<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 19 Aug 2026 15:13:23 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: காவிரி விவகாரம்: சட்டசபையில் காரசார விவாதம் - 19 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-19-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-19-august-2026#comments</comments><guid isPermaLink="false">532f6d4f-39f1-4437-8daa-00952ab7e206</guid><pubDate>Wed, 19 Aug 2026 04:04:15 +0000</pubDate><atom:updated>2026-08-19T13:24:16.835Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/553nhbv2/speaker.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/553nhbv2/speaker.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>சர்க்கார் பேனரை கிழித்ததால் ஆட்சியை இழந்த அதிமுக: அமைச்சர் என்.ஆனந்த்</h2><p>* முதல்வர் விஜய் உடன் 25 ஆண்டுகளுக்கு மேல் நெருங்கிப் பழகியவன் நான்.</p><p>* சாதி, மதம், பணம் எதுவுமே நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் எடுபடவில்லை.</p><p>சர்கார் போஸ்டரை கிழிக்காமல் இருந்திருந்தால் இன்று அதிமுகவிற்கு இந்த நிலை வந்திருக்காது.</p><p>சட்டமன்ற உறுப்பினர் என்ற பதவி வரும், போகும். விஜய்யின் ரசிகன் என்பதே நிரந்தரமான ஒன்று. ரூ.2 கோடி ஒரு பக்கமும், விஜய் படம் ஒரு பக்கமும் இருந்தால், நிச்சயம் எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் விஜய்யின் படத்தைதான் தேர்ந்தெடுப்பார்கள்.</p><p>சபாநாயகர் எங்கள் கட்சிக்கு கிடைத்த வரம் என்றுதான் கூறவேண்டும். அவர் கேட்ட தொகுதி கிடைக்காவிட்டாலும், வேறு தொகுதி வழங்கப்பட்டு வெற்றிப்பெற்றார்.</p><p>மரியவில்சன் எவ்வாறு பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்ற பயம் இருந்தது. ஆனால் அவர் தெளிவாக, மிகச்சிறப்பாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். - அமைச்சர் ஆனந்த்</p><p>177.25 டிஎம்சி தமிழகத்திற்கு உரிமை என்ற தீர்ப்பு கிடைத்த பின் ஆணையம் அமைக்க மத்திய அரசு காலதாமதம் செய்தது.</p><p>நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து ஆணையம் அமைத்த பெருமை எடப்பாடி பழனிசாமியை சாரும்  - ஓ.எஸ்.மணியன்</p><p>அந்தந்த காலகட்டத்தில் ஒவ்வொரு முதல்வரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளார்கள் - சபாநாயகர்</p><p>காவிரி பிரச்சனையில் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.</p><p>காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தில் அனைத்து கட்சியினரும் ஒன்றுபட்டு நிற்கிறார்கள் - சபாநாயகர்</p><p>பிரதமர் பேச்சை கேட்டு ஒருதலைபட்சமாக செயல்பட்டதாக தான் திமுக மீது குற்றச்சாட்டு, உண்மை ஒப்புக்கொண்டதற்கு நன்றி - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>காவிரி விவகாரத்தில் வழக்கு வாபஸ் பெற்றதற்கான காரணத்தை விளக்கமாக பேரவையில் ஏற்கெனவே கூறி உள்ளோம்.</p><p>காவிரி பகுதியில் பிறந்து, அங்கே வளர்ந்த விவசாயிகளான நாங்கள் எப்படி காவிரி நீரை விட்டுக் கொடுப்போம்.</p><p>பிரதமர் எங்களை அழைத்து சமாதானம் பேசினார். வழக்கை வாபஸ் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது - கே.என்.நேரு விளக்கம்</p> <p>காவிரி விவகாரம் - சட்டசபையில் காரசார விவாதம்</p><p>திமுகவினர் அநாகரிகமாக நடந்து கொண்டதாக ராஜ்மோகன் பேசக்கூடாது - கே.என்.நேரு</p><p>ஒருமையில் பேசுவதை திமுகவினர் தவிர்க்க வேண்டும். பேரவையில் திமுகவினர் அநாகரிகமாக நடந்து கொள்வதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.</p><p>பைத்தியம் போல் பேசுவதாக திமுக எம்எல்ஏக்கள் கூறுகின்றனர். சட்டப்பேரவையில் பேசும் வார்த்தையா இது? </p><p>அடிக்கப் பாய்வது போல் வருகின்றனர். திமுகவினர் அடிக்கப் பாய்வதுபோல் வருகிறார். கையை ஓங்குகிறார் -  அமைச்சர் ராஜ்மோகன்</p> <p>காவிரி விவகாரத்தில் இந்த அவையில் பல விவாதங்கள் நடந்துள்ளன - அமைச்சர் அருண்ராஜ்</p> <p>திமுகவின் துரோகம் என்பதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்.</p><p>காவிரி விவகாரத்தில் யாரும் எந்த துரோகமும் செய்ய முடியாது - கே.என்.நேரு</p><p>காவிரி விவகாரத்தில் திமுக எந்த அளவுக்கு துரோகம் இழைத்தது என்று பேச ஆரம்பித்தால் நிறைய விஷயங்கள் பேசலாம் - அமைச்சர் அருண்ராஜ்</p> <p>காவிரி பிரச்சனை 1987-ல் எம்ஜிஆர் காலத்திலேயே வழக்கு தொடர்ந்தோம். </p><p>அதிமுக, திமுக அரசாங்கம் தொடர்ந்து காவிரி நீருக்காக போராடிக்கொண்டு இருக்கிறோம் - எடப்பாடி பழனிசாமி</p> <p>காவிரி விவகாரம், மேகதாது விவகாரம் தொடர்பான நீங்கள் என்ன செய்தீர்கள்.</p><p>அச்சம் என்ற வார்த்தையே எங்கள் தலைவரின் அகராதியில் இல்லை -  அமைச்சர் அருண்ராஜ்</p> <p>9 முறை காட்பாடி எம்எல்ஏவாக இருந்த துரைமுருகன் எதுவும் செய்யவில்லை என சொல்வது சரியல்ல.</p><p>தன்னைப் பார்த்து பிற எம்எல்ஏக்கள் செயல்படும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டவர் துரைமுருகன்.</p><p>காட்பாடி தொகுதியில் என்ன செய்யப் போகிறேன் என்பதை சொல்லுங்கள். அவையில் இல்லாதவர் பற்றி பேசுவது சரியல்ல - எ.வ.வேலு</p><p>துரைமுருகனை குறிப்பிட்டு தவெக எம்எல்ஏ பேசுவதற்கு திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு</p> <p>காட்பாடி தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த துரைமுருகன் சீரமைப்பு பணிகளை முறையாக செய்யவில்லை - தவெக எம்எல்ஏ சுதாகர்</p><p>காட்பாடி தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த துரைமுருகன் அனுபவத்தை நான் மதிக்கிறேன்.</p><p>எந்த கொம்பனாலும் அசைக்க முடியாத தவெக கோட்டையாக இனி காட்பாடி இருக்கும் - தவெக எம்எல்ஏ சுதாகர் </p><p>குறும்பர் இன மக்களுக்கு SC சான்றிதழ் - இதுதொடர்பாக அரசு பரிசீலித்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் எடுத்துச் சொல்லி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>தருமபுரியில் குறும்பர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அதிகம் பேர் உள்ளனர். அவர்கள் SC சான்றிதழ் கேட்டு வருகின்றனர். அவர்களால் பள்ளிக்கூடத்திற்கோ, கல்லூரிக்கோ செல்ல முடியவில்லை. </p><p>ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்திற்கு சென்று ஆர்டர் வாங்கி வந்து விட்டு படிக்கிறார்கள். அதனை பரிசீலனை செய்து வழங்க வேண்டும் - சவுமியா அன்புமணி</p> <p>செஞ்சி கோட்டையை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் - சவுமியா அன்புமணி</p><p>மழை நீர் சேமிப்பை கட்டாயமாக்க வேண்டும். பாலாற்றில் 5 அடிக்கு தடுப்பணைகளை கட்ட வேண்டும்.</p><p>தருமபுரி மாவட்டத்தில் ஏரிகளை தூர்வார வேண்டும் - சவுமியா அன்புமணி</p> <p>அத்திக்கடவு - அவிநாசி 2 திட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள நதிகளை முதலில் இணைக்க வேண்டும்.</p><p>காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தை முதலில் செயல்படுத்த வேண்டும். பாலாற்றில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>நந்தன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் - சவுமியா அன்புமணி</p><p>சவுமியா அன்புமணி கோரிக்கையின் படி நீர்நிலைகள் மேப்பிங் செய்யப்படும் - அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்</p><p>கூவத்தில் குப்பை கொட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.</p><p>நல்ல தண்ணீரில் சாக்கடையை கலப்பது சட்டப்படி குற்றம்.</p><p>தாமிரபரணி நதியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>அரசு கட்டிடங்கள் ஏரியில் தான் அமைந்துள்ளன - சவுமியா அன்புமணி</p><h2>சவுமியா அன்புமணி உரை</h2><p>இந்தியாவில் எங்கும் இல்லாத சதுப்பு நிலம் சென்னையில் உள்ளது.</p><p>திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போதும் கூவம் ஆறு மக்கள் பயன்பாட்டில் உள்ளது.</p><p>சென்னைக்கு வந்த பிறகு தான் கூவம் சாக்கடையாக மாறுகிறது.</p><p>நீர் வளம் தான் எதிர்கால தலைமுறைக்கு நாம் வழங்கும் சொத்து - சவுமியா அன்புமணி</p><p>தமிழ்நாட்டின் நீர்வளம் நம் கையைவிட்டு போய்க்கொண்டு இருக்கின்றன - சவுமியா அன்புமணி</p><p>முதலமைச்சர் விஜய் குறித்து புகழ்ந்து பேசிய தவெக எம்எல்ஏ ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு சபாநாயகர் அறிவுரை</p><p>மானிய கோரிக்கை மீதான விவாதம் பற்றி மட்டும் பேச வேண்டும் என சபாநாயகர் அறிவுரை</p><p>நம்முடைய முதலமைச்சர் மற்ற முதலமைச்சர்களை போல் அல்ல - அமைச்சர் ஆதவ்</p><p>முதலமைச்சர் விஜய்க்கு புகழ்ச்சி பிடிக்காது என்பதை  எம்எல்ஏக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் - அமைச்சர் ஆதவ்</p><p>கல்லணை இன்னும் இடிந்து போகவில்லை தரமாக உள்ளது. நமது காலத்தில் தான் அணைகள் இடிந்து விழுகிறது - அமைச்சர் ஆதவ்</p><h2>எ.வ.வேலு உரை</h2><p>திருவண்ணாமலையில் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்தது.</p><p>தென்பெண்ணை ஆற்றில் 56,000 கனஅடி தண்ணீரை தாங்கும் அளவிற்கு பாலம் கட்டப்பட்டது.</p><p>கொள்ளளவை விட பல மடங்கு அதிகமாக தண்ணீர் வந்ததால் மட்டுமே அணை இடிந்தது.</p><p>தென்பெண்ணை ஆற்றில் ரூ.16 கோடியில் கட்டப்பட்ட மேம்பாலம் 3 மாதத்தில் இடிந்தது - அமைச்சர் மரியவில்சன்</p><p>அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பேச்சுக்கு எதிர்ப்பு - திமுக எம்எல்ஏக்கள் அமளி</p><p>கனவு கண்டாலும் கூட திமுக இனி ஆட்சிக்கு வர முடியாது - அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்</p><p>வீட்டின் தரத்திற்கு கட்டும் பயனாளிகள் தான் பொறுப்பு - கே.என்.நேரு</p><p>திமுக ஆட்சியில் கட்டப்பட்ட வீடுகள் நிறைய இடங்களில் இடிந்து தொங்குகிறது. தவெக ஆட்சியில் கட்டப்படும் வீடுகள் 50 ஆண்டுகள் வரை தரமாக இருக்கும் - அமைச்சர் வினோத்</p><p>2016 - 2020 வரை கொரோனா காலம் என்பதால் தான் பசுமை வீடு திட்டத்தை அதிமுக காலத்தில் சரியாக செய்ய முடியவில்லை - எடப்பாடி பழனிசாமி</p><p>பெருமளவு கனிமவள பொருட்கள் அண்டை மாநிலங்களுக்கு எடுத்து செல்வதாக தொடர் புகார் வந்தன.</p><p>கனிம வளத்தை அண்டை மாநிலங்களுக்கு எடுத்து செல்வதற்கு தடை விதித்த ஒரே தமிழக முதல்வர் விஜய் தான்.</p><p>எம்.சாண்ட், ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்கள், குவாரிகள் தொடர்பான மானிய கோரிக்கை விவாதத்தில் சொல்கிறேன் - அமைச்சர் பிரபு</p><p>ஜல்லி,  எம் சாண்ட் தேவை அதிகரிப்பு, பல குவாரிகள் மூடல் காரணமாக கட்டுமான பொருட்கள் விலை உயர்வு.</p><p>எம்.சாண்ட், ஜல்லி உற்பத்தி திறனை அதிகரிக்க தவெக அரசு ஏதேனும் திட்டம் வைத்துள்ளதா? - எடப்பாடி பழனிசாமி</p><p>ரூ.12,000 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் 150 நாட்கள் வேலை கொடுப்பது சாத்தியமில்லை - ஐ.பெரியசாமி</p><p>150 நாட்கள் வேலை அளிக்க வேண்டும் என்றால் ரூ.30,000 கோடி தேவைப்படும்.</p><p>தமிழ்நாட்டில் எந்த நதியும் ஓடவில்லை, அனைத்து பகுதிகளிலும் வறட்சி - ஐ.பெரியசாமி</p><p>மக்களுக்கு சேவையே முதலமைச்சரின் நோக்கம்.</p><p>எதிர்க்கட்சிகளின் ஆலோசனையை ஏற்க தயாராக உள்ளோம் - அமைச்சர் ஆனந்த்</p><h2> ஐ.பெரியசாமி உரை</h2><p>நான் அன்பாக, அக்கறையாக, ஆசையாக பேசியதால் தான் மக்கள் என்னை 7 முறை எம்எல்ஏவாக வெல்ல வைத்துள்ளனர்.</p><p>விபிஜி ராம் திட்டத்தில் 150 நாட்கள் வேலை தருவது சாத்தியமற்றது. ஏட்டு கத்தரிக்காய் கூட்டுக்கு உதவாது என்பது போல் இந்த திட்டம், அரசு அறிவித்தபடி 150 நாள் வேலை தர முடியுமா?</p> <p>3 துறைகளில் நடந்த ஊழல் தொடர்பான அனைத்து ஆதாரங்களும் உரிய நேரத்தில் வெளியிடப்படும் - முதலமைச்சர் விஜய்</p><p>நான் பேசுவேன், ஆனால் இடைத்தேர்தலிலாவது சிலருக்கு நல்லது நடக்க வேண்டுமே என சட்டசபையில் முதலமைச்சர் விஜய் கூறினார்.</p><p>ஊழல் தொடர்பான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அதை வெளியிட வைத்து விடாதீர்கள் - முதலமைச்சர் விஜய்</p><p>ஊழல் தொடர்பான அனைத்தும் ஆதாரங்கள் எனது மேஜையில் அமைச்சர் வைத்துள்ளார் - முதலமைச்சர் விஜய்</p><p>தவறு நடந்து இருக்கலாம் என ஒப்புக்கொண்டதற்கு நன்றி - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>வளமான கிராமங்களை உருவாக்கும் நோக்கத்தில் தான் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டது.</p><p>கொள்கை தலைவர் என சொல்கிறீர்கள், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை தமிழ்நாடு வளர்ச்சி திட்டம் என மாற்றியது நியாயமா? - ஐ.பெரியசாமி</p><p>அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் பெயரை ஏன் மாற்ற வேண்டும்? கொள்கைத் தலைவர் என கூறும் அண்ணா பெயரை மாற்றியது ஏன்? - ஐ. பெரியசாமி</p><h2>ஐ.பெரியசாமி  உரை</h2><p>அலுவலர்கள் தான் தேர்வு செய்கின்றனர். தவறு நடக்கிறது என்பதற்காக திட்டத்தை நிறுத்தக்கூடாது.</p><p>கட்சி, சாதி மத பாகுபாடின்றி விண்ணப்பித்த அனைவருக்கும் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு தருவதற்கு முயற்சி.</p><p>கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், அரசுக்கான இழப்பை குறைக்க உதவும்.</p><p>வீடு பெறும் பயனாளிகளை தேர்ந்தெடுப்பது அதிகாரிகள் அடங்கிய குழு தான்.</p><p>வீடு கட்டும் திட்டத்தில் பல தவறுகள் நடந்துள்ளது என திட்டவட்டமாக நான் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>ஏற்கெனவே வீடு வைத்துள்ளவர்களுக்கு வீடு கட்டப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கியதற்கான ஆதாரம் உள்ளது - அமைச்சர் ஆனந்த்</p><p>திமுக ஆட்சியில் வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கவில்லை - அமைச்சர் ஆனந்த்</p><p>வீடு கட்டும் திட்டத்தில் பெயரை மாற்றி விட்டு வீடுகளின் எண்ணிக்கையை தவெக அரசு குறைத்து விட்டது - ஐ.பெரியசாமி</p><p>தற்போது எம் சாண்ட் விலையை தாறுமாறாக உயர்த்தி உள்ளனர்.</p><p>ஜல்லி விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது - ஐ.பெரியசாமி</p><p>வீடுகள் முறையாக கட்டப்பட்ட ரூ.5 லட்சம் வழங்குகிறது தவெக அரசு - புஸ்ஸி ஆனந்த்</p><p>வீடு கட்ட திமுக ஆட்சியில் கொடுத்த ரூ.3.5 லட்சம் போதுமானதாக இல்லை - புஸ்ஸி ஆனந்த்</p><p>திமுக ஆட்சியில் அனுமதிக்கப்பட்ட வீடுகள் அடித்தளத்துடன் நிற்கின்றன.</p><p>திமுக ஆட்சியில் வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கவில்லை - புஸ்ஸி ஆனந்த்</p><p>திமுக ஆட்சியில வருடத்திற்கு 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன - ஐ.பெரியசாமி </p><p>நீர்வளத்துறை மீதான மானிய கோரிக்கை மீது விவாதம் தொடங்கியது.</p><p>நீர்வளம், ஊரக வளர்ச்சி மானியக் கோரிக்கை - அமைச்சர் ஆனந்த் தாக்கல் செய்தார்</p><p>சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானங்களை விவாதத்தில் எடுக்க வலியுறுத்தி அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு.</p><p>கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து முழக்கங்கள் எழுப்பியவாறு அதிமுகவினர் வெளிநடப்பு.</p><p>சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.</p><p>சட்டசபையில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கியது.</p><h2>அமைச்சர் வன்னி அரசு உரை</h2><p>நாடே மெச்சும் வகையில் முதலமைச்சர் அறிவிப்பு</p><p>ரூ.300 கோடியில் பெரம்பூரில் மருத்துவமனை அமைப்பதற்கு வரவேற்பு.</p><p>வடசென்னை மக்களை குளிர்விக்கும் வகையில் அறிவிப்பு</p> <p>வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு - சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு</p><p>நான் ரெயிலில்தான் சட்டசபைக்கு வந்து செல்கிறேன். வேலையும் கொடுத்து காரும் கொடுக்கும் முதலமைச்சருக்கு நன்றி - எம்எல்ஏ சபரி ஐங்கரன்</p><p>பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை நிறைவேற்றம் - மன்னார்குடி அமமுக எம்எல்ஏ காமராஜ் வரவேற்பு</p><p>பால் கொள்முதல் விலை உயர்வுக்கு திருத்துறைப்பூண்டி இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ மாரிமுத்து வரவேற்பு</p><p>முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி - அமைச்சர் ஷாஜகான்</p><p>முதலமைச்சர் விஜயால் நிறைய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் - அமைச்சர் ராஜ்மோகன்</p> <p>ஏற்கனவே எம்எல்ஏ ஒருவருக்கு அனைத்துப்படிகளும் சேர்த்து ரூ.1.05 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது.</p><p>ஏற்கனவே சட்டமன்ற அமர்வுகள் நடக்கும்போது தினப்படியாக ரூ.500 வழங்கப்பட்டு வருகிறது.</p><p>வாகனத்திற்காக மாதந்தோறும் ரூ.75,000 வாகனப்படியாக வழங்கப்படும்.</p><p>ஒரு உதவியாளரை நியமித்து கொள்ள மாதந்தோறும் ரூ.25,000 வழங்கப்படும் - முதலமைச்சர் விஜய்</p><p>ரூ.351 கோடி மதிப்பீட்டில் செவிலியர் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கப்படும்.</p><p>5 மருத்துவமனைகளில் மண்டல புற்றுநோய் மையங்கள் தொடங்கப்படும் - முதலமைச்சர் விஜய்</p> <p>அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் வழங்கப்படும் - முதலமைச்சர் விஜய்</p><h2>முதலமைச்சர் விஜய் உரை</h2><p>முதலமைச்சர் மருத்துவ காப்பீடு தொகை ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும்.</p><p>7 அரசு மருத்துவ கல்லூரிகளில் திருநங்கைகளுக்கான அறுவை சிகிச்சை வழங்கப்படும்.</p><p>7 புதிய செவிலியர் கல்லூரிகள் அமைக்கப்படும்.</p><p>முதலமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு திட்டம் மேம்படுத்தப்படும்.</p><p>பெரம்பூரில் ரூ.300 கோடியில் 400 படுக்கை கொண்ட பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் - முதலமைச்சர் விஜய்</p><p>ஆவின் பால் கொள்முதல் விலையை ரூ.38 -ல் இருந்து ரூ.41ஆக உயர்த்தி அறிவிப்பு -முதலமைச்சர் விஜய் </p><p>ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.41 ஆக உயர்த்தி முதலமைச்சர் விஜய் அறிவிப்பு.</p><p>பால் உற்பத்தியாளர்கள் நலனை கருத்தில் கொண்டு பால் கொள்முதல் விலை உயர்த்துவது அரசின் கடமை.</p><p>கடந்த காலத்தில் ஆவின் பாலுக்கான கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை - முதலமைச்சர் விஜய்</p><p>சட்டசபையில் விதி 110 கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு வெளியிடுகிறார்.</p><p>ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு</p><p>சட்டசபையில் இன்று நீர்வளம், ஊரக வளர்ச்சி மற்றும் சுற்றுலாத்துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>உலகக் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை 5-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா</title><link>https://www.maalaimalar.com/sports/india-beat-pakistan-in-hockey-world-cup</link><comments>https://www.maalaimalar.com/sports/india-beat-pakistan-in-hockey-world-cup#comments</comments><guid isPermaLink="false">e50c9295-9916-41cc-b1d4-b81fb1786795</guid><pubDate>Wed, 19 Aug 2026 15:11:17 +0000</pubDate><atom:updated>2026-08-19T15:11:17.371Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய அணி,Team India,Hockey World Cup,உலகக் கோப்பை ஹாக்கி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/nchanhd7/india.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ team india]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/nchanhd7/india.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>16-வது உலகக் கோப்பை ஹாக்கி போட்டியை பெல்ஜியம், நெதர்லாந்து ஆகியவை இணைந்து நடத்தி வருகின்றன. வரும் 30-ம் தேதி வரை நடக்கும் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் நடைபெறுகிறது.</p><h2>16 நாடுகள்</h2><p>ஆண்கள் பிரிவில் பங்கேற்கும் 16 நாடுகளும் 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டு உள்ளன. இந்திய அணி டி பிரிவில் இடம்பெற்று உள்ளன.</p><p>பாகிஸ்தான், இங்கிலாந்து வேல்ஸ் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.</p><p>ஆண்கள் உலகக் கோப்பையில் நெதர்லாந்தில் நடந்த முதல் லீக் போட்டியில் இந்திய அணி வேல்ஸ் அணியை 3–1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இங்கிலாந்து உடனான போட்டியில் இந்தியா 2-4 என தோல்வி அடைந்தது.</p><h2>இந்தியா-பாகிஸ்தான்</h2><p>இந்நிலையில், இன்று நடந்த ஆண்கள் உலகக் கோப்பையில் இந்திய அணி தனது 3வது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை 5–3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.</p><h2>ஹர்மன்பிரீத் சிங் அபாரம்</h2><p>இந்தியா சார்பில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங், அபிஷேக் தலா இரு கோல்களை அடித்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் 3 கோல் அடிக்கப்பட்டது. இந்திய வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.</p><p>இறுதியில், இந்திய அணி 5 - 3 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி 2வது வெற்றியைப் பெற்றது. அத்துடன், இந்திய அணி அடுத்த சுற்றுக்கும் முன்னேறியது.</p>]]></content:encoded></item><item><title>“மனிதர்கள் ஏமாற்றுகிறார்கள்... நாங்கள் மாட்டிக் கொள்கிறோம்” - ம.பி.யில் மனுவில் ஒலித்த தெருநாய்களின் வேதனை!</title><link>https://www.maalaimalar.com/news/national/despite-sterilization-i-have-six-pups-humans-deceive-and-we-get-caught-the-anguish-of-stray-dogs-voiced-in-a-petition-from-madhya-pradesh</link><comments>https://www.maalaimalar.com/news/national/despite-sterilization-i-have-six-pups-humans-deceive-and-we-get-caught-the-anguish-of-stray-dogs-voiced-in-a-petition-from-madhya-pradesh#comments</comments><guid isPermaLink="false">6c614fd2-8619-4c59-a7f6-6af74c6a85d9</guid><pubDate>Wed, 19 Aug 2026 14:58:54 +0000</pubDate><atom:updated>2026-08-19T14:58:54.090Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,மகாராஷ்டிரா,stray dog ​​sterilization,தெருநாய்கள் கருத்தடை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/45wssmgo/New-Project-2026-08-19T194444.809.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “இவர்கள் ஏமாற்றுகிறார்கள்... நாங்கள் மாட்டிக் கொள்கிறோம்” - ம.பி.யில் மனுவில் ஒலித்த தெருநாய்களின் வேதனை!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/45wssmgo/New-Project-2026-08-19T194444.809.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்தியப் பிரதேசத்தின் காண்ட்வா மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாய் முகமூடி அணிந்து மனு அளிக்க சென்ற நபரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. </p><p>மாநகராட்சி பகுதியில் தெருநாய்களுக்கு கருத்தடை செய்வதில் குறைபாடு இருப்பதாகக் கூறி அலுவலகத்திற்கு மனு அளிக்கச் சென்றவர் இந்த நூதன ஆர்ப்பாட்டை முன்னெடுத்துள்ளார். </p><p>ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, வேடிக்கையாக அதே சமயம் அதிகாரிகளைச் சாடும் வகையிலான புகாரை அளித்த அந்த நபர்., “நாங்கள் அவர்களைக் கடிப்பதாக மக்கள் நினைக்கிறார்கள், ஆனால் அதில் எங்கள் மீது எந்தத் தவறும் இல்லை. முன்பு எங்களுக்குச் சாப்பிட ஏதாவது கிடைக்கும், ஆனால் இப்போது அது நடப்பதில்லை. அதனால், நாங்கள் நிச்சயமாக மக்களைத் துரத்திச் செல்வோம். </p><p>மாவட்ட ஆட்சியரிடம் இருந்து நாங்கள் நீதியைக் கோருகிறோம். எங்கள் பெயரில் நிதியைத் திருடி, எங்களுக்கு அவதூறு பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவிட்டேன் என்பது எனக்குத் தெரியும். எனக்கு நீதி கிடைக்கும் என்பதில் நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.” என தெரிவித்தார்.</p><p>மேலும் நாய்களுக்கு முறையான அறுவை சிகிச்சை செய்யாமல், அதிகாரிகள் போலியான ரசீதுகளை மட்டும் தயாரித்து ஊழல் செய்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார்.</p><p>இவருக்கு துணையாக மாநகராட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் தீபக் முல்லு ரத்தோரும் சென்றுள்ளார். </p><h2>ரூ. 40 லட்சம் ஊழல் குற்றச்சாட்டு </h2><p>மாநகராட்சி பகுதியில் தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், அவற்றுக்குக் கருத்தடை சிகிச்சை செய்யவும் கடந்த 4 ஆண்டுகளில் சுமார் ரூ. 40 லட்சம் வரை செலவிடப்பட்டதாகக் கணக்குக் காட்டப்பட்டுள்ளது.</p><p>ஆனால் அதே காலகட்டத்தில், 13,225 நாய் கடி வழக்குகள் பதிவு செய்யப்பட்ட்டுள்ளன.</p><p>மறுபுறம் மாநகராட்சி நிர்வாகப் பொறியாளர் சஞ்சய் சுக்லா, ஊழல் குற்றச்சாட்டை மறுத்தார். கருத்தடைத் திட்டம் தொடர்பான பதிவுகளும், தரவுகளும் வழங்கப்படும் என்றும் கூறினார்.</p><p>மேலும் இவ்விவகாரம் நகராட்சி ஆணையருடன் விவாதிக்கப்பட்டதாகவும், விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூடுதல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>மாநில கல்விக் கொள்கை அடிப்படையில் பாடத்திட்டங்கள்: 31-ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்கலாம்-பள்ளிக் கல்வித்துறை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/school-education-department-says-state-education-policy-based-curriculam-comments-can-be-submitted-by-the-31st</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/school-education-department-says-state-education-policy-based-curriculam-comments-can-be-submitted-by-the-31st#comments</comments><guid isPermaLink="false">c88fbb42-342c-48f5-833b-347b66206af7</guid><pubDate>Wed, 19 Aug 2026 14:43:02 +0000</pubDate><atom:updated>2026-08-19T14:43:02.386Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,School Education Department,பள்ளிக்கல்வித்துறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/24k3s1sh/DPI.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DPI]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/24k3s1sh/DPI.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:</p><p>பள்ளிக் கல்விக்கான தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை 2025-ன் அடிப்படையில் புதிய கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டங்களை உருவாக்க பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தலைமையில் உயர்மட்ட வல்லுநர் குழு மற்றும் கலைத்திட்ட வடிவமைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. </p><p>இக்குழுவினரின் வழிகாட்டுதலின்படி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் ஆறு முதல் பத்து வகுப்புகளின் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.</p><p>இப்பாடத்திட்டங்களைக் கல்வியாளர்கள், பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் https://tnschools.gov.in இணையத் தளத்தில் 20.08.2026 முதல் பார்க்கலாம்.   </p><p>பாடத்திட்டம் சார்ந்து கருத்து கூறுவோார் https://tnschools.gov.in இணையத் தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணையவழிப் படிவம் (online form) வாயிலாக, சுய விவரங்களுடன் தம் கருத்துகனை 31.08.2026-க்குள் அனுப்பக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பெற்ற மகளையே சீரழித்த கொடூர தந்தை: போலி ஆதாரைப் பயன்படுத்தி குழந்தையை விற்ற அத்தை உள்பட 8 பேர் கைது!</title><link>https://www.maalaimalar.com/news/national/cruel-father-abused-his-own-daughter</link><comments>https://www.maalaimalar.com/news/national/cruel-father-abused-his-own-daughter#comments</comments><guid isPermaLink="false">ad9cf8cd-d02f-461e-8bd7-c82b41f94435</guid><pubDate>Wed, 19 Aug 2026 14:41:50 +0000</pubDate><atom:updated>2026-08-19T14:41:50.139Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>POCSO,Raipur,போக்சோ,ChildTrafficking,AadhaarForgery,ராய்பூர்,ராய்பூர்கொடூரம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/6kwcsfz3/rape.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Child Trafficking]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/6kwcsfz3/rape.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்பூரில் மனிதநேயமற்ற, நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 16 வயதுடைய பெற்ற மகளையே சொந்தத் தந்தை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்த கொடூரம் அரங்கேறியுள்ளது.</p><h2>கட்டாய க<strong>ருக்கலைப்பு</strong></h2><p>கடந்த 2023-ஆம் ஆண்டு பெற்ற தாய், தந்தையை விட்டுப் பிரிந்து சென்றதைத் தொடர்ந்து, மூத்த மகளான இந்த சிறுமியைத் தந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துத் தொடர்ந்து அச்சுறுத்தி <a href="https://www.maalaimalar.com/news/national/atrocity-against-14-year-old-girl-by-instagram-friend-in-mumbai">பாலியல் துன்புறுத்தலுக்கு </a>உள்ளாக்கியுள்ளார். இதனால் சிறுமி முதன்முறையாகக் கர்ப்பமடைந்தபோது, அவரது அத்தையும் தந்தையும் இணைந்து சட்டவிரோதமாகக் மாத்திரைகள் வழங்கி கட்டாயக் கருக்கலைப்பு செய்ய வைத்துள்ளனர்.</p><h2>மீண்<strong>டும் கர்ப்பம் அடைந்த சி</strong>றுமி</h2><p>அதன் பின்னரும் தொடர்ந்த கொடுமையால், அச்சிறுமி மீண்டும் 2025-இல் கர்ப்பமடைந்தார். இம்முறை இக்குற்றத்தை மறைப்பதற்காக, செவிலியர்கள் மற்றும் இடைத்தரகர்கள் சிலருடன் இணைந்து தந்தை சதித்திட்டம் தீட்டினார். சிறுமியின் உண்மையான வயதை மறைத்து, போலி ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களைத் தயாரித்து, அவருக்குத் திருமணமாகிவிட்டதாகப் பொய் சித்திரத்தை உருவாக்கியுள்ளனர்.</p><h2>குழ<strong>ந்தை விற்பனை</strong></h2><p>இதனைப் பயன்படுத்தி ஒரு தனியார் மருத்துவமனையில் அச்சிறுமியை அனுமதித்து, அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறக்க வைத்துள்ளனர். குழந்தை பிறந்தவுடனேயே, மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் இடைத்தரகர்களின் உதவியோடு அக்குழந்தை வேறொரு நபருக்கு விற்பனை செய்துள்ளனர்.</p><h2>அத்தை உள்<strong>பட 8 பேர் கை</strong>து</h2><p>சமீபத்தில் சமூக வலைத்தளம் மூலமாகத் தன் தாயைத் தொடர்புகொண்ட சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமைகளை அழுது விவரித்துள்ளார். உடனடியாகத் தாய் அளித்த புகாரின் பேரில், நியூ ராஜேந்திர நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குற்றத்தில் ஈடுபட்ட தந்தை, அத்தை, போலியான ஆவணங்களை உருவாக்க உதவிய செவிலியர்கள் மற்றும் குழந்தையை விலைக்கு வாங்கிய நபர் உட்பட 8 பேரை காவல்துறையினர் போக்சோ, பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் சிறுவர் நீதிச் சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: பிவி சிந்து 3வது சுற்றுக்கு முன்னேற்றம்</title><link>https://www.maalaimalar.com/sports/pv-sindhu-enter-third-round-in-world-championship-badminton</link><comments>https://www.maalaimalar.com/sports/pv-sindhu-enter-third-round-in-world-championship-badminton#comments</comments><guid isPermaLink="false">cfeec8a5-1036-4a6c-9b11-e683deb0bcb9</guid><pubDate>Wed, 19 Aug 2026 14:07:08 +0000</pubDate><atom:updated>2026-08-19T14:07:08.147Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>pv sindhu,பிவி சிந்து,World Championship badminton,உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2024/05/22/2295767-pvsindhu2205.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ pv sindhu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2024/05/22/2295767-pvsindhu2205.webp?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் டெல்லி இந்திரா காந்தி உள்ளரங்கில் நடந்து வருகிறது. இந்தத் தொடரில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.</p><p>இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, கனடாவின் வென் யூ ஜாங் உடன் மோதினார்.</p><p>இதில் சிறப்பாக ஆடிய பி.வி.சிந்து 21-16, 21-17 என்ற செட் கணக்கில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.</p><p>மற்றொரு போட்டியில் இந்தியாவின் உன்னதி ஹூடா 21-11, 9-21, 21-23 என்ற செட் கணக்கில் கனடாவின் மிச்செல்லி லீயிடம் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.</p><p>ஆண்கள் பிரிவில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>35 ஆண்டுகளுக்கு பிறகு வங்கதேசத்தில் நாளை குடியரசுத் தலைவர் தேர்தல்!</title><link>https://www.maalaimalar.com/news/world/presidential-election-in-bangladesh-tomorrow-after-35-years</link><comments>https://www.maalaimalar.com/news/world/presidential-election-in-bangladesh-tomorrow-after-35-years#comments</comments><guid isPermaLink="false">dae71928-f80e-4338-82d5-c5b7845275c5</guid><pubDate>Wed, 19 Aug 2026 14:06:16 +0000</pubDate><atom:updated>2026-08-19T14:06:16.291Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Bangladesh,வங்கதேசம்,Presidential election,ஜனாதிபதி தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/he05y0v3/New-Project-2026-08-19T193536.776.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 35 ஆண்டுகளுக்கு பிறகு வங்கதேசத்தில் நாளை குடியரசுத் தலைவர் தேர்தல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/he05y0v3/New-Project-2026-08-19T193536.776.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வங்கதேசத்தில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை வாக்கெடுப்பு முறைமூலம் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெற உள்ளது. </p><p>இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தலை நேர்மையாகவும், அழகாகவும், ஒழுங்காகவும் நடத்துவதற்கான அனைத்துத் தேவையான ஏற்பாடுகளும் நிறைவடைந்துவிட்டதாக அந்நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.எம்.எம். நசீர் உத்தின் தெரிவித்துள்ளார். </p><p>‘எங்கள் தயாரிப்புகளில் எந்தக் குறையும் இல்லை. இந்தத் தேர்தலில் சம்பந்தப்பட்ட அனைவரிடமிருந்தும் எங்களுக்கு ஒத்துழைப்பு கிடைத்து வருகிறது. எங்களால் ஒரு சிறப்பான தேர்தலை நடத்த முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்றும் தெரிவித்துள்ளார்.</p><p>வங்கதேசத்தின் 349 எம்.பி.க்களும் நாளை வாக்களிப்பார்கள் என்றும், வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கும், அதன் பிறகு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>வாக்குப்பதிவு தொடர்ந்து நேரலையில் ஒளிப்பரப்பப்படும் எனவும் நசீர் உத்தின் தெரிவித்துள்ளார். </p><h2>35 ஆண்டுகளுக்கு பிறகு வாக்குப்பதிவு</h2><p>சமீபத்தில் வங்கதேச அதிபர் முகமது ஷஹாபுதீன் உடல் நலக்குறைவைக் காரணம் காட்டி தனது பதவியை ராஜினாமா செய்தநிலையில், தற்போது தேர்தல் நடைபெறுகிறது. </p><p>கடந்த 1991 ஆம் ஆண்டிற்குப் பிறகு நடைபெற்ற அனைத்து அதிபர் தேர்தல்களிலும் வேட்பாளர்கள் போட்டியின்றி ஒருமனதாகவே தேர்வு செய்யப்பட்டு வந்தனர். தற்போது 35 ஆண்டுகள் கழித்து, இரண்டு வேட்பாளர்கள் களத்தில் இருப்பதால் முதன்முறையாக வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.</p><h2>வெற்றி வாய்ப்பு யாருக்கு?</h2><p>தற்போது பிரதமர் தாரிக் ரஹ்மான் தலைமையிலான ஆளும் பங்களாதேஷ் தேசியவாத கட்சிக்கு நாடாளுமன்றத்தில் <strong>மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை</strong> இடங்கள் உள்ளன. எனவே, அவர்களின் அதிகாரப்பூர்வ வேட்பாளரான <strong>மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீர்</strong> புதிய அதிபராக வெற்றிப் பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கருதப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY: காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் உயர்ந்தது - எவ்வளவு தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-increase-in-evening</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-increase-in-evening#comments</comments><guid isPermaLink="false">f391c659-0506-4aba-869f-361f525ceaef</guid><pubDate>Wed, 19 Aug 2026 13:53:58 +0000</pubDate><atom:updated>2026-08-19T13:53:58.724Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Silver,Gold price,தங்கம் விலை,வெள்ளி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/02/19486890-gold2.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ gold]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/02/19486890-gold2.webp?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தங்கம் என்றால் தற்போது நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாகவே மாறி வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய விலையில் விற்பனை செய்யப்படுவதால் உச்சத்தை தொட்டு விற்பனையாகிறது.</p><p>ஆடி மாதம் முடிந்து சுபமுகூர்த்த தினங்கள் நிறைந்த ஆவணி மாதம் பிறந்துள்ளதால், இனி வரும் நாட்களில் தங்கத்தின் தேவை அதிகரித்து விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>குறைந்த தங்கம் விலை</h2><p>இந்த வாரத்தில் தொடக்கத்தில் இருந்து, அதாவது கடந்த 2 நாட்களாக சற்று உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று காலை சற்று குறைந்தது.</p><p>கிராமுக்கு 85 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14,205-க்கும், சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 640-க்கும் விற்பனை செய்யப்பட்டது.</p><h2>வெள்ளி விலை நிலவரம்</h2><p>தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 250 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. கடந்த 5 நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று சற்று குறைந்தது குறிப்பிடத்தக்கது.</p><p>இந்நிலையில், சென்னையில் இன்று மாலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,560 அதிகரித்து ரூ.1,15,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.195 அதிகரித்து ரூ.14,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.</p><h2>மாலையில் உயர்ந்த தங்கம்</h2><p>காலையில் சவரனுக்கு 680 ரூபாய் குறைந்த தங்கத்தின் விலை மாலையில் 1560 ரூபாய் அதிகரித்திருப்பது இல்லத்தரசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.</p><p>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-</p><p>18-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,320</p><p>17-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,160</p><p>16-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,760</p><p>15-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,760</p><p>14-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,600</p>]]></content:encoded></item><item><title>பழைய வாகனங்களுக்கு மீண்டும் E10 பெட்ரோல் வழங்க மத்திய அரசு ஆலோசனை!</title><link>https://www.maalaimalar.com/news/national/old-vehicles-e10-petrol-return-central-government-consideration</link><comments>https://www.maalaimalar.com/news/national/old-vehicles-e10-petrol-return-central-government-consideration#comments</comments><guid isPermaLink="false">ae2d3802-f670-4212-a5d0-1ba9be11614b</guid><pubDate>Wed, 19 Aug 2026 13:52:13 +0000</pubDate><atom:updated>2026-08-19T13:52:13.383Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>E10Petrol,E20Petrol,EthanolBlending,மத்தியஅரசு,E10 பெட்ரோல்,E20 பெட்ரோல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/4mo1b20q/e10.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ E10Petrol]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/4mo1b20q/e10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் இயங்கும் பழைய வாகனங்களின் நலனைக் கருத்தில் கொண்டு மீண்டும் E10 பெட்ரோலை வழங்குவது குறித்து மத்திய அரசின் மட்டத்தில் முக்கிய ஆலோசனைகள் மற்றும் விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன.</p><h2>எ<strong>த்தனால் கலப்பால் ஏற்ப</strong>டும் சவால்கள்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-ug-counseling-2026-round-1-seat-allotment-results-how-to-check-mbbs-bds-list">இந்தியாவில்</a> தற்போது 20% எத்தனால் கலக்கப்பட்ட E20 பெட்ரோல் நாடு முழுவதும் பயன்பாட்டில் உள்ளது. இருப்பினும், நாட்டின் சாலைகளில் இயங்கும் சுமார் 7.5 கோடி முதல் 8 கோடி பழைய இருசக்கர வாகனங்கள் 'கார்புரேட்டர்' தொழில்நுட்பம் கொண்டவை. இந்த பழைய என்ஜின்களால் E20 பெட்ரோலில் உள்ள கூடுதல் ஆக்சிஜனைச் சீரமைக்க முடிவதில்லை. இதனால் என்ஜின் விரைவில் சூடாவதோடு, பழைய ரப்பர் பாகங்களும் சேதமடைவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.</p><h2>பொ<strong>ருளாதார ஆலோசகரின் பரிந்து</strong>ரை</h2><p>மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தனது அறிக்கையில், பழைய வாகனங்களின் என்ஜின் ஆயுளைப் பாதுகாக்கவும், நுகர்வோரின் கவலையைப் போக்கவும் E10 பெட்ரோலையும் ஒரு விருப்பமாக பெட்ரோல் பங்குகளில் மீண்டும் வழங்க பரிசீலிக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளார்.</p><h2>மத்திய <strong>அரசின் ப</strong>ரிசீலனை</h2><p>E20 பெட்ரோலுக்கு பொருந்தாத பழைய வாகன உரிமையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், உணவு உற்பத்தி மற்றும் எத்தனால் பயன்பாட்டிற்கு இடையேயான சமநிலையைப் பேணும் வகையிலும், மீண்டும் E10 பெட்ரோலை வழங்குவது தொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து அரசு விரிவாக ஆலோசித்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>உலக புகைப்பட தினம்- முதலமைச்சர் விஜய் வாழ்த்து!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/world-photography-day-chief-minister-vijay-greetings</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/world-photography-day-chief-minister-vijay-greetings#comments</comments><guid isPermaLink="false">f909804b-ab17-40d0-9d16-edaf4c9fbb28</guid><pubDate>Wed, 19 Aug 2026 13:29:31 +0000</pubDate><atom:updated>2026-08-19T13:29:31.309Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>CMVIJAY,WorldPhotographyDay,TNNews,உலகபுகைப்படநாள்,முதலமைச்சர்விஜய்,புகைப்படநாள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/ji6qkxrb/vija.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/ji6qkxrb/vija.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலக புகைப்பட நாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் விஜய் புகைப்படக் கலைஞர்களுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.</p><h2>காலத்தின் பக்கங்<strong>களை உறையவை</strong>க்கும் கலை</h2><p>முதலமைச்சர் விஜய் தனது வாழ்த்துச் செய்தியில், ஓடும் காலத்தின் பக்கங்களை ஒரு கணத்தில் உறையச் செய்து, வரலாற்றை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் சமூகக் கண்ணாடியாக புகைப்படங்கள் திகழ்கின்றன எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>புகைப்பட<strong>க் கலைஞர்களுக்</strong>குப் பாராட்டு</h2><p>மனித வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் வாழ்நாள் நினைவாக மாற்றுவதோடு, வார்த்தைகளால் விவரிக்க இயலாத உணர்ச்சிகளையும் நிகழ்வுகளையும் கலைநயம் மிக்க புகைப்படங்கள் மூலம் உணர்த்தும் புகைப்படக் கலைஞர்களின் ஆற்றலை அவர் வெகுவாகப் பாராட்டியுள்ளார். மேலும், அனைத்துப் புகைப்படக் கலைஞர்களின் கலைப் பயணமும் சிறக்க வாழ்த்துவதாகத் தனது செய்தியில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: 3வது சுற்றுக்கு முன்னேறினார் ஆயுஷ் ஷெட்டி</title><link>https://www.maalaimalar.com/sports/ayush-shetty-enter-third-round-in-world-championship-badminton</link><comments>https://www.maalaimalar.com/sports/ayush-shetty-enter-third-round-in-world-championship-badminton#comments</comments><guid isPermaLink="false">5e4e9aca-46cb-4eaf-b86e-9960d90664ba</guid><pubDate>Wed, 19 Aug 2026 13:11:23 +0000</pubDate><atom:updated>2026-08-19T13:11:23.162Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Ayush Shetty,ஆயுஷ் ஷெட்டி,World Championship badminton,உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/xtkmk6un/ayush.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ayush shetty]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/xtkmk6un/ayush.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் டெல்லி இந்திரா காந்தி உள்ளரங்கில் நடந்து வருகிறது. இந்தத் தொடரில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.</p><p>இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, இலங்கையின் அபேய்விக்ரமா உடன் மோதினார்.</p><p>இதில் சிறப்பாக ஆடிய ஆயுஷ் ஷெட்டி 21-8, 21-10 என்ற செட் கணக்கில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.</p><p>மற்றொரு போட்டியில் இந்தியாவின் லக்‌ஷயா சென் 21-19, 19-21, 17-21 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் காரட் டானிடம் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.</p>]]></content:encoded></item><item><title>காங்கிரஸ் புத்தகத்தில் காவி நிறம் ஏன்? - தமிழக சட்டப்பேரவையில் காரசார விவாதம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/row-over-saffron-colour-on-congress-book-cover-in-tamil-nadu-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/row-over-saffron-colour-on-congress-book-cover-in-tamil-nadu-assembly#comments</comments><guid isPermaLink="false">52f2d7bf-102f-49c8-a39e-7d10ea671970</guid><pubDate>Wed, 19 Aug 2026 13:07:18 +0000</pubDate><atom:updated>2026-08-19T13:07:18.239Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TNAssembly,சட்டப்பேரவை,TamilNaduAssembly,AssemblySession,TNNews,தமிழகஅரசியல்,சட்டமன்றம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/ql3evm6m/aadhav.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TamilNadu Assembly ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/ql3evm6m/aadhav.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அமைச்சரவை கொள்கை விளக்கப் புத்தகத்தின் அட்டைப்பட நிறம் குறித்து சுவாரசியமான காரசார விவாதம் ஒன்று நடைபெற்றது.</p><h2>தங்கம் தெ<strong>ன்னரசுவின் கேள்</strong>வி</h2><p>சட்டப்பேரவை விவாதத்தின் போது பேசிய முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ராஜேஷ்குமாரின் துறை சார்ந்த கொள்கை விளக்கப் புத்தகத்தின் அட்டையில் காவி நிறம் பயன்படுத்தப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு அமைச்சரின் துறை புத்தகத்தில் காவி நிறம் ஏன் இடம்பெற வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.</p><h2>ஆதவ் அ<strong>ர்ஜுனாவின் விள</strong>க்கம்</h2><p>இதற்கு உடனடியாகப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அட்டைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிறம் தேசியக் கொடியில் உள்ள முதன்மை நிறத்தையே குறிக்கிறது என்றும், இதில் வேறு எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என்றும் விளக்கம் அளித்தார்.</p><h2>காங்<strong>கிரஸின் நிலைப்பா</strong>டு</h2><p>இதனைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் அமைச்சர் விசுவநாதன், "வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே காங்கிரஸ் கட்சியின் அடிப்படை கொள்கை. வண்ணம், மொழி, உணவு, கலாச்சாரம் என எதிலும் எங்களுக்குள் வேறுபாடுகள் கிடையாது. எனவே, இதுபோன்ற விஷயங்களை திட்டமிட்டு சர்ச்சையாக பரப்ப வேண்டாம்" என்று தெரிவித்து விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை முக்கிய உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thoothukudi-shooting-incident-high-court-madurai-bench-key-order-to-government</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thoothukudi-shooting-incident-high-court-madurai-bench-key-order-to-government#comments</comments><guid isPermaLink="false">f810a8de-103e-49b0-92e9-c2d72477046b</guid><pubDate>Wed, 19 Aug 2026 13:01:05 +0000</pubDate><atom:updated>2026-08-19T13:01:05.296Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தூத்துக்குடி துப்பாக்கி சூடு,அருணா ஜெகதீசன் ஆணையம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/k2c8abm2/madurai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ High court madurai bench]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/k2c8abm2/madurai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018-ல் நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணைக் கமிஷன் அனுமதிக்கப்பட்டது. இந்த கமிஷன் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது.</p><p>இந்த அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு ஏற்கப்பட்டது. பின்னர், அமைச்சரவையில் இந்த அறிக்கையின் ஒரு பகுதி ஏற்கப்பட்டது. இந்த அறிக்கையில் போலீசார் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், 30 லட்சம் ரூபாய்க்கு மேல் இழப்பீடு வழங்கப்படலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.</p><p>இதற்கிடையே உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.</p><p>இந்த மனு இரண்டு நீதிபகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, "தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அருணா ஜெகதீசன் அறிக்கை தமிழக அரசால் ஏற்கப்பட்டதா? இல்லையா?" என்று கேள்வி எழுப்பினர்.</p><p>அதற்கு அரசு சார்பு வழக்கறிஞர் அறிக்கையின் ஒரு பகுதி ஏற்கப்பட்டது எனத் தெரிவித்தார். அத்துடன் ஆணையை முழுயைமாக ஏற்றுக் கொள்வது என்பது மாநில அரசின் உரிமை என்றார்.</p><p>அதற்கு நீதிபதிகள் "இழப்பீட்டை 30 கோடி ரூபாய்க்கு அதிக வழங்கப்பட திட்டமுள்ளதா? அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், காவல் அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க திட்டமுள்ளதா? என்பது குறித்து விரிவான பதில் மனுவை தற்போதைய அரசு தாக்கல் செய்ய வேண்டும்.</p><p>சிபிஐ விசாரணை நடைபெற்று வருவதால் இது குறித்து குறுக்கிட விரும்பவில்லை. வழக்கு விசாரணையை வருகிற 31-ந்தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சர்க்கார் பேனரை கிழித்ததால் ஆட்சியை இழந்த அதிமுக: அமைச்சர் என்.ஆனந்த்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-anand-says-admk-not-come-to-form-govt-because-they-destroy-sarkar-poster</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-anand-says-admk-not-come-to-form-govt-because-they-destroy-sarkar-poster#comments</comments><guid isPermaLink="false">2c586c18-777a-4182-bfad-89d3bff7fbaa</guid><pubDate>Wed, 19 Aug 2026 12:52:15 +0000</pubDate><atom:updated>2026-08-19T12:52:15.619Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,Sarkar,Minister Anand,அமைச்சர் ஆனந்த்,சர்க்கார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/tz2zfseb/anand.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ minister anand]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/tz2zfseb/anand.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகிறது. இதற்கு பதிலளித்து நகராட்சித்துறை அமைச்சர் என்.ஆனந்த் பேசியதாவது:</p><p>முதல்வர் விஜய் உடன் 25 ஆண்டுகளுக்கு மேல் நெருங்கிப் பழகியவன் நான்.</p><p>சாதி, மதம், பணம் எதுவுமே நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் எடுபடவில்லை.</p><p>தேர்தலுக்கு முன் தமிழக வெற்றிக் கழகம் 2 முதல் 7 சதவீதம் வாக்குகள் தான் வாங்குவார்கள் என பேசினார்கள்.</p><p>தி.நகரில் 4 நாட்கள் மட்டுமே பிரசாரம் செய்தேன்.</p><p>என்னை வெற்றிபெற செய்த தியாகராய நகர் சட்டமன்ற தொகுதி மக்களுக்கு நன்றி.</p><p>சர்க்கார் படத்தின் பேனரை கிழிக்காமல் இருந்திருந்தால் அதிமுக ஆட்சியில் இருந்திருக்கும் என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தல்: ஈரானுடன் அனைத்து வர்த்தகமும் நிறுத்தம்- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/missile-attack-threat-uae-halts-all-trade-with-iran</link><comments>https://www.maalaimalar.com/news/world/missile-attack-threat-uae-halts-all-trade-with-iran#comments</comments><guid isPermaLink="false">ebafc6e6-84ac-4cd0-9bb5-0ea7a2146d94</guid><pubDate>Wed, 19 Aug 2026 12:31:19 +0000</pubDate><atom:updated>2026-08-19T12:31:19.170Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>UAE,ஈரான்,Iran,missile attack,ஏவுகணை தாக்குதல்,ஐக்கிய அரபு எமிரேட்ஸ்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/95awqjaa/UAE.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ UAE]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/95awqjaa/UAE.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா கடந்த பிப்ரவரி 28-ந்தேதி போர் தொடுத்தது. </p><h2>பதிலடி</h2><p>இதற்கு பதிலடியாக கத்தார், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது. </p><p>தற்போது இருதரப்பினரும் மறைமுகமாக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ள தால் தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை.</p><p>இதற்கிடையே ஈரானில் இருந்து 2 ஏவுகணைகளை ஏவப்பட்டதாகவும் அதில் ஒரு ஏவுகணை தங்களின் கடல் எல்லைக்குள் விழுந்த தாகவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெரிவித்தது.</p><p>கடல் போக்குவரத்தை குறி வைத்து தாக்குதல் நடத் தப்பட்டதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குற்றம் சாட்டி யது. இதையடுத்து மக்களுக்கு ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தல் குறித்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எச்சரிக்கை விடுத்தது. </p><h2>எச்சரிக்கைகள்</h2><p>அதில் ஐக்கிய அரபு எமிரேட்சின் வான் பாதுகாப்பு அமைப்புகள் நாட்டின் மீது ஏவுகணை அச்சுறுத்தலைக் கண்டறிந்து  உள்ளன. </p><p>எனவே மக்கள் பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறும், அதிகாரப்பூர்வ வழிகள் மூலம் வெளியிடப்படும் எச்சரிக்கைகள் மற்றும் தகவல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.</p><h2>அனைத்து வர்த்தகமும் நிறுத்தம்</h2><p>இந்தநிலையில் ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தலை தொடர்ந்து ஈரானுடனான அனைத்து வர்த்தகமும் ரத்து செய்யப்படுவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியுறவு அமைச்சகம் அறிவித்து உள்ளது. </p><p>இதுதொடர்பாக அந்த அமைச்சகம் கூறும்போது, பிராந்திய, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை குலைக்கும் வகையில் பிராந்திய பதற்றங்கள் அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, ஈரானுடனான அனைத்து வர்த்தகம், வணிகப் பரிமாற்றங்கள் மற்றும் நிதி நடவடிக்கைகள் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்தது. </p><p>ஐக்கிய அரபு எமிரேட்சில் கடைசியாக கடந்த மே மாதம் ஏவுகணை தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2>ஈரான் மறுப்பு</h2><p>இதற்கிடையே ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெரிவித்த குற்றச்சாட்டை ஈரான் மறுத்து உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்சை நோக்கி எந்த ஏவுகணையையும் ஏவவில்லை என்றும் இந்தக் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்றும் ஈரான் தெரிவித்தது. </p><p>நல்ல அண்டை உறவுமுறை என்ற கொள்கையின்படி, இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் தவிர்க் கப்பட வேண்டும் என்று ஈரானின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டெல்லி: லாரியின் எரிவாயு தொட்டி வெடித்து விபத்து - ஒருவர் பலி... 6 பேர் கவலைக்கிடம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-truck-gas-tank-explodes-one-dead-six-critically-injured</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-truck-gas-tank-explodes-one-dead-six-critically-injured#comments</comments><guid isPermaLink="false">d1a5b2d8-d684-42c1-bf07-515bfa29a2ba</guid><pubDate>Wed, 19 Aug 2026 12:23:22 +0000</pubDate><atom:updated>2026-08-19T12:23:22.951Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>delhi,டெல்லி,CNG Cylinder Explosion,சிஎன்ஜி சிலிண்டர் வெடிப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/0yp2mfy1/New-Project-2026-08-19T174621.646.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டெல்லி: லாரியின் எரிவாயு தொட்டி வெடித்து விபத்து - ஒருவர் பலி... 6 பேர் படுகாயம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/0yp2mfy1/New-Project-2026-08-19T174621.646.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியின் புறநகர் பகுதியான திக்ரி கலானில் உள்ள ஒரு சிஎன்ஜி நிலையத்திற்கு லாரி ஒன்று எரிவாயு நிரப்ப வந்துள்ளது. லாரியின் எரிபொருள் தொட்டியில் எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக எரிபொருள் தொட்டி வெடித்துள்ளது. </p><p>இந்த விபத்தில் எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்த மணீஷ் (25) என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் வெடிவிபத்து நடந்த நேரத்தில் அருகில் நின்றுகொண்டிருந்த மேலும் ஆறு பேர் காயமடைந்ததாகவும், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வெடிப்புக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை.</p><p>விபத்து தொடர்பாக 3.37 மணிக்கு தங்களுக்கு தகவல் கிடைத்ததாக டெல்லி தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.</p><p>வெடிவிபத்தைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>கேரளாவில் துணிகரம்: ஐபோனுக்காக தாத்தாவை கொன்ற பேத்தி</title><link>https://www.maalaimalar.com/news/national/kerala-teen-plots-grandfathers-murder-watches-him-suffocate-on-video-call</link><comments>https://www.maalaimalar.com/news/national/kerala-teen-plots-grandfathers-murder-watches-him-suffocate-on-video-call#comments</comments><guid isPermaLink="false">0107f92b-099d-42bc-b7e6-58db550d01b1</guid><pubDate>Wed, 19 Aug 2026 12:17:44 +0000</pubDate><atom:updated>2026-08-19T12:17:44.507Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>grandfather,தாத்தா,I Phone,grand daughter,ஐபோன்,பேத்தி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/724p6rru/sivan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ sivan kutty]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/724p6rru/sivan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஐபோனுக்காக தனது நண்பர்கள் உதவியுடன் தாத்தாவைக் கொலை செய்த பேத்தியின் செயல் கேரளாவில் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.</p><p>கேரளம் மாநிலத்தின் ஆலப்புழாவில் சிவன்குட்டி என்ற முதியவர் (67), கடந்த சனிக்கிழமை தனது வீட்டில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், ஒரு துணியால் கழுத்து நெரிக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.</p><p>அவர் அணிந்திருந்த தங்க செயின், மோதிரம் உள்ளிட்டவை காணாமல் போயிருந்ததால் இந்த வழக்கை கொலை மற்றும் கொள்ளை வழக்காகக் கருதி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சிவன்குட்டியின் பேத்தியான 13 வயது சிறுமி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.</p><p>போலீசார் நடத்திய விசாரணையில் வெளியான தகவல்களின் விவரம் வருமாறு:</p><p>தனது காதலனான 17 வயது சிறுவன் மற்றும் அவனது நண்பர்களான 17 வயது சிறுவர்கள் 2 பேர் என மொத்தம் 4 பேர் சேர்ந்து சிவன்குட்டியை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.</p><p>ஐபோன் மற்றும் பைக் வாங்குவதற்காக சிவன்குட்டியை கொலை செய்ததாக போலீசாரிடம் அவர்கள் வாக்குமூலம் அளித்தனர். </p><p>சிறுமியின் காதலன், அவனது நண்பர்கள் ஆகியோர் இணைந்து கொலையை செய்ததாகவும், சிறுமி காணொலி அழைப்பில் இருந்தபடி சம்பவத்தை ஒருங்கிணைத்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். </p><p>மேலும், பாதிக்கப்பட்ட முதியவர் வீட்டில் தனியாக இருந்ததும், ​​ஆகஸ்ட் 15-ம் தேதி இரவு இந்தக் கொடூர கொலை நடந்ததும் தெரிய வந்தது. </p><p>அதற்கு முந்தைய தினம் முதியவரின் இளைய மகள் பிரசவத்திற்காக ஆலப்புழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும், அவருக்கு துணையாக இருக்க முதியவரின் மனைவியும் அங்கு சென்றதும் தெரியவந்தது.</p><p>ஐபோனுக்காக தாத்தாவை பேத்தியே கொன்ற சம்பவம் கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>1-ந்தேதி வந்து விட்டால் வாடகை செலுத்த வேண்டும்: பாஜக-வில் இருந்து வெளியேறிய ஷேசாத் பூனவாலா சொல்கிறார்</title><link>https://www.maalaimalar.com/news/national/1-%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B7%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D</link><comments>https://www.maalaimalar.com/news/national/1-%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B7%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D#comments</comments><guid isPermaLink="false">9d1da023-e650-41de-b7c3-0b1dad461a89</guid><pubDate>Wed, 19 Aug 2026 12:01:12 +0000</pubDate><atom:updated>2026-08-19T12:01:12.125Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords></media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/ksmbkfyw/ShehzadPoonawalla001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஷேசாத் பூனவாலா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/ksmbkfyw/ShehzadPoonawalla001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பா.ஜ.க. கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரான ஷேசாத் பூனவாலா, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அத்துடன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் வெளியேறியுள்ளார்.</p><p>இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த ஷேசாத் பூனவாலா அவசரமான நிதி மற்றும் தனிப்பட்ட சூழ்நிலைகள் காரணமாக விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக ஷேசாத் பூனவாலா கூறியதாவது:-</p><p>எனக்கு வாடகை செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. நான் பா.ஜ.க.-வில் இருப்பதற்கான, வீட்டு உரிமையாளர் வாடகை கேட்காமல் இருப்பது இல்லை. 1-ந்தேதியன்று என்னிடம் வாடகை கேட்டுவிடுவார். அரசியல் கட்சிகள் தொண்டர்களுக்கு பணம் வழங்குவதில்லை.</p><p>என்னையோ அல்லது வேறு எந்தவொரு தொண்டரையோ வாழ்வாதார ரீதியாக காப்பாற்றுவது பா.ஜ.க.-வின் பணி அல்ல. ஒரு அரசியல் இயக்கத்தில் இணையும்போது, ​​அது வெறும் வேலையாக இருப்பதில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு கொள்கை மீதான ஈர்ப்பு, ஒரு தனிநபர் மீதான பற்று அல்லது அந்த அமைப்பு மீதான ஈடுபாடு ஆகியவற்றின் காரணமாகவே ஒருவர் தொண்டராக மாறுகிறார். அந்த மூன்று அம்சங்களும் இப்போதும் என்னிடம் அப்படியே உள்ளன.</p><p>இவ்வாறு ஷேசாத் பூனவாலா தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.மஹுவா மொய்த்ராவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்த மேற்குவங்க நீதிமன்றம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/west-bengal-court-issues-arrest-warrant-against-trinamool-congress-mp-mahua-moitra</link><comments>https://www.maalaimalar.com/news/national/west-bengal-court-issues-arrest-warrant-against-trinamool-congress-mp-mahua-moitra#comments</comments><guid isPermaLink="false">2b74cb62-3a5e-47ab-b65d-be42e4b7e826</guid><pubDate>Wed, 19 Aug 2026 11:53:54 +0000</pubDate><atom:updated>2026-08-19T11:53:54.089Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Bengal court,MP Mahua Moitra,மேற்கு வங்க நீதிமன்றம்,எம்.பி. மஹூவா மொய்த்ரா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/8dqxyda4/New-Project-2026-08-19T172254.693.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.மஹுவா மொய்த்ராவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்த மேற்குவங்க நீதிமன்றம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/8dqxyda4/New-Project-2026-08-19T172254.693.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ராவுக்கு எதிராக மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்ட நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. </p><p>மொய்த்ரா கைது செய்யப்பட்டது தொடர்பான உத்தரவு நிறைவேற்ற அறிக்கையை ஆக.28ம் தேதி நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் எனவும் கிருஷ்ணாநகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><h2>என்ன வழக்கு?</h2><p>துளசி மாலை மற்றும் இந்து மத நம்பிக்கைகள் குறித்து மொய்த்ரா பேசிய சில கருத்துக்கள் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக மேற்கு வங்கத்தின் கூர்னி பகுதியைச் சேர்ந்த 6 பெண்கள் மற்றும் பாஜகவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும் இந்திய ஆயுதப் படை மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்தும் அவர் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, மஹுவா மொய்த்ராவுக்கு நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுகளை அவமதிப்பாக கூறி கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><h2>மஹுவா மொய்த்ரா தரப்பு விளக்கம்</h2><p>நீதிமன்றத்திற்கு வெளியே அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக மஹுவா மொய்த்ரா தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். அவர் நீதிமன்றத்திற்கு வந்தால் கூட்டமாகச் சூழ்ந்து கொண்டு தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால், அவர் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. </p><p>ஆனால், நீதிமன்றம் முதலில் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறி அந்த கோரிக்கையை நிராகரித்து விட்டது.</p>]]></content:encoded></item><item><title>பழனி நில மோசடி வழக்கு: கைதான சார்பதிவாளர், பத்திர எழுத்தருக்கு ஒரு நாள் போலீஸ் காவல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-land-scam-case-arrested-sub-registrar-one-day-police-custody-for-document-writer</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-land-scam-case-arrested-sub-registrar-one-day-police-custody-for-document-writer#comments</comments><guid isPermaLink="false">7a996519-cb08-4083-b319-e34b4c386f16</guid><pubDate>Wed, 19 Aug 2026 11:45:47 +0000</pubDate><atom:updated>2026-08-19T11:45:47.282Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>போலீஸ் காவல்,சார்பதிவாளர்,Sub Registrar,பழனி நில மோசடி,Pazhani land scam,பத்திர எழுத்தர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/ex289hr6/pazhani.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pazhani land scam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/ex289hr6/pazhani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் தண்டபாணி சுவாமிகள் மடத்தின் ரூ.100 கோடி மதிப்பிலான 1.35 ஏக்கர் நிலம் முறை கேடாக ரூ.2 கோடிக்கு தனியாருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது.</p><p>இந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் (48), விழுப்புரத்தைச் சேர்ந்த அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ் (56), நிலம் வாங்கிய திருப்பூர் மாவட்டம் பாப்பன்குளத்தைச் சேர்ந்த வெள்ளை த்துரை (60), பழனி டி.கே.என்.புதூரைச் சேர்ந்த சேதுபதி (67), வக்கீல் அன்வர்தீன் (65), ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த பத்திர எழுத்தர் ஜெயபிரகாஷ் (38) ஆகியோரை கைது செய்தனர்.</p><h2>ஒரு நாள் காவல்</h2><p>மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த பழனியைச் சேர்ந்த வக்கீல் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். தலை மறைவான சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கொடைக்கானலில் கைது செய்து மருத்துவ பரிசோதனைக்காக திண்டுக்கல் கொண்டு வந்தபோது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது.</p><p>திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் தொடர் சிகிச்சையில் இருந்த ஜஸ்டின் மணிகண்டன் மதுரை அரசு மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டார். </p><p>அங்கு அவருக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்ப டும் ஜஸ்டின் மணிகண்டனிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்னும் முழுமையான விசாரணை நடத்தவில்லை.</p><p>அதே போல் பத்திர எழுத்தர் ஜெயபிரகாசிடமும் விசாரணை நடத்த முடிய வில்லை. இதன் காரணமாக அவர்கள் 2 பேரயும் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என திண்டுக்கல் முதலாவது மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் மனு அளித்தனர். 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்ட நிலையில் ஒரு நாள் மட்டும் அனுமதி வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது. </p><p>இன்று மாலை 5.30 மணிக்குள் விசாரணையை முடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார். விசாரணைக்காக ஜஸ்டின் மணிகண்டன், ஜெயபிரகாஷ் ஆகியோர் இன்று திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜரான நிலையில் அவர்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.</p><h2>ஜாமீன் மனுக்கள்</h2><p>இதனிடையே ஜஸ்டின் மணிகண்டன் தனது உடல் நலன் மற்றும் மருத்துவ சிகிச்சை ஆகியவற்றை காரணம் காட்டி தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என திண்டுக்கல் முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதே போல் பத்திர எழுத்தர் ஜெபிரகாஷ் சார்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.</p><p>நீதிபதி பத்மநாபன் முன்பு விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் சிவச்சந்திரன், வழக்கின் முதன்மை குற்றங்கள், கூட்டுச்சதி, நீதிமன்ற உத்தரவு மீறல் ஆகியவற்றை சுட்டிக் காட்டி ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரி வித்தனர். இதனையடுத்து அவர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.</p><p>மதுரை சிறையில் அடைக்கப்ப ட்டுள்ள முருகதாஸ் சார்பிலும் ஜாமீன் கேட்டு திண்டுக்கல் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் அவருக்கும் ஜாமீன் வழங்க அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் புதிய கார்ப்பரேட் அலுவலகத்தைத் திறந்து வைத்தார் நடிகர் STR!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-str-inaugurates-new-corporate-office-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-str-inaugurates-new-corporate-office-in-chennai#comments</comments><guid isPermaLink="false">1b3ce620-c7df-4472-be87-fc89f554ecd2</guid><pubDate>Wed, 19 Aug 2026 11:45:35 +0000</pubDate><atom:updated>2026-08-19T11:45:35.130Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Silambarasan,சிலம்பரசன்,STR,NewOffice Inauguration,புதியஅலுவலகம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/8saz822k/Silambarasan" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Silambarasan ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/8saz822k/Silambarasan?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D">சிலம்பரசன்</a>,  சென்னையில் இன்று நடைபெற்ற ஒரு ஊடக நிறுவனத்தின் புதிய கார்ப்பரேட் அலுவலகத் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.</p><h2>அலுவலகத் திறப்பு விழா</h2> <p>திரைத்துறை மற்றும் ஊடகத்துறையினர் முன்னிலையில் கோலாகலமாக அரங்கேறிய இந்த விழாவில், நடிகர் சிம்புவின் வருகை அங்கிருந்தவர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.</p><p>விழாவிற்கு வருகை தந்த நடிகர் சிம்புவை, ஊடக நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மலர்க்கொத்து கொடுத்து நெகிழ்ச்சியோடு வரவேற்றனர். அதன் பின்னர், பாரம்பரிய முறைப்படி ரிப்பன் வெட்டி அலுவலகத்தின் புதிய அத்தியாயத்தை சிம்பு தொடங்கி வைத்தார்.</p><p>புதிய அலுவலகத்தின் வளாகத்தை பார்வையிட்ட நடிகர் STR, அங்குள்ள நினைவுப் பலகையில் தனது வாழ்த்துகளைப் பதிவு செய்து பிரத்யேகமாகக் கையெழுத்திட்டார். </p><p>இந்த அலுவலகத் திறப்பு விழாவில் நடிகர் சிலம்பரசன் கலந்துகொண்ட பிரத்யேகப் புகைப்படங்களும், வீடியோக்களும் தற்போது இணையத்திலும், சமூக வலைத்தள பக்கங்களிலும் வெளியாகி ரசிகர்களிடையே காட்டுத்தீயாய் பரவி வருகின்றது</p><h2>ரசிகர்கள் வாழ்த்து:</h2><p>அடுத்தடுத்த திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் சிம்பு, பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>200 ஆண்டு கால கலைப்பயணம்: 2026 உலக புகைப்பட தினத்தின் வரலாற்று பின்னணி ஓர் பார்வை!</title><link>https://www.maalaimalar.com/news/world/200-year-art-journey-a-look-at-the-history-behind-world-photography-day-2026</link><comments>https://www.maalaimalar.com/news/world/200-year-art-journey-a-look-at-the-history-behind-world-photography-day-2026#comments</comments><guid isPermaLink="false">7acda538-9386-4607-8015-a3fc7e867482</guid><pubDate>Wed, 19 Aug 2026 11:25:22 +0000</pubDate><atom:updated>2026-08-19T11:25:22.244Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>WorldPhotographyDay,PhotographyDay2026,PhotographyHistory,Daguerreotype,உலக புகைப்பட தினம்,புகைப்படக் கலைஞர்கள்,ஜோசப் நிசிஃபோர் நியெப்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/ea75vx0g/phortograph.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ World PhotographyDay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/ea75vx0g/phortograph.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலகெங்கிலும் உள்ள புகைப்படக் கலைஞர்கள் மற்றும் கலை ஆர்வலர்களால் இன்று (ஆகஸ்ட் 19) உலக புகைப்பட தினம் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஒரு காலக்கட்டத்தில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே சாத்தியமாக இருந்த புகைப்படத் கலை, இன்று அனைவரின் கைகளிலும் உள்ள ஸ்மார்ட்போன்கள் மூலம் அன்றாட வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கமாக மாறியுள்ளது. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டின் உலக புகைப்பட தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க பின்னணியோடும் புதிய கருப்பொருளோடும் உலகளாவிய கவனத்தைப் பெற்றுள்ளது.</p><p>இந்த ஆண்டிற்கான சர்வதேச புகைப்பட தினத்தின் அதிகாரப்பூர்வ கருப்பொருளாக "HOME" தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இங்கு வீடு என்பது வெறும் நான்கு சுவர்களால் சூழப்பட்ட கட்டிடத்தை மட்டும் குறிக்கவில்லை. மனிதர்களின் உணர்வுகள், நினைவுகள், கலாச்சார வேர்கள் மற்றும் அவர்களுக்கு அமைதியையும் பாதுகாப்பையும் தரும் சூழலை மையமாகக் கொண்டே இந்தத் தலைப்பு வரையறுக்கப்பட்டுள்ளது. </p><h2>உலக புகை<strong>ப்பட அமைப்</strong>பு அழைப்பு </h2><p>ஒரு புகைப்படக் கலைஞர் தனது அன்றாட வாழ்க்கைச் சூழல், குடும்ப உறுப்பினர்களின் இயல்பான தருணங்கள், சொந்த ஊரின் நினைவுகள் அல்லது தனக்கு விருப்பமான மனிதர்களையும் இடங்களையும் எவ்வாறு பார்க்கிறார் என்பதை உணர்வுபூர்வமாகப் படம்பிடிக்க உலக புகைப்பட அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. தொழில்முறைத் தொழில்நுட்ப நேர்த்தியை விட, படங்களின் வழியே வெளிப்படும் மனித உணர்வுகளுக்கே இந்த ஆண்டு முதன்மை இடம் அளிக்கப்படுகிறது. </p><p>இதனுடன் இணைந்து, பிரான்ஸ் நாட்டின் பண்பாட்டு அமைச்சகம் புகைப்படக் கலையின் 200 ஆம் ஆண்டு நிறைவு விழாவை 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளில் கொண்டாடுவதால் இந்த ஆண்டின் நிகழ்வு கூடுதல் வரலாற்று முக்கியத்துவத்தைப் பெறுகிறது.</p><h2>வர<strong>லாற்று நிகழ்வு</strong> </h2><p>ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி உலக புகைப்பட தினமாகக் கொண்டாடப்படுவதற்குப் பின்னால் ஒரு முக்கிய வரலாற்று நிகழ்வு உள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜோசப் நிசிஃபோர் நியெப்ஸ் என்பவரால் உலகின் முதல் நிலையான புகைப்படம் உருவாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து லூயிஸ் டேகியூர் என்பவர் "டேகியூரோடைப்" என்ற புதிய மற்றும் தெளிவான புகைப்பட உருவாக்கும் முறையைக் கண்டறிந்தார்.</p><p>பிரான்ஸ் நாட்டின் அறிவியல் அகாடமி இந்தத் தொழில்நுட்பத்தின் காப்புரிமையை வாங்கி, 1839 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 அன்று "உலகிற்கு பிரான்ஸ் வழங்கும் இலவசக் கொடை" என்று எந்தக் காப்புரிமைப் புகார்களும் இன்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவைக் கவுரவிக்கும் விதமாகவே ஆகஸ்ட் 19 புகைப்பட தினமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.</p><p>நவீன டிஜிட்டல் காலத்தில் புகைப்படக் கலையின் எல்லைகள் வெகுவாக விரிவடைந்துள்ளன. வரலாற்றை ஆவணப்படுத்துவதிலும், உலகளாவிய சமூக மாற்றங்களை வெளிக்கொணர்வதிலும், மனிதர்களின் அரிய தருணங்களை எதிர்காலத்திற்காகச் சேமித்து வைப்பதிலும் புகைப்படம் ஒரு சக்திவாய்ந்த ஊடகமாகத் திகழ்கிறது. </p><p>ஸ்மார்ட்போன்களின் வருகையால் இன்று உலகெங்கிலும் நாள்தோறும் கோடிக்கணக்கான புகைப்படங்கள் எடுக்கப்பட்டுப் பகிரப்பட்டு வருகின்றன. 2026 ஆம் ஆண்டின் "இல்லம்" என்ற கருப்பொருள், வேகமான இந்த நவீன உலகில் நம்மை மீண்டும் நமது வேர்களுடனும் அன்பான மனிதர்களுடனும் பிணைக்கும் ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>உலகில் பெரிய குடும்பங்கள் தேவை என்று நான் கருதவில்லை: கார்த்தி சிதம்பரம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/congress-mp-karti-chidambaram-says-i-do-not-believe-that-we-need-large-families-in-a-technology-driven-world</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/congress-mp-karti-chidambaram-says-i-do-not-believe-that-we-need-large-families-in-a-technology-driven-world#comments</comments><guid isPermaLink="false">315b3b38-1c0e-4a7a-bd2c-77182d10af3f</guid><pubDate>Wed, 19 Aug 2026 11:24:27 +0000</pubDate><atom:updated>2026-08-19T11:24:27.297Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,கார்த்தி சிதம்பரம்,karthi chidambaram</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/r0827uty/KathiChidambaram.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ப சிதம்பரம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/r0827uty/KathiChidambaram.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் அரசுப் பெண் ஊழியர்களுக்கு 3-வது குழந்தைக்கும் 365 நாட்கள் (ஓராண்டு) ஊதியத்துடன் கூடிய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sarathkumar-speech-in-tn-assembly">மகப்பேறு விடுப்பு</a> வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.</p><p>அதேபோல் இன்று தமிழக முதலமைச்சர் விஜய், அனைத்து எம்.எல்.ஏ.-க்களும் தொகுதிகளில் அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் வகையில் கார் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.</p><h2>இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி எம்.பி.யான கார்த்தி சிதம்பரம் கூறியதாவது:-</h2><p>தாய்மார்களுக்கு மகப்பேறு விடுப்பு அளிக்கும் தமிழக அரசின் முடிவை நான் வரவேற்கிறேன். அதேவேளையில், தந்தையர்களுக்கும் தந்தைமை விடுப்பு (paternity leave) வழங்கப்பட வேண்டும். குழந்தைகளை வளர்க்கும் சுமை பெண்களின் மீது மட்டுமே இருக்கக்கூடாது. ஆண்களும் அந்த பொறுப்பை பகிர்ந்துகொள்ள வேண்டும்.</p><p>ஆனால், குடும்பத்தின் அளவை அதிகரிக்க முனையும் அல்லது மூன்றாவது குழந்தையை பெற ஊக்குவிக்கும் எந்தவொரு சலுகையையோ அல்லது அரசுத் திட்டத்தையோ நான் முழுமையாக எதிர்க்கிறேன். நமக்கு ஆரோக்கியமான மற்றும் சிறந்த பயிற்சி பெற்ற மக்கள் தொகைதான் தேவை.</p><p>வெறும் எண்ணிக்கையை மட்டும் அடிப்படையாகக் கொண்ட மக்கள் தொகை நமக்கு தேவையில்லை. தொழில்நுட்பம் சார்ந்த இந்த உலகில் பெரிய குடும்பங்கள் தேவை என்று நான் கருதவில்லை. சிறிய, ஆரோக்கியமான மற்றும் அதிகக் கல்வி அறிவு பெற்ற மக்கள் தொகையே போதுமானது</p><p>இவ்வாறு கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.</p><p>தமிழக அரசு அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அரசு வாகனங்களை வழங்குவது குறித்த கேள்விக்கு, "எம்.பி.க்கள் கார்கள் கேட்கவில்லை என்பதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு கூடுதல் அழுத்தம் தரவேண்டும்- முதல்வர் விஜய்க்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-asks-cm-vijay-to-step-up-pressure-on-centre-over-cauvery-dispute</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-asks-cm-vijay-to-step-up-pressure-on-centre-over-cauvery-dispute#comments</comments><guid isPermaLink="false">ef32720e-a269-4379-b2a3-77c98436005e</guid><pubDate>Wed, 19 Aug 2026 10:56:11 +0000</pubDate><atom:updated>2026-08-19T10:56:11.759Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாமா,அன்புமணி ராமதாஸ்,Anbumaniramadoss,CMVIJAY,CauveryWaterIssue,TamilNaduPolitics,MekedatuDam,காவிரிஉரிமை,முதல்வர்விஜய்,மேகதாதுஅணை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/2k618max/anbumani.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anbumani Ramadoss]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/2k618max/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரி நதிநீர் பிரச்சனை தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சனையாக உருவெடுத்துள்ள நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக அரசுக்கும் முதல்வர் விஜய்க்கும் பல்வேறு முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். காவிரி விவகாரத்தில் மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாக்க உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><h2>அனைத்துக் கட்<strong>சிக் கூட்டத்தை கூ</strong>ட்ட வேண்டும்</h2><p>காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்குத் தேவையான அழுத்தத்தைக் கொடுக்கத் <a href="https://www.maalaimalar.com/news/national/kummidippundi-koodur-between-new-rail-route-union-cabinet-approval">தமிழக முதல்வர் விஜய்</a> உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் விஜய் கூடுதல் அழுத்தம் தர வேண்டும் எனவும் கூறியுள்ளார்.</p><h2>அதிகாரி<strong>களின் பேச்சை மட்டும் கேட்</strong>கக்கூடாது</h2><p>புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள இந்த அரசுக்குக் காவிரி விவகாரம் தொடர்பான நீண்டகால அரசியல் மற்றும் சட்டப் போராட்டங்களில் போதிய அனுபவம் இல்லை என்று சுட்டிக்காட்டிய அன்புமணி, வெறும் அரசு அதிகாரிகளின் ஆலோசனைகளை மட்டுமே நம்பி முதல்வர் முடிவெடுக்கக்கூடாது எனக் குறிப்பிட்டார். </p><p>அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் விவசாயப் பிரதிநிதிகளின் கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் திட்டமிட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.</p><h2>மாணவர் போரா<strong>ட்டங்கள்</strong></h2><p>மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடக் கூடாது எனத் தடை விதிப்பதற்கு யாருக்கும் எந்தவித அதிகாரமும் இல்லை என்று தெரிவித்த அவர், நாட்டின் மற்றும் மாநிலத்தின் உரிமைசார்ந்த கோரிக்கைகளுக்காக இளைஞர்களும் மாணவர்களும் குரல் கொடுப்பதைக் தடுக்க முடியாது என்றார். மேலும், சொந்தமாக கார் இல்லாத மக்கள் பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு அரசு உரிய வசதிகளையும் சலுகைகளையும் வழங்கிச் செயல்பட வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.</p>]]></content:encoded></item><item><title>கும்மிடிப்பூண்டி - கூடூர் இடையே புதிய ரெயில் வழித்தடம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/kummidippundi-koodur-between-new-rail-route-union-cabinet-approval</link><comments>https://www.maalaimalar.com/news/national/kummidippundi-koodur-between-new-rail-route-union-cabinet-approval#comments</comments><guid isPermaLink="false">de831405-60d0-4e0b-8393-8802aac1dc44</guid><pubDate>Wed, 19 Aug 2026 10:48:21 +0000</pubDate><atom:updated>2026-08-19T10:48:21.448Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Union Ministry,மத்திய அமைச்சரவை ஒப்புதல்,Gummudipoondi,புதிய ரெயில் பாதை,கும்மிடிப்பூண்டி,New train track</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/gxc5ikuo/Ashwini-vaishnaw.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Union Ministry Aswini Vaishnaw]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/gxc5ikuo/Ashwini-vaishnaw.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களில் 410 கி.மீ தூரத்திற்கு புதிய ரெயில் பாதைகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.</p><p>அதன்படி, ஹவுரா- சென்னை பல்வழித்தட திட்டத்தின்கீழ் கும்மிடிப்பூண்டி முதல் கூடூர் வரை மூன்றாவது மற்றும் 4வது ரெயில்வே வழித்தடங்கள் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.</p><p>கும்மிடிப்பூண்டி- கூடூர் தடத்தில் ரெயில் பாதை அமைப்பதன் மூலம் தென் மாநிலங்கள், வட மாநிலங்களுக்கு இடையே பயணம் விரைவாகும்.</p><p>ரூ.2,229 கோடியில் புதிய வழித்தடங்கள் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.</p><p>ரூ.13,041 கோடி மதிப்பில் 5 ரெயில்வே வழித்தட பணிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>10 ஆண்டுகளை நிறைவு செய்த தர்மதுரை... வெற்றியடைந்ததா? இயக்குநர் சீனு ராமசாமியின் பதிவு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/dharmadurai-completes-10-years-did-it-leave-a-lasting-impression-on-the-audience-director-seenu-ramasamys-post</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/dharmadurai-completes-10-years-did-it-leave-a-lasting-impression-on-the-audience-director-seenu-ramasamys-post#comments</comments><guid isPermaLink="false">013ef37f-4cfd-48f7-8d9d-2880cae8996b</guid><pubDate>Wed, 19 Aug 2026 10:47:15 +0000</pubDate><atom:updated>2026-08-19T10:47:15.489Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய் சேதுபதி,Seenu Ramasamy,சீனு ராமசாமி,Vijay sethupathi,Dharmadurai,தர்மதுரை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/p72s8lqq/New-Project-2026-08-19T161655.345.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 10 ஆண்டுகளை நிறைவு செய்த தர்மதுரை... மக்கள் மனதில் நின்றதா? இயக்குநர் சீனு ராமசாயின் பதிவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/p72s8lqq/New-Project-2026-08-19T161655.345.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, எம்.எஸ்.பாஸ்கர், ராதிகா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, தமன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தப் படம் தர்மதுரை. ஆர்.கே.சுரேஷ் தயாரித்திருந்த இப்படத்திற்கு யுவன் இசையமைத்திருந்தார். </p><p>கடந்த 2016ம் ஆண்டு ஆக.19ம் தேதி வெளியான இப்படம் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போதுவரை இப்படம் ரசிகர்கள் பேசப்பட்டும், இப்படம் தொடர்பான கருத்துகள் பகிரப்பட்டும் வருகின்றன. </p><p>இந்நிலையில் இன்றோடு படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவு பெறுவதை ஒட்டி இயக்குநர் சீனு ராமசாமி ஒரு சமூக வலைதளப் பதிவை வெளியிட்டுள்ளார். அப்பதிவில்.,</p><p>“ஒரு படம் மக்கள் மனதில் எவ்வளவு நாட்கள் நிலைத்திருக்கிறது என்பதே அதன் வெற்றி அல்லது தோல்வியை தீர்மானிக்கிறது என்பது என்னுடைய நிலைப்பாடு. உங்களது அளப்பரிய அன்பினால், தர்மதுரை படம் இன்று தனது 10-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது!</p><p>இப்படத்தை இயக்கும் வாய்ப்பை எனக்கு வழங்கிய ஆர்.கே.சுரேஷ் மற்றும் அவரது அண்ணன் வெங்கட் ஆகியோருக்கும், தங்கள் கலைத்திறனால் இப்படத்திற்கு உயிர் கொடுத்த ஒவ்வொரு திறமையான கலைஞர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தென்மண்டல கவுன்சிலின் துணைத் தலைவராக முதலமைச்சர் விஜய் நியமனம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-appointed-as-vice-chairman-of-the-southern-zonal-council</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-appointed-as-vice-chairman-of-the-southern-zonal-council#comments</comments><guid isPermaLink="false">a31d1182-c123-45ae-a4d8-ab360a498018</guid><pubDate>Wed, 19 Aug 2026 10:27:29 +0000</pubDate><atom:updated>2026-08-19T10:27:29.403Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>joseph vijay,முதலமைச்சர் விஜய்,SOUTHERN ZONAL COUNCIL,தென்மண்டல கவுன்சில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/1fx32uti/New-Project-2026-08-19T155708.370.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தென்மண்டல கவுன்சிலின் துணைத் தலைவராக முதலமைச்சர் விஜய் நியமனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/1fx32uti/New-Project-2026-08-19T155708.370.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தென்மண்டல கவுன்சிலின் துணைத் தலைவராக முதலமைச்சர் விஜய் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கவுன்சிலின் செயலாளராக தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சாய் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கவுன்சிலின் தலைவராக உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளார். </p><p>நாளை தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாடு நடைபெற உள்ளநிலையில், இந்த நியமனம் வந்துள்ளது. </p><h2>தென்மண்டல கவுன்சில் என்றால் என்ன?</h2><p>தென் மண்டல கவுன்சில் என்பது தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களை இணைக்கும் அமைப்பாகும். </p><p>மத்திய அரசால் அவ்வப்போது கூட்டப்படும் தெற்கு மண்டல குழு, மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பிற்கு தேவைப்படும் பிரச்னைகள் குறித்து விவாதிப்பதற்காக, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர்களை ஒன்றிணைக்கிறது.</p><p>முன்னதாக தென் மண்டல கவுன்சிலின் தமிழ்நாடு உறுப்பினர்களாக அமைச்சர்கள் நிர்மல்குமார், ராஜ்மோகன் நியமனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>போதையில் கார் ஓட்டிய விவகாரம்: டேவிட் வார்னருக்கு அபராதம் விதித்த சிட்னி கோர்ட்</title><link>https://www.maalaimalar.com/sports/former-australia-batter-david-warner-convicted-fined-for-drink-driving</link><comments>https://www.maalaimalar.com/sports/former-australia-batter-david-warner-convicted-fined-for-drink-driving#comments</comments><guid isPermaLink="false">d6de16a2-9fc9-42df-bd2b-2e2af9ceb424</guid><pubDate>Wed, 19 Aug 2026 10:06:54 +0000</pubDate><atom:updated>2026-08-19T10:06:54.566Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>David Warner,டேவிட் வார்னர்,sydney court,சிட்னி கோர்ட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/f7zo5l10/warner.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ warner]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/f7zo5l10/warner.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மது போதையில் காரை ஓட்டிச் சென்ற விவகாரத்தில் டேவிட் வார்னருக்கு அபராதம் விதித்து கோர்ட் உத்தரவிட்டது.</p><p>சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற டேவிட் வார்னர் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் கராச்சி கிங்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகளுக்கு கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.</p><p>கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் பண்டிகை அன்று சிட்னியில் மது குடித்துவிட்டு டேவிட் வார்னர் காரை ஓட்டிச்சென்றார். போக்குவரத்து போலீசார் சோதனையில் வார்னர், நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகம் மது அருந்தியது உறுதியானது.</p><h2>ஒப்புக்கொண்ட வார்னர் </h2><p>இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, டேவிட் வார்னர் மது அருந்தியதை ஒப்புக்கொண்டார் என அவரது வழக்கறிஞர் குறிப்பிட்டார். தனது செயல் முட்டாள்தனமானது. மது அருந்திவிட்டு வாடகை காரில் செல்லாமல் தானே வாகனத்தை ஓட்டிச்சென்றது தவறு எனவும் வார்னர் தெரிவித்ததாகக் கூறப்பட்டுள்ளது.</p><p>இதையடுத்து, ஆகஸ்ட் 18-ம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.</p><h2>அபராதம் விதித்த கோர்ட்</h2><p>இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது, டேவிட் வார்னருக்கு ரூ.1.02 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அவரது காரில் பிரீத்லைசர் அல்லது இன்டர் லாக் எனும் கருவியைப் பொருத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது.</p><p>முன்னதாக, டேவிட் வார்னர் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் கராச்சி கிங்ஸ் அணி கேப்டனாக கடந்த ஏப்ரலில் விளையாடினார். போட்டிகளுக்கான இடைவெளியில் அவர் சிட்னி சென்றார். அங்கு மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிச்சென்றார். சிட்னியின் கிழக்குப் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, வார்னரை வழிமறித்து சோதனை செய்தனர். அவர் அனுமதிக்கப்பட்ட அளவைவிட இரு மடங்கு அதிகமாக மது அருந்தியது தெரியவந்ததால் அவர் கைது செய்யப்பட்டார்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்கள் போராட்டத்திற்கு தடை: இடதுசாரிகள் இன்னமும் கண்டும் காணாத நிலையிலேயே இருக்கப் போகிறார்களா? - திமுக கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-student-protests-will-the-left-continue-to-turn-a-blind-eye-dmk-asks</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-student-protests-will-the-left-continue-to-turn-a-blind-eye-dmk-asks#comments</comments><guid isPermaLink="false">082c2b7e-3701-43df-a7c2-fa0933eb57c8</guid><pubDate>Wed, 19 Aug 2026 09:54:37 +0000</pubDate><atom:updated>2026-08-19T09:54:37.600Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,இடதுசாரிகள்,leftists,தவெக அரசு,tvk government</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/r0sbkzgh/New-Project-2026-08-19T151547.066.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணவர்கள் போராட்டத்திற்கு தடை: இடதுசாரிகள் இன்னமும் கண்டும் காணாத நிலையிலேயே இருக்கப் போகிறார்களா? - திமுக கேள்வி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/r0sbkzgh/New-Project-2026-08-19T151547.066.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்லில் இடதுசாரிகளின் விவரங்களை திரட்டக் கூறியது, மாணவர்களை போராட்டங்களில் பங்கேற்படை தடுக்கக் கூறியது உள்ளிட்ட உத்தரவுகள் முதலமைச்சர் விஜய்க்கு தெரியாமல் வெளியிடப்பட்டதா என்றும், இத்தகைய உத்தரவுகளை கண்டும் காணாமல் இடதுசாரி கட்சிகள் இருக்கப் போகிறதா என திமுக கேள்வி எழுப்பியுள்ளது.</p><p>இதுதொடர்பாக திமுக தலைமையின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;</p><p>நேற்றைய தினம் அதிகார ஆணவத்திமிரோடு, “திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களிலும் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் கட்சியில் உள்ள நபர்களின் பெயர், முகவரி, ஆகியவற்றை வருவாய் ஆய்வாளர்கள் சேகரித்து வட்டாட்சியரிடம் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.</p><p>இன்றைய தினம் மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் உரிய ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ள சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.</p><p>இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வெளிப்பட்ட நிலையில் சுற்றறிக்கைகளை திரும்பப் பெறுவதாக த.வெ.க அரசு பின்வாங்கியுள்ளது.</p><p>அப்படியெனில், சுற்றறிக்கைகளை வெளியிடும் அதிகாரத்தை வழங்கியவர் யார்? முதலமைச்சர் விஜய்க்கே தெரியாமல் இவையெல்லாம் நடக்கிறதா? அல்லது முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?</p><p>ஜனநாயக உரிமைகளை பறிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு இணையாக தமிழ்நாட்டை ஆளும் த.வெ.க அரசும் இத்தகைய மாணவர் விரோத துக்ளக் தர்பார் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வதை திராவிட முன்னேற்றக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.</p><p>த.வெ.க அரசை ஆதரிக்கும் இடதுசாரிகள் இன்னமும் கண்டும் காணாத நிலையிலேயே இருக்கப் போகிறார்களா?” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>ஏ.ஐ-யில் பகிரப்படும் ரகசிய விவரங்கள் திருடப்படும் அபாயம் - பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/police-warn-public-risk-of-confidential-information-shared-on-ai-being-stolen</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/police-warn-public-risk-of-confidential-information-shared-on-ai-being-stolen#comments</comments><guid isPermaLink="false">e9e51902-e23f-41f1-9c89-00b3c4a4f33e</guid><pubDate>Wed, 19 Aug 2026 09:34:31 +0000</pubDate><atom:updated>2026-08-19T09:34:31.356Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Artificial Intelligence,போலீசார் எச்சரிக்கை,police warning,AI,செயற்கை நுண்ணறிவு,ஏஐ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/fiv0ez4f/ai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ AI]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/fiv0ez4f/ai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>செயற்கை நுண்ணறிவு</h2><p>உலகெங்கும் தொழில்நுட்ப வளர்ச்சி அசுரவேகத்தில் உருவெடுத்து வரும் சூழலில், 'செயற்கை நுண்ணறிவு' (ஏ.ஐ)மக்களின் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாக மாறியுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் பெருநிறுவன ஊழியர்கள் வரை அனைவரும் தங்களின் சந்தேகங்களைத் தீர்க்கவும், வேலைகளை எளிதாக்கவும் ஏ.ஐ. செயலிகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.</p> <p>​தொழில்நுட்பம் தரும் அளப்பரிய நன்மைகளுக்கு இடையே, சரியான விழிப்புணர்வு இல்லாததால் அதில் ஒளிந்துள்ள ஆபத்துகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதை உணர்ந்த திருப்பூர் மாவட்ட காவல்துறை, பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஏ.ஐ.-யை பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் பயன்படுத்துவதற்கான விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.</p> <p> அதன்படி சிக்கலான தரவுகளை நொடிகளில் பகுப்பாய்வு செய்வது, மொழியாக்கம், புதிய யோசனைகளை உருவாக்குவது, கல்வி கற்றலை எளிதாக்குவது என மனித உழைப்பையும் நேரத்தையும் மிச்சப்படுத்துவதில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%8F%E0%AE%90">ஏ.ஐ. </a>முன்னணியில் உள்ளது.</p> <p>இணையத்தில் நாம் பகிரும் தகவல்கள் ஏ.ஐ.-ன் தரவுத்தளத்தில் சேமிக்கப்படுகின்றன. சைபர் குற்றவாளிகள் இந்தத் விபரங்களை திருடி, 'டீப்பேக்' உருவகப்படுத்துதல், ஆள்மாறாட்டம் மற்றும் ஆன்லைன் நிதி மோசடிகளுக்குப் பயன்படுத்தும் பேராபத்து நிலவுகிறது. இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட போலீசார் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் அதன்படி  கடவுச்சொல், வங்கிக் கணக்கு எண்கள், ஆதார் மற்றும் பேன் கார்டு போன்ற மிக முக்கியமான தனிப்பட்ட விவரங்களை எக்காரணம் கொண்டும் ஏ.ஐ. தளங்களில் உள்ளீடு செய்யக் கூடாது.</p> <p>அதேபோல்  உடல்நலக் குறைபாடு, மருந்து மாத்திரைகள் மற்றும் மனநலச் சிகிச்சை சார்ந்த சந்தேகங்களுக்கு ஏ.ஐ. வழங்கும் பதில்கள் பொதுவான தகவல்கள் மட்டுமே. தகுதியான மருத்துவ நிபுணரின் நேரடி ஆலோசனைக்கு இது மாற்றாகாது.</p> <p>மேலும் சட்டத்திற்குப் புறம்பான அல்லது பிறரின் கண்ணியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் செயல்களைச் செய்ய ஏ.ஐ.-யின் உதவியை நாடக்கூடாது. திருமணம், வேலைவாய்ப்பு, நிதி மற்றும் குடும்பப் பிரச்னைகள் தொடர்பான முக்கியமான முடிவுகளை ஏ.ஐ. அளிக்கும் தகவல்களை மட்டுமே நம்பி எடுக்கக்கூடாது. அதை ஒரு துணைத் தகவலாகக் கொண்டு, நம்பகமான நபர்களுடன் கலந்தாலோசித்த பிறகே முடிவெடுக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.</p> <p> இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-</p><p>​"ஏ.ஐ. என்பது மனித மூளைக்கு மாற்றல்ல; அது ஒரு வழிகாட்டும் கருவி மட்டுமே. இன்று பல இணைய பயனர்கள் தங்களின் வங்கி ரகசியங்கள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை ஏ.ஐ. செயலிகளில் பதிவேற்றம் செய்வதால், அவை தவறான நபர்களின் கைகளுக்குச் சென்று நிதியிழப்புக்கும், மன உளைச்சலுக்கும் வழிவகுக்கிறது.மேலும், தவறான நோக்கங்களுக்காகவோ அல்லது பிறருக்குத் தீங்கு விளைவிக்கும் வகையிலோ <a href="https://www.maalaimalar.com/news/national/anthropic-launches-free-claude-sonnet-5-new-agentic-ai-model-now-available-globally-for-all-users">ஏ.ஐ. </a>தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால், சைபர் குற்றப் பிரிவுச் சட்டங்களின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். </p><p>தொழில்நுட்பத்தை நன்மைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். 'பாதுகாப்பாகப் பயன்படுத்துவோம் – பொறுப்புடன் வாழ்வோம்' என்பதை பொதுமக்கள் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். நாட்டின் முன்னேற்றத்திற்குத் தொழில்நுட்பம் அவசியம் என்றாலும், கவனமும் விழிப்புணர்வுமே நமது டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்யும் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>உலகளவில் வெளியாகிறது &apos;டாக்ஸிக்&apos; ஆங்கில டிரெய்லர்: ராக் ஸ்டார் யாஷ் ரசிகர்களுக்கு செம ட்ரீட்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/toxic-english-trailer-to-release-globally-rock-star-yash-treat-for-fans</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/toxic-english-trailer-to-release-globally-rock-star-yash-treat-for-fans#comments</comments><guid isPermaLink="false">6faddcee-2ce0-4bd8-b80d-148c832ba9e1</guid><pubDate>Wed, 19 Aug 2026 09:27:46 +0000</pubDate><atom:updated>2026-08-19T09:27:46.593Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Yash,Toxic,டாக்ஸிக்,Nayanthara,யாஷ்,GeetuMohandas,ToxicEnglishTrailer,கீது மோகன்தாஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/8rdnkbct/toxic.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Toxic EnglishTrailer]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/8rdnkbct/toxic.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கன்னடத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ராக் ஸ்டார் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் '<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/yash-toxic-release-date-film-finally-set-for-august-26-after-multiple-delays">டாக்ஸிக்: ஏ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்'</a>  திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ஆங்கில டிரெய்லர் இன்று வெளியாகிறது. உலகளவில் உள்ள பல்வேறு நேரங்களை கணக்கில் கொண்டு, இந்திய நேரப்படி இரவு 8:30 மணிக்கு இத்திரைப்படத்தின் டிரெய்லரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.</p><h2>கோவா பின்னணி<strong>யில் உருவாகும் கதை</strong>க்களம்</h2><p>இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம், சுதந்திரத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில் போர்த்துகீசிய ஆட்சின்கீழ் இருந்த கோவாவை பின்னணியாகக் கொண்டு செதுக்கப்பட்டுள்ளது. </p><p>இக்கதைக்களத்தில் 'ரயா' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள யாஷ், அதிகாரம், குற்றம் மற்றும் வன்முறை நிறைந்த சூழலில் சந்திக்கும் சவால்களே படத்தின் முக்கிய கதைக்கருவாகும். மேலும், இப்படத்தில் யாஷ் 'ரயா' மற்றும் 'டிக்கெட்' என இரண்டு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.</p><h2>பிரம்மா<strong>ண்டமான நட்சத்திர பட்டா</strong>ளம்</h2><p>இப்படத்தில் யாஷுடன் இணைந்து நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, தாரா சுதாரியா மற்றும் ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். கே.வி.என் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படம், கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்டு, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது. </p><p>வருகின்ற ஆகஸ்ட் 26 அன்று உலகமெங்கும் சுமார் 12,000 திரையரங்குகளில் பிரம்மாண்டமாக திரைக்கு வரவுள்ள நிலையில், இன்று வெளியாகும் ஆங்கில டிரெய்லர் படத்தின் கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்களத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>இடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்பதை தடைசெய்ய பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற்றது தவெக அரசு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-tvk-government-has-withdrawn-the-order-banning-students-from-participating-in-left-wing-protests</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-tvk-government-has-withdrawn-the-order-banning-students-from-participating-in-left-wing-protests#comments</comments><guid isPermaLink="false">49841eb0-9aa8-481a-bed0-12aa377e807a</guid><pubDate>Wed, 19 Aug 2026 09:25:24 +0000</pubDate><atom:updated>2026-08-19T09:25:24.796Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,protest,Students,மாணவர்கள்,Tamil Nadu govt,போராட்டங்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/l4zqdmyd/New-Project-2026-08-19T145456.651.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்பதை தடைசெய்ய பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற்றது தவெக அரசு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/l4zqdmyd/New-Project-2026-08-19T145456.651.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இடதுசாரி கட்சிகளின் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரிய உத்தரவை தமிழ்நாடு கல்லூரிக் கல்வி இயக்ககம் திரும்பப் பெற்றுள்ளது. </p><p>மாணவர்கள் சார்ந்தப் பிரச்னைகளிலும், சில பொதுப் பிரச்னைகளிலும் இடதுசாரிகளின் போராட்டங்களில் மாணவர்கள் கலந்துகொண்டு போராடுவது வழக்கம். </p><p>சமீபத்தில் கூட நீட் தேர்வு குளறுபடிகளுக்கு எதிரான கரப்பான்பூச்சி ஜனதா கட்சி டெல்லியில் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவாக இடதுசாரிகள் தரப்பில் சென்னையிலும் போராட்டம் நடத்தப்பட்டது. இதிலும் மாணவர்கள் அமைப்புகள் கலந்துகொண்டன. </p><p>இந்த நிலையில், இடதுசாரிக் கட்சிகள் மற்றும் கரப்பான்பூச்சி கட்சிப் போராட்டங்களில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசு கல்லூரி முதல்வர்களுக்கு கல்லூரிக் கல்வி இயக்ககம் சுற்றறிக்கை விடுத்தது. </p><p>இதற்கு சமூக வலைதளங்களில் பெரும் கண்டனங்கள் எழு, தற்போது இந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது.</p><p>தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைக்கு கரப்பான்பூச்சி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த உத்தரவு “அரசியலமைப்புக்கு விரோதமானது” என்றும், இது தவெக அரசின் “தர்க்கமற்ற” மற்றும் “பகுத்தறிவற்ற” முடிவு என்றும் விமர்சித்திருந்தார்.</p><p>முன்னதாக, நேற்று திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இடதுசாரிகள் உறுப்பினர்கள் குறித்த தகவல்களை திரட்ட வட்டாட்சியர் உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>டெண்டர் மோசடி வழக்கு - ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சர் கைது!</title><link>https://www.maalaimalar.com/news/national/tender-fraud-case-former-aam-aadmi-party-minister-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/national/tender-fraud-case-former-aam-aadmi-party-minister-arrested#comments</comments><guid isPermaLink="false">23132ed9-e758-49e1-a626-4821dd8b8ff0</guid><pubDate>Wed, 19 Aug 2026 09:01:31 +0000</pubDate><atom:updated>2026-08-19T09:01:31.029Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Aam Aadmi Party,ஆம் ஆத்மி கட்சி,satyendar jain,tender scam case,சத்யேந்திர ஜெயின்,டெல்லி குடிநீர் வாரியம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/cvuq7qfg/New-Project-2026-08-19T140852.117.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டெண்டர் மோசடி வழக்கு - ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சர் கைது!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/cvuq7qfg/New-Project-2026-08-19T140852.117.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி குடிநீர் வாரிய டெண்டர் ஊழல் வழக்கில், ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் உட்பட 6 பேரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்துள்ளனர்.</p><p>டெல்லி குடிநீர் வாரியத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியும், ஐஏஎஸ் அதிகாரியுமான உதித் பிரகாஷ் ராய், முன்னாள் ஒப்பந்த ஆலோசகர் அங்கித் ஸ்ரீவஸ்தவா, ஏஎன் எண்டர்பிரைசஸ் உரிமையாளர் நாகேந்திர யாதவ், யூரோடெக் என்விரான்மென்ட் பிரைவேட் லிமிடெட் உரிமையாளர் ராஜா குமார் குர்ரா மற்றும் ஸ்ரீஜன்ஹார் உரிமையாளர் பங்கஜ் வர்மா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>டெல்லியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை  மேம்படுத்துதல் மற்றும் தரம் உயர்த்துதல் தொடர்பான ஒப்பந்தங்களில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>இதில் ரூ.1.52 கோடி லஞ்சம் மற்றும் ஒரு தனியார் நிறுவனத்திற்குச் சாதகமாக டெண்டர் நிபந்தனைகளில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறையால் கடந்த 2024-ஆம் ஆண்டு மே மாதம் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. </p><p>போதிய ஆதாரங்கள் திரட்டப்பட்டதைத் தொடர்ந்து, அனைவரும் கைது செய்யப்பட்டு, டெல்லி ரவுஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.</p><p>சத்யேந்தர் ஜெயினின் கைதைத் தொடர்ந்து பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், இந்த நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று விமர்சித்துள்ளார். அரசியல் எதிரிகளைக் குறிவைக்க, பாஜக பொய்க் குற்றச்சாட்டுகளையும், கைது நடவடிக்கையையும் பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>“பாஜக ஆம் ஆத்மி கட்சிக்கு பயப்படுகிறது என்பதற்கு இன்னும் எத்தனை ஆதாரங்கள் தேவை? அந்த குடிநீர் வாரிய டெண்டர் விடப்பட்ட நேரத்தில், சத்யேந்திரா சிறையில் இருந்தார். சிறையிலிருந்து அவர் எப்படி பொறுப்பேற்றார்? </p><p>உண்மையான காரணம் என்னவென்றால், சத்யேந்திர ஜெயின் பஞ்சாபின் ஆம் ஆத்மி இணைப் பொறுப்பாளராக இருக்கிறார், மேலும் அங்கு தேர்தல்கள் வரவிருக்கின்றன.” என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஊடகப் பொறுப்பாளர் அனுராக் தண்டா எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>NEET UG Counseling 2026: முதல் கட்ட இட ஒதுக்கீடு முடிவுகள் வெளியீடு- MBBS, BDS ஒதுக்கீட்டுப் பட்டியலைப் பெறுவது எப்படி?</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-ug-counseling-2026-round-1-seat-allotment-results-how-to-check-mbbs-bds-list</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-ug-counseling-2026-round-1-seat-allotment-results-how-to-check-mbbs-bds-list#comments</comments><guid isPermaLink="false">aca361a9-d475-45dc-ab64-7f25e456fd3e</guid><pubDate>Wed, 19 Aug 2026 08:44:24 +0000</pubDate><atom:updated>2026-08-19T08:44:24.318Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இட ஒதுக்கீடு,நீட் 2026,NEETUG2026,MCCResult2026,MBBSAdmissions,MedicalCounselling,மருத்துவக் கலந்தாய்வு,நீட் யுஜி தரவரிசை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/9dbcfoxg/neeeee.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ NEET 2026 ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/9dbcfoxg/neeeee.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>NEET 2026 கலந்தாய்வின் முதல் சுற்று இட ஒதுக்கீட்டு முடிவு mcc.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். NEET UG ஒதுக்கீட்டு முடிவுக்கான நேரம், பதிவிறக்க இணைப்பு, அறிக்கை சமர்ப்பிக்கும் தேதிகள் மற்றும் இட ஒதுக்கீட்டு முடிவைச் சரிபார்க்க வேண்டிய வழிமுறைகள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளுங்கள்.</p><p>மருத்துவக் கலந்தாய்வுக் குழு, MCC நீட் 2026 கலந்தாய்வின் முதல் சுற்று இட ஒதுக்கீட்டு முடிவை இன்று, ஆகஸ்ட் 19, 2026 அன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீட் யுஜி முதல் சுற்று கலந்தாய்வுச் செயல்பாட்டில் பங்கேற்று , தங்களின் கல்லூரி மற்றும் பாடப்பிரிவு விருப்பங்களைச் சமர்ப்பித்த விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வ MCC கலந்தாய்வு இணையதளம் மூலம் தங்களின் ஒதுக்கீட்டு நிலையைச் சரிபார்க்கலாம். </p><p>நீட் யுஜி தரவரிசை, பூர்த்தி செய்யப்பட்ட விருப்பங்கள், பிரிவு, இடங்களின் இருப்பு மற்றும் பிற கலந்தாய்வுகளின் அடிப்படையில் ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் ஒதுக்கப்பட்ட மருத்துவ அல்லது பல் மருத்துவ இடத்தை நீட் 2026 முதல் சுற்று இட ஒதுக்கீட்டு முடிவு எடுத்துக்காட்டும். </p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/b0sjm2qv/neet.jpg" /></figure><p>முடிவு வெளியான பிறகு, இடம் பெற்ற விண்ணப்பதாரர்கள் தங்களின் ஒதுக்கீட்டுக் கடிதத்தைப் பதிவிறக்கம் செய்து, காலக்கெடுவுக்குள் ஒதுக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் சேர வேண்டும்.</p><p>மருத்துவக் கலந்தாய்வுக் குழு 2026-ஆம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான முதற்கட்ட இட ஒதுக்கீட்டு முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளமான mcc.nic.in, https://mcc.nic.in பக்கத்தில் வெளியிடுகிறது. அகில இந்திய ஒதுக்கீடு, மத்திய பல்கலைக்கழகங்கள், எய்ம்ஸ், ஜிப்மர்  மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் பி.எஸ்சி நர்சிங் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தங்களின் ஒதுக்கீடு நிலையை உடனடியாகச் சரிபார்க்கலாம்.</p><h2>இட ஒதுக்கீட்<strong>டுப் பட்டியலைச் சரிபா</strong>ர்க்கும் எளிய வழிமுறைகள்</h2><p>அதிகாரப்பூர்வ இணையதளமான mcc.nic.in, https://mcc.nic.in பக்கத்திற்குச் செல்ல வேண்டும். முகப்புப் பக்கத்தில் உள்ள 'UG Medical Counseling' பிரிவைத் தேர்வு செய்ய வேண்டும். அதில் தோன்றும் '<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-chief-ministers-medical-insurance-coverage-raised-to-rs-25-lakh">NEET UG </a>Round 1 Seat Allotment Result 2026' என்ற இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும். திரையில் தோன்றும் PDF கோப்பில் உங்களது ரோல் எண் மற்றும் பெற்ற தரவரிசையைத் தேடி ஒதுக்கீட்டை உறுதிசெய்யலாம். அதன்பின், உங்களது உள்நுழைவுத் தகவல்களைப் பயன்படுத்திக் கணக்கில் புகுந்து, அதிகாரப்பூர்வ ஒதுக்கீட்டுக் கடிதத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.</p><h2>சேர்க்கை <strong>நடைமுறைகள்</strong></h2><p>இட ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மருத்துவ அல்லது பல் மருத்துவக் கல்லூரிகளில் நாளை (ஆகஸ்ட் 20) முதல் ஆகஸ்ட் 25, 2026 வரை நேரில் சென்று சேர வேண்டும். கல்லூரி அறிக்கையின் போது அசல் சான்றிதழ்கள், நீட் மதிப்பெண் சான்றிதழ், நுழைவுச் சீட்டு, அடையாளச் சான்று மற்றும் ஒதுக்கீட்டுக் கடிதம் ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். முதல் சுற்றில் ஒதுக்கீடு பெற்ற கல்லூரியில் சேர விரும்பாதவர்கள் 'Free Exit' முறையில் அபராதம் இன்றி விலகலாம் அல்லது ஆகஸ்ட் 24 முதல் தொடங்கவுள்ள இரண்டாம் கட்டக் கலந்தாய்வில் பங்கேற்று உயர் விருப்பக் கல்லூரியைத் தேர்வு செய்ய விண்ணப்பிக்கலாம்.</p>]]></content:encoded></item><item><title>கல்லாகி போனது மகனின் மனம்...  வயதான தாயை வீல்சேருடன் ரெயிலில் தள்ளி கொன்ற மகன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/son-arrested-for-mother-murder-case-in-tiruttani</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/son-arrested-for-mother-murder-case-in-tiruttani#comments</comments><guid isPermaLink="false">0d488b9d-c678-4fa3-b496-14b74202a05a</guid><pubDate>Wed, 19 Aug 2026 08:30:03 +0000</pubDate><atom:updated>2026-08-19T08:30:03.472Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Police Investigation,போலீசார் விசாரணை,தாய் கொலை,மகன் கைது,mother murder,Son Arrest</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/cz2jvb2p/train.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/cz2jvb2p/train.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அடப்பாவி இப்படி ஒரு காரியத்தை எப்படிடா செய்தாய்? ஊரில் எத்தனையோ முதியோர் இல்லங்கள் இருக்கிறது? அங்கு கொண்டு விட்டு இருந்தால் கூட உனக்கு இப்படி கொலை பழி வந்து இருக்காதே? என்று போலீசாரும் பார்த்தசாரதியிடம் தெரிவித்து ஆதங்கப்பட்டனர்.</strong></em></p><p>மண்ணுக்கு மரம் பாரமாக தெரிவதில்லை...</p><p>மரத்துக்கு கிளை பாரமாக தெரிவதில்லை....</p><p>பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமாக தெரிவதில்லை.</p><p>தான் பெற்ற குழந்தை முடமாகி போனாலும் அந்த குழந்தைக்காக தன் வாழ்நாளையே தியாகம் செய்கிறாள் தாய். ஆனால் பாழாய் போன பிள்ளைகளின் மனம் மட்டும் வயதான காலங்களில் பெற்றோரை அனாதையாக தவிக்க விட்டு செல்வதை கேள்விப்படும் போது மனித நேயம் உள்ள ஒவ்வொருவரின் இதயமும் நடுங்கி போகிறது. </p><p>தொலை தூரங்களில் இருந்து கண் தெரியாத, நடக்க இயலாத தாய், தந்தையரை நகரப் பகுதிகளில் அழைத்து வந்து வீதிகளில் விட்டு சென்ற சம்பவங்களை கேள்விப்பட்டு இருப்போம். இப்படி கல்லாகி போன பல பிள்ளைகள் தங்கள் பெற்றோரை கடைசி காலத்தில் படுத்தும் பாடுகளை பார்க்கும் போது இப்படியும் பிள்ளைகள் இருப்பார்களா? என்று கேட்க தோன்றுகிறது. </p><p>வீட்டில் இருக்கும் அம்மா தனது மகனிடம்  உடம்பு சரியில்லையப்பா... ஆஸ்பத்திரிக்கு போகணும் என்றால் பர்சில் இருந்து ரூபாயை எடுத்துக் கொடுத்து ஆட்டோ பிடித்து போய் வா என்று சொல்லி விட்டு மகன் வேலைக்கு போய் விடுகிறான். நடக்க முடியாத அந்த பரிதாபத்துக்குரிய தாய் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் ஆட்டோ பிடித்து செல்வார். அதுவே மனைவிக்கு லேசான தலைவலி என்று அறிந்ததும் அலுவலகத்திற்கு பாதிநாள் விடுப்பு போட்டு விட்டு ஓடி வந்து ஆதரவாக அணைத்தபடியே ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வார். ஆனால் இந்த வாழ்க்கை வீட்டில் முடங்கி கிடக்கும் பெற்றோரால் கிடைத்தது என்பதை ஏனோ மனங்கள் புரிந்து கொள்ள மறுக்கிறது. </p><p>கடைசி காலத்தில் இப்படித்தான் வயதானவர்களை வீதியில் விட்டு விடுவார்கள் என்பதை உணர்ந்ததால்தான் இன்று வீதிகள் தோறும் முதியோர் இல்லங்கள் முளைத்து வருகின்றன. </p><p>அப்படி இருந்தும் கொல்லும் அளவிற்கு பிள்ளைகள் மனம் கல்லாகி போவதை நினைக்கும் போது கண்ணீர் பெருகுகிறது. அப்படி ஒரு சம்பவம் திருத்தணி அருகே அரங்கேறி இருக்கிறது. </p><p>திருத்தணியில் இருந்து அரக்கோணம் செல்லும் பாதையில் மணவூர் ரெயில் நிலையத்தில் ரெயிலில் அடிப்பட்டு மூதாட்டி ஒருவர் சடலமாக கிடந்தார். முதிர்ந்த அந்த தேகம் சிதைந்து சின்னாபின்னமாகிக் கிடந்தது. பக்கத்திலேயே ஒரு வீல்சேரும் சுக்குநூறாகி துண்டு துண்டாக அங்கொன்றும், இங்கொன்றுமாக கிடந்தது.</p><p>அதை பார்த்ததும் போலீசுக்கு சந்தேகம் வந்தது. எப்படி இந்த மூதாட்டி ரெயிலுக்குள் விழுந்தார். வீல்சேரில் தானாக வந்து விழுந்தாரா? அல்லது யாராவது தள்ளிக் கொண்டு வரும் போது தவறி விழுந்து விட்டாரா? என்று பல கோணங்களில் யோசித்தார்கள். ஆனால் பெற்ற மகனே தள்ளி கொன்று இருப்பார் என்று அவர்களால் நினைத்து பார்க்க கூட முடியவில்லை. </p><p>அடையாளம் காண்பதற்காக விசாரித்த போது  அந்த மூதாட்டி திருவாலங்காடு ஒன்றியம், மணவூரை சேர்ந்த பத்மாவதி என்பது தெரிய வந்தது. போலீசார் அங்கு சென்று விசாரித்த போது கிடைத்த தகவல்களை கேட்டு போலீசாரே ஒரு கணம் ஆடிப்போனார்கள். </p><p>மணவூர் அண்ணாநகரை சேர்ந்தவர் சேஷாத்திரி-பத்மாவதி தம்பதிகள். இவர்களுக்கு 3 மகன்கள். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. மனைவி, குழந்தைகளுடன் எல்லோரும் சந்தோசமாக வாழ்கிறார்கள். இளைய மகன் பார்த்தசாரதி (43) இவருக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள்.  சேஷாத்திரி உயிருடன் இருந்தவரை திடகாத்திரமாக நடமாடிய பத்மாவதியை கொஞ்சம் கொஞ்சமாக முதுமை ஆட்கொண்டது. 72 வயதான பத்மாவதியால் நடமாட முடியவில்லை. வீட்டில் படுத்தபடுக்கையாகி விட்டார்.  மகன்களுக்கு தாயை பார்த்துக் கொள்வது யார் என்பதில் போட்டி எழுந்தது. என்னால் முடியாது என்று ஆளாளுக்கு கை கழுவி விட்டனர். கடைசியில் பார்த்தசாரதி தாயை பார்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அவர் அந்த பொறுப்பை எடுத்துக் கொண்டாலும் வீட்டில் மனைவி, மாமியாரை பார்த்துக் கொள்வதற்கு முகம் சுளித்தார். </p><p>என்னால் எல்லாம் உங்க அம்மாவை  கவனித்துக் கொள்ள முடியாது என்று கணவரோடு சண்டை போட்டு விட்டு கோபத்தில் குழந்தைகளையும் அழைத்து சென்று விட்டார். </p><p>கடந்த 3 மாதமாக தனி மரமாக தவித்த பார்த்தசாரதி, மனைவி பிரிந்து சென்ற சோகத்திலும் கட்டிலில் படுத்த படுக்கையாக கிடந்த தாயை சரியாக பராமரிக்க முடியாமலும் தவித்து வந்தார். இதனால் வாழ்க்கையே வெறுத்து போன பார்த்தசாரதி தனக்கு பாரமாக கருதிய தாயை கொன்று விட முடிவு செய்து உள்ளார்.</p><p>தனது திட்டத்தை நிறைவேற்றுவதற்காக நேற்று இரவு தாய் பத்மாவதியை வீல்சேரில் தூக்கி அமர்த்தி இருக்கிறார். வீட்டிலேயே முடங்கி கிடப்பதால் நம் பிள்ளை வெளியே சுற்றி விட்டு வரலாம் என்று அழைத்து செல்கிறானோ என்று மனதிற்குள் நினைத்த அந்த தாயின் மனம் சந்தோஷத்தில் திளைத்தது. </p><p>வீல்சேரை தள்ளியபடியே மணவூர் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் பார்த்தசாரதி சென்று கொண்டு இருந்தார். ரெயில் நிலையத்தில் மின் வெளிச்சங்களும் சுற்றிலும் கேட்ட வெளி உலக சத்தங்களும் பத்மாவதிக்கு உடலில் புதுதெம்பை கொடுத்தது. ஆனால் இன்னும் சில நிமிடங்களில் நாம் பெற்ற பிள்ளையே நம்மை கொல்லப் போகிறான் என்பது அந்த தாய்க்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. </p><p>தூரத்தில் இருந்து பயங்கர ஒலி எழுப்பியபடி வேகமாக ஒரு ரெயில் வந்து கொண்டு இருந்தது. மகனின் கருணையால் பல மாதங்களுக்கு பிறகு ரெயிலை பார்க்கிறோம் என்று அந்த தாய் நிச்சயம் நினைத்து இருப்பார். ஆனால் மறுகணமே மின்னல்வேகத்தில் பார்த்தசாரதி வீல்சேருடன் தாயை ரெயில் முன்பு தள்ளிவிட்டார்.  கண்ணிமைக்கும் நேரத்தில் வீல்சேருடன் பத்மாவதியும் சின்னாபின்னமாக சிதைந்து போனார். </p><p>சுமையாக இருந்த தாயை தூக்கி வீசி விட்டோம் என்ற நிம்மதியோடு பார்த்தசாரதி வீடு திரும்பினார். ஆனால் போலீசாரின் பார்வை பலகோணங்களில் இருக்கும் அல்லவா அப்படித்தான் அந்த ரெயில் நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது வீல்சேரில் பெண் ஒருவரை தள்ளி கொண்டு வந்ததையும் ரெயிலில் தள்ளி விட்டதையும் பார்த்தனர்.</p><p>இதை அடிப்படையாக வைத்து பார்த்தசாரதியிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணையை தொடர்ந்தனர். அப்போதுதான் நடந்த சம்பவங்களை பார்த்தசாரதியும் விவரித்து இருக்கிறார். </p><p>அடப்பாவி இப்படி ஒரு காரியத்தை எப்படிடா செய்தாய்? ஊரில் எத்தனையோ முதியோர் இல்லங்கள் இருக்கிறது? அங்கு கொண்டு விட்டு இருந்தால் கூட உனக்கு இப்படி கொலை பழி வந்து இருக்காதே? என்று போலீசாரும் பார்த்தசாரதியிடம் தெரிவித்து ஆதங்கப்பட்டனர்.</p><p>கைது செய்யப்பட்ட பார்த்தசாரதி கொலை வழக்கில் ஜெயிலுக்கு அனுப்பப்படுகிறார்.</p>]]></content:encoded></item><item><title>எடை குறைவாக வரும் அரிசி மூட்டைகள்..! ரேஷன் கடை பணியாளர்கள் புகார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ration-shops-get-underweight-rice-sacks-staff-complain</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ration-shops-get-underweight-rice-sacks-staff-complain#comments</comments><guid isPermaLink="false">48c82ab3-327e-44b0-9ebe-0176d01e216c</guid><pubDate>Wed, 19 Aug 2026 08:26:29 +0000</pubDate><atom:updated>2026-08-19T08:26:29.805Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ரேஷன் கடை,ration shop,அரிசி மூட்டைகள்,பணியாளர்கள்,Rice bags,Ration employee</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/pzqdugy7/Ration-shop.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ration shops]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/pzqdugy7/Ration-shop.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ரேஷன் கடைகளுக்கு அரிசி மூட்டைகள் எடை குறைவாக வருவதால் பணியாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.</p><h2>எடை குறைவாக வழங்கப்படும் அரிசி</h2><p>தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ரேஷன் கடைகளில், பொது மக்களுக்கு உரிய எடையில் அரிசி வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது.</p><p>ஆனால், இதுகுறித்து ரேஷன் கடை பணியாளர்களிடம் கேள்வி கேட்டால், "எங்களுக்கே அரிசி மூட்டை எடை குறைவாகத்தான் வருகிறது. அப்படி இருக்கும்போது, உரிய எடையில் எப்படி பொதுமக்களுக்கு அரிசியை வழங்க முடியும்" என்று வருத்தம் தெரிவித்தனர்.</p><p>சமீபத்தில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள நெல் அரவை ஆலைகளில் பல கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கு காரணமான அரசு அதிகாரிகளும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>தரமில்லாத அரிசி</h2><p>50 கிலோ எடை கொண்ட அரிசி மூட்டையின் அளவு ஒரு பக்கம் குறைகிறது என்றால், மற்றொரு பக்கம் தரமான அரிசியாக இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.</p><p>அதாவது,"நல்ல தரமான அரிசியை வெளிச்சந்தைக்கு திருப்பி விட்டுவிட்டு, தரமில்லாத, பழைய அரிசியை ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படுகிறது. அதுவும் எடை குறைவாகவே வழங்கப்படுகிறது" என்ற புகார் பல ஆண்டுகளாக உள்ளது.</p><h2>அரசுக்கு கோரிக்கை</h2><p>அதனால், நெல் கொள்முதலில் தொடங்கி நெல் அரவை, கிடங்கு, போக்குவரத்து, ரேஷன் கடை என முழு விநியோக சங்கிலியையும் கண்காணிக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு குறிப்பாக உணவுத்துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>&apos;ஐட்டம் பாடல்களுக்கு மட்டுமே என்னை அணுகுகிறார்கள்&apos;: நடிகை தமன்னா வேதனை!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/tamannaah-opens-up-about-being-offered-only-item-songs</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/tamannaah-opens-up-about-being-offered-only-item-songs#comments</comments><guid isPermaLink="false">1291c756-0626-4e82-9318-402b50e4395c</guid><pubDate>Wed, 19 Aug 2026 08:10:32 +0000</pubDate><atom:updated>2026-08-19T08:10:32.860Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamannaah,தமன்னா,ItemSong,Kaavaalaa,AajKiRaat,சினிமாசெய்திகள்,ஐட்டம் பாடல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/8gznpktw/tamanna.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tamannaah Bhatia]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/8gznpktw/tamanna.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தமன்னா. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வரும் இவர், தனது நடிப்புடன் கவர்ச்சி நடனங்களாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். தற்போது தமிழில் சுந்தர்.சி இயக்கும் 'புருஷன்' திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதுதவிர இந்தியில் 5 புதிய படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.</p><h2>மார்க்<strong>கெட் உச்சம்</strong> </h2><p>'மில்க்கி பியூட்டி' என ரசிகர்களால் அழைக்கப்படும் தமன்னா, ரஜினிகாந்த் நடித்த '<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-first-song-from-the-movie-jailer-to-be-released-on-august-21">ஜெயிலர்</a>' படத்தில் இடம்பெற்ற 'காவாலா' பாடல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். இருப்பினும், தான் ஒப்புக்கொள்ளும் ஒவ்வொரு நடனப் பாடலையும் வெறும் நடனமாகப் பார்க்காமல், அதையும் ஒரு கதாபாத்திரமாகவே கருதி அர்ப்பணிப்புடன் நடிப்பதாகத் தெளிவுபடுத்தினார். அதனைத் தொடர்ந்து இந்தியில் வெளியான 'ஸ்த்ரீ 2' படத்தின் 'ஆஜ் கி ராத்' பாடலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனால் தமன்னாவின் மார்க்கெட் மேலும் உயர்ந்தது.</p><h2>சவா<strong>ல் நிறை</strong>ந்த கதாபாத்திரங்களுக்கான தேடல்</h2><p>திரைப்படங்களில் சவால் நிறைந்த மற்றும் நடிப்பிற்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடிக்கத் தான் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாக தமன்னா தெரிவித்துள்ளார். ஆனால் பெரும்பாலான இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் தன்னை நடனப் பாடல்களுக்கு மட்டுமே அணுகுவதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். ஒரு கவர்ச்சி நடிகையாக மட்டுமே பார்க்கப்படும் பிம்பத்தைத் தாண்டி, தனது நடிப்புத் திறமையை முழுமையாக வெளிப்படுத்தக்கூடிய வலுவான கதாபாத்திரங்கள் தனக்கு வழங்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><h2>கவர்ச்சியா<strong>ன பிம்பத்தைத் தாண்</strong>டி நடிக்க வேண்டும்</h2><p>மேலும், ஒரு கவர்ச்சியான பிம்பத்தைத் தாண்டி, ஒரு நடிகையாக தன்னை முழுமையாக வெளிப்படுத்தும் வகையிலான கதாபாத்திரங்களை இயக்குநர்கள் வழங்க வேண்டும். சினிமா காலத்திற்கேற்ப தொடர்ந்து மாறி வருவதாக குறிப்பிட்ட அவர், கதையின் தேவைக்கேற்ப முத்தக் காட்சிகள் இடம்பெற்றால் அவற்றை மட்டும் தனியாக பிரித்துப் பார்க்கவோ அல்லது தவறாக மதிப்பிடவோ கூடாது என்றும் தெரிவித்துள்ளார். தமன்னாவின் இந்தக் கருத்துகள் தற்போது திரையுலகில் கவனம் பெற்றுள்ளன.</p> ]]></content:encoded></item><item><title>நமது கையைவிட்டு போகும் தமிழகத்தின் நீர்வளம்..!- சவுமியா அன்புமணி வைத்த முக்கிய கோரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamilnadu-vanishing-water-resources-sowmya-anbumani-urgent-request</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamilnadu-vanishing-water-resources-sowmya-anbumani-urgent-request#comments</comments><guid isPermaLink="false">b043f64d-d62c-4448-9b07-1c9c9df0c259</guid><pubDate>Wed, 19 Aug 2026 08:00:37 +0000</pubDate><atom:updated>2026-08-19T08:00:37.586Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,சவுமியா அன்புமணி,TN assembly,Water resources,Sowmya Anbumani,நீர்வளம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/dn3grwin/sowmya.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PMK MLA Sowmya Anbumani]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/dn3grwin/sowmya.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் இன்று  ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை மானிய கோரிக்கை மீதான  விவாதத்தின்போது, பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி பேசினார்.</p><p>அப்போது சவுமியா அன்புமணி கூறியதாவது:-</p><p>தமிழ்நாட்டின் நீர்வளம் நம் கையைவிட்டு போய்க்கொண்டு இருக்கின்றன. நீர் வளம் தான் எதிர்கால தலைமுறைக்கு நாம் வழங்கும் சொத்து.</p><p>இந்தியாவில் எங்கும் இல்லாத சதுப்பு நிலம் சென்னையில் உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போதும் கூவம் ஆறு மக்கள் பயன்பாட்டில் உள்ளது.</p><p>சென்னைக்கு வந்த பிறகு தான் கூவம் சாக்கடையாக மாறுகிறது. கூவத்தில் குப்பை கொட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். </p><p>நல்ல தண்ணீரில் சாக்கடையை கலப்பது சட்டப்படி குற்றம்.</p><p>தாமிரபரணி நதியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு கட்டிடங்கள் ஏரியில் தான் அமைந்துள்ளன என்றார். </p><p>அப்போது பேசிய அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்,"சவுமியா அன்புமணி கோரிக்கையின் படி நீர்நிலைகள் மேப்பிங் செய்யப்படும்" என்றார்.</p><h2>சவுமியா அன்புமணி</h2><p>அத்திக்கடவு- அவிநாசி 2 திட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள நதிகளை முதலில் இணைக்க வேண்டும்.</p><p>காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தை முதலில் செயல்படுத்த வேண்டும். பாலாற்றில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். </p><p>நந்தன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். மழை நீர் சேமிப்பை கட்டாயமாக்க வேண்டும். பாலாற்றில் 5 அடிக்கு தடுப்பணைகளை கட்ட வேண்டும்.</p><p>தருமபுரி மாவட்டத்தில் ஏரிகளை தூர்வார வேண்டும். செஞ்சி கோட்டையை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும். </p><p>தருமபுரியில் குறும்பர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அதிகம் பேர் உள்ளனர். அவர்கள் SC சான்றிதழ் கேட்டு வருகின்றனர். அவர் பள்ளிக்கூடத்திற்கோ, கல்லூரிக்கோ செல்ல முடியவில்லை. ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்திற்கு சென்று ஆர்டர் வாங்கி வந்து விட்டு படிக்கிறார்கள். அதனை பரிசீலனை செய்து வழங்க வேண்டும்.</p><h2>அமைச்சர் செங்கோட்டையன்</h2><p>குறும்பர் இன மக்களுக்கு SC சான்றிதழ் - இதுதொடர்பாக அரசு பரிசீலித்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. மத்திய அரசிடம் எடுத்துச் சொல்லி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். </p>]]></content:encoded></item><item><title>மானவ் சுதார் அசத்தல் பந்துவீச்சு: முதல் டெஸ்டில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/india-beat-srilanka-in-first-test</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/india-beat-srilanka-in-first-test#comments</comments><guid isPermaLink="false">3d4fc7ae-ed6f-4d21-b212-2d3e13928cb7</guid><pubDate>Wed, 19 Aug 2026 07:58:12 +0000</pubDate><atom:updated>2026-08-19T07:58:12.198Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDvSL,இந்தியா இலங்கை தொடர்,Manav suthar,மானவ் சுதார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/698leqxw/manav.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ team india]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/698leqxw/manav.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.</p><p>இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.</p><p>இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.</p><h2>சதமடித்த படிக்கல்</h2><p>அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 462 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தேவ்தத் படிக்கல் 167 ரன்னும், கே.எல்.ராகுல் 82 ரன்னும், துருவ் ஜுரல் 51 ரன்னும் எடுத்தனர்.</p><p>இலங்கை சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 4 விக்கெட்டும், கேஷரா நுவந்தா 3 விக்கெட்டும், அசிதா பெர்னாண்டோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><h2>சோனல் தினுஷா சதம்</h2><p>தொடர்ந்து ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 284 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் சோனல் தினுஷா 100 ரன்னில் அவுட்டானார். நிரோஷன் டிக்வெலா 80 ரன்னில் ஆட்டமிழந்தார்.</p><h2>மானவ் சுதார் 4 விக்கெட்</h2><p>இந்தியா சார்பில் மானவ் சுதார் 4 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><h2>ரிஷப் பண்ட் அரை சதம்</h2><p>178 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி தொடர்ந்து 2வது இன்னிங்சை தொடர்ந்தது. ரிஷப் பண்ட் மட்டும் தாக்குப்பிடித்து அரை சதம் அடித்து 66 ரன்னில் அவுட்டானார். படிக்கல் 44 ரன்னும், கே.எல்.ராகுல் 35 ரன்னும் எடுத்தனர்.</p><p>இறுதியில், இந்திய அணி 2-வது இன்னிங்சில் 193 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.</p><p>இலங்கை சார்பில் அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட்டும், லஹிரு குமாரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p>இதன்மூலம், 372 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர். 47 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தடுமாறியது.</p><p>5வது விக்கெட்டுக்கு இணைந்த தனஞ்செய டி சில்வா- சோனல் தினுஷா ஜோடி பொறுப்புடன் ஆடியது. இந்த ஜோடி 95 ரன்கள் சேர்த்த நிலையில் டி சில்வா 59 ரன்னில் அவுட்டானார்.</p><p>அரை சதம் கடந்த சோனல் தினுஷா கடைசி வரை போராடி 84 ரன்னில் ஆட்டமிழந்தார்.</p><h2>மானவ் சுதார் 6 விக்கெட்</h2><p>இறுதியில், இலங்கை அணி 2வது இன்னிங்சில் 206 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் இந்திய அணி 1-0 என டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது.</p><p>இந்தியா சார்பில் மானவ் சுதார் 6 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழக அரசியல் களத்தில் உருவாகிறது புதிய கூட்டணி: இடைத்தேர்தலில் ஒன்றாக களம் காண திட்டம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/new-alliance-is-taking-shape-in-the-tamil-nadu-political-arena-plans-are-underway-to-contest-the-by-election-together</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/new-alliance-is-taking-shape-in-the-tamil-nadu-political-arena-plans-are-underway-to-contest-the-by-election-together#comments</comments><guid isPermaLink="false">bb0549f6-990b-4275-860c-ecc443acd038</guid><pubDate>Wed, 19 Aug 2026 07:56:39 +0000</pubDate><atom:updated>2026-08-19T07:56:39.700Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Seeman,velmurugan,வேல்முருகன்,by election,Krishnasamy,கிருஷ்ணசாமி,சீமான்,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/vsxgk1sy/seeman.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சீமான்- கிருஷ்ணசாமி- வேல்முருகன்]]></media:title><media:description type="html"><![CDATA[ சீமான்- கிருஷ்ணசாமி- வேல்முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/vsxgk1sy/seeman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இந்த கூட்டணி மாற்றத்தை ஏற்படுத்துமா? இல்லை இன்னொரு மக்கள் நலக் கூட்டணியாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.</strong></em></p><p>தமிழக அரசியல் களத்தில் தி.மு.க, அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுக்கும் மாற்றாக பல்வேறு அரசியல் கட்சிகள் முளைத்து தங்களது பணிகளை தீவிரமாக செய்த போதிலும், அதற்கு வெற்றி கிடைக்கவில்லை.</p><p>அதே நேரத்தில் த.வெ.க. தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி வெற்றிப்பெற்றுள்ளது. தமிழக அரசியல் களத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக வேறு எந்த கட்சிகளும் செய்யாத சாதனையை முதலமைச்சர் விஜய் செய்து காட்டியிருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்துக்களை தெரிவித்து உள்ளனர்.</p><h2><strong>புதிய கூட்டணி</strong></h2><p>தி.மு.க, அ.தி.மு.க.வுக்கு மாற்றாக இதற்கு முன்பு பல்வேறு கூட்டணிகள் அமைக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்தை முன்னிறுத்தி  உருவாக்கப்பட்ட மக்கள் நலக்கூட்டணி தோல்வியையே தழுவியது. </p><p>இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம், வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகியவை ஒன்றாக இணைந்து செயல்பட்டு வருகின்றன.</p><p>சட்டமன்ற தேர்தலின் போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி அது தோல்வியில் முடிந்த நிலையில் கிருஷ்ணசாமி குறிப்பிட்ட தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு தோல்வியை தழுவினார். </p><p>தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த வேல்முருகனும் கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிட்டார். நாம் தமிழர் கட்சி எப்போதும் போல தனித்து களம் கண்டது.  இந்த தேர்தலில் விஜய் ஏற்படுத்திய தாக்கத்தால் தி.மு.க, அ.தி.மு.க. ஆகிய கட்சிகளே பின்னுக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் மற்ற கட்சிகளும் படுதோல்வியை தழுவின.  </p><p>இந்த நிலையில் தான் தமிழக அரசியல் களத்தில் புதிதாக சீமான், வேல்முருகன், கிருஷ்ணசாமி ஆகியோர் பல்வேறு கட்சிகள் அமைப்புகளோடு புதிய கூட்டணியை ஏற்படுத்தி இருக்கிறார்கள். வருகிற சட்டமன்ற இடைத்தேர்தலில் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர். இந்த கூட்டணி மாற்றத்தை ஏற்படுத்துமா? இல்லை இன்னொரு மக்கள் நலக் கூட்டணியாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.</p>]]></content:encoded></item></channel></rss>