<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 24 Aug 2026 10:01:40 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: கூட்டணி கட்சிகள் இல்லை என்றால் 10 இடங்களில் கூட திமுக வென்றிருக்காது: அமைச்சர் ஆதவ் - 24 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-24-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-24-august-2026#comments</comments><guid isPermaLink="false">bc88f166-bbf3-4480-890b-158b4edebe4c</guid><pubDate>Mon, 24 Aug 2026 03:52:26 +0000</pubDate><atom:updated>2026-08-24T08:52:10.427Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/ijytvjbh/aadhav.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/ijytvjbh/aadhav.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேகதாது அணை விவகாரம் என்றாலும் முல்லைப்பெரியாறு அணை விவகாரம் என்றாலும் சரி தமிழ்நாட்டை பொறுத்தவரை நாங்கள் கூட்டணி மந்திரி சபையில் இருக்கிறோம். </p><p>தமிழக முதலமைச்சர் எடுக்கும் முடிவே இறுதியானது. முதலமைச்சருடன் காங்கிரஸ் கட்சி இணக்கமாக உள்ளது - அமைச்சர் விஸ்வநாதன்</p><p>11 அமைச்சர்களை பெற்றுக்கொண்டு காங்கிரசை ஆதரித்தது திமுக - செங்கோட்டையன்</p><p>தேர்தலில் வெற்றியும் தோல்வியும் மக்களால் வந்தது. வேறு விவாதங்கள் வேண்டாம் - சபாநாயகர்</p><p>எங்களை விட்டு தனியாக நின்று காங்கிரஸ் வெற்றி பெற்றது உண்டா? </p><p>தமிழ்நாட்டில் 10 இடங்களில் காங்கிரசை வெற்றி பெற வைத்தது திமுக.</p><p>ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என அறிவித்தது திமுக - கே.என்.நேரு</p> <p>2024 திமுகவிற்கு 40க்கு 40 வெற்றி கிடைத்ததற்கு காரணம் காங்கிரஸ் கட்சி தான் - தாரகை கத்பட்</p><p>யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பது தனிப்பட்ட முடிவு - அமைச்சர் ஆதவ்</p><p>உங்களுக்கு அவ்வளவு ரோஷம் இருந்தால் அவர்களை வெளியில் அனுப்புங்கள் - கே.என்.நேரு</p><p>எங்கள் கூட்டணி கட்சிகளால் தான் உங்கள் ஆட்சி அமைந்துள்ளது - கே.என்.நேரு</p><p>பூஜியத்தில் இருந்து வந்தது திமுக. எதையும் எதிர்கொள்ள திமுக தயார் - கோவி.செழியன்</p><p>திமுக கூட்டணி கட்சிகளின் வாக்குகள் 15 சதவீதம் உள்ளது - அமைச்சர் ஆதவ்</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உரை</h2><p>ஒரு தேர்தலிலாவது தனித்து நின்று 50 இடங்களில் வென்று காட்டுங்கள்.</p><p>திமுக எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்க கூட்டணி கட்சிகள் தான் காரணம்.</p><p>கூட்டணி கட்சிகள் இல்லை என்றால் 10 இடங்களில் கூட திமுக வென்றிருக்காது.</p><p>சென்னையில் 16 தொகுதிகளில் 14 இடங்களில் தோல்வியை சந்தித்துள்ளது திமுக.</p><p>தி.நகரில் உள்ள குளோபல் 360 என்ற அலுவலகத்தில் வைத்து என்னிடம் வாங்கினர் - அமைச்சர் மரிய வில்சன்</p><p>கடந்த ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில் முறைகேடு நடந்துள்ளதாக நிதி அமைச்சர் மரிய வில்சன் குற்றச்சாட்டு.</p><p>கடந்த திமுக ஆட்சி காலத்தில் என்னிடம் லஞ்சம் வாங்கப்பட்டது - அமைச்சர் மரிய வில்சன்</p><h2>அமைச்சர் ராஜ்மோகன் உரை</h2><p>துப்புரவு தூய்மை தொழிலாளர்கள் போராட்டம் நடந்து கொண்டு வருகிறது. தொழிலாளர்களிடம் யாரும் பேசவில்லை என்று உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.</p><p>இந்த போராட்டத்தை முன்னெடுத்து கொண்டிருக்கும் பாரதி அவர்களோடு நானும், ஆதவ் அர்ஜூனாவும் பேசினோம். </p><p>இன்று மாலை தூய்மை பணியாளர்களை நேரில் சந்தித்து அவர்களை பல வகையான கோரிக்கை, நீண்ட நெடு நாட்களாக இருக்கும் கோரிக்கைகள் பேசி தீர்த்து வைக்கப்படும்.</p> <p>எந்த கட்சி, எந்த ஆட்சியை பற்றியும் நான் பேசவில்லை, மக்கள் எதை எதிர்பார்க்கின்றனரோ அதை தான் சொல்கிறேன்.</p><p>அரசு கல்வி என்பது கருணை அடிப்படையிலான ஒன்று அல்ல, அது உரிமை அடிப்படையிலான ஒன்று.</p><p>காமராஜர் காலத்தில் படித்ததால் தான் எதிர்தரப்பினர் படித்தபோது அரசு பள்ளி நல்ல நிலையில் இருந்தது - ஆதவ்</p><p>அரசு பள்ளிகளில் கழிப்பறை இல்லாததை போல் தோற்றத்தை உருவாக்க முயற்சி.</p><p>கழிப்பறையே கட்டவில்லை என்ற தோற்றத்தை உருவாக்க அமைச்சர்கள் முயற்சிக்கின்றனர், அது தவறு - திமுக எம்எல்ஏ எம்ஆர்கே.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு</p><p>மாணவிகளுக்கு கழிப்பறை என்பது தான் முதல் சேவை. ஏற்கனவே அமைச்சர் ஆதவுடன் ஆலோசனை நடத்தி உள்ளேன்.</p><p>பள்ளிக்கட்டிடங்கள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு பொதுப்பணித்துறை அமைச்சருக்கு  அமைச்சர் ராஜ்மோகன் கோரிக்கை.</p><p>அரசு பள்ளி, கல்லூரி கட்டிடங்களை பராமரிப்பதில் எந்த ஊழலும் இருக்க கூடாது. </p><p>பொதுப்பணித்துறையில் கடந்த 30 ஆண்டுக்களுக்கான தகவலை எடுத்துக்கொண்டிருக்கிறோம்.</p><p>சர்வே 40% நிறைவடைந்த நிலையில் முழு பணியும் நிறைவடைய மேலும் 2 மாதங்கள் ஆகும். எம்எல்ஏக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.</p><p>கல்வி நிறுவன கட்டிடங்கள் 3 ஆக பிரிப்பு. சிவப்பு நிறம் பயன்படுத்த முடியாத கட்டிடம், மஞ்சள் நிறம் சீரமைக்க வேண்டிய கட்டிடம்.</p><p>அடுத்த 5 ஆண்டுகளுக்கு பராமரிப்பு தேவைப்படாத பள்ளி, கல்லூரி கட்டிடங்களில் பச்சை ஸ்டிக்கர் ஒட்டப்படும் - அமைச்சர் ஆதவ்</p><p>பள்ளிக்கல்வித்துறை, பொதுப்பணித்துறை இணைந்து 234 தொகுதியிலும் பள்ளி, கல்லூரி கட்டிடங்களை சீரமைக்க நடவடிக்கை.</p><p>எம்எல்ஏக்கள் அவரவர் தொகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.</p><p>பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் உண்மை நிலை குறித்து அறிக்கை அளித்து தேவையான நிதி குறித்தும் தெரிவிக்கலாம்.</p><p>ஓராண்டிற்குள் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளி, கல்லூரிகளை தரம் உயர்த்த வேண்டும்.</p><p>அரசு பள்ளி, கல்லூரிகளை தரம் உயர்த்துவதில் அந்தந்த தொகுதி எம்எல்ஏக்கள் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும் - ஆதவ் அர்ஜூனா</p><p>பெண்கள் படிக்கும் பல பள்ளிகளில் கழிவறை வசதிகள் இல்லை.</p><p> பள்ளிகளின் பராமரிப்பு பணி பொதுப்பணித்துறையின் கீழ் வருகிறது.</p><p>நான் பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தே பள்ளி, கல்லூரி கட்டிடங்கள் சீரமைக்கப்படவில்லை.</p><p>நான் 10-ம் வகுப்பு படித்தபோது இடிந்து விழுந்த பள்ளிக்கட்டிடம் 12-ம் வகுப்பு முடிக்கும் வரையிலும் கூட கட்டப்படவில்லை - ஆதவ் அர்ஜூனா</p><h2>சட்டசபையில் பொதுப்பணித்துறை ஆதவ் அர்ஜூனா உரை</h2><p>பொதுப்பணித்துறையில் பராமரிப்பு பணியில் அதிக நிதிக் கசிவு.</p><p>நிதிக் கசிவு தொடர்பாக 30 நாட்களாக தகவல்களை திரட்டி வருகிறோம்.</p> <p>பல திட்டங்கள், மேம்பாலங்கள், பூங்காக்கள் உருவாக்கியது அதிமுக ஆட்சியில் தான் - எடப்பாடி பழனிசாமி உரை</p><p>கோவைக்கான சிப்காட் திட்டத்தை திமுக கைவிட்டு விட்டது.</p><p>கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டம் தொடர்பாக மத்திய அரசிடம் முதலமைச்சர் விஜய் பேச வேண்டும் - எஸ்.பி.வேலுமணி</p><p>மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் என குறிப்பிட்டு சட்டசபையில் உரையை தொடங்கினார் அதிமுக எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி</p><p>கோவை மாவட்டத்தையே மாற்றி அமைத்தது அதிமுக.</p><p>கோவை மெட்ரோ ரெயில் திட்டம் முக்கியமான திட்டம்.</p><p>அத்திக்கடவு - அவிநாசி குடிநீர் திட்டத்தை கிடப்பில் போட்டது திமுக.</p><p>அதிமுக ஆட்சியில் கட்டிய பாலத்திற்கு ஜிடி நாயுடு பெயரை வைத்தது திமுக.</p><p>திமுக ஆட்சியில் கோவைக்கு எதுவும் செய்யவில்லை.</p> <p>வியாழக்கிழமையில் இருந்து கேள்வி நேரம் உண்டு - சபாநாயகர் அறிவிப்பு</p><p>பேச அனுமதி கேட்டபோது பல முறை முகத்தை கூட திருப்ப மாட்டார், தற்போதைய சபாநாயகர் போல் கூடுதல் வாய்ப்பு தரமாட்டார் - எஸ்.பி.வேலுமணி</p><p>கடந்த முறை எதிர்க்கட்சியான அதிமுக கொறடாவாக இருந்தபோது அவரும் பேசினார், மற்றவருக்கும் அனுமதி பெற்று தந்தார் - கே.என்.நேரு</p><p>மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் எஸ்.பி.வேலுமணி உரை</p><p>கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சியினர் பேச அனுமதிக்கவில்லை என்று எஸ்.பி.வேலுமணி கூறியதற்கு திமுக தரப்பில் எதிர்ப்பு</p><p>கன்னி பேச்சு என்பதை அறிமுக உரை என்று மாற்றும் வகையில் நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு அமைச்சர் ராஜ்மோகன் வேண்டுகோள்</p><p>எம்எல்ஏக்கள் முதன்முறையாக சட்டசபையில் பேசுவதை கன்னிப்பேச்சு எனக்குறிப்பிட வேண்டாம் - சவுமியா வேண்டுகோள்</p><p>கன்னிப்பேச்சு என்ற வார்த்தைக்கு பதிலாக அறிமுக உரை என்ற வார்த்தை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என சவுமியா கோரிக்கை</p><p>கற்றலில் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு என தனி பாடத்திட்டம் கொண்டுவர வேண்டும் - எம்எல்ஏ சிந்து</p><h2>மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் குடியாத்தம் தவெக எம்எல்ஏ சிந்து உரை</h2><p>என் வெற்றிக்கு பின்னால் இருப்பது என் கணவர்.</p><p>சீரியலில் மூழ்கி இருந்த குடும்பங்களை சட்டசபையை பார்க்க வைத்தவர் முதலமைச்சர்.</p><p>நியமன தேர்வுகள் இன்றி சீனியாரிட்டி, தகுதி அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்.</p><p>அரசு பள்ளிகளில் மீண்டும் நன்னடத்தை வகுப்புகளை தொடங்க வேண்டும், பள்ளிகளில் RO குடிநீர் வழங்க வேண்டும்.</p><p>தண்ணீர் பிரச்சனை என்பது இயற்கையாக வருவது தான் - எ.வ.வேலு</p><p>தொகுதி மக்களின் கருத்தைதான் உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய் கூறினார் - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>58-ம் கால்வாய்க்கு திமுக ஆட்சியில் தண்ணீர் கொண்டுவரவில்லை - உசிலம்பட்டி தவெக எம்எல்ஏ விஜய்</p><p>மதுரை மாவட்டத்தில் செழிப்பாக இருக்கும் தொகுதிகள் சோழவந்தான், உசிலம்பட்டி - திமுக</p><p>கன்னிப்பேச்சாக இருக்கலாம்... ஆனால் குற்றம்சாட்டிக்கொண்டே இருந்தால் எப்படி? - எ.வ.வேலு</p><p>தவெக ஆட்சிக்கு வரவில்லை என்றால் உசிலம்பட்டி காணாமல் போய் இருக்கும் - தவெக எம்எல்ஏ விஜய்</p><p>மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் - தவெக எம்எல்ஏ விஜய்  உரையாற்றினார்</p><p>நகர்ப்புற வசதிகளை கிராமங்களுக்கு மேம்படுத்த மத்திய அரசு ரூ.1000 கோடி நிதி தந்தது.</p><p>உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் ஜனவரியுடன் முடிகிறது - கே.என்.நேரு</p> <p>எங்களுடன் இருந்த அதிகாரிகள் தான் முழுமையாக இன்றும் நகராட்சி துறையில் பணியாற்றுகின்றனர் - கே.என்.நேரு</p><p>தொடர முடியாத நிலையில் உள்ள குடிநீர் திட்டங்களை மீண்டும் தொடர வேண்டும்.</p><p>சென்னையில் 540 இடங்களில் கழிவுநீர் கலக்கிறது. 540 இடங்களிலும் குழாய்கள் அமைத்து சாலைகளை தோண்டி பணி செய்ய வேண்டும் - கே.என்.நேரு</p><p>பாமக சட்டமன்ற குழு தலைவர் சவுமியா அன்புமணி எழுப்பிய கேள்விக்கு கே.என்.நேரு விளக்கம்</p><p>கடந்த 5 ஆண்டுகளில் நகராட்சி நிர்வாகத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.</p><h2>கே.என்.நேரு உரை</h2><p>தேர்தல் வந்ததால் இறுதி அறிக்கையை அவையில் வைக்க முடியவில்லை.</p><p>தற்போதைய அரசு திருப்புகழ் கமிட்டி அறிக்கையை அவையில் சமர்ப்பிக்கலாம்.</p><p>உள்ளாட்சித்துறையில் எங்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கியவர் மு.க.ஸ்டாலின்.</p><p>சென்னை உள்ளிட்ட நகரங்களில் நாளொன்றுக்கு 5,000 மில்லியன் லிட்டர் குடிநீர் கொடுத்தோம்.</p> <p>கோப்புகளை எப்படி பார்க்க வேண்டும் என சொல்லி கொடுத்தவர் கலைஞர் - கே.என்.நேரு</p> <p>வெள்ளத்தடுப்பு குறித்த திருப்புகழ் கமிட்டி அறிக்கை குறித்து கே.என்.நேரு விளக்கம்</p><p>உள்ளாட்சி துறையில் எங்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கியவர் மு.க.ஸ்டாலின் - கே.என்.நேரு</p><p>நகராட்சி நிர்வாகத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் கே.என்.நேரு உரை</p> <p>24 மணி நேரத்திற்கு முன்பாகவே புத்தகங்களை கொடுக்க வேண்டும் - சபாநாயகர் உத்தரவு</p><p>நேற்று இரவு 8 மணிக்கு தான் கொள்கை விளக்க புத்தகம் கிடைத்தது - இபிஎஸ்</p><p>மானியக்கோரிக்கை புத்தகங்கள் ஒருநாளுக்கு முன்பாகவே கிடைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி</p><p>உயர்கல்வித்துறை மானியக்கோரிக்கை - அமைச்சர் விஸ்வநாதன் பதில் உரை</p><p>பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கை - அமைச்சர் ராஜ்மோகன் பதில் உரை</p><p>சட்டசபையில் வனவிலங்குகள் தாக்குதல் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. </p><p>எதிர்ப்பு குரல் கொடுப்பதாக இருந்தால் வெளியே சென்று குரல் கொடுங்கள் என சபாநாயகர் கூறியதை அடுத்து திமுகவினர் வெளிநடப்பு</p><p>பரந்தூர் ஏர்போர்ட் விவகாரம் தொடர்பாக பேரவையில் எழுந்து நின்று முழக்கமிட்ட திமுகவினரை கண்டித்த சபாநாயகர்</p><p>பரந்தூர் விமான நிலையம் குறித்து பேச அனுமதிக்க கோரி திமுக எம்எல்ஏக்கள் அமளி</p><p>திமுக எம்எல்ஏ மீதான அமைச்சரின் புகாருக்க திமுக எம்எல்ஏக்கள் எழுந்து நின்று சட்டசபையில் எதிர்ப்பு.</p><p>பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக சட்டசபை உறுப்பினர் முதலமைச்சர், அமைச்சர்களை மரியாதை இன்றி பேசி இருக்கிறார். இது மிகவும் கண்டனத்திற்குரியது என்று பால்வளத்துறை அமைச்சர் கூறினார்.</p><p>திருநர், திருநங்கைகளும் வெற்றி பயணம் திட்டத்தில் கட்டணமின்றி பயணிக்கலாம் - முதலமைச்சர் விஜய்</p><p>மகளிருக்கான  பேருந்து பயணத்திற்கு வருமான உச்சவரம்போ, மேற்கொள்ளும் பயணங்களில் எண்ணிக்கை கட்டுப்பாடோ இல்லை - முதலமைச்சர் விஜய்</p><p>மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கும் திட்டம் அக்டோபர் 2-ந்தேதி தொடக்கம்.</p><p>டீலக்ஸ் பேருந்து உள்பட அனைத்து பேருந்துகளிலும் மகளிர் இனி கட்டணமின்றி பயணிக்கலாம் - முதலமைச்சர் விஜய்</p><p>புதிய விமான நிலையத்திற்கான இடம் விரைவில் இறுதி செய்யப்படும்.</p><p>சென்னை விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும் - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு</p><p>பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைச்ச மேற்கொண்ட நடவடிக்கைகள் கைவிடப்படும் - முதலமைச்சர் விஜய்</p><p>3 எரிவாயு சிலிண்டருக்கான தொகையை அரசே நேரடியாக பயனாளர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கும் - முதலமைச்சர் விஜய்</p><p>ஆண்டுக்கு 3 கியாஸ் சிலிண்டர்கள் வழங்கும் திட்டம் வரும் பொங்கல் தினத்தில் இருந்து தொடங்கும்.</p><p>அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்திற்க ஆண்டுதோறும் தோராயமாக ரூ.4000 ஒதுக்கப்படும் - முதலமைச்சர் விஜய்</p><p>அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தில் ஆண்டுக்கு 3 இலவச கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் - முதலமைச்சர் விஜய்</p><p>பெண்கள் பயன்பெறும் வகையில் அவர்களை முன்னேற்றும் வகையிலும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது - முதலமைச்சர் விஜய்</p><p>சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் உரையாற்றினார்.</p><p>சட்டசபையில் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதையடுத்து உறுப்பினர்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.</p> <p>2 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் தமிழ்நாடு சட்டசபை  இன்று கூடியது.</p><p>தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது. காலை கூட்டம் கூடியதும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, பள்ளிக் கல்வித்துறை, தமிழ் வளர்ச்சித் துறை, உயர் கல்வித்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.</p><p>இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>3 இலவச சிலிண்டர், அனைத்து பேருந்துகளிலும் இலவச பயணம்... மகளிருக்கு முத்தான அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-3-free-cylinder-and-vetri-payanam-thittam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-3-free-cylinder-and-vetri-payanam-thittam#comments</comments><guid isPermaLink="false">8d7d9428-8def-46d4-9ca7-5640b645aa82</guid><pubDate>Mon, 24 Aug 2026 04:24:47 +0000</pubDate><atom:updated>2026-08-24T04:24:47.688Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/ge8h4t76/vijay.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/ge8h4t76/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கும் வெற்றி பயண திட்டம் அக்டோபர் 2-ந்தேதி முதல் தொடங்கப்படும்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழக சட்டசபை</a> கடந்த 2 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் இன்று மீண்டும் கூடியது. கூட்டம் தொடங்கியதும் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-</p><p>* அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தில் ஆண்டுக்கு 3 இலவச கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். ஆண்டுக்கு 3 கியாஸ் சிலிண்டர்கள் வழங்கும் திட்டம் வரும் பொங்கல் தினத்தில் இருந்து தொடங்கப்படும். </p><p>* 3 எரிவாயு சிலிண்டருக்கான தொகையை அரசே நேரடியாக பயனாளர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கும். </p><p>* ஆண்டு வருவாய் ரூ.2.50 லட்சத்திற்கு குறைவாக உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம் வழங்கப்படும். </p><p>* மகளிர் கட்டணமில்லா பேருந்து திட்டத்தை விரிவுப்படுத்தப்படுகிறது. </p><p>* மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கும் வெற்றி பயண திட்டம் அக்டோபர் 2-ந்தேதி முதல் தொடங்கப்படும். </p><p>* மகளிருக்கான வெற்றிப் பயணத் திட்டத்திற்கு வருமான உச்ச வரம்போ, மேற்கொள்ளும் பயணங்களில் எண்ணிக்கை கட்டுப்பாடோ இல்லை. </p><p>* திருநர், திருநங்கைகளும் வெற்றி பயணம் திட்டத்தில் கட்டணமின்றி பயணிக்கலாம். </p><p>* மாவட்டங்களுக்கு இடையில் பயணம் மேற்கொள்ள சாதாரண பேருந்துகளிலும் இலவசம்.</p><p>* மாநகரம், நகரங்களில் இயங்கும் அரசு பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளலாம்.</p><p>* வெற்றி பயணம் திட்டம் டீலக்ஸ் பேருந்து உள்பட அனைத்து பேருந்துகளிலும் மகளிர் இனி கட்டணமின்றி பயணிக்கலாம். இத்திட்டம் செயல்படுத்துவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடி செலவாகும்.</p>]]></content:encoded></item><item><title>மகளிருக்கு நற்செய்தி!- எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் பேருந்துகளிலும் இனி இலவசப் பயணம்: முழு விவரம் இதோ... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/good-news-for-women-free-travel-now-available-on-express-and-deluxe-buses-toohere-are-the-full-details</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/good-news-for-women-free-travel-now-available-on-express-and-deluxe-buses-toohere-are-the-full-details#comments</comments><guid isPermaLink="false">277e857a-0acd-48f5-b3e0-3e6702585840</guid><pubDate>Mon, 24 Aug 2026 06:25:11 +0000</pubDate><atom:updated>2026-08-24T06:25:11.608Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly,பெண்களுக்கு இலவச பயணம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/mympttwi/freebus.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மகளிருக்கு இலவசப் பயணம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மகளிருக்கு இலவசப் பயணம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/mympttwi/freebus.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மாணவிகள் தொலை தூரத்தில் உள்ள கல்லூரிகளுக்கு செல்லவும், பணியிடங்களுக்கு செல்லவும், மருத்துவம் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கும் கட்டணமின்றி பேருந்துகளில் பயணிக்க இயலும்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழக சட்டசபையில்</a> இன்று பேரவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அவர் பேசியதாவது:-</p><p>தமிழகம் முழுவதும் பெண்களுக்கு இலவச பஸ் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் கட்டணமில்லா பயண திட்டத்தில் மாநகரம், நகர்ப்புறங்களில் சாதாரண மற்றும் மலைப்பகுதி பேருந்துகளில் 40 கி.மீ. வரை மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது. </p><p>எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் பேருந்துகள் மற்றும் புறநகர் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படுவதில்லை. தமிழ்நாட்டின் எந்தப் பகுதிகளிலும் வசிக்கும் ஒரு மகளிரும் போக்குவரத்து கட்டணத்தால் தமது வாய்ப்புகளை இழக்கக் கூடாது என்ற சமூக நீதி சிந்தனையை இவ்வரசு முதன்மையாக கொண்டு உள்ளது.</p><h2><strong>அக்டோபர் 2-ந்தேதி வெற்றிப் பயணம்</strong></h2><p>இதனை கருத்தில் கொண்டு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-3-free-cylinder-and-vetri-payanam-thittam">மகளிர் கட்டணமில்லா</a> பயண திட்டத்தை விரிவுபடுத்தி பெருமளவில் பயனளித்திடும் விதமாக வெற்றிப் பயணம் என்ற பெயரில் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2-ந்தேதி முதல் செயல்படுத்த அரசு முடிவு செய்து உள்ளதை இந்த மாமன்றத்தில் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.</p><p>அதன்படி முதல் கட்டமாக மாநகரம், நகரங்களில் சாதாரண பேருந்துகள் மட்டுமின்றி மாநகரம், நகர்ப்பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் அரசு பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம்.</p><p>மேலும் கூடுதலாக மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில் சாதாரண கட்டண பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம்.</p><h2><strong>படிப்படியாக விரிவு</strong></h2><p>இத்திட்டத்தில் பயன்பெற வருமான உச்சவரம்போ மற்றும் மேற்கொள்ள விரும்பும் பயண  எண்ணிக்கையிலோ கட்டுப்பாடுகள் இல்லை. வெற்றிப் பயண திட்டம் இதர சேவைகளும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.</p><p>இதன் மூலம் மாநிலம் முழுவதும் மகளிருக்கான எளிதில் அணுகக் கூடிய பொதுப் போக்குவரத்து வசதி பெருமளவில்  கிடைக்கும். இதன் மூலம் மாணவிகள் தொலை தூரத்தில் உள்ள கல்லூரிகளுக்கு செல்லவும், பணியிடங்களுக்கு செல்லவும், மருத்துவம் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கும் கட்டணமின்றி பேருந்துகளில் பயணிக்க இயலும்.</p><h2><strong>பொருளாதார முன்னேற்றம்</strong></h2><p>வெற்றிப் பயணம் என்பது கட்டணமில்லா ஒரு பேருந்து பயணம் மட்டுமல்ல, ஒரு மாணவியின் கல்வி, ஒரு தொழிலாளியின்  வேலை வாய்ப்பு, ஒரு தாயின் குடும்ப பொறுப்பு, ஒரு தொழில் முனைவோரின் முன்னேற்றம் போன்றவற்றை உறுதி செய்யும் சமூக முதலீடாகும்.</p><p>தமிழ்நாட்டின் எந்த பகுதியில் வாழ்ந்தாலும் மகளிரின் இயக்க சுதந்திரத்துக்கும், பொருளாதார முன்னேற்றத்துக்கும் அரசு உறுதுணையாக இருக்கும்.</p><p>இத்திட்டத்தின் கீழ் திருநரும் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம். வெற்றிப் பயணம் வழியாக மகளிரின் வாய்ப்புகள் விரிவடைந்து  குடும்பங்கள்  முன்னேறி சமூக நீதியும், சமத்துவமும் நிலை பெற்று வளமாக வெற்றி தமிழ்நாட்டை உருவாக்கும். நமது பயணம் மேலும் வலுப்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2><strong>ரூ.6 ஆயிரம் கோடி</strong></h2><p>இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் ஆண்டு தோறும் தோராயமாக ரூ.6 ஆயிரம் கோடி செலவினம் ஏற்படும் என்றார். </p>]]></content:encoded></item><item><title>பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து: Sofa Model அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்- உதயநிதி ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-indictment-tvk-govt-for-parandur-airport-issue</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-indictment-tvk-govt-for-parandur-airport-issue#comments</comments><guid isPermaLink="false">1b4be611-0d44-4006-9dd4-b5981fcfef51</guid><pubDate>Mon, 24 Aug 2026 09:59:50 +0000</pubDate><atom:updated>2026-08-24T09:59:50.368Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,Parandur Airport,பரந்தூர் விமான நிலையம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/6cx9xjpb/udhayanidhistalin004.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/6cx9xjpb/udhayanidhistalin004.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான பரந்தூர் விமான நிலையத்திட்டத்தை ரத்து செய்திருக்கும் Sofa Model அரசை வன்மையாகக் கண்டிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">உதயநிதி ஸ்டாலின்</a> எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><h2><strong>அரசிற்கு பெரும் நிதி இழப்பு</strong></h2><p>சென்னையில் பெருகி வரும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் விமான சரக்கு போக்குவரத்து- எதிர்காலத் தேவை போன்றவற்றின் அடிப்படையில், சென்னைக்கு 2-ஆவது விமான நிலையம் அவசியம் என்பதை உணர்ந்து, பரந்தூர் விமான நிலையத் திட்டம் கழக அரசால் உருவாக்கப்பட்டது.</p><p>இத்திட்டத்திற்கு Airports Authority of India, Union Civil Aviation Ministry உள்ளிட்டவை ஆய்வு செய்து, அனுமதி தந்துவிட்டன. </p><p>இத்தகைய கடினமான  அனுமதிகளைப் பெறுவது, கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்குச் சந்தை மதிப்பை விட 3 மடங்கு அதிகமான இழப்பீடு, மறு குடியமர்வு போன்ற முக்கியமான பணிகள் அனைத்தும் கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருந்த போதே நடைபெற்றன.</p><p>இதற்காக அரசுத் தரப்பில் பெரும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவையெல்லாம் நடந்த பிறகு, அற்ப அரசியல் காரணங்களுக்காக திட்டத்தையே கைவிடுகிறேன் என்று சொன்னால், அது அரசிற்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/பரந்தூர்-விமான-நிலையம்">பரந்தூர்</a> விமான நிலையத் திட்டத்தை நிறுத்துவதால், சென்னையை சுற்றியுள்ள தொழில் நிறுவனங்கள் அண்டை மாநிலங்களை நோக்கி வெளியேறும் அபாயமும், புதிய நிறுவனங்கள் சென்னைக்கு வர தயங்கும் சூழலும் எழுந்துள்ளன. </p><p>ஆகவே, தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தையும் - தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு, பரந்தூர் விமான நிலைய பணிகளைத் தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான பரந்தூர் விமான நிலையத்திட்டத்தை ரத்து செய்திருக்கும் Sofa Model அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.<br><br>சென்னையில் பெருகி வரும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் விமான சரக்கு போக்குவரத்து - எதிர்காலத் தேவை போன்றவற்றின் அடிப்படையில்,  சென்னைக்கு 2-ஆவது விமான…</p>&mdash; Udhay (@Udhaystalin) <a href="https://x.com/Udhaystalin/status/2091818583756255540?ref_src=twsrc%5Etfw">August 24, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>அரிசியை 2 முறை மட்டும் கழுவுங்கள் - ஆசிய மக்களுக்கு பிரிட்டன் விடுத்த தண்ணீர் சேமிப்பு வேண்டுகோள்!</title><link>https://www.maalaimalar.com/news/world/wash-rice-only-twice-uk-urges-asians-to-save-water</link><comments>https://www.maalaimalar.com/news/world/wash-rice-only-twice-uk-urges-asians-to-save-water#comments</comments><guid isPermaLink="false">28630935-d5ff-4e91-89e6-52c31bba3634</guid><pubDate>Mon, 24 Aug 2026 09:54:18 +0000</pubDate><atom:updated>2026-08-24T09:54:18.196Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>UK,water conservation,water saving,பிரிட்டன் அரசு,UK Drought Campaign,தண்ணீர் சேமிப்பு,Wash RiceTwice,அரிசி கழுவும்முறை,Ofwat Innovation</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/xiso5rlr/Wash-Rice-Twice" width="1500"><media:title type="html"><![CDATA[ Wash Rice Twice ]]></media:title><media:description type="html"><![CDATA[ Wash Rice Twice ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/xiso5rlr/Wash-Rice-Twice?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இங்கிலாந்தில் நிலவி வரும் கடுமையான வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறையைக் கையாள்வதற்காக, அங்கு வாழும் தெற்காசிய மற்றும் பிற ஆசிய வம்சாவளி குடும்பங்கள் தங்களது சமையல் மற்றும் மத வழிபாட்டு முறைகளில் தண்ணீரைச் சேமிக்க வேண்டும் என <a href="https://www.maalaimalar.com/topic/britain">பிரிட்டன்</a> அரசு ஒரு புதிய விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கியுள்ளது.</p><p>குறிப்பாக, 'அரிசியை ஐந்து முதல் ஏழு முறை கழுவுவதற்குப் பதிலாக இரண்டு முறை மட்டுமே கழுவுங்கள்' என்ற பிரிட்டனின் இந்த அறிவுரை தற்போது அந்த நாட்டு மக்களிடையே பெரும் விவாதத்தையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p><h2>ரூ. 2.8 கோடி செலவில் புதிய திட்டம்</h2><p>பிரிட்டனின் தண்ணீர் ஒழுங்குமுறை வாரியமான 'Ofwat' அமைப்பின் நிதி உதவியுடன், 'சவுத் ஸ்டாஃப்ஸ் வாட்டர்' மற்றும் 'கேம்பிரிட்ஜ் வாட்டர்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்திய மதிப்பில் சுமார் 2.8 கோடி ரூபாய் செலவில் இந்தத் திட்டத்தைத் தொடங்கியுள்ளன.</p><p>இங்கிலாந்தில் ஏற்பட்டுள்ள கடும் வெப்ப அலைகளால் நதிகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் கடுமையாக சரிந்துள்ளதால், சிறுபான்மையினர் மற்றும் பல்வேறு மத சமூகங்களிடையே தண்ணீர் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>அரிசி கழுவும் தண்ணீரில் சேமிப்பு</h2><p>தெற்காசியப் குடும்பங்களில் சமைப்பதற்கு முன்பு அரிசியை தண்ணீர் குழாயில் ஐந்து முதல் ஏழு முறை, அதாவது தண்ணீர் தெளிவாகும் வரை கழுவுவது ஒரு வழக்கமான நடைமுறையாகும்.</p><p>இந்த பிரசாரத்தின் மூலம், அரிசியை இரண்டு முறை மட்டுமே கழுவ வேண்டும் என ஆசிய மக்களை பிரிட்டன் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. பிரபல சமையல் கலைஞர் பிங் கூம்ப்ஸ் இதற்கான வீடியோக்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.</p><p>இப்படி செய்வதன் மூலம் ஒவ்வொரு முறையும் சமைக்கும் போது 5 லிட்டர் தண்ணீரைச் சேமிக்க முடியும் என்றும், அரிசி கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றலாம் என்பதையும் இந்த திட்டம் பரிந்துரைக்கிறது.</p><h2>மத வழிபாட்டிலும் கட்டுப்பாடு</h2><p>இஸ்லாமிய மக்கள் தொழுகைக்குச் செல்வதற்கு முன்பு தங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ளும் 'உது' என்ற மத சடங்கின் போதும் தண்ணீரைச் சேமிக்க இந்தத் திட்டம் வழிகாட்டுகிறது.</p><p>கேம்பிரிட்ஜ் மத்திய மசூதியுடன் இணைந்து, குழாயைத் திறந்து வைத்தபடி கைகளைக் கழுவுவதற்குப் பதிலாக, ஒரு லிட்டர் ஜக்கைப் பயன்படுத்தி தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். </p><p>ஓடும் குழாய் தண்ணீரில் கைகழுவினால் ஒரு தடவைக்கு 6 முதல் 12 லிட்டர் தண்ணீர் வீணாவதாக இந்தப் பிரசாரம் சுட்டிக்காட்டுகிறது.</p><h2>பிரிட்டன் அரசிற்கு எழுந்துள்ள கடுமையான எதிர்ப்பு</h2><p>இந்த விழிப்புணர்வு திட்டம் பிரிட்டனில் பெரும் அரசியல் மற்றும் சமூக எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறது. </p><p>பிரிட்டனின் பழமையான குழாய் கட்டமைப்புகள் காரணமாக அங்குள்ள தண்ணீர் நிறுவனங்களால் தினமும் சுமார் 300 கோடி லிட்டர் தண்ணீர் கசிவு ஏற்பட்டு வீணாகிறது. இதை சரி செய்யாமல் மக்களின் கலாச்சார, மத நடைமுறைகளைக் குறை கூறுவது தவறு என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.</p><p>மக்களின் வரிப் பணத்தையும், வாட்டர் பில்களையும் இது போன்ற "விசித்திரமான திட்டங்களுக்கு" வீணாக்குவது நியாயமற்றது என கன்சர்வேடிவ் கட்சியின் மந்திரி மைக் வுட் கடுமையாகச் சாடியுள்ளார். </p> <p>அரிசியை பலமுறை கழுவுவது வெறும் ஸ்டார்ச்சை நீக்குவதற்கு மட்டுமல்ல, அது அரிசியின் தரத்தை மேம்படுத்தவும், பதப்படுத்தும் போது சேரும் அசுத்தங்களை நீக்கவும் அவசியம் என்று சமையல் மற்றும் சுகாதார நிபுணர்கள் பிரிட்டன் அரசின் இந்த நீர் சேமிப்பு ஆலோசனையை மறுத்துள்ளனர்.</p><p>இருப்பினும், வறட்சி காலங்களில் அனைத்து சமூக மக்களையும் உள்ளடக்கிய ஒரு கூட்டு முயற்சி மூலம் தண்ணீர் நுகர்வைக் குறைக்கவே இந்தச் சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தண்ணீர் துறை அதிகாரிகள் தற்காப்பு வாதம் செய்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>2036-க்குள் செல்வந்த நுகர்வோரின் எண்ணிக்கையில் சீனாவை பின்னுக்குத் தள்ளுகிறது இந்தியா!</title><link>https://www.maalaimalar.com/news/national/india-to-overtake-china-in-wealthy-consumers-by-2036</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-to-overtake-china-in-wealthy-consumers-by-2036#comments</comments><guid isPermaLink="false">7794869b-21d6-4a6b-a117-50301a46ba9b</guid><pubDate>Mon, 24 Aug 2026 09:53:57 +0000</pubDate><atom:updated>2026-08-24T09:53:57.592Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,China,சீனா,அமெரிக்கா,wealthy consumers,Affluent Consumers,செல்வந்த நுகர்வோர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/pgvgu7kr/china.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  wealthy consumers china]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/pgvgu7kr/china.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2036-ஆம் ஆண்டிற்குள் அதிக நுகர்வு திறன் கொண்ட செல்வந்த நுகர்வோரின் எண்ணிக்கையில் இந்தியா சீனாவை விட முந்திச் செல்லும் என்று NielsenIQ மற்றும் World Data Lab இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் இந்திய நுகர்வோரின் பங்கு மிக முக்கியமான நிலையை எட்டும் என்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.</p><h2>எண்<strong>ணிக்கை உய</strong>ர்வு </h2><p>தற்போது 2026-ஆம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 2.6 கோடி செல்வந்த நுகர்வோர்கள் உள்ள நிலையில், அடுத்த பத்து ஆண்டுகளில் இது 8.2 கோடி அதிகரித்து 10.8 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே காலகட்டத்தில் <a href="https://www.maalaimalar.com/news/national/ex-envoy-citizenship-row-navdeep-suri-faces-hurdles-proving-indian-nationality-in-punjab-sir-process">சீனாவின் </a>செல்வந்த நுகர்வோர் எண்ணிக்கை 6.2 கோடி உயர்ந்து 10.3 கோடியை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சர்வதேச அளவில் அதிக அளவிலான புதிய செல்வந்த நுகர்வோர்களை சேர்க்கும் நாடாக இந்தியா உருவெடுக்கிறது. இருப்பினும், அமெரிக்கா 23.1 கோடி செல்வந்த நுகர்வோர்களுடன் சர்வதேச அளவில் முதலிடத்தில் தொடரும்.</p><h2>நுகர்<strong>வோர் வரம்பு</strong> </h2><p>இந்த அறிக்கையின்படி, ஒரு நாளைக்கு 90 டாலருக்கும் அதிகமாகச் செலவழிப்பவர்கள் 'செல்வந்த நுகர்வோர்' என்று வரையறுக்கப்படுகிறார்கள். இது நபர்களின் வருமானத்தை மட்டுமே அடிப்படையாகக் கொள்ளாமல், அவர்களின் தினசரி நுகர்வு திறனை அடிப்படையாகக் கொண்ட அளவீடாகும். மேலும், ஒரு நாளைக்கு 13 டாலர் முதல் 90 டாலர் வரை செலவிடும் "மைய நுகர்வோர்கள்"  இந்தியாவில் 2026-இல் 64.9 கோடியாக உள்ளனர். </p><p>உலகளவில் 2036-க்குள் செல்வந்த நுகர்வோரின் மொத்த எண்ணிக்கை 102.5 கோடியை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும், இந்த உயர் நுகர்வுப் பிரிவு பொருளாதாரத்தில் மிகப்பெரிய செலவுத் திறனைக் கட்டுப்படுத்துகிறது.</p><h2>சந்தையின் <strong>புதிய மாற்றங்க</strong>ள்</h2><p>நடுத்தர வர்க்கத்தின் வளர்ச்சி மற்றும் மக்கள் தொகை உயர்வு காரணமாக இந்தியாவை ஒரு "அளவு சார்ந்த வளர்ச்சி" கொண்ட சந்தையாக இந்த அறிக்கை வகைப்படுத்துகிறது. நுகர்வோரின் வாங்கும் திறன் அதிகரித்து வருவதால், நிறுவனங்கள் தரமான, சொகுசான மற்றும் மதிப்புமிக்க பொருட்களை சந்தையில் அறிமுகப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தொலைநோக்குப் பார்வையற்ற நிர்வாகம்... 10 ஆண்டு வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயம் - பரந்தூர் குறித்து அண்ணாமலை கருத்து!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/short-sighted-administration-risk-of-jeopardizing-a-decade-of-growth-annamalais-remarks-on-parandur</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/short-sighted-administration-risk-of-jeopardizing-a-decade-of-growth-annamalais-remarks-on-parandur#comments</comments><guid isPermaLink="false">609e5593-9ee4-446d-a5ca-40ffe168abb3</guid><pubDate>Mon, 24 Aug 2026 09:53:11 +0000</pubDate><atom:updated>2026-08-24T09:53:11.313Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>அண்ணாமலை,Parandur Airport,பரந்தூர் விமான நிலையம்,annamalai,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/uqco0mw2/New-Project-2026-08-24T152253.318.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தொலைநோக்குப் பார்வையற்ற நிர்வாகம்... 10 ஆண்டு வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயம் - பரந்தூர் குறித்து அண்ணாமலை கருத்து!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/uqco0mw2/New-Project-2026-08-24T152253.318.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பேசிய முதலமைச்சர் விஜய், பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதாக அறிவித்தார். மேலும் பரந்தூருக்கு பதில் மாற்று இடங்கள் தேர்ந்தெடுப்பு பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.</p><p>ஆனால் அவை எந்தெந்த இடங்கள் என்பதை தெரிவிக்கவில்லை. இந்நிலையில் சென்னையில் இரண்டாவது விமான நிலையத்திற்கான இடத்தைத் தேர்வு செய்யத் தாமதம் ஏற்பட்டால் தமிழ்நாட்டின் வளர்ச்சி குறைந்தது 10 ஆண்டுகள் தாமதிக்கும் அபாயம் உள்ளதாக ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்.,</p><p>இன்றைய தினம் சட்டப்பேரவையில், முதலமைச்சர் ஜோசப் விஜய், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்காக வேறு சில இடங்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>ஆனால், புதிய இடம் எது என்பதையும் முதலமைச்சர் அறிவித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஏனெனில், இரண்டாவது விமான நிலையத்திற்கான இடத்தைத் தேர்வு செய்யத் தாமதப்படுத்துவதால், தமிழ்நாட்டின் வளர்ச்சி குறைந்தது 10 ஆண்டுகள் தாமதிக்கும் அபாயம் உள்ளது.</p><p>பரந்தூர் திட்டத்திற்கு மாற்றாக வேறு இடத்தில் இரண்டாவது விமான நிலையத்தை அமைக்க தமிழ்நாடு அரசு நிர்வாக ரீதியாக முடிவெடுத்தாலும், புதிய இடத்தைத் தேர்வு செய்வது, மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட சட்டப்பூர்வமான அனுமதிகளைப் பெறுவது, ஒப்பந்தப்புள்ளிகள் கோருவது, நிலம் கையகப்படுத்துவது, தேவையான உரிமங்கள் பெறுவது என, விமான நிலையம் செயல்பாட்டுக்கு வர குறைந்தது 10 ஆண்டுகள் ஆகலாம். </p><p>அதற்குள் மற்ற மாநிலங்கள் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாடு பின்னுக்குத் தள்ளப்படும். இன்றைய தேவைக்கே சென்னை விமான நிலையம் போதுமானதாக இல்லை என்பதை முதலில் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். </p><p>சென்னை விமான நிலையத்தின் பரப்பளவு சுமார் 1,300 ஏக்கர். ஆனால், ஹைதராபாத் விமான நிலையம் சுமார் 5,500 ஏக்கர், பெங்களூரு விமான நிலையம் 4,000 ஏக்கர், நவி மும்பை விமான நிலையம் 2,866 ஏக்கர், டெல்லி விமான நிலையம் 5,100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளன.</p><p>இவ்வளவு குறைந்த பரப்பளவில் இயங்கும் சென்னை விமான நிலையம், குறைந்தபட்சம் பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்க வேண்டும். ஆனால், விமான நிலையத்தில் தரையிறங்கும் பகுதியில் இருந்து வெளியே வந்து,  உள்ளூர் போக்குவரத்தை அடைவதற்கே பயணிகள் இன்று பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள்.</p><p>ஒரு காலத்தில் தென்னிந்தியாவின் நுழைவாயிலாக இருந்த சென்னை, இன்று விமானப் பயணிகள் கையாளும் திறனில் 5-வது இடத்தில் உள்ளது. ஆண்டுக்கு சுமார் 3 கோடி பயணிகளை கையாளும் திறன் கொண்ட சென்னை விமான நிலையத்தை விட டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் விமான நிலையங்கள் முன்னிலையில் உள்ளன.</p><p>மேலும், சென்னை விமான நிலையத்தில் போதுமான டாக்ஸிவேக்கள் மற்றும் ஏர்பிரிட்ஜ்கள் இல்லாத காரணத்தால், பெரிய விமானங்களைக் கையாளும் திறன் கொண்ட Code F விமான நிலையமாக சென்னை விமான நிலையம் வகைப்படுத்தப்படவில்லை. இதனால் A380 போன்ற மிகப்பெரிய விமானங்கள் தரையிறங்க, சென்னை விமான நிலையம் ஏற்றதாக இல்லை. </p><p>தென்னிந்தியாவில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்கள் பெரிய விமானங்களை கையாளும் Code F விமான நிலையங்களாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>கட்சிகள் வரலாம், போகலாம். ஆட்சிகள் மாறலாம். ஆனால் இன்னும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டு மக்கள் திரும்பிப் பார்க்கும்போது, தொலைநோக்குப் பார்வையற்ற நிர்வாகத்தின் காரணமாக, ஒரு தரமற்ற கட்டிடத்தை விமான நிலையம் என்று அழைக்கும் நிலையில் சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்று வருந்தக்கூடாது. </p><p>எனவே, தமிழ்நாடு அரசு இனியும் தாமதிக்காமல், சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்கான பொருத்தமான இடத்தை உடனடியாகத் தேர்வு செய்து, விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும். </p><p>மேலும், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியான செய்திகளின்படி, பரந்தூர் விமான நிலையத்திற்குத் தேவையான 5,746 ஏக்கரில் சுமார் 1,700 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு அரசு ஏற்கனவே கையகப்படுத்தியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. </p><p>பரந்தூர் திட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ள நிலையில், அந்த 1,700 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு அரசு இனி என்ன செய்யப் போகிறது? இதற்கான தெளிவான பதிலையும் தவெக அரசு, மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய்யைக் கேட்டுக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மகாராஷ்டிரா அரசு மருத்துவமனை தீ விபத்தில் பச்சிளம் குழந்தைகள் 3 பேர் பலி – 6 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை!</title><link>https://www.maalaimalar.com/news/national/maharashtra-amravati-nicu-fire-3-babies-dead-6-critical</link><comments>https://www.maalaimalar.com/news/national/maharashtra-amravati-nicu-fire-3-babies-dead-6-critical#comments</comments><guid isPermaLink="false">1b34f6fd-6d8b-495d-af69-7dc52c31c7e9</guid><pubDate>Mon, 24 Aug 2026 09:47:05 +0000</pubDate><atom:updated>2026-08-24T09:47:05.984Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மகாராஷ்டிரா,fire accident,Hospital fire,maharastra CM,Ventilator Explosion,Medical Negligence</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/7y6onjqh/Maharastra-Fire-Accident" width="1500"><media:title type="html"><![CDATA[ Maharastra ]]></media:title><media:description type="html"><![CDATA[ Maharastra Fire Accident ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/7y6onjqh/Maharastra-Fire-Accident?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/maharashtra">மகாராஷ்டிர </a>மாநிலம் அமராவதி மாவட்டத்தில் உள்ள மாவட்டப் பெண்கள் அரசு மருத்துவமனையின் புதிய கட்டடத்தில் இன்று அதிகாலை நேரிட்ட பயங்கர <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">தீ விபத்தில்</a>, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மூன்று பச்சிளம் குழந்தைகள் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். </p><p>மேலும் 6 குழந்தைகள் மீட்கப்பட்டு வெவ்வேறு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>அதிகாலையில் வெடித்த வென்டிலேட்டர்</h2><p>அமராவதி மாவட்டப் பெண்கள் மருத்துவமனையின் புதிய கட்டடத்தின் மூன்றாவது மாடியில் உள்ள 'புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81">தீவிர சிகிச்சைப் பிரிவு</a>' (NICU)-ல் இன்று அதிகாலை சுமார் 4:00 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.</p><p>அங்கு வைக்கப்பட்டிருந்த வென்டிலேட்டர் கருவி ஒன்று திடீரென வெடித்ததே தீ விபத்துக்குக் காரணம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெடித்த சில நிமிடங்களிலேயே தீ மற்றும் அடர்ந்த புகை அந்தப் பிரிவு முழுவதும் அதிவேகமாகப் பரவியது.</p><h2>3 குழந்தைகள் மூச்சுத்திணறி பலி</h2><p>விபத்து நடந்த புதிய <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88">மருத்துவமனை</a>க் கட்டடத்தில் தலா 13 படுக்கைகள் கொண்ட 3 தனித்தனி தீவிர சிகிச்சைப் பிரிவுகள் (மொத்தம் 39 படுக்கைகள்) செயல்பட்டு வருகின்றன.</p><p>விபத்து நேரிட்ட குறிப்பிட்ட அந்தப் பிரிவில் மொத்தம் 12 கைக்குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்தன. தீப்பிடித்த உடனே அங்கு பணியில் இருந்த செவிலியர்களும் மருத்துவப் பணியாளர்களும் துணிச்சலாகச் செயல்பட்டு குழந்தைகளை வெளியேற்ற முயன்றனர்.</p><p>இருப்பினும், அடர்ந்த புகையை சுவாசித்ததால் மூன்று குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. இந்த விபத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் குறைப்பிரசவத்தில் பிறந்த, மிகக் குறைந்த எடையுடைய மற்றும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த பிஞ்சுகள் ஆவர்.</p><h2>மாற்று மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்ட 6 குழந்தைகள்</h2><p>தீ விபத்தில் இருந்து மீட்கப்பட்ட மற்ற குழந்தைகளில் 6 குழந்தைகள் உடனடியாகத் தீவிர சிகிச்சைக்காக அருகில் உள்ள வேறு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88">மருத்துவமனை</a>களுக்கு மாற்றப்பட்டனர். </p><p>சிலர் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கும், மற்றவர்கள் டாக்டர் பஞ்சாப்ராவ் தேஷ்முக் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.</p><h2>தற்போதைய நிலவரம்</h2><p>மாவட்ட முதன்மை மருத்துவர் டாக்டர் வினோத் பவார் அளித்துள்ள தகவலின்படி, மீட்கப்பட்ட குழந்தைகளில் ஒரு குழந்தையின் கை மற்றும் கால்களில் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் அதன் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. </p><p>மற்ற மூன்று குழந்தைகளுக்கும் லேசான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன, தற்போது அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது.</p><p><strong>7 ஆண்டுகளுக்கு முன்பும் இதே விபத்து</strong></p><p>தற்போது விபத்து நேரிட்ட இந்த புதிய கட்டடத்தின் தீவிர சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டு ஒரு வருடம்தான் ஆகிறது. சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு இதே மருத்துவமனையின் பழைய கட்டடத்தில் மின் கசிவு ஏற்பட்டு இதேபோன்ற விபத்து ஏற்பட்டது.</p><p>இன்றைய விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து தீயணைப்புத் துறையினரும் போலீசாரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சீனாவின் ஆளில்லா நிலவுப் பயணத் திட்டம் கடைசி நேரத்தில் ஒத்திவைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/china-unmanned-moon-mission-delayed-last-minute</link><comments>https://www.maalaimalar.com/news/world/china-unmanned-moon-mission-delayed-last-minute#comments</comments><guid isPermaLink="false">2fe73e74-c6fe-4618-b82d-5cec97772fda</guid><pubDate>Mon, 24 Aug 2026 09:46:53 +0000</pubDate><atom:updated>2026-08-24T09:46:53.663Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>China,சீனா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/rd7guvom/Chinemoon0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ China moon mission]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/rd7guvom/Chinemoon0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2030-க்குள் நிலாவில் விண்வெளி வீரர்களை தரையிறக்கும் வகையில், Chang’e-7 நிலவு திடடத்தை சீனா மேற்கொண்டு வருகிறது.</p><p>விண்வெளி சாதனையில் அமெரிக்காவுக்கு போட்டியாக திகழ சீனா முயற்சி மேற்கொண்டு வருகிறது. விண்வெளி மையம் அமைத்தல், செவ்வாய், நிலவுக்கு விண்கலத்தை செலுத்துவது போன்றவற்றை மேற்கொண்டு வருகிறது.</p><h2>Chang’e-7 நிலவு திட்டம்</h2><p>நிலாவின் தென்துருவத்தில் உள்ள நிரந்தர பள்ளத்தில் நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறு குறித்து ஆளில்லா விண்கலம் அனுப்பி சோதனை நடத்த சீனா அரசு முயற்சி செய்து வருகிறது. இந்த திட்டத்திற்கு Chang’e-7 நிலவு திட்டம் என சீனா பெயரிட்டுள்ளது.</p><p>Chang’e-7 விண்கலம் Long March-5 என்ற ராக்கெட் மூலம் செலுத்தப்பட இருந்தது. சில நாட்களுக்கு முன்னதாக ஏவுதள தளம் மற்றும் தளவாடங்கள் எல்லாம் சிறப்பான நிலையில் உள்ளதாக சீனா அரசு தெரிவித்திருந்தது.</p><p>இநத் நிலையில் ஏவுதலுக்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என்று சீனா, நிலவு பயணத்தை ஒத்தி வைத்து்ளளது. இந்த Chang’e-7 விண்கலம் தெற்கு சீனாவின் ஹைனான் மாகாணத்தில் உள்ள வென்சாங் விண்வெளி ஏவுதளத்திலிருந்து ஏவப்படத் திட்டமிடப்பட்டிருந்தது.</p><p>Chang’e-7 விண்கலமும் அதைச் சுமந்து செல்லும் Long March-5 ராக்கெட்டும் ஏற்கனவே ஏவுதளத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தன. ஏவுதலுக்கான ஏற்பாடுகள் இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில், சீன அதிகாரிகள் திடீரென இந்த முடிவை அறிவித்தனர்.</p><p>சீனாவின் மனித விண்வெளிப் பயண நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், விரிவான மதிப்பீட்டுக்குப் பிறகு இந்தப் பணி ஏவுதலுக்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என்றும், திட்டமிடப்பட்ட 2026 காலக்கட்டத்தில் இதை ஏவ முடியாது என்றும் தெரிவித்தது. ஆனால், எந்த குறிப்பிட்ட தொழில்நுட்ப அல்லது வானிலை காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்பது அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.</p><p>Chang’e-7-ன் முக்கிய நோக்கம் நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்வதும், நிரந்தரமாக நிழலில் இருக்கும் பள்ளங்களில் நீர் பனி இருப்பதற்கான ஆதாரங்களைத் தேடுவதும் ஆகும். நிலவின் வளங்களைப் பற்றிய முக்கியமான தகவல்களை சேகரிப்பதும் இந்தத் திட்டத்தின் நோக்கமாக இருந்தது.</p><p>இந்த தாமதம் சீனாவின் நிலவு ஆய்வுத் திட்டத்திற்கு பின்னடைவாக இருந்தாலும், 2030-க்கு முன் விண்வெளி வீரர்களை நிலவில் தரையிறக்க வேண்டும் என்ற அதன் நீண்டகால இலக்கில் Chang’e-7 முக்கிய பங்கைக் கொண்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரூ.30,000 கோடி சைபர் மோசடி: மும்பையில் இருவரை கைது செய்தது அமலாக்கத்துறை!</title><link>https://www.maalaimalar.com/news/national/rs-30000-crore-cyber-fraud-ed-arrests-two-in-mumbai</link><comments>https://www.maalaimalar.com/news/national/rs-30000-crore-cyber-fraud-ed-arrests-two-in-mumbai#comments</comments><guid isPermaLink="false">c81fa9a7-d58c-4e9a-bc49-b1ba3b9bc940</guid><pubDate>Mon, 24 Aug 2026 09:39:41 +0000</pubDate><atom:updated>2026-08-24T09:39:41.801Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Enforcement Directorate,டிஜிட்டல் கைது,சைபர் மோசடி,Digital Arrest,cyber fraud,mumbai,மும்பை,அமலாக்கத்துறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/zs1hqem6/ED.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Enforcement Directorate  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/zs1hqem6/ED.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடு தழுவிய அளவில் நடைபெற்ற மிகப்பெரிய டிஜிட்டல் கைது மற்றும் இணையதள நிதி மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை (ED) தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. சுமார் 30,000 கோடி ரூபாய் அளவிலான சட்டவிரோத பணப்பரிவர்த்தனைகளுடன் தொடர்புடைய இந்த கும்பலின் பின்னணியை கண்டறியும் முயற்சியில், மும்பையைச் சேர்ந்த இரண்டு முக்கிய நபர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.</p><h2>மும்பையி<strong>ல் கைதான இரு</strong>வர்</h2><p>கைது செய்யப்பட்டவர்கள் ஃபஹீம் மொயின் ஹுசைன் சயீத் மற்றும் நயீம் முயீன் சயீத் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரையும் <a href="https://www.maalaimalar.com/news/national/delhi-lutyens-ministers-bungalows-maintenance-cost-rti-reveals-rs-92-crore-spent-in-2025-26">மும்பை</a>யில் வைத்து கைது செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள், சிறப்பு PMLA நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள கோவா மாநிலத்திற்கு அழைத்துச் செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, அவர்கள் பனாஜி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.</p><h2>ரூ.2.60 கோடி இ<strong>ழப்பால் அம்பலமான கு</strong>ம்பல்</h2><p>கோவாவைச் சேர்ந்த பெண் ஒருவரை 'டிஜிட்டல் கைது' செய்வதாக மிரட்டி, 'ரகசிய மேற்பார்வை கணக்குகள்' என்ற பெயரில் 2.60 கோடி ரூபாயை மோசடி கும்பல் பறித்துள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தொடங்கப்பட்ட விசாரணையில்தான், நாடு முழுவதும் பரந்து விரிந்த இந்த மிகப்பெரிய மோசடி நெட்வொர்க் வெளிச்சத்திற்கு வந்தது.</p><h2>போலி நிறுவ<strong>னங்கள் மூலம் சர்வதேச பரி</strong>வர்த்தனை</h2><p>பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பெறப்பட்ட தொகையை வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்து, பின்னர் ரொக்கமாக திரும்பப் பெற்றுள்ளனர். அந்தப் பணத்தை ரிசர்வ் வங்கியின் உரிமம் பெற்ற அந்நிய செலாவணி முகவர்கள் மூலம் வெளிநாட்டு பணமாக மாற்றியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏழை ஓட்டுநர்கள் மற்றும் எளிய பணியாளர்களை இயக்குநர்களாகக் காட்டி பல போலி நிறுவனங்களை உருவாக்கி இந்த பணமோசடியை அரங்கேற்றியுள்ளனர்.</p><p>இந்த நெட்வொர்க் மூலம் ரூ.27,000 கோடி வங்கி பரிவர்த்தனைகளும், ரூ.3,000 கோடி ரொக்கப் பரிவர்த்தனைகளும் நடைபெற்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதிவான 150-க்கும் மேற்பட்ட எஃப்.ஐ.ஆர் மற்றும் 300-க்கும் மேற்பட்ட புகார்கள் இதனுடன் தொடர்புடையவை. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மும்பை மற்றும் கோவாவில் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.3.25 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தந்தை ஆகப்போகும் உலகப் புகழ்பெற்ற கிங் பென்குயின் - 17 ஆண்டுகளுக்குப் பிறகு அதிசயம்!</title><link>https://www.maalaimalar.com/news/world/world-famous-king-penguin-to-become-father-miracle-after-17-years</link><comments>https://www.maalaimalar.com/news/world/world-famous-king-penguin-to-become-father-miracle-after-17-years#comments</comments><guid isPermaLink="false">da09f504-c1cf-4136-80d2-3939237ec9c6</guid><pubDate>Mon, 24 Aug 2026 09:39:28 +0000</pubDate><atom:updated>2026-08-24T09:39:28.811Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Penguin,Sir Nils Olav,பென்குயின்,Edinburgh Zoo,King Penguin Egg,பென்குயின் முட்டை,Major General Nils Olav</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/m48ds7sy/Sir-Nils-Olav-Penguin" width="1500"><media:title type="html"><![CDATA[ Penguin]]></media:title><media:description type="html"><![CDATA[ Sir Nils Olav Penguin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/m48ds7sy/Sir-Nils-Olav-Penguin?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலகிலேயே மிக உயர்ந்த ராணுவப் பதவியைப் பெற்று கின்னஸ் சாதனை படைத்த ‘சர் நில்ஸ் ஒலாவ் III’ என்ற கிங் பென்குயின் விரைவில் தந்தையாகப் போகிறது.</p><p>ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பரோ உயிரியல் பூங்காவில் அதன் புதிய இணையான 'கானி' என்ற பெண் பென்குயின் முட்டை ஒன்றை இட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p> <h2>17 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்ந்த அற்புதம்!</h2><p>எடின்பரோ உயிரியல் பூங்காவில் கடந்த 17 ஆண்டுகளில் கிங் பென்குயின் இனம் முட்டையிடுவது இதுவே முதல் முறையாகும். கடந்த ஆகஸ்ட் 14, வெள்ளிக்கிழமை அதிகாலை இந்த முட்டை இடப்பட்டது. </p><p>பூங்காவிற்கு கடந்த ஜனவரி மாதம் தான் 'கானி' உட்பட மூன்று பெண் பென்குயின்கள் கொண்டு வரப்பட்டன. அவை புதிய சூழலுக்குப் பழகி, இனப்பெருக்கம் செய்ய குறைந்தது 2027 ஆம் ஆண்டு வரை ஆகும் என பூங்கா பராமரிப்பாளர்கள் எதிர்பார்த்தனர். </p><p>ஆனால், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக மிக விரைவிலேயே இந்த அரிய நிகழ்வு நடந்துள்ளது.</p><h2>யார் இந்த 'மேஜர் ஜெனரல் சர் நில்ஸ் ஒலாவ்'?</h2><p>சர் நில்ஸ் ஒலாவ் ஒரு சாதாரண பென்குயின் அல்ல. நார்வே நாட்டின் அரச பாதுகாப்புப் படையின் அதிகாரப்பூர்வ சின்னமாகவும், அதன் தலைமைத் தளபதியாகவும் இது விளங்குகிறது. </p><p>1972 ஆம் ஆண்டு முதல் இந்த ராணுவப் பதவி முறையே மூன்று கிங் பென்குயின்களுக்கு 'நில்ஸ் ஒலாவ்' என்ற பெயரில் வழங்கப்பட்டு வருகிறது. </p><p>கடந்த 2016 இல் 'பிரிகேடியர்' அந்தஸ்தைப் பெற்ற இது, கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 அன்று நார்வே ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் ‘மேஜர் ஜெனரல்’ ஆகப் பதவி உயர்வு பெற்றது. </p><p>உலகிலேயே மிக உயர்ந்த ராணுவப் பதவியில் இருக்கும் பென்குயின் என கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இது இடம் பிடித்துள்ளது.</p><h2>காதலை வென்ற ராணுவ கம்பீரம்!</h2><p>இதுகுறித்து பூங்காவின் விலங்குகள் பராமரிப்புத் துறைத் தலைவர் டேரன் மெக்காரி கூறுகையில், 'புதிதாக வந்த பெண் பென்குயின்கள் இங்குள்ள சூழலோடு செட்டிலாக காலம் எடுக்கும் என்று நினைத்தோம். </p><p>ஆனால், சர் நில்ஸ் தனது ராணுவ கம்பீரத்தோடு மிகக் குறைந்த நாட்களிலேயே கானியின் மனதை வென்றுவிட்டது. கானிக்கு இவருடைய மிலிட்டரி ஸ்டேட்டஸ் மிகவும் பிடித்துவிட்டது போல' என்று நகைச்சுவையுடன் கூறியுள்ளார்.</p><h2>பென்குயின்களின் முட்டை பராமரிப்பு</h2><p>கிங் பென்குயின்கள் பொதுவாக ஒரே ஒரு முட்டை மட்டுமே இடும். இந்த முட்டை பொரிந்து வெளிவர சுமார் 55 நாட்கள் ஆகும். மிக சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இந்த பென்குயின்கள் சாதாரண பறவைகளைப் போல கூடுகள் கட்டுவதில்லை. </p><p>மாறாக, பெற்றோர் பென்குயின்கள் இருவரும் தங்களது கால்களின் மேல் முட்டையை வைத்து, மாறி மாறித் தங்களது உடல் சூட்டின் மூலம் அதனைப் பாதுகாக்கும். தற்போது கானியும் சர் நில்ஸும் பூங்காவின் அமைதியான ஒரு மூலையில் அமர்ந்து தங்களது முட்டையை மிகவும் கவனமாகப் பாதுகாத்து வருகின்றன.</p><p>தற்போது ராணுவப் பதவிகள் மற்றும் கௌரவங்களை வென்ற சர் நில்ஸ் ஒலாவ், தனது வாழ்நாளின் மிக முக்கியமான கடமையான 'தந்தை' என்ற புதிய பொறுப்பை ஏற்கத் தயாராகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>கர்ப்பமாக இருந்த பாதுகாப்புத் துறை அமைச்சக அதிகாரி மரணம்: புகுந்த வீட்டினர் துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு!</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-pregnant-officer-death-harassment-allegations</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-pregnant-officer-death-harassment-allegations#comments</comments><guid isPermaLink="false">8eb72ca2-5780-4d20-b24f-4ee7cdc1f515</guid><pubDate>Mon, 24 Aug 2026 09:31:35 +0000</pubDate><atom:updated>2026-08-24T09:31:35.385Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Harassment,Defence Ministry,Domestic Violence,dwarka,துவாரகா,delhi,டெல்லி,Nazia Khanam</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/k9ktotrw/Nazia-Khanam" width="1500"><media:title type="html"><![CDATA[ Nazia Khanam ]]></media:title><media:description type="html"><![CDATA[ Nazia Khanam ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/k9ktotrw/Nazia-Khanam?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF">டெல்லி </a>துவாரகா பகுதியில் வசித்து வந்த 30 வயதான கர்ப்பிணி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF">அரசு உயர் அதிகாரி</a> ஒருவர் அவரது வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தார். </p><p>அவரது கணவர் மற்றும் மாமனார், மாமியாரால் அவர் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சித்திரவதை செய்யப்பட்டதாக பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.</p><h2><strong>வழக்கின் பின்னணி</strong></h2><p>பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அதிகாரியாக பணிபுரிந்து வந்த நாஜியா கானம், கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி ஆசாம் அலி கான் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.</p><p> திருமணம் முடிந்து 4 மாதங்கள் ஆன நிலையில் நாஜியா மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தார். திருமணத்திற்குப் பிறகு அவரது கணவர் ஆசாம் அலி கான், மாமியார் சமீன் நிஷா, மாமனார் பாபர் அலி கான் ஆகியோர் தன்னைத் தொடர்ந்து கொடுமைப்படுத்துவதாகவும், வீட்டை விட்டு விரட்டி விடுவதாக கொலை மிரட்டல் விடுப்பதாகவும் நாஜியா தனது குடும்பத்தினரிடம் பலமுறை கூறியுள்ளார்.</p><h2><strong>சம்பவத்தன்று நடந்தது என்ன?</strong></h2><p>கடந்த ஆகஸ்ட் 21 அன்று அதிகாலை 4 மணியளவில், நாஜியா தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. </p><p>ஆனால், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் நாஜியாவை கொலை செய்துவிட்டு, அதை தற்கொலை என நாடகமாடுவதாக பெண்ணின் தந்தை தவாப் கான் சந்தேகம் எழுப்பியுள்ளார். </p><p>மேலும் இதற்கு காரணமான கணவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><h2><strong>கணவரின் விளக்கம்</strong></h2><p>நாஜியாவின் கணவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதன் பிறகு நாஜியா அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டதாகவும் கூறியுள்ளார். </p><p>பின்னர் கதவைத் திறந்து பார்த்தபோது அவர் ஜன்னலில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.</p><h2><strong>போலீஸ் விசாரணை</strong></h2><p>நாஜியாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. </p><p>மரணத்தில் சந்தேகம் இருப்பதால் பிரேத பரிசோதனையை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும், ஆதாரங்களை பாதுகாக்க வேண்டும் என்றும் பெண்ணின் குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.</p><p>இச்சம்பவம் குறித்து <a href="https://www.maalaimalar.com/topic/delhi-police">போலீசார் </a>வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் குடும்பத்தினரின் வாக்குமூலங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>அறிவாலயத்தை வெள்ளையடித்து வாடகைக்கு விடவேண்டும் என்பதா? - அமைச்சர் மீது ஆ.ராசா கடும் தாக்கு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/a-raja-condemned-to-minister-nirmal-kumar</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/a-raja-condemned-to-minister-nirmal-kumar#comments</comments><guid isPermaLink="false">6b4b914c-ca1f-4e33-baf0-a0538f66bed3</guid><pubDate>Mon, 24 Aug 2026 09:30:23 +0000</pubDate><atom:updated>2026-08-24T09:30:23.723Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,a raja,ஆ ராசா,Anna arivalayam,அண்ணா அறிவாலயம்,அமைச்சர் நிர்மல்குமார்,minister nirmal kumar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/418rs84w/araja.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anna arivalayam - A Raja - Minister Nirmal kumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/418rs84w/araja.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அண்ணா அறிவாலயத்தை குறை சொல்கின்ற ஒரு கூட்டம் இன்றைக்கு தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது என்று திமுக எம்பி ஆ.ராசா கூறினார்.</strong></em></p><h2>அமைச்சர் நிர்மல்குமார்</h2><p>அமைச்சர் நிர்மல்குமார் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது, “<a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">அண்ணா அறிவாலயத்துக்கு</a> வெள்ளையடித்து வாடகைக்கு விடும் நிலை உருவாகும்” என்று பேசினார். </p><h2>ஆ.ராசா</h2><p>இதற்கு பதில் அளிக்கும் வகையில் இன்று நடந்த திருமண நிகழ்ச்சியில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/change-that-happened-in-tamil-nadu-has-become-a-disappointment-mk-stalin">திமுக</a> எம்பி ஆ.ராசா பேசும்போது அமைச்சர் நிர்மல்குமாரை மறைமுகமாக கண்டித்தார். விழாவில் ஆ.ராசா எம்.பி. பேசியதாவது:-</p> <p>இன்றைக்கு சிலருக்கு காரில் தேசிய கொடி வந்து விட்ட காரணத்தினால் அறிவாலயத்துக்கு வெள்ளையடித்து வாடகைக்கு விடலாம் என்று சில அமைச்சர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். </p><h2>அண்ணா அறிவாலயம்</h2><p>பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் அரசியலில் கிரகப் பிரவேசம் நடத்திய பிறகுதான் தமிழர்கள் தங்கள் வீட்டுக்கு வெள்ளையடித்துக் கொண்டார்கள். அறிவாலயம் தோன்றிய பிறகுதான் தமிழர்கள் தங்கள் வீட்டுக்கு பல முறை வெள்ளையடித்துக் கொண்டார்கள். தமிழ்நாடு தனக்கு வெள்ளையடித்துக் கொண்டது.</p> <p>எனவே அந்த அறிவாலயத்தை குறை சொல்கின்ற ஒரு கூட்டம் இன்றைக்கு தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கின்ற இந்த கூட்டத்தை ஓட்டுவதற்கு எல்லா முயற்சிகளையும் எடுப்போம்.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் காலியாக உள்ள 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கும் திட்டம் இல்லை - தேர்தல் ஆணையம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-plan-to-announce-by-elections-for-the-five-vacant-constituencies-in-tamil-nadu-election-commission</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-plan-to-announce-by-elections-for-the-five-vacant-constituencies-in-tamil-nadu-election-commission#comments</comments><guid isPermaLink="false">7cfc8d9e-f55d-462f-84b7-7df4a9e8df1a</guid><pubDate>Mon, 24 Aug 2026 09:29:49 +0000</pubDate><atom:updated>2026-08-24T09:29:49.024Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை உயர் நீதிமன்றம்,Madras High Court,ECI,இந்திய தேர்தல் ஆணையம்,இடைத்தேர்தல்,Bye-Elections</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/mzs76df8/New-Project-2026-08-24T145926.705.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாட்டில் காலியாக உள்ள 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கும் திட்டம் இல்லை - தேர்தல் ஆணையம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/mzs76df8/New-Project-2026-08-24T145926.705.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் காலியானதாக அறிவிக்கப்பட்ட திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய ஐந்து தொகுதிகள் தொடர்பான தேர்தல் மனுக்கள்மீது நீதிமன்றங்கள் முடிவெடுக்கும் வரை அத்தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படாது என இந்திய தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p>மேலும் இந்த 5 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவதற்கு விதித்த தடையை செப்டம்பர் 8 வரை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அன்றைய தினமே இந்த மனு மீதான இறுதி விசாரணையை நடத்த முடிவு செய்துள்ள நீதிபதிகள், அதற்குள் சம்பந்தப்பட்ட தரப்பினர் தங்களது அனைத்து வாதங்களையும் முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.</p><h2>வழக்கு என்ன?</h2><p>தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, முதலமைச்சர் விஜய், அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா செய்த மொத்தம் 5 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே மற்ற மாநிலங்களில் காலியாக இருந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.</p><p>இச்சூழலில், ராஜினாமா செய்தவர்கள் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதில் மற்றொரு வேட்பாளரை வெற்றிப் பெற்றவராக அறிவிக்கவும் கோரப்பட்டுள்ளது. </p><p>இதனால் இப்போது இடைத்தேர்தல் நடத்தப்பட்டு புதிய நபர் வென்றால், அதே நேரத்தில் பழைய தேர்தல் வழக்கின் தீர்ப்பில் “தோற்ற மாற்று வேட்பாளர் தான் உண்மையான வெற்றியாளர்” என நீதிமன்றம் அறிவித்தால், ஒரே தொகுதிக்கு இரண்டு எம்.எல்.ஏ-க்கள் உரிமை கோரும் கடுமையான சட்ட சிக்கல் உருவாகும்.</p><p>சட்டப்பிரிவு 151ன்படி தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது, காலியானதாக அறிவிக்கப்பட்ட தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்த இயலாது என திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.</p><p>மனுதாரரின் இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம்,  இடைத்தேர்தல் நடத்துவது மாநில அரசு கருவூலத்தைப் பாதிக்கும் என்றும், ஜனநாயக செயல்முறையையும் பாதிக்கும் என்று குறிப்பிட்டு ஜூலை.10ம் தேதியன்று ஜூலை.31 வரை மேற்கண்ட தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கு இந்தியத் தேர்தல் ஆணையத்திற்குத் தடை விதித்தது.</p><p>பின்னர் அந்த இடைக்கால தடை உத்தரவு ஆக.24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தநிலையில், செப்.8 அன்று இறுதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>லஞ்சம் வாங்கியது உண்மை.. நானே அதற்கு சாட்சி!- அன்பில் மகேஷ் மீது அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/maria-wilson-alleges-bribery-against-former-education-minister-anbil-mahesh</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/maria-wilson-alleges-bribery-against-former-education-minister-anbil-mahesh#comments</comments><guid isPermaLink="false">b78c9361-db28-41a1-8767-c22ae0abf02b</guid><pubDate>Mon, 24 Aug 2026 09:14:29 +0000</pubDate><atom:updated>2026-08-24T09:14:29.116Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,anbil mahesh,TN assembly,அன்பில் மகேஷ்,Minister Maria Wilson,அமைச்சர் மரிய வில்சன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/6ie82eze/Maria-wilson.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Maria wilson- Ex Minister Anbil Mahesh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/6ie82eze/Maria-wilson.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தன்னிடம் லஞ்சம் வாங்கப்பட்டதாக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மீது நிதி அமைச்சர் மரிய வில்சன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் மேலும் கூறயதாவது:-</p><p>உயர்கல்வியில் எண்ணிக்கையா? தரமா? என்கிற கேள்வி எழுகிறது. எத்தனை பள்ளிகள், எத்தனை கல்லூரகள் கொண்டு வந்தோம் என்பது முக்கியமில்லை. தரம்தான் ரொம்ப முக்கியம்.</p><p>முதலமைச்சரின் ஆய்வுக் கூட்டத்தில், அமைச்சர் விஸ்வநாத் அவர்களும் பங்கேற்றிருந்தார். அப்போது, எத்தனை பள்ளிகள், எத்தனை கல்லூரிகள் இருக்கிறது என்பது குறித்து விவாதித்தோம்.</p><p>நாமும் கல்வி நிறுவனத்தை நடத்தி வருகிறோம். முன்னாள் அமைச்சர்களும் கல்லூரிகளை நடத்தி வருகின்றனர். தரத்தை எப்படி உயர்த்த வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கும் தெரிந்திருக்கும்.</p><p>அதில் பார்த்தீர்கள் என்றால், certification என்று சொல்வார்கள். அரசு கலைக் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகளில் எத்தனை சான்றிதழ் வாங்கியிருக்கிறார்கள் என்று பட்டியல் எடுத்தோம். ஆனால், கடந்த 30, 40 ஆண்டுகளாக ஒன்றுமே இல்லை.</p><p>ஒரு ஐஓஎஸ் சான்றிதழ்கூட வாங்கவில்லை. எந்த சான்றிதழும் வாங்காமல் நாம் இத்தனை ஆண்டுகள் கல்லூரிகளை நடத்தி வந்திருக்கிறோம் என்றால், எப்படி தரம் வரும். </p><p>எண்ணிக்கை மட்டுமே வரும். அதனடிப்படையில், எந்த முயற்சியும் எடுத்ததுபோல் தெரியவில்லை.</p><p>தனியார் கல்லூரிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அதனால்தான், வேலைவாய்ப்புகளும் கிடைக்கிறது. </p><p>லஞ்சம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறையில் எனக்கும் ஓரளவுக்கு அனுபவம் இருக்கிறது. பள்ளிக்கல்வித்துறை ஆய்வுக்கூட்டத்தில் இதுதொடர்பாக விவாதித்தோம். திமுக ஆட்சியில் பல இடங்களில் கட்டாயப்படுத்திதான் லஞ்சம் வாங்கப்பட்டிருக்கிறது.</p><p>அதில், மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்ட ஒரு நாள் நான். கட்டாயப்படுத்தி வாங்கப்பட்டது. இதனை பல இடங்களில் நான் பதிவுசெய்ய விரும்புகிறேன்.</p><p>எதிர்க்கட்சியினர் தொடர்ந்து ஆதாரம் கேட்கின்றனர். சாட்சி கேட்கின்றனர். ஆவண சாட்சி ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால், இந்த விவகாரத்தில் இங்கு நானே ஒரு சாட்சி தான். </p><p>முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சபையில் இல்லை என்றாலும், இதைநான் கூறவேண்டும். இந்த விஷயத்தை சொல்ல வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால், இந்த விவகாரம் 3 நாட்களாக சுற்றுக்கொண்டே இருக்கிறது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.</p><p>அவர்கள் என் மீது வழக்குக்கூட போடட்டும். எதிர்க்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். </p><p>தி.நகரில் எந்த இடத்தில் எவ்வளவு தொகை கொடுத்தோம் என்பது குறித்து நானே சொல்ல முடியும். சிறுபான்மை நிறுவனத்திற்கு எவ்வளவு தொகை வாங்குனீர்கள் இவை அனைத்தும் என்னால் சொல்ல முடியும். இதுதான் சாட்சி. </p><p>இவ்வாறு கூறினார்.</p><p>நிதி அமைச்சர் மரிய வில்சனின், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீதான குற்றச்சாட்டிற்கு திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.</p> ]]></content:encoded></item><item><title>புதிய விமான நிலையத்திற்கான இடத்தை விரைந்து கண்டறிந்து அறிவிக்க வேண்டும்!- அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-site-for-the-new-airport-must-be-identified-and-announced-quickly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-site-for-the-new-airport-must-be-identified-and-announced-quickly#comments</comments><guid isPermaLink="false">e7c82704-81b2-461c-b830-c56e1fe4f3d0</guid><pubDate>Mon, 24 Aug 2026 09:04:15 +0000</pubDate><atom:updated>2026-08-24T09:04:15.510Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,Parandur Airport,பரந்தூர் விமான நிலையம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/06gims2h/Anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/06gims2h/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பரந்தூர் விமான நிலையத்திற்காக இதுவரை கையகப்படுத்தப்பட்ட நிலங்களை சிப்காட் தொழிற்பேட்டை அமைத்தல் உள்ளிட்ட எந்த திட்டத்துக்காகவும் பயன்படுத்தக்கூடாது என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>புதிய இடம்</strong></h2><p>சென்னைக்கு அருகில் <a href="https://www.maalaimalar.com/topic/பரந்தூர்-விமான-நிலையம்">பரந்தூரில்</a> புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக முதலமைச்சர் விஜய் அவர்கள் அறிவித்திருக்கிறார். தமிழக வளர்ச்சிக்கு சென்னையில்  இரண்டாம் விமான நிலையம் அமைக்க வேண்டியது மிகவும் அவசியம் என்பதால், அதற்கான இடத்தை விரைந்து கண்டறிந்து அறிவிக்க வேண்டும்.</p><p>சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் விரைந்து அமைக்கப்பட வேண்டும் என்பதை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதே நேரத்தில் வேளாண் விளைநிலங்களையும் நீர்நிலைகளையும் அழித்து விமான நிலையம் அமைப்பதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு உடன்பாடு இல்லை.  பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படும் என்று  முந்தைய திமுக அரசு அறிவித்தவுடனேயே, 4 ஆண்டுகளுக்கு முன் 2022-ஆம் ஆண்டு இதே ஆகஸ்ட் மாதம் 26-ஆம் தேதி பாதிக்கப்படும் மக்களை எனது தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி குழு  சந்தித்து கருத்துகளைக் கேட்டறிந்து நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்தது.</p><p>அதே நேரத்தில், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சென்னைக்கு அருகில் இன்னொரு விமான நிலையம் அமைக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். மீனம்பாக்கம் விமான நிலையம் வரும் 2031-ஆம் ஆண்டில்  அதன் முழு கொள்ளளவை எட்டி விடும் என்பதால், அதற்கு முன்பாக புதிய விமான நிலையம் கட்டப்பட வேண்டியது அவசியமாகும்.  சென்னை மாநகருக்கான இரண்டாவது விமான நிலையம் 2007-08 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. அதன்பின் பல்வேறு தடைகளைக் கடந்து 2022-ஆம் ஆண்டில் தான் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான இடம் இறுதி செய்யப்பட்டது. இப்போது அந்த முடிவில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதால், புதிய விமான நிலையம் அமைக்கும் முயற்சிகள் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுள்ளன.</p><h2><strong>ஆறாம் இடம்</strong></h2><p>பயணிகள் போக்குவரத்தைப் பொறுத்தவரை சென்னை விமான நிலையம் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை டெல்லி, மும்பை ஆகியவற்றுக்கு அடுத்து மூன்றாவது பெரிய விமான நிலையமாக திகழ்ந்து வந்தது. ஆனால், சென்னை விமான நிலையத்தில் போதிய இட வசதி இல்லாததாலும், விரிவாக்கப் பணிகளில் ஏற்பட்ட தொய்வு காரணமாகவும் அந்த இடத்தை இழந்து விட்ட சென்னை விமான நிலையம் இப்போது டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய விமான நிலையங்களுக்கு அடுத்தபடியாக ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்திற்கு கொல்கத்தா விமான நிலையத்தை விட பின்தங்கி ஆறாம் இடத்தில் இருந்த சென்னை விமான நிலையம் ஜூலை மாதத்தில் தான் மீண்டும் ஐந்தாம் இடத்தை பிடித்தது. எந்த நேரமும் சென்னை விமான நிலையம் மீண்டும் ஆறாம் இடத்திற்கு தள்ளப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p>உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் ஏர்பஸ் 380 ஆகும். ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 853 பேர் பயணிக்கக் கூடிய இந்த விமானங்களை இயக்குவது விமான நிலையங்களின் கவுரவமாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் டெல்லி, மும்பை, பெங்களூரு விமான நிலையங்களில் இருந்து மட்டும் தான் இந்த வகை விமானம் இயக்கப்பட்டு வருகிறது. மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து இந்த வகை விமானங்களை இயக்க கட்டமைப்பு வசதிகள் இல்லை. இந்த விமானங்களை இயக்க 60 மீட்டர் அகலம் கொண்ட ஓடுபாதைகள்  தேவை; ஆனால், சென்னை விமான நிலைய ஓடுபாதையின் அகலம் 45 மீட்டர் தான். அதேபோல், ஏர்பஸ் 350, போயிங் 777 வகை விமானங்களில் வரும் பயணிகளை கையாளுவதற்கான வசதிகள் மட்டும் தான் சென்னை விமான நிலையத்தில் உள்ளது. அதனால், ஏர்பஸ் 380 விமானங்களை சென்னை விமான நிலையத்தில் இருந்து இயக்க முடியாது. புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டால் மட்டும் தான் இந்த வகை விமானங்கள் மற்றும் எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்படக் கூடிய புதிய வகை விமானங்களை சென்னையிலிருந்து இயக்க முடியும்.</p><h2><strong>வல்லுனர்கள் கவலை</strong></h2><p>2031-ஆம் ஆண்டுக்குள் புதிய விமான நிலையம் கட்டப்படவில்லை என்றால், சென்னைக்கு புதிய விமானங்கள் வராது. அவை பெங்களூரு, ஐதராபாத் விமான நிலையங்களுக்கு சென்றால், அது ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் பின்னடைவை ஏற்படுத்தி விடும் என்று வல்லுனர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.</p><p>அடுத்த ஐந்தாண்டுகளில் புதிய விமான நிலையம் பயன்பாட்டுக்கு வரவேண்டும். இப்போதே பணிகளைத் தொடங்கினால் கூட, அது சாத்தியமாக இன்னும் 8 ஆண்டுகள் ஆகக்கூடும். எனவே, அவசர நிலையைக் கருத்தில் கொண்டு புதிய விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை அரசு விரைந்து தேர்ந்தெடுக்க வேண்டும்.</p><p>சென்னை விமான நிலையம் அமைக்கும் விஷயத்தில் இத்தனைக் குழப்பங்கள் ஏற்படுவதற்கு காரணம்  நிலங்களை கையகப்படுத்தும் கொள்கையில் தெளிவு இல்லாதது தான். வேளாண்மை சாராத எந்தப் பணிக்கும் நிலங்களை கையகப்படுத்துவதில்லை என்பதை கொள்கை முடிவாத தமிழ்நாடு அரசு எடுத்திருந்தால், பரந்தூர் விமான நிலையத்திற்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டிருக்காது. எனவே, இனிவரும் காலங்களிலாவது இத்தகைய குழப்பங்கள் ஏற்படுவதைத் தடுக்க தமிழ்நாட்டில் எந்தவொரு திட்டத்திற்காவும்  வேளாண் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படாது என்பதை கொள்கை முடிவாக அரசு அறிவிக்க வேண்டும்.</p><p>அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக மேல்மா உள்ளிட்ட 11 கிராமங்களில் 3174 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி விரிவாக்கத்திற்காக ஒரு கைப்பிடி மண்ணை கூட கையகப்படுத்திக் கொடுக்க மாட்டோம் என்று தமிழ்நாட்டு மக்களுக்கு முதலமைச்சர் விஜய் அவர்கள் வாக்குறுதி அளிக்க வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக பரந்தூர் விமான நிலையத்திற்காக இதுவரை கையகப்படுத்தப்பட்ட நிலங்களை சிப்காட் தொழிற்பேட்டை அமைத்தல் உள்ளிட்ட எந்த திட்டத்துக்காகவும் பயன்படுத்தக்கூடாது.</p>]]></content:encoded></item><item><title>அமைச்சர் ஆதவ் விட்ட சவால்... சட்டசபையில் வெடித்த வார்த்தை மோதல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-dmk-and-congress-members-arguments-in-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-dmk-and-congress-members-arguments-in-assembly#comments</comments><guid isPermaLink="false">eb119c01-46f5-4957-a401-669b99a4923a</guid><pubDate>Mon, 24 Aug 2026 08:48:00 +0000</pubDate><atom:updated>2026-08-24T08:48:00.553Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/51q5vwyp/aadhavarjuna.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் ஆதவ் அர்ஜூனா]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ஆதவ் அர்ஜூனா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/51q5vwyp/aadhavarjuna.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், தேர்தலில் வெற்றியும் தோல்வியும் மக்களால் வந்தது, வேறு விவாதங்கள் வேண்டாம் என்றார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபையில்</a>, அடுத்த தேர்தலில் திமுக தனித்து நின்று 50 இடங்களில் வெற்றி பெற்று காட்டுங்கள். காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், ஐயூஎம்எல் கட்சிகள் இல்லையென்றால் தி.மு.க. எதிர்க்கட்சியாக கூட அமர்ந்திருக்க முடியாது என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறினார். இதனால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். </p><p>தி.மு.க.வால் காங்கிரஸ் வென்றது என்றும், காங்கிரஸ் தயவால் தி.மு.க. வென்றது என்றும் 2 கட்சியினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.</p><p>இதற்கு பதில் அளித்த தி.மு.க. எம்.எல்.ஏ.கோவி. செழியன், பூஜ்யத்தில் இருந்து வந்தது தி.மு.க. எதையும் எதிர்கொள்ள தி.மு.க. தயார் என்று கூறினார். </p><p>தி.மு.க. எம்.எல்.ஏ. கே.என்.நேரு கூறுகையில், தி.மு.க. கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற கட்சிகளின் ஆதரவால் தான் த.வெ.க. இன்று ஆட்சியில் இருக்கிறது. உங்களுக்கு அவ்வளவு ரோஷம் இருந்தால் அவர்களை வெளியில் அனுப்புங்கள். கூட்டணி கட்சிகளை வெளியே அனுப்பி விட்டு தனியா நின்று ஆட்சி நடத்துங்கள் என்றார். </p><p>இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ், யாரும் யாருக்கும் அடிமையில்லை, தேர்தல் முடிந்தவுடன் கூட்டணி முடிந்துவிடும். தேர்தல் முடிவுக்குப்பின் யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பது அந்தந்த கட்சிகளின் விருப்பம் என்றார். </p><p>இதையடுத்து பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பட், 2024-ல் தி.மு.க.விற்கு 40க்கு 40 வெற்றி கிடைத்ததற்கு காங்கிரஸ் கட்சி தான் காரணம் என கூறினார். </p><p>தி.மு.க. எம்.எல்.ஏ கே.என்.நேரு பேசுகையில், எங்களை விட்டு தனியாக நின்று காங்கிரஸ் வெற்றி பெற்றது உண்டா? என கேள்வி எழுப்பினார். மேலும் தமிழ்நாட்டில் 10 இடங்களில் காங்கிரசை வெற்றி பெற வைத்தது தி.மு.க., ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என அறிவித்தது தி.மு.க. என்றார். </p><p>அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், 11 அமைச்சர்களை பெற்றுக்கொண்டு காங்கிரசை திமுக ஆதரித்தது என்றார். </p><p>இதற்கிடையே பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், தேர்தலில் வெற்றியும் தோல்வியும் மக்களால் வந்தது, வேறு விவாதங்கள் வேண்டாம் என்றார். </p><p>இவ்வாறு சட்டசபையில் காரசார விவாதம் நடைபெற்றது. </p>]]></content:encoded></item><item><title>&apos;குட் டச், பேட் டச்&apos; பற்றிய காட்சி: ஜனநாயகன் படக்குழுவை மனதார பாராட்டிய பாடகி சின்மயி!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/good-touch-bad-touch-scene-singer-chinmayi-praises-jananayagan-team</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/good-touch-bad-touch-scene-singer-chinmayi-praises-jananayagan-team#comments</comments><guid isPermaLink="false">ae5f6ef7-9ba6-4543-99a6-fbe580b52384</guid><pubDate>Mon, 24 Aug 2026 08:33:32 +0000</pubDate><atom:updated>2026-08-24T08:33:32.760Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>எச்.வினோத்,H.vinoth,JanaNayagan,ஜனநாயகன்,Chief Minister Vijay,தமிழக முதலமைச்சர் விஜய்,Singer Chinmayi,பாடகி சின்மயி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/p33nk3qt/chinmayi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Singer Chinmayi ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/p33nk3qt/chinmayi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த ‘<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/jananayagan-success-due-to-vijays-magic-producer-k-venkat-narayana-interview">ஜனநாயகன்</a>’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இத்திரைப்படம் திரையரங்க வெளியீட்டைத் தொடர்ந்து தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வரும் நிலையில், அதில் இடம் பெற்றுள்ள ஒரு குறிப்பிட்ட முக்கியக் காட்சி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளது.</p><p>திரைப்படத்தில் குழந்தைகளுக்கு எதிரான <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/jananayagan-movie-awareness-elderly-man-arrested-under-pocso-act">பாலியல் வன்கொடுமைகள்</a>, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் 'நல்ல தொடுதல், கெட்ட தொடுதல்' பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மிக அழுத்தமான காட்சி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்காட்சியைப் பார்த்து நெகிழ்ந்த பிரபல பின்னணிப் பாடகியும் சமூகச் செயல்பாட்டாளருமான சின்மயி ஸ்ரீபாதா, தனது சமூக வலைதளப் பக்கத்தில் இயக்குநர் எச்.வினோத் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் ஆகியோருக்குத் தனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.</p><h2>குழந்தைகள் <strong>பாதுகாப்பிற்கு குரல்</strong> கொடுத்த விஜய்</h2><p>பாடகி சின்மயி தனது பதிவில், "ஜனநாயகன் திரைப்படத்தைப் பார்த்தேன். நான் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பாலியல் அத்துமீறல்களுக்கு எதிரான விரைவான நடவடிக்கை குறித்த கருத்து இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. விஜய் போன்ற ஒரு மிகப்பெரிய நட்சத்திரமும், தற்போது தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கும் ஒரு தலைவரும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்துப் பேசுவது மிகவும் அவசியமானதும் முக்கியமானதும் ஆகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p>மேலும், இத்தகைய உணர்வுப்பூர்வமான மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் காட்சியை வணிக ரீதியான ஒரு பெரிய திரைப்படத்தில் சேர்த்ததற்காக இயக்குநர் எச்.வினோத்திற்கும், அதில் நடித்த முதலமைச்சர் விஜய்க்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். குழந்தைகள் அனைவரும் இத்தகைய அத்துமீறல்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை கிடைக்க வேண்டும் என்றும் அவர் தனது பதிவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p><h2>சமூக வலைதள<strong>ங்களில் குவியு</strong>ம் ஆதரவு</h2><p>திரைப்படங்களில் பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டுமின்றி, சமூகத்திற்குத் தேவையான விழிப்புணர்வுச் செய்திகளையும் சேர்ப்பது காலத்தின் அவசியமாக மாறியுள்ளது. குறிப்பாக குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை முன்னணி நடிகர்கள் மூலம் கொண்டு சேர்க்கும்போது அது மக்கள் மத்தியில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பாடகி சின்மயியின் இந்த பாராட்டுப் பதிவைத் தொடர்ந்து, திரைத்துறையினரும் பொதுமக்களும் இக்காட்சியின் முக்கியத்துவத்தைப் பகிர்ந்து இணையத்தில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தேர்தல்.. பதறிய ஜெலன்ஸ்கி - பாதுகாப்பு அமைச்சரை நீக்கியது பற்றி விளக்கம் - உக்ரைனில் என்ன நடக்கிறது?</title><link>https://www.maalaimalar.com/news/world/holding-elections-in-ukraine-would-be-a-disaster-why-was-the-defense-minister-dismissed-what-zelenskyy-said</link><comments>https://www.maalaimalar.com/news/world/holding-elections-in-ukraine-would-be-a-disaster-why-was-the-defense-minister-dismissed-what-zelenskyy-said#comments</comments><guid isPermaLink="false">c196dea2-f9fc-4995-8ac3-a031a4c1becd</guid><pubDate>Mon, 24 Aug 2026 08:23:24 +0000</pubDate><atom:updated>2026-08-24T08:23:24.022Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உக்ரைன் போர்,Russia,Ukraine War,Zelenskyy,ஜெலன்ஸ்கி,ரஷியா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/ekr7r2zw/tn-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஜெலன்ஸ்கி ,  மிகைலோ பெடோரோ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஜெலன்ஸ்கி ,  மிகைலோ பெடோரோ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/ekr7r2zw/tn-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ரஷியாவுடனான போருக்கு மத்தியில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D">உக்ரைன் </a>அதிபர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF">ஜெலன்ஸ்கி </a>கடந்த ஜூலை மாதம் தனது அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த மிகைலோ பெடோரோ-ஐ பதவி நீக்கம் செய்தார்.</p><p>இந்த பதவிநீக்கம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் குறித்து ஜெலன்ஸ்கி முதல்முறையாக பொது வெளியில் பேசியுள்ளார். </p> <h2>பதவி நீக்கம்</h2><p>உக்ரைன் பாதுகாப்பு அமைச்சராக இருந்த 35 வயது மிகைலோ பெடோரோ பதவியேற்ற ஆறே மாதங்களில் அவர் அப்பதவியில் இருந்து கடந்த ஜூலை 16 இல் நீக்கப்பட்டார்.</p><p>உக்ரைன் ராணுவத்தில் நவீன டிரோன் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து ரஷிய எல்லைக்குள் புகுந்து பல தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தியதால் மிகைலோ பெடோரோ, 'டிரோன் போரின் தந்தை' என்று உக்ரைன் மக்களால் கொண்டாடப்பட்டவர்.</p> <h2>ஏன் பதவி நீக்கம்?</h2><p>உக்ரைன் ராணுவ தலைமை தளபதி அலக்சாண்டர் சிர்ஸ்கிக்கும், பாதுகாப்பு அமைச்சராக இருந்த பெடோரோவிற்கும் இடையே போர் வியூகம் தொடர்பாக ஏற்பட்ட மோதலே அவரை ஜெலன்ஸ்கி நீக்க காரணம் எனக் கூறப்பட்டது.</p><p>எதிர்காலப் போர் டிரோன்கள் மூலமே நடக்கும் என்று பெடோரோவ் வாதிட, தரைப்படை தான் முக்கியம் என்று தலைமை தளபதி சிர்ஸ்கி பிடிவாதமாக இருந்தார்.</p><p>இந்த மோதலில் அதிபர் ஜெலென்ஸ்கி ராணுவத் தலைமையின் பக்கம் சாய்ந்து அமைச்சரை நீக்கினார்.</p> <h2>செல்வாக்கு</h2><p>பெடோரோ உக்ரைன் மக்களிடையே, முக்கியமாக இளைஞர்களிடமும் தொழில்நுட்பத் துறையினரிடமும் மிகுந்த செல்வாக்கு படைத்தவர்.</p><p>அவர் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, நாட்டில் அவருக்கு ஆதரவாகப் போராட்டங்கள் நடைபெற்றன.</p> <h2>தேர்தல் கோரிக்கை</h2><p>அண்மையில் மிகைலோ பெடோரோ பேசுகையில், அரசிலும் ராணுவக் கொள்முதல்களிலும் ஊழல்கள் அதிகரித்துள்ளதாக பெடோரோவ் குற்றம் சாட்டினார்.</p><p>ஜனநாயக முறையில் மக்கள் புதிய தலைவர்களைத் தேர்ந்தெடுக்க தேர்தல் தான் ஒரே வழி என அவர் தெரிவித்தார்.</p><p>உக்ரைன் சட்டப்படி, நாட்டில் ராணுவ ஆட்சிஅமலில் இருக்கும்போது தேர்தல் நடத்த முடியாது.</p><p>ரஷியாவுடனான போர் தொடர்வதால் அங்கு ராணுவ ஆட்சி நீடிக்கிறது. எனவே, போரின் நடுவே தேர்தல் நடத்துவது சாத்தியமற்றது.</p> <h2>ஜெலன்ஸ்கி பதில்</h2><p>இதற்கு அண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பதிலளித்த ஜெலன்ஸ்கி, "போர் நடக்கும்போது தேர்தல் நடத்துவது நாட்டின் ஒற்றுமையை சிதைக்கும் ஒரு சுனாமி போன்றது.</p><p>எதிரியான ரஷியா இதைப் பயன்படுத்தி உக்ரைனை எளிதில் பிளவுபடுத்திவிடும்" எனக் கூறி அதை நிராகரித்தார்.</p><h2>பெடோரோ பற்றி ஜெலன்ஸ்கி</h2><p>மேலும் பெடோரோவை பதவியில் இருந்த நீக்கியது குறித்து பேசிய ஜெலன்ஸ்கி, "பெடோரோவுக்கு அரசில் 4 மாற்றுப் பதவிகள் வழங்கப்பட்டும், அவர் அவற்றை நிராகரித்துவிட்டார்.</p><p>ரஷிய எல்லைக்குள் டிரோன் தாக்குதல்களுக்காக ஸ்டார்லிங்க் இணையத்தை பயன்படுத்த அதன் உரிமையாளர் எலான் மாஸ்க் ஒப்புக்கொண்டதாக பெடோரோ தலைமையிலான பாதுகாப்பு அமைச்சகம் எனக்கு தவறான தகவலை தெரிவித்தது.</p><p>இதை நம்பி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் பேசியபோது, மஸ்க் அப்படி எந்த அனுமதியும் தரவில்லை என தெரியவந்தது. இதனால் டிரம்ப்பை நான் ஏமாற்றியது போன்ற சங்கடமான சூழ்நிலை உருவானது" என தெரிவித்துள்ளார்.</p><p>இதனிடையே மேஜர் ஜெனரல் யெவ்கெனி க்மாரா புதிய பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>பரந்தூர் விமான நிலையத்தைக் கைவிடுவது தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் படுகுழியில் தள்ளிவிடும்- மு.க.ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-comment-parandur-airport-project-cancelled</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-comment-parandur-airport-project-cancelled#comments</comments><guid isPermaLink="false">5bf9ea32-7aa8-4723-9e1c-6903387a07d3</guid><pubDate>Mon, 24 Aug 2026 08:22:27 +0000</pubDate><atom:updated>2026-08-24T08:22:27.420Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,Parandur Airport,பரந்தூர் விமான நிலையம்,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/6tv6mr4e/MKStalin09.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முக ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ முக ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/6tv6mr4e/MKStalin09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தற்போது அமைந்துள்ள புதிய அரசு மீண்டும் வேறு இடத்தைத் தேர்வு செய்து பணிகள் தொடங்குமுன், தமிழ்நாட்டின் வளர்ச்சியே மொத்தமாக DROP ஆகிவிடும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.</strong></em> </p><p>முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">பரந்தூர்</a> பன்னாட்டு விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு மாநில வளர்ச்சியைப் பல ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிடும். அற்ப அரசியல் காரணங்களுக்காகத் தமிழ்நாட்டின் நலனை அடகு வைக்கக் கூடாது.</p><h2><strong>பெருத்த ஏமாற்றம்</strong></h2><p>மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை விதி எண்.110-இன்கீழ் அறிவித்துவிட்டு விவாதத்துக்கோ கருத்து தெரிவிக்கவோ கூட இடமில்லாமல் செய்திருப்பது சரியல்ல.</p><p>மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி, ஆட்டோமொபைல் என சகல துறைகளிலும் முதலிடம் வகிக்கும் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-makes-a-surprise-announcement-in-the-assembly-abandoning-the-parandur-airport-project">தமிழ்நாட்டின்</a> தலைநகரில் உலகத் தரத்திலான ஒரு விமான நிலையம் அமைவது மிக மிக அவசியமானது. அதை வேண்டாம் என மறுத்திருப்பது மாற்றமல்ல; பெருத்த ஏமாற்றம்!</p><p>சாத்தியமுள்ள அனைத்து மாற்று இடங்களையும் கவனமாகப் பரிசீலித்த பின்புதான் பரந்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்தலும் நிறைவடையும் தருவாயில் உள்ளது. பலகட்டப் பணிகள், ஒப்புதல்கள் நிறைவடைந்த நிலையில் ஆட்சிக்கு வந்ததும் கட்டுமானம் விரைந்து தொடங்கப்பட பல திட்டங்களை நாங்கள் வைத்திருந்தோம். தற்போது அமைந்துள்ள புதிய அரசு மீண்டும் வேறு இடத்தைத் தேர்வு செய்து பணிகள் தொடங்குமுன், தமிழ்நாட்டின் வளர்ச்சியே மொத்தமாக DROP ஆகிவிடும். </p><p>முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக #DravidianModel ஆட்சியில் இருந்த தமிழ்நாடு கடைசி இடத்துக்குத் தள்ளப்படும். முதலமைச்சரின் அறிவிப்பு நம் போட்டி மாநிலங்களுக்கு அடித்த ஜாக்பாட்!</p><p>தொழில் வளர்ச்சி இல்லாமல் ஒரு ட்ரில்லியன் டாலர், ஒன்றரை டரில்லியன் டாலர் என்ற பொருளாதார வளர்ச்சி இலக்குகள் சாத்தியமே இல்லை. எந்த யோசனையும் ஆலோசனைகளும் இல்லாமல் த.வெ.க. அரசு எடுத்திருக்கும் இந்த முடிவு தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளைத் தகர்க்கும் பேரிடி! என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Dropping Parandur is not Change. It&#39;s an irreversible setback for Tamil Nadu&#39;s growth<br><br>The announcement made today by the Hon’ble Chief Minister of Tamil Nadu to drop the Parandur International Airport project will set the State’s development back by several years. Tamil Nadu’s… <a href="https://t.co/QHZdVdK21L">pic.twitter.com/QHZdVdK21L</a></p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2091799886542815579?ref_src=twsrc%5Etfw">August 24, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>மிஸ் யூனிவர்ஸ் இந்தியா 2026: கேரளத்தைச் சேர்ந்த காசியா லிஸ் மெஜோ மகுடம் சூடினார்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/miss-universe-india-2026-kerala-s-kashiya-liz-mejo-crowned</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/miss-universe-india-2026-kerala-s-kashiya-liz-mejo-crowned#comments</comments><guid isPermaLink="false">50fbf73d-3e27-4795-946b-9e7c02757c22</guid><pubDate>Mon, 24 Aug 2026 08:08:51 +0000</pubDate><atom:updated>2026-08-24T08:08:51.977Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>kerala,கேரளம்,ஜெய்பூர்,Kaziah Liz Mejo,Miss Universe India 2026,மிஸ் யூனிவர்ஸ் இந்தியா,காசியா லிஸ் மெஜோ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/fxboajjn/Untitled-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kaziah Liz Mejo  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/fxboajjn/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜெய்பூரில் நடைபெற்ற 'மிஸ் யூனிவர்ஸ் இந்தியா 2026' அழகிப் போட்டியின் பிரமாண்ட இறுதிச்சுற்றில், கேரள மாநிலம் மாவேலிக்கரையைச் சேர்ந்த 19 வயதான காசியா லிஸ் மெஜோ வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். இதன் மூலம், இப்பட்டத்தை வெல்லும் முதல் கேரளாப் பெண் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார். நாடு முழுவதிலும் இருந்து தேர்வான 52 போட்டியாளர்களைத் தாண்டி இவர் இந்த மகுடத்தைச் சூடியுள்ளார்.</p><h2>ஜெய்பூரில் நட<strong>ந்த பிரமாண்ட இ</strong>றுதிச்சுற்று</h2><p>ஜெய்பூரில் உள்ள <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/vishwanath-and-sons-new-collection-update">ஜீ ஸ்டுடியோஸில்</a> நடைபெற்ற இந்த அழகிப் போட்டியில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 52 இறுதிப் போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்தியாவின் முதல் மிஸ் யூனிவர்ஸ் சுஷ்மிதா சென், முன்னாள் அழகிகள் உர்வசி ரவுத்தேலா, செலினா ஜெய்ட்லி மற்றும் ரியா சிங்ஹா ஆகியோர் அடங்கிய நடுவர் குழு போட்டியைத் தேர்வு செய்தது.</p><h2>போட்டியின் இ<strong>தர வெற்றியாளர்</strong>கள்</h2><p>இப்போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வைஷ்ணவி கணேஷ் முதல் ரன்னர்-அப் பட்டத்தையும், 'மிஸ் இன்டர்நேஷனல் இந்தியா 2026' பட்டத்தையும் தட்டிச் சென்றார். குஜராத்தின் அனுஸ்ரீ சதாவலேகர் இரண்டாம் ரன்னர்-அப் பட்டத்தைப் பெற்றார். மகாராஷ்டிராவின் தேஜஸ்வினி ஸ்ரீவஸ்தவா மற்றும் உத்தரகாண்டின் அனுபஹா வஷிஸ்ட் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தனர்.</p><h2>யார் இந்த காசியா <strong>லிஸ் மெஜோ</strong>?</h2><p>சட்டக் கல்லூரி மாணவியும் மாடலுமான காசியா, 12 ஆண்டுகள் பரதநாட்டியம் கற்ற கலைஞர். பாடகர், டிரம்ஸ் மற்றும் வயலின் வாசிக்கும் திறமை படைத்த இவர், 'மிஸ் டீன் இன்டர்நேஷனல் 2025' போட்டியில் முதல் ரன்னர்-அப் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுவயதில் தனது தோற்றம் குறித்துத் தன்னம்பிக்கை இல்லாமல் இருந்த இவர், விடாமுயற்சியால் இன்று நாட்டின் உயரிய அழகி மகுடத்தை அடைந்துள்ளார்.</p><h2>சர்வதேச மேடை <strong>நோக்கி பயணம்</strong></h2><p>தேசிய அளவிலான பட்டத்தை வென்றுள்ள காசியா லிஸ் மெஜோ, இந்த ஆண்டின் பிற்பகுதியில் போர்ட்டோ ரிகோவில் நடைபெறவுள்ள 75-வது மிஸ் யூனிவர்ஸ் உலக அழகிப் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்கவுள்ளார். உலக மேடைக்குத் தயார் செய்வதற்காக, ஸ்டைலிங், உடற்பயிற்சி மற்றும் பேச்சுத் திறன் உள்ளிட்ட பல்வேறு சிறப்புப் பயிற்சிகளை அவர் மேற்கொள்ளவுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கொளத்தூர் தொகுதியில் தவெக வெற்றிக்கு எதிராக மு.க.ஸ்டாலின் வழக்கு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-challenges-tvk-candidate-vs-babu-victory-in-kolathur</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-challenges-tvk-candidate-vs-babu-victory-in-kolathur#comments</comments><guid isPermaLink="false">c952113f-8e5e-44f2-b6d1-41d9d2765790</guid><pubDate>Mon, 24 Aug 2026 08:04:29 +0000</pubDate><atom:updated>2026-08-24T08:04:29.482Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,kolathur assembly,தமிழக சட்டமன்ற தேர்தல்,முக ஸ்டாலின்,கொளத்தூர் தொகுதி,TN Assembly elction 2026</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/u01trzf3/MKS.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DMK Leader MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/u01trzf3/MKS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கொளத்தூரில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளரும், கட்சி தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.</p><p>இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில், தவெக சார்பில் போட்டியிட்ட விஎஸ் பாபு வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.</p><p>கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் ஆய்வு செய்ய தேர்தல் ஆணையத்தின் அனுமதி கேட்கப்பட்டது. </p><p>அனுமதி பெற்றவுடன் அதன் அடிப்படையில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ தலைமையிலான வழக்கறிஞர்கள் சிந்தாதிரிப்பேட்டையில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு எந்திரங்களை ஆய்வு செய்தனர்.</p><p>குறிப்பாக வாக்கு பதிவு மையங்களான 1, 17,28 ,32 ,75 ,78, 79 ,84 ,87 ,112 ,122 157 ,170 உள்ளிட்ட வாக்கு சாவடிகளில் வைக்கப்பட்டிருந்த விவி பேட், வாக்கு பதிவு எந்திரம், கண்ட்ரோல் யூனிட் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன.</p><p>அப்போது பெல் நிறுவனத்தினால் நியமிக்கப்பட்ட என்ஜினீயர் உடன் இருந்தார். நூறு சதவீத விவி பேட் மற்றும் வாக்கு பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது. </p><p>இதில் ஆறு வாக்கு சாவடிகளில் பதிவான வாக்குகள் மற்றும் விவிபேடுகளை ஒப்புகை சீட்டுகளை ஒப்பிட்டுப் பார்த்ததில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டன. </p><p>இதையடுத்து அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் பிரதிநிதி சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார். </p><p>தேர்தல் எந்திரம்  தொடர்பாக புகார் செய்வது தொடர்பான வெளிப்படையான ஒரு நடை முறையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும். பல வாக்கு சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு முறைகேடு நடந்துள்ளது. </p><p>குறிப்பாக பல வாக்குப்பதிவு எந்திரங்களில்  ஹார்டுவேர் என்று சொல்லக்கூடிய மென்பொருள் கோளாறு ஏற்பட்டது. </p><p>தொழில்நுட்ப கோளாறுகளை சுட்டிக்காட்டிய பின்பும் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி உரிய வழிகாட்டு நெறிமுறைகளின்படிதான் சோதனை மற்றும் சரிபார்த்தல் நடைபெற்றுள்ளது. </p><p>எனவே பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதால்</p><p>அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவி பேடுகளை சரிபார்க்க வேண்டும்.</p><p>மேலும், தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும், நான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.</p><p>இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதன்முறையாக எம்எல்ஏக்கள் பேசுவதை &apos;கன்னிப் பேச்சு என்று குறிப்பிட வேண்டாம்!- பெண் எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/female-mlas-request-do-not-refer-to-the-first-speeches-made-by-mlas-as-kanni-speech</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/female-mlas-request-do-not-refer-to-the-first-speeches-made-by-mlas-as-kanni-speech#comments</comments><guid isPermaLink="false">aca0502a-2d0b-46ea-9c97-4b042c01ed9f</guid><pubDate>Mon, 24 Aug 2026 07:53:03 +0000</pubDate><atom:updated>2026-08-24T07:53:03.242Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,கன்னிப் பேச்சு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/qkid2vkd/TNGovt.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தமிழக சட்டசபை]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக சட்டசபை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/qkid2vkd/TNGovt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>'கன்னிப் பேச்சு' என்ற வார்த்தைக்குப் பதிலாக 'அறிமுக உரை' அல்லது 'முதல் உரை' போன்ற வார்த்தையைப் பயன்படுத்தலாம் என்று சபாநாயகரிடம் பா.ம.க எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி கோரிக்கை முன்வைத்தார்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">சட்டசபையில்</a> எம்.எல்.ஏ.க்களின் முதல் உரையை கன்னிப் பேச்சு என்று  குறிப்பிடுவது மரபாக இருந்து வருகிறது. ஆனால் அப்படி குறிப்பிட வேண்டாம் என்று சட்டசபையில் பெண் எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை வைத்தனர்.</p><p>பாராளுமன்றம் அல்லது சட்டசபையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பேசும் முதல் உரையை 'கன்னிப் பேச்சு' என்று கூறுவார்கள்.</p><p>தமிழக சட்டசபையில் இன்றும் 'கன்னிப் பேச்சு' என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.</p><h2><strong>அறிமுக உரை</strong></h2><p>இந்நிலையில் 'கன்னிப் பேச்சு' என்ற வார்த்தைக்குப் பதிலாக 'அறிமுக உரை' அல்லது 'முதல் உரை' போன்ற வார்த்தையைப் பயன்படுத்தலாம் என்று சபாநாயகரிடம் பா.ம.க எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி கோரிக்கை முன்வைத்தார்.</p><p>அதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.லதாவும் இதனை முன்மொழிந்தார். அவர் பேசுகையில், "கன்னிப் பேச்சு என்ற வார்த்தை ஆணாதிக்க சிந்தனையை வெளிப்படுத்துவதாக இருப்பதால் அதனை அவைக்குறிப்பில் இருந்தும் நீக்க வேண்டும்" என்றார்.</p><p>இதற்கு பதில் அளித்த அமைச்சர் ராஜ்மோகன்," கடந்த சட்டப்பேரவையிலேயே வானதி சீனிவாசன் இதுபற்றி பேசியுள்ளார். கடந்த அவையிலும் இதனை பரிசீலிப்பதாகச் சொன்னார்கள். சௌமியா சொன்னது நல்ல ஆலோசனை. இது ஒரு மரபாக உள்ளது. எங்கள் வெற்றித் தலைவரின் ஆட்சியில் இதனை பரிசீலனை செய்யுமாறு வழிமொழிகிறேன்" என்றார்.</p>]]></content:encoded></item><item><title>ஓராண்டிற்குள் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளி தரம் உயர்த்தப்படும்- ஆதவ் அர்ஜூனா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/aadhav-arjuna-promises-upgrade-of-government-schools-in-a-year</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/aadhav-arjuna-promises-upgrade-of-government-schools-in-a-year#comments</comments><guid isPermaLink="false">a0a7bf89-3217-46f0-bc5d-cd222555d2d4</guid><pubDate>Mon, 24 Aug 2026 07:36:52 +0000</pubDate><atom:updated>2026-08-24T07:36:52.746Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆதவ் அர்ஜூனா,Aadhav Arjuna,govt schools,தமிழக அரசு பள்ளிகள்,TN assembly,தமிழக சட்டசபை |</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/hvplvu71/Adhav.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Aadhav arjuna]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/hvplvu71/Adhav.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் பொதுப்பணித்துறை ஆதவ் அர்ஜூனா உரையாற்றினார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><p>பொதுப்பணித்துறையில் பராமரிப்பு பணியில் அதிக நிதிக் கசிவு ஏற்பட்டுள்ளது.</p><p>நிதிக் கசிவு தொடர்பாக 30 நாட்களாக தகவல்களை திரட்டி வருகிறோம்.</p><p>பெண்கள் படிக்கும் பல பள்ளிகளில் கழிவறை வசதிகள் இல்லை. பள்ளிகளின் பராமரிப்பு பணி பொதுப்பணித்துறையின் கீழ் வருகிறது.</p><p>பெண்கள் படிக்கும் பள்ளிகளில் கழிவறைகள் முறையாக பராமரிக்கப்படவில்லை.</p><p>நான் பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தே பள்ளி, கல்லூரி கட்டிடங்கள் சீரமைக்கப்படவில்லை.</p><p>நான் 10-ம் வகுப்பு படித்தபோது இடிந்து விழுந்த பள்ளிக்கட்டிடம் 12-ம் வகுப்பு முடிக்கும் வரையிலும் கூட கட்டப்படவில்லை.</p><p>பள்ளிக்கல்வித்துறை, பொதுப்பணித்துறை இணைந்து 234 தொகுதியிலும் பள்ளி, கல்லூரி கட்டிடங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>எம்எல்ஏக்கள் அவரவர் தொகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.</p><p>பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் உண்மை நிலை குறித்து அறிக்கை அளித்து தேவையான நிதி குறித்தும் தெரிவிக்கலாம்.</p><p>ஓராண்டிற்குள் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளி, கல்லூரிகளை தரம் உயர்த்த வேண்டும்.</p><p>அரசு பள்ளி, கல்லூரிகளை தரம் உயர்த்துவதில் அந்தந்த தொகுதி எம்எல்ஏக்கள் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும்.</p><p>அரசு பள்ளி, கல்லூரி கட்டிடங்களை பராமரிப்பதில் எந்த ஊழலும் இருக்க கூடாது. </p><p>பொதுப்பணித்துறையில் கடந்த 30 ஆண்டுக்களுக்கான தகவலை எடுத்துக்கொண்டிருக்கிறோம்.</p><p>சர்வே 40% நிறைவடைந்த நிலையில் முழு பணியும் நிறைவடைய மேலும் 2 மாதங்கள் ஆகும். எம்எல்ஏக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.</p><p>கல்வி நிறுவன கட்டிடங்கள் 3 ஆக பிரிப்பு. சிவப்பு நிறம் பயன்படுத்த முடியாத கட்டிடம், மஞ்சள் நிறம் சீரமைக்க வேண்டிய கட்டிடம்.</p><p>அடுத்த 5 ஆண்டுகளுக்கு பராமரிப்பு தேவைப்படாத பள்ளி, கல்லூரி கட்டிடங்களில் பச்சை ஸ்டிக்கர் ஒட்டப்படும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><h2>அமைச்சர் ராஜ்மோகன்</h2><p>பள்ளிகளில் பூட்டப்பட்ட கதவுகள் உடைய கழிப்பறை கட்டுவதற்கு தான் முதல் கையெழுத்து போட்டேன்.</p><p>முறையான கழிவறை இல்லாததால் 8 மணி நேரம் வரை பள்ளி மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர். </p><p>மாணவிகளுக்கு கழிப்பறை என்பது தான் முதல் சேவை. ஏற்கனவே அமைச்சர் ஆதவுடன் ஆலோசனை நடத்தி உள்ளேன்.</p><p>குற்றம் நடப்பதை தடுக்கும் வகையில் பள்ளிகளில் சிசிடிவி பொறுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.</p><p>பள்ளிக்கட்டிடங்கள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு பொதுப்பணித்துறை அமைச்சருக்கு  அமைச்சர் ராஜ்மோகன் கோரிக்கை வைத்துள்ளார்.</p><h2>திமுக எம்எல்ஏ எம்ஆர்கே.பன்னீர்செல்வம்</h2><p>அரசு பள்ளிகளில் கழிப்பறை இல்லாததை போல் தோற்றத்தை உருவாக்க முயற்சி.</p><p>கழிப்பறையே கட்டவில்லை என்ற தோற்றத்தை உருவாக்க அமைச்சர்கள் முயற்சிக்கின்றனர், அது தவறு.</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</h2><p>எந்த கட்சி, எந்த ஆட்சியை பற்றியும் நான் பேசவில்லை, மக்கள் எதை எதிர்பார்க்கின்றனரோ அதை தான் சொல்கிறேன்.</p><p>அரசு கல்வி என்பது கருணை அடிப்படையிலான ஒன்று அல்ல, அது உரிமை அடிப்படையிலான ஒன்று.</p><p>காமராஜர் காலத்தில் படித்ததால் தான் எதிர்தரப்பினர் படித்தபோது அரசு பள்ளி நல்ல நிலையில் இருந்தது.</p><p>இவ்வாறு கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சரை பற்றி தரக்குறைவு பேச்சு... திமுக எம்எல்ஏவை சாடிய பெண் அமைச்சர் - சபாநாயகர் சொன்னது என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/is-it-appropriate-for-a-dmk-mla-to-make-derogatory-remarks-about-the-chief-minister-what-did-the-minister-and-the-speaker-say-in-condemnation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/is-it-appropriate-for-a-dmk-mla-to-make-derogatory-remarks-about-the-chief-minister-what-did-the-minister-and-the-speaker-say-in-condemnation#comments</comments><guid isPermaLink="false">88ef3458-9fdb-4488-95cd-c9ad149be9a5</guid><pubDate>Mon, 24 Aug 2026 07:33:49 +0000</pubDate><atom:updated>2026-08-24T07:33:49.024Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தவெக,தமிழக சட்டசபை,TN assembly,tvk,JCD Prabhakar,ஜேசிடி பிரபாகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/w8ctjy99/JCDPrabhakar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்]]></media:title><media:description type="html"><![CDATA[ சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/w8ctjy99/JCDPrabhakar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நீர்வளத்துறை அமைச்சர் இன்று காலையில் எனது அலுவலகத்துக்கு வந்து இது சம்பந்தமாக கவனத்திற்கு கொண்டு வந்து இது உரிமை மீறலில் வருமா? என்று கேட்டார்.</strong></em> </p><p>தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில்  நேற்று நடைபெற்ற திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் எதிர்க்கட்சி தலைவரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துக்கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். விழா மேடையில் உதயநிதி இருக்கும் போது, மணமக்களை வாழ்த்தி, திருவையாறு தொகுதி திமுக எம்.எல்.ஏ துரை சந்திரசேகரன் பேசும் போது, "முதலமைச்சர் விஜய் பற்றியும் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பற்றியும் ஒருமையில்  பேசினார்.</p><p>இந்த பேச்சுக்கு வில்லங்கம் வரும் என்று மேடையிலேயே உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார். நான் பேச விட்டாலும் என்னை வம்பில் இழுத்து விடுகிறீர்கள் என்றார்.</p><p>இது சம்பந்தமாக  <a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">சட்டசபையில்</a> இன்று பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வந்து பேசியதாவது,</p><p>திமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் நேற்று பொது வெளியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் குறித்து மரியாதை இன்றியும் தரக்குறைவாகவும் பேசி உள்ளார். இது மிகவும் கண்டனத்துக்குரியது. தொழில்துறை அமைச்சரையும் பெண் என்றும் பாராமல் மரியாதை இல்லாமல் பேசியது கண்டனத்துக்குரியது; திமுகவினர் தேர்தல் தோல்வி மற்றும் ஆற்றாமையால் இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதாக குறிப்பிட்டார்.</p><p>அப்போது சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறியதாவது:- </p><p>நீர்வளத்துறை அமைச்சர் இன்று காலையில் எனது அலுவலகத்துக்கு வந்து இது சம்பந்தமாக கவனத்திற்கு கொண்டு வந்து இது உரிமை மீறலில் வருமா? என்று கேட்டார் . </p><p>அவர்கள் வெளியில் பேசி இருந்தாலும் அது நம்முடைய மாண்பை குலைப்பதாக இருந்தாலும், முதலமைச்சரின் மாண்பை குலைப்பதாக இருந்தாலும், அமைச்சரின் மாண்பை குலைப்பதாக இருந்தாலும் அதை படித்து பார்த்து, ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பது பற்றி நல்ல முடிவு எடுப்பேன் என்றார். </p>]]></content:encoded></item><item><title>இம்ரான் கானுக்கு ஆதரவாக களமிறங்கிய முன்னாள் கிரிக்கெட் கேப்டன்கள் - பாகிஸ்தான் பிரதமருக்கு கடிதம்</title><link>https://www.maalaimalar.com/news/world/former-cricket-captains-rally-in-support-of-imran-khan-letter-to-the-pakistan-prime-minister</link><comments>https://www.maalaimalar.com/news/world/former-cricket-captains-rally-in-support-of-imran-khan-letter-to-the-pakistan-prime-minister#comments</comments><guid isPermaLink="false">cedb37c6-359d-44db-a2dd-cf886b8c4d48</guid><pubDate>Mon, 24 Aug 2026 07:33:39 +0000</pubDate><atom:updated>2026-08-24T07:33:39.362Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Imran Khan,இம்ரான் கான்,Kapil Dev,shehbaz sharif,கபில் தேவ்,ஷெபாஸ் ஷெரீப்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/qlzlymtg/tn-1.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கபில் தேவ், இம்ரான் கான், கவாஸ்கர் ]]></media:title><media:description type="html"><![CDATA[ கபில் தேவ், இம்ரான் கான், கவாஸ்கர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/qlzlymtg/tn-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/imran-khan">இம்ரான் கானுக்கு</a> முறையான மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யக் கோரி பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்க்கு 21 சர்வதேச கிரிக்கெட் அணிகளின் முன்னாள் கேப்டன்கள் இணைந்து கடிதம் எழுதியுள்ளனர்.</p><p>சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கானுக்கு மனிதநேய அடிப்படையில் முறையான மருத்துவ சிகிச்சையும், பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும் என அதில் வலியுறுத்தியுள்ளனர்.</p> <h2>இம்ரான் கான்</h2><p>73 வயதான பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்று 2023 முதல் சிறையில் உள்ளார். </p><p>அவருக்கு சிறையில் போதிய வசதிகள் இல்லை என்றும் அவரின் உடல்நிலை குறித்தும் ஆதரவாளர்கள் மற்றும் குடும்பத்தினர் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றனர்.</p><p>கடந்த வாரம் உச்சநீதிமன்ற உத்தரவின்படி, இம்ரான் கான் அவர் அடைக்கப்பட்டுள்ள அடியாலா சிறையில் இருந்து இஸ்லாமாபாத் சர்வதேச மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். சில மணி நேரங்களுக்கு பின் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.</p><p>அவரின் உடல்நிலை மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு மோசமில்லை என அவரை பரிசோதித்த சிறப்பு மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.</p><p>இருப்பினும் அவரின் குடும்பத்தினர் அவரை சந்திக்கவும், மருத்துவ சிகிச்சைக்கும் இம்ரான் கானுக்கு உரிமை மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.</p><p>இந்த சூழலில் தான் இம்ரான் கானுக்கு ஆதரவாக அவர் கிரிக்கெட் கேப்டனாக இருந்த சர்வதேச கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன்கள் பாகிஸ்தான் பிரதமருக்கு கூட்டதாக கடிதம் எழுதியுள்ளனர்.</p> <h2>கடிதம்</h2><p>அந்த கடிதத்தில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட மருத்துவக் குழுவில், இம்ரான் கானின் தனிப்பட்ட மருத்துவர்களையும் சேர்த்து முழுமையான மருத்துவப் பரிசோதனை செய்ய அனுமதிக்க வேண்டும்.</p><p>குறிப்பாக, அவரது வலது கண்ணில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் பார்வைக் குறைபாடு குறித்து விரிவாக ஆய்வு செய்ய வேண்டும்.</p> <p>இம்ரான் கானைச் சந்திக்க அவரது குடும்பத்தினருக்கு வாரந்தோறும் அனுமதி அளிக்கும் உச்ச நீதிமன்ற உத்தரவை, எந்தவித நிர்வாகத் தாமதமுமின்றி பாகிஸ்தான் அரசு பின்பற்ற வேண்டும்.</p><p>மருத்துவக் குழுப் பரிந்துரைக்கும் சிகிச்சைகளை எந்தவிதத் தாமதமுமின்றி உடனடியாக இம்ரான் கானுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.</p> <h2>கையெழுத்து</h2><p>இந்த கடிதத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்கள் சுனில் கவாஸ்கர், கபில் தேவ், திலீப் வெங்சர்க்கார் ஆகியோரையும் சேர்த்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளின் உள்ளிட்டவற்றின் முன்னாள் கேப்டன்களும் கையெழுத்திட்டுள்ளனர்.</p><p>பாகிஸ்தானின் உள்நாட்டு சட்டப் நடைமுறைகளில் தலையிட விரும்பவில்லை என்றும் நீதிமன்ற உத்தரவுப்படி மருத்துவ உதவி வழங்குவது அடிப்படை மனிதநேயம் என்றும் முன்னாள் கேப்டன்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>கொடுத்த வாக்கை காப்பாற்றி எங்கள் கண்ணீரை முதலமைச்சர் விஜய் துடைத்துவிட்டார் - பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழு தலைவர் பேட்டி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-has-kept-his-promise-and-wiped-away-our-tears-interview-with-the-leader-of-the-parandur-airport-opposition-committee</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-has-kept-his-promise-and-wiped-away-our-tears-interview-with-the-leader-of-the-parandur-airport-opposition-committee#comments</comments><guid isPermaLink="false">56211c9d-d0c0-46b2-bf62-2f40ca67c812</guid><pubDate>Mon, 24 Aug 2026 07:05:58 +0000</pubDate><atom:updated>2026-08-24T07:05:58.362Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Parandur Airport,பரந்தூர் விமான நிலையம்,தமிழக சட்டசபை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/lhgr1owp/cmparandur.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/lhgr1owp/cmparandur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து ஏகனாபுரத்தில் உள்ள அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.</strong></em></p><p>பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழு தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது:-</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">பரந்தூர் விமான நிலைய திட்டம்</a> கைவிடப்படுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்து இருப்பது எல்லையில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதலமைச்சர் விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளார். அவருக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்.</p><p>அவர் எங்களது கண்ணீரையும், துன்பத்தையும் துடைத்துள்ளார். அவர் எங்களை சந்தித்த போது என்ன கூறினாரோ அதனை முழுவதுமாக நிறைவேற்றி இருக்கிறார். எங்கள் பகுதியில் விவசாயம், கிராம மக்களின் குடியிருப்புகள் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை இருந்து வந்த எங்களது மனக்குழப்பம், துன்பங்கள் நீங்கி உள்ளன. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-makes-a-surprise-announcement-in-the-assembly-abandoning-the-parandur-airport-project">பரந்தூரைச்</a> சுற்றி உள்ள  கிராம மக்கள் அனைவரும் மகிழ்ச்சி வெள்ள கொண்டாட்டத்தில் உள்ளனர். முதலமைச்சர் விஜய்யை சந்தித்து நன்றி கூற முடிவு செய்துள்ளோம்.</p><p>2019-ம் ஆண்டு பரந்தூர் விமான நிலைய திட்டம் அறிவிக்கப்பட்டது முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்தோம். கடந்த 3 ஆண்டுகளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டோம். 1,100 நாட்கள் தாண்டியும்  எங்களது போராட்டம் நீடித்தது. தற்போது முதலமைச்சர் விஜய்யின் அறிவிப்பால் பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டு உள்ளது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><p>பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து ஏகனாபுரத்தில் உள்ள அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஏகானபுரம் ஊராட்சியில் சுதந்திரத்தினத்தன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தின்போது அப்பகுதியில் உள்ள சாலைக்கு “தளபதி விஜய் சாலை” என்று பெயர் சூட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>இமாச்சல பிரதேசம், லடாக்கில் அடுத்தடுத்து நிலநடுக்கம் </title><link>https://www.maalaimalar.com/news/national/successive-earthquakes-in-ladakh-and-himachal-pradesh</link><comments>https://www.maalaimalar.com/news/national/successive-earthquakes-in-ladakh-and-himachal-pradesh#comments</comments><guid isPermaLink="false">2c168b2e-d3da-4440-a7e4-bee964652214</guid><pubDate>Mon, 24 Aug 2026 06:54:37 +0000</pubDate><atom:updated>2026-08-24T06:54:37.899Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Earthquake,ladakh,இமாச்சல பிரதேசம்,Himachal Pradesh,லடாக்,நிலநடுக்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/yl11vnlt/tn.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நிலநடுக்கம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ நிலநடுக்கம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/yl11vnlt/tn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>லடாக் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் இன்று (திங்கள்கிழமை) காலை அடுத்தடுத்து <a href="https://www.maalaimalar.com/topic/earthquake">நிலநடுக்கம் </a>ஏற்பட்டுள்ளது. </p><h2>லடாக் </h2><p>தேசிய நில அதிர்வு மையம் தகவல்படி,  இன்று காலை 8:25 மணியளவில் லடாக்கின் லே பகுதியில் ரிக்டர் அளவில் 3.5 ஆக நிலநடுக்கம் பதிவானது. </p><p>இது  பூமிக்கு அடியில் 120 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.  இதனால் லே பகுதியில் லேசான அதிர்வுகள் உணரப்பட்டன. </p><h2>இமாச்சலப் பிரதேசம்</h2><p>இன்று, லடாக் நிலநடுக்கத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அதிகாலை 3:40 மணியளவில், இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.0 ஆக பதிவானது.</p><p>பூமிக்கு அடியில் 8 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.</p><h2>முந்தைய நிலநடுக்கம்</h2><p>முன்னதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் பிற்பகல் 3:34 மணியளவில் லடாக்கில் லே பகுதியில் இதைவிடச் சற்று வலுவான நிலநடுக்கம் பதிவானது. </p><p>இது ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 150 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.</p><p>இந்த நிலநடுக்கங்களால் உயிர்ச்சேதமோ அல்லது பெரிய அளவிலான பொருள் சேதங்களோ ஏற்பட்டதாக உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை.</p><h2>ஜப்பான் நிலைநடுக்கம்</h2><p>முன்னதாக நேற்று <a href="https://www.maalaimalar.com/news/world/japan-earthquake-59-magnitude-quake-hits-ibaraki-region-near-tokyo-injuring-37-and-disrupting-water-supply-and-traffic">ஜப்பானில் இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் </a>ஏற்பட்டன. முதல் நிலநடுக்கம் அதிகாலையில் 5.9 ரிக்டர் அளவில் பதிவானது. தொடர்ந்து பிற்பகலில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.</p><p>இரண்டு நிலநடுக்கங்களையும் சேர்ந்து 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து முடங்கியது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>மாடர்ன் உடை அணிந்து பெண் சென்ற விவகாரம்: ஆணாதிக்க அரசியலை கடந்து பெண்கள் வெற்றி பெற வேண்டும்!- கனிமொழி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-women-must-triumph-over-patriarchal-politics</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-women-must-triumph-over-patriarchal-politics#comments</comments><guid isPermaLink="false">0f200107-facd-4311-b533-832215ad2f98</guid><pubDate>Mon, 24 Aug 2026 06:53:12 +0000</pubDate><atom:updated>2026-08-24T06:53:12.711Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தவெக,Kanimozhi,கனிமொழி,tvk,Minister Keerthana,அமைச்சர் கீர்த்தனா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/j6lyz7ew/kanimozhi.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கனிமொழி]]></media:title><media:description type="html"><![CDATA[ கனிமொழி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/j6lyz7ew/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>உடை, தோற்றம், தனிப்பட்ட வாழ்க்கை போன்றவற்றை வைத்து விமர்சிப்பது மலினமான அரசியலின் வெளிப்பாடாகும் என கனிமொழி கூறியுள்ளார்.</strong></em> </p><p>காரில் இருந்து இறங்கும் ஒரு பெண் கருப்பு உடை அணிந்து, செல்வது  போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அது தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா என விமர்சித்து சிலர் பதிவு போட்டுள்ளனர். இதுதொடர்பாக, அமைச்சர் கீர்த்தனா விளக்கம் அளித்துள்ளார். ஒரு பெண், தன் அன்றாட வாழ்க்கையை வாழும், வீடியோ ஒன்று, அரசியல் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்துகிறது. </p><p>இது பிற்போக்குத்தனமான, மனநிலையை காட்டுகிறது. ஆனால், எனக்கு இதில் ஆச்சரியமில்லை. பெண்கள் குறித்து, மிகவும் இழிவான கருத்துகளைப் பேசிய, வரலாற்றை கொண்ட, ஒரு தலைவரின் ஆதரவாளர்களிடமிருந்து, வேறு என்ன எதிர்பார்க்க முடியும். ஒன்றை தெளிவுப்படுத்துகிறேன். அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என்றார்.</p><p>இதுகுறித்து, திமுக துணைப் பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/கனிமொழி">கனிமொழி</a> எம்.பி., தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது:-</p><h2><strong>பிற்போக்குத்தனமான மனநிலை</strong></h2><p>காலம் காலமாக, கட்சி வேறுபாடின்றி பொதுவாழ்வில் இருக்கும் பெண்கள் மீது அநாகரிகமான தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.</p><p>ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் களத்தில் துணிச்சலுடன் செயலாற்றும் பெண்களை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல், அவர்களின் உடை, தோற்றம், தனிப்பட்ட வாழ்க்கை போன்றவற்றை வைத்து விமர்சிப்பது மலினமான அரசியலின் வெளிப்பாடாகும். இத்தகைய தாக்குதல்களில் ஈடுபடுபவர்களின் பிற்போக்குத்தனமான மனநிலையே இதன் மூலம் வெளிப்படுகிறது.</p><p>பெண்கள் இதையெல்லாம் கடந்தே வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">காலம் காலமாக, கட்சி வேறுபாடின்றி பொதுவாழ்வில் இருக்கும் பெண்கள் மீது அநாகரிகமான தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.<br><br>ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் களத்தில் துணிச்சலுடன் செயலாற்றும் பெண்களை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல், அவர்களின் உடை, தோற்றம், தனிப்பட்ட வாழ்க்கை போன்றவற்றை…</p>&mdash; Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) <a href="https://x.com/KanimozhiDMK/status/2091751746834194664?ref_src=twsrc%5Etfw">August 24, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>ஜெயலலிதா அறிமுகப்படுத்திய திட்டங்களை தொடரும் முதலமைச்சர் விஜய்க்கு நன்றி- எஸ்.பி.வேலுமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/sp-velumani-thanks-cm-vijay-for-jayalalithaa-scheme-continuation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/sp-velumani-thanks-cm-vijay-for-jayalalithaa-scheme-continuation#comments</comments><guid isPermaLink="false">5033f1e5-d957-40fc-a6a7-a683bd6ae8d0</guid><pubDate>Mon, 24 Aug 2026 06:49:20 +0000</pubDate><atom:updated>2026-08-24T06:49:20.551Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,தமிழக சட்டசபை,sp velumani,TNAssembly,எஸ்பி வேலுமணி,முதலமைச்சர் விஜய்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/azv4315u/SP-Velumani.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay- SP Velumani]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/azv4315u/SP-Velumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் என குறிப்பிட்டு சட்டசபையில் அதிமுக எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி தனது உரையை தொடங்கினார்.</p><p>அப்போது, அதிருப்தியில் உள்ளதாக கூறப்படும் எஸ்.பி.வேலுமணி இபிஎஸ் கொண்டு வந்த திட்டங்களை குறிப்பிட்டு நன்றி கூறினார்.</p><p>மேற்கொண்டு அவர் கூறியதாவது:-</p><p>ஜெயலலிதா அறிமுகப்படுத்திய திட்டங்களை தொடரும் முதலமைச்சர் விஜய்க்கு நன்றி. </p><p>அதிமுக ஆட்சியில் கோவையின் முக்கிய சாலைகள், மேம்பாலங்கள் அமைக்கப்பட்டது. </p><p>கோவை மாவட்டத்தையே மாற்றி அமைத்தது அதிமுக. திமுக ஆட்சியில் கோவைக்கன திட்டங்கள் இல்லை. சிட்காட், சாலை, மேம்பாலம் என அதிமுக செய்து நிலுவையில் இருந்த திட்டங்களை திமுக தொடரவில்லை.</p><p>அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் வைத்தது திமுக.</p><p>கோவை மெட்ரோ ரெயில் திட்டம் முக்கியமான திட்டம். கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டம் தொடர்பாக மத்திய அரசிடம் முதலமைச்சர் விஜய் பேச வேண்டும் </p><p>அத்திக்கடவு - அவிநாசி குடிநீர் திட்டத்தை கிடப்பில் போட்டது திமுக.</p><p>ஊருக்குள் நுழையும் காட்டுப்பன்றியை சுடுவதற்கு மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற்றுத்தர வேண்டும்.</p><p>இவ்வாறு கூறினார்.</p><p>கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சியினர் பேச அனுமதிக்கவில்லை என்று எஸ்.பி.வேலுமணி கூறியதற்கு திமுக தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.</p><p>பேச அனுமதி கேட்டபோது பலமுறை முகத்தை கூட திருப்பமாட்டார், தற்போதைய சபாநாயகர் போல் கூடுதல் வாய்ப்பு தரமாட்டார் என எஸ்.பி.வேலுமணி கூறினார்.</p><p>கடந்த முறை எதிர்க்கட்சியான அதிமுக கொறடாவாக இருந்தபோது அவரும் பேசினார், மற்றவருக்கும் அனுமதி பெற்று தந்தார் என்று முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.</p><p>வியாழக்கிழமையில் இருந்து கேள்வி நேரம் உண்டு என சபாநாயகர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து என அறிவித்த முதலமைச்சர்- மகிழ்ச்சி வெள்ளத்தில் கிராம மக்கள் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/parandur-village-peoples-welcome-to-cm-vijay-announcement</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/parandur-village-peoples-welcome-to-cm-vijay-announcement#comments</comments><guid isPermaLink="false">0b3975de-d024-49f8-8eee-d19f5038abe6</guid><pubDate>Mon, 24 Aug 2026 06:40:46 +0000</pubDate><atom:updated>2026-08-24T06:40:46.372Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Parandur Airport,பரந்தூர் விமான நிலையம்,தமிழக சட்டசபை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/zo4b2twb/parandur.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பரந்தூர் ]]></media:title><media:description type="html"><![CDATA[ பரந்தூர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/zo4b2twb/parandur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி உள்ளனர். முதலமைச்சர் விஜய்யின் அறிவிப்புக்கு பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினர் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.</strong></em></p><p>சென்னையின் 2-வது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">பரந்தூரில்</a> அமைய இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. </p><p>இதற்காக சுமார் 5,300 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்றன. இதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றியுள்ள 13 கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். </p><p>அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வந்தனர். பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் திட்டம் அறிவிக்கப்பட்ட நாள் முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.</p><p>தமிழக வெற்றிக் கழகம் அரசியலில் களம் இறங்கிய பிறகு முதலமைச்சர் விஜய் முதல்முறையாக பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் தான் நேரடியாக களம் இறங்கி மக்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.</p><h2><strong>மகிழ்ச்சி வெள்ளம்</strong></h2><p>இந்த நிலையில் சட்டசபையில் இன்று முதலமைச்சர் விஜய் பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுவதாக அறிவித்து இருப்பது <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-makes-a-surprise-announcement-in-the-assembly-abandoning-the-parandur-airport-project">பரந்தூர்</a> மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதலமைச்சர் விஜய்யின் இந்த அறிவிப்புக்கு கிராம மக்கள் நன்றியும், வாழ்த்துக்களும் தெரிவித்து வருகிறார்கள்.</p><p>இதற்கான கொண்டாட்டங்களில் கிராம மக்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி உள்ளனர். முதலமைச்சர் விஜய்யின் அறிவிப்புக்கு பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினர் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>ஒரே வீட்டில் கணவருடனும், காதலனுடனும் வாழ்வேன் என அடம்பிடித்த இளம்பெண்</title><link>https://www.maalaimalar.com/news/national/uttar-pradesh-affair</link><comments>https://www.maalaimalar.com/news/national/uttar-pradesh-affair#comments</comments><guid isPermaLink="false">a04bad1e-7822-43a3-9fa8-25f44f1e50c7</guid><pubDate>Mon, 24 Aug 2026 06:38:57 +0000</pubDate><atom:updated>2026-08-24T06:38:57.794Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>police,கள்ளக்காதல்,போலீசார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/kf41xp01/Tirupathi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/kf41xp01/Tirupathi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரப்பிரதேச மாநிலம், சீதாபூர் மாவட்டம், மஹ்மூதாபாத்தை சேர்ந்தவர் சுபம் வர்மா, இவரது மனைவி அஞ்சு. தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த நிதின் என்பவருடன் அஞ்சுவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இது கள்ளக்காதலாக மாறியது. கணவன் இல்லாத நேரத்தில் அஞ்சுவின் வீட்டிற்கு நிதின் அடிக்கடி வந்து சென்றார். </p><h2><strong>கள்ளக்காதல்</strong></h2><p>இந்த விவகாரம் கணவருக்கு தெரிந்ததால் அவர் கண்டித்தார். ஆனால் அஞ்சு கள்ளக்காதலை கைவிடவில்லை. கணவர் எதிர்ப்பை மீறி தனது வீட்டிற்கு கள்ளக்காதலன் நிதினை அழைத்து வந்தார்.</p><h2><strong>தகராறு</strong></h2><p>இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இந்த விவகாரம் தெரிந்த உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சுபம் அங்குள்ள போலீசில் புகார் அளித்தார்.</p><h2><strong>பேச்சுவார்த்தை</strong></h2><p>போலீசார் கணவன்-மனைவி, கள்ளக்காதலன் ஆகியோரை போலீஸ் நிலையம் வரவழைத்தனர். அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது சுபம் தனது மனைவி என்னுடன் அல்லது அவரது காதலனுடன் இருக்க வேண்டும். இருவருடன் சேர்ந்து இருக்க முடியாது. வேண்டுமென்றால் நான் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறேன் என கூறினார். ஆனால் அஞ்சு தனது கணவரும் வேண்டும், காதலனும் வேண்டும். இருவருடன் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன் என்றார். இதனை கேட்டதும் போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.</p><h2><strong>போலீசார்</strong></h2><p>போலீசார் 3 பேரிடமும் தனித்தனியாக பேசினர். இந்த விவகாரத்தில் ஒரு பரஸ்பர உடன்பாட்டிற்கு வர முயன்றனர். ஆனால் நீண்ட விவாதத்திற்குப் பிறகும் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. அஞ்சு தன் கணவர் சுபம் மற்றும் காதலன் நிதின் ஆகிய இருவருடனும் தொடர்ந்து வாழ வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.</p><h2><strong>உடன்பாடு எட்டப்படவில்லை</strong></h2><p>பல மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகும் இதில் உடன்பாடு எட்டப்படவில்லை. தொடர்ந்து அஞ்சு இருவரும் வேண்டும் என அடம் பிடித்ததால் போலீசார் அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பேசு பொருளாக மாறியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>10 ஆண்டுகள் நிறைவடையும் முன் முழு PF பணத்தையும் எடுத்தால் ஓய்வூதியம் வராது - செக் வைத்த EPFO </title><link>https://www.maalaimalar.com/news/national/withdrawing-the-entire-pf-amount-before-completing-10-years-means-no-pension-epfos-new-rule</link><comments>https://www.maalaimalar.com/news/national/withdrawing-the-entire-pf-amount-before-completing-10-years-means-no-pension-epfos-new-rule#comments</comments><guid isPermaLink="false">3423c53a-6b27-47b3-85d8-e5a008b48a31</guid><pubDate>Mon, 24 Aug 2026 06:26:11 +0000</pubDate><atom:updated>2026-08-24T06:26:11.036Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,Central govt,Pension,ஓய்வூதியம்,EPFO,வருங்கால வைப்புநிதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/g500j19f/tn-41.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ EPFO]]></media:title><media:description type="html"><![CDATA[ EPFO]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/g500j19f/tn-41.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஓய்வுக்குப் பிறகு மாதாந்திர ஓய்வூதியம் பெற தகுதி பெற வேண்டும் என்றால், ஊழியகர்கள் கட்டாயமாக 10 ஆண்டுகள் வரை PF நிதியில் பங்களிப்பு செய்திருக்க வேண்டும் என்றும் இடையில் முழு பணத்தை எடுக்க கூடாது என்றும் தொழிலாளர் வைப்பு நிதி அமைப்பு (EPFO) அறிவுறுத்தியுள்ளது. </p><h2>வைப்பு நிதி</h2><p>தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் குறிப்பிட்ட தொகை, அவர்களின் எதிர்கால தேவைக்காக தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதியில் சேமிக்கப்படுகிறது. அதற்கு ஆண்டுதோறும் வட்டி வழங்கப்படுகிறது.</p><h2>இடைவெளி </h2><p>இந்நிலையில் 10 ஆண்டுகள் நிறைவடையும் முன்பே வைப்பு நிதி பணத்தை முழுமையாக எடுப்பது, ஊழியரின் மொத்த பணிக்காலத்தின் தொடர்ச்சியை பாதிக்கும்.</p><p>இதனால் இடைவெளி ஏற்பட்டு, 10 ஆண்டுகள் கணக்கில் வராமல் போகலாம். </p><p>இறுதியில் ஓய்வுக்குப் பின் மாதாந்திர ஓய்வூதியம் பெறும் தகுதியை உறுப்பினர்கள் இழக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><h2>மொத்த பணமும் எடுக்கக்கூடாது</h2><p>எனவே அவசர தேவைகளுக்காக PF நிதியை எடுப்பதற்கு முன், அது எதிர்கால ஓய்வூதியத் தகுதியைப் பாதிக்குமா என்பதை உணர்ந்து உறுப்பினர்கள் முடிவெடுக்க வேண்டும்.</p><p>தங்களின் EPF கணக்கு பதிவுகள் மற்றும் Service recordஐ அவ்வப்போது சரிபார்த்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>வட்டி விகிதம் உயர்வு </h2><p>தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதி அமைப்பின் உயரிய அமைப்பான மத்திய அறங்காவலர்கள் வாரியம், ஆண்டுதோறும் வட்டி விகிதத்தை முடிவு செய்கிறது.</p><p>2025-2026 நிதியாண்டுக்கு <a href="https://www.maalaimalar.com/news/national/central-government-approves-epf-8-25-percent-interest-rate">8.25 சதவீத வட்டிவிகிதம்</a> வழங்க மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் இந்த மாதம் அளித்தது.</p><p>இதையடுத்து, மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் உத்தரவுப்படி, 7 கோடிக்கு மேற்பட்ட தொழிலாளர் வருங்கால வைப்புநிதி சந்தாதாரர்களின் கணக்குகளுக்கு 8.25 சதவீத வட்டி விகிதம் இம்மாதம் வரவு வைக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.</p><p>இதன்மூலம், தொழிலாளர் வருங்கால வைப்புநிதிக்கு 2023-2024 நிதியாண்டில் இருந்து தொடர்ந்து 3-வது ஆண்டாக 8.25 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் ஏற்பட்ட மாற்றம் ஏமாற்றமாகி விட்டது- மு.க.ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/change-that-happened-in-tamil-nadu-has-become-a-disappointment-mk-stalin</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/change-that-happened-in-tamil-nadu-has-become-a-disappointment-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">6183491e-debb-4c13-a618-6f227147e479</guid><pubDate>Mon, 24 Aug 2026 06:20:32 +0000</pubDate><atom:updated>2026-08-24T06:20:32.891Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,முக ஸ்டாலின்,திராவிட இயக்கம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/tzmp3hfl/mk-stalin.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DMK leader MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/tzmp3hfl/mk-stalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை திருவான்மியூரில்  நடந்த திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.</p><p>அப்போது அவர் பேசியதாவது:</p><p>தமிழ்நாட்டில் வீட்டில் ஒரு பட்டதாரி இருப்பதற்கு திராவிட இயக்கங்களே காரணம்.</p><p>திராவிட இயக்கங்களின் செயல்பாடுகள் இன்றைய இளைஞர்களுக்கு தெரியவில்லை.</p><p>சில லட்சம் பேர் செய்த தவறால் கோடிக்கணக்கானர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>தமிழ்நாட்டில் ஏற்பட்ட மாற்றம் ஏமாற்றமாகி விட்டது.</p><p>இவ்வாறு அவ்வாறு கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ஜி.வி.பிரகாஷ்  நடிக்கும் புதிய படம் ‘நிஞ்சா’ - இன்று முதல் படப்பிடிப்பு தொடக்கம்! </title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/gv-prakash-new-film-ninja-shoot-begins-today</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/gv-prakash-new-film-ninja-shoot-begins-today#comments</comments><guid isPermaLink="false">5861d387-4173-41f2-bc52-a111ec3669fd</guid><pubDate>Mon, 24 Aug 2026 06:03:48 +0000</pubDate><atom:updated>2026-08-24T06:03:48.086Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>GV Prakash Kumar,ஜி வி பிரகாஷ்குமார்,Ninja,நிஞ்சா,Prarthana Nathan,DirectorMurugu,NinjaMoviePooja,Thanja ShreepathyC inemas,NinjaFirstLook</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/pdky3uwt/G-V-PrakashKumar-Prarthana-Nathan" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ G V PrakashKumar - Prarthana Nathan ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/pdky3uwt/G-V-PrakashKumar-Prarthana-Nathan?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகரும் இசையமைப்பாளருமான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D">ஜி.வி.பிரகாஷ் குமார்</a> கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படமான ‘நிஞ்சா’-வின் (NINJA) அதிகாரப்பூர்வ தொடக்க விழா மற்றும் பிரம்மாண்ட பூஜை இன்று காலை தஞ்சாவூரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீபதி சினிமாஸ் வளாகத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. </p><p>இந்த விழாவைத் தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பும் இன்று முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.</p><h2>புதிய முயற்சி</h2><p>தமிழ் திரையுல வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு புதிய திரைப்படத்தின் தொடக்கப் பூஜை மற்றும் விளம்பர நிகழ்ச்சி ஒரு சினிமா தியேட்டருக்குள் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.</p><p>பொதுவாக படப்பிடிப்பு தளங்கள், ஸ்டூடியோக்கள் அல்லது கோயில்களில் மட்டுமே நடத்தப்படும் பூஜை விழா, இந்த முறை தஞ்சை மக்களின் நேரடிப் பங்கேற்புடன் ஸ்ரீபதி தியேட்டர் இருக்கைகளில் படக்குழுவினர் அமர்ந்திருக்க, ரசிகர்களின் ஆரவாரத்துடன் வித்தியாசமான முறையில் கொண்டாடப்பட்டது.</p><h2>படக்குழு</h2><p>இயக்குநர் முருகு இயக்கத்தில், <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D">ஜி.வி.பிரகாஷ் குமார்</a> நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு 'நிஞ்சா' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜி.வி. பிரகாஷிற்கு ஜோடியாக 'பார்க்கிங்' மற்றும் 'டிடிடி' பட புகழ் பிராத்தனா நாதன் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தை சினிஷ் மற்றும் Learn &amp; Teach Production தயாரிக்கவுள்ளது.</p><p>தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான குரலாலும், ஆன்மாவைத் தொடும் மெல்லிசைகளாலும் முத்திரை பதித்தவர் இசையமைப்பாளர் மற்றும் பாடகர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D">ஷான் ரோல்டன்</a>. </p><p>பாரம்பரிய கர்நாடக இசைப் பின்னணியைக் கொண்ட இவர், தற்போது, ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகும் 'நிஞ்ஜா' திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக உள்ளார்.</p><h2>படப்பிடிப்பு நிலவரம்</h2><p>இன்று காலை தஞ்சை ஸ்ரீபதி தியேட்டரில் நடைபெற்ற விசேஷ பூஜை விழாவில் ஜி.வி.பிரகாஷ் குமார், பிராத்தனா நாதன், ஷான் ரோல்டன், இயக்குநர் முருகு மற்றும் தயாரிப்பாளர் சினிஷ் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினரும் தியேட்டர் இருக்கைகளில் அமர்ந்து விழாவை சிறப்பித்தனர்.</p><p>இந்த மங்களகரமான நிகழ்வைத் தொடர்ந்து, படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இன்று முதல் தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முழுவீச்சில் தொடங்கப்பட்டுள்ளது.</p><p>வித்தியாசமான முறையில் தொடங்கியுள்ள இந்த ‘நிஞ்சா’ திரைப்படம், அடுத்த ஆண்டு (2027) திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">The <a href="https://x.com/hashtag/Ninja?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Ninja</a> - Pooja day is officially in motion ✨ <br><br>K.S. Sinish presents Ninja <br> <a href="https://x.com/gvprakash?ref_src=twsrc%5Etfw">@gvprakash</a> <a href="https://x.com/sinish_s?ref_src=twsrc%5Etfw">@sinish_s</a> <a href="https://x.com/Saidevanand3?ref_src=twsrc%5Etfw">@Saidevanand3</a> <a href="https://x.com/murugufilmmaker?ref_src=twsrc%5Etfw">@murugufilmmaker</a> <a href="https://x.com/RSeanRoldan?ref_src=twsrc%5Etfw">@RSeanRoldan</a> <a href="https://x.com/Nathanprathana?ref_src=twsrc%5Etfw">@Nathanprathana</a> <a href="https://x.com/SoldiersFactory?ref_src=twsrc%5Etfw">@SoldiersFactory</a> <a href="https://x.com/LearnNteachProd?ref_src=twsrc%5Etfw">@LearnNteachProd</a> <a href="https://x.com/dop_harish?ref_src=twsrc%5Etfw">@dop_harish</a> <a href="https://x.com/thecutsmaker?ref_src=twsrc%5Etfw">@thecutsmaker</a> <a href="https://x.com/mr_saivenkat?ref_src=twsrc%5Etfw">@mr_saivenkat</a> <a href="https://x.com/hashtag/Vinish?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Vinish</a> <a href="https://x.com/artdirectorgopi?ref_src=twsrc%5Etfw">@artdirectorgopi</a> <a href="https://x.com/Dineshkasi1?ref_src=twsrc%5Etfw">@Dineshkasi1</a>… <a href="https://t.co/EpQjADNWtP">pic.twitter.com/EpQjADNWtP</a></p>&mdash; Soldiers Factory (@SoldiersFactory) <a href="https://x.com/SoldiersFactory/status/2091744970483060833?ref_src=twsrc%5Etfw">August 24, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2>கதையின் பின்னணி</h2><p>தஞ்சாவூர் ஸ்ரீபதி தியேட்டரில் நடைபெற்ற பிரம்மாண்ட பூஜை விழாவைத் தொடர்ந்து, ‘நிஞ்சா’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ <a href="https://www.maalaimalar.com/search?q=first%20look">ஃபர்ஸ்ட் லுக் </a>போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. </p><p>இந்த போஸ்டரில், கதையின் முக்கிய அங்கமான ஒரு நாய்க்குட்டி, சிவப்பு நிற லெதர் ஜாக்கெட் மற்றும் கூலிங் கிளாஸ் அணிந்து செங்கற்களுக்கு நடுவே செம மாஸாகவும் கெத்தாகவும் அமர்ந்திருப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.</p><p>சுற்றிலும் தேங்காய், மாலைகள் மற்றும் பூக்கள் தூவப்பட்டு ஒரு பூஜைக்கான சூழலில் இந்த நாய் குட்டியின் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கூவத்தை சீரமைக்க வேண்டும் என்றால் 540 இடங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்- கே.என்.நேரு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kn-nehrus-remark-stop-sewage-mixing-at-540-points-to-restore-cooum</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kn-nehrus-remark-stop-sewage-mixing-at-540-points-to-restore-cooum#comments</comments><guid isPermaLink="false">ce5cc9ae-e709-4893-b01d-ca866cc226f1</guid><pubDate>Mon, 24 Aug 2026 05:56:27 +0000</pubDate><atom:updated>2026-08-24T05:56:27.002Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>kn nehru,தமிழக சட்டசபை,sewage,TN assembly,கே.என்.நேரு,கழிவுநீர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/b948cptd/KN-Nehru.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ex Minister KN Nehru]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/b948cptd/KN-Nehru.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நகராட்சி நிர்வாகத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் கே.என்.நேரு உரையாற்றினார்.</p><p>அப்போது, பாமக சட்டமன்றக் குழு தலைவர் சவுமியா அன்புமணி எழுப்பிய திருப்புகழ் கமிட்டி அறிக்கை குறித்த கேள்விக்கு முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்தார்.</p><h2>கே.என்.நேரு உரை</h2><p>உள்ளாட்சி துறையில் எங்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கியவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95.%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D" rel="nofollow">மு.க.ஸ்டாலின்</a>. </p><p>கோப்புகளை எப்படி பார்க்க வேண்டும் என சொல்லி கொடுத்தவர் கலைஞர். தேர்தல் வந்ததால் இறுதி அறிக்கையை அவையில் வைக்க முடியவில்லை.</p><p>தற்போதைய அரசு திருப்புகழ் கமிட்டி அறிக்கையை அவையில் சமர்ப்பிக்கலாம்.</p><p>உள்ளாட்சித்துறையில் எங்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கியவர் மு.க.ஸ்டாலின்.</p><p>சென்னை உள்ளிட்ட நகரங்களில் நாளொன்றுக்கு 5,000 மில்லியன் லிட்டர் குடிநீர் கொடுத்தோம்.</p><p>கடந்த 5 ஆண்டுகளில் நகராட்சி நிர்வாகத்துறைக்கு அதிக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-allocates-rs-264-14-crore-forms-65-special-forces-to-fight-drugs" rel="nofollow">நிதி ஒதுக்கீடு</a> செய்யப்பட்டது.</p><p>தொடர முடியாத நிலையில் உள்ள குடிநீர் திட்டங்களை மீண்டும் தொடர வேண்டும்.</p><p>சென்னையில் 540 இடங்களில் கழிவுநீர் கலக்கிறது. கூவத்தை சீரமைக்க வேண்டும் என்றால் 540 இடங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.</p><p>எங்களுடன் இருந்த அதிகாரிகள் தான் முழுமையாக இன்றும் நகராட்சி துறையில் பணியாற்றுகின்றனர்.</p><p>நகர்ப்புற வசதிகளை கிராமங்களுக்கு மேம்படுத்த <a href="https://www.maalaimalar.com/news/national/removal-of-tv-ad-duration-cap-central-government" rel="nofollow">மத்திய அரசு</a> ரூ.1000 கோடி நிதி தந்தது.</p><p>உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் ஜனவரியுடன் முடிகிறது.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY :  மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய தங்கம் விலை: சவரன் ரூ.1,20,240-க்கு விற்பனை!</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-24-08-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-24-08-2026#comments</comments><guid isPermaLink="false">676ed5f2-a6a6-44cd-9d36-b5f8bbcf541b</guid><pubDate>Mon, 24 Aug 2026 05:51:43 +0000</pubDate><atom:updated>2026-08-24T05:51:43.667Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="350" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/dwvetvrf/gold04.jpg" width="615"><media:title type="html"><![CDATA[ தங்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/dwvetvrf/gold04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கடந்த 15-ந்தேதியில் இருந்து இன்று வரை தங்கம் விலை சவரனுக்கு ரூ.6,480 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தங்கம்">தங்கத்தின்</a> விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. கடந்த சனிக்கிழமை தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100-ம். சவரனுக்கு ரூ.800-ம் உயர்ந்தது. சென்னையில் வெள்ளிக்கிழமை ஒரு கிராம் தங்கம் ரூ.14 ஆயிரத்து 850-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 800-க்கும் விற்பனையானது.</p><p>இதனை தொடர்ந்து சனிக்கிழமை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.14 ஆயிரத்து 950-க்கும், சவரனுக்கு ரூ.800 அதிகரித்து ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. </p><h2><strong>தங்கம் விலை உயர்வு</strong> </h2><p>இந்த நிலையில், வார தொடக்கநாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 30-க்கும் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கம் தொடர்ந்து உயர்ந்து வருவது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த 15-ந்தேதியில் இருந்து இன்று வரை தங்கம் விலை சவரனுக்கு ரூ.6,480 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. </p><h2><strong>வெள்ளி விலை நிலவரம்</strong> </h2><p>தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் உயர்ந்து வருகிறது. அந்த வகையில், இன்று வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 275 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கடந்த 15-ந்தேதியில் இருந்து இன்று வரை வெள்ளி விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. </p><h2><strong>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்</strong></h2><p>23-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,600</p><p>22-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,600</p><p>21-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,800</p><p>20-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,800</p><p>19-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,200</p><h2><strong>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>23-08-2026- ஒரு கிராம் ரூ.270</p><p>22-08-2026- ஒரு கிராம் ரூ.270</p><p>21-08-2026- ஒரு கிராம் ரூ.270</p><p>20-08-2026- ஒரு கிராம் ரூ.260</p><p>19-08-2026- ஒரு கிராம் ரூ.250</p>]]></content:encoded></item><item><title>சென்னை-செங்கல்பட்டு வழித்தடத்தில் மின்சார ரெயில்களின் சேவையில் நாளை முதல் மாற்றம் </title><link>https://www.maalaimalar.com/news/topnews/changes-to-electric-train-services-starting-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/changes-to-electric-train-services-starting-tomorrow#comments</comments><guid isPermaLink="false">24d7b276-5125-4d82-a401-b019c4fd3038</guid><pubDate>Mon, 24 Aug 2026 05:48:43 +0000</pubDate><atom:updated>2026-08-24T05:48:43.166Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>electric train,மின்சார ரெயில்,Train,ரெயில்,மின்சார ரெயில்கள் ரத்து,electric train cancelled</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-01/0u6nxpab/train.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மின்சார ரெயில்]]></media:title><media:description type="html"><![CDATA[ electric train]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-01/0u6nxpab/train.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>உள்ளூர் செய்திகள் (District News)</category><content:encoded><![CDATA[ <p>எழும்பூர் ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக நாளை (25-ந்தேதி) முதல் செப்டம்பர் 7-ந்தேதி வரை 25 மின்சார ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளன.</p><h2><strong>மின்சார ரெயில்கள்</strong></h2><p>சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே நாளை முதல் செப்டம்பர் 5-ந்தேதி வரை இரவு 10.20, 11.20, 11.40, 11.59 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் வார நாட்களில் மட்டும் ரத்து செய்யப்பட உள்ளன.</p><h2><strong>திருமால்பூர் - சென்னை கடற்கரை</strong></h2><p>திருமால்பூர் - சென்னை கடற்கரை இடையே அதே தேதிகளில் இரவு 8 மணிக்கு புறப்படும் மின்சார ெரயில், தாம்பரம்-கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட உள்ளது.</p><h2><strong>கூடுவாஞ்சேரி - சென்னை கடற்கரை</strong></h2><p>கூடுவாஞ்சேரி - சென்னை கடற்கரை இடையே இரவு 10.15, 11.20 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள், தாம்பரம் - கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட உள்ளன. செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே அதே தேதிகளில் இரவு 10.20, 11 ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரெயில்கள், தாம்பரம் - கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட உள்ளன.</p><h2><strong>சென்னை கடற்கரை - கூடுவாஞ்சேரி</strong></h2><p>சென்னை கடற்கரை - கூடுவாஞ்சேரி இடையே இயக்கப்படும் மின்சார ரெயில்கள் அதே தேதிகளில் இரவு 9.45 மணிக்கு பதிலாக, 5 நிமிடம் தாமதமாக இரவு 9.50 மணிக்கு புறப்படும். சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரெயில்கள் அதே தேதிகளில் இரவு 10.20 மணிக்கு பதிலாக, 5 நிமிடம் முன்னதாக, இரவு 10.15 மணிக்கு புறப்படும்.</p><h2><strong>சென்னை கடற்கரை - செங்கல்பட்டு</strong></h2><p>சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே நாளை மறுநாள் (புதன் கிழமை) முதல் செப்டம்பர் 7-ந்தேதி வரை இயக்கப்பட வேண்டிய மின்சார ரெயில், வார நாட்களில் கடற்கரை - தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.</p><p>வருகிற 30-ந்தேதி முதல் செப்டம்பர் 6-ந்தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில், சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 4 மின்சார ரெயில்களும், தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே 2 மின்சார ரெயில்களும், திருமால்பூர் - சென்னை கடற்கரை இடையே ஒரு மின்சார ரெயிலும் ரத்து செய்யப்பட உள்ளன. இது தவிர, 6 மின்சார ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளன. இந்த தகவலை சென்னை ெரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>குளித்துவிட்டு பேரீச்சம்பழம் சாப்பிட்ட கொலையாளிகள்.. வங்கதேசத்தில் இந்து குடும்பம் கொல்லப்பட்டதன் திடுக்கிடும் பின்னணி</title><link>https://www.maalaimalar.com/news/world/killers-who-bathed-and-ate-dates-the-shocking-backstory-behind-the-killing-of-a-hindu-family-in-bangladesh</link><comments>https://www.maalaimalar.com/news/world/killers-who-bathed-and-ate-dates-the-shocking-backstory-behind-the-killing-of-a-hindu-family-in-bangladesh#comments</comments><guid isPermaLink="false">95ae3d3f-a40d-4cf7-b55d-03d80be959ef</guid><pubDate>Mon, 24 Aug 2026 05:34:35 +0000</pubDate><atom:updated>2026-08-24T05:34:35.918Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Bangladesh,வங்கதேசம்,Murder,கொலை,Hindus,இந்துக்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/v5uztvst/tn-39.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கொல்லப்பட்டவர்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ கொல்லப்பட்டவர்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/v5uztvst/tn-39.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/bangaladesh">வங்கதேசத்தின் </a>ரங்பூர் நகரில் உள்ள தாஸ்பாறா பகுதியில் ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் கணபதி சக்ரவர்த்தி (65), அவரின் மனைவி பிரிதிலதா சக்ரவர்த்தி (50), மகள் அகாமி சக்ரவர்த்தி (23), மகன் பிரியம் சக்ரவர்த்தி (12) ஆகியோர் கடந்த வாரம் அவர்களின் பூட்டிய வீட்டில் சடலமாக கிடந்தனர். </p><h2>கண்டெடுப்பு </h2><p>கடந்த வியாழக்கிழமை முதல் குடும்பத்தினரின் போன்கள் அனைத்தும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால், சனிக்கிழமை இரவு உறவினர்கள் வந்து பார்த்தபோது வீடு பூட்டப்பட்டிருந்தது.</p><p>காவல்துறையினர் வந்து பூட்டை உடைத்து உள்ளே சென்றபோது தாயும் மகளும் படிக்கட்டுகளிலும், தந்தை கணபதியின் சடலம் மொட்டை மாடியிலும், 12 வயது சிறுவனின் சடலம் கட்டிலுக்கு அடியிலும் கண்டெடுக்கப்பட்டன.</p><p>அவர்கள் அனைவரும் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டது.</p><p>உடல்களை கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்த வங்கதேச போலீசார் விசாரித்த நிலையில் இது கொலை என தெரியவந்துள்ளது.</p><h2>கொலை</h2><p>முக்தா மற்றும் சித்தார்த்தா என அடையாளங் காணப்பட்ட குற்றவாளிகள் வியாழன் நள்ளிரவுக்கும் வெள்ளி அதிகாலைக்கும் இடையே இந்த படுகொலைகளைச் செய்துள்ளனர்.</p><p>கொலையை செய்த பிறகு, குற்றவாளிகள் அங்கேயே குளித்துவிட்டு, பிரிட்ஜில் இருந்த பேரீச்சம்பழம் மற்றும் வெள்ளரிக்காய்களை சாப்பிட்டுள்ளனர். பின்னர் 'யாபா' என்ற போதைப்பொருளையும் உட்கொண்டுள்ளனர்.</p><p>அலமாரிகளைத் திறந்து ஆடைகளை களைத்து நாலாபுறமும் வீசிவிட்டு தங்க நகைகளை திருடியுள்ளனர்.</p><p>வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை நேரத்தில் வீதிகள் காலியாக இருந்தபோது இவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.</p><h2>அதிரவைக்கும் காரணம்</h2><p>சம்பவத்தன்று இரவு, சந்தேக நபர்களான முக்தா தாஸ் மற்றும் சித்தார்த்தா தாஸ் ஆகிய இருவரும் கணபதி சக்ரவர்த்தியின் வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து 'யாபா' போதை பொருளை உட்கொண்டதாக கூறப்படுகிறது.</p><p>இதை கவனித்த கணபதி சக்ரவர்த்தி மொட்டை மாடிக்கு சென்று, தனது வீட்டின் மாடியில் போதைப்பொருள் பயன்படுத்துவதை தடுத்து கண்டித்துள்ளார்.</p><p>இதனால் ஆத்திரமடைந்த குற்றவாளிகள், முதலில் கணபதி சக்ரவர்த்தியின் கழுத்தை துண்டால் இறுக்கிக் கொன்றுள்ளனர்.</p><p>கணபதியின் முனகல் சத்தம் கேட்டு அவரைப் பார்க்க படிக்கட்டு வழியே மேலே வந்த மனைவி பிரிதிலதாவையும் அதேபோல் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளனர்.</p> <p>தொடர்ந்து தாயின் சத்தம் கேட்டு வந்த மகள் அகாமி சக்ரவர்த்தியையும் அவர்கள் படிக்கட்டிலேயே கொன்றனர்.</p><p>இறுதியில், தங்கள் குற்றம் வெளியே தெரிந்துவிடும் என்ற பயத்தில், கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த 12 வயது சிறுவன் பிரியத்தையும் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர்.</p><p>கொலைக்குப் பிறகு, வழக்கை திசைதிருப்பி கொள்ளை சம்பவமாக காட்டவே குற்றவாளிகள் அலமாரிகளை கலைத்து நாடகமாடியதும், தங்க நகைகளைக் கொள்ளையடித்து சென்றதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. </p><p>கைது செய்யப்பட்ட இருவரும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு இவற்றை வாக்குமூலமாக அளித்துள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>அன்னபூரணி சூப்பர் 6 திட்டம்: ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர் பெறப்போகும் குடும்பங்கள் எவை?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/annapoorani-super-6-scheme-which-families-will-receive-3-free-cylinders-annually</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/annapoorani-super-6-scheme-which-families-will-receive-3-free-cylinders-annually#comments</comments><guid isPermaLink="false">9fee30cb-deea-4bad-b04c-2bfaa0a9ce13</guid><pubDate>Mon, 24 Aug 2026 05:27:27 +0000</pubDate><atom:updated>2026-08-24T05:27:27.599Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,Gas cylinder,கியாஸ் சிலிண்டர்,TN assembly,Annapoorani Super 6 Scheme,அன்னபூரணி சூப்பர் 6 திட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/dwtmqj0y/gas.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கியாஸ் சிலிண்டர்]]></media:title><media:description type="html"><![CDATA[ கியாஸ் சிலிண்டர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/dwtmqj0y/gas.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பயனாளிகள் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்து சிலிண்டர் பெற்றவுடன், எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து பட்டியல் பெற்று சிலிண்டருக்கான விலை பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">சட்டசபையில்</a> இன்று பேரவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அவர் பேசியதாவது:-</p><h2><strong>பெண் முன்னேற்றத்திற்கு</strong></h2><p>நமது அரசின் பெண்கள் பயன்பெறும் வகையில் அவர்களின் முன்னேற்றத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு இதுவரை சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம், தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம், வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டம், அண்ணனின் சீர் திட்டம் போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p>மேலும் நமது அரசு மக்களின்  வாழ்வாதார முன்னேற்றத்தினை முதன்மை நோக்கமாக கொண்டு வெற்றி தொலை நோக்கு திட்ட ஆவணத்தினை வெளியிட்டுள்ளது. அந்த திட்ட ஆவணத்தின் அடிப்படையில் இலக்கு நிர்ணயம் செய்து பல்வேறு திட்டங்கள், அடுத்து வருகின்ற முதலாம், மூன்றாம், ஐந்தாம் ஆண்டிற்குள் நிறைவேற்றத்தக்க திட்டங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>இருப்பினும் பெண்கள் பயன்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுத்து இவ்வரசு நிறைவேற்றும்.</p><h2><strong>வங்கி கணக்கில்</strong></h2><p>கடந்த 4 மாதங்களாக வளைகுடா பகுதியில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக எரிவாயு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-3-free-cylinder-and-vetri-payanam-thittam">சிலிண்டர்</a> கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் மாற்று எரிபொருளை பயன்படுத்தி வருவதாலும் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வினாலும் பொது மக்கள் தங்களது வருவாயில் இருந்து கூடுதலாக தொகையினை செலவிட்டு இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.</p><p>இதனை கருத்தில் கொண்டு நிதி நெருக்கடியான சூழலிலும் பொது மக்களிடம் நிதிச் சுமையினை குறைக்கும் வகையிலும், பொதுமக்களின் நலனை பாதுகாக்கவும், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் நோக்கிலும் எரிவாயு சிலிண்டருக்காக செலவழிக்கப்பட்டு வரும் தொகையினை அவர்களுக்கு வழங்க இவ்வரசு முடிவு செய்துள்ளது.</p><h2><strong>3 சிலிண்டர்</strong></h2><p>எனவே குடும்ப தலைவிகள் பயன்பெறும் வகையில்  முதல் கட்டமாக அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தில் ஆண்டிற்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும்.</p><p>எரிவாயு சிலிண்டருக்கான விலை பயானிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இத்திட்ட பயனாளிகள் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்து சிலிண்டர் பெற்றவுடன், எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து பட்டியல் பெற்று சிலிண்டருக்கான விலை பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.</p><h2><strong>1 கோடியே 30 லட்சம் பேர்</strong></h2><p>இத்திட்டத்தினால் சுமார் 1 கோடியே 30 லட்சத்து 16 ஆயிரத்து 104 குடும்பங்கள் பயனடைவார்கள். அதாவது ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மிகாமல் உள்ள பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள குடும்பத்தினர், சிறு குறு விவசாய குடும்பத்தினர், மாற்றுத்திறனாளி குடும்பத்தினர் போன்ற சமூகத்தில் உள்ள நலிந்த குடும்பத்தினர் பயன் அடைவார்கள்.</p><h2><strong>ஜனவரி மாதம் முதல்</strong></h2><p>இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இத்திட்டம் வரும் பொங்கல் பண்டிகை ஜனவரி மாதம் முதல் செயலாக்கத்துக்கு கொண்டு வரப்படும். இத்திட்டத்துக்காக ஆண்டு தோறும் தோராயமாக ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.</p><p>இவ்வாறு முதலமைச்சர் விஜய் பேசினார்.</p>]]></content:encoded></item></channel></rss>