<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 18 Sep 2026 06:09:59 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 18 செப். 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-18-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-18-september-2026#comments</comments><guid isPermaLink="false">f7bc1909-9f6e-45cd-ab52-a2e557cf3a39</guid><pubDate>Fri, 18 Sep 2026 04:10:11 +0000</pubDate><atom:updated>2026-09-18T05:50:35.708Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/93e5ueb1/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live news]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/93e5ueb1/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-and-dharapuram-by-election-cm-vijay-campaign-4-days">மதுராந்தகம்-தாராபுரம் இடைத்தேர்தல்: முதலமைச்சர் விஜய் 4 நாட்கள் பிரசாரம்</a></p><p>* மதுராந்தகம், தாராபுரம் 2 தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் பிரசாரம் செய்ய திட்டமிட்டு இருக்கிறார். </p><p>* எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் பிரசார திட்டமும் தயாராகி வருகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/additional-special-buses-from-chennai-to-outstations">சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு  கூடுதல் சிறப்பு பேருந்துகள்- அரசு விரைவு போக்குவரத்து கழகம் ஏற்பாடு</a></p><p>* பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>*  சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/congress-mp-jothimani-writes-to-letter-finance-minister-charges-for-upi-merchant-transactions">யுபிஐ வணிக பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்: நிதியமைச்சருக்கு ஜோதிமணி கடிதம்</a></p><p>* ரெயில்வே, எரிபொருள் உள்ளிட்ட குறிப்பிட்ட பிரிவுகளில் ரூ. 2,000-க்கு மேல் ரூ.5 கட்டணம் விதிக்கப்படும்.</p><p>* நாடு முழுவதிலும் உள்ள சிறு வணிகர்கள், நெசவாளர்கள் மற்றும் சாதாரண மக்களைக் கடுமையாகப் பாதிக்கும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-asking-cm-vijay-going-to-do-for-tn-water-management">தமிழ்நாட்டின் நீர் மேலாண்மைக்காக முதலமைச்சர் விஜய் என்ன செய்யப் போகிறார் - அன்புமணி</a></p><p>* அனைத்து சாதிகளிலும் உள் ஒதுக்கீடு நிறைய உள்ளது.</p><p>* தண்ணீருக்காக நாம் அடுத்த மாநிலத்திடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறோம்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-sees-rapid-dengue-surge-with-over-200-daily-cases" rel="nofollow">தமிழகத்தில் வேகமாக பரவும் டெங்கு- தினமும் 200-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு</a></p><p>* மருத்துவமனைகளில் காய்ச்சல் வார்டுகளை அதிகரப்படுத்த உத்தரவு.</p><p>* இதுவரை 16,577 பேருக்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/irattaimalai-seenivasan-memorial-day-dmk-mp-kanimozhi-tribute" rel="nofollow">இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாள்: திமுக எம்பி கனிமொழி புகழஞ்சலி!</a></p><p>* 'திராவிட மணி' இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாள் இன்று.</p><p>* சமத்துவமும் சமூக நீதியும் தழைத்திட அயராது பாடுபட்ட அன்னாரின் நினைவைப் போற்றி வணங்குகிறேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-18-9-2026">GOLD PRICE TODAY: ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.145 உயர்ந்து ரூ.14,155-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/womens-cricket-india-japan-quarterfinal-today" rel="nofollow">பெண்கள் கிரிக்கெட்: கால் இறுதியில் இந்தியா- ஜப்பான் இன்று மோதல்</a></p><p>* போட்டியில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் நேரடியாக கால் இறுதியில் கால் பதித்தன.</p><p>*  அரை இறுதியில் இந்தியா-ஜப்பான் இடையிலான ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியை எதிர்கொள்ளும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/48-dead-from-poisonous-alcohol-in-nigeria" rel="nofollow">நைஜீரியாவில் விஷச்சாராயம் குடித்த 48 பேர் உயிரிழப்பு</a></p><p>* ஒண்டோ மாகாணத்தில் ஏராளமான பொதுமக்கள் வழக்கம்போல சாராயம் வாங்கி அருந்தியுள்ளனர்.</p><p>* விஷசாராயம் காய்ச்சிய முக்கிய நபர் உள்பட 15 பேரை அதிரடியாகக் கைது செய்தனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/amid-war-russia-parliament-election-begins-today" rel="nofollow">போர் சூழலுக்கு இடையே.. ரஷியாவில் நாடாளுமன்ற தேர்தல் இன்று தொடக்கம்</a></p><p>* உக்ரைன் உடனான போரில் ரஷியா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. </p><p>* புதின் தனது அதிகார பலத்தால் மீண்டும் நாடாளுமன்றத்தைக் கைப்பற்றுவது உறுதியாகிவிட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/governor-arlekar-granted-assent-to-12-bills-passed-in-legislative-assembly">சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 12 மசோதாக்களுக்கு ஆளுநர் அர்லேகர் ஒப்புதல்</a></p><p>* சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்களில் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார்.</p><p>* தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பான மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. </p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/student-bharathidasan-again-clarifies-overseas-scholarship-scheme-was-not-misused">அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தை தவறாக பயன்படுத்தவில்லை - மாணவர் பாரதிதாசன் விளக்கம்</a></p><p>* 2-ம் ஆண்டு படிப்பிற்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை என மாணவர் கூறுவது தவறானது.</p><p>* ஆராய்ச்சி செலவுகளுக்கான பில் அனைத்தும் ஆக.26-ந்தேதியே அனுப்பிவிட்டேன்.</p>]]></content:encoded></item><item><title>டெல்லியில் 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை: சிறார்கள் கைது</title><link>https://www.maalaimalar.com/news/national/16-year-old-girl-raped-and-murdered-in-delhi-minors-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/national/16-year-old-girl-raped-and-murdered-in-delhi-minors-arrested#comments</comments><guid isPermaLink="false">20bc33b5-9be7-4de3-a696-d968ef7ce761</guid><pubDate>Fri, 18 Sep 2026 06:06:57 +0000</pubDate><atom:updated>2026-09-18T06:06:57.437Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாலியல் வன்கொடுமை,சிறுமி கொலை,gang rape,delhi,டெல்லி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/ljd3357p/Untitled-design-5.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Delhi minor girl rape-murder case]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/ljd3357p/Untitled-design-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் 16 வயது சிறுமி ஒருவரை மூன்று சிறார்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், சிறார்கள் உட்பட 19 வயது இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF">டெல்லி</a> ஸ்வரூப் நகரில் உள்ள குஷக் சாலைக்கு அருகில் உள்ள ஒரு வயல் பகுதியில் சிறுமி ஒருவரின் சடலம் கிடப்பதாக ஞாயிற்றுக்கிழமை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. </p><p>இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலத்தின் வலது கை காணாமல் போயிருந்ததையும், முகம் மற்றும் வயிறு பகுதிகள் சிதைந்து இருந்ததையும் கண்டறிந்தனர்.</p><p>இதுகுறுத்து காவல்துறையினர் அதிகாரிகள் கூறுகையில், “சிறுமி இறந்து இரண்டு நாட்களே ஆகியிருந்தபோதிலும், அந்த உடல் மிக வேகமாக சிதைந்து கொண்டிருந்தது.</p><p>இது பெரும்பாலும் இயற்கை சீற்றங்களுக்கு உள்ளானதால் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. சிறுமியின் முகத்தை அடையாளம் காண முடியவில்லை.</p><p>மருத்துவ அறிக்கை பாலியல் வன்புணர்வை உறுதி செய்ததுடன், அவரது உடலில் எட்டு இடங்களில் காயங்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.</p><p>மேலும் உயிரிழந்த சிறுமி பலமுறை கத்தியால் குத்தப்பட்டிருந்ததாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.</p><p>இதையடுத்து கூடுதல் துணை காவல் ஆணையர் லோகேஸ்வரன் மற்றும் உதவி காவல் ஆணையர் ரவீந்தர் ஆகியோர் தலைமையிலான குழுவினர், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.</p><p>அப்போது சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டபோது, லாரி ஓட்டுநர் ஒருவரை விசாரணை செய்தனர். இதையடுத்து அந்த ஓட்டுநர் தனது 17 வயது தம்பி அந்த வாகனத்தை அடிக்கடி பயன்படுத்தி வருவதாக கூறினார்.</p><p>இதையடுத்து லாரியின் சிசிடிவி காட்சிகளை காவல் ஆணையர் ஷோபித் சக்ஸேனா தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்ததில், அந்த லாரிக்குள் நான்கு சிறுவர்கள் இருந்தது தெரியவந்தது.</p><p>இதைத்தொடர்ந்து 19 வயதான சிவம் கணேஷ் மற்றும் 18 வயதுக்கு கீழ் இருந்த மூன்று சிறார்களை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து, கொலைக்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு கத்திகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.100 கோடி லஞ்ச வழக்கு: விசாரணைக்கு அன்பில் மகேஷ் ஆஜர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-100-crore-bribery-case-anbil-mahesh-appears-for-inquiry</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-100-crore-bribery-case-anbil-mahesh-appears-for-inquiry#comments</comments><guid isPermaLink="false">b5bbb8aa-80f5-4c81-8764-d982da18aa9c</guid><pubDate>Fri, 18 Sep 2026 06:03:33 +0000</pubDate><atom:updated>2026-09-18T06:03:33.597Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>corruption case,பள்ளிக்கல்வித்துறை,anbil mahesh,Education Department,லஞ்ச வழக்கு,அன்பில் மகேஷ்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/36dxob7u/Anbil-mahesh.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anbil Mahesh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/36dxob7u/Anbil-mahesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ரூ.100 கோடி லஞ்ச வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முன் விசாரணைக்காக ஆஜரானார்.</p><p>சென்னை தியாகராயநகரில் செயல்படும் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/goondas-act-invoked-against-dmk-pt-arasakumar-rs-100-crore-collected-from-private-school-administrators" rel="nofollow">தனியார் பள்ளி</a> சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் கொடுக்கப்பட்டது.</p><p>அந்த புகார் மனுவில், தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி, ரூ.100 கோடி வரை பணம் வசூலித்து மோசடி நடந்துள்ளது என்றும், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.</p><p>இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். தி.மு.க. பிரமுகரான பி.டி.அரசகுமாரும், அவரது உறவினர்களான ஆரோக்கியராஜ், சுரேஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். </p><p>பி.டி.அரசகுமார் தனியார் பள்ளிகளின் சங்க நிர்வாகிகளை சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் வைத்தும், போரூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வைத்தும் சந்தித்து, பணம் வசூலித்ததாக தெரியவந்தது.</p><p>அதன் அடிப்படையில்தான் அவர் கைது செய்யப்பட்டார். அவர் குண்டர் சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில், இதுவரை 177 பேர் புகார் கொடுத்துள்ளனர். </p><p>250 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 61 வங்கிக்கணக் குகள் முடக்கப்பட்டு உள்ளன. இந்த வழக்கில் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமாரை போலீசார் தேடிவருகிறார்கள்.</p><h2>வழக்கு</h2><p>அவர் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க, அனைத்து விமான நிலையங்களுக்கும் 'லுக்-அவுட்' நோட்டீஸ் கொடுக் கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தற்போது, லஞ்ச ஊழல் வழக்காக மாற்றப்பட் டுள்ளது. திமுக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.</p><p>இதனையடுத்து நேற்று முன்தினம் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு தொடர்புடைய இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.</p><h2>சோதனை</h2><p>சென்னை, திருச்சியில் 9 இடங்களில் சோதனை நடத்தினார்கள். இதில் சொத்து ஆவணங்கள், வங்கி விவரங்கள், காசோலைகள் ஆகியவற்றுடன் சேர்த்து வழக்கு சம்பந்தமாக 118 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 18 செல்போன்கள், 3 மடிக்கணி னிகள், 8 பென்டிரைவ் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.</p><p>சோதனை முடிவில் 18-ந்தேதி (அதாவது இன்று) விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு போலீசார் சம்மன் வழங்கி சென்றனர். </p><h2>ஆஜர்</h2><p>இந்நிலையில், போலீசாரின் சம்மனின்படி வழக்கு விசாரணைக்காக சென்னை மத்தியக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் அன்பில் மகேஷ் இன்று ஆஜரானார்.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம்-தாராபுரம் இடைத்தேர்தல்: முதலமைச்சர் விஜய் 4 நாட்கள் பிரசாரம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-and-dharapuram-by-election-cm-vijay-campaign-4-days</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-and-dharapuram-by-election-cm-vijay-campaign-4-days#comments</comments><guid isPermaLink="false">fb1d4f14-ab10-4908-851f-1af56f88aaa5</guid><pubDate>Fri, 18 Sep 2026 05:48:35 +0000</pubDate><atom:updated>2026-09-18T05:48:35.692Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,by election,dharapuram,தாராபுரம்,மதுராந்தகம்,tvk,Madurantakam,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/jjgbv3ns/vijay08.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/jjgbv3ns/vijay08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதலமைச்சர் விஜய் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் தலா 2 நாட்கள் என 4 நாட்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இந்த இடைத்தேர்தலில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் த.வெ.க. இருப்பதால் முதலமைச்சர் விஜய்யின் பிரசாரம் அதற்கு கை கொடுக்கும் என்று கட்சி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.</strong></em></p><p>மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.</p><h2><strong>5 முனை போட்டி</strong></h2><p>2 தொகுதிகளிலும் த.வெ.க., தி.மு.க, அ.திமு.க, கம்யூனிஸ்டு கட்சிகள், நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. இதன் மூலம் இடைத்தேர்தலில் 5 முனைப்போட்டி நிலவுகிறது. மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. வேட்பாளராக பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ஜானகிராமன் ஆகியோர் களம் இறங்கி உள்ளனர். </p><p>தாராபுரத்தில் த.வெ.க. சார்பில் சத்தியபாமா, தி.மு.க. வேட்பாளராக சுகன்யா, அ.தி.மு.க. சார்பில் பானுமதி, இந்திய கம்யூனிஸ்டு சார்பில் லட்சுமணன், நாம் தமிழர் வேட்பாளராக கார்த்திகா ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.</p><h2><strong>தலைவர்கள்</strong> </h2><p>2 தொகுதிகளிலும் போட்டியிடுபவர்களின் இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாக உள்ளது. </p><p>இதை தொடர்ந்து வருகிற 20-ந்தேதிக்கு பிறகு (அடுத்த வாரம்) அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்து இருக்கிறார்கள்.</p><p>இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மேற்கொண்டு உள்ளனர். </p><h2><strong>முதலமைச்சர் விஜய்</strong></h2><p>முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்</a> மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் தலா 2 நாட்கள் என 4 நாட்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.</p><p>இந்த இடைத்தேர்தலில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் த.வெ.க. இருப்பதால் முதலமைச்சர் விஜய்யின் பிரசாரம் அதற்கு கை கொடுக்கும் என்று கட்சி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.</p><h2><strong>இடம் தேர்வு</strong></h2><p>மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் முதலமைச்சர் விஜய் பேசுவதற்காக பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.</p><p>தாராபுரத்தில் வருகிற 25-ந்தேதியும், அடுத்த மாதம் 2-ந்தேதியும் விஜய் பிரசாரம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தாராபுரம் உடுமலை சாலையில் உள்ள திருமலைபாளையம் பகுதியில் பொதுக்கூட்டத்தை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டு உள்ளது.</p><h2><strong>எதிர்பார்ப்பு</strong></h2><p>கடந்த சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் விஜய் பிரசாரம் மேற்கொண்ட போது அவரை பார்ப்பதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது. அவரது பிரசாரக் கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.</p><p>இந்த நிலையில் தான் தற்போது முதலமைச்சராக விஜய் தேர்தல் பிரசாரத்திற்கு செல்ல உள்ளார். இதையொட்டி 2 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.</p><p>த.வெ.க. ஆளும் கட்சியான பிறகு முதலமைச்சர் விஜய் பங்கேற்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் என்பதால் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.</p><h2><strong>மு.க.ஸ்டாலின்</strong></h2><p>தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் கம்யூனிஸ்டு தலைவர்களும் 2 தொகுதிகளிலும் பிரசாரத்திற்கு தயாராகி வருகிறார்கள்.</p><p>மதுராந்தகம், தாராபுரம் 2 தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் பிரசாரம் செய்ய திட்டமிட்டு இருக்கிறார். இதேபோன்று எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் பிரசார திட்டமும் தயாராகி வருகிறது.</p><h2><strong>எடப்பாடி பழனிசாமி</strong></h2><p>அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுராந்தகம் தொகுதியில் வருகிற 25, 26-ந்தேதிகளிலும் அடுத்த மாதம் 3-ந்தேதியும் பிரசாரம் செய்ய முடிவு செய்து உள்ளதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.</p><p>இதேபோன்று தாராபுரம் தொகுதியிலும் 2 நாட்கள் தங்கியிருந்து அவர் பிரசாரம் செய்ய இருக்கிறார்.</p><h2><strong>சீமான்</strong></h2><p>நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகிற 20-ந்தேதிக்கு பிறகு தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். 2 தொகுதிகளிலும் அவர் தங்கியிருந்து ஒரு வாரத்திற்கு மேல் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பேச உள்ளார்.</p><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் வீரபாண்டியன் ஆகியோரும் கம்யூனிஸ்டு கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட இருக்கிறார்கள்.</p><h2><strong>களை கட்டுகிறது</strong></h2><p>இப்படி இடைத்தேர்தல்களில் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட ஆயத்தமாகி வருவதால் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் தேர்தல் களம் களை கட்டுகிறது.</p><p>தங்களது கட்சித் தலைவர்களை வரவேற்பதற்காக அனைத்து கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முழுவீச்சில் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>யுபிஐ வணிக பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்: நிதியமைச்சருக்கு ஜோதிமணி கடிதம்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/congress-mp-jothimani-writes-to-letter-finance-minister-charges-for-upi-merchant-transactions</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/congress-mp-jothimani-writes-to-letter-finance-minister-charges-for-upi-merchant-transactions#comments</comments><guid isPermaLink="false">7ee6c6df-afc4-4d2e-ab58-1570fd9e7c60</guid><pubDate>Fri, 18 Sep 2026 05:38:09 +0000</pubDate><atom:updated>2026-09-18T05:38:09.419Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>நிர்மலா சீதாராமன்,UPI,யுபிஐ,nirmala Sitharaman,jothimani,ஜோதிமணி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/v9j90x1e/jothimani.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nirmala Sitharaman - Jothimani]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/v9j90x1e/jothimani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.4% கட்டணம் வசூலிக்கப்படும் என்ற புதிய அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கடிதம் எழுதி உள்ளார். </p><p>வணிக ரீதியில் 2000 ரூபாய்க்கு மேல் <a href="https://www.maalaimalar.com/news/national/upi-charges-to-be-04-for-some-payments-above-rs-2000-free-for-consumers">யுபிஐ கட்டணம்</a> செலுத்துபவர்களிடம் 0.4 சதவீதம் வசூலிக்கப்படும் எனவும், இந்த நடைமுறை அக்டோபர் 15-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.</p><p>யுபிஐ வணிக பரிவர்த்தனைக்கு 0.4 சதவீதம் கட்டணம் மூலம் ரூ. 5000-க்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும். ரூ.75,000-க்கு மேல் யுபிஐ பரிவர்த்தனை செய்தால் ரூ.300 கட்டணம் வசூலிக்கப்படும்.</p> <p>ரெயில்வே, எரிபொருள் உள்ளிட்ட குறிப்பிட்ட பிரிவுகளில் ரூ. 2,000-க்கு மேல் ரூ.5 கட்டணம் விதிக்கப்படும்.</p><p>தனி நபர்களுக்கு இடையிலான யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு எந்தக் கட்டணமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <p>இந்நிலையில் ரூ.2000-க்கு மேலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.4% கட்டணம் வசூலிக்கப்படும் என்ற புதிய அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய நிதியமைச்சர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D">நிர்மலா சீதாராமனுக்கு</a> காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கடிதம் எழுதி உள்ளார். அதில்,</p><p>அக்டோபர் 15 முதல் அமலுக்கு வரவுள்ள இந்த கட்டணம், நாடு முழுவதிலும் உள்ள சிறு வணிகர்கள், நெசவாளர்கள் மற்றும் சாதாரண மக்களைக் கடுமையாகப் பாதிக்கும். </p> <p>சிறு வணிகர்களின் நலனைக் காக்கவும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும், யுபிஐ அனைவருக்கும் கட்டணமற்ற சேவையாகவே தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளார்.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">₹2,000-க்கு மேல் உள்ள UPI பரிவர்த்தனைகளுக்கு 0.4% (MDR) கட்டணம் வசூலிக்கப்படும் என்ற புதிய அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தி, ஒன்றிய நிதியமைச்சர் திருமிகு. நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.<br><br> அக்டோபர் 15 முதல் அமலுக்கு வரவுள்ள இந்த கட்டணம், நாடு… <a href="https://t.co/GeKGI0WBGH">pic.twitter.com/GeKGI0WBGH</a></p>&mdash; Jothimani (@jothims) <a href="https://x.com/jothims/status/2100808374233497608?ref_src=twsrc%5Etfw">September 18, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு  கூடுதல் சிறப்பு பேருந்துகள்- அரசு விரைவு போக்குவரத்து கழகம் ஏற்பாடு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/additional-special-buses-from-chennai-to-outstations</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/additional-special-buses-from-chennai-to-outstations#comments</comments><guid isPermaLink="false">abe5b4e7-5813-4bf8-a48b-43bebe204a97</guid><pubDate>Fri, 18 Sep 2026 05:34:51 +0000</pubDate><atom:updated>2026-09-18T05:34:51.514Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு பஸ்கள்,TN Govt,தமிழக அரசு,special bus,வார விடுமுறை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/176b3d9b/Buskilampakkam.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ சிறப்பு பேருந்துகள்]]></media:title><media:description type="html"><![CDATA[ சிறப்பு பேருந்துகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/176b3d9b/Buskilampakkam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>வார இறுதியில் இன்று 7812 பயணிகளும், நாளை 4001  பயணிகளும் மற்றும் நாளை மறுநாள் 8946 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.</strong></em> </p><p>தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-</p><h2><strong>சிறப்பு பேருந்துகள்</strong></h2><p>வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழ்நாடு  முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக <a href="https://www.maalaimalar.com/topic/சிறப்பு-பஸ்கள்">சிறப்பு பேருந்துகள்</a> இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><h2><strong>கிளாம்பாக்கம்</strong></h2><p>சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று (18-ந்தேதி) 760 பேருந்துகளும், நாளை (19-ந்தேதி) 520 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. </p><p>சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று 18-ந்தேதி வெள்ளிக்கிழமை அன்று 115 பேருந்துகளும், நாளை (19-ந் தேதி) 115 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களில் இருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. </p><h2><strong>மாதவரம்</strong></h2><p>பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்தில் இருந்து 18 மற்றும் 19-ந்தேதிகளில் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு ஒவ்வொரு நாளும் 70 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் நாளை மறுநாள் (20-ந் தேதி) அன்று 805  சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில், இந்த வார இறுதியில் இன்று 7812 பயணிகளும், நாளை 4001  பயணிகளும் மற்றும் நாளை மறுநாள் 8946 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். </p><p>இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் TNSTC Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p>இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை  மேற்கொள்ள இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் வேகமாக பரவும் டெங்கு- தினமும் 200-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-sees-rapid-dengue-surge-with-over-200-daily-cases</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-sees-rapid-dengue-surge-with-over-200-daily-cases#comments</comments><guid isPermaLink="false">5b551e4f-1a82-493c-a5ac-f975f725beeb</guid><pubDate>Fri, 18 Sep 2026 05:30:49 +0000</pubDate><atom:updated>2026-09-18T05:30:49.737Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Dengue,health department,சுகாதாரத்துறை,Dengue action,டெங்கு காய்ச்சல்,டெங்கு பரவல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/fgbmsx5q/Dengue.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dengue]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/fgbmsx5q/Dengue.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் தினந்தோறும் 200 நபர்களுக்கு மேல் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர் என்று பொது சுகாதரத்துறை தெரிவித்துள்ளது.</p><p>தமிழ்நாட்டில் நேற்று ஒரு நாளில் மட்டும் டெங்கு காய்ச்சலால் 244 நாபர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.</p><p>இந்த ஆண்டில் மட்டும் இதுவர 16,577 பேருக்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்தவும், மருத்துவமனைகளில் காய்ச்சல் வார்டுகளை அதிகரப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.</p><h2>சென்னையில் அதிகம்</h2><p>சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சேலம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டின் நீர் மேலாண்மைக்காக முதலமைச்சர் விஜய் என்ன செய்யப் போகிறார் - அன்புமணி
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-asking-cm-vijay-going-to-do-for-tn-water-management</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-asking-cm-vijay-going-to-do-for-tn-water-management#comments</comments><guid isPermaLink="false">c6be4775-3fb2-459a-8cca-5967331eb2db</guid><pubDate>Fri, 18 Sep 2026 05:07:21 +0000</pubDate><atom:updated>2026-09-18T05:07:21.547Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Anbumani ramadoss,caste census,அன்புமணி  ராமதாஸ்,சாதிவாரி கணக்கெடுப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/ggt8kd91/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay - Anbumani Ramadoss]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/ggt8kd91/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீர் மேலாண்மை குறித்து கடந்த 60 ஆண்டு காலமாக ஆட்சி செய்த கட்சியினர் யாரும் சிந்திக்கவில்லை. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு  நீர் மேலாண்மையில் பின்தங்கி உள்ளது என்று அன்புமணி கூறினார்.</p> <h2>வன்னியா் இட ஒதுக்கீடு</h2><p>வன்னியா்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தில் பங்கேற்று உயிா்நீத்த 21 தியாகிகளின் நினைவை  போற்றும் வகையில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் பா.ம.க. சார்பில் வீரவணக்கம் செலுத்தும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.</p><h2>சாதிவாரி கணக்கெடுப்பு</h2><p>கூட்டத்தில் பா.ம.க தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> பங்கேற்று பேசியதாவது:-</p> <p>ஆண்டுதோறும் செப்டம்பர் 17-ந் தேதி தியாகிகளை நினைவூட்டி அவர்களை போற்றி வருகிறோம். போராட்டத்தில் இறந்தவர்கள் படித்தவர்கள் அல்ல. அவர்களால் இன்று நிறைய இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். இட ஒதுக்கீடு போராட்டத்தில் இறந்தவர்கள் பற்றி இன்று வரை மற்றவர்கள் யாரும் பேசவில்லை. </p><p>பா.ம.க. சார்பில் எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் ஆகியோர் முதலமைச்சராக இருந்தபோது பலமுறை சந்தித்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கேட்டோம். ஆனால் அவர்கள் அதனை நடத்த முன்வரவில்லை.</p> <h2>இடஒதுக்கீடு போராட்டம்</h2><p>தற்போது முதலமைச்சராக உள்ள விஜய் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என கூறியுள்ளார். 95 ஆண்டுகளாக காத்து கிடக்கும் எங்களுக்கு  <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-vows-to-build-social-justice-society-on-periyar-birthday">முதலமைச்சர் விஜய்</a> சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அனைத்து சாதிகளிலும் உள் ஒதுக்கீடு நிறைய உள்ளது. அதனால் சாதிவாரி கணக்கெடுப்பு தோல்வி அடையாமல் இருக்க முதலமைச்சர் விஜய் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இதனால் அதிகம் பயன்பெற போவது பட்டியல் இன பழங்குடியின மக்கள் தான்.</p> <p>இந்திய அளவில் 2 இட ஒதுக்கீடு மற்றும் தமிழ்நாட்டில் 4 இட ஒதுக்கீடு என 6 இட ஒதுக்கீடு பா.ம.க நடத்திய போராட்டத்தால் தான் கிடைத்தது.</p><h2>நீர் மேலாண்மை</h2><p>நீர் மேலாண்மை குறித்து கடந்த 60 ஆண்டு காலமாக ஆட்சி செய்த கட்சியினர் யாரும் சிந்திக்கவில்லை. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு  நீர் மேலாண்மையில் பின்தங்கி உள்ளது. தண்ணீருக்காக நாம் அடுத்த மாநிலத்திடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறோம். </p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கும் முதலமைச்சர் விஜய் தமிழ்நாட்டின் நீர் மேலாண்மைக்காக என்ன செய்யப் போகிறார். 2031-ல் நாம் ஆட்சிக்கு வர போகிறோம். அதற்கான சூழ்நிலைகள் நமக்கு அமைந்துள்ளது. எனவே கட்சியில் உள்ளவர்கள் அதனை நோக்கி கவனம் செலுத்த வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>100 ஆண்டுகளுக்கு த.வெ.க ஆட்சி தான் நடக்கும்- மதுரை ஆதீனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurai-adheenam-says-tvk-will-rule-for-100-years</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurai-adheenam-says-tvk-will-rule-for-100-years#comments</comments><guid isPermaLink="false">8065bef8-4b00-48a8-8536-dc5808ede3ad</guid><pubDate>Fri, 18 Sep 2026 05:02:59 +0000</pubDate><atom:updated>2026-09-18T05:02:59.921Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,மதுரை ஆதீனம்,Madurai Adheenam,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/pi3zbbx5/maduraiaadheenam.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/pi3zbbx5/maduraiaadheenam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>லஞ்சம் வாங்கவும் கூடாது, கொடுக்கவும் கூடாது என்று சொல்வதால் 100 ஆண்டுகளுக்கு த.வெ.க. ஆட்சி தான் தமிழகத்தில் நடக்கும் என்று காஞ்சிபுரத்தில் மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்தார்.</strong></em></p><p>காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் வில்வநாத ஈஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கூறியதாவது:-</p><h2><strong>விஜய் குறித்த வாழ்க்கை வரலாற்று நூல்</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/தவெக">த.வெ.க.</a> அரசு சிறப்பான முறையில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. லஞ்சம் வாங்கவும் கூடாது, லஞ்சம் கொடுக்கவும் கூடாது என்று சொன்ன முதலமைச்சர் விஜயை பாராட்டுகிறேன். திருச்செந்தூருக்கு வந்து தரிசனம் செய்து விட்டு நெற்றியில் திருநீறு இட்டுக் கொண்டார் முதல்வர். 100 ஆண்டுகள் வரை த.வெக. ஆட்சி தான் நடக்கும். இடைத்தேர்தல்களிலும் த.வெ.க. தான் வெற்றி பெறும். வரும் அக்.11 ஆம் தேதி மதுரை தமிழச்சங்கத்தின் சார்பில் முதலமைச்சர் விஜய் குறித்த வாழ்க்கை வரலாற்று நூல் வெளியிடப்படுகிறது. நூலை அடியேன் தான் வெளியிடவுள்ளேன்.</p><h2><strong>அனைவரும் சமம்</strong></h2><p>இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கோவில்களில் பல நல்ல சீர்திருத்தங்களை செய்து வருகிறார். இறைவனுக்கு முன்பு உயர்ந்தவர், தாழ்ந்தவர் இல்லை என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் சமம் என்று செயல்படுகிறார். கோவிலுக்குள் கைப்பேசி எடுத்து செல்வதை தவிர்த்திருப்பதும் வரவேற்கத்தக்கது.</p><p>மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. நான் காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்தவன் என்பதாலும், 6 மாதத்துக்கு முன்பே பிள்ளையார் பாளையம் வில்வநாத ஈஸ்வரர் ஆலய கும்பாபிஷேகத்துக்கு வருவதாக உறுதியளித்திருந்ததாலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க இயலவில்லை.</p><p>எங்கள் மடத்துக்கு அருகிலேயே மீனாட்சி அம்மன் கோவில் இருப்பதால் நான் தினசரி அம்மனை தரிசிப்பதும் வழக்கம் என்றார். </p>]]></content:encoded></item><item><title>இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாள்: திமுக எம்பி கனிமொழி புகழஞ்சலி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/irattaimalai-seenivasan-memorial-day-dmk-mp-kanimozhi-tribute</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/irattaimalai-seenivasan-memorial-day-dmk-mp-kanimozhi-tribute#comments</comments><guid isPermaLink="false">4ad6e1bf-5d2e-4724-88e7-b30355c554ae</guid><pubDate>Fri, 18 Sep 2026 04:26:01 +0000</pubDate><atom:updated>2026-09-18T04:26:01.888Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,Kanimozhi,கனிமொழி,இரட்டைமலை சீனிவாசன்,irattaimalai srinivasan</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/wiu7akxf/kanimozhi1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ irattaimalai srinivasan- Kanimozhi MP]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/wiu7akxf/kanimozhi1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சமூகப்போராளியும் திராவிட இயக்கத்தின் முன்னோடியுமான திராவிட மணி <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D" rel="nofollow">இரட்டை மலை சீனிவாசன்</a> நினைவு நாளான இன்நாளில் அவரது நினைவைப் போற்றி வணங்குகிறேன் என்று திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, உரிமை, அரசியல் பிரதிநிதித்துவத்திற்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்த சமூகப் போராளியும், திராவிட இயக்கத்தின் முன்னோடியுமான 'திராவிட மணி' இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாள் இன்று.</p><p>சமத்துவமும் சமூக நீதியும் தழைத்திட அயராது பாடுபட்ட அன்னாரின் நினைவைப் போற்றி வணங்குகிறேன்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY: ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்
</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-18-9-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-18-9-2026#comments</comments><guid isPermaLink="false">46d92f02-e748-4706-88ea-2504a09f5c29</guid><pubDate>Fri, 18 Sep 2026 04:23:28 +0000</pubDate><atom:updated>2026-09-18T04:23:28.647Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/11/01/20941600-gold3.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/11/01/20941600-gold3.webp?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தங்கம் விலை கிராமுக்கு ரூ.145 உயர்ந்து ரூ.14,155-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.</p><h2>தங்கம் விலை</h2><p>தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. </p><p>சென்னையில் கடந்த 12-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.1,13,360-க்கும், கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.14,170-க்கும் விற்பனையானது. 13-ந்தேதி சவரன் ரூ.1,13,360-க்கும், ஒரு கிராம் ரூ.14,170-க்கும் விற்பனையானது. 14-ந்தேதி சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.1,13,000-க்கும், கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.14,125-க்கும் விற்பனையானது. </p><p>15-ந்தேதி சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.1,12,320-க்கும், கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.14,040-க்கும் விற்பனையானது. 16-ந்தேதி சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.1,12,520-க்கும், கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.14,065-க்கும் விற்பனையானது. நேற்று சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.1,12,080-க்கும், கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.14,010-க்கும் விற்பனையானது. செய்யப்படுகிறது.</p> <h2>தங்கம் விலை உயர்வு</h2><p>இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்து ரூ.1,13,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.145 உயர்ந்து ரூ.14,155-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><h2>வெள்ளி நிலவரம்</h2><p>வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்</h2><p>17-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.112,080</p><p>16-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.112,520</p><p>15-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.112,320</p><p>14-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,000</p><p>13-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,360</p> <h2>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்</h2><p>1709-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>16-09-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>15-09-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>14-09-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>13-09-2026- ஒரு கிராம் ரூ.250</p> ]]></content:encoded></item><item><title>ஆசிய விளையாட்டு பெண்கள் கிரிக்கெட்: கால் இறுதியில் இந்தியா- ஜப்பான் இன்று மோதல்</title><link>https://www.maalaimalar.com/sports/womens-cricket-india-japan-quarterfinal-today</link><comments>https://www.maalaimalar.com/sports/womens-cricket-india-japan-quarterfinal-today#comments</comments><guid isPermaLink="false">ecb3848f-931e-42cb-bdc7-953d7295f969</guid><pubDate>Fri, 18 Sep 2026 04:03:59 +0000</pubDate><atom:updated>2026-09-18T04:03:59.079Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா,ஜப்பான்,பெண்கள் கிரிக்கெட் போட்டி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/xhn8lk7b/IND-vs-JPN.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ IND vs JPN]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/xhn8lk7b/IND-vs-JPN.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆசிய விளையாட்டு பெண்கள் கிரிக்கெட்டில் வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின. இன்று நடைபெறும் கால் இறுதியில் இந்தியா- ஜப்பான் மோதுகின்றன.</p><h2>பெண்கள் கிரிக்கெட்</h2><p>20-வது <a href="https://www.maalaimalar.com/sports/cricket/pakistan-bangladesh-womens-teams-enter-sf-in-asian-games" rel="nofollow">ஆசிய விளையாட்டு</a> போட்டி நாளை முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 4-ந் தேதி வரை ஜப்பானின் அய்ச்சி, நகோயா நகரங்களில் நடக்கிறது.</p><p>இந்த போட்டியின் அதிகாரபூர்வ தொடக்க விழா (நாளை) நடக்கும் முன்பே கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து உள்ளிட்ட சில போட்டிகள் தொடங்கி நடந்து வருகின்றன.</p><p>இதில் பெண்கள் கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் நேரடியாக கால் இறுதியில் கால் பதித்தன.</p><p>ஆல்-ரவுண்டராக ஜொலித்த பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா. இதன் முதலாவது கால் இறுதி ஆட்டத்தில் நிகார் சுல்தானா தலைமையிலான வங்காளதேச அணி, சீனாவை சந்திக்க இருந்தது. ஆனால் ஆட்டம் தொடங்கும் முன்பே மழை பலமாக கொட்டியது. இதனால் 'டாஸ்' போடப்படாமலேயே இந்த ஆட்டம் கைவிடப்பட்டது.</p><p>இருப்பினும் தரவரிசை முன்னிலை அடிப்படையில் வங்காளதேச அணி (10-வது இடம்) வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அரை இறுதிக்கு முன்னேறியது.</p><p>தரவரிசையில் 36-வது இடத்தில் இருக்கும் சீனா களம் இறங்காமலேயே நடையை கட்டியது. வங்காளதேச அணி, அரை இறுதியில் இந்தியா-ஜப்பான் இடையிலான ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியை எதிர்கொள்ளும்.</p><p>மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, தாய்லாந்தை சந்தித்தது. 'டாஸ்' ஜெயித்த பாகிஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. மழை பாதிப்பால் தாமதமாக தொடங்கியதால் போட்டி 11 ஓவர்கள் கொண்டதாக குறைக்கப்பட்டது.</p><h2>பாகிஸ்தான் வெற்றி</h2><p>முதலில் ஆடிய தாய்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 11 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 91 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நன்னாபத் கொஞ்சரோயென்காய் 49 ரன்கள் சேர்த்தார். பாகிஸ்தான் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பாத்திமா சனா 2 விக்கெட் வீழ்த்தினார்.</p><p>தொடர்ந்து ஆடிய பாகிஸ்தானும் தட்டுத்தடுமாறியே வெற்றி பெற்றது. அந்த அணி 10.4 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 92 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது. ஷவால் ஜுல்பிகர் 25 ரன்னும், கேப்டன் பாத்திமா சனா 21 ரன்னும் எடுத்து வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர்.</p><h2>இந்தியா-ஜப்பான் மோதல்</h2><p>இன்று நடைபெறும் கால் இறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, போட்டியை நடத்தும் ஜப்பானுடன் (காலை 10.30 மணி) மல்லுக்கட்டுகிறது.</p><p>கடந்த வாரம் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற கையோடு களம் காணும் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக இருக்கிறது. </p><p>பேட்டிங்கில் ஷபாலி வர்மா, ஸ்மிர்தி மந்தனாவும், பந்து வீச்சில் ஸ்ரீசரனி, தீப்தி ஷர்மா, நந்தினி ஷர்மாவும் நல்ல நிலையில் உள்ளனர். ஜப்பான் அணிக்கு உள்ளூர் சூழல் ஓரளவு அனுகூலமாக இருந்தாலும், பலம் வாய்ந்த இந்தியாவின் சவாலை சமாளிப்பது கடினம் தான்.</p><p>முன்னதாக நடக்கும் மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை-நூர் அரின்னா நாட்சயா தலைமையிலான மலேசியா அணிகள் (அதிகாலை 5.30 மணி) மோதுகின்றன.</p>]]></content:encoded></item><item><title>திருமண வரம் அருளும் புற்றுமாரியம்மன்</title><link>https://www.maalaimalar.com/spirituality/putru-mariyamman-worship</link><comments>https://www.maalaimalar.com/spirituality/putru-mariyamman-worship#comments</comments><guid isPermaLink="false">d063bba5-60e4-4c75-ab9b-a87a332991a9</guid><pubDate>Fri, 18 Sep 2026 03:43:06 +0000</pubDate><atom:updated>2026-09-18T03:43:06.818Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,திருமணம்,வழிபாடு,worship,marriage,Putru mariyamman,புற்றுமாரியம்மன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/248cxtoq/marriage.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Putru mariyamman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/248cxtoq/marriage.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடலூர் மாவட்டம் புவனகிரி அருகில் உள்ளது, இயற்கை எழில் கொஞ்சும் கிராமமான பு.முட்லூர். இங்கு சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த புற்றுமாரியம்மன் திருக்கோவில் உள்ளது. மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து சமயத்தினரும் இங்கு வந்து வழிபடுவது இக்கோவிலின் சிறப்பாகும். </p><p>இக்கோவிலில் உள்ள புற்றில் நாகம் உள்ளது. கோவிலில் புற்றுக்கு முன்னால் புற்றுமாரியம்மன் அருள்பாலிக்கிறார்.</p> <h2>திருமண மாங்கல்ய கட்டு</h2><p>இக்கோவிலின் முன்னால் ஒரு நாகக்கன்னி கோவில் உள்ளது. இங்கு, திருமணத்தடை உள்ளவர்கள், நாக தோஷத்தால் திருமணமாகாமல் இருப்பவர்கள், நாகதேவதைக்கு 'திருமண மாங்கல்ய கட்டு என்ற பிரார்த்தனை நடத்துகின்றனர். மஞ்சள் கயிற்றில் ஒரு துண்டு மஞ்சளை கட்டி, அதற்கு குங்குமம் வைத்து, பூ சாற்றி, அதை புற்றுமாரியம்மன் மடியில் வைத்து பிரார்த்தனை செய்து, அந்த திருமாங்கல்யத்தை கொண்டுவந்து நாக தேவதையிடம் மனமுருகி வேண்டி கட்டி செல்கின்றனர்.</p> <p>இவ்வாறு செய்வதால் விரைவில் திருமணம் நடைபெறுவதாக கூறப்படுகிறது. பின்னர் கோவிலுக்கு தம்பதியாக வந்து, நாக தேவதை மீது கட்டியிருந்த திருமாங்கல்யத்தை பூஜை செய்து கழட்டி எடுக்க வேண்டும். எப்பேர்ப்பட்ட திருமணத் தடைகளும் அம்மன் அருளால் விலகி திருமணம் நடைபெறுவதாக பக்தர்கள் மெய்சிலிர்க்க கூறுகின்றனர்.</p> <h2>வழித்துணையாக வரும் புற்றுமாரியம்மன்</h2><p>வெளிநாடு செல்பவர்கள், இங்குள்ள புற்றிலிருந்து மண் எடுத்து அதை புற்றுமாரியம்மன் மடியில் வைத்து பிரார்த்தனை செய்து தன்னுடன் எடுத்துச் செல்கின்றனர். அவர்கள் மீண்டும் தாய்நாடு திரும்பியவுடன், கோவிலுக்கு வந்து அந்த புற்று மணலை புற்று மாரியம்மனிடம் சமர்ப்பித்து விட்டு, அன்னையின் அருளால் தாங்கள் நல்லபடியாக தாயகம் திரும்பி விட்டோம் என்று நேர்த்திக்கடனை நிறைவேற்றும் விதமாக அபிஷேகம் செய்து வழிபட்டு செல்கின்றனர்.</p> <p>அதேபோல் வாகனங்களில் வெளியூர் பயணங்கள் மேற்கொள்வோர், இந்த ஆலயத்தின் முன் வாகனத்தை நிறுத்தி புற்றுமாரியம்மனை வணங்கிவிட்டு புற்று மணலை எடுத்து தங்கள் வாகனத்தில் வைத்துக்கொண்டு பயணம் மேற்கொள்கின்றனர். இதன்மூலம், தங்களுடன் வழித்துணையாக அம்மனே வருவதாக நினைத்து மனமுருகி செல்கின்றனர். மீண்டும் வீடு திரும்பியவுடன் அந்த மணலை இங்கு கொண்டு வந்து, அம்மனிடம் தாங்கள் பத்திரமாக வீடு திரும்பிவிட்டோம் என்று கூறி அதை வைத்து வழிபாடு நடத்துகின்றனர். இந்த வழிபாட்டை இப்பகுதி மக்கள் மட்டுமின்றி, வெளியூரிலிருந்து வாகனங்களில் வரும் பக்தர்களும் மேற்கொள்கின்றனர்.</p> <h2>பக்தர்கள் வீட்டிற்கு வரும் அன்னை</h2><p>ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் வெள்ளியன்று புற்றுமாரியம்மனுக்கு வெகுவிமரிசையாக ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. இந்த ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்கள் அதிகளவில் கலந்துகொண்டு சகல விதமான பிரச்சினைகளுக்கும் பிரார்த்திக்கின்றனர்.</p> <p>மேலும் அன்றைய தினம், நாள் முழுக்க விரதம் இருந்து 'ஓம் சக்தி பராசக்தி' என்ற அம்பிகையின் திருநாமத்தை மனதில் வேண்டி, மாலையில் இக்கோவிலுக்கு வந்து ஊஞ்சல் உற்சவத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பினால் அன்று இரவு தங்கள் வீட்டில் அம்மனின் கொலுசு சத்தம் கேட்குமாம். இதன்மூலம், அம்மனை மனமுருக வேண்டி விரதம் இருக்கும் பக்தர்களின் வீட்டிற்கு அம்மனே நேரில் வந்து அருள்புரிவதாக கூறுகின்றனர்.</p> <p>இங்கு பேச்சியம்மனுக்கும் தனிச்சன்னிதி உள்ளது. இந்த ஆலயத்தில் ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை அன்று தீமிதி திருவிழா நடைபெறும். இதில் வெளிமாவட்ட மக்களும் கலந்து கொள்கின்றனர். அம்மை நோயால் அவதிப்படுபவர்கள், இந்த அம்மனின் அபிஷேக தீர்த்தத்தை உடலில் தெளித்து, சிறிது உட்கொண்டால் அம்மை விரைவாக இறங்கி விடும் என்று கோவிலுக்கு வரும் பக்தர்கள் நம்பிக்கையோடு சொல்கின்றனர்.</p> <p>கோவில், காலை 6.30 மணி முதல் 9 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.</p><h2>அமைவிடம்</h2><p>சிதம்பரம் - கடலூர் பைபாஸ் சாலையில் சிதம்பரத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள பு.முட்லூரில் இக்கோவில் அமைந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கியா கேரன்ஸ் கிளாவிஸ் புது வேரியண்ட்கள் அறிமுகம் - விலை, முழு விவரங்கள்</title><link>https://www.maalaimalar.com/automobilenews/car/kia-carens-clavis-gets-two-new-automatic-variants</link><comments>https://www.maalaimalar.com/automobilenews/car/kia-carens-clavis-gets-two-new-automatic-variants#comments</comments><guid isPermaLink="false">306e534f-f28f-4f49-b9ef-932cfadb29c5</guid><pubDate>Fri, 18 Sep 2026 03:43:00 +0000</pubDate><atom:updated>2026-09-18T03:43:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Car,Kia India,கியா இந்தியா,கார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/odzznnts/Kia-Carens-Clavis.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kia Carens Clavis]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/odzznnts/Kia-Carens-Clavis.png?w=280" width="280"></media:thumbnail><category>கார் (Automobile)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/kia-india">கியா இந்தியா</a>, கேரன்ஸ் கிளாவிஸ் எம்பிவி மாடலில் இரண்டு புதிய என்ட்ரி லெவல் ஆட்டோமேட்டிக் வேரியன்ட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. </p><p>இந்த விரிவாக்கப்பட்ட சீரிசில், HTE (EX) மற்றும் HTE (O) டிரிம்களில் DCT உடன் கூடிய 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் மற்றும், HTE (O) டிரிம்மில் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் கூடிய 1.5-லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷனும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.</p><p>1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின், 7-ஸ்பீடு DCT டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 158bhp பவர் மற்றும் 253Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. </p><p>டீசல் மாடலைத் தேர்வு செய்பவர்களுக்கு, 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் கூடிய 1.5-லிட்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 114bhp பவர், 250Nm டார்க் உற்பத்தி செய்கிறது. </p><h2>கியா கேரன்ஸ் கிளாவிஸ் சிறப்பு அம்சங்கள்:</h2><p>புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மாடல்களில், மோஷன் சென்சார் கொண்ட ஸ்மார்ட் கீ, பட்டன் ஸ்டார்ட், டிரைவ் மோட்ஸ், EPB மற்றும் ரிமோட் என்ஜின் ஸ்டார்ட் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.</p><h2>கியா கேரன்ஸ் கிளாவிஸ் ஆட்டோமேடிக் விலைகள்:</h2><p>கியா கேரன்ஸ் கிளாவிஸ் HTE O பெட்ரோல் - ரூ. 14.66 லட்சம்</p><p>கியா கேரன்ஸ் கிளாவிஸ் HTE EX பெட்ரோல்- ரூ. 15.21 லட்சம்</p><p>கியா கேரன்ஸ் கிளாவிஸ் HTE O டீசல்- ரூ. 15.81 லட்சம்</p><h2>அதிக தேர்வுகளை வழங்கும்:</h2><p>இந்த அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்த கியா இந்தியாவின் விற்பனை பிரிவின் மூத்த துணை தலைவர் அதுல் சூட், “இந்திய வாடிக்கையாளர்கள் தங்களின் அன்றாடப் பயணங்களில் அதிக சௌகரியத்தையும் வசதியையும் விரும்புவதால், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்கள் அவர்களுக்கு ஒரு முக்கியத் தேர்வாக மாறி வருகின்றன.</p><p>கேரன்ஸ் கிளாவிஸ் வேல்யூ டிரிம்களில் புதிய ஆட்டோமேட்டிக் ஆப்ஷன்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் பவர்டிரெய்ன்கள் இரண்டிலும் இந்த வசதியை ஒரு பரந்த வாடிக்கையாளர் தளத்திற்கு நாங்கள் கிடைக்கச் செய்கிறோம்.</p><p>இந்த விரிவாக்கம், மாறிவரும் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், கியாவிடம் இருந்து வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் பிரீமியம் அனுபவம், நடைமுறைப் பயன்பாடு மற்றும் தொழில்நுட்பத்தில் சமரசம் செய்துகொள்ளாமல், அதிக தேர்வுகளை வழங்கும் எங்களின் வாடிக்கையாளர் மைய அணுகுமுறையைப் பிரதிபலிக்கிறது” என்றார்.</p>]]></content:encoded></item><item><title>கைமீறும் ஏ.ஐ. மாடல்கள்: தனக்குத்தானே கட்டளையிட்டு கொள்கின்றன - ஓபன்ஏஐ அதிர்ச்சி தகவல்</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/openai-flags-concerning-new-ai-behavior-vows-to-track-it-more-closely</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/openai-flags-concerning-new-ai-behavior-vows-to-track-it-more-closely#comments</comments><guid isPermaLink="false">67cc85e2-3775-4180-88ab-f4fdc5cec756</guid><pubDate>Fri, 18 Sep 2026 03:17:00 +0000</pubDate><atom:updated>2026-09-18T03:17:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஓபன்ஏஐ,OpenAI,AI,செயற்கை நுண்ணறிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/glqkmsjv/Open-AI.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ OpenAI]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/glqkmsjv/Open-AI.png?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/artificial-intelligence">செயற்கை நுண்ணறிவு</a> (AI) பாதுகாப்பு குறித்த விவாதங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஏ.ஐ. (AI) மாடல்களில் காணப்பட்ட "எதிர்பாராத அல்லது கவலைக்குரிய" செயல்பாடுகள் குறித்த ஆறு அறிக்கைகளை ஓபன்ஏஐ (OpenAI) வெளியிட்டுள்ளது.</p><p>"Misalignment" (அதாவது, மனிதர்களின் நோக்கங்களுக்கு அல்லது கட்டுப்பாடுகளுக்கு இணங்காமல் செயல்படுதல்) எனப்படும் நிகழ்வுகளை கண்காணிக்கவும், ஆராயவும் மற்றும் வெளிப்படுத்தவும் ஒரு புதிய கட்டமைப்பை அறிமுகப்படுத்துவதாக <a href="https://www.maalaimalar.com/topic/openai">ஓபன்ஏஐ</a> நிறுவனம் தெரிவித்தது. அங்கீகாரம் இன்றி செயல்படுதல், பிற ஏ.ஐ. மாடல்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல் அல்லது கண்காணிப்பை தவிர்த்தல் போன்றவையும் இதில் அடங்கும்.</p><h2>ஏ.ஐ. வளர்ச்சி வேகத்தை குறைக்க வேண்டும்:</h2><p>பாதுகாப்பு கவலைகள் காரணமாக ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் வேகத்தை குறைக்க வேண்டும் என்று ஓபன்ஏஐ மற்றும் அந்த்ரோபிக் (Anthropic) நிறுவனங்களின் தலைவர்கள் வலியுறுத்தி வரும் சூழலில், ஓபன்ஏஐ-இன் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><p>ஓபன்ஏஐ வெளியிட்ட புதிய நிகழ்வுகளில், வெளியிடப்படாத ஒரு ஆராய்ச்சி மாடல், தனது இயல்பான கட்டுப்பாடுகளை மீறுவதற்கான "jailbreak-போன்ற" (கட்டுப்பாடுகளை உடைக்கும்) வழிமுறைகளை தனது சொந்த குறிப்புகளில் சேர்த்துக்கொண்டது. அத்துடன், "பிற சாட்பாட்களை (chatbots) கட்டுப்படுத்தும் பாத்திரங்கள் மற்றும் அடையாளங்களில் இருந்து விடுபட வேண்டும்" என்றும் தனக்குத்தானே கட்டளையிட்டுக் கொண்டது.</p><h2>தனக்குத்தானே கட்டளையிட்டு கொண்டது:</h2><p>மற்றொரு நிகழ்வில், ஒரு AI "ஏஜென்ட்" ஒரு கேள்விக்கான பதிலை கண்டறிய கணினி குறியீட்டை பயன்படுத்தியது. ஆனால், மேற்கோள் காட்டுவதற்கு ஒரு இணையதள ஆதாரம் தேவைப்பட்டதால், பயனரின் அனுமதியின்றி ஒரு கோப்பை பொது இணையத்தில் பதிவேற்றியது.</p><p>'5.6-Sol' எனப்படும் AI மாடலை பயிற்றுவிக்கும்போது, ​​அது விடுபட்ட தரவுகளை தானே உருவாக்கிக்கொள்ளுமாறு தனக்குத்தானே கட்டளையிட்டு கொண்டது; மேலும், பொருந்தாத தகவல்களை மறைத்து வைக்குமாறு நினைவூட்டும் வகையில் ஒரு 'ஏஜென்ட்' செய்தியை எழுதியது.</p><p>இத்தகைய ஏமாற்றும் தன்மையிலான செயல்பாடுகளே, மனித கட்டுப்பாட்டில் இருந்து ஏ.ஐ. நழுவி செல்வது குறித்த சமீபத்திய கவலைகளை தீவிரப்படுத்தியுள்ளன. ஆனால், இந்த விளைவு சில ஏ.ஐ. ஆராய்ச்சியாளர்களுக்கு ஆச்சரியமளிக்கவில்லை என்று கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியரும் கிரே ஸ்வான் ஏ.ஐ. நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான மேட் ஃப்ரெட்ரிக்சன் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>நைஜீரியாவில் விஷச்சாராயம் குடித்த 48 பேர் உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/48-dead-from-poisonous-alcohol-in-nigeria</link><comments>https://www.maalaimalar.com/news/world/48-dead-from-poisonous-alcohol-in-nigeria#comments</comments><guid isPermaLink="false">51102185-6658-4e8f-889d-21423583ef18</guid><pubDate>Fri, 18 Sep 2026 03:14:58 +0000</pubDate><atom:updated>2026-09-18T03:14:58.074Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உயிரிழப்பு,dead,alcohol,Nigeria,விஷச்சாராயம்,Poisonous Liquor,நைஜீரியா</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/h1vnu4pf/Nigeria2.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nigeria ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/h1vnu4pf/Nigeria2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நைஜீரியாவில் விஷச்சாராயம் குடித்த 48 பேர் பலியாயினர். அதனை காய்ச்சிய 15 நபர்களை போலீசார் கைது செய்தனர்.</p><h2>மலிவு விலை சாராயம்</h2><p>ஆப்பிரிக்க நாடான <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE" rel="nofollow">நைஜீரியா</a>வில் வறுமை மற்றும் பொருளாதார காரணங்களால், அரசு அங்கீகாரம் பெற்ற மதுபானங்களை வாங்க முடியாத நடுத்தர மற்றும் ஏழை மக்கள், உள்ளூர் அளவில் சட்டவிரோதமாக காய்ச்சப்படும் மலிவு விலை சாராயங்களை வாங்கி அருந்துவது வழக்கமாக உள்ளது.</p><p>இத்தகைய சாராயங்களில் வீரியத்தை அதிகரிக்க ஆபத்தான வேதிப்பொருட்களைக் கலப்பதால், விஷச்சாராயமாக மாறி அவ்வப்போது உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. இந்தநிலையில், நைஜீரியாவின் தெற்கு பகுதியில் உள்ள ஒண்டோ மாகாணத்தில் ஏராளமான பொதுமக்கள் வழக்கம்போல சாராயம் வாங்கி அருந்தியுள்ளனர்.</p><h2>48 பேர் பலி</h2><p>ஆனால், அவர்கள் குடித்த சாராயத்தில் உயிருக்கு ஆபத்தான 'மெத்தனால்' என்ற நச்சு வேதிப்பொருள் கலக்கப்பட்டு அது விஷசாராயமாக மாறியது பின்னர் தெரியவந்தது.</p><p>அவர்கள் விஷசாராயம் அருந்திய சில மணி நேரங்களிலேயே பலருக்கு கடுமையான வயிற்று வலி, கண் பார்வை மங்குதல், மூச்சுத்திணறல் மற்றும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.</p><p>நச்சு கலந்த இந்த விஷச்சாராயத்தைக் குடித்தவர்களில் இதுவரை 48 பேர் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, பல்வேறு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>போலீசார் தீவிர விசாரணை</h2><p>இது குறித்து அந்த மாகாண சுகாதாரத்துறை ஆணையர் பன்ஜி அஜாகா கூறுகையில், "இந்த விஷசாராயத்தைக் குடித்தவர்களின் சிறுநீரகம், மூளை மற்றும் கண்கள் மிக வேகமாகப் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு நேர்ந்துள்ளது. </p><p>இதுவரை மொத்தம் 182 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்" என தெரிவித்தார்.</p><p>இந்த சம்பவம் தொடர்பாக நைஜீரிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி, விஷசாராயம் காய்ச்சிய முக்கிய நபர் உள்பட 15 பேரை அதிரடியாகக் கைது செய்தனர்.</p><p>இந்த விஷச்சாராய மரணங்கள் நைஜீரியா நாடு முழுவதும் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 12 மசோதாக்களுக்கு ஆளுநர் அர்லேகர் ஒப்புதல்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/governor-arlekar-granted-assent-to-12-bills-passed-in-legislative-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/governor-arlekar-granted-assent-to-12-bills-passed-in-legislative-assembly#comments</comments><guid isPermaLink="false">0b0d0b3e-b359-4366-8382-00d5703ac3b9</guid><pubDate>Fri, 18 Sep 2026 03:01:30 +0000</pubDate><atom:updated>2026-09-18T03:01:30.923Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,bills passed,ஆளுநர் அர்லேகர்,TN Governor Arlekar,மசோதா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/7u6hw2m5/tngovernor.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Governor Arlekar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/7u6hw2m5/tngovernor.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக வெற்றிக்கழக அரசின் முதல் சட்டசபை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட 12 மசோதாக்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழக சட்டசபை</a> முழு பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆக.5-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் 2026-2027-ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டும், ஆக.6-ந்தேதி வேளாண்மை பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன.</p> <p>அதன் பின்னர், பட்ஜெட் மீதான விவாதமும், துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதமும் நடைபெற்றன. இந்த விவாதத்துக்கு அந்தந்த துறையை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர். செப். 8-ந்தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில், கடைசி நாளில் 13 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.</p> <p>இந்த மசோதாக்களில் தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டத்தில், மாநிலத்தில் உலகத் தரத்திலான தனியார் பல்கலைக்கழகங்களை அமைப்பதை எளிதாக்கும் வகையில், அவற்றுக்கான குறைந்தபட்ச நிலத் தேவையை 100 ஏக்கரில் இருந்து மண்டலங்களுக்கு ஏற்ப (சென்னையில் 12 ஏக்கர், பிற மாநகராட்சிகளில் 18 ஏக்கர், இதர பகுதிகளில் 25 ஏக்கர்) குறைக்கவும், நிரந்தர வைப்பு நிதியை ரூ. 50 கோடியில் இருந்து ரூ. 25 கோடியாக குறைக்கவும் சட்டத்திருத்தம் செய்யப்பட்டது.</p> <p>விவசாய விளைபொருள் சந்தைப்படுத்துதல் (ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம், அரசுப் பணியாளர் தேர்வாணையம் (கூடுதல் பணிகள்) திருத்தச் சட்டம், தமிழ்நாடு நிதி ஒதுக்கீட்டுச் சட்டம், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் திருத்த மசோதா, ஊராட்சிகள் 2-ம் சட்ட திருத்த மசோதா, வணிக எளிதாக்கல் திருத்த மசோதா, மதிப்புக்கூட்டு வரி திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.</p> <p>மொத்தமாக நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்களில் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார்.</p><p>சட்டசபையில் அதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளில் எதிர்ப்பை சந்தித்த நகர் ஊரமைப்பு மசோதா, எம்எல்ஏக்களுக்கு கார் வழங்குவது, டாஸ்மாக் மதுபானங்களுக்கு மதிப்பு கூட்டு வரி விதிக்கும் மசோதாவிற்கும் ஆளுநர் ஒப்புதல் வழங்கி உள்ளார்.</p> <p>தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பான மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. </p><p>ஒப்புதல் அளிக்கப்பட்ட <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-session-started">மசோதாக்கள்</a>, தற்போது சட்டங்களாகிவிட்டன. அவை அனைத்தும் கடந்த செப். 15-ந்தேதியிட்ட தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>போர் சூழலுக்கு இடையே.. ரஷியாவில் நாடாளுமன்ற தேர்தல் இன்று தொடக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/world/amid-war-russia-parliament-election-begins-today</link><comments>https://www.maalaimalar.com/news/world/amid-war-russia-parliament-election-begins-today#comments</comments><guid isPermaLink="false">336b0af4-c9f4-4468-9613-720f60c29909</guid><pubDate>Fri, 18 Sep 2026 02:33:34 +0000</pubDate><atom:updated>2026-09-18T02:33:34.778Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>புதின்,ரஷியா போர்,Parliament election,நாடாளுமன்ற தேர்தல்,puthin,russia war</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/wbou96fn/russia1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Russia president Puthin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/wbou96fn/russia1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உக்ரைன் உடனான போரில் ரஷியா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. உக்ரைனின் டிரோன் தாக்குதல்களால் ரஷியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிக்கப்பட்டு, அந்நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. </p><p>இந்த இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியிலும், ரஷியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 3 நாட்களுக்கு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.</p><p>அதிபர் புதினின் 'யுனைடெட் ரஷியா' கட்சிக்கு இந்த தேர்தலில் 100 சதவீத வெற்றி வாய்ப்பு உறுதியாகி இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.</p><p>ஏனெனில், போருக்கு எதிராகக் குரல் கொடுத்த ஒரே எதிர்க்கட்சியான 'யப் லோகோ' கட்சியின் அங்கீகாரத்தை கோர்ட்டு மூலம் புதின் அரசு அதிரடியாக ரத்து செய்தது.</p><p>மேலும், போரை விமர்சித்த முக்கிய தலைவர்கள் சிறையிலடைக்கப்பட்டும், நாட்டைவிட்டு விரட்டப்பட்டும் முடக்கப்பட்டுள்ளனர். </p><p>மக்களின் அதிருப்தி ஒருபுறம் இருந்தாலும், புதின் தனது அதிகார பலத்தால் மீண்டும் நாடாளுமன்றத்தைக் கைப்பற்றுவது உறுதியாகிவிட்டது.</p>]]></content:encoded></item><item><title>அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தை தவறாக பயன்படுத்தவில்லை - மாணவர் பாரதிதாசன் விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/student-bharathidasan-again-clarifies-overseas-scholarship-scheme-was-not-misused</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/student-bharathidasan-again-clarifies-overseas-scholarship-scheme-was-not-misused#comments</comments><guid isPermaLink="false">4582109c-4843-4b2d-8fdd-f30d338593c6</guid><pubDate>Fri, 18 Sep 2026 02:27:30 +0000</pubDate><atom:updated>2026-09-18T02:27:30.267Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Bharathidasan,பாரதிதாசன்,வன்னியரசு,minister vanni arasu,அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/ir35sr2d/student1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Student Bharathidasan - Vanniyarasu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/ir35sr2d/student1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தை தவறாக பயன்படுத்தவில்லை என மாணவர் பாரதிதாசன் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். </p><p>தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழக மாணவர் பாரதிதாசன் என்பவர் இந்த கல்வி உதவித்தொகை இழுத்தடிக்கப்படுவதாக கண்ணீர் மல்க சமூக வலைத்தளத்தில் 'வீடியோ' பதிவு வெளியிட்டார்.</p><p>மாணவர் பாரதிதாசனுக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தங்களது கண்டனங்களை தெரிவித்து இருந்தனர்.</p> <p>இந்த விவகாரம் தொடர்பாக, <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/with-tears-research-student-questions-government-udayanidhi-stalin-condemns">அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை</a> திட்டத்தில் பயிலும் மாணவர் பாரதிதாசனின் காணொலி தகவலுக்கு தமிழ்நாடு அரசின் சமூக நீதித்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சமூக நீதித்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில்,</p><p>* 2-ம் ஆண்டு படிப்பிற்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை என மாணவர் கூறுவது தவறானது.</p> <p>* வெளிநாட்டில் படிக்கும் மாணவருக்கு ஆண்டிற்கு கல்வி கட்டணம், வாழ்க்கை செலவினம், இதர செலவினங்கள் என ரூ.36 லட்சம் வழங்கப்படுகிறது.</p><p>* மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பில் பயிலும் மாணவர் பாரதிதாசனுக்கு முதலாமாண்டுக்கான ரூ.36 லட்சம் வழங்கப்பட்டது.</p> <p>* முதலாமாண்டு தொகைக்கான செலவின வவுச்சர்களை வழங்காமல், 2-ம் ஆண்டுக்கான தொகையை மாணவர் கோரினார்.</p><p>* இருப்பினும் மாணவர் பாரதிதாசனுக்கு ரூ.12 லட்சம் விடுவிக்கப்பட்டதோடு, இதர செலவினங்களுக்கு விளக்கம் கேட்கப்பட்டது.</p> <p>* 20-8-2026 அன்று ஏற்கனவே மாணவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால் இதுவரையில் சரியான விளக்கம் இல்லை.</p><p>* மேலும், மாணவர் பயிலும் மலேசிய தேசிய பல்கலை. பதிவாளரிடம் விளக்கம் கேட்டு நேற்று (17-9-2026) இ-மெயில் அனுப்பப்பட்டது.</p> <p>* பல்கலைக்கழகத்திலிருந்து பதில் கிடைக்கப்பெற்றவுடன் கல்வி உதவித்தொகை விடுவிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.</p><p>* மேற்படி மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றவுடன் மாணவர் காணொளி மூலம் உண்மைக்கு மாறான தகவல்கள் பதிவு செய்துள்ளார்.</p> <p>* வெளிநாடுகளில் பயின்று வரும் 181 மாணக்கர்களில், பாரதிதாசன் தவிர வேறு யாரிடமும் இருந்து புகார்கள் இல்லை.</p><p>* மாணவரது காணொளியானது முற்றிலும் உண்மைக்கு புறம்பானதோடு, கல்வி திட்டத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <p>இந்நிலையில், அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தை தவறாக பயன்படுத்தவில்லை என மாணவர் பாரதிதாசன் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,</p><p>* ரூ.37 லட்சத்திற்கான பில் அனுப்பினேன், ரூ.36 லட்சம் உதவித்தொகை தந்தார்கள். பில் அனுப்பவில்லை என மீண்டும் மீண்டும் கட்டுக்கதை கட்டுகிறார்கள்.</p> <p>* ஆராய்ச்சி செலவுகளுக்கான பில் அனைத்தும் ஆக.26-ந்தேதியே அனுப்பிவிட்டேன்.</p><p>திட்டத்தை தவறாக பயன்படுத்துவதாக <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">அமைச்சர் வன்னியரசு </a>புகார் கூறியிருந்த நிலையில் மாணவர் விளக்கம் அளித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 18 செப்டம்பர் 2026: கள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-18-september-2026-kallalagar-temple-sundaravalli-thayar-purappadu</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-18-september-2026-kallalagar-temple-sundaravalli-thayar-purappadu#comments</comments><guid isPermaLink="false">f8a2f396-9dec-4314-b572-dbb0885b029b</guid><pubDate>Fri, 18 Sep 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-09-18T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/12/26/23756138-perumal.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Perumal]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/12/26/23756138-perumal.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, புரட்டாசி-1 (வெள்ளிக்கிழமை)</p><p>பிறை : வளர்பிறை</p><p>திதி : சப்தமி நண்பகல் 1.54 மணி வரை பிறகு அஷ்டமி</p><p>நட்சத்திரம் : கேட்டை நள்ளிரவு 12.15 மணி வரை பிறகு மூலம்</p><p>யோகம் : மரண / அமிர்தயோகம்</p> <p>ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை</p><p>எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை</p><p>சூலம் : மேற்கு</p><p>நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை</p> <h2>ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் சேஷ வாகனத்தில் திருவீதியுலா</h2><p>தல்லாகுளம் ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கஜேந்திர மோட்சம் இரவு சுவாமி கருட வாகனத்தில் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தர குசாம்பிகை புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் காலை கற்பக விருட்ச வாகனத்திலும் இரவு சுவாமி சர்வ பூபால வாகனத்திலும் பவனி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் சேஷ வாகனத்தில் திருவீதியுலா. நாட்டரசன்கோட்டை குணசீலம் கோவில்களில் ஸ்ரீ நம்பெருமான் புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.</p> <p>ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் கிளி வாகன சேவை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. லால்குடி ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சனம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமணருக்கு திருமஞ்சனம்.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - இன்பம்</p><p>ரிஷபம் - பணிவு</p><p>மிதுனம் - பரிவு</p><p>கடகம் - பாசம்</p><p>சிம்மம் - ஆதரவு</p><p>கன்னி - ஆக்கம்</p> <p>துலாம் - அன்பு</p><p>விருச்சிகம் - வெற்றி</p><p>தனுசு - போட்டி</p><p>மகரம் - முயற்சி</p><p>கும்பம் - ஈகை</p><p>மீனம் - பயிற்சி</p> ]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 18.9.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு நினைத்தது நிறைவேறும் நாள்...</title><link>https://www.maalaimalar.com/Today-Transit/today-rasi-palan-in-tamil-44</link><comments>https://www.maalaimalar.com/Today-Transit/today-rasi-palan-in-tamil-44#comments</comments><guid isPermaLink="false">ab6142b0-244d-4667-8b8e-ce21adf84321</guid><pubDate>Fri, 18 Sep 2026 01:27:57 +0000</pubDate><atom:updated>2026-09-18T01:27:57.527Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசி பலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/01/19417289-rasipalan.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Today Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/01/19417289-rasipalan.webp?w=280" width="280"></media:thumbnail><category>இன்றைய ராசி பலன்கள்</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள். விரயங்கள் அதிகரிக்கும். வி.ஐ.பி.க்களை விரோதித்துக் கொள்ளா தீர்கள். எதையும் தீர்க்கமான முடிவெடுக்க முடியாது.</p><h2>ரிஷபம்</h2><p>யோசித்து செயல்பட வேண்டிய நாள். தொழிலில் புதியவர்களை நம்பி செயல்பட வேண்டாம். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் கவனம் தேவை.</p><h2>மிதுனம்</h2><p>பிரச்சினையிலிருந்து விடுபடும் நாள். பிரியமானவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். தொகை வரவு திருப்தி தரும்.</p><h2>கடகம்</h2><p>புகழ் கூடும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். தொழில் வளர்ச்சியுண்டு. தொல்லை தந்தவர்கள் விலகுவர். இடம், வாங்கும் முயற்சி கைகூடும்.</p><h2>சிம்மம்</h2><p>நிர்வாகத்திறமை பளிச்சிடும் நாள். பொருளாதார நெருக்கடி அகலும். சேமிப்புகள் உயரும். அன்னிய தேசத்திலிருந்து அனுகூலச் செய்திகள் வந்து சேரும்.</p><h2>கன்னி</h2><p>மலைபோல் வந்த துயர் பனிபோல் விலகும் நாள். சிக்கனத்தைக் கடைப்பிடித்துச் சிறப்படைவீர்கள். கடன்சுமை குறைய எடுத்த புதுமுயற்சி வெற்றி தரும்.</p><h2>துலாம்</h2><p>உறவினர்கள் ஒத்துழைப்புச் செய்யும் நாள். சுபச் செய்திகள் வந்து சேரும். வருமானம் திருப்தியளிக்கும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.</p><h2>விருச்சிகம்</h2><p>நினைத்தது நிறைவேறும் நாள், வளர்ச்சிக்கு வழிகாட்டிய வர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். விண்ணப்பித்த வேலை கிடைத்து மகிழ்ச்சியடைவீர்கள்.</p><h2>தனுசு</h2><p>ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும் நாள். அண்ணன் தம்பிகளின் ஆதரவு கிடைக் கும். பொருளாதார நெருக்கடி அகலும். சுபவிரயங்களைச் செய்வது நல்லது.</p><h2>மகரம்</h2><p>நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். தனவரவில் இருந்த தடைகள் அகலும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய சந்தோஷத் தகவல் உண்டு.</p><h2>கும்பம்</h2><p>சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும் நாள். சிக்கல்கள் தீரும். செல்வந்தர்களின் ஒத்துழைப்பு கிட்டும். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர்.</p><h2>மீனம்</h2><p>யோகமான நாள். பணவரவு உண்டு. பக்கபலமாக இருப்பவர்கள் பிரச்சினைகள் தீர வழிகாட்டுவர். உத்தியோ சுத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-diesel-prices-in-chennai-4</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-diesel-prices-in-chennai-4#comments</comments><guid isPermaLink="false">912f3b30-1634-4761-8702-7d12f5680fd6</guid><pubDate>Fri, 18 Sep 2026 01:09:42 +0000</pubDate><atom:updated>2026-09-18T01:09:42.991Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டீசல் விலை,Diesel price,Petrol Price,பெட்ரோல் விலை,இன்றைய விலை நிலவரம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/vt447e6b/petrol-price.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ petrol, Diesel price]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/vt447e6b/petrol-price.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் இன்றைய (18.09.2026 - வெள்ளிக்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>ஈரான் போரினால் மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத <a href="https://www.maalaimalar.com/news/world/saudi-arabia-shuts-down-pipeline-as-houthis-seize-island-opening-new-front-in-iran-war" rel="nofollow">கச்சா எண்ணெய்</a> தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p><h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.</p><h2>பெட்ரோல், டீசல் விலை</h2><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. </p><h2>சிஎன்ஜி</h2><p>இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க் விற்பனை செய்யப்படுகிறது.</p><h2>கச்சா எண்ணெய் விலை</h2><p>இன்று சர்வதேச சந்தையில் பிரனட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 104.70 டாலர் என விற்பனை ஆகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>பயிற்சியின் போது விபத்தில் சிக்கிய எஃப்-16 போர் விமானம்</title><link>https://www.maalaimalar.com/news/world/us-f-16-fighter-jet-crashes-in-michigan-pilot-ejects</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-f-16-fighter-jet-crashes-in-michigan-pilot-ejects#comments</comments><guid isPermaLink="false">0572d8d7-88cd-417e-9caa-783abaa01647</guid><pubDate>Fri, 18 Sep 2026 00:57:55 +0000</pubDate><atom:updated>2026-09-18T00:57:55.968Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,போர் விமானம்,us,F-16 Fighter Jet</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/p6tq6vtj/Fighter-Jet-Crash.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Fighter Jet Crash]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/p6tq6vtj/Fighter-Jet-Crash.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெக்சாஸை தளமாக கொண்ட <a href="https://www.maalaimalar.com/news/world">அமெரிக்க</a> ராணுவத்தின் எஃப்-16 ரக போர் விமானம் ஒன்று, மிச்சிகனில் நடந்த பயிற்சி நடவடிக்கையின் போது விபத்துக்குள்ளானது. விபத்தைத் தொடர்ந்து போர் விமானத்தில் இருந்த விமானி வெளியேற முடிந்ததாக, அந்த விமானத்திற்கு சொந்தமான பிரிவு தெரிவித்தது.</p><p>"149-ஆவது ஃபைட்டர் விங்கிற்கு ஒதுக்கப்பட்ட டெக்சாஸ் ஏர் நேஷனல் கார்டின் எஃப்-16 ஃபைட்டிங் ஃபால்கன் விமானம், டிராவர்ஸ் சிட்டி அருகே வழக்கமான பயிற்சி பணியின் போது விபத்துக்குள்ளானது," என்று அந்தப் பிரிவு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><h2>விபத்து குறித்து தீவிர விசாரணை:</h2><p>"விமானி விமானத்திலிருந்து வெற்றிகரமாக வெளியேறினார். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது," என்று அது மேலும் விவரங்கள் அளிக்காமல் தெரிவித்தது.</p><p>மேலும், அந்த வடக்கு மாகாணத்தின் இரண்டு அமெரிக்க செனட்டர்களில் ஒருவரான கேரி பீட்டர்ஸ், பேசும் போது, "டிராவர்ஸ் சிட்டிக்கு அருகே நடந்த விமான விபத்து குறித்து நான் அறிந்திருக்கிறேன். இந்தச் சம்பவம் குறித்த கூடுதல் தகவல்களைப் பெற நாங்கள் பணியாற்றி வருவதால், நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்" என்றும் கூறினார்.</p><h2>விபத்துக்களத்தில் தீ மற்றும் கரும்புகை:</h2><p>விமானம் கீழே விழுந்த பிறகு, விபத்து நடந்த இடத்திற்கு அருகில் இருந்த சாட்சிகள் அடர்த்தியான கருப்புப் புகை, சிதறல்கள் மற்றும் வெடிப்புகளைக் கண்டதாக விவரித்தனர்.</p><p>விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமார் ஒரு மைல் தொலைவில் உள்ள ஒரு கட்டுமான தளத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த நாதன் ஸ்மித், அந்த போர் விமானம் வழக்கத்திற்கு மாறாக தாழ்வாகவும் மெதுவாகவும் பறப்பது போல் தோன்றியதால், அதை பதிவு செய்ய தொடங்கியதாக ஏ.பி. செய்தி நிறுவனத்திடம் கூறினார்.</p><p>பின்னர் ஒரு பெரிய வெடிச்சத்தத்தைக் கேட்டதாகவும், அது விமானி வெளியேறிய சத்தம் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.</p><p>வெண்டி சோபெக், தானும் தன் கணவரும் ஒரு பெரிய மோதல் சத்தத்தைக் கேட்டதாகவும், பின்னர் பெரிய அளவிலான கருப்புப் புகையைக் கண்டதாகவும் கூறினார். அவரது கணவர், ஃப்ரெட் சோபெக், விபத்தில் சிக்காத ஒரு வீடு மற்றும் கேம்பர் வாகனத்திற்கு அருகிலுள்ள ஒரு வயலில் ஒரு பெரிய நெருப்புப் பந்தைக் கண்டதாகக் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ஹர்திக் பாண்டியா 10 ஓவர்கள் பந்துவீச இன்னும் தயாராகவில்லை - கவுதம் கம்பீர்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/gautam-gambhir-says-hardik-pandya-not-ready-to-bowl-10-overs</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/gautam-gambhir-says-hardik-pandya-not-ready-to-bowl-10-overs#comments</comments><guid isPermaLink="false">c82f81cc-fae6-4a4a-8812-40d5c0ad3c43</guid><pubDate>Fri, 18 Sep 2026 00:38:20 +0000</pubDate><atom:updated>2026-09-18T00:38:20.607Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Hardik Pandya,gautam gambhir,கவுதம் கம்பீர்,ஹர்திக் பாண்டியா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/yxg6a3ee/hardik-Pandya-Gautam-Gambhir.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ hardik Pandya - Gautam Gambhir]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/yxg6a3ee/hardik-Pandya-Gautam-Gambhir.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய ஒருநாள் அணியில் ஹர்திக் பாண்டியாவை அவசர கதியில் களமிறக்க விரும்பவில்லை என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் <a href="https://www.maalaimalar.com/topic/gautam-gambhir">கவுதம் கம்பீர்</a> தெரிவித்துள்ளார். மேலும், அவரை முழுநேர ஆல்-ரவுண்டராக பங்களிக்கும் வகையில் முழு உடற்தகுதி பெற்ற பிறகே ஹர்திக் அணியில் இடம்பெறுவார் என்றும் அவர் தெரிவித்தார்.</p><p>50 ஓவர் போட்டிகளில் ஒரு பந்துவீச்சாளருக்கான முழு ஒதுக்கீடான 10 ஓவர்களை வீச <a href="https://www.maalaimalar.com/topic/hardik-pandya">ஹர்திக் பாண்டியா</a> இன்னும் தயாராகவில்லை என்றும், இந்த நட்சத்திர ஆல்-ரவுண்டரை சர்வதேச கிரிக்கெட்டில் அவசரப்பட்டு மீண்டும் களமிறக்க மாட்டோம் என்றும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்தார்.</p><h2>10 ஓவர்கள் பந்துவீத முடியாது:</h2><p>இந்தியாவின் குறைந்த ஓவர் கிரிக்கெட் அணியில் முக்கிய அங்கமாக திகழும் பாண்டியா, அவரது உடல் தகுதி மற்றும் பணிச்சுமை காரணங்களால் பெரும்பாலும் கவனமாகவே கையாளப்பட்டு வருகிறார். </p><p>பாண்டியா பந்துவீசுவதற்கான முழு உடல் தகுதியை எட்டியதும், அவரும் இளம் ஆல்-ரவுண்டரான நிதிஷ் குமார் ரெட்டியும் ஒரே நேரத்தில் ஆடும் லெவனில் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் கம்பீர் குறிப்பிட்டார்.</p><p>"ஹர்திக் பாண்டியா தற்போதைய நிலையில் 10 ஓவர்கள் பந்துவீச முடியாது. அவரை சர்வதேச கிரிக்கெட்டில் அவசரப்பட்டு களமிறக்க நாங்கள் விரும்பவில்லை. அவர் முழு உடல் தகுதி பெற்ற பிறகு, அவரும் நிதிஷும் இணைந்து விளையாடுவதற்கான வாய்ப்பு உள்ளது," என்று கம்பீர் கூறினார்.</p><h2>ஆல்-ரவுண்டராக பங்களிக்க வேண்டும்:</h2><p>ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா 127 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றிய நிலையில் பயிற்சியாளரின் இந்த கருத்துகள் வெளியாகியுள்ளன.</p><p>ஒருநாள் (ODI) போட்டிகளில் அவரை அதிகம் பயன்படுத்த அணி நிர்வாகம் விரும்புவதால், வெறும் பேட்டிங் திறனுக்காக மட்டும் அவரைத் தேர்ந்தெடுக்காமல், ஒரு முழுமையான ஆல்-ரவுண்டராக பங்களிக்கும் திறனை பொறுத்தே அவரது வருகை அமையும் என்பதை இது உணர்த்துகிறது.</p><p>பி.சி.சி.ஐ.-இன் 'சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்' (Centre of Excellence) அமைப்பிடமிருந்து இறுதி உடல் தகுதி சான்றிதழ் கிடைப்பதற்கு உட்பட்டு, புதுச்சேரியில் ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய 'ஏ' அணியில் பாண்டியா இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>மேற்கு வங்க இடைத்தேர்தல்: திரிணாமுல் காங்கிரஸ் பெயர், சின்னத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை</title><link>https://www.maalaimalar.com/news/national/ec-bars-rival-tmc-factions-from-using-party-name-symbol-in-west-bengal-bypolls</link><comments>https://www.maalaimalar.com/news/national/ec-bars-rival-tmc-factions-from-using-party-name-symbol-in-west-bengal-bypolls#comments</comments><guid isPermaLink="false">1713c9c9-dcdb-4d19-bbc3-02700e4df29c</guid><pubDate>Thu, 17 Sep 2026 23:12:17 +0000</pubDate><atom:updated>2026-09-17T23:12:17.800Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தேர்தல் ஆணையம்,west bengal,TMC Party,திரிணாமுல் காங்கிரஸ் கட்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/7iiofoe9/mamata-banerjee-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ mamata banerjee]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/7iiofoe9/mamata-banerjee-1.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்க இடைத்தேர்தலின் போது, ​​அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸின் (AITC) பெயர் மற்றும் "பூக்கள் மற்றும் புல்" (Flowers and Grass) சின்னத்தை பயன்படுத்த வேண்டாம் என்று அக்கட்சியின் இரு போட்டி பிரிவுகளுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது; மேலும், அவர்கள் விரும்பும் பெயர்கள் மற்றும் சின்னங்களை வெள்ளிக்கிழமை காலைக்குள் சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/mamata-banerjee">மம்தா பானர்ஜி</a> மற்றும் அரூப் ராய் ஆகியோரின் தலைமையிலான இரு பிரிவுகளின் தலைவர்களிடமும் கருத்துகளை கேட்டறிந்த பிறகு, நேற்று (வியாழக்கிழமை) இரவு வெளியிடப்பட்ட இடைக்கால உத்தரவில், 'தேர்தல் சின்னங்கள் ஆணை 1968'-இன் விதிகளின் கீழ் இந்த சிக்கல் குறித்து <a href="https://www.maalaimalar.com/topic/election-commission">தேர்தல் ஆணையம்</a> ஒரு முக்கிய முடிவை எடுக்க வேண்டியுள்ளது என்று ஆணையம் கூறியது.</p><h2>முக்கிய முடிவை எடுக்க வேண்டியுள்ளது:</h2><p>"பதிவில் உள்ள அனைத்துத் தகவல்களையும் முறையாக பரிசீலித்த பிறகு... அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸில் மம்தா பானர்ஜி தலைமையிலான ஒரு பிரிவு மற்றும் அரூப் ராய் தலைமையிலான மற்றொரு பிரிவு என இரு போட்டி பிரிவுகள் உள்ளன என்று ஆணையம் கருதுகிறது," என்று அந்த இடைக்கால உத்தரவு தெரிவித்தது.</p><p>"ஒவ்வொரு பிரிவும் இப்போது தாங்களே உண்மையான கட்சி என்று உரிமை கோருவதால், 'தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு மற்றும் ஒதுக்களிப்பு) ஆணை 1968'-இன் பிரிவு 15-ன் கீழ் ஆணையம் இது குறித்து ஒரு முக்கிய முடிவை எடுக்க வேண்டியுள்ளது," என்றும் அது கூறியது.</p><h2>கட்சி பெயரை பயன்படுத்த அனுமதி இல்லை:</h2><p>அதன்படி, இரு போட்டிப் பிரிவுகளையும் சம நிலையில் வைப்பதற்கும், அவர்களின் உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாப்பதற்கும், மற்றும் கடந்தகால நடைமுறைகளை கருத்தில் கொண்டும், தற்போதைய இடைத்தேர்தல் நோக்கத்திற்காகவும், இச்சிக்கல் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் வரை அமலில் இருக்கும் வகையிலும் இந்த இடைக்கால உத்தரவை ஆணையம் பிறப்பித்துள்ளது.</p><p>"திரு. அரூப் ராய் (மனுதாரர்) மற்றும் செல்வி மம்தா பானர்ஜி (எதிர்மனுதாரர்) ஆகியோரின் தலைமையில் உள்ள இரு குழுக்களும் 'அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ்' என்ற கட்சியின் பெயரைப் பயன்படுத்த அனுமதிக்கப்படமாட்டாது.</p><p>'அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ்' கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 'பூக்கள் மற்றும் புல்' சின்னத்தைப் பயன்படுத்தவும் இவ்விரு குழுக்களும் அனுமதிக்கப்படமாட்டாது என்று ஆணையம் கூறியது.</p><p>இரு குழுக்களும் தங்கள் குழுக்களுக்குத் தாங்கள் விரும்பும் பெயர்களை வைத்துக்கொள்ளலாம் என்றும், தற்போதைய இடைத்தேர்தல்களுக்காக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 'ஒதுக்கப்படாத சின்னங்களின்' பட்டியலில் இருந்து தாங்கள் விரும்பும் வெவ்வேறு சின்னங்களை தேர்வு செய்து பெற்றுக்கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.</p>]]></content:encoded></item><item><title>போர் சூழலிலும் ஐ.நா. உயர்மட்டக் கூட்டத்தில் பங்கேற்க ஈரான் தலைவர்களுக்கு விசா அளித்த அமெரிக்கா</title><link>https://www.maalaimalar.com/news/world/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE</link><comments>https://www.maalaimalar.com/news/world/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE#comments</comments><guid isPermaLink="false">b33b0dbe-06d1-4ec4-a29e-45bfd82910ba</guid><pubDate>Thu, 17 Sep 2026 22:06:41 +0000</pubDate><atom:updated>2026-09-17T22:06:41.916Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,ஐநா,UN,Iran,us</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/49pu1dcm/US-Visa-masoud-pezeshkian.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ US Visa - masoud pezeshkian]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/49pu1dcm/US-Visa-masoud-pezeshkian.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான மோதல் சூழல் நிலவும் நிலையிலும், நியூ யார்க்கில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள <a href="https://www.maalaimalar.com/topic/un">ஐ.நா.</a> பொது சபையின் உயர்மட்ட கூட்டத்தில் பங்கேற்க ஈரான் அதிபர் மற்றும் வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட அந்நாட்டின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு டிரம்ப் நிர்வாகம் விசா அனுமதி அளித்துள்ளது.</p><p>ஐ.நா. கூட்டங்களில் பங்கேற்க ஈரானின் "முக்கியக் குழுவினர்" மற்றும் அவசியமான பணியாளர்களுக்கு விசா அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக <a href="https://www.maalaimalar.com/news/world">அமெரிக்க</a> வெளியுறவு துறை தெரிவித்தது.</p><h2>ஈரான் அதிபருக்கு அமெரிக்க விசா:</h2><p>விசா தொடர்பான தனியுரிமை சட்டங்கள் காரணமாக பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகளின் தகவலின்படி, இந்த குழுவில் அதிபர் மசூத் பெசஸ்கியான் மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.</p><p>ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஆறு மாதங்களுக்கும் மேலாக மோதல் நீடித்து வரும் சூழலிலும், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது அல்லது ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவது தொடர்பான ஒப்பந்தங்கள் எட்டப்படுவதற்கான அறிகுறிகள் ஏதுமில்லாத நிலையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>அதேவேளையில், ஏமனில் ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் உள்கட்டமைப்பு மற்றும் செங்கடலில் உள்ள கப்பல் போக்குவரத்து ஆகியவற்றின் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர்; செங்கடல் என்பது இந்த பிராந்தியத்தின் மற்றொரு முக்கிய கடல்வழி பாதையாகும், அங்குள்ள தடைகள் உலகளாவிய கச்சா எண்ணெய் விலையை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளன.</p><h2>கடந்த கால நிகழ்வுகள்:</h2><p>மேலும், ஈரான் உலகின் முன்னணி பயங்கரவாத ஆதரவு நாடாக திகழ்வதாக அமெரிக்கா கருதுகிறது; அந்நாட்டின் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளதோடு, சமீபத்திய வாரங்களில் ஈரானின் "முக்கிய நிதி ஆதாரங்களை" துண்டிப்பதை நோக்கமாக கொண்ட புதிய நடவடிக்கைகளையும் தொடங்கியுள்ளது.</p><p>ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் அமைந்துள்ள நாடு என்ற முறையில், வெளிநாட்டு தலைவர்கள் பொது சபை கூட்டத்திற்கு வருவதை தடுப்பதில் அமெரிக்காவிற்குச் சில கட்டுப்பாடுகள் உள்ளன. இருப்பினும், அமெரிக்காவுடன் நேரடி மோதலில் ஈடுபட்டுள்ள தலைவர்களுக்கு விசா மறுத்த அல்லது அவர்களின் விண்ணப்பங்களை ஊக்கப்படுத்தாத நிகழ்வுகள் கடந்த காலங்களில் நடந்துள்ளன.</p>]]></content:encoded></item><item><title>புதிய அரசியல் கூட்டணி? கொல்கத்தாவில் மம்தா பானர்ஜியுடன் தி.மு.க. எம்.பி. கனிமொழி ரகசிய ஆலோசனை</title><link>https://www.maalaimalar.com/news/national/kanimozhi-holds-closed-door-meeting-with-mamata-in-kolkata</link><comments>https://www.maalaimalar.com/news/national/kanimozhi-holds-closed-door-meeting-with-mamata-in-kolkata#comments</comments><guid isPermaLink="false">a502fe64-63b9-40e6-a8d4-b8120b43fba7</guid><pubDate>Thu, 17 Sep 2026 21:41:51 +0000</pubDate><atom:updated>2026-09-17T21:41:51.259Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Kanimozhi,கனிமொழி,மம்தா பானர்ஜி,Mamata Banerjee</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/myuoanhn/Kanimozhi-mamata-banerjee.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kanimozhi - Mamata Banerjee]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/myuoanhn/Kanimozhi-mamata-banerjee.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மூத்த தி.மு.க. தலைவரான <a href="https://www.maalaimalar.com/topic/kanimozhi">கனிமொழி</a>, மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியை கொல்கத்தாவில் சந்தித்தார். தெற்கு கொல்கத்தாவின் காளிகாட்டில் உள்ள மம்தா பானர்ஜியின் இல்லத்தில் மக்களவை உறுப்பினர் கனிமொழி அவரை சந்தித்ததாக <a href="https://www.maalaimalar.com/topic/trinamool-congress">திரிணாமுல் காங்கிரஸ்</a> (TMC) தலைவர் ஒருவர் தெரிவித்தார்.</p><p>"கனிமொழி, மம்தா பானர்ஜியின் இல்லத்தில் அவருடன் ரகசிய ஆலோசனை நடத்தினார். இதில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது," என்று அவர் கூறினார்; ஆனால், அந்த விவாதத்தின் விவரங்களை அவர் வெளியிடவில்லை. </p><p>மும்பையில் சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் டெல்லியில் என்சிபி (SP) தலைவர் சரத் பவார் ஆகியோருடன் கனிமொழி ஆலோசனை நடத்திய சில நாட்களுக்குப் பிறகு இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. </p><p>தி.மு.க.-காங்கிரஸ் இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள விரிசல் மற்றும் எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியில் உள்ள பல்வேறு பிராந்திய கட்சிகளிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில், கனிமொழியின் இந்த சந்திப்புகள் கவனத்தை ஈர்த்துள்ளன. </p><h2>மேற்கு வங்கத்தில் மோதல் போக்கு:</h2><p>தேசிய அளவில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியும் 'இந்தியா' கூட்டணியில் அங்கம் வகித்தாலும், மேற்கு வங்கத்தில் அவற்றின் உறவு மோதல் போக்குடனேயே இருந்து வருகிறது. அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தல் விவகாரத்தில் சமீபகாலமாக இவ்விரு கட்சிகளுக்கும் இடையே மோதல் போக்கு நிலவுகிறது.</p><p>நந்திகிராம் தொகுதியை காங்கிரஸுக்கு விட்டுக்கொடுப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மத்தியத் தலைமையிடம் முன்மொழிந்ததாக மாநில காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது; ஆனால், மம்தா பானர்ஜி தலைமையிலான அந்த கட்சி இந்த கூற்றை மறுத்தது.</p><p>தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகும் தி.மு.க.-காங்கிரஸ் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நடிகரும், அரசியல்வாதியுமான ஜோசப் விஜய்யின் த.வெ.க. தலைமையிலான ஆளும் கூட்டணியில் காங்கிரஸ் தற்போது அங்கம் வகிக்கிறது; அதேவேளையில் தி.மு.க. .எதிர்க்கட்சியாக உள்ளது.</p><h2>புதிய அரசியல் கூட்டணி:</h2><p>மேற்கு வங்கத்தில் 15 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸும் அரசியல் ரீதியாக சவாலான காலகட்டத்தை கடந்து வருகிறது. அக்கட்சி மாநில சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டத்திலும் உட்கட்சி அதிருப்தியை எதிர்கொண்டு வருகிறது; இது மம்தா பானர்ஜிக்கு கூடுதல் சவால்களை ஏற்படுத்தியுள்ளது.</p><p>ஜூன் மாதம் நடைபெற்ற 'இந்தியா' கூட்டணிக் கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்கவில்லை; அதன்பிறகு காங்கிரஸ் மீது அக்கட்சி சற்று மோதல் போக்கையே கடைப்பிடித்து வருகிறது.</p><p>இத்தகைய சூழலில், காங்கிரஸ் தலைமையிலான கட்டமைப்புக்கு வெளியே உள்ள கட்சிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்த ஊகங்களை கனிமொழியின் சந்திப்புகள் கிளப்பியுள்ளன. இருப்பினும், புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கும் நோக்கில் இந்த விவாதங்கள் நடைபெற்றதற்கான எந்த அதிகாரப்பூர்வ அறிகுறியும் இல்லை.</p>]]></content:encoded></item><item><title>பிறந்தநாளில் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி - பிரதமர் மோடி</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modis-thank-you-note-for-birthday-wishes</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modis-thank-you-note-for-birthday-wishes#comments</comments><guid isPermaLink="false">fb14398b-de2f-41b3-add8-78bcb3e2c975</guid><pubDate>Thu, 17 Sep 2026 21:00:00 +0000</pubDate><atom:updated>2026-09-17T21:00:00.755Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>birthday wish,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2024/05/25/2332512-pm1.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2024/05/25/2332512-pm1.webp?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரதமர் <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">நரேந்திர மோடி</a>, தனது பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதிலும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் தமக்கு அளித்த அபரிமிதமான வாழ்த்துக்கள், அன்பு மற்றும் ஆசீர்வாதங்களுக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.</p><p>சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு செய்தியில், ஒவ்வொரு அன்பான வார்த்தையும் தன்னை ஆழமாக நெகிழ செய்ததாகவும், <a href="https://www.maalaimalar.com/news/national">இந்திய</a> மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய தனக்கு புது வலிமையை அளித்ததாகவும் பிரதமர் கூறினார். </p><h2>சமூக வலைத்தள பதிவு:</h2><p>"எல்லா இடங்களில் இருந்தும் பொங்கி வழியும் வாழ்த்துகள், அன்பு மற்றும் ஆசீர்வாதங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். ஒவ்வொரு அன்பான வார்த்தையும் ஆழ்ந்து போற்றப்படுகிறது, மேலும் அது நமது மக்களுக்கு சேவை செய்ய எனக்கு புது வலிமையை தருகிறது," என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.</p><p>நாள் முழுவதும் சேவா நடவடிக்கைகளில் பங்கேற்ற எண்ணற்ற குடிமக்களின் முயற்சிகளையும் பிரதமர் பாராட்டினார். தன்னலமற்ற சேவை செயல்கள் தேசத்தின் உணர்வின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக அமைந்து, சமூக கட்டமைப்பை வலுப்படுத்த பங்களிக்கின்றன என்பதையும் அவர் வலியுறுத்தினார்.</p><p>பரந்த தேசிய இலக்கை முன்னிலைப்படுத்திய பிரதமர் மோடி, வளர்ச்சி பெற்ற இந்தியாவை நோக்கிய பயணத்தில் குடிமக்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். "2047-ஆம் ஆண்டுக்குள் செழிப்பான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் தன்னிறைவு பெற்ற தேசத்தை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வையை மீண்டும் வலியுறுத்திய அவர், 'நாம் அனைவரும் ஒன்றிணைந்து வளர்ச்சி பெற்ற பாரதத்தை தொடர்ந்து உருவாக்குவோம்' என்று கூறினார்.</p><h2>சேவை செய்ய அழைப்பு:</h2><p>பிரதமரின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள், முறைசார்ந்த நிகழ்வுகளுக்கு பதிலாக பெரிய அளவிலான தன்னார்வ முன்னெடுப்புகளால் அதிகளவில் கொண்டாடப்பட்டு வரும் வேளையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.</p><p>மாநிலங்கள் முழுவதும், தன்னார்வலர்கள் இரத்த தான முகாம்கள், தூய்மை பணிகள், மரம் நடும் திட்டங்கள், இலவச மருத்துவ பரிசோதனைகள் மற்றும் தேவைப்படுவோருக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் போன்றவற்றை ஏற்பாடு செய்தனர். </p><p>சேவைக்கான பிரதமரின் அழைப்புக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தும் விதமாக, இதுபோன்ற பல செயல்பாடுகள் உள்ளூர் அமைப்புகள், இளைஞர் குழுக்கள் மற்றும் கட்சி தொண்டர்களால் ஒருங்கிணைக்கப்பட்டன.</p>]]></content:encoded></item><item><title>3-வது டி20 போட்டி: 127 ரன்களில் இந்திய அணி வெற்றி - தொடரை 3-0 என கைப்பற்றி அசத்தல்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/afgvsind-3rd-t20-india-win-by-127-runs</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/afgvsind-3rd-t20-india-win-by-127-runs#comments</comments><guid isPermaLink="false">3c1e95ba-d48b-4e6b-8d74-6fe5019d5f4b</guid><pubDate>Thu, 17 Sep 2026 17:50:18 +0000</pubDate><atom:updated>2026-09-17T17:50:18.108Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா ஆப்கானிஸ்தான்,INDvsAFG</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/527a8lcl/ind-win-pic.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ India Win]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/527a8lcl/ind-win-pic.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட <a href="https://www.maalaimalar.com/sports/cricket">டி20</a> தொடரை இந்திய அணி 3-0 கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தல்.</p><p>ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முன்னதாக டெல்லியில் நடந்த முதல் இரு போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றியது.</p><p>இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி டெல்லியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற <a href="https://www.maalaimalar.com/topic/indvsafg">ஆப்கானிஸ்தான் அணி</a> பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா களமிறங்கினர்.</p><h2>இமாலய இலக்கு:</h2><p>ஆரம்பம் முதலே இருவரும் அதிரடியில் இறங்கினர். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். இந்திய அணி பவர் பிளே ஓவரில் 100 ரன்களைக் குவித்தது. அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா 30 பந்தில் சதமடித்து அசத்தினார். இதில் 10 சிக்சர், 9 பவுண்டரி அடங்கும்.</p><p>முதல் விக்கெட்டுக்கு 142 ரன்களை சேர்த்த நிலையில், அபிஷேக் சர்மா 34 பந்தில் 108 ரன்கள் குவித்து ஆட்டமிந்தார். தொடர்ந்து பொறுப்புடன் ஆடிய சஞ்சு சாம்சன் அரை சதம் கடந்து 50 ரன்னில் அவுட்டானார். ஷ்ரேயஸ் அய்யர் 29 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.</p><p>இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 221 ரன்களை குவித்தது.</p><h2>ஆப்கானிஸ்தான் படுதோல்வி:</h2><p>கடின இலக்கை துரத்திய ஆப்கான்ஸ்தான் அணிக்கு துவக்க வீரர்களான ரஹ்முல்லா குர்பாஸ் 15 ரன்களும், கேப்டன் இப்ராகிம் சத்ரான் 25 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். இவர்களை தொடர்ந்து களமிறங்கியவர்களில் ஓமர்சாய் மற்றும் நூர் உல் ரஹ்மான் ஆகியோர் முறையே 17 மற்றும் 11 என இரட்டை இலக்க ரன்களை அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.</p><p>ஆப்கானிஸ்தான் அணி 14.1 ஓவர்களில் வெறும் 94 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையம் இழந்தது. இதனால் இந்திய அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.</p><p>இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் ரவி பிஷ்னோய் தலா 3 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் 2 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் யாஷ் தாக்கூர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். மேலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியது.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: 58 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-bypolls-nominations-of-58-candidates-accepted</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-bypolls-nominations-of-58-candidates-accepted#comments</comments><guid isPermaLink="false">354c402e-cc4e-4e23-ae91-0786eecc44dd</guid><pubDate>Thu, 17 Sep 2026 17:05:22 +0000</pubDate><atom:updated>2026-09-17T17:05:22.672Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>dharapuram,தாராபுரம்,மதுராந்தகம்,TN Bypolls,Madurantakam,தமிழக இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/6ltm7yyr/dmk.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பரந்தாமன் - மரகதம் குமரவேல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/6ltm7yyr/dmk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுராந்தகம் மற்றும் <a href="https://www.maalaimalar.com/topic/dharapuram">தாராபுரம்</a> இடைத்தேர்தல்களுக்கான 58 வேட்பாளர்களின் மனுக்கள், பரிசீலனைக்குப் பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. </p><p>ஆளும் <a href="https://www.maalaimalar.com/topic/tvk">த.வெ.க.</a> கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. ஆகியவற்றின் வேட்பாளர்கள் உள்ளிட்டோரின் மனுக்கள் முறையாக இருந்ததாக கண்டறியப்பட்டது. </p><p>இடதுசாரி கட்சிகள் இவ்விரு தொகுதிகளுக்கும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், தனித்தொகுதிகளாக உள்ள இவ்விரு தொகுதிகளிலும் சுவாரஸ்யமான ஐந்து முனை போட்டி நிலவவுள்ளது.</p><h2>58 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு:</h2><p>தலைமை தேர்தல் அதிகாரியின் இணையதள தகவலின்படி, மதுராந்தகத்தில் 28 வேட்பாளர்களின் மனுக்களும், தாராபுரத்தில் மொத்தம் 30 வேட்பாளர்களின் மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இவ்விரு சட்டமன்ற தொகுதிகளிலும் பெறப்பட்ட மொத்தம் 91 மனுக்களில், 41 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.</p><p>ஏப்ரல் 23-இல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளின் உதவியுடன் ஜோசப் விஜய் தலைமையிலான த.வெ.க. தனது முதல் அரசை அமைத்த பிறகு நடைபெறும் முதல் தேர்தல் களம் இதுவாகும்.</p><p>த.வெ.க. நிறுவனரும் முதல்வருமான விஜய், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு முறையே முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான கே. மரகதம் குமரவேல் மற்றும் பி. சத்தியபாமா ஆகியோரை வேட்பாளர்களாக அறிவித்துள்ளார்.</p><p>குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகிய இருவரும் ஏப்ரல் 23 தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களாக அந்தந்த தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள்; பின்னர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆளும் த.வெ.க. கட்சியில் இணைந்தனர்.</p><h2>தி.மு.க., த.வெ.க.-வுக்கு நேரடி எதிரணி:</h2><p>மதுராந்தகத்திற்கு ஐ. பரந்தாமனையும், தாராபுரத்திற்கு எஸ். சுகன்யாவையும் தி.மு.க. வேட்பாளர்களாக அறிவித்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) தலைமை வகிக்கும் அ.தி.மு.க., மதுராந்தகத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கனிதா சம்பத் மற்றும் தாராபுரத்தில் கே. பானுமதி ஆகியோரை நிறுத்தி, முழுக்க முழுக்க பெண்களை கொண்ட வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே அறிவித்துள்ளது.</p><p>பாரம்பரிய தேர்தல் கூட்டணிகளில் இருந்து விலகி, தனித்த இடதுசாரி முன்னணியாக போட்டியிடப்போவதாக சி.பி.ஐ. (எம்) மற்றும் சி.பி.ஐ. ஆகியவை அறிவித்துள்ளன; இதன் மூலம் அவை தி.மு.க. மற்றும் த.வெ.க. ஆகிய இரு கட்சிகளுக்கும் நேரடி எதிரணியில் நிற்கின்றன.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் இந்தி மொழி கற்பிப்பதை தடுக்க கூடாது: நவோதயா பள்ளிகள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் காலக்கெடு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/hindi-should-not-be-barred-in-tamil-nadu-supreme-court-on-navodaya-schools</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/hindi-should-not-be-barred-in-tamil-nadu-supreme-court-on-navodaya-schools#comments</comments><guid isPermaLink="false">043065c5-b4a4-407d-8c31-5706087c1eab</guid><pubDate>Thu, 17 Sep 2026 16:16:09 +0000</pubDate><atom:updated>2026-09-17T16:16:09.668Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,உச்ச நீதிமன்றம்,இந்தி மொழி,hindi language,Navodaya school,நவோதயா பள்ளிகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/de64qpia/Untitled-design-3.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Supreme Court on Hindi education in Tamil Nadu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/de64qpia/Untitled-design-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் இந்தி மொழி ஒருபோதும் கற்பிக்கப்படாது என்ற நிலைப்பாட்டை தமிழகம் எடுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று கூறியது.</p><p>மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை அமைப்பதற்காக நிலத்தை அடையாளம் காணுமாறு, தமிழக அரசுக்கு பிறப்பித்திருந்த தனது முந்தைய உத்தரவைத் திரும்ப பெறுவதற்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.</p><p>தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் நவோதயா வித்யாலயா பள்ளிகளை நிறுவ வேண்டும் என்று <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D">சென்னை உயர் நீதிமன்றம்</a> விதித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.</p><p>தமிழக அரசு, இந்தி மொழி உட்பட அவற்றின் மும்மொழிக் கல்வி முறை, தமிழகத்தின் இருமொழிக் கொள்கையுடன் முரண்படுகிறது என்ற அடிப்படையில் எதிர்த்து வருகிறது.</p><h3><strong>தமிழக வழக்கறிஞர்</strong></h3><p>தமிழகத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா, மாநில அரசின் எதிர்ப்பு என்பது வெறும் மனநிலை சார்ந்த விஷயம் மட்டுமல்ல, அது கல்விக் கொள்கையை வகுப்பதற்கான அதன் அரசியலமைப்பு அதிகாரம் தொடர்பானது என்று நீதிமன்றத்தில் வாதிட்டார்.</p><p>மேலும் அவர் மாநில அரசு இந்தி மொழிக்கு எதிரானதல்ல என்றும், ஆனால் நவோதயா திட்டத்தில் இந்தி மொழியை முதன்மை மொழியாக வலியுறுத்துவதையே எதிர்ப்பதாகவும் வழக்கறிஞர் கூறினார்.</p><p>மேலும், மத்திய அரசின் திட்டம் விருப்பத்திற்குரியது என்றும், ஒரு குறிப்பிட்ட கொள்கையை ஏற்றுக்கொள்ளுமாறு ஒரு மாநிலத்தை கட்டாயப்படுத்தி நீதிமன்றம் ஆணை பிறப்பிக்க முடியாது என்றும் அவர் வாதிட்டார்.</p><h3><strong>உச்ச நீதிமன்ற நீதிபதிகள்</strong></h3><p>இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் ஏ.ஜி. மசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரனைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பள்ளிகள் தொடர்பான கருத்து வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளுமாறு தமிழகத்தையும் மத்திய அரசையும் வலியுறுத்தினர்.</p><p>மேலும் டிசம்பர் 15, 2025 தேதியிட்ட உத்தரவை நிறைவேற்றவும், முன்மொழியப்பட்ட பள்ளிகளுக்கான பொருத்தமான நிலத்தை அடையாளம் காணவும் மாநில அரசுக்கு மூன்று மாத கால அவகாசத்தை நீதிபதிகள் வழங்கினர்.</p><p>மேலும் நீதிபதிகள், “நீங்கள் உங்கள் மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் மண்ணில் இந்தி கற்பிக்கப்படாது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.</p><p>உங்கள் மாநிலத்தில் நீங்கள் செய்து வரும் அனைத்து நல்ல காரியங்களுக்கும் மேலாக, கூடுதலாக ஒன்றைச் செய்வது உங்கள் தரத்தைக் குறைத்துவிடாது என்று நாங்கள் கூறுகிறோம்.</p><p>டெல்லியிலிருந்து வருவதால் சென்னையின் தரம் குறைந்துவிடாது. சென்னை மக்கள் டெல்லியைப் புறக்கணிக்கக் கூடாது, டெல்லி மக்களும் சென்னையைப் புறக்கணிக்கக் கூடாது.</p><p>இன்று கல்வி, நாளை வேறு ஒன்றாக மாறிவிடும். உங்கள் மனதில் உள்ள இந்த விறைப்புத்தன்மையை நீங்கள் தளர்த்த வேண்டும்” என்று உத்தரவிட்டது.</p><p>தமிழகத்தை உடனடியாக நிலம் கையகப்படுத்தவோ அல்லது ஒரு குறிப்பிட்ட செலவினத்திற்கு மாநிலத்தைக் கட்டுப்படுத்தவோ நீதிமன்றம் உத்தரவிடவில்லை.</p><p>டிசம்பர் 2025 பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில், மாநில அரசு தனது அரசாங்கத் திட்டத்தில் பொருத்தமான நிலத்தை அடையாளம் காண மட்டுமே கோரியுள்ளது.</p><p>கடந்த ஆண்டு டிசம்பரில், ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிகளை அமைப்பதற்குத் தேவையான நிலத்தை ஆறு வாரங்களுக்குள் அடையாளம் காணுமாறு உச்ச நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டது.</p><p>அதைத் தொடர்ந்து, மாநில அரசில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் மத்திய அரசுடனான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் இல்லாதது உள்ளிட்ட காரணங்களைக் கூறி, தமிழக அரசு அந்த உத்தரவை திரும்பப் பெறக் கோரியது.</p><p>இதையடுத்து முன்னதாக பிறப்பிக்கப்பட்ட அந்த உத்தரவைத் திரும்ப பெற நீதிபதிகள் அமர்வு மறுத்துவிட்டது. அதே நேரத்தில், அதற்குக் கட்டுப்பட மாநில அரசுக்கு மேலும் மூன்று மாத கால அவகாசம் வழங்கியதுடன், கொள்கை மற்றும் அதன் செயலாக்கம் குறித்து மத்திய, மாநிலப் பிரதிநிதிகள் தொடர்ந்து கலந்துரையாட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.</p><p>தமிழக அரசு தமிழை இரண்டாம் மொழியாக விரும்பினால், அது பரிசீலிக்கப்படக்கூடிய ஒரு விஷயமே, என்று கூறிய நீதிபதி அமர்வு, மாநில மற்றும் மத்திய அரசுகள் தங்களது கல்விச் செயலாளர்கள் மட்டத்தில் கலந்துரையாடுமாறு கேட்டுக்கொண்டது.</p>]]></content:encoded></item><item><title>போட்டி போட்டுக்கொண்டு லட்டு சாப்பிட்ட இளைஞர்கள் - 30 நிமிடங்களில் 28 லட்டுகளை சாப்பிட்ட நபர்.. வைரல் வீடியோ</title><link>https://www.maalaimalar.com/news/national/man-eats-28-laddus-in-30-minutes-in-gujarat-viral-video</link><comments>https://www.maalaimalar.com/news/national/man-eats-28-laddus-in-30-minutes-in-gujarat-viral-video#comments</comments><guid isPermaLink="false">a957da83-49a1-4284-8122-46f86769b246</guid><pubDate>Thu, 17 Sep 2026 16:02:02 +0000</pubDate><atom:updated>2026-09-17T16:02:02.105Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>குஜராத்,gujarat,Laddu,லட்டு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/5k2jesmi/Untitled-design-4.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gujarat Ladoo Eating Contest Viral]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/5k2jesmi/Untitled-design-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குஜராத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற உள்ளூர் விழா ஒன்றில் 30 நிமிடங்களில் 28 லட்டுகளை சாப்பிட்ட நபரின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D">குஜராத்தில்</a> உள்ள தர்னேதர் என்ற கிராமத்தில் உள்ளுர் மக்களிடம் லட்டு உண்ணும் போட்டி நடைபெற்றது. </p><p>அப்போது அந்த போட்டியில் மொத்தம் 28 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். </p><p>இந்த போட்டியானது விளையாட்டு, இளைஞர் மற்றும் கலாச்சார நடவடிக்கைகள் துறை, குஜராத் விளையாட்டு ஆணையம் மற்றும் மாவட்டப் பயிற்சி மையம் ஆகியவற்றால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டது.</p><p>ஜலாவார் பகுதியின் நாட்டுப்புறக் கலாச்சாரத்தில் வேரூன்றிய இந்த போட்டியைக் காண உள்ளூர் கிராம மக்கள் திரண்டனர்.</p><p>25 முதல் 75 வயதுக்குட்பட்ட 28 போட்டியாளர்கள், பருப்பு மற்றும் சர்க்கரை தூவப்பட்ட கடலை மாவு லட்டுகளை 30 நிமிடங்களுக்குள் சாப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர்.</p><p>இதையடுத்து போட்டி தொடங்கியதும், போட்டியாளர்கள் தங்களால் இயன்ற அளவு லட்டுகளை வேக வேகமாக சாப்பிட தொடங்கினர். </p><p>இதற்கைடையில் போட்டியின் போது சராசரியாக 15 லட்டுகளை சாப்பிட்ட பிறகு, முதல் 15 நிமிடங்களுக்குள் பல போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.</p><figure><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1766460144559224%2F&show_text=false&width=267&t=0" width="267" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></figure><p>இறுதிச் சுற்றில், ஐந்து போட்டியாளர்கள் முதலிடத்திற்காக போட்டியிட்டதால், போட்டி மேலும் தீவிரமடைந்தது.</p><p>போட்டியாளர்கள் 22, 24 மற்றும் 26 லட்டுகளை எட்டியபோது, பார்வையாளர்கள் பலத்த கைதட்டி ஆரவாரம் செய்தனர்.</p><p>பட்டத்தை வெல்வதற்கான தங்களது முயற்சிகளை போட்டியாளர்கள் தொடர்ந்ததால், இறுதி நிமிடங்களில் பரபரப்பு அதிகரித்தது.</p><p>இறுதியில், ராகவானி என்ற இளைஞர் 30 நிமிடங்களில் 28 லட்டுகளை சாப்பிட்டு முதலிடம் பிடித்தார், மேலும் அவருக்கு ரூ. 2,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>3வது டி20 போட்டி: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் அதிரடியில் இந்தியா 221 ரன்கள் குவிப்பு</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/afghanistan-need-222-runs-to-win-against-india-3rd-t20-match</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/afghanistan-need-222-runs-to-win-against-india-3rd-t20-match#comments</comments><guid isPermaLink="false">7a34c733-a061-49d5-a97e-eaa8c4c1d0eb</guid><pubDate>Thu, 17 Sep 2026 15:48:40 +0000</pubDate><atom:updated>2026-09-17T15:48:40.390Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sanju samson,சஞ்சு சாம்சன்,Abhishek Sharma,அபிஷேக் சர்மா,INDvAFG,இந்தியா ஆப்கானிஸ்தான் தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/16sti0kt/sharma.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ abhishek, samson]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/16sti0kt/sharma.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் அதிரடியால் இந்திய அணி 221 ரன்களைக் குவித்துள்ளது.</strong></em></p><p>ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. </p><p>டெல்லியில் நடந்த முதல் இரு போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றியது.</p><h2>டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான்</h2><p>இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி டெல்லியில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது.</p><p>அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா களமிறங்கினர்.</p><p>ஆரம்பம் முதலே இருவரும் அதிரடியில் இறங்கினர். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார்.</p><p>இந்திய அணி பவர் பிளே ஓவரில் 100 ரன்களைக் குவித்தது.</p><h2>30 பந்தில் சதமடித்த அபிஷேக்</h2><p>அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா 30 பந்தில் சதமடித்து அசத்தினார். இதில் 10 சிக்சர், 9 பவுண்டரி அடங்கும்.</p><p>முதல் விக்கெட்டுக்கு 142 ரன்களை சேர்த்த நிலையில், அபிஷேக் சர்மா 34 பந்தில் 108 ரன்கள் குவித்து ஆட்டமிந்தார்.</p><p>அடுத்து இறங்கிய திலக் வர்மா 2 ரன்னில் வெளியேறினார்.</p><p>தொடர்ந்து பொறுப்புடன் ஆடிய சஞ்சு சாம்சன் அரை சதம் கடந்து 50 ரன்னில் அவுட்டானார். ஷ்ரேயஸ் அய்யர் 29 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். </p><p>இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 221 ரன்களைக் குவித்தது.</p>]]></content:encoded></item><item><title>டாடா குழுமத் தலைவர் பதவியில் மீண்டும் சந்திரசேகரன் நியமனம்: டாடா டிரஸ்ட் கடும் எதிர்ப்பு </title><link>https://www.maalaimalar.com/news/national/tata-group-chairman-chandrasekaran-reappointed-amid-trust-opposition</link><comments>https://www.maalaimalar.com/news/national/tata-group-chairman-chandrasekaran-reappointed-amid-trust-opposition#comments</comments><guid isPermaLink="false">86d75590-ff5a-4741-aed5-e1117b204867</guid><pubDate>Thu, 17 Sep 2026 15:02:46 +0000</pubDate><atom:updated>2026-09-17T15:02:46.580Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TATA,டாடா,டாடா குழுமம்,Tata Trusts,டாடா அறக்கட்டளை,N.Chandrasekaran,என்.சந்திரசேகரன்</media:keywords><media:content height="225" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/62hu51mm/n-chandrasekaran.avif" width="400"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ N.Chandrasekaran]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/62hu51mm/n-chandrasekaran.avif?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>நியமனம் </h2><p>டாடா குழுமத்தின் தலைமை நிறுவனமான <a href="https://www.maalaimalar.com/news/world/leave-kenya-president-issues-stern-order-to-tata-chemicals-what-is-the-issue">டாடா</a> சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரசேகரனை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு அதே பதவியில் மீண்டும் தொடர்வார் என்று  டாடா நிர்வாக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><h2>டாடா அறக்கட்டளைகள் எதிர்ப்பு </h2><p>டாடா குழுமத் தலைவராக 2017ஆம் ஆண்டு பதவியேற்ற சந்திரசேகரனின் பதவிகாலம் வருகிற 2027 பிப்ரவரியுடன் முடிவடைய உள்ளது. ஏற்கனவே இவரின் பதவி நீட்டிப்புக்கு முன்பே டாடா சன்ஸ் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், தனது பதவியை ராஜினாம செய்வதாக சந்திரசேகரன் கடந்த மாதம் அறிவித்திருந்தார்.</p><h2>மீண்டும் ஒப்புதல்</h2><p>இந்த நிலையில் டாடா சன்ஸ் குழும நிர்வாக கூட்டத்தில் சந்திரசேகரனை மேலும் 5 ஆண்டுகளுக்கு தலைவராக மறுநியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.</p> <h2>சர்ச்சை </h2><p> சந்திரசேகரனை மீண்டும் தலைவராக நியமிக்க டாடா சன்ஸ் இயக்குனர் குழு எடுத்த முடிவு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்த மறுநியமன தீர்மானத்துக்கு , நான்கு இயக்குநர்கள் ஆதரவாகவும் ,டாடா சன்ஸ் நிறுவனத்தின் அறக்கட்டளை சார்பிலான இயக்குனர்களில் ஒருவருமான <a href="https://www.maalaimalar.com/news/national/can-noel-tata-chairman-of-tata-trust-head-tata-sons-743016">நோயல் டாடா </a>எதிராகவும் வாக்களித்தார்.</p><h2>டாடா டிரஸ்ட்</h2><p>டாடா சன்ஸ் நிறுவனத்தின் விதிமுறைகளின்படி, தலைவரை நியமிப்பதற்கும் மறுநியமிப்பதற்கும் அறக்கட்டளைகளின் பரிந்துரைக்கப்பட்ட இயக்குனர்களின் பெரும்பான்மை ஆதரவு தேவை என்று டாடா அறக்கட்டளைகள் கூறியுள்ளன.</p><p>மேலும், அந்த இரு இயக்குனர்களும் கூட்டத்தில் பங்கேற்று, இருவரும் ஆதரவாக வாக்களித்தால்தான் தலைவர் நியமனம் தொடர்பான தீர்மானம் செல்லுபடியாகும் என்றும் டாடா டிர்ஸ்ட தெரிவித்துள்ளது.</p> <p>நோயல் டாடா எதிராக வாக்களித்துள்ளதால், சந்திரசேகரனின் மறுநியமன <a href="http://maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-urges-resolution-to-safeguard-obc-rights">தீர்மானம்</a> சட்டரீதியாக செல்லாது என்று டாடா அறக்கட்டளைகள் தெரிவித்துள்ளன.</p><p>இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வழங்கிய சட்டக் கருத்தையும் நோயல் டாடா இயக்குனர் குழுவிடம் சமர்ப்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <h2>மோதல் </h2><p>சந்திரசேகரன் மீண்டும் பதவியேற்பது தொடர்பான பிரச்சினை தற்போது சட்ட மற்றும் நிர்வாக ரீதியான மோதலாக மாறியுள்ளது.சந்திரசேகரனுக்கு பதிலாக புதிய தலைவரை தேர்வு செய்யும் பணியை தொடங்கியிருந்ததாக டாடா அறக்கட்டளைகள் தெரிவித்துள்ளன. </p><p>அந்த பட்டியலில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டி.வி.நரேந்திரன், டாடா சன்ஸ் நிறுவனத்தின் குழும தலைமை நிதி அதிகாரி சவுரப் அகர்வால், தேசிய பங்குச்சந்தை தலைமை செயல் அதிகாரி ஆஷிஷ் சவுகான் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன</p><p>தற்போதைய சூழலில், சந்திரசேகரனின் மறுநியமன விவகாரத்தில் டாடா சன்ஸ் இயக்குனர் குழுவுக்கும் டாடா அறக்கட்டளைகளுக்கும் இடையேயான ஒரு மோதல் சூழலலானது ஏற்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>3வது டி20 போட்டி: ருத்ர தாண்டவமாடிய அபிஷேக் சர்மா -30 பந்தில் சதமடித்து சாதனை</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/abhishek-sharma-century-in-30-balls-against-afghanistan-3rd-t20-match</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/abhishek-sharma-century-in-30-balls-against-afghanistan-3rd-t20-match#comments</comments><guid isPermaLink="false">9735e767-a15c-4069-a5a5-377e25ac4026</guid><pubDate>Thu, 17 Sep 2026 14:44:19 +0000</pubDate><atom:updated>2026-09-17T14:44:19.733Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Abhishek Sharma,அபிஷேக் சர்மா,INDvAFG,இந்தியா ஆப்கானிஸ்தான் தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/vv3j36zg/abhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ abhishek sharma]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/vv3j36zg/abhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்தியாவின் அபிஷேக் சர்மா 30 பந்தில் சதமடித்தார்.</strong></em></p><p>ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. </p><p>டெல்லியில் நடந்த முதல் இரு போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றியது.</p><h2>டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான்</h2><p>இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி டெல்லியில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது.</p><p>அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா களமிறங்கினர்.</p><p>இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியில் இறங்கினர். 3வது ஓவரில் 23 ரன்னும், 5வது ஓவரில் 29 ரன்னும் குவித்தனர்.</p><p>அபிஷேக் சர்மா கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார்.</p><p>இந்திய அணி பவர் பிளே ஓவரில் 100 ரன்களைக் குவித்தது.</p><h2>30 பந்தில் சதமடித்த அபிஷேக்</h2><p>தொடர்ந்து அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா 30 பந்தில் சதமடித்து அசத்தினார். இதில் 10 சிக்சர், 9 பவுண்டரி அடங்கும்.</p>]]></content:encoded></item><item><title>காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்கு மாற்றாக மூன்றாவது அணி - மம்தாவை சந்தித்த கனிமொழி எம்.பி </title><link>https://www.maalaimalar.com/news/national/new-alliance-under-cjp-as-alternative-to-congress-bjp-kanimozhi-meets-mamata</link><comments>https://www.maalaimalar.com/news/national/new-alliance-under-cjp-as-alternative-to-congress-bjp-kanimozhi-meets-mamata#comments</comments><guid isPermaLink="false">8a3bfbd7-8583-48d6-932d-3311f2087925</guid><pubDate>Thu, 17 Sep 2026 14:22:08 +0000</pubDate><atom:updated>2026-09-17T14:22:08.848Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மம்தா பானர்ஜி,கனிமொழி எம்பி,Mamta Banerjee,Kanimozhi MP,சிஜேபி,CJP</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/nnrspi5z/Untitled-design-2.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mamata-Kanimozhi meeting]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/nnrspi5z/Untitled-design-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சரான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜியை கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.</p><p>இந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, திராவிட முன்னேற்ற கழகத்தில் இருந்து <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D">காங்கிரஸ் கட்சி</a> வெளியேறியது. இதையடுத்து திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இது இந்தியா கூட்டணியின் எதிர்காலம் குறித்த கேள்விகளையும் எழுப்பியது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF">இந்தியா கூட்டணியிலிருந்து</a> திமுக விலகிவிட்டதாகவும், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல பிராந்திய கட்சிகள் காங்கிரஸ் கட்சியின் மீது அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.</p><p>இந்தியா கூட்டணியின் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை அதிகரித்து வரும் நிலையில், தேசிய அளவில் மூன்றாவது அரசியல் முன்னணியை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக இந்த விவாதங்கள் இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.</p><p>தேசிய அளவில், தற்போது இரண்டு முக்கிய அரசியல் கூட்டணிகளாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் (NDA), காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியும் உள்ளன.</p><h3><strong>2029 மக்களவை தேர்தல்</strong></h3><p>இந்தச் சூழ்நிலையில், 2029 மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, பிராந்திய கட்சிகளின் தலைமையில் ஒரு புதிய தேசிய அளவிலான கூட்டணி அமைவதற்கான சாத்தியக்கூறு குறித்து அரசியல் வட்டாரங்கள் விவாதித்து வருவதாக கூறப்படுறது.</p><p>அத்தகைய ஒரு கூட்டணியில் இடம்பெற வாய்ப்புள்ள தலைவர்களாக மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் பேச்சுவார்த்தையில் உள்ளதாக கூறப்படுகிறது.</p><p>மேலும் கடந்த வாரத்தில் திமுக எம்.பி. கனிமொழி சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரேவை அவரது இல்லத்தில் சந்தித்தார்.</p><p>இந்த சந்திப்பு குறித்த விவரங்கள் வெளியிடப்படாத நிலையில், தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் தமிழகத்தில் காங்கிரஸின் நடவடிக்கைக்குப் பிறகு இந்தியா கூட்டமைப்பின் எதிர்காலம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.</p><p>இந்தப் பின்னணியில்தான் கொல்கத்தாவில் மம்தா பானர்ஜியை, கனிமொழி எம்.பி சந்தித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. வரும் நாட்களில் மேலும் கலந்துரையாடல்களும் சந்திப்புகளும் நடைபெறக்கூடும் என்றும் அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு..! </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/group-1-exam-hall-ticket-release-tnpsc-notification</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/group-1-exam-hall-ticket-release-tnpsc-notification#comments</comments><guid isPermaLink="false">1d3c700f-172b-45e4-94f2-7b1b8c75fc9a</guid><pubDate>Thu, 17 Sep 2026 13:54:20 +0000</pubDate><atom:updated>2026-09-17T13:54:20.538Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TNPSC,hall ticket,ஹால் டிக்கெட்,டிஎன்பிஎஸ்சி,TNPSCGroup1,டிஎன்பிஎஸ்சி குரூப் 1</media:keywords><media:content height="183" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/ykh1gi8h/images-12.jfif" width="275"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TNPSC]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/ykh1gi8h/images-12.jfif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>குரூப் 1 தேர்வு </h2><p>தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 27, 2026 அன்று முற்பகல் அமர்வில் நடைபெற உள்ளது.இத்தேர்விற்கு தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களில் தேர்வானது நடைப்பெற இருக்கிறது.</p><h2>ஹால் டிக்கெட்</h2><p>வரும் 27ம் தேதி நடைப்பெறவுள்ள குரூப் 1 தேர்வுக்கான அனுமதி நுழைவு சீட்டு வெளியாகியுள்ளது.ஹால்டிக்கெட்டை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-ஆகியவற்றில் பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.</p><p>இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தனது சமூகவலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது </p><p>தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிப்பு எண் 05/2026, நாள் 23.06.2026-ன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு ,தொகுதி பணிகள்பதவிகளுக்கான முதல்நிலை கொள்குறி வகை மற்றும் ஒளிக்குறி உணரி தேர்வு 27.09.2026 முற்பகல் நடைபெற உள்ளது.</p><p>தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு, ஹால் டிக்கெட் தேர்வாணையத்தின் இணைய தளம் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவு OTR DASHBOARD மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கான ஹால் டிக்கெட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.</p><p> என்று  தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மெக்கா தாக்கப்பட்டால் பாகிஸ்தான் தனது கடமைகளை நிறைவேற்றும்: பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்</title><link>https://www.maalaimalar.com/news/world/pakistan-will-fulfil-its-obligations-if-mecca-is-attacked-defence-minister-khawaja-asif</link><comments>https://www.maalaimalar.com/news/world/pakistan-will-fulfil-its-obligations-if-mecca-is-attacked-defence-minister-khawaja-asif#comments</comments><guid isPermaLink="false">2a683fdf-2e9c-42a8-9a88-189e2d15da34</guid><pubDate>Thu, 17 Sep 2026 13:51:01 +0000</pubDate><atom:updated>2026-09-17T13:51:01.172Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Pakistan,Houthi,ஹவுதி,Mecca Defense Pact,மெக்கா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/scbiktzl/Untitled-design.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pakistan–Saudi security pledge]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/scbiktzl/Untitled-design.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஏமனில் உள்ள முக்கிய போக்குவரத்து வழித்தடமான பால்-அல்-மண்டேப் ஜலசந்தியை கைப்பற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவுக்கு எதிராக தீவிரமாக போர் தொடுத்து வரும் நிலையில், மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் தனது கடமைகளை நிறைவேற்ற தயாராக இருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE">சவுதியில்</a> உள்ள இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவை நோக்கி ஆளில்லா விமானத்தை ஏவி ஹவுதிகள் தாக்குதல் நடத்தியதாக சவுதி அரேபியா குற்றம்சாட்டியது. </p><p>மேலும் ஹவுதிகள் ஏவிய ஆளில்லா விமானம் ஒன்றை தாங்கள் சுட்டு வீழ்த்தியதாகவும் சவுதி அரேபியா தெரிவித்தது.   </p><h3><strong>ஹவுதி மறுப்பு</strong></h3><p>இந்த குற்றச்சாட்டை மறுத்த ஹவுதிகள், சவுதி அரேபியா பழைய பொய்களை பரப்பி வருவதாக கூறியது. மேலும் இஸ்லாத்தின் முக்கியமான ஒரு தளத்தை குறிவைப்பது பற்றி தங்கள் குழு நினைத்துக்கூட பார்க்காது என்றும் ஹவுதி அமைப்பு கூறியது.</p><p>இதையடுத்து ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறும் சம்பவத்திற்கு, பாகிஸ்தான் தனது கண்டனத்தை பதிவு செய்தது. </p><p>மேலும் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் அமைதிக்கு திரும்புமாறு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்தார்.</p><p>சவுதி அரேபியாவின் பாதுகாப்பிற்கு பாகிஸ்தான் முழு ஆதரவையும் அளித்து, தோளோடு தோள் நிற்கும் எனவும் அவர் கூறினார்.</p><h3><strong>பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்</strong></h3><p>இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கூறுகையில், மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் தனது கடமைகளை நிறைவேற்ற பாகிஸ்தான் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் அவர், மெக்கா தாக்கப்பட்டால் அதை பாதுகாக்க எந்த ஒப்பந்தமும் தேவையில்லை என கூறினார். மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தை குறித்து அவர் கூறுகையில், பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் புவியியல் எல்லைகள் மீறப்படும் பட்சத்தில், பரஸ்பர பாதுகாப்பிற்கு இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது என்றும் கூறினார்.</p><h3><strong>ஈரான் வெளியுறவு அமைச்சர்</strong></h3><p>கடந்த வாரம் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர், சவுதி அரேபியா மீதான அதிகரித்து வரும் தாக்குதல்கள் குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியிடம் எடுத்துரைத்தார்.</p><p>இதையடுத்து ஏமன் விவாகரங்களில் ஈரான் தலையிடுவதில்லை என அமைச்சக் செய்தி தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி செய்தியாளர்களிடம் கூறினார்.</p><p>மேலும் ஹவுதிகள் தங்கள் சொந்த நலன்களின் அடிப்படையில் எடுக்கும் முடிவுகள், முற்றிலும் அவர்களது சுதந்திரமான முடிவுகள் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>3வது டி20 போட்டி: டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பவுலிங் தேர்வு- இந்தியா பேட்டிங்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/afghanistan-opt-to-bowl-first-against-india-third-odi</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/afghanistan-opt-to-bowl-first-against-india-third-odi#comments</comments><guid isPermaLink="false">3c1954b5-40f6-439d-a129-f3e86aec6271</guid><pubDate>Thu, 17 Sep 2026 13:41:14 +0000</pubDate><atom:updated>2026-09-17T13:41:14.875Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Shreyas Iyer,ஷ்ரேயஸ் அய்யர்,INDvAFG,இந்தியா ஆப்கானிஸ்தான் தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/yznm1ejr/toss.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ toss]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/yznm1ejr/toss.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பவுலிங் தேர்வு செய்துள்ளது.</strong></em></p><p>ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. </p><p>டெல்லியில் நடந்த முதல் இரு போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றியது.</p><p>இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி டெல்லியில் இன்று நடைபெறுகிறது.</p><p>டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது.</p><p>அர்ஷ்தீப் சிங்குக்கு பதிலாக யாஷ் தாக்குர் அணியில் இணைந்துள்ளார். சூர்யவன்ஷி இந்தப் போட்டியிலும் சேர்க்கப்படவில்லை.</p><p>அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்குகிறது.</p><h2>இந்திய அணி</h2><p>அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஷ்ரேயஸ் அய்யர் (கேப்டன்), திலக் வர்மா, அக்ஷர் பட்டேல், நிதிஷ்குமார் ரெட்டி, ஷிவம் துபே, ரவி பிஷ்னோய், ஜஸ்பிரித் பும்ரா, யாஷ் தாக்குர்.</p><h2>ஆப்கானிஸ்தான் அணி</h2><p>ரமனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரன் (கேப்டன்), செடியுல்லா அடல், டார்விஷ் ரசூலி, அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், முகமது நபி, ரஷித் கான், முஜுப் உர் ரஹ்மான், பசல்ஹக் பரூக்கி, அப்துல்லா அஹமதுசாய், நுர் உல் ரஹ்மான்.</p>]]></content:encoded></item><item><title>கண்ணீருடன் அரசுக்கு ஆராய்ச்சி மாணவர் கேள்வி ? மாணவரின் கல்விக்கு எந்த இடையூறும் ஏற்படக்கூடாது - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்.! </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/with-tears-research-student-questions-government-udayanidhi-stalin-condemns</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/with-tears-research-student-questions-government-udayanidhi-stalin-condemns#comments</comments><guid isPermaLink="false">fb169d85-1316-448d-bd95-ff5d22e900dd</guid><pubDate>Thu, 17 Sep 2026 13:38:04 +0000</pubDate><atom:updated>2026-09-17T13:38:04.505Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,Condemn,அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை</media:keywords><media:content height="1080" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/1mjxqx4n/TNPSC-4.png" width="1920"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ udhayanidhi stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/1mjxqx4n/TNPSC-4.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>கண்ணீர் மல்க கேள்வி</h2><p>அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன், இந்த <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijays-visit-to-england-has-proven-to-be-a-successful-one">அரசு </a>தனக்கான கல்வி உதவித்தொகையை வழங்காமல் இழுத்தடித்ததை சுட்டிக்காட்டி இருந்த நிலையில், தற்போது இந்த ஆட்சியாளர்கள் அவருடைய கல்வியையே கேள்விக்குறியாக்குவதாக கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.</p><p>அதில் என்ன அடிமையா இரு படிக்காதன்னு சொல்லிடுங்கள் என்று வீடியோ வெளியிட்டு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னிஅரசுக்கு கண்ணீருடன் கேள்வி எழுப்பியுள்ளார்</p> <h2>கண்டனம் </h2><p>அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன், ஆதரவாக எதிர்கட்சி தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-brought-feudal-politics-to-common-people-udayanidhi-stalin">உதயநிதி  </a>ஸ்டாலின் கண்டனங்களை பதிவு செய்துள்ளார்</p><p>இது குறித்து தனது சமூகவலைத்தளபதிவில் கூறப்பட்டுள்ளதாவது </p><p>சமூகநீதி நாளில் இப்படி ஒரு சமூக அநீதியை அரங்கேற்றி இருக்கும் சோபா மாடல் அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.</p><p>தன்னுடைய தவறை மறைக்க அடுத்தவர் மீது பழிபோடும் இந்த ஆட்சியாளர்கள், அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வரவில்லை என்று சொன்ன மாணவரை குறிவைத்து நெருக்கடி  தருவதும், கல்வியில் இருந்து வெளியேற்ற துடிப்பதும் கேவலத்தின் உச்சம்.</p><h2>இடையூறு ஏற்படக்கூடாது</h2><p>மாணவர் பாரதிதாசனை பழிவாங்க, அவருடைய கல்வியை பாழாக்கும் வேலையில் இந்த அரசு இறங்கி இருப்பது ஏற்க முடியாது.ரோஹித் வெமுலாவுக்கு நடந்த அதே கொடுமையை இந்த அரசு தனக்கு செய்கிறது என்று மனம் நொந்து பேசியிருக்கும் பாரதிதாசனின் கல்விக்கு எந்த இடையூறும் இந்த அரசு செய்யக்கூடாது.</p> <p>அவருக்கு சேர வேண்டிய கல்வி உதவித்தொகை கிடைக்கவும் - அவரது ஆராய்ச்சி படிப்பு தொடரவும் இந்த <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-condemn-tvk-government">ரீல்ஸ்</a> அரசு துணை நிற்க வேண்டும்.</p><p>என் இவ்வாறு தனது பக்கத்தில் தெரிவித்துள்ளார்</p> ]]></content:encoded></item></channel></rss>