<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 04 Sep 2026 05:21:56 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 4 செப். 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-4-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-4-september-2026#comments</comments><guid isPermaLink="false">acd0fb12-0d4b-4cd6-aa47-ddb31fcdc0f5</guid><pubDate>Fri, 04 Sep 2026 05:01:07 +0000</pubDate><atom:updated>2026-09-04T05:18:07.783Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/fhfb2j51/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ live news]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/fhfb2j51/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-wishes-to-teachers-day">அனைவரையும் முன்னேற்றும் ஆசிரியர்கள் வாழ்வும் ஏற்றம் பெற வகை செய்ய வேண்டும்! அன்புமணி ராமதாஸ்</a></p><p>* உலகில் அனைவராலும் கொண்டாடப்படுபவர்களாக இருப்பவர்கள் ஆசிரியர்கள் தான். அரசர்களாலும் மதிக்கப்படுபவர்கள் அவர்கள் தான். </p><p>* கடந்த ஆண்டு முதல் ஆசிரியர்களுக்கு புதிய நெருக்கடி ஒன்றும் உண்டாகியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-04-09-2026">GOLD PRICE TODAY : இன்றும் உயர்ந்த தங்கம் விலை- எவ்வளவு தெரியுமா?</a></p><p>* தங்கம் இன்று கிராமுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 360 ரூபாய்க்கும் சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-pallikaranai-marshland-retaining-wall-a-plan-for-destruction-not-restoration">பள்ளிக்கரணை சதுப்புநிலத் தடுப்புச் சுவர்: "மீட்சி அல்ல, அழிவுத் திட்டம்!"- அன்புமணி ராமதாஸ் ஆவேசம்</a></p><p>* இனிவரும் காலங்களில்  பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதிக்கு வெளிநாட்டு பறவைகள் வலசை வருவது முழுமையாக நின்று விடும்.</p><p>* பள்ளிக்கரணை உள்ளிட்ட கடற்கரையோர ஈரநிலங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பும் இந்தத் திட்டத்தின் முதன்மையான 4 நோக்கங்களில் ஒன்றாக திமுக அரசு அறிவித்தது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/krishna-jayanthi-president-droupadi-murmu-and-pm-modi-wish">கிருஷ்ண ஜெயந்தி: ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து</a></p><p>* கிருஷ்ணர் சத்தியம், நேர்மை, நீதி, கருணை மற்றும் தன்னலமற்ற செயல் ஆகியவற்றின் பாதையைக் காட்டினார்.</p><p>* பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீகச் செய்திகளில் தன்னலமற்ற செயலுக்கான ஆழ்ந்த உத்வேகம் அடங்கியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/krishna-jayanthi-festival-cm-vijay-wishes">கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அனைவருக்கும் நல்வாழ்த்துகள் - முதலமைச்சர் விஜய்</a></p><p>* அநீதிக்கு எதிரான அறம் வெல்லும், எத்தகைய சூழலிலும் கடமை தவறாது செயல்பட வேண்டும்.</p><p>* ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசங்களைப் பின்பற்றி உயரிய வாழ்வியல் நெறிகளுடன் அன்பும் அறமும் தழைத்தோங்கும் நல்லுலகைப் படைத்திடுவோம்.</p>]]></content:encoded></item><item><title>FCRA மசோதாவை ஆய்வு செய்ய 31 எம்.பி.க்கள் கொண்ட கூட்டுக்குழு அமைப்பு.. பின்னணி என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/national/joint-committee-comprising-31-mps-formed-to-examine-the-fcra-bill</link><comments>https://www.maalaimalar.com/news/national/joint-committee-comprising-31-mps-formed-to-examine-the-fcra-bill#comments</comments><guid isPermaLink="false">f78f143f-34cc-428d-abcc-b733ecc013f5</guid><pubDate>Fri, 04 Sep 2026 05:17:34 +0000</pubDate><atom:updated>2026-09-04T05:17:34.600Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Joint Parliamentary Committee,FCRA Amendment Bill,எப்சிஆர்ஏ,எப்சிஆர்ஏ சட்டத்திருத்த மசோதா,நாடாளுமன்ற கூட்டுக் குழு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/79soll06/tn.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ FCRA ]]></media:title><media:description type="html"><![CDATA[ FCRA ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/79soll06/tn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/fcra-amendment-bill-resolution-passed-unanimously-in-tn-assembly">எப்சிஆர்ஏ சட்டத்திருத்த மசோதா</a>வை ஆய்வு செய்ய 31 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. </p><p>அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணித்து ஒழுங்குபடுத்தும், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதா (<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%8F-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE">எப்சிஆர்ஏ</a>)வுக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. </p><p>மத்தியில் பாஜக தலைமையிலான என்டிஏ அரசாங்கம் எப்சிஆர்ஏ மசோதாவை கடந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கொண்டு வர எத்தனித்தது. </p><p>ஆனால் ஆகஸ்ட் 12 அன்று மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு மற்றும் விவாதங்களுக்குப் பிறகு மசோதாவானது நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பி ஆய்வு செய்ய முடிவெடுக்கப்பட்டது. </p><h2>கூட்டுக்குழு</h2><p>இந்நிலையில் எப்சிஆர்ஏ மசோதாவை ஆய்வு செய்ய 31 எம்.பிக்களை உள்ளடக்கிய நாடாளுமன்ற கூட்டுக் குழுவை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அமைத்துள்ளார்.</p><p>இந்த கூட்டுக்குழுவில் பாஜக எம்பி சஞ்​சய் ஜெய்ஸ்வால் தலைமை வகிப்​பார்.</p><p>இதில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசை சேரந்த 5 எம்.பிக்கள் இடம்பெற்றுள்ளனர். திமுகவின் 2 எம்பிக்கள் இடம்பெற்றுள்ளனர். </p><p>சமாஜ்வாதி, சரத்பவார் தேசியவாத காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் தலா 1 எம்.பி.க்கள் குழுவில் இடம்பெற்றுள்ளனர். மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் இருவர் இடம்பெற்றுள்ளனர்.</p><p>2014 முதல் பல சர்ச்சைக்குரிய மசோதாக்களை மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ளது. அவ்வாறான மசோதாக்களை ஆய்வு செய்ய அமைக்கப்படும் 19வது நாடாளுமன்ற கூட்டுக் குழு இது. 2024இல் இருந்து 9வது கூட்டுக்குழு இது.</p><h2>எப்சிஆர்ஏ சர்ச்சை</h2><p>கடந்த 1976 ஆம் ஆண்டு அப்​போதைய பிரதமர் இந்​திரா காந்தி ஆட்​சிக் காலத்​தில் எப்சிஆர்ஏ சட்டம் கொண்டு வரப்​பட்​டது.</p><p>கடந்த 2010 ஆம் ஆண்​டில் அப்​போதைய பிரதமர் மன்​மோகன் சிங் ஆட்​சி​யில் இந்த சட்​டத்​தில் கடுமை​யான விதி​கள் சேர்க்​கப்​பட்​டன.</p><p>கடந்த 2020 ஆம் ஆண்​டில் பிரதமர் ​திர மோடி தலைமையிலான என்டிஏ அரசின் இரண்டாம் ஆட்சிக் காலத்தில் எப்சிஆர்ஏவில் ​மேலும் கடுமை​யான விதி​கள் சேர்க்கப்பட்டன.</p><p>தற்​போது மேலும் அதில் மேலும் 3 முக்​கிய திருத்​தங்​கள் செய்யப்பட்டுள்ளன.</p><h2>3 முக்​கிய திருத்​தங்​கள்</h2><p>எப்சிஆர்ஏ உரிமம் ரத்து செய்யப்பட்ட அமைப்புகளின் சொத்துக்களை நிர்வகிக்கவும், தேவைப்பட்டால் அவற்றை விற்கவும் ஒரு தனி அதிகாரியை அரசு நியமிப்பது,</p><p>உரிமம் ரத்து செய்யப்பட்ட அமைப்புகள் தங்களின் வெளிநாட்டு நிதி மற்றும் அசையும், அசையா சொத்துக்களைப் பயன்படுத்துவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பது, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விதிகளைப் பூர்த்தி செய்யாத அமைப்புகளின் சொத்துக்களை அரசாங்கம் தனது கட்டுப்பாட்டில் எடுப்பது ஆகியவை புதிய திருத்தங்கள் ஆகும்.</p><p>இது குறித்து புதிதாக அமைக்கப்பட்ட கூட்டுக்குழு ​​ செய்து தனது பரிந்துரைகளை சமர்ப்பிக்க உள்ளது. இதன் பின் மசோதா அடுத்த கூட்டத்தொடரில் மக்களவையில் வாக்கெடுப்புக்கு விடப்படும்.</p>]]></content:encoded></item><item><title>அனைவரையும் முன்னேற்றும் ஆசிரியர்கள் வாழ்வும் ஏற்றம் பெற வகை செய்ய வேண்டும்! அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-wishes-to-teachers-day</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-wishes-to-teachers-day#comments</comments><guid isPermaLink="false">e8e11445-3249-4375-adf4-4ddaa93e4f86</guid><pubDate>Fri, 04 Sep 2026 05:17:10 +0000</pubDate><atom:updated>2026-09-04T05:17:10.901Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,teachers day,ஆசிரியர் தினம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/ceojmvnu/Anbumaniramadoss01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/ceojmvnu/Anbumaniramadoss01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஆசிரியர்களின் வாழ்க்கை முன்னேற்றம் பெற அரசு வகை வேண்டும்; அந்த இலக்கை நோக்கி உழைக்க ஆசிரியர்கள் நாளில் அனைவரும் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>ஏணியாகவும், தோனியாகவும் இருந்து மாணவர்களை ஏற்றம் பெறவும், வாழ்வில் கரை சேரவும் வகை செய்யும்  ஆசிரியர்களை பெருமைப்படுத்துவதற்கான <a href="https://www.maalaimalar.com/topic/ஆசிரியர்-தினம்">ஆசிரியர்கள் நாளைக்</a> கொண்டாடும் ஆசிரியர்கள் அனைவருக்கும்  எனது நல்வாழ்த்துகளையும், வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>உலகில் அனைவரின் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும் ஆத்மாக்கள் ஆசிரியர்கள் தான்; அதேபோல், மற்றவர்களின் முன்னேற்றத்தைக் கண்டு பொறாமைப்படாமல், மகிழ்ச்சியடையும் மகாத்மாக்களும் ஆசிரியர்கள் தான். அதனால் தான் அவர்கள் அனைவராலும் வணங்கப்படுபவர்களாக உள்ளனர். இத்தகைய சிறப்புமிக்க ஆசிரியர்களை இந்த சமுதாயம் போற்ற வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் நாள் என்பதை ஆசிரியர்களும், மாணவர்களும் மட்டுமே கொண்டாடும் நிலையை மாற்றி ஒட்டுமொத்த மக்களும் கொண்டாடும் நிலையை உருவாக்க வேண்டும். அது தான் நமது சமுதாயத்தை வளர்ப்பதற்காக உழைக்கும் ஆசிரியர் பெருமக்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக இருக்கும்.</p><p>உலகில் அனைவராலும் கொண்டாடப்படுபவர்களாக இருப்பவர்கள் ஆசிரியர்கள் தான். அரசர்களாலும் மதிக்கப்படுபவர்கள் அவர்கள் தான். ஆனால், அவர்கள் வாழ்க்கை மட்டும் கொண்டாட்டமானதாக இல்லை. பழைய ஓய்வூதியத் திட்டம், சமவேலைக்கு சம ஊதியம், தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு என பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத கோரிக்கைகள் ஏராளமாக இருக்கும் நிலையில், கடந்த ஆண்டு முதல் ஆசிரியர்களுக்கு புதிய நெருக்கடி ஒன்றும் உண்டாகியுள்ளது. கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைப் படுத்தப்படுவதற்கு முன் ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள் 2028 ஆகஸ்ட் மாதத்திற்குள் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது தான் இதற்கு காரணமாகும். ஆசிரியர்களின் இந்த நெருக்கடியைப் போக்க கடந்த திமுக ஆட்சி மட்டுமின்றி, புதிய தவெக ஆட்சியும் எதுவும் செய்யாததால் ஆசிரியர்களின் நெருக்கடிகள் தொடர்கின்றன.</p><p>ஆசிரியர்கள் கவலையின்றி வாழ்ந்தால் தான் மாணவர்களை முன்னேற்ற முடியும். அதற்கு வசதியாக  ஆசிரியர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதுடன், தகுதித் தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண்களையும் குறைந்தபட்சம் 35% ஆக குறைக்க வேண்டும்.  இதன் மூலம் ஆசிரியர்களின் வாழ்க்கை முன்னேற்றம் பெற அரசு வகை வேண்டும்; அந்த இலக்கை நோக்கி உழைக்க ஆசிரியர்கள் நாளில் அனைவரும் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>&quot;இம்மார்ட்டல்&quot; படத்திற்கு முக்கியத்துவம் தரவில்லையா?- பட புரமோஷனில் பங்கேற்காதது குறித்து கயாடு லோகர் விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/immortal-movie-promotion-controversy-kayadu-lokar-breaks-silence</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/immortal-movie-promotion-controversy-kayadu-lokar-breaks-silence#comments</comments><guid isPermaLink="false">0bb70f32-364e-480a-8636-0eca011bc058</guid><pubDate>Fri, 04 Sep 2026 05:05:53 +0000</pubDate><atom:updated>2026-09-04T05:05:53.130Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>Kayadu Lohar,கயாடு லோகர்,Immortal,இம்மார்டல்,பட புரோமோஷன்,Movie promotion</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/u1c3cn00/Kayadu.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Actress Kayadu lohar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/u1c3cn00/Kayadu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டிராகன் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் கயாடு லோகர். தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் கயாடு இன்று வெளியாகி உள்ள ‘இம்மார்ட்டல்’, துல்கர் சல்மானுடன் ‘ஐ ஆம் கேம்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.</p><p>இம்மார்ட்டல் படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த வாரம் முதல் தீவிரமாக நடந்து வந்த நிலையில் படத்தின் கதாநாயகியான கயாடு லோகர் புரேமோஷன் விழாவில் பங்கேற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது.</p><p>இதுகுறித்து அவர் கூறும்போது:-</p><p>ஏன் இதைப்பற்றி பேச தொடங்கியுள்ளனர் என எனக்கு தெரியவில்லை. ‘ஐ ஆம் கேம்’ புரமோஷனுக்கு ஒரு நாள் கிடைத்தது.</p><p>ஆனால், இம்மார்ட்டல் படக்குழுவினரிடம் அந்த தேதி இல்லை. அடுத்து ஒரு படப்பிடிப்பில் பங்கேற்றேன். அதனால் இம்மார்ட்டல் பட விழாவுக்கு என்னால் செல்ல முடியவில்லை. இந்த படம் முக்கியம்.</p><p>அந்த படம் முக்கியம் என்பது போல் சித்தரித்து விமர்சனங்களை கொடுக்கிறார்கள். பரவாயில்லை எனக்கு இது பழகிவிட்டது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவுக்கு முதல் படி.. விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்த GSLV-F17 ராக்கெட் - பிரதமர் மோடி பெருமிதம்</title><link>https://www.maalaimalar.com/news/national/a-first-step-for-india-gslv-f17-rocket-successfully-launched-into-space-pm-modi-expresses-pride</link><comments>https://www.maalaimalar.com/news/national/a-first-step-for-india-gslv-f17-rocket-successfully-launched-into-space-pm-modi-expresses-pride#comments</comments><guid isPermaLink="false">ace3ef99-0306-4968-ae5f-132737a27a05</guid><pubDate>Fri, 04 Sep 2026 04:45:20 +0000</pubDate><atom:updated>2026-09-04T04:45:20.507Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ISRO,இஸ்ரோ,செயற்கைக்கோள்,Prime Minister Modi,satellite,பிரதமர் மோடி,GSLV rocket,ஜிஎஸ்எல்வி ராக்கெட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/y5pf1rq8/tn-27.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரதமர் மோடி ]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர் மோடி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/y5pf1rq8/tn-27.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>GSLV-F17 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது பற்றி பிரதமர் மோடி பெருமிதம் பொங்க எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். </p><p>இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான EOS-05-ஐ சுமந்து சென்ற <a href="https://www.maalaimalar.com/news/national/gslv-rocket-with-earth-observation-satellite-lifts-off">GSLV-F17 ராக்கெட்</a>, இன்று (வெள்ளிக்கிழமை) வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.</p><h2>பிரதமர் மோடி பெருமிதம்</h2><p>இதற்கு வாழ்த்து தெரிவித்து <a href="https://www.maalaimalar.com/news/world/pakistan-spy-satellites-six-inclined-orbit-satellites-launched-to-continuously-monitor-indian-territory">பிரதமர் மோடி</a> வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், </p><p>"இஸ்ரோவின் மற்றொரு வியக்கத்தக்க சாதனை இது. நாட்டிற்கு பெருமை சேர்க்கும் மற்றொரு தருணமிது. </p><p>EOS-05-ஐ சுமந்து சென்ற GSLV-F17 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது. </p> <p>புவி-ஒத்திசைவு சுற்றுப்பாதையில் இருந்து செயல்படும் இந்தியாவின் முதல் படமெடுக்கும் செயற்கைக்கோளான EOS-05ஐ சுமந்து GSLV-F17 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது இந்திய விண்வெளித் துறையின் வளர்ந்துவரும் செயல்திறனை வரையறுக்கும் புத்தாக்கமான மற்றும் பாராட்டத்தக்க விஷயம்.</p><p>இஸ்ரோ மற்றும் இந்திய தொழில்துறைக்கு இடையே வளர்ந்து வரும் கூட்டாண்மை, நமது விண்வெளித் திட்டத்திற்கு புதிய பலத்தை சேர்ப்பதுடன், ஒட்டுமொத்த விண்வெளி ஈக்கோ-சிஸ்டத்தில் இந்தியாவின் திறன்களை விரிவுபடுத்துகிறது." என தெரிவித்துள்ளார்.</p> <h2>முதல் இமேஜிங் செயற்கைக்கோள் </h2><p>EOS-05-ஐ சுமந்து சென்ற GSLV-F17 ராக்கெட் சென்னையில் இருந்து சுமார் 135 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இன்று அதிகாலை 2.55 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.</p> <p>இந்திய துணைக்கண்டத்தின் மீது நிலைத்திருக்கும் வகையில் செயல்பட உள்ளதால் மல்டி-ஸ்பெக்ட்ரல் மற்றும் ஹைப்பர்-ஸ்பெக்டரல் தொழில்நுட்பம் கொண்ட அதிநவீன கேமராக்கள் மூலம் இந்தியாவின் நிலப்பரப்பை தொடர்ந்து கண்காணித்து நிகழ்காலத்துக்கு நெருக்கமான புகைப்படங்களை வழங்கும் வகையில் இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><p>இந்தியாவின் எல்லைப் பகுதிகளை தொடர்ச்சியாக கண்காணித்து, நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு தேவையான முக்கிய தரவுகளை வழங்கும். இது புவிசார் சுற்றுப்பாதையில் இருந்து இந்தியாவை கண்காணிக்கும் நாட்டின் முதல் இமேஜிங் செயற்கைக்கோள் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY : இன்றும் உயர்ந்த தங்கம் விலை- எவ்வளவு தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-04-09-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-04-09-2026#comments</comments><guid isPermaLink="false">a2fa9f91-3886-45d8-886d-e39c1a40bb1d</guid><pubDate>Fri, 04 Sep 2026 04:22:06 +0000</pubDate><atom:updated>2026-09-04T04:22:06.305Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/bxvt918k/gold.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ தங்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/bxvt918k/gold.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தங்கம் இன்று கிராமுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 360 ரூபாய்க்கும் சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தங்கம்">தங்கம்</a> விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. சென்னையில் கடந்த 1-ந்தேதி தங்கம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 175-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 400-க்கும் விற்பனையானது. இதனை தொடர்ந்து 2-ந்தேதி தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.225 குறைந்து, ரூ.13 ஆயிரத்து 950-க்கும், சவரனுக்கு ரூ.1,800 சரிந்து ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 600-க்கும் விற்றது. அதனை தொடர்ந்து நேற்று தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு 290 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 240 ரூபாய்க்கும் சவரனுக்கு 2,320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 920-க்கு விற்பனையானது.</p><h2><strong>தொடர் உயர்வில் தங்கம்</strong></h2><p>இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 360 ரூபாய்க்கும் சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நேற்று, இன்று மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3280 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. </p><h2><strong>வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது. </p><h2><strong>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்</strong></h2><p>03-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,920</p><p>02-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,600</p><p>01-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,400</p><p>31-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,960</p><p>30-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,040</p><h2><strong>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>03-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>02-08-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>01-09-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>31-08-2026- ஒரு கிராம் ரூ.260</p><p>30-08-2026- ஒரு கிராம் ரூ.260</p>]]></content:encoded></item><item><title>7 வீரர்களை நீக்கியது சரியான முடிவு தான்- பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொசின் நக்வி</title><link>https://www.maalaimalar.com/sports/pakistan-cricket-board-chairman-mohsin-naqvi-justifies-removal-of-seven-players</link><comments>https://www.maalaimalar.com/sports/pakistan-cricket-board-chairman-mohsin-naqvi-justifies-removal-of-seven-players#comments</comments><guid isPermaLink="false">1fe6e473-9697-4ee2-a183-f33ada7c4d08</guid><pubDate>Fri, 04 Sep 2026 04:12:14 +0000</pubDate><atom:updated>2026-09-04T04:12:14.929Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Pakistan,கிரிக்கெட் வீரர்கள்,மொசின் நக்வி,cricket players,Mohasin  nakvi</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/1bbw11nd/Nakvi2.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mohsin Nakvi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/1bbw11nd/Nakvi2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முதல் இரு டெஸ்டுகளிலும் படுதோல்வி அடைந்தது.</p><p>ஒரு இன்னிங்சில் கூட 200 ரன்களை தொடவில்லை. மோசமான தோல்வி எதிரொலியாக முகமது ரிஸ்வான், சல்மான் அலி ஆஹா, இமாம் உல்-ஹக் உள்பட 7 வீரர்கள் 3-வது டெஸ்டுக்கு முன்பாக தடாலடியாக நீக்கப்பட்டனர்.</p><p>அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். பயிற்சியாளர் சர்ப்ராஸ் அகமதுவும் விடுவிக்கப்பட்டுள்ளார்.</p><p>பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த நடவடிக்கையை முன்னாள் கேப்டன்கள் ரமீஷ் ராஜா, ரஷீத் லத்தீப், சாஹித் அப்ரிடி உள்ளிட்டோர் கடுமையாக குறை கூறினர்.</p><p>ஒரு தொடரின் பாதியில் வீரர்களை நீக்குவது சரியானது அல்ல. இது வீரர்களின் மனஉறுதியை சீர்குலைக்கும் என்று அவர்கள் சாடினர்.</p> <h2>மொசின் நக்வி</h2><p>இந்த நிலையில் இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொசின் நக்வி முதல்முறையாக விளக்கம் அளித்துள்ளார்.</p><p>அவர் லண்டனில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-</p><p>பாகிஸ்தான் கிரிக்கெட் மோசமான நிலையில் இருப்பதாக விமர்சிப்பது நியாயமற்றது. ஒரு நாள் போட்டி தரவரிசையில் 8-வது இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.</p><p>கடைசி 6 ஒரு நாள் தொடர்களில் 4-ஐ கைப்பற்றியுள்ளது. வெற்றி சதவீதம் 24-ல் இருந்து 73-ஆக உயர்ந்துள்ளது. அப்படி இருந்தும் நமது கிரிக்கெட் அழிந்துவிட்டதா? நான் ஒரு விஷயத்தை உங்களிடம் கேட்கிறேன்.</p><p>சமீபத்தில் இந்திய அணி, அயர்லாந்திடம் 20 ஓவர் போட்டியில் தோற்றது. முத்தரப்பு தொடரில் தென்ஆப்பிரிக்க அணி, நமிபியாவிடம் தோல்வி அடைந்தது. அத்துடன் கிரிக்கெட் முடிந்து விட்டதா என்ன? இது போன்ற சில பின்னடைவுகள் ஒட்டுமொத்த அணியின் தரத்தை தீர்மானித்து விடாது.</p><p>சிலர் பாகிஸ்தான் கிரிக்கெட் முற்றிலும் அழிந்து விட்டதாக கூறி வருகிறார்கள். தங்கள் கிரிக்கெட் வாழ்க்கையில் எதையும் சாதிக்காதவர்கள் இப்படி பேசுவது வேடிக்கையானது. சில நேரங்களில் அணித் தேர்வில் தவறு நடப்பது உண்மைதான். அதற்கு நானே பொறுப்பேற்கிறேன்.</p><p>தொடரில் ஒவ்வொரு போட்டியும் முக்கியமானது. வீரர்கள் சோபிக்காதபோது அவர்களை நீக்கிவிட்டு மாற்று வீரர்களை சேர்ப்பதை தவிர வேறு வழியில்லை.</p><p>ஒரு அணியை 9-ல் இருந்து நம்பர் ஒன் இடத்திற்கு 3 அல்லது 6 மாதங்களில் கொண்டு வருவது சாத்தியமல்ல. அதற்கு நீண்ட தூரம் செல்ல வேண்டி யுள்ளது. </p><p>ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகள் போன்று டெஸ்ட் வடிவத்திலும் முன்னேற்றத்தை எதிர்பார்க்கிறோம்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>பள்ளிக்கரணை சதுப்புநிலத் தடுப்புச் சுவர்: &quot;மீட்சி அல்ல, அழிவுத் திட்டம்!&quot;- அன்புமணி ராமதாஸ் ஆவேசம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-pallikaranai-marshland-retaining-wall-a-plan-for-destruction-not-restoration</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-pallikaranai-marshland-retaining-wall-a-plan-for-destruction-not-restoration#comments</comments><guid isPermaLink="false">4b3d4e27-76f1-4fb4-8bea-9edf69f211a6</guid><pubDate>Fri, 04 Sep 2026 04:11:53 +0000</pubDate><atom:updated>2026-09-04T04:11:53.725Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,பள்ளிக்கரணை சதுப்பு நிலம்,Pallikaranai Marshland</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/brfsypwp/anbumani.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பள்ளிக்கரணை சதுப்பு நிலம்- அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ பள்ளிக்கரணை சதுப்பு நிலம்- அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/brfsypwp/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை மாநகரத்தின் இன்றைய முதன்மைத் தேவையும், தமிழக அரசின் இன்றைய முதன்மைக் கடமையும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாப்பதும் தான் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p><a href="https://www.maalaimalar.com/topic/பள்ளிக்கரணை-சதுப்பு-நிலம்">பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில்</a> நெய்தல்  மீட்சி மற்றும் பாதுகாப்பு பணிகள் என்ற பெயரில், 3 கி.மீ நீளத்திற்கு சுற்றுச்சுவர் மற்றும் நடைபாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சதுப்பு நிலத்தை மீட்பதற்கு பதிலாக, அப்பகுதியில் வெள்ளத்தை ஏற்படுத்தி பேரழிவை உருவாக்கும் இத்திட்டத்தை திமுக அரசு தொடங்கியதும், இப்போதைய தவெக அரசு தொடர்ந்து செயல்படுத்துவதும் கண்டிக்கத்தக்கவை.</p><h2><strong>பேரழிவுத் திட்டம்</strong></h2><p>தமிழ்நாட்டின் கடலோர வளங்களை மீட்டெடுப்பதாகக் கூறி, தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் என்ற புதியத் திட்டத்தை கடந்த 2024-ஆம் ஆண்டில் திமுக அரசு தொடங்கியது. உலக வங்கியின் நிதியுதவியுடன்  ரூ.1675 கோடி செலவில் தமிழகத்தின் 14 கடலோர மாவட்டங்களில் 1076 கி.மீ நீளமுள்ள கடலோரப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தான் இந்தத் திட்டத்தின் நோக்கம் என்று முந்தைய திமுக அரசு அறிவித்தது. பள்ளிக்கரணை உள்ளிட்ட கடற்கரையோர ஈரநிலங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பும் இந்தத் திட்டத்தின் முதன்மையான 4 நோக்கங்களில் ஒன்றாக திமுக அரசு அறிவித்தது.</p><p>பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க வேண்டும் என்றாலோ, மீட்க வேண்டும் என்றாலோ, அதற்காக உடனடியாக மேற்கொள்ள வேண்டிய இரு நடவடிக்கைகள், ஒரு காலத்தில் 15,000 ஏக்கராக இருந்து இப்போது 1750 ஏக்கராக சுருங்கி விட்ட பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை இயன்றவரை அகற்றுவதும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் எல்லைகளை வரையறுத்து அறிவிக்கை செய்வதும் தான். ஆனால், அதற்கு பதிலாக மீதமுள்ள சதுப்பு நிலத்தையும் அழிக்கும் முயற்சியை திமுக அரசு தொடங்கியது. இந்த பேரழிவுத் திட்டத்திற்காக மட்டும் வனத்துறை மூலம் திமுக அரசு ரூ.21 கோடியை ஒதுக்கியுள்ளது.</p><h2><strong>ஏற்க முடியாதவை</strong></h2><p>பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய தமிழக அரசு, அதன் பங்குக்கு  ஆக்கிரமிப்பு செய்து 3 கி.மீ நீளத்திற்கு 6 அடி உயரத்தில் தடுப்புச் சுவரையும், அதற்கு உட்புறத்தில் 2 கி.மீ நீளத்திற்கு  நடைபாதையும் அமைத்து வருகிறது. தடுப்புச் சுவர், நடைபாதை ஆகிய இரண்டுமே நீரோட்டத்தைத் தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதால் அந்த பகுதியிலும், சென்னை மாநகரத்தின் பிற பகுதிகளிலும் பெய்யும் மழையால் ஏற்படும் நீர் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு செல்ல முடியாமல் தேங்கி வெள்ளம் ஏற்படும். கடந்த சில நாள்களில் பெய்த லேசான மழைக்கே அப்பகுதியில் மழை நீர் தேங்குவதே இதற்கு சான்றாகும்.</p><p>பள்ளிக்கரணையின் ஆகப்பெரும் சிறப்பே மழைக்காலங்களில் பெருக்கெடுத்து வரும் நீரை ஈர்த்துக் கொண்டு, சென்னை மாநகரை வெள்ளத்திலிருந்து பாதுகாப்பதும், வறட்சி காலங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் பாதுகாப்பதும் தான். இந்த இரு நோக்கங்களையும் திமுக அரசால் அறிவிக்கப்பட்ட இத்திட்டம் சிதைத்து  விடும். இப்படி ஒரு திட்டத்தை ஊழல் செய்யும் நோக்கத்துடன் தான் திமுக அரசு அறிவித்தது. ஆனால்,  ஊழலுக்கு இடம் கொடுக்கும் திட்டங்களையும், மக்களை பாதிக்கும் திட்டங்களையும் ரத்து செய்வதே தங்களின் கொள்கை என்று கூறி, ஐம்பதுக்கும் மேற்பட்ட திட்டங்களை நிறுத்தியும், ரத்து செய்தும் வைத்துள்ள முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான தவெக அரசு இந்தத் திட்டத்தை மட்டும் தொடருவது ஏன்?</p><p>பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியின் எல்லைக்குட்பட்ட பெரும்பாக்கம் பகுதியில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வசதியாக தனியார் கட்டுமான நிறுவனம் சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்து சாலை அமைத்தது.  இது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்த பசுமைத் தீர்ப்பாயம், சதுப்பு நிலத்தின் எல்லைகள் வரையறுத்து அறிவிக்கை செய்யப்படாததைக் கண்டித்து, சதுப்பு நில எல்லை அறிவிக்கை செய்யப்படும் வரை ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் கட்டுமானங்களைக் கட்ட இடைக்காலத் தடை விதித்தது. இந்த உண்மைகள் தெரிந்தும் இந்த அழிவுத் திட்டத்தை திமுக அரசு தொடங்கியதும், தவெக அரசு தொடர்வதும் ஏற்க முடியாதவை.</p><p>பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதிக்குள் இத்தகைய தடுப்புச் சுவர் மற்றும் நடைபாதை அமைப்பது 2017-ஆம் ஆண்டின் சதுப்புநிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகளுக்கு முற்றிலும் எதிரானது ஆகும். இத்தகைய தடுப்பு சுவர் அமைக்கப்படுவதால் அப்பகுதியில் வெள்ளம் ஏற்படுவது மட்டுமின்றி, சதுப்பு நிலத்தின் சூழலியல் தன்மையும் பாதிக்கப்படும். அதனால், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் அங்கமாக உள்ள பறவைகள், ஊர்வன வகைகள், நிலநீர் உயிரினங்கள், மீன்கள், மரங்கள், மூலிகைகள், புற்கள், நீர்வாழ் தாவரங்கள், பூச்சிகள், நுண்ணுயிரிகள் உள்ளிட்டவை அழிவைச் சந்திக்கும். அதுமட்டுமின்றி, இனிவரும் காலங்களில்  பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதிக்கு வெளிநாட்டு பறவைகள் வலசை வருவது முழுமையாக நின்று விடும்.</p><p>கடந்த காலங்களில் பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களை ஆக்கிரமித்து மத்திய மற்றும் மாநில அரசு அலுவகங்கள் கட்டப்பட்டன. பல்லாவரம் முதல் துரைப்பாக்கம் வரை ரேடியல் சாலை அமைக்கப்பட்டது. இதனால், அப்பகுதிகளில் சதுப்பு நிலத்தின் தன்மை பாதிக்கப்பட்டு, பறவைகளின் வருகை நின்று விட்டது. நெய்தல் மீட்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டால் ஒட்டுமொத்த பள்ளிக்கரணைக்கும் அதே நிலை தான் ஏற்படும்.</p><p>சென்னை மாநகரத்தின் இன்றைய முதன்மைத் தேவையும், தமிழக அரசின் இன்றைய முதன்மைக் கடமையும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாப்பதும் தான். அதை செய்வதற்கு பதிலாக பள்ளிக்கரணை சதுப்பு  நிலத்தை அழிக்கும் வகையிலும், அதையொட்டியுள்ள பகுதிகளில் வெள்ளத்தை ஏற்படுத்தும் வகையிலும் தடுப்புச் சுவர், நடைபாதை பணிகளை மேற்கொள்ளக்கூடாது. உடனடியாக அந்தப் பணிகளை தமிழக அரசு நிறுத்துவதுடன், இதுவரை மேற்கொள்ளப்பட்ட கட்டுமானங்களை அகற்றி அந்தப் பகுதிகளை ஏற்கனவே இருந்த இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டும். அதற்கும் மேலாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் எல்லைகளை உடனடியாக வரையறை செய்து அறிவிக்கை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இதை செய்யத் தவறினால் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைக் காப்பதற்காக சென்னை மாநகர மக்களைத்  திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை எனது தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் என எச்சரிக்கிறேன்.</p>]]></content:encoded></item><item><title>கிருஷ்ண ஜெயந்தி: ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/national/krishna-jayanthi-president-droupadi-murmu-and-pm-modi-wish</link><comments>https://www.maalaimalar.com/news/national/krishna-jayanthi-president-droupadi-murmu-and-pm-modi-wish#comments</comments><guid isPermaLink="false">ad933530-7156-49a8-a92c-b24ee984d65c</guid><pubDate>Fri, 04 Sep 2026 04:08:19 +0000</pubDate><atom:updated>2026-09-04T04:08:19.709Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திரவுபதி முர்மு,கிருஷ்ண ஜெயந்தி,krishna jayanthi,pm modi,பிரதமர் மோடி,Droupadi Murmu</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/574ii6ec/modi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ President Droupadi murmu - PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/574ii6ec/modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கிருஷ்ண ஜெயந்தியையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளனர்.</p><h2>ஜென்மாஷ்டமி</h2><p>கிருஷ்ணரின் அவதாரம், மனித குலத்திற்கு வாழ்வியல் நெறிகளையும், அறம், கடமை, பக்தி ஆகியவற்றின் உயர்ந்த தத்துவங்களையும் உணர்த்துகிறது. இத்தகைய மகத்தான கீதோபதேசத்தை வழங்கிய கண்ணனின் பிறப்பைத் தான் பக்தர்கள் கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி எனப் பல பெயர்களில் உலகெங்கும் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.</p> <h2>திரவுபதி முர்மு வாழ்த்து</h2><p>அந்த வகையில், நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தியையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு, <a href="https://www.maalaimalar.com/news/national/pm-exhorts-auto-industry-to-chart-bold-pathway-towards-viksit-bharat">பிரதமர் மோடி</a>, உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளனர்.</p><p>இதுதொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், </p> <p>ஸ்ரீ கிருஷ்ணரின் வாழ்க்கை வரலாறும் செய்திகளும் இந்தியக் கலாச்சாரத்திற்கும் தத்துவத்திற்கும் புத்துணர்வை அளிக்கின்றன. கிருஷ்ணர் சத்தியம், நேர்மை, நீதி, கருணை மற்றும் தன்னலமற்ற செயல் ஆகியவற்றின் பாதையைக் காட்டினார். ஸ்ரீ கிருஷ்ணரின் கொள்கைகளை அனைவரும் ஏற்றுக்கொண்டு, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வளர்ச்சி பெற்ற இந்தியாவை கட்டியெழுப்புவதற்காகத் தொடர்ந்து பாடுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.</p> <h2>பிரதமர் மோடி வாழ்த்து</h2><p>பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், </p><p>உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த <a href="https://www.maalaimalar.com/spirituality/krishna-jayanthi-worship-4">ஜென்மாஷ்டமி</a> நல்வாழ்த்துகள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீகச் செய்திகளில் தன்னலமற்ற செயலுக்கான ஆழ்ந்த உத்வேகம் அடங்கியுள்ளது, அதுவே மனிதகுலத்தை தொடர்ந்து வழிநடத்தி வருகிறது. அவரது பக்திக்கும் வழிபாட்டிற்கும் அர்ப்பணிக்கப்பட்ட இந்த புனிதமான நன்னாள், அனைவரின் வாழ்விலும் நேர்மறை ஆற்றலையும் வலிமையையும் ஊட்ட வேண்டும் என்பதே எனது மனமார்ந்த விருப்பம். ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா! என்று தெரிவித்துள்ளார்.</p> <h2>அமித்ஷா வாழ்த்து</h2><p>மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், </p><p>'ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி' எனும் புனிதத் திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.</p><p>அறம், நீதி மற்றும் பொதுநலத்தின் அடையாளமாகத் திகழும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அனைவர் மீதும் தொடர்ந்து தனது அருளைப் பொழியட்டும். ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா! என்று தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>நான்கு மாடல்களின் விலையை சத்தமின்றி மாற்றிய சாம்சங் - புதிய விலை விவரங்கள்</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/samsung-hikes-price-of-four-phones-in-india</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/samsung-hikes-price-of-four-phones-in-india#comments</comments><guid isPermaLink="false">d7dcbd34-55d6-4737-bb1c-c894d91fccc4</guid><pubDate>Fri, 04 Sep 2026 03:42:00 +0000</pubDate><atom:updated>2026-09-04T03:42:00.000Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Samsung,சாம்சங்,smartphone,ஸ்மார்ட்போன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/ojikiadz/Galaxy-A27.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Galaxy A27]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/ojikiadz/Galaxy-A27.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் <a href="https://www.maalaimalar.com/topic/samsung">சாம்சங்</a> கேலக்ஸி A17, கேலக்ஸி A27, கேலக்ஸி F17 மற்றும் கேலக்ஸி A07 5ஜி ஆகிய <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மார்ட்போன்</a> மாடல்களின் விலையை சாம்சங் நிறுவனம் உயர்த்தியுள்ளது. சாதன தயாரிப்பு நிறுவனங்களுக்கான லாப வரம்பு குறைந்து வருவதன் காரணமாகவே இந்த விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. </p><p>சமீபத்தில் தான் ஒப்போ மற்றும் விவோ உள்ளிட்ட பிற நிறுவனங்களும் தங்கள் சாதனங்களின் விலையை உயர்த்தின. அதோடு, சாம்சங் நிறுவனமும் கடந்த காலங்களில் பல சாதனங்களின் விலையை உயர்த்தியுள்ளது. இப்போது இந்தச் சாதனங்களின் புதிய விலைகள் என்ன என்பதைப் பார்ப்போம்.</p><h2>புதிய விலை விவரங்கள்:</h2><p>சாம்சங் கேலக்ஸி A17-இன் அனைத்து வேரியண்ட்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் 6ஜிபி ரேம், 128ஜிபி வேரியண்ட் விலை ரூ. 19,499-இல் இருந்து ரூ. 29,999-ஆக உயர்ந்துள்ளது. </p><p>அதேவேளையில், 8ஜிபி ரேம், 128ஜிபி மற்றும் 8ஜிபி ரேம், 256ஜிபி வேரியண்ட்களின் விலைகள் முறையே ரூ. 20,999-இல் இருந்து ரூ. 32,999-ஆகவும், ரூ. 23,999-இல் இருந்து ரூ. 38,499-ஆகவும் அதிகரித்துள்ளன.</p><p>சாம்சங் கேலக்ஸி A27-ன் வேரியண்ட்களின் விலையும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதன் பேஸ் வேரியண்ட் 6ஜிபி ரேம், 128ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 2,000 அதிகரித்து ரூ. 33,999-ஆகியுள்ளது. </p><p>மேலும், 8ஜிபி ரேம், 128ஜிபி மற்றும் 8ஜிபி ரேம், 256ஜிபி ஆகிய இரண்டு வேரியண்ட்களின் விலைகளும் முறையே ரூ. 34,999 மற்றும் ரூ. 40,499-இல் இருந்து ரூ. 38,999 மற்றும் ரூ. 45,499-ஆக மாறியுள்ளன.</p><p>சாம்சங் கேலக்ஸி A07 5ஜி-யை பொறுத்தவரை, 4ஜிபி ரேம், 128ஜிபி மற்றும் 6ஜிபி ரேம், 128ஜிபி வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 1,000 மற்றும் ரூ. 2,000 என்ற அளவில் உயர்ந்துள்ளன.</p>]]></content:encoded></item><item><title>அதிக போட்டிகளால் வீரர்களுக்கு காயம்: போட்டி அட்டவணையை முறைப்படுத்த பிசிசிஐ உறுதி!</title><link>https://www.maalaimalar.com/sports/player-injuries-due-to-packed-schedule-bcci-vows-reform</link><comments>https://www.maalaimalar.com/sports/player-injuries-due-to-packed-schedule-bcci-vows-reform#comments</comments><guid isPermaLink="false">062e78d5-bd05-4567-b9e7-287841ca6abe</guid><pubDate>Fri, 04 Sep 2026 03:41:16 +0000</pubDate><atom:updated>2026-09-04T03:41:16.486Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BCCI,போட்டி அட்டவணை,வீரர்கள் காயம்,பிசிசிஐ</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/jzyz7dwv/BCCI.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ BCCI]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/jzyz7dwv/BCCI.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆண்டுதோறும் அதிகமான போட்டிகளில் விளையாடுவதால் வீரர்கள் அடிக்கடி காயத்தில் சிக்குகிறார்கள். அதை குறைக்க முயற்சி எடுக்கப்படும் என கிரிக்கெட் வாரியம் உறுதி அளித்துள்ளது.</p><h2>ஆலோசனை கூட்டம்</h2><p>இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மறுசீராய்வு கூட்டம் மும்பையில் நேற்று நடந்தது. கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுடன் இந்திய டெஸ்ட் கேப்டன் சுப்மன்கில், 20 ஓவர் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், பயிற்சியாளர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D" rel="nofollow">கவுதம் கம்பீர்</a>, கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு மைய இயக்குனர் வி.வி.எஸ்.லட்சுமண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p><p>இதில், இங்கிலாந்து தொடரில் ஏற்பட்ட தோல்வி, முன்னணி வீரர்கள் அடிக்கடி காயத்தில் சிக்குவது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.</p><h2>தேவஜித் சைக்யா</h2><p>பின்னர் இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் தேவஜித் சைக்யா நிருபர்களிடம் கூறியதாவது:-</p><p>நாங்கள் எதிர்கொள்ளும் ஒரே சவால் என்னவென்றால், ஒரு ஆண்டில் அதிகமான போட்டிகள் நடப்பது தான். நிறைய போட்டிகளில் ஆடுவதால் வீரர்களுக்கு காயங்கள் ஏற்படுகின்றன.</p><p>இவர்களின் போட்டி அட்டவணையை பார்த்தால், உதாரணமாக இங்கிலாந்து ஒரு நாள் தொடருக்கு 15 பேர் கொண்ட இந்திய அணி சென்றது. அங்கு 3-4 வீரர்கள் ஆட்டத்தின் போது காயமடைந்தனர்.</p><p>ஆனால் அதற்கு முன்பு அவர்கள் 2 மாதங்கள் ஓய்வின்றி ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடியதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவை எல்லாம் வீரர்களின் உடல்நலத்தை பாதிக்கின்றன.</p><p>இத்தகைய சூழலை தவிர்க்க தற்போதைய போட்டிகள் மற்றும் எதிர்கால <a href="https://www.maalaimalar.com/ampstories/web-stories/ipl-2026-csk-chennai-super-kings-schedule" rel="nofollow">போட்டி அட்டவணை</a>களுக்கு உட்பட்டு நாம் என்ன சிறந்த நடவடிக்கைகள் எடுக்க முடியும் என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம். இதற்கான தீர்வை காண முயற்சிக்கிறோம்.</p><h2>ரோகித் சர்மா- அகர்கர் குறித்து...</h2><p>ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் நடக்கும் எந்த ஒரு பெரிய தொடருக்கு முன்பாகவும் வீரர்களுக்கு முறையான ஓய்வும், அங்குள்ள தட்பவெப்ப சூழலுக்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக் கொள்வதற்கு பயிற்சியும் கிடைக்கும் வகையில் எங்களது வருங்கால போட்டி அட்டவணை திட்டமிடப்பட வேண்டும்.</p><p>பெங்களூருவில் உள்ள கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு மையத்தில் உள்ள மருத்துவ குழுவுக்கும், <a href="https://www.maalaimalar.com/sports/cricket/womens-asia-cup-2026-ind-w-beat-hkg-w-by-137-runs" rel="nofollow">இந்திய அணி</a> நிர்வாகத்துக்கும் இடையே சரியான தகவல் பரிமாற்றம் இல்லை என கூறப்படுவது தவறானது. அனைவரும் ஒரே நோக்கத்துடன் செயல்படுகிறோம். </p><p>இந்திய கிரிக்கெட் வாரியம் ஒரு ஆயில் என்ஜின் போல் சிறப்பாக இயங்குகிறது. கிரிக்கெட் வாரியத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் இடையே முறையான ஒருங்கிணைப்பு உள்ளது. தகவல் பரிமாற்றம் அனைத்தும் சரியாக சென்று கொண்டிருக்கிறது.</p><p>மூத்த வீரர் ரோகித் சர்மா மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். கடந்த ஆட்டத்தில் (இங்கிலாந்துக்கு எதிராக) 138 ரன்கள் குவித்தார். அதனால் அவரது எதிர்காலம் குறித்து ஏன் யூகங்களை கிளப்புகிறீர்கள். அந்த யூகங்களுக்கு பதில் அளிக்கப்போவதில்லை.</p><p>தேர்வு குழு தலைவர் அஜீத் அகர்கரின் ஒப்பந்த காலத்தை நீட்டிப்பது குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை. அவர் வெளியூரில் இருப்பதால் அவரால் கூட்டத்துக்கு வர முடியவில்லை.</p><p>இவ்வாறு சைக்யா கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>புதிய தலைமைச் செயலகம் எங்கு?- 4 இடங்கள் பரிசீலனை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/where-will-the-new-secretariat-be-located-4-sites-under-consideration</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/where-will-the-new-secretariat-be-located-4-sites-under-consideration#comments</comments><guid isPermaLink="false">c3d05b56-daee-4562-a8cd-b6b6d128be0d</guid><pubDate>Fri, 04 Sep 2026 03:29:10 +0000</pubDate><atom:updated>2026-09-04T03:29:10.096Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,புதிய தலைமை செயலகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/2rmptqvy/TNGovt.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தலைமைச் செயலகம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தலைமைச் செயலகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/2rmptqvy/TNGovt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னையில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கு பட்டினப்பாக்கம், கிண்டி, நந்தம்பாக்கம், கோயம்பேடு ஆகிய 4 இடங்கள் பரிசீலனையில் உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</strong></em></p><h2><strong>கடலோர பகுதி</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/புதிய-தலைமை-செயலகம்">புதிய தலைமைச் செயலகம்</a> மற்றும் சட்டப்பேரவை வளாகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ள நிலையில், அதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. புதிய கட்டிடத்துக்கு போதுமான இடம் உள்ளதா, போக்குவரத்து வசதி எப்படி உள்ளது, எதிர்காலத்தில் மேலும் கட்டிடங்களை அமைக்க இடம் கிடைக்குமா, சுற்றுச்சூழல் மற்றும் சட்டப் பிரச்சனைகள் உள்ளனவா என்பன குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.</p><p>பட்டினப்பாக்கம் போர்ஷோர் எஸ்டேட் பகுதியில் சுமார் 25 ஏக்கர் நிலம் உள்ளது. நகரின் முக்கியப் பகுதிகளுக்கு அருகில் இருப்பது இந்த இடத்தின் சாதகமாக பார்க்கப்படுகிறது. ஆனால் இது கடலோரப் பகுதி என்பதால், கட்டிடங்கள் அமைப்பது தொடர்பான விதிமுறைகளை பின்பற்ற வேண்டியுள்ளது. அடையாறு முகத்துவாரம் அருகில் இருப்பதால், மழைக்காலத்தில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ளம் ஏற்படும் வாய்ப்பும் ஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளது. மேலும் இதன் அருகில் மீனவர்கள் வசிக்கும் குடியிருப்புகளும் உள்ளன.</p><h2><strong>கிண்டி</strong></h2><p>கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் சுமார் 35 ஏக்கர் நிலம் உள்ளது. இதுதவிர, கிண்டி ரேஸ்கோர்ஸ் பகுதியிலும் பெரிய அளவில் நிலம் இருப்பதால், இந்த பகுதியும் முக்கியமாக பரிசீலிக்கப்படுகிறது. சர்தார் படேல் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் அருகில் உள்ளன. ரெயில் மற்றும் மெட்ரோ ரெயில் வசதிகளும் இருப்பதால், சென்னையின் பல பகுதிகளில் இருந்து எளிதாக வந்து செல்ல முடியும். ஆனால் கிண்டி ஏற்கெனவே பரபரப்பான பகுதியாக உள்ளது. சென்னை ஐ.ஐ.டி., அண்ணா பல்கலைக்கழகம், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, கிங்ஸ் ஆஸ்பத்திரி, கவர்னர் மாளிகை மற்றும் பல்வேறு அரசு அலுவலகங்கள் இப்பகுதியில் உள்ளன. கிண்டி ரெயில் நிலையம், மெட்ரோ ரெயில் மற்றும் முக்கிய சாலைகள் காரணமாக ஏற்கெனவே அதிக வாகனப் போக்குவரத்து உள்ளது.</p><h2><strong>நந்தம்பாக்கம்</strong></h2><p>நந்தம்பாக்கத்தில் 20 ஏக்கருக்கும் அதிகமான நிலம் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. விமான நிலையம் அருகில் இருப்பதும், தெற்கு மற்றும் மேற்கு சென்னையில் இருந்து எளிதாக வந்து செல்ல முடிவதும் இந்த இடத்தின் முக்கிய சாதகங்கள். நந்தம்பாக்கம் பகுதியில் ஏற்கெனவே பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக நிதி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களை கொண்டு வருவதற்கான பின்டெக் சிட்டி திட்டமும் இப்பகுதியில் உருவாகி வருகிறது. எனவே இங்கு தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால், எதிர்காலத்தில் உருவாகும் புதிய பொருளாதார மையத்துடன் அது எவ்வாறு இணைந்து செயல்படும் என்பதும், ஏற்கெனவே திட்டமிடப்பட்டுள்ள நிலப் பயன்பாட்டில் மாற்றம் ஏற்படுமா என்பதும் ஆய்வு செய்ய வேண்டியதாக உள்ளது.</p><h2><strong>கோயம்பேடு</strong></h2><p>கோயம்பேட்டில் உள்ள பழைய புறநகர் பேருந்து நிலையப் பகுதி சுமார் 36 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பெரிய நிலப்பரப்பு, மெட்ரோ ரெயில் வசதி மற்றும் சென்னையின் பல பகுதிகளுடன் உள்ள சாலை இணைப்பு ஆகியவை இந்த இடத்தின் முக்கிய சாதகங்கள். ஆனால் கோயம்பேடு ஏற்கெனவே சென்னையின் மிகப்பெரிய போக்குவரத்து மையங்களில் ஒன்றாக உள்ளது. கோயம்பேடு மார்க்கெட், மெட்ரோ ரெயில் நிலையம் மற்றும் வணிகப் பகுதிகள் காரணமாக இங்கு எப்போதும் அதிகமான போக்குவரத்து காணப்படுகிறது. இந்த நிலையில் புதிய தலைமைச் செயலகம் அமைந்தால், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் கூடுதல் வாகனப் போக்குவரத்தை சமாளிப்பது சவாலாக இருக்கலாம். மேலும் பழைய பேருந்து நிலையப் பகுதியை எதிர்காலத்தில் வேறு வகையில் பயன்படுத்துவது தொடர்பாகவும் திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.</p><h2><strong>எங்கு அமையும்?</strong></h2><p>புதிய தலைமைச் செயலகத்துக்கான இடத்தை தேர்வு செய்வதில் நிலத்தின் அளவு மட்டும் முக்கியம் இல்லை. போக்குவரத்து வசதி, பாதுகாப்பு ஆகிய அனைத்தையும் அரசு கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது. பட்டினப்பாக்கத்தில் கடலோரப் பிரச்சனை, கிண்டியில் போக்குவரத்து நெரிசல், நந்தம்பாக்கத்தில் ஏற்கெனவே உள்ள வளர்ச்சித் திட்டங்கள், கோயம்பேட்டில் கடும் போக்குவரத்து என ஒவ்வொரு இடத்திலும் சாதகமும், சவாலும் உள்ளன. இந்த 4 இடங்களைத் தவிர கூடுதல் இடங்களும் பரிசீலிக்கப்படலாம். இறுதி இடம் குறித்த அறிவிப்பு வெளியாகும் வரை எந்த இடமும் உறுதி செய்யப்பட்டதாக கூற முடியாது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை (05.09.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-39</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-39#comments</comments><guid isPermaLink="false">27c154a8-910d-4dd5-a9dc-4cdd7b0ce4e7</guid><pubDate>Fri, 04 Sep 2026 03:04:11 +0000</pubDate><atom:updated>2026-09-04T03:04:11.048Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>மின்தடை,TNEB,மின்சார வாரியம்,Power Cut,தமிழ்நாடு மின்சார வாரியம்,சென்னையில் மின்தடை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/11ovgaqt/powercut.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மின்தடை]]></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/11ovgaqt/powercut.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் <a href="https://www.maalaimalar.com/topic/சென்னையில்-மின்தடை">மின் தடை</a> செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><p>அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (05.09.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.  அதன்படி, நாளை திருவொற்றியூர் பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-</p><h2><strong>கீழ்கட்டளை</strong></h2><p>சுண்ணாம்பு கொளத்தூர், ஈச்சங்காடு, கோவிலம்பாக்கம், நன்மங்கலம், அம்பாள் நகர், அன்பு நகர், ரோஸ் நகர், மணிகண்டன் நகர், வீரமணி நகர், செல்ஃப் ஹெல்ப் இண்டஸ்ட்ரியல், பூபதி நகர், பெருமாள் நகர், 'இங்கிலீஷ் எலக்ட்ரிக்கல்' நகர், குமரன் நகர், என்ஜினீயர்ஸ் அவென்யூ, பாக்கியலட்சுமி நகர், ராஜா நகர், பாலமுருகன் நகர்.</p><h2><strong>கோட்டூர்புரம்</strong></h2><p>ஸ்ரீநகர் காலனி, தெற்கு, மேற்கு மற்றும் வடக்கு மாட வீதிகள், தெற்கு அவென்யூ, கோவில் அவென்யூ, ரங்கராஜபுரம் 1-வது முதல் 6-வது தெரு வரை.</p><h2><strong>மாங்காடு</strong></h2><p>ரகுநாதபுரம், கொழுமணிவக்கம், சிவன்தாங்கள், சிக்கராயபுரம், பட்டூர், பத்ரிமேடு, தென் காலனி, சீனிவாச நகர், மலையம்பாக்கம், நெல்லித்தோப்பு, மகாலட்சுமி நகர், சக்ரா நகர், காமாட்சி நகர், அட்டிசன் நகர், சாதிக் நகர், மேல்மா நகர், சக்தி நகர், கே கே நகர்.</p>]]></content:encoded></item><item><title>கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அனைவருக்கும் நல்வாழ்த்துகள் - முதலமைச்சர் விஜய்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/krishna-jayanthi-festival-cm-vijay-wishes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/krishna-jayanthi-festival-cm-vijay-wishes#comments</comments><guid isPermaLink="false">f63b361d-7e02-4a28-a92a-64361a4b9150</guid><pubDate>Fri, 04 Sep 2026 03:03:19 +0000</pubDate><atom:updated>2026-09-04T03:03:19.810Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,கிருஷ்ண ஜெயந்தி,krishna jayanthi</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/of1uiuqi/vijay1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/of1uiuqi/vijay1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அநீதிக்கு எதிரான அறம் வெல்லும், எத்தகைய சூழலிலும் கடமை தவறாது செயல்பட வேண்டும் என்று கிருஷ்ண ஜெயந்தியையொட்டி முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p> <h2>கிருஷ்ணர் அவதாரம்</h2><p>உலகில் அநீதி தலைதூக்கும் போதெல்லாம், தர்மத்தை நிலைநாட்ட இறைவன் பூமியில் அவதரிப்பான் என்பது பகவத்கீதையின் உபதேசம் ஆகும். அதன்படி, திருமாலின் அவதாரமான கிருஷ்ணரின் வாழ்க்கை, மக்களின் மனதை மிகவும் கவர்ந்த ஒன்றாகும். தெய்வீக குணங்கள் முழுமையாக வெளிப்பட்ட அவதாரம் என்பதால், கிருஷ்ணரின் அவதாரம் 'பூர்ணவதாரம்' (முழுமையான அவதாரம்) என்று கருதப்படுகிறது.</p> <h2>கிருஷ்ண ஜெயந்தி</h2><p>கிருஷ்ணரின் அவதாரம், மனித குலத்திற்கு வாழ்வியல் நெறிகளையும், அறம், கடமை, பக்தி ஆகியவற்றின் உயர்ந்த தத்துவங்களையும் உணர்த்துகிறது. இத்தகைய மகத்தான கீதோபதேசத்தை வழங்கிய கண்ணனின் பிறப்பைத் தான் பக்தர்கள்<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/krishna-jayanti-tomorrow-eps-anbumani-greetings"> கிருஷ்ண ஜெயந்தி</a>, கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி எனப் பல பெயர்களில் உலகெங்கும் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.</p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>அந்த வகையில், நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தியையொட்டி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதலமைச்சர் விஜய்</a> வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், </p><p>அனைவரின் இல்லங்களும் உள்ளங்களும் மகிழ்ச்சியால் நிறையும் கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p> <p>அநீதிக்கு எதிரான அறம் வெல்லும், எத்தகைய சூழலிலும் கடமை தவறாது செயல்பட வேண்டும், தர்மத்தின் வழியில் மன உறுதியுடனும் நம்பிக்கையுடனும் வாழ்க்கைப் பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என்னும் ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசங்களைப் பின்பற்றி உயரிய வாழ்வியல் நெறிகளுடன் அன்பும் அறமும் தழைத்தோங்கும் நல்லுலகைப் படைத்திடுவோம்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி: அட்சய திருதியை, ஆடிப்பெருக்கு போல் தங்கம் வாங்க உகந்த நாள் இன்று!</title><link>https://www.maalaimalar.com/spirituality/krishna-jayanti-auspicious-day-to-buy-gold-like-akshaya-tritiya</link><comments>https://www.maalaimalar.com/spirituality/krishna-jayanti-auspicious-day-to-buy-gold-like-akshaya-tritiya#comments</comments><guid isPermaLink="false">99273449-f1f5-4ae2-84a7-8c93b169494e</guid><pubDate>Fri, 04 Sep 2026 02:46:02 +0000</pubDate><atom:updated>2026-09-04T02:46:02.476Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/8ejwh95u/gold.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Krishna]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/8ejwh95u/gold.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. </p><h2>தங்கம் வாங்க உகந்த நாள்</h2><p>கிருஷ்ணர் பிறந்தபோது நிலவிய கிரகநிலை பற்றிய குறிப்பு கமானிக்யா என்ற ஜோதிட நூல் விவரிக்கிறது. கிருஷ்ணர் சந்திர வம்சத்தை சேர்ந்தவர்.</p><p>தேய்பிறை அஷ்டமியாக இருந்தாலும் கிருஷ்ணர் பிறந்தபோது நிரவியை கிரக நிலை அனைத்து கிரகங்களும் சுபநிலையில் இருந்தன. அன்று உதித்த நிலவு <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BF" rel="nofollow">பௌர்ணமி</a> போல் பிரகாசித்தது.</p><p>நான்கு கைகள் கைகளில் சங்கு சக்கரம் கதாயுதம் தாமரை ஏந்தி தெய்வம் சித்திரன் அற்புதமான குழந்தையாக அவர் காட்சியளித்தார்.</p><p>கார்மேக வண்ணத்தில் இருந்த கிருஷ்ணர் மஞ்சள் பட்டாடையுடன் சில ஆப நூலும் அணிந்து காட்சியளித்தார். அவரைப் பெற்ற தாய் தேவகியும் ஒரு தேவதை போல் ஜொலித்தாள்.</p><p>கிருஷ்ணர் சிறையில் பிறக்கும் போதே பலவகை ஆபரணங்களுடன் தோன்றினார். அவரை தந்தை வசுதேவர், குழந்தையை ஆயர்பாடியில் உள்ள நந்தகோபர் வீட்டில் விட்டு வந்தார்.</p><p>அப்போது, ஆயர் குல பெண்கள் குழந்தையை பார்க்க பலவகை ஆபரணங்கள் அணிந்து வந்தனர். விஷ்ணு அலங்கார பிரியர் அவரைப் பார்க்க வந்தவர்களும் சகல அலங்காரத்துடன் வந்தனர். எனவே, அட்சய திருதியை, ஆடிப்பெருக்கு நாளில் நகை வாங்குவது போல் <a href="https://www.maalaimalar.com/sirappukatturaigal/krishna-worship-14" rel="nofollow">கிருஷ்ண ஜெயந்தி</a> நன்னாளிலும் தங்கம், வெள்ளி நகையை வாங்கி அணியலாம்.</p><h2>கிருஷ்ண ஜெயந்தி</h2><p>இன்று (வெள்ளிக்கிழமை) கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. </p><p>நாராயணரின் எட்டாவது அவதாரமான கிருஷ்ணர், தீய சக்திகளை அழித்து, பூமியில் தர்மத்தை நிலைநாட்ட வந்தவர்.</p><p>கம்சன், கவுரவர்கள் என அநீதியின் வடிவமாக இருந்தவர்களை வீழ்த்தி, நீதியை நிலைநாட்டினார். அதோடு மனிதகுலம் தர்மத்தின் வழியில் நடக்க வேண்டும் என்பதற்காக எந்த காலத்திற்கும் பொருந்தும் வகையிலான கீதை மொழியை அருளினார்.</p><p>“எப்போது எல்லாம் தர்மத்தை அழிக்கப்பட்டு, அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்போது தர்மத்தை மீண்டும் நிலை நாட்யுகம் தோறும் அவதாரம் எடுப்பேன்"  என்று பகவான் கிருஷ்ண பகவான் கூறியுள்ளார்.</p><p>செல்வம், பலம், புகழ், அழகு, ஞானம், துறவு என்ற ஆறு வளமைகளும் பூரணமாக அடையப் பெற்றவரே  பகவான் என்று அழைக்கப்படுகிறார் என்று விஷ்ணு புராணம் குறிப்பிடுகிறது. கிருஷ்ணர் மேற்கூறிய தகுதியைப் பெற்றுள்ளதால் பகவான் என்று அறியப்படுகிறார்.</p><h2>கிருஷ்ண அவதாரம்</h2><p>கிருஷ்ணரின் அவதாரத்திற்கு  பல விதமான காரணங்கள் இருந்தாலும், கிருஷ்ணரே நேரடியாக அவதரிப்பதன் முக்கிய காரணம் பக்தர்களை வசீகரித்து மகிழ்ச்சி அளிப்பதற்கே ஆகும்.</p><p>அத்துடன் நாம் வாழ்க்கையை எப்படி இறை சிந்தனையில் நடத்த வேண்டும் என்பதை பகவத் கீதையின் வடிவில் உபதே சிப்பதற்காகவும் அவதரித்தார்.</p><p>பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தனது திவ்யமான வடிவினாலும், ரத்தினம் போன்ற உபதேசங்களினாலும் எல்லோர் இதயத்திலும் இடம் பிடிக்கவே அவதரித்தார்.</p><p>எனவே தான்   உலகம் முழுவதும்  நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் கோடிக்கணக்கான மக்களால் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி, ஜாதி, மத, இன, பேதமின்றி மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது.</p><p>கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று கிருஷ்ணரே நம் வீட்டிற்கு வந்து நமக்கு அருள்புரிவதாக ஐதீகம்.  திருமணம் ஆனவர்கள் கிருஷ்ண ஜெயந்தி விரதம் இருந்து  வழிபட்டால் விரைவில் அந்த கிருஷ்ணரே குழந்தையாக வந்து அவதரிப்பார்.</p><p>சிறுபிள்ளைகளுக்கு கிருஷ்ண லீலைகளையும், அவர் செய்த குறும்புகளையும் கதையாக சொல்ல வேண்டும். கிருஷ்ண ஜெயந்தியை காலை நேரத்தில்  வழிபடுவதை விட மாலை நேரத்தில் வழிபடுவதே சிறந்ததாகும்.</p><p>ஏனென்றால் கிருஷ்ணர் நடுநிசியில் அதாவது நள்ளிரவில் பிறந்ததாக புராணங்கள் கூறுகின்றது.</p><p>அதனால் தான் கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று முழுவதும் விரதம்  இருந்து மாலை வேளையில் பூஜையை தொடங்கி இரவு முழுவதும் பூஜைசெய்து மறுநாள் காலையில் பூஜை நிறைவு செய்ய வேண்டும்.</p><p>கிருஷ்ணருக்கு நெய்வேத்தியமாக படைத்தவற்றை முதலில் சாப்பிட்டு பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.</p><p>கிருஷ்ண ஜெயந்தி அன்று அதிகாலையிலேயே வீட்டினை சுத்தம் செய்து, அரிசி மாவினால் கோலமிட வேண்டும். மாவிலை, தோரணங்கள் கட்ட வேண்டும். பூஜை அறையை சுத்தம் செய்து பூக்களினால் அலங்காரம் செய்ய வேண்டும்.</p><p>பின்னர் அரிசிமாவினால் குழந்தையின் கால் தடங்களை வீட்டு வாசலில் இருந்து பூஜை அறை வரை பதிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் அந்த ஆலிலை கிருஷ்ணனை நம் வீட்டிற்குள் அழைத்து வருவதாக நம்பிக்கை.</p><h2>பூஜை</h2><p>வீட்டில் கிருஷ்ணர் சிலை, அல்லது கிரு ஷ்ணர் படம் இருந்தால் அதனை சுத்தம் செய்து பூ வைத்து அலங்கரிக்க வேண்டும். பூஜைக்கு நெய்வேத்தியமாக கண்ணனுக்கு பிடித்த  வெண்ணெய், சர்க்கரை, அவல், முருக்கு, சீடை இனிப்பு சீடை, அதிரசம் தேன்குழல் போன்ற பல காரங்களை செய்து படைக்க வேண்டும் என  பலவகை பலகாரங்களை படையல் இட்டு பூஜை செய்ய வேண்டும். </p><h2>வழிபாடு</h2><p>இதன்பின்னர் முடிந்தால் அருகிலுள்ள கிருஷ்ணர் கோயிலுக்கு சென்று வழிபடுங்கள். மேலும் வழிபாட்டில் படைக்கப்பட்ட பிரசாதங்களை குடும்பத்தினர், வீட்டின் அருகிலுள்ள குழந்தைகள், பெரியவர்களுக்கு கொடுத்து மகிழுங்கள்.</p><p>குழந்தைகள் இந்த உணவை உண்பதன் மூலம் கிருஷ்ணரே நம் இல்லம் தேடி வந்ததாக பொருளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு செல்வ வளத்தை அள்ளித்தரும் வழிபாடாகும். வீடுகளில் மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் நிலைக்கச் செய்யும் கிருஷ்ண பரமாத்மாவை அவரது ஜெயந்தி நாளில் வரவேற்று வழிபடுவோம்.</p>]]></content:encoded></item><item><title>Video: முதலமைச்சர் விஜய் ஸ்டைலில் கோட் சூட் அணிந்த விநாயகர் சிலை... 
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-assembly-action-vinayagar-statue</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-assembly-action-vinayagar-statue#comments</comments><guid isPermaLink="false">0cc13bd4-7eda-4652-8915-adb0baeede89</guid><pubDate>Fri, 04 Sep 2026 02:17:10 +0000</pubDate><atom:updated>2026-09-04T02:17:10.662Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,Vinayagar statue,விநாயகர் சிலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/6mvjht1r/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vijay ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/6mvjht1r/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-vs-udhayanidhi-stalin-arguments">முதலமைச்சர் விஜய்</a> சைகை காட்சியை தத்ரூபமாக விநாயகர் வடிவில் வடிவமைப்பட்டுள்ளதை போன்ற படங்கள், வீடியோக்கள் தான் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகின்றன.</p><p>விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 14-ந்தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து பலவிதமான வடிவமைப்புகளுடன் விநாயகர் சிலைகள் தமிழகத்திற்கு வரத்தொடங்கியுள்ளன.</p> <p>இந்தநிலையில், முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">விஜய்</a> ஸ்டைலில் விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு உள்ளதை போன்ற படங்கள் சமூக வலைத்தளங்களில் கலக்கி வருகின்றன. சமீபத்தில் சட்டசபையில் முதலமைச்சர் விஜய் செய்த சைகை வைரல் ஆனது.</p> <p>விஜய் சைகை காட்சியை தத்ரூபமாக விநாயகர் வடிவில் வடிவமைப்பட்டுள்ளதை போன்ற படங்கள், வீடியோக்கள் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகின்றன. இது உண்மையான சிலையா அல்லது ஏ.ஐ. தொழில்நுட்ப படமா என்பது உறுதியாகவில்லை.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="hi" dir="ltr"><a href="https://x.com/hashtag/Vijay?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Vijay</a> Vinayagar Chathurthi! ✨ <a href="https://t.co/p05OMWpBrf">pic.twitter.com/p05OMWpBrf</a></p>&mdash; KARTHIK SK (@KARTHIKSK07) <a href="https://x.com/KARTHIKSK07/status/2095362311397724171?ref_src=twsrc%5Etfw">September 3, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 4.9.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு நினைத்தது நிறைவேறும் நாள்...</title><link>https://www.maalaimalar.com/Today-Transit/today-rasi-palan-in-tamil-42</link><comments>https://www.maalaimalar.com/Today-Transit/today-rasi-palan-in-tamil-42#comments</comments><guid isPermaLink="false">89b062de-98d7-45e6-8ba5-f66f0bca3c61</guid><pubDate>Fri, 04 Sep 2026 01:30:12 +0000</pubDate><atom:updated>2026-09-04T01:30:12.940Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசி பலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/29/20790061-rasipalan.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Todays Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/29/20790061-rasipalan.webp?w=280" width="280"></media:thumbnail><category>இன்றைய ராசி பலன்கள்</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>யோகமான நாள். நினைத்தது நிறைவேறும். வருமானம் திருப்தி தரும். புதிய ஒப்பந்தங்களை யோசித்து ஏற்றுக்கொள்வது நல்லது. வரன்கள் வாயில் தேடி வரும்.</p><h2>ரிஷபம்</h2><p>கவலை தீரக் கண்ணனை வழிபட வேண்டிய நாள். வாக்கு சாதுர்யத்தால் வளம் காண்பீர்கள். அலுவலகப் பணிகளில் அருகில் இருப்பவர்களால் நன்மை உண்டு.</p><h2>மிதுனம்</h2><p>ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள்.</p><h2>கடகம்</h2><p>யோகமான நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் கிடைக்கும்.</p><h2>சிம்மம்</h2><p>நினைத்தது நிறைவேறும் நாள். வரன்கள் முடிவாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைககள் கிடைக்கும். பிறருக்கு பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.</p><h2>கன்னி</h2><p>அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். இலாகா மாற்றம் வருவதற்கான அறிகுறி தோன்றும். தொழில் வளர்ச்சியில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.</p><h2>துலாம்</h2><p>எதிலும் விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள். தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. குடும்பத்தினர்கள் உங்கள் மீது குறை கூறுவர்.</p><h2>விருச்சிகம்</h2><p>கீர்த்திகள் பெருக கிருஷ்ணரை வழிபட வேண்டிய நாள். பிரபலஸ்தர்களின் சந்திப்பு உண்டு. வீட்டைச் சீரமைக்கும் பணியில் ஆர்வம் ஏற்படும்.</p><h2>தனுசு</h2><p>தொட்ட காரியங்களில் வெற்றி கிட்டும் நாள். வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். தொழில் தொடர்பாக செல்வந்தர்களைச் சந்தித்துப் பேசுவீர்கள்.</p><h2>மகரம்</h2><p>பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். வீடு வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும்.</p><h2>கும்பம்</h2><p>வருமானம் இருமடங்காகும் நாள். வாகனம் வாங்குவதில் ஆர்வம் கூடும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.</p><h2>மீனம்</h2><p>முன்னேற்றம் கூடும் நாள். பிள்ளைகளின் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் அதிக கேட்ட சலுகைகளைத் தருவர்.</p>]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 4 செப்டம்பர் 2026: கிருஷ்ண ஜெயந்தி</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-4-september-2026-krishna-jayanthi-2</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-4-september-2026-krishna-jayanthi-2#comments</comments><guid isPermaLink="false">1078852c-9e86-487d-b406-e1d5cf34ef37</guid><pubDate>Fri, 04 Sep 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-09-04T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/lhl6bims/krishna2.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Krishnar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/lhl6bims/krishna2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆவணி-18 (வெள்ளிக்கிழமை)</p><p>பிறை : தேய்பிறை</p><p>திதி :  அஷ்டமி இரவு 11.46 மணி வரை பிறகு நவமி</p><p>நட்சத்திரம் : ரோகிணி இரவு 11.22 மணி வரை பிறகு மிருகசீர்ஷம்</p><p>யோகம் :  மரண / சித்தயோகம்</p> <p>ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை</p><p>எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை</p><p>சூலம் : மேற்கு</p><p>நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை</p> <h2>திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை</h2><p>கிருஷ்ண ஜெயந்தி. வைகாஸன ஜெயந்தி. பெரியவாச்சான் பிள்ளை திருநட்சத்திர வைபவம். வேலூர் கோட்டை ஸ்ரீதுர்கையம்மன், பட்டீஸ்வரம் ஸ்ரீதுர்கையம்மன், கதிராமங்கலம் ஸ்ரீதுர்கையம்மன் தலங்களில் பால் அபிஷேகம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு. மதுரை ஸ்ரீ நவநீதகிருஷ்ணசுவாமி உற்சவாரம்பம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி புறப்பாடு, சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன்கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். </p> <p>திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை, திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோயிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சனம், மாடவீதி புறப்பாடு. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சனம். தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியான் வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை தலங்களில் அபிஷேகம்.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - பணிவு</p><p>ரிஷபம் - ஆக்கம்</p><p>மிதுனம் - அனுகூலம்</p><p>கடகம் - முயற்சி</p><p>சிம்மம் - யோகம்</p><p>கன்னி - கடமை</p> <p>துலாம் - உயர்வு</p><p>விருச்சிகம் - கண்ணியம்</p><p>தனுசு - நற்செயல்</p><p>மகரம் - மேன்மை</p><p>கும்பம் - கட்டுப்பாடு</p><p>மீனம் - போட்டி</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/todays-petrol-diesel-prices-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/todays-petrol-diesel-prices-in-chennai#comments</comments><guid isPermaLink="false">4229617b-b2e3-4ce5-ab60-f406d4e643a4</guid><pubDate>Fri, 04 Sep 2026 01:13:59 +0000</pubDate><atom:updated>2026-09-04T01:13:59.547Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல் டீசல் விலை,Petrol Diesel Price,டீசல் விலை,Diesel price,Petrol Price,பெட்ரோல் விலை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/ejlxoprr/petrol.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Petrol-Diesel Price]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/ejlxoprr/petrol.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் போரினால் மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p><h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது.</p><p>அந்த வகையில் சர்வதேச <a href="https://www.maalaimalar.com/news/world/crude-oil-prices-hit-2-week-high-aboveamid-trump-oman-threat" rel="nofollow">கச்சா எண்ணெய்</a> விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.</p><h2>இன்றைய பெட்ரோல், டீசல் விலை</h2><p>அந்த வகையில் இன்றைய (04.09.2026 - வியாழக்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.74-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><h2>கச்சா எண்ணெய் விலை</h2><p>இன்று சர்வதேச சந்தையில் பிரனட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 96.10 டாலர் என விற்பனை ஆகி வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>நாட்டின் வளர்ச்சியில் வாகன தொழில் துறை முக்கிய தூணாக மாற வேண்டும் - பிரதமர் மோடி வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-exhorts-auto-industry-to-chart-bold-pathway-towards-viksit-bharat</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-exhorts-auto-industry-to-chart-bold-pathway-towards-viksit-bharat#comments</comments><guid isPermaLink="false">fc63c737-261f-4885-a18b-cf0695a94627</guid><pubDate>Fri, 04 Sep 2026 00:31:21 +0000</pubDate><atom:updated>2026-09-04T00:31:21.975Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>விக்சித் பாரத்,pm modi,பிரதமர் மோடி,Viksit Bharat</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/xd9f9wlu/New-Project-2026-08-02T213222.327.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர் மோடி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/xd9f9wlu/New-Project-2026-08-02T213222.327.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் வாகனத் தொழில் துறை தொடர்ந்து புதுமைகளை புகுத்தவும், சிறந்து விளங்கவும், 2047-ஆம் ஆண்டுக்குள் விக்சித் பாரத் தொலைநோக்கு பார்வையை நோக்கிய துணிச்சலான பாதையை முனைப்புடன் வகுக்க வேண்டும் என பிரதமர் <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">நரேந்திர மோடி</a> வலியுறுத்தினார்.</p><p>நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (SIAM) 2026 ஆண்டு மாநாட்டில் பிரதமர் கூறியதாவது: சமீபத்திய தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் சர்வதேச சந்தைகளுக்கான பரந்த அணுகலை வழங்குவதால், ஏற்கனவே உலகின் பல பகுதிகளில் அங்கீகாரம் பெற்றுள்ள <a href="https://www.maalaimalar.com/news/national">இந்திய</a> வாகன துறை, தனது உலகளாவிய இருப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கு சிறந்த நிலையில் உள்ளது.</p><h2>பிரதமர் வலியுறுத்தல்:</h2><p>"இந்திய வாகனத் தொழில் தொடர்ந்து புதுமைகளை புகுத்தவும், சிறந்து விளங்கவும், 'விக்சித் பாரத்' நோக்கிய ஒரு துணிச்சலான பாதையை முனைப்புடன் வகுக்கவும் வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்," என்று பிரதமர் தனது செய்தியில் கூறியிருந்தார்.</p><p>இந்தப் பயணம், போக்குவரத்து துறைக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகளையும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும் கொண்டு வருவதோடு, தேசிய வளர்ச்சியின் முக்கிய தூணாக விளங்கும் போக்குவரத்தை மேலும் வலுப்படுத்தும் என்று பிரதமர் மேலும் கூறினார்.</p><p>"கடந்த பத்தாண்டுகளில், உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்றாக இருந்து வருகிறது. நமது பொருளாதாரம் வளர வளர, போக்குவரத்துக்கான தேவையும் அதிகரித்து வருகிறது," என்று பிரதமர் குறிப்பிட்டார்.</p><h2>பொருளாதா வளர்ச்சியில் பங்கு:</h2><p>நெடுஞ்சாலைகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளின் விரைவான விரிவாக்கம், மக்கள் மற்றும் பொருட்களின் போக்குவரத்தை எளிதாக்குவதோடு, வாகன தொழில்துறைக்கு புதிய வாய்ப்புகளையும் உருவாக்குகிறது என்று மோடி சுட்டிக்காட்டினார்.</p><p>"மேம்பட்ட இணைப்பு வசதிகளும், திறமையான தளவாட போக்குவரத்தும் செலவுகளை குறைத்து, இந்திய உற்பத்தி துறையை மேலும் போட்டித்தன்மை வாய்ந்ததாக ஆக்குகின்றன. இது வாகன துறையை வலுப்படுத்தி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கிறது," என்று அவர் கூறினார்.</p><p>தூய்மையான மற்றும் நிலையான போக்குவரத்து சூழலை நோக்கிய பயணத்தில் இந்தியாவும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.</p><p>"சார்ஜிங் உள்கட்டமைப்பின் விரைவான விரிவாக்கம், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதோடு, புத்தாக்கத்திற்கான புதிய வாய்ப்புகளையும் உருவாக்குகிறது," என்று பிரதமர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>2.5 லட்சம் பாலஸ்தீனியர்களை காசாவில் இருந்து வெளியேற்றும் திட்டம் - இஸ்ரேல் அமைச்சர் கருத்தால் சர்ச்சை</title><link>https://www.maalaimalar.com/news/world/israel-ministers-plan-to-remove-25-lakh-palestinians-from-gaza</link><comments>https://www.maalaimalar.com/news/world/israel-ministers-plan-to-remove-25-lakh-palestinians-from-gaza#comments</comments><guid isPermaLink="false">8a328626-3416-41e7-b2c4-510f19fec707</guid><pubDate>Thu, 03 Sep 2026 23:51:56 +0000</pubDate><atom:updated>2026-09-03T23:51:56.815Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>palestine,காசா,இஸ்ரேல்,gaza,Israel,பாலஸ்தீனம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/wd6b5gvm/Palestinians.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Palestinians]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/wd6b5gvm/Palestinians.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இஸ்ரேலின் தீவிர வலதுசாரி தேசிய பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென் கிவிர், <a href="https://www.maalaimalar.com/news/world">காசா</a> பகுதியில் இருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றி வெளிநாடுகளுக்கு அனுப்பும் திட்டத்தை முன்வைத்தார்.</p><p>கடும் போட்டி நிலவிய இஸ்ரேலிய தேர்தல்களுக்கு முன்னதாக பேசிய அவர், இந்த திட்டத்தின்படி முதல் ஆண்டில் காசாவில் இருந்து 250,000 பாலஸ்தீனியர்களும், அதனை தொடர்ந்து அடுத்த ஆறு ஆண்டுகளில் மீதமுள்ள சுமார் இரண்டு மில்லியன் மக்களும் வெளியேறுவார்கள் என்று கூறினார்.</p><h2>ஊக்குவிக்க வேண்டும்:</h2><p>"இது யதார்த்தமானதுதான்," என்று கூறிய பென் கிவிர், அந்த நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடாமல், சில நாடுகள் காசா மக்களை ஏற்றுக்கொள்ள "தயாராக" இருப்பதாக கூறினார்.</p><p>"காசாவின் மக்கள் வெளியேறுவதை நாம் ஊக்குவிக்க வேண்டும்," என்று கூறிய அவர், இந்த திட்டம் பாலஸ்தீனியர்களை அவர்களின் நிலத்தை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்துவதை குறிக்கவில்லை என்று தாம் நம்புவதாக மேலும் கூறினார்.</p><p>ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தில் பொதுமக்களை வலுக்கட்டாயமாக இடம்பெயர செய்வது, ஜெனீவா உடன்படிக்கைகளின்படி ஒரு போர்க்குற்றமாகக் கருதப்படுகிறது.</p><h2>ஆத்திரமூட்டும் கருத்துக்கள்:</h2><p>பாலஸ்தீனியர்களை பொறுத்தவரை, அவர்களை அவர்களின் நிலத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றும் எந்தவொரு முயற்சியும், 1948-இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது அவர்கள் பெருமளவில் இடம்பெயர்ந்த 'நக்ஃபா' அல்லது பேரழிவை நினைவூட்டும்.</p><p>பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வலதுசாரி கூட்டணியில் முக்கிய அமைச்சராக உள்ள பென் கிவிர் தெரிவிக்கும் ஆத்திரமூட்டும் கருத்துக்கள், தொடர்ந்து சர்வதேச கண்டனத்தை ஈர்த்து வருகின்றன.</p><p>அடுத்த அரசாங்கம் அமையும்போது, ​​தனது வலதுசாரி ஜனரஞ்சக யூத சக்தி கட்சி "குடியேற்றப் பொறுப்புள்ள ஒரு அமைச்சகத்தை" கோரும் என்று பென் கிவிர் கூறினார். மேலும், தனது திட்டம் "ஒன்றரை வருட உழைப்பின் விளைவு மற்றும்... உறுதியானது" என்றும் அவர் குறிப்பிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>இருமுறை எம்.பி.யாக இருந்தவரின் பெயர் எஸ்.ஐ.ஆர்.-க்கு பிறகு இடம்பெறாததால் அதிர்ச்சி</title><link>https://www.maalaimalar.com/news/national/two-time-punjab-mp-dharamvira-gandhi-name-not-on-draft-electoral-rolls-after-sir</link><comments>https://www.maalaimalar.com/news/national/two-time-punjab-mp-dharamvira-gandhi-name-not-on-draft-electoral-rolls-after-sir#comments</comments><guid isPermaLink="false">278b5fda-023e-4d4b-96f2-14ccc827cdd2</guid><pubDate>Thu, 03 Sep 2026 23:27:41 +0000</pubDate><atom:updated>2026-09-03T23:27:41.768Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sir,எஸ்ஐஆர்,பஞ்சாப்,Punjab,MP Dharamvira Gandhi,எம்பி தரம்வீர காந்தி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/znb4047a/Dharamvira-Gandhi.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dharamvira Gandhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/znb4047a/Dharamvira-Gandhi.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாட்டியாலாவின் இருமுறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த டாக்டர் தரம்வீர காந்தியின் பெயர், சிறப்பு தீவிர திருத்த (SIR) பணிகளுக்கு பிறகு பஞ்சாபின் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை என்று தெரியவந்துள்ளது.</p><p>முன்னதாக <a href="https://www.maalaimalar.com/topic/aam-admi-party">ஆம் ஆத்மி கட்சி</a> சார்பில் பாட்டியாலா தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய மூத்த காங்கிரஸ் தலைவர், "என்னுடைய வாக்கு உட்பட என் குடும்பத்தினரின் வாக்குகள் வாக்காளர் பட்டியலில் இல்லை" என்று கூறினார்.</p><h2>பெயர்கள் இடம்பெறவில்லை:</h2><p>அவர் மேலும் கூறுகையில், "நான் சுமார் 2000-ஆம் ஆண்டு முதல் இந்த முகவரியில் வசித்து வருகிறேன். நான் மூன்று மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டு, அவற்றில் இரண்டில் இதே வீட்டில் இருந்துதான் வெற்றி பெற்றுள்ளேன். </p><p>அனைத்து அதிகாரப்பூர்வ பதிவுகளிலும் இதுவே எனது நிரந்தர முகவரியாக இருந்து வருகிறது. அப்படி இருந்தும், எனது பெயர் மற்றும் எனது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை" என்றார்.</p><p>இறுதி வாக்காளர் பட்டியலில் தனது மற்றும் தனது குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் மீண்டும் சேர்க்கப்படுவதை உறுதி செய்வதற்காக, தாம் ஏற்கனவே ஆட்சேபனைகளை எழுப்பி, தேவையான ஆவணங்களையும் சமர்ப்பித்துவிட்டதாக டாக்டர் காந்தி மேலும் கூறினார்.</p><h2>ஆதாரங்கள் சமர்பிப்பு:</h2><p>"நேற்று, எனக்கும், என் மனைவி ஜகதம்பா கௌஷல், என் மகன் நிவேந்து பிரஷார் மற்றும் என் மகள் ரோகிணி பிரஷார் ஆகியோருக்குமான கடவுச்சீட்டு, 10-ஆம் வகுப்பு சான்றிதழ் மற்றும் பிற தொடர்புடைய ஆவணங்களை ஆதாரமாக மாவட்ட ஆட்சியர்-மற்றும்-மாவட்டக் கல்வி அதிகாரி அலுவலகத்தில் சமர்ப்பித்தேன்," என்று அவர் கூறினார்.</p><p>கிடைத்துள்ள தகவல்களின்படி, பஞ்சாபில் வாக்காளர் பட்டியல் திருத்தம் செயல்பாட்டின்போது டாக்டர் காந்தி சமர்ப்பித்த ஆவணங்களும், 2003-ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் உள்ள அவரது விவரங்களும் பொருந்தவில்லை என்று அவருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அவரது தனிப்பட்ட வழக்கு குறித்து அதிகாரிகள் இன்னும் எதிர்வினையாற்றவில்லை. வரைவு வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்கள் இடம்பெறாத குடிமக்கள், அதற்கான உறுதிமொழி பத்திரம் மற்றும் துணை ஆவணங்களுடன், ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 12 வரை தங்கள் கோரிக்கைகளை சமர்ப்பிக்கலாம்.</p>]]></content:encoded></item><item><title>புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் பாய்ந்தது</title><link>https://www.maalaimalar.com/news/national/gslv-rocket-with-earth-observation-satellite-lifts-off</link><comments>https://www.maalaimalar.com/news/national/gslv-rocket-with-earth-observation-satellite-lifts-off#comments</comments><guid isPermaLink="false">3184e708-2f28-4f62-a5d3-6e35566cb939</guid><pubDate>Thu, 03 Sep 2026 21:51:20 +0000</pubDate><atom:updated>2026-09-03T21:51:20.901Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>செயற்கைக்கோள்,satellite,GSLV rocket,ஜிஎஸ்எல்வி ராக்கெட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/394m04ql/GSLV-F17.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ GSLV F17]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/394m04ql/GSLV-F17.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இஸ்ரோவின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான EOS-05-ஐ சுமந்து சென்ற GSLV ராக்கெட், இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலைக்கு முந்தைய நேரத்தில் விண்ணில் ஏவப்பட்டது.</p><p>சென்னையில் இருந்து சுமார் 135 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து, 51.7 மீட்டர் உயரமுள்ள GSLV-F17 ராக்கெட், முன்னரே திட்டமிடப்பட்டபடி அதிகாலை 2.55 மணிக்கு விண்ணில் பாய்ந்தது; மழையையும் பொருட்படுத்தாமல் ராக்கெட் கிளம்பியபோது அது இருண்ட வானத்தை ஒளிரச் செய்தது.</p><h2>படமெடுக்கும் செயற்கைக்கோள்:</h2><p>அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட இந்த புவி கண்காணிப்பு விண்கலம், புவி-ஒத்திசைவு சுற்றுப்பாதையில் இருந்து செயல்படும் இந்தியாவின் முதல் படமெடுக்கும் செயற்கைக்கோளாக அமையும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.</p><p>புதன்கிழமை இரவு 11.30 மணிக்கு தொடங்கப்பட்ட 27 மணி நேர 'கவுண்ட்டவுன்' நிறைவடைந்ததை தொடர்ந்து இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.</p><h2>முதல் இமேஜிங் செயற்கைக்கோள்:</h2><p>இந்திய துணைக்கண்டத்தின் மீது நிலைத்திருக்கும் வகையில் செயல்பட உள்ளதால் மல்டி-ஸ்பெக்ட்ரல் மற்றும் ஹைப்பர்-ஸ்பெக்டரல் தொழில்நுட்பம் கொண்ட அதிநவீன கேமராக்கள் மூலம் இந்தியாவின் நிலப்பரப்பை தொடர்ந்து கண்காணித்து நிகழ்காலத்துக்கு நெருக்கமான புகைப்படங்களை வழங்கும் வகையில் இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><p>இந்தியாவின் எல்லைப் பகுதிகளை தொடர்ச்சியாக கண்காணித்து, நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு தேவையான முக்கிய தரவுகளை வழங்கும். இது புவிசார் சுற்றுப்பாதையில் இருந்து இந்தியாவை கண்காணிக்கும் நாட்டின் முதல் இமேஜிங் செயற்கைக்கோள் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>மகளிர் ஆசிய கோப்பை: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா - பல சாதனைகளை படைத்த ஸ்மிருதி மந்தனா</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/majestic-mandhana-breaks-plethora-of-records-as-india-outplay-hong-kong</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/majestic-mandhana-breaks-plethora-of-records-as-india-outplay-hong-kong#comments</comments><guid isPermaLink="false">b81b847f-58db-45ba-a1c4-af0c3832bc93</guid><pubDate>Thu, 03 Sep 2026 20:41:38 +0000</pubDate><atom:updated>2026-09-03T20:41:38.296Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய மகளிர் அணி,மகளிர் ஆசிய கோப்பை,Womens Asia Cup 2026,Ind Women,Hong Kong Women,ஹாங்காங் மகளிர் அணி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/2yv0tujr/Smriti-Mandhana.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Smriti Mandhana]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/2yv0tujr/Smriti-Mandhana.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகளிர் ஆசியக் கோப்பை டி20 போட்டியில் ஹாங்காங் அணியை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் <a href="https://www.maalaimalar.com/topic/smriti-mandhana">ஸ்மிருதி மந்தனா</a> 64 பந்துகளில் 124 ரன்கள் குவித்து பல சாதனைகளை முறியடித்தார். </p><p>மந்தனாவின் இரண்டாவது டி20 சதத்தின் உதவியுடன் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களைக் குவித்தது. </p><p>இந்தப் போட்டியின் மூலம், சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற வகையில் மிதாலி ராஜையும் (10,868 ரன்கள்), அனைத்து விதமான போட்டிகளிலும் அதிக சதங்கள் (18) அடித்தவர் என்ற வகையில் மெக் லானிங்கையும் மந்தனா முந்தினார். </p><h2>ஹாங்காங் சொதப்பல்:</h2><p>2012-க்குப் பிறகு முதல் முறையாக ஆசியக் கோப்பையில் பங்கேற்கும் ஹாங்காங் அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான பெரும் வித்தியாசம் தெளிவாக தெரிந்தது. ஹாங்காங் அணி 'பவர்பிளே' (powerplay) ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 16 ரன்கள் மட்டுமே எடுத்தது; இதனால் இந்தியா நிர்ணயித்த கடினமான இலக்கை எட்டுவது அவர்களுக்கு சாத்தியமற்றதாக மாறியது.</p><p>இறுதியில் ஹாங்காங் அணி 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 56 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் நந்தினி சர்மா பந்தை இரு திசைகளிலும் ஸ்விங் செய்து, தொடக்க ஆட்டக்காரர் மரிகோ ஹில்லை மிகச்சிறந்த பந்துவீச்சின் மூலம் ஆட்டமிழக்கச் செய்தார். உயர்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இல்லாததால், எந்தவொரு பேட்டராலும் இந்தியப் பந்துவீச்சைச் சமாளிக்க முடியவில்லை.</p><h2>ஸ்மிருதி மந்தனா சாதனைகள்:</h2><p>17-வது ஓவரில் தனது 18-வது சதத்தை (அனைத்து விதமான போட்டிகளையும் சேர்த்து) பூர்த்தி செய்த மந்தனா, சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்தவர் என்ற வகையில் ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் மெக் லானிங்கை முந்தினார்.</p><p>லானிங் தனது பெயரில் 17 சதங்களைக் கொண்டுள்ளார். இது மந்தனாவின் இரண்டாவது டி20 சதமாகும்; இதன் மூலம் இச்சாதனையை படைத்த ஒரே இந்திய வீராங்கனையாக அவர் திகழ்கிறார். அவரது இன்னிங்ஸில் 7 சிக்ஸர்களும் 14 பவுண்டரிகளும் அடங்கும்.</p><p>அடுத்த ஓவரில், மைதானத்தின் நேர் திசையில் இரண்டு சிக்ஸர்களை விளாசிய மந்தனா, சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் மிதாலி ராஜையும் முந்தினார். ஹாங்காங் பந்துவீச்சாளர்களின் பலவீனங்கள் ஒருபுறம் இருந்தாலும், மற்ற பேட்டர்கள் தங்களது ஆட்டத்தை நிலைநிறுத்தச் சிரமப்பட்ட அந்த ஆடுகளத்தில், மந்தனா மிக எளிதாக பேட்டிங் செய்தார்.</p>]]></content:encoded></item><item><title>திரை பிரபலங்கள் வெளியிட்ட ‘துரோகம் பழகு’ ஃபர்ஸ்ட் லுக்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/dhrogam-pazhagu-first-look-released</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/dhrogam-pazhagu-first-look-released#comments</comments><guid isPermaLink="false">e9ca464e-13ae-4cf9-bb09-e2e18ca5d8b1</guid><pubDate>Thu, 03 Sep 2026 19:49:28 +0000</pubDate><atom:updated>2026-09-03T19:49:28.063Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Dhrogam Pazhagu,துரோகம் பழகு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/h9rwwmjt/Dhrogam-Pazhagu-FL.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dhrogam Pazhagu First Look]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/h9rwwmjt/Dhrogam-Pazhagu-FL.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் பியூலா மகிழ் தயாரிப்பில், இயக்குநர் சீயோன் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய <a href="https://www.maalaimalar.com/cinema">திரைப்படம்</a> ‘துரோகம் பழகு’.</p><p>இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்-ஐ இயக்குநர் எஸ்.வி. சேகர், <a href="https://www.maalaimalar.com/topic/fefsi">FEFSI</a> தலைவர் ஆர்.கே. செல்வமணி, நடிகர் நட்டி நட்ராஜ், நடிகர் ராம்கி, நடிகை பூனம் பாஜ்வா, நடிகை இனியா, நடிகை நந்திதா ஸ்வேதா மற்றும் அஷ்மிதா சிங் ஆகிய திரையுலக பிரபலங்கள் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் இணைந்து வெளியிட்டனர்.</p><h2>கவனம் பெற்ற ஃபர்ஸ்ட் லுக்:</h2><p>வெளியான ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. இந்தப் படத்தில் தக்க்ஷன் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். </p><p>அவருடன் லொள்ளு சபா ஜீவா, ‘வாழை’ ஜானகி அம்மா, வனிதா விஜயகுமார், ஜி.எம். குமார், கஞ்சா கருப்பு, விஜய் டிவி புகழ் திவாகர், அமுதவாணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.</p><p>மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் பியூலா மகிழ் தயாரிக்கும் இந்தப் படம், இயக்குநர் சீயோன் ராஜாவின் வித்தியாசமான கதை சொல்லும் பாணியிலும், கதாநாயகன் தக்க்ஷன் விஜயின் நடிப்பிலும் முக்கியத்துவம் பெறும் படைப்பாக உருவாகியுள்ளது.</p><p>துரோகம், நம்பிக்கை, உறவுகள் மற்றும் மனித உணர்வுகள் ஆகியவற்றை மையமாக கொண்டு, சாதாரண மனிதர்களின் வாழ்க்கை போராட்டங்களையும், அவர்களுக்குள் ஏற்படும் உணர்வு போராட்டங்களையும் இப்படம் பேசுகிறது.</p><h2>அதிகரித்த எதிர்பார்ப்பு:</h2><p>“சில காயங்கள் ஒருபோதும் மன்னிக்கப்படுவதில்லை…” என்ற அழுத்தமான ஒன்-லைனுடன் வெளியாகியுள்ள ‘துரோகம் பழகு’ ஃபர்ஸ்ட் லுக், படத்தின் கதைக்களம் குறித்த ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது.</p><p>இந்தப்படத்திற்கு புதுமுகம் பாலா மற்றும் ராஜா இருவரும் சேர்ந்து இசையமைத்துள்ளனர். கவிப்பேரரசு வைரமுத்து இந்தப் பட்த்தின் பாடல்களை எழுதியுள்ளார். படத்தின் அனைத்து பாடல்களும் சிறப்பாக அமைந்து, படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளன.</p><p>தக்க்ஷன் விஜய் இப்படத்தில் தனது நடிப்பு மற்றும் சண்டை காட்சிகளில் சிறப்பான பயிற்சியுடன், கதாபாத்திரத்திற்கு தேவையான உணர்வுகளையும் ஆக்‌ஷனையும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். அனைத்து தரப்பு ரசிகர்களையும், குறிப்பாக இளைஞர்களையும் கவரும் படமாக ‘துரோகம் பழகு’ உருவாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>GDP 7.8 சதவீதம் வளர்ந்துள்ள நிலையில் வேலைவாய்ப்புகள் எங்கே? ஆதித்யா தாக்கரே</title><link>https://www.maalaimalar.com/news/national/aaditya-thackeray-questions-where-are-the-jobs-if-gdp-is-growing-at-78-pc</link><comments>https://www.maalaimalar.com/news/national/aaditya-thackeray-questions-where-are-the-jobs-if-gdp-is-growing-at-78-pc#comments</comments><guid isPermaLink="false">4f5cb253-b021-48f2-93a7-93a7e359272c</guid><pubDate>Thu, 03 Sep 2026 19:09:04 +0000</pubDate><atom:updated>2026-09-03T19:09:04.843Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Aaditya Thackeray,GDP,pm modi,பிரதமர் மோடி,ஆதித்தயா தாக்கரே,ஜிடிபி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/iib1m2nl/aditya-thackeray.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Aditya Thackeray]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/iib1m2nl/aditya-thackeray.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாட்டின் <a href="https://www.maalaimalar.com/topic/gdp">ஜிடிபி</a> 7.8 சதவீத வளர்ச்சியை கண்டிருந்தால், அது பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்புகளில் எதிரொலிக்க வேண்டும் என்று சிவசேனா தலைவர் ஆதித்யா தாக்கரே கூறினார்.</p><p>செய்தியாளர் சந்திப்பில் பேசிய தாக்கரே, ஜிடிபி அதிகரித்து வரும் நிலையில், மக்கள் தங்கத்தை வாங்க வேண்டாம் என்று பிரதமர் <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">நரேந்திர மோடி</a> ஏன் வலியுறுத்துகிறார் என்று கேள்வி எழுப்பினார். "ஜிடிபி 7.8 சதவீதம் வளர்வது போல அது எதிரொலிக்க வேண்டும்," என்று தாக்கரே கூறினார். </p><h2>7.8 சதவீத ஜிடிபி வளர்ச்சி:</h2><p>போர்கள், நிலையற்ற தன்மை மற்றும் விநியோகச் சங்கிலித் தடைகள் இருந்தபோதிலும் 7.8 சதவீத ஜிடிபி வளர்ச்சி விகிதத்தை எட்டியதற்காக பிரதமர் நரேந்திர மோடி மக்களைப் பாராட்டினார்.</p><p>இருப்பினும், இந்த புள்ளிவிவரங்கள் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் நிதித்துறை செயலாளர் சுபாஷ் கார்க், கடந்த ஆண்டின் ஜிடிபி மதிப்பீடு சுமார் ரூ. 86 லட்சம் கோடியில் இருந்து ரூ. 80 லட்சம் கோடியாக குறைக்கப்படாமல் இருந்திருந்தால், தற்போதைய விலையின் அடிப்படையில் ஜிடிபி வளர்ச்சி சுமார் 2.6 சதவீதமாகவே இருந்திருக்கும் என்று கூறியிருந்தார்.</p><p>கார்க் உண்மைகளை முன்வைத்து, ஜிடிபி வளர்ச்சி குறித்த கூற்றை அம்பலப்படுத்தியுள்ளார் என்று தாக்கரே கூறினார். "வளர்ச்சி இருந்தால், ஏன் வேலைவாய்ப்புகள் இல்லை?" என்று தாக்கரே கேள்வி எழுப்பினார்.</p><h2>இடஒதுக்கீடு குறித்து கருத்து:</h2><p>மராத்தா இடஒதுக்கீடு ஆர்வலர் மனோஜ் ஜரங்கே மேற்கொண்டுள்ள காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் குறித்து பேசிய தாக்கரே, யாருடைய உரிமையையும் பறிக்காமல், இடஒதுக்கீடு கோருபவர்களுக்கு அது வழங்கப்பட வேண்டும் என்று கூறினார்.</p><p>மராத்தா, ஓபிசி அல்லது தங்கர் என யாராக இருந்தாலும், தேர்தலுக்கு முன் அரசாங்கம் வெறும் வாக்குறுதிகளை மட்டுமே அளித்துவிட்டு, பின்னர் மக்களை ஏமாற்றுகிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.</p><p>விவசாயிகளுக்கு தார்மீக ஆதரவை அளிக்குமாறும், பருவநிலை மாற்றத்தைத் தாங்கி வளரக்கூடிய விவசாய முறையை நோக்கிச் செயல்படுமாறும் தாக்கரே வலியுறுத்தினார்.</p>]]></content:encoded></item><item><title>மகளிர் ஆசிய கோப்பை: ஹாங்காங்-ஐ 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/womens-asia-cup-2026-ind-w-beat-hkg-w-by-137-runs</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/womens-asia-cup-2026-ind-w-beat-hkg-w-by-137-runs#comments</comments><guid isPermaLink="false">34042ede-45e4-48aa-ad1c-356ec45590e1</guid><pubDate>Thu, 03 Sep 2026 18:05:19 +0000</pubDate><atom:updated>2026-09-03T18:05:19.006Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய மகளிர் அணி,Womens Asia Cup 2026,Ind Women,Hong Kong Women,ஹாங்காங் மகளிர் அணி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/ojg16w0a/IND-W-Win.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ IND W Win]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/ojg16w0a/IND-W-Win.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>துபாயில் நடைபெற்று வரும் மகளிர் ஆசிய கோப்பை டி20 <a href="https://www.maalaimalar.com/sports/cricket">கிரிக்கெட்</a> தொடரில் க்ரூப் ஏ பிரிவில் இந்திய மகளிர் மற்றும் ஹாங்காங் மகளிர் அணிகள் மோதின.</p><p>இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் மகளிர் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய மகளிர் அணிக்கு <a href="https://www.maalaimalar.com/topic/smriti-mandhana">ஸ்மிருதி மந்தனா</a> அபாரமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.</p><h2>சதம் விளாசிய ஸ்மிருதி மந்தனா:</h2><p>இந்திய மகளிர் அணிக்கு தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா சிறப்பாக ஆடி எதிரணி பந்துவீச்சை துவம்சம் செய்தார். இவருடன் ஆடிய ஷஃபாளி வெர்மா 28 ரன்களிலும், பிரதிகா ராவல் 10 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ரிச்சா கோஷ் 11 ரன்களும், கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 10 ரன்களில் ஆட்டமிழந்தா்ர்.</p><p>ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த போதிலும், ஸ்மிருதி மந்தனா ரன் குவிப்பில் மட்டும் கவனம் செலுத்தினார். கடைசி வரை அதிரடியாக ஆடிய ஸ்மிருதி மந்தனா 64 பந்துகளில் 124 ரன்களை (14 பவுண்டரிகள், 7 சிக்சர்கள்) விளாசினார். இதன் மூலம் இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை விளாசியது.</p><h2>அபார பந்துவீச்சு:</h2><p>194 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹாங்காங் மகளிர் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணிக்கு தொடக்க வீராங்கணையாக களமிறங்கிய மரிகோ ஹில் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். கேப்டன் நடாஷா மைல்ஸ் 27 பந்துகளில் 15 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.</p><p>பிறகு களமிறங்கிய யாஸ்மின் 11 ரன்களிலும், கேரி சான் 1 ரன்னிலும், மரினா லாம்ப்லோக் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தார். இந்திய அணியின் அபார பந்துவீச்சு காரணமாக ஹாங்காங் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து 16.2 ஓவர்களில் ஹாங்காங் மகளிர் அணி 56 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.</p><p>இதனால் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய மகளிர் அணி சார்பில் தீப்தி ஷர்மா 3 விக்கெட்டுகளையும், பிரேமா ராவத், நந்தனி ஷர்மா மற்றும் ஸ்ரீசராணி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.</p>]]></content:encoded></item><item><title>கார்த்தியின் சர்தார் 2 சென்சார் அப்டேட்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/karthi-starrer-sardar-2-sensor-update</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/karthi-starrer-sardar-2-sensor-update#comments</comments><guid isPermaLink="false">c5ebe086-528b-4c35-acc1-f4a9a5e50182</guid><pubDate>Thu, 03 Sep 2026 17:22:05 +0000</pubDate><atom:updated>2026-09-03T17:22:05.437Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Karthi,கார்த்தி,Sardar 2,சர்தார் 2,PS Mithran,பிஎஸ் மித்ரன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/dkrdbl10/Sardar-2.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sardar 2 Poster]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/dkrdbl10/Sardar-2.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கார்த்தி நடிக்கும் ‘<a href="https://www.maalaimalar.com/topic/sardar-2">சர்தார் 2</a>’ படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.</p><p>தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இயக்குநர் பி.எஸ். மித்ரன் மற்றும் நடிகர் கார்த்தி கூட்டணியில் உருவாகி இருக்கும் <a href="https://www.maalaimalar.com/cinema">திரைப்படம்</a> ‘சர்தார் 2’. </p><p>பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது.</p><h2>சர்தார் 2 படக்குழு:</h2><p>‘சர்தார் 2’ படத்தில் கார்த்தியுடன் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். </p><p>பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.</p><p>சாம் சி.எஸ். இசையமைக்கும் 100-வது திரைப்படம் ‘சர்தார் 2’ என்பதால், படத்தின் இசை மீதும் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. </p><p>சமீபத்தில் ‘சர்தார் 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், அறிமுக வீடியோ மற்றும் டீசர் வெளியாகி வைரலானது.</p>]]></content:encoded></item><item><title>ஒடிசாவில் பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்த 3 வயது யானைக்குட்டி - பொதுமக்கள் கோரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/three-year-old-elephant-calf-rescued-from-abandoned-well-in-odisha</link><comments>https://www.maalaimalar.com/news/national/three-year-old-elephant-calf-rescued-from-abandoned-well-in-odisha#comments</comments><guid isPermaLink="false">16234945-b8d7-42ed-aea9-3b9f1a9a9086</guid><pubDate>Thu, 03 Sep 2026 16:37:16 +0000</pubDate><atom:updated>2026-09-03T16:37:16.441Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Odisha,ஒடிஷா,rescue operation,elephant rescued,யானைக்குட்டி மீட்பு,மீட்பு நடவடிக்கை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/mdot1h0q/Untitled-design-10.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Odisha Elephant Rescue]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/mdot1h0q/Untitled-design-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஒடிசாவில் ஊருக்கு வெளியே பாழடைந்த நிலையில் ஒரு கிணற்றுக்குள் தவறி விழுந்த 3 வயது ஆண் யானை குட்டியை, அந்த பகுதியில் வசிக்கும் கிராமத்தினர், வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் உதவியுடன், பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு கயிறு கட்டி பாதுகாப்பாக மீட்டனர்.</p><h3><strong>பாழடைந்த கிணறு</strong></h3><p>ஒடிசா மாநிலம் தேன்கனால் மாவட்டத்தில உள்ள பஹண்டேய் கிராமத்தில், 3 வயது ஆண் யானை ஒன்று செப்டம்பர் 1-ஆம் தேதி பாழடைந்த கிணற்றுக்குள் தவறி விழுந்தது. </p><p>இதையடுத்து வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.</p><p>இதையடுத்து பல அடி ஆழம் உள்ள கிணற்றில் இருந்த யானையின் உடலில் மீட்பு படை வீரர்கள், கயிறு ஒன்றை கட்டினர்.</p><p>இதைத்தொடர்ந்து பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு, மீட்பு குழுவினர் ஒன்றிணைந்து செயல்பட்டு, யானைக்குட்டியை கிணற்றிலிருந்து பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்தனர்.</p><p>கிணற்றிலிருந்து காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட யானைக்கு, கால்நடை மருத்துவப் பணியாளர்கள் முதலுதவி அளித்தனர்.</p><p>இதையடுத்து கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட அந்த யானைக்குட்டி, யானை மீட்பு மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அதற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><h3><strong>தேன்கானல் வன அதிகாரி</strong></h3><p>இந்த நடவடிக்கை குறித்து தேன்கனால் கோட்ட வன அதிகாரி ஒருவர் கூறுகையில், வனத்துறை ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் கிராம மக்களின் விரைவான செயலாலும் ஒருங்கிணைந்த நடவடிக்கையாலும், இந்த மீட்பு பணி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.</p><p>மேலும் மீட்கப்பட்ட யானைக்குட்டி மேல் சிகிச்சைக்காக, யானைகள் மீட்பு மையத்திற்குப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டு வன ஊழியர்களின் கண்காணிப்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.</p><p>வனவிலங்கின் பாதுகாப்பிற்காக உடனடியாகச் செயல்பட்டு, ஒருங்கிணைந்து, அர்ப்பணிப்புடன் பணியாற்றிய முழு மீட்புக் குழுவினருக்கும் மற்றும் உள்ளூர் மக்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று வனத்துறை அதிகாரி கூறினார்.</p><figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr"> WILDLIFE RESCUE OPERATION | DHENKANAL<br><br> Bahandei Village, Kaunriapala Beat, Gadasila Section, Dhenkanal Range<br> 01.09.2026 | 1:00 PM<br><br>A male wild elephant, approximately 3–4 years old, was found trapped in an abandoned open well near Bahandei Village.<br><br> The RRT of… <a href="https://t.co/XMjXHwdUGO">pic.twitter.com/XMjXHwdUGO</a></p>&mdash; DFO DHENKANAL (@DfoDhenkanal) <a href="https://x.com/DfoDhenkanal/status/2095064152058503305?ref_src=twsrc%5Etfw">September 2, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h3>கோரிக்கை</h3><p>இந்த மீட்பு நடவடிக்கை இணையத்தில் பரவி வைரலானதை தொடர்ந்து, வனத்துறை அதிகாரிகள் தீயணைப்புத் துறை அதிகாரிகளுக்கு பயனர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.</p><p>மேலும் இதுபோன்ற பள்ளங்கள் மற்றும் பாழடைந்த கிணற்றை சுற்றி தடுப்புகளை அமைத்தோ அல்லது அதை முழுவதுமாக மண்ணால் நிரப்பியோ, அசம்பாவித சம்பவங்களை தடுத்து நிறுத்துமாறு பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>வந்தே மாதரம் பாடப்படும் போது உதடுகள் கட்டாயம் அசைய வேண்டும் : சுவேந்து அதிகாரி</title><link>https://www.maalaimalar.com/news/national/schools-that-dont-sing-full-vande-mataram-will-lose-funding-suvendu-adhikari</link><comments>https://www.maalaimalar.com/news/national/schools-that-dont-sing-full-vande-mataram-will-lose-funding-suvendu-adhikari#comments</comments><guid isPermaLink="false">fc3a0b5c-d1c3-461f-9f16-1382853d4626</guid><pubDate>Thu, 03 Sep 2026 16:34:50 +0000</pubDate><atom:updated>2026-09-03T16:34:50.310Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மேற்கு வங்கம்,வந்தே மாதரம்,Vande Mataram,சுவேந்து அதிகாரி,WestBengal,suvendhu adhikari</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/ed71lkv0/Untitled-design-9.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Suvendu Adhikari warns]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/ed71lkv0/Untitled-design-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்கத்தில் பள்ளி பிரார்த்தனைகளின் போது வந்தே மாதரத்தின் முழு பதிப்பையும் பாடாத பள்ளிகளுக்கு, அரசு நிதியுதவி மற்றும் இதர அரசு உதவிகள் நிறுத்தப்படும் என மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி தெரிவித்தார்.</p><p>மேற்கு வங்கத்தில் கடந்த கால ஆட்சியில், மாநிலத்தின் கல்வி முறை அழிவின் விளிம்பிற்கு கொண்டுவரப்பட்டதாகவும் சுவேந்து அதிகாரி குற்றம்சாட்டினார்.</p><p>மேலும் பள்ளி கல்வியில் இந்திய கலாச்சாரம், பாரம்பரியங்கள் மற்றும் தேசியவாத விழுமியங்களை மீட்டு எடுப்பதற்காக, தற்போதைய பாரதிய ஜனதா கட்சி சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார். </p><h3><strong>பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்</strong></h3><p>கொல்கத்தாவிம் கோல்பார்க்கில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் பள்ளியில் விவேகானந்தா வித்யா பாரதி விகாஸ் பரிஷத்தின் ஆண்டு நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி உரையாற்றினார்.</p><p>அப்போது அவர், “வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிலரிடம், அரசு உதவி நிறுத்தப்படும் என்று அவர்களிடம் கூறினேன்.</p><p>அதன் பிறகு அவர்கள் அதனை முழுமையாக பாடுவதற்கு ஓரளவு சம்மதித்தார்கள். வந்தே மாதரம் ஒலிக்கப்பட்ட போது அவர்கள் எழுந்து நின்றார்கள், ஆனால் உதடுகளை அசைக்கவில்லை. அப்போது நான் அவர்களிடம் உதடுகளும் அசைய வேண்டும் என்று கூறினேன்.</p><p>பள்ளிப் பாடத்திட்டங்களில் 'மா', 'ஜல்' மற்றும் 'ஆகாஷ்' போன்ற வார்த்தைகள் மாற்றம் செய்யப்பட்டு முறையே 'அம்மா', 'பானி' மற்றும் 'அஸ்மான்' என்று மாற்றம் செய்யப்பட்டள்ளன.</p><p>ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் மற்றும் சுவாமி விவேகானந்தர் போன்ற ஆளுமைகளின் கற்பித்தல் கருத்துக்களுக்கு மாறாக இந்த "நுட்பமான மாற்றங்கள்" இருந்தது.</p><p>கல்வி நிறுவனங்களில் தேசிய மாணவர் படையை (என்.சி.சி) தடை செய்ததன் மூலம், முந்தைய அரசு மன்னிக்க முடியாத குற்றத்தை செய்துள்ளது.</p><h3><strong>ராஜ்நாத் சிங்கிடம் கோரிக்கை</strong></h3><p>நான் சமீபத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தேன். முதலாவதாக, மாநிலத்தில் பாதுகாப்பு அமைச்சகத்தால் நடத்தப்படும் ராணுவத்தை மையமாக கொண்ட பல உயர்நிலை ‘சைனிக்’ பள்ளிகளைக் கட்டுமாறு அவரை வலியுறுத்தினேன்.</p><p>இரண்டாவதாக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் என்.சி.சி-யைக் கட்டாயமாக்க அனுமதி கோரி அவருக்குக் கடிதம் எழுதுவேன் என்று கூறினேன்.</p><p>நான் ஏற்கனவே அவருக்கு அந்தக் கடிதத்தை அனுப்பிவிட்டேன். தேவையானதைச் செய்வதாக அவரிடமிருந்து உறுதிமொழியையும் பெற்றுள்ளேன்.</p><p>மாற்றத்தை கொண்டு வருவதிலும், வாய்ப்புகளை வழங்குவதிலும் மேற்கு வங்க மக்கள் கால அவகாசம் அளிக்கிறார்கள்.</p><p>சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரஸுக்கு அவர்கள் கால அவகாசம் கொடுத்தார்கள், அதைத் தொடர்ந்து வந்த ஐக்கிய முன்னணி மற்றும் இடது முன்னணி அரசுகளுக்குப் போதுமான வாய்ப்புகளை வழங்கினார்கள்.</p><h3><strong>சரியான நேரத்தில் மாற்றம்</strong></h3><p>மேலும் கடந்த 15 ஆண்டுகளாக திரிணாமுல் காங்கிரஸுக்கும் கால அவகாசம் கொடுத்துள்ளனர். ஆனால் அவர்கள் சரியான நேரத்தில் மாநிலத்தில் மாற்றத்தை கொண்டு வந்தார்கள்.</p><p>திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியின் கடைசி பத்தாண்டுகளில் பின்பற்றப்பட்ட கல்விக் கொள்கை இன்னும் சில காலம் தொடர்ந்திருந்தால், நமது விழுமியங்கள், நமது பாரம்பரியம், நாட்டுப்பற்று மற்றும் தேசியம் ஆகியவை என்றென்றைக்குமாக அழிந்துபோகும் விளிம்பிற்குத் தள்ளப்பட்டிருக்கும்.</p><p>மாநிலத்தில் மக்கள் சரியான நேரத்தில் அரசியல் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளனர்; கல்வி முறையை மீட்டெடுக்கவும் இளைஞர்களிடையே தேசபக்தியை வளர்க்கவும் சீர்திருத்தங்கள் தேவையாக உள்ளது.</p><p>பள்ளி சேர்க்கை ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரான முன்னாள் மாநில அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் பெயர் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், குதிராம் போஸ் மற்றும் மாதங்கினி ஹஸ்ரா போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்களைப் பாடப்புத்தகங்களில் காண்பது கடினமாக இருந்தது” என்று சுவேந்து அதிகாரி கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தீபாவளி ஸ்பெஷல்: ‘ராமாயணா’ படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதி அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/diwali-special-ramayana-release-date-announced</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/diwali-special-ramayana-release-date-announced#comments</comments><guid isPermaLink="false">b6ece32d-5b0c-4570-9f90-336dfddfcbde</guid><pubDate>Thu, 03 Sep 2026 16:30:27 +0000</pubDate><atom:updated>2026-09-03T16:30:27.645Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Yash,Ramayana,ரன்பீர் கபூர்,Ranbir Kapoor,ராமாயணா,யாஷ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/jryjk820/New-Project-2026-09-03T215554.986.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தீபாவளி ஸ்பெஷல்: ‘ராமாயணா’ வெளியீட்டு தேதி அறிவிப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/jryjk820/New-Project-2026-09-03T215554.986.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் பெரும்பாலான ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு திரைப்படம் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-ramayana-trailer-releases-the-day-after-tomorrow-at-dawn-during-the-auspicious-brahma-muhurtham">ராமாயணா</a>’.</p><p>இந்துக்களின் இதிகாச புராணங்களில் ஒன்றான ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ள இந்த வரலாற்று திரைப்படத்தில் பாலிவுட் புகழ் ரன்பீர் கபூர், யாஷ், சாய்பல்லவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.</p><p>இப்படம் இரண்டு பாகமாக உருவாகி உள்ளது. முதல் முதல் பாகம், ராமர் மற்றும் சீதையின் வனவாச கால வாழ்க்கையையும், ராவணனால் சீதை கடத்தப்பட்டதைத் தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகளையும் விவரிக்கிறது. </p><p>சமீபத்தில் முதல் பாகத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல் பாகம் இந்தாண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி நவம்பர் 6ம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. </p><p>இரண்டாம் பாகம் அடுத்தாண்டு தீபாவளியின்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் படத்தை தயாரித்துள்ள நிலையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், ஹான்ஸ் சிம்மர் இசையமைத்துள்ளனர். </p><p>இந்திய மொழிகள் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் படம் வெளியாக உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி: முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் அஜித்குமார் நன்றி தெரிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/motorsports-city-actor-ajith-kumar-thanked-chief-minister-vijay</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/motorsports-city-actor-ajith-kumar-thanked-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">dcd316c5-cff0-4a8d-a3d5-1c72dfd361d8</guid><pubDate>Thu, 03 Sep 2026 16:17:48 +0000</pubDate><atom:updated>2026-09-03T16:17:48.985Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Ajith Kumar,நடிகர் அஜித்குமார்,முதலமைச்சர் விஜய்,tn cm vijay,Motorsports City,மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/irf7qh21/New-Project-2026-09-03T214635.185.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மோட்டார்ஸ்போர்ட்ஸ் சிட்டி: முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த நடிகர் அஜித்குமார்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/irf7qh21/New-Project-2026-09-03T214635.185.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும்நிலையில், இன்றைய அவை நடவடிக்கையின்போது, 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் பல அறிவிப்புகளை வெளியிட்டார். </p><p>அதில் தமிழ்நாட்டில் புதிதாக ஒலிம்பிக் நகரம் மற்றும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் உருவாக்கப்படும் என அறிவித்திருந்தார். </p><p>இந்நிலையில் முதலமைச்சர் விஜய்யின் இந்த அறிவிப்புக்கு அவரது திரைத்துறை நண்பரும், நடிகருமான அஜித்குமார் நன்றி தெரிவித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள நடிகர் அஜித்குமார்.,</p><p>”கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான தமிழ்நாடு அரசின் திட்டங்களை அறிவித்ததன் மூலம், மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட அனைத்து விளையாட்டுத் துறைகளுக்கும் தேவையான கவனத்தை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.</p><p>தற்போது மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறையில் நான் ஈடுபட்டிருப்பதால், விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் புகழ்பெற்ற பொன்மொழியை நான் இவ்வாறு மாற்றி கூறுகிறேன். </p><p>“தமிழ்நாடு அரசின் ஒரு சிறிய அடி, இந்தியாவின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறைக்கான ஒரு மாபெரும் பாய்ச்சல்!’</p><p>முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் அனைத்து முயற்சிகளும் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துகள்.” என தெரிவித்துள்ளார். </p><h2>மனைவி தயாரிப்பில் அஜித்குமார்</h2><p>நடிகர் அஜித்குமார் தற்போது கார் ரேஸில் ஈடுபட்டு வந்தாலும்,  ரசிகர்களுக்கு உற்சாகமளிக்க இடையிடையே சில படங்களிலும்  நடித்து வருகிறார். </p><p>அந்த வகையில் தற்போது ஆத்விக் இயக்கத்தில், மனைவி ஷாலினி தயாரிப்பில் <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/walking-side-by-side-like-a-shadow-ajith-kumar-to-act-in-a-film-produced-by-his-wife">டேர் டெவில்</a> படத்தில் நடித்துவருகிறார்.</p>]]></content:encoded></item><item><title>கொளத்தூர் வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி - உச்ச நீதிமன்றத்தை நாடும் திமுக!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/case-challenging-kolathur-victory-dismissed-dmk-to-move-the-supreme-court</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/case-challenging-kolathur-victory-dismissed-dmk-to-move-the-supreme-court#comments</comments><guid isPermaLink="false">12f5a5cc-1341-42e5-bff0-40515d7e1357</guid><pubDate>Thu, 03 Sep 2026 15:41:39 +0000</pubDate><atom:updated>2026-09-03T15:41:39.256Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,உச்ச நீதிமன்றம்,Kolathur,கொளத்தூர்,மு.க.ஸ்டாலின்,M.k. stalin</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/f8nneypk/New-Project-2026-09-03T210609.718.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கொளத்தூர் வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி - உச்ச நீதிமன்றத்தை நாடும் திமுக!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/f8nneypk/New-Project-2026-09-03T210609.718.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சமீபத்தில் நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டிருந்த வி.எஸ்.பாபு வெற்றிப் பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து மு.க.ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.</p><p>இந்த வழக்கை இன்று <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-high-court-orders-the-quashing-of-two-cases-against-edappadi-palaniswami">உயர் நீதிமன்றம்</a> தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கை தாக்கல் செய்யவுள்ளதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக சட்டத்துறை செயலாளர் என். ஆர். இளங்கோ கூறியதாவது;</p><p>“கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதுபட்டுள்ளது தொடர்பாக ஏற்கனவே ஆதரங்களுடன் உச்ச நீதிமன்றத்தில் எடுத்து வைத்தோம். தேர்தல் ஆணையம் மொத்தம் 19 மின்னணு இயந்திரங்களை சரிபார்த்துவிட்டு 14 இயந்திரங்கள் சரியாக இயங்குகின்றன என்று மட்டும் ஒரு அறிக்கையை கொடுத்துள்ளார்கள். </p><h2>5 இயந்திரங்கள் பழுது</h2><p>இதில் ஐந்து இயந்திரங்கள் சரியாக இல்லை என்றால், ஏறக்குறைய 32.33% வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்திருக்கிறது என்பதை நாங்கள் ஆதாரப்பூர்வமாக நிரூபித்திருக்கிறோம்.</p><p>எனவே கொளத்தூர் தொகுதியினுடைய அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களையும் சரி பார்க்க வேண்டும். அந்த விவி பேட்டில் இருக்கக்கூடிய வாக்கு சீட்டுகளை எண்ணி பார்க்க வேண்டும் என்று ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்தோம். </p><p>இதனுடைய விளைவாக கான்சிகவன்சியல் பிரேயராக எங்களது  தலைவர் வெற்றி பெற்றதாக  அறிவிக்க வேண்டும் என்று கேட்டிருந்தோம். ஆக இரண்டு பிரேயர்கள் செய்யப்பட்டிருந்தன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக அதிக குற்றச்சாட்டுகள் எழுந்ததால் இந்த வழக்கை தொடுக்க வேண்டும் என கட்சியின் சட்டத்துறைதான் முன்னெடுத்தது.  </p><p>கட்சித் தலைவரிடம் எடுத்துச் சொல்லி அவருடைய ஒப்புதலை பெற்று நாங்கள் அந்த இயந்திரங்களை சரிபார்த்தோம். அதில் ஐந்து இயந்திரங்கள் குறைபாடு உடையவதாக இருக்கவே உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறோம். </p><h2>இவிஎம்-க்கு பிறகு சட்டத்திருத்தம் இல்லை</h2><p>மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 100ன் படி இந்தெந்த காரணங்களுக்காகத்தான் தேர்தலை தள்ளுப்படி செய்ய வேண்டும் என்று இருக்கிறது. அதில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக இல்லை என்றால், பழுதடைந்திருந்தால் தேர்தலை தள்ளுபடி செய்யலாம் என்ற காரணம் சொல்லப்படவில்லை. </p><p>ஏனென்றால் அது 1951ல் இயற்றப்பட்ட சட்டம். மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு பிறகு, அந்த சட்டம் திருத்தம் செய்யப்படவில்லை. இரண்டாவதாக அரசியல் அமைப்பு சட்டம், எல்லா தேர்தல் வழக்குகளையும் தேர்தல் மனுவாகத்தான் தாக்கல் செய்ய முடியும் என்று சொல்லி சொல்லியிருக்கிறது. </p><h2> மனு தாக்கல் செய்ய அனுமதி</h2><p>தேர்தல் மனுவை 45 நாட்களுக்குள்ளாக தாக்கல் செய்ய வேண்டும். கொளத்தூர் தொகுதியை பொறுத்தவரைக்கும் நாங்கள் தேர்தல் முடிவு வந்த மூன்றாவது தினமே அதற்குரிய பணத்தைக்கட்டி தேர்தல் ஆணையத்தில் எங்களுக்கு இந்த 14 இயந்திரங்களை சரிபார்க்க  வேண்டும் என கேட்டிருந்தோம்.</p><p>ஆனால் தேர்தல் ஆணையம் 45 நாட்களுக்கு பிறகு தான். சொல்லப்போனால் மூன்று மாதங்களுக்கு பிறகுதான் அந்த இயந்திரங்களை எடுத்து பரிசோதனை செய்தார்கள். எனவே தேர்தல் மனுவை ஒரு எதிர்பார்க்கும் நோக்கில் தாக்கல் செய்ய முடியாது.</p><p>இதை வைத்துதான் இந்த வழக்கை தேர்தல் மனுவாகத்தான் தாக்கல் செய்திருக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்தது. </p><p>எனவே அது நிலைக்கதக்கது அல்ல. இருப்பினும் கூட அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களையும் சரிபார்ப்பது குறித்து உரிய மனுவை உரிய நீதிமன்றத்தில் தாக்கல் செய்து கொள்ளக்கூடிய அனுமதியை வழங்கி இன்றைக்கு தீர்ப்பளித்திருக்கிறார்கள்.</p><p>எனவே இது குறித்து நாங்கள் கட்சித் தலைவரிடம், தலைமைக் கழகத்திடம் எடுத்துச் சொல்லி இதை உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச்செல்ல நாங்கள் கேட்போம். தலைமைக் கழகத்தினுடைய அறிவுறுத்தல் படி நாங்கள் செயல்படுவோம்.” என தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தியோலினா, தியான் லியோ  - இரட்டை குழந்தைகளுக்கு பெயர் சூட்டிய கவின்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/kavin-names-his-twins-theolina-and-tian-leo</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/kavin-names-his-twins-theolina-and-tian-leo#comments</comments><guid isPermaLink="false">26cb4c06-89a4-4be8-9d1c-6d88693939a8</guid><pubDate>Thu, 03 Sep 2026 14:51:59 +0000</pubDate><atom:updated>2026-09-03T14:51:59.796Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Children,kavin,கவின்,HI,குழந்தைகள்,ஹாய்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/bbaz50kx/New-Project-2026-09-03T201024.940.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தியோலினா, தியான் லியோ  - இரட்டை குழந்தைகளுக்கு பெயர் சூட்டிய கவின்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/bbaz50kx/New-Project-2026-09-03T201024.940.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் முன்னணி இடத்தில் இருப்பவர் <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-kavin-and-monica-have-been-blessed-with-twins">நடிகர் கவின்</a>. அண்மையில் இவர் நடிப்பில் வெளியான ‘ஹாய்’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுவருகிறது. </p><p>இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். ‘ஹாய்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பிற்கும் கவின் நன்றி தெரிவித்திருந்தார். </p><p>இந்நிலையில் தன்னுடைய இரட்டை குழந்தைகளின் பெயரை சமூக வலைதளப் பக்கம் வாயிலாக ரசிகர்களுக்கு பகிர்ந்துள்ளார். </p><p>அதன்படி பெண் குழந்தைக்கு தியோலினா கவின் என்றும், ஆண் குழந்தைக்கு தியான் லியோ கவின் என்றும் பெயர் சூட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார். </p><h2>இறைவனுக்கு நன்றி</h2><p>நடிகர் கவின் தனது நீண்டநாள் தோழியான மோனிகாவை கடந்த 2023ம் ஆண்டு கரம்பிடித்தார். இந்த தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் இரட்டை குழந்தை பிறந்தது. இந்த நற்செய்தியை சமூக வலைதளங்களில் பகிர்ந்த கவின்.,</p><p>“எங்கள் வாழ்க்கையை இரட்டிப்பு மகிழ்ச்சியால் நிறைத்த இறைவனுக்கு நன்றி.எங்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளனர்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.</p><p>இந்நிலையில் குழந்தைகளுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தரவரிசையில் கிடுகிடு முன்னேற்றம்: டிரம்ப் முன்மொழிந்த ஏரியின் பெயரை நிராகரித்த மேப்குவெஸ்ட் செயலி</title><link>https://www.maalaimalar.com/news/world/trump-proposed-america-lake-name-rejected-mapquest-app-surges</link><comments>https://www.maalaimalar.com/news/world/trump-proposed-america-lake-name-rejected-mapquest-app-surges#comments</comments><guid isPermaLink="false">5fbd5127-1c9c-4acf-9fe3-e51140eec177</guid><pubDate>Thu, 03 Sep 2026 14:37:10 +0000</pubDate><atom:updated>2026-09-03T14:37:10.688Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Donald Trump,அமெரிக்கா,America,டொனால்ட் டிரம்ப்,lake america,அமெரிக்கா ஏரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/i2o35iry/Untitled-design-8.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Trump Ontario Lake renaming row]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/i2o35iry/Untitled-design-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் ஒன்டாரியோ ஏரியை, ‘அமெரிக்கா ஏரி’ என பெயர் மாற்றம் செய்து அறிவித்ததை தொடர்ந்து, இந்த புதிய பெயர் மாற்றத்தை ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனம் தங்களது தளத்தில் அப்டேட் செய்த நிலையில், ’ ‘மேப்குவெஸ்ட் நிறுவனம்’ இந்த புதிய பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.</p><h3><strong>வர்த்தக ஒப்பந்தம்</strong></h3><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE">அமெரிக்காவுக்கும்</a> கனடாவுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்மொழிந்த ஒப்பந்தத்தை கனடா நிராகரித்தது.</p><p>இதையடுத்து ஒண்டோரியோ ஏரியின் பெயரை ‘அமெரிக்கா ஏரி’ என பெயர் மாற்றம் செய்யுமாறு ஆகஸ்ட் 27 என்று டிரம்ப் உத்தரவிட்டார்.</p><p>இதைத்தொடர்ந்து அமெரிக்க நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் கூகுள், இந்த பெயர் மாற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் தங்களது தளத்தை புதுப்பித்தது.</p><h3><strong>மேப்குவெஸ்ட் எதிர்ப்பு</strong></h3><p>இதற்கிடையில் அமெரிக்காவை சேர்ந்த மேப்குவெஸ்ட் என்ற நிறுவனம், இந்த பெயர் மாற்றத்தை தங்களது தளத்தில் புதுப்பிக்க போவதில்லை என்று தெரிவித்துள்ளது.</p><p>இதுகுறித்து மேப்குவெஸ்ட் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “நாங்கள் ஒன்டாரியோ ஏரியின் பெயரை மாற்றப் போவதில்லை. உங்கள் விருப்பப்படி அதற்கு என்ன பெயர் வேண்டுமானாலும் சூட்டிக் கொள்ளுங்கள்.</p><p>எங்கள் வரைபடத்தில் ஒன்டாரியோ ஏரி சரியாகவே குறிக்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள் அறிவோம்,” என்று அறிவித்தது.</p><p>இதையடுத்து ஆகஸ்ட் 28 அன்று அமெரிக்க ஆப் ஸ்டோரில் 128-வது இடத்தில் இருந்த மேப்குவெஸ்ட் நிறுவனம் ஒரே நாளில் 92-வது இடத்திற்கு முன்னேறியது.</p><p>இதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 31 அன்று, மேப்குவெஸ்ட் நிறுவனம் ஒட்டுமொத்தமாக 3-வது இடத்திற்கு முன்னேறி, புதிய இடங்களை மேப் செயலிகளில் தேடுபவர்கள் பிரிவில் முதல் இடத்தையும் பிடித்தது.</p><p>இந்த மேப்குவெஸ்ட் செயலி அமெரிக்காவில் சுமார் 6,32,000 முறை பதிவிறக்கம் செய்யப்பட்டதாக, தனியார் பகுப்பாய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.</p><p>மேலும் அமெரிக்கா மற்றும் கனடாவில் மொத்த பதிவிறக்கங்கள் 15 லட்சத்தை தாண்டியுள்ளதாக மேப்குவெஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><h3><strong>மேப்குவெஸ்ட் பொது மேலாளர்</strong></h3><p>மேப் குவெஸ்ட் நிறுவனம் உலகம் முழுவதும் பயனர்களிடம் ஏற்படுத்திய தாக்கம் குறித்து, அதன் பொது மேலாளர் டக் பெர்கர் கூறுகையில், “மக்கள் எங்கள் செயலியை பதிவிறக்கம் செய்வதோடு மட்டுமல்லாமல், எங்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் அளவுக்கு அக்கறை காட்டுகிறார்கள்.</p><p>சமூக வலைதளங்களில் எங்கள் செயலி குறித்து, பயனர்கள் புதிய அம்சங்களுக்கான கோரிக்கைகளையும், மாற்றம் செய்ய வேண்டிய சில விஷயங்களையும் சமர்ப்பித்து வருகிறார்கள்.</p><p>மக்கள் கேட்கும் அம்சங்களை உருவாக்குவதற்காக எங்கள் குழு இரவு பகலாக உழைத்து வருகிறது,” என்று தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சித்தா இயக்குநருடன் கைக்கோர்க்கும் கமல்ஹாசன் - லுக் டெஸ்ட் காட்சிகள் இணையத்தில் வைரல்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/kamal-haasan-teams-up-with-chithha-director-look-test-visuals-go-viral-online</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/kamal-haasan-teams-up-with-chithha-director-look-test-visuals-go-viral-online#comments</comments><guid isPermaLink="false">9024658e-49b7-4515-b705-1d6faa2e6db4</guid><pubDate>Thu, 03 Sep 2026 14:35:48 +0000</pubDate><atom:updated>2026-09-03T14:35:48.971Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>அருண்குமார்,Arunkumar,kamal haasan,கமல்ஹாசன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/c7eqd89t/New-Project-2026-09-03T200526.691.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சித்தா இயக்குநருடன் கைக்கோர்க்கும் கமல்ஹாசன் - லுக் டெஸ்ட் காட்சிகள் இணையத்தில் வைரல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/c7eqd89t/New-Project-2026-09-03T200526.691.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சித்தா பட இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிக்கும் புதிய திரைப்படத்திற்காக நடத்தப்பட்ட ‘லுக் டெஸ்ட்’ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. </p><p>கமல்ஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கான ‘லுக் டெஸ்ட்’ புகைப்படம் ஒன்றை தயாரிப்பு நிறுவனம் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளது.</p><p>லுக் டெஸ்ட் புகைப்படங்கள் வெளியான உடனேயே இணையத்தில் வைரலாகி, ரசிகர்களிடையே ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் தூண்டியுள்ளது. </p><p>இத்திரைப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.</p><p>'லுக் டெஸ்ட்' வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படம் குறித்த கூடுதல் விவரங்கள் பின்னர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். </p>]]></content:encoded></item><item><title>திரிணாமுல் கட்சி அலுவலகத்தை சூறையாடிய மர்ம நபர்கள்: பா.ஜ.க.வை சாடிய அபிஷேக் பானர்ஜி</title><link>https://www.maalaimalar.com/news/national/tmc-office-vandalised-in-kolkata-abhishek-banerjee-alleges-bjp-role</link><comments>https://www.maalaimalar.com/news/national/tmc-office-vandalised-in-kolkata-abhishek-banerjee-alleges-bjp-role#comments</comments><guid isPermaLink="false">5d03839b-09ee-42ba-935b-554c8e68ba10</guid><pubDate>Thu, 03 Sep 2026 14:24:06 +0000</pubDate><atom:updated>2026-09-03T14:24:06.388Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Abhishek Banerjee,BJP,பாஜக,TMC,அபிஷேக் பானர்ஜி,திரிணாமுல் காங்கிரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/cgmsfe4f/abhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ abhishek banerjee]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/cgmsfe4f/abhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கொல்கத்தாவில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தை மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.</strong></em></p><p>மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது. அதன்பின், அந்தக் கட்சி பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. அக்கட்சியின் பெரும்பாலான தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி அணிக்குச் சென்றுவிட்டனர்.</p><h2>கட்சி அலுவலகம் சூறை</h2><p>இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆபீசுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று அலுவலகத்தை அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.</p><p>அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்தனர். சிலர் அலுவலகத்தில் இருந்த டிவி மற்றும் கம்ப்யூட்டர் மானிட்டர்களைத் தூக்கிச்சென்றது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.</p><h2>அபிஷேக் பானர்ஜி கண்டனம்</h2><p>இதுதொடர்பாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான அபிஷேக் பானர்ஜி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:</p><p>அதிகாலை 4.30 மணியளவில் கொல்கத்தாவின் மையத்தில் உள்ள எங்கள் கட்சி அலுவலகத்தை ஆயுதங்களுடன் பா.ஜ.க. குண்டர்கள் முற்றுகையிட்டனர்.</p><p>அவர்கள் எங்கள் கட்சி தொண்டர்களைத் தாக்கினர், அவர்களின் தொலைபேசிகளைப் பறித்து, அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். வளாகத்தைச் சூறையாடி மின்னணு உபகரணங்களைச் சேதப்படுத்தினர்.</p><p>கொல்கத்தா காவல்துறை எங்கே இருந்தது? கிட்டத்தட்ட 2 மணி நேரம், எங்கள் கட்சியினர் மற்றும் வழக்கறிஞர்கள் பலமுறை போன் மற்றும் மின்னஞ்சல்கள் மூலம் தொடர்பு கொள்ள முயன்றும் எந்த பதிலும் இல்லை. இது மூர்க்கத்தனமானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் என பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>உச்சத்தில் உலக நாடுகளின் கடன் அளவு: GDP-யில் 100%-ஐ நெருங்கும் அபாயம் - சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/world/global-debt-levels-at-a-peak-risk-of-approaching-100-of-gdp-imf-warns</link><comments>https://www.maalaimalar.com/news/world/global-debt-levels-at-a-peak-risk-of-approaching-100-of-gdp-imf-warns#comments</comments><guid isPermaLink="false">1552db5b-7a5b-4c10-a0db-26d0544832d4</guid><pubDate>Thu, 03 Sep 2026 14:23:25 +0000</pubDate><atom:updated>2026-09-03T14:23:25.604Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Debt,உலக பொருளாதாரம்,International Monetary Fund,economies,கடன்,சர்வதேச நாணய நிதியம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/7zayw825/New-Project-2026-09-03T195202.499.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உச்சத்தில் உலக நாடுகளின் கடன் அளவு: GDP-யில் 100%-ஐ நெருங்கும் அபாயம் - சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/7zayw825/New-Project-2026-09-03T195202.499.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலக நாடுகளின் ஒட்டுமொத்தப் பொதுக் கடன் அளவு, உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 100%-ஐ நெருங்கியுள்ளது. </p><p>இது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்திற்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த கடன் அளவு என்றும், இதனால் ஏற்படும் அபாயங்கள் குறித்தும் ச<a href="https://www.maalaimalar.com/news/world/imfs-big-warning-and-11-new-conditions-for-pakistan-after-op-sindoor-773188">ர்வதேச நாணய நிதியம்</a> எச்சரிக்கை விடுத்துள்ளது. </p><h2>பாதிப்படையும் நாடுகள்</h2><p>குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட நாடுகள், தாங்கள் வாங்கிய கடனுக்கான வட்டி செலுத்துவதற்கே அதிக நிதி தேவைப்படுவதால், தங்களின் உள்கட்டமைப்பு, மருத்துவம் மற்றும் கல்வி போன்ற அத்தியாவசியத் துறைகளுக்கு நிதி ஒதுக்க முடியாமல் தவிக்கின்றதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார். </p><p>இந்த அழுத்தங்கள் பொருளாதார வளர்ச்சியை பலவீனப்படுத்தி, அரசின் பொதுக் கடனைத் தொடர்ந்து நிர்வகிக்கவோ அல்லது திருப்பிச் செலுத்தவோ முடியாத நிலைக்குக் கொண்டு செல்லலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார். </p><h2>பொருளாதார வளர்ச்சி</h2><p>இருப்பினும் ஈரான் - அமெரிக்காப் போரால் எரிபொருள் விநியோகத் தடை மற்றும் அதனால் ஏற்பட்ட பொருளாதார தடையை சிறப்பாக சமாளித்து, 2026-ஆம் ஆண்டிற்கான உலகளாவிய வளர்ச்சி விகிதம் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு தோராயமாக 3 சதவீதமாக உயர்ந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார். </p><h2>வளர்ச்சிக்கான காரணங்கள்</h2><p>மின் உற்பத்தி மீதான செலவினங்கள் உட்பட, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கான முதலீடுகள், அமெரிக்கா மற்றும் செயற்கை நுண்ணறிவு மதிப்புச் சங்கிலியுடன் தொடர்புடைய பிற நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளித்துள்ளன.</p><p>இருப்பினும், ஹார்முஸ் நீரிணை பெரும்பாலும் மூடப்பட்டே இருக்கிறது, எரிசக்தி இருப்புகளை மறுவடிவமைப்பு செய்ய வேண்டியுள்ளது (நிரப்ப வேண்டியுள்ளது), மற்றும் பல நாடுகளில் பணவீக்கத்தைக் குறைக்கும் நடவடிக்கைகள் முடங்கியுள்ளன என அவர் தெரிவித்துள்ளார். </p><h2>மறுசீரமைப்பு பணிகள் விரைவுப்படுத்தப்பட வேண்டும்</h2><p>பொதுக் கடன் தாங்க முடியாத நிலையை எட்டியுள்ள நாடுகளில், கடனை மறுசீரமைக்கும் பணிகளை விரைவுபடுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது. </p><p>2025-ஆம் ஆண்டில் உலகளாவிய பொருளாதார சமநிலையின்மை உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.7% ஆக அதிகரித்துள்ளது, இது கடந்த தசாப்தத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய உயர்வாகும்.</p><p>உபரிப் பொருளாதாரம் கொண்ட நாடுகள், தங்களின் உள்நாட்டு நுகர்வு மற்றும் முதலீட்டை அதிகரிக்க கட்டமைப்புச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதே நேரத்தில் பற்றாக்குறை பொருளாதாரம் கொண்ட நாடுகள் தங்களின் பொது நிதியை ஒருங்கிணைத்து, நிதிப் பாதுகாப்பை மீண்டும் பலப்படுத்த வேண்டும் என்றும் ஜார்ஜீவா கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>அமெரிக்காவின் ஆஷ்வில் நகரில் நேற்று முன்தினம் (செப்.1) நடைபெற்ற ஜி20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டத்திற்குப் பிறகான செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த கருத்துகளை பகிர்ந்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>புத்த துறவியாக மாற ஐஸ்கிரீம் நிறுவனத்தை விற்கும் தொழிலதிபர்</title><link>https://www.maalaimalar.com/news/world/thai-businessman-sells-ice-cream-firm-for-rs-47-crore-to-become-buddhist-monk</link><comments>https://www.maalaimalar.com/news/world/thai-businessman-sells-ice-cream-firm-for-rs-47-crore-to-become-buddhist-monk#comments</comments><guid isPermaLink="false">0b5f48e8-be5f-4ace-8121-5c7dafc0f285</guid><pubDate>Thu, 03 Sep 2026 13:39:59 +0000</pubDate><atom:updated>2026-09-03T13:39:59.474Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தாய்லாந்து,thailand,தொழிலதிபர்,Entrepreneur,buddhist monk,புத்த துறவி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/t6zqls9s/Untitled-design-7.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Thailand Havells ice cream owner]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/t6zqls9s/Untitled-design-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">தாய்லாந்தில்</a> சிரிபோங் அக்கராஸ்ரியுக் என்பவர் புத்த துறவியாக மாறுவதற்காக, தான் நடத்தி வந்த ஹாவெல்ஸ் என்ற ஐஸ்கிரீம் நிறுவனத்தை சுமார் 47 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்வதாக பேஸ்புக்கில் அறிவித்துள்ளார். </p><p>மேலும் 2.77 ஏக்கர் அளவிலான தனது நிறுவனத்தின் நிலத்தையும், அலுவலகம் மற்றும் தொழிற்சாலயையும் விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளார்.</p><h3>ஹாவெல்ஸ் ஐஸ்கிரீம் நிறுவனம்</h3><p>தாய்லாந்து நாட்டில் சிரிபோங் அக்கராஸ்ரியுக் என்பவர் சிறுவயதில் இருந்தே ஐஸ்கிரீம் மீது பிரியம் கொண்டு, ஐஸ்கிரீம் விற்பனையில் ஈடுபட்டு வந்தார். பின்னர் சொந்தமாக ஒரு ஐஸ்கிரீம் நிறுவனத்தை ஆரம்பித்து தொழில்முனைவோராக உருவாக வேண்டும் என்று விரும்பினார்.</p><p>இதையடுத்து இவர் கடந்த 1999-இல் ஹாவெல்ஸ் என்ற ஐஸ்கிரீம் நிறுவனத்தை ஒரு வணிக வளாகத்தில் தொடங்கினார். அவர் தொடங்கிய மூன்று ஆண்டுகளில் அந்த நிறுவனம் 22 கிளைகளாக விரிவடைந்தது.</p><p>இதற்கிடையில் சிரிபோங் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றதை அடுத்து, அவரது நிறுவனம் தாய்லந்து மக்களிடம் நன்கு அறிமுகமான பிராண்டாக மாறியது.</p><p>தாய்லாந்தில் ஐஸ்கிரீம் நிறுவனத்திடம் போட்டி அதிகரித்ததால், சிரிபோங் ஐஸ்கிரீம் நிறுவனத்தை நடத்தி வந்த வணிக வளாகம் உட்பட அதனை சுற்றியுள்ள இடங்களை ஒப்பந்தம் மூலம் போட்டியாளர்கள் கைப்பற்றினர்.</p><h3><strong>சந்தையில் போட்டி</strong></h3><p>இதன்மூலம் சிரிபோங்கால் அந்த பகுதியில் ஐஸ்கிரீம் நிறுவனத்தை புதிதாக தொடங்க முடியாமல் போனது. அதே நேரத்தில், அந்த பகுதிகளில் பல்வேறு நிறுவனங்கள் தங்களது புதிய ஐஸ்கிரீம் நிறுவனத்தை தொடங்கினர்.</p><p>அதன் விளைவாக 2014-ஆம் ஆண்டில், சிரிபோங் நடத்தி வந்த ஒரு ஐஸ்கிரீம் விற்பனையகம் முற்றிலுமாக மூடப்பட்டது. பல்வேறு வணிக வளாகங்களுடன் சிரிபோங் பேச்சுவார்த்தை நடத்தியும், அவரால் புதிய கிளைகளை திறக்க முடியாமல் போனது.</p><p>இதுகுறித்து சிரிபோங் கூறுகையில், வணிக வளாகங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பல கடைகள் காலியாக இருந்தபோதிலும், தனது நிறுவனத்தை தொடங்க, வணிக வளாகங்கள் மறுத்து வந்ததாக கூறினார்.</p><h3>புத்தரிடம் இருந்து பெறப்பட்ட வெற்றி</h3><p>இதையடுத்து அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் தான் உலக வாழ்க்கையை துறந்துவிட்டு, பெளத்த மதத்தில் தன்னை இணைத்து கொள்ள இருப்பதாக அவர் கூறியுள்ளார்.</p><p>மேலும் அவர் கடந்த 2016-ஆம் ஆண்டு தான் எழுதிய ‘புத்தரிடம் இருந்து பெறப்பட்ட வெற்றி’ என்ற புத்தகத்தை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து அவர் பெளத்த போதனைகள் குறித்த பல்வேறு உரைகளையும் ஆற்றி வந்தார்.</p><p>இந்த இரண்டு ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஒரு நிலம் வாங்கி, துறவியாக தீட்சை பெறுவதற்கு முன்பு தியானம் செய்வதற்காக ஒரு வன தியான மையத்தை நிறுவ விரும்புவதாகவும் அவர் கூறினார்.</p><p>ஹாவெல்ஸ் நிறுவனம் தனது வாழ்விலும் குடும்பத்திலும் ஒரு அங்கமாக உள்ளதாவும், தான் இந்த நிறுவனத்தை விட்டு விலகினாலும், தனது ஹாவெல்ஸ் நிறுவனம் தொடர்ந்து முன்னேறுவதை காண விரும்புவதாகவும் சிரிபோங் கூறியுள்ளார்.</p><h3><strong>ஐஸ்கிரீம் நிறுவனம் விற்பனை</strong></h3><p>இந்த நிலையில் சிரிபோங் தனது ஹாவெல்ஸ் ஐஸ்கிரீம் நிறுவனத்தை சுமார் 47 கோடி ரூபாய் மதிப்பில் விற்பனை செய்ய இருப்பதாக பேஸ்புக்கில் அறிவித்துள்ளார். </p><p>இந்த ஒப்பந்தத்தில் 2.77 ஏக்கர் அளவிலான நிலம், இயந்திரங்கள், அலுவலம் மற்றும் தொழிற்சாலையையும் விற்பனை செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்.</p><p>இதற்கான ஒப்பந்த உரிமையாளர்களை தன்னிடம் அறிமுகப்படுத்தும் நபர்களுக்கு சுமார் 1 கோடி ரூபாய் தருவதாகவும் சிரிபோங் அறிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>டெஸ்லாவுக்கு போட்டியா? பாகிஸ்தானில் நேரலையின் போது போலீஸ் வண்டியில் மோதிய தானியங்கி கார்!</title><link>https://www.maalaimalar.com/news/world/self-driving-car-crashes-into-police-vehicle-during-live-stream-in-pakistan</link><comments>https://www.maalaimalar.com/news/world/self-driving-car-crashes-into-police-vehicle-during-live-stream-in-pakistan#comments</comments><guid isPermaLink="false">48a7d3ec-0e65-4d86-be04-5d9b8dfa3bf2</guid><pubDate>Thu, 03 Sep 2026 13:16:56 +0000</pubDate><atom:updated>2026-09-03T13:16:56.928Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Pakistan,islamabad,டெஸ்லா கார்,Telsa car,SelfDriving Car,DChowk,Ranvir Shorey,Remote Controlled Car,EhsanZafar,Internet Disruption</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/zsynu7pd/Tesla-Car" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tesla Car]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/zsynu7pd/Tesla-Car?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D">இஸ்லாமாபாத் </a>டி-சவுக்கில் டெஸ்லாவுக்கு போட்டியாக உருவாக்கப்பட்ட தானியங்கி கார், இன்டர்நெட் துண்டிப்பால் கட்டுப்பாடு இழந்து போலீஸ் வாகனத்தில் மோதி விபத்து - வீடியோ வைரல்.</p><p>பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் உள்ள டி-சவுக் பகுதியில், '<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE">டெஸ்லா</a>' நிறுவனத்தின் சுயவிவரக் கார்களுக்குப் போட்டியாக உருவாக்கப்பட்ட ஒரு அதிநவீனத் தானியங்கி காரின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. </p><p>அப்போது எதிர்பாராத விதமாக இன்டர்நெட் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் அங்கிருந்த போலீஸ் வாகனத்தின் மீது நேராக மோதி விபத்துக்குள்ளானது.</p><p>இந்த ஒட்டுமொத்த சம்பவமும் நேரலையில் பதிவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>அபோட்டாபாத் நகரைச் சேர்ந்த தொழில்நுட்ப ஆர்வலர் எஹ்சான் ஜாபர் என்பவர் உருவாக்கிய இந்த ரிமோட் கண்ட்ரோல் காரை, பாகிஸ்தான் பத்திரிகையாளர் முகமது ஆலிஜா நேரலையில் செய்தியாகப் பதிவு செய்து கொண்டிருந்தபோதே இந்த விபத்து நிகழ்ந்தது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Presenting Pakistan’s answer to the self driving <a href="https://x.com/Tesla?ref_src=twsrc%5Etfw">@Tesla</a>: <br>The Masla. <a href="https://t.co/b5I63UYiEk">pic.twitter.com/b5I63UYiEk</a></p>&mdash; Ranvir Shorey (@RanvirShorey) <a href="https://x.com/RanvirShorey/status/2094441177722523802?ref_src=twsrc%5Etfw">August 31, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2><strong>இன்டர்நெட் துண்டிப்பால் வந்த வினை</strong></h2><p>இந்த விபத்து குறித்து பத்திரிகையாளர் ஆலிஜா கூறுகையில், "இந்த கார் சாட்டிலைட் மற்றும் இன்டர்நெட் உதவியுடன் ரிமோட் மூலம் இயக்கப்பட்டது. சோதனை ஓட்டம் சிறப்பாகவே போய்க்கொண்டிருந்தது. </p><p>ஆனால், திடீரென இன்டர்நெட் சிக்னல் துண்டிக்கப்பட்டதால், கார் கட்டுப்பாட்டை இழந்து நேராக போலீஸ் வாகனத்தின் மீது மோதியது" என்று விளக்கமளித்துள்ளார்.</p><p>மேலும், "இந்த விபத்து குறைந்த போக்குவரத்து கொண்ட அதீத பாதுகாப்பு வளையத்திற்குள் நடந்ததால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுவே மக்கள் நடமாட்டம் மிகுந்த பொதுச்சாலையாக இருந்திருந்தால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும். </p><p>தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் வரவேற்கத்தக்கது என்றாலும், மனித உயிர்களைப் பணயம் வைத்து இதுபோன்ற ஆபத்தான சோதனைகளைச் செய்யக்கூடாது. பாதுகாப்புக்கே நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும்" என்றும் அவர் எச்சரித்துள்ளார்.</p><h2><strong>சமூக வலைத்தளங்களில் குவியும் மீம்ஸ்கள்</strong></h2><p>பாகிஸ்தானின் தொழில்நுட்ப திறமையை உலகிற்கு பறைசாற்ற முயன்ற இந்த வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் கடுமையான ட்ரோல்களுக்கும் மீம்ஸ்களுக்கும் உள்ளாகி வருகிறது.</p><p>குறிப்பாக, பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் ஷோரி இந்த வீடியோவைப் பகிர்ந்து, <em>"</em>தானாக இயங்கும் டெஸ்லா கார்களுக்குப் பாகிஸ்தானின் பதிலளிக்கும் விதமாக இதோ: 'மஸ்லா' <em>(சிக்கல்)"</em> என்று கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.</p><p>நெட்டிசன்கள் பலரும், "இவ்வளவு திறமையாகப் பார்த்துப் பார்த்து போலீஸ் வண்டியிலேயே போய் மோதியிருக்கிறதே!", "போலீஸ்காரர்களிடம் உதை வாங்காமல் தப்பித்ததே பெரிய விஷயம்" எனப் பல்வேறு நகைச்சுவையான கமெண்ட்டுகளைப் பதிவிட்டு இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.</p>]]></content:encoded></item></channel></rss>