<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 29 Aug 2026 04:27:53 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 29 ஆகஸ்ட் 2026...
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-29-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-29-august-2026#comments</comments><guid isPermaLink="false">18607955-3bbe-49aa-abf1-a6d73cdd86bd</guid><pubDate>Sat, 29 Aug 2026 04:04:14 +0000</pubDate><atom:updated>2026-08-29T04:22:44.942Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/om47bexj/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/om47bexj/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://maalai-malar.quintype.com/story/38db2f44-0d69-4039-8e5d-b660bab57679">அமெரிக்காவிடம் இருந்து ஜாவலின் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் கையெழுத்து</a></p><p>*அமெரிக்காவுடன் இந்திய ராணுவம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.</p><p>*ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/a6819e51-84ba-49d1-9c0f-574b54b98586">நேபாள வெள்ளம்: அதிர்ச்சியில் உறைந்த பெண்.. அதிசயமாக உயிர்தப்பிய குடும்பம் - அதிரவைக்கும் வீடியோக்கள்</a></p><p>*சீறிப் பாயும் நீரால் சூழப்பட்ட போதிலும் ஒரு பச்சை வீடு எவ்விதச் சேதமும் இன்றி அப்படியே நின்றது.</p><p>*மரணத்தின் விளிம்பு வரை சென்ற அவர், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/e0806bf7-ac8b-4e79-a62c-a0d782ba38dc">உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம்.. அமெரிக்கா கட்டுப்பாட்டுக்கு வரும் வெனிசுலா எண்ணெய் - டிரம்ப் அறிவிப்பு</a></p><p>*வெனிசுலாவின் 65 பில்லியன் பேரல் கச்சா எண்ணெய் இருப்பை அமெரிக்கா, கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும்</p><p>*, ஈரான் போர் தொடங்கி ஆறு மாதங்களைக் கடந்துள்ளது</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/a38d2012-cf1b-4f8b-b29d-45b7bcf362f9">600-ஐ நெருங்கிய பலி எண்ணிக்கை.. U டர்ன் அடித்த நேபாள அரசு - வெளிநாட்டு மீட்பு குழுக்களுக்கு அனுமதி</a></p><p>* சுமார் 1,500 பேர் இன்னும் மாயமாகியுள்ளனர்.</p><p>*சுமார் 400 இந்தியர்கள் சீனப் பகுதியில் மாட்டிக்கொண்டனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-car-accident-4-college-students-death">மதுராந்தகம் அருகே கார் டயர் வெடித்து விபத்து - 4 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு</a></p><p>* ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது. </p><p>* இந்த விபத்தில் மேலும் 3 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY: தங்கம் வாங்குவோருக்கு குட் நியூஸ் - அதிரடியாக குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-29-8-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-29-8-2026#comments</comments><guid isPermaLink="false">e8ee0fa6-62d3-415a-bcd1-2ed00e348bd5</guid><pubDate>Sat, 29 Aug 2026 04:26:30 +0000</pubDate><atom:updated>2026-08-29T04:26:30.974Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/vjusha2y/gold.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ தங்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ Gold]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/vjusha2y/gold.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தங்கத்தின் விலை கடந்த ஓரிரு நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக உள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் தங்கம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 725-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து17 ஆயிரத்து 800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. </p><p>நேற்று காலை கிராமுக்கு ரூ.75 குறைந்து, ரூ.14 ஆயிரத்து 650-க்கும், சவரனுக்கு ரூ.600 குறைந்து ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 200-க்கும் விற்பனையானது.</p> <p>இதற்கிடையில் மாலையில் தங்கத்தின் விலை திடீரென அதிகரித்தது. காலையில் குறைந்த தங்கத்தின் விலையில் இருந்து கிராமுக்கு ரூ.150-ம், சவரனுக்கு ரூ.1,200-ம் உயர்ந்தது. அந்த வகையில் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து800-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 400-க்கும் விற்பனையானது.</p> <h2>தங்கம் விலை சரிவு</h2><p>இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு  ரூ.2,360 குறைந்து ரூ.1,16,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.295 குறைந்து ரூ.14,505-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p> <h2>வெள்ளி விலை நிலவரம்</h2><p>தங்கத்தை போலவே வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி 260 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்</h2><p>28-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,400</p><p>27-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,800</p><p>26-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,080</p><p>25-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,080</p><p>24-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,240</p> <h2>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்</h2><p>28-08-2026- ஒரு கிராம் ரூ.265</p><p>27-08-2026- ஒரு கிராம் ரூ.265</p><p>26-08-2026- ஒரு கிராம் ரூ.265</p><p>25-08-2026- ஒரு கிராம் ரூ.265</p><p>24-08-2026- ஒரு கிராம் ரூ.275</p> ]]></content:encoded></item><item><title>600-ஐ நெருங்கிய பலி எண்ணிக்கை.. U டர்ன் அடித்த நேபாள அரசு - வெளிநாட்டு மீட்பு குழுக்களுக்கு அனுமதி</title><link>https://www.maalaimalar.com/news/world/death-toll-nears-600-nepal-government-makes-a-u-turn-grants-permission-to-foreign-rescue-teams</link><comments>https://www.maalaimalar.com/news/world/death-toll-nears-600-nepal-government-makes-a-u-turn-grants-permission-to-foreign-rescue-teams#comments</comments><guid isPermaLink="false">a38d2012-cf1b-4f8b-b29d-45b7bcf362f9</guid><pubDate>Sat, 29 Aug 2026 04:18:18 +0000</pubDate><atom:updated>2026-08-29T04:18:18.757Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாளம்,nepal,வெள்ளம்,floods,Rescue Team,மீட்பு படை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/i8ogwa36/tn-4.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நேபாள வெள்ளம், பாலன் ஷா 
]]></media:title><media:description type="html"><![CDATA[ நேபாள வெள்ளம், பாலன் ஷா 
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/i8ogwa36/tn-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">நேபாளத்தில் </a>கடந்த புதன்கிழமை ஏற்பட்ட திடீர் <a href="https://www.maalaimalar.com/news/world/nepal-floods-family-survives-miraculously-woman-left-frozen-in-shock-shocking-videos">வெள்ளப்பெருக்கு </a>காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 600 ஐ எட்டியுள்ளது. சுமார் 1,500 பேர் இன்னும் மாயமாகியுள்ளனர்.</p><p>லடாக்கில் இமயமலை பகுதியில் பனிப்பாறை சரிந்து நதியில் விழுந்து பாதையை அடைத்தால் அணை உடைந்து நீர் வேகமாக கீழ்நோக்கி நேபாளத்தின் புகுந்ததே வெள்ளபெருகுக்கு காரணம் என தெரியவந்துள்ளது.</p><p>ரசுவா மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்கள் இதில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வெள்ளவதில் நேபாளத்தில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. </p> <h2>நிராகரிப்பு</h2><p>மீட்புப்பணிகளில் அந்நாட்டு ராணுவமும் இணைந்துள்ளது. இதனிடையே சர்வதேச நாடுகள் பல மீட்புப் குழுக்களை அனுப்பி உதவ முன்வந்த நிலையில் அந்த உதவியை பாலன் ஷா தலைமையிலான நேபாள அரசு நிராகரித்தது.</p><p>கடந்த 2015 இல் சுமார் 9000 பேர் உயிரிழந்த நேபாள நிலநடுக்கத்தின்போது சர்வதேச மீட்பு குழுக்கள் நேபாளம் வந்தன. அப்போது உள்நாடு மற்றும் வெளிநாடு என அனைத்து மீட்பு குலுக்களையும் ஒருங்கிணைத்து மீட்பு பணியில் ஈடுபடுவதில் சிக்கல் ஏற்பட்டதாக கூறப்பட்டது.</p><p>இதை கருத்தில் கொண்டு, தனது சொந்தப் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை முகமைகளே நிவாரண மற்றும் மீட்புப் பணிகளைக் கையாளும் திறன் கொண்டவை என்று நேபாளம் கூறியிருந்தது.</p><p>ஏதேனும் குறிப்பிட்ட தொழில்நுட்ப உதவி தேவைப்பட்டால், தானே மற்ற நாடுகளிடம் உதவி கேட்கும் என்றும் அரசு தெரிவித்திருந்தது.</p> <h2>ஏற்பு</h2><p>இந்த சூழலில் நேபாள அரசு தனது முடிவை மாற்றி உதவியை ஏற்க முன்வந்துள்ளது. இந்த வெள்ளபெருக்கில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்தவர்களும் காணாமல் போயுள்ளனர். எனவே சர்வதேச குழுக்களை வேண்டாம் என நேபாள அரசு கூறுவது முறையற்றது என விமர்சிக்கப்பட்டது.</p><p>சர்வதேச அழுத்தத்திற்குப் பிறகு சில வெளிநாட்டு மீட்புக் குழுக்கள் மற்றும் அதில் அனுபவமிக்க நிபுணர்களுக்கு வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.</p><p>அறிக்கைகளின்படி, வெள்ளத்திற்குப் பிறகு தங்களது குடிமக்கள் காணாமல் போன நாடுகளிடமிருந்து நேபாள அரசுக்குக் கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டது.</p><p>இதையடுத்தே, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் பங்கேற்க இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான வெளிநாட்டு நிபுணர்கள் மற்றும் மீட்பு குழுக்களுக்கு நேபாளம் அனுமதி அளித்துள்ளது.</p><h2>இந்தியா</h2><p>நேபாளத்திற்கு உதவுவதற்காக இந்தியா ஏற்கனவே பெருமளவிலான நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளது. இது தவிர, தேசிய பேரிடர் மீட்புப் படையின் குழுக்களையும் நேபாளத்திற்கு அனுப்ப இந்தியா முன்வந்துள்ளது.</p><p>இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் தகவல்படி, நேபாள குறைந்தது 320 இந்தியர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.</p><p>அதே நேரத்தில், சுமார் 400 இந்தியர்கள் சீனப் பகுதியில் மாட்டிக்கொண்டனர். அவர்களில் 153 இந்தியர்கள் பாதுகாப்பாக நேபாளத்தை வந்தடைந்துள்ளனர்.</p> <p>இந்திய அரசு நேபாளத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதுடன், தேவைப்பட்டால் அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக உள்ளது.</p><p>இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், பயிற்சி பெற்ற என்டிஆர்எப் குழு மற்றும் தேவையான உபகரணங்களை நேபாளத்திற்கு அனுப்ப இந்தியா முன்வந்துள்ளதாகத் தெரிவித்தார்.</p><p>இந்தக் குழுக்களின் உதவியுடன் மாயமானவர்களைத் தேடும் பணி மற்றும் மீட்பு நடவடிக்கைகள் வேகம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம்.. அமெரிக்கா கட்டுப்பாட்டுக்கு வரும் வெனிசுலா எண்ணெய் - டிரம்ப் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/the-largest-oil-deal-in-world-history-venezuelan-oil-to-come-under-us-control-trump-announces</link><comments>https://www.maalaimalar.com/news/world/the-largest-oil-deal-in-world-history-venezuelan-oil-to-come-under-us-control-trump-announces#comments</comments><guid isPermaLink="false">e0806bf7-ac8b-4e79-a62c-a0d782ba38dc</guid><pubDate>Sat, 29 Aug 2026 03:47:58 +0000</pubDate><atom:updated>2026-08-29T03:47:58.725Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>trump,வெனிசுலா,டிரம்ப்,Venezuela,கச்சா எண்ணெய்,Crude oil</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/57fbb6id/tn-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டிரம்ப் ]]></media:title><media:description type="html"><![CDATA[ டிரம்ப் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/57fbb6id/tn-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/venezuela">வெனிசுலாவின் </a>65  பில்லியன் பேரல் கச்சா எண்ணெய் இருப்பை அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் வகையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.</p> <h2>வெனிசுலா</h2><p>தென்அமெரிக்க நாடான வெனிசுலாவை இந்த ஆண்டு தொடக்கத்தில் முற்றுகையிட்ட அமெரிக்க ராணுவம் அந்நாட்டு அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவியை கடத்தி அமெரிக்காவுக்கு அழைத்து வந்தது.</p><p>அவர்கள் மீது போதைப்பொருள் பயங்கரவாத குற்றச்சாட்டை அமெரிக்கா சுமத்தியுள்ளது.</p><p>வெனிசுலாவிடம் 303 பேரல் கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது. அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகத்தின் கூற்றுப்படி, இது உலகளாவிய எண்ணெய் இருப்புகளில் சுமார் 17% ஆகும்.</p> <p>இடதுசாரியான மதுரோ அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டதும் அந்நாட்டின் எண்ணெய் வளங்களை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயன்றதுமே அமெரிக்காவின் இந்த செயலுக்கு காரணம் என சொல்லப்படுகிறது.</p><p>மதுரோவுக்கு பதில் துணை அதிபராக இருந்த டெல்சி ரோட்ரிக்ஸ் வெனிசுலாவின் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றார். அவர் அமெரிக்காவுக்கு ஒத்துழைப்பதாக தெரிவித்தார். மேலும் வெனிசுலா எண்ணெய் வளத்தை அமெரிக்க நிறுவனங்கள் நிர்வகிக்கும் என டிரம்ப் அறிவித்தார்.</p> <h2>ஒப்பந்தம்</h2><p>இந்நிலையில் ஏறத்தாழ ஒன்பது மாதங்களுக்குப் பிறகு புதிய ஒப்பந்தத்தை டிரம்ப் நேற்று தன் சமூக வலைதள பதிவில் அறிவித்துள்ளார்.</p><p>அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, பாதுகாப்புத்துறை செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் வெனிசுலாவின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் ஆகியோரால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டது என டிரம்ப் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.</p><p>"உலக வரலாற்றிலேயே மிகப்பாரிய எண்ணெய் ஒப்பந்தத்தை வெனிசுலா நாட்டுடன் அமெரிக்கா தற்போது மேற்கொண்டுள்ளது" என்று ட்ரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>அமெரிக்காவில் எரிபொருள் நெருக்கடி</h2><p>அமெரிக்காவில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் விலையேற்றம் டிரம்ப் நிர்வாகத்திற்குப் பெரும் நெருக்கடியைக் கொடுத்து வரும் சூழலில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.</p><p>மற்றொருபுறம், ஈரான் போர் தொடங்கி ஆறு மாதங்களைக் கடந்துள்ள நிலையிலும் முடிவுக்கு வராமல் நீடிப்பதால், எரிசக்தி விநியோகம் குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன.</p> <p>எரிசக்தி அழுத்தத்தைச் சமாளிக்க அமெரிக்கா ஏற்கனவே தனது மூலோபாய பெட்ரோலிய இருப்புகளைப் பயன்படுத்தி வருகிறது.</p><p>2026ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து 10 கோடி பேரல்களுக்கு மேல் குறைந்ததைத் தொடர்ந்து, ஆகஸ்ட் தொடக்கத்தில் இந்த இருப்பு 30 கோடி பேரல்களுக்கும் கீழே சரிந்தது.</p>]]></content:encoded></item><item><title>ராமேசுவரத்தில் திறப்பு விழாவுக்கு தயாராகி வரும் 108 அடி உயர ஆஞ்சநேயர் சிலை </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/108-foot-tall-anjaneyar-statue-being-prepared-for-its-inauguration-in-rameswaram</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/108-foot-tall-anjaneyar-statue-being-prepared-for-its-inauguration-in-rameswaram#comments</comments><guid isPermaLink="false">9c0a7621-8966-4984-bd45-bcaeec3c080c</guid><pubDate>Sat, 29 Aug 2026 03:47:51 +0000</pubDate><atom:updated>2026-08-29T03:47:51.429Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>rameshwaram temple,ராமேசுவரம் கோவில்,anjaneyar statue,ஆஞ்சநேயர் சிலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/9oqg4c4w/anjaneyar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ 108 அடி உயர ஆஞ்சநேயர் சிலை ]]></media:title><media:description type="html"><![CDATA[ 108 அடி உயர ஆஞ்சநேயர் சிலை ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/9oqg4c4w/anjaneyar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ராமேசுவரத்தில் 108 அடி உயரத்தில் கட்டப்பட்டு வரும் ஆஞ்சநேயர் சிலை திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது.</strong></em></p><h2><strong>108 அடி உயர சிலை</strong></h2><p>ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் உருவான வரலாற்றில் ஆஞ்சநேயர் மிக முக்கிய இடம்பெறுகிறார். எனவே ராமேசுவரம் ஓலைக்குடா கடற்கரையில் வடமாநில அறக்கட்டளை மூலம் ரூ.100 கோடியில் 108 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிலை கட்டும் பணியானது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.</p><p>இந்த பணி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. பாதத்தில் இருந்து தலை வரையிலும் ஆஞ்சநேயர் சிலை முழுவதும் கான்கிரீட் மூலம் கட்டி சிமெண்டு பூச்சு முடிவடைந்துவிட்டன. தற்போது முகத்தை வடிவமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். உப்பு காற்நால் சிலை சேதமடைவதை தடுக்கும் வகையல் ரசாயனம் கலந்த சிமெண்டு பூசி, அதற்கான வர்ணங்கள் மூலம் சிலையை வடிவமைக்கும் பணி நடந்து வருகிறது.</p><h2><strong>பிரதமர் திறந்து வைக்கிறார்</strong></h2><p>இந்த 108 அடி உயர ஆஞ்சநேயர் சிலை இலங்கையை நோக்கி பார்ப்பதை போன்று கட்டப்பட்டு வருகிறது. செப்டம்பர் மாதத்துக்குள் இந்த சிலை பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த ஆஞ்சநேயர் சிலையை பிரதமர் மோடி ராமேசுவரம் வந்து திறந்து வைப்பார் என்றும் கூறப்படுகிறது.</p><p>அதன்பின்பு ராமேசுவரம் வரக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் குஜராத், சிம்லா ஆகிய 2 இடங்களில் ஆஞ்சநேயர் சிலை கட்டப்பட்டு திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>10,000mAh பேட்டரியுடன் புது போக்கோ ஸ்மார்ட்போன் - விரைவில் வெளியீடு</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/poco-x8-5g-and-x8-power-5g-india-launch-date-set-for-september-4</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/poco-x8-5g-and-x8-power-5g-india-launch-date-set-for-september-4#comments</comments><guid isPermaLink="false">bc5783bd-3ef6-4408-a260-05827f214bb4</guid><pubDate>Sat, 29 Aug 2026 03:44:00 +0000</pubDate><atom:updated>2026-08-29T03:44:00.000Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>POCO,smartphone,ஸ்மார்ட்போன்,போக்கோ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/7900p7fz/Poco-X8-5g-Teaser.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Poco X8 5g Teaser]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/7900p7fz/Poco-X8-5g-Teaser.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/poco">போக்கோ</a> நிறுவனத்தின் X8 சீரிஸ் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது. புதிய X சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல் செப்டம்பரில் அறிமுகமாகிறது. அறிமுக தேதியுடன் போக்கோ நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனின் பின்புற டிசைனை அம்பலப்படுத்தும் டீசர் வீடியோக்களை வெளியிட்டுள்ளது.</p><p>மேலும், இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி திறன், சார்ஜிங் விவரங்களும் டீசர் வீடியோவில் தெரியவந்துள்ளது. புதிய போக்கோ <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மார்ட்போன்</a> 6.83 இன்ச் டிஸ்ப்ளே, குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் சிப்செட் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.</p><h2>போக்கோ X8 சீரிஸ் வெளியீடு:</h2><p>இந்திய சந்தையில் புதிய போக்கோ X8 பவர் 5ஜி மற்றும் போக்கோ X8 5ஜி ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 04-ஆம் தேதி அறிமுகமாகும் என போக்கோ இந்தியா தெரிவித்துள்ளது. இந்த இரு மாடல்களும் இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.</p><p>மேலும், இவை ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன. ஸ்மார்ட்போன் வெளியீட்டை ஒட்டி ப்ளிப்கார்ட் தளத்தில் இந்த மாடல்களுக்கான மைக்ரோசைட் உருவாக்கப்பட்டுள்ளது.</p><h2>சிறப்பு அம்சங்கள்:</h2><p>போக்கோ X8 5ஜி மாடலில் அதிகபட்சமாக 9000mAh பேட்டரி வழங்கப்படும் என்றும் இந்த ஸ்மார்ட்போன் ஒரு முறை சார்ஜ் செய்தால் 3.2 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் 67 வாட் சார்ஜிங் மற்றும் 22.5 வாட் ரிவர்ஸ் சார்ஜிங் வசதியுடன் வருகிறது.</p><p>போக்கோ X8 பவர் 5ஜி மாடலில் அதிகபட்சம் 10,000mAh பேட்டரியுடன் வருகிறது. இந்த மாடல் முழு சார்ஜ் செய்தால் 3.5 நாட்களுக்கு பிளேபேக் வழங்கும். இத்துடன் 100 வாட் வயர்டு சார்ஜிங், 27 வாட் வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இரு ஸ்மார்ட்போன்களும் பைபாஸ் சார்ஜிங், பி.பி.எஸ். சார்ஜிங் மற்றும் ஸ்மார்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளன.</p><p>அதிகாரப்பூர்வ டீசர் வீடியோவின் படி போக்கோ X8 மால் ஆரஞ்சு மற்றும் வைட் நிறங்களிலும், இதன் கேமரா சென்சார்கள் செங்குத்தாக பொருத்தப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது. இதேபோல் போக்கோ X8 பவர் 5ஜி மாடல் எல்லோ ஃபினிஷ் மற்றும் பிளாக் சதுரங்க வட்ட வடிவம் கொண்ட கேமரா மாட்யூல் கொண்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தவெக MLA கருப்பையா மன்னிப்புக் கோர வேண்டும்- சீமான் வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/seeman-urges-tvk-mla-karuppaiya-must-apologize</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/seeman-urges-tvk-mla-karuppaiya-must-apologize#comments</comments><guid isPermaLink="false">bb5de6d4-c26c-429e-83df-3e6f320e30f7</guid><pubDate>Sat, 29 Aug 2026 03:35:11 +0000</pubDate><atom:updated>2026-08-29T03:35:11.237Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Seeman,தவெக,Naam Thamizhar katchi,tvk,jallikattu,ஜல்லிக்கட்டு,சீமான்,நாம் தமிழர் கட்சி,தவெக எம்எல்ஏ</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/q74z56g3/seeman.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ சீமான்]]></media:title><media:description type="html"><![CDATA[ சீமான்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/q74z56g3/seeman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழர்களின் தொன்மையான வீர விளையாட்டான ஏறுதழுவுதலை “இளைஞர்களையும் சமூகத்தையும் சீரழிக்கும் விளையாட்டு” என்று சட்டப்பேரவையில் பேசிய சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா தனது கருத்தை உடனடியாகத் திரும்பப்பெற்று, தமிழ்நாட்டு மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் <a href="https://www.maalaimalar.com/topic/சீமான்">சீமான்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழர்களின் பல்லாயிரம் ஆண்டுகாலப் பண்பாட்டு அடையாளமாகவும், வீரத்தின் வெளிப்பாடாகவும், நாட்டு மாடுகளைக் காக்கும் மரபின் நீட்சியாகவும் திகழும் ஏறுதழுவுதல் எனும் ஜல்லிக்கட்டு, இளைஞர்களைச் சீரழிக்கும் விளையாட்டு என்று தமிழ்நாடு சட்டப்பேரவையிலேயே சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா பேசியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.</p><h2><strong>மோசமான பார்வை</strong></h2><p>அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்க வேண்டும்; அதற்குத் தேவையான நிதியை அரசு ஒதுக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கை முற்றிலும் நியாயமானது. உழவர்களின் வாழ்வாதாரத்தோடு தொடர்புடைய சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாம் தமிழர் கட்சியும் முழுமையாக ஆதரிக்கிறது. ஆனால், சர்க்கரை ஆலைக்கு நிதி கேட்டுப் பெறுவதற்காக ஜல்லிக்கட்டை இழிவுபடுத்தி பேச வேண்டிய தேவை என்ன?</p><p>தமிழ்நாட்டு தெருவுக்கு தெரு இருக்கும் சாராயக்கடைக்கு சென்று மது அருந்தும் இளைஞர்கள் சீரழியவில்லையா? அலங்காநல்லூர் வாடிவாசலில் காளையைத் தழுவி வீரத்தைக் காட்டும் இளைஞர்கள்தான் சீரழிகிறார்களா?</p><p>வாடிவாசலில் நின்று காளையை எதிர்கொள்வது பண்பாட்டு சீரழிவு? ஆனால், அரசு விற்கும் மது குடித்து உடலையும், குடும்பத்தையும், பொருளாதாரத்தையும் இழப்பது இளைஞர்களின் முன்னேற்றமா?</p><p>இளைஞர்களை மதுவை நோக்கி அழைத்துச் செல்லும் சாராயக்கடைகளை மூடச் சொல்ல உங்களுக்குத் துணிவு இருக்கிறதா? இளைஞர்களை மண்ணோடும், மாடுகளோடும், உழவோடும் இணைக்கும் ஏறுதழுவுதலை மட்டும், சீரழிவு என்று சொல்லும் துணிவு எங்கிருந்து  உங்களுக்கு வந்தது?</p><p>குடிக்கிற இளைஞன் சீரழியவில்லை; காளையை வளர்க்கிற இளைஞன் சீரழிகிறானா? மதுப்புட்டியைத் தூக்குகிற கை நல்ல கை; காளையின் திமிலைத் தழுவுகிற கை கெட்ட கையா? சாராயக்கடைக்கு அரசு இடம் கொடுத்தால் அது வருவாய்; ஜல்லிக்கட்டுக்கு அரசு இடம் கொடுத்தால் அது வீண் செலவா? எப்படிபட்ட மோசமான பார்வை இது?</p><p><a href="https://www.maalaimalar.com/topic/ஜல்லிக்கட்டு">ஜல்லிக்கட்டு</a> என்பது ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. அது தமிழர்களின் வேளாண்மையோடும், கால்நடை வளர்ப்போடும், நாட்டு மாட்டு இனங்களின் பாதுகாப்போடும், கிராமியப் பொருளாதாரத்தோடும் பின்னிப் பிணைந்த வாழ்வியல் பண்பாடு. ஒரு காளையை ஜல்லிக்கட்டுக்குத் தயார்படுத்துவதற்காக ஓர் உழவர் குடும்பம் ஆண்டுக்கணக்கில் அதனைத் தனது குடும்ப உறுப்பினரைப் போல வளர்க்கிறது. அதன் உணவு, உடல்நலம், பராமரிப்பு என அத்தனையிலும் அக்கறை செலுத்துகிறது. "ஓஓ! இவள் இ ‘பொருபுகல் நல்லேறு கொள்பவர் அல்லால், திருமா மெய் தீண்டலர் என்று, கருமமா,எல்லாரும் கேட்ப அறைந்து, எப்பொழுதும்சொல்லால் தரப்பட்டவள்..."-  ஆயமகன் ஆயமகளை மணமுடிக்க வேண்டுமானால் கொடிய போரேற்றைத் தழுவி வெற்றி பெற வேண்டும். இல்லையேல் இவள் அழகு மேனியைத் தீண்ட இயலாது என்று குறிப்பிடுகிறது கலிப்பாடல், </p><h2><strong>வேதனையளிக்கிறது</strong></h2><p>இதை எல்லாம் அறியாமல், அந்த வாழ்வியலைப் புரிந்துகொள்ளாமல், அந்த மண்ணின் வரலாற்றை உணராமல், “இளைஞர்களைச் சீரழிக்கும் ஜல்லிக்கட்டு” என்று பேசுவது அறியாமையின் உச்சமல்லவா? அதுவும் உலகமே அறிந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைத் தனது தொகுதிக்குள் கொண்டிருக்கும் சட்டமன்ற உறுப்பினரிடமிருந்தே இப்படியொரு கருத்து வருவது மிகுந்த வேதனையளிக்கிறது.</p><p>ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்டபோது என்ன நடந்தது என்பதை மறந்துவிடக்கூடாது  மெரினா கடற்கரையிலும் தமிழ்நாட்டின் வீதிகளிலும் உலக நாடுகளின் தெருக்களிலும் இலட்சக்கணக்கான இளைஞர்கள் திரண்டது எதற்காக?</p><p>“எங்கள் மாடு! எங்கள் மண்! எங்கள் உரிமை! எங்கள் ஜல்லிக்கட்டு!” என்று தங்களது இனத்தின் அடையாளத்தைக் காக்கத்தானே போராடினார்கள்?</p><p>அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இளைஞர் எழுச்சியையும் “சீரழிவு” என்று சொல்வீர்களா?</p><p>ஒரு மக்கள் நலத்திட்டத்திற்குக் கொடுக்கப்பட்ட நிதியை மற்றொரு திட்டத்திற்கு பயன்படுத்துவதை எதிரியாக நிறுத்துவது சரியான அரசியல் அல்ல. பள்ளிக்கூடத்திற்கு நிதி கொடுத்ததால் மருத்துவமனை வேண்டாமா? மருத்துவமனை கட்டியதால் சாலை போடக்கூடாதா? என்ன மாதிரியான கருத்துருவாக்கம் இது?</p><p>தமிழர்களின் அடையாளத்தை அழித்துவிட்டு தமிழ்நாட்டை வளர்க்க முடியாது. தமிழர்களின் பண்பாட்டை இழிவுபடுத்திவிட்டு தமிழர்களுக்கு நல்லாட்சி தர முடியாது.</p><p>ஜல்லிக்கட்டு தமிழர்களின் விளையாட்டு மட்டுமல்ல; அது எமது மண்ணின் அடையாளம்! அது வெறும் காளையும் மனிதனும் மோதும் களம் அல்ல; மனிதனுக்கும் மாட்டிற்குமான ஆயிரமாண்டுப் பந்தத்தின் பண்பாட்டு வெளிப்பாடு!</p><p>எனவே, தமிழர்களின் தொன்மையான வீர விளையாட்டான ஏறுதழுவுதலை “இளைஞர்களையும் சமூகத்தையும் சீரழிக்கும் விளையாட்டு” என்று சட்டப்பேரவையில் பேசிய சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா தனது கருத்தை உடனடியாகத் திரும்பப்பெற்று, தமிழ்நாட்டு மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.</p><p>இவ்வாறு சீமான் கூறியுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம் அருகே கார் டயர் வெடித்து விபத்து - 4 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-car-accident-4-college-students-death</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-car-accident-4-college-students-death#comments</comments><guid isPermaLink="false">27416285-57d3-4b96-b0a3-0d42b1dc72b5</guid><pubDate>Sat, 29 Aug 2026 03:30:31 +0000</pubDate><atom:updated>2026-08-29T03:30:31.161Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>students death,accident,விபத்து,மாணவர்கள் உயிரிழப்பு,madurantakam car accident,மதுராந்தகம் கார் விபத்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/ausl8hsf/car.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Car accident]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/ausl8hsf/car.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மதுராந்தகம் அருகே காரின் டயர் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலியாகினர்.</strong></em></p> <p>சென்னையில் உள்ள தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 7 பேர் புதுச்சேரிக்கு சுற்றுலா சென்றுவிட்டு மீண்டும் கார் மூலம் சென்னை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர். </p> <p>கார் மதுராந்தகம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக காரின் பின்புற டயர் திடீரென வெடித்து சிதறியது.</p><p>இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது. </p><p>இந்த விபத்தில் மாணவர்கள் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.</p> <p>தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் மற்றும் காவல்துறையினர் காயமடைந்த மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு மற்றும் மதுராந்தகம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><p>கார் டயர் வெடித்து கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 29 ஆகஸ்ட் 2026: திருநள்ளாறு சனிபகவான் சிறப்பு அபிஷேகம்
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-29-august-2026-thirunallar-sani-bhagavan-special-abhishekam</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-29-august-2026-thirunallar-sani-bhagavan-special-abhishekam#comments</comments><guid isPermaLink="false">205b7a2f-5b59-4d7c-8c47-dc45c24b6f35</guid><pubDate>Sat, 29 Aug 2026 02:48:24 +0000</pubDate><atom:updated>2026-08-29T02:48:24.766Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/01/30/25616771-sanibagavan1.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ sani bhagavan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/01/30/25616771-sanibagavan1.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆவணி-12 (சனிக்கிழமை)</p><p>பிறை : தேய்பிறை</p><p>திதி :  பிரதமை காலை 10.34 மணி வரை பிறகு துவிதியை</p><p>நட்சத்திரம் : பூரட்டாதி நாளை விடியற்காலை 5.03 வரை பிறகு உத்திரட்டாதி</p> <p>யோகம் :  மரண / சித்தயோகம்</p><p>ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை</p><p>எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை</p><p>சூலம் : கிழக்கு</p><p>நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை</p> <h2>திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்</h2><p>திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். நயினார் கோவில் ஸ்ரீ சௌந்தரநாயகி, திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம். </p><p>திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்த ராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி. காரமடை ஸ்ரீ அரங்கநாதர், திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - நன்மை</p><p>ரிஷபம் - நலம்</p><p>மிதுனம் - வரவு</p><p>கடகம் - ஆதாயம்</p><p>சிம்மம் - போட்டி</p><p>கன்னி - முயற்சி</p> <p>துலாம் - பயிற்சி</p><p>விருச்சிகம் - ஆதரவு</p><p>தனுசு - பரிசு</p><p>மகரம் - நிம்மதி</p><p>கும்பம் - உயர்வு</p><p>மீனம் - பயணம்</p> ]]></content:encoded></item><item><title>நேபாள வெள்ளம்: அதிர்ச்சியில் உறைந்த பெண்.. அதிசயமாக  உயிர்தப்பிய குடும்பம் -  அதிரவைக்கும் வீடியோக்கள்</title><link>https://www.maalaimalar.com/news/world/nepal-floods-family-survives-miraculously-woman-left-frozen-in-shock-shocking-videos</link><comments>https://www.maalaimalar.com/news/world/nepal-floods-family-survives-miraculously-woman-left-frozen-in-shock-shocking-videos#comments</comments><guid isPermaLink="false">a6819e51-84ba-49d1-9c0f-574b54b98586</guid><pubDate>Sat, 29 Aug 2026 02:46:09 +0000</pubDate><atom:updated>2026-08-29T02:46:09.610Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாளம்,nepal,வைரல் வீடியோ,வெள்ளம்,floods,viral video</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/zu2nvy3f/tn-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நேபாள வெள்ளம்]]></media:title><media:description type="html"><![CDATA[ நேபாள வெள்ளம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/zu2nvy3f/tn-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">நேபாளத்தில் </a>கடந்த புதன்கிழமை ஏற்பட்ட திடீர் <a href="https://www.maalaimalar.com/news/world/death-toll-from-nepal-floods-rises-to-579-1924-missing">வெள்ளப்பெருக்கு </a>காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 600 ஐ எட்டியுள்ளது. சுமார் 1,500 பேர் இன்னும் மாயமாகியுள்ளனர். </p><p>லடாக்கில் இமயமலை பகுதியில் பனிப்பாறை சரிந்து நதியில் விழுந்து பாதையை அடைத்தால் அணை உடைந்து நீர் வேகமாக கீழ்நோக்கி நேபாளத்தின் புகுந்ததே வெள்ளபெருகுக்கு காரணம் என தெரியவந்துள்ளது. </p> <p>ரசுவா மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்கள் இதில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வெள்ளவதில் நேபாளத்தில் பல வீடுகள், மனிதர்கள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஒரு வீடு மட்டும் தனித்து நின்றதும் அதன் மாடியில் நின்று அதை வேடிக்கை பார்த்த குடும்பத்தினரின் வீடியோவும் வைரலாகி வருகிறது.</p><p>சுற்றியிருந்த அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட அவர்கள் மட்டும் அதியசயமாக உயிர்தப்பியது குறித்து பலரும் இணையத்தில் ஆச்சர்யம் தெரிவித்து வருகின்றனர்.</p> <h2>வீடியோ</h2><p>கரைபுரண்டு ஓடும் சேற்று வெள்ளம், அதன் பாதையில் உள்ள அனைத்துக் கட்டமைப்புகளையும் இடிபாடுகளையும் அடித்துச் செல்வதை அந்த வீடியோ காட்டுகிறது.</p><p>இருப்பினும், சீறிப் பாயும் நீரால் சூழப்பட்ட போதிலும் ஒரு பச்சை வீடு எவ்விதச் சேதமும் இன்றி அப்படியே நின்றது.</p><p>வெள்ள நீர் சூழ்ந்தபோது, அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த குறைந்தது மூன்று பேர் அந்த வீட்டில் இருப்பது காண முடிந்தது.</p><p>அருகில் இருந்த கட்டமைப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அந்த கட்டிடம் மிகக் குறைந்த சேதத்தையே சந்தித்ததாக தெரிகிறது.</p><p>அதேவேளையில், அந்த வீட்டில் காணப்பட்ட குடும்பத்தின் நிலை என்ன ஆனது என்பது குறித்தும் கவலை எழுந்தது.</p><p>பின்னர் மற்றொரு சமூக வலைதளப் பயனர் அந்த குடும்பத்தினர் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்தும் வீடியோவை பகிர்ந்தார்.</p> <figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">That family in the green house. I hope they are alive and safe.  what a nightmare. <a href="https://t.co/t2tVR2cFD7">pic.twitter.com/t2tVR2cFD7</a></p>&mdash; Pooja Shali (@PoojaShali) <a href="https://x.com/PoojaShali/status/2093225981557502059?ref_src=twsrc%5Etfw">August 28, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2>மற்றொரு சம்பவம்</h2><p>மற்றொரு சம்பவடத்தில் மலைப் பகுதியில் மாட்டிக்கொண்ட பெண் ஒருவரை ராணுவப் படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். மரணத்தின் விளிம்பு வரை சென்ற அவர், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.</p><p>வெள்ளத்தில் அவரின் வீடு, குடும்ப உறுப்பினர்கள் உட்படத் தனது அனைத்து உடைமைகளும் கண்ணெதிரே அடித்துச் செல்லப்பட்டதாகப் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் கண்ணீர் மல்கக் கதறினார்.</p><p>உயிர்தப்பிய போதிலும், அவர் மீளமுடியாத அதிர்ச்சியில் உறைந்துபோயிருந்ததை வீடியோவில் காணமுடிந்தது.</p> <figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">: Heartbreaking visuals from Nepal.  <br><br>A woman trapped in the devastating floods was rescued by the Nepal Army after reportedly losing her home, family and everything she had to the disaster.<a href="https://x.com/hashtag/nepal?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#nepal</a> <a href="https://x.com/hashtag/viral?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#viral</a> <a href="https://x.com/hashtag/breaking?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#breaking</a> <a href="https://x.com/hashtag/tibet?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#tibet</a> <a href="https://x.com/hashtag/india?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#india</a> <a href="https://t.co/Qv7bCjU4hE">pic.twitter.com/Qv7bCjU4hE</a></p>&mdash; pradhyumn sharma (@pradhyu78651514) <a href="https://x.com/pradhyu78651514/status/2093326590692438522?ref_src=twsrc%5Etfw">August 28, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><p>இந்தச் வீடியோ காட்சி தற்போதைய கள நிலவரத்தின் பயங்கரத்தை பிரதிபலிக்கின்றன.</p><p>இவரைப் போலவே இன்னும் ஏராளமானோர் உதவிக்காக காத்திருந்தபடி மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் சிக்கியிருக்கலாம் எனப் கவலை எழுந்துள்ளது.</p><p>மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும், தொலைதூரப் பகுதிகளில் சிக்கியுள்ளவர்களின் நிலை குறித்து அச்சம் நிலவுகிறது.</p>]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 29.8.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு திருமணத்தடை அகலும்
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-29-august-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-29-august-2026#comments</comments><guid isPermaLink="false">33dac167-8268-4484-aec9-c8d1e11f6631</guid><pubDate>Sat, 29 Aug 2026 01:53:07 +0000</pubDate><atom:updated>2026-08-29T01:53:07.102Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/03/13/27322352-rasi-3.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/03/13/27322352-rasi-3.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வரவை விடச் செலவு கூடும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.</p><h2>ரிஷபம்</h2><p>திட்டமிட்ட காரியத்தில் திடீர் மாற்றம் ஏற்படும் நாள். உடல் நலத்தில் கவனம் தேவை. தொழில் ரீதியான பயணமொன்றால் லாபம் உண்டு.</p> <h2>மிதுனம்</h2><p>ஆதாயம் அதிகரிக்கும் நாள். அனுபவமிக்கவர்களின் ஆலோசனை கைகொடுக்கும். தொழில் முன்னேற்றம் உண்டு. எதிர்பார்த்த காரியம் இன்று நடைபெறும்.</p><h2>கடகம்</h2><p>முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள். வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பிறருக்குப் பொறுப்புச் சொல்வதால் பிரச்சனைகள் உண்டு.</p> <h2>சிம்மம்</h2><p>மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மறதியால் விட்டுப்போன பணிகளை செய்ய முன்வருவீர்கள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.</p><h2>கன்னி</h2><p>துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். சொத்து சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும். பணியாளர்கள் பக்கபலமாக இருப்பர்.</p> <h2>துலாம்</h2><p>சேமிப்பு உயரும் நாள். பயணம் பலன் தரும். செல்வாக்கு மேலோங்கும். வருமோ, வராதோ என்று நினைத்த பணம் ஒன்று கைக்கு வரும். திருமணத்தடை அகலும்.</p><h2>விருச்சிகம்</h2><p>கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்கும் நாள். கண்ணியமிக்க நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.</p> <h2>தனுசு</h2><p>மதிநுட்பத்தால் மகத்தான காரியங்களைச் செய்து முடிக்கும் நாள். வெளிவட்டாரத் தொடர்பு விரிவடையும். பிள்ளைகளால் உதிரி வருமானம் உண்டு.</p><h2>மகரம்</h2><p>அலைபேசி மூலம் அனுகூலத் தகவல் வந்து சேரும் நாள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் உதவி கிடைக்கும். திருமணங்கள் முடிவாகும்.</p> <h2>கும்பம்</h2><p>இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும் நாள். உறவு பகை பாராமல் உதவி செய்ய முன்வருவீர்கள். அரசியல் ஈடு பாடு அதிகரிக்கும். தடைப்பட்ட காரியம் தானாக நடைபெறும்.</p><h2>மீனம்</h2><p>கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். அயல்நாட்டு நிறுவனங்களின் அழைப்பை ஏற்பது பற்றி யோசிப்பீர்கள்.</p> ]]></content:encoded></item><item><title>எதிர்பார்த்த படங்கள் தோற்கும், எதிர்பாராத படங்கள் வெல்லும் - நயன்தாரா</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/toxic-negative-reviews-nayantharas-reaction</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/toxic-negative-reviews-nayantharas-reaction#comments</comments><guid isPermaLink="false">d90f718d-d8b6-4762-851c-38a1f28fa6cb</guid><pubDate>Sat, 29 Aug 2026 01:46:37 +0000</pubDate><atom:updated>2026-08-29T01:46:37.475Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Nayanthara,நயன்தாரா,Yash,டாக்ஸிக்,யாஷ்</media:keywords><media:content height="576" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/dklv0sx2/maalai-malar2026-08-21mlp602ewtn-2.avif" width="1024"><media:title type="html"><![CDATA[ நயன்தாரா ]]></media:title><media:description type="html"><![CDATA[ நயன்தாரா ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/dklv0sx2/maalai-malar2026-08-21mlp602ewtn-2.avif?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>யாஷ், நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான '<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/toxic-review">டாக்ஸிக்</a>'  திரைப்படம், மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. </p><h2>டாக்ஸிக்</h2><p>இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம், சுதந்திரத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில் போர்த்துகீசிய ஆட்சின்கீழ் இருந்த கோவாவை பின்னணியாகக் கொண்டு அமைந்துள்ளது.</p><p>இப்படத்தில் யாஷ் இரண்டு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். யாஷுடன் இணைந்து நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, தாரா சுதாரியா மற்றும் ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர்.</p> <p>இப்படம் கிட்டத்தட்ட ரூ 600 முதல் 800 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.</p><p>கே.வி.என் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படம், கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்டு, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகியது.</p><p>ஆகஸ்ட் 26 அன்று உலகெங்கிலும் வெளியாகிய இப்படம் எதிர்மறை விமர்சனங்கள் வந்தபோதும் பாக்ஸ் ஆபீசில் ரூ.100 கோடியை கடந்துள்ளது.</p> <h2>நயன்தாரா</h2><p>சமூக வலைதளங்களில் இப்படம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை நயன்தாரா இதுகுறித்து மனம் திறந்துள்ளார்.</p><p>படத்தின் முடிவுகள் குறித்துப் பேசிய அவர், "திரைத்துறையில் உள்ள அனுபவம் ஒரு படம் எவ்வாறு உருவாகிறது என்பது குறித்த அடிப்படை புரிதலை வழங்கக்கூடும்.</p><p>ஆனால் சினிமா என்பது மிகவும் உணர்வுப்பூர்வமானது. எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்தது. எனது திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று நான் பெரிதும் எதிர்பார்த்த சில படங்கள் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியுள்ளன.</p> <p>அதே வேளையில், சில படங்களின் முடிவுகள் குறித்து எனக்கே சந்தேகங்கள் இருந்தன. ஆனால் அவை வசூல் ரீதியாக எதிர்பாராத மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ஆச்சரியப்படுத்தின.</p><p>திரைத்துறையில் எனது இத்தனை ஆண்டுகால பயணம் எனக்கு ஒரு விஷயத்தைக் கற்றுக் கொடுத்துள்ளது. ஒரு படத்தின் வெற்றியையும் தோல்வியையும் ஒரே மாதிரியாக, அடக்கத்துடன் ஏற்றுக்கொள்ள நான் பழகிக்கொண்டேன்" என்று தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>அமெரிக்காவிடம் இருந்து ஜாவலின் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் கையெழுத்து</title><link>https://www.maalaimalar.com/news/national/agreement-signed-to-purchase-javelin-anti-tank-missiles-from-the-us</link><comments>https://www.maalaimalar.com/news/national/agreement-signed-to-purchase-javelin-anti-tank-missiles-from-the-us#comments</comments><guid isPermaLink="false">38db2f44-0d69-4039-8e5d-b660bab57679</guid><pubDate>Sat, 29 Aug 2026 01:13:05 +0000</pubDate><atom:updated>2026-08-29T01:13:05.294Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,USA,ஏவுகணை,missile,INDIAN ARMY,இந்திய ராணுவம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/ak9kxk44/tn.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஜாவலின் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை]]></media:title><media:description type="html"><![CDATA[ ஜாவலின் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/ak9kxk44/tn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE">அமெரிக்க </a>தயாரிப்பான 'ஜாவலின்' பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை அமைப்பை வாங்குவதற்காக அமெரிக்காவுடன் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D">இந்திய ராணுவம்</a> ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.</p><p>இந்தியாவின் கோரிக்கையை ஏற்று இந்த ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல் அளித்த ஒன்பது மாதங்களுக்குப் பிறகு தற்போது கையெழுத்தாகியுள்ளது.</p> <h2>கருத்து</h2><p>இந்த ஒப்பந்தம், இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.</p><p>இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்புப் பங்களிப்பு மேலும் ஆழமாகவும் பலமாகவும் மாறுவதின் சான்றாகும் என்று இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார்.</p><p>இந்திய ராணுவத்திற்கு அமெரிக்கா அளிக்கும் ஆதரவின் ஆழத்தை இந்த ஒப்பந்தம் பிரதிபலிக்கிறது என்றும், இரு நாடுகளின் பாதுகாப்பு தொழில் துறைக்கான புதிய வாய்ப்புகளை இது திறந்துவிடும் என்றும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.</p> <h2>சிறப்பம்சங்கள்</h2><p>சுமார் 45.7 மில்லியன் டாலர் மதிப்பிலானது இந்த ஜாவலின் ஏவுகணை ஒப்பந்தம். அமெரிக்க ராணுவம் தவிர பல சர்வதேச வாடிக்கையாளர்களாலும் ஜாவலின் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.</p><p>கவச வாகனங்கள் மற்றும் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு அரண்களை தகர்க்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><p>ஆர்டிஎக்ஸ் மற்றும் லாக்ஹீட் மார்ட்டின் ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியான 'ஜாவலின் ஜாயிண்ட் வென்ச்சர்' இந்த ஏவுகணைகளை தயாரிக்கிறது.</p> <h2>பாதுகாப்பு</h2><p>கடந்த ஆண்டு இந்தியாவும் அமெரிக்காவும் தங்களின் பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்காக 10 ஆண்டுகால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தன.</p><p>அமெரிக்க-இந்திய மூலோபாய உறவை வலுப்படுத்துவதற்கும், இந்தோ-பசிபிக் மற்றும் தெற்காசிய பிராந்தியங்களில் அரசியல் ஸ்திரத்தன்மை, அமைதி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு முக்கிய பாதுகாப்பு கூட்டாளியின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் இந்த ஒப்பந்தம் உதவும் என்று அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு முகமை சுட்டிக்காட்டியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/todays-petrol-and-diesel-prices-in-chennai-2</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/todays-petrol-and-diesel-prices-in-chennai-2#comments</comments><guid isPermaLink="false">92751f4d-8086-4504-931c-8b703af86fe1</guid><pubDate>Sat, 29 Aug 2026 00:56:31 +0000</pubDate><atom:updated>2026-08-29T00:56:31.275Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,கச்சா எண்ணெய்,Crude oil,பெட்ரோல் டீசல் விலை,Petrol and Diesel Prices</media:keywords><media:content height="576" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/awvbgdsi/maalai-malar2026-08-24b0k0t00ltn-32.avif" width="1024"><media:title type="html"><![CDATA[ பெட்ரோல், டீசல் விலை]]></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல், டீசல் விலை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/awvbgdsi/maalai-malar2026-08-24b0k0t00ltn-32.avif?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/china-warns-us-over-iran-trade-new-economic-sanctions-row">ஈரான் போரினால்</a> மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p> <h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.</p> <h2>இன்றைய பெட்ரோல், டீசல் விலை</h2><p>அந்த வகையில் இன்றைய (29.08.2026 - சனிக்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கச்சா எண்ணெய் விலை</h2><p>இன்று சர்வதேச சந்தையில் பிரனட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 88.29 டாலர் என விற்பனை ஆகி வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>ஜி20 கூட்டத்திற்காக அமெரிக்கா சென்றடைந்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்</title><link>https://www.maalaimalar.com/news/world/fm-sitharaman-lands-in-us-for-six-day-visit-for-g20-talks</link><comments>https://www.maalaimalar.com/news/world/fm-sitharaman-lands-in-us-for-six-day-visit-for-g20-talks#comments</comments><guid isPermaLink="false">f306c530-2116-4355-97a3-c691000ff968</guid><pubDate>Sat, 29 Aug 2026 00:46:10 +0000</pubDate><atom:updated>2026-08-29T00:46:10.628Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,நிர்மலா சீதாராமன்,nirmala Sitharaman,G20,ஜி20,us</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/12lk6hj6/Nirmala-Sitharaman.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nirmala Sitharaman ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/12lk6hj6/Nirmala-Sitharaman.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய நிதியமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/nirmala-sitharaman">நிர்மலா சீதாராமன்</a> ஆறு நாள் பயணமாக அமெரிக்கா சென்றடைந்தார். இந்த பயணத்தின் போது, ​​அவர் ஜி20 நிதியமைச்சர்களின் கூட்டத்தில் பங்கேற்பதுடன், முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விவாதிக்க பல்வேறு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் மற்றும் வணிக தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.</p><p>கனடாவில் நடைபெற்ற முதல் '<a href="https://www.maalaimalar.com/news/national">இந்தியா</a>-கனடா பொருளாதார மற்றும் நிதிசார் கலந்துரையாடல்' நிகழ்வில் பங்கேற்ற பிறகு, மூன்று நாள் பயணத்தை முடித்துக்கொண்டு நிர்மலா சீதாராமன் சிகாகோவின் ஓ'ஹேர் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். </p><p>அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, இந்திய தூதரகத்தின் துணை தூதர் நம்க்யா சி. கம்பா மற்றும் சிகாகோவிற்கான இந்திய தூதரக அதிகாரி சோமநாத் கோஷ் ஆகியோர் அவரை வரவேற்றனர்.</p><h2>ஒன்பது நாள் கூட்டுப் பயணம்:</h2><p>சீதாராமன் கனடா மற்றும் அமெரிக்காவில் ஒன்பது நாள் கூட்டுப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்; இப்பயணம் செப்டம்பர் 2-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.</p><p>சிகாகோவில் தங்கியிருக்கும் காலத்தில், அவர் முக்கிய முதலீட்டாளர்களுடனான மாநாட்டில் பங்கேற்பதுடன், தனியார் துறையை சேர்ந்த முன்னணி தலைமை செயல் அதிகாரிகள், தலைவர்கள் மற்றும் மூத்த பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடுவார் என்று அந்த அறிக்கை தெரிவித்தது.</p><p>இந்தியாவின் முதலீட்டு வாய்ப்புகள், பொருளாதார கண்ணோட்டம் மற்றும் இந்தியா-அமெரிக்கா இடையிலான வணிக மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் ஆகியவை குறித்த விவாதங்கள் இதில் இடம்பெறும்.</p><p>மேலும், சிகாகோ பல்கலைக்கழகத்தில் உள்ள 'போல்ஸ்கி தொழில்முனைவு மற்றும் புத்தாக்க மையத்தை' பார்வையிடும் அவர், தொழில்முனைவு, புத்தாக்கம், தொழில்நுட்ப வணிகமயமாக்கல் மற்றும் இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் ஸ்டார்ட்-அப் மற்றும் புத்தாக்க சூழலுடனான தொடர்புகளை வலுப்படுத்துவது குறித்த கருத்துக்களை பரிமாறி கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>ஜி20 நிதியமைச்சர்கள் கூட்டம்:</h2><p>பின்னர், மத்திய நிதியமைச்சர் சிகாகோவில் உள்ள இந்தியச் சமூகத்தினருடன் கலந்துரையாடுவார். அமெரிக்காவின் தலைமையில் வட கரோலினாவின் ஆஷ்வில் நகரில் நடைபெறவுள்ள ஜி20 நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டத்தில் இந்திய குழுவிற்கு அவர் தலைமை தாங்குவார்.</p><p>ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், ஜி20 உறுப்பு நாடுகளின் நிதியமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர்கள் மற்றும் மூத்த பொருளாதார அதிகாரிகள் ஒன்றிணைந்து, முக்கிய உலகளாவிய பொருளாதார மற்றும் நிதிசார் விவகாரங்கள் குறித்து விவாதிப்பார்கள் என்று அந்த அறிக்கை கூறியது.</p>]]></content:encoded></item><item><title>காசாவில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் 5 பேர் பலி</title><link>https://www.maalaimalar.com/news/world/israeli-strikes-kill-5-in-gaza</link><comments>https://www.maalaimalar.com/news/world/israeli-strikes-kill-5-in-gaza#comments</comments><guid isPermaLink="false">41e8254c-df6c-4896-bcfb-147798323aed</guid><pubDate>Fri, 28 Aug 2026 22:24:43 +0000</pubDate><atom:updated>2026-08-28T22:24:43.964Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>காசா,இஸ்ரேல்,gaza,Israel</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/4as2rtqc/Gaza-Attacked.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gaza Attacked]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/4as2rtqc/Gaza-Attacked.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் மேற்கொள்ளப்பட்ட நிலையற்ற போர்நிறுத்த ஒப்பந்தம் இருந்தபோதிலும், நேற்று காசாவில் நடத்தப்பட்ட இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.</p><p>இதற்கிடையில், <a href="https://www.maalaimalar.com/topic/Iran">ஈரான்</a> போரினால் பாரசீக வளைகுடாவில் ஆயிரக்கணக்கான மாலுமிகள் சிக்கி தவிக்கின்றனர். இத்துடன், ரஷ்யா உடனான எரிசக்தி ஒப்பந்தத்தை ஈரான் முன்னிலைப்படுத்தி வருகிறது, மேலும் ஈரானுடனான தொடர்புகளுக்காக ஒரு முக்கிய எகிப்திய வங்கி மீது <a href="https://www.maalaimalar.com/topic/US">அமெரிக்கா</a> கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.</p><h2>ஐந்து பேர் உயிரிழப்பு:</h2><p>காசாவில் நடத்தப்பட்ட இஸ்ரேலிய தாக்குதல்களில் ஐந்து பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>கான் யூனிஸ் (Khan Younis) பகுதிக்கு வெளியே இருந்த ஒரு குடும்பத்தின் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு சகோதரர்களும் மற்றொரு உறவினரும் உயிரிழந்ததாக நாசர் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். கான் யூனிஸில் தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து தங்களுக்கு தெரியாது என்று இஸ்ரேலிய ராணுவம் கூறியது.</p><p>நேற்று (வெள்ளிக்கிழமை) காசா நகரில் நடத்தப்பட்ட இரண்டு தனித்தனி இஸ்ரேலிய தாக்குதல்களில் தலா ஒருவர் வீதம் கொல்லப்பட்டதாக ஷிஃபா மருத்துவமனை சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். நகரின் இரண்டு வெவ்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தியதை இஸ்ரேலிய ராணுவம் உறுதிப்படுத்தியது, ஆனால் கூடுதல் விவரங்களை அளிக்கவில்லை.</p><h2>70 தாக்குதல்கள் நடத்தப்பட்டன:</h2><p>இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த போரை நிறுத்த அக்டோபரில் மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, காசாவில் நிகழ்ந்த சமீபத்திய உயிரிழப்புகள் இவை. </p><p>கடுமையான சண்டைகள் குறைந்திருந்தாலும், இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன; இதில் குறைந்தது 1,303 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>பிப்ரவரி 28 அன்று ஈரான் போர் தொடங்கியதில் இருந்து, இப்பகுதியை விட்டு வெளியேற முடியாமல் நூற்றுக்கணக்கான கப்பல்களில் சிக்கியுள்ள குறைந்தது 6,000 மாலுமிகள் மற்றும் 19 கப்பல் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் கடல்சார் அமைப்பு தெரிவித்துள்ளது.</p><p>சர்வதேச கடல்சார் அமைப்பின் கூற்றுப்படி, பாரசீக வளைகுடாவில் சர்வதேச கப்பல் போக்குவரத்தின் மீது குறைந்தது 70 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>&quot;நடிகர் சூரி ஹீரோ ஆக 25 வருடங்கள் ஆனது&quot; மண்டாடி பட விழாவில் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/rj-balaji-said-actor-soori-took-25-years-to-become-a-hero</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/rj-balaji-said-actor-soori-took-25-years-to-become-a-hero#comments</comments><guid isPermaLink="false">051a9786-fcc5-4d7a-88db-0e29b22bf762</guid><pubDate>Fri, 28 Aug 2026 21:53:07 +0000</pubDate><atom:updated>2026-08-28T21:53:07.533Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>RJ Balaji,ஆர்ஜே பாலாஜி,மண்டாடி,Soori,Mandaadi,சூரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/e034iaoq/Soori-and-RJ-Balaji.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Soori and RJ Balaji]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/e034iaoq/Soori-and-RJ-Balaji.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகி வரும் படம் <a href="https://www.maalaimalar.com/topic/mandaadi">மண்டாடி</a>. இதில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். சத்யராஜ், சுஹாஷ், ரவீந்திர விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.</p><p>மீனவர்களின் வாழ்க்கை பின்னணியை அடிப்படையாக கொண்டும், அவர்களுக்குள் நடக்கும் படகுப்போட்டியை அடிப்படையாக கொண்டும் படம் உருவாகி உள்ளது. </p><p>இந்தப் படத்தில் முத்துக்காளி எனும் கதாபாத்திரத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/soori">சூரி</a> நடித்துள்ளார். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.</p><h2>ஆர்.ஜே. பாலாஜி பெருமிதம்:</h2><p>இந்தப் படம் வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் மண்டாடி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் படக்குழுவுடன் இயக்குநர் வெற்றி மாறன், நடிகர் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.</p><p>இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய நடிகர், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி நடிகர் சூரியின் திரைப்பயணம் குறித்து பெருமையாக பேசினார்.</p><p>இதுகுறித்து பேசிய இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, "சூரி சார் சங்கமம் படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக நடித்திருந்தார். அந்தப் படம் 1999-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. அன்று தொடங்கி தற்போது சூரி ஹீரோ ஆக 25 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. </p><p>அவர் போராடினார், போராடினார், போராடினார்- அவர் தன்னுடைய இடத்தை கைவிடவே இல்லை. எதையும் கைவிடாமல் இருந்தால் ஒருநாள் சாதிக்கலாம் என்பதற்கு சூரி மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்," என்று தெரிவித்தார்.</p><h2>யார் மண்டாடி?</h2><p>காற்றையும், அலையையும், கடல் நீரோட்டத்தையும் நன்கு கணித்து, மீன்களின் வளத்தையும் அவற்றின் திசைவழி போக்கையும் பற்றிய நல்ல அறிவையும் அனுபவத்தையும் பெற்ற ஒருவர், மீன்பிடிக்க செல்லும்போது படகை வழிநடத்தக்கூடிய தலைமை நிலையில் இருப்பார். அவரைத்தான் மண்டாடி என அழைப்பர். இதில் சூரி தலைவராக இருப்பதால் படத்திற்கு மண்டாடி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.</p><p>மண்டாடி திரைப்படம் அறிவிக்கப்பட்டது முதலே, இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது. விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், இந்தப் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.</p>]]></content:encoded></item><item><title>மொத ராத்திரி திரைப்படத்தை மிகவும் ரசித்தேன் - நடிகர் சிலம்பரசன்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-silambarasan-praises-modha-rathiri-movie</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-silambarasan-praises-modha-rathiri-movie#comments</comments><guid isPermaLink="false">10b7fc68-18e9-4934-b342-e81f44da9e79</guid><pubDate>Fri, 28 Aug 2026 21:21:38 +0000</pubDate><atom:updated>2026-08-28T21:21:38.409Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>silambarasan,சிலம்பரசன்,Modha Rathiri,மொத ராத்திரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/o9t1i2we/Modha-Rathiri-Poster-and-STR.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Modha Rathiri Poster and STR]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/o9t1i2we/Modha-Rathiri-Poster-and-STR.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகர்கள் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா நடிப்பில் வெளியான "<a href="https://www.maalaimalar.com/topic/modha-rathiri">மொத ராத்திரி</a>" திரைப்படத்திற்கு நடிகர் சிலம்பரசன் பாராட்டு தெரிவித்துள்ளார். அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் உருவாகி சமீபத்தில் வெளியான திரைப்படம் "மொத ராத்திரி".</p><p>புதிதாக திருமணமான ஜோடியின் முதலிரவில் நடக்கும் நகைச்சுவையான கதைகளத்துடன் உருவான இந்தப் <a href="https://www.maalaimalar.com/cinema">படம்</a> ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.</p><h2>நடிகர் சிலம்பரசன் பாராட்டு:</h2><p>இந்த நிலையில், மண் மணத்தோடு கூடிய ஒரு சுவாரஸ்யமான படைப்பு என கூறி "மொத ராத்திரி" திரைப்படத்தை நடிகர் சிலம்பரசன் பாராட்டினார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "மொத ராத்திரி படத்தைப் பார்த்தேன், மிகவும் ரசித்தேன்.</p><p>பிற மொழிகளில் வெளியாகும் சிறிய, அழகான படங்களை கண்டறிந்து நாம் கொண்டாடுகிறோம். அதேபோல, ஒரு புதிய குழுவுடன் புதிய முயற்சியாக ஒரு தமிழ்ப் படம் வெளியாகையில் அதற்கும் நாம் அதே அன்பையும், ஆதரவையும் அளிக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.</p><h2>ஒரே இரவில் நடக்கும் கதை:</h2><p>ஒரு கிராமத்து திருமண பின்னணியை கொண்டு, ஒரே இரவில் நடக்கும் கதை. இதில் வரும் பல கதாபாத்திரங்களும், சிறிய தருணங்களும் மிகவும் இயல்பானவையாக அமைந்திருக்கின்றன. கதைகளம், நகைச்சுவை, மனிதர்கள் இடையேயான உரையாடல்கள் மற்றும் கதாபாத்திரங்களின் சித்தரிப்பு என அனைத்தும் மிகவும் சிறப்பாக கையாளப்பட்டிருந்தன.</p><p>ஒரு புதிய இயக்குநரும் அவரின் குழுவும், மண்ணின் மணத்தோடு கூடிய சுவாரஸ்யமான ஒரு படைப்பை உருவாக்கியிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இயக்குநர் ராஜா கருப்பசாமி, நடிகர்கள் மற்றும் படக்குழுவினர்; இவர்களுடன், இப்படத்துக்கு துணையாக நின்ற அனைவருக்கும் எனது பாராட்டுகள்.</p><p>என் ரசிகர்கள் மற்றும் சினிமாவை விரும்புபவர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்; "மொத ராத்திரி" திரைப்படத்தை திரையரங்குகளில் சென்று பார்த்து, அக்குழுவுக்கு ஆதரவு அளியுங்கள். முழு படக்குழுவுக்கும் எனது வாழ்த்துகள். தொடர்ந்து நல்ல படங்களை உருவாக்குங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நேபாள வெள்ளத்தில் உயிர்தப்பிய 21 தமிழர்கள் சென்னை திரும்பினர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nepal-floods-21-tamil-people-return-chennai-safely</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nepal-floods-21-tamil-people-return-chennai-safely#comments</comments><guid isPermaLink="false">7f575d16-0498-408e-8054-14a8f29de14d</guid><pubDate>Fri, 28 Aug 2026 20:46:24 +0000</pubDate><atom:updated>2026-08-28T20:46:24.341Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழர்கள்,Tamil people,Nepal Floods,நேபாள வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/hdfxftjt/Tamilans-arrive-chennai.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tamilans Arrive Chennai]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/hdfxftjt/Tamilans-arrive-chennai.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாளத்தில் ஏற்பட்ட <a href="https://www.maalaimalar.com/topic/nepal-floods">வெள்ளத்தில்</a> சிக்கி மீட்கப்பட்ட 21 தமிழர்கள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.</p><p>கடந்த புதன்கிழமையன்று நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை காணவில்லை. தேடுதல் மற்றும் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</p><p>இந்த சூழலில், நேபாளத்துக்கு சென்று மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க, அமைச்சர்களுக்கு உத்தரவிட்டிருந்த தமிழக முதலமைச்சர்<a href="https://www.maalaimalar.com/topic/vijay"> விஜய்</a>, மீட்கப்பட்டுள்ள 21 தமிழர்களை தாயகம் அழைத்து வர ஏற்பாடு செய்யவும், தொடர்பு கொள்ள இயலாதவர்களின் நிலையை கண்டறிந்து மீட்புப்பணிகளை துரிதப்படுத்தவும் அறிவுறுத்தி இருந்தார்.</p><h2>டெல்லியில் தமிழக அமைச்சர்கள்:</h2><p>அதன்படி தமிழக பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் ராஜ்மோகன், வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் க.தென்னரசு, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் ர.வினோத் ஆகியோர் டெல்லியில், மத்திய அரசின் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியை சந்தித்தனர்.</p><p>அப்போது, நேபாளத்திற்கு சுற்றுலா சென்றிருந்த தமிழர்களை மீட்டு பாதுகாப்பாக அழைத்து வருவது தொடர்பாக மத்திய அரசின் வெளியுறவு அமைச்சகம் மற்றும் நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் மூலம் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப்பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.</p><h2>சென்னை திரும்பிய தமிழர்கள்:</h2><p>இந்நிலையில் காத்மண்டுவில் இருந்து மதியம் 2.15 மணிக்கு, 21 தமிழர்களுடன் புறப்பட்ட இண்டிகோ விமானம் மதியம் 3.45 மணிக்கு டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தது. இதன்பின்னர் தமிழர்கள் 21 பேரையும் தமிழ்நாடு அமைச்சர்கள் நேற்று நேரில் வரவேற்றனர்.</p><p>இதன்பின்னர் இரவு 8 மணியளவில் டெல்லியில் இருந்து புறப்பட்ட அவர்கள், நேற்று இரவு 11.15 மணியளவில் சென்னை வந்தடைந்தனர். விமான நிலையம் வந்த 21 பேரையும் தமிழக அமைச்சர்கள் என்.ஆனந்த், சரத்குமார் ஆகியோர் நேரில் வரவேற்றனர்.</p><p>மீட்கப்பட்ட 21 நபர்களும் திருச்சி, மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் சென்னையை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களை இனிப்புகள் வழங்கி உறவினர்கள் வரவேற்றனர்.</p>]]></content:encoded></item><item><title>UGC-NET ஜூன் 2026 தேர்வு முடிவுகள் வெளியீடு</title><link>https://www.maalaimalar.com/news/national/ugc-net-june-2026-results-declared-for-84-subjects</link><comments>https://www.maalaimalar.com/news/national/ugc-net-june-2026-results-declared-for-84-subjects#comments</comments><guid isPermaLink="false">1812a18d-1642-438b-ac75-325ba7defdb7</guid><pubDate>Fri, 28 Aug 2026 19:11:18 +0000</pubDate><atom:updated>2026-08-28T19:11:18.232Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>UGC,UGC-NET Results,யுஜிசி,யுஜிசி நெட் தேர்வு முடிவுகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/37hrdmhi/UGC.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ UGC]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/37hrdmhi/UGC.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/nta">தேசிய தேர்வு முகமை</a> 84 பாடங்களுக்கான UGC-NET ஜூன் 2026 தேர்வு முடிவுகளை அறிவித்துள்ளது. தேர்வில் பங்கேற்ற மாணவர்கள், ugcnet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ UGC-NET இணையதளம் மூலம் தங்களின் மதிப்பெண் அட்டைகளை சரிபார்த்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.</p><p>யுஜிசி-நெட் ஜூன் 2026 தேர்வானது, 87 பாடங்களுக்கு, ஜூன் 22 முதல் 30, 2026 வரை நடத்தப்பட்டது. ஒரு விண்ணப்பதாரர் தகுதிபெறும் பிரிவைப் பொறுத்து, இந்த தேர்வு இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை (JRF) பெறுவதற்கும், உதவி பேராசிரியராக நியமனம் பெறுவதற்கும், மற்றும் முனைவர் பட்ட படிப்புகளில் சேர்வதற்கும் உள்ள தகுதியை தீர்மானிக்கிறது.</p><h2>தேர்வு முடிவை சரிபார்ப்பது எப்படி?</h2><p>தேர்வர்கள் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றித் தங்களின் மதிப்பெண் அட்டைகளைச் சரிபார்க்கலாம்:</p><p>ugcnet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ UGC-NET இணையதளத்தை பார்வையிடவும்.</p><p>முகப்புப் பக்கத்தில் உள்ள சமீபத்திய அறிவிப்புகள் அல்லது முடிவு பகுதிக்கு செல்ல வேண்டும்.</p><p>UGC-NET ஜூன் 2026 தேர்வு முடிவு இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.</p><p>விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி போன்ற தேவையான உள்நுழைவு விவரங்களை உள்ளிட வேண்டும்.</p><p>UGC-NET தேர்வு முடிவு மற்றும் மதிப்பெண் அட்டையைக் காண விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.</p><p>மதிப்பெண் அட்டையைப் பதிவிறக்கம் செய்து, எதிர்கால சேர்க்கை அல்லது ஆட்சேர்ப்பு தொடர்பான தேவைகளுக்காக ஒரு நகலை வைத்துக்கொள்ள வேண்டும்.</p><h2>மறுதேர்வு விவரம்:</h2><p>2026 செப்டம்பர் 09 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மறுதேர்வு நடத்தப்படவுள்ள ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் பாடப்பிரிவுகளை சேர்ந்த தேர்வர்கள், UGC-NET ஜூன் 2026 மதிப்பெண் அட்டையை அணுக முயற்சிக்கும்போது, ​​"தவறான விண்ணப்ப எண்/கடவுச்சொல்" என்ற செய்தியைப் பெறக்கூடும்.</p><p>இந்த தேர்வர்களுக்கான மதிப்பெண் பட்டியல் மற்றும் தேர்வு முடிவுகள், அவர்களுக்கான மறுதேர்வு நடத்தப்பட்ட பின்னரே வெளியிடப்படும்.</p><p>NTA, ஆங்கிலப் பாடத்திற்கான மறுதேர்வை செப்டம்பர் 9 (ஷிப்ட் 1) அன்றும், வணிகவியல் பாடத்திற்கு செப்டம்பர் 9 (ஷிப்ட் 2) அன்றும், சமூகவியல் பாடத்திற்கு செப்டம்பர் 10 (ஷிப்ட் 1) அன்றும் திட்டமிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டி.என்.பி.எல்.: மதுரை அணியை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது கோவை கிங்ஸ்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-kovai-kings-beat-madurai-panthers-to-become-champions</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-kovai-kings-beat-madurai-panthers-to-become-champions#comments</comments><guid isPermaLink="false">9ffc5b79-d4ff-4eba-ad85-51b6e005e43d</guid><pubDate>Fri, 28 Aug 2026 17:35:54 +0000</pubDate><atom:updated>2026-08-28T17:35:54.350Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,madurai panthers,மதுரை பாந்தர்ஸ்,கோவை கிங்ஸ்,kovai Kings</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/pefimogq/Kovai-Kings-Champion.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kovai Kings Champion]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/pefimogq/Kovai-Kings-Champion.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2026 <a href="https://www.maalaimalar.com/topic/tnpl">டி.என்.பி.எல்.</a> டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணியை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய கோவை கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.</p><p>தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று நடந்தது. இறுதிப் போட்டியில் <a href="https://www.maalaimalar.com/topic/madurai-panthers">மதுரை பாந்தர்ஸ்</a> அணிக்கு எதிராக டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.</p><h2>கோவை அபார ஆட்டம்:</h2><p>கோவை கிங்ஸ் அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய ராதாகிருஷ்ணன் மற்றும் சுரேஷ் லோகேஷ்வர் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். ராதாகிருஷ்ணன் 12 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சுரேஷ் லோகேஷ்வர் 7 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து வெளியேறினார்.</p><p>3-வது விக்கெட்டுக்கு அந்த்ரே சித்தார்த் உடன் பாலசுப்ரமணியன் சச்சின் ஜோடி சேர்ந்தார். சச்சின் நிதானமாக விளையாட, அந்த்ரே சித்தார்த் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்த்ரே சச்சின் 34 பந்தில் அரைசதம் அடித்தார். சச்சின் 33 பந்தில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 117 ரன்கள் குவித்தது.</p><p>4-வது விக்கெட்டுக்கு அந்த்ரே சித்தார்த் உடன் ஷாரூக்கான் ஜோடி சேர்ந்தார். ஷாரூக் கான் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து அம்ப்ரிஸ் களம் இறங்கினார். அந்த்ரே சித்தார்த் 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் கோவை கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் சேர்த்தது.</p><h2>மதுரை பாந்தர்ஸ் சொதப்பல்:</h2><p>183 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ராம் குமார் மற்றும் சித்தார்த் மகாதேவன் ரன் ஏதும் எடுக்காமல், அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். தொடக்கத்திலேயே தடுமாறிய கோவை கிங்ஸ் அணிக்கு சதுர்வேத் மற்றும் ஹரி ராகவேந்தரா ஜோடி சற்றே ஆறுதல் அளிக்கும் வகையில் ரன் குவிப்பில் ஈடுபட்டது.</p><p>சதுர்வேத் 28 பந்துகளில் 40 ரன்கள் (2 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) விளாசி தனது விக்கெட்டை பறிக்கொடுக்க, ஹரி ராகவேந்திரா 14 பந்துகளில் 24 ரன்கள் (3 பவுண்டரிகள்) எடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் பாலசந்தர் அனிருத் 25 பந்துகளில் 24 ரன்ளை சேர்த்தார்.</p><h2>கோவை கிங்ஸ் சாம்பியன்:</h2><p>பின்னர் களமிறங்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். இதனால் மதுரை பாந்தர்ஸ் அணி 14.2 ஓவர்களில் 98 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், கோவை கிங்ஸ் அணி 84 ரன்களில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.</p><p>கோவை தரப்பில் சிறப்பாக பந்துவீசிய மணிமாறன் சித்தார்த் மற்றும் ஷாருக் கான் தலா 3 விக்கெட்டுகளையும், தீபன் லிங்கேஷ் 2 விக்கெட்டுகளையும் ஜதாவேத் சுப்ரமணியன் 1 விக்கெட் எடுத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>நேபாள வெள்ளம்: 320 இந்தியர்கள் மாயம்</title><link>https://www.maalaimalar.com/news/national/nepal-flash-floods-320-indians-missing</link><comments>https://www.maalaimalar.com/news/national/nepal-flash-floods-320-indians-missing#comments</comments><guid isPermaLink="false">edfea9ba-1269-404b-bf86-1a71f58d56bf</guid><pubDate>Fri, 28 Aug 2026 17:13:51 +0000</pubDate><atom:updated>2026-08-28T17:13:51.050Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>indians,Nepal Floods,இந்தியர்கள்,நேபாள வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/dwcjdnd1/tn-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு]]></media:title><media:description type="html"><![CDATA[ நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/dwcjdnd1/tn-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/nepal-floods">நேபாள</a>-திபெத் எல்லையில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கை தொடர்ந்து, குறைந்தது 320 இந்தியர்கள் காணாமல் போயுள்ளனர் மற்றும் 400 பேர் சீன பகுதியில் சிக்கியுள்ளனர் என்று வெளியுறவு அமைச்சகம் (MEA) தெரிவித்துள்ளது. </p><p>இந்த சூழ்நிலையை சமாளிக்க காத்மாண்டுவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க <a href="https://www.maalaimalar.com/news/national">இந்தியா</a> தயாராக இருப்பதாகவும் அமைச்சகம் கூறியது. </p><p>சீன பகுதியில் சிக்கியிருந்த 153 இந்தியர்கள் பாதுகாப்பாக நேபாளத்திற்கு வந்து சேர்ந்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. </p><p>நேபாளத்தின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து காத்மாண்டுவை அடைந்த மறுநாளான இன்று மதியம், 21 இந்தியர்கள் டெல்லிக்கு வந்து சேர்ந்தனர் என்று வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார். </p><h2>அதிகரிக்கும் உயிரிழப்புகள்:</h2><p>தமிழ்நாட்டை சேர்ந்த அந்த இந்தியர்கள், தலைநகரில் உள்ள விமான நிலையத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரால் வரவேற்கப்பட்டனர்.</p><p>நேபாள அதிகாரிகளின் சமீபத்திய தகவல்களின்படி, தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மேலும் பல உடல்கள் மீட்கப்பட்டதால், புதன்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 579-ஆக உயர்ந்துள்ளது.</p><h2>காணாமல் போன இந்தியர்கள்:</h2><p>"தொடர்பு கொள்ள முடியாத அல்லது காணாமல் போன இந்தியர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, தற்போதைய நிலவரப்படி அந்த எண்ணிக்கை 320-ஆக உள்ளது," என்று ஜெய்ஸ்வால் கூறினார்.</p><p>திரிசூலி-ஒன் நீர்மின் திட்டத்தில் பணிபுரிந்த 63 இந்தியர்களும் மீட்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். "தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுமார் 100 பேரும் உள்ளனர். இவர்கள் கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காக சென்றிருக்கக்கூடிய இந்திய வம்சாவளியினர், ஆனால் அவர்கள் வேறு நாடுகளின் குடியுரிமை பெற்றவர்கள்," என்று அவர் கூறினார்.</p><h2>தீவிர ஆலோசனை:</h2><p>400 இந்தியர்கள் சீனப் பகுதியில் சிக்கியிருந்தாலும் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.</p><p>"அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளனர். எங்கள் தூதரகம் அவர்களில் பலருடன் தொடர்பில் உள்ளது. பெய்ஜிங்கில் உள்ள எங்கள் தூதரகம் இயக்கும் உதவி எண் சேவைகள் மூலமாகவும் அவர்களது குடும்பத்தினர் பலர் எங்களைத் தொடர்பு கொண்டனர்."</p><p>"சீனாவில் உள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் எங்கள் தூதரகம் தொடர்பில் உள்ளது; அங்குள்ளவர்களை எவ்வாறு வெளியேற்றுவது என்பது குறித்து அவர்கள் ஆலோசித்து வருகின்றனர்," என்று அவர் குறிப்பிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>பேருந்தில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த மாணவர் - ரூ.13,000 அபராதம் கேட்ட பரிசோதனை அதிகாரி</title><link>https://www.maalaimalar.com/news/national/student-fined-13000-rupees-for-travelling-without-bus-ticket</link><comments>https://www.maalaimalar.com/news/national/student-fined-13000-rupees-for-travelling-without-bus-ticket#comments</comments><guid isPermaLink="false">a4748172-f4e4-4447-94a5-4c30dc8a56f2</guid><pubDate>Fri, 28 Aug 2026 16:42:05 +0000</pubDate><atom:updated>2026-08-28T16:42:05.177Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Government Bus,அரசு பேருந்து,Ticket Examiner,டிக்கெட் பரிசோதகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/m3x7btyj/Untitled-design-5.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pune Bus Fine Controversy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/m3x7btyj/Untitled-design-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிராவில் அரசு பேருந்தில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த மாணவர் ஒருவரிடம் அபராத தொகையாக, புனே மாநகர பயணச்சீட்டு சோதனை அதிகாரி ரூ.7,000 வலுக்கட்டாயமாக வசூலித்ததாக அந்த மாணவர் குற்றம்சாட்டியுள்ளார்.</p><p>மேலும் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்யும் நபர்களிடம் வசூலிக்கப்படும் அபராதம் ரூ.500-ஆக இருக்கும்போது தன்னிடம் இருந்து பணத்தை பறித்துவிட்டதாக மாணவர் கூறியுள்ளார்.</p><p>புனேவில் கடந்த செவ்வாய்க்கிழமை வகாடி பேருந்து நிலையத்தில் இருந்து கத்ராஜூக் பகுதிக்கு அரசுப் பேருந்தில் மாணவர் ஒருவர் பயணம் செய்தார். அப்போது அந்த பேருந்தை சோதனை செய்த பயணச்சீட்டு அதிகாரி, மாணவரிடம் பயணச்சீட்டு கேட்டுள்ளார்.</p><p>பின்னர் மாணவர் தனது செல்போனில் காலை 9:15 மணி முதல் 10:30 மணி வரை இணையவழியில் தோல்வியடைந்த பயணச்சீட்டு பணப்பரிவர்த்தனைகளை காண்பித்துள்ளார்.</p><p>இந்த நிலையில் தோல்வியடைந்த பரிவர்த்தனைகள் பயணச்சீட்டு இல்லாத பயணமாக கருதப்பட்டதாகவும், அதன் காரணமாக ஆரம்பத்தில் தன்னிடம் ரூபாய் 13,000 செலுத்தும்படி டிக்கெட் பரிசோதனை அதிகாரி கேட்டதாகவும் மாணவர் கூறினார்.</p><p>பின்னர் அந்தத் தொகை ரூ.10,000 ஆகக் குறைக்கப்பட்டு, இறுதியாக ரூ.7,000 வசூலிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். அபராதத் தொகையை எவ்வாறு பேரம் பேச முடியும் என்றும், அவ்வாறு செய்வதற்கு பயணச்சீட்டு சோதனை அதிகாரிக்கு அதிகாரம் உள்ளதா என்றும் அந்த மாணவர் கூறினார்.</p><p>இதையடுத்து அங்கீகரிக்கப்பட்ட அரசு பேருந்தின் (PMPML) கணக்கிற்கு பதிலாக, டிக்கெட் பரிசோதகரின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு ரூ.7,000 மாற்றப்பட்டதாக மாணவர் கூறினார்.</p><p>மேலும் அதற்கான ரசீது தனக்கு வழங்கும்போது, ரூ.7,000 அபராத தொகையை தானாக முன்வந்து செலுத்துவதாக தன்னை எழுத வைத்ததாகவும் அந்த மாணவர் கூறினார்.</p><p>இந்த நிலையில் போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிக்கையில், டிக்கெட் இல்லாத பயணம் அனுமதிக்கப்படாது; அதே சமயம், அபராதம் வசூலிக்கும்போது எங்கள் ஊழியர்கள் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறையை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளது.</p><p>ஒரு பயணி ஏதேனும் சிரமத்தை எதிர்கொண்டாலோ அல்லது தவறான தொகை வசூலிக்கப்பட்டதாக நம்பினாலோ, நாங்கள் டிக்கெட் மற்றும் கட்டணப் பதிவுகளை சரிபார்ப்போம் என்றும் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறையை மீறும் எந்தவொரு ஊழியர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று புனே போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சகோதரனின் கையை பிடித்து ராக்கி கட்டும்போது 20 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுமி</title><link>https://www.maalaimalar.com/news/national/girl-falls-into-20-foot-borewell-while-tying-rakhi-to-brother</link><comments>https://www.maalaimalar.com/news/national/girl-falls-into-20-foot-borewell-while-tying-rakhi-to-brother#comments</comments><guid isPermaLink="false">1bb5466d-f80f-44ab-9bd6-3b98700406e6</guid><pubDate>Fri, 28 Aug 2026 16:40:15 +0000</pubDate><atom:updated>2026-08-28T16:40:15.370Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>uttarpradesh,Rakhi,ரக்‌ஷா பந்தன்,ராக்கி கயிறு,Raksha Bhandan,உத்தரப் பிரதேசம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/wzbrw9n9/Untitled-design-6.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Uttar Pradesh Raksha Bandhan tragedy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/wzbrw9n9/Untitled-design-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">உத்தரப் பிரதேசத்தில்</a> சகோதரனின் கையில் ராக்கி கட்டுவதற்காக தனது வீட்டின் முற்றத்தில் நின்று கொண்டிருந்த 16 வயது சிறுமி ஒருவர், தவறி 20 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த நிலையில், பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத் துறையினர் அவரை வெளியில் எடுத்து மருத்துவமனையில் அனுமதித்தனர்.</p><figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Kanpur, UP: Rescue operation underway after a 16-year-old girl falls into a borewell. <a href="https://t.co/zV6TYtK769">pic.twitter.com/zV6TYtK769</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2093248103721955470?ref_src=twsrc%5Etfw">August 28, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><p>உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் சுமார் 35 கி.மீ. தொலைவில் புர்வாமிர் என்ற கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தில் சுட்சி ஷர்மா என்ற 16 வயது சிறுமி ஒருவர், தனது வீட்டின் முற்றத்தில் ரக்‌ஷ பந்தனை கொண்டாடும் வகையில் தனது சகோதரனின் கையில் ராக்கி கட்டுவதற்காக நின்று கொண்டிருந்தார்.</p><p>காலை 6:40 மணியளவில் அந்த சிறுமி தனது சகோதரனின் கையை பிடித்து ராக்கி கட்ட முயன்றபோது, வீட்டின் முற்றத்திற்கு அருகில் மூடாமல் இருந்த 20 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். </p><p>இதையடுத்து சிறுமியின் சகோதரன் கத்தி கூச்சலிட்டதை தொடர்ந்து, அக்கம்பக்கத்தினர் வந்து ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுமியை மீட்க முயற்சி செய்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக மகாராஜ்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.</p><p>இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள், தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) வீரர்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.</p><p>மீட்பு பணி குறித்து தலைமை தீயணைப்பு அதிகாரி தீபக் சர்மா கூறுகையில், தீயணைப்புத் துறையைச் சேர்ந்த குழுக்கள் உதவியுடன் சிறுமியை மீட்கும் பணியில் சுமார் 60 மீட்புபடை வீரர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறினார்.</p><p>ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுமியை சென்றடைவதற்காக, மீட்புக் குழுவினர் அருகில் ஒரு குழியைத் தோண்டினர்.</p><p>ஆழ்துளை கிணற்றையும் வீட்டையும் சுற்றியுள்ள தரை உறுதியற்றதாக இருந்ததாலும், மேலும் ஒரு சரிவு ஏற்படக்கூடும் என்ற கவலைகள் எழுந்ததாலும், இந்த மீட்புப் பணியை கவனமாக மீட்பு படை வீரர்கள் மேற்கொண்டனர்.</p><p>இதற்கிடையில் பல மணி நேர போராட்ட முயற்சிக்குப் பிறகு, மீட்புக் குழுவினர் அந்த சிறுமியை ஆழ்துளைக் கிணற்றிலிருந்து வெளியே எடுத்து, அருகில் இருந்த சர்சால் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.</p><p>அங்கு அந்த சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.</p><p>இந்த நிலையில் சிறுமி ஆழ்துளை கிணற்றில் விழுந்தது குறித்து குடும்பத்தினர் கூறுகையில், சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு முற்றத்தில் ஆழ்துளைக் கிணறு தோண்டப்பட்டது. ஆனால் பணியை முடிக்க முடியாததால் அது கைவிடப்பட்டது.</p><p>பின்னர் மற்றொரு இடத்தில் இரண்டாவது ஆழ்துளைக் கிணறு தோண்டப்பட்டது. கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறு மண்ணைப் பலவீனப்படுத்தியதால், சமீபத்திய மழையின் காரணமாக மண் சரிந்து விழுந்தது என்று அவர்கள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சமையலறையில் புகுந்து தீ வைத்த கரடி - குடும்பத்தை காப்பாற்ற கரடியை கருணை கொலை செய்த அதிகாரிகள்</title><link>https://www.maalaimalar.com/news/world/bear-sets-kitchen-fire-colorado-home</link><comments>https://www.maalaimalar.com/news/world/bear-sets-kitchen-fire-colorado-home#comments</comments><guid isPermaLink="false">fc54d886-4397-40e5-b49c-827242e6b75c</guid><pubDate>Fri, 28 Aug 2026 16:37:52 +0000</pubDate><atom:updated>2026-08-28T16:37:52.942Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,America,Bear,கரடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/8273mmbg/TRASH-.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Colorado Bear shot dead]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/8273mmbg/TRASH-.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவின் கொலராடோ பகுதியில் குடும்பத்தினர் தங்களது வீட்டில் இருந்தபோது, அந்த வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்த கரடி ஒன்று வீட்டை சூறையாடி சமையலறையில் தீ விபத்து ஏற்படுத்தியதை அடுத்து, அங்கு வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் கரடியை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.</p><p>அமெரிக்காவின் மவுண்ட் கிரெஸ்டட் பட் குடியிருப்பு பகுதியில் உள்ள இல்லத்தில் ஒரு குடும்பம் வசித்து வந்துள்ளது. இதையடுத்து கடந்த வாரம் ஆகஸ்ட் 19 ஆம் தேதி இரவு, வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு கரடி ஒன்று உள்ளே நுழைய முயன்றுள்ளது.</p><p>இதையடுத்து வீட்டின் நுழைவாயிலில் இருந்த கண்ணாடி ஜன்னலை உடைத்துக் கொண்டு, அந்த கரடி விட்டின் உள்ளே புகுந்துள்ளது.</p><p>பின்னர் வீட்டின் உள்ளே நுழைந்த கரடி, நுழைவாயில் மற்றும் வரவேற்பறையில் இருந்த அலமாரிகள் மற்றும் ஜன்னல் திரைகளை கீறி சேதப்படுத்தியுள்ளது.</p><p>இதைத்தொடர்ந்து அந்த கரடி, குளிர்சாதனப் பெட்டியை சிதைத்துவிட்டு, சமையலறையில் இருந்த பாத்திரங்களையும், மர அலமாறிகளையும் உடைத்துள்ளது.</p><p>பின்னர் சமையலறைக்குள் நுழைந்த அந்த கரடி, அங்கிருந்த மின்சார அடுப்பை தட்டி விட்டதில், அந்த அடுப்பு தீப்பிடித்து எரிந்து, வீடு முழுவதும் புகை சூழ்ந்தது.</p><p>இந்த சம்பவம் குறித்து வீட்டில் இருந்த குடும்பத்தினர் 911 என்ற எண்ணை தொடர்பு கொண்டு, கிரெஸ்டட் பட் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.</p><p>தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை அதிகாரிகள், கரடி ஒன்று வரவேற்பறை ஜன்னலை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைய முயற்சிப்பதை கண்டனர்.</p><p>கரடியின் ஆக்ரோஷமான நடத்தையை கண்ட அதிகாரிகள், அதை விரட்டி தீயை அணைக்க முயற்சி செய்தனர்.</p><p>ஆனால் கரடி அங்கிருந்து செல்லாமல் ஆக்ரோஷமாக நின்று கொண்டிருந்ததால், எரிந்து கொண்டிருந்த வீட்டின் உள்ளே இருந்த குடும்பத்தை காப்பாற்ற, தீயணைப்புத் துறையினர் வேறு வழியில்லாமல் கரடியை துப்பாக்கியால் சுட்டனர்.</p><p>இதையடுத்து குண்டடிபட்டு கரடி கீழே விழுந்து உயிரிழந்ததை அடுத்து, தீயை அணைத்து வீட்டின் உள்ளே சிக்கி கொண்டிருந்த குடும்பத்தை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>நேபாள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை  579 ஆக உயர்வு... 1,924 மாயம்!</title><link>https://www.maalaimalar.com/news/world/death-toll-from-nepal-floods-rises-to-579-1924-missing</link><comments>https://www.maalaimalar.com/news/world/death-toll-from-nepal-floods-rises-to-579-1924-missing#comments</comments><guid isPermaLink="false">a9869096-f1ca-406c-9670-b8eb26107538</guid><pubDate>Fri, 28 Aug 2026 16:21:06 +0000</pubDate><atom:updated>2026-08-28T16:21:06.169Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>China,சீனா,நேபாளம்,nepal,nepal flood,நேபாள வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/p4haj6ym/New-Project-2026-08-28T215039.605.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நேபாள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை  579 ஆக உயர்வு... 1,924 மாயம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/p4haj6ym/New-Project-2026-08-28T215039.605.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாளத்தில் புதன்கிழமையன்று (ஆக.26) திடீரென ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கிய குறைந்தது 1,924 பேரைக் காணவில்லை என நேபாள பேரிடர் நிவாரண மையம் தெரிவித்துள்ளது. </p><p>மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 579ஆக உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது. இவர்களில் 517 வெளிநாட்டினர் என்றும் தெரிவித்துள்ளது. இதில் இந்தியர்கள் மட்டும் 178 பேர் காணவில்லை என நேபாள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>திபெத்தில் 5 பேர் உயிரிழந்ததாகவும், 558 பேரை காணவில்லை என்றும் சீன அரசு தெரிவித்துள்ளது. இவர்களில் 260 பேர் வெளிநாட்டினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  </p><p>இன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 பேர் நேபாளத்தில் இருந்து மீட்கப்பட்டு டெல்லி திரும்பிய நிலையில், மற்றவர்களை மீட்கும் பணியில் மாநில, மத்தி மற்றும் நேபாள அரசுகள் ஈடுபட்டுள்ளன.</p><p>புதன்கிழமை ஏற்பட்ட வெள்ளம் மட்டுமின்றி, அந்த வெள்ளத்தால் உருவான தற்காலிக ஏரி உடைந்து மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருந்ததால், மீட்புப் பணிகள் சில மணி நேரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டன.</p>]]></content:encoded></item><item><title>சோனியா காந்தி சுயசரிதை: பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் குறித்த கருத்துகளை நீக்க மறுத்ததால் பின்வாங்கிய பென்குயின் நிறுவனம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/sonia-gandhis-autobiography-penguin-withdrew-after-refusing-to-remove-remarks-about-modi-and-the-rss</link><comments>https://www.maalaimalar.com/news/national/sonia-gandhis-autobiography-penguin-withdrew-after-refusing-to-remove-remarks-about-modi-and-the-rss#comments</comments><guid isPermaLink="false">76119be1-69e7-4a7c-be9f-1961735cc8da</guid><pubDate>Fri, 28 Aug 2026 16:04:51 +0000</pubDate><atom:updated>2026-08-28T16:04:51.740Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>RSS,ஆர்எஸ்எஸ்,Modi,sonia gandhi,பிரதமர் மோடி,சோனியா காந்தி,Penguin India,பென்குயின் இந்தியா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/bkk99c7j/New-Project-2026-08-28T213234.782.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சோனியா காந்தி சுயசரிதை: மோடி, ஆர்எஸ்எஸ் குறித்த கருத்துகளை நீக்க மறுத்ததால் பின்வாங்கிய பென்குயின் நிறுவனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/bkk99c7j/New-Project-2026-08-28T213234.782.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சோனியா காந்தியின் சுயசரிதைப் புத்தகமான   ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்’ புத்தகத்தை இந்தியாவில் வெளியிடுவதற்கான ஒப்பந்தத்தில் இருந்து விலகியதாக <a href="https://www.maalaimalar.com/news/national/sonia-gandhis-autobiography-penguin-withdraws-from-publication">பென்குயின் ரேண்டம் ஹவுஸ்</a>  இந்தியா பதிப்பகம் தெரிவித்திருந்தது.</p><p>புத்தகத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள சோனியா காந்தி ஒப்புக்கொள்ளாததால் இந்தியாவில் அதன் வெளியீட்டிலிருந்து பென்குயின் பதிப்பகம் பின்வாங்கியதாக கூறப்பட்டது. ஆனால் இதற்கு பென்குயின் நிறுவனம் மறுப்பு தெரிவித்திருந்தது. </p><p>இந்நிலையில் இந்தக் காரணம்தான் உண்மை என்றும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆர்எஸ்ஆஸ் குறித்த தகவல்களை எடுக்க சோனியா காந்தி மறுத்ததால்தான் பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் புத்தக வெளியீட்டில் இருந்து பின்வாங்கியதாக காங்கிரஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.</p><p>இதுதொடர்பாக தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேசியுள்ள பெயர் குறிப்பிடாத சோனியா காந்தியின் உதவியாளர்களில் ஒருவர்.,</p><p>“சோனியா காந்தியின்மீதான மோடியின் விமர்சனங்களை அவர் விரிவாக இப்புதகத்தில் பகிர்ந்திருந்தாகவும், 2004-ல் குஜராத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் சோனியாவை ‘ஜெர்சி மாடு’ என்று அழைத்த ஒரு கருத்தையும் அவர் மேற்கோள் காட்டியதாகவும்” கூறியுள்ளார். </p><p>ஒரு அரசியல்வாதியாக, இந்த விவகாரம் எவ்வாறு கையாளப்பட்டது என்பதை அவர் குறிப்பிடுகிறார், ஆனால் பதிப்பாளர்களுக்கு அதில் சிக்கல்கள் இருந்தன எனவும் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>"பிலாங்கிங்: தி ஜர்னி ஆஃப் லவ்"(Belonging: A Journey of Love)</h2><p>சோனியா காந்தி இத்தாலியின் ஒரு சிறிய நகரில் கழித்த தனது குழந்தைப் பருவம் மற்றும் போருக்குப் பிந்தைய வாழ்க்கை நினைவுகள், ராஜீவ் காந்தி உடனான திருமணம், அவரது இழப்பு என தனது வாழ்வின் முக்கிய அங்கங்களை இதில் பகிர்ந்துள்ளார்.</p><h2>'ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி'</h2><p>கடந்த பிப்ரவரி மாதம் முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவனேவின் 'ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி' என்ற சுயசரிதை நூலை வெளியிடுவதில் இருந்தும் பென்குயின் நிறுவனம் பின்வாங்கியது.</p><p>இந்நூலை குறிப்பிட்டு, 2020-ல் லடாக்கில் நடந்த இந்தியா-சீனா ராணுவ மோதல் குறித்து ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் விவாதித்திருந்தார். அந்த விவகாரம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்த, அப்புதக வெளியீட்டில் இருந்து விலகியது பென்குயின் நிறுவனம்.</p>]]></content:encoded></item><item><title>TNPL பைனல்: மதுரைக்கு 183 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது கோவை கிங்ஸ்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-final-kovai-kings-183-runs-targets-to-madura-panthers</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-final-kovai-kings-183-runs-targets-to-madura-panthers#comments</comments><guid isPermaLink="false">0bc79077-4fce-4943-8117-f230cc244a23</guid><pubDate>Fri, 28 Aug 2026 15:43:08 +0000</pubDate><atom:updated>2026-08-28T15:43:08.895Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tnpl,தமிழ்நாடு பிரீமியர் லீக்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/mic069rp/TNPLFinal0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TNPL Final]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/mic069rp/TNPLFinal0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கோவை கிங்ஸ் 15.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கடைசி நேரத்தில் விக்கெட்டுகளை மளமளவென உயர்ந்தது.</p><p>தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. மதுரை பாந்தர்ஸ் அணிக்கெதிராக டாஸ் வென்ற கோவை கிங்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது.</p><p>ராதாகிருஷ்ணன்- சுரேஷ் லோகேஷ்வர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ராதாகிருஷ்ணன் 12 பந்தில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சுரேஷ் லோகேஷ்வர் 7 பந்தில் 11 ரன்கள் எடுத்து வெளியேறினார்.</p><h2>அந்த்ரே சித்தார்த் அதிரடி</h2><p>3-வது விக்கெட்டுக்கு அந்த்ரே சித்தார்த் உடன் பாலசுப்ரமணியன் சச்சின் ஜோடி சேர்ந்தார். சச்சின் நிதானமாக விளையாட, அந்த்ரே சித்தார்த் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்த்ரே சச்சின் 34 பந்தில் அரைசதம் அடித்தார். சச்சின் 33 பந்தில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 117 ரன்கள் குவித்தது.</p><p>4-வது விக்கெட்டுக்கு அந்த்ரே சித்தார்த் உடன் ஷாரூக்கான் ஜோடி சேர்ந்தார். ஷாரூக் கான் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து அம்ப்ரிஸ் களம் இறங்கினார். அந்த்ரே சித்தார்த் 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக கோவை கிங்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் சேர்த்தது.</p><p>பின்னர் 183 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் பேட்டிங் செய்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>“எந்த திட்டமானாலும் விவசாய நிலங்களை எடுத்துதான் ஆகவேண்டும்” - சட்டசபையில் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/any-project-inevitably-requires-acquiring-agricultural-land-sengottaiyan-speaks-on-the-hosur-airport</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/any-project-inevitably-requires-acquiring-agricultural-land-sengottaiyan-speaks-on-the-hosur-airport#comments</comments><guid isPermaLink="false">c731e01f-c152-4e3c-bbb4-6197c83f5461</guid><pubDate>Fri, 28 Aug 2026 15:41:52 +0000</pubDate><atom:updated>2026-08-28T15:41:52.115Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu assembly,தமிழ்நாடு சட்டப்பேரவை,minister Sengottaiyan,அமைச்சர் செங்கோட்டையன்,Hosur Airport,ஓசூர் விமான நிலையம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/w4khvodt/New-Project-2026-08-28T211130.040.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “எந்த திட்டமானாலும் விவசாய நிலங்களை எடுத்துதான் ஆகவேண்டும்” - சட்டசபையில் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/w4khvodt/New-Project-2026-08-28T211130.040.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டசபையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, சிறப்பு முயற்சிகள் துறை மீதான மானியக்கோரிக்கைகள் விவாதத்தில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. உறுப்பினருமான பாலகிருஷ்ண ரெட்டி (ஓசூர்) பங்கேற்று பேசினார். அப்போது.,</p><p>“ஓசூரில் விமான நிலையம் தேவை இல்லை. இது என் குரல் அல்ல. விவசாயிகளின் குரல். பரந்தூரில் விவசாய நிலங்கள், விவசாயிகளின் கவலையை அரசு கவனத்தில் எடுத்தது போன்று ஓசூர் விவசாயிகளின் கோரிக்கையையும் அரசு கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும். </p><p>ஓசூரில் ஏற்கனவே மேம்பாட்டு திட்டங்களுக்காக விவசாயிகள் தங்களுடைய நிலங்களை கொடுத்துள்ளார்கள். ஓசூரில் ஏற்கனவே தனியார் விமான நிலையம் செயல்படுகிறது. அந்த விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு அனைத்து வசதிகளும் இருக்கிறது. பரந்தூர் விவசாயிகளின் குரலை கேட்டது போன்று ஓசூர் விவசாயிகளின் குரலையும் கேளுங்கள்.</p><p>நாங்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் இல்லை. ஆனால் விவசாயிகளின் நிலத்தை அழித்து வளர்ச்சி வேண்டாம். ஓசூர் விவசாயிகளின் கவலையை உணர்ந்து புதிய விமான நிலையத்திட்டத்தை முதல்-அமைச்சர் கைவிட வேண்டும்.” என கோரிக்கை வைத்தார்.</p><p>அப்போது அவை முன்னவர் செங்கோட்டையன் குறுக்கிட்டு பேசினார். அவர் கூறுகையில், “எந்தவொரு திட்டத்தை கொண்டு வர வேண்டுமென்றாலும் விவசாய நிலங்களைதான் எடுத்தாக வேண்டும். வேறு வழி கிடையாது. கர்நாடகாவைவிட ஓசூருக்கு வரும்போது நிறைய திட்டங்கள், வளர்ச்சி கிடைக்கும். அதனால்தான் அங்கு நிலங்களை எடுக்கிறோம்” என்றார்.</p> ]]></content:encoded></item><item><title>லார்ட்ஸ் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் 110 ரன்களில் சுருண்டது பாகிஸ்தான்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/eng-vs-pak-lords-test-pakistan-110-all-out-1st-innings</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/eng-vs-pak-lords-test-pakistan-110-all-out-1st-innings#comments</comments><guid isPermaLink="false">3c7c9a4a-a9f7-4fe6-aafe-6029103a171a</guid><pubDate>Fri, 28 Aug 2026 15:35:29 +0000</pubDate><atom:updated>2026-08-28T15:35:29.422Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Lords Test,லார்ட்ஸ் டெஸ்ட்,ENG vs PAK</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/mpfzbanh/Archer0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இங்கிலாந்து வீரர்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/mpfzbanh/Archer0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 290 ரன்கள் எடுத்த நிலையில், பாகிஸ்தான் 110 ரன்களில் சுருண்டுள்ளது.</p><h2>இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்</h2><p>இங்கிலாந்து- பாகிஸ்தான் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது.</p><p>அதன்படி இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 290 ரன்களில் ஆல்அவுட் ஆனது. ஜோர்டன் காக்ஸ் 55 ரன்களும், ஜேமி ஸ்மித் 61 ரன்களும், கஸ் அட்கின்சன் 45 ரன்களும் அடித்தனர்.</p><p>பாகிஸ்தான் அணி சார்பில் முகமது அபப்ாஸ் 4 விக்கெட்டும், முகமது அலி 3 விக்கெட்டும் வீழ்த்தினர். குர்ரம் ஷேசாத் மற்றும அலி உஸ்மான் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.</p><h2>பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸ்</h2><p>பின்னர் பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் ஷான் மசூத் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அப்துல்லா ஷபிக் 5 ரன்களிலும், பாபர் அசாம் 8 ரன்களிலும், சாத் ஷகீல் 16 ரன்களிலும், முகமது ரிஸ்வான் 7 ரன்களிலும், அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.</p><p>மற்றொரு தொடக்க வீரர் அசான் அவைஸ் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார். கடைநிலை வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். அலி உஸ்மான், குர்ரம் ஷேசாத் தலா ஒரு ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இமாம்-உல்-ஹக் காயம் காரணமாக களம் இறங்காததால் பாகிஸ்தான் 110 ரன்களில் சுருண்டது. பாகிஸ்தான் அணியால் 37.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடிந்தது.</p><p>இங்கிலாந்து அணி சார்பில் ஒல்லி ராபின்சன் 4 விக்கெட்டும், ஆர்ச்சர் 3 விக்கெட்டும், ஜோஷ் டாங்க் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். </p>]]></content:encoded></item><item><title>நான் தலித் என்பதால் டார்கெட்: ராஜினாமா செய்த கர்நாடக அமைச்சர் சொல்கிறார்</title><link>https://www.maalaimalar.com/news/national/targeted-because-i-am-dalit-minister-b-nagendra-to-resign-amid-corruption-charges</link><comments>https://www.maalaimalar.com/news/national/targeted-because-i-am-dalit-minister-b-nagendra-to-resign-amid-corruption-charges#comments</comments><guid isPermaLink="false">3b986995-e888-49b9-82a5-746dde98daaf</guid><pubDate>Fri, 28 Aug 2026 15:08:15 +0000</pubDate><atom:updated>2026-08-28T15:08:15.001Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,B Nagendra,பி நாகேந்திரா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/7b0rb5a5/BNagendra001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ B Nagendra]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/7b0rb5a5/BNagendra001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வால்மீகி கார்ப்பரேசன் நிதி தொடர்பான மோசடி வழக்கு தொடர்பாக மந்திரி பதவியை இழந்தவருக்கு, மீண்டும் பதவி வழங்கப்பட்டதால் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தனது பதவியை பி நாகேந்திரா ராஜினாமா செய்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/it-was-the-congress-that-asked-me-to-step-down-basavaraj-horatti-who-resigned-as-karnataka-legislative-council-chairman">கர்நாடகாவில்</a> சித்தராமையா அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டிருந்த பி. நாகேந்திரா, சிவக்குமார் தலைமையில் கடந்த மாதம் அமைக்கப்பட்ட மந்திரி சபையில் இடம் பிடித்திருந்தார். வால்மீகி கார்ப்பரேசன் முறைகே வழக்கில் இவருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் அமைச்சரவையில் இருந்த விலக வேண்டும் என்ற பாஜக வலியுறுத்தி வந்தது.</p><p>இந்த நிலையில்தான் அமைச்சர் பதவியை பி. நாகேந்திரா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக பி. நாகேந்திரா கூறியதாவது:-</p><p>வால்மீகி பரிமாற்றத்தில் என்னுடைய கையெழுத்து எங்கேயாவது இருக்கிறதா?. நான் தலித் என்பதால் டார்கெட் செய்யப்பட்டுள்ளேன். குறிப்பிட்ட பணப் பரிவர்த்தனைகளில் வங்கிகள் சம்பந்தப்பட்டிருக்கும்போது, ​​தன்னை ஏன் இதற்கெல்லாம் பொறுப்பாக்குகிறார்கள். அப்படியானால் மத்திய நிதியமைச்சர்தான் இதற்குப் பொறுப்பா?. கர்நாடக மக்கள் இதையெல்லாம் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எனக்கு எதிராகத் தினமும் ஆயிரம் பொய்கள் சொல்லப்படுகின்றன.</p><p>இவ்வாறு பி. நாகேந்திரா தெரிவித்துள்ளார்.</p><p>இந்த சர்ச்சை எழுந்தபோது பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக இருந்த நாகேந்திரா, ஜூன் 2024-ல் அமைச்சரவையிலிருந்து விலகினார். பின்னர் ஆகஸ்ட் 3, 2026 அன்று திட்டமிடல் மற்றும் புள்ளியியல் துறையின் அமைச்சராக அவர் மீண்டும் நியமிக்கப்பட்டார். இது அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சியின் கோரிக்கையை மீண்டும் எழுப்பியுள்ளது.</p><p>தான் பதவி விலகப்போவதாக வெளியான தகவல்களை நாகேந்திரா முன்னரே மறுத்திருந்தார். மேலும், தன் மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும் அவர் கூறி வந்தார். அத்துடன், பாஜக-வைக் குறிக்கும் வகையில் "மனுவாதிகள்" (Manuvadis) என்பவர்களை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ராஜினாமா செய்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இத்தாலிய மீன்களை பாதுகாக்க ஆக்டோ-ப்ளூ திட்டம்: நீல நண்டுகளை சாப்பிடும் ஆக்டோபஸ் குஞ்சுகள்</title><link>https://www.maalaimalar.com/news/world/octo-blue-project-launched-to-protect-italian-fish</link><comments>https://www.maalaimalar.com/news/world/octo-blue-project-launched-to-protect-italian-fish#comments</comments><guid isPermaLink="false">36d5ea92-e57e-4723-8cdc-be73ee28523a</guid><pubDate>Fri, 28 Aug 2026 15:06:52 +0000</pubDate><atom:updated>2026-08-28T15:06:52.949Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>atlantic ocean,blue crabs,ஆக்டோபஸ்,octopus,Octo blu,நீல நண்டுகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/pyfjmxzv/Untitled-design-4.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Octo-Blue project in Italy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/pyfjmxzv/Untitled-design-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/அமெரிக்கா">அமெரிக்காவின்</a> மத்திய அட்லாண்டிக் கடல் பகுதியில் உள்ளூர் இனமான இத்தாலிய மீன்களை அதிகளவில் நீல நிற நண்டுகள் சாப்பிட்டு வருவதால், அந்த வகையான நண்டுகளை கட்டுப்படுத்தி உள்ளூர் இன மீன்களை பாதுகாக்கும் நோக்கில், சுமார் 1,30,000 ஆக்டோபஸ் குஞ்சுகள் இத்தாலிய கடற்பரப்பில் விடப்பட்டுள்ளன.</p><h3><strong>அட்லாண்டிக் கடல் பகுதி</strong></h3><p>அமெரிக்காவின் மத்திய அட்லாண்டிக் பகுதியில் நீல நண்டுகள் ஒரு மதிப்புமிக்க கடல் உணவு இனமாக இருந்தாலும், மற்ற இடங்களில் அவை ஆக்கிரமிப்பு இனங்களாகக் கருதப்படுகின்றன.</p><p>இந்த நண்டுகள் கடந்த நூற்றாண்டில் மத்திய தரைக்கடலில் முதன்முதலில் காணப்பட்டன, ஆனால் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு அவற்றின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து, உள்ளூர் பல்லுயிர் பெருக்கத்திற்கும் மீன்பிடித் தொழிலுக்கும் அச்சுறுத்தலாக மாறின.</p><h3><strong>ஆக்டோ-ப்ளூ திட்டம்</strong></h3><p>இதையடுத்து நீல நிற நண்டுகளை கட்டுப்படுத்தும் நோக்கில், ‘ஆக்டோ-ப்ளூ’ என்று திட்டத்தை, போலோக்னா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எமிலியா-ரொமானியா பிராந்திய அரசாங்கத்துடன் இணைந்து தொடங்கியுள்ளனர்.</p><p>இந்த சிறிய ஆக்டோபஸ்கள் கடலில் விடப்படும்போது சில மில்லிமீட்டர் நீளம் மட்டுமே இருக்கும். அவை உயிர் பிழைத்து பெரியவைகளாக மாறும்போது, நீல நண்டுகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.</p><p>சாதகமான சூழ்நிலைகளில், ஒரு கிலோகிராம் எடையுள்ள ஒரு சாதாரண ஆக்டோபஸால் ஒரு நாளைக்கு நான்கு நடுத்தர அளவிலான நீல நண்டுகள் வரை உண்ண முடியும்.</p><p>இருப்பினும், இந்தத் திட்டத்தில் ஒரு பெரிய நிச்சயமற்ற தன்மை உள்ளது. பெரும்பாலான குஞ்சு ஆக்டோபஸ் இனங்கள், வயது முதிர்வடையும் கால அளவு வரையில் நீண்ட காலம் உயிர்வாழ்வதில்லை.</p><h3><strong>ஆக்டோபஸ் இறப்பு விகிதம்</strong></h3><p>இந்த திட்டம் குறித்து கடல்சார் சூழலியலாளரான கியான்லூகா சாரா கூறுகையில், இதன் பின்னணியில் உள்ள யோசனை சிறந்ததாக இருந்தாலும், அதன் தாக்கம் முற்றிலும் புறக்கணிக்கத்தக்கதாக இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.</p><p>ஆக்டோபஸ் குஞ்சுகளின் இறப்பு விகிதம் சுமார் 99.9 சதவீதம் என்பதால், கடலில் விடப்பட்ட உயிரினங்களில் ஒரு சிறிய பகுதி மட்டுமே இறுதியில் ஆக்கிரமிப்பு நண்டுகளை வேட்டையாடும் இனங்களாக மாறக்கூடும் என்றும் அவர் கூறினார்.</p><h3><strong>கடல்சார் சூழலியலாளர்</strong></h3><p>இந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ள அன்டோனியோ கசாலினி கூறுகையில், நாங்கள் ஒரு புதிய இனத்தை அறிமுகப்படுத்தவில்லை, மாறாக அட்ரியாட்டிக் கடலில் ஏற்கனவே இயற்கையாக இருக்கும் ஒரு பூர்வீக இனத்தின் எண்ணிக்கையை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறினார்.</p><p>ஆக்டோபஸ்கள் கடினமானது மற்றும் விரைவாக இனப்பெருக்கம் செய்யக்கூடியது என்பதாலும், மேலும் பெண் ஆக்டோபஸ்களால் நூறாயிரக்கணக்கான முட்டைகளை இட முடியும் என்பதாலும் ஆராய்ச்சியாளர்கள் இதை தேர்ந்தெடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பி.எஸ்.என்.எல். கேபிள் குழாய் பணியில் ஈடுபட்டிருந்த 2 பேர் உயிரிழப்பு: புனேயில் சோகம்</title><link>https://www.maalaimalar.com/news/national/two-workers-die-in-bsnl-pipeline-work-police-investigation</link><comments>https://www.maalaimalar.com/news/national/two-workers-die-in-bsnl-pipeline-work-police-investigation#comments</comments><guid isPermaLink="false">9570546f-cd8c-4972-8cda-e0c284e45501</guid><pubDate>Fri, 28 Aug 2026 14:59:09 +0000</pubDate><atom:updated>2026-08-28T14:59:09.210Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,மகாராஷ்டிரா,பிஎஸ்என்எல்,BSNL,fire department,தீயணைப்புத் துறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/q8vb1hcm/Untitled-design-3.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ BSNL Pipe Work Worker Deaths]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/q8vb1hcm/Untitled-design-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/மகாராஷ்டிரா">மகாராஷ்டிராவில்</a> பி.எஸ்.என்.எல். பணிக்காக நிலத்தடி குழாய் பதித்து கொண்டிருந்த இரண்டு துப்புரவு பணியாளர்கள் மயக்கமடைந்த நிலையில் அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். </p><p>இதையடுத்து மர்மமான முறையில் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><h3><strong>நிலத்தடி குழாய் பதிப்பு</strong></h3><p>மகாராஷ்டிராவின் நிக்டி பிரதிகரன் பகுதியில் உள்ள லோக்மான்யா மருத்துவமனைக்கு அருகே ஒரு நிலத்தடிக்குள், சித்தேஷ்வர் கிராமத்தைச் சேர்ந்த 26 வயதான மனோஜ் பாபுராவ் ஷிண்டே மற்றும் 19 வயதான அமோல் அசோக் ஷிண்டே ஆகியோர் குழாய் பதிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.</p><p>இதையடுத்து குழிக்குள் சென்றவர்கள் மேலே வராததால், இரவு 11:45 மணியளவில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தீயணைப்பு துறை வீரர்களின் உதவியுடன் மீட்புப் பணியை தொடங்கினர்.</p><p>பின்னர் குழிக்குள் மயங்கிய நிலையில் இருந்தவர்களை மீட்டு யஷ்வந்த்ராவ் சவான் நினைவு (ஒய்.சி.எம்) மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.</p><p>அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.</p><h3><strong>காவல் ஆய்வாளர்</strong></h3><p>இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து நிக்டி காவல் ஆய்வாளர் மகேஷ் பன்சோடே கூறுகையில், “நாங்கள் சம்பவ இடத்திற்கு சென்று, அவர்களை மீட்டு ஒய்.சி.எம். மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். இருப்பினும், அவர்கள் மருத்துவமனைக்கு வந்தடைந்தபோதே இருவரும் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.</p><p>இறந்தவர்கள் எந்த சூழ்நிலையில் குழிக்குள் சென்றார்கள் மற்றும் அந்த பணிக்கு யார் பொறுப்பு என்பது குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம்.</p><p>அந்த குழாய் பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் தொடர்புடையதாக அறியப்படுகிறது, காவல்துறையினர் பிஎஸ்என்எல் அதிகாரிகளிடமும் விசாரித்து வருகின்றனர்.</p><p>இருப்பினும், இறந்தவர்கள் பிஎஸ்என்எல் தொடர்பான பணியில் ஈடுபட்டிருந்தனரா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.</p><p>மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.</p><p>தொழிலாளர்கள் மூச்சுத்திணறல், ஆக்சிஜன் பற்றாக்குறை, நச்சு வாயுக்களின் தாக்கம் அல்லது பிற காரணங்களால் இறந்தார்களா என்பதை கண்டறிய, காவல்துறை மருத்துவ மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கைகளுக்காக காத்திருக்கிறது.</p><p>கடந்த ஆண்டு நடந்த சம்பவம் தொடர்பாக நிக்டி காவல் நிலையத்தில் கவனக்குறைவான மரணம் விளைவித்ததாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.</p><p>தற்போது பதிவான இரண்டு மரணங்களுடன் சேர்த்து இதுவரை மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்,” என்று அவர் கூறினார்.</p><h3><strong>உயிரிழப்பு 5-ஆக உயர்வு</strong></h3><p>கடந்த ஆகஸ்ட் 15, 2025 அன்று, சின்ச்வாடைச் சேர்ந்த 35 வயதான லக்கன் தவாரே மற்றும் 38 வயதான தத்தாத்ரே வனாலே மற்றும் பிஜலிநகரைச் சேர்ந்த 35 வயதான சாஹேப்ராவ் கீர்ஷேட்டே ஆகிய மூன்று பேர் குழாய் பணியில் ஈடுபட்டிருந்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர்.</p><p>இந்த நிலையில் தற்போது நிகழ்ந்துள்ள இந்த சம்பவம், நிலத்தடி பயன்பாட்டு குழிக்குள் நுழையும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து புதிய கவலைகளை எழுப்பியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ முதல் பாடல் வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/first-song-jaliya-irundha-oruthan-released</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/first-song-jaliya-irundha-oruthan-released#comments</comments><guid isPermaLink="false">26ffc580-8f1e-48ae-bd2a-f6d1d63a0f89</guid><pubDate>Fri, 28 Aug 2026 14:35:22 +0000</pubDate><atom:updated>2026-08-28T14:35:22.727Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Yuvan Shankar Raja,யுவன் சங்கர் ராஜா,Jiiva,ஜீவா,Jolliya Iruntha Oruthan,ஜாலியா இருந்த ஒருத்தன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/f6dwwc85/New-Project-2026-08-28T200132.641.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ முதல் பாடல் வெளியீடு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/f6dwwc85/New-Project-2026-08-28T200132.641.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>16 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ் சினிமாவின் பிளாக்பஸ்டர் கூட்டணியாக நடிகர் ஜீவா, இயக்குநர் எம். ராஜேஷ், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’. </p><p>இப்படத்தில் இவானா, பரிதாபங்கள் சுதாகர், எம்.எஸ்.பாஸ்கர், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தை மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் சார்பில் டத்தோ அப்துல் மாலிக் தயாரித்துள்ளார்.</p><p>இந்நிலையில் இன்று படத்தின் முதல் பாடலான ‘ஜியோ ஜியாலே’ வெளியாகி உள்ளது. </p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/qSL7Cj8w_ZM"></iframe></figure>]]></content:encoded></item><item><title>தேசிய தேர்வு முகமையின் புதிய இயக்குநராக ஐஏஎஸ் பிரசன்ன வெங்கடேஷ் நியமனம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/ias-officer-prasanna-venkatesh-appointed-as-the-new-director-of-the-national-testing-agency</link><comments>https://www.maalaimalar.com/news/national/ias-officer-prasanna-venkatesh-appointed-as-the-new-director-of-the-national-testing-agency#comments</comments><guid isPermaLink="false">d737b6a5-255e-4a0e-a929-a69ff58c3a72</guid><pubDate>Fri, 28 Aug 2026 13:45:15 +0000</pubDate><atom:updated>2026-08-28T13:45:15.261Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>neet,நீட்,தேசிய தேர்வு முகமை,National Testing Agency,Prasanna Venkatesh,பிரசன்ன வெங்கடேஷ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/qesr02zi/New-Project-2026-08-28T191015.172.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தேசிய தேர்வு முகமையின் புதிய இயக்குநராக ஐஏஎஸ் பிரசன்ன வெங்கடேஷ் நியமனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/qesr02zi/New-Project-2026-08-28T191015.172.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/protest-intensifies-nta-removes-47-officials-en-masse">தேசிய தேர்வு முகமை</a>யின் புதிய இயக்குநராக ஆந்திராவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி பிரசன்ன வெங்கடேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த ஐந்து ஆண்டுகள் இந்த பணியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>பிரசன்ன வெங்கடேஷ் இதற்கு முன்னர் ஏலூர் மாவட்ட ஆட்சியராகவும், விஜயவாடா மாநகராட்சி ஆணையராகவும் பணியாற்றியுள்ளார்.</p><p>நிர்வாகக் கட்டமைப்பை பலப்படுத்த பிரசன்ன வெங்கடேஷுடன் சேர்த்து, ஐபிஎஸ் அதிகாரி ரவிக்குமார் சிங் மற்றொரு இயக்குநராகவும், ஐஆர்எஸ் அதிகாரி அமித் சம்தாரியா இணை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>நீட் சர்ச்சை</h2><p>யுஜி - நீட் மற்றும் யுசிஜி நெட் உள்ளிட்ட தேசிய அளவிலான உயர்கல்வி நுழைவுத்தேர்வுகளில் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, இந்த அதிரடி சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை  மேற்கொண்டுள்ளது.</p><p>மூன்று பேரும், மூன்று வாரங்களுக்குள் பொறுப்பேற்க வேண்டும் என்று பணியாளர் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் பணியில் சேரத் தவறினால், மத்திய பணியாளர் திட்டத்திலிருந்து தகுதிநீக்கம் செய்யப்படும் என்றும் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>மீட்புப் படைகள், ராணுவ ஹெலிகாப்டர்களை அனுப்ப முன்வந்த நாடுகள்: நிராகரித்த நேபாளம்- காரணம் என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/world/nepal-flood-past-lessons-why-nepal-declined-rescue-help-offer-from-india-china-and-others</link><comments>https://www.maalaimalar.com/news/world/nepal-flood-past-lessons-why-nepal-declined-rescue-help-offer-from-india-china-and-others#comments</comments><guid isPermaLink="false">88cc4008-c32e-4e55-b28b-3d220282501a</guid><pubDate>Fri, 28 Aug 2026 13:35:33 +0000</pubDate><atom:updated>2026-08-28T13:35:33.358Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>nepal flood,நேபாளம் வெள்ளம்,Rasuwa,ரசுவா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/35abplv4/NepalFlood0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நேபாளம் வெள்ளப் பெருக்கு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/35abplv4/NepalFlood0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பல நாடுகள் மீட்புப்படைகள் அனுப்ப தயாராக இருந்த நிலையில், நேபாளம் அதை ஏற்க மறுத்துள்ளது.</p><p>நேபாளத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட திடீரென வெள்ளப்பெருக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்று மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில் சுமார் 600 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், ஏராளமானோர் சேறு சகதிகளுடன் கூடிய ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோர் மண்ணில் புதைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.</p><h2>மீட்புப்படைகள் அனுப்பு முன் வந்த நாடுகள்</h2><p>நேபாளத்தில் ஏற்பட்டுள்ள இந்த பெரும் சோக சம்பவத்திற்கு இந்தியா, இலங்கை, சீனா போன்ற நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. இந்தியா இரண்டு விமானங்கள் மூலம் மனிதாபிமான உதவிகளை அனுப்பி வைத்துள்ளது.</p><p>இந்தியா, சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் மீட்புப்படை வீரர்களையும், ஹெலிகாப்டர்களையும் அனுப்ப முன்வந்துள்ளன. ஆனால் நேபாள பிரதமர் பாலேந்திர ஷா, வெளிநாட்டின் உதவிகளை ஏற்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.</p><h2>2015-ல் கற்றுக் கொண்ட பாடம்</h2><p>இதற்கு 2015-ம் ஆண்டு நடைபெற்ற சம்பவம்தான் காரணம் எனக் கூறப்படுகிறது. 2015-ல் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் காரணமாக நேபாளம் வெளிநாட்டு உதவிகளை கோரியது. அப்போது, வெளிநாட்டில் இருந்து மீட்புப்படைகள் வந்தன.</p><p>உலகம் முழுவதிலுமிருந்து மீட்புக் குழுக்கள், ராணுவ விமானங்கள் மற்றும் நிவாரண அமைப்புகள் வந்தன. இது நேபாளத்தின் அவசரகாலத் திறனை விரிவுபடுத்திய அதே வேளையில், இந்த திடீர் வருகை கடுமையான போக்குவரத்து மற்றும் நிர்வாக சிக்கல்கள் உருவாக்கியது.</p><p>விமான நிலையங்கள், சாலைகள் மற்றும் தகவல் தொடர்புகள் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வெளிநாட்டுக் குழுக்களுக்கு இடையேயான போட்டியும், அவற்றின் நகர்வுகளை ஒருங்கிணைப்பதில் உள்ள சிரமங்களும் நிர்வாகத்தைச் சிக்கலாக்கியதாக நேபாள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p>தனித்தனியாகச் செயல்படும் பல வெளிநாட்டு மீட்புக் குழுக்களுக்கு இடமளிப்பதற்குப் பதிலாக, ஒரு தெளிவான நேபாள காமாண்ட் தொடரைத் தக்க வைத்துக் கொள்வதன் மூலம், இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் தவிர்க்க இப்போது விரும்புவதாக தெரிகிறது.</p><p>தற்போது நேபாளம் மட்டுமே மீட்பு பணியை கையாண்டால் உத்தரவு பிறப்பிக்கும் ஒரு தலைமையின் கீழ் அனைத்து தகவல்களையும் பெற முடிவும் என நேபாளம் நினைக்கிறது. அதேவேளையில் நிவாரணம் அளிப்பதாக இருந்தால் பிரதமர் நிவாணர நிதிக்கு அளிக்க விருப்பம் தெரிவித்துள்ளது.</p><p>அப்போதுதான் ஒரு இடம் வழியாக முறையாக நிவாரணம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்றடையும் எனவும் நினைக்கிறது. இதற்கிடையே உடல்கள் தொடர்ந்து கண்டெடுக்கப்பட்டு வருவதால் மருத்துவமனையில் உடல்கள் குவிந்து வருவதாக கூறப்படுகிறது.</p><h2>ரசுவாவில் மருத்துவமனைகள் சேதம்</h2><p>ரசுவா மாவட்டத்தில் மருத்துவமனை, சுகாதார மையங்கள், சாலைகள் உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உடனடியாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நேபாளம் தன்னிச்சையாக விரைவாக மீட்புப் பணியை மேற்கொள்ள முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் அதற்கான திறன் தங்களிடம் இருப்பதாக நேபாளம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.</p><p>எப்படியோ இடுபாடுகள், தகவல் தொடர்பு இல்லாத இடங்களில் தவித்துக் கொண்டிருப்போரை விரைவாக மீட்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அருள்நிதி நடிக்கும் ‘வேட்ட சாமி’!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/vetta-saami-starring-arulnithi</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/vetta-saami-starring-arulnithi#comments</comments><guid isPermaLink="false">d2812968-a2a5-4daf-9bbd-da691c4e2892</guid><pubDate>Fri, 28 Aug 2026 13:28:02 +0000</pubDate><atom:updated>2026-08-28T13:28:02.044Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Arulnithi,அருள்நிதி,ameer,அமீர்,வேட்ட சாமி,Vetta Saami</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/x6186ns1/New-Project-2026-08-28T185714.034.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அருள்நிதி நடிக்கும் ‘வேட்ட சாமி’!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/x6186ns1/New-Project-2026-08-28T185714.034.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அருள்நிதி நடிக்கும் புதிய படத்திற்கு வேட்ட சாமி எனப் பெயரிடப்பட்டுள்ளது. மேலும் படத்தின் அறிமுக வீடியோவும் வெளியாகி உள்ளது. </p><p>‘பம்பர்’ திரைப்படத்தை இயக்கிய செல்வக்குமார் எழுதி, இயக்கும் திரைப்படம் வேட்டசாமி. இப்படத்தில் அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.</p><p>7 மைல்ஸ் பெர் செகண்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு, ஜிப்ரான் இசையமைக்கிறார். படம் குறித்த பிற அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Elated to unveil the glimpse of <a href="https://x.com/hashtag/VettaSaami?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#VettaSaami</a> <br><br>My hearty wishes and congratulations to <a href="https://x.com/arulnithitamil?ref_src=twsrc%5Etfw">@arulnithitamil</a> bro, <a href="https://x.com/hashtag/Ameer?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Ameer</a> sir and the entire team ❤️<a href="https://x.com/7mpsProductions?ref_src=twsrc%5Etfw">@7mpsProductions</a> <a href="https://x.com/directormskumar?ref_src=twsrc%5Etfw">@directormskumar</a><a href="https://x.com/AntonyLRuben?ref_src=twsrc%5Etfw">@AntonyLRuben</a> <a href="https://x.com/GhibranVaibodha?ref_src=twsrc%5Etfw">@GhibranVaibodha</a> <a href="https://x.com/RDRajasekar?ref_src=twsrc%5Etfw">@RDRajasekar</a> <a href="https://x.com/dineshashok_13?ref_src=twsrc%5Etfw">@dineshashok_13</a> <a href="https://x.com/Jegan_kaviraj?ref_src=twsrc%5Etfw">@Jegan_kaviraj</a> <a href="https://x.com/hashtag/MadhaviVillisai?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#MadhaviVillisai</a>… <a href="https://t.co/j1iTDUNz8y">pic.twitter.com/j1iTDUNz8y</a></p>&mdash; Lokesh Kanagaraj (@Dir_Lokesh) <a href="https://x.com/Dir_Lokesh/status/2093300175397880126?ref_src=twsrc%5Etfw">August 28, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>எகிறிய வெங்காய விலை: கிலோ ரூ.35-க்கு விற்க மத்திய அரசு நடவடிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/national/centre-intervenes-onion-to-be-sold-at-rs35-per-kg</link><comments>https://www.maalaimalar.com/news/national/centre-intervenes-onion-to-be-sold-at-rs35-per-kg#comments</comments><guid isPermaLink="false">9104ba1a-133f-484b-aa68-df934fd3df7d</guid><pubDate>Fri, 28 Aug 2026 13:13:55 +0000</pubDate><atom:updated>2026-08-28T13:13:55.540Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,onion price,கவுகாத்தி,வெங்காய விலை உயர்வு,guwahati train,Kanda Express,கந்தா எக்ஸ்பிரஸ்.</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/4jc9jirc/Onion" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Onion ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/4jc9jirc/Onion?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடு முழுவதும் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான உணவுப் பொருள்களில் ஒன்றான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88">வெங்காயத்தின் விலை</a> கடந்த சில நாட்களாகக் கடுமையாக உயர்ந்து வருகிறது. இது நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களைப் பெரிதும் பாதித்துள்ளது.</p><h2>சில்லறை விற்பனையில் 59% விலை உயர்வு</h2><p>இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் விளைவாக, முக்கிய வெங்காய உற்பத்தி மாநிலங்களில் விளைச்சல் வெகுவாகக் குறைந்துள்ளது. </p><p>இதனால் சந்தைகளுக்கு வரும் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">வெங்காயத்தின்</a> வரத்து சரிந்து, நாடு முழுவதும் சில்லறை விற்பனையில் இதன் விலை சுமார் 59 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.</p><p>தமிழகத்தைப் பொறுத்தவரை, சென்னையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.80 முதல் ரூ.100 வரை விற்கப்படுவதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.</p> <h2>டெல்லி வந்தடைந்த 'கந்தா எக்ஸ்பிரஸ்'</h2><p>வெங்காய விலையைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் தடையின்றி வெங்காயம் கிடைக்கவும் மத்திய அரசு தற்போது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. </p><p>அதன்படி, மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் இருந்து 'கந்தா எக்ஸ்பிரஸ்' சிறப்பு சரக்கு ரயில் மூலம் முதற்கட்டமாக 400 டன் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">வெங்காயம் </a>டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது.</p><p>மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் நிதி காரே இந்த மானிய விலை வெங்காய விநியோகப் பணியைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.</p> <h2><strong>கிலோ ரூ.35-க்கு மானிய விலை வெங்காயம்</strong></h2><p>மத்திய அரசின் இந்த வெங்காயங்கள் நுகர்வோர் கூட்டுறவு அமைப்புகளான,<strong> இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் நாபெட் </strong>ஆகியவற்றின் நடமாடும் வாகனங்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் <strong>ஒரு கிலோ ரூ.35 என்ற மானிய விலையில்</strong> பொதுமக்களுக்கு நேரடி விற்பனை செய்வதற்காக மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.</p><h2>விரைவில் சென்னை, மதுரைக்கு சிறப்பு ரயில்கள்!</h2><p>தலைநகர் டெல்லியைத் தொடர்ந்து, விலை அதிகமாக உள்ள நாட்டின் பிற முக்கிய நகரங்களுக்கும் சிறப்பு சரக்கு ரயில்கள் மூலம் வெங்காயத்தை விநியோகிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.</p><p>அதன்படி, சென்னை, மதுரை, எர்ணாகுளம் (கொச்சி) மற்றும் கவுகாத்தி ஆகிய நான்கு முக்கிய மையங்களுக்கு விரைவில் 'கந்தா எக்ஸ்பிரஸ்' ரயில்கள் மூலம் வெங்காயம் கொண்டு வரப்பட்டு, பொதுமக்களுக்கு மலிவு விலையில் விநியோகம் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>இதனால் தமிழகத்தில் விரைவில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88">வெங்காய விலை</a> குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>ரசுவா சுரங்கத்தில் இருந்து 63 இந்தியர்கள் உள்பட 350 பேரை மீட்ட நேபாள ராணுவம்</title><link>https://www.maalaimalar.com/news/world/rasuwa-nepal-flood-nepal-army-has-intensified-rescue-operations-for-people-trapped-inside-the-rasuwa-tunnel</link><comments>https://www.maalaimalar.com/news/world/rasuwa-nepal-flood-nepal-army-has-intensified-rescue-operations-for-people-trapped-inside-the-rasuwa-tunnel#comments</comments><guid isPermaLink="false">60340840-e170-4b0c-a7d2-401399d9986b</guid><pubDate>Fri, 28 Aug 2026 12:49:44 +0000</pubDate><atom:updated>2026-08-28T12:49:44.703Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>nepal flood,நேபாளம் வெள்ளம்,Rasuwa,ரசுவா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/6tpylpru/NepalFllood0002.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  நேபாளம் வெள்ளப் பெருக்கு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/6tpylpru/NepalFllood0002.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திபெத்- நேபாளம் எல்லையில் திடீரென ஏற்பட்ட பனிப்பாறை சரிவு காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இதுவரை 500-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.</p><p>நேபாளத்தில் பனிப்பாறை சரிவு காரணமாக கடந்த 26-ந்தேதி மிகப்பெரிய <a href="https://www.maalaimalar.com/news/world/nepal-flash-flood-massive-devastation-and-rising-death-toll-of-500">வெள்ளப்பெருக்கு</a> ஏற்பட்டது. இதில் சுற்றுலா பயணிகள், உள்ளூர்வாசிகள், நீர்மின் நிலையம் உள்ளிட்டவைகளில் பணியாற்றியவர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்னும் மாயமான நிலையில் உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமான நடைபெற்று வருகிறது.</p><p>வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். சிலரின் உடல்களை அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.</p><h2>ரசுவா நீர்மின் நிலையம்</h2><p>இதற்கிடையே கடுமையாக பாதிக்கப்பட்ட ரசுவா மாவட்டத்தில நீர்மின் நிலைய சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்தில் 450-க்கும் மேற்பட்டோர் பணியாற்றியதாக தெரியவந்தது.</p><p>இந்த சுரங்கமும் வெள்ளத்தால் கடுமையாக பாதித்தது. இந்த பகுதியை ராணுவம் இன்ற வானி வழியாக சென்றடைந்தது. பின்னர், சுரங்கத்திற்குள் நுழைத்து அங்கு தவித்துக் கொண்டிருந்த ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்டனர்.</p><p>இதில் 63 இந்தியர்கள் உள்பட 350 பேரை நேபாள ராணுவம் மீட்டுள்ளது. இன்னும் சுமார் 100 பேர் சுரங்கத்தில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.</p><p>இந்தியாவைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் இந்த வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 101 பேர் அடங்குவர். இவர்களில் 21 பேர் இன்று டெல்லி அழைத்து வரப்பட்டனர். அவர்கள் இன்று இரவு சென்னை திரும்புகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>நேபாளத்தில் சிக்கிய எஞ்சியவர்களை மீட்க போராடி வருகிறோம்- அமைச்சர் ராஜ்மோகன்</title><link>https://www.maalaimalar.com/news/national/minister-rajmohan-says-efforts-underway-to-rescue-remaining-tamils-in-nepal</link><comments>https://www.maalaimalar.com/news/national/minister-rajmohan-says-efforts-underway-to-rescue-remaining-tamils-in-nepal#comments</comments><guid isPermaLink="false">67e8d169-7b9a-4a65-8472-fe9f4b142030</guid><pubDate>Fri, 28 Aug 2026 12:37:43 +0000</pubDate><atom:updated>2026-08-28T12:37:43.221Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>delhi,nepal flood,டெல்லி,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan,நேபாளம் வெள்ளம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/djub84ut/Raj-mohan.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Rajmohan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/djub84ut/Raj-mohan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாளத்தில் இருந்து தமிழர்கள் மீட்கப்பட்டது குறித்து அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார்.</p><p>நேபாளம் வெள்ளப்பெருக்கில் சிக்கி மீட்கப்பட்ட 21 பேருடன் காத்மண்டுவில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்பட்ட விமானம் 3.45-க்கு டெல்லி வந்தடைந்தது. </p><p>இதனைதொடர்ந்து, தமிழர்களை மீட்டு அழைத்துவர முதலமைச்சர் விஜய் அமைத்த அமைச்சர்கள் குழு நேபாளத்தில் இருந்து  மீட்டு வரப்பட்ட 21 பேரையும் டெல்லி விமான நிலையத்தில் சந்தித்தனர்.</p><p>அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், தென்னரசு, வினோத் ஆகியோர் தப்பிப்பிழைத்து 21 தமிழர்களுடன் சந்தித்து பேசினர்.</p><p>மீட்கப்பட்ட 21 பேரும் டெல்லி விமான நிலையத்தில் இருந்து, இன்று இரவு 8 மணிக்கு சென்னைக்கு அழைத்து வரப்படவுள்ளனர். மற்றவர்களை மீட்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.</p><h2>அமைச்சர் ராஜ்மோகன்</h2><p>செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது:-</p><p>நேபாளத்தில் இருந்து மீட்கப்பட்ட 21 தமிழர்களுடன் பத்திரமாக டெல்லி அழைத்து வரப்பட்டுள்ளனர்.</p><p>நேபாளத்தில் தொலைத்தொடர்பு பாதிக்கப்பட்டுள்ளதால் எஞ்சியவர்களை மீட்க போராடுகிறோம்.</p><p>மீட்கப்பட்டவர்கள் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. டெல்லி வந்தடைந்த 21 தமிழர்களும் உடல் நலத்துடன் உள்ளனர். பலர் வெள்ளத்தில் பாஸ்போர்டுகளை இழந்துள்ளனர்.</p><p>மீட்கப்பட்டு டெல்லி அழைத்து வரப்பட்ட 21 தமிழர்களும் இன்றிரவு விமானம் மூலம் சென்னை அழைத்து செல்லப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item></channel></rss>