<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 31 Aug 2026 04:36:22 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: சாலை விரிவாக்கத்திற்கு விரைவில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா - 31 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-31-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-31-august-2026#comments</comments><guid isPermaLink="false">8cbab00b-8cfb-4b49-bbe3-619e9e0b783c</guid><pubDate>Mon, 31 Aug 2026 03:46:20 +0000</pubDate><atom:updated>2026-08-31T04:33:00.891Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/d2y0hkhh/aadhavarjuna.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/d2y0hkhh/aadhavarjuna.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சை தமிழ் பல்கலை. வளாகத்தில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கும் அறிவிப்பு திமுக ஆட்சியில் வெளியிடப்பட்டு நிலுவையில் உள்ளது.</p><p>கடந்த திமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட சோழர் அருங்காட்சியகம் திட்டத்தை கைவிடும் எண்ணம் இல்லை - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>புறவழிச்சாலை தொடர்பான கோரிக்கை முன்பே வந்துள்ளது. திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு விட்டது.</p><p>கிராமப்புற, நகர்ப்புற சாலைகளை நெடுஞ்சாலைகளுடன் முழுமையாக இணைப்பது தொடர்பாக கணக்கு எடுக்கப்படுகிறது - அமைச்சர் ஆதவ்</p><p>ஆலைகள் நிறைந்த தேன்கனிக்கோட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்க புறவழிச்சாலை தேவை - எம்எல்ஏ ராமச்சந்திரன்</p><p>ரூ.139 லட்சத்தில் பொதுப்பணித்துறை மூலம் முதல்கட்ட பணிகள் முடிக்கப்பட்டுள்ளது, விரைவில் திறக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்</p> <p>நாகப்பட்டினம் அரசு அருங்காட்சியகம் புதுப்பிக்கப்பட்டு விரைவில் திறக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்</p> <p>நாகை அருங்காட்சியகத்தை உரிய காலக்கெடு நிர்ணயித்து திறக்க வேண்டும்.</p><p>சோழர்காலத்தை சேர்ந்த ஆனைமங்கலம் செப்பேடுகளை நாகப்பட்டினம் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்த வேண்டும் - ஜவாஹிருல்லா கோரிக்கை</p><p>சாலைப்பணிகள், நெடுஞ்சாலையுடன் பிற சாலைகளை இணைப்பது தொடர்பாக 182 எம்எல்ஏக்கள் கோரிக்கை - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா </p><p>இணைப்பு சாலைகளால் அதிக விபத்துகள் ஏற்படும் நிலையில் உயிரிழப்புகளை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்  - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா </p><p>மதுரை, கம்பம், தேனி, நெல்லை, சென்னை, கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா </p> <p>பாலாற்றின் குறுக்கு உயர்மட்டச்சாலை பரிசீலனையில் உள்ளது - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா </p> <p>பாலாற்றின் குறுக்கு உயர்மட்டச்சாலை அமைக்கப்படுமா? - எம்எல்ஏ தென்றல் குமார்</p> <p>திருப்பூர் வேலாம்பாளையம் வரை 3 கிமீ சாலையில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள வேண்டும் - எம்எல்ஏ சத்தியபாமா கோரிக்கை</p><p>டெல்டா மாவட்டங்கள், தென்மாவட்டங்களில் இன்னும் 2 வழி, ஒரு வழி சாலைகள் அதிகம் உள்ளன.</p><p>சாலை விரிவாக்கத்திற்கு விரைவில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா </p> <p>மூலக்கேள்விக்கு தொடர்புடைய கேள்விகளை மட்டுமே கேளுங்கள் - சபாநாயகர்</p><p>ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி பகுதியில் பைபாஸ் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்தார்.</p><p>சட்டசபையில் வினாக்கள் மற்றும் விடைகள் நேரம் தொடங்கியது.</p><p>தமிழக சட்டசபை 2 நாள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடுகிறது. முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. </p><p>கேள்வி நேரம் முடிந்ததும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது.</p> ]]></content:encoded></item><item><title>தமிழக சட்டசபையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/concerned-ministers-reply-to-members-questions-in-the-tamil-nadu-legislative-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/concerned-ministers-reply-to-members-questions-in-the-tamil-nadu-legislative-assembly#comments</comments><guid isPermaLink="false">cd01505d-2df7-4f7e-8513-6e5578cc95a6</guid><pubDate>Mon, 31 Aug 2026 04:35:25 +0000</pubDate><atom:updated>2026-08-31T04:35:25.164Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan,அமைச்சர் ஆதவ் அர்ஜூனா,Minister Aadhav Arjuna</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/nski2pq5/assembly.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் ஆதவ் அர்ஜூனா- அமைச்சர் ராஜ்மோகன்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ஆதவ் அர்ஜூனா- அமைச்சர் ராஜ்மோகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/nski2pq5/assembly.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நாகப்பட்டினம் அரசு அருங்காட்சியகம் புதுப்பிக்கப்பட்டு விரைவில் திறக்கப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபை</a> வார விடுமுறைக்குப்பின் இன்று கூடியது. இன்றைய கூட்டத்தொடரில் மாற்றுத்திறனாளிகள், நலத்துறை, வேளாண்மை, மதுவிலக்கு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மீதான கோரிக்கைகளை மீது விவாதம் நடைபெறுகிறது. மேலும் 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் விலையில்லா வேட்டி சேலை குறித்த கவன ஈர்ப்பு தீர்மானமும் எடுத்துக்கொள்ளப்படுகிறது. </p><p>முன்னதாக, சட்டசபையில் வினாக்கள் - விடைகள் நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். அதன் விவரம் வருமாறு:-</p><p>ஓ.பன்னீர்செல்வம்:- ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி பகுதியில் பைபாஸ் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.</p><p>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா:- டெல்டா மாவட்டங்கள், தென்மாவட்டங்களில் இன்னும் 2 வழி, ஒரு வழி சாலைகள் அதிகம் உள்ளன.</p><p>சாலை விரிவாக்கத்திற்கு விரைவில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என்றார். </p><p>எம்எல்ஏ தென்றல் குமார்:- பாலாற்றின் குறுக்கு உயர்மட்டச்சாலை அமைக்கப்படுமா?  என்று கேள்வி எழுப்பினார். </p><p>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா:-  பாலாற்றின் குறுக்கு உயர்மட்டச்சாலை பரிசீலனையில் உள்ளது என்றார்.</p><p>எம்எல்ஏ சத்தியபாமா:- திருப்பூர் வேலாம்பாளையம் வரை 3 கிமீ சாலையில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். </p><p>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா:  மதுரை, கம்பம், தேனி, நெல்லை, சென்னை, கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இணைப்பு சாலைகளால் அதிக விபத்துகள் ஏற்படும் நிலையில் உயிரிழப்புகளை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். சாலைப்பணிகள், நெடுஞ்சாலையுடன் பிற சாலைகளை இணைப்பது தொடர்பாக 182 எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்றார். </p><p>எம்எல்ஏ ஜவாஹிருல்லா:- நாகை அருங்காட்சியகத்தை உரிய காலக்கெடு நிர்ணயித்து திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். </p><p>அமைச்சர் ராஜ்மோகன்:- நாகப்பட்டினம் அரசு அருங்காட்சியகம் புதுப்பிக்கப்பட்டு விரைவில் திறக்கப்படும்.  ரூ.139 லட்சத்தில் பொதுப்பணித்துறை மூலம் முதல்கட்ட பணிகள் முடிக்கப்பட்டுள்ளது, விரைவில் திறக்கப்படும் என்றார். </p>]]></content:encoded></item><item><title>தி.மு.க.வில் இருந்து விலகிய தோப்பு வெங்கடாசலம்: வேறு கட்சியில் இணைய திட்டமா?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thoppu-venkatachalam-quits-dmk</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thoppu-venkatachalam-quits-dmk#comments</comments><guid isPermaLink="false">d8089aec-8e96-45ee-9b7d-76443acacd07</guid><pubDate>Mon, 31 Aug 2026 04:20:01 +0000</pubDate><atom:updated>2026-08-31T04:20:01.785Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,Thoppu Venkatachalam,தோப்பு வெங்கடாசலம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/3m1r9st0/thoou.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தோப்பு வெங்கடாசலம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தோப்பு வெங்கடாசலம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/3m1r9st0/thoou.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கடந்த சட்டமன்ற தேர்தலில் பெருந்துறை தொகுதியில் தி.மு.க. சார்பில் களமிறங்கிய தோப்பு வெங்கடாசலம் தி.மு.க.வில் இருந்து விலகி உள்ளார்.</strong></em> </p><p>சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில் கட்சியில் இருந்து விலகுவதாக கடிதம் மூலம் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D">தோப்பு வெங்கடாசலம்</a> தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், </p><h2><strong>கசப்பான அனுபங்கள்</strong></h2><p>என் மீது நம்பிக்கை வைத்து மாவட்ட கழக பொறுப்பாளராகவும் பெருந்துறை சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராகவும் வாய்ப்பு வழங்கினீர்கள். அதற்கு என்னுடைய நெஞ்சார்ந்த கோடான கோடி நன்றிகளை அன்புடனும் பணிவுடனும் தெரிவித்துக் கொள்கிறேன். </p><p>ஆனால் நான் மாவட்ட கழக செயலாளராக செயல்படுவதற்கும் சட்டசபை தேர்தலில் எனக்கும் என்னுடன் பணியாற்றியவர்களுக்கும் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிற காரணத்தால் இனிமேலும் என்னால் கழகத்தில் பயணிக்க என் மனம் இடம் கொடுக்காத காரணத்தால் எனது அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். </p><p>மேலும் தற்போதைக்கு வேறு எந்த கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை, முயற்சியும் எடுக்கவில்லை. தற்போதைக்கு வேறு கட்சியில் இணையும் மனநிலையில் இல்லை என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். </p><p>முன்பு, அதிமுகவில் இருந்து விலகிய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dissatisfaction-with-dmk-leadership-will-thoppu-venkatasalam-join-aiadmk">தோப்பு வெங்கடாசலம்</a>, திமுக ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>6,000mAh பேட்டரியுடன் விரைவில் வெளியாகும் சியோமி Foldable ஸ்மார்ட்போன்</title><link>https://www.maalaimalar.com/technology/newgadgets/xiaomi-18-fold-to-pack-a-massive-6000mah-battery</link><comments>https://www.maalaimalar.com/technology/newgadgets/xiaomi-18-fold-to-pack-a-massive-6000mah-battery#comments</comments><guid isPermaLink="false">af7fc44b-b175-4e66-a559-1379c993f0f5</guid><pubDate>Mon, 31 Aug 2026 03:48:00 +0000</pubDate><atom:updated>2026-08-31T03:48:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Xiaomi,Foldable Smartphone,மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்,சியோமி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/o1lrumel/Xiaomi-18-Fold.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Xiaomi 18 Fold Teaser]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/o1lrumel/Xiaomi-18-Fold.png?w=280" width="280"></media:thumbnail><category>புதிய கேஜெட்டுகள் (New gadgets)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சியோமி நிறுவனம் தனது சியோமி 18 ஃபோல்டு ஸ்மார்ட்போனினை விரைவில் சீன சந்தையில் அறிமுகம் செய்யும் என்று கூறப்படுகிறது. </p><p>வெளியீட்டை ஒட்டி <a href="https://www.maalaimalar.com/topic/xiaomi">சியோமி</a> நிறுவனம் தனது புது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 3 நானோமீட்டரில் உருவாகி இருக்கும் Xring O3 சிப் கொண்டிருக்கும் என்பதை உறுதிப்படுத்தி விட்டது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போன் LPDDR6 ரேம் கொண்ட முதல் மாடலாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. </p><p>ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்களை சியோமி ஒருபக்கம் வெளியிடும் நிலையில், இந்த மாடல் பற்றிய புது தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. பிரபல டிப்ஸ்டர் பால்டு பாண்டா வெளியிட்டுள்ள தகவல்களில் இந்த <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மார்ட்போன்</a> பேட்டரி மற்றும் சார்ஜிங் விவரங்கள் தெரியவந்துள்ளது.</p><h2>பேட்டரி விவரங்கள்:</h2><p>டிப்ஸ்டர் பகிர்ந்துள்ள தகவல்களின் படி சியோமி 18 ஃபோல்டு மாடலில் 6000mAh பேட்டரி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் இத்தகைய பேட்டரி கொண்டிருக்கும் முதல் அகலமான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெறும்.</p><p>ஒப்பீட்டளவில் பார்க்கும் போது கேலக்ஸி Z ஃபோல்டு 8 மாடலில் 4880mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதே போல் ஹூவாய் ப்யூரா எக்ஸ் வியூ மாடலில் சற்றே பெரிய 5300mAh பேட்டரி யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. பெரிய பேட்டரி மட்டுமின்றி புதிய சியோமி 18 ஃபோல்டு மாடலில் 67 வாட் வயர்டு மற்றும் 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.</p><h2>எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:</h2><p>இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சியோமி 18 ஃபோல்டு மாடலில் 7.6 இன்ச் மடிக்கக்கூடிய ஸ்கிரீன், ஆண்ட்ராய்டு 17 சார்ந்த ஹைப்பர் ஓஎஸ் 4, புகைப்படங்களை எடுக்க 200MP பிரைமரி கேமரா வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படலாம்.</p><p>புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனுடன் சியோமி நிறுவனம் புதிய டேப்லெட் மாடலையும் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிது. இந்த மாடல் சியோமி பேட் 9 ப்ரோ மேக்ஸ் என அழைக்கப்படும் என்றும் இதில் Xring O3 சிப்செட் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>விண்ணில் பாய்கிறது பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள்!- இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி எப்-17 திட்டம் தயார்</title><link>https://www.maalaimalar.com/news/national/earth-observation-satellite-set-to-soar-into-the-sky-isros-gslv-f-17-mission-is-ready</link><comments>https://www.maalaimalar.com/news/national/earth-observation-satellite-set-to-soar-into-the-sky-isros-gslv-f-17-mission-is-ready#comments</comments><guid isPermaLink="false">5fd69504-d78d-4fb4-9949-cabf8e027427</guid><pubDate>Mon, 31 Aug 2026 03:45:16 +0000</pubDate><atom:updated>2026-08-31T03:45:16.702Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ISRO,இஸ்ரோ,இஸ்ரோ விஞ்ஞானிகள்,GSLV F17,ஜிஎஸ்எல்வி எப்17</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/yp4ltrix/GSLV.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஜிஎஸ்எல்வி எப்17]]></media:title><media:description type="html"><![CDATA[ ஜிஎஸ்எல்வி எப்17]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/yp4ltrix/GSLV.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை ஜி.எஸ்.எல்.வி. எப்-17 ராக்கெட்டில் பொருத்தி வருகிற 4-ந்தேதி இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது.</strong></em></p><h2><strong>பூமிக் கண்காணிப்புப் பணி</strong></h2><p>இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B">இஸ்ரோ</a>) தனது மிகவும் லட்சியமிக்க 'ஜூசாட்-1 ஏ என்று அழைக்கப்பட்ட 'இ.ஒ.எஸ். 5' என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை, 'ஜி.எஸ்.எல்.வி. எப்-17 ராக்கெட்டில் பொருத்தி வருகிற (அதாவது செப்டம்பர்) 4-ந்தேதி அதிகாலை 2.55 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவுகிறது.</p><p>இது வழக்கமான குறைந்த புவிச் சுற்றுப்பாதைக்கு மாறாக, சுமார் 36 ஆயிரம் கி.மீ உயரத்தில் உள்ள <a href="https://www.maalaimalar.com/news/national/research-center-on-the-moon-nasa-invites-isro">புவி</a> நிலைச் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது.</p><p>இந்தியத் துணைக்கண்டத்தின் மீது எப்போதும் நிலைத்திருப்பதால், இது இந்தியாவின் நிலப்பரப்பைத் தொடர்ச்சியாகவும், நிகழ்நேரத்திற்கு அருகிலும் படம்பிடித்துக் கண்காணிக்கும். இதில் மல்டி-ஸ்பெக்ட்ரல் மற்றும் ஹைப்பர்-ஸ்பெக்ட்ரல் வகை அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஜி.எஸ்.எல்.வி. ரகத்தில் இது 19-வது ராக்கெட்டாகும்.</p><h2><strong>பேரிடர் மேலாண்மை</strong></h2><p>பேரிடர் மேலாண்மை குறிப்பாக வெள்ளம், புயல், நிலச்சரிவு மற்றும் காட்டுத்தீ போன்ற இயற்கை பேரிடர்களை உடனுக்குடன் கண்காணித்து தகவல்களை வழங்கும். பயிர் வளர்ச்சி, காடுகளின் பரப்பளவு மாற்றம் மற்றும் நீர்நிலைகளின் நிலவரத்தை கண்காணிக்க உதவும்.</p><p>இந்தியாவின் எல்லைப் பகுதிகளை தொடர்ச்சியாக கண்காணித்து, நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு தேவையான முக்கியத் தரவுகளை வழங்கும். இது புவிசார் சுற்றுப்பாதையில் இருந்து இந்தியாவை கண்காணிக்கும் நாட்டின் முதல் ‘இமேஜிங்’ செயற்கைக்கோள் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர். </p>]]></content:encoded></item><item><title>ஜோர்தானில் உள்ள இரண்டு அமெரிக்க விமானப்படை தளங்கள் மீது ஈரான் பதில் தாக்குதல் </title><link>https://www.maalaimalar.com/news/world/iran-missile-attack-two-us-air-bases-jordan</link><comments>https://www.maalaimalar.com/news/world/iran-missile-attack-two-us-air-bases-jordan#comments</comments><guid isPermaLink="false">cacd07c5-e96f-4b5c-a66e-fa0d0307740d</guid><pubDate>Mon, 31 Aug 2026 03:22:17 +0000</pubDate><atom:updated>2026-08-31T03:22:17.576Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Donald Trump,ஈரான்,Iran,டொனால்ட் டிரம்ப்,Mojtaba Khamenei,மொஜ்தபா கமேனி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/k54our7s/Untitled-design-8.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Donald Trump - Mojtaba Khamenei]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/k54our7s/Untitled-design-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D">ஹார்முஸ்</a> ஜலசந்தியில் உள்ள லராக் தீவில் செயல்பட்டு வந்த இரண்டு ஈரானிய ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, ஜோர்தானில் உள்ள இரண்டு அமெரிக்க விமானப்படை தளங்கள் மீது <a href="https://www.maalaimalar.com/topic/ஈரான்">ஈரான்</a> ஏவுகணை தாக்குதலை நடத்தியது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE">அமெரிக்கா</a> நடத்திய தாக்குதலுக்கு, தகுந்த பதிலடி தரப்படும் என்று இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படை எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. </p><h3><strong>லராக் தீவு</strong></h3><p>ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து சுமார் 1,100 கிலோ மீட்டர் தொலைவில் லராக் தீவு அமைந்துள்ளது. இந்த தீவு ஹார்முஸ் ஜலசந்தியின் தெற்கிலும், கெஷம் தீவின் கிழக்கிலும் அமைந்துள்ளது.</p><p>மூலோபய முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழியில், கடல் அணுக்களை கொண்ட ராக்கெட்டுகளை ஏவுவதற்காக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படையினர் ஏவுகணைகளை தயார் செய்து வருவதாக அமெரிக்கா கூறி வந்தது.</p><p>இதையடுத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணையுமாறும், ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி வேண்டுகோள் விடுத்தார்.</p><h3><strong>மொஜ்தபா கமேனி வேண்டுகோள்</strong></h3><p>மேலும் அவர் வெளியிட்ட எழுத்துப்பூர்வமான செய்தியில், “இஸ்லாமிய தேசங்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு என்பது, சொல் ஒற்றுமை, நட்பு மற்றும் நன்மையின் பாதையில் ஒத்துழைப்பை தருவதாகும்.</p><p>எந்த பதவியில் இருப்பவரும், தெரிந்தோ அல்லது தெரியாமலோ, இஸ்லாமியர்களிடையே பிளவை ஏற்படுத்தி மோதல்களை உருவாக்கும் வகையில் எதையாவது செய்தால், அவர் இஸ்லாத்தின் எதிரிகளின் நோக்கத்திற்கு பணியாற்றியவர் ஆவார்” என்று அவர் கூறினார்.</p><p>மேலும், “உங்கள் உண்மையான எதிரியை அடையாளம் கண்டு, அதன் திட்டத்தை புரிந்துகொண்டு அதை எதிர்கொள்ளுங்கள்” என்றும் அவர் கூறினார்.</p><p>முன்னதாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியில் புதிய கண்ணிவெடிகளை பதிக்க முயற்சித்தால், அமெரிக்கா அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்திருந்தார்.</p><p>இதையடுத்து ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி வேண்டுகோள் விடுத்த சில மணி நேரங்களுக்கு பிறகு, நேற்று லராக் தீவில் அமெரிக்கா ஏவுகணை தாக்குதலை நடத்தியது.</p><p>இந்த தாக்குதல் குறித்து இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படை கூறுகையில், பல ராணுவ வீரர்களும், பொதுமக்களும் கொல்லப்பட்டதாக தெரிவித்தது. மேலும் இந்த தாக்குதலுக்கு தகுந்த பதிலடி தரப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது.</p><h3><strong>ஜோர்தானில் தாக்குதல்</strong></h3><p>இந்த நிலையில், ஜோர்தானில் அமைந்துள்ள இரண்டு அமெரிக்க விமானப்படை தளங்களான கிங் ஹுசைன் மற்றும் அல்-அஸ்ரக் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது.</p><p>இந்த தாக்குதல் குறித்து இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படை கூறுகையில், தொழில்நுட்ப மற்றும் பராமரிப்பு வசதிகள் மற்றும் போர் விமான நிலைகளை இந்த ஏவுகணைகள் குறிவைத்ததாக தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயருமா?- வாகன ஓட்டிகள் மத்தியில் மீண்டும் அச்சம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/will-toll-charges-increase-from-midnight-tonight-renewed-anxiety-among-motorists</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/will-toll-charges-increase-from-midnight-tonight-renewed-anxiety-among-motorists#comments</comments><guid isPermaLink="false">918be1a5-27e3-48b3-8d02-ed8806c16f37</guid><pubDate>Mon, 31 Aug 2026 03:10:36 +0000</pubDate><atom:updated>2026-08-31T03:10:36.269Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தேசிய நெடுஞ்சாலை ஆணையம்,National Highways Authority,Toll Gate,சுங்க கட்டணம்,வாகன ஓட்டிகள்,சுங்கச்சாவடி</media:keywords><media:content height="350" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/ypxm96xy/tollgate.jpg" width="615"><media:title type="html"><![CDATA[ சுங்கச்சாவடி]]></media:title><media:description type="html"><![CDATA[ சுங்கச்சாவடி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/ypxm96xy/tollgate.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சுங்கக் கட்டணம் கடந்த ஜூன் மாதம் உயர்த்தப்பட்டதால் இன்று நள்ளிரவு முதல் மீண்டும் உயர்த்தப்படுமா? என்ற அச்சம் வாகன ஓட்டிகளிடம் எழுந்துள்ளது.</strong></em></p><h2><strong>சுங்கக் கட்டணம்</strong></h2><p>இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளும் மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன. இந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நாட்டின் முக்கிய சாலைகளின் கட்டுமானம், பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.</p><p>இந்த சாலைகளில் பயணம் செய்யும் வாகனங்களிடமிருந்து <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF">சுங்கச்சாவடிகள்</a> மூலம் கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கப்படுகிறது. பல தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் பொதுத்துறை மற்றும் தனியார் கூட்டுத்திட்ட முறையில் செயல்படுத்தப்படுவதால், சுங்கச்சாவடிகள் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைக்கப்படுகின்றன. அந்த ஒப்பந்தத்தின்படி, குறிப்பிட்ட காலத்திற்கு வாகனங்களிடமிருந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கும் உரிமை வழங்கப்படுகிறது.</p><h2><strong>வாகன ஓட்டிகள் அச்சம்</strong></h2><p>அந்தவகையில், தமிழ்நாட்டில் மட்டும் 77 சுங்கச்சாவடிகள் உள்ளன. <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ulundurpettai-toll-gate-price-hike">சுங்கக் கட்டணங்கள்</a> ஒவ்வொரு ஆண்டும் மறுபரிசீலனை செய்யப்பட்டு உயர்த்தப்படுவது வழக்கமாக உள்ளது. பொதுவாக 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது. சில இடங்களில் போக்குவரத்து அளவு, சாலை பராமரிப்பு செலவு, பணவீக்கம் உள்ளிட்ட காரணிகளைக் கருத்தில் கொண்டு 15 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படும். தமிழகத்தில் தேர்தல் நடந்ததால் இந்த ஆண்டு ஏப்ரல் கட்டணம் உயர்த்தப்படவில்லை. மாறாக ஜூன் மாதம் கட்டணம் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து செப்டம்பர் 1-ந்தேதி உயர்த்தப்படும் வழக்கம் இருப்பதால், இன்று நள்ளிரவு மீண்டும் உயர்த்தப்படுமா? என்ற அச்சம் வாகன ஓட்டிகளிடம் எழுந்துள்ளது.</p><p>இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரிகளிடம் கேட்ட போது, 'கட்டண உயர்வு குறித்து மத்திய அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை. வந்தால் சுமார் ரூ.5 கட்டண உயர்வு இருக்கும்' என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் விஜய் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-will-open-mettur-dam-tomorrow-for-delta-irrigation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-will-open-mettur-dam-tomorrow-for-delta-irrigation#comments</comments><guid isPermaLink="false">39a6c810-06f8-4822-b1ff-14b5790b4d74</guid><pubDate>Mon, 31 Aug 2026 03:05:06 +0000</pubDate><atom:updated>2026-08-31T03:05:06.351Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,மேட்டூர் அணை,Mettur Dam,டெல்டா பாசனம்,Delta Irrigation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/hb0nkn8c/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mettur dam - CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/hb0nkn8c/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கர்நாடகாவில் இருந்து தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதை அடுத்து மேட்டூர் அணை நீர்மட்டம் 90 அடியை தாண்டியது. டெல்டா பாசனத்துக்காக அணையில் இருந்து தண்ணீரை முதலமைச்சர் விஜய் நாளை திறந்து வைக்கிறார்.</strong></em></p> <h2>மேட்டூர் அணை</h2><p>சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யாத காரணத்தால் மேட்டுர் அணைக்கு வரும் நீரின் அளவு வெகுவாக குறைந்தது.</p> <h2>காவிரி நீர்வரத்து</h2><p>இதனால் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இல்லாததால் குறிப்பிட்ட நாளான ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனிடையே, கர்நாடக மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் மழை காரணமாக அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு பரவலாக தண்ணீர் வருவதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.</p> <h2>மேட்டூர் அணை</h2><p>நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 90.47 அடியை எட்டி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 35 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.</p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>இதனிடையே, <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">மேட்டூர் அணையில்</a> இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதற்காக முதலமைச்சர் விஜய் நாளை சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் செல்கிறார். ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்திற்கு செல்லும் அவர், அங்கிருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக மேட்டூர் செல்கிறார். பின்னர் அவர் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைக்கிறார்.</p> <h2>பாதுகாப்பு ஏற்பாடுகள்</h2><p>முதலமைச்சர் விஜய் சேலம் வருகையையொட்டி மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மேட்டூர் அணையில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/4-children-killed-rs-3-lakh-compensation-announced">முதலமைச்சர் விஜய்</a> வரும் வழிநெடுகிலும் சாலையின் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. </p> <h2>போலீசார் பாதுகாப்பு</h2><p>அதாவது முதலமைச்சர் விஜய்யை பார்க்கும் ஆர்வத்தில் பொதுமக்கள் அதிகளவு வருவார்கள் என்பதால் அவர் செல்லும் வழியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அணையின் வலது கரையில் விழாவுக்காக பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.</p> <h2>ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு</h2><p>கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரத்து 500 கனஅடியில் இருந்து 10 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருப்பதால் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை நேற்று 15-வது நாளாக நீடித்தது.</p> ]]></content:encoded></item><item><title>ரெயில் பயணிகளின் கவனத்திற்கு..! தெற்கு ரெயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/southern-railway-announced-for-special-trains-and-train-service-changed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/southern-railway-announced-for-special-trains-and-train-service-changed#comments</comments><guid isPermaLink="false">055ca3b2-6df6-44af-981f-73dbe635194a</guid><pubDate>Mon, 31 Aug 2026 02:57:15 +0000</pubDate><atom:updated>2026-08-31T02:57:15.548Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Southern Railway,special train,சிறப்பு ரெயில்,தெற்கு ரெயில்வே,ரெயில் சேவை மாற்றம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/1w606y62/train01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ ரெயில்]]></media:title><media:description type="html"><![CDATA[ ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/1w606y62/train01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை சென்ட்ரல்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் மற்றும் சிறப்பு ரெயில்கள் நீட்டிப்பு குறித்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தெற்கு-ரெயில்வே">தெற்கு ரெயில்வே</a> வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>சென்னை கோட்டத்தில் உள்ள பெடாபாரியா மற்றும் நாயுடுபேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் சென்னை சென்ட்ரல்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-</p><p>* சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று (திங்கட்கிழமை), செப்டம்பர் 3,10 ஆகிய தேதிகளில் இரவு 7 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.12840), அதற்கு மாற்றாக சென்ட்ரலில் இருந்து ஒரு மணி நேரம் தாமதமாக இரவு 8 மணிக்கு புறப்பட்டு ஹவுரா செல்லும்.</p><p>* இதேபோல, சென்னை சென்ட்ரலில் இருந்து செப்டம்பர் 5,12 ஆகிய தேதிகளில் இரவு 7 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12840), அதற்கு மாற்றாக சென்ட்ரலில் இருந்து 2 மணி நேரம் தாமதமாக, இரவு 9 மணிக்கு புறப்பட்டு ஹவுரா செல்லும்.</p><h2><strong>போத்தனூர்-சம்பல்பூர் இடையே சிறப்பு ரெயில்</strong></h2><p>ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் இருந்து வருகிற செப்டம்பர் 9-ந்தேதி முதல் நவம்பர் 25-ந்தேதி வரையில் (புதன்கிழமை மட்டும்) காலை 11.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.08311), புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் அதிகாலை 1.30 மணிக்கு போத்தனூர் சென்றடையும். மறுமார்க்கமாக, போத்தனூரில் இருந்து வருகிற செப்டம்பர் 11-ந்தேதி முதல் நவம்பர் 27-ந்தேதி வரையில் (வெள்ளிக்கிழமை மட்டும்) மதியம் 1 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (08312), மறுநாள் இரவு 11.15 மணிக்கு சம்பல்பூர் சென்றடையும்.</p><h2><strong>மதுரை-கான்பூர் சென்ட்ரல் சிறப்பு ரெயில் நீட்டிப்பு</strong></h2><p>உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் சென்ட்ரலில் இருந்து மதுரை செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.01925), வருகிற செப்டம்பர் 2-ந்தேதி முதல் நவம்பர் 25-ந்தேதி வரையில் (புதன்கிழமை மட்டும்) நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக, மதுரையில் இருந்து கான்பூர் சென்ட்ரல் செல்லும் சிறப்பு ரெயில் (01926), வருகிற செப்டம்பர் 5-ந்தேதி முதல் நவம்பர் 28-ந்தேதி வரையில் (சனிக்கிழமை மட்டும்) நீட்டிக்கப்பட்டுள்ளது.</p><p>இவ்வாறு தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>நேபாளத்தில் கட்டிட இடிபாடுகளுக்கு அடியில் அழுகுரல் - சிறுமியை மீட்ட ஆயுதப்படை</title><link>https://www.maalaimalar.com/news/world/nepal-flood-rescue-6-year-old-girl-from-building-debris</link><comments>https://www.maalaimalar.com/news/world/nepal-flood-rescue-6-year-old-girl-from-building-debris#comments</comments><guid isPermaLink="false">73f17a51-5feb-4955-9611-d101273059d7</guid><pubDate>Mon, 31 Aug 2026 02:22:30 +0000</pubDate><atom:updated>2026-08-31T02:22:30.398Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாளம்,nepal,Nepal Floods,nepal army,நேபாள ராணுவம்,நேபாள வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/4ao3mwvl/Untitled-design-7.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nepal Flood Rescue]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/4ao3mwvl/Untitled-design-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பெரு வெள்ள பேரிடருக்கு பிறகு மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு நடந்து வரும் நிலையில், அடர்த்தியான சேறு மற்றும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்த ஆறு வயது சிறுமியை மீட்பு படையினர் உயிருடன் பத்திரமாக மீட்டனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">நேபாளத்தில்</a> சமீபத்தில் கோஷி ஆற்றில் ஏற்பட்ட பெரு வெள்ள பேரிடரில், அங்கு உள்ள ரசுவா மாவட்டம் அதிகமாக பாதிப்புக்குள்ளானது. </p><h3><strong>ஆறு வயது குழந்தை மீட்பு</strong></h3><p>இதையடுத்து ரசுவா மாவட்டத்தில் உள்ள திமுரே கிராமத்தில் மீட்பு பணி நடைபெற்ற போது, கட்டிட இடுபாடுகளுக்கு அடியில் மெல்லிய அழுகுரலை ஆயுத காவல் படையினர் கேட்டுள்ளனர்.</p><p>அப்போது மீட்பு படையினர் விரைந்து செயல்பட்டு, அந்த இடத்தை தோண்ட தொடங்கினர். இதையடுத்து அந்த இடத்தில் மண்ணுக்கு அடியில் சிக்கியிருந்த ஆறு வயது பெண் குழந்தையை மீட்பு படையினர் மீட்டனர்.</p><p>இதைத்தொடர்ந்து மீட்கப்பட்ட குழந்தைக்கு திமுரேயில் உள்ள விமானப்படை எல்லை சாவடியில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். </p><p>ஆனால அந்த குழந்தையின் உடல்நிலை மோசமடைந்ததால், விமானம் மூலம் காத்மாண்டுவுக்கு அழைத்து செல்ல திட்டமிட்டனர்.</p><p>இருப்பினும் மோசமான வானிலை காரணமாக, அந்த விமானம் புறப்பட தாமதமானது.</p><p>பின்னர் வானிலை சீரானதை தொடர்ந்து, ஹெலிகாப்டர் மூலம் அந்த குழந்தையை நேபாள தலைநகர் காத்மாண்டுவுக்கு அழைத்து சென்றனர்.</p><figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Heartfelt thanks to Nepal’s rescue teams. Your courage pulled a 6-year-old from debris after 3 days in Rasuwa floods. You bring hope amid devastation. Heroes. ❤️ <a href="https://t.co/7nHjlZXDHP">https://t.co/7nHjlZXDHP</a></p>&mdash; MemeTales (@MemeTalesStory) <a href="https://x.com/MemeTalesStory/status/2094102652493950981?ref_src=twsrc%5Etfw">August 30, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h3><strong>மருத்துவமனையில் சிகிச்சை</strong></h3><p>காத்மாண்டுவில் உள்ள சிறப்பு மருத்துவமனையில் அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><p>இந்த நிலையில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த ஆறு வயது குழந்தையை மீட்ட மீட்பு படையினரின் செயல் சமூக வலைதளத்தில் பாராட்டுகளை பெற்றுள்ளது.</p><p>நேபாளத்தில் தொடர்ந்து இரவிலும் தேடுதல் பணியில் ஈடுபட்டு வரும் ஆயுத காவல் படை குழுவினருக்கு பயனர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் பெட்ரோல், டீசல் விலை - இன்றைய நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-and-diesel-price-in-chennai-31-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-and-diesel-price-in-chennai-31-august-2026#comments</comments><guid isPermaLink="false">57e22fd9-47a7-476c-9ce9-911c2d870537</guid><pubDate>Mon, 31 Aug 2026 02:14:58 +0000</pubDate><atom:updated>2026-08-31T02:14:58.724Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,கச்சா எண்ணெய்,Crude oil,பெட்ரோல் டீசல் விலை,Pertrol Diesel Prices</media:keywords><media:content height="576" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/wi7y6inv/maalai-malar2026-07-21zb9pki7q%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88.avif" width="1024"><media:title type="html"><![CDATA[ பெட்ரோல் - டீசல் விலை]]></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல் - டீசல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/wi7y6inv/maalai-malar2026-07-21zb9pki7q%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88.avif?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் போரினால் மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p> <h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.</p> <h2>இன்றைய பெட்ரோல், டீசல் விலை</h2><p>அந்த வகையில் இன்றைய (31.8.2026 - (திங்கள்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108.60-க்கும் டீசல் ரூ.100.43-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 31 ஆகஸ்ட் 2026: மகா சங்கடஹர சதுர்த்தி</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-31-august-2026-maha-sankatahara-chaturthi</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-31-august-2026-maha-sankatahara-chaturthi#comments</comments><guid isPermaLink="false">9f4bc411-f9c9-4c00-8ef8-e22f2625c3ac</guid><pubDate>Mon, 31 Aug 2026 02:03:40 +0000</pubDate><atom:updated>2026-08-31T02:03:40.145Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/01/05/24286652-vinayagar3.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vinayagar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/01/05/24286652-vinayagar3.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆவணி-14 (திங்கள்கிழமை)</p><p>பிறை : தேய்பிறை</p><p>திதி :  திருதியை காலை 9.16 மணி வரை பிறகு சதுர்த்தி</p><p>நட்சத்திரம் : ரேவதி மறுநாள் விடியற்காலை 4.26 மணி வரை பிறகு அசுவினி</p><p>யோகம் :  சித்தயோகம்</p> <p>ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை</p><p>எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை</p><p>சூலம் : கிழக்கு</p><p>நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை</p> <h2>திருச்செந்தூர் ஸ்ரீ முருகப் பெருமான் உற்சவாரம்பம்</h2><p>மகா சங்கடஹர சதுர்த்தி. சுபமுகூர்த்த தினம். திருச்செந்தூர் ஸ்ரீ முருகப் பெருமான் உற்சவாரம்பம், பெரியதங்கப் பல்லக்கில் புறப்பாடு கண்டருளல். தேவக்கோட்டை ஸ்ரீ அரங்கநாதர் புறப்பாடு. பெருவயல் ஸ்ரீ முருகப் பெருமான் உற்சவாரம்பம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர், உப்பூர் ஸ்ரீ வெயிலுகந்த விநாயகர், திருவலஞ்சுழி ஸ்ரீ சுவேத விநாயகர், திருநாரையூர் ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார், திருச்சி உச்சிப் பிள்ளையார் கோவில் ஸ்ரீ மாணிக்க விநாயகர் தலங்களில் ஹோமம் அபிஷேகம். </p> <p>நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் திருமஞ்சனம். கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதர் அபிஷேகம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் தலங்களில் அபிஷேகம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் தலங்களில் சிறப்பு சோமவார அபிஷேகம்.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - தாமதம்</p><p>ரிஷபம் - லாபம்</p><p>மிதுனம் - ஆசை</p><p>கடகம் - முயற்சி</p><p>சிம்மம் - வரவு</p><p>கன்னி - செலவு</p> <p>துலாம் - உழைப்பு</p><p>விருச்சிகம் - ஊக்கம்</p><p>தனுசு - நன்மை</p><p>மகரம் - வெற்றி</p><p>கும்பம் - உற்சாகம்</p><p>மீனம் - சுகம்</p> ]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 31.8.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு காரிய வெற்றி உண்டு</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-31-august-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-31-august-2026#comments</comments><guid isPermaLink="false">0a4d8a76-b01c-4a2f-9d85-2b93ae853950</guid><pubDate>Mon, 31 Aug 2026 01:51:08 +0000</pubDate><atom:updated>2026-08-31T01:51:08.506Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-04-26/5jm25v3a/rasipalan.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-04-26/5jm25v3a/rasipalan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>பற்றாக்குறை ஏற்படும் நாள். நிச்சயித்த காரியம் தாமதமாகலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.</p><h2>ரிஷபம்</h2><p>சான்றோர்களின் சந்திப்பு கிடைக்கும் நாள். தனவரவு திருப்திகரமாக இருக்கும். உடன்பிறப்புகளை அனுசரித்துச் செல்வது நல்லது.</p> <h2>மிதுனம்</h2><p>வரன்கள் வாயில் தேடி வரும் நாள். புதிய பாதை புலப்படும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.</p><h2>கடகம்</h2><p>கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். கொள்கைப் பிடிப்பைத் தளர்த்திக்கொள்ள நேரிடலாம். அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டு.</p> <h2>சிம்மம்</h2><p>சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். குடும்பப் பிரச்சனைகளைப் பிறரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். மருத்துவச் செலவுகள் ஏற்படும்.</p><h2>கன்னி</h2><p>வெளிவட்டாரத் தொடர்பு விரிவடையும் நாள். வீடு மாற்றங்களால் நன்மை கிடைக்கும். உத்தியோகத்தில் உயர்அதிகாரிகளின் மனதில் இடம் பிடிப்பீர்கள்.</p> <h2>துலாம்</h2><p>மன உறுதியுடன் செயல்பட்டு மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் நாள். பிள்ளைகளால் பெருமை சேரும் பிரச்சனை நல்ல முடிவிற்கு வரும்.</p><h2>விருச்சிகம்</h2><p>கனவுகள் நனவாகும் நாள். காரிய வெற்றி உண்டு. நேற்றைய பிரச்சனை நல்ல முடிவிற்கு வரும். ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.</p> <h2>தனுசு</h2><p>முயற்சியில் வெற்றி பெறும் நாள். உடன்பிறப்புகளின் திருமணம் நிறைவேறும். பொதுவாழ்வில் பொறுப்புகள் கூடும். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர்.</p><h2>மகரம்</h2><p>தெய்வீகப்பணி தொடர உதவி செய்வீர்கள். வருமானம் போதுமானதாக இருக்கும். மனதிற்கு இதமான செய்தியொன்று அலைபேசி வழியில் வரும்.</p> <h2>கும்பம்</h2><p>எதிரிகள் உதிரியாகும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். துணிச்சலுடன் செயல்பட்டுத் தொல்லைகளை அகற்றிக் கொள்வீர்கள்.</p><h2>மீனம்</h2><p>துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். சொத்து விற்பனையால் ஆதாயம் உண்டு. அதிகாலையிலேயே செவி குளிரும் செய்திகள் வந்து சேரும்.</p>]]></content:encoded></item><item><title>270 பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழப்பு: சைப்ரஸில் சோகம்</title><link>https://www.maalaimalar.com/news/world/at-least-8-dead-after-ferry-with-nearly-270-passengers-and-crew-capsizes-off-cyprus</link><comments>https://www.maalaimalar.com/news/world/at-least-8-dead-after-ferry-with-nearly-270-passengers-and-crew-capsizes-off-cyprus#comments</comments><guid isPermaLink="false">0f196a15-b876-4e16-83c0-398723a6dce8</guid><pubDate>Mon, 31 Aug 2026 00:28:26 +0000</pubDate><atom:updated>2026-08-31T00:28:26.518Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>passengers,படகு கவிழ்ந்து விபத்து,சைப்ரஸ்,Cyprus,பயணிகள்,ferry capsize</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/q14qunke/cyprus-boat-capsizes.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ cyprus boat capsizes]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/q14qunke/cyprus-boat-capsizes.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இன ரீதியாக பிளவுபட்ட சைப்ரஸின் வடக்குப்பகுதியில், சுமார் 270 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் சென்ற <a href="https://www.maalaimalar.com/topic/boat-capsize">படகு</a> ஒன்று கடற்கரைக்கு அப்பால் கவிழ்ந்ததில் குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளதாக துருக்கிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>வடக்குப் பகுதியின் துருக்கிய சைப்ரியட் பிரதமர் உனல் உஸ்டெல், <a href="https://www.maalaimalar.com/news/world">துருக்கிய அரசு</a> ஒலிபரப்பு நிறுவனமான டிஆர்டி (TRT)-யிடம் பேசும் போது, இதுவரை 237 பேர் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் 22 பேரை தேடும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறினர். </p><h2>8 பேர் தடுத்து நிறுத்தம்:</h2><p>மோசமான வானிலை நிலவியதாகவும், புறப்பட்ட 15 நிமிடங்களிலேயே படகிற்குள் நீர் புகத் தொடங்கியதாகவும் உஸ்டெல் கூறினார். அதன்பின் சிறிது நேரத்திலேயே உதவி கோரும் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். படகு மூழ்கியது குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக, படகின் கேப்டன் உட்பட எட்டு பேரை காவல்துறையினர் தடுத்து வைத்துள்ளதாக உஸ்டெல் கூறினார்.</p><p>வானிலை நிலைமை "மோசமாக இல்லை" என்று கூறிய துருக்கிய சைப்ரியட் தலைவர் டுஃபான் எர்ஹுர்மன், விபத்துக்கான காரணம் குறித்து ஊகங்களை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். 500 மீட்டர் (1,640 அடி) ஆழமான நீரில் கப்பல் மூழ்கியதால் தேடுதல் பணிகள் சவாலாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.</p><h2>மீட்பு பணிகளில் துருக்கி:</h2><p>துருக்கிய அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் தனது இரங்கலை தெரிவித்ததுடன், தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் வடக்கு சைப்ரஸ் உடன் தனது அரசாங்கம் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும் கூறினார். அங்காராவில் உள்ள துருக்கிய ராணுவ அகாடமியின் பட்டமளிப்பு விழாவில் ஞாயிற்றுக்கிழமையன்று பேசிய எர்டோகன், "நாங்கள் நல்ல செய்தியை பெறுவோம் என்று நம்புகிறோம்" என்று கூறினார்.</p><p>கேட்ரமரன் வகையைச் சேர்ந்த அந்த படகு, கைரேனியா (கிரினே என்றும் அழைக்கப்படுகிறது) துறைமுகத்தில் இருந்து மெர்சின் மாகாணத்தில் உள்ள துருக்கியின் தாசுசு துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்தது.</p><p>இக்கப்பல் 'பிலோ டெனிஸ்சிலிக்' என்ற படகு நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும், சைப்ரஸின் வடக்கு கடற்கரையில் உள்ள டயானா கடற்கரைக்கு அப்பால் அது மூழ்கியதாகவும் கைரேனியா மேயர் முராத் சென்குல் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>லார்ட்ஸ் டெஸ்ட்: பாகிஸ்தானை வீழ்த்தியது இங்கிலாந்து - தொடரை கைப்ற்ற அசத்தல் </title><link>https://www.maalaimalar.com/sports/cricket/lords-test-england-beat-pakistan</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/lords-test-england-beat-pakistan#comments</comments><guid isPermaLink="false">d3c152b7-1a46-4633-8297-31309b9a5599</guid><pubDate>Sun, 30 Aug 2026 23:52:19 +0000</pubDate><atom:updated>2026-08-30T23:52:19.259Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Lords Test,லார்ட்ஸ் டெஸ்ட்,ENG vs PAK</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/yh70ghmx/Pak-Lost.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pakistan Lost]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/yh70ghmx/Pak-Lost.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில், 194 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது.</p><p>பாகிஸ்தான் <a href="https://www.maalaimalar.com/sports/cricket">கிரிக்கெட்</a> அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 27-ஆம் தேதி தொடங்கியது.</p><h2>இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்:</h2><p>கேப்டன் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. காக்ஸ் (55) மற்றும் விக்கெட் கீப்பர் ஜேமீ ஸ்மித் (61) அரை சதம் விளாசினர். பென் டக்கெட் (17), எமிலியோ (8), கேப்டன் ரூட் (4), ஹாரி புரூக் (15), லாரன்ஸ் (17) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.</p><p>ஒல்லி ராபின்சன் டக்-அவுட் ஆனார். ஆர்ச்சர் (14) ரன்களில் வெளியேறினார். ஜோஷ் டங் (1), அட்கின்சன் (34) ஆட்டமிழக்காமல் இருந்தனர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து, 56 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 248 ரன்களை எடுத்திருந்தது. பாகிஸ்தான் தரப்பில் முகமது அப்பாஸ் 4 விக்கெட்டுகள், முகமது அலி 3 விக்கெட்டுகள் எடுத்திருந்தனர்.</p><p>தொடர்ந்து 2-வது நாளில் அட்கின்சன் (45) ஆட்டமிழந்ததும் போட்டி முடிவுக்கு வந்தது. ஜோஷ் டங் (30) ஆட்டமிழக்காமல் உள்ளார். 66.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்கில் இங்கிலாந்து 290 ரன்கள் எடுத்தது.</p><h2>இங்கிலாந்து முன்னிலை:</h2><p>இதனை அடுத்து முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் அஜன் அவைஸ் (46), ஷகீல் (16) தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் மளமளவென ஆட்டமிழந்தனர். இதனால், 37.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பாகிஸ்தான் அணி 110 ரன்கள் எடுத்தது. இதனால், இங்கிலாந்து 180 ரன்கள் முன்னிலையில் இருந்தது.</p><p>தொடர்ந்து இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸ் பேட்டிங் செய்தது. இதில், பென் டக்கெட் (1), கேப்டன் ரூட் (24), காக்ஸ் (11) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். </p><p>ஆட்டத்தின் நான்காம் நாள் வரை 2-ஆவது இன்னிங்சில் பேட் செய்த இங்கிலாந்து அணி 2-ஆவது இன்னிங்ஸ் முடிவில் 208 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால், பாகிஸ்தான் வெற்றி பெற 389 ரன்களை இலக்காக இங்கிலாந்து நிர்ணயித்தது.</p><h2>இங்கிலாந்து வெற்றி:</h2><p>கடின இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு சுமாரான தொடக்கமே கிடைத்தது. அந்த அணியில் துவக்க வீரர்களில் ஷான மசூத் (26 ரன்கள்) எடுக்க மற்றவர்கள் சொற்ப ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினர். </p><p>பாகிஸ்தான் தரப்பில் சவுத் ஷகீல் மட்டும் பொறுப்புடன் ஆடி 97 ரன்களை எடுத்தார். எனினும், மற்ற வீரர்கள் ரன் குவிக்க தவறியதால் பாகிஸ்தான் அணி 194 ரன்கள் மட்டுமே எடுத்தது.</p><p>இதனால் இங்கிலாந்து அணி 194 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெற்றது. இதுதவிர மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து 2-0 என முன்னிலை வகிப்பதுடன் தொடரையும் கைப்பற்றி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>171 விக்கெட்டுகள்: மகளிர் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய  வீராங்கனை - தீப்தி சர்மா சாதனை</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/deepti-sharma-becomes-leading-womens-t20i-wicket-taker-with-171-scalps</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/deepti-sharma-becomes-leading-womens-t20i-wicket-taker-with-171-scalps#comments</comments><guid isPermaLink="false">669dcff4-b129-49cb-b0a5-82832a7e63ee</guid><pubDate>Sun, 30 Aug 2026 23:09:20 +0000</pubDate><atom:updated>2026-08-30T23:09:20.596Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மகளிர் டி20 கிரிக்கெட்,Deepti Sharma,தீப்தி ஷர்மா,womens T20I</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/7wnzmxlb/Deepti-Sharma.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Deepti Sharma]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/7wnzmxlb/Deepti-Sharma.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகளிர் டி20 ஆசிய கோப்பை <a href="https://www.maalaimalar.com/sports/cricket">கிரிக்கெட்</a> போட்டியில் தாய்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 94 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அணி அபார வெற்றி பெற்றது. </p><p>இந்த நிலையில், இந்திய அணியின் அனுபவமிக்க ஆல்-ரவுண்டரான <a href="https://www.maalaimalar.com/topic/deepti-sharma">தீப்தி சர்மா</a>, மகளிர் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் 171 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட் எடுத்தவர் என்ற சாதனையை படைத்தார்.</p><p>இந்திய அணிக்காக தனது 150-ஆவது டி20 சர்வதேச போட்டியில் விளையாடியபோது தீப்தி ஷர்மா இந்த சாதனையை எட்டினார். ஹர்மன்ப்ரீத் கௌர் (203) மற்றும் ஸ்மிருதி மந்தனா (172) ஆகியோருக்கு பிறகு, 150 போட்டிகள் என்ற மைல்கல்லை எட்டிய மூன்றாவது இந்திய வீராங்கனை இவராவார். </p><h2>3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தல்:</h2><p>வரலாற்றிலேயே 150 அல்லது அதற்கு மேற்பட்ட டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய 12-வது பெண் கிரிக்கெட் வீராங்கனை இவராவார்.</p><p>வலது கை ஆஃப்-ஸ்பின்னரான தீப்தி, தாய்லாந்துக்கு எதிரான 'குரூப் ஏ' பிரிவு ஆட்டத்தில் 1.1 ஓவர்கள் வீசி, ஒரு மெய்டன் ஓவருடன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி, ரன் ஏதும் விட்டுக்கொடுக்காமல் இந்த சாதனையை நிகழ்த்தினார்.</p><p>இது ஒரு பெருமைக்குரிய தருணம் என்று குறிப்பிட்ட தீப்தி, அதேவேளையில் தனது பந்துவீச்சை மேம்படுத்துவதிலும் அணிக்கு தனது பங்களிப்பை வழங்குவதிலும் மட்டுமே கவனம் செலுத்துவதாக தெரிவித்தார்.</p><h2>மிகுந்த தன்னம்பிக்கையை அளித்தது:</h2><p>"150 விக்கெட்டுகளை கடந்ததை விட, இந்திய சின்னம் பொறித்த இந்திய அணியின் சீருடையை அணிவதே பெருமைக்குரிய உணர்வாக இருக்கிறது. ஒரு இந்திய வீராங்கனையாக சரியான விஷயங்களை செய்வதே முக்கியம். </p><p>யாருக்கு எதிராக விளையாடப் போகிறோம் என்பதை பற்றி நான் சிந்திப்பதில்லை. எப்படி இன்னும் சிறப்பாக செயல்படலாம் மற்றும் எனது பந்துவீச்சு பிரிவுக்கு எப்படி உதவலாம் என்பதிலேயே கவனம் செலுத்துகிறேன்," என்று அவர் கூறினார்.</p><p>தொடர்ந்து பேசிய அவர், "'சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்'-இல் நடைபெற்ற முகாம் எங்களுக்கு மிகுந்த தன்னம்பிக்கையை அளித்தது; நாங்கள் ஆசிய கோப்பையை வெல்ல ஆவலுடன் காத்திருக்கிறோம்," என்றார்.</p>]]></content:encoded></item><item><title>ஹார்முஸ் நீரிணையில் ஈரானிய ராக்கெட் ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்</title><link>https://www.maalaimalar.com/news/world/us-forces-strike-iranian-rocket-launchers-on-strait-of-hormuz</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-forces-strike-iranian-rocket-launchers-on-strait-of-hormuz#comments</comments><guid isPermaLink="false">6dc3c305-f586-4fc1-a77b-4f00267163b8</guid><pubDate>Sun, 30 Aug 2026 22:39:18 +0000</pubDate><atom:updated>2026-08-30T22:39:18.110Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,ஈரான்,Iran,us,Strait of Hormuz,ஹார்முஸ் நீரிணை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/ibwfq5tj/Strait-of-Hormuz.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Strait of Hormuz ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/ibwfq5tj/Strait-of-Hormuz.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஹார்முஸ் நீரிணையில் உள்ள ஈரானிய ராக்கெட் ஏவுதளங்கள் மீது <a href="https://www.maalaimalar.com/topic/US">அமெரிக்க</a> படைகள் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது கடந்த ஒரு மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட முதல் ராணுவ நடவடிக்கையாகும். </p><p>உணர்திறன் மிக்க ராணுவ நகர்வுகள் குறித்து விவரிக்க பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரியின் கூற்றுப்படி, 'ரெவல்யூஷனரி கார்ட் கார்ப்ஸ்' படையினர் கடல் கண்ணிவெடிகளுடன் ராக்கெட்டுகளை ஏவ தயாராவது காணப்பட்டது. </p><p><a href="https://www.maalaimalar.com/topic/strait-of-hormuz">நீரிணையின்</a> சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதைகளில் இருந்த கடல் கண்ணிவெடிகளை அகற்றும் பணியை அமெரிக்க இராணுவம் கடந்த வாரம் நிறைவு செய்தது.</p><h2>பொருளாதார அழுத்தம்:</h2><p>ஈரானில் உள்ள அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனங்கள், நீரிணையில் உள்ள லாரக் தீவுக்கு அருகே வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக தெரிவித்தன. ஈரானின் அரசு ஒலிபரப்பு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில், "எங்கள் போராளிகள் மற்றும் நாட்டு மக்கள் பலரின் வீரமரணம் மற்றும் காயங்கள்" குறித்து 'கார்ட்' (Guard) அமைப்பு குறிப்பிட்டது. இந்த தாக்குதல் "ஆக்கிரமிப்பாளருக்கு தண்டனையை பெற்றுத் தரும்" என்று அந்த அறிக்கை கூறியது.</p><p>ஈரானுடனான போரை முடிவுக்கு கொண்டுவர ராணுவ நடவடிக்கைக்கு பதிலாக பொருளாதார அழுத்தத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்தப்போவதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்த சில நாட்களிலேயே இந்த மோதல் நிகழ்ந்துள்ளது. இந்த உத்தி மாற்றம், தெஹ்ரானுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாடு அல்லது அமைப்பையும் தண்டிப்பதாக மிரட்டுவதை மையமாகக் கொண்டுள்ளது.</p><h2>மீண்டும் பேச்சுவார்த்தை:</h2><p>பல மாத போருக்கு பிறகு ஆயுத இருப்பு குறைந்துள்ளதை நிர்வாகம் பரிசீலித்து வரும் நிலையில், பொருளாதார தடைகளை முக்கிய ஆயுதமாக பயன்படுத்தும் இந்த அணுகுமுறை முன்னுக்கு வந்துள்ளது. நீண்டகால மோதல் உலகின் பிற பகுதிகளில் அமெரிக்காவின் ராணுவ தயார்நிலையை பாதிக்கக்கூடும் என்ற கவலைகளையும் இது எழுப்பியுள்ளது.</p><p>மோதல் தொடர்ந்து நீடிக்கும் நிலையில், போரை விரைவாக முடிவுக்கு கொண்டுவருவது குறித்த டிரம்பின் பேச்சும் மங்கி வருவதாக தெரிகிறது. ஈரானை மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டுவருவதில் தனக்கு "அவசரம் இல்லை" என்று அவர் கடந்த வாரம் வலியுறுத்தினார்; மேலும் அந்த இஸ்லாமிய குடியரசின் தலைமை நெருக்கடியில் சிக்கியுள்ளதாக அவர் தொடர்ந்து கூறி வருகிறார்.</p><p>அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் ஈரானின் கடற்படை மற்றும் விமானப்படைக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஈரான் நேரடி மற்றும் மறைமுகமாக 270 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இழப்பைச் சந்தித்துள்ளதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>ஹல்த்வானி &apos;சுத்திகரிப்பு&apos; கருத்து தொடர்பாக ராகுல் காந்தி மீது FIR</title><link>https://www.maalaimalar.com/news/national/fir-registered-against-rahul-gandhi-over-haldwani-purification-remarks</link><comments>https://www.maalaimalar.com/news/national/fir-registered-against-rahul-gandhi-over-haldwani-purification-remarks#comments</comments><guid isPermaLink="false">be24500a-0bc6-4486-9478-54cc649007d8</guid><pubDate>Sun, 30 Aug 2026 20:46:03 +0000</pubDate><atom:updated>2026-08-30T20:46:03.187Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,FIR,வழக்குப் பதிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/a5q7sa8t/Rahul-Gandhi.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rahul Gandhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/a5q7sa8t/Rahul-Gandhi.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (AICC) தலைவர் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் நடத்தப்பட்ட ஒரு மத சடங்கிற்கு, காங்கிரஸ் தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/rahul-gandhi">ராகுல் காந்தி</a> சாதிய சாயம் பூசியதாக வால்மீகி சமூகத்தை சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், அவர் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தது. </p><p>குழுக்களுக்கு இடையே பகையை தூண்டுதல் மற்றும் மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கத்துடன் வேண்டுமென்றே செய்யப்படும் செயல்கள் தொடர்பான 'பாரதிய நியாய சன்ஹிதா' (BNS) சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த <a href="https://www.maalaimalar.com/topic/fir">FIR</a> பதிவு செய்யப்பட்டுள்ளது. </p><p>மேலும், 'பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டம், 1989'-இன் பிரிவுகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியது.</p><h2>குற்றச்சாட்டு:</h2><p>ஜவஹர் நகரை சேர்ந்தவரும், 'ஸ்ரீ ராம் சேனா தர்மார்த் சேவா நியாஸ்' அமைப்பின் உறுப்பினருமான அமித் குமார், ஹல்த்வானி காவல் நிலையத்தில் அளித்த புகாரில், அந்த "சடங்கு மற்றும் தூய்மை பணி"யின் போது தான் அங்கிருந்ததாகவும், ஆகஸ்ட் 29-ஆம் தேதியன்று டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகள் தங்கள் சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்தியதாகவும் குறிப்பிட்டார்.</p><p>அந்தச் சடங்கில் ஈடுபட்டவர்களை "தீண்டாமையை கடைப்பிடிப்பவர்கள்" மற்றும் "தலித் விரோதிகள்" போல காந்தி சித்தரித்ததாக அவர் குற்றம் சாட்டினார்.</p><p>தாங்கள் பட்டியல் சாதி சமூகத்தை சேர்ந்தவர் என்றும், பட்டியல் சாதியினர் உட்பட சமூகத்தின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்கள் அந்த சடங்கில் ஈடுபட்டதாகவும் குமார் தனது புகாரில் தெரிவித்தார். மேலும், அந்த சடங்கிற்கும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் சாதிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறினார்.</p><h2>சுத்திகரிப்பு யாகம்:</h2><p>ஆகஸ்ட் 8 அன்று ஹல்த்வானியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தினார். அதை தொடர்ந்து, ஆகஸ்ட் 11 அன்று அங்கு சிலர் 'சுத்திகரிப்பு யாகம்' நடத்தியதாக கூறப்பட்டதை தொடர்ந்து அரசியல் சர்ச்சை வெடித்தது.</p><p>இந்தச் சம்பவத்தை பா.ஜ.க.வின் தலித் விரோத மனப்பான்மையின் வெளிப்பாடு என்று காங்கிரஸ் விமர்சித்த நிலையில், பா.ஜ.க. தனது செயலை நியாயப்படுத்தியது. கார்கேவின் பேரணிக்குப் பிறகு அந்த இடம் குப்பைகள் நிறைந்ததாக இருந்ததாகவும், மத வழிபாட்டு தலத்திற்கு பொருத்தமற்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டதாகவும் பா.ஜ.க. தரப்பில் கூறப்பட்டது.</p><p>ஆகஸ்ட் 29 அன்று டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், காந்தி இந்த சம்பவத்தைக் கடுமையாக விமர்சித்ததுடன், அந்த "சுத்திகரிப்பு" நடவடிக்கைக்கு பொறுப்பானவர்கள் மீது SC/ST சட்டத்தின் கீழ் FIR பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.</p>]]></content:encoded></item><item><title>பிரதமர் வேட்பாளர் விவகாரம்: த.வெ.க. அமைச்சரவையில் இருந்து வெளியேறுவோம் - அமைச்சர் ராஜேஷ் குமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajesh-kumar-threatens-to-exit-from-tvk-ministry</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajesh-kumar-threatens-to-exit-from-tvk-ministry#comments</comments><guid isPermaLink="false">b65a5611-2191-4adc-8c1c-c7b857a117da</guid><pubDate>Sun, 30 Aug 2026 20:04:48 +0000</pubDate><atom:updated>2026-08-30T20:04:48.607Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,தவெக,tvk,rajesh kumar,ராஜேஷ் குமார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/hak682ia/Rajesh-Kumar.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rajesh Kumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/hak682ia/Rajesh-Kumar.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2029-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/vijay">விஜய்</a> பிரதமர் வேட்பாளராக ஆவார் என்ற கருத்து சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. </p><p>இதுஒருபக்கம் இருக்க நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பொதுப்பணி துறை அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/aadhav-arjuna">ஆதவ் அர்ஜுனா</a> பேசும் போது தமிழ் நாட்டில் இருந்து பிரதமர் உறுவாக வேண்டும் என்று பேசியிருந்தார். </p><p>இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் விஜய் பிரதமர் வேட்பாளராவார் என்ற கருத்து அதிகளவில் பரவத்தொடங்கியது.</p><h2>காங்கிரஸ் எச்சரிக்கை:</h2><p>இதனிடையே தனியார் நிறுவனம் நடத்திய அடுத்த பிரதமர் யார்? என்ற கருத்துகணிப்பில் முதலமைச்சர் விஜய் 3-ஆம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து முதலமைச்சர் விஜய் தான் பிரதமர் வேட்பாளர் என்பது குறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் வலுப்பெற்றது.</p><p>இந்த நிலையில், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக எற்காவிட்டல் தவெக அமைச்சரவையில் இருந்து வெளியேறுவோம் என்று அமைச்சர் ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார்.</p><h2>அமைச்சர் திட்டவட்டம்:</h2><p>கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் நடைபெற்ற மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் ராபின்சன் பதவி ஏற்பு நிகழ்வில் அமைச்சர் ராஜேஷ்குமார் பேசும் போது, “2029 நாடாளுமன்ற தேர்தலில் பாரத பிரதமர் வேட்பாளர் எங்களுடைய தலைவர் ராகுல் காந்தி தான்!</p><p>ஒருவேளை தமிழக வெற்றிக் கழகம் இதற்கு உடன்படவில்லை என்றால், தமிழக வெற்றி கழகம் தலைமையிலான அமைச்சரவையில் இருக்கும் இரண்டு அமைச்சர்களும் எங்கள் பொறுப்புகளை துறப்போம்,” என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>SCO உச்சிமாநாட்டில் பங்கேற்க கிர்கிஸ்தான் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/pm-modi-arrives-in-kyrgyzstan-to-attend-sco-summit</link><comments>https://www.maalaimalar.com/news/world/pm-modi-arrives-in-kyrgyzstan-to-attend-sco-summit#comments</comments><guid isPermaLink="false">6627fd6f-b5cb-4826-add7-1bfcbf6ded91</guid><pubDate>Sun, 30 Aug 2026 18:53:18 +0000</pubDate><atom:updated>2026-08-30T18:53:18.868Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>SCO summit,pm modi,பிரதமர் மோடி,கிர்கிஸ்தான்,Kyrgyzstan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/r1vz3owc/PM-Modi-in-Kyrgyz.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi in Kyrgyz]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/r1vz3owc/PM-Modi-in-Kyrgyz.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/shanghai">ஷாங்காய்</a> ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகவும், அதன் ஒரு பகுதியாக பல்வேறு இருதரப்பு சந்திப்புகளை நடத்துவதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி கிர்கிஸ்தான் சென்றடைந்தார். </p><p>விமான நிலையத்தில் அமைச்சரவையின் தலைவரான கசிமாலியேவ் அடில்பெக் அலேஷோவிச் அவரை வரவேற்றார். பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக விமான நிலையத்தில் பாரம்பரிய கிர்கிஸ் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. </p><p>"26-ஆவது SCO தலைவர்கள் உச்சிமாநாட்டில் பங்கேற்க <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">பிரதமர் மோடி</a> பிஷ்கெக் வந்துள்ளார். கிர்கிஸ் குடியரசின் அமைச்சரவை தலைவரான திரு. அடில்பெக் கசிமாலியேவ் அவரை வரவேற்றார்.</p><p>பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்த உரையாடல் மற்றும் ஒத்துழைப்பை முன்னெடுப்பதற்காக, பத்து உறுப்பு நாடுகள், பதினைந்து கூட்டாளர் நாடுகள் மற்றும் இரண்டு பார்வையாளர் நாடுகளை SCO உச்சிமாநாடு ஒன்றிணைக்கிறது," என்று வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.</p><h2>உற்சாக வரவேற்பு:</h2><p>ஒரு ஹோட்டலுக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு 'வந்தே மாதரம்' முழக்கங்களுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. 'மா துஜே சலாம்' என்ற தேசபக்திப் பாடலின் இசைக்கு ஏற்ப நடைபெற்ற உற்சாகமான யோகா நிகழ்ச்சியையும் அவர் பார்வையிட்டார். ஹோட்டலுக்கு வந்தடைந்தபோது, ​​சிவபெருமானை மையமாகக் கொண்ட கலாச்சார நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.</p><p>ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெறும் 26-ஆவது SCO உச்சிமாநாட்டில் பங்கேற்க, அதிபர் சதிர் ஜபரோவின் அழைப்பின் பேரில் மோடி கிர்கிஸ்தான் சென்றுள்ளார். 10 உறுப்பினர்களை கொண்ட SCO அமைப்பு தனது 25-ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது.</p><h2>இருதரப்பு சந்திப்பு:</h2><p>சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளால் 2001-இல் இந்த அமைப்பு நிறுவப்பட்டது. பின்னர் 2017-இல் இந்தியாவும் பாகிஸ்தானும் முழு உறுப்பினர்களாக இணைந்தன; அதைத் தொடர்ந்து 2023-இல் ஈரானும், 2024-ல் பெலாரஸும் இதில் இணைந்தன.</p><p>உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, கிர்கிஸ் அதிபர் ஜபரோவ் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட SCO தலைவர்களுடன் மோடி இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>மகளிர் டி20 ஆசிய கோப்பை: தாய்லாந்து அணியை துவம்சம் செய்தது இந்திய மகளிர் அணி</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/india-crush-thailand-by-94-runs-in-womens-t20-asia-cup-contest</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/india-crush-thailand-by-94-runs-in-womens-t20-asia-cup-contest#comments</comments><guid isPermaLink="false">47345ee1-a6e5-4101-8fe7-e1a701ed7f39</guid><pubDate>Sun, 30 Aug 2026 18:14:41 +0000</pubDate><atom:updated>2026-08-30T18:14:41.179Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய மகளிர் அணி,India women,Women&apos;s T20 Asia Cup,Thailand Women,மகளிர் டி20 ஆசிய கோப்பை,தாய்லாந்து மகளிர் அணி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/q0hvi92p/IND-Womens-Win.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ IND Womens Win]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/q0hvi92p/IND-Womens-Win.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகளிர் டி20 ஆசிய கோப்பை தொடரின் 'குரூப் ஏ' (Group A) பிரிவு ஆட்டத்தில், இந்தியா 94 ரன்கள் வித்தியாசத்தில் தாய்லாந்தை வீழ்த்தி வெற்றியுடன் தனது பயணத்தை தொடங்கியது.</p><p>துபாய் சர்வதேச <a href="https://www.maalaimalar.com/sports/cricket">கிரிக்கெட்</a> மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தாய்லாந்து மகளிர் அணி முதலில் பந்துவீசியது. </p><p>இதைத் தொடர்ந்து  பேட்டிங் ஆடிய <a href="https://www.maalaimalar.com/topic/india-womens-team">இந்திய மகளிர்</a> அணிக்கு ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாளி வெர்மா தொடக்கம் கொடுத்தனர்.</p><h2>ஷஃபாளி வெர்மா அபாரம்:</h2><p>ஸ்மிருதி மந்தனா 19 ரன்கள் எடுத்த போது ரன் அவுட் ஆகி வெளியேறினார். பிறகு களமிறங்கிய பிரதிகா ராவல் 18 பந்துகளில் 22 ரன்களை எடுத்தார். கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 5 ரன்களில் பெவிலியன் திரும்பினார். </p><p>அடுத்தடுத்து களமிறங்கியவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஷஃபாளி வெர்மா மட்டும் சிறப்பாக ஆடி 36 பந்துகளில் 64 ரன்கள் (8 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) விளாசினார்.</p><p>இதனால் இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்களை எடுத்தது. தாய்லாந்து மகளிர் அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய சுலிபார்ன் லவோமி 3 விக்கெட்டுகளையும், சுனிடா சதுரோங்கட்டனா 2 விக்கெட்டுகளையும், திபாச்சா புத்தவொங் மற்றும் சனிதா சுத்திரௌங் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.</p><h2>தாய்லாந்து தடுமாற்றம்:</h2><p>160 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய தாய்லாந்து மகளிர் அணி தொடக்கம் முதலே ரன் குவிக்க திணறியது. அந்த அணிக்கு துவக்கம் கொடுத்த நத்தகன் சந்தம் 4 ரன்களும், பணிதா மாயா 6 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பிறகு களமிறங்கிய நானாபத் கொன்ச்சரோன்கய் நிதானமாக ஆடி ரன் குவிப்பில் கவனம் செலுத்தினர்.</p><p>எனினும், மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் தாய்லாந்து மகளிர் அணி 16.1 ஓவர்கள் முடிவில் 65 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. </p><p>இந்திய மகளிர் அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய தீப்தி ஷர்மா மற்றும் நந்தனி ஷர்மா தலா 3 விக்கெட்டுகளையும், ஸ்ரீ சராணி 2 விக்கெட்டுகளையும், க்ராந்தி கௌத் 1 விக்கெட் வீழ்த்தினர். இதனால் இந்திய மகளிர் அணி 94 ரன்கள் வித்தயாசத்தில் அபார வெற்றி பெற்றது.</p>]]></content:encoded></item><item><title>உஸ்பெக்கில் லால் பகதூர் சாஸ்திரிக்கு மரியாதை செலுத்திய பிரதமர் மோடி</title><link>https://www.maalaimalar.com/news/world/pm-modi-pays-tribute-to-lal-bahadur-shastri-plants-tree-in-uzbekistan</link><comments>https://www.maalaimalar.com/news/world/pm-modi-pays-tribute-to-lal-bahadur-shastri-plants-tree-in-uzbekistan#comments</comments><guid isPermaLink="false">b5ed1d6c-f33c-4c86-8bcd-014e26d74a8b</guid><pubDate>Sun, 30 Aug 2026 17:16:10 +0000</pubDate><atom:updated>2026-08-30T17:16:10.578Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Lal Bahadur Shastri,uzbekistan,pm modi,பிரதமர் மோடி,உஸ்பெகிஸ்தான்,லால் பகதூர் சாஸ்திரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/0gor03tu/PM-Modi-paid-respects.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi Paid Respects]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/0gor03tu/PM-Modi-paid-respects.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரதமர் <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">நரேந்திர மோடி</a> தாஷ்கண்டில், முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பாரம்பரியத்தை போற்றும் வகையில் சாஸ்திரி நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தியதுடன், உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவுடன் இணைந்து ஒரு மரக்கன்றை நட்டார்.</p><p>சாஸ்திரியின் 'ஜெய் ஜவான், ஜெய் கிசான்' என்ற காலத்தால் அழியாத முழக்கம் தலைமுறை தலைமுறையாக ஊக்கமளித்து வருகிறது என்று வெளியுறவு அமைச்சகம் கூறியதுடன், அவரது வாழ்க்கை எளிமை, தைரியம் மற்றும் தேசப்பற்றை உள்ளடக்கியதாக இருந்தது என்றும் குறிப்பிட்டது.</p><h2>மரக்கன்று நட்டார் பிரதமர் மோடி:</h2><p>இந்தியாவின் இரண்டாவது பிரதமரான சாஸ்திரி, 1965-ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வரலாற்று சிறப்புமிக்க தாஷ்கண்ட் பிரகடனத்தில் கையெழுத்திட்ட சில மணிநேரங்களுக்கு பிறகு, 1966 ஜனவரி 11 அன்று உஸ்பெக் தலைநகரில் திடீரென காலமானார்.</p><p>இந்தியாவின் 'ஏக் பேத் மா கே நாம்' முன்முயற்சி மற்றும் உஸ்பெகிஸ்தானின் 'யாஷில் மாகோன்' பசுமை முயற்சிகளின் கீழ், பிரதமர் மோடியும் மிர்சியோயேவும் இணைந்து ஜனாதிபதி மாளிகை தோட்டத்தில் ஒரு மரக்கன்றை நட்டனர் என்று வெளியுறவு அமைச்சகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.</p><p>அந்தப் பதிவில், "இந்த நடவடிக்கை, பசுமையான மற்றும் நிலையான எதிர்காலத்தை வளர்ப்பதில் இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தானின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>மரம் நடும் விழா:</h2><p>உஸ்பெகிஸ்தானுக்கான தனது இரண்டு நாள் அரசுமுறை பயணத்தின் ஒரு பகுதியாக, குக்சரோய் ஜனாதிபதி மாளிகையில் மிர்சியோயேவுடன் பிரதமர் மோடி தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, மரம் நடும் விழா நடைபெற்றது.</p><p>இரு தலைவர்களும், இருதரப்பு மூலோபாய கூட்டாண்மையை வலுப்படுத்துவது தொடர்பாக, வர்த்தகம் மற்றும் முதலீடு, புத்தாக்கம் மற்றும் புத்தொழில் நிறுவனங்கள், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு மற்றும் யு.பி.ஐ., பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் மருந்து தொழில், முக்கிய கனிமங்கள், விவசாயம், கல்வி, சுற்றுலா, விண்வெளி மற்றும் மக்கள் பரிமாற்றங்கள் உள்ளிட்ட விரிவான கலந்துரையாடல்களை நடத்தினர்.</p><p>முன்னதாக இன்று, உஸ்பெகிஸ்தான் யோகா கூட்டமைப்பு நடத்திய யோகா அமர்வில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். பிரதமர் சனிக்கிழமை தாஷ்கண்ட் வந்தடைந்தார், விமான நிலையத்தில் அவருக்கு மிர்சியோயேவ் உற்சாகமான வரவேற்பு அளித்தார்.</p>]]></content:encoded></item><item><title>2029-ல் ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர்- விஜய் வசந்த் எம்.பி. உறுதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rahul-gandhi-set-as-2029-pm-candidate-says-mp-vijay-vasanth</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rahul-gandhi-set-as-2029-pm-candidate-says-mp-vijay-vasanth#comments</comments><guid isPermaLink="false">a7051191-cbb1-4f47-8bb6-be208cd896cb</guid><pubDate>Sun, 30 Aug 2026 16:32:23 +0000</pubDate><atom:updated>2026-08-30T16:32:23.557Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Congress,காங்கிரஸ்,Vijay Vasanth,விஜய் வசந்த்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/qngpcsri/Vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vijay Vasanth MP]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/qngpcsri/Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கோவில்பட்டி அருகே ஈராச்சியில் உள்ள பள்ளி விழாவில் விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டார்.</p><p>பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-</p><p>நேபாளத்தில் நடந்த துயர சம்பவத்தில் பல உயிர்களை இழந்துள்ளோம். பலர் காணாமல் போய் உள்ளனர். இதில் தமிழகத்தைச்  சேர்ந்த வர்களும் உள்ளனர்.</p><p>முதலமைச்சர் உடனடியாக அமைச்சர் களை டெல்லிக்கு அனுப்பினார். அங்குள்ளவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>2029-ல் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம்.</p><p>நீட் தேர்வுக்காக டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு அமைப்பினர் தீவிர போராட்டம் நடத்தினாலும், ராகுல் காந்தி பிரதமர் இல்லம் முன்பு முற்றுகையிட்டு அதனை கவனத்துக்கு கொண்டு வந்து, பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என கூறினார்.</p><p>பாராளுமன்றத்தில் அவர் பேசும்போது தடுத்தாலும் விடாமுயற்சியுடன் தனது கருத்துக்களை எடுத்து வைத்தார். மக்களுக்காக குரல் கொடுக்கும் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர். த.வெ.க.வினர் அவர்களது கருத்துக்களை கூறியுள்ளனர். எங்களைப் பொருத்தவரை ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர்.</p><p>2029-ல் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என ஒட்டுமொத்த காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினரின் எண்ணமாக உள்ளது. பிரதமர் மோடியை எதிர்க்கும் சக்தியாக ராகுல் காந்தி உள்ளார். மோடி அரசின் செயல்பாடுகள் மக்களுக்கு நன்றாக தெரியும்.</p><p>நீட் தேர்வு பிரச்சி னையில் என்ன நடந்தது என்று அனை வருக்கும் தெரியும். மாற்றம் வேண்டும். இளைஞர்களுக்கான ஆட்சி வேண்டும், மக்களுக்கான ஆட்சி அமைய வேண்டும் என்றால் ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டும். </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>5 பில்லியன் டாலர் வர்த்தகம், யுரேனிய விநியோகம் : இந்தியா, உஸ்பெகிஸ்தான் இடையே எட்டப்பட்ட முக்கிய ஒப்பந்தங்கள்!</title><link>https://www.maalaimalar.com/news/national/5-billion-trade-uranium-supply-key-agreements-reached-between-india-and-uzbekistan</link><comments>https://www.maalaimalar.com/news/national/5-billion-trade-uranium-supply-key-agreements-reached-between-india-and-uzbekistan#comments</comments><guid isPermaLink="false">7305b888-4213-450d-8d57-2aaa6984f3ed</guid><pubDate>Sun, 30 Aug 2026 16:08:34 +0000</pubDate><atom:updated>2026-08-30T16:08:34.184Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,uzbekistan,pm modi,பிரதமர் மோடி,உஸ்பெகிஸ்தான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/hmeotic7/New-Project-2026-08-30T211702.209.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 5 மில்லியன் டாலர் வர்த்தகம், யுரேனியம் விநியோக ஒப்பந்தம்: இந்தியா, உஸ்பெகிஸ்தான் இடையே எட்டப்பட்ட முக்கிய ஒப்பந்தங்கள்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/hmeotic7/New-Project-2026-08-30T211702.209.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உஸ்பெகிஸ்தானுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இருநாடுகளுக்கும் இடையே இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் பல முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.</p><h2>5 பில்லியன் டாலர் வர்த்தகம்</h2><p>அதன்படி இருநாடுகளும் 2030ம் ஆண்டுக்குள் 5 பில்லியன் டாலர் வர்த்தகம் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளன. மேலும் இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவு, விரிவான உத்திசார் கூட்டாண்மை நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது.</p><p>வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்தில் புதிய ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படவுள்ளது. தற்போதுள்ள கூட்டுக் குழு செயலாளர் மட்டத்திலிருந்து அமைச்சர் மட்டத்திற்கு தரம் உயர்த்தப்படும்.</p><h2>யுரேனியம் விநியோக ஒப்பந்தம்</h2><p>இந்தியாவின் அணுமின் உற்பத்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உஸ்பெகிஸ்தானில் இருந்து நீண்ட கால அடிப்படையில் யுரேனியம் இறக்குமதி செய்ய வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. </p><p>இதுதொடர்பாக இரு நாடுகளும்  ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் தருவாயில் இருக்கின்றன என்று வெளியுறவு அமைச்சகத்தின் மேற்குப் பிராந்தியச் செயலாளர் சிபி ஜார்ஜ் தெரிவித்துள்ளார். </p><p>மேலும் இந்தியாவின் யு.பி.ஐ டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவை உஸ்பெகிஸ்தானிலும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.</p><h2>கனிமங்கள் மற்றும் சுரங்கத் துறை</h2><p>தங்கம், தாமிரம், யுரேனியம் மற்றும் அரிய வகை பூமி கனிமங்கள் உள்ளிட்ட சுரங்கம் மற்றும் கனிம வளங்கள் பிரிவில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. </p><p>இது மட்டுமின்றி பாதுகாப்பு, ஆயுர்வேதம், பாரம்பரிய மருத்துவம், மருந்துகள், சுகாதாரம், விவசாயம், சுற்றுலா மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்பட முக்கிய உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>4 சிறார்கள் உயிரிழப்பு- ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/4-children-killed-rs-3-lakh-compensation-announced</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/4-children-killed-rs-3-lakh-compensation-announced#comments</comments><guid isPermaLink="false">79dd29c3-c094-474e-85a0-3ff7e2bf122e</guid><pubDate>Sun, 30 Aug 2026 15:39:56 +0000</pubDate><atom:updated>2026-08-30T15:39:56.165Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சாலை விபத்து,road accident,திண்டுக்கல்,சிறுவர்கள் உயிரிழப்பு,Dindugul,Children dead</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/05copx9t/TN-CM-Vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/05copx9t/TN-CM-Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்லில் பால் வேன் மோதி உயிரிழந்த சிறார்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>விபத்து</h2><p>திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே வீட்டின் அருகாமையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது பால் வேன் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.</p><p>இந்த கோர விபத்தில் 3 சிறுமிகள், ஒரு சிறுவன் உள்ளிட்ட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><p>விபத்தில் சிறுவன் மோசிகரன், சிறுமிகள் யோகவர்ஷினி, அனன்யா, தனு ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><p>விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடி தலைமறைவான ஓட்டுநர் சரவணனை கைது செய்த போலீசார் பால் வேனையும் பறிமுதல் செய்தனர்.</p><h2>நிதியுதவி</h2><p>திண்டுக்கல் வடமதுரை அருகே வாகனம் மோதிய விபத்தில் 4 குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்திகேட்டு வேதடையடைந்தேன் என முதலமைச்சர் விஜய் அறவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>திண்டுக்கல் கோர விபத்தில் 4 குழந்தைகள் பலியான செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். </p><p>உயிரிழந்த நான்கு குழந்தைகளின் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும்.</p><p>இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நேபாள வெள்ளப் பாதிப்பு: 4 விமானங்கள் மூலம் 68.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பியது இந்தியா!</title><link>https://www.maalaimalar.com/news/national/nepal-flood-crisis-india-sends-685-tonnes-of-relief-materials-via-four-aircraft</link><comments>https://www.maalaimalar.com/news/national/nepal-flood-crisis-india-sends-685-tonnes-of-relief-materials-via-four-aircraft#comments</comments><guid isPermaLink="false">932cdc14-4039-4863-ad8b-424a80deea8c</guid><pubDate>Sun, 30 Aug 2026 15:32:14 +0000</pubDate><atom:updated>2026-08-30T15:32:14.504Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,நேபாளம்,nepal,நிவாரணப் பொருட்கள்,relief materials</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/f3eswfqz/New-Project-2026-08-30T205452.412.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நேபாள வெள்ளப் பாதிப்பு: 4 விமானங்கள் மூலம் 68.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பியது இந்தியா!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/f3eswfqz/New-Project-2026-08-30T205452.412.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெருவெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள அண்டை நாடான நேபாளத்திற்கு இந்தியா இதுவரை 4 ராணுவ விமானங்கள் மூலம் 68.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பி உதவிக்கரம் நீட்டியுள்ளது. </p><p>நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் இதுவரை 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயும் உள்ள நிலையில், ஆக.26 முதல் தேவையான உதவிகளை இந்தியா வழங்கி வருகிறது. </p><p>இதில் தார்பாய்கள், கூடாரங்கள், போர்வைகள், மற்றும் சுகாதாரக் கருவிகள், மருந்துகள் உள்ளிட்ட அடிப்படை தேவைக்கான பொருட்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.</p><p>நிவாரணப் பொருட்கள் மட்டுமின்றி தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக தொழில்நுட்பக் குழுக்கள், தடயவியல் நிபுணர்கள் மற்றும் உபகரணங்களையும் அனுப்பியுள்ளது.</p><p>நீர்மின் நிலைய சுரங்கங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க, அதிநவீன உபகரணங்களுடன் கூடிய பிரத்யேகச் சுரங்கத் தொழில்நுட்பக் குழு அனுப்பப்பட்டுள்ளது. </p><p>இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளும் நேபாளத்திற்கு பல்வேறு உதவிகளை அறிவித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>‘உண்மையான எதிரி யார் என்பதை முதலில் அடையாளம் காணுங்கள்’ - வளைகுடா ஆட்சியாளர்களுக்கு மொஜ்தபா கமேனி அறிவுரை!</title><link>https://www.maalaimalar.com/news/world/first-identify-who-the-real-enemy-is-mojtaba-khameneis-advice-to-gulf-rulers</link><comments>https://www.maalaimalar.com/news/world/first-identify-who-the-real-enemy-is-mojtaba-khameneis-advice-to-gulf-rulers#comments</comments><guid isPermaLink="false">4bd52fcc-d24b-444a-88b5-8fe5fef9ddb5</guid><pubDate>Sun, 30 Aug 2026 15:10:11 +0000</pubDate><atom:updated>2026-08-30T15:10:11.766Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ஈரான்,Iran,Mojtaba Khamenei,மொஜ்தபா கமேனி,Gulf rulers,வளைகுடா ஆட்சியாளர்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/ia6mwdx6/New-Project-2026-08-30T202743.093.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘உண்மையான எதிரி யார் என்பதை முதலில் அடையாளம் காணுங்கள்’ - வளைகுடா நாடுகளுக்கு மொஜ்தபா கமேனி அறிவுரை!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/ia6mwdx6/New-Project-2026-08-30T202743.093.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வளைகுடா நாடுகள் தங்களின் உண்மையான எதிரி யார் என்பதை முதலில் தெரிந்துகொண்டு, அவர்களை எதிர்கொள்ள வேண்டும் என அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் ஈரானின் உச்சத்தலைவர் மொஜ்தபா கமேனி.</p><p>“இஸ்லாமிய நாடுகளின் ஆட்சியாளர்களுக்கும், குறிப்பாக மேற்கு ஆசியா மற்றும் வளைகுடா நாடுகளின் ஆட்சியாளர்களுக்கும் நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் பரிந்துரை என்னவென்றால், </p><p>உங்கள் உண்மையான எதிரியை அடையாளம் கண்டு, அவனது திட்டத்தைப் புரிந்துகொண்டு, அதை எதிர்கொள்ளுங்கள் என்பதே” என அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>ஹார்முஸ் நீரிணை</h2><p>ஹார்முஸ் நீரிணை விவாரத்தில் ஈரான் தெளிவான நிலைப்பாட்டை கொண்டிருக்கும் வேளையில், மத்திய கிழக்கு நாடுகள் அமெரிக்கா பக்கம் நின்று ஈரானுக்கு அழுத்தம் கொடுத்து வரும்நிலையில், மொஜ்தபாவின் இந்த கருத்துகள் வந்துள்ளன.</p><p>நபிகள் நாயகத்தின் பிறந்தநாளையொட்டி அவரது அதிகாரப்பூர்வ டெலிகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட எழுத்துப்பூர்வ செய்தியில் இந்த முக்கியக் கருத்துக்களை அவர் பகிர்ந்துள்ளார். </p><p>அதில் அமெரிக்காவும், இஸ்ரேலும் ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகிற்கும் பொதுவான மற்றும் உண்மையான எதிரிகள் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களுக்கு இனி "பாதுகாப்பான புகலிடம்" இருக்காது என்றும், பிராந்திய நாடுகள் அமெரிக்காவின் ராணுவப் பாதுகாப்பிற்கு ஒரு கேடயமாகச் செயல்படக் கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.</p><h2>பாலஸ்தீன நிலை</h2><p>இஸ்லாமிய நாடுகளுக்கு இடையே உள்ள இன, கலாச்சார, அரசியல் மற்றும் புவியியல் வேறுபாடுகளைப் பயன்படுத்தி எதிரிகள் பிளவை உண்டாக்குகிறார்கள். </p><p>முஸ்லிம்களுக்குள் பிளவை ஏற்படுத்துபவர்கள் தெரிந்தோ அல்லது தெரியாமலோ எதிரிகளுக்குத்தான் உதவுகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>"இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் ஒன்றுபட்டிருந்தால், பாலஸ்தீன மக்கள் இன்று இந்த அளவுக்கு ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பார்களா?" என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஜல்லிக்கட்டு குறித்து சர்ச்சை பேச்சு- த.வெ.க. அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/aiadmk-protest-announced-over-jallikattu-controversy</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/aiadmk-protest-announced-over-jallikattu-controversy#comments</comments><guid isPermaLink="false">40ab6f99-0331-4b6f-a772-f466a0791d53</guid><pubDate>Sun, 30 Aug 2026 15:01:13 +0000</pubDate><atom:updated>2026-08-30T15:01:13.771Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அதிமுக,எடப்பாடி பழனிசாமி,Edappadi pazhanisamy,tvk,jallikattu,ஜல்லிக்கட்டு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/3py41gbi/EPS.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Edappadi pazhanisamy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/3py41gbi/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ் நாடு சட்டசபையில் "ஜல்லிக்கட்டு போட்டி இளைஞர்களை சீரழிக்கிறது" என்று அநாகரீகமாக கொச்சைப்படுத்திப் பேசி இருக்கின்ற சோழவந்தான் தொகுதி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரையும், த.வெ.க அரசையும் கண்டித்து, ஒருங்கிணைந்த மதுரை மாவட்டக் கழகங்களின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் செப்டம்பர் 3-ந் தேதி நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். </p><p>இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>கடும் கண்டனம்</h2><p>சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது, நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை அளித்துவிட்டு ஆட்சியில் அமர்ந்த ரீல்ஸ் மாடல் தவெக.</p><p>அரசு, மக்கள் நிம்மதியுடன் வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தித் தருவதற்கு பதிலாக பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி வருகிறது. இதனை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். </p><p>அந்த வகையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், சோழவந்தான் தொகுதி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா அவர்கள், தமிழர்களுடைய பாரம்பரியத்தின், கலாசாரத்தின், நாகரீகத்தின், வீரத்தின் அடையாளமான ஜல்லிக்கட்டு வீர விளையாட்டுப் போட்டி இளைஞர்களை சீரழிக்கிறது என்று அநாகரீகமாக, கொச்சைப்படுத்திப் பேசியிருப்பது இளைஞர்களிடையேயும், பொதுமக்களிடையேயும் மிகுந்த கொந்தளிப்பையும், வேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது.</p><p>தவெ.க-வினர் இதுபோன்று தான்தோன்றித்தனமாக பேசி வருவது கடும் கண்டனத்திற்குரியது.</p><h2>ஜல்லிக்கட்டுப் போட்டிகள்</h2><p>தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இடையிலான அரசியல் மற்றும் சட்டப் போராட்ட வரலாறு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.</p><p>விலங்குகள் நல வாரியம் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், உச்சநீதிமன்றம் 2014ஆம் ஆண்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு முற்றிலுமாகத் தடை விதித்தது.</p><p>அப்போதைய முதலமைச்சர் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள், ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தோடு கலந்தது என்பதால் இந்தத் தடையை நீக்க வேண்டும் என மத்திய அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததோடு, உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தார். </p><p>தொடர்ந்து, 2017 ஜனவரியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இளைஞர்களும் மாணவர்களும் வாலாற்றுச் சிறப்பு மிக்க அறப் போராட்டத்தை நடத்தினர்.</p><p>அப்போதைய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசின் ஒப்புதலுடன் 21.1.2017 அன்று ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இதன்மூலம் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மீண்டும் நடத்தப்பட்டு வருகிறது.</p><h2>கலாசார பாரம்பரியம்</h2><p>அவசரச் சட்டத்தைத் தொடர்ந்து. எனது தலைமையிலான அப்போதைய அம்மா அரசு தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில் விலங்கு வதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு நிரந்தர சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம் ஐல்லிக்கட்டு என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல.</p><p>அது தமிழர்களின் கலாசார பாரம்பரியம் என சட்டப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டது. 2017-ஆம் ஆண்டு கழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து விலங்கு அமைப்புகள் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், 18.5.2023 அன்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, தமிழக அரசு கொண்டுவந்த சட்டம் செல்லும் என்றும், ஜல்லிக்கட்டு தடையின்றி நடக்கலாம் என்றும் இறுதித் தீர்ப்பு அளித்தது.</p><p>இவ்வாறு ஐல்லிக்கட்டுப் போட்டி தடையின்றி நடைபெறுவதற்கு கழக அரசு மேற்கொண்ட சட்டப் போராட்டங்களே காரணம் என்பதை இந்த நேரத்தில் பெருமையோடு கட்டிக்காட்ட விரும்புகிறேன்.</p><h2>கண்டன ஆர்ப்பாட்டம்</h2><p>இந்நிலையில், 'தமிழர்களின் வீர விளையாட்டான பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டி, இளைஞர்களை அழிக்கிறது என்று தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில் அநாகரீகமாக, கொச்சைப்படுத்திப் பேசிய சோழவந்தான் தொகுதி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரையும்.</p><p>மக்களின் நலனில் அக்கறையில்லாமல் தான்தோன்றித் தனமாக செயல்பட்டு வரும் ரீல்ஸ் மாடல் தவெக அரசையும் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு ஆகிய மாவட்டக் கழகங்களின் சார்பில் 3.9.2026 வியாழக் கிழமை காலை 9.30 மணியளவில் 'அலங்காநல்லூர் வாடிவாசல் அருகில்' மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.</p><p>இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் கழக அமைப்புச் செயலாளரும் மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமானசெல்லூர் K ராஜூ கழக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளரும்.</p><p>மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான R.B. உதயகுமார், அழக அமைப்புச் செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளருமான V.V. ராஜன் செல்லப்பா ஆகியோர் தலைமையில், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் மாணிக்கம் Ex M.LA, அவர்கள் முன்னிலையில் நடைபெறும்.</p><p>இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள். </p><p>முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி பகுதிக் கழகச் செயலாளர்கள்.</p><p>நிர்வாகிகள் கழக சார்பு அமைப்புகளின் மாநில நிர்வாகிகள் சார்பு அமைப்புகளின் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் உட்பட மாவட்டங்களில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும் கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், ஐல்லிக்கட்டு காளைபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், ஐல்லிக்கட்டு நலச் சங்கத்தினர் மற்றும் இளைஞர்கள், இளம் பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுளது அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சூழ்ந்த வெள்ளத்தில் தூணாக நின்ற வீடு... யாரு சாமி அந்த இன்ஜினியர் - இணையத்தை சூழ்ந்த கேள்வி!</title><link>https://www.maalaimalar.com/news/world/a-house-standing-like-a-pillar-amidst-the-surrounding-floodwaters-who-on-earth-is-that-engineer-a-question-sweeping-across-the-internet</link><comments>https://www.maalaimalar.com/news/world/a-house-standing-like-a-pillar-amidst-the-surrounding-floodwaters-who-on-earth-is-that-engineer-a-question-sweeping-across-the-internet#comments</comments><guid isPermaLink="false">7feb4142-cf92-45c5-ab68-34a954258e56</guid><pubDate>Sun, 30 Aug 2026 14:38:18 +0000</pubDate><atom:updated>2026-08-30T14:38:18.605Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாளம்,nepal,வெள்ளம்,flood,Engineer,பொறியாளர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/ponos38a/New-Project-2026-08-30T191825.645.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சூழ்ந்த வெள்ளத்தில் தூணாக நின்ற வீடு... யாரு சாமி அந்த இன்ஜினியர் - இணையத்தை சூழ்ந்த கேள்வி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/ponos38a/New-Project-2026-08-30T191825.645.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாள பெரு வெள்ளத்தின் பல காட்சிகள் நாளுக்கு நாள் வெளியாகி இணையத்தை உலுக்கி வருகின்றன. அதில் ஒரு வீடியோதான் பெருவெள்ளத்தில் ஒரு குடும்பத்தை தூணாக நின்று தாங்கிய வீட்டின் காட்சிகள்.</p><p>நான்குபுறமும் வெள்ளம் சூழ்ந்த நிலையில், அருகில் இருந்த வீடுகள் கொஞ்சம் கொஞ்சமாக காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. ஆனால் நடுவில் இருந்த இந்த ஒரு பச்சைவீடு மட்டும் எதற்கும் அசராமல் உறுதியுடன் நின்றது. </p><p>இந்த வீடியோவை பார்க்கும் பயனர்கள் பலரும் அந்த வீட்டின் பொறியாளருக்குதான் குடும்பத்தினர் நன்றிக்கூற வேண்டும் எனக்கூறி வருகின்றனர். </p><h2>நேபாள பெருவெள்ளம்</h2><p>நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு காரணமாக, திரிசூலி ஆற்றுப் பகுதியில் திடீர் சேற்று வெள்ளம் சீறிப்பாய்ந்தது. </p><p>இந்த வெள்ளத்தில் நேபாளத்தின் ஏழு மாவட்டங்களில் பல்வேறு கட்டிடங்கள், பாலங்கள் மற்றும் வாகனங்கள் அனைத்தும் தரைமட்டமாகி அடித்துச் செல்லப்பட்டுள்ளன. தற்போதுவரை பாதிப்பின் அளவை கணக்கிட முடியவில்லை. </p><p>இந்நிலையில் வெள்ளத்தில் இந்த ஒரு வீடு மட்டும் அசைக்க முடியாமல் கம்பீரமாக நின்றது. கீழ் தளம் மற்றும் முதல் தளம் முழுவதும் வெள்ளத்தால் சூழ பால்கனியில் குடும்பத்தினர் தவித்துக் கொண்டிருந்தனர். </p><p>இப்போதும் அந்தக் காட்சிகளை நினைத்தால், பார்த்தால் மனம் பதறுகிறது. தற்போது அந்த வீட்டில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு பத்திரமாக உள்ளனர். </p><p>வீடு விழாமல் இருந்ததற்கு பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதில் முதல் காரணம் உறுதி. வீட்டை தரமாக கட்டிய பொறியாளர் என அந்த பொறியாளருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மற்றொரு காரணம் வெள்ளம் ஒரே பக்கத்தில் விரைவாக சென்றுக் கொண்டிருந்தது. </p><p>வீட்டின் முன்புறமும் வெள்ளநீர் ஓடிக்கொண்டிருந்தாலும், வெள்ளத்தில் அடித்து கொண்டுவரப்பட்ட கற்கள், பொருட்கள், சேறு ஆகியவை முன்புறம் நின்று வீட்டை தாங்கிக்கொண்டன. இதனால் முன்புறம் வீடு சாய்வதற்கான சாத்தியக்கூறு அபாயங்கள் தவிர்க்கப்பட்டன.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">This house standing after such an immense force is a remarkable testament to strong construction.<a href="https://t.co/OpPGN88pU0">https://t.co/OpPGN88pU0</a></p>&mdash; Weather Monitor (@WeatherMonitors) <a href="https://x.com/WeatherMonitors/status/2093330255369195907?ref_src=twsrc%5Etfw">August 28, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>Video: நேபாள பெருவெள்ளத்தில் நூலிழை தப்பிய குடும்பம் - தாயின் துணிச்சலுக்கு குவியும் பாராட்டு!</title><link>https://www.maalaimalar.com/news/world/nepal-flash-flood-mother-rescues-two-kids-terrifying-clip</link><comments>https://www.maalaimalar.com/news/world/nepal-flash-flood-mother-rescues-two-kids-terrifying-clip#comments</comments><guid isPermaLink="false">c26946ee-f2e4-4ddd-8183-c2429b7334d8</guid><pubDate>Sun, 30 Aug 2026 13:49:07 +0000</pubDate><atom:updated>2026-08-30T13:49:07.557Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாள நிலச்சரிவு,nepal flood,Nepal disaster,நேபாள வெள்ளப் பேரழிவு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/zoc6x8qu/Nepal-Disaster" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nepal Disaster]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/zoc6x8qu/Nepal-Disaster?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இயற்கை சீற்றத்தால் நிலைகுலைந்துள்ள <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">நேபாளத்தில்</a>, கட்டுக்கடங்காத பெருவெள்ளத்தில் இருந்து தனது இரண்டு குழந்தைகளை ஒரு தாய் நூலிழையில் காப்பாற்றும் நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.</p><h2><strong>பேரழிவை ஏற்படுத்தும் <a href="https://www.maalaimalar.com/topic/nepal-flood">நேபாள வெள்ளம்</a></strong></h2><p>அண்டை நாடான நேபாளத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாகப் பயங்கரமான <a href="https://www.maalaimalar.com/topic/nepal-flood">பெருவெள்ளம் </a>ஏற்பட்டுள்ளது. </p><p>கார்கள், பேருந்துகள், ராட்சத மரங்கள், பாலங்கள் மற்றும் அடுக்குமாடி கட்டிடங்கள் எனத் தன் பாதையில் உள்ள அனைத்தையும் இந்த வெள்ளம் சுருட்டி இழுத்துச் செல்லும் அதிர்ச்சி வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.</p><h2><strong>மரண ஓட்டம்: நூலிழையில் தப்பிய உயிர்</strong></h2><p>தற்போது இணையத்தில் மிக வேகமாகப் பரவி வரும் ஒரு வீடியோவில், பள்ளிச் சீருடை அணிந்த இரண்டு சிறு குழந்தைகளின் கைகளைப் பிடித்துக் கொண்டு ஒரு தாய் சாலையில் ஓடுகிறார். </p><p>அவர்களுக்குப் பின்னால் ஆக்ரோஷமாகப் பாய்ந்து வரும் வெள்ள நீர், நொடிப் பொழுதில் அவர்கள் நின்ற சாலையை முழுமையாக ஆக்கிரமிக்கிறது.</p><p>அவர்கள் சாலையைக் கடந்து மேடான பகுதியை நோக்கி ஓடிய அடுத்த சில வினாடிகளில், அங்குள்ள மின் கம்பங்கள் வெடித்துச் சிதறி வெள்ளத்தில் மூழ்குகின்றன. </p><p>கண்சிமிட்டும் நேரத்தில் சுதாரித்துக் கொண்டு அந்தத் தாய் ஓடியதால் மட்டுமே, மூவரின் உயிரும் இன்று நூலிழையில் தப்பியுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Hey Bhagwan I’m speechless. <br>I can’t imagine the pain of watching your entire world being swept away like this.  Praying for everyone affected. May everyone stay safe and find strength through this tragedy. <a href="https://x.com/hashtag/Nepal?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Nepal</a> <a href="https://x.com/hashtag/Flood?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Flood</a> <a href="https://x.com/hashtag/PrayForNepal?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#PrayForNepal</a> <a href="https://x.com/hashtag/StaySafe?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#StaySafe</a> <a href="https://t.co/DiIMGVAKQr">pic.twitter.com/DiIMGVAKQr</a></p>&mdash; R (@Bamdevrijal) <a href="https://x.com/Bamdevrijal/status/2093712463359517070?ref_src=twsrc%5Etfw">August 29, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2><strong>உலகளவில் குவியும் பாராட்டுகள்</strong></h2><p>மரண பயம் காட்டிய அந்தச் சூழலிலும், பதற்றமடையாமல் தனது இரண்டு குழந்தைகளையும் அவ்வளவு வேகமாக ஓட வைத்து, பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்ற அந்தத் தாயின் துணிச்சலை சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.</p><p>"உயிர் பிழைப்பதே கடினமான ஒரு பேரழிவுச் சூழலில், தன் உயிரைப் பொருட்படுத்தாமல் இரண்டு குழந்தைகளையும் மீட்டெடுத்த இந்தத் தாயின் செயல் உலகிலேயே மிக உயர்ந்த ஒன்று" எனப் நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து இக்காட்சியை வைரலாக்கி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சீனாவுக்கு தப்பிய குரோம்பேட்டை குழுவினர்?- டிராவல்ஸ் உரிமையாளர் பரபரப்பு பேட்டி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chrompet-pilgrims-missing-after-nepal-trip-travel-owner-speaks</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chrompet-pilgrims-missing-after-nepal-trip-travel-owner-speaks#comments</comments><guid isPermaLink="false">eba0b6c5-b0e7-4c4f-90a4-022c222c9edb</guid><pubDate>Sun, 30 Aug 2026 12:56:37 +0000</pubDate><atom:updated>2026-08-30T12:56:37.065Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil people,Travels Owner,டிராவல்ஸ் உரிமையாளர்,nepal flood,தமிழர்கள் மாயம்,நேபாளம் வெள்ளம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/oc4t83xu/travels.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Travels agency]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/oc4t83xu/travels.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை குரோம்பேட்டையில் இருந்து நேபாளம் யாத்திரை சென்ற தமிழர்கள் 49 பேர் பற்றி எந்த தகவலும் இல்லை என டிராவல்ஸ் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.</strong></em></p><p>நேபாளத்திற்கு சென்று வந்த குரோம்பேட்டை டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் மறவேள் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் கூறியதாவது:-</p><p>வெள்ளத்தால் மூடப்பட்ட சீன குடியுரிமை மையத்தில் இருந்து தப்பி ஓடியதாகவும் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் விளக்கம் அளித்துள்ளார்.</p><p>நீல நிற உடையில் தப்பியோடும் மக்கள், யாத்திரை சென்ற குரோம்பேட்டை குவினர்தான்.</p><p>மலை மீது ஏறி சீனாவுக்கு தப்பி சென்றிருக்கலாம். தற்போது வரை நேபாள அரசு மட்டுமே தகவல் தெரிவிக்கிறது. சீன அரசிடம் இருந்து எந்த தகவலும் இல்லை.</p><p>சீன அரசு தகவல் தெரிவித்தால் மட்டுமே குரோம்பேட்டை குழுவினர் பற்றி தகவல் தெரிய வாய்ப்புள்ளது.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நேபாளத்தை புரட்டிப்போட்ட வெள்ளம் -  சாதுரியமாக செயல்பட்டு 1,643 உயிர்களை காப்பாற்றிய ஆசிரியர்!</title><link>https://www.maalaimalar.com/news/world/floods-devastate-nepal-teacher-acts-astutely-to-save-1643-lives</link><comments>https://www.maalaimalar.com/news/world/floods-devastate-nepal-teacher-acts-astutely-to-save-1643-lives#comments</comments><guid isPermaLink="false">c3f05614-be56-4054-a780-9809325d86e1</guid><pubDate>Sun, 30 Aug 2026 12:54:58 +0000</pubDate><atom:updated>2026-08-30T12:54:58.982Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாளம்,nepal,School principal,பள்ளி முதல்வர்,nepal flood,நேபாள வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/o6pe7yfh/New-Project-2026-08-30T181411.723.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நேபாளத்தை புரட்டிப்போட்ட வெள்ளம் -  சாதுரியமாக செயல்பட்டு 1,643 உயிர்களை காப்பாற்றிய ஆசிரியர்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/o6pe7yfh/New-Project-2026-08-30T181411.723.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாளத்தில் ஆக.26ம் தேதி காலை நேபாள - திபெத் எல்லையில் லெண்டே கோலா ஆற்றில் பனிப்பாறைகள் உடைந்து விழுந்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 734 ஆக உயர்ந்துள்ளது. </p><p>திபெத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். எல்லையின் இருபுறமும் காணாமல் போன 2000த்திற்கும் மேற்பட்டோரை தேடும் பணியும் 5வது நாளாக தொடர்ந்து வருகிறது.</p><h2>1,643 குழந்தைகள்</h2><p>இந்நிலையில் வெள்ள நேரத்தில் பதட்டமடையால், நிதானமாக செயல்பட்டு 1,643 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய நேபாள பள்ளியின் தலைமை ஆசிரியர்  ஒருவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. </p><p>நேபாளத்தின் திரிசூலி பள்ளத்தாக்கில் உள்ள திரிபுவன் திரிசூலி மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் ராஜேந்திர தவாடிக்கு புதன்கிழமை காலை 9:20 மணிக்கு அவரது நண்பர் ஒருவர் வெள்ளம் தொடர்பான செய்தியை தெரிவித்துள்ளார்.</p><h2>10 நிமிட இடைவெளி</h2><p>வெள்ளப்பெருக்கு தொடர்பாக அவருக்கு தகவல் கிடைத்தப்போது பள்ளியில் 900 குழந்தைகள் இருந்துள்ளனர். மேலும் 700-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளிப் பேருந்துகளிலும், நடந்தும் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தனர்.</p><p>தனக்குக் கிடைத்த 10 நிமிட இடைவெளியில், உடனடியாகப் பள்ளியின் அவசர எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்து ஆசிரியர்கள் உடனடியாக வகுப்பறைகளைக் காலி செய்யுமாறு உத்தரவிட்டார். </p><p>மேலும் பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு போன் செய்து, “இங்கு வராதீர்கள், பேருந்தை அப்படியே உயரமான பகுதிக்குத் திருப்புங்கள். வரும் வழியில் பாலங்கள் இருந்தால் அதைக் கடக்க வேண்டாம்” என்றும் எச்சரித்துள்ளார்.</p><p>பள்ளியில் இருந்த குழந்தைகள் அனைவரும் தப்பி மலைப்பகுதிகளுக்கு சென்றனர். பயத்தால் ஒரு குழந்தைக்கு மட்டும் ஃபிக்ஸ் வந்துள்ளது. அக்குழந்தை மட்டும் இருசக்கர வாகனம் மூலம் மலை உச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.</p><p>இறுதியாக வெள்ளம் பள்ளிக் கட்டிடங்களை அடித்துச் சென்றபோது, குழந்தைகள் அனைவரும் பாதுகாப்பாக மலை உச்சியில் இருந்த ஒரு மரத்தின் அடியில் இருந்தனர். </p><p>ஆனால் துரதிஷ்டவசமாக பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியர் சந்தோஸ் பரியார் (32) மற்றும் தூய்மைப் பணியாளர் சுல்தான் லாமாவை காப்பாற்ற இயலவில்லை. </p><p>ஆசிரியர் வீட்டிற்கு காலை உணவு சமைக்க சென்றுள்ளார், சுல்தான் லாமா பள்ளிக் கதவுகளை மூடிவிட்டு திரும்புவதற்குள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். </p><p>3 மாடிகள் கொண்ட வலுவான கான்கிரீட் பள்ளி கட்டடம் ஆற்றிலிருந்து 60 மீட்டர் உயரத்தில், கிராமத்தை கிழக்குக் கரையுடன் இணைக்கும் எஃகுப் பாலத்தின் அதே மட்டத்தில் இருந்துள்ளது. </p><p>பேரிடர் காலத்தில் சொந்த உயிரைப் பற்றிக் கவலைப்படாமல், ஆயிரக்கணக்கான குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய ராஜேந்திர தவாடிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>வடக்கு சைப்ரஸில் 270 பயணிகளுடன் சென்ற கப்பல் கவிழ்ந்து விபத்து - மீட்பு பணிகள் தீவிரம்!</title><link>https://www.maalaimalar.com/news/world/boat-carrying-270-passengers-capsizes-in-northern-cyprus</link><comments>https://www.maalaimalar.com/news/world/boat-carrying-270-passengers-capsizes-in-northern-cyprus#comments</comments><guid isPermaLink="false">87cece6f-eb28-49d6-87d2-be7af530b5f4</guid><pubDate>Sun, 30 Aug 2026 11:51:21 +0000</pubDate><atom:updated>2026-08-30T11:51:21.661Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Passenger boat,northern Cyprus,பயணிகள் படகு,வடக்கு சைப்ரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/4a3n0er0/New-Project-2026-08-30T172028.528.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வடக்கு சைப்ரஸில் 270 பயணிகளுடன் சென்ற கப்பல் கவிழ்ந்து விபத்து!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/4a3n0er0/New-Project-2026-08-30T172028.528.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வடக்கு சைப்ரஸில் 270 பயணிகளுடன் சென்ற கப்பல் கடலுக்கு நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக துருக்கிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>கைரேனியா கடற்கரையிலிருந்து துருக்கியின் தாசுசு துறைமுகத்திற்கு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் கப்பல் கவிழ்ந்துள்ளது. </p><p>கப்பல் கவிழ்ந்த உடனேயே துருக்கிய சைப்ரஸ் கடலோரக் காவல் படகுகள் மீட்புப் பணிக்காக சம்பவ இடத்திற்கு விரைந்தன. மேலும் ஒரு ஹெலிகாப்டரும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. </p><p>இதில் 159 பயணிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மற்ற 99 பயணிகள் மற்றும் ஊழியர்கள் குறித்து இன்னும் தெரியவில்லை என்று கைரேனியா நகர மேயர் முராத் சென்குல் தெரிவித்துள்ளார். </p><p>இப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே மோசமான வானிலை நிலவி வருவதால், இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>பெரியார், அம்பேத்கர், நேரு பெயர்கள் நீக்கம்: திட்டமிட்டச் செயலாகவே கருத வேண்டியுள்ளது - மு. வீரபாண்டியன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/removal-of-the-names-of-periyar-ambedkar-and-nehru-must-be-viewed-as-a-deliberate-act-mu-veerapandian</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/removal-of-the-names-of-periyar-ambedkar-and-nehru-must-be-viewed-as-a-deliberate-act-mu-veerapandian#comments</comments><guid isPermaLink="false">ee7c96b7-80da-41f7-9f67-b471a3ba6b66</guid><pubDate>Sun, 30 Aug 2026 11:32:08 +0000</pubDate><atom:updated>2026-08-30T11:32:08.797Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,Communist Party of India,Government of Tamil Nadu,M. Veerapandian,மு. வீரபாண்டியன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/ketfzs27/New-Project-2026-08-30T151811.712.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெரியார், அம்பேத்கர், நேரு பெயர்கள் நீக்கம்: திட்டமிட்டச் செயலாகவே கருத வேண்டியுள்ளது - மு. வீரபாண்டியன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/ketfzs27/New-Project-2026-08-30T151811.712.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெரியார், அம்பேத்கர், நேரு பெயர்கள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் நீக்கப்பட்டதன் காரணத்தை தமிழ்நாடு அரசு விளக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் இது தவறுதலாகவோ அல்லது தற்செயலாகவோ நடைபெற்றது அல்ல, திட்டமிட்ட செயலாகவே கருத வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;</p><h2>விடை இல்லை</h2><p>பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பேட்டில், இடஒதுக்கீடு மற்றும் சமூகநீதி வரலாற்றைக் கூறும் பகுதியில் இடம் பெற்றிருந்த தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், மற்றும் பண்டிட் ஜவஹர்லால் நேரு ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன. </p><p>இது கடும் கண்டனத்திற்கு உள்ளானது. கண்டனக் கணைகளின் தாக்கத்திற்குப் பிறகு, தற்பொழுது அத்தலைவர்களின் பெயர்கள் குறிப்பேட்டில் சேர்க்கப்படும் என அமைச்சர் வி.சம்பத்குமார் கூறியுள்ளார். எனினும், இதற்குக் காரணமானவர்கள் யார் என்ற கேள்விக்கு விடை அளிக்கப்படவில்லை.</p><h2>மகத்தான தலைவர்கள்</h2><p>தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், நவீன இந்தியாவின் சிற்பி ஜவஹர்லால் நேரு ஆகியோர் மதச்சார்பின்மை கொள்கையில் உறுதியாக நின்றவர்கள் ஆவர். பிற்போக்குத் தனங்களை, இந்துத்துவ மதவெறி அரசியலை, வகுப்புவாதத்தை வாழ்நாள் முழுவதும் எதிர்த்துப் போராடியவர்கள் ஆவர். </p><p>நவீன இந்தியாவை உருவாக்குவதில் மகத்தான பங்களிப்பை தத்தம் வழிகளில் செலுத்தியவர்கள் ஆவர். அவர்களை சமூக நீதிக்காகப் போராடியவர்கள் என்று மட்டுமே பார்த்து விட முடியாது. அதற்கும் மேலாக உண்மையான சுதந்திரம்,சமத்துவம், சகோதரத்துவம் என்ற உன்னதக் கோட்பாட்டை இந்திய மண்ணில் நடைமுறைப்படுத்த வேண்டும் என அயராது பாடுபட்டவர்கள் ஆவர்.</p><h2>தற்செயலானது அல்ல</h2><p>அப்படிப்பட்ட மகத்தானத் தலைவர்களின் பெயர்கள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பேட்டிலிருந்து நீக்கப்பட்டது என்பதை, தற்செயலானதாக, சாதாரண ஒரு தவறாக பார்க்க முடியாது. அதை ஒரு திட்டமிட்டச் செயலாகவே கருதவேண்டியுள்ளது. </p><p>இந்த மாபெரும் தலைவர்களின் பெயர்கள் இந்துத்துவா சக்திகளுக்கு, மத அடிப்படை வாதிகளுக்கு,பிற்போக்குச் சக்திகளுக்கு எப்பொழுதுமே எட்டிக்காய் போன்று கசப்பதாகும். </p><p>அவர்கள் மீது வெறுப்பு எனும் நெருப்பை இச்சக்திகள் தொடர்ந்து அள்ளி வீசுகின்றன. அத்தலைவர்களை இழிவுபடுத்தி வருகின்றன.</p><h2>கடுமையான நடவடிக்கை</h2><p>எனவே, இந்நிலையில், இத்தலைவர்கள் பெயர்கள் ஏன் நீக்கப்பட்டன? இந்த நீக்கத்துக்குப் பின்னால் உள்ள சக்திகள் எவை ? என்பவை குறித்து முழுமையான நேர்மையான விசாரணையை தமிழ்நாடு அரசு நடத்த வேண்டும். </p><p>இத்தலைவர்களின் பெயர் நீக்கத்திற்குக் காரணமானவர்களை கண்டறித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>உசிலம்பட்டி அருகே சிறுமி தற்கொலை: திமுக எம்பி கனிமொழி கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/16-year-old-dalit-girl-dies-by-suicide-near-usilampatti</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/16-year-old-dalit-girl-dies-by-suicide-near-usilampatti#comments</comments><guid isPermaLink="false">41b33bf0-4ea0-454c-8c78-7712dadece55</guid><pubDate>Sun, 30 Aug 2026 11:20:34 +0000</pubDate><atom:updated>2026-08-30T11:20:34.857Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,கனிமொழி எம்பி,Kanimozhi MP,girl suicide,சிறுமி தற்கொலை,உசிலம்பட்டி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/i4yvwhxw/kanimozhi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DMK MP Kanimozhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/i4yvwhxw/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உசிலம்பட்டி அருகே 16 வயது தலித் சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது என திமுக எம்பி கனிமொழி கூறினார்.</p><p>பள்ளிச் சேர்க்கைக்காக சென்ற சிறுமி அவமானப்படுத்தப்பட்டதாக கூறும் நிலையில் மனவேதனையில் உயிரை மாய்த்துள்ளார் என கனிமொழி கூறினார்.</p><p>இதுகுறித்து திமுக எம்.பி.கனிமொழி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- </p><p>உசிலம்பட்டி அருகே 16 வயது தலித் சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது.</p><p>தனது எதிர்காலம் குறித்த நம்பிக்கையுடன் பள்ளிச் சேர்க்கைக்காகச் சென்ற அந்தச் சிறுமி, அங்கு அவமானப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், மனவேதனையில் அச்சிறுமி உயிரை மாய்த்து கொண்டதால், அவரது குடும்பம் நிலை குலைந்து போயுள்ளது.</p><p>ஒவ்வொரு குழந்தைக்கும் மரியாதையும், கண்ணியமும், பாதுகாப்பான கல்விச்சூழலும் கிடைப்பது அவர்களின் உரிமை.</p><p>இது போன்ற மனவேதனைக்கு எந்தக் குழந்தையும் தள்ளப்படக் கூடாது. இந்தச் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை வழங்கி, நீதி நிலைநாட்டப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மனதின் குரல்: அவகோடா பயிரிட்டு லாபம் ஈட்டும் விவசாயிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு!</title><link>https://www.maalaimalar.com/news/national/voice-of-the-mind-pm-modi-praises-avocado-farmers</link><comments>https://www.maalaimalar.com/news/national/voice-of-the-mind-pm-modi-praises-avocado-farmers#comments</comments><guid isPermaLink="false">a3e96dbf-e332-43a5-88fe-4ceb75ddce60</guid><pubDate>Sun, 30 Aug 2026 11:11:16 +0000</pubDate><atom:updated>2026-08-30T11:11:16.636Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Agriculture,மனதின் குரல்,பிரதமர் மோடி.,pm modi,Mannki Baat,tamilnadu farmers,Avocado Farming,அவகோடா</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/sovz83dc/Avocado-Farming" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Avocado Farming ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/sovz83dc/Avocado-Farming?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆற்றிய <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியின்</a> 137-வது பதிப்பில், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் புதுமையான முயற்சிகள் மற்றும் விவசாயத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்துப் பேசினார்.</p><p>அப்போது, தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல சுற்றுலாத் தலமான கொடைக்கானலைச் சேர்ந்த விவசாயி சந்திரசேகரன் என்பவரின் சாதனையை பிரதமர் மோடி வெகுவாகப் பாராட்டிப் பேசினார்.</p><h2><strong>அவகோடா பழங்களின் தேவை</strong></h2><p>இதுகுறித்து மனதின் குரல் நிகழ்ச்சியில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF">பிரதமர் மோடி </a>பேசியதாவது:</p><p><br>என் அன்பு நாட்டு மக்களே, தற்போது இந்திய நகரங்களில் அவகோடா மிகவும் பிரபலமடைந்து வருகிறது. ஒரு காலத்தில் இந்த பழத்தைப் பற்றி பலருக்கும் தெரியாது, அதற்கான தேவையும் சந்தை மதிப்பும் மிகவும் குறைவாகவே இருந்தது. ஆனால் இன்று, ஆரோக்கியம் மற்றும் பிரீமியம் சந்தைகளில் இது முக்கிய இடத்தைப் பிடித்துள்ளதோடு, பலரது உணவு மேஜைகளிலும் தவறாமல் இடம் பெறத் தொடங்கியுள்ளது என்று கூறினார்.</p><h2><strong>கொடைக்கானல் விவசாயியின் சாதனை</strong></h2><p>தொடர்ந்து பேசிய பிரதமர், இந்த புதிய பயிர் வாய்ப்பைப் பயன்படுத்தி தென்னிந்திய விவசாயிகள் எப்படித் தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்தி வருகிறார்கள் என்பதற்குச் சிறந்த உதாரணங்களைச் சுட்டிக்காட்டினார்.</p><p>"தமிழ்நாடு, கொடைக்கானலைச் சேர்ந்த விவசாயி சந்திரசேகரன் அவர்கள் தனது அரை ஹெக்டேர் நிலத்தில் அவகோடா பழங்களைப் பயிரிடத் தொடங்கினார். </p><p>தற்போதைய சந்தையில் இப்பழங்களுக்குக் கிடைக்கும் நல்ல விலையின் காரணமாக, அவருக்குப் பெரிய அளவில் லாபம் கிடைத்துள்ளதுடன், அவரது வருமானமும் பல மடங்கு அதிகரித்துள்ளது" என்று பிரதமர் குறிப்பிட்டார்.</p><h2><strong>பிற மாநில விவசாயிகளின் உத்வேகம்</strong></h2><p>தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற மாநில விவசாயிகளின் உழைப்பையும் பிரதமர் பாராட்டிப் பேசினார். </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">ஆந்திர பிரதேசம்</a> கடப்பாவைச் சேர்ந்த வரதராஜ் என்ற விவசாயி, நவீன தொழில்நுட்பத்தின் மூலம் இதுவரை சுமார் 4 டன் அவகோடா பழங்களை உற்பத்தி செய்து, இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக உள்ளூர் கடைகளுக்கு விற்று நல்ல லாபம் ஈட்டி வருகிறார்.</p><p><strong><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE">கர்நாடகா </a>மாநிலம் </strong>சிக்மகளூரு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், தங்களது காபித் தோட்டங்களுக்கு நடுவே அவகோடா மரங்களை ஊடுபயிராக நட்டு, காபி மற்றும் மிளகுடன் சேர்த்து உபரி வருமானமும் ஈட்டி சாதனை படைத்து வருகின்றனர் மேலும் அனைவர்க்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை கூறினார்.</p><h2><strong>இந்திய <a href="https://www.maalaimalar.com/news/district/avocado-prices-have-fallen-in-kodaikanal-515722">அவகோடா</a></strong></h2><p>"நகரத்து உணவகங்களில் அவகோடா டோஸ்ட் பற்றி நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். ஆனால், இதே <a href="https://www.maalaimalar.com/news/district/avocado-prices-have-fallen-in-kodaikanal-515722">அவகோடா </a>மூலம் நமது நாட்டின் புதுமைப்பித்த விவசாயிகளும் வருமானம் ஈட்டுவதற்கான ஒரு புதிய வழியைக் கண்டறிந்துள்ளனர். </p><p>சுருக்கமாகச் சொன்னால், நமது நாட்டின் மண்ணில் விளைந்த அவகோடா, வாடிக்கையாளர்களின் உணவைச் சுவையாக்குவதோடு, மறுபுறம் இந்திய விவசாயிகளின் வருமானத்தையும் கணிசமாக உயர்த்தியுள்ளது" எனப் பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>திண்டுக்கல்லில் பால் வேன் மோதி 4 சிறார்கள் உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/four-children-killed-as-milk-van-hits-them-in-dindigul</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/four-children-killed-as-milk-van-hits-them-in-dindigul#comments</comments><guid isPermaLink="false">687eebcc-8f78-4ed6-a3ee-6c447123aec9</guid><pubDate>Sun, 30 Aug 2026 11:03:45 +0000</pubDate><atom:updated>2026-08-30T11:03:45.616Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சாலை விபத்து,road accident,திண்டுக்கல்,Children Death,சிறுவர்கள் உயிரிழப்பு,Dindugul</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/zek4xzgo/acci.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Accident]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/zek4xzgo/acci.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே வீட்டின் அருகாமையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது பால் வேன் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p>இந்த கோர விபத்தில் 3 சிறுமிகள், ஒரு சிறுவன் உள்ளிட்ட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><p>விபத்தில் சிறுவன் மோசிகரன், சிறுமிகள் யோகவர்ஷினி, அனன்யா, தனு ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><p>விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/moderate-rain-forecast-for-western-ghats-districts</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/moderate-rain-forecast-for-western-ghats-districts#comments</comments><guid isPermaLink="false">a4d3da7d-7631-4c09-a7cd-9d4c50aa6ead</guid><pubDate>Sun, 30 Aug 2026 10:40:04 +0000</pubDate><atom:updated>2026-08-30T10:40:04.706Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,Rain,மழை,Meteorological Centre,Weather,மேற்குதொடர்ச்சி மலை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/ngmpl060/rain.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rain]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/ngmpl060/rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் நாளை மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</strong></em></p><h2>13 மாவட்டங்களில் மழை</h2><p>சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரத்தில் வரும் 1 மற்றும் 2ம் தேதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p>கள்ளக்குறிச்சிணண, கடலூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் 1,2ம் தேதியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.</p><h2>3ம் தேதி மிதமான மழை</h2><p>சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் 3ம் தேதி மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.</p><p>விழுப்புரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் 3ம் தேதி மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.</p><p>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் 4, 5ம் தேதிகளில் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆந்திராவில் கொடூரம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவி கைது!</title><link>https://www.maalaimalar.com/news/national/andhra-pradesh-wife-and-lover-arrested-for-husband-murder</link><comments>https://www.maalaimalar.com/news/national/andhra-pradesh-wife-and-lover-arrested-for-husband-murder#comments</comments><guid isPermaLink="false">e2e93aaa-1fd6-42c2-9214-9d1842716b75</guid><pubDate>Sun, 30 Aug 2026 10:37:58 +0000</pubDate><atom:updated>2026-08-30T10:37:58.951Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Murder case,Andhra Pradesh,husband murder,Wife Arrested,ஆந்திர பிரேதசம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/d525zt7e/Murder-Case" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Murder Case]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/d525zt7e/Murder-Case?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில், குடும்பத் தகராறு மற்றும் கள்ளக்காதல் விவகாரத்தில் கணவரைக் கொலை செய்து உடலைக் கிணற்றில் வீசியதாக ஒரு பெண்ணையும் அவரது கள்ளக் காதலனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.</p><h2>குடும்பத் தகராறு</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">ஆந்திர மாநிலம்</a>, அன்னமய்யா மாவட்டம் நீலகண்டராவ்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாலகிருஷ்ணா. இவரது மனைவிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரபி என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. </p><p>இதனைப் பாலகிருஷ்ணா கண்டித்ததால், தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.</p><h2>கொலைச் சம்பவம்</h2><p>கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் பாலகிருஷ்ணா தனது விவசாய நிலத்திற்குச் சென்றபோது, அங்கு வந்த அவரது மனைவி மற்றும் ரபி ஆகிய இருவரும் சேர்ந்து அவரைத் தாக்கி கொலை செய்துள்ளனர். </p><p>பின்னர் கொலையை மறைப்பதற்காகப் பாலகிருஷ்ணாவின் உடலை ஒரு கோணிப்பையில் கட்டி அருகில் உள்ள கிணற்றில் வீசிவிட்டுத் தப்பிச் சென்றனர்.</p><h2>விசாரணை மற்றும் கைது</h2><p>மறுநாள் காலை கிணற்றில் உடல் மிதப்பதைக் கண்ட பொதுமக்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். </p><p>இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் நடத்திய தீவிர <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88">விசாரணையில்</a>, பாலகிருஷ்ணாவின் மனைவி மற்றும் ரபி ஆகியோர் இணைந்து இந்தச் செயலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.</p><p>தற்போது போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். தொடர்ந்து <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88">விசாரணை </a>நடைபெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>‘முஸ்தபாவின் நச்சுப் பேச்சை முதலமைச்சர் விஜய் கண்டிக்க வேண்டும்’ - நயினார் நாகேந்திரன்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-must-condemn-mustafas-toxic-remarks-nainar-nagendran</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-must-condemn-mustafas-toxic-remarks-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">f923f2e9-190a-473c-b6c6-b7707dc8ffe6</guid><pubDate>Sun, 30 Aug 2026 10:28:12 +0000</pubDate><atom:updated>2026-08-30T10:28:12.524Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,TVK Mustafa,தவெக முஸ்தபா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/b1ebdqqp/New-Project-2026-08-30T155745.412.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘முஸ்தபாவின் நச்சுப் பேச்சை முதலமைச்சர் விஜய் கண்டிக்க வேண்டும்’ - நயினார் நாகேந்திரன்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/b1ebdqqp/New-Project-2026-08-30T155745.412.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தீவிரவாதிகள் தண்டிக்கப்பட்டால் தவெகவின் மதுரை மத்திய சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்.,</p><p>“தவெக சட்டமன்ற உறுப்பினர்  முஸ்தபா, அண்மையில் 'அமரன்' திரைப்படம் குறித்து வெளியிட்டுள்ள கருத்துக்கள் அதிர்ச்சியையும், கடும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளன. </p><p>இந்திய மண்ணைக் காக்கத் தன் இன்னுயிரைத் தியாகம் செய்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வீர வரலாற்றைப் போற்றும் 'அமரன்' திரைப்படத்தை, ஏதோ ஒரு சமூகத்திற்கு எதிரானது போலச் சித்தரிக்க முயலும் முஸ்தபாவின் வஞ்சக அரசியல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.</p><p>பாகிஸ்தான் தீவிரவாதிகளைப் பற்றிய உண்மைக்கதையைப் படமாக எடுத்தால், அது எப்படி இஸ்லாமியர்களை இழிவுபடுத்துவதாக அமையும்? முஸ்தபா ஒரு பயங்கரவாதி தண்டிக்கப்படுவதை ஏன் சகித்துக்கொள்ள மறுக்கிறார்? பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்படுவதைக் கண்டு ஒரு இந்தியக் குடிமகனுக்கு மகிழ்ச்சிதான் ஏற்பட வேண்டுமே தவிர, முஸ்தபாவைப் போலக் கண்ணீர் வரக்கூடாது. </p><p>உங்களது அனுதாபம் இந்திய ராணுவத்திற்கா அல்லது எல்லையைத் தாண்டி வரும் பயங்கரவாதிகளுக்கா? மேலும், முதலமைச்சர் ஜோசப் விஜய் நடிப்பில் உருவான 'துப்பாக்கி' திரைப்படத்திலும் தீவிரவாதிகள் தொடர்பான காட்சிகளை நீக்க வைத்ததாகத் தம்பட்டம் அடித்துக்கொள்கிறார்  முஸ்தபா. </p><p>திரையில் தீவிரவாதி தண்டிக்கப்படுவதை ஒரு சமூகத்திற்கு எதிரானதாகக் காட்டி, தமிழ்நாட்டின் அமைதியைச் சீர்குலைக்கத் துடிக்கும் முஸ்தபாவின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. முஸ்தபா போன்றவர்களின் இத்தகைய நச்சுப் பேச்சுக்களைத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உடனடியாகக் கண்டிக்க வேண்டும். </p><p>இல்லையெனில், இதுதான் தவெகவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்பதாக தமிழ்நாடு மக்கள் மக்கள் புரிந்துகொள்வார்கள்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item></channel></rss>