<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 15 Aug 2026 03:32:32 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: நேர்மையான நிர்வாகத்தை நோக்கமாக கொண்டு நமது அரசு செயல்பட்டு வருகிறது - முதலமைச்சர் விஜய் -  15 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/topnews/today-news-in-tamil-live-updates-15-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/today-news-in-tamil-live-updates-15-august-2026#comments</comments><guid isPermaLink="false">c6da5784-7244-49ec-aad8-b0af519a1d11</guid><pubDate>Sat, 15 Aug 2026 01:53:31 +0000</pubDate><atom:updated>2026-08-15T03:31:51.913Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/ptb2hksm/vijay3.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/ptb2hksm/vijay3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>முன்னாள் படை வீரர்களின் 2 மகள்களுக்கு வழங்கும் திருமண நிதியுதவி ரூ.25,000-ல்  இருந்து ரூ.50,000ஆக உயர்வு - முதலமைச்சர் விஜய்</p> <p>தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது - முதலமைச்சர் விஜய்</p><p>தமிழ்நாட்டை முன்மாதிரி மாநிலமாக்குவதுடன் 2036-ம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவோம் - முதலமைச்சர் விஜய்</p> <p>தமிழக நலனுக்கு எதிராக, மாநில உரிமைக்கு பிரச்சனையாக எது வந்தாலும் தவெக அரசு எதிர்க்கும் - முதலமைச்சர் விஜய்</p> <p>தமிழக மக்கள் நலனுக்காக மட்டுமே நிர்வாக ரீதியாக மத்திய அரசுடன் ஒத்துழைப்பு தருகிறோம்  - முதலமைச்சர் விஜய்</p><p>இந்த விழாவில் என்னை பேச வைத்த உலகம் முழுவதும் உள்ள தமிழக மக்கள், GenZ இளைஞர்களுக்கும் நன்றி - முதலமைச்சர் விஜய்</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/q8bvaih9/vijay3.jpg" /></figure><p>லஞ்சம், ஊழலற்ற தமிழகம் என்பதை நோக்கியே நமது தவெக அரசு செயல்பட்டு வருகிறது - முதலமைச்சர் விஜய்</p><p>நாட்டின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்து முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். </p><p>கோட்டையில் கொடியேற்றுவதை பார்க்க வந்துள்ள மக்களுக்கும், என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும் வாழ்த்து - முதலமைச்சர் விஜய்</p><p>தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய் கோட்டை கொத்தளத்தில் முதன்முறையாக தேசியக்கொடி ஏற்றினார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Tamil Nadu Chief Minister C Joseph Vijay hoists the tricolour at the state Secretariat in Chennai on the occasion of 80th Independence Day. <a href="https://t.co/QFKUtuvUjl">pic.twitter.com/QFKUtuvUjl</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2088466594729214122?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>முதலமைச்சர் விஜய்க்கு முப்படை மற்றும் சிறப்பு காவல் படை உள்ளிட்ட படையினர் அணிவகுப்பு மரியாதை.</p><p>திறந்தவெளி வாகனத்தில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பினை பார்வையிடுகிறார் முதலமைச்சர் விஜய்</p><p>சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியேற்றுவதற்காக முதலமைச்சர் விஜய் வருகை.</p><p>நாம் கண்ட மிகப்பெரிய கனவுகள் நமது எண்ணங்களை விரிவாக்கி உள்ளது. கனவு உயர்வாக இருந்தால் திறனும் உயரும் - பிரதமர் மோடி</p><p>40-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம். வர்த்தக ஒப்பந்தத்தால் மீனவர்கள், விவசாயிகள் பயன் - பிரதமர் மோடி</p><p>வரும் 2047-ம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் அணுசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி</p><p>நமது தேவைகளுக்காக பிற நாடுகளை எப்போதும் சார்ந்திருக்க முடியாது. நாம் தற்சார்பு அடைய வேண்டியது காலத்தின் கட்டாயம் - பிரதமர் மோடி</p><p>உலகளவில் ஈர்க்கும் வகையில் பொருட்களை தயாரிக்க வேண்டும் - பிரதமர் மோடி</p><p>உற்பத்தி துறையில் மேலும் வளர்வது கட்டாயம் - பிரதமர் மோடி</p><p>நாட்டு மக்கள் 25 கோடி பேர் வறுமையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் - பிரதமர் மோடி</p><p>கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா பல்வேறு வரலாற்று சாதனைகளை படைத்துள்ளது  - பிரதமர் மோடி பெருமிதம்</p><p>ஒவ்வொரு இந்தியரும் இணைந்து இந்தியா வளர்ச்சி அடைந்த நாடு என்ற கனவை 2047-ம் ஆண்டில் நனவாக்குவோம் - பிரதமர் மோடி</p><p>இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 4 மடங்கு உயர்ந்துள்ளது. </p><p>மிகப்பெரிய செமி கண்டக்டர் ஆலைகள் வர உள்ளன - பிரதமர் மோடி</p><p>அனைத்து பிரிவு மக்களும் நாட்டை முன்னேற்றி கொண்டிருக்கின்றனர். நமது கனவுகளை தடுத்து நிறுத்துவது சாத்தியமற்றது - பிரதமர் மோடி</p><p>அனைவரது மனதிலும் மூவர்ணம் நிறைந்துள்ளது. நாடெங்கிலும் வந்தே மாதரம் பாடல் எதிரொலிக்கிறது - பிரதமர் மோடி</p><p>நமது நாட்டின் டிஜிட்டல் பரிவர்த்தனை கடந்த 12 ஆண்டுகளில் 100 மடங்கு அதிகரித்துள்ளது - பிரதமர் மோடி</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Delhi: From the ramparts of the Red Fort, Prime Minister Narendra Modi says, &quot;... Over the past 12 years, countless citizens—whether Dalits, the downtrodden, the marginalized, or tribals; whether rural or urban dwellers; the poor or the middle class; youth or the… <a href="https://t.co/YT8btWXU6S">pic.twitter.com/YT8btWXU6S</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2088452942542365128?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>இந்தியா தற்சார்பு அடைய வேண்டியது காலத்தின் கட்டாயம் - பிரதமர் மோடி</p><p>2047-ல் 100 ஜிகாவாட் அணுசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி</p><p>இந்தியா அனைத்து நாடுகளுக்கும் முன்னோடியாக சென்று கொண்டிருக்கிறது - பிரதமர் மோடி</p><p>12 ஆண்டுகளில் இந்தியாவின் டிஜிட்டல் பண பரிவர்த்தனை 100 சதவீதத்தை எட்டி உள்ளது.</p><p>நமது வாழ்வில் பெரிதாக சாதிக்க வேண்டும் எனில் ஒவ்வொரு இந்தியரும் கனவு காண வேண்டும் - பிரதமர் மோடி</p><p>நாட்டில் எலக்ட்ரானிக் பொருட்களின் உற்பத்தி 7 மடங்கு உயர்ந்துள்ளது.</p><p>தேசத்தின் அனைத்து பிரிவு மக்களும் நாட்டை முன்னேற்றி கொண்டிருக்கின்றனர் - பிரதமர் மோடி</p><p>உலகம் இன்று நம்மை பார்க்கும் விதம் மாறி உள்ளது - பிரதமர் மோடி</p><p>கனவுகள் உயர்வாக இருக்கும்போது தான் திறன்களும் உயர்ந்ததாக இருக்கும்.</p><p>நாம் கண்ட மிகப்பெரிய கனவுகள் தான் தற்போது நமது எண்ணங்களை விரிவாக்கி உள்ளது.</p><p>நாட்டின் விடுதலைக்காக எண்ணற்றோர் உயிர் தியாகம் செய்துள்ளனர்.</p><p>வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டை அனைவரும் கொண்டாடி கொண்டிருக்கிறோம்.</p><p>நாட்டு மக்கள் அனைவரது இல்லங்களிலும் இன்று மூவர்ண கொடி பறந்து கொண்டிருக்கிறது.</p><p>வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த  ஒரு நிகழ்வை இந்தியா கண்டு கொண்டிருக்கிறது.</p><p>நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி.</p><p>செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Delhi: Prime Minister Narendra Modi hoists the National Flag at Red Fort on the 80th Independence Day. <br><br>The hoisting of the National Flag was synchronised with the 21-Gun Salute by the gunners of the 1721 Field Battery (Ceremonial). The ceremonial battery, utilising the… <a href="https://t.co/rbaiIKQpPU">pic.twitter.com/rbaiIKQpPU</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2088448119566676389?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையில் பிரதமர் மோடி ஏற்றி வைத்த தேசியக்கொடிக்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.</p><p>டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி.</p><p>சுதந்திர தினவிழா கொண்டாட்ட வரலாற்றில் முதன்முறையாக டெல்லி செங்கோட்டையில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டது.</p><p>13-வது முறையாக தேசியக்கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களிடையே உரையாற்ற  உள்ளார் பிரதமர் மோடி.</p><p>நாட்டின் சுதந்திர தினவிழாவை ஒட்டி டெல்லி கடமைப்பாதையில் பிரதமர் மோடிக்கு முப்படை, காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை </p><p>டெல்லியில் உள்ள செங்கோட்டைக்கு வந்தடைந்த பிரதமர் மோடியை பாதுகாப்புத்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங் வரவேற்றார்.</p><p>நாட்டின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி.</p><p>டெல்லி ராஜ்காட்டில் உள்ள தேசத்தந்தை மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Prime Minister Narendra Modi pays floral tributes to the Father of the Nation, Mahatma Gandhi, at Rajghat on the 80th Independence Day<br><br>(Video source: PM Modi/ YouTube) <a href="https://t.co/xIcfLPeDol">pic.twitter.com/xIcfLPeDol</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2088441067771494821?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>80வது சுதந்திர தினம்: கோட்டை கொத்தளத்தில் முதன்முறையாக தேசியக்கொடியை ஏற்றினார் முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/80th-independence-day-cm-vijay-hoists-tricolour-at-fort-st-george</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/80th-independence-day-cm-vijay-hoists-tricolour-at-fort-st-george#comments</comments><guid isPermaLink="false">cce06d55-5b1e-46fd-950c-a63c41f901e6</guid><pubDate>Sat, 15 Aug 2026 03:22:45 +0000</pubDate><atom:updated>2026-08-15T03:22:45.081Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Independence Day,சுதந்திர தினம்,தேசியக்கொடி,Indian flag,முதலமைச்சர் விஜய்,tn cm vijay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/cardncu9/TN-CM-Vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/cardncu9/TN-CM-Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியேற்றுவதற்காக <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D" rel="nofollow">முதலமைச்சர் விஜய்</a> வருகை தந்தார்.</p><p>முதலமைச்சர் விஜயை வரவேற்ற தலைமைச் செயலாளர் அதிகாரிகளை அறிமுகம் செய்து வைத்தார்.</p><p>புனித ஜார்ஜ் கோட்டையில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ஜோசப் விஜய் ஏற்றார்.</p><p>முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு முப்படை மற்றும் சிறப்பு காவல் படை உள்ளிட்ட படையினர் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.</p><p>திறந்தவெளி வாகனத்தில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பினை முதலமைச்சர் விஜய் பார்வையிட்டார்.</p><p>பின்னர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய், செயின்ட் <a href="https://www.maalaimalar.com/news/district/tn-legislative-assembly-will-convene--january-5" rel="nofollow">ஜார்ஜ் கோட்டை</a> கொத்தளத்தில் முதன்முறையாக தேசியக்கொடியை ஏற்றினார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Tamil Nadu Chief Minister C Joseph Vijay hoists the tricolour at the state Secretariat in Chennai on the occasion of 80th Independence Day. <a href="https://t.co/QFKUtuvUjl">pic.twitter.com/QFKUtuvUjl</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2088466594729214122?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 15.08.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு திருமணப் பேச்சுகள் முடிவாகும்</title><link>https://www.maalaimalar.com/astrology/today-rasi-palan-in-tamil-40</link><comments>https://www.maalaimalar.com/astrology/today-rasi-palan-in-tamil-40#comments</comments><guid isPermaLink="false">7ea43d0c-c404-4898-abd6-ba42d55f1a13</guid><pubDate>Sat, 15 Aug 2026 02:53:00 +0000</pubDate><atom:updated>2026-08-15T02:53:00.949Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-05-31/6pltfgvu/New-Project-2026-05-25T070202.454.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ இன்றைய ராசிபலன்]]></media:title><media:description type="html"><![CDATA[ இன்றைய ராசிபலன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-05-31/6pltfgvu/New-Project-2026-05-25T070202.454.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ராசிபலன்(Rasipalan)</category><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2><strong>மேஷம்</strong></h2><p>வாழ்த்துச் செய்திகளால் மகிழ்ச்சி கூடும் நாள். நாட்டுப்பற்று மிக்கவர்களின் ஆதரவு கிடைக்கும். நின்று போன கட்டிடப்பணியை மீதியும் தொடருவீர்கள்.</p><h2><strong>ரிஷபம்</strong></h2><p>யோகமான நாள். தனவரவு தாராளமாக வந்து சேரும். சான்றோர்களின் சந்திப்பால் சந்தோஷம் ஏற்படும். உத்தியோக மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.</p><h2><strong>மிதுனம்</strong> </h2><p>போட்டிகளில் வெற்றி கிட்டும் நாள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் நன்மை ஏற்படும். </p><h2><strong>கடகம்</strong></h2><p>உற்சாகம் அதிகரிக்கும் நாள். உள்ளத்தில் மகிழ்ச்சி கூடும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நிறைவேறும்.</p><h2><strong>சிம்மம்</strong></h2><p>விழாக்களில் கலந்து கொண்டு மகிழும் நாள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். உறவினர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணை புரிவர்.</p><h2><strong>கன்னி</strong> </h2><p>சந்திக்கும் நண்பர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். கடன்சுமை குறையப் புதிய யுக்திகளைக் கையாள்வீர்கள். பயணங்களால் வியக்கும் செய்தி உண்டு. </p><h2><strong>துலாம்</strong></h2><p>விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். பணம் பலவழிகளிலும் வந்து பையை நிரப்பும். நீங்கள் சந்திக்க நினைத்த ஒருவர் இல்லம் தேடி வருவர்.</p><h2><strong>விருச்சிகம்</strong></h2><p>பாராட்டும், புகழும் கூடும் நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். தொகை எதிர்பார்த்த இடத்திலிருந்து கிடைக்கும். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு உண்டு.</p><h2><strong>தனுசு</strong> </h2><p>பற்றாக்குறை அகலும் நாள். பாசம் மிக்கவர்களின் நேசம் கிட்டும். பூர்வீக சொத்துகளில் லாபம் உண்டு. உடல்நலம் கருதிச் செலவிடுவீர்கள். பயணம் பலன் தரும். </p><h2><strong>மகரம்</strong></h2><p>யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். உறவினர்கள் சிலர் உங்களிடம் உதவி கேட்டு நச்சரிப்பர். பயணங்களின்போது கவனம் தேவை.</p><h2><strong>கும்பம்</strong></h2><p>உடல்நலத்தில் உபாதைகள் உண்டு. உறவினர்கள் உங்களை உதாசீனப்படுத்தலாம். குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கும்.</p><h2><strong>மீனம்</strong> </h2><p>யோகமான நாள். தொழிலில் லாபம் உண்டு. அனுபவமிக்கவர்களின் ஆலோசனை கைகொடுக்கும். திருமணப் பேச்சுகள் முடிவாகும். </p>]]></content:encoded></item><item><title>12 ஆண்டுகளில் இந்தியாவின் டிஜிட்டல் பண பரிவர்த்தனை 100 சதவீதத்தை எட்டி உள்ளது - பிரதமர் மோடி</title><link>https://www.maalaimalar.com/news/national/indians-dreams-must-always-be-big-pm-modi-speech-hoisting-national-flag</link><comments>https://www.maalaimalar.com/news/national/indians-dreams-must-always-be-big-pm-modi-speech-hoisting-national-flag#comments</comments><guid isPermaLink="false">459acb81-2d65-4636-ae07-d66507662bab</guid><pubDate>Sat, 15 Aug 2026 02:51:57 +0000</pubDate><atom:updated>2026-08-15T02:51:57.458Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Modi,national flag,தேசிய கொடி,சுதந்திர தினம்,Independance Day,மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/qh8jhx4n/Untitled-design-55.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரதமர் மோடி]]></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/qh8jhx4n/Untitled-design-55.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடு முழுவதும் இன்று சுதந்திர தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.</p><p>நாட்டின் 80வது சுதந்திர தினத்தையொடி டெல்லி ராஜ்காட்டில் உள்ள தேசத்தந்தை மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.</p><p>இதையடுத்து பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.</p><p>இந்தியாவின் 80-வது சுதந்திர தினம் வந்தே மாதரம் பாடலுடன் தொடங்கியது. இதையடுத்து தொடர்ச்சியாக 13வது தேசிய கோடியை பிரதமர் மோடி ஏற்றிவைத்தார்.இதையடுத்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். </p><p>அப்போது அவர் கூறுகையில்:-</p><p>இந்தியர்களின் ஒவ்வொருவரின் மனதிலும் வந்தே மாதரம் இன்று எதிரொலித்து கொண்டு வருகிறது.</p><p>இந்தியர்களின் கனவு எப்போதும் பெரிதாக இருக்க வேண்டும். நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளை நாம் நினைவு கூர வேண்டும்.</p><figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Delhi: From the ramparts of the Red Fort, Prime Minister Narendra Modi says, &quot;... Nuclear energy is a major means of energy security. We have paved the way towards a new goal by passing the &#39;Peace Act&#39; in Parliament. By 2047, we are moving forward with the target of 100… <a href="https://t.co/yqkfEASmeP">pic.twitter.com/yqkfEASmeP</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2088459446959952198?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure> <p>வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வை இந்தியா கண்டு கொண்டிருக்கிறது. நாட்டு மக்கள் அனைவரது இல்லங்களிலும் இன்று மூவர்ண கொடி பறந்து கொண்டிருக்கிறது.</p><p>வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டை அனைவரும் கொண்டாடி கொண்டிருக்கிறோம். நாட்டின் விடுதலைக்காக எண்ணற்றோர் உயிர் தியாகம் செய்துள்ளனர்.</p><p>கனவுகள் உயர்வாக இருக்கும்போது தான் திறன்களும் உயர்ந்ததாக இருக்கும். நாம் கண்ட மிகப்பெரிய கனவுகள் தான் தற்போது நமது எண்ணங்களை விரிவாக்கி உள்ளது.</p><p>நாடு முழுவதும் இன்று சுதந்திர தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. உலகம் இன்று நம்மை பார்க்கும் விதம் மாறி உள்ளது.</p><p>நாட்டில் எலக்ட்ரானிக் பொருட்களின் உற்பத்தி 7 மடங்கு உயர்ந்துள்ளது. தேசத்தின் அனைத்து பிரிவு மக்களும் நாட்டை முன்னேற்றி கொண்டிருக்கின்றனர்.</p><p>12 ஆண்டுகளில் இந்தியாவின் டிஜிட்டல் பண பரிவர்த்தனை 100 சதவீதத்தை எட்டி உள்ளது. </p><p>நமது வாழ்வில் பெரிதாக சாதிக்க வேண்டும் எனில் ஒவ்வொரு இந்தியரும் கனவு காண வேண்டும்.</p><p>இந்தியா அனைத்து நாடுகளுக்கும் முன்னோடியாக சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 4 மடங்கு உயர்ந்துள்ளது.</p><p>கடந்த சில நாட்களாக நிலச் சரிவுகள் மற்றும் பெருமழைகளை எதிர்கொண்டுள்ளோம். </p><p>2047-ஆம் ஆண்டிற்குள் இந்தியா வளர்ந்த நாடாக திகழ வேண்டும். செங்கோட்டையில் வந்தே மாதரம் என்பது ஒரு சரித்திர நிகழ்வாக உள்ளது.</p><p>இந்தியாவின் முன்னேற்றத்திற்கு 140 கோடி மக்களும் உழைக்க வேண்டும். மெட்ரோ ரயில் திட்டங்களின் விரிவாக்கம் தேசத்தின் வளர்ச்சியை உறுதி செய்வதாக உள்ளது.</p><p>இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.</p>]]></content:encoded></item><item><title>டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார் பிரதமர் மோடி</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-hoists-national-flag-red-fort-delhi</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-hoists-national-flag-red-fort-delhi#comments</comments><guid isPermaLink="false">3099f532-c949-41ba-b091-60d2f863a804</guid><pubDate>Sat, 15 Aug 2026 02:23:24 +0000</pubDate><atom:updated>2026-08-15T02:23:24.030Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>narendra modi,நரேந்திர மோடி,national flag,தேசிய கொடி,சுதந்திர தினம்,Independance Day</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/20p4dr6d/Untitled-design-54.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/20p4dr6d/Untitled-design-54.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடு முழுவதும் இன்று சுதந்திர தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நாட்டின் 80வது சுதந்திர தினத்தையொடி பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.</p><p>இதனை தொடர்ந்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.</p><p>இன்று முன்னதாக, 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ராஜ்காட்டில் தேசத்தந்தை மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். </p><p>மேலும், அவர் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, காலனி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தினார்.</p><p>இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், விக்ஸித் பாரதத்தை உருவாக்கும் நோக்கில் நாடு செயல்பட்டு வரும் வேளையில், சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகள் தொடர்ந்து நாட்டிற்கு உத்வேகம் அளித்து வருவதாக பிரதமர் மோடி கூறினார்.</p><p>இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் மேலும் வேகமான முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்றும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.</p><p>2026 ஆம் ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் வந்தே மாதரத்தின் 150வது ஆண்டு நிறைவையும் குறிக்கின்றன.</p><p>சுதந்திர தினத்திற்கு முந்தைய நாள், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகையில், மாணவர்களை இந்தியாவின் எதிர்காலத்தின் சிற்பிகள் என்று குறிப்பிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை</title><link>https://www.maalaimalar.com/news/national/modi-pays-tribute-at-gandhi-memorial</link><comments>https://www.maalaimalar.com/news/national/modi-pays-tribute-at-gandhi-memorial#comments</comments><guid isPermaLink="false">e9f1035a-dca0-44d6-aa07-5004bf735d97</guid><pubDate>Sat, 15 Aug 2026 02:02:57 +0000</pubDate><atom:updated>2026-08-15T02:02:57.795Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>narendra modi,நரேந்திர மோடி,சுதந்திர தினம்,independance  day,gandhi memorial,காந்தி நினைவிடம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/dehps4xa/Untitled-design-53.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/dehps4xa/Untitled-design-53.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியா ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்று இறையாண்மை அடைந்து 79 ஆண்டுகள் ஆன நிலையில், தனது 80வது சுதந்திர தினத்தை இன்று (ஆகஸ்ட் 15, 2026) கொண்டாடுகிறது.</p><p>புதுடெல்லியில் உள்ள செங்கோட்டையில் நடைபெறும் தேசிய நினைவு கூட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்க உள்ளார்.</p><p>சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் முதல் முறையாக, அதன் நீடித்த பாரம்பரியத்தின் 150 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில், 'வந்தே மாதரம்' என்ற தேசிய கீதம் செங்கோட்டையில் முறைப்படி பாடப்பட உள்ளது.</p><p>மேலும், "2047-ஆம் ஆண்டுக்குள் விக்சித் பாரத் என்ற இலக்கை நோக்கிய இந்தியாவின் பயணத்தை முன்னெடுத்துச் செல்வதில் 'யுவ சக்தி'யின் ஆற்றல் மற்றும் முக்கிய பங்களிப்பை கொண்டாடும் வகையிலும் இந்த நிகழ்வு அமையவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>இந்நிலையில் நாட்டின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றுகிறார்.</p><p>அதனைத் தொடர்ந்து, அவர் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடியை ஏற்றுவார்.</p><p>இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் பாரம்பரியமாக மலர்களைத் தூவும் நிகழ்வைத் தொடர்ந்து, அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.</p><p>அதன்பின், 2,500 என்.சி.சி. மாணவர்களும் 'மை பாரத்' தொண்டர்களும் 'வந்தே மாதரம்' பாடலைப் பாடுவார்கள். அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்படும்.</p><p>இந்த கொண்டாட்டங்களை காண, பிரதம மந்திரி முத்ரா யோஜனா தொழில்முனைவோர் மற்றும் பிரதம மந்திரி ஸ்வநிதி தெருவோர வியாபாரிகள் உட்பட சுமார் 5,000 சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.</p><h3><strong>காந்தி நினைவிடம்</strong></h3><p>இந்த நிலையில் இன்று காலையில், டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.</p><p>இதனை தொடர்ந்து செங்கோட்டையில் தேசியக்கொடியை பிரதமர் மோடி ஏற்றுகிறார்.</p>]]></content:encoded></item><item><title>ட்ரோன் மூலம் அஞ்சல் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட தேசிய கொடி.. இமாச்சலில் ஹர் கர் திரங்கா... </title><link>https://www.maalaimalar.com/news/national/national-flag-delivered-by-drone-to-post-office-har-ghar-tiranga-himachal</link><comments>https://www.maalaimalar.com/news/national/national-flag-delivered-by-drone-to-post-office-har-ghar-tiranga-himachal#comments</comments><guid isPermaLink="false">5636c8c5-b505-4ab7-8a77-811867421865</guid><pubDate>Sat, 15 Aug 2026 02:01:13 +0000</pubDate><atom:updated>2026-08-15T02:01:13.164Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சுதந்திர தினம்,Independance Day,Har Ghar Tiranga,ஹர் கர் திரங்கா,india post,இந்திய அஞ்சல் துறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/q44wj7v5/Untitled-design-51.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ட்ரோன் மூலம் தேசிய கொடி விநியோகம், இமாச்சலில் அஞ்சல் துறையின் புதுமை]]></media:title><media:description type="html"><![CDATA[ Har Ghar Tiranga - India post]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/q44wj7v5/Untitled-design-51.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியா தனது 80வது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடும் நிலையில், இமாச்சல பிரதேசத்தின் மண்டி நகரில் இருந்து ரெஹர்தார் பகுதிக்கு ட்ரோன்  மூலம் தேசிய கொடி செல்லப்பட்டது.</p><h3><strong>ஹர் கர் திரங்கா</strong></h3><p>இந்திய அஞ்சல் துறை, ‘ஹர் கர் திரங்கா’ பிரச்சாரத்திற்கு பங்களிக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள குடிமக்களுக்கு தேசிய கொடியை விநியோகம் செய்து வருகிறது.</p><p>இதன்மூலம் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே தேசிய கொடியை பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்படுகிறது.</p><h3><strong>இந்திய அஞ்சல் துறை</strong></h3><p>இமாச்சல பிரதேச மாநிலத்தில் தேசிய கொடியுடன் மண்டி நகரில் இருந்து புறப்பட்ட ட்ரோன் ஒன்று, ரெஹர்தாரில் உள்ள கிளை அஞ்சல் அலுவலகத்தில் தரை இறங்கியது.</p><p>அங்கு, மூவர்ண கொடியை பெற்று கொண்ட அஞ்சல் குழுவினர், அதனை முறைப்படி ஒரு ராணுவ அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.</p><h3><strong>அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா</strong></h3><p>இந்த நிகழ்வை வடகிழக்கு மண்டலத்தின் மத்திய தகவல் தொடர்பு மற்றும் அபிவிருத்தி துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.</p><p>இதுகுறித்து அமைச்சர் சிந்தியா கூறுகையில், “புவியியல் தடைகளை தாண்டி ஒவ்வொரு குடிமகனையும் சென்றடைய உறுதியுடன் இருக்கும் ஒரு புதிய இந்தியாவின் உணர்வை, இமாச்சல பிரதேசத்தில் ‘திரங்கா’ மேற்கொண்ட பயணம் பிரதிபலிக்கிறது,” என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 15 ஆகஸ்ட் 2026: பெருமாள் கோவில்களில் திருமஞ்சன சேவை</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-15-august-2026-perumal-temple-thirumanjana-seva</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-15-august-2026-perumal-temple-thirumanjana-seva#comments</comments><guid isPermaLink="false">4f3faef3-3792-45b6-9be9-058df6b025e8</guid><pubDate>Sat, 15 Aug 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-08-15T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/12/19/23393797-perumal8.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Perumal Sridevi Bhudevi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/12/19/23393797-perumal8.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆடி-30 (சனிக்கிழமை)</p><p>பிறை : வளர்பிறை</p><p>திதி :  திருதியை இரவு 8.35 மணி வரை பிறகு சதுர்த்தி</p><p>நட்சத்திரம் :  பூரம் காலை 7.01 வரை பிறகு உத்திரம்</p> <p>யோகம் :  சித்த / மரணயோகம்</p><p>ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை</p><p>எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை</p><p>சூலம் : கிழக்கு</p><p>நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை</p> <h2>ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி</h2><p>திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சனம். திருவண்ணாமலையில் ஸ்ரீ அருணகிரிநாதர் திருவிழா. நயினார் கோவில் ஸ்ரீ சௌந்தரநாயகி தபசுக் காட்சி, சுவாமி வெள்ளி விருஷப சேவை. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம். </p> <p>திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சன சேவை. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - பக்தி</p><p>ரிஷபம் - பாசம்</p><p>மிதுனம் - பணிவு</p><p>கடகம் - பண்பு</p><p>சிம்மம் - விவேகம்</p><p>கன்னி - பாராட்டு</p> <p>துலாம் - மகிழ்ச்சி</p><p>விருச்சிகம் - உயர்வு</p><p>தனுசு - இன்சொல்</p><p>மகரம் - வெற்றி</p><p>கும்பம் - நன்மை</p><p>மீனம் - உதவி</p> ]]></content:encoded></item><item><title>விரைவில் ஹார்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவிப்பேன் - டிரம்ப்</title><link>https://www.maalaimalar.com/news/world/donald-trump-says-will-soon-declare-strait-of-hormuz-us-territory</link><comments>https://www.maalaimalar.com/news/world/donald-trump-says-will-soon-declare-strait-of-hormuz-us-territory#comments</comments><guid isPermaLink="false">de646cdc-2224-4234-97dd-60dcac5b681e</guid><pubDate>Sat, 15 Aug 2026 00:26:53 +0000</pubDate><atom:updated>2026-08-15T00:26:53.199Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டொனால்டு டிரம்ப்,Donald Trump,Strait of Hormuz,ஹார்முஸ் நீரிணை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/9au9dlzl/trump-2.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Donald Trump]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/9au9dlzl/trump-2.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரானை தோற்கடித்த பிறகு, ஹார்முஸ் நீரிணை நீர்வழியை விரைவில் அமெரிக்காவின் ஒரு பகுதியாக அறிவிப்பேன் என்று அதிபர் <a href="https://www.maalaimalar.com/topic/donald-trump">டொனல்டு டிரம்ப்</a> தெரிவித்தார்.</p><p>"மிக மோசமாக தோற்கடிக்கப்பட்டு வரும் ஈரானை நாம் தோற்கடித்து முடித்த பிறகு, வெகுவிரைவில் நான் <a href="https://www.maalaimalar.com/topic/strait-of-hormuz">ஹார்முஸ்</a> நீரிணையை அமெரிக்காவின் பிராந்தியமாக அறிவிப்பேன்," என்று நியூயார்க் மாநிலத்தில் உள்ள ஒரு காவல்துறை பயிற்சி பள்ளியில் நடந்த அரசியல் பேரணியின் போது அவர் சிரித்துக்கொண்டே கூறினார்.</p><h2>ஈரான் பதிலடி:</h2><p>அதிபர் டிரம்ப், இஸ்ரேலுடன் இணைந்து, ஈரானின் அணுசக்தி திட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவது மற்றும் மக்கள் எழுச்சியை தூண்டுவது ஆகிய அறிவிக்கப்பட்ட நோக்கங்களுடன், கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதியன்று அந்நாட்டிற்கு எதிராக போரைத் தொடங்கினார்.</p><p>இருப்பினும், உலகளாவிய எரிசக்தி மற்றும் பிற சரக்கு கப்பல் போக்குவரத்திற்கான ஒரு முக்கிய பாதையான ஹார்முஸ் நீரிணையின் பெரும்பகுதியின் மீது தன் கட்டுப்பாட்டை நிறுவி ஈரான் பதிலடி கொடுத்தது.</p><h2>துறைமுகங்கள் முற்றுகை:</h2><p>ஹார்முஸ் நீரிணை தொடர்பாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஒரு முட்டுக்கட்டை நிலை நீடிக்கிறது. ஈரான் பெரும்பாலான பயணிகள் கப்பல் போக்குவரத்திற்கு அனுமதி மறுப்பதுடன், அதன் பொருளாதாரத்தை முடக்கும் முயற்சியில் அமெரிக்க கடற்படை ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிட்டுள்ளது.</p><p>"நாங்கள் முற்றுகையிட்டுள்ளோம். நாங்கள் விரும்பினால் தவிர, எந்த கப்பல்களும் உள்ளே வர முடியாது," என்று ஆரவாரம் செய்த ஆதரவாளர்கள் மற்றும் காவல் துறையினரிடம் டிரம்ப் கூறினார்.</p><h2>விசா கட்டுப்பாடு:</h2><p>முன்னதாக அமெரிக்காவில் பிறக்கும் வெளிநாட்டினரின் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கும் பிறப்புரிமை குடியுரிமை சட்டத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தடை விதித்து உத்தரவிட்டார்.இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பிறப்புரிமை குடியுரிமையை முடிவுக்குக் கொண்டுவரும் டிரம்பின் நிர்வாக உத்தரவை அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஜூன் 30-ஆம் தேதி ரத்து செய்தது.</p><p>இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு பிறப்புரிமை குடியுரிமையைக் கட்டுப்படுத்த டிரம்ப் 2 புதிய நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டார். இதில் அமெரிக்காவிற்கு வந்து குழந்தையைப் பெற்றெடுக்கும் நோக்கத்துடன் விசா கோருபவர்களை கட்டுப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>சூரியின் &quot;மண்டாடி&quot; திரைப்படத்தின் 2 ஆவது பாடல் வெளியானது</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/soori-starrer-mandadi-movie-2nd-single-out</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/soori-starrer-mandadi-movie-2nd-single-out#comments</comments><guid isPermaLink="false">6f9ca7b2-dd26-4a9c-ab7e-ad5e595a2949</guid><pubDate>Fri, 14 Aug 2026 23:42:29 +0000</pubDate><atom:updated>2026-08-14T23:42:29.830Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மண்டாடி,Soori,Mandaadi,சூரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/71aw4y9g/Mandadi.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mandaadi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/71aw4y9g/Mandadi.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக இருந்து நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் கதையின் நாயகனாக நடித்து உயர்ந்தவர் நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/soori">சூரி</a>. இவர் நடிப்பில் வெளியான விடுதலை, கருடந், மாமன் ஆகிய திரைப்படங்கள் வர்த்தக ரீதியிலும், விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றன.</p><p>இந்த நிலையில், நடிகர் சூரி தொடர்ச்சியான வெற்றிப் படங்களைத் தொடர்ந்துநாயகனாக நடித்துள்ள புதிய படம் "<a href="https://www.maalaimalar.com/topic/mandaadi">மண்டாடி</a>". இந்தப் படத்திற்கு, ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள "மண்டாடி மண்டாடி" பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. </p><p>இந்தப் பாடல் வரிகள் மற்றும் நடிகர் சூரியின் நடனம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இந்தப் பாடல் படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியது. இந்த வரிசையில், மண்டாடி திரைப்படத்தின் 2-ஆவது பாடல் வெளியிடப்பட்டது.</p><h2>உசுரே நீதான் புள்ள:</h2><p>அதன்படி, மண்டாடி திரைப்படத்தின் 2-ஆவது பாடல் "உசுரே நீதான் புள்ள" படக்குழுவினரால் வெளியிடப்பட்டது. இது மனதை வருடும் காதல் மெலடி பாடல் ஆகும்.</p><p>நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்க்கை மற்றும் படகுப் போட்டிகளை மையமாக கொண்டு உருவாகி வரும் மண்டாடி திரைப்படத்தை இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். இந்தப் படம் வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.</p><p>மண்டாடி திரைப்படத்தில் நடிகர் சூரியுடன் சத்யராஜ், சுஹாஸ், மஹிமா நம்பியார், மிதுன் ஜெய்சங்கர், ரவீந்திர விஜய், பால சரவணன், ஸ்டன்ட் சிவா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே தலைப்பு தொடங்கி ஒவ்வொரு அப்டேட்டிலும் படம் மீதான எதிர்பார்ப்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சுதந்திர தினம்: குடியரசு தலைவரின் உரைக்கு பிரதமர் மோடி பாராட்டு!</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-praise-speech-of-president-droupadi-murmu-on-independence-day</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-praise-speech-of-president-droupadi-murmu-on-independence-day#comments</comments><guid isPermaLink="false">ae028ba0-9ca1-41d3-8a40-c2802c5e0292</guid><pubDate>Fri, 14 Aug 2026 23:09:01 +0000</pubDate><atom:updated>2026-08-14T23:09:01.802Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திரவுபதி முர்மு,Independence Day,சுதந்திர தினம்,pm modi,பிரதமர் மோடி,Droupadi Murmu</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/3bsfnggr/PM-Modi-and-Prez-Droupadi-Murmu.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi and President Droupadi Murmu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/3bsfnggr/PM-Modi-and-Prez-Droupadi-Murmu.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையை பிரதமர் <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">நரேந்திர மோடி</a> பாராட்டினார்.</p><p>நாட்டின் 80-ஆவது <a href="https://www.maalaimalar.com/topic/independence-day">சுதந்திர தினம்</a> இன்று (ஆகஸ்ட் 15) நாடு முழுக்க கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து குடியரசுத் தலைவர் முர்மு நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை சிறப்புரை ஆற்றினார்.</p><p>நாட்டின் வளர்ச்சி, பெண்களின் முன்னேற்றம், பொது தேர்வுகளை சீரமைக்கும் நடவடிக்கை, ஆபரேஷன் சிந்தூர், நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து குடியரசுத் தலைவர் முர்மு ஆற்றிய உரை ஆழமான சிந்தனைகளை உள்ளடக்கி இருந்ததாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.</p><h2>எக்ஸ் தள பதிவு:</h2><p>இதுபகுறித்து பிரதமர் மோடி, வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை ஊக்கமளிப்பதுடன், ஆழ்ந்த சிந்தனைகளை உள்ளடக்கியதாக இருந்தது.</p><p>அவரது கருத்துகள் நம் நாட்டின் வலிமையையும், ஒவ்வொரு இந்தியரின் கனவுகளையும் வெளிக்காட்டுகின்றன. வளர்ச்சியடைந்த இந்தியா எனும் இலக்கை நோக்கி உறுதியுடன் செயல்பட அவரது செய்திகள் ஊக்கமளிக்கின்றன" எனக் கூறியுள்ளார்.</p><h2>சுதந்திர தின கொண்டாட்டம்:</h2><p>இந்தியாவின் 80-ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டை வளாகத்தில் நடைபெறும் கொண்டாட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குகிறார். செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது, ​​முதல் முறையாக 'வந்தே மாதரம்' தேசிய கீதம் இசைக்கப்படவுள்ளது.</p><p>மாநில தலைநகரங்களிலும், நாடு முழுவதும் உள்ள பிற நகரங்கள் மற்றும் ஊர்களிலும் விழா நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் கொடியேற்றம் மற்றும் அதைத் தொடர்ந்த கலாச்சார நிகழ்ச்சிகள் அடங்கும். பிரதான நிகழ்ச்சி செங்கோட்டை வளாகத்தில் நடைபெறும், மேலும் பிரதமர் மோடி கொண்டாட்டங்களுக்குத் தலைமை தாங்குவார்.</p>]]></content:encoded></item><item><title>ஜார்க்கண்ட் முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது</title><link>https://www.maalaimalar.com/news/national/man-arrested-for-allegedly-threatening-to-kill-jharkhand-cm</link><comments>https://www.maalaimalar.com/news/national/man-arrested-for-allegedly-threatening-to-kill-jharkhand-cm#comments</comments><guid isPermaLink="false">b17a1a42-fdce-4a62-8b62-aa3500605e30</guid><pubDate>Fri, 14 Aug 2026 22:39:58 +0000</pubDate><atom:updated>2026-08-14T22:39:58.222Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Arrest,கைது,Jharkhand,ஜார்க்கண்ட்,man</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/cmjk4khw/Hemant-Soren.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/cmjk4khw/Hemant-Soren.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராஞ்சியில் நடைபெற்ற பணி நியமன தேர்வு முறைகேடுகள் தொடர்பான போராட்டத்தின்போது, ​​<a href="https://www.maalaimalar.com/topic/hemant-soren">ஜார்க்கண்ட்</a> முதல்வர் ஹேமந்த் சோரனை கொலை செய்வதாக மிரட்டியதாக கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். </p><p>போகாரோ மாவட்டத்தைச் சேர்ந்த விஸ்வஜீத் குமார் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், கோட்வாலி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாக அவர்கள் கூறினர். </p><p>"போராட்டக்காரர்களைத் தூண்டிவிட்டதாகவும், முதல்வருக்கு மிரட்டல் விடுத்ததாகவும் அவர் மீது பி.என்.எஸ். (BNS) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது," என்று கோட்வாலி காவல் நிலைய பொறுப்பு அதிகாரி சனோஜ் சவுத்ரி தெரிவித்தார்.</p><p>பணி நியமனத் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக வேலை தேடுபவர்கள் போராட்டம் நடத்தி வரும் ஜெய்பால் சிங் முண்டா மைதானத்தில், சோரனுக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துகளை அந்த நபர் தெரிவித்ததாக அவர் கூறினார்.</p><h2>போராட்டம்:</h2><p>ஜார்க்கண்ட் மாநிலத்தின் பணி நியமனத் தேர்வு நடைமுறைகளில் சீர்திருத்தங்களை கோரி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று (சனிக்கிழமை) 22-ஆவது நாளை எட்டியது. சுதந்திர தினத்தை ஒட்டி 'தேசிய கொடி பேரணி' நடத்தத் திட்டமிட்டுள்ள நிலையில், அதிகாரிகள் ஜெய்பால் சிங் முண்டா மைதானத்தில் போராட்டக்காரர்களை சந்தித்து பேசினர்.</p><p>அதிகாரிகள் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், இன்று நடைபெறவுள்ள பேரணிக்கான திட்டமிடப்பட்ட வழித்தடம் குறித்தும் விவரங்களை கேட்டறிந்தனர். இருப்பினும், இந்த பேச்சுவார்த்தைகள் எந்த முடிவும் எட்டப்படாமலேயே நிறைவடைந்தன.</p><p>அரசு அழைப்பு விடுக்கும் போதெல்லாம் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக 'ஜே.பி.எஸ்.சி.-ஜே.எஸ்.எஸ்.சி. சீர்திருத்த மன்றம்' அமைப்பின் தலைவர் ரவீந்திர பாஸ்வான் தெரிவித்தார்.</p><h2>தேசியக் கொடி யாத்திரை:</h2><p>சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் ஆகஸ்ட் 15 அன்று 'தேசிய கொடி பேரணி' நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இந்த நிகழ்ச்சி பணி நியமன தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையை வலியுறுத்தும் இயக்கத்தை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.</p><p>மாணவர்கள் ஜெய்பால் சிங் முண்டா மைதானத்தில் இருந்து ஆல்பர்ட் எக்கா சவுக் வரை பேரணி நடத்தினர்; அப்போது "கல்வி மாஃபியா" மற்றும் அவர்களுக்கு ஆதரவளிப்பதாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் உருவ பொம்மைகளை எரித்தனர்.</p><p>பணி நியமனத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் பொறுப்பானவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்து, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்ற செய்தியை வெளிப்படுத்துவதே இந்தப் போராட்டத்தின் நோக்கம் என்று பாஸ்வான் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>வங்கதேசத்தில் கப்பல் உடைக்கும் தளத்தில் வாயு கசிவு - 8 பேர் உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/toxic-gas-leak-kills-8-at-bangladesh-ship-breaking-yard</link><comments>https://www.maalaimalar.com/news/world/toxic-gas-leak-kills-8-at-bangladesh-ship-breaking-yard#comments</comments><guid isPermaLink="false">983b1e2c-3c58-4683-8b7f-c969fc34dba4</guid><pubDate>Fri, 14 Aug 2026 20:31:34 +0000</pubDate><atom:updated>2026-08-14T20:31:34.449Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உயிரிழப்பு,Bangladesh,வங்கதேசம்,gas leak,எரிவாயு கசிவு,Death toll</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/g8e7xmt5/Ship-Breaking-Yard.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ship Breaking Yard]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/g8e7xmt5/Ship-Breaking-Yard.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வங்கதேசத்தில் உள்ள கப்பல் உடைக்கும் தளத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஒரு கலனில் இருந்து நச்சு வாயு கசிந்ததில், குறைந்தது எட்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர், மேலும் ஐந்து பேரை காணவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>தென்கிழக்கு துறைமுக நகரமான சிட்டகாங்கில் உள்ள வளாகத்திற்குள் இருந்து அலறல் சத்தம் கேட்டதாகவும், அதன் பிறகு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டவர்களில் சிலரை மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.</p><p>எட்டு பேர் உயிரிழந்ததாகவும், காணாமல் போன தொழிலாளர்களை அதிகாரிகள் தேடி வருவதாகவும் மூத்த காவல்துறை அதிகாரி அப்துல் குத்தூஸ் சௌத்ரி தெரிவித்தார்.</p><h2>விசாரணை குழு:</h2><p>"இந்த சம்பவம் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது, மேலும் கப்பல் உடைக்கும் தளத்தில் தணிக்கை செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்," என்று சௌத்ரி ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.</p><p>முன்னர் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட கப்பலை வாங்கிய ஃபெர்டஸ் ஸ்டீல் கப்பல் உடைப்பு தளம் மற்றும் மறுசுழற்சி தொழிற்சாலை, ஒரு "பசுமை" மற்றும் இணக்கமான தளமாக பட்டியலிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.</p><p>ஆனால், வெட்டும் பணி தொடங்குவதற்கு முன்பு கலத்தில் எந்த வாயுவும் இருந்திருக்க கூடாது என்பதால், பாதுகாப்பு நடைமுறைகள் மீறப்பட்டதாக தெரிகிறது என தீயணைப்புத் துறை அதிகாரி தவ்ஃபிகுல் இஸ்லாம் புய்யான் கூறினார்.</p><h2>உடல்கள் மீட்பு:</h2><p>"தள அதிகாரிகள் அறிவுறுத்தல்களை பின்பற்றவில்லை. வாயு தாக்குதலுக்கு உள்ளான தொழிலாளர்கள் உயிரிழந்தனர், அதே சமயம் தொலைவில் இருந்தவர்கள் உயிர் தப்பினர்," என்று அவர் ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து ஃபெர்டௌஸ் பகிரங்கமாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.</p><p>தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் இருந்து மூன்று உடல்களை மீட்டதாகவும், மேலும் பல தொழிலாளர்கள் மயக்க நிலையில் இருந்ததை கண்டறிந்து அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகவும் புய்யான் கூறினார்.</p><p>வங்காளதேசத்தின் கப்பல் உடைக்கும் தொழில், வங்காள விரிகுடாவில் உள்ள சிட்டகாங் கடற்கரையின் 25 கிலோமீட்டர் (15 மைல்) நீளப் பகுதியில் பரவியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>80-ஆவது சுதந்திர தினம்: செங்கோட்டையில் இருந்தபடி நாட்டு மக்களுக்கு உரையாற்றும் பிரதமர் மோடி!</title><link>https://www.maalaimalar.com/news/national/india-80th-independence-day-pm-modi-to-address-nation-from-red-fort</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-80th-independence-day-pm-modi-to-address-nation-from-red-fort#comments</comments><guid isPermaLink="false">75315852-c7e9-4854-a56f-d6980aeaffd1</guid><pubDate>Fri, 14 Aug 2026 19:49:36 +0000</pubDate><atom:updated>2026-08-14T19:49:36.166Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,Independence Day,சுதந்திர தினம்,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/kmad8dxw/red-fort.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Red Fort]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/kmad8dxw/red-fort.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் 80-ஆவது <a href="https://www.maalaimalar.com/topic/independence-day">சுதந்திர தினம்</a> இன்று கொண்டாடப்படுகிறது. தேசபக்தி உணர்வு மற்றும் பல அடுக்கு பாதுகாப்புக்கு மத்தியில், செங்கோட்டை வளாகத்தில் நடைபெறும் கொண்டாட்டங்களுக்கு பிரதமர் <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">நரேந்திர மோடி</a> தலைமை தாங்க உள்ளார். செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது, ​​முதல் முறையாக 'வந்தே மாதரம்' தேசிய கீதம் இசைக்கப்படவுள்ளது.</p><p>மாநில தலைநகரங்களிலும், நாடு முழுவதும் உள்ள பிற நகரங்கள் மற்றும் ஊர்களிலும் விழா நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் கொடியேற்றம் மற்றும் அதைத் தொடர்ந்த கலாச்சார நிகழ்ச்சிகள் அடங்கும். பிரதான நிகழ்ச்சி செங்கோட்டை வளாகத்தில் நடைபெறும், மேலும் பிரதமர் மோடி கொண்டாட்டங்களுக்குத் தலைமை தாங்குவார்.</p><h2>வந்தே மாதரம் 150 ஆண்டுகள்:</h2><p>150 ஆண்டுகள் பாம்பரியம் மிக்க 'வந்தே மாதரம்' கீதத்தை நினைவுகூரும் வகையிலும், "2047-ஆம் ஆண்டுக்குள் விக்சித் பாரத் என்ற இலக்கை நோக்கிய இந்தியாவின் பயணத்தை முன்னெடுத்து செல்வதில் 'யுவ சக்தி'யின் ஆற்றல் மற்றும் முக்கிய பங்களிப்பை கொண்டாடும் வகையிலும்" இந்த மாபெரும் விழா நடைபெற உள்ளது என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.</p><p>செங்கோட்டைக்கு பிரதமர் மோடி வந்தடையும் போது, ​​அவரை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், துணை அமைச்சர் சஞ்சய் சேத் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் ஆகியோர் வரவேற்பார்கள். பாதுகாப்பு செயலாளர், டெல்லி பகுதி தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ராஜேஷ் சேத்தியை பிரதமருக்கு அறிமுகம் செய்வார்.</p><p>பின்னர், தளபதி பிரதமரை மரியாதை செலுத்தும் தளத்திற்கு அழைத்துச் செல்வார். அங்கு, முப்படைகள் மற்றும் டெல்லி காவல்துறையின் ஒருங்கிணைந்த பாதுகாப்பு படையினர் பிரதமர் மோடிக்கு பொது மரியாதை செலுத்துவார்கள். அதன்பிறகு, பிரதமர் மரியாதை காவலர்களை ஆய்வு செய்வார் என்று அமைச்சகம் முன்னதாக ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தது.</p><h2>தேசிய கொடியேற்றம்:</h2><p>மரியாதை அணிவகுப்பை ஆய்வு செய்த பின்னர், பிரதமர் செங்கோட்டையின் கொத்தளங்களுக்குச் செல்வார். தேசியக் கொடியை ஏற்றுவதற்காக, டெல்லி பகுதி தளபதி பிரதமரை கொத்தளங்களில் உள்ள மேடைக்கு அழைத்துச் செல்வார்.</p><p>"தேசியக் கொடியை ஏற்றுவதில் கேப்டன் சோனியா சிங் சௌஹான் பிரதமருக்கு உதவுவார். இது, 1721 ஃபீல்ட் பேட்டரி (செரிமோனியல்) பிரிவின் வீரமிக்க பீரங்கி வீரர்களின் 21 குண்டுகள் முழங்கும் மரியாதையுடன் ஒருங்கிணைக்கப்பட்டுவிடும்," என அந்த அறிக்கை தெரிவித்தது.</p><h2>ராஷ்ட்ரிய வணக்கம்:</h2><p>மூவர்ணக் கொடி ஏற்றப்பட்ட பிறகு, அதற்கு 'ராஷ்ட்ரிய வணக்கம்' செலுத்தப்படும். பிரதமர் தேசியக் கொடியை ஏற்றியவுடன், இந்திய விமானப்படையின் இரண்டு எம்.ஐ.17 ஹெலிகாப்டர்கள் மூலம் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மலர் இதழ்கள் தூவப்படும். அவற்றில் ஒன்று தேசிய கொடியை ஏந்தியபடியும், மற்றொன்று 'வந்தே மாதரம்' சித்தரிக்கப்பட்ட கொடியை ஏந்தியபடியும் செல்லும்.</p><p>அந்த ஹெலிகாப்டர்களின் தலைவர்களாக விங் கமாண்டர் ரஜத் மற்றும் ஸ்குவாட்ரன் லீடர் அங்கித் வர்ஷ்னி ஆகியோர் இருப்பார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மலர் இதழ்கள் தூவிய பிறகு, பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அவரது உரையின் முடிவில், 2,500 தேசிய மாணவர் படை (NCC) மாணவர்களும், மை பாரத் தன்னார்வலர்களும் இணைந்து 'வந்தே மாதரம்' என்ற தேசியப் பாடலையும், அதனைத் தொடர்ந்து தேசிய கீதத்தையும் பாடுவார்கள்.</p>]]></content:encoded></item><item><title>டிஎன்பிஎல்: ஹரி ராகவேந்திரா போராட்டம் வீண்... மதுரை அணியை வீழ்த்தியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-csg-beat-mp-by-39-runs</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-csg-beat-mp-by-39-runs#comments</comments><guid isPermaLink="false">c169fa3c-bf57-4d66-8e97-5cf0eea639c6</guid><pubDate>Fri, 14 Aug 2026 18:56:05 +0000</pubDate><atom:updated>2026-08-14T18:56:05.742Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,Chepauk super gillies,சேப்பாக் சூப்பர் கில்லீஸ்,madurai panthers,மதுரை பேந்தர்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/f6b4clug/Hari-Ragavendra.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Hari Ragavendra]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/f6b4clug/Hari-Ragavendra.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>10-ஆவது <a href="https://www.maalaimalar.com/topic/tnpl">டி.என்.பி.எல்.</a> டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முறை தொடரின் அனைத்து போட்டிகளும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.</p><p>இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற 19-ஆவது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்ஸீஸ் மற்றும் மதுரை பேந்தர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மதுரை பேந்தர்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து, <a href="https://www.maalaimalar.com/topic/chepauk-super-gillies">சேப்பாக் சூப்பர் கில்லீஸ்</a> அணி முதலில் பேட்டிங் செய்தது.</p><h2>அபார தொடக்கம்:</h2><p>சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய மோகித் ஹரிஹரன் மற்றும் கேப்டன் நாராயன் ஜெகதீசன் அபாரமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இவர்களில் மோகித் 50 பந்துகளில் 108 ரன்கள் (4 பவுண்டரிகள், 10 சிக்சர்கள்) விளாசினார். இவருடன் ஆடிய கேப்டன் ஜெகதீசன் 48 பந்துகளில் 79 ரன்கள் (4 பவுண்டரிகள், 6 சிக்சர்கள்) விளாசினார்.</p><p>அடுத்து களமிறங்கிய ஸ்வப்நில் சிங் 21 பந்துகளில் 42 ரன்கள் (3 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) விளாசினார். இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 240 ரன்களை குவித்தது. மதுரை சார்பில் கணேசன் பெரியசாமி மட்டும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.</p><h2>மதுரை சொதப்பல்:</h2><p>கடின இலக்கை துரத்திய மதுரை பேந்தர்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களில் ஒருவராக களமிறங்கிய சித்தார்த் மகாதேவன் வெறும் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய கேப்டன் பாலாசந்தர் அஷ்வின் மற்றும் தீபேஷ் தேவேந்திரன் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் தங்களது விக்கெட்டை பறிக்கொடுத்தனர்.</p><p>பின்னர் களமிறங்கிய ஹரி ராகவேந்திரா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடக்க வீரராக களமிறங்கிய ராம் குமார் 12 பந்துகளில் 28 ரன்கள் (2 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) எடுத்த போது தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த போதிலும், மறுப்பக்கம் ஹரி ராகவேந்திரா அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.</p><p>போட்டி முடிவில் மதுரை பேந்தர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 201 ரன்களை எடுத்தது. இதன் மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மதுரை அணிக்கு அதிகபட்சமாக ஹரி ராகவேந்திரா 55 பந்துகளில் 98 ரன்கள் (9 பவுண்டரிகள், 6 சிக்சர்கள்) விளாசினார்.</p><p>சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஸ்வப்நில் சிங் மற்றும் பிரேம் குமார் தலா 2 விக்கெட்டுகளையும், அபிஷேக் தன்வார், விக்னேஷ் மற்றும் லோகேஷ் ராஜ் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.</p>]]></content:encoded></item><item><title>ஜார்க்கண்ட் போராட்டம்: சுதந்திர தினத்தை ஒட்டி தேசிய கொடி பேரணி மேற்கொள்ள மாணவர்கள் திட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/national/jharkhand-protesting-students-to-take-out-tiranga-yatra-on-aug-15</link><comments>https://www.maalaimalar.com/news/national/jharkhand-protesting-students-to-take-out-tiranga-yatra-on-aug-15#comments</comments><guid isPermaLink="false">780fec16-c83c-467f-9c71-2406ae31728f</guid><pubDate>Fri, 14 Aug 2026 17:54:31 +0000</pubDate><atom:updated>2026-08-14T17:54:31.456Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Students,மாணவர்கள்,Jharkhand protest,ஜார்க்கண்ட் போராட்டம்,Tiranga Yatra</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/5eu3inrt/Jharkhand-Protest-.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jharkhand Protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/5eu3inrt/Jharkhand-Protest-.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national">ஜார்க்கண்ட்</a> மாநிலத்தின் பணி நியமனத் தேர்வு நடைமுறைகளில் சீர்திருத்தங்களை கோரி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) 21-ஆவது நாளை எட்டியது. சுதந்திர தினத்தன்று 'தேசிய கொடி பேரணி' நடத்தத் திட்டமிட்டுள்ள நிலையில், அதிகாரிகள் ஜெய்பால் சிங் முண்டா மைதானத்தில் போராட்டக்காரர்களை சந்தித்து பேசினர்.</p><p>அதிகாரிகள் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ள பேரணிக்கான திட்டமிடப்பட்ட வழித்தடம் குறித்தும் விவரங்களை கேட்டறிந்தனர். இருப்பினும், இந்த பேச்சுவார்த்தைகள் எந்த முடிவும் எட்டப்படாமலேயே நிறைவடைந்தன.</p><p>அரசு அழைப்பு விடுக்கும் போதெல்லாம் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக 'ஜே.பி.எஸ்.சி.-ஜே.எஸ்.எஸ்.சி. சீர்திருத்த மன்றம்' அமைப்பின் தலைவர் ரவீந்திர பாஸ்வான் தெரிவித்தார். </p><h2>தேசிய கொடி பேரணி:</h2><p>சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் ஆகஸ்ட் 15 அன்று 'தேசிய கொடி பேரணி' நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இந்த நிகழ்ச்சி பணி நியமன தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையை வலியுறுத்தும் இயக்கத்தை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.</p><p>மாணவர்கள் ஜெய்பால் சிங் முண்டா மைதானத்தில் இருந்து ஆல்பர்ட் எக்கா சவுக் வரை பேரணி நடத்தினர்; அப்போது "கல்வி மாஃபியா" மற்றும் அவர்களுக்கு ஆதரவளிப்பதாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் உருவ பொம்மைகளை எரித்தனர்.</p><p>பணி நியமனத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் பொறுப்பானவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்து, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்ற செய்தியை வெளிப்படுத்துவதே இந்தப் போராட்டத்தின் நோக்கம் என்று பாஸ்வான் கூறினார்.</p><p>'ஜே.பி.எஸ்.சி.-ஜே.எஸ்.எஸ்.சி. சீர்திருத்த மன்றத்தின்' கீழ் போராடும் மாணவர்கள், பணி நியமன தேர்வுகளில் கூடுதல் வெளிப்படைத்தன்மை, பல தேர்வுகளை ரத்து செய்தல் மற்றும் சி.பி.ஐ. அல்லது ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு வெளியேயுள்ள ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய குழுவின் மூலம் சுதந்திரமான விசாரணை ஆகியவற்றை வலியுறுத்தி வருகின்றனர்.</p><h2>வழக்குப் பதிவு:</h2><p>ஆகஸ்ட் 10-ஆம் தேதியன்று ஜார்க்கண்ட் சட்டமன்றத்தை நோக்கி மாணவர்கள் நடத்திய பேரணியின் போது ஏற்பட்ட வன்முறை தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை (FIR) குறித்தும் போராட்டக்காரர்கள் ராஞ்சி மாவட்ட நிர்வாகத்தைக் கடுமையாக விமர்சித்தனர்.</p><p>தடை உத்தரவுகளை மீறியது, அரசு சொத்துக்களுக்குசேதம் விளைவித்தது மற்றும் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், அடையாளம் தெரியாத சுமார் 300 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. </p><p>இதுவரை யாரும் கைது செய்யப்படவோ அல்லது தடுப்புக் காவலில் வைக்கப்படவோ இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>டிஎன்பிஎல்: மதுரை அணிக்கு எதிராக 240 ரன்களை விளாசிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-csg-smash-240-against-mp</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-csg-smash-240-against-mp#comments</comments><guid isPermaLink="false">0b6bd626-05dc-45ff-ad63-0377b454f015</guid><pubDate>Fri, 14 Aug 2026 17:18:39 +0000</pubDate><atom:updated>2026-08-14T17:18:39.176Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,Chepauk super gillies,சேப்பாக் சூப்பர் கில்லீஸ்,madurai panthers,மதுரை பேந்தர்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/ra5n9r55/CSG-Score.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CSG Score]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/ra5n9r55/CSG-Score.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>10-ஆவது <a href="https://www.maalaimalar.com/topic/tnpl">டி.என்.பி.எல்.</a> டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முறை தொடரின் அனைத்து போட்டிகளும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.</p><p>இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற 19-ஆவது லீக் ஆட்டத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/chepauk-super-gillies">சேப்பாக் சூப்பர் கில்லீஸ்</a> மற்றும் மதுரை பேந்தர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மதுரை பேந்தர்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.</p><h2>அபார தொடக்கம்:</h2><p>சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய மோகித் ஹரிஹரன் மற்றும் கேப்டன் நாராயன் ஜெகதீசன் அபாரமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இவர்களில் மோகித் 50 பந்துகளில் 108 ரன்கள் (4 பவுண்டரிகள், 10 சிக்சர்கள்) விளாசினார். இவருடன் ஆடிய கேப்டன் ஜெகதீசன் 48 பந்துகளில் 79 ரன்கள் (4 பவுண்டரிகள், 6 சிக்சர்கள்) விளாசினார்.</p><p>அடுத்து களமிறங்கிய ஸ்வப்நில் சிங் 21 பந்துகளில் 42 ரன்கள் (3 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) விளாசினார். இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 240 ரன்களை குவித்தது. மதுரை சார்பில் கணேசன் பெரியசாமி மட்டும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.</p><p>முதல் இன்னிங்ஸ் முடிவுற்ற நிலையில், 241 எனும் கடின இலக்கை துரத்தி மதுரை பேந்தர்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.</p><h2>திண்டுக்கல் அபார வெற்றி:</h2><p>இன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 15 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 239 ரன்களை விளாசியது. </p><p>இதைத் தொடர்ந்து களமிறங்கிய சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி அபாரமாக ஆடிய போதிலும், 15 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு வெறும் 158 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது. இதன் காரணமாக திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.</p>]]></content:encoded></item><item><title>பிறந்த குழந்தைக்கு சொந்தம் கொண்டாடிய வாடகை தாய்: நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/american-surrogacy-legal-battle-child-custody</link><comments>https://www.maalaimalar.com/news/world/american-surrogacy-legal-battle-child-custody#comments</comments><guid isPermaLink="false">c83c9a0b-6efb-4c7b-8b11-9e3df845a058</guid><pubDate>Fri, 14 Aug 2026 16:35:26 +0000</pubDate><atom:updated>2026-08-14T16:35:26.286Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வளர்ப்பு தாய்,surrogate,american parents,அமெரிக்க பெற்றோர்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/5eaj8bnb/%D7%99%D7%A6%D7%99%D7%90%D7%AA-4.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமெரிக்காவில் வளர்ப்புத் தாய் மற்றும் உயிரியல் பெற்றோர் இடையிலான குழந்தை உரிமை விவகாரம்]]></media:title><media:description type="html"><![CDATA[ American surrogate ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/5eaj8bnb/%D7%99%D7%A6%D7%99%D7%90%D7%AA-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள நினைத்த பெற்றோர்கள், ஒரு கட்டத்தில் வாடகை தாயிடம் கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தியதை தொடர்ந்து, குழந்தை பெற்றுக்கொண்ட அவர் குழந்தை தனக்கு தான் சொந்தம் என்று கூறி நீதிமன்றத்தை நாடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த தம்பதிகளான ஓமர் அகமது மற்றும் நெளஷீன் கில்கர் ஆகியோர், செவிலியரான மெக்கென்னா வெஸ்ட் என்ற வாடகை தாயை அணுகி, தங்களது குழந்தையை பெற்றுத் தருமாறு கூறியுள்ளனர்.</p><p>அவர்களுக்கு இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தில், சிசுவில் இருக்கும் குழந்தைக்கு ஏதாவது குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டால், அந்த சிசுவை கலைப்பதற்கான ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது.  </p><p>இதையடுத்து சிசுவின் 20-வது வாரத்தில், அந்த குழந்தைக்கு இதய நோய் இருப்பது கண்டறியப்பட்டது.</p><p>இதன்மூலம் குழந்தையின் இதயம் இடது பக்கத்தில் முழுமையாக வளர்ச்சியடையாமல், போதுமான அளவு செயல்பட தவறும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவித்தன.</p><p>மேலும் இதய நோய் குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைக்கு, பிறந்த உடனேயே சில அறுவை சிகிச்சைகள் செய்யப்பட வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.</p><p>இந்த நிலையில் குழந்தையின் பெற்றோர்கள், வாடகை தாயிடம் சிசுவை கலைக்க கூறியுள்ளனர். ஆனால் அவரோ, குழந்தையை நானே வைத்துக்கொள்கிறேன் என்று கூறி, டெல்லாஸ் மாகாணத்தில் கருக்கலைப்பு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், வெளியூருக்கு தப்பி செல்ல முயன்றுள்ளார்.</p><p>பின்னர் வாடகை தாய் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார். பிறந்த அந்த குழந்தைக்கு இதய கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது.</p><p>இதையடுத்து பிறந்த குழந்தையுடன் வாடகைத் தாய் டெக்சாஸ் மாகாணத்திற்கு தப்பிச் செல்ல முயன்றுள்ளார். இதனால், குழந்தையின் பெற்றோர்கள் டெல்லாஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.</p><p>குழந்தையின் பெற்றோர்கள் நீதிமன்றத்தில், தாங்கள் கருவை கலைக்க கூறவில்லை என்று வாதிட்டனர். மேலும் இந்த நிகழ்வை ஒரு அரசியல் நாடகாக வாடகைத் தாய் மாற்றிவிட்டதாக கூறினர்.</p><p>இதைத்தொடர்ந்து டெல்லாஸ் நீதிமன்றம், குழந்தையின் வாடகை தாயை மாகாணத்தை விட்டு வெளியேற தடை விதித்து, குழந்தைக்கு தேவையான அனைத்து உயிர் காக்கும் சிகிச்சையை வழங்குமாறு உத்தரவிட்டார்.</p><p>மேலும் பிறந்த குழந்தைக்கு, அதன் உயிரியல் பெற்றொர்களே பொறுப்பானவர்கள் எனக் கூறி, வாடகை தாய்க்கு குழந்தை மீதான அதிகாரத்திற்கு தடை விதித்து தீர்ப்பளித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>இத்தாலியுடன் ஆழமான மற்றும் வலுவான பிணைப்பு: ராகுல் காந்தி கிண்டல் செய்த நிலையில் MEA பதிவு</title><link>https://www.maalaimalar.com/news/national/share-deep-and-strong-ties-with-italy-centre-on-congress-meloni-jibe</link><comments>https://www.maalaimalar.com/news/national/share-deep-and-strong-ties-with-italy-centre-on-congress-meloni-jibe#comments</comments><guid isPermaLink="false">8ec2f7a6-a3f2-48b9-8861-c8a66a3cbf74</guid><pubDate>Fri, 14 Aug 2026 15:38:06 +0000</pubDate><atom:updated>2026-08-14T15:38:06.803Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/yn112gmz/RahulGandhiPMMOdi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல் காந்தி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/yn112gmz/RahulGandhiPMMOdi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இத்தாலி பிரதமர் மெலோனி குறித்து காங்கிரஸ் தேசிய மாநாட்டில் ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் தலைவர் கூறிய கருத்து சர்ச்சையான நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், ஒரு பதிவை வெளியிட்டுள்ளது.</p><p>அதில் "இத்தாலியுடன் நாங்கள் ஆழமான மற்றும் வலுவான பிணைப்பைக் கொண்டுள்ளோம். இந்த உறவை மேலும் வலுப்படுத்த நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். இரு நாடுகளுக்கு இடையிலான நட்பு மற்றும் இருதரப்பு உறவுகளைப் பொறுத்தவரை, அவை பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலின் அடிப்படையில் பேணப்படுவது முக்கியமாகும்" எனக் குறிப்பிட்டுள்ளது.</p><h2>காங்கிரஸ் தேசிய மாநாட்டில் நடந்தது என்ன?</h2><p>பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு செல்லும்போது அந்நாட்டு தலைவர்களை அடிக்கடி கட்டிப்பிடிப்பதை விமர்சித்த ராகுல் காந்தி, "பிரதமர் மோடிக்கு இந்த யோசனை எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. மனிதர்களின் மண்டைக்குள் விசித்திரமான எண்ணங்கள் வருகின்றன. இதையே அவர் 'வெளியுறவுக் கொள்கை' என்று நினைக்கிறார்" என்கிறார்.</p><p>மேலும் ஒரு படி மேலே சென்று மேடையிலிருந்த காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீட்சித்தைக் கட்டிப்பிடித்தார். உடனே சந்தீப் தீட்சித் நகைக்சுவையாக, "என்னை மெலோனி (இத்தாலி பிரதமர்) என்று நினைத்து கட்டிப்பிடிக்கவில்லையே?" என்று கேட்க, ராகுல் காந்தி சிரித்தபடியே "நான் இன்னும் அந்த அளவுக்குப் போகவில்லை" என்று பதிலளித்தார்.</p><p>அதே கூட்டத்தில் ராகுல் காந்தி, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரை கோமாளிகள் கூட்டம் என்றும் அவர்கள் அதானி மற்றும் அம்பானி போன்ற பெரிய முதலாளிகளின் கர சேவகர்களாக மாறிவிட்டதாகவும் விமர்சித்தார்.</p><p>ராகுல் காந்தி தனது உரையின் முடிவில், "பிரதமர் மோடியும் மத்திய அமைச்சர் அமித் ஷாவும் ராஜினாமா செய்யும் வரை நாங்கள் அவர்களைத் தூங்க விடமாட்டோம். வெறுப்போ வன்முறையோ இன்றி, அன்பினாலும் அகிம்சையினாலும் இந்த போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்போம்" என தெரிவித்தார்.</p><h2>பாஜகவின் கண்டனம்</h2><p>ராகுல் காந்தியின் இந்தக் கருத்துக்கள் மிகவும் அருவருப்பான, தரமற்ற ஒன்று என்றும் ஒரு எதிர்க்கட்சித் தலைவருக்கு இது அழகல்ல என்று பாஜக செய்தித் தொடர்பாளர் சஞ்சு வர்மா சாடியுள்ளார்.</p><h2>காங்கிரஸ் விளக்கம்</h2><p>இதற்கு விளக்கம் அளித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷமா முகமது பேசுகையில், "ராகுல் காந்தி மெலோனியின் பெயரைப் பயன்படுத்தவே இல்லை. அவர் தனது கட்சியின் தலைவர் சந்தீப் தீட்சித்தைக் கட்டியணைத்தார், இதில் எந்தத் தவறும் இல்லை" என்று தெரிவித்தார்.</p><p>மேலும் பேசிய அவர், "நான் ஒரு வெளிநாட்டவரைத் திருமணம் செய்து கொண்டவள். பொதுவாக வெளிநாட்டவர்கள் கை குலுக்குவதையே விரும்புவர். எடுத்தவுடனே கட்டிப்பிடிப்பதை விரும்புவதில்லை" என்று பிரதமர் மோடியின் செய்கையை விமர்சித்தார்.</p>]]></content:encoded></item><item><title>பள்ளி உணவகத்தில் சாப்பிட்ட 12-ம் வகுப்பு மாணவன் மர்மமான முறையில் உயிரிழப்பு: பள்ளி நடத்துநர், நிர்வாகி கைது</title><link>https://www.maalaimalar.com/news/national/student-dies-mysteriously-after-eating-school-canteen-food</link><comments>https://www.maalaimalar.com/news/national/student-dies-mysteriously-after-eating-school-canteen-food#comments</comments><guid isPermaLink="false">6b095986-8cd8-4109-a243-d85a41b02d6c</guid><pubDate>Fri, 14 Aug 2026 15:00:29 +0000</pubDate><atom:updated>2026-08-14T15:00:29.374Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>School Student death,Prince Soni,Jaipur school,பள்ளி மாணவர் உயிரிழப்பு,பிரின்ஸ் சோனி,ஜெய்ப்பூர் பள்ளி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/poy6ut15/%D7%99%D7%A6%D7%99%D7%90%D7%AA-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஜெய்ப்பூர் தனியார் பள்ளி உணவகத்தில் கட்லெட் சாப்பிட்ட 12ஆம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு]]></media:title><media:description type="html"><![CDATA[ School Student death]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/poy6ut15/%D7%99%D7%A6%D7%99%D7%90%D7%AA-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராஜஸ்தான் மாநிலம் ஜோத்வாரா பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், பள்ளி உணவகத்தில் வாங்கிய உணவை சாப்பிட்ட 12-ஆம் வகுப்பு மாணவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்ததை தொடர்ந்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். </p><p>மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, பள்ளி நடத்துநர் மற்றும் நிர்வாகியை விசாரணைக்காக கைது செய்துள்ளனர்.</p><p><strong>12ஆம் வகுப்பு பள்ளி மாணவர் உயிரிழப்பு</strong></p><p>ஜெய்ப்பூரில் உள்ள மகாராணா பிரதாப்பில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது பிரின்ஸ் சோனி என்ற மாணவர் பயின்று வந்துள்ளார்.</p><p>சம்பவத்தன்று அந்த மாணவர், 11 மணியளவில் மதிய உணவு இடைவெளியின் போது, பள்ளி உணவகத்தில் இருந்து கட்லெட்டை வாங்கி சாப்பிட்டுள்ளார்.</p><p>இதை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே மாணவரின் உடல் நிலை மோசமடைந்து மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து மாணவரின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்ப்பட்ட நிலையில், மாணவரின் தந்தையான அமித் சோனி பள்ளிக்கு வந்துள்ளார்.</p><p>பின்னர் தனது மகனை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். மாணவரை பரிசோதித்த மருத்துவர்கள், மனிபால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர்.</p><p>இதைத்தொடர்ந்து மனிபால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.</p><p><strong>உறவினர்கள் குற்றச்சாட்டு</strong></p><p>இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து மாணவரின் உறவினரான ரவிக்குமார் கூறுகையில், “பள்ளி உணவகத்தில் இருந்து கெட்டுப்போன மற்றும் எண்ணெய்ப் பசையுள்ள கட்லெட்டை பிரின்ஸ் சாப்பிட்டபோது, அது அவனது தொண்டையில் சிக்கிக்கொண்டுள்ளது.</p><p>எங்கள் குடும்பத்தினர் காலை சுமார் 11:45 மணியளவில் பள்ளிக்கு வந்து, பிரின்ஸ் இன்னும் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்படவில்லை என்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அதற்குப் பதிலாக, நிர்வாகம் எங்கள் குடும்பத்தினரை ஒரு நான்கு சக்கர வாகனத்தை ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டது.</p><p>சுமார் 100 மீட்டர் தொலைவில் மருத்துவ வசதி இருந்தபோதிலும், பள்ளி நிர்வாகம் பிரின்ஸை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை. பள்ளியில் போதுமான முதலுதவி மற்றும் மருத்துவ வசதிகளும் இல்லை.</p><p>பள்ளி நிர்வாகம், முதல்வர் மற்றும் ஊழியர்கள் மாணவர் மீது பெரும் அலட்சியமாக இருந்துள்ளனர். பிரின்ஸை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தாலோ அல்லது 108 ஆம்புலன்ஸை அழைத்திருந்தாலோ அவரது உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும்” என்று அவர் கூறினார்.</p><p><strong>பள்ளி நிர்வாகி கைது</strong></p><p>இதையடுத்து பிரின்ஸின் உடலை பிரேத பரிசோதனைக்காக கன்வாடியா மருத்துவமனைக்கு ஜோத்வாரா போலீசார் அனுப்பி வைத்தனர்.</p><p>இந்த சம்பவம் நடந்ததை தொடர்ந்து அப்பகுதியில் போராட்டங்கள் வெடித்து, இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.</p><p>இதைத்தொடர்ந்து அலட்சியம் குறித்த குற்றச்சாட்டுகள் பேரில் பள்ளி நடத்துநர் அமித் குமாவத் மற்றும் நிர்வாகி ராஜேந்திர குமார் ஆகியோரை போலீசார் கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>டிஎன்பிஎல்: ருத்ர தாண்டவமாடிய பாபா இந்திரஜித்- சேலத்தை வீழ்த்தியது திண்டுக்கல்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/dindigul-dragons-beat-salem-spartans-in-tnpl-2026</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/dindigul-dragons-beat-salem-spartans-in-tnpl-2026#comments</comments><guid isPermaLink="false">5cdc7643-ad8f-454f-ae78-4174780771d2</guid><pubDate>Fri, 14 Aug 2026 14:37:17 +0000</pubDate><atom:updated>2026-08-14T14:37:17.288Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,திண்டுக்கல் டிராகன்ஸ்,Dindigul Dragons,Baba Indrajith,பாபா இந்திரஜித்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/z7b936ia/DD.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ dindigul]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/z7b936ia/DD.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சேலம் அணிக்கு எதிரான போட்டியில் திண்டுக்கல் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.</p><p>10-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் அடுத்த நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி  மைதானத்தில் நடந்து வருகிறது.</p><h2>திண்டுக்கல் டிராகன்ஸ்</h2><p>இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெற்ற 18-வது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பர்டன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சேலம் அணி பவுலிங் தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 15 ஓவராகக் குறைக்கப்பட்டது.</p><h2>பாபா இந்திரஜித் அரை சதம்</h2><p>அதன்படி, முதலில் ஆடிய திண்டுக்கல் அணி நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவரில்  6 விக்கெட் இழப்புக்கு 239 ரன்களைக் குவித்தது. அந்த அணியின் பாபா இந்திரஜித் ருத்ர தாண்டவமாடினார். அவர் 25 பந்தில் 8 சிக்சர், 3 பவுண்டரியுடன் 73 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.</p><p>வி.கே.வினீத் 20 பந்தில் 45 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஷிவம் சிங் 15 பந்தில் 38 ரன் குவித்து அவுட்டானார்.</p><p>சேலம் அணி சார்பில் ராஜேந்திரன் விவேக் 3 விக்கெட் வீழ்த்தினார்.</p><h2>அபார பந்துவீச்சு</h2><p>இதையடுத்து, 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் சேலம் அணி களமிறங்கியது. கேப்டன் அபிஷேக் மட்டும் அதிரடியாக ஆடி 18 பந்தில் 38 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.</p><p>மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.</p><p>இறுதியில், சேலம் ஸ்பர்டன்ஸ் அணி 15 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் திண்டுக்கல் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் 2 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்துக்கு முன்னேறியது.</p><p>சேலம் அணி தான் ஆடிய 5 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவில் இருந்து தத்தெடுக்கப்பட்டு நெதர்லாந்தில் தோழிகள் வளர்ந்த நிலையில், சகோதரிகள் என தெரிய வந்ததால் நெகிழ்ச்சி</title><link>https://www.maalaimalar.com/news/world/adopted-from-india-and-raised-in-netherlands-2-childhood-friends-discover-they-are-sisters</link><comments>https://www.maalaimalar.com/news/world/adopted-from-india-and-raised-in-netherlands-2-childhood-friends-discover-they-are-sisters#comments</comments><guid isPermaLink="false">c399b84d-6859-46fb-9b0b-5a1d331f15b3</guid><pubDate>Fri, 14 Aug 2026 14:34:52 +0000</pubDate><atom:updated>2026-08-14T14:34:52.070Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நெதர்லாந்து,Netharland</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/j3v60src/Sisters.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சகோதரிகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/j3v60src/Sisters.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் இருந்து கடந்த 40 வருடங்களுக்கு முன்பாக இரண்டு குழந்தைகளை நெதர்லாந்தைச் சேர்ந்து இரண்டு வெவ்வேறு குடும்பங்கள் தத்தெடுத்துள்ளனர்.</p><p>இருவரும் நெதர்லாந்தில் வளர்ந்து வந்துள்ளனர். சுமார் 160 கி.மீ. இடைவெளி தூரம் கொண்ட இடத்தில் வசித்து வந்தனர். 1996-ம் ஆண்டு தத்து எடுக்கப்பட்ட குழந்தைகளுக்கான நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. அந்த நகிழ்ச்சியில் மீனா கெல்டிங் என்பவரும், மினல் திஜ்சென் என்பவரும் கலந்து கொண்டனர்.</p><p>இருவரும் அந்த நிகழ்ச்சியில் சந்தித்த உடன் இருவருக்கும் இடையில் சிறந்த பிணைப்பு ஏற்பட்டது. அத்துடன் இருவரும் ஒரே மாதிரியாக இருந்ததாக அவர்களுடன் நண்பர்கள் கண்டனர். இருவரும் மாறிமாறி தங்களை சகோதரிகள் என்று அழைத்துக் கொண்டு முகவரியை பரிமாற்றிக் கொண்டனர்.</p><h2>டிஎன்ஏ சோதனை</h2><p>கடந்த 15 வருடத்திற்கு முன்னதாக இருவருக்கும் இடையிலான தொடர்பு தடைபட்டது. இதில் 44 வயதாகும் மினால் திஜ்சென் பிரான்ஸ் நாட்டில் தனது கணவனர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். மீனாவுக்கு கடந்த ஏப்ரல் மாதம் மைஹெரிடேஜ் டிஎன்ஏ (MyHeritage DNA) பரிசோதனைக்கான முடிவு கிடைத்தது. தனது மூதாதையர்களை கண்டறிவதற்கான சோதனைக்கு மைஹெரிடேஜ் டிஎன்ஏ டெஸ்ட் எனப் பெயர்.</p><p>இவருடைய டி.என்.ஏ. டெஸ்ட் மீனா கெல்டிங் உடன் 100 சதவீதம் பொருத்தமாக இருந்துள்ளது. தனது டி.என்.ஏ. சோதனை 100 சதவீதம் பொருந்தியது. ஏற்கனவே இளம் வயதில் சந்தித்த பெண் தோழி என்பதை மினால் அறியவில்லை.</p><p>இறுதியில் அவள் சமூக ஊடகங்களில் மீனாவைக் கண்டுபிடித்து, பழைய புகைப்படங்களை வைத்து அவளை அடையாளம் கண்டுகொண்டாள். என்னால் அதை நம்பவே முடியவில்லை மினால் கூறினார்.</p><h2>நெதர்லாந்தில் சகோதரிகளாக சந்திப்பு</h2><p>இரு பெண்களும் அன்பான வளர்ப்பு குடும்பங்களில் வளர்ந்திருந்தாலும், தங்கள் உயிரியல் அடையாளங்கள் குறித்து கேள்விகளையும், ஏதோ ஒன்று குறைவது போன்ற உணர்வையும் கொண்டிருந்ததாகக் கூறினர். டிஎன்ஏ முடிவுகளுக்குப் பிறகு நெதர்லாந்தில் அவர்கள் மீண்டும் இணைந்தபோது, ​​அந்தச் சகோதரிகள் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து, சிரித்து, ஒன்றாக அழுதனர். சகோதரிகளாகத் தங்களின் முதல் செல்ஃபியையும் எடுத்துக் கொண்டனர்.</p><p>"உன்னைப் பார்க்கும்போது, ​​நான் என் வீட்டில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. பல ஆண்டுகளாக என் இதயத்தில் ஒரு வெற்றிடம் இருந்ததை நான் உணர்ந்தேன். அது, காணாமல் போன ஒரு புதிர் விளையாட்டுத் துண்டு (puzzle piece) கிடைத்துவிட்டது போன்றது," என்று மீனா கூறினார்.</p><p>"நாங்கள் சகோதரிகளாக மாறுவதற்கு முன்பே தோழிகளாக இருந்தோம். உண்மையில் நாங்கள் எப்போதும் சகோதரிகளாகவே இருந்தோம், ஆனால் அது எங்களுக்குத் தெரியவில்லை," என்று மினல் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>கோவை என்ன பாகிஸ்தானா அல்லது ஆப்கானிஸ்தானை சார்ந்ததா?: தமிழக அரசை சாடிய சென்னை ஐகோர்ட்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-hc-ask-questions-to-police-department-about-flag-parade-permission-issue-in-kovai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-hc-ask-questions-to-police-department-about-flag-parade-permission-issue-in-kovai#comments</comments><guid isPermaLink="false">8e7d0d1d-2842-416f-b7b5-fe1d721241b1</guid><pubDate>Fri, 14 Aug 2026 14:11:39 +0000</pubDate><atom:updated>2026-08-14T14:11:39.774Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காவல்துறை,கோவை,Chennai High court,சென்னை ஐகோர்ட்,kovai,Flag Parade,police dept,தேசிய கொடி பேரணி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/02k5263g/court.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ high court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/02k5263g/court.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பேரணி நடத்த தி.க., பா.ஜ.க.விற்கு அனுமதியில்லை, த.வெ.க.விற்கு மட்டும் அனுமதியா? என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியது.</p><h2>அவசர வழக்கு</h2><p>சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவையில் பா.ஜ.க. சார்பில் நடத்த திட்டமிடப்பட்ட தேசியக் கொடி பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்தது.</p><p>இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில் அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது என பா.ஜ.க.வின் கோவை மாநகர் மாவட்டத் தலைவர் ஜெ.ரமேஷ்குமார் தெரிவித்திருந்தார்.</p><h2>த.வெ.க.வுக்கு மட்டும் அனுமதியா?</h2><p>இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு மீதான விசாரணையின்போது தமிழக அரசுக்கு நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பினார்.</p><p>அதில், பேரணி நடத்த திராவிடர் கழகத்திற்கு அனுமதி இல்லை, பா.ஜ.க.வுக்கு அனுமதி இல்லை, த.வெ.க.வுக்கு மட்டும் அனுமதியா?</p><p>சுதந்திரப் போராட்ட வீரர் திருப்பூர் குமரன் தேசியக் கொடியை பிடித்து உயிர் நீத்தார். அப்படிப்பட்ட நாட்டில் தேசியக் கொடி பிடித்துச் செல்ல தடை விதிப்பது ஏன்? தேசியக் கொடியை பிடித்து பேரணி செல்ல காவல்துறை அனுமதி மறுப்பது ஏன்? </p><p>அமைதியாக கொடி பிடித்துச் செல்லவே அனுமதி கேட்கிறார்கள். அனுமதி வழங்குவதில் என்ன பிரச்சனை உள்ளது?</p><p>அவர்களும் இந்தியாவில் தான் உள்ளார்கள். தேசியக் கொடியை பிடித்து பேரணி செல்வது என்ன பாவச் செயலா? பேரணிக்கு அனுமதி கேட்டுள்ள கோவை என்ன பாகிஸ்தானா அல்லது ஆப்கானிஸ்தானைச் சேர்ந்ததா?</p><p>தி.க. ஊர்வலம் செல்ல அனுமதி இல்லை. பா.ஜ.க. ஊர்வலம் செல்லக்கூடாது. த.வெ.க.வுக்கு மட்டும் அனுமதியா?</p><p>பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் ஊர்வலத்தில் கலந்து கொள்வார்களா? மற்றவர்கள் கலந்துகொள்ள மாட்டார்களா?</p><p>ஆங்கிலேயர் காலத்தில் இருந்த நடைமுறையில் மாவட்ட ஆட்சியர் செயல்படக் கூடாது என கூறிய நீதிபதி, தேசியக் கொடி பேரணிக்கு அனுமதி அளிப்பது குறித்து காவல்துறையுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்க அரசுக்கு உத்தரவிட்டனர்.</p><p>முன்னதாக, பா.ஜ.க. கோவை மாநகர் மாவட்டத் தலைவர் ஜெ.ரமேஷ்குமார் கோவையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:</p><p>சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் தேசியக் கொடியேற்றி கொண்டாடும் வகையில் ஆகஸ்ட் 11 முதல் 15 வரை அனைத்து இல்லங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் தேசியக் கொடியேற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><h2>தேசியக் கொடி பேரணி</h2><p>சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வரலாற்றை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், கோவையின் முக்கிய வீதிகளில் தேசியக் கொடி பேரணி நடத்த காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டது. கடந்த 6-ஆம் தேதி காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து கிராஸ்கட் சாலை வழியாக பேரணி நடத்த அனுமதி கேட்ட நிலையில், 4 நாளுக்குப் பிறகு போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி காவல்துறை அனுமதி மறுத்தது.</p><p>அதன்பிறகு சிவானந்தா காலனி முதல் பவர்ஹவுஸ் வரை மற்றும் தெப்பக்குளம் மைதானம் முதல் காமராஜர்புரம் வரை என இரு மாற்று வழிகளைப் பரிந்துரைத்தோம்.</p><p>அதிகாரிகளுடனான முதல்கட்ட பேச்சுவார்த்தையில் ஒரு வழித்தடத்துக்கு அனுமதி தருவதாகக் கூறிய நிலையில், மாலையில் திடீரென எந்த வழித்தடத்துக்கும் அனுமதி இல்லை என நோட்டீஸ் வழங்கப்பட்டது.</p><p>காந்திபுரத்தில் அண்மையில் ஆளுங்கட்சியின் கூட்டணி அமைப்புகள் நடத்திய போராட்டங்களுக்கு தடையின்றி அனுமதி வழங்கிய மாநகர காவல் ஆணையர், தேசியக் கொடி பேரணிக்கு மட்டும் அனுமதி மறுத்து ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்.</p><p>காவல்துறையின் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அவசர வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>மிக இளம் வயதில் மாவட்ட கலெக்டர்: மணிப்பூரில் தமிழ் பெண் சாதனை</title><link>https://www.maalaimalar.com/news/national/tamil-nadu-woman-angeline-renita-history-manipur-young-collector</link><comments>https://www.maalaimalar.com/news/national/tamil-nadu-woman-angeline-renita-history-manipur-young-collector#comments</comments><guid isPermaLink="false">06a032ee-a753-4048-a6d1-80211deefb52</guid><pubDate>Fri, 14 Aug 2026 13:26:57 +0000</pubDate><atom:updated>2026-08-14T13:26:57.244Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords></media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/vh6txglx/AngelineRenita0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஏஞ்சலின் ரெனிட்டா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/vh6txglx/AngelineRenita0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மணிப்பூர் மாநிலத்தின் காக்சிங் மாவட்ட கலெக்டராக (துணைக் கமிஷனர்) தமிழ்நாட்டை சேர்ந்த இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஏஞ்சலின் ரெனிட்டா பொறுப்பேற்று சாதனை படைத்துள்ளார். மணிப்பூர் மாநிலத்தின் மிக இளம் வயது மாவட்ட கலெக்டர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2>தமிழ் வழியில் படித்து சாதனை</h2><p>தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆர். ஏஞ்சலின் ரெனிட்டா (வயது 28). இவர் தனது பள்ளி படிப்பை தமிழ் வழி கல்வியில் பயின்றார். பின்னர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியில் வேளாண்மை மற்றும் நீர்ப்பாசன பொறியியல் பிரிவில் படித்து தங்க பதக்கம் வென்று அசத்தினார்.</p><h2>முதலாவது முயற்சியிலேயே ஐ.ஏ.எஸ்.</h2><p>சிறு வயது முதலே ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்த ஏஞ்சலின் ரெனிட்டா, இதற்காக கடுமையாக உழைத்து படித்தார். கடந்த 2022-ஆம் ஆண்டு நடந்த மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குடிமை பணிகள் தேர்வில், தனது முதலாவது முயற்சியிலேயே அகில இந்திய அளவில் 338-வது இடம் பிடித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆனார். இதையடுத்து அவர் மணிப்பூர் மாநில கேடருக்கு தேர்வு செய்யப்பட்டு அங்கு தனது பணியை தொடங்கினார்.</p><h2>குவியும் வாழ்த்து</h2><p>மணிப்பூரில் உள்நாட்டு துறை இணை செயலாளர், லம்பேல் துணைப் பிரிவு அதிகாரி மற்றும் மணிப்பூர் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்ட இயக்குநர் என பல்வேறு முக்கிய பொறுப்புகளில் ஏஞ்சலின் ரெனிட்டா திறம்பட பணியாற்றினார். அவரது சிறப்பான நிர்வாக திறமையை பாராட்டி, மணிப்பூர் அரசு தற்போது அவரை காக்சிங் மாவட்டத்தின் புதிய கலெக்டராக நியமித்து உத்தரவிட்டுள்ளது.</p><p>தமிழ் வழியில் படித்து, மிக இளம் வயதிலேயே மணிப்பூரின் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள தஞ்சை மண் பெற்றெடுத்த இந்த 'தமிழச்சிக்கு' சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>ஜனாதிபதி மாளிகையில் பூந்தோட்டம் திறப்பு - ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 15 வரை இலவச அனுமதி</title><link>https://www.maalaimalar.com/news/national/presidents-house-amrit-udyan-free-visit-aug-16-to-sept-15</link><comments>https://www.maalaimalar.com/news/national/presidents-house-amrit-udyan-free-visit-aug-16-to-sept-15#comments</comments><guid isPermaLink="false">f6181650-2348-49a5-9dcd-fff0d71e8d0a</guid><pubDate>Fri, 14 Aug 2026 13:18:30 +0000</pubDate><atom:updated>2026-08-14T13:18:30.080Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rashtrapati Bhavan,Draupadi Murmu,திரெளபதி முர்மு,amrit udyan,அம்ரித் உத்யான்,ராஷ்டிரபதி பவன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/3aw50gf1/%D7%99%D7%A6%D7%99%D7%90%D7%AA-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அம்ரித் உத்யான் திட்டத்தின் கீழ் குடியரசுத் தலைவர் இல்ல தோட்டம் பொதுமக்களுக்கு திறப்பு]]></media:title><media:description type="html"><![CDATA[ Rashtrapathi bhavan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/3aw50gf1/%D7%99%D7%A6%D7%99%D7%90%D7%AA-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற புகழ்பெற்ற அமிர்த உத்யானத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு, கண்கவர் வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் மலர்களை பார்வையிட்டார்.</p><p><strong>அம்ரித் உத்யான்</strong></p><p>அம்ரித் உத்யான் என்பது டெல்லியில் உள்ள இந்திய குடியரசு தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் (ராஷ்டிரபதி பவன்) வளாகத்திற்குள் அமைந்திருக்கும் ஒரு அழகான தோட்டமாகும்.</p><p>பால்சம்/குல்-மெஹந்தி, அபராஜிதா, ருக்மிணி, பர்ஷா பூல், லால் சாக் மற்றும் நாக்பானா உள்ளிட்ட பூர்வீகத் தாவரங்கள் அடங்கிய இந்த தோட்டம், இந்தியாவின் வளமான மலர் பாரம்பரியத்தை வெளிக்காட்டுவதோடு, தோட்டங்களின் பல்லுயிர்ப் பெருக்கத்தையும் மேம்படுத்துகிறது. </p><p><strong>அனுமதி காலம்</strong></p><p>வருடந்தோறும் மலர்த்தோட்டம் பொதுமக்கள் பார்வைக்காக அனுமதிக்கப்படும. அந்த வகையில் வருகிற ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இங்கு வரும் பொதுமக்களுக்கு கடைசி பதிவு மாலை 5 மணிக்கு பின்பு நிறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தோட்ட பராமரிப்பு பணிகளுக்காக வார விடுமுறையாக ஒவ்வொரு திங்களட்கிழமையும், இந்த தோட்டம் மூடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><p><strong>முன்பதிவு</strong></p><p>ராஷ்டிரபதி பவனுக்கு வரும் பார்வையாளர்களுக்கு நுழைவுக் கட்டணம் முற்றிலும் இலவசம் என்றும், இதற்கான முன்பதிவு அதிகாரப்பூர்வ இணையதளமான visit.rashtrapatibhavan.gov.in மூலமாக ஆன்லைனில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>பொதுமக்களின் கண்கவர் வண்ணங்களுக்கும் சூழலியல் முக்கியத்துவத்திற்கும் பெயர் பெற்ற, பூர்வீக மற்றும் உள்ளூர் பூக்கும் தாவரங்களே இந்த முறை உத்யானத்தின் முக்கிய ஈர்ப்பாக அமைய உள்ளது.</p><p><strong>பிரத்யேக அனுமதி</strong></p><p>ராஷ்டிரபதி பவனுக்கு வரும், விளையாட்டு வீரர்களுக்கு தேசிய விளையாட்டு தினமான ஆகஸ்ட் 29-ஆம் தேதியும், ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தினமான செப்டம்பர் 5 அன்றும், அம்ரித் உத்யானில் பிரத்யேக அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை, ஒவ்வொரு 30 நிமிட இடைவெளியில், மத்திய செயலக மெட்ரோ நிலையத்திலிருந்து அம்ரித் உத்யானத்தின் நுழைவாயில் வரை ‘அம்ரித் உத்யானத்திற்கான பேருந்து சேவை’ என்ற பேனருடன் கூடிய இரண்டு இடத்திற்கும் இடையிலான இணைப்பு பேருந்து சேவையும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><strong>குடியரசுத் தலைவர் பதிவு</strong></p><p>இந்த நிகழ்வு குறித்து குடியரசு தலைவரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற அம்ரித் உத்யான் சம்மர் ஆனுவல்ஸ் 2026 தொடக்க விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டு சிறப்பித்தார்,” என்று பதிவிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஐரோப்பாவில் புதிய வெப்ப அலை: 35 டிகிரிக்கும் அதிகமான வெப்பத்தால் 13.5 கோடி மக்கள் பாதிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/135-million-europeans-face-temperatures-over-35-degree-c</link><comments>https://www.maalaimalar.com/news/world/135-million-europeans-face-temperatures-over-35-degree-c#comments</comments><guid isPermaLink="false">5b678b08-583d-4350-9f1b-c193cf83d495</guid><pubDate>Fri, 14 Aug 2026 13:06:31 +0000</pubDate><atom:updated>2026-08-14T13:06:31.945Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>France,England,வெப்ப அலை,heat waves,European nations</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/bnut2iqb/England0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஐரோப்பாவில் வெப்ப அலை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/bnut2iqb/England0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காலநிலை மாற்றத்தால் பெரும்பாலான நாடுகளில் வெப்பம் வாட்டி வதைக்கிறது. ஐரோப்பிய நாடுகள் எப்போதுமே குளிர் பிரதேசமாக விளங்கும். ஆனால், இந்த கோடை அவர்களுக்கு மிகவும் சிரமமாக அமைந்தது. இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரியா போன்ற நாடுகளில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் வாட்டி வதைத்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.</p><p>சாலைகள் உருகி வாகன டயருடன் ஒட்டிக்கொண்டன. அந்த அளவிற்கு வெயில் சுட்டெரித்தது. இதில் பலர் உயிரிழந்தனர். இந்த நிலையில் தற்போது புதிய வெப்ப அலை உருவாகியுள்ளது. வியாழக்கிழமை அதிக வெப்பநிலை பதிவான நாளாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.</p><h2>இங்கிலாந்து, பிரான்ஸ்</h2><p>ஜெர்மன் வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமையன்று ஐரோப்பியர்களில் கிட்டத்தட்ட 5-ல் 3 பேர்சுமார் 340 மில்லியன் மக்கள் 30 டிகிரி செல்சியஸுக்கும் (86 டிகிரி ஃபாரன்ஹீட்) அதிகமான வெப்பநிலையை எதிர்கொண்டார்கள் என மதிப்பீடு செய்துள்ளது.</p><p>ஆஸ்திரியாவின் கிளாமடாஷ்போர்டு, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ், இந்த கோடைக்காலத்தில் 5-வது வெப்ப அலையை எதிர்கொண்டது என்று தெரிவித்துள்ளது.</p><p>வானிலை ஆய்வு மையம், மத்திய மற்றும் தென்கிழக்கு இங்கிலாந்தில் வெப்பநிழைல 38 டிகிரியை தொடும் எனத் தெரிவித்துள்ளது. ஜூன் 26-ந்தேதி இங்கிலாந்தில் இந்த வருடத்தில் அதிகமான 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியிருந்தது.</p><p>மிதான வெப்பநிலை நிலவினால்தான், ஆகஸ்ட் மாதத்தில் கடந்த வருட அதிகப்பட்ச வெப்ப நிலையை முறியடிக்காமல் இருக்கும் என்று இங்கிலாந்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p>அதிகமா வெப்பநிலை, இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையை சாத்தியமற்ற மற்றும் மனிதாபிமானற்ற சூழ்நிலைக்கு தள்ளியுள்ளது என்று ராயல்ஸ் நர்சிங் கல்லூரி தெரிவித்துள்ளது.</p><h2>மயங்கி விழும் ஊழியர்கள்</h2><p>பணியின்போது ஊழியர்கள் மயங்கி விழுவது, வெப்பம் தொடர்பான காரணங்களால் வலிப்பு ஏற்படுவது மற்றும் கர்ப்பிணி செவிலியர்கள் 30 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பநிலையில் பணியாற்றுவது ஆகியவை குறித்து RCN-ன் உதவி எண்ணுக்குத் தகவல்கள் வந்துள்ளதாக ராயல்ஸ் நர்சிங் காலேஜ் தெரிவித்துள்ளது.</p><p>ஏர் கண்டிஷனிங், மின்விசிறிகள் அல்லது போதுமான காற்றோட்ட வசதி கூட இல்லாத சூழலில் தாங்கள் பணியாற்றுவதாகப் பல ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>பிரான்சில் அதிகபட்சமாக 40 டிகிரி வெப்பநிலையை எதிர்கொள்ளும். ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளைப் போலவே பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தும் பரவலான வறட்சியை எதிர்கொண்டுள்ளன. அங்கு பயிர்கள் கருகிப்போனதாலும் ஆறுகள் வற்றியதாலும் வீடுகள், விவசாயம் மற்றும் சுற்றுச்சூழலுக்கான நீர் விநியோகம் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.</p><p>மனித நடவடிக்கைகளால் ஏற்படும் பருவநிலை மாற்றத்தின் விளைவுகளைக் குறைப்பதற்கான குறுகிய மற்றும் நீண்ட காலத் தீர்வுகளைத் தேட வேண்டிய கட்டாயத்திற்கு இது அரசுகளைத் தள்ளியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டிஎன்பிஎல்: அதிரடியில் மிரட்டிய திண்டுக்கல்- 15 ஓவரில் 239 ரன்கள் குவிப்பு</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/salem-spartans-needs-240-runs-to-win-against-dindigul-in-tnpl-2026</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/salem-spartans-needs-240-runs-to-win-against-dindigul-in-tnpl-2026#comments</comments><guid isPermaLink="false">06add038-3e87-4771-895a-6848ed85f13e</guid><pubDate>Fri, 14 Aug 2026 13:05:16 +0000</pubDate><atom:updated>2026-08-14T13:05:16.698Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,திண்டுக்கல் டிராகன்ஸ்,Dindigul Dragons,Baba Indrajith,பாபா இந்திரஜித்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/z3kypaud/baba.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ baba indrajith]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/z3kypaud/baba.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சேலம் அணிக்கு எதிரான போட்டியில் திண்டுக்கல் அணி 15 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 239 ரன்கள் குவித்துள்ளது.</p><p>10-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் அடுத்த நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி  மைதானத்தில் நடந்து வருகிறது.</p><h2>திண்டுக்கல் டிராகன்ஸ்</h2><p>இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 18-வது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பர்டன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சேலம் அணி பவுலிங் தேர்வு செய்தது. மழை காரண்மாக போட்டி 15 ஓவராகக் குறைக்கப்பட்டது.</p><p>அதன்படி, திண்டுக்கல் அணி முதலில் களமிறங்கியது. ஆரம்பம் முதலே அந்த அணி அதிரடியில் இறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்த நிலையில் வி.கே.வினீத் 20 பந்தில் 45 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஷிவம் சிங் 15 பந்தில் 38 ரன் குவித்து அவுட்டானார்.</p><p>4வது விக்கெட்டுக்கு இணைந்த பாபா இந்திரஜித்-ஹன்னி சைனி ஜோடி சூறாவளியாய் சுழன்றடித்தது. பாபா இந்திரஜித் அரை சதம் கடந்தார். இந்த ஜோடி 21 பந்தில் 70 ரன்கள் குவித்தது.</p><h2>பாபா இந்திரஜித் அதிரடி</h2><p>பாபா இந்திரஜித் 25 பந்தில் 8 சிக்சர், 3 பவுண்டரியுடன் 73 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.</p><p>இறுதியில், திண்டுக்கல் அணி நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 239 ரன்களைக் குவித்தது.</p><p>சேலம் அணி சார்பில் ராஜேந்திரன் விவேக் 3 விக்கெட் வீழ்த்தினார்.</p><p>இதையடுத்து, 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் அணி களமிறங்குகிறது.</p> ]]></content:encoded></item><item><title>லஞ்சம் வாங்க இதயத்தில் பயத்தை ஏற்றியவர் முதலமைச்சர் விஜய்..!- பார்த்திபன்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-parthiban-praised-tn-cm-vijay</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-parthiban-praised-tn-cm-vijay#comments</comments><guid isPermaLink="false">be6ea4d3-6478-46f0-ad74-5507c78ffb76</guid><pubDate>Fri, 14 Aug 2026 12:37:22 +0000</pubDate><atom:updated>2026-08-14T12:37:22.163Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>லஞ்சம்,Actor Parthiban,நடிகர் பார்த்திபன்,Corruption,முதலமைச்சர் விஜய்,tn cm vijay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/bzfrj3cq/TN-CM-Vijay1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay- Actor Parthiban]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/bzfrj3cq/TN-CM-Vijay1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக முதலமைச்சராக விஜய் வருகிற சுதந்திர தினத்தையொட்டி சென்னை தலைமை செயலகம் கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடி ஏற்றுகிறார்.</p><p>இதையொட்டி அவருக்கு நடிகர் பார்த்திபன் அவருக்கே உரிய தனித்துவமான வார்த்தை ஜாலத்துடன் வெளியிட்டுள்ள வாழ்த்து வருமாறு:-</p><p>‘வெற்றிக் கொடி கட்டு’ படத்தில் நடித்த நான், அரசியலில் வெற்றிக் கொடி கட்டிய தமிழக வெற்றிக் கழக தலைவர், மாநில முதல்வராக சுதந்திர தினத்தன்று மூவர்ண கொடியை ஏற்றுவதைப் பற்றி கவிதை இயற்றுவதா? </p><p>அட கவிதையாக இல்லாவிட்டாலும் உரைநடையாவது… யோசித்தபடி….. தமிழ் அகராதியில் வார்த்தைகளை யாசித்தபடி……</p><p>கொடி காத்த குமரன் முதற்கொண்டு எண்ணற்ற தியாகிகள் பெற்று தந்த சுதந்திரத்தை மதிப்புடன் மடித்து கட்டிக் காத்த சுதந்திர கொடியை ஆக 15-ல் பட்டொளி வீசி பறக்கவிடும் பெருமையை நமது முதல்வர் முதன்முறை பெறுகிறார்.</p><p>தமிழ்தாய் வாழ்த்து தான் விழாக்களின் தொடக்கமாக பாடப்பட வேண்டுமென சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியவர்.</p><p>அனுபவம் இல்லாவிட்டாலும் மக்களுக்கான  சம்பவம் செய்ய அரசியலுக்கு வந்து வெற்றிக் கொடி நாட்டலாம் என்ற நம்பிக்கையை நம் நாட்டு இளைஞர்கள் மனதில் ஏற்றியவர்,</p><p>ஆட்சி முறை பெற பணம் தேவையில்லை, மக்களின் நன்மதிப்பை மட்டும் கவனமாக நம் பக்கம் திருப்பினாலே வெற்றி தான் என்ற சூத்திரத்தை அரசியல்வாதிகளுக்கே ஏற்றியவர்.</p><p>அரசு ஊழியர்கள் நேரத்தோடு வேலைக்கு வந்து நேர்மையோடு வேலை செய்ய வேண்டும் என்பதற்காக தானே முன் உதாரணத்தை ஏற்றியவர். விவசாயிகளுக்கான சிறப்பு ஊக்கத்தொகையை வரலாறு காணாத அளவு ஏற்றியவர்.</p><p>லஞ்சம் வாங்க இதயத்தில் பயத்தை கொஞ்சமாக ஏற்றியவர். ஆக இன்னும் பல நன்றை ஏற்றியவர் என்ற தகுதியுடன் ஆகஸ்டு 15-ல் சுதந்திரக் கொடியை ஏற்றுகிறார். நமது முதலமைச்சர் பெருமையுடன்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்தம்: 15 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/yellow-alert-kerala-karnataka-15-states-heavy-rain</link><comments>https://www.maalaimalar.com/news/national/yellow-alert-kerala-karnataka-15-states-heavy-rain#comments</comments><guid isPermaLink="false">6a5bf025-2796-4904-b768-3c47c3dbe3b8</guid><pubDate>Fri, 14 Aug 2026 12:29:22 +0000</pubDate><atom:updated>2026-08-14T12:29:22.549Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>IMD,இந்திய வானிலை ஆய்வு மையம்,bay of bengal,Yellow alert,மஞ்சள் எச்சரிக்கை,வங்காள விரிகுடா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/for1a2w3/%D7%99%D7%A6%D7%99%D7%90%D7%AA-1.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ வங்காள விரிகுடா குறைந்த காற்றழுத்தம் காரணமாக 15 மாநிலங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை]]></media:title><media:description type="html"><![CDATA[ IMD weather forecast]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/for1a2w3/%D7%99%D7%A6%D7%99%D7%90%D7%AA-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வங்காள விரிகுடாவில் வலுப்பெற்று வரும் குறைந்த காற்றழுத்தம் காரணமாக பல மாநிலங்களில் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>இந்த குறைந்த காற்றழுத்தம் காரணமாக, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் மிதமானது முதல் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><h3><strong>வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்தம்</strong></h3><p>வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தம் வேகமாக வலுப்பெற்று வருவதால், இந்தியாவின் பல பகுதிகளில் திடீர் வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. </p><p>இந்த மாற்றம் வரும் நாட்களில் கிழக்கு, மத்திய மற்றும் வட இந்தியாவில் மிதமான முதல் மிக கனமான மழையை கொண்டுவரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.</p><p>தற்போது, இந்த மாற்றம் வடமேற்கு திசையில் மேற்கு வங்க கடற்கரை மற்றும் அண்டை நாடான வங்கதேசத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. </p><p>அடுத்த சில மணிநேரங்களில் இது கங்கை சமவெளி மற்றும் ஜார்க்கண்ட் நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.</p><p>குறைந்த காற்றழுத்தம் மேலும் தீவிரமடைவதால், வானிலை ஆய்வு மையம் பல மாநிலங்களை உயர் எச்சரிக்கை நிலையில் வைத்துள்ளது.</p><p>மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நிலைமை தீவிரமடையக்கூடும் என்பதால், அங்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும் ஜார்க்கண்டிற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கங்கைச் சமவெளி மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய பகுதிகளில் சில இடங்களில் 204.5 மி.மீ-க்கு மேல் மிகக் கனமான மழை பெய்யக்கூடும்.</p><p>அதே நேரத்தில், ஜார்க்கண்டில் 115.6 மி.மீ முதல் 204.4 மி.மீ வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படவும், சாலைகள் நீரில் மூழ்கவும், ஆற்று நீர்மட்டம் அபாயகரமாக உயரவும் வாய்ப்புள்ளது.</p><h3><strong>15 மாநிலங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை</strong></h3><p>இதன் காரணமாக கிழக்கு இந்தியா மற்றும் 15 மாநிலங்களுக்கு தற்போது மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.</p><p>இவற்றில் அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா, கிழக்கு உத்தர பிரதேசம், குஜராத், இமாச்சல பிரதேசம், ஜம்மு &amp; காஷ்மீர், லடாக், கேரளா, கொங்கன்-கோவா, மகாராஷ்டிரா, ராஜஸ்தானின் சில பகுதிகள், கர்நாடகா, உத்தரகாண்ட், விதர்பா (மகாராஷ்டிரா) மற்றும் மேற்கு மத்திய பிரதேசம் ஆகியவை அடங்கும்.</p><p>இந்த பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பெய்யக்கூடும்; மேலும் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கி.மீ. வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.</p><p>தெலங்கானாவின் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.</p><p>ஹைதராபாத் மற்றும் அதன் அருகிலுள்ள மாவட்டங்களில், நாள் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அவ்வப்போது மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஆதிலாபாத், நிஜாமாபாத், கரீம்நகர் மற்றும் கம்மம் ஆகிய பகுதிகளில் பிற்பகல் அல்லது மாலையில் குறுகிய நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும்.</p><p>ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள வட கடலோர ஆந்திரா, தென் கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h3><strong>பொதுமக்களுக்கு எச்சரிக்கை</strong></h3><p>கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதால் மீனவர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயம் இருப்பதால், அத்தியாவசிய தேவையின்றி மக்கள் வீட்டிற்குள் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>மழை மற்றும் மின்னலின் போது மரங்களின் கீழோ, மின் கம்பங்களுக்கு அருகிலோ அல்லது பலவீனமான கட்டிடங்களுக்கு அருகிலோ நிற்க வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>விவசாயிகள் தங்கள் விளைபொருட்கள் நனையாமல் இருக்க, அவற்றை பாதுகாப்பான, உலர்ந்த இடங்களில் சேமித்து வைக்கவும்; கால்நடைகளின் பாதுகாப்பிற்காக அவற்றை உயரமான இடங்களுக்கு நகர்த்துமாறும் வானிலை நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்காவின் வான் பாதுகாப்பை முறியடிப்பது எப்படி? உக்ரைன் போரில் இருந்து கற்றுக் கொண்ட ஈரான்</title><link>https://www.maalaimalar.com/news/world/how-iran-used-learnings-from-ukraine-war-against-us-air-defences</link><comments>https://www.maalaimalar.com/news/world/how-iran-used-learnings-from-ukraine-war-against-us-air-defences#comments</comments><guid isPermaLink="false">b95068a4-4527-4ced-91b7-62b45de7ea4a</guid><pubDate>Fri, 14 Aug 2026 12:19:13 +0000</pubDate><atom:updated>2026-08-14T12:19:13.142Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>டிரோன் தாக்குதல்,Drone Attacks,ukraine russia war,உக்ரைன ரஷ்யா மோதல்,US Iran war,அமெரிக்கா ஈரான் போர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/hrex1oee/USDefence001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமெரிக்காவின் வான் பாதுகாப்பு சிஸ்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/hrex1oee/USDefence001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அணு ஆயுதம் விவகாரத்தில் ஈரான் மீது குற்றம்சாட்டி இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து, ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இதனால் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையில் நேரடி போர் தொடங்கியது.</p><h2>அமெரிக்க ராணுவ தளத்தை தாக்கிய ஈரான்</h2><p>ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட மேற்காசிய நாடுகள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது. அதோடு மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. சமீபத்தில் ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் சரமாரி ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.</p><p>பொதுவாக ஈரானின் ஏவுகணைகளை அமெரிக்காவின் வான் பாதுகாப்பு சிஸ்டம் சிறப்பாக இடைமறித்து அழித்துவிடும். தனது சக்கி வாய்ந்த வான்பாதுகாப்பு சிஸ்டமான பேட்ரியாட் (Patriot interceptor missiles) அமைப்பை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. இது ஏவுகணைகளை துல்லியமாக இடைமறிக்கும். ஆனால், அதையும் மீறி தாக்குதல் நடத்தும் அளவிற்கு ரஷியாவிடம் இருந்து ஈரான் பாடம் கற்றுக் கொண்டுள்ளது.</p><h2>உக்ரைன்- ரஷியா போர்</h2><p>உக்ரைன்- ரஷியா இடையிலான போர் 4 வருடங்களுக்கு மேல் நடைபெற்று வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உதவி செய்து வருகின்றன. உக்ரைனும் பேட்ரியாட் வான்பாதுகாப்பு சிஸ்டத்தை பயன்படுத்தி வருகிறது.</p><p>உக்ரைனுக்கு எதிராக ரஷியா திடீரென சரிமாரி ஏவுகணை தாக்குதலை நடத்தும், அதுவும் ஒரே வகையான ஏவுகணை பயன்படுத்தாமல் பல விதமான ஏவுகணைகளை பயன்படுத்தும். அதுமட்டுமல்லாமல் ஏவுகணைகளுக்கு மத்தியில் டிரோன்களை பயன்படுத்தியும் தாக்குதல் நடத்தும்.</p><h2>வான் பாதுகாப்பு சிஸ்டத்திற்கு பெரும் சவால்</h2><p>இது வான்பாதுகாப்பு சிஸ்டத்திற்கு பெரும் சவால்களை ஏற்படுத்தியுள்ளது. ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் மாறிமாறி தாக்குதல் நடத்துவதால் வான் பாதுகாப்பு சிஸ்டம், சில டிரோன்கள் அல்லது ஏவுகணைகளை இடைமறிக்க தவறி விடுகிறது. இது உக்ரைனில் பெரிய சேதத்தை ஏற்படுத்தியது. </p><p>இதேபாணியில்தான் ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்திற்கு எதிராக ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. வான் பாதுகாப்பு சிஸ்டம் தொடர்ச்சியாக மாறி மாறி ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை செலுத்தியதால், அமெரிக்காவன் வான் பாதுகாப்பு சிஸ்டம் சிறப்பாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.</p><p>ஈரானில் உள்ள முக்கியமான ராணுவ தளம், ஏவுகணைகள் ஏவு தளம் போன்றவற்றை தரைமட்டமாக்கி விட்டோம் என்று அமெரிக்கா சொன்னாலும், ஈரான் அவற்றை மிக விரைவாக சீரமைத்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p>ஈரான் தனது ராணுவ சொத்துக்களை பாதுகாக்க நிலத்தடி மற்றும் மறைவான இடங்களைப் பயன்படுத்துகிறது. அதன் துருப்புக்களும் மூத்த தலைவர்களும் நாடு முழுவதும் உள்ள வெவ்வேறு மறைவிடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p>பிக்காக்ஸ் மலை என்று அழைக்கப்படும், பலத்த பாதுகாப்புள்ள நிலத்தடி தளத்தில் ஈரான் தனது அணுசக்தி திட்டத்தின் சில பகுதிகளை சேமித்து வைத்திருப்பதாகவும் நம்பப்படுகிறது. அது ஒரு மலைக்கு அடியில் 300 அடிக்கும் அதிகமான ஆழத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது. இவை அனைத்தும் அமெரிக்காவிற்கு இந்த மோதலை மேலும் கடினமாக்குகின்றன.</p><p>வளைகுடா முழுவதும் உள்ள இடங்களைப் பாதுகாப்பதை மேலும் கடினமாக்க, அவர்கள் ரஷியாவின் தந்திரத்தை திறம்படப் பயன்படுத்தியுள்ளனர் என்று வியூக மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் துறையின் தலைவர் சேத் ஜி ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நாளை தேநீர் விருந்து கிடையாது: ஆளுநர் மாளிகை அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/independence-day-tamilnadu-governor-tea-party-cancels-on-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/independence-day-tamilnadu-governor-tea-party-cancels-on-tomorrow#comments</comments><guid isPermaLink="false">aaccb31f-a792-4758-8e9d-0dee8a973b1a</guid><pubDate>Fri, 14 Aug 2026 12:12:58 +0000</pubDate><atom:updated>2026-08-14T12:12:58.558Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tea party,தேநீர் விருந்து,ஆளுநர் மாளிகை,Independence Day,சுதந்திர தினம்,lok bhavan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/jf729pbw/lokbawan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ lok bhawan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/jf729pbw/lokbawan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆளுநர் மாளிகையில் நாளை தேநீர் விருந்து கிடையாது என தெரிவித்துள்ளது.</p><h2>சுதந்திர தினம்</h2><p>ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மாநில ஆளுநர்கள் அங்குள்ள ஆளும் கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சியினர் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினருக்கு தேநீர் விருந்து வழங்குவது வழக்கம்.</p><p>தேசத்தின் ஒற்றுமையைப் பறைசாற்றும் வகையிலும், அரசு, அரசியல் கட்சியினர் உடன் ஆளுநர் மாளிகைக்கு இருக்கும் உறவை வலுப்படுத்தும் வகையிலும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.</p><p>தமிழகத்தின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி மேற்கு வங்கத்துக்கு மாற்றப்பட்டார். அதன்பின், தமிழகத்துக்கு தனியாக ஆளுநர் நியமிக்கப்படவில்லை. இதனால் தமிழகத்துக்கு பொறுப்பு ஆளுநர்தான் உள்ளார். கேரளா ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தான் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக செயல்பட்டு வருகிறார்.</p><h2>தேநீர் விருந்து</h2><p>தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி இருந்தபோது அவருடனான மோதல் காரணமாக தி.மு.க. உள்பட அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து தேநீர் விருந்தை புறக்கணித்த சம்பவங்கள் நடந்தன.</p><p>இந்நிலையில், தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், முதல் முதலாக நாளை அவர் பங்கேற்பார் என்ற நிலையில் தேநீர் விருந்து இல்லை என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.</p><p>பொறுப்பு ஆளுநர் அர்லேகர் கேரளா செல்வதால் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை ஆளுநரின் தேநீர் விருந்து</p><p>கிடையாது. நாளை இரவு ஆளுநர் அர்லேகர் சென்னை வருகிறார் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>உத்தரகாண்ட் சுரங்க விபத்து: பலி எண்ணிக்கை 9-ஆக உயர்வு</title><link>https://www.maalaimalar.com/news/national/uttarakand-tunnel-accident-death-toll-rises-to-9</link><comments>https://www.maalaimalar.com/news/national/uttarakand-tunnel-accident-death-toll-rises-to-9#comments</comments><guid isPermaLink="false">a7de9d51-0906-4b8f-a1bf-1dd570e3e403</guid><pubDate>Fri, 14 Aug 2026 12:10:58 +0000</pubDate><atom:updated>2026-08-14T12:10:58.668Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உத்தரகாண்ட்,பலி எண்ணிக்கை உயர்வு,சுரங்க விபத்து</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/1scioqmi/Uttarakhand.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Uttarakhand CM]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/1scioqmi/Uttarakhand.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள மாயாபூர் பிப்பல் கோட்டி பகுதியில்  ‘விஷ்ணு காட்-பிப்பல்கோட்டி’ நீர்மின் நிலைய பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக பெரிய அளவிலான சுரங்கம் தோண்டப்பட்டு பணிகள் நடக்கிறது.</p><h2>நீர் புகுந்து நிலச்சரிவு</h2><p>நேற்று இந்த பணியில் பீகார், ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 22-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். நேற்று மாலை திடீரென்று சுரங்கத்தில் பலத்த சத்தத்துடன் தண்ணீர் புகுந்ததால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் இடிபாடுகளுக்குள் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.</p><p>சுரங்கப்பாதையின் நுழைவு வாயிலில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் இந்த விபத்து நடந்துள்ளது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் மாநில பேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, இந்திய-திபெத் எல்லைக் காவல் படை, ராணுவம் மற்றும் உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சுரங்கத்திற்குள் பெருக்கெடுத்து ஓடும் நீரை கடக்க மீட்பு குழுவினர் சிறப்புப் படகுகளைப் பயன்படுத்தினர்.</p><h2>9 பேர் பலி</h2><p>சுரங்கப்பாதையில் அதிக அளவு தண்ணீர் நிரம்பியிருந்ததாலும், பக்கவாட்டிலும் தண்ணீர் கசிந்ததாலும் மீட்புப் பணி சவாலாக இருந்தது. சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி, தண்ணீரில் சிக்கியவர்களைக் குழுவினர் மீட்டனர்.</p><p>முதற்கட்ட மீட்புப் பணிகளுக்குப் பிறகு, பல தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். எனினும் இந்த விபத்தில் 9 பேர் பலியாகினர். மேலும் சில தொழிலாளர்களைக் காணவில்லை என்றும் கூறப்படுகிறது.</p><p>மீட்கப்பட்ட 14 தொழிலாளர்கள் படுகாயத்துடன் உடனடியாக அருகில் உள்ள கோபேஷ்வர் மற்றும் பிப்பல்கோட்டி மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p>பலியானவர்கள் டெஹ்ரியைச் சேர்ந்த பிரதீப் சிங் பவார், சமோலியைச் சேர்ந்த முகேஷ், பீகாரைச் சேர்ந்த துர்லப் சர்மா, ஜார்க்கண்டைச் சேர்ந்த விஜய், ஜிதேந்திரா, லோகேஷ்வர், புவனேஸ்வர் உள்ளிட்டோர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p><h2>மீட்பு எந்திரம் சிக்கியது</h2><p>மீட்பு பணியின்போது அதில் ஈடுபட்ட ஒரு எந்திரம் சிக்கி சேதம் அடைந்தது. இதையடுத்து மாற்று வழிகள் மூலம் மீட்பு பணிகள் நடைபெற்றன. சமோலி மற்றும் அதைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாகவே விபத்து நடந்து உள்ளது. </p><p>உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, மீட்புப் பணிகளை நேரில் பார்வையிட்டுத் தீவிரப்படுத்தினார். மேலும், பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், அம்மாநில முதலமைச்சர்களுடன் தொலைபேசியில் பேசி நிலைமைகளை விளக்கி உள்ளார்.</p><h2>முதலமைச்சர் நேரில் பார்வை</h2><p>மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் காணொளிக் காட்சி மூலம் நேரடியாகத் தொடர்புகொண்டு அவர்களின் நலம் விசாரித்தார். மாநில அரசு அவர்களுக்கு உறுதுணையாக நிற்கும் என்றும், அவர்களின் சிகிச்சை மற்றும் மறுவாழ்விற்காக உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அவர் அவர்களுக்கு உறுதி உளித்தார். மேலும் விபத்து நடந்த சுரங்கத்தை இன்று முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி பார்வையிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>ஜாம்ஷெட்பூர் கால்பந்து கிளப்பை வெறும் 100 ரூபாய்க்கு விற்பனை செய்த டாடா ஸ்டீல்ஸ்</title><link>https://www.maalaimalar.com/sports/football/tata-steel-sells-jamshedpur-football-club-for-just-rs-100-behind-company-exit-from-isl</link><comments>https://www.maalaimalar.com/sports/football/tata-steel-sells-jamshedpur-football-club-for-just-rs-100-behind-company-exit-from-isl#comments</comments><guid isPermaLink="false">7220b254-d56a-4ed9-a8e7-2a4530eec647</guid><pubDate>Fri, 14 Aug 2026 11:22:23 +0000</pubDate><atom:updated>2026-08-14T11:22:23.087Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Indian Super League</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/quvtxkrr/TataSteel0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜாம்ஷெட்பூர் கால்பந்து கிளப்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/quvtxkrr/TataSteel0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கால்பந்து (Football)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜாம்ஷெட்பூரில் 1987-ம் ஆண்டு கால்பந்து அகாடமியை டாடா தொடங்கியது. இந்த நிறுவனம் 300-க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது. இந்தியாவில் நடைபெறும் ஐ.எஸ்.எல். என்ற கால்பந்து லீக்கில் விளையாடும் அணிகளில் ஒன்றாக ஜாம்ஷெட்பூர் கால்பந்து கிளப் உள்ளது. இந்த அணியின் உரிமையாளராக டாடா ஸ்டீல் இருந்து வந்தது.</p><h2>டாடா ஸ்டீல்</h2><p>இந்த நிலையில் டாடா ஸ்டீல் ஜாம்ஷெட்பூர் கால்பந்து கிளப்பின் மொத்த பங்குகளையும் சர்ச்சில் பிரதமர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் (Churchill Brothers Sports club) என்ற கிளப்பிற்கு விற்பனை செய்துள்ளது. ஒவ்வொரு கிளப்பும் கோடிக்கணக்கான ரூபாள் அளவில் கைமாறும். ஆனால், டாடா இந்த கிளப்பை வெறும் 100 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் டாடா ஸ்டீல்ஸ் இந்தியன் சூப்பர் லீக் (ISL) கிளப் உரிமையாளர்கள் என்பதில் இருந்து வெளியேறுகிறது.</p><p>ஜெம்ஷெட்பூர் கால்பந்து மற்றும் ஸ்போர்ட்டிங் பிரைவேட் லிமிடெட் (JFSPL) கால்பந்து அணியின் 100 சதவீதம் பங்குகளை மாற்ற டாடா ஸ்டீல் இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. டாடா ஸ்டீல் அந்த கிளப்பின் மொத்த பங்குகளான 4.08 கோடி பங்குகளை வைத்திருந்தது.</p><h2>ஆல் இந்தியா கால்பந்து பெடரேசன்</h2><p>பரிமாற்றத்திற்கான ஒப்பந்தத்தில் டாடா ஸ்டீல்- சர்ச்சில் பிரதர்ஸ் கையெழுத்திட்டனர். சர்ச்சில் பிரதமர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் பிரைவேட் லிமிடெட் கோவாவை மையமாக கொண்டு நிறுவனம் ஆகும்.</p><p>இந்த ஒப்பந்தத்திற்கு ஆல் இந்தியா கால்பந்து பெடரேசன் (AIFF) ஒப்புதல் தேவை. பிற வழக்கமான ஒப்புதல்களுடன், இந்த ஒப்பந்தம் ஆகஸ்ட் 31-க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இந்த ஒப்பந்தத்தில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி-யின் (Jamshedpur FC) ISL விளையாட்டு உரிமம் மற்றும் 12 வீரர்கள் மற்றும் இரண்டு பயிற்சியாளர்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் ஆகியவை அடங்கும். செப்டம்பர் 2026 முதல் சர்ச்சில் பிரதர்ஸ் (Churchill Brothers) அந்த ஒப்பந்தங்களை ஏற்றுக்கொண்டு செயல்படுத்தும்.</p><h2>எதனால் 100 ரூபாய் பரிமாற்றம்?</h2><p>2026 நிதியாண்டில் JFSPL நிறுவனம் 32.23 கோடி ரூபாய் வருவாயைப் பதிவு செய்தது. இருப்பினும், மார்ச் 2026 நிலவரப்படி அதன் நிகர மதிப்பு (net worth) எதிர்மறையாக, அதாவது மைனஸ் 5.8 கோடி ரூபாயாக இருந்தது.</p><p>எனவே, ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிக்கு நன்கு அறியப்பட்ட பெயர், விளையாட்டுக்கான உரிமம் மற்றும் ISL கட்டமைப்பில் ஓர் இடம் ஆகியவை இருந்தாலும், அதை நிர்வகிக்கும் நிறுவனத்திடம் பெரிய அளவில் பணப்புழக்கம் ஏதும் இருக்கவில்லை. எனவே, இந்த 100 ரூபாய் என்பது லாபம் ஈட்டும் ஒரு விளையாட்டு அணியின் வழக்கமான மதிப்பீடாகக் கருதப்படாமல், ஒரு குறியீட்டு ரீதியிலான உரிமை மாற்றமாகவே பார்க்கப்பட வேண்டும்.</p><p>இந்தியக் கால்பந்துக்கு இது ஒரு சவாலான காலகட்டமாகும். ISL தனது வணிக மாதிரி மற்றும் நிதி ரீதியான சாத்தியக்கூறுகள் குறித்து பல்வேறு கேள்விகளை எதிர்கொண்டு வருகிறது. தகவல்களின்படி, இந்த லீக்கின் ஊடக ஒளிபரப்பு உரிமத்தின் மதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. அதாவது, JioStar நிறுவனம் ஆண்டுக்கு 275 கோடி ரூபாய் செலுத்தி வந்த நிலையில், 2025-26 சீசனுக்காக FanCode நிறுவனம் வெறும் 8.6 கோடி ரூபாய் மட்டுமே வழங்க முன்வந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இந்தியா-இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/india-srilanka-first-test-starts-tomorrow-in-galle</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/india-srilanka-first-test-starts-tomorrow-in-galle#comments</comments><guid isPermaLink="false">e9f6fa2f-5cdf-43e1-a6ba-f469750ede42</guid><pubDate>Fri, 14 Aug 2026 11:08:42 +0000</pubDate><atom:updated>2026-08-14T11:08:42.390Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சுப்மன் கில்,Shubman Gill,Galle Test,காலே டெஸ்ட்,SLvIND,இலங்கை இந்தியா தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/txasq5wy/lanka.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ shubman gill, de silva]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/txasq5wy/lanka.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியா-இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி காலேயில் நாளை தொடங்குகிறது.  </p><p>சுப்மன்  கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கைக்குச் சென்றுள்ளது.</p><h2>முதல் டெஸ்ட் </h2><p>இரு அணிகள் இடையே 4 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. கடைசியாக 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் பெங்களூருவில் நடந்த போட்டியில் இந்தியா 238 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை மண்ணில் கடைசியாக 2017-ல்  நடந்த பல்லேகலே டெஸ்டிலும் இன்னிங்ஸ் மற்றும் 171 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது.</p><p>இந்திய அணி கடைசியாக சொந்த மண்ணில்  கடந்த ஜூன் மாதம் ஆப்கானிஸ்தானை இன்னிங்ஸ் மற்றும் 300 ரன் வித்தியாசத்தில்  வென்றது. கொழும்பில் இலங்கை லெவனுக்கு எதிரான 3 நாள் பயிற்சி ஆட்டத்தில்  6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்ததால் நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும்.</p><p>இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் தொடங்கும் என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>தேவ்தத் படிக்கல்</h2><p>சாய் சுதர்சன் காயத்தால் தொடரில் இருந்து விலகியதால் அவரது இடமான 3-வது வரிசையில் தேவ்தத் படிக்கல் ஆடுகிறார். அவர் பயிற்சி ஆட்டத்தில் 142 ரன் குவித்து இருந்தார். கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வால் தொடக்க வீரர்களாகவும், கேப்டன் சுப்மன் கில் 4-வது வரிசையிலும் இடம்பெறுவார்கள். </p><p>முதன்மை விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் தேர்வு பெறுவார். துருவ் ஜூரல் இடத்தில் சர்பிராஸ் கானுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.</p><p>சுழற்பந்தில் ஆல்ரவுண்டர் ஜடேஜா, குல்தீப் யாதவ், மானவ் சுதார், வேகப்பந்தில் பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படும். குர்னூர் இடம் பெற்றால் மானவ் சுதார் கழற்றி விடப்படலாம். 11 பேர் கொண்ட அணியை தேர்வு செய்வது கேப்டன் சுப்மன் கில்லுக்கு சவாலாக இருக்கும்.</p><h2>இலங்கை அணி</h2><p>தனஞ்செய டி சில்வா தலைமையிலான இலங்கை அணி சொந்த மண்ணில் வெற்றியுடன் கணக்கை தொடங்கும் வேட்கையில் உள்ளது. அந்த அணி கடைசியாக கடந்த மாதம் வெஸ்ட் இண்டீசில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 0-1 என்ற கணக்கில் இழந்தது. சொந்த மண்ணில் கடைசியாக 2025-ல் வங்காளதேத்தை வீழ்த்தி (1-0) இருந்தது.</p><p>நாளைய டெஸ்ட் இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. சோனி ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.</p><h2>47-வது மோதல்</h2><p>இரு அணிகளும் நாளை மோதுவது 47-வது டெஸ்ட் ஆகும்.  இதுவரை நடைபெற்ற 46 போட்டியில் இந்தியா 22-ல், இலங்கை 7-ல் வெற்றி பெற்றுள்ளன. 17 டெஸ்ட் டிரா ஆனது. இலங்கையில் இந்திய அணி 8 டெஸ்ட் தொடரில் விளையாடி உள்ளது. இதில் இரு அணிகளும் தலா 3 தொடரை கைப்பற்றி உள்ளன. 2 தொடர் சமனில் முடிந்தது. கடைசியாக இலங்கையில் 2017-ல் ஆடிய 3 டெஸ்டிலும் இந்திய அணி வென்று ஒயிட்வாஷ் (3-0) செய்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>துபாயில் மூளைச்சாவு அடைந்த 29 வயது இந்திய பெண்ணின் உறுப்பு தானத்தால் 3 பேருக்குக் கிடைத்த மறுவாழ்வு!</title><link>https://www.maalaimalar.com/news/world/organ-donation-of-brain-dead-29-year-old-indian-woman-in-dubai-gives-new-life-to-three</link><comments>https://www.maalaimalar.com/news/world/organ-donation-of-brain-dead-29-year-old-indian-woman-in-dubai-gives-new-life-to-three#comments</comments><guid isPermaLink="false">162c2f41-7e90-4379-9320-a84db2ce1848</guid><pubDate>Fri, 14 Aug 2026 10:49:40 +0000</pubDate><atom:updated>2026-08-14T10:49:40.777Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>துபாய்,dubai,OrganDonation,உறுப்புதானம்,JovitaDesouza,ஜோவிட்டாடிசோசா,AlJalilaFoundation,HayatUAE,HumanitarianAct</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/9tsnvwjp/Organ-Donation" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Organ Donation ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/9tsnvwjp/Organ-Donation?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிறருக்கு உதவுவதையே தனது வாழ்நாள் நோக்கமாக கொண்டு வாழ்ந்த ஜோவிட்டா டிசோசா என்ற இளம்பெண், தனது மரணத்திற்குப் பின்னும் மூன்று பேரின் உயிரைக் காத்துத் தனது மனிதநேயத்தை நிலைநிறுத்தியுள்ளார்.</p><h2>அறக்கட்டளைப் பணியும் எதிர்பாராத மரணமும்:</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D">துபாயில் </a>உள்ள புகழ்பெற்ற 'அல் ஜலிலா அறக்கட்டளையின்' முக்கியப் பணியாளராக ஜோவிட்டா பணியாற்றி வந்தார். </p><p>பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் மனிதநேயப் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வந்த இவருக்கு, அண்மையில் கடுமையான மூளை ரத்தக்கசிவு ஏற்பட்டது. தீவிர மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதிலும், மருத்துவர்கள் அவர் 'மூளைச்சாவு' அடைந்ததாக அறிவித்தனர்.</p><h2>குடும்பத்தினரின் உன்னத முடிவு:</h2><p>தன் வாழ்நாள் முழுவதும் மற்றவர்களுக்கு உதவுவதையே குறிக்கோளாகக் கொண்டிருந்த ஜோவிட்டாவின் எண்ணத்திற்கு மதிப்பளிக்கும் வகையில், அவரது குடும்பத்தினர் ஒரு உன்னதமான முடிவை எடுத்தனர். </p><p>ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய உறுப்புதானத் திட்டமான 'ஹயாத்' மூலம் அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்ய முன்வந்தனர். </p><p>இவர்களின் இந்த உன்னத முடிவால், மரணப் படுக்கையில் இருந்த மூன்று நபர்களுக்குப் புதிய உயிர் கிடைத்துள்ளது.</p><h2>அறக்கட்டளை சி.இ.ஓ மற்றும் குடும்பத்தினர் உருக்கம்:</h2><p>உலக உறுப்புதான தினத்தை முன்னிட்டு ஜோவிட்டாவின் இந்தச் தியாகத்தைப் பாராட்டி அல் ஜலிலா அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஆமிர் அல் ஜாரூனி கூறுகையில், "ஜோவிட்டாவின் வாழ்க்கை, கொடுப்பதன் உன்னதத்தை உணர்த்துகிறது. அவரது குடும்பத்தின் இந்த முடிவு மூன்று உயிர்களைக் காப்பாற்றியுள்ளது" என நெகிழ்ச்சியுடன் கூறினார்.</p><p>ஜோவிட்டாவின் குடும்பத்தினர் பேசுகையில், "அவளது அன்பான மற்றும் உதவும் குணம்தான் இந்தத் துயரமான நேரத்தில் எங்களுக்குப் பெரிய தைரியத்தைக் கொடுத்தது. </p><p>அவள் எப்போதும் மற்றவர்களின் மகிழ்ச்சியையே முதலில் நினைப்பாள், அவளது புன்னகை எங்கள் குடும்பத்தின் மிகப்பெரிய மகிழ்ச்சி" என உருக்கமாகத் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>இந்தியா, இஸ்ரேல் இணைந்து முதல் ஹேக்கத்தான் நிகழ்ச்சி - மின்சாரமில்லாமல் இயங்கும் சக்கர நாற்காலி அறிமுகம் </title><link>https://www.maalaimalar.com/news/world/india-israel-launch-first-hackathon-electricity-free-wheelchair</link><comments>https://www.maalaimalar.com/news/world/india-israel-launch-first-hackathon-electricity-free-wheelchair#comments</comments><guid isPermaLink="false">354a4561-6900-415c-9423-c3d299dfc469</guid><pubDate>Fri, 14 Aug 2026 10:46:56 +0000</pubDate><atom:updated>2026-08-14T10:46:56.998Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Indian Embassy,India-Israel hackathon,இந்தியா இஸ்ரேல் ஹேக்கத்தான்,இந்திய தூதரகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/tr0fuh92/%D7%99%D7%A6%D7%99%D7%90%D7%AA.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ இந்தியா-இஸ்ரேல் ஹேக்கத்தான்: மின்சாரமில்லா புதுமை சக்கர நாற்காலி அறிமுகம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ India Israel Hackathon]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/tr0fuh92/%D7%99%D7%A6%D7%99%D7%90%D7%AA.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஒன்றாக இணைந்து முதல் ஹேக்கத்தான் நிகழ்வில் கலந்துகொண்டன. இந்த நிகழ்வின் மூலம் விபத்தில் காயமடைந்து கை மற்றும் கால்கள் அசைவின்றி இருக்கும் நபர்கள் இயங்கும் வகையில் மின்சாரம் இல்லாமல் இயங்கும் எளிதாக இயங்கும் சக்கர நாற்காலி முன்மாதிரியை அறிமுகம் செய்துள்ளது. </p><h3><strong>ஹேக்கத்தான் நிகழ்வு</strong></h3><p>ஹேக்கத்தான்கள் என்பது பங்கேற்பாளர்கள் குறிப்பிட்ட சிக்கல்களுக்கான முன்மாதிரிகளை அல்லது தீர்வுகளை உருவாக்கும், காலவரையறைக்குட்பட்ட புத்தாக்க நிகழ்வுகளில் ஒன்றாகும்.</p><p>புனர்வாழ்வுத் தொழில்நுட்பம் என்பது காயம், அறுவை சிகிச்சை அல்லது நோய்க்குப் பிறகு உடல் குணமடைவதற்காக பயன்படுத்தப்படும் சாதனங்கள் மற்றும் அமைப்புகளை உள்ளடக்கியது.</p><p>நடமாடுவதற்கு உதவும் சாதனங்களில் சக்கர நாற்காலிகள், கை, கால் ஆதரவு அமைப்புகள் மற்றும் இயக்கத்திற்கு உதவும் கருவிகள் ஆகியவை அடங்கும்.</p><h3><strong>இந்தியா இஸ்ரேல் ஹேக்கத்தான் பங்கேற்பு</strong></h3><p>மீட்பு சுகாதாரப் பராமரிப்பு என்ற கருப்பொருளுடன், முதல் இந்தியா-இஸ்ரேல் ஹேக்கத்தான் இன்றுடன் நிறைவடைந்தது.</p><p>இந்த நிகழ்வில் புனர்வாழ்வு மற்றும் நோயாளிகள் நடமாட்டம் தொடர்பான 14 சிக்கல் கூற்றுகளில் பணியாற்றுவதற்காக, இந்தியா மற்றும் இஸ்ரேலைச் சேர்ந்த 1,300 இளம் கண்டுபிடிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.</p><p>இந்த ஹேக்கத்தான், இரண்டு நாடுகளில் குழு அடிப்படையிலான சிக்கல் தீர்க்கும் முறையை பயன்படுத்தியது. பங்கேற்பாளர்கள், மறுவாழ்வு, குணமடைதலைக் கண்காணித்தல் மற்றும் உதவி சாதனங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய சுகாதாரத் தொழில்நுட்ப யோசனைகளில் பணியாற்றினர்.</p><p>இஸ்ரேலில் உள்ள இந்திய யூத சமூகத்தைச் சேர்ந்த ஓரி காட்வில், மற்ற சமூக உறுப்பினர்களுடன் இணைந்து இந்த ஹேக்கத்தானை ஏற்பாடு செய்தார்.</p><p>தாப்பர் பல்கலைக்கழகம் முதன்மை கல்வி பங்காளராக செயல்பட்டதுடன், ஆரம்பகட்ட புத்தாக்கம் மற்றும் சுகாதாரத் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான ஒரு மையமாகவும் விளங்கியது. மேலும் தாப்பர் பல்கலைக்கழகம் இந்நிகழ்ச்சிக்கான கல்விசார் கூட்டாளியாகச் செயல்பட்டது.</p><p>இஸ்ரேலுக்கான இந்தியத் தூதர் ஜே.பி. சிங், 2026 ஆகஸ்ட் 14 அன்று வெற்றியாளர்களைப் பாராட்டினார்.</p><p>இந்த நிகழ்வில் கால்களை இழந்தவர்களுக்கு மறுவாழ்விற்காக சக்கர நாற்காலியின் முன் சக்கரத்தின் இயந்திர சுழற்சியைப் பயன்படுத்தும், குறைந்த செலவிலான, மின்சாரமில்லாத , சக்கர நாற்காலி முன்மாதிரியை இஸ்ரேல் அறிமுகம் செய்தது.</p><p>இந்தியா சார்பில், காயமடைந்த நோயாளிகளின் கை, கால் அசைவுகளை ஆரோக்கியமான நபர்களின் அசைவுகளுடன் ஒப்பிடுவதற்கு, நிகழ்நேர காணொளி செயலாக்கம் மற்றும் தானியங்கி இயக்கப் பகுப்பாய்வு முன்மாதிரி அறிமுகம் செய்யப்பட்டது.</p><p>இஸ்ரேலில் வெற்றி பெற்ற தீர்வுகளில், சக்கர நாற்காலியின் முன்பக்கச் சக்கரம் இயற்கையாகச் சுழலும் தன்மையைப் பயன்படுத்தி, மின்சாரத் தேவையின்றி கால்களைக் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் அசைக்க உதவும் ஒரு அமைப்பும் அடங்கும்.</p><p>உறுப்பு அசைவு மற்றும் மறுவாழ்வு சிகிச்சைக்குத் துணையளிக்கும் வகையில், எளிமையான மற்றும் பரவலாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு அணுகுமுறையை இத்தீர்வு வழங்க முற்படுகிறது.</p><h3><strong>இந்திய தூதரகம்</strong></h3><p>இந்த முன்னெடுப்பு குறித்து இந்திய தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில், “இஸ்ரேலில் உள்ள இந்திய யூத சமூகத்தை சேர்ந்த ஓரி காட்வில், இந்த ஹேக்கத்தான் நிகழ்வை ஒரு முன்னெடுப்பாக நடத்த திட்டமிட்டார்.</p><p>இந்த முன்னெடுப்பு, இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மக்கள் உறவுகளை வலுப்படுத்தவும், பரந்த சமூகத் தாக்கத்தை ஏற்படுத்தும் தீர்வுகளுக்காக இளம் மாணவர்களின் படைப்பாற்றலையும் தொழில்நுட்பத் திறன்களையும் பயன்படுத்தவும் சமூகத்திற்கு ஒரு தளத்தை வழங்கியது.</p><p>சமூக ஈடுபாடு மற்றும் புத்தாக்கத்திற்கான ஒரு தளமாக உருவாக்கப்பட்ட முதல் இந்தியா-இஸ்ரேல் ஹேக்கத்தான், இந்தியா-இஸ்ரேல் நட்புறவு, இளைஞர்கள் தலைமையிலான புத்தாக்கம் மற்றும் சமூக நன்மைக்கான தொழில்நுட்பம் ஆகியவற்றின் அர்த்தமுள்ள கொண்டாட்டமாக உருவெடுத்தது.</p><p>இரு நாடுகளிலும் உள்ள இளைஞர்கள் மற்றும் சமூகங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு, சமூக நலனுக்கும் உலகளாவிய நன்மைக்கும் பங்களிக்கக்கூடிய தீர்வுகளை எவ்வாறு உருவாக்க முடியும் என்பதை இந்த முயற்சி நிரூபித்தது.</p><p>இந்தியத் தூதரகம் இதுபோன்ற முயற்சிகளை ஆதரிப்பதற்கும் வலுப்படுத்துவதற்கும், இந்தியா-இஸ்ரேல் ஹேக்கத்தானின் அடுத்த பதிப்பை எதிர்நோக்குகிறது” என்று தெரிவித்தது.</p>]]></content:encoded></item><item><title>நிச்சயம் முடிந்த சில வாரங்களில் வங்கி பெண் ஊழியர் தற்கொலை! ஆணும் சடலமாக மீட்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/engaged-bank-couple-die-hours-apart-in-kerala-karnataka</link><comments>https://www.maalaimalar.com/news/national/engaged-bank-couple-die-hours-apart-in-kerala-karnataka#comments</comments><guid isPermaLink="false">1f6e9abe-fde3-4d15-a78d-eeab3bec7d46</guid><pubDate>Fri, 14 Aug 2026 10:42:21 +0000</pubDate><atom:updated>2026-08-14T10:42:21.220Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Karnataka,Police Investigation,கொச்சி,KeralaTragedy,BankEmployees,Engaged Couple,TragicDeath</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/zlii2asz/Kerala-Tragedy" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kerala Tragedy ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/zlii2asz/Kerala-Tragedy?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணியாற்றி வந்த இளம் ஜோடிகள் <a href="https://www.maalaimalar.com/topic/kerala">கேரளா </a>மற்றும் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE">கர்நாடகா</a>வில் அடுத்தடுத்து சில மணிநேர இடைவெளியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>பின்னணி விவரங்கள்</h2><p>கேரளாவின் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த பி. அனுஸ்ரீ (25) மற்றும் கண்ணூர் பகுதியைச் சேர்ந்த வி. அமல் என்ற ஜோடி ஒரே வங்கியில் பணியாற்றி வந்தனர். </p><p>இவர்கள் இருவருக்கும் சமீபத்தில் தான் நிச்சயதார்த்தம் முடிவடைந்தது. வரும் டிசம்பர் மாதம் திருமணம் நடக்கவிருந்தது.</p><h2>நடந்த மரணங்கள்</h2><p>கர்நாடகாவின் ஹன்சூர் பகுதியில் உள்ள வங்கிக் கிளையில் பணியாற்றி வந்த அனுஸ்ரீ, அங்குள்ள தனது தங்குமிடத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவரது உடல் காசர்கோட்டிற்கு கொண்டு வரப்பட்டு புதன்கிழமை மாலை தகனம் செய்யப்பட்டது.</p><p>கொச்சியின் எர்ணாகுளம் கிளையில் பணியாற்றி வந்த அமல், தனது காதலி அனுஸ்ரீயின் மரணச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார். </p><p>இதனால் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்துத் தங்கிய அவர், அங்குத் தற்கொலை செய்து கொண்டதாகப் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.</p><h2>போலீஸ் விசாரணை</h2><p>சம்பவ இடத்தில் தற்கொலைக் கடிதம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என எர்ணாகுளம் வடக்கு போலீசார் தெரிவித்துள்ளனர். </p><p>இவர்களின் மரணத்திற்கான துல்லியமான காரணம் மற்றும் பின்னணி குறித்து அறிய அமலின் மொபைல் போன் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அமலின் உடலுக்கான பிரேதப் பரிசோதனை இன்று நடைபெற உள்ளதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>66 ஆண்டுகள் நகம் வளர்த்து உலக சாதனை: 29 அடி நீள நகங்களுடன் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த இந்தியர்!</title><link>https://www.maalaimalar.com/news/national/indian-man-sets-world-record-with-29-foot-long-fingernails</link><comments>https://www.maalaimalar.com/news/national/indian-man-sets-world-record-with-29-foot-long-fingernails#comments</comments><guid isPermaLink="false">8b61eb91-cb3d-4498-8263-4ff2f43ebf79</guid><pubDate>Fri, 14 Aug 2026 10:36:19 +0000</pubDate><atom:updated>2026-08-14T10:36:19.343Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>புனே,Pune,Guinness WorldRecord,கின்னஸ்சாதனை,Shridhar Chillal,ஸ்ரீதர்சில்லால்,Longest Fingernails,66YearsChallenge</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/88i1st7t/Longest-Fingernails" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Longest Fingernails ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/88i1st7t/Longest-Fingernails?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவை சேர்ந்த ஸ்ரீதர் சில்லால் என்ற முதியவர், தனது ஒரே கையில் மிகவும் நீளமான நகங்களை வளர்த்து கின்னஸ் உலக சாதனை படைத்து வரலாற்றுப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். </p><p>மஹாராஷ்டிர மாநிலம் புனே நகரைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவரின் இடது கை 5 நகங்களின் மொத்த நீளம் 909.6 சென்டிமீட்டர், அதாவது கிட்டத்தட்ட 29 அடி 10 அங்குலம் ஆகும்.</p><h2>நகங்களின் தனித்தனி நீள விவரங்கள்:</h2><p>ஸ்ரீதரின் இடது கை நகங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக அளவிடப்பட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுண்டுவிரல் நகத்தின் நீளம் 179.1 செ.மீ, மோதிர விரல் 181.6 செ.மீ, நடுவிரல் 186.6 செ.மீ, ஆள்காட்டி விரல் 164.5 செ.மீ பெருவிரல் 197.8 செ.மீ ஆகும்.</p><h2>66 ஆண்டு காலப் பயணமும் பின்னணியும்:</h2><p>கடந்த 1952 ஆம் ஆண்டு, ஸ்ரீதருக்கு 16 வயதாக இருந்தபோது பள்ளியில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. இவரது நண்பர் ஒருவர் எதிர்பாராதவிதமாகத் தங்களது ஆசிரியரின் நீண்ட நகம் ஒன்றை உடைத்துவிட்டார். </p><p>இதனால் கோபமடைந்த ஆசிரியர், "நீங்களாக நகம் வளர்த்துப் பார்த்தால் தான், அதை உடைக்காமல் பராமரிப்பது எவ்வளவு கடினம் என்று உங்களுக்குப் புரியும்" எனச் சவால் விடுத்தார்.</p><p>ஆசிரியரின் அந்த வார்த்தைகளை ஒரு சவாலாக எடுத்துக் கொண்ட ஸ்ரீதர், அன்றிலிருந்து தனது நகங்களை வெட்டுவதை நிறுத்தினார்.</p><h2>தினசரி வாழ்க்கையில் சந்தித்த சவால்கள்:</h2><p>நகங்கள் வளர வளர அவரது அன்றாட வாழ்க்கையில் பல கடுமையான சிரமங்கள் ஏற்பட்டன. தூங்கும் போதும், நடக்கும் போதும் நகங்கள் உடைந்துவிடக் கூடாது என்பதில் தீவிர கவனம் செலுத்தினார். </p><p>இருந்தபோதிலும், அவர் ஒரு வெற்றிகரமான புகைப்படக் கலைஞராக மாறினார். தனது நீண்ட நகங்களுக்கு இடையூறு இல்லாதவாறு, கேமராவில் ஒரு சிறப்புப் பிடியை வடிவமைத்துப் பயன்படுத்தி புகைப்படம் எடுத்து வந்தார்.</p><p>இவரது பெருவிரல் நகம் மட்டுமே ஒரு சாதாரண வீட்டு வாசலின் உயரத்திற்கு இணையாகச் சுருண்டு வளர்ந்து, உலகிலேயே "மிக நீளமான ஒற்றை நகம்" என்ற தனிப் பட்டத்தை இவருக்குப் பெற்றுத் தந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஈரானுக்கு எதிரான போரில் ஆப்ரகாம் லிங்கன் போர்க் கப்பலுக்குப் பதில் யு.எஸ்.எஸ். வாஷிங்டன்?</title><link>https://www.maalaimalar.com/news/world/us-has-a-bigger-problem-in-hormuz-than-iran-resistance</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-has-a-bigger-problem-in-hormuz-than-iran-resistance#comments</comments><guid isPermaLink="false">8f18ef1e-17c0-48c6-a86d-8e6d80f31076</guid><pubDate>Fri, 14 Aug 2026 10:16:35 +0000</pubDate><atom:updated>2026-08-14T10:16:35.972Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Abraham Lincoln,ஹார்முஸ் ஜலசந்தி,Strait of Hormuz,US Iran war,அமெரிக்கா ஈரான் போர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/hrsdatvi/USSAbrahamLincoln001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ USS Abraham Lincoln]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/hrsdatvi/USSAbrahamLincoln001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி தொடங்கியது. இந்த போரில் அமெரிக்காவின் மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பலான ஆப்ரகாம் லிங்கன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கப்பலில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் உள்ளனர்.</p><h2>ஜனவரியில் மத்திய கிழக்குப் பகுதிக்கு வந்த ஆப்ரகாம் லிங்கன்</h2><p>ஆப்ரகாம் லிங்கன் கப்பல் சான் டியாகோவில் கடந்த ஆண்டு நவம்பர் 21-ம் தேதி அன்று தனது பயணத்தை தொடங்கியது. இந்த வருடம் ஜனவரி மாதம் மத்திய கிழக்குப் பகுதியை வந்தடைந்தது. பிப்ரவரி 28-ந்தேதி போரில் ஈடுபட்டது.</p><p>ஈரானுக்கு எதிரான போரில் இந்த கப்பல் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்த வாரத்துடன் ஆப்ரகாம் லிங்கன் புறப்பட்டு 260 நாட்கள் நிறைவடைகிறது. பொதுவாக அமெரிக்காவின் போர்க்கப்பல் ஒரு முறை புறப்பட்டால் 6 முதல் 7 வாரங்களில் திரும்ப சென்றடைந்து விடும். அல்லது வீரர்கள் 7 மாதத்திற்குள் வீடு திரும்பி விடுவார்கள்.</p><h2>மனஉறுதியை இழந்த வீரர்கள்?</h2><p>ஆனால் இந்த முறை இன்னும் வீடு திரும்பவில்லை. இதனால் வீரர்கள் மனஉறுதி இழந்து மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் இரண்டு முக்கிய நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சில வீரர்கள் கடலில் குதிக்க முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது.</p><p>இதற்கு முக்கிய காரணம், வீர்ரகள் போர்க்கப்பலில் ஏறும்போது உணவு, சுத்தமான பொருட்கள் அதன்பின் மெயில் (குடும்பத்தினரை தொடர்பு கொள்வது உள்பட) ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆனால் ஆப்ரகாம் லிங்கன் கப்பலில் மோசமான நிலை நிலவி வருவதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. போார்க் காரணமாக வீரர்கள் மெயில் தொடர்பு இல்லாமல் தவிப்பதாக தெரிகிறது. அதோடு தூய்மையான பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் ஹெக்சேத்</h2><p>ஆனால், இந்த செய்திகள் முற்றிலும் தவறாக சித்தரிக்கப்பட்டவை என்று அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்சேத் தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக அவர் கூறுகையில் "ஒவ்வொரு கப்பலுக்கும், ஒவ்வொரு குழுவினருக்கும், ஒவ்வொரு கப்பல் தலைவருக்கும், எந்தவொரு தருணத்திலும் எங்களால் முடிந்த அனைத்தையும் வழங்குவதை நாங்கள் உறுதிசெய்கிறோம். சில பணி நியமனங்கள் மற்றவற்றை விட நீண்ட காலத்தைக் கொண்டவை. அத்தகைய சூழலில் பணியாற்றும் மாலுமிகள் மீது எனக்கு மற்ற யாரையும் விட அதிக மரியாதையும் நன்றியுணர்வும் உண்டு. கரையை அல்லது துறைமுகத்தை அடையும் வாய்ப்புகள் மிகக் குறைவாக உள்ள நிலையில், கொந்தளிப்பான கடற்பரப்பில், மிகவும் கடினமான சூழலில் அவர்கள் ஆற்றும் பணிகள் உண்மையிலேயே வியக்கத்தக்கவை" என்று குறிப்பிட்டுள்ளார்.</p><h2>USS ஜார்ஜ் வாஷிங்டன்</h2><p>இந்த நிலையில் USS ஜார்ஜ் வாஷிங்டன் போர்க்கப்பல் வியட்நாமில் உள்ள டா நாங் (Da Nang) துறைமுகத்தில் இருந்து கடந்த வாரம் மத்திய கிழக்குப் பகுதியை நோக்கி புறப்பட்டுள்ளது. பிசிபிக் மற்றும் இந்திய பெருங்கடலை இணைக்கும் மலாக்கா ஜலசந்தியில் காணப்படுவதாகும், இந்திய பெருங்கடல் நோக்கி கப்பல் பயணிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.</p><p>இதனால் ஆப்ரகாம் லிங்கன் கப்பலுக்குப் பதிலாக USS வாஷிங்டன் பாதுகாப்பிற்காக நிறுத்தப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருகிறார் ஈரான் அதிபர்</title><link>https://www.maalaimalar.com/news/national/iran-president-to-come-to-delhi-for-brics-summit</link><comments>https://www.maalaimalar.com/news/national/iran-president-to-come-to-delhi-for-brics-summit#comments</comments><guid isPermaLink="false">6887b041-7e2d-4af9-8148-b91678ba13fd</guid><pubDate>Fri, 14 Aug 2026 10:03:45 +0000</pubDate><atom:updated>2026-08-14T10:03:45.880Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BRICS Summit,பிரிக்ஸ் உச்சி மாநாடு,Iran President,ஈரான் அதிபர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/xhtvk69l/iran.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Masoud Pezeshkian]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/xhtvk69l/iran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியான் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளதாக தகவல் வெளியானது.</p><h2>பிரிக்ஸ் உச்சி மாநாடு</h2><p>பிரிக்ஸ் அமைப்பில் ஈரான், எகிப்து, எத்தியோப்பியா, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் கடந்த 2024-ம் ஆண்டில் முழு உறுப்பினர்களாக இணைந்தன. இதனைத் தொடர்ந்து, 2025-ம் ஆண்டில் இந்தோனேசியாவும் இணைந்ததால் முழு உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.</p><p>இந்த ஆண்டு பிரிக்ஸ் அமைப்பின் 18-வது உச்சி மாநாடு, 'மீள்தன்மை, புதுமை, ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான கட்டமைப்பு' என்ற கருப்பொருளின் கீழ் டெல்லியில் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது.</p><h2>ஈரான் அதிபர் இந்தியா வருகை</h2><p>இந்நிலையில், பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியான் இந்தியாவுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியது. இந்த வருகையின்போது இரு நாடுகளின் உறவு மற்றும் போர்நிறுத்தம் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>கடந்த ஜூன் மாதம் நடந்த வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி இந்தியா வருகை தந்தார். அப்போது, அமெரிக்காவுடனான போர்நிறுத்த விவகாரத்தில் இந்தியாவின் பங்கு முக்கியமானது என கூறி அவர், ஹார்முஸ் ஜலசந்தி போக்குவரத்து தொடர்பாக உறுதியும் வழங்கினார்.</p><p>அமெரிக்கா உடனான போர் தொடர்ந்து வரும் நிலையில், ஈரான் அதிபரின் இந்தியா வருகை உலக நாடுகளை உற்றுநோக்க வைத்துள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>