<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 06 Aug 2026 15:22:29 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க ரூ.17,000 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்
 - 6 ஆகஸ்ட் 2026
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-6-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-6-august-2026#comments</comments><guid isPermaLink="false">cea48297-4a0d-4b97-9bab-77c908ac9582</guid><pubDate>Thu, 06 Aug 2026 03:39:01 +0000</pubDate><atom:updated>2026-08-06T14:58:33.170Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/0lx0tsgt/vinoth3.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Vinoth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/0lx0tsgt/vinoth3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/india-pakistan-clash-headlines-womens-asia-cup-2026-schedule">மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் தேதி அறிவிப்பு</a></p><p>* மகளிர் ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 28ம் தேதி துபாயில் தொடங்குகிறது.</p><p>* முதல் போட்டியில் தாய்லாந்து, ஹாங்காங் அணிகள் மோதுகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-invites-tamil-nadu-mps-for-constituency-delimitation-meet">தொகுதி மறுவரையறை தொடர்பான ஆலோசனை - தமிழ்நாடு எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு!</a></p><p> * தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு, தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு.</p><p>* இந்த ஆலோசனைக் கூட்டம் நாளை மறுநாள் (ஆக.8) சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/bangladesh-to-hold-presidential-election-on-august-20-ec">வங்கதேச அதிபர் தேர்தல் வரும் 20-ம் தேதி நடைபெறும்: தேர்தல் ஆணையம்</a></p><p>* அதிபர் பதவியில் இருந்து முகமது ஷஹாபுதீன் ஜூலை 24-ம் தேதி ராஜினாமா செய்தார்.</p><p>* நாடாளுமன்ற சபாநாயகர் ஹபிஸ் உத்தீன் அகமது இடைக்கால அதிபராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/medvedev-zverev-lose-second-round-in-canada-open-tennis">கனடா ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் மெத்வதேவ், ஸ்வரேவ் அதிர்ச்சி தோல்வி</a></p><p>* கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோவில் நடந்து வருகிறது.</p><p>* முன்னணி வீரர்கள் நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/carlos-alcaraz-withdraws-from-cincinnati-open-tennis">சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: நம்பர் 2 வீரர் விலகல்</a></p><p>* சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெறுகிறது.</p><p>* கார்லோஸ் அல்காரஸ் கடைசியாக பார்சிலோனா ஓபன் தொடரில் விளையாடினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/i-dont-want-to-kill-people-i-just-want-a-deal-with-iran-says-trump">"மக்களை கொல்ல விரும்பவில்லை; ஈரானுடன் ஒப்பந்தம் செய்யவே விரும்புகிறேன்" - அமெரிக்க அதிபர் டிரம்ப்!</a></p><p>* டிரம்ப் மக்கள் உயிரை காக்க ஈரானுடன் ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார்</p><p>* அமெரிக்கா இஸ்ரேல் ஆயுதம் வைத்திருக்கும் வரை நாங்களும் தொடர்வோம் என்றது ஈரான்</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/rbi-to-roll-out-plastic-rs-10-rs-20-notes">அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்</a></p><p>* காகித நோட்டுகளுடன் பிளாஸ்டிக் நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும்.</p><p>* பிளாஸ்டிக் நோட்டுகள் தண்ணீரில் நனையாது, எளிதில் கிழியாது மற்றும் அழுக்கடையாது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/tanvi-sharma-ashmita-chaliha-enter-qf-in-korea-mastesr-badminton">கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: தன்வி ஷர்மா, அஷ்மிதா சலிஹா காலிறுதிக்கு முன்னேற்றம்</a></p><p>* கொரியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் தொடர் கொரியாவில் நடந்து வருகிறது.</p><p>* ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் அனைவரும் வெளியேறினர்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/coco-gauff-rybakina-enter-next-round-in-canada-open-tennis">கனடா ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் கோகோ காப், ரிபாகினா வெற்றி</a></p><p>* கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோவில் நடந்து வருகிறது</p><p>* முன்னணி வீராங்கனைகள் நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/pakistan-beat-west-indies-in-second-test">2வது டெஸ்டில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி: சமனில் முடிந்த டெஸ்ட் தொடர்</a></p><p>* பாகிஸ்தானின் அப்துல்லா ஷபிக் ஆட்ட நாயகன் விருது வென்றார்.</p><p>* இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/agriculture-budget-a-disappointment-for-farmers-anbumani-criticism" rel="nofollow">வேளாண் பட்ஜெட் உழவர்களுக்கு ஏமாற்றமே..!- அன்புமணி விமர்சனம்</a></p><p>* வேளாண் பட்ஜெட்டில் ரூ.470.92 கோடி அளவிற்கு நிதி குறைக்கப்பட்டுள்ளதாக அன்புமணி குற்றச்சாட்டு.</p><p>* இடைக்கால நிதிநிலை அறிக்கையின் மதிப்பான ரூ.47,248 கோடியை விட ரூ.11,126 கோடி அதிகம். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/eps-mistakenly-tries-to-enter-udayanidhi-stalin-vehicle-again" rel="nofollow">மீண்டும்.. மீண்டுமா..!- தவறுதலாக உதயநிதியின் காரில் ஏற முயன்ற இபிஎஸ்</a></p><p>* தி.மு.க. ஆட்சியின் போதும் இதே போல் நிகழ்வு நடைபெற்றது.</p><p>* அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி காரும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-visitors-at-coimbatore-airport-ahead-of-independence-day">சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்குத் தடை!</a></p><p>* சுதந்திர தினம் வரை கோவை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு தடை</p><p>* பாதுகாப்பு அதிகரிப்பு, பயணிகள் முன்னதாகவே விமான நிலையம் வருவதற்கு உத்தரவு</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/no-major-announcements-in-agriculture-budget-says-premalatha" rel="nofollow">வேளாண் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் எதுவும் இல்லை- பிரேமலதா</a></p><p>* முதலமைச்சர் விஜய் நினைத்தால் இப்போதே விவசாயிகளுக்கு நன்மை செய்ய முடியும்.</p><p>* செய்தித்தாள் வாசிப்பதைபோல் பட்ஜெட்டை வாசதித்துள்ளார் அமைச்சர் வினோத்.</p><p>சட்டசபையில் இன்று 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். அதன் முழு விவரம் வருமாறு:</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/jug0dj1h/ministervinoth.jpg" /></figure><p>வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்ய ஆரம்பித்தபோது முதலமைச்சர் குறித்து பேசிய அமைச்சர் வினோத் இறுதியாகவும் முதலமைச்சர் குறித்து உணர்ச்சிவசப்பட்டார்.</p><p>அமைச்சர் பேச்சுக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் தேவையற்ற வார்த்தைகள் இருந்தால் மட்டும் நீக்குவதாக சபாநாயகர் உறுதி அளித்தார்.</p><p>கடந்த 2 மணி நேரமாக சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தார் அமைச்சர் வினோத்</p><p>பசுமை தமிழ்நாடு இயக்கம் மூலம் மாநிலம் முழுவதும் 30 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் - அமைச்சர் வினோத்</p><p>நடப்பாண்டில் கூடுதலாக 2.50 லட்சம் தென்னங்கன்று உற்பத்தி செய்து தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு விநியோகம் - அமைச்சர் வினோத்</p> <p>விதை இருப்பை அதிகரிக்கும் வகையில் மேலும் 150 விதை பயிர் தொகுப்பு ரூ.1 கோடியில் ஏற்படுத்தப்படும் - அமைச்சர் வினோத்</p><p>வேளாண் காடுகளை ஊக்குவிக்கும் திட்டத்தில் 5 லட்சம் சந்தன மரம், 50,000 தேக்குமரம் உள்ளிட்ட மரங்களை நடுவதற்கு திட்டம்</p><p>மூலதன கடன் வழங்கும் நடவடிக்கையாக உழவர்களுக்கு குறுகிய கால கடன் தருவதற்கு ரூ.3,000 கோடி ஒதுக்கீடு</p><p>500 நடுத்தர பால் பண்ணைகள் அமைக்க 25% மூலதன மானியம் வழங்கப்படும் - அமைச்சர் வினோத்</p><p>மகளிர் சுய உதவிக்குழு சார்ந்த கால்நடை பராமரிப்புக்கு சிறப்பு நிதியாக ரூ.5000 வழங்குவதற்கு ரூ.2.5 கோடி ஒதுக்கீடு</p><p>மாநிலம் முழுவதும் சிறு பால் பண்ணைகள் அமைக்க 4 சதவீதம் வட்டி மானியம் வழங்க ரூ.4.19 கோடி ஒதுக்கீடு</p><p>வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கால்நடை தீவனம் ஒரு கிலோ ரூ.2 மானிய விலையில் வழங்கப்படும் - அமைச்சர் வினோத்</p><p>கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திற்கு மாணவர் களப்பயிற்சிக்காக 6 பேருந்துகள் வாங்க ரூ.3 கோடி ஒதுக்கீடு</p><p>2026-2027 நிதியாண்டில் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க ரூ.17,000 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><h2>உதகையில் வேளாண் ஆராய்ச்சி பயிற்சி மையம்</h2><p>உழவர் சந்தைகளை புனரமைக்க ரூ.20 கோடி, 50 உழவர் சந்தைகளில் மின்னணு விலைப்பலகை அமைக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு</p><p>வேளாண் நுண்ணறிவு மற்றும் சந்தை மகத்துவ மையத்திற்கு ரூ.4 கோடி ஒதுக்கீடு</p><p>சாக்கோட்டையில் நம்மாழ்வார் பெயரில் ஒரு புதிய உயிர்ம வேளாண்மை பட்டயப் படிப்பு கல்லூரி அமைக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு</p><p>நீலகிரி மாவட்டம் ஊட்டியில் புதிய வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்திற்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு</p> <p>2 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு வசதிகளை ஏற்படுத்த ரூ.4.8 கோடி ஒதுக்கீடு</p><p>வேளாண் விளைபொருட்களை மதிப்பு கூட்ட 4 முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்கப்படும் - அமைச்சர் வினோத்</p><p>வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்ய 2 சிறப்பு வணிக வளாகங்கள் கட்ட, மேம்படுத்த ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு</p><p>225 ஏக்கர் பரப்பளவு வேளாண்மையில் இயந்திரமயமாக்கல் செயல்விளக்கத்திற்காக ரூ.46.37 லட்சம் ஒதுக்கீடு</p><p>மக்காச்சோளம், நிலக்கடலை, உளுந்து, தென்னையில் 100% மானியத்தில் முழுமையான இயந்திரமயத்தை புகுத்த திட்டம்.</p><p>தமிழ்நாடு விவசாயிகளின் வருமான மேம்பாட்டு ஆணையத்திற்கு ரூ.5.20 கோடி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர்</p><p>புதிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை உருவாக்கி சமபங்கு நிதியாக உறுப்பினருக்கு தலா ரூ.5000 வழங்க ரூ.12 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><p>வேளாண் பொறியியல் விரிவாக்க, பயிற்சி மையங்கள் அமைக்க ரூ.4.6 கோடி ஒதுக்கீடு.</p><p>வேளாண்மையில் முழுமையான இயந்திரமயத்தை புகுத்தும் திட்டங்களுக்கான செயல்விளக்கங்ளுக்கு ரூ.46.37 லட்சம் ஒதுக்கீடு</p><h2>வேளாண் இயந்திரங்கள் </h2><p>உழவர்களுக்கு வேளாண் பொருட்களை வாடகைக்கு வழங்கும் திட்டத்தை வலுப்படுத்த ரூ.20.31 கோடி ஒதுக்கீடு</p><p>புதிதாக 463 வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை கொள்முதல் செய்வதற்காக ரூ.20.31 கோடி நிதி ஒதுக்கீடு</p><p>1000 விவசாயிகளுக்கு மானியத்தில் மின்கட்டமைப்புடன் சாராத சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட் அமைக்க ரூ.23 கோடி ஒதுக்கீடு</p><p>பயிர் சாகுபடி, மதிப்பு கூட்டுதலுக்கான 50 ஒருங்கிணைந்த வேளாண் இயந்திர வாடகை வணிக மையங்கள் அமைக்க ரூ.8.13 கோடி ஒதுக்கீடு</p><p>ஆயிரம் ஏக்கர் பாசன பரப்பை உருவாக்கும் நோக்கில் விவசாயிகளுக்கு மானியத்தில் ஆழ்துளை மற்றும் குழாய் கிணறு அமைக்க ரூ.6 கோடி ஒதுக்கீடு</p><p>பொதுப்பிரிவை சார்ந்த 500 விவசாயிகளுக்கு அதிகபட்ச மானியமாக 60% வரை வழங்குவதற்கு ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர்</p><p>100% மானியத்தில் 500 பண்ணைக்குட்டைகள் உருவாக்குதல், 75% மானியத்தில் 500 பண்ணைக்குட்டைகளை தூர்வார ரூ.8.5 கோடி ஒதுக்கீடு</p><p>பெண்களுக்கு ட்ரோன் இயக்கப் பயிற்சிக்காக வான் மகள் என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு ரூ.4 கோடி ஒதுக்கீடு</p><p>100 மகளிர் உட்பட 500 பேருக்கு ட்ரோன் இயக்க பயிற்சி உரிமம், 50 பயிற்சி பெற்ற மகளிருக்கு 50% மானியத்தில் ட்ரோன் வழங்கப்படும்.</p><p>57,000 மெட்ரிக் டன் சேமிக்கும் வகையில் வெங்காய சேமிப்பு கிடங்கு அமைப்பதற்காக ரூ.22 கோடி ஒதுக்கீடு</p><p>24,000 விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் இயந்திரம் மற்றும் கருவி வழங்க ரூ.227.2 கோடி ஒதுக்கீடு</p><p>தென்னை மரங்கள் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் தென்னை சிறப்பு திட்டத்திற்கு ரூ.41 கோடி ஒதுக்கீடு </p><p>தென்னை பதப்படுத்தும் கழகம்  ரூ.5.30 கோடியில் அமைக்கப்படும் - அமைச்சர் வினோத்</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/gi2bnhlf/coconut.jpg" /></figure><p>கரூர் முதலைப்பட்டியில் தென்னை நாற்றுப்பண்ணை ரூ.48 லட்சத்தில் அமைக்கப்படும் என அறிவிப்பு</p><p>தென்னை பதப்படுத்தும் கழகம் ரூ.22 கோடியில் அமைக்கப்படும் - அமைச்சர் வினோத்</p><p>அளவு கடந்த ஊட்டச்சத்து உள்ள தமிழ்நாடு தளிர்கீரை திட்டத்திற்கு ரூ.1.20 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><p>தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தியை உயர்த்த உயர் தொழில்நுட்ப சாகுபடி முறைகளுக்காக ரூ.41 கோடி ஒதுக்கீடு</p><p>தென்னை மரங்கள் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் தென்னை சிறப்பு திட்டத்திற்கு ரூ.16 கோடி ஒதுக்கீடு</p><p>நன்னெறி சாகுபடி, நஞ்சற்ற உற்பத்தி, உலகளாவிய ஏற்றுமதிக்காக வேளாண் பட்ஜெட்டில் ரூ.8.43 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><p>வெற்றி இல்லத்தரசி வீட்டு தோட்ட திட்டத்திற்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><p>வீடுகளின் மாடிகளில் தோட்டம் அமைக்க மானியம் வழங்கும் வகையில் வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம் என்ற புதிய திட்டம் அறிமுகம்.</p> <p>8 புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள் ரூ.27.82 கோடியில் அமைக்கப்படும் - அமைச்சர் வினோத்</p><p>தொழில்நுட்பமும் பாரம்பரியமும் சங்கமிக்கும் திருவிழாவாக நடத்தப்படும் வேளாண் கண்காட்சிக்காக ரூ.3 கோடி ஒதுக்கீடு </p><p>பனைவிதை, பனங்கன்று விநியோகம், பயிற்சி அளித்தல் மற்றும் பனைபொருள் உற்பத்தி கூடாரம் அமைக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு</p><p>விதை சுத்திகரிப்புத்திறனை அதிகரிக்க 3 புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் ரூ.7.1 கோடியில் அமைக்கப்படும்.</p><p>17,315 ஏக்கருக்கு விதைக்கரும்பு மானியத்திற்கு ரூ.9.36 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><p>மாவட்ட அளவில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் வெற்றி விவசாயி விருது வழங்கப்படும்.</p><p>மாவட்ட அளவில் சிறந்த விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.50,000, இரண்டாம் பரிசாக ரூ.25,000 வழங்கப்படும்.</p><p>மாவட்டந்தோறும் வழங்கப்படும் வெற்றி விவசாயி விருதுக்கு ரூ.67.50 லட்சம் ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><p>மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டி நடத்தப்பட்டு மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் விருது வழங்கப்படும் என அறிவிப்பு</p><p>அஞ்சலையம்மாள் விருதில் முதல் பரிசாக ரூ.2.50 லட்சம், 2-ம் பரிசாக ரூ.1.50 லட்சம், 3-ம் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்படும்.</p><p>5 விவசாயிகளுக்கு சிறந்த உயிர்ம விவசாயிகளுக்கான நம்மாழ்வார் விருது வழங்கப்படும் - அமைச்சர் வினோத்</p><p>ஆதிதிராவிடர், பழங்குடியின வகுப்பை சார்ந்த சிறு குறு விவசாயிகள் உயர்மதிப்பு வேளாண் திட்டங்களில் 20% கூடுதல் மானியம் - அமைச்சர் வினோத்</p><p>மழை, வெயிலில் இருந்து விளைபொருட்களை பாதுகாக்கும் வகையில் விவசாயிகளுக்கு தார்ப்பாய்கள் வழங்கும் திட்டத்திற்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு.</p> <p>தமிழ்நாட்டில் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்காக ரூ.4 கோடி ஒதுக்கீடு  - அமைச்சர் வினோத்</p><p>நிலத்தடி நீரை பாதிக்கும் சீமை கருவேல மரங்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அகற்றும் பணிக்கு ரூ.4 கோடி ஒதுக்கீடு.</p><p>அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவித் திட்டத்திற்காக ரூ.56.72 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டு திட்டத்திற்காக ரூ.36 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><p>காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர் இழப்புகளை தடுக்க காட்டுப்பன்றி சேதத் தடுப்பு திட்டத்திற்கு ரூ.7.35 கோடி ஒதுக்கீடு</p><p>பருத்தி உற்பத்தியை பெருக்கிட பருத்தி மறுமலர்ச்சி இயக்கத்திற்காக ரூ.27.21 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><p>விவசாய நிலங்களில் நிரந்தரப் பசுமையை உறுதிப்படுத்த வேளாண் காடுகள் திட்டத்திற்காக ரூ.170.70 கோடி ஒதுக்கீடு</p> <p>அதிக ஊட்டச்சத்து நிறைந்த சீமைத்தினை, பாப்பரை, குலசாமை பயிர்களின் செயல்விளக்கத் திடல்களுக்காக ரூ.30 லட்சம் ஒதுக்கீடு</p><p>சாமை, தினை, வரகு, குதிரைவாலி, பனிவரகு போன்ற பயிர்சாகுபடியை இருமடங்காக்க தமிழ்நாடு குறுதானிய இயக்கத்திற்கு ரூ.7.61 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><p>சிறுதானியங்களின் சாகுபடி பரப்பு, உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில் தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்திற்கு ரூ.63.81 கோடி - அமைச்சர் வினோத்</p><p>பயறு வகைகள், எண்ணெய் வித்துப்பயிர்களில் தன்னிறைவுக்கான இயக்கத்திற்காக ரூ.203.64 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><p>ஒவ்வொரு உழவருக்கும் தனிப்பயன் சேவைகளை வழங்க ஏஐ அடிப்படையிலான செயலிக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/phbqf2zv/paddy.jpg" /></figure><p>நெல் விதை உற்பத்தி மானியத்திற்கு சிறப்பு திட்டம் அறிவித்து ரூ.34.72 கோடி ஒதுக்கீடு</p><p>நெல் விதை உற்பத்தி மற்றும் விநியோக மானியத்திற்கான மாநில அரசின் சிறப்பு திட்டத்திற்கு ரூ.34.72 கோடி ஒதுக்கீடு</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/ogk40j0p/compost.jpg" /></figure><p>இயற்கை உரங்களை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு ரூ.4.5 கோடி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர் வினோத்</p><p>மத்திய மாநில அரசின் பங்களிப்பில் புதிய வேளாண் இயற்கை தொகுப்பை உருவாக்க ரூ.9 கோடி ஒதுக்கீடு -  வேளாண் அமைச்சர்</p><p>மண்புழு உரக்கூடம் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p> <p>ரூ.4 கோடி மதிப்பீட்டில் 1 கோடி விவசாயிகளுக்கு மண் வள அட்டைகள் வழங்கப்படும் - வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு</p><p>உயிர்ம வேளாண் பரவலாக்க சிறப்பு திட்டத்தில் 20,000 ஏக்கருக்கு தலா ரூ.4,000 சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்.</p> <p>5 ஆண்டுகளில் 131 மெட்ரிக் டன் உணவு உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் - அமைச்சர் வினோத் </p><p>மண்வள பாதுகாப்புக்கான ஐந்தாண்டு திட்டத்திற்கு ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு</p><p>மண் வளத்தை பாதுகாக்கும் வகையில் 1 லட்சம் பசுந்தாள் உரம் வழங்கப்படும்.</p> <p>பயிர் காப்பீட்டிற்காக பிரதமர் மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் 14 தொகுப்புகளில் ரூ.648 கோடி மாநில நிதி விடுவிப்பு.</p><p>இலவச மும்முனை மின்சாரம் திட்டத்திற்கு கட்டண தொகையாக மின்வாரியத்திற்கு ரூ.7,432.58 கோடி வழங்கப்படும் - அமைச்சர் வினோத்</p><p>எல்-நினோ தாக்கத்தால் 12 மாவட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.</p><p>சூப்பர் எல் நினோவால் தமிழ்நாட்டில் விவசாயம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது - அமைச்சர் வினோத் </p><p>விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் ரூ.132 கோடி மதிப்பீட்டில் குறுவை தொகுப்பு திட்டம் வழங்கப்பட்டுள்ளது.</p><p>வேளாண் விளைபொருட்களுக்கு 100% பயிர் காப்பீடு வழங்க முடிவு - அமைச்சர் வினோத்</p> <p>வேளாண்மை துறையில் பழைய திட்டங்களுடன் சில புதிய திட்டங்களும் தொடங்கப்பட உள்ளது. </p><p>நாட்டின் வேளாண்மை பாதிக்கப்பட்டால் வேறு எந்த துறையும் சரியான பாதையில் செல்ல முடியாது.</p><p>டெல்டா மாவட்டங்களில் உள்ள வாய்க்கால்கள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டுள்ளன என்று அமைச்சர் வினோத் கூறினார்.</p> <p>செயற்கை நுண்ணறிவின் வருகையால் 2021-ம் ஆண்டு முதல் புதிய பரிணாமம் பெற்றது.</p><p>வேளாண்மை, விவசாயிகளை பாதுகாக்க முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு உறுதி பூண்டுள்ளது - அமைச்சர் வினோத்</p> <p>வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்டை தொடர முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தினார்   - அமைச்சர் வினோத்</p><p>வெற்றி விவசாயிகளை கொண்ட வெற்றி தமிழ்நாட்டை உருவாக்குவோம்  - அமைச்சர் வினோத்</p> <p>சட்டசபையில் வேளாண் பட்ஜெட்டை மட்டும் தாக்கல் செய்யுங்கள் என அமைச்சர் வினோத்துககு சபாநாயகர் அறிவுரை வழங்கினார்.</p><p>தமிழகத்தின் தலைப்பு செய்தி முதலமைச்சர் பேசுவதாக இருக்கும் அல்லது முதலமைச்சரை பற்றி பேசுவதாக இருக்கும் - அமைச்சர் வினோத்</p><p>வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யும் அமைச்சர் வினோத் முதலமைச்சர் குறித்து புகழ்ச்சியாக பேசியதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.</p><p>கோட் சூட் அணிந்த விவசாயி முதலமைச்சர் விஜய் என வேளாண் பட்ஜெட் தாக்கலின்போது அமைச்சர் வினோத் புகழாரம்</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/8smd7lya/vinoth2.jpg" /></figure><p>சட்டசபையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் வினோத்</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/baakw511/speaker.jpg" /></figure><p>வேளாண் பட்ஜெட் தாக்கலாக உள்ள நிலையில் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/5ady734p/udhayanidhi.jpg" /></figure><p>எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, திமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வருகை.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/x2lizk1n/vijay.jpg" /></figure><p>வேளாண் பட்ஜெட் இன்று தாக்கலாக உள்ள நிலையில் சட்டசபைக்கு முதலமைச்சர் விஜய் வருகை.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/xpjmrorm/dmk2.jpg" /></figure><p>சட்டசபைக்கு திமுக எம்எல்ஏக்கள் கறுப்பு சட்டை அணிந்து வருகை. மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என சாடல்.</p> <p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று தமிழக சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.</p><p>வேளாண் துறை அமைச்சர் வினோத், 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். </p> ]]></content:encoded></item><item><title>க்யா போல்டி பப்ளிக்: நாடு முழுவதும் மக்கள் பிரச்னைகளை கேட்கவிருக்கும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி!</title><link>https://www.maalaimalar.com/news/national/what-the-public-says-the-cockroach-janata-party-is-campaigning-across-the-country</link><comments>https://www.maalaimalar.com/news/national/what-the-public-says-the-cockroach-janata-party-is-campaigning-across-the-country#comments</comments><guid isPermaLink="false">1fd62836-e37e-469c-8970-835a79f74e3b</guid><pubDate>Thu, 06 Aug 2026 14:47:11 +0000</pubDate><atom:updated>2026-08-06T14:47:11.900Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,abhijeet dipke,அபிஜீத் தீப்கே,CJP,Kya Bolti Public,மக்கள் என்ன சொல்கிறார்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/9ldemnv0/New-Project-2026-08-06T192619.876.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ க்யா போல்டி பப்ளிக்: நாடு முழுவதும் மக்கள் பிரச்னைகளை கேட்கவிருக்கும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/9ldemnv0/New-Project-2026-08-06T192619.876.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மக்களுடன் கலந்துரையாடி, அவர்களின் பிரச்னைகளை புரிந்துகொள்வதற்கு நாடு முழுவதும் 'க்யா போல்டி பப்ளிக்' என்ற பிரசாரத்தை அடுத்த மாதம் முன்னெடுக்க உள்ளதாக கரப்பான்பூச்சி கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார். </p><p>மகாராஷ்டிராவில் உள்ள தனது இல்லத்தில் இன்று நடைபெற்ற கரப்பான்பூச்சி கட்சியின் முக்கியக் குழு கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்துள்ளார். </p><p>இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்களைச் சந்தித்து, அவர்களின் பிரச்சினைகள், குறைகள் மற்றும் அவர்கள் விரும்பும் அரசியல் மாற்றங்கள் குறித்துக் கேட்டறிவதே இந்த பிரசாரத்தின் முக்கிய நோக்கம் என்று தீப்கே தெரிவித்துள்ளார். </p><p>சமீபத்தில் நடைபெற்ற நீட் முறைகேடு தொடர்பான போராட்டத்தில் வேலையில்லாத இளைஞர்கள் அதிகம் கலந்துகொண்டதாகவும், இதனை வைத்து வேலையில்லாத் திண்டாட்டம், கல்வித்துறை வணிகமயமாக்கல், அரசு நிறுவனங்கள் மீதான நம்பிக்கை குறைவு போன்ற விவகாரங்களை மையமாகக் கொண்டு இப்பிரச்சாரம் முன்னெடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். </p><p>“மக்கள் இனி வீதிகளில் இறங்குவார்கள். இன்று அவர்கள் ஒருவரின் ராஜினாமாவைக் கோரியுள்ளனர்; நாளை மற்றவர்களின் ராஜினாமாவையும் கோருவார்கள். வளர்ந்த இந்தியாவுக்கான பாபாசாகேப் அம்பேத்கர், மகாத்மா காந்தி மற்றும் பண்டிட் நேரு ஆகியோரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப சி.ஜே.பி. செயல்படும். </p><p>எங்கள் சித்தாந்தம் இந்திய அரசியலமைப்பின் சித்தாந்தத்தைப் போன்றதே” என தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் தேதி அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/india-pakistan-clash-headlines-womens-asia-cup-2026-schedule</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/india-pakistan-clash-headlines-womens-asia-cup-2026-schedule#comments</comments><guid isPermaLink="false">7673759a-0e95-4238-9aaf-28dfb3023ac8</guid><pubDate>Thu, 06 Aug 2026 14:42:44 +0000</pubDate><atom:updated>2026-08-06T14:42:44.141Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,பாகிஸ்தான்,Pakistan,Womens Asia Cup,மகளிர் ஆசிய கோப்பை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/8wmonf69/toss.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ india, pakistan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/8wmonf69/toss.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகளிர் ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 28ம் தேதி தொடங்கி செப்டம்பர் 13-ம் தேதி வரை துபாயில் நடைபெற உள்ளது.</p><p>இந்தத் தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி பங்கேற்கிறது.</p><p>மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் ஆகஸ்ட் 28 அன்று துபாயில் தொடங்குகிறது. குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன.</p><p>அரையிறுதி போட்டிகள் செப்டம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளிலும், இறுதிப்போட்டி செப்டம்பர் 13-ம் தேதியும் நடைபெற உள்ளது.</p><h2>இந்தியா-பாகிஸ்தான் மோதல்</h2><p>இந்நிலையில், விளையாட்டில் பரம எதிரிகளாகக் கருதப்படும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி, இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி செப்டம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது.</p><p>ஆகஸ்ட் 28-ம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் தாய்லாந்து, ஹாங்காங் அணிகள் மோதுகின்றன.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை தொடர்பான ஆலோசனை - தமிழ்நாடு எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-invites-tamil-nadu-mps-for-constituency-delimitation-meet</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-invites-tamil-nadu-mps-for-constituency-delimitation-meet#comments</comments><guid isPermaLink="false">fe1a75ab-dbec-4be5-b390-5a02a0a2a227</guid><pubDate>Thu, 06 Aug 2026 14:13:35 +0000</pubDate><atom:updated>2026-08-06T14:13:35.095Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,tvk,தொகுதி மறுவரையறை,Delimitation,cm vijay,முதலமைச்சர் விஜய்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/l0gmqrcp/Untitled-design.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தொகுதி மறுவரையறை தொடர்பான ஆலோசனை - தமிழ்நாடு எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/l0gmqrcp/Untitled-design.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக ஆலோசனை நடத்த, தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கும் முதலமைச்சர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார். </p><p>இந்த ஆலோசனைக் கூட்டம் நாளை மறுநாள் (ஆக.8) சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது. </p><p>நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும்நிலையில், தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. </p><p>இந்த மசோதா சட்டமானால் தென் மாநிலங்கள் பாதிக்கப்படக்கூடும் என திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. </p><p>இந்நிலையில் இந்த மசோதா தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழ்நாட்டின் அனைத்து மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்களும் முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அனைவருக்கும் அழைப்பிதழும் அனுப்பப்படுகிறது.</p><p><strong>தொகுதி மறுவரையறை ஆலோசனை கூட்டம்</strong></p><p>சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் வருகின்ற ஆகஸ்ட் 8-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது. </p><p>இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>சத்தீஸ்கரை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் செயற்கை பன்னீருக்கு தடை</title><link>https://www.maalaimalar.com/news/national/maharashtra-bans-analogue-paneer-violators-face-6-months-jail-rs-1-lakh-fine</link><comments>https://www.maalaimalar.com/news/national/maharashtra-bans-analogue-paneer-violators-face-6-months-jail-rs-1-lakh-fine#comments</comments><guid isPermaLink="false">52eb1ab0-7fe6-4410-99df-6a7b0b5f9ef4</guid><pubDate>Thu, 06 Aug 2026 14:04:40 +0000</pubDate><atom:updated>2026-08-06T14:04:40.158Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,மகாராஷ்டிரா,ban,தடை,analaog paneer,செயற்கை பன்னீர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/htc8cemk/paneer.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ paneer]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/htc8cemk/paneer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிராவில் அனலாக் பன்னீர் எனப்படும் செயற்கை பன்னீரின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு ஓராண்டு தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டது.</p><p>மகாராஷ்டிர மாநிலத்தில் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பா.ஜ.க – சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.</p><h2>தரமற்ற பன்னீர்</h2><p>அங்குள்ள உணவகங்கள் மற்றும் கேட்டரிங் நிறுவனங்கள் இந்த செயற்கை பன்னீரை நுகர்வோருக்குத் தெரியாமல் உண்மையான பன்னீராகப் பயன்படுத்தி வந்தது கண்டறியப்பட்டது. உணவு பாதுகாப்புத்துறை நடத்திய ஆய்வில் பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளில் 35 சதவீதத்திற்கும் அதிகமானவை தரமற்றவை என தெரிய வந்தது.</p><p>இந்தத் தடையை மீறுபவர்களுக்கு 6 மாதங்கள் முதல் ஆயுள் சிறைத்தண்டனை வரை விதிக்கப்படலாம். மேலும், 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.</p><p>இதுதொடர்பாக, மகாராஷ்டிர மாநில உணவு பாதுகாப்பு கமிஷனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:</p><p>மாநிலம் முழுதும் பெரும்பாலான உணவு விடுதிகள், ஹோட்டல்களில் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்காமல், பாலில் இருந்து தயாரிக்கப்படும் பன்னீர் எனக்கூறி, அனலாக் பன்னீரை வழங்குவதாக எங்களுக்கு தொடர்ச்சியாக புகார்கள் வருகின்றன.</p><h2>ஓராண்டு தடை</h2><p>இது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம். அனலாக் பன்னீரில் புரதச்சத்து மிகக் குறைவு. உடல் நலனுக்கும் கேடு. எனவே, அடுத்த ஓராண்டுக்கு அனலாக் பன்னீரை உற்பத்தி செய்யவும், பதப்படுத்தவும், தயாரிக்கவும், வினியோகிக்கவும், மொத்த மற்றும் சில்லரை விற்பனை கடைகளில் விற்கவும் ஓராண்டு தடை விதிக்கப்படுகிறது.</p><p>இதை மீறுவோருக்கு விளைவுகளின் தீவிரத்தைப் பொறுத்து தண்டனை வழங்கப்படும். குறைந்தபட்சம், 6 மாத சிறை மற்றும் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மரணத்தை விளைவிக்கும் சந்தர்ப்பங்களில் ஆயுள் தண்டனை மற்றும் 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.</p><p>ஏற்கனவே சத்தீஸ்கரில் செயற்கை பன்னீருக்கான தடை அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>நானியின் ‘தி பாரடைஸ்’ டீசர் வெளியானது!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/nanis-the-paradise-teaser-released</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/nanis-the-paradise-teaser-released#comments</comments><guid isPermaLink="false">2711bf3c-2773-4cc3-a6ea-c9c6be9b7d31</guid><pubDate>Thu, 06 Aug 2026 13:53:21 +0000</pubDate><atom:updated>2026-08-06T13:53:21.681Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Nani,The Paradise,தி பாரடைஸ்,srikanth odela,ஸ்ரீகாந்த் ஒடேலா,நானி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/a0px8uwr/New-Project-2026-08-06T191730.164.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நானியின் ‘தி பாரடைஸ்’ டீசர் வெளியானது!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/a0px8uwr/New-Project-2026-08-06T191730.164.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேச்சரல் ஸ்டார் நானி நடித்துள்ள, ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. </p><p>ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில் நானி, சோனாலி குல்கர்னி, மோகன் பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளப் படம் தி பாரடைஸ். </p><p>1980-களின் கதைக்களத்தை கொண்டுள்ள இப்படம், செகந்திராபாத்தில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின சமூகம், அமைப்புரீதியான அடக்குமுறையை எதிர்த்து குடியுரிமைக்காகப் போராடுவதை காட்டுகிறது. பான் இந்தியப் படமாக உருவாகியுள்ள இப்படம் செப்டம்பர் 24ம்தேதி வெளியாக உள்ளது. </p><p>இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. </p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/LMqE7OAewkg"></iframe></figure>]]></content:encoded></item><item><title>விவசாயிகளுக்கு திருப்தி அளிக்கும் வகையில் வேளாண் பட்ஜெட் இல்லை - பெ. சண்முகம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-agriculture-report-does-not-satisfy-farmers-p-shanmugam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-agriculture-report-does-not-satisfy-farmers-p-shanmugam#comments</comments><guid isPermaLink="false">5eccd42c-9d50-4a1a-b748-3147bc0001b9</guid><pubDate>Thu, 06 Aug 2026 13:16:49 +0000</pubDate><atom:updated>2026-08-06T13:16:49.931Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,P. Shanmugam,பெ.சண்முகம்,தவெக அரசு,tvk government</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/ej0u3ptn/New-Project-2026-08-06T184611.608.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விவசாயிகளுக்கு திருப்தி அளிக்கும் வகையில் வேளாண் அறிக்கை இல்லை - பெ. சண்முகம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/ej0u3ptn/New-Project-2026-08-06T184611.608.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2026-27ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தவெக அரசு நேற்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது. அதனைத்தொடர்ந்து இன்று வேளாண்துறை அமைச்சர் வினோத், வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். </p><p>இந்நிலையில் வேளாண் அறிக்கை விவசாயிகளுக்கு திருப்தி அளிக்கும் வகையில் அமையவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;</p><h2>வரவேற்கத்தக்கது</h2><p>“வேளாண் நிதிநிலை அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மை கல்லூரி அமைக்கப்படும், சிறுதானிய உற்பத்தி மற்றும் கொள்முதல் ஊக்கப்படுத்தும் அறிவிப்பு, பனை பாதுகாப்பு இயக்கம், வாழைக்கு முட்டுக் கொடுக்கும் திட்டம், பூச்சி மற்றும் நோய் பாதிப்பிலிருந்து தென்னையை பாதுகாக்க தென்னை டானிக் வழங்குவதுடன் தமிழ்நாடு தென்னை பதப்படுத்தும் கழகம் அமைக்கப்படும் என்று அறிவித்திருப்பது,</p><p>வாழை, மஞ்சள், வெங்காயம், தக்காளி, மா, மிளகாய் ஆகிய விளைபொருட்கள் சேமிப்புக்கான குளிர்ப்பதன கிடங்குகள் அமைக்கப்படும், சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் 1000 விவசாயிகளுக்கு மானியத்துடன் வழங்கப்படும், உழவர் சந்தைகள் மேம்படுத்தப்படும் என்றும், வாரத்திற்கு ஒரு நாள் இயற்கை வேளாண் பொருட்கள் விற்பனைக்கு ஒதுக்கப்படும் என்பது போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது.</p><h2>பயிர்க்கடன் தள்ளுபடி</h2><p>நிதிநிலை அறிக்கையில், விவசாயத்தில் இயந்திரமயம் என்பதற்கு கூடுதல் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் விவசாய வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை என்ற கருத்தின் அடிப்படையில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>ஏற்கனவே, விவசாய தொழிலாளர்களுக்கு விவசாயத்தில் வேலை கிடைக்காமல் புலம்பெயர்ந்து செல்லும் அவலநிலை உள்ளது. இந்த நிலையில், விவசாயத்தை முழுமையாக இயந்திரமயமாக்குவது, மனித உழைப்பை முற்றிலும் நிராகரிக்கும் நிலை ஏற்பட்டு விவசாய தொழிலாளர்களுக்கு விவசாயத்தில் வேலையே கிடைக்காது என்ற நிலையை உருவாக்கும் என்பதை அரசுக்கு சுட்டிக்காட்டுகிறோம்.</p><p>விவசாயத்திற்கு இலவச மின்சாரம் என்பது தமிழ்நாடு விவசாயிகள் போராடிப் பெற்ற உரிமை ஆகும். மின் இணைப்புக் கோரி பல ஆண்டுகளாக சில லட்சம் விவசாயிகள் காத்திருக்கும் நிலையில் அவர்களுக்கு மின் இணைப்பு வழங்குவது குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லாமல் இருப்பது விவசாயிகள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. </p><p>அதேபோல், ஏற்கனவே அரசு அறிவித்துள்ள விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி போதுமானது அல்ல என்று விவசாயிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.</p><h2>தொடர்கதை</h2><p>விவசாயத்திற்கு முக்கியம் தரமான விதை, உரம், பாசன உத்தரவாதம், சந்தை வாய்ப்பு கொள்முதல் உத்தரவாதம் போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக, காவிரி டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் பாதுகாப்பாக வைப்பதற்கான குடோன் வசதிகள் இல்லாமல் திறந்தவெளியில் வைக்கப்படுவதும், மழையில் நனைந்து வீணாவதும் தொடர்கதையாக உள்ளது. </p><p>ஆனால், இதுகுறித்து நிதிநிலை அறிக்கையில் எதுவுமே குறிப்பிடாமல் இருப்பது சரியல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம். மேலும், குறுவை சாகுபடி செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அரசு முன்வர வேண்டும்.</p><p>காட்டுப்பன்றி மட்டுமல்லாமல் பலவிதமான வன விலங்குகளால் பயிர்கள் பாதிக்கப்படுவது, மனித உயிரிழப்புகள் உட்பட ஏற்படுகிறது. நிதி நிலை அறிக்கையில் காட்டுப்பன்றிகளை தடுப்பதற்கு யோசனை சொல்லப்பட்டுள்ளது. அதேநேரத்தில், வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து அரசு அறிவிக்க வேண்டும்.</p><h2>தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை</h2><p>சட்டப்பேரவை தேர்தலின்போது தவெகவால் விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நிதிநிலை அறிக்கை அக்கறை செலுத்தவில்லை. குறிப்பாக, நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 3500ம், கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ. 4500ம், சந்தை விலையில் சரிவு ஏற்படும்போது அதை அரசு ஈடுசெய்யும் என்பதும், </p><p>விதைப்பு கால உதவியாக ஒவ்வொரு விவசாய குடும்பத்திற்கும் ரூ. 15,000 வழங்கப்படும் என்பதும், 100 சதவிகிதம் பயிர்க்காப்பீடு உத்தரவாதப்படுத்த தமிழ்நாடு அரசே பயிர்க்காப்பீட்டு நிறுவனத்தை ஏற்படுத்துவது போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது விவசாயிகள் மத்தியில் ஏமாற்றத்தை உள்ளாக்கியிருக்கிறது. </p><p>பெரும்பகுதியான மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் வேளாண்மை துறைக்கு இன்னும் கூடுதல் முக்கியத்துவம் அளித்திருக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>‘அனுசரித்துப் போ’ என
மகள்களிடம் கூறாதீர்கள்... அவர்களின் புகார்களை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள் - அலகாபாத் உயர் நீதிமன்றம்  </title><link>https://www.maalaimalar.com/news/national/do-not-dismiss-your-daughters-take-their-complaints-seriously-allahabad-high-court</link><comments>https://www.maalaimalar.com/news/national/do-not-dismiss-your-daughters-take-their-complaints-seriously-allahabad-high-court#comments</comments><guid isPermaLink="false">4b34c8f6-1b46-4983-87d5-68d03aa3f442</guid><pubDate>Thu, 06 Aug 2026 12:48:38 +0000</pubDate><atom:updated>2026-08-06T12:48:38.056Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>அலகாபாத் உயர் நீதிமன்றம்,திருமணமான பெண்,Allahabad HC,Adjust,married woman,அனுசரித்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/amgpymgh/New-Project-2026-08-06T181815.717.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மகள்களிடம் கூறாதீர்கள்... அவர்களின் புகார்களை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள் - அலகாபாத் உயர் நீதிமன்றம்  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/amgpymgh/New-Project-2026-08-06T181815.717.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குடும்பத்தில் ‘அனுசரித்து செல், இணங்கிப் போ’ என மகள்களிடம் கூறாதீர்கள். அவர்களது பிரச்னைகளை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள் என பெற்றோர்களுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. </p><p>மேலும் இத்தகைய அறிவுரை, உங்களை அறியாமலேயே குற்றவாளிகளுக்கு சாதகமாக அமைந்து, இறுதியில் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய தொடர்ச்சியான வன்முறைக்குப் பெண்களை ஆளாக்கக்கூடும் என்றும் கூறியுள்ளது. </p><p>நீதிபதி ராஜேஷ் சிங் சௌஹான் மற்றும் நீதிபதி அப்தேஷ் குமார் சௌத்ரி ஆகியோர் அடங்கிய அமர்வின் இந்தக் கருத்து பலரிடமும் பரவலான பாராட்டுகளைப் பெற்றுவருகிறது.</p><p>வரதட்சணைக் கொடுமையால் 25 வயது இளம்பெண்ணும், அவரது கைக்குழந்தையும் கொலை செய்யப்பட்ட வழக்கின் மேல்முறையீட்டு மனுவிசாரணையில் உயர் நீதிமன்றம் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளது.</p><h2>வழக்கின் பின்னணி </h2><p>இந்த வழக்கு, 25 வயதான மீனா தேவி மற்றும் அவரது 15 மாதக் குழந்தை கடந்த 2011ம் ஆண்டு, வரதட்சணைக் கொடுமையால் அடித்துக் கொல்லப்பட்டது தொடர்பானது. </p><p>மீனாவின் திருமணத்தின்போது அவரது குடும்பத்தினர் ரூ.2.26 லட்சம் மாப்பிள்ளை வீட்டிற்கு கொடுத்துள்ளனர். திருமணத்திற்குப் பிறகு, கணவர் தினேஷ் குமார், அவரது பெற்றோர் மற்றும் சகோதரர்கள் இணைந்து ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் கூடுதலாகக் கேட்டு மீனாவை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சித்திரவதை செய்துள்ளனர்.</p><p>தனக்கு நடக்கும் கொடுமைகள் குறித்து மீனா பலமுறை போன் மூலமாகவும், நேரிலும் பெற்றோர் மற்றும் சகோதரர்களிடத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் மீனாவின் பெற்றோர் தரப்பு இது சாதாரணப் பிரச்னை நாளடைவில் சரியாகிவிடும் எனக் கூறி சமாதானப்படுத்தி வந்துள்ளனர். </p><p>இதன் விளைவு, மீனா மற்றும் அவரது 15 மாதக் குழந்தை இருவரும், தினேஷ் வீட்டில் உடலில் காயங்களுடன் உயிரிழந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், மீனாவின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.</p><p>இந்த ஆயுள் தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் இந்த தண்டனையை உறுதிசெய்து இந்தக் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.</p><h2>நீதிமன்றத்தின் முக்கிய கருத்துகள்</h2><p>மகள்களின் தொடர்ச்சியான புகார்களை, கணவன்-மனைவிக்கு இடையேயான சாதாரண கருத்து வேறுபாடுகள் என கருதக்கூடாது. மாறாக, அவை உதவி, பாதுகாப்பு மற்றும் தலையீட்டிற்கான கோரிக்கைகள் என்பதனை பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும். </p><p>பயம், அவமானம் அல்லது துன்புறுத்தல் குறித்துத் தனது பெற்றோரையோ அல்லது உறவினர்களையோ மீண்டும் மீண்டும் அணுகும் ஒரு பெண்ணின் குரல், பரிவுடனும், உடனடியாகவும் கேட்கப்பட வேண்டும். </p><p>அத்தகைய பெண்ணுக்கு ஆதரவளிப்பதும், அவரது பாதுகாப்பையும், கண்ணியத்தையும் பேணுவதும் குடும்பத்தின் தார்மீக மற்றும் சமூகப் பொறுப்பாகும்.  பெண்கள் அமைதியாகத் துன்பப்பட நிர்பந்திக்கப்படுவதில்லை என்பதை சமூகங்களும் உறுதி செய்ய வேண்டும். </p><p>“தாமதமான வருத்தமும், நீதிமன்ற வழக்குகளும் இழந்த ஒரு உயிரை மீண்டும் கொண்டு வர முடியாது”. சரியான நேரத்தில் மேற்கொள்ளப்படும் தலையீடு ஈடுசெய்ய முடியாத இழப்பைத் தவிர்க்க உதவும். என தெரிவித்தனர். </p>]]></content:encoded></item><item><title>வங்கதேச அதிபர் தேர்தல் வரும் 20-ம் தேதி நடைபெறும்: தேர்தல் ஆணையம்</title><link>https://www.maalaimalar.com/news/world/bangladesh-to-hold-presidential-election-on-august-20-ec</link><comments>https://www.maalaimalar.com/news/world/bangladesh-to-hold-presidential-election-on-august-20-ec#comments</comments><guid isPermaLink="false">6fd7950c-cc36-4c6e-94ac-0ed68c526e1e</guid><pubDate>Thu, 06 Aug 2026 12:45:21 +0000</pubDate><atom:updated>2026-08-06T12:45:21.274Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Bangladesh,வங்கதேசம்,தேர்தல் ஆணையம்,Election commision,அதிபர் தேர்தல்,president election</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/6fk7twha/bangla.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ bangladesh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/6fk7twha/bangla.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வங்கதேசத்தின் புதிய அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் ஆகஸ்ட் 20-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.</p><p>வங்கதேசத்தில் நடந்த மாணவர் புரட்சியால் அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் அவர் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.</p><p>தொடர்ந்து, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு நடத்திய தேர்தலில் தாரிக் ரஹ்மான் புதிய பிரதமராக பதவி ஏற்றார். நெருக்கடிகளுக்கு மத்தியில் அதிபர் முகமது ஷஹாபுதீன் பதவியில் நீடித்து வந்தார்.</p><p>2023-ம் ஆண்டில் அதிபர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட அவருக்கு இன்னும் 2 ஆண்டு பதவிக்காலம் உள்ளது. ஆனால் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் அவருக்கு இருந்ததாகக் கருதப்படும் தொடர்பு காரணமாக தாாிக் ரஹ்மான் அரசுக்கும், அதிபர் முகமது ஷஹாபுதீனுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.</p><h2>அதிபர் ராஜினாமா</h2><p>இதற்கிடையே, வரும் டிசம்பரில் ஷேக் ஹசீனா மீண்டும் வங்கதேசம் திரும்ப உள்ளேன் என அறிவித்தார். அவரிடம் அதிபர் முகமது ஷஹாபுதீன் தொடர்பு கொண்டு பேசியதாகக் கூறப்படுகிறது. இது வங்கதேச புதிய அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. </p><p>இதையடுத்து, கடந்த மாதம் 24-ம் தேதி அதிபர் பதவியில் இருந்து முகமது ஷஹாபுதீன் திடீரென ராஜினாமா செய்தார். தற்போது நாடாளுமன்ற சபாநாயகர் ஹபிஸ் உத்தீன் அகமது இடைக்கால அதிபராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.</p><h2>20-ம் தேதி அதிபர் தேர்தல்</h2><p>இந்நிலையில், வங்கதேசத்தின் புதிய அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் ஆகஸ்ட் 20-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.</p><p>இதற்கான வேட்புமனு தாக்கல் ஆகஸ்ட் 13-ம் தேதியும், வேட்புமனு பரிசீலனை ஆகஸ்ட் 16-ம் தேதியும் நடைபெறும் என தெரிவித்தது.</p>]]></content:encoded></item><item><title>உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் தகுதி சுற்று நடைபெறும் தேதி அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/sports/world-cup-cricket-qualifier-schedule-announced</link><comments>https://www.maalaimalar.com/sports/world-cup-cricket-qualifier-schedule-announced#comments</comments><guid isPermaLink="false">f6235071-54b5-4b7e-9dba-ab66889a62aa</guid><pubDate>Thu, 06 Aug 2026 12:14:53 +0000</pubDate><atom:updated>2026-08-06T12:14:53.586Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ICC,உலக கோப்பை கிரிக்கெட்,World Cup Cricket,தகுதி சுற்று,world cup qualifier round,ஐசிசி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/m6z5kxdp/world-cup.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ World Cup]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/m6z5kxdp/world-cup.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 1975-ம் ஆண்டு உலக கோப்பையை அறிமுகப்படுத்தியது.</p><h2>உலக கோப்பை கிரிக்கெட் </h2><p>கடைசியாக 2023-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற  உலக கோப்பையை (50 ஓவர்) ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இறுதிப்போட்டியில் இந்தியாவை  6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.</p><p>14-வது  ஐ.சி.சி. ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பை   அடுத்த  ஆண்டு (2027) அக்​டோபர் 4-ந்தேதி முதல் நவம்பர் 21-ந்தேதி வரை  தென் ஆப்​பிரிக்​கா, ஜிம்​பாப்​வே, நமீபியா ஆகிய 3 நாடுகளில் நடைபெறுகிறது.</p><p>உலக கோப்பை போட்டி நடைபெறும் 12 இடங்களை  ஐ.சி.சி. சமீபத்தில் அறி​வித்து இருந்தது. </p><h2>தகுதிசுற்று ஆட்டம்</h2><p>இந்த போட்டியில் மொத்தம் 14 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் நேரடியாக விளையாடும். செப்டம்பர் 30-ந்தேதி தர வரிசையின் அடிப்படையில் முதல் 8 இடங்களை பிடித்த அணிகள் உலக கோப்பையில் விளையாடும். எஞ்சிய 4 இடங்களுக்கு தகுதி சுற்றின் மூலம் தேர்வு செய்யப்படும்.</p><p>இந்த நிலையில் உலக கோப்பை போட்டிக்கான தகுதிசுற்று நடைபெறும் தேதி விவரம் வெளியாகி உள்ளது. பிப்ரவரி 22-ந்தேதி முதல் மார்ச் 23-ந்தேதி வரை தகுதிசுற்று ஆட்டங்கள் நடத்த ஐ.சி.சி. திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் போட்டி நடைபெறும் இடங்களை முடிவு செய்யவில்லை.</p><p>தகுதி சுற்றில் அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட 10 அணிகள் விளையாடுகின்றன.</p>]]></content:encoded></item><item><title>திருவள்ளூர் அமோனியா வாயுக்கசிவு விபத்து - உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க ஆலை உரிமையாளருக்கு உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thiruvallur-ammonia-gas-leak-accident-factory-owner-ordered-to-pay-rs-10-lakh-to-the-families-of-the-deceased</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thiruvallur-ammonia-gas-leak-accident-factory-owner-ordered-to-pay-rs-10-lakh-to-the-families-of-the-deceased#comments</comments><guid isPermaLink="false">30c68336-4319-40d8-9078-c4dc2948c086</guid><pubDate>Thu, 06 Aug 2026 11:37:23 +0000</pubDate><atom:updated>2026-08-06T11:37:23.315Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை உயர் நீதிமன்றம்,Madras High Court,compensation,இழப்பீடு,Tiruvallur ammonia leak,திருவள்ளூர் அமோனியா வாயுக்கசிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/5kmazyl5/New-Project-2026-08-06T165937.864.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருவள்ளூர் அமோனியா வாயுக்கசிவு விபத்து - உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க ஆலை உரிமையாளருக்கு உத்தரவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/5kmazyl5/New-Project-2026-08-06T165937.864.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர் அமோனியா வாயுக் கசிவு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க ஆலை உரிமையாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>திருவள்ளூர் மாவட்டம், கன்னிகைப்பேரில் செயல்பட்டு வந்த தனியார் இறால் பதப்படுத்தும் ஆலையில் கடந்த ஜூன் மாதம் 21ம் தேதி நிகழ்ந்த இந்த விபத்து தொடர்பாக, ஆலை உரிமையாளர்கள் ஜோசப் ஜெகன், மோகன் மற்றும் ஆலை மேலாளர் டேனியல் டைட்டஸ் சிங் ஆகிய 3 பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி, இந்த இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. </p><p>மூன்று பேரும் விசாரணை அதிகாரி முன்னிலையில் ஆஜராகி வழக்கமான கையெழுத்திட வேண்டும் என்றும், காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.</p><p>ஜூன் 21ம் தேதி ஆலையில் ஏற்பட்ட இந்த அமோனியா கசிவில் சிக்கி 18 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழ்நாடு அரசு சார்பில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டது.</p><p>முன்னதாக மூவரின் ஜாமின் மனுவையும் திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தநிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தை நாடிய நிலையில் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>அரசியல் ஒரு இருமுனை கத்தி; எனக்கு அதிகார ஆசையில்லை: விஜய் குறித்து மனம் திறந்த நடிகர் மாதவன்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/madhavan-says-politics-is-a-double-edged-sword-no-desire-for-power-speaks-on-cm-vijay</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/madhavan-says-politics-is-a-double-edged-sword-no-desire-for-power-speaks-on-cm-vijay#comments</comments><guid isPermaLink="false">6abd408b-6a5b-4d65-9147-e13e466332d3</guid><pubDate>Thu, 06 Aug 2026 11:11:07 +0000</pubDate><atom:updated>2026-08-06T11:11:07.133Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Vijay,நடிகர் மாதவன்,Actor Madhavan,ஜி.டி.நாயுடு,G.D.Naidu</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/aw3bjy8a/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Actor Madhavan-Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/aw3bjy8a/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தொழிலதிபர் ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான 'G.D.N' பட விளம்பர நிகழ்ச்சியின் போது, மூத்த இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாருடன் நடிகர் மாதவன் சிறப்பு நேர்காணல் ஒன்றில் பங்கேற்றார். அதில் நடிகர் விஜய், தமிழக அரசியல் சூழல் மற்றும் தனது சொந்த அரசியல் விருப்பங்கள் குறித்து மாதவன் விரிவாகப் பேசியுள்ளார்.</p><h2><strong>நண்பன் விஜய் முதலமைச்சரானது பெருமை</strong></h2><p>"தமிழகத்தில் அரசியல் சூழல் இவ்வளவு வேகமாக மாறும் என்றும், அது சாத்தியம் என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது மக்களுக்கு மாற்றத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது" என்று மாதவன் குறிப்பிட்டிருந்தார். எனக்கு விஜய்யை நன்றாகத் தெரியும். என் நண்பன் விஜய் இன்று 'முதலமைச்சர் விஜய்' ஆகியிருப்பதை நான் பெருமையுடன் சொல்கிறேன் என மகிழ்ச்சி தெரிவித்தார்.</p><h2><strong>அரசியல் பிரவேசம் குறித்து மாதவன் தெளிவு</strong></h2><p>தனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் சுத்தமாக இல்லை என்று கூறிய மாதவன், "மக்களுக்குச் சேவை செய்யும் எண்ணம் நமக்குள்ளேயே இருக்க வேண்டும். அதிகார ஆசை எனக்கு இல்லை. மக்களுக்குத் தலைவனாகவோ அல்லது முதலமைச்சராகவோ ஆக வேண்டும் என்ற லட்சியம் எனக்குக் கிடையாது. அந்த வகையில் நான் ஒரு சுயநலவாதி" என்று பேசினார்.</p><h2><strong>'தம்பி' பட வசனம்</strong></h2><p> மேலும் பேசிய அவர், எனக்கு அரசியலைப் பற்றி பெரிய புரிதல் இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை நான் மதிக்கிறேன். எனது 'தம்பி' படத்தில் வரும் பிரபல வசனத்தைப் போல, யாருக்கும் தீங்கு விளைவிக்காமல் எனது வேலையைச் சரியாகச் செய்வதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது" என்றார்.</p><p>நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் கூறுகையில்,  "அரசியல் என்பது ஒரு இருமுனை கத்தி. நீங்கள் நல்லது செய்தாலும் திட்டு வாங்குவீர்கள், தவறு செய்தாலும் திட்டு வாங்குவீர்கள். நீங்கள் என்ன செய்தாலும் அதை எதிர்மறையாகப் பார்க்கும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யும்" என்றார். </p><p>துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பன் உதயநிதி குறித்துப் பேசிய அவர், நான்கு வயதில் தனது மடியில் அமர்ந்திருந்த இன்பன் இன்று வளர்ந்து நிற்கும் விதத்தைப் பார்க்கும் போது பெருமையாக இருப்பதாகத் தெரிவித்தார்.</p><h2><strong>'G.D.N' திரைப்படம் பற்றிய விவரங்கள்</strong></h2><p>"இந்தியாவின் எடிசன்" என்று அழைக்கப்படும் கோவையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் மற்றும் கண்டுபிடிப்பாளர் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'G.D.N' திரைப்படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கியுள்ளார். இதில் மாதவனுடன் சத்யராஜ், பிரியாமணி, ஜெயராம், துஷாரா விஜயன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>&quot;மக்களை கொல்ல விரும்பவில்லை; ஈரானுடன் ஒப்பந்தம் செய்யவே விரும்புகிறேன்&quot; - அமெரிக்க அதிபர் டிரம்ப்!</title><link>https://www.maalaimalar.com/news/world/i-dont-want-to-kill-people-i-just-want-a-deal-with-iran-says-trump</link><comments>https://www.maalaimalar.com/news/world/i-dont-want-to-kill-people-i-just-want-a-deal-with-iran-says-trump#comments</comments><guid isPermaLink="false">e34a175e-8cfa-4189-ae80-88b69ebcadee</guid><pubDate>Thu, 06 Aug 2026 11:09:00 +0000</pubDate><atom:updated>2026-08-06T11:09:00.915Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,DonaldTrump,ஈரான்,Iran,ஹார்முஸ் ஜலசந்தி,HormuzStrait,அஹ்மத் வஹிதி,AmericaVSIran</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/idiz3gg8/AmericaVSIran" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ AmericaVSIran]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/idiz3gg8/AmericaVSIran?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்கா - ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்து மீண்டும் மோதல் நடை பெற்று வந்த நிலையில், பேச்சுவார்த்தை நடப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். </p><p>இதனால் ஈரான் மீதான திட்டமிட்ட மிகப்பெரிய தாக்குதலை நிறுத்தி வைத்ததாகவும் தெரிவித்தார்.</p><h2><strong>அமெரிக்கா-ஈரான் முரண்பாடு:</strong></h2><p>ஈரானுடனான பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படும் என்றும் அமெரிக்கா தெரிவித்தது. </p><p>ஆனால் அதை ஈரான் திட்டவட்டமாக மறுத்தது. அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்றும் ஹார்முஸ் ஜலசந்தியை நிர்வகிப்பது தொடர்பாக ஓமனுடன் நடந்த பேச்சு வார்த்தையில் ஒப்பந்தம் மேற்கொள்வதில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளோம் என்றும் ஈரான் தெரிவித்தது. </p><p>ஓமனுடனான பேச்சு வார்த்தையில் அமெரிக்காவுக்கு எந்த பங்களிப்பும் இல்லை என்று ஈரான் தெரிவித்தது.</p><h2><strong>ஒப்பந்தமே விருப்பம்:</strong></h2><p>இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், லாஸ் வேகாஸ் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>"ஈரானை நாங்கள் கடுமையாக தாக்கி வருகிறோம். ஆனால் நான் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ளவே விரும்புகிறேன். ஏனென்றால் நான் மக்களை கொல்ல விரும்பவில்லை. ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதை விட, ஈரானுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதையே விரும்புகிறேன்.</p><p>2-ம் உலகப் போருக்கு பிறகு மிகப்பெரிய தாக்கு தலை நடத்த நாங்கள் தயாராக இருந்தோம். அப்போது ஈரான் எங்களிடம் தயவுசெய்து அதைச் செய்யாதீர்கள். நாம் பேசலாம்’ என்று கூறியது. இதையடுத்து தாக்குதலை நிறுத்தி வைத்தேன். </p><p>அதன்பிறகு ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறோம். ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களைப் பெறக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்" என்று டிரம்ப் கூறினார்.</p><h2><strong>அணு ஆயுத நிபந்தனை:</strong></h2><p>இந்த நிலையில் ஈரானின் புரட்சிகர காவல் படையின் தலைமைத் தளபதி அஹ்மத் வஹிதி கூறுகையில், அமெரிக்காவும் இஸ்ரேலும் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் வரை, ஈரானின் பாதுகாப்பிற்காக நாங்களும் அணு ஆயுதத் தயாரிப்புப் பணிகளைத் தொடர்வோம். </p><p>அவர்கள் தங்கள் அணு ஆயுதங்களைக் கைவிட்டால், நாங்களும் அவ்வாறே செய்வோம் என்று வஹிதி கூறியுள்ளார்.</p><h2><strong>ஹார்முஸில் வெடிசத்தம்:</strong></h2><p>இதற்கிடையே ஹார்முஸ் ஜலசந்தியில் ஓமன் அருகே சென்று கொண்டிருந்த ஒரு எண்ணை கப்பல் அருகே 2 வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக இங்கிலாந்து கடல்சார் நிறுவனம் தெரிவித்தது. </p><p>கப்பலும், அதன் பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்று தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ் தெரியாது என்பது பெருமையல்ல அவமானம்!-தான் படித்த பள்ளியில் புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்து நடிகர் தனுஷ் உருக்கம்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/dhanush-calls-ignorance-of-tamil-a-shame-at-chennai-school-new-building-opening</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/dhanush-calls-ignorance-of-tamil-a-shame-at-chennai-school-new-building-opening#comments</comments><guid isPermaLink="false">c2e66f7f-7fb4-4ed6-a860-7a2838c6f9f1</guid><pubDate>Thu, 06 Aug 2026 10:56:14 +0000</pubDate><atom:updated>2026-08-06T10:56:14.348Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நடிகர் தனுஷ்,actor Dhanush,Tamil Language,Dhanush Block,தாய்மொழி தமிழ்,தனுஷ் பிளாக்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/i7ye7a4r/dhanush.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Actor Dhanush  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/i7ye7a4r/dhanush.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை சாலிகிராமத்தில் உள்ள தாய் சத்யா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 3 தளங்களைக் கொண்ட புதிய கட்டிடத் திறப்பு விழா நடைபெற்றது. தான் எல்.கே.ஜி முதல் 10-ஆம் வகுப்பு வரை படித்த பள்ளிக்குத் தேவையான உள்கட்டமைப்புகளைத் தன் சொந்தச் செலவில் கட்டித் தந்த நடிகர் தனுஷ், 'தனுஷ் பிளாக்' எனும் அக்கட்டிடத்தை நேரில் திறந்து வைத்தார்.</p><p>விழாவில் தனது பழைய ஆசிரியர்களின் கால்களில் விழுந்து ஆசி பெற்ற தனுஷ், ஆசிரியர்கள், சக வகுப்புத் தோழர்கள் மற்றும் மாணவர்களிடையே உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றினார்:</p><h2><strong>தாய்மொழி பற்றிய பேச்சு</strong></h2><p> "நான் இங்கு படித்த காலத்தில் ஆங்கிலம் சரியாக பேச வராது, தவறுகளுடனே பேசுவோம். ஆனால் எங்களுக்குத் தமிழ் நன்றாகத் தெரியும். இன்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. நான் சந்திக்கும் 10 பேரில் 8 பேருக்குத் தமிழ் எழுத, படிக்கத் தெரியவில்லை. ஆனால் ஆங்கிலத்தில் புலமை பெற்றுள்ளனர். இது மிகவும் மனவேதனை அளிக்கிறது" எனக் குறிப்பிட்டார்.</p><h2><strong>வெளிநாட்டு அனுபவம்</strong></h2><p>சில ஆண்டுகளுக்கு முன்பு பெல்ஜியத்தில் பிரெஞ்சு படப்பிடிப்பின் போது, எனக்கு ஆங்கிலம் தெரியும் என்பதைக் கேட்டு அங்குள்ளவர்கள் வியந்தனர். காரணம் கேட்டதற்கு, 'தாய்மொழி தெரிந்திருப்பதுதான் முதன்மை. ஆங்கிலம் என்பது கூடுதல் தகுதி மட்டுமே' என்றனர். அந்த சம்பவம் மொழி பற்றிய என் பார்வையையே மாற்றியது.</p><h2><strong>உருக்கமான வேண்டுகோள்</strong></h2><p>"தாய்ப்பால் போன்ற தாய்மொழியை விடுத்து பிற மொழிகளுக்கு முக்கியத்துவம் தருவது தவறானது. தமிழ் தெரியாது என்று சொல்வது பெருமையல்ல; அது உண்மையில் அவமானம். மாணவர்கள் அனைவரும் முதலில் தாய்மொழியைப் படிக்கவும் எழுதவும் கற்றுக் கொள்ள வேண்டும்" என வலியுறுத்தினார்.</p><h2><strong>பள்ளிக்குத் தொடரும் ஆதரவு:</strong></h2><p>நடிகரும் தனுஷின் பள்ளித் தோழருமான ஒளிப்பதிவாளர் ஏ.குமரன் பேசுகையில், பள்ளியின் உள்கட்டமைப்புத் தேவையை அறிந்து தனுஷ் முன்வந்து நிதியுதவி செய்ததாகவும், வரும் காலங்களில் பழமையான கட்டிடங்களைச் சீரமைத்து மேலும் புதிய வசதிகளைச் செய்து தருவதாக உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தார். மாணவர்களும் எதிர்காலத்தில் தான் படித்த கல்வி நிறுவனங்களுக்குப் பங்களிப்பு செய்ய வேண்டும் எனத் தனுஷ் கேட்டுக்கொண்டார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை மெட்ரோ ரெயில் 2ம் கட்ட பணி: மூலக்கடையை வந்தடைந்தது &apos;நீலகிரி&apos;!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/neelagiri-tbm-completes-phase-2-tunnel-reaches-moolakadai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/neelagiri-tbm-completes-phase-2-tunnel-reaches-moolakadai#comments</comments><guid isPermaLink="false">7366444b-c6e4-4cce-98a1-a58a1df38830</guid><pubDate>Thu, 06 Aug 2026 10:43:43 +0000</pubDate><atom:updated>2026-08-06T10:43:43.299Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Metro Rail,Chennai Metro Rail,சென்னை மெட்ரோ ரெயில்,Nilagiri,மெட்ரோ ரெயில்,நீலகிரி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/wxm09bms/metro.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chennai metro rail]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/wxm09bms/metro.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 3-ல் நீலகிரி எனப் பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் பணியை முடித்தது.</p><p>சுரங்கம் தோண்டும் இயந்திரமான நீலகிரி வெற்றிகரமாக பணியை முடித்து மூலக்கடை மெட்ரோ ரெயில் நிலையத்தை வந்தடைந்தது.</p><p>இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 3-ல்  நீலகிரி என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாக பணியை முடித்து மூலக்கடை மெட்ரோ நிலையத்தை வந்தடைந்தது. </p><p>சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், கட்டம் 2-ல் 118.9 கி.மீ. நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களை கட்டி முடிக்க திட்டமிட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.</p><p>சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 3-ல் மாதவரம் பால் பண்ணை முதல் கெல்லீஸ் வரையிலான முதல் 9 கி.மீ. நீளத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணியை டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணிக்காக மொத்தம் 7 சுரங்கப்பாதை தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.</p><p>இதில், 'நீலகிரி' என்று பெயரிடப்பட்ட சுரங்கப்பாதை தோண்டும் இயந்திரம், மாதவரம் நெடுஞ்சாலை ரெயில் நிலையத்திலிருந்து மூலக்கடை இரயில் நிலையம் வரையிலான (up line) பகுதியில் சுரங்கம் தோண்டும் பணியைத் தொடங்கியது.</p><p>மொத்தம் 819 மீட்டர் நீளத்திற்கு சுரங்கம் அமைக்கும் பணியை முடித்து மூலக்கடை மெட்ரோ நிலையத்தை வந்தடைந்தது. இது TU01 ஒப்பந்தத்தின் கீழ் டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட 11-வது சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் வெற்றிகரமான பணி நிறைவு ஆகும்.</p><p>ஒட்டுமொத்தமாக, சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம்-2-ல் இதுவரை 24 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் தனது பணியை முடித்து இலக்குகளை வெற்றிகரமாக எட்டியுள்ளது.</p><p>இந்தத் திட்டத்தின் TU-01 ஒப்பந்தப் பிரிவின் கீழ் வரும் மாதவரம் நெடுஞ்சாலை முதல் மூலக்கடை வரையிலான சுரங்கப் பாதை பகுதி பல பெரிய சவால்கள் நிறைந்ததாக அமைந்தது; குறிப்பாக, 'நீலகிரி' (S 96) என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம் பக்கிங்ஹாம் கால்வாயின் அடியிலும், வாகனப் போக்குவரத்து நிறைந்த சாலையின் அடியிலும் வெற்றிகரமாகப் பாதையை அமைத்ததோடு, அப்பகுதியில் இருந்த 14-க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகளால் பொதுமக்களின் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படாதவாறு தடையின்றி மாற்று நீர் ஆதாரங்களை அமைத்துக் கொடுத்து இப்பணிகள் சிறப்பாகச் செய்து முடிக்கப்பட்டுள்ளன.</p><p>சுரங்கப்பாதை அமைக்கும் பணி முழுவதும், அனுமதிக்கப்பட்ட குறைந்தபட்ச நில அதிர்வு மற்றும் மாற்றங்களுக்குள் மிகச் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டது. மேலும், இப்பணி நடைபெற்ற காலம் முழுவதும் விரிவான கண்காணிப்புக் கருவிகள் மூலம் தொடர் கண்காணிப்பு உறுதிசெய்யப்பட்டது.</p><p>இந்நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இணைப் பொது மேலாளர் திரு. கொள்ளி வெங்கட ரமணா (சுரங்கப் பாதை), பொது ஆலோசகர் குழுவின் முதன்மை வரைபடப் பொறியாளர் திரு. PSS நாயுடு, டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் திட்ட மேலாளர் திரு. விஜய குமார், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம் மற்றும் பொது ஆலோசகர் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 62-ஆக உயர்த்த மனு - மாநிலங்கள் முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/national/petition-to-raise-judges-retirement-age-to-62-supreme-court-directs-states</link><comments>https://www.maalaimalar.com/news/national/petition-to-raise-judges-retirement-age-to-62-supreme-court-directs-states#comments</comments><guid isPermaLink="false">61ad6970-80d6-4a88-8a7f-3e5bacb2f0d0</guid><pubDate>Thu, 06 Aug 2026 10:40:11 +0000</pubDate><atom:updated>2026-08-06T10:40:11.073Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,உச்ச நீதிமன்றம்,நீதிபதிகள் ஓய்வு வயது,judges retirement</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/1v6eqhln/Untitled-design-28.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Supreme Court asks states to reconsider raising judicial officers’ retirement age to 62]]></media:title><media:description type="html"><![CDATA[ Supreme Court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/1v6eqhln/Untitled-design-28.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீதித்துறை அதிகாரிகளின் ஓய்வு பெறும் வயதை 60 வயதுக்கு மேல் உயர்த்துவதை எதிர்க்கும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், தங்கள் நிலைப்பாட்டை செப்டம்பர் இரண்டாம் தேதிக்குள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. </p><p>அகில இந்திய நீதிபதிகள் சங்கம் (AIJA) தாக்கல் செய்த மனு, இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய் மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. </p><h3><strong>உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்</strong></h3><p>அப்போது அந்த அமர்வு, நீதித்துறை தீர்ப்புக்குப் பதிலாக, மாநில அரசுகளே சுயமாக முடிவெடுப்பது சிறப்பாக இருக்கும் என்று கூறியது. விசாரணை நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 1992-ஆம் ஆண்டிலிருந்து இரட்டிப்பாகி, சுமார் 10,000-லிருந்து தற்போது 20,000-க்கும் அதிகமாக உள்ளது. </p><p>உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 1992-ல் 568-ஆக இருந்தது, தற்போது அது 1,114-ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவித்தது.</p><p>இதையடுத்து இந்த வழக்கில் மாநிலங்கள் வாதிடுகையில், அரசு ஊழியர்களுக்கான சலுகைகளைப் போலவே, சில மாநிலங்கள் நீதித்துறை அதிகாரிகளுக்கான ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 61-ஆக உயர்த்தியுள்ளன.</p><p>மேலும், நீதித்துறை அதிகாரிகளின் ஓய்வு பெறும் வயதை 62-ஆக உயர்த்துவது, அரசு ஊழியர்களிடையே ஏற்றத்தாழ்வையும் அதிருப்தியையும் உருவாக்கும் என்றும், அவர்களும் இதேபோன்ற சலுகைகளைக் கோருவார்கள் என்றும், இது அரசுக்கு ஒரு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்றும் கூறியது.</p><p><strong>நீதிபதிகள் அமர்வு</strong></p><p>இதையடுத்து நீதிமன்ற அமர்வு கூறும்போது, “இந்த இரண்டு ஆட்சேபனைகளும் நிராகரிக்கப்படுகின்றன. ஒரு நீதித்துறை அதிகாரி ஓய்வு பெறும்போது, அரசு அவருக்கு ஒரு தொகையையும், அவர் கடைசியாகப் பெற்ற சம்பளத்தில் பாதிக்கும் மேற்பட்ட ஓய்வூதியத்தையும் வழங்குகிறது.</p><p>காலி இடத்தை நிரப்பும்போது, புதிதாக நியமிக்கப்படுபவருக்கு அரசு சம்பளம் வழங்குகிறது. அனுபவம் வாய்ந்த மற்றும் திறமையான நீதித்துறை அதிகாரிகளை தக்கவைத்துக் கொள்வது மாநிலத்திற்கும் நீதித்துறைக்கும் நிதி ரீதியாகப் பயனளிக்கும்.</p><p>ஆனால், மாநிலங்களின் நிர்வாக முடிவுகள் மூலம் இந்தப் பிரச்சினையை சுமூகமாகத் தீர்க்க முடியும் என்று நாங்கள் கருதுகிறோம்.</p><p>அரசு ஊழியர்களின் தற்போதைய ஓய்வு வயதை பொருட்படுத்தாமல், நீதித்துறை அதிகாரிகளின் ஓய்வு வயதை உயர்த்துவது தொடர்பான பிரச்சினையை மாநிலங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.</p><p>நீதித்துறை அதிகாரிகளின் ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62-ஆக உயர்த்துவதற்கு ஆதரவாக இவ்விவகாரத்தில் உயர் நீதிமன்றங்கள், மாநில அரசுகளுக்கு வலு சேர்க்க வேண்டும்” என்றும் உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.</p>]]></content:encoded></item><item><title>இங்கிலாந்தில் உள்ள வாக்தேவி அம்மன் சிலையை மீட்க மத்தியப்பிரதேசம் கோரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/national/madhya-pradesh-government-requests-return-of-vagdevi-amma-statue-from-england</link><comments>https://www.maalaimalar.com/news/national/madhya-pradesh-government-requests-return-of-vagdevi-amma-statue-from-england#comments</comments><guid isPermaLink="false">0a3d3de8-88fa-4daa-a5bb-a5621d8f49b2</guid><pubDate>Thu, 06 Aug 2026 10:30:10 +0000</pubDate><atom:updated>2026-08-06T10:30:10.011Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இங்கிலாந்து அருங்காட்சியகம்,போஜ்சாலா தளம்,goddess vagdevi,bhojsala,england museum,வாக்தேவி அம்மன் சிலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/oj1wtbdk/Untitled-design-27.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ India Seeks Return of Vagdevi Idol from British Museum]]></media:title><media:description type="html"><![CDATA[ Vagdevi Idol]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/oj1wtbdk/Untitled-design-27.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்தியப்பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் இருந்து வாக்தேவி சிலை இங்கிலாந்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஒர் நூற்றாண்டை கடந்துள்ள நிலையில், அதனை திரும்ப கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது.</p><p>போபாலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் கலாச்சார பணிக்குழு மற்றும் கலாச்சார அமைச்சர்கள் கூட்டங்களில், காலனித்துவ காலத்தில் திருடப்பட்டு இங்கிலாந்திற்கு கொண்டு செல்லப்பட்ட சிலையை தாயகம் திரும்ப கொண்டு வருவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருகிறது.</p><p>மேலும் பிரிக்ஸ் நடுகளிடையே ஒரு வலுவான ஒத்துழைப்பை வலியுறுத்துவதற்காக, இந்தியா இந்த நான்கு நாட்கள் நடைபெறும் கலந்தாய்வுகளை பயன்படுத்தி கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><strong>மத்திய கலாச்சார அமைச்சகம்</strong></p><p>இதுகுறித்து மத்திய கலாச்சார அமைச்சகத்தில் செயலாளராக உள்ள விவேக் அகர்வால் கூறுகையில், “மத்திய கலாச்சார அமச்சகத்தில் நான் செயலாளராக பொறுப்பேற்ற உடனேயே, பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் உள்ள வாக்தேவி அம்மன் சிலையை திருப்பி அனுப்பக்கோரி, மத்தியப் பிரதேச அரசு எங்களுக்கு கடிதம் எழுதியது.</p><p>அன்று முதல், நாங்கள் தூதரக வழிமுறைகள் மூலமாகவும், அருங்காட்சியக மட்டத்திலும் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்” என்று கூறினார்.</p><p><strong>உயர் நீதிமன்றம் தீர்ப்பு</strong></p><p>கடந்த மே மாதம், போஜசாலா-கமல் மௌலா மசூதி வளாகம் சரஸ்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோயில் என்று மத்தியப்பிரதேச உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த இடத்தில் பல நூற்றாண்டுகளாக இந்து வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறிய நீதிமன்றம், பிரத்தியேக இந்து வழிபாட்டு உரிமைகளுக்கான கோரிக்கையை ஏற்றுக்கொண்டது.</p><p>மேலும், அந்த வளாகத்தில் இஸ்லாமியர்கள் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த அனுமதி அளித்திருந்த இந்திய தொல்லியல் துறையின் 2003 ஏப்ரல் 7 ஆம் தேதியிட்ட உத்தரவையும் அது ரத்து செய்தது.</p><p>நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்குவதற்கு முன்னர், தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பதிவுகள், இந்திய தொல்லியல் துறையின் (ASI) அறிவிப்புகள், அதன் அறிவியல் ஆய்வின் கண்டுபிடிப்புகள் மற்றும் தொடர்புடைய சட்ட விதிகளை ஆய்வு செய்தது.</p><p><strong>வாக்தேவி சிலை</strong></p><p>பரமாரா காலத்தை சேர்ந்த இந்த வெள்ளை பளிங்கு சிற்பம், 11ஆம் நூற்றாண்டில் தார் நகரை இணைக்கும் ஒரு கல்வெட்டை கொண்டுள்ளது.</p><p>இது சுமார் 1.28 மீட்டர் உயரமும், 250 கிலோகிராம் எடையும் கொண்டதாக அறியப்படுகிறது. மேஜர் ஜெனரல் வில்லியம் கின்கெயிட் என்பவரிடம் இருந்து இது பெறப்பட்டதாகவும், 1909ஆம் ஆண்டில் இது முறையாக தனது சேகரிப்பில் சேர்க்கப்பட்டதாகவும் அருங்காட்சியகம் பதிவு செய்துள்ளது.</p><p><strong>மீட்கப்பட்ட தொல்பொருட்கள்</strong></p><p>சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்திரேலியா சென்ற போது, தமிழகத்தை சேர்ந்த ஒரு கல் நந்தி, பத்ரகாளி உருவம் பொறிக்கப்பட்ட உலோக திரிசூலம் மற்றும் ஆறு தலை கொண்ட கல் கார்த்திக்கேயன் ஆகிய மூன்று தொல்பொருட்களை ஆஸ்திரேலியா தாமாக முன்வந்து திரும்ப தருவதற்கு ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>முன்சர்க்கரை நோய்: நீரிழிவுக்கு முன் கிடைக்கும் எச்சரிக்கை-அலட்சியம் வேண்டாம்!</title><link>https://www.maalaimalar.com/health/generalmedicine/prediabetes-risk-factors-symptoms-control</link><comments>https://www.maalaimalar.com/health/generalmedicine/prediabetes-risk-factors-symptoms-control#comments</comments><guid isPermaLink="false">801ea6cc-f22d-4bea-9d85-e347a9d8aa5c</guid><pubDate>Thu, 06 Aug 2026 10:14:57 +0000</pubDate><atom:updated>2026-08-06T10:14:57.795Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Health,ஆரோக்கியம்,HealthTips,உடல்நலம்,Prediabetes,முன்சர்க்கரை நோய்,நீரிழிவுநோய்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/5dkxu99s/sugar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Prediabetes]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/5dkxu99s/sugar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>பொது மருத்துவம் (General Medicine)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முன்சர்க்கரை நோய் என்பது, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு இயல்பை விட அதிகமாக இருந்தாலும், அது முழுமையான நீரிழிவு நோயாக (Diabetes) மாறாத நிலையாகும். இது உடலின் முக்கியமான எச்சரிக்கை அறிகுறியாக கருதப்படுகிறது. இந்த நிலையில் உரிய கவனமும் வாழ்க்கைமுறை மாற்றங்களும் மேற்கொள்ளப்படாவிட்டால், சில ஆண்டுகளில் டைப்-2 நீரிழிவு நோய் உருவாகும் அபாயம் அதிகரிக்கும். ஆனால், சரியான உணவுமுறை, உடற்பயிற்சி மற்றும் உடல் எடையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இந்த நிலையை மீண்டும் இயல்பான அளவுக்கு கொண்டு வரவும் முடியும்.</p><h2><strong>ப்ரீ-டயாபடீஸ் காரணங்கள்</strong></h2><p>ப்ரீ-டயாபடீஸ் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் உடல் பருமன், உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை, அதிக கலோரி மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை தொடர்ந்து உட்கொள்வது, குடும்பத்தில் நீரிழிவு நோய் வரலாறு இருப்பது, உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு சத்து மற்றும் மனஅழுத்தம் போன்றவை அடங்கும். குறிப்பாக வயது அதிகரிக்கும் போது இந்த அபாயமும் அதிகரிக்கிறது.</p><h2>ப்<strong>ரீ-டயாபடீஸ் அறிகுறிகள்</strong> </h2><p>முன்சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பலருக்கும் ஆரம்பத்தில் எந்த அறிகுறியும் தெரியாமல் இருக்கலாம். இருப்பினும் சிலருக்கு அதிக தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், எளிதில் சோர்வடைவது, அதிக பசி, கண்பார்வை மங்குதல் மற்றும் உடல் எடை மாற்றம் போன்ற அறிகுறிகள் தோன்றக்கூடும். </p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/rawq0f96/pre.jpg" /></figure><p>இவ்வாறான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக ரத்தச் சர்க்கரை பரிசோதனை செய்து மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.</p><h2>ப்ரீ-<strong>டயாபடீஸ்</strong> மருத்துவ பரிசோதனைகள்</h2><p>ப்ரீ-டயாபடீஸை கண்டறிய வெறும் வயிற்று ரத்தச் சர்க்கரை, HbA1c பரிசோதனை மற்றும் Oral Glucose Tolerance Test (OGTT) போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பரிசோதனைகள் மூலம் நீரிழிவு நோய்க்கான அபாயத்தை முன்கூட்டியே அறிந்து தகுந்த நடவடிக்கைகளை எடுக்க முடியும்.</p><h2>எவ்வாறு <strong>கட்டுப்</strong>படுத்துவது?</h2><p>இந்த நிலையை கட்டுப்படுத்துவதற்கு வாழ்க்கைமுறை மாற்றங்களே மிக முக்கியமான சிகிச்சையாகும். தினமும் குறைந்தது 30 முதல் 45 நிமிடங்கள் வரை நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்வது, நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள், முழுதானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை உணவில் சேர்ப்பது, </p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/0a8ntyvs/dia.jpg" /></figure><p>இனிப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது, போதுமான தூக்கம் பெறுவது மற்றும் மனஅழுத்தத்தைக் குறைப்பது ஆகியவை ரத்தச் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். உடல் எடையை 5 முதல் 10 சதவீதம் வரை குறைப்பதும் நீரிழிவு நோய் உருவாகும் அபாயத்தை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கிறது.</p><h2><strong>அலட்சியம் வேண்டாம்</strong></h2><p>முன்சர்க்கரை நோயை அலட்சியப்படுத்தினால், அது டைப்-2 நீரிழிவு நோயாக மாறுவதோடு மட்டுமல்லாமல், இதய நோய், பக்கவாதம், சிறுநீரக பாதிப்பு மற்றும் கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கும். எனவே, இந்த நிலையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம்.</p><p>முன்சர்க்கரை நோய் என்பது பயப்பட வேண்டிய நோய் அல்ல; மாறாக, உடல் வழங்கும் ஒரு முக்கிய எச்சரிக்கை. சரியான உணவுப் பழக்கம், தினசரி உடற்பயிற்சி, ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மற்றும் வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் மூலம் நீரிழிவு நோய் வருவதைக் கணிசமாகத் தடுக்க முடியும். "இன்றே வாழ்க்கை முறையை மாற்றுங்கள்; நாளைய நீரிழிவு அபாயத்தைத் தவிருங்கள்" என்பதே இந்த நிலை சொல்லும் முக்கியமான செய்தியாகும்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட வழிவகை செய்யவேண்டும் - ஆளுநருக்கு 21 தமிழ்நாடு எம்.பி.க்கள் கடிதம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/arrangements-must-be-made-to-sing-the-tamil-thai-vazhthu-first-at-state-functions-21-tamil-nadu-mps-jointly-write-to-the-governor</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/arrangements-must-be-made-to-sing-the-tamil-thai-vazhthu-first-at-state-functions-21-tamil-nadu-mps-jointly-write-to-the-governor#comments</comments><guid isPermaLink="false">cb5e13c2-f58b-4b0e-a73a-1472a27568c0</guid><pubDate>Thu, 06 Aug 2026 10:09:44 +0000</pubDate><atom:updated>2026-08-06T10:09:44.735Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>வந்தே மாதரம்,Vande Mataram,தமிழ்த்தாய் வாழ்த்து,Rajendra Vishwanath Arlekar,ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்,Tamizh Thai Vaazhthu</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/drt2q338/New-Project-2026-08-06T151214.709.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாநில நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட வழிவகை செய்யவேண்டும் - ஆளுநருக்கு 21 தமிழ்நாடு எம்.பி.க்கள் கூட்டாக கடிதம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/drt2q338/New-Project-2026-08-06T151214.709.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் நடைபெறும் பட்டமளிப்பு, பல்கலைக்கழக விழாக்கள் மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் மாநிலத்தின் கீதமான தமிழ்த்தாய் வாழ்த்தை தொடக்கத்திலும், இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படவும் வழிவகை செய்யுமாறு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகருக்கு தமிழ்நாடு எம்.பி.க்கள் 21 பேர் கடிதம் எழுதியுள்ளனர். </p><p>ப.சிதம்பரம், மாணிக்கம் தாகூர், கார்த்தி சிதம்பரம், தொல் திருமாவளவன், துரை வைகோ உள்ளிட்டோர் இந்த கடிதத்தை எழுதியுள்ளனர். </p><p>இதுதொடர்பாக தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு தெளிவான மற்றும் முன்கூட்டிய வழிகாட்டுதல்களை வழங்குமாறு வலியுறுத்தியுள்ளனர். </p><p>2021ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வ மாநில கீதமாக இப்பாடலே இருந்து வருவதாகவும், 5 தசாப்தங்களுக்கும் மேலாக அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் இந்த பாடலே முதலில் இசைக்கப்பட்டு வருவதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். </p><p>கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்றிய போது கூட, தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி தேசிய கீதத்துடன் விழா நிறைவடைந்ததை எம்.பி.க்கள் நினைவுகூர்ந்துள்ளனர்.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவது இடத்திற்குத் தள்ளியது தமிழ் மக்களையும், அந்தப் பல்கலைக்கழகம் யாருடைய பெயரால் அமைந்துள்ளதோ, அந்தப் பாடலை இயற்றிய மனோன்மணியம் சுந்தரனார் பிள்ளையையும் அவமதிப்பது போல் உள்ளதாகப் பலரும் அதிருப்தி தெரிவித்ததாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். </p><p>அரசு நிறுவனங்கள் “கண்ணியத்துடனும், சர்ச்சைகள் இன்றியும்” தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக, தாங்கள் இந்தக் கோரிக்கையை ஒரு புகாராக அல்ல, மாறாக ஒரு வேண்டுகோளாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். </p><h2>கடிதத்திற்கான காரணம் என்ன?</h2><p>முதலமைச்சர் விஜய் பதவி ஏற்பு விழாவிலேயே இந்த சர்ச்சை தொடங்கியது. ஆனால் அது ஆளுநர் நிகழ்ச்சி என்பதால் வந்தே மாதரம் முதலில் பாடப்பட்டதாக தவெக அமைச்சர்கள், கூட்டணி தலைவர்கள் விளக்கம் அளித்தனர். இச்சூழலில் கடந்த 2026 ஜூலை 28 அன்று திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.</p><p>இந்த விழாவில் முதலில் வந்தே மாதரமும், இரண்டாவது தேசிய கீதமும், மூன்றாவது தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. தமிழ்நாட்டின் மாநிலப்பாடலும், அப்பாடலை எழுதியவருமான மனோன்மணியம் பெயரைக் கொண்ட பல்கலைக்கழகத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது பலதரப்பிலிருந்தும் கண்டனங்களை பெற்றது. </p><p>இதனிடையே விழாவிற்கு முன்னரே பல்கலைக்கழக வேந்தர் இதுதொடர்பாக பேசியிருந்தார். இதனால் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதனும் இந்த பட்டமளிப்பு விழாவை புறக்கணித்திருந்தார். இந்நிலையில் நேற்று தமிழ்நாடு எம்.பி.க்கள் இணைந்து இந்தக் கடிதத்தை பொறுப்பு ஆளுநர் அர்லேகருக்கு எழுதியுள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>வீட்டை விட்டு வெளியேறி நிலத்தடியில் வீடு கட்டி வாழும் வாலிபர்!</title><link>https://www.maalaimalar.com/news/national/underground-house-in-field-young-man-lives-alone</link><comments>https://www.maalaimalar.com/news/national/underground-house-in-field-young-man-lives-alone#comments</comments><guid isPermaLink="false">eb828912-a16c-4a6e-afc0-422b03d857a2</guid><pubDate>Thu, 06 Aug 2026 09:54:12 +0000</pubDate><atom:updated>2026-08-06T09:54:12.103Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய பிரதேசம்,Madhya Pradesh,UndergroundHouse,நிலத்தடி வீடு,மண் வீடு,Jhabua,UniqueHome</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/hhc7l2u2/MadhyaPradesh-UndergroundHouse" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MadhyaPradesh UndergroundHouse ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/hhc7l2u2/MadhyaPradesh-UndergroundHouse?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவா பகுதியைச் சேர்ந்த அர்ஜுன் என்ற வாலிபர், பெற்றோரால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, கிராமத்தில் உள்ள ஒரு வயல்வெளியில் தனக்கென ஒரு நிலத்தடி வீட்டை உருவாக்கி வசித்து வருகிறார்.</p><h2><strong>கதவு, ஜன்னல் இல்லாத மண் வீடு:</strong></h2><p>அர்ஜுன் என்ற வாலிபர் தனக்கு வசிப்பிடம் இல்லாததால் தரையைத் தோண்டி இந்தச் சிறிய நிலத்தடி வீட்டை உருவாக்கியுள்ளார். </p><p>இந்த வீட்டிற்கு முறையான முன் கதவோ அல்லது காற்றோட்டத்திற்கான ஜன்னல்களோ இல்லை. முற்றிலும் மண்ணுக்குள்ளேயே இந்த வீடு செதுக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>நவீன வசதிகளுடன் கூடிய எளிய கட்டமைப்பு:</strong></h2><p>மிகவும் குறுகிய மற்றும் எளிமையான அமைப்பைக் கொண்ட இந்த வீட்டிற்குள் அர்ஜுன் வாழத் தேவையான பல வசதிகளைச் செய்துள்ளார். </p><p>தூங்குவதற்காக மண்ணிலேயே ஒரு மேடை போன்ற அமைப்பை உருவாக்கி, அதன் மேல் பாயும் படுக்கை விரிப்பும் போடப்பட்டுள்ளது. </p><p>மழையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வீட்டின் மேற்பகுதியில் தார்பாய் கொண்டு கூரை அமைக்கப்பட்டுள்ளது. மண் வீட்டிற்குள் சீரியல் பல்புகளையும், லேப்டாப் பயன்படுத்துவதும், செல்போன் சார்ஜ் செய்வதற்கான வசதிகளையும் செய்துள்ளார். </p><p>ஆனால் இதற்கு மின்சாரம் எவ்வாறு கிடைக்கிறது என்பது இன்னும் தெளிவாக கிடைக்கவில்லை. நவீன வசதிகளுடன் கூடிய இந்த எளிய கட்டமைப்புகளை வடிவமைத்து வாழ்ந்து வருகிறார்.</p><h2><strong>வியப்பில் நெட்டிசன்கள்:</strong></h2><p>இவரின் புகைப்படங்களைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், "இந்தக் குறுகிய இடத்தில் மூச்சுமுட்டுவது போல் உள்ளது, இதற்குள் எப்படி மணிக்கணக்கில் வசதியாக இருக்க முடிகிறது?" என்று ஆச்சரியம் தெரிவித்து வருகின்றனர். </p><p>அதே வேளையில், அர்ஜுனின் இந்தத் தனித்துவமான முயற்சியைப் பாராட்டியும் பலர் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்</title><link>https://www.maalaimalar.com/news/national/rbi-to-roll-out-plastic-rs-10-rs-20-notes</link><comments>https://www.maalaimalar.com/news/national/rbi-to-roll-out-plastic-rs-10-rs-20-notes#comments</comments><guid isPermaLink="false">c3f5a2dc-f509-42d5-9365-733aba587b4c</guid><pubDate>Thu, 06 Aug 2026 09:34:53 +0000</pubDate><atom:updated>2026-08-06T09:34:53.592Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>RBI,Sanjay Malhotra,சஞ்சய் மல்ஹோத்ரா,ரிசர்வ் வங்கி,பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்,plastic rupees note</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/z3i9li6v/plastic-currecy.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Plastic currency  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/z3i9li6v/plastic-currecy.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் காகித ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக நீண்ட காலம் உழைக்கக்கூடிய 'பாலிமர்' எனப்படும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் விடுவதற்கான ரிசர்வ் வங்கியின் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.</p><p>முதல்கட்டமாக ரூ.10 மற்றும் ரூ.20 மதிப்பிலான பாலிமர் நோட்டுகளைச் சோதனை முறையில் அச்சடித்து வெளியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சோதனை முயற்சி வெற்றி பெறும் பட்சத்தில் பாலிமர் நோட்டுகள் வழக்கமான பயன்பாட்டிற்கு முழுமையாக கொண்டு வரப்படும் என மக்களவையில் நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி தெரிவித்தார்.</p><h2>பழைய காகித நோட்டுகள் செல்லாதா?</h2><p>பழைய காகித ரூபாய் நோட்டுகள் உடனடியாகத் தடை செய்யப்பட மாட்டாது. காகித நோட்டுகளுடன் சேர்ந்து பிளாஸ்டிக் நோட்டுகளும் இணையாகப் புழக்கத்தில் இருக்கும். காகித நோட்டுகளை முழுமையாகத் திரும்பப் பெறும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்றும் அரசு தெளிவுபடுத்தியது.</p><p>இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவது:</p><h2>ஏப்ரலில் அறிமுகம்</h2><p>வருகிற ஏப்ரல் மாதம்  நீடித்து உழைக்கும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும்.</p><p>ஒரு முன்னோட்டத் திட்டமாக ரிசர்வ் வங்கி ரூ.10 மற்றும் ரூ.20 பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை முதலில் வெளியிட உள்ளது.</p><p>அதன் பயன்பாடு அடிப்படையில் கூடுதல் மதிப்புகளில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதா, வேண்டாமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.</p><p>காகித நோட்டுகளுடன் பிளாஸ்டிக் நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும். முதல் கட்டமாக ரூ.100 கோடி மதிப்புள்ள ரூ.10 மற்றும் ரூ.20 பிளாஸ்டிக் நோட்டுகளை அச்சிட ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என தெரிவித்தார்.</p><h2>பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளின் நன்மைகள்</h2><p>காகித நோட்டுகளை விட பாலிமர் நோட்டுகள் பல மடங்கு கூடுதல் ஆயுட்காலம் கொண்டவை.</p><p>தண்ணீரில் நனையாது, எளிதில் கிழியாது மற்றும் அழுக்கடையாது.</p><p>இவற்றில் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை எளிதாகச் சேர்க்க முடியும் என்பதால், போலி நோட்டுகளை அச்சடிப்பது மிகவும் கடினம்.</p><p>ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா போன்ற உலகின் பல்வேறு நாடுகளில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் பிளாஸ்டிக் பண முறையை இந்தியாவிலும் அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி நீண்ட நாட்களாகத் திட்டமிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>‘ராமாயணா’ வெளியீடு தேதி அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ramayana-release-date-announced</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ramayana-release-date-announced#comments</comments><guid isPermaLink="false">bfc75042-447e-4869-8633-4fc203966722</guid><pubDate>Thu, 06 Aug 2026 09:28:37 +0000</pubDate><atom:updated>2026-08-06T09:28:37.260Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Yash,Sai Pallavi,சாய் பல்லவி,Ramayana,ரன்பீர் கபூர்,Ranbir Kapoor,ராமாயணா,யாஷ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/1k75o844/New-Project-2026-08-06T144801.553.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ராமாயணா வெளியீடு தேதி அறிவிப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/1k75o844/New-Project-2026-08-06T144801.553.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்துக்களின் முக்கிய இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு, நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், யாஷ், சாய்பல்லவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளப் படம் ராமாயணா. </p><p>நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் தீபாவளி பண்டிகையொட்டி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படம் நவம்பர் 6ம் தேதி வெளியாகும் என ஆங்கில டிரெய்லரில் படக்குழு குறிப்பிட்டுள்ளது. </p><p>தமிழ் டிரெய்லர் ஜூலை.30 அன்று பிரம்மமுகூர்த்தத்தில் 4.15 மணிக்கு வெளியிடப்பட்டது. படத்தில் ரவி துபே, சன்னி தியோல், அருண் கோவில், லாரா தத்தா, ரகுல் ப்ரீத் சிங், குணால் கபூர், சோபனா ஆகியோரும் நடித்துள்ளனர்.</p><p>பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ், மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>அமைச்சர் ஆனந்தை சந்தித்தது ஏன்? - சி.வி.சண்முகம் விளக்கம்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cv-shanmugam-explains-why-did-meet-minister-anand</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cv-shanmugam-explains-why-did-meet-minister-anand#comments</comments><guid isPermaLink="false">d0ae046e-edc8-4870-8e55-5f95df5b5802</guid><pubDate>Thu, 06 Aug 2026 09:23:10 +0000</pubDate><atom:updated>2026-08-06T09:23:10.435Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,CV Shanmugam,சிவி சண்முகம்,sp velumani,எஸ்பி வேலுமணி,அமைச்சர் ஆனந்த்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/bnm53yyz/cvshanmugam.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CV Shanmugam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/bnm53yyz/cvshanmugam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அ.தி.மு.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் ஆகியோர் இன்று சட்டப்பேரவை வளாகத்தில் த.வெ.க. பொதுச் செயலாளரான அமைச்சர் என்.ஆனந்தை திடீரென சந்தித்து பேசினார்கள்.</strong></em> </p><p>அ.தி.மு.க.வில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு ஏற்பட்ட மோதல் முடிவுக்கு வராமல் நீண்டுக் கொண்டே செல்கிறது. </p><h2>எஸ்.பி.வேலுமணி- சி.வி.சண்முகம்</h2><p>அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-says-promises-made-to-farmers-have-not-been-fulfilled">எடப்பாடி பழனிசாமி</a>யிடம் இன்னும் சமாதானமாக செல்லாமல் மோதல் போக்கையே கடைப்பிடித்து வருகிறார்கள்.</p> <p>எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோரை திருப்திப்படுத்தும் விதத்தில் புதிய பதவிகளை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். ஆனால் அதனை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. சட்டமன்றத்தில் த.வெ.க. அரசின் மீதான நம்பிக்கை தீர்மானத்திற்கு ஆதரவாக எஸ்.பி.வேலுமணி ஆதரவு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்  வாக்களித்தனர்.</p><p>பின்னர் அவர்கள் தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்து கடிதமும் அளித்தனர். இதன் பிறகும் எடப்பாடி பழனிசாமிக்கும், எஸ்.பி.வேலுமணி தரப்பிற்கும் இடையேயான பிரச்சனை நீண்டுக் கொண்டே செல்கிறது. </p> <h2>போர்க்கொடி</h2><p>இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரையும் அ.தி.மு.க.வில் சேர்க்க வேண்டும் என்று கோரி இருந்தார். இப்படி தலைமைக்கு எதிராக தொடர்ந்து எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் செயல்பட்டு வரும் நிலைமையிலும் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்காமலேயே எடப்பாடி பழனிசாமி பொறுமைக் காத்து வருகிறார்.</p> <h2>எஸ்.பி.வேலுமணி - சி.வி.சண்முகம்</h2><p>இந்த நிலையில் அ.தி.மு.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் ஆகியோர் இன்று சட்டப்பேரவை வளாகத்தில் த.வெ.க. பொதுச் செயலாளரான அமைச்சர் என்.ஆனந்தை திடீரென சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பு 1 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. </p><p>சட்டமன்ற வளாகத்தில் வைத்து இன்று எடப்பாடி பழனிசாமியை சந்திக்காத நிலையில் அவர்கள் அமைச்சர் என்.ஆனந்தை சந்தித்து பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p> <h2>அ.தி.மு.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்</h2><p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">அ.தி.மு.க.</a>வில் இருந்து 6 எம்.எல்.ஏ.க்கள் ஏற்கனவே ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்து உள்ளனர். இதனால் 6 தொகுதிகளும் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. </p><p>இந்த நிலையில் அ.தி.மு.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களில் மேலும் சிலர் த.வெ.க. பக்கம் சாயும் வகையில் அமைச்சர் என்.ஆனந்தை  சந்தித்து பேசி இருப்பது மீண்டும் அ.தி.மு.க.வில் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.</p> <h2>எஸ்.பி.வேலுமணி</h2><p>இந்த சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுகையில்,</p><p>அத்திக்கடவு அவினாசி திட்டம் தொடர்பாகவும், தொகுதி பிரச்சனைகள் பற்றியும் பேசினோம். தவெகவில் இணைய உள்ளதாக வெளியான தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்த அவர், அதிமுக எங்களுடைய கட்சி என்றும் திட்டவட்டமாக கூறினார்.</p><h2>சி.வி.சண்முகம்</h2><p>இந்நிலையில் அமைச்சர் என்.ஆனந்தை சந்தித்தது தொடர்பாக சி.வி.சண்முகத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:</p> <p>தொகுதி மக்களின் நலனுக்கான கோரிக்கைகளுடன் அமைச்சர் ஆனந்தை சந்தித்தோம். அத்திக்கடவு அவிநாசி திட்டம், தொகுதி சம்பந்தமான கோரிக்கைகளுக்காக அவரை சந்தித்து பேசினோம்.</p><p>நான் ஏன் இபிஎஸ்-ஐ சந்திக்க வேண்டும். தேவையற்ற கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மொத ராத்திரியுடன் மோதும் ரியோ ராஜின் ‘ராம் இன் லீலா’! </title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/rio-rajs-ram-in-leela-clashes-with-modha-rathiri</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/rio-rajs-ram-in-leela-clashes-with-modha-rathiri#comments</comments><guid isPermaLink="false">297dcd61-b7b1-4a51-bae0-fb0d779d72cf</guid><pubDate>Thu, 06 Aug 2026 09:09:21 +0000</pubDate><atom:updated>2026-08-06T09:09:21.964Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ரியோ ராஜ்,rio raj,Ram In Leela,ராம் இன் லீலா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/buao26v8/New-Project-2026-08-06T142850.027.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மொத ராத்திரியுடன் மோதும் ரியோ ராஜின் ‘ராம் இன் லீலா’! ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/buao26v8/New-Project-2026-08-06T142850.027.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் ரியோராஜ், அறிமுக நாயகி வர்த்திகா நடிக்கும் காதல் திரைப்படம் ராம் இன் லீலா. </p><p>ரியோராஜின் சொந்த தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் முனிஷ்காந்த், சேத்தன், தீபா வெங்கட், மாளவிகா அவினாஷ், நயனா எல்சா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். </p><p>படத்திற்கு அங்கித் மேனன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதமே முடிவடைந்த நிலையில், படம் குறித்த அறிவிப்பு வீடியோ, பாடல்கள் மற்றும் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. </p><p>இந்நிலையில் படம் ஆக.21ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் நடித்துள்ள மொத ராத்திரி படத்துடன் மோதுகிறது. அப்படமும் ஆக.21ம் தேதி வெளியாகிறது. </p>]]></content:encoded></item><item><title>வேளாண் பட்ஜெட் உழவர்களுக்கு ஏமாற்றமே..!- அன்புமணி விமர்சனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/agriculture-budget-a-disappointment-for-farmers-anbumani-criticism</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/agriculture-budget-a-disappointment-for-farmers-anbumani-criticism#comments</comments><guid isPermaLink="false">b6b505dc-a55d-4b09-b595-1dcd96c32abc</guid><pubDate>Thu, 06 Aug 2026 08:59:25 +0000</pubDate><atom:updated>2026-08-06T08:59:25.245Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,தமிழக பட்ஜெட்,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/48bjjivj/anbumani.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anbumani ramadoss]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/48bjjivj/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கொள்முதல் விலை, பயிர்க்கடன் அறிவிப்பு இல்லாத நிலையில் நோக்கத்தை நிறைவேற்றாத வேளாண் பட்ஜெட் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தமிழ்நாடு அரசின் சார்பின் ஆறாம் முறையாகவும், த.வெ.க. அரசின் சார்பில் முதல் முறையாகவும் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.</p><p>வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகளைப் பார்க்கும் போது எந்த நோக்கத்திற்காக வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று பாமக 13 ஆண்டுகள் போராடி வெற்றி பெற்றதோ, அந்த நோக்கத்தில் ஒரு  விழுக்காடு கூட நிறைவேறவில்லை. இந்த நிதிநிலை அறிக்கை உழவர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது.</p><p>சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பும், வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீடும் கணிசமாக குறைக்கப்பட்டிருக்கிறது. </p><p>வேளாண்துறைக்கு மட்டும் திமுக அரசில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ரூ.15,167.62 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் அதை விட ரூ.470.92 கோடி குறைவாக ரூ.14,696.70 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. </p><p>பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையில் 20 துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.58,374 கோடி என்றும், இது இடைக்கால நிதிநிலை அறிக்கையின் மதிப்பான ரூ.47,248 கோடியை விட ரூ.11,126 கோடி அதிகம் என்றும் கூறப்பட்டிருக்கிறது.</p><p>உண்மையில் வேளாண் நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பு குறைக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள 20 துறைகளில் ஊரக வளர்ச்சித்துறைக்கான நிதி ஒதுக்கீடு மட்டும் இடைக்கால நிதிநிலை அறிக்கையின் மதிப்பான ரூ.6,329.29 கோடியிலிருந்து ரூ.11,774 கோடி உயர்த்தி மொத்தம் ரூ.18,103.02 கோடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. </p><p>கடந்த ஆண்டு வரை நடைமுறையிலிருந்த 100 நாள் வேலைத் திட்டத்திற்கு பதிலாக 125 நாள் வேலைத் திட்டம் அறிமுகம் செய்யபட்டிருப்பதாகவும், இந்தத் திட்டத்திற்கான மத்திய அரசின் பங்கு குறைக்கப்பட்டு, மாநில அரசின் பங்கு உயர்த்தப்பட்டிருப்பதால் தான் இந்தக் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>இதனால் கள அளவில் எந்த மாற்றமும் ஏற்பட்டு விடப்போவதில்லை. இந்த கூடுதல்  ஒதுக்கீட்டை கழித்துப் பார்த்தால் வேளாண் நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பு ரூ.46,600 கோடி மட்டும் தான். இது இடைக்கால நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பான ரூ.47,248 கோடியை விட ரூ.648 கோடி குறைவு ஆகும்.</p><p>நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பில் 25% வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. அதன்படி நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பான ரூ.4.62 லட்சம் கோடியில் வேளாண் நிதிநிலை அறிக்கைக்காக ரூ.1.16 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதில் பாதியளவு மட்டும் தான் வேளாண்மைக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் வேளாண்மைத் துறைக்கு மட்டும் வெறும் ரூ.14,696.70 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதை ஏற்கவே முடியாது.</p><p>த.வெ.க. ஆட்சிக்கு வந்தால் நெல்லுக்கான கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.3500, கரும்புக்கான கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.4500 வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.</p><p>ஆனால், அது குறித்து எந்த அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை. நெல் கொள்முதலை கையாளும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு திமுக ஆட்சியின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில், ரூ.14,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் ரூ.18 கோடி மட்டும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டு பார்க்கும் போது நடப்பாண்டில் நெல்லுக்காக தமிழக அரசு வழங்கும் ஊக்கத்தொகை உயர்த்தப்படாது என்றே தோன்றுகிறது. இது மிகப்பெரிய ஏமாற்றம்.</p><p>கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளுடன் உழவர்கள் காத்துக் கிடப்பதைத் தடுக்கவும், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாவதைத் தடுக்கவும் கிடங்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று பாமக வலியுறுத்தி வருகிறது.</p><p>ஆனால், அதற்கான திட்டங்களை அறிவிக்காத அரசு, 43,500 விவசாயிகளுக்கு  ரூ.10 கோடியில்  தார்ப்பாய்கள் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. ரூ.2298 மதிப்புள்ள தார்ப்பாய்களைக் கொண்டு பல டன் எடையுள்ள நெல்லை எவ்வாறு நனையாமல் பாதுகாக்க முடியும்? என்பது தெரியவில்லை.</p><p>பயறு வகைகளின் சாகுபடியை  15.19 லட்சம் ஏக்கரில் இருந்து 24.70 லட்சம் ஏக்கராகவும், எண்ணெய் வித்துகளின் சாகுபடி பரப்பை 9.26 லட்சம் ஏக்கரில் இருந்து 14.89 லட்சம் ஏக்கராகவும் உயர்த்த சிறப்புத் திட்டம்  செயல்படுத்தப் படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்காக உழவர்களுக்கு ஊக்கத்தொகை எதுவும் அறிவிக்கப் படவில்லை. </p><p>பிற பயிர்களுடன் ஒப்பிடும் போது பயறு மற்றும் எண்ணெய் வித்துகள் சாகுபடியில் இலாபம் குறைவாகவே கிடைக்கும் நிலையில், அதை ஈடு செய்யும் அளவுக்கு உழவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்காத நிலையில், இந்த முயற்சி வெற்றி பெறாது. இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள பல அறிவிப்புகள்  திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் &amp; அறிவிப்புகளின் நீட்சியாகவே உள்ளன. புதிதாக எதுவும் இல்லை.</p><p>நெல் உள்ளிட்ட 10 வகையான பயிர்களில் அதிக விளைச்சல் ஈட்டும் 3 உழவர்கள் வீதம் மொத்தம் 30 பேருக்கு வழங்கப்படும் விருதுகளுக்கு கடலூர் அஞ்சலையம்மாள் பெயர் சூட்டப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளிக்கும் போதாவது பயனுள்ள அறிவிப்புகளை அரசு வெளியிட வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வாகனங்களின் மைலேஜ் குறைவு: E20 பெட்ரோல் பயன்பாட்டிற்கு இந்தியாவில் எழும் எதிர்ப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/reduced-vehicle-mileage-opposition-to-e20-petrol-in-india</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/reduced-vehicle-mileage-opposition-to-e20-petrol-in-india#comments</comments><guid isPermaLink="false">5adca0d6-5c62-4981-8200-e727e1a84a50</guid><pubDate>Thu, 06 Aug 2026 08:31:44 +0000</pubDate><atom:updated>2026-08-06T08:31:44.049Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,Raipur,E20 எத்தனால் பெட்ரோல்,ராய்ப்பூர்,E20 petrol</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/nnetviqn/petrol.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ E20 petrol]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/nnetviqn/petrol.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் 20 சதவீத எத்தனால் கலக்கப்பட்ட E20 பெட்ரோல் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், வாகனங்களின் மைலேஜ் குறைவு, என்ஜின் கோளாறுகள் மற்றும் வாகன பொருந்தாமை காரணமாக வாகன ஓட்டிகள் இடையே எதிர்ப்பு வலுத்து வருகிறது. சமீபத்தில் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் நுகர்வோர் நீதிமன்றம் வழங்கிய ஒரு முக்கிய தீர்ப்பு, இந்த விவகாரத்தில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.</p><h2><strong>ராய்ப்பூர் நுகர்வோர் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு:</strong></h2><p>ராய்ப்பூரைச் சேர்ந்த மருத்துவர் பிரேம்ராஜ் தேவதா என்பவர் வாங்கிய மாருதி சுசுகி 'கிராண்ட் விட்டாரா' வாகனம், E20 பெட்ரோல் பயன்படுத்தியதால் அடிக்கடி என்ஜின் செயலிழப்பு அடைந்ததாக தொடரப்பட்ட வழக்கில் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.</p><h2><strong>மாற்று வாகனம்:</strong></h2><p>மாருதி சுசுகி நிறுவனம் 45 நாட்களுக்குள் E20 பெட்ரோலுக்கு உகந்த புதிய காரை வழங்க வேண்டும் அல்லது வாகனத்தின் விலை, காப்பீடு மற்றும் பதிவுச் செலவு உட்பட மொத்தம் ரூ.20.50 லட்சத்தைத் திரும்பச் செலுத்த வேண்டும். மன உளைச்சலுக்காக ரூ.1 லட்சம் மற்றும் வழக்குச் செலவுக்காக ரூ.10,000 வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. காரில் கலப்பட எரிபொருள் பயன்படுத்தப்பட்டதே பாதிப்புக்குக் காரணம் என மாருதி சுசுகி கூறியதை நீதிமன்றம் நிராகரித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><h2><strong>E20 பெட்ரோல் எதிர்கொள்ளும் பிரதான சவால்கள்:</strong></h2><p>ஏப்ரல் 2023-க்கு முன் உற்பத்தி செய்யப்பட்ட பெரும்பாலான வாகனங்களின் பாகங்கள் (எரிபொருள் குழாய், ரப்பர் சீல்கள், இன்ஜெக்டர்கள்) E20 பெட்ரோலின் அரிக்கும் தன்மையை தாங்கும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. எத்தனால் பெட்ரோலை விட குறைவான ஆற்றல் அடர்த்தி கொண்டது என்பதால், E20 பெட்ரோல் பயன்படுத்தும் போது வாகனங்களின் மைலேஜ் 5% முதல் 7% வரை குறைவதாகப் பயனர்கள் புகாரளிக்கின்றனர்.</p><p>எத்தனால் காற்றில் உள்ள ஈரப்பதத்தை எளிதில் உறிஞ்சும் இயல்புடையது. இதனால் எரிபொருள் தொட்டியில் நீர் படிந்து, என்ஜின் துருப்பிடித்தல் மற்றும் அடைப்பு ஏற்படுகின்றன. பெட்ரோல் பங்குகளில் சாதாரண E10 அல்லது தூய்மையான பெட்ரோல் கிடைக்காமல், E20 மட்டுமே இயல்புநிலை எரிபொருளாக விற்கப்படுவது நுகர்வோரை அதிருப்தியடையச் செய்துள்ளது.</p><p>எரிபொருளில் நீர் அல்லது பிற கலப்படங்கள் கலப்பதே என்ஜின் பழுதுக்குக் காரணம் எனக் கூறி, நுகர்வோர் கோரிக்கைகளை நிராகரிக்கின்றனர். கடுமையான பரிசோதனைகள் மற்றும் GPS கண்காணிப்பு அமைப்புகள் மூலம் தரமான E20 பெட்ரோல் விநியோகிக்கப்படுவதாகக் எண்ணெய் நிறுவனங்கள் கூறுகின்றன. இரு தரப்பினரின் குற்றச்சாட்டுகளுக்கு இடையே தங்களுக்கு ஏற்படும் நிதி இழப்பிற்கும் என்ஜின் சேதத்திற்கும் யார் பொறுப்பு என்று நுகர்வோர் கேள்வி எழுப்புகின்றனர். </p><p>இந்த ராய்ப்பூர் தீர்ப்பு வருங்காலத்தில் வாகன உற்பத்தியாளர்களுக்கு சட்டரீதியான சவால்களையும், நுகர்வோர் நம்பிக்கையில் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில், இந்த பெட்ரோல் குழப்பம் நுகர்வோரை மின்சார வாகனங்களை நோக்கி விரைவாக மாறத் தூண்டும் காரணியாகவும் பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>மீண்டும்.. மீண்டுமா..!- தவறுதலாக உதயநிதியின் காரில் ஏற முயன்ற இபிஎஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/eps-mistakenly-tries-to-enter-udayanidhi-stalin-vehicle-again</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/eps-mistakenly-tries-to-enter-udayanidhi-stalin-vehicle-again#comments</comments><guid isPermaLink="false">02463d57-5eb2-4faa-9c87-a7b414301fe3</guid><pubDate>Thu, 06 Aug 2026 08:30:13 +0000</pubDate><atom:updated>2026-08-06T08:30:13.923Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Udhayanidhi Stalin,உதயநிதி ஸ்டாலின்,எடப்பாடி பழனிசாமி,Car,Edappadi pazhanisamy,கார்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/rz4cy4yz/EPS.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Udhayanithi stalin- Edappadi pazhanisamy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/rz4cy4yz/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபை கூட்டம் நடந்து கொண்டிருப்பதால் சட்டசபைக்கு வெளியே தலைமைச் செயலக வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் காரும், அதற்கு முன்னால் அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி காரும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.</p><p>சட்டசபை கூட்டம் முடிவடைந்த போது இருவரும் நிருபர்களுக்கு தனித்தனியாக பேட்டி அளித்தனர். அதன்பிறகு  அவரவர் அலுவலகத்துக்கு சென்று  எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசித்தனர்.</p><p>இதைதொடர்ந்து எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு செல்வதற்காக கார் நிற்கும் இடத்திற்கு வந்தார். அப்போது, அந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த  உதயநிதி ஸ்டாலினின் காரை தனது கார் என்று நினைத்து அதில் ஏற முயன்றார்.</p><p>உடனே பாதுகாவலர்கள் நமது கார் முன்னால் நிற்கிறது. இந்த கார் இல்லை என்று தெரிவித்தனர். உடனே சுதாரித்து கொண்ட எடப்பாடி பழனிசாமி  அதன்பிறகு தனது காரில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டார்.</p><p>ஏற்கனவே கடந்த 2022-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின் போதும் இதே போல் உதயநிதி ஸ்டாலின் காரில்  அப்போது எடப்பாடி பழனிசாமி ஏற முயன்றது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்குத் தடை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-visitors-at-coimbatore-airport-ahead-of-independence-day</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-visitors-at-coimbatore-airport-ahead-of-independence-day#comments</comments><guid isPermaLink="false">9d49b760-d91f-488e-b933-3c04e7188210</guid><pubDate>Thu, 06 Aug 2026 08:27:09 +0000</pubDate><atom:updated>2026-08-06T08:27:09.350Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>coimbatore airport,கோவை விமான நிலையம்,IndependenceDay2026,சுதந்திர தினம்2026,Airport Security</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/qwujj51g/Coimbatore-Airport" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Coimbatore Airport ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/qwujj51g/Coimbatore-Airport?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, நாட்டின் முக்கிய பொது இடங்கள் மற்றும் போக்குவரத்து முனையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. </p><p>இதன் ஒரு பகுதியாக, கோவை பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இன்று முதல் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டு, பார்வையாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>பார்வையாளர்களுக்குத் தடை:</strong></h2><p>கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு போன்ற உள்நாட்டு நகரங்களுக்கும், சிங்கப்பூர், ஷார்ஜா போன்ற வெளிநாடுகளுக்கும் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். </p><p>கோவை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த பயணிகளும் இந்த விமான நிலையத்தையே நம்பியுள்ளனர்.</p><p>இந்நிலையில் வழக்கமாக பயணிகளை வழிஅனுப்ப வருபவர்கள் மற்றும் பார்வையாளர்கள் கட்டணம் செலுத்தி, பிரத்யேக 'பார்வையாளர் பாஸ்' பெற்று விமான நிலையத்தின் உள்ளே சென்று வருவது வழக்கம். </p><p>ஆனால், சுதந்திர தின முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்கும் பொருட்டு, இந்த பார்வையாளர் அனுமதி முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.</p><h2><strong>அதிகாரிகள் விளக்கம்:</strong></h2><p>இது குறித்து கோவை விமான நிலைய உயர் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:</p><p>"சுதந்திர தினத்தை முன்னிட்டு, மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு பணியகத்தின் உத்தரவுப்படி இந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை பார்வையாளர்களுக்கான நுழைவுச்சீட்டு மற்றும் பிரத்யேக பாஸ்கள் எதுவும் வழங்கப்பட மாட்டாது. பயணிகள் மட்டுமே விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்." என்று தெளிவாக கூறியுள்ளனர்.</p><h2><strong>பாதுகாப்பு அதிகரிப்பு:</strong></h2><p>சுதந்திர தினக் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளதால், கோவை விமான நிலையத்தில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை மற்றும் துணை ராணுவத்தினரின் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. </p><p>விமான நிலைய நுழைவாயில், வாகன நிறுத்துமிடம் ஆகிய பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பயணிகள் கொண்டு வரும் உடமைகள் அனைத்தும் நவீன ஸ்கேனர் கருவிகள் மூலம் வெவ்வேறு நிலைகளில் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. </p><p>மோப்ப நாய் பிரிவு மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்களும் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.</p><p>பாதுகாப்பு சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், பயணிகள் வழக்கம் போல் வரும் நேரத்தை விட சற்று முன்னதாகவே விமான நிலையத்திற்கு வருமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பாலியல் வன்கொடுமை வழக்கில் மூத்த பத்திரிகையாளர் தருண் தேஜ்பால் குற்றவாளி என உயர்நீதிமன்றம் தீர்ப்பு </title><link>https://www.maalaimalar.com/news/national/tarun-tejpal-convicted-of-sexual-assault-bombay-high-court-overturns-2021-acquittal</link><comments>https://www.maalaimalar.com/news/national/tarun-tejpal-convicted-of-sexual-assault-bombay-high-court-overturns-2021-acquittal#comments</comments><guid isPermaLink="false">4257d50f-c47f-4c22-a0a4-9e5d5905a8b6</guid><pubDate>Thu, 06 Aug 2026 08:24:25 +0000</pubDate><atom:updated>2026-08-06T08:24:25.134Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாலியல் வன்கொடுமை,Sexual assault,உயர்நீதிமன்றம்,High Court,Journalist,பத்திரிகையாளர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/z010yyr6/tn-29.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தருண் தேஜ்பால்]]></media:title><media:description type="html"><![CDATA[ தருண் தேஜ்பால்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/z010yyr6/tn-29.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2013 இல் இளம் பெண் பத்திரிகையாளரை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88">பாலியல் வன்கொடுமை</a> செய்த வழக்கில் 'தெஹல்கா' பத்திரிகையின் நிறுவனரும் முன்னாள் ஆசிரியரும் மூத்த பத்திரிகையாளருமான தருண் தேஜ்பால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.</p><p>2013  நவம்பர் 7 அன்று நிகழ்வொன்றின்போது கோவாவில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் லிப்டில் வைத்து தன்னை தருண் தேஜ்பால் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெஹல்கா பத்திரிகையில் பணியாற்றிய இளம் பெண் பத்திரிகையாளர் புகார் அளித்தார். </p><p>ஆனால் போதிய சான்றுகள் இல்லை எனக் கூறி, சந்தேகத்தின் பலனைத் தருண் தேஜ்பாலுக்கு வழங்கி 2021ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. </p><p>பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தில் முரண்பாடுகள் இருப்பதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.</p> <h2>மேல்முறையீடு</h2><p>இத்தீர்ப்பை எதிர்த்து கோவா காவல் துறையும் அரசுத் தரப்பும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.</p><p>கோவாவுக்கு என்று தனி உயர்நீதிமன்றம் கிடையாது. பம்பாய் உய்ரநீதிமன்றத்தின் கோவா அமர்வு இந்த மேல்முறையீட்டை விசாரித்து வந்தது.</p> <h2>தீர்ப்பு</h2><p>இந்த வழக்கில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை விசாரணை நீதிமன்றம் தவறாகக் கையாண்டதாகவும், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற தவறான அனுமானத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டதாகவும் வாதிட்டார்.</p><p>இந்நிலையில் விசாரணை முடிவில் இன்று(ஆகஸ்ட் 6) 2021ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் வழங்கிய விடுதலை உத்தரவை ரத்து செய்த பம்பாய் உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் நீலா கோகலே மற்றும் அமித் ஜாம்சந்தேகர் அடங்கிய கோவா அமர்வு தருண் தேஜ்பால் குற்றவாளி என அதிரடியாக தீர்ப்பளித்தது.</p> <h2>உச்சநீதிமன்றம்</h2><p>தருண் தேஜ்பால் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கான தண்டனை விவரங்களை உயர் நீதிமன்றம் விரைவில் அறிவிக்கவுள்ளது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல உள்ளதாக தருண் தேஜ்பால் தரப்பு தெரிவித்துள்ளது.</p><p>முன்னதாக இன்றைய அமர்வில், தனக்கு 61 வயதாகிறது என்றும், ஒரு மனைவி இருப்பதாகவும் தானே இதில் பாதிக்கப்பட்டவன் எனவும் கூறி, தனக்கு கருணை காட்டுமாறு கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p>தேஜ்பால் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்காக, இந்த உத்தரவை எட்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்குறமாறு நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார்.</p>]]></content:encoded></item><item><title>எலான் மஸ்க்கின் &apos;X&apos; நிறுவனத்தில் இருந்து விலகிய  PRODUCT CHIEF நிகிதா பியர்!</title><link>https://www.maalaimalar.com/technology/elon-musks-x-loses-product-chief-nikita-bier</link><comments>https://www.maalaimalar.com/technology/elon-musks-x-loses-product-chief-nikita-bier#comments</comments><guid isPermaLink="false">2cb7dd7a-2a3a-4d03-9ced-d97d7920b7da</guid><pubDate>Thu, 06 Aug 2026 07:59:19 +0000</pubDate><atom:updated>2026-08-06T07:59:19.898Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Elon Musk,எலான் மஸ்க்,எக்ஸ்,x,Nikita Bier,நிகிதா பியர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/9lnr9eo7/elon.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Elon Musk-Nikita Bier]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/9lnr9eo7/elon.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தொழில்நுட்பம் (Technology)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான பிரபல சமூக வலைதள நிறுவனமான 'X' தயாரிப்புப் பிரிவு தலைவராக பணியாற்றி வந்த தொழிலதிபர் நிகிதா பியர், பொறுப்பேற்ற ஒரு ஆண்டிலேயே தன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.</p><h2><strong>அதிகாரப்பூர்வ பதிவு:</strong></h2><p>"X சமூகத்திற்குச் சேவை செய்தது எனது வாழ்நாளின் மிகப்பெரிய பாக்கியம். வரலாற்று சிறப்புமிக்க தகவல் தொடர்புத் தொழில்நுட்பமாக X எப்போதும் நிலைத்து நிற்கும். ஆனால் இந்த செயலியை பராமரித்து இயக்குவது 24 மணி நேரமும் இடைவிடாது செய்யவேண்டிய பணியாக உள்ளது. எனவே தற்போது நான் ஒரு சிறிய இடைவெளி எடுக்க வேண்டிய நேரமிது," என அவர் தெரிவித்துள்ளார். முழு நேரத் தயாரிப்புத் தலைவர் பொறுப்பில் இருந்து விலகினாலும், X நிறுவனத்தின் மூலோபாய ஆலோசகராக அவர் தொடர்ந்து செயல்படுவார்.</p><h2><strong>ஓராண்டு சாதனைகள்:</strong></h2><p>2025 ஜூலை மாதம் இந்த பொறுப்பை ஏற்ற நிகிதா பியர், தனது ஓராண்டு பதவிக் காலத்தில் அடைந்த முக்கிய இலக்குகளைப் பட்டியலிட்டுள்ளார். தனது தலைமையின்கீழ் சுமார் '30 புதிய தயாரிப்புகள் மற்றும் பயன்பாட்டு அம்சங்கள் X செயலியில் அறிமுகப்படுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். </p><p>புதிய பயனர்களின் வருகை மற்றும் தளத்தின் பயன்பாட்டு அளவீடுகளில் சாதனை படைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், ஆப்பிள் ஆப் ஸ்டோர் தரவரிசையில் X தளம் 70 இடங்கள் முன்னேறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h3><strong>யார் இந்த நிகிதா பியர்?</strong> </h3><p>நிகிதா பியர் அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி தொழிலதிபர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் ஆவார். டீனேஜர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற 'tbh' மற்றும் 'Gas' ஆகிய சமூக வலைதள செயலிகளை உருவாக்கியவர். இவர் உருவாக்கிய 'tbh' செயலியை 2017-ல் மெட்டா நிறுவனமும், 'Gas' செயலியை 2023-ல் டிஸ்கார்ட் நிறுவனமும் விலைக்கு வாங்கின. பெர்க்லியிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் படித்த இவர், தற்போது லைட்ச்பீட் நிறுவனத்தில் வென்ச்சர் பார்ட்னராகவும் பணியாற்றி வருகிறார்.</p>]]></content:encoded></item><item><title>ஹிரோஷிமா.. உலகம் இன்னும் கடந்த போக முடியாத தினம்</title><link>https://www.maalaimalar.com/news/world/responsibility-and-resilience-hiroshima-day-2026-remembering-atomic-bombing-and-call-for-a-peaceful-nuclear-free-world</link><comments>https://www.maalaimalar.com/news/world/responsibility-and-resilience-hiroshima-day-2026-remembering-atomic-bombing-and-call-for-a-peaceful-nuclear-free-world#comments</comments><guid isPermaLink="false">752f733c-615f-426c-b92b-5fb492e837c3</guid><pubDate>Thu, 06 Aug 2026 07:57:40 +0000</pubDate><atom:updated>2026-08-06T07:57:40.246Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>japan,ஜப்பான்,இரண்டாம் உலகப் போர்,World war II,Atomic bomb,ஹிரோஷிமா தினம்,அணுகுண்டு,Hiroshima Day</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/h5e2l4wp/tn-28.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஹிரோஷிமா தாக்குதலில் பிழைத்தவர்கள் ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஹிரோஷிமா தாக்குதலில் பிழைத்தவர்கள் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/h5e2l4wp/tn-28.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[  <p>அது இரண்டாம் உலகப் போரின் உச்சக்கட்டம். இன்றைப் போன்றதொரு ஆகஸ்ட் 6. ஆண்டு 1945. மனித விழுமியங்கள் அனைத்தையும் மறந்து அமெரிக்கா செய்த காரியம் மனித வரலாற்றிலேயே கரும்புள்ளியாக நாள். </p><p>அச்சு நாடுகளின் கூட்டணியில் அங்கம் வகித்த ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்தின் மீது <a href="https://www.maalaimalar.com/news/world/nuclear-arms-spending-hits-record-high-china-leads-global-expansion">அணுகுண்டு </a>வீசியது நேச நாடான அமெரிக்கா. </p><p>அந்த அணு குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த மனிதர்களை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 6 அன்று ஹிரோஷிமா தினம் அனுசரிக்கப்படுகிறது.</p><p>இன்றுடன் இந்த கோரம் நடந்து 81 ஆம் ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. </p><p>2026 ஹிரோஷிமா தினத்தின் மையக்கரு, "Remembrance, Responsibility and Resilience" என்பதாகும். </p><p>அதாவது பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து, வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அணுஆயுதங்களற்ற அமைதியான உலகை நோக்கி உழைப்பதன் அவசியத்தை இது வலியுறுத்துகிறது.</p><h2>அணுகுண்டு தாக்குதல்</h2><p>1945, ஆகஸ்ட் 6, ஹிரோஷிமாவில் காலை 8.15 மணி: அமெரிக்காவின் Enola Gay என்ற B-29 ரக போர் விமானம்</p><p>'லிட்டில் பாய்' என்ற அணு குண்டை ஹிரோஷிமா நகரின் மீது வீசியது.</p><p>தீக்காயங்கள், வெடிப்பினால் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் கதிர்வீச்சுப் பாதிப்புகள் காரணமாக 1945 ஆம் ஆண்டின் இறுதிக்குள் மட்டும் 1,40,000 க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர்.</p><p>இதன் தொடர்ச்சியாக, 3 நாட்களுக்குப் பிறகு , ஆகஸ்ட் 9இல் நாகசாகி மீது Fat Man என்ற இரண்டாவது அணு குண்டு வீசப்பட்டது.</p><p>அடுத்து வந்த சில நாட்களில், ஆகஸ்ட் 15 அன்று ஜப்பான் நிபந்தனையற்ற சரணடைதலை அறிவித்ததன் மூலம் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.</p><h2>ஹிரோஷிமா தினத்தின் முக்கியத்துவம்</h2><p>அணுஆயுதப் போரினால் ஏற்படும் மனிதப் பேரழிவுகளையும், தலைமுறை கடந்து கதிர்வீச்சால் அவதிப்படும் மனிதர்களின் துயரத்தையும் உலகிற்கு நினைவூட்டுகிறது.</p><p>உலகளவில் அணு ஆயுதங்களைக் குறைக்கவும், அமைதி மற்றும் வன்முறையற்ற பாதையை உருவாக்கவும் சர்வதேச சமூகத்தை ஒருங்கிணைக்கும் நாளாக இது அமைகிறது.</p>]]></content:encoded></item><item><title>சர்ச்சைப் பேச்சு வழக்கு: பொன்முடிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ponmudi-hate-speech-case-chennai-george-town-court-issues-arrest-warrant</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ponmudi-hate-speech-case-chennai-george-town-court-issues-arrest-warrant#comments</comments><guid isPermaLink="false">34f93599-a1f8-4818-800a-668dd4746992</guid><pubDate>Thu, 06 Aug 2026 07:42:32 +0000</pubDate><atom:updated>2026-08-06T07:42:32.718Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,ponmudi,பொன்முடி,George Town Court,ஜார்ஜ் டவுன் நீதிமன்றம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/93dsywx6/george.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ george town]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/93dsywx6/george.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்களைக் குறித்து சர்ச்சைக்குரிய முறையில் கருத்து தெரிவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றம் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராகப் பிடிவாரண்ட்  பிறப்பித்துள்ளது.</p><h2><strong>சர்ச்சைப் பேச்சு:</strong></h2><p>சென்னையில் கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இளைஞர் அணியின் தலைமையகமான அன்பகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவம், வைணவம் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.</p><p>இது தொடர்பாக சென்னை மாநகராட்சி பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன், சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனிநபர் புகார் மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், வெறுப்பு பேச்சு பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான இந்த புகாரை விசாரித்து, மதரீதியாக வெறுப்புணர்வை ஏற்படுத்துதல், மத உணர்வுகளை புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவரை தண்டிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இந்த புகார் மனு எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமான ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.</p><h2><strong>வழக்கை ரத்து செய்ய மனு:</strong></h2><p>தனக்கு எதிரான புகாரை விசாரணைக்கு ஏற்று ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி பொன்முடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு நடைபெற்றது. அப்போது பொன்முடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "மூடிய அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பேச்சு தொடர்பாக தனி நபர் புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை தாக்கல் செய்யும் முன் அரசின் அனுமதியை பெறவில்லை என்பதால், இந்த வழக்கை தொடர்ந்து நடத்த முடியாது" என வாதிட்டார்.</p><h2><strong>மனு தள்ளுபடி:</strong> </h2><p>புகார்தாரரான உமா ஆனந்தன் தரப்பில், தனது பேச்சு ஊடகங்களில் பரவும், பிற மதத்தினர் பார்ப்பார்கள் என்று தெரிந்தே பொன்முடி இந்த வெறுப்பு பேச்சை பேசியுள்ளார். இதே விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து, பொன்முடிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டிருந்த நிலையில், பொன்முடியின் பேச்சால் பொது அமைதிக்கு எந்த குந்தகமும் ஏற்படவில்லை என கூறி, புகார்கள் முடித்து வைக்கப்பட்டன. மேலும், பொன்முடிக்கு எதிரான வழக்கை தொடர அரசிடம் அனுமதி கோரியிருப்பதாகவும் வாதிடப்பட்டது.</p><p>இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இளந்திரையன், வழக்கை ரத்து செய்ய கோரிய பொன்முடியின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இந்நிலையில், கடந்த ஜூலை 2ஆம் தேதி  தீர்ப்பளித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.</p><h3><strong>வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட காரணம்:</strong></h3><p>இந்த நிலையில், சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கு விசாரணைக்கு பொன்முடி தொடர்ந்து ஆஜராகாமல் இருந்ததால், அவருக்கு எதிராகப் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் வைக்கப்பட்டது. பிறப்பிக்கப்பட்டுள்ள பிடிவாரண்ட் உத்தரவின்படி, பொன்முடியைக் கைது செய்து செப்டம்பர் 2-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல் துறைக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மற்றுமொரு பெயர்மாற்ற நிகழ்வே வேளாண் பட்ஜெட் 2026 - மு.க.ஸ்டாலின்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-agriculture-budget-2026-budget-is-merely-another-instance-of-a-name-change</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-agriculture-budget-2026-budget-is-merely-another-instance-of-a-name-change#comments</comments><guid isPermaLink="false">6f6daca4-9301-462b-b529-009425192e29</guid><pubDate>Thu, 06 Aug 2026 07:42:09 +0000</pubDate><atom:updated>2026-08-06T07:42:09.835Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,TN budget,தமிழக பட்ஜெட்,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,Budget 2026,முக ஸ்டாலின்,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/5zroo9vk/mkstalin1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/5zroo9vk/mkstalin1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[  <p>தமிழக சட்டசபையில் இன்று 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-to-plant-3-million-saplings-under-green-initiative">வேளாண் பட்ஜெட்</a> தாக்கல் செய்தது குறித்து திமுக தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க.ஸ்டாலின்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதலமைச்சரின் உச்சிகுளிர பாராட்டுமழை பொழியப் பயன்பட்டதுதான் வேளாண் பட்ஜெட் 2026.</p> <p>மற்றுமொரு பெயர்மாற்ற நிகழ்வாக மட்டுமே நடந்து முடிந்துள்ளது.</p><h2>வெற்றி லேபிள்</h2><p>திராவிட மாடல் அரசின் திட்டங்களின் மேல் 'வெற்றி' என்ற லேபிளை ஒட்டினால் வேலை முடிந்தது என்று இந்த அரசு நினைக்கிறதா?</p><p>குறுவை சாகுபடி பாதித்து அரசின் உதவிக்கரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் டெல்டா உழவர்களுக்கு எதுவுமில்லாத, வெற்று பட்ஜெட்டாக இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது.</p> <p>உழவர் பெருமக்களின் கோரிக்கைகளை உரத்த குரலில் இந்தக் கூட்டத்தொடர் முழுவதும் கழக உறுப்பினர்கள் எழுப்புவார்கள். உறக்கத்தில் இருக்கும் அரசு விழித்துக் கொண்டு பதில் சொல்லியாக வேண்டும். தீர்வு கிடைக்க வேண்டும்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதலமைச்சரின் உச்சிகுளிர பாராட்டுமழை பொழியப் பயன்பட்டதுதான் <a href="https://x.com/hashtag/TNAgriBudget2026?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TNAgriBudget2026</a>.<br><br>மற்றுமொரு பெயர்மாற்ற நிகழ்வாக மட்டுமே நடந்து முடிந்துள்ளது.<a href="https://x.com/hashtag/DravidianModel?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#DravidianModel</a> அரசின் திட்டங்களின் மேல் &#39;வெற்றி&#39; என்ற லேபிளை ஒட்டினால் வேலை முடிந்தது என்று இந்த அரசு… <a href="https://t.co/YlD3WedXB3">pic.twitter.com/YlD3WedXB3</a></p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2085263496539959504?ref_src=twsrc%5Etfw">August 6, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>தொலைநோக்கு பார்வையுடன்கூடிய பட்ஜெட்- முதலமைச்சர் விஜய் பாராட்டு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-hails-visionary-budget</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-hails-visionary-budget#comments</comments><guid isPermaLink="false">183e2962-7175-4b41-8fe1-632b1d6868bf</guid><pubDate>Thu, 06 Aug 2026 07:41:23 +0000</pubDate><atom:updated>2026-08-06T07:41:23.291Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN budget,தமிழக பட்ஜெட்,Budget 2026,முதலமைச்சர் விஜய்,tn cm vijay,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/26cn1ozb/TN-CM.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/26cn1ozb/TN-CM.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2026-2027ம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கை தாக்க செய்த நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண்துறை அமைச்சர் வினோத்திற்கு முதலமைச்சர் விஜய் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.</p><h2>வேளாண் பட்ஜெட்</h2><p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார்.</p><p>இதில், விவசாயிகளுக்கான பல்வேறு முக்கியத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.</p><h2>முதலமைச்சர் விஜய் பாராட்டு</h2><p>இந்நிலையில், பட்ஜெட் தொடர்பாக நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண்துறை அமைச்சர் வினோத் ஆகியோரை முதலமைச்சர் விஜய் பாராட்டியுள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழ்நாட்டின் வளர்ச்சியை இலக்காகவும், மக்கள் நலனை மையமாகவும் கொண்டு, ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றே மாதங்களில் அனைவரும் பாராட்டும் வகையில் 2026 - 27ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள மாண்புமிகு நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் மரிய வில்சன் அவர்களுக்கும், வேளாண்மை நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு. ர. வினோத் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.</p><p>தொலைநோக்குப் பார்வையுடன்கூடிய திருத்திய நிதிநிலை அறிக்கையானது மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், திருநர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழில்முனைவோர், அரசுப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்கும் புதிய நம்பிக்கையை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. </p><p>வேளாண்மை நிதிநிலை அறிக்கையானது, தமிழ்நாட்டின் வேளாண் வளர்ச்சியோடு, அதன் தொழில்சார்ந்த கால்நடை மற்றும் மீன் வளர்ப்பு, பால்வளம், உணவுப் பொருட்களைப் பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டுதல் போன்ற தொழில்களையும் மேம்படுத்துவதோடு, அனைத்துத் தரப்பு விவசாயிகளின் நலனையும் வாழ்வாதாரத்தையும் மேலும் வலுப்படுத்தும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><p>வளமான தமிழ்நாட்டை நோக்கிய நமது வெற்றிப் பயணம் தொடரட்டும்!</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தவெக ஆட்சியில் அதிகம் பாதிக்கப்பட்டது விவசாயிகள் தான் - உதயநிதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-farmers-most-affected-during-tvk-regime</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-farmers-most-affected-during-tvk-regime#comments</comments><guid isPermaLink="false">ec1c3493-c2d0-4886-81c2-ccbbf8af423e</guid><pubDate>Thu, 06 Aug 2026 07:26:44 +0000</pubDate><atom:updated>2026-08-06T07:26:44.438Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,vijay,Udhayanidhi Stalin,TN budget,தமிழக பட்ஜெட்,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,tvk,Budget 2026,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/f8td3eos/udhayanidhi1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Udhayanidhi Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/f8td3eos/udhayanidhi1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. சட்டசபையில் இன்று 2026-27-ம் ஆண்டுக்கான <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-to-plant-3-million-saplings-under-green-initiative">வேளாண் பட்ஜெட்டை</a> வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். </p><p>வேளாண் பட்ஜெட் தாக்கலுக்கு பின் இன்றைய சட்டசபை கூட்டம் நிறைவு பெற்றது. இதையடுத்து சட்டசபை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">உதயநிதி ஸ்டாலின்</a> செய்தியாளர்களிடம் கூறியதாவது:</p><p>* தவெக அரசு தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட்டில் எதுவும் புதிதில்லை.</p> <h2>வேளாண் பட்ஜெட்</h2><p>* தவெக ஆட்சியில் காவிரியில் நீர் வரவில்லை, வேளாண் பட்ஜெட்டில் புதிய அறிவிப்பு இல்லை.</p><p>* கடந்த 4 மாதமாக விவசாயிகள் எண்ணற்ற பிரச்சனைகளை சந்திக்கும் நிலையில் எந்த புதிய அறிவிப்பும் இல்லை.</p><p>* தமிழக வேளாண் பட்ஜெட்டில் எந்த திட்டமும் இல்லை.</p><p>* திமுக அரசின் திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்து அவர்களின் கட்சி பெயரை சேர்த்து புதியதை போல் அறிவித்துள்ளனர்.</p> <p>* மரபை மீறி பேரவையில் முதலமைச்சருக்கு ஜால்ரா போடுகின்றனர்.</p><p>* கடந்த 4 மாதமாக விவசாயிகள் எண்ணற்ற பிரச்சனைகளை சந்திக்கும் நிலையில் எந்த புதிய அறிவிப்பும் இல்லை.</p><h2>கருப்பு சட்டை</h2><p>* தவெக ஆட்சியில் அதிகம் பாதிக்கப்பட்டது விவசாயிகள் தான்.</p><p>* குறுவை சாகுபடி செய்யாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் அதை வெளிப்படுத்தவே கருப்பு சட்டை அணிந்து பேரவைக்கு வந்தோம்.</p> <p>* அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுங்கள் என்ற கோரிக்கை குறித்து முதலமைச்சர் வாய் திறக்கவில்லை.</p><p>* விவசாயிகளின் பிரச்சனைகள் குறித்த குரலுக்கு முதலமைச்சர் வாய் திறப்பதே இல்லை.</p><h2>காவிரி விவகாரம்</h2><p>* காவிரி விவகாரம் குறித்து அவையில் விவாதிக்க அனுமதி கோரி சபாநாயகரிடம் திமுக சார்பில் கடிதம் அளித்துள்ளோம்.</p><p>* சட்டசபையில் நாளை முதல் நாங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு முதல்வர் வாய் திறப்பாரா என்று பார்ப்போம்.</p><p>* எங்கள் கேள்விகளுக்கு முதல்வர் பதில் அளிப்பார் என விவசாயிகளுடன் திமுக எம்எல்ஏக்களும் காத்திருக்கிறோம்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>வேளாண் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் எதுவும் இல்லை- பிரேமலதா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-major-announcements-in-agriculture-budget-says-premalatha</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-major-announcements-in-agriculture-budget-says-premalatha#comments</comments><guid isPermaLink="false">5be938f7-a086-4a88-94f5-379f3a04e281</guid><pubDate>Thu, 06 Aug 2026 07:20:30 +0000</pubDate><atom:updated>2026-08-06T07:20:30.617Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN budget,தமிழக பட்ஜெட்,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,Budget 2026,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/lonxk6lr/premalatha.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Premalatha]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/lonxk6lr/premalatha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார்.</p><p>பின்னர், இதுதொடர்பாக தேதிமுக பொதுச்செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-</p><p>விவசாயிகள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்புகள் வேளாண் பட்ஜெட்டில் இல்லை.</p><p>நெல்லை மூட்டைகளை பாதுகாக்கும் சேமிப்பு கிடங்கு தொடர்பாக எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் வெளியாகவில்லை.</p><p>100 நாள் வேலைத்திட்டம் தொடர்பாக வேளாண் பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. சீமை கருவேல மரங்களை அகற்றுவதோடு நிறுத்தாமல் அதனை விளைநிலங்களாக மாற்றுவதையே தேமுதிக விரும்புகிறது.</p><p>ரசாயன உரங்களை விவசாயிகள் அதிகம் பயன்படுத்துவதால் நமது விளைபொருளை வெளிநாட்டில் வாங்க மறுக்கின்றனர்.</p><p>நேற்றும், இன்றும் பழைய திட்டங்களுக்கு புதிய பெயர்கள் வைத்து திட்டங்களை அறிவித்துள்ளனர்.</p><p>இந்திய வேளாண் பொருட்களை வெளிநாட்டு சந்தைகளுக்கு கொண்டு செல்ல இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க வேண்டும்.</p><p>அடுத்த ஜென்மத்தில் விவசாயியாக பிறக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் கூறியிருக்கிறார். அது மகிழ்ச்சி தான். ஆனால்,முதலமைச்சர் விஜய் நினைத்தால் இப்போதே விவசாயிகளுக்கு நன்மை செய்ய முடியும், எதற்கு அடுத்த ஜென்மம்.</p><p>கள் இறக்க அனுமதி தர வேண்டும் என்ற விவசாயிகளின் பல ஆண்டு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். </p><p>மாவட்டந்தோறும் நலிவுற்ற பதப்படுத்தும் ஆலைகளை மறுசீரமைத்து வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்.</p><p>செய்தித்தாள் வாசிப்பதைபோல் பட்ஜெட்டை வாசதித்துள்ளார் அமைச்சர் வினோத், இது செயலாக்கம் பெற வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நிலவின் மேல் மோதிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் 4 டன் ராக்கெட் பகுதி.. தாக்கம் என்ன? </title><link>https://www.maalaimalar.com/news/world/spacex-rocket-impact-4-ton-falcon-9-debris-crashes-into-moon-near-einstein-crater-after-18-months-in-orbit</link><comments>https://www.maalaimalar.com/news/world/spacex-rocket-impact-4-ton-falcon-9-debris-crashes-into-moon-near-einstein-crater-after-18-months-in-orbit#comments</comments><guid isPermaLink="false">fb36cd7b-ac67-4786-9ee9-f09658362ddb</guid><pubDate>Thu, 06 Aug 2026 07:02:34 +0000</pubDate><atom:updated>2026-08-06T07:02:34.808Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Moon,நிலவு,SpaceX,space,விண்வெளி,ஸ்பேஸ் எக்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/b0hsunmw/tn-27.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நிலவின் மேல் மோதிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் ]]></media:title><media:description type="html"><![CDATA[ நிலவின் மேல் மோதிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/b0hsunmw/tn-27.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விண்வெளியில் கடந்த 18 மாதங்களுக்கும் மேலாகக் கட்டுப்பாடின்றி சுற்றித் வந்த <a href="https://www.maalaimalar.com/topic/spacex">ஸ்பேஸ்எக்ஸ்  </a>நிறுவனத்தின் 4 டன் எடையுள்ள ராக்கெட் பகுதி நிலவின் மேற்பரப்பில் மோதியுள்ளது.</p><p>2025 ஜனவரியில் Firefly Aerospace விண்கலத்தைச் சுமந்து சென்ற ஸ்பேஸ்எக்ஸ்  உடைய Falcon 9 ராக்கெட்டின் பாகமே தற்போது நிலவில் மணிக்கு 8,690 கி.மீ வேகத்தில் மோதியுள்ளது.</p><h2>மோதல்</h2><p>ஒரு பள்ளிப் பேருந்தின் அளவிற்குப் பெரியதான இந்த ராக்கெட் பாகம், விண்வெளிப் பாதையிலிருந்து விலகிச் சுமார் 1.5 ஆண்டுகளுக்கும் மேலாக விண்வெளிக் கழிவாகச் சுற்றி வந்தது.</p><p>பூமி நேரப்படி நேற்று நண்பகல் வேளையில், நிலவின் மேற்குக் பகுதியில் அமைந்துள்ள Einstein crater பகுதியில் இது மோதியதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அதிவேக மோதலால் நிலவின் தூசிகள் காற்றில் எழும்பிப் பரவியுள்ளன.</p><p>அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் லூனார் (நிலவு) செயற்கைக்கோள்கள் இந்த மோதல் நடந்த இடத்தை நிழற்படம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. புகைப்படங்கள் மூலம் சேதங்களை ஆய்வு செய்யச் சில நாட்கள் ஆகலாம் என கூறப்படுகிறது.</p> <h2>காரணம்</h2><p>ராக்கெட்டில் எஞ்சியிருந்த எரிபொருள் முழுமையாக வெளியேற்றப்பட்டதால், அதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாமல் போனது. </p><p>சூரிய கதிர்வீச்சு மற்றும் ஈர்ப்பு விசையின் காரணமாகவே இது நிலவை நோக்கிய பாதையில் திரும்பியதாக ஸ்பேஸ்எக்ஸ் தெரிவித்துள்ளது.</p><p>இந்த மோதலால் யாருக்கும் எவ்வித ஆபத்தும் இல்லை என்ற போதிலும், விண்வெளிக் கழிவுகளை அகற்றுவதில் இருக்கும் அலட்சியமே இதற்கு வானியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p>இதுபோன்ற திட்டமிடப்படாத சம்பவங்களை தடுப்பது குறித்து நாசாவும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமும் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை - எடப்பாடி பழனிசாமி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-says-promises-made-to-farmers-have-not-been-fulfilled</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-says-promises-made-to-farmers-have-not-been-fulfilled#comments</comments><guid isPermaLink="false">7ddf467d-b479-4184-963c-09fd2575f222</guid><pubDate>Thu, 06 Aug 2026 06:54:23 +0000</pubDate><atom:updated>2026-08-06T06:54:23.352Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,TN budget,தமிழக பட்ஜெட்,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,tvk,Budget 2026,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/muk0bjei/eps.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Edappadi Palaniswami ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/muk0bjei/eps.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. சட்டசபையில் இன்று 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/drones-for-women-at-a-50-subsidy-vetri-vaan-magal-scheme-announced">வேளாண் பட்ஜெட்</a> தாக்கலுக்கு பின் இன்றைய சட்டசபை கூட்டம் நிறைவு பெற்றது. இதையடுத்து சட்டசபை வளாகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF">எடப்பாடி பழனிசாமி</a> செய்தியாளர்களிடம் கூறியதாவது:</p><p>* தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட் விவசாயிகளை ஏமாற்றி உள்ளது.</p> <h2>திமுக ஆட்சி</h2><p>* சுமார் இரண்டரை மணி நேரம் வாசிக்கப்பட்ட வேளாண் பட்ஜெட்டில் எந்த ஒரு புதிய அறிவிப்பும் இல்லை.</p><p>* கடந்த கால திமுக ஆட்சியில் 20 துறைகளை இணைத்து வாசிக்கப்பட்ட வேளாண் பட்ஜெட் போலத்தான் தவெக பட்ஜெட்டும் உள்ளது.</p><p>* ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,500 கரும்பு டன்னுக்கு ஆதார விலை ரூ.4,500 வழங்கப்படும் என்றார்கள் அந்த அறிவிப்பு என்னவானது?</p> <h2>உழவர் உரிமை அட்டை</h2><p>* சொந்த நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு விதைப்பு கால நிதியாக ரூ.15,000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு என்னவானது?</p><p>* உழவர் உரிமை அட்டை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 தரப்படும் என்ற வாக்குறுதி என்னவானது?</p><p>* தொடக்க வேளாண் வங்கிக்கடன்களில் உள்ள விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு என்னவானது?</p> <h2>தவெக அரசு</h2><p>* தேர்தல் நேரத்தில் இனிக்க இனிக்க பேசிய தவெக தற்போது விவசாயிகளை ஏமாற்றி விட்டது.</p><p>* வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி உள்ளனர். இது விவசாயிகளுக்கு நன்மை தரும் பட்ஜெட் இல்லை.</p><p>* அதிமுக அரசு முன்னதாக அறிவித்த குடிமராமத்து திட்டத்தில் நீர் நிலைகள் முழுமையாக சீரமைக்கப்பட்டது.</p> <h2>குடிமராமத்து திட்டம்</h2><p>* மகத்தான குடிமராமத்து திட்டத்திற்கு வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை.</p><p>* ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் அதிமுக அரசு தூர்வாரியதால் தான் மாநிலம் முழுவதும் நீர் நிலைகளில் நீர் உள்ளது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>அதிமுகவில் மீண்டும் சலசலப்பு -  அமைச்சர் ஆனந்துடன் அதிருப்தி எம்எல்ஏக்கள் சந்திப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/aiadmk-rebel-mlas-meet-water-resources-minister-anand</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/aiadmk-rebel-mlas-meet-water-resources-minister-anand#comments</comments><guid isPermaLink="false">981be373-b7aa-4945-89bc-3812b3af8afb</guid><pubDate>Thu, 06 Aug 2026 06:53:49 +0000</pubDate><atom:updated>2026-08-06T06:53:49.594Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,sp velumani,எஸ்பி வேலுமணி,அமைச்சர் ஆனந்த்,Minister Bussy Anand</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/y14bp0vz/TN-Sec.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN Secretariat]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/y14bp0vz/TN-Sec.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார்.</p><p>இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சரும், தவெக பொதுச் செயலாளருமான ஆனந்த் உடன் அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் சந்தித்தனர்.</p><p>அதிமுக எம்எல்ஏக்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி. அன்பழகன் ஆகியோர் அமைச்சர் ஆனந்தை சந்தித்து பேசினர்.</p><p>வேளாண் பட்ஜெட் தாக்கல் நிறைவடைந்த நிலையில் அமைச்சர் ஆனந்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>பசுமை தமிழ்நாடு இயக்கம்: மாநிலம் முழுவதும் 30 லட்சம் மரக்கன்றுகள் நடும் பிரம்மாண்ட திட்டம்!-அமைச்சர் வினோத்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-to-plant-3-million-saplings-under-green-initiative</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-to-plant-3-million-saplings-under-green-initiative#comments</comments><guid isPermaLink="false">ae9c4bbe-16d5-4350-86b2-ccfb0ba6c6eb</guid><pubDate>Thu, 06 Aug 2026 06:37:43 +0000</pubDate><atom:updated>2026-08-06T06:37:43.401Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,vijay,TN budget,தமிழக பட்ஜெட்,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,tvk,Budget 2026,பட்ஜெட்2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/48w5sus4/ff.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ minister vinoth
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/48w5sus4/ff.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளின் கடன் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், கால்நடைப் பராமரிப்பு, பால் உற்பத்தி மற்றும் பசுமைப் போர்வையைப் பெருக்கவும் பல்வேறு முக்கிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.</p><h2><strong>கால்நடை பராமரிப்பு &amp; பால் பண்ணை மேம்பாடு:</strong></h2><h2><strong>நடுத்தர பால் பண்ணைகள்:</strong></h2><p>500 நடுத்தர பால் பண்ணைகள் அமைக்க 25 சதவீதம் மூலதன மானியம் வழங்கப்படும்.</p><h2><strong>சிறு பால் பண்ணைகள்:</strong></h2><p>மாநிலம் முழுவதும் சிறு பால் பண்ணைகள் அமைப்பதை ஊக்குவிக்க 4 சதவீத வட்டி மானியமாக ரூ.4.19 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><h2><strong>மகளிர் சுய உதவிக்குழுக்கள்:</strong></h2><p>மகளிர் சுய உதவிக்குழு சார்ந்த கால்நடை பராமரிப்புக்காகச் சிறப்பு நிதியாகத் தலா ரூ.5,000 வழங்க ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>மானிய விலையில் தீவனம்:</strong></h2><p>வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்குக் கால்நடைத் தீவனம் ஒரு கிலோ ரூ.2 என்ற மானிய விலையில் வழங்கப்படும்.</p><h2><strong>விதை பயிர் தொகுப்பு:</strong></h2><p>மாநிலத்தில் விதை இருப்பை அதிகரிக்கும் நோக்கில், ரூ.1 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக 150 விதை பயிர் தொகுப்புகள் ஏற்படுத்தப்படும்.</p><h2><strong>வேளாண் காடுகள் திட்டம்</strong>:</h2><p>வேளாண் காடுகளை ஊக்குவிக்கும் பொருட்டு 5 லட்சம் சந்தன மரங்கள் மற்றும் 50,000 தேக்கு மரங்கள் உள்ளிட்ட மரக்கன்றுகள் நடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><h2><strong>பசுமை தமிழ்நாடு இயக்கம்:</strong></h2><p>பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் மூலம் மாநிலம் முழுவதும் மொத்தம் 30 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். 'பசுமை தமிழ்நாடு இயக்கம்' மூலம் மாநிலத்தின் காடுகளின் பரப்பளவை அதிகரிக்கவும் சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணவும் மாநிலம் முழுவதும் 30 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்றும் அமைச்சர் தனது உரையில் உறுதிபடத் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item></channel></rss>