<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 13 Aug 2026 12:39:40 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 13 ஆகஸ்ட் 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-13-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-13-august-2026#comments</comments><guid isPermaLink="false">6b1cd842-7f06-457b-93b8-c38a9bb7ae73</guid><pubDate>Thu, 13 Aug 2026 04:13:24 +0000</pubDate><atom:updated>2026-08-13T10:05:05.349Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/3ajhq5r5/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live news]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/3ajhq5r5/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/gautam-gambhirs-head-coach-job-safe-or-unsafe-bccis-decision-made">தொடர் தோல்வி எதிரொலி: 2027 உலகக் கோப்பை வரை பயிற்சியாளர் பதவியில் நீடிப்பாரா கம்பீர்?</a></p><p>* இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன் பும்ரா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் காயத்தால் விலகினர்.</p><p>* கவுதம் கம்பீரின் ஒப்பந்தம் 2027 டிசம்பர் வரை இருக்கிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/bali-island-tragedy-passenger-boat-fire-211-rescued-19-year-old-woman-dead">பாலி தீவு அருகே பயங்கரம்: பயணிகள் படகில் தீ விபத்து - 211 பேர் மீட்பு, இளம் பெண் பலி!</a></p><p>* பாலி தீவு அருகே லோம்போக் சென்ற 'புத்ரி யாஸ்மின்' படகில் அதிகாலை 4:15 மணிக்கு தீப்பிடித்தது.131 பேர் என்ற பட்டியல் இருந்தும் 211 பேரை மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர். </p><p>* இந்த விபத்தில் 19 வயது இந்தோனேசிய பெண் உயிரிழந்தார், மேலும் 5 பேரை தேடும் பணி நடக்கிறது</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/australia-all-out-198-runs-against-bangladesh-in-first-test">வங்கதேசம் அபார பந்துவீச்சு: ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 198 ரன்களுக்கு ஆல் அவுட்</a></p><p>* வங்கதேசம் சார்பில் ஹசன் மகமுது 6 விக்கெட் வீழ்த்தினார்.</p><p>* இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/rbi-issues-new-regulations-for-loan-interest-rates-across-india">கடன் வட்டி விகிதங்களில் அதிரடி மாற்றம்: ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் வெளியீடு!</a></p><p>* புதிய விதிகள் ஏப்ரல் 1, 2027 முதல் அமல்: வங்கிகள், NBFC அனைத்திற்கும் தினசரி குறையும் நிலுவை வட்டி கட்டாயம்.</p><p>* பழைய கடன் மாற்றம் 2029 வரை: ஒருமுறை மட்டும் வாய்ப்பு, கூடுதல் கட்டணம் வசூலிக்கவோ வட்டி உயர்த்தவோ கூடாது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/telangana-rice-mills-raid-government-recovers-rs-700-crore-paddy-dues">தெலங்கானா அரிசி ஆலைகளில் அதிரடி சோதனை: ரூ.700 கோடி நெல் நிலுவைத் தொகையை மீட்டு அரசு சாதனை!... </a></p><p>*தெலங்கானா மாநிலத்தில் அரசுக்கு சொந்தமான நெல் நிலுவையைத் திரும்பச் செலுத்தாத அரிசி ஆலை அதிபர்கள் மீது மாநில அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. </p><p>*நேர்மையாகச் செயல்படும் ஆலை அதிபர்களுக்கு அரசு துணையாக இருக்கும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/rajya-sabha-uproar-kharge-demands-case-over-purification-ritual-after-his-speech">என்னைத் தீண்டத்தகாதவனாக நடத்துகிறீர்கள்.. மாநிலங்களவையில் கொந்தளித்த கார்கே - என்ன நடந்தது?</a></p><p>*என்னைத் தீண்டத்தகாதவராக நடத்தி, மேடையைச் 'சுத்தம்' செய்து அவமானப்படுத்துகிறீர்கள்.</p><p>*கோஷங்கள் எழுப்பப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்தே இந்த சடங்கு நடத்தப்பட்டதாக அமைப்பாளர்கள் கூறினர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/digital-arrest-scam-10-74-crore-popular-social-media-influencer-held-in-pune">ரூ.10.74 கோடி டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி: பிரபல சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸர் புனேயில் கைது!</a></p><p>* ரூ.10.74 கோடி மோசடி: புனே 82 வயது முதியவரிடம் டிஜிட்டல் அரெஸ்ட் என பணம் பறிப்பு.</p><p>* இன்ஃப்ளூயன்ஸர் கைது: ரீல்ஸ் பிரபலம் ரோஹன் ஜாதவ் போலி வங்கி கணக்கு கொடுத்ததாக போலீஸ் கைது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/heavy-rain-mumbai-landslide-kurla-six-killed">மும்பையில் கொட்டித்தீர்த்த கனமழை: கட்கோபர் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு 6 பேர் பரிதாப பலி; மீட்புப் பணிகள் தீவிரம்!...</a> </p><p>*7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p>*நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி மிகவும் குறுகலான பாதைகளைக் கொண்டதாக இருப்பதால், பெரிய இயந்திரங்களை அங்கு கொண்டு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.</p><p>தனியார் நிறுவனங்களில் பணி பெற்றோருக்கு நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் விஜய்.</p><p>வெற்றி முதலீட்டாளர்கள் மாநாட்டில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.</p><p>WOWsemi நிறுவனம் கோவையில் செமிகண்டக்டர் துறை திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் அமைக்க திட்டம்.</p><p>அடுத்த 2 ஆண்டில் ரூ.75 கோடி முதலீட்டில் Wafer on Wheels அனுபவ மையம், திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் அமைக்கப்படும்.</p><p>அடுத்த 5 ஆண்டுகளில் 75,000-க்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி அளித்து, 15,000 நபர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.</p> <p>ஜெர்மனி நாட்டை சேர்ந்த டைம்லர் நிறுவனம் 400 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ரூ.4,000 கோடி முதலீடு செய்கிறது.</p><p>ஜெர்மனியின் முன்னணி நிறுவனமான BIZER தமிழகத்தில் ரூ.300 கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.</p><p>ஆஸி.ன் Avid Group திருவள்ளூர், தூத்துக்குடியில் ரூ.7000 கோடி முதலீட்டில் 12,000 பேருக்கு வேலை தரும் வகையில் ஒப்பந்தம்.</p><p>ஷைலி என்ஜினீயரிங் பிளாஸ்டிக்ஸ் நிறுவனம் தமிழகத்தில் 400 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ரூ.500 கோடி முதலீடு.</p><p>ஜப்பானின் YKK நிறுவனம் திருவள்ளூரில் ரூ.1651 கோடி முதலீட்டில் 4,316 பேருக்கு வேலை தரும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்.</p><p>அமெரிக்காவை சேர்ந்த FORTUNE நிறுவனம் 4,000 பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் ரூ.477 கோடி முதலீடு செய்கிறது.</p><p>ரூ.400 கோடி முதலீட்டில் 1500 பேருக்கு வேலை தரும் வகையில் தூத்துக்குடியில அக்னிகுல் காஸ்மோஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம்.</p><p>செயிண்ட் கோபைன் நிறுவனம் தமிழகத்தில் ரூ.2,000 கோடி முதலீடு செய்தவற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.</p><p>ரூ.1000 கோடியில் பீனிக்ஸ் கோத்தாரி நிறுவனம் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.</p><p>தூத்துக்குடியில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ரூ.250 கோடி முதலீடு செய்கிறது ஸ்கை ரூட்.</p><p>ஜே.கே. டயர்ஸ் ரூ.5,143 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து.</p><p>கேப்லின் குரூப் நிறுவனம் ரூ.925 கோடியில் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு தரும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.</p><p>மின் வாகன தயாரிப்பு நிறுவனமான அல்ட்ரா வைலட் தமிழகத்தில் ரூ.777 கோடி முதலுடு செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.</p><p>டைட்டன் நிறுவனம் ரூ.1000 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.</p><p>அக்னி கோல் நிறுவனம் ரூ.400 கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் கையெழுத்தானது.</p><p>முதலமைச்சர் முன்னிலையில் இந்துஜா குரூப் நிறுவனத்துடன் ரூ.2,500 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து.</p><p>முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழக அரசின் அனைத்து துறைகளும் ஓரணியில் உள்ளது - அமைச்சர் கீர்த்தனா</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/z3y0ou8m/keerthana.jpg" /></figure><p>தமிழக வெற்றிக்கழகத்தில் 100 நாள் ஆட்சியில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஈர்ப்பு - அமைச்சர் கீர்த்தனா</p><p>ஜெர்மனி, அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட 15 நாடுகளை சேர்ந்த நிறுவனங்களுடன் ஒப்பந்த கையெழுத்தாகிறது.</p><p>மாநாட்டில் 1,06,998 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு.</p><p>வெற்றி முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.67,452 கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்படும் என தமிழ்நாடு அரசு உறுதி.</p><p>சென்னையில் நடைபெறும் வெற்றி முதலீட்டாளர்கள் மாநாட்டில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு.</p><p>சென்னை கிண்டியில் 'வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு' தொடங்கியது.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கியது வெற்றி முதலீட்டாளர்கள் மாநாடு.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-13-8-2026">GOLD PRICE TODAY: நாளுக்கு நாள் ஏறும் தங்கம் விலை - இன்றைய நிலவரம் </a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.14,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. </p><p><a href="https://maalai-malar.quintype.com/story/b0aaf1c8-3178-4559-b174-fc3eb50e1661">தந்தை மறைந்த 5வது நாளில் ஆடுகளத்திற்கு திரும்பிய மெஸ்ஸி - ரசிகர்கள் நெகிழ்ச்சி</a></p><p>*நீங்கள் எனது தந்தையும், நண்பனும், பிரதிநிதியும் ஆவீர்கள்</p><p>*கால்பந்தில் தான் தொடர்வது குறித்து உறுதியாக தெரியவில்லை என உருக்கமாக பதிவிட்டிருந்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/platforms-1-to-5-at-egmore-railway-station-closed">எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைமேடை 1 முதல் 5 வரை மூடல்</a></p><p>* எழும்பூரிலிருந்து புறப்பட்டு தென்மாவட்டங்களுக்குச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சில தாம்பரம் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. </p><p>* எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 6 முதல் 9 வரை உள்ள நடைமேடைகளில் இருந்து இயக்கப்படும். மின்சார ரெயில்கள் வழக்கம்போல நடைமேடை 10, 11-ல் இருந்து இயக்கப்படும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/haridwar-ganga-pollution-outrage-7000-tonnes-of-plastic-and-urine-bottle-waste-cleared-after-kanwar-yatra">சிறுநீர் நிரம்பிய பாட்டில்கள்.. கன்வர் யாத்திரை நிறைவில் ஹரித்வாரில் 7 ஆயிரம் டன் குப்பைகள்</a></p><p>*கங்கை நதி உற்பத்தியாகும் இமயமலைப் பகுதியான கங்கோத்ரியிலும் இதே போன்ற சூழலே நிலவுகிறது.</p><p>*சுமார் 5 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் ஹரித்வாருக்கு வருகை தந்தனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/old-modi-congress-leaders-wedding-reception-clip-not-linked-to-revati-sule-event-fact-check-confirms">ஆளே மாறிட்டீங்க.. திருமண விழாவில் மோடியுடன் கார்கே கலகல - வீடியோ உண்மையா?</a></p><p>*கார்கே, "நீங்கள் ஆள் கொஞ்சம் மாறிவிட்டீர்கள்" என கூற, அதற்கு மோடி "ஓ அப்படியா" என கூறுவது பதிவாகியுள்ளது.</p><p>*தற்போதைய நிகழ்வோடு இதற்கு எவ்வித தொடர்பும் இல்லை</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/jantar-mantar-season-2-protest-cjbp-alleges-hall-cancellations-and-threats-blocking-meetings-in-delhi">'ஜந்தர் மந்தர் சீசன் 2' போராட்டத்தை அறிவித்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி</a></p><p>*தலைகீழாக தொங்கவிடப்படுவீர்கள் என்று மிரட்டியுள்ளனர்.</p><p>*சீசன் 2 போராட்டம் தொடங்கும் என்பதை அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/afghanistan-girls-denied-secondary-and-higher-education-under-taliban-rule">மூடத்தனத்தால் ஒரு தலைமுறையையே முடக்கிய தாலிபான்.. ஆப்கானிஸ்தானில் 24 லட்சம் பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுப்பு</a></p><p>*2030ஆம் ஆண்டிற்குள் உயர்நிலை பள்ளிக் கல்வி மறுக்கப்பட்ட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 40 லட்சமாக உயரும்</p><p>*முற்றிலுமாகத் தடை செய்துள்ள ஒரே நாடு ஆப்கானிஸ்தான் மட்டுமே.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/iran-us-war-to-continue-until-trumps-term-ends-warns-irgc-adviser">டிரம்ப் பதவிக்காலம் முடியும் வரை போரை நீட்டிப்போம் - ஈரான் தடாலடி</a></p><p>*அமெரிக்க ராணுவம் நினைத்ததை விட பலவீனமாக இருப்பதை இந்தப் போரின் மூலம் அறிந்துகொண்டதாக தெரிவித்தார்.</p><p>*பெரும் விலை கொடுக்க நேரிடும் என்பதைப் புரிந்துகொள்வார்கள்</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vice-president-cp-radhakrishnan-to-visit-tamil-nadu-on-16th">2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்</a></p><p>* துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் நடக்கும் புத்தக வெளியிட்டு விழாவில் பங்கேற்கிறார்.</p><p>* தஞ்சையில் உள்ள சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/9-rameswaram-fishermen-arrested-sri-lankan-navy-action">ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர்  கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்</a></p><p>* ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர்  இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>* மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களது 9 பேரை படகுகளையும் பறிமுதல் செய்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>என்னைத் தீண்டத்தகாதவனாக நடத்துகிறீர்கள்.. மாநிலங்களவையில் கொந்தளித்த கார்கே - என்ன நடந்தது?</title><link>https://www.maalaimalar.com/news/national/rajya-sabha-uproar-kharge-demands-case-over-purification-ritual-after-his-speech</link><comments>https://www.maalaimalar.com/news/national/rajya-sabha-uproar-kharge-demands-case-over-purification-ritual-after-his-speech#comments</comments><guid isPermaLink="false">f3ab0e82-90aa-4d04-8547-2519301bdb89</guid><pubDate>Thu, 13 Aug 2026 07:45:55 +0000</pubDate><atom:updated>2026-08-13T07:45:55.590Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மாநிலங்களவை,rajya sabha,மல்லிகார்ஜுன கார்கே,mallikarjun kharge,Untouchability,தீண்டாமை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/i989zunm/tn-12.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நட்டா, கார்கே ]]></media:title><media:description type="html"><![CDATA[ நட்டா, கார்கே ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/i989zunm/tn-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இன்று மழைக்கால கூட்டத்தோரின் கடைசி நாள். மக்களவை தொடங்கியதும் நாள் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மாநிலங்களவை வந்தே மாதரம் பாடலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. </p><p>கேரளாவின் பெயரை கேரளம் என மாற்றுவது உள்ளிட்ட மசோதாக்கள் மீது இன்று மாநிலங்களவையில் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. </p><p>இந்நிலையில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87">கார்கே</a>, தன்னைப் பற்றிய சர்ச்சை ஒன்றை எழுப்பியதால் அவை பரபரப்படைந்தது. </p> <h2>சம்பவம்</h2><p>ஆகஸ்ட் 8 அன்று உத்தரகாண்ட் மாநிலம் ஹல்தவானியில் ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது.</p><p>இதில் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்று பேசினார். இதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஸ்ரீ ராம் சேனா தர்மார்த் சேவா நியாஸ் சங்கட்டன் என்ற இந்துத்துவா அமைப்பு ஒன்று மேடையில் ஹோமம் ஒன்றை நடத்தியது.</p><p>ராம்லீலா மைதானம் ஆன்மீகப் புனிதம் வாய்ந்தது என்பதால், அதை அரசியல் கூட்டங்களுக்கு பயன்படுத்துவதற்கும், அக்கூட்டத்தில் சனாதன தர்மத்திற்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்தே இந்த சடங்கு நடத்தப்பட்டதாக அமைப்பாளர்கள் கூறினர்.</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/wso7pbek/tn-11.jpg" /></figure><h2>மாநிலங்களவையில் கார்கே</h2><p>இந்த விவகாரம் குறித்து இன்று மாநிலங்களவையில் பேசிய அவர், "நான் எந்த மதத்தையோ அல்லது சமூகத்தையோ பற்றிப் பேசவில்லை. அரசின் பிரச்சனைகளை மட்டுமே பேசினேன்.</p><p>ஆனால், எனது உரையைத் தொடர்ந்து மேடையை தூய்மைப்படுத்த ஹோமம் நடத்தியுள்ளனர். இதுதான் அரசியலமைப்பை பாதுகாப்பதா? நான் எதிர்க்கட்சித் தலைவர்.</p><p>நான் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதற்காக யாரிடமும் இறக்கப்பட்டு எனக்குப் பாதுகாப்புத் தாருங்கள் என்று மன்றாடியதில்லை.</p><p>எனக்குப் போராடும் வலிமை இருக்கிறது, போராடிக் கொண்டும் இருக்கிறேன். ஆனால், என்னைத் தீண்டத்தகாதவராக நடத்தி, மேடையைச் 'சுத்தம்' செய்து அவமானப்படுத்துகிரீர்கள்.  இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்." என வலியறுத்தினார்.</p> <h2>நட்டா விளக்கம்</h2><p>இதற்கு பதிலளித்து பேசிய மத்திய அமைச்சர் ஜேபி நட்டா, "கார்கே ஜியின் உணர்வுகள் காயப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். </p><p>பாஜக இதுபோன்ற செயல்களை ஒருபோதும் ஆதரிக்காது. இச்சம்பவம் குறித்து கண்டிப்பாக விசாரணை நடத்தப்படும்" என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>TNPSC - டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2ஏ தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி - ஆகஸ்ட் 17-ந்தேதி தொடங்குகிறது!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/online-coaching-for-group-2-and-2a-exams-starts-on-august-17</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/online-coaching-for-group-2-and-2a-exams-starts-on-august-17#comments</comments><guid isPermaLink="false">be8e6818-f869-426c-a348-57a4f6e76169</guid><pubDate>Wed, 12 Aug 2026 14:28:38 +0000</pubDate><atom:updated>2026-08-12T14:28:38.382Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>குரூப் 2 தேர்வு,Group 2 Exam,Aatchi Tamil IAS Academy,ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/er06ikfd/New-Project-2026-08-12T200821.586.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/er06ikfd/New-Project-2026-08-12T200821.586.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமி சார்பில், டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2ஏ தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 17-ந்தேதி முதல் தொடங்குகின்றன. </p><h2>குரூப்-2, 2ஏ தேர்வு</h2><p>சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமி, கடந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. </p><p>இங்கு பயிற்சி பெற்ற பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் டி.என்.பி.எஸ்.சி. நடத்திய பல்வேறு தேர்வுகளில் வெற்றி பெற்று அரசுப் பணிகளில் சேர்ந்துள்ளனர்.</p><p>இந்த நிலையில், 2026-ம் ஆண்டுக்கான குரூப்-2, 2ஏ தேர்வுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. இதன் மூலம் உதவி ஆய்வாளர், முதுநிலை ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், இளநிலைக் கண்காணிப்பாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார்பதிவாளர் நிலை-II, சிறை அலுவலர் உள்ளிட்ட மொத்தம் 821 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.</p><figure><img alt="குரூப்-2, 2ஏ தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி - ஆகஸ்ட் 17-ந்தேதி தொடங்குகிறது!" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/03034yk4/New-Project-2026-08-12T195542.631.jpg" /></figure><h2>ஆன்லைன் பயிற்சி</h2><p>நவம்பர் 1-ந்தேதி நடைபெற உள்ள குரூப்-2, 2ஏ முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெறுவதற்குத் தேவையான திட்டமிட்ட பயிற்சியை வழங்கும் வகையில், ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமியில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 17-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்குகின்றன.</p><p>மொத்தம் 75 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்புகள், தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். பயிற்சியின் ஒரு பகுதியாக தொடர் மாதிரித் தேர்வுகள் மற்றும் தேர்வு நோக்கிலான பயிற்சிகள் நடத்தப்படும்.</p><p>மேலும், தேர்வுக்குத் தேவையான ஆதார நூல்கள் மற்றும் இ-புத்தகங்கள் மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் வழங்கப்படும்.</p><p>வெற்றியை இலக்காகக் கொண்டு திட்டமிடப்பட்டுள்ள இந்த பயிற்சி வகுப்பில் சேருவதற்கான பயிற்சிக் கட்டணம் ரூ.12,500 ஆகும்.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/zkg6l6zc/New-Project-2026-08-12T200718.052.jpg" /></figure><h2>முன்பதிவு செய்யலாம்</h2><p>இந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர், ‘TNPSC GROUP II, IIA ONLINE COACHING-2026’ என்று டைப் செய்து, தங்களது பெயர் மற்றும் தொடர்பு விவரங்களை 7550151584 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பி முன்பதிவு செய்யலாம்.</p><p>இந்த தகவலை ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமி இயக்குநர் ச. வீரபாபு தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மின்சார நெருக்கடியில் வங்கதேசம்: உதவிக் கரம் நீட்ட இந்தியாவிடம் கோரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/world/bangladesh-electricity-crisis-india-aid-request</link><comments>https://www.maalaimalar.com/news/world/bangladesh-electricity-crisis-india-aid-request#comments</comments><guid isPermaLink="false">9a83d0a5-41ce-4225-8f36-44f2cfa56125</guid><pubDate>Thu, 13 Aug 2026 12:23:59 +0000</pubDate><atom:updated>2026-08-13T12:23:59.487Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,Bangladesh,வங்கதேசம்,power crisis,மின்சார நெருக்கடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/9o9f1ux3/bangaladesh.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bangladesh faces power crisis]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/9o9f1ux3/bangaladesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வங்கதேசம், தற்போது வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு மிக மோசமான மின்சார தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருகிறது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தினமும் 9 முதல் 10 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. </p><p>இந்த மின்சார நெருக்கடியைச் சமாளிக்கவும் எரிபொருள் இருப்பை உயர்த்தவும் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச அரசு, இந்தியாவிடம் கூடுதல் டீசல் வழங்கி உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.</p><h2>இருளில் மூ<strong>ழ்கிய கிரா</strong>மப்புறங்கள்</h2><p>வங்கதேசத்தில் மின்சாரத் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய தரவுகளின்படி நாட்டின் மின்சாரத் தேவை சுமார் 18,000 மெகாவாட்டாக உள்ள நிலையில், மின் உற்பத்தி வெறும் 13,000 மெகாவாட் அளவிலேயே உள்ளது. இதனால் சுமார் 5,000 மெகாவாட் அளவிற்கு கடுமையான மின் பற்றாக்குறை நிலவுகிறது. தலைநகர் டாக்காவைத் தவிர்த்து, வெளி மாவட்டங்களிலும் கிராமப்புறங்களிலும் இதன் தாக்கம் மிக மோசமாக உள்ளது. </p><p>ஒரு நாளைக்கு 8 முதல் 10 மணி நேரம் வரை தொடர் மின்வெட்டு ஏற்படுவதால் வணிகங்கள், சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் விவசாயப் பணிகள் ஸ்தம்பித்துப் போயுள்ளன. தீவிர வெப்ப அலை வீசி வரும் சூழலில், இந்த நீண்ட நேர மின்வெட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையை மேலும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது.</p><h2>அவ<strong>சர நடவடிக்கை</strong>கள்</h2><p>மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் நாட்டின் அரசு பல்வேறு அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வர்த்தக வளாகங்கள், கடைகள் மற்றும் சந்தைகள் அனைத்தும் இரவு 8 மணிக்குள் கட்டாயமாக மூடப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மின்சார சேமிப்பை உறுதி செய்ய பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு முன்னதாகவே விடுமுறை அறிவிப்பது உள்ளிட்ட பல்வேறு அவசரகால நடவடிக்கைகளையும் வங்கதேச அரசு மேற்கொண்டு வருகிறது.</p><h2>டீ<strong>சல் விநியோகத்திற்காக</strong> இந்தியாவை நாடும் வங்கதேசம்</h2><p>மின் பற்றாக்குறைக்கு எரிபொருள் தட்டுப்பாடே முதன்மையான காரணியாக இருப்பதால், இந்தியாவிடம் இருந்து கூடுதல் டீசல் இறக்குமதி செய்ய வங்கதேச அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. அசாமின் நுமாலிகர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து எல்லை தாண்டிய 'இந்தியா-வங்கதேச நட்புறவு குழாய் பாதை' வழியாக டீசல் விநியோகத்தை அதிகரிக்குமாறு வங்கதேசத்தின் மின் மற்றும் எரிசக்தி அமைச்சகம் இந்திய தூதரக அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. வங்கதேசத்தில் நிலவும் இந்த கடுமையான எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க இந்தியா கூடுதல் டீசல் வழங்கி உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>ரூ.36.53 கோடி இ-சலான் மோசடி: 3 ஆண்டுகளாக இழுத்தடிக்கும் போலீஸ் விசாரணை - ஆந்திர உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி!</title><link>https://www.maalaimalar.com/news/national/36-53-crore-e-challan-fraud-andhra-high-court-anger</link><comments>https://www.maalaimalar.com/news/national/36-53-crore-e-challan-fraud-andhra-high-court-anger#comments</comments><guid isPermaLink="false">537b215b-7ad7-44d1-8c30-86a2aeb695d0</guid><pubDate>Thu, 13 Aug 2026 12:18:45 +0000</pubDate><atom:updated>2026-08-13T12:18:45.328Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உயர்நீதிமன்றம்,ஆந்திர பிரதேசம்,Highcourt,AndraPradesh,PoliceInvestigation,OnlineFraud,EChallanScam,இ-சலான்,DataEvolveSolutions,TrafficChallanScam</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/x8x00fwa/AndraPradesh-HighCourt" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ AP HighCourt]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/x8x00fwa/AndraPradesh-HighCourt?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/andhra-pradesh">ஆந்திரா</a>வில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான இ-சாலன் வசூலில் ரூ.36.53 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில், 3 ஆண்டுகள் ஆகியும் போலீசார் விசாரணையை முடிக்காதது குறித்து ஆந்திர உயர்நீதிமன்றம் தனது கடுமையான அதிருப்தியைத் தெரிவித்துள்ளது. </p><p>இந்த விவகாரத்தில் டிஜிபி உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விசாரணையின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>குண்டூரைச் சேர்ந்த ஷிபி சக்ரவர்த்தி என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கின் அடிப்படையில், தலைமை நீதிபதி லிசா கில் மற்றும் நீதிபதி சல்லா குணரஞ்சன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த அதிருப்தியை வெளியிட்டுள்ளது.</p><h2><strong>வழக்கின் பின்னணி என்ன?</strong></h2><h2><strong>குளோனிங் ஆப் மூலம் மோசடி</strong></h2><p>காவல்துறைக்குத் தொழில்நுட்ப சேவைகளை வழங்கி வந்த 'டேட்டா எவால்வ் சொல்யூஷன்ஸ்' என்ற நிறுவனம், தங்களுடைய ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் சட்டவிரோதமாக ஒரு 'குளோனிங் ஆப்' மூலம் வாகன ஓட்டிகளிடம் இருந்து இ-சலான் பணத்தைத் தொடர்ந்து வசூலித்துள்ளது.</p><h2><strong>கோடிக்கணக்கில் பணம் திசைதிருப்பல்</strong></h2><p>இவ்வாறு போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட ரூ.36.53 கோடி அரசு கணக்கிற்குச் செல்லாமல், அந்த நிறுவனத்தின் இயக்குநர் அவினாஷ் என்பவரின் தனிப்பட்ட கணக்குகளுக்குத் திசைதிருப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவினாஷ், அக்ஷிதா, ரவிகிரண் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.</p><h2><strong>நீதிமன்றம் காட்டிய அதிருப்தி</strong></h2><p>இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஏ. ஜெயந்தி ஆஜராகி, "வழக்கின் விசாரணை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கூடுதல் சாட்சிகளை விசாரிக்க வேண்டியுள்ளது மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன" என்று விளக்கம் அளித்தார்.</p><p>ஆனால், இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஒரு மோசடி வழக்கில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை நிலுவையில் இருப்பதை ஏற்க முடியாது என்றனர். </p><p>இந்த மந்தமான விசாரணை குறித்து டிஜிபியின் கவனத்திற்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கவும், வழக்கின் இறுதி அறிக்கை அல்லது குற்றப்பத்திரிகையை விரைந்து தாக்கல் செய்யவும் போலீசாருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பிறப்புச் சுற்றுலாவுக்கு முற்றுப்புள்ளி: 600-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரின் விசாக்களை ரத்து செய்தது அமெரிக்கா!</title><link>https://www.maalaimalar.com/news/world/us-crackdown-on-birth-tourism-600-plus-visas-revoked</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-crackdown-on-birth-tourism-600-plus-visas-revoked#comments</comments><guid isPermaLink="false">b10fe2d0-18d1-462e-8767-64728b81df0e</guid><pubDate>Thu, 13 Aug 2026 12:11:34 +0000</pubDate><atom:updated>2026-08-13T12:11:34.576Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,America,விசா ரத்து,பிறப்புச் சுற்றுலா,Birth tourism,visa cancel</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/lpp2rxls/visa.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Trump]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/lpp2rxls/visa.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவில் பிறக்கும் வெளிநாட்டினரின் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கும் பிறப்புரிமை குடியுரிமை சட்டத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தடை விதித்து உத்தரவிட்டார்.</p><p>இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பிறப்புரிமை குடியுரிமையை முடிவுக்குக் கொண்டுவரும் டிரம்பின் நிர்வாக உத்தரவை அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஜூன் 30-ந்தேதி ரத்து செய்தது.</p><p>இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு பிறப்புரிமை குடியுரிமையைக் கட்டுப்படுத்த டிரம்ப் 2 புதிய நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டார். இதில் அமெரிக்காவிற்கு வந்து குழந்தையைப் பெற்றெடுக்கும் நோக்கத்துடன் விசா கோருபவர்களை கட்டுப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.</p><p>இந்த நிலையில் பிறப்புச் சுற்றுலாவுக்கு எதிரான தீவிர நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கடந்த ஒரு மாதத்தில் வெளிநாட்டினரின் 600-க்கும் மேற்பட்ட விசாக்களை ரத்து செய்து உள்ளதாக வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.</p><p>வெளியுறவுத்துறையால் சமீபத்தில் உருவாக்கப்பட்ட ‘பிறப்புச் சுற்றுலா தடுப்புப் பணிக்குழு’வின் ஆய்வைத் தொடர்ந்து இந்த விசா ரத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.</p><p>இதுதொடர்பாக மார்கோ ரூபியோ தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:-</p><p>வெறும் ஒரு மாதத்தில், பிறப்புச் சுற்றுலா தடுப்புப் பணிக்குழு உலகம் முழுவதும் உள்ள வெளிநாட்டினரின் 600-க்கும் மேற்பட்ட விசாக்களை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்தத் துஷ்பிரயோகத்திலிருந்து நமது நாட்டைப் பாதுகாக்கும் பணியைத் தொடர்ந்து மேற்கொள்ளும். அமெரிக்கக் குடியுரிமை விற்பனைக்குரியது அல்ல என்றார்.</p><p>மேலும் அமெரிக்கச் சட்டங்களைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு பிறப்புச் சுற்றுலா மூலம் பெரும் லாபம் ஈட்ட சில கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன.</p><p>வெளிநாட்டினர் தங்கள் குழந்தைகளுக்கு அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றுத்தரும் நோக்கில், அமெரிக்க விசா நடைமுறையை ஏமாற்ற அவர்களுக்குப் பயிற்சி அளிப்பது, பயணம் மற்றும் தங்குமிட ஏற்பாடுகளைச் செய்வது, ஏன் போலி ஆவணங்களைத் தயாரிப்பது போன்ற செயல்களில் இக்கும்பல்கள் ஈடுபடுகின்றன என்று மார்கோ ரூபியோ குற்றம்சாட்டி உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பாஜக-விடம் பணம் மட்டுமே மிச்சம் உள்ளது: அகிலேஷ் யாதவ்</title><link>https://www.maalaimalar.com/news/national/only-money-left-for-bjp-to-win-elections-akhilesh-yadav</link><comments>https://www.maalaimalar.com/news/national/only-money-left-for-bjp-to-win-elections-akhilesh-yadav#comments</comments><guid isPermaLink="false">2d9f6fd8-7d5e-4cf3-afb8-05bcda01be18</guid><pubDate>Thu, 13 Aug 2026 12:10:44 +0000</pubDate><atom:updated>2026-08-13T12:10:44.900Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,அகிலேஷ் யாதவ்,Akhilesh Yadav,Samajwadi party,சமாஜ்வாடி கட்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/cnec5bd2/Untitled-design-43.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Akhilesh Yadav]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/cnec5bd2/Untitled-design-43.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரப் பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், பெண்களுக்கு ரூ. 20,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படலாம் என்று செய்தி வெளியான நிலையில், தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பாரதிய ஜனதா கட்சியிடம் பணத்தை தவிர வேறு எதுவும் இல்லை என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். </p><p>உத்தரப் பிரதேசத்தில் 403 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இதற்கிடையில் தேர்தல் வாக்குறுதியாக உத்தரப் பிரதேசத்தில் உள்ள பெண்களுக்கு பாஜக ஊக்கத்தொகையாக ரூ.20,000 வழங்கப்பட உள்ளதாக இணையத்தில் தகவல் வெளியானது.</p><h3><strong>அகிலேஷ் யாதவ் பதிவு</strong></h3><p>இந்நிலையில் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பாஜக-விடம் பணத்தை தவிர வேறு எதுவும் மிச்சமில்லை.</p><p>அதுவும் பாஜக முறைகேடாக சம்பாதித்த பணம் தான்; அந்த பணத்தை உத்தரப் பிரதேசத்தின் மதப்பற்றுள்ள பெண்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.</p><p>பெண்களுக்கு பணம் வழங்கப்படும் என அறிவித்து தேர்தலில் வெற்றி பெற்ற மற்ற மாநிலங்களில், ஒருபுறம் அதை கொடுக்க தயங்கும் அதே வேளையில், மறுபுறம் பாஜக கொடுத்த பணத்தை மக்களிடம் திரும்ப கேட்கிறார்கள்.</p><p>அந்த பணத்தை திருப்பி கொடுக்க முடியாத பெண்களுக்கு எதிராக, பாஜக காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள் மற்றும் வழக்குகள் போன்ற கண்டிக்கத்தக்க வழிகளை கையாள்கிறது என்று உத்தரப் பிரதேசத்தின் பெண்கள் கேள்வி எழுப்புகின்றனர்.</p><p>இன்று பாஜக அரசு ஆண்டுக்கு ரூ.50,000 வழங்குவது பற்றி பேசுகிறது, ஆனால் கடந்த 10 ஆண்டுகளிலேயே இந்த பணத்தை அவர்களால் கொடுத்திருக்க முடியும், இருந்தும் அவர்கள் அதை கொடுக்கவில்லை.</p><p>பாஜகவின் ஊழல் நிறைந்த அரசு கடந்த 10 ஆண்டுகளில் பெண்களுக்குச் சொந்தமான 5 லட்சம் ரூபாயை விழுங்கிவிட்டது. இப்போது வெறும் 20,000 ரூபாய் மட்டுமே தருவதாக வெற்றுப் பேச்சு பேசுகிறது.</p><p>5 லட்சம் ரூபாயில் 20,000 ரூபாய் என்பது வெறும் நான்கு சதவீதம் மட்டுமே. அதாவது, இந்த பாஜகவினர் பெண்களின் பங்கில் 96 சதவீதத்தை விழுங்கிவிட்டனர்.</p><p>கோயிலில் நடந்த திருட்டு மற்றும் குழந்தைகள் மீதான தாக்குதல்களுக்குப் பிறகு, பாஜகவிடம் அறநெறியும் இல்லை, தைரியமும் இல்லை.</p><p>பாஜக தனது திட்டங்களின் கீழ் தகுதியுள்ளவர்களுக்கு பலன்களை வழங்கும்போதெல்லாம், அந்தப் பணம் அதற்கு உரிமையுள்ளவர்களை சென்றடைவதுதான் முக்கியமான விஷயம்,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஜார்க்கண்ட் போராட்டம்: அடையாளம் தெரியாத 500 மாணவர்கள் உட்பட 600 பேர்மீது வழக்குப்பதிவு!</title><link>https://www.maalaimalar.com/news/national/jharkhand-protest-cases-registered-against-600-people-including-500-unidentified-students</link><comments>https://www.maalaimalar.com/news/national/jharkhand-protest-cases-registered-against-600-people-including-500-unidentified-students#comments</comments><guid isPermaLink="false">91cb4245-9dc4-4af2-8ba6-01e0f829b156</guid><pubDate>Thu, 13 Aug 2026 12:06:24 +0000</pubDate><atom:updated>2026-08-13T12:06:24.600Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Jharkhand,மாணவர்கள் போராட்டம்,ஜார்க்கண்ட்,students protest</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/rfeubmev/New-Project-2026-08-13T173559.455.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜார்க்கண்ட் போராட்டம்: அடையாளம் தெரியாத 500 மாணவர்கள் உட்பட 600 பேர்மீது வழக்குப்பதிவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/rfeubmev/New-Project-2026-08-13T173559.455.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜார்க்கண்டில் அரசுப் பணி தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக போராடிய 500 அடையாளம் தெரியாத மாணவர்கள் உட்பட மொத்தம் 600 பேர் மீது அம்மாநில காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.  </p><p>ராஞ்சியில் உள்ள சட்டமன்றத்தை நோக்கி மாணவர்கள் நடத்திய பேரணியில் தடை உத்தரவுகளை மீறியது மற்றும் தடுப்புகளை உடைத்தது போன்ற காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>போராட்டம்</h2><p>ஜார்க்கண்ட் மாநில அரசால் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளில் நடைபெற்ற குளறுபடிகளை கண்டித்தும், குளறுபடி நடந்த தேர்வுகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்; இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தவேண்டும் என மாணவர்கள் கடந்த 20 நாட்களாக தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ரகுபர் தாஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் மாணவர்களின் CBI விசாரணை கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். </p><p>மாணவர்களின் தொடர் போராட்டத்தை அடுத்து, முறைகேடு புகார் எழுந்த 3 அரசுத் தேர்வுகளை ரத்து செய்ய ஜார்க்கண்ட் அரசு ஒப்புக்கொண்டுள்ளது. எனினும், அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறும் வரை தங்களது உண்ணாவிரதம் மற்றும் போராட்டங்கள் தொடரும் என மாணவர் அமைப்புகள் அறிவித்துள்ளன.</p><p>இந்நிலையில் இப்போராட்டதின் ஒருபகுதியாக திங்கள்கிழமையன்று ஜார்க்கண்ட் சட்டமன்றத்தை முற்றுகையிட முயன்ற சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். </p><p>600 போராட்டக்காரர்கள் மீது காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் 100 போராட்டக்காரர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அடையாளம் தெரியாத 500 மாணவர்கள் மற்றும் பிற போராட்டக்காரர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டிஎன்பிஎல்: நெல்லை அணி வெற்றி பெற 163 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கோவை</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/nellai-royal-kings-needs-163-runs-to-win-against-kovai-kings-in-tnpl-2026</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/nellai-royal-kings-needs-163-runs-to-win-against-kovai-kings-in-tnpl-2026#comments</comments><guid isPermaLink="false">2c4a889f-558c-4798-90a9-b57e3d85f91f</guid><pubDate>Thu, 13 Aug 2026 11:56:59 +0000</pubDate><atom:updated>2026-08-13T11:56:59.132Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,Nellai Royal Kings,நெல்லை ராயல் கிங்ஸ்,கோவை கிங்ஸ்,vida kovai kings</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/nofpe9vp/kovai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ kovai kings]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/nofpe9vp/kovai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை அணிக்கு எதிரான போட்டியில் கோவை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்துள்ளது.</p><p>10-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் அடுத்த நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி  மைதானத்தில் நடந்து வருகிறது.</p><h2>நெல்லை ராயல் கிங்ஸ்</h2><p>இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 16-வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.</p><p>அதன்படி, கோவை கிங்ஸ் அணி முதலில் களமிறங்கியது. அணியின் எண்ணிக்கை 6 ஆக இருந்தபோது தொடக்க ஆட்டக்காரர் ராதாகிருஷ்ணன் 5 ரன்னில் அவுட்டானார்.</p><p>2-வது விக்கெட்டுக்கு இணைந்த சுரேஷ் லோகேஷ்வர்-பாலசுப்ரமணியன் சச்சின் ஜோடி 59 ரன்கள் சேர்த்த நிலையில் சுரேஷ் லோகேஷ்வர் 26 ரன்னில் ஆட்டமிழந்தார்.</p><p>அதிரடியாக ஆடிய பாலசுப்பிரமணியன் 42 ரன்னில் வெளியேறினார். கேப்டன் ஷாருக் கான் 29 ரன்னில் அவுட்டானார்.</p><p>இறுதியில், கோவை கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை எடுத்துள்ளது.</p><p>நெல்லை அணி சார்பில் யுதீஸ்வரன் 3 விக்கெட்டும், இம்மானுவல் செரியன், சச்சின் ராதி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.</p><p>இதையடுத்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை கிங்ஸ் அணி களமிறங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்காவில் பயங்கரம்: தாய்-சகோதரரை கொன்ற இந்திய வம்சாவளி மாணவர்</title><link>https://www.maalaimalar.com/news/world/horror-in-america-indian-origin-student-kills-mother-brother</link><comments>https://www.maalaimalar.com/news/world/horror-in-america-indian-origin-student-kills-mother-brother#comments</comments><guid isPermaLink="false">9329da1a-7bc2-4070-8c19-6cff3bf3cfd2</guid><pubDate>Thu, 13 Aug 2026 11:22:19 +0000</pubDate><atom:updated>2026-08-13T11:22:19.916Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Arrest,America,Indian student,அமெகரிக்கா,இந்திய வம்சாவளி மாணவர்,சகோதரர் கைது</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/v41iz1yu/USA.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ USA]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/v41iz1yu/USA.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவின் மாசசூ செட்ஸ் மாகாணத்தில் உள்ள ஆக்டன் பகுதியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுதா வெங்கடேசன் (வயது 45), தனது கணவர், மகன்கள் அர்ஜூன் அரவிந்த் (17), சித்தார்த் அரவிந்த் (14) ஆகியோருடன் வசித்து வந்தார். இந்தநிலையில் சுதா வெங்கடேசனும், சித்தார்த் அரவிந்தும் பிணமாக கண்டெடுக்கபட்டனர்.</p><p>அவர்களது வீட்டுக்கு வந்த டியூசன் ஆசிரியர், அழைப்பு மணியை நீண்ட நேரம் அழுத்தியபோதும் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து அவர் சுதா வெங்கடேசனின் கணவரை போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். உடனே அவரும் தனது குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முயன்றனார்.</p><p>ஆனால் யாரும் போனை எடுக்கவில்லை. இதனால் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அந்த வீட்டுக்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அங்கு முதல் தளத்தில் சித்தார்த் அரவிந்தும், கீழ் தளத்தில் உள்ளஅறையில் சுதா வெங்கடேசனும் பிணமாக கிடந்தனர். அவர்களது உடல்களில் காயங்கள் இருந்தன. </p><p>வீட்டில் மூத்த மகன் அர்ஜூன் அரவிந்த் இல்லை. விசாரணையில் தாய்- சகோதரனை அர்ஜூன் அரவிந்த் கொலை செய்ததும், பின்னர் தனது தாயின் காரில் தப்பி சென்றதும் தெரியவந்தது. இந்த சம்பவம் சுதா வெங்கடேசனின் கணவர் காலையில் வேலைக்கு சென்றபிறகு நடந்து உள்ளது.</p><p>தப்பி சென்ற அர்ஜூன் அரவிந்தை போலீசார் தீவிரமாக தேடினர். மாசசூ செட்சின் வேய்லாண்டில் உள்ள ஒரு வாகன நிறுத்து மிடத்தில் இருந்த அர்ஜூன் அரவிந்த்தை போலீசார் கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. </p><p>இதில் உயர்நிலைப்பள்ளி மாணவரான அர்ஜூன் தனது குடும்பத்தைக் கொல்வது தொடர்பான யோசனைகள் அல்லது கருத்துகளை இணையத்திலும் சாட்ஜிபிடியிலும் தேடி உள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தாய்-தம்பியை கொலை செய்வதற்கு அர்ஜூன் அரவிந்த் எந்த ஆயுதத்தை பயன்படுத்தினார் என்ற தகவலை போலீசார் வெளியிடவில்லை.</p>]]></content:encoded></item><item><title>வார இறுதி நாட்களில் வேலையே இல்லை: டிரெண்டாகும் இந்திய வம்சாவளி பெண் தொழிலதிபரின் கொள்கை!</title><link>https://www.maalaimalar.com/news/national/no-work-on-weekends-policy-of-indian-origin-woman-entrepreneur-goes-viral</link><comments>https://www.maalaimalar.com/news/national/no-work-on-weekends-policy-of-indian-origin-woman-entrepreneur-goes-viral#comments</comments><guid isPermaLink="false">f8120259-5821-48a4-9f88-1a9307f2aaa2</guid><pubDate>Thu, 13 Aug 2026 10:54:29 +0000</pubDate><atom:updated>2026-08-13T10:54:29.307Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>mumbai,மும்பை,Sara Sham,Interior Design,சாரா ஷாம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/p287nkl8/WOMAN.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Sara Sham]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/p287nkl8/WOMAN.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மும்பையில் பிறந்து சர்வதேச அளவில் புகழ்பெற்ற உட்புற வடிவமைப்பு (Interior Design) கலைஞராக விளங்கும் சாரா ஷாம், தனது நிறுவன ஊழியர்களுக்கு வார இறுதி நாட்களில் எவ்வித வேலையும் தரப்படுவதில்லை என்ற அறிவிப்பின் மூலம் உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளார். மாலை 6 மணிக்கு மேல் தனது அலுவலகப் பணிகளை முற்றிலும் நிறுத்திவிடும் இவரது இந்த அதிரடி நடைமுறை, கார்ப்பரேட் உலகில் பணி கலாச்சாரம் குறித்த புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>ஊழியர்களின் நலனே முக்கியம்</h2><p>சாரா ஷாம் நடத்தும் வடிவமைப்பு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வாரத்தில் ஐந்து நாட்கள், தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே வேலை செய்கிறார்கள். திட்டப்பணிகள் முடிவதில் தாமதம் ஏற்பட்டாலும், வார இறுதி நாட்களிலோ அல்லது ஞாயிற்றுக்கிழமைகளிலோ ஊழியர்களுக்கு தொலைபேசி அழைப்புகளோ அல்லது அவசரக் கெடுவோ விதிக்கப்படுவதில்லை. காலக்கெடுவைத் தவறவிடும் சூழல் உருவாகும்போது, இருக்கும் ஊழியர்களை அதிக நேரம் வேலை செய்ய வற்புறுத்துவதற்குப் பதிலாக, புதிய பணியாளர்களைச் சேர்த்துக் கொள்வதையே சாரா வழக்கமாகக் கொண்டுள்ளார்.</p><p>இந்தக் கடுமையான நடைமுறையின் காரணமாக, சில பெரிய வாடிக்கையாளர்கள் தங்களது ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு வெளியேறியுள்ளனர். வார இறுதி நாட்களில் தங்களுக்குக் கிடைக்கக்கூடிய பிற நிறுவனங்களை அவர்கள் நாடியபோதிலும், சாரா தனது கொள்கையிலிருந்து சிறிதும் பின்வாங்கவில்லை. வாடிக்கையாளர்களை இழப்பதைப் பற்றி கவலைப்படாமல், ஊழியர்களின் ஓய்வு நேரத்திற்கு முன்னுரிமை அளிப்பதே தனது நிறுவனத்தின் முதன்மை இலக்கு என அவர் கூறுகிறார்.</p><h2>ப<strong>டைப்பாற்றல் என்பது கிணறு போன்ற</strong>து</h2><p>தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்பக் கட்டத்தில் தானும் தினமும் நள்ளிரவு வரை உழைத்து, குடும்ப நேரத்தையும், ஓய்வையும் இழந்ததாகத் தெரிவிக்கும் சாரா, நாளடைவில் தனது சிந்தனையை மாற்றிக் கொண்டார். அதிக மணிநேரம் தொடர்ச்சியாக வேலை செய்வதன் மூலம் சிறந்த படைப்புகள் உருவாக்கப்படுவதில்லை என்றும், போதிய ஓய்வு பெற்ற பின்னரே புதிய மற்றும் சிறந்த யோசனைகள் பிறக்கின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.</p><p>படைப்பாற்றலை அவர் ஒரு கிணற்றுடன் ஒப்பிட்டுக் கூறுகையில், குழாயைத் திறந்து வைத்தால் நீர் வந்துகொண்டே இருக்கும், ஆனால் கிணறு அப்படிப்பட்டது அல்ல; அதைத் தொடர்ந்து இறைத்துக் கொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில் நீர் வற்றிவிடும் என்று விளக்கம் அளித்துள்ளார். ஊழியர்களைத் தொடர்ந்து ஓய்வின்றி உழைக்க வைத்தால், அவர்களுடைய படைப்பாற்றல் படிப்படியாகக் குறைந்து, வேலையின் தரம் பாதிக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.</p><h2>சர்வ<strong>தேச அளவில் பாராட்டு</strong></h2><p>மைக்ரோசாப்ட் ஜப்பான் நிறுவனம் 2019-ஆம் ஆண்டில் பரிசோதனை முறையில் அமல்படுத்திய 4 நாள் வேலை வாரத் திட்டத்தையும் சாரா தனது உரையாடலில் சுட்டிக்காட்டியுள்ளார். ஊழியர்களுக்குக் கூடுதல் ஓய்வு அளிக்கப்பட்டபோது அவர்களின் பணித்திறன் சுமார் 40 சதவீதம் அதிகரித்ததாக அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.</p><p>சாரா ஷாமின் இந்த லிங்க்ட்இன் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெருநிறுவனங்களின் தீவிர பணி அழுத்தத்திற்கு மத்தியில், ஊழியர்களின் மனநலனுக்கும் பணி-வாழ்க்கை சமநிலைக்கும் முன்னுரிமை அளிக்கும் சாராவின் இந்தத் துணிச்சலான முடிவைப் பல தொழிலதிபர்களும் ஊழியர்களும் பாராட்டி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>51 வருட ஹாக்கி உலகக்கோப்பை சோகத்தை முடிக்க வேண்டும் - கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் அதிரடி பேட்டி!</title><link>https://www.maalaimalar.com/sports/india-hockey-captain-harmanpreet-singh-on-ending-51-year-world-cup-heartbreak</link><comments>https://www.maalaimalar.com/sports/india-hockey-captain-harmanpreet-singh-on-ending-51-year-world-cup-heartbreak#comments</comments><guid isPermaLink="false">f6e2e0c5-bc9e-42b6-b637-46f9a7a64626</guid><pubDate>Thu, 13 Aug 2026 10:45:27 +0000</pubDate><atom:updated>2026-08-13T10:45:27.643Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>hockey,ஹாக்கி,HarmanpreetSingh,ஹர்மன்பிரீத்சிங்,Hockey WorldCup,Indian HockeyTeam</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/8y4xwiae/Indian-HockeyTeam" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Indian HockeyTeam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/8y4xwiae/Indian-HockeyTeam?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/hockey-india">இந்திய ஹாக்கி</a> ரசிகர்களின் 51 ஆண்டுகால உலகக்கோப்பை பதக்கக் கனவை இம்முறை எப்படியாவது நனவாக்க வேண்டும் என்று முழு மூச்சில் களமிறங்குகிறது இந்த ஆடவர் ஹாக்கி அணி. </p><p>சனிக்கிழமை அன்று நடக்கவுள்ள தனது முதல் லீக் போட்டியில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF">இந்திய அணி</a>, வேல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.</p><p>கடந்த உலககோப்பைகளில் இந்திய அணி 6 மற்றும் 9 வது இடங்களை மட்டுமே பிடித்து ஏமாற்றம் அளித்திருந்தது. </p><p>இந்த முறை பெங்களூரு சாய் மைதானத்தில் கடுமையான உடல் தகுதிப் பயிற்சிகளையும், சுவிட்சர்லாந்தில் மனவலிமைக்கான சிறப்பு முகாம்களையும் முடித்துவிட்டு, கேப்டன் <a href="https://www.maalaimalar.com/topic/harmanpreet-singh">ஹர்மன்பிரீத் சிங்</a> மிகவும் நம்பிக்கையுடன் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.</p><h2>அதில்,</h2><h2>உலகக்கோப்பைக்கு அணி எப்படி தயாராகியிருக்கிறது?</h2><p>உலகக்கோப்பை 4 வருடங்களுக்கு ஒருமுறை தான் வரும். அதன் முக்கியத்துவம் எங்களுக்கே தெரியும். கடந்த இரண்டு உலகக்கோப்பைகளை நாம் சொந்த நாட்டில் விளையாடினோம், இந்த முறை வேறு ஒரு புதிய சூழலில் விளையாடப் போகிறோம். </p><p>இந்த வாய்ப்பை <a href="https://www.maalaimalar.com/topic/hockey-india">இந்திய ஹாக்கி</a> வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாக மாற்ற அணி வீரர்கள் துடிக்கிறார்கள்.</p><h2>51 வருடங்களாக பதக்கம் வெல்லவில்லை என்ற பெரிய எதிர்பார்ப்பு உங்களுக்கு பயத்தையோ, அழுத்தத்தையோ தருகிறதா?</h2><p>இதை நான் பயம் என்றோ, பிரஷர் என்றோ சொல்ல மாட்டேன். இது எங்களுடைய பொறுப்பு, நாட்டிற்காக செய்ய வேண்டிய கடமை. கடந்த காலத்தில் இந்தியா ஹாக்கியில் படைத்த வரலாற்றுச் சாதனைகள் தான் எங்களை இன்னும் வேகமாக ஓட தூண்டுகின்றன. </p><p>உலகத் தரவரிசையில் நாம் 7-வது இடத்தில் இருக்கிறோம். இது நமக்கு குறைவான ரேங்கிங் தான். இத்தொடரில் நாம் களம் இறங்கும்போது பலவீனமான அணியாகப் பார்க்கப்பட்டாலும், ஒரு குழுவாக எங்களால் எதையும் சாதிக்க முடியும் என்ற அசாத்திய நம்பிக்கை எங்களிடம் உள்ளது.</p><h2>அணியில் 8 இளம் வீரர்கள் முதன்முறையாக உலகக்கோப்பையில் விளையாடுகிறார்கள், அவர்களை எப்படி கையாள்கிறீர்கள்?</h2><p>ஒவ்வொரு வீரருக்கும் தங்களின் கடமை என்னவென்று நன்றாகத் தெரியும். சின்ன வயதில் இருந்தே நாட்டின் ஜெர்சியை அணிந்து உலகக்கோப்பை, ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பது தான் அவர்களின் கனவு. </p><p>பெரிய தொடர் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகமாகத் தான் இருக்கும். ஆனால், இளம் வீரர்கள் மேல் தேவையில்லாத பிரஷரை நாங்கள் ஏற்ற விரும்பவில்லை. </p><p>அவர்களை மைதானத்தில் பயமில்லாமல், ஆட்டத்தை ரசித்து விளையாடச் சொல்லியிருக்கிறேன். ஒரு டீமாக திட்டங்களைச் சரியாகச் செய்தால், வெற்றி நிச்சயம் நம் பக்கம் வரும்.</p><h2>பெனால்டி கார்னர்களை கோலாக மாற்றும் 'டிராக் பிளிக்கர்கள்' அணியில் அதிகமாக இருப்பது உங்கள் சுமையைக் குறைக்கிறதா?</h2><p>கேப்டனாக என் மேல் எப்போதுமே ஒரு கண் இருக்கும். ஆனால் இப்போது அணியில் எனக்குப் போட்டியாகவும், எனக்கு உதவியாகவும் பல திறமையான வீரர்கள் இருப்பது அணிக்குக் கிடைத்த பெரிய பிளஸ் பாயிண்ட். </p><p>மைதானத்தில் வேகமாக ஓடிவந்து திடீரென பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைக்கும்போது, பதற்றப்படாமல் எப்படி மனதை அமைதியாக வைத்து இலக்கைத் தாக்க வேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்துள்ளேன். </p><p>"அதிகமாக யோசிக்காதீங்க, உங்க திறமையை நம்பி 100% உழைப்பைக் கொடுங்க" என்பது தான் அவர்களுக்கு நான் கொடுத்த எளிய மெசேஜ் என்று கூறினார்.</p><h2>இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக விளையாடப் போவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?</h2><p>சமீபத்தில் நடந்த ப்ரோ லீக் போட்டிகளில் இந்த இரண்டு அணிகளுக்கு எதிராகவும் பல புதிய திட்டங்களைச் செய்து காட்டி வெற்றி பெற்றோம். அந்த தைரியம் இப்போது எங்களிடம் உள்ளது.</p><p>அவர்களின் ஆட்ட முறை நம்மைப் போன்றது தான் என்பதால், அவர்களிடம் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களை இந்த உலகக்கோப்பையில் சரியாகப் பயன்படுத்துவோம்.</p><h2>உலகக்கோப்பையில் பாகிஸ்தானுடன் மோதுவது கூடுதல் டென்ஷனை தருமா?</h2><p>பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி என்றாலே மைதானத்தில் சுற்றியிருக்கும் ரசிகர்களிடம் ஒரு தனி உணர்ச்சியும், பரபரப்பும் இருக்கும் என்பது உண்மைதான். ஆனால், எங்களுக்குள் எந்த பயமும் இல்லை. </p><p>எங்களைப் பொறுத்தவரை இந்தியாவுக்காக விளையாடுகிறோம் என்ற அந்தப் பொறுப்பு தான் முக்கியம். எங்கள் கவனம் முழுக்க ஆட்டத்தின் மீது மட்டுமே இருக்கும் என்று நம்பிக்கையுடன் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் வருகிற 17-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/districts-in-tamil-nadu-likely-to-receive-rain-until-the-17th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/districts-in-tamil-nadu-likely-to-receive-rain-until-the-17th#comments</comments><guid isPermaLink="false">10293906-78d5-4ae3-b618-a66a79d53813</guid><pubDate>Thu, 13 Aug 2026 10:30:55 +0000</pubDate><atom:updated>2026-08-13T10:30:55.622Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Rain,IMD,Chennai Rain,சென்னை மழை,சென்னை வானிலை ஆய்வு மையம்,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/hutmt8ns/rain005.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மழை]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/hutmt8ns/rain005.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.</strong></em> </p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (feeble Trough) நிலவுகிறது.</p><p>இன்று நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.</p><p>மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் வடக்கு கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>நாளை நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>15-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>16-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>17-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>18-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, ஈரோடு, சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>19-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, ஈரோடு, சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>இதனிடையே இன்று முதல் 17-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் வட உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>இன்று முதல் 17-ந்தேதி வரை தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>மகாராஷ்டிராவின் முன்னாள் துணை முதலமைச்சருக்கு கத்திக்குத்து!</title><link>https://www.maalaimalar.com/news/national/former-deputy-chief-minister-of-maharashtra-stabbed</link><comments>https://www.maalaimalar.com/news/national/former-deputy-chief-minister-of-maharashtra-stabbed#comments</comments><guid isPermaLink="false">06623a3d-5f18-4010-b541-5d9177beb830</guid><pubDate>Thu, 13 Aug 2026 10:30:39 +0000</pubDate><atom:updated>2026-08-13T10:30:39.472Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,மகாராஷ்டிரா,Sukhbir Singh Badal,அகாலி தளம்,சுக்பீர் சிங் பாதல்,Akali Dal</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/phe1c6zp/New-Project-2026-08-13T154327.599.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மகாராஷ்டிராவின் முன்னாள் துணை முதலமைச்சருக்கு கத்திக்குத்து!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/phe1c6zp/New-Project-2026-08-13T154327.599.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அகாலி தளம் தலைவரும், பஞ்சாபின் முன்னாள் துணை முதலமைச்சருமான சுக்பீர் சிங் பாதல்மீது மர்ம நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>மகாராஷ்டிர மாநிலம் நாந்தேடு பகுதியில் உள்ள குருத்வாரா அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. நேற்று நான்டெட்டில் உள்ள தக்த் ஸ்ரீ ஹசூர் சாஹிப் குருத்வாராவில் பாதல் தொழுகை முடித்து திரும்புகையில், மர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்கியுள்ளார். </p><p>தாக்குதல் நடந்தபோது, ​​பாதலின் மனைவியும் அகாலி தல் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹர்சிம்ரத் கவுர் பாதலும் அவருடன் இருந்துள்ளார். இந்தத் தாக்குதலில் சுக்பீரின் கையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த கொட்டும் காட்சிகள் வெளியாகி உள்ளன. </p><p>தாக்குதல் நடத்தியவர் முதலில் வயிற்றில் குற்ற முயன்றதாகவும், சுக்பீரின் காவலர்கள் தடுத்ததில் அந்தக் குத்து கையில் விழுந்துள்ளது.</p><p>உடனடியாக சுக்பீர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தாக்குதல் நடந்த சிறிது நேரத்திலேயே மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இதுதொடர்பாக போலீசாரிடம் கேட்டறிந்து, தாக்குதல் நடத்தியவர் தொடர்பாக விசாரிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p>முதற்கட்டமாக தாக்குதல் நடத்தியவர் நிஹாங் சீக்கியரான ஜஸ்பால் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் அதே குருத்வாராவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். ஆனால் தாக்குதலுக்கான காரணங்கள் இன்னும் தெரியவில்லை. </p>]]></content:encoded></item><item><title>மராத்தி மொழி தெரியாத டாக்சி ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்: போக்குவரத்து அமைச்சர்</title><link>https://www.maalaimalar.com/news/national/licenses-of-taxi-drivers-without-marathi-knowledge-to-be-cancelled-says-transport-minister</link><comments>https://www.maalaimalar.com/news/national/licenses-of-taxi-drivers-without-marathi-knowledge-to-be-cancelled-says-transport-minister#comments</comments><guid isPermaLink="false">75b5b961-c862-408c-b460-bfe52a65bc61</guid><pubDate>Thu, 13 Aug 2026 10:30:01 +0000</pubDate><atom:updated>2026-08-13T10:30:01.871Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,ஓட்டுநர் உரிமம்,Marathi,மராத்தி,driving license,Call Taxi,மகராஷ்டிரா,டாக்சி ஓட்டுநர்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/psweinus/Untitled-design-42.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மராத்தி தெரியாத டாக்சி ஓட்டுநர்களின் உரிமம் இடைநீக்கம் மற்றும் ரத்து]]></media:title><media:description type="html"><![CDATA[ Marathi language in Maharashtra Transport]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/psweinus/Untitled-design-42.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிராவில் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கு மராத்தி மொழியில் பணிபுரியும் அறிவு இருப்பதை கட்டாயமாக்கும் வகையில் சட்டத்தை திருத்த அம்மாநில அரசு முன்மொழிந்துள்ளது.</p><p>இதை மீறுபவர்களுக்கு அவர்களின் ஓட்டுநர் உரிமம் இடை நீக்கம் செய்யப்படவோ அல்லது ரத்து செய்யப்படவோ வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><h3><strong>ஓட்டுநர்களுக்கு மராத்தி கட்டாயம்</strong></h3><p>மகராஷ்டிராவில் புதிய விதிகளின்படி, ஒரு ஆட்டோ அல்லது டாக்சி ஓட்டுநருக்கு மராத்தி மொழியில் நடைமுறை அறிவு இல்லாவிட்டாலோ அல்லது அடிப்படை உரையாடலுக்கு தேவையான அளவு கூட மராத்தி பேச தெரியவில்லையென்றாலோ, அந்த ஓட்டுநருக்கு முதலில் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படும்.</p><p>அந்த ஒரு மாத காலத்திற்குள் அவர் மராத்தி மொழியை கற்க தவறினால், அவரது ஓட்டுநர் உரிமம் மூன்று மாதங்களுக்கு இடை நீக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தற்காலிக தடை காலத்திற்கு பிறகும் ஓட்டுநர் மராத்தி கற்க தவறினால், ஓட்டுநர் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மகராஷ்டிரா மோட்டார் வாகன விதிகள், 1989-இல் முன்மொழியப்பட்ட திருத்தங்களின்படி, மின்னணு மீட்டர் பொருத்தப்பட்ட மோட்டார் வாடகை காரின் ஓட்டுநர், மராத்தி மொழியில் பணிபுரியும் அறிவு பெற்றிருக்க வேண்டும் என மாநில அரசால் வெளியிடப்பட்ட வரைவு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.</p><h3><strong>போக்குவரத்து துறை அமைச்சர்</strong></h3><p>இதுகுறித்து மாநில போக்குவரத்து அமைச்சர் பிரதாப் சர்நாயக் கூறுகையில், “இந்த திருத்தங்கள் மூலம் ஓட்டுநர்கள் தங்கள் பயணிகளுடன் உரையாடவும், அவர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு, பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை உறுதி செய்யவும் உள்ளூர் மொழியின் நடைமுறை அறிவு அவசியம்,” என்று அவர் கூறினார்.</p><p>முன்னதாக ஏப்ரல் மாதம், மகராஷ்டிர அரசு மாநிலம் முழுவதும் உள்ள கால்டாக்சி ஓட்டுநர்கள் மராத்தி மொழி கற்பதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 15ம் தேதிக்கு பிறகு நீட்டிக்கப்படாது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>முன்பதிவின் போது &apos;டிப்ஸ்&apos; கேட்கக் கூடாது: ஓலா, உபெர் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/national/no-tips-during-booking-government-order-to-ola-uber</link><comments>https://www.maalaimalar.com/news/national/no-tips-during-booking-government-order-to-ola-uber#comments</comments><guid isPermaLink="false">273ce559-8c76-4028-989d-ca60326413a7</guid><pubDate>Thu, 13 Aug 2026 10:17:42 +0000</pubDate><atom:updated>2026-08-13T10:17:42.432Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஓலா,Ola,Uber,central government,உபெர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/vwf1isfw/aaaa.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ola-Uber ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/vwf1isfw/aaaa.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஓலா, உபெர் உள்ளிட்ட மொபைல் செயலி வாயிலான வாடகை கார் சேவைகளில், பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பாகவே வாடிக்கையாளர்களிடம் 'டிப்ஸ்' கேட்பதற்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. பயணம் தொடங்குவதற்கு முன்பாக கூடுதல் பணம் செலுத்தக் கோரும் நடைமுறையை உடனடியாகச் செயலிகளிலிருந்து நீக்க வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அனைத்து நிறுவனங்களுக்கும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.</p><h2>பய<strong>ணிகள் பு</strong>கார்</h2><p>சமீபகாலமாக ஓலா மற்றும் உபெர் போன்ற செயலிகளில் வாடகை வாகனங்களை முன்பதிவு செய்யும்போது, "முன்பண டிப்ஸ் வழங்குங்கள்", "கூடுதல் தொகையைத் தேர்வு செய்யுங்கள்" அல்லது "டிப்ஸ் அளித்தால் வாகனம் விரைவில் உறுதி செய்யப்படும்" என்ற பெயரில் குறுஞ்செய்திகள் காட்டப்பட்டு வந்தன. இதன் காரணமாக, கூடுதல் கட்டணம் செலுத்தாத பயணிகளின் கோரிக்கைகளை ஓட்டுநர்கள் நிராகரிப்பதாகவும், அவசரத் தேவையின் போது பயணிகள் மறைமுகமாக அதிகக் கட்டணம் செலுத்த வற்புறுத்தப்படுவதாகவும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்திற்குப் பல்வேறு புகார்கள் குவிந்தன.</p><p>இந்த புகார்களை தீவிரமாகப் பரிசீலித்த மத்திய அரசு, மோட்டார் வாகன அக்ரிகேட்டர் வழிகாட்டு நெறிமுறைகளின் கீழ் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, பயணிகள் தங்களது விருப்பத்தின் பேரில் வழங்கும் டிப்ஸ் தொகையை, பயணம் முழுமையாக முடிவடைந்த பிறகு மட்டுமே கோர முடியும். பயணம் தொடங்கும் முன் அல்லது முன்பதிவின் போது வாடிக்கையாளர்களுக்கு எந்தவித உளவியல் அழுத்தத்தையும் தரக்கூடாது என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>நுகர்வோர் உரி<strong>மை பா</strong>துகாப்பு</h2><p>மத்திய அரசின் புதிய உத்தரவின்படி, பயணிகள் வழங்கும் டிப்ஸ் தொகை முழுமையாகச் சம்மந்தப்பட்ட ஓட்டுநரின் கணக்கிற்கே செல்ல வேண்டும் என்றும், அதில் எந்தவொரு பிடித்தத்தையும் கார் சேவை நிறுவனங்கள் செய்யக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்திற்கு முரணாகச் செயல்படும் மற்றும் வாடிக்கையாளர்களைத் தவறாக வழிநடத்தும் எந்தவொரு செயலி அம்சமும் சட்டவிரோதமானதாகக் கருதப்படும் என்று அமைச்சகம் எச்சரித்துள்ளது.</p><p>பயணக் கட்டணத்தைத் தாண்டி முன்பே டிப்ஸ் கொடுத்தால் மட்டுமே கார் வரும் என்ற நிலை உருவாவதைத் தடுக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, வாடகை வாகனங்களை வழக்கமாகப் பயன்படுத்தும் லட்சக்கணக்கான மக்களுக்குப் பெரிய நிம்மதியை அளித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டிஎன்பிஎல் கிரிக்கெட்: நாளை பலப்பரீட்சை நடத்தும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- மதுரை பாந்தர்ஸ் அணிகள்!</title><link>https://www.maalaimalar.com/sports/tnpl-cricket-chepauk-super-gillies-vs-madurai-panthers-tomorrow-litmus-test</link><comments>https://www.maalaimalar.com/sports/tnpl-cricket-chepauk-super-gillies-vs-madurai-panthers-tomorrow-litmus-test#comments</comments><guid isPermaLink="false">f6ccb771-18fa-4312-b790-6b873e5708f9</guid><pubDate>Thu, 13 Aug 2026 10:06:07 +0000</pubDate><atom:updated>2026-08-13T10:06:07.086Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,Chepauk super gillies,சேப்பாக் சூப்பர் கில்லீஸ்,madurai panthers,மதுரை பாந்தர்ஸ்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/4ujr3xvp/super-ghillies.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Super ghillies vs Madurai panthers]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/4ujr3xvp/super-ghillies.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>8 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் அடுத்த நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.</p><h2>சேப்பாக்க சூப்பர் கில்லீஸ்</h2><p>4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ்  2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று  5 வது இடத்தில் உள்ளது.</p><p>அந்த அணி முதல் போட்டியில்  நெல்லையிடம் 50 ரன் வித்தியாசத்திலும், 2-வது  ஆட்டத்தில்  திருப்பூரிடம் 7 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்றது. 3-வது போட்டியில் திண்டுக்கல்லை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.</p><p>நேற்று  நடந்த 4-வது ஆட்டத்தில் சேலம்  ஸ்பார்டன்சை  5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.</p><p>ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 5-வது  போட்டியில் மதுரை  பாந்தர்சை நாளை (14-ந்தேதி) எதிர்கொள்கிறது. இரவு 7.30 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெறுகிறது.</p><h2>ஜெகதீசன்</h2><p>மதுரை அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ்  ஹாட்ரிக் வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. மதுரை பாந்தர்ஸ்  இந்த போட்டி தொடரில் தோல்வியை சந்திக்காத அணியாக திகழ்கிறது. இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும்.</p><p>கேப்டன் என்.ஜெகதீசன் பேட்டிங்கில் மிகவும் நல்ல நிலையில் இருக்கிறார். அவர் 4 போட்டியில் 2 அரை சதத்துடன் 222 ரன்கள் எடுத்து இந்த தொடரில் முதல் இடத்தில் உள்ளார். சராசரி 74.00 ஆகும்.</p><p>ஸ்டிரைக் ரேட் 173.43 ஆகும். பந்து வீச்சாளர்களில்  சிலம்பரசன், விக்னேஷ் தலா 5 விக்கெட் கைப்பற்றி உள்ளனர்.</p><h2>மதுரை பாந்தர்ஸ்</h2><p>அனிருத் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் தான் மோதிய 4 போட்டியிலும் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன்  முதல் இடத்தில் உள்ளது. அந்த அணி 5-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.</p><p>முன்னதாக நாளை மாலை 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில்  சேலம் ஸ்பார்–டன்ஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.  சேலம்  முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது. திண்டுக்கல் 2- வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது.</p><p>இன்றைய போட்டிகள் இன்று நடைபெறும் முதல் போட்டியில்  கோவை கிங்ஸ்- நெல்லை  ராயல் கிங்ஸ்  (மாலை 3.30) அணிகள் மோதுகின்றன.கோவை 2-வது வெற்றி ஆர்வத்திலும், நெல்லை  3-வது  வெற்றி வேட்கையிலும் உள்ளன.</p><p>இரவு 7.30 மணிக்கு நடக்கும் 2-வது ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ்- திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. திருச்சி 3-வது வெற்றி ஆர்வத்திலும்,  திருப்பூர் 4-வது  வெற்றி வேட்கையிலும் உள்ளன.</p>]]></content:encoded></item><item><title>தொடர் தோல்வி எதிரொலி: 2027 உலகக் கோப்பை வரை பயிற்சியாளர் பதவியில் நீடிப்பாரா கம்பீர்?</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/gautam-gambhirs-head-coach-job-safe-or-unsafe-bccis-decision-made</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/gautam-gambhirs-head-coach-job-safe-or-unsafe-bccis-decision-made#comments</comments><guid isPermaLink="false">6fe76b98-f9a8-4628-9d87-13ea5927f34c</guid><pubDate>Thu, 13 Aug 2026 09:59:52 +0000</pubDate><atom:updated>2026-08-13T09:59:52.575Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>gautam gambhir,கவுதம் கம்பீர்,BCCI,Head Coach,தலைமை பயிற்சியாளர்,பிசிசிஐ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/j3j5vvfc/gambhir.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ gambhir]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/j3j5vvfc/gambhir.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய அணியின் சமீபத்திய தொடர் தோல்விகளால் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மீண்டும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார். </p><p>இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீர் இருந்து வருகிறார். முன்னாள் தொடக்க வீரரான அவர் 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றார்.</p><h2>கம்பீர் மீது விமர்சனம்</h2><p>கம்பீர் பயிற்சியின் கீழ் இந்திய அணி ஏற்கனவே மோசமான தோல்வியை தழுவியுள்ளது. சொந்த மண்ணில் நியூசிலாந்திடம் 3 டெஸ்ட் போட்டியிலும் தோற்று ஒயிட்வாஷ் ஆனது. ஆஸ்திரேலியாவிலும் தோல்வி ஏற்பட்டது. ஆனாலும், அவர் பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்படவில்லை.</p><p>சமீபத்தில் இந்திய அணியின் தோல்வியால் கம்பீர் மீண்டும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார். அயர்லாந்திடம் டி20 தொடர், இங்கிலாந்திடம் ஒருநாள் மற்றும் டி20 ஓவர் தொடர் ஆகியவற்ரை இழந்தது. கடந்த செப்டம்பர் மாதம் சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவிடம் 2 டெஸ்டிலும் தோற்று ஒயிட் வாஷ் ஆனது. </p><h2>நீக்கப்படுவாரா?</h2><p>இதனால் பயிற்சியாளர் பதவியில் இருந்து கம்பீர் நீக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 2027 உலகக் கோப்பை வரை அவரது பதவி பாதுகாப்பாக இருக்குமா, இருக்காதா என்பதே அனைவரது கேள்வியாக இருக்கிறது.</p><p>விராட் கோலி, ரோகித் சர்மா, அஸ்வின் ஆகியோரது ஓய்வுக்கு பிறகு சுப்மன் கில் தலைமையில் டெஸ்ட் அணி புதிய வீரர்களுடன் பங்கேற்று வருகிறது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன் பும்ரா, சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் காயத்தால் விலகினார்கள். </p><h2>வாய்ப்பு இல்லை</h2><p>இலங்கை தொடருக்குப் பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு இன்னும் 2 தொடரே இருக்கிறது. இதனால் டெஸ்டுக்கு பயிற்சியாளர் ஒருவரை தற்காலிகமாக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பு கிட்டத்தட்ட இல்லை என்றே கருதப்படுகிறது. </p><p>டெஸ்ட் கிரிக்கெட்டில் கம்பீரின் செயல்பாடு சிறப்பாக இல்லாவிட்டாலும் இப்போது அவரை நீக்க கிரிக்கெட் வாரியம் விரும்ப வில்லை. வெள்ளைப் பந்து கிரிக்கெட்டை (ஒருநாள் போட்டி, டி20 போட்டி) பொறுத்த வரை அவர் 2027 உலகக் கோப்பை வரை அந்தப் பதவியில் நீடிப்பார் என்றே தகவல் தெரிவிக்கிறது. </p><p>கவுதம் கம்பீரின் ஒப்பந்தம் 2027 டிசம்பர் வரை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>பாலி தீவு அருகே பயங்கரம்: பயணிகள் படகில் தீ விபத்து - 211 பேர் மீட்பு, இளம் பெண் பலி!</title><link>https://www.maalaimalar.com/news/world/bali-island-tragedy-passenger-boat-fire-211-rescued-19-year-old-woman-dead</link><comments>https://www.maalaimalar.com/news/world/bali-island-tragedy-passenger-boat-fire-211-rescued-19-year-old-woman-dead#comments</comments><guid isPermaLink="false">086eecf5-fa37-4c96-8ced-35ba55f63795</guid><pubDate>Thu, 13 Aug 2026 09:48:08 +0000</pubDate><atom:updated>2026-08-13T09:48:08.008Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தோனேசியா,Bali,பாலி,BaliFerryFire,பாலிதீவு விபத்து,Indonesia BoatAccident,SeaRescue Operation,FerryDisaster2026,TravelSafety</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/g6y1bl07/Bali-FerryFire" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bali FerryFire ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/g6y1bl07/Bali-FerryFire?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE">இந்தோனேசியா</a>வின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81">பாலி தீவு </a>அருகே, நடுக்கடலில் சென்று கொண்டிருந்த பயணிகள் படகு ஒன்றில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கிய 211 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். </p><p>எனினும், இந்த விபத்தில் 19 வயது இந்தோனேசியப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 5 பேரைத் தேடும் பனி தீவீரமாக நடைபெற்று வருகிறது.</p><h2>நள்ளிரவில் நேர்ந்த விபத்து:</h2><p>'புத்ரி யாஸ்மின்' என்ற அந்தப் படகு, பாலியில் இருந்து அண்டை தீவான லோம்போக் நோக்கிப் புறப்பட்டுச் சென்றது. </p><p>புதன்கிழமை அதிகாலை சுமார் 4:15 மணியளவில் நடுக் கடலில் சென்று கொண்டிருந்தபோது, படகில் திடீரென தீப்பிடித்தது. அந்தப் படகில் 7 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் பயணித்துள்ளனர். </p><p>மேலும், 44 வாகனங்களும் 53 மோட்டார் சைக்கிள்களும் அதில் ஏற்றிச் செல்லப்பட்டன.</p><h2>உயிரைக் காப்பாற்ற கடலில் குதித்த பயணிகள்:</h2><p>படகு தீ பிடித்ததில் தீயின் வெப்பம் தாங்க முடியாமல், பல பயணிகள் லைஃப் ஜாக்கெட் அணிந்து கொண்டு கடலில் குதித்தனர். </p><p>தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர், 13 அடி உயரத்திற்கு எழுந்த அலைகளையும் பொருட்படுத்தாமல், ஹெலிகாப்டர் மற்றும் 6 கப்பல்களின் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.</p><h2>முரண்பாடான பயணிகளின் எண்ணிக்கை :</h2><p>படகின் அதிகாரப்பூர்வப் பட்டியலில் 131 பேர் மட்டுமே இருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. ஆனால், மீட்புக் குழுவினர் இதுவரை 211 பேரை மீட்டுள்ளனர். </p><p>இந்தோனேசியாவில் வழக்கமாகப் பட்டியலில் உள்ளதை விட அதிக மக்களைப் படகுகளில் ஏற்றுவது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், இந்த பெரும் குளறுபடி குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என்று அந்நாட்டு போக்குவரத்து அமைச்சர் டுடி பூர்வகாந்தி தெரிவித்துள்ளார்.</p><p>தீ விபத்திற்கான துல்லியமான காரணம் என்ன என்பது குறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்புக் குழுவினர் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>துல்கர் சல்மானின் ‘I&apos;M GAME’ திரைப்பட ரிலீஸ் ஒத்திவைப்பு! புதிய அறிவிப்பு தேதியை வெளியிட்டது படக்குழு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/dulquer-salman-im-game-movie-release-delayed-team-announces-new-date</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/dulquer-salman-im-game-movie-release-delayed-team-announces-new-date#comments</comments><guid isPermaLink="false">6f59d1e8-aca7-4a47-a672-4edee60856df</guid><pubDate>Thu, 13 Aug 2026 09:44:54 +0000</pubDate><atom:updated>2026-08-13T09:44:54.731Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>துல்கர் சல்மான்,Dulquer Salmaan,கயாடு லோகர்,ஐ அம் கேம்,I&apos;m Game,Gayadu Lohar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/6ml1tqw7/i-am-game.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dulquer Salmaan  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/6ml1tqw7/i-am-game.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கும் ‘ஐ அம் கேம்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு, செப்டம்பர் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p><h2>பான்-<strong>இந்திய அளவில்</strong> வெளியிட திட்டம்</h2><p>படத்தின் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை நாங்கள் அறிவோம், தாமதத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். ஆனால் இந்த திரைப்படம் பெரிய அளவில் அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் திரைக்கு வரவுள்ளதால், இந்த ரிலீஸ் தள்ளிவைப்பு தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது.</p><h2>திரை<strong>ப்படத்தின் க</strong>தைக்களம்</h2><p>‘ஆர்.டி.எக்ஸ்’ படத்தின் மூலம் புகழ்பெற்ற நஹான் ஹிதாயத் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் கயாடு லோகர், ஆண்டனி வர்கீஸ் மற்றும் முன்னணி இயக்குனர் மிஷ்கின் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வேஃபாரர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த ஆக்ஷன் திரில்லர் திரைப்படம், பெரிய அளவிலான தியேட்டர் ரிலீஸை குறிவைத்து தற்போது செப்டம்பர் மாதம் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பூந்தமல்லி-வடபழனி வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்க தொடர்ந்து தாமதம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/continued-delay-in-launching-metro-rail-service-on-the-poonamallee-vadapalani-route</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/continued-delay-in-launching-metro-rail-service-on-the-poonamallee-vadapalani-route#comments</comments><guid isPermaLink="false">25165cc3-94e9-40f8-b87f-134930159d51</guid><pubDate>Thu, 13 Aug 2026 09:43:54 +0000</pubDate><atom:updated>2026-08-13T09:43:54.439Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பூந்தமல்லி,Poonamallee,Metro Train,Chennai metro,சென்னை மெட்ரோ,vadapalani,வடபழனி,மெட்ரோ ரெயில்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/1b5nbt29/Metro.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/1b5nbt29/Metro.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>5 மாதங்களாக சேவையை தொடங்குவதற்கான தேதி இறுதிச் செய்யப்படாததால் பொதுமக்கள் வெறுப்பில் உள்ளனர். பணிகள் முடிந்த பிறகு கூட அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர தாமதம் செய்வதால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.</strong></em> </p><p>சென்னையில் 2ம் கட்ட <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">மெட்ரோ ரெயில்</a> திட்டம் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி பைபாஸ் வரையிலான 4-வது வழித்தடம் ஒன்றாகும். </p><h2><strong>பாதுகாப்பு</strong></h2><p>இந்த வழித்தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும் கோடம்பாக்கம் பவர் அவுஸ் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை உயர்மட்ட பாதையாகவும் அமைகிறது. 9 சுரங்க மெட்ரோ ரெயில் நிலையங்களும் 18 உயர்மட்ட மெட்ரோ ரெயில் நிலையங்களும் இதில் இடம் பெறுகின்றன. </p><p>4-வது வழித்தடத்தின் ஒரு பகுதியாக பூந்தமல்லி- வடபழனி வரை 14.6 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரெயில் வழித்தட பணி கடந்த பிப்ரவரி மாதம் முடிந்து பாதுகாப்பு சோதனை நடத்தப்பட்டது. </p><p>பல கட்ட ஆய்வுக்குப் பிறகு இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் இயக்க பிப்ரவரி மாதம் இறுதியில் அனுமதி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மார்ச் மாதம் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. </p><h2><strong>முதலமைச்சர் ஆய்வு</strong></h2><p>ஆனால் சட்டசபை தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக தாமதமானது. தேர்தல் முடிந்து புதிதாக த.வெ.க. அரசு ஆட்சிக்கு வந்த பிறகும் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-travelling-metro-train">விஜய்</a> கடந்த சில நாட்களுக்கு முன்பு மெட்ரோ ரெயிலில் பயணித்து திட்டத்தை ஆய்வு செய்தார்.  அப்போது அவரிடம் பூந்தமல்லி- வடபழனி -மெட்ரோ ரெயில் சேவை  தொடங்குவதில் உள்ள தாமதம் குறித்து அதிகாரிகள் எடுத்துக் கூறினர்.</p><p>இந்த வழித்தடத்தில் சேவையை தொடங்க  தயார் நிலையில் உள்ளது. மத்திய அரசு அனுமதி தர வேண்டும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. கடிதம் எழுதி பல மாதங்கள் ஆகியும் இன்னும் தேதி தரப்படவில்லை. </p><p>5 மாதங்களாக சேவையை தொடங்குவதற்கான தேதி இறுதிச் செய்யப்படாததால் பொதுமக்கள் வெறுப்பில் உள்ளனர். பணிகள் முடிந்த பிறகு கூட அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர தாமதம் செய்வதால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். </p><h2><strong>அதிகாரி தகவல்</strong></h2><p>இதுகுறித்து மெட்ரோ ரெயில் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- </p><p>இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு 50 சதவீதமும் மாநில அரசு 50 சதவீதமும் நிதி உதவி அளிக்கிறது. தற்போது  பாராளுமன்ற கூட்டம் நடைபெறுவதால் இன்னும் தேதி உறுதி செய்யப்படவில்லை. இது பற்றி முதலமைச்சரிடமும் தெரிவித்துள்ளோம். மத்திய அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம். எந்த நேரத்திலும் தகவல் வரலாம் என்று எதிர்பார்க்கிறோம். மெட்ரோ ரெயில் சேவையை காணொளி  மூலம் திறந்து வைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. பிரதமர் திறப்பு விழா தேதி தருவதில் உள்ள  தாமதம் தான். மத்திய நகர்ப்புற  வளர்ச்சித் துறையிடம் இருந்து தகவல் வந்த ஓரிரு நாட்களில்  சேவை தொடங்கும். </p><h2><strong>தினமும் சோதனை</strong></h2><p>இதற்கிடையில் இந்த வழித்தடத்தில் தினமும் டிரைவர் இல்லாமல்  சோதனை நடைபெறுகிறது.  சேவை தொடங்கிய முதல் 3 மாதங்கள் டிரைவருடன் மெட்ரோ ரெயில் இயங்கும். அதன் பின்னர் டிரைவர் இல்லாமல்  இயக்கப்படும். </p><p>இந்த வழித்தடத்தில் 13 மெட்ரோ ரெயில்கள் இயக்க தயாராக உள்ளன. கூட்டம் அதிகமாக இருந்தால் கூடுதலாக சேவையை அதிகரிக்கவும் திட்டமிட்டு உள்ளோம். 10 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்படும்.  கூடுதலாக 25 மெட்ரோ ரெயில்கள் தயாராக இருக்கின்றன. தேவைப்பட்டால் அதனையும் பயன்படுத்துவோம். </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்து- 3 பேர் உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/fireworks-factory-accident-near-sivakasi-3-killed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/fireworks-factory-accident-near-sivakasi-3-killed#comments</comments><guid isPermaLink="false">1d19f918-9823-4ab5-80cb-905db94349ec</guid><pubDate>Thu, 13 Aug 2026 09:32:51 +0000</pubDate><atom:updated>2026-08-13T09:32:51.505Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உயிரிழப்பு,dead,வெடி விபத்து,Fireworks,Bomb Explosion,பட்டாசு ஆலை விபத்து</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/9v15s619/sivakasi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sivakasi explosion]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/9v15s619/sivakasi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.</p><p>சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டியில் உள்ள கிருஷ்ணா பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p>வெடி விபத்தில் படுகாயம் அடைந்த ஒரு தொழிலாளி மீட்கப்பட்டுள்ளார். தொடர்ந்து புகை மூட்டமாக உள்ளதால் மீதமுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>‘மொத ராத்திரி’ டிரெய்லர் வெளியானது!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/modha-rathiri-trailer-released</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/modha-rathiri-trailer-released#comments</comments><guid isPermaLink="false">7535cbdf-1b1c-48cc-9143-c884ddd46334</guid><pubDate>Thu, 13 Aug 2026 09:28:17 +0000</pubDate><atom:updated>2026-08-13T09:28:17.608Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ரிஷிகாந்த்,Modha Rathiri,மொத ராத்திரி,Anishma Anilkumar,Rishikanth,அனிஷ்மா அனில்குமார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/rlzl7fvd/New-Project-2026-08-13T145729.135.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘மொத ராத்திரி’ டிரெய்லர் வெளியானது!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/rlzl7fvd/New-Project-2026-08-13T145729.135.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராஜா கருப்பசாமி எழுத்து மற்றும் இயக்கத்தில் அனிஷ்மா அனில்குமார், ரிஷிகாந்த் நடித்துள்ளப் படம் மொத ராத்திரி. </p><p>இவர்களுடன் சேத்தன், வெங்கடேஷ், பகவதி பெருமாள், பானுப்ரியா மற்றும் சங்கீதா பாலன் ஆகியோர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார். </p><p>கிராமப்புற பின்னணியில் ஒரு வித்தியாசமான திருமணம் நடக்கிறது. புதுமணத் தம்பதியரின் முதலிரவு அன்று எதிர்பாராத பல திருப்பங்களும், பொய்களும், குழப்பங்களும் அரங்கேறுகின்றன. இதனால் ஏற்படும் கலகலப்பான மற்றும் நகைச்சுவையான சம்பவங்களை மையமாகக் கொண்டு இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது.</p><p>படம் ஆக.21ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி உள்ளது. </p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/cfEKCH5MuWc"></iframe></figure>]]></content:encoded></item><item><title>இந்தியாவிடமிருந்து பெட்ரோல் இறக்குமதி செய்யும் நிலைக்கு ஆளான ரஷியா.. என்ன நடந்தது?</title><link>https://www.maalaimalar.com/news/world/india-russia-fuel-trade-shift-ukraine-strikes-trigger-russian-petrol-shortage-india-exports-refined-fuel</link><comments>https://www.maalaimalar.com/news/world/india-russia-fuel-trade-shift-ukraine-strikes-trigger-russian-petrol-shortage-india-exports-refined-fuel#comments</comments><guid isPermaLink="false">1d0293f8-8627-4e5e-8641-a79ba6d1ebd3</guid><pubDate>Thu, 13 Aug 2026 08:46:25 +0000</pubDate><atom:updated>2026-08-13T08:46:25.579Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Russia,பெட்ரோல்,Petrol,கச்சா எண்ணெய்,Crude oil,ரஷியா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/9pxo8qvk/tn-13.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ரஷியா]]></media:title><media:description type="html"><![CDATA[ ரஷியா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/9pxo8qvk/tn-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவிடம் இருந்து பெட்ரோல் இறக்குமதி செய்யும் நிலைமைக்கு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE">ரஷியா </a>தள்ளப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. </p><p>இந்தியா தனது சொந்த நாட்டின் பெட்ரோல் - டீசல் தேவைக்கு 90 சதவீதம் வெளிநாட்டு கச்சா எண்ணெய்யையே நம்பி உள்ளது.  </p><p>வெளிநாட்டில் இருந்து கச்சா எண்ணெய் வங்கி இங்குள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் பெட்ரோல் - டீசல் தயாரிக்கப்பட்டு உள்நாட்டு தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. </p><p>ஈரான் போரினால் ஹார்முஸ் ஜலசந்தியில் நிச்சயமற்ற சூழலால் மத்திய கிழக்கில் இருந்து வர வேண்டிய கச்சா எண்ணெய் வரத்தில் தொய்வு நிலவுகிறது. </p><p>மேலும் அமெரிக்காவின் அழுத்தத்தால் ரஷியாவிடமிருந்தும் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா கணிசமாக குறைத்தது. </p><p>ஈரான் போரினால் சர்வதேச தட்டுப்பாடு ஏற்படக்கூடாது எனபதற்காக,  அமெரிக்கா வழங்கிய தளர்வினால் தற்போது ரஷியாவிடம் கொள்முதலை இந்தியா அதிகரித்த நிலையில் தற்போது அதில் ஒரு சுவாரஸ்ய திருப்பம் ஏற்பட்டுள்ளது. </p><p>நமக்கு கச்சா எண்ணெய் விற்கும் ரஷியா, நம்மிடம் பெட்ரோல் வாங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க ஆய்விதழான ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி இந்தியாவின் நயாரா எனர்ஜி லிமிடட் நிறுவனத்திடம் இருந்து 43,000 பேரல் பெட்ரோல் ஏற்றுமதி செய்யப்பட்டு ரஷியா சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனமும் இதை உறுதோபடுத்தியுள்ளது. </p><p>இந்தியாவிடம் ரஷியா பெட்ரோல் இறக்குமதி செய்வது இதுவே முதல்முறை ஆகும். </p><h2>வர்த்தகம் </h2><p>குஜராத்தின் முந்ரா துறைமுகத்தில் இருந்து ரஷிய கொடியுடன் கூடிய சைக்லோன் என்ற டேங்கர் கப்பலில் ஜூன் 18 அன்று நிரப்பப்பட்டு அனுப்பப்பட்ட இந்த 42,000 டன் பெட்ரோல்,  எகிப்தில் உள்ள Damietta துறைமுகதில் ஓமன்  கொடி பொருத்திய கப்பலுக்கு மாற்றப்பட்டு அங்கிருந்து பின்னர் ஜுலே 6 அன்று புறப்பட்டு, ஆகஸ்ட் முதல் வாரத்தில் ரஷியா சென்று சேர்ந்துள்ளதாக ப்ளூம்பெர்க் குறிப்பிட்டுள்ளது. </p><p>இதேபோல ஜூலையில் குஜராத்தின் வதினார் துறைமுகத்தில் மேலும் 2 கப்பல்கள் பெட்ரோலை ஏற்றிக்கொண்டு எகிப்து துறைமுகங்களுக்கு சென்றடைந்து அங்கு வேறு கப்பல்களில் மாற்றப்பட்டு ரஷியா நோக்கி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> <h2>ரஷியா, பெட்ரோல் வாங்க காரணம் என்ன?</h2><p>கடந்த 2022 முதல் உக்ரைனுடன் போரிட்டு வருகிறது ரஷியா. டிரோன் போர் முறையை அதிகம் பயன்படுத்த தொடங்கியுள்ள உக்ரைன், ரஷியாவின் சுத்திகரிப்பு நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் கச்சா எண்ணெய் கையில் இருந்தும் அதை பெட்ரோலாக சுத்திகரிப்பு செய்ய முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதால் ரஷியா முழுவதும் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.</p><p>2024 முதல் உக்ரைன் ரஷியாவின் சுத்திகரிப்பு நிலையங்களை பல கட்டங்களாக தாக்கி வரும் நிலையில் அதன் தாக்கம் தற்போது முழுமையாக வெளித்தெரிய தொடங்கியுள்ளது. '</p><p>ராய்ட்டர்ஸ் செய்தியின்படி இந்த ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை ரஷியாவின் 16 சுத்திகரிப்பு நிலையங்களை தாக்கி சேதப்படுத்தி உள்ளது உக்ரைன். </p><p>இதில் ஒரு சுத்திகரிப்பு நிலையம் மாஸ்கோவில் அதிபர் மாளிகை அமைந்துள்ள இடத்திற்கு வெறும் 15 கிலோமீட்டர் தான் தள்ளியுள்ளது.</p><p>பெட்ரோல் தட்டுப்பாட்டால் மக்கள் பெட்ரோல் நிலையங்களில் வரிசைகட்டி நிற்கும் நெருக்கடியான சூழல் ரஷியாவில் உருவாகியுள்ளது. </p><p>எனவே ரஷியாவில் இருந்து பெட்ரோலை வெளிநாடுகளுக்கு இறக்குமதி செய்யும் தடையை இவ்வாண்டு இறுதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. </p><p>இருந்தும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து மேலதிக பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது ரஷியா.</p><p>பெட்ரோல் நெருக்கடி குறித்து கடந்த ஜூன் மாதம் ரஷிய அதிபர் புதினே கவலை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.</p> <h2>கொடுக்கல் - வாங்கல்</h2><p>ஜூலையில் பெலாரஸ், கஜகஸ்தான், இந்தியா என 3 நாடுகளிடம் ரஷியா பெட்ரோல் இறக்குமதி செய்துள்ளது. 400,000 டன் பெட்ரோல் இறக்குமதி செய்ய ரஷியா இலக்கு வைத்துள்ளது.</p><p>இதனிடையே ரஷியாவிடம் இருந்து இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் அளவில் உச்சத்தை எட்டியுள்ளது. ஜூலையில் சாதனை அளவாக ஒரு நாளைக்கு சுமார் 2.8 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.</p><p>இது நாட்டின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் 55.5 சதவீதம் என கெப்ளர் கப்பல் போக்குவரத்துக்கு கண்காணிப்பாக தரவுகளை ப்ளூம்பெர்க் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>புதிய கட்சித் தொடங்கும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பேரன்!</title><link>https://www.maalaimalar.com/news/national/netaji-subhash-chandra-boses-grandson-to-launch-a-new-party</link><comments>https://www.maalaimalar.com/news/national/netaji-subhash-chandra-boses-grandson-to-launch-a-new-party#comments</comments><guid isPermaLink="false">8b173ecd-4875-4649-aa79-b1a83a7252d9</guid><pubDate>Thu, 13 Aug 2026 08:29:01 +0000</pubDate><atom:updated>2026-08-13T08:29:01.790Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Netaji Subhas Chandra Bose,Chandra Kumar Bose,Azad Hind Party,நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்,அசாத் ஹிந்த் கட்சி,சந்திர குமார் போஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/dhv6uaed/New-Project-2026-08-13T133517.052.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ புதிய கட்சித் தொடங்கும் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் பேரன்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/dhv6uaed/New-Project-2026-08-13T133517.052.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஸின் சகோதரரின் பேரரான சந்திர குமார் போஸ் இளைஞர்களை மையாக கொண்டு ‘ஆசாத் ஹிந்த் கட்சி’ என்றப் பெயரில் புதியக் கட்சி ஒன்றை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். </p><p>டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்தைப் பார்த்து அவருக்கு இந்த எண்ணம் வந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் தற்போதைய அரசியல் சூழலில் இளைஞர்கள் அதிருப்தியில் இருப்பதை உணர்ந்ததால் இந்த முடிவை எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>ஆசாத் ஹிந்த் கட்சியானது, அனைத்து மதங்களுக்கும் சமமான மரியாதை அளிக்கும் சர்வ தர்ம சமபாவம் என்ற கொள்கையாலும், அரசியலமைப்பின் உண்மையான நெறிமுறைகளை நிலைநிறுத்துவதாலும் வழிநடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.</p><p>“முற்போக்கு சிந்தனையுள்ள, அனைவரையும் உள்ளடக்கிய, மதச்சார்பற்ற மக்கள் அனைவரும், குறிப்பாக இளைஞர்கள், ஆசாத் ஹிந்த் கட்சியை ஆதரிப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். நேதாஜி 1943-ல் ஆசாத் ஹிந்த் அரசை அறிவித்த தினமான அக்டோபர் 21 அன்று இக்கட்சி முறைப்படி அறிவிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.</p><h2>பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் - சொந்தக் கட்சி</h2><p>2016-ல் பாஜகவில் இணைந்த சந்திர குமார் போஸ் சுமார் 7 வருடங்கள் அக்கட்சியில் இருந்தார். ஆசாத் ஹிந்த் மோர்ச்சா என்ற அமைப்பை உருவாக்குவதாக பாஜக உறுதியளித்ததாலேயே இக்கட்சியில் இணைந்ததாகவும், இல்லையென்றால் இணைந்திருக்க மாட்டேன் எனக்கூறி பின்னர் அதிலிருந்து வெளியேறினார்.</p><p>அதனைத்தொடர்ந்து 2026 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார். பின்னர் தனிப்பட்ட காரணங்களைக் கூறி திரிணாமுல் காங்கிரஸிலிருந்து விலகினார். </p><p>இந்நிலையில் புதிய கட்சியைத் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திருமணமாகாத இளைஞர்கள் மது அருந்தினால் ரூ.5,000 அபராதம் - எங்கே தெரியுமா?
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/fine-of-rs-5000-for-unmarried-youths-consuming-alcohol</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/fine-of-rs-5000-for-unmarried-youths-consuming-alcohol#comments</comments><guid isPermaLink="false">3174c857-cb28-4891-a333-f208e450aa3d</guid><pubDate>Thu, 13 Aug 2026 08:28:02 +0000</pubDate><atom:updated>2026-08-13T08:28:02.994Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>alcohol,மதுப்பழக்கம்,Nagapattinam,நாகப்பட்டினம்,Youngsters,அபராதம்,இளைஞர்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/34xo83wg/youths-.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Fine youths consuming alcohol]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/34xo83wg/youths-.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>திருமணமாகாத இளைஞர்கள் மது அருந்தினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று விழுந்தமாவடி ஊர் பஞ்சாயத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது.</strong></em></p><h2>விழுந்தமாவடி</h2><p>போதைப்பொருள் இல்லாத பாதுகாப்பான தமிழ்நாட்டை உருவாக்க அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் வலியுறுத்தி வருகிறார். அந்த வகையில், போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கான உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி மற்றும் போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.</p><h2>விழிப்புணர்வு பேனர்</h2><p>இந்த நிலையில், மதுப் பழக்கத்தால் சீரழியும் இளைஞர்களின் எதிர்காலத்தைக் காக்கவும், பொது அமைதியைப் பேணவும், நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே விழுந்தமாவடி ஊர் பஞ்சாயத்து சார்பில் மதுவை ஒழிப்போம், மக்களைக் காப்போம் என்ற முழக்கத்துடன் விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டுள்ளது.</p>  <h2>அபராதம்</h2><p>அதில், பொதுமக்கள் கவனத்திற்கு... நமது கிராமத்தின் பொது அமைதி, இளைஞர்களின் நலன் பொதுசுகாதாரம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு 02.08.2026 முதல் ஊரில் திருமணம் ஆகாதவர்கள் (இளைஞர்கள்) மது அருந்த முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.</p> <h2>குடிபோதை</h2><p>மேலும் திருமணம் ஆகாதவர்கள் மது அருந்துவதை ஆதாரத்துடன் நீரூபிக்கப்பட்டால் ரூ.5,000/- அபராதம் வசூலிக்கப்படும். இதனுடன் திருமணம் ஆனவர்கள் குடிபோதையில் வீட்டிலோ அல்லது பொது இடத்திலோ பிரச்சனைகள் ஏற்பட்டு நமது ஊருக்கு வரும் பட்சத்தில் ரூ.5,000/-அபராதம் வசூலிக்கப்படும். “இந்த நல்ல முயற்சிக்கு ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்”.</p> <h2>மதுவை ஒழிப்போம்! மக்களை காப்போம்!!</h2><p>இன்றைய சரியான முடிவு நாளைய சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் மதுவை தவிர்போம், நம் எதிர்கால வாழ்கையையும், நம் சமூகத்தையும் பாதுகாப்போம்... ‘மதுவை ஒழிப்போம்! மக்களை காப்போம்!!” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>போதைப்பொருளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வரும் நிலையில், விழுந்தமாவடி ஊர் மக்களின் இத்தகைய முடிவு மக்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>கடன் வட்டி விகிதங்களில் அதிரடி மாற்றம்: ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/news/national/rbi-issues-new-regulations-for-loan-interest-rates-across-india</link><comments>https://www.maalaimalar.com/news/national/rbi-issues-new-regulations-for-loan-interest-rates-across-india#comments</comments><guid isPermaLink="false">cdbe4fba-7710-4042-8458-0cb186c97a0a</guid><pubDate>Thu, 13 Aug 2026 08:26:47 +0000</pubDate><atom:updated>2026-08-13T08:26:47.042Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>RBI,reserve bank of india,ஆர்பிஐ,ரிசர்வ்பங்கி,InterestRate Framework,ExternalBenchmark,LoanGuidelines2027,தனிநபர்கடன்,விவசாயக்கடன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/m1e41gnt/ReserveBankOfIndia" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ReserveBankOfIndia ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/m1e41gnt/ReserveBankOfIndia?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் வாங்குபவர்களின் நலனைப் பாதுகாக்கவும், வட்டி விகிதங்களில் கூடுதல் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரவும் <a href="https://www.maalaimalar.com/topic/rbi">இந்திய ரிசர்வ் வங்கி</a> புதிய வரைவு விதிமுறைகளை முன்மொழிந்துள்ளது. </p><p>இந்த புதிய விதிகள் இறுதி செய்யப்பட்டு, வரும் ஏப்ரல் 1, 2027 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரவுள்ளன.</p><p>இந்த புதிய விதிகள் பொதுத்துறை வங்கிகள், கிராமப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் NBFC எனப்படும் பொதுத்துறை அல்லாத நிதி நிறுவனங்கள் ஆகிய அனைத்திற்கும் பொருந்தும் என RBI அறிவித்துள்ளது.</p><h2>முக்கிய மாற்றங்கள் என்னென்ன?</h2><h2>வட்டி கணக்கிடும் முறையில் மாற்றம்:</h2><p>இனிமேல் கடன்களுக்கான வட்டி, நடப்பு மாதத்தின் அடிப்படையில், தினசரி குறையும் நிலுவைத் தொகையைக் கணக்கிட்டு வசூலிக்கப்பட வேண்டும்.</p><h2>வட்டி விகிதத்தை மாற்ற புதிய கட்டுப்பாடுகள்:</h2><p>அனைத்து வங்கிகளும் தங்களின் மிதக்கும் வட்டி விகிதத் தனிநபர் கடன்கள் மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான கடன்களை கட்டாயமாக வெளிப்புறக் குறியீட்டுடன் இணைக்க வேண்டும்.</p><p>இதில் RBI-ன் ரெப்போ ரேட் அல்லது அரசிடம் இருக்கும் கருவூலப் பத்திரங்களின் லாப வரம்பு ஆகியவை குறியீடாகப் பயன்படுத்தப்படும்.</p><p>நிர்ணயிக்கப்பட்ட இந்தக் குறியீட்டு அளவுக்குக் குறைவாக எந்த வங்கிக் கடனுக்கும் வட்டி வசூலிக்கக் கூடாது.</p><h2>மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே மாற்றம்:</h2><p>வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தை மாற்றியமைக்கும் கால அளவு 3 மாதங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். </p><p>விவசாயக் கடன்களுக்கு மட்டும் பயிர் காலத்தைக் கணக்கில் கொண்டு அதிகபட்சமாக 12 மாதங்கள் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.</p><h2>கூடுதல் கட்டணங்களுக்குக் கடிவாளம் :</h2><p>வங்கிகள் கடனுக்காக வசூலிக்கும் கூடுதல் வட்டி வரம்பு , வாடிக்கையாளரின் கடன் தகுதியின் அடிப்படையில் மட்டுமே மாற்றியமைக்கப்பட வேண்டும். </p><p>இதர கட்டணங்களை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வங்கிகள் மாற்றியமைக்க முடியும்.</p><h2>ஏழை மற்றும் சிறு விவசாயிகளுக்குப் பாதுகாப்பு:</h2><p>சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால விவசாயக் கடன்களுக்கான மொத்த வட்டியும், இதர கூடுதல் கட்டணங்களும், அவர்கள் வாங்கிய அசல் தொகையை விட ஒருபோதும் அதிகமாக இருக்கக் கூடாது என RBI நிபந்தனை விதித்துள்ளது.</p><h2>பழைய கடன்களுக்கு என்ன விதிமுறை?</h2><p>தற்போது செயல்பாட்டில் இருக்கும் பழைய கடன்களை புதிய விதிமுறைகளின் கீழ் மாற்றுவதற்கு ஏப்ரல் 1, 2029 வரை ஒருமுறை மட்டுமே கால அவகாசம் வழங்கப்படும். </p><p>இதற்கு வாடிக்கையாளர்களின் ஒப்புதல் கட்டாயம். மேலும், பழைய கடனிலிருந்து புதிய முறைக்கு மாறுவதற்கு வாடிக்கையாளர்களிடம் எந்தவித கூடுதல் கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்றும், வட்டி விகிதத்தை உயர்த்தக் கூடாது என்றும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது</p>]]></content:encoded></item><item><title>ஹைட்ரஜன் வாகன வரலாற்றில் புதிய சாதனை: மணிக்கு 653 கி.மீ வேகத்தில் சீறிப்பாய்ந்து JCB ஹைட்ரோமேக்ஸ் உலக சாதனை!</title><link>https://www.maalaimalar.com/news/world/new-record-in-hydrogen-vehicle-history-jcb-hydromax-hits-653-kmph</link><comments>https://www.maalaimalar.com/news/world/new-record-in-hydrogen-vehicle-history-jcb-hydromax-hits-653-kmph#comments</comments><guid isPermaLink="false">a0c28e08-0256-48a2-9e22-9e19db1d886e</guid><pubDate>Thu, 13 Aug 2026 08:22:02 +0000</pubDate><atom:updated>2026-08-13T08:22:02.796Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>JCB Hydromax,Dieselmax,Hydrogen vehicles,JCB ஹைட்ரோமேக்ஸ்,ஹைட்ரஜன் வாகனம்,டீசல்மேக்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/skxuliai/jcb.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ JCB Hydromax ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/skxuliai/jcb.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சர்வதேச அளவில் ஆட்டோமொபைல் துறையை வியப்பில் ஆழ்த்தும் வகையில், பிரிட்டனின் பிரபல எஞ்சினியரிங் நிறுவனமான JCB உருவாக்கிய 'ஹைட்ரோமேக்ஸ்' ஹைட்ரஜன் வாகனம் புதிய உலக சாதனையைப் படைத்துள்ளது. அமெரிக்காவின் யுட்டா மாகாணத்தில் உள்ள போனிவில் உப்பளத்தில் நடைபெற்ற இந்த அதிவேகப் பயண சோதனையில், மணிக்கு 653.9 கி.மீ  வேகத்தை எட்டி புதிய உலக நிலவேக சாதனையை  பதிவு செய்துள்ளது.</p><h2><strong>எஃப்.ஐ.ஏ விதிகளை பூர்த்தி செய்த இர</strong>ட்டை வழிப் பயணம்</h2><p>சர்வதேச மோட்டார் விளையாட்டு கூட்டமைப்பான FIA (Federation Internationale de l'Automobile) விதிகளின்படி, உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட ஒரு வாகனம் ஒரு மணி நேரத்திற்குள் எதிர் எதிர் திசைகளில் இரண்டு முறை இயக்கப்பட்டிருக்க வேண்டும். அதன்படி தனது முதல் சுற்றில் மணிக்கு 644 கி.மீ (400.623 மைல்) வேகத்தையும், திரும்பிய இரண்டாவது சுற்றில் மணிக்கு 663 கி.மீ (412.135 மைல்) வேகத்தையும் தொட்டது. இந்த இரண்டு சுற்றுகளின் சராசரி வேகமான 653.9 கி.மீ வேகத்தின் அடிப்படையில் இந்த புதிய உலக சாதனை படைக்கப்பட்டு உள்ளது.</p><h2>முந்<strong>தைய சாதனைகளை தவிடுபொடியாக்</strong>கிய மைல்கல்</h2><p>இதற்கு முன் 2004-இல் பி.எம்.டபிள்யூ ஹைட்ரஜன் வாகனம் பதிவு செய்த மணிக்கு 298 கி.மீ சாதனையை இந்த ஹைட்ரோமேக்ஸ் மிக எளிதாக முறியடித்துள்ளது. மேலும், 2006-ஆம் ஆண்டு இதே போனிவில் மைதானத்தில் JCB நிறுவனத்தின் டீசல்மேக்ஸ் வாகனம் படைத்த மணிக்கு 563 கி.மீ வேக சாதனையையும் மற்றும் ஹைட்ரஜன் ஃபியூல்-செல் முறையில் எட்டப்பட்ட மணிக்கு 486 கி.மீ வேகத்தையும்  கடந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.</p><h2>அதி<strong>வேக சாதனை நாயகன் ஆண்டி க்ரீன்</strong></h2><p>1997-ஆம் ஆண்டு 'த்ரஸ்ட் எஸ்.எஸ்.சி' என்ற ஜெட் வாகனத்தில் பயணித்து உலகின் ஒலியின் வேகத்தை நிலத்தில் கடந்து சாதனை படைத்த முன்னாள் விண்வெளிப் படை தளபதி ஆண்டி க்ரீன் இந்த சாதனையின் போதும் வாகனத்தை இயக்கியுள்ளார். 2006-இல் JCB டீசல் வாகனத்தை ஓட்டி சாதனை படைத்ததும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2>பசு<strong>மை எதிர்கா</strong>லம்</h2><p>32 அடி நீளம் கொண்ட இந்த ஹைட்ரோமேக்ஸ் வாகனம் ஃபியூல்-செல் மின்சாரத்திற்குப் பதிலாக, நேரடியாக ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்தும் என்ஜின்களைக் கொண்டுள்ளது. இதில் JCB கட்டுமான வாகனங்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இரண்டு ஹைட்ரஜன் என்ஜின்கள் பொருத்தப்பட்டு, மொத்தமாக 1,600 பி.ஹெச்.பி ஆற்றலை வெளிப்படுத்துகின்றன. புகைக் குழாய் வழியே பூஜ்ஜிய கார்பன் உமிழ்வைக் கொண்ட இந்த தொழில்நுட்பம், எதிர்கால போக்குவரத்து துறையில் ஹைட்ரஜன் ஆற்றலின் முக்கியத்துவத்தை உலகிற்கு நிரூபித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு- 35 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/periyar-dam-extra-water-opened-vaigai-dam-level-touches-35-feet</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/periyar-dam-extra-water-opened-vaigai-dam-level-touches-35-feet#comments</comments><guid isPermaLink="false">5a02e2ce-fdfd-4eb3-9358-992d4ec804d5</guid><pubDate>Thu, 13 Aug 2026 08:13:55 +0000</pubDate><atom:updated>2026-08-13T08:13:55.029Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தண்ணீர் திறப்பு,vaigai dam,Periyar dam,வைகை அணை,பெரியாறு ஆணை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/622nj05n/dam.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vaigai Dam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/622nj05n/dam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.</p><p>மேலும், முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வெள்ளிமலை, அரசரடி, வருசநாடு வனப்பகுதிகளில் பெய்யும் மழை மூலம் வைகையாறு வழியாக வைகை அணையை வந்து சேருகிறது.</p><p>மேலும் முல்லை பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் அணைக்கு நீர்வரத்து உள்ளது. இந்த ஆண்டு சூப்பர் எல்நினோ தாக்கத்தால் மழை முற்றிலும் இன்றி மூல வைகையாறு வறண்டது. இதனால் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது.</p><p>தற்போது கேரளாவில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால் முல்லை பெரியாறு அணை நீர்–மட்டம் சீராக உயர்ந்து வருகிறது. இதனால் வைகை அணையில் தண்ணீர் தேக்குவதற்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.</p><p>இன்று காலை அணையின் நீர்மட்டம் 34.97 அடியாக உள்ளது. 220 கன–அடி நீர் வருகிற நிலையில் குடிநீர் திட்டங்களுக்காக 86 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 604 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.</p><h2>பெரியாறு அணை</h2><p>முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 122.95 அடியாக உள்ளது. 687 கனஅடி நீர் வருகிற நிலையில் தமிழக பகுதிக்கு 800 கனஅடி நீர் திறக்–கப்படுகிறது. அணையில் 3212 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.</p><p>மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 27.30 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 56.58 அடியாக உள்ளது. 6 கனஅடி நீர் வருகிறது. 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. </p><p>சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 26.25 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. பெரியாறு அணை 19, தேக்கடி 3 மி.மீ. மழை–யளவு பதவாகி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>821 பணியிடங்களை மட்டும் நிரப்புவதா?: இளைஞர்களுக்கு துரோகம் செய்யக் கூடாது!- அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-filling-only-821-vacancies-the-youth-must-not-be-betrayed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-filling-only-821-vacancies-the-youth-must-not-be-betrayed#comments</comments><guid isPermaLink="false">9950d984-9895-4b2b-b6ca-659f33808f04</guid><pubDate>Thu, 13 Aug 2026 08:08:39 +0000</pubDate><atom:updated>2026-08-13T08:08:39.172Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,காலி பணியிடங்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/czq3nwsz/Anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/czq3nwsz/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வேலையில்லாத இளைஞர்களுக்கு   உதவித் தொகை வழங்குதல், தனியார் வேலைவாய்ப்புகளில் தமிழக இளைஞர்களுக்கு 75% இட ஒதுக்கீடு  வழங்கும் சட்டத்தை இயற்றுதல் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளையும் விரைந்து நிறைவேற்ற வேண்டும்.</p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள தொகுதி 2 மற்றும் 2ஏ பணியிடங்களை நிரப்புவதற்காக 821 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருக்கிறது. குறைந்தது 3000 பணிகளுக்கு ஆள்தேர்வு நடைபெறும் என இளைஞர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அதில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே காலியிடங்களாக அறிவிக்கப்பட்டிருப்பது அவர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.</p><p>தொகுதி 2 மற்றும் 2ஏ பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு &amp;2க்கான போட்டித் தேர்வு அறிவிக்கையை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. அதன்படி  அரசுத் துறைகளிலுள்ள சார்பதிவாளர், சிறப்பு உதவியாளர், தனிப்பிரிவு உதவியாளர் உள்ளிட்ட தொகுதி 2 பணிகளுக்கு 41 பேரும், தணிக்கை ஆய்வாளர், உதவியாளர்கள், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட தொகுதி 2ஏ பணிகளுக்கு 780 பேரும் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த பணிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு நவம்பர் ஒன்றாம் தேதி நடைபெறும் என்றும் டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.</p><p>தமிழ்நாடு அரசுத் துறைகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  2 மற்றும் 2ஏ பணியிடங்கள் காலியாக உள்ளதாக அரசு ஊழியர் அமைப்புகள் தெரிவித்துள்ளன. பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் மறைக்கப்பட்ட இடங்களையும் சேர்த்தால் காலியிடங்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கும் கூடுதலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இவ்வளவு பணியிடங்களை வைத்துக் கொண்டு வெறும் 821 பேரை மட்டும் தேர்ந்தெடுப்பது போதுமானதல்ல.</p><p>இரண்டாம் தொகுதி பணிகளுக்கு வெறும் 41 பேர் காலியிடங்கள் மட்டுமே இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.  அவற்றிலும் கூட 4 பணியிடங்கள் கடந்த காலங்களில் அறிவிக்கப்பட்டு நிரப்பப்படாததால் ஏற்பட்ட பின்னடைவு பணியிடங்கள் ஆகும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வரலாற்றிலேயே இரண்டாம் தொகுதி பணியிடங்கள் இவ்வளவு குறைவாக நிரப்பப்படுவது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன் கடந்த ஆண்டு 50 பேர் இந்த பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், திமுக அரசின் அந்த வேதனையான சாதனையை இப்போதைய தவெக அரசு முறியடித்திருக்கிறது. இதைவிட மோசமாக இளைஞர்களை ஏமாற்ற முடியாது.</p><p>2011&amp;ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போது வரையிலான 16 ஆண்டுகளில் 2021, 2021 ஆகிய ஆண்டுகளைத் தவிர மீதமுள்ள அனைத்து ஆண்டுகளிலும் தொகுதி 2 மற்றும் 2ஏ பணிகளுக்கு ஆள்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறன்றனர். மிக அதிகமாக 2022&amp;ஆம் ஆண்டில் 6500 பேரும், 2011&amp;ஆம் ஆண்டில் 6241 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள ஆண்டுகளில் 2025&amp;ஆம் ஆண்டைத் தவிர மற்றவற்றில் குறைந்தது 1086 பேர் முதல் 3842 பேர் வரையிலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு இருக்கும் போது நடப்பாண்டில் மட்டும்  வெறும் 821 பேரை தேர்ந்தெடுப்பதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.</p><p>தொகுதி 2 மற்றும் 2 ஏ பணிகளுக்கான அடிப்படைக் கல்வித் தகுதி ஏதாவது ஒரு பட்டப்படிப்பு ஆகும். இந்தப் படிப்பை முடித்து விட்டு, அரசு வேலை கிடைக்காதா? என்ற ஏக்கத்தில் காத்திருக்கும் இளைஞர்கள் எண்ணிக்கை மட்டும் 60 லட்சத்திற்கும் அதிகமாகும். ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 4 முதல் 5 லட்சம் பேர் இந்த எண்ணிக்கையில் இணைந்து கொண்டிருக்கின்றனர். அவ்வாறு இருக்கும் போது ஒவ்வொரு ஆண்டும் அவர்களில் ஒரு விழுக்காட்டினருக்குக் கூட அரசு வேலைகள் வழங்கப்படாதது அரசின் தோல்வி ஆகும்.</p><p>2026&amp;ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தவெக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசுத் துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. தமிழக அரசுத் துறைகளில் இன்றைய நிலையில் 6 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக வைத்துக் கொண்டால், அடுத்த ஐந்தாண்டுகளில் குறைந்தது 2 லட்சம் பணியிடங்கள் காலியாகக் கூடும். அவற்றையும் சேர்த்தால் புதிய அரசு ஐந்தாண்டுகளில் 8 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்க வேண்டியிருக்கும். அதற்கான ஆண்டுக்கு 1.50 லட்சம் பேருக்காவது அரசு வேலைகள் வழங்கப்பட வேண்டும்.</p><p>ஆனால்,  பட்டப்படிப்பை தகுதியாகக் கொண்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் 461, பட்டயப்படிப்பை தகுதியாகக் கொண்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் 839, தொகுதி 1 பணிகள் 26, தொகுதி 2 மற்றும் 2ஏ பணியிடங்கள் 821 என 2147 பணியிடங்களுக்கு மட்டும் தான் 4 ஆள்தேர்வு அறிவிக்கைகள் வெளியிடப் பட்டிருக்கின்றன. இவையும் கூட முந்தைய திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டவை தான். இதே நிலை தொடர்ந்தால், அடுத்த ஐந்தாண்டுகளில் அதிகபட்சமாக 50,000 பேருக்கு கூட அரசு வேலைகளை வழங்க முடியாது;  அரசுத்துறை காலிப் பணியிடங்களையும் நிரப்ப முடியாது. வாக்குறுதியை நிறைவேற்றுவதிலும் தவெக தோல்வியடையும்.</p><p>2026&amp;ஆம் ஆண்டில் தவெக ஆட்சிக்கு வருவதற்கு காரணம் இளைஞர்கள் தான். அவர்களுக்கு தவெக  அளித்த வாக்குறுதிகளில் முதன்மையானவை அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்; வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4000 உதவித் தொகை வழங்கப்படும்; தனியார் தொழில் வணிக நிறுவனங்களில் 75% வேலைகள் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்யும் சட்டம் இயற்றப்படும் என்பன தான். இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுப்பது இளைஞர்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகம் ஆகும். அதை செய்யாமல் இருப்பதை தவிர்க்க டி.என்.பி.எஸ்.சி மூலம் நிரப்பப்படவுள்ள தொகுதி 2 மற்றும் 2ஏ பணிகளுக்கான காலியிடங்களின் எண்ணிக்கையை 3000 ஆக உயர்த்த வேண்டும். இது தவிர, வேலையில்லாத இளைஞர்களுக்கு   உதவித் தொகை வழங்குதல், தனியார் வேலைவாய்ப்புகளில் தமிழக இளைஞர்களுக்கு 75% இட ஒதுக்கீடு  வழங்கும் சட்டத்தை இயற்றுதல் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளையும் விரைந்து நிறைவேற்ற வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>வங்கதேசம் அபார பந்துவீச்சு: ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 198 ரன்களுக்கு ஆல் அவுட்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/australia-all-out-198-runs-against-bangladesh-in-first-test</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/australia-all-out-198-runs-against-bangladesh-in-first-test#comments</comments><guid isPermaLink="false">bbfec5c5-2c38-48f5-b814-4c0c8dd06680</guid><pubDate>Thu, 13 Aug 2026 08:07:45 +0000</pubDate><atom:updated>2026-08-13T08:07:45.510Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>AUSvBAN,Hasan Mahmud,ஆஸ்திரேலியா வங்கதேசம் தொடர்,ஹசன் மகமுது</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/t90erb1p/hasan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ hasan mahmud]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/t90erb1p/hasan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 198 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.</p><p>ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நஜ்முல் ஹூசைன் ஷான்டோ தலைமையிலான வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது.</p><h2>டார்வின் டெஸ்ட்</h2><p>இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது.</p><p>இந்நிலையில், ஆஸ்திரேலியா-வங்கதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டார்வினில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.</p><p>அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்கியது. வங்கதேச வீரர்கள் ஆரம்பம் முதலே சிறப்பாக பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.</p><h2>ஸ்மித் அரை சதம்</h2><p>ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து அரை சதம் கடந்தார். அவர் 71 ரன்னில் அவுட்டானார்.</p><p>ஜேக் வெதரால்டு 23 ரன்னும், டிராவிஸ் ஹெட் 22 ரன்னும் எடுத்தனர்.</p><p>5-வது விக்கெட்டுக்கு இணைந்த ஸ்மித்-கேரி ஜோடி 56 ரன்கள் சேர்த்தது.</p><p>இறுதியில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 198 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.</p><p>வங்கதேசம் சார்பில் ஹசன் மகமுது 6 விக்கெட்டும், தஸ்கின் அகமது, எபாடட் ஹொசைன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p>]]></content:encoded></item><item><title>தெலுங்கானா அரிசி ஆலைகளில் அதிரடி சோதனை: ரூ.700 கோடி நெல் நிலுவைத் தொகையை மீட்டு அரசு சாதனை!</title><link>https://www.maalaimalar.com/news/national/telangana-rice-mills-raid-government-recovers-rs-700-crore-paddy-dues</link><comments>https://www.maalaimalar.com/news/national/telangana-rice-mills-raid-government-recovers-rs-700-crore-paddy-dues#comments</comments><guid isPermaLink="false">9e6171e1-4dab-4833-b7da-e6e962ee5aae</guid><pubDate>Thu, 13 Aug 2026 07:53:21 +0000</pubDate><atom:updated>2026-08-13T07:53:21.009Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Revanth Reddy,Telangana,தெலங்கானா,ரேவந்த் ரெட்டி,Telangana rice mills,தெலங்கானா அரிசி ஆலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/z2h9un4m/Telangana-rice-mills.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Telangana rice mills ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/z2h9un4m/Telangana-rice-mills.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தெலுங்கானா மாநிலத்தில் அரசுக்கு சொந்தமான நெல் நிலுவையைத் திரும்பச் செலுத்தாத அரிசி ஆலை அதிபர்கள் மீது மாநில அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விஜிலென்ஸ் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த சில வாரங்களாக நடத்திய சோதனையில், சுமார் 900 கோடி ரூபாய் மதிப்பிலான நெல் இருப்பு மாயமானது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அரசு விடுத்த கடும் எச்சரிக்கையைத் தொடர்ந்து, இதுவரை 700 கோடி ரூபாய் வரை நிலுவைத் தொகை மீட்கப்பட்டுள்ளது.</p><h2>முறைகே<strong>டு செய்வோர் மீது கடு</strong>ம் நடவடிக்கை</h2><p>முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மற்றும் குடிமைப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் உத்தம் குமார் ரெட்டி ஆகியோர் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில், அரசுக்குச் சொந்தமான ஒவ்வொரு தானியத்தின் மதிப்பையும் முழுமையாக மீட்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். நேர்மையாகச் செயல்படும் ஆலை அதிபர்களுக்கு அரசு துணையாக இருக்கும் என்றும், முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் ஆலைகள் பறிமுதல் செய்யப்பட்டு, நெல் அரவை செய்யும் பணிகள் மகளிர் சுயஉதவிக் குழுக்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>நவீன சேமிப்பு <strong>மையங்கள் </strong></h2><p>எதிர்காலத்தில் தானியச் சேமிப்பில் முறைகேடுகள் நடப்பதைத் தவிர்க்க, அதிக நெல் மகசூல் தரும் நல்கொண்டா, சூரியபேட்டை, நிஜாமாபாத், பெத்தபல்லி மற்றும் காமாரெட்டி ஆகிய மாவட்டங்களில் 'சைலோ' சேமிப்பு மையங்களைக் கட்ட முன்னோடித் திட்டம் தொடங்கப்படவுள்ளது.</p><p>இதற்காகத் தொகுதிக்கு 50 முதல் 100 ஏக்கர் வரை நிலம் ஒதுக்கப்பட்டு, இந்த மையங்களைப் பராமரிக்கும் பொறுப்பு மகளிர் சுயஉதவிக் குழுக்களிடம் வழங்கப்படும். மேலும், உடனடித் தேவைகளுக்காகத் தனியார் சேமிப்புக் கிடங்குகள், திருமண மண்டபங்கள் மற்றும் பழைய திரையரங்குகளை வாடகைக்கு எடுத்து நெல் சேமிப்பைப் பாதுகாக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மேட்டூர் அணை நீர்மட்டம் 80 அடியை தாண்டியது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mettur-dam-water-level-crossed-80-feet</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mettur-dam-water-level-crossed-80-feet#comments</comments><guid isPermaLink="false">5ded8579-50a0-4616-ad46-ecd53638976b</guid><pubDate>Thu, 13 Aug 2026 07:41:47 +0000</pubDate><atom:updated>2026-08-13T07:41:47.841Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,Mettur Dam,Hogenakkal,Southwest Monsoon,தென்மேற்கு பருவமழை,ஒகேனக்கல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/zd9v02bk/metturdam3.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mettur dam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/zd9v02bk/metturdam3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடியை தாண்டியது.</strong></em></p><h2>தென்மேற்கு பருவமழை</h2><p>கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளது. இதையடுத்து கடந்த 1-ந் தேதி முதல் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்தை பொறுத்து தமிழகத்துக்கு காவிரியில் அதிகரித்தும், குறைத்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. </p> <h2>நீர்மட்டம்</h2><p>இன்று காலை நிலவரப்படி கபினி அணைக்கு வினாடிக்கு 8448 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அதே போல் கிருஷ்ண ராஜ சாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 124.80 அடியாகும். தற்போது அணையின் நீர்மட்டம் 109.74 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4875 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2310 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.</p> <h2>ஒகேனக்கல் பரிசல் இயக்க தடை</h2><p>இதன் காரணமாக ஒகேனக்கல்லில் இன்று காலை வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதனால் பாதுகாப்பு கருதி இன்று 4-வது நாளாக பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">மேட்டூர் அணைக்கு</a> நேற்று மாலை வினாடிக்கு 8583 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று காலை வினாடிக்கு 7833 கனஅடியாக குறைந்து வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.</p> <h2>80 அடியை தாண்டியது</h2><p>அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே திறந்து விடப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 80.31 அடியாக இருந்தது. கர்நாடகாவில் மழையின் தீவிரம் அதிகரித்து உபரிநீர் திறப்பு அதிகரித்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>ரூ.10.74 கோடி டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி: பிரபல சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸர் புனேயில் கைது!</title><link>https://www.maalaimalar.com/news/national/digital-arrest-scam-10-74-crore-popular-social-media-influencer-held-in-pune</link><comments>https://www.maalaimalar.com/news/national/digital-arrest-scam-10-74-crore-popular-social-media-influencer-held-in-pune#comments</comments><guid isPermaLink="false">908ca415-9154-4d97-90cf-083912fff780</guid><pubDate>Thu, 13 Aug 2026 07:29:00 +0000</pubDate><atom:updated>2026-08-13T07:29:00.612Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>புனே,Pune,DigitalArrestScam,டிஜிட்டல்அரெஸ்ட்மோசடி,சைபர்போலீஸ்,CyberPolice,OnlineFraud,InfluencerArrested,இன்ஃப்ளூயன்ஸர்கைது,MuleAccountScam</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/z9i07wyu/Mule-AccountScam" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mule AccountScam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/z9i07wyu/Mule-AccountScam?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி மூலம் முதியவர் ஒருவரிடம் ரூ.10.74 கோடி சுருட்டிய வழக்கில், 26 வயதான பிரபல சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸர் ரோஹன் ராஜேஸ்வர் ஜாதவ் என்பவரை <a href="https://www.maalaimalar.com/topic/pune">புனே</a> சைபர் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். </p><p>நீதிமன்றத்தில் சரணடைந்ததைத் தொடர்ந்து அவர் முறைப்படி கைது செய்யப்பட்டார்.</p><h2>வழக்கின் பின்னணி:</h2><p>புனேயின் டெக்கான் பகுதியைச் சேர்ந்த 82 வயது ஓய்வுபெற்ற தொழிலதிபர் ஒருவரை மிரட்டிய மோசடி கும்பல், அவர் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிக்கியிருப்பதாகக் கூறி 'டிஜிட்டல் அரெஸ்ட்' செய்துள்ளது. </p><p>இதன் மூலம் அவரிடமிருந்து ரூ.10.74 கோடியைப் பறித்துள்ளனர்.</p><h2>இன்ஃப்ளூயன்ஸரின் பங்கு:</h2><p>இதுகுறித்து சைபர் பிரிவு சீனியர் இன்ஸ்பெக்டர் ஸ்வப்னாலி ஷிண்டே கூறுகையில், "கைது செய்யப்பட்டுள்ள ரோஹன் ஜாதவ், மோசடி கும்பலுக்கு போலி வங்கி கணக்குகளை வழங்கியுள்ளார். </p><p>இந்த கணக்குகள் மூலம் பலரிடம் பணம் பறிக்கப்பட்டுள்ளது" என்றார். போலீசார் பணப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்தபோது இந்த போலி கணக்கு நெட்வொர்க் அம்பலமானது.</p><h2>அடுத்தடுத்த கைதுகள்:</h2><p>இந்த வழக்கில் ஏற்கனவே கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சுபம் தனதோலே(26), அமர் அதராகி(24) உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். </p><p>அவர்களிடம் நடத்திய விசாரணையின் போது அடிப்படையிலேயே ரோஹன் ஜதாவும் பிடிபட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள ரோஹன் ஜதாவ், கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் மற்றும் குறுகிய வீடியோக்களை பதிவிட்டு லட்சக்கணக்கான ஃபாலோவர்ஸ்களை கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>மும்பையில் கொட்டித்தீர்த்த கனமழை: கட்கோபர் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு 6 பேர் பரிதாப பலி; மீட்புப் பணிகள் தீவிரம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/heavy-rain-mumbai-landslide-kurla-six-killed</link><comments>https://www.maalaimalar.com/news/national/heavy-rain-mumbai-landslide-kurla-six-killed#comments</comments><guid isPermaLink="false">74fd4b75-cca2-4636-9df1-0752bea4ee62</guid><pubDate>Thu, 13 Aug 2026 07:20:58 +0000</pubDate><atom:updated>2026-08-13T07:20:58.545Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>mumbai,மும்பை,Mumbai landslide,Ghatkopar,மும்பை நிலச்சரிவு,கட்கோபர் பகுதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/wxa6rpdx/mm.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mumbai landslide]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/wxa6rpdx/mm.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, நகரின் கிழக்கு புறநகர் பகுதியான கட்கோபர் சிராக் நகரில் உள்ள கௌசியா சால் பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. குன்றின் சரிவிலிருந்து பாறைகளும் மண்ணும் சரிந்து விழுந்ததில், அங்குள்ள குடியிருப்பு வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், மேலும் 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><h2>அதிகா<strong>லையில் நிகழ்ந்த விபரீதம்</strong></h2><p>பிருஹன் மும்பை மாநகராட்சி மற்றும் தீயணைப்புத் துறை அளித்த தகவலின்படி, இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை சுமார் 3:48 மணியளவில் நிகழ்ந்துள்ளது. மக்கள் ஆழந்த உறக்கத்தில் இருந்த நேரத்தில், குன்றின் ஒரு பகுதி திடீரென சரிந்து வீடுகளின் மீது விழுந்தது. தகவல் அறிந்தவுடன் தேசிய பேரிடர் மீட்புப் படை, மும்பை தீயணைப்புப் படை, காவல்துறை மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.</p><h2>கேமரா<strong>க்கள் மூலம் தீ</strong>விர சோதனை</h2><p>நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி மிகவும் குறுகலான பாதைகளைக் கொண்டதாக இருப்பதால், பெரிய இயந்திரங்களை அங்கு கொண்டு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. </p><figure><img alt=" 6 killed in a landslide" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/yq8kdkq0/lands.jpg" /></figure><p>இதனால் மீட்புக் குழுவினர் மனித ஆற்றல் மூலமாகவும், சிறிய வாளிகள் மூலமாகவும் இடிபாடுகளை அகற்றும் சவாலான பணியை மேற்கொண்டனர். </p><p>இடிபாடுகளுக்குள் எவரேனும் சிக்கியுள்ளனரா என்பதைக் கண்டறிய நவீன இடிபாடுகளுக்குள் தேடும் 'விக்டிம் டிடெக்ஷன் கேமரா' கருவிகள் பயன்படுத்தப்பட்டன. காயமடைந்தவர்கள் உடனடியாக ராஜாவாடி மற்றும் பாபா மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><h2>நிவார<strong>ண உத</strong>வி</h2><p>சம்பவ இடத்தை மும்பை மேயர் ரிது தவாடே மற்றும் மாநகராட்சி உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு நிலைமையை ஆய்வு செய்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறிய மேயர், பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சமும், காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவுக்காக தலா ரூ. 50,000 நிதி உதவியும் அறிவித்துள்ளார். மேலும், நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாறுமாறு மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அழகிலும் அழகு.. 27 ஆண்டுகளுக்கு பிறகு ஐரோப்பாவில் முழு சூரிய கிரகணம் - கண்டு ரசித்த மக்கள் </title><link>https://www.maalaimalar.com/news/world/rare-total-solar-eclipse-in-europe-first-full-eclipse-in-27-years-dazzles-skywatchers-across-northern-spain-and-other-regions</link><comments>https://www.maalaimalar.com/news/world/rare-total-solar-eclipse-in-europe-first-full-eclipse-in-27-years-dazzles-skywatchers-across-northern-spain-and-other-regions#comments</comments><guid isPermaLink="false">68c1902e-9ca9-45a6-ba24-548843483398</guid><pubDate>Thu, 13 Aug 2026 07:13:01 +0000</pubDate><atom:updated>2026-08-13T07:13:01.211Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சூரிய கிரகணம்,europe,Solar eclipse,ஐரோப்பா,வானியல் நிகழ்வு,astronomical event</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/3wzz2lr0/tn-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சூரிய கிரகணம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சூரிய கிரகணம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/3wzz2lr0/tn-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>27 ஆண்டுகளுக்குப் பிறகு ஐரோப்பிய கண்டத்தில் நேற்று முதல் முழு <a href="https://www.maalaimalar.com/news/world/nasa-to-livestream-total-solar-eclipse-on-august-12">சூரிய கிரகணம்</a> காணப்பட்டது.</p><p>இதற்கு முன்னர் 1999ஆம் ஆண்டில்தான் ஐரோப்பிய நிலப்பகுதியில் முழு சூரிய கிரகணம் தென்பட்டடிருக்கிறது.  </p> <h2>27 ஆண்டுகளுக்குப் பிறகு</h2><p>ஆகஸ்ட் 12 - நேற்று மாலை வட ஸ்பெயின், ஐஸ்லாந்து, கிரீன்லாந்து, போர்ச்சுகலில் முழு சூரிய கிரகணம் தென்பட்டது. ரஷியாவின் வட பகுதியிலும் முழு கிரகணம் தெரிந்தது.</p><p>ஐரோப்பாவின் பிற பகுதிகள், வடமேற்கு ஆப்பிரிக்கா மற்றும் வட அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதிகளில் பகுதியளவு சூரிய கிரகணம் தென்பட்டது.</p><p>இந்த கிரகணத்தின் உச்சக்கட்டத்தின் போது, நிலவு சூரியனை முழுமையாக மறைத்த நிகழ்வு 2 நிமிடங்கள் 18 வினாடிகள் வரை நீடித்தது.</p> <h2>ரசித்த மக்கள்</h2><p>அந்தச் சில நிமிடங்களில் பகல் நேரம் திடீரென மாலை நேர இருளாக மாறியது.</p><p>உலகின் கோடிக்கணக்கான மக்கள் இந்த முழு சூரிய கிரகணத்தை நேரிலும் நேரலையிலும் கண்டு ரசித்தனர். நாசா இந்த நேரலையை ஒளிபரப்பியது. </p><p>ஸ்பெயினில் சூரிய அஸ்தமன நேரத்தில் இந்த கிரகணம் நிகழ்ந்ததால், மற்ற இடங்களை விட மிக பார்க்க அழகாக இருந்தது. </p><p>ஸ்பெயினில் மட்டும் சுமார் 60 லட்சம் மக்கள் இதைக் காண திரண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>இந்தியாவில் கிரகணம் நிகழ்ந்த நேரத்தில் இரவாக இருந்ததாலும், இந்தியா இந்த கிரகணத்தின் நிழல் பாதையில் அமைந்திருக்கவில்லை என்பதாலும் இங்கிருந்து இந்த சூரிய கிரகணத்தை நம்மால் காண முடியவில்லை.</p>]]></content:encoded></item><item><title>நாளை ஆடிப்பூர தேரோட்டம்: ஸ்ரீரங்கத்தில் இருந்து ஆண்டாளுக்கு மங்களப்பொருட்கள் அனுப்பிவைப்பு</title><link>https://www.maalaimalar.com/spirituality/aadi-pooram-auspicious-items-sent-to-andal-from-srirangam</link><comments>https://www.maalaimalar.com/spirituality/aadi-pooram-auspicious-items-sent-to-andal-from-srirangam#comments</comments><guid isPermaLink="false">ad64ef6b-f82e-4062-ae6d-ed4ea6438c04</guid><pubDate>Thu, 13 Aug 2026 07:12:13 +0000</pubDate><atom:updated>2026-08-13T07:12:13.621Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,வழிபாடு,worship,Srivilliputhur,ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்,ஆடிப்பூரம்,aadi pooram,Andal,திருச்சி ஸ்ரீரங்கம் கோவில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/0y0wyk2b/srirangam.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Srirangam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/0y0wyk2b/srirangam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த ஆண்டாள், பெருமாள் மீதிருந்த பக்தியினால் அவருக்கு பூமாலையுடன், பாமாலை சூட்டியதோடு அவரிடமே மணமாலையும் சூடிக் கொண்டாள். இதனால் ஆண்டாளுக்கு சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்ற சிறப்புப்பெயரும் உண்டு. </p><h2>ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்</h2><p>ஆண்டாள் மணமுடித்து ஐக்கியமானது திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் என்பதால் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கும், ஸ்ரீரங்கம் கோவிலுக்குமிடையே சம்பந்த உறவும், மங்களப்பொருட்கள் பரிவர்த்தனையும் நெடுங்காலமாக இருந்து வந்தது. பல்வேறு காரணங்களினால் அவ்வழக்கம் இடையில் நின்று போனது.</p> <h2>மங்களப்பொருட்கள் பரிவர்த்தனை</h2><p>இந்தநிலையில் இரு ஊர் பக்தர்களின் முயற்சியால் அவ்வழக்கம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக ஸ்ரீரங்கம் சித்திரை தேருக்கு முதல் நாள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்தும், ஸ்ரீவில்லிபுத்தூர் தேரோட்டத்திற்கு முதல்நாள் ஸ்ரீரங்கத்தில் இருந்தும் பரஸ்பரம் மங்களப்பொருட்கள் பரிவர்த்தனை நடந்து வருகிறது.</p> <h2>ஆடிப்பூர தேரோட்டம்</h2><p>இந்த வகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் <a href="https://www.maalaimalar.com/spirituality/aadi-pooram-3">ஆடிப்பூர</a> தேரோட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரங்கள், மஞ்சள், குங்குமம், பழங்கள், சந்தனம், தாம்பூலம் உள்ளிட்ட மங்களப்பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு ஆண்டாள் கோவிலில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.</p> <h2>ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்</h2><p>இதற்கென ரெங்கநாதர் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் கொண்டு செல்லவுள்ள மங்களப்பொருட்கள் கோவில் ரங்க விலாச மண்டபத்தில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு பின், உள்வீதிகளில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டன.</p><p>இந்த மங்களப்பொருட்கள் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ரெங்கநாதர் கோவில் அர்ச்சகர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் உபயதாரர்கள் மூலம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நாளை ஆடிப்பூரம்:  பெண்கள் வாழ்வில் சுப பலன்களை அள்ளித் தரும் ஆண்டாள் வழிபாடு</title><link>https://www.maalaimalar.com/spirituality/tomorrow-aadi-pooram-worship</link><comments>https://www.maalaimalar.com/spirituality/tomorrow-aadi-pooram-worship#comments</comments><guid isPermaLink="false">6f3c934e-6245-452c-ab41-82201380b42b</guid><pubDate>Thu, 13 Aug 2026 07:10:44 +0000</pubDate><atom:updated>2026-08-13T07:10:44.967Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆடி மாதம்,ஆடிப்பூரம்,aadi pooram,Aadi Month,Andal Worship,ஆண்டாள் வழிபாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/m1s13y1j/aadipooram.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/m1s13y1j/aadipooram.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கன்னிப்பெண்களை மகிழ்விப்பதும் சுமங்கலிகளை மகிழ்வித்து மங்கலப் பொருட்கள் வழங்குவதும் மிகப்பெரிய புண்ணியம். சர்வ மங்கலங்களும் பொங்கிப்பெருகும்.</strong></em></p><p>ஆடி மாத விழாக்களில் முக்கியமான <a href="https://www.maalaimalar.com/topic/ஆடிப்பூரம்">ஆடிப்பூரம்</a> நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. பூரம் நட்சத்திரம் நாளை காலை 7.22 மணிக்கு தொடங்கி, நாளை மறுநாள் காலை 7:01 மணிக்கு நிறைவடைகிறது.</p><p>அனைத்து மாதங்களிலும் பூரம் நட்சத்திரம் வந்தாலும், ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் நாச்சியார் அவதரித்தது ஆடி மாத பூரம் நட்சத்திரத்தில்தான்.  </p><p>ஒருசமயம் நாராயணனிடம் பூமிதேவி, ‘இந்த உலகத்தில் உள்ள ஆத்மாக்களில் தாங்கள் யாரிடத்தில் அதிக அன்பு செலுத்துவீர்கள்?’ என்று  கேட்டார். அதற்கு அவர் ‘பூலோகத்தில் வாழ்ந்தும் இக சுகங்களில் பற்று வைக்காமல் என்னிடமே நித்தம் பக்தி செய்து என்னை நினைத்து எனக்குப் பாமாலையும், பூமாலையும்  தொடுத்துச் சாத்துகின்ற பாகவதர்களிடம் நான் அளவு கடந்த அன்பு செலுத்துவேன், என்றார். </p><h2><strong>பெருமாள் மீது பக்தி</strong></h2><p>உடனே பூமிதேவி, தான் அத்தகைய பக்தையாக  பிறவியெடுக்க அருளவேண்டினார். அதன் படியே, நள வருடம் ஆடி மாதம் சுக்ல பட்சம் சதுர்த்தி செவ்வாய்க்கிழமையும் பூர நட்சத்திரமும் கூடிய அன்று நந்தவனத்தில் துளசி மாடத்துக்குக் கீழே இப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோவிலில் உள்ள நாச்சியார் சந்நிதி உள்ள இடத்தில் பூமாதேவி சிறு குழந்தையாக ஆண்டாளாக அவதரித்தாள்.  </p><p>வடபத்ரசாயி பெருமாளுக்கு மாலை அணிவிக்கும் பொருட்டு பூக்கள் பறிப்பதற்காக விடியற்காலையில் பூக்குடலையுடன் நந்தவனத்திற்குச் சென்ற விஷ்ணு சித்தர் எனும் பெரியாழ்வார் அந்த சிறு குழந்தையைப் பார்த்தார். அந்த குழந்தையை சுரும்பார் குழற்கோதை அல்லது சுருக்கமாக கோதை என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்.</p><p>இளம் வயதிலேயே சமயம், தமிழ் என தனக்குத் தெரிந்த அனைத்தையுமே பெரியாழ்வார் கோதைக்குச் சொல்லிக் கொடுத்தார். இதனால் கோதை, இளம் வயதிலேயே கண்ணன் மீது மிகுந்த பக்தியுணர்வு கொண்டவராகவும், தமிழில் நல்ல திறமை கொண்டவராகவும் இருந்தார். </p><p>கன்னிப் பருவம் அடைந்த கோதைக்கு பெரியாழ்வார் உயர்ந்த ஞானத்தைப் போதித்தார். கோதையும் கண்ணனையே சிந்திப்பதும் துதிப்பதும் மற்றும் அந்த கோவிந்தன் நினைவாகவே வளர்ந்து வந்தாள்.  இளமை தொடங்கி பெருமாள் மீது பக்தி கொண்டு அவரையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றிருந்தாள் கோதை.</p><h2><strong>கோதை சூடிக்கொடுத்த  மாலையே நறுமணம்</strong></h2><p>பெரியாழ்வார் தினமும் பூ  கொய்து வந்து அதை மாலையாகக் கட்டி பெருமாளுக்கு சாற்றுவதற்கு பூக்கூடையில் வைப்பது வழக்கம். பெருமாளுக்கு சாற்றுவதற்காக ஆழ்வாரால் தொடுக்கப்பட்ட மாலையை, கோதை, ஒவ்வொரு நாளும்  தான் அணிந்து கண்ணனுக்கு ஏற்றவளாக தானிருக்கிறோமா என்று  கண்ணாடியில்  பார்த்து மகிழ்ந்து பின்னர் திரும்பவும் கொண்டுபோய் வைத்துவந்தார். இதனால் கோதை சூடிய மாலைகளே இறைவனுக்கும் சூடப்பட்டன. பெருமாளும் அதை விருப்பமுடன் ஏற்றுக்கொண்டார். இது பெரியாழ்வாருக்கு தெரியாது. ஒருநாள் பெருமாளுக்கு அணிவிப்பதற்காகக் கட்டி வைத்திருந்த மாலையைச் சூடி  கண்ணாடியில் கோதை, தன்னை அழகு பார்த்துக் கொண்டிருந்ததை பெரியாழ்வார் கவனித்துவிட்டார். </p><p>மனவருத்தத்தால் பகவானுக்கு அன்று அவள் சூடிய மாலையை ஒதுக்கிவிட்டுப் புதிய மாலை தொடுத்து இறைவனுக்கு அணிவித்தார்.  அன்று இரவு ஆழ்வாரின் கனவில் பெருமாள் தோன்றி ‘கோதை சூடிக்கொடுத்த  மாலையே நறுமணம் மிக்கதும் எம் உள்ளத்திற்கு விருப்பமானதும் ஆகும்; ஆதலின் அத்தன்மையான மாலையே கொண்டு வருவாய்’ எனச் சொன்னார்.</p><p>தனக்கு  மகளாய் வாய்த்துள்ள கோதை பூமிதேவியின் அவதாரம் என பெரியாழ்வார் தெரிந்துகொண்டார்.  தான் சூடிக் கொடுத்த மாலையை பகவான் ஏற்றுக்கொண்டதால், அன்று முதல் கோதை, ‘சூடிக்கொடுத்த நாச்சியார்’ எனவும், ‘சூடிக்கொடுத்த சுடர்க்கொடி’ என்றும் இறைவனையே ஆண்டவள் என்ற பொருளில் “ஆண்டாள்” என்றும் போற்றப்படுகிறார். அரங்கநாதரின்  பெருமைகளைக் கேட்டு அளவற்ற இன்பம் அடைந்து அரங்கனுக்கே மாலையிடுவதென உறுதி பூண்டாள் ஆண்டாள். ரங்கநாதரும் அவளுடைய பக்திக்கு வசமாகி  கோதையை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். </p><p>அரங்கன் ஆழ்வாரின் கனவில் தோன்றி கோதையை ஸ்ரீ ரங்கத்திற்கு அழைத்து வருமாறு ஆணையிட்டார். பாண்டிய நாட்டு மன்னனாகிய வல்லபதேவன் கனவிலும் தோன்றி, நீ அடியார் குழாத்துடன் ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சென்று பட்டர்பிரான் மகளாம் கோதையை முத்துப் பல்லக்கில் ஏற்றி நம் ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து வருவாயாக என்றருளினார். மன்னன் வல்லபதேவனும் ஏவலாளரைக் கொண்டு, விடியற்காலைக்குள் ஸ்ரீவில்லிபுத்துரையும் ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் வழியெங்கும் தண்ணீர் தெளித்தும், பூம்பந்தலிட்டும், தோரணம் கட்டியும், வாழை, கமுகு நாட்டியும் நன்கு அலங்கரித்து வைத்தான். பின், நால்வகை சேனைகளோடும் வந்து அரங்கன் தன் கனவில் கூறியவற்றை ஆழ்வாருக்கு உணர்த்தினான்.</p><p>அரசன், பெரியாழ்வார் முதலானோருடன் கோதையுடன் பலரும் ஸ்ரீரங்கம் பெரிய கோவிலை அடைந்தனர்.  ஸ்ரீரங்கத்தில் நுழைந்ததும் அரங்கனுக்காகவே அலங்கரித்தால் போல் இருந்த  ஆண்டாள் பல்லக்கிலிருந்து இறங்கி பெரிய பெருமாள், சந்நிதியில் சென்று, மறைந்து பரமபதம் அடைந்தாள்.  </p><p>ஆண்டாள் அவதரித்த ஆடி மாதம் முழுவதுமே ஆண்டாளை வழிபடலாம். பிரார்த்தனை செய்து நம்முடைய கோரிக்கைகளை வைக்கலாம். ஒரு அன்னையின் கருணையுடன் நம் குறைகளைக் கேட்டறிவாள் ஆண்டாள். மங்காத செல்வங்களைத் தருகிறாள்.  ஆண்டாளை நினைத்து பூஜைகள் செய்து, ஒரு செவ்வாய்க்கிழமையோ வெள்ளிக்கிழமையோ சுமங்கலிகளுக்கு வளையல், மஞ்சள், குங்குமம், தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை-பாக்கு என மங்கலப் பொருட்களுடன் புடவை, ரவிக்கை அல்லது ரவிக்கை மட்டுமோ வைத்து கொடுக்கலாம்.</p><p>இதனால்  இல்லத்தில் ஐஸ்வர்யம் பெருகும். குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சி தங்கும். இதேபோல், சிறுமியருக்கும் வளையல், பொட்டு, கண்ணாடி, மருதாணி முதலான மங்கலப் பொருட்களை வழங்கலாம். வீட்டில், தடைபட்ட மங்கல காரியங்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து நடைபெற அருளுவாள் ஆண்டாள். பெருமாளின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாக அவதரித்த தருணத்தில், பூமாதேவியும் ஆடிப்பூர நாளில் ஆண்டாளாக அவதரித்தாள்.</p><p>கன்னிப்பெண்களை மகிழ்விப்பதும் சுமங்கலிகளை மகிழ்வித்து மங்கலப் பொருட்கள் வழங்குவதும் மிகப்பெரிய புண்ணியம். சர்வ மங்கலங்களும் பொங்கிப்பெருகும். குழந்தை இல்லையே என்று ஏங்குவோருக்கு, விரைவில் சந்தான பாக்கியம் அருளுவாள் ஆண்டாள் அன்னை. பொன் பொருள் சேர்க்கை நிகழும். ஆடை ஆபரணச் சேர்க்கைகளை வழங்குவாள் ஆண்டாள். ஆடிப்பூரத்தில் அம்பாளுக்கு வீட்டிலிருந்தே பல வழிபாடுகளை செய்யலாம். அம்பாள் ஆராதனையை குடும்பத்தில் உள்ள பெண்கள் எல்லோரும் சேர்ந்து செய்யலாம்.  வீட்டை சுத்தம் செய்து, அலங்கரித்து, ஆண்டாளுக்கு உரிய தாமரைப்பூ, சிகப்பு நிற ஆடை, கல்கண்டு சாதம் ஆகியவற்றை படைத்து வழிபட்டு தான தர்மம் செய்தால் ஆண்டாளின் பூரண அருள் கிட்டும் என்பது நம்பிக்கை. </p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள்..!- பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வரவேற்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/historic-resolutions-passed-in-assembly-golden-kodi-armstrong-welcome</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/historic-resolutions-passed-in-assembly-golden-kodi-armstrong-welcome#comments</comments><guid isPermaLink="false">2e5fc61b-2ac4-4bc5-b130-929a2b587760</guid><pubDate>Thu, 13 Aug 2026 07:10:18 +0000</pubDate><atom:updated>2026-08-13T07:10:18.117Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,தீர்மானங்கள் நிறைவேற்றம்,பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/ckb6x8m6/porkodi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Porkodi Armstrong]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/ckb6x8m6/porkodi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி பொது செயலாளர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் சட்டமன்றத்தில்  கொண்டுவரப்பட்ட சரித்திர சிறப்புமிக்க  தீர்மானங்களை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.</p><p>அதில் கூறியதாவது:-</p><p>சட்டமன்றத்தில் விளிம்பு நிலை மக்களின் மருத்துவக் கல்வியை கருத்தில் கொண்டும் மருத்துவக்கல்வி கார்ப்பரேட் மயமாவதை தடுத்து நிறுத்தும் பொருட்டும் கொண்டு வரப்பட்ட நீட் ஒழிப்பு தனித்தீர்மானம், சிறுபான்மையினரின் கல்வி  நிறுவனங்கள் மற்றும் சமூக தொண்டு நிறுவனங்களை முடக்கும் வகையில் ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கும்  வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்ட (எஃப்சி ஆர்ஏ) திருத்த மசோதாவிற்கு எதிரான தீர்மானம், பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக் கீட்டை தாமதப்படுத்தாமல் நிறைவேற்ற வலியுறுத்தி கொண்டுவரப்பட்ட தனித்தீர்மானம், தமிழகத்தின் 7.18 சதவீத நாடாளுமன்ற பிரதிநிதித்துவ விகிதாசாரத்தை  குறைக்கும் வகையில் ஒன்றிய அரசு கொண்டு வர முயற்சிக்கும் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான தீர்மானம் என தமிழக முதல்வர் தலைமையிலான தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த  அனைத்து தீர்மானங்களையும்  தமிழ்மாநில பகுஜன் சமாஜ் கட்சி  பாராட்டி வரவேற்கிறது.</p><p>மேலும், நம் மாநில  நலன் கருதியும் மக்களின் நலன் கருதியும் இதுபோன்று எத்தகைய அரசியல் நிலைப்பாட்டை  தமிழக முதல்வர் முன்னெடுத்தாலும்  தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி அதை வரவேற்பதோடு அரசுக்கு உறுதுணையாகவும் நிற்கும் என்பதையும்  தெரிவித்துக் கொள்கிறது. தொடரட்டும் நல்லவை மட்டும். பாராட்டுகள்.</p><p>இவ்வாறு அதில் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு அல் கொய்தா தான் காரணம் - ஐநா பரபரப்பு அறிக்கை 
</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-car-bomb-alert-un-report-links-aqis-al-qaeda-affiliate-to-red-fort-blast-contradicting-indian-probe</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-car-bomb-alert-un-report-links-aqis-al-qaeda-affiliate-to-red-fort-blast-contradicting-indian-probe#comments</comments><guid isPermaLink="false">73daac01-82f2-4583-bb01-3bb16bf08ba9</guid><pubDate>Thu, 13 Aug 2026 06:55:44 +0000</pubDate><atom:updated>2026-08-13T06:55:44.489Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Lashkar-e-Taiba,அல் கொய்தா,al qaeda,லஷ்கர் இ தொய்பா,செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு,Red Fort car bombing</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/52oemgy6/tn-9.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு ]]></media:title><media:description type="html"><![CDATA[ டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/52oemgy6/tn-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டெல்லி சென்கோட்டை அருகே நடந்த <a href="https://www.maalaimalar.com/news/national/delhi-car-bombing-terrorists-used-chatgpt-to-design-rocket-explosives-in-red-fort-attack">கார் குண்டுவெடிப்பில்</a> அல் கொய்தாவின் கை இருப்பதாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் கண்காணிப்பு குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. </p><h2>அல் கொய்தா </h2><p>கடந்த ஆகஸ்ட் 10 வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில், "இந்திய துணை கண்டத்தில் அல் கொய்தாவின் ஒரு துணைப் பிரிவு, பிராந்திய பயங்கரவாத அமைப்பாக வளர்ந்து வருகிறது. அது ஒரு மத்திய தலைமையின் கீழ் இல்லாமல் தனி தனியே ஆங்காங்கே சிறு சிறு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது. </p><p>நவம்பர் 2025 இல் செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு தாக்குதலை அல் கொய்தாவின் இந்த துணை அமைப்பே மேற்கொண்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.   </p><p>அந்த அமைப்பின் பெயர் "அன்சார் கஸ்வத்உல் ஹிந்த்" (AQIS) என ஐநா கவுன்சில் குழு குறிப்பிட்டுள்ளது. 2014 இல் இந்த துணைப்பிரிவை  அல் கொய்தா தொடங்கியுள்ளது. </p><p>இந்த அமைப்பு தற்போது இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கனிஸ்தான் (சில பகுதிகள்) உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளில் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>எல்லைகளை கடந்து இயங்கி வருவதால் இவ்வமைப்பு ஆபத்தானது என அறிக்கை வகைப்படத்தியுள்ளது. </p><p>என்ஐஏ உள்ளிட்ட இந்திய முகமைகள் நடத்திய விசாரணையில் செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு தாக்குதல் பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு என கூறப்பட்ட நிலையில் ஐநாவின் இந்த மாறுபட்ட அறிக்கை விவாதத்தை தூண்டியுள்ளது. </p><h2>செங்கோட்டை கார் குண்டுவெடிப்பும் என்ஐஏ விசாரணையும்</h2><p>2025, நவம்பர் 10, மாலை 7 மணியளவில் டெல்லி செங்கோட்டை வெளியே ஹூண்டாய் i20 கார் திடீரென வெடித்துச் சிதறியது. இதில் அப்பகுதியில் இருந்த 11 பேர் உயிரிழந்தனர். காரை ஓட்டி வந்தவனும் உயிரிழந்தான்.</p><p>அவன் பெயர் உமர் இ நபி என அடையாளம் காணப்பட்டது. இவனுக்கு பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பவுடன் தொடர்பிருந்ததாக கூறப்பட்டது.</p><p>இவன் பஞ்சாபில் அல் பலா என்ற பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றி வந்தவன் எனவும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த பல்கலைக்கழகமும் பல முறைகேடுகளில் ஈடுபட்டதாக தெரியவந்தது.</p><p>செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக, 11 குற்றவாளிகளுக்கு எதிராக 7,500 குற்றப்பத்திரிகையை தேசிய புலனாய்வு முகமை தாக்கல் செய்திருந்தது. இந்தக் குற்றப்பத்திரிகையை வரும் ஆகஸ்ட் 27 அன்று டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>