<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 25 Aug 2026 09:47:13 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: பரந்தூரில் விமான நிலையம் வந்தால் சென்னையில் வெள்ளம் ஏற்படும்: அமைச்சர் கீர்த்தனா - 25 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-25-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-25-august-2026#comments</comments><guid isPermaLink="false">11be16ef-2d9c-4bff-90aa-9f30801d224f</guid><pubDate>Tue, 25 Aug 2026 03:58:44 +0000</pubDate><atom:updated>2026-08-25T08:20:52.077Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/s5ar4m7s/keerthana.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/s5ar4m7s/keerthana.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவிலேயே நம்பர் ஒன் ரப்பர் என்றால் அது கன்னியாகுமரி ரப்பர்தான் - தளவாய் சுந்தரம்</p><p>கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் தொழில் சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும் - தாரகை கத்பட்</p><p>கன்னியாகுமரி மாவட்ட வாழை, பலா, மிளகிற்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் - தாரகை கத்பட்</p><p>மத்திய பாஜக கூட்டணியில் இருப்பவர்கள் என்எல்சி பிரச்சனைகள் குறித்து மத்திய அரசிடம் எடுத்துக்கூற வேண்டும் - அமைச்சர் கீர்த்தனா</p> <p>பரந்தூர் மக்களைப்போல் என்எல்சியால் பாதிக்கப்பட்ட மக்களையும் பாதுகாப்போம் - அமைச்சர் கீர்த்தனா</p> <p>வடமாநிலங்களில் கட்டமைப்பு மேற்கொள்ள சிஎஸ்ஆர் நிதியை என்எல்சி பயன்படுத்துகிறது. தமிழ்நாட்டில் தடுப்பணைகள் கட்ட எல்எல்சியின் சிஎஸ்ஆர் நிதியை பயன்படுத்த வேண்டும் - சவுமியா அன்புமணி</p><p>மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவை ஒட்டி மதுரையில் உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும். </p><p>மதுரையில் பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் - முஸ்தபா கோரிக்கை</p><p>மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு முதலமைச்சர் விஜய் வர வேண்டும் - முஸ்தபா</p><p>சட்டசபை மாண்பு கருதி முஸ்தபா காட்டிய ஆதாரத்தை வெளியிட விரும்பவில்லை - சபாநாயகர்</p><p>எம்எல்ஏக்கள் பேச்சு பேரவைக்கு வெளியே சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் இருக்கக்கூடாது - தமிமுன் அன்சாரி</p><p>பேசியதற்கு ஆதாரத்தை கொடுத்தார் தவெக எம்எல்ஏ முஸ்தபா</p><p>தவெக எம்எல்ஏ கூறிய ஒரு கருத்துக்கு ஆட்சேபம் தான் தெரிவித்தோம் - கோவி செழியன்</p><p>சபாநாயகர் இருக்கைக்கு அருகே சென்று பூண்டி கலைவாணன் வாக்குவாதம்</p><p>உருட்டல் மிரட்டல்களுக்கு தவெக எப்போதும் பயப்படாது. சபாநாயகருக்கான கண்ணியத்தை மதியுங்கள் - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>தவெக எம்எல்ஏ முஸ்தபா பேச்சிற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.</p><p>அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டம் திமுக ஆட்சியில் ரத்து செய்யப்பட்டது.</p><p>திமுக கொண்டுவந்த பரந்தூர விமான நிலைய திட்டத்தை தவெக அரசு ரத்து செய்துள்ளது -  சிவி. சண்முகம்</p> <p>அரசியல் நடந்தால் தமிழ்நாட்டிற்கு எந்த நல்ல திட்டமும் வராது. </p><p>எல்லாவற்றிலும் அரசியல் செய்யும் நிலையில் இப்படியே போனால் ஒரு டிரில்லியனும் வராது, ஒன்றரை டிரில்லியனும் வராது - சிவி. சண்முகம்</p><p>பரந்தூர் விமான நிலையத்துக்காக கையப்படுத்தப்பட்ட நிலம் விவசாயிகளிடம் ஒப்படைக்கப்படுமா? </p><p>மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமா? - காங்கிரஸ்</p><p>பரந்தூர் விவசாய நிலங்களும் மண்ணின் மைந்தர்களும் தவெக அரசால் பாதுகாக்கப்பட்டுள்ளனர் - அமைச்சர் வன்னி அரசு</p><p>திமுகவுடன் கூட்டணி இருந்தபோதே பரந்தூர் திட்டத்தை எதிர்த்து போராடினோம் - அமைச்சர் வன்னி அரசு</p><p>பரந்தூரை நாம் விமான நிலையமாக மாற்றினால் கண்டிப்பாக சென்னைக்குள் வெள்ளம் வரும் அபாயம் உள்ளது.</p><p>பரந்தூர் கால்வாயை அழித்தால் கேரளத்தில் ஏர்போர்ட்டுக்குள் வெள்ளம் வந்ததை போன்ற நிலை தான் ஏற்படும்.</p><p>1500 நீர்நிலை, 1000 குடும்பம் பாதிக்கும் என்பதை கருதாமல் பரந்தூர் நிலத்தை ஏர்போர்ட்டுக்கு தேர்வு செய்தது தவறு</p><p>மக்கள் பாதிக்காதவாறு 2-வது புதிய விமான நிலையம் அமைக்கப்படும்.</p><p> நிலம் எடுப்பது தொடர்பாக திமுக ஆட்சியில் அமைத்த குழுவின் அறிக்கையை தற்போது வரை வெளியிடாதது ஏன்? - அமைச்சர் கீர்த்தனா</p>  <p>பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் மக்களுக்கும் மண்ணுக்கும் இடையூறு இல்லாத தொழில்கள் தொடங்கப்படும். </p><p>வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் பரந்தூரில் தொழில்கள் தொடங்கப்படும். </p><p>மழை பெய்யாமல் இருந்தாலும் விவசாயம் நடக்கும் விளைநிலம் என்பதால் தான் பரந்தூர் ஏர்போர்ட் திட்டம் ரத்து - அமைச்சர் கீர்த்தனா</p><p>1000 ஆண்டு கால பொக்கிஷமான கம்பன் கால்வாய் பரந்தூர் பகுதிகளில் ஓடுகிறது-  அமைச்சர் ராஜ்மோகன்</p><p>உள்ளூரில் வசிக்கும் யாருடைய நிலங்களையும் தமிழக அரசு தற்போது வரை கையகப்படுத்தவில்லை. பரந்தூர் விமான நிலையத்திற்காக சொந்த மக்களை அகதிகளாக வெளியேற்ற முடியாது. விமான நிலையத்திற்காக கையப்படுத்தப்பட்ட நிலங்களை என்ன செய்வது என பின்னர் முடிவு செய்யப்படும் - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>விமான நிலையத்திற்காக 5 வருடமாக கையப்படுத்திய நிலங்கள் அனைத்தும் வெளியூரில் வசிப்பவர்களுடையது - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>பரந்தூர் விமான நிலையத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்தை என்ன செய்யப்போகிறீர்கள்? - எடப்பாடி பழனிசாமி </p><p>ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை என நிர்மல்குமார் பேசியதற்கு திமுக எதிர்ப்பு</p><p>பரந்தூர் விமான நிலைய திட்டம் வருவதற்கு முன்பே அங்கு முதலீடு செய்த தனியார் நிறுவனத்துக்காக கதறுகின்றனர்  - அமைச்சர் நிர்மல்குமார்</p> <p>பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி கூட வாங்கப்படவில்லை. பரந்தூர் பகுதிகளில் நிலத்தை வாங்கி குவித்தவர்கள், கறுப்பு பணம் சேர்த்தவர்கள் மட்டுமே திட்டத்தை எதிர்க்கின்றனர் - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>பரந்தூர் விமான நிலைய திட்டம் வருவதற்கு முன்பே அங்கு முதலீடு செய்த தனியார் நிறுவனத்துக்காக கதறுகின்றனர் - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான இழப்பீடு தொகையை மக்களிடம் இருந்து திரும்ப பெற முடியாது, என்ன செய்வீர்கள்? - இபிஎஸ்</p><p>90% நிலம் கையகப்படுத்தப்படவில்லை 48% நிலம் மட்டும் தான் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக 1,202 ஏக்கர் நிலம் மட்டுமே கையப்படுத்தப்பட்டுள்ளது - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>ஊழல் இல்லா ஆட்சியை முதல்வர் கொடுப்பதால் அனைத்து நிறுவனங்களும் முதலீடு செய்யும் தொழில்துறை வளரும். திமுக ஈர்த்ததைவிட 10 மடங்கு அதிக தொழில் முதலீடுகளை தவெக அரசு ஈர்க்கும் - அமைச்சர் ஆதவ்</p><p>60 நாட்களுக்குள் சிங்கிள் விண்டோ சிஸ்டத்தை முதலமைச்சர் விஜய் உருவாக்கி காட்டுவார் - அமைச்சர் ஆதவ்</p> <p>தொழில்துறை வளர்வதற்கு மிக முக்கிய காரணமான சிங்கிள் விண்டோ சிஸ்டம் தான். அதை முதல்வர் உருவாக்குவார் - அமைச்சர் ஆதவ்</p><p>பரந்தூர் ஏர்போர்ட்டா அல்லது விவசாயிகள் கண்ணீரா என்றால் முதல்வர் விஜய் விவசாயிகள் பக்கம்தான் நிற்பார் - அமைச்சர் ஆதவ்</p> <p>பரந்தூர் விமான நிலையம் திட்டத்தை ரத்து செய்துள்ளீர், முதலீட்டாளர்களை பாதிக்கும் - ஆஸ்டின் </p><p>நான் குறிப்பிட்ட பத்திரிகை ஒரு பத்திரிகை கூட கிடையாது. அது ஒரு வெப்சைட். பிரைவேட் வெப்சைட். </p><p>அதே பத்திரிகையாளர்கள் தான் தினத்தந்தியில் நம்மை பற்றி, நம்முடைய தொழில்துறை பற்றி அவ்வளவு அழகாக எழுதி இருந்தார்கள். </p><p>அதையெல்லாம் எடுத்துக்கொண்டு வந்து இங்கே பேசி பெருமைப்பட்டு இருந்தால், தமிழ்நாடு முன்னேறுகிறது என்று பேசி இருந்தால் ரொம்ப நன்றாக இருந்திருக்கும் - அமைச்சர் கீர்த்தனா</p><p>தமிழ்நாட்டில் தொழில் முதலீடு மாநாட்டை முதலில் நடத்தியது ஜெயலலிதா - எடப்பாடி பழனிசாமி</p><p>அமைச்சர் கீர்த்தனா ஒரு சில பத்திரிகைகளை தான் கூறி உள்ளார் - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>காசு கொடுத்தால் பத்திரிகையாளர்கள் எதையும் எழுதுவார்கள் என கூறக்கூடாது - எ.வ.வேலு</p><p>நாகர்கோவில் மிகவும் சிரமப்பட்டு இடம் தேர்வு செய்தோம். அடிக்கல் நாட்டி 6 மாதமாகியும் பணி தொடங்கப்படவில்லை. தொழில்துறை வளர்ச்சி தான் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம், திமுக ஆட்சியில் தொழில்துறை முதலிடத்தில் இருந்தது. </p><p>தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் முந்தைய காலாண்டை விட 74.48% சரிவு, மற்ற மாநிலங்கள் 200% அதிகரித்துள்ளது - ஆஸ்டின்</p><h2>அமைச்சர் கீர்த்தனா உரை</h2><p>தொழில் முதலீடுகள் குறைந்துள்ளதாக ஆஸ்டின் பேசியது தவறான தகவல்.</p><p>100 நாட்களுக்குள் ரூ.1 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளோம். </p><p>காசு கொடுத்தால் எதையும் எழுதும் பத்திரிகை - அமைச்சர் கீர்த்தனா</p> <p>மக்கள் பிரச்சனை கேட்டு நிறைவேற்றவதற்காக 6 தொகுதிகளுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் - அமைச்சர் ஆதவ்</p><p>6 தொகுதிகளில் எம்எல்ஏக்கள் இல்லாத நிலையில் மக்கள் தங்களது பிரச்சனைகளை யாரிடம் கூறுவது - எம்எல்ஏ ஆஸ்டின்</p><p>இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க முடியும். நாம் முடிவு செய்ய முடியாது - சபாநாயகர்</p><p>ஒரு மாதத்தில் 6 பேர் ராஜினாமா செய்துள்ளனர். ஆதாயம் இன்றி ராஜினாமா செய்வார்களா? - ஆஸ்டின்</p> <p>எடப்பாடி பழனிசாமி உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக பேச வேண்டும் - சபாநாயகர்</p><p>எடப்பாடி தவெக வேட்பாளர் வேட்பு மனு  தள்ளுபடி செய்யப்பட்டது - எடப்பாடி பழனிசாமி</p><p>எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் வாபஸ் பெற்றது குதிரை பேரம் இல்லையா? - அமைச்சர் செங்கோட்டையன்</p> <p>காலியாக உள்ள தொகுதிகளில் விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>பொறுப்பு அமைச்சரால் காலியாக உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் செல்ல முடியுமா? - இபிஎஸ்</p><p>எம்எல்ஏ இல்லாமல் காலியாக உள்ள தொகுதிகளில் பொறுப்பு அமைச்சர்கள் கவனித்து வருகின்றனர் - அமைச்சர் செங்கோட்டையன்</p> <p>எம்எல்ஏக்கள் ராஜினாமா காரணமாக காலியாக உள்ள தொகுதிகளில் யார் மக்கள் பணி செய்வது? - எடப்பாடி பழனிசாமி</p><p>விளக்கம் கூற வருகிறார் என நினைத்து தான் தளவாய் சுந்தரம் பேச அனுமதித்தேன் - சபாநாயகர் விளக்கம்</p><p>எம்எல்ஏ ஆஸ்டின் பேசியபோது அமைச்சர் பேசலாம், அவை முன்னவர் பேசலாம் தளவாய் சுந்தரம் ஏன் பேசுகிறார்? - கேஎன். நேரு</p><p>திமுக எம்எல்ஏ ஆஸ்டின் பல கட்சிகளில் இருந்தவர் என தளவாய் சுந்தரம் பேசியதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளி</p><p>சிறுபான்மை ஆணைய தலைவர் தனிப்பட்ட விவாதம், பொதுமேடையில் பேசவே கூடாது என்றெல்லாம் கிடையாது. கடந்த ஆட்சியில் பீட்டர் அல்போன்ஸ், லியோனி போன்றவர்கள் அரசியல் விவாதங்களில் பேசி உள்ளனர் - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>சிறுபான்மை ஆணைய தலைவர் பெலிக்ஸ் ஜெரால்டு தொலைக்காட்சி அரசியல் விவாதங்களில் பங்கேற்க கூடாது - எம்எல்ஏ ஆஸ்டின்</p> <p>பட்ஜெட் கூட்டத்தில் உதயநிதி பங்கேற்பதை தடுக்க சதி நடந்தது. சதியை முறியடித்து அவையில் வீற்றிருக்கிறார் உதயநிதி - திமுக உறுப்பினர் ஆஸ்டின்</p><p>சட்டசபையில் இயற்கை வளங்கள் துறை, தொழில்துறை, தகவல் தொழில்நுட்பத் துறை தொடர்பான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கியது.</p><p>சட்டசபையில் தொகுதி சார்ந்த பிரச்சனைகளை எழுப்பும் எம்எல்ஏக்கள். உறுப்பினர்களின் கேள்விகள் &amp; கோரிக்கைகளுக்கு அமைச்சர்கள் பதில் அளிக்கிறார்கள்.</p><p>சட்டசபையில் தொகுதி சார்ந்த பிரச்சனைகளை எழுப்பும் எம்எல்ஏக்கள்.</p><p>மேட்டூர் அணை திறப்பு தொடர்பாக கூடிய விரைவில் நல்ல செய்தி வரும் - நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த்</p> <p>காவிரி டெல்டா பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது, குடிநீருக்கே தட்டுப்பாடு உள்ளது - எம்எல்ஏ மாரிமுத்து</p><p>மேட்டூர் நீர் திறப்பு எப்போது என கூறினார் தான் சம்பா சாகுபடிக்கான முன்னேற்பாடு பணிகளை செய்ய முடியும் - எடப்பாடி பழனிசாமி</p><p>சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்கு தோண்டிய பள்ளத்தில் விழுந்து பெண் பலியாகி உள்ளார்.</p><p>மழைநீர் வடிகால் பணி நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட வேண்டும்  - திமுக எம்எல்ஏ சேகர்பாபு</p><p>மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும்? - திமுக எம்எல்ஏ கோவி செழியன்.</p><p>டெட் தேர்வில் இருந்து விலக்களிக்க கோரி தனித்தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றம்.</p><p>பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு அதிமுக, திமுக, காங்கிரஸ், பாமக, சிபிஐ, சிபிஎம் ஆதரவு.</p><p>ஆசிரியர்களுக்கு திமுக உறுதுணையாக இருக்கும் - எ.வ.வேலு உறுதி</p><p>ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வகையிலான தீர்மானத்திற்கு சிபிஐ ஆதரவு - ராமச்சந்திரன்</p><p>அரசின் தனித்தீர்மானத்திற்கு ஆதரவு, கல்வியை பொதுப்பட்டியலை இருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் - பாமக</p><p>அமைச்சர் ராஜ்மோகன் கொண்டுவந்த தனித்தீர்மானத்திற்கு பாமக, இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு</p><p>பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அரசினர் தனித்தீர்மானம்</p><p>டெட் தேர்வில் இருந்து விலக்களிக்க கோரி சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்.</p><p>3.28 லட்சம் ஆசிரியர்கள் கட்டாயம் டெட் தேர்வில் தேர்ச்சி என்ற உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>பழுதான கட்டிடத்தை இடிக்க நடவடிக்கை, 50 மாணவிகள் தங்கும் வகையில் விடுதி கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>திண்டுக்கல் ஆயக்குடியில் ரூ.3.70 கோடியில் மாணவியர் விடுதி - அமைச்சர் வன்னி அரசு</p><p>பழனி ஆயக்குடி அரசு மாநில விடுதிக்கு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் - எம்எல்ஏ ரவி மனோகரன் கோரிக்கை</p><p>அத்தியாவசிய மருந்து பட்டியலில் சேர்க்கப்படாத நிலையிலும் எமிசிஜுமாப் மருந்தை வழங்க வேண்டும் - அமைச்சர் அருண்ராஜ்</p><p>ஹீமோபிலியா மரபணுக் கோளாறால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு எமிசிஜுமாப் மருந்தை விலையின்றி வழங்க வேண்டும் - எம்எல்ஏ ரவி</p><p>3 தமிழர்களின் மரணத்திற்கு நீதி கிடைக்க தமிழ்நாடு அரசு துணை நிற்க வேண்டும். அவர்கள் குடும்பத்திற்கு தேவையான நிதி உதவியும், சட்ட உதவியும் அரசு செய்ய வேண்டும் - உதயநிதி</p> <p>சட்டத்துறை, வனத்துறை அமைச்சர்கள் இதுதொடர்பாக விரிவாக விளக்கம் அளித்துள்ளனர் - சபாநாயகர்</p><h2>கர்நாடகத்தில் 3 தமிழர்கள் கொலை - உதயநிதி ஸ்டாலின் உரை</h2><p>கர்நாடகாவில் வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள் சித்ரவதை செய்யப்பட்டு கொலை என கூராய்வு அறிக்கை.</p><p>உயிரிழந்த தமிழர்கள் உடலில் காயம் இருந்ததாக கூராய்வு அறிக்கை வந்துள்ளது.</p><p>தமிழக அமைச்சர்கள் யாராவது கர்நாடகா சென்றார்களா?</p><p>3 தமிழர்கள் கொலையில் அரசின் நிலைப்பாடு என்ன?</p><p>சட்டசபையில் இயற்கை வளங்கள் துறை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகிய துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.</p><p>எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பேசியவுடன் அவர்களது கேள்விகளுக்கு துறையின் அமைச்சர்கள் டி.கே.பிரபு (இயற்கை வளங்கள்), கீர்த்தனா (தொழில்), குமார் (தகவல் தொழில்நுட்பம்) ஆகியோர் பதிலுரை வழங்குவார்கள். </p> ]]></content:encoded></item><item><title>அசல் ஜங்கிள் புக்.. காட்டில் ஓநாய்களுடன் வாழ்ந்த &apos;ஓநாய் மனிதர்&apos; மறைவு - யார் இவர்?</title><link>https://www.maalaimalar.com/news/world/mowgli-in-real-life-the-wolf-man-who-lived-with-wolves-in-the-forest-has-passed-away-who-is-he</link><comments>https://www.maalaimalar.com/news/world/mowgli-in-real-life-the-wolf-man-who-lived-with-wolves-in-the-forest-has-passed-away-who-is-he#comments</comments><guid isPermaLink="false">e01d9808-ad25-4e50-a65d-c45e9602e06f</guid><pubDate>Tue, 25 Aug 2026 09:44:42 +0000</pubDate><atom:updated>2026-08-25T09:44:42.089Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வைரல்,ஸ்பெயின்,ஓநாய்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/w8gb501p/tn-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மார்கோஸ் ரோட்ரிகஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ மார்கோஸ் ரோட்ரிகஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/w8gb501p/tn-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காட்டில் மிருகங்களுடன் வளர்ந்த தார்சன், ஜங்கிள் புக் கதையில் வரும் மௌக்லி உள்ளிட்ட கற்பனை கதாபாத்திரங்களை நாம் கேள்விப்பட்டிருப்போம்.</p><p>அவ்வாறு நிஜ வாழ்வில் ஓநாய்களுடன் வாழ்ந்து,  'ஓநாய் மனிதர்' என பெயரெடுத்த  மார்கோஸ் ரோட்ரிகஸ் பாண்டோஜா என்பவர் தனது  80வது வயதில் கடந்த ஆகஸ்ட் 15 அன்று காலமானார்.</p><h2>வாழ்வு</h2><p><a href="https://www.maalaimalar.com/news/world/death-toll-hits-57-in-mass-refugee-crossing-to-spain">ஸ்பெயினில் </a>1946 இல் வறுமைச் சூழலில் பிறந்தவர் மார்கோஸ். வருக்கு 6 அல்லது 7 வயது இருக்கும்போது அவரை அவரது தந்தை ஒரு ஆடு மேய்ப்பரிடம் விற்றுவிட்டார்.</p><p>அந்த ஆடு மேய்ப்பரிடம் வேலை செய்து வளர்ந்த மார்கோஸ் அவர் இறந்த பிறகு, ஆதரவுமின்றி மலை காட்டில் தனித்து விடப்பட்டார்.</p><p>இருப்பினும் அங்குள்ள இயற்கையோடும் விலங்குகளோடும் மெல்ல மெல்ல வாழப் பழகிக் கொண்டார் மார்கோஸ்.</p> <p>சுமார் 12 ஆண்டுகள் மனிதத் தொடர்பே இன்றி வாழ்ந்த அவர், படங்களில் வருவதுபோல விலங்குகளின் சத்தங்களை எழுப்பி அவற்றுடன் பேசப் பழகிக்கொண்டார்.</p><p>ஒரு ஓநாய் கூட்டத்தின் குட்டிகளுக்கு உணவளித்து, அவற்றின் நம்பிக்கையைப் பெற்று அந்தக் கூட்டத்தின் ஒரு உறுப்பினராகவே மாறினார். ஓநாய்களுடன் இணைந்து வேட்டையாடவும் கற்றுக்கொண்டார். பதின்பருவம் இவ்வாறாக காட்டில். கழிந்தது</p> <h2>திருப்பம்</h2><p>1965இல்தனது 19வது வயதில் ஸ்பெயின் அதிகாரிகளால் காட்டில் கண்டெடுக்கப்பட்டு மனித சமூகத்திற்கு அழைத்து வரப்பட்டார் மார்கோஸ்.</p><p>ஆனால், மனிதர்கள் மத்தியில் வாழ்வது அவருக்குப் பிடிக்கவில்லை.</p><p>"காட்டில் ஓநாய்களுடன் வாழ்ந்த நாட்களே எனது வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்கள்" என்று அவர் இதன்பின் பல சமயங்களில் கூறியுள்ளார்.</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/y7gq2f09/tn-2.jpg" /></figure><h2>இறுதி நாட்கள்</h2><p>பின்னநாட்களில் பள்ளிகளுக்கு சென்று இயற்கையையும் விலங்குகளையும் பாதுகாப்பது குறித்துக் குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை செய்து வந்தார் அவர்.</p><p>அவரது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு 2010 இல் 'Entrelobos' (Among wolves) என்ற திரைப்படமும் வந்துள்ளது.</p><p>2001 முதல் ஸ்பெயினின் வடமேற்கில் உள்ள ரான்டே கிராமத்தில் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தார் அவர். அந்த கிராம மக்கள் அன்போடு கவனித்துக்கொண்டனர்.</p><p>தனது இறுதி நாட்களையும் அங்கேயே கழித்த அவர் கடந்த ஆகஸ்ட் 15 இல் 80வது வயதில் அமைதியான முறையில் இயற்கை எய்தியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சாய் அபயங்கரின் ‘ரதிமா’ பாடல் வெளியானது!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/sai-abayankar-rathima-new-song-release</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/sai-abayankar-rathima-new-song-release#comments</comments><guid isPermaLink="false">27595cc6-f37c-4fcd-9f58-456593f56311</guid><pubDate>Tue, 25 Aug 2026 09:39:40 +0000</pubDate><atom:updated>2026-08-25T09:39:40.129Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sai Abhyankkar,சாய் அபயங்கர்,Bhagyashri Borse,Radhimaa,ரதிமா,பாக்யஸ்ரீ போர்ஸே,Think Indie,LyricsByVivek</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/27gqcfv0/Radhimaa-Song" width="1500"><media:title type="html"><![CDATA[ Radhimaa ]]></media:title><media:description type="html"><![CDATA[ Radhimaa Song]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/27gqcfv0/Radhimaa-Song?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>'கட்சி சேரா' மற்றும் 'ஆச கூட' போன்ற உலகளாவிய ரீதியில் வைரலான இண்டீபெண்டண்ட் ஹிட் பாடல்களைக் கொடுத்த இளம் இசையமைப்பாளரும் பாடகருமான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D">சாய் அபயங்கர்</a> தனது அடுத்த அதிரடி இண்டீ பாடலான ‘ரதிமா’ பாடலை வெளியீட்டுள்ளார்.</p><p>திங்க் மியூசிக் நிறுவனத்தின் ‘திங்க் இண்டீ’ லேபிளின் கீழ் இப்பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.</p><h2><strong>‘ஹேப்பி பிரேக்ப்’ பாடல்!</strong></h2><p>வழக்கமான காதல் தோல்விப் பாடல்கள் போல சோகமாகவோ அல்லது கோபத்தை வெளிப்படுத்தும் விதமாகவோ இல்லாமல், காதலை அழகான நினைவுகளுடன் விடைபெற்று ஏற்றுக்கொள்ளும் ஒரு துள்ளலான பாணியில் இப்பாடலை சாய் அபயங்கர் உருவாக்கியுள்ளார். </p><p>சமகாலத்திய நடன இசையையும், கவாலி இசை வடிவத்தையும் கலந்து அழகான வரிகளுடன் இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>'ரதிமா’வாக காந்தா பட நடிகை</strong></h2><p>சாய் அபயங்கரின் முந்தைய பாடல்களில் புதுமுகங்கள் மற்றும் பிரபல நடிகைகள் நடித்து ஹிட் அடித்த வரிசையில், இப்பாடலின் மியூசிக் வீடியோவில் 'காந்தா' பட புகழ் முன்னணி இளம் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸே முதன்மை கதாபாத்திரமான 'ரதிமா'வாக நடித்துள்ளார். </p><p>இவருடன் இணைந்து சாய் அபியங்கரும் இந்த வீடியோவில் நடித்துள்ளனர்.</p><h2><strong>ரதிமா குழுவினர்</strong></h2><p>சாய் அபயங்கர் இசையமைத்து, தயாரித்து, பாடியுள்ளார். இவருடன் இணைந்து பெண் குரல்களில் நர்கிஸ் , அஷ்மா மற்றும் சாய் ஸ்மிருதி ஆகியோர் பாடியுள்ளனர்.</p><p>பிரபல பாடலாசிரியர் விவேக் இப்பாடலுக்கு வரிகளை எழுதியுள்ளார். சாய் அபயங்கரின் ஆஸ்தான இயக்குநரான தேஜோ பரத்வாஜ் இப்பாடலை இயக்கியுள்ளார். 'மஞ்சும்மெல் பாய்ஸ்' புகழ் பிரபல ஒளிப்பதிவாளர் ஷைஜு காலித் காட்சிகளைப் படமாக்கியுள்ளார். </p><p>கெபா ஜெரெமையா (எலக்ட்ரிக் &amp; பேஸ் கிட்டார்), ராபின் செபாஸ்டியன் (கூடுதல் கிட்டார்), சச்சின் கவிதியா (புல்புல் தரங்), ஆஷிஷ் (புல்லாங்குழல்) மற்றும் சின்மயி (வயலின்) போன்ற முன்னணி கலைஞர்கள் பங்களித்துள்ளனர். சென்னை ‘யோலோ ரெக்கார்ட்ஸ்’ ஸ்டுடியோவில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D">சாய் அபயங்கர்</a> மிக்ஸிங் செய்ய, ரூபேந்தர் வெங்கடேஷ் மாஸ்டரிங் செய்துள்ளார்.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/jR3rWCBeO6M"></iframe></figure><p>சினிமா துறையிலும் விஜய் சேதுபதியின் 'பத்தா' மற்றும் தனுஷின் 'ஓம் சாப்டர் 1' போன்ற பெரிய படங்களுக்கு இசையமைத்து வரும் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D">சாய் அபயங்கர்</a>, தனது 6-வது தனித்துவமான இண்டீ சிங்கிளான ‘ரதிமா’ மூலம் மீண்டும் ஒருமுறை சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகத் தொடங்கியுள்ளார்.</p><p>இப்பாடலின் கவர்ச்சிகரமான ஹூக் ஸ்டெப் மற்றும் துள்ளல் இசை இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்து இணையதளங்களில் வைரலாகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>மத்தியப் பிரதேசம்: 3400 முத்தம் கொடுத்த காதலி... காதலனுக்கு ரூ.5,500 அபராதம் விதித்த காவல்துறை!</title><link>https://www.maalaimalar.com/news/national/madhya-pradesh-girlfriend-plants-3400-kisses-police-fine-boyfriend-5500</link><comments>https://www.maalaimalar.com/news/national/madhya-pradesh-girlfriend-plants-3400-kisses-police-fine-boyfriend-5500#comments</comments><guid isPermaLink="false">5e97e86a-54d0-4551-8fab-ed9974ef62d0</guid><pubDate>Tue, 25 Aug 2026 09:34:39 +0000</pubDate><atom:updated>2026-08-25T09:34:39.513Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Traffic Police,போக்குவரத்து போலீசார்,Gwalior,குவாலியர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/gmf63gz9/New-Project-2026-08-25T150417.069.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மத்தியப் பிரதேசம்: 3400 முத்தம் கொடுத்த காதலி... காதலனுக்கு ரூ.5,500 அபராதம் விதித்த காவல்துறை!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/gmf63gz9/New-Project-2026-08-25T150417.069.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்தியப் பிரதேசத்தில் காதலியின் முத்தத்தால், காதலன் ரூ.5,500 அபராதம் கட்டிய சம்பவம் இணையதளத்தில் வைரலாகி பேசுபொருளாகியுள்ளது.  </p><p>மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், காதலியின் முத்த அடையாளங்களுடன் வலம் வந்த காரின் உரிமையாளருக்குப் போக்குவரத்துப் போலீஸார் ரூ.5,500 அபராதம் விதித்துள்ளனர். </p><p>மேலும், காரில் இருந்த அனைத்து முத்த அடையாளங்களையும் காதலனையே வைத்து அழிக்கச் சொல்லியுள்ளனர். </p><h2>3,400 லிப்ஸ்டிக் முத்தங்கள்</h2><p>வெளிநாடுகளில் நடக்கும் ஒரு ட்ரெண்டை பார்த்துவிட்டு, ஆதித்யா சிகர்வார் என்ற இளைஞரின் காதலி, அவரின் கார் முழுவதும் 3,400 லிப்ஸ்டிக் முத்த அடையாளங்களை பதித்துள்ளார். கார் முழுவதும் முத்தங்களை பதிக்க சுமார் 4 மணிநேரம் ஆனதாம். </p><p>உடல் முழுவதும் முத்தம் பதிக்கப்பட்ட காரை எடுத்துக்கொண்டு ஆதித்யா வெளியே சென்றுள்ளார். முத்த தடயங்களால் கார் சென்ற இடமெல்லாம் தனித்து தெரிந்துள்ளது. </p><h2>கார் பறிமுதல்</h2><p>உடனே சாலையில் சென்ற பலர் அதனை வீடியோ, போட்டோக்கள் எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த கார் தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக அதில் தெரிந்த வாகனப் பதிவு எண்ணைப் பயன்படுத்தி போலீசார் காரின் உரிமையாளரை கண்டறிந்துள்ளனர்.</p><p>மேலும் காரையும் பறிமுதல் செய்து, போக்குவரத்து விதிகளை மீறியதாக (மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ், வாகனத்தின் அசல் தோற்றத்தை மாற்றியமைத்ததற்காக) ஆதித்யாவிற்கு ரூ.5,500 அபராதம் விதித்துள்ளனர்.</p><p>தொடர்ந்து ஆதித்யா மன்னிப்புக்கோர காரை கொடுத்த போலீசார், லிப்ஸ்டிக் முத்த தடயங்களை அனைத்தையும் அவரை வைத்தே அழிக்கச் சொல்லியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>ஒற்றுமை - சகோதரத்துவத்தை போற்றும் ஓணம் பண்டிகை</title><link>https://www.maalaimalar.com/spirituality/onam-festival-worship</link><comments>https://www.maalaimalar.com/spirituality/onam-festival-worship#comments</comments><guid isPermaLink="false">cb3c6c65-caaa-4542-a8cf-68f93f2011cf</guid><pubDate>Tue, 25 Aug 2026 09:32:22 +0000</pubDate><atom:updated>2026-08-25T09:32:22.247Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,வழிபாடு,worship,ஓணம் பண்டிகை,onam festival</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/3in68h1l/onam1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/3in68h1l/onam1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>திருவோண நட்சத்திரம்</h2><p>கேரள மக்கள் அனைவரும் சாதி, மத, இன வேறுபாடின்றி, மிகவும் மகிழ்ச்சியோடு எதிர்நோக்கும் ஒரு திருவிழா, ஓணம் பண்டிகை ஆகும். ஆவணி மாதம் வரும் திருவோண நட்சத்திரத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மகாபலி சக்கரவர்த்தி, தன் நாட்டிற்கு விஜயம் செய்வதாக நம்பிக்கை. எனவே, அவரை வரவேற்கும் நாளாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.</p> <h2>ஓணம் பண்டிகை</h2><p>ஓணம் பண்டிகை, கேரள மக்களால் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் பாரம்பரிய திருவிழாவாகும். இந்நாளில் கேரளம் முழுவதும், புத்தாடைகள், பூக்கோலங்கள், விளையாட்டுப் போட்டிகள், பலகாரங்கள் என கொண்டாட்டம் களைக்கட்டும். </p><p>கேரளம் மட்டுமின்றி தென்தமிழக மாவட்டங்களிலும் ஓணம் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது.</p> <h2>மகாபலி சக்கரவர்த்தி</h2><p>கேரளத்தை ஆட்சி செய்த மகாபலி சக்கரவர்த்தி, அசுர குலத்தில் பிறந்திருந்தாலும் மக்களிடம் அளவுகடந்த அன்பு கொண்டிருந்தார். இவர், தனது நாட்டை மிகவும் சிறந்த முறையில் ஆட்சி செய்து வந்தார். இவரது ஆட்சியில் பசி, வறுமை, அநீதி இல்லாமல், மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவும், வளமாகவும் வாழ்ந்து வந்தனர். மக்கள் அனைவரும் சமமாக நடத்தப்பட்டனர்.</p> <h2>மகாவிஷ்ணு</h2><p>மகாபலி சக்கரவர்த்தியின் புகழ் மூவுலகிலும் பரவியது. தர்மத்திலும், கொடையிலும் சிறந்து விளங்கிய மகாபலி, மூவுலகையும் ஆட்சி செய்ய ஆரம்பித்தார். இதனால், 'தானே அனைவரிலும் சிறந்தவர்' என்ற அகந்தை மகாபலி சக்கரவர்த்திக்கு ஏற்பட்டது. மகாபலியின் புகழைக் கண்டு தேவர்கள் அனைவரும் பயந்தனர். இதையடுத்து தேவர்கள், மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர்.</p> <h2>சுக்ராச்சாரியார்</h2><p>அவ்வேளையில் மகாபலி சக்கரவர்த்தி, தனது குருவான சுக்ராச்சாரியாரின் ஆசியோடு மாபெரும் யாகம் ஒன்றை நடத்தினார். யாகம் முடியும்போது, யார் தானம் கேட்டாலும் மறுக்காமல் கொடுக்க வேண்டும் என்பது வழக்கம். அதன்படி மகாபலி சக்கரவர்த்தி, நாட்டு மக்களுக்கு கேட்கும் தானத்தை வழங்கினார். அச்சமயம் மகாவிஷ்ணு, வாமன (குள்ள வடிவம்) அவதாரம் எடுத்து, யாகம் நடைபெறும் இடத்திற்கு வந்தார்.</p> <h2>வாமனர்</h2><p>வாமனரை பார்த்த மகாபலி சக்கரவர்த்தி, அவரிடம் “என்ன தானம் வேண்டும்" என்று கேட்டார். அதற்கு வாமனர், “அரசே! எனக்கு மூன்று அடி நிலம் மட்டும் போதும்” என்றார். </p><p>மகாபலி சக்கரவர்த்தி சிரித்துக் கொண்டே, "மூன்று அடி நிலம் தானா?" என்று கேட்டார். சுக்ராச்சாரியார், “வந்திருப்பவர் சாதாரண சிறுவன் அல்ல. மகாவிஷ்ணுவின் அவதாரமே” என்பதை உணர்ந்தார். எனவே மகாபலியிடம், அவர் கேட்ட தானத்தை வழங்க வேண்டாம் எனக் கூறினார்.</p> <h2>மூன்றடி நிலம் தானம்</h2><p>ஆனால், யாகம் முடியும் தருவாயில் உள்ளதால் மகாபலி சக்கரவர்த்தி தானம் கொடுப்பதை நிறுத்த விரும்பவில்லை. கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்தார். வாமனருக்கு மூன்றடி நிலம் கொடுக்க ஒப்புக்கொண்டார். உடனே குள்ள வடிவில் இருந்த வாமனர், மிகப் பெரிய உருவம் எடுத்து பூமிக்கும் வானுக்குமாக உயர்ந்து நின்றார்.</p> <h2>பாதாள உலகம்</h2><p>பின்னர், தன்னுடைய முதல் அடியில் பூமி முழுவதையும் அளந்தார். இரண்டாவது அடியில் வானத்தை அளந்தார். பின்னர், “மூன்றாவது அடியை எங்கே வைப்பது?” எனக் கேட்க, மகாபலி சக்கரவர்த்தி தனது தலையை தாழ்த்தி “எனது தலையில் வைத்துக்கொள்ளுங்கள்" என்றார். உடனே வாமனர், மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் தனது மூன்றாவது அடியை வைத்தார். இதனால் மகாபலி சக்கரவர்த்தி, பாதாள உலகத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.</p> <h2>மகாபலி சக்கரவர்த்தி வேண்டுகோள்</h2><p>இருப்பினும், மகாபலி சக்கரவர்த்தியின் நல்ல மனதையும், தான தர்மத்தையும், கொடுத்த வாக்கை காப்பாற்றும் பண்பையும் போற்றிய மகாவிஷ்ணு, அவருக்கு வரம் அளிப்பதாக கூறினார். மகாபலி, “என் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்பதை, நான் ஆண்டுக்கு ஒரு முறையாவது வந்து பார்க்க வேண்டும்” என்று கேட்டார். மகாவிஷ்ணுவும் அவரது வேண்டுகோளை ஏற்று வரம் அளித்தார்.</p><h2>ஓணம் பண்டிகை</h2><p>அதன்படி, ஆவணி மாத திருவோண நாளில் மகாபலி சக்கரவர்த்தி, தனது மக்களை காண பூமிக்கு வருவதாக கருதப்படுகிறது. இதையே ஓணம் பண்டிகையாக கேரள மக்கள் நம்பிக்கையோடு கொண்டாடுகிறார்கள். இந்த ஆண்டு ஓணம் பண்டிகை, ஆகஸ்டு மாதம் 26-ந் தேதி புதன்கிழமை வருகிறது. </p> <h2>ஓண சத்யா</h2><p>கேரளாவில் ஓணம் பண்டிகை அஸ்தம் நட்சத்திரம் தொடங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை பத்து நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த பத்து நாட்களுமே கேரளத்தில் கொண்டாட்டம் களைக்கட்டிவிடும். ஓண சத்யா, படகுப் போட்டி, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், யானை ஊர்வலம், ஓண ஊஞ்சல் என கேரளம் முழுவதும் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும்.</p> <h2>அறுவடை திருவிழா</h2><p>இயற்கைக்கும், விவசாயத்திற்கும் நன்றி தெரிவிக்கும் அறுவடைத் திருவிழாவாகவும் ஓணம் பண்டிகை பார்க்கப்படுகிறது. ஓணம் பண்டிகையின்போது மக்கள் அனைவரும் ஒன்றுகூடி மகிழ்வதால், இது ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை போற்றும் விழாவாகவே உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சீனாவின் ரோபா ராணுவம்: எச்சரித்த காங்கிரஸ்- ராகுல் காந்தியை சுட்டிக்காட்டி பதில் கொடுத்த பா.ஜ.க.</title><link>https://www.maalaimalar.com/news/national/congress-mp-warns-of-chinese-robot-army-bjp-fires-rahul-robot-jibe</link><comments>https://www.maalaimalar.com/news/national/congress-mp-warns-of-chinese-robot-army-bjp-fires-rahul-robot-jibe#comments</comments><guid isPermaLink="false">75de3f33-de01-41e5-a2f5-869a2efe0af7</guid><pubDate>Tue, 25 Aug 2026 09:32:02 +0000</pubDate><atom:updated>2026-08-25T09:32:02.496Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>China,Usain Bolt,robot,Humanoid Robot,மனித உருவ ரோபோ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/2vwfidfi/ChineseRobo0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சீனா ரோபோ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/2vwfidfi/ChineseRobo0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உசைன் போல்ட் சாதனையை 100மீ ஓட்டப் பந்தயத்தில் ரோபோ முறியடித்துள்ள நிலையில், சீனா தன் ராணுவத்தில் ரோபோவை இணைக்கக் கூடும் என்று காங்கிரஸ் எம்.பி. எச்சரித்துள்ளார்.</p><p>அமெரிக்காவுக்கு போட்டியாக சீனா தொழில்நுட்பத்தில் வேகமாக முன்னேறி வருகிறது. சமீபத்தில் ரோபாக்களுக்கான சர்வதேச போட்டியை நடத்தியது. இதில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் சீனாவின் மனித ரோபா, <a href="https://www.maalaimalar.com/sports/robot-breaks-usain-bolt-record-100m-9-39-seconds">உசைன் போல்ட்</a> சாதனையை முறியடித்தது.</p><p>இந்த நிலையில் மனித ரோபாவை சீனா ராணுவத்தில் ஈடுபடுத்தக் கூடும் என்று காங்கிரஸ் எம்.பி. மணிஷ் திவாரி எச்சரித்துள்ளார்.</p><h2>இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. மணிஷ் திவாரி வெளியிட்டுள்ள எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-</h2><p>இந்தியா கவனமாக இல்லாவிட்டால், மிக விரைவில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் (LAC) ஒரு ரோபோ சீன ராணுவத்தில் (PLA) போரிட நேரிடலாம். வளர்ந்து வரும் வல்லரசு என்ற ஆரவாரங்கள் இருந்தபோதிலும், தொழில்நுட்பப் போட்டியில் சீனாவுடன் ஒப்பிடுகையில் நாம் உண்மையில் எவ்வளவு பின்தங்கியுள்ளோம் என்பதை சீனாவின் பிரமிக்க வைக்கும் மனித உருவ ரோபோக்களின் வளர்ச்சி நமக்கு ஒரு யதார்த்தமான பாடத்தைக் கற்பிக்கக் கூடும். மேலும் இது அதன் வகைகளில் ஒன்று மட்டுமே.</p><p>75 கிரிட்டிக்கல் டெக்னாலாஜியில் 67-ல் அமெரிக்காவை விட சீனா முன்னோக்கி உள்ளது.</p><p>இவ்வாறு மணிஷ் திவாரி பதிவிட்டிருந்தார்.</p><p>இது தொடர்பாக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா பதில் அளிக்கும் வகையில் கூறுகையில் "முதலாவதாக, உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (LAC) பகுதியில் காங்கிரஸ் கட்சியின் மனநிலையை நாம் எதிர்த்துப் போராட வேண்டும். டோக்லாம் மோதல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ​​சீனக் கூடாரங்களுக்குள் காணப்பட்டவர்கள் அவர்கள்தான்.</p><p>சீனர்கள் நமது ராணுவத்தை அடித்து வீழ்த்திவிட்டார்கள் என்று ராகுல் காந்தி கூறினார். அவர் ஒரு சீன ரோபோ. அவரது மனநிலையை நாம் எதிர்த்துப் போராட வேண்டும்.</p><p>இவ்வாறு பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா பதிலடி கொடுத்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திரிணாமுல் காங்கிரசில் இருந்து தாவிய 20 எம்.பி.களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!</title><link>https://www.maalaimalar.com/news/national/west-bengal-political-shake-up-supreme-court-notice-to-20-tmc-mps-in-anti-defection-case</link><comments>https://www.maalaimalar.com/news/national/west-bengal-political-shake-up-supreme-court-notice-to-20-tmc-mps-in-anti-defection-case#comments</comments><guid isPermaLink="false">e1afe23f-62f5-4d10-bec0-5328556e1faa</guid><pubDate>Tue, 25 Aug 2026 09:02:34 +0000</pubDate><atom:updated>2026-08-25T09:02:34.257Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மம்தா பானர்ஜி,Mamata Banerjee,Supreme Court,trinamool congress,உச்சநீதிமன்றம்,திரிணாமுல் காங்கிரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/7egx82gt/tn-1.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ உச்சநீதிமன்றம், மம்தா ]]></media:title><media:description type="html"><![CDATA[ உச்சநீதிமன்றம், மம்தா ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/7egx82gt/tn-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் <a href="https://www.maalaimalar.com/news/national/bjp-insulting-netaji-and-his-legacy-mamata-banerjee-urge-people-to-protest-against">மம்தா பானர்ஜியின்</a> திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்தது. </p><p>இதன்மூலம் மேற்கு வங்கத்தில் முதல் முறை பாஜக ஆட்சி அமைத்துள்ளது. சுவேந்து அதிகாரி முதல்வராக செயல்பட்டு வருகிறார்.</p><p>பாஜக 207 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் 80 இடங்களில் வென்றது. </p><p>இருந்தபோதும் அதில் 50க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் தனி அணியாக பிரிந்தனர். எண்ணிக்கையின் அடிப்படையில் அவர்களையே சட்டமன்ற எதிர்க்கட்சியாக சட்டமன்ற சபாநாயகர் அங்கீகரித்தார். </p><h2>பிளவு</h2><p>இதனிடையே மத்தியிலும் திரிணாமுல் காங்கிரஸ் மக்களவை மாநிலங்களவை எம்பிக்கள் இடையே பிளவு ஏற்பட்டது. 20 திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி என்சிபிஐ என்ற பிராந்திய கட்சியில் இணைந்து பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தனர். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களின் முடிவை அங்கீகரித்தார்.</p><p>மோடி தலைமையிலான என்டிஏ எம்பிக்கள் கூட்டத்திலும் இந்த 20 பேர் பங்கேற்றனர். இதனிடையே கட்சி மாறிய எம்பிக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி திரிணாமுல் காங்கிரசில் மம்தா தலைமையிலான அணி சபாநாயகரை அணுகியது.</p><p>மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளரும் எம்பியுமான அபிஷேக் பானர்ஜி இதுதொடர்பாக சபாநாயகரை அணுகிறார்.</p><h2>கைவிரித்த சபாநாயகர்</h2><p>இந்த 20 எம்பிக்களையும் தகுதிநீக்கம் செய்யக் கோரி சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ஜூனில் மனு அளித்தும், ஆகஸ்டில் நேரில் சந்தித்தும் எந்த முடிவும் எடுக்கப்படாமல் காலதாமதம் செய்யப்பட்டதால், அபிஷேக் பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.</p><p>திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற 20 மக்களவை எம்பிக்கள் வேறு கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பது அல்லது இணைவது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி தகுதிநீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் என அவரது மனுவில் தெரிவித்தார்.</p><h2>உச்சநீதிமன்றம் தலையீடு</h2><p>இந்த மனு இன்று தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி ஜாய்மால்யா பாக்சி மற்றும் நீதிபதி வி. மோஹனா ஆகியோர் அடங்கிய <a href="https://www.maalaimalar.com/topic/supreme-court">உச்சநீதிமன்ற </a>அமர்வில் விசாரணைக்கு வந்தது.</p><p>வழக்கு தொடர்பாகத் தங்களது விளக்கத்தை அளிக்குமாறு 20 எம்பிக்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிடப்பட்டது.</p><p>இந்த விவாகரத்தில் சபாநாயகரின் காலதாமதத்தை சுட்டிக்காட்டியபோதும் மக்களவை சபாநாயகர் ஒரு அரசியலமைப்புப் பதவி என்பதால் அவருக்கு நேரடியாக நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது</p><p>சபாநாயகர் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சபாநாயகர் ஏற்கனவே இது தொடர்பாக நடவடிக்கைகளை தொடங்கி உள்ளதாக தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஓணம் பண்டிகை: எடப்பாடி பழனிசாமி - தலைவர்கள் வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/onam-festival-edappadi-palaniswami-and-leaders-wishes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/onam-festival-edappadi-palaniswami-and-leaders-wishes#comments</comments><guid isPermaLink="false">e4b69390-252c-4c05-9082-c4aaf8ec94d2</guid><pubDate>Tue, 25 Aug 2026 08:44:46 +0000</pubDate><atom:updated>2026-08-25T08:44:46.500Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Edappadi Palaniswami,எடப்பாடி பழனிசாமி,ஓணம் பண்டிகை,onam festival,மகாபலி,mapali</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/ff5zdgl8/eps.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/ff5zdgl8/eps.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாளை ஓணம் பண்டிகையையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-</p><h2>எடப்பாடி பழனிசாமி</h2><p>அ.தி.மு.க. பொதுச் செயலாளர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/controversy-in-tn-assembly-for-admk-mlas-resign">எடப்பாடி பழனிசாமி</a>:-</p><p>பாரம்பரிய சிறப்பு மிக்க பண்டிகையான <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%93%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88">திருஓணம்</a> திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும், மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த  `ஓணம்’ திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.</p> <h2>மகாபலி சக்கரவர்த்தி</h2><p>மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அழித்திட, திருமால் வாமனன் அவதாரம் பூண்டு மூன்றடி மண் கேட்க, முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் விண்ணையும் அளந்து, மூன்றாம் அடியை மகாபலி மன்னனின் தலையில் வைத்து பூமிக்குள் புதைக்கும் முன்பு, அம்மன்னனின் வேண்டுகோளை ஏற்று ஆண்டுதோறும் தனது நாட்டு மக்களைக் காண வரம் கொடுத்தார்.  அதன்படி மக்களைக் காண வரும் மகாபலி மன்னனை  வரவேற்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோணத்தன்று  ஓணம் திருநாள் கொண்டாடப்படுகிறது.   </p> <p>ஜாதி, மத பேதமின்றி மலையாள மொழி பேசும் மக்களால் பத்து நாட்கள் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையின்போது, மக்கள் தங்கள் இல்லங்களின் வாயில்களில் வண்ணப் பூக்களால் அத்தப்பூ கோலமிட்டு, புத்தாடை அணிந்து, ஓணம் விருந்துண்டு, மோகினி ஆட்டம், கோலாட்டம் போன்ற நடனங்களை ஆடி உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள்.</p><p>அன்பு, அமைதி, சகோதரத்துவம் ஆகியவற்றைப் பின்பற்றி அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் கூடி வாழ்ந்திட வேண்டும் என்பதை உலகிற்கு உணர்த்தும் ஓணம் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடும், மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நெஞ்சார்ந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.</p> <p>மேலும் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்ட தலைவர்கள் ஓணம் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>எகிப்து வான்படை பயிற்சியில் ரஃபேல்-ஜே-16 போர் விமானங்கள் நேருக்கு நேர்: உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா!</title><link>https://www.maalaimalar.com/news/world/egypt-air-force-drill-rafale-j16-face-off-india-watching-closely</link><comments>https://www.maalaimalar.com/news/world/egypt-air-force-drill-rafale-j16-face-off-india-watching-closely#comments</comments><guid isPermaLink="false">eb9d285d-7c69-408c-bfe0-bbaa73998848</guid><pubDate>Tue, 25 Aug 2026 08:34:53 +0000</pubDate><atom:updated>2026-08-25T08:34:53.955Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,Rafale,Egyptian Air Force,Eagles of Civilization,எகிப்து வான்படை,ரஃபேல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/qq3s8u0f/flight.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Egyptian Air Force  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/qq3s8u0f/flight.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>எகிப்து மற்றும் சீனாவுக்கு இடையே நடைபெறும் 2026-ஆம் ஆண்டிற்கான "ஈகிள்ஸ் ஆஃப் சிவிலைசேஷன்" கூட்டு வான்படை பயிற்சி, சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. எகிப்திய வான்படையில் உள்ள பிரான்ஸ் தயாரிப்பான ரஃபேல் போர் விமானங்களும், சீன வான்படையின் அதிநவீன ஜே-16 ரக போர் விமானங்களும் முதன்முறையாக போலி வான்வழித் தாக்குதல் பயிற்சிகளில் நேரடியாக மோதுகின்றன.</p><h2><strong>சீனாவின் ஜே-16 போர் விமானத்</strong>தின் திறன்கள்</h2><p>சீனாவின் "<a href="https://www.maalaimalar.com/news/topnews/s-jaishankar-meets-putin-in-moscow">ஹிடன் டிராகன்</a>" என்று அழைக்கப்படும் ஜே-16 விமானங்கள், இரட்டை என்ஜின் கொண்ட 4.5-ஆம் தலைமுறை மல்டிரோல் போர் விமானங்களாகும். ஏறத்தாழ 6,000 கிலோமீட்டர் தூரம் வரை வான்வழியாகவே எரிபொருள் நிரப்பி எகிப்து வந்தடைந்துள்ள இந்த விமானங்கள், அதிநவீன ரேடார்கள், மின்னணு போர் சாதனங்கள் மற்றும் நீண்டதூர ஏவுகணைகளை ஏந்தும் திறன் கொண்டவை.</p><h2>இந்தி<strong>ய வான்ப</strong>டை </h2><p>இந்திய வான்படை தற்போது பிரான்சிடமிருந்து பெறப்பட்ட ரஃபேல் போர் விமானங்களை முதன்மைப் படைகளாகப் பயன்படுத்தி வருகிறது. அதே நேரத்தில், எல்லைப் பகுதிகளில் சீன வான்படை தனது ஜே-16 விமான பெருக்கத்தைக் கணிசமாக அதிகரித்து வருகிறது. மேலும், பாகிஸ்தான் ஏற்கனவே சீனாவின் ஜே-10சி ரக விமானங்களை இயக்கி வரும் நிலையில், ஜே-16 விமானங்களையும் வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகிறது.</p><p>எகிப்தில் நடக்கும் இந்த ஒன்-ஆன்-ஒன் வான்வழி மோதல் பயிற்சிகளின் மூலம், மேற்கத்திய தொழில்நுட்பத்தில் உருவான ரஃபேல் விமானங்களின் வான் சூழ்ச்சித் திறன், ரேடார் கண்டறிதல் எல்லைகள் மற்றும் வான் தாக்குதல் உத்திகளை சீனப் படைகள் நேரடியாக மதிப்பிட முடிகிறது.</p><p>ரஃபேல் விமானங்களின் பல பலவீனங்கள் மற்றும் நுட்பங்களைச் சீனா அறிந்து கொண்டால், அது எல்லைப் பாதுகாப்பில் இந்தியாவுக்கு சவாலாக அமையக்கூடும். இதனால், இந்த பயிற்சியில் ஜே-16 மற்றும் ரஃபேல் விமானங்கள் வெளிப்படுத்தும் செயல்பாடுகளை இந்திய பாதுகாப்பு அமைப்புகள் உன்னிப்பாக ஆராய்ந்து வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>மீண்டும் தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: செயற்கைக்கோள் தரவுகளை வெளியிட்டு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/national/southwest-monsoon-intensifies-again-imd-warning-with-satellite-data</link><comments>https://www.maalaimalar.com/news/national/southwest-monsoon-intensifies-again-imd-warning-with-satellite-data#comments</comments><guid isPermaLink="false">b29bd25e-0b46-4cee-b236-a1b86f06bf0f</guid><pubDate>Tue, 25 Aug 2026 08:22:01 +0000</pubDate><atom:updated>2026-08-25T08:22:01.032Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய வானிலை ஆய்வு மையம்,India Meteorological Department,Southwest Monsoon,தென்மேற்கு பருவமழை,delhi,டெல்லி,INSAT-3DS</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/8cfkkrsc/climate.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  India Meteorological Department  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/8cfkkrsc/climate.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு <a href="https://www.maalaimalar.com/news/national/flooded-gurugram-again-who-is-to-blame-for-citys-infrastructure-collapse">தென்மேற்கு பருவமழை </a>மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. நாட்டின் கிழக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் திரண்டுள்ள பெரும் மேகக் கூட்டங்களை இந்தியாவின் மேம்படுத்தப்பட்ட INSAT-3DS வானிலை செயற்கைக்கோள் துல்லியமாகப் படம்பிடித்து அனுப்பியுள்ளது. இதன் மூலம் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பல மாநிலங்களில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>INSAT-3DS செயற்கைக்கோளின் தெர்மல் அகச்சிவப்பு படங்கள், வங்கக் கடலின் வடபகுதியிலிருந்து தொடங்கி ஒடிசா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் இந்தோ-கங்கைச் சமவெளி வரை பரந்து விரிந்த அடர்ந்த மேகக் கூட்டங்களைக் காட்டுகின்றன. ஆழமான வெப்பச்சலனம் காரணமாக உருவாகியுள்ள இந்த 'கியுமுலோநிம்பஸ்' ரக மேகங்கள், இடி மின்னலுடன் கூடிய மிகக் கனமழையை உருவாக்கும் திறன் கொண்டவை.</p><h2>ம<strong>ழைப்பொழிவு</strong> </h2><p>வரவிருக்கும் இந்த மழைப் பொழிவு நாடு முழுவதும் ஒரே சீராக இருக்காது என்று வானிலை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கிழக்கு மற்றும் மத்திய இந்தியப் பகுதிகள் அதிக அளவு மழைப்பொழிவைப் பெறவுள்ள நிலையில், நாட்டின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகள் ஒப்பீட்டளவில் குறைவான அல்லது மிதமான மழையையே சந்திக்கும். டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள தேசிய தலைநகர் பிராந்தியத்தில் பரவலான புதுமழைக்கான வாய்ப்புகள் நிலவுகின்றன.</p><h2>அணை<strong>களின் நீர்மட்டம் உயர்வு</strong></h2><p>பருவமழையின் இந்த மீட்சி, குறிப்பாக 'காரிஃப்' பருவச் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்குப் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. நெல், பருத்தி, கரும்பு போன்ற பயிர்களுக்குத் தேவையான நீர் ஆதாரத்தை இது உறுதிசெய்யும். மேலும், மத்திய மற்றும் கிழக்கு இந்திய அணைகளின் நீர்மட்டமும் கணிசமாக உயர வாய்ப்புள்ளது. தொடர் மழை எச்சரிக்கை காரணமாகத் தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், உள்ளூர் நிர்வாகத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>கேரளத்தில் கால் பதிக்கும் த.வெ.க.- மாநில தலைவர் ஆகிறார் நடிகர் தேவன்</title><link>https://www.maalaimalar.com/news/national/tvk-entered-in-kerala-actor-devan-joining</link><comments>https://www.maalaimalar.com/news/national/tvk-entered-in-kerala-actor-devan-joining#comments</comments><guid isPermaLink="false">03219221-93ca-473a-95c9-fb351bc8a654</guid><pubDate>Tue, 25 Aug 2026 08:21:29 +0000</pubDate><atom:updated>2026-08-25T08:21:29.878Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தேவன்,தவெக,விஜய்,vijay,tvk,Devan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/i3uyw1ww/deva.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தமிழக முதலமைச்சர் விஜய்- நடிகர் தேவன்]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக முதலமைச்சர் விஜய்- நடிகர் தேவன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/i3uyw1ww/deva.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>செப்டம்பர் 8-ந்தேதியுடன் முடிவடையும் தமிழக சட்டசபை  கூட்டத்தொடருக்கு  பிறகு, 10-ந்தேதிக்கு மேல் சென்னையில் விஜய்யை நேரில் சந்தித்து  பேசிய பிறகே இறுதி முடிவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.</strong></em></p><p>பாரதிய ஜனதா கட்சியில் இருந்து சமீபத்தில் விலகிய மலையாள திரைப்பட நடிகர் தேவன், முதலமைச்சர்  விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் தனக்கு  கேரள மாநிலத் தலைவர் பதவியை வழங்க முன்வந்துள்ளதாக தெரி வித்துள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டை  தளமாக  கொண்ட  <a href="https://www.maalaimalar.com/topic/தவெக">த.வெ.க</a>., கட்சி கேரளத்திலும் தனது அரசியலை விரிவாக்கம் செய்யக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.</p><p>பா.ஜ.க.வில் சுமார் 5  ஆண்டுகள் இருந்தும் தமக்கு எவ்வித முக்கிய  பொறுப்பும் வழங்கப்படாததால், மக்களுக்கு பங்காற்ற முடியாத நிலை ஏற்பட்டதன் காரணமாகவே கடந்த ஆகஸ்ட் 16-ந்தேதி அன்று அந்த அமைப்பில் இருந்து விலகியதாக தேவன்  சுட்டிக்காட்டினார். </p><p>தாம் விலகிய தகவலை அறிவித்த மறுநாளே விஜய்யின் அலுவலகத்தில் இருந்து  தம்மைத் தொடர்பு கொண்டு பேச விருப்பம் தெரிவித்ததாகவும், அன்றைய தினமே  த.வெ.க. பிரதிநிதிகள் 2 பேர்  நடிகை பிரியங்காவுடன் சாலக்குடியில் உள்ள தமது இல்லத்திற்கு நேரில் வந்து சுமார் 3  மணி நேரம் விரிவாக ஆலோசனை நடத்தியதாகவும் கூறினார். </p><h2><strong>த.வெ.க.வில் இணைகிறார்</strong></h2><p>அதனைத்தொடர்ந்து  த.வெ.க.வின்  மூத்த தலைவர்கள் கூகுள் மீட் வழியாகவும் மேல்நிலைப் பேச்சுகளை நடத்தினர். இந்த ஆலோசனைகளின் மூலம் தனக்கும் விஜய்க்கும் இடையே எண்ணங்கள், கொள்கைகள் மற்றும் மக்கள் நலப்பணிகளில் ஒரே மாதிரியான பார்வைகள் இருப்பது தெளிவானதாக தேவன் தெரிவித்துள்ளார். எனவே இணைந்து செயல்படுவதில் எவ்விதச் சிக்கலும் இல்லை என்றும், தம்மை கேரள மாநிலத் தலைவராக  பொறுப்பேற்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டதாகவும்   கூறினார்.</p><p>காங்கிரஸ் கட்சி உள்பட சில உள்ளூர் அமைப்புகளும் தம்மை  தொடர்புகொண்டு அழைப்பு விடுத்ததாகவும், ஆனால் தாம் அவற்றை ஏற்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். </p><h2><strong>விஜய்யுடன் சந்திப்பு</strong> </h2><p>திரைத்துறையில் விஜய்யுடன் 6 திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ள தேவன், கேரளம் அரசியலில் காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் பா.ஜ.க., ஆகிய முன்னணி அமைப்புகள் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக இளைஞர்கள் த.வெ.க.வை ஒரு புதிய மாற்றாகப் பார்க்க  தொடங்கியுள்ள தாக  தெரிவித்தார். செப்டம்பர் 8-ந்தேதியுடன் முடிவடையும் தமிழக சட்டசபை  கூட்டத்தொடருக்கு  பிறகு, 10-ந்தேதிக்கு மேல் சென்னையில் விஜய்யை நேரில் சந்தித்து  பேசிய பிறகே இறுதி முடிவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>பீகார் அரசுத் தேர்வு வினாத்தாள் கசிவு.. முதலமைச்சர் இல்லம் நோக்கி மாணவர்கள் பேரணியால் பரபரப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/bpsc-exam-scam-protest-patna-students-march-to-cm-residence-police-use-water-cannons-to-stop-rally</link><comments>https://www.maalaimalar.com/news/national/bpsc-exam-scam-protest-patna-students-march-to-cm-residence-police-use-water-cannons-to-stop-rally#comments</comments><guid isPermaLink="false">848123fc-266d-4032-81e9-d3783883cf80</guid><pubDate>Tue, 25 Aug 2026 08:17:26 +0000</pubDate><atom:updated>2026-08-25T08:17:26.168Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பீகார்,Bihar,மாணவர்கள் போராட்டம்,தேர்வு முறைகேடு,Student protests,exam irregularities</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/vpwyz3p4/tn.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/vpwyz3p4/tn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பீகார் மாநில அரசு நடத்தும் பிபிஎஸ்சி தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் தலைநகர் பாட்னாவில்  பேரணி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  </p><h2>தேர்வு முறைகேடு </h2><p>நடந்து முடிந்த 70வது பிபிஎஸ்சி தேர்வில் முறைகேடு மற்றும் <a href="https://www.maalaimalar.com/news/national/government-to-introduce-exam-irregularities-bill-lok-sabha-today">வினாத்தாள் கசிவு </a>நடந்ததாக குற்றம்சாட்டி மாணவர்கள் காந்தி மைதானத்தில் இருந்து முதல்வர் இல்லம் நோக்கி இன்று தங்கள் பேரணியை தொடங்கினர். </p><p>செல்லும் வழி நெடுகிலும் கோஷங்களை எழுப்பியவண்ணம் சென்ற அவர்கள்  போலீசாரால் போடப்பட்ட தடுப்புகளை தாண்டி செல்ல முயன்றனர். </p><p>மாணவர்ளை தடுக்க அங்கு குவிக்கப்பட்ட போலீசார் மற்றும் மத்திய படையினர் முயன்று வருகின்றனர். மாணவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து போலீசார் தடுக்க முயன்றபோதும் அவர்கள் முதலமைச்சர் இல்லத்தை நெருங்கியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. </p><p>முன்னதாக நேற்று போராட்டக்குழு மாணவர்களின் பிரதிநிதிகளிடம் பீகார் என்டிஏ அரசு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அதில் தீர்வு  எட்டப்படாததால் இன்று பேரணி நடத்தப்பட்டது. </p><h2>மாணவர்கள் கோரிக்கை</h2><p>மாணவர் தலைவர் சவுரவ் குமார் அரசுடனான பேச்சுவார்த்தை நேர்மறையாக அமைந்ததாகவும் இருப்பினும் தங்கள் கோரிக்கை நிறைவடையும் வரை தங்கள் எதிர்ப்பு செயல்பாடுகளை தொடரப்போவதாகவும் தெரிவித்தார்.</p><p>"நாங்கள் பீகார் முதல்வர் சாம்ராட் சவுத்ரியை சந்திக்க விரும்புகிறோம். இதுவரை எங்களிடம் கீழ்நிலை அதிகாரிகளே பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். முதல்வரை சந்தித்தால் தான் தீர்வுகிடைக்கும் . </p><p>எங்களுக்கு முதல்வரை சந்திக்க வாய்ப்பளிக்கப்படும் என தெரிவித்தால் நாங்கள் போராட்டத்தை கைவிட தயார்" எனவும் அவர் குறிப்பிட்டார்.</p> <p>மேலும் " எங்களின் முதன்மை கோரிக்கை முதலமைச்சரை சந்திப்பதுதான். அது சாத்தியப்படவில்லை என்றால் இரண்டாவது பட்சமாக நாங்கள் கல்வி அமைச்சரை சந்திக்க ஒப்புக்கொள்கிறோம். </p><p>ஆனால் இவர்கள் இருவரை தவிர வேறு யாரையும் நாங்கள் சந்திக்க தயாராக இல்லை" எனவும் அவர் தெரிவித்தார்.</p> <h2>அரசின் முன்னெடுப்பு</h2><p>இதனிடையே மாணவர்களின் குறைகளை கேட்டறிய, "வித்யார்தி சாயோக் சிவிர்" (மாணவர் உதவி முகாம்) மாதந்தோறும் நடத்தப்படும் என பீகார் அரசு அறிவித்துள்ளது.</p><p>கல்வி நிலையங்களில் ஒவ்வொரு மாதமும் 4 வது செவ்வாய்கிழமை இந்த முகாம்கள் நடத்தப்படும் என்றும் நேரடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மாணவர்களின் குறைகள் சென்று சேரும் என்றும் முதலமைச்சர் சவுத்ரி தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.</p><p>"மாணவர்கள் தங்கள் குறைகளை பதிவு செய்ய ஒரு இணைய போர்டல் உருவாக்கப்படும். அதில் மாணவர்கள் புகார்களை பதிவு செய்து அது எந்த கட்டத்தில் உள்ளது என்பதை அறியலாம். மேலும் 1100 என்ற உதவி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வெள்ளை சர்க்கரை விலை உயர்வின் பாதிப்பைத் தடுக்க ரேஷன்  கடைகளில் 2 கிலோ கூடுதலாக வழங்க வேண்டும்: அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-to-mitigate-the-impact-of-the-rise-in-white-sugar-prices-an-additional-2-kg-should-be-provided-at-ration-shops</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-to-mitigate-the-impact-of-the-rise-in-white-sugar-prices-an-additional-2-kg-should-be-provided-at-ration-shops#comments</comments><guid isPermaLink="false">828c54e2-3a4f-4f9a-a7e5-83a5e955129e</guid><pubDate>Tue, 25 Aug 2026 08:02:44 +0000</pubDate><atom:updated>2026-08-25T08:02:44.788Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,sugar price,சர்க்கரை விலை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/41ttxzp1/anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/41ttxzp1/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>6 மாதங்களுக்கு நியாயவிலைக் கடைகளில் அனைத்து குடும்ப அட்டைகளுக்கு தலா 2 கிலோ கூடுதல் சர்க்கரை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</strong></em></p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் இல்லாத வகையில், சீனி எனப்படும் வெள்ளை சர்க்கரையின் விலை கிலோவுக்கு ரூ.20 முதல்  ரூ.25 வரை அதிகரித்து ரூ.75 முதல் ரூ.80  என்ற அளவை எட்டியுள்ளது. இது அடுத்து வரும் மாதங்களில் மேலும் உயர்ந்து  தீப ஒளி திருவிழா காலத்தின் போது ரூ.100 என்ற உச்சத்தை அடையக்கூடும் என்று வணிகர்கள் தெரிவித்துள்ளனர். ஒருபுறம் கரும்பு விவசாயிகளுக்கு போதிய கொள்முதல் விலை கிடைக்காத நிலையில், இன்னொருபுறம் மக்களை பாதிக்கும் வகையில் சர்க்கரை விலை உயர்ந்து வருவது கவலையளிக்கிறது.</p><p>எரிபொருள் இறக்குமதியை குறைக்கும் வகையில்,  வாகன எரிபொருளில்  அதிக அளவில் எத்தனால் கலப்பதை  மத்திய அரசு ஊக்குவிப்பதாகவும்,  அதற்காக சர்க்கரை ஆலைகள் வெள்ளை சர்க்கரை உற்பத்தியை விட  மொலாசஸ் எனப்படும்  கரும்பு வெல்லப்பாகு  உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் தருவது தான் இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.  இதில்  ஓரளவு உண்மை இருப்பதை மறுக்க முடியாது.</p><p>ஆனால், இதையும் தாண்டிய முதன்மைக் காரணம், தமிழ்நாட்டில் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் கரும்பு சாகுபடி பரப்பு அண்மைக்காலங்களில் மிக வேகமாக குறைந்து வருவது தான். தேசிய அளவில் 2022-ஆம் ஆண்டில்  58.85 லட்சம் ஹெக்டேராக இருந்த கரும்பு சாகுபடி பரப்பு, 2024-ஆம் ஆண்டில் 54.49 லட்சம் ஹெக்டேராக குறைந்து விட்டது.</p><h2><strong>அநீதி</strong></h2><p>தமிழ்நாட்டில் 2020-ஆம் ஆண்டுக்கு முன் 15 லட்சம் ஏக்கராக இருந்த கரும்பு சாகுபடி பரப்பு 2025-ஆம் ஆண்டில்  வெறும் 5 லட்சம் ஏக்கராக குறைந்து விட்டது. அதேபோல், தமிழ்நாட்டில்  2018ஆம் ஆண்டில் 2.8 கோடி டன்னாக இருந்த  சர்க்கரை உற்பத்தி 2024-ஆம் ஆண்டில் 1.59 கோடி டன்னாக குறைந்து விட்டது. இதற்கு காரணம் கரும்புக்கான உற்பத்திச் செலவு  அதிகரித்து விட்டதும், அதற்கு ஏற்ற வகையில்  கரும்பின் கொள்முதல் விலை  உயர்த்தப்படாததும் தான்.  இந்த நிலை மாற்றப்பட்டு  சாகுபடி பரப்பு அதிகரிக்கப்பட்டால் தான் சர்க்கரை உற்பத்தி அதிகரித்து விலை குறையும்.</p><p>ஒரு டன் கரும்பிலிருந்து கிடைக்கும் சர்க்கரை, மொலாசஸ், சக்கை உள்ளிட்ட அனைத்து துணைப் பொருள்களின் வாயிலாக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/suger-price-hike-in-tamilnadu">சர்க்கரை</a> ஆலைகளுக்கு  ரூ,21 ஆயிரத்திற்கும் கூடுதலாக வருமானம் கிடைக்கும் நிலையில், சர்க்கரை ஆலைகள் ஒரு டன் கரும்புக்கு  ரூ.5000 கூட கொள்முதல் விலையாக வழங்க மறுப்பதும், அதற்கு ஆட்சியாளர்கள் துணை போவதும் அநீதியாகும்.</p><p>ஒரு டன் கரும்பில் சராசரியாக ஒரு குவிண்டால் சர்க்கரை உற்பத்தி செய்ய முடியும். அப்படியானால், ஒரு குவிண்டால் சர்க்கரையின் மொத்த விலை  ரூ.7000 ஆக இப்போது உயர்ந்துள்ள நிலையில், அதே விலை ஒரு டன் கரும்புக்கு கொள்முதல் விலையாக வழங்கப்பட வேண்டும். சர்க்கரை உற்பத்தியில் கிடைக்கும் துணை பொருள்கள் மூலம் ஆலைகளுக்கு கிடைக்கும் வருமானம் இலாபமாக இருக்கும். ஆனால், இயல்பாக வழங்க வேண்டிய விலையில் பாதிக்கும் குறைவாக ரூ..3383  தான் கொள்முதல் விலையாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை குறைந்தபட்சம்  ரூ.5000 என்ற அளவுக்காவது அதிகரிக்க வேண்டும். அப்போது தான் கரும்பு சாகுபடி பரப்பும், சர்க்கரை உற்பத்தியும் அதிகரிக்கும்.</p><p>இவை ஒருபுறமிருக்கு சர்க்கரை விலை உயர்வால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பை  குறைப்பதற்காக பொங்கல் திருநாள் வரை நடப்பு மாதம் தொடங்கி  6 மாதங்களுக்கு நியாயவிலைக் கடைகளில் அனைத்து குடும்ப அட்டைகளுக்கு தலா 2 கிலோ கூடுதல் சர்க்கரை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>&apos;மகாக்காளி&apos; படத்தில் அசுர குருவாக அக்ஷய் கண்ணா: இணையத்தை ஆக்கிரமிக்கும் &apos;சுக்ராச்சாரியார்&apos; தோற்றம்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/akshay-khanna-asura-guru-makakkali-first-look</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/akshay-khanna-asura-guru-makakkali-first-look#comments</comments><guid isPermaLink="false">abeefea7-ce06-48a5-8cf1-4fac643a038c</guid><pubDate>Tue, 25 Aug 2026 07:47:20 +0000</pubDate><atom:updated>2026-08-25T07:47:20.588Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அக்ஷய் கண்ணா,akshaye khanna,Mahakali,Shukracharya,மகாக்காளி,பிரசாந்த் வர்மா சினிமாடிக் யூனிவர்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/ytbaj707/akshay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Akshaye Khanna ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/ytbaj707/akshay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரசாந்த் வர்மா சினிமாடிக் யூனிவர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்டத் திரைப்படமான 'மகாக்காளி' படத்தின் முதல் பார்வை வீடியோ வெளியாகியுள்ளது. இதில் அசுரர்களின் குருவான 'சுக்ராச்சாரியார்' கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் கண்ணா நடித்துள்ளார். அவரது கம்பீரமான தோற்றமும் மிரட்டலான நடிப்பும் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.</p><p>அக்ஷய் கண்ணா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'சாவா' திரைப்படத்தில் ஔரங்கசீப் கதாபாத்திரத்திலும், 'துரந்தர்' திரைப்படத்தில் ரஹ்மான் டகாயிட் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். அந்த இரு படங்களிலும் தனது அழுத்தமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த அவர், தற்போது '<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/nayanthara-expects-mookuthi-amman-2-theatrical-release">மகாக்காளி</a>' படத்தின் மூலம் முற்றிலும் மாறுபட்ட ஒரு புராணக் கதாபாத்திரத்தில் களமிறங்கியுள்ளார். இதனால் அவரது திரைப்பயணத்தில் இது மற்றொரு மைல்கல்லாக அமையும் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.</p><p>நீண்ட தாடி, சடைமுடி மற்றும் திலகத்துடன் அக்ஷய் கண்ணா தோன்றும் சுப்ரமண்ய வடிவமைப்பு, அவரது வழக்கமான தோற்றத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளது. எந்த ஒரு கதாபாத்திரத்தையும் தனது தனித்துவமான நடிப்பால் உயிர்ப்பிக்கும் அக்ஷய் கண்ணாவின் 'ஆரா'  இந்த வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது என சினிமா விரும்பிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.</p><h2>பிரம்மாண்ட தயா<strong>ரிப்பில் உருவாகும் 'மகா</strong>க்காளி'</h2><p>பூஜா அபர்ணா கொல்லுரு இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்தில் பூமி ஷெட்டி முதன்மைப் பாத்திரமான மகாக்காளியாக நடிக்கிறார். மேலும் ரோஹித் சராஃப், ஸ்ரியா ரெட்டி போன்ற முன்னணி நட்சத்திரங்களும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையிலான போரை மையமாகக் கொண்டு உருவாகும் இத்திரைப்படம், 2027-ஆம் ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பரந்தூரில் மாற்று தொழில் திட்டங்கள் தொடங்கப்படும்- அமைச்சர் கீர்த்தனா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-keerthana-says-alternative-livelihood-schemes-will-be-launched-in-parandur</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-keerthana-says-alternative-livelihood-schemes-will-be-launched-in-parandur#comments</comments><guid isPermaLink="false">1739b048-2edd-40f4-a240-8ff068c244e6</guid><pubDate>Tue, 25 Aug 2026 07:22:13 +0000</pubDate><atom:updated>2026-08-25T07:22:13.243Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Parandur Airport,பரந்தூர் விமான நிலையம்,தமிழ்நாடு சட்டசபை,TN assembly,Minister Keerthana,அமைச்சர் கீர்த்தனா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/9sgbnifi/keerthana.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சட்டசபையில் பேசிய அமைச்சர் கீர்த்தனா]]></media:title><media:description type="html"><![CDATA[ சட்டசபையில் பேசிய அமைச்சர் கீர்த்தனா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/9sgbnifi/keerthana.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பரந்தூரை நாம் விமான நிலையமாக மாற்றினால் கண்டிப்பாக சென்னைக்குள் வெள்ளம் வரும் அபாயம் உள்ளது என அமைச்சர் கீர்த்தனா கூறினார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழ்நாடு சட்டசபையில்</a> இன்றைய மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்தது குறித்து பெரும் விவாதம் நடைபெற்றது. தி.மு.க.- த.வெ.க. உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு:-</p><p>அ.தி.மு.க. எம்.எல்.ஏ. எடப்பாடி பழனிசாமி பேசுகையில், பரந்தூர் விமான நிலையத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்தை என்ன செய்யப்போகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். </p><p>அதற்கு அமைச்சர் நிர்மல்குமார் பதில் அளிக்கையில், விமான நிலையத்திற்காக 5 வருடமாக கையப்படுத்திய நிலங்கள் அனைத்தும் வெளியூரில் வசிப்பவர்களுடையது. உள்ளூரில் வசிக்கும் யாருடைய நிலங்களையும் தமிழக அரசு தற்போது வரை கையகப்படுத்தவில்லை. பரந்தூர் விமான நிலையத்திற்காக சொந்த மக்களை அகதிகளாக வெளியேற்ற முடியாது. விமான நிலையத்திற்காக கையப்படுத்தப்பட்ட நிலங்களை என்ன செய்வது என பின்னர் முடிவு செய்யப்படும் என்றார். </p><p>அமைச்சர் கீர்த்தனா கூறுகையில், </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/parandur-airport-project-cancelled-issue-arguments-in-assembly">பரந்தூரில்</a> கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் மக்களுக்கும் மண்ணுக்கும் இடையூறு இல்லாத தொழில்கள் தொடங்கப்படும். வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் பரந்தூரில் மாற்று தொழில் திட்டங்கள் தொடங்கப்படும். </p><p>மழை பெய்யாமல் இருந்தாலும் விவசாயம் நடக்கும் விளைநிலம் என்பதால் தான் பரந்தூர் ஏர்போர்ட் திட்டம் ரத்து செய்யப்பட்டது. பரந்தூரை நாம் விமான நிலையமாக மாற்றினால் கண்டிப்பாக சென்னைக்குள் வெள்ளம் வரும் அபாயம் உள்ளது.</p><p>பரந்தூர் கால்வாயை அழித்தால் கேரளத்தில் ஏர்போர்ட்டுக்குள் வெள்ளம் வந்ததை போன்ற நிலை தான் ஏற்படும். 1500 நீர்நிலை, 1000 குடும்பம் பாதிக்கும் என்பதை கருதாமல் பரந்தூர் நிலத்தை ஏர்போர்ட்டுக்கு தேர்வு செய்தது தவறு.</p><p>மக்கள் பாதிக்காதவாறு 2-வது புதிய விமான நிலையம் அமைக்கப்படும். நிலம் எடுப்பது தொடர்பாக திமுக ஆட்சியில் அமைத்த குழுவின் அறிக்கையை தற்போது வரை வெளியிடாதது ஏன்? என கேள்வி எழுப்பினார். </p><p>இதையடுத்து பேசிய அமைச்சர் வன்னி அரசு, திமுகவுடன் கூட்டணி இருந்தபோதே பரந்தூர் திட்டத்தை எதிர்த்து போராடினோம். பரந்தூர் விவசாய நிலங்களும் மண்ணின் மைந்தர்களும் தவெக அரசால் பாதுகாக்கப்பட்டுள்ளனர் என்றார். </p><p>முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு,</p><p>விமான நிலையம் அமைப்பது மத்திய அரசாங்கத்திற்கு உட்பட்டது. நிலம் கையகப்படுத்துவது மட்டும் தான் மாநில  அரசின் பணி. மாநில அரசாங்கத்தின் சார்பில் குழு அமைக்கப்பட்டு மூன்று அமைச்சர்கள் நேரடியாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளை அழைத்து பேசினோம். 13 கிராமங்களில் 11 கிராமங்கள் ஒத்துக் கொண்டன. ஏகனாபுரம், பரந்தூர் ஆகிய இரண்டு கிராமங்கள் மட்டுமே ஒத்துக் கொள்ளவில்லை என்றார்.</p>]]></content:encoded></item><item><title>வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த ‘கந்தா எக்ஸ்பிரஸ்’ சரக்கு ரெயில்கள் இயக்கம்: மத்திய அரசு நடவடிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/national/gandha-express-freight-trains-to-control-onion-prices</link><comments>https://www.maalaimalar.com/news/national/gandha-express-freight-trains-to-control-onion-prices#comments</comments><guid isPermaLink="false">951d76a4-aca2-4ab9-abd4-16e15f95ceb4</guid><pubDate>Tue, 25 Aug 2026 07:22:12 +0000</pubDate><atom:updated>2026-08-25T07:22:12.047Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,Guwahati,கவுகாத்தி,வெங்காய விலை உயர்வு,Kanda Express,Onionprice,கந்தா எக்ஸ்பிரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/xfpp5p0t/ONION.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kanda Express]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/xfpp5p0t/ONION.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடெங்கிலும் சமையல் அத்தியாவசியப் பொருளான வெங்காயத்தின் சில்லறை விற்பனை விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், விலையைக் கட்டுப்படுத்தவும் சந்தையில் விநியோகத்தைச் சீர்செய்யவும் மத்திய அரசு 'கந்தா எக்ஸ்பிரஸ்' சிறப்புச் சரக்கு ரெயில்களை இயக்கத் தொடங்கியுள்ளது. மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் மேற்பார்வையில் இந்த நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.</p><h2>கிடுகி<strong>டுவென உயர்ந்த</strong> வெங்காய விலை</h2><p>கடந்த சில வாரங்களாக நாட்டின் முக்கிய நகரங்களில் வெங்காயத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அகில இந்திய அளவில் வெங்காயத்தின் சராசரி சில்லறை விலை கிலோவுக்கு ரூ.42 முதல் ரூ.44 வரை உயர்ந்துள்ள நிலையில், டெல்லியிலும் சென்னையிலும் கிலோ ரூ.58 முதல் ரூ.65 வரை விற்பனை செய்யப்படுகிறது. <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/night-time-electric-trains-cancelled-starting-today">மகாராஷ்டிரா</a> உள்ளிட்ட உற்பத்தி மையங்களில் நிலவும் வரத்து குறைவே இந்த விலை உயர்வுக்கு முதன்மைக் காரணமாகக் கூறப்படுகிறது.</p><h2><strong>‘கந்தா எக்ஸ்பிரஸ்’ மூலம் ரெயில்களில் மொத்த விநியோகம்</strong></h2><p>விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள அரசு கையிருப்பு மையங்களில் இருந்து ஆயிரக்கணக்கான டன் வெங்காயத்தைச் சிறப்புச் சரக்கு ரெயில்கள் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னை, மதுரை, டெல்லி, எர்ணாகுளம் மற்றும் கவுகாத்தி ஆகிய முக்கிய நுகர்வு நகரங்களுக்கு இந்த ரெயில்கள் மூலம் வெங்காயம் கொண்டு செல்லப்படுகிறது.</p><h2><strong>மலிவு விலையில் கிடைக்க ஏற்பாடு</strong></h2><p>ரெயில்கள் மூலம் வரும் வெங்காயம் நேரடியாக மொத்த விற்பனைச் சந்தைகளுக்கும் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களுக்கும் விநியோகிக்கப்படும். இதன் மூலம் வெளிச்சந்தையில் செயற்கையாக உருவாக்கப்படும் பற்றாக்குறை தவிர்க்கப்பட்டு, பொதுமக்களுக்கு நியாயமான விலையில் வெங்காயம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் மேலும் பல நகரங்களுக்கும் இந்த சேவை விரிவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருப்பதி லட்டில் நூலா? - தேவஸ்தானம் விளக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/tirupati-laddu-thread-rumour-devastanam-warning</link><comments>https://www.maalaimalar.com/news/national/tirupati-laddu-thread-rumour-devastanam-warning#comments</comments><guid isPermaLink="false">737f9a62-0a1b-437b-868f-fbab97c799ae</guid><pubDate>Tue, 25 Aug 2026 07:15:41 +0000</pubDate><atom:updated>2026-08-25T07:15:41.302Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திருப்பதி,Tirupati,திருப்பதி லட்டு,லட்டு பிரசாதம்,Laddu Rumors,TTD Clarification,Laddu Prasadam,FakeVideoAlert</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/6ob4offp/Tirupati-LadduRumors" width="1500"><media:title type="html"><![CDATA[ Tirupati ]]></media:title><media:description type="html"><![CDATA[ Tirupati LadduRumors]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/6ob4offp/Tirupati-LadduRumors?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">திருப்பதி ஏழுமலையான் கோவிலில்</a> பக்தர்களுக்கு வழங்கப்படும் உலகப் புகழ்பெற்ற ‘திருப்பதி லட்டு’ பிரசாதத்தில் நூல் இருந்ததாகச் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோ முற்றிலும் உண்மைக்கு மாறானது என திருப்பதி தேவஸ்தானம் மறுத்துள்ளது.</p><p>மேலும், இத்தகைய வதந்திகளைப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேவஸ்தான அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.</p><h2><strong>வதந்தி வீடியோவும் தேவஸ்தான விளக்கமும்</strong></h2><p>சமீப நாட்களாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வேகமாகப் பரவி வருகிறது. அதில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வாங்கப்பட்ட லட்டு ஒன்றில் நூல் போன்ற பொருள் இருப்பதாகக் காண்பிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும் தேவஸ்தான அதிகாரிகள் விடுத்துள்ள அறிக்கையில், திருப்பதி தேவஸ்தானத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்தில் லட்டு பிரசாதம் குறித்து பக்தர்களிடையே தவறான எண்ணங்களை உருவாக்கும் விதமாக வீடியோ ஒன்றை உருவாக்கி அவற்றை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது சரியல்ல. </p><p>பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் செயல்பட வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p><h2><strong>பக்தர்களுக்கு வேண்டுகோள்</strong></h2><p>பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் இத்தகைய போலியான மற்றும் சரிபார்க்கப்படாத வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிரவோ, மற்றவர்களுக்கு அனுப்பவோ வேண்டாம் என தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.</p><p>ஏதேனும் குறைகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால், அதைச் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதைத் தவிர்த்து, உடனடியாக தேவஸ்தான கண்காணிப்புத் துறை அதிகாரிகளின் கவனத்திற்கு நேரடியாகக் கொண்டு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>அதிகாரப்பூர்வ தகவல்களுக்கு மட்டுமே பக்தர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தெருநாய்கள் கருணைக்கொலை: கேரள அரசு வெளியிட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகள்!</title><link>https://www.maalaimalar.com/news/national/kerala-street-dogs-mercy-killing-new-guidelines</link><comments>https://www.maalaimalar.com/news/national/kerala-street-dogs-mercy-killing-new-guidelines#comments</comments><guid isPermaLink="false">cf9d8dc5-a34e-4da8-90d0-2d0084f77efc</guid><pubDate>Tue, 25 Aug 2026 07:04:11 +0000</pubDate><atom:updated>2026-08-25T07:04:11.943Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>kerala,stray dogs,கேரள அரசு,Rabies,தெருநாய்கள்,Euthanasia of stray dogs,தெருநாய்கள் கருணைக்கொலை,வெறிநாய் கடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/d5wti9hh/STRAY-DOGS.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Euthanasia of stray dogs]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/d5wti9hh/STRAY-DOGS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரள மாநிலத்தில் தெருநாய்களின் பெருக்கம் மற்றும் வெறிநாய் கடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், ஆபத்தான தெருநாய்களைக் கருணைக்கொலை செய்ய அம்மாநில அரசு முறைப்படி அனுமதி வழங்கி புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><h2>கருணைக்<strong>கொலை செய்யப்படுவதற்</strong>கான தகுதிகள்</h2><p>மாநில உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் <a href="https://www.maalaimalar.com/news/national/216-tortoises-rescued-from-mumbai-trafficking-rewilded-in-tadoba">கால்நடை பராமரிப்புத் துறை</a> மூலம் செயல்படுத்தப்படும் இந்த நடவடிக்கையில், அனைத்து தெருநாய்களும் கொல்லப்பட மாட்டாது. குணப்படுத்த முடியாத தீவிர நோயால் பாதிக்கப்பட்ட நாய்கள், வெறிநாய் கடி (Rabies) நோயால் பாதிக்கப்பட்டவை, மற்றும் பொதுமக்களுக்கு மிகக் கடுமையான அச்சுறுத்தலாகவும் வன்முறையாகவும் நடந்துகொள்ளும் நாய்கள் மட்டுமே கருணைக்கொலை செய்ய அனுமதிக்கப்படும். </p><p>ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும் 'தெருநாய் மேலாண்மைக் குழு' அமைக்கப்படும். இந்த அமைப்பின் தலைவர் மற்றும் தகுதி வாய்ந்த அரசு கால்நடை மருத்துவரின் எழுத்துப்பூர்வப் பரிந்துரைக்குப் பிறகே ஒரு நாயைக் கருணைக்கொலை செய்ய அனுமதி அளிக்கப்படும்.</p><h2>மருத்து<strong>வ முறைகள்</strong> </h2><p>நாய்களைப் பிடிக்கும்போதும், கருணைக்கொலை செய்யும்போதும் எவ்வித கொடூரமான அல்லது வன்முறை முறைகளையும் கையாளக் கூடாது என அரசு அறிவுறுத்தியுள்ளது.</p><p>* துப்பாக்கியால் சுட்டோ, நஞ்சு கொடுத்தோ அல்லது தடியால் அடித்தோ கொல்லக் கண்டிப்பாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>* தகுதிவாய்ந்த கால்நடை மருத்துவர் மூலமாக, நரம்பு வழியே குறிப்பிட்ட மருத்துவ மருந்துகளைச் செலுத்தி மட்டுமே வலியற்ற முறையில் உயிர் பிரிக்கப்பட வேண்டும்.</p><p>* பிற நாய்களின் முன்னிலையில் கருணைக்கொலை நிகழ்வை நடத்தக் கூடாது.</p><p>பிடிக்கப்படும் தெருநாய்கள் உடனடியாகக் கொல்லப்பட மாட்டாது. அவை 2 முதல் 3 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்படும். அந்த நேரத்தில் விலங்கு நல அமைப்புகளோ அல்லது தனிநபர்களோ அந்த நாய்களைத் தத்தெடுக்க விரும்பினால், அவற்றை அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்று வளர்க்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நடவடிக்கை மூலமாக மாநிலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, விலங்கு நல விதிகளையும் முறைப்படி பின்பற்ற கேரள அரசு முடிவு செய்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்காவில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 15 சதவீதம் சரிவு!</title><link>https://www.maalaimalar.com/news/world/15-percent-drop-in-indian-students-aspiring-to-study-in-america</link><comments>https://www.maalaimalar.com/news/world/15-percent-drop-in-indian-students-aspiring-to-study-in-america#comments</comments><guid isPermaLink="false">f75aa660-dea8-4b66-986c-b1b50eee34d4</guid><pubDate>Tue, 25 Aug 2026 06:52:33 +0000</pubDate><atom:updated>2026-08-25T06:52:33.952Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,indian students,விசா தடை,Trump Administration,டிரம்ப் அரசு,America H1B visa,USVisa,CommonApp</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/muxm30ek/Trump-Administration" width="1500"><media:title type="html"><![CDATA[ Trump Administration ]]></media:title><media:description type="html"><![CDATA[ Trump Administration ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/muxm30ek/Trump-Administration?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE">அமெரிக்கா</a>வில் அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் குடியேற்றக் கொள்கைகளில் தீவிர மாற்றங்களையும், கடுமையான விசா கட்டுப்பாடுகளையும் அமல்படுத்தி வருகிறது. </p><p>இதன் நேரடி விளைவாக, அமெரிக்க கல்லூரிகளில் சேர விரும்பும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.</p><h2><strong>மாணவர் சேர்க்கையில் கடும் வீழ்ச்சி</strong></h2><p>இதுதொடர்பாக காமன் ஆப் என்ற அமைப்பு வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,</p><p>கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2025-26 கல்வியாண்டில் அமெரிக்காவில் இளங்கலைப் படிப்புகளில் சேர விண்ணப்பித்த இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 15 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. </p><p>வரும் 2026-27ஆம் கல்வியாண்டிற்கான சர்வதேச மாணவர்களின் ஒட்டுமொத்த விண்ணப்பங்கள் (மார்ச் 1ஆம் தேதி நிலவரப்படி) 10 சதவீதம் குறைந்துள்ளது. இது மிக விசித்திரமான மற்றும் மிகப்பெரிய சரிவாகப் பார்க்கப்படுகிறது.</p><p>அமெரிக்காவிற்கு சர்வதேச அளவில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை அனுப்பும் நாடாக இந்தியா திகழ்கிறது. கடந்த 2024-25 கல்வியாண்டில் மட்டும் சுமார் 3.63 லட்சத்திற்கும் அதிகமான இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் பல்வேறு படிப்புகளில் சேர்ந்திருந்தனர். </p><p>ஆனால், தற்போதைய கடுமையான விசா விதிமுறைகள்,<a href="https://www.maalaimalar.com/topic/h-1b-visa"> எச்-1பி </a>(H-1B) <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE">விசா </a>கட்டுப்பாடுகள் மற்றும் கொள்கை ரீதியான நிச்சயமற்ற சூழல் காரணமாக இந்திய மாணவர்கள் அமெரிக்காவைத் தேர்ந்தெடுப்பதைக் குறைத்து வருவதாகக் கல்வி நிபுணர்கள் விளக்குகின்றனர்.</p><h2><strong>2 லட்சம் விசாக்கள் ரத்து</strong></h2><p>மறுபுறம், அமெரிக்கக் குடியேற்ற வரலாற்றிலேயே இல்லாத வகையில் புதிய அதிரடி நடவடிக்கை ஒன்றை டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது.</p><p>வணிக விசா மற்றும் சுற்றுலா <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE">விசா </a>மூலமாக அமெரிக்காவிற்குள் நுழைந்து, பின்னர் அங்கு தஞ்சம் கோரிய சுமார் <strong>2 லட்சம் வெளிநாட்டினரின் விசாக்களை ஒட்டுமொத்தமாக ரத்து செய்ய</strong> டிரம்ப் அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், அமெரிக்க வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் விசாக்கள் ரத்து செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.</p><p>அதிபர் டிரம்பின் இந்த அடுத்தடுத்த கடுமையான நடவடிக்கைகள், உயர்கல்விக்காகவும் வேலைவாய்ப்புக்காகவும் அமெரிக்கா செல்லத் திட்டமிட்டுள்ள இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாள்: தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மலரஞ்சலி மரியாதை</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/captain-vijayakanth-birthday-south-indian-artists-association-tribute</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/captain-vijayakanth-birthday-south-indian-artists-association-tribute#comments</comments><guid isPermaLink="false">84ae3d86-7b7a-4c3c-bbed-1cda5e554f57</guid><pubDate>Tue, 25 Aug 2026 06:51:32 +0000</pubDate><atom:updated>2026-08-25T06:51:32.277Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நாசர்,Karthi,கார்த்தி,கேப்டன் விஜயகாந்த்,Captain Vijayakanth,தென்னிந்திய நடிகர் சங்கம்,Nasar,South Indian Artistes&apos; Association</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/y8z5yxvz/nadaiha.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ South Indian Artistes' Association]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/y8z5yxvz/nadaiha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மறைந்த புகழ்பெற்ற திரைப்பட நடிகரும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவருமான 'கேப்டன்' விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்தின் வளாகத்தில் சிறப்பு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் நடிகர் சங்க நிர்வாகிகள், மூத்த கலைஞர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டு அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.</p><h2>திரையுல<strong>கின் வழிகாட்டியாகத் திகழ்ந்த கேப்ட</strong>ன்</h2><p>தமிழ் திரைப்படத் துறையில் தனக்கென தனிமுத்திரை பதித்த <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-praise-to-vijayakanth">விஜயகாந்த்</a>, நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மக்களின் பேரன்பைப் பெற்றவர். திரையுலகில் வளரும் நடிகர்களுக்கு வாய்ப்பளித்து வழிகாட்டியாகவும், பசி என்று வந்தவர்களுக்கு உணவளித்து ஆதரவளித்த கொடைவள்ளலாகவும் அவர் திகழ்ந்தார். அவரது இந்த மனிதநேயப் பண்புகளை நினைவு கூர்ந்து திரைத்துறையினர் பெருமிதத்துடன் அஞ்சலி செலுத்தினர்.</p><h2>நடிகர் சங்கக் <strong>கடனை மீட்டுத் தந்த பொ</strong>ற்காலம்</h2><p>தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக விஜயகாந்த் பொறுப்பு வகித்த காலம் அதன் பொற்காலமாகக் கருதப்படுகிறது. நடிகர் சங்கம் கடும் நிதி நெருக்கடியிலும் கடனிலும் மூழ்கியிருந்த சூழலில், கலை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து அந்த நிதிச் சுமையை முழுமையாக மீட்டுத் தந்தார். திரைக்கலைஞர்களின் நலனுக்காகவும், நலிவடைந்த நடிகர்களின் வாழ்வாதாரத்திற்காகவும் அவர் ஆற்றிய தொண்டுகள் இன்றும் திரையுலகினரால் நன்றியோடு நினைவு கூரப்படுகின்றன.</p><p>அவரது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நடிகர் சங்கத்தின் சார்பில் மலர் அலங்காரம் செய்யப்பட்ட விஜயகாந்தின் உருவப்படத்திற்கு தலைவர் நாசர்,  பொருளாளர் கார்த்தி மற்றும் நிர்வாகிகள் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்.  திரையுலகப் பிரபலங்கள் மட்டுமல்லாது, எண்ணற்ற ரசிகர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் நேரிலும் தங்களுடைய நினைவஞ்சலிகளைத் தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை- லாட்டரி மருமகன்: காரசார விவாதத்தை ஏற்படுத்திய பரந்தூர் ஏர்போர்ட் விவகாரம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/parandur-airport-project-cancelled-issue-arguments-in-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/parandur-airport-project-cancelled-issue-arguments-in-assembly#comments</comments><guid isPermaLink="false">24bf06ea-7735-400a-af17-2815def7a06c</guid><pubDate>Tue, 25 Aug 2026 06:45:15 +0000</pubDate><atom:updated>2026-08-25T06:45:15.629Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தவெக,Parandur Airport,பரந்தூர் விமான நிலையம்,தமிழக சட்டசபை,TN assembly,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/o9dr12q7/Assembly.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் நிர்மல்குமார்- தங்கம் தென்னரசு]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் நிர்மல்குமார்- தங்கம் தென்னரசு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/o9dr12q7/Assembly.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழக சட்டசபையில் இன்றைய மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பரந்தூர் விமான நிலையம் ரத்து விவகாரம் பெரும் காரசார விவாதத்தை ஏற்படுத்தியது.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழ்நாடு சட்டசபை</a> கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.ஆஸ்டின் பேசுகையில், நாகர்கோவிலில் மிகவும் சிரமப்பட்டு இடம் தேர்வு செய்தோம், அடிக்கல் நாட்டி 6 மாதமாகியும் பணி தொடங்கவில்லை. த.வெ.க. அரசு நடத்திய முதலீட்டாளர்கள் மாநாட்டில் புதிதாக எத்தனை நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டது?. தொழில்துறை வளர்ச்சி தான் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம், திமுக ஆட்சியில் தொழில்துறை முதலிடத்தில் இருந்தது. பரந்தூர் விமான நிலையம் திட்டத்தை ரத்து செய்துள்ளீர், முதலீட்டாளர்களை பாதிக்கும் என பேசினார். </p><p>இதுதொடர்பாக அமைச்சர் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசுகையில், </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-makes-a-surprise-announcement-in-the-assembly-abandoning-the-parandur-airport-project">பரந்தூர்</a> விமான நிலையமா அல்லது விவசாயிகள் கண்ணீரா என்றால் எங்கள் தலைவர், முதலமைச்சர் விஜய் விவசாயிகள் பக்கம்தான் நிற்பார். முதலமைச்சர் நேற்று சொன்னார், விமான நிலையத்திற்கான இடம் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்று. எங்களுடைய தலைவரின் முதல் பிரசாரம், காலடி பட்டது விவசாயிகளின் கண்ணீருக்காக. விவசாயத்திற்காக குரல் கொடுப்போம், டெல்டாவில் பிறந்தவர்கள் நாங்கள் என சொல்லக்கூடியவர்கள் பரந்தூர் விவசாயிகளுக்கு எதிராக, பரந்தூர் மட்டுமல்ல திருவண்ணாமலையில் மேல்மா விவசாயிகளுக்கு எதிராக குண்டர் சட்டம் போட்டது தி.மு.க. தமிழ்நாட்டில் உள்ள 381 ஏரிகள் குறித்தும், மக்களுடைய குரலுக்கு பேசியது இல்லை. நேற்றே தெளிவா சொல்லியாச்சு, சென்னை விமான நிலையத்தின் இன்றைய பங்கு என்ன? அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான அரசின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து சொல்லியாச்சு. </p><p>ஆனால் நேற்றில் இருந்து தி.மு.க. இந்த விமான நிலையம் இல்லை என்றால் தமிழகத்தின் முதலீடே போய் விடும் என்று சொல்கிறார்கள். தொழில்துறை வளர்வதற்கு மிக முக்கிய காரணமாக சிங்கிள் விண்டோ சிஸ்டம் தான், அதை முதலமைச்சர் உருவாக்குவார். தொழில் முதலீடு வருவதற்கு ஊழல் இல்லாத கட்டமைப்பே தேவை. 381 ஏரிகள் மற்றும் விவசாயிகள் பக்கம் நிற்பதற்காக மட்டுமே பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்பட்டது. 5 வருடம் கழித்து வெள்ளை அறிக்கை வெளியிட நாங்கள் ரெடி. உங்களோட 10 மடங்கு பொருளாதார இங்கு வந்து இருக்கும். ஏன் என்றால் ஊழல் இல்லாத ஆட்சியே எங்கள் முதலமைச்சர் கொடுப்பார் என்றார். </p><p>அ.தி.மு.க. எம்.எல்.ஏ. எடப்பாடி பழனிசாமி</p><p>பரந்தூர் விமான நிலைய திட்டத்தை முதலமைச்சர் ரத்து செய்துவிட்டார். அதற்கு எந்தவிதமான மாற்றுகருத்தும் கிடையாது. அதற்காக 5,740 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாக கூறி 90 சதவீத நிலம் கையகப்படுத்தி இழப்பீட்டு தொகையும் கொடுத்தாச்சு. கையப்படுத்திய நிலத்தை என்ன செய்யப்போகிறீர்கள்? விவசாயிகளுக்கு கொடுக்கப்போறீங்களா? என்பது குறித்து அரசின் விளக்கம் தேவை என்றார். </p><p>அமைச்சர் நிர்மல்குமார் பேசுகையில், </p><p>பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு மொத்தமாக 5,846 ஏக்கர் தேவைப்பட்டது. பட்டா நிலங்கள் 3,774. 3 போகம் விளைவிக்கக்கூடிய விவசாய நிலங்கள் 2,681 ஏக்கர் விவசாய நிலங்கள் இருந்தது. 90 சதவீதம் நிலம் கையகப்படுத்தப்படவில்லை. 48 சதவீதம் அதாவது 1,202 ஏக்கர் நிலங்கள் மட்டும் தான் கையகப்பட்டுத்தப்பட்டு உள்ளது.  சுற்றுச்சூழல் அனுமதி வாங்கியதாக தவறான தகவல் சொல்லப்படுகிறது. ஜி ஸ்கொயர் மாப்பிள்ளைக்காக பரந்தூர் பகுதிகளில் நிலத்தை வாங்கிக்குவித்தவர்கள், கருப்பு பணம் சேர்த்தவர்கள் மட்டுமே திட்டத்தை எதிர்க்கின்றனர் என்றார். </p><p>ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை என அமைச்சர் நிர்மல்குமார் பேசியதற்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். </p><p>இதனை தொடர்ந்து, தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசு பேசுகையில், ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை என்று நீங்கள் சொல்கிறீர்கள் என்று சொன்னால், வேறு எந்த லாட்டரி மருமகனுக்காக புதிய விமான நிலையம் அமைக்க உள்ளீர்கள் என்று நான் கேட்கட்டுமா? என்றார்.</p><p>இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. </p><p>இதையடுத்து பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசு, பல இடங்களில் ஆய்வு செய்த பிறகே பரந்தூர் பகுதியை தேர்வு செய்தோம். எந்த இடத்தில் அமைத்தாலும் அங்கும் விவசாய நிலங்கள் இருக்கும், அப்போது பிரச்சனை ஏற்படும். மக்களை இடமாற்றம் செய்யாமல் நிலத்தை கையகப்படுத்த முடியாது. சென்னை விமான நிலையத்தில் எப்படி 2-வது ரன்வே வரும்? என கேள்வி எழுப்பினார். </p><p>இதையடுத்து பேசிய அமைச்சர் கீர்த்தனா, கையகப்படுத்தப்பட்ட நிலத்தை வைத்து மக்களை பாதிக்காத வகையில் திட்டம் தொடங்கப்படும். மத்திய அரசு அனுமதி அளித்தும் சென்னை விமான நிலையத்தை ஏன் விரிவாக்கம் செய்யவில்லை? என கேள்வி எழுப்பினார். </p><p>இவ்வாறு அவையில் விவாதம் நடைபெற்றது. </p>]]></content:encoded></item><item><title>குருக்ராமை மீண்டும் சூழ்ந்த வெள்ளம்: நகரின் உள்கட்டமைப்பு சீர்குலைவுக்கு யார் காரணம்?</title><link>https://www.maalaimalar.com/news/national/flooded-gurugram-again-who-is-to-blame-for-citys-infrastructure-collapse</link><comments>https://www.maalaimalar.com/news/national/flooded-gurugram-again-who-is-to-blame-for-citys-infrastructure-collapse#comments</comments><guid isPermaLink="false">f85763c9-cd77-46fe-abc1-d572cdee2936</guid><pubDate>Tue, 25 Aug 2026 06:34:37 +0000</pubDate><atom:updated>2026-08-25T06:34:37.276Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>gurugram,Gurugram Floods,Gurugram  municipal,குருக்ராம்,குருக்ராம் கனமழை,பேரிடர் மேலாண்மை வாரியம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/847rt79s/gurugram.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gurugram Floods ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/847rt79s/gurugram.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் தொழில்நுட்ப மையங்களில் ஒன்றாகத் திகழும் குருக்ராம் நகரில், நேற்று பெய்த கனமழையைத் தொடர்ந்து பிரதான சாலைகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கின. இதனால் வாகனப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு, நகரம் ஸ்தம்பித்தது.</p><h2>பள்ளிப் பேருந்<strong>துகளில் முடங்கிய குழந்தைக</strong>ள்</h2><p>சுபாஷ் சௌக் மற்றும் சோஹ்னா சாலை ஆகிய பகுதிகளில் நீர் தேங்கியதால், பள்ளிப் பேருந்துகள் நான்கு மணி நேரத்திற்கும் மேலாகச் செல்ல முடியாமல் முடங்கின. உணவு மற்றும் தண்ணீர் வசதியின்றி வாகனங்களுக்குள்ளேயே குழந்தைகள் தவிக்கும் நிலை ஏற்பட்டது. பெற்றோர்களும் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால், குழந்தைகளை உடனே மீட்க முடியாமல் தவித்தனர்.</p><h2>Work Fr<strong>om Home அறிவுறுத்தல்</strong></h2><p>நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மாவட்ட <a href="https://www.maalaimalar.com/news/national/protests-in-manipur-over-inclusion-of-2-non-muslim-members-in-waqf-board">பேரிடர் மேலாண்மை வாரியம்</a> (DDMA) தனியார் நிறுவனங்கள், கார்ப்பரேட் அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு உடனடியாக வீடுகளில் இருந்தே பணிபுரியும் முறையை அமல்படுத்துமாறு அறிவுறுத்தியது. சாலை சீரமைப்பு மற்றும் வடிகால் அடைப்புகளை நீக்கும் பணிகளைச் சீராக மேற்கொள்ளவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.</p><p>குருக்ராம் நகரம் வெள்ளத்தில் மூழ்கும்போது எந்த அமைப்பைக் குற்றம் சாட்டுவது என்பதில் பெரும் குழப்பம் நிலவுகிறது. நகரின் உள்கட்டமைப்பு ஒரே ஒரு நகராட்சி அமைப்பின் கீழ் செயல்படாமல், பல அரசு நிறுவனங்களிடையே பிரிக்கப்பட்டுள்ளது.</p><p>GMDA: பிரதான நகரக் உள்கட்டமைப்பு, பெரிய வடிகால்கள் மற்றும் முதன்மைச் சாலைகளைப் பராமரிக்கிறது.</p><p>MCG: குடியிருப்புப் பகுதிகள் மற்றும் உள்ளூர் சாலைப் பராமரிப்புப் பொறுப்புகளைக் கொண்டுள்ளது.</p><p>HSVP &amp; HSIIDC: திட்டமிடப்பட்ட துறைகள் மற்றும் தொழிற்பேட்டைப் பகுதிகளின் உள்கட்டமைப்பை நிர்வகிக்கின்றன.</p><p>NHAI &amp; PWD: தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் பிற முக்கிய இணைப்புச் சாலைகளைப் பராமரிக்கின்றன. </p><h2>ஒருங்கிணை<strong>ப்பு இல்லாததால் ஏற்</strong>படும் பாதிப்புகள்</h2><p>ஒரு சாலை ஒரு அமைப்பின் பராமரிப்பிலும், அதன் அருகிலுள்ள சாக்கடை வடிகால் மற்றொரு அமைப்பின் கட்டுப்பாட்டிலும் இருப்பதால், அவசரக் காலத்தில் துரித நடவடிக்கை எடுக்க முடிவதில்லை. ஒரு சில மணி நேர கனமழைக்கே நகரின் ஒட்டுமொத்தப் போக்குவரத்தும் செயலிழப்பது, இந்த அமைப்புகளுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லாததையே காட்டுகிறது. "மில்லினியம் சிட்டி" என்று அழைக்கப்படும் குருக்ராம், முறையான வடிகால் வசதியும் ஒருங்கிணைந்த நிர்வாக அமைப்பும் இல்லாததால் ஒவ்வொரு மழைக்காலத்திலும் நிலைகுலைந்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>தமிழக சட்டசபையில் தினத்தந்தியைப் பாராட்டிய அமைச்சர் கீர்த்தனா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-keerthana-praises-daily-thanthi-in-tn-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-keerthana-praises-daily-thanthi-in-tn-assembly#comments</comments><guid isPermaLink="false">f1eb2d5d-b8f8-4eec-8454-ac8070fc4593</guid><pubDate>Tue, 25 Aug 2026 06:32:39 +0000</pubDate><atom:updated>2026-08-25T06:32:39.466Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,Daily Thanthi,TN assembly,Minister Keerthana,அமைச்சர் கீர்த்தனா,தினத்தந்தி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/xe11fd6e/keerthana.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ minister keerthana]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/xe11fd6e/keerthana.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் பேசிய அமைச்சர் கீர்த்தனா தொழில்துறை பற்றி அவ்வளவு அழகாக எழுதி இருந்த தினத்தந்திக்கு பாராட்டு தெரிவித்தார். </p><p>தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா உரையாற்றினார்.</p><p>அப்போது அவர் கூறுகையில், தொழில் முதலீடுகள் குறைந்துள்ளதாக ஆஸ்டின் பேசியது தவறான தகவல். 100 நாட்களுக்குள் ரூ.1 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.</p><p>காசு கொடுத்தால் எதையும் எழுதும் பத்திரிகை என தனியார் பத்திரிகை ஒன்றை குறிப்பிட்டார் அமைச்சர் கீர்த்தனா.</p><p>காசு கொடுத்தால் பத்திரிகையாளர்கள் எதையும் எழுதுவார்கள் என கூறக்கூடாது என திமுக கொறடா எ.வ.வேலு தெரிவித்தார்.</p><p>அப்போது குறுக்கிட்ட அமைச்சர் நிர்மல்குமார், அமைச்சர் கீர்த்தனா ஒரு சில பத்திரிகைகளை தான் கூறி உள்ளார் என்றார்.</p><p>தமிழ்நாட்டில் தொழில் முதலீடு மாநாட்டை முதலில் நடத்தியது ஜெயலலிதா என அதிமுக உறுப்பினர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.</p><p>அவரை தொடர்ந்து பேசிய அமைச்சர் கீர்த்தனா, நான் குறிப்பிட்ட பத்திரிகை ஒரு பத்திரிகைகூட கிடையாது. அது ஒரு வெப்சைட். பிரைவேட் வெப்சைட். அதே பத்திரிகையாளர்கள் தான் தினத்தந்தியில் நம்மை பற்றி, நம்முடைய தொழில்துறை பற்றி அவ்வளவு அழகாக எழுதி இருந்தார்கள். </p><p>அதையெல்லாம் எடுத்துக்கொண்டு வந்து இங்கே பேசி பெருமைப்பட்டு இருந்தால், தமிழ்நாடு முன்னேறுகிறது என்று பேசி இருந்தால் ரொம்ப நன்றாக இருந்திருக்கும் என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்: சட்டசபையில் காரசார விவாதம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/controversy-in-tn-assembly-for-admk-mlas-resign</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/controversy-in-tn-assembly-for-admk-mlas-resign#comments</comments><guid isPermaLink="false">15360cbe-9298-43cf-9955-91ea9fafef9f</guid><pubDate>Tue, 25 Aug 2026 05:57:09 +0000</pubDate><atom:updated>2026-08-25T05:57:09.505Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Edappadi Palaniswami,Sengottaiyan,TN assembly,ADMK mlas resign</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/s8h7fesa/EPS.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ edappadi palaniswami]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/s8h7fesa/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பொறுப்பு அமைச்சரால் காலியாக உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் செல்ல முடியுமா? என இபிஎஸ் கேள்வி எழுப்பினார்.</p><p>அப்போது பேசிய  அமைச்சர் செங்கோட்டையன், காலியாக உள்ள தொகுதிகளில் விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.</p><p>எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் வாபஸ் பெற்றது குதிரை பேரம் இல்லையா? என அமைச்சர் செங்கோட்டையன் ஆவேசமாகக் கேட்டார்.</p><p>எடப்பாடி ஆவேசம்</p><p>எடப்பாடி தவெக வேட்பாளர் வேட்பு மனு  தள்ளுபடி செய்யப்பட்டது என எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பதிலளித்தார்.</p><p>அப்போது குறுக்கிட்டுப் பேசிய சபாநாயக்ர் ஜேசிடி பிரபாகர், எடப்பாடி பழனிசாமி உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக பேச வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.</p><p>ஒரு மாதத்தில் 6 பேர் ராஜினாமா செய்துள்ளனர். ஆதாயம் இன்றி ராஜினாமா செய்வார்களா? என ஆஸ்டின் கேள்வி எழுப்பினார்.</p><p>இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்க முடியும். நாம் முடிவு செய்ய முடியாது என்றார் சபாநாயகர்.</p><p>6 தொகுதிகளில் எம்எல்ஏக்கள் இல்லாத நிலையில் மக்கள் தங்களது பிரச்சனைகளை யாரிடம் கூறுவது என எம்எல்ஏ ஆஸ்டின் கேள்வி எழுப்பினார்.</p><p>மக்கள் பிரச்சனைகளைக் கேட்டு நிறைவேற்றவதற்காக 6 தொகுதிகளுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என  அமைச்சர் ஆதவ் தெரிவித்தார்.</p><p>அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம் தொடர்பாக தமிழக சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் செங்கோட்டையன் இடையே கடும் வாக்குவாதம் உருவானதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.</p><p>அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம் தமிழக சட்டசபையில் காரசார விவாதத்தை ஏற்படுத்தியது.</p><p>தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.</p><h2>ஆஸ்டின் கேள்வி</h2><p>இதில் பேசிய திமுக உறுப்பினர் ஆஸ்டின் பேசுகையில், பட்ஜெட் கூட்டத்தில் உதயநிதி பங்கேற்பதை தடுக்க சதி நடந்தது. சதியை முறியடித்து அவையில் வீற்றிருக்கிறார் உதயநிதி. சிறுபான்மை ஆணைய தலைவர் பெலிக்ஸ் ஜெரால்டு தொலைக்காட்சி அரசியல் விவாதங்களில் பங்கேற்கக் கூடாது என தெரிவித்தார்.</p><p>அதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல்குமார், சிறுபான்மை ஆணைய தலைவர் தனிப்பட்ட விவாதம். பொதுமேடையில் பேசவே கூடாது என்றெல்லாம் கிடையாது. கடந்த ஆட்சியில் பீட்டர் அல்போன்ஸ், லியோனி போன்றவர்கள் அரசியல் விவாதங்களில் பேசி உள்ளனர் என்றார்.</p><p>அப்போது எழுந்த உறுப்பினர் தளவாய் சுந்தரம், திமுக எம்எல்ஏ ஆஸ்டின் பல கட்சிகளில் இருந்தவர் என பேசினார். இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்டனர்.</p><p>எம்.எல்.ஏ. ஆஸ்டின் பேசியபோது அமைச்சர் பேசலாம், அவை முன்னவர் பேசலாம் தளவாய் சுந்தரம் ஏன் பேசுகிறார்? என கேஎன். நேரு கேள்வி எழுப்பினார்.</p><p>விளக்கம் கூற வருகிறார் என நினைத்து தான் தளவாய் சுந்தரம் பேச அனுமதித்தேன் என்றார் சபாநாயகர் விளக்கம் அளித்தார்.</p><p>அதிமுக எம்.எல்.ஏ. எடப்பாடி பழனிசாமி பேசுகையில், எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா காரணமாக காலியாக உள்ள தொகுதிகளில் யார் மக்கள் பணி செய்வது? என கேள்வி எழுப்பினார்.</p><h2>செங்கோட்டையன் பதில்</h2><p>அதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், எம்.எல்.ஏ. இல்லாமல் காலியாக உள்ள தொகுதிகளில் பொறுப்பு அமைச்சர்கள் கவனித்து வருகின்றனர் என்றார்.</p><p>பொறுப்பு அமைச்சரால் காலியாக உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் செல்ல முடியுமா? என இபிஎஸ் கேள்வி எழுப்பினார்.</p><p>அப்போது பேசிய  அமைச்சர் செங்கோட்டையன், காலியாக உள்ள தொகுதிகளில் விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.</p><p>எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் வாபஸ் பெற்றது குதிரை பேரம் இல்லையா? என அமைச்சர் செங்கோட்டையன் ஆவேசமாகக் கேட்டார்.</p><h2>எடப்பாடி ஆவேசம்</h2><p>எடப்பாடி தவெக வேட்பாளர் வேட்பு மனு  தள்ளுபடி செய்யப்பட்டது என எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பதிலளித்தார்.</p><p>அப்போது குறுக்கிட்டுப் பேசிய சபாநாயக்ர் ஜேசிடி பிரபாகர், எடப்பாடி பழனிசாமி உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக பேச வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.</p><p>ஒரு மாதத்தில் 6 பேர் ராஜினாமா செய்துள்ளனர். ஆதாயம் இன்றி ராஜினாமா செய்வார்களா? என ஆஸ்டின் கேள்வி எழுப்பினார்.</p><p>இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்க முடியும். நாம் முடிவு செய்ய முடியாது என்றார் சபாநாயகர்.</p><p>6 தொகுதிகளில் எம்எல்ஏக்கள் இல்லாத நிலையில் மக்கள் தங்களது பிரச்சனைகளை யாரிடம் கூறுவது என எம்எல்ஏ ஆஸ்டின் கேள்வி எழுப்பினார்.</p><p>மக்கள் பிரச்சனைகளைக் கேட்டு நிறைவேற்றுவதற்காக 6 தொகுதிகளுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என  அமைச்சர் ஆதவ் தெரிவித்தார்.</p><p>அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம் தொடர்பாக தமிழக சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் செங்கோட்டையன் இடையே கடும் வாக்குவாதம் உருவானதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சராக விஜய்... தமிழக மக்கள் அதிர்ஷ்டசாலிகள்... நடிகர் யாஷ் பேச்சு </title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-yash-hails-vijays-commitment-to-the-people-of-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-yash-hails-vijays-commitment-to-the-people-of-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">92ab7624-bb9c-4764-9236-3d26d75f7849</guid><pubDate>Tue, 25 Aug 2026 05:51:00 +0000</pubDate><atom:updated>2026-08-25T05:51:00.666Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Yash,Toxic,டாக்ஸிக்,யாஷ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/730nqu05/yash.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்- நடிகர் யாஷ்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்- நடிகர் யாஷ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/730nqu05/yash.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதலமைச்சர் விஜய்யின் பொறுப்புணர்ச்சியை பார்க்கும் போது நமக்கே வியப்பாக இருக்கிறது என நடிகர் யாஷ் கூறியுள்ளார்.</strong></em></p><p>கீது மோகன்தாஸ் இயக்கத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D">யாஷ்</a> நடிப்பில் நாளை திரைக்கு வர இருக்கும் படம் ‘டாக்ஸிக்’. படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹீமாகுரேஷி, ருக்மினி வசந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். கே.வி.என். புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அதிக பொருட் செலவில் பிரமாண்டமாக உருவாகி உள்ள இந்த படத்தின் முன்னோட்ட விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் நடிகர் யாஷ் பேசியதாவது:-</p><h2><strong>வியப்பு</strong></h2><p>தமிழ்நாட்டு மக்கள் எப்போதும் எனக்கு நிறைய அன்பை  கொடுத்து வருகிறார்கள்.  சினிமா என்றால் தமிழ், கன்னடம், தெலுங்கு என்று இல்லை. அது இந்திய சினிமாதான். ‘டாக்ஸிக்’ படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும்.</p><p>முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்</a> எல்லோரையும் கவரக்கூடிய மனிதர். தமிழக மக்கள் ரொம்ப அதிர்ஷ்டசாலிகள். விஜய் மீது உள்ள பாசத்தை தேர்தல் மூலம் நிரூபித்திருக்கிறார்கள். அவரும் மக்கள் மீது உள்ள பாசத்தை முதலமைச்சராக அவர் செய்யும் கடமைகள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தி வருகிறார். முதலமைச்சர் விஜய்யின் பொறுப்புணர்ச்சியை பார்க்கும் போது நமக்கே வியப்பாக இருக்கிறது.</p><h2><strong>வெளிப்படையான தேர்தல்</strong></h2><p>மக்களுக்கான பணியினை நல்ல முறையில் செய்து கொண்டிருக்கிறார். தயாரிப்பாளர் வெங்கட் நாராயணன் முதலமைச்சர் விஜய் காலை முதல் இரவு வரை மக்களுக்காக பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என அடிக்கடி சொல்வார். இதன் மூலம் என்ன தெரிகிறது என்றால் விஜய் மீது மக்கள் வைத்திருந்த அன்பை நாம் திருப்பி கொடுக்க வேண்டும். விஜய்க்கு அதற்கான நேரம் இப்போது வந்துள்ளது. விஜய் முதலமைச்சராக கிடைத்ததற்கு நாம் ரொம்ப அதிர்ஷ்டசாலி. எப்பவும் உள்ள அரசியல் இல்லாமல் புதுவிதமான அரசியல் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அதைப் பார்க்கும் போது நமக்கு ரொம்ப மகிழ்ச்சி வருகிறது. </p><p>எல்லோருக்குமே தெரியும் இந்த தேர்தல் வெளிப்படையான தேர்தலாக நடந்தது.</p><p>தமிழக தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது மக்கள் முதலமைச்சர் விஜய்க்கு எவ்வளவு பெரிய பொறுப்பை கொடுத்துள்ளனர் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. விஜய்க்கும் அதற்குரிய அனைத்து தகுதியும் இருக்கிறது. இந்த அரசியலை பார்த்து உலக அரசியலும் மாற வேண்டும். தமிழக மக்கள் சரியான முடிவை எடுத்துள்ளனர்.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>பெண்ணின் தலையை சிதைத்து ரெயிலில் இருந்து வீசினார்களா?- தலைமறைவு தம்பதி பற்றி பரபரப்பு தகவல்கள்</title><link>https://www.maalaimalar.com/news/topnews/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D#comments</comments><guid isPermaLink="false">a781be19-9485-445f-8f30-3687059b2d9b</guid><pubDate>Tue, 25 Aug 2026 05:46:42 +0000</pubDate><atom:updated>2026-08-25T05:46:42.734Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>electric train,மின்சார ரெயில்,Murder,கொலை,Guduvancherry Woman Murder,Northstate Couple,கூடுவாஞ்சேரி பெண் கொலை,வடமாநில தம்பதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/vmj3n1um/murdercasee.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/vmj3n1um/murdercasee.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>உள்ளூர் செய்திகள் (District News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து கடந்த 5-ந்தேதி டெல்லி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் சிவப்பு நிற சூட்கேசில் துண்டு துண்டாக வெட்டி எடுக்கப்பட்ட பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது.</p><p>இதுபற்றி அம்மாநில போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். சென்னையில் இருந்து பெண்ணை கொன்று கொலை செய்து சூட்கேசில் அனுப்பி வைத்த தால் சென்னைக்கு வந்து விசாரணை மேற்கொண்டார்கள்.</p><h2><strong>வீடியோ காட்சிகள்</strong></h2><p>சென்ட்ரல் ரெயில் நிலைய போலீசாருடன் இணைந்து விசாரித்த ஆக்ரா போலீசார் வீடியோ காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது கொலை செய்யப்பட்ட பெண் கூடுவாஞ்சேரியில் வைத்து துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.</p><p>அவரது பெயர் ஹயாத் நிஷா என்பதும், கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த அவரை ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்த அசாமை சேர்ந்த ராகுல், ஒடிசாவை சேர்ந்த பகவதி மாஜி ஆகிய இருவரும் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ராகுல்-பகவதி மாஜி தம்பதியை பிடிப்பதற்கு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.</p><h2><strong>தப்பி ஓட்டம்</strong></h2><p>இது தொடர்பாக அசாம் மற்றும் ஒடிசாவுக்கு 2 தனிப்படைகள் விரைந்து சென்று உள்ளன. சென்னையில் 2 தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள். வீடியோ காட்சி வெளியில் வந்ததும் தம்பதி உஷாராகி தங்களது செல்போன் எண்ணை சுவிட்ச் ஆப் செய்து தலைமறைவாகி விட்டனர். இதனால் அவர்கள் இருக்கும் இடத்தை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை.</p><p>இதை தொடர்ந்து தம்பதியின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோரது செல்போன் எண்களை போலீசார் கண்காணித்து வருகிறார்கள். அவர்கள் மூலமாக இருவரையும் பிடிக்க வலைவிரிக்கப்பட்டுள்ளது.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/vlaon5ef/andaa.jpg" /></figure><h2><strong>தலை எங்கே?</strong></h2><p>இதற்கிடையே கொலையுண்ட பெண்ணின் தலை இன்னும் சிக்காமல் உள்ளது. கொலையாளிகள் இருவரும் ஹயாத் நிஷாவை துண்டு துண்டாக வெட்டிக் கொன்றதுடன் சதை பாகங்கள் பெரிய அண்டாவில் போட்டு சமைத்ததும் போலீசாருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இப்படி பெண்ணின் உடல் பாகங்கள் ஈவு இரக்கமின்றி வெட்டி எடுத்த தம்பதி துண்டிக்கப்பட்ட தலையை எங்கு வீசினார்கள் என்பதும் தெரியவில்லை.</p><h2><strong>சிதைத்தார்களா?</strong></h2><p>உடலை துண்டு துண்டாக வெட்டி எடுத்துவிட்டு தலையை துண்டித்த தம்பதி அதனை அடையாளம் தெரியாத அளவுக்கு சுக்கு நூறாக சிதைத்து தனித்தனியாக வீசி இருக்கலாமா? என்கிற சந்தேகமும் ஏற்பட்டிருக்கிறது. கூடுவாஞ்சேரியில் இருந்து சூட்கேசில் பெண்ணின் உடல் பாகங்கள் அடைத்து எடுத்து வந்த போது தலையையும் தனியாக ஒரு பையில் வைத்து எடுத்து வந்திருக்கலாம் என கருதப்படுகிறது. அப்போது ரெயிலில் இருந்தபடியே தலை இருந்த பையை மட்டும் தண்டவாளம் மூலமாக வீசி இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.</p><h2><strong>3 வாரம் தேடுதல்</strong></h2><p>கடந்த 5-ந்தேதி ஆக்ராவில் பெண்ணின் உடல் பாகங்கள் மீட்கப்பட்ட நிலையில் மறுநாளே அங்குள்ள போலீசார் சென்னை வந்து கொலை செய்யப்பட்டவரை அடையாளம் கண்டுவிட்டனர். அன்று முதல் பெண்ணின் தலையை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இதன் மூலம் கடந்த 3 வாரங்களாக ஹயாத் நிஷாவின் தலையை தேடி அலையும் போலீசார் அதனை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகிறார்கள்.</p><h2><strong>உயர் போலீஸ் அதிகாரிகள்</strong></h2><p>தாம்பரம் போலீஸ் கமிஷனர் பிரேமானந்த் சின்கா உத்தரவின் பேரில் உயர் போலீஸ் அதிகாரிகள் மேற்பார்வையில் இந்த வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. போலீசுக்கு பெரும் சவாலாக இருக்கும் இந்த வழக்கில் எப்படி துப்பு துலக்கி கொலையாளிகளை கண்டுபிடித்து விடுவோம் என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.</p><h2><strong>அசாம் மற்றும் ஒடிசா</strong></h2><p>அசாம் மற்றும் ஒடிசாவில் கொலையாளிகளின் உறவினர்களை பிடித்து விசாரித்து வரும் போலீசார் அவர்கள் மூலமாக தம்பதி பதுங்கி இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பதற்கு திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் விரைவில் கொலையாளிகள் பிடிபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவில் மிலாது நபி நாளை அனுசரிப்பு: நபிகளாரின் புகழ்பாடும் ஈத்-ஏ-மீலாத் சிறப்புத் தொகுப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/milad-un-nabi-observance-in-india-tomorrow-special-eid-e-milad-feature</link><comments>https://www.maalaimalar.com/news/national/milad-un-nabi-observance-in-india-tomorrow-special-eid-e-milad-feature#comments</comments><guid isPermaLink="false">bb63be1b-1b5f-44e2-905e-ee1658664259</guid><pubDate>Tue, 25 Aug 2026 05:41:53 +0000</pubDate><atom:updated>2026-08-25T05:41:53.280Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,நபிகள் நாயகம்,மிலாது நபி,MiladunNabi,EideMilad,Muhammad,ஈத்-ஏ-மீலாத்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/rlmhxn8k/eid.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  EideMilad  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/rlmhxn8k/eid.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இஸ்லாமிய மார்க்கத்தின் இறுதித் தூதரான நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை நினைவுகூரும் மிலாது நபி  (ஈத்-ஏ-மீலாத்) திருநாள், இந்தியாவில் நாளை (ஆகஸ்ட் 26) அன்று அனுசரிக்கப்படுகிறது. இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியின் மூன்றாவது மாதமான ரபி உல் அவ்வல் மாதத்தில் நிலவு தென்படுவதன் அடிப்படையில் இந்த புனித நாள் தீர்மானிக்கப்படுகிறது. சுன்னி பிரிவைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் ரபி உல் அவ்வல் மாதத்தின் 12-ஆம் நாளிலும், ஷியா பிரிவினர் 17-ஆம் நாளிலும் இந்நிகழ்வைக் குறிக்கின்றனர்.</p><h2>மிலா<strong>து நபி வரலாறு</strong> </h2><p>கி.பி 570-ஆம் ஆண்டில் சவுதி அரேபியாவில் உள்ள புனித மக்கா நகரில் நபிகள் நாயகம் பிறந்ததாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. தொடக்க காலத்தில் இந்நாள் அவரது மறைவை நினைவுகூரும் அமைதியான நாளாகவே கருதப்பட்டது. பின்னர் 10 மற்றும் 11-ஆம் நூற்றாண்டுகளில் பாத்திமித் ஆட்சியாளர்களின் காலத்தில், நபிகளாரின் வாழ்க்கை வரலாறு, போதனைகள் மற்றும் இறை வழிபாடுகளை முன்னிறுத்தி பொது நிகழ்வாகக் கொண்டாடத் தொடங்கப்பட்டது. காலப்போக்கில் இது உலகெங்கிலும் உள்ள <a href="https://www.maalaimalar.com/news/national/protests-in-manipur-over-inclusion-of-2-non-muslim-members-in-waqf-board">முஸ்லிம்களால்</a> தங்களது ஆன்மீக நெறிமுறைகளைப் புதுப்பிக்கும் சிறப்புமிக்க நாளாக மாறியது.</p><h2>புனித நா<strong>ளின் முக்கியத்து</strong>வம்</h2><p>மிலாது நபி என்பது வெறும் பண்டிகை மட்டுமே அல்லாமல், நபிகள் நாயகம் மனிதகுலத்திற்குப் போதித்த அன்பு, அமைதி, கருணை, நேர்மை மற்றும் சகோதரத்துவம் ஆகிய நற்பண்புகளை மீண்டும் நினைவுகூரும் புனித நாளாகும். ஏழை எளியவர்களுக்கு உதவுதல், பசித்தோருக்கு உணவளித்தல் மற்றும் மனிதநேயப் பணிகளை மேற்கொள்வது இந்நாளின் முக்கிய நோக்கமாகும்.</p><h2>இந்தியாவில் <strong>கொண்டாடப்படும் மு</strong>றைகள்</h2><p>இந்நாளில் மசூதிகள் மற்றும் வீடுகள் மின் விளக்குகளாலும் பசுமை நிறக் கொடிகளாலும் அலங்கரிக்கப்படும். இஸ்லாமிய பெருமக்கள் அதிகாலையிலேயே மசூதிகளுக்குச் சென்று சிறப்புத் தொழுகைகளில் ஈடுபடுவர். நபிகளாரின் புகழைப் பாடும் 'நாத்' பாடல்கள் இசைக்கப்படுவதும், அவரது வரலாற்றுப் போதனைகள் (சீரா) குறித்த சொற்பொழிவுகள் நிகழ்த்தப்படுவதும் வழக்கம். பல இடங்களில் அமைதிப் பேரணிகள் மற்றும் ஏழைகளுக்கு அன்னதானம் ஆகியவை சிறப்பாக நடத்தப்படும்.</p>]]></content:encoded></item><item><title>2027 பல்சர் சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது பஜாஜ் - விலை மற்றும் முழு விவரங்கள்!</title><link>https://www.maalaimalar.com/automobilenews/bike/2027-bajaj-pulsar-150-125-launched</link><comments>https://www.maalaimalar.com/automobilenews/bike/2027-bajaj-pulsar-150-125-launched#comments</comments><guid isPermaLink="false">ec5ea085-aa13-47ff-b90d-2961446d6a56</guid><pubDate>Tue, 25 Aug 2026 05:32:00 +0000</pubDate><atom:updated>2026-08-25T05:32:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>bike,பைக்,bajaj auto,பஜாஜ் ஆட்டோ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/b0wv2erf/2027-Bajaj-Pulsar.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 2027 Bajaj Pulsar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/b0wv2erf/2027-Bajaj-Pulsar.png?w=280" width="280"></media:thumbnail><category>பைக் (Automobile)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/bajaj-auto">பஜாஜ் ஆட்டோ</a> நிறுவனம் தனது புகழ்பெற்ற இரண்டு மாடல்களான பஜாஜ் பல்சர் 125 மற்றும் பல்சர் 150 சீரிஸ் மாடல்களை மேம்படுத்தியது. புதிய பல்சர் 125 விலை ரூ. 92,990-இல் இருந்தும், பல்சர் 150 விலை ரூ. 1.15 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. இந்த இரண்டு மோட்டார்சைக்கிள்களிலும் ஹார்டுவேர் அப்டேட்களுடன் முக்கிய மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.</p><p>வடிவமைப்பைப் பொறுத்தவரை, இரண்டு மோட்டார்சைக்கிள்களும் ஒரே மாதிரியான வடிவமைப்பு கொண்டுள்ளன மற்றும் முழுமையான LED அமைப்பை கொண்டுள்ளன. </p><p>இருப்பினும், முக்கிய மாற்றங்கள் ஹார்டுவேர் பிரிவில்தான் உள்ளன. அவை இப்போது பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனையும், புதிய எக்ஸாஸ்ட் அமைப்பையும் பெற்றுள்ளன. மேலும், டைமண்ட் ஃபிரேம் கொண்டுள்ளன.</p><h2>சிறப்பு அம்சங்கள்:</h2><p>அம்சங்களை பொறுத்தவரை, பஜாஜ் பல்சர் 125 மற்றும் 150 மாடல்களில் புதிய 5-இன்ச் TFT கன்சோல், நேவிகேஷன் மற்றும் ஸ்கிரீன் மிரரிங் உள்ளிட்ட முக்கிய அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. பல்சர் 125 மாடலில் ஸ்போர்ட், ரோடு மற்றும் ரெயின் என மூன்று ரைடு மோட்களும், ஐடில் ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டமும் உள்ளன. மேலும், டைப்-சி சார்ஜிங் போர்ட் இதில் இடம்பெற்றுள்ளது.</p><p>பிரேக்கிங் அமைப்பைப் பொறுத்தவரை, பல்சர் 125 மாடலில் முன்பக்கத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்பக்கத்தில் டிரம் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளன. அதே சமயம், பல்சர் 150 மாடலில் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் என இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகளுடன் கூடிய இரட்டை டிஸ்க் பிரேக் அமைப்பு உள்ளது.</p><p>மூன்று வேரியண்ட்டுகளில் வழங்கப்படும், இதில் டாப்-ஸ்பெக் வேரியண்ட்டில் ஸ்ப்ளிட்-சீட் அமைப்பு இடம்பெறும். கீழ்நிலை வேரியண்ட்டுகளில் சிங்கிள்-பீஸ் சீட் அமைப்பு தொடரும்.</p><h2>என்ஜின்:</h2><p>பஜாஜ் பல்சர் 125 மாடலிில் 11.6 bhp பவர் மற்றும் 11.4 Nm நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும் 124.38cc சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.</p><p>புதிய பல்சர் 150 மாடலில் 13.8 bhp பவர் மற்றும் 14.1 Nm நியூட்டன் மீட்டர் டார்க் திறன் வெளிப்படுத்தும், ஃப்யூல் இன்ஜெக்ஷன் மற்றும் ட்வின் ஸ்பார்க் தொழில்நுட்பத்துடன் கூடிய 149.5cc சிங்கிள்-சிலிண்டர், ஃபோர்-ஸ்ட்ரோக், ஆயில்-கூல்டு என்ஜினை பெறுகிறது.</p><p>இந்த இரண்டு மோட்டார்சைக்கிள்களும் ஸ்டார்ட் மற்றும் கியர் ஷிஃப்டுகளை வழங்கும் நோக்கில், 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், வெட் மல்டி-பிளேட் கிளட்ச் மற்றும் எலக்ட்ரானிக் இக்னிஷன் சிஸ்டம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளன.</p><p>இந்திய சந்தையில் பல்சர் 150 ஆனது ஹோண்டா சிபி யூனிகார்ன் 160 மற்றும் டி.வி.எஸ். அப்பாச்சி ஆர்.டி.ஆர். 160 ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது, அதே சமயம் பல்சர் 125 ஆனது ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர், டி.வி.எஸ். ரைடர் 125 மற்றும் ஹோண்டா எஸ்.பி. 125 ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது.</p>]]></content:encoded></item><item><title>புதிய ஏ.சி. மின்சாரப் பஸ்கள் சேவையை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-inaugurated-the-new-ac-electric-bus-service</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-inaugurated-the-new-ac-electric-bus-service#comments</comments><guid isPermaLink="false">0fc5818d-4886-4fc7-8525-00bc3767cd09</guid><pubDate>Tue, 25 Aug 2026 05:28:54 +0000</pubDate><atom:updated>2026-08-25T05:28:54.694Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,TN Govt,தமிழக அரசு,electric bus,மின்சார பஸ்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/bvl7c2hu/bus.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ புதிய ஏ.சி. மின்சாரப் பஸ்கள் சேவையை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ புதிய ஏ.சி. மின்சாரப் பஸ்கள் சேவையை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/bvl7c2hu/bus.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>130 புதிய ஏ.சி. மின்சார பஸ்கள் ஆலந்தூர், பெரம்பூர், ஆவடி, சென்ட்ரல், பாடியநல்லூர், கேகே நகர், அய்யப்பன்தாங்கள் உள்ளிட்ட பணிமனைகளில் இருந்து இயக்கப்படுகிறது.</strong></em> </p><p>சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், முதற்கட்டமாக ரூ.697 கோடி மதிப்பீட்டில், 625 தாழ்தள மின்சாரப் பஸ்கள் (மொத்த விலை ஒப்பந்தத்தின் அடிப்படையில்) வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, சென்ட்ரல் பணிமனை மற்றும் தண்டையார்பேட்டை-1 உள்ளிட்ட 5 பணிமனைகளில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.</p><p>இதனைத் தொடர்ந்து, 2-ம் கட்டமாக 750 புதிய தாழ்தள குளிர்சாதன மின்சாரப் பஸ்கள் ஆலந்தூர், சென்டிரல் பணிமனை-2, பெரம்பூர், பாடியநல்லூர், ஆவடி, கே.கே. நகர் மற்றும் ஐயப்பன்தாங்கல் உள்ளிட்ட 7 பணிமனைகளில் இருந்து இயக்க திட்டமிடப்பட்டது.</p><h2><strong>முதலமைச்சர் தொடங்கி வைத்தார்</strong></h2><p>இதில் முதன் முதலாக ஆலந்தூர் பணிமனையில் இருந்து  ரூ.234.50 கோடி மதிப்பில் 130 புதிய ஏ.சி. மின்சார பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த மின்சார பஸ்கள் இயக்கத்தை முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்</a> சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். </p><p>அதன்படி, சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மின்சார பஸ்களை முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார். </p><figure><img alt="ஏ.சி. மின்சாரப் பஸ்கள் " src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/7wxivr7b/bus0.jpg" /><figcaption>ஏ.சி. மின்சாரப் பஸ்கள் </figcaption></figure><p>130 புதிய ஏ.சி. மின்சார பஸ்கள் ஆலந்தூர், பெரம்பூர், ஆவடி, சென்ட்ரல், பாடியநல்லூர், கேகே நகர், அய்யப்பன்தாங்கள் உள்ளிட்ட பணிமனைகளில் இருந்து இயக்கப்படுகிறது. </p><p>அதனை தொடர்ந்து மின்சார பேருந்தில் ஏறி பார்வையிட்டு, ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களிடம் பஸ்களின் வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் ரூ.55.58 கோடி மதிப்பில் 120 புதிய பஸ்களையும் முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கிவைத்தார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/phase-2-electric-buses-in-chennai-cm-vijay-to-launch-them-tomorrow">சென்னை</a> தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன், தலைமைச் செயலர் சாய்குமார், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். </p>]]></content:encoded></item><item><title>மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும்?: சட்டசபையில் பதிலளித்த அமைச்சர் ஆனந்த்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-anand-tell-tn-assembly-mettu-dam-when-open</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-anand-tell-tn-assembly-mettu-dam-when-open#comments</comments><guid isPermaLink="false">aa9cd81a-e916-41c4-86e7-4290318ec9ed</guid><pubDate>Tue, 25 Aug 2026 05:17:34 +0000</pubDate><atom:updated>2026-08-25T05:17:34.225Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,Mettur Dam,தமிழக சட்டசபை,TN assembly,Minister Anand,அமைச்சர் ஆனந்த்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/kye81r44/anand.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ minister anand]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/kye81r44/anand.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் அமைச்சர் மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும்? என்ற கேள்விக்கு நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் பதிலளித்தார்.</p><p>தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகிறது. அப்போது பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ. கோவி செழியன், மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும்? என கேள்வி எழுப்பினார்.</p><p>தமிழக சட்டசபையில் இன்று தி.மு.க. எம்.எல்.ஏ. கோவி செழியன் பேசும்போது, டெல்டா மாவட்ட விவசாயிகள் காவிரியில் எப்போது தண்ணீர் திறக்கப்படும் என்று ஏக்கத்தோடு காத்திருக்கிறார்கள். அணை எப்போது திறக்கப்படும்? அரசு அறிவிக்க இயலுமா? என அரசின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன் என்றார்.</p><h2>விரைவில் நல்ல செய்தி</h2><p>இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் என்.ஆனந்த், மேட்டூர் அணை திறப்பது தொடர்பாக கூடிய விரைவில் நல்ல செய்தி அறிவிக்கப்படும் என தெரிவித்தார். </p><h2>எடப்பாடி பழனிசாமி</h2><p>இந்த விவகாரம் குறித்து முன்னாள் முதலமைச்ச ரும் அ.தி.மு.க. சட்டமன்ற குழு தலைவருமான எடப்பாடி பழனிசாமியும் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:</p><p>இதுகுறித்து ஏற்கனவே அவையில் கவன ஈர்ப்பு கொடுத்துள்ளோம். ஏற்கனவே குறுவை சாகுபடி தண்ணீர் திறக்கப்படவில்லை. இது சம்பந்தமாக நீர்வளத்துறை அமைச்சர் அணையில் தண்ணீர் இல்லாததால் திறக்கப்படவில்லை என சபையில் தெரிவித்தார். இப்போது அணை நிரம்பிக் கொண்டிருக்கிறது. தண்ணீரும் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. டெல்டா மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். விவசாய தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.</p><h2>திறக்கப்படுமா?</h2><p>எனவே இந்த ஆண்டு சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுமா? அது எப்போது திறக்கப்படும்? திறப்பதாக இருந்தால் 15 நாட்களுக்கு முன்பாகவே அறிவிக்கப்பட்டால்தான் நாற்றங்கால் வைக்கக் கூடிய பணி தொடங்கப்ப டும். எனவே நீர்வளத்துறை அமைச்சர் எப்போது மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்டத்தில் சம்பா சாகுபடி செய்ய தண்ணீர் திறக்கப்படும் என்பதை அறிய விரும்புகிறேன் என தெரிவித்தார்.</p><p>மேட்டூர் அணை திறப்பது தொடர்பாக பல்வேறு எம்.எல்.ஏ.க்களும் இன்று சட்ட சபையில் பேசினார்கள்.</p>]]></content:encoded></item><item><title>நச்சுத்தன்மையுள்ள &apos;ஊமத்தங்காய்&apos; விற்பனை: அமேசான், இன்ஸ்டாமார்ட், பிக்பாஸ்கெட் உணவு உரிமங்கள் தற்காலிக ரத்து!</title><link>https://www.maalaimalar.com/news/topnews/toxic-datura-sales-amazon-instamart-bigbasket-licenses-suspended</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/toxic-datura-sales-amazon-instamart-bigbasket-licenses-suspended#comments</comments><guid isPermaLink="false">052bf9cc-2218-4241-8069-ad4598b281ed</guid><pubDate>Tue, 25 Aug 2026 05:15:52 +0000</pubDate><atom:updated>2026-08-25T05:15:52.162Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Karnataka,அமேசான்,Amazon,பிக்பாஸ்கெட்,Bigbasket,இன்ஸ்டாமார்ட்,Datura fruit,Instamart,ஊமத்தங்காய்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/e9cwinnw/swiggy.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Datura fruit ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/e9cwinnw/swiggy.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, முன்னணி ஆன்லைன் வணிக நிறுவனங்களான அமேசான், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் மற்றும் பிக்பாஸ்கெட் ஆகியவற்றின் உணவு உரிமங்களை தற்காலிகமாக இடைநீக்கம் செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளது. மனிதர்கள் உண்பதற்குப் பொருத்தமற்ற, ஆபத்தான 'ஊமத்தங்காய்' மற்றும் அதன் விதைகளை உணவுப் பொருளாகத் தங்களது தளங்களில் காட்சிப்படுத்தி விற்பனை செய்ததற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>ஆபத்தான ஊ<strong>மத்தங்காய்</strong> விற்பனை</h2><p>பொதுமக்களிடம் இருந்து வந்த புகார்களின் அடிப்படையில் <a href="https://www.maalaimalar.com/news/national/27-students-fall-ill-after-consuming-mid-day-meal-at-rajasthan-school">உணவு பாதுகாப்புத் துறை</a> அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், நச்சுத்தன்மை கொண்ட ஊமத்தங்காய் மற்றும் விதைகள், FSSAI உணவு பாதுகாப்பு உரிம எண்களுடன் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு, இந்த ஆன்லைன் நிறுவனங்களின் சேமிப்புக் கிடங்குகளில் வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. ஊமத்தங்காய் உட்கொள்வது மனித உயிருக்குத் தீவிர ஆபத்தை விளைவிக்கும் என்றும், இது கோமா நிலைக்கு அல்லது உயிரிழப்பிற்கு வழிவகுக்கும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.</p><p>இது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்ட நிலையில், அமேசான் நிறுவனம் எந்தவொரு முறையான பதிலும் அளிக்கவில்லை. ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் நிறுவனம் விளக்க ஆவணங்களைச் சமர்ப்பிக்க கூடுதல் அவகாசம் கோரியது. பிக்பாஸ்கெட் நிறுவனம், ஊமத்தங்காய் விற்பனையை ஆன்லைனில் உடனடியாக நிறுத்திவிட்டதாகவும், இனிவரும் காலங்களில் 'மனித நுகர்வுக்கு உகந்தது அல்ல' என்ற எச்சரிக்கை லேபிளுடன் மட்டுமே மாற்றியமைக்கப்படும் என்றும் தெரிவித்தது.</p><p>இருப்பினும், இந்நிறுவனங்களின் பதில்கள் திருப்திகரமாக இல்லை எனக் கூறிய உணவு பாதுகாப்புத் துறை, ஆன்லைன் உணவு வணிக உரிமங்களை உடனடியாக இடைநீக்கம் செய்துள்ளது. மேலும், இந்த ஆன்லைன் தளங்களுக்கு ஊமத்தங்காய்களை விநியோகம் செய்த விற்பனையாளர்களின் உரிமங்களும் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட பொருட்கள் தொடர்பான விளம்பரங்கள் மற்றும் பட்டியல்களைத் தங்களது செயலிகளிலிருந்து உடனடியாக நீக்குமாறு அரசு கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY : சற்று குறைந்த தங்கம் விலை- இன்றைய நிலவரம்!</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-25-08-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-25-08-2026#comments</comments><guid isPermaLink="false">aa630faa-c3c5-4af7-b8ab-79de69559284</guid><pubDate>Tue, 25 Aug 2026 05:05:44 +0000</pubDate><atom:updated>2026-08-25T05:05:44.658Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/y37wua91/gold07.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ தங்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/y37wua91/gold07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இன்றும் தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று குறைந்துள்ளது.</strong></em> </p><p>ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் பிறந்துள்ளதால் <a href="https://www.maalaimalar.com/topic/தங்கம்">தங்கம்</a> விலை ஏறுமுகமாகவே உள்ளது. அந்த வகையில், வார தொடக்கநாளான நேற்று தங்கம் விலை கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 30-க்கும் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த 15-ந்தேதியில் இருந்து நேற்று வரை தங்கம் விலை சவரனுக்கு ரூ.6,480 உயர்ந்துள்ளது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. </p><h2><strong>சற்று குறைந்த தங்கம் விலை</strong></h2><p>இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 10-க்கும் சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது. </p><h2><strong>வெள்ளி விலை நிலவரம்</strong> </h2><p>தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. அந்த வகையில், இன்று வெள்ளி கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 265 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. </p><h2><strong>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்</strong></h2><p>24-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,240</p><p>23-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,600</p><p>22-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,600</p><p>21-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,800</p><p>20-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,800</p><h2><strong>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>24-08-2026- ஒரு கிராம் ரூ.275</p><p>23-08-2026- ஒரு கிராம் ரூ.270</p><p>22-08-2026- ஒரு கிராம் ரூ.270</p><p>21-08-2026- ஒரு கிராம் ரூ.270</p><p>20-08-2026- ஒரு கிராம் ரூ.260</p>]]></content:encoded></item><item><title>கேப்டன் புகழ் நீடுவாழ்க!- மு.க.ஸ்டாலின் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-praise-vijayakanth</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-praise-vijayakanth#comments</comments><guid isPermaLink="false">48c6610c-a749-4768-90f6-e7da14f8ba68</guid><pubDate>Tue, 25 Aug 2026 04:52:15 +0000</pubDate><atom:updated>2026-08-25T04:52:15.265Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMDK,தேமுதிக,vijayakanth,முக ஸ்டாலின்,விஜயகாந்த்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/737hovcr/mkstalin.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/737hovcr/mkstalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>விஜயகாந்தின் கனவுகளை நனவாக்க உழைக்கும் தே.மு.தி.க. தோழர்களுக்கும் அவர்களை வழிநடத்தும் அன்புச் சகோதரி திருமதி பிரேமலதாவுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.</strong></em></p><p>நடிகரும், தே.மு.தி.க. நிறுவனத் தலைவருமான மறைந்த <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D">விஜயகாந்தின்</a> 74-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் தொண்டர்கள், ரசிகர்கள் திரண்டு மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-praise-to-vijayakanth">விஜயகாந்த்</a> பிறந்தநாளையொட்டி அவரை அரசியல் தலைவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். </p><p>அந்த வகையில், முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><h2><strong>புகழ் நீடுவாழ்க!</strong> </h2><p>ஏழை மக்களின் மேல் கொண்ட அளவற்ற அன்பால் அவர்களின் நெஞ்சத்தில் நீங்காத நினைவாய் வாழும் எனது அருமை நண்பரும் தே.மு.தி.க. நிறுவனருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் இன்று!</p><p>அவரின் கனவுகளை நனவாக்க உழைக்கும் தே.மு.தி.க. தோழர்களுக்கும் அவர்களை வழிநடத்தும் அன்புச் சகோதரி திருமதி </p><p>பிரேமலதாவுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>கேப்டன் அவர்களின் புகழ் நீடுவாழ்க! என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">ஏழை மக்களின் மேல் கொண்ட அளவற்ற அன்பால் அவர்களின் நெஞ்சத்தில் நீங்காத நினைவாய் வாழும் எனது அருமை நண்பரும் தே.மு.தி.க. நிறுவனருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் இன்று!<br><br>அவரின் கனவுகளை நனவாக்க உழைக்கும் தே.மு.தி.க. தோழர்களுக்கும் அவர்களை வழிநடத்தும் அன்புச் சகோதரி திருமதி… <a href="https://t.co/x2epVGxjgC">pic.twitter.com/x2epVGxjgC</a></p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2092102624015495294?ref_src=twsrc%5Etfw">August 25, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>ரூ. 10,000 பட்ஜெட்டில் புது IER ஹெட்போன்அறிமுகம் செய்த சோனி - என்ன ஸ்பெஷல்?</title><link>https://www.maalaimalar.com/technology/newgadgets/sony-ier-m500-wired-in-ear-monitors-launched-in-india</link><comments>https://www.maalaimalar.com/technology/newgadgets/sony-ier-m500-wired-in-ear-monitors-launched-in-india#comments</comments><guid isPermaLink="false">c6dbc43f-178d-42f7-a5ed-947d5f6b96ec</guid><pubDate>Tue, 25 Aug 2026 04:46:00 +0000</pubDate><atom:updated>2026-08-25T04:46:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sony,சோனி,IEM,இன் இயர் மாணிட்டர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/apu9v9vs/Sony-IER-M500.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sony IER-M500]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/apu9v9vs/Sony-IER-M500.png?w=280" width="280"></media:thumbnail><category>புதிய கேஜெட்டுகள் (New gadgets)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/sony">சோனி</a> நிறுவனம் இந்திய சந்தையில் IER-M500 பெயரில் புதிய இன்-இயர் மாணிட்டர் மாடலை அறிமுகம் செய்தது. இந்த மாடல் தொழில்முறை ஆடியோ மாணிட்டரிங் மற்றும் லைவ் பெர்ஃபார்மன்ஸ் பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. </p><p>இந்த இயர்போன்கள் 5mm டைனமிக் டிரைவர்கள், சீல்டு அகௌஸ்டிக் டிசைன் கொண்டுள்ளன. இது பேசிவ் நாய்ஸ் ஐசோலேஷன் வசதியை வழங்குகிறது. இத்துடன் பல்வேறு இயர் டிப்கள், ஃபிட்டிங் சப்போர்ட்ர்ஸ், கேபிள் க்ளிப் மற்றும் கேஸ் உள்ளிட்டவை இந்த இயர்போனுடன் வழங்கப்படுகிறது.</p><p>புதிய சோனி IER-M500 மாடல் கடந்த ஜூலை மாத வாக்கில் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்திய சந்தையிலும் விற்பனைக்கு வந்தள்ளது. இந்த இயர்போன் மொத்தத்தில் மூன்றுவித நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.</p><h2>சிறப்பு அம்சங்கள்:</h2><p>சோனி IER-M500 5mm டிரைவர்களை கொண்டிருக்கிறது. இந்த இயர்போன்கள் சீல்டு ஹவுசிங், இன்டர்னல் அகௌஸ்டிக் வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இது வெளிப்புற சத்தத்தை குறைக்க செய்கிறது. இத்துடன் நாய்ஸ்-ஐசோலேட்டிங் இயர் டிப்கள் வழங்கப்படுகிறது. இது பேசிவ் நாய்ஸ் ஐசோலேஷன் அனுபவத்தை மேம்படுத்துகிறது.</p><p>கனெக்டிவிட்டிக்கு சோனி IER-M500 மாடலிில் 1.6m வயர்டு Y-டைப் கேபிள் மற்றும் L-வடிவ ஸ்டீரியோ மினி பிளக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த இயர்போனுடன் ஃபிட்டிங் சப்போர்ட்டர்ஸ், பலவித அளவுகளல் நாய்ஸ்-ஐசோலேட்டிங் இயர் டிப்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய கேபிள் க்ளிப் வழங்கப்படுகிறது. கேபிள் தவிர்த்து இந்த இயர்போனின் எடை 6.9 கிராம் ஆகும்.</p><h2>விலை மற்றும் விவரங்கள்:</h2><p>இந்திய சந்தையில் சோனி IER-M500 மாடலின் விலை ரூ. 10,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இயர்போன் பிளாக், க்ளியர் மற்றும் ரெட் அண்ட் பிளாக் நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த இயர்போன் அமேசான், ப்ளிப்கார்ட், ரியல் இமேஜ், சவுண்ட் க்ளிட்ஸ், ஹெட்போன் ஜோன் மற்றும் இதர ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>டெட் தேர்வில் இருந்து விலக்களிக்க கோரி சட்டசபையில் தனித்தீர்மானம் நிறைவேற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-passes-tet-exam-exemption-resolution</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-passes-tet-exam-exemption-resolution#comments</comments><guid isPermaLink="false">d0983fd4-5d1d-4ba4-ae08-070229f16a84</guid><pubDate>Tue, 25 Aug 2026 04:40:34 +0000</pubDate><atom:updated>2026-08-25T04:40:34.997Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டெட் தேர்வு,TET Exam,தனித்தீர்மானம்,TN assembly,தமிழக சட்டசபை |,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/10bt3k6y/raj.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Rajmohan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/10bt3k6y/raj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் டெட் தேர்வில் இருந்து விலக்களிக்க கோரி <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">தனித்தீர்மானம்</a> ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.</p><p>தமிழக சட்டசபையில் இன்று இயற்கை வளங்கள், தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும், டிஜிட்டல் சேவைகள் ஆகிய 3 துறைகள் தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. </p><h2>தனித்தீர்மானம்</h2><p>முன்னதாக, சட்டசபை கூட்டம் தொடங்கியதும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆசிரியர்களுக்கு டெட் தேர்வில் இருந்து விலக்களிக்க கோருவது தொடர்பான  தனித்  தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். அவர் பேசியதாவது:</p><p>ஆசிரியர் பணி என்பது வெறும் அறிவைப் போதிக்கும் தொழில் மட்டுமல்ல; அது மனித வளத்தை உருவாக்கி, சமூகத்தின் எதிர்காலத்தைச் செதுக்கும் ஒரு உயரிய பொறுப்பாகும். மேலும், பாடத்திட்டங்களை மாணவர்களின் வயது மற்றும் புரிந்து கொள்ளும் திறனுக்கு ஏற்ப எளிமையாகக் கற்பித்தல், அவர்களின் கற்றல் குறைபாடுகளைக் கண்டறிந்து நிவர்த்தி செய்தல், அறிவோடு சேர்த்து நற்பண்புகள், சமூகப் பொறுப்பு, ஒழுக்கம் மற்றும் தன்னம்பிக்கையை மாணவர்களிடம் வளர்த்தல், ஒவ்வொரு மாணவரிடமும் உள்ள தனித்துவமான திறமைகளான, விளையாட்டு, பேச்சு, எழுத்து, அறிவியல் ஆர்வம் ஆகியவற்றைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துதல் ஆகியவை ஆசிரியர்களின் தலையாய பணியாக உள்ளது.</p><h2>ஆசிரியர் தகுதித்தேர்வு</h2><p>தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின் 23.08.2010-ம் தேதியிட்ட அறிவிக்கையில், இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் நியமனம் செய்யப்படுவதற்குரிய ஒரு தகுதியாக, ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டது.</p><p>ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக, குறிப்பாக 15 முதல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக, எவ்வித இடையூறும் இன்றி தங்களது பணியைச் சிறப்பாக ஆற்றி வரும் நிலையில், இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009-இல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், பணியில் இருக்கும் ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று 1.9.2025-ம் நாளிட்ட உரிமையியல் மேல்முறையீட்டு (சிவில் அப்பீல்) சுப்ரீம் கோர்ட்டால் ஆணையிடப்பட்டுள்ளது. மேற்கண்ட உத்தரவினால், தமிழ்நாட்டில் சுமார் 3,28,701 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் பதவி உயர்வினை பெற இயலும். </p><h2>பணி பாதுகாப்பு</h2><p>மேலும் தேர்ச்சி பெறவில்லையெனில் பணியிழப்புக்கும் ஆளாக நேரிடும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் சீராய்வு மனுவின் மீதான 29.05.2026-ம் நாளிட்ட தீர்ப்பில், பணியில் உள்ள ஆசிரியர்கள் 31.08.2028-க்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என சுப்ரீம் கோர்ட்டால் ஆணையிடப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில், 15 முதல் 20 ஆண்டுகள் வரை தடையின்றிப் பணியாற்றி ஓய்வுபெறும் வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களை, தகுதித் தேர்வு எழுத வற்புறுத்துவது அவர்களின் வாழ்வாதார உரிமையைப் பாதிக்கும் செயலாகும். எனவே, இச்சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு, நீண்டகால சேவை, வாழ்வாதாரம் மற்றும் நலன் ஆகியவற்றைப் பாதுகாக்கும் நோக்கில், தனித் தீர்மானம் முன்மொழியப்படுகிறது.</p><h2>நிரந்தர விலக்கு</h2><p>1. தமிழ்நாடு பள்ளிகளில் 23.08.2010-க்கு முன்பாக அன்றைய நடைமுறையில் இருந்த விதிமுறைகள் மற்றும் தகுதிகளின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, அவர்களின் நீண்டகாலப் பணியனுபவம் மற்றும் பணிப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து முழுமையான மற்றும் நிரந்தர விலக்கு அளிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஒன்றிய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது.</p><p>2. இதற்கேற்ப, இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009-ன் பிரிவு 23-ல், உரிய சட்டத்திருத்தம் மேற்கொண்டு, 23.08.2010-க்கு முன்பாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் வகையில் தேவையான சட்டப்பூர்வ ஏற்பாடுகளை ஒன்றிய அரசு மேற்கொண்டு, தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் வழியாக இதுதொடர்பான தெளிவான மற்றும் ஒருமித்த அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல், சுற்றறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டுமாறு ஒன்றிய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது.</p><p>3. மேற்கண்ட நடவடிக்கைகள் மூலம், நீண்ட காலமாகப் பணியாற்றி வரும் ஆசிரியர்களின் பணிப்பாதுகாப்பு மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட உரிய பணிப்பலன்கள் எவ்விதத் தடையும் இன்றி தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்யுமாறு ஒன்றிய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது. </p><p>இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் வாசித்தார்.</p><p>இதனை தொடர்ந்து தனித்தீர்மானத்தை ஆதரித்து எம்.எல்.ஏ.க்கள் பேசினர்.</p><p>தனித்தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:</p><p>20 முதல் 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர் பணியில் இருப்பவர்கள் தற்போதைய புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தகுதித் தேர்வை எழுதித் தேர்ச்சி பெறுவது நடைமுறையில் கடினமானது  என்று ஆசிரியர்களின் நலன் கருதி தி.மு.க. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டது.</p><p>ஆனால் உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில் ஆசிரியர்கள் கட்டாயம் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், தற்போதைய சட்டச் சூழலில் ஆசிரியர்களின் பணி பாதுகாப்பு மற்றும் பதவி உயர்வில் ஏற்படும் தடைகளை நீக்க, ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்களை இயற்ற வேண்டும், </p><p>மேலும், ஆசிரியர்களின் பணி பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கான உரிமைகள், சலுகைகளைப் பெற்றுத் தரும் வகையில் ஒன்றிய அரசு புதிய சட்டங்களை இயற்றும் பட்சத்தில்,  தி.மு.க. எம்.பி.க்கள் அதற்கு முழு ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்குவார்கள் என தெரிவித்தார்.</p><p>இதனை தொடர்ந்து தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது</p>]]></content:encoded></item><item><title>விஜயகாந்த் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்!- முதலமைச்சர் விஜய் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-praise-to-vijayakanth</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-praise-to-vijayakanth#comments</comments><guid isPermaLink="false">08c3c32a-2a5a-4800-8ba3-9811aac69605</guid><pubDate>Tue, 25 Aug 2026 04:39:46 +0000</pubDate><atom:updated>2026-08-25T04:39:46.913Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,DMDK,தேமுதிக,vijayakanth,விஜயகாந்த்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/mbtovj0b/vijay.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விஜயகாந்த்- முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ விஜயகாந்த்- முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/mbtovj0b/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>திரைத்துறையில் தனக்கெனத் தனி முத்திரை பதித்ததோடு, அரசியலில் மக்கள் நலனை முன்னிறுத்திய தலைவராகவும் திகழ்ந்து, ஏழை, எளிய மக்களின் மீது அன்பும், அக்கறையும் கொண்டு கொடையுள்ளத்தோடு உதவிய புரட்சிக் கலைஞரின் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்! என்று கூறியுள்ளார்.</strong></em> </p><p>நடிகரும், தே.மு.தி.க. நிறுவனத் தலைவருமான மறைந்த <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D">விஜயகாந்தின்</a> 74-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் தொண்டர்கள், ரசிகர்கள் திரண்டு மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி அவரை அரசியல் தலைவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். </p><p>அந்த வகையில், முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/why-didnt-you-seek-the-blessings-of-vijayakanth-who-helped-you-grow-vijaya-prabhakaran-asks-chief-minister-vijay">விஜய்</a> எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><h2><strong>புகழ் வணக்கங்கள்...</strong></h2><p>மனிதநேயம், துணிச்சல், தன்னலமற்ற சேவை ஆகியவற்றை அடையாளமாகக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எனது புகழ் வணக்கங்களைச் செலுத்துகிறேன்.</p><p>திரைத்துறையில் தனக்கெனத் தனி முத்திரை பதித்ததோடு, அரசியலில் மக்கள் நலனை முன்னிறுத்திய தலைவராகவும் திகழ்ந்து, ஏழை, எளிய மக்களின் மீது அன்பும், அக்கறையும் கொண்டு கொடையுள்ளத்தோடு உதவிய புரட்சிக் கலைஞரின் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்! என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">மனிதநேயம், துணிச்சல், தன்னலமற்ற சேவை ஆகியவற்றை அடையாளமாகக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எனது புகழ் வணக்கங்களைச் செலுத்துகிறேன்.<br><br>திரைத்துறையில்… <a href="https://t.co/hH9qLSXkbw">pic.twitter.com/hH9qLSXkbw</a></p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2092106246149271783?ref_src=twsrc%5Etfw">August 25, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>3 தமிழர்கள் படுகொலை குறித்து தமிழக சட்டசபையில் கேள்வி எழுப்பிய உதயநிதி ஸ்டாலின்  </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-stalin-speech-in-tn-assembly-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-stalin-speech-in-tn-assembly-today#comments</comments><guid isPermaLink="false">3341242b-6bdb-4098-9003-023acb360b17</guid><pubDate>Tue, 25 Aug 2026 04:17:23 +0000</pubDate><atom:updated>2026-08-25T04:17:23.788Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Udhayanidhi Stalin,உதயநிதி ஸ்டாலின்,தமிழக சட்டசபை,எதிர்க்கட்சி தலைவர்,TN assembly,opposite leader</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/0we3y0gw/udaya.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/0we3y0gw/udaya.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் 3 தமிழர்கள் படுகொலை குறித்து கேள்வி எழுப்பினார்.</p><p>தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகிறது.</p><p>அப்போது எதிர்க்கட்சி தலைவரான உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:</p><p>கர்நாடகாவில் வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள் சித்ரவதை செய்யப்பட்டு கொலை என கூராய்வு அறிக்கை.</p><p>உயிரிழந்த தமிழர்கள் உடலில் காயம் இருந்ததாக கூராய்வு அறிக்கை வந்துள்ளது.</p><p>தமிழக அமைச்சர்கள் யாராவது கர்நாடகா சென்றார்களா?</p><p>3 தமிழர்கள் கொலையில் அரசின் நிலைப்பாடு என்ன? என கேள்வி எழுப்பினார்.</p><p>இதற்கு சபாநாயகர், சட்டத்துறை அமைச்சர் நாளை விளக்கம் அளிப்பார் என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>6000mAh பேட்டரி, 50MP கேமராவுடன் பட்ஜெட் விலையில் அறிமுகமான புது ஸ்மார்ட்போன்</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/lava-virat-v1-pro-5g-launched-in-india</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/lava-virat-v1-pro-5g-launched-in-india#comments</comments><guid isPermaLink="false">9f447df7-7c68-4972-ba81-592d4682f816</guid><pubDate>Tue, 25 Aug 2026 03:42:00 +0000</pubDate><atom:updated>2026-08-25T03:42:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>LAVA,லாவா,smartphone,ஸ்மார்ட்போன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/j0ky9zjq/Lava-Virat-V1-Pro-5G.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Lava Virat V1 Pro 5G]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/j0ky9zjq/Lava-Virat-V1-Pro-5G.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/lava">லாவா</a> நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் லாவா விராட் V1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மார்ட்போன்</a> விராட் V1 5ஜி மாடலின் மேல் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த மாடலில் மேம்பட்ட கேமரா, அதிவேக சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.</p><p>மேலும், இந்த ஸ்மார்ட்போன் 5ஜி வசதி கொண்ட யுனிசாக் பிராசஸர், IP64 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.</p><h2>சிறப்பு அம்சங்கள்:</h2><p>லாவா விராட் V1 ப்ரோ 5ஜி மாடலில் 6.74 இன்ச் HD+ டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், யுனிசாக் T8200 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 128 ஜிபி மெமரி, மெமரியை 1 டிபி வரை நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ரேம் பூஸ்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.</p><p>புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. முந்தைய லாவா விராட் V1 மாடலில் 13MP பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனில் உள்ள இரு கேமராக்களிலும் அதிகபட்சம் 2K ரெசல்யூஷனில் வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.</p><p>இத்துடன் ஆண்ட்ராய்டு 16 ஓ.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும், ஆண்ட்ராய்டு 17 அப்டேட், இரு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி பேட்ச்கள் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.</p><p>இந்த ஸ்மார்ட்போன் 3.5mm ஹெட்போன் ஜாக், பக்கவாட்டில் கைரேகை சென்சார், ஹைப்ரிட் சிம் கார்டு ஸ்லாட் கொண்டிருக்கிறது.</p><h2>விலை விவரங்கள்:</h2><p>புதிய லாவா விராட் V1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ. 15,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஆகஸ்ட் 31-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி என ஒற்றை மெமரி ஆப்ஷனில் கிடைக்கிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் சிக்கிம் மிட்நைட் மற்றும் ஸ்பிட்டி ஃப்ராஸ்ட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>இந்த வார விசேஷங்கள்: 25-8-2026 முதல் 31-8-2026 வரை</title><link>https://www.maalaimalar.com/spirituality/this-week-specials-25-8-2026-to-31-8-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/this-week-specials-25-8-2026-to-31-8-2026#comments</comments><guid isPermaLink="false">dde4aa2a-1cdf-477d-b679-101af2de1129</guid><pubDate>Tue, 25 Aug 2026 03:02:20 +0000</pubDate><atom:updated>2026-08-25T03:02:20.568Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,வழிபாடு,Astrology,this week special,இந்த வார விசேஷங்கள்,worship</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/01/13/24703153-muruga1.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Murugan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/01/13/24703153-muruga1.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>25-ந் தேதி (செவ்வாய்)</h2><p>* பிரதோஷம்.</p><p>* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் விறகு விற்ற திருவிளையாடல்.</p><p>* விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் ரத உற்சவம்.</p><p>* சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.</p><p>* மேல்நோக்கு நாள்.</p> <h2>26-ந் தேதி (புதன்)</h2><p>* ஓணம் பண்டிகை.</p><p>* சிரவண விரதம்.</p><p>* நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணியர் ரத உற்சவம்.</p><p>* சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் புறப்பாடு. </p><p>* மேல்நோக்கு நாள்.</p> <h2>27-ந் தேதி (வியாழன்)</h2><p>* பவுர்ணமி.</p><p>* ஆவணி அவிட்டம்.</p><p>* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தீர்த்தவாரி.</p><p>* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.</p><p>* மேல்நோக்கு நாள்.</p> <h2>28-ந் தேதி (வெள்ளி)</h2><p>* வரகூர் உறியடி உற்சவம் ஆரம்பம்.</p><p>* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.</p><p>* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் பவனி.</p><p>* திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.</p><p>* மேல்நோக்கு நாள்.</p> <h2>29-ந் தேதி (சனி)</h2><p>* திருவரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், மதுரை கூடலழகர் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.</p><p>* கீழ்நோக்கு நாள்.</p> <h2>30-ந் தேதி (ஞாயிறு)</h2><p>* நாங்குநேரி உலகநாயகி அம்மன் வருசாபிஷேகம்</p><p>* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு அலங்கார திருமஞ்சனம்.</p><p>* திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.</p><p>* மேல்நோக்கு நாள்.</p> <h2>31-ந் தேதி (திங்கள்)</h2><p>* முகூர்த்த நாள்.</p><p>* சங்கடகர சதுர்த்தி.</p><p>* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி உற்சவம் ஆரம்பம்.</p><p>* பெருவயல் முருகப்பெருமான் விழா தொடக்கம். </p><p>* சங்கரன்கோவில் கோமதியம்மனுக்கு புஷ்பப் பாவாடை தரிசனம்.</p><p>* சமநோக்கு நாள்.</p> ]]></content:encoded></item><item><title>10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-rain-in-10-districts-until-10-am</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-rain-in-10-districts-until-10-am#comments</comments><guid isPermaLink="false">62aefb2f-3011-4114-8428-09550e24e848</guid><pubDate>Tue, 25 Aug 2026 02:44:08 +0000</pubDate><atom:updated>2026-08-25T02:44:08.876Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,IMD,Rain,மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/01/11/24586346-rain.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rain]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/01/11/24586346-rain.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் வாட்டி வதைத்தும், மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை கொட்டியும் வருகிறது. நேற்று முன்தினம் இரவில் திடீரென இடி மின்னலுடன் கனமழை கொட்டியதால் வெப்பம் தணிந்தது.</p><h2>சென்னையில் மழை</h2><p>நேற்று காலை முதல் சென்னையில் வானம் மேகமூட்டத்துடனும், வெயிலின் தாக்கம் குறைவாகவும் இருந்த நிலையில், இரவு 8 மணியளவில் திடீரென மழை வெளுக்கத் தொடங்கியது. </p> <p>சென்ட்ரல், எழும்பூர், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கிண்டி, எம்.ஆர்.சி. நகர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. </p><p>இந்நிலையில், தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">சென்னை வானிலை மையம்</a> தெரிவித்துள்ளது.</p> <p>அதன்படி, கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.</p><h2>கனமழை</h2><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வுப்பாதை நிலவுவதால், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் கூடிய கனமழை பெய்யக்கூடும்.</p> <p>ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். </p><p>தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p> <p>நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p> <p>இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>