<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 19 Sep 2026 07:22:07 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 19 செப். 2026...
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-19-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-19-september-2026#comments</comments><guid isPermaLink="false">879b7072-039f-46f2-9fb1-c5b930ad6945</guid><pubDate>Sat, 19 Sep 2026 05:03:44 +0000</pubDate><atom:updated>2026-09-19T06:20:38.898Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/4sus048d/LIVE.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ live news]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/4sus048d/LIVE.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/international-coastal-cleanup-day-governor-arlekar-says-keeping-surroundings-clean-should-be-a-natural-habit">சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பது இயல்பான பழக்கமாகவே இருக்க வேண்டும் -  ஆளுநர் அர்லேகர்</a></p><p>* இன்று நாங்கள் அனைவரும் உலகப்புகழ் பெற்ற மெரினா கடற்கரையில் கூடியுள்ளோம். </p><p>* தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஒரு தொடர்ச்சியான கூட்டு இயக்கமாக முன்னெடுக்க வேண்டும்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-plan-to-set-up-a-garbage-incinerator-must-be-abandoned-immediately">குப்பை எரிஉலை அமைக்கும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்</a></p><p>* குப்பை எரிஉலைகள் உலகெங்கும் தோல்வியடைந்த திட்டம் ஆகும். உலகின் வளர்ந்த நாடுகள் பலவும் இந்தத் திட்டத்திற்கு தடை விதித்துள்ளன.</p><p>* திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை ரத்து செய்த தவெக அரசு, இந்த பேரழிவுத் திட்டத்தை மட்டும் செயல்படுத்தத் துடிப்பது ஏன்?</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/possibility-of-low-pressure-area-forming-over-andaman-sea">அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு </a></p><p>* வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று மாலை ஒரு குறைந்த காற்றழுந்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.</p><p>* குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகரக்கூடும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/iit-student-dies-by-suicide-after-using-chatgpt-in-exam">தேர்வில் ChatGPT பயன்படுத்திய IIT மாணவர் தற்கொலை - சக மாணவர்கள் போராட்டம்!</a></p><p>* ஐஐடி பாம்பேயில் ChatGPT பயன்படுத்திய மாணவர் தற்கொலையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.</p><p>* நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறுகிறது, மாணவர்கள் மிரட்டல் தான் காரணம் என போராட்டம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/trump-white-house-ban-on-cnn-denounced-as-assault-on-press-freedom">வெள்ளை மாளிகையில் சில செய்தி நிறுவனங்களுக்கு தடை விதித்த டிரம்ப்...</a> </p><p>* அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் மூன்று செய்தி நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ளார்.</p><p>* இந்த நிறுவனங்கள் போலி செய்திகளை வெளியிட்டு வருவதாக டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-19-9-2026">GOLD PRICE TODAY: ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை! - எவ்வளவு தெரியுமா? </a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.130 உயர்ந்து ரூ.14,285-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>கருட சேவை தரிசிக்க குவிந்த பக்தர்கள்- திருப்பதி மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு </title><link>https://www.maalaimalar.com/spirituality/restrictions-on-vehicle-movement-on-the-tirupati-hill-road</link><comments>https://www.maalaimalar.com/spirituality/restrictions-on-vehicle-movement-on-the-tirupati-hill-road#comments</comments><guid isPermaLink="false">110a3246-d830-4c4c-b789-cadcb7c646c3</guid><pubDate>Sat, 19 Sep 2026 07:03:32 +0000</pubDate><atom:updated>2026-09-19T07:03:32.313Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>devotees,Tirupati temple,பிரம்மோற்சவ விழா,திருப்பதி கோவில்,பக்தர்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/0em978js/tirupati.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் இன்று காலை மோகினி அவதாரத்தில் ஏழுமலையான் பவனி வந்த காட்சி.]]></media:title><media:description type="html"><![CDATA[ திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் இன்று காலை மோகினி அவதாரத்தில் ஏழுமலையான் பவனி வந்த காட்சி.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/0em978js/tirupati.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கருட சேவையை காண மதியம் முதலே பக்தர்கள் 4 மாட வீதிகளில் குவிய தொடங்கினர். பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் டீ, காபி, பால், மோர் உள்ளிட்டவை தேவஸ்தான தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்பட்டது. மாட வீதிகளில் கருட சேவையை காண 1.80 லட்சம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/திருப்பதி-கோவில்">திருப்பதி ஏழுமலையான் கோவில்</a> பிரம்மோற்சவ விழாவில் 5-வது நாளான இன்று காலை ஏழுமலையான் மோகினி அவதாரத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். </p><h2><strong>கருட சேவை</strong></h2><p>மாலை 6.30 மணிக்கு கருட சேவை உற்சவம் தொடங்குகிறது. தங்க கருட வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.</p><p>பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வான கருட சேவையை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வாகனங்களில் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் திருப்பதி மலை பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2><strong>வாகனங்களுக்கு தடை</strong> </h2><p>போக்குவரத்து நெரிசலை குறைக்க திருப்பதி மலை உள்ளிட்ட சாலைகளில் 10 இடங்களில் சிறப்பு வாகன நிறுத்தங்களை திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்து உள்ளது. </p><p>பிரம்மோற்சவ விழாவை காண வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை வாகன நிறுத்தும் இடங்களில் நிறுத்தி விட்டு பஸ்களில் திருப்பதி மலைக்கு வர வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதேபோல் இன்று காலை முதல் நள்ளிரவு வரை மலை பாதையில் பைக் உள்ளிட்ட இருசக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>கருட சேவையை காண மதியம் முதலே பக்தர்கள் 4 மாட வீதிகளில் குவிய தொடங்கினர். பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் டீ, காபி, பால், மோர் உள்ளிட்டவை தேவஸ்தான தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்பட்டது. மாட வீதிகளில் கருட சேவையை காண 1.80 லட்சம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.</p><h2><strong>சிறப்பு ரெயில்கள்</strong></h2><p>கருட சேவை காண வரும் பக்தர்கள் சிரமமின்றி தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல திருப்பதியில் இருந்து வேலூர் கன்டோன்ன்மென்ட் வரையும் திருப்பதியில் இருந்து சென்னை கடற்கரை, நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல நள்ளிரவு 1 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.</p><h2><strong>20 மணி நேரம்</strong></h2><p>திருப்பதியில் நேற்று 76,060 பேர் தரிசனம் செய்தனர். 32, 248 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 4.56 லட்சம் லட்டுக்கள் விற்பனையானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர் பாரதிதாசனுக்கு ரூ.23.95 லட்சம் கல்வி உதவித்தொகை விடுவிப்பு
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/educational-scholarship-of-rs-23-95-lakh-released-for-student-bharathidasan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/educational-scholarship-of-rs-23-95-lakh-released-for-student-bharathidasan#comments</comments><guid isPermaLink="false">00ed0913-d804-48ee-b711-845013a323f6</guid><pubDate>Sat, 19 Sep 2026 07:02:40 +0000</pubDate><atom:updated>2026-09-19T07:02:40.466Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Bharathidasan,பாரதிதாசன்,minister vanni arasu,அமைச்சர் வன்னி அரசு,அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/ub1or8vp/student1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Student Bharathidasan - Minister Vanni Arasu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/ub1or8vp/student1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு உத்தரவின்படி, மாணவன் பாரதிதாசனுக்கு அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது.</p><p>அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழக மாணவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-says-financial-assistance-will-be-provided-to-student-bharathidasan-within-two-days">பாரதிதாசன்</a> என்பவர் இந்த கல்வி உதவித்தொகை இழுத்தடிக்கப்படுவதாக கண்ணீர் மல்க சமூக வலைத்தளத்தில் 'வீடியோ' பதிவு வெளியிட்டு இருந்தார்.</p> <p>இதையடுத்து வெளிநாட்டில் படிக்கும் மாணவர் பாரதிதாசனுக்கு அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும் என்று அமைச்சர் வன்னிஅரசு உறுதி அளித்து இருந்தார்.</p><p>இந்நிலையில், மாணவன் பாரதிதாசனுக்கு அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ரூ.12.21 லட்சம் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் எஞ்சிய ரூ.23.95 லட்சமும் நேற்று ஒரேநாளில் விடுவிக்கப்பட்டது.</p><p>ஆராய்ச்சி படிப்பிற்கு அனுமதிக்கப்பட்ட ரூ.36 லட்சத்தை 2-வது ஆண்டாக முழுமையாக மாணவர் பாரதிதாசன் பெற்றுள்ளார். </p><p>மாணவரின் கோரிக்கையை ஏற்று, அவரது படிப்பு எக்காரணம் கொண்டும் தடைபடக் கூடாது என்ற நோக்கத்திலும், சமூக நீதித்துறை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">அமைச்சர் வன்னி அரசு</a> அவர்களின் உத்தரவின்படியும் எஞ்சிய தொகையான ரூ.23.95 லட்சமும் போர்க்கால அடிப்படையில் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>Honeymoon சென்ற புதுமணத் தம்பதிக்கு நேர்ந்த சோகம் - பார்பிக்யூ சமைத்த போது நேர்ந்த விபரீதம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/honeymoon-tragedy-newlywed-couple-barbecue-accident</link><comments>https://www.maalaimalar.com/news/national/honeymoon-tragedy-newlywed-couple-barbecue-accident#comments</comments><guid isPermaLink="false">7be03907-8c88-4121-b623-92cc015b62a8</guid><pubDate>Sat, 19 Sep 2026 06:59:55 +0000</pubDate><atom:updated>2026-09-19T06:59:55.841Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>fire accident,புதுமண தம்பதி,Honey Moon,ஹனிமூன்,தீ விபத்து,Newly married couple</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/oy7o7u26/Fire-Accident" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Fire Accident ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/oy7o7u26/Fire-Accident?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">மேற்கு வங்காளத்தில்</a> Hoonymoon கொண்டாடச் சென்ற புதுமணத் தம்பதியின் வாழ்வில் பார்பிக்யூ தீ விபத்து காரணமாகப் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. கணவன் கண்முன்னே தீப்பற்றி எரிந்ததில் இளம்பெண் ஒருவர் 60 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><h2>ஹனிமூன் பயணத்தில் நேர்ந்த விபரீதம்</h2><p>மேற்கு வங்க மாநிலம் உத்தர் தினாஜ்பூர் பகுதியைச் சேர்ந்த <strong><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF">சவுவிக் தாஸ்</a></strong><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF"> என்பவருக்கும், </a><strong><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF">நிகிதா சாஹா</a></strong><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF"> </a>என்ற பெண்ணுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. </p><p>இந்த புதுமணத் தம்பதியினர் தங்களது ஹனிமூனை கொண்டாடுவதற்காக டார்ஜிலிங் பகுதியில் உள்ள புகழ்பெற்ற சிட்டாங் மலைவாசஸ்தலத்திற்குச் சென்றிருந்தனர்.</p><p>அங்குள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்கியிருந்தபோது, அங்கிருந்த பார்பிக்யூ சமையல் வசதியைப் பயன்படுத்தத் திட்டமிட்டனர். சமையல் நடக்கும் இடத்திற்கு மிக அருகில் இந்த தம்பதியினர் அமர்ந்திருந்தனர்.</p><h2>கண்ணிமைக்கும் நேரத்தில் பற்றிய தீ</h2><p>அங்கு பணிபுரிந்த விடுதி ஊழியர் ஒருவர், பார்பிக்யூ அடுப்பை வேகமாக எரியூட்டுவதற்காக ஒரு பிளாஸ்டிக் கேனில் இருந்த எரியக்கூடிய திரவத்தை அடுப்பில் ஊற்றியுள்ளார். </p><p>அப்போது எதிர்பாராத விதமாகத் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">தீ கொளுந்துவிட்டு</a> எரியத் தொடங்கி, அருகில் அமர்ந்திருந்த நிகிதாவின் உடலுக்குப் பரவியது.</p><p>கண்ணிமைக்கும் நேரத்தில் நிகிதாவின் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. </p><p>அதிர்ச்சியடைந்த கணவர் சவுவிக் தாஸும், சம்பந்தப்பட்ட ஊழியரும் தங்களது ஆடைகளைக் கழற்றி தீயை அணைக்கப் போராடினர். இருப்பினும் நிகிதாவின் உடல் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.</p><h2>தற்போதைய நிலை</h2><p>நிகிதாவின் உடலில் <strong>60 சதவீதத்திற்கும் அதிகமான தீக்காயங்கள்</strong> ஏற்பட்டுள்ளதால், அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p> உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. </p><p>இச்சம்பவம் குறித்து உள்ளூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சொகுசு விடுதியின் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவுடனான 101 ஒப்பந்தங்கள் மறுஆய்வு: இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் &apos;Win-Win&apos; கூட்டு முயற்சியே இலக்கு என பங்களாதேஷ் அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/world/review-of-101-agreements-with-india-bangladesh-aims-win-win</link><comments>https://www.maalaimalar.com/news/world/review-of-101-agreements-with-india-bangladesh-aims-win-win#comments</comments><guid isPermaLink="false">370ceba0-d2bc-47b4-902e-cc657437bdac</guid><pubDate>Sat, 19 Sep 2026 06:35:18 +0000</pubDate><atom:updated>2026-09-19T06:35:18.673Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,Bangladesh,பங்களாதேஷ்,WinWin Agreement,இந்தியவெளியுறவுத்துறை ஒப்பந்தங்கள்மறுஆய்வு,Contract Review</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/ihtju7aa/WinWin-Agreement" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ WinWin Agreement ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/ihtju7aa/WinWin-Agreement?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து, முந்தைய அவாமி லீக் அரசாங்கத்தின் காலத்தில் இந்தியாவுடன் கையெழுத்திடப்பட்ட 101 இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D">புரிந்துணர்வு ஒப்பந்தங்களை</a> தற்போதைய பங்களாதேஷ் இடைக்கால அரசு மறுஆய்வு செய்யத் தொடங்கியுள்ளது.</p><p>இந்த மறுஆய்வு ஒப்பந்தங்கள் ரத்து செய்வதற்காக அல்ல என்றும், இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் (Win-Win) மாற்றுவதற்காகவே என்றும் பங்களாதேஷ் அரசு விளக்கம் அளித்துள்ளது.</p><h2>மறுஆய்வின் நோக்கம் என்ன? – பங்களாதேஷ் விளக்கம்</h2><p>இது குறித்து பங்களாதேஷ் நாடாளுமன்றத்தின் தலைமை கொறடா நூருல் இஸ்லாம் மோனி செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/india">இந்தியாவுடன் </a>பல்வேறு காலகட்டங்களில் போடப்பட்ட ஒப்பந்தங்களை முழுமையாக ரத்து செய்யும் திட்டம் பங்களாதேஷ் அரசிற்கு இல்லை.</p><p>இந்த ஒப்பந்தங்களில் ஏதேனும் முரண்பாடுகள் அல்லது பங்காளதேஷின் தேசிய நலனுக்குப் புறம்பான அம்சங்கள் இருக்கிறதா என்பதை மட்டுமே அந்தந்த அமைச்சகங்கள் ஆய்வு செய்து வருகின்றன. </p><p>இதில் ஏதேனும் முரண்பாடுகள் கண்டறியப்பட்டால், அதுகுறித்து இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இருதரப்பிற்கும் சாதகமான முறையில் அவை சரிசெய்யப்படும் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.</p><h2>எந்தெந்தத் துறைகளின் ஒப்பந்தங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன?</h2><p>இந்தியா மற்றும் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D">பங்களாதேஷ் </a>இடையே நீண்டகாலமாகப் பல முக்கியத் துறைகளில் கூட்டுறவு நிலவி வருகிறது. </p><p>தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள முக்கியப் பகுதிகள், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்குப் பொருட்களைக் கொண்டு செல்வதற்காக பங்களாதேஷின் சிட்டகாங் மற்றும் மோங்லா துறைமுகங்களை இந்தியா பயன்படுத்தி வருகிறது.</p><p>இதன் தற்போதைய விதிமுறைகள் ஆய்வு செய்யப்படுகின்றன.</p><p>பங்களாதேஷ் தனது மின்சாரத் தேவைக்காக இந்தியாவின் மின்சார இறக்குமதியையும், எல்லை கடந்த எரிபொருள் விநியோகத்தையும் நம்பியுள்ளது.</p><p>பங்களாதேஷில் நிலவும் அந்நியச் செலாவணி பற்றாக்குறை காரணமாக, மின்சாரக் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் மற்றும் நிதியியல் மறுபேச்சுவார்த்தைகள் இதில் அடங்கும். </p><p>இந்தியா நிதியுதவி அளிக்கும் பல திட்டங்களின் சாத்தியக்கூறுகள் மற்றும் நிதிப் பயன்பாடு குறித்து பங்களாதேஷ் திட்டக்குழு மறுஆய்வு செய்து வருகிறது.</p><p>எல்லையில் கடத்தல், சட்டவிரோத ஊடுருவல் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளைத் தடுப்பதில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. </p><p>முந்தைய அரசின் காலத்தில் இந்திய எதிர்ப்பு கிளர்ச்சியாளர்கள் பங்களாதேஷ் மண்ணைப் பயன்படுத்தாமல் தடுக்க இரு நாடுகளும் ஒத்துழைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2>இந்தியாவின் எதிர்வினை என்ன?</h2><p>பங்களாதேஷ் அரசின் இந்த மறுஆய்வு நடவடிக்கை குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் டகத் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெள்ளிக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில்,</p><p>"இது தொடர்பான ஊடகச் செய்திகளை நாங்களும் கவனித்தோம். ஆனால், இதுகுறித்து பங்களாதேஷ் அரசிடமிருந்து இந்தியாவிற்கு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. </p><p>எவ்வாறாயினும், இந்தியாவின் தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசு நிச்சயம் எடுக்கும்," என்று அவர் தெரிவித்துள்ளார்.</p><p>இந்த மறுஆய்வின் முடிவுகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று பங்களாதேஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இரு அண்டை நாடுகளின் உறவில் ஒரு புதிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>கயாடு லோகரின் Recent Look...</title><link>https://www.maalaimalar.com/ampstories/web-stories/kayadu-logar-latest-photoshoot</link><comments>https://www.maalaimalar.com/ampstories/web-stories/kayadu-logar-latest-photoshoot#comments</comments><guid isPermaLink="false">35774553-2d86-45d7-bde4-bde89ad83513</guid><pubDate>Sat, 19 Sep 2026 06:22:15 +0000</pubDate><atom:updated>2026-09-19T06:22:15.416Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Kayadu Lohar,காயடு லோகர்,Actress Photoshoot,Kayadu Lohar Latest Picture</media:keywords><media:content height="1080" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/s1ccqgro/Untitled-design-2026-09-19T112815.313.png" width="1080"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kayadu Lokar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/s1ccqgro/Untitled-design-2026-09-19T112815.313.png?w=280" width="280"></media:thumbnail><category>வெப் ஸ்டோரீஸ் (Web stories)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/mscnzk1v/Untitled-design-2026-09-19T112903.580.png" /></figure><p>புனேயில் பிறந்து, மாடலிங் துறையில் தனது திறமையை நிரூபித்தவர் கயாடு லோகர்</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/77vzz1cg/Untitled-design-2026-09-19T113036.216.png" /></figure><p>'டைம்ஸ் பிரெஷ் ஃபேஸ்' அழகிப் போட்டியில் வென்று கவனம் ஈர்த்தவர்</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/dpo2re9s/Untitled-design-2026-09-19T113002.155.png" /></figure><p>'டிராகன்' திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார்.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/ee9vol23/Untitled-design-2026-09-19T112934.258.png" /></figure><p>சமீபத்தில் வெளியான 'இதயம் முரளி' மற்றும் 'இம்மார்டல்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/jz3o8tym/Untitled-design-2026-09-19T113111.236.png" /></figure><p>திரையுலகில் அடுத்தடுத்த படங்களுக்கு வலுவான என்ட்ரி கொடுக்க, தன்னை முற்றிலும் புதிய லுக்கிற்கு மாற்றியுள்ளார்.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/r9s7avmk/Untitled-design-2026-09-19T113145.535.png" /></figure><p>அழகு மற்றும் சிறந்த நடிப்பாலும் தென்னிந்திய திரையுலகின் அடுத்த கனவுக்கன்னியாக வலம் வருகிறார் கயாடு!</p>]]></content:encoded></item><item><title>ஆசிரியர் தகுதி தேர்வு டெட் வினாத்தாள்களை காலணிக்குள் மறைத்து கடத்திய ஊழியர்கள்</title><link>https://www.maalaimalar.com/news/national/teachers-qualification-exam-question-papers-smuggled-in-shoes-16-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/national/teachers-qualification-exam-question-papers-smuggled-in-shoes-16-arrested#comments</comments><guid isPermaLink="false">06ad9cb9-0a98-4f10-bd66-2dac1d5a7463</guid><pubDate>Sat, 19 Sep 2026 06:20:36 +0000</pubDate><atom:updated>2026-09-19T06:20:36.521Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆசிரியர் தகுதி தேர்வு,TET Exam,paper leak,Exam Question Paper,வினாத்தாள் கசிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/vzxavr7s/Untitled-design-16.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Maharashtra TET exam paper leak]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/vzxavr7s/Untitled-design-16.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிராவில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான வினாத்தாள்களை அச்சகத்தில் இருந்து காலணிகளில் கடத்தி, 8,000 ரூபாய்க்கு விற்பனை செய்த வழக்கில், மொத்தம் 18 பேர் மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.</p><h3><strong>மகாராஷ்டிரா டெட் தேர்வு</strong></h3><p>ஆக்ராவில் உள்ள மஹிம் பத்ரன் பிரைவேட் லிமிடெட் என்ற அச்சகத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தின் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">ஆசிரியர் தகுதி தேர்வுக்கான</a> வினாத்தாள்கள் அச்சிடப்பட்டு வந்தன. </p><p>அப்போது அந்த அச்சகத்தில் வேலை பார்த்துவந்த இரண்டு ஊழியர்கள் வினாத்தாள்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர்.</p><p>இதையடுத்து அவர்கள் அச்சகத்தில் பாதுகாப்பு சோதனைகள் அதிகமாக இருந்ததால், தங்கள் காலணிகளில் மறைத்து வைத்து வினாத்தாள்களை வெளியே கொண்டு வந்துள்ளனர்.</p><p>தேர்வின் நேர்மையை பாதுகாப்பதற்காக, தேர்வு நாளன்று தேர்வர்கள் தங்கள் வினாத்தாள்களை தேர்ந்தெடுக்கும் வகையில் நான்கு தனித்தனி தொகுப்புகளாக தயாரித்திருந்தனர்.</p><p>ஆனால் அச்சகத்தில் வேலை பார்த்த ஊழியர்கள் மற்றும் ஒரு முன்னாள் பணியாளரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மீறி, அந்த நான்கு வினாத்தாள் தொகுப்புகளையும் தங்கள் காலணிகளுக்குள் மடித்து வைத்து திருட்டுத்தனமாக வெளியே கொண்டு வந்துள்ளனர்.</p><p>இதையடுத்து ஊழியர்கள் அந்த வினாத்தாள்களை 8,000 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.</p><h3>3 பேர் கைது</h3><p>மகாராஷ்டிராவில் பிவண்டி பகுதியை சேர்ந்த ஒருவருக்கு, ஆசிரியர் தகுதி தேர்வு வினாத்தாள்களை விற்பனை செய்ய முயன்றபோது, மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.</p><p>முன்னாள் பயிற்சி வகுப்பு ஆசிரியரான குப்தா என்பவரை மாநிலங்களுக்கு இடையேயான மோசடியின் முக்கிய குற்றவாளியாக போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.</p><p>அவருக்கு ஒடிசாவில் முன்னதாக நடந்த மற்றொரு தேர்வுத்தாள் கசிவு வழக்கிலும் தொடர்பு இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><h3><strong>குற்றப்பத்திரிகை தாக்கல்</strong></h3><p>இதைத்தொடர்ந்து பிவண்டியில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், 18 பேர் குற்றவாளிகளாக போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.</p><p>இந்த வழக்கில் இதுவரையில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகளான அசோக் சாவ் மற்றும் பிரகாஷ் மிசாலை போலீசார் தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பது இயல்பான பழக்கமாகவே இருக்க வேண்டும் -  ஆளுநர் அர்லேகர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/international-coastal-cleanup-day-governor-arlekar-says-keeping-surroundings-clean-should-be-a-natural-habit</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/international-coastal-cleanup-day-governor-arlekar-says-keeping-surroundings-clean-should-be-a-natural-habit#comments</comments><guid isPermaLink="false">9aa707b3-6eaf-41fb-8004-5bcfae6bee7f</guid><pubDate>Sat, 19 Sep 2026 06:09:20 +0000</pubDate><atom:updated>2026-09-19T06:09:20.431Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>மெரினா கடற்கரை,Chennai Marina Beach,Governor Arlekar,ஆளுநர் அர்லேகர்,International Coastal Cleanup Day,சர்வதேச கடற்கரை தூய்மை தினம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/pwmnpzr0/governor.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Marina beach - Governor Arlekar ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/pwmnpzr0/governor.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஒரு தொடர்ச்சியான கூட்டு இயக்கமாக முன்னெடுக்க வேண்டும் என்று ஆளுநர் அர்லேகர் கூறினார்.</p><p>சர்வதேச கடற்கரை தூய்மை தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் சர்வதேச கடற்கரை தூய்மை தினமான இன்று சென்னை மெரினா கடற்கரையில் சிறப்பு தூய்மைப் பணி நிகழ்ச்சி நடைபெற்றது. </p> <p>இந்த நிகழ்ச்சியில், தமிழக பொறுப்பு <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D">ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்</a>, பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்று தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.</p><p>அப்போது <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/governor-arlekar-granted-assent-to-12-bills-passed-in-legislative-assembly">ஆளுநர் அர்லேகர்</a> செய்தியாளர்களிடம் கூறியதாவது:</p><p>* இன்று நாங்கள் அனைவரும் உலகப்புகழ் பெற்ற மெரினா கடற்கரையில் கூடியுள்ளோம். </p> <p>* <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%20%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88">மெரினா கடற்கரையை</a> சுத்தம் செய்யும் நிலை ஏற்பட்டிருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.</p><p>* இருப்பினும், உலகம், நாடு மற்றும் மாநிலம் முழுவதும்  ‘கடற்கரை தூய்மைப்படுத்தும் நாள்’ எனக் கடைப்பிடிக்கப்படும் இந்நாளில், நாம் மீண்டும் இங்கு கூடியுள்ளோம்.</p><p>* கடற்கரை, சுற்றுப்புறம், வீடுகளை தூய்மையாக வைத்திருப்பது நமது இயல்பான பழக்கமாகவே இருந்திருக்க வேண்டும்.</p>  <p>* தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஒரு தொடர்ச்சியான கூட்டு இயக்கமாக முன்னெடுக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>குப்பை எரிஉலை அமைக்கும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-plan-to-set-up-a-garbage-incinerator-must-be-abandoned-immediately</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-plan-to-set-up-a-garbage-incinerator-must-be-abandoned-immediately#comments</comments><guid isPermaLink="false">195c22fc-676c-4bfc-a7cc-a1cdd253e7f2</guid><pubDate>Sat, 19 Sep 2026 06:00:15 +0000</pubDate><atom:updated>2026-09-19T06:00:15.377Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/rj73cjv5/Anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/rj73cjv5/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சேலம் ஜாகிர் அம்மாபாளையத்தில் 92 ஏக்கரில் குப்பை எரிஉலை அமைத்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தமிழக அரசு அறிவித்ததை அன்புமணி ராமதாஸ் கடுமையாக எதிர்க்கிறார். உலகளவில் தோல்வியடைந்த இந்த எரிஉலைகள் டையாக்சின், சல்பர் டையாக்சைடு, பாதரசம் போன்ற நச்சு வாயுக்கள் மூலம் புற்றுநோய், இதய நோய், ஆஸ்துமா உள்ளிட்ட பல நோய்களை ஏற்படுத்தும் பேரழிவு திட்டம் என எச்சரிக்கிறார்.</strong></em></p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>பேரழிவு</strong></h2><p>சேலம் மாநகரம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் 92 ஏக்கர் பரப்பளவில் குப்பை எரிஉலை அமைத்து குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.  ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் சாயப்பட்டறைகளுடன் கூடிய ஜவுளிப்பூங்கா, குப்பை எரியுலை உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்தி சேலம் மாநகர மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்தத் துடிப்பது கண்டிக்கத்தக்கது.</p><p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி அவை விதி எண் 110-இன் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் விஜய் அவர்கள், சேலம் மாநகராட்சியில் ரூ.291 கோடியில் 10 மெகாவாட் திறனுக்கும், நெல்லையில் ரூ.256 கோடியில் 9 மெகாவாட் அளவுக்கும் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக சேலம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் வெள்ளக்கல்பட்டியில் கொங்கு எஸ்.ஆர்.வி பள்ளிக்கு எதிரில் உள்ள அரசுக்கு சொந்தமான 92.49 ஏக்கர் பரப்பளவில் திடக்கழிவு குப்பைகளை எரித்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை அமைக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இது சேலம் மாநகரத்திற்கு பேரழிவை ஏற்படுத்திவிடும்.</p><h2><strong>ஆபத்தானவை</strong> </h2><p>குப்பை எரிஉலைகள் உலகெங்கும் தோல்வியடைந்த திட்டம் ஆகும். உலகின் வளர்ந்த நாடுகள் பலவும் இந்தத் திட்டத்திற்கு தடை விதித்துள்ளன. குப்பை எரிஉலையில் பிளாஸ்டிக் உள்ளிட்ட அனைத்து குப்பைகளும் ஒன்றாக எரிக்கப்படும் என்பதால், அதிலிருந்து டையாக்சின், சல்பர் டையாக்சைடு, கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் டையாக்சைடு, பாதரசம், கரியமில வாயு, டையாக்சைடு, ஃபியூரன் உள்ளிட்டவை வெளியாகும். காற்றில் மிதக்கும் PM 2.5, PM 10  நச்சுத் துகள்கள், ஆவியாகும் கரிமச் சேர்மங்கள்  ஆகியவை வெளியாகும். இவற்றில் பல ரசாயனங்கள் சுற்றுச்சூழலுடன் கலந்து அழியாமல் நிலைத்திருக்கக் கூடிய மிகக் கொடிய நச்சுத்தன்மை கொண்டவை; இவை மனித உடலுக்குள் சென்ற பின்னரும் கூட அழியாமல் பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானவை.</p><p>மின்சார உற்பத்தி தொழில் நுட்பங்களில் மிகவும் மாசுபடுத்தக்கூடியது குப்பை எரிஉலைதான். நிலக்கரி அனல்மின் நிலையத்தை விட 28 மடங்கு  டையாக்சின், 3 மடங்கு  நைட்ரஜன் ஆக்சைடு, 14 மடங்கு அதிக பாதரசம், 6 மடங்கு  சல்பர் டையாக்சைடு, இரண்டரை மடங்கு கரியமிலவாயு ஆகிய மாசுக்கள் குப்பை எரிஉலையில் இருந்து வெளியாகின்றன. இந்த நச்சு ரசாயனங்களால் புற்றுநோய், இருதய நோய்கள், மூச்சுக்குழல் நோய்கள், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பதிப்புகள் ஏற்படும். தோல்நோய், ஈரல் பாதிப்பு, ஆஸ்துமா என பல கேடுகளுக்கு குப்பை எரிப்பு வழிவகுக்கும். குழந்தைகளும் வயதானவர்களும் அதிகம் பாதிக்கப்படுவார்கள். காற்று மாசு மட்டுமல்லாமல், எரிஉலை சாம்பலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. போபால் நகரில் விஷவாயுக் கசிவால் ஒரே நாளில் ஏற்பட்ட பாதிப்புகள் குப்பை எரிஉலைகளால் படிப்படியாக ஏற்படும் ஆபத்து உள்ளது.</p><p>இந்த உண்மைகள் அனைத்தும் தெரிந்திருந்து தான் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வடசென்னை கொடுங்கையூர், தென்சென்னை பெருங்குடி, செங்கல்பட்டு மாவட்டம் கீரப்பாக்கம், கோவை வெள்ளலூர் ஆகிய இடங்களில் ஆபத்தான குப்பை எரிஉலை திட்டத்தை அறிவித்து அதற்கான பணிகளை கடந்த ஆட்சியாளர்கள் மேற்கொண்டனர். இந்த நிலையில், புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசு, அதன் பங்குக்கு சேலம் ஜாகிர் அம்மாபாளையம், திருநெல்வேலி ஆகிய இடங்களிலும் குப்பை எரிஉலை அமைக்கத் துடித்து வருகிறது.</p><p>சேலம் ஜாகிர் அம்மாபாளையம் குப்பை எரிஉலைத் திட்டம் கூட கடந்த ஆட்சியில் கருவாக்கப்பட்ட திட்டம் தான். இதற்கான திட்டம் வகுக்கப்பட்டது முதல் இடம் அடையாளம் காணப்பட்டு, இறுதி செய்யப்பட்டது வரை அனைத்தும் திமுக ஆட்சியில் தான் இறுதி செய்யப்பட்டது. திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை ரத்து செய்த தவெக அரசு, இந்த பேரழிவுத் திட்டத்தை மட்டும் செயல்படுத்தத் துடிப்பது ஏன்?</p><h2><strong>பா.ம.க.வின் வினா</strong></h2><p>சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இருந்தும், கரூர் மாவட்டத்தில் கரூர் மாநகராட்சியில் இருந்தும் திடக்கழிவு குப்பைகள் சாலைவழியாக் கொண்டு வரப்பட்டு சேலம் குப்பை எரிஉலையில் எரிக்கப்படும். இவற்றில் 60% வரை ஈரக்கழிவுகள் இருப்பதால், அவை கொண்டு வரப்படும் பாதை நெடுகிலும் துர்நாற்றம், சுற்றுச்சூழல் சீர்கேடு, நோய்ப்பரவல் உள்ளிட்ட கேடுகளை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி, இந்த ஆலைக்காக தினமும் ஒன்றரை லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும். இதில் ஒரு பகுதி கழிவுநீரை சுத்திகரிப்பதன் மூலம் பெறப்படும் என்றாலும், பெரும்பகுதி நீர்  நிலத்திலிருந்து தான் எடுக்கப்படும் என்பதால் நிலத்தடி நீர்மட்டத்தின் மீது மிகப்பெரும் அழுத்தம் ஏற்படும்.</p><p>சேலம் ஜாகிர்பாளையத்தில் ஏற்கனவே 119 ஏக்கர் பரப்பளவில் ஜவுளி பூங்கா அமைக்கும் திட்டம் அறிவிக்கப் ட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ரூ.800 கோடியில் அமைக்கப்படும் இந்த ஜவுளி பூங்காவில்  60-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் அமைக்கப்படவுள்ளன. அதற்காக ஒருபுறம் நிலத்தடி நீர் பெருமளவில்  உறிஞ்சப்படுவது மட்டுமின்றி, சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் வேதிப்பொருள்களும், நச்சுப் பொருள்களும் கலந்த கழிவுநீர் நிலம், நீர், வாயு ஆகிய மூன்றையும் நஞ்சாக்கி விடும். அதே பகுதியில் தான் இப்போது குப்பை எரிஉலை அமைக்கப்படவுள்ளது என்பதால், அதையொட்டி 30 கி.மீ சுற்றளவில் வாழும் மக்களுக்கு அவர்கள் சுவாசிக்கும் காற்று, குடிநீர் ஆகியவையே புற்றுநோய், இதயநோய் என பட்டியலிட முடியாத எண்ணிக்கையில் நோய்களை ஏற்படுத்தி விடும். இவ்வளவு பேரழிவுகளையும் ரூ.291 கோடி மக்களின் வரிப்பணத்தைக் கொட்டிக் கொடுத்து வாங்க வேண்டுமா? என்பது தான் பா.ம.க.வின் வினா.</p><p>இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லரின் நாஸி படைகளால் பிடிக்கப்பட்ட  யூதர்கள் ஜெர்மனியில் அமைக்கப்பட்டிருந்த கொலை முகாம்களில் அடைக்கப்பட்டு, நச்சுவாயு செலுத்தப்பட்டு கொல்லப்பட்டனர். சேலம் ஜாகிர் அம்மாபாளையம் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்படும் குப்பை எரிஉலைகளும் அவற்றுக்கு சற்றும் குறைந்தவை அல்ல. எனவே, சேலம் உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் குப்பை எரிஉலைகளை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். மாறாக, உச்சநீதிமன்றம் ஆணையிடவாறு, வீடுகள் மற்றும் நிறுவனங்களில் இருந்து  கழிவுகளை ஈரமான குப்பை, உலர்ந்த குப்பை, சுகாதாரக் கழிவுகள், சிறப்புக் கவனம் தேவைப்படும் கழிவுகள் என 4 வகைகளாகப் பிரித்து  சேகரிக்கும் சேகரிக்கப்படும் கழிவுகளை மத்திய அரசின் 2026 ஆம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மை விதிகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். </p>]]></content:encoded></item><item><title>திருப்பதி கலப்பட நெய் மோசடி: சுகிருதி ஃபுட்ஸ் உரிமையாளரை கைது செய்த அமலாக்கத்துறை</title><link>https://www.maalaimalar.com/news/national/rs-96-crore-adulterated-ghee-scam-in-tirupati-ed-arrests-sukruthi-foods-owner</link><comments>https://www.maalaimalar.com/news/national/rs-96-crore-adulterated-ghee-scam-in-tirupati-ed-arrests-sukruthi-foods-owner#comments</comments><guid isPermaLink="false">ae3b3d6d-0243-46d9-9d2f-d47f6fa88e0d</guid><pubDate>Sat, 19 Sep 2026 05:49:57 +0000</pubDate><atom:updated>2026-09-19T05:49:57.238Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Enforcement Directorate,திருப்பதி,Tirupati,அமலாக்கத்துறை,Tirumala Devasthanam,திருமலை தேவஸ்தானம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/8m78rr9t/Untitled-design-14.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tirupati adulterated ghee scam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/8m78rr9t/Untitled-design-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் கலப்படும் செய்ததாக கூறப்படும் பணமோசடி வழக்கில், சுகிருதி ஃபுட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கைலாஷ் சந்த் மங்களா என்பவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF">திருப்பதி</a> லட்டு தயாரிக்கும் நெய்யில் கலப்படம் செய்துள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், </p><h3><strong>கலப்பட நெய்</strong></h3><p>திருப்பதி லட்டு பிரசாதத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் கலப்படம் செய்யப்பட்ட நெய்யானது, சுத்திகரிக்கப்பட்ட பாமாயில், பாம் கெர்னல் ஆயில், பாமோலின் மற்றும் எம்ஜி-90, மோனோகிளிசரைடுகள், மைவாசெட் சாஃப்ட் 400, அசிட்டிக் அமில எஸ்டர் உள்ளிட்ட ரசாயணங்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. </p><p>பின்னர் இவை, அக்மார்க் ஸ்பெஷல் கிரேடு பசு நெய் என்ற பெயரில் திமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.</p><h3><strong>96 கோடி மோசடி</strong></h3><p>2019 முதல் 2024-ஆம் ஆண்டு வரை திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு மோசடியாக வழங்கப்பட்ட நெய்யின் மதிப்பு ரூபாய் 230 கோடியாக உள்ளது. அதில் 96 கோடி ரூபாய் மதிப்புள்ள கலப்பட நெய், மங்களாவால் தயாரிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த வழக்கில் மங்களா என்பவர், கலப்பட பொருட்களை பெற உதவியதோடு தனது தொழிற்சாலை வளாகத்தில் கலப்பட நெய்யையும் தயாரித்துள்ளார்.</p><p>ஸ்ரீ வைஷ்ணவி டெய்ரி ஸ்பெஷாலிட்டிஸ், மல்கங்கா மில்க் &amp; அக்ரோ ப்ராடக்ட்ஸ் மற்றும் ஏஆர் டெய்ரி ஃபுட்ஸ் உள்ளிட்ட பல்வேறு போலி நிறுவனங்கள் மூலம் கலப்படம் செய்யப்பட்ட நெய் விநியோகத்தையும் மங்களா ஒருங்கிணைத்துள்ளார்.</p><p>மேலும், கலப்படங்களின் உண்மையான பயன்பாட்டை மறைத்து, அசல் பசு நெய்யின் முறையான உற்பத்தி மற்றும் விநியோகம் போன்ற தோற்றத்தை உருவாக்கும் நோக்கத்துடன், நெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் விற்பனை மற்றும் கொள்முதல் தொடர்பான போலிப் பதிவுகளை மங்களா உருவாக்கியுள்ளார் என்றும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.</p><h3><strong>சுகிருதி ஃபுட்ஸ் நிறுவன உரிமையாளர் கைது</strong></h3><p>இதையடுத்து இந்த குற்றச்சாட்டுகளின் பேரில், செப்டம்பர் 17 அன்று ஐதராபாத்தில் உள்ள அலுவலகத்தில் மங்களா காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.</p><p>பின்னர் அவர் விசாகப்பட்டினத்தில் உள்ள பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை கூறியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&apos;கோவிந்தா... கோவிந்தா...&apos; கோஷத்துடன் முழங்கிய புரட்டாசி முதல் சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் திரண்ட பக்தர்கள் கூட்டம்!</title><link>https://www.maalaimalar.com/spirituality/purattasi-sanikizhamai-devotees-worship-in-perumal-temple</link><comments>https://www.maalaimalar.com/spirituality/purattasi-sanikizhamai-devotees-worship-in-perumal-temple#comments</comments><guid isPermaLink="false">1b7b689e-672a-48b4-8c4e-fa0a307fc5dc</guid><pubDate>Sat, 19 Sep 2026 05:42:34 +0000</pubDate><atom:updated>2026-09-19T05:42:34.854Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>பெருமாள் வழிபாடு,சனிக்கிழமை பெருமாள் வழிபாடு,perumal worship,புரட்டாசி,purattasi,Purattasi Sanikizhamai</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/u5dse3fa/perumal.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள் கூட்டம்]]></media:title><media:description type="html"><![CDATA[ பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள் கூட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/u5dse3fa/perumal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதம் நேற்று பிறந்து. இன்று புரட்டாசி மாதம்  2-ம் நாள் மற்றும் முதல் சனிக்கிழமை என்பதால்  பெருமாள் கோவில்களில் விசேஷ பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/புரட்டாசி">புரட்டாசி</a> மாத முதல் சனிக்கிழமையையொட்டி பிரசித்தி பெற்ற கோவில்களில் சிறப்பு  அபிஷே, ஆராதனைகள் நடைபெற்றது. </p><p>சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், தி.நகர் வெங்கடநாராயணா சாலையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீ வெங்கடேசுவர சுவாமி கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். </p><h2><strong>வரதராஜ பெருமாள் கோவில்</strong></h2><p>108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், அத்திவரதர் கோவில் என புகழ் பெற்றதுமான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையொட்டி ஏராளமான பக்தர்கள் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்தனர்.</p><p>இதைத்தொடர்ந்து உலகளந்த பெருமாள், யதோத்தக்காரி பெருமாள், அஷ்டபுஜ பெருமாள், அழகிய சிங்கப்பெருமாள், பச்சை வண்ணப் பெருமாள், பவளவண்ண பெருமாள், நிலா துண்ட பெருமாள், ஆதிகேச பெருமாள், திரிநீரகத்தான் பெருமாள், காஞ்சிபுரம் அருகே உள்ள பாலுசெட்டி சத்திரத்தில் உள்ள வீரராகவப் பெருமாள், திருமுக்கூடலில் உள்ள  பிரசன்ன வெங்கடேச பெருமாள்,  பழைய சிவரத்தில் உள்ள நரசிம்ம பெருமாள், உத்திரமேரிலுள்ள ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத சுந்தர வரதராஜ பெருமாள், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆதிகேசவ பெருமாள் உள்ளிட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 108 திவ்ய தேசங்களில் முதல் புரட்டாசி சனிக்கிழமைஓட்டி பெருமாள் கோவில்களில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷே, ஆராதனைகள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.</p><p>அந்தியூர் திருப்பதி  பேட்டை பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று சந்தன காப்பு அலங்காரத்தில் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். </p><p>இதை ஒட்டி ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசனம் செய்தனர். கோவிந்தா... கோவிந்தா என்று கோஷமிட்டு தரிசித்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானங்கள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை அந்தந்த கோவில் செயல் அலுவலர்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/possibility-of-low-pressure-area-forming-over-andaman-sea</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/possibility-of-low-pressure-area-forming-over-andaman-sea#comments</comments><guid isPermaLink="false">5b65645f-4a39-40c7-919b-596f4fcfbeef</guid><pubDate>Sat, 19 Sep 2026 05:21:03 +0000</pubDate><atom:updated>2026-09-19T05:21:03.204Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>IMD,இந்திய வானிலை ஆய்வு மையம்,Low pressure,குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி,அந்தமான்,Andaman sea</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/g9pg6jk5/andaman.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ imd satellite image]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/g9pg6jk5/andaman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று மாலை ஒரு குறைந்த காற்றழுந்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p>இந்திய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/districts-in-tamil-nadu-likely-to-experience-rain-accompanied-by-thunder-and-lightning">வானிலை ஆய்வு மையம் </a>வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:</p><p>* வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. </p><p>* வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று மாலை ஒரு குறைந்த காற்றழுந்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.</p>  <p>* குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகரக்கூடும்.</p><p>* தெற்கு ஒடிசா - வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி அடுத்த 3 தினங்களுக்கு நகரக்கூடும்.</p><p>* கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>தேர்வில் ChatGPT பயன்படுத்திய IIT மாணவர் தற்கொலை - சக மாணவர்கள் போராட்டம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/iit-student-dies-by-suicide-after-using-chatgpt-in-exam</link><comments>https://www.maalaimalar.com/news/national/iit-student-dies-by-suicide-after-using-chatgpt-in-exam#comments</comments><guid isPermaLink="false">add3af77-e73b-4e93-a0a8-49f44fe21b7e</guid><pubDate>Sat, 19 Sep 2026 05:02:00 +0000</pubDate><atom:updated>2026-09-19T05:02:00.982Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>students protest,student suicide,மாணவர் தற்கொலை,IIT Bombay,பாம்பே,BTech Student</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/lnftci1f/IIT-Student-Suicide" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ IIT Student Suicide ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/lnftci1f/IIT-Student-Suicide?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88">மும்பையில் </a>உள்ள புகழ்பெற்ற இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் இரண்டாமாண்டு படித்து வந்த மாணவர் ஒருவர், தேர்வின் போது மொபைல் போனில் ChatGPT செயலியைப் பயன்படுத்தியதாகப் பிடிபட்டதைத் தொடர்ந்து, தனது விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். </p><p>இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஐஐடி பவாய் வளாகத்தில் நேற்று இரவு முழுவதும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் திரண்டு விடிய விடிய தீவிர போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p><h2><strong>தேர்வில் முறைகேடு புகார் - என்ன நடந்தது?</strong></h2><p>ஐஐடி பாம்பேயில் உள்ள ஒரு கல்லூரியில் இரண்டாமாண்டு பி.டெக் படித்து வந்த மாணவர் சாஹில் வாகோடே என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p>வெள்ளிக்கிழமை நடைபெற்ற பருவத் தேர்வின் போது , சாஹில் தனது மொபைல் போனைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அவர் தேர்வுத்தாளினைக் புகைப்படம் எடுத்து <a href="https://www.maalaimalar.com/topic/chatgpt">ChatGPT </a>தளத்தில் பதிவேற்றி, அதற்கான விடைகளைத் தேடியதாகக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேர்வு அறைக் கண்காணிப்பாளர் அவரிடமிருந்த மொபைல் போனைப் பறிமுதல் செய்துள்ளார்.</p><h2><strong>கல்லூரி நிர்வாகத்தின் விளக்கம்</strong></h2><p>இந்த விவகாரம் தொடர்பாக <a href="https://www.maalaimalar.com/topic/iit">ஐஐடி </a>பாம்பே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,</p><p>மாணவர் மீது உடனடி ஒழுங்குமுறை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.</p><p>தேர்வு முடிந்ததும், சம்பந்தப்பட்ட பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் ஆகியோர் மாணவரை அழைத்து ஆலோசனை வழங்கியுள்ளனர்.</p><p>இந்தச் சம்பவத்தால் அவருடைய கல்வி மற்றும் எதிர்கால வாழ்க்கை எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்று கூறி அவரைத் தேற்றி அனுப்பியுள்ளனர்.</p><p>அதன் பின்னர் தனது விடுதி அறைக்குத் திரும்பிய மாணவர், மாலை நேரத்தில் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார் என்பதும் தெரிய வந்துள்ளது.</p><h2><strong><a href="https://www.maalaimalar.com/topic/student-protest">கொந்தளித்த மாணவர்கள் - வளாகத்தில் போராட்டம்</a></strong></h2><p>மாணவர் சாஹிலின் மரணச் செய்தி வெளியானதும், ஐஐடி வளாகத்தில் இருந்த மாணவர்கள் நள்ளிரவில் திரண்டு நிர்வாகத்திற்கு எதிராகப் போராட்டத்தில் குதித்தனர்.</p><h2><strong>மாணவர்களின் குற்றச்சாட்டு</strong></h2><p>கல்லூரி நிர்வாகம் உண்மையை மறைப்பதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். </p><p>சாஹிலுக்கு ஒரு வருடக் கல்வி இடைநீக்கம் வழங்கப்படும் என்றும், அவர் விடுதியை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அதிகாரிகள் மிரட்டியதாகப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.</p><p>இத்தகைய நடவடிக்கையால் நான்கு ஆண்டு பொறியியல் படிப்பு ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் நீட்டிக்கப்படும் என்ற பயமும், கடுமையான மன அழுத்தமுமே மாணவரை இந்த எல்லைக்குத் தள்ளியிருக்கலாம் என்று சக மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.</p><h2><strong>தேர்வுகள் ஒத்திவைப்பு:</strong></h2><p>மாணவர்களின் தொடர் போராட்டத்தை அடுத்து, ஐஐடி பாம்பே இயக்குனர் பேராசிரியர் சிரீஷ் கேதாரே மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். </p><p>நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, தற்போது நடந்து வரும் அனைத்து பருவத் தேர்வுகளும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.</p><h2><strong>6 மாதங்களில் 3-வது தற்கொலை</strong></h2><p>ஐஐடி பாம்பே வளாகத்தில் கடந்த 6 மாதங்களில் நடக்கும் 3-வது தற்கொலைச் சம்பவம் இதுவாகும் (இந்த ஆண்டில் 4-வது சம்பவம்). கடந்த பிப்ரவரி மற்றும் ஜூலை மாதங்களிலும் இரண்டு மாணவர்கள் இதேபோல் தற்கொலை செய்து கொண்டனர். </p><p>தொடர்ந்து மாணவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் ஐஐடி நிறுவனங்களில் நிலவும் கல்வி அழுத்தங்கள் மற்றும் மாணவர்களின் மனநலம் குறித்த பல்வேறு விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது.</p><p>இச்சம்பவம் குறித்து பவாய் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY: ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை! - எவ்வளவு தெரியுமா? </title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-19-9-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-19-9-2026#comments</comments><guid isPermaLink="false">426b7661-33c2-4fac-8cd7-156d2e2f6034</guid><pubDate>Sat, 19 Sep 2026 04:22:36 +0000</pubDate><atom:updated>2026-09-19T04:22:36.632Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-24/u4idje3h/gold.png" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-24/u4idje3h/gold.png?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.130 உயர்ந்து ரூ.14,285-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p>தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. </p><p>சென்னையில் கடந்த 12-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.1,13,360-க்கும், கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.14,170-க்கும் விற்பனையானது. 13-ந்தேதி சவரன் ரூ.1,13,360-க்கும், ஒரு கிராம் ரூ.14,170-க்கும் விற்பனையானது. 14-ந்தேதி சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.1,13,000-க்கும், கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.14,125-க்கும் விற்பனையானது. 15-ந்தேதி சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.1,12,320-க்கும், கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.14,040-க்கும் விற்பனையானது.</p> <p>16-ந்தேதி சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.1,12,520-க்கும், கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.14,065-க்கும் விற்பனையானது. 17-ந்தேதி சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.1,12,080-க்கும், கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.14,010-க்கும் விற்பனையானது. செய்யப்படுகிறது. நேற்று சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்து ரூ.1,13,240-க்கும் கிராமுக்கு ரூ.145 உயர்ந்து ரூ.14,155-க்கும் விற்பனையானது.</p> <h2>தங்கம் விலை அதிரடி உயர்வு</h2><p>இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து ரூ.1,14,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.130 உயர்ந்து ரூ.14,285-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p> <h2>உயர்ந்து வரும் வெள்ளி விலை</h2><p>வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><h2>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்</h2><p>18-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,240</p><p>17-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.112,080</p><p>16-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.112,520</p><p>15-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.112,320</p><p>14-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,000</p> <h2>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்</h2><p>18-09-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>17-09-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>16-09-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>15-09-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>14-09-2026- ஒரு கிராம் ரூ.250</p> ]]></content:encoded></item><item><title>AI- யின் தவறான அறிக்கை: ஈரான் போரின் போது அமெரிக்கா - சீனா இடையே நூலிழையில் தவிர்க்கப்பட்ட போர் ஆபத்து!</title><link>https://www.maalaimalar.com/news/world/misreported-ai-intel-averted-us-china-war-risk</link><comments>https://www.maalaimalar.com/news/world/misreported-ai-intel-averted-us-china-war-risk#comments</comments><guid isPermaLink="false">1c2ba9c1-8511-482a-b732-091af9605f66</guid><pubDate>Sat, 19 Sep 2026 04:15:08 +0000</pubDate><atom:updated>2026-09-19T04:15:08.703Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா சீனா மோதல்,செயற்கை நுண்ணறிவு,AI Report,AI Chatbot,Military Tech</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/xatn6u1j/Military-Tech" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Military Tech]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/xatn6u1j/Military-Tech?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராணுவ நடவடிக்கைகளில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81">செயற்கை நுண்ணறிவு </a>தொழில்நுட்பத்தை முழுமையாக நம்புவது எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர்த்தும் அதிர்ச்சியூட்டும் உண்மை ஒன்று அண்மையில் வெளிவந்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE">அமெரிக்கா </a>- இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே பதற்றம் நிலவிய காலகட்டத்தில், AI வழங்கிய தவறான தகவலால் சீனக் கப்பல் ஒன்றை அமெரிக்க ராணுவம் தாக்க முற்பட்டதும், இறுதி நேரத்தில் அது தடுக்கப்பட்டதும் தற்போது தெரியவந்துள்ளது.</p><h2><strong>தவறான AI அறிக்கையும், போர்த் தயாரிப்பும்</strong></h2><p>மத்திய கிழக்கு பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த சீனக் கப்பல் ஒன்றில் அணு ஆயுதத் தயாரிப்பிற்குப் பயன்படும் பொருட்கள் கடத்தப்படுவதாக அமெரிக்க ராணுவத்திற்கு ஒரு புலனாய்வு அறிக்கை கிடைத்தது. </p><p>இந்தத் தகவல் கிடைத்தவுடன் அமெரிக்க ராணுவம் மிக வேகமாகச் செயல்பட்டது.</p><p>சீனக் கப்பலை வழிமறித்துக் கைப்பற்ற திட்டங்கள் தீட்டப்பட்டன. ஆயுதம் ஏந்திய அமெரிக்க வீரர்கள் கப்பலுக்குள் நுழையத் தயாராகினர்.</p><p>ராணுவ விமானங்களும் உடனடியாக விண்ணில் பறக்க விடப்பட்டன. </p><p>ஆனால், தாக்குதல் நடப்பதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு, அந்தப் புலனாய்வு அறிக்கையை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்தபோதுதான், அது ஒரு <strong>AI Chatbot</strong> மூலம் உருவாக்கப்பட்ட "முற்றிலும் தவறான அறிக்கை" என்பது கண்டுபிடிக்கப்பட்டது.</p><h2><strong>Chatbot செய்த குளறுபடி என்ன?</strong></h2><p>ஹவாயைத் தளமாகக் கொண்ட அமெரிக்காவின் சிறப்புப் படைப்பிரிவைச் சேர்ந்த இளம் புலனாய்வு ஆய்வாளர் ஒருவர், சம்பந்தப்பட்ட <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE">சீனக்</a> கப்பலின் சரக்கு விவரங்கள் குறித்து ஒரு AI சாட்பாட்டிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>அந்த AI சாட்பாட், இணையத்தில் இருந்த பொதுவான தகவல்களையும், அரசாங்கத்தின் ரகசியத் தகவல்களையும் ஒன்றிணைத்து ஆய்வு செய்து, கப்பலில் இருந்த பொருட்களை தவறாகப் புரிந்துகொண்டு, அவை அணு ஆயுதப் பொருட்கள் என அறிக்கை அளித்துள்ளது. அந்த ஆய்வாளர், AI கொடுத்த தகவல்களை அப்படியே ஒரு முறையான ராணுவப் புலனாய்வு அறிக்கையாக மாற்றி உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார். </p><p>இந்த தவறான புரிதலால், இரு அணு ஆயுத நாடுகளுக்கு இடையே உலகப் போரே மூளும் அபாயம் ஏற்பட்டது.</p><h2><strong>ராணுவத்தில் AI பயன்பாடும் கட்டுப்பாடற்ற நிலையும்</strong></h2><p>தற்போது அமெரிக்க ராணுவம் மற்றும் உளவுத்துறை, இலக்குகளைத் துல்லியமாகக் கண்டறியவும், திட்டமிடல்களுக்கும், விநியோகச் சங்கிலி மேலாண்மைக்கும் AI தொழில்நுட்பத்தை மிக வேகமாகப் பரவலாக்கி வருகிறது.</p><p>இருப்பினும், இந்தச் சம்பவம் பல முக்கியக் கேள்விகளை எழுப்பியுள்ளது.</p><p>அமெரிக்க ராணுவத்தின் வெவ்வேறு பிரிவுகள் வெவ்வேறு AI அமைப்புகளைப் பயன்படுத்துகின்றன.</p><p>இதனால், AI தரும் தகவல்களைச் சரிபார்க்க முறையான பொதுவான விதிகள் எதுவும் இல்லை."AI தொழில்நுட்பம் உங்களை ஒரு மோசமான முடிவுக்கு மிக வேகமாக அழைத்துச் செல்லும்" என பாதுகாப்பு அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார். </p><p>AI கருவிகளைப் பயன்படுத்தும் இளம் ஆய்வாளர்கள், அதன் முடிவுகளைச் சரிபார்க்காமல் அப்படியே நம்பும் போக்கு அதிகரித்து வருகிறது.</p><h2><strong>AI ஆபத்து</strong></h2><p>சீனக் கப்பல் மீதான தாக்குதல் நடத்தப்பட்டிருந்தால், அது வாஷிங்டன் மற்றும் பெய்ஜிங் இடையே கட்டுப்படுத்த முடியாத பெரும் போராக வெடித்திருக்கும். </p><p>தொழில்நுட்ப வளர்ச்சி அவசியம்தான் என்றாலும், மனிதர்களின் இறுதி முடிவு மற்றும் சரிபார்ப்பு இல்லாமல் ராணுவ இலக்குகளை AI-இடம் ஒப்படைப்பது உலகிற்கே ஆபத்தானது என்பதை இந்தச் சம்பவம் நிரூபித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தேசிய கொடியை ஏந்தி செல்ல தாமதம் - கபடி வீரர் பவன் செஹ்ராவத்தை நியமித்த இந்திய ஒலிம்பிக் சங்கம்</title><link>https://www.maalaimalar.com/sports/pawan-sehrawat-replaces-shot-putter-as-indias-flag-bearer</link><comments>https://www.maalaimalar.com/sports/pawan-sehrawat-replaces-shot-putter-as-indias-flag-bearer#comments</comments><guid isPermaLink="false">910412f3-b93a-46f7-b3bf-b94253ce4cff</guid><pubDate>Sat, 19 Sep 2026 04:14:09 +0000</pubDate><atom:updated>2026-09-19T04:14:09.396Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கபடி,Kabaddi,Indian olympic association,இந்திய ஒலிம்பிக் சங்கம்,ஆசிய விளையாட்டு போட்டிகள்,Asian Games 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/skg1gw5h/Untitled-design-13.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tajinderpal Singh Toor -Pawan Sehrawat]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/skg1gw5h/Untitled-design-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜப்பானில் ஆசிய விளையாட்டு போட்டிக்கான தொடக்க விழாவில், இந்திய தேசிய கொடியை ஏந்தி செல்ல குண்டு எறிதல் வீரரான தஜிந்தர்பால் சிங் தூர் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், கடைசி நிமிட தாமதத்தால் அவருக்கு பதிலாக இந்திய குழுவை வழிநடத்த கபடி வீரரான பவர் செஹ்ராவத் நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>ஜப்பான் நாட்டில் உள்ள ஐச்சி நகோயாவில் 20-தாவது <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF">ஆசிய விளையாட்டு போட்டிகள்</a> இன்று (19.09.2026) தொடங்கி அக்டோபர் 4ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. </p><p>இந்த போட்டியில் கலந்துகொள்ளும் இந்திய தடகள் அணி வீரர்கள், ஜப்பான் நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு தங்களின் உடலை பழக்கப்படுத்தும் வகையில், செப்டம்பர் 13 முதல் டோக்கியோவில் உள்ள சுகுபா பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர்.</p><h3>விளையாட்டு உபகரணங்கள் தாமதம்</h3><p>இந்த நிலையில் 2026 ஆசிய போட்டிகளுக்கான இந்தியா கொடியேற்றும் விழா இன்று நடைபெற உள்ளது. இந்திய அணியை வழிநடத்த குண்டு எறிதல் வீரரான தஜிந்தர்பால் சிங் தூர் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.</p><p>இதையடுத்து சிங்கின் விளையாட்டு உபகரணங்கள் இன்று பிற்பகல் 3 மணிக்கு நகோயா விமான நிலையத்திற்கு வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதன் காரணமாக, தனது உபகரணங்களை வாங்கிக் கொண்டு, தொடக்க விழா நடைபெறும் இடத்திற்கு செல்ல குறைந்த நேரமே இருப்பதால், அவரால் அந்த விழாவில் கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.</p><h3><strong>கபடி வீரர் பவன் செஹ்ராவத்</strong></h3><p>இதையடுத்து இந்திய ஒலிம்பிக் சங்கம், குண்டு எறிதல் வீரருக்கு பதிலாக 30 வயதான கபடி வீரரான பவன் செஹ்ராவத், துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான மானு பாகர் உடன் இணைந்து இந்திய அணியின் சார்பில் தேசிய கொடியை ஏந்தி செல்வார்கள் என அறிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விநாயகர் சிலையோடு 7 பவுன் நகையை தவறவிட்ட மூதாட்டி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/elderly-woman-loses-gold-jewelry-along-with-vinayagar-idol</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/elderly-woman-loses-gold-jewelry-along-with-vinayagar-idol#comments</comments><guid isPermaLink="false">9ecb0fc9-cca4-4de1-83e1-1b505eb8daf2</guid><pubDate>Sat, 19 Sep 2026 03:36:02 +0000</pubDate><atom:updated>2026-09-19T03:36:02.195Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,விநாயகர் சிலை,Vinayagar idol,jewel recovery,நகை மீட்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/3b33b8ga/gold.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ police handover woman gold jewel ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/3b33b8ga/gold.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பொதுமக்கள் உதவியுடன் குப்பை மற்றும் ஏரியில் இறங்கி தேடிய போலீசார் ஏரியில் கிடந்த 7 பவுன் தங்க நெக்லசை மீட்டு மூதாட்டி கோகிலாவிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். </p> <p>சென்னையை அடுத்த பள்ளிக்கரணையை சேர்ந்தவர் கோகிலா (வயது 65). <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">விநாயகர் சதுர்த்தி</a>யையொட்டி தனது வீட்டில் சிறிய அளவிலான விநாயகர் சிலை வைத்து வழிபட்டார். அந்த விநாயகர் சிலைக்கு 7 பவுன் தங்க நெக்லஸ் அணிவித்து பூஜை செய்தார். பூஜை முடிந்ததும் அந்த விநாயகர் சிலையை, அருகில் வைக்கப்பட்டிருந்த பெரிய <a href="https://www.maalaimalar.com/news/national/vinayagar-chaturthi-special-golden-modak-worth-rs-27000-per-kg-in-maharashtra">விநாயகர் சிலை</a> அருகே வைத்துவிட்டு கோகிலா வீட்டுக்கு வந்துவிட்டார்.</p> <p>சிறிது நேரத்துக்கு பிறகுதான் விநாயகர் சிலைக்கு அணிவித்திருந்த 7 பவுன் தங்க நெக்லஸ் அவரது நினைவுக்கு வந்தது. பதறியடித்து அங்கு சென்று பார்த்தபோது, தனது விநாயகர் சிலை மற்றும் நகையை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். </p> <p>இது குறித்து பள்ளிக்கரணை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜ், அங்கு பெரிய விநாயகர் சிலை வைத்திருந்த பலராமனிடம் கேட்டபோது, அங்கிருந்த சிறிய சிலைகளை பள்ளிக்கரணை ஏரியில் கரைத்து விட்டதாகவும், பூக்களை அருகில் உள்ள குப்பையில் கொட்டியதாகவும் தெரிவித்தார்.</p> <p>இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் சிலரின் உதவியுடன் குப்பை மற்றும் ஏரியில் இறங்கி போலீசார் தேடினர். அப்போது ஏரியில் கிடந்த 7 பவுன் தங்க நெக்லசை மீட்டு மூதாட்டி கோகிலாவிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.  நகையை மீட்ட போலீசாருக்கு கோகிலா கண்ணீல் மல்க நன்றி தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவில் டெங்கு காய்ச்சல் தடுப்பூசி அடுத்த ஆண்டு அறிமுகம்</title><link>https://www.maalaimalar.com/news/national/dengue-vaccine-to-be-launched-in-india-next-year</link><comments>https://www.maalaimalar.com/news/national/dengue-vaccine-to-be-launched-in-india-next-year#comments</comments><guid isPermaLink="false">4671c38e-d6ff-4155-a64c-5a8d6cfddfaf</guid><pubDate>Sat, 19 Sep 2026 03:31:04 +0000</pubDate><atom:updated>2026-09-19T03:31:04.463Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தடுப்பூசி,dengue fever,டெங்கு காய்ச்சல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/692fnnqk/dengue.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டெங்கு காய்ச்சல் தடுப்பூசி]]></media:title><media:description type="html"><![CDATA[ டெங்கு காய்ச்சல் தடுப்பூசி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/692fnnqk/dengue.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இந்தியாவில் டெங்கு காய்ச்சலுக்கான முதல் தடுப்பூசி அடுத்த ஆண்டு அறிமுகம் ஆகிறது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.</strong></em></p><h2><strong>முதலாவது தடுப்பூசி</strong></h2><p>டெங்கு நோய்த்தடுப்பு, கட்டுப்பாடு ஆகியவற்றுக்கான இந்தியாவின் முயற்சிகளை வலுப்படுத்துவதின் முக்கிய நடவடிக்கையாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு நிறுவனம், ஜெர்மனியின் டகேடா ஜி.எம்.பி.எச். நிறுவனம் தயாரித்துள்ள டெங்கு டெட்ராவேலண்ட் தடுப்பூசிகளை (கியூடெங்கா) இறக்குமதி செய்து சந்தைப்படுத்துவதற்கு கடந்த ஜூலை மாதம் அனுமதி அளித்தது.</p><p>இது நாட்டில் <a href="https://www.maalaimalar.com/topic/டெங்கு-காய்ச்சல்">டெங்கு காய்ச்சல்</a> தடுப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட முதலாவது தடுப்பூசி ஆகும். மருந்துகள், அழகுசாதனப்பொருட்கள் சட்டம்-1940 மற்றும் மருந்து விதிமுறைகள்-1945 ஆகியவற்றின்படி தடுப்பூசிகளின் தரம், பாதுகாப்பு, திறன் ஆகியவற்றின் விரிவான அறிவியல் ரீதியான மதிப்பீட்டுக்குப் பிறகே இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. </p><h2><strong>3 கட்டங்களாக...</strong></h2><p>இந்த தடுப்பூசியை 4 வயது முதல் 60 வயது வரையிலானவர்களுக்கு செலுத்தலாம். இதன் செயல்திறன் குறித்து பிரேசில், தாய்லாந்து, இலங்கை உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவில் 4 முதல் 60 வயது வரை உள்ளவர்களுக்கு 3 கட்டங்களாக இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. டெங்கின் 4 வகைகளிலும் ஆய்வு நடத்தப்பட்டது.</p><p>இத்தடுப்பூசிக்கு ஏற்கனவே ஐரோப்பிய யூனியன், பிரிட்டன், சுவிட்சர்லாந்து, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட 42 நாடுகளில் ஒப்புதல் கிடைத்துள்ளது. அத்துடன் உலக சுகாதார அமைப்பின் முன் தகுதியையும் பெற்றுள்ளது. உலகம் முழுவதும், 2.4 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் வினியோகிக்கப்பட்டு உள்ளன.</p><h2><strong>ஒப்பந்தம் கையெழுத்து</strong></h2><p>இந்நிலையில் இந்தியாவில் இதனை சந்தைப்படுத்துவதற்கும், வினியோகிப்பதற்குமான உரிமையை ஐதராபாத்தின் டாக்டர் ரெட்டிஸ் லேபரிட்டரிஸ் நிறுவனம் பெற்று இருக்கிறது. இதற்கான ஒப்பந்தம் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கையெழுத்தானது. அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் இந்த தடுப்பூசி சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை விவரம் குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.</p><p>இதுபற்றி, டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரிஸ் நிறுவனம், “2027-ம் ஆண்டின் முதல் பாதியில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும், இந்தியாவின் முதல், அங்கீகாரம் பெற்ற டெங்கு தடுப்பூசியான கியூடெங்காவை சந்தைப்படுத்தவும், வினியோகிக்கவும் டகேடா நிறுவனத்துடன் நாங்கள் ஒரு பிரத்தியேக ஒப்பந்தம் செய்துள்ளோம்" என சமூக வலைத்தள பதிவு ஒன்றில் தெரிவித்து உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் அரிசி விலை 25 முதல் 30 சதவீதம் அதிகரிப்பு
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rice-prices-in-tamil-nadu-increased-by-25-to-30-percent</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rice-prices-in-tamil-nadu-increased-by-25-to-30-percent#comments</comments><guid isPermaLink="false">aabd84c6-576b-44be-aa77-c989575e6267</guid><pubDate>Sat, 19 Sep 2026 03:18:23 +0000</pubDate><atom:updated>2026-09-19T03:18:23.048Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN,அரிசி,விலை உயர்வு,Rice,price rise,தமிழ்நாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/ueshirla/rice.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/ueshirla/rice.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் அரிசி விலை 25 முதல் 30 சதவீதம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கிடுகிடு உயர்வு</h2><p>தமிழ்நாட்டில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF">அரிசி</a> விலை கடந்த சில மாதங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதற்கு காரணம் பருவமழை பற்றாக்குறை காரணமாக நெல் விளைச்சலில் ஏற்பட்ட பாதிப்பே என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.</p> <p>விலை உயர்வு குறித்து அரிசி ஆலை உரிமையாளர்கள் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் டி.துளசிங்கம் கூறியதாவது:-</p><p>தமிழ்நாட்டிற்கு ஆண்டுக்கு சுமார் 95 லட்சம் டன் அரிசி தேவைப்படுகிறது. இதில், சுமார் 75 முதல் 80 லட்சம் டன் அரிசி தமிழ்நாட்டிலேயே உற்பத்தியாகிறது. அதில் 10 லட்சம் டன் மோட்டா ரக அரிசி அண்டை மாநிலமான கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் சுமார் 25 லட்சம் முதல் 30 லட்சம் டன் அரிசி அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ஒடிசா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. குறிப்பாக பொன்னி அரிசி ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.</p> <h2>தட்டுப்பாடு ஏற்படாது</h2><p>கடந்த சில மாதங்களில் அரிசி விலை சுமார் 25 முதல் 30 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. இது கிலோவுக்கு ரூ.8 முதல் ரூ.15 வரை உயர்வாக இருக்கக்கூடும். மழைப்பொழிவு குறைவால் அரிசி தட்டுப்பாடு வரும் என்று கூறுவது சரியல்ல. தற்போது மழை பெய்யத் தொடங்கிவிட்டது. இன்னும் 90 நாட்களில் அடுத்தகட்ட நெல் விளைச்சல் வந்துவிடும். எனவே, அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> <h2>பொன்னி அரிசி</h2><p>சென்னையில் அரிசியின் நேற்றைய மொத்த விலை விவரம் வருமாறு (அடைப்புக்குறிக்குள் கடந்த 4 மாதத்திற்கு முந்தைய விலை):- </p><p>26 கிலோ பொன்னி அரிசி - ரூ.1,800 (ரூ.1,400). இதன்படி ஒரு கிலோ பொன்னி அரிசி ரூ.69-க்கு விற்பனை ஆகிறது. 26 கிலோ இட்லி அரிசி - ரூ.1,040 (ரூ.850), 26 கிலோ சன்னரக அரிசி ரூ.1,600 (ரூ.1,200), 25 கிலோ பிராண்டு பொன்னி அரிசி விலை ரூ.1,450 முதல் ரூ.1,550 வரை விற்பனை செய்யப்பட்டது. கடந்த 4 மாதங்களுக்கு முன் இந்த விலை ரூ.1,250 முதல் ரூ.1,450 வரை இருந்ததாக கூறப்படுகிறது.</p> <h2>பாசுமதி -சீரகச்சம்பா அரிசி</h2><p>அதேபோன்று 30 கிலோ பாசுமதி அரிசி ரூ.1,950 முதல் ரூ.3,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. இது கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ரூ.1,450 முதல் ரூ.2,500-க்கு விற்பனை செய்யப்பட்டதாக தெரிகிறது. அதேபோன்று கடந்த 4 மாதங்களுக்கு முன் ரூ.4,900-க்கு விற்பனை செய்யப்பட்ட 30 கிலோ சீரகச்சம்பா அரிசி நேற்று ரூ.5,400-க்கு விற்பனை செய்யப்பட்டது.</p> <h2>ரேஷன் அரிசி</h2><p>தமிழ்நாட்டில் அரிசி விலை உயர்ந்து வரும் நிலையில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88">ரேஷன் கடைகளில்</a> இலவசமாக வழங்கப்படும் 20 கிலோ அரிசியை வெளிச்சந்தையில் கிடைக்கும் அரிசியின் தரத்திற்கு ஏற்ப சன்னரக பொன்னி அரிசியாக வழங்கினால் மக்களுக்கு வெளிச்சந்தையில் அரிசியை விலை கொடுத்து வாங்கும் தேவை பெருமளவு குறையும். அரிசி விலை உயர்வும் தடுக்கப்படும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-by-election-final-list-of-candidates-to-be-released-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-by-election-final-list-of-candidates-to-be-released-today#comments</comments><guid isPermaLink="false">d1989fb5-cbbb-4d3a-bdce-fb7d947efc1b</guid><pubDate>Sat, 19 Sep 2026 02:51:10 +0000</pubDate><atom:updated>2026-09-19T02:51:10.473Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>by election,dharapuram,தாராபுரம்,Maduranthakam,மதுராந்தகம்,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/ewetknvj/byelection.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Maduranthakam - Dharapuram]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/ewetknvj/byelection.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.</p> <h2>மதுராந்தகம் இடைத்தேர்தல்</h2><p>செங்கல்பட்டு மாவட்டம் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-dharapuram-byelection-edappadi-palaniswami-6-day-campaign">மதுராந்தகம்</a> (தனி) சட்டமன்ற தொகுதியில் அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இங்கு வேட்பாளர்களாக த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. சார்பில் பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சுகந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகிராமன் உள்ளிட்ட 48 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களில் 28 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது.</p> <h2>தாராரபுரம்</h2><p>அதேபோல் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">இடைத்தேர்தல்</a> நடைபெறும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் வேட்புமனு தாக்கல் கடந்த 9-ந் தேதி தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தொடங்கியது. கடந்த 16-ந்தேதி வேட்புமனு தாக்கல் முடிந்தது. அதன்படி, த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு மற்றும் நா.த.க. வேட்பாளர்கள் என மொத்தம் 51 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான பரிசீலனை 17-ந் தேதி நடந்தது.</p> <p>இதில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் சத்தியபாமா, தி.மு.க. வேட்பாளர் சுகன்யா, அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் லட்சுமணன் உள்பட 22 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. மீதமுள்ள 29 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.</p> <h2>இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு</h2><p>இன்று (சனிக்கிழமை) மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள் ஆகும். எனவே இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.</p><p>ஏற்கனவே வேட்பாளர்கள் பிரசாரத்தை தொடங்கி விட்ட நிலையில், இனி பிரசாரம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>வெள்ளை மாளிகையில் சில செய்தி நிறுவனங்களுக்கு தடை விதித்த டிரம்ப்</title><link>https://www.maalaimalar.com/news/world/trump-white-house-ban-on-cnn-denounced-as-assault-on-press-freedom</link><comments>https://www.maalaimalar.com/news/world/trump-white-house-ban-on-cnn-denounced-as-assault-on-press-freedom#comments</comments><guid isPermaLink="false">cdebf389-0d2f-4d5c-adcd-f6f864d7a982</guid><pubDate>Sat, 19 Sep 2026 02:40:28 +0000</pubDate><atom:updated>2026-09-19T02:40:28.729Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>trump,அமெரிக்கா,America,டிரம்ப்,CNN,சிஎன்என்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/olebd5qa/trump1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Trump]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/olebd5qa/trump1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சிஎன்என், எம்எஸ் நவ் மற்றும் பொலிடிகோ ஆகிய மூன்று செய்தி நிறுவனங்கள் போலி செய்திகளை வெளியிட்டு வருவதாக கூறி, அவற்றை வெள்ளை மாளிகையில் இருந்து தடை செய்வதாக அறிவித்துள்ளார்.</p><h3><strong>செய்தி நிறுவனங்களுக்கு தடை</strong></h3><p>அமெரிக்க <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D">அதிபர் டிரம்ப்</a> தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்ட பதிவில், “தொடர்ந்து போலிச் செய்திகளை வெளியிட்டு வருவதன் விளைவாக, போலிச் செய்தி சிஎன்என், எம்எஸ்என்ஓடபிள்யூ மற்றும் பொலிடிகோ ஆகிய செய்தி நிறுவனங்களை வெள்ளை மாளிகையிலிருந்து உடனடியாகத் தடை செய்வதாக அறிவிப்பதில் நான் பெருமைப்படுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.</p><p>மேலும், பொலிடிகோ செய்தி நிறுவனம், அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனின் கீழ், தங்களை காத்து கொள்வதற்காக, அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து நேரடியாக சட்டவிரோதமான 8 மில்லியன் டாலர் சந்தாவைப் பெற்றுள்ளதாகவும், இது தனக்கு ஊழலாகத் தெரிவதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.</p><p>இதுபோன்ற கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளக்கூடிய கூடுதல் செய்தி நிறுவனங்களையும் அறிவிக்கப்போவதாக டிரம்ப் கூறியுள்ளார்.</p><p>மேலும் அவர், அமெரிக்க அரசாங்கத்தின் நிர்வாகம் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் குறித்து செய்தி வெளியிடும்போது, ஊடகங்கள் தொடர்ந்து புனைவுகளையும் பொய்களையும் எழுதவோ, வெளியிடவோ கூடாது என்று கூறியுள்ளார்.</p><p>போலி செய்திகளை வெளியிடும் நிறுவனங்கள் தனது அலுவலகத்தில் இருப்பதை தான் விரும்பவில்லை என்றும், இந்த தடையை எந்த அளவிற்கு விதிக்க முடியுமோ, அந்த அளவிற்கு விதிக்கலாம் என்று தான் கூறுவதாக தெரிவித்துள்ளார்.</p><p>நம் நாட்டில் நேர்மையான செய்திகள் இருக்க வேண்டும். நடுநிலையான பத்திரிகைகளும் நேர்மையான பத்திரிகைகளும் தேவை. அவர்களின் செய்தி அறிக்கை எவ்வளவு போலியானது என்பது உங்களுக்குத் தெரியும். அது ஒருதலைப்பட்சமானது. அது ஒருபோதும் நல்லதாக இருப்பதில்லை என்று அவர் கூறினார்.</p><h3><strong>சிஎன்என் செய்தி நிறுவனம் கண்டனம்</strong></h3><p>இந்நிலையில், டிரம்ப் வெளியிட்ட தடை உத்தரவு, பத்திரிகை சுதந்திரத்தின் மீதான சட்டவிரோதத் தாக்குதல் என்று சிஎன்என் கூறியுள்ளது.</p><p>இதுகுறித்து சிஎன்என் செய்தி நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “சிஎன்என் எங்கள் வெள்ளை மாளிகைக் குழுவிற்கும் அவர்களின் நேர்மையான மற்றும் துல்லியமான செய்தியறிக்கைக்கும் முழு ஆதரவு அளிக்கிறது.</p><p>அமெரிக்க அரசியலமைப்பின் கீழ், அரசாங்கத்தின் எந்த தடையோ தலையீடோ இன்றி அந்தச் செய்தியறிக்கையை வெளியிடுவதற்கு எங்களுக்கு உரிமை உண்டு.</p><p>அதிபர் டிரம்ப் அச்சுறுத்திய தடை அமல்படுத்தப்பட்டால், அது அரசியலமைப்பால் பாதுகாக்கப்பட்ட அந்த அடிப்படை உரிமையின் மீதான சட்டவிரோதத் தாக்குதலாக அமையும்” என்று பதிவிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் பெட்ரோல், டீசல் விலை - இன்றைய நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-and-diesel-price-in-chennai-19-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-and-diesel-price-in-chennai-19-september-2026#comments</comments><guid isPermaLink="false">bcd4caa3-7051-473d-b618-77f26aa0f7d8</guid><pubDate>Sat, 19 Sep 2026 02:02:30 +0000</pubDate><atom:updated>2026-09-19T02:02:30.364Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,கச்சா எண்ணெய்,Crude oil,பெட்ரோல் டீசல் விலை,Pertrol Diesel Prices</media:keywords><media:content height="576" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/wi7y6inv/maalai-malar2026-07-21zb9pki7q%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88.avif" width="1024"><media:title type="html"><![CDATA[ பெட்ரோல் - டீசல் விலை]]></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல் - டீசல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/wi7y6inv/maalai-malar2026-07-21zb9pki7q%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88.avif?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>ஈரான் போர்</h2><p>ஈரான் போரினால் மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p> <h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.</p> <h2>இன்றைய பெட்ரோல், டீசல் விலை</h2><p>அந்த வகையில் இன்றைய (19.9.2026 - (சனிக்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.76-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 19.9.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-19-september-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-19-september-2026#comments</comments><guid isPermaLink="false">507ac408-f54d-4261-9994-3103bd12a777</guid><pubDate>Sat, 19 Sep 2026 01:51:40 +0000</pubDate><atom:updated>2026-09-19T01:51:40.089Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/10/26210841-rasipalan4.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/10/26210841-rasipalan4.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>ஆதாயம் தரும் செயல்களில் அக்கறை காட்டும் நாள். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக்கொள்வீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு.</p><h2>ரிஷபம்</h2><p>யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். மற்றவர்களுக்கு நன்மை செய்யப்போய் அது தீமையாகத் தெரியும். கையாளும் பொருட்களில் கவனம் தேவை.</p> <h2>மிதுனம்</h2><p>நினைத்தது நிறைவேறும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கும் வாய்ப்பு ஏற்படும்.</p><h2>கடகம்</h2><p>மனக்கலக்கம் ஏற்படும் நாள். வாகன வழியில் திடீர் செலவுகள் உருவாகும். உத்தியோகத்தில் நீண்ட தூரத்திற்கு மாறுதல் வரலாம். நட்பு பகையாகும்.</p> <h2>சிம்மம்</h2><p>பிள்ளைகளால் பெருமை வந்து சேரும் நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். ஆரோக்கியம் சீராகும். விவாகப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வந்து சேரும்.</p><h2>கன்னி</h2><p>விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. விண்ணப்பித்த வேலை விரைவில் கிடைப்பதற்கான தகவல் வந்து சேரும்.</p> <h2>துலாம்</h2><p>பகை அகலும் நாள். பல நாட்களாக நினைத்த காரியம் இன்று முடியும். வாங்கல், கொடுக்கல்கள் ஆதாயம் தரும். கவுரவம், அந்தஸ்து உயரும்.</p><h2>விருச்சிகம்</h2><p>நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். நம்பிக்கைக்குரியவிதம் நண்பர்கள் நடந்துகொள்வர். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.</p> <h2>தனுசு</h2><p>இனிய செய்தி இல்லம் தேடி வரும் நாள். மக்கள் செல்வாக்கு மேலோங்கும். பெற்றோர் வழியில் பிரியம் கூடும். வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும்.</p><h2>மகரம்</h2><p>விரயங்கள் கூடும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக்கொள்வீர்கள். உத்தியோக முயற்சியில் இருந்த குறுக்கீடுகள் விலகும்.</p> <h2>கும்பம்</h2><p>கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரலாம்.</p><h2>மீனம்</h2><p>வி.ஐ.பி.க்கள் வீடு தேடி வரும் நாள். விரும்பிய காரியத்தை செய்து முடிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர்.</p> ]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 19 செப்டம்பர் 2026: குச்சனூர் சனி பகவான் திருமஞ்சனம்
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-19-september-2026-kuchanur-sani-bhagavan</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-19-september-2026-kuchanur-sani-bhagavan#comments</comments><guid isPermaLink="false">2024bd7e-18b5-4ee9-9075-fcf5f9350c8d</guid><pubDate>Sat, 19 Sep 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-09-19T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/01/30/25616771-sanibagavan1.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ sani bhagavan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/01/30/25616771-sanibagavan1.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, புரட்டாசி-2 (சனிக்கிழமை)</p><p>பிறை : வளர்பிறை</p><p>திதி : அஷ்டமி பிற்பகல் 3.58 மணி வரை பிறகு நவமி</p><p>நட்சத்திரம் : மூலம் பின்னிரவு 2.55 மணி வரை பிறகு பூராடம்</p> <p>யோகம் : சித்தயோகம்</p><p>ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை</p><p>எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை</p><p>சூலம் : கிழக்கு</p><p>நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை</p> <h2>பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் காளிங்க நர்த்தனக் காட்சி</h2><p>குச்சனூர் ஸ்ரீ சனி பகவான் சிறப்பு திருமஞ்சனம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு வெள்ளி சேஷ வாகனத்தில் புறப்பாடு. தல்லாகுளம் ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் காளிங்க நர்த்தனக் காட்சி. நயினார் கோவில் ஸ்ரீ சௌந்தரநாயகி, திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம் திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. </p> <p>உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - நலம்</p><p>ரிஷபம் - பொறுமை</p><p>மிதுனம் - இன்பம்</p><p>கடகம் - பண்பு</p><p>சிம்மம் - உவகை</p><p>கன்னி - ஈகை</p> <p>துலாம் - நிறைவு</p><p>விருச்சிகம் - மேன்மை</p><p>தனுசு - சுகம்</p><p>மகரம் - ஜெயம்</p><p>கும்பம் - வெற்றி</p><p>மீனம் - ஆதரவு</p> ]]></content:encoded></item><item><title>பாஸ்போர்ட் பெறும் நடைமுறையில் புதிய மாற்றம் செய்த மத்திய அரசு   </title><link>https://www.maalaimalar.com/news/national/central-government-introduces-new-changes-to-the-passport-application-process</link><comments>https://www.maalaimalar.com/news/national/central-government-introduces-new-changes-to-the-passport-application-process#comments</comments><guid isPermaLink="false">68ea346e-8499-40a0-b7f1-f7fa6b6c2b5e</guid><pubDate>Sat, 19 Sep 2026 00:16:49 +0000</pubDate><atom:updated>2026-09-19T00:16:49.957Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,பாஸ்போர்ட்,Passport,central government,கடவுச்சீட்டு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/ynfxtfwv/tn-23.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பாஸ்போர்ட் ]]></media:title><media:description type="html"><![CDATA[ பாஸ்போர்ட் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/ynfxtfwv/tn-23.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் பெறுவதில் மாற்றங்களை செய்து மத்திய வெளியுறவு அமைச்சகம் 'கடவுச்சீட்டு (திருத்த) விதிகள், 2026'-ஐ அறிவித்துள்ளது.</p><p>இந்த புதிய விதிகள், செப்டம்பர் 15ஆம் தேதியன்று அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்ட உடனேயே நடைமுறைக்கு வந்தன. </p> <h2>குழந்தைகளுக்கு</h2><p>15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட பாஸ்போர்ட், 5 ஆண்டுகள் அல்லது குழந்தைக்கு 15 வயது பூர்த்தியாகும் வரை (இவற்றில் எது முந்துகிறதோ அதுவரை) மட்டுமே செல்லுபடியாக இருந்தது.</p><p>புதிய விதியின்படி 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான வழக்கமான 36 பக்க பாஸ்போர்ட் இனி அது வழங்கப்பட்ட தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு அல்லது குழந்தைக்கு 18 வயது பூர்த்தியாகும் வரை செல்லுபடியாகும். இதில் எது முதலில் வருகிறதோ அதுவே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.</p><p>வயது வரம்பு 15ல் இருந்து 18 வயதாக உயர்த்தப்பட்டுள்ளது.</p><p>உதாரணமாக 14 வயதில் பாஸ்போர்ட் பெறும் ஒரு குழந்தைக்கு, 5 ஆண்டுகள் நிறைவடையாவிட்டாலும் 18 வயது பூர்த்தியாகும் போதே அந்த பாஸ்போர்ட்டின் செல்லுபடியாகும் காலம் முடிவுக்கு வந்துவிடும்.</p><p>8 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்குப் புதிய பாஸ்போர்ட் பெறுவதில் 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.</p> <h2>கட்டணம் உயர்வு</h2><p>முன்னதாக ஜூலை 1 முதல் அமலுக்கு வந்த விதிகளின்படி, முன்பு 1,500 ரூபாயாக இருந்த பெரியவர்களுக்கான 36 பக்க பாஸ்போர்ட்டின் கட்டணம் இப்போது ரூ. 2,500 ஆக உயர்ந்துள்ளது. முன்பு 2,000 ரூபாயாக இருந்த 60 பக்க பாஸ்போர்ட்டின் கட்டணம் இப்போது ரூ. 3,500 ஆக உயர்ந்துள்ளது.</p><p>மேலும், முன்பு 3,500 ரூபாயாக இருந்த 36 பக்க 'தட்கல்' பாஸ்போர்ட்டுக்கான கட்டணம் இப்போது ரூ. 5,000ஆக உயர்ந்துள்ளது. முன்பு 4,000 ரூபாயாக இருந்த 60 பக்க 'தட்கல்' பாஸ்போர்ட்டுக்கான கட்டணம் இப்போது ரூ. 6,000 ஆக உயர்ந்துள்ளது.</p><p>60 பக்க பாஸ்போர்ட் தொலைந்துபோனாலோ அல்லது சேதமடைந்தாலோ அதை உடனடியாக மாற்றுவதற்கான கட்டணம் 5,500 ரூபாயில் இருந்து ரூ. 8,500 ஆக உயர்ந்துள்ளது.</p><p>சிறார்களுக்கு 36 பக்கங்கள்கொண்ட சாதாரண பாஸ்போர்ட் கட்டணம் 1,000 ரூபாயில் இருந்து 1,750 ரூபாயாகவும் 36 பக்கங்கள் தட்கல் பாஸ்போர்ட் கட்டணம் 3,000 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>உக்ரைன் போரில் கட்டவிழ்த்து விடப்பட்ட பாலியல் வன்முறை.. 89% ரஷியா செய்தது - ஐநா அதிர்ச்சி அறிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/world/sexual-violence-unleashed-in-the-ukraine-war-russia-responsible-for-89-of-cases-shocking-un-report</link><comments>https://www.maalaimalar.com/news/world/sexual-violence-unleashed-in-the-ukraine-war-russia-responsible-for-89-of-cases-shocking-un-report#comments</comments><guid isPermaLink="false">9954ccc1-48a2-41f4-98d8-9c0e72b69e8d</guid><pubDate>Sat, 19 Sep 2026 00:01:31 +0000</pubDate><atom:updated>2026-09-19T00:01:31.099Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உக்ரைன் போர்,Russia,Ukraine War,Sexual violence,பாலியல் வன்முறை,ரஷியா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/r30c6eu4/tn-24.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ உக்ரைன் போர் ]]></media:title><media:description type="html"><![CDATA[ உக்ரைன் போர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/r30c6eu4/tn-24.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உக்ரைன் போரில் பரவலான பாலியல் வன்முறை நடப்பதாக ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு திடுக்கிடும் அறிக்கையை வெளியிட்டுள்ளது.</p> <p>ஐரோப்பாவின் நேட்டோ நாடுகளில் இணைய முயன்றதால் உக்ரைன் மீது 2022 இல் <a href="https://www.maalaimalar.com/news/world/amid-war-russia-parliament-election-begins-today">ரஷியா </a>போர் தொடுத்தது. </p><p>5வது ஆண்டாக போர் முடிவின்றி நீடித்து வரும் நிலையில் போர்ச் சூழலில் நிகழும் பாலியல் வன்முறை குறித்து அதிர்ச்சியூட்டும் அறிக்கையை ஐநா வெளியிட்டுள்ளது. </p><p>ரஷியா போர் தொடுத்த பின்னர், பொதுமக்களுக்கும் போர்க் கைதிகளுக்கும் எதிராகப் பரவலான பாலியல் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. </p> <h2>அறிக்கை</h2><p>ஐ.நா கண்காணிப்புக் குழு மேற்கொண்ட ஆய்வில், பிப்ரவரி 2022 முதல் ஜூலை 2026 வரையிலான காலக்கட்டத்தில் உறுதி செய்யப்பட்ட 1,004 பாலியல் வன்முறைச் சம்பவங்களை ஆவணப்படுத்தியுள்ளது.</p><p>ஆவணப்படுத்தப்பட்ட சம்பவங்களில் 89% ரஷியத் தரப்பால் செய்யப்பட்டவை. ரஷிய ராணுவம், சிறைத் துறை மற்றும் பாதுகாப்பு முகமைகள் இதில் அடங்கும்.</p><p>11% சம்பவங்கள் உக்ரைனிய அதிகாரிகளால், உக்ரைன் ராணுவம் மற்றும் சிறைத்துறையால் செய்யப்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <h2>ரஷியா தரப்பு</h2><p>உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் ரஷியாவிற்குள் உள்ள சிறை முகாம்களில் கைது செய்யப்பட்டவர்கள் மீது பாலியல் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.</p><p>கூட்டுப் பாலியல் வன்கொடுமை, பாலியல் உறுப்புகளை சிதைத்தல் மற்றும் சோவியத் காலத்து சாதனமான 'Tapik' மூலம் ஆண்களின் இனப்பெருக்க உறுப்புகளில் மின்சாரம் பாய்ச்சுதல் போன்ற கொடூரமான சித்திரவதைகள் இதில் அடங்கும்.</p><p>வழக்கமாகப் போர்ச் சூழலில் பெண்களே அதிகம் பாதிக்கப்படும் நிலையில், சிறை முகாம்களில் பாலியல் சித்திரவதைக்கு உள்ளானவர்களில் பெரும்பாலானோர் ஆண் போர்க் கைதிகள் ஆவர்.</p><p>ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் பெண்கள் மற்றும் சிறுமிகளும் கடுமையான பாலியல் அத்துமீறல்களுக்கு ஆளாகியுள்ளனர்.</p> <h2>உக்ரைன் தரப்பு</h2><p>உக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ரஷியப் போர்க் கைதிகளுக்கு எதிராக பாலியல் ரீதியான அச்சுறுத்தல்கள் மற்றும் உறுப்புகளில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p><p>எனினும், உக்ரைனியப் படைகளால் ரஷிய போர்க் கைதிகள் யாரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகப் பதிவாகவில்லை என ஐ.நா குறிப்பிட்டுள்ளது.</p> <h2>கவலை</h2><p>ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க் கூறுகையில், "ஆவணப்படுத்தப்பட்டுள்ள இந்த அருவருக்கத்தக்கச் செயல்கள் என்னை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.</p><p>உக்ரைனில் தொடர்ந்து நடைபெற்று வரும் வன்முறைகளுக்கு மத்தியில் இத்தகைய அத்துமீறல்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கக்கூடும் என அஞ்சுகிறேன்" என்று கவலை தெரிவித்துள்ளார்.</p><h2>பதில்</h2><p>ஜெனீவாவில் உள்ள ரஷியாவின் தூதரகக் குழு இந்த அறிக்கை குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்க மறுத்துவிட்டது.</p><p>இந்த அறிக்கை ரஷியாவின் மனித உரிமை மீறல்களை உலகிற்குச் சுட்டிக்காட்டியுள்ளதாக கூறிய உக்ரைன் வெளியுறவு அமைச்சகம், தனது தரப்பு மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நேரடி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.</p>]]></content:encoded></item><item><title>மேல்மா சிப்காட்..  நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற அரசு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/melma-sipcot-tvk-government-withdraws-land-acquisition-notification</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/melma-sipcot-tvk-government-withdraws-land-acquisition-notification#comments</comments><guid isPermaLink="false">2b384f42-ad3c-45fa-9a6c-d8d563e4c0a6</guid><pubDate>Fri, 18 Sep 2026 23:33:23 +0000</pubDate><atom:updated>2026-09-18T23:33:23.794Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை,சிப்காட்,மேல்மா சிப்காட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/px8l2gq4/tn-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மேல்மா ]]></media:title><media:description type="html"><![CDATA[ மேல்மா ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/px8l2gq4/tn-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேல்மா சிப்காட் தொழிற்பூங்கா விரிவாக்கத்திற்கான நில எடுப்பு அறிவிக்கையை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்றது.</p> <p>திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D">சிப்காட் </a>தொழிற்பேட்டை 3-வது யூனிட் விரிவாக்கத்துக்காக, மேல்மா உட்பட 11 கிராமங்களில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை முந்தைய திமுக அரசு கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டது. </p><h2>எதிர்ப்பு</h2><p>மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. அவர்களுக்கு தவெக ஆதரவு தெரிவித்தது. </p><p>2025 ஜூலை மாதம் நடந்த தவெக செயற்குழு கூட்டத்தில் மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.</p><p>ஆனால் ஆட்சி பொறுப்பேற்ற பின்  தவெக அரசு, மேல்மா கிராமத்தில் 22 எக்டேர் புன்செய் நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிக்கை வெளியிட்டது விமர்சனத்துக்கு உள்ளானது.</p><p>கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தற்போது தவெக அரசு அதிலிருந்து பின்வாங்கியுள்ளது.</p><h2>அரசிதழில்</h2><p>நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்ட அரசிதழில், "சிப்காட் செய்யார் தொழிற்பூங்கா நிலை-3 க்காக திருவண்ணாமலை மாவட்டம்,செய்யார் வட்டம், மேல்மா கிராமத்தில் அலகு 1 பிளாக் 2-ல் 22.16.00 ஹெக்டேர் நிலங்களை நில எடுப்பு செய்ய, தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நில எடுப்பு சட்டப் பிரிவு 3(1)ன் கீழ் அறிவிக்கை வெளியிடப்பட்டது.</p><p>திருவண்ணாமலை மாவட்ட கலெக்டரின் பரிந்துரையின் அடிப்படையில் அந்த அரசிதழில் உள்ள 22.16.00 ஹெக்டேர் நிலங்களை நில எடுப்பு செய்ய வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கை திரும்பப் பெறப்படுகிறது." என குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>5 வயது மகளை கொன்று பிரிட்ஜில் வைத்துவிட்டு தற்கொலை செய்த தந்தை </title><link>https://www.maalaimalar.com/news/national/father-kills-5-year-old-daughter-places-her-in-the-fridge-and-commits-suicide</link><comments>https://www.maalaimalar.com/news/national/father-kills-5-year-old-daughter-places-her-in-the-fridge-and-commits-suicide#comments</comments><guid isPermaLink="false">0fb637aa-3c57-458e-a5fd-ab84eab8c437</guid><pubDate>Fri, 18 Sep 2026 22:50:00 +0000</pubDate><atom:updated>2026-09-18T22:50:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தற்கொலை,suicide,குஜராத்,gujarat,Murder,கொலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/50np98yo/tn.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தற்கொலை ]]></media:title><media:description type="html"><![CDATA[ தற்கொலை ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/50np98yo/tn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குஜராத்தில் கடன் சுமை காரணமாக 5 வயது மகளை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை செய்த சோகம் நிகழ்ந்துள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/topic/gujarat">குஜராத் </a>மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் ராஜுலா பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர் தனக் (40). </p><p>கடந்த செப்டம்பர் 14 அன்று இவரது மனைவி மஞ்சுபென் தங்கள் 5 வயது மகள் ஹிமான்ஷியை கிஷோரிடம் விட்டுவிட்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்தார்.</p><p>புதன்கிழமை அன்று கிஷோரை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றபோது அழைப்பை அவர் ஏற்காததால், மஞ்சுபென் தனது சகோதரரை வீட்டிற்குச் சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். </p><p>பூட்டியிருந்த வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, கிஷோர் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.</p><p>காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட சோதனையில், படுக்கையில் கிஷோர் எழுதி வைத்திருந்த 3 தற்கொலைக் கடிதங்கள் கைப்பற்றப்பட்டன.</p> <h2>தற்கொலை - கொலை</h2><p>கடன் பெற்று, அந்தப் பணத்தைக் கட்டுமானப் பணிகளில் முதலீடு செய்திருந்ததாகவும், தொழிலதிபர் நண்பர்களிடமிருந்து தனக்கு வர வேண்டிய ரூ.7.25 லட்சம் பணம் இன்னும் வந்து சேரவில்லை என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். பணப் பிரச்சனையால் வேறு வழி தெரியாமல் மகளுடன் தற்கொலை செய்வதாக எழுதியிருந்தார்.</p><p>தனது இறப்பிற்கு பிறகு மகள் கஷ்டப்படக் கூடாது என்பதால் அவளைக் கொன்றதாக கடிதத்தில் தெரிவித்துள்ளார்.</p><p>குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோரியுள்ள கிஷோர், மகளின் உடலைப் பிரிட்ஜில் வைத்திருப்பதாக அதில் குறிப்பிட்டிருந்தார். இதை வாசித்த பின் அதிர்ந்த போலீசார் பிரிட்ஜை சோதனையிட்டபோது அதில் சிறுமி ஹிமான்ஷியின் சடலம் இருந்துள்ளது.</p> <h2>கடைசி கொண்டாட்டம்</h2><p>தற்கொலைக்கு முன்பாகத் தனது மகள் ஹிமான்ஷிக்கு பிறந்தநாள் போல அந்த அறையைப் பலூன்கள் மற்றும் மெழுகுவர்த்திகளால் கிஷோர் அலங்கரித்துள்ளார்.</p><p>மகளுக்குப் புதிய வெள்ளை நிற ஆடைகளை அணிவித்து, தலையில் துப்பட்டா போட்டு, உதடுகளில் துளசி இலைகளை வைத்துப் பூஜை செய்துள்ளார்.</p><p>அறையிலும் பிரிட்ஜூகுள்ளும் சாக்லேட்டுகளை வைத்து, பிரிட்ஜ் கதவில் "ஹேப்பி பர்த்டே ஹிமான்ஷி" என்று காகிதத்தில் எழுதி ஒட்டியுள்ளார்.</p><p>அன்று குழந்தைக்குப் பிறந்தநாள் இல்லை என்றபோதிலும் அவர் இப்படி செய்துள்ளார். இதைச் செய்து பின், மகளை மூச்சு திணறச் செய்து கொன்று பிரிட்ஜில் வைத்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்துள்ள ராஜுலா காவல்துறை, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.</p><h2>தற்கொலை தீர்வல்ல</h2><p>தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். </p><p>தற்கொலை எண்ணங்கள், மனநல பிரச்சனைகளில் இருந்து விடுபட, உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.</p><p>சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணிநேரமும் செயல்படும்)</p><p>மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணிநேரம் செயல்படும்)</p><p>சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண் – 1800-599-0019</p> ]]></content:encoded></item><item><title>துருவ் விக்ரம் நடிக்கும் &apos;ஜாக்கி&apos; படத்தின் புரோமோ ரிலீஸ் </title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/promo-released-for-the-movie-jacky-starring-dhruv-vikram</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/promo-released-for-the-movie-jacky-starring-dhruv-vikram#comments</comments><guid isPermaLink="false">71b705ce-8358-4198-aebc-750437ea8c4f</guid><pubDate>Fri, 18 Sep 2026 22:02:00 +0000</pubDate><atom:updated>2026-09-18T22:02:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Dhruv Vikram,துருவ் விக்ரம்,Promo,புரோமோ,ஜாக்கி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/sreehtnh/tn-19.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஜாக்கி]]></media:title><media:description type="html"><![CDATA[ ஜாக்கி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/sreehtnh/tn-19.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>துருவ் விக்ரம் நடிக்கும் ஜாக்கி படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.</p><p>அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் எழுத்து மற்றும் இயக்கத்தில்<a href="https://www.maalaimalar.com/topic/dhruv-vikram"> துருவ் விக்ரம்</a> புதிய காதல் கதை ஒன்றில் நடிக்கிறார்.</p><p>பிரம்மன், ஆதித்யா வர்மா படங்களில் உதவி இயக்குநராக கரண் அரவிந்த் குமார் பணிபுரிந்த கரண் அரவிந்த் குமார் இயக்கும் இப்படத்தின் டைட்டில் அண்மையில் அறிவிக்கப்பட்டது.</p><p>இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் எர்னேனி, ரவி சங்கர் ஆகியோர் தயாரிக்கின்றனர். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.</p><p>இந்த படத்தில் நடிகர்கள் பிருத்வி பாண்டியராஜ், சாய் தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.</p> <h2>ஜாக்கி</h2><p>இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த செப்டம்பர் 12 அன்று வெளியானது .</p><p>அதன்படி துருவ் விக்ரம் நடிக்கும் நான்காம் படமான இதற்கு "ஜாக்கி" என பெயர் சூட்டப்பட்டது. இப்படம் ரொமாண்டிக் ஆகசன் திரைப்படமாக உருவாகி வருகிறது.</p><p>இந்நிலையில் தற்போது ஜாக்கி படத்தின் புரோமோ வீடியோ ஒன்று வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.</p> <h2>துருவ் விக்ரம்</h2><p>'ஆதித்ய வர்மா' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அவர், பின்னர் தனது தந்தை விக்ரமுடன் இணைந்து 'மகான்' திரைப்படத்தில் நடித்தார். அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் படத்தில் நடித்ததன் மூலம் கவனம் ஈர்த்தார்.</p><p>இந்த படத்தில் நடித்ததற்காக அண்மையில் சைமா விருதும் வாங்கினார். இந்த சூழலில் அவரின் 4வது படமான ஜாக்கி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. </p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/yeyIvyYCyl8"></iframe></figure>]]></content:encoded></item><item><title>எனக்கு End-ஏ கிடையாது..  ரொனால்டோ ரசிகர்களுக்கு நற்செய்தி </title><link>https://www.maalaimalar.com/sports/football/i-dont-have-end-good-news-for-ronaldo-fans</link><comments>https://www.maalaimalar.com/sports/football/i-dont-have-end-good-news-for-ronaldo-fans#comments</comments><guid isPermaLink="false">03e706c5-8a59-422c-a320-5f7a264895ed</guid><pubDate>Fri, 18 Sep 2026 21:23:25 +0000</pubDate><atom:updated>2026-09-18T21:23:25.153Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Ronaldo,கால்பந்து,FootBall,உலகக்கோப்பை கால்பந்து,Football World Cup,ரோனால்டோ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/nq8tkys4/tn-25.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[  ரொனால்டோ]]></media:title><media:description type="html"><![CDATA[  ரொனால்டோ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/nq8tkys4/tn-25.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கால்பந்து (Football)</category><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சர்வதேச கால்பந்தில் விளையாடுவது குறித்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.</p> <p>வரவிருக்கும் UEFA நேஷன்ஸ் லீக் போட்டிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ள போர்ச்சுகல் அணியில் <a href="https://www.maalaimalar.com/topic/cristiano-ronaldo">ரொனால்டோ </a>இடம்பெற்றுள்ளார். </p><p>இதன் மூலம் அவர் சர்வதேசக் கால்பந்திலிருந்து உடனடியாக ஓய்வு பெறப்போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது.</p><p>போர்ச்சுகல் அணி தனது யுஏஇஎப்ஏ நேஷன்ஸ் லீக் பயணத்தை செப்டம்பர் 24 அன்று சொந்த மண்ணில் வேல்ஸ் அணிக்கு எதிராகத் தொடங்குகிறது.</p> <h2>உலகக்கோப்பைக்கு பின்</h2><p>2026 பிஃபா உலகக்கோப்பை தொடரின் காலிறுதிக்கு முந்தைய போட்டியில் ஸ்பெயினிடம் போர்ச்சுகல் தோற்று வெளியேறியது.</p><p>அதுவே தனது கடைசி உலகக்கோப்பையாக இருக்கும் என ரொனால்டோ சுட்டிக்காட்டிய போதிலும், சர்வதேசக் கால்பந்திலிருந்து ஓய்வு பெறுவது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை.</p> <h2>புதிய பயிற்சியாளர்</h2><p>உலகக்கோப்பைத் தோல்விக்குப் பிறகு ராபர்டோ மார்டினெஸுக்குப் பதிலாக ஜார்ஜ் ஜெசஸ் போர்ச்சுகல் அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.</p><p>சவுதி அரேபியாவின் அல் நாசர் கிளப் அணியில் ரொனால்டோவுடன் இணைந்து பணியாற்றி லீக் பட்டத்தையும் வென்ற அனுபவம் கொண்டவர் ஜெசஸ்.</p><p>"அணிக்குத் தேர்வாகியுள்ள அனைத்து வீரர்களும் எனக்குச் சமமானவர்களே. ரொனால்டோ சிறப்பாகச் செயல்பட்டால் அணியில் தொடர்வார், இல்லையெனில் வாய்ப்பு கிடைக்காது. அனைவரையும் ஒரே கோணத்திலேயே நான் அணுகுவேன்." என்று ஜெசஸ் தெரிவித்துள்ளார்.</p> <h2>சாதனையின் விளிம்பில் ரொனால்டோ</h2><p>தற்போது 41 வயதான ரொனால்டோ, ஆண்களுக்கான சர்வதேசக் கால்பந்து வரலாற்றில் 146 கோல்களுடன் முதலிடத்தில் உள்ளார்.</p><p>கிளப் மற்றும் சர்வதேசப் போட்டிகள் சேர்த்து இதுவரை 979 கோல்களை அடித்துள்ள ரொனால்டோ, 1000 கோல்கள் என்ற பிரம்மாண்ட மைல்கல்லை எட்ட இன்னும் 21 கோல்களே தேவையாக உள்ளது.</p><p>இந்த சாதனையைப் போர்ச்சுகல் அணியை விட அல் நாசர் கிளப் சார்பிலேயே அவர் விரைவாக எட்டுவார் என ஜெசஸ் கருத்து தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் இந்தியாவிடம் வாங்கிய கடனை முழுமையாக அடைத்த மாலத்தீவு </title><link>https://www.maalaimalar.com/news/world/maldives-has-fully-repaid-its-debt-to-india-despite-the-financial-crisis</link><comments>https://www.maalaimalar.com/news/world/maldives-has-fully-repaid-its-debt-to-india-despite-the-financial-crisis#comments</comments><guid isPermaLink="false">bc588e76-1145-44d5-b6ce-0cc4bac012e6</guid><pubDate>Fri, 18 Sep 2026 20:30:35 +0000</pubDate><atom:updated>2026-09-18T20:30:35.587Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Debt,Maldives,மாலத்தீவு,Foreign Exchange,கடன்,அந்நிய செலாவணி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/6452rggz/tn-20.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மோடி - முய்சு ]]></media:title><media:description type="html"><![CDATA[ மோடி - முய்சு ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/6452rggz/tn-20.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவிடம் பெற்ற 150 மில்லியன் டாலர் கடனை மாலத்தீவு அடைந்துள்ளது.</p> <p>பொருளாதார நெருக்கடி மற்றும் அந்நியச் செலாவணி பற்றாக்குறைக்கு மத்தியிலும், இந்தியாவிடமிருந்து பெற்ற 150 மில்லியன் டாலர் (1,436 கோடி ரூபாய்) கடனை <a href="https://www.maalaimalar.com/topic/maldives">மாலத்தீவு </a>முழுமையாக திருப்பிச் செலுத்தியுள்ளது.</p><p>ஏற்கனவே 100 மில்லியன் டாலர்களை அடைந்த நிலையில் இறுதித் தவணையான 50 மில்லியன் டாலரை மாலத்தீவு அரசு செப்டம்பர் 17 அன்று செலுத்தி இந்தக் கடனை முழுமையாக அடைத்துள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெள்ளிக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தினார்.</p> <h2>கடன்</h2><p>2019 ஆம் ஆண்டு எஸ்பிஐ வங்கி மாலத்தீவில் கருவூலப் பத்திரங்களை வாங்கியதன் மூலம் 150 மில்லியன் டாலர் கடன் வழங்கப்பட்டது. இக்கடன் செலுத்தும் கெடு மொத்தம் 6 முறை நீட்டிக்கப்பட்டது.</p><p>இக்கடனின் அசலை தற்போது மாலத்தீவு அரசு செலுத்தியுள்ளது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் அதற்காக ஆன வட்டித் தொகையை இந்திய அரசே ஏற்றுக்கொண்டது. இதற்காக இந்தியா செலுத்திய வட்டித் தொகை மட்டும் சுமார் 45 மில்லியன் டாலர் ஆகும்.</p> <h2>கூடுதல் நிதியுதவி</h2><p>மாலத்தீவின் நிதி அமைப்பைச் சீரமைக்க இந்தியா ரூ.3,000 கோடிமதிப்பிலான கரன்சி ஸ்வாப் வசதியை வழங்கியுள்ளது.</p><p>இது தவிர, 2029 மற்றும் 2030 வரை செல்லுபடியாகும் வகையில் மலாத்தீவின் 350 மில்லியன் டாலர் மதிப்பிலான கருவூலப் பத்திரங்களையும் எஸ்பிஐ வங்கி வாங்கியுள்ளது.</p><p>மாலத்தீவிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களையும் இந்தியா தொடர்ந்து விநியோகித்து வருகிறது.</p> <h2>மாலத்தீவின் அந்நியச் செலாவணி</h2><p>இந்த 50 மில்லியன் டாலர் கடனைத் திருப்பிச் செலுத்தியதன் காரணமாக, மாலத்தீவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 600 மில்லியன் டாலருக்கும் கீழே சரியும் சூழல் உருவாகியுள்ளது.</p><p>ஆகஸ்ட் மாத இறுதியில் மாலத்தீவு பணவியல் ஆணையத்தின் தரவுப்படி, அந்நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 643.8 மில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p>குறைந்த அந்நியச் செலாவணி மற்றும் சுற்றுலாத் துறையை மட்டுமே முழுமையாக நம்பியிருக்கும் பொருளாதார அமைப்பு காரணமாக மாலத்தீவு பெரும் கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளது.</p> <h2>இந்தியா மாலத்தீவு உறவு</h2><p>மாலத்தீவு அதிபர் முகமது முய்சு சீனாவிற்கு நெருக்கமாகச் செயல்படத் தொடங்கியபோது இருநாடுகளுக்கும் இடையிலான உறவு கடுமையாகப் பாதிக்கப்பட்டது.</p><p>இருப்பினும், அக்டோபர் 2024இல் அதிபர் முய்சு இந்தியாவிற்கு வருகை தந்தபோது, மாலத்தீவின் அந்நியச் செலாவணி நெருக்கடியைச் சமாளிக்க ரூ.6,300 கோடிக்கும் அதிகமான உதவிகளை வழங்க இந்தியா ஒப்புக்கொண்டது.</p><p>இதன் மூலம் இருநாடுகளுக்கும் இடையிலான தூதரக மற்றும் பொருளாதார உறவுகள் மீண்டும் சீரடைந்து வலுப்பெற்று வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>திரிணாமுல் காங்கிரஸ் பெயர் - சின்னம் முடக்கம்.. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மம்தா </title><link>https://www.maalaimalar.com/news/national/trinamool-congress-name-and-symbol-frozen-mamata-moves-supreme-court</link><comments>https://www.maalaimalar.com/news/national/trinamool-congress-name-and-symbol-frozen-mamata-moves-supreme-court#comments</comments><guid isPermaLink="false">5ee7450d-592b-43bb-a99d-a8791c1c6bea</guid><pubDate>Fri, 18 Sep 2026 19:52:40 +0000</pubDate><atom:updated>2026-09-18T19:52:40.310Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மம்தா பானர்ஜி,Mamata Banerjee,Supreme Court,trinamool congress,உச்சநீதிமன்றம்,திரிணாமுல் காங்கிரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/yf9y4fa7/tn-22.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மம்தா ]]></media:title><media:description type="html"><![CDATA[ மம்தா ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/yf9y4fa7/tn-22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை தேர்தல் ஆணையம் தற்காலிகமாக முடக்கியதை எதிர்த்து, கட்சியின் நிறுவனர் மம்தா பானர்ஜி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.</p> <p>மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜியின்<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D"> திரிணாமுல் காங்கிரஸ் </a>படுதோல்வியை சந்தித்தது. </p><p>அதன்பின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி பூசல் ஏற்பட்டது. சுமார் 60 எம்.எல்.ஏ.-க்கள் (மூன்றில் இரண்டு பங்கு) தனியாக செயல்பட முடிவு செய்தனர். இவர்கள் அரூப் ராய், ரிதப்ரதா பானர்ஜி தரப்பில் செயல்பட தொடங்கினர்.</p><p>அதேவேளையில் நாங்கள்தான் உண்மையான திரிணாமுல் காங்கிரஸ் என மம்தா பானர்ஜி தரப்பு கூறி வந்தது. இதற்கிடையே, திரிணாமுல் கட்சி எம்.பி.க்கள் 20 பேர், வேறு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சிறிய கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டார்.</p> <h2>இடைத்தேர்தல்</h2><p>மேற்கு வங்க மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் நாங்கள்தான் உண்மையான திரிணாமுல் காங்கிரஸ் என இரு தரப்பினரும் தேர்தல் ஆணையத்தின் முறையிடப்பட்டனர். இதனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னம் (இரட்டைப் பூக்கள்) சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.</p>  <h2>மம்தா அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ்</h2><p>இரண்டு தரப்பிலும் பரிந்துரை செய்த கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மம்தா பிரிவுக்கு மம்தா அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் என்ற புதிய பெயரை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அத்துடன் கால்பந்து வீரர் சின்னத்தை ஒதுக்கியுள்ளது.</p><h2>ஜனநாயக அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ்</h2><p>அரூப் ராய், ரிதப்ரதா பானர்ஜி தரப்புக்கு ஜனநாயக அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் என்ற புதிய பெயரை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இந்த தரப்புக்கு அஞ்சல் உறை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>மேற்கு வங்கம், மேகாலயா, திரிபுரா மாநிலங்களில் நடைபெறும் இடைத்தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட இந்த கட்சியின் பெயரில் இருதரப்பினரும் செயல்படுவார்கள்.</p><p>மூன்றில் இரண்டு பங்கு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் ஆதரவு இருந்தால், கட்சிக்கு உரிமை கொண்டாடும் தரப்பிற்கு சாதகமான தீர்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.</p> <h2>உச்சநீதிமன்றம் சென்ற மம்தா</h2><p>இதனிடையே தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து மம்தா பானர்ஜி சுப்ரீம் கோர்ட்டை அணுகியுள்ளார்.</p><p>தேர்தல் ஆணையத்தின் இந்த இடைக்கால உத்தரவு சட்டவிரோதமானது என்றும், கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்தும் உரிமையை பறிக்க முடியாது என்றும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பெண் குழந்தை பெற்றெடுத்த மனைவியை மருத்துவமனையில் வைத்தே சரமாரியாக தாக்கிய கணவன்</title><link>https://www.maalaimalar.com/news/national/husband-brutally-assaults-wife-right-at-the-hospital-after-she-gives-birth-to-a-baby-girl</link><comments>https://www.maalaimalar.com/news/national/husband-brutally-assaults-wife-right-at-the-hospital-after-she-gives-birth-to-a-baby-girl#comments</comments><guid isPermaLink="false">a3ba24d1-e8fc-4bd3-ac9a-8741f7713539</guid><pubDate>Fri, 18 Sep 2026 18:47:33 +0000</pubDate><atom:updated>2026-09-18T18:47:33.313Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கணவன்-மனைவி,husband and wife,பிரசவம்,childbirth,பெண் குழந்தை,Girl child</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/tfcm38fx/tn-18.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தாக்குதலுக்கு உள்ளான மனைவி ]]></media:title><media:description type="html"><![CDATA[ தாக்குதலுக்கு உள்ளான மனைவி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/tfcm38fx/tn-18.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்தியப் பிரதேசத்தில் பெண் குழந்தை பெற்றெடுத்த மனைவியை மருத்துவமனையில் வைத்தே கணவன் சரமாரியாக தாக்கிய கொடூரம் அரங்கேறியுள்ளது.</p> <p>மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள கமலா ராஜா மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவப் பிரிவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. </p><h2>பிரசவம் </h2><p>35 வயதான அந்தப் பெண் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் ஒரு பெண் - ஒரு ஆண் குழந்தை என <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">இரட்டைக் குழந்தைகளை</a> பெற்றெடுத்தார். </p><p>குழந்தை பிறப்புக்கு பின் மருத்துவமனை மகப்பேறு வார்டுக்குள் வந்த 45 வயது கணவன், </p><p>ஆண் குழந்தையை பெற்ற அதே வேளை  ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்ததால் மனைவி மீது ஆத்திரம் அடைந்துள்ளார். </p><p>தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்னர் அவரைத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் அப்பெண்ணின் முகத்தில் காயங்கள் ஏற்பட்டன.</p> <h2>விசாரணை</h2><p>அப்பெண்ணின் தந்தை, காவல்துறையிடம் அளித்த புகாரில் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி வலியுறுத்தியுள்ளார்.</p><p>கூர்மையான ஆயுதத்தால் அப்பெண் தாக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். </p><p>ஆனால் அவர் தாக்குதலின்போது தனது மனைவியின் வாயை இறுக்கமாக மூடியதாகவும், அப்போது அவரின் மோதிரம் மற்றும் நகங்களால் அப்பெண்ணின் முகத்தைக் கீறியதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>இச்சம்பவம் குறித்த விசாரணையை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பிறந்தநாள் கொண்டாட்டத்தில் முகத்தில் கேக் பூசிய  நண்பனை வெட்டிக் கொன்ற இளைஞன் </title><link>https://www.maalaimalar.com/news/national/enraged-after-having-cake-smeared-on-his-face-during-a-birthday-celebration-a-young-man-hacked-his-friend-to-death</link><comments>https://www.maalaimalar.com/news/national/enraged-after-having-cake-smeared-on-his-face-during-a-birthday-celebration-a-young-man-hacked-his-friend-to-death#comments</comments><guid isPermaLink="false">8c750727-d84b-4417-984d-58d6d2b42294</guid><pubDate>Fri, 18 Sep 2026 18:14:41 +0000</pubDate><atom:updated>2026-09-18T18:14:41.864Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜம்மு காஷ்மீர்,Murder,கொலை,BirthDay Celebration,பிறந்தநாள் கொண்டாட்டம்,Jammu &amp; Kashmir</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/o8cem7du/tn-17.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கொலை ]]></media:title><media:description type="html"><![CDATA[ பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கொலை ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/o8cem7du/tn-17.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முகத்தில் கேக் பூசப்பட்டதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், நண்பனை இளைஞர் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.</p> <p>ஜம்மு காஷ்மீர் ஜானுபூரில் அமைந்துள்ள லோயர் ரூப்நகர் பகுதியில் நேற்று இரவு சாலையோரத்தில் நீரஜ் என்ற 'அன்ஷு' தனது பிறந்தநாளைக் கொண்டாடிக்கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. </p><p>நீரஜின் சகோதரர் ரிஷு, நண்பர்கள் பவன் நாயர் என்கிற சமீர்,  ஜான் சோத்ரா, கௌரவ் சிங் மற்றும் சுகந்த் பட்டி உள்ளிட்ட நண்பர்கள் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். </p> <p>கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நீரஜ் கேக் வெட்டிக்கொண்டிருந்தபோது, ​​பவன் நாயர் நீரஜின் முகத்தில் கேக்கை பூசினார். இது வாக்குவாதத்திற்கு வழிவகுத்தது.</p><p>மற்ற நண்பர்கள் தலையிட்டுப் பிரச்சினையைத் தீர்க்க முயன்றபோதிலும், கோபமடைந்த நீரஜ் கத்தியை எடுத்து பவன் நாயரின் கழுத்தை வெட்டினார்.</p> <p>படுகாயமடைந்த பவன், உடனடியாக ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.</p><p>ஆனால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக நீரஜ் மற்றும் அவரது சகோதரர் ரிஷுவை ஜெயின்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">குற்றத்தில் </a>பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தைத் தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>எதைப்பற்றி பேசுகிறது பா. ரஞ்சித்தின் வேட்டுவம்?..  &quot;வேர்ல்ட் ஆப் வேட்டுவம்&quot; வீடியோ ரிலீஸ்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/what-is-pa-ranjiths-vettuvam-about-world-of-vettuvam-video-released</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/what-is-pa-ranjiths-vettuvam-about-world-of-vettuvam-video-released#comments</comments><guid isPermaLink="false">2140aad2-bb6c-4707-8259-05685243be8b</guid><pubDate>Fri, 18 Sep 2026 17:43:40 +0000</pubDate><atom:updated>2026-09-18T17:43:40.116Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆர்யா,Arya,பா. ரஞ்சித்,vettuvam,வேட்டுவம்,Pa. Ranjith</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/6sergqav/tn-16.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ வேட்டுவம்]]></media:title><media:description type="html"><![CDATA[ வேட்டுவம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/6sergqav/tn-16.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பா. ரஞ்சித் இயக்கும் வேட்டுவம் படத்தின் "வேர்ல்ட் ஆப் வேட்டுவம்" வீடியோ வெளியாகி உள்ளது.</p> <p>தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களுள் முக்கியமானவர் <a href="https://www.maalaimalar.com/topic/pa-ranjith">பா. ரஞ்சித்</a>, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை ஓங்கி பேசுவதும், சமூதாயத்தில் அவர்கள் படும் பிரச்சனைகள் சார்ந்த கதைகளை திரைப்படமாக கொடுத்து வருகிறார். </p><p>சமூகம் சார்ந்த படங்களை இயக்குவது மட்டுமல்லாமல், நீலம் ப்ரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல நல்ல படங்களை தயாரித்தும் வருகிறார். </p><p>அம்பேத்கர் மற்றும் புத்தரின் சிந்தனையையும், சித்தாந்தத்தையும் அதிகம் பேசுபவர் ரஞ்சித். நீலம் குழுமம் என்ற அமைப்பின் மூலம் நூலகம், சிறப்பு திரையிடல், மார்கழி மக்களிசை என பல மாற்றத்தை சமூகத்தில் உருவாக்கி வருகிறார்.</p> <h2>வேட்டுவம்</h2><p>கடைசியாக சீயான் விக்ரம் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தை இயக்கினார். திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து பா.ரஞ்சித் தற்பொழுது <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D">வேட்டுவம் </a>திரைப்படத்தை இயக்கி வருகிறார்.</p><p>இப்படத்தின் கதாநாயகனாக கெத்து தினேஷ் மற்றும் ஆர்யா வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். </p><p>இப்படம் ஓரு மாடர்ன் கேங்க்ஸ்டர் டிராமாவாக உருவாக இருக்கிறது. மணிகண்டன் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.</p><p>இப்படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக சோபிதா துலிபாலா நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.</p> <h2>வேர்ல்ட் ஆப் வேட்டுவம்</h2><p>இந்நிலையில் வேட்டுவம் படத்தில் கதைக்களம் என்ன? என்பது குறித்த விளக்கத்துடன் மேக்கிங் வீடியோ பாணியில் "வேர்ல்ட் ஆப் வேட்டுவம்" வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.</p><p>படத்தில் ஒரு பதவிக்கான போட்டி நடக்கிறது என்றும் அதில் வெல்லப்போவது யார்? என்பதாக கதை இருக்கும் என ரஞ்சித் வீடியோவில் பேசுகிறார்.</p><p>படம் வரலாற்று பின்னணியையும் நிகழ்காலத்தையும் கலந்து எடுக்கப்பட்டுள்ளது வீடியோவில் தெரிகிறது. இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/oZnAxf_5qYw"></iframe></figure>]]></content:encoded></item><item><title>ஜேசன் சஞ்சய் இயக்கிய &apos;சிக்மா&apos; டிரெய்லர் வெளியீடு</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/trailer-release-of-sigma-directed-by-jason-sanjay</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/trailer-release-of-sigma-directed-by-jason-sanjay#comments</comments><guid isPermaLink="false">81b6e0f1-3f8a-4724-90e7-d53f4123cf05</guid><pubDate>Fri, 18 Sep 2026 17:18:10 +0000</pubDate><atom:updated>2026-09-18T17:18:10.170Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>jason sanjay,சந்தீப் கிஷன்,Sundeep Kishan,ஜேசன் சஞ்சய்,சிக்மா,sigma</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/6so6q7ag/tn-15.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சிக்மா]]></media:title><media:description type="html"><![CDATA[ சிக்மா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/6so6q7ag/tn-15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள சிக்மா படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.</p> <p>முதலமைச்சர் விஜய்யின் மகனான <a href="https://www.maalaimalar.com/topic/jason-sanjay">ஜேசன் சஞ்சய்</a> இயக்கத்தில், சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட், சம்பத் ராஜ், ராஜு சுந்தரம் உள்ளிட்டோர் நடித்துள்ளப் படம் சிக்மா. </p><p>லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜி.கே.தமிழ்க்குமரன் தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.</p><p>ஆக்சன் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.</p><p>இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. </p> <h2>டிரெய்லர் ரிலீஸ்</h2><p>படத்தின் முதல் பாடலான சிக்மா ஸ்டைல், இரண்டாவது பாடலான அய்யய்யோ அம்மாடி ஏற்கனவே வெளியாகி இருந்தது.</p><p>‘சிக்மா’ படத்தில் ஒரு சிறப்பு பாடலில் ஜேசன் சஞ்சய், கேத்தரின் தெரசா நடனமாடி உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.</p><p>இந்நிலையில் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி கவனம் பெற்று வருகிறது.</p><h2>ரிலீஸ்</h2><p>படம் முன்னதாக ஜூலை.31ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் பின் ஒத்திவைக்கப்பட்டது.</p><p>தொடர்ந்து காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2 அன்று ரிலீசாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>ஜேசன் சஞ்சய்</h2><p>ஜேசன் சஞ்சய் கனடாவில் உள்ள டொராண்டோ பிலிம் ஸ்கூலில் திரைப்படத் தயாரிப்பு டிப்ளமோ படித்துள்ளார். தொடர்ந்து லண்டனில் திரைக்கதை எழுதுவது தொடர்பான பி.ஏ. ஹானர்ஸ் படித்துள்ளார். சில குறும்படங்களை இயக்கியுள்ளார்.</p> <figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/hgnVXBtuWe8"></iframe></figure>]]></content:encoded></item><item><title>தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆய்வுக் கூட்டம் நிறைவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thaimaman-thanga-mothiram-maternal-uncles-gold-ring-scheme-review-meeting-chaired-by-chief-minister-vijay-concludes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thaimaman-thanga-mothiram-maternal-uncles-gold-ring-scheme-review-meeting-chaired-by-chief-minister-vijay-concludes#comments</comments><guid isPermaLink="false">aad04445-e3cd-4e37-b461-9820ba755831</guid><pubDate>Fri, 18 Sep 2026 16:59:01 +0000</pubDate><atom:updated>2026-09-18T16:59:01.431Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,தவெக அரசு,தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/rcposhf7/tn-14.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய் ]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/rcposhf7/tn-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத் தொடக்கம் மற்றும் செயல்படுத்துதல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.  </p> <p>முதலமைச்சர் ஜோசப் விஜய் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-to-launch-thaaymaaman-gold-ring-scheme-on-28th">தாய்மாமன் தங்க மோதிரம் </a>திட்டத்தை 28.9.2026 அன்று தொடங்கி வைக்கிறார்.</p><p>இந்நிலையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத் தொடக்கம் மற்றும் செயல்படுத்துதல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.</p> <p>அரசு தரப்பில் இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், </p><p>"<a href="https://www.maalaimalar.com/topic/tvk-govt">தமிழ்நாடு அரசு</a> தாய்-சேய் நலனை மேம்படுத்துவதற்கு மிகுந்த முன்னுரிமை அளித்து வருகிறது. </p><p>கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதியுதவி, இலவச பிரசவம் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தை பராமரிப்பு சேவைகள், அவசர மகப்பேறு சிகிச்சை, ஊட்டச்சத்து அளித்தல், பிரசவத்திற்காக மருத்துவமனையைத் திட்டமிடும் முறை, கர்ப்பிணி மற்றும் குழந்தைகள் கூட்டுக் கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு மென்பொருள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு மாநிலத்தில் தாய்-சேய் நலக் குறியீடுகள் குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன.</p> <h2>தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்</h2><p>தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்ந்த சேவைகளில் மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும், தமிழர் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தில், தாய்மாமன் சீர்மரபைப் பிரதிபலிக்கும் வகையிலும் வெற்றித் தமிழகம் தொலைநோக்குத் திட்டத்தின்படி, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளைச் சிறப்பிக்கும் வகையில் “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” என்ற சிறப்பு நலத்திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.</p><p>இத்திட்டத்தின் கீழ், 22.06.2026 அன்று முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்கமோதிரம் வழங்கப்படும். இதற்கான அரசாணை 23.06.2026 அன்று வெளியிடப்பட்டது.</p> <h2>பிரசவங்கள்</h2><p>தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 7.80 இலட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. இவற்றில் 99.9 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன என்று தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு-6ல்பதிவாகியுள்ளது. </p><p>இவற்றில் 4.20 இலட்சம் பிரசவங்கள் (53%) அரசு மருத்துவமனைகளில் நிகழ்கின்றன. அதில் 90 சதவீதம் சீமாங் மையங்களில் (CEmONC Centres) நடைபெறுகின்றன. </p><p>இதன்மூலம், பாதுகாப்பான பிரசவம் மற்றும் ஆரோக்கியமான குழந்தைகளின் பிறப்பை உறுதி செய்வதில் பொது சுகாதார அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.</p><h2>தங்க மோதிரம்</h2><p>தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒரு கிராம் எடை கொண்ட தங்க மோதிரம் வழங்கப்படும். </p><p>அதற்கென தனித்துவமான வரிசை எண்ணும் (Unique Serial Number), சேதப்படுத்த முடியாத பாதுகாப்புப் பெட்டகமும் (Tamper-proof Packaging) வழங்கப்படும். </p><p>இத்திட்டத்திற்காக முதல் தவணையாக 1,28,000 தங்கமோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.</p><p>தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் தாய்மார்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள். PICMEயில் பதிவு செய்யப்பட்டு RCH அடையாள எண் பெற்றிருக்க வேண்டும்.</p><p>இத்திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 28.09.2026 அன்று தொடங்கி வைக்கப்படவுள்ளது. மேலும், அரசு மருத்துவமனைகளில் 22.06.2026 முதல், திட்டம் தொடங்கப்படும் நாள் வரை பிறக்கும் குழந்தைகளுக்கு 107 மையங்களில் தினமும்100 குழந்தைகள் வீதம் 28.09.2026 முதல் வழங்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. </p><p>இத்திட்டம் முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்படும் நாளிலிருந்து அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும்போது தங்கமோதிரம் வழங்கப்படும்.</p> <h2>செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் தவிர்த்து</h2><p>இந்தியத் தேர்தல் ஆணையத்தால் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், அத்தொகுதிகள் இடம்பெற்றுள்ள செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களைத் தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் இத்திட்டம் 28.9.2026 அன்று தொடங்கி வைக்கப்படும்.</p><p>இத்திட்டம், அரசு மருத்துவ சேவைகளில் மக்களின் நம்பிக்கையை அதிகரிப்பதோடு, மருத்துவமனைகளில் பாதுகாப்பான பிரசவமுறையை ஊக்குவிப்பதாகவும், தாய்-சேய் நலப் பாதுகாப்பை வலுப்படுத்துவதாகவும், குழந்தை நலனில் அரசின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.</p> <h2>கூட்டம் </h2><p>இக்கூட்டத்தில், மாண்புமிகு மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் கோ.க. அருண்ராஜ், தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் திரு. மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் மரு. தாரேஸ் அகமது, இ.ஆ.ப., தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநர் மரு. அனீஷ் சேகர், இ.ஆ.ப., நகராட்சி நிர்வாக இயக்குநர் திரு.பி.மதுசூதன் ரெட்டி, இ.ஆ.ப., தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் மரு. எஸ். உமா, இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மரு. ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>நந்திகிராம் இடைத்தேர்தல்: மம்தா ஆதரவு தெரிவித்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் அதிரடி கைது</title><link>https://www.maalaimalar.com/news/national/congress-nandigram-pick-arrested-after-mamata-banerjee-announces-support</link><comments>https://www.maalaimalar.com/news/national/congress-nandigram-pick-arrested-after-mamata-banerjee-announces-support#comments</comments><guid isPermaLink="false">87fb0aaf-2fc5-4ad9-a968-5824a0d3bd81</guid><pubDate>Fri, 18 Sep 2026 16:29:50 +0000</pubDate><atom:updated>2026-09-18T16:29:50.941Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,மேற்கு வங்கம்,west bengal,Nandigram,நந்திகிராம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/qgevzmyc/CongressParty001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காங்கிரஸ் வேட்பாளர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/qgevzmyc/CongressParty001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்கம் மாநிலம் நந்திகிராம் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. மேற்கு வங்கம் மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இரண்டாக பிரிந்துள்ளது. மம்தா பானர்ஜி, மம்தா அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் என்ற பெயரில் கட்சியை பயன்படுத்த தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.</p><h2>2007-ம் ஆண்டு கொலை வழக்கில் கைது</h2><p>இதற்கிடையே நந்திகிராம் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாக மம்தா பானர்ஜி தெரிவித்தார். இவர் தெரிவித்த சில மணி நேரங்களில் நந்திகிராம் காங்கிரஸ் வேட்பாளர் மிலன் பிரதானை போலீசார் கைது செய்துள்ளது. அவர் மீதான பழைய கொலை வழக்கில் கைது செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளார்.</p><p>2007-ம் ஆண்டு நந்திகிராம் நிலம் கையகப்படுத்துதலுக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின்போது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தற்போது போலீசார் கைது செய்துள்ளனர்.</p><p>இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் கே.சி. வேணுகோபால் கூறுகையில் "பாஜக-வின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு வங்கத்தில் ஜனநாயகம் 'வென்டிலேட்டர்' உதவியுடன் உயிர்வாழும் நிலையில் உள்ளது. எதிர்க்கட்சிகளே இல்லாத இந்தியாவை (Opposition-Mukt Bharat) உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, நமது மகத்தான அரசியலமைப்பு சார்ந்த ஜனநாயகத்தை ஒரு கேலிக்கூத்தான நாடாக (Banana Republic) மாற்றும் நடவடிக்கையில் பாஜக ஈடுபட்டுள்ளது.</p><h2>ஜனநாயகத்தைக் கைப்பற்ற பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்- காங்கிரஸ்</h2><p>மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்த சில நிமிடங்களிலேயே, 2007-ம் ஆண்டைச் சேர்ந்த, நீண்ட காலமாக முடங்கிக் கிடந்த ஒரு வழக்கை கையில் எடுத்து எங்கள் வேட்பாளரை கைது செய்தது, ஜனநாயகத்தைக் கைப்பற்ற பா.ஜ.க. எந்த எல்லைக்கும் செல்லும் என்பதையே காட்டுகிறது. அடக்குமுறை மிக்க ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்துப் போராடி அவர்களை வெளியேற்றிய கட்சி எங்களுடையது. எனவே, அவர்களைப் போலச் செயல்படும் இவர்களின் இத்தகைய மலிவான மிரட்டல் உத்திகள் எங்களை ஒருபோதும் அச்சுறுத்த முடியாது. அதிகாரத்தின் இந்த தவறான பயன்பாட்டை எதிர்த்து நாங்கள் உறுதியாக நிற்போம். அத்துடன் பாஜகவின் தோல்வியையும் உறுதி செய்வோம்" என்றார்.</p>]]></content:encoded></item><item><title>நவோதயா பள்ளிகள் வேண்டாம்: தேவைப்பட்டால் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடர் கூட்டி தீர்மானம் நிறைவேற்றுவோம்- உதயநிதி ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-stalin-says-no-to-navodaya-schools-special-assembly-session-if-needed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-stalin-says-no-to-navodaya-schools-special-assembly-session-if-needed#comments</comments><guid isPermaLink="false">9f77bde9-7ec9-42c1-ae1f-248735ee20c6</guid><pubDate>Fri, 18 Sep 2026 15:22:50 +0000</pubDate><atom:updated>2026-09-18T15:22:50.564Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,நவோதயா பள்ளிகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/4kfyeqvi/UdhayanidhiStalin.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/4kfyeqvi/UdhayanidhiStalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தி மொழித் திணிப்பு வேண்டாம் என்று கூறுவதாலேயே தமிழர்கள் தனி நாடாக இயங்குவதாக எடுத்துக்கொள்ள முடியாது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.</p><p>தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>நவோதயா பள்ளிகளைத் தமிழ்நாட்டில் அனுமதிப்பது தொடர்பான வழக்கில் தமிழ்நாடு, இந்திக்கு எதிரான தனது மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். மாநிலங்கள் தனி நாடுகளாக இயங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருக்கிறது.</p><p>இந்த நேரத்தில், நாங்கள் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம். இந்தி உள்ளிட்ட எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் இல்லை. தமிழ்நாடு தனி நாடாக இயங்கவில்லை. தனித்தன்மையுடன் இயங்குகிறது.</p><h2>இந்தியைக் கற்பதற்கும் நாட்டுப் பற்றுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை</h2><p>இந்தியைத் திணிப்பதுதான் தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து தனித்தீவாக அந்நியப்படுத்தும். வேற்றுமையில் ஒற்றுமை என்பதை மதித்து, அந்தந்த மாநிலங்கள் தாங்கள் விரும்பும் மொழிக் கொள்கையைப் பின்பற்ற அனுமதிப்பதே, இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு மேலும் வலிமை சேர்ப்பதாக அமையும்.</p><p>இந்திய சீனப் போர், வங்கதேச விடுதலைப் போர், கார்கில் போர், குஜராத் நிலநடுக்கம் என நம் நாடு சந்தித்த ஒவ்வொரு இக்கட்டான சூழலிலும் தமிழர்கள் தங்களுடைய நாட்டுப்பற்றை, வேறெந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும் குறைவில்லாத வகையில் வெளிப்படுத்தியுள்ளனர்.</p><p>எனவே, இந்தி மொழித் திணிப்பு வேண்டாம் என்று கூறுவதாலேயே தமிழர்கள் தனி நாடாக இயங்குவதாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்தியைக் கற்பதற்கும் நாட்டுப் பற்றுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.</p><h2>இந்தி தெரியாததால் தமிழ்நாடு எந்தவிதத்திலும் பின்னடைவைச் சந்திக்கவில்லை</h2><p>இருமொழிக் கொள்கையைப் பின்பற்றும் தமிழ்நாடுதான், அனைத்துத் துறைகளிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. உயர்கல்விச் சேர்க்கையில் முதலிடம் வகிக்கிறது. நாட்டிலேயே, தொழிற்சாலைகளில் பெண்கள் அதிகம் பணிபுரியும் மாநிலமாகத் திகழ்கிறது. நோபல் விருதாளர்கள் முதல் இஸ்ரோவின் முன்னணி அறிவியலாளர்கள் வரை, இந்தி தெரியாமலேயே தமிழர்கள் சாதனைகளைப் படைத்துள்ளனர்.</p><p>எனவே, இந்தி தெரியாததால் தமிழ்நாடு எந்தவிதத்திலும் பின்னடைவைச் சந்திக்கவில்லை. மாறாக, தமிழ்நாடு மற்ற மாநிலங்களைக் காட்டிலும் சிறப்பான வளர்ச்சியை எட்டியிருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சி இன்ஜினாகத் தமிழ்நாடு விளங்குகிறது.</p><p>நவோதயா பள்ளிகளை அனுமதிப்பது தொடர்பான வழக்கில், முந்தைய திராவிட மாடல் அரசின் சார்பில் உறுதியான வாதங்களை எடுத்து வைத்தோம்.</p><h2>அரசின் கொள்கையை அப்படியே நிறைவேற்ற வேண்டிய தேவையில்லை</h2><p>அரசியலமைப்புச் சட்டத்தில், கல்வி ஒத்திசைவுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதால், ஒன்றிய அரசின் கொள்கையை அப்படியே நிறைவேற்ற வேண்டிய தேவையில்லை. தமிழ்நாட்டில் ஏற்கனவே மாதிரிப் பள்ளிகள் எனும், உண்டு-உறைவிடப் பள்ளிகள் மூலமாக அனைத்து மாவட்டங்களிலும் பின்தங்கிய ஏழை, எளிய மாணவர்களுக்குத் தரமான கல்வி வழங்கப்பட்டுவருகிறது.</p><p>அப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளிலும் சிறந்த முறையில் வெற்றிபெற்று, நாட்டின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்றுவருகின்றனர். இந்நிலையில், நவோதயா பள்ளிகளுக்காகத் தனியாக இடம் ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லை. நவோதயா பள்ளிகளுக்கு அளிக்கும் நிதியைத் தமிழ்நாடு அரசிடம் அளித்தால், தற்போது நம்மிடம் உள்ள கட்டமைப்பைக் கொண்டே சிறப்பாகச் செயல்பட முடியும்.</p><p>மேலும், மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத காரணத்தாலேயே, சமக்ர சிக்‌ஷா திட்டத்தின்கீழ், தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டிய 3,548 கோடி ரூபாயை ஒன்றிய அரசு நிலுவையில் வைத்துள்ளது. தமிழ்நாட்டு மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, அந்த நிதியை விடுவிக்க வேண்டும் எனப் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தோம்.</p><p>தற்போது அந்த வழக்கில், தமிழ்நாட்டில் புதிதாக அமைந்துள்ள அரசும் நமது இருமொழிக் கொள்கையைப் பின்பற்றி, நவோதயா பள்ளிகளைத் தமிழ்நாட்டில் அனுமதிக்கத் தேவையில்லை என்பதைத் தெரிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.</p><h2>உறுதியான வாதங்களை எடுத்து வைத்திட வேண்டும்</h2><p>இந்த நிலைப்பாட்டில், தற்போதைய அரசு தொடர்ந்து உறுதியான வாதங்களை எடுத்து வைத்திட வேண்டும். மேலும், தேவை எழுந்தால் உடனடியாகச் சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரைக் கூட்டி, நவோதயா பள்ளிகளைத் தமிழ்நாட்டில் அனுமதிக்க முடியாது எனும் தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை வலியுறுத்தி, தனித் தீர்மானம் இயற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.</p><p>பேரறிஞர் அண்ணா அவர்களால் இம்மண்ணில் விதைக்கப்பட்ட இருமொழிக் கொள்கையை, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து உச்ச நீதிமன்றத்தில் நிலைநாட்டுவோம்! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகளைத் தடுத்து நிறுத்துவோம்!</p><p>இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>2வது போட்டியிலும் வெற்றி: ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/australia-beat-zimbabwe-in-second-odi</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/australia-beat-zimbabwe-in-second-odi#comments</comments><guid isPermaLink="false">8c68d62b-fa00-41e2-bf4c-814d874c29cc</guid><pubDate>Fri, 18 Sep 2026 15:18:49 +0000</pubDate><atom:updated>2026-09-18T15:18:49.091Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Travis Head,டிராவிஸ் ஹெட்,ZIMvAUS,ஆஸ்திரேலியா ஜிம்பாப்வே தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/kk5cgns9/zampa.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ adam zampa]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/kk5cgns9/zampa.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 84 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.</strong></em></p><p>ஆஸ்திரேலிய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.</p><p>இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி ஹராரேயில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பவுலிங் தேர்வு செய்தது.</p><p>அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 130 ரன் சேர்த்த நிலையில் மிட்செல் மார்ஷ் 53 ரன்னில் அவுட்டானார்.</p><h2>சதமடித்த டிராவிஸ் ஹெட்</h2><p>2-வது விக்கெட்டுக்கு டிராவிஸ் ஹெட் உடன் கூப்பர் கானலி இணைந்தார். இந்த ஜோடி 60 ரன்கள் சேர்த்த நிலையில் டிராவிஸ் ஹெட் 112 ரன்னில் வெளியேறினார். கூப்பர் கானலி பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். கடைசி கட்டத்தில் ஆலிவர் பீக் அதிரடியாக ஆடி 18 பந்தில் 41 ரன் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.</p><h2>பிராட் இவான்ஸ் 3 விக்கெட்</h2><p>ஜிம்பாப்வே சார்பில் பிராட் இவான்ஸ் 3 விக்கெட்டும், மசகட்சா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p>இதையடுத்து, 357 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் ஜிம்பாப்வே அணியின் விக்கெட்கள் விழுந்தன.</p><p>அதிகபட்சமாக சிக்கந்தர் ராசா 45 ரன்னும், பிரெண்டன் டெய்லர் 39 ரன்னும், கிரெய்க் எர்வின் 38 ரன்னும், இன்னசன்ட் காலா 34 ரன்னும், பென் கர்ரன் 30 ரன்னும் எடுத்தனர்.</p><p>இறுதியில் ஜிம்பாப்வே அணி 48.3 ஓவரில் 272 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 84 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது.</p><h2>டிராவிஸ் ஹெட் ஆட்ட நாயகன்</h2><p>ஆஸ்திரேலியா அணி சார்பில் ஹேசில்வுட், கூப்பர் கானலி, ஆடம் ஜாம்பா, மாட் ரென்ஷா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது டிராவிஸ் ஹெட்டுக்கு வழங்கப்பட்டது.</p>]]></content:encoded></item></channel></rss>