<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 12 Aug 2026 06:52:02 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: தொகுதி மறுவரையறைக்கு எதிராக தீர்மானம் - சட்டசபையில் நிறைவேறியது - 12 ஆகஸ்ட் 2026
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-12-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-12-august-2026#comments</comments><guid isPermaLink="false">2688edc8-8b1b-44e4-a900-ccc79547ce8d</guid><pubDate>Wed, 12 Aug 2026 03:59:22 +0000</pubDate><atom:updated>2026-08-12T06:50:21.773Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/k2i5kgmq/spaker.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Speaker]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/k2i5kgmq/spaker.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>அமைச்சர் மரிய வில்சன் உரை</h2><p>மத்திய அரசிடம் இருந்து நியாயமான நிதிப்பகிர்வு கோரிய தீர்மானத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.</p><p>வரி மற்றும் வரி அல்லாத வருவாயில் அரசுக்கு ரூ.15,000 கோடி கிடைக்கும்.</p><p>எந்த பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி திட்டமும் நிறுத்தப்படவில்லை.</p><p>நடைமுறை திட்டங்கள் தொடர்வதுடன் தவெக அரசு புதிய திட்டங்களையும் செயல்படுத்தும். தவெக அரசு அளித்துள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்.</p><p>சொந்த வரி வருவாய் வளர்ச்சி 12 சதவீதம் தான் சாத்தியம்.</p><p>திட்டம் அனுமதி பெறுவதற்கான ஊழல் தவெக அரசால் தடுக்கப்பட்டுள்ளது. </p> <p>மத்திய அரசிடம் இருந்து நியாயமான நிதிப்பகிர்வு கோரிய தீர்மானத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.</p><p>வரி மற்றும் வரி அல்லாத வருவாயில் அரசுக்கு ரூ.15,000 கோடி கிடைக்கும் - அமைச்சர் மரிய வில்சன் </p> <h2>வெற்றி பட்ஜெட்</h2><p>இடைத்தரகர்களுக்கு சென்ற வீணான செலவினம் தவெக அரசில் நிறுத்திவைப்பு.</p><p>தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் ஒரு வெற்றி பட்ஜெட் - அமைச்சர் மரிய வில்சன் </p><p>எங்கள் தவறை திருத்தி உங்களிடம் இருந்து சிலவற்றை கற்றுக்கொண்டு மீண்டும் வலிமையாக நாங்கள் வருவோம்.</p><p>தமிழ் மொழி விவகாரத்தில் அன்று ஆவேசப்பட்டு விட்டேன். முன்னாள் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனையும் என்னையும் ஒப்பிட்டு பேசினார்கள்.</p><p>நான் பிறந்தது திருவாரூர், வளர்ந்தது புதுச்சேரி, படித்தது சென்னை, தற்போது ஆர்.கே.நகர் தத்தெடுத்துள்ளது - அமைச்சர் மரிய வில்சன் </p><h2>அமைச்சர் மரிய வில்சன் உரை</h2><p>வெற்றி அடைவதற்கு குறுக்கு வழியை அடையாமல் உண்மையுடன் இருந்தால் எல்லாம் சாத்தியம் என்பதற்கு முதல்வரே எடுத்துக்காட்டு.</p><p>அன்றும் இன்றும் என்றும் உண்மைக்கு புறம்பாக தவெகவினர் பேசுவதில்லை.</p><p>30 ஆண்டுகள் கழித்து மீண்டும் அரசியலுக்கு வருவதற்கு முதல்வர் விஜய் மூலம் வாய்ப்பு.</p><p>குறி வைத்தால் தவற மாட்டேன், தவறுமானால் குறியே வைக்க மாட்டேன் என்ற எம்ஜிஆர் வசனத்தை ரீ-டிரெண்ட் செய்து சாதித்தவர் முதல்வர்.</p><p>கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம், கடமை இருந்தால் வீரன் ஆகலாம், பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம் பாடலுக்கு முதல்வரே உதாரணம்.</p><p>பேரவையில் பட்ஜெட் மீதான பதிலுரையில் குட்டிக்கதை சொல்லி உரை தொடங்கினார் நிதியமைச்சர் மரிய வில்சன்</p><p>சட்டரீதியான போராட்டம் நடத்தி தேனி மக்களுடன் அரசு உறுதுணையாக இருக்கும்.</p><p>உச்சநீதிமன்ற உத்தரவின்படி தான் வெளியேற்றம் என அறிவிப்பு, முதல்வர் அறிவுறுத்தல்படி சட்டரீதியில் போராடுவோம் - அமைச்சர் ஆதவ்</p><p>மலை கிராம மக்கள் வெளியேற்றம் தொடர்பாகவும் திங்கட்கிழமை விவாதத்திற்கு ஏற்பதாக சபாநாயகர் அறிவிப்பு</p><p>3 தலைமுறையாக அப்பகுதியில் வசிக்கும் மக்களை வனப்பகுதி என கூறி வெளியேற்றும் நடவடிக்கையை எதிர்த்து முற்றுகை - திமுக எம்எல்ஏ</p><p>தேனி ஆட்சியர் அலுவலகம் முன் மலை கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கை கண்டித்து முற்றுகை ஆர்ப்பாட்டம் - அதிமுக கவனஈர்ப்பு</p> <p>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை திங்கட்கிழமை எடுத்து கொள்கிறேன் - சபாநாயகர்</p><p>போதைப்பொருள் குறித்து புகார் தந்த மாணவன் குறித்து காவல்துறை தகவலை கசியவிட்டதால் கொலை என பெற்றோர் குற்றச்சாட்டு.</p><p>போதைப்பொருள் பயன்பாடு குறித்து புகார் தந்த அமுதனை 20 பேர் கொண்ட கும்பல் அடித்து கொலை.</p><p>புகார் தந்தவரின் தகவலை அலட்சியமாக போலீசார் கசியவிட்டது தொடர்பாக விளக்கம் தர வேண்டும் - உதயநிதி</p><p>கோவையில் கல்லூரி மாணவன் அமுதன் சக மாணவர்களால் அடித்து கொல்லப்பட்டுள்ளார் - எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி</p><p>தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து சட்டசபையில் தனித்தீர்மானம் நிறைவேறியது.</p><p>தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையில் முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் நிறைவேற்றம்.</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உரை</h2><p>ரூ.1 தந்தால் நமக்கு 29 பைசா மட்டுமே திருப்பி தருகிறார்கள், நாம் உழைத்தாலும் நம்மால் அதிகாரத்தை உருவாக்க முடியா நிலை.</p><p>2026-க்கு பின் காங்கிரசுக்கும் திமுகவுக்கும் தற்போது வேறு நிலை இருக்கலாம். ஆனால் மாநில சுயாட்சி பிரச்சனை ஒன்று சேருக.</p><p>தமிழ்நாட்டிற்கான பிரச்சனை என்றால் திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒன்றாக நிற்க வேண்டும்.</p><p>ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை எதிர்த்து தமிழக எம்பிக்கள் ஒற்றுமையாக நின்று எதிர்த்தனர். தமிழக எம்பிக்கள் 39 பேரும் அவையில் இருந்த வெளிநடப்பு செய்யாமல், சட்டத்தை எதிர்த்து வாக்களிக்குமாறு அமைச்சர் வேண்டுகோள்.</p> <h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உரை</h2><p>இன்றைய தீர்மானம் என்பது காங்கிரஸ் பாஜக என்பதல்ல, மாநில சுயாட்சியை நிலைநிறுத்துவதற்கு தீர்மானம்.</p><p>பேரவையில் குறைவான எண்ணிக்கையில் உள்ள பாஜக, காங்கிரசின் நிலை நாளை நாடாளுமன்றத்தில் நமக்கு வரக்கூடாது.</p><p>பாஜக உறுப்பினராக இருந்தாலும் இந்த தீர்மானத்தில் தமிழன் என்ற முறையில் செயல்படுங்கள்.</p><p>தொகுதி மறுவரையறையில் மு.க.ஸ்டாலின் தான் இதற்கு முதலில் குரல் கொடுத்தார் என்பதை நாங்கள் ஆதரிக்கிறோம். தென்னிந்திய விகிதாசாரம் குறைவதை முன்னாள் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கடுமையாக எதிர்த்தனர்.</p><p>வடகிழக்கு மாநிலங்களின் நிலை நமக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தீர்மானம் கொண்டு வந்துள்ளார் முதல்வர்.</p> <p>5, 6 வடமாநிலங்கள் சேர்ந்தாலே ஒரு பிரதமரை உருவாக்கும் நிலையில் உள்ளது, அது மாற்றப்பட வேண்டும்.</p><p>அதிகாரம் குஜராத், உ.பி.க்கு மட்டுமல்ல, நமது குரல் அதிகாரம் பிரதமராக ஒலிக்க வேண்டும். வருங்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து ஒரு பிரதமர் உருவாக வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</p><p>உயிருள்ள வரை மாநில சுயாட்சிக்காக இதே பேரவையில் குரல் கொடுத்தவர்கள் முன்னாள் முதல்வர்கள் கலைஞர், ஜெயலலிதா.</p><p>உள்ளாட்சி, கட்சியில் நிர்வாக ரீதியாக மாற்றம் செய்யும்போது நாடாளுமன்றத்தில் ஏன் மாற்றம் கூடாது என கேட்கின்றனர்?</p><p>மக்கள்தொகை அடிப்படையில் நாடாளுமன்ற விகிதாசாரத்தை உருவாக்கவில்லை அமெரிக்கா - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</p> <h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உரை</h2><p>மாநில சுயாட்சி இல்லாமல் இந்தியாவை உருவாக்க முடியாது என அண்ணா கூறி உள்ளார்.</p><p>நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லாதபோது அரசியலமைப்பில் முதல் தீர்மானம் கொண்டு வந்தது தமிழ்நாடு.</p><p>அரசியல் ரீதியில் மாறுபட்ட கருத்தில் இருந்தாலும் தனித்தீர்மானத்தை ஆதரித்த எதிர்க்கட்சி தலைவருக்கு நன்றி.</p> <p>2026 மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் தமிழக எம்பிக்கள் எண்ணிக்கை குறையும். </p><p>ஏப்.16-ல் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதா நகலை எரித்து திமுக தனது எதிர்ப்பை பதிவு செய்தது.</p><p>Delimitation அடுத்த 25 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்குமாறும் கூறினோம்.  </p><p>33% மகளிர் இடஒதுக்கீட்டை முழுமனமுடன் திமுக ஆதரிக்கிறது வரவேற்கிறது. 7.18 விகிதாசாரத்தை குறைக்கக்கூடாது எனக்கூறி தவெக அரசு கொண்டுவந்த தனித்தீர்மானத்தை திமுக ஆதரிக்கிறது - உதயநிதி</p> <p>திமுக அமைச்சரவை கூட்டம் நடத்திய பின்னர் கடந்தாண்டு மார்ச்சில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டது.</p><p>Fair Delimitation தலைப்பில் 5 மாநில முதல்வர்கள், 10 கட்சிகளுக்கு கடிதம் எழுதி நடவடிக்கை எடுத்தார் மு.க.ஸ்டாலின் - உதயநிதி</p><p>மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்தால் என்ன பாதிப்பு என நாட்டுக்கே முதலில் கூறியது திமுக தான்.</p><p>தொகுதி மறுவரையறையின் ஆபத்தை இந்தியாவிற்கே கூறியது திமுகதான்.</p><p>எம்பிக்கள் எண்ணிக்கை குறைக்க அனுமதிக்க மாட்டோம், தமிழகத்தின் விகிதாசாரம் குறையக்கூடாது என திமுக பேரவையில் தீர்மானம் - எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி</p> <h2>முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி உரை</h2><p>தொகுதி மறுவரையறை விவகாரத்தில் எக்காரணத்தை கொண்டும் தமிழகம் பாதிக்கப்பட கூடாது என்பதே திமுக நிலைப்பாடு.</p> <p>வாக்கு வங்கி அரசியல் ஆதாயத்திற்காக மத்திய பாஜக அரசு தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வருகிறது - ராஜேஷ்குமார்</p><h2>தொகுதி மறுவரையறை தனித்தீர்மானம் ஏன்? - சபாநாயகர் விளக்கம்</h2><p>வரும் முன் காக்க எச்சரிக்கை நடவடிக்கையாகவே தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர் விஜய் - சபாநாயகர்</p><p>தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு தமிழக காங்கிரஸ் ஆதரவு - ராஜேஷ்குமார்</p><p>2029 தேர்தலிலேயே மகளிருக்கு 33% இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும். அடுத்த 30 ஆண்டுகளுக்கு தொகுதி மறுவரையறை இருக்கக்கூடாது - மனிதநேய மக்கள் கட்சி எம்எல்ஏ ஜவாஹிருல்லா</p> <p>தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் கொண்டுவந்த தனித்தீர்மானத்திற்கு மமக ஆதரவு - ஜவாஹிருல்லா</p><h2>தமிமுன் அன்சாரி  உரை</h2><p>தொகுதி எண்ணிக்கை குறைவாக இருப்பதால் வடகிழக்கு மாநிலங்களின் குரல்கள் நசுக்கப்படுகிறது, அதே சூழல் இங்கும் வரும்.</p><p>மகளிர் இடஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு உள் இடஒதுக்கீடு தேவை.</p><p>தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் கொண்டுவந்த தனித்தீர்மானத்திற்கு மஜக ஆதரவு.</p><h2>அமைச்சர் ஷாஜகான் உரை</h2><p>மத்திய பாஜக அரசு கொண்டு வரும் சட்டங்களும் திட்டங்களும் மக்களுக்கு விரோதமானதாகவே உள்ளது. பாஜக வெற்றி பெறவே முடியாத தென் மாநிலங்களின் குரலை நசுக்கும் வகையில் தொகுதி மறுவரையறை.</p><p>பல ஆண்டுகளை கடந்த அமெரிக்கா போன்ற நாடுகளிலும் தொகுதி எம்பிக்கள் எண்ணிக்கை உயர்த்தப்படவில்லை.</p> <p>அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி போன்றோர் நாடாளுமன்றத்திற்குள் பேசுவது வேறு, வெளியே பேசுவது வேறு. பிரதமர மோடியும் அமித்ஷாவும் 2 வித நாடகம் நடத்துவதை வெளிப்படுத்தும் விதமான தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.</p><p>வடமாநிலத்தவருக்கு முக்கியத்துவம் கொடுத்து சமத்துவ நிலையை நீக்கும் வகையில் தொகுதி மறுவரையறை.</p><p>மகளின் இடஒதுக்கீடுக்கு தடை இல்லாத போதும் தொகுதி மறுவரையறையுடன் இணைத்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்.</p><p>இந்தி பேசும் மாநில எம்பிக்கள் எண்ணிக்கை உயரும். எனவே அவர்கள் மட்டுமே நாட்டை ஆளும் வாய்ப்பை பெறுவர் - அமைச்சர் வன்னிஅரசு</p> <h2>அமைச்சர் வன்னிஅரசு உரை</h2><p>தொகுதி மறுவரையறையை எதிர்த்து முதலமைச்சர் விஜய் கொண்டுவந்துள்ள தீர்மானம் தனித்துவமானது, மகத்துவமானது.</p><p>தமிழ்நாட்டின் உரிமையை, தென்னிந்தியாவின் உரிமையை பாதுகாக்கும் வகையில் தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.</p><p>தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் கொண்டுவந்த தனித்தீர்மானத்திற்கு விசிக ஆதரவு - அமைச்சர் வன்னிஅரசு</p><p>அரசியல் காரணங்கள், பரபரப்பை ஏற்படுத்துவதற்காகவே தவெக அரசு தொகுதி மறுவரையறை தனித்தீர்மானம் கொண்டு வந்துள்ளது.</p><p>தொகுதி மறுவரையறை மசோதா பாதகமானதா? சாதகமானதா? என தெரியாத நிலையில் தனித்தீர்மானத்திற்கு அதிமுக எதிர்ப்பு என்று எடப்பாடி பழனிசாமி தெரித்தார்.</p> <h2>எடப்பாடி பழனிசாமி உரை</h2><p>விகிதாசாரம் பாதிக்கப்படாததை உறுதிசெய்யுமாறு மத்திய அமைச்சரிடம் அதிமுக வலியுறுத்தி உள்ளது. </p><p>அதிமுகவின் கோரிக்கையை ஏற்று உறுப்பினர் எண்ணிக்கை குறையாது என மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார். 7.18 விகிதாசாரம் குறையக்கூடாது என்ற அதிமுகவின் நிலைப்பாட்டால், எம்பிக்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.</p><p>தமிழகத்திற்கான எம்பிக்கள் எண்ணிக்கை 39ல் இருந்து 59 ஆக உயர்வதற்கு தொகுதி மறுவரையறை வழிவகை செய்யும்.</p> <p>மக்கள்தொகை கட்டுப்பாட்டில் உள்ள தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு தொகுதி மறுவரையறை விகிதாசாரம் குறையக்கூடாது - எடப்பாடி பழனிசாமி</p> <p>செவி வழி செய்தியை வைத்து தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. தொகுதி மறுவரையறை தொடர்பாக கொண்டு வந்த தனித்தீர்மானத்தை முதலமைச்சர் திரும்ப பெற வேண்டும் -  பாமக எம்எல்ஏ</p><p>மக்கள்தொகை அடிப்படையில் எடுக்கப்பட்ட தரவின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் பாமக எதிர்க்கும். </p><p>தொகுதி மறுவரையறையை 2026 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி செய்தால் பாமக கடுமையாக எதிர்க்கும் - எம்எல்ஏ கணேஷ்குமார்</p> <p>தமிழ்நாட்டில் தனிப்பெரும் கட்சியான தவெகவில் கூட ஒரு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் வைத்துள்ளது. பெரிய கட்சிகளே நிர்வாக வசதிக்காக மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை உயர்த்துகிறார்கள் - பாமக எம்எல்ஏ கணேஷ்குமார்</p><h2>பாஜக எம்எல்ஏ போஜராஜன் உரை</h2><p>சட்டமுன்வடிவு பரிசீலனையில் உள்ளபோது தனித்தீர்மானம் கொண்டுவரும் அவசரம் என்ன?</p><p>மக்களின் தேவை அறிந்து மாற்றம் கொண்டு வருவது அவசியம். மாற்றம் ஒன்றே மாறாதது. அடுத்த தலைமுறையை கருத்தில் கொண்டே நாடாளுமன்றம் பெரிதாக கட்டப்பட்டுள்ளது.</p><p>பெண்ணுக்கு முன்னுரிமை முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி பாஜக என்பதை நாடறியும்.</p><p>தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானத்தை பாஜக எதிர்க்கிறது.</p> <h2>தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா உரை</h2><p>சட்டமுன்வடிவை கொண்டுவராத நிலையில் எதன் அடிப்படையில் தமிழக அரசு தனித்தீர்மானத்தை கொண்டுவந்துள்ளது?</p><p>தொகுதி மறுவரையறை மூலம் 59 எம்பிக்கள் தமிழகத்திற்கு வர வாய்ப்பு உள்ளது. அது சிறப்பானது என்பதில் மாற்றில்லை.</p><p>10 லட்சம் மக்களுக்கு ஒரு எம்.பி. தான் தற்போது உள்ளனர். தொகுதி மறுவரையறை மூலம் 8 லட்சம் மக்களுக்கு ஒரு எம்பி வருவர்.</p><p>முதல்வருக்கும் அரசியலில் பெண்களை ஊக்கப்படுத்தும் கட்சியினருக்கும் என் வாழ்த்துகள்.</p><p>தமிழ்நாட்டின் விகிதாச்சாரம் 7:2 என்ற வகையிலேயே தொடர வேண்டும். அது மாற்றப்படக்கூடாது.</p> <p>தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாவில் மத்திய அரசு சட்டமுன்வடிவு இதுவரை கொண்டுவரப்படவில்லை - பிரேமலதா</p><p>தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் வகையில் தொகுதி மறுவரையறை மசோதா. நிதிப்பகிர்வில் மத்திய பாஜக அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது -  எம்எல்ஏ ராமச்சந்திரன்</p> <p>தொகுதிமறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் கொண்டுவந்த தனித்தீர்மானத்திற்கு சிபிஐ ஆதரவு - எம்எல்ஏ ராமச்சந்திரன்</p><h2>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ செல்லசாமி</h2><p>பாஜக செல்வாக்கு அதிகம் உள்ள வடமாநிலங்களில் எம்பிக்கள் எண்ணிக்கை அதிகரிப்பதே அவர்களின் திட்டம்.</p><p>மக்கள்தொகையில் குறைவாக உள்ள தமிழகம் போன்ற தென்பகுதி மாநிலங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும்.</p><p>நாடாளுமன்றத்தில் இப்போது உறுப்பினர்களே எல்லோரும் பேச நேரம் இல்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 800-க்கு மேல் உயர்த்தினால் எப்படி பேச முடியும்?</p><p>பாஜக செல்வாக்கு அதிகம் உள்ள வடமாநிலங்களில் எம்பிக்கள் எண்ணிக்கை அதிகரிப்பதே அவர்களின் திட்டம்.</p><p>மக்கள்தொகையில் குறைவாக உள்ள தமிழகம் போன் தென்பகுதி மாநிலங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும்.</p> <p>மற்ற கட்சிகள் பேசிய பிறகு திமுக  உறுப்பினர்கள் பேசலாம் என அவை முன்னவர் செங்கோட்டையன் பதில்</p><p>முதல்வர் தனித்தீர்மானத்தின் மீது முதலில் பிரதான எதிர்க்கட்சியான திமுகவை பேச அனுமதிக்குமாறு எ.வ.வேலு கோரிக்கை விடுத்தார்.</p><p>முதலமைச்சர் கொண்டு வந்த தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித்தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது - செல்லசாமி</p><p>நாடாளுமன்ற உறுப்பினர்களின் விகிதம் 2.2:1 என்ற அளவிலேயே தொடர வேண்டும். 543 என்ற அளவிலேயே நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை நிரந்தரமாக வைக்க வேண்டும். வரும் பொதுத்தேர்தலில் பெண்களுக்கு 3ல் 1 என்ற அளவில் இடமளிக்க வேண்டும் - முதலமைச்சர் விஜய்</p> <p>மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதால் தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. </p><p>தற்போதைய மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 543 என்ற அளவிலேயே தொடர வேண்டும் - முதலமைச்சர் விஜய்</p><p>தொகுதி மறுவரையறை குறித்த ஆலோசனையில் 6 கட்சிகளின் எம்பிக்கள் பங்கேற்றனர். அனைத்துக்கட்சி எம்பிக்களுடன் நடத்திய ஆலோசனையில் தொகு மறுவரையறை குறித்து விவாதித்தோம் - முதலமைச்சர் விஜய்</p><p>அனைத்துக்கட்சி எம்பிக்களுடன் நடத்திய ஆலோசனையில் தொகு மறுவரையறை குறித்து விவாதித்தோம்.</p><p>நாட்டின் மக்கள்தொகையில் சமஅளவில் பெண்கள் உள்ளதால் அவர்களுக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டும்.</p><p>மகளிருக்கான 33% இடஒதுக்கீட்டை மேலும் தாமதிக்க கூடாது. மத்திய அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் - முதலமைச்சர் விஜய்</p><p>பெண்களின் வெற்றி சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் அதிகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.</p><p>ஒரு பெண் அதிகாரம் பெற்றால் ஒரு குடும்பம் உயர்கிறது. ஆயிரக்கணக்கான பெண்கள் அதிகாரம் பெறும்போது நாடே உயர்கிறது - முதலமைச்சர் விஜய்</p> <p>2021-ல் 12 பெண்கள் இருந்த நிலையில் 2026 சட்டசபையில் 26 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.</p><p>தமிழ்நாட்டில் ஆண்களை விட பெண்கள் தான் அதிக ஓட்டு போட்டுள்ளனர். பெண்களுக்கான முன்னுரிமை வழங்குவதில் இந்தியாவுக்கு தவெக அரசு முன்னுதாரணமாக உள்ளது.</p><p>உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீட்டால் பெண்களின் தலைமை பண்பும் நிரூபிக்கப்பட்டுள்ளது - முதலமைச்சர் விஜய்</p><h2>முதலமைச்சர் விஜய்</h2><p>பெண்கள் தனிப்பட்ட முறையில் சமூகத்தில் உயர்ந்தால் மட்டுமே ஒட்டுமொத்த சமூகத்திற்கும் நல்ல பெயர் வரும்.</p><p>பெண்கள் இடஒதுக்கீடு என்பது சலுகை  அல்ல சமூக நீதி.</p><p>மிகப்பெரிய பணம் இருந்தால் வீட்டுக்கோ , பொருளாதாரம் இருந்தால் நாட்டுக்கோ பெரிய பெயரி வந்துவிடும் என நினைப்பர் - முதலமைச்சர் விஜய்</p><p>நமது குடும்பத்தில் உள்ள பாட்டி, அம்மா, அக்கா, தங்கையை பற்றிய தீர்மானம் இது - முதலமைச்சர் விஜய்</p><p>தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்டசபையில் தனித்தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் கொண்டு வருகிறார்.</p><p>தமிழ்நாடு சட்டசபை நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் அமர்வு தொடங்கியது</p><p>தமிழ்நாடு சட்டசபை நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் அமர்வு தொடங்கியதுதமிழ்நாடு சட்டசபை நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் அமர்வு தொடங்கியது</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/resolution-against-constituency-delimitation-to-be-tabled-in-assembly-today">தொகுதி மறுவரையறைக்கு எதிராக தீர்மானம் - சட்டசபையில் இன்று தாக்கல்</a></p> ]]></content:encoded></item><item><title>மகனைத் தேடிய மூத்த குடிமகனிடம் ரூ.29 லட்சம் மோசடி: கொல்கத்தாவில் அதிர்ச்சி சம்பவம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/senior-citizen-cheated-of-rs-29-lakh-while-searching-for-missing-son</link><comments>https://www.maalaimalar.com/news/national/senior-citizen-cheated-of-rs-29-lakh-while-searching-for-missing-son#comments</comments><guid isPermaLink="false">7ddf9546-a5fd-44b8-993e-e2d368e6d31b</guid><pubDate>Wed, 12 Aug 2026 06:51:35 +0000</pubDate><atom:updated>2026-08-12T06:51:35.892Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கொல்கத்தா,Kolkata,money laundering,மோசடி புகார்,Kariyahat,காரியாஹாட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/wehyfz6l/fraud.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kolkata  Money laundering]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/wehyfz6l/fraud.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தனது காணாமல் போன மகனைத் தேட உதவி செய்வதாகக் கூறி, மூத்த குடிமகன் ஒருவரிடம் தனியார் புலனாய்வாளர் ஒருவர் ரூ.29 லட்சத்துக்கும் அதிகமான தொகையை ஏமாற்றிப் பறித்த சம்பவம் கொல்கத்தாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>பர்த்வான் பகுதியைச் சேர்ந்த 64 வயதான ஓய்வுபெற்ற அரசு அதிகாரி (WBCS) என்பவரின் 29 வயது மகன், கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி 21 அன்று திடீரென காணாமல் போனார். உள்ளூர் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால், கவலையடைந்த தந்தை கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் புலனாய்வு நிறுவனத்தை அணுகினார். மகனைக் கண்டுபிடிக்க ரூ.5 லட்சம் கட்டணமாக ஒப்பந்தம் செய்யப்பட்டு, முதற்கட்டமாக ரூ. 4.5 லட்சம் செலுத்தப்பட்டது.</p><h2>பணம் <strong>பறிப்</strong>பு</h2><p>அந்தத் தனியார் நிறுவனம் இந்த வழக்கை சாம்ராட் பௌமிக் என்ற நபரிடம் ஒப்படைத்தது. 2025 ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில், காணாமல் போன இளைஞர் புருலியா-ஜார்க்கண்ட் எல்லைக்கு அருகில் இருப்பதாகவும், அவரைப் பற்றிய முக்கியமான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் சாம்ராட் பௌமிக் போலியான வாக்குறுதிகளை அளித்தார்.</p><p>ரகசியத் தகவலாளர்களுக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றும், களத்தில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடுதல் நிதி தேவை என்றும் கூறி, தந்தையின் பதற்றத்தைப் பயன்படுத்தி மீண்டும் மீண்டும் பணம் கோரினார். இதை நம்பிய தந்தை, டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் ரொக்கம் மூலமாக மொத்தம் ரூ. 25,34,746 வழங்கினார்.</p><h2>மோ<strong>சடி வெளிச்சத்திற்கு வந்த</strong> விதம்</h2><p>தொடர்ந்து பணம் பெற்ற போதிலும் எந்த முன்னேற்றமும் இல்லாததால், தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த தந்தை 2025 டிசம்பர் 20 அன்று சாம்ராட்டைச் சந்தித்துத் தான் கொடுத்த பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டார். அதற்கு சாம்ராட் ரூ.1 லட்சத்தை மட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டு, தொடர்பைத் துண்டித்ததுடன் அவருக்கு மிரட்டலும் விடுத்துள்ளார். இதற்கிடையில், சேவை வழங்காததால் தனியார் புலனாய்வு நிறுவனம் தான் பெற்ற ரூ. 4.5 லட்சத்தை முழுமையாகத் திருப்பி அளித்துவிட்டது.</p><h2>காவ<strong>ல் துறை விசாரணை</strong></h2><p>ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மூத்த குடிமகன், ஆகஸ்ட் 8 அன்று காரியாஹாட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், முதலமைச்சரின் 'ஜனதார் தர்பார்' நிகழ்விலும் இச்சம்பவம் குறித்து முறையிட்டதைத் தொடர்ந்து, காணாமல் போன மகனைக் கண்டுபிடிக்க குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. </p><p>தற்போது காரியாஹாட் காவல் துறையினரும் சிஐடியும் இணைந்து விசாரணையைத் தொடங்கியுள்ளன. சாம்ராட் பௌமிக்கிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர்களின் நிதிப் பரிவர்த்தனைகள் குறித்துத் தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>29 வீரர்கள், 100 கி.மீ தூரம், ஒரே ஒரு பிரம்மாண்ட ஜாகுவார்: கின்னஸ் சாதனை படைத்தது ஜாகுவார் டிசிஎஸ் ரேசிங் அணி!</title><link>https://www.maalaimalar.com/news/world/29-players-100-km-one-giant-jaguar-guinness-record</link><comments>https://www.maalaimalar.com/news/world/29-players-100-km-one-giant-jaguar-guinness-record#comments</comments><guid isPermaLink="false">a3b6e8e7-5ce5-4a29-b9e0-26352f7b32b1</guid><pubDate>Wed, 12 Aug 2026 06:26:59 +0000</pubDate><atom:updated>2026-08-12T06:26:59.796Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Guinness World Record,கின்னஸ் சாதனை,Jaguar TCS,TCS Racing,GEN3,ஜாகுவார் டிசிஎஸ்,டிசிஎஸ் ரேசிங் அணி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/uoljsdyz/tcs.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jaguar TCS]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/uoljsdyz/tcs.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஃபார்முலா ஈ கார் பந்தயத் தொடரின் GEN3 சகாப்தம் முடிவடைவதை முன்னிட்டு, லண்டன் வீதிகளில் 100 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் ஓடி, ஜாகுவார் ஐ-டைப் 7 ரேஸ் காரின் பிரம்மாண்ட வடிவத்தை ஜிபிஎஸ் வரைபடமாக உருவாக்கி ஜாகுவார் டிசிஎஸ் ரேசிங் அணி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.</p><h2>சாத<strong>னை</strong></h2><p>வரும் ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள லண்டன் ஈ-ப்ரீ தொடருடன் ஃபார்முலா ஈ கார பந்தயத்தின் GEN3 சகாப்தம் நிறைவடைகிறது. இதனைச் சிறப்பிக்கும் வகையில், ஜாகுவார் டிசிஎஸ் ரேசிங் அணி மற்றும் அதன் முக்கிய தொழில்நுட்பப் பங்காளியான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் அமைப்பைச் சேர்ந்த 29 ஓட்டப் பந்தய வீரர்கள் இந்த கின்னஸ் முயற்சியில் ஈடுபட்டனர்.</p><p>டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் லண்டன் தலைமையகத்தில் தொடங்கிய இந்த ஓட்டம், லண்டனின் முக்கிய வீதிகள் வழியாக 100 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தைக் கடந்து மீண்டும் அதே இடத்தில் நிறைவடைந்தது. ஒவ்வொரு வீரரும் தங்களது ஜிபிஎஸ் சாதனையைத் தொடரோட்டப் பேடன் போல அடுத்த வீரரிடம் வழங்கி, தடையற்ற தொடர்ச்சியான பாதையைப் பதிவு செய்தனர். துல்லியமான வரைபடம், தடையற்ற பாதை அமைப்பு மற்றும் ஜிபிஎஸ் பதிவுகள் போன்ற கின்னஸ் அமைப்பின் அனைத்து விதிகளையும் பூர்த்தி செய்து இந்த சாதனை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><h2>GEN3 சகாப்த<strong>த்தின் நா</strong>யகன்</h2><p>கடந்த நான்கு சீசன்களாக நடைபெற்ற GEN3 சகாப்தத்தில், ஜாகுவார் டிசிஎஸ் ரேசிங் அணி 18 பந்தயங்களில் வெற்றி பெற்று மிக வெற்றிகரமான அணியாகத் திகழ்கிறது. மேலும், 23 முறை போடியம் இடங்களையும், மொத்தம் 1,144 புள்ளிகளையும் ஈட்டி சாதனை படைத்துள்ளது. இது தவிர, லண்டன் எக்செல் மெய்நிகர் ரேஸ் களத்தில் 109 நபர்கள் பங்கேற்ற சிமுலேட்டர் வீடியோகேம் ரிலே தொடரிலும் பங்கேற்று, ஒரே வாரத்தில் இரண்டாவது கின்னஸ் சாதனையையும் இந்த அணி தன்வசப்படுத்தியுள்ளது.</p><h2>சாம்பியன்ஷி<strong>ப் ரேஸில்</strong> ஜாகுவார்</h2><p>தற்போது ஃபார்முலா ஈ அணிகளுக்கான உலக சாம்பியன்ஷிப் தரவரிசையில் ஜாகுவார் டிசிஎஸ் ரேசிங் அணி போர்ச்சே அணியை விட 14 புள்ளிகள் முன்னிலையில் உள்ளது. ஓட்டுநர்களுக்கான தரவரிசையில் ஜாகுவார் அணியின் மிட்ச் எவன்ஸ் இரண்டாம் இடத்தில் உள்ளார். 10 ஆண்டுகள் ஜாகுவார் அணியுடன் பயணித்த மிட்ச் எவன்ஸுக்கு இந்த லண்டன் ஈ-ப்ரீ போட்டி இறுதிப் போட்டியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தின் உரிமைக்காக அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்..!- அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-athav-arjuna-urges-unity-for-tamil-nadus-rights</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-athav-arjuna-urges-unity-for-tamil-nadus-rights#comments</comments><guid isPermaLink="false">cfbcd6a8-9da9-4153-a4a4-7e1110de5ccc</guid><pubDate>Wed, 12 Aug 2026 06:21:48 +0000</pubDate><atom:updated>2026-08-12T06:21:48.187Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,தொகுதி மறுவரையறை,Delimitation Bill,அமைச்சர் ஆதவ் அர்ஜூனா,Minister Adhav Arjuna</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/yozo3dxy/Adhav-arjuna.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Aadhav Arjuna]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/yozo3dxy/Adhav-arjuna.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டபையில் இன்று 4வது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. இதில், தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்பசபையில் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார்.</p><p>முதலமைச்சர் கொண்டு வரும் தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துளை பதிவு செய்தனர்.</p><p>இதில், திமுக, காங்கிரஸ், மஜக, மமக, சிபிஎம், சிபிஐ, விசிக, ஐயூஎம்எல் ஆதரவு தெரிவித்துள்ளது. அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.</p><p>தொடர்ந்து, சட்டசபையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உரையாற்றியதாவது:-</p><p>மாநில சுயாட்சி இல்லாமல் இந்தியாவை உருவாக்க முடியாது என அண்ணா கூறி உள்ளார்.</p><p>நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லாதபோது அரசியலமைப்பில் முதல் தீர்மானம் கொண்டு வந்தது தமிழ்நாடு.</p><p>அரசியல் ரீதியில் மாறுபட்ட கருத்தில் இருந்தாலும் தனித்தீர்மானத்தை ஆதரித்த எதிர்க்கட்சி தலைவருக்கு நன்றி.</p><p>அண்ணாவின் கொள்கை திமுக, அதிமுகவுக்கு மட்டுமல்ல, அவரது கொள்கை வழியில் வந்தவர்கள் தவெகவினர்.</p><p>உயிருள்ள வரை மாநில சுயாட்சிக்காக இதே பேரவையில் குரல் கொடுத்தவர்கள் முன்னாள் முதல்வர்கள் கலைஞர், ஜெயலலிதா.</p><p>உள்ளாட்சி, கட்சியில் நிர்வாக ரீதியாக மாற்றம் செய்யும்போது நாடாளுமன்றத்தில் ஏன் மாற்றம் கூடாது என கேட்கின்றனர்?</p><p>மக்கள்தொகை அடிப்படையில் நாடாளுமன்ற விகிதாசாரத்தை உருவாக்கவில்லை அமெரிக்கா.</p><p>5,6 வடமாநிலங்கள் சேர்ந்தாலே ஒரு பிரதமரை உருவாக்கும் நிலையில் உள்ளது. அது மாற்றப்பட வேண்டும்.</p><p>அதிகாரம் குஜராத், உ.பி.க்கு மட்டுமல்ல, நமது குரல் அதிகாரம் பிரதமராக ஒலிக்க வேண்டும். வருங்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து ஒரு பிரதமர் உருவாக வேண்டும்.</p><p>இன்றைய தீர்மானம் என்பது காங்கிரஸ் பாஜக என்பதல்ல, மாநில சுயாட்சியை நிலைநிறுத்துவதற்கு தீர்மானம்.</p><p>பேரவையில் குறைவான எண்ணிக்கையில் உள்ள பாஜக, காங்கிரசின் நிலை நாளை நாடாளுமன்றத்தில் நமக்கு வரக்கூடாது.</p><p>பாஜக உறுப்பினராக இருந்தாலும் இந்த தீர்மானத்தில் தமிழன் என்ற முறையில் செயல்படுங்கள்.</p><p>தொகுதி மறுவரையறையில் மு.க.ஸ்டாலின் தான் இதற்கு முதலில் குரல் கொடுத்தார் என்பதை நாங்கள் ஆதரிக்கிறோம். தென்னிந்திய விகிதாசாரம் குறைவதை முன்னாள் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கடுமையாக எதிர்த்தனர்.</p><p>தமிழ்நாட்டிற்கான விகிதாச்சாரம் உயர்ந்தாலும் கூட முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்த்தார். வடகிழக்கு மாநிலங்களின் நிலை நமக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தீர்மானம் கொண்டு வந்துள்ளார் முதல்வர்.</p><p>ரூ.1 தந்தால் நமக்கு 29 பைசா மட்டுமே திருப்பி தருகிறார்கள், நாம் உழைத்தாலும் நம்மால் அதிகாரத்தை உருவாக்க முடியா நிலை.</p><p>2026-க்கு பின் காங்கிரசுக்கும் திமுகவுக்கும் தற்போது வேறு நிலை இருக்கலாம். ஆனால் மாநில சுயாட்சி பிரச்சனை ஒன்று சேருக.</p><p>தமிழ்நாட்டிற்கான பிரச்சனை என்றால் திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒன்றாக நிற்க வேண்டும்.</p><p>ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை எதிர்த்து தமிழக எம்பிக்கள் ஒற்றுமையாக நின்று எதிர்த்தனர். தமிழக எம்பிக்கள் 39 பேரும் அவையில் இருந்த வெளிநடப்பு செய்யாமல், சட்டத்தை எதிர்த்து வாக்களிக்குமாறு அமைச்சர் வேண்டுகோள்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றம்- சபாநாயகர் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/speaker-announces-resolution-moved-by-the-chief-minister-in-the-assembly-passed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/speaker-announces-resolution-moved-by-the-chief-minister-in-the-assembly-passed#comments</comments><guid isPermaLink="false">4416fa4c-6bb4-43a9-a2ce-0fbbed1dce74</guid><pubDate>Wed, 12 Aug 2026 06:20:11 +0000</pubDate><atom:updated>2026-08-12T06:20:11.205Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly,தொகுதி மறுவரையறை,Delimitation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/83p1jt8x/JCDPrabhakar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் ]]></media:title><media:description type="html"><![CDATA[ சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/83p1jt8x/JCDPrabhakar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சட்டசபையில் முதலமைச்சர் முன்மொழிந்த தனித்தீர்மானத்தின் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பின்பு, தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார்.</strong></em> </p><p>முதலமைச்சர் விஜய் தலைமையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%88">தொகுதி மறுசீரமைப்பு</a> மசோதாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடிவு எடுக்கப்பட்டது.</p><p>அதன்படி இன்று தமிழக சட்டசபையில் முதலமைச்சர் விஜய் தொகுதி மறுவரையறை தொடர்பாக அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வந்து முன் மொழிந்தார்.</p><p>அப்போது முதலமைச்சர் விஜய் பேசியதாவது:-</p><h2><strong>இதயத்தில் இருந்து பேசுகிறோம்</strong></h2><p>நமது குடும்பத்தில் இருக்கிற, நமது வீட்டில் இருக்கிற நமது பாட்டி, அம்மா, அக்காவை, தங்கையை பற்றிய ஒரு தீர்மானம். அதைபற்றி அவர்களுக்காக நமது இதயத்தில் இருந்து பேசுகிறோம்.  இதற்கு முன்னாடி இந்த விஜய்க்கு கிடைத்த இடத்துக்கும் இன்னிக்கு இந்த விஜய்க்கு கிடைத்திருக்கிற இடத்துக்கும் மிகப்பெரிய காரணமாக இருக்கிறது என்னுடைய பாட்டி, அம்மா, தங்கைகள்தான். </p><p>அவர்கள் மிகப்பெரிய காரணம் என்பதை என்னால் மறுக்கவே முடியாது.  அந்த நன்றி, விசுவாதத்தோடு, அப்படி ஒரு உணர்வோடுதான் இங்கு நின்று பேசுகிறேன். பெரிதாக பணம் இருந்தால் ஒரு வீட்டுக்கோ, பெரிதாக பொருளாதாரம் இருந்திட்டால் ஒரு நாட்டுக்கோ பெரிய பெயர் வந்து விடும் என்று சிலபேர் நினைக்கலாம். ஆனால் உண்மையாகவே ஒரு நாட்டுக்கோ, வீட்டுக்கோ எப்போது பெரிய பெயர் கிடைக்கும் தெரியுமா?</p><p>அந்த வீட்டு பெண்கள் தனிப்பட்ட முறையில் சமூகத்தில் உயர்ந்தால்தான் பெரிய பெயர் ஒட்டுமொத்த சமூகத்துக்கே கிடைக்கும். நமது தமிழ்நாட்டு மண்ணில் சங்க காலத்தில் இருந்து அன்றும் சரி, இன்றும் சரி மிகப்பெரிய ஆளுமையாக பெண் ஆளுமைகள் நிறைய பேர் இருக்கிறாங்க. </p><p>இன்று இந்த பேரவையின் வாயிலாக பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை இனியும் தாமதிக்காமல் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம்.  இது பெண்களுக்கான சலுகை அல்ல. அவர்களின் ஜனநாயக உரிமை. இது ஒருவருக்கான வெற்றி அல்ல. இது இந்திய ஜனநாயகத்தின் வெற்றி. ஒரு பெண் அதிகாரம் பெறும்போது ஒரு குடும்பம் உயருகிறது. </p><p>ஆயிரக்கணக்கான பெண்கள் அதிகாரம்பெறும்போது ஒரு நாடே உயருகிறது. மக்கள் தொகை மற்றும் தொகுதி மறுசீரமைப்புடன் பெண்களுக்கான தொகுதி ஒதுக்கீட்டை இணைப்பதால் ஏற்படும் காலதாமத்தின் காரணமாக பெண்களுக்கான தொகுதி ஒதுக்கீட்டை ஒத்திவைக்கக் கூடாது என்றும், அதை விரைவாக அமல்படுத்த தகுந்த அரசியல் அமைப்பு மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.</p><p>இவ்வாறு முதலமைச்சர் விஜய் பேசினார். </p><h2><strong>ஆதரவு</strong></h2><p>இதனை தொடர்ந்து <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-supports-the-resolution-moved-by-the-chief-minister">திமுக</a>, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஐயூஎம்எல், மனிதநேய ஜனநாயக கட்சி,  மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. </p><p>அதனை தொடர்ந்து சட்டசபையில் முதலமைச்சர் முன்மொழிந்த தனித்தீர்மானத்தின் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பின்பு, தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>அரசு பள்ளி நிதியில் ரூ.2.66 கோடி சுருட்டல்! 4 ஆண்டுகளாக போக்கு காட்டிய பள்ளி முன்னாள் முதல்வர் அதிரடி கைது!</title><link>https://www.maalaimalar.com/news/national/uttar-pradesh-government-school-fund-scam-arrest</link><comments>https://www.maalaimalar.com/news/national/uttar-pradesh-government-school-fund-scam-arrest#comments</comments><guid isPermaLink="false">6b4e8436-24f6-4b51-a0fe-783596006584</guid><pubDate>Wed, 12 Aug 2026 06:15:17 +0000</pubDate><atom:updated>2026-08-12T06:15:17.438Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Uttar Pradesh,உத்தரப் பிரதேசம்,AshramSchoolScam,EOWArrest,JeetlalPatel,PrayagrajCorruption,GovtFundScam,அரசுபணமோசடி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/wp72hfs7/GovtFund-Scam" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ GovtFund Scam ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/wp72hfs7/GovtFund-Scam?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">உத்தரப் பிரதேச</a> மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள அரசு ஆசிரமப் பள்ளி நிதியில், விதிகளை மீறி பல கோடி ரூபாய் ஊழல் செய்துவிட்டு தலைமறைவாக இருந்த முன்னாள் பொறுப்பு முதல்வர் ஜீத்லால் படேலை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.</p><h2>என்ன நடந்தது?</h2><p>பிரயாக்ராஜ் மாவட்டத்தில் சமூக நலத்துறையின் கீழ் 'ராஜ்கியா ஆசிரம பத்ததி' என்ற அரசு குடியிருப்புப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. </p><p>கடந்த 2018-19 முதல் 2021-22 வரையிலான நிதியாண்டுகளில், இங்குள்ள 4 பள்ளிகளுக்கு அரசு வழங்கிய நிதியில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாகப் புகார்கள் எழுந்தன. </p><p>இதுகுறித்து உத்தரப் பிரதேச அரசின் உள்துறை உத்தரவின் பேரில், பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.</p><h2>சாமர்த்தியமாக நடந்த ஊழல்:</h2><p>விசாரணையில், சுர்வால் ஷஹ்னி கிளையின் பொறுப்பு முதல்வராக இருந்த ஜிதலால் படேல் மற்றும் சில அதிகாரிகள் சேர்ந்து இந்த ஊழலை அரங்கேற்றியது தெரிய வந்தது. அரசு விதிகளின்படி எந்தவொரு பொருளையும் வாங்க வேண்டுமானால் முறையான டெண்டர் மற்றும் கொட்டேஷன் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். </p><p>ஆனால், இவர்கள் எந்த விதியையும் மதிக்காமல், தங்களுக்கு வேண்டிய தனியார் நபர்களிடம் இருந்து பள்ளிக்குத் தேவையற்ற பொருட்களைக் கூடுதல் விலைக்கு வாங்கியுள்ளனர். </p><p>இதன் மூலம் ஒட்டுமொத்தமாக ரூ 2.66 கோடி அரசுப் பணத்தை மோசடி செய்து சுருட்டியுள்ளனர்.</p><h2>போலீஸ் வலைவீச்சு &amp; கைது:</h2><p>இந்த மெகா ஊழல் தொடர்பாக 5 அரசு அதிகாரிகள் மற்றும் 12 தனியார் நபர்கள் மீது கூட்டுச்சதி, நம்பிக்கை துரோகம் மற்றும் ஏமாற்றுதல் (IPC Sections 409, 420, 120-B) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. </p><p>போலீசார் தன்னைத் தேடுவதை அறிந்த ஜீத்லால் படேல், கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.</p><p>அவரைப் பிடிக்கத் தனிப்படை அமைத்து தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்ட லக்னோ பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார், ஆகஸ்ட் 10 அன்று பிரயாக்ராஜின் சங்கர்கர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வைத்து அவரை மடக்கிப் பிடித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>ரியல் எஸ்டேட் உலகையே மிரள வைத்த டீல்! ₹271 கோடிக்கு பென்ட்ஹவுஸ் வாங்கிய இந்திய தொழிலதிபர்!</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/record-breaking-luxury-penthouse-sale-indian-tycoon-pays-rs-271-crore</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/record-breaking-luxury-penthouse-sale-indian-tycoon-pays-rs-271-crore#comments</comments><guid isPermaLink="false">fc978ad8-6ef1-4099-955e-c30c9874dc68</guid><pubDate>Wed, 12 Aug 2026 06:08:07 +0000</pubDate><atom:updated>2026-08-12T06:08:07.056Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gurugram RealEstate,குருகிராம் ரியல்எஸ்டேட்,DLF TheDahlias,டிஎல்எஃப்டாலியாஸ்,Luxury Penthouse,CroreClubHouses,Property Investment India</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/xbp6gf3d/Gurugram-RealEstate" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gurugram RealEstate]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/xbp6gf3d/Gurugram-RealEstate?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF">ரியல் எஸ்டேட்</a> வரலாற்றிலேயே மிக விலையுயர்ந்த மற்றும் பிரம்மாண்டமான சொகுசு பங்களா விற்பனை ஒப்பந்தம் ஒன்று டெல்லிக்கு அருகிலுள்ள குருகிராமில் அரங்கேறியுள்ளது. </p><p>பிரபல தொழிலதிபர் மானவ் சர்தானா, அங்குள்ள ஒரு அதிநவீன பென்ட்ஹவுஸை ரூ.271 கோடிக்கு வாங்கி ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.</p><h2>ஒரு சதுர அடி விலை எவ்வளவு தெரியுமா?</h2><p>டி.எல்.எஃப் நிறுவனத்தின் அதிசொகுசு திட்டமான 'தி டாலியாஸ்' குடியிருப்பில் தான் இந்த டீல் நடந்துள்ளது. இந்த பென்ட்ஹவுஸின் மொத்த பரப்பளவு 17,200 சதுர அடியும், இதன் கார்பெட் ஏரியா மட்டும் சுமார் 10,500 சதுர அடியிலும் அமைந்துள்ளது. </p><p>கணக்கிட்டுப் பார்த்தால், கார்பெட் ஏரியாவின் அடிப்படையில் ஒரு சதுர அடிக்கு சுமார் ரூ.2.6 லட்சம் விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் ஒரு சதுர அடிக்கு விற்கப்பட்ட மிக காஸ்ட்லியான வீடுகளில் ஒன்றாக விளங்குகிறது.</p><h2>மும்பைக்கு டஃப் கொடுக்கும் குருகிராம்:</h2><p>இதுவரை இந்தியாவின் மிக விலையுயர்ந்த வீடுகள் மற்றும் சொகுசு வாழ்க்கை முறையில் மும்பைதான் முதலிடம் பிடித்து வருகிறது. </p><p>உதாரணமாக, மும்பை வொர்லி பகுதியில் லீனா காந்தி திவாரி ரூ.639 கோடிக்கும், மலபார் ஹில் பகுதியில் ஜே.பி.தப்பாரியா ரூ.369 கோடிக்கும் வீடுகளை வாங்கியுள்ளனர். </p><p>ஆனால், இப்போது குருகிராமும் மும்பைக்கு இணையாக கோடீஸ்வரர்களின் சொர்க்க பூமியாக மாறி வருகிறது.</p><h2>கோடீஸ்வரர்களின் கூடாரம்:</h2><p>'தி டாலியாஸ்' திட்டத்திற்கு முன்பாக, குருகிராமில் இருந்த 'தி கேமலியாஸ்' என்ற திட்டத்தில் தான் பெரும் பணக்காரர்கள் வீடுகளை வாங்கி வந்தனர். </p><p>அங்கு வாரன் பஃபெட்டின் நெருங்கிய கூட்டாளியான அஜித் ஜெயின் ரூ.85 கோடிக்கும், தொழிலதிபர் ரிஷி பார்ட்டி ரூ.190 கோடிக்கும் பென்ட்ஹவுஸ் வாங்கியிருந்தனர். </p><p>ஆனால், இப்போது 'தி டாலியாஸ்' அந்த சாதனைகளை எல்லாம் முறியடித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் டெல்லியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் இங்கு ரூ.380 கோடிக்கு 4 வீடுகளை மொத்தமாக வாங்கினார்.</p><h2>'தி டாலியாஸ்' திட்டத்தின் பிரம்மாண்டம்:</h2><p>இந்த ஒட்டுமொத்த திட்டத்தின் மதிப்பு மட்டும் ரூ.40,000 கோடிக்கும் அதிகம். மொத்தம் 8 கோபுர டவர்ஸ் மற்றும் 29 அடுக்கு மாடிகளைக் கொண்ட இந்த திட்டத்தில் 420 அல்ட்ரா-லக்சரி வீடுகள் மட்டுமே கட்டப்படுகின்றன. </p><p>இதில் 15 டூப்ளெக்ஸ் பென்ட்ஹவுஸ்கள் மற்றும் 3.5 லட்சம் சதுர அடியில் ஒரு பிரம்மாண்ட கிளப்ஹவுஸ் அமையவுள்ளது.</p><p>டி.எல்.எஃப் நிறுவனத்தின் முதன்மை வணிக அதிகாரி ஆகாஷ் ஓஹ்ரி கூறுகையில், "இந்த திட்டத்தில் 65% வீடுகள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டன. இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு வாழ் இந்தியர்களும் இங்கு வீடுகளை வாங்க போட்டி போட்டு வருகின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவிற்கு முதன்முறை தங்கம்: ஏரியல் சில்க் மற்றும் பிரிட்ஜ் விளையாட்டில் மும்பை உடன்பிறப்புகள் சர்வதேச சாதனை!</title><link>https://www.maalaimalar.com/sports/indias-first-gold-aerial-silk-bridge-mumbai-siblings-record</link><comments>https://www.maalaimalar.com/sports/indias-first-gold-aerial-silk-bridge-mumbai-siblings-record#comments</comments><guid isPermaLink="false">4453ed12-e745-4532-aea4-1e988329d4e4</guid><pubDate>Wed, 12 Aug 2026 05:50:17 +0000</pubDate><atom:updated>2026-08-12T05:50:17.329Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Mumbai siblings,Aerial silk Game,Bridge Game,மும்பை உடன்பிறப்புகள்,ஏரியல் சில்க்,பிரிட்ஜ் விளையாட்டு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/z9e7p26o/mumbai-sibings.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mumbai siblings]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/z9e7p26o/mumbai-sibings.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மும்பை வொர்லி பகுதியைச் சேர்ந்த சகோதர சகோதரியான வீர் கஹ்ரோத்ரா மற்றும் விஹா கஹ்ரோத்ரா ஆகிய இருவரும் சர்வதேச அளவிலான மாற்று விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளனர். உடலியல் ரீதியான சவால்களை எதிர்கொள்ள விளையாட்டுக்குள் நுழைந்த இவர்கள், இன்று உலக சாம்பியன் பட்டங்களைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர்.</p><h2>ஏரியல் <strong>சில்க் பிரிவில் வீர் கஹ்</strong>ரோத்ராவின் தங்கம்</h2><p>17 வயதான வீர் கஹ்ரோத்ரா, ஹங்கேரியில் நடைபெற்ற போல் அண்ட் ஏரியல் ஸ்போர்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஏரியல் சில்க் பிரிவில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இந்த பிரிவில் இந்தியாவிற்காக தங்கம் வெல்லும் முதல் வீரர் இவராவார். தரைப்பகுதியில் இருந்து சுமார் 30 அடி உயரத்தில் தொங்கும் துணிகளைப் பயன்படுத்தி உடலின் நெகிழ்வுத்தன்மை, வலிமை மற்றும் சமநிலையை வெளிப்படுத்தும் இந்த விளையாட்டில் வீர் தீவிர பயிற்சி பெற்றுள்ளார். தனது தொடை தசைகளின் வளர்ச்சிக்காக பிசியோதெரபியின் ஒரு பகுதியாக 8 வயதில் இதில் சேரத் தொடங்கி, இன்று உலகளவில் சாதனை அடைந்துள்ளார்.</p><h2>பிரிட்ஜ் கார்டு வி<strong>ளையாட்டி</strong>ல் விஹா கஹ்ரோத்ராவின் சாதனை</h2><p>14 வயதான விஹா கஹ்ரோத்ரா, சீனாவில் நடைபெற்ற 9வது உலக யூத் டிரான்ஸ்நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டியில் 16 வயதுக்குட்பட்டோருக்கான பிரிட்ஜ் கார்டு விளையாட்டில் தங்கம் வென்றார். இந்த விளையாட்டில் நார்வே, இங்கிலாந்து மற்றும் இந்திய வீராங்கனைகளுடன் இணைந்து அவர் வெற்றி பெற்றார். கணிதத் திறனும் மன வியூகங்களும் நிறைந்த இந்த விளையாட்டில், எதிராளிகளின் நகர்வுகளைக் கணித்து விளையாடுவதற்காக தினமும் பல மணிநேரம் இணையவழி பயிற்சிகளில் விஹா ஈடுபட்டு வந்தார்.</p><h2>இந்தியாவி<strong>ல் நிலவு</strong>ம் சவால்கள்</h2><p>இந்தியாவில் இந்த இரண்டு விளையாட்டுக்களுக்கும் போதிய பயிற்சி மையங்களோ அல்லது உள்கட்டமைப்புகளோ இல்லாததே இவர்கள் எதிர்கொண்ட மிகப்பெரிய சவாலாகும். ஏரியல் சில்க் பயிற்சிக்கு ஐரோப்பாவில் 30 அடி உயர கூரைகள் உள்ள அரங்குகள் இருக்கும் வேளையில், இந்தியாவில் 18 அடி உயரமுள்ள அரங்கைத் தேடுவதே சிரமமாக இருந்தது. அதேபோல பிரிட்ஜ் விளையாட்டுக்குத் தகுந்த பயிற்சியாளர்களைக் கண்டுபிடிப்பதும் கடினமாக இருந்தது. இத்தனை சவால்களையும் தாண்டி இருவருமே சர்வதேச அரங்கில் தங்கப் பதக்கம் வென்று நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்துக்கு தி.மு.க. ஆதரவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-supports-the-resolution-moved-by-the-chief-minister</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-supports-the-resolution-moved-by-the-chief-minister#comments</comments><guid isPermaLink="false">2fcee17a-e88d-4b59-ad30-3daa239fd312</guid><pubDate>Wed, 12 Aug 2026 05:49:35 +0000</pubDate><atom:updated>2026-08-12T05:49:35.856Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly,தொகுதி மறுவரையறை,Delimitation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/wrkhcacw/udhayanidhi.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/wrkhcacw/udhayanidhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>7.18 விகிதாச்சாரத்தை குறைக்கக்கூடாது எனக்கூறி த.வெ.க. அரசு கொண்டு வந்த தனித்தீர்மானத்தை தி.மு.க. ஆதரிக்கிறது. </p><p>தமிழக சட்டசபையில் முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%88">தொகுதி மறுவரையறை</a> விவகாரத்தில் எக்காரணத்தை கொண்டும் தமிழகம் பாதிக்கப்படக் கூடாது என்பதே தி.மு.க. நிலைப்பாடு. மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்தால் என்ன பாதிப்பு என நாட்டுக்கே முதலில் கூறியது தி.மு.க. தான். </p><p>எம்பிக்கள் எண்ணிக்கை குறைக்க அனுமதிக்க மாட்டோம், தமிழகத்தின் விகிதாச்சாரம் குறையக்கூடாது என இதே சட்டசபையில் மு.க.ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றினார். திமுக அமைச்சரவை கூட்டம் நடத்திய பின்னர் கடந்தாண்டு மார்ச்சில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. Fair Delimitation தலைப்பில் 5 மாநில முதல்வர்கள், 10 கட்சிகளுக்கு கடிதம் எழுதி நடவடிக்கை எடுத்தார் மு.க.ஸ்டாலின். தி.மு.க.வின் எதிர்ப்பால் தான் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/separate-resolution-against-constituency-delimitation-vck-and-iuml-extend-support">தொகுதி மறுவரையறை</a> மசோதா நாடாளுமன்றத்தில் தோற்கடிக்ப்பட்டது. </p><p>2026 மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் தமிழக எம்பிக்கள் எண்ணிக்கை குறையும். ஏப்.16-ல் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதா நகலை எரித்து திமுக தனது எதிர்ப்பை பதிவு செய்தது. அடுத்த 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுவரையறை நடத்தக்கூடாது. 7.18 விகிதாச்சாரத்தை குறைக்கக்கூடாது எனக்கூறி த.வெ.க. அரசு கொண்டு வந்த தனித்தீர்மானத்தை தி.மு.க. ஆதரிக்கிறது. </p><p>மேலும், 33 சதவீத மகளிர் இடஒதுக்கீட்டை முழுமனதுடன் திமுக ஆதரிக்கிறது வரவேற்கிறது என்றார். </p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம்: ம.ஜ.க., ம.ம.க., காங்கிரஸ் ஆதரவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-motion-against-delimitation-mjk-mmk-support</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-motion-against-delimitation-mjk-mmk-support#comments</comments><guid isPermaLink="false">a7400be3-f821-462f-9ea9-87c564cfd722</guid><pubDate>Wed, 12 Aug 2026 05:45:46 +0000</pubDate><atom:updated>2026-08-12T05:45:46.348Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,மஜக,தொகுதி மறுவரையறை,Delimitation,tn cm vijay,மமக</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/b5gjf3o8/MJK.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Thamimun Ansari- Jawahirulla ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/b5gjf3o8/MJK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டபையில் இன்று 4வது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. இதில், தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்பசபையில் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார்.</p><p>முதலமைச்சர் கொண்டு வரும் தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துளை பதிவு செய்து வருகின்றனர்.</p><h2>மனிதநேய ஜனநாயக கட்சி</h2><p>இந்நிலையில், தொகுதிமறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு மஜக ஆதரவு தெரிவித்துள்ளது.</p><p>இதுகுறித்து மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி கூறியதாவது:-</p><p>தொகுதி எண்ணிக்கை குறைவாக இருப்பதால் வடகிழக்கு மாநிலங்களின் குரல்கள் நசுக்கப்படுகிறது. அதே சூழல் இங்கும் வரும்.</p><p>மகளிர் இடஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு உள் இடஒதுக்கீடு தேவை.</p><p>தொகுதிமறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு மஜக ஆதரவு தெரிவிக்கிறது.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>மனிதநேய மக்கள் கட்சி</h2><p>தொடர்ந்து, தொகுதிமறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் கொண்டுவந்த தனித்தீர்மானத்திற்கு மமக ஆதரவு தெரிவித்துள்ளார்.</p><p>மேலும்,"2029 தேர்தலிலேயே மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும்.</p><p>அடுத்த 30 ஆண்டுகளுக்கு தொகுதி மறுவரையறை இருக்க கூடாது" என்று மமக எம்எல்ஏ ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.</p><h2>காங்கிரஸ்</h2><p>தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு தமிழக காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.</p><p>வாக்கு வங்கி அரசியல் ஆதாயத்திற்காக மத்திய பாஜக அரசு தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வருகிறது என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் ராஜேஷ்குமார் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு : அவசரமாகத் தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/engine-malfunction-indigo-flight-makes-emergency-landing-at-chennai-airport</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/engine-malfunction-indigo-flight-makes-emergency-landing-at-chennai-airport#comments</comments><guid isPermaLink="false">0f2bf13f-3205-4861-a840-73c9bb8e419e</guid><pubDate>Wed, 12 Aug 2026 05:40:30 +0000</pubDate><atom:updated>2026-08-12T05:40:30.229Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை விமான நிலையம்,Indigo Flight,chennai airport,Engine Malfunction,என்ஜின் கோளாறு,இன்டிகோ விமானம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/dyw98dtl/tt.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ IndiGo flight]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/dyw98dtl/tt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கொல்கத்தாவில் இருந்து 224 பயணிகளுடன் சென்னை நோக்கி வந்த இண்டிகோ நிறுவனத்தின் பயணிகள் விமானத்தில், தரையிறங்குவதற்குச் சிறிது நேரத்திற்கு முன்பு திடீரென இடதுபுற என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. நேற்று இரவு 11:29 மணியளவில் விமான ஓட்டுநர் எஞ்சின் செயலிழந்ததை உணர்ந்து உடனடியாகக் கட்டுப்பாட்டு அறைக்குச் செய்தி அனுப்பினார்.</p><h2>அவ<strong>சரநிலை பிரக</strong>டனம்</h2><p>இதனைத் தொடர்ந்து, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் உடனடியாக முழு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு, தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மருத்துவ மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. என்ஜின் பழுது ஏற்பட்ட போதிலும், விமானி திறம்படச் செயல்பட்டு இரவு 11:37 மணியளவில் விமானத்தை ஓடுபாதை 25-இல் பாதுகாப்பாகத் தரையிறக்கினார்.</p><h2>பாது<strong>காப்பாக தரையிறக்க</strong>ப்பட்டது</h2><p>விமானத்தில் இருந்த 224 பயணிகளும் எவ்வித காயமுமின்றி பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டனர். நிலைமை கட்டுக்குள் வந்ததை அடுத்து, இரவு 11:47 மணியளவில் அவசரநிலை திரும்பப் பெறப்பட்டு, விமான நிலையச் செயல்பாடுகள் இயல்புநிலைக்குத் திரும்பின.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித்தீர்மானம்: வி.சி.க., ஐயூஎம்எல் ஆதரவு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/separate-resolution-against-constituency-delimitation-vck-and-iuml-extend-support</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/separate-resolution-against-constituency-delimitation-vck-and-iuml-extend-support#comments</comments><guid isPermaLink="false">ddb1a40c-3a88-498f-8fa2-d95a0ca0a19f</guid><pubDate>Wed, 12 Aug 2026 05:33:03 +0000</pubDate><atom:updated>2026-08-12T05:33:03.844Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,vck,தமிழக சட்டசபை,TN assembly,விடுதலை சிறுத்தைகள் கட்சி,தொகுதி மறுவரையறை,Delimitation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/zc2qcmvh/IUML.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர்கள் வன்னி அரசு- ஷாஜகான்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர்கள் வன்னி அரசு- ஷாஜகான்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/zc2qcmvh/IUML.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்நாடு சட்டசபையில் தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியை தொடர்ந்து இந்திய முஸ்லிம் லீக் கட்சியும் ஆதரவு தெரிவித்தது.</strong></em> </p><p>அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி போன்றோர் நாடாளுமன்றத்திற்குள் பேசுவது வேறு, வெளியே பேசுவதும் வேறு. பிரதமர் மோடியும், அமித்ஷாவுடம் 2 வித நாடகம் நடத்துவதை வெளிப்படுத்தும் விதமான தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. மகளிர் இடஒதுக்கீடுக்கு தடை இல்லாத போதும் <a href="https://www.maalaimalar.com/topic/தொகுதி-மறுவரையறை">தொகுதி மறுவரையறையுடன்</a> இணைத்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டம். வடமாநிலத்தவருக்கு முக்கியத்துவம் கொடுத்து சமத்துவ நிலையை நீக்கும் வகையில் தொகுதி மறுவரையறை. இந்தி பேசும் மாநில எம்பிக்கள் எண்ணிக்கை உயரும். எனவே அவர்கள் மட்டுமே நாட்டை ஆளும் வாய்ப்பை பெறுவர். தொகுதி மறுவரையறை அனுமதிக்கக்கூடாது, அனுமதிக்க மாட்டோம் என முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவு என்று தெரிவித்தார். </p><p>விடுதலை சிறுத்தைகள் கட்சியை தொடர்ந்து இந்திய முஸ்லிம் லீக் கட்சியும் ஆதரவு தெரிவித்தது. இதுதொடர்பாக அமைச்சர் ஷாஜகான் கூறுகையில், </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/pmk-member-says-chief-minister-must-withdraw-the-resolution">தொகுதி மறுவரையறை</a> தொடர்பாக முதலமைச்சர் கொண்டுவந்த தனித்தீர்மானத்திற்கு IUML ஆதரவு தெரிவிக்கிறது. மத்திய பாஜக அரசு கொண்டு வரம் சட்டங்களும், திட்டங்களும் மக்களுக்கு விரோதமானதாகவே உள்ளது. நாட்டு மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்காமல் பாஜக வெற்றி பெற வேண்டும் என்ற சூழ்ச்சியில் தொகுதி மறுவரையறை. பாஜக வெற்றிபெறவே முடியாத தென் மாநிலங்களின் குரலை நசுக்கும் வகையில் தொகுதி மறுவரையறை. பல ஆண்டுகளை கடந்த அமெரிக்கா போன்ற நாடுகளிலும் தொகுதி எம்பிக்கள் எண்ணிக்கை உயர்த்தப்படவில்லை. சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்படாத நிலையிலும் வருமுன் காக்கும் நோக்கிலேயே முதலமைச்சர் தனித்தீர்மானம் நிறைவேற்றம்.</p><p>இவ்வாறு அமைச்சர் ஷாஜகான் பேசினார். </p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித்தீர்மானத்திற்கு அதிமுக எதிர்ப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/aiadmk-rejects-tn-govt-special-resolution-on-delimitation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/aiadmk-rejects-tn-govt-special-resolution-on-delimitation#comments</comments><guid isPermaLink="false">89047a35-1fc4-474d-b08a-9a1c2a894d1a</guid><pubDate>Wed, 12 Aug 2026 05:20:44 +0000</pubDate><atom:updated>2026-08-12T05:20:44.983Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,எடப்பாடி பழனிசாமி,Edappadi pazhanisamy,தமிழக சட்டசபை,TN assembly,தொகுதி மறுவரையறை,Delimitation</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/dvjtssl3/EPS.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Edappadi pazhanisamy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/dvjtssl3/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டபையில் இன்று 4வது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. இதில், தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்பசபையில் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார்.</p><p>முதலமைச்சர் கொண்டு வரும் தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துளை பதிவு செய்து வருகின்றனர்.</p><p>இந்நிலையில், மக்கள்தொகை கட்டுப்பாட்டில் உள்ள தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு தொகுதி மறுவரையறை விகிதாசாரம் குறையக்கூடாது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-</p><p>மக்கள்தொகை கட்டுப்பாட்டில் உள்ள தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு தொகுதி மறுவரையறை விகிதாசாரம் குறையக்கூடாது. </p><p>விகிதாசாரம் பாதிக்கப்படாததை உறுதிசெய்யுமாறு மத்திய அமைச்சரிடம் அதிமுக வலியுறுத்தி உள்ளது. </p><p>அதிமுகவின் கோரிக்கையை ஏற்று உறுப்பினர் எண்ணிக்கை குறையாது என மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார். 7.18 விகிதாசாரம் குறையக்கூடாது என்ற அதிமுகவின் நிலைப்பாட்டால், எம்பிக்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.</p><p>தமிழகத்திற்கான எம்பிக்கள் எண்ணிக்கை 39ல் இருந்து 59 ஆக உயர்வதற்கு தொகுதி மறுவரையறை வழிவகை செய்யும்.</p><p>அரசியல் காரணங்கள், பரபரப்பை ஏற்படுத்துவதற்காகவே தவெக அரசு தொகுதி மறுவரையறை தனித்தீர்மானம் கொண்டு வந்துள்ளது.</p><p>தொகுதி மறுவரையறை மசோதா பாதகமானதா? சாதகமானதா? என தெரியாத நிலையில் தனித்தீர்மானத்திற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவிக்கிறது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>இன்று சர்வதேச இளைஞர் தினம்: இளைய சமுதாயத்திற்கு நல்வாழ்த்துகள்!</title><link>https://www.maalaimalar.com/news/world/today-is-international-youth-day-best-wishes-to-the-young-community</link><comments>https://www.maalaimalar.com/news/world/today-is-international-youth-day-best-wishes-to-the-young-community#comments</comments><guid isPermaLink="false">b5cb35ac-b29c-40ac-9357-3f3f5102766b</guid><pubDate>Wed, 12 Aug 2026 05:10:21 +0000</pubDate><atom:updated>2026-08-12T05:10:21.315Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>united nations,இளைய தலைமுறை,International Youth Day,young genarations,சர்வதேச இளைஞர் தினம்,ஐக்கிய நாடுகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/g9i0r3z5/youth-day.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ International Youth Day]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/g9i0r3z5/youth-day.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இன்று உலகெங்கிலும் சர்வதேச இளைஞர் தினம் (ஆகஸ்ட் 12) சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சமுதாயத்தின் மாற்றத்திற்கும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கியத் தூணாகத் திகழும் இளைஞர்களின் பங்கை அங்கீகரிக்கும் வகையிலும், அவர்கள் எதிர்கொள்ளும் உலகளாவிய சவால்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும் இத்தினம் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.</p><h2>2026-ஆம் ஆண்டின் மையக் <strong>கருப்பொருள்</strong></h2><p>இந்த ஆண்டிற்கான சர்வதேச இளைஞர் தின கருப்பொருளாக "மாறுபட்ட சூழல்கள், பொதுவான லட்சியங்கள்" என்பதை ஐக்கிய நாடுகள் சபை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உலகெங்கிலும் வாழும் இளைஞர்களின் சமூக, பொருளாதார மற்றும் புவியியல் சூழல்கள் வேறுபட்டதாக இருந்தாலும், கண்ணியமான வாழ்க்கை, தரமான கல்வி, பாதுகாப்பான வேலைவாய்ப்பு, மனநலம் மற்றும் நிலையான எதிர்காலம் போன்ற விஷயங்களில் அவர்களின் லட்சியங்கள் ஒன்றே என்பதை இந்த மையக்கரு வலியுறுத்துகிறது. </p><p>குறிப்பாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் வளரும் நாடுகளில் உள்ள இளைஞர்களின் தேவைகளுக்கு உலகளாவிய அளவில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என ஐ.நா சுட்டிக்காட்டியுள்ளது.</p><h2>வரலாற்<strong>று பின்னணி</strong></h2><p>இளைஞர்களுக்கெனத் தனியாக ஒரு உலகளாவிய தினத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் முதன்முதலில் 1991-ஆம் ஆண்டு ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் நடைபெற்ற ஐ.நா அமைப்பின் உலக இளைஞர் மன்றக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இளைஞர் விவகாரங்களுக்கான அமைச்சர்களின் உலக மாநாட்டின் பரிந்துரையை ஏற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, 1999-ஆம் ஆண்டு தனது 54/120 தீர்மானத்தின் மூலம் ஆகஸ்ட் 12-ஆம் தேதியை சர்வதேச இளைஞர் தினமாக முறைப்படி பிரகடனம் செய்தது. இதன் தொடர்ச்சியாக, ஆகஸ்ட் 12, 2000 அன்று உலகின் முதல் சர்வதேச இளைஞர் தினம் அனுசரிக்கப்பட்டது.</p><h2>சமூக மு<strong>க்கிய</strong>த்துவம்</h2><p>தற்போதைய உலகளாவிய தரவுகளின்படி, 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை சுமார் 120 கோடியைத் தொட்டுள்ளது. இது உலகின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 16 சதவீதமாகும். ஆனால் அதே நேரத்தில், பெரியவர்களைக் காட்டிலும் இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகமாக உள்ளது என்பதும், பருவநிலை மாற்றம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப இடைவெளி போன்ற பிரச்சனைகள் இளைஞர்களைப் பெரிதும் பாதிக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. </p><p>செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் விமர்சன சிந்தனை போன்ற எதிர்காலத்திற்குத் தேவையான திறன்களை இளைஞர்களுக்குக் கொண்டு சேர்ப்பதன் மூலமே இந்த சவால்களை எதிர்கொள்ள முடியும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.</p><p>மாறுபட்ட சூழல்களில் நாம் வாழ்ந்தாலும் நமது லட்சியங்களும் கனவுகளும் ஒன்றே என்பதை உணர்ந்து, புதிய உலகைப் படைக்க உழைக்கும் அனைத்து இளைஞர்களுக்கும் சர்வதேச இளைஞர் தின நல்வாழ்த்துகள். உலகை மாற்றியமைக்கும் ஆற்றலும், தடைகளைத் தகர்க்கும் துணிச்சலும் கொண்ட நாட்டின் எதிர்காலத் தூண்களான இளைஞர்கள் அனைவருக்கும் இனிய இளைஞர் தின வாழ்த்துகளைப் பகிர்ந்து மகிழ்வோம்.</p>]]></content:encoded></item><item><title>தீர்மானத்தை முதலமைச்சர் திரும்பப் பெற வேண்டும்- பாமக</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/pmk-member-says-chief-minister-must-withdraw-the-resolution</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/pmk-member-says-chief-minister-must-withdraw-the-resolution#comments</comments><guid isPermaLink="false">56261064-1dee-4bd5-a8ba-a125f4559f9d</guid><pubDate>Wed, 12 Aug 2026 05:08:16 +0000</pubDate><atom:updated>2026-08-12T05:08:16.623Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,PMK,பாமக,தமிழக சட்டசபை,TN assembly,தொகுதி மறுவரையறை,Delimitation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/5ywns5lx/PMK.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பா.ம.க. எம்.எல்.ஏ.கணேஷ் குமார் - முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ பா.ம.க. எம்.எல்.ஏ.கணேஷ் குமார் - முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/5ywns5lx/PMK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தாக்கல் செய்த தீர்மானத்தை முதலமைச்சர் திரும்பப் பெற வேண்டும் என பா.ம.க. எம்.எல்.ஏ.கணேஷ் குமார் பேசினார்.</strong></em> </p><p>தமிழ்நாடு சட்டசபையில் இன்று முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%88">தொகுதி மறுவரையறை</a> தொடர்பான தீர்மானத்தின் மீது பா.ம.க. எம்.எல்.ஏ.கணேஷ் குமார் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-</p><h2><strong>பா.ம.க. எதிர்க்கும்</strong></h2><p>தமிழ்நாட்டில் தனிப்பெரும் கட்சியான த.வெ.க.வில் கூட ஒரு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் வைத்துள்ளது. பெரிய கட்சிகளே நிர்வாக வசதிக்காக மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கையை உயர்த்துகிறார்கள். உள்ளாட்சிகளிலேயே 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/separate-resolution-against-constituency-delimitation-cpi-and-cpm-extend-support">தொகுதி மறுவரையறை</a> செய்யப்படுகிறது.</p><p>மக்கள் தொகை அடிப்படையில் எடுக்கப்பட்ட தரவின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் பா.ம.க. எதிர்க்கும். ஒவ்வொரு தொகுதியிலும் 14 முதல் 18 லட்சம் வரையிலான வாக்காளர்கள் உள்ளனர்.  தொகுதி மறுவரையறையை 2026 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி செய்தால் பா.ம.க. கடுமையாக எதிர்க்கும்.</p><p>செவி வழி செய்தியை வைத்து தொகுதி மறுவரையறை தொடர்பாக தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.  தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தாக்கல் செய்த தீர்மானத்தை முதலமைச்சர் திரும்பப் பெற வேண்டும். இந்த தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. ஏற்கனவே இதுதொடர்பாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டதால் தமிழ்நாட்டில் இருவேறு நிலைப்பாடு என்றது போல் ஆகி விடும் என்றார். </p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறைக்கு எதிராக தீர்மானத்தை கொண்டு வர என்ன அவசரம்?- பாஜக எம்.எல்.ஏ கேள்வி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/bjp-mla-questions-urgency-of-resolution-against-constituency-delimitation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/bjp-mla-questions-urgency-of-resolution-against-constituency-delimitation#comments</comments><guid isPermaLink="false">3b360caa-0c04-4611-9dc0-0900980e3f3d</guid><pubDate>Wed, 12 Aug 2026 04:56:40 +0000</pubDate><atom:updated>2026-08-12T04:56:40.022Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,தமிழக சட்டசபை,TN assembly,தொகுதி மறுவரையறை,Delimitation Bill,எம்.எல்.ஏ போஜராஜன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/gyu7q8zl/BJP.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ BJP MLA Bhojarajan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/gyu7q8zl/BJP.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டபையில் இன்று 4வது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. இதில், தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்பசபையில் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார்.</p><p>முதலமைச்சர் கொண்டு வரும் தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துளை பதிவு செய்து வருகின்றனர்.</p><p>இந்நிலையில், பாஜக எம்எல்ஏ போஜராஜன் சட்டசபையில் பேசியதாவது:-</p><p>சட்டமுன்வடிவு பரிசீலனையில் உள்ளபோது தனித்தீர்மானம் கொண்டு வரும் அவசரம் என்ன? </p><p>மக்களின் தேவை அறிந்து மாற்றம் கொண்டு வருவது அவசியம். மாற்றம ஒன்றே மாறாதது.</p><p>அடுத்த தலைமுறையை கருத்தில் கொண்டே நாடாளுமன்றம் பெரியதாக கட்டப்பட்டுள்ளது.</p><p>மாற்றத்தை நாம்  ஏற்க வேண்டும். அதே வேளையில் தமிழ்நாட்டில் பாதிப்பில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். </p><p>தொகுதி மறுவரையறை பரிசீலனையில்தான் உள்ளது. அடுத்த தலைமுறையினரை மனதில் வைத்தே கொண்டு வரப்படுகிறது. </p><p>பெண்களுக்கு முன்னுரிமை முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி பாஜக என்பதை நாடறியும்.</p><p>தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை பாஜக எதிர்க்கிறது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித்தீர்மானம்: சிபிஐ, சிபிஎம் ஆதரவு- தே.மு.தி.க. நிலை? </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/separate-resolution-against-constituency-delimitation-cpi-and-cpm-extend-support</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/separate-resolution-against-constituency-delimitation-cpi-and-cpm-extend-support#comments</comments><guid isPermaLink="false">cf4accac-7eae-41d0-a485-9e8d9f7ad8c7</guid><pubDate>Wed, 12 Aug 2026 04:50:52 +0000</pubDate><atom:updated>2026-08-12T04:50:52.703Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly,தொகுதி மறுவரையறை,Delimitation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/eah4i4oj/cpi.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தீர்மானத்தின் மீது உரையாற்றிய உறுப்பினர்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ தீர்மானத்தின் மீது உரையாற்றிய உறுப்பினர்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/eah4i4oj/cpi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த தொகுதி மறுவரையறை எதிர்ப்பு தீர்மானத்தை  ஆதரிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்துள்ளன.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%88">தொகுதி மறுவரையறையை</a> எதிர்த்து தமிழ்நாடு சட்டசபையில் இன்று முதலமைச்சர் தனித்தீர்மானம் கொண்டுவந்தார்.  அப்போது முதலமைச்சர் விஜய் பேசியதாவது:-</p><p>நமது குடும்பத்தில் உள்ள பாட்டி, அம்மா, அக்கா, தங்கையை பற்றிய தீர்மானம் இது. மிகப்பெரிய பணம் இருந்தால் வீட்டுக்கோ, பொருளாதாரம் இருந்தால் நாட்டுக்கோ பெரிய பெயர் வந்துவிடும் என நினைப்பர். பெண்கள் தனிப்பட்ட முறையில் சமூகத்தில் உயர்ந்தால் மட்டுமே ஒட்டுமொத்த சமூகத்திற்கும் நல்ல பெயர் வரும். பெண்களுக்கான அரசாக, அவர்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்தும் அரசாக இந்த அரசு இருக்கும்.  பெண்களுக்கான அரசியல் இட ஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கானது. பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை விரைந்து நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தொகுதி வரையறையுடன் பெண்கள் இடஒதுக்கீட்டை இணைக்கக் கூடாது. நாட்டின் மக்கள் தொகையில் சமஅளவில் பெண்கள் உள்ளதால் அவர்களுக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டும். ஆகையால் உறுப்பினர்கள் இத்தீர்மானத்தை நிறைவேற்றித்தருமாறு கேட்டுக்கொண்டார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-time-to-boost-womens-representation-in-assembly-and-parliament">முதலமைச்சர்</a> தனித்தீர்மானத்தின் மீது முதலில் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வை. பேச அனுமதிக்குமாறு எ.வ.வேலு கோரிக்கை விடுத்தார். </p><p>மற்ற கட்சிகள் பேசிய பிறகு தி.மு.க. உறுப்பினர்கள் பேசலாம் என அவை முன்னவர் செங்கோட்டையன் பதில் கூறினார். </p><h2><strong>ஆதரவு</strong></h2><p>இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் விவாதம் தொடங்கியது. முதலில் தீர்மானத்தின் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ செல்லசுவாமி பேசினார். </p><p>அப்போது, முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த தொகுதி மறுவரையறை எதிர்ப்பு தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது, வரவேற்கிறது. நாடாளுமன்றத்தில் இப்போது உறுப்பினர்கள் எல்லோரும் பேச நேரம் இல்லை. பாஜக செல்வாக்கு அதிகம் உள்ள வடமாநிலக்ஙளில் எம்பிக்கள் எண்ணிக்கை அதிகரிப்பதே அவர்களின் திட்டம்.  மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்திய நமக்கு மத்திய அரசு இதை ஒரு தண்டனையாக கொடுக்கிறது. மக்கள் தொகையை கணக்கெடுக்காமலேயே புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டுள்ளது. மாநில உரிமை பாதிக்கப்படுவதை ஏற்க முடியாது. வடமாநிலங்களில் தொகுதிகளை அதிகரிப்பதே பாஜகவின் நோக்கம் என்றார். </p><p>இதையடுத்து முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த தொகுதி மறுவரையறை எதிர்ப்பு தீர்மானத்தை  ஆதரிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ தளி ராமச்சந்திரன் தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், </p><p>தொகுதி மறுவரையறை தென்மாநிலங்களுக்கு பாதிப்பாக அமையும். தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் வகையில் தொகுதிவரையறை மசோதா. நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் மறுக்கப்படுவது கூட்டாட்சித் தத்துவத்திற்கு விடுக்கப்படும் சவால். குடும்பக் கட்டுப்பாட்டை கறாராக நிறைவேற்றிய தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் பாதிக்கப்படும். மக்கள் தொகையை கட்டுப்படுத்தாத உ.பி., பீகார், மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு சாதகமாகிவிடும் என்றார். </p><p>இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளை தொடர்ந்து தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா பேசுகையில், </p><h2><strong>எதன் அடிப்படையில் தனித்தீர்மானம்?</strong></h2><p>தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான சட்ட முன்வடிவை மத்திய அரசு இதுவரைகொண்டு வரவில்லை. சட்ட முன்வடிவை கொண்டுவராத நிலையில் எதன் அடிப்படையில் தமிழக அரசு தனித்தீர்மானத்தை கொண்டுவந்துள்ளது? மக்கள் தொகையை காரணம் காட்டி தமிழ்நாட்டு எம்.பி.க்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்பிருக்கிறது. 815 எம்.பி.க்கள் வருவதற்கு வாய்ப்பு ஏற்பட்டால் தமிழ்நாட்டு எம்பிக்களின் எண்ணிக்கை 59 ஆகும். தமிழ்நாட்டுக்கான எம்பிக்கள் உயரும்போது நமது மக்கள் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் பேசமுடியும். 10 லட்சம் பேருக்கு ஒரு எம்.பி. என இருக்கும் நிலையில் அது 8 லட்சம் பேருக்கு ஒரு எம்பி என மாறும். தொகுதி மறுசீரமைப்பின் மூலம் தமிழ்நாட்டின் எம்பிக்கள் எண்ணிக்கை உயர்ந்தால் சிறப்பாக இருக்கும் என்றார். </p>]]></content:encoded></item><item><title>7.1 விர்ச்சுவல் சவுண்ட், அதிநவீன சென்சார்களுடன் புது கேமிங் ஹெட்போன் அறிமுகம்!</title><link>https://www.maalaimalar.com/technology/newgadgets/noise-clutch-hp-p01-gaming-headphone-launched-in-india</link><comments>https://www.maalaimalar.com/technology/newgadgets/noise-clutch-hp-p01-gaming-headphone-launched-in-india#comments</comments><guid isPermaLink="false">a506b8b5-ec5d-4032-917c-56913e633da5</guid><pubDate>Wed, 12 Aug 2026 04:46:00 +0000</pubDate><atom:updated>2026-08-12T04:46:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Headphone,ஹெட்போன்,Noise,நாய்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/x77dn293/Noise-Clutch-HP-P01.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Noise Clutch HP-P01 Gaming Headphone]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/x77dn293/Noise-Clutch-HP-P01.png?w=280" width="280"></media:thumbnail><category>புதிய கேஜெட்டுகள் (New gadgets)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/noise">நாய்ஸ்</a> நிறுவனம் இந்தியாவில் கேமிங் ஹெட்போன் சந்தையில் களமிறங்கியது. கிளட்ச் HP-P01 என அழைக்கப்படும் புதிய ஹெட்போன் நாய்ஸ் நிறுவனத்தின் முதல் கேமிங் ஹெட்போன் மாடல் ஆகும். இந்த <a href="https://www.maalaimalar.com/topic/headphone">ஹெட்போன்</a> மொபைல் சாதனங்கள், கணினி மற்றும் கன்சோல் கொண்டு கேமிங் செய்வோருக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. </p><p>இந்த புது ஹெட்போனில் 50மில்லிமீட்டர் டிரைவர், 24ms வரையிலான லோ-லேடன்சி வயர்லெஸ் கனெக்டிவிட்டி மற்றும் கழற்றக்கூடிய பூம் மைக்ரோபோன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 7.1 விர்ச்சுவல் சரவுண்ட் சவுண்ட், ஆர்.ஜி.பி. லைட்டிங் மற்றும் அதிகபடசம் 40 மணி  நேர பேட்டரி பேக்கப் வழங்குகிறது. </p><h2>அம்சங்கள்:</h2><p>புதிய நாய்ஸ் கிளட்ச் HP-P01 மாடல் 50mm டைனமிக் டிரைவர் மற்றும் 20Hz to 20kHz frequency response வழங்குகிறது. இத்துடன் இந்த ஹெட்செட் ஸ்டீரியோ மற்றும் டாகிள் செய்யக்கூடிய 7.1 விர்ச்சுவல் சரவுண்ட் சவுண்ட் சப்போர்ட் கொண்டிருக்கிறது. அழைப்புகளின் போது தெளிவான ஆடியோவை உறுதி செய்யும் வகையில் இந்த ஹெட்போனில் கழற்றக்கூடிய பூம் மைக்ரோபோன் வழங்கப்பட்டுள்ளது.</p><p>இந்த ஹெட்போன் 2.4GHz வயர்லெஸ், ப்ளூடூத் 6 மற்றும் 3.5எம்.எம். வயர்டு கனெக்டிவிட்டியுடன் வருகிறது. இத்துடன் வயர்லெஸ் லேடன்சி 24ms வரையிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஹெட்போனை கணினி, லேப்டாப், சோனி பிளேஸ்டேஷன் 5, எக்ஸ்பாக்ஸ் கன்சோல், நின்டென்டோ ஸ்விட்ச் மற்றும் மொபைல் சாதனங்களுடன் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.</p><h2>விலை விவரங்கள்:</h2><p>புதிய நாய்ஸ் கிளட்ச் HP-P01 ஹெட்போனின் இந்திய விலை ரூ. 4,999 என நிர்ணயம் செய்யப்ட்டுள்ளது. இந்த ஹெட்போன் நாய்ஸ் வலைதளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.</p><p>இந்த ஹெட்போன் பிளாக்\ரெட், பர்ப்பிள்\கோல்டு மற்றும் கிரே\கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஹெட்போனின் அதிகாரப்பூர்வ வினியோகம் இம்மாதம் 27-ஆம் தேதி தொடங்கும் எ தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பெண்களின் வெற்றி சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் அதிகரிக்க வேண்டிய நேரம் இது- முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-time-to-boost-womens-representation-in-assembly-and-parliament</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-time-to-boost-womens-representation-in-assembly-and-parliament#comments</comments><guid isPermaLink="false">e9b8157f-60b8-4449-9565-f94792f167e9</guid><pubDate>Wed, 12 Aug 2026 04:29:24 +0000</pubDate><atom:updated>2026-08-12T04:29:24.519Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN assembly,தமிழக சட்டசபை கூட்டம்,தொகுதி மறுவரையறை,Delimitation Bill,முதலமைச்சர் விஜய்,tn cm vijay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/o4x8h2b4/Vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijjay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/o4x8h2b4/Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டபையில் இன்று 4வது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. இதில், தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்பசபையில் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார்.</p><p>அதில், மக்களவை உறுப்பினர் எண்ணிக்கையை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாக்க வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.</p><p>மாநிலங்களுக்கு இடையிலான விகிதாச்சார பிரதிநிதித்துவம் தற்போதுள்ள அளவிலேயே நிரந்தரமாக்கவும் வலியுறுத்தி தனித் தீர்மானம்.</p><p>மக்களவை, சட்டமன்ற தேர்தலில் மகளிருக்கு மூன்றில் ஒரு பங்கு தொகுதி ஒதுக்கீட்டை உறுதி செய்யவும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p>முதலமைச்சர் கொண்டு வரும் தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துளை பதிவு செய்து வருகின்றனர்.</p><p>முன்னதாக, தீர்மானம் குறித்து முதலமைச்சர் விஜய் கூறியதாவது:-</p><p>நமது குடும்பத்தில் உள்ள பாட்டி, அம்மா, அக்கா, தங்கையை பற்றிய தீர்மானம் இது. மிகப்பெரிய பணம் இருந்தால் வீட்டுக்கோ, பொருளாதாரம் இருந்தால் நாட்டுக்கோ பெரிய பெயர் வந்துவிடும் என நினைப்பர். </p><p>பெண்கள் தனிப்பட்ட முறையில் சமூகத்தில் உயர்ந்தால் மட்டுமே ஒட்டுமொத்த சமூகத்திற்கும் நல்ல பெயர் வரும்.</p><p>பெண்கள் இடஒதுக்கீடு என்பது சலுகை அல்ல, சமூக நீதி. </p><h2>2026 சட்டமன்றத்தில்..</h2><p>2021-ல் 12 பெண்கள் இருந்த நிலையில், 2026 சட்டமன்றத்தில் 26 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.</p><p>தமிழ்நாட்டில் ஆண்டுகளை விட பெண்கள் தான் அதிக ஓட்டு போட்டுள்ளனர். பெண்களுக்கான முன்னுரிமை வழங்குவதில் இந்தியாவுக்கே தவெக அரசு முன்னுதாரணமாக உள்ளது. உள்ளாட்சித் தேர்தில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீட்டால் பெண்களின் தலைமை பண்பும் நிரூபிக்கப்பட்டுள்ளது.</p><p>2021-ல் 12 பெண்கள் இருந்த நிலையில் 2026 சட்டசபையில் 26 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். பெண்களின் வெற்றி சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் அதிகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. </p><p>அனைத்துக்கட்சி எம்பிக்களுடன் நடத்திய ஆலோசனையில் தொகுதிமறுவரையறை குறித்து விவாதித்தோம். நாட்டின் மக்கள்தொகையில் சம அளவில் பெண்கள் உள்ளதால் அவர்களும் சமவாய்ப்பு வழங்க வேண்டும்.</p><h2>மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு</h2><p>மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை மேலும் தாமதிக்க கூடாது, மத்திய அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். </p><p>நாடாளுமன்ற உறுப்பினர்களின் விகிதம் 2.2:1 என்ற அளவிலேயே தொடர வேண்டும். 543 என்ற அளவிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை நிரந்தரமாக வைக்க வேண்டும்.</p><p>வரும் பொதுத்தேர்தல்களில் பெண்களுக்கு 3-ல் 1 என்ற அளவில் இடமளிக்க வேண்டும். </p><p>இவ்வாறு அவர் கூறி, தொகுதி மறுவரையறைவுக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்தார். </p>]]></content:encoded></item><item><title>ஈரான் ஏவுகணை அச்சுறுத்தல்: &apos;ஏர் ஃபோர்ஸ் ஒன்&apos; விமானத்தில் இருந்து ரகசியமாகத் தப்பிய டிரம்ப்!</title><link>https://www.maalaimalar.com/news/world/iran-missile-threat-trump-secretly-escapes-air-force-one</link><comments>https://www.maalaimalar.com/news/world/iran-missile-threat-trump-secretly-escapes-air-force-one#comments</comments><guid isPermaLink="false">b687c864-7fc4-4c7f-84a0-ba6891841066</guid><pubDate>Wed, 12 Aug 2026 04:11:10 +0000</pubDate><atom:updated>2026-08-12T04:11:10.132Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>trump,டிரம்ப்,Turkey,NATO,ஈரான் ஏவுகணை,Air Force One,ஏர் ஃபோர்ஸ் ஒன்,Iran missile</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/ln2c2kth/Untitled-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Air Force One]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/ln2c2kth/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அங்காராவில் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டிற்குப் பிறகு, சாத்தியமான பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகத் தாம் ரகசியமாக வேறு விமானத்திற்கு மாறியதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.</p><h2><strong>ஈரான் ஏவுகணை அச்சுறுத்தல் பின்னணி</strong></h2><p>துருக்கி தலைநகர் அங்காராவில் நேட்டோ மாநாடு முடிந்ததும், டிரம்பைக் குறிவைத்துத் தோளில் வைத்து இயக்கும் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்த அல்லது படுகொலை செய்ய ஈரான் ஆதரவுப் படைகள் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரித்தது. ஈரான் அச்சுறுத்தல்களின் அடிப்படையில் தாம் சீக்ரெட் சர்வீஸ் மற்றும் ராணுவ அதிகாரிகளின் வழிகாட்டுதலைப் பின்பற்றியதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.</p><h2>கே<strong>ட்டரிங் டிரக் மூலம் ர</strong>கசியமாகத் தப்பிய டிரம்ப்</h2><p>டிரம்ப் அனைவரும் பார்க்கும் வகையில் கேமராக்களுக்கு முன்னால் 'ஏர் ஃபோர்ஸ் ஒன்' விமானத்தில் ஏறியுள்ளார். விமானத்தில் ஏறிய பிறகு, அதன் மறுபக்கக் கதவு வழியாக உணவுப்பொருட்களை ஏற்றும் 'கேட்டரிங் டிரக்'  மூலமாக ரகசியமாக இறக்கப்பட்டு, அருகில் நிறுத்தப்பட்டிருந்த 'C-32A' என்ற சிறிய ராணுவ விமானத்திற்கு மாற்றப்பட்டார். அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் இந்தச் சிறிய விமானத்தில் தனியாக ஏறி, பயணம் சாதாரணமானது போலக் காட்ட முயன்றார்.</p><h2>செய்தியாள<strong>ர்களும் அதிகாரிகளும்</strong> ஏமாற்றப்பட்டது எப்படி?</h2><p>வெள்ளை மாளிகை பணியாளர்கள், செய்தியாளர்கள் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, நிதித்துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட் உள்ளிட்டோர் டிரம்ப் வழக்கமான 'ஏர் ஃபோர்ஸ் ஒன்' விமானத்தில்தான் பயணிக்கிறார் என்று நம்பினர். பாதுகாப்பு காரணங்களுக்காக விமானத்தின் ஜன்னல் திரைகளை மூடி வைக்குமாறு அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது. டிரம்ப் இல்லாமல் அந்த விமானம் வழக்கமான அழைப்புக் குறியீட்டுடன் பறந்தது.</p><h2>பிரிட்டன் வழிப் <strong>பயணமும் விமான மாற்</strong>றமும்</h2><p>டிரம்ப் பயணித்த சிறிய C-32A விமானம் "Reach 18" என்ற அழைப்புக் குறியீட்டைப் பயன்படுத்தியது. பிரிட்டன் சென்று சேர்ந்ததும், டிரம்ப் மீண்டும் பழைய ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் ஏறி இறங்கி கேமராக்களுக்குக் காட்சியளித்தார். அதன் பின்னர் கத்தார் அரசு பரிசளித்த அதிநவீன போயிங் 747-8 விமானத்திற்கு மாறி அமெரிக்கா திரும்பினார்.</p><h2>பத்திரிகை<strong>யாளர்கள் அமை</strong>ப்பின் அதிருப்தி</h2><p>பத்திரிகையாளர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளைப் போலி விமானத்தில் பயணிக்க வைத்து ஆபத்தில் தள்ளியது குறித்து அமெரிக்கப் பத்திரிகையாளர்கள் பாதுகாப்புச் சங்கம் கடும் கவலையை வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்துச் செய்தியாளர்களுக்கு முன்னரே தெரிந்திருக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>ரேஷன் கடை வேலை நேரம் மாற்றம்?- ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/change-in-ration-shop-working-hours-officials-ordered-to-review-the-matter</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/change-in-ration-shop-working-hours-officials-ordered-to-review-the-matter#comments</comments><guid isPermaLink="false">17acbf8d-1c98-466a-a2eb-ac667dfddd63</guid><pubDate>Wed, 12 Aug 2026 04:04:03 +0000</pubDate><atom:updated>2026-08-12T04:04:03.186Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,ரேஷன் கடை,ration shop</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/04r2jmko/rationshop.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ரேஷன் கடை]]></media:title><media:description type="html"><![CDATA[ ரேஷன் கடை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/04r2jmko/rationshop.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ரேஷன் கடை வேலை நேரத்தை மாற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</strong></em></p><h2><strong>மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்</strong></h2><p>தமிழ்நாடு அரசு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88">ரேஷன் கடை</a> பணியாளர் சங்கம் சார்பில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டிருந்தது. அதில், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் தற்போது ரேஷன் கடைகள் காலை 8.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மீண்டும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 7 மணி வரையிலும் செயல்பட்டு வருகிறது. அதன்படி, மதிய இடைவேளை நேரம் நீட்டிக்கப்பட்டு, பணி நேரம் சுமார் 12 மணி நேரமாக உள்ளது. இதனால் பணியாளர்கள் மனச்சோர்வுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும், நுகர்பொருள் வாணிபக் கழக குடோன்களுக்கு வெள்ளிக்கிழமை வேலை நாளாகவும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகவும் உள்ளது. ஆனால், ரேஷன் கடை பணியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறையாகவும், ஞாயிற்றுக்கிழமை வேலை நாளாகவும் இருப்பதால், விடுமுறை நாட்கள் யாருக்கும் பயனுள்ளதாக இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><h2><strong>ஆய்வு செய்ய உத்தரவு</strong></h2><p>எனவே, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/new-procedure-for-quality-rice-at-ration-shops">ரேஷன் கடை</a> வேலை நேரத்தை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் மாற்றி அமைக்க வேண்டும் என்றும் மாதத்தின் முதல் 2  வெள்ளிக்கிழமைகளை வேலை நாட்களாகவும், முதல் 2 ஞாயிற்றுக்கிழமைகளை விடுமுறை நாட்களாகவும் அறிவிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.</p><p>இந்த கோரிக்கை மனுவின்படி, மாற்றங்களைச் செயல்படுத்தினால் கள அளவில் ஏற்படும் சாதக, பாதகங்களை ஆய்வு செய்து, அது குறித்து அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட துணைப்பதிவாளர்களுக்கு பொது வினியோகத்திட்டத்தின் இணைப்பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>உ.பி-ல் போலி சான்றிதழ்கள் மூலம் வக்கீலாக பதிவு: 39 பேர் மீது போலீசார் வழக்கு</title><link>https://www.maalaimalar.com/news/national/fake-certificates-lawyers-registered-in-up-case-filed-against-39</link><comments>https://www.maalaimalar.com/news/national/fake-certificates-lawyers-registered-in-up-case-filed-against-39#comments</comments><guid isPermaLink="false">c3ee49fa-870f-42a8-b6cd-84ff166daf88</guid><pubDate>Wed, 12 Aug 2026 04:03:08 +0000</pubDate><atom:updated>2026-08-12T04:03:08.881Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வழக்குப்பதிவு,உத்தரபிரதேசம்,uttarpradesh,case filed,fake document,போலி சான்றிதழ்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/18alqi3s/fake.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Fake document]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/18alqi3s/fake.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அலகாபாத் ஐகோர்ட்டு கடந்த ஜூன் 3-ந் தேதி பரபரப்பு உத்தரவு பிறப்பித்தது. உத்தரபிரதேச பார் கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்தவர்களில், யாருடைய பட்டப்படிப்பு சான்றிதழ் போலி என்று தெரிகிறதோ, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும் என்று கூறியது.</p><p>இதற்கிடையே, உத்தரபிரதேச பார் கவுன்சில், 105 வக்கீல்களுக்கு எதிராக பிரயாக்ராஜ் நகரில் உள்ள சிவில் லைன்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தது.</p><p>பதிவு செய்து, வக்கீலாக பணியாற்றுவதற்கான சான்றிதழ் பெற்று வக்கீல் தொழில் செய்து வருவதாக புகாரில் கூறியுள்ளது.</p><p>புகாரின் அடிப்படையில், கடந்த 3 நாட்களில் 39 வக்கீல்கள் மீது போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இத்தகவலை சிவில் லைன்ஸ் இன்ஸ்பெக்டர் ராமாஷ்ரே யாதவ் தெரிவித்தார்.</p><p>மீதியுள்ள வக்கீல்கள் மீது ஓரிரு நாட்களில் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும், அதன்பிறகு விசாரணை தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ரூ. 8 ஆயிரம் பட்ஜெட்டில் புது ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த லாவா</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/lava-smart-4-launched-in-india</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/lava-smart-4-launched-in-india#comments</comments><guid isPermaLink="false">3248a9fb-f77d-443c-8752-e28a736eb6ba</guid><pubDate>Wed, 12 Aug 2026 03:48:00 +0000</pubDate><atom:updated>2026-08-12T03:48:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>LAVA,லாவா,smartphone,ஸ்மார்ட்போன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/m4vcuim2/Lava-Smart-4.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Lava Smart 4]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/m4vcuim2/Lava-Smart-4.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/technology">லாவா</a> நிறுவனம் விராட் வி1 மற்றும் விராட் வி1 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த சில வாரங்களில் மற்றொரு புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் ரூ. 10,000 பட்ஜெட்டில் விற்பனைக்கு வருகிறது. ஸ்மார்ட் 4 என அழைக்கப்படும் புதிய <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மார்ட்போன்</a> 6.59 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது.</p><p>அளவில் சற்றே சிறியதாக உருவாக்கப்பட்டு இருக்கும் லாவா ஸ்மார்ட் 4 மாடல் முதல் முறை ஸ்மார்ட்போன் வாங்குவோர் மற்றும் இரண்டாவது ஸ்மார்ட்போனாக பயன்படுத்த விரும்புவோருக்கு சிறந்த தேர்வாக இருக்கும். இது குறுந்தகவல் மற்றும் அழைப்புகள் போன்ற அடிப்படை பயன்பாடுகளுக்கு ஏற்றதாக இருக்கும்படி உருவாக்கப்பட்டு இருக்கிறது.</p> <h2>சிறப்பு அம்சங்கள்:</h2><p>லாவா ஸ்மார்ட் 4 மாடலில் 6.59 இன்ச் எல்.சி.டி. பேனல் கொண்ட டிஸ்ப்ளே, qHD ரெசல்யூஷன், 90ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் யுனிசாக் SC9863A சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 28 மில்லிமீட்டர் பிராசஸர் யூனிட் ஆகும். இதே பிராசஸர் தான் லாவா விராட் வி1 4ஜி மாடலிலும் வழங்கப்பட்டு இருந்தது. அழைப்புகள், குறுந்தகவல், பிரவுசிங் என அடிப்படை பயன்பாடுகளுக்கு இந்த சிப்செட் ஏற்றதாக இருக்கும்.</p><p>புகைப்படங்களை எடுக்க இந்த ஸ்மார்ட்போனில் 8MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 கோ எடிஷன் ஓ.எஸ். கொண்டிருக்கிறது. இது என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன்களில் சீரான அனுபவத்தை வழங்குவதில் பெயர் பெற்றது குறிப்பிடத்தக்கது.</p><p>இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 10 வாட் சார்ஜிங் மற்றும் யு.எஸ்.பி. டைப் சி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் புதிய லாவா ஸ்மார்ட் 4 மாடல் MIL-STD-810H தர மிலிட்டரி கிரேடு சான்று பெற்றிருக்கிறது. இதில் உள்ள டூயல் சிம் ஸ்லாட் கொண்டு பயனர்கள் ஒரே நேரத்தில் இரு 4ஜி சிம் கார்டுகளை பயன்படுத்த முடியும்.</p><h2>விலை விவரங்கள்:</h2><p>புதிய லாவா ஸ்மார்ட் 4 மாடலின் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கொனார்க் கோல்டு மற்றும் அஜந்தா கிரே என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் தற்போது ஆஃப்லைன் விற்பனை மையங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>அருகாமையில் வசிப்பவர்கள் சுங்கச்சாவடிகளில் கட்டணம் இன்றி பயணிக்கலாமா?- நெடுஞ்சாலை ஆணையம் பதில்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/highways-authority-inform-can-nearby-residents-travel-through-toll-plazas-without-paying-a-fee</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/highways-authority-inform-can-nearby-residents-travel-through-toll-plazas-without-paying-a-fee#comments</comments><guid isPermaLink="false">f1e92d79-c477-41ce-b5ed-d4aed1d21ded</guid><pubDate>Wed, 12 Aug 2026 03:46:20 +0000</pubDate><atom:updated>2026-08-12T03:46:20.572Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தேசிய நெடுஞ்சாலை ஆணையம்,National Highways Authority,Toll plaza,சுங்கச்சாவடி,கட்டணம்</media:keywords><media:content height="350" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/7m0ie7mr/tollgate.jpg" width="615"><media:title type="html"><![CDATA[ சுங்கச்சாவடி]]></media:title><media:description type="html"><![CDATA[ சுங்கச்சாவடி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/7m0ie7mr/tollgate.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சுங்கச்சாவடிகளின் அருகாமையில் உள்ளவர்கள் அடையாள அட்டையை காண்பித்து கட்டணம் இன்றி பயணிக்கலாமா? என்பது குறித்து நெடுஞ்சாலை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.</strong></em></p><h2><strong>சுங்கச்சாவடிகள்</strong></h2><p>தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தனியார் பங்களிப்புடன் சாலைகளை சீரமைத்து, அதற்கான கட்டணத்தை வாகன ஒட்டிகளிடம் இருந்து <a href="https://www.maalaimalar.com/topic/சுங்கச்சாவடி">சுங்கச்சாவடி</a> மூலமாக வசூலித்து வருகிறது.</p><p>நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 78 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. இந்த சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் கார், ஜீப், ஆட்டோ, பஸ், லாரி, டெம்போ உள்பட பல்வேறு வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.</p><h2><strong>கட்டணம் இன்றி...</strong></h2><p>இந்தநிலையில் சுங்கச்சாவடிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள வாகன ஓட்டிகள் தங்களது அடையாள அட்டையை காண்பித்து கட்டணம் இன்றி கடந்து செல்லலாம் என்று ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.</p><p>சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் அந்த தகவலுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.</p><h2><strong>உள்ளூர் மாதாந்திர பாஸ்</strong></h2><p>அதில் "தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில், அடையாள அட்டையை காண்பித்தால் உள்ளூர் வாசிகள் கட்டணம் இன்றி பயணிக்கலாம் என்பது தவறான கருத்து. உள்ளூர்வாசிகளுக்கு கட்டணமில்லா பயணம் கிடையாது.</p><p>ஆனால் சுங்கச்சாவடிக்கு அருகில் வசிக்கும் உள்ளூர் மக்களுக்கு கட்டண சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதற்காக உள்ளூர் மாதாந்திர பாஸ் முறை நடைமுறையில் உள்ளது.</p><p>சுங்கச்சாவடியைச் சுற்றி 20 கிலோமீட்டர் சுற்றளவில் வசிப்பவர்கள் மட்டுமே இந்த சலுகையைப் பெற தகுதியுடையவர்கள். குறிப்பிட்ட அந்த சுங்கச்சாவடிக்கென அறிவிக்கப்பட்டுள்ள விதிகளின்படியே இந்த பாஸ்கள் வழங்கப்படுகின்றன. எனவே, அடையாள அட்டையை காண்பித்து கட்டணமில்லாமல் செல்லலாம் என்று கருத வேண்டாம். சலுகை பெற விரும்புவோர் அந்த சுங்கச்சாவடியின் விதிகளைப் பின்பற்றி முறைப்படி உள்ளூர் மாதாந்திர பாஸை பெற வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தெலங்கானாவில் டேங்கர் லாரி மீது ஆட்டோ மோதி விபத்து- 6 கூலித் தொழிலாளர்கள் பலி!</title><link>https://www.maalaimalar.com/news/national/auto-crash-with-tanker-lorry-in-telangana-kills-six-workers</link><comments>https://www.maalaimalar.com/news/national/auto-crash-with-tanker-lorry-in-telangana-kills-six-workers#comments</comments><guid isPermaLink="false">94f59ff9-3428-4af7-ba84-a4c15571a608</guid><pubDate>Wed, 12 Aug 2026 03:37:43 +0000</pubDate><atom:updated>2026-08-12T03:37:43.728Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உயிரிழப்பு,Death,Telangana,lorry accident,லாரி விபத்து,தெலங்கானா</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/8fidlrnc/Accident.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Accident]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/8fidlrnc/Accident.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி பகுதியில் ஆட்டோ மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.</p><p>தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் சத்வார் கிராம பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று ஒரு ஆட்டோ சென்று கொண்டிருந்தது.</p><p>அப்போது, அந்த வழியாக வந்த டேங்கர் லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ முற்றிலும் நசுங்கியது. மேலும் ஆட்டோவில் பயணித்தவர்களில் 6 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். </p><h2>கூலித் தொழிலாளர்கள்</h2><p>ஆட்டோவில் இருந்தவர்கள் அனைவரும் கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம் ராஜகிரி கிராமத்தை சேர்ந்தவர்கள் என்றும் இதில் உயிரிழந்தவர்களில் ரேகா, ஸ்ரீதேவி, கவிதா, ரேஷ்மா, நிகிதா மற்றும் தேவதாஸ் ஆகியோர் என்பது தெரியவந்தது. </p><p>வேலை முடிந்து ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்த 5 பெண்கள் உள்ளிட்ட 6 கூலித் தொழிலாளர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.</p><p>ஆட்டோ மீது டேங்கர் லாரி மோதியதில் படுகாயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>மேலும், விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் 9 இடங்களில் என்ஐஏ சோதனை
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nia-raid-at-9-locations-in-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nia-raid-at-9-locations-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">051aa7c4-ff19-40c7-8048-391149c7a22d</guid><pubDate>Wed, 12 Aug 2026 03:03:56 +0000</pubDate><atom:updated>2026-08-12T03:03:56.667Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN,போதைப்பொருள் கடத்தல்,Drug trafficking,NIA Raid,என்ஐஏ சோதனை,தமிழ்நாடு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2024/04/22/2097618-nia.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ NIA Raid]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2024/04/22/2097618-nia.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்நாட்டில் 9 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடைபெற்று வருகிறது.</strong></em></p><p>சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 9 இடங்களில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%90%E0%AE%8F%20%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88">தேசிய புலனாய்வு முகமை</a> அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.</p> <p>2024-ம் ஆண்டு அந்தமானில் போதைப்பொருட்கள் சிக்கிய வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் பிடிபட்ட 7 பேருடன் தொடர்பில் இருந்தவர்கள் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பர்மாவில் இருந்து செயல்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் உள்ளவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படுகிறது.</p><p>மியான்மரில் இருந்து செயல்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பா? என அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறைக்கு எதிராக தீர்மானம் - சட்டசபையில் இன்று தாக்கல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/resolution-against-constituency-delimitation-to-be-tabled-in-assembly-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/resolution-against-constituency-delimitation-to-be-tabled-in-assembly-today#comments</comments><guid isPermaLink="false">e0228e91-0042-4d3e-95fb-e9223bdc030d</guid><pubDate>Wed, 12 Aug 2026 02:38:06 +0000</pubDate><atom:updated>2026-08-12T02:38:06.154Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,தொகுதி மறுவரையறை,Delimitation,Constituency Delimitation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/tx5fkhcs/tnassembly.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN Assembly]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/tx5fkhcs/tnassembly.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சட்டசபையில் தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/aadav-arjuna-answer-to-eps-speech-in-tn-assembly">தமிழக சட்டசபையில்</a> நேற்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. </p><p>நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வெளிநாட்டு நன்கொடை மசோதாவுக்கு எதிராகவும் தமிழக சட்டசபையில் நேற்று 2 தீர்மானங்கள் நிறைவேறின. இந்த மசோதாக்களுக்கு பா.ஜ.க. தவிர அனைத்துக்கட்சி எம்எல்ஏக்களும் ஆதரவு அளித்தனர்.</p> <p>சட்டசபையில் இன்று இதுதொடர்பான தீர்மானம் தாக்கல் செய்யப்படுகிறது.</p><p>நாடாளுமன்ற <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%88">தொகுதி மறுவரையறைக்கு</a> எதிராக கடந்த 8-ந்தேதி முதலமைச்சர் விஜய் தலைமையில் சென்னையில் அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தை தி.மு.க., அ.தி.மு.க. புறக்கணித்தது.</p><p>இந்த கூட்டத்தில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது என முடிவு செய்யப்பட்டது.</p> <p>இந்நிலையில், தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிய இருக்கிறார். இதை வழிமொழிந்து எம்.எல்.ஏ.க்கள் பேசுவார்கள். ஏற்கனவே, தி.மு.க., அ.தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் இந்த தீர்மானத்தின் மீது கடுமையான விவாதங்கள் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>சுதந்திர தின விழா - மதுரை விமான நிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/independence-day-celebrations-5-layer-security-for-madurai-airport</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/independence-day-celebrations-5-layer-security-for-madurai-airport#comments</comments><guid isPermaLink="false">5013d0c3-6eb1-46e4-9c2b-566ec9475475</guid><pubDate>Wed, 12 Aug 2026 02:17:38 +0000</pubDate><atom:updated>2026-08-12T02:17:38.674Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>madurai airport,மதுரை விமான நிலையம்,Independence Day,சுதந்திர தினவிழா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/70wi82rw/maduraiairport.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Madurai airport]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/70wi82rw/maduraiairport.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மதுரை விமான நிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 20-ந்தேதி வரை பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.</strong></em></p> <h2>சுதந்திரதின விழா</h2><p>நாடு முழுவதும் வருகிற 15-ந்தேதி (சனிக்கிழமை) <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE">சுதந்திர தின விழா</a>, கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு <a href="https://www.maalaimalar.com/news/national/modi-urges-people-to-take-developed-india-pledge-on-i-day">மத்திய அரசின்</a> அறிவுறுத்தலின்பேரில் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளன.</p><h2>மதுரை விமான நிலையம்</h2><p>மதுரை விமான நிலையத்தில் நேற்று முதல் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை விமான நிலைய உள்வளாகம், விமான நிலைய ஓடுபாதை, விமான நிலைய சுற்றுப்புற கண்காணிப்பு கோபுரங்கள், விமான நிலைய வெளிவளாகம், வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட இடங்களில் மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.</p> <h2>சோதனை</h2><p>24 மணி நேரமும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினரும், மோப்பநாய் படை பிரிவினரும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் பயணிகள் மற்றும் அவர்கள் கொண்டு வரும் உடைமைகள் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.</p>  <h2>பார்வையாளர்களுக்கு தடை</h2><p>இதுதவிர விமான நிலையத்தின் வெளிப்பகுதிகளான பெருங்குடி, சின்ன உடைப்பு உள்ளிட்ட பகுதிகளில் மாநகர போலீசாரும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விமான நிலையத்திற்குள் செல்ல பார்வையாளர்களுக்கு வருகிற 20-ந்தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>இதற்கிடையே, மதுரை மாநகர பகுதியில் உள்ள விடுதிகள் சந்தேகத்திற்கிடமாக யாராவது தங்கி உள்ளார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுபோல, ரெயில் நிலையம், பஸ் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>கொலம்பியாவை உருக்குலைத்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 250-ஆக உயர்வு</title><link>https://www.maalaimalar.com/news/world/colombia-earthquake-death-toll-rises-to-250</link><comments>https://www.maalaimalar.com/news/world/colombia-earthquake-death-toll-rises-to-250#comments</comments><guid isPermaLink="false">0f9bf790-ff22-4bcf-a695-6ac5357cdcfd</guid><pubDate>Wed, 12 Aug 2026 02:04:37 +0000</pubDate><atom:updated>2026-08-12T02:04:37.318Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Earthquake,கொலம்பியா,பலி எண்ணிக்கை உயர்வு,death toll raise,நிலநடுக்கம்,colombia earthquake</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/m0377h7v/colombia.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Colombia Earthquake]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/m0377h7v/colombia.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கொலம்பியாவில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 254-ஆக உயர்ந்துள்ளது.</p><p>மேலும் 2,600-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், 3,900-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>மேற்கு கொலம்பியாவின் சொகோ (Choco) மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் டெல் பால்மர் நகருக்கு அருகே பூமிக்கு அடியில் சுமார் 100 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.</p><p>தொடர்ந்து பல நில அதிர்வுகள் பதிவாகின. இந்த அதிர்வுகள் அண்டை நாடுகளான ஈக்வடார், பானமா மற்றும் வெனிசுவேலா வரையிலும் உணரப்பட்டன.</p><h2>கொலம்பியா நிலநடுக்க பாதிப்பு</h2><p>கொலம்பியாவில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தால் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நகரமாகப் பெரேரா உருவெடுத்துள்ளது. இங்கு மட்டும் 60 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 254 ஆக உயர்ந்துள்ளது.</p><p>நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 3.900க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை எனத் தரவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாகக் காளி (Cali) மற்றும் பெரேரா (Pereira) நகரங்களில் அதிகமானோர் மாயமாகியுள்ளனர். காளி பகுதியில் 95 பேரும், பெரேராவில் 101 பேரும் உயிரிழந்துள்ளனர்.</p><p>பாதிக்கப்பட்ட பிராந்தியம் முழுவதும் சுமார் 1600 கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. அதே நேரத்தில் கிட்டத்தட்ட 5,000 வீடுகள் நிலநடுக்கத்தின் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.</p><p>நாட்டின் 5 முக்கியத் நகரங்களுக்கு இன்னமும் ரெட் அலர்ட் அமலில் உள்ளது.</p><h2>அவசர நிலை</h2><p>நிலநடுக்கம் குறித்து பேசிய கொலம்பியா அதிபர் அபெலார்டோ டி லா எஸ்ப்ரீல்லா கூற்றுப்படி,</p><p>நிலநடுக்கத்தால் 1,577 குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. அதில் 37 கட்டிடங்கள் முற்றிலும் அழிந்துவிட்டன.</p><p>60க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் முழுமையாக இடிந்து தரைமட்டமாகியுள்ளன. 18 மருத்துவ மையங்கள் மற்றும் 52 பள்ளிகள் பலத்த சேதமடைந்துள்ளன. 7 விமான நிலையங்களின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன.</p><p>நிலநடுக்கத்தின் பேரழிவைக் கருத்தில் கொண்டு கொலம்பியா அரசு தேசிய பேரிடர் அவசரநிலை பிரகடனம் செய்துள்ளது.</p><p>இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை விரைவாக மீட்க ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.</p><p>காளி நகரில் உள்ள ஒரு மருத்துவமனையின் குழந்தைகள் பராமரிப்புப் பிரிவுகள் இடிந்து விழுந்துள்ளதால், அங்குப் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.</p><p>நகரின் பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து தூசிப் படலம் பரவியது. பயத்தில் மக்கள் வீடுகளின் மாடியிலிருந்து குதித்தும் தப்பிக்க முயன்றனர்.</p><p>பெரேரா நகரில் 4 அடுக்கு மாடி கட்டிடம் உள்ளிட்ட பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.</p><p>மேனிசேல்ஸ் நகரின் புகழ்பெற்ற நவதோதிக் கதீட்ரல் தேவாலயத்தின் பக்கவாட்டுக் கோபுரம் இடிந்து விழுந்தது.</p><h2>உதவி</h2><p>அவசரகால நிதியாக கொலம்பியாவுக்கு சுமார் ரூ.130 கோடி வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.</p><p>எல் சால்வடார் அதிபர் நயீப் புக்கேலே, மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் மற்றும் சிலி அதிபர் ஜோஸ் அன்டோனியோ காஸ்ட் ஆகிய லத்தீன் அமெரிக்க நாட்டுத் தலைவர்கள் கொலம்பியாவுக்கு தேவையான மருத்துவக் குழுக்கள், மீட்புப் படைகள் மற்றும் நிவாரணப் பொருட்களை உடனடியாக அனுப்பத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளனர்.</p><h2>வெனிசுலாவை தொடர்ந்து..</h2><p>அண்டை நாடான வெனிசுவேலாவில் கடந்த மாதம் ஜூன் 24 அன்று 7.2, 7.5 ரிக்டர் அளவுகளில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கத்தில் மீட்பு பணிகள் இன்னும் தொடர்ந்து வரும் நிலையில் இன்றைய நிலவரப்படி 6,301 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>இந்த சூழலில் தற்போது கொலம்பியாவில் 21ஆம் நூற்றாண்டின் ஏற்பட்ட மிகக் கடுமையான நிலநடுக்கம் இது. வெனிசுலாவில் 3.8 ரிக்டர் அளவு தற்போது நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 12 ஆகஸ்ட் 2026: ஆடி அமாவாசை
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-12-august-2026-aadi-amavasai</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-12-august-2026-aadi-amavasai#comments</comments><guid isPermaLink="false">4a8a0c1e-ef1b-4eaa-be8a-65b5fa2b00db</guid><pubDate>Wed, 12 Aug 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-08-12T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/914no0ei/tharpanam.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ tharpanam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/914no0ei/tharpanam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆடி-27 (புதன்கிழமை)</p><p>பிறை : தேய்பிறை</p><p>திதி :  அமாவாசை நள்ளிரவு 12.16 மணி வரை பிறகு பிரதமை</p><p>நட்சத்திரம் :  பூசம் காலை 9.10 வரை பிறகு ஆயில்யம்</p> <p>யோகம் :  சித்தயோகம்</p><p>ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை</p><p>எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை</p><p>சூலம் : வடக்கு</p><p>நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை</p> <h2>ஆடி அமாவாசை</h2><p>ஆடி அமாவாசை. ராமேஸ்வரம், வேதாரண்யம், திருவள்ளூர், திலதர்ப்பணபுரி கோவில்களில் பித்ரு தர்ப்பணம் செய்ய நன்று. திருக்கண்ணபுரம் ஸ்ரீ சௌரிராஜப் பெருமாள் விபீஷணாழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல். நயினார் கோவில் ஸ்ரீ சௌந்திர நாயகி சிவலிங்க பூஜை செய்தருளல். விருதுநகர் சமீபம் சதுரகிரி ஸ்ரீ சுந்தரமகாலிங்கம் கோவிலில் பெருந்திருவிழா. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் புறப்பாடு. </p>  <p>திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை தலத்தில் திருமஞ்சனம். கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு. விருதுநகர் ஸ்ரீ விஸ்வநாதர், வேதாரண்யம் ஸ்ரீ திருமறைக்காடர் கோவில்களில் அபிஷேகம்.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - நலம்</p><p>ரிஷபம் - பொறுப்பு</p><p>மிதுனம் - லாபம்</p><p>கடகம் - போட்டி</p><p>சிம்மம் - நட்பு</p><p>கன்னி - ஆதரவு</p> <p>துலாம் - ஆக்கம்</p><p>விருச்சிகம் - உதவி</p><p>தனுசு - தேர்ச்சி</p><p>மகரம் - நன்மை</p><p>கும்பம் - புகழ்</p><p>மீனம் - முயற்சி</p> ]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 12.8.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு கனவுகள் நனவாகும் நாள்...</title><link>https://www.maalaimalar.com/Today-Transit/today-rasi-palan-in-tamil-12-8-2026</link><comments>https://www.maalaimalar.com/Today-Transit/today-rasi-palan-in-tamil-12-8-2026#comments</comments><guid isPermaLink="false">fdf53f96-9eb3-4c77-a741-04efab78a3a8</guid><pubDate>Wed, 12 Aug 2026 01:27:17 +0000</pubDate><atom:updated>2026-08-12T01:27:17.196Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rasipalan,Daily Rasipalan,ராசி பலன்,இன்றைய ராசி பலன்கள்,Todays rasipalan</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-04-06/tfs7454t/astrology.jpg.jpeg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Today Rasi palan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-04-06/tfs7454t/astrology.jpg.jpeg?w=280" width="280"></media:thumbnail><category>இன்றைய ராசி பலன்கள்</category><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>நட்பால் நன்மை ஏற்படும் நாள். வாகனம் வாங்கும் யோகம் உண்டு. தாமதப்பட்டு வந்த காரியங்களை இன்று துரிதமாகச் செய்து முடிப்பீர்கள்.</p><h2>ரிஷபம்</h2><p>முக்கியப் புள்ளிகளால் முன்னேற்றம் கூடும் நாள். பொருளாதார நிலை உயரும். நாட்டுப்பற்று மிக்க நண்பர் ஒருவரால் நல்ல காரியம் விரைவாக நடைபெறும்.</p><h2>மிதுனம்</h2><p>எதிரிகள் விலகும் நாள். சுபகாரியப் பேச்சு முடிவாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்பு வந்து சேரும்.</p><h2>கடகம்</h2><p>குடும்பச்சுமை கூடும் நாள். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது.</p><h2>சிம்மம்</h2><p>விரயத்திற்கேற்ற வரவு வந்து சேரும் நாள். வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். பெற்றோர் நலனில் அக்கறை தேவை. வாகனப் பராமரிப்புச் செலவுகளால் வாட்டம் ஏற்படும்.</p><h2>கன்னி</h2><p>கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். கடமையில் கண்ணும், கருத்துமாக 2 இருப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்க முன்வருவீர்கள்.</p><h2>துலாம்</h2><p>தொல்லை தந்தவர்கள் எல்லையை விட்டு விட்டு விலகும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்காக எடுத்த முயற்சி கைகூடும்.</p><h2>விருச்சிகம்</h2><p>கனவுகள் நனவாகும் நாள். நாணயமும், நேர்மையும் கொண்ட நண்பர்களால் நம்பிக்கைகள் நடைபெறும். சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.</p><h2>தனுசு</h2><p>யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்சினை ஏற்படும்.</p><h2>மகரம்</h2><p>நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.</p><h2>கும்பம்</h2><p>ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். கைமாத்தாக கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும். பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட பகை மாறும்.</p><h2>மீனம்</h2><p>பொது வாழ்வில் புகழ் கூடும் நாள். அடுத்தவர் நலனில் எடுத்த அக்கறைக்கு ஆதாயம் கிட்டும். பூர்வீக சொத்தை விற்றுப் புதிய சொத்தை வாங்குவீர்கள்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-diesel-prices-in-chennai-2</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-diesel-prices-in-chennai-2#comments</comments><guid isPermaLink="false">cdda8f51-b7f7-449a-9059-e7eb3d387a7a</guid><pubDate>Wed, 12 Aug 2026 01:04:18 +0000</pubDate><atom:updated>2026-08-12T01:04:18.609Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல் டீசல் விலை,Petrol Diesel Price,டீசல் விலை,Diesel price,Petrol Price,பெட்ரோல் விலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/zqvhuwkk/tn-2.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ petrol, diesel]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/zqvhuwkk/tn-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் போரினால் மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p><h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.</p><h2>இன்றைய பெட்ரோல், டீசல் விலை</h2><p>அந்த வகையில் இன்றைய (12.08.2026 - செய்வ்வாய்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.74-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p>இன்று சர்வதேச சந்தையில் பிரனட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 89.24 டாலர் என விற்பனை ஆகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஜார்ஜினா ரோட்ரிக்ஸ்-ஐ மணந்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ</title><link>https://www.maalaimalar.com/sports/cristiano-ronaldo-marries-georgina-rodriguez-after-years-of-wedding-speculation</link><comments>https://www.maalaimalar.com/sports/cristiano-ronaldo-marries-georgina-rodriguez-after-years-of-wedding-speculation#comments</comments><guid isPermaLink="false">75e2a948-1012-4e65-a619-74ffc0b9bf2e</guid><pubDate>Wed, 12 Aug 2026 00:33:54 +0000</pubDate><atom:updated>2026-08-12T00:33:54.773Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Cristiano Ronaldo,கிறிஸ்டியானோ ரொனால்டோ,georgina Rodriguez,ஜார்ஜினா ரோட்ரிக்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/cbs78xy1/Cristiano-Ronaldo-and-Georgina-Rodr%C3%ADguez-married.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Cristiano Ronaldo - Georgina Rodriguez]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/cbs78xy1/Cristiano-Ronaldo-and-Georgina-Rodr%C3%ADguez-married.png?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/cristiano-ronaldo">கிறிஸ்டியானோ ரொனால்டோ</a> மற்றும் ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் போர்ச்சுகலில் நடந்த ஒரு விழாவில் திருமணம் செய்துகொண்டு, தங்களின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட உறவை இறுதியாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். போர்ச்சுகல் <a href="https://www.maalaimalar.com/sports/football">கால்பந்து</a> சூப்பர் ஸ்டாரும் அவரது நீண்டகால காதலியும், தங்களின் திருமண மோதிரங்களின் ஒரு எளிய புகைப்படம் மூலம் மட்டுமே இந்தச் செய்தியை பகிர்ந்துகொண்டனர்.</p><p>போர்ச்சுக்கல் மற்றும் அல் நஸ்ர் அணியின் முன்கள வீரரான 41 வயதான ரொனால்டோவும், 32 வயதான ஸ்பெயின் மாடல் ரோட்ரிக்ஸும், ஆகஸ்ட் 11 அன்று காஸ்காய்ஸில் தங்களது ஐந்து பிள்ளைகள் முன்னிலையில் ஒரு விழாவில் திருமணம் செய்துகொண்டனர். பின்னர், இந்த தம்பதியினர் திருமண மோதிரங்கள் அணிந்த தங்கள் கைகளின் புகைப்படத்தை பகிர்ந்துகொண்டனர்.</p><h2>முற்றுப்புள்ளி:</h2><p>இருவரின் விரல்களிலும் மோதிரங்களைக் கண்ட பிறகு ரசிகர்கள் ஊகித்து வந்ததை அந்தப் பதிவு திறம்பட உறுதி செய்தது. இத்தாலிய கால்பந்து பத்திரிகையாளர் ஃபேப்ரிசியோ ரொமானோவும் இந்த திருமணத்தை உறுதிப்படுத்தினார். இதன் மூலம், அந்த தம்பதியினர் எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என்பது குறித்த பல மாத கால நிச்சயமற்ற நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.</p><p>சுவாரஸ்யமாக, அந்தத் தம்பதியரின் உண்மையான திருமணம், சற்று வேடிக்கையான ஒரு தவறான அறிவிப்புக்குப் பிறகே நடைபெற்றது.</p><h2>எதிர்பார்க்கவில்லை:</h2><p>ரோட்ரிக்ஸின் நெட்ஃபிளிக்ஸ் தொடரான ​​'ஐ ஆம் ஜார்ஜினா'வில், தங்களது உறவு இவ்வளவு தீவிரமாக மாறும் என்று எதிர்பார்க்கவில்லை என ரொனால்டோ ஒப்புக்கொண்டார்.</p><p>இது குறித்து பேசும் போது, "ஆரம்பத்தில் இது இவ்வளவு வலுவாக இருக்கும் என்றோ, நான் அவள் மீது காதல் கொள்வேன் என்றோ நினைக்கவில்லை. உண்மையைச் சொல்லப்போனால், நான் இதை எதிர்பார்க்கவில்லை. ஆனால் சிறிது காலத்திற்குப் பிறகு, அவள்தான் என் வாழ்க்கைத் துணை என்று உணர்ந்தேன்," என்று கூறினார்.</p><p>ரொனால்டோ - ரோட்ரிக்ஸ் தம்பதியினர், தங்களது திருமணத்திற்கு சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு, ஆகஸ்ட் 11, 2025 அன்று தங்களது நிச்சயதார்த்தத்தை அறிவித்தனர். ரோட்ரிக்ஸ் தனது நிச்சயதார்த்த மோதிரத்தின் புகைப்படத்தைப் பகிர்ந்து, "S, quiero. En esta y en todas mis vidas" என்று குறிப்பிட்டார்.</p><p>ரொனால்டோ மற்றும் ரோட்ரிக்ஸுக்கு அலானா மற்றும் பெல்லா என்ற மகள்கள் உள்ளனர். அதே நேரத்தில், அவர்கள் ரொனால்டோவின் மூத்த மகன் கிறிஸ்டியானோ ஜூனியர் மற்றும் இரட்டையர்களான ஈவா மரியா மற்றும் மேட்டியோ ஆகியோரையும் வளர்த்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கடலை நோக்கி ஏவுகணை சோதனை நடத்திய வட கொரியா</title><link>https://www.maalaimalar.com/news/world/japan-said-north-korea-fires-suspected-ballistic-missile-towards-sea</link><comments>https://www.maalaimalar.com/news/world/japan-said-north-korea-fires-suspected-ballistic-missile-towards-sea#comments</comments><guid isPermaLink="false">02b00a93-97c3-49a6-821b-a7464185670d</guid><pubDate>Tue, 11 Aug 2026 23:41:44 +0000</pubDate><atom:updated>2026-08-11T23:41:44.253Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>japan,ஜப்பான்,North korea,ballistic missile,வட கொரியா,ஏவுகணை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/rtdf7npx/Ballistic-Missile.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ballistic Missile]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/rtdf7npx/Ballistic-Missile.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடலை நோக்கி <a href="https://www.maalaimalar.com/news/world">வட கொரியா</a> ஏவுகணை சோதனை நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு வாரத்திற்கும் குறைவான காலத்தில் நிகழும் இரண்டாவது ஆயுத சோதனையாக இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. வட கொரியா புதன்கிழமை கடலை நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை ஏவியதாக ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>சந்தேகத்திற்கிடமான ஆயுதம் கடலில் விழுந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தென் கொரிய ராணுவத்தை மேற்கோள் காட்டி, வட கொரியா தனது கிழக்கு கடற்கரைக்கு அப்பால் அடையாளம் தெரியாத ஏவுகணை ஒன்றை சுட்டதாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><h2>இராணுவ பயிற்சி:</h2><p>வட கொரிய அச்சுறுத்தல்களுக்கு எதிரான தயார்நிலையை வலுப்படுத்துவதற்காக, தென் கொரியாவும் அமெரிக்காவும் அடுத்த வாரம் தங்களின் வருடாந்திர பெரிய அளவிலான இராணுவ பயிற்சிகளை தொடங்கவுள்ளதாக அறிவித்த இரண்டு நாட்களுக்கு பிறகு, இந்த ஏவுகணை சோதனை நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>உல்ச்சி ஃப்ரீடம் ஷீல்ட் என்று அழைக்கப்படும் இந்தப் பயிற்சிகள், வட கொரியாவிடம் இருந்து கடும் எதிர்ப்பை தூண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில், தம்மீது படையெடுப்பதற்கான ஒரு ஒத்திகையாகவே அந்நாடு இந்த பயிற்சியை கருதுகிறது.</p><h2>ஆத்திரமூட்டும் ஆயுத சோதனை:</h2><p>இதற்கு முன்னர், தென்கொரியா-அமெரிக்காவின் முக்கிய இராணுவப் பயிற்சிகளுக்கு, வட கொரியா ஆத்திரமூட்டும் ஆயுத சோதனைகள் மற்றும் கடுமையான சொல்லாடல்கள் மூலம் பதிலளித்துள்ளது.</p><p>கடந்த வாரம், தென் கொரியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள், வட கொரியா ஏவிய குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணையை கண்டறிந்தன. இது ஜூன் மாத கடைசிக்கு பிறகு வட கொரியா மேற்கொண்ட முதல் பாலிஸ்டிக் ஆயுத சோதனை நடவடிக்கையாகும். </p><p>வழக்கமாக ஆயுத சோதனைகள் குறித்த விவரங்களை ஒரு நாள் கழித்து வெளியிடும் வட கொரியா, இந்த ஏவுகணை ஏவப்பட்டதாகக் கூறப்படுவதை உறுதிப்படுத்தவில்லை.</p>]]></content:encoded></item><item><title>ஜிம்பாப்வேயின் கரிபா ஏரியில் படகு கவிழ்ந்ததில் 15 பேர் பலி; 27 பேர் மாயம்</title><link>https://www.maalaimalar.com/news/world/at-least-15-dead-27-missing-after-ferry-capsizes-on-zimbabwes-lake-kariba</link><comments>https://www.maalaimalar.com/news/world/at-least-15-dead-27-missing-after-ferry-capsizes-on-zimbabwes-lake-kariba#comments</comments><guid isPermaLink="false">e324bd41-8829-436f-9186-9adaeb59ae9b</guid><pubDate>Tue, 11 Aug 2026 22:51:42 +0000</pubDate><atom:updated>2026-08-11T22:51:42.555Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உயிரிழப்பு,zimbabwe,ஜிம்பாப்வே,படகு விபத்து,ferry capsize</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/wonz0309/ferry-capsizes-zimbabwe.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ferry capsizes zimbabwe]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/wonz0309/ferry-capsizes-zimbabwe.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world">ஜிம்பாப்வே</a> நாட்டின் கரிபா ஏரியில் அதிக பயணிகளை ஏற்றி சென்ற படகு கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. <a href="https://www.maalaimalar.com/topic/boat-capsize">படகு</a> கவிழ்ந்த விபத்தில் மேலும் 27 பேர் காணாமல் போயுள்ளனர். இதனை அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது. ஏரியில் இருந்து 77 பேர் மீட்கப்பட்டு அங்குள்ள ஒரு தீவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக அந்த முகமை கூறியது.</p><p>இருப்பினும், உறுதிப்படுத்தப்பட்ட பயணச்சீட்டு விற்பனையின் அடிப்படையில், 114 பயணிகளும் ஐந்து பணியாளர்களும் மட்டுமே படகில் இருந்ததை உறுதிப்படுத்த முடிவதாக ஜிம்பாப்வேயின் சிவில் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>பயணச்சீட்டு தேவைப்படாத வயதுடைய குழந்தைகள் எத்தனை பேர் படகில் இருந்தார்கள் என்பது தெரியவில்லை என்றும், அவர்கள் கணக்கில் சேர்க்கப்படவில்லை என்றும் அது கூறியது. அந்தப் படகு 90 பேர் பயணிக்கும் திறன் கொண்டது என்று முகமை தெரிவித்தது. </p><h2>மீட்பு பணிகள் தீவிரம்:</h2><p>உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினரான முட்சா முரோம்பெட்ஸி (Mutsa Murombedzi) ஒரு காணொளியை வெளியிட்டார்; அதில், பழமையானதாகத் தோன்றும் அந்தப் படகு தனது பயணத்தைத் தொடங்கியபோது, ​​கரையில் இருந்தவர்கள் அதற்கு விடை கொடுக்கும் வகையில் கைகளை அசைப்பது பதிவாகியுள்ளது. கிராமப்புற மக்கள் கரிபா நகரத்திற்குச் செல்ல ஏரி வழியாக இந்தப் படகை பயன்படுத்துவதாக அவர் கூறினார்.</p><p>ஏரியில் வீசும் பலமான அலைகளை அந்தப் படகு தாங்குமா என்பது குறித்து கரையில் நின்றிருந்த சிலர் கவலை தெரிவித்ததையும் அந்தக் காணொளி காட்டுகிறது.</p><p>முன்னதாக, மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக ஜிம்பாப்வே காவல்துறை கூறியது, ஆனால் வேறு எந்த விவரங்களையும் அளிக்கவில்லை. ஏரியில் தலைகீழாகக் கவிழ்ந்ததாகத் தோன்றும் படகை நோக்கி அதிவேகப் படகுகள் செல்வதையும், ஹெலிகாப்டர் ஒன்று மேலே வட்டமிடுவதையும் காட்டும் காணொளியை ஜிம்பாப்வேயின் அரசு ஒலிபரப்பு நிறுவனமான ZBC வெளியிட்டது.</p><h2>மிகப்பெரிய ஏரி:</h2><p>தென் ஆப்பிரிக்காவில் உள்ள கரிபா ஏரி, ஜிம்பாப்வே மற்றும் அதன் அண்டை நாடான ஜாம்பியா ஆகியவற்றுக்கு இடையேயான எல்லையின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது.</p><p>நீரின் கொள்ளளவு அடிப்படையில் உலகின் மிகப்பெரிய மனிதனால் உருவாக்கப்பட்ட ஏரியான இது, 1950-களின் பிற்பகுதியிலும் 1960-களின் முற்பகுதியிலும் ஜாம்பேசி ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டதன் மூலம் உருவாக்கப்பட்டது. இதனால் ஒரு பள்ளத்தாக்கு மெதுவாக நீரால் நிரப்பப்பட்டு மிகப்பெரிய ஏரியாக மாறியது; தற்போது இது 200 கி.மீ-க்கும் அதிகமான நீளமும், சில இடங்களில் 40 கி.மீ வரை அகலமும் கொண்டதாக உள்ளது.</p><p>ஜிம்பாப்வே மற்றும் ஜாம்பியா ஆகிய நாடுகள் இந்த ஏரியைப் பகிர்ந்து கொள்கின்றன; அவற்றுக்கு இடையேயான அதிகாரப்பூர்வ எல்லை ஏரியின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>4-ஆவது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு வழங்க முடியாது - உயர்நீதிமன்றம் உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/national/no-maternity-leave-for-government-employees-expecting-4th-child-court</link><comments>https://www.maalaimalar.com/news/national/no-maternity-leave-for-government-employees-expecting-4th-child-court#comments</comments><guid isPermaLink="false">5b648d28-bba0-44fc-ade8-e50a4709d13f</guid><pubDate>Tue, 11 Aug 2026 22:08:55 +0000</pubDate><atom:updated>2026-08-11T22:08:55.183Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நீதிமன்றம்,Maternity leave,Court,Government employee,மகப்பேறு விடுப்பு,அரசு ஊழியர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/bklako64/allahabad-high-court.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ allahabad high court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/bklako64/allahabad-high-court.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விதிகளின் படி தனக்கு நான்காவது குழந்தை பிறக்க இருப்பதை அடுத்து மகப்பேறு விடுப்பு வழங்க உத்தரவிடக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்த அரசு ஊழியரின் மனுவை <a href="https://www.maalaimalar.com/news/national">அலகாபாத்</a> உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.</p><p>சசி குமாரி தாக்கல் செய்த மனுவின் பேரில், நீதிபதி மஞ்சு ராணி சௌஹான் ஆகஸ்ட் 7-ஆம் தேதியன்று இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.</p><h2>மேல் முறையீடு:</h2><p>தனது நான்காவது குழந்தைக்கான மகப்பேறு விடுப்பு கோரிக்கையை நிராகரித்து, சம்பல் (பீம் நகர்) வட்டார கல்வி அலுவலர் ஜூன் 19-ஆம் தேதியன்று பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அப்பெண் மேல்முறையீடு செய்திருந்தார்.</p><p>சட்டத்தின்படி ஆறு மாத மகப்பேறு விடுப்பை வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகார அமைப்புக்கு உத்தரவிட வேண்டும் என குமாரி உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.</p><p>விசாரணையின் போது, ​​விதிகளின்படி மனுதாரர் தனது நான்காவது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு பெற உரிமை இல்லை என்ற அடிப்படையில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் அந்த ரிட் மனுவை எதிர்த்தார்.</p><p>எனவே, எந்தத் தலையீடும் தேவையில்லை என்றும், இந்த ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்றும் வழக்கறிஞர் வாதிட்டார்.</p><h2>சட்டத்தின் பார்வையில் தவறானது:</h2><p>குமாரி தனது மற்ற மூன்று குழந்தைகளின் பிறப்பின்போது எந்த விடுப்பும் எடுக்கவில்லை என்றும், அதனால் அவர் இப்போதுதான் முதல் முறையாக விடுப்பு பெற தகுதியுடையவர் என்றும் அவரது வழக்கறிஞர் வாதிட்டார். எனவே, கல்வி அதிகாரியின் உத்தரவு தன்னிச்சையானது மற்றும் சட்டத்தின் பார்வையில் தவறானது.</p><p>ரிட் மனுவில் கூறப்பட்டுள்ள ஒரு கூற்றை வலியுறுத்தி, குமாரி ஏற்கனவே மகப்பேறு விடுப்பு எடுத்துவிட்டார் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் சமர்ப்பித்தார்.</p><p>அரசுத் தரப்பு வழக்கறிஞர்களின் கூற்றைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி சௌகான், நீதிமன்றத்தின் தலையீடு தேவையில்லை என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார்.</p>]]></content:encoded></item><item><title>24 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 9 பேர் உயிரிழப்பு - பீகாரில் சோகம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/nine-killed-in-lightning-strikes-in-3-districts-of-bihar</link><comments>https://www.maalaimalar.com/news/national/nine-killed-in-lightning-strikes-in-3-districts-of-bihar#comments</comments><guid isPermaLink="false">8a21baf1-4538-4084-98cd-fbba95cc2dcf</guid><pubDate>Tue, 11 Aug 2026 20:13:24 +0000</pubDate><atom:updated>2026-08-11T20:13:24.139Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உயிரிழப்பு,பீகார்,Bihar,lightning strike,மின்னல்,Death toll</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/bhsz5x2s/lightning-strike.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ lightning strike]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/bhsz5x2s/lightning-strike.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national">பீகார்</a> மாநிலத்தின் மூன்று மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்ததாக செவ்வாய்க்கிழமை வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது. இந்த உயிரிழப்புகள் கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளன.</p><p>பங்கா மாவட்டத்தில் ஐந்து பேரும், லக்கிசராய் மாவட்டத்தில் மூன்று பேரும், பாட்னா மாவட்டத்தில் ஒருவரும் உயிரிழந்ததாக <a href="https://www.maalaimalar.com/topic/chief-minister">முதலமைச்சர்</a> அலுவலகம் (CMO) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>நிதியுதவி:</h2><p>உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.</p><p>பங்கா மாவட்டத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்த ஐந்து பேரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்களும் அடங்குவர்.</p><p>பங்கா மாவட்டத்தின் பௌசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொராய் கிராமத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த குஷ்மி தேவி (45), ரிங்கு தேவி (35) மற்றும் ரேணு தேவி (38) ஆகியோர் வீட்டின் வெளியே இருந்தபோது மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.</p><p>பௌசி வட்டத்தைச் சேர்ந்த சிராய் கிராமவாசியான சுரேஷ் யாதவ், தனது வயலுக்குச் செல்லும் வழியில் குளம் ஒன்றின் அருகே மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.</p><h2>இழப்பீடு:</h2><p>அதே வட்டத்தைச் சேர்ந்த காசி கைரி கிராமத்தில், வயலில் நெல் நடும் தொழிலாளர்களுக்கு காலை உணவு கொடுத்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த சுஃபியானா (50) என்பவர் மின்னல் தாக்கி உயிரிழந்தார்.</p><p>பேரிடர் மேலாண்மை விதிமுறைகளின்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று பங்கா கூடுதல் மாவட்ட ஆட்சியர் (ADM) அஜித் குமார் தெரிவித்தார்.</p><p>மோசமான வானிலை நிலவும்போது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும், அத்துடன் பேரிடர் மேலாண்மைத் துறையின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் முதலமைச்சர் சம்ராட் சௌத்ரி கேட்டுக்கொண்டதாக முதலமைச்சர் அலுவலக அறிக்கை தெரிவிக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>சிவகார்த்திகேயனின் சேயோன் திரைப்படத்தில் சீமான்?</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/seeman-to-join-sivakarthikeyan-starrer-seyon-star-cast</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/seeman-to-join-sivakarthikeyan-starrer-seyon-star-cast#comments</comments><guid isPermaLink="false">d0ff2f31-7541-4e6b-b77a-c5f48c571bae</guid><pubDate>Tue, 11 Aug 2026 19:01:15 +0000</pubDate><atom:updated>2026-08-11T19:01:15.079Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Seeman,sivakarthikeyan,சிவகார்த்திகேயன்,Seyon,சேயோன்,சீமான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/h8pjd87j/Seyon-SK-and-Seeman.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Seyon SK and Seeman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/h8pjd87j/Seyon-SK-and-Seeman.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/sivakarthikeyan">சிவகார்த்திகேயன்</a> மற்றும் இயக்குநர் சிவகுமார் முருகேசன் கூட்டணியில் உருவாகி வரும் 'சேயோன்' திரைப்படத்தில் நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.</p><p>மதுரையில் தொடங்கியுள்ள இதன் படப்பிடிப்பில் அவர் விரைவில் பங்கேற்க உள்ளார். முன்னதாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான ‘எல்ஐகே’ படத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/seeman">சீமான்</a> நடித்திருந்தார். அந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.</p><h2>சந்தோஷ் நாராயணன் மேஜிக்:</h2><p>'அமரன்' படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து, கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் இரண்டாவது திரைப்படம் சேயோன். ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'தாய் கிழவி' படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் இந்தப் படத்தை இயக்குகிறார்.</p><p>மதுரை மண்ணின் பாரம்பரிய பின்னணியில் கிராமத்து கமர்ஷியல் எண்டர்டெய்னராக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். பிரபல தெலுங்கு நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் சேயோன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.</p><h2>2-ஆம் கட்ட படப்பிடிப்பு:</h2><p>கடந்த ஜூன் மாதம் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தது. கன்னட இயக்குநர் ராஜ் பி. ஷெட்டி இப்படத்தில் இணைந்துள்ளார். இந்த நிலையில், சேயோன் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு திட்டமிடப்பட்டது. </p><p>இதற்காக மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் மிக பிரமாண்டமான செட்கள் அமைக்கப்பட்டு, முக்கிய சண்டை காட்சி மற்றும் குடும்பக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.</p><p>'சேயோன்' திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.</p>]]></content:encoded></item><item><title>அடுத்த வாரம் வெளியாகும் துல்கர் சல்மானின் &apos;ஐ ம் கேம்&apos;</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/dulquer-salmaan-starrer-i-am-game-release-update</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/dulquer-salmaan-starrer-i-am-game-release-update#comments</comments><guid isPermaLink="false">becb6187-49f5-4882-90d2-967857320c21</guid><pubDate>Tue, 11 Aug 2026 18:29:43 +0000</pubDate><atom:updated>2026-08-11T18:29:43.614Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Dulquer Salmaan,துல்கர் சல்மான்,iam game,ஐ ம் கேம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/j8kcsi5d/im-game.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ im game]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/j8kcsi5d/im-game.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/dulquer-salmaan">துல்கர் சல்மான்</a> நடிப்பில் உருவாகி இருக்கும் 'ஐ ம் கேம்' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 'அருகே அருகே' என பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாடலுக்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். இந்தப் பாடலை பாடலாசிரியர் விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுத, பின்னணி பாடகர் அர்மான் மாலிக் பாடியுள்ளார். இந்தப் பாடல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிடப்பட்டது. </p><p>ரசிகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள :ஐ அம் கேம்' <a href="https://www.maalaimalar.com/cinema">திரைப்படம்</a> - ஆகஸ்ட் 20-ஆம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. துல்கர் சல்மானின் வேஃபரர் ஃபிலிம்ஸ் (Wayfarer Films) தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த பிரம்மாண்டமான ஃபேண்டஸி திரில்லர் திரைப்படம்- &nbsp;துல்கரின் திரை பயணத்திலேயே மிக பெரிய படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>அதிகரித்த எதிர்பார்ப்பு:</h2><p>இப்படத்தை நஹாஸ் ஹிதாயத் இயக்கி இருக்கிறார். வேஃபரர் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு சஜீல் பாபா - இஸ்மாயில் அபுபக்கர் மற்றும் பிலால் மொய்து ஆகியோர் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். வசனங்களை சஜீல் பாபா - ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் ஷபாஸ் ரஷீத் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.</p><p>'அருகே அருகே..' எனத் தொடங்கும் இந்த பாடல் வெளியான உடனேயே ரசிகர்களின் மனதை கவர்ந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அத்துடன் படம் குறித்த ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்பாடல் மேலும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.‌</p><h2>40-ஆவது திரைப்படம்:</h2><p>துல்கர் சல்மானின் 40 வது திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த பிரம்மாண்ட ஃபேண்டஸி திரில்லர் திரைப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த் திவாரி, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை உரிமையை ஜீ மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது.</p><p>இப்படத்தின் டிரெய்லர் மற்றும் புதிதாக வெளியான பாடல் ஆகியவை ஜேக்ஸ் பிஜாயின் இசை - ஜிம்ஷி காலீத்தின் ஒளிப்பதிவு மற்றும் அன்பறிவ் மாஸ்டர்களின் சண்டைக் காட்சிகள் - ஆகியவை படத்தின் முக்கிய சிறப்பம்சங்களாக அமையும் என்பதை உணர்த்துகின்றன.</p><p>மாபெரும் வெற்றி பெற்ற லோகா படத்தை தொடர்ந்து வேஃபரர் பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த படம் இதுவாகும். அதே போல் பிளாக் பஸ்டர் ஹிட் படமான 'RDX -ஆர்.டி.எக்ஸ்.' படத்திற்கு பிறகு இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கும் அடுத்த படமாகவும் இது அமைந்துள்ளது. இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இந்தியா முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டி.என்.பி.எல்.: கோவை அணிக்கு எதிரான போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் வெற்றி!</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-tt-beat-kk-by-4-wickets</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-tt-beat-kk-by-4-wickets#comments</comments><guid isPermaLink="false">0adb0b51-f234-4aa9-924a-caaf69da2fc0</guid><pubDate>Tue, 11 Aug 2026 17:51:54 +0000</pubDate><atom:updated>2026-08-11T17:51:54.113Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,திருப்பூர் தமிழன்ஸ்,கோவை கிங்ஸ்,Tiruppur Tamizhans,kovai Kings</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/x8oz2niu/TT-Win-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருப்பூர் தமிழன்ஸ் வெற்றி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/x8oz2niu/TT-Win-1.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>10-ஆவது <a href="https://www.maalaimalar.com/topic/tnpl">டி.என்.பி.எல்.</a> டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முறை தொடரின் அனைத்து போட்டிகளும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.</p><p>இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற 13-ஆவது லீக் ஆட்டத்தில் கோவை கிங்ஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் தமிழன்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து, <a href="https://www.maalaimalar.com/topic/kovai-kings">கோவை கிங்ஸ்</a> முதலில் பேட்டிங் செய்தது.</p><h2>சுமாரான தொடக்கம்:</h2><p>கோவை கிங்ஸ் அணி தொடக்க வீரராக களமிறங்கிய அபினவ் கண்ணன் 5 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இவருடன் களமிறங்கிய சுரேஷ் லோகேஷ்வர் 12 பந்துகளில் 22 ரன்களையும், இவருடன் ஆடிய பாலசுப்ரமணியம் சச்சின் 20 பந்துகளுக்கு 30 ரன்களையும் அடித்தார்.</p><p>அடுத்து களமிறங்கியவர்களில் ஆன்ட்ரே சித்தார்த் 23 பந்துகளில் 36 ரன்களும், மான் பாஃப்னா 20 ரன்களும், ஆர்.எஸ். ஆம்ப்ரிஷ் மற்றும் மனவ் பராக் தலா 10 ரன்களும், கேப்டன் ஷாருக் கான் 18 ரன்களும் எடுத்தனர். இதனால் கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 166 ரன்களை மட்டுமே எடுத்தது.</p><p>திருப்பூர் தமிழன்ஸ் சார்பில் சிறப்பாக பந்துவீசிய நடராஜன் மற்றும் ரகுபதி சிலம்பரசன் தலா 2 விக்கெட்டுகளையும், எசக்கிமுத்து, சாய் கிஷோர் மற்றும் மோகன் பிரசாத் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.</p><h2>அபார தொடக்கம்:</h2><p>எளிய இலக்கை துரத்திய திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கிய அமித் சாத்விக் 29 பந்துகளில் 66 ரன்கள் (5 பவுண்டரிகள், 6 சிக்சர்கள்) விளாசினார். அடுத்து வந்தவர்களில் மதிவாணன் அதிகபட்சமாக 26 பந்துகளில் 34 ரன்களும், முகமது அலி 29 ரன்களும் எடுத்தனர்.</p><p>ஒரு பக்கம் தொடக்க வீரரான அமித் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த மறுப்பக்கம் விக்கெட்டுகள் சரிந்து கொண்டே வந்தது. இதனால் திருப்பூர் தமிழன்ஸ் அணி 18 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களை எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றது.</p>]]></content:encoded></item></channel></rss>