<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 08 Sep 2026 05:29:21 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: கடந்த ஆட்சியில் பொதுப்பணித்துறையில் ரூ.2,000 கோடி முறைகேடு: அமைச்சர் ஆதவ்  புகார் - 8 செப். 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-8-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-8-september-2026#comments</comments><guid isPermaLink="false">271c6b9f-172f-4ef3-bb75-008623eab7d3</guid><pubDate>Tue, 08 Sep 2026 03:42:33 +0000</pubDate><atom:updated>2026-09-08T05:25:23.995Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/un7xbzuk/aadhav.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/un7xbzuk/aadhav.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சாதி பற்றிய திறந்தவெளி பதிவுமுறையை மத்திய அரசு கைவிடக்கோரி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் தீர்மானம்</p><p>மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதி விவரம் தொடர்பான திறந்தவெளி முறையை கைவிட வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம்</p><p>பட்டியலில் உள்ள சாதி அடிப்படையில் மட்டும் பதிவு செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு கோரி தமிழ்நாடு அரசு சார்பில் தீர்மானம்</p><p>பதிவேற்றம் செய்யப்பட்ட சாதிகளின் பட்டியலில் இருந்து சாதி விவரத்தை குறிப்பிடும் வகையில் வழிவகை செய்யக்கோரி தீர்மானம்</p><p>சாதி பற்றிய திறந்தவெளி பதிவுமுறையை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு சார்பில் தீர்மானம்</p><p>பட்ஜெட் அனுமதி இல்லாமலேயே 14-1-2026 அரசாணை மூலம் 2026-27-ம் ஆண்டு பணிகளுக்கு ரூ.2000 கோடி எடுத்துள்ளதாக அமைச்சர் ஆதவ் குற்றச்சாட்டு</p><p>சட்டசபையில் அனுமதியின்றி எதிர்கால பட்ஜெட்டில் இருந்து ரூ.2000 கோடி எடுக்கப்பட்டது குறித்த விசாரணை தேவை.</p><p>80 பணிகளுக்கு எதிர்கால பட்ஜெட்டில் முன்கூட்டியே ரூ.2,000 கோடி ஒதுக்கியது மிகப்பெரிய தவறு - அமைச்சர் ஆதவ்</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உரிமை மீறல் புகார்</h2><p>கடந்த ஆட்சியில் பொதுப்பணித்துறையில் ரூ.2000 கோடி முறைகேடு என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உரிமை மீறல் புகார்.</p><p>சட்டசபையில் அனுமதியின்றி எதிர்கால பட்ஜெட்டில் இருந்து ரூ.2000 கோடி எடுத்துள்ளது திமுக.</p><p>தாங்கள் தான் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்றெண்ணி எதிர்கால பட்ஜெட்டில் ரூ.2,000 கோடி முறைகேடு என குற்றச்சாட்டு</p><p>அவையை முடிக்கவிடாமல் திமுகவினர் தடுத்தால் நான் என்ன செய்ய முடியும்?</p><p>முதலமைச்சர் பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்க முடியாது என்பதற்கு காரணத்தையும் கூறி விட்டேன்.</p><p>தவெக எம்எல்ஏக்கள் அமைதி காத்தது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. </p><p>என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என பார்த்துக்கொண்டிருந்தார் எடப்பாடி பழனிசாமி - சபாநாயகர்</p><h2>சபாநாயகர் உரை</h2><p>திமுகவினர் பேசுவதற்கு அனுமதி கொடுப்பது தான் நான் செய்த தவறா?</p><p>சபையை நடத்தவிடாமல் தடுக்க வேண்டும் என திமுகவினருக்கு உள்நோக்கம்.</p><p>அவையின் மாண்பு தான் முக்கியம், திமுகவினரை வெளியேற்றியதை தவறாக கருதவில்லை.</p><p>பிற்பகல் 1.30 மணிக்குள்ளாக சட்டசபையை முடிக்க வேண்டும்</p> <p>சபாநாயகர் இருக்கை முன் அமர்ந்திருந்த திமுக எம்எல்ஏக்களை அவை காவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கி சென்று வெளியேற்றினர்.</p><p>சட்டசபை மாண்பை குலைக்கும் வகையில் செயல்படும் திமுக உறுப்பினர்களை அவை காவலர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு</p><p>திமுக கொறடா எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுவதற்கு நான் அனுமதி தருகிறேன், அனைவரும் இருக்கையில் அமருங்கள் - சபாநாயகர்</p><p>அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும், நீக்க வேண்டும் என்று தொடர்து திமுக உறுப்பினர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர்.</p><p>சபாநாயகர் இருக்கைக்கு முன்பாக அமர்ந்தும், சூழ்ந்து நின்றும் திமுக உறுப்பினர்கள் கூச்சல் எழுப்பி வருகின்றனர்.</p><p>அவையின் மாண்பை எப்படி குறைக்க வேண்டும் என்று பயிற்சி எடுத்துக்கொண்டு திமுக உறுப்பினர்கள் வந்துள்ளீர்கள்.</p><p>சட்டசபையை நடத்தவிடாமல் தடைசெய்யும் நோக்கத்திலேயே திமுக உறுப்பினர்கள் வந்துள்ளனர் - சபாநாயகர்</p><p>2 நாட்களாக பிரச்சனையில் ஈடுபடும் திமுக உறுப்பினர்களை அவையிலிருந்து வெளியேறுங்கள் - அவை முன்னவர் செங்கோட்டையன்</p><p>சட்டசபையில் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு திமுக உறுப்பினர்கள் அமளி</p><p>நேற்று முதலமைச்சர் விஜய் பேசிய எதையும் அவை குறிப்பில் இருந்து நீக்க தேவையில்லை - சபாநாயகர்</p> <p>சட்டசபையில் திமுகவினர் என் அனுமதியின்றி போஸ்டர்களை காட்டினீர்கள்.</p><p>சர்காரியாக கமிஷன் செய்தி பற்றி பலமுறை மாமன்றத்தில் பேசப்பட்டுள்ளது.</p><p>மிசா சட்டத்தில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டது பற்றி முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டது உண்மையான செய்தி - சபாநாயகர்</p><p>சட்டசபையில் நேற்று முதலமைச்சர் விஜய் பேசியபோது ஒரு நிமிடம் கூட திமுகவினர் கவனிக்கவில்லை -சபாநாயகர் குற்றச்சாட்டு</p><p>திமுக ஆட்சியின் மீது சர்காரியா கமிஷனிடம் புகார் அளித்ததே கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கல்யாண சுந்தரம் தான் - அமைச்சர் ஆதவ்</p><h2>அமைச்சர் ஆதவ் உரை</h2><p>திமுக ஆட்சியில் என்னென்ன ஊழல் நடந்தது என்று காட்டும் பொறுப்பு தவெக அரசுக்கு உள்ளது.</p><p>திமுக ஆட்சியில் நடந்தவற்றை ஒவ்வொரு துறையாக கிளீன் செய்து வருகிறார் முதலமைச்சர் விஜய்.</p><p>ஊழல் என்ற புற்றுநோயை திமுக உருவாக்கி உள்ளதை சுட்டிக்காட்டி உள்ளார் முதலமைச்சர் விஜய்.</p><p>மறைந்தவர்கள் பற்றியும் அவையில் இல்லாதவர் பற்றியும் முதலமைச்சர் பேரவையில் பேசுவது நியாயமில்லை - கே.என்.நேரு</p><p>என்னை பேச விடமாட்டார்கள், தவெகவினர் பேசினாலே பயந்து எழுந்து நின்று கூச்சல் போடுவர் - அமைச்சர் ஆதவ்</p><p>எம்ஜிஆரும் அவையில் சர்காரியா கமிஷன் குறித்து பேசி உள்ளதால் அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டாம் - செங்கோட்டையன்</p><p>ஸ்டாலின் கைது குறித்த அமைச்சர் நிர்மல் குமாரின் பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சல்</p><p>முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்படவில்லை, பெண்கள் தொடர்பான வழக்கிற்கு தான் கைது செய்யப்பட்டார்.</p><p>21-வது அம்ச திட்டம் என்று அம்மையார் இந்திரா காந்தி குறித்து மோசமாக பேசியதால் தான் ஸ்டாலின் கைது - அமைச்சர் நிர்மல்குமார்</p><h2>அமைச்சர் நிர்மல்குமார் உரை</h2><p>விசாரணையையோ நீதிமன்றத்தை பற்றியோ நேற்று முதலமைச்சர் விஜய் பேசவில்லை.</p><p>கலைஞர் எங்கெங்கு எல்லாம் பணம் வாங்கினார் என்பது ஏற்கனவே சர்காரியாக கமிஷனில் உள்ளது. </p><p>திருட்டு, வழிப்பறி, பெண்கள் குறித்த வழக்கு கூட இருக்கலாம், அது எல்லாம் மிசா வழக்கு ஆகாது.</p> <p>முதலமைச்சர் விஜய் ஆதாரம் இன்றி பேசிய அனைத்தையும் அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் - எ.வ.வேலு</p><p>கலைஞர் கருணாநிதி மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை என சர்காரியா கமிஷனே கூறிவிட்டது.</p><p>குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லாததால் வழக்கு தொடர முடியாது என்றும் சர்காரியா கமிஷன் கூறிவிட்டது - எ.வ.வேலு</p><p>நேற்று மாறன் பற்றி முதலமைச்சர் விஜய் பேசினார், அவைக்குள் இல்லாதவர் பற்றி பேசக்கூடாது என விதியில் உள்ளது -  எ.வ.வேலு </p> <p>மிசா சட்டத்தை பற்றி முதலமைச்சர் விஜய் பேசியதற்கு திமுக எதிர்ப்பு </p><p>பெரியார் கொள்கையை ஏற்றுள்ள திராவிட கழக தலைவர் வீரமணி கூட முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் சிறையில் இருந்தார் - எ.வ.வேலு</p><p>நேற்று பேரவையில் முதலமைச்சர் விஜய் பேசும்போது நாங்கள் அமைதியாகவே இருந்தோம்.</p><p>அமலாக்கத்துறை அறிக்கையை முதலமைச்சர் விஜய் பேசியது அவையை மீறிய செயல், விதிக்குட்பட்டது அல்ல என்பது திமுக கருத்து.</p><p>ஜனநாயகத்திற்கு எதிராக வந்த மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையில் இருந்தார் மு.க.ஸ்டாலின் - எ.வ.வேலு </p> <h2>சட்டசபையில் திமுக கொறடா எ.வ.வேலு உரை</h2><p>பேரவைக்கு என்று மரபுகள் உள்ளன. முதலமைச்சர் கண்ணியமாகவே பேசுவார்.</p><p>அவை மரபை மீறி முதலமைச்சர் பேசி இருக்கிறார்.</p><p>நீதி விசாரணையில் இருப்பதை பேச அனுமதி இல்லை.</p><p>சட்டசபையில் இன்று பொதுத்துறை, அயலக தமிழர் நலன், மாநில சட்டசபை, ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நிதித்துறை, திட்டம் மற்றும் வளர்ச்சி, ஓய்வூதியங்களும் ஓய்வுக்கால நன்மைகளும், போக்குவரத்து ஆகிய துறைகளின் மானிய கோரிக்கைகள் மீது, விவாதம் நடக்க உள்ளது. </p><p>அமைச்சர்கள் செங்கோட்டையன், மரிய வில்சன், பார்த்திபன், தென்னரசு ஆகியோர் விவாதத்திற்கு பதில் அளித்து பேசுவார்கள்.</p> ]]></content:encoded></item><item><title>ரூ.2000 கோடி.. மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் எ.வ. வேலு செய்த வேலை - சட்டபையில் ஆதவ் அர்ஜுனா புகார் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-2000-crore-the-move-made-by-ev-velu-in-the-confidence-of-returning-to-poweraadhav-arjuna-levels-allegations-in-the-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-2000-crore-the-move-made-by-ev-velu-in-the-confidence-of-returning-to-poweraadhav-arjuna-levels-allegations-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">2458f3a7-14ce-40bf-b38a-9b9216aeceee</guid><pubDate>Tue, 08 Sep 2026 05:29:03 +0000</pubDate><atom:updated>2026-09-08T05:29:03.854Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,Aadhav Arjuna,ஆதவ் அர்ஜுனா,Tamil Nadu Legislative Assembly,E.V. Velu,எ.வ. வேலு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/9m5i58ma/tn-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஆதவ் அர்ஜுனா, எ.வ. வேலு]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆதவ் அர்ஜுனா, எ.வ. வேலு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/9m5i58ma/tn-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையின் கடைசி நாள் இன்று. நேற்று முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/vijay">விஜய் </a>காவல்துறை மானிய கோரிக்கை பதிலுரையில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-ministers-remarks-cannot-be-expunged-from-the-house-records-speaker-asserts-firmly">சர்க்காரியா கமிஷன் </a>குறித்து பேசியவற்றை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை சபாநாயகர் மறுத்த நிலையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். </p><p>இதையடுத்து அவை நடவடிக்கைகள் தொடர்தன. </p><p>அப்போது எழுந்த விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுக கொறடா எ.வ. வேலு குறித்த குற்றச்சாட்டை முன்வைத்தார். </p> <p>ஆதவ் அர்ஜுனா அவையில் பேசியதாவது, "சட்டப்சபையின் உரிமை மீறல் பிரச்னையை நாங்கள் கொண்டுவந்தோம். </p><p>தமிழ்நாடு சட்டசபை விதிகளின் கீழ் முன்னாள் அமைச்சர் மற்றும் இன்றைய எம்எல்ஏ எவ வேலு 2021 - 2026 ஆம் காலகட்டத்தில் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணி துறை அமைச்சராக இருந்தபோது 14.1.2026 நாளிட்ட அரசாணை எண் 06 மூலம் 2026-27 ஆம் ஆண்டிற்கான சிஆர்ஐடிபி திட்டத்தின் கீழ் 80 பணிகளுக்கு ரூ.2000 கோடி முன்கூட்டிய நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, அத்தொகை 2026-27 இல் மொத்த திட்ட அனுமதிக்குள் சரிசெய்யப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. </p><p>ஆனால் அந்த நேரத்தில் அந்த மானிய கோரிக்கைக்கள் சட்டசபையில் அப்போது வாக்களிக்கப்பட்டு நிறைவேற்றப்படவில்லை. </p><p>இருப்பினும் இப்பணிகளுக்கு ஒப்பந்தங்கள் கோரப்பட்டு 2025-26 நிதியாண்டிலே 80 பணி ஆணைகளும் வழங்கப்பட்டு எதிர்கால பட்ஜெட் புரொவிஷன் மீது ரூ.2000 கோடி காமிட்ட் லயபிலிட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இது சட்டமன்ற நடைமுறைக்கு எதிரானது.</p><p>சட்டமன்றத்தில் ஒப்புதல் இல்லாமலேயே ஆட்சி வந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் எதிர்கால பட்ஜெட்டில் இருந்து ரூ. 2000 கோடியை ஒதுக்கியுளளனர். </p><p>இதனால் மானிய கோரிக்கையை பரிசீலித்து அனுமதி வழங்கும் சட்டசபையின் அதிகாரம் செயல்முறையில் பறிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பொறுப்பற்ற செயல் குறித்த அறிக்கையை ஆய்வக்கு சட்டமன்றம் அனுப்ப வேண்டும் என கோருகிறேன்" என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்குக்கு வழி சொல்கிறார் முதலமைச்சர்- எ.வ.வேலு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ev-velu-indictment-cm-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ev-velu-indictment-cm-vijay#comments</comments><guid isPermaLink="false">ee457877-b141-41b1-8b0d-e317a510952b</guid><pubDate>Tue, 08 Sep 2026 05:13:50 +0000</pubDate><atom:updated>2026-09-08T05:13:50.801Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,kn nehru,தமிழக சட்டசபை,கேஎன் நேரு,ev velu,எவ வேலு,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/q9ln2jpq/evvelu.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ செய்தியாளர் சந்திப்பில் எ.வ.வேலு]]></media:title><media:description type="html"><![CDATA[ செய்தியாளர் சந்திப்பில் எ.வ.வேலு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/q9ln2jpq/evvelu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>காவல்துறை மானியக்கோரிக்கை மீது எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலளிக்கவில்லை என்று எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">சட்டசபையில்</a> நேற்று சர்காரியா அறிக்கை தொடர்பாக முதலமைச்சர் விஜய் பேசியது குறித்து அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று தி.மு.க. தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இக்கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்ததை தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவைக்காவலர்கள் மூலம் சபையில் இருந்து தி.மு.க. வினர்கள் உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். </p><p>இதை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த கே.என்.நேரு கூறுகையில், </p><p>தி.மு.க.வை அசிங்கப்படுத்தும் நோக்கில் பொய்யான செய்திகளை சினிமா பாணியில் முதலமைச்சர் பேசினார். அமலாக்கத்துறை பற்றி முதலமைச்சர் பேசிய நிலையில் பதிலளிக்க எங்களுக்கு அனுமதி தாருங்கள் என சபாநாயகரிடம் கேட்டோம். அதற்கு நாங்கள் பதில் சொல்லும் முயலும்போது எங்களை அவையில் இருந்து வெளியேற்றி இருக்கிறார்கள் என்றார். </p><p>தி.மு.க. கொறடா எ.வ.வேலு கூறுகையில், </p><p>* எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் பதிலளிப்பார் என எதிர்பார்த்தோம். </p><p>* காவல்துறை மானியக்கோரிக்கை மீது எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலளிக்கவில்லை.</p><p>* மிசாவைப் பற்றி பேசிய போது முதலமைச்சர் விஜய் வெளிப்படுத்திய மோசமான உடல்மொழியை எல்லோரும் பார்த்திருப்பீர்கள். </p><p>* மிசாவில் சிறை சென்ற முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தியாகத்தை கொச்சைப்படுத்தியுள்ளனர். </p><p>* முரசொலி மாறன் குடும்பத்தினரிடம் பணம் வாங்கி படம் நடித்த முதலமைச்சர் அவரை ஏன் கொச்சைப்படுத்தினார்?</p><p>* பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்குக்கு வழி சொல்கிறார் முதலமைச்சர் விஜய்.</p><p>* பெண் மாற்று தலைவரே இதுவரை இல்லை என்று ரீல்ஸ் போடுவதற்காக சத்யபாமாவை சபாநாயகர் இருக்கையில் அமரவைத்தனர் என்றார். </p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் இருந்து தி.மு.க.வினர் அவைக்காவலர்களால் வெளியேற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-members-evicted-from-the-assembly-by-marshals</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-members-evicted-from-the-assembly-by-marshals#comments</comments><guid isPermaLink="false">ecbd125c-054c-4a37-9d93-bf40b7d57bdb</guid><pubDate>Tue, 08 Sep 2026 04:54:13 +0000</pubDate><atom:updated>2026-09-08T04:54:13.612Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தமிழக சட்டசபை,TN assembly,JCD Prabhakar,ஜேசிடி பிரபாகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/qzb0zobr/Assembly.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தி.மு.க.வினர் அவைக்காவலர்களால் வெளியேற்றம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தி.மு.க.வினர் அவைக்காவலர்களால் வெளியேற்றம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/qzb0zobr/Assembly.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அவை காவலர்களை அழைத்து அமளியில் ஈடுபடும் தி.மு.க. உறுப்பினர்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து அவைக் காவலர்கள் தி.மு.க. உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்றினர்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழ்நாடு சட்டசபையில்</a>  சர்காரியா அறிக்கை குறித்து நேற்று முதலமைச்சர் விஜய் பேசியது குறித்து அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று தி.மு.க. தரப்பில் இன்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தனது தீர்ப்பை கூறினார். அதில்,</p><p>முதலமைச்சரின் பதிலுரையில் குறிப்பிட்ட எதையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது என்றார். இதையடுத்து சட்டசபையில் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். </p><p>அப்போது பேசிய சபாநாயகர், இதுபொதுக்கூட்ட மேடை அல்ல, இது உங்கள் கட்சிக்கூட்டம் அல்ல. அவையின் மாண்பை எப்படி குறைக்க வேண்டும் என்று பயிற்சி எடுத்துக்கொண்டு தி.மு.க. உறுப்பினர்கள் வந்துள்ளீர்கள். பேரசையை நடத்தவிடாமல் தடை செய்யும் நோக்கத்திலேயே திமுக உறுப்பினர்கள் வந்துள்ளனர். தி.மு.க. கொறடா எ.வ.வேலு அல்லது கே.என்.நேரு பேச அனுமதி தருகிறேன் என்றார். </p><p>சபாநாயகர் பேசிக்கொண்டு இருக்கும்போதே, அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும், நீக்க வேண்டும் என்று தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். </p><p>அப்போது பேசிய அவை முன்னவர் செங்கோட்டையன், 2 நாட்களாக பிரச்சனையில் ஈடுபடும் திமுக உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்றுங்கள் என்றார். </p><p>இருப்பினும் சபாநாயகர், தி.மு.க. கொறடா எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுவதற்கு நான் அனுமதி தருகிறேன், அனைவரும் இருக்கையில் அமருங்கள் என பல முறை கூறினார். ஆனால் தி.மு.க. உறுப்பினர் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர். </p><p>இதனால் அவை காவலர்களை அழைத்து அமளியில் ஈடுபடும் தி.மு.க. உறுப்பினர்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து அவைக் காவலர்கள் தி.மு.க. உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்றினர். </p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது  - சபாநாயகர் சொன்ன காரணம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-ministers-remarks-cannot-be-expunged-from-the-house-records-speaker-asserts-firmly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-ministers-remarks-cannot-be-expunged-from-the-house-records-speaker-asserts-firmly#comments</comments><guid isPermaLink="false">79bf8e1a-84e4-42dc-9f6e-4e65a2d83517</guid><pubDate>Tue, 08 Sep 2026 04:54:04 +0000</pubDate><atom:updated>2026-09-08T04:54:04.283Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,விஜய்,தமிழக சட்டசபை,சபாநாயகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/e3v99a53/tn-5.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சபாநாயகர் ]]></media:title><media:description type="html"><![CDATA[ சபாநாயகர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/e3v99a53/tn-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய் நேற்று சர்க்காரியா கமிஷன் பற்றி பேசியவற்றை அவைகுறிப்பில் இருந்து நீக்க முடியாது என சபாநாயகர் அறிவித்துள்ளார்.</p> <p>நேற்று காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலுரை அளித்த <a href="https://www.maalaimalar.com/topic/vijay">முதலைச்சர் விஜய்</a>, 1970களில் ஒரு நபர் விசாரணை ஆணையமான சர்க்காரியா கமிஷன், <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-says-mk-stalin-was-not-arrested-under-misa">திமுக ஊழல்கள் </a>செய்ததாக தந்த அறிக்கை பற்றியும் அதை முன்வைத்து கடந்த திமுக ஆட்சியில் அமலாக்கத்துறை அனுப்பிய ஆவணத்தையும் குறிப்பிட்டு பேசினார். </p><p>அதில் குறிப்பாக, வீராணம் திட்டத்தின் கீழ் குழாய் தயாரிப்பு டெண்டருக்காக  அப்போதைய திமுக அரசின் கீழ் முதலமைச்சர் கருணாநிதியின் மருமகன் முரசொலி மாறன்,  சத்யநாராயணா பிரத்ர்ஸ் என்ற நிறுவனத்திடம் இன்ஸ்டால்மென்டில் ரூ.29 லட்சம் லஞ்சம் வாங்கினார் எனவும், சத்யநாராயணா பிரதர்ஸ்க்கு டெண்டர்  ஒதுக்க கருணாநிதி தனது பதவியை தவறாக பயன்படுத்தினார் எனவும் சர்க்காரியா கமிஷன் அறிக்கையை சுட்டிக்காட்டி விஜய் பேசினார். </p><h2></h2><h2>திமுக வலியுறுத்தல்</h2><p>இவை அனைத்தும் குற்றச்சாட்டுகள் தவிர எதுவும் நிரூபிக்கப்படவில்லை ஆதலால், திமுக நேற்று அவையில் கடும் அமளியில் ஈடுபட்டது. மேலும் சபாநாயகர் பேச அனுமதி தராததால் அவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது.</p><p>இந்த சூழலில் இன்று அவை தொடங்கியதும் திமுக கொறடா எவ வேலு, நேற்று முதலமைச்சர் விஜய், சர்க்காரியா கமிஷன் பற்றி பேசிய விஷயங்களை அவைகுறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தினார்.</p> <h2>சபாநாயகர் பதில் </h2><p>இதற்கு பதிலளித்த சபாநாயகர் பிரபாகர்,</p><p>"நேற்று இந்த சபையில் முதலமைச்சர் பதிலுரை அளித்தார். அவர் பேச ஆரம்பித்து முடிக்கும் வரைக்கும் திமுக உறுப்பினர்கள் யாராவது அதை கவனித்து கேட்டீர்களா என மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்.</p><p>எனது அனுமதி இல்லாமல் போஸ்டர்களை எல்லாம் கொண்டுவந்து காண்பித்தீர்கள். அதற்கு நான் நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு நிமிடம் கூட அவர் பேச்சை யாருக்கும் கேட்கவில்லை. சத்தம் போட்டுகொண்டு தான் இருந்தீர்கள்.</p><p>முதலைச்சர் நேற்று அவையில் பேசிய சில ஆதாரங்களை முன்கூட்டியே என்னிடம் காட்டினார். அவைகள் இந்த அவையிலே சர்க்காரியா கமிஷன் பற்றி எப்படி எல்லாம் விரிவாக விவாதிக்கப்பட்டது.</p><p>பலமுறை சொல்லப்பட்ட செய்தியை தான் அவர் படித்தார். புதிதாக எதுவும் சொல்லவில்லை. மிசாவிலே முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டது பற்றி அவர் குறிப்பிடுகிறார். அது உண்மை செய்திதான். முரசொலி மாறன் பற்றி ஏற்கனவே இங்கே குறிப்பிடப்பட்டுள்ள செய்தியை தான் அவர் குறிப்பிட்டார்.</p><p>அமலாக்கத்துறையை பற்றி சொல்லும்போது பொதுத் தளத்தில் இருக்கும் செய்தியை தான் இங்கு ஏற்கனவே சொல்லியிருக்கிறார்கள். அதை அவையில் சொல்வது பொருத்தமானது தான். நீங்கள் (திமுக) ஆட்சியில் இருக்கும்போது அமலாக்கத்துறை வழங்கிய ஆவணங்களை நீங்கள் வெளியிடுவதற்கோ நடவடிக்கை எடுக்கவோ வாய்ப்பில்லாமல் போயிருக்கலாம். ஆனால் புதிய அரசாங்கம், அமலாக்கத்துறை கொடுத்த ஆணவம் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என மக்களின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய இடத்தில் உள்ளது.</p><p>அமலாக்கத்துறை சொன்னத்தை தான் முதலமைச்சர் சொல்லியிருக்கிறாரே தவிர தீர்ப்பு பற்றியோ, அதன் மீதான நடவடிக்கை பற்றியோ அவர் பேசவில்லை.</p><p>ஒரு துறை, ஒரு செய்தியை சொல்லியிருக்கிறது என்று குறிப்பிடுவதில் தவறில்லை. எனவே அவைகுறிப்பில் இருந்து அவர் பேசியதை நீக்க வேண்டிய தேவை இல்லை என்று நான் அறிவிக்கிறேன்" என தெரிவித்தார்.</p><p>இதைத்தொடர்ந்து திமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.</p> ]]></content:encoded></item><item><title>669கிமீ ரேன்ஜ் வழங்கும் புது பிஎம்டபிள்யூ கார் அறிமுகம் - விலை மற்றும் முழு விவரங்கள்</title><link>https://www.maalaimalar.com/automobilenews/newautomobile/bmw-i5-lwb-launched-in-india</link><comments>https://www.maalaimalar.com/automobilenews/newautomobile/bmw-i5-lwb-launched-in-india#comments</comments><guid isPermaLink="false">e2b42fc6-db25-4141-be54-d15ef48d4a88</guid><pubDate>Tue, 08 Sep 2026 04:51:00 +0000</pubDate><atom:updated>2026-09-08T04:51:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Car,BMW,பிஎம்டபிள்யூ,கார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/axari9n5/BMW-i5-LWB.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ BMW i5 LWB]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/axari9n5/BMW-i5-LWB.png?w=280" width="280"></media:thumbnail><category>இது புதுசு (Automobile)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/bmw">பி.எம்.டபிள்யூ.</a> இந்தியா நிறுவனம் தனது i5 LWB மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த எலக்ட்ரிக் செடான் மாடலின் விலை ரூ. 79.60 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என தொடங்குகிறது. இது அதன் ICE 5 சீரிஸ் மாடலை விட ரூ. 3 லட்சம் அதிகம் ஆகும். புதிய பி.எம்.டபிள்யூ. மாடலின் விநியோகம் உடனடியாக தொடங்குகிறது.</p><p>வடிவமைப்பைப் பொறுத்தவரை, புதிய i5 LWB மாடலில் ஃபுல் எல்.இ.டி. லைட்டிங், BMW M-ஸ்போர்ட் டூயல்-டோன் அலாய் வீல்கள், ஒளிரும் கிரில், இழுக்கும் வகை கதவு கைப்பிடிகள், 20-இன்ச் டயர்கள், 5 சீரிஸ் பேட்ஜிங் மற்றும் மெல்லிய டெயில் லைட்கள் இடம்பெற்றுள்ளன. </p><h2>சிறப்பு அம்சங்கள்:</h2><p>அளவீடுகளில் இந்த கார் 5.18 மீட்டர் நீளம், 2.15 மீட்டர் அகலம் மற்றும் 1.52 மீட்டர் உயரம் கொண்டது, மேலும் இதன் வீல்பேஸ் 3.1 கொண்டுள்ளது. இதன் கேபினில், க்ரிஸ்டலைஸ்டு டிரைவ் செலக்டர் மற்றும் டிரைவ் மோட் டயல்கள், 12.3-இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 14.9-இன்ச் சென்டர் ஸ்கிரீன், வீகன் லெதர் அப்ஹோல்ஸ்டரி மற்றும் ஒரு பனோரமிக் கிளாஸ் ரூஃப் ஆகியவை உள்ளன.</p><p>முன் இருக்கை வென்டிலேட் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் சரவுண்ட் லைட்டிங், 4-ஜோன் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், போவர்ஸ் &amp; வில்கின்ஸ் ஆடியோ, பி.எம்.டபிள்யூ. ஓ.எஸ். 8.5 மற்றும் டிஜிட்டல் கீ பிளஸ் ஆகியவை இதன் சிறப்பம்சங்களில் அடங்கும். மேலும், முன் இருக்கைகளின் பின்புறத்தில் தொலைபேசி/டேப்லெட் வைக்கும் செட்பேக் வழங்கப்படுகிறது.</p><p>இந்த மாடல் கார்பன் பிளாக் மெட்டாலிக் நிறத்தில் டைட்டானியம் பிரான்ஸ் அக்சன்ட்கள் செய்யப்பட்டுள்ளன. சில்வர் பிரான்ஸ் இன்டீரியர் அக்சென்ட்களுடன் 'ஃபர்ஸ்ட் எடிஷன்' என்ற என்கிரேவிங் உள்ளது.</p><h2>சார்ஜிங் மற்றும் செயல்திறன்:</h2><p>புதிய பி.எம்.டபிள்யூ. i5 LWB மாடலில் 264 ஹெச்.பி. பவர், 410 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும் RWD என்ஜின் மற்றும் 81.6kWh பேட்டரி பேக் வழங்கப்படுகிறது. இந்த யூனிட் 669 கிலோமீட்டர் வரை செல்லும் என கூறப்படுகிறது. இந்த கார் 6.7 நொடிகளில் 0-100 கிலோமீட்டர் வேகத்தை எட்டுகிறது.</p><p>இத்துடன் 1kW (AC) மற்றும் 160kW (DC) சார்ஜிங் வேகங்கள் ஆதரவு வழங்கப்படுகிறது. இதில் DC சார்ஜிங் மூலம் 33 நிமிடங்களில் பேட்டரியை 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும்.</p><p>பாதுகாப்பு அம்சங்களில் எட்டு ஏர்பேக்குகள், 360° கேமரா மற்றும் பக்கவாட்டு மோதல் பாதுகாப்பு ஆகியவை அடங்கும். குறிப்பிடத்தக்க வகையில், இந்த ஃபர்ஸ்ட் எடிஷன் மாடல் முதலில் 99 யூனிட்டுகளாக மட்டுமே தயாரிக்கப்பட்டது, அவை அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் இன்றும் எதிரொலித்த சர்காரியா அறிக்கை- மு.க.ஸ்டாலின் மிசாவில் கைதாகவில்லை- அமைச்சர் நிர்மல்குமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-says-mk-stalin-was-not-arrested-under-misa</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-says-mk-stalin-was-not-arrested-under-misa#comments</comments><guid isPermaLink="false">872789a9-e61b-46d2-b1df-1df975a71def</guid><pubDate>Tue, 08 Sep 2026 04:34:13 +0000</pubDate><atom:updated>2026-09-08T04:34:13.329Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தவெக,தமிழக சட்டசபை,ev velu,எவ வேலு,TN assembly,tvk,அமைச்சர் நிர்மல்குமார்,minister nirmal kumar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/y8koiaw1/nirmalkumar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் நிர்மல்குமார்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் நிர்மல்குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/y8koiaw1/nirmalkumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மு.க.ஸ்டாலின் கைது குறித்த அமைச்சர் நிர்மல்குமாரின் பேச்சுக்கு தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் அமளி ஏற்பட்டது.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> இன்று பொதுத்துறை, போக்குவரத்து துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. இதற்கு முன்பாக, சர்க்காரியா அறிக்கை குறித்து நேற்று முதலமைச்சர் விஜய் பேசியது தொடர்பாக திமுக கொறடா எ.வ.வேலு பேசினார். அப்போது எ.வ.வேலு பேசியதாவது:-</p><p>* பேரவைக்கு என்று மரபுகள் உள்ளன. முதலமைச்சர் கண்ணியமாகவே பேசுவார். அவை மரபை மீறி முதலமைச்சர் பேசி இருக்கிறார்.</p><p>* நீதி விசாரணையில் இருப்பதை பேச அனுமதி இல்லை.</p><p>* நேற்று பேரவையில் முதலமைச்சர் விஜய் பேசும்போது நாங்கள் அமைதியாகவே இருந்தோம்.</p><p>* அமலாக்கத்துறை அறிக்கையை முதலமைச்சர் விஜய் பேசியது அவையை மீறிய செயல், விதிக்குட்பட்டது அல்ல என்பது திமுக கருத்து.</p><p>* ஜனநாயகத்திற்கு எதிராக வந்த மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையில் இருந்தார் மு.க.ஸ்டாலின்.</p><p>* பெரியார் கொள்கையை ஏற்றுள்ள திராவிட கழக தலைவர் வீரமணி கூட முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் சிறையில் இருந்தார்.</p><p>* நேற்று மாறன் பற்றி முதலமைச்சர் விஜய் பேசினார், அவைக்குள் இல்லாதவர் பற்றி பேசக்கூடாது என விதியில் உள்ளது.</p><p>* கலைஞர் கருணாநிதி மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை என சர்காரியா கமிஷனே கூறிவிட்டது. </p><p>* குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லாததால் வழக்கு தொடர முடியாது என்றும் சர்காரியா கமிஷன் கூறிவிட்டது.</p><p>* சர்காரியா கமிஷன் குறித்து முதலமைச்சர் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்கம் வேண்டும் என்றார். </p><p>இதற்கு பதிலளித்து சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் பேசியதாவது:-</p><p>* விசாரணையையோ நீதிமன்றத்தை பற்றியோ நேற்று முதலமைச்சர் விஜய் பேசவில்லை. </p><p>* கலைஞர் எங்கெங்கு எல்லாம் பணம் வாங்கினார் என்பது ஏற்கனவே சர்காரியா கமிஷனில் உள்ளது. </p><p>* திருட்டு, வழிப்பறி, பெண்கள் குறித்த வழக்கு கூட இருக்கலாம், அது எல்லாம் மிசா வழக்கு ஆகாது. </p><p>* முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்படவில்லை, பெண்கள் தொடர்பான வழக்கிற்கு தான் கைது. </p><p>* 21-வது அம்ச திட்டம் என்று அம்மையார் இந்திரா காந்தி குறித்து மோசமாக பேசியதால் தான் ஸ்டாலின் கைது என்றார். </p><p>மு.க.ஸ்டாலின் கைது குறித்த அமைச்சர் நிர்மல்குமாரின் பேச்சுக்கு தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் அமளி ஏற்பட்டது. </p>]]></content:encoded></item><item><title>200MP கேமரா, 6000mAh பேட்டரியுடன் சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்</title><link>https://www.maalaimalar.com/technology/newgadgets/xiaomi-18-fold-launched-with-200mp-camera-price-features</link><comments>https://www.maalaimalar.com/technology/newgadgets/xiaomi-18-fold-launched-with-200mp-camera-price-features#comments</comments><guid isPermaLink="false">638c0eeb-e00d-45a4-875f-2a35bc09aae9</guid><pubDate>Tue, 08 Sep 2026 04:14:00 +0000</pubDate><atom:updated>2026-09-08T04:14:00.000Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Xiaomi,Foldable Smartphone,மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்,சியோமி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/rs6gnoyq/Xiaomi-18-Fold.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Xiaomi 18 Fold]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/rs6gnoyq/Xiaomi-18-Fold.png?w=280" width="280"></media:thumbnail><category>புதிய கேஜெட்டுகள் (New gadgets)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/xiaomi">சியோமி</a> 18 ஃபோல்ட், நிறுவனத்தின் புதிய புத்தக வடிவ மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்டு 8-ஐ தொடர்ந்து இந்த மாடல் அறிமுகமாகி இருக்கிறது. </p><p>இந்த இரண்டு மடிக்கக்கூடிய <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மார்ட்போன்</a> மாடல்களும் ஒரே மாதிரியாக அகலமான, கச்சிதமான வடிவமைப்பை கொண்டுள்ளன. சியோமி 18 ஃபோல்டு மாடலில் 5.38-இன்ச் கவர் டிஸ்ப்ளே மற்றும் 7.58-இன்ச் ஸ்கிரீன் உள்ளது. இத்துடன் சியோமியின் புதிய Xring O3 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. </p><h2>சிறப்பு அம்சங்கள்:</h2><p>சியோமி 18 ஃபோல்டு மாடலில், 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட 5.38-இன்ச் AMOLED கவர் டிஸ்ப்ளே மற்றும் அதே 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட 7.58-இன்ச் மடிக்கக்கூடிய AMOLED டிஸ்ப்ளே ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன், சியோமி நிறுவனத்தின் 3nm டெகா-கோர் Xring O3 AI முதன்மை SoC மூலம் இயக்கப்படுகிறது.</p><p>இத்துடன் 16GB வரையிலான ரேம் மற்றும் 1TB UFS 4.1 மெமரியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த போன், ஆண்ட்ராய்டு 17 சார்ந்த ஹைப்பர்ஓஎஸ் 4 கொண்டிருக்கிறது.</p><p>புகைப்படங்களை எடுக்க 200MP OIS பிரைமரி கேமரா, OIS கொண்ட 50MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா, 50MP அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்காக, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை மற்றும் முகத்தை அடையாளம் காணும் வசதியை ஆதரிக்கிறது.</p><p>கனெக்டிவிட்டிக்கு டூயல் நானோ-சிம் சப்போர்ட், 5ஜி, வைபை 7, ப்ளூடூத் 6.0, என்எஃப்சி மற்றும் ஒரு யுஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும். இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதிக்காக IP58 மற்றும் IP59 சான்று பெற்றுள்ளது.</p><p>சியோமி 18 ஃபோல்டு மாடல் 6000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது, இது 67W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. விரித்த நிலையில் இது 5.02 மிமீ மற்றும் மடித்த நிலையில் 10.68 மிமீ அளவுடையது, மேலும் இதன் எடை 219 கிராம் ஆகும்.</p><h2>விலை மற்றும் முன்பதிவு:</h2><p>சியோமி 18 ஃபோல்டு மாடலின் 12GB + 256GB வேரியன்ட்டின் ஆரம்ப விலை CNY 10,999 (சுமார் ரூ. 1,55,000) ஆகும். இதன் 12GB + 512GB மாடலின் விலை CNY 11,999 (சுமார் ரூ. 1,69,000) ஆகவும், 16GB + 512GB மாடலின் விலை CNY 12,999 (சுமார் ரூ. 1,83,000) ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. </p><p>LPDDR6 ரேம் கொண்ட உயர் ரக 16GB + 1TB மாடலின் விலை CNY 14,999 (சுமார் ரூ. 2,11,300) ஆகும். இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் கருப்பு, நிஷினோ ரெட் மற்றும் வார்ம் கோல்ட் ஒயிட் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது .</p><p>சியோமி, LPDDR6 ரேம் உடன் கூடிய 16GB + 1TB ரேம் மற்றும் ஸ்டோரேஜ் உள்ளமைப்பில், செராமிக் ஸ்பெஷல் எடிஷன் ஒன்றை CNY 15,999 (தோராயமாக ரூ. 2,25,400) விலையில் வழங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>டெல்லியில்  3 ஆண்டுகளில் 1,133  கட்டிடங்கள் சரிந்து விழுந்து 98 பேர் உயிரிழப்பு - அச்சத்தில் வாழும் மக்கள் 
</title><link>https://www.maalaimalar.com/news/national/1133-buildings-collapsed-and-98-people-lost-their-lives-in-delhi-over-three-years-residents-living-in-fear</link><comments>https://www.maalaimalar.com/news/national/1133-buildings-collapsed-and-98-people-lost-their-lives-in-delhi-over-three-years-residents-living-in-fear#comments</comments><guid isPermaLink="false">a82c87b0-652d-45b2-8566-85a5be4dd571</guid><pubDate>Tue, 08 Sep 2026 04:12:44 +0000</pubDate><atom:updated>2026-09-08T04:12:44.501Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கட்டிட விபத்து,Building Collapse,hostel,தங்கும் விடுதி,delhi,டெல்லி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/ocw1o5i3/tn-4.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டெல்லி]]></media:title><media:description type="html"><![CDATA[ டெல்லி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/ocw1o5i3/tn-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் மூன்று ஆண்டுகளில் மட்டும் 1,133 கட்டிடச் சரிந்து விழுந்து அதில் மொத்தம் 98 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது. </p> <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF">டெல்லியில் </a>சத்ய நிகேதன் பகுதியில் டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் சுமார் 50 பேர் தங்கியிருந்த தனியார் விடுதி கட்டிடம் கடந்த ஞாயிறன்று இடிந்து விழுந்ததில் 7 பேர் கொல்லபட்டனர்.</p><p>இந்த சம்பவம் தலைநகரில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் ஏற்கனவே டெல்லியில் நிகழ்ந்த பல்வேறு கட்டிட விபத்து சம்பவங்கள் கவனம் பெற்று வருகின்றன.</p><p>இந்த விபத்து வெறும் தனிப்பட்ட சம்பவமாக அல்லாமல் தலைநகர் டெல்லி முழுவதிலும் உள்ள கட்டிடங்களின் பாதுகாப்பு குறித்த பெரும் கேள்வி எழுந்துள்ளது.</p> <h2>முறைகேடு</h2><p>இந்த <a href="https://www.maalaimalar.com/news/national/delhi-lodge-building-accident-owner-arrested-in-rajasthan">விடுதி கட்டிட விபத்து</a> சமபவத்தில் டெல்லி மாநகராட்சி நடத்திய முதற்கட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>வெறும் 165 அடி பரப்பளவில் கட்டப்பட்ட இந்த 5 மாடிக் கட்டிடத்திற்கு மாநகராட்சியின் அனுமதி பெற்ற வரைபடம் எதுவும் இல்லை.</p><p>மேலும், கட்டிடத்தின் அடித்தளத்தில்உரிய அனுமதியின்றி புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்ததும், அனுமதிக்கப்பட்ட அவளை 5வது தளம் கட்டப்பட்டதும் தெரியவந்துள்ளது.</p><p>விதிகளின்படி 9 மீட்டருக்கு மேல் உயரமும், 20க்கும் மேற்பட்ட மாணவர்களும் தங்கும் விடுதிகளுக்கு தீயணைப்புத் துறையின் தடையில்லாச் சான்றிதழ் கட்டாயம். ஆனால், இந்த விடுதிக்கு எந்தவித அனுமதியும் பெறப்படவில்லை.</p> <h2>நடவடிக்கை</h2><p>விபத்தைத் தொடர்ந்து கட்டிடத்தின் உரிமையாளர் ஹரிராம் குப்தா, அவருடைய மனைவி ஊர்மிளா மற்றும் மகன் மகேஷ் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>அதேபோல, சட்டவிரோத கட்டுமானத்தைக் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்ததாக டெல்லி மாநகராட்சியின்5 அதிகாரிகள் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.</p> <h2>அதிர்ச்சி புள்ளிவிவரம்</h2><p>இதனிடையே தான் டெல்லி தீயணைப்புத் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் டெல்லியில் கட்டிடங்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.</p><p>டெல்லியில் 2022ஆம் ஆண்டில் 349 கட்டிடச் சரிவு சம்பவங்கள் பதிவாகியுன. இதில் 43 பேர் உயிரிழந்தனர்.</p><p>2023இல் 371 கட்டிட சரிவு சம்பவங்களில் 23 பேரும், 2024 இல் 413 கட்டிட சரிவு சம்பவங்களில் 32 பேரும் பலியாகினர்.</p><p>ஒட்டுமொத்தமாக 2022 முதல் 2024 வரையிலான மூன்று ஆண்டுகளில் மட்டும் 1,133 கட்டிடச் சரிவு சம்பவங்கள் பதிவாகி, மொத்தம் 98 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>2026ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் மட்டும் (ஜனவரி முதல் ஜூலை வரை) 233 கட்டிடச் சரிவு அழைப்புகள் பெறப்பட்டு, அதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்; 101 பேர் காயமடைந்துள்ளனர்.</p><h2>சத்ய நிகேதன் சோதனை</h2><p>சத்ய நிகேதன் பகுதி, தொடக்கத்தில் குறைந்த குடியிருப்புகளை கொண்ட பகுதியாகவே இருந்துள்ளது. ஆனால் டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகம் இங்கு அமைந்துள்ளதால் சிக்கல் எழுந்தது.</p><p>பல்கலைக்கழக விடுதிகளில் போதிய இடமில்லாமல், மாணவர்களின் தேவையைப் பயன்படுத்தி, குடியிருப்பு வீடுகள் அனைத்தும் அனுமதி இன்றி பல மாடி தனியார் விடுதிகளாகவும் உணவகங்களாகவும் மாற்றப்பட்டன.</p><p>ஒரு சதுர கிலோமீட்டருக்கு 11,320 பேர் வாழும் அடர்த்தியான டெல்லியில், இது போன்ற கட்டுப்பாடற்ற மற்றும் சட்டவிரோதக் கட்டிட மாற்றங்களே தொடர் விபத்துக்களுக்கு முக்கியக் காரணமாக அமைகின்றன.</p>]]></content:encoded></item><item><title>நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்!- மாணிக்கம் தாகூர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-indictment-bjp-govt-2</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-indictment-bjp-govt-2#comments</comments><guid isPermaLink="false">ccd4d006-a24c-4c1c-9a02-1d63c4de64a1</guid><pubDate>Tue, 08 Sep 2026 04:12:22 +0000</pubDate><atom:updated>2026-09-08T04:12:22.326Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,தற்கொலை,நீட் தேர்வு,மாணிக்கம் தாகூர்,Neet exam,Manickam Tagore</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/ob52yb8t/manickamtagore.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/ob52yb8t/manickamtagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மாணவர்களின் தொடர் மரணங்களை ஒரு தீவிரமான பிரச்சனையாகவே கருதாமல், தமிழகத்தின் நியாயமான குரலைத் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வரும் மக்கள் விரோத பாஜக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன் என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.</strong></em> </p><p>தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><h2><strong>தற்கொலை</strong></h2><p>பல்லாவரத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/நீட்-தேர்வு">நீட் தேர்வு</a> அழுத்தத்தால் தம்பி சாய் அபினவ் தற்கொலை செய்து கொண்ட செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.</p><p>​"இனி ஒரு உயிர்கூட நீட் தேர்வால் போகக்கூடாது" என்று மக்கள் மன்றத்தில் நாங்கள் தொடர்ந்து குரல் எழுப்பி போராடி வருகிறோம். ஆனால், கல்நெஞ்சம் கொண்ட நரேந்திர மோடி  அரசு அதை ஒரு துளியும் காதுகொடுத்துக் கேட்கத் தயாராக இல்லை!</p><p>இன்னும் எத்தனை மாணவர்களின் ரத்தம் இந்த பாஜக அரசுக்குத் தேவைப்படுகிறது? மாணவர்களின் தொடர் மரணங்களை ஒரு தீவிரமான பிரச்சனையாகவே கருதாமல், தமிழகத்தின் நியாயமான குரலைத் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வரும் மக்கள் விரோத பாஜக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.</p><h2><strong>துணை நிற்போம்</strong></h2><p>அன்பு மாணவச் செல்வங்களே, தற்கொலை எதற்கும் தீர்வல்ல; ஒருபோதும் இதுபோன்ற விபரீத முடிவுகளை எடுக்காதீர்கள்! இந்த அநீதியான நீட் தேர்வுக்கு எதிராக நாம் அனைவரும் ஓரணியில் திரண்டு போராடி நிச்சயம் தீர்வு காண்போம். நாங்கள் உங்கள் பக்கம் என்றும் துணை நிற்போம்.</p><p>மாணவர்களின் உயிரோடு விளையாடும் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்! என்று பதிவிட்டுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">பல்லாவரத்தில் நீட் தேர்வு அழுத்தத்தால் தம்பி சாய் அபினவ் தற்கொலை செய்து கொண்ட செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.<br><br>​&quot;இனி ஒரு உயிர்கூட நீட் தேர்வால் போகக்கூடாது&quot; என்று மக்கள் மன்றத்தில் நாங்கள் தொடர்ந்து குரல் எழுப்பி போராடி வருகிறோம். ஆனால், கல்நெஞ்சம் கொண்ட <a href="https://x.com/narendramodi?ref_src=twsrc%5Etfw">@narendramodi</a> அரசு அதை…</p>&mdash; Manickam Tagore .Bமாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) <a href="https://x.com/manickamtagore/status/2097161577640480945?ref_src=twsrc%5Etfw">September 8, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>அக்கவுண்ட் இல்லாமலும் அழைப்புகளில் இணையலாம் - வாட்ஸ்அப்-இல் வரப்போகும் புது அப்டேட்</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/whatsapp-may-allow-people-without-an-account-to-join-calls</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/whatsapp-may-allow-people-without-an-account-to-join-calls#comments</comments><guid isPermaLink="false">6358ee4a-0c76-4dd3-9eb1-8875ebcc2182</guid><pubDate>Tue, 08 Sep 2026 03:32:00 +0000</pubDate><atom:updated>2026-09-08T03:32:00.000Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>செயலி,WhatsApp,Apps,வாட்ஸ்அப்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2024/03/08/2016845-whatsapp-logo.webp" width="1500"><media:title type="html"><![CDATA[ Whatsapp Logo]]></media:title><media:description type="html"><![CDATA[ Whatsapp Logo]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2024/03/08/2016845-whatsapp-logo.webp?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலகின் முன்னணி குறுந்தகவல் செயலிகளில் ஒன்று <a href="https://www.maalaimalar.com/topic/whatsapp">வாட்ஸ்அப்</a>. அவ்வப்போது செயலிகளில் புது அம்சத்தை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில், வாட்ஸ்அப் விரைவில் புதிதாக "கெஸ்ட் காலிங்" (guest calling) என்ற அம்சத்தினை வழங்க இருக்கிறது. </p><p>தற்போது இந்த அம்சத்திற்கான அப்டேட் வழங்குவதில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இந்த அம்சம், வாட்ஸ்அப் அக்கவுண்ட் இல்லாதவர்களையும் வாட்ஸ்அப் அழைப்புகளில் சேர அனுமதிக்கும். </p><p>இதன் மூலம், பயனர்கள் செயலியை இன்ஸ்டால் செய்யவோ அல்லது அக்கவுண்ட் உருவாக்க தேவையில்லாமல், <a href="https://www.maalaimalar.com/technology">வெப் பிரவுசர்</a> வழியாக நேரடியாக அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.</p><h2>விரைவில் கெஸ்ட் காலிங் அம்சம்:</h2><p>தற்போது, ​​வாட்ஸ்அப் செயலி மற்றும் அக்கவுண்ட் இல்லாத பயனர்களால் வாட்ஸ்அப் அழைப்பில் இணைய முடியாது. இந்த புதிய கெஸ்ட் காலிங் அம்சம் இந்த குறைபாட்டை நீக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, வாட்ஸ்அப் விரைவில் அக்கவுண்ட் இல்லாமலேயே பயனர்களை அழைப்புகளில் இணைய அனுமதிக்கலாம்.</p><p>இது குறித்து WABetaInfo வெளியிட்டுள்ள தகவல்களின் படி, வாட்ஸ்அப் அக்கவுண்ட் இல்லாதவர்கள் பாதுகாப்பான இணைப்பு மூலம் அழைப்புகளில் சேர அனுமதிக்கும் கெஸ்ட் காலிங் அம்சத்தில் வாட்ஸ்அப் பணியாற்றி வருகிறது. </p><p>இந்த செயல்பாடு, வாட்ஸ்அப்பின் ஏற்கனவே உள்ள கெஸ்ட் சாட் வழிமுறையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் என்று கூறப்படுகிறது. இது, வாட்ஸ்அப் பயனர்கள் இந்த மெசேஜிங் தளத்தை பயன்படுத்தாத நபர்களை அழைக்க வழிவகுக்கும்.</p><h2>வெப் பிரவுசரில் வாட்ஸ்அப் அழைப்புகள்:</h2><p>இந்த அம்சத்தின் மூலம், அழைப்பை ஏற்பவர் 'அழைப்புகள்' (Calls) பகுதியில் இருந்து ஒரு அழைப்பு இணைப்பை உருவாக்க முடியும் என்று கூறப்படுகிறது. </p><p>அழைப்பை ஏற்பவர், அழைப்பின் வகையைத் தேர்ந்தெடுத்து, உருவாக்கப்பட்ட இணைப்பை நகலெடுத்து மற்ற பங்கேற்பாளர்களுடன் பகிரலாம். இந்த இணைப்பு, வாட்ஸ்அப் வெப் (WhatsApp Web) தளத்தில் உள்ள அழைப்பு இடைமுகத்தை திறக்கும் என்று சொல்லப்படுகிறது.</p><p>வாட்ஸ்அப் அக்கவுண்ட் இல்லாத பயனர்கள், வாட்ஸ்அப் செயலியை பதிவிறக்கம் செய்யாமலோ அல்லது கணக்கை உருவாக்காமலோ, வெப் பிரவுசரில் அந்த இணைப்பை திறந்து கெஸ்ட்-ஆக அழைப்பில் இணைய முடியும் என்று கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>&quot;படித்தவர்கள் வாழும் பகுதிகளை விட ரெட் லைட் பகுதிகளில் இருந்தே எனக்கு அதிக வாக்குகள் கிடைக்கின்றன&quot; - நிதின் கட்கரி பெருமிதம்</title><link>https://www.maalaimalar.com/news/national/i-receive-more-votes-from-red-light-areas-than-from-localities-where-educated-people-live-nitin-gadkari-says-with-pride</link><comments>https://www.maalaimalar.com/news/national/i-receive-more-votes-from-red-light-areas-than-from-localities-where-educated-people-live-nitin-gadkari-says-with-pride#comments</comments><guid isPermaLink="false">46b31a34-83d9-4999-8ef7-23b5230c60b6</guid><pubDate>Tue, 08 Sep 2026 03:02:56 +0000</pubDate><atom:updated>2026-09-08T03:02:56.325Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,nagpur,Nitin gadkari,நிதின் கட்கரி,நாக்பூர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/n8esd8nr/tn-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நிதின் கட்கரி ]]></media:title><media:description type="html"><![CDATA[ நிதின் கட்கரி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/n8esd8nr/tn-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>படித்த மக்கள் வாழும் பகுதிகளை விடக் குற்றப் பின்னணி கொண்டவர்கள் மற்றும் சிவப்பு விளக்கு பகுதிகள் உள்ள இடங்களில் இருந்தே தனக்கு அதிக வாக்குகள் கிடைப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளார்.</p><p>மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக உள்ள <a href="https://www.maalaimalar.com/topic/nitin-gadkari">நிதின் கட்கரி </a>நேற்று ராஜாஸ்தான் மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். </p><p>அப்போது அவர், நாக்பூரில் உள்ள மிகவும் படித்த மக்கள் வாழும் பகுதிகளில் தனக்கு 70% முதல் 75% வரை மட்டுமே வாக்குகள் கிடைத்ததாகவும், அதே நேரத்தில் குற்றப் பின்னணி (Underworld), பாதாள உலகத் தொடர்புகள் மற்றும் சிவப்பு விளக்கு பகுதிகள் நிறைந்த இடங்களில் 92% வாக்குகள் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.</p><h2>காரணம்</h2><p>அதற்கான காரணத்தை விலக்கிய அவர், "நான் அரசியலில் நல்லவை, கெட்டவை என அனைத்தையும் பரிசோதித்துப் பார்த்துவிட்டேன்.</p><p>அப்பகுதிகளுக்குச் சாலை வசதிகளை அமைத்துத் தந்து, பல்வேறு சமூக நலத்திட்டப் பணிகளை மேற்கொண்டதால் தான் மக்கள் வாக்களித்தார்களே தவிர, நான் குற்றச்செயல்களுக்கு ஆதரவளிப்பதாக இதன் பொருள் அல்ல" என்று தெளிவுபடுத்தியுள்ளார்.</p> <h2>இலவசம்</h2><p>"வாக்காளர்கள் மிகவும் புத்திசாலிகள். அவர்கள் இலவசங்களைப் பெற்றுக்கொண்டாலும், தங்களுக்கு யார் உண்மையாக வேலை செய்வார்கள் என்பதைப் புரிந்து கொண்டுதான் வாக்களிப்பார்கள்" என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>கடந்த காலத்தில் தேர்தலில் போட்டியிட்டபோது வாக்காளர்களுக்கு தலா 1 கிலோ ஆட்டிறைச்சி வழங்கியதாகவும், ஆனால் அந்தத் தேர்தலில் தான் தோல்வியடைந்ததாகவும் அவர் நினைவுகூர்ந்தார்.</p> <p>சில நாட்களுக்கு முன்பு மற்றொரு நிகழ்வில் பேசிய கட்கரி, "என்னால் இனி பழையபடி தீவிரமாகப் பணியாற்ற முடியாது. பொறுப்புகளைப் புதிய தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டும்" என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p>கடந்த 2024 மக்களவை தேர்தலில் நாக்பூர் தொகுதியில் நிதின் கட்கரி தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விகாஸ் தாக்கரேவை விட சுமார் 1 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை (09.09.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-40</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-40#comments</comments><guid isPermaLink="false">82855979-78a1-436e-aa88-474a6203a4cb</guid><pubDate>Tue, 08 Sep 2026 02:48:42 +0000</pubDate><atom:updated>2026-09-08T02:48:42.470Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>மின்தடை,TNEB,மின்சார வாரியம்,Power Cut,தமிழ்நாடு மின்சார வாரியம்,சென்னையில் மின்தடை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/iumo6wv4/powercut3.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மின்தடை]]></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/iumo6wv4/powercut3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</strong></em></p><p>அந்த வகையில், நாளை <a href="https://www.maalaimalar.com/topic/சென்னையில்-மின்தடை">மின் தடை</a> செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (09.09.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.  அதன்படி, நாளை திருவொற்றியூர் பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-</p><h2><strong>போரூர்</strong></h2><p>மூகாம்பிகை நகர், குன்றத்தூர் பிரதான சாலை, ராம் நகர், குமரன் நகர், பெரிய பனிச்சேரி, தண்டலம் பிரதான சாலை, பாபு கார்டன், இரண்டம் கட்டளை, சிக்கராயபுரம், கொள்ளசேரி.</p><h2><strong>ராமாபுரம்</strong></h2><p>முகலிவாக்கம், சபரி நகர், ஸ்ரீ ராம் நகர், சுபஸ்ரீ நகர், கமலா நகர், காமாட்சி நகர், சக்தி நகர், எம்.கே.எம். பள்ளி சாலை, மாரியம்மன் கோவில் தெரு, எல்லையம்மன் கோவில் தெரு, வி.வி. கோவில் தெரு, எஸ்.எஸ். கோவில் தெரு, மவுண்ட் பூந்தமல்லி சாலை, தேஸ்மா கார்டன், கேதார் மருத்துவமனை சாலை.</p>]]></content:encoded></item><item><title>இந்த வார விசேஷங்கள்: 8-9-2026 முதல் 14-9-2026 வரை
</title><link>https://www.maalaimalar.com/spirituality/this-week-specials-8-9-2026-to-14-9-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/this-week-specials-8-9-2026-to-14-9-2026#comments</comments><guid isPermaLink="false">6d1dc4df-4943-4dfe-bc0f-29fa86d1ee93</guid><pubDate>Tue, 08 Sep 2026 02:44:27 +0000</pubDate><atom:updated>2026-09-08T02:44:27.563Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,வழிபாடு,Astrology,this week special,இந்த வார விசேஷங்கள்,worship</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/08/26/17704861-vinayagar.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/08/26/17704861-vinayagar.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>8-ந் தேதி (செவ்வாய்)</h2><p>* பிரதோஷம்.</p><p>* மதுரை நவநீத கிருஷ்ணர், ரெங்க நாதன் திருக்கோலம்.</p><p>* திருச்செந்தூர் முருகன் தங்கக் கயிலாய பர்வத வாகனத்தில் பவனி.</p><p>* தேவகோட்டை, திண்டுக்கல், தேரெழுந்தூர் தலங்களில் விநாயகர் திருவீதி உலா.</p><p>* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கமல வாகனத்தில் பவனி.</p><p>* மேல்நோக்கு நாள்.</p> <h2>9-ந் தேதி (புதன்)</h2><p>* திருச்செந்தூர், பெருவயல் தலங்களில் முருகப்பெருமான் ரத உற்சவம்.</p><p>* மதுரை நவநீத கிருஷ்ணர் ராமாவதாரம், மாலையில் தவழ்ந்த கண்ணன் அலங்காரம். </p><p>* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் வெள்ளி கேடயத்தில் திருவீதி உலா.</p><p>* கீழ்நோக்கு நாள்.</p> <h2>10-ந் தேதி (வியாழன்)</h2><p>* அமாவாசை.</p><p>* திருச்செந்தூர் சுப்பிரமணியர் தெப்ப உற்சவம்.</p><p>* மதுரை நவநீத கிருஷ்ணர் ஆண்டாள் அலங்காரம்.</p><p>* சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.</p><p>* கீழ்நோக்கு நாள்.</p> <h2>11-ந் தேதி (வெள்ளி)</h2><p>* திருவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு.</p><p>* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். </p><p>* திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை பவனி.</p><p>* கீழ்நோக்கு நாள்.</p> <h2>12-ந் தேதி (சனி)</h2><p>* திருக்குறுங்குடி ஸ்ரீநம்பி சன்னிதியில் உறியடி உற்சவம்.</p><p>* உப்பூர் விநாயகப்பெருமான் திருக்கல்யாணம்.</p><p>* சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்மர் புறப்பாடு. </p><p>* மேல்நோக்கு நாள்.</p> <h2>13-ந் தேதி (ஞாயிறு)</h2><p>* முகூர்த்த நாள்.</p><p>* உப்பூர் விநாயகர் ரத உற்சவம்.</p><p>* சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்மர் திருவீதி உலா. </p><p>* தேவகோட்டை, திண்டுக்கல், மிலட்டூர், திருவலஞ்சுழி தலங்களில் விநாயகர் பவனி.</p><p>* சமநோக்கு நாள்.</p> <h2>14-ந் தேதி (திங்கள்)</h2><p>* விநாயகர் சதுர்த்தி. </p><p>* மதுரை நவநீத கிருஷ்ணர் மச்சவதாரம். </p><p>* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.</p><p>* சமநோக்கு நாள்.</p> ]]></content:encoded></item><item><title>72 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறை.. தேசிய திரைப்பட விருது விழா டெல்லியில் இருந்து குஜராத்துக்கு மாற்றம்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/for-the-first-time-in-its-72-year-history-national-film-awards-ceremony-shifting-from-delhi-to-gujarat</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/for-the-first-time-in-its-72-year-history-national-film-awards-ceremony-shifting-from-delhi-to-gujarat#comments</comments><guid isPermaLink="false">d03f364d-b682-432b-adbd-01407abd6f92</guid><pubDate>Tue, 08 Sep 2026 02:26:46 +0000</pubDate><atom:updated>2026-09-08T02:26:46.156Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>குஜராத்,தேசிய திரைப்பட விருதுகள்,தனுஷ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/jjhfbk7d/tn-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தேசிய திரைப்பட விருது விழா]]></media:title><media:description type="html"><![CDATA[ தேசிய திரைப்பட விருது விழா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/jjhfbk7d/tn-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>72வது தேசிய திரைப்பட விருதுகள் விழா  டெல்லிக்கு பதிலாக குஜராத்தில் நடைபெற உள்ளது.</p><p>இந்தியத் திரைப்படத்துறையின் மிக உயரிய விருதாக மத்திய அரசு வழங்கும் தேசிய திரைப்பட விருதுகள்  இருக்கிறது. </p><p>இந்நிலையில் 72வது <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81">தேசிய திரைப்பட விருதுகள்</a> வழங்கும் விழா வரும் செப்டம்பர் 22 அன்று, குஜராத் மாநிலத்தில் உள்ள ஏக்தா நகரில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  </p><p>குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெற்றியாளர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவிக்கவுள்ளார். </p> <h2>டெல்லி டூ குஜராத்</h2><p>1954-இல் தொடங்கப்பட்ட தேசிய திரைப்பட விருது விழாக்கள், 72 ஆண்டு காலமாக தலைநகர் டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தன.</p><p>தற்போது முதன்முறையாக இந்த மரபு உடைக்கப்பட்டு தலைநகருக்கு வெளியே குஜராத்தில் நடைபெறுகிறது.</p><p>1974 முதல் 2022 வரை திரைப்பட விழாக்கள் இயக்ககத்தால் (DFF) நடத்தப்பட்டு வந்த இந்த விழா, 2022 முதல் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் (NFDC) மூலம் நடத்தப்பட்டு வருகிறது.</p> <h2>விருதுகள்</h2><p>2024ஆம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுக்கு இவ்வாண்டு விருதுகள் வழங்கப்பட உள்ளன. விருதுப் பட்டியல் கடந்த ஜூலை மாதம் டெல்லியில் அறிவிக்கப்பட்டது.</p><p>அதன்படி, சிறந்த திரைப்படமாக 'ஆர்ட்டிகிள் 370' படம் இவ்வாண்டு விருதுக்கு தேர்வாகியுள்ளது. சிறந்த நடிகையாக 'ஆர்ட்டிகிள் 370' படத்தில் நடித்ததற்காக யாமி கௌதம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.</p><p>'பிரம்மயுகம்' படத்தில் நடித்த மம்முட்டி மற்றும் 'சந்து சேம்பியன்' படத்தில் நடித்த கார்த்திக் ஆர்யன் ஆகியோருக்கு சிறந்த நடிகர் விருது பகிர்ந்தளிக்கப்படுகிறது.</p> <p>சிறந்த அறிமுக இயக்குநர் விருதுக்கு 'வீர் சவார்க்கர்' படத்தை இயக்கிய ரந்தீப் ஹூடா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.</p><p>சிறந்த ஜனரஞ்சகப் படமாக பிரபாஸின் கல்கி 2898 ஏ.டி தேர்வாகியுள்ளது.</p><p>தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புள்ள சிறந்த படம் என்ற பிரிவில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/mammoottys-mass-introduction-video-from-the-dhanush-starrer-om-chapter-1">தனுஷ் </a>நடித்த 'கேப்டன் மில்லர்' தேர்வாகியுள்ளது.</p><p>தனுஷ் இயக்கி நடித்த 'ராயன்' திரைப்படம் சிறந்த தமிழ் படத்திற்கான விருதுக்கு தேர்வாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 8 செப்டம்பர் 2026: பிரதோஷம்
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-8-september-2026-pradosham</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-8-september-2026-pradosham#comments</comments><guid isPermaLink="false">b8904393-f3f3-496f-a896-11958212e8c8</guid><pubDate>Tue, 08 Sep 2026 02:10:24 +0000</pubDate><atom:updated>2026-09-08T02:10:24.419Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/15/26514511-pradosham.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Siva peruman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/15/26514511-pradosham.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆவணி-22 (செவ்வாய்க்கிழமை)</p><p>பிறை : தேய்பிறை</p><p>திதி :   துவாதசி பிற்பகல் 2.28 மணி வரை பிறகு  திரயோதசி</p><p>நட்சத்திரம் : பூசம் மாலை 5.11 மணி வரை பிறகு ஆயில்யம்</p> <p>யோகம் :  சித்தயோகம்</p><p>ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை</p><p>எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை</p><p>சூலம் : வடக்கு</p><p>நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை</p> <h2>முருகர் தலங்களில் அபிஷேகம், அலங்காரம்</h2><p>பிரதோஷம். மதுரை ஸ்ரீ நவநீத கிருஷ்ண சுவாமி ரங்கநாதன் திருக்கோலம் பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் கமல வாகனத்தில் புறப்பாடு, திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. தேவக்கோட்டை, தேரெழுந்தூர், திண்டுக்கல் தலங்களில் ஸ்ரீ விநாயகப் பெருமான் திருவீதியுலா. சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். </p> <p>திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் தலங்களில் அபிஷேகம், அலங்காரம். திருநெல்வேலி சமீபம் 3-ஆம் நவதிருப்பதி ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை. திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் திருக்கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. எழுந்தருளல். ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமான் பவனி. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் தலங்களில் மாலை ஸ்ரீ சுவாமி ஸ்ரீ அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - கடமை</p><p>ரிஷபம் - வரவு</p><p>மிதுனம் - தாமதம்</p><p>கடகம் - அனுகூலம்</p><p>சிம்மம் - ஆதரவு</p><p>கன்னி - உறுதி</p> <p>துலாம் - ஜெயம்</p><p>விருச்சிகம் - அன்பு</p><p>தனுசு - நன்மை</p><p>மகரம் - அமைதி</p><p>கும்பம் - உற்சாகம்</p><p>மீனம் - பணிவு</p> ]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 8.9.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு சொத்துகள் வாங்கும் யோகமுண்டு
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-8-september-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-8-september-2026#comments</comments><guid isPermaLink="false">74ecb115-1973-4559-b457-5d5ccfe1b51e</guid><pubDate>Tue, 08 Sep 2026 02:00:13 +0000</pubDate><atom:updated>2026-09-08T02:00:13.269Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/12/30/23956404-rasipalan3.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/12/30/23956404-rasipalan3.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>கொள்கைப் பிடிப்போடு செயல்படும் நாள். பிள்ளைகளின் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். தொழிலில் புதியவர்கள் அறிமுகமாவர்.</p><h2>ரிஷபம்</h2><p>கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும் நாள். புதிய உத்தியோகத்திற்காக எடுத்த முயற்சி கைகூடும். நண்பர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் நடைபெறும்.</p> <h2>மிதுனம்</h2><p>யோகமான நாள். அதிகாலையிலேயே வரவு வந்து சேரும். தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும்.</p><h2>கடகம்</h2><p>தகராறு செய்தவர்கள் தானாக விலகும் நாள். தனவரவு திருப்தி தரும். இடம் வாங்கும் முயற்சி கைகூடும். மாற்று மருத்துவம் உடல்நலத்தைச் சீராக்கும்.</p> <h2>சிம்மம்</h2><p>எப்படி நடக்குமோ என்று நினைத்த காரியம் நல்ல விதமாக நடைபெறும் நாள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு.</p><h2>கன்னி</h2><p>பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். ஆக்கபூர்வமாகச் சிந்தித்துச் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.</p> <h2>துலாம்</h2><p>முக்கியப் புள்ளிகளால் முன்னேற்றம் கூடும் நாள். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.</p><h2>விருச்சிகம்</h2><p>சேமிப்பு உயரும் நாள். நண்பர்கள் நல்ல தகவல்களைத் தருவர். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.</p> <h2>தனுசு</h2><p>பக்கத்தில் உள்ளவர்களால் சிக்கல்கள் ஏற்படும் நாள். தொலைபேசி வழித் தகவல் தொல்லை தரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.</p><h2>மகரம்</h2><p>கல்யாண முயற்சி கைகூடும் நாள். கடன் சுமை குறையும். சொத்துகள் வாங்கும் யோகமுண்டு. பொதுவாழ்வில் புகழ் கூடும். உத்தியோக முன்னேற்றம் உண்டு.</p> <h2>கும்பம்</h2><p>ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் மேலோங்கும்.</p><h2>மீனம்</h2><p>பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் அயல்நாட்டு அழைப்புகள் வரலாம்.</p> ]]></content:encoded></item><item><title>தனுஷ் நடிக்கும் &quot;ஓம் - சாப்டர் 1..&quot; மம்மூட்டியின் மாஸான அறிமுக வீடியோ </title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/mammoottys-mass-introduction-video-from-the-dhanush-starrer-om-chapter-1</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/mammoottys-mass-introduction-video-from-the-dhanush-starrer-om-chapter-1#comments</comments><guid isPermaLink="false">f8c0a64b-b57a-468d-a0ef-13b7f8f1d875</guid><pubDate>Tue, 08 Sep 2026 01:55:58 +0000</pubDate><atom:updated>2026-09-08T01:55:58.852Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Mammootty,Dhanush,தனுஷ்,மம்மூட்டி,ஓம் சாப்டர் 1,Om Chapter 1</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/zriugr0f/tn-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/zriugr0f/tn-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் 'ஓம்' படத்தில் மம்மூட்டியின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியாகியுள்ளது. </p> <p>'அமரன்' வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி திரைக்கதை இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/alaga-luva-first-single-from-om-chapter-1-released">ஓம் - சாப்டர் 1</a>’</p><p>தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/mammootty-celebrates-his-75th-birthday-crazy-title-poster-release">மம்மூட்டி </a>முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.</p><p>முன்னணி நடிகைகளான சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.</p> <h2>இசை</h2><p>நேற்று மம்மூட்டி தனது 75வது பிறந்தநாளை கொண்டாடியதை ஒட்டி அவரின் கதாபாத்திர அறிமுக வீடியோவை ஓம் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ 2 நிமிட நீளம் அமைந்துள்ளது.</p><p>இப்படத்தில் மம்மூட்டி பர்மா கார்த்திகேயன் என்ற கடத்தல் மன்னன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அறிமுக வீடியோவில், "பழையன கழிதலும் புதியன புகுதலும்", "பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்" என தமிழ் பழமொழிகளை அள்ளித் தெளிக்கிறார். வீடியோவின் இறுதியில் தனுஷ் உடன் அவர் தோன்றும் பிரேம் தனி ரகம்.</p><p>ஒட்டுமொத்தத்தில் இவ்வீடியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிரச் செய்துள்ளது.</p><p>முன்னதாக நடிகர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘அலாகா லூவா’ பாடல் வெளியாகியிருந்தது. சாய் அப்யங்கர் இசையில் இப்பாடல் வைப் மெட்டீரியல் ஆக வந்திருந்தது.</p> <h2>ரிலீஸ்</h2><p>படத்திற்கு எழில் அரசு கே ஒளிப்பதிவு செய்ய, ஆர். கலைவாணன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். படத்தின் சண்டைக் காட்சிகளைச் சர்வதேச அளவில் புகழ்பெற்ற மாஸ்டர்களான யானிக் பென், கேச்சா ஆகியோர் வடிவமைத்துள்ளனர்.</p><p>பிரமாண்ட பட்ஜெட்டில் பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் அக்டோபர் 16 அன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.</p><p>வொண்டர்பார் ஃபிலிம்ஸ் சார்பில் தனுஷ், ஷ்ரத்தா அகர்வால், அஸ்மத் ஜக்மாக் ஆகியோர் இணைந்து இப்படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/chennai-fuel-price-update-iran-conflict-pushes-crude-oil-up-todays-petrol-and-diesel-rates-announced-2</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/chennai-fuel-price-update-iran-conflict-pushes-crude-oil-up-todays-petrol-and-diesel-rates-announced-2#comments</comments><guid isPermaLink="false">bfc94ecd-053a-4c1c-8e00-9db4c93d5b7c</guid><pubDate>Tue, 08 Sep 2026 01:26:39 +0000</pubDate><atom:updated>2026-09-08T01:26:39.021Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டீசல் விலை,Diesel price,Petrol Price,பெட்ரோல் விலை,இன்றைய பெட்ரோல் விலை,Todays petrol price</media:keywords><media:content height="576" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/1xkldom8/maalai-malar2026-08-14alj4ing3maalai-malar2026-07-28zqvhuwkktn-2.avif" width="1024"><media:title type="html"><![CDATA[ பெட்ரோல், டீசல் விலை நிலவரம்]]></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல், டீசல் விலை நிலவரம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/1xkldom8/maalai-malar2026-08-14alj4ing3maalai-malar2026-07-28zqvhuwkktn-2.avif?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/iran-increases-gasoline-price-for-its-heaviest-consumers-as-economy-struggles">ஈரான் போரினால் </a>மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p><h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது.</p><p>அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.</p><h2>இன்றைய பெட்ரோல், டீசல் விலை</h2><p>அந்த வகையில் இன்றைய (08.09.2026 - செய்வ்வாய்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><h2>கச்சா எண்ணெய் விலை</h2><p>இன்று சர்வதேச சந்தையில் பிரனட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 97.20 டாலர் என விற்பனை ஆகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>இந்து அமைப்பினர் வருகையின்போது பெண் ஊழியர்கள் புறக்கணிப்பு.. போராட்டத்தால் ஈபிள் கோபுரம் மூடல்</title><link>https://www.maalaimalar.com/news/world/female-employees-sidelined-during-visit-by-hindu-group-members-eiffel-tower-closed-due-to-protest</link><comments>https://www.maalaimalar.com/news/world/female-employees-sidelined-during-visit-by-hindu-group-members-eiffel-tower-closed-due-to-protest#comments</comments><guid isPermaLink="false">2b7c06a2-3150-423a-bc6d-5a2c3d138da3</guid><pubDate>Tue, 08 Sep 2026 01:03:41 +0000</pubDate><atom:updated>2026-09-08T01:03:41.255Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>women,பிரான்ஸ்,France,eiffel tower,இந்து அமைப்பினர்,பெண்கள்,ஈபிள் கோபுரம்,Hindu organization members</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/kg1hnijb/tn.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஈபிள் கோபுரத்தில் BAPS அமைப்பினர் விசிட் ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஈபிள் கோபுரத்தில் BAPS அமைப்பினர் விசிட் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/kg1hnijb/tn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p> இந்து அமைப்பினர் வருகையின்போது பெண் ஊழியர்கள் புறக்கணிப்பு காரணமாக வெடித்த போராட்டத்தால் பிரான்சின் புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் மூடபட்டுள்ளது. </p><p>பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உலகப் புகழ்பெற்ற <a href="https://www.maalaimalar.com/topic/eiffel-tower">ஈபிள் கோபுரம்</a> அமைந்துள்ளது. பிரான்ஸ் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் லிஸ்டில் ஈபிள் கோபுரம் நிச்சயம் இருக்கும். </p><p>ஆனால் நேற்று (திங்கள்கிழமை) ஈபிள் டவர் திடீரென மூடப்பட்டது. இதற்கு இந்து மதக் குழுவினர் ஏற்படுத்திய சர்ச்சையே மூல காரணம். </p> <h2>பெண்கள் கூடாது</h2><p>பிரான்ஸில் புதிய கோயில் திறப்பு விழாவிற்காக வந்த சுவாமிநாராயண் சன்ஸ்தா (BAPS) அமைப்பைச் சேர்ந்த 100 பேர் அடங்கிய குழுவினர் கடந்த சனிக்கிழமை ஈபிள் டவரைப் பார்வையிட்டனர்.</p><p>இந்தக் குழுவினர் செல்லும்போது, ஈபிள் டவரில் பணிபுரியும் பெண் ஊழியகர்கள் ஷிப்டில் இருந்து நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு பதிலாக ஆண் ஊழியர்கள் மட்டுமே இருக்கும்படி செய்துள்ளது நிர்வாகம்.</p><p>இந்து மதக் குழுவினரின் வருகையின் போது, பெண் ஊழியர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டதாக கூறி நேற்று ஊழியர்கள் நேற்று திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>இதற்குக் காரணமாக ஈபிள் டவர் சுற்றுலாப் பயணிகளுக்கு நேற்று மூடப்பட்டுள்ளது.</p> <h2>மன்னிப்பு - கண்டனம்</h2><p>ஈபிள் டவரை நிர்வகிக்கும் 'SETE' நிறுவனம், "பெண்களுடனான தொடர்பை குறைக்குமாறு இந்து அமைப்பின் குழுவினர் கோரிக்கை விடுத்தது உண்மைதான், ஆனால் அந்த நிபந்தனையை நிர்வாகம் ஏற்றுக் கொண்டிருக்கக் கூடாது" என தன் தவறை ஒப்புக்கொண்டுள்ளது.</p><p>இந்தச் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள பாரிஸ் BAPS கோயில் நிர்வாகம், "நாங்கள் யாருடைய பிரவேசத்தையும் தடுக்கவில்லை.</p><p>மற்ற பார்வையாளர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் மட்டுமே நேரத்தை ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டோம். பரஸ்பர மரியாதையையே நாங்கள் நம்புகிறோம்" எனக் கூறி மன்னிப்பு கோரியுள்ளது.</p><p>பாரிஸ் மேயர் இமானுவேல் கிரிகோயர் கூறுகையில், "பெண்களை ஒதுக்கி வைக்கும் இத்தகைய நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டது ஏற்றுக்கொள்ள முடியாதது. பிரெஞ்சு மதிப்பீடுகளுக்கு எதிரானது" எனக் கூறி இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p>பிரான்ஸ் தேசிய பேரவைத் தலைவர் யேல் பிரவுன் பிவெட்கூறுகையில், "வெளிநாட்டுப் பார்வையாளர்களின் கோரிக்கைகளுக்காக பெண்கள் ஒதுங்கி நிற்க வேண்டும் என்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது" என சாடியுள்ளார்.</p> <h2>மோடியின் வாழ்த்து</h2><p>இந்தச் சம்பவத்திற்கு முந்தைய நாள் தான், பிரான்ஸின் முதலாவது பெரிய சுவாமிநாராயண் திருக்கோயில் பாரிஸில் கோலாகலமாகத் திறக்கப்பட்டது.</p><p>இந்த கோவிலை இணைய வழியே திறந்து வைத்து பேசிய <a href="https://www.maalaimalar.com/amp/story/news/national/pm-modi-said-india-france-relations-have-reached-new-heights">பிரதமர் மோடி</a>, இந்தியா - பிரான்ஸ் இடையேயான கலை, கலாச்சார மற்றும் அரசியல் உறவுகள் புதிய உயரத்தை எட்டியுள்ளன என்றும், இந்த கோயில் இரு நாடுகளின் கூட்டுறவுக்கு சான்றாக பல நூற்றாண்டுகள் விளங்கும் என்றும் வாழ்த்திப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>பொருளாதார நெருக்கடியால் எரிபொருள் விலையை உயர்த்தியது ஈரான்</title><link>https://www.maalaimalar.com/news/world/iran-increases-gasoline-price-for-its-heaviest-consumers-as-economy-struggles</link><comments>https://www.maalaimalar.com/news/world/iran-increases-gasoline-price-for-its-heaviest-consumers-as-economy-struggles#comments</comments><guid isPermaLink="false">fc8f3e1b-ca1d-4b15-a44b-efe05ae8d309</guid><pubDate>Tue, 08 Sep 2026 00:30:51 +0000</pubDate><atom:updated>2026-09-08T00:30:51.968Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Economy,ஈரான்,Iran,எரிபொருள் விலை,gasoline price</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/p7tzuyt2/Iran-Gasoline.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Iran Gasoline]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/p7tzuyt2/Iran-Gasoline.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாதக்கணக்கில் நீடிக்கும் போரினால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் ஒரு பகுதியாக, அதிக அளவில் பெட்ரோல் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கான விலையை <a href="https://www.maalaimalar.com/topic/Iran">ஈரான்</a> உயர்த்தியதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டிசம்பர் மாதத்திற்கு பிறகு மேற்கொள்ளப்படும் இரண்டாவது விலை உயர்வு இது ஆகும்.</p><p>பெட்ரோல் விலை உயர்வு என்பது மக்கள் மத்தியில் உணர்வுப்பூர்வமான ஒரு விஷயமாகவும், பணவீக்கத்தை அதிகரிக்கக்கூடிய காரணியாகவும் அமையக்கூடியது. </p><p>2019-இல் மேற்கொள்ளப்பட்ட விலை உயர்வு நாடு தழுவிய போராட்டங்களை தூண்டியது. அதை ஒடுக்க <a href="https://www.maalaimalar.com/news/world">அரசு</a> மேற்கொண்ட நடவடிக்கைகளில் 300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><h2>குடும்பங்களுக்கு கூடுதல் வருவாய்:</h2><p>அமெரிக்காவுடனான போரை பற்றி நேரடியாக குறிப்பிடாமல், "தற்போதைய சூழல்" காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. மேலும், இந்த விலை உயர்வு மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாய் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>புதிய நடைமுறையின்படி, மாதத்திற்கு 110 லிட்டர் (29 கேலன்) என்ற ஒதுக்கீட்டிற்கு மேல் பெட்ரோல் வாங்குபவர்கள், இனி ஒரு லிட்டருக்கு 100,000 ரியால்கள் (சுமார் 7 சென்ட்) செலுத்த வேண்டும். இது டிசம்பர் முதல் அவர்கள் செலுத்தி வந்த விலையை விட இரு மடங்கு அதிகமாகும்.</p><h2>நாணய மதிப்பு சரிவு:</h2><p>உலகிலேயே மிகக் குறைந்த பெட்ரோல் விலையைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஈரான் இன்னும் திகழ்கிறது. எனினும், இந்த விலை உயர்வு அந்நாட்டின் 9 கோடியே 20 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு அன்றாட செலவு சுமையை மேலும் அதிகரிக்கிறது.</p><p>ஏற்கனவே அந்நாட்டின் நாணய மதிப்பு வரலாறு காணாத சரிவை சந்தித்து வருகிறது, மேலும் மக்களின் வாங்கும் திறனும் குறைந்துள்ளது. நேற்று (திங்கள்கிழமை) ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு 2.22 மில்லியன் ரியால்களாக இருந்தது.</p><p>அரசுக்கு சொந்தமான எண்ணெய் விநியோக நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கெரமத் வெய்ஸ் கரமி கூறுகையில், புதிய பெட்ரோல் விலை விகிதம் 15 சதவீத நுகர்வோரை பாதிக்கும் என்று தெரிவித்ததாக அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான IRNA செய்தி வெளியிட்டுள்ளது.</p><h2>பெட்ரோல் நுகர்வு:</h2><p>ஆகஸ்ட் மாதத்தில் பெட்ரோல் நுகர்வு நாளொன்றுக்கு 145 மில்லியன் லிட்டராக (38 மில்லியன் கேலன்) உயர்ந்து சாதனை படைத்ததாகவும், அதே வேளையில் உள்நாட்டு உற்பத்தித் திறன் நாளொன்றுக்கு 122 மில்லியன் லிட்டராக மட்டுமே இருந்ததாகவும் அவர் கூறினார். மீதமுள்ள தேவை இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது.</p><p>விலை உயர்வு அதிகப்படியான நுகர்வை குறைக்க உதவும். ஈரானில் பழைய வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்களின் பயன்பாடு, அத்துடன் போதுமான பொதுப் போக்குவரத்து வசதி இல்லாமை ஆகியவை அதிக நுகர்வுக்குக் காரணமென நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ரூ. 1.10 லட்சம் கோடியில் ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல்</title><link>https://www.maalaimalar.com/news/national/govt-clears-rs-110-lakh-crore-proposals-to-buy-military-hardware</link><comments>https://www.maalaimalar.com/news/national/govt-clears-rs-110-lakh-crore-proposals-to-buy-military-hardware#comments</comments><guid isPermaLink="false">b0e57e3f-37b3-4a0c-b60b-d812c16fb971</guid><pubDate>Mon, 07 Sep 2026 23:46:36 +0000</pubDate><atom:updated>2026-09-07T23:46:36.950Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rajnath Singh,ராஜ்நாத் சிங்,Military hardware,ராணுவம் தளவாடங்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/zwuhc3df/Rajnath-Singh.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rajnath Singh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/zwuhc3df/Rajnath-Singh.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/rajnath-singh">ராஜ்நாத் சிங்</a> தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில், முப்படைகளுக்கான ராணுவ தளவாடங்களை வாங்குவதற்கு கொள்கை ரீதியான ஒப்புதலை வழங்கியது. </p><p>இதில், போர் விமானங்களை நவீனமயமாக்குதல் மற்றும் மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்கள், இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி உளவு வாகனங்கள், ரேடார்கள், பால அமைப்புகள் மற்றும் கண்ணிவெடிகளை இடும் கருவிகள் உள்ளிட்டவை ரூ. 1.10 லட்சம் கோடி மதிப்பில் கொள்முதல் செய்யப்படுகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/defence">பாதுகாப்பு துறை</a> ஒப்புதல்களின் ஒரு முக்கிய அம்சம், இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைத்து, உள்நாட்டு கொள்முதலை ஊக்குவிப்பதும், அரசின் 'ஆத்மநிர்பர் பாரத்' முயற்சிக்கு ஊக்கமளிப்பதுமாகும்.</p><p>இது குறித்து பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், "வழங்கப்பட்ட மொத்த தேவை ஏற்பில், ஏறத்தாழ 98 சதவீத கொள்முதல்கள் இந்திய தொழில்துறையில் இருந்தே செய்யப்படும். இது, இந்தியாவில் ஒரு வலுவான பாதுகாப்பு தொழில்துறை தளத்தை உருவாக்குவதில் எங்களது அர்ப்பணிப்பைக் காட்டுகிறது," என்றார்.</p><h2>அதிநவீன வாகனங்கள் கொள்முதல்:</h2><p>ராணுவத்தைப் பொறுத்தவரை, CBRN உளவு வாகனங்கள், அதிவேக வாகனங்கள் (HMVகள்), தானாக இயங்கும் இயந்திரக் கண்ணிவெடி இடும் வாகனங்கள், மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்கள் (ALHகள்), இழுவை டாங்கிகள் மற்றும் சர்வத்ரா பால அமைப்பு ஆகியவற்றைக் கொள்முதல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>CBRN உளவு வாகனங்கள், CBRN நச்சுப் பொருட்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்டறிதல், அடையாளம் காணுதல், கண்காணித்தல் மற்றும் குறித்தல் ஆகிய திறன்களை கொண்டிருக்கும் அதே வேளையில், இழுவை டாங்கிகள் என்பவை, எதிரி கண்ணிவெடிகளில் இருந்து பாதையைத் தெளிவுபடுத்துவதற்காக நிலக்கண்ணிவெடிகளை வெடிக்கச் செய்ய வடிவமைக்கப்பட்ட முன்பக்க அமைப்புடன் கூடிய சிறப்பு இராணுவப் போர் வாகனங்களாகும்.</p><p>கனரக வாகனங்கள் சவாலான நிலப்பரப்புகளில் செயல்பாட்டுத் திறன்கள், தளவாட ஆதரவு மற்றும் இயங்குதிறனை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. "இந்த ஏஎல்ஹெச் வாகனங்கள், ராணுவம் மற்றும் இந்திய விமானப்படைக்காக அனைத்து நிலப்பரப்புகளிலும் மற்றும் செயல்பாட்டுச் சூழ்நிலைகளிலும் சிக்கலான பணிகளை நிறைவேற்றும்," என்று அது கூறியது.</p>]]></content:encoded></item><item><title>பீகார் வெள்ள பாதிப்பு: தேசிய பேரிடராக அறிவிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு தேஜஸ்வி யாதவ் கடிதம்</title><link>https://www.maalaimalar.com/news/national/tejashwi-urges-pm-to-declare-bihar-floods-national-disaster</link><comments>https://www.maalaimalar.com/news/national/tejashwi-urges-pm-to-declare-bihar-floods-national-disaster#comments</comments><guid isPermaLink="false">3c10c01d-aacb-438f-a5dc-8929d643b556</guid><pubDate>Mon, 07 Sep 2026 23:16:44 +0000</pubDate><atom:updated>2026-09-07T23:16:44.490Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tejashwi Yadav,pm modi,Bihar floods,பீகார் வெள்ளம்,பிரதமர் மோடி,s, தேஜஸ்வி யாதவ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/0wulh9iq/bihar-floods.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bihar Floods]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/0wulh9iq/bihar-floods.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பீகாரின் வெள்ள பாதிப்பை “தேசியப் பேரிடராக” அறிவித்து, நிவாரணம், மீட்பு மற்றும் மறுவாழ்வு பணிகளுக்காக ரூ.5,000 கோடி மத்திய உதவித் தொகுப்பை வழங்க வேண்டும் என <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">பிரதமர்</a> நரேந்திர மோடியை எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி பிரசாத் யாதவ் வலியுறுத்தினார்.</p><p>வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தியாரா பகுதிகளை பார்வையிட்ட பிறகு பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், உயர்ந்து வரும் நதி நீர்மட்டம் மற்றும் பரவலான <a href="https://www.maalaimalar.com/topic/bihar-floods">வெள்ளப்பெருக்கு</a> ஆகியவை மில்லியன் கணக்கான மக்களை பாதித்து, இயல்பு வாழ்க்கையை சீர்குலைத்து, பொது உள்கட்டமைப்பை சேதப்படுத்தியுள்ளதாக தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.</p><h2>மீட்புப் பணிகள் போதுமானதாக இல்லை:</h2><p>நெருக்கடியின் தீவிரத்தோடு ஒப்பிடும் போது மாநில அரசின் நிவாரண மற்றும் மீட்புப் பணிகள் போதுமானதாக இல்லை என்றும், கூடுதல் உதவிக்காக மத்திய அரசை வலியுறுத்த தவறியதாக மாநில என்.டி.ஏ. தலைவர்களையும் அவர் குற்றம் சாட்டினார்.</p><p>வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உணவு, பாதுகாப்பான குடிநீர், மருந்துகள், மின்சாரம், கால்நடை தீவனம் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றை பெறுவதற்கு போராடி வருவதாக தேஜஸ்வி யாதவ் கூறினார்.</p><p>துண்டிக்கப்பட்ட பகுதிகளில் கூடுதல் படகுகளையும் மீட்பு வளங்களையும் உடனடியாக அனுப்ப வேண்டும் என்றும், கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக ராணுவம் மற்றும் விமானப்படை ஹெலிகாப்டர்களின் உதவியை அவர் கோரினார்.</p><p>பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் போதுமான உணவு, குடிநீர், மருந்துகள், கால்நடைத் தீவனம் மற்றும் தற்காலிக தங்குமிடங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் தேஜஸ்வி கோரிக்கை விடுத்தார். வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட விவசாயிகள், தொழிலாளர்கள், கால்நடை உரிமையாளர்கள் மற்றும் பிறருக்கு சிறப்பு நிதியுதவி வழங்க அவர் அழைப்பு விடுத்தார்.</p><h2>சுதந்திரமான ஆய்வு நடத்த வேண்டும்:</h2><p>நீண்டகால நடவடிக்கைகளை நாடி, அவர் பீகாருக்கான வெள்ள தடுப்பு திட்டத்தை முன்மொழிந்தார். இத்திட்டம், ஆறு மற்றும் கரை மேலாண்மை, வடிகால் மேம்பாடு, நீர்நிலைகளை புனரமைத்தல் மற்றும் நவீன வெள்ள முன்னறிவிப்பு அமைப்புகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.</p><p>மேலும், நேபாளம் மற்றும் பிற அண்டை நாடுகளுடன் வலுவான நீர் மேலாண்மை ஒருங்கிணைப்பின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். பீகாரின் பேரிடர் மேலாண்மைத் தயார்நிலை மற்றும் அவசரகால நிதிகளின் பயன்பாடு குறித்து ஒரு சுதந்திரமான ஆய்வு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கோரினார்.</p>]]></content:encoded></item><item><title>அச்சுறுத்தல்களுக்கு தீர்க்கமாக பதிலளிக்க ஆயுத படைகளுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது: ராஜ்நாத் சிங்</title><link>https://www.maalaimalar.com/news/national/rajnath-singh-said-armed-forces-given-freedom-resources-to-respond-decisively-to-threats</link><comments>https://www.maalaimalar.com/news/national/rajnath-singh-said-armed-forces-given-freedom-resources-to-respond-decisively-to-threats#comments</comments><guid isPermaLink="false">c0ce0db8-18a0-41ed-989e-fe2b803d039a</guid><pubDate>Mon, 07 Sep 2026 20:29:31 +0000</pubDate><atom:updated>2026-09-07T20:29:31.957Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Rajnath Singh,armed forces,ஆயுத படை,ராஜ்நாத் சிங்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/9wkmt9fj/Rajnath-Singh.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rajnath Singh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/9wkmt9fj/Rajnath-Singh.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>எதிரிகளின் எல்லைக்குள்ளேயே சென்று தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட அச்சுறுத்தல்களுக்கு தீர்க்கமாக பதிலளிப்பதற்கான "சுதந்திரமும் வளங்களும்" இந்திய ஆயுத படைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்  தெரிவித்தார். </p><p>இங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்தியா அமைதியை விரும்புவதாகவும், போரையோ அல்லது எந்தவொரு நாட்டின் நிலப்பகுதியையும் ஆக்கிரமிப்பதையோ அது விரும்பவில்லை என்றும் மீண்டும் வலியுறுத்தினார். </p><p>இருப்பினும், அமைதிக்கும் பலவீனத்திற்கும் இடையே தெளிவான வேறுபாடு உள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.</p><h2>பேச்சுவார்த்தைக்கு இடமிருக்காது:</h2><p>"போர் குறித்த அச்சத்தால் ஏற்படும் அமைதி கண்டிக்கத்தக்கது; அதேவேளையில், அமைதிக்காக நடத்தப்படும் போர் போற்றுதலுக்குரியது. இந்தியாவுக்கு எதிராக ஏதேனும் ஒரு நாடு பயங்கரவாதத்தை ஊக்குவித்தால், பேச்சுவார்த்தைக்கு இடமிருக்காது; மாறாக, நமது பாதுகாப்பு படைகள் தகுந்த பதிலடியை கொடுக்கும் என்பதை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம்," என்று அவர் கூறினார்.</p><p>எதிரிகளின் எல்லைக்குள்ளேயே சென்று தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட அச்சுறுத்தல்களுக்கு தீர்க்கமாக பதிலளிக்க ஆயுத படைகளுக்கு சுதந்திரமும் வளங்களும் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். புவிசார் அரசியல் நிச்சயமற்ற சூழலிலும், இந்தியா தனது சுயமான முடிவெடுக்கும் திறன் மற்றும் மூலோபாய சுதந்திரத்துடன் முன்னேறி வருகிறது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் தனது உரையில் வலியுறுத்தினார்.</p><h2>பாதுகாப்பை எதிரிகள் முயற்சி:</h2><p>ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களை தவறான பாதைக்கு இட்டுச் செல்லுதல், இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு நிதியுதவி அளித்தல், வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை பரப்புதல் மற்றும் சமூகத்தில் பிளவுகளை உருவாக்க முயற்சித்தல் உள்ளிட்ட அனைத்து தீய வழிகளிலும் இந்தியாவின் பாதுகாப்பை குலைக்க எதிரிகள் முயற்சித்ததாக சிங் கூறினார்.</p><p>தவறான பாதையில் சென்ற இளைஞர்களை மீண்டும் நல்வழிக்கு கொண்டு வருதல், மறுவாழ்வு மற்றும் தீவிரவாத சிந்தனைகளை அகற்றும் முயற்சிகளை மேற்கொள்ளுதல், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம், இத்தகைய தீய திட்டங்களை முறியடித்து அனைத்து முனைகளிலும் அரசு பதிலடி கொடுத்துள்ளது என்று அவர் உறுதியாகக் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சண்முக பாண்டியனின் புதிய திரைப்படம் - டைட்டில் வீடியோவை வெளியிட்ட நடிகர் சிவகார்த்திகேயன்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-sivakarthikeyan-releases-shanmuga-pandian-new-movie-title</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-sivakarthikeyan-releases-shanmuga-pandian-new-movie-title#comments</comments><guid isPermaLink="false">0ffc332d-b9f0-4912-9fc8-ac11e8e83f2f</guid><pubDate>Mon, 07 Sep 2026 19:48:30 +0000</pubDate><atom:updated>2026-09-07T19:48:30.316Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>sivakarthikeyan,shanmuga pandian,சண்முக பாண்டியன்,சிவகார்த்திகேயன்,ManiSeon</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/t50wbjrw/SK-and-Shanmuga-Pandian.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ SK and Shanmuga Pandian]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/t50wbjrw/SK-and-Shanmuga-Pandian.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேப்டன் விஜயகாந்த் அவர்களால் துவங்கப்பட்டு, தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை வழங்கிய முன்னணி தயாரிப்பு நிறுவனமான கேப்டன் சினி கிரியேஷன்ஸ் தனது 10-ஆவது மைல்கல் திரைப்படத்தின் படப்பிடிப்பை சென்னையில் பூஜையுடன் மிக பிரம்மாண்டமாக தொடங்கியது.</p><p>இந்தப் படத்தில் கேப்டனின் இளைய மகனான <a href="https://www.maalaimalar.com/topic/shanmuga-pandian">சண்முக பாண்டியன்</a> கதாநாயகனாக நடிக்கிறார். ‘கட்டப்பாவ காணோம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகி கவனம் ஈர்த்த மணி சியோன் இத்திரைப்படத்தை இயக்குகிறார்.</p><h2>தலைப்பு அறிவிப்பு:</h2><p>இன்று காலை சென்னையில் நடைபெற்ற படத்தின் தொடக்க விழாவில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு முறைப்படி கேமராவை ஆன் செய்து படப்பிடிப்பை துவங்கி வைத்தார். இந்த நிலையில், இந்தப் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டது.</p><p>அதன்படி நடிகர் சண்முக பாண்டியன் மற்றும் இயக்குநர் மணி சியோன் இணையும் புதிய படத்திற்கு "கிங் அண்ட் குயின்ஸ்" என தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும், இது குறித்த அறிவிப்பு வீடியோ வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை நடிகர் சிவகார்த்திகேயன் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.</p><h2>படக்குழுவுக்கு வாழ்த்து:</h2><p>முன்னதாக இந்தப் படத்தின் படப்பிடிப்பை பூர்ண ஜோதி சுதீஷ் கிளாப் போர்டை அடித்து துவங்கி வைத்தார். டாக்டர்.ஜானு ஸ்ரீ சுதீஷ், நடிகர் இளவரசு, தம்பி ராமையா, படூர் ரமேஷ், மைனா நந்தினி, இந்திரஜா ரோபோ சங்கர், பட்டிமன்றம் ராஜா, பிரகதி, காயத்ரி ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.</p><p>மேலும், இயக்குநர் திரு மற்றும் ஒளிப்பதிவாளர் அர்வி ஆகியோரும் இவ்விழாவை சிறப்பித்தனர். தயாரிப்பாளர் எல்கே சுதீஷ் எம்.பி தயாரிப்பில், கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் தற்போது அடுத்தடுத்த பிரம்மாண்ட தயாரிப்புகளுடன் தமிழ் சினிமாவில் அதிரடி முத்திரை பதித்து வருகிறது.</p><h2>விறுவிறு படப்பிடிப்பு:</h2><p>ஏற்கனவே இயக்குநர் திரு இயக்கத்தில் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்து வரும் 'வாணவேடிக்கை' திரைப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து, தற்போது பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ள "கிங் அண்ட் குயின்ஸ்" திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்றே தொடங்கி அதிவேகமாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>இந்தப் படத்திற்கு 'மாநகரம்', 'டானாக்காரன்' உள்ளிட்ட பல படங்களுக்கு பணியாற்றிய திறமைமிக்க பிரசன்ன குமார் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளர் மனு ரவிச்சந்திரன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.</p> <figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/hMnj8TX0fVg"></iframe></figure>]]></content:encoded></item><item><title>மகளிர் ஆசிய கோப்பை: ஹாங் காங்-ஐ பந்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி - 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/womens-asia-cup-2026-pakistan-women-beat-hong-kong-women-by-72-runs</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/womens-asia-cup-2026-pakistan-women-beat-hong-kong-women-by-72-runs#comments</comments><guid isPermaLink="false">cc4f96e2-301d-4eb0-b393-3f1041b1cfb4</guid><pubDate>Mon, 07 Sep 2026 18:49:51 +0000</pubDate><atom:updated>2026-09-07T18:49:51.623Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Womens Asia Cup,மகளிர் ஆசிய கோப்பை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/8t01o9wu/Pak-W-Win.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pakistan Women Win]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/8t01o9wu/Pak-W-Win.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகளிர் ஆசிய கோப்பை 2026 டி20 <a href="https://www.maalaimalar.com/sports/cricket">கிரிக்கெட்</a> தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் க்ரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் மற்றும் ஹாங் காங் மகளிர் அணிகள் களம்கண்டன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.</p><p>இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் மகளிர் அணிக்கு தொடக்கம் கொடுத்த முனீபா அலி 6 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இவருடன் களமிறங்கிய ஷவால் சுல்ஃபிகர் அதிரடியாக ஆடி 35 பந்துகளில் 47 ரன்கள் (6 பவுண்டரிகள்) விளாசினார். பிறகு ஜாய்லீன் கௌர் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.</p><h2>பாகிஸ்தான் பேட்டிங்:</h2><p>பிறகு களமிறங்கிய கல் ஃபெரோஸா 3 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய ஆயிஷா சஃபார் 19 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிறகு வந்தவர்களில் துபா ஹாசன் மட்டும் 14 ரன்கள் எடுக்க மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஃபாதிமா சனா மட்டும் 24 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.</p><p>இதையடுத்து பாகிஸ்தான் மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்களை எடுத்தது. ஹாங் காங் மகளிர் அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஜாய்லீன் கௌர் 4 விக்கெட்டுகளையும், இக்ரா சஹர் மற்றும் கேரி சான் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.</p><h2>ஹாங் காங் சொதப்பல்:</h2><p>144 எனும் எளிய இலக்கை துரத்திய ஹாங் காங் மகளிர் அணிக்கு தொடக்கம் கொடுத்த கேப்டன் நடாஷா மைல்ஸ் 1 ரன்னுக்கும், மரிகோ ஹில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய யாஸ்மின் தாஸ்வானி 13 ரன்களிலும், கேரி சான் 47 பந்துகளில் 30 ரன்களை எடுத்தார்.</p><p>இவர்களைத் தொடர்ந்து களமிறங்கியவர்களில் ஜாய்லீன் கௌர் மட்டுமே 10 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் ஹாங் காங் அணி 19 ஓவர்கள் முடிவில் வெறும் 71 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.</p><p>இதனால், பாகிஸ்தான் மகளிர் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் மகளிர் அணி சார்பில் நஷ்ரா சந்து 6 விக்கெட்டுகளையும், ஃபாதிமா சனா, சதியா இக்பால், உம் இ ஹானி மற்றும் ஆயிஷா சஃபர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.</p>]]></content:encoded></item><item><title>போர்களில் மனித உருவ ரோபோக்களை பயன்படுத்த தீவிரம் காட்டும் சீனா</title><link>https://www.maalaimalar.com/news/world/china-plans-to-use-humanoid-robots-in-war</link><comments>https://www.maalaimalar.com/news/world/china-plans-to-use-humanoid-robots-in-war#comments</comments><guid isPermaLink="false">f1f9e53c-8370-4f92-851c-035ab2f8ac6b</guid><pubDate>Mon, 07 Sep 2026 18:13:36 +0000</pubDate><atom:updated>2026-09-07T18:13:36.986Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>China,சீனா,போர்,war,ரோபோட்,Humanoid Robots</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/nbp29aml/humanoid-robot-military.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Humanoid Robot Military]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/nbp29aml/humanoid-robot-military.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த மாதம் <a href="https://www.maalaimalar.com/news/world">சீனாவில்</a> நடைபெற்ற உலக மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகளில், ரோபோக்கள் குதித்தன, குத்துச்சண்டை போட்டன மற்றும் நடனமாடின. சில அதிவேக ரோபோக்கள் 100 மீட்டர் தூரத்தை உசேன் போல்ட்டை விட வேகமாக ஓடின. </p><p>இயந்திரங்களின் மேம்பட்ட திறன்களையும், மீம்களில் இடம்பெற தகுந்த அவற்றின் தடுமாற்றங்களையும் கண்டு பார்வையாளர்கள் ஆரவாரம் செய்தனர்.</p><p>போட்டிகள் முடிந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு, மக்கள் விடுதலை ராணுவத்தின் அதிகாரப்பூர்வ செய்தித்தாள் அந்த நிகழ்ச்சியில் இருந்து தனக்கென சில முடிவுகளை எடுத்தது.</p><p>ஆய்வகங்களில் இருந்து <a href="https://www.maalaimalar.com/topic/robot">ரோபோ</a> "போராளிகளுக்கான" ராணுவ பயிற்சி தளங்களுக்கு அதிநவீன தொழில்நுட்பங்களை மாற்றுவதை ஆராய்ச்சியாளர்கள் விரைவுபடுத்த வேண்டும் என்று பி.எல்.ஏ. டெய்லி அழைப்பு விடுத்தது.</p><h2>போர்க்களத்தில் மனித உருவ ரோபோ:</h2><p>100-க்கும் மேற்பட்ட சீன ராணுவ கொள்முதல் அறிவிப்புகள், கல்விசார் ஆய்வுகள், காப்புரிமைகள், அதிகாரப்பூர்வ வெளியீடுகள், அரசாங்க பதிவுகள் மற்றும் பாதுகாப்பு நிறுவன ஆவணங்கள் ஆகியவற்றை ராய்ட்டர்ஸ் ஆய்வு செய்ததன் படி, சீனாவின் பாதுகாப்பு துறை மனித உருவ ரோபோக்களின் ராணுவப் பயன்பாடுகள் குறித்த ஆராய்ச்சியை துரிதப்படுத்துவதோடு, அவற்றை எதிர்காலத்தில் போர்க்காலத்தில் நிலைநிறுத்துவதற்கான திட்டமிடலையும் மேற்கொண்டு வருகிறது.</p><p>முன்னர் வெளியிடப்படாத பதிவுகளின்படி, ராணுவ நிறுவனங்கள் போர்க்கள தேவைகளுக்கு ஏற்ப மனித உருவ ரோபோக்களை சோதித்து வருகின்றன; அவற்றுக்கு பயிற்சி அளிக்க ரோபோக்களையும் தொழில்நுட்பங்களையும் பெற முயல்கின்றன. மேலும், அவை துருப்புக்களுடன் இணைந்து எவ்வாறு செயல்படக்கூடும் என்பதையும் ஆய்வு செய்கின்றன.</p><p>ரோபோக்களின் புலனுணர்வு, கையாளுதல் மற்றும் பயிற்சி தரவுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்திய இந்த பணிகள், 2025 மற்றும் 2026-ஆம் ஆண்டுகளில் வேகம் பெற்றன.</p><h2>ஏற்றுமதியில் சீனா முன்னிலை:</h2><p>BofA குளோபல் ரிசர்ச் அறிக்கையின்படி, 2025-ஆம் ஆண்டில் உலகளாவிய மனித உருவ வாகன ஏற்றுமதிகளில் சுமார் 95 சதவீதத்தை சீன உற்பத்தியாளர்கள் மேற்கொண்டனர். </p><p>இந்த வணிக ஆதிக்கம், மக்கள் விடுதலை ராணுவத்திற்கு (PLA) விரிவடைந்து வரும் ஒரு தொழில்துறையை அணுகுவதற்கான வாய்ப்பை வழங்குவதோடு, அதன் சொந்த ராணுவ பயன்பாடுகளையும் மேம்படுத்திக்கொள்ள உதவுகிறது.</p><p>சீனாவின் ரோபோ பாதுகாப்பு ஆராய்ச்சி, உலகளவில் ராணுவ தொழில்நுட்பங்கள் எவ்வளவு வேகமாக வளர்ந்து வருகின்றன என்பதை அடிக்கோடிட்டு காட்டுகிறது.</p>]]></content:encoded></item><item><title>கடந்த 6 மாதத்தில் 60,000 சிறார் பிரசவங்கள்: அரசு நலத்திட்டம் ரத்து செய்யப்படும் என சுவேந்து அதிகாரி எச்சரிக்கை </title><link>https://www.maalaimalar.com/news/national/west-bengal-records-60000-minor-deliveries-in-six-months-government-warns-action</link><comments>https://www.maalaimalar.com/news/national/west-bengal-records-60000-minor-deliveries-in-six-months-government-warns-action#comments</comments><guid isPermaLink="false">bf08fc95-6807-47b9-9121-7e95b5e8b494</guid><pubDate>Mon, 07 Sep 2026 16:40:31 +0000</pubDate><atom:updated>2026-09-07T16:40:31.741Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மேற்கு வங்கம்,சுவேந்து அதிகாரி,child marriage,குழந்தை திருமணம்,west bengal,suvendhu adhikari</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/rttacz94/Untitled-design-37.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bihar child marriage]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/rttacz94/Untitled-design-37.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பீகாரில் குழந்தை திருமணம் செய்து கொள்பவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு, அவருக்கு வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகள் திரும்ப பெறப்படும் என அம்மாநில முதலமைச்சர் சுவேந்து அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">பீகார்</a> மாநிலத்தில் இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரை, 18 வயது குறைந்த சிறுமிகளுக்கு சுமார் 60,000 பிரசவங்கள் மருத்துவமனையில் நடைபெற்றதாக மாநில சுகாதார துறை ஒரு அறிக்கை வெளியிட்டது. </p><p>இந்த நிலையில் நபான்னாவில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு மேற்கு வங்கத்தின் முதல்வர் சுவேந்து அதிகாரி செய்தியாளர்களை சந்தித்தார்.  </p><h3><strong>குழந்தை திருமணத்தில் முதலிடம்</strong></h3><p>அப்போது அவர் கூறுகையில், “ஆறு மாத காலப்பகுதியில், முர்ஷிதாபாத்தில் 12,847 சிறுமிகள் மருத்துவமனைகளில் பிரசவித்ததன் மூலம் அதிகபட்ச எண்ணிக்கை பதிவாகியுள்ளது.</p><p>தெற்கு பர்கானாஸ் பகுதி 4,178 வழக்குகளுடன் அடுத்த இடத்தில் உள்ளது. 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளின் குழந்தை திருமணங்கள் மற்றும் பிரசவங்களில் மேற்கு வங்கம் நாட்டிலேயே முதலிடம் வகிக்கிறது.</p><p>18 வயதுக்குட்பட்ட சிறுமி சம்பந்தப்பட்ட ஒவ்வொரு கர்ப்பம் மற்றும் பிரசவ வழக்கும் பதிவு செய்யப்பட வேண்டும்.</p><p>சந்தேகத்திற்கிடமான குழந்தை திருமணங்களைக் கண்டறியவும், அதற்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் சுகாதாரப் பதிவேடுகளைப் பயன்படுத்துவார்கள்.</p><h3><strong>வயது சரிபார்க்கப்படும்</strong></h3><p>சிறுவயதில் திருமணம் செய்து வைக்கப்பட்ட பெண்கள் கண்டறியப்பட்டால், அவர்களின் கணவர்களுக்கு விளக்கம் கோரும் அறிவிப்புகள் வழங்கப்பட்டு, மனைவியின் வயதுக்கான சரியான ஆதாரத்தை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.</p><p>வயதுக்கான சரியான ஆதாரத்தை அவர்கள் வழங்கத் தவறினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>இந்த அதிரடி நடவடிக்கையின் போது கண்டறியப்படும் வழக்குகளில், காவல்துறை குற்றவியல் நடவடிக்கையைத் தொடங்கி, கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளும்.</p><p>குழந்தை திருமணங்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டவர்களிடம் இருந்து நலத்திட்டங்கள் மற்றும் இதர திட்டங்களின் பலன்கள் திரும்பப் பெறப்படும்.</p><p>சிறுவர் திருமணங்களை நடத்தி வைக்கும் அல்லது அதற்கு வழிவகுக்கும் மதகுருக்கள் மற்றும் இதில் ஈடுபடுபவர்களுக்கு சட்டப்படி சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்” என்று அவர் கூறினார்.</p><h3><strong>கடுமையான போக்சோ சட்டம்</strong></h3><p>மேலும், 18 வயதுக்குட்பட்ட பெண்ணுடன், அவர் திருமணமானவரா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் பாலியல் உறவு கொள்வது குற்றமாகும் என்று சுட்டிக்காட்டிய சுவேந்து அதிகாரி, போக்சோ சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் என்று கூறினார்.</p><p>18 வயதுக்குட்பட்ட சிறுமியுடன் உடல் உறவு கொள்வது போக்சோ சட்டத்தின் பிரிவுகளுக்கு உட்பட்டது என்றும், அதற்கான சிறைத் தண்டனை 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையிலும், சில சூழ்நிலைகளில் மரண தண்டனையும் விதிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.</p><p>சிறார் கர்ப்பம் தொடர்பான வழக்குகள் குறிப்பாகக் கடுமையான விசாரணைக்கும் நடவடிக்கைக்கும் உள்ளாகும் என்று மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: முதலமைச்சர் பேசியது எதற்கும் ஆதாரம் கிடையாது..!- உதயநிதி- 07 செப். 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-07-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-07-september-2026#comments</comments><guid isPermaLink="false">8c774a06-0db5-4dde-8aa8-7f7fb7910b2b</guid><pubDate>Mon, 07 Sep 2026 03:57:28 +0000</pubDate><atom:updated>2026-09-07T16:13:52.036Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly,tvk</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/bazo2c3e/Udhay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay- Udhayanithi stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/bazo2c3e/Udhay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது. </p><p>காவல்துறை மானியக்கோரிக்கை மீது முதலமைச்சர் விஜய் பதிலுரை அளிக்க உள்ளார். </p><p>சட்டசபைக்கு உறுப்பினர்கள் வருகை.</p><p>தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து கேள்வி எழுப்புவோம் - திமுக கொறடா எ.வ.வேலு திட்டவட்டம்</p><p>3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டசபை இன்று மீண்டும் கூடியது.</p><p>2026-ம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் அரசினர் சட்ட முன்வடிவு அறிமுகம் செய்தார் அமைச்சர் செங்கோட்டையன்- இதனை தொடர்ந்து சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார். </p><p>எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு கோரி முழக்கம் எழுப்பி வருகின்றனர். </p><p>2026-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் இரண்டாம் திருத்த சட்டமுன்வடிவை அறிமுகம் செய்தார் அமைச்சர் ஆனந்த்</p><p>காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்சர் விஜய் பதிலுரை தொடங்கியது.</p><p>சாலைகள், ஆலைகள் அமைப்பதால் மாநிலத்தின் வளர்ச்சி தீர்மானிக்கப்படுவதில்லை- முதலமைச்சர் விஜய்</p><p>சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருந்தால் தொழில் முதலீடு வரும், தொழில்கள் முறையாக நடைபெறும்- முதலமைச்சர் விஜய்</p><p>சட்டத்தை மதித்து நடப்பவர்களுக்கு காவல்துறை உற்ற நண்பராக இருக்க வேண்டும்- முதலமைச்சர் விஜய்</p><p>குற்றவாளி எந்த கட்சியை சேர்ந்தவராயினும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதே த.வெ.க. அரசின் நிலைப்பாடு- முதலமைச்சர் விஜய்</p><p>யாரிடமும் சார்பின்றி நடுநிலை தவறாது நீதி வழங்குவதே சரியான ஆட்சி என திருவள்ளுவர் கூறியுள்ளார்- முதலமைச்சர் விஜய்</p><p>எதிர்க்கட்சியினர் கூறிய கருத்தாக இருந்தாலும் அதில் உண்மை உள்ளதா என ஆராய்ந்து சரி செய்வதில் பாகுபாடில்லை- முதலமைச்சர் விஜய்</p><p>ஒவ்வொரு குற்றத்திற்கு பின்னும் குடும்ப பிரச்சனை, போதைப்பொருள் பயன்பாடு இருக்கலாம்- முதலமைச்சர் விஜய்</p><p>அனைத்து குற்றங்களும் கடந்த 100 நாட்களில் தோன்றியதல்ல- முதலமைச்சர் விஜய்</p><p>சொத்து தகராறு, பழிவாங்கும் மனப்பான்மை கூட குற்றத்திற்கான காரணமாக இருக்கலாம்- முதலமைச்சர் விஜய்</p><p>ஒவ்வொரு காவல் நிலையங்களும் தங்களுக்கு எல்லைக்குட்பட்ட மக்களின் நெருக்கமான தொடர்பாக ஏற்படுத்த வேண்டும்- முதலமைச்சர் விஜய்</p><p>பள்ளி மாணவர்கள் தொடங்கி அனைவருக்கும் டிஜிட்டல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்- முதலமைச்சர் விஜய்</p><p>2021 முதல் 2025 வரை நடைபெற்ற குற்றச் சம்பவங்களை கூறி ஒதுங்கிச் செல்ல எனது மனம் இடம் தரவில்லை- முதலமைச்சர் விஜய்</p><p>குற்றத்திற்கு போதை கலாச்சாரம் காரணம் என ஒற்றை வார்த்தை கூறி தப்பிப்பது நல்ல பண்பு அல்ல- முதலமைச்சர்</p><p>கோவை அமுதன் கொலை, சென்னை தனுஷ்குமார் கொலை சம்பவத்தில் 36 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்- முதலமைச்சர் விஜய்</p><p>குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் வலுவான சைபர் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கப்பட வேண்டும்- முதலமைச்சர் விஜய்</p><p>ஊழலற்ற நேர்மையான ஆட்சி செய்வதே தவெக அரசின் நோக்கம், அரசு ஊழியர்கள் ஊழல் செய்வதை ஏற்க முடியாது- முதலமைச்சர் விஜய்</p><p>போதைப்பொருள் கலாச்சாரம் கடந்த ஆட்சியாளர்கள் கவனிக்காமல் இருந்ததால் தற்போது ஆழமாக வேரூன்றி நிற்கிறது- முதலமைச்சர் </p><p>பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக எந்த ஒரு குற்றம் நடைபெற்றாலும் நடவடிக்கை அறிவுறுத்தப்பட்டுள்ளது- முதலமைச்சர் விஜய்</p><p>காவலில் எந்த மரணம் நடைபெற்றாலும் எந்த ஒரு பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்- முதலமைச்சர் விஜய்</p><p>போதைப்பொருள் தடுப்புப்படை நடவடிக்கைகளால் போதை என்கிற மரத்தின் ஒரு சில கிளைகளை அகற்றி இருக்கிறோம்- முதலமைச்சர் விஜய்</p><p>காவல்நிலையத்தில் உயிரிழப்பு என்பது சாதாரணமான நிகழ்வு அல்ல, காவல்துறை மீதான நம்பிக்கையை பாதிக்கும் பிரச்சனை- முதலமைச்சர்</p><p>குற்றம் தெருவில் மட்டுமல்ல இணையத்திலும் நடைபெறுவதால் குற்றம் நடக்கும் முன்பே கண்டறிந்து தடுப்பது அவசியம்- முதலமைச்சர்</p><p>காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை துறை வாரியாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்- முதலமைச்சர் விஜய்</p><p>அரசியலுக்காக தனிப்பட்ட முறையில் பெண்களை தரம் தாழ்ந்து பேச வேண்டாம் என முதலமைச்சர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். </p><p>கருத்துரிமை, பேச்சுரிமையை எந்த அளவுக்கு பயன்படுத்துகிறார்கள் என்பதை யோசிக்க வேண்டும்- முதலமைச்சர் விஜய்</p><p>பெண்கள் உட்பட அனைவரையும் தரம் தாழ்ந்து பேசுவதை தவிர்க்க வேண்டும்- முதலமைச்சர் விஜய்</p><p>ஒரு எம்எல்ஏ ஆர்தோ சர்ஜன் போல் பேசுகிறார், சட்டமன்றத்தில் எலும்பை உடைப்பாராம்- முதலமைச்சர் விஜய்</p><p>பெண்கள் குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசுவதை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்- முதலமைச்சர் விஜய்</p><p>பழிவாங்கும் எண்ணத்தில் நான் அரசியலுக்கு வரவில்லை, அப்படி நினைத்தால் அதற்கு நான் பொறுப்பில்லை- முதலமைச்சர் விஜய்</p><p>சட்டசபையில் ஜெயலலிதா பட்ட அவமானங்கள் நமக்கு தெரியும்- முதலமைச்சர் விஜய்</p><p>எதற்கெடுத்தாலும் மிசாவை பார்த்தவங்க என்று பேசி வருகின்றனர், மிசா வரலாறு நமக்கு தெரியும்- முதலமைச்சர் விஜய்</p><p>தமிழ்நாடு தான் என் வீடு, 8 கோடி மக்கள் தான் நமக்கு சொந்தங்கள்- முதலமைச்சர் விஜய்</p><p>திமுக ஆட்சிக்காலத்தில் அமலாக்கத்துறை அனுப்பிய ஆவணத்தை காட்டி முதலமைச்சர் விஜய் சட்டசபையில் ஆவேசமாக பேசி வருகிறார். </p><p>1970 களில் திமுக ஆட்சியில் வீராணம் திட்டத்திற்கு சத்யநாராயண பிரதர்ஸ் டெண்டருக்கு கமிஷன் கேட்டது தொடர்பாக ED அறிக்கை வைத்து முதலமைச்சர் விஜய் பேச்சு</p><p>25 ஆண்டுகளுக்கு முன்பே கலைஞரின் மருமகன் டெண்ருக்கு ரூ.29 லட்சம் தவணை முறையில் லஞ்சம். கலைஞர் கருணாநிதி மேல் எனக்கு மதிப்பும் மரியாதையும் உள்ளது, நான் அமலாக்கத்துறை அறிக்கை தான் பேசுகிறேன். முதலமைச்சர் பதவியை கலைஞர் கருணாநிதி தவறாக பயன்படுத்தியதாக அமலாக்கத்துறை அறிக்கை அளித்துள்ளது- முதலமைச்சர் விஜய்</p><p>அரசியல் பாரம்பரியம் தெரியுமா சீனியாரிட்டி தெரியுமா என பேசுவோர் குறித்து தான் மக்களுக்கு எடுத்து சொல்கிறேன். சர்க்காரியா கமிஷன் எழுதிய புத்தகம் சட்டமன்ற நூலகத்தில் உள்ளது, அதை எடுத்து படியுங்கள் - முதலமைச்சர் விஜய்</p><p>ஆதாரத்தை பக்கத்திலேயே வைத்துக்கொண்டு தேடுவது தான் திமுகவின் பழக்கம் - முதலமைச்சர் விஜய்</p><p>7.5 முதல் 10 சதவீதம் வரை கட்சி நிதி திமுக பெற்றதாக அமலாக்கத்துறையை கூறியுள்ளது- முதலமைச்சர் விஜய்</p><p>கட்சி நிதியில் நேரடி பயனாளியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி இருந்ததாக ED அறிக்கையில் உள்ளது- முதலமைச்சர் விஜய்</p><p>திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது பதவியை தவறாக பயன்படுத்தினார் என்றும் அறிக்கையில் உள்ளது- முதலமைச்சர் விஜய்</p><p>முன்னாள் அமைச்சருடன் பல ஐஏஎஸ் அதிகாரிகளும் ஊழலில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை அறிக்கை- முதலமைச்சர் விஜய்</p><p>குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரி ரத்தீஷ் துபாயில் ஒளிந்து கொண்டிருப்பது ஏன்?- முதலமைச்சர் கேள்வி</p><p>திமுகவினர் எப்போது எதை செய்தாலும் குடும்பமாக தான் செய்வார்கள்- முதலமைச்சர் விஜய்</p><p>செய்யும் தவறையே முறையாக செய்யும் வகையில் விஞ்ஞான ஊழலில் ஈடுபட்டுள்ளனர்- முதலமைச்சர் விஜய்</p><p>மதுபாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.100 வரை கூடுதலாக ஊழல் வசூலித்ததை முறையாக செய்துள்ளனர்- முதலமைச்சர் விஜய்</p><p>ஆதாரம் வேணும் ஆதாரம் வேணும் என சொல்வோர்களுக்கு தற்போது ஆதாரம் போதுமா? முதலமைச்சர் விஜய் கேள்வி</p><p>திமுக இருக்கும் இடத்தில் தான் தவறு நடக்கும், தவறு நடக்கும் இடத்தில் தான் திமுக இருக்கும்- முதலமைச்சர் விஜய்</p><p>ஊழல் செய்வோர் தான் ஆதாரம் கேட்பர், ஊழலே செய்யாதோர் அமைதியாக இருப்பார்கள்- முதலமைச்சர் விஜய்</p><p>மக்களை ஏமாற்றிய போலி பிம்பம், திமுகவின் பிராண்ட் உடைக்கப்படும். அண்ணா, எம்ஜிஆர், என்டிஆருக்கு பின் விஜய் தான். இறைவனும், இயற்கையும் என்றுமே நம் பக்கம் தான் இருப்பார்கள்- முதலமைச்சர் விஜய். </p><p>கரூர் கேங்க் என்று என்னவொரு சூப்பர் பெயர் பாருங்களேன், கரூர் கேங்க் தலைவர் யார் என்று தெரிந்துக்கொள்ள மக்கள் ஆவலாக உள்ளனர்- முதலமைச்சர் விஜய்.</p><p>செய்யும் தவரையே முறையாக செய்யும் வகையில் விஞ்ஞான ஊழலில் ஈடுபட்டுள்ளனர். </p><p>மதுபாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.100 வரை கூடுதலாக ஊழல் வசூலித்ததை முறையாக செய்துள்ளனர்- முதலமைச்சர் விஜய்.</p><p>திமுக இருக்கும் இடத்தில் தான் தவறு நடக்கும், தவறு நடக்கும் இடத்தில் தான் திமுக இருக்கும்- முதலமைச்சர் விஜய்.</p><p>ஊழல் செய்வோர் தான் ஆதாரம் கேட்பர், ஊழலே செய்யாதோர் அமைதியாக இருப்பார்கள்.</p><p>திமுக அரசு பொறுப்பேற்றதும் அதிமுக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் எதற்கு ரத்து செய்யப்பட்டது ஏன்?- முதலமைச்சர் விஜய்.</p><p>திமுக ஆட்சியில் மூடுவிழா கண்ட திட்டங்களுக்கு பட்டியலிட்டால் ஒரு நாளே போதாது.</p><p>திமுக செய்த தவறுகளை மக்கள் நினைவில் வைத்திருப்பதால் தான் தேர்தலில் தகுந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர்- முதலமைச்சர் விஜய்</p><p>திமுக ஆட்சிக்காலத்தில் 4 ஆண்டுகள் மடிக்கணினி கொடுக்கவில்லை; ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் மூடப்பட்டது.</p><p>அம்மா மினி கிளினிக், தாலிக்கு தங்கம், அம்மா பைக், ஆடு மாடு வழங்கும் திட்டம் திமுக ஆட்சியில் நிறுத்தம்- முதலமைச்சர் விஜய்.</p><p>மக்கள் நலனில் கண்ணும் கருத்துமாக உள்ள தவெக அரசு இனியும் அப்படி தான் இருக்கும்- முதலமைச்சர் விஜய்.</p><p>திமுக ஆட்சியில் குற்றங்கள் நடைபெற்றபோது அரசியல் தலையீட்டால் எப்ஐஆர் பதிவதில் கால தாமதம் அனைவரும் அறிந்ததே.</p><p>கடலூர் எம்.பி சுரேஷ் முந்திரி ஆலையில் பணியாற்றியவர் மரணம், தற்கொலை என சித்தரிப்பு- முதலமைச்சர் விஜய்.</p><p>தவெக ஆட்சியில் ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் உடனடி சட்ட நடவடிக்கை.</p><p>திமுக ஆட்சிக்காலத்தில் பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லை என்று முதலமைச்சர் விஜய் குற்றச்சாட்டு.</p><p>சென்னை விருகம்பாக்கத்தில் 2022ல் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த பெண் காவலரிடம் அத்துமீறல்.</p><p>பெண் காவலரின் புகாரை வாபஸ் பெற பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. 2023-ல் தான் வழக்கு பதிவு செய்யப்பட்டது- முதலமைச்சர் விஜய்.</p><p>திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினர் தரன் மனைவி சிவசங்கரி காவல் ஆய்வாளரை கன்னத்தில் அறைந்தார்.</p><p>கோவில் ஊழியர் மட்டும் கைது செய்யப்பட்டார். ஆய்வாளரை அறைந்த குற்றவாளி ஜாமின் பெற திமுக உதவியாக இருந்தது- முதலமைச்சர் விஜய்.</p><p>ஆளுங்கட்சியினர் தொடர்புடைய வழக்கில் காலதாமதம், திமுக நிர்வாகிகள் காப்பாற்றப்பட்டது என பெரிய பட்டியல் உள்ளது- முதலமைச்சர் விஜய்.</p><p>பல்லாவரம் முன்னாள் எம்எல்ஏ மகன் வீட்டில் வேலைபார்த்த பெண் பாதிக்கப்பட்டபோது உடனடி நடவடிக்கை இல்லை.</p><p>தவெக ஆட்சியில் குற்றம் செய்வோர் மீது கட்சி பாகுபாடின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது- முதலமைச்சர் விஜய்.</p><p>எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பு குரலை பார்த்து சிரித்தவாறே பதிலுரையை முதலமைச்சர் விஜய் முடித்தார்.</p><p>முதலமைச்சர் விஜய் பதிலுரை அளித்தபோது அமைதியாக இருந்து கேட்டிருக்க வேண்டும் என எதிர்க்கட்சியினருக்கு சபாநாயகர் கண்டிப்பு.</p><p>எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனுமதியின்றி போஸ்டர் காட்டுவது குரல் கொடுப்பதை ஏற்க முடியாது- சபாநாயகர்.</p><p>பேச அனுமதி மறுப்பதாக குற்றம்சாட்டி திமுக எம்எல்ஏக்கள் இருக்கையில் இருந்து எழுந்து நின்று குரல் கொடுத்து தொடர் அமளி.</p><p>சட்டசபையில் பேச அனுமதி கோரி அமளியில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏக்கள சபாநாயகர் இருக்கை முன்பாக அமர்ந்து தர்ணா.</p> <p>முதலமைச்சர் பதிலுரையின்போது அமைதியாக இருந்திருந்தால் பேச அனுமதித்து இருப்பேன்- சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்.</p><p>சட்டமன்ற நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் திமுக உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அவை முன்னவர் பரிந்துரை.</p><p>திமுக உறுப்பினர்கள் பேசுவதற்கு அனுமதிக்குமாறு முதலமைச்சர் விஜய் சொல்லியுள்ளார்- சபாநாயகர்.</p><p>திமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட நிலையில் எதிர்கட்சியினர் பேச அனுமதியுங்கள் என முதலமைச்சர் விஜய் கோரிக்கை.</p><p>திமுக உறுப்பினர்கள் பேசுவதற்கு அனுமதிக்குமாறு முதலமைச்சர் விஜய் சொல்லியுள்ளார். அமைதியாக இருக்கையில் அமருங்கள்- சபாநாயகர்.</p><p>தொடர்ந்து திமுக அமளியில் ஈடுபட்டிருந்த நிலையில், திமுக உறுப்பினர்கள் பேச மீண்டும் அனுமதி மறுத்தார் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்.</p><p>சட்டசபையில் பேச அனுமதி மறுக்கப்படுவதை கண்டித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு.</p><p>எதிர்கட்சித் தலைவர் உதயநிதி பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததை அடுத்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.</p><p>என்னை நிர்பந்தம் செய்வதுபோல் திமுகவினர் நடந்து கொள்வதால் சபையில் பேச அனுமதிக்க முடியாது- சபாநாயகர்.</p><p>தொடர்ந்து பேசிய தமிழ்நாடு வனப்படை ரூ.100.72 கோடியில் மறுசீரமைப்பு செய்து வலுப்படுத்தப்படும் என அமைச்சர் ரஞ்சித்குமார் அறிவிப்பு.</p><p>வன உயிரினங்களால் ஏற்படும் பல்வேறு வகையான சேதங்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையானது சேதத்தின் தன்மைக்கேற்ப, அந்த இழப்பிற்கு உரிய நிவாரணமாக அமையும் வகையில் உயர்த்தி நிர்ணயிக்கப்படும்- அமைச்சர் ரஞ்சித் குமார்</p><p>தமிழ்நாட்டின் மாநில மரமான பனைமரத்தின் மரபணு பண்புகளை வகைப்படுத்துதல் மற்றும் மரபணு மேம்பாடு ஆகியவற்றை மேற்கொள்ளும் நோக்கில், "தமிழ்நாடு பனைமர மரபணு பாதுகாப்பு மற்றும் மரபணு மேம்பாட்டுத் திட்டம்" ரூ.50 லட்சத்தில் செயல்படுத்தப்படும்- அமைச்சர் ரஞ்சித் குமார்</p><p>வன விலங்குகளுக்கு ஏற்படும் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து நோய்பரவலைத் தடுக்க, வனவிலங்குகளைப் பாதுகாக்க, வனவிலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்களை (Zoonotic Diseases) தடுக்க, நடமாடும் வனவிலங்கு தடயவியல் மற்றும் நோய்கண்டறியும் ພໍ (Mobile Wildlife Forensic and Disease Diagnostic Laboratory) ரூ.1 கோடி செலவில் தென் தமிழ்நாட்டில் தயார் நிலையில் வைக்கப்படும்-அமைச்சர் ரஞ்சித் குமார்.</p><p>தமிழ்நாடு முழுவதும் கிராமப்புற, நகர்ப்புற மற்றும் நகரை ஒட்டிய புறநகர்ப் பகுதிகளில், அரசு, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பிற நிறுவனங்களுக்குச் சொந்தமான நிலங்களில் தலா ஒரு ஹெக்டேர் பரப்பளவில் 25 இயற்கைப் பூங்காக்கள் (Nature Parks) உருவாக்கப்படும். இத்திட்டத்திற்காக ரூ.10 கோடி செலவிடப்படும்-  வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார்</p><p>5 ஆண்டுகளில் தமிழ்நாடு வனத்தீ மேலாண்மைத் திட்டம் ரூ.60.58 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்- அமைச்சர் ரஞ்சித்குமார்.</p><p>சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அறையில், அவர் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை.</p><p>கவிஞர் கண்ணதாசன் திமுகவை பற்றி Short &amp; Sweetஆ ஒன்னு சொன்னாரு 'பேசிப்பழகிய பொய், வாங்கிப் பழகிய கை, போட்டுப் பழகிய பை' இதுதான் திமுக.. இவ்ளோதான் திமுக- பதிலுரையின்போது முதல்வர் விஜய் பேச்சு.</p><p>சட்டசபைக்கு நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த திமுக உறுப்பினர்களை சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்த அதிமுக சட்டமன்ற குழு தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.</p><p>சட்டசபையில் பேச அனுமதி மறுப்பதாக குற்றம்சாட்டி வெளிநடப்பு செய்த நிலையில் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.</p><p>சட்டசபையில், முதலமைச்சர் விஜய் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை வைத்து பேசினார். </p><p>தற்போது திமுக ஆட்சி நடைபெறவில்லை, தவெக ஆட்சி நடைபெறுவதை நீங்கள் நம்புங்கள் என நான் ஏற்கனவே சொல்லியிருந்தேன்.</p><p>முதலமைச்சருக்கு 15 கேள்விகளை முன்வைத்திருந்தேன். ஒரு கேள்விக்கு கூட பதில் அளிக்கவில்லை- உதயநிதி ஸ்டாலின்.</p><p>முதலமைச்சர் பேசி முடித்ததும் விளக்கம் அளிக்க அனுமதிக்குமாறு நாங்கள் கோரிக்கை வைத்தோம். </p><p>பேச அனுமதிப்பேன் என கூறிய சபாநாயகர் மீண்டும் யாருடைய அழுத்தத்தினாலோ என்னமோ அனுமதியை மறுத்துவிட்டார்.</p><p>திங்கள்கிழமை பதிலளிப்பதாக சொல்லி கடந்த வியாழக்கிழமை ஓடிவிட்டார் முதலமைச்சர் விஜய்- உதயநிதி ஸ்டாலின்</p><p>மனப்பாடம் செய்து ஒப்பிவித்தல் போட்டியைபோல் தவறான கருத்துக்களை ஒப்புவித்துள்ளார் முதலமைச்சர் விஜய்.</p><p>பஞ்ச் டயலாக் என ரீல்ஸ்க்காக மட்டுமே இன்றும் முதலமைச்சர் விஜய் பேசியுள்ளார்.</p><p>பஞ்ச் டயலாக் மற்றும் டைவர்ஷன் டேக்டிக்ஸ் மட்டுமே பயன்படுத்துகிறார் முதலமைச்சர் விஜய்- உதயநிதி ஸ்டாலின்</p><p>திமுகவினர் மீது வழக்கு இருந்தால் நடவடிக்கை எடுங்கள் என்ற தான் நாங்களும் கூறுகிறோம்.</p><p>நேற்று நடந்த கொலை பற்றி பேசும்போது 1970-களுக்கு செல்கிறார், சர்காரியா கமிஷனுக்கு செல்கிறார் முதலமைச்சர்.</p><p>முதலமைச்சர் விஜய் அரசியலுக்கு வந்து ஆட்சியை பிடித்தது ஒரு பெரிய விபத்து, அவருக்கு மிசாவை பற்றி பேச தகுதியில்லை- உதயநிதி ஸ்டாலின்.</p><p>திரைப்பட ரிலீஸ்க்காக கொடநாடு சென்று வாட்ச்மேன் வேலை பார்த்தவர் முதலமைச்சர் விஜய்.</p><p>ரூ.15 கோடி வருமானத்தை மறைத்ததாக முதலமைச்சர் விஜய் மீது வழக்கு உள்ளது.</p><p>பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் மீதும் வழக்கு உள்ளது-  உதயநிதி ஸ்டாலின்.</p><p>வழக்கு நிலுவையில் உள்ள விஜயபாஸ்கர், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்டோரை உடன் சேர்த்து வைத்துள்ளார் முதலமைச்சர் விஜய்.</p><p>எங்களை மிரட்டுவதற்காக லஞ்ச ஒழிப்புத்துறை வைத்து கே.என்.நேரு வீட்டில் ரெய்டு நடத்தினார்கள்.</p><p>முதல்வரின் நண்பர்கள், அவர்களுடைய ஆலோசகர் விஷ்ணு ரெட்டி, அவரது உறுப்பினர்கள் கனிமவளத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்- உதயநிதி ஸ்டாலின்</p><p>கனிமவளத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள விஷ்ணு ரெட்டி உள்ளிட்டோர் என்ன பொறுப்பில் உள்ளனர்?</p><p>ஒருதலை பட்சமாக செயல்பட்ட சட்டசபை தலைவருக்கு திமுக சார்பில் கண்டனம் தெரிவிக்கிறோம். சினிமா சூட்டிங் டயலாக் போல முதலமைச்சர் பேசிக் கொண்டிருந்தார். அதனால் தான் தொடர்ந்து கோஷம் போட்டோம்.</p><p>முதலமைச்சர் விஜய் பேசும்போது சபாநாயகர் எங்கள் பக்கம் திரும்பக்கூடவில்லை. தவெக அரசுக்கும் முதலமைச்சர் விஜய்க்கும் சபாநாயகர் ஜால்ரா அடித்துக் கொண்டே இருந்தார்- உதயநிதி ஸ்டாலின்.</p><p>முதலமைச்சர் பேசியது ஆதாரம் கிடையாது, அமலாக்கத்துறை, சர்காரியா ஆவணம் அனைத்தும் குற்றச்சாட்டு தான்.</p><p>கோடி கோடியாக பணத்துடன் வந்து எந்த அமைச்சர் பதவி வேண்டும் எனக் கேட்டதாக ஐயுஎம்எல் எம்எல்ஏ பேசியுள்ளார்.</p><p>திமுக மீதான ஊழல் புகார் நிரூபிக்கப்பட்டதா? ஊழல் புகாரில் தண்டிக்கப்பட்டவர் யார் என்று உங்களுக்கே தெரியும்- உதயநிதி ஸ்டாலின்.</p><p>திமுகவினர் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடக்கலாம். அவற்றை சட்டரீதியாக சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்- உதயநிதி ஸ்டாலின்</p><p>பஞ்சமி நிலங்களை கண்டறிய ஏற்கனவே இருந்த ஆணையத்தைவிட சிறப்பான ஆணையம் அமைக்கப்படும்- அமைச்சர் வன்னிஅரசு.</p><p>"சட்டம் ஒழுங்கு பிரச்சினையில், ஜாதி மறுப்பு திருமணமும் காரணமாக இருப்பதாக முதல்வர் பேசினார். சமூக பிரச்சினையான கலப்பு திருமணம் தொடர்பான முக்கிய கருத்தை தெரிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்"- முதல்வர் விஜய்யின் பதிலுரைக்கு அமைச்சர் வன்னிஅரசு நன்றி</p><p>முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி என்று சொல்வது போல் அம்மா ஜெயலலிதா எனச் சொல்ல வேண்டும் என வேலுமணி கோரிக்கை வைத்தார்.</p><p>முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என்று சொல்வதனால் அவர்களை குறைத்து மதிப்பிடுவதாக எண்ண வேண்டாம்- வன்னி அரசு.</p><p>சமூக ஊடகங்களில் பெண்கள் குறித்து விமர்சிக்கும் தவெகவினரும் உள்ளனர், அவர்களையும் கண்டிக்க வேண்டும்- தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா.</p><p>பெண்களை விமர்சித்து பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய முதலமைச்சருக்கு வரவேற்பு- பிரேமலதா.</p><p>திமுகவினர் போலி கணக்கு மூலம் தவெக பெயரில் சமூக ஊடக கணக்குகள் தொடங்கி அவதூறு பரப்புகின்றனர்.</p><p>தவெகவினர் உள்ளிட்ட யாராக இருந்தாலும் பெண்களை அவதூறாக பேசினால் நடவடிக்கை என்றுதான் முதலமைச்சர் கூறியுள்ளார்- அமைச்சர் நிர்மல் குமார்.</p><p>கேப்டன் விஜயகாந்தை எப்படியெல்லாம் சங்கடத்திற்கு உள்ளாக்கினரோ அதே வேலையை தான் இப்போதும் செய்கின்றனர். </p><p>கேப்டன் குறித்து தவறான தகவல் பரப்பியோர்போல் இப்போதும் திமுகவினர் ஃபேக் ஐடி உருவாக்கி செயல்படுகின்றனர்- அமைச்சர் நிர்மல் குமார்.</p><p>“திருவண்ணாமலை பொதுக்குழுவில் நான் தவறாக பேசியதாக சித்தரிக்கிறார்கள். எங்கள் தலைவர் சொன்னதை தான், நான் பேசினேன். திமுகவும் அதிமுகவும் இணைந்து முதல்வரை தேர்வு செய்ய முயன்றார்கள் என்று கூறியதை தான் நான் சொன்னேன். தரகர்கள் பலரும் சுயநலத்திற்காக பேரம் பேசியிருப்பார்கள்”- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ சையது பரூக்.</p><p>ஐயுஎம்எல் கட்சியின் 2 சட்டமன்ற உறுப்பினர்களை அடைத்து வைத்து மிரட்டி உள்ளனர்.</p><p>மே 8ம் தேதி இரவு உணவகத்தில் அடைத்து வைத்து மிரட்டல் விடுத்தவர் யார் என்பதை சொல்ல வேண்டிய நிலை வரும்.</p><p>முதலமைச்சர் விஜய் ஆட்சி அமைந்துவிடக்கூடாது என்று திமுக ஒரு முடிவு சொன்னது, பின்பு மற்றொரு முடிவு சொன்னது.</p><p>2 எம்எல்ஏக்களை ஓட்டலில் அடைத்தது யார் என்று உடைத்து பேசினால், அது தமிழக அரசியலுக்கு நல்லதல்ல- அமைச்சர் ஷாஜகான்.</p><p>தமிழக வெற்றிக் கழகம் மீது எதிர்க்கட்சியினர் பொய்யான குற்றச்சாட்டை வைத்து சென்றுள்ளனர்.</p><p>ஐயுஎம்எல் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சபையின் வெளியே பொய்யான குற்றச்சாட்டை வைக்கிறார்.</p><p>மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்கி காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி ஒத்துழைப்புடன் தவெகவுக்கு கடிதம் வந்தது.</p><p>எந்த கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களிடமும் தவெக அமைச்சர்கள் யாரும் பேசவில்லை- அமைச்சர் ஆதவ் திட்டவட்டம்.</p><p>திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் அக்காட் ஓட்டலில் எம்எல்ஏக்களை தங்க வைத்தவர் யார் என மக்கள் அறிவர்.</p><p>திராவிட முன்னேற்றக் கழகம் தான் குதிரை பேரம் நடத்தியது என விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா குற்றச்சாட்டு.</p><p>ஐயுஎம்எல் கட்சியின் மீது தவறான குற்றச்சாட்டை பரப்பி வருகின்றனர். இது மிகவும் தவறு என்று அமைச்சர் ராஜ்மோகன் பேசினார்.</p><p>திமுகவினரை போல் கோடிகளை கொட்டி அமைக்கப்பட்ட அரசு இல்லை, கோடிக்கணக்கான மக்களின் விஜய் சர்கார்- ராஜ்மோகன்.</p><p>திமுக, அதிமுக இணைந்து ஆட்சியமைக்க முயற்சி என தவறான தகவல் சொல்கின்றனர். நாங்கள் திமுகவுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை.</p><p>திமுக தீயசக்தி என்று சொன்ன எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார்- அக்ரி கிருஷ்ணமூர்த்தி</p><p>“வரிவிதிப்பு, தணிக்கை மற்றும் திருப்புத்தொகை உள்ளடக்கிய வரி செலுத்துவோருக்கான சேவைகளின் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டு வரி நிர்வாகத்தில் 'முகம் அறியாத' நடைமுறை விரிவுபடுத்தப்படும்”- வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன்.</p><p>மாற்று சபாநாயகராக தஞ்சாவூர் தவெக சட்டமன்ற உறுப்பினர் விஜய் சரவணன் அமர்ந்த போது, எதிரில் அமர்ந்திருந்த முதல்வர் விஜய்க்கு வணக்கம் தெரிவிக்க, பதிலுக்கு முதல்வர் விஜய்யும் புன்னகைத்தபடி அவருக்கு பதில் வணக்கம் வைத்து, 'எப்படி..' என கண் அசைவில் கேட்க, சபை முழுக்க மேஜையை தட்டி தவெகவினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.</p><p>"மாநிலத்தில் முதலாம் விற்பனை நிலையில் மதிப்புக் கூட்டு வரி செலுத்திய பின்னர் பெட்ரோல் மற்றும் டீசல் மறுவிற்பனை செய்யும் சில்லறை விற்பனை நிலையங்கள் சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் கீழ் பதிவு பெற்று இருப்பின், தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரிச் சட்டத்தின் கீழ் பதிவு பெறுவதிலிருந்து விலக்களிக்கப்படும்"- வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் அறிவிப்பு.</p><p>"போலி இறப்பு மற்றும் வாரிசுரிமைச் சான்றிதழ்கள் மூலம் நடைபெறும் மோசடி பதிவுகளைத் தடுக்க, சான்றிதழ் எண்கள் API மூலம் நிகழ்நேரத்தில் சரிபார்க்கப்படும். இதனால் பதிவு சேவைகள் விரைவுபடுத்தப்பட்டு, போலி ஆவணப் பதிவுகள் தடுக்கப்படும்"- அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன்</p><p>நாளைய தீர்ப்பை கேட்டவர் அல்ல, இன்றைய தீர்ப்பை எழுதியவர். கில்லியாக களம் கண்டவர், இன்று மக்கள் மனதில் தடம் பதித்தவர். துப்பாக்கி சத்தம் தேவையில்லை, அவர் சொல் ஒன்று போதும் தீப்பொறி பறக்க. மாஸ்டராய் திரையில், நம் வாத்தியார் வழியில் வந்த நம் அன்பு வாத்தியார்- தவெக அண்ணாநகர் எம்எல்ஏ ராம்குமார்</p><p>ஆவணங்களை நேரில் தாக்கல் செய்ய தேவையில்லை. இணையவழியில் ஆவணங்களை பதிவேற்றம் செய்த பிறகு, சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் சென்று புகைப்படம் மற்றும் கைரேகை மட்டும் வழங்கினால் போதும்.</p><p>பதிவு முடிந்ததும் ஆவணம் இணையவழியில் . Settlement, Release, Partition, Revocation Settlement உள்ளிட்ட குடும்ப ஏற்பாடு ஆவணங்கள் 15.10.2026 முதல் காகிதமில்லா முறையில் மட்டுமே பதிவு செய்யப்படும்- அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன்</p><p>ஊழலுக்கு எதிரான, ஊழலில் ஊறித் திளைத்தவர்களைத் தோலுரித்துக் காட்டியதுமான அற்புதமான உரையாக முதலமைச்சர் விஜய்யின் உரை அமைந்தது- சட்டசபையில் காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன்.</p><p>வனத்துறையின் பல்வேறு நிலையில் பணியாற்றி வரும் சுமார் 6,260 சீருடை பணியாளர்கள் (Frontline Staff), பணியில் இருக்கும் போது சீருடை அணிந்த நிலையில் பேருந்துகளில் பயணிக்க, ஒரு பணியாளருக்கு மாதத்திற்கு ரூ.200 என்ற சலுகைக் கட்டணத்தில் ரூ.1.50 கோடி செலவில் பேருந்து பயண அட்டை, ஸ்மார்ட் அடையாள அட்டையாக (Smart Identity Card) வழங்கப்படும்- அமைச்சர் ரஞ்சித் குமார் </p><p>"இந்து சமய அறநிலையத் துறை மற்றும் வக்ஃபு வாரியம் தெரிவிக்கும் தடைசெய்யப்பட்ட நில விவரங்கள் STAR-ல் பதிவேற்றம் செய்யப்படும்.</p><p>மோசடி பதிவுகளைத் தடுக்கவும், பதிவுகளைப் பாதுகாக்கவும் API இணைப்பு வழங்கப்படும். மேலும், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் மற்றும் வக்ஃபு வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆகியோர் STAR இணையதளத்தில் நேரடியாக நிலப் பதிவுகளை உள்ளீடு செய்யும் வசதி ஏற்படுத்தப்படும்"-அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன்</p><p>சார்பதிவாளர் அலுவலகங்கள் இனி வார நாட்களில் மட்டும் செயல்படும் வருகையில்லா ஆவணப்பதிவு விரிவாக்கம் செய்யப்படவுள்ளதால், சார்பதிவாளர்களின் வேலைப்பளுவைக் குறைக்கும் நோக்கில், சனிக்கிழமைகளில் செயல்படும் 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் இனி வார நாட்களில் மட்டும் செயல்படும்.</p><p>சனிக்கிழமை கட்டாயப்பணி முறை கைவிடப்படும்- அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன்.</p><p>தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் காற்று தர கண்காணிப்பை வலுப்படுத்தும் நோக்கில், மாநிலம் முழுவதும் 80 இடங்களில் உணரிகை (சென்சார்) அடிப்படையிலான தொடர் சுற்றுப்புற காற்று தர கண்காணிப்பு நிலையங்கள் ரூ.8 கோடியில் நிறுவப்படும்- தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் டாக்டர் வே.க. ராஜீவ்.</p><p>காற்று, நீர், ஒலி சார்ந்த சுற்றுச்சூழல் அளவுருக்களை நிகழ்நேரத்தில் கண்காணிக்க, தொழிற்சாலை ஆய்வுகள், மாசுபாடு தொடர்பான நிகழ்வுகள், பொதுமக்கள் புகார்களின் போது விரைவான அறிவியல் அடிப்படையிலான மதிப்பீடு செய்து நடவடிக்கை மேற்கொள்ள, நவீன சுற்றுச்சூழல் பகுப்பாய்வுக் கருவிகள் பொருத்தப்பட்ட 5 நடமாடும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு வாகனங்கள் ரூ.7.50 கோடி மதிப்பீட்டில் இயக்கப்படும்- சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் ராஜீவ்.</p><p>குழந்தைக்குக் கொடுக்கும் தாய்ப்பாலில் டையாக்சின் உள்ளது என பள்ளிக்கரணையில் கூறுகிறார்கள். கடலூரில் இளநீரில் டையாக்சின் இருப்பதாகக் கூறுகிறார்கள். இதையெல்லாம் ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.</p><p>'வளர்ச்சி, வளர்ச்சி' என்று கூறி புற்றுநோயை வளர்த்து வைத்துள்ளோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் புற்றுநோய்க்கு தனி மருத்துவமனை வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறோம். இதற்கு காரணம் இப்படிப்பட்ட வளர்ச்சிதான்- பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் சவுமியா அன்புமணி.</p><p>தொழிற்சாலைகளில் வேலை கொடுக்கிறார்கள். மாதம் ரூ.2 லட்சம் சம்பளம் கொடுப்பார்களா? ஏனென்றால், புற்றுநோய் சிகிச்சைக்கு ரூ.2 லட்சத்துக்கும் மேல் செலவாகலாம். இதுதான் வளர்ச்சியா? மக்களின் உயிரைப் பணயம் வைத்து தொழிற்சாலைகளும் வளர்ச்சியும் தேவையா?-  சவுமியா அன்புமணி</p><p>திருவண்ணாமலை மாவட்டம் மதுரா கிருஷ்ணாவரம் கிராமத்தில், வழியில் கிணறு உள்ளதால், சுடுகாடு வழியாகவே மக்கள் சென்று வருகின்றனர். இதனால், அந்த ஊரில் பெண் கொடுப்பதற்கும், பெண் எடுப்பதற்கும் மக்கள் தயங்குகின்றனர்- ஆரணி அதிமுக MLA ஜெயசுதா பேசியதும் மேஜையை தட்டி சிரித்த பாமக MLA கணேஷ்குமார்.</p><p>பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி பேசும்போது, மானியக் கோரிக்கைகள் மீது விரிவாகப் பேசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடுகிறார். அதனால், காலம் போவதே தெரியவில்லை. வாழ்த்துகள் என மாற்று சபாநாயகரும், தஞ்சை சட்டமன்ற உறுப்பினருமான விஜய் சரவணன் புகழாரம் சூட்டினார்.</p><p>சாலை ஓரங்களில் நடைபாதை இல்லை. ஆனால், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 10 அடி அகலத்திற்கு கான்கிரீட் போட்டு நடைபாதை அமைத்துள்ளார்கள். தண்ணீர் செல்லும் பாதையை அடைத்து, 10 அடி உயரத்திற்கு கான்கிரீட் சுவர் அமைத்துள்ளார்கள்- சவுமியா அன்புமணி</p><p>பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை காப்பாற்றி, ராம்சார் குறியீடு பெற்றதை அங்கீகரித்தாலே, அங்குள்ள மக்களின் வீடுகள் காப்பாற்றப்படும். பள்ளிக்கரணையில் நடைபாதை அமைத்துள்ளனர். அதற்கு என்ன அவசியம் இருக்கிறது? தண்ணீர் செல்லும் பாதையை அடைத்து, சிமெண்ட் பைப் போட்டுள்ளனர்-  சவுமியா அன்புமணி</p><p>"பழனி ஆண்டவர் எனக்கு அள்ளி தந்தார், தமிழக முதல்வரும் எனக்கு அள்ளித்தந்தார், இங்கு அமர வைத்தார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்"- பழனி முருகன் தனக்கு அள்ளித்தந்ததாக அதிமுக எம்எல்ஏ ரவிமனோகரன் பேசியதற்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில்.</p><p>மாற்றுத் தலைவராக சட்டப்பேரவையை வழி நடத்திய தஞ்சை சரவணன், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு பதிலாக, சட்டப்பேரவையில் இல்லாத முன்னாள் அதிமுக அமைச்சரும், தவெகவில் இணைந்து செயல்பட்டு வரும் வெல்லமண்டி நடராஜன் பெயரை குறிப்பிட்டு அழைக்க, பின்னர் சுதாரித்துக் கொண்ட தஞ்சை சரவணன், மன்னிக்கவும் கே.பி அன்பழகன் என கூறி அவரை பேச அழைத்தார்.</p><p>சென்னையில் நல்ல காற்றே இல்லை.  இந்தியாவில் இருக்கக்கூடிய நகரங்களில் கடைசி இடத்தில் சென்னை உள்ளது சுவாசிக்க தகுதி இல்லாத காற்றை சென்னை மக்கள் சுவாசித்து வருகிறார்கள்- சவுமியா அன்புமணி</p><p>மாசு அடைந்த காற்றால் பொருளாதார இழப்பு ரூ.11,000 கோடியாக உள்ளது நல்ல காற்று இருந்தால் சென்னையில் இருப்பவர்கள் ஆயுட் காலம் 4 ஆண்டுகள் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது: சென்னையில் ஏன் காற்று மாசுபடுகிறது என ஐ.ஐ.டி செய்த ஆய்வறிக்கையை வெளியிட வேண்டும்- சவுமியா அன்புமணி</p><p>ஒரு பெண்ணாக, இந்த சமுதாயத்தில் எவ்வளவு கஷ்டம், துயரம் என்பதை பகிர விரும்புகிறேன். பத்திரிக்கையாளராக என்னை ட்ரோல் செய்தால், தாங்கிக் கொள்வேன்.</p><p>ஆனால் எங்கள் அண்ணனை சேர்த்து என்னை பேசும் போது, அதன் பிரதிபலிப்பு வேறுவிதமாக இருக்கும். படிக்கும் போது ஏற்படும் தடுமாற்றத்தை கேலி செய்யும் ஆண்களுக்கு சொல்கிறேன், அடுத்த சட்டமன்றத்தில் எங்கள் பேச்சு இதை விட சிறப்பாக இருக்கும்.</p><p>நீங்கள் ட்ரோல் செய்வதால், எங்களுக்கு எதுவும் தெரியாது என்று அர்த்தமில்லை- அமைச்சர் ஜெகதீஸ்வரி உருக்கம்</p><p>சட்டப்பேரவையில் துணை சபாநாயகர் ரவி சங்கர் பேசிக்கொண்டிருந்தபோது, நேரத்தின் அருமை உங்களுக்கு தெரியும்... பலர் பேச வேண்டியுள்ளது. பலரிடம் நீங்கள் சாட்டையை சுழற்றியவர்!" என மாற்று சபாநாயகர் விஜய் சரவணன் கூறினார்.</p><p>அதற்கு, “10 நிமிடத்தைத் தாண்ட மாட்டேன்... எப்படி முடிக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும்!" என துணை சபாநாயகர் ரவி சங்கர் பதிலளித்தார். இருவரின் பேச்சால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.</p>]]></content:encoded></item><item><title>அபிஷன் ஜீவிந்த், சிவராஜ்குமார் நடிக்கும் &apos;பிக்காசோ&apos;!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/picasso-starring-abishan-jeevindh-and-shivarajkumar</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/picasso-starring-abishan-jeevindh-and-shivarajkumar#comments</comments><guid isPermaLink="false">298ebe82-a3a2-4a84-a96d-c3412e754ce1</guid><pubDate>Mon, 07 Sep 2026 16:09:57 +0000</pubDate><atom:updated>2026-09-07T16:09:57.088Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Abishan Jeevinth,shivarajkumar,Picasso,அபிஷன் ஜீவிந்த்,சிவராஜ்குமார்,பிக்காசோ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/norbijvh/New-Project-2026-09-07T212001.200.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அபிஷன் ஜீவிந்த், சிவராஜ்குமார் நடிக்கும் 'பிக்காசோ'!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/norbijvh/New-Project-2026-09-07T212001.200.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அறிமுக இயக்குநர் கௌதம் சிவராமன் இயக்கத்தில் <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/shiva-rajkumar-and-abishan-jeevinth-new-movie-update-out-now">அபிஷன் ஜீவிந்த், சிவராஜ்குமார்</a> முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் படத்திற்கு ‘பிக்காசோ’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. </p><p>இப்படத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் நடித்துள்ள யோகலட்சுமி, சிவானி நாகராம், கானா வினோத் ஆகியோரும் நடிக்கின்றனர். </p><p>டிராமா கம்பெனி பேனரின் கீழ் ஏ. பாலமுருகன் இப்படத்தைத் தயாரிக்கிறார். படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். படம் குறித்த பிற அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>டூரிஸ்ட் ஃபேமிலி, வித் லவ்</h2><p>‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமான அபிஷன் ஜீவிந்த், வித் லவ் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். </p>]]></content:encoded></item><item><title>கே.எல். ராகுல் வெளியேறுகிறாரா? டெல்லி கேப்பிட்டல்ஸ் உரிமையாளர் அளித்த பதில்..!</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/kl-rahul-is-klutch-for-delhi-capitals-parth-jindal</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/kl-rahul-is-klutch-for-delhi-capitals-parth-jindal#comments</comments><guid isPermaLink="false">9e3f8734-b14c-476f-a43b-326196051378</guid><pubDate>Mon, 07 Sep 2026 16:06:17 +0000</pubDate><atom:updated>2026-09-07T16:06:17.030Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>KL Rahul,கேஎல் ராகுல்,Delhi Capitals,டெல்லி கேப்பிட்டல்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/0mkc2okw/KLRahul001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ KL Rahul]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/0mkc2okw/KLRahul001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான கே.எல். ராகுல் விளையாடி வருகிறார். இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு Trade செய்யப்பட இருப்பதாக செய்தி வெளியானது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரகானே தலைமையில் 2026-ல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அடுத்த சீசனில் ரகனே விளையாடுவாரா? என்பது சந்தேகம்தான்.</p><h2>கொல்கத்தா நைட் ரைடர்ஸ்</h2><p>இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் திறமையுடன் சிறந்த பேட்ஸ்மேனை Trade செய்ய ஆர்வமாக உள்ளது. ஹர்திக் பாண்ட்யாவை Trade செய்ய விருப்பம் தெரிவித்தது. இதற்கிடையே கே.எல். ராகுலை Trade செய்ய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முயற்சி செய்து வருவதாக செய்தி வெளியானது.</p><p>இந்த நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான பார்த் ஜிண்டால் இந்த செய்தியை மறுத்துள்ளார். இது தொடர்பாக பார்த் ஜிண்டால எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவியில் கூறியிருப்பதாவது:-</p><p>டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு கே.எல். ராகுல் ஒரு மிக முக்கியமான மற்றும் நம்பிக்கைக்குரிய வீரர். எனக்குத் தெரிந்த மிகச் சிறந்த மனிதர்களில் ஒருவரான இவர், எப்போதும் தன்னைவிட அணிக்குத்தான் முன்னுரிமை அளிப்பார். நாங்கள் இன்னும் சாதிக்க வேண்டியவை நிறைய உள்ளன. டெல்லிக்கு பெருமை சேர்க்கும் வகையில் நாங்கள் இணைந்து கடுமையாக உழைப்போம்.</p><p>இவ்வாறு பார்த் ஜிண்டால் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஈரான் சண்டை &quot;போர் அல்ல&quot; எனக்கூறி உயிரிழந்த விமானிக்கு இழப்பீடு வழங்க மறுத்த அமெரிக்கா</title><link>https://www.maalaimalar.com/news/world/us-pilot-killed-in-iran-war-compensation-dispute</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-pilot-killed-in-iran-war-compensation-dispute#comments</comments><guid isPermaLink="false">a53d8a0e-8120-406c-8ec2-4b72b0e5ac30</guid><pubDate>Mon, 07 Sep 2026 16:04:19 +0000</pubDate><atom:updated>2026-09-07T16:04:19.349Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விமானி,Pilot,அமெரிக்கா,America,ஈரான்,Iran</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/tpsa2b6r/Untitled-design-36.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ US Pilot Compensation Row]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/tpsa2b6r/Untitled-design-36.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரானுக்கு எதிராக நடந்த போரின்போது, அமெரிக்க விமானத்திற்கு எரிபொருள் நிரப்ப சென்ற விமானம் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழந்த அமெரிக்க விமானிக்கு போரில் இறந்ததற்கான ஊதியம் வழங்கப்பட மாட்டாது என அமெரிக்கா தெரிவித்தது. </p><p>இதையடுத்து தனது குடும்பத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக விமானியின் மனைவி தெரிவித்ததையடுத்து, இறுதியில் அமெரிக்க அதிகாரிகள் அவருக்கு பதில் அளித்துள்ளனர்.</p><p>மேற்கு ஈராக்கில் ஈரானுக்கு எதிராக <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE">அமெரிக்கா</a> தாக்குதல் நடத்தியது. அப்போது அமெரிக்க போர் விமானங்களில் எரிபொருள் நிரப்புவதற்காக கேசி-135 என்ற அமெரிக்க விமானம் மார்ச் 12-ஆம் தேதி போர் நடந்த இடத்திற்கு சென்றது. </p><p>இந்த விமானத்தில் அமெரிக்க விமானி மேஜர் அலெக்ஸ் கிளின்னர் பயணம் செய்தார். அப்போது அமெரிக்க போர் விமானத்திற்கு எரிபொருள் நிரப்பி கொண்டிருந்தபோது விமானம் வெடித்து விபத்துக்குள்ளானது.</p><p>இந்த விபத்தில் 33 வயதான விமானி அலெக்ஸ் கிளின்னர் உயிரிழந்தார். இதையடுத்து முறையான போர் பிரகடனம் அறிவிக்காததால், விபத்தில் உயிரிழந்த அமெரிக்க விமானிக்கு உரிய இழப்பீடு தர முடியாது என அமெரிக்கா தெரிவித்தது.</p><p>இதனால் விரக்தியடைந்த அமெரிக்க விமானியின் மனைவி கிளின்னர், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “என் கணவர் போரில் உயிரிழந்தார். ஆனால் சட்டப்படி இது போர் இல்லை என என்னிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>துயரத்தில் இருக்கும் ஒரு குடும்பம் அரசாங்க செயல்முறைகளை சமாளிக்க தயாராக இல்லாத ஒரு தருணத்தில், அவற்றை சமாளிப்பது எவ்வளவு கடினமாக இருக்கும் என்பதை இந்த அனுபவம் எனக்கு உணர்த்தியது.</p><p>நினைத்துப் பார்க்க முடியாத இழப்பை சந்திக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆரம்பத்திலிருந்தே அரசாங்கத்திடம் இருந்து ஒரு தெளிவான பதில் கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.</p><p>நாம் இறந்தவர்களின் சேவையையும் தியாகத்தையும் கௌரவிக்கும் முறையின் ஒரு பகுதியாக இந்த நடைமுறை உள்ளது” என்று கூறினார்.</p><p>அவர் தெரிவித்த கருத்து இணையத்தில் பரவியதை அடுத்து, அமெரிக்க விமானப்படை அதிகாரிகள் கிளின்னரை தொடர்பு கொண்டு, போர் தொடர்பான ஆபத்துக்கால ஊதியம் மற்றும் வரிச் சலுகைகள் ஆகியவை இதில் அடங்கி இருந்தன என கூறினர்.</p><p>மேலும் உயிரிழந்த அமெரிக்க விமானியின் இறுதி சம்பள பட்டியலில், போர்க்கால ஊதியமாக மாதத்திற்கு 225 டாலர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அது தவறாக பட்டியலிடப் பட்டிருந்ததாகவும் தெரிவித்தனர்.</p><p>இதையடுத்து வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கிளின்னர் குறித்து, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ்-இடம் கேட்கப்பட்டது. </p><p>அப்போது அவர், “நாங்கள் எங்களால் முடிந்தவரை அவருக்கு உதவவும், அவருடைய உரிமை அனைத்தையும் அவர் பெறுவதை உறுதி செய்யவும் விரும்புகிறோம்.</p><p>நாங்கள் உயிரிழந்த விமானி கிளின்னரை நேசிக்கிறோம். அவர் செய்த தியாகத்திற்கு நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம். மேலும் அவருக்கு தேவையானதை பெற்று தரும், எங்கள் கடமையை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்கிறோம்” என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.260 கோடி வசூலித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ்... ஓடிடி வெளியீடு எப்போது?</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/viswanath-and-sons-grosses-260-crore-when-is-the-ott-release</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/viswanath-and-sons-grosses-260-crore-when-is-the-ott-release#comments</comments><guid isPermaLink="false">0d23902c-8bd4-48e6-8884-d1ed75ac96d2</guid><pubDate>Mon, 07 Sep 2026 15:45:09 +0000</pubDate><atom:updated>2026-09-07T15:45:09.142Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சூர்யா,suriya,mamitha baiju,மமிதா பைஜூ,விஸ்வநாத் அண்ட் சன்ஸ்,Viswanath And Sons</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/f3ug3ue9/New-Project-2026-09-07T211435.545.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரூ.260 கோடி வசூலித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ்... ஓடிடி வெளியீடு எப்போது?]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/f3ug3ue9/New-Project-2026-09-07T211435.545.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ, ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ஆக.14ம் தேதி திரையரங்குகளில் வெளியானப் படம் <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/trailer-for-suriyas-viswanath-and-sons-released">விஸ்வநாத் அண்ட் சன்ஸ்</a>.</p><p>சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார்.</p><p>இந்நிலையில் வெளியான 25 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ.260 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது. </p><p>மேலும் படம் செப்.14ம் தேதி நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால் படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. </p>]]></content:encoded></item><item><title>செல்வாக்குமிக்க  நபர்கள் மீதுள்ள ஊழல்  வழக்குகளை விசாரிப்பது கடினம்- சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/selvaakkum-mikka-napargal-meethulla-oozhal-vazhakkugalai-visaarippathu-kadinam-chennai-uyarneethimandram-karuthu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/selvaakkum-mikka-napargal-meethulla-oozhal-vazhakkugalai-visaarippathu-kadinam-chennai-uyarneethimandram-karuthu#comments</comments><guid isPermaLink="false">849fd3f5-3876-4f24-ad1a-4baa5510872f</guid><pubDate>Mon, 07 Sep 2026 15:30:13 +0000</pubDate><atom:updated>2026-09-07T15:30:13.267Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஊழல் வழக்கு,Madras High Court,சென்னை உயர்நீதிமன்றம்,நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்</media:keywords><media:content height="363" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/r2ao8zf6/750x450406735-justice-n-anand-venkatesh-and-madras-hc.jpg" width="735"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Madras High Court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/r2ao8zf6/750x450406735-justice-n-anand-venkatesh-and-madras-hc.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>சாத்தியமற்றது </h2><p>இந்த நாட்டில் செல்வாக்கு மிக்க நபர்கள் மீதுள்ள வழக்குகளை  விசாரிப்பது என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்று <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/no-bar-on-singing-tamil-anthem-before-vande-mataram-madras-high-court">சென்னை உயர்நீதிமன்றம் </a>அதிருப்தி கருத்தை தெரிவித்துள்ளது. </p><h2>விசாரணை </h2><p>முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் வழக்கில் வேலுமணியுடன் சேர்த்து தொடர்புடைய மூன்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீதான நடவடிக்கைகளில் ஏற்பட்ட தாமதத்தைக் கண்டித்து அறப்போர் இயக்கம் என்ற தன்னார்வ அமைப்பு தாக்கல் செய்த நீதிமன்ற <a href="https://www.maalaimalar.com/news/national/bill-on-disrespect-to-vande-mataram-passed-in-the-rajya-sabha">அவமதிப்பு</a> மனுவானது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது.</p><h2>மத்திய அரசு</h2><p>இது தொடர்பாக மத்திய அரசு சார்பில்  தெரிவிக்கப்பட்டதில், வழக்கு தொடர அனுமதி கோரி  தமிழக அரசு அனுப்பிய விளக்கம் கடிதம் ஜூலை 28-ம் தேதி கிடைக்கப் பெற்று அதன்மீது பரிசீலனை நடந்து வருகிறது என்று விளக்கம் அளித்திருந்தது.</p><h2>தமிழக அரசு </h2><p>இதற்கு தமிழக அரசின் பதிலாக இது தொடர்பாக ஆகஸ்ட் 27-ம் தேதி நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.</p><h2>அதிருப்தி </h2><p>இந்த நிலையில் இந்த  வழக்கானது விசாரணைக்கு வந்தபோது, இந்தியாவில் செல்வாக்கு மிகுந்த நபர்கள் மீதான<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-indictment-dmk-4"> ஊழல் </a>வழக்கை விசாரிப்பது சிரமமாக உள்ளது. அனுமதி பெறுவதற்கே இவ்வளவு அதிகமான சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது இதற்குபின் இந்த வழக்கில் என்ன நடக்கும் என கடவுளுக்குத்தான் தெரியும் என அதிருப்தி தெரிவித்தார்.</p><p>மேலும் வழக்கில் தற்போதையை நிலை என்னவென்று காணொலி வாயிலாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டின் மாஸ்டர்கள்: நியூசிலாந்து கேப்டன் புகழாரம்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/nz-v-ind-2026-masters-of-odi-game-santner-hails-virat-kohli-and-rohit</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/nz-v-ind-2026-masters-of-odi-game-santner-hails-virat-kohli-and-rohit#comments</comments><guid isPermaLink="false">9eb515f4-ec57-4af9-9258-8ffa42d573ea</guid><pubDate>Mon, 07 Sep 2026 15:20:58 +0000</pubDate><atom:updated>2026-09-07T15:20:58.182Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rohit sharma,ரோகித் சர்மா,Virat Kohli,விராட் கோலி,Mitchell Santner,மிட்செல் சான்ட்னர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/isbjj5l1/Rohit0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரோகித் சர்மா- விராட் கோலி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/isbjj5l1/Rohit0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய அணி இந்த வருடம் இறுதியில் நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் ஐந்து ஒருநாள், ஐந்து டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.</p><p>விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகிறார்கள். ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி 2027 உலகக் கோப்பையில் விளையாடுவார்களா? என்ற கேள்வி ஒரு பக்கம் இருந்து கொண்டே வருகிறது.</p><p>இந்த நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் மாஸ்டர்கள் என்று நியூசிலாந்து அணி கேப்டன் மிட்செல் சான்ட்னர் புகழாரம் சூட்டியுள்ளார்.</p><h2>இது தொடர்பாக மிட்செல் சான்ட்னர் கூறியதாவது:-</h2><p>இந்தியாவுக்கு எதிரான தொடர் ஒரு சவாலாக இருக்கப்போகிறது. நீண்ட காலமாக நாம் பார்த்து வருவது போல, விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவரும் இப்போதும் மிகச் சிறந்த வீரர்கள். ஒருநாள் போட்டிகளில் வல்லவர்கள். கடந்த காலங்களில் நியூசிலாந்தின் சில ஆடுகளங்கள் அவர்களுக்குப் பிடித்தமானவையாக இருந்திருக்கின்றன. இம்முறை அப்படி அமையாது என்று நம்புவோம்.</p><h2>சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்துவதுதான் இலக்கு</h2><p>நாங்கள் இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 5 போட்டிகளில் விளையாட இருக்கிறோம். இலங்கைக்கு எதிராக 3 போட்டிகளில் விளையாட இருக்கிறோம். அதன்பின் இங்கிலாந்துக்கு எதிராக அடுத்த வருடம் விளையாட இருக்கிறோம். இந்த போட்டிகள் 2027 உலகக் கோப்பை தொடருக்கான சரியான வகையில் தயாராகுதலாக இருக்கும்.</p><p>இந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்துவதை நீங்கள் விரும்புவீர்கள். அது ஒரு மிகச்சிறந்த விஷயமாக இருக்கும். அதன்பிறகு, அடுத்த ஆண்டு அக்டோபரில் அணியின் கட்டமைப்பு எப்படி இருக்கக்கூடும் என்பதைக் கண்டறிய முயற்சிக்க வேண்டும்.</p><p>இவ்வாறு சான்ட்னெர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஒரே ஆண்டில் 4 முறை இடமாற்றம்: தவறுகளை சுட்டிக்காட்டினால் இப்படித்தானா?- ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவேசம்</title><link>https://www.maalaimalar.com/news/national/i-was-removed-for-pointing-out-mistakes-ias-officer-transferred-fourth-time-in-a-year</link><comments>https://www.maalaimalar.com/news/national/i-was-removed-for-pointing-out-mistakes-ias-officer-transferred-fourth-time-in-a-year#comments</comments><guid isPermaLink="false">2de29b0b-a2fa-4e10-923a-5aefd78ced98</guid><pubDate>Mon, 07 Sep 2026 15:05:38 +0000</pubDate><atom:updated>2026-09-07T15:05:38.034Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஐஏஎஸ் அதிகாரி,IAS,Madhyapradesh,Transfer,பணியிட மாற்றம்,மத்தியப் பிரதேசம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/rswgmn60/Untitled-design-34.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ IAS officer Neha Marwya]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/rswgmn60/Untitled-design-34.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய பிரேதசத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அரசு அதிகாரி ஒருவர், கடந்த ஓராண்டில் தொடர்ந்து நான்காவது முறையாக இடமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, தன்னுடைய உயர் அதிகாரிகள் தன்னை ஒரு கிள்ளுக்கு இரையாக பார்ப்பதாக ஐ.ஏ.எஸ் சங்கத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.</p><p>2011 பேட்ச் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%90%E0%AE%8F%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D">ஐ.ஏ.எஸ் அதிகாரியான</a> நேஹா மார்வ்யா கடந்த 2017-இல் சிவ்புரி மாவட்ட பஞ்சாயத்து தலைமை அதிகாரியாக பணி அமர்த்தப்பட்டார். </p><p>அப்போது இவருக்கு வாகன கட்டணங்கள் தொடர்பாக அப்போதைய ஆட்சியர் ஓ.பி. ஸ்ரீவஸ்தவா உடன் மோதல் போக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவரை உயர் அதிகாரிகள் அந்த பணியில் இருந்து வேறு இடத்திற்கு மாறுதல் செய்தனர்.</p><p>இதையடுத்து 2022-ல் வருவாய் துறையில் பணியாற்றிய அவர், தனது பதவியை பொறுப்பேற்க முதன்மை செயலாளர் மனிஷ் ரஸ்தோகி தன்னை உள்ளே அனுமதிக்க மறுத்ததாக குற்றம்சாட்டினார்.</p><p>இதைத்தொடர்ந்து நேஹா கடந்த ஜனவரி 2025-ல் திண்டோரி பகுதியில் ஆட்சியராக நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்ற எட்டு மாதங்களுக்கு பிறகு உயர் அதிகாரிகள் அவரை ஆட்சியர் பதவியில் இருந்து நீக்கினர்.</p><p>நேஹா மத்தியப் பிரதேச பட்டியல் பழங்குடியினர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார்.</p><p>இந்த நிலையில் நேஹா, பழங்குடியினர் பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குநராக பொறுப்பேற்று இரண்டு மாதங்கள்தான் ஆகிறது. ஆனால் அவர் வெளியிட்ட அரசு அறிவிப்புகளை தொடர்ந்து, ஊழியர்கள் அவருக்கு எதிராக போராட்டம் ஒன்றை நடத்தினர்.</p><p>இதன் காரணமாக தொடர்ந்து ஓராண்டில் நான்காவது முறையாக அதிகாரிகள் அவரை பணியிட மாறுதல் செய்து உத்தரவிட்டுள்ளனர்.</p><p><strong>ஐஏஎஸ் சங்கத்திற்கு கடிதம்</strong></p><p>இந்த நிலையில் தான் பணியில் சேர்ந்த 50 நாட்களுக்குள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஐஏஎஸ் சங்கத்திற்கு நேஹா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில், “நான் எப்போதும் உத்தரவுகளை மரியாதையுடன் ஏற்றுக்கொள்வேன். ஆனால் இந்த முறை நான் ஊக்கம் இழந்துவிட்டேன்.</p><p>கீழ்ப்படியாமை மற்றும் கோப்புகளை பதுக்கி வைத்திருப்பது குறித்து நான் புகார் அளித்தேன். ஆனால் நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக நான் நீக்கப்பட்டேன்.</p><p>கீழ்நிலை அதிகாரிகள் இடமாற்றங்களை தீர்மானிக்கும் அளவுக்கு, ஒரு ஐஏஎஸ் அதிகாரி பலவீனமாக இருக்க முடியுமா? என்று எனக்கு தெரியவில்லை.</p><p>இந்த பணியிட மாறுதலை அனுபவிக்க ஒரு மாதத்திற்குள் தான் என்ன செய்துவிட்டேன் என்று எனக்கு தெரியவில்லை.</p><p>ஒரு அதிகாரியால் ஒரு மாதத்தில் வேலையை புரிந்துகொள்வது என்பது அரிது. ஆனாலும், இந்த இடமாற்றத்தால் நான் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறேன்.</p><h3><strong>கீழ்நிலை அதிகாரிகள் மிரட்டுகிறார்கள்</strong></h3><p>தொடர்ச்சியான குறுகிய கால பதவிக் காலங்கள் தன்னை மனச்சோர்வடையச் செய்துவிட்டது. </p><p>நிலைமை மேம்படும் என்ற நம்பிக்கையில் பல ஆண்டுகளாக நான் பொறுமையாக இருந்தேன், ஆனால் இப்போது கீழ்நிலை அதிகாரிகள் என்னை மிரட்டத் தொடங்கியுள்ளனர்.</p><p>எப்போதும் சதிகாரர்களே வெற்றி பெறுகிறார்கள், நான் தோற்கிறேன்.</p><p>இந்த அமைப்பு என்னை கைவிட்டுவிட்டது. இன்று நான், நாளை மற்றொரு ஐஏஎஸ் அதிகாரி இலக்காக இருப்பார்,” என்று அவர் ஐஏஎஸ் சங்கத்திற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தொடர் கொலையாளிகள் அதிகம் உள்ள நாடுகள் - 6வது இடத்தில் இந்தியா!</title><link>https://www.maalaimalar.com/news/national/countries-with-the-highest-number-of-serial-killers-india-ranks-6th</link><comments>https://www.maalaimalar.com/news/national/countries-with-the-highest-number-of-serial-killers-india-ranks-6th#comments</comments><guid isPermaLink="false">2b759265-d5a5-4180-ad49-019724b5b955</guid><pubDate>Mon, 07 Sep 2026 14:59:31 +0000</pubDate><atom:updated>2026-09-07T14:59:31.029Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,அமெரிக்கா,United States,Serial Killers,தொடர் கொலையாளிகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/xmgamguc/New-Project-2026-09-07T202250.138.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தொடர் கொலையாளிகள் அதிகம் உள்ள நாடுகள் - 6வது இடத்தில் இந்தியா!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/xmgamguc/New-Project-2026-09-07T202250.138.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p> உலகம் முழுவதும் 1900 ஆண்டுமுதல் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில்,  அதிக அளவிலான தொடர் கொலையாளிகள் ஆவணப்படுத்தப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது.</p><p>சமீபத்திய 2026 ராட்ஃபோர்ட்/எஃப்.ஜி.சி.யு (Radford/FGCU) அறிக்கையின்படி, 1900 ஆம் ஆண்டு முதல் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட தொடர் கொலையாளிகளின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இந்தத் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.</p><h2>விசாரணை முறை</h2><p>இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், இந்த எண்கள் அந்தந்த நாடுகளின் ஒட்டுமொத்த பாதுகாப்பு குறைபாட்டை மட்டும் குறிப்பதில்லை; மாறாக, அங்குள்ள குற்றவியல் விசாரணை முறைகள், ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்றுப் பதிவுகளின் வெளிப்படைத்தன்மையையும் காட்டுகின்றன.</p><h2>அமெரிக்கா முதலிடம்</h2><p>இந்த பட்டியலில் அமெரிக்கா 3,803 கொலையாளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இது இரண்டாம் இடத்தில் இருக்கும் இங்கிலாந்தின் மொத்த எண்ணிக்கையான 188-ஐ விட 20 மடங்குக்கும் அதிகமாகும்.</p><p>ரஷ்யா 172 பேருடன் மூன்றாம் இடத்திலும், அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா (153) மற்றும் ஜப்பான் (145) ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. 135 கொலையாளிகளுடன் <a href="https://www.maalaimalar.com/news/national/india-said-no-to-the-press-conference-trump-initially-agreed-but-later-changed-his-tune-an-incident-at-the-g7-summit">இந்தியா</a> 6வது இடத்தில் உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>புதிய காரை திருடர்களிடம் இருந்து பாதுகாக்க, வீட்டின் மொட்டை மாடியில் பார்க்கிங் செய்த நபர்</title><link>https://www.maalaimalar.com/news/national/man-parks-new-car-on-rooftop-to-prevent-theft</link><comments>https://www.maalaimalar.com/news/national/man-parks-new-car-on-rooftop-to-prevent-theft#comments</comments><guid isPermaLink="false">c2e7723a-e72c-4aec-96ef-28c9521c1363</guid><pubDate>Mon, 07 Sep 2026 14:48:51 +0000</pubDate><atom:updated>2026-09-07T14:48:51.888Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பீகார்,Bihar,மஹிந்திரா கார்,Mahindra Scorpio</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/1e491dtb/Untitled-design-35.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rooftop Parking to Prevent Car Theft]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/1e491dtb/Untitled-design-35.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பீகாரை சேர்ந்த நபர் ஒருவர், தான் புதிதாக வாங்கிய மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரை, இரவு நேரத்தில் திருடர்களிடம் இருந்து பாதுகாப்பதற்காக வீட்டின் மொட்டை மாடிக்கு, கிரேன் மூலம் கொண்டு சென்று பார்க்கிங் செய்த காணொளி இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">பீகார்</a> மாநிலம் கோபால்கஞ்ச் பகுதியை சேர்ந்த மனோஜ் யாதவ் என்பவர் சமீபத்தில் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரை வாங்கி உள்ளார்.</p><h3><strong>வெளிநாட்டிற்கு சென்ற கார் உரிமையாளர்</strong></h3><p>இதையடுத்து இவருக்கு இஸ்ரேல் நாட்டில் வேலை கிடைத்து விட்டதால், தனது வாகனத்தை பீகாரில் ஒரு ஓட்டுநரிடம் கொடுத்துவிட்டு, அவர் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார்.</p><p>இதற்கிடையில் சிறிது காலம் கழித்து, அந்த ஓட்டுநர் பணியில் இருந்து சென்று விட்ட நிலையில், தனது கார் திருடப்பட்டு விடுமோ என்று யாதவுக்கு கவலை எழுந்துள்ளது.</p><p>இதைத்தொடர்ந்து திருட்டில் இருந்து காரை பாதுகாப்பதற்காக, யாதவ் குடும்பத்தினர் மஹிந்திரா வாகனத்தை வீட்டின் மொட்டை மாடிக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர்.</p><h3><strong>மொட்டை மாடியில் பார்க்கிங்</strong></h3><p>பின்னர் அவர்கள், அந்த வாகனத்தை ஒரு கிரேன் மூலம் வீட்டின் இரண்டாவது தளத்தில் உள்ள மாடிக்கு தூக்கி சென்று பார்க்கிங் செய்தனர்.</p><figure><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1072908068927705%2F&show_text=false&width=560&t=0" width="560" height="314" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></figure><p>இந்த காட்சியை பார்த்த உள்ளூர் கிராம மக்கள், அதனை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டனர்.</p><p>கார் திருடப்படுவதில் இருந்து பாதுகாப்பதற்காக, கார் உரிமையாளர் வீட்டின் மொட்டை பார்க்கிங் செய்த காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சபாநாயகர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-speaker-must-act-impartially-communist-party-of-india-insists</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-speaker-must-act-impartially-communist-party-of-india-insists#comments</comments><guid isPermaLink="false">bb47b4f7-6e8c-41ab-8c49-c97c7c20c6a1</guid><pubDate>Mon, 07 Sep 2026 14:48:04 +0000</pubDate><atom:updated>2026-09-07T14:48:04.839Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சிபிஐ,CPI,ஜேசிடி பிரபாகர்,M. Veerapandian,மு. வீரபாண்டியன்,JCT Prabhakar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/1emd1zzl/New-Project-2026-09-07T201642.419.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சபாநாயகர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/1emd1zzl/New-Project-2026-09-07T201642.419.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டமன்றத்தின் மரபையும், ஜன நாயகத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;</p><p>சட்டமன்ற பதிலுரையில் தமிழ்நாடு முதலமைச்சர் பெண்களை இழிவுப்படுத்தும் விதத்தில் யார் பேசினாலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார். இது வரவேற்கத்தக்கது.</p><p>அத்துடன் சமூக வலைதளங்களில் பெண்கள் இழிவுப்படுத்தப்படுவதையும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.</p><p>உயிர்புள்ள ஜனநாயகத்திற்கு சட்டமன்ற நடவடிக்கைகள் மக்களின் கோரிக்கைகளுக்கான பிரச்சனைகளை பேசவும், தீர்வு காணவும் கவனம் செலுத்திட வேண்டும்.</p><p>எதிர்கட்சிகளின் குரலுக்கு செவி சாய்க்கவும், அதற்கு உரிய முறையில் பதிலளிப்பதற்கும் மாறாக சட்டமன்ற நடவடிக்கைகளில் வெறும் கூச்சல் மிகும் வாதமுறையால் சட்டமன்றத்தின் நேரம் வீணடிக்கப்படுகிறது. </p><p>சட்டமன்ற மரபையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதில் ஆளுங்கட்சிக்கு அதிக பொறுப்பு உள்ளது. அத்துடன் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/give-due-respect-to-mlas-speaker">சபாநாயகர் </a>நடுநிலையோடு செயல்பட வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சுறாப் பட காட்சி - கவனம் ஈர்க்கும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் இன்ஸ்டா ஸ்டோரி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/a-scene-from-the-movie-sura-opposition-leader-udhayanidhi-stalins-instagram-story-grabs-attention</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/a-scene-from-the-movie-sura-opposition-leader-udhayanidhi-stalins-instagram-story-grabs-attention#comments</comments><guid isPermaLink="false">51e5edb9-0863-4029-aa05-ba455999dcfd</guid><pubDate>Mon, 07 Sep 2026 13:35:40 +0000</pubDate><atom:updated>2026-09-07T13:35:40.080Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,சுறா,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,Sura</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/4h7n5rdt/New-Project-2026-09-07T185908.339.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சுறாப் பட காட்சி - கவனம் ஈர்க்கும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் இன்ஸ்டா ஸ்டோரி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/4h7n5rdt/New-Project-2026-09-07T185908.339.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடைபெற்று வரும் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நாளை உடன் முடிகிறது. இந்நிலையில் இன்றைய அவை நடவடிக்கையில், காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்கினார்.</p><p>அப்போது திமுகமீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும் அமலாக்கத்துறை வழக்குகள், மிசா, சர்க்காரியா ஆணையம் உள்ளிட்ட பலவற்றை குறிப்பிட்டு பேசினார்.</p><h2>திமுக வெளிநடப்பு</h2><p>இதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. முதலமைச்சர் விஜய் உரையாற்றும்போதே திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் எழுந்து அமளியில் ஈடுபட்டனர். மேலும் அவை நடுவே தர்ணாவிலும் ஈடுபட்டனர். </p><p>தொடர்ந்து எதிர்க்கட்சிகள் பதிலளிக்க சட்டப்பேரவைத் தலைவர் நேரம் தரவில்லை என வெளிநடப்பு செய்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-indictment-tvk-govt-4">உதயநிதி ஸ்டாலின்</a>.,</p><p>தவெகவின் நூறு நாள் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளதை ஆதாரத்துடன் தாங்கள் சுட்டிக்காட்டியதாகவும், அதற்குப் பதிலளிக்க முடியாமல் முதலமைச்சர் விஜய் எந்தவித ஆதாரமும் இல்லாத பொய்க் குற்றச்சாட்டுகளைத் தங்கள் மீது சுமத்தியுள்ளார் என்றும் கூறினார். </p><p>மேலும் அவை அனைத்தும் வழக்குகள்தான் என்றும், முதலமைச்சர் விஜய், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மீதும் வழக்குகள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.</p><h2>இன்ஸ்டாகிராம் ஸ்டோரி</h2><p>இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஸ்டோரி இணையத்தில் வைரலாகி வருகிறது. </p><p>அதில் முதலமைச்சர் விஜய் நடித்த சுறா படத்தின் காட்சி ஒன்றை பகிர்ந்துள்ளார். </p><figure><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DIDg05DutpY/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:658px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DIDg05DutpY/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a></div></blockquote>
<script async src="//platform.instagram.com/en_US/embeds.js"></script></figure>]]></content:encoded></item></channel></rss>