<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 02 Sep 2026 08:02:41 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: விவசாயிகள், ஆசிரியர்கள் மீது முந்தைய ஆட்சியில் பதியப்பட்ட வழக்குகள் ரத்து: முதலமைச்சர் விஜய் - 2 செப். 2026 </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-2-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-2-september-2026#comments</comments><guid isPermaLink="false">83338c15-7a2e-4b27-825a-a67aff274e36</guid><pubDate>Wed, 02 Sep 2026 03:53:36 +0000</pubDate><atom:updated>2026-09-02T07:45:16.854Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/ubfkhzxf/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/ubfkhzxf/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சியில் ரூ.34 கோடியில் இறைச்சி பதப்படுத்தும் ஆலை அமைக்கப்படும் - அமைச்சர் கமலி</p><p>பருத்தி பயிர் பாதிப்பு குறித்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கு நாகை எம்எல்ஏ ஜவாஹிருல்லா கவன ஈர்ப்பு தீர்மானம்</p><p>தவெக அரசின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளும் வாபஸ் பெறப்படுமா? - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</p><p>வழக்குகள் வாபஸ் என்பது இதுதான் முதல்முறை என அமைச்சர் கூறியது தவறு. 5,000-க்கும் மேற்பட்ட போராட்டம் சார்ந்த வழக்குகளை ஸ்டாலின் வாபஸ் பெற்றார் - உதயநிதி </p><p>முந்தைய ஆட்சி என்று கூறாமல் வேறு எப்படி கூற முடியும்? - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>முதலமைச்சரின் அறிவிப்பை திமுகவும் வரவேற்கும் - சபாநாயகர்</p><p>முந்தைய ஆட்சியில் வழக்குகள் போடப்பட்டாதா? இல்லை? - சபாநாயகர்</p><p>திமுக ஆட்சியிலும் வழக்குகள் வாபஸ் என்பதற்கு வன்னிஅரசு சாட்சி - எ.வ.வேலு</p><p>முந்தைய அரசு என கூறினால் விவாதம் எழத்தான் செய்யும்  - எ.வ.வேலு</p><p>போராட்டத்தை ஒடுக்குவதற்கு திமுக ஆட்சியில் வழக்குகள் பதிவு - நிர்மல்குமார்</p><p>வரலாற்று சிறப்புமிக்க முதல்வரின் அறிவிப்புக்கு நன்றி.</p><p>முதல்வர் பரந்த உள்ளத்துடன் விவசாயிகள் பக்கம் நின்று அவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற்றுள்ளார்.</p><p>அரசு கூறும்போது நீதிமன்றம் நிச்சயம் விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</p><p>110 விதிகளின் கீழ் முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில் எந்த விதிமீறலும் இல்லை - சபாநாயர் விளக்கம்</p><p>110 விதியின் கீழ் அறிவிப்புகளை மட்டும் தான் முதலமைச்சர் வெளியிட முடியும், வழக்குகளை வாபஸ் பெறும் அறிவிப்பை எப்படி வெளியிடலாம்.</p><p>110 விதியின் கீழ் பேசும் முதல்வர் முந்தைய ஆட்சி குறித்த  தவறான கருத்துகளை எப்படி தெரிவிக்கலாம்?</p><p>ஒரு திட்டத்திற்காக நிலம் எடுக்கும்போது போராட்டங்கள் நடக்கும், நீங்கள் செய்தாலும் அதுதான் நடக்கும்.</p><p>சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க நீதியை நிலைநாட்டத்தான் போராட்டக்காரர்கள் மீது வழக்கு பதியப்பட்டது  - எ.வ.வேலு</p><p>அரசியல் வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்</p><p>நீட் போராட்ட வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட்</p><p>அறிவிப்புகளை வரவேற்க ராமச்சந்திரன் நீட் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான வழக்குகளையும் ரத்து செய்ய கோரிக்கை</p><p>ஒட்டுமொத்த ஆசிரியர்கள், அவர்கள் குடும்பத்தினர் சார்பிலும் முதல்வருக்கு நன்றி கூறுகிறேன் - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>சென்னை கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூரில் ரூ.236 கோடியில் குடிநீர் ஆதாரங்கள் மேம்படுத்தப்படும்.</p><p>கடலூரில் ரூ.8 கோடியில் பாரம்பரிய நடைபாதை அமைக்கப்படும்.</p><p>கன்னியாகுமரி கடற்கரை பகுதியை அழகுப்படுத்த ரூ.50 கோடி ஒதுக்கப்படும்.</p><p>ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவு சான்று பெற ஏற்படும் காலதாமதத்தை தடுக்க டிஜிட்டல் முறையில் வழங்கப்படும்.</p><p>லைசென்ஸ் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும், பயனாளர்கள் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.</p><p>டிஜிட்டல் முறையில் டிரைவிங் லைசென்ஸ், பதிவுச்சான்று வழங்குவதால் தொலைந்து போனாலும் பதிவிறக்கம் செய்யலாம்.</p><p>விவசாயிகள், ஆசிரியர்கள் மீது திமுக ஆட்சியில் பதியப்பட்ட வழக்குகள் ரத்து.</p><p>திருவண்ணாமலை மேல்மா சிப்காட் போராட்ட வழக்குகளும் ரத்து - முதலமைச்சர் விஜய்</p> <p>பள்ளிகளை சுற்றியுள்ள சாலையில் மாணவ, மாணவிகள் நடந்து செல்ல பிரத்யேக நடைபாதை உருவாக்கப்படும்.</p><p>மாநிலம் முழுவதும் ரூ.305 கோடி செலவில் பூங்காக்கள் அமைக்கப்படும்.</p><p>ரூ.335 கோடி செலவில் அரசு பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.</p><p>மதுரை மாநகராட்சியில் 40 ஆண்டுகள் பழமையான பாதாள சாக்கடை திட்டம் ரூ.2,400 கோடியில் மேற்கொள்ளப்படும்.</p><p>நாகர்கோவிலில் ரூ.960 கோடியில் புதிய பாதாள சாக்கடை திட்டம் மேற்கொள்ளப்படும் - முதலமைச்சர் விஜய்</p> <p>சென்னை கீழ்ப்பாக்கத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய திறன் அதிகரிக்கும் திட்டம் ரூ.410 கோடியில் செயல்படுத்தப்படும்.</p><p>சென்னை உட்பட அனைத்து நகரப்பகுதிகளின் சாலைகளும் ரூ.1,850 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும் - முதலமைச்சர் விஜய்</p><p>நாகர்கோவில் மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் புதிய பாதாள சாக்கடை திட்டங்கள் செயல்படுத்தப்படும்.</p><p>ஆவடி நகராட்சியில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் வகையில் ரூ.500 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் - முதலமைச்சர் விஜய்</p> <p>மீஞ்சூரில் ரூ.4,800 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.</p><p>பழமையான 33 குடிநீர் திட்டங்கள் சீரமைக்கப்படும் - முதலமைச்சர் விஜய்</p> <p>சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்புகளை வெளியிட்டார்.</p> <p>பணி நிரந்தரம், ஊதிய உயர்வு கோரிக்கையில் நிர்வாக சிக்கல் மட்டுமின்றி நிதி சிக்கலும் உள்ளது - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>தூய்மைப் பணியாளர்களை சந்தித்து முதலமைச்சர் பேசுவாரா? என தெளிவுபடுத்த வேண்டும்.</p><p>பணி நிரந்தரம் தொடர்பான தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் 15 நாட்களை எட்டியுள்ளது - உதயநிதி ஸ்டாலின்</p><p>மணக்குடி கிராமத்தில் படகு சவாரி செய்ய தனியார் நிறுவனத்திற்கு இதுவரை எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை.</p><p>அனுமதியில்லாமல் படகு சவாரி, சாகச சுற்றுலா மேற்கொள்ளப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ராஜேஷ்</p><p>வணிக ரீதியில் சாகச சுற்றுலா செய்யும் முன்பு சுற்றுலாத்துறையிடம் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும் - அமைச்சர் ராஜேஷ்</p><p>ஆட்கொல்லி புலியை தேடிக்கொண்டிருக்கிறோம் - அமைச்சர் ரஞ்சித் குமார் </p> <p>உதகை அருகே இருவரை கொன்று தின்ற புலியை பிடிக்க வேண்டும் - போஜராஜன்</p> <p>வனவிலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப்பன்றிகளை நீக்க இயலாது - செங்கோட்டையன்</p> <p>மத்திய அரசிடம் வலியுறுத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்கப்படும் - அமைச்சர் ரஞ்சித்குமார்</p><p>வனவிலங்கு பட்டியலில் இருந்து காட்டுப்பன்றியை நீக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் - ராஜேந்திரன்</p><p>காட்டுப்பன்றியை விவசாயிகள் சுட்டுக்கொல்வதாக அமைச்சர் பேரவையில் கூறுவது சரியல்ல. </p><p>பாதுகாக்கப்பட்ட வனவிலங்கான காட்டுப்பன்றியை சுட்டுக்கொல்வதாக கூறுவது அரசின் மீதான நல்லெண்ணத்தை கெடுக்கும் - தங்கம் தென்னரசு</p><p>காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொன்று சிக்கன்போல் விவசாயிகள் சாப்பிடுகிறார்கள், அதை நாம் கண்டுகொள்வதில்லை - அமைச்சர் ரஞ்சித் குமார் </p><p>காட்டுப்பன்றிகளை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் - தளி ராமச்சந்திரன்</p><p>தஞ்சை பெரிய கோவிலில் அன்னதானம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் - எம்எல்ஏ தஞ்சை சரவணன் கேள்விக்கு அமைச்சர் ரமேஷ் பதில்</p> <p>தஞ்சை பெருவுடையார் கோவிலில் தினந்தோறும் அன்னதானம் வழங்க தனியாரையும் அனுமதிக்க வேண்டும் - தஞ்சை சரவணன்</p> <p>அனைத்து கோவில்களையும் ஆய்வு செய்வதற்கு தயார். கோவில்களில் அன்னதான சேவையை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ரமேஷ்</p><p>விருத்தாச்சலத்தை கோவில் நகரமாக அறிவிக்க வேண்டும். அமைச்சர்கள் எங்களுடன் சேர்ந்து தொகுதிக்கு வந்து ஆய்வு செய்ய வேண்டும் - பிரேமலதா</p><p>திருத்தணி முருகன் கோவிலில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை தேவை. </p><p>செவ்வாய் கிழமை தோறும் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை தேவை - எம்எல்ஏ ஹரி கோரிக்கை</p><p>இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த கோரிக்கைகள் - அமைச்சர் ரமேஷ் பதில்</p><p>சொந்த காரணங்களால் சிலர் பணம் வாங்கிக்கொண்டு செயல்படுகிறார்கள். இன்னும் 6 மாதங்களில் பிரச்சனை சரி செய்யப்படும் - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்</p><p>கொரடாச்சேரி பகுதியில் ஒருநாளைக்கு 10 முறை பவர் கட் ஆகிறது - எம்எல்ஏ பூண்டி கலைவாணன் குற்றச்சாட்டு</p><p>சென்னையில் புதிதாக 6 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>15 நிமிடங்களில் மின் வெட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆண்டில் 6,000 டிரான்ஸ்ஃபார்மர்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>குறை மின்னழுத்தப் பிரச்சனை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் நிர்மல்குமார்</p> <p>பத்மநாபபுரம் - மலைக்கிராமங்களில் மின்வசதி இல்லை. துணை மின்நிலையம் அமைத்துத்தர வேண்டும் - செல்லசாமி</p><p>மதுரையில் 6 புதிய துணை மின் நிலையங்களுக்கான பணிகள் நடைபெறுகிறது - அமைச்சர் நிர்மல்குமார்</p> <p>திருத்துறைப்பூண்டியில் 110KV துணை மின்நிலையம் தேவை - எம்எல்ஏ மாரிமுத்து கோரிக்கை</p><p>குறை மின்னழுத்தப் பிரச்சனை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>சென்னையில் தாழ்வாக உள்ள மின்பெட்டிகளை உயர்த்தி வைக்க நடவடிக்கை - அமைச்சர் நிர்மல்குமார்</p> <p>மின்சாரத்துறை தொடர்பாக எம்எல்ஏக்கள் கோரிக்கை - அமைச்சர் நிர்மல்குமார் பதில்</p> <p>நேரடி கொள்முதல் நிலையங்கள் - உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் பதில் அளித்து வருகிறார்</p><p>ஆன்மிகமும் எங்கள் இதயங்களில் இருக்கிறது - ஓ.பன்னீர்செல்வம்</p> <p>எங்களுடைய சட்டசபை உறுப்பினர் கேட்டது உண்மையில் ஜலதோஷம் பற்றி தான் - உதயநிதி</p> <p>பெரியார் இயக்கம் பற்றி பேசிய திமுக தோஷத்தை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் பெரியார் வழி வந்தவர்கள். அறிவியல் பூர்வமாக இந்த பிரச்சனையை அணுகக்கூடியவர்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</p><p>தவெக அரசு அறிவியல் பூர்வமான ஒரு அரசை தான் மேற்கொண்டுள்ளது. தோஷம், பில்லி, சூனியம் அதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. உறுப்பினருக்கு நம்பிக்கை இருந்தால் அதை செய்து கொள்ளலாம். </p><p>ஜலதோஷம் தான் அதிகம் உள்ளது. பாம்புக்கடி தோஷம் எல்லாம் கேள்விப்படவில்லை - அமைச்சர் அருண்ராஜ்</p> <p>பல்வேறு தொகுதிகளில் பாம்புக்கடி இருக்கிறது. அந்த தொகுதிகளில் எல்லாம் தோஷம் உள்ளது. அமைச்சர் நாக தோஷம் கழிப்பதற்கு ஏதாவது பிரார்த்தனை இருந்தால் அதை செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்</p> <p>அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலி பணியிடம் நிரப்பப்படும் - அக்ரி கிருஷ்ணமூர்த்தி கேள்விக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்</p><p>விரைவில் சங்கரன்கோவில் மருத்துவமனை மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படும் - அமைச்சர் அருண்ராஜ்</p><p>சங்கரன்கோவில் மருத்துவமனை புதிய கட்டடத்தை விரைவில் திறந்து வைக்க வேண்டும் - திலீபன் ஜெயசங்கரன்</p><p>விழுப்புரத்தில் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையம் அமைய உள்ளது - அமைச்சர் அருண்ராஜ்</p><p>விழுப்புரத்தில் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையம் அமைய உள்ளது - அமைச்சர் அருண்ராஜ்</p><p>முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரியில் சுற்றுச்சுவர், ஆடிட்டோரியம் ஏசி வசதி, உள் விளையாட்டு அரங்கம் தேவை - சிவக்குமார்</p><p>முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு பட்ஜெட்டில் ஏராளமான அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. </p><p>முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி ஆடிட்டோரியத்திற்கு ஏசி வசதி அமைக்க நடவடிக்கை - அமைச்சர் அருண்ராஜ்</p> <p>தேவை இருப்பின் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் அருண்ராஜ்</p><p>வள்ளியூர் மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். </p><p>ராதாபுரம் தொகுதியில் உள்ள மருத்துவமனையில் மருத்துவ வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் - சதீஷ் கிறிஸ்டோபர்</p><p>ஆம்பூர் மருத்துவமனை பிரசவங்களின் எண்ணிக்கையை ஆய்வு செய்து மகப்பேறு மைய வசதி ஏற்படுத்தப்படும் - அமைச்சர் அருண்ராஜ்</p><p>பண்ருட்டி மருத்துவமனையில் சிடி ஸ்கேன் வசதி தேவை ஏற்படும் பட்சத்தில் ஏற்படுத்தப்படும்.</p><p>பண்ருட்டி மருத்துவமனைக்கு 2 ஃப்ரீசர் பாக்ஸ் வசதி ஏற்படுத்தி தரப்படும் - அமைச்சர் அருண்ராஜ்</p><p>கடலூர் GH கொண்டு செல்லும் வழியில் உயிரிழப்புகள் நிகழ்கின்றன.</p><p>பண்ருட்டி மருத்துவமனையில் சிடி ஸ்கேன் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் - எம்எல்ஏ மோகன்</p> <p>ஏப்ரல் 2026 முதல் ஜூலை 2026 வரை 39 பேர் பாம்பு கடித்து அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர் - அமைச்சர் அருண்ராஜ்</p><p>பாம்பு கடி, விஷ முறிவு மருந்து மருத்துவமனையில் போதிய அளவில் கையிருப்பு உள்ளது - அமைச்சர் அருண்ராஜ்</p> <p>பண்ருட்டி அரசு மருத்துவமனையில் பாம்பு கடி மருந்துகள் தேவை - எம்எல்ஏ மோகன்</p><p>சட்டசபையில் இன்று வினாக்கள் விடைகள் நேரம் முடிந்ததும், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைகளின் மீதான மானியக்கோரிக்கை மீது விவாதங்கள் நடைபெறும்.</p><p>விவாதத்துக்கு பதில் அளித்து பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி, மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், கால்நடை துறை அமைச்சர் கமலி ஆகியோர், துறையின் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.</p> ]]></content:encoded></item><item><title>பொன்னேரி ஜெயிலில் ஆய்வு- திருக்குறள் புத்தகம் வாசித்த கைதியை பாராட்டிய நீதிபதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ponneri-jail-inspection-judge-lauds-inmate-reading-thirukkural</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ponneri-jail-inspection-judge-lauds-inmate-reading-thirukkural#comments</comments><guid isPermaLink="false">5f277aff-9053-4842-8351-69b8ac525289</guid><pubDate>Wed, 02 Sep 2026 07:52:01 +0000</pubDate><atom:updated>2026-09-02T07:52:01.004Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Justice,திருக்குறள்,Thirukural,பொன்னேரி சிறை,நீதிபதி ஆய்வு,ponneri jail</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/96y6r3cg/justice.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chief District Judge Juliet Pushpa]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/96y6r3cg/justice.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பொன்னேரி கிளை சிறையில் திருக்குறள் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்த ஒரு கைதியை பார்த்து  மாவட்ட முதன்மை நீதிபதி ஜூலியட் புஷ்பா விசாரித்து பாராட்டினார். </p><p>பொன்னேரி கிளை சிறையில் மாவட்ட முதன்மை நீதிபதி ஜூலியட் புஷ்பா தலைமையில் முதன்மை சார்பு நீதிபதி மகேஸ்வரி, தலைமை குற்றவியல் நீதிபதி தீன தயாளன் (பொறுப்பு) மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நளினி தேவி ஆகியோர் அடங்கிய குழுவினர் திடீரென ஆய்வு செய்தனர்.</p><p>அப்போது கிளைச் சிறையில் கைதிகளுக்கு முறையான <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D" rel="nofollow">குடிநீர்</a>, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளதா? எனவும் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு சுகாதாரமான முறையில் வழங்கப்படுகிறதா? என்பது குறித்தும் கேட்டறிந்தனர்.</p><p>கிளைச் சிறைக்குள் கைதிகள் அடைக்கப்படும் அறைகளையும், கைதிகள் நேர்காணல் அறையையும் நேரில் சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து சிறைச்சாலையில் பராமரிக்கப்படும் கைதிகள் ஒப்படைப்பு பதிவேடு, பாரா பதிவேடு, சிறை பதிவேடு, ஆயுத அறை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். </p><p>சிறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள உணவு பொருட்களின் எடை உள்ளிட்டவற்றை ஆய்வு  செய்து கைதிகளுக்கு தேவையான சட்ட உதவிகள், கல்வி மருத்துவம் குறித்தும் கேட்டிருந்தனர்.</p><p>அப்போது திருக்குறள் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்த ஒரு கைதியை பார்த்து  மாவட்ட முதன்மை நீதிபதி ஜூலியட் புஷ்பா விசாரித்து பாராட்டினார். </p><p>ஜெயிலில் அனைவரும் புத்தகம் படிக்க வேண்டும், கைதிகள் தங்களது தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். இனி சிறைக்குள் வரக்கூடாது நல்ல மனிதனாக சமுதாயத்தில் வாழ வேண்டும், குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும், சட்ட உதவிகள் தேவைப்பட்டால் குழு வினரிடம் தெரிவிக்கவும் என்று நீதிபதி அறிவுரை வழங்கினார். </p><p>மேலும் அனைத்து கைதிகளிடம் குறைகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது கிளை சிறை கண் காணிப்பாளர் சசிகுமார் (பொறுப்பு) மற்றும் வழக்கறிஞர்கள் உடன் இருந்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் வாபஸ்:  திமுக குற்றச்சாட்டுக்கு சபாநாயகர் அளித்த பதில் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-speaker-reply-to-dmk-indictment</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-speaker-reply-to-dmk-indictment#comments</comments><guid isPermaLink="false">aab57c29-79eb-489a-b7a9-98ae69c914a1</guid><pubDate>Wed, 02 Sep 2026 07:48:30 +0000</pubDate><atom:updated>2026-09-02T07:48:30.116Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly,வழக்குகள் வாபஸ்,JCD Prabhakar,ஜேசிடி பிரபாகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/3jq7s1cr/JCDPrabhakar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் ]]></media:title><media:description type="html"><![CDATA[ சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/3jq7s1cr/JCDPrabhakar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>110 விதியின் கீழ் முதலமைச்சர் விதிப்படி தான் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதில் எந்த தவறும் கிடையாது என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழ்நாடு சட்டசபையில்</a> முதலமைச்சர் விஜய் இன்று  110 விதியின் கீழ் விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான கடந்த ஐந்து ஆண்டில் போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவது  தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டது தொடர்பாக  திமுக கொறடா எ.வ.வேலு  சில விளக்கங்களை கேட்டு எதிர்ப்பு தெரிவித்தார். </p><p>அவர் கூறுகையில் முதலமைச்சர் 110 விதியின் கீழ் மக்களுக்குத் தேவையான நலத்திட்டங்கள் மற்றும் கொள்கைகளை அறிவிப்பதை யாரும் மறுக்கவில்லை.</p><p>பொதுமக்களுக்கான நலத்திட்டங்களை அறிவிப்பதற்குப் பதிலாக, முந்தைய அரசு போட்ட <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-cases-registered-against-farmers-and-teachers-during-the-dmk-regime-withdrawn">வழக்குகளைத்</a> திரும்பப் பெறுவதாகக் கூறி, முந்தைய ஆட்சியின் மீது குற்றம் சாட்டும் வகையில் 110 விதியை அரசியல் உள்நோக்கத்துடன் பயன்படுத்துவது ஏற்புடையதல்ல.</p><p>சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவே காவல் துறை மூலம் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. எந்த ஒரு அரசுக்கோ அல்லது முதலமைச்சருக்கோ தனிப்பட்ட முறையில் விவசாயிகள் மீதோ அல்லது ஆசிரியர்கள் மீதோ எவ்வித காழ்ப்புணர்ச்சியும் இருக்க முடியாது.</p><p>இதுபோன்ற வழக்குகளைத் திரும்பப் பெறுவதாக 110 விதியில் அறிவிப்பதன் மூலம், இனி இந்த ஆட்சியில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வழக்கே பதிவு செய்யப்பட மாட்டாதா அல்லது நில எடுப்பு போன்ற பணிகளின் போது சட்டம்-ஒழுங்கை அரசு கண்டு கொள்ளாதா?</p><p> முந்தைய அரசைக் குறை கூறுவதற்காக 110 விதியைப் பயன்படுத்துவது சட்டமன்ற நடைமுறைகளுக்கு எதிரானது</p><p>இவ்வாறு எ.வ.வேலு கூறினார்.</p><p>இதற்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறுகையில், 110 விதியின் கீழ் முதலமைச்சர் விதிப்படி தான் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதில் எந்த தவறும் கிடையாது. வேண்டுமானால் 110 விதியின் கீழ் என்னென்ன அறிவிப்புகளை வெளியிடலாம் என்று பட்டியல் தரவா? என்று  சபாநாயகர் எதிர் கேள்வி எழுப்பினார்.</p>]]></content:encoded></item><item><title>அச்சரப்பாக்கம் அருகே நடுபழனி கோவிலில் மரகத முருகன் சிலை கொள்ளை - மர்ம கும்பல் துணிகரம்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/murugan-idol-stolen-from-nadu-palani-temple-near-acharapakkam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/murugan-idol-stolen-from-nadu-palani-temple-near-acharapakkam#comments</comments><guid isPermaLink="false">7270fb4c-dfcc-47dd-ab4a-4b243d8211fc</guid><pubDate>Wed, 02 Sep 2026 07:41:33 +0000</pubDate><atom:updated>2026-09-02T07:41:33.412Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Acharapakkam,nadu palani temple,முருகன் சிலை கொள்ளை,அச்சரப்பாக்கம்,நடுபழனி கோவில்,murugan statue stolen</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/bz96wkue/murugan1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கோவிலில் இருந்த மரகத முருகன்  சிலை - சிலை மாயமானதால் காலியாக உள்ள பீடம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/bz96wkue/murugan1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அச்சரப்பாக்கம் அருகே நடுபழனி கோவிலில் மரகத முருகன் சிலை திருடு போன சம்பவம் பக்தர்களை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.</p><h2>மரகத முருகர் சிலை</h2><p>செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் அடுத்த பெருங்கருணை கிராமத்தில் உள்ள கனக மலை குன்றின் மீது தண்டாயுதபாணி கோவில் உள்ளது. இங்கு முத்து சுவாமிகள் தண்டாயுத பாணி சிலையை நிர்மாணம் செய்து முருக வழிபாட்டில் ஈடுபட்டார்.</p><p>சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோவில் மற்றும் பழனியில் உள்ள முருகன் கோவிலுக்கும் நடுவில் இருப்பதால் இந்த கோவிலை முருக பக்தர்கள் நடுபழனி முருகன் கோவில் என்று அழைத்து வந்தனர். கோவிலில் சுமார் 3 அடி உயரத்தில் மூலவர் மரகத முருகர் சிலை இருந்தது.</p> <p>வளர்பிறை, சஷ்டி, கிருத்திகை பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் உள்ளிட்ட அனைத்து முக்கிய விசேஷ நாட்களிலும் சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்க பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கிறார்கள். கோவிலின் மேற்கு பகுதியில் சுமார் 50 அடி உயரத்தில் பிரமாண்ட முருகன் சிலையும் உள்ளது.</p> <p>இந்தக் கோவிலை உருவாக்கிய முத்து சுவாமிகள் முக்தி அடைந்த பின்னர் கோவிலின் நிர்வாகத்தினை பெருங்கருணை கிராம மக்களோடு இணைந்து கர்நாடக மாநிலத்தில் உள்ள ஸ்ரீ கணபதி சச்சிதானந்த சரஸ்வதி சுவாமிகள் அறக்கட்டளையின் கீழ் நிர்வகிக்க வழிவகை செய்ததாக கூறப்படுகிறது. கன ஸ்ரீ கணபதி சச்சிதானந்த சுவாமிகள் திருக்கருணை நடுபழனி தண்டாயுதபாணி கோவிலில் இருந்த கற்சிலையை நீக்கி விட்டு மரகத கல்லால் ஆன தண்டாயுதபாணி மூலவர் சிலை நிறுவப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வந்தன.</p>  <h2>தண்டாயுதபாணி சிலை</h2><p>இந்த நிலையில் நேற்று இரவு பூஜை முடிந்ததும் கோவிலை ஊழியர்கள் பூட்டி சென்றனர். இன்று காலை வழக்கம்போல் கோவிலை பூசாரி திறந்தபோது கருவறையில் இருந்த மூலவர் மரகத கல்லாலான தண்டாயுதபாணி சிலை திருடு போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.</p><p>இதுகுறித்து கோவில் நிர்வாகத்துக்கும், சித்தாமூர் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். </p><p>கோவிலின் பின்பக்க மலையின் வழியாக வந்து மர்ம கும்பல் இந்த கொள்ளையில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது. மூலவர் சிலை உள்ள இடத்தில் 3 கதவுகளின் பூட்டுகளை உடைத்து கைவரிசை காட்டி உள்ளனர். </p> <h2>போலீசார் விசாரணை</h2><p>கோவிலில் இருந்த உண்டியல் உடைக்கப்படவில்லை. விலை மதிப்பு இல்லாத மரகத முருகன் சிலையை மட்டும் குறிவைத்து கொள்ளையர்கள் இச்சம்பத்தில் ஈடுபட்டு உள்ளனர். கோவிலில் காவலாளி உள்ளார். அவர் கோவிலின் கீழ் பகுதியில் இருந்ததாக தெரிகிறது. இதனால் அவருக்கு கோவிலில் சிலை கொள்ளை போனது தெரியவில்லை. இன்று காலை தான் கோவிலுக்குள் கொள்ளையர்கள் புகுந்து சிலையை தூக்கி சென்று இருந்தது தெரிந்தது.</p><p>கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தபோது அதில் 2 கொள்ளையர்களின் உருவம் பதிவாகி இருந்தது. அதனை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.</p> <p>கோவில் மண்டபம் மற்றும் கருவறையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களின் வயர்களை துண்டித்து உள்ளனர். கோவிலின் பின்பக்கம் உள்ள கண்காணிப்பு கேமராவில் மட்டும் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி இருந்தன. </p><p>சம்பவ இடத்தை டி.எஸ்.பி.தீபக் ரஜினி பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கொள்ளை கும்பல் நீண்ட நாட்கள் திட்டமிட்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.</p><p>நடுபழனி கோவிலில் மரகத முருகன் சிலை திருடு போன சம்பவம் பக்தர்களை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வரும் 15-ந்தேதி முதல் டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம்: முதலமைச்சர் விஜய் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-digital-driving-licenses-from-the-15th-of-this-month</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-digital-driving-licenses-from-the-15th-of-this-month#comments</comments><guid isPermaLink="false">a3c2b27e-905a-47f6-a815-a3914cf3db76</guid><pubDate>Wed, 02 Sep 2026 07:32:46 +0000</pubDate><atom:updated>2026-09-02T07:32:46.567Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,ஓட்டுநர் உரிமம்,TN assembly,driving license</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/gxissycm/vijay.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/gxissycm/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மாநிலம் முழுவதும் 15.09.2026 முதல், ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ்கள் டிஜிட்டல் முறையில், அதாவது Digital Driving License மற்றும் Digital Registration Certificate வழங்கும் வசதி ஏற்படுத்தப்படும்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> முதலமைச்சர் விஜய் 110 கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-</p><p>நமது அரசு ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகத்தை உறுதிசெய்வதுடன், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் எளிமையான முறையில் மக்களைச் சென்றடையும் வகையில் தொடர்ந்து நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது.</p><p>தற்போது, தமிழ்நாட்டில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச்சான்று பெறுவதற்குக் கட்டணமாக 250 ரூபாய் விண்ணப்பதாரர்களால் செலுத்தப்பட்டு, சிப் (Chip) பொருத்தப்பட்ட அட்டைகளாக தபால் மூலம் விண்ணப்பதாரர்களின் முகவரிக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் விண்ணப்பதாரர்களுக்குக் கிடைப்பதற்கு ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை காலதாமதம் ஏற்படுகிறது.</p><p>இந்தக் காலதாமதத்தினால் பொதுமக்களுக்குப் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. இந்த காலதாமதத்தினைத் தவிர்க்கும் வகையில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச்சான்றிதழ் ஆகியவை Digital முறையில் பொதுமக்கள் தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளும் நடைமுறை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்படும்.</p><p>மாநிலம் முழுவதும் 15.09.2026 முதல், ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ்கள் டிஜிட்டல் முறையில், அதாவது Digital Driving License மற்றும் Digital Registration Certificate வழங்கும் வசதி ஏற்படுத்தப்படும்.</p><p>மின்னணு வாகனப் பதிவுச்சான்றிதழ் முறை (Digital RC) அறிமுகம் செய்வதன்மூலம், புதிய வாகனம் வாங்குவோர், வாகனப் பதிவை அதாவது, Digital RC–யை இணையம் வழியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதேபோன்று ஓட்டுநர் தேர்வில்  தேர்ச்சிபெற்ற விண்ணப்பதாரர்களுக்கு, அன்றைய தினமே ஓட்டுநர் உரிமம் டிஜிட்டல் முறையில் வழங்கப்படும்.</p><p>அரசு அலுவலகங்கள் மற்றும் பிற அதிகாரப்பூர்வ அமைப்புகள் QR code-ஐ scan செய்து மின்னணு முறையில் ஆவணங்களைச் சரிபார்க்க முடியும். இதன்மூலம் போலி ஆவணங்கள் தவிர்க்கப்படும். இந்த முறையினால், ஆவணம் தொலைந்தாலோ, சேதமடைந்தாலோ மீண்டும் பதிவிறக்கம் செய்துகொள்ளவும், அச்சிட்டுக்கொள்ளவும் முடியும்.</p><p>ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கும், வாகனத்தைப் பதிவு செய்வதற்கும், வாகனப்பதிவு புதுப்பித்தல் மற்றும் படிப்படியாக போக்குவரத்து சம்பந்தமான அனைத்து அலுவலக சேவைகளுக்கும் தமிழ்நாட்டில் எந்தவொரு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திலும் விண்ணப்பித்து “Anywhere Registration / Licensing” என்ற முறையில் வசதிகள் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும்.</p><p>இவ்வாறு முதலமைச்சர் விஜய் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>முதல்-மந்திரி, பிரதமர் பதவியில் 25 ஆண்டுகள்: மோடியின் பிறந்தநாளை ஒரு மாதம் கொண்டாட பாஜக-வினர் திட்டம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/25-years-as-prime-minister-one-month-nationwide-modi-birthday-celebrations</link><comments>https://www.maalaimalar.com/news/national/25-years-as-prime-minister-one-month-nationwide-modi-birthday-celebrations#comments</comments><guid isPermaLink="false">5fb2b9b4-b4c6-4a50-acd7-904078629891</guid><pubDate>Wed, 02 Sep 2026 07:26:18 +0000</pubDate><atom:updated>2026-09-02T07:26:18.207Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,pm modi,பிரதமர் மோடி,Vadnagar Varanasi Yatra,வாட்நகர் வாரணாசி யாத்திரை,Seva Jyothi Yatra,சேவா ஜோதி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/jw6tj4fx/PM-Modi" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/jw6tj4fx/PM-Modi?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF">பிரதமர் மோடி </a>தொடர்ச்சியாக 3-வது முறையாக பிரதமர் பதவி வகித்து வருகிறார்.</p><p>மத்தியில் காங்கிரசுக்கு எதிராக அசுர பலம் பெற்று அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில கட்சிகளோடு இணைந்தும், தனியாகவும் பாஜக வெற்றி பெற்று வருகிறது.</p><p>இதன் காரணமாகவும் பிரதமரின் தனிப்பட்ட செல்வாக்காலும் தொடர்ந்து பாஜக மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்து வருகிறது.</p><h2>25 ஆண்டுகள்</h2><p>2001-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை குஜராத் முதல்-மந்திரியாக பதவி வகித்துள்ள பிரதமர் மோடி 12 ஆண்டுகள் அந்த மாநிலத்தில் அசைக்க முடியாத தலைவராக திகழ்ந்தார்.</p><p>இதன் பின்னர் தேசிய அரசியலில் கால் பதித்த மோடி 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் ஆனார்.</p><p>இதன் பின்னர் நடைபெற்ற 2 தேர்தல்களிலும் பா.ஜனதா வெற்றிவாகை சூடியதை தொடர்ந்து பிரதமர் பதவியையும் அவர் தொடர்ச்சியாக வகித்து வருகிறார்.</p><p>இதன் மூலம் 12 ஆண்டுகளை கடந்து அவர் பிரதமர் பதவியில் நீடிக்கிறார். </p><p>இப்படி முதல்-மந்திரி மற்றும் பிரதமர் பதவியில் 25 ஆண்டுகள் பணியாற்றியதை கருத்தில் கொண்டு பிரதமர் மோடியின் பிறந்த நாளை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாட <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95">பாஜக </a>திட்டமிட்டுள்ளது.</p><h2>கால் நூற்றாண்டு</h2><p>நாட்டின் உயரிய பதவிகளில் கால் நூற்றாண்டு காலமாக பல்வேறு மக்கள் பணிகளை மேற்கொண்டு உலக அரங்கிலும் முக்கியத்துவம் வாய்ந்த தலைவராக பிரதமர் மோடி திகழ்ந்து வருகிறார்.</p><p>இந்த நிலையில் வருகிற 17-ந்தேதி பிரதமர் மோடி பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களிலும் நலத்திட்ட உதவிகள் மற்றும் யாத்திரைகள் நடத்தவும் பாரதீய ஜனதா தலைவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.</p><h2>ஆலோசனை</h2><p>இது தொடர்பாக தமிழக பாரதிய ஜனதா நிர்வாகிகள் திருச்சியில் இன்று ஆலோசனை நடத்தினார்கள். சமயபுரம் சுங்கச்சாவடி அருகில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்துக்கு மாநில தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">நயினார் நாகேந்திரன்</a> தலைமை தாங்கினார்.</p><p>தமிழக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.</p><p>முன்னதாக திருச்சி மாவட்ட தலைவர்கள் ஒண்டிமுத்து, அஞ்சாநெஞ்சன் ஆகியோர் வரவேற்றனர்.</p><p>இந்த கூட்டத்தில் முன்னாள் மாநில தலைவர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் அனைத்து மாவட்ட தலைவர்கள், பிரதமர் பிறந்தநாள் விழாவுக்காக பிரத்யேகமாக மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்ட 5 பேர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டனர்.</p><h2>அக்டோபர் 17-ந்தேதி வரை</h2><p>வருகிற 17-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் 17-ந்தேதி வரை பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளது. அப்போது ரத்ததான முகாம்கள், தூய்மை பணிகள் ஆகியவையும் மேற்கொள்ளப்பட உள்ளன.</p><p>பிரதமர் மோடியின் பிறந்த ஊரான குஜராத் மாநிலம் வாட்நகரில் இருந்து அவர் வெற்றி பெற்ற வாரணாசி தொகுதி வரை மோட்டார்சைக்கிள் பேரணி மற்றும் சேவா ஜோதி யாத்திரை ஆகியவை நடைபெற உள்ளது. இதற்காக 10 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.</p><p>பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நாடு தழுவிய அளவில் ஓவிய போட்டிகள், பேச்சு போட்டிகள் ஆகிய வையும் நடத்தப்பட உள்ளன.</p><h2>யாத்திரை தொடக்கம்</h2><p>ஒரே நாளில் வாட்நகர் மற்றும் வாரணாசி ஆகிய 2 இடங்களில் இருந்தும் ஒரே நாளில் 10 குழுவினர் இந்த யாத்திரை பயணத்தைத் தொடங்குகின்றனர்.</p><p>இந்த குழுக்களில் இடம் பெற்று இருப்பவர்கள் பல்வேறு மாநிலங்களுக்கும் பயணம் மேற்கொண்டு ஒரு மாதத்திற்கு பிறகு வாட்நகரை வந்து அடைவார்கள். அதே நேரத்தில் புறப்படும் குழு ஒரு மாத காலம் பயணம் மேற்கொண்டு வாரணாசியை சென்று அடையும்.</p><h2>100 கிலோ மீட்டர்</h2><p>வெளி மாநிலங்களுக்கு செல்லும் குழுவினர் தினமும் சுமார் 100 கி.மீ. பயணம் செய்யும் வகையில் திட்டமிடப்பட்டு உள்ளது. </p><p>இந்த பயணத்தின் போது மோட்டார் சைக்கிள் மற்றும் பேருந்துகளில் சென்று பிரதமர் மோடியின் சாதனைகளை பாஜக -வினர் மக்களிடம் கொண்டு சேர்க்க முடிவு செய்து இருக்கிறார்கள்.</p><p>மத்திய அரசு மற்றும் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் செயல்பாடுகள் ஆகியவற்றை பொதுமக்களோடு கலந்துரையாடு வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.</p><p>இதன் மூலம் அனைத்து மாநிலங்களிலும் பா.ஜனதா தலைவர்கள் பிரதமர் மோடியின் ஒரு மாத பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை தீவிரமாக தொடங்கி இருக்கிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>2029-ல் பிரதமர் யார்?- தவெக Vs காங்கிரஸ் இடையே முற்றும் வார்த்தை மோதல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-vijay-will-be-pm-in-2029-congresss-tharakai-katpat-counters-with-rahul-gandhi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-vijay-will-be-pm-in-2029-congresss-tharakai-katpat-counters-with-rahul-gandhi#comments</comments><guid isPermaLink="false">08489f79-3c83-4c2e-8888-c357261cf486</guid><pubDate>Wed, 02 Sep 2026 07:21:16 +0000</pubDate><atom:updated>2026-09-02T07:21:16.071Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கனிமொழி,Kanimozhi MP,பிரதமர் வேட்பாளர்,PM Candidate,தாரகை கத்பட்,Tharagai katpat</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/hwnjdq87/Congress.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TVK MLA Kanimozhi- Congress MLA Tharagai katpat]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/hwnjdq87/Congress.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2029ல் பிரதமர் வேட்பாளர் முதலமைச்சர் விஜய்தான். தளபதியை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்த ராகுல்காந்தி தான், பிரதமராகவும் அமர வைப்பார் என தவெக MLA கனிமொழி தெரிவித்துள்ளார்.</p><p>சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக வெற்றி கழக கவுண்டம்பாளையம் எம்எல்ஏ  கனிமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-</p><p>2029-ல் பிரதமர் வேட்பாளர் தலைவர் விஜய் தான். தளபதிதான். 2025-ல் நான் கணித்ததைப் போல 2026-ல் விஜய் முதலமைச்சரானார். 2026-ல் இப்போது  சொல்கிறேன் 2029-ல் தமிழகத்திலிருந்துதான் பிரதமர் உருவாகப் போகிறார் .</p><p>மேலும், 2029-ல் இந்திய அரசியலில் மாற்றம் நிகழப்போகிறது. பிரதமரை இனி டெல்லியில் இருந்து முடிவு செய்யப்போவது இல்லை. </p><p>ராகுல் காந்திதான் தளபதியை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்தார். அதேபோல் <a href="https://www.maalaimalar.com/news/national/fir-registered-against-rahul-gandhi-over-haldwani-purification-remarks" rel="nofollow">ராகுல் காந்தி</a>யே தலைவர் தளபதியை பிரதமராக அமர வைப்பார் </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><p>தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர்கள் ரசிகர் மன்ற மனப்பான்மையில் உள்ளனர் என சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர்  தாரகை கத்பட்  பேட்டி அளித்துள்ளார். </p><p>இதுகுறித்து தமிழக வெற்றி கழக எம்.எல்.ஏ  கனிமொழிக்கு பதில் அளிக்கும் வகையில் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் தாரகை கத்பட் கூறியதாவது:-</p><p>அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர் ராகுல் காந்திதான். முதலமைச்சர் விஜய் இதுவரை ராகுல் காந்திதான் பிரதமர் என்று கூறியுள்ளார்.</p><p>தற்போது உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் ரசிகர் மனநிலையில் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் தலைவரைத்தான் சொல்வார்கள் ராகுல் காந்திதான் பிரதமர்.</p><p>இதனால் காங்கிரஸ் தொண்டர்களுக்கு எந்த சோர்வும் கிடையாது. ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர். </p><p>காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமல்ல, இந்தியாவே இதுகுறித்து தெளிவாக இருக்கிறது என கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய பொங்கல் ஓட்டலுக்கு விற்பனை- காலை உணவு வினியோகத்தில் ஆசிரியர்கள் முறைகேடு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/pongal-intended-for-children-sold-to-a-hotel</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/pongal-intended-for-children-sold-to-a-hotel#comments</comments><guid isPermaLink="false">90f0cfeb-d35d-4f2b-8ca4-59f48487a4d6</guid><pubDate>Wed, 02 Sep 2026 07:18:37 +0000</pubDate><atom:updated>2026-09-02T07:18:37.664Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>பொங்கல்,காலை உணவு திட்டம்,புளியந்தோப்பு மாநகராட்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/qr57uo08/pongal.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ காலை உணவு சாப்பிட்ட மாணவர்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ காலை உணவு சாப்பிட்ட மாணவர்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/qr57uo08/pongal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பள்ளியின் தலைமையாசிரியர் கொடுக்கும் மாணவர்கள் பட்டியல் அடிப்படையில் உணவு வழங்கப்பட்டாலும் அது முறையாக குழந்தைகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறதா என்பதை கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.</strong></em> </p><p>அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி குழந்தைகளுக்கு <a href="https://www.maalaimalar.com/topic/காலை-உணவு-திட்டம்">காலை உணவு  திட்டம்</a> கடந்த தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது. காலை உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு  வரும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளின் பசியை போக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட இத்திட்டம் அமோக வரவேற்பு பெற்றது.</p><p>பள்ளி தொடங்குவதற்கு முன்பு காலை 8.30 மணிக்கு குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. பொங்கல், கிச்சடி, உப்புமா  போன்ற  சத்துள்ள உணவு வகைகள் இதில் இடம் பெற்றுள்ளன. </p><p>சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் 200-க்கும் மேற்பட்ட மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் காலை உணவு வழங்கப்படுகிறது.  இந்தத் திட்டத்திலும் சிலர் முறைகேடு செய்வது தெரியவந்து உள்ளது.</p><p>புளியந்தோப்பு 72-வது வார்டு ஹார்னஸ் சாடல் பாக்டரி ரோடு உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில்  250  மாணவர்கள் படித்து வருகிறார்கள். 8-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 150 குழந்தைகள் காலை உணவு திட்டத்திற்கு தகுதியானவர்கள்.  ஆனால் 60 பேர் மட்டுமே காலை உணவு சாப்பிடுவதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம்   காலை 8 மணிக்கு  சுடச்சுட சுவையான பொங்கல் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு கொண்டுவரப்பட்டது.  8.30 மணிக்கு காலை உணவு வழங்கப்பட்டது. 4 குழந்தைகள் மட்டுமே பொங்கல் வாங்கி சாப்பிட்டார்கள்.  வேறு யாரும் சாப்பிடவில்லை. 9 மணிக்கு வகுப்பு தொடங்கியது. 9.05 மணிக்கு மீதமுள்ள மொத்த பொங்கலையும் ஒரு கூடையில் வைத்து ஒரு பெண் வெளியே கொண்டு  சென்றார்.</p><h2><strong>ஆய்வு செய்ய வேண்டும்</strong></h2><p>அந்தப் பெண் ஒரு ஓட்டலுக்கு வினியோகம் செய்வதற்காக பொங்கலை கொண்டு செல்வது தெரியவந்தது.  ஓட்டலுக்கு விற்பனை செய்து அதில் கிடைக்கும் தொகையை பள்ளியில் உள்ள சிலர் பங்கிட்டு கொள்வதாக  அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். பள்ளி குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய காலை உணவை ஒவ்வொரு நாளும்  ஓட்டலில் விற்று முறைகேடு செய்வது  வெட்ட வெளிச்சமாகி உள்ளது.  பள்ளி குழந்தைகளின் பசி தீர்க்க வேண்டிய உணவு ஓட்டல்களில் விற்கப்பட்டு வியாபாரமாகி கொண்டிருப்பதை அப்பகுதி மக்கள் தினமும் பார்த்து வேதனை  அடைந்தனர். ஒவ்வொரு நாளும் காலை 9 மணிக்கு பள்ளியில் இருந்து காலை உணவை அந்தப் பெண் ஓட்டலுக்கு கொண்டு செல்வதை கண்காணித்து உள்ளனர்.  பள்ளி தலைமை ஆசிரியருக்கு தெரியாமல் இந்த முறைகேடு நடக்க வாய்ப்பில்லை என்று அந்தப் பகுதி மக்கள்  தெரிவித்தனர். காலை உணவை கொண்டு செல்லும் அந்தப் பெண் யார்? அவருக்கும் பள்ளிக்கும் என்ன தொடர்பு? குழந்தைகளுக்கு உணவை வழங்கிய ஒரு  ஆசிரியர் மீதமுள்ள உணவை எந்த ஓட்டலுக்கு அனுப்பி வைக்கிறார், என்பது கேள்விக்குறியாக முன்வைக்கப்படுகிறது.</p><p>ஒவ்வொரு நாளும் 50  பேர்  சாப்பிடக்கூடிய உணவு வெளியே விற்கப்படுகிறது. இந்தப் பள்ளியில் காலை உணவு சாப்பிடக்கூடிய மாணவர்கள் எத்தனை பேர்? எத்தனை பேருக்கு உணவு தினமும் வழங்கப்படுகிறது என்பதை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும்.</p><p>குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய தரமான காலை உணவு வெளியே விற்கப்பட்டு பணமாக்கப்படுகிறது. சரியான புள்ளி விவரங்கள் இல்லாமல் உணவு வினியோகிக்கப்படுவதால் இந்த முறைகேடு நடைபெறுகிறது. இதனை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்தால் இது போன்ற தவறு நடைபெறாது.  </p><p>பள்ளியின் தலைமையாசிரியர் கொடுக்கும் மாணவர்கள் பட்டியல் அடிப்படையில் உணவு வழங்கப்பட்டாலும் அது முறையாக குழந்தைகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறதா என்பதை கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். </p><p>இதுபோன்று எத்தனை பள்ளிகளில் குழந்தைகளுக்கு வழங்கக்கூடிய காலை உணவு ஓட்டல்களுக்கு செல்கிறது, மாணவர்கள் வருகை பதிவு, சாப்பிடுகிறவர்களின் எண்ணிக்கையை கூடுதலாக அதிகாரிகளுக்கு தெரிவித்து உணவை அதிகளவு பெற்று முறைகேடு செய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.  எனவே காலை உணவு திட்டத்தை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ள பள்ளி  தலைமை ஆசிரியர், ஆசிரியர் மற்றும்  பெண் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தாய்லாந்தில் மது அருந்திவிட்டு பணம் செலுத்த தவறிய இளம்பெண்ணுக்கு ’’மொட்டை அடித்த’’ பார் நிர்வாகம் 
</title><link>https://www.maalaimalar.com/news/world/thailand-bar-shaves-customers-head-for-unpaid-alcohol-bill</link><comments>https://www.maalaimalar.com/news/world/thailand-bar-shaves-customers-head-for-unpaid-alcohol-bill#comments</comments><guid isPermaLink="false">bd75d37f-a17f-45ed-befe-300508b27914</guid><pubDate>Wed, 02 Sep 2026 07:07:45 +0000</pubDate><atom:updated>2026-09-02T07:07:45.336Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தாய்லாந்து,thailand,மொட்டை அடித்து,சமூக ஊடகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/659fggb9/Untitled-design.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Thailand girl]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/659fggb9/Untitled-design.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><strong>செலுத்தப்படாத கட்டணம், வாடிக்கையாளருக்கு மொட்டை அடிப்பு </strong></p><p>தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், மது அருந்திவிட்டு பணம் செலுத்தாத  காரணத்திற்காக வாடிக்கையாளரின் தலையை மதுபான விடுதி ஊழியர் ஒருவர் மழிக்கும் காட்சி கேமராவில் பதிவாகி அது  சமூக ஊடங்களில் வெளியான நிலையில் பெரும் விவாத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>நியூயார்க் போஸ்ட் பத்திரிகை அறிக்கையின்படி தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஆகஸ்ட் 25 அன்று, 18 வயதுப் பெண் ஒருவர் போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தி பிங்க்லாவ் பகுதியில் உள்ள ஒரு பிரபலமான மதுபான விடுதிக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது. </p><p>அவர் அங்கு உண்டு, குடித்து, சுமார் 60,000 தாய் பாட் (தோராயமாக $1,800 அமெரிக்க டாலர்) என்ற பெரிய தொகையை பில்லாகச் செலுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p><strong>காவல் துறையை அழைக்காமல் தாங்களே அத்துமீறல்</strong></p><p>குறிப்பாக அந்தப் பெண் பணம் செலுத்தாமல் வெளியேற முயல்வதை ஊழியர்கள் உணர்ந்த காரணத்தினால்  காவல்துறையை ஈடுபடுத்துவதற்குப் பதிலாக, அவர்கள் அந்த விஷயத்தைத் தாங்களே கையில் எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. </p><p>இந்த நிலையில் செலுத்தப்படாத கணக்கின் ஒரு பகுதியைத் தீர்ப்பதற்காக, முறைசாரா முடி வாங்கும் ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ளுமாறு பார் ஊழியர்கள் அந்த இளம் பெண்ணை வற்புறுத்தி இருக்கின்றனர்.</p> <p><strong>முடியை மழிக்க ஒப்புக்கொண்ட பெண் </strong></p><p>செலுத்தப்படாத கட்டணத்திற்காக தன்னுடைய முடியை மழிக்க அந்த பெண் ஒப்புக்கொண்டதாகவும் அதன்பிறகே மொட்டை அடித்தாகவும் பார் நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p>எலக்ட்ரிக் ‘ரேசர்’ மூலம் மொட்டையடிக்கப்பட்டதாகவும், அப்போது வீடியோ எடுத்த நபர், ‘நாங்கள் உன்னை ஏமாற்றவில்லை, தலைமுடிக்கு உரிய சந்தை விலையை பில் தொகையில் ஈடுகட்ட  கழிக்கிறோம்’ என்று பேசியுள்ளார். </p> <p><strong>வெளியில் கசிந்த வீடியோ</strong></p><p>பெண்ணிற்கு மொட்டை அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதையடுத்து, தாய்லாந்து சமூக மேம்பாடு மற்றும் மனித பாதுகாப்பு அமைச்சகம் இதுகுறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.</p><p>மேலும் சமூக வலைதளங்களில் குற்றவியல் வழக்குகளுக்கு பதிலாக இந்த தண்டனையின் மூலம் அவர் எளிதில் தப்பித்து விட்டதாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>வெளிநாட்டு தொடர்களில் மோசம்: விளக்கம் கேட்க கம்பீர், அகர்கர், லக்ஷ்மண் பிசிசிஐ-க்கு சம்மன்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/bcci-summons-gambhir-agarkar-and-laxman-to-review-india-dismal-away-form</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/bcci-summons-gambhir-agarkar-and-laxman-to-review-india-dismal-away-form#comments</comments><guid isPermaLink="false">8626fdd2-a9db-427c-aca5-c121afbdc605</guid><pubDate>Wed, 02 Sep 2026 06:54:37 +0000</pubDate><atom:updated>2026-09-02T06:54:37.083Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கவுதம் கம்பீர்,BCCI,Ajit Agarkar,அஜித் அகர்கர்,gambhir,vvs laxman,பிசிசிஐ</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/wwj6qum2/BCCI.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ BCCI]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/wwj6qum2/BCCI.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய டி20 அணி சமீபத்தில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சென்று விளையாடியது. அயர்லாந்துக்கு எதிரான தொடரை 0-2 என இந்தியா இழந்தது. அதன்பின் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகளில் கொண்ட தொடரில் 0-4 என இந்தியா தோல்வியடைந்தது.</p><h2>பிசிசிஐ ஆய்வு</h2><p>பின்னர், சில வீரர்கள் காயம் காரணமாக கேள்வி எழுப்பப்பட்டது. இதனால் அணியின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்ய பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளது.</p><p>இது தொடர்பாக பி.சி.சி.ஐ. கவுதம் கம்பீர், தேர்வுக்குழு கமிட்டி தலைவர் அஜித் அகர்கர், பெங்களூருவில் உள்ள COE தலைவர் லக்ஷ்மண் ஆகியோருக்கு பிசிசிஐ சம்மன் அனுப்பியுள்ளது.</p><p>இவர்கள் அனைவரும் மும்பை தலைமையத்திற்கு வர உள்ளனர். இவர்கள் எதிர்கால இந்திய அணியின் பயணம் குறித்து விவாதம் நடத்த இருக்கிறது.</p><p>பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா, ஏற்கனவே அயர்லாந்து, இங்கிலாந்து தொடரில் இந்தியா தோல்வி அடைந்தது குறித்து ஆய்வு செய்யப்படும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.</p><h2>16 தொடர் வெற்றிக்குப் பிறகு தோல்வி</h2><p>இந்தியா 16 தொடர்களில் இழக்காமல் வீறுநடை போட்டி சென்று கொண்டிருந்தது. ஷ்ரேயாஸ் தலைமையில் முதன்முறையாக அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சென்ற டி20 அணி தொடர்களை இழந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>புதிதாக 6 மாவட்டங்களில் நர்சிங் கல்லூரிகள் தொடங்கப்படும் - அமைச்சர் அருண்ராஜ்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/six-new-nursing-colleges-tamil-nadu-arunraj-announces</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/six-new-nursing-colleges-tamil-nadu-arunraj-announces#comments</comments><guid isPermaLink="false">b02e059b-fefc-4b91-996e-5636a7b544d0</guid><pubDate>Wed, 02 Sep 2026 06:53:03 +0000</pubDate><atom:updated>2026-09-02T06:53:03.473Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,அமைச்சர் அருண்ராஜ்,Minister Arunraj,Govt Nursing College,அரசு நர்சிங் கல்லூரி,270 Crore Allocation</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/7rel8u40/Minister-Arunraj" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Minister Arunraj ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/7rel8u40/Minister-Arunraj?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் 2014-க்கு பிறகு புதிய அரசு செவிலியர் கல்லூரிகளே இல்லாத நிலையில், 6 மாவட்டங்களில் புதிய கல்லூரிகள் தொடங்க <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D">அமைச்சர் அருண்ராஜ்</a> <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">சட்டசபையில் </a>அறிவித்துள்ளார். </p><p>முதல்வரின் விதி 110 அறிவிப்பின்படி 7 கல்லூரிகள், 270 கோடி ஒதுக்கீட்டில், 600 புதிய BSc நர்சிங் இடங்களுடன் வருகிறது.</p><h2><strong>புதிய செவிலியர் கல்லூரிகள்</strong></h2><p>இது குறித்து அமைச்சர் பேசியதாவது,</p><p>சென்னை, செங்கல்பட்டு, கடலூர், சேலம் மதுரை மற்றும் தேனி ஆகிய 6 மாவட்டங்களில் மட்டுமே அரசு செவிலியர் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. 2014ம் ஆண்டுக்குப் பிறகு புதிய செவிலியர் கல்லூரியில் தொடங்கப்படவில்லை. </p><p>மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை கருத்தில் கொண்டு முதலமைச்சர் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 110 கீழ் 7 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.</p><h2><strong>270 கோடி ஒதுக்கீடு</strong></h2><p>இந்திய செவிலியர் கவுன்சில் விதிமுறைகளின் படி ஒரு புதிய செவிலியர் கல்லூரி துவங்க போதிய படுக்கை வசதிகள் கொண்ட தேவையான மருத்துவ பிரிவுகள் கொண்ட போதிய புறநோயாளிகள் எண்ணிக்கை வெளிநோயாளிகள் எண்ணிக்கை, மகப்பேறு சேவை மற்றும் அதற்கு தேவையான கட்டுமானங்கள் அவசியம்.</p><p>மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளை இணைப்பு மருத்துவமனையாக கொண்டு புதிய செவிலியர் கல்லூரியில் துவங்கப்பட உள்ளன.</p><p>திருநெல்வேலி, திருச்சி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் தலா 100 இடங்கள் விதம் ஆண்டுக்கு மொத்தம் 600 பிஎஸ்சி நர்சிங் பட்டய இடங்கள் உருவாக்கப்படுகின்றன.</p><p>இந்த 6 செவிலியர் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் இருந்து நடத்திட தொடர் மற்றும் தொடரா செலவினமாக ரூ. 270 கோடி முன்மொழியப்பட்டுள்ளது.</p><h2>440 இடங்கள் கூடுதல்</h2><p>மேலும் கோயம்புத்தூர், ஈஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாநில அரசு நிதியில் 60 பிஎஸ்சி நர்சிங் இடங்களுடன் புதிய செவிலியர் கல்லூரி ஒன்றும் தொடங்க முன்மொழிவுபட்டது.</p><p>ஏற்கனவே உள்ள ஆறு பிஎஸ்சி நர்சிங் பணியிடங்கள் கொண்ட மருத்துவ செவிலியர் மருத்துவ கல்லூரியில் கூடுதல் இடங்கள், 440 கூடுதல் இடங்கள் உருவாக்கி இருக்கிறோம் எனக் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தொகுதிகளுக்கு அமைச்சர்களும் எங்களுடன் வந்தால் மக்கள் பிரச்சனைகள் தெளிவாக புரியும் - பிரேமலதா விஜயகாந்த்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/premalatha-vijayakanth-says-if-ministers-also-accompany-us-to-the-constituencies-they-will-clearly-understand-the-peoples-issues</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/premalatha-vijayakanth-says-if-ministers-also-accompany-us-to-the-constituencies-they-will-clearly-understand-the-peoples-issues#comments</comments><guid isPermaLink="false">d0d8d53b-d088-495b-b840-b02dc3cdef8c</guid><pubDate>Wed, 02 Sep 2026 06:41:49 +0000</pubDate><atom:updated>2026-09-02T06:41:49.931Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,பிரேமலதா விஜயகாந்த்,TN assembly,அமைச்சர் ரமேஷ்,Minister Ramesh</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/wgui0cgf/premalatha.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரேமலதா விஜயகாந்த்]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரேமலதா விஜயகாந்த்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/wgui0cgf/premalatha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நடப்பு சட்டசபை கூட்டத்தொடர் முடிந்த பிறகு உறுப்பினரோடு சேர்ந்து ஆய்வு செய்ய நான் தயாராக இருக்கிறேன் என அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> வினாக்கள் விடை நேரம் நடைபெற்று வருகிறது. முதலில் சுகாதாரத்துறை மற்றும் மின்சாரத்துறை தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். </p><p>அதனை தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் ரமேஷ் பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-</p><p>* திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் கோவிலுக்கு மண்டபமும், இலவச இருசக்கர வாகன நிறுத்தமும் ஏற்படுத்தி தர வேண்டும் என்று தவெக எம்எல்ஏ கோரிக்கை விடுத்தார். அதற்கு அமைச்சர் கூறுகையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரை கட்டணமில்லா இருசக்கர வாகன நிறுத்தம் வசதி இருந்தது. இதனால் பல சிக்கல்கள் ஏற்பட்டது. காவல்துறை தரப்பில் புகாரும் கூறப்பட்டது. இதுதொடர்பாக விரிவான ஆய்வினை மேற்கொண்டு கோவிலின் நிதி நிலைமையும் ஆலோசித்து உறுப்பினர் கூறிய கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றார். </p><p>* திருத்தணி முருகன் கோவிலில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை தேவை. செவ்வாய் கிழமை தோறும் காலை, மாலை என இருவேளையும் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை வழங்கி வழிபட அனுமதிக்க வேண்டும் என்று எம்எல்ஏ ஹாரி கோரிக்கை விடுத்தார். </p><p>இதற்கு பதில் அளித்த அமைச்சர் ரமேஷ், திருத்தணி கோவிலில் உள்ளூர் மக்களை அனுமதிப்பது தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் வந்துள்ளது. உள்ளூர் மக்களை அனுமதிப்பது தொடர்பாக அறங்காவலர் குழு தலைவரின் பரிந்துரைக்காக காத்துள்ளோம். இணையதளம் மூலமாக தரிசன டிக்கெட் பெறுவதற்கான இணையதளம், செயலிகளை உருவாக்கம் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். கூடிய விரைவில் இணையதள வசதிகள் வரும்போது உள்ளூர் மக்களுக்கான தரிசனத்திற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். </p><p>* விருத்தாசலம் என்றாலே கோவில் மாநகரம். விருத்தாசலத்தை கோவில் நகரமாக அறிவிக்க வேண்டும். விருத்தாசலம் தொகுதியில் நூற்றுக்கணக்கான கோவில்கள் சிதிலமடைந்து உள்ளது அதனை சீரமைக்க வேண்டும். கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். நாங்கள் எல்லாம் தொகுதிக்குள் போகும்போது துறை சார்ந்த அமைச்சர்கள் வந்தால் மக்களோடு சேர்ந்து அங்கு உள்ள பிரச்சனைகள் குறித்து நேரடியாக சொல்லும்போது உங்களுக்கு தெளிவாக புரியும். அமைச்சரும் எங்களோடு சேர்ந்து வரும் போது அந்த பணிகளும்சிறப்பாக செய்ய முடியும் என்பதை என் கருத்தாக கூறுகிறேன் என தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். </p><p>இதற்கு பதில் அளித்த அமைச்சர் ரமேஷ், உறுப்பினரின் கோரிக்கைகள் நிச்சயமாக பரிசீலனை செய்யப்பட்டு இந்த கூட்டத்தொடர் முடிந்த பிறகு உறுப்பினரோடு சேர்ந்து ஆய்வு செய்ய நான் தயாராக இருக்கிறேன். நிச்சயமாக ஆய்வு செய்து அனைத்து கோவில்களுக்கும் சிறப்பான முறையில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். </p><p>* தஞ்சை பெருவுடையார் கோவிலில் தினந்தோறும் அன்னதானம் வழங்க வேண்டும். அன்னதான திட்டத்தை தன்னார்வலர்களும் செய்ய முன்வரும் நிலையில், அந்த கோவிலில் அனுமதி மறுக்கப்படுகிறது. ஆகவே தங்கு தடை இல்லாமல் அன்னதானத்தை வழங்கும் வகையில் கோவிலின் பக்கவாட்டில் தமிழக அரசு கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய கட்டிடங்களை புனரமைத்து அதில் அன்னதான கூடத்தை அமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்தார். </p><p>இதற்கு பதில் அளித்த அமைச்சர் ரமேஷ், தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய பல்வேறு கோவில்களில் இந்த அன்னதான சேவையை விரிவுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைளை மேற்கொள்ள ஆய்வு செய்து வருகிறோம். கூடிய விரைவில் உரிய அனுமதி பெற்று அன்னதான திட்டம் மேலும் சிறப்பாக நடைபெறும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். </p>]]></content:encoded></item><item><title>நேபாளத்தில் சிக்கியவர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?- மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/hc-directs-centre-state-to-submit-detailed-report-on-rescue-of-missing-indians-in-nepal-floods</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/hc-directs-centre-state-to-submit-detailed-report-on-rescue-of-missing-indians-in-nepal-floods#comments</comments><guid isPermaLink="false">38213716-9de6-4fb6-a50c-b37af95c8c6f</guid><pubDate>Wed, 02 Sep 2026 06:32:31 +0000</pubDate><atom:updated>2026-09-02T06:32:31.699Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை உயர்நீதிமன்றம்,chennai highcourt,அறிக்கை தாக்கல்,report submit,nepal flood,நேபாளம் வெள்ளம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/tyvdlaje/Nepal-HC.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nepal flood- Chennai highcourt]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/tyvdlaje/Nepal-HC.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாள வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்களை மீட்க எடுத்த நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.</p><p>கும்பகோணத்தைச் சேர்ந்த சூப்பர் யாத்ரா டிராவல்ஸ் என்ற தனியார் பயண நிறுவனம் மூலம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 57 பேர் ஆகஸ்ட் 23-ந்தேதி கும்பகோணத்தில் இருந்து நேபாளத்திற்கு சென்றனர்.</p><p>ஆகஸ்ட் 26-ந்தேதி நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியுள்ளனர். இவர்களில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%90%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81" rel="nofollow">சென்னை ஐகோர்ட்டு</a> ஓய்வுபெற்ற நீதிபதி சிவஞானம் உள்ளிட்டோர் காணாமல் போயுள்ளனர். </p><p>நேபாளம் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 57 பேரில் மீட்கப்பட்டவர்கள், சிகிச்சை பெற்று வருபவர்கள், காணாமல் போனவர்கள் குறித்த விபரங்களை, அவர்களின் குடும்பத்தினருக்கு தெரிவிக்க உத்தரவிட வேண்டும். </p><p>மீட்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் எனக் கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த வக்கீல்  பர்வேஷ் முஷ்ரப், ஐகோர்ட்டு  மதுரை அமர்வில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.</p><p>இந்த வழக்கு, சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டு, தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.</p><p>அப்போது தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், தமிழகத்தில் இருந்து கைலாசத்துக்கு யாத்திரை சென்ற 305 பேரில், 220 பேர் மீட்கப்பட்டு, அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். </p><p>மீதமுள்ள 85 பேரை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஓய்வுபெற்ற <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/murugan-conference-made-foreigners-realize-what-thirumoor-said-chennai-high-court-judge-sivagnanam-735525" rel="nofollow">நீதிபதி சிவஞானம்</a> உள்பட காணாமல் போனவர்களின் குடும்பத்தினர், அரசு செலவில் காத்மாண்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.</p><p>இதையடுத்து, நேபாள வெள்ளத்தில் சிக்கி, காணாமல் போனவர்களை மீட்க எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>முந்தைய ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-cases-registered-against-farmers-and-teachers-during-the-dmk-regime-withdrawn</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-cases-registered-against-farmers-and-teachers-during-the-dmk-regime-withdrawn#comments</comments><guid isPermaLink="false">5403c0a3-9fe5-42b3-a14e-c6cdef360ea8</guid><pubDate>Wed, 02 Sep 2026 06:29:46 +0000</pubDate><atom:updated>2026-09-02T06:29:46.853Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/0yf2t7s0/vijay01.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/0yf2t7s0/vijay01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஆசிரியர்கள், விவசாயிகள் மீதான வழக்குகள் திரும்பப்பெறப்படுவதாக சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அறிவித்ததை கட்சியினர் வரவேற்றனர்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழ்நாடு சட்டசபையில்</a> வினாக்கள் விடை நேரம் நடைபெற்று வந்தது. இதனிடையே முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-</p><p>* ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவுச்சான்று பெற ஏற்படும் காலதாமதத்தை தடுக்க டிஜிட்டல் முறையில் வழங்கப்படும். </p><p>* லைசென்ஸ் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும், பயனாளர்கள் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். </p><p>* டிஜிட்டல் முறையில் டிரைவிங் லைசென்ஸ், பதிவுச்சான்று வழங்குவதால் தொலைந்து போனாலும் பதிவிறக்கம் செய்யலாம். </p><p>* திமுக ஆட்சியில் வாழ்வாதாரம் தொடர்பாக போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீது வழக்குப்பதியப்பட்டது. </p><p>* திமுக ஆட்சியில் போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும். </p><p>கடந்த ஆட்சியின் போது போராடிய விவசாயிகள் கைது செய்யப்பட்டதை <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-made-important-announcements-under-rule-110-in-the-tamil-nadu-legislative-assembly">முதலமைச்சர் விஜய்</a> சுட்டிக்காட்டிய போது தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டனர். </p><p>இதையடுத்து பேசிய முதலமைச்சர் விஜய்,  வாழ்வாதாரத்திற்காக போராடிய விவசாயிகள் மீது மனிதநேயமற்ற முறையில் பதியப்பட்ட வழக்குகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். </p><p>* விவசாயிகள், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு துணை நிற்கும் என்றும் முதலமைச்சர் விஜய் உறுதியாக கூறினார். </p><p>ஆசிரியர்கள், விவசாயிகள் மீதான வழக்குகள் திரும்பப்பெறப்படுவதாக சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அறிவித்ததை கட்சியினர் வரவேற்றனர். </p>]]></content:encoded></item><item><title>தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-made-important-announcements-under-rule-110-in-the-tamil-nadu-legislative-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-made-important-announcements-under-rule-110-in-the-tamil-nadu-legislative-assembly#comments</comments><guid isPermaLink="false">9cae4f6a-fff5-4a14-86da-759994d1dd12</guid><pubDate>Wed, 02 Sep 2026 06:16:26 +0000</pubDate><atom:updated>2026-09-02T06:16:26.220Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/0ox22b72/vijay.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/0ox22b72/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஆவடி மாநகராட்சியில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் வகையில் ரூ.500 கோடியில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> வினாக்கள் விடை நேரம் நடைபெற்று வந்தது. இதனிடையே முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-</p><p>* தமிழ்நாட்டின் நகரக்ஙளில் சுகாதாரமான நகரங்களாக மாற்ற பாதுகாப்பான குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படும். </p><p>*  வடசென்னை, ஆவடி, பொன்னேரி, மீஞ்சூர் பகுதிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும். </p><p>* சென்னை மீஞ்சூரில் ரூ.4,800 கோடி மதிப்பில் கடல்நீரை குடிநீராக்கம் திட்டம் செயல்படுத்தப்படும். </p><p>* ஆவடி மாநகராட்சியில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் வகையில் ரூ.500 கோடியில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். </p><p>* சென்னை கீழ்ப்பாக்கத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய திறன் அதிகரிக்கும் திட்டம் ரூ.400 கோடியில் செயல்படுத்தப்படும். </p><p>* பழமையான 33 குடிநீர் திட்டங்களை சீரமைக்கப்படும். </p><p>* குன்றத்தூர், கூடுவாஞ்சேரி நந்திவரம் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும். </p><p>* ரூ.1000 கோடி செலவில் மதுரை, கடலூர் மாநகராட்சிகளில் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். </p><p>* சென்னையில் குடிநீர் மற்றும் கழிவுநீர்  அமைப்புகளை ரூ.210 கோடியில் மேம்படுத்தப்படும். </p><p>* நாகர்கோவில் மாநகராட்சியில் விடுபட்ட மற்றும் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும். </p><p>* சென்னை உட்பட அனைத்து நகரப்பகுதிகளின் சாலைகளும் ரூ.1,850 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும். </p><p>* ரூ.2400 கோடியில் மதுரை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டங்கள் சீரமைக்கப்படும். </p><p>* நெல்லை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் மின்உற்பத்திக்கு ரூ.256 கோடி ஒதுக்கீடு</p><p>* பள்ளிகளை சுற்றியுள்ள சாலைகளில் மாணவ, மாணவிகள் நடந்து செல்ல பிரத்யேக நடைபாதை உருவாக்கப்படும். </p><p>* மாநிலம் முழுவதும் ரூ.305 கோடி செலவில் பூங்காக்கள் அமைக்கப்படும். </p><p>* ரூ.335 கோடி செலவில் அரசு பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படும். </p>]]></content:encoded></item><item><title>மழைக்காலங்களில் கட் அவுட், பேனர்கள் வைக்க தடை- த.வெ.க.வினருக்கு அமைச்சர் என்.ஆனந்த் எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-anand-warns-tvk-members-over-rainy-season-cutouts-and-banners-ban</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-anand-warns-tvk-members-over-rainy-season-cutouts-and-banners-ban#comments</comments><guid isPermaLink="false">b5d62573-c038-4136-ae77-33c37f6ffb05</guid><pubDate>Wed, 02 Sep 2026 06:08:13 +0000</pubDate><atom:updated>2026-09-02T06:08:13.352Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,தடை உத்தரவு,tvk,MInister N Anand,அமைச்சர் என் ஆன்ந்த்,cut outs</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/iaxa431t/Anand.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister N Anand]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/iaxa431t/Anand.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் த.வெ.க.வினர் பேனர் மற்றும் கட் அவுட் வைக்க கூடாது என தமிழக <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D" rel="nofollow">முதலமைச்சர் விஜய்</a> உத்தரவுபடி பொதுச் செயலாளரும் அமைச்சருமான என்.ஆனந்த் ஏற்கனவே நிர்வாகிகளுக்கு உத்தவிட்டுள்ளார்.</p><p>மீறி வைப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.</p><h2>மழைக்காலங்களில்</h2><p>இந்நிலையில் பருவ மழையை முன்னிட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வரும் அமைச்சர் என்.ஆனந்த் மழைக்காலம் வருவதால் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் பேனர்களை, கட் அவுட்களை அகற்ற வேண்டும் என நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p>இது குறித்து த.வெ.க.வினருக்கு அமைச்சர் என்.ஆனந்த், நம் தலைவரும் முதலமைச்சருமான விஜய் பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த செயலிலும் த.வெ.க.வினர் ஈடுபட கூடாது.</p><p>பேனர்கள், <a href="https://www.maalaimalar.com/sports/cricket/ipl-news-in-tamil/sanju-samson-to-play-in-his-hometown-for-first-intl-match-807441" rel="nofollow">கட் அவுட்</a>கள் வைத்து பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக் கூடாது என உத்தரவிட்டு உள்ளார். </p><p>எனவே பருவமழை தொடங்க இருக்கும் நேரத்தில் தங்களது பகுதியில் ஏதேனும் கட் அவுட்கள் மற்றும் பேனர்கள் வைத்திருந்தால் உடனடியாக அகற்றி விட வேண்டும்.</p><p>பேனர்களால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட கூடாது. மழைக் காலங்களில் பொது மக்களுக்கு த.வெ.க.வினர் பாதுகாப்பாக இருந்து பல்வேறு உதவிகள் செய்ய வேண்டும். மக்கள் பாது காப்பே நமக்கு முக்கியம் என அமைச்சர் என்.ஆனந்த் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். </p>]]></content:encoded></item><item><title>சென்னையில் புதிதாக 6 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்- அமைச்சர் நிர்மல்குமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-to-get-six-new-power-substations-says-minister-nirmalkumar</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-to-get-six-new-power-substations-says-minister-nirmalkumar#comments</comments><guid isPermaLink="false">405d1a70-f417-4532-a87a-030b2e232001</guid><pubDate>Wed, 02 Sep 2026 05:48:20 +0000</pubDate><atom:updated>2026-09-02T05:48:20.123Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN assembly,தமிழக சட்டசபை |,substations,அமைச்சர் நிர்மல் குமார்,minister nirmal kumar,துணை மின் நிலையங்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/geqa47hw/Nirmal-kumar.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Nirmal kumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/geqa47hw/Nirmal-kumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சொந்த காரணங்களால் சிலர் பணம் வாங்கிக்கொண்டு செயல்படுகிறார்கள் என பவர்கட் தொடர்பாக அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம். </p><p>தமிழ்நாடு சட்டசபையில் இன்று வினாக்கள் விடை நேரம் நடைபெற்று வருகிறது. மின்சாரத்துறை தொடர்பாக எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில், அமைச்சர் நிர்மல்குமார் பதில் அளித்துள்ளார்.</p><p>அப்போது, துணை மின்நிலையம் அமைத்துத் தர வேண்டும் என எம்எல்ஏ செல்லசாமி கோரிக்கை வைத்துள்ளார்.</p><p>இதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல்குமார்," குறை மின்னழுத்தப் பிரச்சனை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>சென்னையில் தாழ்வாக உள்ள மின்பெட்டிகளை உயர்த்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.</p><p>தொடர்ந்து, திருத்துறைப்பூண்டியில் 110KV <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D" rel="nofollow">துணை மின்நிலையம்</a> தேவை என எம்எல்ஏ மாரிமுத்து கோரிக்கை வைத்தார்.</p><p>இதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார்,"மதுரையில் 6 புதிய துணை மின் நிலையங்களுக்கான பணிகள் நடைபெறுகிறது" என்றார். </p><p>பத்மநாபபுரம் - மலைக்கிராமங்களில் மின்வசதி இல்லை. துணை மின்நிலையம் அமைத்துத்தர வேண்டும் என எம்எல்ஏ செல்லசாமி கோரிக்கை வைத்தார்.</p><p>இதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார்,"ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆண்டில் 6,000 டிரான்ஸ்ஃபார்மர்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>குறை மின்னழுத்தப் பிரச்சனை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>15 நிமிடங்களில் மின் வெட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.</p><p>சென்னையில் புதிதாக 6 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்" என்றார்.</p><p>கொரடாச்சேரி பகுதியில் ஒருநாளைக்கு 10 முறை பவர் கட் ஆகிறது என எம்எல்ஏ பூண்டி கலைவாணன் குற்றம்சாட்டினார்.</p><p>சொந்த காரணங்களால் சிலர் பணம் வாங்கிக்கொண்டு செயல்படுகிறார்கள் என பவர்கட் தொடர்பாக அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்தார்.</p><p>மேலும் அவர்,"இன்னும் 6 மாதங்களில் பிரச்சனை சரி செய்யப்படும்" என்றார்.</p>]]></content:encoded></item><item><title>பாம்பு கடிக்கு மருந்துகள் போதுமான அளவு அரசு மருத்துவமனைகளில் உள்ளது- அமைச்சர் அருண்ராஜ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-arunraj-says-there-is-an-adequate-supply-of-snakebite-medicines-in-government-hospitals</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-arunraj-says-there-is-an-adequate-supply-of-snakebite-medicines-in-government-hospitals#comments</comments><guid isPermaLink="false">453b2bad-995a-4584-ae30-861755d1c8c7</guid><pubDate>Wed, 02 Sep 2026 05:29:32 +0000</pubDate><atom:updated>2026-09-02T05:29:32.576Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,அமைச்சர் அருண்ராஜ்,Minister Arunraj</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/u2ygzmj9/arunjar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் அருண்ராஜ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் அருண்ராஜ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/u2ygzmj9/arunjar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பாம்பு கடிக்கு சிகிச்சை மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் போதுமான அளவு அரசு மருத்துவமனைகளில் இருக்கிறது என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">சட்டசபையில்</a> இன்று பாம்பு கடிக்கு அரசு  ஆஸ்பத்திரிகளில் உயிர் காக்கும் மருந்துகள் போதுமான அளவு இருப்பு உள்ளதா என்பது குறித்து எம்.எல்.ஏ.க்கள் கேள்வி எழுப்பினர்.</p><p>அதன் விவரம் வருமாறு,</p><p>பண்ருட்டி மோகன்:- பண்ருட்டி அரசு மருத்துவமனையில் பாம்பு கடிக்கு சிகிச்சை மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் வழங்க அரசு முன்வருமா?</p><p>அமைச்சர் அருண்ராஜ் :-பாம்பு கடிக்கு சிகிச்சை மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் போதுமான அளவு அரசு மருத்துவமனைகளில் இருக்கிறது.</p><p>முன்னாள் அமைச்சர் கே என் நேரு :-    </p><p>திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்றத் தொகுதி புள்ளம்பாடி ஒன்றியம் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு கொண்டு வருகிறது. நிறைய கிராமங்களை கொண்ட பகுதி. அதை தரம் உயர்த்தி முழு நேர ஆரம்ப நிலை  மருத்துவமனையாகமாற்றி தர வேண்டும். அப்படி தந்தால் அந்த பகுதியில் இருக்கிற பாம்பு கடிக்கான  மருந்துகள் எல்லாம் 24 மணி நேரம் கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருக்கும். கட்டிட வசதி இருக்கு எல்லா வசதிகளும் இருக்கிறது. அதை தரம் உயர்த்தி தர வேண்டும்.</p><p>அமைச்சர் அருண்ராஜ் :-</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-replies-to-members-questions-regarding-the-health-department-in-the-tamil-nadu-legislative-assembly">மருத்துவத்துறை</a> சார்பில் நலம் செயலி உள்ளது. அதன் மூலம் மருந்துகள் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க எடுக்கப்படும்.</p><p>முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி:-</p><p>ஆத்தூர் தொகுதி சின்னாளபட்டி பேரூராட்சியில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதை அரசு மருத்துவமனையாக தரம் உயர்ந்த  நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>அமைச்சர் அருண்ராஜ் :</p><p>இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>சட்டமன்ற உறுப்பினர்கள் மருத்துவமனைகளை தரம் உயர்த்த வேண்டும், மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளீர்கள். அதனை அரசும் திட்டத்தில் வைத்துள்ளது.  எனவே அனைத்து நடவடிக்கையும் விரைவில் மேற்கொள்ளப்படும்.</p><p>முஸ்தபா (த வெ க ):- மதுரை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு மருத்துவமனை வளாகத்திலேயே வைத்து சிகிச்சை வழங்கப்படுகிறது. எனவே அதற்கு தரமான வசதிகளை செய்து தர வேண்டும்.</p><p>அமைச்சர் அருண்ராஜ்:- </p><p>உறுப்பினரின் கோரிக்கையின் படி ஆய்வு செய்து அவர் கேட்ட வசதி செய்து தரப்படும்.</p><p>பெரியகுளம் சபரி ஐங்கரன்:- </p><p>தேனி அரசு மருத்துவமனையில் போதுமான பாம்புக்கடி சிகிச்சைக்காக வருவோருக்கு படுக்கை வசதி இல்லை அதனை செய்து தர வேண்டும்.</p><p>அமைச்சர் அருண்ராஜ் - கூடுதல் படுக்கை வசதிகள் நிச்சயம் செய்து கொடுக்கப்படும்.</p><p>முன்னாள் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்:-</p><p>பாம்பு கடிக்கு சமீபத்தில் பிளஸ் டூ மாணவி ஒருவர் இறந்துள்ளார். எனவே அனைத்து மருத்துவமனைகளிலும் பாம்பு கடிக்கான தடுப்பு மருந்து உள்ளதா? தமிழ்நாட்டில் பாம்பு கடிக்கு எத்தனை பேர் இறந்துள்ளனர்? எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p> <p>அமைச்சர் அருண் ராஜ் :-</p><p>இந்த ஆண்டு பாம்பு கடிக்கு 9,519பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9 பேர் மரணம் அடைந்துள்ளனர். கடந்த 2025 ஆம் ஆண்டில் 15 ஆயிரத்து 837 பேர் பாம்பு கடியால் பாதிக்கப்பட்டனர். அதில் 26 பேர் இறந்துள்ளனர். பாம்பு கடிக்கான விஷ முறிவு மருந்து அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் கைவசம் உள்ளது. </p><p>இவ்வாறு விவாதம் நடந்தது.</p><p>40 நிமிடம் மொத்த கேள்விகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதிலளித்தார்.</p>]]></content:encoded></item><item><title>மூர்மார்க்கெட்- சூலூர்பேட்டை இடையே பயணிகள் ரெயில் ரத்து!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/passenger-trains-cancelled-between-moore-market-and-sulurpet</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/passenger-trains-cancelled-between-moore-market-and-sulurpet#comments</comments><guid isPermaLink="false">821babad-3ef2-420b-a4c5-3de5fa2c30f8</guid><pubDate>Wed, 02 Sep 2026 05:26:39 +0000</pubDate><atom:updated>2026-09-02T05:26:39.527Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Southern Railway,ரெயில் சேவை,rail service,தெற்கு ரெயில்வே,பயணிகள் ரெயில் ரத்து,passenger rail cancel</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/aqalxypa/local-train.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Passenger train]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/aqalxypa/local-train.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. </p><p>இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள பெதபரியா- நாயுடுபேட்டை இடையே நாளை (3-ந்தேதி) மற்றும் 5 ஆகிய தேதிகளில் மதியம் 12.20 மணி முதல் மாலை 6.50 மணி வரையில் (6 மணி நேரம் 30 நிமிடம்) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. </p><p>அதன் விவரம் வருமாறு:-</p><p>* மூர்மார்க்கெட்டில் (சென்னை சென்டிரல்) இருந்து காலை 7.45 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் பயணிகள் ரெயிலும், மறுமார்க்கமாக, <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88" rel="nofollow">சூலூர்பேட்டை</a>யில் மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் வரும் பயணிகள் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.</p><p>* சூலூர்பேட்டையில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு நெல்லூர் வரும் பயணிகள் ரெயிலும், மறுமார்க்கமாக, நெல்லூரில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை வரும் பயணிகள் ரெயிலும் ரத்துசெய்யப்படுகிறது.</p><p>* மூர்மார்க்கெட்டில் இருந்து இரவு 9.25 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் பயணிகள் ரெயில் ரத்து செய்யப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆந்திராவில் மலேரியா எதிர்ப்பு மாத்திரை உட்கொண்ட 2-ம் வகுப்பு சிறுமி உயிரிழப்பு: 50 பேருக்கு சிகிச்சை</title><link>https://www.maalaimalar.com/news/national/andhra-student-dies-after-taking-anti-malaria-tablet-over-50-hospitalised</link><comments>https://www.maalaimalar.com/news/national/andhra-student-dies-after-taking-anti-malaria-tablet-over-50-hospitalised#comments</comments><guid isPermaLink="false">25c1a6f7-d4f1-4f22-90c8-9896cb199978</guid><pubDate>Wed, 02 Sep 2026 05:22:19 +0000</pubDate><atom:updated>2026-09-02T05:22:19.769Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மலேரியா மருந்து,ஆந்திரா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/bah96t9t/Andhra001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிகிச்சை பெறும் கிராமவாசிகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/bah96t9t/Andhra001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குளோரோகுயின் (Chloroquine) என்பது ஒரு ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தாகும். இது மலேரியா ஒட்டுண்ணிக்கு நச்சுத்தன்மை வாய்ந்த ஹீம் (heme) எனும் பொருளின் அளவை ரத்தத்தில் அதிகரிப்பதன் மூலம் மலேரியாவைக் குணப்படுத்துகிறது. இது ஒட்டுண்ணியை அழித்து, தொற்று பரவுவதைத் தடுக்கிறது.</p><p>ஆந்திரா- தெலுங்கானா மாநில எல்லையில் உள்ள போலவரத்தில் உள்ளது கொல்லகுப்பா கிராமம். இந்த கிராமத்தில் உள்ள 71 பேருக்கு மலேரியா எதிர்ப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டது. மாத்திரை உட்கொண்டவர்களில் பலருக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. அதாவது காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.</p><h2>53 பேர் மருத்துவமனையில் அனுமதி</h2><p>இதுகுறித்து அறிந்த அதிகாரிகள் சுமார் 29 பேரை தெலுங்கானாவில் உள்ள மருத்துவமனையிலும், 24 பேரை உள்ளூர் சுகாதார மையத்திலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.</p><p>இதில் 2-ம் வகுப்பு படித்து வந்த மாதிவி ஜமுனா என்ற 7 வயது மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிகிச்சை பெற்று வரும் மற்றவர்கள் நிலை சீராக உள்ளது. இது தொடர்பாக அச்சப்படத் தேவையில்லை என்று மாவட்ட கலெக்டர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.</p><p>மாவட்ட நிர்வாகம் மூன்று குழந்தைகள் நல மருத்துவர்கள் அடங்கிய சிறப்பு மருத்துவக் குழுக்களைப் பணியமர்த்தியுள்ளது. இவர்கள் சிகிச்சை பெற்று வரும் நபர்களை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.</p><h2>சந்திரபாபு நாயுடு உத்தரவு</h2><p>சிறப்பான சிகிச்சை அளிக்க ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.</p><p>மேலும், சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் சம்பவம் தொடர்பான விவரங்களைக் கேட்டறிந்தார்.</p><p>காக்கிநாடா அரசு பொது மருத்துவமனையைச் சேர்ந்த ஒன்பது பேர் கொண்ட நிபுணர் குழு அந்த கிராமத்தை வந்தடைந்துள்ளது. விஜயவாடா, ராஜமகேந்திரவரம் மற்றும் காக்கிநாடாவிலிருந்து மேலும் மூன்று குழுக்கள் அவர்களுடன் இணையவுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>இன்விக்டோ மாடலின் விலையை திடீரென உயர்த்திய மாருதி</title><link>https://www.maalaimalar.com/automobilenews/car/maruti-invicto-becomes-dearer</link><comments>https://www.maalaimalar.com/automobilenews/car/maruti-invicto-becomes-dearer#comments</comments><guid isPermaLink="false">81e275f2-36d7-4f22-807e-429f11227eb4</guid><pubDate>Wed, 02 Sep 2026 05:14:00 +0000</pubDate><atom:updated>2026-09-02T05:14:00.000Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Car,Maruti Suzuki,மாருதி சுசுகி,கார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/5j4mjky2/Maruti-Invicto.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Maruti Invicto]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/5j4mjky2/Maruti-Invicto.png?w=280" width="280"></media:thumbnail><category>கார் (Automobile)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/maruti-suzuki">மாருதி சுசுகி</a> நிறுவனம், ஆகஸ்ட் 2026 முதல் தனது வரிசையில் உள்ள பல மாடல்களின் விலையை உயர்த்தியது. முன்னதாக ஜிம்னி, இ-விட்டாரா, பலேனோ மற்றும் பிரெஸ்ஸா போன்ற மாடல்களின் விலை உயர்த்தப்பட்டது.</p><p>இந்த வரிசையில், தற்போது இன்னோவா ஹைக்ராஸின் ஒரு வகையான மாருதியின் இன்விக்டோ காரின் விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதில், வேரியண்ட் தேர்வை பொறுத்து விலைகள் கூடவோ குறையவோ செய்துள்ளன. </p><h2>விலை மாற்றம்:</h2><p>ஏழு இருக்கைகள் கொண்ட அடிப்படை ஜீட்டா+ ஹைப்ரிட் வேரியன்ட்டின் விலையில் ரூ. 3,000 குறைக்கப்பட்டு, இதன் ஆரம்ப நிலை விலை ரூ. 24.94 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p>இன்விக்டோ வரிசையில் உள்ள மற்ற இரண்டு மாடல்களான ஸீட்டா+ ஹைப்ரிட் 8S மற்றும் ஆல்ஃபா+ ஹைப்ரிட் 7S ஆகியவற்றின் விலை முறையே ரூ. 10,000 அதிகரித்துள்ளது.</p><p>இதனால், இந்த MPV-யின் விலை தற்போது ரூ. 24.94 லட்சம் முதல் ரூ. 28.70 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது (அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலைகள்).</p><p>பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனிலும் கிடைக்கும் ஹைக்ராஸ் போல் இல்லாமல், மாருதி சுசுகி இன்விக்டோ ஹைப்ரிட் மாடலில் மட்டுமே வழங்கப்படுகிறது. கடந்த மாதம் இந்த மாடலின் ஒரு வேரியண்ட்டின் விலை மட்டும் ரூ. 25,000 உயர்த்தப்பட்டது .</p>]]></content:encoded></item><item><title>சீனாவில் 2-ம் வகுப்பு மாணவி சாதனை: ஏ.ஐ. மூலம் செயலி வடிவமைத்து ரூ. 2.5 லட்சத்திற்கு விற்பனை</title><link>https://www.maalaimalar.com/news/world/13-year-old-chinese-girl-sells-ai-homework-app-for-2-5-lakh-in-three-days</link><comments>https://www.maalaimalar.com/news/world/13-year-old-chinese-girl-sells-ai-homework-app-for-2-5-lakh-in-three-days#comments</comments><guid isPermaLink="false">18499178-d5b6-447e-9886-49cc04de9e3a</guid><pubDate>Wed, 02 Sep 2026 05:10:28 +0000</pubDate><atom:updated>2026-09-02T05:10:28.578Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>China,சீனா,பள்ளி மாணவி,school student,AI App,ஏ.ஐ செயலி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/s6jpjstj/Untitled-design-2.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 13-year-old Zhu Shuhan’s ‘Sai Chang’ study-monitoring app]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/s6jpjstj/Untitled-design-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/சீனா">சீனாவில்</a> வசித்து வரும் 13 வயது சிறுமி ஒருவர், எந்தவிதமான ப்ரோகிரமிங் அறிவும் இல்லாமல் ஏ.ஐ தொழில்நுட்பத்துடன் இணைந்த ஒரு செயலியை உருவாக்கி, அதன்மூலம் ரூபாய் 2.5 லட்சம் வருவாயை ஈட்டி, அதன் மூலம் கிடைத்த தொகையை தனது பெற்றோர்களிடம் கொடுத்துள்ளார். </p><h3><strong>இரண்டாம் வகுப்பு மாணவி</strong></h3><p>சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள ஒரு அரசு நடுநிலைப்பள்ளியில் ஜூ ஷூஹான் என்ற மாணவி இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.</p><p>இந்த பள்ளியில் படிக்கும் பெரும்பாலான மாணவிகள், தங்களின் பெற்றோர்களை விட்டு பிரிந்து, அந்த பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.</p><p>இந்த பள்ளியில் பெற்றோர்களின் மேற்பார்வை இல்லாமல் பயிலும் மாணவிகள், கல்வியில் கவனம் செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளனர்.</p><h3><strong>‘ஸாய் சாங்’ என்ற ஏ.ஐ செயலி</strong></h3><p>இதை கவனித்த அந்த இரண்டாம் வகுப்பு மாணவியான ஜூ, தனது யோசனையின் மூலம் ‘ஸாய் சாங்’ என்ற செயலியை ஏ.ஐ தொழில்நுட்ப வசதியுடன் உருவாக்கினார்.</p><p>இந்த செயலியை மாணவிகள் தங்கள் நேரடி படிப்பை எந்தவித கவனச் சிதறலும் இல்லாமல் பயிலும் வகையில் ஜூ உருவாக்கினார்.</p><p>இந்த செயலி மூலம், பெற்றோர்கள் தங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து, பின்னர் தங்களின் குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்வதை கண்கணிப்பதற்காக ஜூ உருவாக்கினார்.</p><p>மேலும் குழந்தைகள் தங்களின் போன்களில் (கைப்பேசி) விளையாடுவதையோ அல்லது இருக்கையை விட்டு எழுவதையோ கேமரா கண்டறிந்தால், அந்த செயலி பெற்றோர்களுக்கு குரல் வழி மூலம் ஒரு நினைவூட்டலை வழங்குகிறது.</p><p>குழந்தைகளின் படிப்பு நேரம் முடிந்தவுடன், இந்த செயலி குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் குறித்த ஒரு அறிக்கையை உருவாக்குகிறது.</p><h3><strong>மாணவி ஜூ</strong></h3><p>இந்த செயலி குறித்து மாணவி ஜூ கூறுகையில், எனது பெற்றோர் அடிக்கடி வேலையாக இருந்ததால், படிக்கும்போது தான் தனியாக விடப்பட்டதாகவும், இதையடுத்து தனது சொந்த அனுபவத்திலிருந்து இந்த யோசனை உருவானதாகவும் கூறினார்.</p><p>கோடிங் திறன்கள் எதுவும் இல்லாதபோதிலும், தனது யோசனையை ஒரு பெரிய மொழி மாதிரிக்கு (language model) விவரித்ததன் மூலம் இந்த செயலியை உருவாக்கியதாக மாணவி ஜூ கூறினார்.</p><p>இந்த செயலியின் தேவை தொடர்ந்து அதிகரித்தால், இந்த தயாரிப்பை அதிக பயனர்களுக்கு குறைந்த விலையில் கிடைக்க செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.</p><h3><strong>ஏ.ஐ. தயாரிப்பு சந்தைப்படுத்துதல் போட்டி</strong></h3><p>இதையடுத்து ஆகஸ்ட் 21 முதல் 23 வரை ஹாங்சோவில் நடைபெற்ற தேசிய அளவிலான ஏ.ஐ. தயாரிப்பு சந்தைப்படுத்துதல் போட்டியில், மாணவி ஜூ உருவாக்கிய ‘ஸாய் சாங்’ செயலி காட்சிபடுத்தப்பட்டது.</p><p>இந்த போட்டியில் பங்கேற்ற போட்டியாளர்களின் செயலிகள், தொழில்நுட்ப மதிப்பீட்டின் அடிப்படையில் இல்லாமல், அவர்களின் ஏ.ஐ தயாரிப்புகள் மூலம் ஈட்டப்பட்ட வருவாயின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டது.</p><p>இந்த போட்டியில் 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டனர். இதையடுத்து இந்த பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வரும் ஜூ ஷூஹான் மாணவி, மூன்றாம் இடத்தை பிடித்து 70,000 ரூபாய் ரொக்கத்தை பரிசாக வென்றார்.</p><p>ஜூ விற்பனை செய்த ஏ.ஐ செயலியானது, 90 ஆர்டர்களை பெற்று, மொத்தமாக மூன்று நாட்களில் 2.5 லட்சம் ரூபாயை ஈட்டியது.</p>]]></content:encoded></item><item><title>கரும்பு சாகுபடியை பெருக்கி படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை தொடர்ந்து இயக்க வேண்டும்!- அன்புமணி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-says-sugarcane-cultivation-must-be-increased-to-ensure-the-continued-operation-of-the-padalam-cooperative-sugar-mill</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-says-sugarcane-cultivation-must-be-increased-to-ensure-the-continued-operation-of-the-padalam-cooperative-sugar-mill#comments</comments><guid isPermaLink="false">7161e74d-9200-4144-a17e-5b3fa775ed0b</guid><pubDate>Wed, 02 Sep 2026 05:09:36 +0000</pubDate><atom:updated>2026-09-02T05:09:36.964Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,சர்க்கரை ஆலை,கரும்பு சாகுபடி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/51yeb0m9/Anbumaniramadoss01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/51yeb0m9/Anbumaniramadoss01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கரும்பு சாகுபடி பரப்பை அதிகரித்து படாளம் ஆலை தொடர்ந்து இயங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை, கூட்டுறவு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகளில் அக்டோபர் ஒன்றாம்  தேதி முதல் அரவைப் பருவம் தொடங்கவுள்ள நிலையில், படாளத்தில் உள்ள மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், ஒப்பந்த பணியாளர் நியமனம் உள்ளிட்ட எந்தப் பணிகளும் இன்னும் தொடங்கப்படவில்லை. நாடு முழுவதும் சர்க்கரைக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவும் சூழலில், கூட்டுறவு ஆலைகள் மூலம் சர்க்கரை உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகளை தமிழக அரசின் சர்க்கரைத் துறை தவற விடுவது சரியானதல்ல.</p><h2><strong>ஐயம்</strong></h2><p>செங்கல்பட்டு மாவட்டம் படாளத்தில் 1961-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை தமிழ்நாட்டின் பழமையான மற்றும் அதிக அரவைத் திறன் கொண்ட சர்க்கரை ஆலைகளில் ஒன்றாகும். ஒரு நாளைக்கு 2500 டன் கரும்பு அரவைத் திறன் கொண்ட படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை சர்க்கரை உற்பத்தி நடைபெறும். அதற்கான முதல் நடவடிக்கையாக ஆலையில் ஒப்பந்தத் தொழிலாளர்களை பணியில் இணைக்கும் நடைமுறை ஜூலை மாதத்தில் தொடங்கும். ஆனால், நடப்பாண்டில் ஜூலைக்குப் பிறகு ஆகஸ்ட் மாதமும் நிறைவடைந்து  செப்டம்பர் மாதம் பிறந்து விட்ட நிலையில், இன்று வரை ஒப்பந்தத் தொழிலாளர்களை பணியில் இணைக்கும் நடைமுறை தொடங்கவில்லை. அதனால் படாளம் ஆலையை மூட அரசு திட்டமிட்டுள்ளதோ என்ற ஐயம் எழுந்துள்ளது.</p><p>அதுமட்டுமின்றி, நிதிப்பற்றாக்குறை காரணமாக படாளம் சர்க்கரை ஆலையை நடப்பாண்டில் இயக்கும் முடிவை அரசு கைவிட்டு விட்டதாக வெளியாகியுள்ள செய்திகளும் இந்த ஆலையை நம்பியுள்ள 30 ஆயிரம் விவசாயிகளையும், நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெறும் தொழிலாளர்களையும் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்நாட்டில் சர்க்கரைத் துறையின் வளர்ச்சிக்கு பெரும் பங்களித்த படாளம் சர்க்கரை ஆலையை மூட அரசு முடிவு செய்திருந்தால், அதற்கு ஒரே ஒரு நியாயமான காரணம் கூட கிடையாது. அதனால், அப்படி ஏதேனும் திட்டம் இருந்தால் அதை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்.</p><h2><strong>கரும்பு சாகுபடி பரப்பு குறைவு</strong></h2><p>படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 29,632 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். திண்டிவனம்,  வானூர், மேல்மருவத்தூர், படாளம், செங்கல்பட்டு, மதுராந்தகம், உத்திரமேரூர், திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட 10 கரும்பு கோட்டங்களில் உள்ள ஒரு லட்சத்து 62,327 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்படும் கரும்பு இந்த ஆலைக்கு வழங்கப்பட வேண்டும். அதன்படி, தொடக்கத்தில் ஆண்டுக்கு 90 ஆயிரம் டன் கரும்பு அரவையுடன் உற்பத்தியைத் தொடங்கிய படாளம் ஆலை, ஒரு கட்டத்தில் ஆண்டுக்கு 6 லட்சம் டன் வரை கரும்பு அரவை செய்து சாதனை படைத்தது. ஒரு கட்டத்தில் ஆலையை தனியாருக்கு தாரை வார்க்கும் நோக்கத்துடன் கரும்பு அரவை படிப்படியாக குறைக்கப்பட்டு, 2001-ஆம் ஆண்டில் படாளம் சர்க்கரை ஆலை மூடப்பட்டது.</p><p>அதன்பின் ஆலையை இயக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், 2008-09 ஆம் ஆண்டுகளில்  பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையில் அடுத்தடுத்து இரு போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதன்பயனாக அப்போதிருந்த அரசு ரூ.34 கோடியில் ஆலையை சீரமைத்து 2010-ஆம் ஆண்டு முதல் இயக்கத் தொடங்கியது. அதன்பின் கரும்பு அரவை 2022-23ஆம் ஆண்டில் 2 லட்சம் டன் என்ற அளவைக் கடந்தது. அதன்பின், கடந்த இரு ஆண்டுகளாக கரும்பு அரவை  69,360 டன், 53,928 டன்னாக குறைந்தது. நடப்பாண்டில் குறைந்தது 67,500 டன் கரும்பு அரவை செய்ய முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் தான், அதை கைவிட்டு ஆலையை மூட முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது.</p><p>தமிழக அரசு நினைத்தால் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்குட்பட்ட பகுதிகளில் 60 லட்சம் டன் வரை கரும்பு சாகுபடி செய்ய வைக்க முடியும். ஆனால், அதற்கான ஏற்பாடுகளை ஆலை நிர்வாகமும்,  அரசும் மேற்கொள்ளவில்லை. ஒரு சர்க்கரை ஆலையில் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கரும்பு சாகுபடியை  அதிகரிக்க வேண்டியது சம்பந்தப்பட்ட ஆலையின் கரும்பு அலுவலர், துணை கரும்பு அலுவலர் ஆகியோரின் பணி ஆகும். ஆனால், இந்த இரு பணியிடங்களும் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ள நிலையில், கரும்பு சாகுபடியை எவ்வாறு அதிகரிக்க முடியும்? மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு உட்பட்ட பகுதிகளில் கரும்பு சாகுபடி பரப்பு குறைந்தது தான் ஆலையின் வீழ்ச்சிக்கு மிக முக்கிய காரணம் ஆகும்.</p><p>மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மேலாண் இயக்குனர், அலுவலக மேலாளர், தொழிலாளர் நல அதிகாரி, தலைமைப் பொறியாளர் ஆகிய 4 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். ஆலையில் மொத்தம்  535 பணியிடங்கள் இருக்கும் போதிலும் கூட, மேற்கண்ட நால்வரைத் தவிர வேறு எவரும் பணியில் இல்லை. தேவையின் போது பயன்படுத்திக் கொள்ள 381 ஒப்பந்தப் பணியாளர்கள் உள்ளனர். அவர்கள் அனைவருமே  ஓய்வு அல்லது விருப்ப ஓய்வு பெற்றவர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் அரவைக் காலத்திலும், இவர்களில்  244 பேர் அரவையில்லா காலத்திலும் பணியில் இருக்க வேண்டும். ஆனால், இவர்களில் ஒருவர் கூட நடப்பாண்டில் பணிக்கு அழைக்கப்படவில்லை. அதனால் தான் படாளம் சர்க்கரை ஆலை முடங்கிக் கிடக்கிறது.</p><p>தமிழ்நாட்டில் கரும்பு சாகுபடியை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் தான், கடந்த ஆண்டில் கரும்புக்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ள கொள்முதல் விலையான டன்னுக்கு 3290.50 ரூபாயுடன், ஊக்கத்தொகையாக  ரூ.709.50 சேர்த்து  டன்னுக்கு ரூ.4000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. நடப்பாண்டில்   இது ரூ.4300 வரை உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இனிவரும் காலங்களில் கரும்பு சாகுபடி அதிகரிக்கும். இத்தகைய சூழலில் பழமையும், பெருமையும் வாய்ந்த ஆலையை மூட நினைப்பது நியாயமல்ல.</p><p>இந்திய சந்தையில் சர்க்கரைக்கான தேவை அதிகரித்து, 50% வரை விலை உயர்ந்துள்ள நிலையில், படாளம் ஆலைக்கு புத்துயிரூட்டப்பட்டால், அது அடுத்த சில ஆண்டுகளில் இலாபம் ஈட்டத் தொடங்கிவிடும். இதைக் கருத்தில் கொண்டு பணியாளர்களின் தேவைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதற்கேற்ற வகையில் முதலில் ஒப்பந்த பணியாளர்களையும், பின்னர் படிப்படியாக நிரந்தர பணியாளர்களையும் நியமிக்க வேண்டும். அவர்கள் மூலம் கரும்பு சாகுபடி பரப்பை அதிகரித்து படாளம் ஆலை தொடர்ந்து இயங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY : அதிரடியாக குறைந்த தங்கம் விலை- இன்றைய நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-rate-today-sharp-decline-in-chennai-prices</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-rate-today-sharp-decline-in-chennai-prices#comments</comments><guid isPermaLink="false">5830303c-33d4-43f7-8a6d-81697327a04c</guid><pubDate>Wed, 02 Sep 2026 05:06:02 +0000</pubDate><atom:updated>2026-09-02T05:06:02.293Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>gold rate,தங்கம் விலை குறைவு,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Gold rate reduce,Today gold rate</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/mitqgzdd/gold-rate.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold rate in Chennai]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/mitqgzdd/gold-rate.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தங்கம் விலை நேற்று உயர்ந்த நிலையில் இன்று அதிரடியாக குறைந்துள்ளது.</p> <p>தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. சென்னையில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு தங்கம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 505-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 40-க்கும் விற்பனையானது.</p><p>இந்த நிலையில் தங்கத்தின் விலை நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.135 குறைந்து ரூ.14 ஆயிரத்து 370-க்கும், சவரனுக்கு ரூ.1,080 குறைந்து ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 960-க்கும் விற்றது.</p><h2>நேற்று உயர்வு</h2><p>தொடர்ந்து, மாத தொடக்க நாளான நேற்று<a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D" rel="nofollow"> தங்கம் விலை</a> சற்று உயர்ந்தது. அதன்படி கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 385 ரூபாய்க்கும் சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 080-க்கு விற்பனை செய்யப்பட்டது.</p><h2>இன்று சரிவு</h2><p>சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,800 குறைந்த நிலையில்,  ரூ.1,11,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p>ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.225 குறைந்த நிலையில் ரூ.13,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><h2>வெள்ளி விலை நிலவரம்</h2><p>வெள்ளி விலை நேற்று சற்று குறைந்த நிலையில், இன்று எந்த மாற்றமுமின்றி விற்பனை செய்யப்படுகிறது.</p><p>அதன்படி, சென்னையில் வெள்ளியின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.</p><h2>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்</h2><p>01-09-2026-  ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,80</p><p>31-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,960</p><p>30-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,040</p><p>29-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,040</p><p>28-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,400</p><h2>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்</h2><p>01-09-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>31-08-2026- ஒரு கிராம் ரூ.260</p><p>30-08-2026- ஒரு கிராம் ரூ.260</p><p>29-08-2026- ஒரு கிராம் ரூ.260</p><p>28-08-2026- ஒரு கிராம் ரூ.265</p>]]></content:encoded></item><item><title>நாக தோஷம்... ஜலதோஷம்... சட்டசபையில் கலகல விவாதம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/naga-dosham-common-cold-lively-debate-in-the-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/naga-dosham-common-cold-lively-debate-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">70e4947b-a7a3-49c4-84c3-b6f9c9b7d092</guid><pubDate>Wed, 02 Sep 2026 04:58:09 +0000</pubDate><atom:updated>2026-09-02T04:58:09.750Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>O Panneer Selvam,தமிழக சட்டசபை,TN assembly,ஓ பன்னீர்செல்வம்,அமைச்சர் அருண்ராஜ்,Minister Arunraj</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/x8h568pa/assembly0.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் அருண்ராஜ்- ஓ.பன்னீர்செல்வம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் அருண்ராஜ்- ஓ.பன்னீர்செல்வம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/x8h568pa/assembly0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பெரியார் இயக்கம் பற்றி பேசிய திமுக இன்று, தோஷம் பற்றி பேசிக்கிட்டு இருக்காங்க. நாங்கள் பெரியார் வழியில் வந்தவர்கள் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறினார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> இன்று வினாக்கள் விடை நேரம் நடைபெற்று வருகிறது. முதலில் சுகாதாரத்துறை தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் பதில் அளித்து வருகிறார். </p><p>தி.மு.க. எம்.எல்.ஏ.ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், </p><p>சட்டசபை ஆரம்பித்து அமைச்சர் பாம்பு கடி தொடர்பாக உரிய விளக்கத்தை அளித்து வருகிறார். இன்றைக்கு நான் அறிந்தது, பல்வேறு நிறைய தொகுதிகளில் பாம்பு கடி உள்ளதாக அறிகிறேன். அந்த தொகுதிகளில் எல்லாம் தோஷம் இருப்பதாக நான் அறிகிறேன். ஆகவே, பேரவை தலைவர் முன்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், நாகதோஷம் கழிப்பதற்கு ஏதாவது பிரார்த்தனைகள் இருந்தால் அதனை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றார். </p><p>இதற்கு பதில் அளித்த அமைச்சர் அருண்ராஜ், முதலமைச்சர் தலைமையிலான அரசு அறிவியல் பூர்வமான அரசாக  மேற்கொண்டு இருக்கிறோம். தோஷம், பில்லி சூனியம் எல்லாம் நம்பிக்கை இல்லை. உறுப்பினருக்கு நம்பிக்கை இருந்தால் உங்களுடைய தொகுதிக்கு தோஷம் நிவர்த்தி மேற்கொள்ளலாம். மாநில அளவில் அறிவியல் பூர்வமான முயற்சிகள் மட்டும் தான் நாம் எடுப்போம். ஜலதோஷம் தான் அதிகம் இருக்கு. பாம்பு கடி தோஷம் எல்லாம் இருக்குற மாதிரி நாம் கேள்விபடலை என்றார்.</p><p>இதனை தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விரும்பினால் இந்த தோஷம் கழிப்பதற்கு உரியவர்களை அனுப்பி வைப்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் அருண்ராஜ், தோஷத்தில் நம்பிக்கையும் இல்லை. விருப்பமும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். </p><p>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசுகையில், பெரியார் இயக்கம் பற்றி பேசிய திமுக இன்று, தோஷம் பற்றி பேசிக்கிட்டு இருக்காங்க. நாங்கள் பெரியார் வழியில் வந்தவர்கள். அறிவியல் பூர்வமாக இந்த பிரச்சனையை அணுக கூடியவர்கள் என்பதை இங்கே பதிவு செய்கிறேன் என்றார். </p><p>இதனை தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், எங்கள் சட்டமன்ற உறுப்பினர் கேட்டது உண்மையாகவே ஜலதோஷத்தை பற்றி தான். எங்களுடைய துணை தலைவருக்கு உண்மையாகவே ஜலதோஷம். அவருக்கு 2 நாட்கள் உடல்நிலை சரியில்லை. அதற்கும் தீர்வு காணவேண்டும் என்றார். </p><p>இவ்வாறு விவாதம் நடைபெற்றது. </p>]]></content:encoded></item><item><title>டொனால்டு டிரம்ப் அதிரடி உத்தரவு: Apple Maps மேற்கொண்ட முக்கிய மாற்றம்..!</title><link>https://www.maalaimalar.com/news/world/apple-maps-changes-lake-ontario-to-lake-america-after-trump-order</link><comments>https://www.maalaimalar.com/news/world/apple-maps-changes-lake-ontario-to-lake-america-after-trump-order#comments</comments><guid isPermaLink="false">098c6aa5-fd60-4fdc-b2d5-68267430047a</guid><pubDate>Wed, 02 Sep 2026 04:57:11 +0000</pubDate><atom:updated>2026-09-02T04:57:11.415Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,USA,கனடா,canada</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/9osmknb7/LakeAmerica0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Lake America]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/9osmknb7/LakeAmerica0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படாமல் தோல்வியில் முடிவடைந்தது. இதனால் கோபம் அடைந்த டொனால்டு டிரம்ப், ஒன்டாரியோ ஏரியின் பெயரை மாற்றினார். இனிமேல் ஒன்டாரியோ ஏரி, அமெரிக்கா ஏரி (Lake America) என பெயர் மாற்றப்பட்டுள்ளது என்று உத்தரவிட்டார்.</p><p>இதனால் Alphabet, அமெரிக்கா ஏரி என்ற அழைக்க முடிவு செய்தது. இதன் அடிப்படையில் ஆப்பிள் மேப்ஸ் (APPLE Maps) ஒன்டாரியோ ஏரியின் பெயரை அமெரிக்கா ஏரி என மாற்றியுள்ளது. இனிமேல் அமெரிக்க பயனர்கள் அமெரிக்கா ஏரி என்பதை பார்க்க முடியும். அதேவேளையில் கனடா நாட்டின் பயனர்கள் ஒன்டாரியோ ஏரி என பார்க்க முடியும். இரண்டு நாட்டிற்கு வெளியில் இருந்து இரண்டு பெயர்களிலும் பார்க்க முடியும் என்று அறிவித்துள்ளது.</p><p>அதேபோல் மெக்சிகோ வளைகுடா என்பதை அமெரிக்கா வளைகுடா என பார்க்க முடியும்.</p><p>வட அமெரிக்காவின் ஐந்து பெரும் ஏரிகளில் (Great Lakes) ஒன்றான ஒன்டாரியோ ஏரி குறித்து டிரம்ப் பிறப்பித்த நிர்வாக உத்தரவில், அந்த ஏரியை அமெரிக்கக் கூட்டாட்சி நிர்வாகம் பயன்படுத்தும் முறைக்கு மட்டுமே பொருந்தும். மாறாக கனடா, சர்வதேச அமைப்புகள் அல்லது பிற நிறுவனங்கள் அந்த ஏரியை எவ்வாறு அழைக்கின்றன என்பதை இது கட்டுப்படுத்தாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பிராண்ட் தோற்றத்தை மாற்றிய வோடபோன் ஐடியா</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/vi-refreshes-brand-identity</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/vi-refreshes-brand-identity#comments</comments><guid isPermaLink="false">e58a241c-c23a-413d-a030-47b8f0e75a81</guid><pubDate>Wed, 02 Sep 2026 04:42:00 +0000</pubDate><atom:updated>2026-09-02T04:42:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Shah Rukh Khan,வோடபோன் ஐடியா,ஷாருக் கான்,Vi</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/n4x4u8wj/Vi.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vodafone Idea Logo]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/n4x4u8wj/Vi.png?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/vodafone-idea">வோடபோன் ஐடியா</a> (Vi), தனது பிராண்ட் அடையாளத்தை புதுப்பிப்பதாக அறிவித்துள்ளது. அதன் முக்கிய பிராண்ட் லோகோ, லோகோ வடிவமைப்பின் மேற்பகுதியில் அமைந்துள்ள ஒரு ஆற்றல்மிக்க, முப்பரிமாண கோளமாக மாற்றியமைத்துள்ளது. </p><p>வி நிறுவனம் தனது அடுத்தகட்ட வளர்ச்சிக்கு தன்னை தயார்படுத்திக்கொள்ளும் வேளையில், இந்த மாற்றம் அதிக ஆழம், இயக்கம் மற்றும் ஒரு முன்னோக்கிய கண்ணோட்டத்தை வெளிப்படுத்தும் நோக்கம் கொண்டது.</p><h2>புதிய விளம்பர தூதர்:</h2><p>லோகோ மாற்றத்துடன், வி நிறுவனம் தனது வரவிருக்கும் விளம்பர பிரச்சாரத்திற்கு நடிகர் ஷாருக் கானை பிராண்ட் தூதராக அறிவித்துள்ளது. இந்தப் பிரச்சாரம் “Vi மாறுகிறது… தயாராக இருங்கள்” (Vi is changing… be ready) என்ற தலைப்பில் அமையவுள்ளது.</p><p>இந்த விளம்பர முன்னெடுப்பானது, வரும் வாரங்களில் வெளியிடப்படவுள்ள பரந்த அளவிலான செயல்பாட்டு மற்றும் சேவை சார்ந்த மேம்படுத்தல்களுக்கான ஒரு முன்னோட்டமாக அமைகிறது.</p><h2>3டி லோகோ:</h2><p>இந்த புதுப்பிக்கப்பட்ட அடையாளம், வி நிறுவனத்தின் நிறுவப்பட்ட காட்சி மொழியில் இருந்து ஒரு முழுமையான விலகலாக இல்லாமல், ஒரு பரிணாம வளர்ச்சியை குறிக்கிறது. அதன் மைய வரைகலை கூறினை ஒரு முப்பரிமாண கோளமாக மாற்றுவதன் மூலம், இந்நிறுவனம் தற்போதுள்ள பிராண்ட் அங்கீகாரத்தை தக்கவைத்து கொள்வதோடு, மேலும் நவீனமான, ஆற்றல்மிக்க ஒரு ஆளுமையையும் வெளிப்படுத்த நோக்கமாக கொண்டுள்ளது.</p><p>செயல்பாட்டு ரீதியாக, இந்த மேம்படுத்தல், ஒரு வழக்கமான தொலைத்தொடர்பு வழங்குநர் என்ற நிலையில் இருந்து ஒரு பரந்த டிஜிட்டல் மற்றும் இணைப்பு பங்காளராக மாறுவதற்கான வி-இன் தொடர்ச்சியான முயற்சிகளுடன் ஒத்துப்போகிறது. இந்த முன்னெடுப்பு, அதன் முக்கிய அடிப்படைகளை வலுப்படுத்தி, பிணைய விரிவாக்கம், சேவை புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர் அனுபவம் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தும் என்று அந்நிறுவனம் தெரிவித்தது.</p><p>புதுப்பிக்கப்பட்ட பிராண்டிங் மற்றும் வடிவமைப்பு அம்சங்கள், செப்டம்பர் 1 முதல் அனைத்து நுகர்வோர் தொடர்பு தளங்களிலும் படிப்படியாக ஒருங்கிணைக்கப்படும். இந்த செயலாக்கம், வி-இன் டிஜிட்டல் தளங்கள், சில்லறை விற்பனை கடைகளின் வலையமைப்பு, நேரடி விளம்பர பொருட்கள் மற்றும் நாடு தழுவிய வரவிருக்கும் சந்தைப்படுத்தல் தகவல்தொடர்புகளை உள்ளடக்கியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழக சட்டசபையில் சுகாதாரத்துறை தொடர்பாக உறுப்பினர்கள் கேள்விக்கு அமைச்சர் பதில்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-replies-to-members-questions-regarding-the-health-department-in-the-tamil-nadu-legislative-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-replies-to-members-questions-regarding-the-health-department-in-the-tamil-nadu-legislative-assembly#comments</comments><guid isPermaLink="false">982aaba5-0e13-4c0a-92e2-a952b20fb50a</guid><pubDate>Wed, 02 Sep 2026 04:32:19 +0000</pubDate><atom:updated>2026-09-02T04:32:19.358Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,அமைச்சர் அருண்ராஜ்,Minister Arunraj</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/b0it186o/arunjar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் அருண்ராஜ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் அருண்ராஜ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/b0it186o/arunjar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ரிஷிவந்தியத்தில் தாலுகா மருத்துவமனை அமைக்கப்படுமா? என்ற உறுப்பினர் கேள்விக்கு தேவை இருப்பின் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபை</a> கூட்டம் தொடங்கியது. இன்றைய கூட்டத்தில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர்கள் நலத்துறைகளின் மீதான மானியக் கோரிக்கை மீது விவாதங்கள் நடைபெறுகிறது. மேலும் திருமருகல் பகுதியில் மாவுப்பூச்சி தாக்குதலால் பயிர்கள் சேதமடைந்தது குறித்து ஜவாஹிருல்லா கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வருகிறார். </p><p>முதலில் வினாக்கள் விடை நேரம் நடைபெற்று வருகிறது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். முதலில் பேசிய அமைச்சர் அருண்ராஜ், பண்ருட்டி அரசு மருத்துவமனையில் பாம்பு கடி சிகிச்சை, உயிர் காக்கும் மருந்துகள் இருப்பு உள்ளன. ஆம்பூர் மருத்துவமனை பிரசவங்களின் எண்ணிக்கையை ஆய்வு செய்த மகப்பேறு மைய வசதி ஏற்படுத்தப்படும் என்றார். </p><h2><strong>எம்எல்ஏ மோகன்</strong> </h2><p>பண்ருட்டி மருத்துவமனைக்கு Freezer Box மற்றும் CT Scan வசதி வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு அமைச்சர் அருண்ராஜ், பண்ருட்டி மருத்துவமனைக்கு 2 Freezer Box மற்றும் தேவை இருப்பின் CT Scan வசதி ஏற்படுத்தி தரப்படும். கடலூர் மருத்துவமனைக்கு நிகராக பண்ருட்டி மருத்துவமனையை தரம் உயர்த்த ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். </p><p>மேலும், வள்ளியூர் மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்ற மற்றொரு உறுப்பினரின் கேள்விக்கு தேவை இருப்பின் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார். </p><p>தலைவாசல் தாலுகாவிற்கு புதிய மருத்துவமனை வேண்டும் என்ற உறுப்பினரின் கோரிக்கைக்கு தலைவாசல் தாலுகாவுக்கு மருத்துவமனை கட்டிக்கொடுப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆய்வு செய்து நடவடிக்கை என்று சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார். </p><p>ரிஷிவந்தியத்தில் தாலுகா மருத்துவமனை அமைக்கப்படுமா? என்ற உறுப்பினர் கேள்விக்கு தேவை இருப்பின் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார். </p><p>முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி ஆடிட்டோரியத்திற்கு ஏசி வேண்டும் என்ற உறுப்பினரின் கோரிக்கைக்கு, மருத்துவ கல்லூரி ஆடிட்டோரியத்திற்கு ஏசி ஏற்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>தாய்லாந்தை நெருங்கும் அமெரிக்க போர்க்கப்பல்: பாலியல் தொழிலாளர்களை கண்காணிக்கும் போலீசார்- காரணம் என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/world/pattaya-sex-workers-face-raids-as-5000-us-sailors-head-to-thailand</link><comments>https://www.maalaimalar.com/news/world/pattaya-sex-workers-face-raids-as-5000-us-sailors-head-to-thailand#comments</comments><guid isPermaLink="false">4e1204dc-566d-414c-a5f4-8efcd4c45ab4</guid><pubDate>Wed, 02 Sep 2026 04:12:42 +0000</pubDate><atom:updated>2026-09-02T04:12:42.325Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்க போர்க்கப்பல்,US Iran war,அமெரிக்கா ஈரான் போர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/i77f642v/USSAbrahamLincoln.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமெரிக்க போர்க்கப்பல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/i77f642v/USSAbrahamLincoln.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. அதற்கு முன்னதாக கடந்த வருடம் நவம்பர் மாதம் அமெரிக்காவில் இருந்து <a href="https://www.maalaimalar.com/news/world/us-has-a-bigger-problem-in-hormuz-than-iran-resistance">ஆப்ரஹாம் லிங்கன்</a> என்ற கடற்படை போர்க்கப்பல் புறப்பட்டது. அமெரிக்காவின் போர்க்கப்பலை பொறுத்தவரை, வீரர்கள் 6 மாதத்திற்குள் கரை திரும்புவார்கள். ஆனால், இந்த முறை சுமார் ஒரு வருடத்தை நெருங்கும் நிலையில் சொந்த நாடு திரும்பவில்லை. அவர்கள் மனதளவில் சோர்ந்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.</p><h2>தாய்லாந்தில் அமெரிக்கா போர்க்கப்பல்</h2><p>இந்த நிலையில அமெரிக்காவின் ஆப்ரகாம் லிங்கன் போர்க்கப்பல், மேலும் இரண்டு கப்பல்களுடன் தாய்லாந்தில் உள்ள லேம் சாபாங்கில் (Laem Chabang) என்ற இடத்தில் நங்கூரமிடவுள்ளதாக தெரிகிறது.</p><p>இதன் அருகில்தான் பட்டாயா என்ற ரெசார்ட் சிட்டி உள்ளது. இது கடற்கரை உல்லாச விடுதி நகரமாகும். சுமார் 5 ஆயிரம் வீரர்கள் இந்த நகரில் உள்ள முக்கியமான ரெசார்ட்களில் தங்கி ஓய்வு எடுப்பார்கள் எனத் தெரிகிறது.</p><p>வீரர்கள் நீண்ட நாட்கள் கடலிலேயே இருந்ததால் சோர்வை போக்க மதுபானம், கேளிக்கை, பொழுதுபோக்கு போன்றவற்றில் ஈடுபட்டு நேரத்தை செலவழிக்க வாய்ப்புள்ளது. இதனால் பாலியல் தொழில் அதிகமாக நடைபெற வாய்ப்புள்ளது. இதனால், தற்போது இருந்தே சந்தேகத்திற்குரிய வகையில் நடமாடும் பாலியல் தொழிலாளர்களை கண்காணிக்கும் பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.</p><h2>பட்டாயா நகரம்</h2><p>சந்தேகத்திற்குரிய வகையில் நடமாடும் பாலியல் தொழிலாளர்களை கைது செய்து வருகின்றனர். தற்போது வரை சந்தேகத்திற்குரிய வகையில் 40 முதல் 50 பேரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.</p><p>பாலியல் தொழிலை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது கடினம் என்று பட்டாயா காவல் துறைத் தலைவர் அனெக் ஸ்ரதோங்யூ கூறினார். நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சிக்கிறோம், ஆனால் இது கடினமானது என்றார்.</p><p>அதிகாரிகளுக்கு தெரியாமலேயே பாலியல் தொழிலாளர்கள் பொது இடங்களில் வாடிக்கையாளர் ஆகக்கூடியவர்களை அணுக முடியும் என்று எச்சரித்தார்.</p><p>அமெரிக்க வீரர்கள் ஒருநாளைக்கு 30 முதல் 91 டாலர் வரை செலவழிக்க வாய்ப்புள்ளது. இது குறுகிய காலத்தில் பட்டாயா நகரின் பொருளாதாரத்தை உயர்த்தும் என்று மேயர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>புதிய தாக்குதலால் அமெரிக்கா வருத்தப்படும்: கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள்- ஈரான் எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/world/america-to-face-harsh-retaliation-iran-warns</link><comments>https://www.maalaimalar.com/news/world/america-to-face-harsh-retaliation-iran-warns#comments</comments><guid isPermaLink="false">27836786-ab7d-495a-b645-1b51094a39ae</guid><pubDate>Wed, 02 Sep 2026 04:02:02 +0000</pubDate><atom:updated>2026-09-02T04:02:02.973Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,America,ஈரான்,Iran</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/w8v5eno7/Untitled-design-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ US-Iran missile strikes]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/w8v5eno7/Untitled-design-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரானில் உள்ள சிரிக் நகரில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில், அமெரிக்கா ஏவுகணைகளை வீசி இரவு முழுவதும் தாக்கியதில், ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் சுமார் 50 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.</p><p>ஹார்முஸ் ஜலசந்தியில் வர்த்தக கப்பல்கள் மீது இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையினர் (IRGC) சமீபத்தில் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. </p><h3><strong>மொஜ்தபா கமேனி அழைப்பு</strong></h3><p>கடந்த வாரம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைய வருமாறு, ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி வேண்டுகோள் விடுத்திருந்தார்.</p><p>இதையடுத்து மொஜ்தபா கமேனி வேண்டுகோள் விடுத்த சில மணி நேரங்களுக்கு பிறகு, ஈரானில் உள்ள லராக் தீவில் அமெரிக்கா ஏவுகணை தாக்குதலை நடத்தியது.</p><p>இந்த தாக்குதலில் பல ராணுவ வீரர்களும், பொதுமக்களும் கொல்லப்பட்டதாக இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படை தெரிவித்தது.</p><p>மேலும் இந்த தாக்குதலுக்கு தகுந்த பதிலடி தரப்படும் என்றும், அமெரிக்காவுக்கு மறக்க முடியாத பாடங்களை ஈரான் வழங்கவுள்ளதாகவும் மொஜத்பா கமேனி தெரிவித்திருந்தார்.</p><h3><strong>ஈரான் பதிலடி</strong></h3><p>இதையடுத்து ஜோர்டானில் அமைந்துள்ள இரண்டு அமெரிக்க விமானப்படை தளங்களான கிங் ஹுசைன் மற்றும் அல்-அஸ்ரக் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது.</p><p>ஈரானிலிருந்து ஏவப்பட்ட 10 பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்ததாக ஜோர்டான் ராணுவம் தெரிவித்தது. மேலும் மூன்று ஏவுகணைகள் தொலைதூரப் பகுதிகளில் விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.</p><p>குவைத் மற்றும் பஹ்ரைனிலும் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் பதிவாகின. இதையடுத்து பஹ்ரைனில் உள்ள குடிமக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்தது.</p><p>இதற்கிடையில் அமெரிக்கா தங்கள் குற்றங்களுக்காக வருந்தும் வரை, அவர்களுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகள் தொடரும் என ஈரானின் கதம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளரான கர்னல் இப்ராஹிம் ஸோல்ஃபகாரி தெரிவித்தார்.</p><h3><strong>அமெரிக்கா தாக்குதல்</strong></h3><p>ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பழிவாங்கும் விதமாக, ஈரான் நாட்டின் தெற்கில் அமைந்துள்ள ஹார்முஸ் ஜலசந்தியிலும், வளைகுடாவில் உள்ள ஒரு தீவிலும் அமெரிக்கா நேற்று தாக்குதல் நடத்தியது.</p><p>மேலும் தெற்கு கெர்மான் மாகாணத்தில் உள்ள ஒரு விமான நிலையத்தின் மீதும், ஈரானின் சபஹர் மற்றும் கொனார்க் மாவட்ட பகுதிகளில் நான்கு ஏவுகணைகளை அமெரிக்கா வீசியது.</p><p>இதைத்தொடர்ந்து ஈரானின் சிரிக் நகரின் குஹெஸ்டாக் பகுதியில் நடந்த ஒரு திருமணத்தில் அமெரிக்கா ஏவுகணைகளை வீசி தாக்கியதாகவும், இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட நான்கு பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான IRNA தெரிவித்துள்ளது.</p><p>ஈரான் மீதான தாக்குதலில் பொதுமக்கள் குறிவைக்கப்பட்டதாக வந்த செய்திகளை அமெரிக்க ராணுவம் மறுத்துள்ளது.</p><p>இதுகுறித்து அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் (CENTCOM) செய்தித் தொடர்பாளர் கேப்டன் டிம் ஹாக்கின்ஸ் கூறுகையில், அமெரிக்க ராணுவம் ஒருபோதும் பொதுமக்களைக் குறிவைப்பதில்லை என்று கூறினார்.</p><p>ஈரான் மீதான தாக்குதல் குறித்து சென்ட்காம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ஹோர்முஸ் ஜலசந்தியில் வர்த்தகக் கப்பல்கள் மீதும், அப்பகுதியில் பணியமர்த்தப்பட்ட அமெரிக்கப் படை வீரர்கள் மீதும், மேலும் ஜோர்டான் மீது சமீபத்தில் மேற்கொண்ட தாக்குதல் முயற்சிகளைத் தொடர்ந்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.</p><h3><strong>ஈரான் எச்சரிக்கை</strong></h3><p>இந்த நிலையில் ஈரானின் (ஐ.ஆர்.ஜி.சி) செய்தித் தொடர்பாளர் ஹொசைன் மொஹேபி வெளியிட்ட X பதிவில், வாஷிங்டன் தனது புதிய தாக்குதல்களுக்காக வருந்தும் என்றும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு கடுமையான தண்டனை காத்திருக்கிறது என்றும் எச்சரித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இனி ஐ.ஓ.எஸ்.-இலும் AI Content Label - வாட்ஸ்அப்  கொண்டுவரும் புது மாற்றம்</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/whatsapp-reportedly-rolling-out-ai-content-label-for-channels-on-ios</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/whatsapp-reportedly-rolling-out-ai-content-label-for-channels-on-ios#comments</comments><guid isPermaLink="false">2019f551-61be-460d-b6bb-38062b516ad7</guid><pubDate>Wed, 02 Sep 2026 03:42:00 +0000</pubDate><atom:updated>2026-09-02T03:42:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>WhatsApp,வாட்ஸ்அப்,iOS,ஐஓஎஸ்,AI Content Label</media:keywords><media:content height="350" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2022/07/27/1736705-whatsapp.jpg" width="615"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ WhatsApp Logo]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2022/07/27/1736705-whatsapp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலகின் முன்னணி குறுந்தகவல் செயலி <a href="https://www.maalaimalar.com/topic/whatsapp">வாட்ஸ்அப்</a> தனது ஐ.ஓ.எஸ். வெர்ஷனின் சேனல் அப்டேட்களில் ஏ.ஐ. உள்ளடக்க லேபெல் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம், செயற்கை நுண்ணறிவு கொண்டு உருவாக்கப்பட்ட அல்லது திருத்தப்பட்ட மீடியாவை அடையாளம் காண அட்மின்களுக்கு ஒரு வழி கிடைக்கும். </p><p>இந்த அம்சம் சில பீட்டா பயனர்களுக்கு கிடைக்கத் தொடங்கியுள்ளது. முன்னதாக <a href="http://maalaimalar.com/topic/android">ஆண்ட்ராய்டு</a> வெர்ஷனில் இதேபோன்ற அம்சம் வெளியான நிலையில் தற்போது ஐ.ஓ.எஸ். வெர்ஷனிலும் வழங்கப்பட்டு வருகிறது. </p><p>இதுபோன்ற லேபிளிங் சட்டப்பூர்வமாகத் தேவைப்படும் நாடுகளில், AI வெளிப்படுத்தல் தேவைகளை பூர்த்தி செய்ய சேனல் அட்மின்களுக்கு உதவக்கூடும். வாட்ஸ்அப் இன்னும் இந்த அம்சத்தை அனைத்து பயனர்களுக்கும் வழங்கவில்லை, தற்போது இது தேர்ந்தெடுக்கப்பட்ட அக்கவுண்ட்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது.</p><h2>டெஸ்டிங்கில் புது அம்சம்:</h2><p>WABetaInfo வெளியிட்டுள்ள தகவல்களின்படி, வாட்ஸ்அப் தனது 26.34.10.70 வெர்ஷனில், TestFlight வழியாக சில ஐ.ஓ.எஸ். பீட்டா பயனர்களுக்கு ஏ.ஐ. உள்ளடக்க லேபிள் அம்சத்தை வெளியிட்டு வருகிறது. இந்த அம்சம், செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அல்லது திருத்தப்பட்ட மீடியாவை கொண்ட பதிவுகளை அடையாளம் காண சேனல் அட்மின்களை அனுமதிக்கிறது.</p><p>சேனல் அப்டேட்டின் கான்டெக்ஸ்ட் மெனுவில் அட்மின்கள் இந்த ஆப்ஷனை காண முடியும். ஏ.ஐ. உள்ளடக்க லேபிளை தேர்ந்தெடுத்து உறுதிப்படுத்திய பிறகு, அது அப்டேட்டில் சேர்க்கப்பட்டுவிடும், மேலும் அதை நீக்க முடியாது. மற்ற அட்மின்கள் உட்பட, சேனலை பார்க்கும் அனைவருக்கும் இந்த லேபிள் தெரியும் எனக் கூறப்படுகிறது.</p><p>ஏ.ஐ. உள்ளடக்க லேபிள்:</p><p>மெட்டா ஏ.ஐ., சாட்ஜிபிடி மற்றும் ஜெமினி உள்ளிட்ட எந்தவொரு ஏஐ சேவையை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அல்லது மாற்றியமைக்கப்பட்ட படங்கள், வீடியோக்கள் மற்றும் பிற மீடியாக்களை இந்த லேபிள் உள்ளடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வாட்ஸ்அப் சில ஏ.ஐ.-உருவாக்கிய மீடியாக்களை தானாகவே கண்டறிந்து லேபிளை சேர்க்கக்கூடும்.</p><p>சில நாடுகளில், சேனல் அட்மின்கள் ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்ட மீடியாவை வெளியிட சட்டப்படி கடமைப்பட்டுள்ளனர். இந்த அம்சம் கிடைக்கும்போது, ​​இந்த தேவை குறித்து அட்மின்களுக்கு தெரிவிக்கும் ஒரு பேனரை வாட்ஸ்அப் சேனல் இன்டர்ஃபேசின் மேற்பகுதியில் காண்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கணக்கிற்கு இந்த அம்சம் செயல்படுத்தப்பட்ட பின்னரே அந்த பேனர் தோன்றும்.</p><p>முக்கிய நோக்கம்:</p><p>குறிப்பாக உருவாக்கப்பட்ட படங்கள் அல்லது காணொளிகள் யதார்த்தமாக தோன்றும் போது, ​​செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட அல்லது திருத்தப்பட்ட ஊடகங்களை உண்மையான உள்ளடக்கத்தில் இருந்து வேறுபடுத்தி அறிய பின்தொடர்பவர்களுக்கு உதவுவதே இந்த அறிவிப்பின் நோக்கமாகும்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் 11 இடங்களில் ஏ.சி. பஸ் நிறுத்தம்- மாநகராட்சி தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/corporation-announcement-ac-bus-shelters-at-11-locations-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/corporation-announcement-ac-bus-shelters-at-11-locations-in-chennai#comments</comments><guid isPermaLink="false">4c5f7599-0fa4-44f6-a407-25e52ffcf660</guid><pubDate>Wed, 02 Sep 2026 03:40:35 +0000</pubDate><atom:updated>2026-09-02T03:40:35.175Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Corporation,சென்னை மாநகராட்சி,AC Bus Station,ஏசி பஸ் நிறுத்தம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/mr9l1h1c/ACBusstand.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஏ.சி. பஸ் நிறுத்தம்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஏ.சி. பஸ் நிறுத்தம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/mr9l1h1c/ACBusstand.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பெரு நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் சென்னையில் 11 இடங்களில் ஏ.சி. பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட இருக்கிறது.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/சென்னை-மாநகராட்சி">சென்னை மாநகராட்சி</a> பகுதிகளில் பயணிகளின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில் உரிய பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளுடன் கூடிய ஏ.சி. பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. </p><h2><strong>ஏ.சி. பஸ் நிறுத்தங்கள்</strong></h2><p>இந்த நிலையில், பெரு நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் சென்னையில் 11 இடங்களில் ஏ.சி. பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிகழ்ச்சி சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. மாநகராட்சி கமிஷனர் சமீரன், சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் ஆகியோர் முன்னிலையில் பங்களிப்பாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.</p><p>சென்னை டி.எம்.எஸ். அண்ணாசாலை, மயிலாப்பூர் பஸ் நிறுத்தம், வடபழனி ஜவஹர்லால் நேரு சாலை, வேளச்சேரி விஜயநகர் பஸ் முனையம், வடபழனி பஸ் நிறுத்தம் அருகில் (2 இடங்கள்), சின்னமலை, ஆற்காடு சாலை, ஆலந்தூர் மெட்ரோ, எழும்பூர் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ஏ.சி. பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட இருக்கிறது. </p><p>இந்த பஸ் நிறுத்தங்களில், கண்காணிப்பு கேமராக்கள், வைபை வசதி, சாய்வுதளப் பாதை, பஸ் வழித்தடத் தகவல்கள், மின்விளக்கு வசதி, பாதுகாப்பான கண்ணாடி, சார்ஜிங் வசதி உள்ளிட்டவை அமைக்கப்பட இருப்பதாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி நகைகளுக்கும் ஹால்மார்க் முத்திரை கட்டாயம்- அடுத்த மாதம் முதல் அமல்படுத்த முடிவு</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/hallmarking-silver-jewellery-may-become-mandatory-from-october</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/hallmarking-silver-jewellery-may-become-mandatory-from-october#comments</comments><guid isPermaLink="false">48e05f7d-b562-4f61-a52c-05f0643f3ce4</guid><pubDate>Wed, 02 Sep 2026 03:31:21 +0000</pubDate><atom:updated>2026-09-02T03:31:21.254Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Silver,ஹால்மார்க்,வெள்ளி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/581qi5pe/silver.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ வெள்ளி நகை]]></media:title><media:description type="html"><![CDATA[ வெள்ளி நகை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/581qi5pe/silver.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தங்கத்தைத் தொடர்ந்து, வெள்ளி நகைகளுக்கும் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்பதை வருகிற அக்டோபர் மாதம் கொண்டுவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</strong></em></p><h2><strong>ஹால்மார்க் முத்திரை</strong></h2><p>வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை அதிகரிக்கவும், ஒழுங்குமுறை கண்காணிப்பை பலப்படுத்தவும் வருகிற அக்டோபர் மாதம் முதல் <a href="https://www.maalaimalar.com/topic/வெள்ளி">வெள்ளி</a> நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்டது. இது படிப்படியாக தற்போது வரை 400 மாவட்டங்களுக்கு விரிவாக்கப்பட்டதை போல, வெள்ளி நகைகளுக்கும் ஒவ்வொரு கட்டமாக அமல்படுத்தப்பட இருக்கிறது.</p><p>இதற்காக 6 இலக்க ஹால்மார்க் தனித்துவ அடையாள எண் (எச்.யு.ஐ.டி.) முறை மற்றும் உள்கட்டமைப்புகள் விரிவாக்கப்பட்டு வருகின்றன. இந்திய தரக்கட்டுப்பாட்டு அமைப்பான 'பி.ஐ.எஸ்.' 102 மாவட்டங்களில் 341 வெள்ளி பரிசோதனை மையங்களை நடத்தி வருகிறது. இதில் 25 ஆயிரம் நகை வியாபாரிகள் பதிவு செய்துள்ளனர். மேலும் பி.ஐ.எஸ். அமைப்பு 7 தூய்மை தரநிலைகளை அங்கீகரித்துள்ளது.</p><h2><strong>தூய்மை தரம்</strong></h2><p>2005-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் விருப்பத்தின் அடிப்படையில் இருந்த இந்த திட்டத்தில் அதே ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி எச்.யு.ஐ.டி. இணையதளம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 77 லட்சத்துக்கும் அதிகமான வெள்ளி நகைகளுக்கு ஹால்மார்க் வழங்கப்பட்டுள்ளது. ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளில் பி.ஐ.எஸ். முத்திரை, 'SILVER' என்ற வார்த்தை, தூய்மை தரம் மற்றும் எச்.யு.ஐ.டி. எண் இடம்பெறும். இதனை 'பி.ஐ.எஸ். கேர்' செயலி மூலம் வாடிக்கையாளர்கள் சரிபார்க்கலாம்.</p><p>ஹால்மார்க் முத்திரையை கட்டாயமாக்குவது, நுகர்வோர் தாங்கள் செலுத்தும் பணத்திற்கு ஏற்ற தூய்மையான வெள்ளியைப் பெறுவதை உறுதி செய்யும். மேலும் தூய்மை உத்தரவாதத்தை வழங்கி சந்தைக்கு அதிக வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் என்றும் கூறப்படுகிறது.</p><h2><strong>தண்டனை-அபராதம்</strong></h2><p>பி.ஐ.எஸ். சட்டம் 2016-ன் படி, விதிகளை மீறும் வியாபாரிகளுக்கு ஓராண்டு வரை சிறை அல்லது குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் அபராதம் (பொருட்களின் மதிப்பில் 5 மடங்கு வரை) விதிக்கப்படலாம். முத்திரையை தவறாக பயன்படுத்தினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். இந்தியாவில் பெரும்பாலான நகைக் கடைகள் 92.5 சதவீத ஸ்டெர்லிங் வெள்ளி தரத்தை பின்பற்றுவதாக அனைத்து இந்திய ரத்தினங்கள் மற்றும் நகைகள் உள்நாட்டு கவுன்சில் அமைப்பு தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நேபாளத்தின் பேரழிவு வெள்ளப்பெருக்கை எச்சரித்த குயிலின் அமைதி</title><link>https://www.maalaimalar.com/news/world/silence-of-the-cuckoo-bird-and-catastrophic-floods-warn-nepals-climate-future-is-already-here</link><comments>https://www.maalaimalar.com/news/world/silence-of-the-cuckoo-bird-and-catastrophic-floods-warn-nepals-climate-future-is-already-here#comments</comments><guid isPermaLink="false">4e434db9-b77f-4b67-aefd-5cb2eb23e09e</guid><pubDate>Wed, 02 Sep 2026 03:08:54 +0000</pubDate><atom:updated>2026-09-02T03:08:54.347Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>nepal flood,நேபாள வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/rkq1oyx8/flood.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ nepal flood]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/rkq1oyx8/flood.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நேபாளத்தின் பேரழிவு வெள்ளப்பெருக்கை குயிலின் அமைதி எச்சரித்ததாக நேபாள எழுத்தாளர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.</strong></em></p><h2><strong>எழில்மிகு நாடு</strong></h2><p>நேபாளத்தில் பருவநிலை மாற்றம் மற்றும் உமிழ்வு கட்டுப்பாட்டு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ள நேபாள நாட்டை சேர்ந்த எழுத்தாளர் சோபியா எல்.பாண்டே அங்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை முன்கூட்டியே ஒரு பறவையின் வருகையின்மை அறிவித்ததாக தெரிவித்துள்ளார். இது குறித்து சோபியா எல்.பாண்டே என்ன தெரிவித்துள்ளார் என்று பார்ப்போம்...</p><p><a href="https://www.maalaimalar.com/topic/நேபாள-வெள்ளம்">நேபாளம்</a> துணை வெப்பமண்டல அட்சரேகையிலும், இமயமலையின் மடியிலும் அமைந்துள்ளதால் வளமான பல்லுயிர் பெருக்கத்தைக் கொண்ட ஒரு எழில்மிகு நாடாகும்.</p><h2><strong>உலக அழிவின் காட்சி</strong></h2><p>இது புகழ்பெற்ற தேவதாரு மரங்கள் உள்ளிட்ட உள்நாட்டு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் தொட்டிலாக விளங்கி வருகிறது. மேலும், சகர்மாதா மற்றும் சிட்வான் ஆகிய 2 யுனெஸ்கோ உலக இயற்கை பாரம்பரிய தளங்களை கொண்டுள்ளதுடன் சர்வதேச மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இயற்கை எழில் கொஞ்சும் நாடாக விளங்கியது.</p><p>இந்த நிலையில், சமீபத்தில் ரசுவா பகுதியில் எந்தவித எச்சரிக்கையுமின்றி திடீரென ஏற்பட்ட சீற்றமிக்க வெள்ளப்பெருக்கு பேரழிவை ஏற்படுத்தியது. கடந்த வாரம் ஏற்பட்ட சீற்றமிக்க வெள்ளம் உலக அழிவின் காட்சியைப் போல இருந்தது. அது உண்மையில் நடக்கும் வரை கற்பனை செய்து பார்க்க முடியாததாக இருந்தது.</p><h2><strong>பருவநிலை மாற்றம்</strong></h2><p>இது திடீரென உருவானது போல் தோன்றினாலும், அது மிகவும் அமைதியாக உருவாகி, எந்த எச்சரிக்கையும் இன்றி ரசுவா பகுதியை அடித்துச் சென்றபோது கொடிய பயங்கரத்துடன் வெளிப்பட்டது. இதற்கு காரணம் வேகமாக மாறிவரும் பருவநிலை மாற்றமே ஆகும்.</p><p>இந்த பருவநிலை மாற்றத்தால் நமது பழமையான அரச மரங்கள், வண்ணப் பறவைகள், உயரமான ஏரிகளில் உள்ள தெளிவான நீர், பனிமலைகள், புகழ்பெற்ற தேவதாரு மரங்களால் சூழப்பட்ட குன்றுகள், சுவை நிறைந்த வண்ணமயமான காய்கறிகள், மாசடைந்த காற்றைச் சுத்தப்படுத்தும் வலுவான பருவமழைகள், மனித உயிர்களின் புனிதம் மற்றும் பறவைகள், விலங்குகள் என அனைத்தும் ஆபத்தில் சிக்கியுள்ளன.</p><h2><strong>குயில்கள் வரவில்லை</strong></h2><p>ஆம், பருவநிலை மாற்றத்தால் ரசுவா பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை நமக்கு முன்கூட்டியே இயற்கை தெரிவித்தது. 45 ஆண்டுகளுக்கும் மேலாக வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் குயில்கள் முதல் முறையாக நேபாளப் பள்ளத்தாக்கு பகுதிக்கு வரவில்லை.</p><p>குயில்கள் வழக்கமாக அமரும் லப்சி மரமும், குஞ்சுகளை வளர்க்கும் காகங்களும் அங்கேயே உள்ளபோதிலும், குயில்களின் கூக்கூ...கூக்கூ... குரல் கேட்காததால் அப்பகுதி மக்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். வெப்பமான வசந்த காலம் மற்றும் பசுமை இடங்கள் குறைந்து வருவதன் காரணமாக குயில்கள் வரவில்லை. இது, உலகின் பருவநிலை ஆபத்தான நிலைக்கு மாறியதன் அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.</p><h2><strong>வெப்பநிலை</strong></h2><p>தற்போது வெப்பநிலை ஏற்கனவே 1.4 டிகிரி செல்சியஸ் அதிகமாக உள்ளது. இந்த நூற்றாண்டில் வெப்ப உயர்வை 1.5 டிகிரி செல்சியஸுக்குள் வைக்க முயலும் நிலையில், பருவநிலை மாற்றம் கடுமையான தாக்கத்தை தொடர்ந்து ஏற்படுத்தும்.</p><p>எனவே, வருடாந்திர தேசிய வரவு செலவுத் திட்டங்களை உருவாக்கும் போதும், நாட்டின் மூலோபாயத்தைத் திட்டமிடும் போதும், கல்வி முறையை மறுசீரமைக்கும் போதும் பருவநிலை விழிப்புணர்வும் திட்டமிடலும் அதில் இணைக்கப்பட வேண்டும்.</p><h2><strong>நெகிழி நிறைந்த நதிகள்</strong></h2><p>உலகளாவிய உமிழ்வுகளுக்கு நேபாளம் மிகக் குறைவாகவே பங்களிக்கிறது என்றாலும், நெகிழி நிறைந்த நதிகள் தனிப்பட்ட நுகர்வு மற்றும் அலட்சியத்தின் இயற்கைச் சுற்றுச்சூழலின் பாதிப்பைக் காட்டுகின்றன. எனவே, இனியும் இது போன்ற பேரிடர் ஏற்படாத வகையில் அனைவரும் இயற்கைக்கு பங்கம் இல்லாமல் விழிப்புடன் செயல்படுவோம்.</p><p>இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நேபாள வெள்ளத்தால் பீகாரில் புதுவகையான மீன்கள் -  நச்சுத்தன்மையுள்ள மீன்களை சாப்பிட வேண்டாம் என அரசு எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/bihar-warning-on-fish-as-nepal-floodwaters-surge-into-india</link><comments>https://www.maalaimalar.com/news/national/bihar-warning-on-fish-as-nepal-floodwaters-surge-into-india#comments</comments><guid isPermaLink="false">f974d43e-7e9f-4219-a685-a039aa57b6f0</guid><pubDate>Wed, 02 Sep 2026 02:27:06 +0000</pubDate><atom:updated>2026-09-02T02:27:06.698Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பீகார்,Bihar,fish,மீன்கள்,Nepal Floods,நேபாள வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/iqrsct75/Untitled-design.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bihar fish]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/iqrsct75/Untitled-design.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">நேபாளத்தில்</a> உள்ள கோசி மற்றும் கண்டக் ஆறுகளில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தை தொடர்ந்து, அந்த வெள்ள நீரால் பீகார் மாநிலத்திற்குள் அடித்து கொண்டு வரப்பட்ட மீன்களை உண்ண வேண்டாம் என பீகார் மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><h3><strong>நிலத்தடி நீரில் நச்சுத்தன்மை கலப்பு</strong></h3><p>நேபாளத்தின் மேற்கு சம்பாரன், கிழக்கு சம்பாரன், சீதாமர்ஹி, கிஷன்கஞ்ச், பூர்ணியா மற்றும் அராரியா உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களில் உள்ள நிலத்தடி நீரில், பாதுகாப்பான வரம்பை தாண்டி நச்சுத்தன்மை கொண்ட ஆர்சனிக் காணப்படுகிறது.</p><p>கங்கை நதி ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் ஆர்சனிக் அமிலத்தின் அளவு (நச்சுத்தன்மை) மிக அதிகமாக கண்டறியப்பட்டுள்ளன.</p><p>மேலும் நேபாள எல்லையை ஒட்டியுள்ள ஏழு மாவட்டங்களில், ஆற்று நீரில் அதிக இரும்புச்சத்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.</p><p>இதனால், நீர் துவர்ப்புச் சுவையைக் கொண்டிருப்பதுடன், பாத்திரங்கள் மற்றும் ஆடைகளில் சிவப்பு-மஞ்சள் கறைகளையும் ஏற்படுத்துகிறது.</p><p>நேபாளத்தில் தேங்கி நிற்கும் நீரில் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்து, டெங்கு, மலேரியா மற்றும் சிக்குன்குனியா நோய்களுடன், தோல் மற்றும் கண் நோய்த்தொற்றுகளின் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>மேலும் அந்த பகுதியில் வசிக்கும் மக்களிடம், இதேபோன்ற எச்சரிக்கை ஒன்றை நேபாள காவல்துறை விடுத்துள்ளது.</p><h3><strong>பீகாரில் பாயும் ஆற்று நீர்</strong></h3><p>இந்த நிலையில் நேபாளத்தின் வடக்கு பகுதியில் உள்ள முக்கிய நீர்வழிகளான கண்டக் மற்றும் கோசி ஆறுகள் வழியாக திரிசூலி ஆறு பீகார் மாநிலத்திற்குள் பாய்ந்து வருகிறது.</p><p>பீகாரில் ஆற்றின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதிய வகையிலான மீன்கள் ஆற்றில் காணப்படுகின்றன. </p><p>அந்த வகையான மீன்களை சாப்பிட்ட சில நபர்கள் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>குறிப்பாக, கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் ஆற்று நீரில் இயல்பை விடப் பல மடங்கு அதிகமான அளவு இரும்புச்சத்து பதிவாகியுள்ளது.</p><p>வெள்ள நீரால் பீகாரின் எல்லை மாவட்டங்கள் முழுவதும் உள்ள விவசாய நிலங்களும் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், மாநிலத்தில் தானியங்கள் மற்றும் காய்கறிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.</p><h3><strong>பீகார் ஆற்று நீர் மாசுபாடு</strong></h3><p>பீகார் வெள்ள நீரில் பிடிக்கப்பட்ட மீன்களில் கழிவு நீர் மாசுபாடு, பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் பிற நோய்கிருமிகள் இருக்க வாய்ப்புள்ளதால், அந்த மீன்களை வாங்கவோ, விற்கவோ, உட்கொள்ளவோ வேண்டாம் என விலங்கு மற்றும் மீன்வளத் துறை அறிவுறுத்தியுள்ளது.</p> <h2>எச்சரிக்கை</h2><p>பீகாரின் பால், மீன்வளம் மற்றும் கால்நடை வளத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் வெள்ள நீர் வடிகால்கள் மாசடைந்து இறந்த விலங்குகள் மற்றும் பிற நச்சுத் தன்மையுடன் தொடர்ந்து நீடித்து வருவதால், இந்த மீன்கள் உண்பதற்குப் பாதுகாப்பற்றவை என்றும், சுற்றுச்சூழல் நிலைமைகள் சீராகும் வரை வெள்ள நீரில் பிடிக்கப்பட்ட மீன்களை மக்கள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் பெட்ரோல், டீசல் விலை - இன்றைய நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-and-diesel-price-in-chennai-2-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-and-diesel-price-in-chennai-2-september-2026#comments</comments><guid isPermaLink="false">c4a50387-1305-451d-b98c-fbcc502f2fec</guid><pubDate>Wed, 02 Sep 2026 02:00:19 +0000</pubDate><atom:updated>2026-09-02T02:00:19.659Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,கச்சா எண்ணெய்,Crude oil,பெட்ரோல் டீசல் விலை,Pertrol Diesel Prices</media:keywords><media:content height="576" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/awvbgdsi/maalai-malar2026-08-24b0k0t00ltn-32.avif" width="1024"><media:title type="html"><![CDATA[ பெட்ரோல், டீசல் விலை]]></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல், டீசல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/awvbgdsi/maalai-malar2026-08-24b0k0t00ltn-32.avif?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் போரினால் மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p> <h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.</p> <h2>இன்றைய பெட்ரோல், டீசல் விலை</h2><p>அந்த வகையில் இன்றைய (2.9.2026 - (புதன்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 2.9.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு கல்யாண வாய்ப்புகள் கைகூடும்</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-2-september-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-2-september-2026#comments</comments><guid isPermaLink="false">ef57aba5-24a3-4c82-bb58-bbcf4679a21a</guid><pubDate>Wed, 02 Sep 2026 01:49:33 +0000</pubDate><atom:updated>2026-09-02T01:49:33.221Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/01/19461778-rasipalan.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/01/19461778-rasipalan.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட பகை மாறும். வீடு, வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும்.</p><h2>ரிஷபம்</h2><p>யோகமான நாள். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். நீண்டதூரப் பயணங்கள் செல்லப் போட்ட திட்டம் கைகூடும். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.</p> <h2>மிதுனம்</h2><p>இனிமையான நாள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். கல்வி நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.</p><h2>கடகம்</h2><p>தைரியத்தோடு செயல்பட்டு சாதனை படைக்கும் நாள். மறைமுகப்போட்டிகளை முறியடிப்பீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.</p> <h2>சிம்மம்</h2><p>பொதுக்காரியங்களில் ஈடுபட்டு புகழ் சேர்க்கும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். தொழிலில் லாபம் உண்டு. தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும்.</p><h2>கன்னி</h2><p>யோசித்து செயல்பட வேண்டிய நாள். தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிப்பர்.</p> <h2>துலாம்</h2><p>வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிடையும் நாள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். அரசுவழிச் சலுகைகள் எதிர்பார்த்தபடியே கிடைக்கும்.</p><h2>விருச்சிகம்</h2><p>வரவு இரு மடங்காகும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.</p> <h2>தனுசு</h2><p>முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணவரவு வந்து சேரும். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும்.</p><h2>மகரம்</h2><p>அலைச்சல் அதிகரிக்கும் நாள். சொந்த பந்தங்கள் வழியில் சுபச்செலவுகளைச் செய்யும் சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.</p> <h2>கும்பம்</h2><p>ஒற்றுமை பலப்படும் நாள். பழைய வாகனத்தைக் கொடுத்துப் புதிய வாகனம் வாங்கும் எண்ணம் ஏற்படும். மடல் மூலம் மகிழ்ச்சியான தகவலொன்று வரலாம்.</p><h2>மீனம்</h2><p>கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். கடமையில் இருந்த தொய்வு அகலும். பக்குவமாகப்பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள்.</p> ]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 2 செப்டம்பர் 2026: தேய்பிறை சஷ்டி விரதம்
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-2-september-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-2-september-2026#comments</comments><guid isPermaLink="false">22c4899a-0fb8-4645-8b03-f4722224ed5f</guid><pubDate>Wed, 02 Sep 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-09-02T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-22/le7z01it/muruga1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Murugan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-22/le7z01it/muruga1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆவணி-16 (புதன்கிழமை)</p><p>பிறை : தேய்பிறை</p><p>திதி :  பஞ்சமி காலை 6.11 மணி வரை பிறகு சஷ்டி மறுநாள் விடியற்காலை 4.12 வரை பிறகு சப்தமி</p><p>நட்சத்திரம் : பரணி பின்னிரவு 2.20 மணி வரை பிறகு கார்த்திகை</p> <p>யோகம் :  சித்த / அமிர்தயோகம்</p><p>ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை</p><p>எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை</p><p>சூலம் : வடக்கு</p><p>நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை</p> <h2>பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு</h2><p>தேய்பிறை சஷ்டி விரதம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை தலத்தில் அலங்கார திருமஞ்சன சேவை. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சன சேவை. </p> <p>பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி தலங்களில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு. விருதுநகர் ஸ்ரீ விஸ்வநாதர், வேதாரண்யம் ஸ்ரீ திருமறைக்காடர் தலங்களில் அபிஷேகம். திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாத சுவாமி சிறப்பு அபிஷேகம். அருப்புக்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் காலை சிறப்பு அபிஷேகம்.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - பொறுப்பு</p><p>ரிஷபம் - நற்செயல்</p><p>மிதுனம் - லாபம்</p><p>கடகம் - ஆதரவு</p><p>சிம்மம் - வரவு</p><p>கன்னி - கவனம்</p> <p>துலாம் - செலவு</p><p>விருச்சிகம் - புகழ்</p><p>தனுசு - பாராட்டு</p><p>மகரம் - மகிழ்ச்சி</p><p>கும்பம் - அன்பு</p><p>மீனம் - பக்தி</p> ]]></content:encoded></item><item><title>நேபாள வெள்ள பாதிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000ஐ கடந்தது - மீட்பு பணிகளில் தொடர் சிக்கல்</title><link>https://www.maalaimalar.com/news/world/nepal-flood-death-toll-crosses-1000-rescuers-reach-remote-areas-2</link><comments>https://www.maalaimalar.com/news/world/nepal-flood-death-toll-crosses-1000-rescuers-reach-remote-areas-2#comments</comments><guid isPermaLink="false">83c4fbe0-9f2b-4d49-ba5c-a7ab50bd909e</guid><pubDate>Wed, 02 Sep 2026 00:26:34 +0000</pubDate><atom:updated>2026-09-02T00:26:34.122Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உயிரிழப்பு,Death toll,Nepal Floods,நேபாள வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/85aqkxxs/Nepal-site.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nepal site after floods]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/85aqkxxs/Nepal-site.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுமிக்க திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,000-ஐ கடந்தது. ஆயிரக்கணக்கானோர் இன்னும் காணாமல் போயுள்ள நிலையில், உள்நாட்டு மற்றும் <a href="https://www.maalaimalar.com/news/world">சர்வதேச</a> உதவிகள் மிகவும் அவசியமாக தேவைப்படுகின்றன.</p><p>கடந்த புதன்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கில் 1,003 பேர் உயிரிழந்ததை <a href="https://www.maalaimalar.com/topic/touist">நேபாள</a> அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 3,900-க்கும் மேற்பட்டோர் குறித்த தகவல் ஏதும் இல்லை.</p><h2>மீட்பு பணிகளில் சிக்கல்:</h2><p>தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக நேபாள ராணுவம் மற்றும் காவல்துறை சுமார் 10,000 பணியாளர்களை ஈடுபடுத்தியுள்ளது. இருப்பினும், சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்திருப்பதாலும், இடிபாடுகளை அகற்றுவதற்கான உபகரணங்கள் பற்றாக்குறையாக இருப்பதாலும் இப்பணிகளில் சிக்கல்கள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.</p><p>இதற்கிடையில், அடையாளம் காணப்படாத உயிரிழந்தவர்களின் உடல்களைக் கூட்டு முறையில் அடக்கம் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. சித்வான் மாவட்டத்தில் உள்ள ஒரு காட்டில் சுமார் 200 உடல்கள் ஏற்கனவே அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் காவல் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார். </p><p>உடல்கள் சிதைவடைந்த நிலையில் இருந்ததாலும், அவற்றை நகர்ப்பகுதிக்கு கொண்டு செல்வது மிகவும் கடினமாக இருந்ததாலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.</p><h2>மருத்துவ பொருட்கள் பற்றாக்குறை:</h2><p>உயிரிழந்தவர்கள் பின்னர் அடையாளம் காணப்பட்டால் உடல்களை மீண்டும் தோண்டி எடுக்க ஏதுவாக, டிஎன்ஏ (DNA) மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஒவ்வொரு அடக்க இடமும் கவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>நேபாளத்தில் பலர் உயிர் பிழைத்தவர்களுக்கு உதவ முன்வருகின்றனர்; காத்மாண்டுவில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பலர் ரத்த தானம் செய்து வருகின்றனர். ரத்த இருப்பு குறைந்து வருவதாகவும், கூடுதல் தானங்களை மருத்துவமனை கோருவதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மருத்துவ பொருட்களும் போதுமானதாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p>எல்லையின் சீனப் பகுதியில், 16 பேர் உயிரிழந்ததாகவும், 540-க்கும் மேற்பட்டோர் இன்னும் காணாமல் போயுள்ளதாகவும் அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p>சுமார் 65,000 பேருக்குத் தண்ணீர், சுகாதாரம் மற்றும் தூய்மைப் பராமரிப்பு தொடர்பான உதவிகள் அவசரமாகத் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். </p><p>மேலும், சுமார் 10,500 கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு ஊட்டச்சத்து உதவி தேவைப்படுவதாகவும், 5 வயதுக்குட்பட்ட 2,600 குழந்தைகளுக்குக் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கான (severe wasting) சிகிச்சை தேவைப்படலாம் என்றும் அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>உச்சிமாநாட்டு புகைப்படத்தில் பிரதமர் மோடி மிஸ்ஸிங்... எடிட் செய்த படத்தை பதிவிட்ட பாக். பிரதமரால் சர்ச்சை</title><link>https://www.maalaimalar.com/news/world/shehbaz-sharif-crops-out-pm-modi-to-take-centre-stage-in-shanghai-bloc-pic</link><comments>https://www.maalaimalar.com/news/world/shehbaz-sharif-crops-out-pm-modi-to-take-centre-stage-in-shanghai-bloc-pic#comments</comments><guid isPermaLink="false">da7d5187-5fad-45a9-972a-0097d6ad67bd</guid><pubDate>Tue, 01 Sep 2026 23:47:35 +0000</pubDate><atom:updated>2026-09-01T23:47:35.974Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>shehbaz sharif,ஷெபாஸ் ஷெரிப்,Shanghai,pm modi,பிரதமர் மோடி,ஷாங்காய்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/ajti2wxc/New-Project-10.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pak. PM Pic]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/ajti2wxc/New-Project-10.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world">பாகிஸ்தான்</a> பிரதமர் ஷெபாஸ் ஷெரிப்பின் அலுவலகம், செவ்வாயன்று நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டு புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் அபத்தமான முறையில் பகிர்ந்தது. ஆனால், அசல் புகைப்படத்தில் இருந்த மற்ற உலக தலைவர்களை நீக்கிவிட்டு, தன்னை மட்டும் மையத்தில் வைக்கும் வகையில் அதனை மாற்றியிருந்தது.</p><p>பாகிஸ்தான் பிரதமர் பகிர்ந்த புகைப்படத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங், கிர்கிஸ்தான் அதிபர் சதிர் ஜபரோவ், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், தஜிகிஸ்தான் அதிபர் எமோமாலி ரஹ்மான், உஸ்பெக் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் மற்றும் கிர்கிஸ்தான் கர்னல் உலர்பீக் ஸர்லிகோவிச் ஷர்ஷீவ் ஆகியோர் மட்டுமே இடம்பெற்றிருந்தனர்.</p><h2>குழு புகைப்படத்தில் குழப்பம்:</h2><p>கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் நடைபெற்ற 26வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டின் அமர்வுக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படத்தில், உறுப்பு நாடுகளின் தலைவர்கள் ஒன்றாக நின்றுகொண்டிருந்தனர்.</p><p>இருப்பினும், பிரதமர் நரேந்திர மோடி அசல் புகைப்படத்தைப் பகிர்ந்து, உண்மையில் ஷெரீப் வலமிருந்து நான்காவதாக நின்றிருந்ததையும், மற்ற ஐந்து உலகத் தலைவர்கள் படத்தில் இருந்து நீக்கப்பட்டிருந்ததையும் காட்டினார்.</p><p>பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த உரையாடல் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக, 26-ஆவது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) தலைமைத்துவ உச்சிமாநாடு 10 உறுப்பு நாடுகள், 15 கூட்டாளர் நாடுகள் மற்றும் இரண்டு பார்வையாளர் நாடுகளை ஒன்றிணைத்தது.</p><h2>மாநாட்டில் பிரதமர் மோடி கூறியது:</h2><p>கிர்கிஸ்தானில் நடைபெற்ற 26ஆவது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கைகளை கோடிட்டு காட்டினார். உலகளாவிய எரிசக்தி விநியோகம் மற்றும் பொருளாதாரங்களை பாதித்துள்ள, மத்திய கிழக்கில் தொடரும் மோதலுக்கு மத்தியில் அவரது இந்தக் கருத்துக்கள் வெளியாகின.</p><p>10 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO), 2001-ஆம் ஆண்டில் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளால் நிறுவப்பட்டது. 2017-ஆம் ஆண்டில் இந்தியாவும் பாகிஸ்தானும், அதனைத் தொடர்ந்து 2023-ஆம் ஆண்டில் ஈரானும், 2024-ஆம் ஆண்டில் பெலாரஸும் முழு உறுப்பினர்களாகின.</p><p>SCO-வின் மூன்று முக்கிய தூண்களான பாதுகாப்பு, இணைப்பு மற்றும் வாய்ப்பு ஆகியவற்றைச் சுற்றி வலுவான ஒத்துழைப்புக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். தொலைநோக்குப் பார்வையைத் தாண்டி, அளவிடக்கூடிய விளைவுகளை நோக்கி பணியாற்ற வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.</p>]]></content:encoded></item></channel></rss>