<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 08 Aug 2026 08:42:50 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 8 ஆகஸ்ட் 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-8-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-8-august-2026#comments</comments><guid isPermaLink="false">b54f04e3-e267-4cba-9339-bc533284a1e5</guid><pubDate>Sat, 08 Aug 2026 04:51:00 +0000</pubDate><atom:updated>2026-08-08T08:18:57.323Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/272sbpdk/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live News]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/272sbpdk/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-wishes-to-new-judges-may-your-work-excel-in-ensuring-equal-justice-and-social-justice">சமநீதியும், சமூகநீதியும் கிடைக்க செய்யும் வகையில் தங்களது பணி சிறக்கட்டும்! - புதிய நீதிபதிகளுக்கு முதல்வர் வாழ்த்து</a></p><p>* சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். </p><p>* மக்கள் அனைவருக்கும் சமநீதியும், சமூகநீதியும் கிடைக்கச் செய்யும் வகையில் தங்களது பணி சிறக்கட்டும்!</p> <p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/afghanistan-beat-ireland-in-second-odi">2வது ஒருநாள் போட்டி: ரஷித் கான் அசத்தலான பந்துவீச்சில் அயர்லாந்தை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்</a></p><p>* முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 299 ரன்கள் குவித்தது.</p><p>* 6 விக்கெட் வீழ்த்திய ரஷித் கானுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/ashmita-chaliha-enter-final-in-korea-mastesr-badminton">கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் அஷ்மிதா சலிஹா</a></p><p>* கொரியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் தொடர் கொரியாவில் நடந்து வருகிறது.</p><p>* இறுதிப்போட்டியில் அஷ்மிதா சலிஹா, சீன வீராங்கனை உடன் மோதுகிறார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/who-will-pay-upi-transaction-fees-nirmala-sitharaman-clarifies">யுபிஐ பணப்பரிவர்த்தனைக் கட்டணம் யாருக்கெல்லாம் பொருந்தும்?-குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த நிர்மலா சீதாராமன்!... </a></p><p>*மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள ‘வரி மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதா 2026’ சமீபத்தில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. </p><p>*சாதாரணக் நுகர்வோர்கள் தங்கள் அன்றாடத் தேவைகளுக்காக மேற்கொள்ளும் நபர்-நபர் மற்றும் வணிகர்களுக்கானக் கட்டணங்கள்  போன்ற யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எவ்வித சேவைக் கட்டணமும் வசூலிக்கப்படாது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/land-guideline-value-in-tamil-nadu-hiked-by-up-to-60-percent">தமிழகத்தில் நில வழிகாட்டி மதிப்பு 60% வரை உயர்வு: அரசு அதிரடி நடவடிக்கை!</a></p><p>* ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டப் பதிவாளர் தலைமையில், மண்டல வாரியாகக் கிராமங்களின் நில விவரங்களைச் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.</p><p>* சொத்துப் பதிவு மூலம் கிடைக்கும் முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணம் அதிகரிக்கும் என்பதால், அரசின் வருவாய் கணிசமாக உயரும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-demands-withdrawal-of-fcra-bill-to-protect-minorities" rel="nofollow">சிறுபான்மையினர் நலன் காக்க FCRA மசோதாவை திரும்பப் பெற வேண்டும்!- மு.க.ஸ்டாலின்</a></p><p>* நாடாளுமன்ற பருவகாலக் கூட்டத்தொடரில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.</p><p>* நாடாளுமன்ற கூட்டுகுழுவிற்குப் பரிந்துரைக்குமாறு அமைச்சரிடம் வலியுறுத்தல்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/mojtaba-khameneis-health-raises-concerns-in-iran" rel="nofollow">ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி உடல்நிலை கவலைக்கிடம்?</a></p><p>* மொஜ்தபா கமெனியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று இஸ்ரேலிய ஊடகம் தகவல்.</p><p>* எந்த நேரத்திலும் அவர் இறக்கக்கூடும் என்றும் ஈரானின் உயர்மட்டத் தலைவர்களிடையே தகவல்கள் பரவி வருகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/constituency-delimitation-all-party-mps-meeting-government-not-send-any-letter-to-dmk-leadership">அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் கூட்டம் -  திமுக தலைமைக்கு கடிதம் எதுவும் எழுதவில்லை என தகவல்</a></p><p>* முதலமைச்சர் விஜய் நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தை தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் புறக்கணித்து உள்ளன. </p><p>* மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியூரில் இருக்கிறார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-constituency-delimitation-mps-meeting-tvk-government-drama-divert-attention-from-cauvery-issue">எம்பிக்கள் கூட்டம்: காவிரி பிரச்சனையை திசைத்திருப்ப த.வெ.க. அரசு நடத்தும் நாடகம் - கனிமொழி</a></p><p>* தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை ஏற்கெனவே நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானங்களில் தெரிவித்துவிட்டோம். </p><p>* த.வெ.க. அரசின் இன்றைய கூட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-lok-sabha-constituencies-may-increase-from-39-to-59-under-delimitation-draft-list-out">தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் தமிழக மக்களவை தொகுதிகள் 59 ஆக உயரும்: உத்தேச பட்டியல் வெளியீடு!... </a></p><p>*தமிழ்நாட்டின் தற்போதைய மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 39-ல் இருந்து 59 ஆக உயரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>*இத்திட்டத்திற்கு தமிழகத்தின் பிரதான ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-devotees-carrying-mobile-phones-into-temples">கோவில்களில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை: 1-ந்தேதி முதல் பாதுகாப்பு பெட்டகம் அமைக்க உத்தரவு</a></p><p>* தமிழகத்தில் உள்ள கோவில்களுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.</p><p>* ஒலி பெருக்கி மூலமும் இந்த தகவலை அறிவிக்க வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/us-senate-approves-100-percent-tariff-on-russian-oil-buyers-what-it-means-for-india">ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 100% வரி: அமெரிக்க செனட் சபை மசோதா ஒப்புதல்-இந்தியாவிற்குப் பெரும் சவாலா?... </a></p><p>*ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 100 சதவீத வரி விதிக்கும் அதிகாரம் அளிக்கும் புதிய தடைகள் மசோதாவிற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. </p><p>*உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து இந்தியா மலிவு விலையில் ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/people-are-watching-those-who-boycott-mps-meeting-manickam-thakur" rel="nofollow">எம்பிக்கள் கூட்டத்தை புறக்கணிப்பவர்களை மக்கள் கவனிக்கின்றனர்- மாணிக்கம் தாகூர்</a></p><p>* தவெக அரசு நடத்தும் அரசியல் நாடகத்தில் திமுக பங்கேற்காது என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.</p><p>* சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-8-8-2026">GOLD PRICE TODAY: தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம்: நகை வாங்குவோர் கலக்கம்!</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.13,965-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/death-threat-audio-targeting-mla-zeeshan-siddique-goes-viral" rel="nofollow">உனது தந்தைக்கு அடுத்து நீதான்.. ஜீஷான் சித்திக் எம்எல்ஏவுக்கு கொலை மிரட்டல்</a></p><p>*  மிரட்டல் விடுக்கப்பட்ட அந்த ஆடியோ பதிவின் உண்மைத்தன்மை என்ன? </p><p>* கொலை மிரட்டல் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/amit-shah-visit-tn-today">2 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார் அமித்ஷா</a></p><p>* அமித்ஷா மகாராஷ்டிர மாநில நிகழ்ச்சிகளை இன்று முடித்தபின் அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வருகிறார்.</p><p>* அமித்ஷா திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு கார் மூலம் சாலை மார்க்கமாக புதுச்சேரி செல்கிறார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/constituency-delimitation-issue-thirumavalavan-calls-upon-dmk-and-admk">தொகுதி மறுவரையறை விவகாரம்: திமுக, அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு</a></p><p>* தமிழக எம்.பி.க்களுடன் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.</p><p>* மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் சாய்குமார் தனித்தனியாக கடிதம் அனுப்பியுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>திருத்தணி முருகன் கோவிலில் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய ரோஜா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/actress-roja-kavadi-at-thiruttani-murugan-temple</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/actress-roja-kavadi-at-thiruttani-murugan-temple#comments</comments><guid isPermaLink="false">df359d8f-1997-418d-87e5-34abccacfefc</guid><pubDate>Sat, 08 Aug 2026 08:40:02 +0000</pubDate><atom:updated>2026-08-08T08:40:02.076Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruttani Murugan Temple,திருத்தணி முருகன் கோவில்,roja,kavadi,ரோஜா,காவடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/1npfqz7e/roja.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Roja]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/1npfqz7e/roja.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகையும், அரசியல்வாதியுமான <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BE">ரோஜா</a> முருகனின் தீவிர பக்தை ஆவார்.</p><h2>நேர்த்திக்கடன்</h2><p>அடிக்கடி திருத்தணி முருகன் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று தரிசனம் செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். ஆடி கிருத்திகையின் போது ஒவ்வொரு ஆண்டும் காவடி சுமந்து சாமியை வழிபடுவார். கடந்த 14 வருடங்களாக காவடி எடுத்து வந்து ரோஜா நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறார்.</p> <h2>காவடி</h2><p>அந்த வகையில் இந்த ஆண்டும் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலுக்கு நடிகை ரோஜா காவடி எடுத்து வந்தார். பக்தி பரவசத்துடன் ‘முருகனுக்கு அரோகரா அரோகரா’ என்ற பக்தி கோஷத்துடன் காவடியை சுமந்தபடி கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் சார்பில் சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. </p> <h2>திருத்தணி முருகன் கோவில்</h2><p>ரோஜா காவடி எடுத்து வந்த காட்சிகளை கோவில் வளாகத்தில் கூடியிருந்த பக்தர்கள் ஆர்வத்துடன் செல்போனில் படம் பிடித்தனர். ரோஜா காவடி எடுத்தது குறித்து அவரது கணவரும் இயக்குனருமான ஆர்.கே.செல்வமணி கூறுகையில், ரோஜா முருகனின் தீவிர பக்தர் ஆவார். கடந்த 14 ஆண்டுகளாக <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">திருத்தணி முருகன் கோவிலில் </a>காவடி எடுத்து தரிசனம் செய்து வருகிறார். அதுபோல் இந்த ஆண்டும் திருத்தணி முருகன் கோவிலில் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>TNEA : இன்ஜினியரிங் கவுன்சிலிங் ரவுண்ட் 2 ரிசல்ட்! அடுத்து மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tnea-2026-engineering-admission-round-2-results-and-next-steps</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tnea-2026-engineering-admission-round-2-results-and-next-steps#comments</comments><guid isPermaLink="false">4a4d9975-f3f1-4cce-9409-0a3fc14b6577</guid><pubDate>Sat, 08 Aug 2026 08:38:47 +0000</pubDate><atom:updated>2026-08-08T08:38:47.811Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Engineering Counseling,tnea,TNEA 2026,இன்ஜினியரிங் சேர்க்கை,இன்ஜினியரிங் கவுன்சிலிங்,டிஎன்இஏ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/pnwpabxw/engineering.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Engineering Counseling  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/pnwpabxw/engineering.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை இரண்டாம் சுற்று கலந்தாய்வின் தற்காலிக ஒதுக்கீட்டு முடிவுகள் வெளியாகியுள்ளன. தற்காலிக ஒதுக்கீட்டை உறுதிசெய்ய மாணவர்களுக்கு 5 வெவ்வேறு தேர்வுகள் வழக்கம் போல் வழங்கப்பட்டுள்ளன. கல்வி ஆலோசகர்களின் கூற்றுப்படி, 'Accept and Upward' (ஏற்றுக்கொண்டு மேல்நோக்கி நகர்தல்) ஆப்ஷனைத் தேர்வு செய்வதற்கு முன் மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய வழிகாட்டுதல்கள்:</p><h2>யார் 'அக்செப்ட் அண்ட் <strong>அப்வர்ட்' தேர்வு செய்யக் கூடாது?</strong></h2><p>உங்களின் சாய்ஸ் ஃபில்லிங் பட்டியலில், தற்போது கிடைத்த கல்லூரிக்கு மேலே உள்ள கல்லூரிகளில் உங்களுக்குப் படிக்க விருப்பமில்லை என்றால் அப்வர்ட் தேர்வு செய்யக் கூடாது. அப்வர்ட் தேர்வில் மேல்வரிசையில் உள்ள கல்லூரிகளில் ஏதேனும் ஒன்று ஒதுக்கீடு செய்யப்பட்டால், தற்போது கிடைத்துள்ள சீட் தானாகவே ரத்தாகிவிடும்.</p><h2>கட் ஆ<strong>ஃப் சாத்தியக்கூறு இல்லாதபோ</strong>து</h2><p>உங்கள் கட் ஆஃப் மதிப்பெண்ணிற்கு மேலே நீங்கள் குறிப்பிட்ட கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்பே இல்லை என உறுதியாகத் தெரிந்தால் அப்வர்ட் கொடுப்பதைத் தவிர்க்கலாம். தற்போது ஒதுக்கப்பட்ட கல்லூரியின் கட்டண விவரங்கள், உள்கட்டமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவை உங்களுக்கு முழு திருப்தியளித்தால், அதை அப்படியே 'Accept and Join' செய்து உறுதிப்படுத்துவதே பாதுகாப்பானது.</p><h2>Ac<strong>cept &amp; Upward தேர்வு செய்தவர்களுக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள்</strong></h2><p>1. தற்காலிக ஒதுக்கீட்டு ஆணையைப் பதிவிறக்கம் செய்து, '5 நாட்களுக்குள்' அருகிலுள்ள TNEA உதவி மையத்திற்குச் சென்று நேரில் சான்றிதழ் சரிபார்ப்பை மேற்கொள்ள வேண்டும். தவறினால் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும்.</p><p>2.TFC மையத்தில் ஆவணங்களைச் சமர்ப்பிப்பதுடன் ரூ. 25,000 முன்பணக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.</p><p>3. ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு, 5 நாட்களுக்குள் உங்களுக்கான இறுதி ஒதுக்கீட்டு ஆணை இணையதளத்தில் வெளியிடப்படும்.</p><p>4. இறுதி ஒதுக்கீட்டு ஆணை கிடைத்த 7 நாட்களுக்குள் குறிப்பிட்ட கல்லூரிக்கு நேரில் சென்று சேர்க்கையை உறுதிசெய்ய வேண்டும்.</p><h2>TFC <strong>மையத்தில் சமர்</strong>ப்பிக்க வேண்டிய முக்கிய ஆவணங்கள்</h2><p>* TNEA தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை (Tentative Allotment Order)</p><p>* 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் (Mark Sheets)</p><p>* மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate -TC)</p><p>* சாதிச் சான்றிதழ் (Community Certificate)</p><p>* முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் (First Graduate Certificate - பொருந்துமாயின்)</p><p>* வருமானச் சான்றிதழ் (Income Certificate)</p><p>* மாணவரின் வங்கி கணக்கு புத்தக நகல் (Bank Passbook)</p><p>* பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்கள்</p><p>* சேர்க்கைக் கட்டணம் (ரூ. 25,000)</p><p>மாணவர்கள் தங்களது சாய்ஸ் லிஸ்ட்டை மீண்டும் ஒருமுறை கவனமாக ஆய்வு செய்த பிறகே முடிவெடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்கும் த.வெ.க. ஆதரவு எம்.பி.க்கள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/twenty-allied-mps-attend-vijay-delimitation-consultation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/twenty-allied-mps-attend-vijay-delimitation-consultation#comments</comments><guid isPermaLink="false">a7ec8c39-dea5-4ba5-905e-2f9011978499</guid><pubDate>Sat, 08 Aug 2026 08:31:05 +0000</pubDate><atom:updated>2026-08-08T08:31:05.682Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,TN MPs,tvk,தமிழக எம்பிக்கள் கூட்டம்,தவெக ஆதரவு எம்பிக்கள்,TVK support</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/qw611etl/TN-CM-Vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/qw611etl/TN-CM-Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடு முழுவதும் தொகுதி  மறுவரையறை காரணமாக தமிழகம் பாதிக்கப்படுவதாக கூறி அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.</p><p>கடந்த தி.மு.க. ஆட்சியிலும் தொகுதி மறுவரையறையின்போது தமிழகத்தின் நலன்கள் பாதிக்கப் டக் கூடாது என்று அனைத்து அரசியல் கட்சி களும் குரல் கொடுத்தன.</p><h2>முதலமைச்சர் விஜய் தலைமையில்..</h2><p>இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று  மாலை சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக எம்.பி.க்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. </p><p>இதன்படி இந்த கூட்டம் இன்று நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தில் தொகுதி மறுவரையறையால் தமிழக எம்.பி. தொகுதிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி விரிவாக விவாதிக்கப்படுகிறது.</p><p>இந்த கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்குமா? என்பது பற்றி நேற்று சட்டமன்றத்தில் த.வெ.க. அமைச்சர்களும் கேள்வி எழுப்பினார்கள். </p><h2>புறக்கணிப்பு</h2><p>இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் நடத்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தை தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் புறக்கணித்து உள்ளன.</p><p>தி.மு.க. எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில்,"த.வெ.க. அரசு நடத்தும் அரசியல் நாடகத்தில் தி.மு.க. பங்கேற்காது என்றும் தொகுதி மறுவரையறையில் தி.மு.க.வின் முந்தைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை" என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p><p>அ.தி.மு.க.வும் இந்த கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என தெரிவித்துள்ளது. அதேபோன்று பா.ம.க.வும் விஜய் தலைமையிலான கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக கூறி உள்ளது.</p><p>தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று உள்ள தே.மு.தி.க.வுக்கு ஒரு மேல்சபை எம்.பி. வழங்கப்பட்டு உள்ளது. எல்.கே.சுதீஷ் எம்.பி.யாக இருக்கிறார். அவர் இன்று டெல்லியில் இருப்பதாகவும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும் அந்த கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியூரில் இருக்கிறார். அதனால் அவரும் பங்கேற்கவில்லை. </p><h2>பங்கேற்பு</h2><p>அதே நேரத்தில் த.வெ.க. ஆதரவு கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் முதலமைச்சர் விஜய் நடத்தும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கு 3 மேல்சபை எம்.பி.க்கள் உள்பட 12 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். </p><p>விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 2 எம்.பி.க்களும், இந்திய கம்யூ னிஸ்டு கட்சியை சேர்ந்த 2 எம்.பி.க்களும், மார்க்சிஸ்டு எம்.பி.க்கள் இருவரும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.</p><h2>ம.தி.மு.க.</h2><p>ம.தி.மு.க. சார்பில் துரை வைகோ எம்.பி.யாக உள்ளார். மேல்சபை எம்.பி.யான இவரும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த எம்.பி.யும் விஜய் நடத்தும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதன் மூலம் த.வெ.க. ஆதரவு எம்.பி.க்கள் 20 பேர் இன்று மாலை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்.</p><p>தமிழகத்தில் மொத்தம் மக்களவை, மாநிலங்களவை என 2 அவைகளையும் சேர்த்து 57 பேர் உள்ளனர்.  இவர்களில் 20 பேர் மட்டுமே கலந்து கொள்கிறார்கள்.</p><p>தி.மு.க.வில் 8 மேல் சபை எம்.பி.க்களும், 20 மக்களவை எம்.பி.க்களும் உள்ளனர்.</p><p>அ.தி.மு.க.வுக்கு 4 மேல்சபை எம்.பி.க்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே இன்றைய கூட்டத்தை புறக்கணித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>ரெயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு… எந்தெந்த ரயில்கள் ரத்து?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/changes-in-rapid-suburban-train-services-for-renovation-work-at-chennai-egmore</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/changes-in-rapid-suburban-train-services-for-renovation-work-at-chennai-egmore#comments</comments><guid isPermaLink="false">001622d1-319d-42e8-b1e8-72dde41a5e5e</guid><pubDate>Sat, 08 Aug 2026 08:26:39 +0000</pubDate><atom:updated>2026-08-08T08:26:39.116Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Southern Railway,electric train,மின்சார ரெயில்,ரெயில் சேவை,train service,தெற்கு ரெயில்வே</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/23r9a3bi/train.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ train]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/23r9a3bi/train.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் இரவு நேர புறநகர் ரெயில்களை நம்பி பயணம் செய்யும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><h2>பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு</h2><p>சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.842 கோடி மதிப்பில் மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருகின்றன. புதிய இரும்பு நடைமேம்பாலம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் காரணமாக பாதுகாப்பு மற்றும் பணிகள் தடையின்றி நடைபெறுவதற்காக புறநகர் மற்றும் விரைவு ரெயில் சேவைகளில் பல்வேறு மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.</p><p>இந்நிலையில், சென்னையில் இரவு நேர புறநகர் ரெயில்களை நம்பி பயணம் செய்யும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><p>சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகளால் ஆகஸ்ட் 22-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை சில ரெயில்களின் இயக்கத்தில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்படுகின்றன. </p><h2>இரவு நேர ரெயில்கள் ரத்து</h2><p>சென்னை கடற்கரையில் இருந்து வருகிற 22, 24, 25, 26, 27, 28, 29 ஆகிய தேதிகளில் (வார நாட்களில்) இரவு 11:20, 11:40, 11.59 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.</p><p>சென்னை கடற்கரையில் இருந்து மேற்கண்ட தேதிகளில் அதிகாலை 3.50 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில் சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே பகுதிநேர ரத்து செய்யப்படுகிறது.</p><p>சென்னை கடற்கரையில் இருந்து வருகிற 23, 30 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) இரவு 11.20, 11:40, 11.59 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து மேற்கண்ட தேதிகளில் இரவு 11, 11.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.</p><p>சென்னை கடற்கரையில் இருந்து வருகிற 23. 30 ஆகிய தேதிகளில் அதிகாலை 3.50 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில் கடற்கரை-தாம்பரம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டில் இருந்து மேற்கண்ட தேதிகளில் இரவு 10.20, 11 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரெயில் தாம்பரம்-கடற்கரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.</p><p>இந்த மாற்றங்கள் இரவு நேர பணிகளை முடித்து வீடு திரும்புவோர், தாம்பரம் வழித்தட பயணிகள் மற்றும் அதிகாலை ரெயில்களை பயன்படுத்துவோரை பாதிக்கக்கூடும் என்பதால், மாற்றுப் போக்குவரத்து ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்து கொள்ளுமாறு ரெயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.</p><p>எழும்பூர் ரெயில் நிலைய மேம்பாட்டுப் பணிகளை விரைவாக நிறைவு செய்வதற்காக இந்த தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என சென்னை ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இமாச்சல் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து- 7 பேர் உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/himachal-pradesh-mountain-road-bus-accident-7-killed</link><comments>https://www.maalaimalar.com/news/national/himachal-pradesh-mountain-road-bus-accident-7-killed#comments</comments><guid isPermaLink="false">a395039a-0153-410c-a28f-c1edc7b14e3e</guid><pubDate>Sat, 08 Aug 2026 08:00:00 +0000</pubDate><atom:updated>2026-08-08T08:00:00.441Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உயிரிழப்பு,bus accident,dead,Himachal Pradesh,தனியார் பேருந்து விபத்து,இமாச்சல் பிரதேசம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/2djbhjt0/bus.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bus accident]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/2djbhjt0/bus.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இமாச்சல பிரதேச மாநிலம் சம்பா மாவட்டத்தில் உள்ள மலைப்பாதையில் தனியார் பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது.</p><h2>பேருந்து கவிழ்ந்து விபத்து</h2><p>குறுகிய பாதை மற்றும் செங்குத்தான சரிவுகளுக்கு பெயர் பெற்ற சுரா பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள சலூச்மோர் வளைவு அருகே சென்று கொண்டிருந்தபோது அந்த பேருந்து கவிழ்ந்தது. காலை 7.15 மணியளவில் இந்த விபத்து நடந்தது.</p><p>பேருந்தில் இருந்த பயணிகள் அலறினார்கள். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதி மக்கள் உதவிக்கு ஓடி வந்தார்கள். தகவல் அறிந்ததும் தேசிய பேரிடர் மீட்புப் படை, ஊர்க் காவல் படை, தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.</p><h2>7 பேர் பலி</h2><p>பேருந்து கவிழ்ந்ததில் 7 பேர் பலியானார்கள். 11 பேர் காயமடைந்தனர். பலத்த காயம் அடைந்த 6 பேர் சம்பாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><p>அந்த பேருந்தில் எத்தனை பேர் இருந்தார்கள் என்ற விவரம் தெரியவில்லை. பேருந்து இடிபாடுகளுக்கு அடியில் பயணிகள் சிக்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். </p><h2>இதுவரை 78 பேர் பலி</h2><p>விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இமாச்சல பிரதேசத்தில் கடந்த ஜூன் 30-ந்தேதி முதல் நேற்று வரை பருவ மழைக்காலத்தில் சாலை விபத்தில் 78 பேர் பலியாகி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.</p><h2>பிரதமர் மோடி இரங்கல்</h2><p>இமாச்சல் பேருந்து விபத்தில் இறந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பேருந்து விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டது மிகுந்த வேதனையளிக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>ஸ்பைடர்-மேன்: டாம் ஹாலண்ட் - ஜெண்டாயா ஜோடியின் ரகசிய திருமணம்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/tom-holland-zendaya-secret-wedding-in-england</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/tom-holland-zendaya-secret-wedding-in-england#comments</comments><guid isPermaLink="false">f9feddfa-dbeb-4ee0-a322-0ef21e4559d0</guid><pubDate>Sat, 08 Aug 2026 07:41:53 +0000</pubDate><atom:updated>2026-08-08T07:41:53.551Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஸ்பைடர்மேன்,Spiderman,Zendaya,TomHolland,டாம்ஹாலண்ட்,ஜெண்டாயா,TomHollandZendaya Wedding</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/tgvj1au1/TomHolland-Zendaya-Wedding" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  TomHolland Zendaya Wedding  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/tgvj1au1/TomHolland-Zendaya-Wedding?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஹாலிவுட் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான '<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D">ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே</a>' திரைப்படம் உலக அளவில் வசூல் சாதனை படைத்து வரும் வேளையில், படத்தின் முன்னணி நட்சத்திரங்களான <a href="https://www.maalaimalar.com/topic/tom-holland">டாம் ஹாலண்ட்</a> மற்றும் ஜெண்டாயா ஜோடி தங்களது ரகசியத் திருமணக் கொண்டாட்டத்தை இங்கிலாந்தில் நடத்தியுள்ளனர். </p><p>இச்செய்தி உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கு இரட்டைக் கொண்டாட்டமாக அமைந்துள்ளது.</p><h2><strong>7 நாட்களில் ரூ.11,750 கோடி வசூல்!</strong></h2><p>கடந்த ஜூலை மாத இறுதியில் வெளியான இந்தத் திரைப்படம், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. படம் திரைக்கு வந்த 7 நாட்களில் ரூ.11,750 கோடிக்கும் மேல் வசூலித்து பாக்ஸ் ஆபீஸில் இமாலய சாதனை படைத்துள்ளது. </p><p>இந்தியாவிலும் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிவரும் இத்திரைப்படம், இதுவரை ரூ.400 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது.</p><h2><strong>ரூ.6.4 கோடி செலவில் 3 நாட்கள் நடந்த ரகசிய திருமணம்!</strong></h2><p>இத்திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, டாம் ஹாலண்ட் மற்றும் ஜெண்டாயா ஜோடி தங்களது நீண்ட நாள் காதலைத் திருமண பந்தமாக மாற்றியுள்ளனர். </p><p>இங்கிலாந்தின் சர்ரே பகுதியில் உள்ள ஆடம்பரமான பீவர்புரூக் ஹோட்டல் தோட்டத்தில் இந்த நிகழ்வு நடந்துள்ளது. தோராயமாக இந்திய மதிப்பில் சுமார் ரூ.6.4 கோடி செலவில் 3 நாட்கள் இந்தத் திருமணக் கொண்டாட்டங்கள் அரங்கேறியுள்ளன. </p><p>திரைப்பிரபலங்கள் பலரும் ராபர்ட் டவுனி ஜூனியர், திமோதி சாலமேட், கைலி ஜென்னர் உள்ளிட்ட ஹாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் என 250 பேர் மட்டுமே இதில் பங்கேற்று வாழ்த்துக்களை தெரிவித்தனர். மணமகனின் தோழனாக டாம் ஹாலண்டின் தம்பி சாம் உடனிருந்தார்.</p> <h2><strong>செல்போன்களுக்குத் தடை!</strong></h2><p>தகவல்களும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் கசியக் கூடாது என்பதில் தீவிரமாக இருந்ததால், திருமணத்தில் பங்கேற்ற விருந்தினர்கள் மற்றும் பணியாளர்கள் யாரும் செல்போன்களைப் பயன்படுத்தக் கடும் தடை விதிக்கப்பட்டிருந்தது. </p><p>மேலும், இவர்களது திருமண மேடை மற்றும் அலங்காரங்கள் 'ஸ்பைடர்-மேன்' கருப்பொருளைக் கொண்டு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.</p><h2><strong>2017 முதல் நீடித்த காதல்!</strong></h2><p>டாம்ஹாலண்டும், ஜெண்டாயாவும் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ஸ்பைடர்மேன் ஹோம்கமிங் படத்தில் இணைந்து பணியாற்றிய போது முதன் முதலில் சந்தித்தனர். </p><p>2021-ல் இருவருக்கும் நெருங்கி இருக்கும் புகைப்படங்கள் வைரலானது. ஆனாலும் இருவரும் தங்களது காதலை அதிகாரப்பூர்வமாக வெளியிடாமல் தனிப்பட்ட ரகசியமாகவே வைத்திருந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் அஷ்மிதா சலிஹா</title><link>https://www.maalaimalar.com/sports/ashmita-chaliha-enter-final-in-korea-mastesr-badminton</link><comments>https://www.maalaimalar.com/sports/ashmita-chaliha-enter-final-in-korea-mastesr-badminton#comments</comments><guid isPermaLink="false">61ab4bb1-1ca4-49b9-9aa3-9c27f6ed4f57</guid><pubDate>Sat, 08 Aug 2026 07:39:49 +0000</pubDate><atom:updated>2026-08-08T07:39:49.226Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கொரியா ஓபன் பேட்மிண்டன்,Korea Open Bamdinton,ashmita chaliha,அஷ்மிதா சலிஹா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/1hkqyj4w/ashmita.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ashmita chaliha]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/1hkqyj4w/ashmita.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கொரியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் தொடர் கொரியாவில் நடந்து வருகிறது.</p><p>இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை அஷ்மிதா சலிஹா, சகநாட்டு வீராங்கனை ரக்‌ஷிதா ராம்ராஜ் உடன் மோதினார்.</p><p>இதில் சிறப்பாக ஆடிய அஷ்மித சலிஹா முதல் செட்டை 21-13 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட ரக்‌ஷிதா ராம்ராஜ் அதிரடியாக ஆடி 2வது செட்டை 21-16 என கைப்பற்றினார்.</p><p>வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை அஷ்மிதா சலிஹா 21-13 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.</p><p>நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் அஷ்மிதா சலிஹா, சீன வீராங்கனையான ஹான் குயான்சி உடன் மோதுகிறார்.</p><p>சமீபத்தில் நடைபெற்ற தைபே ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்தியாவின் தன்வி ஷர்மா சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>யுபிஐ பணப்பரிவர்த்தனைக் கட்டணம் யாருக்கெல்லாம் பொருந்தும்?-குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த நிர்மலா சீதாராமன்!</title><link>https://www.maalaimalar.com/news/national/who-will-pay-upi-transaction-fees-nirmala-sitharaman-clarifies</link><comments>https://www.maalaimalar.com/news/national/who-will-pay-upi-transaction-fees-nirmala-sitharaman-clarifies#comments</comments><guid isPermaLink="false">e5b8e549-dd82-4c4e-954d-dbee67d3a6eb</guid><pubDate>Sat, 08 Aug 2026 07:34:57 +0000</pubDate><atom:updated>2026-08-08T07:34:57.717Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நிர்மலா சீதாராமன்,ஜெய்ராம் ரமேஷ்,Jairam Ramesh,nirmala Sitharaman,UPI Transaction,யுபிஐ பணப்பரிவர்த்தனை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/unkfdyqj/nirmala.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Nirmala Sitharaman  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/unkfdyqj/nirmala.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பொதுமக்களின் அன்றாட யுபிஐ (UPI) டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு எந்தவிதமானக் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது என்றும், இது முற்றிலும் இலவசமாகவே தொடரும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p>மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள ‘வரி மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதா 2026’ சமீபத்தில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா, 'பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு நடைமுறைகள் சட்டம் 2007'-இன் பிரிவு 10A-இல் உள்ள 'பூஜ்யக் கட்டணம்' (Zero MDR) விதிகளைத் திருத்துவதற்கு வழிவகை செய்கிறது. இதையடுத்து, "யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது; இது பொதுமக்கள் மற்றும் சிறு வணிகர்களைப் பாதிக்கும்" என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.</p><h2><strong>பொதுமக்களுக்கு முற்றிலும் இல</strong>வசம்</h2><p>சாதாரணக் நுகர்வோர்கள் தங்கள் அன்றாடத் தேவைகளுக்காக மேற்கொள்ளும் நபர்-நபர் மற்றும் வணிகர்களுக்கானக் கட்டணங்கள்  போன்ற யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எவ்வித சேவைக் கட்டணமும் வசூலிக்கப்படாது.</p><h2>வணி<strong>கர்களுக்கு மட்டுமே</strong> </h2><p>எம்டிஆர் (MDR) என்பது நுகர்வோருக்கானது அல்ல. ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கும் அதிகமாகப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் பெரிய அளவிலான வணிகர்களிடம் மட்டுமே குறிப்பிட்ட குறைந்தபட்சக் கட்டணம் (0.05% முதல் 0.5% வரை) விதிப்பது குறித்துப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.</p><h2>நிதிக் கட்டமைப்பை <strong>மேம்படுத்த</strong> நடவடிக்கை</h2><p>சாலையோர வியாபாரிகள், சிறு வணிகர்கள் மற்றும் பெட்டிக் கடைக்காரர்களுக்கு இந்த MDR கட்டணத்திலிருந்து முழு விலக்கு அளிக்கப்படும். பெரிய வணிகர்களிடமிருந்து திரட்டப்படும் இந்தச் சேவைக் கட்டணம், வங்கி அமைப்புகள் மற்றும் நிதித் தொழில்நுட்ப நிறுவனங்களின் டிஜிட்டல் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் சைபர் மோசடித் தடுப்பு நடவடிக்கைகளில் முதலீடு செய்யப் பயன்படும். </p><p>நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதா முழுமையாக நிறைவேறிய பிறகே, இந்திய தேசிய பரிவர்த்தனைக் கழகம் (NPCI) தலைமையிலான யுபிஐ வழிகாட்டுதல் குழு இதுகுறித்த இறுதி முடிவை எடுக்கும்.</p><h2>சீதாராமன் <strong>பதிலடி</strong></h2><p>காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், "வணிகர்கள் மீது விதிக்கப்படும் கட்டணச் சுமை இறுதியில் பொருட்களின் விலை உயர்வு மூலம் பொதுமக்கள் மீதே சுமத்தப்படும்" எனக் குற்றம் சாட்டினார்.  இதற்குப் பதிலளித்த நிதியமைச்சர், வதந்திகளை பரப்பும் முன் காங்கிரஸ் தலைவர்கள் சில உண்மைகளை புரிந்துகொண்டு ஆக்கப் பூர்வமாக விவாதிக்க முன்வர வேண்டும். இது தவறான வதந்தி என்றும், டிஜிட்டல் பரிவர்த்தனை தளங்களின் பாதுகாப்பை அதிகரிக்கவே இத்தகைய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 60% வரை உயரும் நில வழிகாட்டி மதிப்பு: அரசு அதிரடி நடவடிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/land-guideline-value-in-tamil-nadu-hiked-by-up-to-60-percent</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/land-guideline-value-in-tamil-nadu-hiked-by-up-to-60-percent#comments</comments><guid isPermaLink="false">75eca9f8-3ac5-4b67-acbd-c74b15b3a7eb</guid><pubDate>Sat, 08 Aug 2026 07:33:21 +0000</pubDate><atom:updated>2026-08-08T07:33:21.492Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,நில வழிகாட்டி மதிப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/jtxf0pbw/TNGovt.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/jtxf0pbw/TNGovt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>வருவாய்க் கிராமங்கள், நகரப் பகுதிகள் மற்றும் முக்கியச் சாலைப் பகுதிகளில் சமீபத்தில் நடைபெற்ற சொத்துப் பதிவுகள் மற்றும் சந்தை நிலவரங்களை அடிப்படையாகக் கொண்டு புதிய மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது.</strong></em></p><p>தமிழகத்தில் மனைப் பிரிவுகள், விவசாய நிலங்கள், வணிகக் கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளின் சந்தை மதிப்பு நாளுக்கு நாள் கணிசமாக உயர்ந்து வருகிறது. இருப்பினும், பல பகுதிகளில் <a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-அரசு">அரசு</a> பதிவுத் துறையின் நில வழிகாட்டி மதிப்பு தற்போதைய சந்தை விலையை விட மிகவும் குறைவாகவே உள்ளது.</p><p>இந்த இடைவெளியைச் சரிசெய்யும் வகையில், தமிழக அரசு சார்பதிவாளர் அலுவலகங்கள் வாயிலாக மாநிலம் முழுவதிலும் உள்ள நிலங்களின் வழிகாட்டி மதிப்பை 30 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.</p><h2><strong>கிராமவாரியாக பட்டியல் தயாரிப்பு</strong></h2><p>வருவாய்க் கிராமங்கள், நகரப் பகுதிகள் மற்றும் முக்கியச் சாலைப் பகுதிகளில் சமீபத்தில் நடைபெற்ற சொத்துப் பதிவுகள் மற்றும் சந்தை நிலவரங்களை அடிப்படையாகக் கொண்டு புதிய மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது.</p><p>ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டப் பதிவாளர் தலைமையில், மண்டல வாரியாகக் கிராமங்களின் நில விவரங்களைச் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.</p><p>உள்கட்டமைப்பு வளர்ச்சி அடைந்த பகுதிகள், புதிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் அமைந்துள்ள பகுதிகள் மற்றும் மெட்ரோ/தொழில்நுட்பப் பூங்காக்கள் அருகில் உள்ள கிராமங்களில் நில மதிப்பு அதிகபட்சமாக 60 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது.</p><h2><strong>இந்த உயர்வால் ஏற்படும் மாற்றங்கள்</strong></h2><p>சொத்துப் பதிவு மூலம் கிடைக்கும் முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணம் அதிகரிக்கும் என்பதால், அரசின் வருவாய் கணிசமாக உயரும்.</p><p>நிலத்தின் உண்மையான சந்தை மதிப்புக்கும் பதிவு மதிப்புக்கும் இடையிலான வேறுபாடு குறைவதால், சொத்து வாங்குவதில் நிலவும் முறையற்றப் பணப் பரிவர்த்தனைகள் குறையும்.</p><p> அரசு வழிகாட்டி மதிப்பு உயர்வதால், வங்கிகளில் நிலத்தை அடமானம் வைத்துப் பெறப்படும் கடன் தொகையின் வரம்பு அதிகரிக்கும்.</p>]]></content:encoded></item><item><title>ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி உடல்நிலை கவலைக்கிடம்?</title><link>https://www.maalaimalar.com/news/world/mojtaba-khameneis-health-raises-concerns-in-iran</link><comments>https://www.maalaimalar.com/news/world/mojtaba-khameneis-health-raises-concerns-in-iran#comments</comments><guid isPermaLink="false">21c399bc-dee9-4aac-9113-51897fb76101</guid><pubDate>Sat, 08 Aug 2026 07:31:39 +0000</pubDate><atom:updated>2026-08-08T07:31:39.331Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஈரான்,Iran,கவலைக்கிடம்,Health issue,Mojtaba Khamenei,மொஜ்தபா கமெனி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/1ki75pzr/khameni.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mohtaba khamenei]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/1ki75pzr/khameni.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி போர் தொடுத்தன. இதில் முதல் நாளிலேயே ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி கொல்லப்பட்டார்.</p><p>இதையடுத்து அவரது மகன் மொஜ்தபா கமெனி ஈரானின் புதிய உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இதுவரை அவர் பொதுவெளியில் தோன்றவில்லை. </p><p>அமெரிக்காவின் தாக்குதலில் காயம் அடைந்த மொஜ்தபா கமெனி சிகிச்சை பெற்று வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டது.</p><p>அதன்பின் மொஜ்தபா கமெனி பெயரில் அறிக்கைகள் வெளியானது. இதில் அமெரிக்கா-இஸ்ரேலுக்கு அவர் எச்சரிக்கைகளை விடுத்து இருந்தார்.</p><p>இந்த நிலையில் மொஜ்தபா கமெனியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று இஸ்ரேலிய ஊடகமான சேனல் 14 செய்தி வெளியிட்டுள்ளது. மொஜ்தபா கமெனியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், எந்த நேரத்திலும் அவர் இறக்கக்கூடும் என்றும் ஈரானின் உயர்மட்டத் தலைவர்களிடையே தகவல்கள் பரவி உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.</p><p>அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து உள்ளது. ஈரான் அதிபர் பெசெஷ்கியனின் அமைச்சரவைக்கு நெருக்கமான ஒரு வட்டாரம்,"மொஜ்தபா கமெனி விரைவில் மரணம் அடைந்ததற்கான செய்தியைக் கேட்டால் அதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை"  என்று கூறியதாக இஸ்ரேல் ஊடகம் தெரிவித்து உள்ளது.</p><p>கடந்த 2 நாட்களுக்கு முன்பு உச்ச தலைவர் மொஜ்தபாவுடன் தொடர்பு கொள்வது மிகவும் கடினமாக இருப்பதாக ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>சமநீதியும், சமூகநீதியும் கிடைக்க செய்யும் வகையில் தங்களது பணி சிறக்கட்டும்! - புதிய நீதிபதிகளுக்கு முதல்வர் வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-wishes-to-new-judges-may-your-work-excel-in-ensuring-equal-justice-and-social-justice</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-wishes-to-new-judges-may-your-work-excel-in-ensuring-equal-justice-and-social-justice#comments</comments><guid isPermaLink="false">b8da7410-2d9c-4af9-bc69-81ece2bf0759</guid><pubDate>Sat, 08 Aug 2026 07:28:27 +0000</pubDate><atom:updated>2026-08-08T07:28:27.480Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Madras High Court,சென்னை ஐகோர்ட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/3swxby2k/cmvijay1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/3swxby2k/cmvijay1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</strong></em></p><p>இதுதொடர்பாக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-consultation-with-tamil-nadu-mps-on-delimitation">முதலமைச்சர் விஜய்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p> <p>இந்திய குடியரசுத் தலைவர் அவர்களால் மாண்பமை <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%90%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D">சென்னை உயர்நீதிமன்றத்திற்குப்</a> புதிதாக நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள கோவிந்தராஜன் கிருஷ்ணசாமி, ரஜ்னிஷ் பதியில், ரமேஷ் நடராஜன், ஜி.கே.முத்துக்குமார், ராமகிருஷ்ணன் ராஜேஷ் விவேகானந்தன் மற்றும் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள ரவீக்குமார் சங்கரநாராயணன், திலீப் குமார் நாகராஜன், எல்லப்பன் மனோகரன், டாக்டர் பி. முருகன், எம்.டி.சுமதி, எஸ்.அல்லி, சி.திருமகள், சண்முகம் கார்த்திகேயன், முருகேசன் பாலுச்சாமி, என்.குணசேகரன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். </p> <p>நீதியின் மாண்பையும், அரசியலமைப்பின் விழுமியங்களையும் நிலைநாட்டி, மக்கள் அனைவருக்கும் சமநீதியும், சமூகநீதியும் கிடைக்கச் செய்யும் வகையில் தங்களது பணி சிறக்கட்டும்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சிறுபான்மையினர் நலன் காக்க FCRA மசோதாவை திரும்பப் பெற வேண்டும்!- மு.க.ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-demands-withdrawal-of-fcra-bill-to-protect-minorities</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-demands-withdrawal-of-fcra-bill-to-protect-minorities#comments</comments><guid isPermaLink="false">1aee2b18-194f-4f59-b241-c1ce431998cf</guid><pubDate>Sat, 08 Aug 2026 07:08:45 +0000</pubDate><atom:updated>2026-08-08T07:08:45.325Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,FCRA Bill,எப்சிஆர்ஏ மசோதா,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/e8rbnfl8/mks.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DMK Leader MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/e8rbnfl8/mks.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>FCRA (வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை))சட்ட மசோதாவை திரும்பப் பெற, நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே நடவடிக்கை தேவை என்றும் சிறுபான்மையினருக்கு எதிரான மசோதாவை தொடக்கத்தில் இருந்தே திமுக எதிர்த்து வருகிறது என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-  </p><p>நமது நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் தலைமையிலான சிறுபான்மையினர் மீதான கூட்டு நடவடிக்கைக் குழுவின் பிரதிநிதிகள் குழுவும், இந்தியாவில் உள்ள பல்வேறு மதப்பிரிவுகளைச் சேர்ந்த உயர்மட்ட மதத் தலைவர்களும், 6.8.2026 அன்று  உள்துறை அமைச்சரைச் சந்தித்தனர்.</p><p>மார்ச் 2026-ல் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதாவை திரும்பப் பெறவும், FCRA-வின் பிரிவு 15-ஐ ரத்து செய்ய வேண்டும் அல்லது வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம், 2010-ன் செயல்பாடுகள் குறித்த விரிவான ஆய்வுடன்  நாடாளுமன்ற கூட்டுகுழுவிற்குப் பரிந்துரைக்குமாறும் அமைச்சரிடம் வலியுறுத்தினர்.</p><p>முன்மொழியப்பட்ட இந்த மசோதாவின் நீண்டகால விளைவுகள் காரணமாக, அதன் விதிகளை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வரும் திமுக, இந்தக் கோரிக்கையை ஆதரிக்கிறது.</p><p>சிறுபான்மையினரின் உரிமைகளைக் கருத்தில் கொண்டு, இந்த மன்றத்தின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து, தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற பருவகாலக் கூட்டத்தொடரில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் தமிழக மக்களவை தொகுதிகள் 59 ஆக உயரும்: உத்தேச பட்டியல் வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-lok-sabha-constituencies-may-increase-from-39-to-59-under-delimitation-draft-list-out</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-lok-sabha-constituencies-may-increase-from-39-to-59-under-delimitation-draft-list-out#comments</comments><guid isPermaLink="false">c0ae8cb2-08ff-454b-8bda-eec9e8cdf26a</guid><pubDate>Sat, 08 Aug 2026 07:04:19 +0000</pubDate><atom:updated>2026-08-08T07:04:19.481Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,தொகுதி மறுவரையறை,Delimitation,முதலமைச்சர் விஜய்,TamilNadu LokSabha,தமிழக மக்களவை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/m9b2qu52/tamiklnadu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Delimitation TamilNadu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/m9b2qu52/tamiklnadu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடாளுமன்ற தொகுதி எல்லைகளை மக்கள் தொகை அடிப்படையில் மாற்றி அமைக்கும் தொகுதி மறுவரையறை (Delimitation) செயல்படுத்தப்பட்டால், தமிழ்நாட்டின் தற்போதைய மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 39-ல் இருந்து 59 ஆக உயரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>தொகுதி மறுவரையறை</strong></h2><p>நடைபெற்று வரும் நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடரில், திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளின் எல்லைகள் வரையறுக்கப்பட இருப்பதால், மக்கள்தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.</p><h2><strong>நாடு தழுவிய இடங்கள் உயர்வு</strong></h2><p>தற்போதைய நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 543 ஆக உள்ளது. மறுவரையறைக்குப் பிறகு மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 850 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.</p><h2><strong>தமிழகம் எதிர்ப்பு</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/constituency-delimitation-all-party-mps-meeting-government-not-send-any-letter-to-dmk-leadership">தொகுதி மறுவரையறை</a> சட்ட மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேறினால், நாடு முழுவதும் தற்போதுள்ள 543 தொகுதிகள் 850 ஆக உயரும். குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், 59 ஆக உயர வாய்ப்பு உள்ளது. ஆனால், மக்கள்தொகையை கட்டுப்படுத்தாத மாநிலங்களுக்கு இதைவிட அதிக தொகுதிகள் கிடைக்கும் என்பதால், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.</p><h2>மக்கள் <strong>தொகை</strong> கட்டுப்பாடு</h2><p>தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் கடந்த சில தசாப்தங்களாக குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தி மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியுள்ளன.</p><h2>அரசியல் <strong>கட்சிகளின்</strong> நிலைப்பாடு</h2><p>இத்திட்டத்திற்கு தமிழகத்தின் பிரதான ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.</p><h2>எம்பிக்கள் <strong>ஆலோசனை</strong> கூட்டம்</h2><p>இந்த நிலையில், தொகுதி மறுவரையறை குறித்து விவாதிக்க தமிழக எம்பிக்கள் ஆலோசனை கூட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று மாலை 3 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் கூட்டியுள்ளார். ஆனால், இந்த கூட்டத்தை திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. என்றாலும், நாடாளுமன்ற இரு அவைகளிலும் தொகுதி மறுவரையறை சட்ட மசோதா நிறைவேறினால், தமிழ்நாட்டில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகள் 59 ஆக உயரும். அவ்வாறு உயர்ந்தால் என்னென்ன பெயர்களில் மக்களவை தொகுதிகள் இருக்கும் என்ற உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.</p><h2><strong>உத்தேச 59 மக்களவை தொகுதிக</strong>ளின் பட்டியல்</h2><p>புதிய மறுவரையறை திட்ட வரைவின்படி அமையக்கூடிய உத்தேச 59 தொகுதிகள் இதோ:</p><p>1. திருத்தணி</p><p>2. திருவள்ளூர்</p><p>3. சென்னை வடக்கு</p><p>4. சென்னை கிழக்கு</p><p>5. சென்னை மத்திய</p><p>6. சென்னை தெற்கு</p><p>7. சென்னை மேற்கு</p><p>8. தாம்பரம்</p><p>9. செங்கல்பட்டு</p><p>10. காஞ்சிபுரம்</p><p>11. வேலூர்</p><p>12. திருப்பத்தூர்</p><p>13. ராணிப்பேட்டை</p><p>14. திருவண்ணாமலை</p><p>15. வந்தவாசி / ஆரணி</p><p>16. திண்டிவனம்</p><p>17. விழுப்புரம்</p><p>18. கள்ளக்குறிச்சி</p><p>19. கடலூர்</p><p>20. சிதம்பரம்</p><p>21. ஓசூர்</p><p>22. கிருஷ்ணகிரி</p><p>23. தர்மபுரி</p><p>24. சேலம்</p><p>25. மேட்டூர்</p><p>26. ராசிபுரம்</p><p>27. நாமக்கல்</p><p>28. ஈரோடு</p><p>29. கோபிசெட்டிபாளையம்</p><p>30. திருப்பூர்</p><p>31. தாராபுரம் / பழனி</p><p>32. பொள்ளாச்சி</p><p>33. கோவை கிழக்கு</p><p>34. கோவை மேற்கு</p><p>35. நீலகிரி</p><p>36. கரூர்</p><p>37. பெரம்பலூர்</p><p>38. அரியலூர் / லால்குடி</p><p>39. திருச்சிராப்பள்ளி</p><p>40. தஞ்சாவூர்</p><p>41. கும்பகோணம்</p><p>42. மயிலாடுதுறை</p><p>43. நாகபட்டினம்</p><p>44. திருவாரூர்</p><p>45. புதுக்கோட்டை</p><p>46. சிவகங்கை</p><p>47. ராமநாதபுரம்</p><p>48. தூத்துக்குடி</p><p>49. திருச்செந்தூர்</p><p>50. திருநெல்வேலி</p><p>51. நாங்குநேரி / கன்னியாகுமரி</p><p>52. கன்னியாகுமரி / நாகர்கோவில்</p><p>53. தென்காசி</p><p>54. சிவகாசி</p><p>55. விருதுநகர்</p><p>56. தேனி</p><p>57. மதுரை கிழக்கு</p><p>58. மதுரை மேற்கு</p><p>59. திண்டுக்கல்</p><p>மறுவரையறை ஆணையத்தின் இறுதி முடிவுகள் நாடாளுமன்ற ஒப்புதலுக்கு பின்னரே இறுதி வடிவம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>லிப்ட் வசதி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?- கும்மிடிப்பூண்டி ரெயில் நிலைய பணிகள் தாமதத்தால் மக்கள் அவதி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/public-inconvenienced-by-delays-in-gummidipoondi-railway-station-works</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/public-inconvenienced-by-delays-in-gummidipoondi-railway-station-works#comments</comments><guid isPermaLink="false">9b292d33-8d23-4e71-bea6-1b475d303d87</guid><pubDate>Sat, 08 Aug 2026 06:57:04 +0000</pubDate><atom:updated>2026-08-08T06:57:04.253Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம்,மறுசீரமைப்பு பணி,Gummidipoondi Railway Station</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/k2blz18l/gummidipoondi.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ரெயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் ஆமை வேகத்தில் நடக்கின்றன.]]></media:title><media:description type="html"><![CDATA[ ரெயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் ஆமை வேகத்தில் நடக்கின்றன.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/k2blz18l/gummidipoondi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி புறநகர் ரெயில் நிலையம் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக சுமார் ரூ.25 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. </p><h2><strong>மேம்பாட்டு பணிகள்</strong></h2><p>அவ்வாறு புதுப்பிக்கப்படும் போது ரெயில் நிலையத்தில் 4 நடைமேடைகளை இணைத்தப்படி பஜார் பகுதியில் இருந்து சிப்காட் பகுதியான பைபாஸ் சாலைக்கு லிப்ட் வசதியுடன் கூடிய புதிய நடைமேம்பாலம், பிரமாண்டமான நுழைவு வாயில் கட்டிடங்கள், எக்ஸ்லேட்டர் மற்றும் 4 வாகன நிறுத்துமிடங்கள் என பல்வேறு அடிப்படை வசதிகள்  அமைய உள்ளது.</p><p>இந்த திட்டத்திற்கான  பூமி பூஜை கும்மிடிப்பூண்டி ரெயில் நிலைய வளாகத்தில் கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது. அதன் பின்னர் அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6-ந்தேதி  பிரதமர் மோடி இந்த திட்டத்திற்கான அடிக்கல்லை காணொலி வாயிலாக நாட்டினார். </p><p>இதில்  ரெயில்வே துறை உயர் அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர். அந்த நிகழ்வின் போது 2024-ம் ஆண்டு தொடக்கத்தில்  <a href="https://www.maalaimalar.com/topic/கும்மிடிப்பூண்டி-ரெயில்-நிலையம்">கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம்</a> புதுப்பிக்கும் பணி முழுமையாக நிறைவடைந்து சேவைகள் அனைத்தும் பயன்பாட்டிற்கு வரும் என மண்டல ரெயில்வே நிர்வாகம் சார்பில் அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது.</p><h2><strong>75 சதவீத பணிகள்</strong></h2><p>ஆனால் அந்த பணியில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரெயில்வே துறை உயர் அதிகாரிகள் இந்த திட்ட பணிகளை நேரில் ஆய்வு செய்து 2025-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பணிகள் நிறைவடையும் எனவும் திட்டவட்டமாக  தெரிவித்தனர். ஆனால் தற்போது வரை 75 சதவீத பணிகள் கூட நிறைவு பெறாத நிலையே தொடர்கிறது.</p><p>மேலும், கும்மிடிப்பூண்டி பஜாரில் இருந்து ரெயில் நிலையத்திற்கு பயணிகள் வந்தால் செங்குத்தான படிகளில் ஏறி தான் 1, 2, 3, 4 ஆகிய பிளாட்பரங்களுக்கு செல்லவேண்டிய சூழல் உள்ளது. டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் எடுக்கும் வயதான பயணிகள் கால்கடுக்க படிகளில் ஏறி இறங்க வேண்டிய அவல நிலை உள்ளது. </p><p>கும்மிடிப்பூண்டி பஜாரில் இருந்து ரெயில் நிலையத்திற்குள் வருகிற பயணிகள் வசதிக்காகவும்,  ரெயில் நிலையத்திற்குள் நுழைய ஏதுவாக எந்த ஒரு லிப்ட் வசதியும் இதுவரை அமைக்கப்படவில்லை. எனவே அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரெயில் நிலையம் மேம்படுத்தும் இந்த சமயத்தில் லிப்ட் வசதியை ரெயில்வே நிர்வாகம் செய்திட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.</p><h2><strong>ஆமை வேகத்தில்</strong></h2><p>ரெயில் நிலைய மேம்பாட்டு பணிகள் ஆமை வேகத்தில் பல வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வருவதால் தினமும் புறநகர் மின்சார ரெயில் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே அம்ரித் பாரத் திட்டத்தின் அடிப்படையில் அனைத்து பணிகளையும், உடனடியாக நிறைவேற்றி தாம்பரம் ரெயில் நிலையம் போல கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் ஆந்திர மற்றும் வடமாநிலங்களுக்கான எக்ஸ்பிரஸ் ரெயில்களை நின்று செல்லவும் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கும்மிடிப்பூண்டி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் கூட்டம் -  திமுக தலைமைக்கு கடிதம் எதுவும் அரசு அனுப்பவில்லை?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/constituency-delimitation-all-party-mps-meeting-government-not-send-any-letter-to-dmk-leadership</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/constituency-delimitation-all-party-mps-meeting-government-not-send-any-letter-to-dmk-leadership#comments</comments><guid isPermaLink="false">a425184a-ebe9-41fa-b647-f857a1efacac</guid><pubDate>Sat, 08 Aug 2026 06:31:47 +0000</pubDate><atom:updated>2026-08-08T06:31:47.493Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,விஜய்,vijay,தொகுதி மறுவரையறை,Constituency Delimitation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/3fexkhs0/annaarivalayam1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anna Arivalayam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/3fexkhs0/annaarivalayam1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>தொகுதி மறுவரையறை</h2><p>மத்திய பா.ஜ.க. அரசு <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%88">தொகுதி மறுவரையறை</a> மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டி நிறைவேற்ற ஆலோசித்து வருகிறது. இதனால் தென்மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் நிலவுகிறது. இந்த விவகாரம் குறித்து ஆலோசித்து உரிய முடிவெடுக்கத் தமிழக எம்.பி.க்களுடன் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.</p> <p>இக்கூட்டத்தில் பங்கேற்க தமிழகத்தில் உள்ள மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் சாய்குமார் தனித்தனியாக கடிதம் அனுப்பியுள்ளார்.</p><h2>முதலமைச்சர் விஜய்</h2><p>இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் நடத்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தை <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/constituency-delimitation-issue-dmk-and-admk-to-boycott-meeting">தி.மு.க.</a>, அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் புறக்கணித்து உள்ளன. </p> <h2>கனிமொழி</h2><p>இதுதொடர்பாக தி.மு.க. எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘த.வெ.க. அரசு நடத்தும் அரசியல் நாடகத்தில் தி.மு.க. பங்கேற்காது என்றும் தொகுதி மறுவரையறையில் தி.மு.க.வின் முந்தைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p> <h2>அதிமுக</h2><p>அ.தி.மு.க.வும் இந்த கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என தெரிவித்துள்ளது. அதே போன்று பா.ம.க.வும் விஜய் தலைமையிலான கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக கூறி உள்ளது. தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க.வுக்கு ஒரு மேல் சபை எம்.பி. வழங்கப்பட்டு உள்ளது. எல்.கே.சுதீஷ் எம்.பி.யாக இருக்கிறார். அவர் இன்று டெல்லியில் இருப்பதாகவும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும் அந்த கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியூரில் இருக்கிறார். அதனால் அவரும் பங்கேற்கவில்லை.</p> <h2>திமுக தலைமை</h2><p>இந்நிலையில், அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த விவகாரத்தில் திமுக தலைமைக்கு அரசு தரப்பில் கடிதம் எதுவும் எழுதவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.</p><p>எம்.பி.க்களுக்கு மட்டும் அரசு தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும், பலருக்கும் அது நேற்று மாலை தான் சென்று சேர்ந்ததாகவும் தெரிய வந்துள்ளது. </p><p>திமுக தலைமை சொல்லாமல் நாங்கள் எப்படி கலந்து கொள்ள முடியும்? என அக்கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு! இன்றும், நாளையும் கைரேகை பதிவு சிறப்பு முகாம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-ration-shops-ekyc-fingerprint-camp-august-8-9-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-ration-shops-ekyc-fingerprint-camp-august-8-9-2026#comments</comments><guid isPermaLink="false">ba37e119-0633-4a20-932a-45b1e06f67bd</guid><pubDate>Sat, 08 Aug 2026 06:27:49 +0000</pubDate><atom:updated>2026-08-08T06:27:49.954Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>special camp,Ration Card,சிறப்பு முகாம்,Fingerprint,கைரேகை பதிவு,ரேஷன் கார்டு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/brsam5hs/finger-print.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Finger print]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/brsam5hs/finger-print.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ரேசன் கடைகளிலும்  இன்றும், நாளையும் இகேஒய்சி (eKYC) சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.</p><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><h2>கைவிரல் ரேகை</h2><p>தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன் படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களை சரிபார்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் விரல் ரேகைஅடிப்படையிலான சரிபார்ப்பினை (eKYC) மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. </p><h2>2 நாட்களுக்கு முகாம்</h2><p>அதன்படி குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதும் இடையூறுமின்றி இப்பணியினை செய்திட அறிவுறுத்தப்பட்டு கடந்த அக்டோபர் 2023 முதல் குடும்ப உறுப்பினர்களின் விரல் ரேகை சரிபார்ப்பு (eKYC) பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 95.86% eKYC பணியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>இந்த eKYC பதிவினை 100% நிறைவு செய்யும் பொருட்டு 08.08.2026 (இன்று) மற்றும் 09.08.2026 (நாளை) ஆகிய நாட்களில் தமிழகத்திலுள்ள அனைத்து நியாய விலைக்கடைகளிலும் சிறப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.</p><h2>கைரேகை பதிவு</h2><p>ஆகவே, நியாயவிலைக்கடைகளில் கைரேகை பதிவு (eKYC) செய்யப்படாமல் விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் கைரேகை விரல் (eKYC) பதிவு செய்ய வருகின்ற 08.08.2026 மற்றும் 09.08.2026 ஆகிய இரண்டு நாட்கள் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகளிலும் நடைபெறும் சிறப்பு முகாமினை பயன்படுத்தி விடுபட்ட குடும்ப அட்டைதாரர்கள் eKYC பதிவினை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&apos;சொந்த மண்ணில் வீடு கட்ட வேண்டும்&apos;:நள்ளிரவில் உத்தரகாண்ட் முதல்வரிடம் ரிஷப் பண்ட் கோரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/sports/rishabh-pant-midnight-plea-to-uttarakhand-cm-for-home</link><comments>https://www.maalaimalar.com/sports/rishabh-pant-midnight-plea-to-uttarakhand-cm-for-home#comments</comments><guid isPermaLink="false">b637b253-3da2-467a-a875-7fa5f5014fcc</guid><pubDate>Sat, 08 Aug 2026 06:12:56 +0000</pubDate><atom:updated>2026-08-08T06:12:56.265Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Uttarakhand,உத்தரகாண்ட்,Rishabh Pant,Pushkar Singh Dhami,புஷ்கர் சிங் தாமி,ரிஷப் பண்ட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/mc576fog/risab.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rishabh Pant-Pushkar Singh Dhami ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/mc576fog/risab.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி விக்கெட் கீப்பரும் பேட்டருமான ரிஷப் பண்ட் தனது சொந்த மாநிலமான உத்தரகாண்டில் வீடு கட்டுவதற்கும் வசிப்பிடத்தை மாற்றுவதற்கும் நிலம் பெற உதவுமாறு அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமிக்கு தனது எக்ஸ் தளத்தில் நள்ளிரவில் பகிரங்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><h2><strong>3 ஆண்டு கால காத்திருப்பு</strong></h2><p>டெல்லியிலிருந்து தனது வசிப்பிடத்தை உத்தரகாண்டிற்கு மாற்ற விரும்புவதாகவும், ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக நிலம் வாங்குவது ஒரு பெரும் கனவாக மாறிவிட்டதாகவும் பண்ட் குறிப்பிட்டுள்ளார். அரசு நிர்ணயிக்கும் நியாயமான விலையிலேயே நிலத்தை வாங்கத் தயாராக இருப்பதாகவும், இலவசமாக எந்த நிலத்தையும் கேட்கவில்லை என்றும் அவர் தெளிவாகக் கூறியுள்ளார்.</p><h2><strong>சொந்த மண் பாசம்</strong></h2><p>தனது சொந்த மாநில மக்களுக்கு சேவை செய்யவும், தனது முதல் சொந்த வீட்டை உத்தரகாண்டில் கட்டவும் விரும்புவதாக உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.</p><h2><strong>முதலமைச்சரின் பதில்</strong></h2><p>பண்ட்டின் பதிவுக்குப் பதிலளித்த உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, "நீங்கள் உத்தரகாண்டின் பெருமை" எனக் கூறி, அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் விதிகளுக்கு உட்பட்டு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தற்போது இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ள நிலையில், பண்ட்டின் இந்த பதிவும் அதற்கு முதலமைச்சர் அளித்த பதிலும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>கோவில்களில் செல்போன் கொண்டு செல்ல தடை! பிரபலங்களுக்கும் கட்டுப்பாடு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-devotees-carrying-mobile-phones-into-temples</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-devotees-carrying-mobile-phones-into-temples#comments</comments><guid isPermaLink="false">a5744571-42a4-4d02-83a5-f23b567e72b8</guid><pubDate>Sat, 08 Aug 2026 06:01:34 +0000</pubDate><atom:updated>2026-08-08T06:01:34.164Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Temples,கோவில்கள்,இந்து சமய அறநிலையத்துறை,CELLPHONES,செல்போன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/85yj38ic/temple.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கோவில்களில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை]]></media:title><media:description type="html"><![CDATA[ கோவில்களில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/85yj38ic/temple.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கோவில் வளாகத்துக்குள் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு பலகையினை கோவில் நுழைவு வாசல் மற்றும் வெளியே பக்தர்களுக்கு நன்றாக தெரியும் வகையில் வைக்கப்பட வேண்டும்.</strong></em></p><p>தமிழகத்தில் உள்ள கோவில்களுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.</p><h2><strong>ரீல்ஸ் அதிகரிப்பு</strong></h2><p>ஆனாலும் சில கோவில்களில் இந்த நடைமுறைகள் பின்பற்றப்படாமல் சமீப காலமாக சில பக்தர்கள் கோவில்களுக்குள் புகைப்படம் எடுத்தல், வீடியோ பதிவு செய்தல், செல்பி எடுத்தல், சமூக வலைதளங்களுக்கான குறும்படம் (ரீல்ஸ்) எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. இதனால் கோவில்களின் புனிதத் தன்மை மற்றும் ஆன்மீக சூழல் பாதிக்கப்படுவதோடு இறை வழிபாடு செய்ய வருகை தரும் பக்தர்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்துகிறது.</p><h2><strong>செல்போனுக்கு தடை</strong></h2><p>எனவே கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது குறித்தும் வருகை தரும் பக்தர்களின் செல்போன்களை பெற்று பாதுகாத்து மீண்டும் அவர்களிடம் ஒப்படைப்பது குறித்த நடைமுறையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/46-projects-worth-rs-24585-crore-cancelled-government-announcement">இந்து சமய அறநிலையத்துறை</a> அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.</p><p>அதனைத் தொடர்ந்து கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்வதை தடுக்க  சில முக்கிய கட்டுப்பாடுகள் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>இது தொடர்பாக <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">இந்து சமய அறநிலையத்துறை</a> ஆணையர் டாக்டர் டி.ஜி.வினய் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-</p><h2><strong>அறிவிப்பு பலகை</strong></h2><p>கோவில் வளாகத்துக்குள் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு பலகையினை கோவில் நுழைவு வாசல் மற்றும் வெளியே பக்தர்களுக்கு நன்றாக தெரியும் வகையில் வைக்கப்பட வேண்டும்.</p><p>ஒலி பெருக்கி மூலமும் இந்த தகவலை அறிவிக்க வேண்டும்.</p><h2><strong>பெட்டக வசதி</strong></h2><p>பக்தர்கள் கோவிலுக்குள்  நுழையும் முன் தங்களின் செல்போன்களை பாதுகாப்பாக வைக்கும் வகையில் கைபேசி பாதுகாப்பு பெட்டக வசதியினை கோவில் நிர்வாகம் உடனே ஏற்படுத்த வேண்டும்.</p><p>இந்த மையங்கள் கோவில் நுழைவு வாசல் அல்லது காலணி பாதுகாப்பு மையத்திற்கு அருகிலேயே அமைக்கப்பட வேண்டும்.</p><h2><strong>ரூ.5 கட்டணம்</strong></h2><p>செல்போன்களை பெற்று பாதுகாப்பதற்கான கட்டணமாக ஒரு செல்போனுக்கு ரூ.5 தொகை வசூலிக்கப்பட வேண்டும். இதற்கான ரசீது வழங்கப்பட வேண்டும்.</p><p>வருகிற 1-ந்தேதி முதல்  அனைத்து முதுநிலை கோவில்களிலும் பக்தர்கள் செல்போனை கோவிலுக்குள் கொண்டு செல்லும் நடைமுறை முழுமையாக தடை செய்யப்பட வேண்டும்.</p><h2><strong>பணியாளர் நியமனம்</strong></h2><p>பக்தர்களிடம் இருந்து செல்போனை பெற்று பாதுகாப்பாக வைத்து மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்கும் பணிக்கு தேவையான பணியாளர்கள், தன்னார்வலர்கள் நியமிக்கப்பட வேண்டும்.</p><h2><strong>போலீசில் புகார்</strong></h2><p>கோவில் வளாகத்துக்குள் செல்போனை பயன்படுத்துவது புகைப்படம், வீடியோ எடுப்பது குறித்து கண்காணித்திட போதிய எண்ணிக்கையிலான பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.</p><p>அனுமதி இல்லாமல் புகைப்படம், வீடியோ எடுக்கும் பக்தர்கள் மீது போலீசில் புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><h2><strong>முக்கிய பிரமுகர்களுக்கு தடை</strong></h2><p>கோவிலுக்குள் இறைவனின் உருவங்களை புகைப்படம் எடுப்பது, கோவில் வளாகத்தில் புகைப்படம் எடுப்பது, வீடியோ ரீல்ஸ் போன்றவற்றை பதிவு செய்வது மற்றும் வி.ஐ.பி.க்கள், முக்கியஸ்தர்கள், திரைத்துறை பிரபலங்களுடன் கோவிலுக்குள் வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்க அனுமதி வழங்குவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இந்திய பொருட்களுக்கு 100% வரி: அமெரிக்க செனட் சபையில் மசோதா நிறைவேற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/world/us-senate-approves-100-percent-tariff-on-russian-oil-buyers-what-it-means-for-india</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-senate-approves-100-percent-tariff-on-russian-oil-buyers-what-it-means-for-india#comments</comments><guid isPermaLink="false">321c4453-1924-4e6b-84c8-b5bcfc55e768</guid><pubDate>Sat, 08 Aug 2026 05:51:26 +0000</pubDate><atom:updated>2026-08-08T05:51:26.216Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,Russia,trump,ரஷ்யா,டொனால்ட் டிரம்ப்,US Senate,அமெரிக்க செனட் சபை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/iav4t1sw/trump.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TRUMP]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/iav4t1sw/trump.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 100 சதவீத வரி விதிக்கும் அதிகாரம் அளிக்கும் புதிய தடைகள் மசோதாவிற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதாவுக்கு லிண்ட்சே ஓ.கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026 எனப் பெயரிடப்பட்டுள்ளது. செனட் சபையில் 86-11 என்ற வாக்கு வித்தியாசத்தில் இது நிறைவேறியுள்ளது.</p><h2>பா<strong>திக்கப்படும் நாடுகள்</strong></h2><p>ரஷ்யாவின் ஆற்றல் வளங்களை அதிகம் வாங்கும் முதன்மை 5 நாடுகளை இலக்காகக் கொண்டு இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா, சீனா, அஜர்பைஜான், ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. உக்ரைன் மீதான போரை நிறுத்துவதற்கும், ரஷ்யாவிற்கான நிதி ஆதாரங்களை முடக்குவதற்கும், இந்த நாடுகளின் ஏற்றுமதி பொருட்கள் மீது 100% வரை வரிகளை விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிற்கு இம்மசோதா முழு அதிகாரம் அளிக்கிறது.</p><h2><strong>ஈரான் தடைகள் நீட்டிப்பு</strong></h2><p>ரஷ்யா மீதான கட்டுப்பாடுகளுடன் சேர்த்து, 1996-ஆம் ஆண்டின் ஈரான் தடைகள் சட்டத்தையும் 2031 வரை நீட்டிக்க இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.</p><h2><strong>இந்தியாவிற்கு</strong> ஏற்படும் பாதிப்புகள்</h2><p>உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து இந்தியா மலிவு விலையில் ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது. அமெரிக்க செனட்டின் இந்த நடவடிக்கை இந்திய அமெரிக்க வர்த்தக உறவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.</p><h2><strong>ஏற்றுமதிச் செலவு உயர்வு</strong></h2><p>அமெரிக்காவிற்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு 100% வரி விதிக்கப்பட்டால், இந்தியப் பொருட்களின் விலை உயர்ந்து அமெரிக்கச் சந்தையில் கடும் போட்டி நிலவலைச் சந்திக்க நேரிடும்.</p><h2>அடுத்<strong>தகட்ட நடவடிக்கை</strong></h2><p>செனட் சபையில் ஒப்புதல் பெற்றுள்ள இம்மசோதா, பிரதிநிதிகள் சபையின் பரிசீலனைக்கு அனுப்பப்படும். அவர்கள் ஆகஸ்ட் 31 அன்று மீண்டும் கூடும்போது இந்த மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்பட்டால் குடியரசுத் தலைவரின் கையொப்பத்திற்கு அனுப்பப்படும்.</p>]]></content:encoded></item><item><title>எம்பிக்கள் கூட்டத்தை புறக்கணிப்பவர்களை மக்கள் கவனிக்கின்றனர்- மாணிக்கம் தாகூர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/people-are-watching-those-who-boycott-mps-meeting-manickam-thakur</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/people-are-watching-those-who-boycott-mps-meeting-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">df79da8f-d5a3-43f5-a71b-ec83de613c34</guid><pubDate>Sat, 08 Aug 2026 05:47:28 +0000</pubDate><atom:updated>2026-08-08T05:47:28.699Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN MPs,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore,தொகுதி மறுவரையறை,Delimitation,தமிழக எம்பிக்கள் கூட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/pbwf6wy9/Manickam-tgore.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Manickam tagore]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/pbwf6wy9/Manickam-tgore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>எம்பிக்கள் கூட்டத்தை புறக்கணிப்பவர்களை மக்கள் கவனிக்கின்றனர் என்றும் புறக்கணித்தவர்களை நினைவில் கொள்வர் என்றும் காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழக நலன்களை விடத் தங்கள் அரசியலுக்கு முன்னுரிமை அளிப்பவர்கள் கலந்துகொள்ளாமல் இருக்கலாம்.</p><p>ஆனால், தமிழகத்திற்கு முதலிடமும், அரசியலுக்கு இரண்டாமிடமும் கொடுப்பவர்கள், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் கூட்டப்பட்டுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள்.</p><p>இது கட்சி அரசியல் பற்றியது அல்ல.</p><p>இது தமிழகத்தின் உரிமைகள், நலன்கள் மற்றும் எதிர்காலம் பற்றியது.</p><p>தமிழக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தேவைப்பட்ட நேரத்தில் தமிழகத்துடன் நின்றவர்கள் யார் என்பதை அவர்கள் நினைவில் கொள்வார்கள்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>தொகுதி மறுவரையறை</h2><p>மத்திய பா.ஜ.க. அரசு தொகுதி மறுவரையறை மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டி நிறைவேற்ற ஆலோசித்து வருகிறது. இதனால் தென்மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் நிலவுகிறது. </p><p>இந்த விவகாரம் குறித்து ஆலோசித்து உரிய முடிவெடுக்கத் தமிழக எம்.பி.க்களுடன் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.</p><h2>முதலமைச்சர் விஜய்</h2><p>தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான எம்.பி.க்கள் கூட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக எம்பிக்கள் பங்கேற்கின்றன. திமுக, அதிமுக புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.</p><p>இதையடுத்து திமுக, அதிமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்குமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்து இருந்தார்.</p><h2>திமுக - அதிமுக</h2><p>இந்நிலையில் தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான எம்.பி.க்கள் கூட்டத்தை அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. அதிமுகவை சேர்ந்த எம்.பி.க்கள் இன்பதுரை, தம்பிதுரை, தனபால், தர்மர் ஆகிய 4 பேரும் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தவெக அரசு நடத்தும் அரசியல் நாடகத்தில் திமுக பங்கேற்காது என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.</p><p>மாநிலங்களவை எம்.பி.யும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன், தேமுதிகவை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. சுதீஷூம் பங்கேற்க மாட்டார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Those who place their politics above Tamil Nadu’s interests may choose not to attend.<br><br>But those who put Tamil Nadu first, and politics second, will attend the all-party meeting called by the Hon’ble <a href="https://x.com/CMOTamilnadu?ref_src=twsrc%5Etfw">@CMOTamilnadu</a> .<br><br>This is not about party politics. <br>It is about Tamil Nadu’s…</p>&mdash; Manickam Tagore .Bமாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) <a href="https://x.com/manickamtagore/status/2085946567107002548?ref_src=twsrc%5Etfw">August 8, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>எம்பிக்கள் கூட்டம்: காவிரி பிரச்சனையை திசைத்திருப்ப த.வெ.க. அரசு நடத்தும் நாடகம் - கனிமொழி
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-constituency-delimitation-mps-meeting-tvk-government-drama-divert-attention-from-cauvery-issue</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-constituency-delimitation-mps-meeting-tvk-government-drama-divert-attention-from-cauvery-issue#comments</comments><guid isPermaLink="false">b3991184-e57c-42b5-ace5-74540c0b0c80</guid><pubDate>Sat, 08 Aug 2026 05:46:31 +0000</pubDate><atom:updated>2026-08-08T05:46:31.839Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Kanimozhi,கனிமொழி,vijay,தொகுதி மறுவரையறை,Constituency Delimitation,தவெக அரசு,tvk government</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/c5o0bp7n/kanimozhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kanimozhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/c5o0bp7n/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுக எம்பி <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF">கனிமொழி</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><h2>தொகுதி மறுவரையறை</h2><p>தொகுதி மறுவரையறையில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் காப்பதிலும் Fair Delimitation என்பதிலும் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.கழகம் தனது முந்தைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது.</p><p>இப்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், தொகுதி மறுவரையறை சட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றப் போவதாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. திருத்தப்பட்ட சட்டமுன்வடிவு இன்னும் கையில் கிடைக்கப்பெறவும் இல்லை.</p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>இந்த விவகாரத்தில், தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை ஏற்கெனவே நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானங்களில் தெரிவித்துவிட்டோம். அதனை ஒருமனதாக நிறைவேற்றிய கட்சிகளுக்கும் அதே நிலைப்பாட்டில் உள்ளபோது,<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-consultation-with-tamil-nadu-mps-on-delimitation"> முதலமைச்சர்</a> கூட்டும் கூட்டத்துக்கான தேவை என்ன? முந்தைய நிலைப்பாட்டில் இருந்து அந்தக் கட்சிகளை மாற்ற வேண்டும் என்றா?</p> <h2>காவிரி பிரச்சனை</h2><p>காவிரிக்காகப் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், மேகதாது அணைக்கு எதிராக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாமல், காவிரி பிரச்சனையைத் திசைத்திருப்ப த.வெ.க. அரசு நடத்தும் நாடகம்தான் இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டம். எனவே, தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் ஒருமித்த கோரிக்கையை நிராகரித்துள்ள த.வெ.க. அரசின் இன்றைய கூட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது.</p> <h2>மேகதாது அணை</h2><p>உழவர்கள் மேல் உண்மையான அக்கறை இருந்தால், மேகதாது அணைக்கு எதிராகச் சட்டமன்றத்தில் நாம் நிறைவேற்றிய தீர்மானத்தை தமிழ்நாட்டின் M.P.க்களுடன் இணைந்து ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வழங்கிடத் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகளை அனுப்ப முதலமைச்சர் தயாரா?</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>14 மாதங்கள் முடங்கியிருந்த போது அவர்தான் ஊக்கமளித்தார்-நடிகர் விஷால் உருக்கம்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-vishal-emotional-about-fiancee-sai-tanshika-support-during-14-month-hiatus</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-vishal-emotional-about-fiancee-sai-tanshika-support-during-14-month-hiatus#comments</comments><guid isPermaLink="false">cd555ba5-7a03-4c9d-a5ee-a9b9074a36fb</guid><pubDate>Sat, 08 Aug 2026 05:22:57 +0000</pubDate><atom:updated>2026-08-08T05:22:57.794Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sai Dhanshika,Magudam,மகுடம்,நடிகர் விஷால்,Actor Vishal,சாய் தன்ஷிகா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/pbxekqgw/Untitled-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Actor Vishal -Sai Dhanshika]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/pbxekqgw/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சினிமா பயணத்தில் சந்தித்த சவால்கள் மற்றும் தயாரிப்புச் சிக்கல்கள் காரணமாகத் தாம் கடந்த 14 மாதங்களாகப் படங்களில் நடிக்க முடியாமல் வீட்டில் முடங்கியிருந்ததாகவும், அந்த இக்கட்டான காலகட்டத்தில் தனக்குத் தொடர்ந்து நம்பிக்கையும் ஊக்கமும் அளித்தது தனது வருங்கால மனைவி சாய் தன்ஷிகா என நடிகர் விஷால் உருக்கமாகப் பேசியுள்ளார். திரையுலக நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய நடிகர் விஷால், தனது சினிமா வாழ்க்கை மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து மனம் திறந்து பகிர்ந்து கொண்டார்.</p><h2><strong>14 மாத இடைவெளி</strong></h2><p>திரைப்படத் தயாரிப்பில் ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகள், வழக்குகள் மற்றும் தொழில்ரீதியான முடக்கங்கள் காரணமாகக் கடந்த 14 மாதங்களாகத் தன்னால் எந்தவொரு புதிய திரைப்படத்திலும் நடிக்க இயலவில்லை என்று <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/vishals-magudam-trailer-released">விஷால் </a>சுட்டிக்காட்டினார். திரைத்துறை வாழ்வில் இது மிகவும் மன உளைச்சலைத் தந்த காலகட்டமாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.</p><h2><strong>தடைகளைத் தாண்டிய ஊக்கம்</strong></h2><p>வீட்டில் முடங்கியிருந்த அந்தச் சோதனையான சூழலில், "மீண்டும் பழைய வேகத்துடன் களமிறங்க முடியும்" என்ற எண்ணத்தையும் தன்னம்பிக்கையையும் விதைத்து, தொடர்ந்து ஊக்கமளித்தவர் எனது வருங்கால மனைவி சாய் தன்ஷிகா விஷால் தெரிவித்தார். மேலும், அவர் இல்லையென்றால் இவ்வளவு பாசிட்டிவாக உங்கள் முன் என்னால் நின்றிருக்க முடியாது என கூறி சாய் தன்ஷிகாவுக்கு தனது நன்றியை விஷால் நெகிழ்ச்சியுடன் பதிவு செய்தார்.</p><h2><strong>இயக்குநராக புதிய பரிமாணம்:</strong></h2><p>நடிகராக மட்டுமின்றி, திரைப்படங்களை இயக்கும் புதிய பயணத்திலும் விஷால் கவனம் செலுத்தி வருகிறார். அவரது இயக்கத்திலும் நடிப்பிலும் உருவாகி வரும் ‘மகுடம்’ உள்ளிட்ட திரைப்படங்களின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், இப்பேச்சு சினிமா வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.</p><h2><strong>திரையுலகினர் வரவேற்பு</strong></h2><p>சினிமாவில் பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து மீண்டு வந்துள்ள விஷாலின் இந்த நேர்மையான பேச்சு, அவரது ரசிகர்களாலும் திரையுலகப் பிரபலங்களாலும் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. தடைகளைத் தாண்டி அவர் மீண்டும் முழு வீச்சில் களமிறங்குவது அவரது திரைப்பயணத்திற்குப் புதிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY: தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம்: நகை வாங்குவோர் கலக்கம்!
</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-8-8-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-8-8-2026#comments</comments><guid isPermaLink="false">fbb52bbf-9e77-4bde-91fb-66a7a1ccecbd</guid><pubDate>Sat, 08 Aug 2026 05:15:00 +0000</pubDate><atom:updated>2026-08-08T05:15:00.810Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-16/epody74y/gold4.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-16/epody74y/gold4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றத்துடன் காணப்படுகிறது. </p><p>ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.1,05,760-க்கும், கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.13,220-க்கும் விற்பனையானது. 2-ந்தேதி ஒரு சவரன் ரூ.1,05,760-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.13,220-க்கும் விற்பனையானது. </p><p>3-ந்தேதி சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,06,000-க்கும், கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.13,250-க்கும் விற்பனையானது. 4-ந்தேதி சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,05,600-க்கும், கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.13,200-க்கு விற்பனையானது.</p> <p>5-ந்தேதி காலை சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ரூ.1,06,880-க்கும், கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.13,360-க்கும் விற்பனையான நிலையில் மீண்டும் மாலையில் விலை அதிகரித்தது. மாலையில் சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.1,07,840-க்கும் கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.13,480 விற்பனையானது.</p><p>6-ந்தேதி சவரனுக்கு ரூ.2,160 உயர்ந்து ரூ.1,10,000-க்கும், கிராமுக்கு ரூ.270 உயர்ந்து ரூ.13,750-க்கும் விற்பனையானது.</p> <p>நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 900-க்கும், சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து,  ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. </p><h2>தங்கம் விலை உயர்வு</h2><p>இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.1,11,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.13,965-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p> <h2>வெள்ளி விலை நிலவரம்</h2><p>வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி விலை ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-</h2><p>07-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,200</p><p>06-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,10,000</p><p>05-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,07,840</p><p>04-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,600</p><p>03-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,000</p> <h2>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-</h2><p>07-08-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>06-08-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>05-08-2026- ஒரு கிராம் ரூ.240</p><p>04-08-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>03-08-2026- ஒரு கிராம் ரூ.235</p> ]]></content:encoded></item><item><title>உனது தந்தைக்கு அடுத்து நீதான்.. ஜீஷான் சித்திக் எம்எல்ஏவுக்கு கொலை மிரட்டல்</title><link>https://www.maalaimalar.com/news/national/death-threat-audio-targeting-mla-zeeshan-siddique-goes-viral</link><comments>https://www.maalaimalar.com/news/national/death-threat-audio-targeting-mla-zeeshan-siddique-goes-viral#comments</comments><guid isPermaLink="false">32b0266b-ea92-4774-8249-16a52b5fd6c1</guid><pubDate>Sat, 08 Aug 2026 05:11:20 +0000</pubDate><atom:updated>2026-08-08T05:11:20.975Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாபா சித்திக்,தேசியவாத காங்கிரஸ் கட்சி,ஜீஷான் சித்திக்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/qm3e2ado/sid1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/qm3e2ado/sid1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உனது தந்தைக்கு அடுத்து நீ தான்' என ஜீஷான் சித்திக் எம்.எல்.ஏ.வுக்கு ஆடியோவில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><h2>ஆடியோவில் மிரட்டல்</h2><p>முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான பாபா சித்திக் கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மும்பை பாந்திரா பகுதியில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியான ஜிஷான் அக்தர் என்பவரின் பெயரில் தற்போது ஒரு மிரட்டல் ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. </p><p>அதில் பாபா சித்திக்கின் மகனும், எம்.எல்.ஏ.வுமான ஜீஷான் சித்திக்கை மிரட்டும் வகையில் இந்தி மொழியில் உள்ள அந்த ஆடியோவில் கூறப்பட்டு இருப்பதாவது:-</p><h2>ஜீஷான் சித்திக்</h2><p>"உன்னுடைய தந்தையை நான்தான் கொன்றேன். இப்போது உனக்கான மரண வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு விட்டது. உன்னுடைய பாதுகாப்பை எவ்வளவு வேண்டுமானாலும் பலப்படுத்திக்கொள். கடந்த முறை நீ அதிர்ஷ்டவசமாக தப்பிவிட்டாய், ஆனால் இந்த முறை எங்களிடம் இருந்து தப்பவே முடியாது."</p><p>இவ்வாறு அந்த ஆடியோவில் மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.</p><h2>போலீசார் தீவிர விசாரணை</h2><p>இந்த ஆடியோ குறித்து ஜீஷான் சித்திக்கின் சகோதரி பாந்திரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கி உள்ளனர். மிரட்டல் விடுக்கப்பட்ட அந்த ஆடியோ பதிவின் உண்மைத்தன்மை என்ன? </p><p>அது நிஜமாகவே தலைமறைவாக உள்ள குற்றவாளி ஜிஷான் அக்தர் பேசியதுதானா? மற்றும் அது எந்த ஐ.பி முகவரியிலிருந்து இணையதளத்தில் பதி வேற்றம் செய்யப்பட்டது? என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.</p><p>இந்த கொலை மிரட்டல் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பழனி நில மோசடி வழக்கில் கைதான வழக்கறிஞர் அன்வர்தீன் உயிரிழப்பு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-temple-land-fraud-arrested-lawyer-anwardeen-death</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-temple-land-fraud-arrested-lawyer-anwardeen-death#comments</comments><guid isPermaLink="false">d4e0f825-f54f-4615-9480-b52171d6dd95</guid><pubDate>Sat, 08 Aug 2026 04:30:49 +0000</pubDate><atom:updated>2026-08-08T04:30:49.773Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உயிரிழப்பு,dead,pazhani,பழனி நில மோசடி,வழக்கறிஞர் அன்வர்தீன்,Anwardheen</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/24gxm0us/pazhani2.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Advocate Anwardeen- Palani]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/24gxm0us/pazhani2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பழனி ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் கைதான சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனிடம், திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கே வந்து மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினார். பின்னர் அவரை 21-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.</p><h2>மோசடி பத்திரப்பதிவு</h2><p>பழனி கோவில் அடிவாரம் பகுதியில் தண்டபாணி சுவாமிகள் மடத் தின் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் உள்ளது. இந்த நிலம் கடந்த மாதம் 6-ந்தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில், தனி நபர்களுக்கு ரூ.2 கோடிக்கு கிரையமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது.</p><p>தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த மோசடி தொடர்பாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் நிலத்தை விற்பனை செய்த விழுப்புரத்தைச் சேர்ந்த ஆசிரியர் முருகதாஸ், நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை (60), சேதுபதி (67) அவர்களுக்கு உதவிய பழனி கவுண்டன்குளம் பகுதியை சேர்ந்த வக்கீல் அன்வர்தீன் (65) ஆகிய 4 பேரை கைது செய்தனர். </p><p>அவர்களை போலீஸ் காவலில் எடுத்து கடந்த 3 நாட்களாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.</p><h2>நேரில் விசாரணை</h2><p>அதேநேரம் இந்த வழக்கில் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்ட சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் நெஞ்சுவலி காரணமாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். </p><p>இதனால் அவரை நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்த முடியவில்லை. இதையடுத்து மாஜிஸ் திரேட் பாக்கியராஜ் அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் வந்து ஜஸ்டின் மணிகண்டனிடம் விசாரணை நடத்தினார். பின்னர் அவரை வருகிற 21-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுச்சென்றார்.</p><p>திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் ஜஸ்டின் மணிகண்டனுக்கு 2 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட இருக்கிறது. அதன் பிறகு அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டால் மதுரை சிறைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.</p><p>இதனிடையே ஆசிரியர் முருகதாஸ், சேதுபதி, அன்வர்தீன் ஆகியோர் தரப்பில் ஜாமீன் கேட்டு திண்டுக் கல் 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. </p><p>அந்த மனுக்களை தள்ளுபடி செய்து நேற்று கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து மாலையில் ஆசிரியர் முருகதாஸ் உள்பட 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 12-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் பாக்கியராஜ் உத்தரவிட்டார். பின்னர் அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.</p><h2>அன்வர்தீன் உயிரிழப்பு</h2><p>இந்நிலையில், பழனி கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கில் கைதான வழக்கறிஞர் அன்வர்தீன் சிறையில் உயிரிழந்துள்ளார்.</p><p>நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் நீதிமன்றக்காவலில் அடைக்கப்பட்டிருந்த அன்வர்தீன் உயிரிழந்துள்ளார்.</p><p>சர்க்கரை நோய், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் அன்வர்தீனுக்கு சிறையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என்றும் இதுகுறத்து விசாரித்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை விவகாரம் - விஜய் தலைமையிலான கூட்டத்தை புறக்கணிக்கும் திமுக - அதிமுக
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/constituency-delimitation-issue-dmk-and-admk-to-boycott-meeting</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/constituency-delimitation-issue-dmk-and-admk-to-boycott-meeting#comments</comments><guid isPermaLink="false">34619411-edfb-416b-b268-80202383a1a3</guid><pubDate>Sat, 08 Aug 2026 04:30:29 +0000</pubDate><atom:updated>2026-08-08T04:30:29.433Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,விஜய்,ADMK,அதிமுக,vijay,தொகுதி மறுவரையறை,Constituency Delimitation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/xeghepke/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay  - Inbadurai - Kanimozhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/xeghepke/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக விஜய் தலைமையிலான கூட்டத்தை திமுக - அதிமுக புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளது.</strong></em></p><h2>தொகுதி மறுவரையறை</h2><p>மத்திய பா.ஜ.க. அரசு <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%88">தொகுதி மறுவரையறை</a> மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டி நிறைவேற்ற ஆலோசித்து வருகிறது. இதனால் தென்மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் நிலவுகிறது. இந்த விவகாரம் குறித்து ஆலோசித்து உரிய முடிவெடுக்கத் தமிழக எம்.பி.க்களுடன் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.</p> <h2>தமிழக அரசு</h2><p>இக்கூட்டத்தில் பங்கேற்க தமிழகத்தில் உள்ள மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் சாய்குமார் தனித்தனியாக கடிதம் அனுப்பியுள்ளார்.</p>  <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான எம்.பி.க்கள் கூட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக எம்பிக்கள் பங்கேற்கின்றன. திமுக, அதிமுக புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து திமுக, அதிமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்குமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்து இருந்தார்.</p><h2>திமுக - அதிமுக</h2><p>இந்நிலையில் தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான எம்.பி.க்கள் கூட்டத்தை அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. அதிமுகவை சேர்ந்த எம்.பி.க்கள் இன்பதுரை, தம்பிதுரை, தனபால், தர்மர் ஆகிய 4 பேரும் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தவெக அரசு நடத்தும் அரசியல் நாடகத்தில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/aadav-arjuna-and-udhayanidhi-stalin-argument-in-tn-assembly">திமுக</a> பங்கேற்காது என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.</p><p>மாநிலங்களவை எம்.பி.யும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன், தேமுதிகவை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. சுதீஷூம் பங்கேற்க மாட்டார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>ரூ. 7000 தள்ளுபடியுடன் விற்பனைக்கு வரும் விவோ ஸ்மார்ட்போன்</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/vivo-x200t-to-sell-for-rs-62999-during-flipkart-freedom-sale</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/vivo-x200t-to-sell-for-rs-62999-during-flipkart-freedom-sale#comments</comments><guid isPermaLink="false">26137caf-59ec-4588-9fa9-1eee581c3b1d</guid><pubDate>Sat, 08 Aug 2026 04:24:00 +0000</pubDate><atom:updated>2026-08-08T04:24:00.000Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Vivo,Flipkart,smartphone,ஸ்மார்ட்போன்,விவோ,ப்ளிப்கார்ட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/ci6xiuch/Vivo-X200T.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vivo X200T]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/ci6xiuch/Vivo-X200T.png?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/vivo">விவோ</a> நிறுவனத்தின் X200T ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தலைசிறந்த கேமரா, பிளாக்ஷிப் தர செயல்திறன் மற்றும் நீண்ட நேர பேட்டரி பேக்கப் இந்த ஸ்மார்ட்போனின் குறிப்பிடத்தக்க அம்சங்களாக உள்ளன. </p><p>இந்திய சந்தையில் ரூ. 69,999 விலையில் விற்பனை செய்யப்ட்டு வரும் விவோ X200T <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மார்ட்போன்</a> ப்ளிப்கார்ட் ஃப்ரீடம் சேல் சிறப்பு விற்பனையில் சிறப்பு தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது.</p><h2>சலுகை விவரம்:</h2><p>ப்ளிப்கார்ட் ஃப்ரீடம் சேல் சிறப்பு விற்பனையில் இந்த விவோ X200T ஸ்மார்ட்போனின் 512 ஜிபி மெமரி வேரியண்ட் ரூ. 7,000 தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது.</p><p>இதனால் ரூ. 69,999-க்கு விற்பனை செய்யப்பட்ட விவோ X200T ஸ்மார்ட்போன் தற்போது ரூ. 62,999 விலையிலேயே விற்பனைக்கு கிடைக்கிறது. இ்த சலுகையை பெற பயனர்கள் எஸ்.பி.ஐ. வங்கி கிரெடிட் கார்டு வைத்திருக்க வேண்டும்.</p><p>மேலும், இந்த தள்ளுபடி ஸ்டாக் இருக்கும் வரை அல்லது குறிப்பிட்ட நேரம் என குறுகிய காலத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த சலுகை ஒவ்வொரு பகுதிக்கு ஏற்ப வேறுபடலாம்.</p><h2>சிறப்பம்சங்கள்:</h2><p>அம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் 2800x1260 பிக்சல் Full HD+ AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 9400+ பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.</p><p>புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமராவுடன் மூன்று 50MP சென்சார்களும், 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கேமரா சார்ந்து பல்வேறு அம்சங்கள் மற்றும் பிரத்யேக போட்டோ மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது.</p><p>ஆண்ட்ராய்டு 15 ஓ.எஸ். கொண்டிருக்கும் விவோ X200T ஆண்ட்ராய்டு 16 அப்டேட் பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மாரட்போன் 6200mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் விவோ X200T 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ் மற்றும் பல்வேறு கனெக்டிவிட்டி சென்சார்களுடன் வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>முன்பதிவில் மாஸ் காட்டிய சாம்சங் ஃபோல்டபில் ஸ்மார்ட்போன்கள்</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/samsung-reports-30-higher-global-pre-orders-for-galaxy-z-fold-8-series</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/samsung-reports-30-higher-global-pre-orders-for-galaxy-z-fold-8-series#comments</comments><guid isPermaLink="false">0c3eef33-3482-4498-bb75-74281f79b7d5</guid><pubDate>Sat, 08 Aug 2026 03:44:00 +0000</pubDate><atom:updated>2026-08-08T03:44:00.000Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Samsung,சாம்சங்,Foldable Smartphone,மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/bq5migci/samsung-Galaxy-Z-Fold8.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ samsung Galaxy Z Fold8]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/bq5migci/samsung-Galaxy-Z-Fold8.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/samsung">சாம்சங்</a> நிறுவனத்தின் சமீபத்திய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சீரிஸ் கேலக்ஸி Z ஃபோல்டு 8 அல்ட்ரா, கேலக்ஸி Z ஃபோல்டு 8 மற்றும் கேலக்ஸி Z ப்ளிப் 8 ஆகியவற்றிற்கான உலகளாவிய முன்பதிவுகள், முந்தைய தலைமுறை மாடல்களுடன் ஒப்பிடும் போது  30% அதிகரித்துள்ளதாக சாம்சங் தெரிவித்துள்ளது.</p><p>உலகளாவிய முன்பதிவுகளின் போது, ​​கேலக்ஸி Z ஃபோல்டு 8 அல்ட்ரா மற்றும் கேலக்ஸி Z ஃபோல்டு 8 ஆகிய இரண்டிற்கும் கிராஃபைட் (Graphite) நிறம் முதன்மை தேர்வாக அமைந்தது. அதேவேளையில், கேலக்ஸி Z ப்ளிப் 8 மாடலுக்கான முன்பதிவுகளில் பின்க் (Pink) நிறம் முன்னிலை வகித்தது.</p><h2>இந்திய முன்பதிவு நிலவரம்:</h2><p>இந்தியாவில், கடந்த ஜூலை 22-ஆம் தேதியன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்ட 72 மணி நேரத்திற்குள்ளேயே முன்பதிவுகள் 2,71,000 யூனிட்டுகளை கடந்துள்ளன. ஒப்பிட்டுப் பார்க்கும் போது, முந்தைய தலைமுறை மாடல்களான கேலக்ஸி Zஃபோல்டு 7 மற்றும் Z ப்ளிப் 7 ஆகியவை இந்திய சந்தையில் இதே அளவிலான எண்ணிக்கையை எட்ட 15 நாட்கள் தேவைப்பட்டன.</p><p>இந்தியாவில் புதிய கேலக்ஸி Z சீரிஸ் போன்களுக்கு, முன்பணம் ஏதுமின்றி 30 மாதங்களுக்கான வட்டியில்லா மாத தவணை முறை (no-cost EMI) திட்டத்தை சாம்சங் அறிமுகப்படுத்தியுள்ளது. இது சந்தையில் முதன்முறையாக வழங்கப்படும் ஒரு திட்டமாகும்.</p><h2>விலை விவரங்கள்:</h2><p>கேலக்ஸி Z ஃபோல்டு 8 அல்ட்ரா: ஆரம்ப விலை ரூ. 1,99,999</p><p>இந்த ஸ்மார்ட்போன் வயலெட் ஷேடோ, கிராஃபைட், க்ரீம், கிரீன் ஷேடோ ஆகிய நிறங்களில் கிடைக்கிறது</p><p>கேலக்ஸி Z ஃபோல்டு: ஆரம்ப விலை ரூ. 1,79,999</p><p>இந்த ஸ்மார்ட்போன் லாவெண்டர், கிராஃபைட், க்ரீம் மற்றும் பிஸ்டாச்சியோ ஆகிய நிறங்களில் கிடைக்கிறது</p><p>கேலக்ஸி Z ப்ளிப் 8: ஆரம்ப விலை ரூ. 1,24,999</p><p>இந்த ஸ்மார்ட்போன் பின்க், கிராஃபைட், க்ரீம் மற்றும் மின்ட் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.</p><p>புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் முன்னணி ஆன்லைன் வலைதளங்கள் மற்றும் ஆஃப்லைன் சில்லறை விற்பனை கடைகள், சாம்சங் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர் (Samsung Experience Store) மற்றும் சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் விற்பனைக்கு கிடைக்கின்றன.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை முதல் தொடங்குகிறது தமிழ் ஆக்கி லீக் போட்டி</title><link>https://www.maalaimalar.com/sports/tamil-hockey-league-begins-in-chennai-from-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/sports/tamil-hockey-league-begins-in-chennai-from-tomorrow#comments</comments><guid isPermaLink="false">7d41c9cd-b82b-4a8b-ba62-e189ed6711c9</guid><pubDate>Sat, 08 Aug 2026 03:21:53 +0000</pubDate><atom:updated>2026-08-08T03:21:53.835Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>hockey,லீக் போட்டி,League,ஹாக்கி,தமிழ் ஆக்கி லீக் போட்டி,Tamil hockey league</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/95pprbs8/hockey1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tamil Hockey League]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/95pprbs8/hockey1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆக்கி திருவள்ளூர் சார்பில் தமிழ் ஆக்கி லீக் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் செப்டம்பர் 12-ந் தேதி வரை நடக்கிறது.</p><p>ரேலா மருத்துவமனை ஆதரவுடன் நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்கும் 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி 'ஏ' பிரிவில் இந்தியன் வங்கி, வருமான வரி, தெற்கு ரெயில்வே, எஸ்.எம்.நகர், ஜி.எஸ்.டி. மற்றும் கலால் வரி, எஸ்.டி.ஏ.டி. விளையாட்டு விடுதி அணியும், 'பி' பிரிவில் இந்தியன் ஓவர் சீஸ் வங்கி, ஏ.ஜி.அலுவலகம், தயாந்த் வீரன்ஸ், பட்டாபிராம் ஸ்டிரைக்கர்ஸ், இந்திய உணவு கழகம், ஐ.சி.எப். அணியும் இடம் பெற்றுள்ளன.</p><p>லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் 'டாப்-3' இடங்களை பிடிக்கும் அணிகள் 'சூப்பர் சிக்ஸ்' சுற்றுக்குள் நுழையும். சூப்பர் சிக்ஸ் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.</p><p>இந்த போட் டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ. 1 லட்சமும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.50 ஆயி ரமும் பரிசாக வழங்கப்படும்.</p><p>தொடக்க நாளில் நடைபெறும் ஆட்டத்தில் ஜி.எஸ்.டி. -எஸ்.டி.ஏ.டி அணிகள் (பிற்பகல் 2.30 மணி) மோதுகின்றன.</p><p>இது தவிர பெண்களுக்கு மினி லீக் ஆக்கி போட்டி நடத்தப்படுகிறது. இதில் 4 அணிகள் கலந்து கொள்கின்றன.</p><p>இந்த தகவலை போட்டி அமைப்பு குழு தலைவர் டாக்டர் பிரகாஷ் அய்யாதுரை சென்னையில் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். அப்போது போட்டி இயக்குனரும், இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டனுமான வி.பாஸ்கரன், டெக்னிக்கல் அதிகாரி முனீர் சேட்.</p><p>இந்திய அணியின் முன்னாள் வீரர் திரு மால்வளவன், சென்னை ஆக்கி சங்க செயலாளர் உதயகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்த நிகழ்ச்சியில், போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் பரிசுக் கோப்பை அறிமுகம் செய்யப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>தாம்பரம்- திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/southern-railway-announced-special-train-between-tambaram-to-thiruvananthapuram</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/southern-railway-announced-special-train-between-tambaram-to-thiruvananthapuram#comments</comments><guid isPermaLink="false">7134b44e-716c-4ada-a2d2-fe4a18fe10ce</guid><pubDate>Sat, 08 Aug 2026 03:20:45 +0000</pubDate><atom:updated>2026-08-08T03:20:45.184Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Southern Railway,special train,சிறப்பு ரெயில்,ஓணம்,onam festival,தெற்கு ரெயில்வே</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/hf3lirs7/train01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ ரெயில்]]></media:title><media:description type="html"><![CDATA[ ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/hf3lirs7/train01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஓணம் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம்-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87">தெற்கு ரெயில்வே </a>வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><h2><strong>56 சிறப்பு ரெயில்கள்</strong></h2><p>ஓணம் பண்டிகையை முன்னிட்டு வருகிற 12-ந்தேதி முதல் அடுத்த மாதம் 6-ந்தேதி வரை தெற்கு ரெயில்வே சார்பில் 56 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து வருகிற 19-ந்தேதி முதல் அடுத்த மாதம் 2-ந்தேதி வரை (புதன்கிழமை மட்டும்) கேரளம் மாநிலம் கொல்லத்திற்கு சிறப்பு ரெயில் (வண்டி எண்-06119) இயக்கப்படுகிறது. அதே போல, கொல்லத்தில் இருந்து வருகிற 20-ந்தேதி முதல் அடுத்த மாதம் 3-ந்தேதி வரை (வியாழக்கிழமை மட்டும்) சென்னை சென்ட்ரலுக்கு சிறப்பு ரெயில் (06120) இயக்கப்படுகிறது.</p><h2><strong>தாம்பரம்-திருவனந்தபுரம்</strong></h2><p>திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து வருகிற 19-ந்தேதி முதல் அடுத்த மாதம் 2-ந்தேதி வரை (புதன்கிழமை மட்டும்) தாம்பரத்திற்கு சிறப்பு ரெயில் (06110) இயக்கப்படுகிறது.</p><p>அதே போல, <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/egmore-railway-station-redevelopment-work-express-trains-to-be-diverted-to-tambaram-and-mambalam">தாம்பரத்தில்</a> இருந்து வருகிற 20-ந்தேதி முதல் அடுத்த மாதம் 3-ந்தேதி வரை (வியாழக்கிழமை மட்டும்) திருவனந்தபுரம் சென்ட்ரலுக்கு சிறப்பு ரெயில் (06109) இயக்கப்படுகிறது.</p><p>மங்களூரு சென்ட்ரலில் இருந்து வருகிற 17-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை (திங்கட்கிழமை மட்டும்) சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரெயில் (06126) இயக்கப்படுகிறது.</p><p>அதே போல, சென்னை எழும்பூரில் இருந்து வருகிற 18-ந்தேதி முதல் அடுத்த மாதம் 1-ந்தேதி வரை (செவ்வாய்க்கிழமை மட்டும்) மங்களூரு சென்ட்ரலுக்கு சிறப்பு ரெயில் (06125) இயக்கப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>2 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார் அமித்ஷா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/amit-shah-visit-tn-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/amit-shah-visit-tn-today#comments</comments><guid isPermaLink="false">99c6bdd2-2d47-4c55-bfd7-ba6c22d4463c</guid><pubDate>Sat, 08 Aug 2026 03:12:43 +0000</pubDate><atom:updated>2026-08-08T03:12:43.650Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN,Amit Shah,அமித்ஷா,Tiruvannamalai,திருவண்ணாமலை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/12/26372197-amit.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Amit Shah]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/12/26372197-amit.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.</strong></em> </p><p>மத்திய உள்துறை மந்திரி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE">அமித்ஷா</a> மகாராஷ்டிர மாநில நிகழ்ச்சிகளை இன்று முடித்தபின் அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் இன்று மாலை 4.20 மணியளவில் திருவண்ணாமலைக்கு வருகிறார்.</p> <h2>அருணாசலேஸ்வரர் கோவில்</h2><p>ஹெலிகாப்டரிலிருந்து இறங்கும் அமித்ஷா காரில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88">திருவண்ணாமலை</a> கிரிவலப்பாதையில் உள்ள ரமண ஆசிரமத்திற்கு செல்கிறார். அங்கு சுமார் 1 மணி நேரம் நடைபெற உள்ள சிறப்பு பூஜையில் பங்கேற்கும் அவர் பின்னர் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார். </p> <h2>அமித்ஷா</h2><p>இதைத்தொடர்ந்து அமித்ஷா மாலை 6 மணியளவில் திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு கார் மூலம் சாலை மார்க்கமாக புதுச்சேரி செல்கிறார். இதையொட்டி திருவண்ணாமலையில் பாதுகாப்பு பணிகள் மற்றும் அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் ஹெலிபேடு தயார் செய்யும் பணிகளில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&apos;ஜனநாயகன்&apos; திரைப்படத்தால் வெளிச்சத்திற்கு வந்த கொடுமை: போக்சோ சட்டத்தில் சிக்கிய முதியவர்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/jananayagan-movie-awareness-elderly-man-arrested-under-pocso-act</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/jananayagan-movie-awareness-elderly-man-arrested-under-pocso-act#comments</comments><guid isPermaLink="false">869cca78-822f-44c5-9294-a117bce5c856</guid><pubDate>Sat, 08 Aug 2026 02:46:45 +0000</pubDate><atom:updated>2026-08-08T02:46:45.883Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Arrested,போக்சோ சட்டம்,pocso act,JanaNayagan,ஜனநாயகன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/byko4mnv/girlmolested.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Girl harassment]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/byko4mnv/girlmolested.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, தாய் வேலை செய்து வந்த வீட்டின் உரிமையாளரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.</strong></em></p><h2>வீட்டு வேலை</h2><p>சென்னை கே.கே. நகரைச் சேர்ந்த தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக பிரிந்து வசித்து வருகின்றனர். இவர்களது 11 வயது மகனும், 8 வயது மகளும் தந்தையுடன் வசித்து வருகின்றனர்.</p><p>குழந்தைகளின் தாய், கோடம்பாக்கத்தில் உள்ள சண்முகப்பிரியன் (வயது 50) என்பவரது வீட்டில் வேலை செய்து வருகிறார். அவர் அவ்வப்போது தனது குழந்தைகளை அந்த வீட்டுக்கு அழைத்து வந்து தன்னுடன் தங்க வைத்ததாக கூறப்படுகிறது.</p> <h2>சிறுமிக்கு பாலியல் சீண்டல்</h2><p>இந்த நிலையில், சிறுமியை அவரது தந்தை, முதலமைச்சர் விஜய் நடித்த '<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/jananayagan-success-due-to-vijays-magic-producer-k-venkat-narayana-interview">ஜனநாயகன்</a>' திரைப்படத்தை பார்க்க அழைத்துச் சென்றார். அந்த படத்தில் குழந்தைகளுக்கு 'நல்ல தொடுதல், கெட்ட தொடுதல்' குறித்து விஜய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் காட்சி இடம்பெற்றுள்ளது.</p><p>அந்த காட்சியை பார்த்த சிறுமி, தனது தந்தையிடம், "நான் ஒரு விஷயம் சொல்ல வேண்டும். என்னை திட்டக்கூடாது" என்று கூறிவிட்டு, தாய் வேலை செய்யும் வீட்டில் தங்கியிருந்தபோது. அந்த வீட்டின் உரிமையாளர் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.</p> <h2>உரிமையாளர் கைது</h2><p>இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை, வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குற்றச்சாட்டு உறுதியானதால் சண்முகப்பிரியனை போலீசார் கைது செய்தனர்.</p><p>அவர் மீது <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">போக்சோ சட்டத்தின்</a> கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.</p> <h2>ஜனநாயகன்</h2><p>'ஜனநாயகன்' திரைப்படத்தில் இடம்பெற்ற விழிப்புணர்வு காட்சியால் சிறுமி தைரியமாக நடந்த சம்பவத்தை வெளிப்படுத்தியதை தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டு வெளிச்சத்துக்கு வந்து, போலீசார் நடவடிக்கை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>சட்டசபையில் பயோமெட்ரிக் முறை விரைவில் அறிமுகம்- சபாநாயகர் தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-assembly-to-introduce-biometric-system-soon-says-speaker</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-assembly-to-introduce-biometric-system-soon-says-speaker#comments</comments><guid isPermaLink="false">d8667789-ee6b-46da-83b1-e56969033e3b</guid><pubDate>Sat, 08 Aug 2026 02:36:10 +0000</pubDate><atom:updated>2026-08-08T02:36:10.885Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN assembly,Biometric system,TN Assembly speaker,சபாநாயகர்,பயோமெட்ரிக்,தமிழக சட்டமன்ற கூட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/arxooeh3/JCD.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN Speaker JCD Prabhakarar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/arxooeh3/JCD.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ. பிரேமலதா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், தற்போது பதிவேடுகளில் எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட வேண்டியதுள்ளது. அதை பயோமெட்ரிக் முறையில் நவீனப்படுத்த வேண்டும் என்று கேட்டார்.</p><p>அதற்கு பதிலளித்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், பயோமெட்ரிக் முறை ஆய்வில் உள்ளது. விரைவில் அது அமல்படுத்தப்படும் என்றும் கூறினார்.</p><p>பின்னர் பேசிய பிரேமலதா, அவையில் உறுப்பினர்களுக்கு டம்ளரில் தண்ணீர் தரப்படுகிறது.</p><p>பாதுகாப்பான நீரை பெறுவதற்காக அனைவருக்கும் பாட்டிலில் தண்ணீர் தர வேண்டும் என்று ஏற்கனவே கேட்டேன். அதற்கு ஓ.பன்னீர்செல்வம் (தி.மு.க. எம்.எல்.ஏ.) தடை போடுகிறார் என்று கூறினார்.</p><p>அப்போது குறுக்கிட்டு பேசிய ஓ.பன்னீர்செல்வம், நான் தடை போடவில்லை. அவர் கேட்பதை கொடுத்து விடுங்கள் என்று சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார். அப்போது அவையில் சிரிப்பொலி எழுந்தது.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை விவகாரம்: திமுக, அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/constituency-delimitation-issue-thirumavalavan-calls-upon-dmk-and-admk</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/constituency-delimitation-issue-thirumavalavan-calls-upon-dmk-and-admk#comments</comments><guid isPermaLink="false">f09c8c03-4204-4315-9056-02823619e130</guid><pubDate>Sat, 08 Aug 2026 02:13:34 +0000</pubDate><atom:updated>2026-08-08T02:13:34.843Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,விஜய்,thirumavalavan,திருமாவளவன்,ADMK,அதிமுக,vijay,தொகுதி மறுவரையறை,Constituency Delimitation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/ltw459cl/thirumavalavan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Thirumavalavan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/ltw459cl/thirumavalavan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்க திமுக, அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.</strong></em></p><p>மத்திய பா.ஜ.க. அரசு <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%88">தொகுதி மறுவரையறை</a> மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டி நிறைவேற்ற ஆலோசித்து வருகிறது. இதனால் தென்மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் நிலவுகிறது. </p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>இந்த விவகாரம் குறித்து ஆலோசித்து உரிய முடிவெடுக்கத் தமிழக எம்.பி.க்களுடன் முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-very-bad-chief-minister-not-amma-government-just-summa-government-os-manian-slams">விஜய்</a> தலைமையில் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.</p><p>இக்கூட்டத்தில் பங்கேற்க தமிழகத்தில் உள்ள மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் சாய்குமார் தனித்தனியாக கடிதம் அனுப்பியுள்ளார்.</p><p>இந்த ஆலோசனைக் கூட்டத்தை தி.மு.க. எம்.பி.க்கள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.</p> <h2>தொகுதி மறுவரையறை</h2><p>இந்நிலையில், தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான எம்.பி.க்கள் கூட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக எம்பிக்கள் பங்கேற்கும் நிலையில், திமுக, அதிமுகவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.</p><h2>திமுக - அதிமுக</h2><p>பாஜக அரசின் சட்டத்தை எதிர்க்க திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை விவகாரம்: தமிழக எம்.பி.க்களுடன் முதலமைச்சர் விஜய் இன்று ஆலோசனை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-consultation-with-tamil-nadu-mps-on-delimitation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-consultation-with-tamil-nadu-mps-on-delimitation#comments</comments><guid isPermaLink="false">777b0964-b7ca-4297-9f0b-95d11eb7e561</guid><pubDate>Sat, 08 Aug 2026 01:35:19 +0000</pubDate><atom:updated>2026-08-08T01:35:19.055Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN MPs,Constituency Delimitation,தொகுதி மறுவரையறை மசோதா,முதலமைச்சர் விஜய்,tn cm vijay,தமிழக எம்பிக்கள் கூட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/l0gmqrcp/Untitled-design.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/l0gmqrcp/Untitled-design.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.</p><h2>முதலமைச்சர் அழைப்பு</h2><p>தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக ஆலோசனை நடத்த, தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கும் முதலமைச்சர் விஜய் அழைப்பு விடுத்திருந்தார்.</p><p>இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று (ஆக.8) சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது.</p><p>நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.</p><p>இந்த மசோதா சட்டமானால் தென் மாநிலங்கள் பாதிக்கப்படக்கூடும் என திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.</p><p>இந்நிலையில் இந்த மசோதா தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழ்நாட்டின் அனைத்து மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்களும் முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அனைவருக்கும் அழைப்பிதழும் அனுப்பப்பட்டுள்ளது.</p><h2>தொகுதி மறுவரையறை ஆலோசனை கூட்டம்</h2><p>சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் இன்று பிற்பகல் 3 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது.</p><p>இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இந்த கூட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக எம்பிக்கள் பங்கேற்கின்றனர். பாமக பங்கேற்பது குறித்து அன்புமணி இன்று காலை 10 மணியளவில் அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.</p><h2>புறக்கணிப்பு?</h2><p>தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக எம்பிக்கள் கூட்டத்தை திமுக, அதிமுக புறக்கணிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 8 ஆகஸ்ட் 2026:  குச்சனூர் சனிபகவான் சிறப்பு திருமஞ்சனம் 
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-8-august-2026-kuchanur-saneeswaran</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-8-august-2026-kuchanur-saneeswaran#comments</comments><guid isPermaLink="false">ad522e54-dfab-49e1-8740-813c52af54d4</guid><pubDate>Sat, 08 Aug 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-08-08T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/01/30/25616771-sanibagavan1.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kuchanur sani bhagavan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/01/30/25616771-sanibagavan1.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆடி-23 (சனிக்கிழமை)</p><p>பிறை : தேய்பிறை</p><p>திதி :  தசமி காலை 11.34 மணி வரை பிறகு ஏகாதசி</p><p>நட்சத்திரம் :  ரோகிணி பிற்பகல் 3.16 வரை பிறகு மிருகசீர்ஷம்</p><p>யோகம் :  அமிர்த / சித்தயோகம்</p> <p>ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை</p><p>எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை</p><p>சூலம் : கிழக்கு</p><p>நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை</p> <h2>ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை</h2><p>குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சனம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் தந்தப்பரங்கி நாற்காலியிலும், ஸ்ரீ ரெங்கமன்னார் அனுமன் வாகனத்திலும் பவனி. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் தெப்பம். இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் பவனி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். நயினார் கோவில் ஸ்ரீ சௌந்தரநாயகி, திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம். </p> <p>திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - சுகம்</p><p>ரிஷபம் - வரவு</p><p>மிதுனம் - நன்மை</p><p>கடகம் - தாமதம்</p><p>சிம்மம் - அனுகூலம்</p><p>கன்னி - மகிழ்ச்சி</p> <p>துலாம் - தெளிவு</p><p>விருச்சிகம் - பாராட்டு</p><p>தனுசு - வெற்றி</p><p>மகரம் - நன்மை</p><p>கும்பம் - பாராட்டு</p><p>மீனம் - விருத்தி</p> ]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 8.8.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் வளர்ச்சி மேலோங்கும்... </title><link>https://www.maalaimalar.com/Today-Transit/today-rasi-palan-in-tamil-39</link><comments>https://www.maalaimalar.com/Today-Transit/today-rasi-palan-in-tamil-39#comments</comments><guid isPermaLink="false">7ec7c596-2da6-41b2-8762-c76ead3648b7</guid><pubDate>Sat, 08 Aug 2026 01:26:45 +0000</pubDate><atom:updated>2026-08-08T01:26:45.323Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-05-18/fbpverq5/rasipalan.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Todays Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-05-18/fbpverq5/rasipalan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இன்றைய ராசி பலன்கள்</category><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>சந்தோஷம் அதிகரிக்கும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். அலைபேசி வழித்தகவல் ஆச்சரியப்படவைக்கும்.</p><h2>ரிஷபம்</h2><p>நல்லவர்களின் தொடர்பால் நலம் காண வேண்டிய நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும்.</p><h2>மிதுனம்</h2><p>உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். நண்பர்கள் ஒத்துழைப்புச் செய்வர். வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.</p><h2>கடகம்</h2><p>யோகமான நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.</p><h2>சிம்மம்</h2><p>சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.</p><h2>கன்னி</h2><p>தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படும் நாள். தனவரவில் இருந்த தடைகள் அகலும். பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும்.</p><h2>துலாம்</h2><p>யோசித்து செயல்பட வேண்டிய நாள். தொழில் பங்கு தாரர்களிடம் விழிப்புணர்ச்சி தேவை. பிறருக்குப் பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.</p><h2>விருச்சிகம்</h2><p>பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பாதியில் நின்ற கட்டிடப்பணி மீதியும் தொடரும். புதிய தொழில் தொடங்கும் தொடங்கும் எண்ணம் மேலோங்கும்.</p><h2>தனுசு</h2><p>புதிய பொறுப்புகள் வந்து சேரும் நாள். வியாபாரம் சூடுபிடிக்கும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கும்.</p><h2>மகரம்</h2><p>பெருமைப்படத்தக்க செய்தி வந்து சேரும் நாள். பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள். வருங்கால நலன் கருதி திட்டங்களைத் தீட்டுவீர்கள்.</p><h2>கும்பம்</h2><p>வரன்கள் வாயிற்கதவைத் தட்டும் நாள். வருமானம் உயரும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.</p><h2>மீனம்</h2><p>உற்சாகத்துடன் செயல்படும் நாள். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு உண்டு. தொழிலில் புதிய பங்கு தாரர்கள் வந்திணைவர் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/chennai-fuel-prices-today-petrol-diesel</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/chennai-fuel-prices-today-petrol-diesel#comments</comments><guid isPermaLink="false">90126871-ffc8-4842-b98a-0f12905643e3</guid><pubDate>Sat, 08 Aug 2026 01:15:43 +0000</pubDate><atom:updated>2026-08-08T01:15:43.670Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல் டீசல் விலை,Petrol Diesel Price,Diesel price,Petrol Price,பெட்ரோல் விலை,வணிகம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/eyp4pp4l/petrol.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ petrol- Diesel price]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/eyp4pp4l/petrol.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் போரினால் மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p><h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.</p><h2>இன்றைய பெட்ரோல், டீசல் விலை</h2><p>அந்த வகையில் இன்றைய (08.08.2026 - சனிக்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><h2>கச்சா எண்ணெய்</h2><p>இன்று சர்வதேச சந்தையில் பிரனட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 82.27 டாலர் என விற்பனை ஆகி வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>யூட்டாவில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் விபத்து</title><link>https://www.maalaimalar.com/news/world/helicopter-battling-utah-wildfire-crashes-with-no-word-on-2-people-aboard</link><comments>https://www.maalaimalar.com/news/world/helicopter-battling-utah-wildfire-crashes-with-no-word-on-2-people-aboard#comments</comments><guid isPermaLink="false">00d50d5c-3b9f-49aa-b814-08e57a183fb1</guid><pubDate>Sat, 08 Aug 2026 00:27:19 +0000</pubDate><atom:updated>2026-08-08T00:27:19.590Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>helicopter,ஹெலிகாப்டர் விபத்து,ஹெலிகாப்டர்,chopper crash,Utah wildfire,யூட்டா காட்டுத்தீ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/g3xo1vtz/widemouth-2.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ யூட்டாவில் காட்டுத்தீ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/g3xo1vtz/widemouth-2.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவின் யூட்டாவில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்க உதவிய கனரக <a href="https://www.maalaimalar.com/topic/helicopter">ஹெலிகாப்டர்</a> ஒன்று விபத்துக்குள்ளானதாக ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த இருவரின் உடல்நிலை குறித்து எந்தத் தகவலும் இல்லை.</p><p>ஜூலை 27-ஆம் தேதியன்று மின்னலால் மத்திய யூட்டாவில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஏழு ஹெலிகாப்டர்களில் இதுவும் ஒன்றாகும்.</p><h2>விபத்து உறுதி:</h2><p>யூட்டாவின் ரிச்ஃபீல்டில் சிகோர்ஸ்கி S64 ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதை ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் உறுதிப்படுத்தியது.</p><p>விபத்து குறித்த கேள்விகளுக்கு செவியர் கவுண்டி ஷெரிஃப் உடனடியாக பதிலளிக்கவில்லை. மேலும், FAA மற்றும் காட்டுத்தீ அதிகாரிகளிடம், ஹெலிகாப்டரில் இருந்த இருவரின் உடல்நிலை குறித்த தகவல்கள் இல்லை.</p><p>தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியமும் (NTSB) FAA-வும் இந்த விபத்து குறித்து விசாரிக்கும். ஆனால், அருகிலேயே காட்டுத்தீ எரிந்து கொண்டிருந்தால், அவர்களால் உடனடியாக சம்பவ இடத்திற்கு பாதுகாப்பாக சென்றடைய முடியாமல் போகலாம்.</p><h2>வானிலை எச்சரிக்கை:</h2><p>வெள்ளிக்கிழமை நிலவரப்படி, தீ 165 சதுர மைல்கள் (427 சதுர கிலோமீட்டர்கள்) பரப்பளவிற்கு பரவி இருந்ததுடன், 19 சதவீதம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஏழு ஹெலிகாப்டர்களில் ஒன்றாகும்.</p><p>நிலையற்ற காற்று, வறண்ட எரிபொருட்கள் மற்றும் கடும் வெப்பநிலை நிலவக்கூடும் என்றும், அத்துடன் வறண்ட இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் மீட்புக் குழுவினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 'ரெட் ஃபிளாக்' எச்சரிக்கைகள் நடைமுறையில் இருந்தன.</p><h2>தீவிர விசாரணை:</h2><p>ஹெலிகாப்டர் விபத்து குறித்து செவியர் கவுண்டி ஷெரிஃப் ஃபேஸ்புக் பக்கத்தில் விபத்து நடந்த பகுதிக்குள் எப்போது செல்ல முடியும் என்பதை பொர்க்க வேண்டும். இது தொடர்பான விசாரணை நடத்தப்படும். தேசிய போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் இது குறித்த விசாரணையை நடத்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>