<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 02 Sep 2026 14:01:09 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கியச் செய்திகள் - 2 செப். 2026 </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-2-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-2-september-2026#comments</comments><guid isPermaLink="false">83338c15-7a2e-4b27-825a-a67aff274e36</guid><pubDate>Wed, 02 Sep 2026 03:53:36 +0000</pubDate><atom:updated>2026-09-02T12:35:29.985Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/ubfkhzxf/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/ubfkhzxf/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய்யின் சாதனைகளை ஆந்திரா, கேரளா, கர்நாடகா மட்டுமல்ல, அனைத்து வடமாநிலங்களும் கூர்ந்து கவனித்து வருகின்றனர். தளபதி விஜய் போல, நமக்கும் ஒரு முதல்வர் அமையமாட்டாரா என அனைவரும் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்- பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி.</p><h2>பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி </h2><p>சினிமா படங்களை தான் பிறமொழிகளில் டப்பிங் செய்து மக்கள் பார்த்து ரசிப்பதை கண்டிருக்கிறேன். ஆனால் எங்கள் தலைவரின் சட்டமன்ற உரையையும், பொதுகூட்ட பேச்சையும் டப்பிங் செய்து பிறமொழி பேசும் வேற்று மாநிலத்தினரும் கேட்கின்றனர்.</p><p>நான் தடுமாறிக்கொண்டிருந்தபோது, எனது அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டதா என்று நினைத்தபோது, என்னைத் தூக்கிப்பிடித்து வருவாய்த் துறை அமைச்சராக்கி அழகு பார்த்தவர் இன்றைய முதலமைச்சர்- அதிமுக எம்.எல்.ஏ ராகேஷின் பேச்சுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில்.</p><h2>சங்கராபுரம் அதிமுக எம்எல்ஏ ராகேஷ்</h2><p>அதிமுகவும் தவெகவும் ஒன்று என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். ஒரு தலைவர் கொண்டு வரும் திட்டம், அடுத்த 50 ஆண்டுகளுக்குப் பேசப்பட வேண்டும். அதை எங்கள் தலைவர் செய்துள்ளார். </p><p>இன்று உங்களுக்குக் கிடைத்திருக்கும் வருவாய்த் துறை அமைச்சர், சபாநாயகர் எல்லாமே நாங்கள் கொடுத்ததுதான். தமிழகத்தில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக அதிமுக விளங்கி வருகிறது.</p><h2>அமைச்சர் நிர்மல் குமார்</h2><p>கலைஞர் தன் வழக்குக்காக கண்ணை மூடிக்கொண்டு கச்சத்தீவை தாரை வார்த்தார். கைவிட்டுப் போன பிறகு தீர்மானம் போட்டு என்ன பயன்?</p><p>உண்மையை சொன்னால் திமுகவினருக்கு கோபம் வருகிறது, Reels போடுவதற்காக பேசுகிறோம் என்கிறார்கள். மக்களுக்கு செய்த துரோகத்தைதான் சொல்கிறோம்.</p><h2>முன்னாள் அமைச்சர் கோவி.செழியன்</h2><p>எங்கள் உறுப்பினர் படகு பிரச்சினையைப் பற்றித்தான் பேசினார். ஆனால், நீர்வளத்துறை அமைச்சர் கச்சத்தீவு என்று Open செய்தார். அவர் Open செய்துவிட்டு சிரித்துக்கொண்டிருந்த காட்சியும் தெரியும். சட்டத்துறை அமைச்சரும் நீண்ட நேரம் இதுகுறித்து விளக்கமளித்தார்.</p><p>விவாதம் முறையாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, அதைத் திசைதிருப்ப வேண்டும் என்றால், ஒரு தலைப்புச் செய்தியைச் சொல்ல வேண்டும். அது குறித்து சட்டத்துறை அமைச்சர் கருத்து சொல்ல வேண்டும். நாங்கள் எழுந்து அதற்கு எதிர்வினையாற்ற வேண்டும். </p><p>பின்னர், அந்தக் காட்சியைப் புகைப்படம் எடுத்து, வெளியில் அவர்கள் அமைதியாகப் பேசுவது போலவும், திமுக உறுப்பினர்கள் கொந்தளிப்பது போலவும் ஒரு Reels வெளியிடுவதற்காகத்தான் கச்சத்தீவு பிரச்சினையைப் பயன்படுத்துகிறார்கள்</p><p>எங்கள் பகுதியை மட்டும் காட்டாமல், ஆளுங்கட்சியினரையும் காட்டினால்தான் அவர்களின் செயல் என்ன என்பது வெளியே புரியும்.</p> <h2>காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் தாரகை கத்பர்ட்</h2><p>கச்சத்தீவு 285 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம். அதை கொடுத்துவிட்டு 25 லட்சம் ஏக்கர் கொண்ட வாட்ஜ் பேங்க் (Wadge Bank) வாங்கினோம். அதனால் எவ்வளவு வளம் கிடைக்கிறது? முதல் ஒப்பந்தத்தை மட்டும் பேசுகிறார்கள், இரண்டாவது ஒப்பந்தத்தை பற்றி ஏன் பேசுவதில்லை?</p><p>கச்சத்தீவை கொடுத்ததே திமுக தான் என அமைச்சர் என்.ஆனந்த் கூறு. திமுகவினர் ஆக்ரோஷமாக அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் பின் நடந்த உரையாடல்</p><h2>திமுக கொறடா எ.வ.வேலு</h2><p>கச்சத்தீவு குறித்து இந்த சபையில் பலமுறை விவாதித்துவிட்டோம். காங்கிரஸ் கட்சியின் பிரதமர் இந்திராகாந்தி தான் கச்சத்தீவை வழங்கினார்.</p><h2>அமைச்சர் நிர்மல்குமார்</h2><p>கச்சத்தீவை தாரை வார்க்க அன்றைய மத்திய அரசு முடிவு செய்த போது, அன்று இருந்த மாநில அரசு என்ன செய்தது? கருணாநிதியிடம் ஆலோசனை செய்த பிறகு தான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. வழக்கை காட்டி மிரட்டி தான், அவர்களை ஒப்புக் கொள்ள வைத்தனர்.</p><h2>நாமக்கல் தவெக எம்எல்ஏ திலீப் </h2><p>Work like a horse, live like a hermit ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதாவது புரவி(குதிரை) போல வேலை செய்ய வேண்டும், துறவி போல வாழ வேண்டும் என்று சொல்வார்கள். புரவி போல தமிழக மக்களுக்காக உழைக்கிறார், அவரது வாழ்க்கையில் துறவி போல எளிமையாக இருக்கிறார்.</p><h2>நாமக்கல் தவெக எம்எல்ஏ திலீப்</h2><p>நல்லவர்களை காப்பாற்றவும், தீயோரை ஒதுக்கி தர்மத்தை நிலைநாட்ட அவ்வப்போது தோன்றுவேன் என கண்ணபிரான் சொன்னது போல, தமிழகத்தின் அவதார புருஷனாக அவதரித்து, கடந்தகால ஆட்சியை அகற்றியுள்ளார் முதலமைச்சர் விஜய்.</p><p>பாமக சட்டமன்ற குழுத் தலைவர் சௌமியா அன்புமணிக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்ததற்கு நன்றி," என பாமக எம்எல்ஏ சிவக்குமார் பேச, குறுக்கிட்டு எழுந்த சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா, "நடிகர் கமல் தலைமை ஏற்று நடத்தும் கட்சி மக்கள் நீதி மய்யம், நான் தலைமை தாங்கும் கட்சியின் பெயர் மனிதநேய மக்கள் கட்சி என்பதை கூறிக்கொள்கிறேன்" என தெரிவித்தார். இதை கேட்டு, பாமகவினர் உள்ளிட்ட அனைவரும் சிரித்தனர்.</p><h2>அமைச்சர் ஸ்ரீநாத்</h2><p>மீன்வளக் கூட்டுறவுச் சங்கங்கள் தங்களுக்குப் பொருத்தமான வணிக நடவடிக்கைகளை மேற்கொண்டு, சொந்த வருவாயை ஈட்டும் வகையில் வலுப்படுத்தப்படும்.</p><p>20,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பயனடையும் வகையில், 18 மீன்வளக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு ஆதரவளிக்கப்படும்.</p><p>TAFCOFED வாயிலாக 55 மீன்வளக் கூட்டுறவுச் கூட்டுறவுச் சங்கங்கள் ‘மீன் வளர்ப்போர் மற்றும் உற்பத்தியாளர் அமைப்புகளாக (FFPOS) வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளன. </p><p>தமிழ்நாட்டின் 50 கடலோர கிராமங்களுக்கு உட்பட்ட பொருத்தமான கடற்பகுதியில் செயற்கை மீன் உறைவிடங்கள் அமைக்கப்படும்.</p><p>மீன் பிடிக்க கடலுக்குச்சென்ற காணாமல் போகும் மீனவர் குடும்பத்திற்கு வழங்கும் உதவித்தொகை உயர்த்தப்படும்.</p><p>கிருஷ்ணகிரி அரசு மீன் பண்ணைகளில் ரூ.24 லட்சத்தில் மீன் விரலிகள் உற்பத்திப்பிரிவு நிறுவப்படும் - அமைச்சர் ஸ்ரீநாத்</p><p>திருவொற்றியூர் மீன்பிடித் துறைமுகத்தில் அதிநவீன மீன் சந்தை அமைக்கப்படும் - அமைச்சர் ஸ்ரீநாத்</p><p>திருச்சியில் ரூ.34 கோடியில் இறைச்சி பதப்படுத்தும் ஆலை அமைக்கப்படும் - அமைச்சர் கமலி</p><p>பருத்தி பயிர் பாதிப்பு குறித்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கு நாகை எம்எல்ஏ ஜவாஹிருல்லா கவன ஈர்ப்பு தீர்மானம்</p><p>தவெக அரசின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளும் வாபஸ் பெறப்படுமா? - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</p><p>வழக்குகள் வாபஸ் என்பது இதுதான் முதல்முறை என அமைச்சர் கூறியது தவறு. 5,000-க்கும் மேற்பட்ட போராட்டம் சார்ந்த வழக்குகளை ஸ்டாலின் வாபஸ் பெற்றார் - உதயநிதி </p><p>முந்தைய ஆட்சி என்று கூறாமல் வேறு எப்படி கூற முடியும்? - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>முதலமைச்சரின் அறிவிப்பை திமுகவும் வரவேற்கும் - சபாநாயகர்</p><p>முந்தைய ஆட்சியில் வழக்குகள் போடப்பட்டாதா? இல்லை? - சபாநாயகர்</p><p>திமுக ஆட்சியிலும் வழக்குகள் வாபஸ் என்பதற்கு வன்னிஅரசு சாட்சி - எ.வ.வேலு</p><p>முந்தைய அரசு என கூறினால் விவாதம் எழத்தான் செய்யும்  - எ.வ.வேலு</p><p>போராட்டத்தை ஒடுக்குவதற்கு திமுக ஆட்சியில் வழக்குகள் பதிவு - நிர்மல்குமார்</p><p>வரலாற்று சிறப்புமிக்க முதல்வரின் அறிவிப்புக்கு நன்றி.</p><p>முதல்வர் பரந்த உள்ளத்துடன் விவசாயிகள் பக்கம் நின்று அவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற்றுள்ளார்.</p><p>அரசு கூறும்போது நீதிமன்றம் நிச்சயம் விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</p><p>110 விதிகளின் கீழ் முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில் எந்த விதிமீறலும் இல்லை - சபாநாயர் விளக்கம்</p><p>110 விதியின் கீழ் அறிவிப்புகளை மட்டும் தான் முதலமைச்சர் வெளியிட முடியும், வழக்குகளை வாபஸ் பெறும் அறிவிப்பை எப்படி வெளியிடலாம்.</p><p>110 விதியின் கீழ் பேசும் முதல்வர் முந்தைய ஆட்சி குறித்த  தவறான கருத்துகளை எப்படி தெரிவிக்கலாம்?</p><p>ஒரு திட்டத்திற்காக நிலம் எடுக்கும்போது போராட்டங்கள் நடக்கும், நீங்கள் செய்தாலும் அதுதான் நடக்கும்.</p><p>சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க நீதியை நிலைநாட்டத்தான் போராட்டக்காரர்கள் மீது வழக்கு பதியப்பட்டது  - எ.வ.வேலு</p><p>அரசியல் வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்</p><p>நீட் போராட்ட வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட்</p><p>அறிவிப்புகளை வரவேற்க ராமச்சந்திரன் நீட் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான வழக்குகளையும் ரத்து செய்ய கோரிக்கை</p><p>ஒட்டுமொத்த ஆசிரியர்கள், அவர்கள் குடும்பத்தினர் சார்பிலும் முதல்வருக்கு நன்றி கூறுகிறேன் - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>சென்னை கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூரில் ரூ.236 கோடியில் குடிநீர் ஆதாரங்கள் மேம்படுத்தப்படும்.</p><p>கடலூரில் ரூ.8 கோடியில் பாரம்பரிய நடைபாதை அமைக்கப்படும்.</p><p>கன்னியாகுமரி கடற்கரை பகுதியை அழகுப்படுத்த ரூ.50 கோடி ஒதுக்கப்படும்.</p><p>ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவு சான்று பெற ஏற்படும் காலதாமதத்தை தடுக்க டிஜிட்டல் முறையில் வழங்கப்படும்.</p><p>லைசென்ஸ் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும், பயனாளர்கள் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.</p><p>டிஜிட்டல் முறையில் டிரைவிங் லைசென்ஸ், பதிவுச்சான்று வழங்குவதால் தொலைந்து போனாலும் பதிவிறக்கம் செய்யலாம்.</p><p>விவசாயிகள், ஆசிரியர்கள் மீது திமுக ஆட்சியில் பதியப்பட்ட வழக்குகள் ரத்து.</p><p>திருவண்ணாமலை மேல்மா சிப்காட் போராட்ட வழக்குகளும் ரத்து - முதலமைச்சர் விஜய்</p> <p>பள்ளிகளை சுற்றியுள்ள சாலையில் மாணவ, மாணவிகள் நடந்து செல்ல பிரத்யேக நடைபாதை உருவாக்கப்படும்.</p><p>மாநிலம் முழுவதும் ரூ.305 கோடி செலவில் பூங்காக்கள் அமைக்கப்படும்.</p><p>ரூ.335 கோடி செலவில் அரசு பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.</p><p>மதுரை மாநகராட்சியில் 40 ஆண்டுகள் பழமையான பாதாள சாக்கடை திட்டம் ரூ.2,400 கோடியில் மேற்கொள்ளப்படும்.</p><p>நாகர்கோவிலில் ரூ.960 கோடியில் புதிய பாதாள சாக்கடை திட்டம் மேற்கொள்ளப்படும் - முதலமைச்சர் விஜய்</p> <p>சென்னை கீழ்ப்பாக்கத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய திறன் அதிகரிக்கும் திட்டம் ரூ.410 கோடியில் செயல்படுத்தப்படும்.</p><p>சென்னை உட்பட அனைத்து நகரப்பகுதிகளின் சாலைகளும் ரூ.1,850 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும் - முதலமைச்சர் விஜய்</p><p>நாகர்கோவில் மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் புதிய பாதாள சாக்கடை திட்டங்கள் செயல்படுத்தப்படும்.</p><p>ஆவடி நகராட்சியில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் வகையில் ரூ.500 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் - முதலமைச்சர் விஜய்</p> <p>மீஞ்சூரில் ரூ.4,800 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.</p><p>பழமையான 33 குடிநீர் திட்டங்கள் சீரமைக்கப்படும் - முதலமைச்சர் விஜய்</p> <p>சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்புகளை வெளியிட்டார்.</p> <p>பணி நிரந்தரம், ஊதிய உயர்வு கோரிக்கையில் நிர்வாக சிக்கல் மட்டுமின்றி நிதி சிக்கலும் உள்ளது - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>தூய்மைப் பணியாளர்களை சந்தித்து முதலமைச்சர் பேசுவாரா? என தெளிவுபடுத்த வேண்டும்.</p><p>பணி நிரந்தரம் தொடர்பான தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் 15 நாட்களை எட்டியுள்ளது - உதயநிதி ஸ்டாலின்</p><p>மணக்குடி கிராமத்தில் படகு சவாரி செய்ய தனியார் நிறுவனத்திற்கு இதுவரை எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை.</p><p>அனுமதியில்லாமல் படகு சவாரி, சாகச சுற்றுலா மேற்கொள்ளப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ராஜேஷ்</p><p>வணிக ரீதியில் சாகச சுற்றுலா செய்யும் முன்பு சுற்றுலாத்துறையிடம் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும் - அமைச்சர் ராஜேஷ்</p><p>ஆட்கொல்லி புலியை தேடிக்கொண்டிருக்கிறோம் - அமைச்சர் ரஞ்சித் குமார் </p> <p>உதகை அருகே இருவரை கொன்று தின்ற புலியை பிடிக்க வேண்டும் - போஜராஜன்</p> <p>வனவிலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப்பன்றிகளை நீக்க இயலாது - செங்கோட்டையன்</p> <p>மத்திய அரசிடம் வலியுறுத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்கப்படும் - அமைச்சர் ரஞ்சித்குமார்</p><p>வனவிலங்கு பட்டியலில் இருந்து காட்டுப்பன்றியை நீக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் - ராஜேந்திரன்</p><p>காட்டுப்பன்றியை விவசாயிகள் சுட்டுக்கொல்வதாக அமைச்சர் பேரவையில் கூறுவது சரியல்ல. </p><p>பாதுகாக்கப்பட்ட வனவிலங்கான காட்டுப்பன்றியை சுட்டுக்கொல்வதாக கூறுவது அரசின் மீதான நல்லெண்ணத்தை கெடுக்கும் - தங்கம் தென்னரசு</p><p>காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொன்று சிக்கன்போல் விவசாயிகள் சாப்பிடுகிறார்கள், அதை நாம் கண்டுகொள்வதில்லை - அமைச்சர் ரஞ்சித் குமார் </p><p>காட்டுப்பன்றிகளை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் - தளி ராமச்சந்திரன்</p><p>தஞ்சை பெரிய கோவிலில் அன்னதானம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் - எம்எல்ஏ தஞ்சை சரவணன் கேள்விக்கு அமைச்சர் ரமேஷ் பதில்</p> <p>தஞ்சை பெருவுடையார் கோவிலில் தினந்தோறும் அன்னதானம் வழங்க தனியாரையும் அனுமதிக்க வேண்டும் - தஞ்சை சரவணன்</p> <p>அனைத்து கோவில்களையும் ஆய்வு செய்வதற்கு தயார். கோவில்களில் அன்னதான சேவையை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ரமேஷ்</p><p>விருத்தாச்சலத்தை கோவில் நகரமாக அறிவிக்க வேண்டும். அமைச்சர்கள் எங்களுடன் சேர்ந்து தொகுதிக்கு வந்து ஆய்வு செய்ய வேண்டும் - பிரேமலதா</p><p>திருத்தணி முருகன் கோவிலில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை தேவை. </p><p>செவ்வாய் கிழமை தோறும் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை தேவை - எம்எல்ஏ ஹரி கோரிக்கை</p><p>இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த கோரிக்கைகள் - அமைச்சர் ரமேஷ் பதில்</p><p>சொந்த காரணங்களால் சிலர் பணம் வாங்கிக்கொண்டு செயல்படுகிறார்கள். இன்னும் 6 மாதங்களில் பிரச்சனை சரி செய்யப்படும் - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்</p><p>கொரடாச்சேரி பகுதியில் ஒருநாளைக்கு 10 முறை பவர் கட் ஆகிறது - எம்எல்ஏ பூண்டி கலைவாணன் குற்றச்சாட்டு</p><p>சென்னையில் புதிதாக 6 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>15 நிமிடங்களில் மின் வெட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆண்டில் 6,000 டிரான்ஸ்ஃபார்மர்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>குறை மின்னழுத்தப் பிரச்சனை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் நிர்மல்குமார்</p> <p>பத்மநாபபுரம் - மலைக்கிராமங்களில் மின்வசதி இல்லை. துணை மின்நிலையம் அமைத்துத்தர வேண்டும் - செல்லசாமி</p><p>மதுரையில் 6 புதிய துணை மின் நிலையங்களுக்கான பணிகள் நடைபெறுகிறது - அமைச்சர் நிர்மல்குமார்</p> <p>திருத்துறைப்பூண்டியில் 110KV துணை மின்நிலையம் தேவை - எம்எல்ஏ மாரிமுத்து கோரிக்கை</p><p>குறை மின்னழுத்தப் பிரச்சனை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>சென்னையில் தாழ்வாக உள்ள மின்பெட்டிகளை உயர்த்தி வைக்க நடவடிக்கை - அமைச்சர் நிர்மல்குமார்</p> <p>மின்சாரத்துறை தொடர்பாக எம்எல்ஏக்கள் கோரிக்கை - அமைச்சர் நிர்மல்குமார் பதில்</p> <p>நேரடி கொள்முதல் நிலையங்கள் - உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் பதில் அளித்து வருகிறார்</p><p>ஆன்மிகமும் எங்கள் இதயங்களில் இருக்கிறது - ஓ.பன்னீர்செல்வம்</p> <p>எங்களுடைய சட்டசபை உறுப்பினர் கேட்டது உண்மையில் ஜலதோஷம் பற்றி தான் - உதயநிதி</p> <p>பெரியார் இயக்கம் பற்றி பேசிய திமுக தோஷத்தை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் பெரியார் வழி வந்தவர்கள். அறிவியல் பூர்வமாக இந்த பிரச்சனையை அணுகக்கூடியவர்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</p><p>தவெக அரசு அறிவியல் பூர்வமான ஒரு அரசை தான் மேற்கொண்டுள்ளது. தோஷம், பில்லி, சூனியம் அதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. உறுப்பினருக்கு நம்பிக்கை இருந்தால் அதை செய்து கொள்ளலாம். </p><p>ஜலதோஷம் தான் அதிகம் உள்ளது. பாம்புக்கடி தோஷம் எல்லாம் கேள்விப்படவில்லை - அமைச்சர் அருண்ராஜ்</p> <p>பல்வேறு தொகுதிகளில் பாம்புக்கடி இருக்கிறது. அந்த தொகுதிகளில் எல்லாம் தோஷம் உள்ளது. அமைச்சர் நாக தோஷம் கழிப்பதற்கு ஏதாவது பிரார்த்தனை இருந்தால் அதை செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்</p> <p>அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலி பணியிடம் நிரப்பப்படும் - அக்ரி கிருஷ்ணமூர்த்தி கேள்விக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்</p><p>விரைவில் சங்கரன்கோவில் மருத்துவமனை மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படும் - அமைச்சர் அருண்ராஜ்</p><p>சங்கரன்கோவில் மருத்துவமனை புதிய கட்டடத்தை விரைவில் திறந்து வைக்க வேண்டும் - திலீபன் ஜெயசங்கரன்</p><p>விழுப்புரத்தில் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையம் அமைய உள்ளது - அமைச்சர் அருண்ராஜ்</p><p>விழுப்புரத்தில் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையம் அமைய உள்ளது - அமைச்சர் அருண்ராஜ்</p><p>முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரியில் சுற்றுச்சுவர், ஆடிட்டோரியம் ஏசி வசதி, உள் விளையாட்டு அரங்கம் தேவை - சிவக்குமார்</p><p>முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு பட்ஜெட்டில் ஏராளமான அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. </p><p>முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி ஆடிட்டோரியத்திற்கு ஏசி வசதி அமைக்க நடவடிக்கை - அமைச்சர் அருண்ராஜ்</p> <p>தேவை இருப்பின் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் அருண்ராஜ்</p><p>வள்ளியூர் மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். </p><p>ராதாபுரம் தொகுதியில் உள்ள மருத்துவமனையில் மருத்துவ வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் - சதீஷ் கிறிஸ்டோபர்</p><p>ஆம்பூர் மருத்துவமனை பிரசவங்களின் எண்ணிக்கையை ஆய்வு செய்து மகப்பேறு மைய வசதி ஏற்படுத்தப்படும் - அமைச்சர் அருண்ராஜ்</p><p>பண்ருட்டி மருத்துவமனையில் சிடி ஸ்கேன் வசதி தேவை ஏற்படும் பட்சத்தில் ஏற்படுத்தப்படும்.</p><p>பண்ருட்டி மருத்துவமனைக்கு 2 ஃப்ரீசர் பாக்ஸ் வசதி ஏற்படுத்தி தரப்படும் - அமைச்சர் அருண்ராஜ்</p><p>கடலூர் GH கொண்டு செல்லும் வழியில் உயிரிழப்புகள் நிகழ்கின்றன.</p><p>பண்ருட்டி மருத்துவமனையில் சிடி ஸ்கேன் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் - எம்எல்ஏ மோகன்</p> <p>ஏப்ரல் 2026 முதல் ஜூலை 2026 வரை 39 பேர் பாம்பு கடித்து அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர் - அமைச்சர் அருண்ராஜ்</p><p>பாம்பு கடி, விஷ முறிவு மருந்து மருத்துவமனையில் போதிய அளவில் கையிருப்பு உள்ளது - அமைச்சர் அருண்ராஜ்</p> <p>பண்ருட்டி அரசு மருத்துவமனையில் பாம்பு கடி மருந்துகள் தேவை - எம்எல்ஏ மோகன்</p><p>சட்டசபையில் இன்று வினாக்கள் விடைகள் நேரம் முடிந்ததும், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைகளின் மீதான மானியக்கோரிக்கை மீது விவாதங்கள் நடைபெறும்.</p><p>விவாதத்துக்கு பதில் அளித்து பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி, மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், கால்நடை துறை அமைச்சர் கமலி ஆகியோர், துறையின் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.</p> ]]></content:encoded></item><item><title>ரஷிய வான்வெளியைத் தவிர்க்குமாறு ஜெலன்ஸ்கி எச்சரிக்கை: &apos;அரசு பயங்கரவாதம்&apos; என புதின் கடும் கண்டனம்!</title><link>https://www.maalaimalar.com/news/world/zelensky-warns-on-russian-airspace-putin-slams-state-terrorism</link><comments>https://www.maalaimalar.com/news/world/zelensky-warns-on-russian-airspace-putin-slams-state-terrorism#comments</comments><guid isPermaLink="false">3abbb204-0da9-449a-9996-df823cca4106</guid><pubDate>Wed, 02 Sep 2026 13:58:20 +0000</pubDate><atom:updated>2026-09-02T13:58:20.119Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Russia,Putin,Zelenskyy,ஜெலென்ஸ்கி,ரஷியா,உக்ரைன்,State Terrorism,புடின்,அரசு பயங்கரவாதம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/ueyjzjmd/putin.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Putin -Zelenskyy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/ueyjzjmd/putin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2022-இல் போர் தொடங்கியதில் இருந்தே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் விமானங்கள் ரஷிய வான்வெளியைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து வருகின்றன. </p><p>உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து நடத்தி வரும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ரஷிய எல்லைக்குள் இருக்கும் ராணுவ இலக்குகள் மீது உக்ரைன் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், ரஷியாவின் வான்வெளி இனி வணிகரீதியான பயணிகள் விமானங்களுக்கு பாதுகாப்பற்றதாக மாறிவிட்டது என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி சர்வதேச விமான நிறுவனங்களுக்கும் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p>ட்ரோன்கள் நிறைந்த வான்வெளியில் பயணிகள் விமானங்கள் பறப்பது பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்றும், <a href="https://www.maalaimalar.com/news/world/us-iran-conflict-iran-missile-strike-on-jordan-base">உக்ரைன் </a>நேரடியாகப் பயணிகள் விமானங்களை இலக்கு வைக்கவில்லை என்றாலும், ரஷியாவின் வான்வெளி நடைமுறையில் மூடப்படும் நிலையை நோக்கிச் செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக மாஸ்கோ மற்றும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் போன்ற நகரங்களுக்கு இன்னும் சேவைகளை வழங்கி வரும் சர்வதேச விமான நிறுவனங்கள் இந்த எச்சரிக்கையைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><h2>'பேச்<strong>சுவார்த்தைக்</strong>கு வழியில்லை' </h2><p>ஜெலென்ஸ்கியின் இந்த எச்சரிக்கைக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய புதின், பயணிகள் விமானப் போக்குவரத்தை அச்சுறுத்தும் வகையில் பேசுவது "அரசு பயங்கரவாதம்" என்று சாடினார்.</p><p>பயங்கரவாதிகளுடன் ரஷியா ஒருபோதும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தாது என்று திட்டவட்டமாகக் கூறிய புதின், உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மற்றும் பொருளாதார இலக்குகள் மீது ரஷியப் படைகள் தீவிரமான மற்றும் பெரிய அளவிலான பதிலடித் தாக்குதல்களைத் தொடரும் என்றும் எச்சரித்துள்ளார்.</p><p>2022-இல் போர் தொடங்கியதில் இருந்தே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் விமானங்கள் ரஷிய வான்வெளியைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து வருகின்றன. இருப்பினும், சீனா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா போன்ற நாடுகளைச் சேர்ந்த சில விமான நிறுவனங்கள் ஆசிய-ஐரோப்பிய வழித்தடங்களுக்காக ரஷிய வான்வெளியை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன.</p><p>தற்போது உக்ரைனின் நீண்டதூர ட்ரோன்கள் ரஷிய எல்லைக்குள் ஆழமாக ஊடுருவித் தாக்குதல் நடத்தி வருவதால், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஏவுகணைகளின் குறுக்கீடால் வணிக விமானங்கள் பெரும் ஆபத்தைச் சந்திக்க நேரிடும் என சர்வதேச விமானப் போக்குவரத்து வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>25 ஆண்டுக்குப் பின் இணைந்த பிரபுதேவா - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி: &apos;மூன்வாக்&apos; ரிலீஸ் தேதி அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/after-25-years-prabhudeva-ar-rahman-reunite-moonwalk-release-date-announced</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/after-25-years-prabhudeva-ar-rahman-reunite-moonwalk-release-date-announced#comments</comments><guid isPermaLink="false">6d0099d0-cbe2-4519-ab83-e7f0b1bd654b</guid><pubDate>Wed, 02 Sep 2026 13:54:42 +0000</pubDate><atom:updated>2026-09-02T13:54:42.390Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>Prabhu Deva,Moon Walk,AR Rahman,ஏஆர் ரஹ்மான்,யோகி பாபு,Yogi Babu,பிரபுதேவா,மூன்வாக்,Diwali 2026,Behindwoods</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/wwbf9vj1/Moon-walk" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Moon walk  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/wwbf9vj1/Moon-walk?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>25 ஆண்டுகளுக்குப் பின் பிரபுதேவா - <a href="https://www.maalaimalar.com/topic/ar-rahman">ஏ.ஆர்.ரஹ்மான் </a>கூட்டணியில் உருவாகியுள்ள 'மூன்வாக்' படம் தீபாவளி 2026-ல் ரிலீஸ் ஆகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் 5 பாடல்களை பாடி நடித்துள்ளார், யோகி பாபு 16 வேடங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p>தமிழ் திரையுலகில் ‘காதலன்’, ‘மின்சார கனவு’, ‘லவ் பேர்ட்ஸ்’, ‘மிஸ்டர் ரோமியோ’ போன்ற பிளாக்பஸ்டர் படங்களுக்குப் பிறகு, 25 ஆண்டுகள் கழித்து நடனப்புயல் <a href="https://www.maalaimalar.com/topic/prabhu-deva">பிரபுதேவா </a>மற்றும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய இருபெரும் ஆளுமைகள் மீண்டும் இணையும் 'மூன்வாக்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>ரிலீஸ் தேதி</strong></h2><p>ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள '<a href="https://www.maalaimalar.com/topic/moon-walk">மூன்வாக்</a>' இத்திரைப்படம் 2026 தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.</p><p>இத்திரைப்படம் ஒரு முழுமையான நகைச்சுவை, நடனம் மற்றும் குடும்பக் கொண்டாட்டப் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. பிரபல ஊடக நிறுவனமான பிகைண்ட்வுட்ஸ் -ன் நிறுவனரும் சிஇஓ-வுமான மனோஜ் என்.எஸ் இயக்குநராக அறிமுகமாகும் முதல் திரைப்படம் இதுவாகும்.</p><h2><strong><a href="https://www.maalaimalar.com/topic/ar-rahman">ஏ.ஆர்.ரஹ்மான்</a>!</strong></h2><p>இந்தத் திரைப்படத்தின் மிக முக்கிய சிறப்பம்சமாக, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதோடு மட்டுமின்றி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். </p><p>அதில் குறைவான நேரத்தில் மட்டும் நடித்திருப்பதாக சமீபத்திய வீடியோ ஒன்றில் அவரே கூறியிருந்தார்.</p><h2><strong>5 பாடல்களையும் பாடிய இசைப்புயல்</strong></h2><p>இப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இந்த 5 பாடல்களையும் ஏ.ஆர்.ரஹ்மானே சொந்தக் குரலில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு பாடலும் ஒரு குறிப்பிட்ட திருவிழா அல்லது கொண்டாட்டத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. </p><p>ஏற்கனவே வெளியான 'ஏது', 'மக்கரீனா' மற்றும் 'டிங்கா' ஆகிய பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், பிரபுதேவா மற்றும் ரஹ்மான் இணைந்து தோன்றும் அடுத்த பாடல் விரைவில் வெளியாகவுள்ளது.</p><h2><strong>16 வேடங்களில் அசத்தும் யோகி பாபு</strong></h2><p>இப்படத்தின் நகைச்சுவைக்கு வலு சேர்க்கும் வகையில் நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81">யோகி பாபு</a> ஒரு புதிய சாதனையை செய்துள்ளார். இந்த படத்தில் அவர் 16 வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். </p><p>இதுகுறித்து ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய யோகி பாபு, "இயக்குநர் மனோஜ் கதை சொல்லும் போது எனக்கு ஒரே ஒரு கதாபாத்திரம் தான் இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் ஸ்கிரிப்டில் எனக்கு 16 வெவ்வேறு வேடங்கள் இருப்பதை அறிந்து வியப்படைந்தேன்" என்று தெரிவித்துள்ளார்.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/ddycsCiZ4OM"></iframe></figure><h2><strong>நட்சத்திரப் பட்டாளம்</strong></h2><p>பிரபுதேவா, யோகி பாபு ஆகியோருடன் அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், சாட்ஸ், நிஷ்மா செங்கப்பா, சுஷ்மிதா நாயக், ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன், தீபா சங்கர் உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளமே இதில் இணைந்து நடித்துள்ளனர்.</p><p>மனோஜ் என்.எஸ், திவ்யா மனோஜ் மற்றும் பிரவீன் ஏலக் ஆகியோர் இணைந்து பிகைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். அனூப் வி ஷைலஜா ஒளிப்பதிவு செய்ய, ரேமண்ட் டெரிக் கிராஸ்டா படத்தொகுப்பு செய்துள்ளார்.</p><h2><strong>தீபாவளிப் பந்தயம்</strong></h2><p>'<a href="https://www.maalaimalar.com/topic/moon-walk">மூன்வாக்</a>' திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது. </p><p>2026 தீபாவளி ரேஸில் சூர்யாவின் 47-வது திரைப்படம் மற்றும் சிலம்பரசனின் 'அரசன்' ஆகிய படங்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டாலும், இதுவரை அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் தேதியை அறிவித்த ஒரே திரைப்படம் 'மூன்வாக்' மட்டுமே என்றும் தெரியவந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>“மின்மினிப் பூச்சிகள் நிரந்தரம் கிடையாது; சூரியன்தான் நிரந்தரம்... நிலைத்து நிற்கும்” - மு.க.ஸ்டாலின்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/fireflies-are-not-permanent-the-sun-alone-is-permanent-it-endures-mk-stalin</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/fireflies-are-not-permanent-the-sun-alone-is-permanent-it-endures-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">18f9eb73-bf86-488f-b7bb-fac3c38589a4</guid><pubDate>Wed, 02 Sep 2026 13:51:19 +0000</pubDate><atom:updated>2026-09-02T13:51:19.460Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,மு.க.ஸ்டாலின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/697l8lxq/New-Project-2026-09-02T191731.964.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “மின்மினிப் பூச்சிகள் நிரந்தரம் கிடையாது; சூரியன்தான் நிரந்தரம்... நிலைத்து நிற்கும்” - மு.க.ஸ்டாலின்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/697l8lxq/New-Project-2026-09-02T191731.964.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மறுசீரமைப்பு பிரதிநிதிகள் கூட்டம் இன்று காணொலி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின்.,</p><p>“நாட்டிலேயே முதன்முதலில் ஆட்சியைக் பிடித்த மாநிலக் கட்சி, சாதனைகள் பல படைத்த கட்சி என்ற பெருமை நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இருக்கிறது. அதற்குக் காரணம், அப்படியே தேங்கி நின்றுவிடாமல், காலத்திற்கு ஏற்ற மாதிரி நாம் அப்டேட் ஆகி, அப்கிரேட் ஆவதுதான்.</p><p>‘மாற்றங்கள் நம்மிலிருந்துதான் தொடங்க வேண்டும்’ என்று சொல்லி, திமுக 2.0-விற்கான பயணத்தை இப்போது நாம் தொடங்கியிருக்கிறோம்.</p><p>நடந்து முடிந்த தேர்தலில் நமக்கு ஏற்பட்ட பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்து, வெற்றிப் பாதைக்கு நாம் திரும்ப வேண்டும் என்று பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்துக் கொண்டு இருக்கிறோம்.</p><p>முதலில், கள ஆய்வுக் குழுவை அனுப்பி, நிர்வாகிகளிடம் கருத்து கேட்டோம். ஆன்லைனில் தொண்டர்களிடம் கருத்து கேட்டோம். அதில் வந்த அறிக்கையையெல்லாம் நான் முழுமையாகப் படித்தேன்.</p><p>அதில் வந்த கருத்துகளின் அடிப்படையில், கட்சியின் கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீரமைப்புகளைப் பரிந்துரை செய்ய, கட்சி மறுசீரமைப்புக் குழுவை அமைத்தோம். அந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், செயற்குழுவில் பல்வேறு தீர்மானங்களைக் கொண்டு வந்தோம்.</p><p>அதன் தொடர்ச்சியாக, கடந்த 28-ஆம் தேதி 110 மாவட்டங்களை அறிவித்தோம். இந்தச் செயல்பாட்டின் அடுத்த கட்டப் பணியைச் சிறப்பாகச் செய்ய நேற்று முன்தினம், தலைமைக் கழகப் பிரதிநிதிகளாக உங்கள் அனைவரையும் அறிவித்திருக்கிறோம்.</p><p>கழக மறுசீரமைப்புக்கான தலைமைக் கழகப் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டிருக்கின்ற நீங்கள், என்னுடைய கண்களாகவும், காதுகளாகவும் மாவட்டங்களுக்குச் சென்று, எந்தவித பாகுபாடுகளும் பார்க்காமல் எந்தவித அழுத்தங்களுக்கும் அடிபணியாமல், கொடுக்கப்பட்டிருக்கின்ற பணிகளைச் சரியாகச் செய்துவிட்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.</p><p>நீங்கள் அனைவரும் உங்களுக்குப் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கின்ற மாவட்டங்களுக்குச் சென்று, மாவட்டச் செயற்குழுக் கூட்டத்திற்கு முன்னிலை வகித்து, அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்டு, மறுசீரமைப்புக் குழு வகுத்துத் தந்துள்ள வழிமுறைகளின்படி கழக அமைப்புகளை உருவாக்க வேண்டும்.</p><p>முக்கியமாக நீங்கள் சென்று முதலில் சொல்ல வேண்டியது என்னவென்றால்,“கிளை முதல் தலைமை வரைக்குமான பொறுப்புகளுக்குத் தேர்தல்தான் நடக்கப்போகிறது என்று தலைவர் சொல்லிவிட்டார். அது அனைத்துமே சுதந்திரமான, நேர்மையான தேர்தலாகத்தான் நடைபெறும். </p><p>அப்போதுதான் புதிய நிர்வாகிகள், இளைஞர்கள் பொறுப்புகளுக்கு வருவார்கள். அதற்கு நீங்கள் தான் ஒத்துழைக்க வேண்டும். அப்போதுதான் நாம் அனைவரும் சேர்ந்து பாடுபட்டு வளர்த்த கட்சியை, அடுத்த நூறு ஆண்டுகளுக்குக் கொண்டு செல்ல முடியும்” என்று சொல்ல வேண்டும்.</p><p>அதேபோல், செயற்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்களின் அடிப்படையில், வயது வரம்பு காரணமாகவும், ஒருவர் எத்தனை முறை பதவியில் இருக்கலாம் என்ற வரம்பு காரணமாகவும் பலருக்கும் இப்போது இருக்கும்பொறுப்புகள் பறிபோகும்.</p><p>“அவர்கள் யாரையும் தலைவர் கைவிடப் போவதில்லை. அவர்கள் அனைவருக்கும் அவர்கள் தகுதிக்கேற்ற வேறு பொறுப்புகளை வழங்கும் வகையில் தலைவர் முடிவெடுப்பார்” என்பதையும் மாவட்டச் செயற்குழுக் கூட்டங்களில் எடுத்துச் சொல்லுங்கள்.</p><p>வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி கழக அமைப்புகள் பிரிக்கப்படுவதை உறுதி செய்து, அனைவரின் ஒப்புதலையும் பெற்று தலைமைக் கழகத்தில் ஒப்படைக்கும் பணியை அடுத்த 15 நாட்களில் விரைந்து முடித்துத் தர வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இதையெல்லாம் நீங்கள் செய்து முடித்த பிறகுதான் உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்க முடியும். அடித்தளம் வலிமையாக இருந்தால்தான் கட்டிடம் உறுதியாக இருக்கும். </p><p>வேர்கள் வலிமையாக இருந்தால்தான் ஆலமரம் உறுதியாக நிற்கும். அதுபோல நம்முடைய கழகக் கட்டமைப்புதான் நம்மைத் தாங்கி நிற்கும். அந்த ஆணிவேரைப் பலப்படுத்தும் பெரும் பொறுப்பு உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.</p><p>இன்றைக்கு காலையில் மறுசீரமைப்புக் குழுவின் வழிகாட்டு நெறிமுறைகள் தலைமைக் கழகத்தின் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும். அதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் தங்கம் தென்னரசு அவர்களிடம் கேளுங்கள்.</p><p>கொள்கை அற்ற, கட்டமைப்பு அற்ற கட்சிகள் வரும் – போகும். மின்மினிப் பூச்சிகள் நிரந்தரம் கிடையாது; சூரியன்தான் நிரந்தரம்! நிலைத்து நிற்கும்!</p><p>கட்டமைப்பைப் பலப்படுத்தி, கொள்கைப் பயணத்தைத் தொடர்வோம்! இன்று நாம் செய்யும் பணிகள் நாளை வரலாறாய் நிலைத்து நிற்கும்!</p><p>கழகத்தை மறுசீரமைப்போம்!</p><p>மீண்டு வருவோம்! மீண்டும் வெல்வோம்!</p><p>நன்றி! வணக்கம்!” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>எங்களை தற்குறி என்றனர், தற்குறி இப்போது அம்புக்குறியாக மாறி தீய சக்தியை அழித்துள்ளது-அமைச்சர் ஸ்ரீநாத்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/they-called-us-target-now-arrow-destroys-evil-forces-minister-srinath</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/they-called-us-target-now-arrow-destroys-evil-forces-minister-srinath#comments</comments><guid isPermaLink="false">5f8e9512-0c76-45bd-acfa-62494c2ede6a</guid><pubDate>Wed, 02 Sep 2026 13:40:56 +0000</pubDate><atom:updated>2026-09-02T13:40:56.774Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,assembly,சட்டசபை கூட்டத்தொடர்,TNAssembly,Minister Srinath,அமைச்சர் ஸ்ரீநாத்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/wg867gfy/sri.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Srinath]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/wg867gfy/sri.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாநில எல்லைப் பகிர்வு தொடர்பான இந்தச் சிக்கலில் உடனடியாகத் தலையிட்டு, ஆந்திர அரசோடு பேசி விசைப் படகுகளையும் மீனவர்களையும் பாதுகாப்பாக மீட்க மூத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் உரையாற்றிய  அமைச்சர் ஸ்ரீநாத், தமிழகக் கடலோரப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்தச் சூழலில், அண்மையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களின் மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மத்திய அரசுக்கு அவசரக் கடிதம் எழுதியுள்ளார். </p><p>சர்வதேச கடல் எல்லைக் கட்டுப்பாட்டை மீறியதாகக் கூறி மீனவர்கள் மீது விதிக்கப்படும் கடுமையான தண்டனைகள் அவர்களின் வாழ்வாதாரத்தை முடக்குவதாகவும், இதற்கு நிரந்தர தூதரகத் தீர்வை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் காண வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2> 8 வி<strong>சைப் படகுகள்</strong> மீட்பு முயற்சி</h2><p>இலங்கை எல்லைப் பிரச்சனை ஒருபுறம் இருக்க, ஆந்திர மாநில எல்லைப் பகுதிக்கு உட்பட்ட கடல் பகுதியில் மீன்பிடித்ததாகக் கூறி, தமிழகத்தைச் சேர்ந்த 8 விசைப் படகுகளையும் அதில் இருந்த மீனவர்களையும் ஆந்திரக் கடலோரக் காவல் படையினர் அண்மையில் சிறைபிடித்துள்ளனர். மாநில எல்லைப் பகிர்வு தொடர்பான இந்தச் சிக்கலில் உடனடியாகத் தலையிட்டு, ஆந்திர அரசோடு பேசி விசைப் படகுகளையும் மீனவர்களையும் பாதுகாப்பாக மீட்க மூத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><h2>"தற்குறி இப்<strong>போது அம்புக்குறியா</strong>க மாறியுள்ளது"</h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/premalatha-vijayakanth-says-if-ministers-also-accompany-us-to-the-constituencies-they-will-clearly-understand-the-peoples-issues">சட்டப்பேரவை </a>விவாதத்தின் போது எதிர்த்தரப்பினர் மற்றும் அரசியல் விமர்சகர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் ஸ்ரீநாத், அரசியல் களத்தில் தங்களை அற்பமாகப் பேசியவர்களுக்கும் விமர்சித்தவர்களுக்கும் காட்டமான பதிலடியைக் கொடுத்தார். "எங்களை தற்குறி என்று சிலர் கேலி செய்து எள்ளி நகையாடினார்கள். ஆனால், அந்தத் தற்குறி தான் இப்போது கூர்மையான அம்புக்குறியாக மாறி, மக்கள் விரோத மற்றும் தீய சக்திகளை அழித்து வீழ்த்தியுள்ளது," என்று பேரவையில் ஆவேசமாகத் தெரிவித்தார்.</p><h2>ஊழல் சக்திகளுக்<strong>கு எதிரான</strong> எச்சரிக்கை</h2><p>தொடர்ந்து உரையாற்றிய அவர், கடந்த காலங்களில் நிர்வாகச் சீர்கேட்டிலும் ஊழல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்ட தலைவர்களுக்கு இந்த ஆட்சி மாற்றம் ஒரு பாடமாக அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டார். தங்களை தற்குறி எனக் விமர்சித்தவர்கள், தற்போது தங்களின் ஊழல் தவறுகளுக்காகப் பயந்து நடுங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எவ்வித சமரசமும் இன்றி ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என்றும் உறுதியளித்தார்.</p>]]></content:encoded></item><item><title>அயோத்தி ராமர் கோயிலின் அறக்கட்டளைக்கு சிஇஓ-வாக ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல்  ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! </title><link>https://www.maalaimalar.com/news/national/retired-air-marshal-jitendra-mishra-appointed-as-ceo-of-the-ayodhya-ram-temple-trust</link><comments>https://www.maalaimalar.com/news/national/retired-air-marshal-jitendra-mishra-appointed-as-ceo-of-the-ayodhya-ram-temple-trust#comments</comments><guid isPermaLink="false">d9a779de-6e1e-441a-bc16-8790b894b94b</guid><pubDate>Wed, 02 Sep 2026 13:34:44 +0000</pubDate><atom:updated>2026-09-02T13:34:44.901Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>CEO,Ram temple trust,Jeetendra Mishra,ராமர் கோயில் அறக்கட்டளை,தலைமைச் செயல் அதிகாரி,ஜிதேந்திர மிஸ்ரா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/du58lc8r/New-Project-2026-09-02T190425.432.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அயோத்தி ராமர் கோயிலின் அறக்கட்டளைக்கு சிஇஓ-வாக ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல்  ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/du58lc8r/New-Project-2026-09-02T190425.432.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையின்  (ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை) முதல் தலைமைச் செயல் அதிகாரியாக ஜிதேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். அயோத்தியில் நடைபெற்ற அறக்கட்டளைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. </p><p>இப்பதவிக்காக பெறப்பட்ட 5,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைப் பரிசீலித்து, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பிரமோத் கோஹ்லி தலைமையிலான 3 பேர் கொண்ட தேர்வுக்குழு இறுதியாக இவரை தேர்வு செய்துள்ளது.</p><p>ஜிதேந்திர மிஸ்ரா இந்திய விமானப்படையில் ஏர் மார்ஷலாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். </p><p>சமீபத்தில் கோயில் உண்டியல் காணிக்கை மற்றும் நிதி நிர்வாகத்தில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, நிர்வாக வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க இந்த சிஇஓ பதவி உருவாக்கப்பட்டுள்ளது. </p><p>புதிய சிஇஓ கோயிலின் ஒட்டுமொத்த நிர்வாகம், பக்தர்களுக்கான வசதிகள், கூட்ட நெரிசல் மேலாண்மை, பணியாளர்கள் மற்றும் நிதிச் செயல்பாடுகளைக் கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்மீக மற்றும் மத சடங்குகளில் அவர் தலையிட மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>மேலும் அறக்கட்டளையின் இடைக்காலப் பொதுச் செயலாளர் கிருஷ்ண மோகனுக்குப் பதிலாக, தற்போது அதன் பொருளாளராக இருக்கும் கோவிந்த் தேவ் கிரி, பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மகேஷ் பக்சந்த்கா புதிய பொருளாளராக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>எதற்கு இந்த திடீர் நியமனம்?</h2><p>ராமர் கோயில் அறக்கட்டளையின் நன்கொடை கையாடல் தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து அதன் நிர்வாக பொறுப்புகளை கவனிக்க இந்த பொறுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இதுவரை எட்டுபேர் கைது செய்யப்பட்டுள்ளநிலையில், பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சம்பத் ராய் ராஜினாமா செய்துள்ளார்.</p><p>மேலும் இரண்டு அறங்காவலர்களும் தங்களது பணியை ராஜினாமா செய்துள்ளனர்.</p><p>இந்நிலையில் அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ், சுவாமி கமல்நாயன் தாஸ், தற்காலிக பொதுச் செயலாளர் டாக்டர் கிருஷ்ண மோகன், அறங்காவலர் மஹந்த் தினேந்திர தாஸ், பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி உள்ளிட்டோர் கலந்து ஒரு கூட்டத்தைக் கூட்டி இந்த சிஇஓ பதவியை கொண்டு வந்துள்ளனர். </p><h2>யார் இந்த மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா?</h2><p>உத்தரப் பிரதேசத்தின் தியோரியாவைச் சேர்ந்த மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா பல்வேறு விருதுகளைப் பெற்ற ஒரு ஓய்வுபெற்ற இந்திய விமானப்படை அதிகாரி ஆவார். 38 ஆண்டுகளாக விமானப்படை பிரிவில் பணியாற்றியுள்ளார்.</p><p>இவர்தான் ஆபரேஷன் சிந்துர் நடவடிக்கையின் போது இந்தியாவின் மேற்கு விமானப் படைப் பிரிவுக்குத் தலைமை தாங்கினார். </p>]]></content:encoded></item><item><title>தங்கக் கொள்முதல் மற்றும் வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்க பிரதமர் மோடி வலியுறுத்துவது ஏன்? சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விளக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/modis-call-to-cut-gold-buying-and-overseas-trips-sridhar-vembu-on-the-economic-reasons</link><comments>https://www.maalaimalar.com/news/national/modis-call-to-cut-gold-buying-and-overseas-trips-sridhar-vembu-on-the-economic-reasons#comments</comments><guid isPermaLink="false">173fdaa3-deef-4963-9a94-1bb1995e1d19</guid><pubDate>Wed, 02 Sep 2026 12:36:57 +0000</pubDate><atom:updated>2026-09-02T12:36:57.250Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா,Prime Minister Modi,Sridhar Vembu,ஸ்ரீதர் வேம்பு,ZOHO,GDP,பிரதமர் மோடி,சோஹோ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/qlj3bdmq/sri.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sridhar Vembu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/qlj3bdmq/sri.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் ஜிடிபி 7.8 சதவீத என்ற வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தாலும், நாடு தனது அந்நியச் செலாவணி கையிருப்பை எச்சரிக்கையுடன் கையாள வேண்டியது அவசியம் என்று ஸ்ரீதர் வேம்பு சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (GDP) 7.8 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையிலும், தங்கம் வாங்குவது, வெளிநாட்டுச் சுற்றுலா செல்வது மற்றும் வெளிநாடுகளில் திருமணங்களை நடத்துவது ஆகியவற்றைக் குறைத்துக் கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார். பிரதமரின் இந்த வேண்டுகோளுக்குப் பின்னணியில் உள்ள பொருளாதாரக் காரணங்கள் குறித்து 'சோஹோ' நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விரிவான விளக்கம் அளித்துள்ளார்.</p><p>இந்தியாவின் ஜிடிபி 7.8 சதவீத என்ற வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தாலும், நாடு தனது அந்நியச் செலாவணி கையிருப்பை எச்சரிக்கையுடன் கையாள வேண்டியது அவசியம் என்று <a href="https://www.maalaimalar.com/news/national/tech-professionals-must-learn-sales-to-succeed-sridhar-vembu">ஸ்ரீதர் வேம்பு</a> சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு நாட்டின் பொருளாதாரம் வேகமடையும் போது, இறக்குமதிக்கான தேவையும் கூடவே அதிகரிக்கும். இந்தியா தற்போதும் கணிசமான அளவு எரிசக்தி மற்றும் அதிநவீன தொழில்நுட்ப சாதனங்களுக்காக பிற நாடுகளை சார்ந்துள்ளதால், அந்நியச் செலாவணியைப் பாதுகாப்பது நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மிக முக்கியமானது என அவர் தெரிவித்துள்ளார்.</p><p>ஜப்பான், தென்கொரியா, தைவான் மற்றும் சீனா ஆகிய கிழக்காசிய நாடுகள் தங்களது அதிவேக வளர்ச்சிக் கட்டத்தில் இருந்தபோது, இதேபோன்று அந்நியச் செலாவணியைச் சேமிப்பதில் மிகக் கடுமையாகச் செயல்பட்டதாக ஸ்ரீதர் வேம்பு நினைவு கூர்ந்துள்ளார். இந்தியாவின் ஏற்றுமதி கணிசமாக உயர்ந்து வந்தாலும், அந்த ஏற்றுமதிப் பொருட்களின் தயாரிப்பிற்குத் தேவையான அதிநவீன இயந்திரங்கள், சிபியு , ஜிபியு மற்றும் மென்பொருட்களை இந்தியா இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. எனவே தங்கம் வாங்குதல் மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் மூலமாக அந்நியச் செலாவணி வெளியேறுவதைக் கட்டுப்படுத்துவது அவசியமாகிறது.</p><h2>சுயசார்<strong>பு இலக்கு</strong></h2><p>இந்தியாவின் தற்போதைய சூழ்நிலையை வேகமாக வளர்ந்து வரும் ஒரு நிறுவனத்துடன் ஒப்பீட்டுப் பேசியுள்ளார் ஸ்ரீதர் வேம்பு. ஒரு நிறுவனம் தனது தொழில் விரிவாக்கத்திற்கு முதலைச் சேமித்து முதலீடு செய்வதைப் போல, இந்தியாவும் தன் வளர்ச்சிக்குத் தேவையான மூலதனத்தைப் பாதுகாக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் எரிசக்தி உற்பத்தியில் தன்னிறைவு பெற்று, அதிநவீன தொழில்நுட்பங்களை சொந்தமாக உருவாக்கும் வரை இந்த அந்நியச் செலாவணி பாதுகாப்பு முறை அவசியமானது என்றும், அதற்குச் சில தசாப்தங்கள் ஆகலாம் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஐசிசி தரவரிசை: சரிவை சந்தித்த பும்ரா, சுப்மன் கில்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/gill-bumrah-slip-in-icc-test-rankings-padikkal-moves-up</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/gill-bumrah-slip-in-icc-test-rankings-padikkal-moves-up#comments</comments><guid isPermaLink="false">2f9bc976-4d7f-4c0b-9402-40623160e658</guid><pubDate>Wed, 02 Sep 2026 12:00:14 +0000</pubDate><atom:updated>2026-09-02T12:00:14.484Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சுப்மன் கில்,Shubman Gill,ICC Rankings,ஐசிசி தரவரிசை,Jasprit Bumrah,ஜஸ்பிரித் பும்ரா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/2nnoy6fr/gill.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ gill, bumrah]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/2nnoy6fr/gill.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.</strong></em></p><p>டெஸ்ட் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.</p><h2>பின்தங்கிய கில்</h2><p>சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கை சுற்றுப்பயணத்தில் விளையாடிய 3 இன்னிங்ஸ்களில் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்த சுப்மன் கில், பேட்டிங் தரவரிசையில் இரு இடங்கள் சரிந்து 9-வது இடம் பிடித்துள்ளார்.</p><p>தரவரிசையில் ரிஷப் பண்ட் 7-வது இடத்தில் நீடிக்கிறார். </p><h2>முன்னேறிய படிக்கல்</h2><p>இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது 11-வது இடத்தை தக்கவைத்துக்கொண்டு டாப்-10 பட்டியலுக்கு மிக அருகில் உள்ளார். </p><p>இலங்கைக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 328 ரன்கள் குவித்து, இரு சதங்களை விளாசிய தேவ்தத் படிக்கல் 5  இடம் முன்னேறி 54-வது இடம் பிடித்துள்ளார்.</p><h2>பும்ரா பின்னடைவு</h2><p>பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில் இருந்த பும்ரா தற்போது மூன்றாவது இடத்திற்குச் சரிந்துள்ளார்.</p><p>ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் முதலிடத்திலும், நியூசிலாந்தின் மேட் ஹென்றி இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>ஜோர்டானில் உள்ள அமெரிக்க கடற்படை தளம் மீது ஈரான் ஏவுகணைகள் வீச்சு</title><link>https://www.maalaimalar.com/news/world/us-iran-conflict-iran-missile-strike-on-jordan-base</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-iran-conflict-iran-missile-strike-on-jordan-base#comments</comments><guid isPermaLink="false">1385a9fc-394f-4cac-b27d-b1cfb1627210</guid><pubDate>Wed, 02 Sep 2026 11:54:07 +0000</pubDate><atom:updated>2026-09-02T11:54:07.856Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஈரான்,Iran,missile attack,jordan,ஏவுகணை வீச்சு,ஜோர்டான்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/t7xum5on/jordaan.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ US Navy base]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/t7xum5on/jordaan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்கா-ஈரான் இடையேயான மத்திய கிழக்கு போரில் கடந்த ஒரு மாதமாக மோதல் நடைபெறாமல் இருந்த நிலையில் மீண்டும் இருதரப்பும் தாக்குதலில் ஈடுபட்டன. நேற்று இரவு ஈரான் மீது அமெரிக்கா சரமாரியாக தாக்குதல் நடத்தியது. </p><p>ஈரான் அரசின் 2 எண்ணெய் கப்பல்கள் உள்பட 100 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது. <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%9C%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF" rel="nofollow">ஹோர்முஸ் ஜலசந்தி</a>யில் கண்ணிவெடிகளை ஈரான் புதைக்க முயன்றதால் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்தது.</p><p>இதற்கிடையே சிரிக் நகரின் குஹெஸ்டாக் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திருமண விழா நடந்து கொண்டிருந்தபோது அங்கு அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலின் சிதறல்கள் விழுந்து தாக்கியதில், ஒரு குழந்தை உள்பட 5 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.</p><p>இதுதொடர்பாக ஈரானின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி கூறியதாவது:-</p><p>குஹெஸ்டாக் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் திருமணத்தை குடும்பங்கள் கொண்டாடிக கொண்டிருந்தபோது கொடூரமாகத் தாக்கப்பட்டது.</p><p>இந்தக் கொடூரத்தை இதற்கு முன்னர் நடந்த தொடர் அட்டூழியங்களில் இருந்து பிரிக்க முடியாது என்றார்.</p><p>அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் சூளுரைத்தது. அதன்படி ஜோர்டானின் அகபா பகுதியில் உள்ள அமெரிக்க கடற்படைத் தளத்தின் மீது ஏவுகணை களை ஈரான் ஏவி தாக்குதல் நடத்தியது.</p><p>ஈரானிடமிருந்து வந்த 13 பாலிஸ்டிக் ஏவுகணைகளில்  10 ஏவுகணைகளை வெற்றிகரமாக இடைமறித்ததாகவும் 3 ஏவுகணைகள் மக்கள் வசிக்கும் மையங்களிலிருந்து வெகு தொலைவில் விழுந்ததாகவும் ஜோர்டான் ராணுவம் தெரிவித்தது.</p><p>அதேபோல் பக்ரைன், குவைத்தில் அமெரிக்க தளங்களும் குறிவைக்கப்பட்டன. பதிலடி தாக்குதல் நடத்தினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்திருந்த நிலையில் ஈரான் தாக்குதலை நடத்தியது.</p><p>மேலும், அமெரிக்க படைகளுக்கு மறக்க முடியாத பாடங்களை கற்று கொடுப்போம் என்ற ஈரான் உச்ச தலைவர் மொஜத்பா கமெனி தெரிவித்து உள்ளார்.</p><p>இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில்," ஹோர்முஸ் ஜலசந்தியின் மீது ஏறக்குறைய முழுமையான அமெரிக்காவின் கட்டுப்பாடும், ஈரானின் பொருளாதாரம் முற்றிலுமாகச் சரிந்து கொண்டும் இருக்கும் நமது தற்போதைய நிலையை நான் மிகவும் விரும்புகிறேன்.</p><p>ஈரானிய மக்கள் எப்போது கிளர்ந்தெழுந்து போராடப் போகிறார்கள்? என்று தெரிவித்து உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டின் வரி வசூல் குறைவு... இதே நிலை தொடர்ந்தால் - டி.ஆர்.பி. ராஜா எச்சரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadus-tax-collection-is-low-if-this-trend-continuestrb-rajaa-warns</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadus-tax-collection-is-low-if-this-trend-continuestrb-rajaa-warns#comments</comments><guid isPermaLink="false">2391caef-e912-47d8-8a60-a322007abed1</guid><pubDate>Wed, 02 Sep 2026 11:32:23 +0000</pubDate><atom:updated>2026-09-02T11:32:23.536Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,டிஆர்பி ராஜா,TRB Rajaa,Government of Tamil Nadu,வரி வசூல்,Tax collection</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/061ws30n/New-Project-2026-09-02T170155.867.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாட்டின் வரி வசூல் குறைவு... இதே நிலை தொடர்ந்தால் - டி.ஆர்.பி. ராஜா எச்சரிக்கை!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/061ws30n/New-Project-2026-09-02T170155.867.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டின் வருவாய் நிலை மோசமான நிலையில் இருப்பதாக முன்னாள் திமுக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்.,</p><p>“தமிழ்நாட்டின் வருவாய் இயந்திரம் சிவப்பு எச்சரிக்கை காட்டுகிறது. இதே நிலை தொடர்ந்தால், செலவுகளைக் குறைப்பதா? மேலும் கடன் வாங்குவதா? என்ற கடினமான நிலைக்கு தமிழ்நாடு அரசு விரைவில் தள்ளப்படலாம்!</p><p>ஆகஸ்ட் மாத சரக்கு மற்றும் சேவை வரி புள்ளிவிவரங்கள் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டியவை. 2025 ஆகஸ்டில் ரூ.10,329 கோடியாக இருந்த தமிழ்நாட்டின் வரி வசூல், 2026 ஆகஸ்டில் ரூ.10,189 கோடியாகக் குறைந்துள்ளது.</p><p>அதாவது - 1% சரிவு! </p><p>ஆனால் இதே காலகட்டத்தில்:</p><p>இந்தியா +9%</p><p>கர்நாடகா +13%</p><p>குஜராத் +15%</p><p>தெலங்கானா +16%</p><p>உத்தரப் பிரதேசம் +19%</p><p>மகாராஷ்டிரா +8%</p><p>தமிழ்நாடு மட்டும் -1%!</p><p>சாதாரண மக்களுக்கு இந்த சேவை மற்றும் சரக்கு வரி எண்ணைப் பற்றி ஏன் கவலை இருக்க வேண்டும்? ஏனென்றால், தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாயில் சுமார் 38% மாநில சரக்கு மற்றும் சேவை வரி மூலமாக மட்டுமே வருகிறது !</p><p>வளர்ச்சிப் பணிகளுக்கு அதிக நிதி ஒதுக்கவேண்டும். ஆனால் அதே நேரத்தில் கடன் சுமையையும் கட்டுப்படுத்த வேண்டும். இந்தக் கணக்கு சரியாக வர வேண்டுமென்றால் அரசின் வருவாய் கட்டாயம் வளர வேண்டும்.</p><p>ஆனால் ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி காட்டுவதோ அதற்கு நேர் எதிரான -1% சரிவு!</p><h2>தமிழ்நாட்டை மட்டும் கடந்து செல்லமுடியாது</h2><p>“ஒரு மாத புள்ளிவிவரத்தை வைத்து ஒரு வருடத்திற்கான போக்கைத் தீர்மானிக்க முடியாது” என்று சிலர் சொல்லலாம். உண்மைதான். </p><p>ஆனால் இந்தியா +9% வளரும்போது, நம்மோடு போட்டியிடும் முக்கிய மாநிலங்கள் அனைத்தும் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்யும்போது, தமிழ்நாடு மட்டும் -1%-ல் இருப்பதை சாதாரணமாகக் கடந்து செல்ல முடியாது.</p><p>இது நிச்சயம் ஒரு முக்கிய எச்சரிக்கை! </p><h2>அரசு விளக்க வேண்டும்</h2><p>இந்த நிலை தொடர்ந்தால், பற்றாக்குறையாகும் பணத்தை எங்கிருந்து கொண்டு வரப் போகிறார்கள்?</p><p>மேலும் கடன் வாங்கப் போகிறார்களா? வேறு வரிகளை உயர்த்தப் போகிறார்களா?</p><p>அல்லது சாலைகள், உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கான செலவுகளைக் குறைக்கப் போகிறார்களா? வருவாய் இல்லாமல் பட்ஜெட் வெறும் காகிதக் கணக்குதான்! </p><p>இந்த -1% GST சரிவு ஒரு தொடர்கதையாக மாறுவதை தமிழ்நாடு தாங்க முடியாது! இது கட்டுப்படுத்த முடியாத சரிவாக மாறுவதற்கு முன்பாவது இன்றைய தவெக அரசு விழித்துக்கொள்ளுமா?</p><p>இந்த சரிவிக்கு என்ன காரணம் என்று அரசு தெளிவாக சொல்லவேண்டும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நேபாள வெள்ளப் பேரழிவு: பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று நிவாரணம் வழங்கி ஆறுதல் கூறிய நடிகர் சோனு சூட்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/nepal-flood-disaster-actor-sonu-sood-relief-efforts</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/nepal-flood-disaster-actor-sonu-sood-relief-efforts#comments</comments><guid isPermaLink="false">0946ab05-e6db-49dd-b0ef-82e7078d7e68</guid><pubDate>Wed, 02 Sep 2026 11:01:23 +0000</pubDate><atom:updated>2026-09-02T11:01:23.110Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>actor sonu sood,நடிகர் சோனு சூட்,nepal flood,நேபாள வெள்ளப் பேரழிவு,Nepal flood disaster,காத்மாண்டு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/odpfp7ep/sonu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Actor Sonu Sood  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/odpfp7ep/sonu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திரைத்துறையில் முன்னணி நடிகராகவும், சமூக சேவையில் நிஜ வாழ்வு நாயகனாகவும் திகழும் சோனு சூட், கடுமையான வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ள நேபாள நாட்டிற்கு நேரில் சென்று மக்களுக்கு உதவியுள்ளார். தனது <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/jailer-2-release-date-unchanged-official-announcement-from-sun-pictures">சோனு சூட்</a> அறக்கட்டளை சார்பாக நிவாரணப் பொருட்களைக் கொண்டு சென்றுள்ள அவர், வெள்ளத்தால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் நேரில் களமிறங்கியுள்ளார்.</p><p>நேபாள நாட்டின் திரிசூலி பஜார் மற்றும் அதனை சுற்றியுள்ள வெள்ள பாதிப்புக்குள்ளான பகுதிகளைச் சுற்றிப் பார்த்த சோனு சூட், அங்குள்ள மக்களைச் சந்தித்து அவர்களின் கவலைகளைக் கேட்டறிந்தார். திரிசூலி ஆற்றின் கரையில் நின்று பேசிய அவர், இந்த வெள்ளப்பெருக்கு கற்பனை செய்ய முடியாத மிகப்பெரிய இழப்பையும், உடைந்த வீடுகளையும், பாதிக்கப்பட்ட குடும்பங்களையும் விட்டுச் சென்றுள்ளதாக மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார்.</p><h2><strong>"நேபாள மக்கள் தனித்து இல்லை"</strong> </h2><p>நிவாரணப் பணிகளின் போது ஊடகங்களிடம் பேசிய சோனு சூட், நேபாள நாட்டு மக்கள் இந்த இக்கட்டான நேரத்தில் தங்களை தனிமையாக உணர வேண்டாம் என்றும், உணவு, தங்குமிடம் மற்றும் மீண்டும் தங்கள் வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்கான அனைத்து உதவிகளையும் செய்யத் தாம் உறுதியேற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார். வீடுகளையும் குடும்பங்களையும் இழந்து தவிக்கும் மக்களுக்கு புதிய விடியலை ஏற்படுத்தித் தருவதே தமது நோக்கம் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.</p><p>காத்மாண்டுவிற்குச் சென்று நிவாரணப் பொருட்களை நேரடியாக விநியோகம் செய்து வரும் சோனு சூட்டுடன் சேர்ந்து நடிகை மனிஷா கொய்ராலா, அருண் கோவில் உள்ளிட்ட பல திரை பிரபலங்களும் நேபாள மக்களுக்குத் தங்களின் ஆதரவை வழங்கி வருகின்றனர். தற்போதைய தகவல்களின்படி வெள்ளத்திற்குப் பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையின் கரமாகச் செயல்படும் சோனு சூட்டின் இந்த முயற்சிக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>புதிய பரிணாமத்தில் அர்ஜுன் தாஸ் - ரசிகர்கள் பாராட்டு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/arjun-das-romantic-turn-in-once-more-wins-audience</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/arjun-das-romantic-turn-in-once-more-wins-audience#comments</comments><guid isPermaLink="false">bfe49f4a-7b8b-4d0d-8f3e-74447d529b2c</guid><pubDate>Wed, 02 Sep 2026 11:00:41 +0000</pubDate><atom:updated>2026-09-02T11:00:41.323Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>Aditi Shankar,Arjun Das,அர்ஜுன் தாஸ்,Once More,அதிதி ஷங்கர்,ஒன்ஸ் மோர்,Vignesh Srikanth</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/exk0djo5/Arjun-Das-Aditi-Shankar" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Arjun Das - Aditi Shankar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/exk0djo5/Arjun-Das-Aditi-Shankar?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வில்லன் போன்ற கதாபாத்திரங்களில் மிரட்டிய <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அர்ஜுன் தாஸ்</a>, தற்போது 'ஒன்ஸ் மோர்' படத்தில் காதல் நாயகனாக மாறியதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.</p><h2><strong>அசத்தலான காதல் நாயகன்</strong></h2><p>'<a href="https://www.maalaimalar.com/topic/once-more">ஒன்ஸ் மோர்</a>' திரைப்படத்தில் அர்ஜுன் தாஸின் புதிய சாக்லேட் பாய் கதாபாத்திரத்தை பார்த்த நெட்டிசன்கள், 'கைதி', 'மாஸ்டர்' போன்ற படங்களில் மிரட்டலான வில்லன் கதாபாத்திரங்களில் நடித்த அவரா இப்படி கணீர் குரலை வைத்துக் கொண்டு மிகவும் க்யூட்டாகவும் மென்மையாகவும் காதல் செய்கிறார் என்று வியந்து பாராட்டி வருகின்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D">அதிதி ஷங்கருடன்</a> அவர் இணைந்து நடித்துள்ள ரொமாண்டிக் காட்சிகள் மற்றும் ஆன்-ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி மிகவும் புத்துணர்ச்சியாகவும் ரசிக்கும்படியாகவும் இருப்பதாகவும், ஆக்ஷன் ஜானரைத் தாண்டி ஒரு லவ்வர் பாயாகத் தங்களை முழுமையாகக் கவர்ந்து தனக்குள் இருக்கும் அசாத்தியமான பல்துறை நடிப்புத் திறமையை அவர் மீண்டும் நிரூபித்துவிட்டார் என்றும் சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.</p><h2><strong>ஒன்ஸ் மோர்</strong></h2><p>அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் எழுத்து மற்றும் இயக்கத்தில், மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி அன்று வெளியான ஒன்ஸ் மோர் திரைப்படம் வெளியானது.</p><p>கடந்த கால காதல் தோல்வியின் வலியால் இனி காதலே வேண்டாம் என்று ஒதுங்கி வாழும் ரகு (அர்ஜுன் தாஸ்) மற்றும் அவனது வாழ்க்கையில் நுழைந்து மீண்டும் அவனுக்குள் காதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்த முயலும் கலகலப்பான அஞ்சலி (அதிதி ஷங்கர்) ஆகிய இருவருக்கும் இடையே நடக்கும் ஒரு அழகான காதல் மற்றும் எமோஷனல் பயணமாகும்.</p><p>ஹிஷாம் அப்துல் வஹாபின் இசை மற்றும் கச்சிதமான முதல் பாதி ஆகியவை படத்திற்கு பெரும் பலமாக இருந்தாலும், இரண்டாம் பாதியின் மெதுவான திரைக்கதை சற்று தொய்வை ஏற்படுத்தினாலும், ஒட்டுமொத்தமாக உறவுகளின் முதிர்ச்சியையும் காதலுக்கு 'ஒன்ஸ் மோர்' இரண்டாவது வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதையும் அழகாகப் பேசும் ஒரு ஃபீல்-குட் ரொமாண்டிக் என்டர்டெய்னராக இப்படம் தியேட்டர்களில் வெற்றி நடை போடுகிறது.</p><h2><strong>பாக்ஸ் ஆபீஸ் வசூல்</strong></h2><p>திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் 'ஒன்ஸ் மோர்' திரைப்படம், பாக்ஸ் ஆபீஸிலும் சிறப்பான தொடக்கத்தைப் பெற்றுள்ளது. </p><p>Sacnilk வலைத்தளத்தின் தகவல்படி, இப்படம் வெளியான முதல் 3 நாட்களிலேயே ரூ.1 கோடிக்கும் அதிகமான வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>ஜாஜர் ரெயில்வே தண்டவாளம் அருகே பறவை ஆர்வலரின் கண்டுபிடிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/discovery-of-red-backed-shrike-near-jhajjar-railway-track</link><comments>https://www.maalaimalar.com/news/national/discovery-of-red-backed-shrike-near-jhajjar-railway-track#comments</comments><guid isPermaLink="false">0f3a809b-c2e7-4c07-80bc-594a61b0a324</guid><pubDate>Wed, 02 Sep 2026 10:46:16 +0000</pubDate><atom:updated>2026-09-02T10:46:16.084Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>haryana,ஹரியானா,Jhajjar Bird,ஜாஜர் பறவை,Red-backed Shrike,ரெட்-பாக்டு ஸ்ட்ரைக்,Siberian Bird,சைபீரிய பறவை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/cp8e21r6/Jhajjar-Bird" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jhajjar Bird]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/cp8e21r6/Jhajjar-Bird?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/haryana">ஹரியானா </a>ஜாஜர் ரெயில் தண்டவாளம் அருகே ராகேஷ் அஹ்லாவத் ரெட்-பாக்டு ஸ்ட்ரைக் பறவையை கண்டறிந்தார். இது சைபீரியாவிலிருந்து வழிதவறி வந்த இளம் பறவை என்று கண்டறியப்பட்டது.</p><p>ஹரியானா மாநிலம் ஜாஜர் மாவட்டத்தின் டிகல் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே, பறவை ஆர்வலரான ராகேஷ் அஹ்லாவத் என்பவர் தனது வழக்கமான பறவை கண்காணிப்பு பயணத்தின் போது ரெட்-பாக்டு ஸ்ட்ரைக் இந்த அரிய பறவையைக் கண்டறிந்துள்ளார்.</p><p>அங்குள்ள ஒரு புதரின் மீது அமர்ந்திருந்த இந்த பறவையின் தனித்துவமான தோற்றம் அவரை உடனடியாகக் கவர்ந்தது.</p><h2>வித்தியாசமான பறவை</h2><p>இதுகுறித்து ராகேஷ் அஹ்லாவத் கூறுகையில், "பொதுவாக நமது பகுதியில் நாம் காணும் ஸ்ட்ரைக் பறவைகள் நீண்ட வாலையும், பழுப்பு நிற முதுகையும் கொண்டிருக்கும். </p><p>ஆனால், ரெட்-பாக்டு ஸ்ட்ரைக்  பறவை முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. இதன் மேல் பகுதி பழுப்பு நிறத்திலும், கீழ் பகுதி வெளிறிய நிறத்திலும், உடல் முழுவதும் செதில் போன்ற கருமையான அமைப்புகளையும் கொண்டிருந்தது." என்றார். </p><p>மேலும், இந்தப் பறவை தனது வாலை அடிக்கடி விரித்து மேல்நோக்கியும் கீழ்நோக்கியும் அசைத்த விசித்திரமான நடத்தையும் அவரது கவனத்தை ஈர்த்துள்ளது.</p><h2>ரஷ்யாவில் இருந்து வந்த குட்டி வேட்டைக்காரன்</h2><p>இந்த ரெட்-பாக்டு ஸ்ட்ரைக் பறவைகள் மத்திய <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE">ரஷ்யா </a>மற்றும் சைபீரியா போன்ற குளிர்ந்த பகுதிகளில் இருந்து இலையுதிர்காலமான செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இந்தியாவுக்குப் புலம்பெயர்கின்றன. </p><p>இந்தியாவில் இவை வழக்கமாக <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D">குஜராத்தின் </a>கட்ச் பகுதியில்தான் அதிகம் காணப்படும்.</p><h2>பறவையின் சிறப்பம்சங்கள்</h2><p>இவை சிறிய அளவிலான வேட்டைப் பறவைகளாகும். முட்கள் நிறைந்த புதர்கள் மற்றும் திறந்தவெளிப் பிரதேசங்களில் அமர்ந்து கொண்டு பெரிய பூச்சிகள், சிறிய பறவைகள் மற்றும் எலிகளை வேட்டையாடும்.</p><p>வேட்டைப் பறவையாக இருந்தாலும், இவை புதர்களில் மிக அமைதியாக அமர்ந்திருக்கக் கூடியவை. இதனால் எளிதில் மனிதர்களின் கண்களுக்குத் தட்டுப்படாது.</p><p>ஜாஜரில் காணப்பட்ட இந்த பறவை இன்னும் முழு வளர்ச்சியடையாத இளம் பறவையாகும். இது தனது வழக்கமான பயணப் பாதையிலிருந்து வழிதவறி ஹரியானாவிற்குள் நுழைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.</p><h2>ஹரியானாவின் முதல் அதிகாரப்பூர்வ பதிவு</h2><p>டெல்லி பறவைகள் சங்கத்தின் மூத்த பறவை ஆய்வாளரான பங்கஜ் குப்தா இதுகுறித்து தெரிவிக்கையில், "ஹரியானாவில் ரெட்-பாக்டு ஸ்ட்ரைக் பறவை ஆவணப்படுத்தப்படுவது இதுவே முதல் முறை என்பதால், இது பறவையியல் துறையில் ஒரு மிக முக்கியமான பதிவாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p>ரெயில்வே தண்டவாளத்தின் ஓரங்களில் உள்ள முள் புதர்கள் மற்றும் திறந்தவெளிகள் இந்த பறவைகள் வேட்டையாடுவதற்கு ஏற்ற சூழலை வழங்கியதால், இது தற்காலிகமாக இங்கு தங்கியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ஜெயிலர் 2 வெளியீட்டு தேதி மாற்றம் இல்லை: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/jailer-2-release-date-unchanged-official-announcement-from-sun-pictures</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/jailer-2-release-date-unchanged-official-announcement-from-sun-pictures#comments</comments><guid isPermaLink="false">716466b4-8676-4374-abc2-8279965ad7fe</guid><pubDate>Wed, 02 Sep 2026 10:28:50 +0000</pubDate><atom:updated>2026-09-02T10:28:50.896Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Nelson Dilipkumar,நெல்சன் திலீப்குமார்,Rajinikanth,ரஜினிகாந்த்,Ramya Krishnan,Jailer 2,ஜெயிலர் 2</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/k21ycfew/jailer.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ No change in the release date of Jailer 2]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/k21ycfew/jailer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் சில முக்கியக் காட்சிகளை மீண்டும் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் வெளியீட்டு தேதி தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாகவும் இணையதளங்களில் தகவல்கள் வெளியாயின. </p><p>சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்படலாம் என சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பரவி வந்த வதந்திகளுக்கு தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இத்திரைப்படம் திட்டமிட்டபடி வரும் அக்டோபர் 15 அன்று ஆயுத பூஜை விடுமுறை விருந்தாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>இயக்குநர்<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/trisha-radhika-aparna-starrer-grand-psychological-thriller-london-shoot-begins"> நெல்சன் திலீப்குமார்</a> இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் சில முக்கியக் காட்சிகளை மீண்டும் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் வெளியீட்டு தேதி தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாகவும் இணையதளங்களில் தகவல்கள் வெளியாயின. இத்தகைய குழப்பங்களுக்குத் திரையரங்கு உரிமையாளர்களும் ரசிகர்களும் பதிலைத் எதிர்பார்த்திருந்த நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அந்த வதந்திகளைப் பொய்யாக்கியுள்ளது.</p><h2>அலப்பறை <strong>கிளப்புறோ</strong>ம்</h2><p>சன் பிக்சர்ஸ் வெளியிட்ட புதிய போஸ்டரில் ரஜினிகாந்த் துப்பாக்கியுடன் பவர்ஃபுல்லான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். அத்துடன் "அலப்பறை கிளப்புறோம்" என்ற மாஸ் டேக்லைனுடன் வரும் அக்டோபர் 15 ஆம் தேதி திரைப்படம் வெளியாவது உறுதி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2023-ல் வெளியாகி வசூல் சாதனை படைத்த 'ஜெயிலர்' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, அதே கூட்டணியில் உருவாகும் 'ஜெயிலர் 2' படத்தின் மீது சர்வதேச அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.</p><p>இப்படத்தில் ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், யோகி பாபு, ஜாஃபர் சாதிக் ஆகியோருடன் இணைந்து சுராஜ் வெஞ்சாரமூடு, பகவதி பெருமாள், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவையும், ஆர்.நிர்மல் படத்தொகுப்பையும் மேற்கொள்கின்றனர். தீபாவளி மற்றும் ஆயுத பூஜை விடுமுறையைக் குறிவைத்துத் தயாராகும் இத்திரைப்படம் தடையின்றி அக்டோபரில் வெளியாவது ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திரிஷா, ராதிகா, அபர்ணா நடிப்பில் பிரம்மாண்ட சைக்கலாஜிக்கல் திரில்லர்: லண்டனில் படப்பிடிப்பு தொடக்கம்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/trisha-radhika-aparna-starrer-grand-psychological-thriller-london-shoot-begins</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/trisha-radhika-aparna-starrer-grand-psychological-thriller-london-shoot-begins#comments</comments><guid isPermaLink="false">22e44143-01b6-4871-8885-11fc7fb854e6</guid><pubDate>Wed, 02 Sep 2026 10:12:23 +0000</pubDate><atom:updated>2026-09-02T10:12:23.578Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>Trisha,Aparna Balamurali,Radhikaa,ராதிகா   சரத்குமார்,திரிஷா,அபர்ணா,Panorama Studios</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/4gtkq2ii/trisha.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Trisha]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/4gtkq2ii/trisha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தத் திரைப்படத்தை பிரபல ஹிந்தித் திரைப்படமான ‘டாக்டர் பிரியதர்ஷினி’ தொடர்களின் பின்னணியில் உள்ள 'பனோரமா ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரித்து, தமிழ் திரையுலகில் தனது முதல் தயாரிப்பு அடியை எடுத்து வைக்கிறது.</p><p>தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகையான திரிஷா, நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் தேசிய விருது பெற்ற நடிகை அபர்ணா பாலமுரளி ஆகிய மூவரும் இணைந்து நடிக்கும் புதிய தமிழ் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. பெயர் சூட்டப்படாத இத்திரைப்படம், மர்மம், திகில் மற்றும் சுவாரஸ்யம் நிறைந்த ஒரு <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/rashmika-mandana-starrer-mysaa-movie-release-update">சைக்கலாஜிக்கல் திரில்லர்</a> திரைப்படமாக உருவாகிறது.</p><p>இந்தத் திரைப்படத்தை பிரபல ஹிந்தித் திரைப்படமான ‘டாக்டர் பிரியதர்ஷினி’ தொடர்களின் பின்னணியில் உள்ள 'பனோரமா ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரித்து, தமிழ் திரையுலகில் தனது முதல் தயாரிப்பு அடியை எடுத்து வைக்கிறது. 'லோகோமோட்டிவ் குளோபல்' மற்றும் 'ஃபியூஷன் ஃபிளிக்ஸ்' ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்த பிரம்மாண்ட படைப்பை வழங்குகின்றனர். குமார் மங்கத் பாடக், அபிஷேக் பாடக், விகாஸ் சர்மா, அமித் டால்மியா மற்றும் சுந்தர் ஆரோன் ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.</p><h2>தமிழ் திரையுல<strong>க அறிமு</strong>கம்</h2><p>நசீருதீன் ஷா நடித்த 'பாரா ஆனா', அக்‌ஷய் குமாரின் 'ஏர்லிஃப்ட்' மற்றும் சாய்ஃப் அலி கான் நடித்த 'செஃப்' போன்ற படங்களை இயக்கிப் புகழ்பெற்ற பிரபல பாலிவுட் இயக்குநர் ராஜா கிருஷ்ணா மேனன் இத்திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகிறார். மேலும், இவர் சைக்கலாஜிக்கல் ஹாரர் பிரிவில் இயக்கும் முதல் படமும் இதுவேயாகும்.</p><h2>லண்டனில் தொ<strong>டங்கும் படப்</strong>பிடிப்பு </h2><p>இத்திரைப்படத்தின் பூஜை விழா அண்மையில் நடைபெற்று, முறைப்படி படப்பிடிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு லண்டனில் நடைபெறவுள்ளது. திரிஷா, ராதிகா மற்றும் அபர்ணா பாலமுரளி என நடிப்புத் திறமை வாய்ந்த மூன்று முன்னணி நடிகைகள் முதன்மை வேடங்களில் ஒன்றிணைவது இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் வெகுவாக உயர்த்தியுள்ளது. இப்படத்தின் கதைக்களம், கூடுதல் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த பிற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>‘சிட்டிக்கு கோபம் வந்துடுச்சி’: ரஷியாவில் வாடிக்கையாளர் தள்ளிவிட்டதால் தாக்க முயன்ற மனித ரோபோ!</title><link>https://www.maalaimalar.com/news/world/city-got-angry-humanoid-robot-tried-to-attack-after-being-pushed-by-its-owner-in-russia</link><comments>https://www.maalaimalar.com/news/world/city-got-angry-humanoid-robot-tried-to-attack-after-being-pushed-by-its-owner-in-russia#comments</comments><guid isPermaLink="false">765d54d9-0d6a-4b33-a176-76645fd5d2a6</guid><pubDate>Wed, 02 Sep 2026 10:05:30 +0000</pubDate><atom:updated>2026-09-02T10:05:30.976Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Russia,Humanoid Robot,ரஷியா,மனித ரோபோ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/tqxq51kq/New-Project-2026-09-02T151024.795.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘சிட்டிக்கு கோபம் வந்துடுச்சி’: உரிமையாளர் தள்ளிவிட்டதால் தாக்க முயன்ற மனித ரோபோ!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/tqxq51kq/New-Project-2026-09-02T151024.795.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ரஷ்யாவில் உள்ள ஒரு மின்னணுப் பொருட்கள் கடையில் வாடிக்கையாளர் ஒருவர் தள்ளிவிட்டதால், ஆத்திரத்தில் அவரை மனித ரோபோ ஒன்று மீண்டும் மீண்டும் தாக்க முயன்ற சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. </p><p>கடையில் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் ஒரு மனித உருவ சேவை ரோபோ அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. </p><p>வீடியோவின்படி, கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர், மரியாதைக்காக அந்த ரோபோவிடம் கைகுலுக்க முயன்றுள்ளார். அந்த ரோபோ அதற்குப் பதிலளிக்காததால், அதிருப்தி அடைந்த அவர் ரோபோவை லேசாக தள்ளிவிட்டார்.</p><p>இதனால் கோபமடைந்த ரோபோ, அவரை கால்களால் தாக்க முயன்றது. கடையில் இருந்த இருவர் ரோபோவை கட்டுப்படுத்த முயற்னர். இருப்பினும் அது ஆக்ரோஷத்தில் அவர்களையும் தாக்க முயன்றது. </p><p>இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் இதனை  ‘தி டெர்மினேட்டர்’ மற்றும் தமிழில் வெளியான ரஜினிகாந்தின் ‘எந்திரன்’ படத்துடன் ஒப்பிட்டு, கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="tr" dir="ltr">Rusya&#39;da bir teknoloji mağazasında robot, kendisini iten müşteriye saldırmaya çalıştı. <a href="https://t.co/8q16sHfhX0">pic.twitter.com/8q16sHfhX0</a></p>&mdash; Boşuna Tıklama (@bosunatiklama) <a href="https://x.com/bosunatiklama/status/2094923603263304076?ref_src=twsrc%5Etfw">September 1, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>நேபாளத்தில் பெருவெள்ளத்துக்கு காலநிலை மாற்றமே காரணம்- பிரதமர் பலேந்திர ஷா</title><link>https://www.maalaimalar.com/news/world/nepal-floods-caused-by-climate-change-says-pm-balendra-shah</link><comments>https://www.maalaimalar.com/news/world/nepal-floods-caused-by-climate-change-says-pm-balendra-shah#comments</comments><guid isPermaLink="false">92b757db-f574-4aad-889a-891997a46468</guid><pubDate>Wed, 02 Sep 2026 09:59:42 +0000</pubDate><atom:updated>2026-09-02T09:59:42.461Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>nepal flood,Balendra Shah,நேபாளம் வெள்ளம்,பலேந்திர ஷா,நேபாளம் பிரதமர்,nepal prime minister</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/evg4w2ad/Shah.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nepal PM Balendra shah]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/evg4w2ad/Shah.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் ஆயிரக் கணக்கானோர் அடித்து செல்லப்பட்டனர். பேரழிவு உண்டான பகுதிகளில் இன்று 8-வது நாளாக மீட்புப்பணிகள் நடந்து வருகிறது. சேறு-சகதிகளில் இருந்து உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன.</p><p>இந்த நிலையில் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 1,127-ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சித்வான் மாவட்டத்தில் 348 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.</p><p>586 வெளிநாட்டினர் உள்பட 4800-க்கும் மேற்பட்டோர் மாயமாகி இருக்கிறார்கள். நேபாள வெள்ளத்தில் சிக்கி ஏராளமான இந்தியர்களும் மாயமாகி இருக்கிறார்கள்.</p><p>இதுவரை மீட்கப்பட்ட உடல்களில் 95 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p>அடையாளம் காணப்படாத 911 உடல்கள் குறித்த விவரங்கள் நேபாளக் காவல் துறையின் இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.</p><h2>புதைக்கப்படும் உடல்கள்</h2><p>இதற்கிடையே வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டு வருகின்றன. தலைநகர் காத்மாண்டுவில் உள்ள கோகர்ணா காட்டுப் பகுதியிலும், சித்வானில் உள்ள தேவ்காட் பகுதியிலும் பெரிய குழிகள் தோண்டப்பட்டு உடல்களை வரிசையாக வைத்து புதைத்தனர்.</p><p>புதைக்கப்பட்ட உடல்களில் <a href="https://www.maalaimalar.com/news/world/nepal-will-collect-and-preserve-dna-samples-and-other-identifying-information-from-victims" rel="nofollow">டி.என்.ஏ மாதிரிகள்</a> எடுக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்களின் அடையாளத்தை கண்டறிந்த பிறகு, புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து உடல்களை எடுத்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>இந்தநிலையில் நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்துக்கு காலநிலை மாற்றமே காரணம் என்று அந்நாட்டு பிரதமர் பலேந்திர ஷா தெரிவித்து உள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் கூறும்போது:-</p><p>நேபாளத்தில் ஏற்பட்ட இந்த பேரழிவுக்கு காலநிலை மாற்றமே காரணம் என்பதில் சந்தேகமில்லை. இமயமலை வெப்பநிலையில் 1.8 டிகிரி செல்சியஸ் உயர்வு ஏற்பட்டு இருக்கிறது.</p><p>ஒரு பெரிய பனியாறு அல்லது பாறை-பனிச்சரிவு போதேகோஷி ஆற்றில் வெள்ளப் பெருக்கைத் தூண்டியது என்றும், உருகும் பனியும் செங்குத்தான நிலப்பரப்பும் வெள்ளத்தை கீழ்நோக்கி பாய செய்து பெரிய பாதிப்பை  ஏற்படுத்தியது என்றும் நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.</p><p>இமயமலைப் பகுதிகளில் காலநிலை மாற்றத்தின் விளைவாக நாம் எதிர்கொள்ள வேண்டிய அபாயம் அதிகரித்து வருவதை இந்தச் சம்பவம் சுட்டிக்காட்டுகிறது.</p><p>இதற்கு வலுவான உலகளாவிய பேரிடர் ஒத்துழைப்பு அவசியமாகும். அடையாளம் காண முடியாத நிலையில் கண்டெ டுக்கப்பட்ட சடலங்களை மட்டுமே அரசாங்கம் கை யாண்டு வருகிறது.</p><p>அவற்றை அடையாளம் காண உத வக்கூடிய டி.என்.ஏ மாதிரி கள் மற்றும் பிற ஆதா ரங்களையும் பாதுகாத்து வருகிறது. அடையாளம் காணப் பட்ட சடலங்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்ப டைக்கப்பட்டு வருகின்றன என்றார்.</p>]]></content:encoded></item><item><title>2005 நாசா விண்வெளி ஆய்வு: 16 நாட்கள் உணவின்றி விண்வெளியில் வாழ்ந்த பல்லிகள் குறித்து திடுக்கிடும் தகவல்கள்</title><link>https://www.maalaimalar.com/news/world/2005-nasa-space-study-shocking-facts-about-lizards-that-survived-16-days-without-food</link><comments>https://www.maalaimalar.com/news/world/2005-nasa-space-study-shocking-facts-about-lizards-that-survived-16-days-without-food#comments</comments><guid isPermaLink="false">f552c76a-1eed-4a47-a928-166fa5709c89</guid><pubDate>Wed, 02 Sep 2026 09:58:25 +0000</pubDate><atom:updated>2026-09-02T09:58:25.074Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நாசா,nasa,NASA Space Study,lizards,Foton-M2,விண்வெளி ஆய்வு,பல்லிகள்,போடான்-எம்2</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/lbfh03kw/gg.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  lizards  Foton-M2]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/lbfh03kw/gg.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த 2005-ஆம் ஆண்டு அமெரிக்காவின் நாசா மற்றும் ரஷ்ய அறிவியல் அகாடமி இணைந்து ஒரு அபூர்வ விண்வெளி பரிசோதனையை மேற்கொண்டன. இதில், ஐந்து தடிமனான கால்விரல்களைக் கொண்ட பல்லிகள் 'போடான்-எம்2' என்ற ரஷ்ய விண்வெளி ஓடத்தின் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டன. புவிஈர்ப்பு விசை இல்லாத சூழல் உயிரினங்களின் திசுக்களில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை ஆராய்வதே இந்த ஆய்வின் முக்கிய நோக்கமாகும்.</p><h2>உணவு மற்று<strong>ம் நீரின்றி 16</strong> நாட்கள் பயணம்</h2><p>பொதுவாக <a href="https://www.maalaimalar.com/news/national/whale-ambergris-worth-rs-4-5-crore-seized-in-maharashtra">விண்வெளி</a> ஆய்வுகளுக்கு எலிகள் மற்றும் தவளைகள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், முதன்முறையாக ஊர்வன பிரிவைச் சேர்ந்த பல்லிகள் தேர்வு செய்யப்பட்டன. பல்லிகள் நீண்ட நாட்களுக்கு உணவு மற்றும் தண்ணீரின்றி வாழக்கூடிய இயல்புடையவை என்பதால், 16 நாட்கள் வரை தொடர்ந்த இந்த பயணத்தின் போது அவற்றுக்கு எந்தவித உணவோ அல்லது குடிநீரோ வழங்கப்படவில்லை. பல்லிகளின் இந்தத் தாங்கும் திறன், விண்வெளி பயணத்தின் போது அவற்றுக்குத் தேவையான பிற வாழ்க்கை ஆதரவு அமைப்புகளின் தேவையை வெகுவாகக் குறைத்தது.</p><p>16 நாட்களுக்குப் பிறகு விண்வெளி ஓடம் பூமிக்குத் திரும்பியபோது, பல்லிகள் அனைத்தும் உயிருடன் மீட்கப்பட்டன. மேல்நோக்கிய பார்வையில் அவை ஆரோக்கியமாக இருப்பது போல் தோன்றினாலும், ஆய்வகத்தில் நடத்தப்பட்ட விரிவான சோதனைகள் வேறு சில உண்மைச் செய்திகளை வெளிப்படுத்தின. பல்லிகளின் எலும்பு அடர்த்தி கணிசமாகக் குறைந்துள்ளதும், அவற்றின் கல்லீரல் செல்களின் வீரியம் மாறுபட்டுள்ளதும் கண்டறியப்பட்டது. குறிப்பாக, போதிய ஊட்டச்சத்து இல்லாததாலும், வாழ்விடக் கட்டுப்பாடுகளினாலும் தான் இந்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றும், வெறும் எடையற்ற தன்மையினால் மட்டும் இது நிகழவில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.</p><h2>சுவரில் ஒட்டி <strong>நடக்கும் தி</strong>றன்</h2><p>பல்லிகளின் கால்விரல்களில் உள்ள சிறப்பு திசுக்கள், புவிஈர்ப்பு விசை இல்லாத விண்வெளி சூழலிலும் வழுவழுப்பான பரப்புகளில் அவை உறுதியாகப் பிடித்து நகர உதவியாக இருந்தன. விண்வெளியில் தவளைகள் போன்ற பிற உயிரினங்கள் மிதந்து மிதந்து மன அழுத்தத்திற்கு ஆளாகும் நிலையில், பல்லிகள் சுவர்களிலேயே ஒட்டிக் கொண்டு நிலையாக இருந்தன. இந்த ஆய்வு மூலம் பெறப்பட்ட தரவுகள், எதிர்காலத்தில் மனிதர்கள் நீண்டகால விண்வெளி பயணங்களை மேற்கொள்ளும்போது உடலில் ஏற்படும் எலும்பு மற்றும் உறுப்பு சார்ந்த மாற்றங்களைப் புரிந்துகொள்ள பெரிதும் உதவியாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நீட் மற்றும் ஐஐடி இணையதளத்தை ஹேக் செய்த 12-ஆம் வகுப்பு கேரள மாணவர் - ஐஐடியில் பொறியாளராக நியமனம் </title><link>https://www.maalaimalar.com/news/national/neet-iit-website-hacked-by-class-12-student-hired-as-iit-engineer</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-iit-website-hacked-by-class-12-student-hired-as-iit-engineer#comments</comments><guid isPermaLink="false">a558adbe-a0ed-44d9-8fa0-3968a13f0e2a</guid><pubDate>Wed, 02 Sep 2026 09:51:35 +0000</pubDate><atom:updated>2026-09-02T09:51:35.567Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>neet,நீட்,IIT,JEE Advanced,ஐஐடி,ஜேஇஇ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/t0qr48jn/Untitled-design-4.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ IIT Kanpur cyber security hire]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/t0qr48jn/Untitled-design-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கேரளாவை சேர்ந்த 16 வயதான இளைஞர் ஒருவர், கடந்த ஜூன் மாதத்தில் நீட் மறுதேர்வு இணையதளத்திலும், ஐஐடி ரூர்க்கி பல்கலைக்கழகத்தால் நிர்வகிக்கப்படும் ஜே.இ.இ அட்வான்ஸ்டு இணையதளத்திலும் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை சுட்டிக்காட்டியதை தொடர்ந்து, தற்போது அந்த இளைஞரை ஐஐடி கான்பூர் நிறுவனம் சைபர் பாதுகாப்பு பொறியாளராக பணியில் சேர்த்துள்ளது.</strong></em></p><h3><strong>கேரள இளைஞர்</strong></h3><p>கேரளாவில் உள்ள திருவல்லைக்கு அருகில் உள்ள மன்னாரை பூர்வீகமாக கொண்ட ரைலன் அணில் தற்போது தனது பெற்றோர்களுடன் துபாயில் வசித்து வருகிறார். 16 வயதான அணில் துபாயில் உள்ள சிபிஎஸ்இ தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.</p><p>இவரது தந்தை 1999-இல் துபாய்க்கு குடிபெயர்ந்து, அல்-பூஃட்டைம் என்ற நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்ப மேலாளராக பணிபுரிந்து வருகிறார். அணில் தனது சிறுவயதில் இருந்தே ஹாலிவுட் படங்களான ‘தி மேட்ரிக்ஸ்’ மற்றும் ‘மிஸ்டர் ரோபோட்’ ஆகிய கதைகளில் வரும் ஹேக்கர்களால் ஈர்க்கப்பட்டுள்ளார்.</p><p>இதன் காரணமாக இவர் 8-ஆம் வகுப்பு முதலே ஹேக்கிங்-இல் தீவிரமாக ஆர்வம் கொண்டு, அதனை கற்க தொடங்கினார். இதையடுத்து இவர் 10-ஆம் வகுப்பில் Grubby.ai என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் இணையதளத்தில் உள்ள குறைகளை கண்டறிந்து, அதுகுறித்து புகார் அளித்தார்.</p><p>இந்த அனுபவத்தின் மூலம் அவர் ஹேக்கிங் துறையில் மிக அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வந்துள்ளார். இதையடுத்து இவர் கடந்த ஜூன் மாதத்தில் நடந்த <a href="https://www.maalaimalar.com/topic/நீட்-தேர்வு">நீட்</a> மறுதேர்வு இணையதளத்தில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்தார்.</p><h3><strong>நீட் இணையதளம்</strong></h3><p>அந்த இணையதளத்தில் நீட் தேர்வு மையங்களை நிர்வகிப்பது மற்றும் பார்வையாளர்கள் தொடர்பான தகவல்களை அணுகுவது உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட தகவல்கள் இருந்ததை அவர் கண்டறிந்தார்.</p><h3><strong>ஜேஇஇ அட்வான்ஸ்டு இணையதளம்</strong></h3><p>மேலும் ஐஐடி ரூர்க்கி பல்கலைக்கழகத்தால் நிர்வகிக்கப்படும் ஜேஇஇ அட்வான்ஸ்டு தளத்துடன் தொடர்புடைய கிளவுட் சேமிப்பில் இருந்த குறைபாடுகளையும் அவர் கண்டறிந்தார்.</p><p>ஜேஇஇ இணையதளத்தில் தேர்வர்களின் அனுமதி அட்டைகளை (ஹால் டிக்கெட்) மற்றும் தேர்வு முடிவுகள் உள்ளிட்ட ஆவணங்கள் உள்ளிட்டவை பாதுகாப்பற்ற முறையில் இருந்தது அவருக்கு தெரியவந்தது</p><p>இதையடுத்து இணையதளத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து, அவர் உரிய நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்து அதற்கு உரிய பதில் கிடைக்காததால், அதில் இருந்த குறைபாடுகளை பொதுவெளியில் தெரிவித்தார்.</p><p>இதற்கிடையில் அவர் பொதுவெளியில் தெரிவித்த சில நாட்களுக்குள், இணையதளத்தில் இருந்த குறைபாடுகள் சரி செய்யப்பட்டதாக அவர் கூறினார்.</p><h3><strong>ஐஐடி ரூர்க்கி</strong></h3><p>இதுகுறித்து ஐஐடி ரூர்க்கி கூறுகையில், இணையதளத்தில் உள்ள சேமிப்பகம் படிக்க மட்டுமே முடியும் என்றும், அதன் தரவுகளை மாற்றவோ அல்லது நீக்கவோ முடியாது என்று பதிலளித்தது.</p><p>இந்த நிலையில் மகாராஷ்டிராவில் உள்ள ஐஐடி கான்பூர் பல்கலைக்கழகம், 16 வயது இளைஞர் அணிலை அணுகி, அதன் சைபர் பாதுகாப்பு புத்தாக்க மையமான C31Hub-இல் இளநிலை சைபர் பாதுகாப்பு பொறியாளராக பணி அமர்த்தியுள்ளது.</p><h3><strong>ஐஐடி கான்பூர் இயக்குநர்</strong></h3><p>இதுகுறித்து ஐஐடி கான்பூர் இயக்குநர் மனிந்திர அகர்வால் கூறுகையில், “அனிலின் பணியையும் திறமைகளையும் கண்ட பிறகு, ஐஐடி கான்பூர் குழு அவரை அணுகியது. எங்கள் பொறியாளர்கள் அவருடன் கலந்துரையாடியபோது, சைபர் பாதுகாப்பு மற்றும் அது தொடர்பான துறைகளில் அவருக்கு வலுவான திறன்கள் இருப்பதைக் கண்டறிந்தனர்.</p><p>அதைத் தொடர்ந்து, அவரைப் பணியில் அமர்த்த முடிவு செய்தோம். அவர் துபாயில் வசிப்பதாலும், தற்போது 12 ஆம் வகுப்பு படித்து வருவதாலும், ஆலோசகராகத் தொலைவிலிருந்து பணிபுரிகிறார். அவரால் முழுநேரமாகப் பணியாற்ற முடியாது. பல்வேறு இணையதளங்களின் பாதுகாப்பு பகுப்பாய்வு செய்வதே அவரது முதன்மை பொறுப்பாகும்.</p><p>அனில் ஒரு சிறுவன் என்பதால், இந்த ஒப்பந்தம் நிறைவடைய கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆனது. அவரது தந்தை அனில் ஆபிரகாம், அவனது பாதுகாவலராகவும் இணைப் பொறுப்பாளர் உள்ளிட்ட கடமைகளை உள்ளடக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.</p><p>அவரது பணிகள், மேற்பார்வையிடப்பட்ட, அபாயமற்ற கல்வி, ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டுச் செயல்பாடுகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன.</p><p>ஐஐடி-க்களில் இதுவரையில் பணியமர்த்தப்பட்டவர்களில் மிக இளைய வயதுடையவர் இவர்தான்” என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>துலீப் டிராபி: திலக் வர்மா அசத்தல் ஆட்டத்தால் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தெற்கு மண்டலம்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/south-zone-team-enter-duleep-trophy-final</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/south-zone-team-enter-duleep-trophy-final#comments</comments><guid isPermaLink="false">509e334d-bed9-4878-9a4a-42bb0707a5c3</guid><pubDate>Wed, 02 Sep 2026 09:41:47 +0000</pubDate><atom:updated>2026-09-02T09:41:47.747Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திலக் வர்மா,Tilak Varma,துலீப் டிராபி,Duleep Trophy,south zone,தெற்கு மண்டலம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/ya2nx1tt/tilak.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ tilak varma]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/ya2nx1tt/tilak.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>துலீப் டிராபி போட்டியில் வடக்கு மண்டல அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தெற்கு மண்டலம் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.</strong></em></p><p>துலீப் டிராபி அரையிறுதி ஒன்றில் வடக்கு மண்டலம், தெற்கு மண்டலம் இடையிலான போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வடக்கு மண்டலம் அணி பேட்டிங் தேர்வு செய்தது.</p><h2>கவரப்பா 4 விக்கெட்</h2><p>அதன்படி, முதலில் பேட் செய்த வடக்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் 195 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின்</p><p>கம்ரான் இக்பால் 76 ரன்னும், கண்ணையா வதாவன் 35 ரன்னும் எடுத்தனர்.</p><p>தெற்கு மண்டலம் சார்பில் கவரப்பா 4 விக்கெட்டும், நிதிஷ், தியாகராஜன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><h2>திலக் வர்மா அசத்தல் சதம்</h2><p>அடுத்து ஆடிய தெற்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் 312 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் திலக் வர்மா பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 117 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். ஷ்ரேயஸ் கோபால் 87 ரன்னில் அவுட்டானார்.</p><p>வடக்கு மண்டல அணி சார்பில் குர்னூர் பிரார் 4 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், அன்ஷுல் கம்போஜ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p>தொடர்ந்து களமிறங்கிய வடக்கு மண்டல அணி 2வது இன்னிங்சில் 297 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சனத் சங்க்வான் 76 ரன்னும், ஆயுஷ் டொசேஜா 52 ரன்னும், அன்ஷுல் கம்போஜ் 36 ரன்னும், நிஷாந்த் சிந்து 35 ரன்னும் எடுத்தனர்.</p><h2>நிதீஷ் 5 விக்கெட்</h2><p>தெற்கு மண்டல அணி சார்பில் நிதீஷ் 5 விக்கெட்டும், சாய் தேஜா, ஷ்ரேயஸ் கோபால் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p>இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தெற்கு மண்டல அணி களமிறங்கியது. ரிக்கி புய், ஜெகதீசன் ஜோடி பொறுப்புடன் ஆடியது. முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்த நிலையில் ரிக்கி புய் 42 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து ஜெகதீசன் 43 ரன்னில் ஆட்டமிழந்தார்.</p><h2>திலக் வர்மா அசத்தல்</h2><p>அடுத்து இறங்கிய கேப்டன் திலக் வர்மா கடைசி வரை ஆட்டமிழக்காமல் அரை சதமடித்து 51 ரன் எடுத்து வெற்றிக்கு உதவினார்.</p><p>அவருக்கு ஸ்மாரன் ரவிசந்திரன் ஒத்துழைப்பு கொடுத்தார்.</p><p>இறுதியில், தெற்கு மண்டல அணி 3 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் துலீப் டிராபி இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. திலக் வர்மாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.</p><p>வரும் ஞாயிறு அன்று நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் கிழக்கு மண்டலம், தெற்கு மண்டலம் அணிகள் மோதுகின்றன.</p>]]></content:encoded></item><item><title>‘நெருக்கடி எங்களால் உருவாகவில்லை... நீங்கள்தான் தார்மீக பொறுப்பு’ - இந்தியா, சீனா, அமெரிக்காவிடம் உதவியல்ல, இழப்பீடு கோரும் நேபாளம்!</title><link>https://www.maalaimalar.com/news/world/we-did-not-create-the-crisis-you-bear-the-moral-responsibility-nepal-demands-compensation-not-aid-from-india-china-and-the-us</link><comments>https://www.maalaimalar.com/news/world/we-did-not-create-the-crisis-you-bear-the-moral-responsibility-nepal-demands-compensation-not-aid-from-india-china-and-the-us#comments</comments><guid isPermaLink="false">21814a22-e315-4145-b998-5561fed70386</guid><pubDate>Wed, 02 Sep 2026 09:32:23 +0000</pubDate><atom:updated>2026-09-02T09:32:23.267Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,China,சீனா,அமெரிக்கா,us,Nepal Floods,நேபாள பெருவெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/tv0mpf0b/New-Project-2026-09-02T150109.963.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘நெருக்கடி எங்களால் உருவாகவில்லை... நீங்கள்தான் தார்மீக பொறுப்பு’ - இந்தியா, சீனா, அமெரிக்காவிடம் உதவியல்ல, இழப்பீடு கோரும் நேபாளம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/tv0mpf0b/New-Project-2026-09-02T150109.963.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாளம் உதவி கோரவில்லை, மாறாக, இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவிடமிருந்து காலநிலை மாற்றத்திற்கான இழப்பீட்டைக் கோருவதாக நேபாளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்குகள் தொடர்பாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் சிசிர் கானல் கருத்து தெரிவித்துள்ளார். </p><h2>நேபாள வெள்ளப்பெருக்கு</h2><p>ஆகஸ்ட் 26 அன்று, லாங்டாங் லிருங்கின் வடக்குப் பகுதியில் சுமார் 17,000 அடி உயரத்தில் இருந்த ஒரு பனிமலை, நேபாள-திபெத் எல்லையில் உள்ள போதே கோஷி ஆற்றில் சரிந்து விழுந்து, அதன் வழியாக வரும் மத்திய நேபாளத்தின் மலைப்பகுதிகளில் உள்ள திரிசூலி ஆற்றில் <a href="https://www.maalaimalar.com/news/world/glof-event-not-the-cause-of-nepals-massive-floods-glacier-collapse-is-the-reason-new-report-by-scientists">வெள்ளப்பெருக்கு </a>ஏற்பட்டது. </p><p>இந்த எதிர்பாராத திடீர் வெள்ளப்பெருக்கால் நேபாளம் பெரும் இழப்பை சந்தித்துள்ளது. ஆற்றின் பாதையில் வழியாக இருந்த அதையும் தாண்டிய பகுதிகளிலும் இருந்த சாலைகள், வீடுகள், பாலங்கள், பள்ளிகள் என அனைத்தும் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.</p><p>வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போதுவரை 1000த்தை கடந்துள்ள நிலையில், சேற்றில் தோண்ட தோண்ட இன்னும் மனிதர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. அதேவேளையில், 583 வெளிநாட்டினர் உட்பட சுமார் 4,000 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.</p><h2>1 பில்லியன் டாலர் செலவு</h2><p>ஒருபக்கம் மீட்பு பணி நடைபெற்று வந்தாலும், மறுபுறம் வீடுகளை, உடைமைகளை இழந்தவர்களின் வாழ்க்கையை மறுசீரமைக்கும் பணிகளையும் அரசு மேற்கொள்ள வேண்டியுள்ளது. </p><p>திடீர் வெள்ளத்திற்குப் பிறகான புனரமைப்பு பணிகளுக்கான செலவு மிக அதிகமாக உள்ளது. மீட்புப் பணிகளுக்கான செலவு 5 பில்லியன் டாலர் என காத்மாண்டு மதிப்பிட்டுள்ளது. இது அந்நாட்டின் பொருளாதாரத்தில் கிட்டதட்ட 10-ல் ஒரு பங்கு ஆகும்.</p><h2>உதவி அல்ல இழப்பீடு</h2><p>இந்தச் சூழலில் நேபாளம் தற்போது மனிதாபிமான உதவிகளைக் கோருவதிலிருந்து விலகி, சீனா, இந்தியா மற்றும் அமெரிக்காவிடம் இருந்து “காலநிலை இழப்பீடு” கோரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. </p><p>அதாவது இந்த காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட இழப்பீட்டிற்கு அதன் பொறுப்பாளர்களே நிவாரணம் வழங்க வேண்டும் என நேபாளம் தெரிவித்துள்ளது. </p><p>இந்த பேரிடர் பருவநிலை மாற்றத்துடன் தொடர்புடையது என்றும், இதற்கு காரணமான நாடுகள் அதற்கான இழப்பீட்டை தரவேண்டும் என நேபாளத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் சிசிர் கானல் தெரிவித்துள்ளார். </p><h2>உதவி அல்ல தார்மீகப் பொறுப்பு</h2><p>இதுதொடர்பாக நேற்று பேசிய அவர்.,</p><p>“சேதம் மிக அதிகம். பல்லாயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன; அதோடு, பள்ளிகள் மற்றும் பல பில்லியன் ரூபாய் மதிப்பிலான நீர்மின் திட்டங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p>இது மனிதாபிமானம் சார்ந்த விஷயம் அல்ல; இது சட்ட மற்றும் தார்மீகப் பொறுப்பு சம்பந்தப்பட்ட விஷயம்.</p><p>உலகில் அதிக மாசு உமிழும் நாடான சீனா, இரண்டாம் இடத்தில் உள்ள அமெரிக்கா, மூன்றாம் இடத்தில் உள்ள இந்தியா போன்ற முக்கிய தொழிற்சாலை நாடுகளுக்கு, நேபாளம் போன்ற பாதிக்கப்படக்கூடிய நாடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டிய வரலாற்றுப் பொறுப்பு உள்ளது.” எனக் கூறியுள்ளார். </p><h2>கார்பன்-டை-ஆக்சைடு வெளியேற்றம்</h2><p>நேபாள குற்றச்சாட்டைப் போலவே, உலகளாவிய CO₂ வெளியேற்றத்தில் சுமார் 29 முதல் 33 சதவிகிதம் வரை பங்களித்து, சீனா முதலிடத்திலும், 6.2 பில்லியன் மெட்ரிக் டன்கள் உடன்  12.7 முதல் 15 சதவிகிதம் வரை வகித்து அமெரிக்கா இரண்டாம் இடத்திலும், மூன்றாவது இடத்தில் இந்தியாவும் உள்ளது. </p><p>இந்தியா ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4.4 பில்லியன் மெட்ரிக் டன் CO₂-க்கு இணையான வாயுவை வெளியிடுகிறது. இது உலகளாவிய பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் 7.3 சதவீதம் முதல் 8.3 சதவீதம் ஆகும்.</p><p>இந்தப் பசுமை இல்ல வாயுக்கள் பருவநிலை மாற்றத்திற்குக் காரணமாகி , இமயமலைப் பகுதியை மேலும் பாதிப்புக்குள்ளாக்குகின்றன. </p>]]></content:encoded></item><item><title>உதயநிதியை பாராட்டிய சபாநாயகர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/speaker-praise-udhayanidhi-stalin</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/speaker-praise-udhayanidhi-stalin#comments</comments><guid isPermaLink="false">d317bdb4-bbed-42e4-8b62-c19e94e9e4c6</guid><pubDate>Wed, 02 Sep 2026 09:31:58 +0000</pubDate><atom:updated>2026-09-02T09:31:58.692Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,தமிழக சட்டசபை,TN assembly,JCD Prabhakar,ஜேசிடி பிரபாகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/fh4yk8ph/jcd.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்- உதயநிதி ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்- உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/fh4yk8ph/jcd.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நான் சொன்னதை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன் என்று சொன்ன பெருந்தன்மைக்காக அவரை பாராட்டுகிறேன் என்றார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> முதலமைச்சர் விஜய் இன்று விதி எண் 110-இன் கீழ், விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடியபோது அவர்கள் மீது கடந்த ஆட்சிக் காலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்வதாக அறிவித்தார். </p><p>முதலமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து அமைச்சர்கள், கட்சி உறுப்பினர்கள் வரவேற்று பேசினர். இதனை தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், வழக்குகள் வாபஸ் பெறுவது இதுதான் வரலாற்றில் முதன்முறை என அமைச்சர் ஒருவர் பேசினார். இது சரியான தகவல் இல்லை. எங்களுடைய தலைவர் எங்களுடைய ஆட்சியின் போது, குடியுரிமை திருத்தச்சட்டம், வேளாண் சட்டசம், 8 வழிச்சாலை போராட்டம், கூடங்குளம் போராட்டம், மீத்தேன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளை தி.மு.க. ஆட்சியில் அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாபஸ் பெற்றுள்ளார். அப்போது எங்கள் தலைவர், முன்னாள் முதலமைச்சர் 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிடவில்லை. அதிகாரிகளை அழைத்து சொல்லிவிட்டு இந்த அவையில் வழக்குகள் வாபஸ் என்று அறிவித்தார். எனவே இந்த அறிவிப்பு முதன்முறை அல்ல என்றார். </p><p>இதை அடுத்து சில மணி நேரம் கழித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், 110 விதியின் கீழ் முதலமைச்சர் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதனை தொடர்ந்து விவாதம் நடைபெற்றது. அப்போது நான் எங்களுடைய முன்னாள் முதலமைச்சர் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிடவில்லை என்று சொல்லியிருந்தேன். நீங்கள் அதை அவைக்குறிப்பில் எடுத்துக்காட்டினீர்கள். அதில் 110 விதியின் கீழ் தான் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறோம். இதனால் நான் பேசிய குறிப்பை திரும்பப்பெற்றுக்கொள்கிறேன் என்றார். </p><p>இதனை தொடர்ந்து பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், எதிர்க்கட்சி தலைவரிடம் அந்த ஆதாரத்தைக்காட்டியவுடன், இதனை உடனே கவனத்திற்கு கொண்டு வந்தீர்கள், நான் சொன்னதை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன் என்று சொன்ன பெருந்தன்மைக்காக அவரை பாராட்டுகிறேன் என்றார். </p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rain-likely-in-20-districts-of-tamil-nadu-meteorological-department</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rain-likely-in-20-districts-of-tamil-nadu-meteorological-department#comments</comments><guid isPermaLink="false">ec9d5f9b-b8b5-4af7-89ef-3f702c10dfbf</guid><pubDate>Wed, 02 Sep 2026 09:31:36 +0000</pubDate><atom:updated>2026-09-02T09:31:36.606Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,IMD,Rain,மழை,தமிழ்நாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/3ostojdi/imd.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Regional meteorological centre]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/3ostojdi/imd.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">வானிலை ஆய்வு மையம் </a>வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.</p> <h2>மழைக்கு வாய்ப்பு</h2><p>தமிழகத்தில் இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p>  <p>தமிழகத்தில் நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p> <p>தமிழகத்தில் 4-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>வரும் 5-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p> <h2>அதிகபட்ச வெப்பநிலை </h2><p>இன்று முதல் வரும் 5-ந்தேதி வரை கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால்</p><p>பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.  உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில</p><p>இடங்களில் 2-4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p> <h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன்</p><p>காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p> <h2>மீனவர்களுக்கான எச்சரிக்கை</h2><p>இன்று மற்றும் நாளை தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><h2>வங்கக்கடல் பகுதிகள்:</h2><p>இன்று மற்றும் நாளை தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>மகாராஷ்டிராவில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சம் பறிமுதல்: தொடரும் கடத்தல் கும்பல் வேட்டை</title><link>https://www.maalaimalar.com/news/national/whale-ambergris-worth-rs-4-5-crore-seized-in-maharashtra</link><comments>https://www.maalaimalar.com/news/national/whale-ambergris-worth-rs-4-5-crore-seized-in-maharashtra#comments</comments><guid isPermaLink="false">dd3e25c1-1e00-44a9-86b9-58412962f646</guid><pubDate>Wed, 02 Sep 2026 09:03:46 +0000</pubDate><atom:updated>2026-09-02T09:03:46.101Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,மகாராஷ்டிரா,ambergris,Whale Vomit,smuggling gangs,திமிங்கல எச்சம்,கடத்தல் கும்பல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/5qodjnjw/whale.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Whale Vomit ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/5qodjnjw/whale.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு மகாராஷ்டிர மாநிலத்தின் சாங்க்லி மாவட்டத்தில்  ரூ.4.5 கோடி மதிப்புள்ள ஆம்பர்ஹ்ரிஸ் எனப்படும் திமிங்கல எச்சத்தை காவல் துறையினரும் வனத்துறையினரும் இணைந்து பறிமுதல் செய்துள்ளனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/topnews/india-rs-20000-crore-crypto-fraud-sc-says-extradite-main-accused-subhash-sharma">மகாராஷ்டிரா மாநிலம்</a> சாங்லி கிராமப்புற எல்லைக்குட்பட்ட காஸ்பே திக்ராஜ் பகுதியில், சாங்லி கிராமப்புற காவல் துறையினரும் வனத்துறையினரும் இணைந்து நடத்திய தீவிர ரோந்து பணியின் போது ரூ.4.5 கோடி மதிப்பிலான ஆம்பர்ஹ்ரிஸ் எனப்படும் திமிங்கல எச்சத்தை பறிமுதல் செய்துள்ளனர். சம்பவ இடத்தில் இரு பெட்டிகளில் இந்த விலையுயர்ந்த கடத்தல் பொருட்கள் கைப்பற்றப்பட்டது.</p><p>இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக கோல்ஹாபூர் மாவட்டத்தின் குன்கி கிராமத்தைச் சேர்ந்த 32 வயதான அமோல் சித் என்பவரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தொடர் விசாரணையில், சிந்துதுர்க் மாவட்டத்தின் மால்வன் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் மூலம் இந்த திமிங்கல எச்சம் விநியோகம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. தப்பி ஓடிய அந்த முக்கிய நபரைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.</p><h2>மும்பை<strong>-புனே சந்தைகள் இல</strong>க்கு</h2><p>போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட இந்த திமிங்கல எச்சம் மும்பை மற்றும் புனே போன்ற பெருநகரங்களின் சட்டவிரோத சந்தைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்ய கடத்தப்படவிருந்தது அம்பலமாகியுள்ளது.</p><h2>தொடரு<strong>ம் சோதனைக</strong>ள் </h2><p>இந்த நடவடிக்கைக்கு ஒரு நாளுக்கு முன்பாக, சிந்துதுர்க் மாவட்டம் குடால் பகுதியில் ரூ.2.4 கோடி மதிப்பிலான திமிங்கல எச்சத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்து நான்கு பேரை கைது செய்திருந்தனர். இரண்டு நாட்களில் மட்டும் மேற்கு மகாராஷ்டிர பகுதியில் சுமார் ரூ.7 கோடி மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p>ஸ்பெர்ம் திமிங்கலங்களின் செரிமான மண்டலத்தில் உருவாகும் இந்த மெழுகு போன்ற ஆம்பர்ஹ்ரிஸ் பொருள், விலையுயர்ந்த வாசனை திரவியங்களின் நறுமணம் நீண்ட நேரம் நிலைத்திருக்கப் பயன்படுகிறது. மேலும் சில நாடுகளில் நரம்பு மண்டலம் மற்றும் செரிமானக் கோளாறுகளுக்கான பாரம்பரிய மருந்துகளிலும் இது முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுவதால் சர்வதேச சந்தையில் இதற்கு பெரும் தேவை நிலவுகிறது.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய முதியவருக்கு நேர்ந்த கொடூரம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/elderly-man-back-from-america-cheated-in-india</link><comments>https://www.maalaimalar.com/news/national/elderly-man-back-from-america-cheated-in-india#comments</comments><guid isPermaLink="false">8a8166d2-fa7a-4cd3-9f52-cf71c18169be</guid><pubDate>Wed, 02 Sep 2026 09:02:58 +0000</pubDate><atom:updated>2026-09-02T09:02:58.212Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சைபர் மோசடி,Digital Arrest,Online Fraud,ஆன்லைன் மோசடி,வங்கி மோசடி,Mumbai Police,cyber scam,Senior Citizen Safety</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/bg5283kt/Cyber-Scam" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Cyber Scam ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/bg5283kt/Cyber-Scam?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D">குஜராத் </a>மாநிலம் சூரத் மாவட்டத்தின் பார்தோலி நகரைச் சேர்ந்தவர் பிரபுபாய் படேல் (82). இவர் கடந்த 1980 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்குச் சென்று மிசிசிப்பி மாகாணத்தில் குடியேறினார். </p><p>அங்கு பணிபுரிந்து ஓய்வு பெற்ற பிறகு, கடந்த 2007 ஆம் ஆண்டு தனது முதல் மனைவியுடன் பார்தோலி நகரில் வசித்து வருகிறார்கள். இவர்களது மூன்று பிள்ளைகளும் தற்போது அமெரிக்காவிலேயே வசித்து வருகின்றனர்.</p><p>கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி, பிரபுபாய் படேலின் வாட்ஸ்அப் எண்ணிற்கு "மும்பை காவல்துறை தலைமையகம்" என்ற பெயரில் ஒரு செய்தி வந்துள்ளது. அதைத் தொடர்ந்து அதே எண்ணில் இருந்து ஒரு அழைப்பும் வந்துள்ளது.</p><h2>ரூ.122 கோடி மோசடி புகார் என மிரட்டல்</h2><p>அழைப்பில் பேசிய ஒரு பெண், தான் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88">மும்பை </a>காவல்துறை அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். </p><p>பிரபுபாயின் ஆதார் விபரங்களைப் பயன்படுத்தி ஒரு வங்கி கணக்கு தொடங்கப்பட்டிருப்பதாகவும், அதன் மூலம் ரூ.122 கோடி அளவிற்கு சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் கூறி பிரபுபாயை மிரட்டியுள்ளார்.</p><p>மேலும், அவர் 'டிஜிட்டல் கைது' செய்யப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரது குடும்பத்தினரின் நடமாட்டங்கள் கண்காணிக்கப்படுவதாகவும்<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF"> சைபர் குற்றவாளிகள்</a> பயமுறுத்தியுள்ளனர். </p><p>காவல்துறைக்கு ஒத்துழைக்க மறுத்தால் அவரது வங்கி கணக்குகள் அனைத்தும் முடக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.</p><p>பின்னர், மற்றொரு நபர் தன்னை மும்பை உயர்காவல்துறை அதிகாரி என்று கூறிக்கொண்டு, "வழக்கில் இருந்து தப்பிக்க உடனடியாக பணத்தை ஏற்பாடு செய்யுங்கள். </p><p>விசாரணை முடிந்ததும் இந்த பணம் உங்களுக்கே திருப்பித் தரப்படும்" என்று நம்பும்படி பேசியுள்ளார்.</p><h3>11 நாட்களில் ரூ.2.96 கோடி பரிமாற்றம்</h3><p>பயந்துபோன பிரபுபாய் படேல், மோசடி கும்பல் கொடுத்த பல்வேறு வங்கி கணக்குகளுக்கு கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரையிலான இடைப்பட்ட 11 நாட்களில் மொத்தம் ரூ.2 கோடியே 96 லட்சம் பணத்தை பரிமாற்றம் செய்துள்ளார்.</p><p>ஆகஸ்ட் 31 ஆம் தேதி, பிரபுபாய் அமெரிக்காவில் இருக்கும் தனது மகன்களிடம் இந்த விபரங்களை போனில் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த மகன்கள், இது சைபர் மோசடி என்பதை உணர்ந்து உடனடியாக காவல்துறையை அணுகுமாறு தந்தைக்கு அறிவுறுத்தினர்.</p><h2>தீவிர விசாரணையில் சைபர் கிரைம் போலீஸ்</h2><p>பார்தோலி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வி.ஏ. செங்கல் தலைமையிலான போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். </p><p>சைபர் கிரைம் சிறப்புப் பிரிவினரும் இந்த விசாரணையில் களமிறக்கப்பட்டுள்ளனர்.</p><h2>சைபர் நிபுணர்களின் எச்சரிக்கை</h2><p>இதுகுறித்து <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">சைபர் குற்றப்பிரிவு நிபுணர்</a> பேராசிரியர் திரிவேணி சிங் கூறுகையில்:</p><p>"சட்ட அமலாக்க அமைப்புகளின் மீதான பயம் மற்றும் சைபர் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் முதியவர்களே இவர்களின் முக்கிய இலக்காக மாறுகிறார்கள். </p><p>எந்தவொரு அரசு அல்லது காவல் துறையும் போன் மூலம் யாரையும் கைது செய்யாது, விசாரணையின் பெயரில் பணத்தையும் கோராது. இதுபோன்ற அழைப்புகள் வந்தால் உடனடியாக இணைப்பைத் துண்டித்துவிட்டு காவல்துறையைத் தொடர்பு கொள்ள வேண்டும்." என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் நீக்கம்: தமிழக அரசு உடனடியாக தலையிட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dismissal-of-nlc-contract-workers-anbumani-ramadoss-urges-tamil-nadu-government-to-intervene-immediately</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dismissal-of-nlc-contract-workers-anbumani-ramadoss-urges-tamil-nadu-government-to-intervene-immediately#comments</comments><guid isPermaLink="false">af22cccf-1a66-44ea-a1b2-f638862a98de</guid><pubDate>Wed, 02 Sep 2026 08:56:50 +0000</pubDate><atom:updated>2026-09-02T08:56:50.366Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,NLC,என்எல்சி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/ebdwfl4r/Anbumaniramadoss0.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ் ]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/ebdwfl4r/Anbumaniramadoss0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பணியாற்றி வரும் தற்காலிக, ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிலைப்பு செய்வதற்காக  சிறப்புத் திட்டம் ஒன்றை உருவாக்கி  செயல்படுத்தும்படி என்.எல்.சி நிறுவனத்திற்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>நெய்வேலியில் உள்ள என்.எல்.சி நிறுவனத்தின்  1, 1ஏ, 2 ஆகிய  நிலக்கரி சுரங்கங்களின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வந்த  347 ஒப்பந்தத்  தொழிலாளர்கள் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அடுத்த சில வாரங்களில் மேலும் 713 பேரை பணி நீக்கம் செய்ய என்.எல்.சி நிர்வாகம் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. என்.எல்.சி நிறுவனத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் தொழிலாளர்களை எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் பணி நீக்கம் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.</p><h2><strong>பணி நீக்கம்</strong></h2><p>என்.எல்.சி நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தங்களை என்.எல்.சி நிறுவனம் ஒன்றன் பின் ஒன்றாக ரத்து செய்து வருகிறது. கடந்த  ஏப்ரல் மாதம் 15-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை  6 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த 11 ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு விட்டன. அதன் காரணமாக 347 தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.  நாளை, செப்டம்பர் 3-ஆம் தேதி இரு நிறுவனங்களின் இரு ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு 64 பேர் பணி நீக்கப்படவுள்ளனர்.  </p><p>நவம்பர் 16 ஆம்  தேதி வரை மொத்தம் 13 நிறுவனங்களின் 27 ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு மொத்தம் 1060 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்படவுள்ளனர். அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டால், அவர்களின் குடும்பங்கள்  வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் வாடும் நிலை உருவாகும். என்.எல்.சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிலைப்பு செய்யப்பட்டால் அவர்களுக்கு இந்த நிலை நேராது. வட இந்தியர்களை நிரந்தரப் பணிகளில் அமர்த்தும் என்.எல்.சி நிறுவனம் தமிழர்களை ஒப்பந்தத் தொழிலாளர்களாக மட்டுமே அமர்த்தி கொத்தடிமைகளாக நடத்துகிறது.</p><h2><strong>என்.எல்.சி நிறுவனம் தமிழ்நாட்டுக்கு தேவையில்லை</strong></h2><p>என்.எல்.சி நிறுவனம் நிலக்கரியை வெட்டி எடுத்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கோடிகளை லாபமாக ஈட்டி வருகிறது. அதற்கு அடிப்படை நிலங்கள் தான். ஆனால், என்.எல்.சி  நிறுவனத்திற்கு கோடிகளைக் கொட்டிக் கொடுக்கும் அந்த நிலங்களை வழங்கியவர்களுக்கு வேலை வழங்கப்படவில்லை. என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் வழங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களில் 1827 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது.</p><p>கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 25 ஆயிரம் குடும்பங்கள் மொத்தம் 37,256 ஏக்கர் நிலங்களை வழங்கியுள்ளன. அவற்றில் 23 ஆயிரத்திற்கும் கூடுதலான குடும்பங்களுக்கு இன்னும் வேலை வழங்கப்படாத நிலையில், நிலமே வழங்காத வட இந்தியர்களுக்கு நிரந்தர வேலைகள் வழங்கப்பட்டுள்ளன.  நிலம் கொடுத்த மக்களுக்கு வேலை கூட வழங்காமல் நன்றி மறந்த துரோக நிறுவனமாகவே என்.எல்.சி நிறுவனம் செயல்பட்டு வருவதற்கு இதுவே சான்றாகும். இது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தான் என்.எல்.சி நிறுவனம் தமிழ்நாட்டுக்கு தேவையில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சி கூறி வருகிறது.</p><p>என்.எல்.சி நிறுவனத்தின் இந்த அத்துமீறல்களையும்,  துரோகங்களையும் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.  உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு  பணி நீக்கப்பட்ட ஒப்பந்தத்  தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கச் செய்ய வேண்டும்.  அங்கு பணியாற்றி வரும் தற்காலிக, ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிலைப்பு செய்வதற்காக  சிறப்புத் திட்டம் ஒன்றை உருவாக்கி  செயல்படுத்தும்படியும் என்.எல்.சி நிறுவனத்திற்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.20,000 கோடி கிரிப்டோகரன்சி மோசடி: துபாயில் தலைமறைவாக உள்ள சுபாஷ் சர்மாவை நாடு கடத்த உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/topnews/india-rs-20000-crore-crypto-fraud-sc-says-extradite-main-accused-subhash-sharma</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/india-rs-20000-crore-crypto-fraud-sc-says-extradite-main-accused-subhash-sharma#comments</comments><guid isPermaLink="false">2d6ebebb-68e1-4894-af92-12896fb254dd</guid><pubDate>Wed, 02 Sep 2026 08:46:46 +0000</pubDate><atom:updated>2026-09-02T08:46:46.922Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>cryptocurrency scam,கிரிப்டோகரன்சி மோசடி,cryptocurrency fraud,உச்சநீதிமன்றம்,Subhash Sharma,Corvio Coin,கிரிப்டோகரன்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/pppb5n3q/crypto.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ cryptocurrency scam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/pppb5n3q/crypto.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய அளவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய ரூ.20,000 கோடி மதிப்பிலான கிரிப்டோகரன்சி மோசடி வழக்கில் முதன்மை குற்றவாளியான சுபாஷ் சர்மாவை உடனடியாக இந்தியாவுக்கு நாடு கடத்த மத்திய அரசு, சிபிஐ மற்றும் இமாச்சல பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><h2>2.5 லட்<strong>சம் முதலீட்டாளர்க</strong>ளை ஏமாற்றி துபாயில் தஞ்சம்</h2><p>இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த சுபாஷ் சர்மா, 'கோர்வியோ காயின்'  உள்ளிட்ட போலி டிஜிட்டல் நாணயங்கள் மற்றும் பொன்சி திட்டங்கள் மூலம் சுமார் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களை ஏமாற்றி பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி மோசடியில் ஈடுபட்டார். 2023-ஆம் ஆண்டு இந்த மோசடி தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்ததை அறிந்த முதன்மை குற்றவாளி <a href="https://www.maalaimalar.com/news/national/sco-summit-centre-for-security-threats-among-key-decisions-as-india-highlights">சுபாஷ் சர்மா</a>, உடனடியாக இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாகப் பாதுகாப்பாகத் தலைமறைவாக வாழ்ந்து வருகிறார்.</p><h2>சொத்துக<strong>ள் பறிமுதல்</strong> </h2><p>இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பார்டிவாலா மற்றும் கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த முக்கிய உத்தரவுகள்</p><p>*வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் சுபாஷ் சர்மாவை உடனடியாகக் கைது செய்து இந்தியாவுக்குக் கொண்டு வர மத்திய உள்துறை அமைச்சகம், சிபிஐ மற்றும் மாநில அரசு இணைந்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>*குற்றவாளி சுபாஷ் சர்மா மற்றும் அவருடைய உறவினர்களின் பெயர்களில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகள் அனைத்தையும் உடனடியாகப் பறிமுதல் செய்து முடக்க வேண்டும்.</p><p>*இந்த பிரம்மாண்ட நிதி மோசடி வழக்கை விரைவாகவும் பிரத்யேகமாகவும் விசாரித்து முடிக்க இமாச்சல பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஒரு சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும்.</p><p>இந்த கிரிப்டோகரன்சி மோசடி வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகள் கடந்த 2025-ஆம் ஆண்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். இதில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஒருவரின் ஜாமீன் மனுவை விசாரித்த போதே, தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி சுபாஷ் சர்மாவை நாடு கடத்த உச்சநீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தூய்மை பணியாளர்கள் போராட்டம்: உதயநிதி  கேள்விக்கு அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cleanliness-workers-protest-rajmohan-response-udayanidhi-question</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cleanliness-workers-protest-rajmohan-response-udayanidhi-question#comments</comments><guid isPermaLink="false">b468bf2e-9751-41a2-ac45-dacbafcc8783</guid><pubDate>Wed, 02 Sep 2026 08:19:52 +0000</pubDate><atom:updated>2026-09-02T08:19:52.879Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Udhayanidhi Stalin,உதயநிதி ஸ்டாலின்,தமிழக சட்டசபை,TN assembly,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/7w22dzce/udhay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Rajmohan- Udhayanithi stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/7w22dzce/udhay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில்  இன்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில்  எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்  பேசியதாவது:-</p><p>ஆளும் கட்சி தேர்தல் அறிக்கையில்  கொடுத்த முக்கியமான ஒரு வாக்குறுதி, தூய்மைப் பணியாளர்களுக்குப் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு. இந்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.</p><p>இன்றோடு சேர்த்து அவர்களுடைய போராட்டம் 15-வது நாளை எட்டியிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பாக சட்டப்பேரவையில் இந்த பிரச்சனை தொடர்பாக அரசின் கவனத்திற்கு நாங்கள் எடுத்து வரும்போது, அமைச்சர்கள், பள்ளிக்  கல்வித் துறை அமைச்சர்  விரைவில் இதற்கு ஒரு நல்ல தீர்வு ஏற்படும் என்று இந்த அவையில் பதில் சொல்லியிருக்கிறார்கள். </p><p>ஆனால் இதுவரைக்கும் எந்த முடிவும், சுமுகமான முடிவும் எட்டப்படவில்லை.</p><p>இந்தத் துறைக்கு பொறுப்பு வகிக்கக்கூடிய முதலமைச்சரை அவர்கள் நேரடியாகச் சந்தித்து கோரிக்கையை வைக்க வேண்டும் என்று  தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.</p><p>இன்றைய முதலமைச்சர் சென்ற ஆண்டு இதே மாதிரி <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/sanitation-workers-forcibly-arrested-while-attempting-to-lay-siege-to-the-chief-ministers-mla-office" rel="nofollow">தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்</a> பண்ணும்போது அவர்களுடைய கட்சி அலுவலகத்திற்கு அழைத்து வந்து அவர்களை எல்லாம் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.</p><p>எனவே என்னுடைய கோரிக்கை, நாங்கள் கேட்க விரும்புவது, அரசின் கவனத்திற்கு எடுத்து வருவது... தூய்மைப் பணியாளர்களுடைய கோரிக்கைகளை முதலமைச்சர் எப்போது நிறைவேற்றிக் கொடுப்பார்? தூய்மைப் பணியாளர்களைச் சந்தித்து முதலமைச்சர்  பேசுவாரா? </p><p>பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேசும்போது எங்கள் ஆட்சியில் 100 நாட்களை தாண்டிப் போராட்டம் நடைபெற்றது என்று சொன்னார்கள்.</p><p>இப்போது நீங்களும் 100 நாட்களைத் தாண்டும் வரை காத்திருக்கப் போகிறீர்களா? அந்த கேள்வியை நான் கேட்க விரும்புகிறேன் .</p><p>அதேபோல, எங்களுடைய ஆட்சியில் போராட்டம் நடந்தபொழுது எங்களுடைய அப்போதைய அமைச்சர்  சேகர்பாபு , மேயர் பிரியா அவர்களெல்லாம் தூய்மைப் பணியாளர்களை தொடர்ந்து சந்தித்து அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.</p><p>இப்போது  ஆட்சியில் இருக்கும்போது ஒரு அமைச்சர் கூட அந்த போராட்டக்களத்திற்கு யாரும் சென்று அவர்களை இதுவரைக்கும் சந்திக்கவில்லை. </p><p>ஆட்சியில் இல்லாதபோது  தூய்மைப் பணியாளர்களை சந்திக்க தயாராக இருந்த இன்றைய முதலமைச்சர்  இப்போது  தூய்மைப் பணியாளர்களை சந்திக்க மறுப்பது ஏன்?</p><p>இவ்வாறு  எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.</p><p>இதற்கு பள்ளி கல்வித்துறை <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/they-are-not-cleaners-they-are-cleanliness-angels-minister-rajmohan" rel="nofollow">அமைச்சர் ராஜ்மோகன்</a> பதில் அளித்ததாவது :-</p><p>அவர்கள் கேட்கும் கோரிக்கை நிதி சார்ந்து உள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் </p><p>100 நாட்களை தாண்டி போராடினார்கள்.</p><p>இந்த ஆட்சியில் இரண்டு முறை அவர்களை அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ளது. </p><p>கடந்த திமுக ஆட்சியில் அவர்கள் நடைபாதையில் அமர்ந்துதான் போராடினார்கள். ரிப்பன் மாளிகைக்கு உள்ளே கூட அனுமதிக்கவில்லை தற்போது ரிப்பன் மாளிகைக்கு உள்ளே அமர்ந்து தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.</p> <p>அவர்களது போராட்டத்திற்கு விரைவில் நல்ல தீர்வு காணப்படும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>நவம்பர் 8-ந்தேதி கொண்டாட்டம்: தீபாவளி சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு 6-ந்தேதி தொடக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/reservations-for-special-diwali-trains-begin-on-the-6th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/reservations-for-special-diwali-trains-begin-on-the-6th#comments</comments><guid isPermaLink="false">b1092479-4eaa-493e-91ab-b31790ec9ab7</guid><pubDate>Wed, 02 Sep 2026 08:07:13 +0000</pubDate><atom:updated>2026-09-02T08:07:13.438Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>special train,சிறப்பு ரெயில்,முன்பதிவு,Diwali,தீபாவளி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/gvhnkchu/train01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ ரெயில்]]></media:title><media:description type="html"><![CDATA[ ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/gvhnkchu/train01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தீபாவளி முன்பதிவுக்கு பயணிகள் தங்களை தயார் நிலையில் வைத்து கொள்ளுமாறு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</strong></em></p><p>இந்த ஆண்டு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF">தீபாவளி</a> பண்டிகை நவம்பர் 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. அதற்கு முந்தைய தினம் சனிக்கிழமை என்பதால் இந்த 2 நாட்கள் விடுமுறையில் அரசு ஊழியர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் வெளியிடங்களில் இருந்து நெல்லை உள்ளிட்ட தங்கள் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர்.</p><h2><strong>முன்பதிவு</strong></h2><p>தீபாவளியை ஒட்டி சொந்த ஊர்களுக்கு திரும்பும் பயணிகளுக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவுகள் வருகிற 6-ந்தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. ரெயில்களில் 60 நாட்களுக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறையின்படி, நவம்பர் 5-ந்தேதி அன்று சொந்த ஊர்களுக்கு திரும்ப விரும்புவோர், வருகிற 6-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். நவம்பர் 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து புறப்பட விரும்புவோர், வருகிற 7-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முன்பதிவு செய்து கொள்ள  வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/resolution-passed-in-california-legislature-to-celebrate-diwali">தீபாவளிக்கு</a> முந்தைய தினமான நவம்பர் 7-ந்தேதி பயணத்துக்கு தயாராக இருப்பவர்கள், வருகிற 8-ந்தேதி (செவ்வாய்கிழமை) அன்று முன்பதிவு செய்ய வேண்டும்.</p><p>தீபாவளியை ஒட்டி ஊர்களுக்கு திரும்ப விரும்புவோர் பெரும்பாலும் வருகிற 7 மற்றும் 8-ந்தேதிகளில் அதிகமாக முன்பதிவுகளை மேற்கொள்வர். எனவே தீபாவளி முன்பதிவுக்கு பயணிகள் தங்களை தயார் நிலையில் வைத்து கொள்ளுமாறு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><h2><strong>தீபாவளிக்கு மறுதினம் விடுமுறை</strong></h2><p>அதேபோல் மறுமார்க்கத்தில் தீபாவளி முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை, கோவை, பெங்களூரு போன்ற பெரு நகரங்களுக்கு செல்வோர் வரும் 9-ந்தேதி முதல் முன்பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். தீபாவளி முடிந்து மறுதினமே பணிக்கு செல்வோர், தீபாவளி தினமான நவம்பர் 8-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்றே புறப்பட வேண்டும். அதற்கு வருகிற 9-ந்தேதி முன்பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். தீபாவளி பண்டிகையை ஒட்டி கடந்த 2 ஆண்டுகளாக தீபாவளிக்கு மறுதினம் விடுமுறை அறிவிப்பது வழக்கமாக உள்ளது. </p><p>அதன்படி 9-ந்தேதி (திங்கட்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டால், அன்று மாலையில் பலர் நகரங்களுக்கு புறப்பட்டு செல்வர். அதன்படி நவம்பர் 9-ந்தேதி சொந்த ஊர்களில் இருந்து புறப்பட்டு செல்வோர், வருகிற 10-ந்தேதி (வியாழக்கிழமை) முன்பதிவு  செய்ய வேண்டும். தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் அதிகளவில் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வார்கள் என்பதால், முக்கிய ரெயில்களில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே இருக்கைகள் நிரம்ப வாய்ப்புள்ளது.  இதனால் பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டு டிக்கெட் முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பொன்னேரி ஜெயிலில் ஆய்வு- திருக்குறள் புத்தகம் வாசித்த கைதியை பாராட்டிய நீதிபதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ponneri-jail-inspection-judge-lauds-inmate-reading-thirukkural</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ponneri-jail-inspection-judge-lauds-inmate-reading-thirukkural#comments</comments><guid isPermaLink="false">5f277aff-9053-4842-8351-69b8ac525289</guid><pubDate>Wed, 02 Sep 2026 07:52:01 +0000</pubDate><atom:updated>2026-09-02T07:52:01.004Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Justice,திருக்குறள்,Thirukural,பொன்னேரி சிறை,நீதிபதி ஆய்வு,ponneri jail</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/96y6r3cg/justice.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chief District Judge Juliet Pushpa]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/96y6r3cg/justice.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பொன்னேரி கிளை சிறையில் திருக்குறள் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்த ஒரு கைதியை பார்த்து  மாவட்ட முதன்மை நீதிபதி ஜூலியட் புஷ்பா விசாரித்து பாராட்டினார். </p><p>பொன்னேரி கிளை சிறையில் மாவட்ட முதன்மை நீதிபதி ஜூலியட் புஷ்பா தலைமையில் முதன்மை சார்பு நீதிபதி மகேஸ்வரி, தலைமை குற்றவியல் நீதிபதி தீன தயாளன் (பொறுப்பு) மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நளினி தேவி ஆகியோர் அடங்கிய குழுவினர் திடீரென ஆய்வு செய்தனர்.</p><p>அப்போது கிளைச் சிறையில் கைதிகளுக்கு முறையான <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D" rel="nofollow">குடிநீர்</a>, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளதா? எனவும் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு சுகாதாரமான முறையில் வழங்கப்படுகிறதா? என்பது குறித்தும் கேட்டறிந்தனர்.</p><p>கிளைச் சிறைக்குள் கைதிகள் அடைக்கப்படும் அறைகளையும், கைதிகள் நேர்காணல் அறையையும் நேரில் சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து சிறைச்சாலையில் பராமரிக்கப்படும் கைதிகள் ஒப்படைப்பு பதிவேடு, பாரா பதிவேடு, சிறை பதிவேடு, ஆயுத அறை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். </p><p>சிறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள உணவு பொருட்களின் எடை உள்ளிட்டவற்றை ஆய்வு  செய்து கைதிகளுக்கு தேவையான சட்ட உதவிகள், கல்வி மருத்துவம் குறித்தும் கேட்டிருந்தனர்.</p><p>அப்போது திருக்குறள் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்த ஒரு கைதியை பார்த்து  மாவட்ட முதன்மை நீதிபதி ஜூலியட் புஷ்பா விசாரித்து பாராட்டினார். </p><p>ஜெயிலில் அனைவரும் புத்தகம் படிக்க வேண்டும், கைதிகள் தங்களது தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். இனி சிறைக்குள் வரக்கூடாது நல்ல மனிதனாக சமுதாயத்தில் வாழ வேண்டும், குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும், சட்ட உதவிகள் தேவைப்பட்டால் குழு வினரிடம் தெரிவிக்கவும் என்று நீதிபதி அறிவுரை வழங்கினார். </p><p>மேலும் அனைத்து கைதிகளிடம் குறைகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது கிளை சிறை கண் காணிப்பாளர் சசிகுமார் (பொறுப்பு) மற்றும் வழக்கறிஞர்கள் உடன் இருந்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் வாபஸ்:  திமுக குற்றச்சாட்டுக்கு சபாநாயகர் அளித்த பதில் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-speaker-reply-to-dmk-indictment</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-speaker-reply-to-dmk-indictment#comments</comments><guid isPermaLink="false">aab57c29-79eb-489a-b7a9-98ae69c914a1</guid><pubDate>Wed, 02 Sep 2026 07:48:30 +0000</pubDate><atom:updated>2026-09-02T07:48:30.116Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly,வழக்குகள் வாபஸ்,JCD Prabhakar,ஜேசிடி பிரபாகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/3jq7s1cr/JCDPrabhakar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் ]]></media:title><media:description type="html"><![CDATA[ சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/3jq7s1cr/JCDPrabhakar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>110 விதியின் கீழ் முதலமைச்சர் விதிப்படி தான் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதில் எந்த தவறும் கிடையாது என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழ்நாடு சட்டசபையில்</a> முதலமைச்சர் விஜய் இன்று  110 விதியின் கீழ் விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான கடந்த ஐந்து ஆண்டில் போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவது  தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டது தொடர்பாக  திமுக கொறடா எ.வ.வேலு  சில விளக்கங்களை கேட்டு எதிர்ப்பு தெரிவித்தார். </p><p>அவர் கூறுகையில் முதலமைச்சர் 110 விதியின் கீழ் மக்களுக்குத் தேவையான நலத்திட்டங்கள் மற்றும் கொள்கைகளை அறிவிப்பதை யாரும் மறுக்கவில்லை.</p><p>பொதுமக்களுக்கான நலத்திட்டங்களை அறிவிப்பதற்குப் பதிலாக, முந்தைய அரசு போட்ட <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-cases-registered-against-farmers-and-teachers-during-the-dmk-regime-withdrawn">வழக்குகளைத்</a> திரும்பப் பெறுவதாகக் கூறி, முந்தைய ஆட்சியின் மீது குற்றம் சாட்டும் வகையில் 110 விதியை அரசியல் உள்நோக்கத்துடன் பயன்படுத்துவது ஏற்புடையதல்ல.</p><p>சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவே காவல் துறை மூலம் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. எந்த ஒரு அரசுக்கோ அல்லது முதலமைச்சருக்கோ தனிப்பட்ட முறையில் விவசாயிகள் மீதோ அல்லது ஆசிரியர்கள் மீதோ எவ்வித காழ்ப்புணர்ச்சியும் இருக்க முடியாது.</p><p>இதுபோன்ற வழக்குகளைத் திரும்பப் பெறுவதாக 110 விதியில் அறிவிப்பதன் மூலம், இனி இந்த ஆட்சியில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வழக்கே பதிவு செய்யப்பட மாட்டாதா அல்லது நில எடுப்பு போன்ற பணிகளின் போது சட்டம்-ஒழுங்கை அரசு கண்டு கொள்ளாதா?</p><p> முந்தைய அரசைக் குறை கூறுவதற்காக 110 விதியைப் பயன்படுத்துவது சட்டமன்ற நடைமுறைகளுக்கு எதிரானது</p><p>இவ்வாறு எ.வ.வேலு கூறினார்.</p><p>இதற்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறுகையில், 110 விதியின் கீழ் முதலமைச்சர் விதிப்படி தான் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதில் எந்த தவறும் கிடையாது. வேண்டுமானால் 110 விதியின் கீழ் என்னென்ன அறிவிப்புகளை வெளியிடலாம் என்று பட்டியல் தரவா? என்று  சபாநாயகர் எதிர் கேள்வி எழுப்பினார்.</p>]]></content:encoded></item><item><title>அச்சரப்பாக்கம் அருகே நடுபழனி கோவிலில் மரகத முருகன் சிலை கொள்ளை - மர்ம கும்பல் துணிகரம்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/murugan-idol-stolen-from-nadu-palani-temple-near-acharapakkam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/murugan-idol-stolen-from-nadu-palani-temple-near-acharapakkam#comments</comments><guid isPermaLink="false">7270fb4c-dfcc-47dd-ab4a-4b243d8211fc</guid><pubDate>Wed, 02 Sep 2026 07:41:33 +0000</pubDate><atom:updated>2026-09-02T07:41:33.412Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Acharapakkam,nadu palani temple,முருகன் சிலை கொள்ளை,அச்சரப்பாக்கம்,நடுபழனி கோவில்,murugan statue stolen</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/bz96wkue/murugan1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கோவிலில் இருந்த மரகத முருகன்  சிலை - சிலை மாயமானதால் காலியாக உள்ள பீடம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/bz96wkue/murugan1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அச்சரப்பாக்கம் அருகே நடுபழனி கோவிலில் மரகத முருகன் சிலை திருடு போன சம்பவம் பக்தர்களை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.</p><h2>மரகத முருகர் சிலை</h2><p>செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் அடுத்த பெருங்கருணை கிராமத்தில் உள்ள கனக மலை குன்றின் மீது தண்டாயுதபாணி கோவில் உள்ளது. இங்கு முத்து சுவாமிகள் தண்டாயுத பாணி சிலையை நிர்மாணம் செய்து முருக வழிபாட்டில் ஈடுபட்டார்.</p><p>சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோவில் மற்றும் பழனியில் உள்ள முருகன் கோவிலுக்கும் நடுவில் இருப்பதால் இந்த கோவிலை முருக பக்தர்கள் நடுபழனி முருகன் கோவில் என்று அழைத்து வந்தனர். கோவிலில் சுமார் 3 அடி உயரத்தில் மூலவர் மரகத முருகர் சிலை இருந்தது.</p> <p>வளர்பிறை, சஷ்டி, கிருத்திகை பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் உள்ளிட்ட அனைத்து முக்கிய விசேஷ நாட்களிலும் சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்க பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கிறார்கள். கோவிலின் மேற்கு பகுதியில் சுமார் 50 அடி உயரத்தில் பிரமாண்ட முருகன் சிலையும் உள்ளது.</p> <p>இந்தக் கோவிலை உருவாக்கிய முத்து சுவாமிகள் முக்தி அடைந்த பின்னர் கோவிலின் நிர்வாகத்தினை பெருங்கருணை கிராம மக்களோடு இணைந்து கர்நாடக மாநிலத்தில் உள்ள ஸ்ரீ கணபதி சச்சிதானந்த சரஸ்வதி சுவாமிகள் அறக்கட்டளையின் கீழ் நிர்வகிக்க வழிவகை செய்ததாக கூறப்படுகிறது. கன ஸ்ரீ கணபதி சச்சிதானந்த சுவாமிகள் திருக்கருணை நடுபழனி தண்டாயுதபாணி கோவிலில் இருந்த கற்சிலையை நீக்கி விட்டு மரகத கல்லால் ஆன தண்டாயுதபாணி மூலவர் சிலை நிறுவப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வந்தன.</p>  <h2>தண்டாயுதபாணி சிலை</h2><p>இந்த நிலையில் நேற்று இரவு பூஜை முடிந்ததும் கோவிலை ஊழியர்கள் பூட்டி சென்றனர். இன்று காலை வழக்கம்போல் கோவிலை பூசாரி திறந்தபோது கருவறையில் இருந்த மூலவர் மரகத கல்லாலான தண்டாயுதபாணி சிலை திருடு போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.</p><p>இதுகுறித்து கோவில் நிர்வாகத்துக்கும், சித்தாமூர் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். </p><p>கோவிலின் பின்பக்க மலையின் வழியாக வந்து மர்ம கும்பல் இந்த கொள்ளையில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது. மூலவர் சிலை உள்ள இடத்தில் 3 கதவுகளின் பூட்டுகளை உடைத்து கைவரிசை காட்டி உள்ளனர். </p> <h2>போலீசார் விசாரணை</h2><p>கோவிலில் இருந்த உண்டியல் உடைக்கப்படவில்லை. விலை மதிப்பு இல்லாத மரகத முருகன் சிலையை மட்டும் குறிவைத்து கொள்ளையர்கள் இச்சம்பத்தில் ஈடுபட்டு உள்ளனர். கோவிலில் காவலாளி உள்ளார். அவர் கோவிலின் கீழ் பகுதியில் இருந்ததாக தெரிகிறது. இதனால் அவருக்கு கோவிலில் சிலை கொள்ளை போனது தெரியவில்லை. இன்று காலை தான் கோவிலுக்குள் கொள்ளையர்கள் புகுந்து சிலையை தூக்கி சென்று இருந்தது தெரிந்தது.</p><p>கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தபோது அதில் 2 கொள்ளையர்களின் உருவம் பதிவாகி இருந்தது. அதனை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.</p> <p>கோவில் மண்டபம் மற்றும் கருவறையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களின் வயர்களை துண்டித்து உள்ளனர். கோவிலின் பின்பக்கம் உள்ள கண்காணிப்பு கேமராவில் மட்டும் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி இருந்தன. </p><p>சம்பவ இடத்தை டி.எஸ்.பி.தீபக் ரஜினி பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கொள்ளை கும்பல் நீண்ட நாட்கள் திட்டமிட்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.</p><p>நடுபழனி கோவிலில் மரகத முருகன் சிலை திருடு போன சம்பவம் பக்தர்களை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வரும் 15-ந்தேதி முதல் டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம்: முதலமைச்சர் விஜய் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-digital-driving-licenses-from-the-15th-of-this-month</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-digital-driving-licenses-from-the-15th-of-this-month#comments</comments><guid isPermaLink="false">a3c2b27e-905a-47f6-a815-a3914cf3db76</guid><pubDate>Wed, 02 Sep 2026 07:32:46 +0000</pubDate><atom:updated>2026-09-02T07:32:46.567Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,ஓட்டுநர் உரிமம்,TN assembly,driving license</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/gxissycm/vijay.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/gxissycm/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மாநிலம் முழுவதும் 15.09.2026 முதல், ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ்கள் டிஜிட்டல் முறையில், அதாவது Digital Driving License மற்றும் Digital Registration Certificate வழங்கும் வசதி ஏற்படுத்தப்படும்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> முதலமைச்சர் விஜய் 110 கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-</p><p>நமது அரசு ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகத்தை உறுதிசெய்வதுடன், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் எளிமையான முறையில் மக்களைச் சென்றடையும் வகையில் தொடர்ந்து நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது.</p><p>தற்போது, தமிழ்நாட்டில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச்சான்று பெறுவதற்குக் கட்டணமாக 250 ரூபாய் விண்ணப்பதாரர்களால் செலுத்தப்பட்டு, சிப் (Chip) பொருத்தப்பட்ட அட்டைகளாக தபால் மூலம் விண்ணப்பதாரர்களின் முகவரிக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் விண்ணப்பதாரர்களுக்குக் கிடைப்பதற்கு ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை காலதாமதம் ஏற்படுகிறது.</p><p>இந்தக் காலதாமதத்தினால் பொதுமக்களுக்குப் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. இந்த காலதாமதத்தினைத் தவிர்க்கும் வகையில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச்சான்றிதழ் ஆகியவை Digital முறையில் பொதுமக்கள் தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளும் நடைமுறை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்படும்.</p><p>மாநிலம் முழுவதும் 15.09.2026 முதல், ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ்கள் டிஜிட்டல் முறையில், அதாவது Digital Driving License மற்றும் Digital Registration Certificate வழங்கும் வசதி ஏற்படுத்தப்படும்.</p><p>மின்னணு வாகனப் பதிவுச்சான்றிதழ் முறை (Digital RC) அறிமுகம் செய்வதன்மூலம், புதிய வாகனம் வாங்குவோர், வாகனப் பதிவை அதாவது, Digital RC–யை இணையம் வழியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதேபோன்று ஓட்டுநர் தேர்வில்  தேர்ச்சிபெற்ற விண்ணப்பதாரர்களுக்கு, அன்றைய தினமே ஓட்டுநர் உரிமம் டிஜிட்டல் முறையில் வழங்கப்படும்.</p><p>அரசு அலுவலகங்கள் மற்றும் பிற அதிகாரப்பூர்வ அமைப்புகள் QR code-ஐ scan செய்து மின்னணு முறையில் ஆவணங்களைச் சரிபார்க்க முடியும். இதன்மூலம் போலி ஆவணங்கள் தவிர்க்கப்படும். இந்த முறையினால், ஆவணம் தொலைந்தாலோ, சேதமடைந்தாலோ மீண்டும் பதிவிறக்கம் செய்துகொள்ளவும், அச்சிட்டுக்கொள்ளவும் முடியும்.</p><p>ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கும், வாகனத்தைப் பதிவு செய்வதற்கும், வாகனப்பதிவு புதுப்பித்தல் மற்றும் படிப்படியாக போக்குவரத்து சம்பந்தமான அனைத்து அலுவலக சேவைகளுக்கும் தமிழ்நாட்டில் எந்தவொரு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திலும் விண்ணப்பித்து “Anywhere Registration / Licensing” என்ற முறையில் வசதிகள் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும்.</p><p>இவ்வாறு முதலமைச்சர் விஜய் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>முதல்-மந்திரி, பிரதமர் பதவியில் 25 ஆண்டுகள்: மோடியின் பிறந்தநாளை ஒரு மாதம் கொண்டாட பாஜக-வினர் திட்டம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/25-years-as-prime-minister-one-month-nationwide-modi-birthday-celebrations</link><comments>https://www.maalaimalar.com/news/national/25-years-as-prime-minister-one-month-nationwide-modi-birthday-celebrations#comments</comments><guid isPermaLink="false">5fb2b9b4-b4c6-4a50-acd7-904078629891</guid><pubDate>Wed, 02 Sep 2026 07:26:18 +0000</pubDate><atom:updated>2026-09-02T07:26:18.207Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,pm modi,பிரதமர் மோடி,Vadnagar Varanasi Yatra,வாட்நகர் வாரணாசி யாத்திரை,Seva Jyothi Yatra,சேவா ஜோதி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/jw6tj4fx/PM-Modi" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/jw6tj4fx/PM-Modi?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF">பிரதமர் மோடி </a>தொடர்ச்சியாக 3-வது முறையாக பிரதமர் பதவி வகித்து வருகிறார்.</p><p>மத்தியில் காங்கிரசுக்கு எதிராக அசுர பலம் பெற்று அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில கட்சிகளோடு இணைந்தும், தனியாகவும் பாஜக வெற்றி பெற்று வருகிறது.</p><p>இதன் காரணமாகவும் பிரதமரின் தனிப்பட்ட செல்வாக்காலும் தொடர்ந்து பாஜக மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்து வருகிறது.</p><h2>25 ஆண்டுகள்</h2><p>2001-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை குஜராத் முதல்-மந்திரியாக பதவி வகித்துள்ள பிரதமர் மோடி 12 ஆண்டுகள் அந்த மாநிலத்தில் அசைக்க முடியாத தலைவராக திகழ்ந்தார்.</p><p>இதன் பின்னர் தேசிய அரசியலில் கால் பதித்த மோடி 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் ஆனார்.</p><p>இதன் பின்னர் நடைபெற்ற 2 தேர்தல்களிலும் பா.ஜனதா வெற்றிவாகை சூடியதை தொடர்ந்து பிரதமர் பதவியையும் அவர் தொடர்ச்சியாக வகித்து வருகிறார்.</p><p>இதன் மூலம் 12 ஆண்டுகளை கடந்து அவர் பிரதமர் பதவியில் நீடிக்கிறார். </p><p>இப்படி முதல்-மந்திரி மற்றும் பிரதமர் பதவியில் 25 ஆண்டுகள் பணியாற்றியதை கருத்தில் கொண்டு பிரதமர் மோடியின் பிறந்த நாளை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாட <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95">பாஜக </a>திட்டமிட்டுள்ளது.</p><h2>கால் நூற்றாண்டு</h2><p>நாட்டின் உயரிய பதவிகளில் கால் நூற்றாண்டு காலமாக பல்வேறு மக்கள் பணிகளை மேற்கொண்டு உலக அரங்கிலும் முக்கியத்துவம் வாய்ந்த தலைவராக பிரதமர் மோடி திகழ்ந்து வருகிறார்.</p><p>இந்த நிலையில் வருகிற 17-ந்தேதி பிரதமர் மோடி பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களிலும் நலத்திட்ட உதவிகள் மற்றும் யாத்திரைகள் நடத்தவும் பாரதீய ஜனதா தலைவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.</p><h2>ஆலோசனை</h2><p>இது தொடர்பாக தமிழக பாரதிய ஜனதா நிர்வாகிகள் திருச்சியில் இன்று ஆலோசனை நடத்தினார்கள். சமயபுரம் சுங்கச்சாவடி அருகில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்துக்கு மாநில தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">நயினார் நாகேந்திரன்</a> தலைமை தாங்கினார்.</p><p>தமிழக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.</p><p>முன்னதாக திருச்சி மாவட்ட தலைவர்கள் ஒண்டிமுத்து, அஞ்சாநெஞ்சன் ஆகியோர் வரவேற்றனர்.</p><p>இந்த கூட்டத்தில் முன்னாள் மாநில தலைவர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் அனைத்து மாவட்ட தலைவர்கள், பிரதமர் பிறந்தநாள் விழாவுக்காக பிரத்யேகமாக மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்ட 5 பேர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டனர்.</p><h2>அக்டோபர் 17-ந்தேதி வரை</h2><p>வருகிற 17-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் 17-ந்தேதி வரை பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளது. அப்போது ரத்ததான முகாம்கள், தூய்மை பணிகள் ஆகியவையும் மேற்கொள்ளப்பட உள்ளன.</p><p>பிரதமர் மோடியின் பிறந்த ஊரான குஜராத் மாநிலம் வாட்நகரில் இருந்து அவர் வெற்றி பெற்ற வாரணாசி தொகுதி வரை மோட்டார்சைக்கிள் பேரணி மற்றும் சேவா ஜோதி யாத்திரை ஆகியவை நடைபெற உள்ளது. இதற்காக 10 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.</p><p>பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நாடு தழுவிய அளவில் ஓவிய போட்டிகள், பேச்சு போட்டிகள் ஆகிய வையும் நடத்தப்பட உள்ளன.</p><h2>யாத்திரை தொடக்கம்</h2><p>ஒரே நாளில் வாட்நகர் மற்றும் வாரணாசி ஆகிய 2 இடங்களில் இருந்தும் ஒரே நாளில் 10 குழுவினர் இந்த யாத்திரை பயணத்தைத் தொடங்குகின்றனர்.</p><p>இந்த குழுக்களில் இடம் பெற்று இருப்பவர்கள் பல்வேறு மாநிலங்களுக்கும் பயணம் மேற்கொண்டு ஒரு மாதத்திற்கு பிறகு வாட்நகரை வந்து அடைவார்கள். அதே நேரத்தில் புறப்படும் குழு ஒரு மாத காலம் பயணம் மேற்கொண்டு வாரணாசியை சென்று அடையும்.</p><h2>100 கிலோ மீட்டர்</h2><p>வெளி மாநிலங்களுக்கு செல்லும் குழுவினர் தினமும் சுமார் 100 கி.மீ. பயணம் செய்யும் வகையில் திட்டமிடப்பட்டு உள்ளது. </p><p>இந்த பயணத்தின் போது மோட்டார் சைக்கிள் மற்றும் பேருந்துகளில் சென்று பிரதமர் மோடியின் சாதனைகளை பாஜக -வினர் மக்களிடம் கொண்டு சேர்க்க முடிவு செய்து இருக்கிறார்கள்.</p><p>மத்திய அரசு மற்றும் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் செயல்பாடுகள் ஆகியவற்றை பொதுமக்களோடு கலந்துரையாடு வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.</p><p>இதன் மூலம் அனைத்து மாநிலங்களிலும் பா.ஜனதா தலைவர்கள் பிரதமர் மோடியின் ஒரு மாத பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை தீவிரமாக தொடங்கி இருக்கிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>2029-ல் பிரதமர் யார்?- தவெக Vs காங்கிரஸ் இடையே முற்றும் வார்த்தை மோதல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-vijay-will-be-pm-in-2029-congresss-tharakai-katpat-counters-with-rahul-gandhi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-vijay-will-be-pm-in-2029-congresss-tharakai-katpat-counters-with-rahul-gandhi#comments</comments><guid isPermaLink="false">08489f79-3c83-4c2e-8888-c357261cf486</guid><pubDate>Wed, 02 Sep 2026 07:21:16 +0000</pubDate><atom:updated>2026-09-02T07:21:16.071Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கனிமொழி,Kanimozhi MP,பிரதமர் வேட்பாளர்,PM Candidate,தாரகை கத்பட்,Tharagai katpat</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/hwnjdq87/Congress.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TVK MLA Kanimozhi- Congress MLA Tharagai katpat]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/hwnjdq87/Congress.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2029ல் பிரதமர் வேட்பாளர் முதலமைச்சர் விஜய்தான். தளபதியை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்த ராகுல்காந்தி தான், பிரதமராகவும் அமர வைப்பார் என தவெக MLA கனிமொழி தெரிவித்துள்ளார்.</p><p>சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக வெற்றி கழக கவுண்டம்பாளையம் எம்எல்ஏ  கனிமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-</p><p>2029-ல் பிரதமர் வேட்பாளர் தலைவர் விஜய் தான். தளபதிதான். 2025-ல் நான் கணித்ததைப் போல 2026-ல் விஜய் முதலமைச்சரானார். 2026-ல் இப்போது  சொல்கிறேன் 2029-ல் தமிழகத்திலிருந்துதான் பிரதமர் உருவாகப் போகிறார் .</p><p>மேலும், 2029-ல் இந்திய அரசியலில் மாற்றம் நிகழப்போகிறது. பிரதமரை இனி டெல்லியில் இருந்து முடிவு செய்யப்போவது இல்லை. </p><p>ராகுல் காந்திதான் தளபதியை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்தார். அதேபோல் <a href="https://www.maalaimalar.com/news/national/fir-registered-against-rahul-gandhi-over-haldwani-purification-remarks" rel="nofollow">ராகுல் காந்தி</a>யே தலைவர் தளபதியை பிரதமராக அமர வைப்பார் </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><p>தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர்கள் ரசிகர் மன்ற மனப்பான்மையில் உள்ளனர் என சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர்  தாரகை கத்பட்  பேட்டி அளித்துள்ளார். </p><p>இதுகுறித்து தமிழக வெற்றி கழக எம்.எல்.ஏ  கனிமொழிக்கு பதில் அளிக்கும் வகையில் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் தாரகை கத்பட் கூறியதாவது:-</p><p>அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர் ராகுல் காந்திதான். முதலமைச்சர் விஜய் இதுவரை ராகுல் காந்திதான் பிரதமர் என்று கூறியுள்ளார்.</p><p>தற்போது உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் ரசிகர் மனநிலையில் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் தலைவரைத்தான் சொல்வார்கள் ராகுல் காந்திதான் பிரதமர்.</p><p>இதனால் காங்கிரஸ் தொண்டர்களுக்கு எந்த சோர்வும் கிடையாது. ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர். </p><p>காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமல்ல, இந்தியாவே இதுகுறித்து தெளிவாக இருக்கிறது என கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>தாய்லாந்தில் மது அருந்திவிட்டு பணம் செலுத்த தவறிய இளம்பெண்ணுக்கு ’’மொட்டை அடித்த’’ பார் நிர்வாகம் 
</title><link>https://www.maalaimalar.com/news/world/thailand-bar-shaves-customers-head-for-unpaid-alcohol-bill</link><comments>https://www.maalaimalar.com/news/world/thailand-bar-shaves-customers-head-for-unpaid-alcohol-bill#comments</comments><guid isPermaLink="false">bd75d37f-a17f-45ed-befe-300508b27914</guid><pubDate>Wed, 02 Sep 2026 07:07:45 +0000</pubDate><atom:updated>2026-09-02T07:07:45.336Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தாய்லாந்து,thailand,மொட்டை அடித்து,சமூக ஊடகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/659fggb9/Untitled-design.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Thailand girl]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/659fggb9/Untitled-design.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><strong>செலுத்தப்படாத கட்டணம், வாடிக்கையாளருக்கு மொட்டை அடிப்பு </strong></p><p>தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், மது அருந்திவிட்டு பணம் செலுத்தாத  காரணத்திற்காக வாடிக்கையாளரின் தலையை மதுபான விடுதி ஊழியர் ஒருவர் மழிக்கும் காட்சி கேமராவில் பதிவாகி அது  சமூக ஊடங்களில் வெளியான நிலையில் பெரும் விவாத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>நியூயார்க் போஸ்ட் பத்திரிகை அறிக்கையின்படி தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஆகஸ்ட் 25 அன்று, 18 வயதுப் பெண் ஒருவர் போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தி பிங்க்லாவ் பகுதியில் உள்ள ஒரு பிரபலமான மதுபான விடுதிக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது. </p><p>அவர் அங்கு உண்டு, குடித்து, சுமார் 60,000 தாய் பாட் (தோராயமாக $1,800 அமெரிக்க டாலர்) என்ற பெரிய தொகையை பில்லாகச் செலுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p><strong>காவல் துறையை அழைக்காமல் தாங்களே அத்துமீறல்</strong></p><p>குறிப்பாக அந்தப் பெண் பணம் செலுத்தாமல் வெளியேற முயல்வதை ஊழியர்கள் உணர்ந்த காரணத்தினால்  காவல்துறையை ஈடுபடுத்துவதற்குப் பதிலாக, அவர்கள் அந்த விஷயத்தைத் தாங்களே கையில் எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. </p><p>இந்த நிலையில் செலுத்தப்படாத கணக்கின் ஒரு பகுதியைத் தீர்ப்பதற்காக, முறைசாரா முடி வாங்கும் ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ளுமாறு பார் ஊழியர்கள் அந்த இளம் பெண்ணை வற்புறுத்தி இருக்கின்றனர்.</p> <p><strong>முடியை மழிக்க ஒப்புக்கொண்ட பெண் </strong></p><p>செலுத்தப்படாத கட்டணத்திற்காக தன்னுடைய முடியை மழிக்க அந்த பெண் ஒப்புக்கொண்டதாகவும் அதன்பிறகே மொட்டை அடித்தாகவும் பார் நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p>எலக்ட்ரிக் ‘ரேசர்’ மூலம் மொட்டையடிக்கப்பட்டதாகவும், அப்போது வீடியோ எடுத்த நபர், ‘நாங்கள் உன்னை ஏமாற்றவில்லை, தலைமுடிக்கு உரிய சந்தை விலையை பில் தொகையில் ஈடுகட்ட  கழிக்கிறோம்’ என்று பேசியுள்ளார். </p> <p><strong>வெளியில் கசிந்த வீடியோ</strong></p><p>பெண்ணிற்கு மொட்டை அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதையடுத்து, தாய்லாந்து சமூக மேம்பாடு மற்றும் மனித பாதுகாப்பு அமைச்சகம் இதுகுறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.</p><p>மேலும் சமூக வலைதளங்களில் குற்றவியல் வழக்குகளுக்கு பதிலாக இந்த தண்டனையின் மூலம் அவர் எளிதில் தப்பித்து விட்டதாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>வெளிநாட்டு தொடர்களில் மோசம்: விளக்கம் கேட்க கம்பீர், அகர்கர், லக்ஷ்மண் பிசிசிஐ-க்கு சம்மன்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/bcci-summons-gambhir-agarkar-and-laxman-to-review-india-dismal-away-form</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/bcci-summons-gambhir-agarkar-and-laxman-to-review-india-dismal-away-form#comments</comments><guid isPermaLink="false">8626fdd2-a9db-427c-aca5-c121afbdc605</guid><pubDate>Wed, 02 Sep 2026 06:54:37 +0000</pubDate><atom:updated>2026-09-02T06:54:37.083Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கவுதம் கம்பீர்,BCCI,Ajit Agarkar,அஜித் அகர்கர்,gambhir,vvs laxman,பிசிசிஐ</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/wwj6qum2/BCCI.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ BCCI]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/wwj6qum2/BCCI.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய டி20 அணி சமீபத்தில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சென்று விளையாடியது. அயர்லாந்துக்கு எதிரான தொடரை 0-2 என இந்தியா இழந்தது. அதன்பின் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகளில் கொண்ட தொடரில் 0-4 என இந்தியா தோல்வியடைந்தது.</p><h2>பிசிசிஐ ஆய்வு</h2><p>பின்னர், சில வீரர்கள் காயம் காரணமாக கேள்வி எழுப்பப்பட்டது. இதனால் அணியின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்ய பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளது.</p><p>இது தொடர்பாக பி.சி.சி.ஐ. கவுதம் கம்பீர், தேர்வுக்குழு கமிட்டி தலைவர் அஜித் அகர்கர், பெங்களூருவில் உள்ள COE தலைவர் லக்ஷ்மண் ஆகியோருக்கு பிசிசிஐ சம்மன் அனுப்பியுள்ளது.</p><p>இவர்கள் அனைவரும் மும்பை தலைமையத்திற்கு வர உள்ளனர். இவர்கள் எதிர்கால இந்திய அணியின் பயணம் குறித்து விவாதம் நடத்த இருக்கிறது.</p><p>பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா, ஏற்கனவே அயர்லாந்து, இங்கிலாந்து தொடரில் இந்தியா தோல்வி அடைந்தது குறித்து ஆய்வு செய்யப்படும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.</p><h2>16 தொடர் வெற்றிக்குப் பிறகு தோல்வி</h2><p>இந்தியா 16 தொடர்களில் இழக்காமல் வீறுநடை போட்டி சென்று கொண்டிருந்தது. ஷ்ரேயாஸ் தலைமையில் முதன்முறையாக அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சென்ற டி20 அணி தொடர்களை இழந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>புதிதாக 6 மாவட்டங்களில் நர்சிங் கல்லூரிகள் தொடங்கப்படும் - அமைச்சர் அருண்ராஜ்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/six-new-nursing-colleges-tamil-nadu-arunraj-announces</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/six-new-nursing-colleges-tamil-nadu-arunraj-announces#comments</comments><guid isPermaLink="false">b02e059b-fefc-4b91-996e-5636a7b544d0</guid><pubDate>Wed, 02 Sep 2026 06:53:03 +0000</pubDate><atom:updated>2026-09-02T06:53:03.473Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,அமைச்சர் அருண்ராஜ்,Minister Arunraj,Govt Nursing College,அரசு நர்சிங் கல்லூரி,270 Crore Allocation</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/7rel8u40/Minister-Arunraj" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Minister Arunraj ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/7rel8u40/Minister-Arunraj?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் 2014-க்கு பிறகு புதிய அரசு செவிலியர் கல்லூரிகளே இல்லாத நிலையில், 6 மாவட்டங்களில் புதிய கல்லூரிகள் தொடங்க <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D">அமைச்சர் அருண்ராஜ்</a> <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">சட்டசபையில் </a>அறிவித்துள்ளார். </p><p>முதல்வரின் விதி 110 அறிவிப்பின்படி 7 கல்லூரிகள், 270 கோடி ஒதுக்கீட்டில், 600 புதிய BSc நர்சிங் இடங்களுடன் வருகிறது.</p><h2><strong>புதிய செவிலியர் கல்லூரிகள்</strong></h2><p>இது குறித்து அமைச்சர் பேசியதாவது,</p><p>சென்னை, செங்கல்பட்டு, கடலூர், சேலம் மதுரை மற்றும் தேனி ஆகிய 6 மாவட்டங்களில் மட்டுமே அரசு செவிலியர் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. 2014ம் ஆண்டுக்குப் பிறகு புதிய செவிலியர் கல்லூரியில் தொடங்கப்படவில்லை. </p><p>மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை கருத்தில் கொண்டு முதலமைச்சர் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 110 கீழ் 7 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.</p><h2><strong>270 கோடி ஒதுக்கீடு</strong></h2><p>இந்திய செவிலியர் கவுன்சில் விதிமுறைகளின் படி ஒரு புதிய செவிலியர் கல்லூரி துவங்க போதிய படுக்கை வசதிகள் கொண்ட தேவையான மருத்துவ பிரிவுகள் கொண்ட போதிய புறநோயாளிகள் எண்ணிக்கை வெளிநோயாளிகள் எண்ணிக்கை, மகப்பேறு சேவை மற்றும் அதற்கு தேவையான கட்டுமானங்கள் அவசியம்.</p><p>மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளை இணைப்பு மருத்துவமனையாக கொண்டு புதிய செவிலியர் கல்லூரியில் துவங்கப்பட உள்ளன.</p><p>திருநெல்வேலி, திருச்சி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் தலா 100 இடங்கள் விதம் ஆண்டுக்கு மொத்தம் 600 பிஎஸ்சி நர்சிங் பட்டய இடங்கள் உருவாக்கப்படுகின்றன.</p><p>இந்த 6 செவிலியர் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் இருந்து நடத்திட தொடர் மற்றும் தொடரா செலவினமாக ரூ. 270 கோடி முன்மொழியப்பட்டுள்ளது.</p><h2>440 இடங்கள் கூடுதல்</h2><p>மேலும் கோயம்புத்தூர், ஈஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாநில அரசு நிதியில் 60 பிஎஸ்சி நர்சிங் இடங்களுடன் புதிய செவிலியர் கல்லூரி ஒன்றும் தொடங்க முன்மொழிவுபட்டது.</p><p>ஏற்கனவே உள்ள ஆறு பிஎஸ்சி நர்சிங் பணியிடங்கள் கொண்ட மருத்துவ செவிலியர் மருத்துவ கல்லூரியில் கூடுதல் இடங்கள், 440 கூடுதல் இடங்கள் உருவாக்கி இருக்கிறோம் எனக் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தொகுதிகளுக்கு அமைச்சர்களும் எங்களுடன் வந்தால் மக்கள் பிரச்சனைகள் தெளிவாக புரியும் - பிரேமலதா விஜயகாந்த்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/premalatha-vijayakanth-says-if-ministers-also-accompany-us-to-the-constituencies-they-will-clearly-understand-the-peoples-issues</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/premalatha-vijayakanth-says-if-ministers-also-accompany-us-to-the-constituencies-they-will-clearly-understand-the-peoples-issues#comments</comments><guid isPermaLink="false">d0d8d53b-d088-495b-b840-b02dc3cdef8c</guid><pubDate>Wed, 02 Sep 2026 06:41:49 +0000</pubDate><atom:updated>2026-09-02T06:41:49.931Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,பிரேமலதா விஜயகாந்த்,TN assembly,அமைச்சர் ரமேஷ்,Minister Ramesh</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/wgui0cgf/premalatha.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரேமலதா விஜயகாந்த்]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரேமலதா விஜயகாந்த்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/wgui0cgf/premalatha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நடப்பு சட்டசபை கூட்டத்தொடர் முடிந்த பிறகு உறுப்பினரோடு சேர்ந்து ஆய்வு செய்ய நான் தயாராக இருக்கிறேன் என அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> வினாக்கள் விடை நேரம் நடைபெற்று வருகிறது. முதலில் சுகாதாரத்துறை மற்றும் மின்சாரத்துறை தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். </p><p>அதனை தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் ரமேஷ் பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-</p><p>* திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் கோவிலுக்கு மண்டபமும், இலவச இருசக்கர வாகன நிறுத்தமும் ஏற்படுத்தி தர வேண்டும் என்று தவெக எம்எல்ஏ கோரிக்கை விடுத்தார். அதற்கு அமைச்சர் கூறுகையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரை கட்டணமில்லா இருசக்கர வாகன நிறுத்தம் வசதி இருந்தது. இதனால் பல சிக்கல்கள் ஏற்பட்டது. காவல்துறை தரப்பில் புகாரும் கூறப்பட்டது. இதுதொடர்பாக விரிவான ஆய்வினை மேற்கொண்டு கோவிலின் நிதி நிலைமையும் ஆலோசித்து உறுப்பினர் கூறிய கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றார். </p><p>* திருத்தணி முருகன் கோவிலில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை தேவை. செவ்வாய் கிழமை தோறும் காலை, மாலை என இருவேளையும் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை வழங்கி வழிபட அனுமதிக்க வேண்டும் என்று எம்எல்ஏ ஹாரி கோரிக்கை விடுத்தார். </p><p>இதற்கு பதில் அளித்த அமைச்சர் ரமேஷ், திருத்தணி கோவிலில் உள்ளூர் மக்களை அனுமதிப்பது தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் வந்துள்ளது. உள்ளூர் மக்களை அனுமதிப்பது தொடர்பாக அறங்காவலர் குழு தலைவரின் பரிந்துரைக்காக காத்துள்ளோம். இணையதளம் மூலமாக தரிசன டிக்கெட் பெறுவதற்கான இணையதளம், செயலிகளை உருவாக்கம் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். கூடிய விரைவில் இணையதள வசதிகள் வரும்போது உள்ளூர் மக்களுக்கான தரிசனத்திற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். </p><p>* விருத்தாசலம் என்றாலே கோவில் மாநகரம். விருத்தாசலத்தை கோவில் நகரமாக அறிவிக்க வேண்டும். விருத்தாசலம் தொகுதியில் நூற்றுக்கணக்கான கோவில்கள் சிதிலமடைந்து உள்ளது அதனை சீரமைக்க வேண்டும். கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். நாங்கள் எல்லாம் தொகுதிக்குள் போகும்போது துறை சார்ந்த அமைச்சர்கள் வந்தால் மக்களோடு சேர்ந்து அங்கு உள்ள பிரச்சனைகள் குறித்து நேரடியாக சொல்லும்போது உங்களுக்கு தெளிவாக புரியும். அமைச்சரும் எங்களோடு சேர்ந்து வரும் போது அந்த பணிகளும்சிறப்பாக செய்ய முடியும் என்பதை என் கருத்தாக கூறுகிறேன் என தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். </p><p>இதற்கு பதில் அளித்த அமைச்சர் ரமேஷ், உறுப்பினரின் கோரிக்கைகள் நிச்சயமாக பரிசீலனை செய்யப்பட்டு இந்த கூட்டத்தொடர் முடிந்த பிறகு உறுப்பினரோடு சேர்ந்து ஆய்வு செய்ய நான் தயாராக இருக்கிறேன். நிச்சயமாக ஆய்வு செய்து அனைத்து கோவில்களுக்கும் சிறப்பான முறையில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். </p><p>* தஞ்சை பெருவுடையார் கோவிலில் தினந்தோறும் அன்னதானம் வழங்க வேண்டும். அன்னதான திட்டத்தை தன்னார்வலர்களும் செய்ய முன்வரும் நிலையில், அந்த கோவிலில் அனுமதி மறுக்கப்படுகிறது. ஆகவே தங்கு தடை இல்லாமல் அன்னதானத்தை வழங்கும் வகையில் கோவிலின் பக்கவாட்டில் தமிழக அரசு கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய கட்டிடங்களை புனரமைத்து அதில் அன்னதான கூடத்தை அமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்தார். </p><p>இதற்கு பதில் அளித்த அமைச்சர் ரமேஷ், தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய பல்வேறு கோவில்களில் இந்த அன்னதான சேவையை விரிவுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைளை மேற்கொள்ள ஆய்வு செய்து வருகிறோம். கூடிய விரைவில் உரிய அனுமதி பெற்று அன்னதான திட்டம் மேலும் சிறப்பாக நடைபெறும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். </p>]]></content:encoded></item><item><title>நேபாளத்தில் சிக்கியவர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?- மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/hc-directs-centre-state-to-submit-detailed-report-on-rescue-of-missing-indians-in-nepal-floods</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/hc-directs-centre-state-to-submit-detailed-report-on-rescue-of-missing-indians-in-nepal-floods#comments</comments><guid isPermaLink="false">38213716-9de6-4fb6-a50c-b37af95c8c6f</guid><pubDate>Wed, 02 Sep 2026 06:32:31 +0000</pubDate><atom:updated>2026-09-02T06:32:31.699Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை உயர்நீதிமன்றம்,chennai highcourt,அறிக்கை தாக்கல்,report submit,nepal flood,நேபாளம் வெள்ளம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/tyvdlaje/Nepal-HC.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nepal flood- Chennai highcourt]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/tyvdlaje/Nepal-HC.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாள வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்களை மீட்க எடுத்த நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.</p><p>கும்பகோணத்தைச் சேர்ந்த சூப்பர் யாத்ரா டிராவல்ஸ் என்ற தனியார் பயண நிறுவனம் மூலம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 57 பேர் ஆகஸ்ட் 23-ந்தேதி கும்பகோணத்தில் இருந்து நேபாளத்திற்கு சென்றனர்.</p><p>ஆகஸ்ட் 26-ந்தேதி நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியுள்ளனர். இவர்களில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%90%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81" rel="nofollow">சென்னை ஐகோர்ட்டு</a> ஓய்வுபெற்ற நீதிபதி சிவஞானம் உள்ளிட்டோர் காணாமல் போயுள்ளனர். </p><p>நேபாளம் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 57 பேரில் மீட்கப்பட்டவர்கள், சிகிச்சை பெற்று வருபவர்கள், காணாமல் போனவர்கள் குறித்த விபரங்களை, அவர்களின் குடும்பத்தினருக்கு தெரிவிக்க உத்தரவிட வேண்டும். </p><p>மீட்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் எனக் கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த வக்கீல்  பர்வேஷ் முஷ்ரப், ஐகோர்ட்டு  மதுரை அமர்வில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.</p><p>இந்த வழக்கு, சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டு, தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.</p><p>அப்போது தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், தமிழகத்தில் இருந்து கைலாசத்துக்கு யாத்திரை சென்ற 305 பேரில், 220 பேர் மீட்கப்பட்டு, அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். </p><p>மீதமுள்ள 85 பேரை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஓய்வுபெற்ற <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/murugan-conference-made-foreigners-realize-what-thirumoor-said-chennai-high-court-judge-sivagnanam-735525" rel="nofollow">நீதிபதி சிவஞானம்</a> உள்பட காணாமல் போனவர்களின் குடும்பத்தினர், அரசு செலவில் காத்மாண்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.</p><p>இதையடுத்து, நேபாள வெள்ளத்தில் சிக்கி, காணாமல் போனவர்களை மீட்க எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்துள்ளனர்.</p>]]></content:encoded></item></channel></rss>