<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 19 Aug 2026 11:46:28 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: காவிரி விவகாரம்: சட்டசபையில் காரசார விவாதம் - 19 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-19-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-19-august-2026#comments</comments><guid isPermaLink="false">532f6d4f-39f1-4437-8daa-00952ab7e206</guid><pubDate>Wed, 19 Aug 2026 04:04:15 +0000</pubDate><atom:updated>2026-08-19T08:51:34.305Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/553nhbv2/speaker.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/553nhbv2/speaker.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>177.25 டிஎம்சி தமிழகத்திற்கு உரிமை என்ற தீர்ப்பு கிடைத்த பின் ஆணையம் அமைக்க மத்திய அரசு காலதாமதம் செய்தது.</p><p>நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து ஆணையம் அமைத்த பெருமை எடப்பாடி பழனிசாமியை சாரும்  - ஓ.எஸ்.மணியன்</p><p>அந்தந்த காலகட்டத்தில் ஒவ்வொரு முதல்வரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளார்கள் - சபாநாயகர்</p><p>காவிரி பிரச்சனையில் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.</p><p>காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தில் அனைத்து கட்சியினரும் ஒன்றுபட்டு நிற்கிறார்கள் - சபாநாயகர்</p><p>பிரதமர் பேச்சை கேட்டு ஒருதலைபட்சமாக செயல்பட்டதாக தான் திமுக மீது குற்றச்சாட்டு, உண்மை ஒப்புக்கொண்டதற்கு நன்றி - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>காவிரி விவகாரத்தில் வழக்கு வாபஸ் பெற்றதற்கான காரணத்தை விளக்கமாக பேரவையில் ஏற்கெனவே கூறி உள்ளோம்.</p><p>காவிரி பகுதியில் பிறந்து, அங்கே வளர்ந்த விவசாயிகளான நாங்கள் எப்படி காவிரி நீரை விட்டுக் கொடுப்போம்.</p><p>பிரதமர் எங்களை அழைத்து சமாதானம் பேசினார். வழக்கை வாபஸ் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது - கே.என்.நேரு விளக்கம்</p> <p>காவிரி விவகாரம் - சட்டசபையில் காரசார விவாதம்</p><p>திமுகவினர் அநாகரிகமாக நடந்து கொண்டதாக ராஜ்மோகன் பேசக்கூடாது - கே.என்.நேரு</p><p>ஒருமையில் பேசுவதை திமுகவினர் தவிர்க்க வேண்டும். பேரவையில் திமுகவினர் அநாகரிகமாக நடந்து கொள்வதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.</p><p>பைத்தியம் போல் பேசுவதாக திமுக எம்எல்ஏக்கள் கூறுகின்றனர். சட்டப்பேரவையில் பேசும் வார்த்தையா இது? </p><p>அடிக்கப் பாய்வது போல் வருகின்றனர். திமுகவினர் அடிக்கப் பாய்வதுபோல் வருகிறார். கையை ஓங்குகிறார் -  அமைச்சர் ராஜ்மோகன்</p> <p>காவிரி விவகாரத்தில் இந்த அவையில் பல விவாதங்கள் நடந்துள்ளன - அமைச்சர் அருண்ராஜ்</p> <p>திமுகவின் துரோகம் என்பதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்.</p><p>காவிரி விவகாரத்தில் யாரும் எந்த துரோகமும் செய்ய முடியாது - கே.என்.நேரு</p><p>காவிரி விவகாரத்தில் திமுக எந்த அளவுக்கு துரோகம் இழைத்தது என்று பேச ஆரம்பித்தால் நிறைய விஷயங்கள் பேசலாம் - அமைச்சர் அருண்ராஜ்</p> <p>காவிரி பிரச்சனை 1987-ல் எம்ஜிஆர் காலத்திலேயே வழக்கு தொடர்ந்தோம். </p><p>அதிமுக, திமுக அரசாங்கம் தொடர்ந்து காவிரி நீருக்காக போராடிக்கொண்டு இருக்கிறோம் - எடப்பாடி பழனிசாமி</p> <p>காவிரி விவகாரம், மேகதாது விவகாரம் தொடர்பான நீங்கள் என்ன செய்தீர்கள்.</p><p>அச்சம் என்ற வார்த்தையே எங்கள் தலைவரின் அகராதியில் இல்லை -  அமைச்சர் அருண்ராஜ்</p> <p>9 முறை காட்பாடி எம்எல்ஏவாக இருந்த துரைமுருகன் எதுவும் செய்யவில்லை என சொல்வது சரியல்ல.</p><p>தன்னைப் பார்த்து பிற எம்எல்ஏக்கள் செயல்படும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டவர் துரைமுருகன்.</p><p>காட்பாடி தொகுதியில் என்ன செய்யப் போகிறேன் என்பதை சொல்லுங்கள். அவையில் இல்லாதவர் பற்றி பேசுவது சரியல்ல - எ.வ.வேலு</p><p>துரைமுருகனை குறிப்பிட்டு தவெக எம்எல்ஏ பேசுவதற்கு திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு</p> <p>காட்பாடி தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த துரைமுருகன் சீரமைப்பு பணிகளை முறையாக செய்யவில்லை - தவெக எம்எல்ஏ சுதாகர்</p><p>காட்பாடி தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த துரைமுருகன் அனுபவத்தை நான் மதிக்கிறேன்.</p><p>எந்த கொம்பனாலும் அசைக்க முடியாத தவெக கோட்டையாக இனி காட்பாடி இருக்கும் - தவெக எம்எல்ஏ சுதாகர் </p><p>குறும்பர் இன மக்களுக்கு SC சான்றிதழ் - இதுதொடர்பாக அரசு பரிசீலித்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் எடுத்துச் சொல்லி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>தருமபுரியில் குறும்பர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அதிகம் பேர் உள்ளனர். அவர்கள் SC சான்றிதழ் கேட்டு வருகின்றனர். அவர்களால் பள்ளிக்கூடத்திற்கோ, கல்லூரிக்கோ செல்ல முடியவில்லை. </p><p>ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்திற்கு சென்று ஆர்டர் வாங்கி வந்து விட்டு படிக்கிறார்கள். அதனை பரிசீலனை செய்து வழங்க வேண்டும் - சவுமியா அன்புமணி</p> <p>செஞ்சி கோட்டையை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் - சவுமியா அன்புமணி</p><p>மழை நீர் சேமிப்பை கட்டாயமாக்க வேண்டும். பாலாற்றில் 5 அடிக்கு தடுப்பணைகளை கட்ட வேண்டும்.</p><p>தருமபுரி மாவட்டத்தில் ஏரிகளை தூர்வார வேண்டும் - சவுமியா அன்புமணி</p> <p>அத்திக்கடவு - அவிநாசி 2 திட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள நதிகளை முதலில் இணைக்க வேண்டும்.</p><p>காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தை முதலில் செயல்படுத்த வேண்டும். பாலாற்றில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>நந்தன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் - சவுமியா அன்புமணி</p><p>சவுமியா அன்புமணி கோரிக்கையின் படி நீர்நிலைகள் மேப்பிங் செய்யப்படும் - அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்</p><p>கூவத்தில் குப்பை கொட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.</p><p>நல்ல தண்ணீரில் சாக்கடையை கலப்பது சட்டப்படி குற்றம்.</p><p>தாமிரபரணி நதியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>அரசு கட்டிடங்கள் ஏரியில் தான் அமைந்துள்ளன - சவுமியா அன்புமணி</p><h2>சவுமியா அன்புமணி உரை</h2><p>இந்தியாவில் எங்கும் இல்லாத சதுப்பு நிலம் சென்னையில் உள்ளது.</p><p>திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போதும் கூவம் ஆறு மக்கள் பயன்பாட்டில் உள்ளது.</p><p>சென்னைக்கு வந்த பிறகு தான் கூவம் சாக்கடையாக மாறுகிறது.</p><p>நீர் வளம் தான் எதிர்கால தலைமுறைக்கு நாம் வழங்கும் சொத்து - சவுமியா அன்புமணி</p><p>தமிழ்நாட்டின் நீர்வளம் நம் கையைவிட்டு போய்க்கொண்டு இருக்கின்றன - சவுமியா அன்புமணி</p><p>முதலமைச்சர் விஜய் குறித்து புகழ்ந்து பேசிய தவெக எம்எல்ஏ ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு சபாநாயகர் அறிவுரை</p><p>மானிய கோரிக்கை மீதான விவாதம் பற்றி மட்டும் பேச வேண்டும் என சபாநாயகர் அறிவுரை</p><p>நம்முடைய முதலமைச்சர் மற்ற முதலமைச்சர்களை போல் அல்ல - அமைச்சர் ஆதவ்</p><p>முதலமைச்சர் விஜய்க்கு புகழ்ச்சி பிடிக்காது என்பதை  எம்எல்ஏக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் - அமைச்சர் ஆதவ்</p><p>கல்லணை இன்னும் இடிந்து போகவில்லை தரமாக உள்ளது. நமது காலத்தில் தான் அணைகள் இடிந்து விழுகிறது - அமைச்சர் ஆதவ்</p><h2>எ.வ.வேலு உரை</h2><p>திருவண்ணாமலையில் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்தது.</p><p>தென்பெண்ணை ஆற்றில் 56,000 கனஅடி தண்ணீரை தாங்கும் அளவிற்கு பாலம் கட்டப்பட்டது.</p><p>கொள்ளளவை விட பல மடங்கு அதிகமாக தண்ணீர் வந்ததால் மட்டுமே அணை இடிந்தது.</p><p>தென்பெண்ணை ஆற்றில் ரூ.16 கோடியில் கட்டப்பட்ட மேம்பாலம் 3 மாதத்தில் இடிந்தது - அமைச்சர் மரியவில்சன்</p><p>அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பேச்சுக்கு எதிர்ப்பு - திமுக எம்எல்ஏக்கள் அமளி</p><p>கனவு கண்டாலும் கூட திமுக இனி ஆட்சிக்கு வர முடியாது - அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்</p><p>வீட்டின் தரத்திற்கு கட்டும் பயனாளிகள் தான் பொறுப்பு - கே.என்.நேரு</p><p>திமுக ஆட்சியில் கட்டப்பட்ட வீடுகள் நிறைய இடங்களில் இடிந்து தொங்குகிறது. தவெக ஆட்சியில் கட்டப்படும் வீடுகள் 50 ஆண்டுகள் வரை தரமாக இருக்கும் - அமைச்சர் வினோத்</p><p>2016 - 2020 வரை கொரோனா காலம் என்பதால் தான் பசுமை வீடு திட்டத்தை அதிமுக காலத்தில் சரியாக செய்ய முடியவில்லை - எடப்பாடி பழனிசாமி</p><p>பெருமளவு கனிமவள பொருட்கள் அண்டை மாநிலங்களுக்கு எடுத்து செல்வதாக தொடர் புகார் வந்தன.</p><p>கனிம வளத்தை அண்டை மாநிலங்களுக்கு எடுத்து செல்வதற்கு தடை விதித்த ஒரே தமிழக முதல்வர் விஜய் தான்.</p><p>எம்.சாண்ட், ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்கள், குவாரிகள் தொடர்பான மானிய கோரிக்கை விவாதத்தில் சொல்கிறேன் - அமைச்சர் பிரபு</p><p>ஜல்லி,  எம் சாண்ட் தேவை அதிகரிப்பு, பல குவாரிகள் மூடல் காரணமாக கட்டுமான பொருட்கள் விலை உயர்வு.</p><p>எம்.சாண்ட், ஜல்லி உற்பத்தி திறனை அதிகரிக்க தவெக அரசு ஏதேனும் திட்டம் வைத்துள்ளதா? - எடப்பாடி பழனிசாமி</p><p>ரூ.12,000 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் 150 நாட்கள் வேலை கொடுப்பது சாத்தியமில்லை - ஐ.பெரியசாமி</p><p>150 நாட்கள் வேலை அளிக்க வேண்டும் என்றால் ரூ.30,000 கோடி தேவைப்படும்.</p><p>தமிழ்நாட்டில் எந்த நதியும் ஓடவில்லை, அனைத்து பகுதிகளிலும் வறட்சி - ஐ.பெரியசாமி</p><p>மக்களுக்கு சேவையே முதலமைச்சரின் நோக்கம்.</p><p>எதிர்க்கட்சிகளின் ஆலோசனையை ஏற்க தயாராக உள்ளோம் - அமைச்சர் ஆனந்த்</p><h2> ஐ.பெரியசாமி உரை</h2><p>நான் அன்பாக, அக்கறையாக, ஆசையாக பேசியதால் தான் மக்கள் என்னை 7 முறை எம்எல்ஏவாக வெல்ல வைத்துள்ளனர்.</p><p>விபிஜி ராம் திட்டத்தில் 150 நாட்கள் வேலை தருவது சாத்தியமற்றது. ஏட்டு கத்தரிக்காய் கூட்டுக்கு உதவாது என்பது போல் இந்த திட்டம், அரசு அறிவித்தபடி 150 நாள் வேலை தர முடியுமா?</p> <p>3 துறைகளில் நடந்த ஊழல் தொடர்பான அனைத்து ஆதாரங்களும் உரிய நேரத்தில் வெளியிடப்படும் - முதலமைச்சர் விஜய்</p><p>நான் பேசுவேன், ஆனால் இடைத்தேர்தலிலாவது சிலருக்கு நல்லது நடக்க வேண்டுமே என சட்டசபையில் முதலமைச்சர் விஜய் கூறினார்.</p><p>ஊழல் தொடர்பான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அதை வெளியிட வைத்து விடாதீர்கள் - முதலமைச்சர் விஜய்</p><p>ஊழல் தொடர்பான அனைத்தும் ஆதாரங்கள் எனது மேஜையில் அமைச்சர் வைத்துள்ளார் - முதலமைச்சர் விஜய்</p><p>தவறு நடந்து இருக்கலாம் என ஒப்புக்கொண்டதற்கு நன்றி - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>வளமான கிராமங்களை உருவாக்கும் நோக்கத்தில் தான் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டது.</p><p>கொள்கை தலைவர் என சொல்கிறீர்கள், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை தமிழ்நாடு வளர்ச்சி திட்டம் என மாற்றியது நியாயமா? - ஐ.பெரியசாமி</p><p>அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் பெயரை ஏன் மாற்ற வேண்டும்? கொள்கைத் தலைவர் என கூறும் அண்ணா பெயரை மாற்றியது ஏன்? - ஐ. பெரியசாமி</p><h2>ஐ.பெரியசாமி  உரை</h2><p>அலுவலர்கள் தான் தேர்வு செய்கின்றனர். தவறு நடக்கிறது என்பதற்காக திட்டத்தை நிறுத்தக்கூடாது.</p><p>கட்சி, சாதி மத பாகுபாடின்றி விண்ணப்பித்த அனைவருக்கும் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு தருவதற்கு முயற்சி.</p><p>கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், அரசுக்கான இழப்பை குறைக்க உதவும்.</p><p>வீடு பெறும் பயனாளிகளை தேர்ந்தெடுப்பது அதிகாரிகள் அடங்கிய குழு தான்.</p><p>வீடு கட்டும் திட்டத்தில் பல தவறுகள் நடந்துள்ளது என திட்டவட்டமாக நான் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>ஏற்கெனவே வீடு வைத்துள்ளவர்களுக்கு வீடு கட்டப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கியதற்கான ஆதாரம் உள்ளது - அமைச்சர் ஆனந்த்</p><p>திமுக ஆட்சியில் வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கவில்லை - அமைச்சர் ஆனந்த்</p><p>வீடு கட்டும் திட்டத்தில் பெயரை மாற்றி விட்டு வீடுகளின் எண்ணிக்கையை தவெக அரசு குறைத்து விட்டது - ஐ.பெரியசாமி</p><p>தற்போது எம் சாண்ட் விலையை தாறுமாறாக உயர்த்தி உள்ளனர்.</p><p>ஜல்லி விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது - ஐ.பெரியசாமி</p><p>வீடுகள் முறையாக கட்டப்பட்ட ரூ.5 லட்சம் வழங்குகிறது தவெக அரசு - புஸ்ஸி ஆனந்த்</p><p>வீடு கட்ட திமுக ஆட்சியில் கொடுத்த ரூ.3.5 லட்சம் போதுமானதாக இல்லை - புஸ்ஸி ஆனந்த்</p><p>திமுக ஆட்சியில் அனுமதிக்கப்பட்ட வீடுகள் அடித்தளத்துடன் நிற்கின்றன.</p><p>திமுக ஆட்சியில் வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கவில்லை - புஸ்ஸி ஆனந்த்</p><p>திமுக ஆட்சியில வருடத்திற்கு 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன - ஐ.பெரியசாமி </p><p>நீர்வளத்துறை மீதான மானிய கோரிக்கை மீது விவாதம் தொடங்கியது.</p><p>நீர்வளம், ஊரக வளர்ச்சி மானியக் கோரிக்கை - அமைச்சர் ஆனந்த் தாக்கல் செய்தார்</p><p>சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானங்களை விவாதத்தில் எடுக்க வலியுறுத்தி அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு.</p><p>கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து முழக்கங்கள் எழுப்பியவாறு அதிமுகவினர் வெளிநடப்பு.</p><p>சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.</p><p>சட்டசபையில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கியது.</p><h2>அமைச்சர் வன்னி அரசு உரை</h2><p>நாடே மெச்சும் வகையில் முதலமைச்சர் அறிவிப்பு</p><p>ரூ.300 கோடியில் பெரம்பூரில் மருத்துவமனை அமைப்பதற்கு வரவேற்பு.</p><p>வடசென்னை மக்களை குளிர்விக்கும் வகையில் அறிவிப்பு</p> <p>வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு - சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு</p><p>நான் ரெயிலில்தான் சட்டசபைக்கு வந்து செல்கிறேன். வேலையும் கொடுத்து காரும் கொடுக்கும் முதலமைச்சருக்கு நன்றி - எம்எல்ஏ சபரி ஐங்கரன்</p><p>பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை நிறைவேற்றம் - மன்னார்குடி அமமுக எம்எல்ஏ காமராஜ் வரவேற்பு</p><p>பால் கொள்முதல் விலை உயர்வுக்கு திருத்துறைப்பூண்டி இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ மாரிமுத்து வரவேற்பு</p><p>முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி - அமைச்சர் ஷாஜகான்</p><p>முதலமைச்சர் விஜயால் நிறைய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் - அமைச்சர் ராஜ்மோகன்</p> <p>ஏற்கனவே எம்எல்ஏ ஒருவருக்கு அனைத்துப்படிகளும் சேர்த்து ரூ.1.05 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது.</p><p>ஏற்கனவே சட்டமன்ற அமர்வுகள் நடக்கும்போது தினப்படியாக ரூ.500 வழங்கப்பட்டு வருகிறது.</p><p>வாகனத்திற்காக மாதந்தோறும் ரூ.75,000 வாகனப்படியாக வழங்கப்படும்.</p><p>ஒரு உதவியாளரை நியமித்து கொள்ள மாதந்தோறும் ரூ.25,000 வழங்கப்படும் - முதலமைச்சர் விஜய்</p><p>ரூ.351 கோடி மதிப்பீட்டில் செவிலியர் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கப்படும்.</p><p>5 மருத்துவமனைகளில் மண்டல புற்றுநோய் மையங்கள் தொடங்கப்படும் - முதலமைச்சர் விஜய்</p> <p>அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் வழங்கப்படும் - முதலமைச்சர் விஜய்</p><h2>முதலமைச்சர் விஜய் உரை</h2><p>முதலமைச்சர் மருத்துவ காப்பீடு தொகை ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும்.</p><p>7 அரசு மருத்துவ கல்லூரிகளில் திருநங்கைகளுக்கான அறுவை சிகிச்சை வழங்கப்படும்.</p><p>7 புதிய செவிலியர் கல்லூரிகள் அமைக்கப்படும்.</p><p>முதலமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு திட்டம் மேம்படுத்தப்படும்.</p><p>பெரம்பூரில் ரூ.300 கோடியில் 400 படுக்கை கொண்ட பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் - முதலமைச்சர் விஜய்</p><p>ஆவின் பால் கொள்முதல் விலையை ரூ.38 -ல் இருந்து ரூ.41ஆக உயர்த்தி அறிவிப்பு -முதலமைச்சர் விஜய் </p><p>ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.41 ஆக உயர்த்தி முதலமைச்சர் விஜய் அறிவிப்பு.</p><p>பால் உற்பத்தியாளர்கள் நலனை கருத்தில் கொண்டு பால் கொள்முதல் விலை உயர்த்துவது அரசின் கடமை.</p><p>கடந்த காலத்தில் ஆவின் பாலுக்கான கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை - முதலமைச்சர் விஜய்</p><p>சட்டசபையில் விதி 110 கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு வெளியிடுகிறார்.</p><p>ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு</p><p>சட்டசபையில் இன்று நீர்வளம், ஊரக வளர்ச்சி மற்றும் சுற்றுலாத்துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>பழனி நில மோசடி வழக்கு: கைதான சார்பதிவாளர், பத்திர எழுத்தருக்கு ஒரு நாள் போலீஸ் காவல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-land-scam-case-arrested-sub-registrar-one-day-police-custody-for-document-writer</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-land-scam-case-arrested-sub-registrar-one-day-police-custody-for-document-writer#comments</comments><guid isPermaLink="false">7a996519-cb08-4083-b319-e34b4c386f16</guid><pubDate>Wed, 19 Aug 2026 11:45:47 +0000</pubDate><atom:updated>2026-08-19T11:45:47.282Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>போலீஸ் காவல்,சார்பதிவாளர்,Sub Registrar,பழனி நில மோசடி,Pazhani land scam,பத்திர எழுத்தர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/ex289hr6/pazhani.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pazhani land scam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/ex289hr6/pazhani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் தண்டபாணி சுவாமிகள் மடத்தின் ரூ.100 கோடி மதிப்பிலான 1.35 ஏக்கர் நிலம் முறை கேடாக ரூ.2 கோடிக்கு தனியாருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது.</p><p>இந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் (48), விழுப்புரத்தைச் சேர்ந்த அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ் (56), நிலம் வாங்கிய திருப்பூர் மாவட்டம் பாப்பன்குளத்தைச் சேர்ந்த வெள்ளை த்துரை (60), பழனி டி.கே.என்.புதூரைச் சேர்ந்த சேதுபதி (67), வக்கீல் அன்வர்தீன் (65), ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த பத்திர எழுத்தர் ஜெயபிரகாஷ் (38) ஆகியோரை கைது செய்தனர்.</p><h2>ஒரு நாள் காவல்</h2><p>மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த பழனியைச் சேர்ந்த வக்கீல் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். தலை மறைவான சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கொடைக்கானலில் கைது செய்து மருத்துவ பரிசோதனைக்காக திண்டுக்கல் கொண்டு வந்தபோது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது.</p><p>திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் தொடர் சிகிச்சையில் இருந்த ஜஸ்டின் மணிகண்டன் மதுரை அரசு மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டார். </p><p>அங்கு அவருக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்ப டும் ஜஸ்டின் மணிகண்டனிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்னும் முழுமையான விசாரணை நடத்தவில்லை.</p><p>அதே போல் பத்திர எழுத்தர் ஜெயபிரகாசிடமும் விசாரணை நடத்த முடிய வில்லை. இதன் காரணமாக அவர்கள் 2 பேரயும் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என திண்டுக்கல் முதலாவது மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் மனு அளித்தனர். 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்ட நிலையில் ஒரு நாள் மட்டும் அனுமதி வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது. </p><p>இன்று மாலை 5.30 மணிக்குள் விசாரணையை முடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார். விசாரணைக்காக ஜஸ்டின் மணிகண்டன், ஜெயபிரகாஷ் ஆகியோர் இன்று திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜரான நிலையில் அவர்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.</p><h2>ஜாமீன் மனுக்கள்</h2><p>இதனிடையே ஜஸ்டின் மணிகண்டன் தனது உடல் நலன் மற்றும் மருத்துவ சிகிச்சை ஆகியவற்றை காரணம் காட்டி தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என திண்டுக்கல் முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதே போல் பத்திர எழுத்தர் ஜெபிரகாஷ் சார்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.</p><p>நீதிபதி பத்மநாபன் முன்பு விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் சிவச்சந்திரன், வழக்கின் முதன்மை குற்றங்கள், கூட்டுச்சதி, நீதிமன்ற உத்தரவு மீறல் ஆகியவற்றை சுட்டிக் காட்டி ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரி வித்தனர். இதனையடுத்து அவர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.</p><p>மதுரை சிறையில் அடைக்கப்ப ட்டுள்ள முருகதாஸ் சார்பிலும் ஜாமீன் கேட்டு திண்டுக்கல் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் அவருக்கும் ஜாமீன் வழங்க அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் புதிய கார்ப்பரேட் அலுவலகத்தைத் திறந்து வைத்தார் நடிகர் STR!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-str-inaugurates-new-corporate-office-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-str-inaugurates-new-corporate-office-in-chennai#comments</comments><guid isPermaLink="false">1b3ce620-c7df-4472-be87-fc89f554ecd2</guid><pubDate>Wed, 19 Aug 2026 11:45:35 +0000</pubDate><atom:updated>2026-08-19T11:45:35.130Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Silambarasan,சிலம்பரசன்,STR,NewOffice Inauguration,புதியஅலுவலகம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/8saz822k/Silambarasan" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Silambarasan ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/8saz822k/Silambarasan?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D">சிலம்பரசன்</a>,  சென்னையில் இன்று நடைபெற்ற ஒரு ஊடக நிறுவனத்தின் புதிய கார்ப்பரேட் அலுவலகத் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.</p><h2>அலுவலகத் திறப்பு விழா</h2> <p>திரைத்துறை மற்றும் ஊடகத்துறையினர் முன்னிலையில் கோலாகலமாக அரங்கேறிய இந்த விழாவில், நடிகர் சிம்புவின் வருகை அங்கிருந்தவர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.</p><p>விழாவிற்கு வருகை தந்த நடிகர் சிம்புவை, ஊடக நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மலர்க்கொத்து கொடுத்து நெகிழ்ச்சியோடு வரவேற்றனர். அதன் பின்னர், பாரம்பரிய முறைப்படி ரிப்பன் வெட்டி அலுவலகத்தின் புதிய அத்தியாயத்தை சிம்பு தொடங்கி வைத்தார்.</p><p>புதிய அலுவலகத்தின் வளாகத்தை பார்வையிட்ட நடிகர் STR, அங்குள்ள நினைவுப் பலகையில் தனது வாழ்த்துகளைப் பதிவு செய்து பிரத்யேகமாகக் கையெழுத்திட்டார். </p><p>இந்த அலுவலகத் திறப்பு விழாவில் நடிகர் சிலம்பரசன் கலந்துகொண்ட பிரத்யேகப் புகைப்படங்களும், வீடியோக்களும் தற்போது இணையத்திலும், சமூக வலைத்தள பக்கங்களிலும் வெளியாகி ரசிகர்களிடையே காட்டுத்தீயாய் பரவி வருகின்றது</p><h2>ரசிகர்கள் வாழ்த்து:</h2><p>அடுத்தடுத்த திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் சிம்பு, பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>200 ஆண்டு கால கலைப்பயணம்: 2026 உலக புகைப்பட தினத்தின் வரலாற்று பின்னணி ஓர் பார்வை!</title><link>https://www.maalaimalar.com/news/world/200-year-art-journey-a-look-at-the-history-behind-world-photography-day-2026</link><comments>https://www.maalaimalar.com/news/world/200-year-art-journey-a-look-at-the-history-behind-world-photography-day-2026#comments</comments><guid isPermaLink="false">7acda538-9386-4607-8015-a3fc7e867482</guid><pubDate>Wed, 19 Aug 2026 11:25:22 +0000</pubDate><atom:updated>2026-08-19T11:25:22.244Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>WorldPhotographyDay,PhotographyDay2026,PhotographyHistory,Daguerreotype,உலக புகைப்பட தினம்,புகைப்படக் கலைஞர்கள்,ஜோசப் நிசிஃபோர் நியெப்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/ea75vx0g/phortograph.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ World PhotographyDay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/ea75vx0g/phortograph.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலகெங்கிலும் உள்ள புகைப்படக் கலைஞர்கள் மற்றும் கலை ஆர்வலர்களால் இன்று (ஆகஸ்ட் 19) உலக புகைப்பட தினம் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஒரு காலக்கட்டத்தில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே சாத்தியமாக இருந்த புகைப்படத் கலை, இன்று அனைவரின் கைகளிலும் உள்ள ஸ்மார்ட்போன்கள் மூலம் அன்றாட வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கமாக மாறியுள்ளது. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டின் உலக புகைப்பட தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க பின்னணியோடும் புதிய கருப்பொருளோடும் உலகளாவிய கவனத்தைப் பெற்றுள்ளது.</p><p>இந்த ஆண்டிற்கான சர்வதேச புகைப்பட தினத்தின் அதிகாரப்பூர்வ கருப்பொருளாக "HOME" தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இங்கு வீடு என்பது வெறும் நான்கு சுவர்களால் சூழப்பட்ட கட்டிடத்தை மட்டும் குறிக்கவில்லை. மனிதர்களின் உணர்வுகள், நினைவுகள், கலாச்சார வேர்கள் மற்றும் அவர்களுக்கு அமைதியையும் பாதுகாப்பையும் தரும் சூழலை மையமாகக் கொண்டே இந்தத் தலைப்பு வரையறுக்கப்பட்டுள்ளது. </p><h2>உலக புகை<strong>ப்பட அமைப்</strong>பு அழைப்பு </h2><p>ஒரு புகைப்படக் கலைஞர் தனது அன்றாட வாழ்க்கைச் சூழல், குடும்ப உறுப்பினர்களின் இயல்பான தருணங்கள், சொந்த ஊரின் நினைவுகள் அல்லது தனக்கு விருப்பமான மனிதர்களையும் இடங்களையும் எவ்வாறு பார்க்கிறார் என்பதை உணர்வுபூர்வமாகப் படம்பிடிக்க உலக புகைப்பட அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. தொழில்முறைத் தொழில்நுட்ப நேர்த்தியை விட, படங்களின் வழியே வெளிப்படும் மனித உணர்வுகளுக்கே இந்த ஆண்டு முதன்மை இடம் அளிக்கப்படுகிறது. </p><p>இதனுடன் இணைந்து, பிரான்ஸ் நாட்டின் பண்பாட்டு அமைச்சகம் புகைப்படக் கலையின் 200 ஆம் ஆண்டு நிறைவு விழாவை 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளில் கொண்டாடுவதால் இந்த ஆண்டின் நிகழ்வு கூடுதல் வரலாற்று முக்கியத்துவத்தைப் பெறுகிறது.</p><h2>வர<strong>லாற்று நிகழ்வு</strong> </h2><p>ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி உலக புகைப்பட தினமாகக் கொண்டாடப்படுவதற்குப் பின்னால் ஒரு முக்கிய வரலாற்று நிகழ்வு உள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜோசப் நிசிஃபோர் நியெப்ஸ் என்பவரால் உலகின் முதல் நிலையான புகைப்படம் உருவாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து லூயிஸ் டேகியூர் என்பவர் "டேகியூரோடைப்" என்ற புதிய மற்றும் தெளிவான புகைப்பட உருவாக்கும் முறையைக் கண்டறிந்தார்.</p><p>பிரான்ஸ் நாட்டின் அறிவியல் அகாடமி இந்தத் தொழில்நுட்பத்தின் காப்புரிமையை வாங்கி, 1839 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 அன்று "உலகிற்கு பிரான்ஸ் வழங்கும் இலவசக் கொடை" என்று எந்தக் காப்புரிமைப் புகார்களும் இன்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவைக் கவுரவிக்கும் விதமாகவே ஆகஸ்ட் 19 புகைப்பட தினமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.</p><p>நவீன டிஜிட்டல் காலத்தில் புகைப்படக் கலையின் எல்லைகள் வெகுவாக விரிவடைந்துள்ளன. வரலாற்றை ஆவணப்படுத்துவதிலும், உலகளாவிய சமூக மாற்றங்களை வெளிக்கொணர்வதிலும், மனிதர்களின் அரிய தருணங்களை எதிர்காலத்திற்காகச் சேமித்து வைப்பதிலும் புகைப்படம் ஒரு சக்திவாய்ந்த ஊடகமாகத் திகழ்கிறது. </p><p>ஸ்மார்ட்போன்களின் வருகையால் இன்று உலகெங்கிலும் நாள்தோறும் கோடிக்கணக்கான புகைப்படங்கள் எடுக்கப்பட்டுப் பகிரப்பட்டு வருகின்றன. 2026 ஆம் ஆண்டின் "இல்லம்" என்ற கருப்பொருள், வேகமான இந்த நவீன உலகில் நம்மை மீண்டும் நமது வேர்களுடனும் அன்பான மனிதர்களுடனும் பிணைக்கும் ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>உலகில் பெரிய குடும்பங்கள் தேவை என்று நான் கருதவில்லை: கார்த்தி சிதம்பரம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/congress-mp-karti-chidambaram-says-i-do-not-believe-that-we-need-large-families-in-a-technology-driven-world</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/congress-mp-karti-chidambaram-says-i-do-not-believe-that-we-need-large-families-in-a-technology-driven-world#comments</comments><guid isPermaLink="false">315b3b38-1c0e-4a7a-bd2c-77182d10af3f</guid><pubDate>Wed, 19 Aug 2026 11:24:27 +0000</pubDate><atom:updated>2026-08-19T11:24:27.297Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,கார்த்தி சிதம்பரம்,karthi chidambaram</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/r0827uty/KathiChidambaram.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ப சிதம்பரம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/r0827uty/KathiChidambaram.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் அரசுப் பெண் ஊழியர்களுக்கு 3-வது குழந்தைக்கும் 365 நாட்கள் (ஓராண்டு) ஊதியத்துடன் கூடிய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sarathkumar-speech-in-tn-assembly">மகப்பேறு விடுப்பு</a> வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.</p><p>அதேபோல் இன்று தமிழக முதலமைச்சர் விஜய், அனைத்து எம்.எல்.ஏ.-க்களும் தொகுதிகளில் அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் வகையில் கார் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.</p><h2>இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி எம்.பி.யான கார்த்தி சிதம்பரம் கூறியதாவது:-</h2><p>தாய்மார்களுக்கு மகப்பேறு விடுப்பு அளிக்கும் தமிழக அரசின் முடிவை நான் வரவேற்கிறேன். அதேவேளையில், தந்தையர்களுக்கும் தந்தைமை விடுப்பு (paternity leave) வழங்கப்பட வேண்டும். குழந்தைகளை வளர்க்கும் சுமை பெண்களின் மீது மட்டுமே இருக்கக்கூடாது. ஆண்களும் அந்த பொறுப்பை பகிர்ந்துகொள்ள வேண்டும்.</p><p>ஆனால், குடும்பத்தின் அளவை அதிகரிக்க முனையும் அல்லது மூன்றாவது குழந்தையை பெற ஊக்குவிக்கும் எந்தவொரு சலுகையையோ அல்லது அரசுத் திட்டத்தையோ நான் முழுமையாக எதிர்க்கிறேன். நமக்கு ஆரோக்கியமான மற்றும் சிறந்த பயிற்சி பெற்ற மக்கள் தொகைதான் தேவை.</p><p>வெறும் எண்ணிக்கையை மட்டும் அடிப்படையாகக் கொண்ட மக்கள் தொகை நமக்கு தேவையில்லை. தொழில்நுட்பம் சார்ந்த இந்த உலகில் பெரிய குடும்பங்கள் தேவை என்று நான் கருதவில்லை. சிறிய, ஆரோக்கியமான மற்றும் அதிகக் கல்வி அறிவு பெற்ற மக்கள் தொகையே போதுமானது</p><p>இவ்வாறு கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.</p><p>தமிழக அரசு அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அரசு வாகனங்களை வழங்குவது குறித்த கேள்விக்கு, "எம்.பி.க்கள் கார்கள் கேட்கவில்லை என்பதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு கூடுதல் அழுத்தம் தரவேண்டும்- முதல்வர் விஜய்க்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-asks-cm-vijay-to-step-up-pressure-on-centre-over-cauvery-dispute</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-asks-cm-vijay-to-step-up-pressure-on-centre-over-cauvery-dispute#comments</comments><guid isPermaLink="false">ef32720e-a269-4379-b2a3-77c98436005e</guid><pubDate>Wed, 19 Aug 2026 10:56:11 +0000</pubDate><atom:updated>2026-08-19T10:56:11.759Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாமா,அன்புமணி ராமதாஸ்,Anbumaniramadoss,CMVIJAY,CauveryWaterIssue,TamilNaduPolitics,MekedatuDam,காவிரிஉரிமை,முதல்வர்விஜய்,மேகதாதுஅணை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/2k618max/anbumani.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anbumani Ramadoss]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/2k618max/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரி நதிநீர் பிரச்சனை தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சனையாக உருவெடுத்துள்ள நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக அரசுக்கும் முதல்வர் விஜய்க்கும் பல்வேறு முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். காவிரி விவகாரத்தில் மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாக்க உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><h2>அனைத்துக் கட்<strong>சிக் கூட்டத்தை கூ</strong>ட்ட வேண்டும்</h2><p>காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்குத் தேவையான அழுத்தத்தைக் கொடுக்கத் <a href="https://www.maalaimalar.com/news/national/kummidippundi-koodur-between-new-rail-route-union-cabinet-approval">தமிழக முதல்வர் விஜய்</a> உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் விஜய் கூடுதல் அழுத்தம் தர வேண்டும் எனவும் கூறியுள்ளார்.</p><h2>அதிகாரி<strong>களின் பேச்சை மட்டும் கேட்</strong>கக்கூடாது</h2><p>புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள இந்த அரசுக்குக் காவிரி விவகாரம் தொடர்பான நீண்டகால அரசியல் மற்றும் சட்டப் போராட்டங்களில் போதிய அனுபவம் இல்லை என்று சுட்டிக்காட்டிய அன்புமணி, வெறும் அரசு அதிகாரிகளின் ஆலோசனைகளை மட்டுமே நம்பி முதல்வர் முடிவெடுக்கக்கூடாது எனக் குறிப்பிட்டார். </p><p>அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் விவசாயப் பிரதிநிதிகளின் கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் திட்டமிட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.</p><h2>மாணவர் போரா<strong>ட்டங்கள்</strong></h2><p>மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடக் கூடாது எனத் தடை விதிப்பதற்கு யாருக்கும் எந்தவித அதிகாரமும் இல்லை என்று தெரிவித்த அவர், நாட்டின் மற்றும் மாநிலத்தின் உரிமைசார்ந்த கோரிக்கைகளுக்காக இளைஞர்களும் மாணவர்களும் குரல் கொடுப்பதைக் தடுக்க முடியாது என்றார். மேலும், சொந்தமாக கார் இல்லாத மக்கள் பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு அரசு உரிய வசதிகளையும் சலுகைகளையும் வழங்கிச் செயல்பட வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.</p>]]></content:encoded></item><item><title>கும்மிடிப்பூண்டி - கூடூர் இடையே புதிய ரெயில் வழித்தடம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/kummidippundi-koodur-between-new-rail-route-union-cabinet-approval</link><comments>https://www.maalaimalar.com/news/national/kummidippundi-koodur-between-new-rail-route-union-cabinet-approval#comments</comments><guid isPermaLink="false">de831405-60d0-4e0b-8393-8802aac1dc44</guid><pubDate>Wed, 19 Aug 2026 10:48:21 +0000</pubDate><atom:updated>2026-08-19T10:48:21.448Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Union Ministry,மத்திய அமைச்சரவை ஒப்புதல்,Gummudipoondi,புதிய ரெயில் பாதை,கும்மிடிப்பூண்டி,New train track</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/gxc5ikuo/Ashwini-vaishnaw.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Union Ministry Aswini Vaishnaw]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/gxc5ikuo/Ashwini-vaishnaw.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களில் 410 கி.மீ தூரத்திற்கு புதிய ரெயில் பாதைகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.</p><p>அதன்படி, ஹவுரா- சென்னை பல்வழித்தட திட்டத்தின்கீழ் கும்மிடிப்பூண்டி முதல் கூடூர் வரை மூன்றாவது மற்றும் 4வது ரெயில்வே வழித்தடங்கள் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.</p><p>கும்மிடிப்பூண்டி- கூடூர் தடத்தில் ரெயில் பாதை அமைப்பதன் மூலம் தென் மாநிலங்கள், வட மாநிலங்களுக்கு இடையே பயணம் விரைவாகும்.</p><p>ரூ.2,229 கோடியில் புதிய வழித்தடங்கள் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.</p><p>ரூ.13,041 கோடி மதிப்பில் 5 ரெயில்வே வழித்தட பணிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>10 ஆண்டுகளை நிறைவு செய்த தர்மதுரை... வெற்றியடைந்ததா? இயக்குநர் சீனு ராமசாமியின் பதிவு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/dharmadurai-completes-10-years-did-it-leave-a-lasting-impression-on-the-audience-director-seenu-ramasamys-post</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/dharmadurai-completes-10-years-did-it-leave-a-lasting-impression-on-the-audience-director-seenu-ramasamys-post#comments</comments><guid isPermaLink="false">013ef37f-4cfd-48f7-8d9d-2880cae8996b</guid><pubDate>Wed, 19 Aug 2026 10:47:15 +0000</pubDate><atom:updated>2026-08-19T10:47:15.489Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய் சேதுபதி,Seenu Ramasamy,சீனு ராமசாமி,Vijay sethupathi,Dharmadurai,தர்மதுரை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/p72s8lqq/New-Project-2026-08-19T161655.345.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 10 ஆண்டுகளை நிறைவு செய்த தர்மதுரை... மக்கள் மனதில் நின்றதா? இயக்குநர் சீனு ராமசாயின் பதிவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/p72s8lqq/New-Project-2026-08-19T161655.345.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, எம்.எஸ்.பாஸ்கர், ராதிகா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, தமன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தப் படம் தர்மதுரை. ஆர்.கே.சுரேஷ் தயாரித்திருந்த இப்படத்திற்கு யுவன் இசையமைத்திருந்தார். </p><p>கடந்த 2016ம் ஆண்டு ஆக.19ம் தேதி வெளியான இப்படம் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போதுவரை இப்படம் ரசிகர்கள் பேசப்பட்டும், இப்படம் தொடர்பான கருத்துகள் பகிரப்பட்டும் வருகின்றன. </p><p>இந்நிலையில் இன்றோடு படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவு பெறுவதை ஒட்டி இயக்குநர் சீனு ராமசாமி ஒரு சமூக வலைதளப் பதிவை வெளியிட்டுள்ளார். அப்பதிவில்.,</p><p>“ஒரு படம் மக்கள் மனதில் எவ்வளவு நாட்கள் நிலைத்திருக்கிறது என்பதே அதன் வெற்றி அல்லது தோல்வியை தீர்மானிக்கிறது என்பது என்னுடைய நிலைப்பாடு. உங்களது அளப்பரிய அன்பினால், தர்மதுரை படம் இன்று தனது 10-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது!</p><p>இப்படத்தை இயக்கும் வாய்ப்பை எனக்கு வழங்கிய ஆர்.கே.சுரேஷ் மற்றும் அவரது அண்ணன் வெங்கட் ஆகியோருக்கும், தங்கள் கலைத்திறனால் இப்படத்திற்கு உயிர் கொடுத்த ஒவ்வொரு திறமையான கலைஞர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தென்மண்டல கவுன்சிலின் துணைத் தலைவராக முதலமைச்சர் விஜய் நியமனம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-appointed-as-vice-chairman-of-the-southern-zonal-council</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-appointed-as-vice-chairman-of-the-southern-zonal-council#comments</comments><guid isPermaLink="false">a31d1182-c123-45ae-a4d8-ab360a498018</guid><pubDate>Wed, 19 Aug 2026 10:27:29 +0000</pubDate><atom:updated>2026-08-19T10:27:29.403Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>joseph vijay,முதலமைச்சர் விஜய்,SOUTHERN ZONAL COUNCIL,தென்மண்டல கவுன்சில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/1fx32uti/New-Project-2026-08-19T155708.370.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தென்மண்டல கவுன்சிலின் துணைத் தலைவராக முதலமைச்சர் விஜய் நியமனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/1fx32uti/New-Project-2026-08-19T155708.370.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தென்மண்டல கவுன்சிலின் துணைத் தலைவராக முதலமைச்சர் விஜய் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கவுன்சிலின் செயலாளராக தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சாய் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கவுன்சிலின் தலைவராக உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளார். </p><p>நாளை தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாடு நடைபெற உள்ளநிலையில், இந்த நியமனம் வந்துள்ளது. </p><h2>தென்மண்டல கவுன்சில் என்றால் என்ன?</h2><p>தென் மண்டல கவுன்சில் என்பது தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களை இணைக்கும் அமைப்பாகும். </p><p>மத்திய அரசால் அவ்வப்போது கூட்டப்படும் தெற்கு மண்டல குழு, மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பிற்கு தேவைப்படும் பிரச்னைகள் குறித்து விவாதிப்பதற்காக, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர்களை ஒன்றிணைக்கிறது.</p><p>முன்னதாக தென் மண்டல கவுன்சிலின் தமிழ்நாடு உறுப்பினர்களாக அமைச்சர்கள் நிர்மல்குமார், ராஜ்மோகன் நியமனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>போதையில் கார் ஓட்டிய விவகாரம்: டேவிட் வார்னருக்கு அபராதம் விதித்த சிட்னி கோர்ட்</title><link>https://www.maalaimalar.com/sports/former-australia-batter-david-warner-convicted-fined-for-drink-driving</link><comments>https://www.maalaimalar.com/sports/former-australia-batter-david-warner-convicted-fined-for-drink-driving#comments</comments><guid isPermaLink="false">d6de16a2-9fc9-42df-bd2b-2e2af9ceb424</guid><pubDate>Wed, 19 Aug 2026 10:06:54 +0000</pubDate><atom:updated>2026-08-19T10:06:54.566Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>David Warner,டேவிட் வார்னர்,sydney court,சிட்னி கோர்ட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/f7zo5l10/warner.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ warner]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/f7zo5l10/warner.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மது போதையில் காரை ஓட்டிச் சென்ற விவகாரத்தில் டேவிட் வார்னருக்கு அபராதம் விதித்து கோர்ட் உத்தரவிட்டது.</p><p>சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற டேவிட் வார்னர் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் கராச்சி கிங்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகளுக்கு கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.</p><p>கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் பண்டிகை அன்று சிட்னியில் மது குடித்துவிட்டு டேவிட் வார்னர் காரை ஓட்டிச்சென்றார். போக்குவரத்து போலீசார் சோதனையில் வார்னர், நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகம் மது அருந்தியது உறுதியானது.</p><h2>ஒப்புக்கொண்ட வார்னர் </h2><p>இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, டேவிட் வார்னர் மது அருந்தியதை ஒப்புக்கொண்டார் என அவரது வழக்கறிஞர் குறிப்பிட்டார். தனது செயல் முட்டாள்தனமானது. மது அருந்திவிட்டு வாடகை காரில் செல்லாமல் தானே வாகனத்தை ஓட்டிச்சென்றது தவறு எனவும் வார்னர் தெரிவித்ததாகக் கூறப்பட்டுள்ளது.</p><p>இதையடுத்து, ஆகஸ்ட் 18-ம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.</p><h2>அபராதம் விதித்த கோர்ட்</h2><p>இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது, டேவிட் வார்னருக்கு ரூ.1.02 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அவரது காரில் பிரீத்லைசர் அல்லது இன்டர் லாக் எனும் கருவியைப் பொருத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது.</p><p>முன்னதாக, டேவிட் வார்னர் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் கராச்சி கிங்ஸ் அணி கேப்டனாக கடந்த ஏப்ரலில் விளையாடினார். போட்டிகளுக்கான இடைவெளியில் அவர் சிட்னி சென்றார். அங்கு மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிச்சென்றார். சிட்னியின் கிழக்குப் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, வார்னரை வழிமறித்து சோதனை செய்தனர். அவர் அனுமதிக்கப்பட்ட அளவைவிட இரு மடங்கு அதிகமாக மது அருந்தியது தெரியவந்ததால் அவர் கைது செய்யப்பட்டார்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்கள் போராட்டத்திற்கு தடை: இடதுசாரிகள் இன்னமும் கண்டும் காணாத நிலையிலேயே இருக்கப் போகிறார்களா? - திமுக கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-student-protests-will-the-left-continue-to-turn-a-blind-eye-dmk-asks</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-student-protests-will-the-left-continue-to-turn-a-blind-eye-dmk-asks#comments</comments><guid isPermaLink="false">082c2b7e-3701-43df-a7c2-fa0933eb57c8</guid><pubDate>Wed, 19 Aug 2026 09:54:37 +0000</pubDate><atom:updated>2026-08-19T09:54:37.600Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,இடதுசாரிகள்,leftists,தவெக அரசு,tvk government</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/r0sbkzgh/New-Project-2026-08-19T151547.066.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணவர்கள் போராட்டத்திற்கு தடை: இடதுசாரிகள் இன்னமும் கண்டும் காணாத நிலையிலேயே இருக்கப் போகிறார்களா? - திமுக கேள்வி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/r0sbkzgh/New-Project-2026-08-19T151547.066.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்லில் இடதுசாரிகளின் விவரங்களை திரட்டக் கூறியது, மாணவர்களை போராட்டங்களில் பங்கேற்படை தடுக்கக் கூறியது உள்ளிட்ட உத்தரவுகள் முதலமைச்சர் விஜய்க்கு தெரியாமல் வெளியிடப்பட்டதா என்றும், இத்தகைய உத்தரவுகளை கண்டும் காணாமல் இடதுசாரி கட்சிகள் இருக்கப் போகிறதா என திமுக கேள்வி எழுப்பியுள்ளது.</p><p>இதுதொடர்பாக திமுக தலைமையின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;</p><p>நேற்றைய தினம் அதிகார ஆணவத்திமிரோடு, “திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களிலும் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் கட்சியில் உள்ள நபர்களின் பெயர், முகவரி, ஆகியவற்றை வருவாய் ஆய்வாளர்கள் சேகரித்து வட்டாட்சியரிடம் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.</p><p>இன்றைய தினம் மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் உரிய ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ள சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.</p><p>இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வெளிப்பட்ட நிலையில் சுற்றறிக்கைகளை திரும்பப் பெறுவதாக த.வெ.க அரசு பின்வாங்கியுள்ளது.</p><p>அப்படியெனில், சுற்றறிக்கைகளை வெளியிடும் அதிகாரத்தை வழங்கியவர் யார்? முதலமைச்சர் விஜய்க்கே தெரியாமல் இவையெல்லாம் நடக்கிறதா? அல்லது முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?</p><p>ஜனநாயக உரிமைகளை பறிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு இணையாக தமிழ்நாட்டை ஆளும் த.வெ.க அரசும் இத்தகைய மாணவர் விரோத துக்ளக் தர்பார் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வதை திராவிட முன்னேற்றக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.</p><p>த.வெ.க அரசை ஆதரிக்கும் இடதுசாரிகள் இன்னமும் கண்டும் காணாத நிலையிலேயே இருக்கப் போகிறார்களா?” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>ஏ.ஐ-யில் பகிரப்படும் ரகசிய விவரங்கள் திருடப்படும் அபாயம் - பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/police-warn-public-risk-of-confidential-information-shared-on-ai-being-stolen</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/police-warn-public-risk-of-confidential-information-shared-on-ai-being-stolen#comments</comments><guid isPermaLink="false">e9e51902-e23f-41f1-9c89-00b3c4a4f33e</guid><pubDate>Wed, 19 Aug 2026 09:34:31 +0000</pubDate><atom:updated>2026-08-19T09:34:31.356Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Artificial Intelligence,போலீசார் எச்சரிக்கை,police warning,AI,செயற்கை நுண்ணறிவு,ஏஐ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/fiv0ez4f/ai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ AI]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/fiv0ez4f/ai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>செயற்கை நுண்ணறிவு</h2><p>உலகெங்கும் தொழில்நுட்ப வளர்ச்சி அசுரவேகத்தில் உருவெடுத்து வரும் சூழலில், 'செயற்கை நுண்ணறிவு' (ஏ.ஐ)மக்களின் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாக மாறியுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் பெருநிறுவன ஊழியர்கள் வரை அனைவரும் தங்களின் சந்தேகங்களைத் தீர்க்கவும், வேலைகளை எளிதாக்கவும் ஏ.ஐ. செயலிகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.</p> <p>​தொழில்நுட்பம் தரும் அளப்பரிய நன்மைகளுக்கு இடையே, சரியான விழிப்புணர்வு இல்லாததால் அதில் ஒளிந்துள்ள ஆபத்துகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதை உணர்ந்த திருப்பூர் மாவட்ட காவல்துறை, பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஏ.ஐ.-யை பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் பயன்படுத்துவதற்கான விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.</p> <p> அதன்படி சிக்கலான தரவுகளை நொடிகளில் பகுப்பாய்வு செய்வது, மொழியாக்கம், புதிய யோசனைகளை உருவாக்குவது, கல்வி கற்றலை எளிதாக்குவது என மனித உழைப்பையும் நேரத்தையும் மிச்சப்படுத்துவதில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%8F%E0%AE%90">ஏ.ஐ. </a>முன்னணியில் உள்ளது.</p> <p>இணையத்தில் நாம் பகிரும் தகவல்கள் ஏ.ஐ.-ன் தரவுத்தளத்தில் சேமிக்கப்படுகின்றன. சைபர் குற்றவாளிகள் இந்தத் விபரங்களை திருடி, 'டீப்பேக்' உருவகப்படுத்துதல், ஆள்மாறாட்டம் மற்றும் ஆன்லைன் நிதி மோசடிகளுக்குப் பயன்படுத்தும் பேராபத்து நிலவுகிறது. இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட போலீசார் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் அதன்படி  கடவுச்சொல், வங்கிக் கணக்கு எண்கள், ஆதார் மற்றும் பேன் கார்டு போன்ற மிக முக்கியமான தனிப்பட்ட விவரங்களை எக்காரணம் கொண்டும் ஏ.ஐ. தளங்களில் உள்ளீடு செய்யக் கூடாது.</p> <p>அதேபோல்  உடல்நலக் குறைபாடு, மருந்து மாத்திரைகள் மற்றும் மனநலச் சிகிச்சை சார்ந்த சந்தேகங்களுக்கு ஏ.ஐ. வழங்கும் பதில்கள் பொதுவான தகவல்கள் மட்டுமே. தகுதியான மருத்துவ நிபுணரின் நேரடி ஆலோசனைக்கு இது மாற்றாகாது.</p> <p>மேலும் சட்டத்திற்குப் புறம்பான அல்லது பிறரின் கண்ணியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் செயல்களைச் செய்ய ஏ.ஐ.-யின் உதவியை நாடக்கூடாது. திருமணம், வேலைவாய்ப்பு, நிதி மற்றும் குடும்பப் பிரச்னைகள் தொடர்பான முக்கியமான முடிவுகளை ஏ.ஐ. அளிக்கும் தகவல்களை மட்டுமே நம்பி எடுக்கக்கூடாது. அதை ஒரு துணைத் தகவலாகக் கொண்டு, நம்பகமான நபர்களுடன் கலந்தாலோசித்த பிறகே முடிவெடுக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.</p> <p> இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-</p><p>​"ஏ.ஐ. என்பது மனித மூளைக்கு மாற்றல்ல; அது ஒரு வழிகாட்டும் கருவி மட்டுமே. இன்று பல இணைய பயனர்கள் தங்களின் வங்கி ரகசியங்கள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை ஏ.ஐ. செயலிகளில் பதிவேற்றம் செய்வதால், அவை தவறான நபர்களின் கைகளுக்குச் சென்று நிதியிழப்புக்கும், மன உளைச்சலுக்கும் வழிவகுக்கிறது.மேலும், தவறான நோக்கங்களுக்காகவோ அல்லது பிறருக்குத் தீங்கு விளைவிக்கும் வகையிலோ <a href="https://www.maalaimalar.com/news/national/anthropic-launches-free-claude-sonnet-5-new-agentic-ai-model-now-available-globally-for-all-users">ஏ.ஐ. </a>தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால், சைபர் குற்றப் பிரிவுச் சட்டங்களின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். </p><p>தொழில்நுட்பத்தை நன்மைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். 'பாதுகாப்பாகப் பயன்படுத்துவோம் – பொறுப்புடன் வாழ்வோம்' என்பதை பொதுமக்கள் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். நாட்டின் முன்னேற்றத்திற்குத் தொழில்நுட்பம் அவசியம் என்றாலும், கவனமும் விழிப்புணர்வுமே நமது டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்யும் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>உலகளவில் வெளியாகிறது &apos;டாக்ஸிக்&apos; ஆங்கில டிரெய்லர்: ராக் ஸ்டார் யாஷ் ரசிகர்களுக்கு செம ட்ரீட்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/toxic-english-trailer-to-release-globally-rock-star-yash-treat-for-fans</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/toxic-english-trailer-to-release-globally-rock-star-yash-treat-for-fans#comments</comments><guid isPermaLink="false">6faddcee-2ce0-4bd8-b80d-148c832ba9e1</guid><pubDate>Wed, 19 Aug 2026 09:27:46 +0000</pubDate><atom:updated>2026-08-19T09:27:46.593Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Yash,Toxic,டாக்ஸிக்,Nayanthara,யாஷ்,GeetuMohandas,ToxicEnglishTrailer,கீது மோகன்தாஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/8rdnkbct/toxic.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Toxic EnglishTrailer]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/8rdnkbct/toxic.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கன்னடத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ராக் ஸ்டார் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் '<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/yash-toxic-release-date-film-finally-set-for-august-26-after-multiple-delays">டாக்ஸிக்: ஏ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்'</a>  திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ஆங்கில டிரெய்லர் இன்று வெளியாகிறது. உலகளவில் உள்ள பல்வேறு நேரங்களை கணக்கில் கொண்டு, இந்திய நேரப்படி இரவு 8:30 மணிக்கு இத்திரைப்படத்தின் டிரெய்லரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.</p><h2>கோவா பின்னணி<strong>யில் உருவாகும் கதை</strong>க்களம்</h2><p>இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம், சுதந்திரத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில் போர்த்துகீசிய ஆட்சின்கீழ் இருந்த கோவாவை பின்னணியாகக் கொண்டு செதுக்கப்பட்டுள்ளது. </p><p>இக்கதைக்களத்தில் 'ரயா' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள யாஷ், அதிகாரம், குற்றம் மற்றும் வன்முறை நிறைந்த சூழலில் சந்திக்கும் சவால்களே படத்தின் முக்கிய கதைக்கருவாகும். மேலும், இப்படத்தில் யாஷ் 'ரயா' மற்றும் 'டிக்கெட்' என இரண்டு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.</p><h2>பிரம்மா<strong>ண்டமான நட்சத்திர பட்டா</strong>ளம்</h2><p>இப்படத்தில் யாஷுடன் இணைந்து நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, தாரா சுதாரியா மற்றும் ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். கே.வி.என் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படம், கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்டு, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது. </p><p>வருகின்ற ஆகஸ்ட் 26 அன்று உலகமெங்கும் சுமார் 12,000 திரையரங்குகளில் பிரம்மாண்டமாக திரைக்கு வரவுள்ள நிலையில், இன்று வெளியாகும் ஆங்கில டிரெய்லர் படத்தின் கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்களத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>இடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்பதை தடைசெய்ய பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற்றது தவெக அரசு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-tvk-government-has-withdrawn-the-order-banning-students-from-participating-in-left-wing-protests</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-tvk-government-has-withdrawn-the-order-banning-students-from-participating-in-left-wing-protests#comments</comments><guid isPermaLink="false">49841eb0-9aa8-481a-bed0-12aa377e807a</guid><pubDate>Wed, 19 Aug 2026 09:25:24 +0000</pubDate><atom:updated>2026-08-19T09:25:24.796Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,protest,Students,மாணவர்கள்,Tamil Nadu govt,போராட்டங்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/l4zqdmyd/New-Project-2026-08-19T145456.651.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்பதை தடைசெய்ய பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற்றது தவெக அரசு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/l4zqdmyd/New-Project-2026-08-19T145456.651.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இடதுசாரி கட்சிகளின் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரிய உத்தரவை தமிழ்நாடு கல்லூரிக் கல்வி இயக்ககம் திரும்பப் பெற்றுள்ளது. </p><p>மாணவர்கள் சார்ந்தப் பிரச்னைகளிலும், சில பொதுப் பிரச்னைகளிலும் இடதுசாரிகளின் போராட்டங்களில் மாணவர்கள் கலந்துகொண்டு போராடுவது வழக்கம். </p><p>சமீபத்தில் கூட நீட் தேர்வு குளறுபடிகளுக்கு எதிரான கரப்பான்பூச்சி ஜனதா கட்சி டெல்லியில் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவாக இடதுசாரிகள் தரப்பில் சென்னையிலும் போராட்டம் நடத்தப்பட்டது. இதிலும் மாணவர்கள் அமைப்புகள் கலந்துகொண்டன. </p><p>இந்த நிலையில், இடதுசாரிக் கட்சிகள் மற்றும் கரப்பான்பூச்சி கட்சிப் போராட்டங்களில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசு கல்லூரி முதல்வர்களுக்கு கல்லூரிக் கல்வி இயக்ககம் சுற்றறிக்கை விடுத்தது. </p><p>இதற்கு சமூக வலைதளங்களில் பெரும் கண்டனங்கள் எழு, தற்போது இந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது.</p><p>தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைக்கு கரப்பான்பூச்சி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த உத்தரவு “அரசியலமைப்புக்கு விரோதமானது” என்றும், இது தவெக அரசின் “தர்க்கமற்ற” மற்றும் “பகுத்தறிவற்ற” முடிவு என்றும் விமர்சித்திருந்தார்.</p><p>முன்னதாக, நேற்று திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இடதுசாரிகள் உறுப்பினர்கள் குறித்த தகவல்களை திரட்ட வட்டாட்சியர் உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>டெண்டர் மோசடி வழக்கு - ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சர் கைது!</title><link>https://www.maalaimalar.com/news/national/tender-fraud-case-former-aam-aadmi-party-minister-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/national/tender-fraud-case-former-aam-aadmi-party-minister-arrested#comments</comments><guid isPermaLink="false">23132ed9-e758-49e1-a626-4821dd8b8ff0</guid><pubDate>Wed, 19 Aug 2026 09:01:31 +0000</pubDate><atom:updated>2026-08-19T09:01:31.029Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Aam Aadmi Party,ஆம் ஆத்மி கட்சி,satyendar jain,tender scam case,சத்யேந்திர ஜெயின்,டெல்லி குடிநீர் வாரியம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/cvuq7qfg/New-Project-2026-08-19T140852.117.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டெண்டர் மோசடி வழக்கு - ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சர் கைது!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/cvuq7qfg/New-Project-2026-08-19T140852.117.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி குடிநீர் வாரிய டெண்டர் ஊழல் வழக்கில், ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் உட்பட 6 பேரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்துள்ளனர்.</p><p>டெல்லி குடிநீர் வாரியத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியும், ஐஏஎஸ் அதிகாரியுமான உதித் பிரகாஷ் ராய், முன்னாள் ஒப்பந்த ஆலோசகர் அங்கித் ஸ்ரீவஸ்தவா, ஏஎன் எண்டர்பிரைசஸ் உரிமையாளர் நாகேந்திர யாதவ், யூரோடெக் என்விரான்மென்ட் பிரைவேட் லிமிடெட் உரிமையாளர் ராஜா குமார் குர்ரா மற்றும் ஸ்ரீஜன்ஹார் உரிமையாளர் பங்கஜ் வர்மா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>டெல்லியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை  மேம்படுத்துதல் மற்றும் தரம் உயர்த்துதல் தொடர்பான ஒப்பந்தங்களில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>இதில் ரூ.1.52 கோடி லஞ்சம் மற்றும் ஒரு தனியார் நிறுவனத்திற்குச் சாதகமாக டெண்டர் நிபந்தனைகளில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறையால் கடந்த 2024-ஆம் ஆண்டு மே மாதம் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. </p><p>போதிய ஆதாரங்கள் திரட்டப்பட்டதைத் தொடர்ந்து, அனைவரும் கைது செய்யப்பட்டு, டெல்லி ரவுஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.</p><p>சத்யேந்தர் ஜெயினின் கைதைத் தொடர்ந்து பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், இந்த நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று விமர்சித்துள்ளார். அரசியல் எதிரிகளைக் குறிவைக்க, பாஜக பொய்க் குற்றச்சாட்டுகளையும், கைது நடவடிக்கையையும் பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>“பாஜக ஆம் ஆத்மி கட்சிக்கு பயப்படுகிறது என்பதற்கு இன்னும் எத்தனை ஆதாரங்கள் தேவை? அந்த குடிநீர் வாரிய டெண்டர் விடப்பட்ட நேரத்தில், சத்யேந்திரா சிறையில் இருந்தார். சிறையிலிருந்து அவர் எப்படி பொறுப்பேற்றார்? </p><p>உண்மையான காரணம் என்னவென்றால், சத்யேந்திர ஜெயின் பஞ்சாபின் ஆம் ஆத்மி இணைப் பொறுப்பாளராக இருக்கிறார், மேலும் அங்கு தேர்தல்கள் வரவிருக்கின்றன.” என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஊடகப் பொறுப்பாளர் அனுராக் தண்டா எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>NEET UG Counseling 2026: முதல் கட்ட இட ஒதுக்கீடு முடிவுகள் வெளியீடு- MBBS, BDS ஒதுக்கீட்டுப் பட்டியலைப் பெறுவது எப்படி?</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-ug-counseling-2026-round-1-seat-allotment-results-how-to-check-mbbs-bds-list</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-ug-counseling-2026-round-1-seat-allotment-results-how-to-check-mbbs-bds-list#comments</comments><guid isPermaLink="false">aca361a9-d475-45dc-ab64-7f25e456fd3e</guid><pubDate>Wed, 19 Aug 2026 08:44:24 +0000</pubDate><atom:updated>2026-08-19T08:44:24.318Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இட ஒதுக்கீடு,நீட் 2026,NEETUG2026,MCCResult2026,MBBSAdmissions,MedicalCounselling,மருத்துவக் கலந்தாய்வு,நீட் யுஜி தரவரிசை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/9dbcfoxg/neeeee.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ NEET 2026 ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/9dbcfoxg/neeeee.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>NEET 2026 கலந்தாய்வின் முதல் சுற்று இட ஒதுக்கீட்டு முடிவு mcc.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். NEET UG ஒதுக்கீட்டு முடிவுக்கான நேரம், பதிவிறக்க இணைப்பு, அறிக்கை சமர்ப்பிக்கும் தேதிகள் மற்றும் இட ஒதுக்கீட்டு முடிவைச் சரிபார்க்க வேண்டிய வழிமுறைகள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளுங்கள்.</p><p>மருத்துவக் கலந்தாய்வுக் குழு, MCC நீட் 2026 கலந்தாய்வின் முதல் சுற்று இட ஒதுக்கீட்டு முடிவை இன்று, ஆகஸ்ட் 19, 2026 அன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீட் யுஜி முதல் சுற்று கலந்தாய்வுச் செயல்பாட்டில் பங்கேற்று , தங்களின் கல்லூரி மற்றும் பாடப்பிரிவு விருப்பங்களைச் சமர்ப்பித்த விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வ MCC கலந்தாய்வு இணையதளம் மூலம் தங்களின் ஒதுக்கீட்டு நிலையைச் சரிபார்க்கலாம். </p><p>நீட் யுஜி தரவரிசை, பூர்த்தி செய்யப்பட்ட விருப்பங்கள், பிரிவு, இடங்களின் இருப்பு மற்றும் பிற கலந்தாய்வுகளின் அடிப்படையில் ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் ஒதுக்கப்பட்ட மருத்துவ அல்லது பல் மருத்துவ இடத்தை நீட் 2026 முதல் சுற்று இட ஒதுக்கீட்டு முடிவு எடுத்துக்காட்டும். </p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/b0sjm2qv/neet.jpg" /></figure><p>முடிவு வெளியான பிறகு, இடம் பெற்ற விண்ணப்பதாரர்கள் தங்களின் ஒதுக்கீட்டுக் கடிதத்தைப் பதிவிறக்கம் செய்து, காலக்கெடுவுக்குள் ஒதுக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் சேர வேண்டும்.</p><p>மருத்துவக் கலந்தாய்வுக் குழு 2026-ஆம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான முதற்கட்ட இட ஒதுக்கீட்டு முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளமான mcc.nic.in, https://mcc.nic.in பக்கத்தில் வெளியிடுகிறது. அகில இந்திய ஒதுக்கீடு, மத்திய பல்கலைக்கழகங்கள், எய்ம்ஸ், ஜிப்மர்  மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் பி.எஸ்சி நர்சிங் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தங்களின் ஒதுக்கீடு நிலையை உடனடியாகச் சரிபார்க்கலாம்.</p><h2>இட ஒதுக்கீட்<strong>டுப் பட்டியலைச் சரிபா</strong>ர்க்கும் எளிய வழிமுறைகள்</h2><p>அதிகாரப்பூர்வ இணையதளமான mcc.nic.in, https://mcc.nic.in பக்கத்திற்குச் செல்ல வேண்டும். முகப்புப் பக்கத்தில் உள்ள 'UG Medical Counseling' பிரிவைத் தேர்வு செய்ய வேண்டும். அதில் தோன்றும் '<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-chief-ministers-medical-insurance-coverage-raised-to-rs-25-lakh">NEET UG </a>Round 1 Seat Allotment Result 2026' என்ற இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும். திரையில் தோன்றும் PDF கோப்பில் உங்களது ரோல் எண் மற்றும் பெற்ற தரவரிசையைத் தேடி ஒதுக்கீட்டை உறுதிசெய்யலாம். அதன்பின், உங்களது உள்நுழைவுத் தகவல்களைப் பயன்படுத்திக் கணக்கில் புகுந்து, அதிகாரப்பூர்வ ஒதுக்கீட்டுக் கடிதத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.</p><h2>சேர்க்கை <strong>நடைமுறைகள்</strong></h2><p>இட ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மருத்துவ அல்லது பல் மருத்துவக் கல்லூரிகளில் நாளை (ஆகஸ்ட் 20) முதல் ஆகஸ்ட் 25, 2026 வரை நேரில் சென்று சேர வேண்டும். கல்லூரி அறிக்கையின் போது அசல் சான்றிதழ்கள், நீட் மதிப்பெண் சான்றிதழ், நுழைவுச் சீட்டு, அடையாளச் சான்று மற்றும் ஒதுக்கீட்டுக் கடிதம் ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். முதல் சுற்றில் ஒதுக்கீடு பெற்ற கல்லூரியில் சேர விரும்பாதவர்கள் 'Free Exit' முறையில் அபராதம் இன்றி விலகலாம் அல்லது ஆகஸ்ட் 24 முதல் தொடங்கவுள்ள இரண்டாம் கட்டக் கலந்தாய்வில் பங்கேற்று உயர் விருப்பக் கல்லூரியைத் தேர்வு செய்ய விண்ணப்பிக்கலாம்.</p>]]></content:encoded></item><item><title>கல்லாகி போனது மகனின் மனம்...  வயதான தாயை வீல்சேருடன் ரெயிலில் தள்ளி கொன்ற மகன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/son-arrested-for-mother-murder-case-in-tiruttani</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/son-arrested-for-mother-murder-case-in-tiruttani#comments</comments><guid isPermaLink="false">0d488b9d-c678-4fa3-b496-14b74202a05a</guid><pubDate>Wed, 19 Aug 2026 08:30:03 +0000</pubDate><atom:updated>2026-08-19T08:30:03.472Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Police Investigation,போலீசார் விசாரணை,தாய் கொலை,மகன் கைது,mother murder,Son Arrest</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/cz2jvb2p/train.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/cz2jvb2p/train.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அடப்பாவி இப்படி ஒரு காரியத்தை எப்படிடா செய்தாய்? ஊரில் எத்தனையோ முதியோர் இல்லங்கள் இருக்கிறது? அங்கு கொண்டு விட்டு இருந்தால் கூட உனக்கு இப்படி கொலை பழி வந்து இருக்காதே? என்று போலீசாரும் பார்த்தசாரதியிடம் தெரிவித்து ஆதங்கப்பட்டனர்.</strong></em></p><p>மண்ணுக்கு மரம் பாரமாக தெரிவதில்லை...</p><p>மரத்துக்கு கிளை பாரமாக தெரிவதில்லை....</p><p>பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமாக தெரிவதில்லை.</p><p>தான் பெற்ற குழந்தை முடமாகி போனாலும் அந்த குழந்தைக்காக தன் வாழ்நாளையே தியாகம் செய்கிறாள் தாய். ஆனால் பாழாய் போன பிள்ளைகளின் மனம் மட்டும் வயதான காலங்களில் பெற்றோரை அனாதையாக தவிக்க விட்டு செல்வதை கேள்விப்படும் போது மனித நேயம் உள்ள ஒவ்வொருவரின் இதயமும் நடுங்கி போகிறது. </p><p>தொலை தூரங்களில் இருந்து கண் தெரியாத, நடக்க இயலாத தாய், தந்தையரை நகரப் பகுதிகளில் அழைத்து வந்து வீதிகளில் விட்டு சென்ற சம்பவங்களை கேள்விப்பட்டு இருப்போம். இப்படி கல்லாகி போன பல பிள்ளைகள் தங்கள் பெற்றோரை கடைசி காலத்தில் படுத்தும் பாடுகளை பார்க்கும் போது இப்படியும் பிள்ளைகள் இருப்பார்களா? என்று கேட்க தோன்றுகிறது. </p><p>வீட்டில் இருக்கும் அம்மா தனது மகனிடம்  உடம்பு சரியில்லையப்பா... ஆஸ்பத்திரிக்கு போகணும் என்றால் பர்சில் இருந்து ரூபாயை எடுத்துக் கொடுத்து ஆட்டோ பிடித்து போய் வா என்று சொல்லி விட்டு மகன் வேலைக்கு போய் விடுகிறான். நடக்க முடியாத அந்த பரிதாபத்துக்குரிய தாய் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் ஆட்டோ பிடித்து செல்வார். அதுவே மனைவிக்கு லேசான தலைவலி என்று அறிந்ததும் அலுவலகத்திற்கு பாதிநாள் விடுப்பு போட்டு விட்டு ஓடி வந்து ஆதரவாக அணைத்தபடியே ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வார். ஆனால் இந்த வாழ்க்கை வீட்டில் முடங்கி கிடக்கும் பெற்றோரால் கிடைத்தது என்பதை ஏனோ மனங்கள் புரிந்து கொள்ள மறுக்கிறது. </p><p>கடைசி காலத்தில் இப்படித்தான் வயதானவர்களை வீதியில் விட்டு விடுவார்கள் என்பதை உணர்ந்ததால்தான் இன்று வீதிகள் தோறும் முதியோர் இல்லங்கள் முளைத்து வருகின்றன. </p><p>அப்படி இருந்தும் கொல்லும் அளவிற்கு பிள்ளைகள் மனம் கல்லாகி போவதை நினைக்கும் போது கண்ணீர் பெருகுகிறது. அப்படி ஒரு சம்பவம் திருத்தணி அருகே அரங்கேறி இருக்கிறது. </p><p>திருத்தணியில் இருந்து அரக்கோணம் செல்லும் பாதையில் மணவூர் ரெயில் நிலையத்தில் ரெயிலில் அடிப்பட்டு மூதாட்டி ஒருவர் சடலமாக கிடந்தார். முதிர்ந்த அந்த தேகம் சிதைந்து சின்னாபின்னமாகிக் கிடந்தது. பக்கத்திலேயே ஒரு வீல்சேரும் சுக்குநூறாகி துண்டு துண்டாக அங்கொன்றும், இங்கொன்றுமாக கிடந்தது.</p><p>அதை பார்த்ததும் போலீசுக்கு சந்தேகம் வந்தது. எப்படி இந்த மூதாட்டி ரெயிலுக்குள் விழுந்தார். வீல்சேரில் தானாக வந்து விழுந்தாரா? அல்லது யாராவது தள்ளிக் கொண்டு வரும் போது தவறி விழுந்து விட்டாரா? என்று பல கோணங்களில் யோசித்தார்கள். ஆனால் பெற்ற மகனே தள்ளி கொன்று இருப்பார் என்று அவர்களால் நினைத்து பார்க்க கூட முடியவில்லை. </p><p>அடையாளம் காண்பதற்காக விசாரித்த போது  அந்த மூதாட்டி திருவாலங்காடு ஒன்றியம், மணவூரை சேர்ந்த பத்மாவதி என்பது தெரிய வந்தது. போலீசார் அங்கு சென்று விசாரித்த போது கிடைத்த தகவல்களை கேட்டு போலீசாரே ஒரு கணம் ஆடிப்போனார்கள். </p><p>மணவூர் அண்ணாநகரை சேர்ந்தவர் சேஷாத்திரி-பத்மாவதி தம்பதிகள். இவர்களுக்கு 3 மகன்கள். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. மனைவி, குழந்தைகளுடன் எல்லோரும் சந்தோசமாக வாழ்கிறார்கள். இளைய மகன் பார்த்தசாரதி (43) இவருக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள்.  சேஷாத்திரி உயிருடன் இருந்தவரை திடகாத்திரமாக நடமாடிய பத்மாவதியை கொஞ்சம் கொஞ்சமாக முதுமை ஆட்கொண்டது. 72 வயதான பத்மாவதியால் நடமாட முடியவில்லை. வீட்டில் படுத்தபடுக்கையாகி விட்டார்.  மகன்களுக்கு தாயை பார்த்துக் கொள்வது யார் என்பதில் போட்டி எழுந்தது. என்னால் முடியாது என்று ஆளாளுக்கு கை கழுவி விட்டனர். கடைசியில் பார்த்தசாரதி தாயை பார்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அவர் அந்த பொறுப்பை எடுத்துக் கொண்டாலும் வீட்டில் மனைவி, மாமியாரை பார்த்துக் கொள்வதற்கு முகம் சுளித்தார். </p><p>என்னால் எல்லாம் உங்க அம்மாவை  கவனித்துக் கொள்ள முடியாது என்று கணவரோடு சண்டை போட்டு விட்டு கோபத்தில் குழந்தைகளையும் அழைத்து சென்று விட்டார். </p><p>கடந்த 3 மாதமாக தனி மரமாக தவித்த பார்த்தசாரதி, மனைவி பிரிந்து சென்ற சோகத்திலும் கட்டிலில் படுத்த படுக்கையாக கிடந்த தாயை சரியாக பராமரிக்க முடியாமலும் தவித்து வந்தார். இதனால் வாழ்க்கையே வெறுத்து போன பார்த்தசாரதி தனக்கு பாரமாக கருதிய தாயை கொன்று விட முடிவு செய்து உள்ளார்.</p><p>தனது திட்டத்தை நிறைவேற்றுவதற்காக நேற்று இரவு தாய் பத்மாவதியை வீல்சேரில் தூக்கி அமர்த்தி இருக்கிறார். வீட்டிலேயே முடங்கி கிடப்பதால் நம் பிள்ளை வெளியே சுற்றி விட்டு வரலாம் என்று அழைத்து செல்கிறானோ என்று மனதிற்குள் நினைத்த அந்த தாயின் மனம் சந்தோஷத்தில் திளைத்தது. </p><p>வீல்சேரை தள்ளியபடியே மணவூர் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் பார்த்தசாரதி சென்று கொண்டு இருந்தார். ரெயில் நிலையத்தில் மின் வெளிச்சங்களும் சுற்றிலும் கேட்ட வெளி உலக சத்தங்களும் பத்மாவதிக்கு உடலில் புதுதெம்பை கொடுத்தது. ஆனால் இன்னும் சில நிமிடங்களில் நாம் பெற்ற பிள்ளையே நம்மை கொல்லப் போகிறான் என்பது அந்த தாய்க்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. </p><p>தூரத்தில் இருந்து பயங்கர ஒலி எழுப்பியபடி வேகமாக ஒரு ரெயில் வந்து கொண்டு இருந்தது. மகனின் கருணையால் பல மாதங்களுக்கு பிறகு ரெயிலை பார்க்கிறோம் என்று அந்த தாய் நிச்சயம் நினைத்து இருப்பார். ஆனால் மறுகணமே மின்னல்வேகத்தில் பார்த்தசாரதி வீல்சேருடன் தாயை ரெயில் முன்பு தள்ளிவிட்டார்.  கண்ணிமைக்கும் நேரத்தில் வீல்சேருடன் பத்மாவதியும் சின்னாபின்னமாக சிதைந்து போனார். </p><p>சுமையாக இருந்த தாயை தூக்கி வீசி விட்டோம் என்ற நிம்மதியோடு பார்த்தசாரதி வீடு திரும்பினார். ஆனால் போலீசாரின் பார்வை பலகோணங்களில் இருக்கும் அல்லவா அப்படித்தான் அந்த ரெயில் நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது வீல்சேரில் பெண் ஒருவரை தள்ளி கொண்டு வந்ததையும் ரெயிலில் தள்ளி விட்டதையும் பார்த்தனர்.</p><p>இதை அடிப்படையாக வைத்து பார்த்தசாரதியிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணையை தொடர்ந்தனர். அப்போதுதான் நடந்த சம்பவங்களை பார்த்தசாரதியும் விவரித்து இருக்கிறார். </p><p>அடப்பாவி இப்படி ஒரு காரியத்தை எப்படிடா செய்தாய்? ஊரில் எத்தனையோ முதியோர் இல்லங்கள் இருக்கிறது? அங்கு கொண்டு விட்டு இருந்தால் கூட உனக்கு இப்படி கொலை பழி வந்து இருக்காதே? என்று போலீசாரும் பார்த்தசாரதியிடம் தெரிவித்து ஆதங்கப்பட்டனர்.</p><p>கைது செய்யப்பட்ட பார்த்தசாரதி கொலை வழக்கில் ஜெயிலுக்கு அனுப்பப்படுகிறார்.</p>]]></content:encoded></item><item><title>எடை குறைவாக வரும் அரிசி மூட்டைகள்..! ரேஷன் கடை பணியாளர்கள் புகார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ration-shops-get-underweight-rice-sacks-staff-complain</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ration-shops-get-underweight-rice-sacks-staff-complain#comments</comments><guid isPermaLink="false">48c82ab3-327e-44b0-9ebe-0176d01e216c</guid><pubDate>Wed, 19 Aug 2026 08:26:29 +0000</pubDate><atom:updated>2026-08-19T08:26:29.805Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ரேஷன் கடை,ration shop,அரிசி மூட்டைகள்,பணியாளர்கள்,Rice bags,Ration employee</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/pzqdugy7/Ration-shop.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ration shops]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/pzqdugy7/Ration-shop.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ரேஷன் கடைகளுக்கு அரிசி மூட்டைகள் எடை குறைவாக வருவதால் பணியாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.</p><h2>எடை குறைவாக வழங்கப்படும் அரிசி</h2><p>தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ரேஷன் கடைகளில், பொது மக்களுக்கு உரிய எடையில் அரிசி வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது.</p><p>ஆனால், இதுகுறித்து ரேஷன் கடை பணியாளர்களிடம் கேள்வி கேட்டால், "எங்களுக்கே அரிசி மூட்டை எடை குறைவாகத்தான் வருகிறது. அப்படி இருக்கும்போது, உரிய எடையில் எப்படி பொதுமக்களுக்கு அரிசியை வழங்க முடியும்" என்று வருத்தம் தெரிவித்தனர்.</p><p>சமீபத்தில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள நெல் அரவை ஆலைகளில் பல கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கு காரணமான அரசு அதிகாரிகளும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>தரமில்லாத அரிசி</h2><p>50 கிலோ எடை கொண்ட அரிசி மூட்டையின் அளவு ஒரு பக்கம் குறைகிறது என்றால், மற்றொரு பக்கம் தரமான அரிசியாக இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.</p><p>அதாவது,"நல்ல தரமான அரிசியை வெளிச்சந்தைக்கு திருப்பி விட்டுவிட்டு, தரமில்லாத, பழைய அரிசியை ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படுகிறது. அதுவும் எடை குறைவாகவே வழங்கப்படுகிறது" என்ற புகார் பல ஆண்டுகளாக உள்ளது.</p><h2>அரசுக்கு கோரிக்கை</h2><p>அதனால், நெல் கொள்முதலில் தொடங்கி நெல் அரவை, கிடங்கு, போக்குவரத்து, ரேஷன் கடை என முழு விநியோக சங்கிலியையும் கண்காணிக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு குறிப்பாக உணவுத்துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>&apos;ஐட்டம் பாடல்களுக்கு மட்டுமே என்னை அணுகுகிறார்கள்&apos;: நடிகை தமன்னா வேதனை!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/tamannaah-opens-up-about-being-offered-only-item-songs</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/tamannaah-opens-up-about-being-offered-only-item-songs#comments</comments><guid isPermaLink="false">1291c756-0626-4e82-9318-402b50e4395c</guid><pubDate>Wed, 19 Aug 2026 08:10:32 +0000</pubDate><atom:updated>2026-08-19T08:10:32.860Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamannaah,தமன்னா,ItemSong,Kaavaalaa,AajKiRaat,சினிமாசெய்திகள்,ஐட்டம் பாடல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/8gznpktw/tamanna.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tamannaah Bhatia]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/8gznpktw/tamanna.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தமன்னா. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வரும் இவர், தனது நடிப்புடன் கவர்ச்சி நடனங்களாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். தற்போது தமிழில் சுந்தர்.சி இயக்கும் 'புருஷன்' திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதுதவிர இந்தியில் 5 புதிய படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.</p><h2>மார்க்<strong>கெட் உச்சம்</strong> </h2><p>'மில்க்கி பியூட்டி' என ரசிகர்களால் அழைக்கப்படும் தமன்னா, ரஜினிகாந்த் நடித்த '<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-first-song-from-the-movie-jailer-to-be-released-on-august-21">ஜெயிலர்</a>' படத்தில் இடம்பெற்ற 'காவாலா' பாடல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். இருப்பினும், தான் ஒப்புக்கொள்ளும் ஒவ்வொரு நடனப் பாடலையும் வெறும் நடனமாகப் பார்க்காமல், அதையும் ஒரு கதாபாத்திரமாகவே கருதி அர்ப்பணிப்புடன் நடிப்பதாகத் தெளிவுபடுத்தினார். அதனைத் தொடர்ந்து இந்தியில் வெளியான 'ஸ்த்ரீ 2' படத்தின் 'ஆஜ் கி ராத்' பாடலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனால் தமன்னாவின் மார்க்கெட் மேலும் உயர்ந்தது.</p><h2>சவா<strong>ல் நிறை</strong>ந்த கதாபாத்திரங்களுக்கான தேடல்</h2><p>திரைப்படங்களில் சவால் நிறைந்த மற்றும் நடிப்பிற்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடிக்கத் தான் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாக தமன்னா தெரிவித்துள்ளார். ஆனால் பெரும்பாலான இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் தன்னை நடனப் பாடல்களுக்கு மட்டுமே அணுகுவதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். ஒரு கவர்ச்சி நடிகையாக மட்டுமே பார்க்கப்படும் பிம்பத்தைத் தாண்டி, தனது நடிப்புத் திறமையை முழுமையாக வெளிப்படுத்தக்கூடிய வலுவான கதாபாத்திரங்கள் தனக்கு வழங்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><h2>கவர்ச்சியா<strong>ன பிம்பத்தைத் தாண்</strong>டி நடிக்க வேண்டும்</h2><p>மேலும், ஒரு கவர்ச்சியான பிம்பத்தைத் தாண்டி, ஒரு நடிகையாக தன்னை முழுமையாக வெளிப்படுத்தும் வகையிலான கதாபாத்திரங்களை இயக்குநர்கள் வழங்க வேண்டும். சினிமா காலத்திற்கேற்ப தொடர்ந்து மாறி வருவதாக குறிப்பிட்ட அவர், கதையின் தேவைக்கேற்ப முத்தக் காட்சிகள் இடம்பெற்றால் அவற்றை மட்டும் தனியாக பிரித்துப் பார்க்கவோ அல்லது தவறாக மதிப்பிடவோ கூடாது என்றும் தெரிவித்துள்ளார். தமன்னாவின் இந்தக் கருத்துகள் தற்போது திரையுலகில் கவனம் பெற்றுள்ளன.</p> ]]></content:encoded></item><item><title>நமது கையைவிட்டு போகும் தமிழகத்தின் நீர்வளம்..!- சவுமியா அன்புமணி வைத்த முக்கிய கோரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamilnadu-vanishing-water-resources-sowmya-anbumani-urgent-request</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamilnadu-vanishing-water-resources-sowmya-anbumani-urgent-request#comments</comments><guid isPermaLink="false">b043f64d-d62c-4448-9b07-1c9c9df0c259</guid><pubDate>Wed, 19 Aug 2026 08:00:37 +0000</pubDate><atom:updated>2026-08-19T08:00:37.586Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,சவுமியா அன்புமணி,TN assembly,Water resources,Sowmya Anbumani,நீர்வளம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/dn3grwin/sowmya.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PMK MLA Sowmya Anbumani]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/dn3grwin/sowmya.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் இன்று  ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை மானிய கோரிக்கை மீதான  விவாதத்தின்போது, பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி பேசினார்.</p><p>அப்போது சவுமியா அன்புமணி கூறியதாவது:-</p><p>தமிழ்நாட்டின் நீர்வளம் நம் கையைவிட்டு போய்க்கொண்டு இருக்கின்றன. நீர் வளம் தான் எதிர்கால தலைமுறைக்கு நாம் வழங்கும் சொத்து.</p><p>இந்தியாவில் எங்கும் இல்லாத சதுப்பு நிலம் சென்னையில் உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போதும் கூவம் ஆறு மக்கள் பயன்பாட்டில் உள்ளது.</p><p>சென்னைக்கு வந்த பிறகு தான் கூவம் சாக்கடையாக மாறுகிறது. கூவத்தில் குப்பை கொட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். </p><p>நல்ல தண்ணீரில் சாக்கடையை கலப்பது சட்டப்படி குற்றம்.</p><p>தாமிரபரணி நதியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு கட்டிடங்கள் ஏரியில் தான் அமைந்துள்ளன என்றார். </p><p>அப்போது பேசிய அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்,"சவுமியா அன்புமணி கோரிக்கையின் படி நீர்நிலைகள் மேப்பிங் செய்யப்படும்" என்றார்.</p><h2>சவுமியா அன்புமணி</h2><p>அத்திக்கடவு- அவிநாசி 2 திட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள நதிகளை முதலில் இணைக்க வேண்டும்.</p><p>காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தை முதலில் செயல்படுத்த வேண்டும். பாலாற்றில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். </p><p>நந்தன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். மழை நீர் சேமிப்பை கட்டாயமாக்க வேண்டும். பாலாற்றில் 5 அடிக்கு தடுப்பணைகளை கட்ட வேண்டும்.</p><p>தருமபுரி மாவட்டத்தில் ஏரிகளை தூர்வார வேண்டும். செஞ்சி கோட்டையை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும். </p><p>தருமபுரியில் குறும்பர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அதிகம் பேர் உள்ளனர். அவர்கள் SC சான்றிதழ் கேட்டு வருகின்றனர். அவர் பள்ளிக்கூடத்திற்கோ, கல்லூரிக்கோ செல்ல முடியவில்லை. ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்திற்கு சென்று ஆர்டர் வாங்கி வந்து விட்டு படிக்கிறார்கள். அதனை பரிசீலனை செய்து வழங்க வேண்டும்.</p><h2>அமைச்சர் செங்கோட்டையன்</h2><p>குறும்பர் இன மக்களுக்கு SC சான்றிதழ் - இதுதொடர்பாக அரசு பரிசீலித்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. மத்திய அரசிடம் எடுத்துச் சொல்லி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். </p>]]></content:encoded></item><item><title>மானவ் சுதார் அசத்தல் பந்துவீச்சு: முதல் டெஸ்டில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/india-beat-srilanka-in-first-test</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/india-beat-srilanka-in-first-test#comments</comments><guid isPermaLink="false">3d4fc7ae-ed6f-4d21-b212-2d3e13928cb7</guid><pubDate>Wed, 19 Aug 2026 07:58:12 +0000</pubDate><atom:updated>2026-08-19T07:58:12.198Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDvSL,இந்தியா இலங்கை தொடர்,Manav suthar,மானவ் சுதார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/698leqxw/manav.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ team india]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/698leqxw/manav.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.</p><p>இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.</p><p>இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.</p><h2>சதமடித்த படிக்கல்</h2><p>அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 462 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தேவ்தத் படிக்கல் 167 ரன்னும், கே.எல்.ராகுல் 82 ரன்னும், துருவ் ஜுரல் 51 ரன்னும் எடுத்தனர்.</p><p>இலங்கை சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 4 விக்கெட்டும், கேஷரா நுவந்தா 3 விக்கெட்டும், அசிதா பெர்னாண்டோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><h2>சோனல் தினுஷா சதம்</h2><p>தொடர்ந்து ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 284 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் சோனல் தினுஷா 100 ரன்னில் அவுட்டானார். நிரோஷன் டிக்வெலா 80 ரன்னில் ஆட்டமிழந்தார்.</p><h2>மானவ் சுதார் 4 விக்கெட்</h2><p>இந்தியா சார்பில் மானவ் சுதார் 4 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><h2>ரிஷப் பண்ட் அரை சதம்</h2><p>178 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி தொடர்ந்து 2வது இன்னிங்சை தொடர்ந்தது. ரிஷப் பண்ட் மட்டும் தாக்குப்பிடித்து அரை சதம் அடித்து 66 ரன்னில் அவுட்டானார். படிக்கல் 44 ரன்னும், கே.எல்.ராகுல் 35 ரன்னும் எடுத்தனர்.</p><p>இறுதியில், இந்திய அணி 2-வது இன்னிங்சில் 193 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.</p><p>இலங்கை சார்பில் அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட்டும், லஹிரு குமாரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p>இதன்மூலம், 372 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர். 47 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தடுமாறியது.</p><p>5வது விக்கெட்டுக்கு இணைந்த தனஞ்செய டி சில்வா- சோனல் தினுஷா ஜோடி பொறுப்புடன் ஆடியது. இந்த ஜோடி 95 ரன்கள் சேர்த்த நிலையில் டி சில்வா 59 ரன்னில் அவுட்டானார்.</p><p>அரை சதம் கடந்த சோனல் தினுஷா கடைசி வரை போராடி 84 ரன்னில் ஆட்டமிழந்தார்.</p><h2>மானவ் சுதார் 6 விக்கெட்</h2><p>இறுதியில், இலங்கை அணி 2வது இன்னிங்சில் 206 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் இந்திய அணி 1-0 என டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது.</p><p>இந்தியா சார்பில் மானவ் சுதார் 6 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழக அரசியல் களத்தில் உருவாகிறது புதிய கூட்டணி: இடைத்தேர்தலில் ஒன்றாக களம் காண திட்டம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/new-alliance-is-taking-shape-in-the-tamil-nadu-political-arena-plans-are-underway-to-contest-the-by-election-together</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/new-alliance-is-taking-shape-in-the-tamil-nadu-political-arena-plans-are-underway-to-contest-the-by-election-together#comments</comments><guid isPermaLink="false">bb0549f6-990b-4275-860c-ecc443acd038</guid><pubDate>Wed, 19 Aug 2026 07:56:39 +0000</pubDate><atom:updated>2026-08-19T07:56:39.700Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Seeman,velmurugan,வேல்முருகன்,by election,Krishnasamy,கிருஷ்ணசாமி,சீமான்,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/vsxgk1sy/seeman.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சீமான்- கிருஷ்ணசாமி- வேல்முருகன்]]></media:title><media:description type="html"><![CDATA[ சீமான்- கிருஷ்ணசாமி- வேல்முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/vsxgk1sy/seeman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இந்த கூட்டணி மாற்றத்தை ஏற்படுத்துமா? இல்லை இன்னொரு மக்கள் நலக் கூட்டணியாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.</strong></em></p><p>தமிழக அரசியல் களத்தில் தி.மு.க, அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுக்கும் மாற்றாக பல்வேறு அரசியல் கட்சிகள் முளைத்து தங்களது பணிகளை தீவிரமாக செய்த போதிலும், அதற்கு வெற்றி கிடைக்கவில்லை.</p><p>அதே நேரத்தில் த.வெ.க. தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி வெற்றிப்பெற்றுள்ளது. தமிழக அரசியல் களத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக வேறு எந்த கட்சிகளும் செய்யாத சாதனையை முதலமைச்சர் விஜய் செய்து காட்டியிருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்துக்களை தெரிவித்து உள்ளனர்.</p><h2><strong>புதிய கூட்டணி</strong></h2><p>தி.மு.க, அ.தி.மு.க.வுக்கு மாற்றாக இதற்கு முன்பு பல்வேறு கூட்டணிகள் அமைக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்தை முன்னிறுத்தி  உருவாக்கப்பட்ட மக்கள் நலக்கூட்டணி தோல்வியையே தழுவியது. </p><p>இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம், வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகியவை ஒன்றாக இணைந்து செயல்பட்டு வருகின்றன.</p><p>சட்டமன்ற தேர்தலின் போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி அது தோல்வியில் முடிந்த நிலையில் கிருஷ்ணசாமி குறிப்பிட்ட தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு தோல்வியை தழுவினார். </p><p>தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த வேல்முருகனும் கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிட்டார். நாம் தமிழர் கட்சி எப்போதும் போல தனித்து களம் கண்டது.  இந்த தேர்தலில் விஜய் ஏற்படுத்திய தாக்கத்தால் தி.மு.க, அ.தி.மு.க. ஆகிய கட்சிகளே பின்னுக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் மற்ற கட்சிகளும் படுதோல்வியை தழுவின.  </p><p>இந்த நிலையில் தான் தமிழக அரசியல் களத்தில் புதிதாக சீமான், வேல்முருகன், கிருஷ்ணசாமி ஆகியோர் பல்வேறு கட்சிகள் அமைப்புகளோடு புதிய கூட்டணியை ஏற்படுத்தி இருக்கிறார்கள். வருகிற சட்டமன்ற இடைத்தேர்தலில் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர். இந்த கூட்டணி மாற்றத்தை ஏற்படுத்துமா? இல்லை இன்னொரு மக்கள் நலக் கூட்டணியாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>பி.எம்.கேர்ஸ் வசூலித்த ரூ.1,162.92 கோடியில் ரூ.16.47 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது: தணிக்கை அறிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/only-16-47-crore-spent-from-1162-92-crore-pm-cares-audit-report</link><comments>https://www.maalaimalar.com/news/national/only-16-47-crore-spent-from-1162-92-crore-pm-cares-audit-report#comments</comments><guid isPermaLink="false">7884463b-b696-4de4-909e-adbb8031edba</guid><pubDate>Wed, 19 Aug 2026 07:32:43 +0000</pubDate><atom:updated>2026-08-19T07:32:43.949Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தணிக்கை அறிக்கை,audit report,pmcares,கொரோனா நிதி,பிஎம் கேர்ஸ் நிதி,Corona Fund</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/y3z86xek/Untitled-design-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பி.எம்.கேர்ஸ் தணிக்கை அறிக்கை]]></media:title><media:description type="html"><![CDATA[ PM cares audit report]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/y3z86xek/Untitled-design-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D">பி.எம். கேர்ஸ்</a> நிதியானது கடந்த 2023-24 மற்றும் 2024-25 ஆகிய நிதியாண்டுகளில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ரூ.1,162.92 கோடி நன்கொடையாக வசூல் செய்யப்பட்டது. ஆனால் இந்த காலகட்டத்தில் ரூ.16.47 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாக தணிக்கை அறிக்கைகள் (audit report) தெரிவித்துள்ளன.</p><h3><strong>பி.எம்.கேர்ஸ் நிவாரண முகமை</strong></h3><p>இந்தியாவில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE">கொரோனா</a> தொற்று காரணமாக பி.எம்.கேர்ஸ் (PMcares) என்ற அவசரகால நிவாரண ஆணையம் 27 மார்ச் 2020 அன்று அமைக்கப்பட்டது.</p><p>2022-23 ஆம் ஆண்டில், இந்த முகமையானது நன்கொடைகளாக ரூ. 912.21 கோடியை வசூலித்த நிலையில், ரூ. 439.38 கோடியை செலவிட்டது. இதில், பெருந்தொற்றின் போது பெற்றோரை இழந்த குழந்தைகளுக்காக ரூ. 346 கோடியும், கிட்டத்தட்ட 1 லட்சம் ஆக்சிஜன் செறிவூட்டிகளைக் கொள்முதல் செய்வதற்காக ரூ. 91.87 கோடியும் செலவிட்டது.</p><p>பெருந்தொற்றுக்குப் பிறகு, இந்த நிதிக்கு வரும் நன்கொடைகள் குறைந்துள்ளன. 2020-21 ஆம் ஆண்டில், இந்த நிதியிலிருந்து அதிகபட்சமாக ரூ. 7,678.68 கோடி வசூலானது. மேலும் இந்த நிதியில் இருந்து ரூ. 3,976.17 கோடி செலவிடப்பட்டது.</p><p>2021-22 ஆம் ஆண்டில், செலவினம் ரூ.3,716.29 கோடியாகவும், நன்கொடைகள் ரூ. 1,936.88 கோடியாகவும் இருந்தன. 2024-25 ஆம் ஆண்டில், நன்கொடையாக ரூ. 479.97 கோடியை வசூலித்தது. அதே சமயம் கோவிட்-19 காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்காக வெறும் ரூ. 87.85 லட்சத்தை மட்டுமே செலவிட்டது.</p><p>2023-24 ஆம் ஆண்டில், இது ரூ. 682.94 கோடியை வசூலித்து, ரூ. 15.59 கோடியை செலவிட்டது. 31 மார்ச், 2025 அன்று முடிவடைந்த ஆண்டுக்கான வரவுகள் மற்றும் செலவுகள் கணக்கின்படி, நிதியத்தின் கணக்குகளில் ரூ. 8,452.06 கோடி உள்ளது. இதில், ரூ. 7,846.65 கோடி நிலையான வைப்புத்தொகையில் இருந்தது.</p><h3><strong>நன்கொடைகள்</strong></h3><p>மொத்தத்தில், இந்த நிதியானது மார்ச் 2020-ல் தொடங்கப்பட்டதிலிருந்து நன்கொடையாக ரூ. 14,766.95 கோடியை வசூலித்துள்ளது மற்றும் 2024-25 வரை ரூ. 8,133.29 கோடியை செலவிட்டுள்ளது. இதில் பெரும்பாலான செலவினங்கள் கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் நிகழ்ந்துள்ளன.</p><h3><strong>தணிக்கை அறிக்கை</strong></h3><p>இந்த நிலையில் பிம் கேர்ஸ் நிதியின் 2024-2025 ஆம் ஆண்டிற்கான தணிக்கை அறிக்கையை (audit report) சமூக ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p>மேலும் அந்த பதிவில், “கொரோனா காலத்தில் நன்கொடையாக வசூலிக்கப்பட்ட ரூ.8,452 கோடியில் வெறும் 0.01 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. பிரதம மந்திரி மாநில பொருளாதார காப்பக நிதி ஏன் இவ்வளவு பெரிய தொகையை பயன்படுத்தாமல் முடக்கி வைத்துள்ளது.</p><p>இந்த நிதியை வசூலித்த முகமைகள், ரூ.324 கோடியை திருப்பி அளித்துள்ளன (refund). ஆனால் இந்த பணம் எதற்காகவும், ஏன் திருப்பி அளிக்கப்பட்டது என்பது குறித்தும் எந்த தகவலும் இல்லை. எந்த முகமை பணத்தை திருப்பி அளித்தது? பழுதடைந்த உபகரணங்களுக்கான பொறுப்பில் இருந்து தப்பிக்கவா இந்த பணம் திருப்பி அளிக்கப்பட்டது.</p><p>தணிக்கை அறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ள குறிப்புகள் ஏன் பதிவேற்றப்படவில்லை. பேரிடர்களின் போது குடிமக்களுக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்ட ஒரு முகமை, வெளிநாட்டு ஆதாரங்கள் உட்பட ஆயிரக்கணக்கான கோடிகளை திரட்டியுள்ளது.</p><p>ஆனால் அது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. பி.எம்.கேர்ஸ் நிதியானது தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு தகவல்களை தெரிவிக்க மறுப்பதன் மூலம், பொதுமக்களின் பார்வையில் இருந்து தொடர்ந்து தப்பித்து வருகிறது” என்று அவர் பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழர்களை சுட்டுக்கொன்றுவிட்டு ஆணவத்தோடு பேசுவதா..?- கர்நாடக முதல்வருக்கு சீமான் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/seeman-condemns-karnataka-cm-over-killing-of-three-tamils</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/seeman-condemns-karnataka-cm-over-killing-of-three-tamils#comments</comments><guid isPermaLink="false">4814cf24-1252-450b-84cd-7995ddccbe97</guid><pubDate>Wed, 19 Aug 2026 07:27:48 +0000</pubDate><atom:updated>2026-08-19T07:27:48.773Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Seeman,Karnataka CM,Fake Encounter,கர்நாடக முதலமைச்சர்,தமிழர்கள் சுட்டுக்கொலை,சீமானம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/dyu69dsk/Seeman.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Seeman-D.K.Shivakumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/dyu69dsk/Seeman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக வனப்பகுதிக்குள் மூன்று தமிழர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு, ஆணவத்தோடு கர்நாடக <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%95%E0%AF%87.%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D" target="_blank">முதல்வர் டி.கே.சிவக்குமார்</a> பேசுவதா? என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>கர்நாடக வனப்பகுதியில் மூன்று அப்பாவித்தமிழர்களை ஈவிரக்கமற்றுச் சுட்டுக்கொன்றுவிட்டு, எங்கள் மாநிலத்தின் விவகாரத்தில் தலையிடாது, உங்கள் வேலையைப் பாருங்கள் எனத் துளியும் குற்றவுணர்ச்சியோ, பொறுப்புணர்ச்சியோ இல்லாது கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் பேசியிருப்பது ஆணவத்தின் உச்சம்.</p><p>தமிழர்களையும், தமிழ்நாட்டின் தன்மான உணர்வையும் சீண்டிப் பார்க்கும் வகையிலான கர்நாடக அரசின் போக்கைக் கடுமையாகக் கண்டிக்கிறேன். </p><p>ஒவ்வொரு முறையும் காவிரி நதிநீரில் தமிழர்களுக்கான உரிமையையும், பங்கீட்டையும் கேட்டு நாங்கள் போராடும் போதெல்லாம் இனவெறியைத் தூண்டிவிட்டு, கர்நாடகத்தில் வாழும் தமிழர்களைத் தாக்கி, தமிழர்களின் வணிகத்தலங்களைத் தகர்த்து, அவர்களது வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கி,</p><p>தமிழர்களை ஏதிலிகளாக தமிழ்நாட்டுக்கு விரட்டியடிக்கும் கன்னட இனவெறியின் நீட்சியாகவே, மூன்று தமிழர்கள் வனப்பகுதிக்குள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அத்துப்பாக்கிச்சூடு தமிழர்கள் என்பதாலேயே, திட்டமிட்டு நடத்தப்பட்ட <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88" target="_blank">இனப்படுகொலை</a>யாகும். </p><p>மான் வேட்டையாடியதாகப் பொய்யானக் குற்றச்சாட்டைக் கூறி, மூன்று குற்றமற்ற தமிழர்களைக் கொன்றுகுவித்ததோடு மட்டுமல்லாது, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் கருத்துகூட சொல்லக்கூடாது; கண்டனம்கூட தெரிவிக்கக்கூடாது என கர்நாடக முதல்வர் சிவக்குமார் பேசியிருப்பது மிக மோசமான அடாவடித்தனத்தின் வெளிப்பாடு.</p><p>கர்நாடக மாநிலத்துக்குள் தமிழர்களுக்கு என்ன நடந்தாலும் கேட்கக்கூடாதெனக் கூறுவாரென்றால், காவிரி நதிநீரைத் தராது வஞ்சிக்கும் கர்நாடக அரசின் மீதுள்ள கோபத்தில் தமிழ்நாட்டுக்குள் வாழும் கன்னடர்களைத் தமிழர்கள் நாளைத் தாக்கினாலும் கேள்விகேட்காது இருந்துவிடுவாரா அம்மாநில முதல்வர் சிவக்குமார்? </p><p>தமிழ்நாட்டுக்குள் வாழும் கன்னடர்களுக்கு என்ன நடந்தாலும் கவலையில்லை என இருந்துவிடுவாரா? மூன்று தமிழர்கள் வனத்துறையினரால் கொலைசெய்யப்பட்டு, அதில் தொடர்புடைய வனத்துறையினர் கொலைவழக்கின் கீழ் கைதுசெய்யப்படவோ, அம்மாநில அரசின் சார்பில் தமிழர்களிடம் மன்னிப்புக் கேட்கவோ செய்யாத சிவக்குமாருக்கு, எங்களைப் பேசக்கூடாதெனச் சொல்வதற்கான உரிமையையும், துணிவையும் யார் கொடுத்தது?</p><p>கர்நாடகாவுக்குள் தமிழர்களுக்கு என்ன நடந்தாலும் கேள்வி கேட்கக் கூடாதெனச் சொல்ல நீங்கள் யார்? நீங்கள் உங்கள் மாநிலத்துக்கு முதல்வராக இருக்கலாம். எங்கள் இனத்தவருக்கு உத்தரவுப் பிறப்பிக்கவோ, கட்டளையிடவோ உங்களுக்கு என்ன உரிமையிருக்கிறது? </p><p>ஒவ்வொரு முறையும் கர்நாடகாவில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/three-tamils-shot-dead-in-karnataka-the-tamil-nadu-governments-failure-to-condemn-the-incident-is-shocking-udhayanidhi-stalin" target="_blank">தமிழர்கள்</a> மீது தாக்குதல் தொடுக்கப்படும்போதெல்லாம் தமிழ்நாடும், தமிழர்களும் சனநாயகத்தன்மையோடு நடந்து கொள்வதை ஏமாளித்தனமெனக் கருதினால், உங்கள் அறியாமைக்கு நாங்கள் பொறுப்பல்ல பெருமக்களே!</p><p>தமிழர்கள் திருப்பி அடித்தால் என்ன நடக்குமென்பதை தமிழீழத்தில் உலகம் பார்த்தது. முப்படைகளைக் கொண்ட மகத்தான மக்கள் இராணுவத்தைக் கட்டியெழுப்பி, உலக வல்லாதிக்கங்களை எதிர்த்துச் சண்டையிட்ட மாவீரத்தைப் போர்க்களத்திலே நிகழ்த்திக் காட்டிய புறநானூற்றுத் தலைவன் பெருமாவீரன் பிரபாகரனின் பிள்ளைகள் நாங்கள்; </p><p>எல்லையைக் காத்து நின்ற வனக்காவலன் வீரப்பனாரின் வாரிசுகள் நாங்கள். எங்கள் சனநாயக உணர்வைக் கோழைத்தனமெனக் கருதினால், அதற்கான பெரும் விலையை நீங்கள் கொடுக்க வேண்டி வரும் என எச்சரிக்கிறேன்.</p><p>தமிழர்கள் எனும் மூத்தத் தேசிய இனத்தின் குடிகளைச் சீண்டுவது போலவும், அவமதிப்பது போலவும் பேசுவதைக் கைவிட்டு, கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் நாவடக்கிப் பேச வேண்டும். கன்னடர் எனும் தேசிய இனத்தையும், அதன் குடிகளையும் ஆரத்தழுவி முழுதாய் நேசிக்கிறோம். </p><p>பேரன்பு கொண்டு அம்மக்களோடு உறவுபாராட்ட எண்ணுகிறோம். அதற்காக, தமிழ்த்தேசிய இனத்தின் மீது பகைமையும், வெறுப்பும் கொண்டு, கர்நாடக அரசு செய்யும் அட்டூழியங்களை இனியும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது.</p><p>தமிழர்களின் பரந்த மனப்பான்மையையும், பெருந்தன்மையையும், சனநாயக உணர்வையும் அலட்சியப்படுத்திச் செயல்பட முனைந்தால், பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது. </p><p>தமிழ்நாடு என்பது உலகமெங்கும் பரவி வாழும் தமிழர்களுக்கான வரலாற்றுத்தாயகம். உலகின் எந்த மூலையில் தமிழர்களுக்கு ஒரு இன்னல் விளைந்தாலும் தமிழ்நாட்டிலிருந்து ஆதரவுக்குரல்கள் ஒலிக்கத்தான் செய்யும். அதனைக் கேள்வி கேட்பதற்கு கர்நாடக முதல்வர் சிவக்குமாருக்கு எந்த உரிமையுமில்லை.</p><p>ஆகவே, மூன்று அப்பாவித்தமிழர்களைச் சுட்டுக்கொன்ற கர்நாடக அரசின் வனத்துறையினர் மீது கொலைவழக்குப் பதிவுசெய்யப்பட்டு, கைதுசெய்யப்பட்டு, மூன்று பேரின் குடும்பத்தாருக்கும் தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.</p><p>அதற்கு தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசு கர்நாடக அரசுக்கு அரசியல் அழுத்தமும், நெருக்கடியும் கொடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>47 வயதில் முதல் &apos;புல்-அப்ஸ்&apos; செய்து அசத்திய நடிகை ஜோதிகா! </title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actress-jyothika-stuns-with-first-pull-ups-at-47</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actress-jyothika-stuns-with-first-pull-ups-at-47#comments</comments><guid isPermaLink="false">a1482e69-af1f-44de-a914-eec239638ab1</guid><pubDate>Wed, 19 Aug 2026 07:26:15 +0000</pubDate><atom:updated>2026-08-19T07:26:15.730Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜோதிகா,Jyothika,Fitness Milestone,PullUps,Age Is Just A Number,Weigh tlifting,Fitness Motivation,Jyotika Fitness</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/ciov9qy9/Jyotika" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jyotika ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/ciov9qy9/Jyotika?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகையான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE">ஜோதிகா</a>, தனது 47 வயதில் கடினமான 'புல்-அப்ஸ்' <a href="https://www.maalaimalar.com/topic/exercise">உடற்பயிற்சி</a>யை வெற்றிகரமாகச் செய்து முடித்து புதிய பிட்னஸ் மைல்கல்லை எட்டியுள்ளார். </p><p>இது தொடர்பான அவரது உத்வேகமூட்டும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.</p><h2>மூன்று ஆண்டு கால உழைப்பு:</h2><p>கடந்த மூன்று ஆண்டுகளாகத் தீவிர உடல் வலிமைப் பயிற்சிகளை மேற்கொண்டு வரும் ஜோதிகா, இந்த வயதில் 'புல்-அப்ஸ்' செய்தது தனக்கு "அற்புதமான" உணர்வைத் தருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>இது குறித்து அவர் பேசுகையில்:</h2><p>"என்னுடைய பிட்னஸ் பயணத்தில் எனக்குக் கிடைத்த மிகச்சிறந்த அறிவுரை எனது பயிற்சியாளர் மகேஷ் கனேகர் கொடுத்ததுதான். உடற்பயிற்சி என்பது வெளிப்புறத் தோற்றத்திற்கானதல்ல; அது உடலின் உள் வலிமைக்கானது. வலிமை கூடும்போது உடல் எடை தானாகவே குறைந்துவிடும்.</p><p>எனது 44 வயதில்தான் இந்த உடற்பயிற்சி பயணத்தை அவரோடு தொடங்கினேன். இன்று எனது 47 வயதில், முதல்முறையாக இரண்டு 'புல்-அப்ஸ்' பயிற்சிகளைச் செய்துள்ளேன். வயது என்பது வெறும் எண் மட்டுமே; நம்மால் முடியாதது எதுவுமில்லை என்பதை அவர் எனக்கு நிரூபித்துள்ளார்" என்று ஜோதிகா பெருமிதத்துடன் கூறியுள்ளார்.</p><h2>ஜோதிகாவின் பிட்னஸ் ரகசியம்:</h2><p>தற்போது வெளியாகி இருக்கும் 'சிஸ்டம்' வெப் சீரிஸ் மூலம் ரசிகர்களைக் கவர்ந்துள்ள ஜோதிகா, தனது தினசரி உடற்பயிற்சி முறைகளையும் பகிர்ந்துள்ளார்:</p><p>அதில், 'சிஸ்டம்'&nbsp;திரைப்பட நடிகை, தான் ஒரு "காலை நேரப் பிரியர்" என்றும், வாரத்திற்கு 4-5 முறை உடற்பயிற்சி செய்ய விரும்புவதாகவும் குறிப்பிட்டார். " நான் எழுந்ததும், ஒரு ஆப்பிள் சாப்பிட்டுவிட்டு, ஜிம்மிற்கு விரைந்து செல்வேன். அங்கு பளுதூக்கும் உடல் வலிமைப் பயிற்சி செய்வேன். </p><p>அது காலை 10.30 மணிக்குள் முடிந்துவிடும், அதன்பிறகு அன்றைய நாளுக்கு தயாராகிவிடுவேன். இரண்டு நாட்கள் உடற்பயிற்சி செய்வேன், பிறகு ஒரு நாள் ஓய்வெடுப்பேன். வாரத்திற்கு 4 முதல் 5 நாட்கள் வரை உடற்பயிற்சியை மேற்கொள்வேன் என்று கூறியுள்ளார்.</p><p>40 வயதைக் கடந்த பெண்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும் வயது ஒரு தடையல்ல என்பதைத் தனது கடின உழைப்பின் மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளார் நடிகை ஜோதிகா.</p><figure><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DYJiRsbM-tI/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:658px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DYJiRsbM-tI/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a></div></blockquote>
<script async src="//platform.instagram.com/en_US/embeds.js"></script></figure>]]></content:encoded></item><item><title>எஸ்.பி.ஐ ஏடிஎம் ரூ.1.93 கோடி மோசடி வழக்கு: முன்னாள் வங்கி அதிகாரியின் ஜாமீன் மனுவை நிராகரித்தது குஜராத் உயர் நீதிமன்றம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/sbi-atm-rs-1-93-crore-fraud-case-gujarat-high-court-rejects-bail-of-former-bank-officer</link><comments>https://www.maalaimalar.com/news/national/sbi-atm-rs-1-93-crore-fraud-case-gujarat-high-court-rejects-bail-of-former-bank-officer#comments</comments><guid isPermaLink="false">59a0579b-9890-40e8-a729-9c3ee58505ec</guid><pubDate>Wed, 19 Aug 2026 07:19:52 +0000</pubDate><atom:updated>2026-08-19T07:19:52.198Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Cybercrime,GujaratHighCourt,FinancialCrime,CrimeNews,ATMScam,குஜராத்உயர்நீதிமன்றம்,ஏடிஎம்மோசடி,வங்கிமோசடி,நிதிமுறைகேடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/yw68y88s/Untitled-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ GujaratHighCourt]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/yw68y88s/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குஜராத் மாநிலத்தில் உள்ள நர்மதா மாவட்டம் ராஜ்பிப்லா எஸ்பிஐ கிளை ஏடிஎம் மற்றும் வங்கி மென்பொருளில் மோசடி செய்து ரூ.1.93 கோடியை சுருட்டிய வங்கி அதிகாரியின் இரண்டாவது ஜாமீன் மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.</p><h2>வங்கி<strong>யில் நடந்த முறைகே</strong>டு </h2><p>குஜராத் ராஜ்பிப்லா <a href="https://www.maalaimalar.com/news/national/103-year-old-woman-donates-life-savings-for-assam-flood-victims">எஸ்பிஐ</a> கிளையில் கேஷ் ஆஃபீசராக பணியாற்றிய பாங்மோய் சக்ரவர்த்தி, வங்கியின் பணக் பெட்டகத்திலிருந்து பணத்தை எடுத்து ஏடிஎம் மற்றும் ரொக்க வைப்பு இயந்திரங்களில் நிரப்பும் பொறுப்பில் இருந்தார். அவர் தனது நிர்வாக அதிகாரப்பூர்வ உள்நுழைவு சான்றுகளைப் பயன்படுத்தி, ஏடிஎம் அமைப்பில் குறைந்தபட்ச இருப்புத் தொகை காட்டுவது போல் மென்பொருளை மாற்றி அமைத்து, பெரும் தொகையை ரகசியமாகத் திருடி வந்துள்ளார். மேலும், இந்த முறைகேட்டை மறைப்பதற்காக வங்கியின் மைய வங்கியியல் அமைப்பில் போலி வைப்புத் தொகைப் பதிவுகளை அவர் உருவாக்கியுள்ளார்.</p><h2>எந்தெந்த ஏ<strong>டிஎம்களில் எவ்வள</strong>வு பணம் கைமாறியது?</h2><p>விசாரணையில் அவர் நான்கு முக்கிய ஏடிஎம் மையங்களில் இருந்து ரூ.1.93 கோடியைச் சுருட்டியது கண்டறியப்பட்டது, ராஜ்பிப்லா ஸ்டேஷன் ரோட்டில் உள்ள ஏடிஎம்மில் ரூ.39.98 லட்சம், போய்ச்சாவில் உள்ள சுவாமிநாராயண் குருகுல் ஏடிஎம்மில் ரூ.39.92 லட்சம், ஏடிஎம் எண் 465624-ல் இருந்து ரூ.62 லட்சம், சந்தோஷ் சவுக்தி ஏடிஎம் எண் 465625-ல் இருந்து ரூ.51.64 லட்சம் கைமாறியுள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>பணப்ப<strong>ரிமாற்றம்</strong></h2><p>சக்ரவர்த்தி திருடிய தொகையை உத்ரபிரதேசம், பீஹார் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள தனது உறவினர்களின் வங்கிச் கணக்குகளுக்கு மாற்றியுள்ளார். அங்கிருந்து UPI, RTGS மற்றும் NEFT மூலமாக ஐசிஐசிஐ வங்கி கணக்குகளுக்குப் பணத்தை அனுப்பியுள்ளார். இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் சுமார் ரூ.2.34 கோடி மதிப்பிலான பணப்பரிவர்த்தனைகள் சந்தேகத்தின் கீழ் கண்டறியப்பட்டுள்ளன.</p><p>அக்டோபர் 17, 2025 அன்று அவர் நஸ்வாடி கிளைக்கு மாற்றப்பட்ட போதிலும், நவம்பர் 6 வரை அவரது கேஷ் ஆஃபீசர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் செயல்பாட்டில் இருந்துள்ளது. இதன் மூலம் அக்டோபர் 28, 30 மற்றும் நவம்பர் 3 ஆகிய தேதிகளில் முறைகேடான பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. ஏடிஎம்களில் இருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் அவரது மொபைல் இருப்பிடத் தரவு ஆகியவை குற்றத்தை உறுதிப்படுத்தும் வலுவான ஆதாரங்களாக அமைந்தன.</p><h2>நீதி<strong>மன்றம் உத்தரவு</strong></h2><p>பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு நவம்பர் 28, 2025 முதல் சிறையில் இருக்கும் பாங்மோய் சக்ரவர்த்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் ஜாமீன் கோரினார். ஆனால், நீதிபதி எச்.டி.சுதார் அடங்கிய அமர்வு, "பொருளாதாரக் குற்றங்கள் திட்டமிட்டு நடத்தப்படும் வெள்ளைச் சட்டைக் குற்றங்கள்" என்று சுட்டிக்காட்டியது. மின்னணு மற்றும் நிதி ஆதாரங்கள் இதில் அடங்கியிருப்பதால் சாட்சியங்களை கலைக்க வாய்ப்புள்ளது எனக் கூறி ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.</p> ]]></content:encoded></item><item><title>சட்டசபையில் இன்று முதலமைச்சர் விஜய் வெளியிட்ட 10 முக்கிய அறிவிப்புகள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/10-importatnt-announcements-made-by-cm-vijay-in-the-legislative-assembly-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/10-importatnt-announcements-made-by-cm-vijay-in-the-legislative-assembly-today#comments</comments><guid isPermaLink="false">b376bd66-c011-4e75-8153-d1234172830a</guid><pubDate>Wed, 19 Aug 2026 07:17:08 +0000</pubDate><atom:updated>2026-08-19T07:17:08.898Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/d4js6b08/vijay.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/d4js6b08/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சட்டசபையில் இன்று பேரவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் 10 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-chief-ministers-medical-insurance-coverage-raised-to-rs-25-lakh">முதலமைச்சர் விஜய்</a> பேசியதாவது:-</p><p>உலகில் தான் உற்பத்தி செய்யும் பாலை தனது சந்ததிகளுக்கு மட்டுமின்றி மனிதர்கள் உள்ளிட்ட பிற ஜீவராசிகளுக்கும் வழங்கி உயிரை காக்கும் பசுவை தெய்வமாக போற்றி வளர்த்து வருவது நமது பாரம்பரியத்தின் சிறப்பு. இன்றைய அறிவியல் உலகில் ஒரு லிட்டர் பாலை உற்பத்தி செய்வதற்காக பசுவின் உடலில் சுமார் 500 லிட்டர் ரத்தம் சுத்திகரிக்கப்படுவதாக கூறப்படும் போது, பசுவின் உழைப்பை எண்ணி வியக்க தோன்றுகிறது.</p><p>தமிழ்நாட்டில் 8,800 பால் கூட்டுறவு சங்கங்களில் உள்ள 3 லட்சத்து 16 ஆயிரம்  பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து தினசரி 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு ஆவின் நிறுவனத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 31 லட்சம் லிட்டர் பால் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p><p>தற்போது 4.3 சதவீதம் கொழுப்பு சத்து மற்றும் 8.2 சதவீதம் இதர சத்துக்கள் அடங்கிய ஒரு லிட்டர் பாலுக்கு கொள்முதல் விலையாக 35 ரூபாயும், மாநில ஊக்கத் தொகையாக 1 லிட்டர் பாலுக்கு 3 ரூபாயும் ஆக மொத்தம் ஒரு லிட்டருக்கு கொள்முதல் விலை 38 ரூபாய் 5.11.2022 முதல் வழங்கப்பட்டு வருகிறது.</p><p>அதிகாலை 3 மணிக்கே எழுந்து மாடுகளை சுத்தம் செய்து பால் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களின் உழைப்பையும், தீவனம் மற்றும் வேலையாட்களின் கூலி உள்ளிட்ட அதிகரித்து வரும் செலவுகளையும் கடந்த கால அரசு போதிய அளவில் கருத்தில் கொள்ளவில்லை. உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல் இருந்துள்ளது. </p><h2><strong>ரூ.41 ஆக உயர்வு</strong></h2><p>கடந்த காலத்தில் கொள்முதல் விலை உரிய அளவில் உயர்த்தப்படாத நிலையில் நம் அரசு சந்தித்து வரும் அதிகப்படியான நிதி நெருக்கடியிலும் பால் உற்பத்தியாளர்களின் நலனையும், வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு அவர்களின் உன்னதமான உழைப்பிற்கு உரிய மதிப்பை வழங்கும் வகையில் கொள்முதல் விலையை உயர்த்துவது நமது அரசின் கடமையாகும்.</p><p>தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பால் வழங்கும் 3 லட்சத்து 16 ஆயிரத்துக்கும் மேலான பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையில் பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு கூட்டுறவு சங்கம் மூலமாக 1 ரூபாய் உயர்த்தவும், மேலும் அரசு ஊக்கத் தொகையை 3 ரூபாயில் இருந்து 5 ரூபாயாக உயர்த்தவும் ஆக மொத்தம் ஒரு லிட்டர் கொள்முதல் விலை 38 ரூபாயில் இருந்து 41 ரூபாயாக உயர்த்த அரசு முடிவு செய்து உள்ளது.</p><p>இந்த கொள்முதல் விலை உயர்வால் கூடுதலாக ஒரு மாதத்திற்கு ரூபாய் 30 கோடியும், ஒரு ஆண்டுக்கு ரூபாய் 360 கோடியும் செலவாகும்.</p><h2><strong>சமமான மருத்துவ சேவை</strong></h2><p>ஒரு உயிரின் மதிப்பை அவரது வருமானம் தீர்மானிக்கக் கூடாது. வசதி படைத்தவர், வசதி குறைவானவர் என்ற நிலை மருத்துவத் துறையில் இருக்கக் கூடாது. அனைவருக்கும் சமமான மருத்துவ சேவை எளிதாக கிடைக்க வேண்டும் என்பதில் நமது அரசு உறுதியாக உள்ளது. மருத்துவம் என்பது சலுகை அல்ல. ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை. </p><p>ஒரு மனிதனின் உயிரை காப்பாற்றுவதில் தாமதமாகும் ஒவ்வொரு நொடியும் மிகக் கொடியது. மருத்துவத்தை தேடி வரும் மக்களின் பாதையில் இருக்கும் தடைகளான வறுமை, தொலைவு, மருத்துவர் பற்றாக்குறை, மருந்துகளின் விலை, மருத்துவ விழிப்பு ணர்வு இல்லாமை, காத்திருப்பு, அவசரகால வசதியின்மை போன்றவற்றை படிப்படியாக அகற்றி, ஏழை, பணக்காரர், கிராமம்,  நகரம் என்ற பாகுபாடு இன்றி ஒவ்வொருவருக்கும் தரமான மற்றும் எளிதான மருத்துவ சேவை கிடைக்க செய்வதை முதன்மையான நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது நமது அரசு.</p><p>மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை யில் சில அறிவிப்புகளை சட்டப் பேரவை விதி 110-ன் கீழ் இன்று வெளியிட விரும்புகிறேன்.</p><h2><strong>பன்நோக்கு உயர் சிறப்பு ஆஸ்பத்திரி</strong></h2><p>வடசென்னை மக்களுக்கு உயர்தர மருத்துவ சேவை எளிதில் கிடைக்கும் வகையில் பெரம்பூரில் ரூ.300 கோடி மதிப்பீட்டில்  400 படுக்கைகள் கொண்ட உலகத் தரத்திலான பன்னோக்கு உயர் சிறப்பு ஆஸ்பத்திரி அமைக்கப்படும்.</p><p>முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் இலவச மருத்துவ சிகிச்சைக்கான மருத்துவ காப்பீட்டு தொகை ஆண்டொன்றுக்கு தற்போது உள்ள ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும்.</p><p>திருநங்கையர்களுக்கான மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை சேவைகள் கூடுதலாக சென்னை ஸ்டான்லி, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கல்பட்டு, திருவாரூர், தர்மபுரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 7 அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.</p><h2><strong>7 செவிலியர் கல்லூரிகள்</strong></h2><p>தமிழ்நாட்டில் 2014-ம் ஆண்டுக்கு பிறகு புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படாத நிலையில் தரமான மருத்துவ சேவைக்கு தேவையான செவிலியர், மருந்தியல் மற்றும் துணை மருத்துவ பணியாளர்களை உருவாக்கும் வகையில் அரசு மருத்துவ கல்லூரிகளில் ரூ.351 கோடி மதிப்பீட்டில் கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்படும்.</p><p>7 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்பட்டு 660 பி.எஸ்.சி. செவிலியர் மாணவர்கள் இடங்கள் உருவாக்கப்பட்டு ஏற்கனவே உள்ள செவிலியர் கல்லூரிகள் மற்றும் செவிலியர் பள்ளிகளில் கூடுதலாக 1925 கூடுதல் மாணாக்கர் இடங்கள், இயன்முறை மருத்துவம் உள்ளிட்ட 12 துணை மருத்துவ படிப்புகளில் 2,778 மாணாக்கர் இடங்கள், மருந்தியல் படிப்புகளில் 735 கூடுதல் இடங்கள் என மொத்தம் சுமார் 6,098 கூடுதல் மாணாக்கர் இடங்கள் உருவாக்கப்படும்.</p><h2><strong>புற்றுநோய் பராமரிப்பு இயக்கம்</strong></h2><p>தமிழ்நாட்டில்  அதிகரித்து வரும் புற்றுநோய்களை தடுக்கவும், தரமான சிகிச்சை வழங்கவும் முதலமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு இயக்கம் முதலமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு மிஷன் ரூ.677 கோடியே 44 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.471 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் ஜி+14 தளங்களுடன் ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை பிரிவு அமைக்கப்படும். மேலும் 5 மண்டல புற்றுநோய் மையங்கள், தஞ்சாவூர், கோவை, மதுரை, திருநெல்வேலி மற்றும் விழுப்புரம் ஆகிய மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிகளில்  நிறுவப்படும். முதல்கட்டமாக ராஜாஜி ஆஸ்பத்திரியில் ரூ.84 கோடியில் ஜி+8 தளங்களுடன் மண்டல புற்றுநோய் மையம் தொடங்கப்படும்.</p><p>ரோபாட்டிக் அறுவை சிகிச்சை லீனியர் ஆக்சுலரேட்டர் லினக் கதிர் வீச்சு நவீன கருவிகள் இலக்கு மற்றும் நோய் எதிர்ப்பு சிகிச்சைகளுக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு ரூ.106 கோடியே 17 லட்சம் வழங்கப்படும். டாக்டர்களுக்கு பயிற்சி, நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து ஆதரவு ஆகியவற்றுக்காக ரூ.2 கோடியே 77 லட்சம் அளிக்கப்படும். மேலும் தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் 1.22 லட்சம் பெண்களுக்கு ரூ.8 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் எச்.பி.வி. டி.என்.ஏ. பரி சோதனை மேற்கொள்ளப்படும். மொத்தம் ரூ.673 கோடியே 44 லட்சம் மதிப்பீட்டில் புற்றுநோய் தாக்கத்தில் இருந்து மக்களை காக்கும் வகையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும்.</p><p>பொருளாதார பலம் இல்லாமல் சட்டமன்ற உறுப்பினர்களாக பணியாற்றும் மற்றும் முதன் முதலாக சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தங்களது மக்கள் பணியை தொய்வின்றி தொடருவதற்கும், அவர்கள் தங்களின் தொகுதி பணிகளை திறம்பட மேற்கொள்வதற்கு வசதியாக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.</p>]]></content:encoded></item><item><title>போபாலில் &apos;ஜென் ஆல்பா&apos; பள்ளி மாணவர்கள் வீதியில் இறங்கி போராட்டம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/gen-alpha-students-protest-in-bhopal-over-school-merger-plan</link><comments>https://www.maalaimalar.com/news/national/gen-alpha-students-protest-in-bhopal-over-school-merger-plan#comments</comments><guid isPermaLink="false">0b1ccab4-6c18-4c4b-8612-0cecac126f01</guid><pubDate>Wed, 19 Aug 2026 07:14:49 +0000</pubDate><atom:updated>2026-08-19T07:14:49.118Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>NCERT,கேந்திரிய வித்யாலயா,Bhopal Protest,போபால் போராட்டம்,Gen Alpha Protest,Kendriya Vidyalaya Merger,DMS Bhopal,மாணவர்கள் எதிர்ப்பு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/ifecjnf4/Gen-Alpha-Protest" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gen Alpha Protest ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/ifecjnf4/Gen-Alpha-Protest?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">மத்திய பிரதேச</a> மாநிலம் போபாலில் உள்ள புகழ்பெற்ற பிராந்திய மாதிரிப் பள்ளியை, <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%BE">கேந்திரிய வித்யாலயா </a>சங்கத்துடன் இணைக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிராக, அந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் வீதியில் இறங்கி தங்களின் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.</p><p>மத்திய அரசின் இந்தத் திடீர் முடிவால், பல தசாப்தங்கலாகத் தனித்துவமாகச் செயல்பட்டு வரும் தங்களது நிறுவனத்தின் நோக்கம் முற்றிலும் சிதைந்துவிடும் என்று மாணவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.</p><h2>முழக்கமிட்ட 'ஜென் ஆல்பா' தலைமுறை:</h2><p>போபாலில் உள்ள 'டெமான்ஸ்ட்ரேஷன் மல்டிபர்ப்பஸ் பள்ளி' வளாகத்திற்கு வெளியே திரண்ட நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள், கைகளில் பதாகைகளை ஏந்தி, இணைப்புத் திட்டத்திற்கு எதிராக ஆக்ரோஷமாக முழக்கங்களை எழுப்பினர். </p><p>தற்போதைய நவீனத் தலைமுறையைச் சேர்ந்த பள்ளி சிறுவர்கள், தங்களின் கல்வி உரிமைக்காகவும், பள்ளியின் தனித்துவத்திற்காகவும் திரண்டது போபால் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><h2>போராட்டத்திற்கான காரணம் என்ன?</h2><p>மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் மூலம் கடந்த 1965ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த ரீஜனல் பள்ளிகள் தொடங்கப்பட்டன.</p><p>இந்தியாவின் நான்கு முக்கிய நகரங்களில் (போபால், அஜ்மீர், மைசூர் மற்றும் புவனேஸ்வர்) மட்டுமே இத்தகைய மாதிரிப் பள்ளிகள் நிறுவப்பட்டன. வழக்கமான கல்வி முறையைப் பின்பற்றாமல், புதிய கற்பித்தல் முறைகளை உருவாக்குவதற்கும், கல்வியில் புதுமையான ஆராய்ச்சிகள் மற்றும் சோதனைகளைச் செய்வதற்கும் இந்த ரீஜனல் பள்ளிகள் பிரத்யேகமாகத் தோற்றுவிக்கப்பட்டன. </p><p>தற்போது இந்தப் பள்ளியைப் பொதுவான கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுடன் இணைப்பதன் மூலம், இதன் ஆராய்ச்சித் தன்மையும், தனித்துவமான அடையாளமும் முற்றிலும் அழிந்துவிடும் என்று மாணவர்கள் தரப்பில் கூறிவருகின்றனர்.</p><h2>பள்ளி முதல்வரிடம் மனு - தீவிரமடையும் போராட்டம்:</h2><p>போராட்டத்தின் இறுதியாக, மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பிராந்தியக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் எஸ்.கே. குப்தாவைச் சந்தித்து தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்யும் அதிகாரப்பூர்வக் கோரிக்கை மனுவை அளித்தனர்.</p><p>அந்த மனுவில், "இணைப்புத் திட்டத்தை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். தங்களது பள்ளியை மேலும் வலுப்படுத்தி, கல்வி ஆராய்ச்சி மையமாகவே தொடர அனுமதிக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளனர்.</p><p>மேலும், தங்களது கோரிக்கைகளுக்கு உரிய அதிகாரிகள் உடனடியாகச் செவிசாய்க்கவில்லை எனில், அடுத்தடுத்த கட்டங்களாகத் தங்களது போராட்டத்தை மாநில மற்றும் மத்திய அரசுத் துறைகளை நோக்கித் தீவிரப்படுத்தப் போவதாகவும் பள்ளி மாணவர்கள் எச்சரித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் செல்வதை தடுத்த ஒரே முதல்வர்- அமைச்சர் பிரபு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-blocked-mineral-exports-to-neighbouring-states-says-minister-prabhu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-blocked-mineral-exports-to-neighbouring-states-says-minister-prabhu#comments</comments><guid isPermaLink="false">cd16d219-2c1b-42d5-bd58-2b81a00a46cc</guid><pubDate>Wed, 19 Aug 2026 07:10:00 +0000</pubDate><atom:updated>2026-08-19T07:10:00.126Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,கனிம வளங்கள்,அமைச்சர் பிரபு,Minister Prabhu,Mineral exports</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/wkqq5hmv/Minister-Prabhu.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Prabhu- TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/wkqq5hmv/Minister-Prabhu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் இன்று  ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை மானிய கோரிக்கை மீதான  விவாதத்தில்  திமுக முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி பேசினார் அப்போது அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார். இதற்கு அமைச்சர் என் ஆனந்த் அவ்வப்போது விளக்கம் அளித்தார்.</p><p>அப்போது நடந்த விவாதம்:-</p><p>அமைச்சர் என் ஆனந்த்:- அண்ணனின்  மாவட்டம்  கொடைக்கானலில் தாண்டிக்குடி பகுதிக்கு எங்கள் தலைவர் ஒரு முறை படப்பிடிப்புக்கு சென்றுவிட்டு    கீழே  இறங்கி வரும் போது ஒரு மணி நேரம் தனியாக நடந்து வந்தார். ஆனால் அங்கு ஒரு பகுதியில் சாலை வசதியில்லை. அங்கு நம்ம சொந்த செலவில் சாலை போட்டுவிடலாமா என கேட்டார்.</p><p>அப்போது நம்மை பேனர் வைக்கவே விடமாட்றாங்க. ரோடு எப்படி போடுறதுனு கேட்டேன். நான் பதவியேற்ற 5 வது நாள் அந்த தாண்டிக் குடி கிராமத்திற்கு சாலை போட வேண்டும் என முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து உத்தரவு வந்தது . இன்னிக்கு 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அங்கு வேலை தொடங்கியுள்ளது.</p><p>நூறு நாட்கள் திட்டத்திற்கு ரூ.12,600 கோடி வேண்டும்.  ரூ 7,586 கோடியில் தமிழக அரசு முதல் அமைச்சர் 5057 கோடி ஒதுக்கி இருக்கிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>கண்டிப்பாக 150 நாட்கள் வேலை கொடுக்கப்படும் என்பதை இந்த நேரத்துல நாங்கள் தெரிவித்துகொள்கிறேன். இது செய்ய முடியுமா அப்படி என்றெல்லாம், பணம் இருக்குதா என்றெல்லாம் பார்த்து தான், ஒவ்வொரு திட்டத்தையும் தினந்தோறும் செயல்படுத்தும் முதல்வர் தான் எங்களுடைய முதல்வர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். </p><p>எங்களுக்கு தெரியும் எப்படி பேசணும் இப்ப எப்படி ஆட்சி இருக்கின்றது என்பது.எல்லாம் உங்களுக்கு தெரியும். அதனால அதெல்லாம் கருத்தில் கொண்டு சொல்லுங்கள்.</p><p>மக்களுக்கு சேவை செய்வதற்காக வந்திருக்கிறவர் தான் எங்கள் முதல்வர். அதனால தான் இந்த மாதிரி எல்லாம் தயவு செய்து சொல்லாதீங்க.</p><p>நாங்க எல்லாம் சொல்ல ஆரம்பித் தோம் அப்படின்னா நிறைய விஷயங்கள் நாங்கள் பேச வேண்டியதாக இருக்கும். ஆகவே நீங்கள் எந்த ஒரு ஆலோசனையாக இருந்தாலும் நீங்கள் அதை தாராளமா சொல்லுங்கள் எங்களுடைய முதல்வர் 234 சட்டமன்ற தொகுதிக்கும் முதல்வர்.</p><p>மக்களுக்கு என்ன பிரச்சனை மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து அதை மட்டும் செய்யக்கூடிய முதல்வராக இருப்பார் </p><p> நான் அடிக்கடி  உங்களிடம்  குறுக்கிட சங்கடமாக இருக்குது அதனால தயவு செய்து நீங்கள் எதுவாக இருந்தாலும் எந்த ஒரு விஷயம் ஆனாலும் உங்களுடைய தொகுதி விஷயம் உங்களுடைய மாவட்ட விஷயங்கள் எதுவாக இருந்தாலும் நீங்கள் சொல்லுங்கள் நாங்கள் செய்து தர தயாராக இருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>அமைச்சர் பிரபு :</p><p>இதுவரைக்கும் தமிழக வரலாற்றிலேயே நம்ம மக்களுக்கான சேவையை பூர்த்தி செய்வதற்கு இங்கு உள்ள கனிம வளங்களை நம்ம மக்களுக்கு கொடுக்கணும் அப்படிங்கற ஒரு நோக்கத்தோடு அண்டை மாநிலத்திற்கு செல்லும் கனிம வள த்திற்கு தடை போட்ட ஒரே முதலமைச்சர் நமது தமிழக முதலமைச்சர்.</p><p>இவ்வாறு விவாதம் நடந்தது.</p>]]></content:encoded></item><item><title>தமிழர்கள் படுகொலையை தமிழக அரசு கண்டிக்கக் கூடாதா?: சி.பி.ஐ விசாரணை நடத்த அரசு வலியுறுத்த வேண்டும்!- அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-government-must-insist-on-a-cbi-inquiry-for-tamilis-shotdead-case</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-government-must-insist-on-a-cbi-inquiry-for-tamilis-shotdead-case#comments</comments><guid isPermaLink="false">1aa87ca9-01ae-4b12-837c-a10099f29946</guid><pubDate>Wed, 19 Aug 2026 06:58:16 +0000</pubDate><atom:updated>2026-08-19T06:58:16.395Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,சிபிஐ,cbi,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,தமிழர்கள் சுட்டுக்கொலை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/618hcgzw/Anbumaniramadoss0.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/618hcgzw/Anbumaniramadoss0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கர்நாடகத்தில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று கர்நாடக அரசையும், மத்திய அரசையும் வலியுறுத்த வேண்டும்.</strong></em></p><p>பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>கர்நாடக வனப்பகுதியில் <a href="https://www.maalaimalar.com/topic/தமிழர்கள்-சுட்டுக்கொலை">3 தமிழர்கள்</a> அம்மாநில வனத்துறையினரால் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டது  பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது கர்நாடகத்தின் சட்டம் &amp; ஒழுங்கு சார்ந்த விவகாரம் என்பதால் அது குறித்து தமிழக அரசோ, தமிழக அரசியல் கட்சிகளோ எந்தக் கருத்தும் தெரிவிக்கக்கூடாது என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியிருக்கிறார். தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்காக கண்டனம் தெரிவிக்கவும், சிபிஐ விசாரணை கோரவும் தமிழகத்திற்கு உரிமை இல்லை என்று கூறுவது கண்டிக்கத்தக்கது.</p><h2><strong>ஏற்றுக்கொள்ள முடியாது</strong></h2><p>கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,‘‘எந்த மாநிலமும் இன்னொரு மாநில நிர்வாகத்தில் தலையிட முடியாது. தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது கர்நாடகத்தின் சட்டம் &amp; ஒழுங்கு  பிரச்சனை என்பதால் அதில் தமிழக அரசு தலையிட முடியாது. தமிழ்நாடு அதன் நிர்வாகத்தைப் பார்த்துக் கொள்ளட்டும்; நாங்கள் எங்கள் நிர்வாகத்தைப் பார்த்துக் கொள்கிறோம்’’ எனக் கூறியுள்ளார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது.</p><p>சாம்ராஜ்நகர் மாவட்ட வனப்பகுதியில் 3 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை அம்மாநிலத்தின் சட்டம் &amp; ஒழுங்கு சார்ந்த சிக்கல் என்று கூறுவதே இந்த விவகாரத்தை திசை திருப்பும் செயலாகும். காணாமல் போன மாடுகளை தேடிச் சென்ற 3 தமிழர்கள் கர்நாடக வனத்துறையினரால் கொடூரமான முறையில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்கள். இதற்கு ஒவ்வொரு நாளும் புதிய ஆதாரங்கள் கிடைத்து வருகின்றன. சாம்ராஜ்நகர் மாவட்ட பொறுப்பு அமைச்சர்  புட்டரங்கா ஷெட்டி,  மதச்சார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்த ஹானூர் சட்டப்பேரவை  உறுப்பினர் மஞ்சுநாத்  ஆகியோர் வனத்துறையினரின்  விளக்கத்தை ஏற்க மறுத்திருக்கிறார். அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தமது சொந்த நிதியிலிருந்து தலா ரூ.10 லட்சம் வழங்கியிருக்கிறார்.</p><p>3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்திலிருந்து புத்தம் புதிய காலணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றை உயிரிழந்தவர்களில் ஒருவர் அணிந்திருக்கிறார். கொல்லப்பட்டவர்கள் மான் வேட்டையில் ஈடுபட்டு இருந்தால் புதிய காலணிகள் கரைபடாமல் இருக்க வாய்ப்பில்லை என காவல்துறை அதிகாரிகளில் சிலரே கூறியுள்ளனர். இந்த ஐயங்களை போக்க வேண்டியது கர்நாடக அரசின் கடமை ஆகும். ஆனால், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி வழங்குவதற்கு பதிலாக உண்மையை மூடி மறைக்க கர்நாடக அரசு முயல்கிறது. இத்தகைய தருணத்தில் கொல்லப்பட்ட தமிழர்கள் குடும்பங்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டியது தமிழக அரசு மற்றும் தமிழக அரசியல் கட்சிகளின் கடமை ஆகும். இதை செய்யக்கூடாது என்று சொல்ல இந்தியா சர்வாதிகார நாடும் அல்ல... கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் சர்வாதிகாரியும் இல்லை என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும்.</p><p>ஒரு மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்களோ, ஓர் இனத்தைச் சேர்ந்தவர்களோ இன்னொரு மாநிலத்தில் அல்லது நாட்டில் தாக்கப்படும் போது அல்லது படுகொலை செய்யப்படும் போது, அதைக் கண்டிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்தவும்  பாதிக்கப்பட்டவர்களின் பூர்வீக மாநிலம் அல்லது இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு உண்டு. கடந்த காலங்களில் இலங்கையில் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது அதை தமிழ்நாட்டு அரசும், மக்களும் கண்டித்துள்ளனர். அதைத் தொடர்ந்து ஈழத்தமிழர் சிக்கலில் மத்திய அரசே தலையிட்டு நடவடிக்கை எடுத்த வரலாறு உண்டு. காவிரி பிரச்சினையில் கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்ட போதும் அதை தமிழ்நாடு கண்டித்திருக்கிறது. காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் 1991&amp;92ஆம் ஆண்டில் கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்ட போது, பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களில்  பாட்டாளி மக்கள் கட்சியினர் 05.01.1992-ஆம் நாள் கர்நாடகத்தை நோக்கி அணிவகுத்துச் சென்ற வரலாறு உண்டு.</p> <p>கடந்த பத்தாண்டுகளில் கோவா மாநிலத்தில் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் பலமுறை தாக்கப்பட்ட போது அதற்கு கர்நாடக சட்டப்பேரவையே கண்டனம் தெரிவித்திருக்கிறது. 2008-ஆம் ஆண்டு மும்பையிலும், மராட்டியத்தின் பிற பகுதிகளிலும் பிகாரைச் சேர்ந்தவர்கள் தாக்கப்பட்ட போது, அதற்கு அப்போதைய மத்திய அமைச்சர் லாலுபிரசாத் யாதவ், பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்ததும், அவர்களின் கோரிக்கையை ஏற்று மராட்டிய முதலமைச்சருக்கு அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் அவர்களே  கடுமையான வார்த்தைகளில் கடிதம் எழுதியதும் நடந்தது. அதனால், கர்நாடகத்தில் தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து பேசவும், நீதிக்காக போராடவும் தமிழக அரசுக்கும், மக்களுக்கும் அனைத்து உரிமைகளும் உண்டு.</p><p>எனவே, கர்நாடகத்தில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கர்நாடக அரசு நியாயமான நடவடிக்கை எடுக்கும் என்று இனியும் நம்பிக் கொண்டிருப்பது தவறு ஆகும். இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று கர்நாடக அரசையும், மத்திய அரசையும் வலியுறுத்த வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>கொல்கத்தா ஹோட்டலில் தீ விபத்து.. வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் உட்பட 9 பேர் உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/fire-accident-in-multi-storey-hotel-9-killed-including-bangladeshis</link><comments>https://www.maalaimalar.com/news/national/fire-accident-in-multi-storey-hotel-9-killed-including-bangladeshis#comments</comments><guid isPermaLink="false">c6f27add-2c89-466e-9240-1065efd801ad</guid><pubDate>Wed, 19 Aug 2026 06:53:53 +0000</pubDate><atom:updated>2026-08-19T06:53:53.066Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மேற்கு வங்கம்,கொல்கத்தா,Kolkata,hotel fire accident,west bengal,தீ விபத்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/tvbtkpha/Untitled-design-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து]]></media:title><media:description type="html"><![CDATA[ Kolkata Hotel Fire]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/tvbtkpha/Untitled-design-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">மேற்கு வங்கத்தில்</a> 5 மாடி ஹோட்டலில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு வயது குழந்தை உட்பட ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h3><strong>கொல்கத்தாவில் தீ விபத்து</strong></h3><p>மேற்கு வங்க மாநிலம் கொல்கதாவில் உள்ள ஹோட்டலில் இன்று அதிகாலை 1:45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.</p><p>இதையடுத்து <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">தீ விபத்து</a> ஏற்பட்ட பகுதிக்கு ஐந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு,  காவல்துறையினரும் பேரிடர் மேலாண்மை துறையினரும் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.</p><h3>வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் உயிரிழப்பு</h3><p>இந்த விபத்து குறித்து பேசிய அமைச்சர் கெளஷிக் செளத்ரி, “நாங்கள் இறந்தவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்த முயற்சித்து வருகிறோம். விபத்து ஏற்பட்ட இந்த கட்டிடத்தின் நிலை மிக மோசமாக உள்ளது.</p><p>தீ விபத்தில் நமது நாட்டை சேர்ந்தவர்களும் வங்கதேசத்தை சேர்ந்தவர்களும் உயிரிழந்துள்ளனர்.</p><p>இந்த கட்டிடத்திற்குள் பல ஹோட்டல்கள் உள்ளன. இங்கு என்ன நடக்கிறது என்பதை பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன்.</p><p>தீ விபத்திற்கான காரணம் மின்கசிவாக இருக்கலாம். ஆனால் தடயவியல் பரிசோதனை மூலம்தான் தீ விபத்துக்கான தெளிவான காரணம் தெரியவரும்.</p><p>கட்டிட நிர்வாகம் அடிப்படை பாதுகாப்பு மற்றும் கட்டுமான விதிமுறைகளை பின்பற்றவில்லை. ஹோட்டலின் செயல்பாட்டில் பல முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.</p><h3><strong>மீட்பு நடவடிக்கை</strong></h3><p>கொல்கத்தாவில் நடந்த தீ விபத்து குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஐந்து மாடி கட்டிடத்தில் இருந்து 80 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.</p><p>அடர்த்தியான புகை காரணமாக தீயணைப்பு வீரர்கள் படிக்கட்டுகளில் ஏறி மேல் தளங்களை அடைவது கடினமாக உள்ளது.</p><p>விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. </p><p>சிக்கியவர்களை மீட்பதும், தீ விபத்திற்கான காரணங்களை கண்டறிவதுமே எங்களின் முன்னுரிமையாக உள்ளது.</p><p>கட்டிட உரிமையாளருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவருக்கு எதிரான நடவடிக்கைகளை காவல்துறை தொடங்கி உள்ளது” என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>103 வயதில் ரூ.1.54 லட்சம் நிதி உதவி அளித்த மூதாட்டி - தனது வாழ்நாள் சேமிப்பை அப்படியே வழங்கினார்! </title><link>https://www.maalaimalar.com/news/national/103-year-old-woman-donates-life-savings-for-assam-flood-victims</link><comments>https://www.maalaimalar.com/news/national/103-year-old-woman-donates-life-savings-for-assam-flood-victims#comments</comments><guid isPermaLink="false">57656c8e-3f5e-4615-abb8-f5d42b5b2181</guid><pubDate>Wed, 19 Aug 2026 06:51:21 +0000</pubDate><atom:updated>2026-08-19T06:51:21.129Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நிதியுதவி,Assam Flood,அசாம் வெள்ளம்,kanaklatha das,flood donation,கனக்லதா தாஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/zq750yas/Untitled-design-9.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அசாம் வெள்ள நிதியுதவி]]></media:title><media:description type="html"><![CDATA[ Assam Flood Relief]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/zq750yas/Untitled-design-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D">அசாமில்</a> வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நன்கொடையாக 1.54 லட்சம் ரூபாயை 103 வயது மூதாட்டி அளித்துள்ளார்.</p><h3>கமிஷனர் அலுவலகம் சென்ற மூதாட்டி</h3><p>அசாம் மாநிலம் சிராஜூலியில் உள்ள மஜ்ரோய்மாரி கிராமத்தில் கனக்லதா தாஸ் என்ற மூதாட்டி வசித்து வருகிறார். </p><p>சமீபத்தில் கிழக்கு அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தை தொடர்ந்து, அந்த பகுதியில் உள்ள குடும்பங்களை சேர்ந்தவர்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.</p><p>இதையடுத்து அந்த பகுதி மக்கள் எதிர்கொள்ளும் துயரங்கள் குறித்து அறிந்து, 264 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கமிஷனர் அலுவலத்திற்கு மூதாட்டி சென்றார்.</p><h3>நிதி உதவி</h3><p>தான் பல ஆண்டுகளாக சேமித்த 1.54 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு கமிஷனர் அலுவலத்திற்கு நேரில் சென்றார்.</p><p>அங்கு, ஆணையர் மிருதுல் யாதவை நேரில் சந்தித்து, தனது வாழ்நாள் சேமிப்பில் இருந்து முழுவதுமாக எடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 77 குடும்பங்களுக்கு தலா ரூபாய் 2,000 வீதம் நிதி உதவியாக வழங்கினார்.</p><h3><strong>மூதாட்டியிடம் ஆசி பெற்ற மாவட்ட ஆணையர்</strong></h3><p>மூதாட்டி அளித்த இந்த நிதியுதவி குறித்து மாவட்ட ஆணையர் கூறுகையில், “எனது இத்தனை ஆண்டுகால சேவையில், இத்தகைய தூய்மையான மற்றும் தன்னலமற்ற மனிதநேயமிக்க செயலை நான் அரிதாகவே பார்த்துள்ளேன்.</p><p>உண்மையான கருணை மற்றும் குடிமை பொறுப்பு என்றால் என்ன என்பதை கனகலதா தாஸ் எங்களுக்கு கற்று கொடுத்துள்ளார்.</p><p>இன்று எனக்கு இவர் அளித்த ஆசி, நான் பெறக்கூடிய எந்தவொரு கெளரவத்தையும் விட மதிப்பு வாய்ந்தது” என்று ஆணையர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>திமுக இனி எந்த காலத்திலும் ஆட்சிக்கு வர முடியாது- அமைச்சர் ஆனந்த்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-can-never-come-to-power-again-says-minister-anand</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-can-never-come-to-power-again-says-minister-anand#comments</comments><guid isPermaLink="false">38c1639c-93e7-4356-9864-2ecfcadb9989</guid><pubDate>Wed, 19 Aug 2026 06:46:07 +0000</pubDate><atom:updated>2026-08-19T06:46:07.772Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆதவ் அர்ஜூனா,தமிழக சட்டசபை,TN assembly,Adhav Arjuna,Minister Anand,அமைச்சர் ஆனந்த்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/5o327yst/ANand.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Adhav- Minister Anand-DMK MLA E.V.Velu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/5o327yst/ANand.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் இன்றைய கூநீர்வளம், ஊரக வளர்ச்சி மானியக் கோரிக்கையை அமைச்சர் ஆனந்த் தாக்கல் செய்தார். இதைதொடர்ந்து, நீர்வளத்துறை மீதான மானிய கோரிக்கை மீது விவாதம் தொடங்கியது.</p><p>அப்போது, தமிழக சட்டசபையில் இன்று என்ன கத்தினாலும், கனவு கண்டாலும் திமுக இனி ஆட்சிக்கு வர முடியாது என அமைச்சர் ஆனந்த் கூறியுள்ளார்.</p><p>நாங்கள் யாரும் தவறு செய்ய மாட்டோம் என திரும்ப திரும்ப சொல்கிறேன் என அமைச்சர் ஆனந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.</p><h2>அமைச்சர் மரியவில்சன்</h2><p>திமுக ஆட்சியில் தரமற்ற முறையில் தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்ட பாலம் 3 மாதத்தில் இடிந்தது.</p><h2>திமுக எம்எல்ஏ எ.வ.வேலு</h2><p>வரலாறு காணாத அளவுக்கு மழை, வெள்ளப்பெருக்கு அணை இடிந்தது. வரலாறு காணாத அளவுக்கு நீர் வந்ததநன் கரணமாகத்தான் தென்பெண்ணையில் கட்டப்பட்ட பாலம் இடிந்தது.</p><p>தென்பெண்ணை ஆற்றில் 3 லட்சம் கன அடி நீர் கரைபுரண்டு ஓடியதால்தான் பாலம் இடிந்து விழுந்தது.</p><h2>அமைச்சர் ஆதவ்</h2><p>சோழர் கால கல்லணை இன்றும் தரமாக உள்ளது. நமது காலத்தில் தான் 3 மாதத்தில் பாலம் இடிந்து விழுகிறது.</p>]]></content:encoded></item><item><title>சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு: விஜய் முதலமைச்சராக தமிழகத்தை ஆட்சி செய்யப் போவது எப்போது?- டிடிவி தினகரன் கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-indictment-tvk-govt-6</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-indictment-tvk-govt-6#comments</comments><guid isPermaLink="false">ba661510-c74e-4f2f-a2ce-1063a5780b2c</guid><pubDate>Wed, 19 Aug 2026 06:40:18 +0000</pubDate><atom:updated>2026-08-19T06:40:18.925Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,AMMK,அமமுக,டிடிவி தினகரன்,tvk,TTTV Dhinakaran</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/8or528gb/TTVDhinakaran001.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/8or528gb/TTVDhinakaran001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழக மக்கள் அச்சமின்றி, பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தவெக அரசையும், முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.</strong></em></p><p>அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/டிடிவி-தினகரன்">டி.டி.வி.தினகரன்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>சென்னை வண்ணாரப்பேட்டை தங்கசாலை மேம்பாலம் அருகே உள்ள நகர்ப்புற வாழ்விடக் குடியிருப்புப் பகுதியில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதில், பொதுமக்கள் தங்களது உயிரைப் பாதுகாத்துக் கொள்ளப் பதற்றத்துடன் ஓடியதாக சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள காணொளிக் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன.</p><h2><strong>கவலை</strong> </h2><p>கடந்த இரு நாட்களில் மட்டும் காஞ்சிபுரம் அருகே இரட்டைக் கொலை, திருப்புவனம் அருகே இளைஞர் குத்திக் கொலை, நெய்வேலியில் இளைஞர் வெட்டிக் கொலை, திருப்பூர் அருகே வடமாநில இளைஞர் தலையில் கல்லைப் போட்டுக் கொலை என, தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கொலைச் சம்பவங்கள் நடைபெறாத நாட்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை சந்தி சிரிக்கும் அளவிற்குச் சென்றிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது.</p><p>அதேபோல  சேலம் வாழப்பாடியில் சமூகநீதி விடுதியில் தங்கி பயிலும் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல், தஞ்சாவூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை, சேலம் கொண்டலாம்பட்டியில் 14 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை, ஈரோடு அருகே 85 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது என, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தமிழகத்தில் சர்வசாதாரணமாக அரங்கேறிக் கொண்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.</p><h2><strong>காலக்கொடுமை</strong></h2><p>இப்படி, தினந்தோறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், போதைப்பொருட்களின் தாராளப் புழக்கம் என, ஒட்டுமொத்த தமிழகமும் பதற்றமான சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கும் நிலையில், தவெக அரசும் அதன் முதலமைச்சரும் தங்களது முதல் 100 நாள் அலங்கோல ஆட்சியை சாதனையாக அறிவித்து பல கோடி ரூபாய் செலவில் நாடு முழுவதும் விளம்பரப்படுத்திக் கொண்டிருப்பது காலக்கொடுமையாகும்.</p><p>ஆட்சிப் பொறுப்பேற்ற நாளிலிருந்து கால அவகாசம் தேவை என்பதையும், தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் குற்றச் சம்பவங்களுக்கு முந்தைய ஆட்சியாளர்களே காரணம் என்பதையும் வாடிக்கையாகக் கூறி வரும் தமிழக முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், எப்போது தான் தமிழகத்தை ஆட்சி செய்யத் தொடங்குவார்? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.</p><p>எனவே, குற்றச் சம்பவங்கள் அரங்கேறிய பின்னர் குற்றவாளிகளைக் கைது செய்வதை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல், குற்றங்கள் நடைபெறுவதற்கு முன்பாகவே அவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழக மக்கள் அச்சமின்றி, பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தவெக அரசையும், முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார்... &apos;இன்னோவா&apos; காரா கொடுத்தா நல்லாருக்கும்- அப்ளிகேஷன் போட்ட உறுப்பினர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/assembly-members-thanks-to-cm-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/assembly-members-thanks-to-cm-vijay#comments</comments><guid isPermaLink="false">7b5484dc-445b-4e24-9aa3-036c05fac6fd</guid><pubDate>Wed, 19 Aug 2026 06:24:42 +0000</pubDate><atom:updated>2026-08-19T06:24:42.029Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/a3a6396y/car.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/a3a6396y/car.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழக சட்டசபையில் முதலமைச்சர் இன்று 110 விதியின் கீழ் அறிவித்த அறிவிப்புக்கு சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் மகிழ்ச்சி தெரிவித்து நன்றி கூறினார்கள்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழக சட்டமன்றத்தில்</a> இன்று 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய், எம்எல்ஏக்களுக்கு கார் உள்ளிட்ட  பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.</p><p>அவர் அறிவிப்பை வெளியிடும் போதே விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் ஜோதிமணி பலமுறை எழுந்து கும்பிட்டபடியே நின்று கொண்டிருந்தார். <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/assembly-members-shocking-cm-vijay-announced">முதலமைச்சர்</a> பேசி முடித்ததும் அதன் பின்  ஜோதிமணி பேசியதாவது,</p><p>நான் வைத்த கோரிக்கையை ஏற்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் வழங்குவதாக அறிவித்துள்ள முதலமைச்சர் வாகனத்துக்கு ஓட்டுநர் மட்டுமின்றி மாத வாகன படி ரூ.75,000 அலுவலக உதவியாளருக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்ததை மிகவும் வரவேற்று நன்றி தெரிவிக்கிறேன்.</p><p>நான் கேட்டதை நிறைவேற்றி தந்த முதலமைச்சருக்கும் பேரவை தலைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார். </p><h2><strong>தாரகை கத்பட் (காங்கிரஸ்)</strong></h2><p>முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு  புல்லரிக்கக் கூடிய விஷயம். சட்டசபைக்கு பொருளாதாரப் பின்புறம் இல்லாத சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் வந்துள்ளார்கள். அவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினருக்கான வாகனம்  ஓட்டுனர்களுக்கு  சம்பளம் உதவியாளர்களுக்கான சம்பளம் வழங்கி இருப்பதற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.  இது எதிர்க்கட்சிக்கு கூட சந்தோஷமான ஒரு விஷயம்தான். ஆனால் அவர்களால் வெளிப்படுத்த முடியாது.  நாங்கள் அங்கிருந்தாலும் அதைத்தான் செய்வோம்.</p><p>இந்த அரசு மக்களுக்கான அரசு என்பதை நிரூபித்துள்ளது. முதலமைச்சர் காப்பீடு திட்டம் 5 லட்சம் ரூபாயில் இருந்து 25 லட்ச ரூபாய் உயர்த்தப்பட்டது. அனைத்து மக்களுக்கும் காப்பீடு திட்டத்தை பற்றி விரிவாக தெரிவிக்கப்படும்..</p><p>முதலமைச்சருக்கு காங்கிரஸ்  கட்சியின் சார்பாக எங்களுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார்.</p><h2><strong>செல்லசுவாமி (சி பி எம் )</strong></h2><p>பால் கொள்முதல் விலை அதிகரிப்பு அதேபோல  கார் தொடர்பாக அறிவிப்பு இன்பமாக இருக்கிறது. ஏற்கனவே முன் காலத்தில் ஊதிய உயர்வு கொடுத்த போது இது போன்ற சலுகைகள் வழங்க வேண்டும் என்று கூறிய போதும் மக்களின் வரி பணத்தில் இருந்து கொடுப்பது ஏற்புடையது இல்லை என்று சொல்லுவோம். ஒட்டுமொத்தமாக முதலமைச்சரின் எண்ணத்தை பாராட்டுகிறோம்.</p><p>எங்கள் கட்சியின் நிலைப்பாடு சம்பந்தமாக என்ன என்பதைக் கேட்டு அதை நாங்கள் உட்படுவோம்  அறிவிப்பிற்கு நன்றி கூறுகிறோம்.</p><h2><strong>கல்லாணை (த.வெ.க)</strong></h2><p>மதுரை ராஜாஜி மருத்துவமனை புற்றுநோய் பிரிவு அறிவிப்பிற்கு நன்றி  முதல்வர் கொடுக்கும் காரில் செல்வது மகிழ்ச்சி. அனைத்துக்கும் நன்றி.</p><h2><strong>பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்</strong></h2><p>பால் கொள்முதல் விலையை முதலமைச்சர் ஏற்றி தந்து உள்ளார். மருத்துவ துறையில் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்துள்ளார். எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனமும் உதவியாளரும் வழங்கியுள்ளார். இதற்கு இரு கரங்களைக் கூப்பி வணங்குகின்றோம்.</p><p>இது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமல்ல மறைமுகமாக ஓட்டுநர்களுக்கு வேலைவாய்ப்பு உதவியாளர்களுக்கு வேலை வாய்ப்பு, சுற்றி சுற்றி பம்பரமாய் வேலை செய்வதற்காக புதிய வாகனத்தை தந்துள்ளார். </p><p>என்ன தருவார் எதை தருவார் என்று எண்ணுவதற்கு முன்னே பொன்னை தருவார் பொருளை தருவார். போதாது போதாது என்றால் தன்னையே தரக்கூடிய முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி.</p><h2><strong>சத்தியபாமா (த வெ க )</strong></h2><p>மக்களுக்காக பணியாற்ற வேண்டும். அதில் எந்தவித தொய்வும் ஏற்பட்டுவிடக்கூடாது என முதலமைச்சர் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் கொடுத்தது இன்ப அதிர்ச்சியை வழங்கி உள்ளார். அவருக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2><strong>பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி</strong></h2><p>பால் உற்பத்தியாளரின் கோரிக்கை அறிந்து தாயுள்ளத்தோடு அவர்களுக்கு பால் கொள்முதல் விலையை உயர்த்தியதற்கு நன்றி.</p><h2><strong>மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)</strong> </h2><p>கரும்பு கொள்முதல்களை உயர்த்தியது மட்டுமின்றி பால் கொள்முதல் விலையை உயர்த்தி விவசாயிகளின் வயிற்றில் பால்  வார்த்துள்ளார். அவருக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2><strong>காங்கிரஸ் எம்எல்ஏ</strong></h2><p>கொடுக்குறதுதான் கொடுக்குறீங்க 'இன்னோவா' காரா கொடுத்தா நல்லாருக்கும் என்றார். </p><h2><strong>சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான்</strong></h2><p>பால் கொள் முதல் விலை உயர்வு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்குவது, ஒரே நாளில் அடுத்தடுத்த அறிவிப்புகள் பெறுவதும், மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு முதலமைச்சருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2><strong>பா.ம.க கணேஷ்குமார்</strong></h2><p>சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் மட்டுமில்லாமல் உதவியாளர் என சிறப்பு அறிவிப்பு செய்து இருப்பது வரவேற்கத்தக்கது. அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இருக்க வேண்டும் என்றார். </p><h2><strong>சபாநாயகர்</strong></h2><p>அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தான் வாகனம் தருகிறார்கள்.</p><h2><strong>கணேஷ்குமார்</strong></h2><p>முதலமைச்சருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை  தெரிவித்துக் கொள்கிறேன். மக்களை நோக்கி செல்லும் எங்கள் பயணத்திற்கு வேகம் வழங்கி இருப்பதைதான் நாங்கள் பார்க்கிறோம் என்றார். </p><h2><strong>பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன்</strong></h2><p>கல்லூரியில் காதல் தோல்வியடைந்த எனக்கு வேலையும் இல்லை காரும் இல்லை. தற்போது முதல்வர் எனக்கு வேலையும் வழங்கியிருக்கிறார். காரும் வழங்கியுள்ளார் என்றார்.</p><h2><strong>சமூக நீதி துறை அமைச்சர் வன்னியரசு</strong></h2><p>ரூ. 5 லட்சம் காப்பீட்டை அதிகரித்து கொடுங்கள் என எங்கள் தலைவர் கேட்டதுண்டு அதை அதிகரித்து கொடுத்துள்ளார். இது வரவேற்கத்தக்க ஒன்று என்றார்.</p>]]></content:encoded></item><item><title>நீர்வளம், ஊரக வளர்ச்சி மானியக் கோரிக்கை: திமுக - தவெக இடையே காரசார விவாதம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rural-development-water-resources-grant-request-dmk-tvk-clash</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rural-development-water-resources-grant-request-dmk-tvk-clash#comments</comments><guid isPermaLink="false">d4a0f70b-684f-4c8f-8985-019a74c9c705</guid><pubDate>Wed, 19 Aug 2026 06:04:56 +0000</pubDate><atom:updated>2026-08-19T06:04:56.928Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,I Periyasamy,TN assembly,அமைச்சர் ஐ.பெரியசாமி,Minister Anand,அமைச்சர் ஆனந்த்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/2jwb585h/I-Periyasamy.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister N.Anand- I.Periyasamy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/2jwb585h/I-Periyasamy.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் இன்றைய கூநீர்வளம், ஊரக வளர்ச்சி மானியக் கோரிக்கையை அமைச்சர் ஆனந்த் தாக்கல் செய்தார்.</p><p>இதைதொடர்ந்து, நீர்வளத்துறை மீதான மானிய கோரிக்கை மீது விவாதம் தொடங்கியது.</p><h2>திமுக எம்எல்ஏ ஐ.பெரியசாமி உரை:</h2><p>திமுக ஆட்சியில வருடத்திற்கு 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. திமுக ஆட்சியில் அனுமதிக்கப்பட்ட வீடுகள் அடித்தளத்துடன் நிற்கின்றன.</p><p>தொகையை உயர்த்தி எண்ணிக்கையை குறைத்துவிட்டனர்.</p><h2>அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்:</h2><p>திமுக ஆட்சியில் வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கவில்லை. வீடு கட்ட திமுக ஆட்சியில் கொடுத்த ரூ.3.5 லட்சம் போதுமானதாக இல்லை.</p><p>வீடுகள் முறையாக கட்டப்பட்ட ரூ.5 லட்சம் வழங்குகிறது தவெக அரசு.</p><h2>ஐ.பெரியசாமி: </h2><p>தற்போது எம் சாண்ட் விலையை தாறுமாறாக உயர்த்தி உள்ளனர். ஜல்லி விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.</p><p>வீடு கட்டும் திட்டத்தில் பெயரை மாற்றி விட்டு வீடுகளின் எண்ணிக்கையை தவெக அரசு குறைத்துவிட்டது.</p><h2>அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்:</h2><p>திமுக ஆட்சியில் வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கவில்லை. வீடு கட்டும் திட்டத்தில் பல தவறுகள் நடந்துள்ளது என திட்டவட்டமாக நான் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>ஏற்கெனவே வீடு வைத்துள்ளவர்களுக்கு வீடு கட்டப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கியதற்கான ஆதாரம் உள்ளது.</p><h2>ஐ.பெரியசாமி</h2><p>அலுவலர்கள் தான் தேர்வு செய்கின்றனர். தவறு நடக்கிறது என்பதற்காக திட்டத்தை நிறுத்தக்கூடாது.</p><p>கட்சி, சாதி மத பாகுபாடின்றி விண்ணப்பித்த அனைவருக்கும் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு தருவதற்கு முயற்சி. கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், அரசுக்கான இழப்பை குறைக்க உதவும்.</p><p>வீடு பெறும் பயனாளிகளை தேர்ந்தெடுப்பது அதிகாரிகள் அடங்கிய குழு தான். வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.5 லட்சம் அரசு நிதி தந்தாலும் தற்போது விலை உயர்ந்துள்ளதால் நிதி பற்றாக்குறை தான்.</p><p>வீடு கட்டும் திட்டத்தில் பெயரை மாற்றிவிட்டு வீடுகளின் எண்ணிக்கையை தவெக அரசு குறைத்துவிட்டது.</p><h2>அமைச்சர் ஆனந்த்:</h2><p>திமுக ஆட்சியில் வீடுகள் முழுமையாக கட்டப்படவில்லை. மக்கள் இன்னும் குடிசையில் தான் வசிக்கின்றனர்.</p><h2>ஐ.பெரியசாமி:</h2><p>கொள்கை தலைவர் என சொல்கிறீர்கள், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை தமிழக அரசு வளர்ச்சி திட்டம் என மாற்றியது நியாயமா? மறுமலர்ச்சி திட்டத்தில் அண்ணாவின் பெயரை மாற்றியது வருத்தமாக உள்ளது.</p><h2>அமைச்சர் பிரபு:</h2><p>திமுக ஆட்சியில் ஆண்டுக்கு 100 கோடி மெட்ரிக் ஜல்லி உற்பத்தி, 85 கோடி டன் மெட்ரிக் டன் தான் பயன்படுத்தியுள்ளனர். </p><h2>அமைச்சர் ஆனந்த்:</h2><p>வீடு கட்டும் திட்டத்தில் பல தவறுகள் நடந்துள்ளது என திட்டவட்டமாக நான் தெரிவித்துக் கொள்கிறேன். </p>]]></content:encoded></item><item><title>சத்துணவில் உப்புக்கு பதிலாக டிடர்ஜென்ட் பவுடர் - 40 பள்ளி மாணவர்களின் உடல்நலம் பாதிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/detergent-mistaken-for-salt-in-school-meal-40-students-hospitalised</link><comments>https://www.maalaimalar.com/news/national/detergent-mistaken-for-salt-in-school-meal-40-students-hospitalised#comments</comments><guid isPermaLink="false">1b2b3180-62e6-4a7b-b3e3-297cdda77c4b</guid><pubDate>Wed, 19 Aug 2026 06:01:43 +0000</pubDate><atom:updated>2026-08-19T06:01:43.299Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பீகார்,Bihar,food poisoning,MidDay MealHorror,சத்துணவுவிபத்து,NalandaSchool,DetergentInFood,SchoolStudentsIll,மதியஉணவுஅலட்சியம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/m9373txt/Food-Poisoning" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Food Poisoning ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/m9373txt/Food-Poisoning?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">பீகார் </a>மாநிலம் நாலந்தா மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் வழங்கப்பட்ட மதிய சத்துணவில், உப்புக்கு பதிலாக தவறுதலாக டிடர்ஜென்ட் பவுடர் கலக்கப்பட்டதால், உணவை உண்ட 40-க்கும் மேற்பட்ட <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">பள்ளி மாணவர்கள்</a> கடுமையான வயிற்று வலி மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். </p><p>இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p><h2>என்ன நடந்தது?</h2><p>நாலந்தா மாவட்டம் நூர்சராய் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரசி நடுநிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை மதிய உணவு வழங்கப்பட்டது. அன்றைய தினம் மாணவர்களுக்கு சோயாபீன்ஸ் கூட்டு பரிமாறப்பட்டது.</p><p>உணவை சாப்பிட்ட மாணவர்கள், அதில் உப்பு குறைவாக இருப்பதாக சமையலரிடமும் ஆசிரியர்களிடமும் கூறியுள்ளனர். அப்போது, சமையல் அறையில் இருந்த ஊழியர்கள், உப்புக்கு பதிலாக அங்கிருந்த டிடர்ஜென்ட் பவுடரை தவறுதலாக எடுத்து மாணவர்களுக்குப் பரிமாறியுள்ளனர். </p><p>அது சலவை தூள் என்று தெரியாமல் மாணவர்களும் உணவோடு சேர்த்து அதனைச் சாப்பிட்டுள்ளனர்.</p><h2>மருத்துவமனையில் குவிந்த பெற்றோர்:</h2><p>டிடர்ஜென்ட் பவுடர் கலந்த உணவைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே, மாணவர்களுக்கு அடுத்தடுத்து கடுமையான வயிற்று வலியும், வாந்தியும் ஏற்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 40 மாணவர்கள் மயங்கி விழுந்ததால் பள்ளியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.</p><p>உடனடியாக பள்ளி நிர்வாகத்தினர் அனைத்து மாணவர்களையும் மீட்டு 'பீகார் ஷெரீஃப் மாதிரி மருத்துவமனைக்கு' சிகிச்சைக்காக அவசர அவசரமாக அனுமதித்தனர். </p><p>இந்த தகவல் காட்டுத்தீ போல பரவியதால், அதிர்ச்சியடைந்த பெற்றோர்களும், உறவினர்களும் மருத்துவமனை வளாகத்தில் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.</p><h2>அமைச்சரின் அதிரடி ஆய்வு மற்றும் எச்சரிக்கை:</h2><p>பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நாலந்தா மாவட்ட சிவில் சர்ஜன் டாக்டர் ஜெய் பிரகாஷ் சிங் தலைமையிலான மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். "தற்போது அனைத்து குழந்தைகளும் ஆபத்து கட்டத்தைத் தாண்டி பாதுகாப்பாக உள்ளனர். தொடர்ந்து அவர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்" என்று சிவில் சர்ஜன் தெரிவித்துள்ளார்.</p><p>இச்சம்பவம் குறித்து அறிந்த பீகார் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஷ்ரவண் குமார் நேரடியாக மருத்துவமனைக்கு விரைந்து சென்று, சிகிச்சை பெற்று வரும் மாணவர்களைச் சந்தித்து நலம் விசாரித்தார்.</p><p>செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஷ்ரவண் குமார், "மாணவர்களுக்குத் தரமான சிகிச்சை வழங்க மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. </p><p>பள்ளி மதிய உணவு தயாரிப்பிலும், அதனைப் பரிமாறுவதிலும் இவ்வளவு பெரிய அலட்சியமாகச் செயல்பட்டவர்கள் மீது மிகக் கடுமையான சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதியளித்தார்.</p><h2>கேள்விக்குறியாகும் மாணவர்களின் பாதுகாப்பு:</h2><p>மதிய உணவு சமைக்கும் இடத்தில், உணவுப் பொருட்களுக்கு அருகில் டிடர்ஜென்ட் பவுடர் ஏன் வைக்கப்பட்டது? மற்றும் அதனைச் சோதிக்காமல் மாணவர்களுக்கு எப்படிப் பரிமாறினார்கள் என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். </p><p>ஏழை எளிய அரசுப் பள்ளி மாணவர்களின் உயிருடன் விளையாடிய இந்த அலட்சியப் போக்கு பீகாரில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஊழல் தொடர்பான அனைத்து ஆதாரங்களும் என் மேஜையில் தான் உள்ளது- முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-says-all-the-evidence-regarding-the-corruption-is-right-here-on-my-desk</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-says-all-the-evidence-regarding-the-corruption-is-right-here-on-my-desk#comments</comments><guid isPermaLink="false">1bf8ee24-370a-4881-8166-0d610eecddfa</guid><pubDate>Wed, 19 Aug 2026 05:52:47 +0000</pubDate><atom:updated>2026-08-19T05:52:47.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,I Periyasamy,TN assembly,ஐ பெரியசாமி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/hu5iwaxe/vijay02.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/hu5iwaxe/vijay02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மக்களிடம் என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என்று எனக்கு தெரியும், பேசிவிட்டு தான் வந்துள்ளேன். நான் பேசுவேன், ஆனால் இடைத்தேர்தலிலாலவது சிலருக்கு நல்லது நடக்க வேண்டும் இல்லையா? என்றார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழ்நாடு சட்டசபையில்</a> மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, தி.மு.க. எம்.எல்.ஏ. ஐ. பெரியசாமி பேசுகையில், வீடு கட்டும் திட்டத்தில் பெயரை மாற்றி விட்டு வீடுகளின் எண்ணிக்கையை தவெக அரசு குறைத்து விட்டது என்றார். </p><p>அதற்கு அமைச்சர் ஆனந்த், வீடு கட்டும் திட்டத்தில் பல தவறுகள் நடந்துள்ளது என திட்டவட்டமாக நான் தெரிவித்துக் கொள்கிறேன்  என்றார். அதனை தொடர்ந்து பேசிய எம்.எல்.ஏ. ஐ. பெரியசாமி, அலுவலர்கள் தான் தேர்வு செய்கின்றனர். தவறு நடக்கிறது என்பதற்காக திட்டத்தை நிறுத்தக்கூடாது. கட்சி, சாதி மத பாகுபாடின்றி விண்ணப்பித்த அனைவருக்கும் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு தருவதற்கு முயற்சி. கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், அரசுக்கான இழப்பை குறைக்க உதவும். வீடு பெறும் பயனாளிகளை தேர்ந்தெடுப்பது அதிகாரிகள் அடங்கிய குழு தான் என்று பேசினார். </p><p>இதையடுத்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், </p><p>சமஸ் தொகுத்த ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ புத்தகத்தை எ.வ.வேலு குறிப்பிட்டிருந்தார். விஜய் 100 : ஊழலுக்கு எதிரான ஓர் அடி என சமஸ் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். என்ன பேசினாலும் ஆதாரம் காட்டுங்கள் என எதிர்க்கட்சியினர் சொல்கிறார்கள். கடந்த ஆட்சியில் தவறுகள் ஏற்பட்டிருக்கலாம் என ஒப்புக்கொண்ட ஐ.பெரியசாமிக்கு நன்றி என்றார். </p><p>இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் பேசுகையில், </p><p>முந்தைய ஆட்சியில் 3 துறைகளை ஆய்வு செய்த அறிக்கை என் மேஜையில் உள்ளது. கோப்புகள் என்னிடம் இருப்பதாக நிதியமைச்சர் கூறியிருந்தார். அது உண்மை தான். ஆதாரங்கள் அனைத்தும் என் மேஜையில் தான் உள்ளது. அந்த கோப்புகளை ஓபன் செய்ய வைத்துவிடாதீர்கள், எப்போது திறக்க வேண்டுமோ அப்போது திறப்போம்.  மக்களிடம் என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என்று எனக்கு தெரியும், பேசிவிட்டு தான் வந்துள்ளேன். நான் பேசுவேன், ஆனால் இடைத்தேர்தலிலாலவது சிலருக்கு நல்லது நடக்க வேண்டும் இல்லையா? என்றார். </p><p>எம்எல்ஏ ஐ பெரியசாமி பேசுகையில்,  நான் அன்பாக, அக்கறையாக, ஆசையாக பேசியதால் தான் மக்கள்  என்னை 7 முறை எம்எல்ஏவாக வெல்ல வைத்துள்ளனர் என்றார். </p>]]></content:encoded></item><item><title>பால் கொள்முதல் விலை ரூ.3  உயர்வு போதுமானதல்ல: லிட்டருக்கு குறைந்தது 7 ரூபாயாவது உயர்த்த வேண்டும்!- அன்புமணி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-price-must-be-raised-by-at-least-7-rupees-per-litre</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-price-must-be-raised-by-at-least-7-rupees-per-litre#comments</comments><guid isPermaLink="false">b16f33b7-b906-41d5-8a23-1dc7002b4386</guid><pubDate>Wed, 19 Aug 2026 05:27:54 +0000</pubDate><atom:updated>2026-08-19T05:27:54.025Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,ஆவின் பால் கொள்முதல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/skdyp5yo/anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/skdyp5yo/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு வரவேற்கத்தக்கது என்றாலும் இது போதுமானது அல்ல என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.</strong></em> </p><p>தமிழக சட்டசபையில் இன்று <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-chief-ministers-medical-insurance-coverage-raised-to-rs-25-lakh">முதலமைச்சர் விஜய்</a> 110 விதியின் கீழ், ஆவின் பால் கொள்முதல் விலையை ரூ.38-ல் இருந்து ரூ.41 ஆக உயர்த்தப்படும் என்று அறிவித்தார். </p><p>இதுதொடர்பாக பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>போதுமானது அல்ல</strong></h2><p>தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்படும் பாலின் விலை லிட்டருக்கு  ரூ.3  உயர்த்தப்பட்டிருக்கிறது. பாலுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த கொள்முதல் விலை 35 ரூபாயிலிருந்து 36 ரூபாயாகவும்,  ஊக்கத்தொகை ரூ.3-லிருந்து  ரூ.5 ஆகவும் உயர்த்தப்படும்  என்று  முதலமைச்சர் விஜய் அவர்கள் அறிவித்திருக்கிறார்.  பால் கொள்முதல் விலை உயர்வு வரவேற்கத்தக்கது என்றாலும் இது போதுமானது அல்ல.</p><p>தமிழ்நாட்டில் பால் கொள்முதல் விலை கடந்த 4 ஆண்டுகளாக உயர்த்தப்படாததாலும், தனியார் நிறுவனங்கள் ஆவின் கொள்முதல் விலையை விட  லிட்டருக்கு  ரூ.12 வரை கூடுதலாக வழங்குவதாலும் ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு குறைந்தது ரூ.10 உயர்த்தி வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வந்தது. அந்த அளவுக்கு உயர்த்த முடியாவிட்டாலும் குறைந்தது லிட்டருக்கு  ரூ.7 அளவுக்காவது உயர்த்த அரசு முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>அதிமுக வெளிநடப்பு: தவெக ஆட்சி வந்த வேகத்தில் படுபாதாளத்திற்கு சென்றுவிடும்..!-எடப்பாடி பழனிசாமி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/aiadmk-stages-walkout-edappadi-says-tvk-government-heading-towards-ruin</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/aiadmk-stages-walkout-edappadi-says-tvk-government-heading-towards-ruin#comments</comments><guid isPermaLink="false">c96479d7-33b9-4c83-87b8-7b17d289d52c</guid><pubDate>Wed, 19 Aug 2026 05:23:59 +0000</pubDate><atom:updated>2026-08-19T05:23:59.863Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,ADMK,அதிமுக,எடப்பாடி பழனிசாமி,தமிழக சட்டமன்றம்,TN assembly,tvk</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/eymutj78/EPS.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Edappadi pazhanisami]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/eymutj78/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கவன ஈர்ப்பு தீர்மானங்களை விவாதத்திற்கு எடுக்க மறுத்ததால் அதிமுக எம்எல்ஏக்கள் முழக்கங்கள் எழுப்பி வெளிநடப்பு செய்தனர்.</p><p>கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து முழக்கங்கள் எழுப்பியவாறு அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.</p><p>இதைதொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><p>சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்து 5 நாட்களான பின்னும் விவாதத்திற்கு ஏற்க மறுக்கின்றனர்.</p><p>சவுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர் உடல் தாயகம் கொண்டு வருவது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம்.</p><p>தமிழர்களை காப்போம் என்று சொல்லும் தவெக அரசு சவுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் உடலை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை.</p><p>ஈரானிய கடற்கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக மீனவர் தொடர்பான கவன ஈர்ப்பை விவாதத்திற்கு ஏற்க மறுக்கின்றனர்.</p><p>கடற்கொள்ளையர்கள் சுட்டதில் ஒரு மீனவர் பலியான நிலையில் மேலும் 4 மீனவர்கள் சவுதியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p>அரசாங்கம் நடக்கவில்லை, ரீல்ஸ் மட்டும்தான் போடுகின்றனர். எதற்கு கத்துகிறார்கள் என தெரியாமலேயே கத்துகிறார்கள்.</p><p>எந்த அளவுக்கு வேகமாக தவெக ஆட்சி வந்துள்ளதோ, அதே வேகத்தில் படுபாதாளத்திற்கு சென்றுவிடும்.</p><p>மயிலாடுதுறையைச் சேர்ந்த மீனவர் உடலை மீட்பது தொடர்பான நடவடிக்கை எடுக்காமல் தவெக அரசு தட்டிக் கழிக்கிறது.</p><p>துப்பாக்கிச்சூட்டில் தமிழக மீனவர் உயிரிழப்பு குறித்து பேசும்போது தவெக எம்எல்ஏக்கள் சிரிக்கின்றனர்.</p><p>3 மீனவர்கள் உடல் ஒருவாரமாக தமிழகம் கொண்டுவர முடியாமல் தவிக்கின்றனர். இதைவிட என்ன முக்கியமானது உள்ளது.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item></channel></rss>