்போது இந்த விளக்கம் அளிக்கப்பட்டது.</p><h2>மத்திய அரசு விளக்கம்:</h2><p>அரசு நிகழ்ச்சிகளை தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கி, தேசிய கீதத்துடன் முடிப்பது தமிழ்நாட்டில் நீண்டகாலமாக பின்பற்றப்படும் ஒரு பாரம்பரியம் என்று மனுதாரர் வாதிட்டார். மனுவின்படி, அரசு நிகழ்ச்சிகள் வந்தே மாதரத்துடன் தொடங்க வேண்டும் என்று கோரும் ஜனவரி 28-ஆம் தேதியிட்ட மத்திய உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கையை ரத்து செய்ய அவர் கோரினார்.</p><p>மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜூலை 9-ஆம் தேதியன்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட புதிய அறிவிக்கையை சுட்டிக்காட்டினார். அந்த அறிக்கையின்படி, வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதம் ஆகியவை அடுத்தடுத்து பாடப்பட வேண்டும் என்றும், தேசிய கீதத்திற்கு முன்னதாக வந்தே மாதரம் பாடப்பட வேண்டும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டது.</p><p>மாநில கீதங்கள் குறித்து அந்த அறிவிப்பில் எதுவும் கூறப்படவில்லை என்றும், தமிழ் தாய் வாழ்த்து கடைசியாக பாடப்பட வேண்டும் என்று அதில் நிபந்தனை விதிக்கப்படவில்லை என்றும் மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.</p><h2>வரிசை குறித்த சர்ச்சை:</h2><p>தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, சென்னை உயர் நீதிமன்றத்தில் சுதந்திர தினத்தன்று இதே வரிசைமுறைதான் பின்பற்றப்பட்டது என்றும், முதலில் தமிழ் வாழ்த்து, அதனைத் தொடர்ந்து வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது என்றும் சுட்டிக்காட்டியது.</p><p>பாரம்பரியமாக அரசு நிகழ்ச்சிகள் தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கும் தமிழ்நாட்டில், பாடல்களின் வரிசை குறித்த சர்ச்சை அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வருகிறது. </p><p>தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனது வழக்கமான உரைக்கு முன்பு தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று முன்னாள் ஆளுநர் ஆர்.என். ரவி வலியுறுத்தியதை அடுத்து, இந்த விவகாரம் மேலும் தீவிரமடைந்தது. இந்த கோரிக்கையை அப்போதைய தி.மு.க. அரசு நிராகரித்தது.</p>]]></content:encoded></item><item><title>இம்ரான் கானை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அனுமதி!</title><link>https://www.maalaimalar.com/news/world/pakistan-supreme-court-grants-permission-to-move-imran-khan-to-a-private-hospital</link><comments>https://www.maalaimalar.com/news/world/pakistan-supreme-court-grants-permission-to-move-imran-khan-to-a-private-hospital#comments</comments><guid isPermaLink="false">47690900-4f0a-488e-ae2b-c9935fd9620b</guid><pubDate>Tue, 18 Aug 2026 16:33:18 +0000</pubDate><atom:updated>2026-08-18T16:33:18.995Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Imran Khan,Pakistan,இம்ரான் கான்,Supreme Court,உச்ச நீதிமன்றம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/9i0ekl13/New-Project-2026-08-18T212939.604.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இம்ரான் கானை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அனுமதி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/9i0ekl13/New-Project-2026-08-18T212939.604.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின் தற்போதைய எதிர்க்கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் நிறுவனருமான இம்ரான் கானை, ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையிலிருந்து இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிஃபா சர்வதேச மருத்துவமனைக்கு 2 நாட்களுக்குள் மாற்றுமாறு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>மேலும் இம்ரான் கானின் சகோதரி டாக்டர் உஸ்மா கான், அவரது தனிப்பட்ட மருத்துவர் டாக்டர் ஃபைசல் சுல்தான் உட்பட அவருக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சையை மேற்பார்வையிட ஒரு மருத்துவக் குழுவை அமைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>குடும்பத்தினர் மருத்துவமனையில் இம்ரான் கானை சந்திக்கலாம் என்றும், வெளிநாட்டில் வசிக்கும் மகன்களுடன் இம்ரான் கான் பேசவும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. </p><h2>என்ன சிகிச்சை?</h2><p>பல ஊழல் வழக்குகள் தொடர்பாக கடந்த 2023 ஆகஸ்ட் முதல் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் இம்ரான் கான் அடைக்கப்பட்டுள்ளார். நீண்டநாட் சிறையில் இருப்பதால் அவருக்கு பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் இருப்பதாகவும், மேலும் சிறையில் அவருக்கு உரிய சிகிச்சைகள் மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.</p><p>இந்த உடல்நலப் பிரச்னைகள் தொடர்பாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அரசு மருத்துவர்கள் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், தனியார் மருத்துவ நிபுணர்களின் சிகிச்சை தேவை என்றும் அவரது குடும்பத்தினரும், கட்சியினரும் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.</p><p>ஆனால் மருத்துவமனையை மாற்றமுடியாது, அதற்கு பதில் ஒரு மருத்துவ குழுவை அமைத்து, அந்தக் குழு அளிக்கும் அறிக்கையை வைத்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம் என இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. </p><p>கடந்த சில மாதங்களாக இதுதொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தநிலையில், கடந்த வாரம் அவரை பரிசோதித்த மருத்துவக்குழு நேற்று மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்தது. </p><h2>இம்ரான் கானின் மருத்துவ அறிக்கை</h2><p>73 வயதான இம்ரான் கான், தனது குடும்பத்தினரை நீண்டநாட்களாக காணததால் அவருக்குக் கடுமையான ரத்த அழுத்தம், மன உளைச்சல் மற்றும் இதயத் துடிப்பில் மாறுபாடுகள் ஏற்பட்டதாக சுட்டிக் காட்டியது. </p><p>மேலும் நாடித்துடிப்பும், இதய நிலையும் இயல்பாக இல்லை என்றும், அவரது முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படத் தொடங்கியிருந்தன என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. </p><h2>வலது கண் பார்வையில் கடுமையான பாதிப்பு</h2><p>மேலும் இம்ரான் கானுக்கு வலது கண்ணில் <strong>CRVO (Central Retinal Vein Occlusion)</strong> என்ற ரத்த நாள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தனது <strong>வலது கண் பார்வையில் சுமார் 85 சதவீதத்தை இழந்துவிட்டார்</strong> என்று அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் முறையிட்டனர். </p><p>சிறையில் இதற்கு உரிய சிறப்பு சிகிச்சை அளிக்கப்படவில்லை என அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.</p><p>இந்த மருத்துவ அறிக்கையைத் தொடர்ந்து மருத்துவமனை மாற்றத்திற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>TNPL: கோவை கிங்ஸ்க்கு 168 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-chepauk-super-gillies-168-runs-targest-to-kovai-kings</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-chepauk-super-gillies-168-runs-targest-to-kovai-kings#comments</comments><guid isPermaLink="false">952103ce-66b9-4a90-8ff0-ce16a961e1de</guid><pubDate>Tue, 18 Aug 2026 15:59:09 +0000</pubDate><atom:updated>2026-08-18T15:59:09.976Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,சேப்பாக் சூப்பர் கில்லீஸ்,CSG,கோவை கிங்ஸ்,kovai Kings</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/629lfx53/CSG0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ராம் அரவிந்த்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/629lfx53/CSG0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு பிரீமியர் லீக் 2027 சீசனின் 21-வது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கில்லீஸ்- கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.</p><p>டாஸ் வென்ற கோவை கிங்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் மோகித் ஹரிஹரன் மற்றும் என். ஜெகதீசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இங்கினர். ஹரிஹரன் 13 ரன்களிலும், என். ஜெகதீசன் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஆஷிக் 0 ரன்னில் ஆட்டமிழந்தார்.</p><h2>ராம் அர்விந்த் அரைசதம்</h2><p>அடுத்து இம்பேக்ட் பிளேயராக வந்த ராம் அர்விந்த் அதிரடியாக விளையாடினார். அவர் 32 பந்தில் 7 பவுண்டரி, 4 சிக்சருடன் 63 ரன்கள் விளாசினார். அதன்பின் ஸ்வப்னில் சிங் (20), அஷ்வந்த் வல்தபா (5), மோகனா பிரசாத் (12) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.</p><p>6.1 ஓவரில் 50 ரன்களை தொட்ட சேப்பாக் சூப்பர் கில்லீஸ், 10 ஓவரில் 100 ரன்களை தொட்டது. ஆனால், கடைசி 10 ஓவரில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததால் 19.3 ஓவரில் 167 ரன்களில் ஆல்அவுட் ஆனது.</p> <p>கோவை கிங்ஸ் அணியில் ஆர்.எஸ். அம்ப்ரிஸ் 3 விக்கெட்டுகளும், மணிமாறன் சித்தார்த் 2 விக்கெட்டுகளும், ஆர். திவாகர், ஜி. கிஷோர், ஜே. சுப்ரமணியன் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p>]]></content:encoded></item><item><title>வேறு மாநிலங்களில் கன்னட மக்கள் பாதிக்கப்பட்டால் கர்நாடகா வாயை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்குமா? - பெ.சண்முகம் கேள்வி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/would-karnataka-remain-a-silent-spectator-if-kannada-people-were-affected-in-other-states-p-shanmugam-asks</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/would-karnataka-remain-a-silent-spectator-if-kannada-people-were-affected-in-other-states-p-shanmugam-asks#comments</comments><guid isPermaLink="false">fd07eabb-b9ab-4ccf-a041-5ac4541d38e4</guid><pubDate>Tue, 18 Aug 2026 15:55:11 +0000</pubDate><atom:updated>2026-08-18T15:55:11.675Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,P. Shanmugam,பெ.சண்முகம்,Chief Minister D.K. Shivakumar,முதலமைச்சர் டி.கே.சிவகுமார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/zrpqwewy/New-Project-2026-08-18T212452.389.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேறு மாநிலங்களில் கன்னட மக்கள் பாதிக்கப்பட்டால் கர்நாடகா வாயை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்குமா? - பெ.சண்முகம் கேள்வி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/zrpqwewy/New-Project-2026-08-18T212452.389.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக வனத்துறையால் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு தலையிடக்கூடாது என கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் பேசியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில்.,</p><p>“கர்நாடக மாநிலத்தில் மூன்று தமிழர்கள் வனத்துறையினரால் கொல்லப்பட்டது தொடர்பாக தமிழ்நாடு தலையிடக் கூடாது என்று கர்நாடக முதலமைச்சர் டி. கே. சிவக்குமார் கூறியிருப்பதற்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். </p><p>உலகில் தமிழ் மக்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு நியாயமும் நீதியும் கிடைக்கக் குரல் கொடுப்பது தமிழ்நாடு தலைவர்கள் மற்றும் அரசின் கடமையாகும்.</p><p>இக்கொலை சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்த தமிழ்நாட்டு முதலமைச்சரை, “உங்கள் வேலையைப் பாருங்கள்” என்று கர்நாடக முதலமைச்சர் கடுமையான வார்த்தைகளில் கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. </p><p>வேறு மாநிலங்களில் கன்னட மொழி பேசும் மக்கள் பாதிக்கப்பட்டால் கர்நாடக அரசு வாயை மூடிக்கொண்டு வேடிக்கைதான் பார்க்குமா என்பதை விளக்க வேண்டுகிறோம்.</p><p>கர்நாடக நிர்வாகத்தில் தமிழ்நாடு தலையிடுவதாகப் பிரச்சனையைத் திசை திருப்புவதை விடுத்து, கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதில் கர்நாடக அரசு கவனம் செலுத்தட்டும்.</p>]]></content:encoded></item><item><title>கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: கண்டனம் தெரிவிக்காத தமிழ்நாடு அரசின்  நிலைப்பாடு அதிர்ச்சியளிக்கிறது - உதயநிதி ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/three-tamils-shot-dead-in-karnataka-the-tamil-nadu-governments-failure-to-condemn-the-incident-is-shocking-udhayanidhi-stalin</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/three-tamils-shot-dead-in-karnataka-the-tamil-nadu-governments-failure-to-condemn-the-incident-is-shocking-udhayanidhi-stalin#comments</comments><guid isPermaLink="false">511f68c8-865d-486c-85ac-71ad706cd46c</guid><pubDate>Tue, 18 Aug 2026 15:43:46 +0000</pubDate><atom:updated>2026-08-18T15:43:46.812Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,தமிழ்நாடு அரசு,Udhayanidhi Stalin,Government of Tamil Nadu,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/hvkn9mr8/New-Project-2026-08-18T211244.382.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: கண்டனம் தெரிவிக்காத தமிழ்நாடு அரசின்  நிலைப்பாடு அதிர்ச்சியளிக்கிறது - உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/hvkn9mr8/New-Project-2026-08-18T211244.382.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக வனத்துறையால் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்காதது அதிர்ச்சியளிப்பதாக தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் நாளை நடைபெற உள்ள தென்மாநில முதலமைச்சர் மாநாட்டின்போது, முதலமைச்சர் டி.கே.சிவகுமாரிடம் இதுதொடர்பாக உரிய விளக்கத்தை கேட்டுப்பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்.,</p><p>“கர்நாடகாவில் மூன்று தமிழர்களை அம்மாநில வனத்துறையினர் சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக எந்த கண்டனத்தையும் வெளியிடாமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.</p><p>சட்டப்பேரவையில் இந்த விவகாரம் தொடர்பாக பதிலளித்த அமைச்சரும், கர்நாடகத்தின் பாணியையே எதிரொலித்தார்.</p><p>தமிழ்நாடு அரசு சார்பிலோ, முதலமைச்சர் சார்பிலோ கர்நாடக முதலமைச்சரிடம் விளக்கம் கேட்டு எந்தவொரு கடிதமும் இதுவரை எழுதப்படவில்லை.</p><p>த.வெ.க. தலைவர் என்கிற நிலையில் பட்டும் படாமல் ஒரு அறிக்கையை மட்டும் வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த சூழலில் சென்னையில் நாளைய தினம் தென் மாநில முதலமைச்சர்கள் கூட்டம் கூடுகிறது. </p><p>அந்தக் கூட்டத்தின் போது, கர்நாடக முதலமைச்சரை சந்தித்து, இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் உரிய விளக்கத்தைக் கேட்டுப் பெற வேண்டும். </p><p>இந்த வழக்கு விசாரணையை கர்நாடக காவல்துறை விசாரிப்பதற்கு பதிலாக நம்பகமான நீதி விசாரணை நடத்திட தமிழ்நாடு அரசு கோர வேண்டும்.</p><p>இந்த சம்பவத்தில் நடைபெற்றுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணைய வழிகாட்டுதல்கள் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் அடிப்படையில் இந்த உயிரிழப்புகளுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.</p><p>மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு கூடுதல் இழப்பீடு தரப்படுவதை உறுதி செய்ய கர்நாடக முதலமைச்சரிடம் தமிழ்நாட்டு முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>குருகிராமில் மலைபோல் குவிந்த குப்பைகள்: பொதுமக்கள் கடும் அவதி..!</title><link>https://www.maalaimalar.com/news/national/garbage-piles-up-at-gurugram-waste-points-amid-delay-in-lifting</link><comments>https://www.maalaimalar.com/news/national/garbage-piles-up-at-gurugram-waste-points-amid-delay-in-lifting#comments</comments><guid isPermaLink="false">e6c04dde-d943-4989-96c4-a84b11945409</guid><pubDate>Tue, 18 Aug 2026 15:26:50 +0000</pubDate><atom:updated>2026-08-18T15:26:50.344Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Garbage,gurugram,குருகிராம்,குப்பைகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/xpnwd9vr/GarbageGurugram001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ குர்கிராம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/xpnwd9vr/GarbageGurugram001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் மாநகராட்சி கண்ட்ஸா (Khandsa) பகுதியில் உள்ள உள்ளூர் இரண்டாம் நிலை குப்பை சேகரிப்பு மையத்திலிருந்து (SCP) பல மாதங்களாகக் குப்பைகள் முறையாக அகற்றப்படாததால், அங்கு குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>நகரம் முழுவதும் உள்ள இரண்டாம் நிலை குப்பை சேகரிப்பு மையங்களில் (SCPs) குப்பைகள் மலைபோல் குவிந்து வருவதை மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். குப்பைகளை அகற்றுவதில் ஏற்படும் கடும் தாமதத்தால், குடியிருப்புப் பகுதிகள் சுகாதாரமற்ற சூழலாகவும், நோய்க்கிருமிகள் பெருகும் இடமாகவும் மாறியுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.</p><h2>குருகிராம் மாநகராட்சி</h2><p>குருகிராம் மாநகராட்சி (MCG) அதிகாரிகளின் கூற்றுப்படி, நகரின் 14 சேகரிப்பு மையங்களில் 12 மையங்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன. பிரேம் பூரியில் உள்ள மையம் சில மாதங்களுக்கு முன்பே மூடப்பட்டது. செக்டார் 70-ல் உள்ள டுலிப் சௌக் (Tulip Chowk) அருகிலுள்ள மையமும் மூடப்பட்டு, அங்கிருந்து அகற்றப்பட வேண்டிய குப்பைகள் இனி 'பெரி வாலா பாக்' (Beri Wala Bagh) பகுதிக்கு மாற்றப்பட்டு அகற்றப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>வீடு வீடாகச் சேகரிக்கப்படும் குப்பைகள், பதப்படுத்துவதற்காக பந்த்வாரி (Bandhwari) பகுதிக்கு அனுப்பப்படுவதற்கு முன்னதாக, தரம் பிரிப்பதற்காகக் கொண்டு வரப்படும் இடைநிலை மையங்களாக இந்த SCP-கள் செயல்படுகின்றன.</p><p>கண்ட்ஸா பகுதியில், உள்ளூர் சேகரிப்பு மையத்திலிருந்து பல மாதங்களாகக் குப்பைகள் முறையாக அகற்றப்படாததால், அங்கு குப்பைகள் பெருமளவில் குவிந்துள்ளதாக மக்கள் கூறினர்.</p><p>"நான் அந்தச் சேகரிப்பு மையத்திற்கு அருகில் வசிக்கிறேன்.  குப்பைகள் போதுமான அளவு அகற்றப்படாததால் அங்கு குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளதை நான் கவனித்திருக்கிறேன்," என்று அப்பகுதிவாசியான பிரசாந்த் குமார் கூறினார்.</p><p>சமீபத்திய மாதங்களில் பலமுறை தீ விபத்துகள் ஏற்பட்டதால், இந்த இடம் தீ விபத்து அபாயம் கொண்ட இடமாகவும் மாறியுள்ளது. கண்ட்ஸா மையத்தில் ஒரே வாரத்தில் இரண்டு முறை தீ விபத்துகள் ஏற்பட்டதாகவும், ஒவ்வொன்றையும் அணைக்க 24 மணி நேரத்திற்கும் மேலான நேரம் தேவைப்பட்டதாகவும் பத்திரிகைகளில் செய்தி வெளியாகின.</p><p>செக்டார் 110 மற்றும் பாலம் விஹார் (Palam Vihar) பகுதிகளிலிருந்தும் இதேபோன்ற புகார்கள் எழுந்துள்ளன. அங்குள்ள 'பாஜ்கேரா' (Bajghera) சேகரிப்பு மையத்தில், குப்பை சேகரிப்பிற்கும் அதை அகற்றுவதற்கும் இடையே பெரும் இடைவெளி (சமச்சீரற்ற நிலை) இருப்பதாக மக்கள் தெரிவித்தனர்.</p><p>"குப்பையைக் கொட்டுவதற்கு ஐந்து லாரிகள் வந்தால், அதை அகற்றுவதற்கு ஒரே ஒரு லாரி மட்டுமே வருகிறது. மழைக்காலத்தில் நிலைமை இன்னும் மோசமாகிறது. அந்த இடம் முழுவதும் தண்ணீர் தேங்கிவிடுவதால், அப்பகுதி மக்களுக்கும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் அது ஆபத்தானதாகவும் சுகாதாரமற்றதாகவும் மாறுகிறது" என்று செக்டார் 110-ஐச் சேர்ந்த பாரத் நைன் கூறினார்.</p><p>செக்டார் 21-ல், கார்டர்புரி (Carterpuri) சேகரிப்பு மையத்தில் தண்ணீர் தேங்கியதால், பல நாட்களாக வீடு வீடாகச் சென்று குப்பை சேகரிக்கும் பணி பாதிக்கப்பட்டது. "மழைநீரால் அந்த இடத்தின் நிலை மோசமாக இருந்ததால், புதிதாகக் குப்பைகளைக் கொட்ட முடியவில்லை என்று தொழிலாளர்கள் கூறினர்" என்று செக்டார் 21 குடியிருப்போர் நலச் சங்கத்தின் (RWA) பொதுச் செயலாளர் குந்தன் லால் சர்மா தெரிவித்தார். தண்ணீர் வெளியேற்றப்பட்ட பின்னரே அந்த இடத்தில் குப்பைகளைக் கொட்டும் பணியை மீண்டும் தொடங்க முடிந்தது என்று ஷர்மா மேலும் கூறினார்.</p><p>NH-48 சாலையில் அமைந்துள்ள, நகரத்தின் மிகப்பெரிய குப்பை சேகரிப்பு மையமான பெரி வாலா பாக், குடியிருப்பு வளாகங்களிலிருந்து வெறும் 100 மீட்டர் தொலைவில் மட்டுமே உள்ளது என்றும், அங்கு டிராக்டர்கள் தாறுமாறாக நிறுத்தப்பட்டு போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகின்றன என்றும் அப்பகுதிவாசிகள் குற்றம் சாட்டினர்.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கியச் செய்திகள் - 18 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-18-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-18-august-2026#comments</comments><guid isPermaLink="false">c27daa42-6f88-4a58-93d9-0737d7f66078</guid><pubDate>Tue, 18 Aug 2026 03:58:44 +0000</pubDate><atom:updated>2026-08-18T15:08:20.594Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/2xvhx5yb/speaker1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/2xvhx5yb/speaker1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/rishabh-pant-becomes-first-indian-and-fastest-to-hit-100-sixes-in-test-cricket">டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவிரைவாக 100 சிக்சர்: வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்</a></p><p>* இலங்கை அணி முதல் இன்னிங்சில் 284 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.</p><p>* இந்தியா சார்பில் மானவ் சுதர் 4 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/srilanka-need-288-runs-to-win-in-lats-day-against-india-first-test">காலே டெஸ்ட்: நான்காம் நாள் முடிவில் இலங்கை 84/4 - வெற்றியின் விளிம்பில் இந்தியா</a></p><p>* இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 193 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.</p><p>* இலங்கை சார்பில் அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டும் பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadav-arjuna-says-engineering-students-to-participate-pwd-tenders">பொறியியல் பட்டதாரிகளுக்கு பொதுப்பணித்துறை ஒப்பந்தங்களில் வாய்ப்பு: அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</a></p><p>* பணி முன்னேற்றம், தரக் கட்டுப்பாட்டைக் கண்காணித்தல் மற்றும் வெளிப்படைத் தன்மைக்காக ஒரு செயலி உருவாக்குதல்.</p><p>* பொதுப் பணித்துறையில் ஒப்பந்ததாரர்கள் பதிவு முறையை மேலும் எளிமையாக்குதல்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-flying-train-service-to-merge-with-metro-rail-railway-board-nod">சென்னை மெட்ரோவுடன் இணைகிறது பறக்கும் ரெயில் திட்டம் – ரெயில்வே வாரியம் ஒப்புதல்!</a></p><p>* 2 வருடத்தில் மாற்றம்: பறக்கும் ரெயில் இயக்கம், பராமரிப்பு அனைத்தும் அடுத்த 2 ஆண்டில் மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.</p><p>* ஒரே டிக்கெட் வசதி: மெட்ரோ, பறக்கும் ரெயில் இரண்டுக்கும் சேர்த்து ஒரே ஸ்மார்ட் கார்டு மற்றும் டிக்கெட் பயன்படுத்தலாம்.</p><p>பொதுப்பணி துறைக்கான மானியக் கோரிக்கை மீதான பதிலுரையில் ஆதவ் அர்ஜூனா கூறியதாவது:-</p><p>* 30 மாடிகள் கொண்ட அரசு அலுவலகங்களை உருவாக்க வேண்டும்.</p><p>* அரசு கட்டிடங்களின் அனைத்து தரவுகளையும் ஒன்றிணைக்க DashBoard உருவாக்கப்படும்.</p><p>* கட்டிடங்களின் பராமரிப்பை ஊழல் இல்லாமல் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்</p><p>* பணிக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு  பொதுப்பணித்துறையில் சலுகைகளுடன் வாய்ப்பு</p><p>* பொதுப்பணித்துறையில் ஒப்பந்ததாரர்கள் பதிவு முறை எளிமைப்படுத்தப்படும்</p><p>* வெளிப்படை தன்மையுடன் டெண்டர்கள் உருவாக்கப்படும்.</p><p>* டெண்டர்களில் இனிமேல் பினாமிகளுக்கு இடம் கிடையாது.</p><p>நெடுஞ்சாலை துறைக்கான மானியக் கோரிக்கை மீதான பதிலுரையில் ஆதவ் அர்ஜூனா கூறியதாவது:-</p><p>* மாவட்ட சாலைகள் மீது கவனம் செலுத்தப்படும்.</p><p>* சென்னை- கோவை- தூத்துக்குடி இணைக்கும் விரைவு தொழில் தர விரைவு சாலை உருவாக்கப்படும்.</p><p>* தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை விரைவுபடுத்த நடவடிக்கை</p><p>* ரூ. 500 கோடியில் சாலை பாதுகாப்பு கண்காணிப்பு குழு செயல்படுத்தப்படும்</p><p>* கடல்வழி போக்குவரத்து மும்பையில் இருப்பது போல் செயல்படுத்தப்படும்</p><p>* சென்னை- புதுவை இடையே படகு போக்குவரத்து</p><p>* 2027 முதல் சாலை விதிகள் மேலும் கடுயைமாக்கப்படும்</p><p>* பேட்ச் ஒர்க்கை ஒழிக்க புதிய திட்டம்</p><p>* ரூ. 400 கோடியில் சென்னையில் முக்கோண வழித்தட சாலை</p><p>* பாம்பன் டூ அக்னி தீர்த்தம் வரை உள்நாட்டு பயணிகள் போக்குவரத்து சேவை</p><p>* நாகை - காங்கேசன்துரை இடையிலான படகு போக்குவரத்து விரிவுப்படுத்தப்படும்</p><p>விளையாட்டுத்துறைக்கான மானியக்கோரிக்கை மீதான பதிலுரையில் ஆதவ் அர்ஜூனா கூறியதாவது:-</p><p>* 38 விளையாட்டு மாவட்டத்தில் விளையாட்டு விடுதி தொடங்கப்படும்</p><p>* மாற்று திறனாளிகளுக்கு தனிப்பட்ட வசதி செய்து தரப்படும்.</p><p>* சென்னையில் பாரா ஒலிம்பிக் பயிற்சி மையம் ஏற்படுத்தப்படும்.</p><p>* பெண்களுக்கான சிங்கப்பெண் விளையாட்டு திருவிழா நடத்தப்படும்.</p><p>* ஆண்டுதோறும் கிராமிய பாரம்பரிய விளையாட்டுப் போட்டுகள் நடத்தப்படும்.</p><p>* திறமையான மாணவர்களை கண்டுபிடித்து ஒலிம்பிக் பயிற்சி.</p><p>* ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை அதிகரிப்பு.</p><p>* விளையாட்டு சங்கங்கள் பிரச்சனை இருந்தால் SDAT சங்கத்தை ஏற்று நடத்தும்</p><p>* திருநர்களுக்கான போட்டி நடத்தப்படும்.</p><p>* கோவையில் என்.சி.சி. அகாடமி</p><p>அரசு பெண் ஊழியர்களின் 3வது குழந்தைக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு: அமைச்சர் சரத்குமார்</p><p>லாக்அப் மரணங்களில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிதியுதவி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும்.</p><p>சபரிவர்மன் மட்டுமின்றி பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிதியுதவி, அரசு பணி வழங்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்</p> <p>மாணவர் படுகொலை, குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு போதையே காரணம்.</p><p>இதுபோன்ற கொடூர குற்றங்களுக்கு என்கவுன்டர் மட்டுமே தீர்வு - பிரேமலதா விஜயகாந்த்</p> <p>சாலைப்பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்.</p><p>தமிழ்நாடு முழுவதும் மாணவர் விடுதிகள் சுத்தம் சுகாதாரம் இல்லாத நிலையில் உள்ளன.</p><p>கர்நாடகா, ஆந்திரா, இலங்கை எந தமிழர்கள் அனைத்து இடங்களிலும் தாக்கப்படுகின்றனர் -  பிரேமலதா விஜயகாந்த்</p><p>தமிழ்நாடு முழுவதும் உள்ள பாரம்பரிய கட்டிடங்களை மேம்படுத்த வேண்டும்.</p><p>பல இடங்களில் அரசு அலுவலகங்கள் மிகவும் மோசமாக உள்ளன.</p><p>விருத்தாசலம் அரசு அச்சகத்தை புனரமைக்க வேண்டும்.</p><p>அரசு கட்டிடங்கள் தனியார் கட்டிடங்கள் போன்று பராமரிக்கப்பட வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்</p><p>போதையில் இருந்து இளைஞர்களை மீட்க விளையாட்டு அவசியம்.</p><p>இளைஞர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுத் தருவது விளையாட்டு.</p><p>கிராமப்புறங்களில் உள்ள விளையாட்டு மைதானங்களை மேம்படுத்த வேண்டும்.</p><p>சேதமடைந்த மாநில நெடுஞ்சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்</p><h2>மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பிரேமலதா விஜயகாந்த் உரை</h2><p>விளையாட்டின் முக்கியத்துவத்தை ஒரு விளையாட்டு வீராங்கனையாக நான் உணர்ந்துள்ளேன்.</p><p>இளைஞர்களின் எதிர்காலமே நாட்டின் வருங்காலம்.</p><p>தேவைப்படும் பட்சத்தில் கலந்துரையாடி அதிகாரிகளுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>எம்எல்ஏக்களிடம் அதிகாரிகள் உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும் என அரசு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் - எடப்பாடி பழனிசாமி</p><p>வண்டல் மண் பிரச்சனைக்காக 4 எம்எல்ஏக்கள் நேரில் சென்றபோது சேலம் ஆட்சியர் அவமதித்து விட்டார்.</p><p>சேலம் ஆட்சியருக்கு 47 முறை தொலைபேசியில் அழைத்தும் அவர் பேசவில்லை - எம்எல்ஏ மணி</p><p>பக்கத்து ஊருக்கு கூட போகாது - அமைச்சர் பிரபு</p><p>வண்டல் மண் பாகிஸ்தானுக்கா செல்கிறது?  - அதிமுக</p><p>விவசாயிகளை மாஃபியாக்கள் எனக்கூறுவதை ஏற்க முடியாது என இபிஎஸ் கூறியதற்கு நான் விவசாயிகளை குறிப்பிடவில்லை என அமைச்சர் பிரபு பதில் அளித்தார்.</p><p>வண்டல் மண்ணை விவசாய நிலத்திற்கு மட்டும் தான் பயன்படுத்த முடியும் - எடப்பாடி பழனிசாமி </p><p>விவசாயிகள் என்ற பெயரில் வண்டல் மண்ணை அதிகம் அள்ளும் மாஃபியாக்களை விட மாட்டோம்.</p><p>விவசாயிகளுக்கு மட்டுமே வண்டல் மண் என்பதில் தவெக அரசு உறுதியாக உள்ளது -  அமைச்சர் பிரபு</p><h2>அதிமுக எம்எல்ஏ மணி</h2><p>தமிழ்நாட்டில் சாலை புரட்சியை உருவாக்கியவர் இபிஎஸ்.</p><p>தொலைநோக்குடன் பல மேம்பாலங்களை கொண்டு வந்தவர் இபிஎஸ்.</p><p>கட்டாய விளையாட்டு, உடற்பயிற்சிக்கு நிதி ஒதுக்கப்படுகிறதா? - மெய்யநாதன் கேள்வி</p><p>உலக செஸ் போட்டியை முதல் முதலில் தமிழ்நாட்டில் நடத்தியவர் ஜெயலலிதா.</p><p>ரூ.29 கோடியில் செஸ் போட்டியை நடத்தியவர் ஜெயலலிதா - சபாநாயகர்</p><p>விளையாட்டு விடுதியில் ஏசி பொருத்தித் தர வேண்டும்.</p><p>வீரர், வீராங்கனைகளுக்கு ஸ்மார்ட் வாட்ச் வழங்க வேண்டும்.</p><p>அனைத்து தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் திட்டம் தொடர வேண்டும் - எம்எல்ஏ மெய்யநாதன் </p><h2>ஆலங்குடி தொகுதி திமுக எம்எல்ஏ மெய்யநாதன் உரை</h2><p>விருது பெறும் வீரர்களுக்கான ஊக்கத்தொகை கிடைப்பதில் முன்பு சிக்கல் இருந்தது.</p><p>திமுக ஆட்சியில் 48 மணி நேரத்தில் உயரிய ஊக்கத்தொகை கிடைத்தது.</p><p>5 ஆண்டு கால ஆட்சியில் 6,689 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.215 கோடி ஊக்கத்தொகை அளிக்கப்பட்டுள்ளது.</p><p>உச்சநீதிமன்ற தீர்ப்பை செல்லாததாக்கி சட்டத்திருத்தம் கொண்டு வரும் மத்திய அரசால் நீட்டை நீக்க முடியாதா? - சிவி சண்முகம்</p><p>மாணவர்கள் மீது அக்கறை இருந்திருந்தால் நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வந்து நீட்டை நீக்கி இருக்கலாம்.</p><p>உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நீட்டை தொடர்வதாக பாஜக கூறுவது எல்லாம் ஏமாற்று வேலை.</p><p>உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த 6 மாதங்களில் கனிமவள சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது மத்திய பாஜக அரசு  - சிவி சண்முகம்</p> <p>காங்கிரஸ், பாஜக உடலில் இருப்பது ஒரே ஜீன் தான்.</p><p>உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நீட் தொடர்வதாக பாஜக உறுப்பினர் கூறுகிறார் - சிவி சண்முகம்</p><p>வைபவ் சூர்யவன்ஷி போல் குழந்தைகள் விளையாட்டில் சாதிக்க வேண்டும்.</p><p>டிஎன்பிஎஸ்சியில் 8 உறுப்பினர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.</p><p>தமிழகத்தில் அளவுக்க அதிகமாக உள்ள சுங்கச்சாவடிகளை மூட வேண்டும்.</p><p>மத்திய அரசிடம் பேசி சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக எம்எல்ஏ சிவக்குமார்</p><p>8 ஆண்டுகளுக்கு முன்பு அமைச்சராக இருந்தபோது தூர்வாரும் பணி நடைபெற்றது.</p><p>ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் நந்தன் கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்றது - சிவி சண்முகம்</p><h2>மானியக் கோரிக்கை விவாதம் - விக்கிரவாண்டி பாமக எம்எல்ஏ சிவக்குமார் உரை</h2><p>விக்கிரவாண்டியில் தொழிற்பயிற்சி கல்லூரி அமைத்து தர வேண்டும்.</p><p>விக்கிரவாண்டியில் சிங்கப்பெண் சிறப்புப் படை காவல் நிலையம் தேவை.</p><p>நந்தன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றித் தர வேண்டும்.</p><h2>காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பட் உரை</h2><p>நீட் எந்தெந்த மாநிலத்திற்கு தேவையோ அந்த மாநிலத்திற்கு கொண்டு வரலாம் என்று தான் சொன்னோம்.</p><p>காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த ஒவ்வொரு சட்டத்தையும் பில் திருத்தம் என்ற பெயரில் அனைத்து சட்டத்தையும் பாஜக அரசு திருத்திக்கொண்டு இருக்கிறது.</p><p>மக்களுக்கு எது தேவையோ அதை காங்கிரஸ் ஆட்சியில் நாங்கள் கொண்டு வந்தோம்.</p><p>அனைத்து திட்டங்களையும் திருத்திக்கொண்டு இருக்கும்போது மாணவர்களுக்கான இந்த திட்டத்தை திருத்துவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்?</p> <p>காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தான் நீட் வந்தது என தாரகை கத்பட் கூறி விட்டார் - பாஜக எம்எல்ஏ போஜராஜன்</p><p>கன்னியாகுமரியில் உள்ள அனைத்து குளங்களையும் இணைக்க வேண்டும் - தாரகை கத்பட்</p><p>குளச்சல் தொகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.</p><p>தாமிரபரணி, கோதையாறு, பரளியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் தேவை  - தாரகை கத்பட்</p> <p>பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மிகப்பெரிய சவாலாக உள்ளன. இரும்புக்கரம் கொண்டு குற்றங்களை அரசு அடக்க வேண்டும் - தாரகை கத்பட்</p><p>சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு காங்கிரஸ் வரவேற்பு.</p><p>மீனவர்கள் கைது பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.</p><p>கடலில் காணாமல் போகும் மீனவர்களை மீட்க கடல் ஆம்புலன்ஸ் தேவை - தாரகை கத்பட்</p><p>இருமொழிக் கொள்கையை பாதுகாப்பதிலும் காங்கிரஸ் உறுதியாக இருக்கும்.</p><p>IREL அரிய வகை கனிம நிறுவனத்தால் கடல் அரிப்பு, கடற்கரை சுருங்கி விட்டது  - தாரகை கத்பட்</p><p>காலை உணவுத்திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டியதற்க நன்றி. </p><p>காங்கிரஸ் திட்டங்களை மாற்றும் பாஜக, நீட் தேர்வை ஏன் மாற்றவில்லை?</p><p>100 நாள் வேலைத்திட்டத்தை நிறுத்துவதற்கு பாஜக முயற்சி செய்கிறது - தாரகை கத்பட்</p><h2>மானியக்கோரிக்கை விவாதம் - காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பட் உரை</h2><p>எனது வெற்றிக்கு உழைத்த கூட்டணி கட்சியினருக்கு நன்றி.</p><p>ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கொடுத்து, கூட்டணி கட்சிக்கு மரியாதை தந்தவர் விஜய்.</p><p>தவெக பட்ஜெட் ஏழை, எளிய மக்களுக்கான பட்ஜெட்.</p><p>தமிழகத்திற்கான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும்.</p><p>செம்மேடு - தாழம்பட்டு சாலை பெரிய ஓடையின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைத்து தர  வேண்டும் -  எம்எல்ஏ ராஜேந்திரன்</p><h2>என்எல்சி தொழிலாளர்கள் நலன் குறித்து அதிமுக எம்எல்ஏ ராஜேந்திரன் உரை</h2><p>சுற்றுவட்டார கிராமங்களின் மேம்பாட்டிற்கு என்எல்சி 3% சிஎஸ்ஆர் நிதி தர வேண்டும்.</p><p>சிஎஸ்ஆர் நிதி தொடர்பாக என்எல்சியை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/0nckklvs/thahira.jpg" /></figure><p>அந்த கவுரம் என்னை சார்ந்தது மட்டும் அல்ல. இஸ்லாமியர்கள் அனைவருக்குமான பெருமை அளிப்பதுபோல் நடத்தினார்.</p><p>அன்றே முடிவு செய்தேன். எந்த கட்சிக்காக இந்த இடத்திற்கு நான் வந்தேனோ சாகும் வரை இந்த ஆடை தான் அணிந்து இருப்பேன். இது என் அடையாளம் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்,.</p><p>தளபதியால் நான், தளபதிக்காகவே நான், என்றும் தலைமைக்கும் தளபதிக்கும் விசுவாசத்துடன் நன்றியுடன் நடந்து கொள்வேன் - எம்எல்ஏ தாஹிரா</p> <p>என்னைப்போன்ற பெண்களுக்கு முக்கிய இடத்தை கொடுத்து இந்த இடத்தில்  நிற்க வைத்து இருக்கிறார்.</p><p>எந்த அரசியல்வாதிகளும், எந்த அமைப்பில் இருப்பவர்களும் இஸ்லாமிய பெண்களுக்கு முதல் இடம் கொடுத்தது இல்லை.</p><p>எங்கள் தலைவர் கட்சியில் பதவி கொடுத்தபோது அவருடன் பக்கத்தில் அமரவைத்து கவுரவித்தார்.</p> <h2>கட்சி கொடி நிறத்தில் உடை அணிந்திருப்பது  ஏன்? என எம்எல்ஏ தாஹிரா விளக்கம்</h2><p>தலைவருடன் கடந்த 27 ஆண்டுகளாக பயணித்து இருக்கிறேன்.</p><p>தமிழ்நாட்டில் முதல் பெண் ரசிகர் மன்றத்தில் நான் அந்த பட்டத்தை வாங்கி இருக்கிறேன்.</p> <p>ராணிப்பேட்டையில் புதிய மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, வாலாஜா அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் - எம்எல்ஏ தாஹிரா</p><h2>ராணிப்பேட்டை தொகுதி தவெக எம்எல்ஏ தாஹிரா உரை</h2><p>வாயால் வடை சுட்ட காலம் போய் சுவையான வடை சுட்டு கையில் கொடுக்கும் காலம்.</p><p>முதலமைச்சரை பேச சொல்லும் கூட்டம், அவர் பேசத் தொடங்கினால் ஓடுகிறது.</p><p>தவெக ஆட்சி ஊழலற்ற உண்மையான மக்கள் ஆட்சி.</p><p>அதிகாரிகள் எந்த திட்டத்தை தீட்டினாலும் அமைச்சரின் கவனத்திற்கு வராமல் வெளியிடப்படாது.</p><p>நெடுஞ்சாலை, பொதுப்பணித் துறையிலும் விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட உள்ளது - ஆதவ்</p><p>தான் மட்டும் நல்ல அறையில் அமர்ந்திருக்க வேண்டும் என முதல்வர் நினைக்கவில்லை.</p><p>முதல்வரை சுற்றி பணியாற்றும் 80-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அவரை காண வருவோர் வசதிக்காகத்தான் அறை மாற்றம்.</p><p>எளிமையை விரும்பும் முதலமைச்சர் விஜய், தன்னை சுற்றி இருப்பவகளை நினைத்துதான் அறையை மாற்றுகிறார் - அமைச்சர் ஆதவ்</p> <p>கலைஞரும், ஜெயலலிதாவும் புதிய தலைமைச்செயலகத்தை கட்ட வேண்டும் என நினைத்தனர் - அமைச்சர் ஆதவ்</p> <p>5 வருடத்தில் நடைபெற்ற டெண்டர் குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிட உள்ளோம்.</p><p>தான் மட்டும் நல்ல அறையில் அமர்ந்திருக்க வேண்டும் என முதல்வர் நினைக்கவில்லை - அமைச்சர் ஆதவ்</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உரை</h2><p>வாழைப்பழத்தில் ஊசி ஏற்றி அதனை மக்களுக்கே கொடுப்பது போல் சிரித்துக்கொண்டு பேசியிருக்கிறார் எ.வ.வேலு</p><p>கடந்த 5 வருட பத்திரிகை செய்திக எடுத்து பார்த்தால் பொதுப்பணித்துறையில் ஊழல் மட்டுமே நிறைந்திருக்கும்.</p><p>முதல்வர் அறை மாற்றத்திற்கான டெண்டர் இன்னும் முடியவில்லை.</p><p>தவெக அரசின் வாக்குறுதி புத்தகத்தில் அறம் திட்டத்தின் 25-வது பக்கத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் பற்றி கூறி உள்ளீர்கள்.</p><p>எந்த ஓய்வூதிய திட்டத்திற்கு தவெக அரசு அனுமதி அளிக்கப்போகிறது, அரசு அதிகாரிகளுக்கு தெளிவான விளக்கம் தேவை.</p><p>முதல்வர் அறையை தயார் செய்ய ரூ.5.54 கோடி மதிப்பிலான பணிக்கு டெண்டர் விடப்படவில்லை என்ற செய்தியை சுட்டிக்காட்டி எ.வ. வேலு பேச்சு</p><p>காலை உணவுத்திட்டத்தின் பெயர் காமராஜர் பெயரில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. காலை உணவுத்திட்டத்திற்கு காமராஜர் பெயரை தவிர வேறு எந்த பெயரும் பொருத்தமாக இருக்காது - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>பெயர் மாற்றம் என்பது கலைஞர் ஆட்சியிலும் இருந்தது என்பதை சுட்டிக்காட்டி அமைச்சர் ராஜ்மோகன் பேசினார்.</p><p>அந்த மைக், சேர், டேபிள் செய்தது நாங்கள் தான் என்கிறார்கள். இவை அனைத்தும் செய்தது மக்கள் வரிப்பணத்தில் தான்.</p><p>கடந்த திமுக ஆட்சியில் அம்மா மினி கிளினிக் முதல்வர் கிளினிக் ஆக மாறி உள்ளது.</p><p>பொதுக்கூட்டத்தில் பேசுவதை போல் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேரவையில் பேசிக்கொண்டிருக்கிறார் - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>பொதுக்கூட்டத்தில் பேசுவதை போல் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேரவையில் பேசிக்கொண்டிருக்கிறார் - அமைச்சர் செங்கோட்டையன்</p><p> மானியக்கோரிக்கை தொடர்பாக மட்டும் பேசுங்கள் - சபாநாயகர்</p><p>2003-ல் பழைய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டது - எ.வ.வேலு</p><p>அரசு அதிகாரிகள் பொதுவானவர்கள்.</p><p>நேற்று எங்களுக்கு சல்யூட்... இன்று உங்களுக்கு சல்யூட் - எ.வ.வேலு </p><h2>எ.வ.வேலு உரை</h2><p>இந்த நிதி ஆண்டுக்கான எதிர்கால திட்டமிடல் குறித்து எதுவும் இல்லை.</p><p>வெள்ளத் தடுப்புப் பணிகள் குறித்து கொள்ளை விளக்க குறிப்பில் இல்லை.</p><p>சட்டசபையை கலைநயமிக்கதாக மாற்றியது திமுக தான்.</p><p>4 வழித்தடம், 2 வழித்தடம் சாலைகள் இந்த நிதி ஆண்டில் எவ்வளவு அமைக்கப்பட்டது? - எ.வ.வேலு</p><p>முதலமைச்சருக்கு அதிக திறமை இருக்கிறது என்பதை ஏற்கிறேன் - எ.வ.வேலு</p><p>டெண்டர் விலையை உயர்த்தி முறைகேடு செய்யத் தெரியாது என முதல்வர் கூறுகிறார் - எ.வ.வேலு</p><p>அமைச்சர் போல் திமுக ஆட்சியின் சாதனைகளை பட்டியல் போடுகிறீர்கள் - சபாநாயகர்</p><p>மானியக்கோரிக்கையை விட்டுவிட்டு காலை உணவு குறித்து பேசுவது ஏன்? - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>காலை உணவுத்திட்டத்திற்கு காமராஜர் பெயரை வைக்க வேண்டிய அவசியம் என்ன?</p><p>புதிய திட்டத்திற்கு காமராஜர் பெயரை வைத்தால் அதை வரவேற்கிறோம்.</p><p>முதலமைச்சர் என்பது பொதுவான சொற்றொடர் - எ.வ.வேலு</p><p>மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கையில் தான் கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்தோம் - எ.வ.வேலு</p><p>கோவை தந்தை பெரியார் நூலகத்தை திறக்க வேண்டும் - எ.வ.வேலு கோரிக்கை</p><p>அண்ணா அறிவாலயத்தில் பெரியார் சிலை இல்லை.</p><p>எங்கள் கட்சி அலுவலகத்தில் பெரியாருக்கு சிலை இருக்கிறது - ஆதவ் அர்ஜூனா</p><p>3 மாத காலமாக பெரியார் நூலகத்தை கிடப்பில் போட்டது ஏன்? - எ.வ.வேலு</p><p>பெரியார் கொள்கை தலைவர் என தவெக தம்பட்டம் அடித்துக்கொள்கிறது - எ.வ.வேலு</p><p>விடுதலை போராட்ட வீரர்களுக்கு சிலைகள், மணிமண்டபங்கள் அமைத்து தந்தோம் - எ.வ.வேலு</p><p>மானியக் கோரிக்கை மீது விவாதம் - எதிர்க்கட்சி கொறடா எ.வ.வேலு உரை</p><p>சென்னை வள்ளுவர் கோட்டம் முதல் குமரி வள்ளுவர் சிலை வரை கலைஞரின் அடையாளம் இல்லா ஊரே இல்லை - எ.வ.வேலு</p><p>4 துறைகள் மீதான மானிய கோரிக்கை தொடங்கியது.</p><p>மனிதவள மேலாண்துறை மானிய கோரிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் சரத்குமார்.</p><p>பொதுப்பணித்துறை மானிய கோரிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</p><p>மீன்வளம், சுற்றுச்சூழலை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் தவெக அரசு அனுமதிக்காது - அமைச்சர் ராஜீவ்</p><p>3 கிணறுகளுக்கு திமுக ஆட்சியிலும், ஒரு கிணறுக்கு அதிமுக ஆட்சியிலும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது - அமைச்சர் ராஜீவ்</p><p>ஹைட்ரோ கார்பன் கிணறு திட்டத்தால் புதுவை முதல் கன்னியாகுமரி வரை கடல் வளம் பாதிக்கப்படும் -  சிபிஐ எம்எல்ஏ மாரிமுத்து</p><h2>எம்எல்ஏ தமிமுன் அன்சாரி உரை</h2><p>சுற்றுச்சூழல் பாதிப்பை கூர்ந்தாய்வு செய்து அரசு நடவடிக்கை என அமைச்சர் கூறி உள்ளார்.</p><p>புதிதாக 4 கிணறு தோண்டினால் மீனவர் நலன் என பல பாதிப்பு உள்ளதால் அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம்.</p><p>பரங்கிப்பேட்டையில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைப்பதற்கான HOEC நிறுவன விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும்.</p><h2>கடலூர் பரங்கிப்பேட்டையில் ஹைட்ரோ கார்பன் திட்டமா? அமைச்சர் ராஜீவ் விளக்கம் அளித்தார்.</h2><p>பரங்கிப்பேட்டையில் 4 புதிய எண்ணெய் கிணறுகள் அமைக்க இந்துஸ்தான் நிறுவனம் திட்டம்.</p><p>மீனவர்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் முதலமைச்சர் விஜய் அரசு அனுமதிக்காது.</p><p>சுற்றுச்சூழலை பாதிக்கும் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்.</p><p>பரங்கிப்பேட்டையில் இந்துஸ்தான் ஆயில் எக்ஸ்ப்ளோஷன் நிறுவன கிணறுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு என கவன ஈர்ப்பு தீர்மானம்.</p><p>தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டதில் தமிழ்நாடு அரசின் மேல் நடவடிக்கை என்ன? </p><p>தமிழர்களை சுட்டுக்கொன்றவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய தமிழக அரசு கோரியுள்ளதா?  - திமுக</p><p>கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி - அமைச்சர் ரஞ்சித்</p><p>கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள் குடும்பத்திற்கு நிதி வழங்கப்படுமா? - எடப்பாடி பழனிசாமி</p><p>கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொலை - கர்நாடக அரசின் விசாரணையை தமிழ்நாடு அரசு கண்காணிக்கிறது - அமைச்சர் நிர்மல்குமார்</p> <p>சிபிஐ விசாரணை தேவை என்கிறோம் - தவெக அரசின் நிலைப்பாடு என்ன? - பாமக</p><p>கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொலை - தவெக அரசு அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? - பாமக</p><p>யாருடைய கவனத்தை ஈர்க்க இப்படி பேசுகிறீர்கள்? - அமைச்சர் நிர்மல்குமாருக்கு சபாநாயகர் கண்டிப்பு</p><p>அமைச்சர் நிர்மல்குமார் இனி தேவையற்றதை பேச அனுமதிக்க மாட்டேன் - சபாநாயகர்</p><p>திமுகவை விமர்சித்து அமைச்சர் நிர்மல்குமார் பேசியவை அவை குறிப்பில் இருந்து நீக்கம் - சபாநாயகர்</p><p>உலகம் முழுவதும் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களின் ஒரே நம்பிக்கை முதலமைச்சர் விஜய் - அமைச்சர் நிர்மல்குமார்</p><h2>கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொலை - கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அமைச்சர் நிர்மல்குமார் பதில்</h2><p>சுட்டுக்கொல்லப்பட்ட தமிழகர்கள் குடும்பத்திற்கு கூடுதல் நிதி வழங்குவது குறித்து கர்நாடகா பரிசீலனை.</p><p>தமிழர்களை சுட்டுக்கொன்ற வனத்துறை மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு.</p><p>தமிழர்களை சுட்டுக்கொன்ற வனத்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல்.</p><h2>பாஜக எம்எல்ஏ போஜராஜன்</h2><p>துப்பாக்கிச்சூட்டில் பலியான தமிழர்கள் குடும்பத்திற்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும். </p><p>பலியான தமிழர்கள் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசும் நிதி வழங்க வேண்டும்.</p><p>தமிழர்கள் நலனுக்கு கட்சி வேறுபாடுகள் இன்றி ஒன்றிணைய வேண்டும்.</p><p>மான் வேட்டைக்கு சென்றவர்கள் சுட்டுக்கொலை என்பது பொய்யான செய்தி - கீழ்வேளூர் மார்க்சிஸ்ட் எம்எல்ஏ லதா</p><p>தமிழர்களின் உயிரை துப்பாக்கி குண்டுகள் தீர்மானிக்கக்கூடாது.  சிபிஐ விசாரணைக்கு கர்நாடக அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ ராமச்சந்திரன்</p><p>தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட வேண்டும் - தளி இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ ராமச்சந்திரன்</p><p>கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொலை - அதிமுக, பாமக, காங்கிரஸ், சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தல்.</p><p>கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை தேவை - காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பட்</p><p>தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதில் ஏதோ இருக்கிறது என கர்நாடக எம்எல்ஏவே கூறுகிறார். கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் - பாமக எம்எல்ஏ கணேஷ் </p><h2>பாமக எம்எல்ஏ கணேஷ் உரை</h2><p>மேட்டூர் கட்டப்பட்டதால் கர்நாடகாவிற்கு புலம்பெயர்ந்த 3 பேர் சுட்டுக்கொலை.</p><p>தங்கள் கால்நடைகளை தேடிச்சென்றவர்களை சுட்டுக்கொன்றுள்ளது கர்நாடக வனத்துறை.</p><p>மான் வேட்டைக்கு சென்றவர்கள் சுட்டுக்கொலை என்பது ஏற்புடையது அல்ல.</p><p>மான் வேட்டையில் ஈடுபட்டதாக 3 தமிழர்களை குற்றம்சாட்டி கொன்றுள்ளது கர்நாடக வனத்துறை.</p><p>2 மாநில எல்லை பகுதியில் கொலை நடைபெற்றுள்ளதால் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை.</p><p>வனத்துறை சுட்டுக்கொன்ற தமிழர்களுக்கு ரூ.5 லட்சம் மட்டுமே இழப்பீடு அறிவிப்பு, தமிழக அரசு கூடுதலாக நிதி தர வேண்டும்  - எடப்பாடி பழனிசாமி</p> <h2>கவன ஈர்ப்பு தீர்மானத்தில் எடப்பாடி பழனிசாமி உரை</h2><p>பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் தனது கால்நடை தேடிச்சென்ற 3 தமிழர்கள் சுட்டுககொலை, ஒருவர் படுகாயத்துடன் சிகிக்சை.</p><p>அப்பாவி விவசாயிகளை வனத்துறை சுட்டுக்கொன்றது மனித உரிமை மீறல் - மனோஜ்பாண்டியன் </p><h2>கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்கள்  - கவன ஈர்ப்பு தீர்மானத்தில் மனோஜ்பாண்டியன் உரை</h2><p>கர்நாடகாவில் கால்நடை தேடிச்சென்ற 3 தமிழர்கள் கர்நாடக வனத்துறையால்  சுட்டுக்கொலை.</p><p>சட்டசபையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது.</p><p>சட்டசபையில் இன்று இளைஞர் நலன், விளையாட்டு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள், பொதுப்பணி, மனிதவள மேம்பாட்டுத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.</p><p>கடலூரில் இந்துஸ்தான் ஆயில் நிறுவனம், மேம்பாட்டுக் கிணறுகள் அமைப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவிரைவாக 100 சிக்சர்: வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/rishabh-pant-becomes-first-indian-and-fastest-to-hit-100-sixes-in-test-cricket</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/rishabh-pant-becomes-first-indian-and-fastest-to-hit-100-sixes-in-test-cricket#comments</comments><guid isPermaLink="false">01979c6e-1350-458c-bc07-ae8e2344a377</guid><pubDate>Tue, 18 Aug 2026 15:02:26 +0000</pubDate><atom:updated>2026-08-18T15:02:26.735Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Rishabh Pant,SLvIND,ரிஷப் பண்ட்,இலங்கை இந்தியா தொடர்,100 sixer,100 சிக்சர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/wspm9buh/rishab.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rishabh pant]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/wspm9buh/rishab.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காலே போட்டியில் இந்திய அணியின் ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டியில் அதிவிரைவில் 100 சிக்சர்களை விளாசி வரலாற்று சாதனை படைத்தார்.</p><p>இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.</p><p>முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 462 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தேவ்தத் படிக்கல் 167 ரன் குவித்தார்.</p><p>இலங்கை சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 4 விக்கெட்டும், கேஷரா நுவந்தா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p>அடுத்து ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 284 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சோனல் தினுஷா 100 ரன்னில் அவுட்டானார். </p><p>இந்தியா சார்பில் மானவ் சுதர் 4 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p>178 ரன் முன்னிலை பெற்ற இந்திய அணி 2வது இன்னிங்சில் 193 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ரிஷப் பண்ட் 66 ரன்னில் அவுட்டானார். </p><p>இந்நிலையில், ரிஷப் பண்ட் 89 இன்னிங்ஸ்களில் 100 சிக்சர்களை விளாசி அதிவிரைவாக 100 சிக்சர்கள் அடித்தவர் எனற சாதனையைப் படைத்தார்.</p><p>இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை அடித்த வீரர்கள் மற்றும் இன்னிங்ஸ் எண்ணிக்கை:</p><p>ரிஷப் பண்ட் 100 சிக்சர்கள் - 89 இன்னிங்ஸ்.</p><p>பென் ஸ்டோக்ஸ் 138 சிக்சர்கள் - 220 இன்னிங்ஸ்</p><p>பிரெண்டன் மெக்கல்லம் 107 சிக்சர்கள் - 176 இன்னிங்ஸ்</p><p>ஆடம் கில்கிறிஸ்ட் - 100 சிக்சர்கள் - 137 இன்னிங்ஸ்.</p>]]></content:encoded></item><item><title>சீனா மற்றும் ரஷியாவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிய ஆர்டிக் கடல் வழித்தடம்</title><link>https://www.maalaimalar.com/news/world/why-the-arctic-sea-route-has-become-so-important-for-china-and-russia</link><comments>https://www.maalaimalar.com/news/world/why-the-arctic-sea-route-has-become-so-important-for-china-and-russia#comments</comments><guid isPermaLink="false">d1d043c0-63b4-44cf-a3f5-6e821f0c5f63</guid><pubDate>Tue, 18 Aug 2026 15:01:03 +0000</pubDate><atom:updated>2026-08-18T15:01:03.260Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Russia,China,ஹார்முஸ் ஜலசந்தி,Strait of Hormuz</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/8brr9hks/Arcticsea001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆர்டிக் கடல் வழித்தடம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/8brr9hks/Arcticsea001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களுடன் உலகளாவிய கப்பல் போக்குவரத்து இடையூறுகளும் வடக்கு கடல் வழித்தடத்தின் (Northern Sea Route) மூலோபாய முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளன.</p><p>மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சீன சரக்கு கப்பல்கள் வடக்கு கடல் வழித்தடத்தில் பயணிக்கத் தொடங்கியதிலிருந்து, ஆர்டிக் கப்பல் போக்குவரத்துப் பாதை உலகளாவிய முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.</p><h2>செங்கடலில் ஹவுதி தாக்குதல்</h2><p>அதே ஆண்டின் பிற்பகுதியில் செங்கடலில் வணிகக் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல்கள், ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையிலான மிக விரைவான கடல்வழி போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த சூயஸ் கால்வாய் வழியாகச் செல்லும் போக்குவரத்தை பாதித்தன. ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அரபு-இஸ்ரேலிய போருக்குப் பிறகு, மோதல் காரணமாக ஏற்பட்ட மிக தீவிரமான போக்குவரத்து இடையூறாக இது அமைந்தது.</p><p>5,600 கி.மீ (3,480 மைல்) நீளமுள்ள வடக்கு கடல் வழித்தடம் (Northern Sea Route), ரஷியாவின் ஆர்டிக் கடற்கரைப் பகுதியில் பாரண்ட்ஸ் கடல் (Barents Sea) முதல் பெரிங் நீரிணை (Bering Strait) வரை பரவியுள்ளது.</p><p>ஆண்டின் பெரும்பகுதி பயணிக்க முடியாததாக இருந்த இத்தடம், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகுவதால், காலநிலை மாற்றத்தின் விளைவாக இப்போது எளிதில் பயணிக்கக் கூடியதாக மாறி வருகிறது.</p><p>இப்பகுதியில் ரஷியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதுடன், சூயஸ் கால்வாயில் ஏற்படும் மோதல்கள் மற்றும் கடல் கொள்ளை சம்பவங்கள் போக்குவரத்தை பாதித்து வருவதால், சீன நிறுவனங்களுக்கு ஆர்டிக் பகுதி ஒரு மாற்றுப் பாதையாக அதிக ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>மோதல் அல்லது போர்க் காலங்களில் உலகளாவிய தொடர்பை உறுதிசெய்ய, மேற்கத்திய நாடுகளின் கட்டுப்பாட்டில் உள்ள முக்கியக் குறுகிய கடல் வழித்தடங்கள் (chokepoints) இல்லாத ஒரு பாதையைத் தேடும் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனாவுக்கு, இத்தடம் மிக முக்கியமானது.</p><h2>சீனாவின் கடல்சார் உத்தி</h2><p>சீனாவின் கடல்சார் உத்தி என்பது தென் சீனக் கடல், கிழக்கு சீனக் கடல் மற்றும் தைவான் ஆகியவற்றுடன் மட்டும் தொடர்புடையது அல்ல. அது சீனா எவ்வாறு உலகளவில் இணைகிறது மற்றும் எவ்வாறு உலகளாவிய இணைப்புத் தொடர்பை உருவாக்குகிறது என்பதோடும் தொடர்புடையது என்று வியன்னாவைச் சேர்ந்த ஆலோசனை நிறுவனமான FACE-ன் நிறுவனரும் புவிசார் அரசியல் உத்தியாளருமான வெலினா சக்கரோவா (Velina Tchakarova) கூறினார்.</p><p>"வடக்குக் கடல் வழித்தடம்" இல்லாவிட்டால், சீனா தனது இறக்குமதிகள் மீதான முற்றுகை, இடையூறு மற்றும் குழப்பம் போன்ற பெரும் அபாயங்களை எப்போதும் எதிர்கொள்ள நேரிடும். எனவே, சீனாவின் கண்ணோட்டத்தில் இந்த வழித்தடம் மூலோபாய ரீதியாக முக்கியமானது. இதை மேம்படுத்துவதிலும் இதற்கான வசதிகளை உருவாக்குவதிலும் சீனா முதலீடு செய்வது இயல்பான மற்றும் தர்க்கரீதியான ஒன்றே.</p><h2>முதல் சீன கப்பல் பயணம்</h2><p>அரசுக்குச் சொந்தமான கோஸ்கோ (Cosco) குழுமத்தால் இயக்கப்படும் முதல் சீன சரக்குக் கப்பல் 2013-ல் வடக்குக் கடல் வழித்தடம் வழியாக பயணம் செய்தது. ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, ‘நியூ நியூ ஷிப்பிங்’ (New New Shipping) என்ற தனியார் நிறுவனம், ஆர்டிக் வழியாக சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே வழக்கமான சேவையைத் தொடங்கியது.</p><p>ஆனால், அக்டோபர் மாதத்தில் சீனாவின் நிங்போவிலிருந்து (Ningbo) இங்கிலாந்தின் ஃபெலிக்ஸ்டோவிற்கு (Felixstowe) சீ லெஜண்ட் (Sea Legend) நிறுவனத்தின் இஸ்தான்புல் பிரிட்ஜ் (Istanbul Bridge) என்ற கப்பல் பயணித்தபோதுதான், வடக்குக் கடல் வழித்தடத்தை சீனக் கப்பல்கள் பயன்படுத்துவது பரவலான கவனத்தை ஈர்த்தது. இந்தப் பயணம் வெறும் 20 நாட்களிலேயே நிறைவடைந்தது. இது மற்ற கடல் வழித்தடங்களைப் பயன்படுத்தும்போது ஆகும் பயண நேரத்தில் ஏறக்குறைய பாதியளவே ஆகும்.</p> <p>அதன்பிறகு மேலும் பல கப்பல்கள் இவ்வழித்தடத்தைப் பயன்படுத்தத் தொடங்கின. இந்த கோடைக்காலத்தில், சுமார் 38 சரக்கு கப்பல்கள் (container ships) சீனத் துறைமுகங்களிலிருந்து ஆர்டிக் வழித்தடம் வழியாக ரஷியா அல்லது வடக்கு ஐரோப்பாவிற்குப் பயணம் செய்கின்றன. அவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை அதே வழியில் திரும்பவும் உள்ளன.</p><h2>பயணம் நாட்கள் குறைவு</h2><p>கடந்த ஆண்டில் வடக்குக் கடல் வழித்தடம் வழியாக 17 சீன வணிகக் கப்பல் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆர்டிக் வழித்தடத்தின் மூலமான பயணம் மிகவும் வேகமானது. சீனாவிலிருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அல்லது பிற ஐரோப்பிய துறைமுகங்களைச் சென்றடைய சுமார் 30 நாட்களே ஆகின்றன.</p><p>சமீபத்திய கப்பல் போக்குவரத்து அட்டவணைகளின்படி, சூயஸ் கால்வாய் வழியாகச் செல்ல சுமார் 45 நாட்களும், நன்னம்பிக்கை முனை (Cape of Good Hope) வழியாகச் செல்ல சுமார் 60 நாட்களும் ஆகின்றன.</p><p>வடக்கு கடல் வழித்தடம் (Northern Sea Route) ஜூலை முதல் அக்டோபர் வரை மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. 2024 மற்றும் 2025-ல் சாதனை அளவிலான போக்குவரத்து நிகழ்ந்த போதிலும், சூயஸ் கால்வாய் வழியாகக் கொண்டு செல்லப்படும் சரக்குகளுடன் ஒப்பிடுகையில், இதன் வழியாகச் செல்லும் சரக்குகளின் அளவு மிகக் குறைவாகவே உள்ளது.</p><p>இருப்பினும், <a href="https://www.maalaimalar.com/news/world/usiran-tensions-trump-warns-unconditional-surrender-and-tougher-sanctions">ஹார்முஸ் ஜலசந்தி</a> (Strait of Hormuz) அடைப்பு, செங்கடல் தாக்குதல்கள் மற்றும் பிற முக்கிய கடல்வழிப் பாதைகளைச் சுற்றியுள்ள பதற்றங்கள் வரை உலகளாவிய கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகள், மாற்று வழித்தடங்களின் மூலோபாய முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளன.</p>]]></content:encoded></item><item><title>கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற மகன்... கொண்டாட்ட புகைப்படங்களை பகிர்ந்த ஷாலினி! </title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/son-wins-football-championship-title-shalini-shares-celebratory-photos</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/son-wins-football-championship-title-shalini-shares-celebratory-photos#comments</comments><guid isPermaLink="false">50ae6a20-bc0c-412b-982e-575e665ef5f7</guid><pubDate>Tue, 18 Aug 2026 14:51:41 +0000</pubDate><atom:updated>2026-08-18T14:51:41.757Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>கால்பந்து,FootBall,shalini,ஆத்விக்,ஷாலினி,Aathvik</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/zy9p4spn/New-Project-2026-08-18T200024.839.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற மகன்... கொண்டாட்ட புகைப்படங்களை பகிர்ந்த ஷாலினி! ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/zy9p4spn/New-Project-2026-08-18T200024.839.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திரைத்துறையைத் தாண்டி கார் பந்தயம், துப்பாக்கிச்சூடு என விளையாட்டுத்துறையிலும் கால்பதித்து தனது பன்முகத் திறமைகளை வெளிப்படுத்தி வருபவர் நடிகர் அஜித்குமார். இவரது கார் பந்தயம் தொடர்பான ஆவணப்படமும் உருவாகி வருகிறது.</p><p>இதனிடையே அஜித் மகன் ஆத்விக்கும் கால்பந்து விளையாட்டில் உள்ளது அவரது ரசிகர்கள் பலரும் அறிந்ததே. ஆத்விக் கால்பந்து விளையாடுவது தொடர்பான புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். </p><p>இந்நிலையில் ஆத்விக்கின் அணி மஹோகனி யூத் லீக் கால்பந்து தொடரில் சாம்பியம் பட்டம் வென்றுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை ஷாலினி அஜித்குமார், விளையாட்டின் முடிவைவிட, அதில் கிடைக்கும் மகிழ்ச்சிதான் முக்கியம் என பதிவிட்டுள்ளார். </p><h2>மஹோகனி யூத் லீக்</h2><p>சென்னையில் உள்ள மஹோகனி கால்பந்து கழகம் நடத்தும் இளையோர் கால்பந்துப் போட்டித் தொடர் மஹோகனி யூத் லீக். சிறுவர்கள் மற்றும் இளையோர் பிரிவினரிடையே கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்க இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>பொறியியல் பட்டதாரிகளுக்கு பொதுப்பணித்துறை ஒப்பந்தங்களில் வாய்ப்பு: அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadav-arjuna-says-engineering-students-to-participate-pwd-tenders</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadav-arjuna-says-engineering-students-to-participate-pwd-tenders#comments</comments><guid isPermaLink="false">0041543c-4de4-4f1e-875a-637b78e8043a</guid><pubDate>Tue, 18 Aug 2026 14:44:22 +0000</pubDate><atom:updated>2026-08-18T14:44:22.900Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,பொதுப்பணித்துறை,PWD,TN Assembl,அமைச்சர் ஆதவ் அர்ஜூனா,Minister Aadav Arjuna</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/iw6cwos2/arjuna.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ aadav arjuna]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/iw6cwos2/arjuna.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பணி வாய்ப்புக்காகக் காத்திருக்கும் பொறியியல் பட்டதாரிகளுக்கு பொதுப்பணித்துறை ஒப்பந்தங்களில் சலுகையுடன் வாய்ப்பு வழங்குதல்.</p><h2>பொதுப்பணித் துறை</h2><p>தமிழக சட்டசபையில் பொதுப்பணித்துறை சார்பில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:</p><p>அனுமதிக்கத்தக்க அதிகபட்ச பிரிமியம் FSI முழுமையாகப் பயன்படுத்தப்பட்டு பன்னடுக்கு எழில் மிகு மற்றும் உலகத்தரமான கட்டடங்களை அமைத்தல்.</p><p>இந்த அறிவிப்பின் மூலம் விலைமதிப்பிட முடியாத அரசு நிலங்கள் சேமிக்கப்பட்டு, அவற்றின் உச்சபட்ச பயன்பாடு உறுதி செய்யப்படும்.</p><p>பணி வாய்ப்புக்காகக் காத்திருக்கும் பொறியியல் பட்டதாரிகளுக்கு பொதுப்பணித்துறை ஒப்பந்தங்களில் சலுகையுடன் வாய்ப்பு வழங்குதல்.</p><p>ஒரு கோடி ரூபாய்வரை திட்ட மதிப்புள்ள பொதுப்ப்பணித்துறை ஒப்பந்தங்களில் பணி வாய்ப்புக்காகக் காத்திருக்கும் தகுதிவாய்ந்த பொறியியல் பட்டதாரிகளுக்கு சலுகையுடன் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படும்.</p><p>ஒரு கோடி ரூபாய் தொகுப்பு நிதியுடன் தமிழ்நாடு உள் கட்டமைப்பு மற்றும் கட்டுமானக் கழகம் நிறுவுதல்.</p><p>இந்தக் கழகம் முன்னணி தனியார் நிறுவனங்களுடன் போட்டியிடும் வகையில் உலகத் தரத்துடன் அமைக்கப்படும். இதன்மூலம் பெருநகரங்கள், தொழிற்துறை மையங்கள், தொழில்நுட்பப் பூங்காக்கள், தகவல் தொழில்நுட்ப நகரங்கள் மற்றும் வணிகப் பூங்காக்கள் ஆகியவை உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.</p><p>பணி முன்னேற்றம், தரக் கட்டுப்பாட்டைக் கண்காணித்தல் மற்றும் வெளிப்படைத் தன்மைக்காக ஒரு செயலி உருவாக்குதல்.</p><h2>ஒப்பந்ததாரர் பதிவு முறையில் மேலும் எளிமை</h2><p>பொதுப் பணித்துறையில் ஒப்பந்ததாரர்கள் பதிவு முறையை மேலும் எளிமையாக்குதல்.</p><p>அரசு மருத்துவமனைகளின் பராமரிப்புப் பணிகளை நவீனப்படுத்தும் நோக்கில் AI தொழில்நுட்பத்துடன் கட்டட மேலாண்மையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படும் என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>சென்னை மெட்ரோவுடன் இணைகிறது பறக்கும் ரெயில் திட்டம் – ரெயில்வே வாரியம் ஒப்புதல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-flying-train-service-to-merge-with-metro-rail-railway-board-nod</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-flying-train-service-to-merge-with-metro-rail-railway-board-nod#comments</comments><guid isPermaLink="false">7251a269-6fd0-4362-9b59-19ca2129a4fd</guid><pubDate>Tue, 18 Aug 2026 14:26:36 +0000</pubDate><atom:updated>2026-08-18T14:26:36.281Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>SouthernRailway,சென்னைமெட்ரோ,ChennaiMetro,MRTSChennai,பறக்கும்ரயில்,CMRLUpdates,MetroMRTSMerge,மெட்ரோஇணைப்பு,தமிழக போக்குவரத்துக் கழகம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/k9nwzddb/CMRLUpdates" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CMRL]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/k9nwzddb/CMRLUpdates?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னை</a>யின் போக்குவரத்து வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, சென்னை பறக்கும் ரெயில் சேவையை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துடன் முழுமையாக இணைப்பதற்கான இறுதி ஒப்புதலை ரெயில்வே வாரியம் வழங்கியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது.</p><h2><strong>அடுத்த 2 ஆண்டுகளில் முழு மாற்றம்!</strong></h2><p>சென்னையில் தற்போது தெற்கு ரெயில்வேயால் இயக்கப்பட்டு வரும் கடற்கரை - வேளச்சேரி இடையிலான பறக்கும் ரெயில் சேவை, அடுத்த 2 ஆண்டுகளுக்குள் முழுமையாக <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">மெட்ரோ ரெயில்</a> நிறுவனத்தின் வசம் ஒப்படைக்கப்படும். </p><p>இந்த ஒப்பந்தத்தின்படி, பறக்கும் ரெயிலின் செயல்பாடுகள், ரெயில்களை இயக்குதல் மற்றும் அனைத்து சொத்துக்களின் பராமரிப்பு உரிமைகளும் மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு மாற்றப்படவுள்ளன.</p><h2><strong>15 ஆண்டுகால நீண்ட காத்திருப்பு</strong></h2><p>பறக்கும் ரெயில் திட்டத்தை மெட்ரோவுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை மற்றும் அதற்கான பேச்சுவார்த்தைகள் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழக அரசு மற்றும் மத்திய ரெயில்வே துறைக்கு இடையே நடைபெற்று வந்தன. </p><p>பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு, தற்போது இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இணைப்பிற்கு ரெயில்வே வாரியம் பச்சைக்கொடி காட்டியுள்ளது.</p><h2><strong>புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து</strong></h2><p>மெட்ரோ நிறுவனத்துடன் பறக்கும் ரெயில் திட்டத்தை இணைப்பதற்கான அதிகாரப்பூர்வ புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தில்,</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88">பறக்கும் ரெயில்</a> நிலையங்கள், தண்டவாளங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளின் சொத்துக்களை மெட்ரோவிடம் ஒப்படைத்தல். எதிர்காலத்தில் ரெயில்களை இயக்குவது மற்றும் பராமரிப்பது தொடர்பான முக்கிய விவரங்கள். ரெயில் நிலையங்களைப் புதுப்பித்து மெட்ரோ தரத்திற்கு உயர்த்துவது போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.</p><h2>பயணிகளுக்குக் கிடைக்கப்போகும் நன்மைகள் என்ன?</h2><p>இந்த இணைப்பின் மூலம் சென்னை மக்களுக்குப் பல்வேறு போக்குவரத்து வசதிகள் மேம்படவுள்ளன.</p><p>பயணிகள் மெட்ரோ மற்றும் பறக்கும் ரெயில் இரண்டிற்கும் சேர்த்து ஒரே டிக்கெட் அல்லது ஸ்மார்ட் கார்டைப் பயன்படுத்தும் வசதி கொண்டு வரப்படும்.</p><p>தற்போது போதிய பராமரிப்பின்றி இருக்கும் பறக்கும்ரெயில் நிலையங்கள் அனைத்தும் மெட்ரோ ரெயில் நிலையங்களைப் போலத் தூய்மையாகவும், நவீன வசதிகளுடனும் (லிஃப்ட், எஸ்கலேட்டர், பாதுகாப்பு வசதிகள்) மாற்றப்படும்.</p><p>மெட்ரோ மற்றும் பறக்கும் ரெயில் சேவைகள் ஒன்றோடொன்று தடையின்றி இணைக்கப்படுவதால் பயண நேரம் பெருமளவு குறையும்.</p>]]></content:encoded></item><item><title>வரலாறு காணாத உச்சத்தில் சர்க்கரை விலை – வரியில்லா இறக்குமதிக்கு மத்திய அரசு அதிரடித் திட்டம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/sugar-prices-hit-unprecedented-high-centre-plans-duty-free-import</link><comments>https://www.maalaimalar.com/news/national/sugar-prices-hit-unprecedented-high-centre-plans-duty-free-import#comments</comments><guid isPermaLink="false">dde6954c-1fc4-425d-a4b7-9c227ec30bb5</guid><pubDate>Tue, 18 Aug 2026 14:21:39 +0000</pubDate><atom:updated>2026-08-18T14:21:39.280Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>SugarPriceSpike,சர்க்கரைவிலை உயர்வு,India Sugar Imports,Duty Free Imports,வரியில்லா இறக்குமதி,Government Measures,Sugar Shortage</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/4c21yzav/Sugar-Price-Spike" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sugar Price Spike ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/4c21yzav/Sugar-Price-Spike?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் வரவிருக்கும் தொடர் பண்டிகைக் காலங்களை முன்னிட்டு, <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88">சர்க்கரை</a>யின் தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளதால் அதன் விலை அதிரடியாக உயர்ந்து வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது. </p><p>இதனைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டுச் சந்தையில் சர்க்கரை விநியோகத்தை அதிகரிக்கவும் "வரியில்லா சர்க்கரை இறக்குமதி" உள்ளிட்ட பல்வேறு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81"> மத்திய அரசு</a> தீவிரமாக ஆலோசித்து வருகிறது.</p><h2>ஒரே மாதத்தில் 20% விலை உயர்வு!</h2><p>இந்தியாவின் முக்கிய சர்க்கரை வர்த்தக மையங்களில் ஒன்றான மகாராஷ்டிராவின் கோலாப்பூரில், மொத்த விற்பனையில் 100 கிலோ (ஒரு குவிண்டால்) சர்க்கரையின் விலை நடப்பு ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து இதுவரை சுமார் 20% வரை உயர்ந்துள்ளது.</p><p>தற்போது சர்க்கரை விலை ஒரு குவிண்டாலுக்கு ரூ.5,350 என்ற வரலாற்றுச் சாதனை அளவைத் தொட்டுள்ளது. உள்நாட்டில் சர்க்கரை இருப்பு போதுமான அளவு இருப்பதாக அரசு தரப்பில் கூறப்பட்டாலும், சந்தையில் சர்க்கரைக்கான தட்டுப்பாடு நிலவுவதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.</p><h2>பண்டிகைக் கால தட்டுப்பாடே காரணம்</h2><p>ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் விநாயகர் சதுர்த்தி, தசரா, தீபாவளி போன்ற முக்கியப் பண்டிகைகள் அடுத்தடுத்து வருவதால், இனிப்புகள் மற்றும் பலகாரங்கள் தயாரிப்பிற்கு சர்க்கரையின் தேவை மிக அதிகமாக இருக்கும். </p><p>இந்த திடீர் தேவையைச் சமாளிக்க, வெளிநாடுகளில் இருந்து சர்க்கரையை இறக்குமதி செய்வது மட்டுமே தற்போதைய ஒரே தீர்வு என மும்பை சர்க்கரை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><h2>விலையைக் குறைக்க மத்திய அரசு கையில் எடுக்கும் 4 முக்கிய ஆயுதங்கள்</h2><p>சர்க்கரை விலையைக் கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு தனி ஒரு நடவடிக்கையை மட்டும் நம்பியிருக்காமல், பல்வேறு உத்திகளைப் பரிசீலித்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சர்க்கரைக்கான இறக்குமதி வரியைக் குறைத்து, குறைந்த விலையில் சர்க்கரை கிடைக்க வழிவகை செய்தல். </p><p>இந்தியா கடந்த 10 ஆண்டுகளில் சர்க்கரையை பெரிய அளவில் இறக்குமதி செய்யாத நிலையில், தற்போது இந்த முடிவை எடுக்க அரசு முன்வந்துள்ளது. பெரிய மொத்த வியாபாரிகள் சர்க்கரையைப் பதுக்கி வைத்துச் செயற்கைத் தட்டுப்பாட்டை உருவாக்குவதைத் தடுக்க, அவர்கள் எவ்வளவு சர்க்கரையை இருப்பு வைக்கலாம் என்பதற்கான உச்ச வரம்பைக் குறைப்பது.</p><p>சர்க்கரை ஆலைகள் மாதந்தோறும் உள்நாட்டுச் சந்தைக்கு விடுதலை செய்யும் சர்க்கரையின் அளவை அதிகரிப்பது. அக்டோபர் முதல் தொடங்கவுள்ள புதிய கரும்புப் பருவத்தில், எத்தனால் தயாரிப்பிற்காகப் பயன்படுத்தப்படும் கரும்பின் அளவைக் குறைத்து, அதை முழுமையாகச் சர்க்கரை உற்பத்திக்குத் திருப்புவது. இதன் மூலம் சர்க்கரை உற்பத்தி இந்தியாவில் அதிகரிக்கும்.</p><p>உலகிலேயே சர்க்கரையை மிக அதிகமாகப் பயன்படுத்தும் நாடு இந்தியாதான் என்பதால், <a href="https://www.maalaimalar.com/topic/india">இந்தியா</a>வின் இந்த இறக்குமதி முடிவு சர்வதேச அளவிலும் சர்க்கரை சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவின் கடனை இன்றே அடைக்க யோசனைக்கூறிய அமைச்சர் சரத்குமார்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sarathkumar-proposes-a-plan-to-pay-off-indias-debt-today-itself</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sarathkumar-proposes-a-plan-to-pay-off-indias-debt-today-itself#comments</comments><guid isPermaLink="false">53f6ce25-9375-4881-bfc4-2ccf596d4f28</guid><pubDate>Tue, 18 Aug 2026 14:14:17 +0000</pubDate><atom:updated>2026-08-18T14:14:17.924Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,Minister Sarathkumar,அமைச்சர் சரத்குமார்,INDIA’S DEBT,இந்தியக் கடன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/3gzutpp2/New-Project-2026-08-18T191757.409.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இந்தியாவின் கடனை இன்றே அடைக்க யோசனைக்கூறிய அமைச்சர் சரத்குமார்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/3gzutpp2/New-Project-2026-08-18T191757.409.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் மொத்தக் கடன் தொகை 2027ம் ஆண்டில் ரூ. 214 லட்சம் கோடியாக இருக்கும் என 2026-27ம் ஆண்டு நிதியாண்டு அறிக்கை தாக்கலில் மத்திய அரசு தெரிவித்தது. </p><p>மார்ச் 2026 வரை மொத்தக் கடன் ரூ.197 லட்சம் கோடியாக இருக்கும் நிலையில், மொத்த நிலுவைக் கடன்கள் ஓராண்டில் கிட்டத்தட்ட ரூ. 17.6 லட்சம் கோடி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இதனிடையே தமிழ்நாடு அரசின் கடனும் சமீப காலமாக பெரும் விவாதப்பொருளாக மாநில அரசியலில் உருவெடுத்துள்ளது. தமிழ்நாடு அரசின் மொத்த கடன்தொகை தற்போதுவரை ரூ.13.18 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. </p><p>இந்நிலையில் இந்தியாவின் கடனே இன்றே அடைக்கலாம் என தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் ஒரு யோசனையை வழங்கியுள்ளார். இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்யை புகழ்ந்து பேசிய அவர்.,</p><p>“முதலமைச்சரின் சேவையை பாராட்டுவோருக்கு சேவை வரி விதித்தால், இந்தியாவின் கடனை இன்றே அடைக்கலாம்.” என தெரிவித்துள்ளார்.  </p>]]></content:encoded></item><item><title>‘ஜெயிலர் 2’ படத்தின் முதல் பாடல் ஆக.21-ல் வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-first-song-from-the-movie-jailer-to-be-released-on-august-21</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-first-song-from-the-movie-jailer-to-be-released-on-august-21#comments</comments><guid isPermaLink="false">f62f26e5-a8a8-444c-8256-4e3ec37e8eb2</guid><pubDate>Tue, 18 Aug 2026 13:45:12 +0000</pubDate><atom:updated>2026-08-18T13:45:12.398Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rajinikanth,ரஜினிகாந்த்,Jailer 2,ஜெயிலர் 2,Anirudh Ravichander,அனிருத் ரவிச்சந்தர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/tehybdi3/New-Project-2026-08-18T191153.482.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘ஜெயிலர் 2’ படத்தின் முதல் பாடல் ஆக.21-ல் வெளியீடு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/tehybdi3/New-Project-2026-08-18T191153.482.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023-ல் வெளியாகி வரவேற்பை பெற்றப் படம் ஜெயிலர். ஜெயிலரின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் ‘ஜெயிலர் 2’ உருவாகி வருகிறது. இப்படத்தையும் இயக்குநர் நெல்சனே இயக்குகிறார். </p><p>சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க, அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். படம் அக்டோபர் 15ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் ஆக.21ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">The Feast is ready! <a href="https://x.com/hashtag/Jailer2?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Jailer2</a> First Single releasing on August 21 <a href="https://x.com/rajinikanth?ref_src=twsrc%5Etfw">@rajinikanth</a> <a href="https://x.com/Nelsondilpkumar?ref_src=twsrc%5Etfw">@Nelsondilpkumar</a> <a href="https://x.com/anirudhofficial?ref_src=twsrc%5Etfw">@anirudhofficial</a> <a href="https://x.com/vijaykartikdop?ref_src=twsrc%5Etfw">@vijaykartikdop</a> <a href="https://x.com/Nirmalcuts?ref_src=twsrc%5Etfw">@Nirmalcuts</a> <a href="https://x.com/ChethanDsouza?ref_src=twsrc%5Etfw">@ChethanDsouza</a> <a href="https://x.com/AlwaysJani?ref_src=twsrc%5Etfw">@AlwaysJani</a> <a href="https://x.com/KiranDrk?ref_src=twsrc%5Etfw">@KiranDrk</a> <a href="https://x.com/hashtag/PallaviSingh?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#PallaviSingh</a> <a href="https://x.com/valentino_suren?ref_src=twsrc%5Etfw">@valentino_suren</a> <a href="https://x.com/hashtag/SantoshRaju?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#SantoshRaju</a> <a href="https://x.com/kabilanchelliah?ref_src=twsrc%5Etfw">@kabilanchelliah</a> <a href="https://x.com/RIAZtheboss?ref_src=twsrc%5Etfw">@RIAZtheboss</a> <a href="https://x.com/hashtag/Jailer2FromOct15?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Jailer2FromOct15</a> <a href="https://t.co/PKPNXvONXH">pic.twitter.com/PKPNXvONXH</a></p>&mdash; Sun Pictures (@sunpictures) <a href="https://x.com/sunpictures/status/2089691281601729000?ref_src=twsrc%5Etfw">August 18, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>‘கூட்டணி அரசில் அங்கம் வகிப்பதன் மூலம் நாங்களும் ஆளுங்கட்சிதான்’ - திருமாவளவன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/by-being-part-of-the-coalition-government-we-too-are-the-ruling-party-thirumavalavan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/by-being-part-of-the-coalition-government-we-too-are-the-ruling-party-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">8ea53d88-a05b-4243-bb75-ea5af1d114a4</guid><pubDate>Tue, 18 Aug 2026 13:28:42 +0000</pubDate><atom:updated>2026-08-18T13:28:42.226Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,thirumavalavan,திருமாவளவன்,விசிக,vck,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/6am3cfmf/New-Project-2026-08-18T185820.306.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘கூட்டணி அரசில் அங்கம் வகிப்பதான் மூலம் நாங்களும் ஆளுங்கட்சிதான்’ - திருமாவளவன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/6am3cfmf/New-Project-2026-08-18T185820.306.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தவெக - விசிக கூட்டணித் தொடர்பாக முதலமைச்சர் விஜய்யை, விசிகத் தலைவர் திருமாவளவன் இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் பேசியதாவது;</p><p>“தவெகவோடு நாங்கள் இணைந்து 100 நாட்கள் ஆகின்றன. அவர்களோடு இணைந்து தொடர்ந்து பயணிப்போம் என்பதை நேற்று (ஆக.17) மாநாட்டிலேயே நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம்.</p><p>ஆளுங்கட்சியோடு பயணத்தோம், இனி ஆளுங்கட்சியாக பரிணமிப்போம் என்கிற முழக்கத்தையும் மாநாட்டில் முன்வைத்தேன். இன்று கூட்டணி அரசில் அங்கம் வகிப்பதன்மூலம் நாங்களும் ஒரு ஆளுங்கட்சி அடையாளத்தை பெற்றிருக்கிறோம் என்பது ஒரு வளர்ச்சி.</p><p>இதனை தமிழ்நாடு மக்கள் எங்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். அவர்கள் விருப்பப்படி எங்களது அரசின் நிலைப்பாடு இருக்கும்.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>பிலிப்பைன்ஸ் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி</title><link>https://www.maalaimalar.com/news/world/two-killed-in-school-shooting-in-southern-philippines</link><comments>https://www.maalaimalar.com/news/world/two-killed-in-school-shooting-in-southern-philippines#comments</comments><guid isPermaLink="false">4de940b5-3ca7-4ff3-9071-5ca4ba914408</guid><pubDate>Tue, 18 Aug 2026 13:27:32 +0000</pubDate><atom:updated>2026-08-18T13:27:32.295Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>துப்பாக்கிச்சூடு,Philippines,பிலிப்பைன்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/2kqz6ftm/Philippines0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிலிப்பைன்ஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/2kqz6ftm/Philippines0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் இன்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்தனர். தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த இரண்டு மாதங்களுக்குள் நடைபெற்ற 2-வது சம்பவம் இதுவாகும்.</p><p>தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள ஜம்போங்கா நகரில் உள்ள தனியார் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அடெினியோ டி ஜம்போங்கா (Ateneo de Zamboanga) பல்கலைக்கழகத்துடன் இணைந்த பள்ளியில் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் கைத்துப்பாக்கி மற்றும் ரைஃபிளைப் பள்ளி வளாகத்திற்குள் கொண்டு வந்து, வகுப்பறைக்குள் இருந்த மாணவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டதாகக் காவல்துறையினர் முதற்கட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.</p><p>GMA News வெளியிட்ட காணொளியில், பலமுறை துப்பாக்கிச் சத்தம் கேட்டபோது மாணவர்கள் பாதுகாப்பிற்காக குனிந்து பதுங்கும் வகையிலான வகுப்பறைக்குள்ளான குழப்பமான காட்சிகள் இடம்பெற்றிருந்தன.</p><h2>10-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு</h2><p>உயிரிழந்தவர் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் என்று காவல்துறை தெரிவித்தது. துப்பாக்கிச் சூடு நடத்திய 9-ம் வகுப்பு மாணவர், பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகக் காவல்துறை கூறியுள்ளது. மேலும் இருவர் காயமடைந்தனர்.</p><p>மத்திய பிலிப்பைன்ஸின் டக்லோபன் (Tacloban) நகரில் உள்ள ஒரு பொது உயர்நிலைப் பள்ளியில் கடந்த ஜூன் மாதம் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. முந்தைய சம்பவத்தில், பள்ளியைச் சேர்ந்த இருவர் வளாகத்திற்குள் துப்பாக்கியால் சுட்டதில் குறைந்தது மூன்று மாணவர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 20 பேர் காயமடைந்தனர்.</p><p>பிலிப்பைன்ஸில் துப்பாக்கி வைத்திருப்பதற்கான விதிமுறைகள், பின்னணி சரிபார்ப்பு மற்றும் உளவியல் பரிசோதனை உள்ளிட்டவை கடுமையானவை என்பதால், அங்கு பள்ளிகளில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரிதாகவே நிகழ்கின்றன. இருப்பினும், சட்டவிரோத துப்பாக்கிகள் புழக்கத்தில் உள்ளன.</p> <h2>அதிபர் உத்தரவு</h2><p>பள்ளிகளில் வன்முறையைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தீர்மானிக்கவும், இதுகுறித்து விசாரணை நடத்தவும் சட்ட அமலாக்க முகமைகளுக்கு பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் உத்தரவிட்டார்.</p><p>"நமது குழந்தைகள் கல்வி கற்கவும், வளரவும், தங்கள் எதிர்கால வாழ்க்கையைப் பற்றி கனவு காணவும் நாம் அவர்களை ஒப்படைக்கும் இடங்கள்தான் நமது பள்ளிகள். அவை நம் நாட்டின் மிக பாதுகாப்பான இடங்களாகவும் இருக்க வேண்டும்," என்று மார்கோஸ்  அறிக்கையில் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>காலே டெஸ்ட்: நான்காம் நாள் முடிவில் இலங்கை 84/4 - வெற்றியின் விளிம்பில் இந்தியா</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/srilanka-need-288-runs-to-win-in-lats-day-against-india-first-test</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/srilanka-need-288-runs-to-win-in-lats-day-against-india-first-test#comments</comments><guid isPermaLink="false">35e1d39d-a4b3-45bc-998b-cb4da38318d7</guid><pubDate>Tue, 18 Aug 2026 13:19:44 +0000</pubDate><atom:updated>2026-08-18T13:19:44.650Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rishabh Pant,SLvIND,ரிஷப் பண்ட்,Manav suthar,மானவ் சுதார்,இலங்கை இந்தியா தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/mqsjsjcm/manav.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ manav suthar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/mqsjsjcm/manav.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற கடைசி நாளில் 288 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 6 விக்கெட்டுகள் உள்ளன.</p><p>இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.</p><p>இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.</p><h2>சதமடித்த படிக்கல்</h2><p>அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 462 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தேவ்தத் படிக்கல் 167 ரன்னும், கே.எல்.ராகுல் 82 ரன்னும், துருவ் ஜுரல் 51 ரன்னும் எடுத்தனர்.</p><p>இலங்கை சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 4 விக்கெட்டும், கேஷரா நுவந்தா 3 விக்கெட்டும், அசிதா பெர்னாண்டோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><h2>சோனல் தினுஷா சதம்</h2><p>தொடர்ந்து ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 284 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் சோனல் தினுஷா 100 ரன்னில் அவுட்டானார். நிரோஷன் டிக்வெலா 80 ரன்னில் ஆட்டமிழந்தார்.</p><h2>மானவ் சுதர் 4 விக்கெட்</h2><p>இந்தியா சார்பில் மானவ் சுதர் 4 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><h2>ரிஷப் பண்ட் அரை சதம்</h2><p>178 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி 2வது இன்னிங்சில் 193 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ரிஷப் பண்ட் அரை சதமடித்து 66 ரன்னில் அவுட்டானார். படிக்கல் 44 ரன்னும், கே.எல்.ராகுல் 35 ரன்னும் எடுத்தனர்.</p><p>இலங்கை சார்பில் அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட்டும், லஹிரு குமாரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><h2>இலங்கைக்கு இலக்கு 372</h2><p>இதன்மூலம் 372 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் நிஷான் மதுஷ்கா 6 ரன்னில் அவுட்டானார். பசிந்து சுரியபந்தாரா டக் அவுட்டானார். அடுத்து இறங்கிய கமிந்து மெண்டிஸ் 2 ரன்னில் வெளியேறினார்.</p><p>மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் லஹிரு உதாரா 16 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 47 ஆக இருந்தது.</p><p>5வது விக்கெட்டுக்கு கேப்டன் தனஞ்செய டி சில்வா-சோனல் தினுஷா ஜோடி இணைந்து நிதானமாக ஆடியது.</p><p>இறுதியில், நான்காம் நாள் முடிவில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்கு 84 ரன்கள் எடுத்துள்ளது. டி சில்வா 31 ரன்னும், சோனல் தினுஷா 25 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.</p><p>இந்தியா சார்பில் மானவ் சுதார் 2 விக்கெட் வீழ்த்தினர்.</p><p>நாளை கடைசி நாள் என்பதால் மேலும் 288 ரன்களை எடுத்தால் இலங்கைக்கும், மேலும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினால் இந்திய அணிக்கும் வெற்றி கிடைக்கும். எனவே காலே டெஸ்ட் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>டிரம்ப் விடுத்த திடீர் மிரட்டல்: 2 வாரத்தில் இல்லாத அளவிற்கு கச்சா எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு</title><link>https://www.maalaimalar.com/news/world/crude-oil-prices-hit-2-week-high-aboveamid-trump-oman-threat</link><comments>https://www.maalaimalar.com/news/world/crude-oil-prices-hit-2-week-high-aboveamid-trump-oman-threat#comments</comments><guid isPermaLink="false">e8c0660e-d2b6-455a-b2df-2146e6375a37</guid><pubDate>Tue, 18 Aug 2026 13:12:39 +0000</pubDate><atom:updated>2026-08-18T13:12:39.326Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டொனால்டு டிரம்ப்,Donald Trump,கச்சா எண்ணெய்,Crude oil</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/ahmcts2v/CrudeOil001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கச்சா எண்ணெய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/ahmcts2v/CrudeOil001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு ஆசியாவில் மோதல் தீவிரமடைதல் மற்றும் ஓமன் மீது <a href="https://www.maalaimalar.com/news/world/usiran-tensions-trump-warns-unconditional-surrender-and-tougher-sanctions">டிரம்ப்</a> விடுத்த மிரட்டல் ஆகியவற்றால் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 91 டாலருக்கும் அதிகமாக உயர்ந்து, கடந்த இரண்டு வாரங்களில் இல்லாத உச்சத்தை எட்டியது.</p><p>மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் மோதல் சூழலில், ஓமன் மீது குண்டு வீசுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விடுத்த சமீபத்திய மிரட்டலை முதலீட்டாளர்கள் உன்னிப்பாக கவனித்து வரும் நிலையில், இன்று கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 91 டாலருக்கும் அதிகமாக உயர்ந்து, கடந்த இரண்டு வாரங்களில் இல்லாத உச்சத்தை எட்டியது.</p><p>ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் அல்லது போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான எந்த அறிகுறியும் இல்லாத சூழலிலும், பேச்சுவார்த்தைக்கான 60 நாள் காலக்கெடு திங்கட்கிழமையுடன் முடிவடைந்த நிலையிலும், இந்த மோதல் முடிவுக்கு வர எவ்வளவு காலம் ஆகும் என்பது குறித்த நிச்சயமற்ற தன்மையிலேயே முதலீட்டாளர்கள் உள்ளனர்.</p><h2>பிரெண்ட் கச்சா எண்ணெய்</h2><p>Investing.com-இன் தரவுகளின்படி, முந்தைய வர்த்தக நாள் முடிவில் பீப்பாய் ஒன்றுக்கு 90.87 டாலராக இருந்த உலகளாவிய கச்சா எண்ணெய் அளவுகோலான 'பிரெண்ட்' (Brent) கச்சா எண்ணெயின் விலை, செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தின்போது பீப்பாய் ஒன்றுக்கு 91.84 டாலர் என்ற உச்சத்தை எட்டியது.</p><p>ஜூலை 30, 2026 அன்று பீப்பாய் ஒன்றுக்கு சுமார் 93 டாலராக இருந்த விலையுடன் ஒப்பிடுகையில், தற்போது கச்சா எண்ணெய் விலைகள் மீண்டும் உயர்ந்து இரண்டு வாரங்களுக்கும் மேலான உச்சத்தை எட்டியுள்ளதாக வர்த்தகத் தரவுகள் காட்டுகின்றன.</p><p>வர்த்தகத் தரவுகளின்படி, 2026-ஆம் ஆண்டில் இதுவரை உலக சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 44%-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 30% அதிகரித்துள்ளது.</p><p>அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே இறுதி அமைதி ஒப்பந்தம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் கடந்த மூன்று மாதங்களில் எரிசக்தி விலைகள் 15% வரை குறைந்திருந்தாலும், தற்போது அத்தகைய ஒப்பந்தத்திற்கான எந்த அறிகுறியும் இல்லாததால் விலைகள் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளன.</p><h2>கடந்த ஒரு மாதத்தில் 3 சதவீதம் உயர்வு</h2><p>Investing.com தரவுகளின்படி, கடந்த ஒரு மாதத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 3%-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. கடந்த ஐந்து வர்த்தக காலத்தில் விலை 2%-க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.</p><p>பங்குச் சந்தையின் முந்தைய நாள் வர்த்தக முடிவில் ஒரு பீப்பாய்க்கு (bbl) 90.87 டாலராக இருந்த ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை, செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3:03 மணி நிலவரப்படி 0.14% உயர்ந்து 91.01 டாலராக வர்த்தகமானது.</p><h2>எண்ணெய் விலை ஏன் மீண்டும் உயர்கிறது?</h2><p>இறுதி அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கான 60 நாள் காலக்கெடு முடிந்த பின்னரும், ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) விவகாரத்தில் ஓமன் தலையிட்டால் அந்நாட்டின் மீது குண்டு வீசுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த சமீபத்திய மிரட்டலாலும் எண்ணெய் விலை இரண்டு வாரங்களுக்கும் மேலான உச்சத்தை எட்டியது.</p><p>ஓமன் குறுக்கே நின்றால், நாங்கள் அவர்கள் மீது கடுமையான குண்டுவீச்சை நடத்துவோம் என்று டொனால்ட் டிரம்ப் நேற்று கூறியிருந்தார்.</p><p>உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தி குறித்து ஓமனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஈரான் தெரிவித்தது. இருப்பினும், இந்த பேச்சுவார்த்தைகள் சிக்கலான நிலையில் உள்ளன.</p><p>மேற்கு ஆசியாவில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமெரிக்காவின் முயற்சிகளுக்கு ஓமன் இடையூறு விளைவித்தால் மட்டுமே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிரம்ப் தனது மிரட்டலில் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அன்று பிரிவு இன்று ஒற்றுமை... அப்பா - மகன் சண்டையால் நின்றுபோன திரைப்படம் - இயக்குநர் சேரன் வேதனை!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/conflict-then-unity-now-a-film-halted-by-a-father-son-feud-director-cheran-expresses-his-anguish</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/conflict-then-unity-now-a-film-halted-by-a-father-son-feud-director-cheran-expresses-his-anguish#comments</comments><guid isPermaLink="false">c62aa709-b33b-4d5a-b7d8-17f0aeec40ab</guid><pubDate>Tue, 18 Aug 2026 13:04:02 +0000</pubDate><atom:updated>2026-08-18T13:04:02.775Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Ramadoss,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,இயக்குநர் சேரன்,Director Cheran,ராமதாஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/j6blsw6v/New-Project-2026-08-18T183341.460.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்று சண்டை இன்று ஒற்றுமை... அப்பா - மகன் சண்டையால் நின்றுபோன திரைப்படம் - இயக்குநர் சேரன் வேதனை!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/j6blsw6v/New-Project-2026-08-18T183341.460.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்தாண்டு பாமக நிறுவனர் ராமதாஸின் சுயசரிதைப் படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகி இருந்தன. அந்த சுயசரிதைப் படத்தை இயக்குநர் சேரன் இயக்கவிருப்பதாகவும், நடிகர் ஆரி ராமதாஸ் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.</p><p>படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் எல்லாம் வெளியிடப்பட்டன. ஆனால் அதன்பின் அப்படம் குறித்த எந்த தகவல்களும் வெளிவரவில்லை. இதுதொடர்பான கேள்விக்கும் நடிகர் ஆரி, இயக்குநர் சேரன் அப்டேட்டுகளை வெளியிடுவார் என தெரிவித்திருந்தார். </p><p>இருப்பினும் படம் தொடர்பாக எந்தத் தகவல்களும் வெளிவராமல் படம் கைவிடப்பட்டது. இந்நிலையில் இப்படம் கைவிடப்பட்டது தொடர்பாக இயக்குநர் சேரன் பேசியுள்ளார். </p><p>இயக்குநர் சங்ககிரி ராஜ்குமாரின் ‘ஒன் மேன்’ திரைப்படம் ஆகஸ்ட் 21-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளநிலையில், இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் ராமதாஸின் படம் தொடர்பாக பேசிய சேரன்.,</p><p>“ராமதாஸ் படத்திற்கு எனக்கு முன்னால் கதை எழுத அமர்ந்தவர் சங்ககிரி ராஜ்குமார்தான். அவர்தான்  படத்தை இயக்கியிருக்க வேண்டியது. சில காரணங்களால், தயாரிப்பாளர்கள் என்னை அணுகினார்கள். </p><p>அப்போது ராஜ்குமார் நிறைய குறிப்புகளை எழுதி வைத்துள்ளதாகவும், அதை நான் எடுத்துக்கொள்ளும்படியும் கூறும்போது எனக்கு ஒரு நெருடல். </p><p>அவர் எடுக்கவிருக்கும் படத்தை, அவர் எடுக்க வேண்டும் என்று நினைத்து எழுதிய படத்தை நான் ஏன் எடுக்க வேண்டும் என்று சொல்லி, நான் ராமதாஸிடம், “தம்பி எடுக்கட்டும், நான் வேணா கூட இருந்து ஆதரவு தருகிறேன். ஏனென்றால், அவருக்கு ஒரு கனவு இருந்திருக்கும், அவருக்கு ஒரு அடையாளம் வேண்டும். அவர் மிக அழகாக அந்தக் கதையைத் தொகுத்திருப்பார்.</p><p>அப்போது அதைப்போய் நான் எடுத்தால், அவர் உழைப்பைத் தட்டிப்பறித்தது போல் இருக்கும்” என்று அவரிடம் சொன்னேன்.</p><p>அவர்கள் பின்னர் பேசிவிட்டு, “இல்லை, இந்தக் கதை இன்னும் சிறப்பாக வர வேண்டும், இப்படி வர வேண்டும், அப்படி வர வேண்டும்” என்று தயாரிப்பாளர்கள் வற்புறுத்தியபோது, நான் ராஜ்குமாரைக் கூப்பிட்டு, “தம்பி, என்னால் மறுக்க முடியவில்லை, வேறு வழியில்லை. </p><p>பெரியவர்கள் கேட்கும்போது அதை வேண்டாம் என்று தூக்கி எறிந்துவிட்டு வரும் அளவுக்கு அவர்களது அன்பை உதாசினப்படுத்த முடியாது. வேறு வழியில்லாமல் நான் ஒப்புக்கொள்கிறேன் தம்பி” என்று அவரிடம் சொன்னேன். அதற்கு அவனுக்கு என் மீது வருத்தம் இருந்தது.</p><p>ஆனால் இப்போது அந்தப் படம் உனக்கும் இல்லை, எனக்கும் இல்லை என்றாகிவிட்டது. அந்தப் படத்திற்காக இவரது உழைப்பு 2 வருடம், என்னுடைய உழைப்பு கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் வீணானது. </p><p>நாங்கள் ஒரு 15 பேர் கொண்ட குழுவாகச் சென்று, இடங்களைப் பார்த்து, படப்பிடிப்புத் தளங்களைத் தேடி, எத்தனையோ இடங்களுக்கு அலைந்து, காடுகளையும் மேடுகளையும் கடந்து ஊர்களை கண்டுபிடித்தோம்.</p><p>காரணம் அது 1987-ஆம் ஆண்டு காலத்து வரலாறு. 1987-லிருந்து நடந்த சம்பவங்களை முழுமையாகப் பதிவு செய்ய வேண்டும். இப்போது அந்த கிராமங்களைத் தேடினால், 2026-ஆம் ஆண்டில் 1987-ன் காலத்து கிராமங்களை எங்கே போய் தேடுவது?</p><p>தமிழ்நாடு முழுவதும் அலைந்து அந்தக்காலத்து கிராமங்களையும், சாலைகளையும் கண்டறிந்து, அப்போதைய மனிதர்களைப் போன்ற தோற்றமுடைய ஆட்களைக் கண்டுபிடித்தோம். காரணம் அந்த காலத்து ஆட்களின் தோற்றம் என்பது வேறு. இப்போது அதுபோல யாரும் இல்லை.</p><p>அதனைவைத்து ஒன்றரை வருடமாக தகவல்களை திரட்டி வைத்திருந்தால், அந்தப் படம் நடக்கவில்லை. இது எவ்வளவு பெரிய வலி. அவர்கள் வேண்டுமானால் சொல்லலாம், “நாங்கள் உங்களுக்கு அந்தப் பணி செய்த வரைக்கும் சம்பளம் கொடுத்துவிட்டோமே” என்று. ஆனால் எங்களுக்குத் தேவை சம்பளம் அல்ல, நான் எடுத்தப் படம் வெளியே வரவேண்டும்.</p><p>ஆனால் அது நடக்கவில்லை, நின்றுவிட்டது. அதற்கு காரணம் என்ன அப்பா-மகன் சண்டை போட்டனர், படம் நின்றுவிட்டது. இப்போது அப்பா- மகனும் சேர்ந்துவிட்டார்கள், ஆனால் படம் எடுக்க ஆளில்லை. என்ன செய்வது?</p><p>இதுதான் சினிமாத் துறையின் அவலம். அதுபோலத்தான் சினிமா என்பது எங்கு நம்மைத் தூக்கி நிறுத்தும், எங்கு நம்மை ஏமாற்றும், எங்கு நம்மை உட்கார வைக்கும் என்று யாருக்கும் தெரியாது.” என சேரன் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>இடஒதுக்கீடு இல்லை என்றால், பாஜக-வுக்கு தோல்வி: கூட்டணி கட்சி மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/if-bjp-fails-it-will-also-be-voted-out-up-minister-on-nishad-reservation</link><comments>https://www.maalaimalar.com/news/national/if-bjp-fails-it-will-also-be-voted-out-up-minister-on-nishad-reservation#comments</comments><guid isPermaLink="false">d94deba1-2f5a-427c-848a-6143df6eb218</guid><pubDate>Tue, 18 Aug 2026 12:54:58 +0000</pubDate><atom:updated>2026-08-18T12:54:58.995Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,Yogi Adityanath,யோகி ஆதித்யநாத்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/i07b33pm/SanjayNishad.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சஞ்சய் நிஷாத்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/i07b33pm/SanjayNishad.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு உ.பி.யில் நடைபெற்று வருகிறது. யோகி ஆதித்யநாத் தலைமையில் இரண்டு முறை பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. பா.ஜ.க. 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க முனைப்புடன் உள்ளது.</p><p>இந்த நிலையில் பாஜக கூட்டணியில் உள்ள நிஷாத் கட்சியைச் சேர்ந்த சஞ்சய் நிஷாத் அமைச்சர், பாஜக இட ஒதுக்கீடு வழங்கவில்லை என்றால் தோல்வியை சந்திக்கும் எனத் தெரிவித்துள்ளார்.</p><h2>நிஷாத் சமூகம்</h2><p>சஞ்சய் நிஷாத், நிஷாத் சமூகத்தை சேர்ந்தவர்கள். நிஷாத் சமூகத்திற்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.</p><p>உத்தர பிரதேச மாநில அமைச்சரவையில் இடம் பிடித்திருக்கும் மீன் வளத்துறை அமைச்சராக இருக்கும் சஞ்சய் நிஷாத் கூறியதாவது:-</p><p>யானை (பி.எஸ்.பி.), சைக்கிள் (சமாஜ்வாதி) மற்றும் கை (காங்கிரஸ்) நிஷாத் இட ஒதுக்கீட்டிற்கான கோரிக்கையை நிராகரித்தது. இதனால் அவர்கள் அதிகாரத்தில் இருந்து நீக்கப்பட்டார்கள். பாஜக-வும் கோரிக்கையை நிறைவேற்ற தவறினால், அவர்களும் ஆட்சியில் இருந்து அகற்றப்படுவார்கள். எங்களுடைய மூதாதையர்கள் நாட்டின் சுதந்திரத்தை நிலைநாட்டியதுடன், அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படுவதையும் உறுதி செய்தனர்.</p><p>நாங்கள் இடஒதுக்கீட்டை விரும்புகிறோம். பாஜக அரசு இதை கட்டாயம் அமல்படுத்த வேண்டும். முன்னதாகவே, இந்த விவகாரத்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் அரசு கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நாங்கள் உங்களுடைய வழக்கறிஞர். பாஜக நீதிபதி. எனினும், எங்களுக்கு இடஒதுக்கு வழங்க வேண்டும்.</p><p>இவ்வாறு சஞ்சய் நிஷாத் தெரிவித்துள்ளார்.</p><p>அத்துடன் சொந்த பூத்களை தயார் செய்யவும், கட்சியை வலுப்படுத்தவும் தொண்டர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.400 கோடியில் சென்னையில் முக்கோண வழித்தட சாலை: அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadav-arjuna-announce-tn-assembly-for-triangle-road-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadav-arjuna-announce-tn-assembly-for-triangle-road-in-chennai#comments</comments><guid isPermaLink="false">6932b807-6052-4e03-be35-ec95a15adb2e</guid><pubDate>Tue, 18 Aug 2026 12:29:59 +0000</pubDate><atom:updated>2026-08-18T12:29:59.289Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,Minister Aadav Arjuna</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/5ou1flwr/aadav.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ minister aadav arjuna]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/5ou1flwr/aadav.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் நெடுஞ்சாலை துறைக்கான மானியக் கோரிக்கை மீதான பதிலுரையில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BE">அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</a> கூறியதாவது:</p><p>சென்னை- கோவை - தூத்துக்குடியை இணைக்கும் தொழில் தட விரைவு சாலை உருவாக்கப்படும்.</p><p>சென்னை கன்னியாகுமரி 8 வழிச்சாலை, சென்னை நுழைவு வழித்தடச் சந்திப்புகளை மேம்படுத்துதல், திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் மற்றும் கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு உயர்மட்ட சாலை உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>சென்னை-மாமல்லபுரம்-புதுச்சேரியை இணைக்கும் கடல்வழி உயர்மட்ட சாலைத் தொடர், மும்பை - நவி மும்பை கடல் இணைப்புச் சாலை போல் கட்டம் கட்டமாக உருவாக்கப்படும்.</p><p>வெற்றி சட்டமன்ற உறுப்பினர் சாலை மேம்பாட்டுத் திட்டம்.</p><p>நம்ம சாலை செயலி மேம்பாட்டை உள்ளடக்கிய சீரான சாலைகள் திட்டம் ரூ.250 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும்.</p><p>சென்னை-மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே கடல்வழிப் பயணிகள் படகுப் போக்குவரத்து சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>சென்னையின் கலங்கரை விளக்கம் முதல் அடையாறு திருவிக பாலம் வரை உயர்மட்டச் சாலை அமைக்கப்படும்,</p><p>வடசென்னையில் பெருகி வரும் போக்குவரத்து தேவைகளை கருத்தில் கொண்டு, வியாசர்பாடியில் உள்ள ரெயில்வே மேம்பாலம் நீட்டிக்கப்படும்.</p><p>தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>ரூ.500 கோடியில் சாலை பாதுகாப்பு கண்காணிப்பு குழு செயல்படுத்தப்படும்.</p><p>சென்னை-புதுவை இடையே படகு போக்குவரத்து</p><h2>கடுமையாகும் சாலை விதிகள்</h2><p>சாலை விபத்துகளைத் தடுக்க அடுத்த ஆண்டு முதல் சாலை விதிகள் மேலும் கடுமையாக்கப்படும்.</p><p>நெடுஞ்சாலைகளில் பேட்ச் ஒர்க்கிற்கு மட்டும் அதிக செலவு செய்யப்படுகிறது. அதில் அதிக ஊழலும் நடந்துள்ளது.</p><p>ரூ. 400 கோடியில் சென்னையில் முக்கோண வழித்தட சாலை</p><p>45,000 கிலோ மீட்டர் சாலைகள் இருவழிப் பாதையாக மாற்றப்படும்.</p><p>பாம்பன் டூ அக்னி தீர்த்தம் வரை உள்நாட்டு பயணிகள் போக்குவரத்து சேவை</p><p>நாகை - காங்கேசன்துரை இடையிலான படகு போக்குவரத்து விரிவுப்படுத்தப்படும் என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>மஞ்சள் காய்ச்சல்: ஆரம்ப அறிகுறிகளை அறிந்துகொள்வது ஏன் முக்கியம்?</title><link>https://www.maalaimalar.com/health/generalmedicine/yellow-fever-why-early-symptoms-matter</link><comments>https://www.maalaimalar.com/health/generalmedicine/yellow-fever-why-early-symptoms-matter#comments</comments><guid isPermaLink="false">e4094fd6-a07e-40ec-ba36-25a7a3888dbf</guid><pubDate>Tue, 18 Aug 2026 12:29:32 +0000</pubDate><atom:updated>2026-08-18T12:29:32.422Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆரோக்கியம்,HealthTips,HealthAwareness,Yellow Fever,மஞ்சள்காய்ச்சல்,சுகாதாரவிழிப்புணர்வு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/omerhvor/sss.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Yellow Fever]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/omerhvor/sss.jpg?w=280" width="280"></media:thumbnail><category>பொது மருத்துவம் (General Medicine)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மஞ்சள் காய்ச்சல் என்பது ஒரு வகை வைரஸால் ஏற்படும் கடுமையான பாதிப்பாகும். இது முக்கியமாக ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் காரிபியன் பகுதிகளின் சில இடங்களில் பரவுகிறது. பாதிக்கப்பட்ட கொசுக்கள் கடிப்பதன் மூலம் இந்த வைரஸ் மனிதர்களுக்குப் பரவுகிறது. இருப்பினும், தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம் இந்த நோயைத் தடுக்க முடியும். </p><h2>நோய் பரவு<strong>ம் முறை</strong></h2><p>பாதிக்கப்பட்ட கொசுக்கள் மனிதர்களைக் கடிக்கும்போது இந்நோய் பரவுகிறது. வைரஸைக் கடத்தும் கொசுக்கள் பகல் நேரத்திலேயே மனிதர்களைக் கடிக்கின்றன. இவை நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்கள் ஆகிய இரண்டிலும் காணப்படுகின்றன. மஞ்சள் காய்ச்சல் மனிதர்களிடமிருந்து மற்றொரு மனிதருக்கு நேரடியாகத் தொடுதல் மூலமாகவோ நெருங்கிய தொடர்பின் மூலமாகவோ பரவாது. தொற்று ஏற்பட்ட 3 முதல் 6 நாட்களுக்குள் இதன் அறிகுறிகள் தோன்றத் தொடங்கும். </p><h2>முதல் கட்<strong>ட அறிகுறி</strong>கள் </h2><p>கடுமையான காய்ச்சல், தலைவலி, குமட்டல் அல்லது வாந்தி, தசை வலி, கடுமையான முதுகுவலி மற்றும் பசியின்மை. </p><figure><img alt="Yellow Fever" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/156eq26x/yellow.jpg" /></figure><p>இந்த ஆரம்ப அறிகுறிகள் பொதுவாக 3 முதல் 4 நாட்களுக்குள் சரியாகிவிடும். பெரும்பாலோர் இதிலிருந்து முழுமையாகக் குணமடைந்துவிடுவார்கள்.</p><h2>இரண்டாம் கட்<strong>டம் மிகவும் ஆ</strong>பத்தானது</h2><p>பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 15 சதவீதம் பேருக்கு நோய் தீவிரமடைகிறது. மஞ்சள் காமாலை, சிறுநீரக செயலிழப்பு, வாய், மூக்கு, கண்கள் மற்றும் வயிற்றுப் பகுதியில் ரத்தப்போக்கு ஏற்படுதல் போன்றவை இதற்கான முக்கிய அறிகுறிகளாகும். தீவிர நிலை அடையும் நோயாளிகளில் பாதி பேர் உயிரிழக்கக் கூடும்.</p><h2>மருத்துவ ஆ<strong>லோசனையு</strong>ம் சிகிச்சையும்</h2><p>மஞ்சள் காய்ச்சல் பரவும் பகுதிகளுக்குப் பயணம் செய்தாலோ அல்லது அங்கு சென்று திரும்பிய சில நாட்களிலோ அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். ரத்த பரிசோதனை மூலம் இந்நோய் உறுதி செய்யப்படுகிறது. மஞ்சள் காய்ச்சலுக்கு நேரடியாகக் குணப்படுத்தும் குறிப்பிட்ட மருந்துகள் எதுவும் இல்லை. இருப்பினும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மற்றும் அறிகுறிகளுக்கான சிகிச்சை அளிப்பதன் மூலம் நோயாளிகள் காப்பாற்றப்படுகிறார்கள்.</p><h2>தடுப்<strong>பூசியின் முக்கிய</strong>த்துவம் </h2><p>மஞ்சள் காய்ச்சல் பரவும் நாடுகளுக்குப் பயணம் செய்வதற்கு முன் தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம். தடுப்பூசி போட்ட பிறகு வழங்கப்படும் சர்வதேச தடுப்பூசி சான்றிதழ் ஆயுள் முழுமைக்கும் செல்லுபடியாகும். இந்த சான்றிதழ் பாஸ்போர்ட்டுடன் இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நோய் பரவும் வாய்ப்புள்ள நாடுகள் அல்லது நோய் பரப்பும் கொசுக்கள் உள்ள நாடுகளுக்குப் பயணம் செய்ய இந்த சான்றிதழ் கட்டாயமாகும்.</p>]]></content:encoded></item><item><title>ஒரே குடும்பத்தில் 3 டாக்டர்கள்! நீட் தேர்வில் வென்று நெசவாளர் மகன்கள் அசத்தல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/three-doctors-in-one-family-weaver-sons-crack-neet</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/three-doctors-in-one-family-weaver-sons-crack-neet#comments</comments><guid isPermaLink="false">05ef3ac8-f141-4e96-ab8b-c5e092d49692</guid><pubDate>Tue, 18 Aug 2026 11:45:17 +0000</pubDate><atom:updated>2026-08-18T11:45:17.682Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,NeetExam,Tirunelveli,மருத்துவக்கல்லூரி,தமிழ்நாடு,GovtSchoolStudents,MedicalSeats</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/90uxfu6m/neet.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ GovtSchoolStudents]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/90uxfu6m/neet.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளாங்குளி கிராமத்தைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளி ராம்குமார் - மங்கையர் திலகம் தம்பதியின் மூன்று மகன்கள், அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக் கல்லூரிகளில் இடம் பிடித்துப் பெருமை சேர்த்துள்ளனர்.</p><h2>விடாமுயற்சி<strong>யால் வெ</strong>ன்ற மூத்த மகன்</h2><p>ராம்குமாரின் மூத்த மகனான வெங்கட் ஸ்ரீ, கடந்த 2023-ஆம் ஆண்டு பிளஸ்-2 தேர்ச்சி பெற்று, தொடர்ந்து 2 ஆண்டுகள் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/neet-controversy-aiadmk-congress-clash">நீட் தேர்வு </a>எழுதியும் போதிய மதிப்பெண் கிடைக்காத சூழலில், சோர்ந்து போகாமல் விடாமுயற்சியுடன் மீண்டும் தேர்வு எழுதி 440 மதிப்பெண்கள் பெற்றார்.</p><h2>ஒரே முயற்<strong>சியில் சாதித்த</strong> இரட்டையர்கள்</h2><p>அண்ணன் வழியைப் பின்பற்றி, அவரது இரட்டைச் சகோதரர்களான அருண் மற்றும் தரண் ஆகிய இருவரும் இந்த ஆண்டு அரசுப் பள்ளியில் பிளஸ்-2 முடித்து முதன்முறையாக நீட் தேர்வை எதிர்கொண்டனர். இதில் அருண் 511 மதிப்பெண்களும், தரண் 494 மதிப்பெண்களும் பெற்று அசத்தினர்.</p><h2>மருத்து<strong>வக் கல்லூரிக</strong>ளில் இடம்</h2><p>அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத முன்னுரிமை இடஒதுக்கீட்டின் கீழ் நடைபெற்ற மருத்துவக் கலந்தாய்வில் மூன்று சகோதரர்களுக்கும் சேர்க்கை உறுதியானது. மூத்த மகன் வெங்கட் ஸ்ரீக்கு நாகர்கோவில் அரசு பல் மருத்துவக் கல்லூரியிலும், அருணுக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியிலும், தரணுக்கு கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியிலும் இடங்கள் கிடைத்துள்ளன. வறுமை சூழலிலும் விடாமுயற்சியால் சாதித்த இந்தச் சகோதரர்களுக்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>விளையாட்டுதான் என்னுடைய சாதி, மதம், மொழி, குடும்பம் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/sports-is-my-caste-religion-language-family-minister-athav-arjuna</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/sports-is-my-caste-religion-language-family-minister-athav-arjuna#comments</comments><guid isPermaLink="false">9029d015-b6da-47b8-aa0b-5088545ba032</guid><pubDate>Tue, 18 Aug 2026 11:40:51 +0000</pubDate><atom:updated>2026-08-18T11:40:51.248Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tvk,TNassembly meeting,AadhavArjuna,ஆதவ்அர்ஜுனா,SportsDevelopment,OlympicMission,தமிழகசட்டப்பேரவை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/524pxsc2/Aadhav-Arjuna" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Aadhav Arjuna   ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/524pxsc2/Aadhav-Arjuna?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகிறது. அப்போது விளையாட்டுக்கான முக்கிய அறிவிப்புகளையும் பல்வேறு முக்கிய கோரிக்கைகளையும் விளையாட்டு துறை அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BE">ஆதவ் அர்ஜுனா </a>கூறியுள்ளார்.</p><h2>இது குறித்து அவர் கூறியதாவது:-</h2><h2>ஜெயலலிதாவை போல் தனித்து நின்று வெற்றி</h2><p>"2016-ல் புரட்சித்தலைவி ஜெயலலிதா தனித்து நின்று வெற்றி பெற்றார். அதேபோல் 2026-ல் 41 எதிர்கட்சிகளை எதிர்த்து நின்று முதல்வர் விஜய் வெற்றி பெற்றுள்ளார்" என அமைச்சர் ஆதவ் தெரிவித்தார். "மக்கள் துணையுடன், இளைஞர்கள் துணையுடன், தமிழக மக்கள் துணையுடன் ஆட்சியை பிடித்துள்ளார் முதல்வர் விஜய். </p><p>3 வருடத்தில் கட்சி ஆரம்பித்து வெற்றி பெற முடியுமா, பூத் இருக்கா, ஏஜெண்ட் இருக்கா என கேட்டார்கள். ஆனால் 41 எதிர்கட்சிகளை எதிர்த்து இந்த வெற்றி சாத்தியமானது" என அவர் பேசினார்.</p><h2>அண்ணாவின் கனவு நிறைவேறியது</h2><p>"அண்ணாவை போல் ஒரு இளைஞர் கூட்டத்தை உருவாக்கி வெற்றி பெற்றுள்ளார் முதல்வர் விஜய். அண்ணா கூறியதை போல இளைஞர்களுக்கு வேகமும் அதிகம், விவேகமும் அதிகம்" என ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டார்.</p><p>"சாதி, மதம், ஏழை, பணக்காரர் என்ற எந்த வித்தியாசமும் இல்லாத அண்ணா கண்ட கனவு இன்று நிறைவேறியுள்ளது. இன்று சட்டப்பேரவையில் இருப்பவர்கள் பண்ணையாரின் பிள்ளைகள் அல்ல, மன்னர் ஆட்சியின் பிள்ளைகள் அல்ல. அம்பேத்கர் கண்ட கனவு இன்று தமிழக சட்டமன்றத்தில் நிறைவேறி உள்ளது. </p><p>21 தலித் உறுப்பினர்கள் அமர்ந்துள்ளனர்" என்றார்."1 ரூபாய் காசு செலவு செய்யாமல் இங்குள்ள தவெக எம்எல்ஏக்கள் அனைவரும் வெற்றி பெற்றுள்ளனர்" என்றும் அவர் பெருமையுடன் கூறினார்.</p><h2>விளையாட்டு துறைக்கு முக்கியத்துவம் - புதிய திட்டங்கள்</h2><p>விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஆதவ் அர்ஜுனா, "விளையாட்டுதான் என்னுடைய சாதி, மதம், மொழி, குடும்பம்" என்றார். புரட்சித்தலைவி அம்மாவின் Sports Development Authority திட்டத்தின் கீழ் திருச்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 3 மாணவர்களில் ஒருவராக தான் இருந்ததாகவும், நேரு ஸ்டேடியத்தில் மாநிலத்திற்காக விளையாடிய தேசிய அளவிலான பாஸ்கெட்பால் வீரர் என்றும் தெரிவித்தார்.</p><p>"இங்கேயே 3 பாஸ்கெட்பால் வீரர்கள் உள்ளனர். நிதியமைச்சர் மரிய வில்சன்,  முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி, சபாநாயகர் ஜெ.எஸ்.டி பிரபாகர் உட்பட பலரும் விளையாட்டு பின்னணியில் இருந்து வந்தவர்கள்" என கூறினார்.</p><p>"100 ஆண்டுகளில் தமிழர்கள் யாரும் ஒலிம்பிக் பதக்கம் வாங்கவில்லை. இதை மாற்ற '8 to 18' என்ற புதிய திட்டத்தை கொண்டு வரப்போகிறோம். விளையாட்டு வீரர்களுக்கு என தனி கல்விக்கொள்கை உருவாக்கப்பட வேண்டும். </p><p>விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறப்பு கல்வி வழங்கப்படும். அவர்கள் எங்கு சென்றாலும் அவர்களுக்கான செலவுகளை அரசே ஏற்கும்" என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>விவாகரத்து செய்யாமல் 2வது திருமணம் செய்தால் 20% சம்பளம் பிடித்தம் செய்யப்படும் - ஊழியர்களுக்கு அசாம் அரசு எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/20-salary-deduction-for-second-marriage-without-divorce-assam-govt-warns-employees</link><comments>https://www.maalaimalar.com/news/national/20-salary-deduction-for-second-marriage-without-divorce-assam-govt-warns-employees#comments</comments><guid isPermaLink="false">2d1a3e42-9527-4470-9fca-a93906541cfc</guid><pubDate>Tue, 18 Aug 2026 11:28:08 +0000</pubDate><atom:updated>2026-08-18T11:28:08.182Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Divorce,விவாகரத்து,Assam govt,CM Himanta Biswa Sarma,அசாம் அரசு,முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/cru6yljy/New-Project-2026-08-18T164231.550.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விவாகரத்து செய்யாமல் 2வது திருமணம் செய்தால் 20% சம்பளம் பிடித்தம் செய்யப்படும் - ஊழியர்களுக்கு அசாம் அரசு எச்சரிக்கை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/cru6yljy/New-Project-2026-08-18T164231.550.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அசாம் மாநிலத்தில் பலதார மணமுறையை தடை செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. </p><p>அதன் ஒருபகுதியாக மாநிலத்தின் அரசு ஊழியர்கள் தங்களது முதல் மனைவியை சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்துகொண்டால் அவர்களின் ஊதியத்திலிருந்து 20% பிடித்தம் செய்யப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. </p><p>பிடித்தம் செய்யப்படும் அந்தத் தொகை நேரடியாக முதல் மனைவியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இருப்பினும் இதற்காக முதல் மனைவி அரசிடம் விண்ணப்பிக்க வேண்டும்.</p><p>விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலும், சம்பளப் பிடித்தம் தொடரும். சட்டரீதியான நடவடிக்கைகள் முடியும் வரை முதல் மனைவி எந்தச் சிரமங்களையும் சந்திக்காமல் இருப்பதற்காக, அவருக்கு நிதி உதவி வழங்குவதே தங்களின் நோக்கம் என்று அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.</p><p>இந்த முடிவை தனியார் துறை ஊழியர்களுக்கும் செயல்படுத்தத் திட்டமிட்டப்பட்டுள்ளது. </p><p>ஏற்கனவே அசாமில் அரசு ஊழியர்கள் தங்களின் வயதான பெற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி உடன்பிறப்புகளை புறக்கணித்தால் அவர்களது சம்பளத்தில் இருந்து 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு, அந்தத் தொகை நேரடியாக அவர்களின் பெற்றோர் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கியச் செய்திகள்- 17 ஆகஸ்ட் 2026 </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-17-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-17-august-2026#comments</comments><guid isPermaLink="false">e5056155-d3e7-4ac5-831d-27ef01f8d24e</guid><pubDate>Mon, 17 Aug 2026 04:01:34 +0000</pubDate><atom:updated>2026-08-18T11:19:16.665Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/obhwuvef/vijay1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/obhwuvef/vijay1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-today-debates-on-demands-forg-grants-session-begin">மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் சட்டசபையில் இன்று தொடக்கம்</a></p><p>4 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் இன்று சட்டசபை கூட்டத்தொடர் கூடியது.</p><p>சட்டசபையில் இன்று முதல் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.</p><p>100-வது நாளில் அடியெடுத்து வைத்துள்ள தவெக ஆட்சிக்கு பாராட்டு - சபாநாயகர்</p><p>மக்களின் நாடித்துடிப்பை அறிந்து தவெக அரசு பல துறைகளில் சிறப்பான திட்டங்களை செயல்படுத்துகிறது - சபாநாயகர்</p><p>வளமான சமத்துவமான ஊழலற்ற தமிழ்நாடு என்ற கட்டமைப்பை முதல் 100 நாட்களில் செயல்படுத்தி உள்ளது தவெக அரசு  - சபாநாயகர்</p><p>கோவை அமுதன் கொலை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்துள்ளோம் - திமுக எம்எல்ஏ வேலு</p><p>கோவை மாணவன் கொலை தொடர்பாக திமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதம் ஏற்கப்பட்டுள்ளது - சபாநாயகர்</p><p>கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகத்தில் ஏராளமான கொலைகள் நடந்துள்ளது - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி</p><h2>எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உரை</h2><p>கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகத்தில் ஏராளமான கொலைகள் நடந்துள்ளது.</p><p>கோவை கல்லூரி மாணவன் கொலையை ஏற்கெனவே அமைச்சர் ராஜ்மோகன் கோஷ்டி மோதலால் கொலை என கூறினார். இரு தரப்பாக பிரிந்து அடித்துக்கொண்டால் தான் கோஷ்டி மோதல், அமுதனை 20 பேர் அடித்துள்ளனர், இது கொலை. </p><p>அமுதனின் பெற்றோரிடம் தொலைபேசியில் ஆதரவு கூறினேன்.</p><p>போதைப்பொருள் புழக்கம் பற்றி தகவல் அளித்ததால் தான் அமுதன் கொலை என அவரின் பெற்றோர் திட்டவட்டம்.</p><p>கோவையில் மட்டுமல்ல சென்னை திருவொற்றியூர் பள்ளி மாணவன் தனுஷ் போதை பழக்கத்தை தட்டிக்கேட்டதால் கொலை.</p><p>சென்னை அம்பத்தூரில் ஆட்டோவில் வைத்து பெண் கழுத்தறுத்து கொலை.</p><p>கடந்த ஒரு வாரத்தில் தமிழகம் முழுவதும் நடந்த கொலைகளை பட்டியலிட்டு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உரையாற்றினார்.</p><p>கொலை மட்டுமல்ல பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் அதிகரித்துள்ளது.</p><p>100 நாள் சாதனை என பெருமை பேசும் தவெக அரசு, 100 நாட்களில் சட்டம் ஒழுங்கு நிலையையும் பார்க்க வேண்டும் - உதயநிதி</p><p>போதைக்கு எதிரான தொடர் விழிப்புணர்வு, வன்முறைக்கு எதிராக கவுன்சிலிங் நடத்த வேண்டும் என உதயநிதி கோரிக்கை விடுத்தார்.</p><h2>அதிமுக எம்எல்ஏ காமராஜ் உரை</h2><p>விடுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை, பயன்பாட்டை புகார் தந்த மாணவன் அமுதன் கொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p>மாணவன் தாக்கப்பட்ட பின் விடுதியில் இருந்து வெளியேறுமாறு கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.</p><p>மைதானத்தில் வைத்து மாணவன் அமுதனை இரும்பு கம்பியால் அடித்தும் கத்தியால் குத்தியும் 20 பேர் கொண்ட கும்பல் கொலை செய்துள்ளது.</p><p>செல்போன் சம்பந்தப்பட்ட சீனியர் ஜூனியர் சம்பவம், கோஷ்டி மோதல் என காவல்துறை அதிகாரியே சொல்கிறார்.</p> <h2>பாமக எம்எல்ஏ கணேஷ் குமார்</h2><p>போதைப்பொருள் 15 வயது மாணவர்கள் இடையே புழக்கத்தில் உள்ளது.</p><p>கடந்த ஆட்சியில் இருந்த போதைப்பொருள் புழக்கம் போன்றவை தற்போது தவெக ஆட்சியிலும் தொடர்வது வேதனை தருகிறது.</p><p>மாணவர்கள் கொலை விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க வேண்டும்.</p><p>எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வு நடைபெறாத வகையில் கடும் தண்டனை வழங்க வேண்டும் - பாஜக எம்எல்ஏ போஜராஜன்</p><p>கஞ்சா போதை பழக்கமே கல்லூரி, பள்ளிகளில் மாணவர்கள் தாக்குதலுக்கு காரணமாக உள்ளது - எம்எல்ஏ செல்லசாமி</p><p>சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக எடுத்துக்கொள்ளாமல்   காவல்துறையை களை எடுத்து கரைபடியாத கரங்களாக கொண்டு வர வேண்டும் - எம்எல்ஏ செல்லசாமி</p> <h2>காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கட்பட் உரை</h2><p>இரும்புக்கரம் கொண்டு அடக்கினாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக தமிழகத்தில் போதைப்பொருளால் அசம்பாவிதம் நடக்கிறது.</p><p>பள்ளி, கல்லூரிகளில் மாணவ அமைப்புகளை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவது முக்கியம்.</p><p>மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அமைப்பை உருவாக்கி செயல்பட வேண்டும் -  தாரகை கட்பட்</p><p>கோவை அமுதன் கொலை விவகாரம் தொடர்பாக அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்தார்.</p><p>இரண்டாமாண்டு பயிலும் அமுதனின் நண்பனுக்கும் 4-ம் ஆண்டு மாணவர்களுக்கும் இடையிலான மோதலில் தாக்கி உள்ளனர்.</p><h2>அமைச்சர் நிர்மல்குமார் உரை</h2><p>அமுதன் இறந்ததை தொடர்ந்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>அமுதன் கொலை தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.</p><p>போதைப்பொருள் தொடர்பாக எந்த தகவலும் இல்லை. பழிவாங்கல் காரணமாகவே கொலை என தெரிய வந்துள்ளது.</p><p>போதைப்பொருள் புகார் தந்தவரின் தகவலை போலீசார் கசிய விட்டது என எந்த நிகழ்வும் நடைபெறவில்லை என அமைச்சர் நிர்மல்குமார் திட்டவட்டம்.</p><p>போதைப்பொருள் குறித்து புகார் அளித்தவரின் தகவலை போலீசார் கசியவிட்டதாக கூறுவதில் உண்மையில்லை. போதைப்பொருள் தொடர்பாக புகாரளித்தால் கொலை என சித்தரித்து உண்மையை திசை திருப்ப வேண்டாம்.</p><p>கோவை மாணவன் அமுதன் கொலையில் உண்மையை மறைக்க வேண்டிய அவசியம் காவல்துறைக்கு இல்லை.  கடந்த 5 ஆண்டுகளாக போதைப்பொருள் புழக்கம் தமிழகத்தில் எப்படி இருந்தது என நாம் அறிந்ததே.</p><p>போதைப்பொருள் கடத்தல் மன்னர் ஜாபர் சாதிக் உடன் கடந்த ஆட்சியில் முதல்வரின் குடும்பத்தினரிடம் தொடர்பு உள்ளது - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>ஜாபர் சாதிக் உடன் திமுக ஆட்சியில் இருந்த முதல்வர் உடன் தொடர்பு என அமைச்சர் குற்றம்சாட்டியதற்கு திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.</p><p>ஒரு அமைச்சரே ஐபிஎல் போட்டியின்போது போதைப்பொருள் பயன்படுத்தியது வீடியோவாக வெளியாகி உள்ளது - உதயநிதி</p><p>ஐபிஎல் போட்டியில் தவெக அமைசசர் பவுடர் என உதயநிதி பேசியதும் தவெக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.</p><p>மாத்திரை நுணுக்கியதாக கதைவிட்ட தவெக அமைச்சரிடம் காவல்துறை விசாரணை நடத்தியதா? </p><p>போதைப்பொருள் கடத்தல் மன்னன் விவகாரத்தில் திமுக உடனடி நடவடிக்கை எடுத்தது - உதயநிதி</p><p>ஸ்டேடியத்தில் நடந்தவற்றை பற்றி விளக்கம் அளித்துவிட்டேன், ஆதாரம் இன்றி தேவையின்றி பேசக்கூடாது.</p><p>திமுக ஆட்சியில் தான் அந்த நிகழ்வு நடந்தது, அப்படியென்றால் ஸ்டேடியம் வளாகத்தில் போதைப்பொருள் விற்றார்களா?  - அமைச்சர் சரத்</p><p>திமுக ஆட்சியில் போதைப்பொருள் விற்கப்பட்டது என்று ஒப்புக்கொள்கிறீர்களா? என் அமைச்சர் சரத் கேள்வி எழுப்பினார்.</p><p>கோர்ட்டில் இருக்கும் வழக்கு பற்றி ஏன் பேசுகிறார்? பவுடர் பயன்படுத்தியது பற்றி மட்டும் அமைச்சர் பதில் தரட்டும் - கே.என்.நேரு</p><h2>கோவை மாணவர் விவகாரம் - அமைச்சர் ராஜ்மோகன் உரை</h2><p>கோவை மாணவர் குடும்பத்திற்கு இழப்பீடு, அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>மாணவர் தனுஷ் கொலையில் எந்தவித சார்பும் இன்றி காவல்துறை விசாரணை நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.</p><p>மாணவர் கொலை விவகாரத்தில் சார்பு தன்மை இன்றி நேர்மையாக காவல்துறை விசாரணை நடைபெறும்.</p><p>கொல்லப்பட்ட மாணவர்ன தனுஷின் சகோதரருக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உரை</h2><p>தவெகவின் 100 நாள் ஆட்சி, அடுத்த 25 ஆண்டுக்கான அடித்தளம். தவெக ஆட்சியை உருவாக்கிய இளைஞர்கள், பெண்களுக்கு நாங்கள் என்றும் உண்மையாக இருப்போம்.</p><p>மாணவர் கொலை வழக்கு விசாரணையில் எவ்வித அழுத்தம் இருக்காது. முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>மாநிலம் முழுவதும் 65 போதைப்பொருள் தடுப்பு குழு ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ளது.</p><p>தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டை அடியோடு ஒழிக்க தவெக அரசு உறுதியாக உள்ளது.</p><p>நாங்கள் எழுந்தால் நீங்கள் பேசவே முடியாது என்று அமைச்சர் ஆதவ் பேசியதற்கு திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.</p><p>கடந்த 2020ம் ஆண்டுக்கு முன்பு தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் உறுதியாக இல்லை.</p><p>போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்ததால் தான் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குற்றங்கள் அதிகரிப்பு - அமைச்சர் ஆதவ்</p> <p>திமுக ஆட்சியில் தான் போதைப்பொருள் பயன்பாடு, பாலியல் குற்றங்கள் அதிகரித்ததாக அமைச்சர் ஆதவ் குற்றச்சாட்டு.</p> <p>கடந்த திமுக ஆட்சியில் 40 சதவீத போக்சோ வழக்குகள் அதிகரித்துள்ளன. இது காவல்துறை கொடுத்த அறிக்கை - அமைச்சர் ஆதவ்  </p><p>போதைப்பொருள் அதிகரிப்பு காரணமாக தான் திமுகவை மக்கள் தூக்கி எறிந்தனர் என்ற அமைச்சர் ஆதவின் பேச்சுக்கு பேரவையில் அமளி</p><p>கவன ஈர்ப்பு தீர்மானத்தில் குற்றச்சாட்டுகளை அடுக்கக்கூடாது - எ.வ.வேலு</p><p>கேள்வி நேரத்திலும் கவன ஈர்ப்பு தீர்மான நேரத்திலும் குற்றச்சாட்டு கூறக்கூடாது என்பது தான் பேரவை விதி - எ.வ.வேலு</p><p>கவன ஈர்ப்பு, ஒத்திவைப்பு தீர்மானத்தில் அரசு விளக்கம் தான் கூற வேண்டும், பதில் குற்றச்சாட்டு கூறுவது அவை மரபு அல்ல - எ.வ.வேலு</p><p>திமுக ஆட்சியில் நடந்த குற்றங்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. தவெக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? அமைச்சர் ஆதவ் பேச்சிற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கேள்வி?</p><p>திமுக ஆட்சியை குறை சொல்ல புகைப்படம் காட்டும் அமைச்சரே நாங்கள் எடுத்த நடவடிக்கை குறித்து சான்று தருகிறார் - உதயநிதி</p><p>இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த திமுக ஆட்சியில் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்.</p><p>போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் எதற்காக நாங்கள் அமர்த்திய அதிகாரிக்கு முக்கிய பதவி தந்தீர்கள்?  - உதயநிதி</p><p>திமுக ஆட்சியில் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் சிறப்பாக செயல்பட்ட 15 போலீசாருக்கு தவெக அரசே விருது தந்தது ஏன்?- உதயநிதி</p><p>எதிர்க்கட்சி எழுப்பிய கேள்விக்கு உரிய விளக்கம் இல்லை என கூறி பேரவையில் இருந்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.</p><p>சட்டசபையில் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு சம்பந்தமே இல்லாமல் பேசுவதால் நேரம் வீணாகிறது - எடப்பாடி பழனிசாமி</p><h2>மேகமலை விவகாரம் - தொடர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்</h2><p>மேகமலையில் வசித்து வரும் பழங்குடியினர் உள்ளிட்ட மக்களை வெளியேற்றக்கூடாது - அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி</p><h2>அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி</h2><p>மேகமலையில் 98 கிராமங்களில் 100 ஆண்டுகளுக்கு மேலாக 5,000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.</p><p>மேகமலை விவகாரத்தில் அரசு கொள்கை முடிவெடுத்து சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என கோரிக்கை.</p><p>மேகமலை குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்து அப்பகுதி மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை தடுக்க வேண்டும்.</p><h2>எம்எல்ஏ செல்லசாமி உரை</h2><p>மேகமலையை காப்புக்காடு என அறிவித்த நிலையில் வனத்துறை அதிக கட்டுப்பாடு விதித்துள்ளது.</p><p>வனத்துறையினர் கெடுபிடிகள் காரணமாக விளைபொருளை விற்க கூட முடியாமல் மேகமலை மக்கள் தவிக்கின்றனர்.</p><p>சாலை, போக்குவரத்து, குடிநீர், பள்ளிக்கூடம், ரேஷன் உள்ளிட்ட வசதிகளை தமிழ்நாடு அரசே செய்து கொடுத்துள்ளது.</p> <p>உச்சநீதிமன்றமே சொந்த நாட்டு மக்களை துணை ராணுவம் கொண்டு வெளியேற்ற கூறியது வேதனை - எம்எல்ஏ ராமச்சந்திரன்</p><p>கடந்த 60 ஆண்டு காலமாக ஆட்சி செய்தவர்கள் பட்டா வழங்கியிருந்தால் இந்த நிலை வந்திருக்காது - எம்எல்ஏ ராமச்சந்திரன்</p><h2>தவெக எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா உரை</h2><p>மேகமலை - வருசநாடு மலைகிராம மக்களை வெளியேற்றுவததை ஏற்றுக்கொள்ள முடியாது.</p><p>உச்சநீதிமன்றத்தில் கடந்த கால அரசு சரியாக வாதாடாததே இந்த நிலைக்கான காரணம்.</p><h2>அமைச்சர் நிர்மல்குமார் உரை</h2><p>2009 திமுக ஆட்சியில்தான் மேகமலை காப்புக்காடுகளாக அறிவிக்கப்பட்டது.</p><p>2009-ல் காப்புக்காடாக அறிவித்தபோது திமுக முறையாக கையாண்டிருந்தால் இந்த இக்கட்டான சூழல் ஏற்பட்டிருக்காது.</p><p>மேகமலை விவகாரத்தில் கடந்த 5 ஆண்டுகளில் செய்த தவறுகளை தவெக அரசு செய்யாது.</p><p>மேகமலை விவகாரத்தில் நிரந்தர தீர்வு கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கையையும் தவெக அரசு மேற்கொள்கிறது. </p><p>15 ஆண்டுகளாக மக்கள் போராடுகின்றனர். கடந்த கால ஆட்சியில் இந்த வழக்குகள் முறையாக கையாளப்படவில்லை.</p><p>2025 முதல் 2026-ம் ஆண்டு வரை ஆய்வு செய்தபோது முறையான ஆதாரம் கொடுத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>மேகமலை விவகாரத்தில் திமுகவை குறிப்பிட்டு அமைச்சர் நிர்மல்குமார் பேசியதற்கு திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.</p><p>திமுக அளித்த இறுதி அறிக்கை பெயரில் தான் உச்சநீதிமன்றம் முடிவெடுத்து அறிவித்துள்ளது.</p><p>மேகமலை விவகாரத்தில் திமுக செய்த ஒட்டுமொத்த தவறின் காரணமாகத்தான் மக்கள் வெளியேற்றப்படுகின்றனர்.</p><p>திமுக தவற விட்ட நிலையில் எதை வைத்து மேகமலை மக்களை காப்பாற்ற போகிறோம் என 3 நாட்களில் தெரிவிப்போம் - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>மேகமலை விவகாரத்தில் திமுக குறித்து அமைச்சர் நிர்மல்குமார் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் - சபாநாயகர்</p><p>சட்டசபையில் வருவாய்த்துறை மீதான மானிய கோரிக்கை மீது விவாதம் தொடங்கியது.</p><p>வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மீதான மானிய கோரிக்கை மீது விவாதத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பதில்</p><p>சட்டசபையில் 3 துறைகள் மீதான மானிய கோரிக்கை மீது விவாதம் தொடங்கியது.</p><h2>அமைச்சர் அருண்ராஜ்</h2><p>முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற 100-வது நாள் இன்று.</p><p>மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை என்ற மாபெரும் தூணை தூக்கிப் பிடிக்க என்னிடம் ஒப்படைத்த முதல்வருக்கு நன்றி.</p><p>சுகாதாரம், வருவாய் மற்றும் பேரிடர் மீதான மானிய கோரிக்கை மீதும் விவாதம் தொடங்கியது. திமுக எம்எல்ஏ சாத்தூர் ராமச்சந்திரன் பேசினார்.</p><h2>திமுக எம்எல்ஏ சாத்தூர் ராமச்சந்திரன் உரை</h2><p>கலைஞரின் கொள்கை பிடிப்பும் மு.க.ஸ்டாலினின் செயல்திறனும் கொண்ட இளம் தலைவர் உதயநிதி.</p><p>திமுக ஆட்சியில் 400 பக்கங்கள் கொண்ட கொள்கை விளக்க குறிப்பு தவெக ஆட்சியில் 300 பக்கமாக குறைந்துள்ளது. </p><p>பக்கங்கள் தான் குறைந்துள்ளன. தவெக ஆட்சியில் கொள்கை, லட்சியங்கள் குறையவில்லை - அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி</p><p>தவெக அரசின் லட்சியங்கள் குறையவில்லை. லட்சியங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் அரசாக தவெக அரசு உள்ளது - செங்கோட்டையன்</p><h2>திமுக எம்எல்ஏ சாத்தூர் ராமச்சந்திரன் உரை</h2><p>திமுக ஆட்சியில் 27 லட்சம் பேருக்கு பட்டா வழங்கினோம். சொன்னது எதையும் தவெக அரசு நிறைவேற்றவில்லை.</p><p>கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் சென்னை மாநகராட்சியில் 77,000 பேருக்கு பட்டா வழங்கினோம்.</p><p>சென்னையில் மீட்கப்படாமல் இருந்த தோட்டக்கலை சங்கம், கிண்டி ரேஸ் கோர்ஸ் நிலத்தை மீட்டெடுத்தவர் ஸ்டாலின்.</p><p>திமுக ஆட்சிக்காலத்தில் கனமழை, வெள்ளம், புயல் ஏற்பட்ட நிலையில் ரூ.5,000 கோடி மத்திய அரசிடம் கேட்கப்பட்டது - சாத்தூர் ராமச்சந்திரன்</p> <p>தவெக அளித்த வாக்குறுதியான மகளிர் உரிமைத்தொகை வழங்காதது ஏன்? - திமுக எம்எல்ஏ சாத்தூர் ராமச்சந்திரன்</p><p>100 நாட்கள் தான் முடிந்தது, தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றுவோம் - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>மகளிர் உரிமைத்தொகையை 28 மாதங்களுக்கு திமுக தரவில்லை, நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் தான் தந்தது - செங்கோட்டையன்</p><p>கொரோனா பெருந்தொற்றின் காரணமாகத்தான் மகளிர் உரிமைத்தொகையை திமுக தாமதமாக தந்தது - சாத்தூர் ராமச்சந்திரன்</p> <p>திமுக ஆட்சியின் முந்தைய அதிமுக காலத்தில் தான் கொரோனா பெருந்தொற்று வந்தது - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>கொரோனா காலத்தில் கைகொடுக்காதீர் என்று தான் சொன்னார்கள். உரிமைத்தொகை தராதீர் என சொல்லவில்லை - அமைச்சர் ராஜ்மோகன் கிண்டல்</p><p>பட்டா கொடுத்தீர்கள், ஆனால் இடம் இல்லையே என்று கேள்வி எழுப்பிய மக்கள் தான் திமுகவுக்கு ஓட்டு போடவில்லை - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>ஒரு சில இடங்களில் தவறு நடந்திருக்கலாம், ஆனால் திமுக ஆட்சியில் நாங்கள் 27 லட்சம் பட்டா வழங்கி உள்ளோம் - சாத்தூர் ராமச்சந்திரன்</p><p>முறைகேடு நடந்ததாக திமுக முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஒப்புக்கொண்டதற்கு நன்றி - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்புகளை வெளியிட்டார்.</p><p>தமிழ்நாட்டு விவசாயிகள் நமது உயிர்நாடி - முதலமைச்சர் விஜய்</p> <p>தவெக அரசு பொறுப்பேற்ற 100-வது நாளையொட்டி 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்புகளை வெளியிடுகிறார்.</p><p>தமிழ்நாட்டு விவசாயிகள் நமது உயிர்நாடி - முதலமைச்சர் விஜய்</p> <p>திமுக தலைவர் பெயரை குறிப்பிட்டு அமைச்சர் பேசியதற்காக முதலமைச்சர் விஜய் பேரவையில் வருத்தம் தெரிவித்தார்.</p><p>தமிழக மக்கள் நம் உயிர் என்றால் விவசாயிகள் நம் உயிர்நாடி, சாதி மதம் என அனைத்திற்கும் அப்பாற்பட்ட தொழில் விவசாயம் - முதலமைச்சர்</p><p>தமிழ்நாட்டில் விவசாயிகளின் பயிர்க்கடன் கூடுதலாக தள்ளுபடி செய்து முதலமைச்சர் விஜய் அறிவிப்பு </p><p>75 ஆயிரம் ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்றுள்ளவர்களுக்கு முழுமையாக தள்ளுபடி.</p><p>ரூ.75 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை கடன் பெற்றவர்களுக்கு ரூ.75,000 வரை தள்ளுபடி.</p><p>ரூ.1 லட்சத்திற்கு மேல் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு ரூ.35,000 தள்ளபடி - முதலமைச்சர் விஜய்</p><p>சட்டமன்றத்தின் கண்ணியம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதிக்கு கற்றுக்கொடுங்கள்  </p><p>சட்டமன்ற கண்ணியம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதிக்கு ஓ.பன்னீர்செல்வம் கற்றுக்கொடுக்க வேண்டும்.</p><p>முதலமைச்சர் வரும்போது எதிர்க்கட்சி தலைவர் எழுந்திருக்க வேண்டும் - அமைச்சர் ரமேஷ் பேச்சால் அவையில் சலசலப்பு</p><p>முன்னாள் முதல்வர் வரும்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து நின்றதில்லை. அதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை - கே.என்.நேரு</p><p>அதிமுக ஆட்சியில் நீட் கொண்டு வரப்படவில்லை. 2011, 2012ல் தான் நீட் தொடர்பான அறிவிக்கை வந்தது - தளவாய் சுந்தரம்</p><h2>தளவாய் சுந்தரம் உரை</h2><p>தமிழ்நாட்டில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமி.</p><p>அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரி கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமி.</p> <p>2017-ம் ஆண்டு தான் நீட் தேர்வு வந்தது - அமைச்சர் ராஜேஷ் தளவாய் சுந்தரம்குமார்</p><p>நீட் தேர்வால் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவர்களின் பெற்றோரை ராகுல் சந்தித்தார் - அமைச்சர் ராஜேஷ் குமார்</p><p>விரும்பாத மாநிலங்களுக்கு நீட் இல்லை 2014-ல் ராகுல் காந்தி வாக்குறுதி - அமைச்சர் ராஜேஷ் குமார்</p><h2>எடப்பாடி பழனிசாமி உரை</h2><p>2010-ம் ஆண்டு டிசம்பரில் நீட் அறிவிக்கை வந்தது.</p><p>காங்கிரஸ் ஆட்சியில் தான் நீட் அறிவிக்கை வெளியிடப்பட்டது.</p><p>உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக நடந்து கொள்ள முடியாது.</p><p>நீட் தேர்வுக்கு விலக்கு தேவை என்பதே அதிமுகவின் கொள்கை.</p> <p>மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு செயல்படுகிறது.</p><p>மதுரவாயல் தொகுதியில் பட்டா பிரச்சனை அதிகமாக உள்ளது - தவெக எம்எல்ஏ ரேவந்த் சரண்</p><h2>ஓ.பன்னீர்செல்வம் உரை</h2><p>பேரவைக்கு சபாநாயகர் வரும்போது எழுந்து நிற்பது தான் மரபு. </p><p>முதலமைச்சர் வரும்போது அவையில் அனைவரும் எழுந்து நிற்பது மரபு இல்லை. </p> <p>சபாநாயகருக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தப்பட வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை - சபாநாயகர்</p><h2>சபாநாயகர் பேச்சு</h2><p>தமிழர் பண்பாட்டை கடைபிடித்து மரியாதை செலுத்துவது அவரவர் விருப்பம்.</p><p>முதலமைச்சர் விஜய் வரும்போது இ.பி.எஸ். எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்.</p><p>எழுந்து நிற்பது அவரவர் விருப்பம் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. </p> <h2>அமைச்சர் ஆனந்த் உரை</h2><p>அம்மா முதலமைச்சராக இருந்தபோது ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் எழுந்து நிற்பார். குனிந்தபடி நிற்பார் அதை உலகமே அறியும்.</p><p>தலைவர் தளபதிக்காக மட்டுமே எங்கள் எல்லோருக்கும் மக்கள் அனைவரும் வாக்களித்தார்கள் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.</p><p>ஏனென்றால் தளபதி முதலமைச்சராக வர வேண்டும் என்று தமிழ்நாடு மக்கள் முடிவெடுத்து விட்டார்கள்.  அதன்  அடிப்படையில் எங்களுக்கு வாக்களித்தார்கள்.</p> <p>நீட் தேர்வை இந்த அரசு எந்தளவிற்கு எதிர்க்கிறதோ அந்த அளவிற்கு நெக்ஸ்ட் தேர்வையும் கண்டிப்பாக எதிர்ப்போம் - அமைச்சர் அருண்ராஜ்</p> <p>கொள்ளிடத்தில் இருந்து அரியலூர் பொன்னேரிக்கு நீர் கொண்டு வர வேண்டும் - வைத்தியலிங்கம்</p><h2>பாமக எம்எல்ஏ வைத்தியலிங்கம் உரை</h2><p>கொள்ளிடத்தில் இருந்து அரியலூர் பொன்னேரிக்கு நீர் கொண்டு வர வேண்டும்.</p><p>முந்திரியை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். </p><p>விருத்தாசலம் - கும்பகோணம் சாலை 4 வழிச்சாலையாக்க வேண்டும்.</p><p>இயற்கை சீற்றங்களுக்கு நிரந்தர நிவாரண திட்டம் தேவை.</p><p>கும்பகோணம், விருத்தாசலத்தை தனி மாவட்டமாக பிரிக்க வேண்டும்.</p> <h2>அதிமுக எம்எல்ஏ நடராஜ் உரை</h2><p>அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை விரிவுப்படுத்தி காங்கேயம் பகுதியை இணைக்க வேண்டும்.</p><p>காங்கேயத்தில் தேங்காய், அரிசி உற்பத்திக்காக புதிய தொழிற்பேட்டை அவசியம்.</p><p>தொகுதி மேம்பாட்டு நிதியான ரூ.3 கோடியை ரூ.7 கோடியாக உயர்த்த வேண்டும்.</p><p>விவசாயிகள் நலன் கருதி 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.</p><p>வெள்ளவயலை தனி வட்டாரமாக அறிவிக்க வேண்டும்.</p><p>அமராவதி ஆற்றின் உபரி நீரை நீரேற்றம் செய்து காங்கேயம் தொகுதிக்கு வழங்க வேண்டும் - அதிமுக எம்எல்ஏ நடராஜ் உரை</p><h2>திமுக எம்எல்ஏ லெட்சுமணன் உரை</h2><p>3.2% மட்டுமே மருத்துவ கட்டமைப்புக்கு நிதி உயர்த்தப்பட்டுள்ளது.</p><p>செவிலியர்கள் பணி நிரந்தரம் - பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை.</p> <h2>அதிமுக எம்எல்ஏ ஓ.எஸ். மணியன் உரை</h2><p>15 வகையான நோயாளிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை போதாது, ரூ.10,000- ஆக உயர்த்த வேண்டும்.</p><p>எந்த நேரத்திலும் உடல் கூறு ஆய்வுக்கு அனுமதிக்க வேண்டும். </p><h2>வருவாய்த்துறை மானியக்கோரிக்கை மீது அமைச்சர் செங்கோட்டையன் பதிலுரை</h2><p>வருவாய்த்துறை சேவை துறையாக மாறி உள்ளது. வருவாய்த்துறையில் 26 சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.</p><p>15 நாட்களுக்குள் சான்றிதழ்களை வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.</p><p>100 நாட்களில் சுமார் 39 லட்சம் சான்றிதழ்கள் வழங்கி உள்ளது வருவாய்த்துறை.</p><p>முதலமைச்சர் விஜய் ஒரு தீர்க்கதரிசி.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/shock-in-assam-tribal-schoolgirl-sexual-assault-accused-shot">அசாமில் பழங்குடியின மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான நபர் மீது துப்பாக்கிச்சூடு!... </a></p><p>* விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது தப்பிக்க முயன்றதால் காவல்துறை அவரைக் காலில் சுட்டுப் பிடித்துள்ளது. </p><p>*அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சிராங் மாவட்ட சிரேஷ்ட காவல் கண்காணிப்பாளர் துருபா போரா தெரிவித்துள்ளார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/546-crimes-in-100-days-dmk-legal-wing-deputy-secretary-parandhaman">100 நாளில் 546 குற்றச் சம்பவங்கள்: திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன்</a></p><p>* இந்த 100 நாள் ஆட்சி மக்களுக்கான சர்க்கார் அல்ல, வெறும் சர்க்கஸ் சர்க்கார்!</p><p>* நாளுக்கு நாள் நாசமாகும் தமிழ்நாடு இது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/bangkok-gun-market-thailand-tightens-rules-traders-protest">பாங்காக் துப்பாக்கி சந்தையில் தாய்லாந்து அரசின் புதிய கட்டுப்பாடுகள்: வியாபாரிகள் கொந்தளிப்பு!... </a></p><p>*அரசின் இந்தத் தொடர் கட்டுப்பாடுகள் காரணமாகப் பல தசாப்தங்களாகத் இயங்கி வந்த பாரம்பரிய துப்பாக்கிக் கடைகள் பெரும் நிதி நெருக்கடியைச் சந்தித்துள்ளன.</p><p>*ஆசிய கண்டத்திலேயே அதிகளவில் பொதுமக்களிடம் துப்பாக்கிகள் இருக்கும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானுக்கு அடுத்து தாய்லாந்து இரண்டாம் இடத்தில் உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>எச்1என்1 காய்ச்சல் அறிகுறி: 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு-பெங்களூரு பள்ளி திடீர் மூடல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/h1n1-flu-symptoms-over-500-students-affected-bengaluru-school-shuts</link><comments>https://www.maalaimalar.com/news/national/h1n1-flu-symptoms-over-500-students-affected-bengaluru-school-shuts#comments</comments><guid isPermaLink="false">8642b7aa-8662-4d7e-baf7-cc62336cce46</guid><pubDate>Tue, 18 Aug 2026 11:16:06 +0000</pubDate><atom:updated>2026-08-18T11:16:06.915Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பெங்களூரு,bengaluru,H1N1Flu,BengaluruSchoolNews,பெங்களூரு பள்ளி,எச்1என்1 காய்ச்சல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/hfd38dss/hi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ H1N1Flu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/hfd38dss/hi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக மாநிலம் பெங்களூருவின் ரிச்சர்ட்ஸ் டவுன் பாட்டரி சாலையில் இயங்கி வரும் புகழ்பெற்ற கிளாரன்ஸ் உயர்நிலைப் பள்ளியில் திடீரென காய்ச்சல் மற்றும் இருமல் தீவிரமாக பரவியுள்ளது. பள்ளியில் பயிலும் 2,500 மாணவர்களில் 500க்கும் மேற்பட்டோர் (சுமார் 20 சதவீதம்) காய்ச்சல், சளி, கடுமையான இருமல் மற்றும் உடல் வலியால் பாதிக்கப்பட்டு பள்ளிக்கு வரவில்லை. மேலும், 21 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களும் இதே அறிகுறிகளுடன் விடுப்பு எடுத்துள்ளனர்.</p><h2>உறுதியா<strong>ன எச்1என்</strong>1 தொற்றுகள்</h2><p>பள்ளியின் முதலுதவி மையத்திற்கு 137 மாணவர்கள் காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சைக்காக வந்ததை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரண்டு பேருக்கு H1N1 / Swine Flu வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/less-painful-lethal-injection-for-death-penalty-supreme-court-says-no">வைரஸ்</a> மேலும் பரவுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆகஸ்ட் 18 வரை பள்ளி வளாகத்தில் நேரடி வகுப்புகள் அனைத்தும் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.</p><h2>பள்ளி <strong>சுற்றியுள்ள சுகாதார சீர்கேடு காரண</strong>ம்?</h2><p>பள்ளி நிர்வாகம் மாநகராட்சி சுகாதார அதிகாரி மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள அவசர கடிதத்தில், பள்ளி வளாகத்தை சுற்றி அனுமதியின்றி செயல்படும் தெருவோர உணவகங்களே இந்த சுகாதார சீர்கேட்டிற்கு காரணம் எனக் குற்றம்சாட்டியுள்ளது. </p><p>நடைபாதைகளை ஆக்கிரமித்து விற்கப்படும் உணவுப் பொருட்கள், கொட்டப்படும் கழிவுகள் மற்றும் அதனால் சேரும் எலிகள் மாணவர்களின் ஆரோக்கியத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>பள்ளி வளாகத்திலிருந்து 50 மீட்டர் சுற்றளவில் சுகாதாரமற்ற உணவுகள் விற்கப்படுவதைத் தடுக்கவும், சட்டவிரோத கடைகளை உடனடியாக அகற்றவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அரசு பெண் ஊழியர்களின் 3வது குழந்தைக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு: அமைச்சர் சரத்குமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sarathkumar-speech-in-tn-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sarathkumar-speech-in-tn-assembly#comments</comments><guid isPermaLink="false">0ae4a793-bddb-4dc4-9ab2-b23e6dce8b8f</guid><pubDate>Tue, 18 Aug 2026 11:10:46 +0000</pubDate><atom:updated>2026-08-18T11:10:46.182Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Govt employees,TN assembly,தமிழக சட்டசபை |,அரசு ஊழியர்கள்,Minister Sarathkumar,அமைச்சர் சரத்குமார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/fodn4hk5/sarath.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ minister sarathkumar ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/fodn4hk5/sarath.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அரசு பெண் ஊழியர்களின் 3வது குழந்தைக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என அமைச்சர் சரத்குமார் அறிவித்தார்.</p><p>தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகிறது. அப்போது மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் சரத்குமார் பதிலளித்துப் பேசியதாவது:</p><p>அரசு பெண் ஊழியர்களின் 3வது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு 365 நாட்கள் வழங்கப்படும்.</p><p>போட்டித் தேர்வுக்கு தயாராகும் ஆர்வலர்களுக்காக வெற்றி பாதை செயலி உருவாக்கப்படும்.</p><p>ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தின் சமூக ஊடக கண்காணிப்பு மையம் ஏற்படுத்துதல்.</p><p>தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் கண்காணிப்பு அறையுடன் கூடிய சிசிடிவி கேமரா அமைப்பு ஏற்படுத்துதல்.</p><p>பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி மையத்தில் நவீன கணினி மையம் உருவாக்குதல்.</p><p>பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் திறந்தவெளி விளையாட்டு அரங்கம் அமைத்தல்.</p><p>அரசுப் பணியாளர்களுக்கான இணைய வழி திறன் மேம்பாட்டு பயிற்சியில் கூடுதலாக சட்டம் மற்றும் விதிகளை இணைத்தல்.</p><p>போட்டித் தேர்வு பயிற்சி மையங்களை அறிவுசார் மையங்களுடன் இணைத்தல்.</p><p>எளிமை ஆளுமைத் திட்டத்தின்கீழ் 150 அரசு சேவைகள் வழங்குதல்.</p><p>டிஎன்பிஎஸ்சி கூடுதல் இணைப்பு கட்டிடம் ரூ.5.12 கோடி செலவில் கட்டப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>3 தமிழர்கள் சுட்டுக்கொலை: “உங்கள் வேலையை பாருங்கள்”
தமிழ்நாட்டிற்கு கர்நாடக முதலமைச்சர் கண்டனம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/three-tamils-shot-dead-mind-your-own-businesskarnataka-chief-minister-criticizes-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/news/national/three-tamils-shot-dead-mind-your-own-businesskarnataka-chief-minister-criticizes-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">8ea1d26d-22b7-44c9-8ae0-7b80f6874089</guid><pubDate>Tue, 18 Aug 2026 11:05:06 +0000</pubDate><atom:updated>2026-08-18T11:05:06.336Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,டி.கே.சிவகுமார்,joseph vijay,D.K. Shivakumar,முதலமைச்சர் விஜய்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/nqt7ltwp/New-Project-2026-08-18T163153.791.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: “உங்கள் வேலையை பாருங்கள்”
தமிழ்நாட்டிற்கு கர்நாடக முதலமைச்சர் கண்டனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/nqt7ltwp/New-Project-2026-08-18T163153.791.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர் மற்றும் குமார் ஆகிய 3 பேர் கொல்லப்பட்டனர்.</p><p>இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த முதலமைச்சர் விஜய் இது ஒரு படுகொலை என்றும், இந்த விவகாரத்தில் கர்நாடக அரசு கொடுக்கும் விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார். </p><p>மேலும் மற்ற தமிழ்நாடு தலைவர்களும் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.</p><h2>டி.கே.சிவக்குமார் கண்டனம்</h2><p>இந்நிலையில் தமிழ்நாடு அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்துகளுக்கு கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்து அவர் பேசியதாவது:-</p><p>“இது ஒரு கூட்டாட்சி அமைப்பு. எந்தவொரு மாநிலமும் மற்றொரு மாநிலத்தின் உள் விவகாரங்களில் தலையிடக் கூடாது. நான் தமிழ்நாடு விவகாரங்களில் ஒருபோதும் தலையிட்டதில்லை, மேலும் உங்கள் நிர்வாகம் குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவும் இல்லை.  </p><p>ஒவ்வொரு மாநிலமும் அதற்கே உரிய சவால்களை எதிர்கொள்கிறது. கர்நாடகாவின் சட்டம், ஒழுங்கு விவகாரம் குறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும். </p><p>எங்கள் மாநிலத்தைப் பாதுகாப்பது எப்படி என்று எங்களுக்குத் தெரியும். நீங்கள் உங்கள் வேலையை செய்யுங்கள், நாங்கள் எங்கள் வேலையைச் செய்வோம். </p><p>கர்நாடகாவின் நிர்வாகம் மற்றும் சட்டம் ஒழுங்கு விஷயங்களில் தலையிடக் கூடாது.” என தெரிவித்தார். </p><p>இவ்வாறு டி.கே.சிவகுமார் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>காந்தி, நேரு மீது கூட வழக்கு பதியப்பட வேண்டும்: கார்கே தடாலடி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vante-mataram-issue-case-should-be-filed-against-gandhi-and-nehru-too-kharge-slams</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vante-mataram-issue-case-should-be-filed-against-gandhi-and-nehru-too-kharge-slams#comments</comments><guid isPermaLink="false">0da8de1a-643b-499c-aa5b-e544b6a69387</guid><pubDate>Tue, 18 Aug 2026 11:00:17 +0000</pubDate><atom:updated>2026-08-18T11:00:17.331Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வந்தே மாதரம்,Vande Mataram,கார்கே,Kharge,sonia gandhi,சோனியா காந்தி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/8ln9aiea/Kharge001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கார்கே- சோனியா காந்தி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/8ln9aiea/Kharge001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் தேசிய கீதமாக ஜன கண மன உள்ளது. தேசிய பாடலாக வந்தே மாதரம் உள்ளது. தேசிய கீதம் பாடலுக்கு முன்னதாக வந்தே மாதரம் பாடல் பாடப்பட வேண்டும். அத்துடன் வந்தே மாதரம் முழுமையாக பாடப்பட வேண்டும் என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றியது.</p><h2>வந்தே மாதரம்</h2><p>தேசிய பாடலான வந்தே மாதரம் அவமதிக்கப்படுவதை தடுப்பதற்கும், தேசிய கீதத்திற்கும் இணையான சட்டப் பாதுகாப்பை வழங்குவதற்கும் 2026 ஜூலை மாதத்தில் (The Prevention of Insults to National Honour (Amendment) Bill, 2026) என்ற வந்தே மாதரம் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, பின்னர் ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்று சட்டமாகியுள்ளது.</p><p>இச்சட்டத்தின் கீழ் இப்பாடலை வேண்டுமென்றே பாடுவதைத் தடுத்தாலோ அல்லது அவமதித்தாலோ மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது அரசு விழாக்கள் மற்றும் பள்ளிகளில் தேசிய கீதத்திற்கு முன்பாக வந்தே மாதரம் பாடப்பட வேண்டும் என்றும், பாடலின் ஆறு பத்திகளையும் (Stanzas) முழுமையாகப் பாடப்பட வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.</p><p>இந்த சட்டம் நிறைவேற்றதுடன் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. சுதந்திர தினத்தின்போது பல்வேறு இடங்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.</p><h2>காங்கிரஸ் அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றியபோது சர்ச்சை</h2><p>அந்த வகையில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. தேசியக் கொடி ஏற்றப்படுவதற்கு முன்னதாக வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது. அப்போது இரண்டு பத்திகள் பாடப்பட்ட பின்னர், அவற்றை சோனியா காந்தி நிறுத்தச் சொல்வது போன்று சைகை காட்டியது போன்ற செய்தி வெளியானது. ஆனால், சோனியா காந்தி, கார்கேவுக்கு நாற்காலிதான் கேட்டார். பாடலை நிறுத்தச் சொல்லவில்லை என்று காங்கிரஸ் விளக்கம் அளித்தது.</p><p>இதற்கிடையே வந்தே மாதரம் பாடலை அவமதித்ததாக சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புகார் அளிக்கப்பட்டது குறித்து மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.</p><h2>இது தொடர்பாக மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:-</h2><p>அவர்கள் என்ன புகாரை பதிவு செய்யப் போகிறார்கள்? மகாத்மா காந்தி பாடிய அதே வந்தே மாதரம் பாடலைத்தான் நாங்களும் பாடினோம். ஜவஹர்லால் நேரு பாடியதையும் நாங்கள் பாடினோம். கடந்த 18 ஆண்டுகளாக, வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு பாடியது உட்பட, அவர்கள் பாடியவற்றையே நாங்களும் பாடி வருகிறோம். மேலும், 12 ஆண்டுகள் முதல்வராக இருந்தபோதும், இத்தனை ஆண்டுகளாக அவர் (பிரதமர் நரேந்திர மோடி) பாடி வரும் அதே வந்தே மாதரம் பாடலைத்தான் அவரும் பாடினார்.</p><p>இது ஒரு குற்றம் என்றால், கடந்த 18 ஆண்டுகளாக அவர்களும் இந்த குற்றத்தை செய்து வந்துள்ளனர் என்றுதான் அர்த்தம். இதுவே குற்றம் என்றால், மகாத்மா காந்தி மீதும் வழக்குத் தொடருங்கள். நேரு மீதும் வழக்குத் தொடருங்கள்.</p><p>மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ரியோவின் ‘ராம் இன் லீலா’ படத்தின் பெயர் மாற்றம்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/title-of-rios-film-ram-in-leela-changed</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/title-of-rios-film-ram-in-leela-changed#comments</comments><guid isPermaLink="false">9b329cd4-f10b-43c0-82d1-cefb0b18677b</guid><pubDate>Tue, 18 Aug 2026 10:32:47 +0000</pubDate><atom:updated>2026-08-18T10:32:47.030Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Actor Rio Raj,Ram and Leela,நடிகர் ரியோ ராஜ்,ராம் அண்ட் லீலா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/41w0o9gq/New-Project-2026-08-18T155301.769.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரியோவின் ‘ராம் இன் லீலா’ படத்தின் பெயர் மாற்றம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/41w0o9gq/New-Project-2026-08-18T155301.769.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் ரியோ ராஜ், வர்த்திகா நடிப்பில் உருவாகி உள்ளப் படம் ராம் இன் லீலா. இப்படத்தில் பாலாஜி தியாகராஜன் தயாளன், முனிஷ்காந்த், சேத்தன், தீபா வெங்கட், மாளவிகா அவினாஷ், நயனா எல்சா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.</p><p>இப்படத்தை டிரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஈவா என்டர்டெயின்மென்ட் பதாகைகளின் கீழ் ஆர். ரவீந்திரன் மற்றும் சுதர்சன் ஆகியோர் தயாரித்துள்ளனர். அங்கித் மேனன் படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள், டிரெய்லர் எல்லாம் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், ஆக.21ம் தேதி படம் வெளியாக உள்ளது.</p><p>இந்நிலையில் இப்படத்தின் பெயரை படக்குழு மாற்றியுள்ளது. அதன்படி, திரைப்படத்தின் பெயர் தற்போது ‘ராம் அண்ட் லீலா’ என மாற்றப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சீனாவில் உருவாகும் புதுவித &apos;டார்க் டூரிசம்&apos;: செயற்கைப் பேரிடர்களைப் பணம்கொடுத்து அனுபவிக்கும் இளைஞர்கள்!</title><link>https://www.maalaimalar.com/news/world/china-youth-flock-to-artificial-disaster-parks-as-dark-tourism-trend-grows</link><comments>https://www.maalaimalar.com/news/world/china-youth-flock-to-artificial-disaster-parks-as-dark-tourism-trend-grows#comments</comments><guid isPermaLink="false">3007af8e-f657-47da-8e8a-fe3cb93e5b5b</guid><pubDate>Tue, 18 Aug 2026 10:30:42 +0000</pubDate><atom:updated>2026-08-18T10:30:42.093Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>China,சீனா,சுற்றுலா,Hangzhou,DarkTourism,LvxingBase,டார்க்டூரிசம்,இயற்கைபேரிடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/qvoxhnoj/chin.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ China DarkTourism]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/qvoxhnoj/chin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சீனாவில் தற்போது இளைஞர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே 'டார்க் டூரிசம்' எனும் சோக சம்பவங்கள் அல்லது ஆபத்தான சூழல்களை அனுபவிக்கும் புதிய டிரெண்ட் வேகமாகப் பரவி வருகிறது. வழக்கமாக வரலாற்றுப் பேரழிவுகள் நடந்த இடங்களைப் பார்வையிடுவதற்குப் பதிலாக, செயற்கையாக உருவாக்கப்படும் இயற்கைச் சீற்றங்களை நேரில் சந்தித்து ஆபத்திலிருந்து தப்பிக்கும் பயிற்சிகளைப் பெற சீன இளைஞர்கள் பெரும் தொகை கொடுத்து ஆர்வம் காட்டி வருகின்றனர்.</p><h2>ஹங்சோவில் அமை<strong>ந்துள்ள பிரம்மா</strong>ண்ட 'லுக்சிங் பேஸ்'</h2><p>சீனாவின் கிழக்குக் பகுதியில் அமைந்துள்ள ஹங்சோ நகரில் 'லுக்சிங் பேஸ்' என்ற நாட்டின் முதல் அதிநவீன செயற்கைப் பேரிடர் மையம் தொடங்கப்பட்டுள்ளது. பிரபல சீனப் பெண் மற்றும் ஆண் சாகசப் பயணிகளான சாங் சின்யு மற்றும் லியாங் ஹாங் ஆகியோரால் நிறுவப்பட்ட இந்த மையம், குறுகிய காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.</p><p>இந்த மையத்தில் மணிக்கு 165 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் செயற்கைப் புயல், கனமழை, மற்றும் திடீர் நகர்ப்புற வெள்ளப்பெருக்கு போன்ற ஆபத்தான சூழல்கள் அப்படியே உருவாக்கப்படுகின்றன. இங்கு வருபவர்கள் வெப்பப் பாதுகாப்பு உடைகள் மற்றும் தலைக்கவசங்களை அணிந்து, நிஜ பேரிடரின் நடுவே நின்று தப்பிப்பிழைக்கும் வழிமுறைகளைக் கற்றுக்கொள்கின்றனர்.</p><h2>கட்டண <strong>விவரங்</strong>கள்</h2><p>* தனிநபர் பெரியவர்களுக்கான கட்டணம்: 899 யுவான் (சுமார் $135 USD)</p><p>* குடும்பப் தொகுப்புக் கட்டணம்: 5,000 யுவான் வரை </p><p>இந்த மையம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 1,60,000-க்கும் அதிகமானோர் வருகை தந்துள்ளனர். இந்த பேரிடர் அனுபவ மையம் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஆபத்து காலங்களில் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் தற்காப்புப் பயிற்சிகளைப் பெற இது ஒரு நல்ல வாய்ப்பு என சிலர் ஆதரவு தெரிவிக்கின்றனர்.</p><p>அதேவேளையில், நிஜ வாழ்க்கையில் வெள்ளம் மற்றும் இயற்கைச் சீற்றங்களால் வீடுகளையும் உறவினர்களையும் இழந்து தவிக்கும் மக்களின் வேதனையை, வணிக ரீதியிலான பொழுதுபோக்காக மாற்றுவது அவர்களின் துயரத்தைக் கொச்சைப்படுத்துவது போல் உள்ளது என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>IT வேலையை உதறிவிட்டு காளான் விவசாயம் : மாதம் ரூ.10 லட்சம் சம்பாதிக்கும் பி.டெக் பட்டதாரி!</title><link>https://www.maalaimalar.com/news/national/btech-graduate-quits-it-job-earns-10-lakh-a-month-from-mushroom-farming</link><comments>https://www.maalaimalar.com/news/national/btech-graduate-quits-it-job-earns-10-lakh-a-month-from-mushroom-farming#comments</comments><guid isPermaLink="false">e788772d-c520-477a-a5c4-98ca0d859f06</guid><pubDate>Tue, 18 Aug 2026 10:28:57 +0000</pubDate><atom:updated>2026-08-18T10:28:57.716Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Mushroom Farming,காளான் விவசாயம்,ITtoAgriculture,BTechFarmer,பிடெக் விவசாயி,Ganga Bhumi Mushrooms,Agripreneurship</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/jdtta0z7/Mushroom-Farming" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mushroom Farming ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/jdtta0z7/Mushroom-Farming?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பொதுவாகப் பொறியியல் படிக்கும் இளைஞர்களின் இலக்கு ஒரு நல்ல ஐடி நிறுவனத்தில் சேர்ந்து கைநிறையச் சம்பாதிப்பதாகத் தான் இருக்கும். </p><p>ஆனால், <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%92%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE">ஒடிசா</a>வைச் சேர்ந்த விக்ரம்தேவ் மஹாபத்ரா என்ற இளைஞர், 14 ஆண்டுகால தனது வெற்றிகரமான கார்ப்பரேட் ஐடி வாழ்க்கையைத் துறந்து, சொந்த ஊரில் காளான் விவசாயம் செய்து மாதம் 10 லட்ச ரூபாய்க்கும் மேல் லாபம் ஈட்டி சாதனை படைத்து வருகிறார்.</p><h2>14 ஆண்டுகால ஐடி வாழ்க்கை</h2><p>ஒடிசாவின் நபரங்பூர் பகுதியைச் சேர்ந்த விக்ரம்தேவ், கடந்த 2012-ஆம் ஆண்டு பிஜு பட்நாயக் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் 'எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்' பிரிவில் பி.டெக் முடித்தார். </p><p>படிப்பை முடித்தவுடன் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">ஐடி துறை</a>யில் கால்பதித்த அவர், அடுத்த 14 ஆண்டுகளில் மைண்ட்ட்ரீ, செரோல் டெக்னாலஜிஸ் மற்றும் எல்டிஐமைண்ட்ட்ரீ போன்ற இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் பல்வேறு உயர் பொறுப்புகளில் மிக வெற்றிகரமாகப் பணியாற்றினார்.</p><h2>கார்ப்பரேட் டூ விவசாயம் எப்படி?</h2><p>கார்ப்பரேட் வாழ்க்கையில் நல்ல வருமானம் கிடைத்தாலும், சொந்த ஊருக்குச் சென்று சுயதொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் விக்ரம்தேவிடம் இருந்தது. </p><p>ஒருகட்டத்தில் தனது ஐடி வேலையை ராஜினாமா செய்த அவர், தனது சொந்த ஊரான நபரங்பூருக்குத் திரும்பினார். அங்கு விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த வணிக வாய்ப்புகளை ஆராய்ந்தவர், காளான் வளர்ப்பைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்தார். </p><p>அதன்படி, 'கங்கா பூமி மஷ்ரூம்ஸ்' என்ற வணிக ரீதியிலான காளான் உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் மையத்தைத் தொடங்கினார்.</p><h2>தினசரி 600 கிலோ உற்பத்தி; மாதம் 10 லட்சம் லாபம்!</h2><p>நவீன தொழில்நுட்பங்களை விவசாயத்தில் புகுத்திய விக்ரம்தேவின் பண்ணை, தற்போது மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. இவரது பண்ணையில் ஒரு நாளைக்குச் சுமார் 500 முதல் 600 கிலோ வரை காளான்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. </p><p>இது ஒரு மாதத்திற்கு 15 முதல் 18 டன்கள் ஆகும். இங்கு விளையும் காளான்கள் ஒடிசா மாநிலத்தின் முக்கிய நகரங்களான பெர்ஹாம்பூர், புவனேசுவர் போன்ற பெரிய சந்தைகளுக்கு நேரடியாகக் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. </p><p>அனைத்துப் பராமரிப்பு மற்றும் இதர செலவுகளும் போக, இந்த காளான் பண்ணை மூலம் மட்டுமே இவருக்கு மாதம் ரூ.10 லட்சத்திற்கும் மேல் நிகர லாபம் கிடைக்கிறது.</p><h2>24 கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு</h2><p>விக்ரம்தேவ் தனக்கான வருமானத்தை உருவாக்கியதோடு நிறுத்திக்கொள்ளாமல், தனது பகுதியைச் சேர்ந்த 24 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பையும் வழங்கியுள்ளார். மிக முக்கியமாக, அவரது பண்ணையில் பணிபுரியும் 24 ஊழியர்களில் 18 பேர் பெண்கள். </p><p>இதன் மூலம் கிராமப்புறப் பெண்களின் வாழ்வாதாரத்திற்கு அவர் வழிவகை செய்துள்ளார். பெருநகரங்களை நோக்கி வேலைக்காக ஓடாமல், சரியான திட்டமிடலும் சந்தை தேவையைப் புரிந்துகொள்ளும் திறனும் இருந்தால், நவீன விவசாயம் மூலம் சொந்த ஊரிலேயே மிகப்பெரிய தொழிலதிபராக மாற முடியும் என்பதற்கு விக்ரம்தேவ் மஹாபத்ராவின் இந்த பயணம் சிறந்த எடுத்துக்காட்டாகும்.</p>]]></content:encoded></item><item><title>இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/imd-inform-districts-likely-to-experience-heavy-rain-today-and-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/imd-inform-districts-likely-to-experience-heavy-rain-today-and-tomorrow#comments</comments><guid isPermaLink="false">a3059989-dd9a-4205-9a2c-2fabcec3394a</guid><pubDate>Tue, 18 Aug 2026 10:23:44 +0000</pubDate><atom:updated>2026-08-18T10:23:44.571Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/17rnn3gv/rain.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/17rnn3gv/rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</strong></em></p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p><h2><strong>லேசான மழை</strong></h2><p>இன்று மற்றும் நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.</p><p>திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>20-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>21 மற்றும் 22-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>23 மற்றும் 24-ந்தேதிகளில் வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>இதனிடையே இன்று முதல் 22-ந்தேதி வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong> </h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>இன்று முதல் 22-ந்தேதி வரை தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item></channel></rss>