<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 23 Aug 2026 04:17:18 +0000</lastBuildDate><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 23.8.2026 -  சிம்மம் ராசிக்காரர்களே உஷார்..!</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasipalan-in-tamil-august-23</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasipalan-in-tamil-august-23#comments</comments><guid isPermaLink="false">551e5a72-540c-4391-afe8-f6594d204862</guid><pubDate>Sun, 23 Aug 2026 02:36:01 +0000</pubDate><atom:updated>2026-08-23T02:36:01.685Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-19/cju5lvaa/rasi-1.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ ராசிபலன்]]></media:title><media:description type="html"><![CDATA[ Today Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-19/cju5lvaa/rasi-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>இல்லத்தில் நல்ல காரியம் நடைபெறும் நாள். உதிரி வருமானங்கள் பெருகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.</p><h2>ரிஷபம்</h2><p>யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். திடீரெனச் செலவுகள் அதிகரிக்கலாம். பிறருக்காகப் பொறுப்புகள் சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.</p><h2>மிதுனம்</h2><p>புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். ஆதாயம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். இதைச் செய்யலாமா, அதைச் செய்யலாமா என்ற சிந்தனை அதிகரிக்கும்.</p><h2>கடகம்</h2><p>நேரில் சந்திக்கும் நண்பர்களால் நெஞ்சம் மகிழும் நாள். எதிர்கால வளர்ச்சிக்கும் திட்டங்களைத் தீட்டுவீர்கள். கல்யாண வாய்ப்புகள் கைகூடும்.</p><h2>சிம்மம்</h2><p>மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். வாங்கல், கொடுக்கல்களில் பிரச்சினை ஏற்படும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகளால் மனஅமைதி குறையும்.</p><h2>கன்னி</h2><p>இடமாற்றம் பற்றிச் சிந்திக்கும் நாள். உறவினர் வழிப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். தேகநலன் கருதி தொகையைச் செலவிடும் சூழ்நிலை உண்டு.</p><h2>துலாம்</h2><p>வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். வீடு கட்டும் முயற்சியில் இருந்த தடை அகலும். பிள்ளைகள் குடும்பப் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வர்.</p><h2>விருச்சிகம்</h2><p>பாராட்டும், புகழும் கூடும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும்.</p><h2>தனுசு</h2><p>விடாமுயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். கொடுக்கல், வாங்கல்களில் கவனம் தேவை.</p><h2>மகரம்</h2><p>சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். பாதியில் நின்ற பணியை மீதியும் தொடருவீர்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.</p><h2>கும்பம்</h2><p>சந்தோஷம் அதிகரிக்கும் நாள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பர்.</p><h2>மீனம்</h2><p>வீடு மாற்றச் சிந்தனை மேலோங்கும் வழக்கமான பணிகளில் சுணக்கம் ஏற்படலாம். பிரச்சினைகளைச் சமாளிக்கப் பிறரிடம் ஆலோசனை கேட்பீர்கள்.</p>]]></content:encoded></item><item><title>மும்பையில் சோகம்: 22 அடி உயர விநாயகர் சிலை சரிந்து விழுந்து 2 பேர் உயிரிழப்பு, 5 பேர் படுகாயம்</title><link>https://www.maalaimalar.com/news/national/tragedy-in-mumbai-22-foot-ganesha-idol-collapses-2-dead-5-injured</link><comments>https://www.maalaimalar.com/news/national/tragedy-in-mumbai-22-foot-ganesha-idol-collapses-2-dead-5-injured#comments</comments><guid isPermaLink="false">21128e92-4984-4394-a0b3-429cdf0a3cf3</guid><pubDate>Sun, 23 Aug 2026 04:13:11 +0000</pubDate><atom:updated>2026-08-23T04:13:11.808Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மும்பை,விநாயகர்சதுர்த்தி,MumbaiTragedy,GaneshFestival,Bhuleshwar,மும்பைசெய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/5iml6vs8/mumbai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mumbai Tragedy Death]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/5iml6vs8/mumbai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தெற்கு மும்பையின் பூலேஷ்வர் பகுதியில் அமைந்திருக்கும் 'பூலேஷ்வராச்சா ராஜா' விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்ற போது  நேற்று இரவு சுமார் 10 மணியளவில் எதிர்பாராத துயரம் நேரிட்டது. </p><p>பலராம் மெர்ச்சன்ட் சாலையில் உள்ள கபூதர்கானா அருகே ஜெய் அம்பே சௌக் வழியே ஊர்வலம் சென்று கொண்டிருந்த போது, 22 அடி உயரமுள்ள பிரம்மாண்ட <a href="https://www.maalaimalar.com/news/national/husband-kills-wife-after-dispute-arrests-made">விநாயகர் சிலை </a>தாங்கி நிற்கும் இரும்புச் சட்டகத்தில் இருந்த போல்ட்டுகள் மற்றும் நட்டுகள் தளர்ந்ததால் சிலை அப்படியே நிலைகுலைந்து பக்தர்கள் கூட்டத்தின் மீது சரிந்தது.</p><h2>இருவர் உயிரிழப்பு</h2><p>இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சங்கேத் நெவ்சே (33) மற்றும் பிரிஜேஷ் ஹேமந்த் ஜோஷி (30) ஆகிய இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், வைபவ் கெனந்த் (38), பவன் சௌராசியா (25), குணால் காஷித் (26) மற்றும் லாவண்யா (5), திவ்யா (7) ஆகிய இரு சிறுமிகள் உட்பட 5 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களின் நிலை தற்போது சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>வழ<strong>க்குப் பதிவு</strong> </h2><p>தகவல் அறிந்ததும் மும்பை தீயணைப்புத் துறை, காவல்துறை, போக்குவரத்து காவலர்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக வி.பி.ரோடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விநாயகர் சிலையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் இரும்பு சட்டகத்தின் தரம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>டிஎன்பிஎல் பிளே ஆப்: முதல் தகுதிச்சுற்றில் மதுரை, திருச்சி அணிகள் இன்று மோதல்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-playoff-madurai-panthers-trichy-grand-cholas-to-meet-today</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-playoff-madurai-panthers-trichy-grand-cholas-to-meet-today#comments</comments><guid isPermaLink="false">c18f2703-3d22-452b-a529-e2a01baeedb1</guid><pubDate>Sun, 23 Aug 2026 03:34:32 +0000</pubDate><atom:updated>2026-08-23T03:34:32.505Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PlayOff,டிஎன்பிஎல்,tnpl,Trichy Grand Cholas,திருச்சி கிராண்ட் சோழாஸ்,madurai panthers,மதுரை பாந்தர்ஸ்,பிளே ஆப்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/a053h23m/tnpl.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TNPL]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/a053h23m/tnpl.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டி.என்.பி.எல். தொடரின் முதல் தகுதிச்சுற்று போட்டியில் மதுரை பாந்தர்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் இன்று மோதுகின்றன.</p><p>10-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றுடன் லீக் சுற்றுகள் நிறைவடைந்தன.</p><h2>பிளே ஆப் சுற்று</h2><p>புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த மதுரை பாந்தர்ஸ், 10 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்த திருச்சி கிராண்ட் சோழாஸ், 8 புள்ளிகளுடன் 3வது இடம்பிடித்த கோவை கிங்ஸ், 8 புள்ளிகளுடன் 4வது இடம் பிடித்த திருப்பூர் தமிழன்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.</p><h2>வெளியேறிய அணிகள்</h2><p>நெல்லை ராயல் கிங்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், சேலம் ஸ்பர்டன்ஸ் ஆகிய அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.</p><p>முதல் தகுதிச்சுற்று போட்டி இன்று நடைபெறுகிறது. எலிமினேட்டர் சுற்று போட்டி நாளை நடைபெறுகிறது. இரண்டாவது தகுதிச்சுற்று போட்டி 26ம் தேதி நடைபெறுகிறது. இறுதிப்போட்டி 28-ம் தேதி நடைபெற உள்ளது.</p><p>இந்நிலையில், டிஎன்பிஎல் தொடரில் இன்று முதல் பிளே ஆப் சுற்று போட்டிகள் தொடங்குகின்றன.</p><h2>முதல் தகுதிச்சுற்று</h2><p>இன்று நடக்கும் முதலாவது தகுதிச்சுற்று போட்டியில் மதுரை பாந்தர்ஸ்-திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் இரவு 7.30 மணிக்கு மோதுகின்றன.</p><p>நாளை நடைபெறும் வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்றில் கோவை கிங்ஸ்-திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோத உள்ளன.</p>]]></content:encoded></item><item><title>சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய கோகோ காப், பெகுலா</title><link>https://www.maalaimalar.com/sports/tennis/coco-gauff-jessica-pegula-enter-final-round-in-cincinnati-open-tennis</link><comments>https://www.maalaimalar.com/sports/tennis/coco-gauff-jessica-pegula-enter-final-round-in-cincinnati-open-tennis#comments</comments><guid isPermaLink="false">45fc84c1-2bc5-417e-9d4b-cdb524be1ba6</guid><pubDate>Sun, 23 Aug 2026 03:09:01 +0000</pubDate><atom:updated>2026-08-23T03:09:01.187Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Jessica Pegula,ஜெசிகா பெகுலா,கோகோ காப்,Cincinnati Open Tennis,Coco gauff,சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/rfo8fqbw/gauff.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ coco gauff, jessica pegula]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/rfo8fqbw/gauff.jpg?w=280" width="280"></media:thumbnail><category>டென்னிஸ் (Tennis)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D">சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்</a> தொடர் அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இத்தொடர் வரும் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. நேற்று நள்ளிரவு அரையிறுதி சுற்று போட்டிகள் நடந்தன.</p><p>இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் கோகோ காப், செக் குடியரசின் சாரா பெஜ்லக் உடன் மோதினார்.</p><p>இதில் சிறப்பாக ஆடிய கோகோ காப் 6-4, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.</p><p>மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, போலந்தின் இகா ஸ்வியாடெக் உடன் மோதினார்.</p><p>இதில் சிறப்பாக ஆடிய ஜெசிகா பெகுலா முதல் செட்டை 7-5 என வென்றார். இதற்கு பதிலடியாக அதிரடியாக ஆடிய ஸ்வியாடெக் 2வது செட்டை 6-4 என கைப்பற்றினார்.</p><p>வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் சிறப்பாக செயல்பட்ட ஜெசிகா பெகுலா 6-4 என வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.</p><p>நாளை அதிகாலை நடைபெறவுள்ள இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், சக நாட்டு வீராங்கனையான ஜெசிகா பெகுலா உடன் மோதுகிறார்.</p>]]></content:encoded></item><item><title>கொலை வழக்கில் 40 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை கைது செய்த தனிப்படை போலீசார்</title><link>https://www.maalaimalar.com/news/national/special-squad-arrests-man-missing-40-years-in-murder-case</link><comments>https://www.maalaimalar.com/news/national/special-squad-arrests-man-missing-40-years-in-murder-case#comments</comments><guid isPermaLink="false">1cfaef94-c5e0-4b0a-8291-dfa010e75a2b</guid><pubDate>Sun, 23 Aug 2026 02:51:08 +0000</pubDate><atom:updated>2026-08-23T02:51:08.344Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>uttarpradesh,abscond,உத்தரப் பிரதேசம்,natthulal,நத்துலால்,தலைமறைவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/nd4y5fjd/Untitled-design-6.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Delhi 1984 murder case]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/nd4y5fjd/Untitled-design-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் கடந்த 1984-ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில், நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்து வந்த 65 வயது நபரை, உத்தரப் பிரதேச குற்றப்பிரிவு காவல்துறை கைது செய்தது.</p><h3><strong>1984 கொலை வழக்கு</strong></h3><p>உத்தரப் பிரதேச மாநிலம் விகாஸ்புரியில் உள்ள ஒரு பூங்காவில் கடந்த 1984 ஆம் ஆண்டு மே 23-ஆம் தேதி இரவு அசோக் குமார் என்பவர் கொலை செய்யப்பட்டார்.</p><p>இந்த கொலையை அடுத்து ஹர்தோய் பகுதியை சேர்ந்த நத்து என்ற 23 வயது நத்துலால் என்பவரை ஜனக்புரி காவல்துறையினர் தீவிரமாக தேடிவந்தனர்.</p><p>அசோக் குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில், சீதாபூரை சேர்ந்த பாபூதி பிரசாத் என்பருக்கும் தொடர்பு இருப்பதாக காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.</p><p>மேலும் கைது செய்யப்பட்ட நபரிடம், கொலைக்காக பயன்படுத்தப்பட்ட கத்தியையும் பறிமுதல் செய்தனர். இருப்பினும் நத்து என்ற நத்துலாலை கைது செய்ய முடியாமல் காவல்துறை திணறி வந்தது.</p><h3><strong>தனிப்படை அமைப்பு</strong></h3><p>இதையடுத்து நத்துலாலை கண்டுபிடிக்கும் பணியை குற்றப்பிரிவு தீவிரப்படுத்தியது. ஒரு குழு அமைக்கப்பட்டு, பழைய வழக்கு ஆவணங்களை ஆய்வு செய்து, சீதாபூர் மற்றும் ஹர்தோய் மாவட்டங்களில் குற்றம் சாட்டப்பட்டவரின் நடமாட்டம் இருப்பதாக காவல்துறை உறுதி செய்தது.</p><p>ஹர்தோயின் பாலி பகுதியில் நடத்திய சோதனையின்போது, நத்துலால் உயிருடன் இருப்பதாகவும், அவ்வப்போது தனது சொந்த கிராமத்திற்குச் சென்று வருவதாகவும் காவல்துறை அதிகாரிகள் அறிந்துகொண்டனர்.</p><p>ஆகஸ்ட் 17 அன்று, அவரது அடையாளங்களுடன் பொருந்தக்கூடிய ஒருவர் கிராமத்தில் தென்பட்டதை அடுத்து, அந்த கிராமத்தை சுற்றிவளைத்து காவல்துறை நத்துலாலை கைது செய்தது.</p><h3><strong>கைது நடவடிக்கை</strong></h3><p>இதுகுறித்து காவல்துறை கூறுகையில், “நத்துலாலும் பிரசாத்தும் நண்பர்கள், மேலும் இறந்தவரும் பிரசாத்தும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். </p><p>பிரசாத்தின் மனைவியிடம் கொலை செய்யப்பட்ட அசோக் குமார் பாலியல் ரீதியான அத்துமீறலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட தகராறே இந்தக் கொலைக்கு காரணமாக உள்ளது.</p><p>சம்பவம் நடந்த அன்று இரவு, நத்துலாலும் பிரசாத்தும் ஒரு பூங்காவில் ஒன்றாக மது அருந்தி, பின்னர் அசோக்கை கொலை செய்யும் நோக்கில், அவரை பிந்தொடர்ந்து கொலை செய்துள்ளனர்.</p><p>நத்துலால் தலைமறைவாக இருந்தபோது, உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் உள்ள மொத்த காய்கறிச் சந்தைகளில் பணிபுரிந்து வந்து, தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருந்துள்ளார். மேலும், அவர் திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வாழ்ந்து வந்தார்.</p><p>2005-ஆம் ஆண்டு ஃபரூக்காபாத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையிலும் அவர் பெயர் இடம்பெற்றிருந்தது” என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>வயது மற்றும் ஆண்டு வரம்பு எதிரொலி: தி.மு.க.வில் 20 மாவட்ட செயலாளர்கள் பதவி இழக்க வாய்ப்பு?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/likelihood-of-20-dmk-district-secretaries-losing-their-posts</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/likelihood-of-20-dmk-district-secretaries-losing-their-posts#comments</comments><guid isPermaLink="false">789f3856-658d-4548-a356-1846ff326113</guid><pubDate>Sun, 23 Aug 2026 02:48:20 +0000</pubDate><atom:updated>2026-08-23T02:48:20.711Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,மாவட்ட செயலாளர்,District Secretary,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/ehlxgdm6/DMK.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DMK ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/ehlxgdm6/DMK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தி.மு.க. செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், சுமார் 20  மாவட்ட செயலாளர்கள் பதவி இழக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.</p><p>தமிழக சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு தி.மு.க.வில் பல்வேறு மாற்றங்களை கொண்டுக்வர அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.</p><p>இந்த விறுவிறுப்பான சூழ்நிலையில் தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.</p><h2>பதவி இழக்க வாய்ப்பு</h2><p>குறிப்பாக, கிளைச் செயலாளர் முதல் மாவட்ட செயலாளர் வரை பதவி வகிப்போருக்கு வயது வரம்பு விதிக்கப்பட்டது. அதன்படி, மாவட்ட செயலாளர் பதவிக்கு 70 வயது என வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை வைத்துப் பார்த்தால் 13 தி.மு.க. மாவட்ட செயலாளர்களின் பதவி பறிபோகும் என தெரிகிறது. ஏனென்றால் இவர்கள் 13 பேரும் 70 வயதை கடந்தவர்கள் ஆவார்கள். </p><p>இதேபோல், மாவட்ட செயலாளராகும் ஒருவர் அதிகபட்சமாக 3 முறைக்கு மேல் அந்தப் பதவியில் இருக்கமுடியாது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><h2>20 பேர் யார்?</h2><p>செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் அடுத்த 15 நாட்களுக்குள் செயல்பாட்டுக்கு வரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் தி.மு.க.வில் மூத்த நிர்வாகிகள் பலர் அதிர்ச்சியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.</p><p>இந்நிலையில், தற்போது தி.மு.க.வில் 70 வயதிற்கு மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் 15 ஆண்டுகள் பதவி வகித்தவர்களின் விவரங்கள் வெளியாகி உள்ளன.</p><p>காஞ்சிபுரம் வடக்கு: தா.மோ.அன்பரசன்-66 வயது, 25 ஆண்டு</p><p>காஞ்சிபுரம் தெற்கு: சுந்தர்-71 வயது</p><p>தூத்துக்குடி தெற்கு: அனிதா ராதாகிருஷ்ணன் - 74 வயது</p><p>நெல்லை மேற்கு: ஆவுடையப்பன்-81 வயது, 28 ஆண்டு</p><p>மதுரை மாநகர்: கோ.தளபதி-70 வயது, 18 ஆண்டு</p><p>மதுரை வடக்கு: மூர்த்தி-67 வயது, 27 ஆண்டு</p><p>சிவகங்கை: பெரியகருப்பன்-66 வயது, 27 ஆண்டு</p><p>விருதுநகர் தெற்கு: சாத்தூர் ராமச்சந்திரன்-77 வயது, 26 ஆண்டு</p><p>அரியலூர்: எஸ்.எஸ்.சிவசங்கர்-55 வயது, 20 ஆண்டு</p><p>புதுக்கோட்டை தெற்கு: ரகுபதி - 72 வயது </p><p>திருவாரூர்: பூண்டி கலைவாணன்-62 வயது, 19 ஆண்டு</p><p>தஞ்சை வடக்கு: அன்பழகன் - 72 வயது</p><p>தேனி தெற்கு: கம்பம் ராமகிருஷ்ணன் - 77 வயது</p><p>திருப்பூர் மத்தியம்: செல்வராஜ் - 70 வயது</p><p>ஈரோடு தெற்கு: முத்துசாமி - 77 வயது</p><p>சேலம் கிழக்கு: எஸ்.ஆர்.சிவலிங்கம் - 75 வயது</p><p>கடலுர் கிழக்கு: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்-68 வயது, 34 ஆண்டு</p><p>விழுப்புரம் வடக்கு: செஞ்சி மஸ்தான் - 71 வயது</p><p>திருவண்ணாமலை தெற்கு: ஏ.வ.வேலு - 75 வயது</p><p>ராணிப்பேட்டை: ஆர்.காந்தி-80 வயது, 30 ஆண்டு</p>]]></content:encoded></item><item><title>தொலைக்காட்சி சேனல்களுக்கு விளம்பர கால அளவு நீக்கம்: மத்திய அரசு</title><link>https://www.maalaimalar.com/news/national/removal-of-tv-ad-duration-cap-central-government</link><comments>https://www.maalaimalar.com/news/national/removal-of-tv-ad-duration-cap-central-government#comments</comments><guid isPermaLink="false">e36cba4b-0e50-4d51-b833-ec24018ab206</guid><pubDate>Sun, 23 Aug 2026 02:04:44 +0000</pubDate><atom:updated>2026-08-23T02:04:44.940Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,central government,advertisements,television channel,தொலைக்காட்சி சேனல்,விளம்பரங்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/mjz53owe/Untitled-design-5.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TV]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/mjz53owe/Untitled-design-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தொலைக்காட்சி சேனல்களில் ஒரு மணி நேரத்திற்கு 12 நிமிட நேரம் விளம்பரம் ஒளிபரப்பப்படும் விதிகளை நீக்கி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.</p><h3><strong>தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்</strong></h3><p>தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், ‘கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க்குகள் (திருத்தம்) விதிகள், 2026-ஐ திருத்தம் செய்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p><p>அந்த அறிவிப்பில், “1994-ஆம் ஆண்டின் கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க்குகள் விதிகளில், விதி 7-இல் உள்ள துணை விதி (11) நீக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.</p><p>இந்த துணை விதி ஒரு மணி நேரத்திற்கு 12 நிமிடங்கள் என தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு வரம்பு விதித்திருந்தது.</p><p>1994 ஆம் ஆண்டின் கேபிள் தொலைக்காட்சி வலையமைப்பு விதிகளின் கீழ், 2026 ஆம் ஆண்டில் விளம்பர கால வரம்பு அறிமுகப்படுத்தப்பட்டது.</p><p>அதன் பின்னர், தொலைக்காட்சி ஒளிபரப்பு துறையில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றம் அடைந்துள்ளதாக அமைக்ககம் தெரிவித்துள்ளது.</p><p>தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் செய்தி குறிப்பில், 2006-ஆம் ஆண்டில் 62 தொலைக்காட்சி அலைவரிசைகள் மட்டுமே இருந்தன எனவும், ஆனால் தற்போது 900-க்கும் மேற்பட்ட அலைவரிசைகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.</p><p>கேபிள் டிவி துறையின் முழுமையான டிஜிட்டல் மயமாக்கலை தொடர்ந்து, DTH, கேபிள் டிவி, HITS மற்றும் IPTV உள்ளிட்ட அனைத்து தொலைக்காட்சி விநியோக தளங்களும், தற்போது 300 முதல் 500 க்கும் மேற்பட்ட அலைவரிசைகளை கொண்டுள்ளன.</p><p>இந்த வகையான தொலைக்காட்சி ஒளிபரப்பு துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை தொடர்ந்து, விளம்பர கால அளவு தொடர்பான விதிமுறைகளை மறுபரீசிலனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது.</p><p>இந்தியாவில் ஒரு சேனல் கட்டண சேனலாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், அது பெருமளவில் விளம்பரங்களை சார்ந்துள்ளது.</p><p>தொலைக்காட்சி துறைக்கும் டிஜிட்டல் ஊடகங்களுக்கும் இடையே சந்தையில் போதுமான போட்டி நிலவுவதாக தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கருதுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.</p><p>இந்த நிலையில் சந்தையில் நியாயமான போட்டியை ஏற்படுத்தவும், வணிகம் செய்வதை எளிதாக்கவும் விளம்பர கால வரம்பை நீக்கி மத்திய அரசாங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்றைய நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/petrol-diesel-price-in-chennai-today</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/petrol-diesel-price-in-chennai-today#comments</comments><guid isPermaLink="false">56fcc488-6d52-4259-bd75-049170fbddbf</guid><pubDate>Sun, 23 Aug 2026 01:58:46 +0000</pubDate><atom:updated>2026-08-23T01:58:46.730Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல்,Petrol,கச்சா எண்ணெய்,Crude oil,diesel,டீசல்</media:keywords><media:content height="576" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/1g366y0c/maalai-malar2026-08-06wi7y6invmaalai-malar2026-07-21zb9pki7q%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88.avif" width="1024"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ petrol, diesel]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/1g366y0c/maalai-malar2026-08-06wi7y6invmaalai-malar2026-07-21zb9pki7q%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88.avif?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் போர் ஓய்ந்து ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டு மத்திய கிழக்கில் இருந்து கச்சா எண்ணெய் வரத்து அதிகரித்த ஒரு சில நாட்களில் மீண்டும் போர் மூண்டுள்ளதால் சர்வதேச கச்சா எண்ணெய் விலைகளில் மீண்டும் தாக்கம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.</p><h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.</p><h2>பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</h2><p>இந்நிலையில், இன்றைய (23.08.2026 - ஞாயிற்றுக்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>2வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 210 ரன்னுக்கு ஆல் அவுட்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/australia-210-all-out-in-first-innings-against-bangladesh-second-test</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/australia-210-all-out-in-first-innings-against-bangladesh-second-test#comments</comments><guid isPermaLink="false">e90d6548-85c0-4476-822c-a9ff067305e0</guid><pubDate>Sun, 23 Aug 2026 01:51:16 +0000</pubDate><atom:updated>2026-08-23T01:51:16.660Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மிட்செல் ஸ்டார்க்,Starc,Shoriful Islam,AUSvBAN,ஆஸ்திரேலியா வங்கதேசம் தொடர்,ஷோரிபுல் இஸ்லாம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/ds3ku11u/islam.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ shoriful islam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/ds3ku11u/islam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 210 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.</p><p>ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நஜ்முல் ஹூசைன் ஷான்டோ தலைமையிலான வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது.</p><p>டார்வினில் நடந்த முதல் டெஸ்டில் வங்கதேசம் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.</p><p>இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது.</p><h2>ஆஸ்திரேலியா அசத்தல்</h2><p>அதன்படி, முதலில் வங்கதேசம் அணி களமிறங்கியது. ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்து வீசினர்.</p><p>குறிப்பாக, மிட்செல் ஸ்டார்க் அனல்பறக்க வீசினார். </p><p>21 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.</p><p>கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தைஜுல் இஸ்லாம், ஷோரிபுல் இஸ்லாம் ஜோடி 25 ரன் சேர்த்தது.</p><p>இறுதியில், வங்கதேசம் அணி முதல் இன்னிங்சில் 34 ஓவரில் 64 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. </p><h2>ஸ்டார்க் 6 விக்கெட்</h2><p>ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க் 6 விக்கெட்டும், பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p>இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. அந்த அணியும் 41 ரன்னுக்குள் 3 விக்கெட்களை இழந்து தத்தளித்தது.</p><p>ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க் 6 விக்கெட்டும், பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p>இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. அந்த அணியும் 41 ரன்னுக்குள் 3 விக்கெட்களை இழந்து தத்தளித்தது.</p><p>4வது விக்கெட்டுக்கு இணைந்த ஸ்டீவ் ஸ்மித்-கேமரூன் கிரீன் ஜோடி 77 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்மித் 42 ரன்னில் அவுட்டானார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.</p><h2>கேமரூன் கிரீன் அரைசதம்</h2><p>இறுதியில், முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்துள்ளது. கேமரூன் கிரீன் அரை சதம் கடந்து 51 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.</p><p>இந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. கேமரூன் கிரீன் 67 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.</p><p>இறுதியில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 210 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் வங்கதேசத்தை விட 146 ரன்கள் முன்னிலை பெற்றது.</p><h2>ஷோரிபுல் இஸ்லாம் 7 விக்கெட்</h2><p>வங்கதேசம் சார்பில் ஷோரிபுல் இஸ்லாம் 7 விக்கெட் வீழ்த்தினார்.</p><p>இதையடுத்து 146 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்கதேசம் 2வது இன்னிங்சை விளையாடி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 23 ஆகஸ்ட் 2026: அனுமனுக்கு திருமஞ்சனம்</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-23-august-2026-hanuman-thirumanjanam</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-23-august-2026-hanuman-thirumanjanam#comments</comments><guid isPermaLink="false">e5655e3e-a19a-4a9e-9150-a28a13425484</guid><pubDate>Sun, 23 Aug 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-08-23T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-04-29/7mi40ucx/narasimmar1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ hanuman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-04-29/7mi40ucx/narasimmar1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆவணி-6 (ஞாயிற்றுக்கிழமை)</p><p>பிறை : வளர்பிறை</p><p>திதி :  ஏகாதசி மறுநாள் 5.33 மணி வரை பிறகு துவாதசி</p><p>நட்சத்திரம் : மூலம் இரவு 7.48 வரை பிறகு பூராடம்</p> <p>யோகம் :  அமிர்த / சித்தயோகம்</p><p>ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை</p><p>எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை</p><p>சூலம் : மேற்கு</p><p>நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை</p> <h2>சுபமுகூர்த்த தினம், ஏகாதசி, வாஸ்து நாள் </h2><p>சுபமுகூர்த்த தினம். ஏகாதசி, மதுரை ஸ்ரீ சிவபெருமான் நரிகளைப் பரிகளாக்கிய திருவிளையாடல். வாஸ்துநாள் காலை 7.23க்கு மேல் 7.59 வரை வாஸ்து பூஜை செய்ய நன்று. சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் திருவீதியுலா. திருத்தணி, திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமான் கோவில்களில் பால் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம். </p> <p>திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சனம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம். இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், தஞ்சை புன்னை நல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் அபிஷேகம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - ஜெயம்</p><p>ரிஷபம் - மகிழ்ச்சி</p><p>மிதுனம் - உழைப்பு</p><p>கடகம் - பக்தி</p><p>சிம்மம் - பரிசு</p><p>கன்னி - நன்மை</p> <p>துலாம் - உதவி</p><p>விருச்சிகம் - தாமதம்</p><p>தனுசு - ஆரோக்கியம்</p><p>மகரம் - லாபம்</p><p>கும்பம் - திறமை</p><p>மீனம் - சாதனை</p> ]]></content:encoded></item><item><title>விமான பயணிகள் கவனத்திற்கு.. செப்டம்பர் 1 முதல் வருகிறது சூப்பர் மாற்றம்! </title><link>https://www.maalaimalar.com/news/national/india-immigration-boarding-pass-stamping-scrapped-at-international-airports-digital-process-from-september-1</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-immigration-boarding-pass-stamping-scrapped-at-international-airports-digital-process-from-september-1#comments</comments><guid isPermaLink="false">0772e7df-42df-4772-8e7a-0629b884b504</guid><pubDate>Sun, 23 Aug 2026 00:12:35 +0000</pubDate><atom:updated>2026-08-23T00:12:35.284Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>airport,விமான நிலையம்,சர்வதேச விமான நிலையம்,international airport,Air passengers,விமான பயணிகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/9uponci6/tn-14.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விமான பயணிகள்]]></media:title><media:description type="html"><![CDATA[ விமான பயணிகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/9uponci6/tn-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வரும் புதிய மாற்றத்தின் மூலம், இந்தியாவின் சர்வதேச <a href="https://www.maalaimalar.com/topic/airport">விமான நிலையங்களில்</a> போர்டிங் பாஸ்களில் முத்திரை குத்தும் முறை முழுமையாகக் கைவிடப்படுகிறது.</p><p>மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் குடிவரவு பணியகமான BOI இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.,</p> <h2>காரணம்</h2><p>இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் பயணிகள் Immigration சோதனையின் போது தங்கள் காகித போர்டிங் பாஸ்களில் முத்திரை குத்திக் கொள்ளும் நடைமுறை தலைவலியாக இருந்து வந்தது.</p><p>சில போர்டிங் பாஸ்களில் தவறான அல்லது தெளிவற்ற முறையில் முத்திரை குத்தப்படுவதால், பார்கோடு போன்ற விவரங்களைப் படிப்பதில் இயந்திரங்களுக்கு பிழைகள் மற்றும் சிக்கல்கள் ஏற்பட்டன</p><p>இதனால் பயணிகள் அசௌகரியத்தை சந்தித்து வந்ததாலும் சீல் வைப்பதால் ஏற்படும் தாமதங்கள் மற்றும் தவறுகளைத் தவிர்க்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.</p> <h2>விளக்கம்</h2><p>பயணிகள் இனி காகித போர்டிங் பாஸ் மட்டுமல்லாது தங்கள் ஸ்மார்ட்போன்களில் மின்னணு முறையிலான போர்டிங் பாஸ்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம். இதனால் விமான நிலையப் பயணம் எளிதாகும்.</p><p>ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் தற்போது இ போர்டிங் பாஸ்களை வழங்குவதால், ஒட்டுமொத்தப் பயணத்தையும் டிஜிட்டல் முறைக்கு மாற்றுவது எளிதாகிறது.</p> <p>அப்படி, செப்டம்பர் 1 முதல் காகித போர்டிங் பாஸ்களைப் பயணிகள் தொடர்ந்து பயன்படுத்தினாலும், அதில் குடியேற்றத் துறை அதிகாரிகளால் இனி எந்த முத்திரையும் குத்தப்படாது.</p><p>தனிநபர் உடற்பரிசோதனையின் போதும் போர்டிங் பாஸ்களில் சீல் வைக்கும் நடைமுறை ஏற்கனவே கைவிடப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.</p> <h2>பாஸ்போர்ட்</h2><p>போர்டிங் பாஸ் சீல் ரத்து செய்யப்படுவதைத் தொடர்ந்து, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு பாஸ்போர்ட்டில் வைக்கப்படும் Immigration Entry மற்றும் Exit முத்திரையையும் முழுமையாக நீக்குவதற்கான சோதனை முயற்சிகள் தற்போது நடந்து வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>போரில் ஈரானின் வெற்றியை உலகமே ஒப்புக்கொண்டுள்ளது -  ஈரான் அதிபர் </title><link>https://www.maalaimalar.com/news/world/iran-victory-in-us-conflict-president-masoud-pezeshkian-says-world-recognizes-irans-win-and-us-is-globally-hated</link><comments>https://www.maalaimalar.com/news/world/iran-victory-in-us-conflict-president-masoud-pezeshkian-says-world-recognizes-irans-win-and-us-is-globally-hated#comments</comments><guid isPermaLink="false">f1d59167-c7bd-4169-933d-a5342dac00dd</guid><pubDate>Sat, 22 Aug 2026 23:23:35 +0000</pubDate><atom:updated>2026-08-22T23:23:35.440Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>trump,டிரம்ப்,Iran War,ஈரான் போர்,ஹார்முஸ் ஜலசந்தி,Strait of Hormuz</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/oe8dbn56/tn-17.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டிரம்ப், மசூத் பெசெஷ்கியான்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிரம்ப், மசூத் பெசெஷ்கியான்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/oe8dbn56/tn-17.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவுடனான போரில் ஈரானின் வெற்றியை உலகமே ஒப்புக்கொண்டுள்ளதாக ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.</p><h2>மசூத் பெசெஷ்கியான்</h2><p>நேற்று ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் ஆற்றிய உரையில், </p><p>"ஈரானின் வெற்றியை உலக நாடுகள் ஏற்கனவே ஏற்றுக்கொண்டுவிட்டன. நமது பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா, உலகளவில் வெறுக்கப்படும் ஒரு நாடாக மாறியுள்ளது. </p> <p>நமது பலத்தையும் சுயமரியாதையையும் தக்கவைத்துக்கொண்டுள்ள இந்தச் சரியான தருணத்திலேயே போரை முடிவுக்குக் கொண்டுவருவது நல்லது" என்று தெரிவித்துள்ளார்.</p><p>ஹார்முஸில் நிலவும் சர்வதேச நெருக்கடியைச் சமாளிக்கப் பிரான்ஸ் மற்றும் சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் சொந்தமாக மாற்றுத் திட்டங்களுடன் முன்னகர்ந்து வருகின்றன. இது ஈரானின் ராணுவ வெற்றிக்கு சான்றாக சர்வதேச ஊடகங்களால் பார்க்கப்படுகிறது.</p> <h2>பொருளாதார தடை</h2><p>இதனிடையே ஈரான் மீதும் ஈரானுக்கு உதவும் நாடுகள் மீதும் பொருளாதார டி-டே, அதாவது மிகக் கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கப்போவதாக <a href="https://www.maalaimalar.com/news/world/historic-crisis-in-us-economy-us-national-debt-hits-40-trillion">டிரம்ப் </a>மிரட்டியுள்ளார்.</p><p>அமெரிக்க நிதித்துறைச் செயலர் ஸ்காட் பெசென்ட், இந்த <a href="https://www.maalaimalar.com/news/world/us-iran-economic-war-trump-announces-unprecedented-sanctions-and-warns-allied-nations">பொருளாதார அழுத்தம்</a> மூலம் ஈரான் அரசை முழுமையாக முடக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.</p> <h2>ஈரான் போர் பின்னணி </h2><p>ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடுவதை எதிர்த்து இஸ்ரேலுடன் இணைந்து கடந்த பிப்ரவரி கடைசியில் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலை தொடங்கியது. முதல் நாள் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனி கொல்லப்பட்டார்.</p> <h2>அழுத்தம்</h2><p>இதைத்தொடர்ந்து மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்களை ஈரான் தாக்கியது. மத்திய கிழக்கில் இருந்து எண்ணெய், எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல்களை தடுத்து நிறுத்தியது. இதனால் உலகளவில் நெருக்கடி ஏற்பட்டதால் போரை நிறுத்த வேண்டும் என்ற அழுத்தம் அமெரிக்காவுக்கு அதிகரித்தது.</p><p>இருப்பினும் ஈரான் உடன்பாட்டுக்கு வர மறுப்பதால் போர் முடிவின்றி தொடர்ந்து வருகிறது. இடையில் ஏற்பட்ட போர் நிறுத்தமும் தோல்வியில் முடிந்தது.</p><p>இரு தரப்பு இடையே மறைமுக பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.</p> <p>ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஈரானுக்கு பல்வேறு அழுத்தங்களை அமெரிக்க அதிபர் டிரம்ப் கொடுத்து வருகிறார்.</p><p>இதைத்தொடர்ந்து மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்களை ஈரான் தாக்கியது. மத்திய கிழக்கில் இருந்து எண்ணெய், எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல்களை தடுத்து நிறுத்தியது. இதனால் உலகளவில் நெருக்கடி ஏற்பட்டதால் போரை நிறுத்த வேண்டும் என்ற அழுத்தம் அமெரிக்காவுக்கு அதிகரித்தது.</p><p>இருப்பினும் ஈரான் உடன்பாட்டுக்கு வர மறுப்பதால் போர் முடிவின்றி தொடர்ந்து வருகிறது. இடையில் ஏற்பட்ட போர் நிறுத்தமும் தோல்வியில் முடிந்தது.</p><p>இரு தரப்பு இடையே மறைமுக பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.</p><p>ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஈரானுக்கு பல்வேறு அழுத்தங்களை அமெரிக்க அதிபர் டிரம்ப் கொடுத்து வருகிறார்.</p>]]></content:encoded></item><item><title>பாலியல் வழக்கை மறைக்க ரூ.5 கோடி லஞ்சம்.. தன் மீது குற்றம்சுமத்திய முன்னாள் நீதிபதிக்கு பஞ்சாப் முதலமைச்சரின் மனைவி நோட்டீஸ்</title><link>https://www.maalaimalar.com/news/national/punjab-cms-wife-sends-legal-notice-to-ex-judge-over-bribery-allegation-in-sexual-abuse-case</link><comments>https://www.maalaimalar.com/news/national/punjab-cms-wife-sends-legal-notice-to-ex-judge-over-bribery-allegation-in-sexual-abuse-case#comments</comments><guid isPermaLink="false">d0475189-c7b6-4d60-86dd-bc8c9c18ecbf</guid><pubDate>Sat, 22 Aug 2026 22:39:18 +0000</pubDate><atom:updated>2026-08-22T22:39:18.754Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பஞ்சாப்,Punjab,ஆம் ஆத்மி,பகவந்த் மான்,Bhagwant Mann,Aam Aadmi</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/a34rmre7/tn-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பஞ்சாப் முதலமைச்சர், மனைவி ]]></media:title><media:description type="html"><![CDATA[ பஞ்சாப் முதலமைச்சர், மனைவி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/a34rmre7/tn-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றை மூடி மறைப்பதற்காக பஞ்சாப் முதல்வர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">பகவந்த் மானின் </a>மனைவி குர்ப்ரீத் கவுர் ரூ. 5 கோடி லஞ்சம் கேட்டதாக ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சித் சிங் என்பவர் குற்றம்சாட்டியிருந்தார். </p><p>இந்நிலையில் குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஞ்சித் சிங்கிற்கு குர்ப்ரீத் கவுர் சட்டப்பூர்வ நோட்டீஸ்அனுப்பியுள்ளார்.</p> <h2>நோட்டீஸ்</h2><p>நோட்டீஸ் கிடைத்த 24 மணி நேரத்திற்குள் அவர் பதில் அளிக்க வேண்டும் என்று அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதிலளிக்கத் தவறினால் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருக்கும் என்றும், சட்ட நடவடிக்கைகள் தொடரப்படும் என்றும் அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>காங்கிரஸ் தலைவர் சுக்பால் சிங் கைராவின் மைத்துனரே ரஞ்சித் சிங் ஆவார். எனவே அவரின் இந்த குற்றச்சாட்டு உள்நோக்கம் கொண்டது என ஆளும் <a href="https://www.maalaimalar.com/topic/aam-aadmi">ஆம் ஆத்மி </a>தெரிவித்துள்ளது.</p> <h2>மனித உரிமைகள் ஆணையம் </h2><p>முன்னதாக, இக்குற்றச்சாட்டு தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழக்கு பதிவு செய்து, பஞ்சாப் மாநில தலைமை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியது.</p><p>புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை 2 வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு ஆணையம் அறிவுறுத்தியது.</p><p>இந்நிலையில் குர்ப்ரீத் கவுர், தன் மீது குற்றம்சாட்டிய முன்னாள் நீதிபதிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்.. பள்ளி மாணவி 5 மாத கர்ப்பம் - கருக்கலைப்பு முயற்சியில் உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/jammu-kashmir-school-horror-teacher-rapes-minor-student-for-months-illegal-abortion-attempt-leads-to-death</link><comments>https://www.maalaimalar.com/news/national/jammu-kashmir-school-horror-teacher-rapes-minor-student-for-months-illegal-abortion-attempt-leads-to-death#comments</comments><guid isPermaLink="false">6a38cc81-39df-4094-844f-6ddb212e0ba5</guid><pubDate>Sat, 22 Aug 2026 21:51:15 +0000</pubDate><atom:updated>2026-08-22T21:51:15.317Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாலியல் வன்கொடுமை,Sexual assault,government school,ஜம்மு காஷ்மீர்,அரசுப் பள்ளி,Jammu &amp; Kashmir</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/47ezu93y/tn-15.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பாலியல் வன்கொடுமை]]></media:title><media:description type="html"><![CDATA[ பாலியல் வன்கொடுமை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/47ezu93y/tn-15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜம்மு காஷ்மீரில் அரசுப் பள்ளி மாணவி  உயிரிழந்த சம்பவத்தில் ஆசிரியர் ஒருவர் பல மாதங்களாக அந்த மாணவியை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88">பாலியல் வன்கொடுமை </a>செய்து கர்ப்பமாக்கிய அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது. </p> <h2>பாலியல் வன்கொடுமை</h2><p>ஜம்மு காஷ்மீர் கிஷ்த்வார் மாவட்டத்தில் சத்ரூ பகுதியிலுள்ள பமல்போரா அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராகவும் பொறுப்புத் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி வந்த காலித் உசேன் என்ற ஆசிரியர், அதே பள்ளியில் படித்த மாணவியை பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.</p><p>இதனால் மாணவி 5 மாத கர்ப்பமானார். இதையறிந்த ஆசிரியர், தனது சகோதரர் தாரிக் என்பவரின் உதவியுடன் சட்டவிரோதமாக சில மாத்திரைகளைக் கொடுத்து மாணவிக்கு கருக்கலைப்பு செய்ய முயன்றுள்ளார்.</p><p>இதனால் மாணவியின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டு, கிஷ்த்வார் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.</p><p>பின்னர் மேல்சிகிச்சைக்காக ஜம்மு அரசு மருத்துவக் கல்லூரிக்குக் கொண்டு செல்லும் வழியில் ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்தார்.</p> <h2>பிரேதப் பரிசோதனை</h2><p>மாணவி சுமார் 5 மாத கர்ப்பமாக இருந்தது பிரேதப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p>மாணவியின் மரணத்தைத் தொடர்ந்து சத்ரூ மற்றும் கிஷ்த்வார் பகுதிகளில் பொதுமக்கள் திரண்டு நீதி வேண்டி போராட்டங்களில் ஈடுபட்டனர்.</p><p>பிரதான குற்றவாளியான ஆசிரியர் காலித் உசேன் மற்றும் அவரது சகோதரர் தாரிக் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.</p>  <h2>கைது</h2><p>குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் காலித் உசேன் உடனடியாகப் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>இந்தச் சட்டவிரோதக் கருக்கலைப்பு முயற்சியில் வேறு யாரெல்லாம் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்துக் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.</p><p>போலி மாத்திரைகளை வழங்கிய மருந்தக உரிமையாளர் மற்றும் சில உறவினர்களும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>அரசுப் பள்ளியில் அத்துமீறி ஆய்வு.. அபிஜித் தீப்கே மீது வழக்குப்பதிவு</title><link>https://www.maalaimalar.com/news/national/maharashtra-school-fir-cjp-founder-booked-for-unauthorized-entry-and-questioning-students-in-government-school</link><comments>https://www.maalaimalar.com/news/national/maharashtra-school-fir-cjp-founder-booked-for-unauthorized-entry-and-questioning-students-in-government-school#comments</comments><guid isPermaLink="false">bf1f2c53-619b-4e6f-8987-650cfa965fbc</guid><pubDate>Sat, 22 Aug 2026 21:01:29 +0000</pubDate><atom:updated>2026-08-22T21:01:29.547Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சிஜேபி,CJP Protest,CJP,அபிஜித் தீப்கே,சிஜேபி போராட்டம்,Abhijit Deepke</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/wigo3xz1/tn-16.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அபிஜித் தீப்கே]]></media:title><media:description type="html"><![CDATA[ அபிஜித் தீப்கே]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/wigo3xz1/tn-16.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிராவில் அரசுப் பள்ளிக்குள் அனுமதியின்றி நுழைந்து, மாணவர்களிடம் கேள்வி கேட்டு இடையூறு ஏற்படுத்திய புகாரின் பேரில் கரப்பான்பூச்சி கட்சி நிறுவனர் <a href="https://www.maalaimalar.com/news/national/abijeet-dipke-warns-of-massive-delhi-jantar-mantar-style-protest-in-jaipur">அபிஜித் திப்கே</a> மீது  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. </p><h2>புகார்</h2><p> புகாரின்படி, ஆகஸ்ட் 20 அன்று பிற்பகல் 1 மணியளவில் அபிஜித் திப்கே மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் மகாராஷ்டிர மாநிலம் லாத்தூர் மாவட்டம் ஔசா பகுதியில் உள்ள அரசுப் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்துள்ளனர்.  அனுமதியின்றி வகுப்பறைகளுக்குள் சென்ற அவர்கள், மாணவர்களிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டு ஒன்றரை முதல் இரண்டு மணி நேரம் வரை அங்கே நேரத்தைச் செலவிட்டுள்ளனர். மேலும் வகுப்பறை நிகழ்வுகளைப் புகைப்படமும் எடுத்துள்ளனர்.</p><h2>வாக்குவாதம்</h2><p>பள்ளியில் முழுமையான வருகைப்பதிவு மற்றும் சிறப்பான சூழல் இருப்பது போலக் காட்டுவதற்காக வேறொரு பள்ளியைச் சேர்ந்த மாணவர்களை இந்த பள்ளியின் வகுப்பறையில் அமர வைத்தது தொடர்பாக ஆசிரியர்களுக்கும் சிஜேபினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  அப்போது ஆசிரியர்களை அவதூறாகப் பேசி, அவர்களைப் பணியிலிருந்து இடைநீக்கம் செய்ய வைப்பதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. </p><p>பள்ளி ஆசிரியர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், ஔசா காவல் நிலையப் போலிஸார் அபிஜித் திப்கே உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.  </p><h2>நாய்களுக்கு நல்ல வசதி</h2><p>முன்னதாக பள்ளியை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இது மாணவர்களின் வாழ்க்கைப் பிரச்சனை. மக்கள் பிரதிநிதிகள் மாணவர்களுக்காக எதுவுமே செய்யப்போவதில்லை என்றால், அவர்களுக்கு மக்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்?</p><p>ஹெலிகாப்டரில் மட்டுமே பறப்பதற்காகவா மக்கள் வாக்களிக்கிறார்கள்? மக்கள் தங்கள் குழந்தைகள் எந்தச் சூழ்நிலையில் படிக்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்.</p><p>இந்த அமைச்சர்களின் நாய்களுக்குக்கூட மாணவர்களை விட சிறந்த வசதிகள் கிடைக்கின்றன.</p><p>சில பள்ளிகளில் மாணவர்கள் விலங்குகளை விட மோசமாக நடத்தப்படுகின்றனர்.</p><p>போதிய வகுப்பறைகள், பெஞ்சுகள், கழிப்பறைகள் மற்றும் பாதுகாப்பான சாலை வசதிகள் இல்லாத பள்ளிகளின் அவலநிலைக்கு மக்கள் பிரதிநிதிகளும் அமைச்சர்களுமே பொறுப்பேற்க வேண்டும்.</p><p>கல்விக்காகப் பணியாற்றாத வரை எங்கள் வீட்டுக்கு வாக்கு கேட்க வர வேண்டாம் என்று அவர்களிடம் கூறுங்கள்.</p><p>அரசியலுக்காக சாதி, சமூகக் கொடிகளைப் பிடித்துக்கொண்டு நாம் வெளியே வருகிறோம்.</p><p>அதேபோல் நமது குழந்தைகளின் பள்ளிகளுக்காகவும் நாம் குரல் கொடுக்க வேண்டும்" என்று கூறினார்.</p> <h2>ஆபத்தில் மதம்</h2><p>அரசியல் தலைவர்கள் மதம் ஆபத்தில் உள்ளது என்று தொடர்ச்சியாக கூறுவதை குறிப்பிட்ட அவர், "இத்தனை ஆண்டுகளாக அழியாத மதம், உங்கள் ஆட்சிக் காலத்திலா அழியப் போகிறது? மதம் எங்கும் போய்விடாது.</p><p>ஆனால் நமது குழந்தைகளின் எதிர்காலம் கண்டிப்பாகப் பாதிக்கப்படும்" என்று தெரிவித்தார்.</p> <h2>ராஜினாமா செய்</h2><p>தாதா பூசே பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக தொடர வேண்டுமா என்ற செய்தியாளரின் கேள்விக்கு, "பள்ளிகளின் அவலநிலையைப் பார்த்தால், கல்வி அமைச்சர் அந்தப் பதவியில் தொடரக்கூடாது என்றே தோன்றுகிறது.</p><p>அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் படிக்க வைத்தால்தான் அங்குள்ள உண்மையான பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள முடியும்" என தீப்கே பதிலளித்தார்.</p> <p>பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் ஆளும் அரசு, அரசுப் பள்ளிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வரத் தவறிவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.</p><p>School Thik Karo (பள்ளிகளைச் சரிசெய்) என்ற பெயரில் சிஜேபி கடந்த வாரம் பிரசார இயக்கம் ஒன்றை தொடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>பாஜக புதிய நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து.. ஜென் இசட் இளைஞர்களை கவர தனி குழு அமைப்பு </title><link>https://www.maalaimalar.com/news/national/bjp-launches-gen-z-outreach-new-high-level-team-formed-under-modi-and-nitin-naveen-to-woo-youth</link><comments>https://www.maalaimalar.com/news/national/bjp-launches-gen-z-outreach-new-high-level-team-formed-under-modi-and-nitin-naveen-to-woo-youth#comments</comments><guid isPermaLink="false">42c7d364-9939-4954-bdf6-0972b6be2744</guid><pubDate>Sat, 22 Aug 2026 20:20:33 +0000</pubDate><atom:updated>2026-08-22T20:20:33.599Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,Prime Minister Modi,ஜென் இசட்,Gen z,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/bu9nwjxm/tn-12.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரதமர் மோடி ]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர் மோடி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/bu9nwjxm/tn-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்குச் சென்ற <a href="https://www.maalaimalar.com/news/national/modi-govt-campus-outreach-ministers-to-visit-universities-daily-under-one-day-one-university-campaign-to-engage-gen-z-students">பிரதமர் மோடி</a>, கட்சியின் தலைவர் நிதின் நபின் தலைமையிலான புதிய நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.</p><h2>புதிய நிர்வாகிகள் </h2><p>பாஜகவின் 65 உறுப்பினர்கள் கொண்ட புதிய நிர்வாகி பட்டியல் ஆகஸ்ட் 17 அன்று அறிவிக்கப்பட்டது. இதில் 51 புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.</p><p>ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் புதிய அமைப்பில் முக்கியப் பங்காற்ற உள்ளனர். </p> <h2>இளைஞர்களை கவர குழு</h2><p>14 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட இளைஞர்களை சென்றடையும் வகையில் பெரிய அளவிலான இயக்கத்தை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.</p><p>அந்த வகையில் ஜென் இசட் தலைமுறையினரை சென்றடைவதற்காக சிறப்பு 'ஜென் ஜி அவுட்ரீச் திட்டத்தை' பாஜக கையில் எடுத்துள்ளது.</p><p>இதற்காக தனித்துவமான உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின், தேசியப் பொதுச்செயலாளர்களான ஸ்மிருதி இரானி மற்றும் வினோத் தாவ்டே ஆகியோருக்கு இந்த குழுவில் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.</p><p>மேலும், குஜராத் மாநில அமைச்சர் ஹர்ஷ் சங்கவி, சத்தீஸ்கர் மாநில அமைச்சர் ஓ.பி. சவுத்ரி உள்ளிட்ட பல முக்கிய இளம் தலைவர்களும் இந்த குழுவில் பணியாற்றவுள்ளனர்.</p> <h2>பாடம் கற்ற பாஜக </h2><p>தேர்வு முறைகேடுகளை கண்டித்து டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைமையில் இளைஞர்கள், மாணவர்கள் நடத்திய போராட்டம், தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலக வழிவகுத்தது.</p><p>இதைத்தொடர்ந்து சுதாரித்துக்கொண்ட பிரதமர் மோடி, இன்ஸ்டாகிராமில் மாணவர்களை கவரும் வேலையில் இறங்கியுள்ளார். கட்சியினரையும் இன்ஸ்டாகிராமை அதிகம் பயன்படுத்துமாறு அறிவுறுத்தினார்.</p><p>அடுத்து வரும் தேர்தல்களில் வெற்றியை தீர்மானிப்பதில் ஜென் இசட் முக்கிய காரணியாக மாறும் சூழலில், அவர்களை கவர பல்வேறு விஷயங்களை மத்திய பாஜக அரசு செய்து வருகிறது. பாஜகவின் சிந்தாந்த தலைமையாக கருதப்படும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் ஜென் இசட் சந்திப்புகளை நடத்தி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஒடிசா அருகே வங்கக்கடலில் மூழ்கிய சரக்குக் கப்பல் - 2 மாலுமிகள் மீட்பு - 22 பேரை தேடும் பணி தீவிரம்
</title><link>https://www.maalaimalar.com/news/national/cargo-ship-sinks-near-odisha-mv-ocean-winner-goes-down-in-bay-of-bengal-search-on-for-22-missing-crew</link><comments>https://www.maalaimalar.com/news/national/cargo-ship-sinks-near-odisha-mv-ocean-winner-goes-down-in-bay-of-bengal-search-on-for-22-missing-crew#comments</comments><guid isPermaLink="false">5f847ce9-cae5-4c9d-a07a-b17016f322f7</guid><pubDate>Sat, 22 Aug 2026 19:36:29 +0000</pubDate><atom:updated>2026-08-22T19:36:29.824Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஒடிசா,Odisha,Indian Navy,இந்திய கடற்படை,cargo ship,சரக்கு கப்பல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/53c50an7/tn-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கப்பல் ]]></media:title><media:description type="html"><![CDATA[ கப்பல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/53c50an7/tn-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஒடிசா அருகே <a href="https://www.maalaimalar.com/news/national/indian-sailors-safe-22-indians-on-two-hijacked-merchant-ships-off-yemen-and-somalia-reported-unharmed">சரக்குக் கப்பல்</a> மூழ்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>மூழ்கிய கப்பல்</h2><p>நேற்று முன் தினம் ஒடிசா கடற்கரையிலிருந்து சிங்கப்பூருக்கு இரும்புத் தாதை சுமந்து கொண்டு பனாமா நாட்டு கொடியுடன் எம்.வி. ஓஷன் வின்னர் என்ற சரக்கு கப்பல் புறப்பட்டது.</p><p>நேற்று, ஒடிசாவின் பாரதீப் கடற்கரையிலிருந்து சுமார் 240 நாட்டிக்கல் மைல் தொலைவில் சென்றபோது வங்கக்கடலில் கப்பல் மூழ்கியது.</p><p>தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதை தொடர்ந்து இந்தியக் கடலோரக் காவல் படை மற்றும் இந்தியக் கடற்படை ஆகியவை இணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.</p> <h2>பணியாளர்கள்</h2><p>இக்கப்பலில் 20 சீனா, 3 மியான்மர் மற்றும் 1 வங்கதேசத்தைச் சேர்ந்த மாலுமி என மொத்தம் 24 பணியாளர்கள் இருந்தனர். கடலில் மிதந்த 2 மாலுமிகள் இதுவரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.</p><p>எஞ்சிய 22 பணியாளர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அண்மையில் செல்லும் பிற கப்பல்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, தேடுதல் பணிக்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>TNPL: நெல்லையை வீழ்த்தி மதுரை வெற்றி </title><link>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-cricket-madurai-panthers-crush-nellai-royal-kings-by-72-runs-to-go-top-of-points-table</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-cricket-madurai-panthers-crush-nellai-royal-kings-by-72-runs-to-go-top-of-points-table#comments</comments><guid isPermaLink="false">a9bf3634-6c7e-49a1-9126-a6ba8e29d0dc</guid><pubDate>Sat, 22 Aug 2026 19:05:40 +0000</pubDate><atom:updated>2026-08-22T19:05:40.428Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,madurai panthers,Nellai Royal Kings,நெல்லை ராயல் கிங்ஸ்,மதுரை பேந்தர்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/mt51ww10/tn-13.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டிஎன்பிஎல்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிஎன்பிஎல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/mt51ww10/tn-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற <a href="https://www.maalaimalar.com/sports/cricket/salem-spartans-beat-tirupur-tamizhans-in-tnpl-2026">தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் </a>நெல்லை கிங்ஸை மதுரை  72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. </p> <h2>டிஎன்பிஎல்</h2><p>டிஎன்பிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 2-ம் கட்ட ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடி யத்தில் நடைபெற்று வருகின்றன.</p><p>இன்று நடைபெற்ற 28 வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் - மதுரை பேந்தர்ஸ் அணிகள் மோதின.</p><p>முதலில் பேட்டிங் செய்த மதுரை பேந்தர்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது. </p><p>199 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய நெல்லை ராயல் கிங்ஸ் மதுரை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 126 ரன்களுக்கு சுருண்டது.</p><p>இதன்மூலம் மதுரை அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.</p> <h2>முதலிடம்</h2><p>மதுரை அணியின் ஒட்டுமொத்த ரன் ரேட்டும் இப்போட்டி மூலம் கணிசமாக உயர்ந்துள்ளது.</p><p>இந்த வெற்றியின் மூலம் மதுரை அணி லீக் சுற்றில் 7 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகளை பெற்றுள்ளது.</p> <p>முன்னதாக மதுரை பேந்தர்ஸ் அணி, திருச்சி கிராண்ட் சோழாஸ், கோவை கிங்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகளை தொடர்ச்சியாக வீழ்த்தியிருந்தது.</p><p>சென்னை சூப்பர் கில்லீஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகளிடம் மட்டுமே தோல்வியடைந்திருந்தது.</p><p>தற்போதைய வெற்றியுடன் சேர்த்து மொத்தம் 5 வெற்றிகளுடன் மதுரை அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.</p> <h2>சேலம் அணி ஆறுதல் வெற்றி</h2><p>முன்னதாக நேற்று மதியம் திருப்பூருக்கு எதிரான போட்டியில் 45 ரன் வித்தியாசத்தில் வென்ற சேலம் அணி ஆறுதல் வெற்றி பெற்றது.</p><p>அந்த போட்டியில் டாஸ் வென்ற சேலம் அணி பேட்டிங் தேர்வு செய்தது.</p><p>அதன்படி, முதலில் ஆடிய சேலம் ஸ்பர்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்தது. பொறுப்புடன் ஆடிய கார்த்திக் மணிகண்டன் அரை சதமடித்தார். அவர் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பூபதிகுமார் 27 ரன்னிலும், அபிஷேக் 29 ரன்னில் ஆட்டமிழந்தனர்.</p> <p>திருப்பூர் அணி சார்பில் மதிவண்ணன் 3 விக்கெட் வீழ்த்தினார்.</p><p>இதையடுத்து, 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்கியது.</p><p>தொடக்க ஆட்டக்காரரான துஷார் ரஹேஜா மட்டும் அதிரடியாக ஆடினார். அவர் 43 பந்துகளில் 5 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 75 ரன்கள் குவித்தார்.</p><p>அமித் சாத்விக், முகமது அலி ஆகியோர் இரட்டை இலக்கங்களை எட்டினர். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.</p><p>இறுதியில், திருப்பூர் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சேலம் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.</p><p>சேலம் சார்பில் ரஹில் ஷா 3 விக்கெட்டும், பொய்யாமொழி 2 விக்கெட்டும் வீழ்த்தினர். நடப்பு தொடரில் 7 போட்டிகளில் விளையாடிய சேலம் ஒரு வெற்றி, 6 தோல்வி என புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.</p><p>திருப்பூர் அணி தான் ஆடிய 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>கடத்தப்பட்ட 2 வணிகக் கப்பல்கள்.. 22 இந்திய மாலுமிகளின் நிலை குறித்து மத்திய அரசு விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/national/indian-sailors-safe-22-indians-on-two-hijacked-merchant-ships-off-yemen-and-somalia-reported-unharmed</link><comments>https://www.maalaimalar.com/news/national/indian-sailors-safe-22-indians-on-two-hijacked-merchant-ships-off-yemen-and-somalia-reported-unharmed#comments</comments><guid isPermaLink="false">6c872f7f-a3a5-4e19-bd7b-1d3a223fee11</guid><pubDate>Sat, 22 Aug 2026 18:19:53 +0000</pubDate><atom:updated>2026-08-22T18:19:53.525Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Yemen,ஏமன்,கடற்கொள்ளையர்கள்,சோமாலியா,Somalia,Pirates</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/85v512tz/tn-9.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கப்பல்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ கப்பல்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/85v512tz/tn-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஏமன் மற்றும் சோமாலியா கடற்பகுதிகளில் அடுத்தடுத்து <a href="https://www.maalaimalar.com/news/world/indian-crew-hostage-two-merchant-ships-hijacked-off-yemen-and-somalia-22-indians-in-peril">கடற்கொள்ளையர்கள் </a>கடத்திய  2 வணிகக் கப்பல்களில் சிக்கியுள்ள 22 இந்திய மாலுமிகளும் தற்போது பாதுகாப்பாக உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.</p> <h2>கடத்தல்</h2><p>எரித்திரியா நாட்டுக்கு கொடியுடன் எண்ணெய் பொருட்களை ஏற்றிச் சென்ற எம்டி ஷிபு 1 என்ற வணிக கப்பல் 20 பணியாளர்களுடன் ஏமன் கடற்கரைக்கு 30 நாட்டிக்கல் மைல் தொலைவில் ஏடன் வளைகுடாவில் சென்றுகொண்டிருந்தபோது ஆயுதமேந்திய 6 <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">கடற்கொள்ளையர்களால் </a>கடத்தப்பட்டுள்ளது. அதிலிருந்த 20 பணியாளர்களில் 16 பேர் இந்தியர்கள் என தெரியவந்துள்ளது.</p><p>முன்னதாக எம்வி லுடிப் என்ற கேமரூன் கொடியுடன் கூடிய வணிக கப்பல் சோமாலியாவின் பன்ட்லேண்ட் கடற்கரைக்கு அருகே கடந்த திங்களன்று கடத்தப்பட்டுள்ளது.</p> <p>அதில் இருந்த மொத்தம் 10 பணியாளர்களில் 6 பேர் இந்தியர்கள் ஆவர். சோமாலிய அதிகாரி ஒருவரின் கூற்றை மேற்கோள் காட்டி அசோசியேட் பிரஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.</p><p>இந்த கப்பலானது பண்ட்லேண்ட்டில் உள்ள Eyl மாவட்டத்தில் உள்ள மராரையாவுக்கு 3.5 நாட்டிக்கல் மைல் தொலைவில் வைத்து கடத்தப்பட்டு பின்னர் அங்கிருந்து வடக்கு சோமாலியாவில் உள்ள Nugaal கடற்கரையை நோக்கி கொண்டு செல்லப்பட்டதாக அந்த சோமாலிய அதிகாரி தெரிவித்துள்ளார்.</p> <p>இந்த கப்பல் போலார் மூவ்மென்ட் ஷிப்பிங் என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும் சோமாலியாவில் உள்ள துருக்கி ராணுவ பயிற்சி மையத்திற்கு ஆயுதங்கள், பயிற்சி உபகரணங்கள், சேட்டிலைட் மற்றும் தொலைத்தொடர்பு கருவிகளை கொண்டு சென்று கொண்டிருந்தது என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.</p><p>கப்பலை 8 கடற்கொள்ளையர்கள் சேர்ந்து கடத்தியதாக நம்பப்படுகிறது. இவர்கள் முன்னதாக கடந்த ஏப்ரலில் எம்வி ஸ்வார்ட் என்ற கப்பலை கடத்தியர்வர்கள் என்று அந்த சோமாலிய அதிகாரி தெரிவித்துள்ளார்.</p> <h2>விளக்கம்</h2><p>இதுகுறித்து இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், "கடத்தப்பட்ட கப்பல்களில் உள்ள அனைத்து இந்திய மாலுமிகளும் காயங்களின்றி பாதுகாப்பாக உள்ளனர். </p><p>அவர்களை பத்திரமாக மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன" என்று உறுதியளித்துள்ளார்.</p> <p>சோமாலிய அரசு அதிகாரிகள் மற்றும் சர்வதேச கடல்சார் பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து மாலுமிகளை மீட்பதற்கான தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளை நைரோபியில் உள்ள இந்திய தூதரகம் மேற்கொண்டுள்ளது.</p><p>கடத்தப்பட்ட கப்பல்களின் நடமாட்டத்தை சர்வதேச கடற்படைக் கப்பல்களும், டிரோன்களும் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>மியான்மர்: புத்த மடாலயம் மீது ராணுவம்  வான்வழி தாக்குதல் - 14 பொதுமக்கள் பலி, 20 பேர் காயம்</title><link>https://www.maalaimalar.com/news/world/myanmar-military-airstrike-14-civilians-killed-20-injured-in-strike-on-buddhist-monastery</link><comments>https://www.maalaimalar.com/news/world/myanmar-military-airstrike-14-civilians-killed-20-injured-in-strike-on-buddhist-monastery#comments</comments><guid isPermaLink="false">0f97eadb-f7a8-44ba-bf0a-9615751a11c4</guid><pubDate>Sat, 22 Aug 2026 17:43:53 +0000</pubDate><atom:updated>2026-08-22T17:43:53.452Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Myanmar,Aung San Suu Kyi,civil war,உள்நாட்டுப் போர்,மியான்மர்,ஆங் சான்  சூச்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/ljn1vmct/tn-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மியான்மர்]]></media:title><media:description type="html"><![CDATA[ மியான்மர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/ljn1vmct/tn-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/myanmar-approves-return-of-3-lakh-rohingya">மியான்மரில்</a> புத்த மடாலயம் மீது அந்நாட்டு ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 14 பேர் பலியாகினர். 20 பேர் காயமுற்றனர். </p><h2>ராணுவ ஆதிக்கம் </h2><p>பிப்ரவரி 2021இல்<a href="https://www.maalaimalar.com/topic/aung-san-suu-kyi"> ஆங் சான் சூச்சி</a>யின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைக் கவிழ்த்து ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.</p><p>ராணுவத்துக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சிக் குழுக்கள் மியான்மரில் செயல்பட்டு வருகின்றன. </p><p>அதில் குறிப்பிடத்தக்கது ஜனநாயக ஆதரவுப் படை. கிளர்ச்சியார்களை குறிவைத்து ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் அப்பாவி மக்கள் பலர் கொல்லப்படுவது தொடர்கதையாகி வருகிறது. </p><p>2025-இல் மியான்மரில் தேர்தல் நடத்தப்பட்டு ராணுவ ஆதரவு பெற்ற USDP கட்சி வெற்றி பெற்றது. முன்னாள் ராணுவ ஜெனரல் மின் ஆங் ஹ்லேய்ங் அதிபராகபொறுப்பேற்றுக்கொண்டார். </p><p>இது வெளியுலகிற்கு ராணுவம் நடத்திய கண்துடைப்பு நாடகமாக பார்க்கப்படுகிறது. </p> <h2>தாக்குதல்</h2><p>இந்த நிலையில் தான் மத்திய மியான்மரில் உள்ள மியாவ்ங் பகுதியில் உள்ள ஸ்வெல் லே ஓ என்ற கிராமத்தில் நேற்று ராணுவம் வான்வெளித் தாக்குதல் நடத்தியுள்ளது.</p><p>ராணுவப் போர் விமானம் ஒன்று 15 நிமிட இடைவெளியில் இரண்டு குண்டுகளை வீசியுள்ளது. இதில் இரண்டாவது குண்டு அருகில் இருந்த வீடு ஒன்றையும் சேதப்படுத்தியது.</p><p>தகவலின்படி, இத்தாக்குதலில் 3 பெண்கள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். 20 பேர் படுகாயமடைந்தனர்.</p> <h2>வழிபாட்டு நிகழ்வு</h2><p>பௌத்தர்களின் புனித காலத்தை குறிக்கும் வகையில் மடாலயத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு வார கால தியானப் பயிற்சியில் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றிருந்த போது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.</p><p>"இது தவறாக இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல் அல்ல; அவர்கள் வேண்டுமென்றே பௌத்த விகாரையை இலக்கு வைத்துத் தாக்கியுள்ளனர்" என்று ஜனநாயக ஆதரவு கிளர்ச்சியாளர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.</p> <h2>கண்டனம்</h2><p>மியான்மரில் பொதுமக்களுக்கு எதிராக ராணுவம் திட்டமிட்ட வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.</p><p>திருமணங்கள் மற்றும் மத விழாக்களில் பொதுமக்கள் கூடும் இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதை ராணுவம் ஒரு பயங்கரவாத உத்தியாகப் பயன்படுத்தி வருவதாக சர்வதேச மோதல் கண்காணிப்பு அமைப்பான ACLED தெரிவித்துள்ளது.</p> <h2>ராணுவ விளக்கம்</h2><p>எனினும், பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராகவே தாங்கள் நடவடிக்கை எடுப்பதாகவும், பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு கட்டுப்பாட்டுடன் செயல்படுவதாகவும் மியான்மர் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><h2>உள்நாட்டு போர்</h2><p>நாட்டின் பெரும்பாலான பகுதிகள் ஆயுதமேந்திய உள்நாட்டுப் போருக்குள் தள்ளப்பட்டன. கடந்த 5 ஆண்டுகளில் 1,00,000க்கும் அதிகமானோர் இதில் உயிரிழந்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 22 ஆகஸ்ட் 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-22-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-22-august-2026#comments</comments><guid isPermaLink="false">e2a2597d-07a4-4e47-9c79-e9f341ff896c</guid><pubDate>Sat, 22 Aug 2026 04:03:13 +0000</pubDate><atom:updated>2026-08-22T17:24:52.577Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/7a7fqmxz/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/7a7fqmxz/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thaimaman-gold-ring-scheme-tender-2-famous-jewellery-companies">தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: டெண்டரை கைப்பற்றிய 2 பிரபல நகை நிறுவனங்கள்</a></p><p>* &nbsp;ஒரு கிராம் எடையுள்ள 4 லட்சத்து 41 ஆயிரத்து 667 தங்க மோதிரங்கள் வழங்க அரசாணை வழங்கப்பட்டுள்ளது.</p><p>* ஒப்பந்தபுள்ளிகள் கோரப்பட்டதில் 11 நிறுவனங்கள் தங்களது விலைப்புள்ளி விவரத்தினை தெரிவித்தன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/public-pays-tribute-to-sowcar-janaki-funeral-this-evening">சௌகார் ஜானகி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி - இன்று மாலை இறுதிச்சடங்கு</a></p><p>* சௌகார் ஜானகியின் வாழ்க்கையில் வானொலிக்கும் முக்கிய இடம் உண்டு.</p><p>* 2020-ம் ஆண்டு வெளியான 'பிஸ்கோத்' திரைப்படம் அவரது 400-வது படமாகக் குறிப்பிடப்படுகிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/onam-festival-flight-fares-from-chennai-to-kerala-surge-multiple-times">ஓணம் பண்டிகை: சென்னையில் இருந்து கேரளா செல்ல விமான கட்டணம் பல மடங்கு உயர்வு! பயணிகள் அதிர்ச்சி... </a></p><p>*ரெயில் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு இடங்கள் ஏற்கனவே முழுமையாக நிரம்பிவிட்டதால், கடைசி நேரப் பயணத்திற்கு மக்கள் பெருமளவில் விமான சேவையை நாடத் தொடங்கியுள்ளனர். </p><p>*இதைப் பயன்படுத்தி விமான நிறுவனங்கள் கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்தியுள்ளன. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-let-us-cherish-and-preserve-chennai-history">சென்னையின் வரலாற்றைப் போற்றி பாதுகாப்போம் - கனிமொழி</a></p><p>* எண்ணற்ற கரங்களின் உழைப்பில் வளர்ந்த  மெட்ராஸ் மாநகரம்</p><p>* இன்று சென்னையாக உயர்ந்து, கோடிக்கணக்கான மக்களின் கனவுகளைத் தாங்கி நிற்கிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-22-8-2026">GOLD PRICE TODAY: நகை பிரியர்களுக்கு ஷாக்... ஏறுமுகத்தில் தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 அதிகரித்து ரூ.14,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/us-canada-trade-talks-fail-canada-to-impose-retaliatory-tariffs">அமெரிக்கா-கனடா வர்த்தக பேச்சுவார்த்தை தோல்வி: 50% வரிகளுக்கு பதிலடியாக சமமான வரி விதிக்க கனடா பிரதமர் முடிவு!... </a></p><p>*வாஷிங்டனில் 3 நாட்கள் நீடித்த பேச்சுவார்த்தை முறிந்ததால் நள்ளிரவு முதல் அமெரிக்காவின் புதிய வரிகள் அமல்</p><p>*தூதுக்குழுவை உடனடியாக ஒட்டாவாவிற்கு திரும்ப அழைத்தது கனடா.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-modi-government-imposes-charges-on-the-savings-accounts-of-the-poor-and-the-common-people">ஏழை எளிய மக்களின் சேமிப்பு கணக்கிற்கு கட்டணம் விதிக்கும் மோடி அரசு- மாணிக்கம் தாகூர் கண்டனம்</a></p><p>*  ஏழை எளிய மக்களிடம் கட்டண கொள்ளை அடிக்கும் இந்த வங்கிகள் தான் கடந்த 10 ஆண்டுகளில் பெரு முதலாளிகளுக்கு 16 லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்துள்ளது.</p><p>* மோடி அரசின் ஏழை மக்கள் மீதான இந்த கட்டண கொள்ளை வன்மையாக கண்டிக்கிறோம். உடனடியாக இந்த கட்டண உயர்வை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-day-anbumani-ramadoss-wishes">சென்னையின் வரங்களை பாதுகாக்க சென்னை நாளில் உறுதியேற்போம்! - அன்புமணி</a></p><p>* தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் பங்களிப்பது சென்னை தான்.</p><p>* ஏரிகளையும் அழித்து கான்கிரீட் காடுகளை உருவாக்கி வருகிறோம். இதை விட மோசமாக இயற்கையை சூறையாட முடியாது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-congratulates-teachers-selected-for-national-teachers-award">தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து</a></p><p>* தேசிய நல்லாசிரியர் விருதிற்கு  தேர்வான ஆசிரியர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>* தமிழ்நாட்டின் கல்விச் சிறப்புக்கும், ஒட்டுமொத்த ஆசிரிய சமூகத்திற்கும் மேலும் பெருமை சேர்க்கிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-says-constructive-debates-should-take-place-in-the-legislative-assembly">சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும்- திருமாவளவன்</a></p><p>* மாநில சுயாட்சி என்ற கோரிக்கை முழக்கத்தை உரக்க பேசவே இந்த மாநாடு நடைபெற்றது. </p><p>* மாநில சுயாட்சி என்பது தி.மு.க.வால் முன் நிறுத்தப்பட்ட ஒரு மகத்தான கோட்பாடு.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-steps-into-387th-year-our-pledge-to-protect-the-foster-mother">387-ல் அடியெடுத்து வைக்கும் நம்ம சென்னை: வளர்ப்பு அன்னையைக் காக்க நாம் ஏற்க வேண்டிய உறுதிமொழி!... </a></p><p>*வாழ்வு தேடி வந்த கோடிக்கணக்கான மக்களைத் தன் மடியில் ஏந்தி, வாழ்வாதாரம் அளித்து பேணிக்காக்கும் தாயாகத் திகழ்கிறது சென்னை மாநகரம். </p><p>*அதிக அளவில் மரக்கன்றுகளை நட்டு, நிலத்தடி நீர்மட்டத்தைப் பாதுகாத்துச் சென்னையின் வளமான எதிர்காலத்தை உருவாக்குவோம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/abijeet-dipke-warns-of-massive-delhi-jantar-mantar-style-protest-in-jaipur">டெல்லி ஜந்தர் மந்தர் பாணியில் ஜெய்ப்பூரில் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என அபிஜீத் திப்கே எச்சரிக்கை!</a></p><p>* மாட்டுத் தொழுவத்தில் இயங்கும் அரசுப்பள்ளியை ஆய்வு செய்ய சென்ற சி.ஜே.பி தொண்டர்கள் மீது தாக்குதல்.</p><p>* தாக்குதலை பா.ஜ.க குண்டர்கள் நடத்தியதாகவும், பெண் தொண்டர் உட்பட பலர் காயமடைந்ததாகவும் குற்றச்சாட்டு.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/lausanne-diamond-league-rumesh-pathirage-hattrick">லோசான் டைமண்ட் லீக்: 9 செ.மீ இடைவெளியில் நீரஜ் சோப்ராவை வீழ்த்தி ருமேஷ் பத்திரகே ஹாட்ரிக் சாதனை! </a></p><p>*இரண்டாவது சுற்றில் நீரஜ் சோப்ரா அபாரமாகச் செயல்பட்டு 88.05 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து தற்காலிகமாகப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார். </p><p>*மூன்றாவது சுற்றில், இலங்கை வீரர் ருமேஷ் பத்திரகே 88.14 மீட்டர் தூரம் எறிந்து மீண்டும் முதலிடத்தைக் கைப்பற்றினார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-appears-before-vigilance-and-anti-corruption-police">செந்தில்பாலாஜி லஞ்ச ஒழிப்பு போலீசில் ஆஜர் - டாஸ்மாக் முறைகேடு பற்றி விசாரணை</a></p><p>* டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை.</p><p>* 40 இடங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருந்தன.&nbsp;</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/resolution-passed-at-executive-committee-meeting-an-individual-can-hold-post-of-dmk"> திமுக மாவட்ட செயலாளராக ஒருவர் அதிகபட்சம் 3 முறை பதவி வகிக்கலாம் - செயற்குழுவில் தீர்மானம்</a></p><p>* தேர்தல் தோல்விக்கான காரணங்கள் பற்றி ஆராயப்பட்டு அது தொடர்பாக அதிரடி முடிவுகள் தி.மு.க.வில் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.</p><p>* வருவாய் மாவட்டங்களின் அடிப்படையில் 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு கழக மாவட்டம் என்ற வகையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுகிறது.&nbsp;</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/annamalai-announces-we-the-leaders-organization-website-revamped">வீ த லீடர்ஸ் அமைப்பின் இணைய தளம் மாற்றி அமைப்பு - அண்ணாமலை அறிவிப்பு</a></p><p>* இதுவரை உறுப்பினர் சேர்க்கை பற்றிய விவரங்களுடன் இருந்த இந்த பக்கத்தை இப்போது மாற்றி அமைத்துள்ளார்.</p><p>* பொதுமக்கள் அவற்றை பார்த்து பணிகள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/australia-165-for-8-wickets-in-first-day-against-bangladesh-second-test">2வது டெஸ்ட்: 64 ரன்னில் சுருண்ட வங்கதேசம்: முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 165/8</a></p><p>* ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட் வீழ்த்தினார்.</p><p>* 2வது டெஸ்டின் முதல் நாளில் மொத்தம் 18 விக்கெட்டுகள் வீழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/sikhs-protest-outside-rahul-gandhis-residence-against-cong-leaders-calling-sajjan-kumar-hero">ராகுல் காந்தி வீட்டு முன் போராட்டத்தில் ஈடுபட்ட சீக்கியர்கள்: காரணம் என்ன?</a></p><p>* சஜ்ஜன் குமாரின் மறைவுக்குப் பிறகு, அவர் தங்கள் நாயகன் என்று காங்கிரஸ் தலைவர்கள் வெளியிட்ட கருத்துகள் ஆட்சேபனைக்குரியவை.</p><p>* சஜ்ஜன் குமார் தங்கள் நாயகனா என்பது குறித்து ராகுல் காந்தி இன்று தெளிவுபடுத்த வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/former-cm-pinarayi-vijayan-says-his-hands-clean-denies-hawala-dealings">என் கைகள் சுத்தமானவை..! ஹவாலா பரிவர்த்தனை குற்றச்சாட்டை மறுத்த பினராயி விஜயன்</a></p><p>* வீணா என்னுடைய மகள் என்பதனால் ஏராளமான விசயங்கள் எழுப்பப்பட்டன.</p><p>* ஏராளமான சொத்துகளுக்கு வீணா உரிமையாளர் கிடையாது. பேசப்படும் பணத்தின் அளவும் பெரியதல்ல.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/india-to-meet-srilanka-in-second-test-for-colombo">நாளை கடைசி டெஸ்ட்: இலங்கைக்கு எதிரான தொடரை கைப்பற்றுமா இந்தியா?</a></p><p>* முதல் டெஸ்டில் இந்திய அணி 165 ரன் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது.</p><p>* காயமடைந்த தினேஷ் சண்டிமால் இலங்கை அணியில் சேர்க்கப்படவில்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/japanese-father-leaves-7-year-old-alone-on-mount-fuji">7 வயது மகன் ஃபூஜி மலை ஏறும்போது சோர்வடைந்ததால் தனியாகத்தவிக்கவிட்டுச் சென்ற ஜப்பானியத் தந்தை!</a></p><p>* புஜி மலையில் 2490 மீட்டர் உயரத்தில் சோர்வடைந்த 7 வயது மகனை தந்தை தனியே விட்டுச் சென்றார்.</p><p>* தவறான முடிவுக்கு வருந்துவதாக தந்தை மன்னிப்பு கேட்டார், பாதுகாப்பு விதிகளை போலீசார் வலியுறுத்தினர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/russia-double-drone-attack-on-ukraine-mall-kills-16">உக்ரைனின் வணிக வளாகம் மீது தாக்குதல்: ரஷியாவிற்கு அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம்!</a></p><p>* ஜெலன்ஸ்கியின் சொந்த ஊரான க்ரிவி ரிஹ் வணிக வளாகம் மீது ரஷ்யா இரட்டை ட்ரோன் தாக்குதல்.</p><p>* இது மனிதாபிமானமற்ற பயங்கரவாதம் என ஜெலன்ஸ்கி கண்டனம், தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என எச்சரிக்கை.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/indian-pair-get-bronze-in-world-championship-badminton-womens-doubles">உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: வெண்கலம் வென்றது திரிசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி</a></p><p>* இந்தத் தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவில் பதக்கம் வெல்லும் 2-வது இந்திய ஜோடி என்ற சாதனை படைத்தது.</p><p>* 2011-ல் ஜுவாலா கட்டா-அஸ்வினி ஜோடி இந்தத் தொடரில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/salem-spartans-beat-tirupur-tamizhans-in-tnpl-2026">டிஎன்பிஎல்: திருப்பூரை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது சேலம்</a></p><p>* சேலம் அணி 7 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, 6 தோல்வி என புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. </p><p>* திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/mitchell-starc-has-moved-past-dale-steyn-in-the-test-wickets-tally">டெஸ்டில் 441 விக்கெட்: ஸ்டெயின் சாதனையை முறியடித்தார் ஸ்டார்க்</a></p><p>* டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் பட்டியலில் 10-வது இடம் பிடித்தார் ஸ்டார்க்.</p><p>* டேல் ஸ்டெயின் 93 டெஸ்டில் விளையாடி 439 விக்கெட் எடுத்து 11-வது இடத்தில் உள்ளார். </p> ]]></content:encoded></item><item><title>ம.பி. மருத்துவமனை குழந்தைகள் சிகிச்சை பிரிவில் தீ விபத்து.. பிறந்த குழந்தை பலி - இரு குழந்தைகள்  காயம்</title><link>https://www.maalaimalar.com/news/national/infant-dies-after-fire-in-madhya-pradesh-govt-hospital-nicu-cradle-warmer-short-circuit-sparks-blaze-dozens-of-babies-evacuated-safely</link><comments>https://www.maalaimalar.com/news/national/infant-dies-after-fire-in-madhya-pradesh-govt-hospital-nicu-cradle-warmer-short-circuit-sparks-blaze-dozens-of-babies-evacuated-safely#comments</comments><guid isPermaLink="false">147ce48f-def8-4eda-9ca3-63957b7a3f22</guid><pubDate>Sat, 22 Aug 2026 17:17:55 +0000</pubDate><atom:updated>2026-08-22T17:17:55.501Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>fire accident,அரசு மருத்துவமனை,Government Hospital,Madhya Pradesh,தீவிபத்து,மத்தியப் பிரதேசம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/jt8w8bit/tn-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ம.பி. மருத்துவமனை தீ விபத்து ]]></media:title><media:description type="html"><![CDATA[ ம.பி. மருத்துவமனை தீ விபத்து ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/jt8w8bit/tn-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/madhya-pradesh">மத்தியப் பிரதேசத்தில்</a> அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81"> தீவிபத்தில் </a>பச்சிளம் குழந்தை பலியான சம்பவம் அரங்கேறியுள்ளது. </p><h2>அரசு மருத்துவமனை</h2><p>மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்ட அரசு மருத்துவமனையி இன்று அதிகாலை 1:50 மணியளவில் இந்த தீ விபத்து நிகழ்ந்தது.  </p><p>புதிதாக பிறக்கும் குறைந்த எடையுள்ள மற்றும் குறைபிரசவத்தில் பிறந்த குழந்தைகளின் உடல் வெப்பநிலையைப் பராமரிக்கப் பயன்படும் Cradle Warmer இயந்திரத்தில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாகத் தீப்பொறி உருவானதாகக் கூறப்படுகிறது.  </p><h2>தீ பரவல்</h2><p>வார்மர் இயந்திரத்தில் பற்றி எரிந்த தீ, அங்கிருந்த படுக்கை விரிப்புகளுக்கும் பரவியது.</p><p>தீ பரவுவதைக் கண்டவுடன் அங்குப் பணியிலிருந்த ஊழியர்கள், எரியும் வார்மர் இயந்திரத்தை மற்ற குழந்தைகளிடமிருந்து தள்ளி நகர்த்தினர்.</p><p>அதே பிரிவில் சிகிச்சையில் இருந்த 33 குழந்தைகளும், அருகிலுள்ள வெளிப்புறப் பிரிவில் இருந்த 30 குழந்தைகளும் பத்திரமாக வேறு வார்டுகளுக்கு மாற்றப்பட்டனர்.</p><p>மேலும், தீ மேல் தளத்திலிருந்த மகப்பேறு வார்டுக்குப் பரவாமலும் தடுக்கப்பட்டது.</p><p>இருப்பினும் தீ விபத்து ஏற்பட்ட பிரிவில் ஆக்சிஜன் உதவியுடன் இருந்த 3 குழந்தைகள் தீக்காயமடைந்துள்ளன.</p> <h2>உயிரிழப்பு</h2><p>காயமடைந்த 3 குழந்தைகளும் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் ஜபல்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேற்சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர்.</p><p>அங்கு சிகிச்சையில் இருந்த ஒரு குழந்தை உயிரிழந்தது. எனினும், குழந்தையின் உடற்கூறாய்வு அறிக்கையில் அக்குழந்தை தீக்காயங்களால் இறக்கவில்லை என்றும், பிறப்பிலேயே இருந்த தீவிர சுவாசக் கோளாறு பிரச்சனையாலேயே உயிரிழந்தது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>லேசான தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட மற்ற இரு குழந்தைகள் தற்போது சீரான உடல்நிலையுடன் உள்ளனர்.</p> <h2>விசாரணை</h2><p>இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. </p><p>இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மத்தியப் பிரதேச சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் உமங் சிங்கார், மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் உடனடியாக தீவிபத்தை தடுக்கும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை தணிக்கை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>உலக கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் இந்தியா 1-3 எனத் தோல்வியடைந்தது இந்தியா</title><link>https://www.maalaimalar.com/sports/india-stare-at-world-cup-exit-after-loss-to-netherlands</link><comments>https://www.maalaimalar.com/sports/india-stare-at-world-cup-exit-after-loss-to-netherlands#comments</comments><guid isPermaLink="false">2f2447d0-da91-4cd4-a42f-d22852e340c2</guid><pubDate>Sat, 22 Aug 2026 16:34:12 +0000</pubDate><atom:updated>2026-08-22T16:34:12.898Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உலக கோப்பை ஹாக்கி,World cup Hockey</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/xbq5nqcl/HockeyIndia.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஹாக்கி இந்தியா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/xbq5nqcl/HockeyIndia.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலக கோப்பை ஹாக்கி தொடர் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஸ்டேஜ் 2-ல் E பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா நெதர்லாந்தை எதிர்கொண்டது. இதில் இந்தியா 1-3 என தோல்வியடைந்தது. இந்த தோல்வியின் மூலம் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்புக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது.</p><p>60 நிமிடங்கள் ஆட்டம் 4 பகுதியாக பிரிக்கப்படடு போட்டி நடத்தப்பட்டது. முதல் இரண்டு கால் பகுதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 3-வது கால் பகுதி ஆட்டத்தில் நெதர்லாந்து அணி முதல் கோலை அடித்தது. 41-வது நிமிடத்தில் டெல்ஜென்காம்ப் அந்த கோலை அடித்தார். கடைசி கால் பகுதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சித்தினர்.</p><p>51-வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் ஹோயிடேமேக்கர்ஸ் கோல் அடித்தார். 52-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி இந்திய வீரர் ஹர்மன்ப்ரீத் கோல் அடித்தர். என்றாலும் 55-வது நிமிடத்தில் நெதர்லாந்தின் மற்றொரு வீரர் திஜ்ஸ் வான் டாம் கோல் அடித்தார்.</p><p>இதனால் இந்தியா 1-3 எனத் தோல்வியடைந்தார். ஏற்கனவே இங்கிலாந்திடம் இந்தியா தோல்வியடைந்துள்ளது. கடைசியாக அர்ஜென்டினாவை எதிர்கொள்ள இருக்கிறது. இதில் வெற்றி பெற்றால் ஒருவேளை அரையிறுதி வாய்ப்பை எதிர்பார்க்கலாம்.</p>]]></content:encoded></item><item><title>பெண்கள் குறித்த மனுஸ்மிருதியின் விதிமுறை வெட்கக்கேடானது- ராகுல் காந்தி</title><link>https://www.maalaimalar.com/news/national/women-are-not-owned-by-husbands-or-sons-rahul-gandhi-on-manusmriti</link><comments>https://www.maalaimalar.com/news/national/women-are-not-owned-by-husbands-or-sons-rahul-gandhi-on-manusmriti#comments</comments><guid isPermaLink="false">7c0749ae-c81e-4872-a3d5-9169de0ca044</guid><pubDate>Sat, 22 Aug 2026 16:33:17 +0000</pubDate><atom:updated>2026-08-22T16:33:17.692Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Congress,காங்கிரஸ்,மனுஸ்மிருதி,manusmriti</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/kt3x6te8/Untitled-design-4.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rahul Gandhi slams Manusmriti’s control over women]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/kt3x6te8/Untitled-design-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெண்கள் தங்களுக்கு தாங்களே சொந்தமானவர்கள் என்றும் தங்கள் தந்தைக்கோ, கணவனுக்கோ அல்லது மகன்களுக்கோ சொந்தமானவர்கள் கிடையாது என்று <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி</a> கூறினார். </p><p>மேலும், ஒரு பெண் தன் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஆண் உறவினர்களின் அதிகாரத்தின் கீழ் இருக்க வேண்டும் என்ற மனுஸ்மிருதியின் விதிமுறை வெட்கக்கேடானது என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p>மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் நலத் திட்டமான 'சத்ரோன் கி கூஞ்ச்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களவை எதிர் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.</p><p>அப்போது அவர் கூறுகையில், “இந்தியப் பெண்களின் 70 கோடி தனித்துவமான பயணங்கள், தனித்துவமான கற்பனைத்திறன், தனித்துவமான கனவுகள் தான் இந்தியாவின் மிகப்பெரிய பலமாக உள்ளது.</p><p>குழந்தைப் பருவத்தில் ஒரு பெண் தன் தந்தைக்கு கட்டுப்பட்டிருக்க வேண்டும், இளமைப் பருவத்தில் அவள் தன் கணவனுக்குச் சொந்தமானவள், அவளது கணவன் இறந்த பிறகு, அவள் தன் மகன்களுக்குச் சொந்தமானவள் என்று மனுஸ்மிருதி தெளிவாகக் கூறுகிறது.</p><p>ஒரு பெண் ஒருபோதும் சுதந்திரமாக இருக்கக்கூடாது. இந்த வார்த்தைகள் வெட்கக்கேடானவை. இந்த வார்த்தைகள் பேசப்பட்டிருக்கவே கூடாது.</p><p>நீங்கள் உங்களைத் தவிர வேறு யாருக்கும் சொந்தமானவர் அல்ல. உங்கள் தந்தை, சகோதரர், கணவர், மகன் ஆகியோருடன் உங்களுக்கு உறவு இருக்கலாம், ஆனால் நீங்கள் அவர்களுக்கு சொந்தமானவர் அல்ல, நீங்கள் உங்களுக்கு மட்டுமே சொந்தமானவர்.</p><p>நான் சொற்பொழிவாற்றவோ அல்லது அரசியல் விவாதிக்கவோ இங்கு வரவில்லை; மாறாக, இளைஞர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவும், கருத்துக்களைக் கலந்துரையாடவும் ஒரு வாய்ப்பை வழங்குவதற்காகவே வந்துள்ளேன்.</p><p>கூண்டைத் தகர்த்தெறியுங்கள் என்ற கூட்டத்தில் பேச எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பெண்களாகிய நீங்கள் தனித்துவமானவர், நீங்கள் சிறப்பானவர், நீங்கள் ஒரு தனிநபர், மேலும் உங்களுக்கென சொந்தக் கனவும் தொலைநோக்குப் பார்வையும் உண்டு.</p><p>பெண்கள் இயல்பாகவே ஆண்களை விட அதிக உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள், மென்மையானவர்கள், கருணையுள்ளவர்கள் மற்றும் முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள் என்பதே எனது வாதம்.</p><p>பெண்கள் பெரும்பாலும் மகள், மனைவி அல்லது தாய் என்ற மூன்று அடையாளங்களுக்குள் முடக்கப்பட்டனர்; இந்த உறவுகளில் தவறொன்றுமில்லை என்றாலும், இவை மட்டுமே அவர்களின் ஒரே அடையாளமாக இருக்க முடியாது.</p><p>பெண்கள் தொழில் வல்லுநர்களாகவும் விளையாட்டு வீராங்கனைகளாகவும் பல்வேறு துறைகளில் தீவிரமாகச் செயல்பட்டாலும், அவர்களின் அடையாளங்கள் பெரும்பாலும் ஆண்களுடனான உறவுகளின் மூலமே வரையறுக்கப்படுகின்றன” என்று ராகுல் காந்தி கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>30 நிமிடங்கள் பாடும் கிப்பன் குரங்கு - உலகின் அழிந்து வரும் இனத்தை பாதுகாக்கும் அமெரிக்க ஆர்வலர்</title><link>https://www.maalaimalar.com/news/world/endangered-gibbons-singing-for-30-minutes</link><comments>https://www.maalaimalar.com/news/world/endangered-gibbons-singing-for-30-minutes#comments</comments><guid isPermaLink="false">15c6e63c-b0b9-42f8-8aaf-bf0c3b38b1f4</guid><pubDate>Sat, 22 Aug 2026 16:11:27 +0000</pubDate><atom:updated>2026-08-22T16:11:27.603Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Los Angeles,லாஸ் ஏஞ்சல்ஸ்,gibbon,monkey species,கிப்பன்,குரங்கு இனம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/8n9h4ds0/Untitled-design-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கிப்பன் குரங்குகள்]]></media:title><media:description type="html"><![CDATA[ Gibbon conservation in US]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/8n9h4ds0/Untitled-design-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அருகில் உள்ள சாண்டா கிளாரிடா பள்ளத்தாக்கில் குரங்கு இனத்தை சேர்ந்த கிப்பன்கள் ஒவ்வொரு முறையும் 20 முதல் 30 நிமிடங்கள் வரை பாடுவதாக கிப்பன் பாதுகாப்பு மையத்தின் இயக்குநர் காபி ஸ்கோல்லர் கூறினார்.</p><h3><strong>கிப்பன் பாதுகாப்பு மையம்</strong></h3><p>அமெரிக்காவில் உள்ள கிப்பன் பாதுகாப்பு மையத்தில் ஐந்து இனங்களை சேர்ந்த சுமார் 40 கிப்பன் குரங்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த பாதுகாப்பு மையம் ஆலன் மூட்னிக் என்பவரால் நிறுவப்பட்டது. 2011-இல் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட மூட்னிக் மரணமடைந்தார்.</p><p>இதையடுத்து இந்த கிப்பன் பாதுகாப்பு மையம் தற்போது இயக்குநர் காபி ஸ்கோல்லர் என்பவரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.</p><p>இந்த வகை கிப்பன் குரங்குகள் தனித்துவமான குணாதிசயங்கள் மற்றும் விசித்திரமான பழக்கவழக்கங்கள் நிறைந்தவையாக உள்ளன. பெப்பர் என்ற இளம் வடக்கு வெள்ளைக் கன்னங்கள் கொண்ட கிப்பன், குழுவின் பாடலைத் தொடங்க எப்போதும் தலைமை தாங்குகிறது.</p><p>மேலும் வயலட் என்ற கொண்டை கிப்பன் தனது கூட்டாளியான ட்ரூமனுடன் சேர்ந்து பல்லவியை முடிக்கிறது. மீட்கப்பட்ட கிப்பனான பியருக்கு ஆண்களைப் பிடிக்காது. அந்தச் சிறிய குரங்குகள் ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு முறை, ஒவ்வொரு முறையும் 20 முதல் 30 நிமிடங்கள் வரை பாடுகின்றன.</p><p>தென்கிழக்கு ஆசியாவின் வெப்பமண்டல மழைக்காடுகளில் கிப்பன்கள் வழக்கமாகக் காணப்படும் இடங்களில், அவற்றின் வாழ்விடங்கள் அழிக்கப்படுவதால் பெருகிவரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன.</p><p>வனவிலங்கு வர்த்தகமும் ஒரு அச்சுறுத்தலாக உள்ளது; கிப்பன்கள் குட்டிகளாக இருக்கும்போதே அவற்றின் பெற்றோரிடமிருந்து பிடிக்கப்பட்டு செல்லப்பிராணிகளாக விற்கப்படுகின்றன.</p><p>இந்தோனேசியாவின் ஜாவா தீவில் மட்டுமே காணப்படும், அழிந்துவரும் இனமான ஜாவா கிப்பன்களை வெற்றிகரமாக இனப்பெருக்கம் செய்த முதல் மையம் இதுவாக உள்ளது.</p><p>மையத்தில் பிறந்த பிறகு ராக்கியின் தாய் அந்த குட்டி கிப்பன் குரங்கை கைவிட்டு சென்றது. கடினமான பிரசவத்தைச் சந்தித்த முதல் முறை சந்திப்பதால் தாய்மார்களுக்கு இதுபோல நிகழ வாய்ப்புள்ளதாக விலங்கியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p>இந்த நிலையில் கிப்பன் குரங்கு இனத்தை குறித்து அவர் கூறுகையில், “ஜாவான்கள், அவை எனக்கு மிகவும் பிடித்த இனம், மேலும் அந்த ஆண் ஜாவான் பாடுவது, எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.</p><p>ஜாவானிய நாட்டுப்புறக் கதைகளில், அவை காடுகளில் வாழும் ஆவிகள் என்று அறியப்படுகின்றன, ஏனென்றால் அவற்றின் குரலை எப்போதுமே கேட்க முடியும்.</p><p>கிப்பன்களுக்குப் பெரிய அடைப்பிடங்களைக் கட்டுவதற்கும், பார்வையாளர்களுக்காக ஒரு கல்வி மையத்தை அமைப்பதற்கும் அதிகப் பணம் திரட்டுவதே எனது நீண்டகால இலக்காக உள்ளது.</p><p>மூட்னிக்கின் மரபைப் போற்றுவதைத் தொடரவும், அவரது பெயரால் அழைக்கப்படும் ஒரு கிப்பன் உட்பட, அவற்றுக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணிக்கவும் நான் விரும்புகிறேன்.</p><p>அவர் காலமானபோது, ​​அவர் நம்முடன் இருந்து, இந்த மையத்தைத் தொடர்ந்து நடத்த எங்களுக்கு உதவுகிறார் என்று நான் உணர்ந்தேன்," என்று ஸ்கோல்லர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>விதிமுறை மீறல் வழக்கு: அமெரிக்காவுக்கு ரூ.4000 கோடி செலுத்த ஒப்புக்கொண்ட டிக்டாக்</title><link>https://www.maalaimalar.com/news/world/tiktok-agrees-to-pay-rs-4000-crore-fine-to-us</link><comments>https://www.maalaimalar.com/news/world/tiktok-agrees-to-pay-rs-4000-crore-fine-to-us#comments</comments><guid isPermaLink="false">6a7efd7b-8d73-45d4-a60b-02bf9b6bbe73</guid><pubDate>Sat, 22 Aug 2026 15:17:27 +0000</pubDate><atom:updated>2026-08-22T15:17:27.993Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிக்டாக்,TikTok,musically,byte dance,மியூசிக்கலி,பைட் டான்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/jsl1c7tq/Untitled-design-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டிக்டாக் ]]></media:title><media:description type="html"><![CDATA[ TikTok Fine]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/jsl1c7tq/Untitled-design-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவில் குழந்தைகளின் தனிப்பட்ட தகவல்களை சட்டவிரோதமாக சேகரித்து விதிமுறைகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், டிக்டாக் மற்றும் அதன் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் (byte dance) சுமார் 4,000 கோடி ரூபாய் (400 மில்லியன் டாலர்) தொகையை அபராதமாக செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது.</p><h3><strong>டிக்டாக் நிறுவனம்</strong></h3><p>அமெரிக்காவில் உள்ள குழந்தைகளின் தனிப்பட்ட தகவல்களை சட்டவிரோதமாக சேகரித்ததாகவும், 13 வயதுக்குட்பட்ட பயனர்களிடமிருந்து பெற்றோரின் ஒப்புதலை பெறுவதற்கான விதிமுறைகளை மீறியதாகவும் 2024-ம் ஆண்டு டிக்டாக் மற்றும் பைட்டான்ஸ் மீது நீதித்துறை வழக்குத் தொடர்ந்திருந்தது.</p><p>13 வயதுக்குட்பட்ட பயனர்களுடைய கணக்குகள் என்பது நிறுவனத்திற்கு தெரிந்திருந்தும், குழந்தைகளின் கணக்குகளை நீக்குமாறு பெற்றோர்கள் விடுத்த கோரிக்கைகளை டிக்டாக் மதிக்கத் தவறியதாகவும் அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது.</p><p>அமெரிக்க நீதித்துறை தனது புகாரைத் தாக்கல் செய்ததிலிருந்து, டிக்டாக்கின் அமெரிக்க உரிமையாளர் அமைப்பு மற்றும் தனியுரிமை நடைமுறைகள் உள்ளிட்டவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.</p><p>டிக்டாக் செயலிக்கு அமெரிக்கா விதித்த தடையை தவிர்ப்பதற்காக, ஆரக்கிள், சில்வர் லேக் மற்றும் ஐக்கிய அரபு அமீரக முதலீட்டு நிறுவனமான எம்ஜிஎக்ஸ் உள்ளிட்ட முதலீட்டாளர்களை உள்ளடக்கிய, பெரும்பான்மையாக அமெரிக்கர்களுக்கு சொந்தமான டிக்டாக் அமெரிக்க கூட்டு நிறுவனத்தை நிறுவ பைட்டான்ஸ் நிறுவனம் ஒப்புக்கொண்டது.</p><h3><strong>அமெரிக்க நீதிமன்றம்</strong></h3><p>டிக்டாக் அமெரிக்கக் கூட்டு நிறுவனம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “பயனர்கள் தளத்தை அணுகுவதற்கு பயனர்கள் தங்கள் பிறந்த தேதியை உள்ளிட வேண்டும்.</p><p>மேலும், தங்கள் வயதை தவறாகக் குறிப்பிடும் 13 வயதுக்குட்பட்ட பயனர்களைக் கண்டறிய டிக்டாக் வயது சரிபார்ப்பு அமைப்புகளை உருவாக்கியுள்ளது” என்று அது கூறியது.</p><p>இதையடுத்து குழந்தைகள் தனியுரிமைச் சட்டங்களை மீறியதாகக் குற்றம் சாட்டி அமெரிக்க நீதித்துறை தொடுத்த வழக்கை முடிவுக்குக் கொண்டுவர, டிக்டாக் மற்றும் அதன் சீனத் தாய் நிறுவனமான பைட் டான்ஸ், 400 மில்லியன் டாலர் தொகையைச் செலுத்த ஒப்புக்கொண்டது.</p><p>இந்தத் தீர்வு குழந்தைகள் இணைய தனியுரிமைப் பாதுகாப்புச் சட்டத்தின் (கோப்பா) கீழ் பெறப்பட்ட மிகப்பெரிய மீட்புத் தொகைகளில் ஒன்றாகும்.</p><p>இந்த ஒப்பந்தத்தின்படி டிக்டாக் உடனடியாக 300 மில்லியன் டாலரையும், அதன் முன்னோடியான மியூசிக்கலி சம்பந்தப்பட்ட முந்தைய ஒப்புதல் ஆணையை ரத்து செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு, மேலும் 100 மில்லியன் டாலரையும் செலுத்தும் என்று நீதித்துறை தெரிவித்துள்ளது.</p><p>இந்த நிலையில் இந்த தீர்வு, அமெரிக்க குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் கிடைத்த ஒரு மாபெரும் வெற்றியாகும் என்று அமெரிக்காவின் துணை தலைமை வழக்கறிஞர் ஸ்டான்லி இ. உட்வார்ட் ஜூனியர் கூறினார்.</p><p>மேலும் அவர், “இணையத்தில் குழந்தைகள் பாதுகாக்கப்படுவதையும், அவர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஒப்படைக்கப்பட்ட நிறுவனங்கள் தங்களின் சட்டப்பூர்வ கடமைகளை நிறைவேற்றுவதையும் உறுதி செய்வதே துறையின் முன்னுரிமையாகும்.</p><p>இந்தத் தீர்வு குடும்பங்கள் எதிர்பார்க்கும் மற்றும் தகுதியான பாதுகாப்புகளை வலுப்படுத்துவதோடு கணிசமான இழப்பீட்டையும் உறுதி செய்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p>கோப்பா (COPPA) மற்றும் அதன் அமலாக்க விதிமுறைகளுக்கு இணங்குவது தொடர்பான வழக்குகளுக்கு இந்த தீர்வு முற்றுப்புள்ளி வைப்பதாக நீதித்துறை தெரிவித்துள்ளது.</p><p>மேலும், இந்த ஒப்பந்தம் நீடித்த வழக்கு நடவடிக்கைகளால் ஏற்படும் தாமதம் மற்றும் நிச்சயமற்ற தன்மையை தவிர்க்கும் என்றும் நீதித்துறை கூறியுள்ளது.</p><h3><strong>2019இல் அபராதம் செலுத்திய மியூசிக்கலி</strong></h3><p>இந்தத் தீர்வு முன்னதாக மியூசிக்கலி (Musically) சம்பந்தப்பட்ட 2019 ஆம் ஆண்டின் ஃபெடரல் டிரேட் கமிஷன் (FTC) ஒப்புதல் ஆணை தொடர்பாகவும் அமைந்துள்ளது.</p><p>சிறு குழந்தைகள் இந்த செயலியைப் பயன்படுத்துவதை அந்த தளம் அறிந்திருந்தும், அவர்களின் பெயர்கள், மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் பிற தனிப்பட்ட தகவல்களைச் சேகரிப்பதற்கு முன்பு பெற்றோரின் ஒப்புதலைப் பெறத் தவறிவிட்டது என்று FTC குற்றம் சாட்டியிருந்தது. இதையடுத்து மியூசிக்கலி அந்த நேரத்தில் 5.7 மில்லியன் டாலர் அபராதம் செலுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட 53 வயது யானைக்கு வந்தாராவில் சிறப்பு சிகிச்சை: விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது</title><link>https://www.maalaimalar.com/news/national/flood-rescued-elephant-joymoti-airlifted-to-vantara-for-specialised-treatment</link><comments>https://www.maalaimalar.com/news/national/flood-rescued-elephant-joymoti-airlifted-to-vantara-for-specialised-treatment#comments</comments><guid isPermaLink="false">17fd6b82-3ba2-454d-8caf-96d74be59be1</guid><pubDate>Sat, 22 Aug 2026 15:08:17 +0000</pubDate><atom:updated>2026-08-22T15:08:17.622Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Assam Flood,அசாம் வெள்ளம்,Vantara,வந்தாரா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/uxiurava/Elephant001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ யானை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/uxiurava/Elephant001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாகலாந்து மற்றும் அசாமில் கடந்த மாதம் 2-வது வாரத்தில் கனமழை பெய்தது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளத்தில் 53 வயதான பெண் யானை (ஜோய்மோதி) அடித்துச் செல்லப்பட்டது. நாகலாந்து அதிகாரிகள் உள்ளூர் மக்கள் உதவியுடன் இந்த யானையை மீட்டனர்.</p><h2>காயத்துடன் அவதிப்பட்ட யானை</h2><p>ஆனால் யானையின் உடம்பில் பெரும்பாலான இடங்களில் காயம் ஏற்பட்டிருந்தது. ஒரு கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டு கண்ணீர் வடிந்த வண்ணம் உள்ளது. உள்ளூர் பகுதியில் கால்நடை மருத்துவர்கள் காயங்களுக்கு மருந்து வைத்து கட்டினார்கள். என்றாலும், நீண்ட நேரம் நிற்க முடியாமல் ஜோய்மோதி அவதிப்பட்டது. மேலும், சரியாக உணவு சாப்பிட முடியாமல் கஷ்டப்பட்டது.</p><p>இதனால் குஜராத் மாநிலம் ஜாம் நகரில் உள்ள அம்பானியின் வந்தாராவுக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. சாலை வழியாக கொண்டு செல்லப்பட்டால் நீண்ட நேரம் ஆகும் என்பதால் வான்வழியாக வந்தாரா கொண்டு செல்லப்பட்டுள்ளது.</p><h2>வந்தாரா</h2><p>வந்தாரா ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஆனந்த் அம்பானி மூலம் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் தொடங்கப்பட்ட ஒரு பெரிய வனவிலங்கு பாதுகாப்பு, மீட்பு மற்றும் மறுவாழ்வு மையமாகும். காயம்பட்ட, துஷ்பிரயோகம் செய்யப்பட்ட மற்றும் ஆபத்தில் உள்ள விலங்குகளுக்கு இது அடைக்கலம் அளிக்கிறது.</p><p>வனவிலங்குகளுக்கான அவசர சிகிச்சையில் உள்ளூர் திறனை வலுப்படுத்தும் நோக்கில், அசாமில் மூன்று வனவிலங்கு கால்நடை மருத்துவப் பராமரிப்பு மையங்களை (அதில் ஒன்று யானைகளுக்கென பிரத்யேகமாக அமைக்கப்படவுள்ளது) நிறுவ 'வந்தாரா' (Vantara) முன்மொழிந்துள்ளது. இத்திட்டத்தின்படி, இந்த மையங்கள் அந்தந்த விலங்கினங்களுக்கு ஏற்ற உள்கட்டமைப்பு மற்றும் கால்நடை மருத்துவ வசதிகளைக் கொண்டிருக்கும்; மேலும் இவை அசாம் வனத்துறையால் தன்னாட்சி முறையில் இயக்கப்படும்.</p><p>அசாமில் உள்ள யானைகள் மற்றும் பிற வனவிலங்குகளுக்கு, அவசரநிலை ஏற்படும் இடங்களுக்கு அருகிலேயே சிறப்பு மருத்துவ சிகிச்சையை வழங்குவதே இம்மையங்களை அமைப்பதன் நோக்கமாகும்; இதன் மூலம் விலங்குகளை நீண்ட தூரம் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் குறையும்.</p>]]></content:encoded></item><item><title>டெஸ்டில் 441 விக்கெட்: ஸ்டெயின் சாதனையை முறியடித்தார் ஸ்டார்க்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/mitchell-starc-has-moved-past-dale-steyn-in-the-test-wickets-tally</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/mitchell-starc-has-moved-past-dale-steyn-in-the-test-wickets-tally#comments</comments><guid isPermaLink="false">46fb05dc-6de4-45d4-a41f-cf6c36e3c3a5</guid><pubDate>Sat, 22 Aug 2026 14:52:36 +0000</pubDate><atom:updated>2026-08-22T14:52:36.101Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Mitchel Starc,மிட்செல் ஸ்டார்க்,Dale Steyn,டேல் ஸ்டெயின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/i0n8ys4o/starc1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ mitchell starc]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/i0n8ys4o/starc1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வங்கதேச அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்டில் வங்கதேச அணி அபார வெற்றி பெற்றது.</p><p>இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் மெக்காய் நகரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பவுலிங் தேர்வு செய்தது.</p><p>அதன்படி, முதலில் ஆடிய வங்கதேசம் முதல் இன்னிங்சில் 64 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.</p><h2>ஸ்டார்க் 6 விக்கெட்</h2><p>ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்து வீசிய மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட் வீழ்த்தினார்.</p><p>தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 165 ரன்களை எடுத்துள்ளது.</p><h2>ஷோரிபுல் இஸ்லாம் 6 விக்கெட்</h2><p>வங்கதேசம் சார்பில் ஷோரிபுல் இஸ்லாம் 6 விக்கெட் வீழ்த்தினார். </p><h2>டாப் 10-ல் நுழைந்த ஸ்டார்க்</h2><p>இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிராக சிறப்பாக பந்து வீசிய ஸ்டார்க் 6 விக்கெட் வீழ்த்தினார். அவர் 107 டெஸ்டுகளில் விளையாடி 441 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். இதன்மூலம் மிட்செல் ஸ்டார்க், ஸ்டெயின் சாதனையை முறியடித்துள்ளார். </p><p>டேல் ஸ்டெயின் 93 டெஸ்டில் விளையாடி 439 விக்கெட் எடுத்து 11-வது இடத்தில் உள்ளார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் 10-வது இடத்தை ஸ்டார்க் பிடித்துள்ளார்.</p><p>ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் வார்னே 708 விக்கெட்டுடன் முதல் இடத்திலும், நாதன் லயன் 567 விக்கெட்டுடன் 2வது இடத்திலும், மெக்ராத் 563 விக்கெட்டுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.</p><p>இந்த வரிசையில் 441 விக்கெட்டுகளுடன் மிட்செல் ஸ்டார்க் 4-வது இடத்தில் உள்ளார். </p><p>உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களில் மிட்செல் ஸ்டார்க் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் 56 டெஸ்ட்களில் 230 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>கம்யூனிஸ்டுகள் ஆதரவில் தான் தற்போதைய ஆட்சி நடக்கிறது - சிபிஎம் சண்முகம் ஆவேசம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/current-tamil-nadu-government-runs-on-communist-support-says-cpm-shanmugam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/current-tamil-nadu-government-runs-on-communist-support-says-cpm-shanmugam#comments</comments><guid isPermaLink="false">12707b5b-56fc-4b61-ada6-41c414624a73</guid><pubDate>Sat, 22 Aug 2026 14:39:03 +0000</pubDate><atom:updated>2026-08-22T14:39:03.242Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>CPM,Communist protest,P. Shanmugam,பெ.சண்முகம்,சிபிஎம்,Chief Secretary Saikumar IAS,தலைமை செயலாளர் சாய்குமார்,Saidapet Protest</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/zrttdfqq/CPI-Shanmugam" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Shanmugam ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/zrttdfqq/CPI-Shanmugam?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>"தற்போதைய தமிழ்நாடு அரசு அமைவதற்கும், அது தொடர்ந்து நீடிப்பதற்கும்<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF"> மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி</a> தான் ஆதரவு கொடுத்துள்ளது. இந்த அரசியல் அடிப்படை கூட தெரியாமல் இடதுசாரி மாணவர் அமைப்புகளுக்கு எதிராகச் சுற்றறிக்கை அனுப்பிய தலைமைச் செயலாளர் மற்றும் வட்டாட்சியர் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என சிபிஎம் மாநிலச் செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/p-shanmugam">பெ. சண்முகம்</a> ஆவேசமாக முழங்கினார்.</p><p>தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் எம். சாய்குமார் ஐஏஎஸ் அவர்களின் சித்தாந்த சாய்மானத்தைக் கண்டித்தும், அவரைப் பதவியிலிருந்து உடனடியாக நீக்க வலியுறுத்தியும் சென்னை சைதாப்பேட்டையில் இன்று <a href="https://www.maalaimalar.com/topic/cpim">சிபிஎம் </a>சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p><h2>இந்த ஆர்ப்பாட்டத்தில் பெ.சண்முகம் கூறியிருப்பதாவது:</h2><p>நாங்கள் என்ன தடை செய்யப்பட்ட அமைப்பா?</p><p>ஆர்ப்பாட்டத்தில் பேசிய சண்முகம், "அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மாணவர் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அப்படி இருக்கும்போது, இடதுசாரி மற்றும் கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்புகளை மட்டும் குறிவைத்து சுற்றறிக்கையில் முடக்க நினைப்பது ஏன்? நாங்கள் ஒன்றும் ஜனநாயகத்திற்கு விரோதமான அமைப்போ அல்லது தடை செய்யப்பட்ட அமைப்போ அல்ல. </p><p>கம்யூனிஸ்ட் கட்சிகள் சுதந்திரத்திற்கு முன்பும், தற்போதும் பல்வேறு தடைகளைச் சந்தித்த வரலாறு கொண்டது. அதிகாரிகளுக்கு உத்தரவு போடத் தெரியும் என்றால், அதை மதிக்க வேண்டுமா அல்லது மிதிக்க வேண்டுமா என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம். </p><p>அதிகாரிகள் முதலில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றைப் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்" என்று எச்சரித்தார்.</p><h2>"மிரட்டுவது காவல்துறை... பொதுநலனுக்காகப் போராடுவது மாணவர்கள்!"</h2><p>ஜனநாயகத்திற்கு எதிராகச் செயல்படுவது மாணவர் அமைப்புகள் அல்ல, மாறாகக் காவல்துறையினர்தான் என்று சண்முகம் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். "எங்கள் மாணவர்கள் பொதுநலன் கருதி, மாணவர்களின் நலனுக்காக மட்டுமே போராட்டங்களை நடத்துகிறார்கள். </p><p>அதைத் தடுப்பதற்கு அதிகாரிகளுக்கு எந்த உரிமையும், அதிகாரமும் இல்லை. சட்டமன்றத்தில் உண்மைக்கு மாறாக அமைச்சர் செங்கோட்டையன் சொல்வது உண்மையா அல்லது மாவட்ட ஆட்சித் தலைவர் சொல்வது உண்மையா என்பதை அரசு தெளிவுபடுத்தி, பொய் சொல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.</p><h2>தேர்தல் ஆணையம் நியமித்த சாய்குமாரை உடனே நீக்குங்கள்!</h2><p>தலைமைச் செயலாளர் எம். சாய்குமார் ஐஏஎஸ் இந்த அரசால் நேரடியாக இங்கு நியமிக்கப்பட்டவர் அல்ல, அவர் தேர்தல் ஆணையத்தின் மூலம் நியமிக்கப்பட்டவர் என்பதைச் சுட்டிக்காட்டிய சண்முகம், "உயர் கல்வித்துறை ஆணையருக்கு விளக்கம் கேட்டு நேற்று மாலை நோட்டீஸ் அனுப்பிய அரசு, அதேபோல் தலைமைச் செயலாளர் சாய்குமாருக்கும் முறைப்படி நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க வேண்டும். </p><p>நீங்கள் யாரை வேண்டுமானாலும் புதிய தலைமைச் செயலாளராகக் கொண்டு வாருங்கள், ஆனால் சாய்குமார் அந்தப் பதவியில் நீடிக்கக் கூடாது என்பது மட்டுமே எங்களின் ஒற்றை இலக்கு" என்றார்.</p><h2>முழுமையாகத் திரும்பப் பெறப்படாத பல்கலைக்கழக சுற்றறிக்கை!</h2><p>தவறு செய்த குஜிலியம்பாறை வட்டாட்சியர் மற்றும் தலைமைச் செயலாளரின் வாய்மொழி உத்தரவைக் கேட்டு, உயர் கல்வித்துறை செயலாளர் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பிய சர்ச்சைக்குரிய சுற்றறிக்கை இன்னும் முழுமையாகத் திரும்பப் பெறப்படவில்லை என்று சண்முகம் குற்றம் சாட்டினார்.</p><p>"காவல்துறை கமிஷனர் போட்ட உத்தரவு மட்டுமே திரும்பப் பெறப்பட்டுள்ளது; மற்றபடி பல்கலைக்கழகங்களுக்குச் சென்ற சுற்றறிக்கைகள் அப்படியேதான் உள்ளன. அரசாங்கம் இதில் முழுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.</p><h2>யார் கையில் ஆட்சி? முதலமைச்சர் விஜய் பதில் சொல்ல வேண்டும்!</h2><p>மிக முக்கியமான அரசியல் கேள்வியாக, "தற்போது தமிழ்நாட்டில் அரசிடம் அதிகாரிகள் கட்டுப்பட்டு இருக்கிறார்களா? அல்லது அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு அரசு இயங்குகிறதா? இதற்கு மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்கள்தான் உரிய பதிலை அளிக்க வேண்டும்" என்று சண்முகம் வலியுறுத்தினார்.</p><p>மேலும், "இடதுசாரிகளின் ஆதரவோடு தான் இந்த அரசு நீடிக்கிறது. எனவே, இத்தகைய அதிகாரிகளை வைத்துக்கொண்டு நீங்கள் ஆட்சி நடத்தப்போகிறீர்களா அல்லது இடதுசாரிகளை வைத்து ஆட்சியைத் தொடரப்போகிறீர்களா? இந்த நிர்வாகக் குளறுபடிகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, இப்பிரச்சினை சுமுகமாகத் தீர்க்கப்பட வேண்டும்" என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.</p><p>மாணவர் போராட்டங்களுக்குத் தடை விதிக்கும் வகையில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கைக்குப் பல்வேறு தரப்பிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, காவல்துறை தரப்பில் உத்தரவுகள் வாபஸ் பெறப்பட்டாலும், பல்கலைக்கழக உத்தரவுகள் முழுமையாகத் திரும்பப் பெறப்படவில்லை எனக் கூறி சிபிஎம் தனது போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் முனைவர் எம்.சாய்குமாரின் சித்தாந்த சாய்மானம் அம்பலப்பட்டுள்ள நிலையில், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும், குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று <a href="https://x.com/hashtag/CPIM?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CPIM</a> சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற… <a href="https://t.co/T0VZSUXp99">pic.twitter.com/T0VZSUXp99</a></p>&mdash; Shanmugam P (@Shanmugamcpim) <a href="https://x.com/Shanmugamcpim/status/2091088457808646388?ref_src=twsrc%5Etfw">August 22, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>மார்க்கெட்டில் உலாவும் செயற்கை பனீர்: கர்நாடக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/karnataka-bans-sale-of-analogue-paneer-marketed-as-paneer-for-one-year</link><comments>https://www.maalaimalar.com/news/national/karnataka-bans-sale-of-analogue-paneer-marketed-as-paneer-for-one-year#comments</comments><guid isPermaLink="false">0ec7c8e3-896d-44ef-a1d9-447547e85b99</guid><pubDate>Sat, 22 Aug 2026 14:34:18 +0000</pubDate><atom:updated>2026-08-22T14:34:18.968Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Paneer,பனீர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/7c08kici/Paneer0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ செயற்கை பனீர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/7c08kici/Paneer0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>புரோட்டீன் மற்றும் கால்சியம் சத்து அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் பனீரை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனைப் பயன்படுத்தில் பால் அல்லாத தாவர எண்ணெய் போன்ற பொருட்களில் இருந்த போலியாக செயற்கை பனீர் சந்தைகளில் உலாவருகின்றன. இது பொதுமக்களில் சுகாதாரத்திற்கு பெரும் சவாலாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மகாராஷ்டிரா அரசு அனலாக பனீர் என அழைக்கப்படும் செயற்கை பனீருக்கு தடைவிதித்திருந்தது. அந்த வகைியல் தற்போது கர்நாடக அரசு ஒரு வருடம் தடைவிதித்துள்ளது.</p> <p>கர்நாடக அரசு உண்மையான பனீருக்கு மாற்றாக தயாரிக்கப்பட்டு பனீர் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் அனலாக் பனீர் அல்லது Non-Dairy Paneer தயாரிப்பு சேமிப்பு, விநியோகம் மற்றும் விற்பனைக்கு மாநிலம் முழுவதும் ஓராண்டு தடை விதித்துள்ளது. பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>கர்நாடக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, ஆகஸ்ட் 17-ம் தேதி வெளியிட்ட அரசு அறிவிப்பில் இந்தத் தடை குறிப்பிடப்பட்டுள்ளது. உற்பத்தி, பதப்படுத்துதல், பேக்கிங், சேமிப்பு, போக்குவரத்து, மொத்த மற்றும் சில்லறை விற்பனை, விற்பனைக்காகக் காட்சிப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை பொருந்தும்.</p><h2>போலி பனீர்</h2><p>பாலில் இருந்து தயாரிக்கப்படும் உண்மையான பனீரில் பால் கொழுப்பு மற்றும் பால் திடப்பொருட்கள் முக்கியமானவை. ஆனால், அனலாக் பனீரில் பால் கொழுப்புக்கு பதிலாக தாவர எண்ணெய், தாவர கொழுப்பு, மாவுச்சத்து, எமல்சிபையர்கள் மற்றும் பிற பால் அல்லாத பொருட்கள் பயன்படுத்தப்படலாம்.</p><p>உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய விதிகளின்படி, இத்தகைய தயாரிப்புகளை ‘பனீர்’ என்ற பெயரில் லேபிள் செய்வது (பொருட்கள் மீது விவரம் அடங்கிய அட்டை அல்லது அச்சிடுதல்), விளம்பரப்படுத்துவது அல்லது விற்பனை செய்வது அனுமதிக்கப்படாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>எனினும், FSSAI தனித்தனி தரநிலைகளை ஏற்கனவே நிர்ணயித்துள்ள Frozen Dessert, Processed Cheese, Mixed Fat Spread போன்ற தயாரிப்புகளுக்கு இந்தத் தடை பொருந்தாது.</p><p>மேலும், உணவுத் தயாரிப்புகளில் அனலாக் பனீரை மூலப்பொருளாகப் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறாமல் உணவு நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என கர்நாடக உணவு பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சீனாவில் நடைபெற்ற காதலர் தின ‘கிஷி திருவிழா’ - உற்சாகமாக கலந்துகொண்ட புதுமண தம்பதிகள்</title><link>https://www.maalaimalar.com/news/world/qixi-festival-in-china-lively-celebrations-by-newly-married-couples</link><comments>https://www.maalaimalar.com/news/world/qixi-festival-in-china-lively-celebrations-by-newly-married-couples#comments</comments><guid isPermaLink="false">e82bf8d8-cd41-46b3-96d3-b2b00b7afa31</guid><pubDate>Sat, 22 Aug 2026 14:27:34 +0000</pubDate><atom:updated>2026-08-22T14:27:34.315Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>China,சீனா,qixi festival,கிஷி திருவிழா,சீன காதலர் தினம்,china valentines day</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/kbyyriz1/Untitled-design-1.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சீன காதலர் தின கிஷி திருவிழா]]></media:title><media:description type="html"><![CDATA[ China Qixi Festival]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/kbyyriz1/Untitled-design-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சீனாவின் சந்திர நாட்காட்டியின்படி (Lunar calender) ஆகஸ்ட் 19 ஆம் தேதி ஏழாவது மாதத்தின் ஏழாவது நாளில் கிஷி திருவிழா (Qixi festival) கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழா பெரும்பாலும் சீனாவின் பாரம்பரிய காதலர் தினம் என்று அழைக்கப்பட்டு வருகிறது.</p><p>கிஷி என்பது பண்டைய சீனர்கள் நட்சத்திரங்களை உற்றுநோக்கியதில் இருந்து தொடங்கியது. காலப்போக்கில், இந்த விழா கால்நடைகளை பராமரிப்பவர் மற்றும் நெசவுப் பெண்ணின் காதல் கதையுடன் பிணைக்கப்பட்டது.  </p><p>இது, 'திறமைக்காக மன்றாடுதல்' என்று பொருள்படும் ' கிகியாவோ' போன்ற மரபுகளுக்கும் வழிவகுத்தது. முற்காலத்தில், பெண்கள் நிலவின் கீழ் ஊசிகளில் நூல் கோர்ப்பார்கள், கைத்திறனுக்காகப் பிரார்த்தனை செய்வார்கள்.</p><p>கியாகுவோ எனப்படும் நேர்த்தியான பலகாரங்களைச் செய்வார்கள், மேலும் நெசவுப் பெண்ணைக் கௌரவிப்பார்கள். இந்தப் பழக்கவழக்கங்களில் சில, இன்றும் சீனாவின் சில பகுதிகளில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.</p><h3><strong>சீன கிஷி திருவிழா</strong></h3><p>இதற்கிடையில், மக்கள் கிஷி பண்டிகையைக் கொண்டாடும் விதம் தொடர்ந்து மாறிவருகிறது. சீனப் பயணத் தளமான டோங்செங் டிராவல் வெளியிட்ட அறிக்கையின்படி, சாதாரண நாட்களுடன் ஒப்பிடுகையில், ஆகஸ்ட் 19 அன்று இரவு நேரக் காட்சி இடங்களுக்கான முன்பதிவுகள் 50 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.</p><p>படகுப் பயண முன்பதிவுகளும் 47 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளதாகவும், அதில் வாடிக்கையாளர்களில் 76 சதவீதம் பேர் தம்பதிகளாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.</p><p>பாரம்பரிய சடங்குகள் முதல் மாலை நேர படகு பயணங்கள் மற்றும் ஒளிக்காட்சிகள் வரை, கிஷி பண்டிகையானது பண்டைய பழக்கவழக்கங்களையும் அன்பை கொண்டாடும் நவீன வழிகளையும் ஒன்றிணைக்கிறது.</p><p>2026-இல் சீனா முழுவதும் மக்கள் கிஷி திருவிழாவை கொண்டாடும் விதமாக, ஆகஸ்ட் 19 அன்று சியான் நகரின் யோங்னிங் வாயிலுக்குக் கீழே நடைபெற்ற டாங் பாணி குழுத் திருமண விழாவில் ஐந்து புதுமணத் தம்பதிகள் பங்கேற்றனர்.</p><p>இந்த கிஷி திருவிழாவின் போது, குன்மிங்கின் ஷிலின் யி தன்னாட்சி மாவட்டத்தில் உள்ள கல் வனக் காட்சிப் பகுதியில் புதுமணத் தம்பதிகள் திருமண இனிப்புகளை வழங்கினர். </p><p>'அஷிமா' என்ற சீனத் திரைப்படத்தின் முக்கிய படப்பிடிப்புத் தளமான இந்த குறிப்பிட்ட இடத்தில் ஐம்பது தம்பதிகள் திருமணம் செய்துகொண்டனர்.</p><p>கிஷி திருவிழாவிற்கு ஒரு நாள் முன்னதாக, ஆகஸ்ட் 18 அன்று, குவாங்சி சுவாங் தன்னாட்சிப் பிராந்தியத்தின், நான்னிங், யோங்னிங் மாவட்டத்திலுள்ள மெங்லியன் கிராமத்தில், ஒரு கிராமவாசி தனது வீட்டிற்கு வெளியே கிஷி பண்டிகையை மையமாகக் கொண்ட அரிசி தானியக் கலைப்படைப்பைக் காட்சிப்படுத்துவது சடங்காக பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>டிஎன்பிஎல்: திருப்பூரை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது சேலம்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/salem-spartans-beat-tirupur-tamizhans-in-tnpl-2026</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/salem-spartans-beat-tirupur-tamizhans-in-tnpl-2026#comments</comments><guid isPermaLink="false">f1af0ed4-9b14-4821-b6ca-c14866081fb1</guid><pubDate>Sat, 22 Aug 2026 13:58:14 +0000</pubDate><atom:updated>2026-08-22T13:58:14.523Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,திருப்பூர் தமிழன்ஸ்,Salem Spartans,சேலம் ஸ்பர்டன்ஸ்,tirupur tamizhans</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/ih7nf297/salem.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ salem spartans]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/ih7nf297/salem.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூருக்கு எதிரான போட்டியில் 45 ரன் வித்தியாசத்தில் வென்ற சேலம் அணி நடப்பு தொடரில் ஆறுதல் வெற்றி பெற்றது.</p><p>10-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியின் 2வது கட்டம் சென்னையின் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது.</p><h2>திருப்பூர் தமிழன்ஸ்</h2><p>இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெற்ற 28-வது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பர்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சேலம் அணி பேட்டிங் தேர்வு செய்தது. </p><h2>கார்த்திக் மணிகண்டன் அரை சதம்</h2><p>அதன்படி, முதலில் ஆடிய சேலம் ஸ்பர்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்தது. பொறுப்புடன் ஆடிய கார்த்திக் மணிகண்டன் அரை சதமடித்தார். அவர் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பூபதிகுமார் 27 ரன்னிலும், அபிஷேக் 29 ரன்னில் ஆட்டமிழந்தனர்.</p><p>திருப்பூர் அணி சார்பில் மதிவண்ணன் 3 விக்கெட் வீழ்த்தினார்.</p><p>இதையடுத்து, 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்கியது.</p><h2>துஷார் ரஹேஜா அதிரடி</h2><p>தொடக்க ஆட்டக்காரரான துஷார் ரஹேஜா மட்டும் அதிரடியாக ஆடினார். அவர் 43 பந்துகளில் 5 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 75 ரன்கள் குவித்தார்.</p><p>அமித் சாத்விக், முகமது அலி ஆகியோர் இரட்டை இலக்கங்களை எட்டினர். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.</p><p>இறுதியில், திருப்பூர் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சேலம் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.</p><p>சேலம் சார்பில் ரஹில் ஷா 3 விக்கெட்டும், பொய்யாமொழி 2 விக்கெட்டும் வீழ்த்தினர். நடப்பு தொடரில் 7 போட்டிகளில் விளையாடிய சேலம் ஒரு வெற்றி, 6 தோல்வி என புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. </p><p>திருப்பூர் அணி தான் ஆடிய 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது.</p><p>அடுத்து நடைபெறும் கோவை-மதுரை இடையிலான ஆட்டத்தில் மதுரை அணி மோசமாக தோற்றால் திருப்பூர் அணிக்கு பிளே ஆப் சுற்று செல்ல வாய்ப்புள்ளது.</p><p>திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>கழிவு பொருட்களையும் கலைநயமாக்கலாம்: 8000 கண்ணாடி பாட்டில்கள் கொண்டு அழகிய வீட்டை உருவாக்கிய தாய்-மகள்</title><link>https://www.maalaimalar.com/news/world/brazilian-mother-and-daughter-began-collecting-discarded-bottles-years-later-more-than-8000-glass-bottles-had-become-the-walls-of-their-seven-bedroom-home</link><comments>https://www.maalaimalar.com/news/world/brazilian-mother-and-daughter-began-collecting-discarded-bottles-years-later-more-than-8000-glass-bottles-had-become-the-walls-of-their-seven-bedroom-home#comments</comments><guid isPermaLink="false">af2647f5-774a-45e5-a9d7-38623eb39702</guid><pubDate>Sat, 22 Aug 2026 13:16:15 +0000</pubDate><atom:updated>2026-08-22T13:16:15.633Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Brazil,பிரேசில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/imyvhykb/House0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கண்ணாடி பாட்டிலால் கட்டப்பட்ட சுவர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/imyvhykb/House0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சுற்றுலா சென்று திரும்பும்போது புகைப்படங்கள், நினைவுப் பொருட்கள் என பலவற்றை வீட்டுக்கு கொண்டு வருகிறோம். ஆனால், நாம் உருவாக்கும் கழிவுகளை முறையாக அகற்றுவது பெரும்பாலும் மறந்து விடுகிறோம். இதன் விளைவாக பாட்டில்கள், உணவுப் பொட்டலங்கள் உள்ளிட்ட கழிவுகள் கடற்கரைகள் மற்றும் காடுகளில் நீண்ட காலம் தேங்குகின்றன.</p><p>பிரேசிலின் இட்டமராக்கா தீவில், எட்னா டான்டாஸ் மற்றும் அவரது மகள் மரியா கேப்ரெய்லி டான்டாஸ் இந்தப் பிரச்சினைக்கு வித்தியாசமான தீர்வை கண்டனர்.</p><p>கடந்த 2020-ம் ஆண்டு அவர்கள் கடற்கரையில் குவிந்து கிடந்த கண்ணாடிப் பாட்டில்களை சேகரிக்கத் தொடங்கினர். இரண்டு ஆண்டுகள் உழைத்து, மரப்பொருட்கள், பழைய மரப் பலகைகள், பற்பசைக் குழாய்கள் உள்ளிட்ட மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களுடன் ஒரு வீட்டை உருவாக்கினர்.</p><p>‘Casa de Sal’ அல்லது ‘சால்ட் ஹவுஸ்’ என அழைக்கப்படும் இந்த ஏழு அறைகள் கொண்ட வீட்டின் சுவர்களை பல ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட சுமார் 8,000 கண்ணாடிப் பாட்டில்கள் பயன்படுத்தி உருவாக்கியுள்ளனர். சூரிய உதயத்தின் போது பாட்டில்கள் வழியாக ஒளி வீட்டுக்குள் ஊடுருவுவதால், அதன் சுவர்கள் அழகாக ஒளிர்கின்றன.</p><p>எட்னா சமூக-சுற்றுச்சூழல் கல்வியாளராகவும், 27 வயதான மரியா நிலைத்தன்மை சார்ந்த ஆடைத் துறையிலும் பணியாற்றுகிறார். பெண்கள் கட்டுமானத் துறையில் எதிர்கொள்ளும் பாலினப் பாகுபாட்டையும் அவர்கள் இதன் மூலம் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p>தற்போது சால்ட் ஹவுஸ் தங்குமிடமாகவும், நிலைத்த கட்டுமான முறைகள் குறித்த பயிற்சிகள் நடைபெறும் இடமாகவும் உள்ளது. கழிவாகத் தூக்கி எறியப்பட்ட பொருட்களும் படைப்பாற்றல், உழைப்பு மற்றும் சுற்றுச்சூழல் அக்கறையுடன் பயனுள்ள ஒன்றாக மாற முடியும் என்பதை இந்தத் தாய் மற்றும் மகள் ஆகியோர் நிரூபித்து உள்ளனர்.</p><p>இவர்களின் முயற்சி சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது. கண்ணாடிப் பாட்டில்களை மீண்டும் பயன்படுத்துவதன் மூலம், அவை வீணாகக் குப்பைக்குச் செல்வதைத் தடுத்துள்ளனர். மேலும், மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாடு மூலம் புதிய பொருட்களின் தேவையையும் குறைக்க முடியும் என்பதை இந்த வீடு உணர்த்துகிறது.</p><p>தாய் மற்றும் மகளின் பல ஆண்டுகால முயற்சி, படைப்பாற்றலும் விடாமுயற்சியும் இருந்தால் கழிவுப் பொருட்களைக்கூட பயனுள்ள ஒன்றாக மாற்ற முடியும் என்பதை நிரூபிக்கிறது. அவர்களின் வீடு இன்று ஒரு தனித்துவமான இல்லமாக மட்டுமல்லாமல், நிலைத்தன்மை, மறுபயன்பாடு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வின் அழகான எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது.</p>]]></content:encoded></item><item><title>உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: வெண்கலம் வென்றது திரிசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி</title><link>https://www.maalaimalar.com/sports/indian-pair-get-bronze-in-world-championship-badminton-womens-doubles</link><comments>https://www.maalaimalar.com/sports/indian-pair-get-bronze-in-world-championship-badminton-womens-doubles#comments</comments><guid isPermaLink="false">69977c58-63c5-4349-bf4b-81bc3fa0dfb7</guid><pubDate>Sat, 22 Aug 2026 13:16:08 +0000</pubDate><atom:updated>2026-08-22T13:16:08.035Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Treesa Jolly,Gayatri Gopichand,காயத்ரி கோபிசந்த்,World Championship badminton,உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்,திரிசா ஜாலி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/wvojxm5c/jolly.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ treesa jolly, gayatri gopichand]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/wvojxm5c/jolly.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் டெல்லி இந்திரா காந்தி உள்ளரங்கில் நடந்து வருகிறது. இந்தத் தொடரில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.</p><h2>அரையிறுதியில் இந்தியா</h2><p>இதில் பெண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதி சுற்றில் இந்தியாவின் திரிசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி, சீனாவின் டான் நிங் - லீயு ஷெங்ஷு ஜோடி உடன் மோதியது.</p><p>இதில் சிறப்பாக ஆடிய ஜாலி-கோபிசந்த் ஜோடி 21-18 என முதல் செட்டைக் கைப்பற்றியது. இதில் சுதாரித்துக் கொண்ட சீன ஜோடி அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 21-13, 21-8 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியது.</p><h2>வெண்கலம் வென்ற இந்தியா</h2><p>இந்தியாவின் ஜாலி-கோபிசந்த் ஜோடி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. ஆனாலும் அரையிறுதியில் தோற்றாலும் அவர்களுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.</p><h2>சாதனை படைத்த ஜாலி-காயத்ரி ஜோடி</h2><p>இதன்மூலம் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் மகளிர் இரட்டையர் பிரிவில் பதக்கம் வெல்லும் 2-வது இந்திய ஜோடி என்ற வரலாற்று சாதனையை படைத்தது.</p><p>இதற்கு முன் 2011-ம் ஆண்டு ஜுவாலா கட்டா - அஸ்வினி ஜோடி உலக சாம்பியன்ஷிப் மகளிர் இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p>ஆண்கள் ஒற்றையர், பெண்கள் ஒற்றையர், ஆண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் ஆகிய பிரிவுகளில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகள் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>ரஷியாவின் பிரபல கார்ட்டூன் தொடரான ‘மாஷா அண்ட் தி பியர்’ தொடருக்கு உக்ரைன் அரசு தடை!</title><link>https://www.maalaimalar.com/news/world/ukraine-bans-russian-cartoon-series-masha-and-the-bear</link><comments>https://www.maalaimalar.com/news/world/ukraine-bans-russian-cartoon-series-masha-and-the-bear#comments</comments><guid isPermaLink="false">1ce0c79b-4b76-461a-bb8d-71b03903d0f5</guid><pubDate>Sat, 22 Aug 2026 13:01:59 +0000</pubDate><atom:updated>2026-08-22T13:01:59.372Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Zelenskyy,ஜெலன்ஸ்கி,Russia Ukraine war,ரஷியா உக்ரைன் போர்,Masha And The Bear,மாஷா அண்ட் தி பியர்,Cartoon Sanctions</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/sf6g1bpi/Masha-and-the-Bear" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Masha and the Bear]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/sf6g1bpi/Masha-and-the-Bear?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE">ரஷியா</a>வுடன் தொடர் ராணுவ மோதலில் ஈடுபட்டு வரும் உக்ரைன் அரசு, தற்போது ரஷியாவின் உலகப் புகழ்பெற்ற குழந்தைகளுக்கான அனிமேஷன் தொடரான 'மாஷா அண்ட் தி பியர்' மீது அதிகாரப்பூர்வமாக தடையையும் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.</p><h2>அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் கலாச்சார அமைச்சரின் அதிரடி உத்தரவு</h2><p>இது தொடர்பாக உக்ரைன் கலாச்சார அமைச்சர் டெட்டியானா பெரெஷ்னா தனது சமூக ஊடகப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.</p><p>அதில், "'மாஷா அண்ட் தி பியர்' அனிமேஷன் தொடரை தயாரிக்கும் மற்றும் விநியோகிக்கும் ரஷிய நிறுவனங்களுக்கு எதிராக உக்ரைன் தடைகளை விதித்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p>மேலும், உக்ரைன் அதிபர் வொலோடிமிர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF">ஜெலன்ஸ்கி </a>இந்த கார்ட்டூன் தொடரை தயாரிக்கும் 'அனிமக்கார்ட்' ஸ்டுடியோ மற்றும் அதன் விநியோகஸ்தர்களுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்கும் ஆணைகளில் கையெழுத்திட்டுள்ளார்.</p><h2>தடைக்கான முக்கிய காரணங்கள்</h2><p>இந்த கார்ட்டூன் தொடர் குழந்தைகள் மத்தியில் தந்திரமான முறையில் ரஷியாவிற்கு ஆதரவான கருத்துக்களைப் பரப்புவதாக உக்ரைன் குற்றம் சாட்டுகிறது. </p><p>ரஷியாவின் இத்தகைய மறைமுகப் பிரச்சாரங்கள் உக்ரைனின் தேசிய பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த கார்ட்டூனில் சோவியத் யூனியன் காலத்து சின்னங்கள் மற்றும் ரஷிய ராணுவப் பாணியிலான தொப்பிகள் போன்ற கூறுகள் நேர்மறையாகக் காட்டப்படுவதாக உக்ரைனின் நட்பு நாடுகளான பிரிட்டன் மற்றும் எஸ்டோனியா போன்ற நாடுகளும் ஏற்கனவே விமர்சித்துள்ளன.</p><p>"ரஷியாவின் இத்தகைய நச்சுப் பிரச்சாரங்களுக்கு குழந்தைகளின் திரைகளில் இடமில்லை - உக்ரைனிலும் சரி, உலக அளவில் எங்குமே சரி" என்று கலாச்சார அமைச்சர் பெரெஷ்னா திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.</p><h2>உக்ரைனின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?</h2><p>இந்த அதிகாரப்பூர்வத் தடை மூலம் உக்ரைன் நாட்டில் இந்த கார்ட்டூன் ஒளிபரப்பாவது முற்றிலும் தடுக்கப்படும். மேலும், யூடியூப் உள்ளிட்ட சர்வதேச இணையத் தளங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த கார்ட்டூன் மூலம் தயாரிப்பு நிறுவனம் பெறும் வருவாயை முடக்கவும், அதன் விநியோகத்தை உலகளவில் கட்டுப்படுத்தவும் உக்ரைன் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.</p><h2>தயாரிப்பு நிறுவனம் மற்றும் ரஷ்யாவின் மறுப்பு</h2><p>கார்ட்டூனைத் தயாரிக்கும் 'அனிமக்கார்ட்' நிறுவனம் இக்குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ளது.</p><p>தாங்கள் ரஷிய அரசிடம் இருந்து எந்தவொரு நிதியுதவியும் பெறுவதில்லை என்றும், முற்றிலும் சுதந்திரமாகச் செயல்படும் ஒரு கலை நிறுவனம் என்றும் விளக்கம் அளித்துள்ளது.</p><p>இதற்கிடையே, ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் உக்ரைனின் இந்த நடவடிக்கையைக் கடுமையாகக் கேலி செய்துள்ளார். "உக்ரைன் தற்போது கார்ட்டூன்களுக்கு எதிராகவும் போரைத் தொடங்கியுள்ளது. </p><p>இது கீவ் ஆட்சியாளர்களின் விகாரமான, அசிங்கமான முகத்தையே காட்டுகிறது" என்று அவர் விமர்சித்துள்ளார்.</p><h2>கார்ட்டூனின் உலகளாவிய ஆதிக்கம்</h2><p>'மாஷா அண்ட் தி பியர்' கார்ட்டூன் உலக அளவில் சுமார் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. </p><p>குறிப்பாக இதன் யூடியூப் வீடியோக்கள் மட்டும் உலகளவில் 3,700 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று உலக சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>குழந்தைக்கு மருந்து கொடுப்பதில் தகராறு: உறவினரை அழைத்து வந்து கணவரை அடித்துக் கொலை செய்த மனைவி</title><link>https://www.maalaimalar.com/news/national/husband-kills-wife-after-dispute-arrests-made</link><comments>https://www.maalaimalar.com/news/national/husband-kills-wife-after-dispute-arrests-made#comments</comments><guid isPermaLink="false">dd9facbe-d79a-41d9-b438-9a1d21188031</guid><pubDate>Sat, 22 Aug 2026 12:44:40 +0000</pubDate><atom:updated>2026-08-22T12:44:40.632Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மனைவி கைது,Wife Arrested,delhi,software engineer,டெல்லி,மென்பொருள் பொறியாளர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/1bn5boru/Untitled-design.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Delhi software engineer murder]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/1bn5boru/Untitled-design.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் 31 வயதான மென்பொருள் பொறியாளர் ஒருவரை தனது மருமகள் வீட்டார் அடித்து கொலை செய்து விட்டதாக, உயிரிழந்த பொறியாளரின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக மனைவி உள்பட நான்கு பேரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.</p><h3><strong>பொறியாளர் வினய் குப்தா</strong></h3><p>வினய் நொய்டாவில் உள்ள அடோப் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் ஆண்டுக்கு சுமார் 60 லட்சம் ரூபாய் சம்பளமாக பெற்று வந்துள்ளார்.</p><p>இவர், மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ரேகா என்பவை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியருக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர்.</p><p>டெல்லியில் உள்ள வீட்டில், வினய்-யும் அவரது மனைவியும் மூன்றாவது மாடியிலும், வினய்யின் பெற்றோர்கள் கீழ்தளத்திலும் வசித்து வந்துள்ளனர்.</p><p>இதையடுத்து இன்று காலை வினய் குப்தாவுக்கும் அவரது மனைவி ரேகாவுக்கும் இடையே, தங்கள் குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.</p><p>அப்போது ரேகா வீட்டில் இருந்து வெளியேறி, தனது தந்தை, இரண்டு சகோதரர்கள், மாமா என குடும்ப உறுப்பினர்களை வினய் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.</p><p>இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகி உள்ளது. அதைத் தொடர்ந்து ரேகாவின் குடும்ப உறுப்பினர்கள் வினயை தாக்க தொடங்கியுள்ளனர்.</p><h3><strong>பொறியாளரின் தாய் குற்றச்சாட்டு</strong></h3><p>இன்று நடந்த சம்பவம் குறித்து வினய்யின் தாய் கூறுகையில், ”மருமகளின் குடும்பத்தினருக்கு தண்ணீர் மற்றும் குளிர்பானங்களை வாங்கி வருவதற்காக வெளியே சென்றேன்.</p><p>நான் திரும்பி வந்தபோது, என் மகனை மருமகளின் வீட்டார் தாக்கிக்கொண்டு இருந்தனர். நான் உடனே தாக்குதலை நிறுத்துமாறு அவர்களிடம் கெஞ்சினேன். ஆனால் என் மகன் மீது தாக்குதல் தொடர்ந்து நடத்தப்பட்டது.</p><p>மருமகளின் வீட்டார், எனது மகனின் கழுத்தை நெரித்து, மார்பில் உதைத்து தாக்கினர். இந்த சம்பவத்தை முன்கூட்டியே திட்டம் தீட்டி, எனது வீட்டில் இருந்த அனைத்து சிசிடிவி கேமராக்களையும் ரேகா அணைத்துவிட்டார்” என்று அவர் கூறினார்.</p><p>தாக்குதல் நடந்த சில நிமிடங்களுக்கு பிறகு, வினய்-யின் பக்கத்து வீட்டுக்காரர் உள்ளே வந்து, அவரை தோளில் சுமந்து கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வினய் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.</p><h3><strong>மனைவி குடும்பத்தார்கள் கைது</strong></h3><p>இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ரேகா, அவரது இரண்டு சகோதரர்கள் மற்றும் அண்ணி என நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மாமா- மச்சான் என சட்டமன்றத்தில் பேசக்கூடாது: முன்னாள் அமைச்சர் துரைமுருகன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dont-say-uncle-cousin-in-assembly-duraimurugan-advice-to-dmk-mlas</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dont-say-uncle-cousin-in-assembly-duraimurugan-advice-to-dmk-mlas#comments</comments><guid isPermaLink="false">59b09fb8-5c0a-4780-9669-3dc748682e2f</guid><pubDate>Sat, 22 Aug 2026 12:28:47 +0000</pubDate><atom:updated>2026-08-22T12:28:47.378Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>துரை முருகன்,DMK,திமுக,Durai Murugan</media:keywords><media:content height="1948" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/bf6j8kd0/DuraiMurugan.jpg" width="3464"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ துரைமுருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/bf6j8kd0/DuraiMurugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டமன்றத்தில் மாமா- மச்சான் என்று பேசக்கூடாது என்று திமுக பொதுச் செயலாளர் அக்கட்சி எம்.எல்.ஏ.-க்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.</p><h2>தமிழக சட்டசபை கூட்டத்தொடர்</h2><p>தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது துறைகள் வாரியாக மானியக் கோரிக்கை நடைபெற்று வருகிறது. நேற்று சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாக சொல்லும் காட்சிகள், ரீல்ஸ் ஆக வெளியிடப்படுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.</p><p>மேலும், தவெக- திமுக எம்.எல்.ஏ.-க்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. சில சமயங்களில் அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் செய்யக்கூடிய வகையில் சில வார்த்தைகளை உறுப்பினர்கள் பேசி விடுகிறார்கள். இது தொடர்பாக அடிக்கடி சலசலப்பு ஏற்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/aadhav-arjuna-reply-to-udhayanidhi-stalin">திமுக </a>சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பேசும்போது, மாமா என்று கூறினார். இந்த வார்த்தை அவை குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக துணை சபாநாயகர் தெரிவித்தார். சில உறுப்பினர்கள் இவ்வாறு உறவு முறை குறித்து பேசுகிறார்கள்.</p><p>இந்த நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமை செயற்குழு கூட்டம் நடைபெற்றது. திமுக பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டார்.</p><p>அப்போது "சட்டப்பேரவையில் மாமா, மச்சான் என்ற உறவு முறை எல்லாம் வைத்து பேசக்கூடாது" என்று திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அறிவுறுத்தியதாக தெரிகிறது. மேலும், சட்டமன்ற செயல்பாடுகளை பார்த்தால் தானும், மு.க. ஸ்டாலினும் தற்போது பேரவைக்கு செல்லாமல் இருப்பதே நல்லது என தோன்றுகிறது எனக் கூறியுள்ளார்.</p><h2>இந்த கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.</h2><p>* கழகத்தின் கட்டமைப்பில் புது ரத்தம் பாய்ச்சிட, கிளைக்கழகச் செயலாளருக்கான அதிகபட்ச வயது 45 என்றும், கிளைக்கழகச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் அதிகபட்சம் 2 முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.</p><p>* சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாநகரகங்களிலும், சூழலுக்கு ஏற்ப பிற மாநகராட்சிகளிலும் வட்டக்கழகங்களை வலிமைப்படுத்திட கிளைக்கழகம் அமைக்கப்படுகிறது. 45 வயதுக்கு மிகாதவர் கிளைச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஒருவர் அதிகபட்சம் 2 முறை மட்டுமே இப்பொறுப்பை வகிக்க முடியும்.</p><p>* சென்னை மாநகராட்சியின் வட்டக்கழகங்கள் சராசரியாக 10 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும், பிற மாநகராட்சிகளில் சராசரியாக 5 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும் அமையும். மாநகர-நகர-பேரூர் வட்டக்கழகச் செயலாளர்களின் அதிகபட்ச வயது 50 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.</p><p>* பேரூர் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 எனவும், அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே பொறுப்பை வகிக்க முடியும் என தீர்மானிக்கப்படுகிறது.</p><p>* சென்னை மாநகராட்சியில் பகுதிக்கழகங்கள் சராசரியாக 40 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும், பிற மாநகராட்சிகளில் பகுதிக்கழகங்கள் சராசரியாக 30 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும் அமையும். பகுதிக் கழகச் செயலாளர்களின் அதிகபட்ச வயது 60 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.</p><h2>நகர செயலாளர்கள்</h2><p>* நகரக் கழகங்கள் சராசரியாக 40 ஆயிரம் வாக்குகளைக் கொண்டிருக்கும். நகரக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 எனவும், ஒருவர் அதிகபட்சம் 2 முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும் என தீர்மானிக்கப்படுகிறது.</p><p>* சராசரியாக 30 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றியக் கழகம் உருவாக்கப்பட வேண்டும். ஒன்றியக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் 2 முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.</p><h2>மாவட்ட செயலாளர்கள்</h2><p>* வருவாய் மாவட்டங்களின் அடிப்படையில் 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு கழக மாவட்டம் என்ற வகையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுகிறது. பிரிக்கும்போது ஒரு தொகுதி மட்டும் எஞ்சியிருப்பின் அதே வருவாய் மாவட்டத்தில் பொருத்தமான கழக மாவட்டத்துடன் மூன்றாவது தொகுதியாக இணைக்கப்படும். மாவட்டக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 70 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் 3 முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும். இனி மாநகரச் செயலாளர் என்ற பொறுப்பு இருக்காது.</p><p>* கழகத்தலைவர் 110 மாவட்டங்களை அறிவித்தவுடன், மாவட்ட செயற்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு வழிகாட்டு நெறிமுறைகளின்படி 15 நாட்களுக்குள் ஒன்றியம்-நகரம்-பகுதி-வட்டக்கழகங்கள் பிரிக்கப்பட வேண்டும்.</p><p>தலைமைக் கழகத்தால் அனுப்பி வைக்கப்படும் பிரதிநிதி முன்னிலையில் மீண்டும் மாவட்ட செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டு, பிரிக்கப்பட்ட அமைப்புகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டு தலைமைக் கழகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.</p><p>தி.மு.க. மாவட்ட செயலாளராக ஒருவர் 2 முறை மட்டுமே பதவி வகிக்க முடியும் என்று முதலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது. பின்னர் அது திருத்தம் செய்யப்பட்டு 3 முறை பதவி வகிக்கலாம் என மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.</p><p>இந்த செயற்குழு கூட்டத்தில் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>சிறையில் இருக்கும் ரவுடியுடன் வீடியோ காலில் பேசியபடி ஆடைகளை கழற்றிய இன்ஸ்பெக்டர்!</title><link>https://www.maalaimalar.com/news/national/inspector-strips-on-video-call-with-jailed-rowdy</link><comments>https://www.maalaimalar.com/news/national/inspector-strips-on-video-call-with-jailed-rowdy#comments</comments><guid isPermaLink="false">284a5926-5def-470c-b0a6-d1766be09561</guid><pubDate>Sat, 22 Aug 2026 12:07:41 +0000</pubDate><atom:updated>2026-08-22T12:07:41.612Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பெங்களூரு,பெண் இன்ஸ்பெக்டர்,karnataka police,woman inspector,Rowdy Saikumar,Hindalga Jail,ஹிண்டல்கா சிறை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/0eqwoyqj/Woman-Inspector" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Woman Inspector]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/0eqwoyqj/Woman-Inspector?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81">பெங்களூரு</a>வில் கடந்த சில நாட்களாக ஒரு வீடியோ சமூக வலை தளங்களில் வெளியானது. அதில் பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் போனில் பேசிக்கொண்டே தனது ஆடைகளை கழற்றுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது. </p><p>இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து அந்த பெண் அதிகாரி யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் பொதுமக்களிடமும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.</p><h2><strong>பெண் இன்ஸ்பெக்டர்</strong></h2><p>இதனைதொடர்ந்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வீடியோவில் இருப்பது கர்நாடக மாநில தொழிலல் துறை பாதுகாப்புப் படையை சேர்ந்த <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D">பெண் இன்ஸ்பெக்டர்</a> என்பது தெரிய வந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.</p><h2><strong>புகார் விசாரணை</strong></h2><p>பெண் இன்ஸ்பெக்டர் ஹிண்டல்கா மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த தனது நண்பரான ரவுடி சாய்குமார் என்பவருடன் வீடியோ காலில் பேசிய போது ஆடைகளை கழற்றியது தெரியவந்தது. இதையடுத்து பெண் இன்ஸ் பெக்டர், சாய்குமார் மற்றும் சிலர் மீது கப்பன் பார்க் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.</p><p>இதையடுத்து போலீசார் புகாரை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்க சட்ட ஆலோசனைகள் பெற்று வருகின்றனர். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-</p><p>வீடியோவில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் புகார் அளித்து விட்டு தற்போது விடுமுறையில் சென்று விட்டார். இந்த வீடியோ கடந்த 2024-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ரவுடிப் பட்டியலில் இடம் பெற்றுள்ள பெண் இன்ஸ்பெக்டரின் நண்பரான சாய்குமார் துமகூரு மாவட்டம் குனிகல் பகுதியை சேர்ந்தவர்.</p><h2><strong>சிறை தொடர்பு அம்பலம்</strong></h2><p>இந்த வீடியோ எடுத்த காலக்கட்டத்தில் இன்ஸ்பெக்டர் ஹிண்டல்கா மத்திய சிறையில் பணியில் இருந்தார். அந்த சிறையில் தான் சாய்குமாரும் அடைக்கப்பட்டு இருந்தார். </p><p>அவர்சிறையில் இருந்த போது இன்ஸ்பெக்டர், ரவுடி தொடர்பு கொண்டு ஆபாசமான அழைப்புகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சாய்குமார் அந்த அழைப்பை பதிவு செய்து கொண்டு அதை சமீபத்தில் கசிய விட்டுள்ளார்.</p><h2><strong>ரவுடியின் லஞ்ச புகார்</strong></h2><p>மேலும் ரவுடி சாய்குமாரும், பெண் இன்ஸ்பெக்டர் மீது புகார் அளித்து உள்ளார். அதில் சிறைக்குள் தன்னிடம் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">லஞ்சம் </a>பெற்றுக்கொண்டு தொலைபேசிகள், மது பானம் மற்றும் பிற ஆடம்பர பொருட்களை அவர் வழங்கியதாக குற்றம் சாட்டி உள்ளார். அதே கைபேசி தான் வீடியோ அழைப்புகளை பதிவு செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p>சிறையில் நடக்கும் முறை கேடுகளை அம்பலப்படுத்துபவர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்படும் என மிரட்டப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.</p><h2><strong>பெண் இன்ஸ்பெக்டர் சர்ச்சை</strong></h2><p>அவரது புகாரின் அடிப்படையில் பெண் இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியான விசாரணை நடை பெற்று வருகிறது. இதற்கிடையே சிறை அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளுடன் ஒரு வீடியோ இன்ஸ்டா கிராமில் பகிரப்பட்டது.</p><p>அந்த பதிவை தொடர்ந்து சிறை அதிகாரிகள் பெலகாவி சிஇஎன் போலீசில் நிலையத்தில் புகார் செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. பெண் போலீஸ் வீடியோ வேகமாக பரவி வருவதால் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE">கர்நாடகா</a>வில் பரபரப்பு நிலவி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>டிஎன்பிஎல்: 170 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சேலம்-பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுமா திருப்பூர்?</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/tirupur-tamizhans-need-170-runs-to-win-against-salem-spartans-in-tnpl-2026</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/tirupur-tamizhans-need-170-runs-to-win-against-salem-spartans-in-tnpl-2026#comments</comments><guid isPermaLink="false">5face8e1-d519-4cb8-bcd0-2d94a4f911d1</guid><pubDate>Sat, 22 Aug 2026 11:44:45 +0000</pubDate><atom:updated>2026-08-22T11:44:45.599Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,திருப்பூர் தமிழன்ஸ்,Salem Spartans,சேலம் ஸ்பர்டன்ஸ்,tirupur tamizhans</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/zivcmi2w/mani.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ karthik manikandan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/zivcmi2w/mani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர் அணிக்கு எதிரான போட்டியில் சேலம் அணி 169 ரன்கள் எடுத்துள்ளது.</p><p>10-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியின் 2வது கட்டம் சென்னையின் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது.</p><p>திருப்பூர் தமிழன்ஸ்</p><p>இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெற்ற 28-வது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பர்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சேலம் அணி பேட்டிங் தேர்வு செய்தது. </p><p>அதன்படி, சேலம் ஸ்பர்டன்ஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்கத்தில் அபிஷேக், பூபதிகுமார் ஜோடி அதிரடியாக ஆடியது. </p><p>முதல் விக்கெட்டுக்கு 47 ரன் சேர்த்த நிலையில் பூபதிகுமார் 27 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய விவேக் 6 ரன்னில் வெளியேறினார்.</p><p>அபிஷேக் 29 ரன்னில் ஆட்டமிழந்தார். சன்னி சந்து 1 ரன்னிலும், ஹரிஷ்குமார் 3 ரன்னில் அவுட்டாகினர்.</p><p>பொறுப்புடன் ஆடிய கார்த்திக் மணிகண்டன் அரை சதமடித்தார். அவர் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.</p><p>இறுதியில், சேலம் ஸ்பர்டன்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்துள்ளது.</p><p>திருப்பூர் அணி சார்பில் மதிவண்ணன் 3 விக்கெட் வீழ்த்தினார்.</p><p>இதையடுத்து, 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்குகிறது.</p> ]]></content:encoded></item><item><title>நாக்பூரில்  36 டன் தாய் கெளுத்தி மீன்கள் அழிப்பு: காரணம் என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/national/11-ponds-raided-36-tonnes-of-banned-thai-mangur-destroyed-in-nagpur</link><comments>https://www.maalaimalar.com/news/national/11-ponds-raided-36-tonnes-of-banned-thai-mangur-destroyed-in-nagpur#comments</comments><guid isPermaLink="false">ab21c3d0-c9c3-4bea-aff8-c96b7922996e</guid><pubDate>Sat, 22 Aug 2026 11:43:18 +0000</pubDate><atom:updated>2026-08-22T11:43:18.635Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மகாராஷ்டிரா,நாக்பூர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/0rxwuzsf/CatFish001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கெளுத்தி மீன்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/0rxwuzsf/CatFish001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் மீன்வளத்துறை சார்பில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது சட்டவிரோதமாக பல்வேறு நிறுவனங்கள் குளங்கள் அமைத்து தாய் கெளுத்தி மீன்கள் வளர்க்கப்படுவதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.</p><p>அப்போது 11 குளங்களில் வளர்க்கப்பட்டு வந்த சுமார் 36 டன்கள் தாய் கெளுத்தி (தாய் மங்கூர்) மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அதை லாரிகள் ஏற்று, சுற்றுச்சூழல் பாதிப்படையாக இடத்தில் பெரிய பள்ளம் தோண்டி, அதில் கொட்டி மூடினர்.</p><p>அதிகாரிகளுக்கு வந்த புகார் அடிப்படையில் பர்ஷிவ்னி தாலுகாவில் உள்ள சிசோலி-மகதுலா பகுதியில் குளங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">11 Ponds Raided, 36 Tonnes Of Banned Thai Mangur Destroyed In Nagpur<a href="https://t.co/uXenI0Aa0G">https://t.co/uXenI0Aa0G</a> <a href="https://t.co/zSGf2zFFCZ">pic.twitter.com/zSGf2zFFCZ</a></p>&mdash; NDTV (@ndtv) <a href="https://x.com/ndtv/status/2090700292941889635?ref_src=twsrc%5Etfw">August 21, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure> <p>உள்ளூரைச் சேர்ந்த 25 மீனவர்கள் உதவியுடன் இந்த மீன்கள் குளத்தில் இருந்து அகற்றப்பட்டன. கடந்த 3 மாதங்களில் 51 டன் மீன்கள் அழிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது அழிக்கப்பட்டது மிகப்பெரிய அளவிலானது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>இந்த வகை தாய் கெளுத்தி மீன்கள் சுற்றுச்சூழல் மற்றும் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிப்பதால், இந்தியாவில் இவற்றை வளர்க்க அரசாங்கம் தடை விதித்துள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>