<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 01 Aug 2026 13:45:03 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 1 ஆகஸ்ட் 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-1-august-2026-2</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-1-august-2026-2#comments</comments><guid isPermaLink="false">6db1f91d-b4f2-4888-b10e-353b9e4cce34</guid><pubDate>Sat, 01 Aug 2026 05:01:38 +0000</pubDate><atom:updated>2026-08-01T13:27:14.189Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/4ievmxyy/modi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/4ievmxyy/modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vijayabaskar-mr-vijayabaskar-seek-byelection-ban-lift">இடைதேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனு!</a></p><p>* தடை நீக்கி இடைத்தேர்தல் நடத்த முன்னாள் அமைச்சர்கள் மனு</p><p>* நீதிமன்றம் தடை நீக்குமா என அரசியல் பரபரப்பு</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-nature-has-prevailed-10000-cusecs-released-from-kabini-dam-water-must-also-be-released-from-the-krishna-raja-sagara-dam">இயற்கை வென்றது: கபினியில் தண்ணீர் திறப்பு- கே.ஆர்.எஸ். அணையிலிருந்தும் தண்ணீர் திறக்க அன்புமணி வலியுறுத்தல்</a></p><p>* கர்நாடகத்தில் காவிரியின் துணை ஆறுகளில் ஒன்றான கபினியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை நிரம்பி வழிவதையடுத்து அங்கிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.</p><p>* இந்த நீர் இன்னும் எவ்வளவு காலத்திற்கு திறக்கப்படும், தமிழகத்தின் தேவைக்கு போதுமானதாக இருக்குமா? என்பதெல்லாம் அடுத்த சில வாரங்களுக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் எவ்வளவு மழை பெய்யும் என்பதைப் பொறுத்தே அமையும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-dispute-approaching-supreme-court-only-legal-solution-minister-nirmal-kumar">காவிரி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் திங்கட்கிழமை மனுதாக்கல்-அமைச்சர் நிர்மல் குமார்... </a></p><p>•கர்நாடக அரசியலுக்கு ஆதரவாகத் தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகள் செயல்பட்டு வருவது மிகவும் வருத்தமளிக்கிறது.</p><p>•கர்நாடக அரசியல்வாதிகள் மற்றும் கட்சிகள் தங்களின் அரசியல் லாபத்திற்காகவே தொடர்ந்து காவிரி விஷயத்தில் பிடிவாத போக்கைக் கடைப்பிடித்து வருகின்றன. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-approaches-supreme-court-seeking-immediate-directions-for-release-of-cauvery-water-to-tamil-nadu">காவிரி நீரை உடனடியாக தமிழ்நாட்டிற்கு திறந்து விட உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. அவசர மனு</a></p><p>* கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் நீரையும், பிலிகுண்டுலுவில் கிடைக்கும் நீரின் அளவையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) தினசரி கண்காணித்து, அதன் அமலாக்க நிலையை உச்சநீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு உத்தரவிட வேண்டும்.</p><p>* வழக்கின் உண்மை நிலைகள் மற்றும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, நீதியை நிலைநாட்டுவதற்குத் தேவையான பிற உரிய உத்தரவுகளையும் உச்சநீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/pmk-president-anbumani-ramadoss-how-can-farmers-be-forced-to-repay-crop-loans-with-interest-after-announcing-a-loan-waiver">பயிர்க்கடன் தள்ளுபடி என்று அறிவித்து விட்டு வட்டியுடன் செலுத்த கட்டாயப்படுத்துவதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்</a></p><p>* தமிழக அரசு மற்றும் கூட்டுறவுத் துறையின் தவறான அணுகுமுறையும், நிர்வாகக் குளறுபடிகளும்தான் அனைத்து குழப்பங்களுக்கும் காரணம் ஆகும். </p><p>* இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாகத் தலையிட்டு, உழவர்களிடம் பயிர்க்கடன் தவணைகளைக் கேட்டு தொல்லை கொடுக்கக் கூடாது என கூட்டுறவு சங்கங்களுக்கு ஆணையிட வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/e20-fuel-policy-petrol-would-have-hit-rs125-per-litre-during-iran-war-centre">E20 எரிபொருள் கொள்கை: ஈரான் போரின் போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.125 ஆக உயர்ந்திருக்கும்- மத்திய அரசு விளக்கம்!... </a></p><p>*சர்வதேசப் பொருளாதாரப் பாதுகாப்பைக் காரணம் காட்டி E20 கொள்கையை மத்திய அரசு தீவிரமாக நியாயப்படுத்தி வருகிறது.</p><p>*ஒரே வாரத்தில் 4-வது முறையாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அறிக்கை வெளியீட்டுத் தரவுகளுடன் விளக்கம் அளித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rahul-gandhi-warns-factionalism-blocking-congress-progress-in-tamil-nadu">தமிழ்நாட்டில் பல பிரிவுகளாகச் செயல்படும் காங்கிரஸ்: 'உட்கட்சிப் பூசலே வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை'-ராகுல் காந்தி பரபரப்பு.</a>.. </p><p>*தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவே புதிய மாவட்ட செயலாளர்கயை நியமித்துள்ளோம்.</p><p>*அனைத்து கோஷ்டிப் பூசல்களையும் மறந்து அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/topnews/nature-belongs-to-no-one-karnataka-cm-dk-shivakumar">'இயற்கை யாருக்கும் சொந்தமானது அல்ல..': கடையடைப்பு போராட்டத்தை திரும்ப பெற கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் வலியுறுத்தல... </a></p><p>*அளவிற்கு அதிகமாக நீரைத் தேக்கி வைத்தால் அணை உடைந்தோ அல்லது கரைபுரண்டு ஓடியோ வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நாமே அடித்துச் செல்லப்படும் அபாயம் உள்ளது.</p><p>*காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் வழிகாட்டுதல்கள் மற்றும் அணைகளின் நீர்வரத்து சூழலைக் கருத்தில் கொண்டு, இயல்பான நீர் திறப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-it-wing-indictment-dmk">எரிச்சல் மற்றும் விரக்தி மோடில் அலறும் திமுக- தவெக சாடல்</a></p><p>* ஆட்சியில் இருக்கும்போது சத்தம் போடுவதுபோல சவுண்ட் கொடுத்துவிட்டு, மியூட் மோடுக்குச் சென்று, மியாவ் என்றுகூடச் சத்தம் எழுப்பாத காரியப் பூனைதான் திமுக. </p><p>* கடந்த மே மாதத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட கட்சியாகத் தவிக்கும் திமுக, காவிரி விவகாரத்தில் கபட நாடகமாடுவதை மக்கள் ஏற்கமாட்டார்கள்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/central-government-released-tax-share-of-rs-4466-crore-to-tamil-nadu">தமிழ்நாட்டிற்கான  ரூ.4,466 கோடி வரிப்பகிர்வு தொகையை விடுவித்தது மத்திய அரசு</a></p><p>* அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.1,09,019 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.</p><p>* பீகாருக்கு ரூ.10,845 கோடி, மத்திய பிரதேசத்திற்கு ரூ.8,010 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/el-nino-threat-southwest-monsoon-india-weather-centre-warning">எல் நினோ அச்சுறுத்தல்: இந்தியாவின் தென்மேற்கு பருவமழை மீண்டும் பாதிக்குமா?-வானிலை மையம் எச்சரிக்கை!... </a></p><p>*பசிபிக் பெருங்கடலில் நிலவும் வெப்பநிலை மாற்றத்தால் உருவான 'சூப்பர் எல் நினோ' மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது.</p><p>*இந்தியாவின் விவசாயத்திற்கும் பொருளாதாரத்திற்கும் மிக முக்கிய ஆதாரமாக விளங்குவது தென்மேற்கு பருவமழையாகும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/cjp-protest-aftermath-cji-event-postponed-at-last-minute">CJP போராட்டம் எதிரொலி: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் நிகழ்ச்சி கடைசி நிமிடத்தில் ஒத்திவைப்பு!... </a></p><p>*மும்பையில் உள்ள நாட்டின் முன்னணி உயர்கல்வி நிறுவனமான 'டாட்டா சமூக அறிவியல் கழகத்தின்' (TISS) 86வது பட்டமளிப்பு விழா, பாதுகாப்பு மற்றும் போராட்ட அச்சம் காரணமாகக் கடைசி நிமிடத்தில் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p>*நாட்டின் பல மாநிலங்களிலிருந்தும் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் விமானம் மற்றும் ரெயில்கள் மூலம் மும்பை வந்து சேர்ந்துவிட்டனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/orange-alert-issued-for-three-districts-today" rel="nofollow">3 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்</a></p><p>* திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. </p><p>* மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/august-rain-expected-above-normal-in-tamilnadu" rel="nofollow">தமிழகத்தில் ஆகஸ்டு மாதத்தில் இயல்பை விட அதிக மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்</a></p><p>* மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைப்பொழிவு இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.</p><p>* பசிபிக் பெருங்கடல் பகுதியில் மிதமான  எல்-நினோ சூழல் நிலவுகிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/only-reel-apology-cjp-chief-abhijit-deepke-slams-modi-video">'ரீலில் மட்டும்தானா மன்னிப்பு?'- பிரதமர் மோடியின் வீடியோவுக்கு CJP தலைவர் அபிஜீத் தீப்கே சரமாரி கேள்வி!... </a></p><p>*ஜந்தர் மந்தர் போராட்டத்தில் தமக்கு எதிராகவும், தமது மறைந்த தாயார் குறித்தும் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்திய மாணவர்களை மன்னிப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி இன்ஸ்டாகிராமில் செல்ஃபி வீடியோ ஒன்றை வெளியிட்டார். </p><p>*போராட்டங்களில் பங்கேற்ற சாதாரண மாணவர்கள் மற்றும் குற்றப்பின்னணி இல்லாத இளைஞர்கள் மீதான வழக்குகளை விடுவிக்க வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/russian-missile-drone-attack-on-ukraine-capital">உக்ரைன் தலைநகர் மீது டிரோன் தாக்குதல் - 3 பேர் பலி!</a></p><p>* கீவ் குடியிருப்புகள் சேதம், வணிக கிடங்குகள் தீப்பற்றி எரிந்தன </p><p>* இடிபாடுகளில் சிக்கிய பலர் படுகாயம், பலி எண்ணிக்கை உயர வாய்ப்பு</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-appears-at-thiruvallikeni-police-station-in-dmk-mla-bribery-bargain-case" rel="nofollow">த.வெ.க. எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய வழக்கு: செந்தில் பாலாஜி காவல் நிலையத்தில் ஆஜர்</a></p><p>* செந்தில் பாலாஜி போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடாமல் இருந்து வந்தார்.</p><p>* முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி விசாகன் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-issue-mk-stalin-question-to-cm-vijay-all-party-meeting">அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட முடியுமா முடியாதா? - முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி</a></p><p>* கர்நாடகம் சென்றால் காவிரியைக் கையோடு எடுத்துவந்து விடலாம் என்று தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சர் நினைத்தாரோ என்னவோ... </p><p>* தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடச் சொல்லி CWMA உத்தரவிட்டதும் "நீங்கள் இப்போதைக்கு வரவேண்டாம்" என்று கேட்டைச் சாத்திவிட்டார்கள்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-tn-decides-to-move-supreme-court-to-secure-cauvery-water-right-move">காவிரியில் நீர் பெற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர தமிழகம் முடிவு: சரியான நடவடிக்கை! - அன்புமணி</a></p><p>* காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீரை உடனடியாக திறந்து விடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக சட்ட அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்திருக்கிறார்.&nbsp;</p><p>* கர்நாடகத்தில் எந்தக் கட்சியின் ஆட்சி நடந்தாலும் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க அம்மாநில முதலமைச்சர்கள் முன்வர மாட்டார்கள் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/new-mega-international-airport-in-andhra-pradesh-opened-by-modi" rel="nofollow">இந்தியாவிலேயே மிகப்பெரிய சர்வதேச விமான நிலையம்- ஆந்திராவில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்</a></p><p>* பழங்குடியின பெண்கள் கலந்துகொண்டு தின்ஷா நடனமாடி பிரதமருக்கு உற்சாக வரவேற்பு. </p><p>* பிரதமர் வருகையை முன்னிட்டு நகரம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/jammu-kashmir-kulgam-attack-on-migrant-workers-two-killed">ஜம்மு-காஷ்மீரில் கொடூரம்: வெளிமாநிலத் தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு-இருவர் பலி... </a></p><p>*பிழைப்பு தேடி காஷ்மீருக்கு வந்த ஏழைத் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்த வன்முறைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>*இத்தாக்குதலில் பலி எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/delhi-independence-day-drone-ban-till-aug-16">சுதந்திர தின பாதுகாப்பு: டெல்லியில் ஆகஸ்ட் 16 வரை டிரோன்கள் பறக்கத் தடை-காவல்துறை உத்தரவு!... </a></p><p>*இந்த கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 16 ஆம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>*சம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு டெல்லி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/swaraj-is-my-birthright-father-of-indian-nationalism">சுயராஜ்யம் எனது பிறப்புரிமை: தேசியவாதத்தின் தந்தை லோக்மான்ய திலகரின் நினைவு தினம் இன்று!... </a></p><p>*மக்களிடையே ஒற்றுமையையும் தேசபக்தியையும் உருவாக்க, வீடுகளுக்குள் முடங்கிக்கிடந்த 'விநாயகர் சதுர்த்தி' வழிபாட்டைப் பொதுமக்களுக்கான விழாவாக மாற்றினார். </p><p>*சிறையில் இருந்த காலத்தில் அவர் எழுதிய 'கீதா ரஹஸ்யம்' என்ற நூல், பகவத் கீதையின் கடமை மற்றும் தியாகக் கருத்துக்களை விளக்கும் ஒரு தலைசிறந்த படைப்பாக இன்றளவும் போற்றப்படுகிறது.</p><p>காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சென்னை வருகை-தொண்டர்கள் உற்சாக வரவேற்பு</p><p>* மாலை 4 மணியளவில் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து உரையாடுகிறார்.</p><p>*   நீட் தேர்வால் பலியான 4 மாணவ-மாணவிகளின் பெற்றோரை சந்திப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thoppu-venkatasalam-relieved-from-dmk-post" rel="nofollow">திமுக பொறுப்பில் இருந்து தோப்பு வெங்கடாசலம் விடுவிப்பு</a></p><p>* தோப்பு வெங்கடாச்சலத்திற்கும் முன்னாள் அமைச்சர் முத்துசாமிக்கும் இடையே தொடர்ந்து மோதல்?</p><p>* ஆளுங்கட்சியான தவெகவில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-irregularities-former-md-visakan-missing" rel="nofollow">முறைகேடு விவகாரம்: டாஸ்மாக் முன்னாள் மேலாண் இயக்குனர் விசாகன் தலைமறைவு?</a></p><p>* சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனைகளுடன், செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் வழங்கியுள்ளது.</p><p>* டாஸ்மாக் முறைகேடு புகாரில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட நிலையில் விசாகனை விசாரிக்கத் திட்டம்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/tnpl-cricket-ticket-sale-starts-today">டி.என்.பி.எல். கிரிக்கெட் டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்</a></p><p>* போட்டி வருகிற 4-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை 2 கட்டமாக நடத்தப்படுகிறது. </p><p>*  கல்லூரி நுழைவுவாயிலில் அமைக்கப்பட்ட கவுண்ட்டரில் இன்று தொடங்குகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/commercial-cylinder-price-reduced-by-rs200" rel="nofollow">வணிக சிலிண்டர் விலை ரூ.200 குறைந்தது!</a></p><p>*  வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.200 குறைந்து ரூ.2,906க்கு விற்பனை.</p><p>*  வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமில்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/this-is-my-first-and-last-mistake-15-year-old-girl-apologises-for-remarks-against-pm-modi">'இதுவே எனது முதல் மற்றும் கடைசி தவறு': பிரதமர் மோடியை விமர்சித்த 15 வயது சிறுமி பகிரங்க மன்னிப்பு!...</a></p><p>*எனக்கு 15 வயதுதான் ஆகிறது. நான் செய்த தவறு மன்னிப்புக்கு உரியது அல்ல. நான் மிகவும் வெட்கப்படுகிறேன். என்னால் என்னை நிமிர்ந்து கூடப் பார்க்க முடியவில்லை.</p><p>*சிறுமி நோய்டாவில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் தனது தாயாருடன் வசித்து வந்த நிலையில், தற்போது அந்த வீடு பூட்டப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-1-8-2026">GOLD PRICE TODAY: ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை - இன்றைய நிலவரம் </a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.13,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/heavy-rainfall-in-keralam-two-death">கேரளத்தில் மீண்டும் நிலச்சரிவு - 2 பேர் உயிரிழப்பு</a></p><p>* அடூர் மலைப்பகுதியில் அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பெண் ஒருவர் பலியானார். </p><p>* கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை மற்றும் வயநாடு எல்லைப்பகுதிகிளில் நிலச்சரிவால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/perunthalaivar-kamarajar-breakfast-scheme-tender-announced">பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் - டெண்டர் அறிவிப்பு</a></p><p>* முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் பெயர் 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்' என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.</p><p>* ரவை, சம்பா ரவை தலா 1,000 மெட்ரிக் டன், சேமியா 1,100 மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது  </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/census-operations-begin-across-tamil-nadu-today">தமிழ்நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்</a></p><p>* அனைத்து வீடுகளுக்கும் நேரில் சென்று, 33 கேள்விகளைக் கொண்ட படிவத்தைப் பயன்படுத்தி தகவல்கள் திரட்டப்பட உள்ளன.</p><p>* 1948-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் சட்டப்படி, சேகரிக்கப்படும் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும். </p>]]></content:encoded></item><item><title>இடைதேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijayabaskar-mr-vijayabaskar-seek-byelection-ban-lift</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijayabaskar-mr-vijayabaskar-seek-byelection-ban-lift#comments</comments><guid isPermaLink="false">4cf1ebd3-cb70-4803-b596-b15eb7db22ab</guid><pubDate>Sat, 01 Aug 2026 13:19:11 +0000</pubDate><atom:updated>2026-08-01T13:19:11.530Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசியல்,ByElection,இடைத்தேர்தல்,Ex Minister MR Vijayabaskar,C Vijayabaskar,Election2026</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/ync1syok/C-Vijayabaskar-MR-Vijayabaskar" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ C Vijayabaskar  - MR Vijayabaskar ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/ync1syok/C-Vijayabaskar-MR-Vijayabaskar?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் விராலிமலை மற்றும் கரூர் உள்ளிட்ட 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி, அதிமுக முன்னாள் அமைச்சர்களான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D">சி.விஜயபாஸ்கர்</a> மற்றும்<a href="https://www.maalaimalar.com/topic/mr-vijayabaskar"> எம்.ஆர். விஜயபாஸ்கர் </a>ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனுத் தாக்கல் செய்துள்ளனர்.</p><h2><strong>வழக்கின் பின்னணி:</strong></h2><p>கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை எதிர்த்துத் தொடரப்பட்ட பல்வேறு தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள காரணத்தினால், தமிழகத்தில் காலியாக உள்ள திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கக் கூடாது என கடந்த ஜூலை 10 ஆம் தேதி நீதிமன்றம் தடை விதித்திருந்தது.</p><h2><strong>முன்னாள் அமைச்சர்களின் வாதம்:</strong></h2><p>தற்போது இந்தத் தடையை நீக்கக் கோரி மனுத் தாக்கல் செய்துள்ள முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது மனுவில், "இந்தத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தால், அதனால் எந்தவொரு சிக்கலான சூழ்நிலையும் எழ வாய்ப்பில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p>அதேபோல் எம்.ஆர். விஜயபாஸ்கர் தாக்கல் செய்துள்ள மனுவில், "தேர்தல் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக, மக்கள் பிரதிநிதிகள் (சட்டமன்ற உறுப்பினர்கள்) இல்லாமல் தொகுதி மக்கள் நீண்ட நாட்கள் பாதிக்கப்படக் கூடாது" என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><h2><strong>அரசியல் எதிர்பார்ப்பு:</strong></h2><p>மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால் தொகுதிப் பணிகள் தொய்வடைந்துள்ளதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளன. </p><p>நீதிமன்றம் இந்தத் தடையை நீக்கி இடைத்தேர்தலுக்கு வழிவகுக்குமா என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போதே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறையை ஆதரிப்பவர்கள் தமிழ்நாட்டின் எட்டப்பர்கள்: ராகுல் காந்தி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/constituency-redistribution-supporters-are-ettappans-of-tamil-nadu-rahul-gandhi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/constituency-redistribution-supporters-are-ettappans-of-tamil-nadu-rahul-gandhi#comments</comments><guid isPermaLink="false">7e235c21-1734-420d-a921-0ab63d1db38e</guid><pubDate>Sat, 01 Aug 2026 13:14:37 +0000</pubDate><atom:updated>2026-08-01T13:14:37.776Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Congress,காங்கிரஸ்,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/j1kwv0mc/Untitled-design-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Rahul Gandhi calls BJP plot a threat to Tamil Nadu in Delimitation Betrayal Remark]]></media:title><media:description type="html"><![CDATA[ Rahul Gandhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/j1kwv0mc/Untitled-design-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தொகுதி மறுவரையறைக்கு யார் ஆதரவு அளிக்கிறார்களோ அவர்கள் தமிழ்நாட்டிற்கு எட்டப்பர்களாக இருப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.</p><p>தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி முகாம், மாமல்லபுரத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு சொந்தமான கடற்கரை விடுதியில் கடந்த ஜூலை 23-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.</p><p>இந்த முகாமின் நிறைவு நாளான இன்று ராகுல் காந்தி பங்கேற்று, மாவட்டத் தலைவர்களிடம் கட்சியின் எதிர்கால அரசியல் திட்டங்கள், அமைப்பு வலுப்படுத்தல் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை வழங்கினார்.</p><h3><strong>தொகுதி மறுவரையறை</strong></h3><p>செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி பேசியதாவது:-</p><p>தொகுதி மறுவரையறை என்பது தமிழக மக்களிடம் இருந்து அதிகாரத்தை பறிப்பதாக உள்ளது. இது பாரதிய ஜனதா கட்சியின் சதியாக உள்ளது. </p><p>தமிழ்நாட்டு வரலாற்றில் எட்டப்பர் என்ற பாத்திரம் ஒன்று உள்ளது. எட்டப்பர் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகத்தை விளைவிக்கும் ஒருவராக குறிப்பிடப்படுகிறது.</p><p>தொகுதி மறுவரையறைக்கு யார் ஆதரவு அளித்தாலும், அவர்கள் தமிழ்நாட்டிற்கு துரோகம் விளைவிப்பவர்களாகவே இருக்கிறார்கள்.</p><p>தொகுதி மறுவரையறையை ஆதரிப்பது என்பது தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கும் துரோகம் இழைப்பதற்கு பாரதிய ஜனதா கட்சியை அனுமதிப்பதாக உள்ளது.</p><p>இந்த செயல்களில் ஈடுபடுபவர்கள் 21ஆம் நூற்றாண்டின் எட்டப்பர்களாக இருக்கிறார்கள்.</p><p>தொகுதி மறுவரையறைக்கு எதிராக குரல் கொடுக்கும் தமிழர்களும் மற்றும் தனிப்பெரும் கட்சியாக உள்ள தமிழகத்தை சேர்ந்த கட்சிகளும் தொகுதி மறுவரையறையை மக்களவையில் தோற்கடிக்க வேண்டும்.</p><p>இவ்வாறு செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>இயற்கை வென்றது: கபினியில் தண்ணீர் திறப்பு- கே.ஆர்.எஸ். அணையிலிருந்தும் தண்ணீர் திறக்க அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-nature-has-prevailed-10000-cusecs-released-from-kabini-dam-water-must-also-be-released-from-the-krishna-raja-sagara-dam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-nature-has-prevailed-10000-cusecs-released-from-kabini-dam-water-must-also-be-released-from-the-krishna-raja-sagara-dam#comments</comments><guid isPermaLink="false">e3ca4116-457a-426f-903d-b77361888d10</guid><pubDate>Sat, 01 Aug 2026 12:47:09 +0000</pubDate><atom:updated>2026-08-01T12:47:09.922Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,mekedatu dam,Kabini Dam,கபினி அணை,Cauvery Water Issue</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/sfpgmxco/Anbumani0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கபினி அணை- அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/sfpgmxco/Anbumani0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-</h2><p>கர்நாடகத்தில் காவிரியின் துணை ஆறுகளில் ஒன்றான கபினியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை நிரம்பி வழிவதையடுத்து அங்கிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீர் இன்னும் எவ்வளவு காலத்திற்கு திறக்கப்படும், தமிழகத்தின் தேவைக்கு போதுமானதாக இருக்குமா? என்பதெல்லாம் அடுத்த சில வாரங்களுக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் எவ்வளவு மழை பெய்யும் என்பதைப் பொறுத்தே அமையும். எனினும் இயற்கையின் கொடையால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது நிம்மதியளிக்கிறது.</p><h2>கபினி அணை</h2><p>கபினி அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 2281 அடியாகவும், நீர் இருப்பு 17.50 டி.எம்.சியாகவும் இருந்தது. அணை நிரம்புவதற்கு இன்னும் 3 அடியும், 2 டி.எம்.சி நீருமே தேவை என்ற நிலையில், வினாடிக்கு 11747 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பிற்பகலில் நீர்வரத்து அதிகரித்த நிலையில் நாளைக்குள் அணை நிரம்பி விடும் என்பதால் முன்னெச்சரிக்கையாகவே நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இது இயற்கையின் கொடையே தவிர கர்நாடக அரசின் விருப்பம் அல்ல.</p><h2>ஹாரங்கி அணை</h2><p>காவிரி பாசன மாவட்டங்களுக்கு குறைந்த பட்சம் சம்பா பருவத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்றால் இன்னும் குறைந்தது 40 முதல் 45 டிஎம்சி தண்ணீர் தேவை. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்தால் கபினி அணையிலிருந்து தண்ணீர் வருவதும் நிறுத்தப்பட்டு விடும். அதனால் தமிழகத்திற்கு பயன் கிடைக்காது.</p><p>இன்னொரு அணையான ஹாரங்கி நிரம்பி வழிவதால் அதிலிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. அடுத்த சில நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் என்று தெரிகிறது.</p><h2>கே.ஆர்.எஸ். அணை</h2><p>எனவே, வெள்ளம் போல் வரும் கூடுதல் நீரை சேமித்து வைக்க வசதியாக கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்தும் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும். அதை இன்னும் ஒரு வாரத்திற்கு தொடருவதன் மூலம் தமிழ்நாட்டின் காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடி செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.</p><p>இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>காவிரி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் திங்கட்கிழமை மனுத் தாக்கல்-அமைச்சர் நிர்மல் குமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-dispute-approaching-supreme-court-only-legal-solution-minister-nirmal-kumar</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-dispute-approaching-supreme-court-only-legal-solution-minister-nirmal-kumar#comments</comments><guid isPermaLink="false">801f719c-7dbd-438a-962e-b3981d666cc0</guid><pubDate>Sat, 01 Aug 2026 12:38:18 +0000</pubDate><atom:updated>2026-08-01T12:38:18.598Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Supreme Court,mekedatu dam,Cauvery Issue,அமைச்சர் நிர்மல் குமார்,minister nirmal kumar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/q4cyjvav/nirmal.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Nirmal Kumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/q4cyjvav/nirmal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு உரிய நீரைப் பெற உச்சநீதிமன்றத்தை அணுகுவதே தற்போதுள்ள ஒரே சட்டரீதியான வழிமுறை என்று சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். </p><h2><strong>கர்நாடகத்தின் பிடிவாத போக்கு:</strong></h2><p>செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், "கர்நாடகாவில் எந்த ஆட்சி அமைந்தாலும் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் வழங்கக் கூடாது என்பதில் அவை உறுதியாக செயல்பட்டு வருகின்றன. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளையும் மதிக்காமல் கர்நாடகம் தொடர்ந்து மறுத்து வருகிறது. 100 ஆண்டுகளுக்கும் மேலாக அம்மாநிலத்தின் அரசியலே தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தரக் கூடாது என்பதை மையமாக வைத்தே நகர்கிறது" எனக் குற்றம்சாட்டினார்.</p><h2><strong>மத்திய அரசுக்குக் கண்டனம்:</strong></h2><p>மத்திய ஜல் சக்தி இணை அமைச்சரின் சமீபத்திய கருத்து குறித்து விமர்சித்த அவர், "உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, கீழ்மடை மாநிலமான தமிழ்நாட்டின் ஒப்புதல் இன்றி 0.1 டி.எம்.சி தண்ணீரைக்கூடத் திருப்பிவிடவோ, புதிய அணைகளைக் கட்டவோ முடியாது. இதனைப் புரிந்துகொள்ளாமல் மத்திய அமைச்சர் கர்நாடகாவிற்கு ஆதரவாகப் பேசுவது தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்யும் துரோகம்" என்றார்.</p><h2><strong>தமிழ்நாடு அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை:</strong></h2><p>விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கத் தமிழ்நாடு அரசு உறுதியாக இருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து உரிய நீரைப் பெறுவதற்கான சட்ட நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு தீவிரமாக மேற்கொள்ளும். முதலமைச்சர் சட்ட வல்லுநர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனைகளை நடத்தி வருகிறார். விரைவில் விரிவான சட்ட உத்தி மற்றும் அரசின் அதிகாரப்பூர்வ முடிவுகள் அறிவிக்கப்படும்.</p><h2><strong>மத்திய அரசுக்கு அழுத்தம்</strong>:</h2><p>உச்சநீதிமன்றத்தை நாடுவதுடன், தீர்ப்பாயத்தை வலியுறுத்துவது மற்றும் மத்திய அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் தருவது என அனைத்து சாத்தியக்கூறுகளையும் அரசு பரிசீலித்து வருகிறது.</p><h2><strong>கர்நாடகவுக்கு ஆதரவு:</strong></h2><p>"கர்நாடக அரசியல்வாதிகள் மற்றும் கட்சிகள் தங்களின் அரசியல் லாபத்திற்காகவே தொடர்ந்து காவிரி விஷயத்தில் பிடிவாத போக்கைக் கடைப்பிடித்து வருகின்றன. கர்நாடக அரசியலுக்கு ஆதரவாகத் தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகள் செயல்பட்டு வருவது மிகவும் வருத்தமளிக்கிறது." </p><h2><strong>அரசியல் கட்சிகள் சதி:</strong></h2><p>காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு 17 டிஎம்சி தண்ணீர் கொடுத்திருக்க வேண்டும், காவிரியில் தமிழ்நாட்டிற்கு கர்நாடகா 15 நாட்களுக்கு வினாடிக்கு 2500 கன அடி வீதம் தண்ணீரை திறக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், தவெக அரசு காவிரி நீரை பெற்று விடக்கூடாது என தமிழகத்தில் உள்ள கட்சிகள் அரசியல் செய்கின்றன. எனவே, காவிரி நீரை திறந்து விடக்கோரி வரும் திங்கட்கிழமை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம்.</p> <h2><strong>தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை:</strong></h2><p>தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக வெளியாகும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப்புறம்பானவை என்றும், இந்த ஆண்டு மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று நிர்மல் குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>காவிரி நீரை உடனடியாக தமிழ்நாட்டிற்கு திறந்து விட உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. அவசர மனு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-approaches-supreme-court-seeking-immediate-directions-for-release-of-cauvery-water-to-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-approaches-supreme-court-seeking-immediate-directions-for-release-of-cauvery-water-to-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">eadbdf50-6cff-4f0f-a83a-be2d7cfc1ceb</guid><pubDate>Sat, 01 Aug 2026 12:15:49 +0000</pubDate><atom:updated>2026-08-01T12:15:49.894Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,mekedatu dam,மேகதாது அணை,mekedatu,காவிரி அணை,cauvery dam</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/nn5tszt8/CauveryDam.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காவிரி நீர் விவகாரம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/nn5tszt8/CauveryDam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக மாநில அரசு, தமிழ்நாட்டிற்கு மாதந்தோறும் வழங்க இருக்கும் தண்ணீரை வழங்க மறுத்து வருகிறது. இந்த நிலையில் காவிரி நீரை உடனடியாக தமிழ்நாட்டிற்கு திறந்து விட உச்சநீதிமன்றத்தில் திமுக அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p>இம்மனுக்கள் மூத்த வழக்கறிஞர் பி. வில்சனால் வரைவு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p>திமுக விவசாயிகள் அணி செயலாளர் A.K.S விஜயன் மூலம், சிவில் மேல்முறையீட்டு வழக்கு எண்2453/2007-ல் இடைக்கால மனுவைத் தாக்கல் செய்து, தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை உடனடியாக திறந்துவிட அவசர உத்தரவு பிறப்பிக்கவும், 16.02.2018 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்தவும், காவிரி நீர் ஒழுங்குமுறை குழு (CWRC) மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) வழங்கிய உத்தரவுகளை அமல்படுத்தவும் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது.</p><h2>இந்த மனுவில் மாண்புமிகு உச்சநீதிமன்றத்திடம் பின்வரும் நிவாரணங்கள் கோரப்பட்டுள்ளன:-</h2><p>I. 28.07.2026 அன்று காவிரி நீர் ஒழுங்குமுறை குழு (CWRC) வழங்கியதும், 30.07.2026 அன்று காவிரிநீர் மேலாண்மை ஆணையம் (CWMA) உறுதிசெய்ததுமான உத்தரவை கர்நாடக அரசு உடனடியாக முழுமையாக செயல்படுத்துமாறு உத்தரவிட வேண்டும். அதன்படி, உச்சநீதிமன்றத்தின் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து தொடர்ந்து 15 நாட்களுக்கு தினமும் 3,500 கனஅடி (கியூசெக்ஸ்) தண்ணீர் பிலிகுண்டுலுவில் திறந்துவிடவும், 29.07.2026 முதல் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையையும் ஈடு செய்யுமாறு உத்தரவிட வேண்டும்.</p><h2>கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்</h2><p>II. 26.07.2026 நிலவரப்படி, விகிதாச்சார (Distress Sharing) அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய 9.46 டி.எம்.சி. நீர்பற்றாக்குறையை ஈடு செய்யும் வகையில், 15 நாட்களுக்கு தினமும் சுமார் 7,000 கியூசெக்ஸ் தண்ணீர் பிலிகுண்டுலுவில் கிடைக்குமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.</p><p>III. கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் நீரையும், பிலிகுண்டுலுவில் கிடைக்கும் நீரின் அளவையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) தினசரி கண்காணித்து, அதன் அமலாக்க நிலையை உச்சநீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு உத்தரவிட வேண்டும்.</p><p>IV. வழக்கின் உண்மை நிலைகள் மற்றும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, நீதியை நிலைநாட்டுவதற்குத் தேவையான பிற உரிய உத்தரவுகளையும் உச்சநீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்.</p><p>கர்நாடக அரசு, காவிரி நீர் மேலாண்மை திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள சட்டப்பூர்வ அமைப்புகளின் கட்டாய உத்தரவுகளைப் பின்பற்றாமல் காவிரி நீரைதிறந்துவிட மறுத்துள்ளதால், காவிரி டெல்டாபகுதியைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை இந்த மனுசுட்டிக்காட்டுகிறது.</p><p>விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், உச்சநீதிமன்றத்தின் 16.02.2018 தீர்ப்பை முழுமையாக அமல்படுத்தவும், உடனடி தலையீடு செய்யுமாறு உச்சநீதிமன்றத்திடம் இம்மனு கோருகிறது.</p><p> மேற்கூறிய மேல்முறையீட்டில் திராவிட முன்னேற்ற கழகத்தையும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தையும் (CWMA) ஒரு தரப்பினராக இணைத்துக் கொள்ளுமாறும் திமுக கோரியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கிளாஸ்கோ காமன்வெல்த்: டிரிபிள் ஜம்ப் போட்டியில் தமிழக வீரர்கள் வெள்ளி, வெண்கலப் பதக்கம் வென்று சாதனை</title><link>https://www.maalaimalar.com/sports/glasgow-commonwealth-triple-jump-praveen-chithravel-and-selva-prabhu-won-silver-and-bronze</link><comments>https://www.maalaimalar.com/sports/glasgow-commonwealth-triple-jump-praveen-chithravel-and-selva-prabhu-won-silver-and-bronze#comments</comments><guid isPermaLink="false">a9c7332a-fa83-4d65-b903-8cc8c7caf84d</guid><pubDate>Sat, 01 Aug 2026 11:48:32 +0000</pubDate><atom:updated>2026-08-01T11:48:32.940Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காமன்வெல்த் போட்டி,Glasgow,commonwealth game,கிளாஸ்கோ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/go395o4w/TripleJump0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிரவீன் சித்ரவேல்- செல்வ பிரபு திருமாறன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/go395o4w/TripleJump0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் போட்டியில் இந்தியா சார்பில் பிரவீன் சித்ரவேல் (தமிழ்நாடு), செல்வ பிரபு திருமாறன் (தமிழ்நாடு) ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பிரவீன் சித்ரவேல் வெள்ளிப் பதக்கமும், செல்வ பிரபு வெண்கல பதக்கமும் வென்றனர்.</p><p>கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் எல்டோஸ் பால் மற்றும் அப்துல்லா அபூபக்கர் ஆகியோர் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் வென்றனர். அதன்பின் தற்போது இந்தியாவைச் சேர்ந்த பிரவீன் சித்ரவேல் மற்றும் செல்வ பிரபு திருமாறன் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் வென்றுள்ளனர்.</p><p>ஜமைக்கா வீரர் ஜோர்டன் ஸ்காட் 16.72 மீ. தாண்டி தங்கம் வென்றார். பிரவீன் சித்ரவேல் 16.58மீ தாண்டினார். செல்வ பிரபு திருமாறன் 16.52 மீட்டர் தாண்டினார்.</p><h2>குத்துச்சண்டையில் தங்கம், வெள்ளி</h2><p>குத்துச் சண்டையில் ஆண்களுக்கான 55 கிலோ எடைப்பிரிவில் ஜடுமணி சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார்.</p><p>பெண்களுக்கான போட்டியில் பிரீத்தி பவார், ஜேஸ்மின் லம்போரியா தங்கம் வென்று அசத்தினர். </p><p>பாரா தடகளத்தில் சோனம் ரானா தங்கம், சுபம் ஜெயல் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.</p>]]></content:encoded></item><item><title>பயிர்க்கடன் தள்ளுபடி என்று அறிவித்து விட்டு வட்டியுடன் செலுத்த கட்டாயப்படுத்துவதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/pmk-president-anbumani-ramadoss-how-can-farmers-be-forced-to-repay-crop-loans-with-interest-after-announcing-a-loan-waiver</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/pmk-president-anbumani-ramadoss-how-can-farmers-be-forced-to-repay-crop-loans-with-interest-after-announcing-a-loan-waiver#comments</comments><guid isPermaLink="false">d4161871-0f37-4e35-9474-b8d5e96674b7</guid><pubDate>Sat, 01 Aug 2026 11:19:44 +0000</pubDate><atom:updated>2026-08-01T11:19:44.628Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தவெக அரசு,TVK Govt</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/pa3r95af/Anbumani.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anbumani ramadoss]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/pa3r95af/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களில் உழவர்கள் வாங்கிய பயிர்க்கடன்கள் சில நிபந்தனைகளுடன் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதாக தமிழக அரசு அறிவித்திருக்கும் நிலையில், கடன் பெற்ற விவசாயிகள் அதற்கான தவணைத் தொகையை வட்டியுடன் செலுத்த வேண்டும் என்று கூட்டுறவு சங்கங்கள் அறிவிக்கை அனுப்பியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. வறட்சி பாதிப்பால் ஏற்கனவே வாடிக் கொண்டிருக்கும் விவசாயிகளை இத்தகைய அறிவிக்கைகள் மூலம் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்குவது கண்டிக்கத்தக்கது.</p><h2>வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்</h2><p>மதுரை மாவட்டம் கள்ளந்திரி பகுதியில் உள்ள பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர்க்கடன் பெற்ற  விவசாயிகள் அனைவருக்கும் இந்த அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அந்த அறிவிக்கையில், அரசால் அறிவிக்கப்பட்ட கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடியை பெறுவதற்கு தகுதி பெற்ற உழவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு, அவர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட தொகை அரசால்  விடுவிக்கப்படும் வரை, கடன் பெற்ற உழவர்கள் தவறாமல் தவணை செலுத்த வேண்டும்.</p><p>அவ்வாறு செலுத்தாவிட்டால் அவர்களின் கடன்கள் தவணை தவறிய கடன்களாக கருதப்படும். கடன் தொகை இறுதி செய்யப்பட்டு கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு விடுவிக்கும்போது அந்தத் தொகை சம்பந்தப்பட்ட விவசாயிகளிம் சேமிப்புக் கணக்கில் செலுத்தப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதே போன்று தமிழகத்தின் பல மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்களும் பயிர்க்கடன் பெற்ற உழவர்களுக்கு இதே போன்ற  அறிவிக்கையை அனுப்பியுள்ளன. இதனால் உழவர்கள் பெரும் கவலைக்குள்ளாகியுள்ளனர். தமிழ்நாடு அரசின் இந்த நிர்வாக அணுகுமுறை மிகவும் தவறானது.</p><h2>பயிர்க்கடன் தள்ளுபடி</h2><p>கடந்த காலங்களில் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து சில நாள்களில் அரசாணை பிறப்பிக்கப்படும். அந்த நாளில் உழவர்களின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு விடும். அதற்கான சான்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும். அதனால், உழவர்கள் நிம்மதி அடைவதுடன் அடுத்த பருவத்திற்கு பயிர்க்கடன் பெறுவதற்கும் தகுதி பெறுவார்கள்.</p><p>ஆனால், அதற்கு முற்றிலும் மாறாக, அரசு கடன் தொகையை செலுத்தும் வரை விவசாயிகள் கடன் தவணையை வட்டியுடன் செலுத்த வேண்டும் என்பதும், தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகை உழவர்களின் சேமிப்புக் கணக்கில்தான் செலுத்தப்படும் என்பதும் நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்றாகும்.</p><h2>நேர்மையுடன் செயல்படாத த.வெ.க. அரசு</h2><p>பயிர்க்கடன் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தொடக்கம் முதலாகவே நேர்மையுடன் செயல்படவில்லை. சிறு, குறு விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்த தவெக, ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.50 ஆயிரம் வரையிலான கடன்கள் மட்டுமே முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தது. அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடும்  எதிர்ப்பு தெரிவித்ததால் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் கடன் தொகையின் அளவை ரூ.75 ஆயிரமாக உயர்த்தியது. இப்போது  கடன் தவணையை உடனடியாக செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது.</p><p>தமிழக உழவர்கள் ஏற்கனவே வாழ முடியாத அளவுக்கு துயரத்தில் வாடிக் கொண்டிருக்கின்றனர். நடப்பாண்டில் தென் மேற்கு பருவமழை பொய்த்ததால் தமிழ்நாடு முழுவதும் கடுமையான வறட்சி நிலவுகிறது. வறட்சியால் பாதிக்கப்பட்டு, குறுவை சாகுபடி செய்ய முடியாத விவசாயிகளுக்கு அரசுத் தரப்பில் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், அவர்களை பயிர்க்கடன்களை செலுத்தும்படி கட்டாயப்படுத்துவது மனிதநேயமற்ற செயலாகும்.</p><p>தமிழக அரசு மற்றும் கூட்டுறவுத் துறையின் தவறான அணுகுமுறையும், நிர்வாகக் குளறுபடிகளும்தான் அனைத்து குழப்பங்களுக்கும் காரணம் ஆகும். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாகத் தலையிட்டு, உழவர்களிடம் பயிர்க்கடன் தவணைகளைக் கேட்டு தொல்லை கொடுக்கக் கூடாது என கூட்டுறவு சங்கங்களுக்கு ஆணையிட வேண்டும். கடன் தள்ளுபடி தொகையை உடனடியாக கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பி, பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை உழவர்களுக்கு வழங்க வேண்டும்.</p><p>இவ்வாறு அன்புமணி ராமதாஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>E20 எரிபொருள் கொள்கை: ஈரான் போரின் போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.125 ஆக உயர்ந்திருக்கும்- மத்திய அரசு விளக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/e20-fuel-policy-petrol-would-have-hit-rs125-per-litre-during-iran-war-centre</link><comments>https://www.maalaimalar.com/news/national/e20-fuel-policy-petrol-would-have-hit-rs125-per-litre-during-iran-war-centre#comments</comments><guid isPermaLink="false">6cc925f5-ee91-4aba-bb14-65ef5491282a</guid><pubDate>Sat, 01 Aug 2026 10:55:15 +0000</pubDate><atom:updated>2026-08-01T10:55:15.622Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>என்ன சத்தம் இந்த நேரம் சிறப்பு காட்சி,INDIA,ஈரான்,Iran,Strait of Hormuz,E20 fuel,E20 எரிபொருள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/sxxdvrv9/petrol.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ E20 Fuel  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/sxxdvrv9/petrol.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய அரசு அமல்படுத்தியுள்ள E20 (20% எத்தனால் கலந்த பெட்ரோல்) எரிபொருள் கொள்கைக்கு எதிராக வாகன உரிமையாளர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் மத்தியில் தொடர் சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், மத்திய பெட்ரோலிய அமைச்சகம் முக்கிய விளக்கமளித்துள்ளது.</p><p>அதில், மத்திய கிழக்கில் அமெரிக்கா-ஈரான் போர் உச்சத்தில் இருந்தபோது E20 கொள்கை அமலில் இல்லாதிருந்தால், இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.125 வரை உயர்ந்து பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும் என்று அரசு சுட்டிக்காட்டியுள்ளது.</p><h2><strong>பெட்ரோலிய அமைச்சகம் அறிக்கை:</strong></h2><p>இந்தியாவில் 2023-க்கு முன் உற்பத்தி செய்யப்பட்ட வாகன உரிமையாளர்கள் பலர், E20 பெட்ரோல் பயன்படுத்துவதால் வாகனங்களின் மைலேஜ் குறைவதாகவும், எஞ்சின் பராமரிப்புச் செலவு அதிகரிப்பதாகவும் புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும் எதிர்க்கட்சிகளும் இக்கொள்கைக்கு எதிராகப் போராடி வருகின்றன. இந்த சர்ச்சைகளுக்குப் பதிலளிக்கும் வகையில், ஒரே வாரத்தில் 4-வது முறையாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அறிக்கை வெளியீட்டுத் தரவுகளுடன் விளக்கம் அளித்துள்ளது.</p><h2><strong>ஈரான் போரும் கச்சா எண்ணெய் விலையும்:</strong></h2><p>அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியபோது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றிற்கு $135 (சுமார் ரூ.13,000) ஆக உயர்ந்தது. எத்தனால் கலப்பு இல்லாதிருந்தால் டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.125-ஐத் தொட்டிருக்கும். ஆனால், 20% எத்தனால் கலக்கப்பட்டதால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.94.77 என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டு, நுகர்வோருக்கு லிட்டருக்கு ரூ.30 வரை சேமிப்பு கிடைத்தது.</p><h2><strong>அரசின் விளக்கம்:</strong></h2><p>எத்தனால் பயன்பாட்டால் மைலேஜ் சற்று குறைவதை ஒப்புக் கொண்ட மத்திய அரசு, நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும், சர்வதேசச் சந்தை விலையேற்றத்திலிருந்து நுகர்வோரைக் காக்கவும் இக்கொள்கை மிகவும் முக்கியமானது எனக் குறிப்பிட்டுள்ளது.</p><h2><strong>இறக்குமதி குறைப்பு:</strong></h2><p>இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 85% இறக்குமதியை மட்டுமே நம்பியிருக்கும் சூழலில், உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் எத்தனாலை 20% கலப்பது நாட்டின் அந்நியச் செலாவணியையும் பெருமளவில் சேமிக்கிறது என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது. வாகன உரிமையாளர்களின் புகார்களுக்கு மத்தியில், சர்வதேசப் பொருளாதாரப் பாதுகாப்பைக் காரணம் காட்டி E20 கொள்கையை மத்திய அரசு தீவிரமாக நியாயப்படுத்தி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>வரலாறு எழுதப்படும் போதெல்லாம் அஜித் தோவலின் பெயர் எழுதப்படும்: லோக்மான்ய திலக் விருது வழங்கி அமித் ஷா பாராட்டு</title><link>https://www.maalaimalar.com/news/national/whenever-history-is-written-ajit-doval-will-be-named-amit-shah-praise-at-lokmanya-tilak-award</link><comments>https://www.maalaimalar.com/news/national/whenever-history-is-written-ajit-doval-will-be-named-amit-shah-praise-at-lokmanya-tilak-award#comments</comments><guid isPermaLink="false">a4d5b463-ae4a-45ee-a8fa-ae4ea67c8c44</guid><pubDate>Sat, 01 Aug 2026 10:53:16 +0000</pubDate><atom:updated>2026-08-01T10:53:16.056Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமித் ஷா,Ajit Doval,amith shah,அஜித் தோவல்,Lokmanya Tilak,Bal Gangadhar Tilak,பால கங்காதர திலகர்,லோக்மன்யா திலக்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/x9jn8mli/Untitled-design-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Amit Shah hails Ajit Doval’s key role in India’s national security]]></media:title><media:description type="html"><![CDATA[ Lokmanya Tilak Award]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/x9jn8mli/Untitled-design-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு, இந்த ஆண்டுக்கான லோக்மான்ய திலக் தேசிய விருதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வழங்கினார். </p><h3><strong>லோக்மான்ய திலக் தேசிய விருது</strong></h3><p>லோக்மான்ய திலக் தேசிய விருது என்பது தேச வளர்ச்சி மற்றும் முன்னேற்றத் துறையில் ஆற்றிய பணிகளைக் கௌரவிப்பதற்காக நிறுவப்பட்ட ஒரு தேசிய அளவிலான விருதாகும். </p><p>இது லோக்மான்யா என்று பிரபலமாக அறியப்பட்ட இந்திய தேசியவாதத் தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான பாலகங்காதர திலகரின் பெயரால் அழைக்கப்படுகிறது.</p><p>இந்த விருது ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி லோக்மான்ய திலகரின் நினைவு தினத்தை முன்னிட்டு வழங்கப்பட்டு வருகிறது. </p><p>இந்நிலையில் மகாராஸ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்ற விழாவில், தோவலுக்கு 2026-ஆம் ஆண்டுக்கான லோக்மான்ய திலக் விருதை அமித் ஷா வழங்கினார்.</p><h3><strong>அஜித் தோவலை பாராட்டிய அமித் ஷா</strong></h3><p>பின்னர் அமித் ஷா பேசியதாவது:-</p><p>இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை வலுப்படுத்துவதில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பெரும் பங்கு ஆற்றியுள்ளார்.</p><p>தேசியப் பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் மோடி எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும், டோவல் பின்னணியில் தனது பங்கையும், ஆலோசனையையும் வழங்கியுள்ளார்.</p><p>வரலாறு எழுதப்படும்போதெல்லாம் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டுப் பாதுகாப்பை யாராவது பகுப்பாய்வு செய்தால், அப்போது தெளிவாக அஜித் தோவலுக்கு ஒரு பொன்னான பக்கம் ஒதுக்கி வைக்கப்பட வேண்டும். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை.</p><p>இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எஃகு போன்ற உறுதியான முதுகெலும்பு கொண்ட வெளியுறவுக் கொள்கையாக மாறியுள்ளது. இதை யாராலும் மறுக்க முடியாது. நாம் சுய மரியாதையுடன் சேர்த்து, உலகில் நமது நிலையை வலுப்படுத்தியுள்ளோம்.</p><p>2014-ல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகப் பொறுப்பேற்ற பிறகு, தோவல் பல மூலோபாய யோசனைகளைக் களத்தில் செயல்படுத்த உதவியதுடன், இந்தியாவின் ஆயுதப் படைகளை நவீனமயமாக்குவதிலும், தொழில்நுட்பத்தை வலுப்படுத்துவதிலும், செயல்பாட்டுத் திறனை அதிகரிப்பதிலும், நாட்டின் பாதுகாப்புத் தயார்நிலையை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றினார்.</p><p>அஜித் தோவல் என் வீட்டிற்கு வந்திருந்தது எனக்கு நினைவிருக்கிறது. அவர் அளித்த தகவல்களின் விளைவாக, குஜராத் காவல்துறை அகமதாபாத் குண்டுவெடிப்பு சம்பவத்தை மட்டுமல்ல, நாடு முழுவதும் நடந்த 13 குண்டுவெடிப்பு சம்பவங்களையும் ஒரே நேரத்தில் தீர்த்து வைத்தது. இது ஒரு மிகப்பெரிய சாதனை.</p><p>ஒரு பத்திரிகையாளர் எவ்வளவு அச்சமற்றவராக இருக்க முடியும் என்பதை பால கங்காதர திலகரின் கேசரி பத்திரிக்கையை படித்தால் மட்டுமே உணர முடியும்.</p><p>லோக்மான்ய பாலகங்காதர திலகர் வகுத்த கலாச்சார தேசிய வாதப் பாதையில், இந்தியா இப்போது உறுதியாக முன்னேறி வருகிறது. அந்தப் பயணத்தை யாராலும் பின்னோக்கித் திருப்ப முடியாது.</p><p>அத்தகைய நபர்கள் கௌரவிக்கப்படும்போது, அவர்கள் மீதான சமூகத்தின் நன்றியுணர்வு வெளிப்படுகிறது. </p><p>இன்று அஜித் தோவலுக்கு வழங்கப்பட்டுள்ள திலக் விருது, இந்த நாட்டிற்காக வாழ்ந்து உழைப்பவர்களுக்கு, இது ஒரு பெரும் உத்வேகத்தின் இடமாக அமையும்” என்று அமித் ஷா கூரினார்.</p><h3>அஜித் தோவல்</h3><p>இதைத்தொடர்ந்து பேசிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், “லோக்மான்ய பாலகங்காதர திலகர் பெயர் சூட்டப்பட்ட இந்த விருதுக்கு நான் நன்றி தெரிவித்து, அதனைப் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்.</p><p>பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா போன்ற தலைவர்கள் நமக்குக் கிடைத்திருப்பது பெரும் பாக்கியம்” என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் பல பிரிவுகளாகச் செயல்படும் காங்கிரஸ்: &apos;உட்கட்சிப் பூசலே வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை&apos;-ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rahul-gandhi-warns-factionalism-blocking-congress-progress-in-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rahul-gandhi-warns-factionalism-blocking-congress-progress-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">173dea37-2db9-4612-bffb-1f2cf2070fbd</guid><pubDate>Sat, 01 Aug 2026 10:46:02 +0000</pubDate><atom:updated>2026-08-01T10:46:02.215Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Tamil Nadu,தமிழ்நாடு காங்கிரஸ்,Congress Party,காங்கிரஸ் அணி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/o0xbzbsn/rahul.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rahul Gandhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/o0xbzbsn/rahul.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி முகாம் மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு சொந்தமான கடற்கரை விடுதியில் கடந்த 23-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பயிற்சி முகாமின் நிறைவு நாளான இன்று நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்றார். சென்னை விமான நிலையத்தில் ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். </p><p>இந்த நிறைவு விழாவில் பங்கேற்று பேசிய ராகுல்காந்தி, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு கோஷ்டிகளாகப் பிரிந்து தனித்தனியாகச் செயல்பட்டு வருவது கட்சியின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாகக் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2><strong>உட்கட்சிப் பூசல் தான் பெரிய சவால்:</strong></h2><p>பயிற்சி கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி வலுவடையாததற்குப் பிரதானக் காரணம் உட்கட்சிப் பூசல்களும், பல்வேறு அணிகளாகக் நிர்வாகிகள் தனித்து இயங்குவதுமே ஆகும் என வேதனை தெரிவித்தார். "கட்சியின் உட்கட்சிப் பிரச்சனைகளே காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக உள்ளன" என்று அவர் தனது உரையில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><h2><strong>ஒற்றுமையின் முக்கியத்துவம் :</strong></h2><p>மாநில அளவில் தலைவர்களிடையேயும் தொண்டர்களிடையேயும் ஒருங்கிணைப்பு இல்லாத சூழல் நிலவுவது, களத்தில் கட்சியின் செயல்பாடுகளைப் பாதிப்பதாக மேலிடத்திற்குப் பல்வேறு புகார்கள் சென்ற வண்ணமாக இருந்தன. இந்தச் சூழலில், ராகுல் காந்தியின் இந்த நேரடி விமர்சனம் மற்றும் எச்சரிக்கை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் காரசாரமான விவாதத்தையும் கிளப்பியுள்ளது.</p><p>அரசியல் களத்தில் வலுவான முன்னெடுப்புகளை எடுக்க வேண்டுமானால், தலைவர்கள் தங்கள் சொந்த நலன்களைத் தாண்டி கட்சியின் ஒற்றுமையை முன்னிறுத்த வேண்டும் எனவும், அனைத்து கோஷ்டிப் பூசல்களையும் மறந்து அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவே புதிய மாவட்ட செயலாளர்கயை நியமித்துள்ளோம் என ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் போட்டி: குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனைகள் பிரீத்தி பவார்,  லம்போரியா தங்கம் வென்றனர்</title><link>https://www.maalaimalar.com/sports/glasgow-commonwealth-lovlina-borgohain-preeti-pawar-won-gold</link><comments>https://www.maalaimalar.com/sports/glasgow-commonwealth-lovlina-borgohain-preeti-pawar-won-gold#comments</comments><guid isPermaLink="false">10ffcee2-3e5f-4af6-b9dc-a4c1c336a8b8</guid><pubDate>Sat, 01 Aug 2026 10:39:01 +0000</pubDate><atom:updated>2026-08-01T10:39:01.395Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>காமன்வெல்த் போட்டி,Lovlina Borgohain,Glasgow,லவ்லினா போர்கோஹெய்ன்,commonwealth game,கிளாஸ்கோ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/imsr3w96/GoldMedal.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிரீத்தி பவார்- லம்போரியா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/imsr3w96/GoldMedal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஸ்காட்லாந்தில் நடைபெற்று வரும் கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் பளுதூக்குதலில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பதக்கங்களை குவித்தனர். பளுதூக்குதல் போட்டியில் மட்டும் இந்தியாவுக்கு 1 தங்கம், 6 வெள்ளி, 1 வெண்கலம் என 8 பதக்கங்கள் கிடைத்துள்ளன.</p><h2>குத்துச்சண்டையில் 10 பதக்கங்கள்</h2><p>இன்று குத்துச்சண்டையில் மட்டும் 10 பதக்கங்களை உறுதி செய்துள்ளனர். இதில் 6 வீராங்கனைகள் மற்றும் 4 வீரர்கள் ஆவார்கள்.</p><p>இன்று மதியம் நடைபெற்ற பெண்களுக்கான 54 கிலோ எடைப்பிரிவு குத்துச் சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை பிரீத்தி பவார், கனடாவின் ஸ்கார்லெட் டெல்காடோவை எதிர்கொண்டார். இதில் பிரீத்தி பவார் 5-0 என வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றார்.</p><h2>லம்போரியா</h2><p>இவரைத் தொடர்ந்து ஜாஸ்மின் லம்போரியா 57 கிலோ எடைப்பிரிவில் வடக்கு அயர்லாந்து வீராங்கனை மைக்கேலா வால்ஷை வீழ்த்தி தங்கம் வென்றார்.</p><p>குத்துச் சண்டை போட்டியில் சாக்ஷி சவுத்ரி (51), லவ்லினா போர்கோஹெய்ன் (75), பிரியா கங்காஸ் (60), அருந்ததி சவுத்ரி (70) ஆகிய வீராங்கனைகள் இன்னும் பதக்கம் வெல்ல இருக்கின்றனர். </p><p>அதேபோல் ஆண்கள் பிரிவில் ஜடுமணி சிங் (55), சச்சின் சிவாச் (60), அங்குஷ் பங்கல் (80), நரேந்தர் பெர்வால் (90+) ஆகியோர் பதக்கம் வெல்ல இருக்கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய் கர்நாடகாவிற்கு சென்றால் அவரை கட்டி வைத்து விடுவார்கள்- அனிதா ராதாகிருஷ்ணன் சர்ச்சை பேச்சு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anitha-radhakrishnan-again-controversy-speech</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anitha-radhakrishnan-again-controversy-speech#comments</comments><guid isPermaLink="false">fdef7b80-fd9d-4d42-b60e-cf5ed9670bb2</guid><pubDate>Sat, 01 Aug 2026 10:26:37 +0000</pubDate><atom:updated>2026-08-01T10:26:37.713Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,விஜய்,கர்நாடகா,Karnataka,vijay,அனிதா ராதாகிருஷ்ணன்,Anitha Radhakrishnan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/855fg9b6/anitharadhakrishnan.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அனிதா ராதாகிருஷ்ணன்]]></media:title><media:description type="html"><![CDATA[ அனிதா ராதாகிருஷ்ணன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/855fg9b6/anitharadhakrishnan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தற்போதுள்ள தமிழக முதலமைச்சரால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. ஆடுகிறார் பாடுகிறார். இதைத் தவிர மற்ற எந்த விஷயம் செய்வது இல்லை.</aside><p>தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் தி.மு.க. பாக முகவர்கள் கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் தி.மு.க. அமைச்சரும், திருச்செந்தூர்  தொகுதி எம்.எல்.ஏ.வுமான <a href="https://www.maalaimalar.com/topic/அனிதா-ராதாகிருஷ்ணன்">அனிதா ராதாகிருஷ்ணன்</a> கலந்து கொண்டு தி.மு.க. கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பேசினார். </p><h2><strong>சர்ச்சை பேச்சு</strong></h2><p>அவர் பேசுகையில் முதலமைச்சர் விஜயை விமர்சித்தும், ஒருமையிலும் பேசினார். அவர் பேசியதாவது:-</p><p>தற்போதுள்ள தமிழக முதலமைச்சரால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. ஆடுகிறார் பாடுகிறார். இதைத் தவிர மற்ற எந்த விஷயம் செய்வது இல்லை. தற்போது காவிரி பிரச்சனையில் என்ன பாடு படுது. நான் ஹெலிகாப்டரில் சென்று நேரில் பார்ப்பேன் என்கிறார். முதலமைச்சர் விஜய் கர்நாடகாவிற்கு சென்றால் அவரை அங்கு பிடித்து கட்டி வைத்து விடுவார்கள் என்பதால் ஹெலிகாப்டரில் செல்வேன் என்கிறார். தேவையில்லாமல் அந்த மாநிலத்திற்கு சென்று ஒப்பந்தம் போட்டு நமது மாநிலம் கெட்டுப் போய் விடக்கூடாது. காமராஜர் பெயரை சொல்லி கதை விட்டு ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். இதை நாம் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p><p>ஏற்கனவே முதலமைச்சர் விஜய் குறித்து அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் மீண்டும் முதலமைச்சர் விஜயை விமர்சித்தும், ஒருமையிலும் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&apos;இயற்கை யாருக்கும் சொந்தமானது அல்ல..&apos;: கடையடைப்பு போராட்டத்தை திரும்ப பெற கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் வலியுறுத்தல்!</title><link>https://www.maalaimalar.com/news/topnews/nature-belongs-to-no-one-karnataka-cm-dk-shivakumar</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/nature-belongs-to-no-one-karnataka-cm-dk-shivakumar#comments</comments><guid isPermaLink="false">8c8f894e-a1b8-4095-b329-6a08d81bf644</guid><pubDate>Sat, 01 Aug 2026 10:18:42 +0000</pubDate><atom:updated>2026-08-01T10:18:42.777Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,டி.கே.சிவக்குமார்,காவிரி நீர்,Tamilnadu Government,Cauvery river,CM D.K. Shivakumar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/575ztqyb/DK.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM D.K. Shivakumar ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/575ztqyb/DK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p>காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிமிடம் அதிகளவு நீரைத் தேக்கி வைத்தால் வெள்ள அபாயம் ஏற்படும் என எச்சரித்துள்ள கர்நாடக முதல்வர் <a href="https://www.maalaimalar.com/news/national/dk-shivakumar-says-tn-cm-vijay-should-not-visit-karnataka-in-current-situation">டி.கே. சிவக்குமார்,</a> "இயற்கை யாருக்கும் சொந்தமானது அல்ல" எனக் கூறி, தமிழ்நாட்டிற்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ள கடையடைப்பு போராட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.</p><h2><strong>அணைகளின் தற்போதைய நிலை</strong>:</h2><p>காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் தொடர் கனமழை பெய்து வருவதால், கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் (KRS), கபினி உள்ளிட்ட முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது. அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வரும் நிலையில், பாதுகாப்பு கருதி உபரி நீர் ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.</p><h2><strong>இயற்கையின் விதி:</strong></h2><p>"இயற்கை என்பது குறிப்பிட்ட ஒரு மாநிலத்திற்கோ அல்லது நபருக்கோ சொந்தமானது அல்ல. மழை பொழியும்போது அணைகளில் அளவிற்கு அதிகமாக நீரைத் தேக்கி வைத்தால் அணை உடைந்தோ அல்லது கரைபுரண்டு ஓடியோ வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு நாமே அடித்துச் செல்லப்படும் அபாயம் உள்ளது" எனவே தண்ணீரை நாம் திறந்து விட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.</p><h2><strong>கடையடைப்பு அறிவிப்புக்கு எதிர்ப்பு:</strong></h2><p>காவிரி நீர் திறப்பு மற்றும் அது தொடர்பான சர்ச்சைகளை முன்னிட்டு தமிழ்நாட்டிற்கு எதிராகவும், காவிரி விவகாரத்தைக் கண்டித்தும் அறிவிக்கப்பட்டுள்ள கடையடைப்பு மற்றும் போராட்ட அறிவிப்புகளை அமைதியை விரும்பும் அமைப்புகளும் கன்னட அமைப்புகளும் திரும்பப் பெற வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p><p>காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் (CWRC) வழிகாட்டுதல்கள் மற்றும் அணைகளின் நீர்வரத்து சூழலைக் கருத்தில் கொண்டு, இயல்பான நீர் திறப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இரு மாநில எல்லையோரப் பகுதிகளில் தேவையற்ற பதற்றத்தைத் தவிர்க்கவும், வர்த்தகம் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்கவும் அனைத்துத் தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அம்மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சாதி, மதமற்றவர் என உடனடியாக சான்றிதழ் வழங்க சட்டம் நிறைவேற்ற உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் நடிகர் பார்த்திபன் வழக்கு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/parthiban-seeks-legal-mandate-for-caste-religionless-certification</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/parthiban-seeks-legal-mandate-for-caste-religionless-certification#comments</comments><guid isPermaLink="false">72d31710-2cee-4b92-9d10-5e112ddf55c0</guid><pubDate>Sat, 01 Aug 2026 10:14:57 +0000</pubDate><atom:updated>2026-08-01T10:14:57.342Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>பார்த்திபன்,Parthiban,Chennai High court,சென்னை உயர்நீதிமன்றம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/ous7h7r1/Parthiban.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை உயர்நீதிமன்றம்-பார்த்திபன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/ous7h7r1/Parthiban.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் சாதி, மதமற்றவர் என சான்றிதழ் பெற விரும்புவோருக்கு உடனடியாக சான்று வழங்கும் வகையில் சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என பொதுநல வழக்கில் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>சாதி, மதமற்றவர் என சான்றிதழ் பெற்றுள்ளார் பார்த்திபன்</h2><p>சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் நடிகர் பார்த்திபன் சாதி, மதமற்றவர் சான்றிதழ் பெற்றார். அந்த சான்றிதழை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜராகி காண்பித்தார். அப்போது நீங்கள் மட்டும் பயன் அடைந்தார் போதாது, இதுபோன்று சான்றிதழ் பெற விரும்புவோர் பயனடைய வேண்டும் என்று கூறியிருந்தார்.</p><p>இந்த நிலையில்தான் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் சாதி, மதமற்றவர் என சான்றிதழ் பெற விரும்புவோருக்கு உடனடியாக சான்று வழங்கும் வகையில் சட்டம் இயற்ற அல்லது அரசாணை வெளியிட உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>2025-ம் ஆண்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆளுநருக்கும் அப்போதைய அரசுக்கும் சுமூக உறவு இல்லாததால் சட்டம் இயற்றப்படவில்லை. தற்போது அதுபோன்ற நிலை இல்லை. இதனால் சட்டம் இயற்ற உத்தரவிட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.</p><p>இந்த மனு ஆகஸ்ட் 3-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>குடியுரிமை சரிபார்ப்பு இல்லாமல் வெளிநாட்டு குடிமக்களை நாடு கடத்த முடியாது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/national/no-citizenship-verification-no-deportation-centre-tells-supreme-court</link><comments>https://www.maalaimalar.com/news/national/no-citizenship-verification-no-deportation-centre-tells-supreme-court#comments</comments><guid isPermaLink="false">4ac2c94d-7073-4f1d-905f-c44c938f7aaa</guid><pubDate>Sat, 01 Aug 2026 09:59:31 +0000</pubDate><atom:updated>2026-08-01T09:59:31.167Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>citizenship,அசாம்,Assam,CAA,foreign citizens,வெளிநாட்டவர் குடியுரிமை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/1pna4vyt/Untitled-design-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Deportation Rules: Centre tells Supreme Court foreigners can’t be deported without confirmed citizenship and home country acceptance]]></media:title><media:description type="html"><![CDATA[ Indian citizenship]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/1pna4vyt/Untitled-design-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h3><strong>வெளிநாட்டவர் குடியுரிமை</strong></h3><p>ஒரு வெளிநாட்டவரின் குடியுரிமை சரிபார்க்கப்படாத நிலையில், அவரது சொந்த நாடு அவரது குடியுரிமையை உறுதிசெய்து அவரை ஏற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டாலன்றி, அவரை நாடு கடத்த முடியாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. </p><p>நாடு கடத்தப்படுவதற்கு உடனடி வாய்ப்பு இல்லாதபோதிலும், அசாமில் வெளிநாட்டினர் என அறிவிக்கப்பட்டவர்கள் காலவரையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மத்திய உள்துறை அமைச்சகம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.</p><h3><strong>மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்</strong></h3><p>இதுகுறித்து மத்திய அரசு கூறுகையில், “தேசியம் சரிபார்க்கப்படாத ஒரு வெளிநாட்டவரை, அவரது தேசியம் உறுதிசெய்யப்பட்டாலோ, செல்லுபடியாகும் பயண ஆவணம் வைத்திருந்தாலோ, அல்லது சம்பந்தப்பட்ட தாய்நாட்டின் ஏற்பு கிடைத்தாலோ மட்டுமே அவரது தாய் நாட்டிற்கு நாடு கடத்த முடியும். </p><p>தேசிய சரிபார்ப்பு இல்லாமல் நாடு கடத்தும் நடைமுறையைத் தொடங்க முடியாது. ஒரு வெளிநாட்டவர், செல்லுபடியாகும் பயண ஆவணம் அல்லது கடவுச்சீட்டை வைத்திருந்தாலோ மற்றும் வேறு எந்தக் குற்ற வழக்கும் நிலுவையில் இல்லாவிட்டாலோ,</p><p>தண்டனைக் காலம் அல்லது நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்த பிறகு, சம்பந்தப்பட்ட மாநிலம், யூனியன் பிரதேசம் அல்லது வெளிநாட்டினர் மண்டலப் பதிவு அலுவலகத்தால் அவரை நாடு கடத்த முடியும்.</p><p>ஒருவரை நாடு கடத்துவதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட நாட்டின் தூதரகம் அல்லது உயர் ஆணையத்திடம் இருந்து குடியுரிமை சரிபார்ப்பு செயல்முறையின் மூலம் தேவையான பயண ஆவணத்தைப் பெறுவது அவசியம்,” என்றும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.</p>]]></content:encoded></item><item><title>எரிச்சல் மற்றும் விரக்தி மோடில் அலறும் திமுக- தவெக சாடல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-it-wing-indictment-dmk</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-it-wing-indictment-dmk#comments</comments><guid isPermaLink="false">2e8a4f2a-36f8-48ee-8362-49d7ed6b3c96</guid><pubDate>Sat, 01 Aug 2026 09:55:16 +0000</pubDate><atom:updated>2026-08-01T09:55:16.371Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,தவெக,mekedatu dam,மேகதாது அணை,tvk,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/k4ns9dv2/TVK.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தவெக]]></media:title><media:description type="html"><![CDATA[ தவெக]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/k4ns9dv2/TVK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>ஆட்சியில் இருக்கும்போது சத்தம் போடுவதுபோல சவுண்ட் கொடுத்துவிட்டு, மியூட் மோடுக்குச் சென்று, மியாவ் என்றுகூடச் சத்தம் எழுப்பாத காரியப் பூனைதான் திமுக.</aside><p><a href="https://www.maalaimalar.com/topic/தவெக">தமிழக வெற்றிக்கழக</a> தகவல் தொழில்நுட்ப அணியின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><h2><strong>மக்களாட்சி</strong></h2><p>விவசாயிகள் நலன்களுக்காகவும் கர்நாடக வாழ் தமிழ்ச் சொந்தங்களுக்காகவும் யோசித்துச் செயல்படுவதுதான் மக்கள் விரும்பும் முதல்வர், நம் வெற்றித் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மனசாட்சி உள்ள மக்களாட்சி.</p><p>திமுக போல சுயநலம் கொண்டு தனி ஆவர்த்தனம் செய்யத் துடிப்பவர் இல்லை, எங்கள் வெற்றித் தலைவர்.</p><p> தொடர்ந்து பல ஆண்டுகளாக ஒன்றிய அரசிடம் பேரம் பேசி, பெற வேண்டிய இலாகாக்களைப் பெற்ற போதெல்லாம் காவிரி விவகாரத்திற்காக ஒரு மந்திரி பதவியையாவது, ஒருநாளாவது உதறி இருக்குமா இந்தத் திமுக?</p><h2><strong>மக்கள் ஏற்கமாட்டார்கள்</strong></h2><p>அத்தனை ஆண்டுகளில் ஒருமுறையாவது காவிரிப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண முயன்றிருக்குமா இந்தத் திமுக? அப்போதெல்லாம் பதவியில் ஒட்டிக்கொண்டு சுகம் கண்ட சுயநல இயக்கம்தான் இந்தத் திமுக.</p><p> ஆட்சியில் இருக்கும்போது சத்தம் போடுவதுபோல சவுண்ட் கொடுத்துவிட்டு, மியூட் மோடுக்குச் சென்று, மியாவ் என்றுகூடச் சத்தம் எழுப்பாத காரியப் பூனைதான் திமுக. ஆனால், ஆட்சி பறிபோன பிறகு பாருங்கள் மண், மொழி, மானம் என்று உரிமை முழக்கத்தை எழுப்பி எம்பி எம்பிக் குதிக்கும்.</p><p>எப்போதும் மக்களைத் தூண்டிவிட்டுக் குளிர்காயும் திமுக, இப்போது எரிச்சல் மற்றும் விரக்தி மோடில் அலறிக்கொண்டு இருக்கிறது. கடந்த மே மாதத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட கட்சியாகத் தவிக்கும் திமுக, காவிரி விவகாரத்தில் கபட நாடகமாடுவதை மக்கள் ஏற்கமாட்டார்கள்.</p><p> எனவே, காவிரிப் பிரச்சனையில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-issue-mk-stalin-question-to-cm-vijay-all-party-meeting">ஸ்டாலின்</a> அவர்களின், திமுக ஆட்சி போய்விட்டதே,  தவெக ஆட்சி வந்து விட்டதே என்று வன்மமாகப் பேசாமல் மக்கள் நலன் சார்ந்து உண்மையாகப் பேச வேண்டும். அப்படி அவரால் பேச முடியுமா முடியாதா? என்றால் அவர் உள்மனம் முடியாது என்றுதான் உண்மையான வன்மம் பேசும். இது அவர் மட்டுமன்று, உலகமே அறிந்த உண்மை என்று கூறப்பட்டுள்ளது. </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">விவசாயிகள் நலன்களுக்காகவும்<br>கர்நாடக வாழ் தமிழ்ச் சொந்தங்களுக்காகவும் யோசித்துச் செயல்படுவதுதான் மக்கள் விரும்பும் முதல்வர், நம் வெற்றித் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மனசாட்சி உள்ள மக்களாட்சி.<br><br>திமுக போல சுயநலம் கொண்டு தனி ஆவர்த்தனம் செய்யத் துடிப்பவர் இல்லை,…</p>&mdash; TVK IT Wing Official (@TVKHQITWingOffl) <a href="https://x.com/TVKHQITWingOffl/status/2083479568040751234?ref_src=twsrc%5Etfw">August 1, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>சிக்கன் பிரியாணி சாப்பிடுவதால் குழந்தைகள் கெட்டுப்போய் விடுவார்களா?- அமைச்சர் ராஜ்மோகன் கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajmohan-question-will-children-be-spoiled-by-eating-chicken-biryani</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajmohan-question-will-children-be-spoiled-by-eating-chicken-biryani#comments</comments><guid isPermaLink="false">0379050c-adf1-4ee3-8590-2faba072b8c5</guid><pubDate>Sat, 01 Aug 2026 09:42:52 +0000</pubDate><atom:updated>2026-08-01T09:42:52.826Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Biryani,பிரியாணி,Chicken Biryani,சிக்கன் பிரியாணி,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/m1f84hwx/rajmohan.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் ராஜ்மோகன்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ராஜ்மோகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/m1f84hwx/rajmohan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>கடந்த ஆட்சி காலங்களில் ஆட்சியாளர்கள் சார்ந்த, அரசியல் சார்ந்த புத்தகங்களே நூலகங்களுக்கு வாங்கப்பட்டுள்ளன. இனி அவ்வாறு இல்லாமல் அரசியல் சாராத அனைத்து புத்தகங்களும் வாங்கப்படும்.</aside><p>ஈரோட்டில் பள்ளி கல்வித்துறை <a href="https://www.maalaimalar.com/topic/அமைச்சர்-ராஜ்மோகன்">அமைச்சர் ராஜ்மோகன் </a>நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>ஈரோட்டில் பள்ளிகளில் ஆய்வு செய்தேன். சில பள்ளிகளில் மைதானம், கழிப்பிடம், காற்றோட்டம், விசாலமான வகுப்பறை கூட இல்லாமல் கடந்த ஆட்சியாளர்கள் எப்படி அனுமதி கொடுத்தார்கள் என தெரியவில்லை . இவற்றை ஆய்வு செய்து சீரமைக்க முதலமைச்சர் கூறியுள்ளார் .</p><h2><strong>விரைவில் அறிவிப்பு</strong></h2><p>நான் அறிந்தவரை 50 சதவீத பள்ளிகளில் பி.டி. ஆசிரியர்கள் இல்லை. 250 குழந்தைகள் ஒரு பி.டி.ஆசிரியர் தேவை என்ற நிலையில் ஆயிரம் குழந்தைகள் உள்ள பள்ளிகளில் ஒரு பி.டி. ஆசிரியர் கூட இல்லாததை பார்த்தேன். நூலகர்களும் இல்லை. இவ்விரு பணியிடங்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு வெளிவரும்.</p><p>கடந்த ஆட்சி காலங்களில் ஆட்சியாளர்கள் சார்ந்த, அரசியல் சார்ந்த புத்தகங்களே நூலகங்களுக்கு வாங்கப்பட்டுள்ளன. இனி அவ்வாறு இல்லாமல் அரசியல் சாராத அனைத்து புத்தகங்களும் வாங்கப்படும். அரசு பள்ளிகளில் வாரத்தில் ஒரு நாள் சிக்கன் பிரியாணி குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என முதலமைச்சரிடம் தெரிவித்து அதற்கான ஆய்வு நடந்து வருகிறது.</p><p>அதற்குள் முன்னாள் எம்.பி., .டி .கே .எஸ் .இளங்கோவன், பள்ளிகளில் சிக்கன் பிரியாணி வழங்கினால் அங்குள்ள சைவம் சாப்பிடும் குழந்தைகள் என்ன ஆவார்கள் என கேள்வி எழுப்புகிறார். சிக்கன் பிரியாணி சாப்பிட்டு குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்படும் எனக் கூறும் முதல் நபராக அவரை பார்க்கிறேன். பள்ளிகளில் படிக்கும் 90 சதவீத குழந்தைகள் சிக்கன் சாப்பிடுகின்றனர்.</p><p>சிக்கன் பிரியாணி சாப்பிட்டு ஒரு குழந்தை கெட்டுப் போய் விடுவார்களா என்ன?. அதை உணவாக பார்க்காமல், ஒரு உயிர் பொருளாக, புரோட்டின் உணவாக பார்க்கிறேன். அதில் அரசியலை திணிக்காதீர்கள். விரைவில் முதலமைச்சர் நல்ல முடிவு எடுப்பார் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>எல் நினோ அச்சுறுத்தல்: இந்தியாவின் தென்மேற்கு பருவமழை மீண்டும் பாதிக்குமா?-வானிலை மையம் எச்சரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/national/el-nino-threat-southwest-monsoon-india-weather-centre-warning</link><comments>https://www.maalaimalar.com/news/national/el-nino-threat-southwest-monsoon-india-weather-centre-warning#comments</comments><guid isPermaLink="false">2cb9044e-2423-4731-aabc-ff3e8f2d4c70</guid><pubDate>Sat, 01 Aug 2026 09:23:37 +0000</pubDate><atom:updated>2026-08-01T09:23:37.863Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Southwest Monsoon,தென்மேற்கு பருவமழை,Weather Department,எல் நினோ,இந்திய வானிலை மையம்,El Nino</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/a0v8zwi8/monsoon.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ELNINO-MONSOON]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/a0v8zwi8/monsoon.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு மிக மோசமான மழைப் பற்றாக்குறையுடன் தொடங்கிய நடப்பு தென்மேற்கு பருவமழை, ஜூலை மாதத்தில் ஓரளவு மீண்டெழுந்த நிலையில், தற்போது வலுவடைந்து வரும் 'எல் நினோ' காரணியால் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மீண்டும் மழை பொழிவு குறையக்கூடும் என்று உலக வானிலை அமைப்பு (WMO) மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளன.</p><p>இந்தியாவின் விவசாயத்திற்கும் பொருளாதாரத்திற்கும் மிக முக்கிய ஆதாரமாக விளங்குவது தென்மேற்கு பருவமழையாகும். இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடக்கத்தில் போதிய மழை பெய்யாமல் நாட்டின் பல பகுதிகளில் வறட்சி நிலை ஏற்பட்டது. இருப்பினும், கடந்த மாதத்தில் பெய்த பரவலான கனமழை இந்த பற்றாக்குறையை ஓரளவிற்குச் சரிசெய்தது. </p><p>இந்நிலையில், பசிபிக் பெருங்கடலில் நிலவும் வெப்பநிலை மாற்றத்தால் உருவான 'சூப்பர் எல் நினோ' மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக புதிய சர்வதேச காலநிலை எச்சரிக்கை வெளியாகியுள்ளது.</p><h2><strong>குறைவான மழைப்பொழிவு கணிப்பு:</strong></h2><p>இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஆகஸ்ட் மாதத்தில் வழக்கத்தை விடக் குறைவான மழையே பதிவாக வாய்ப்புள்ளது.</p><h2><strong>உலக வானிலை அமைப்பின் எச்சரிக்கை:</strong></h2><p>ஐக்கிய நாடுகளின் உலக வானிலை அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் 'எல் நினோ' காரணி மிகவும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2><strong>விவசாயிகள் கவலை:</strong></h2><p>இந்தியாவின் இரண்டாம் கட்ட பருவமழை பலவீனமடைந்தால், நாட்டின் முக்கிய விளைபொருட்களான நெல், கரும்பு மற்றும் பருப்பு வகைகளின் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்படலாம் என்று அஞ்சப்படுகிறது.</p><h2><strong>அணை நீர்மட்டம்:</strong></h2><p>ஜூலை மாத மழையால் அணைகளின் நீர்மட்டம் ஓரளவிற்கு உயர்ந்திருந்தாலும், ஆகஸ்ட் மாதத்தில் மழை குறைந்தால் குடிநீர் மற்றும் பாசன நீர் தேவையில் நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது.</p><p>பருவமழையின் முதல் பாதி ஏற்ற இறக்கங்களுடன் நிறைவடைந்துள்ள நிலையில், 'எல் நினோ'வின் தாக்கத்தால் இரண்டாவது பாதி வறட்சியை நோக்கிச் செல்லுமா என்ற அச்சமும், கேள்வியும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் மேலோங்கியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டிற்கான  ரூ.4,466 கோடி வரிப்பகிர்வு தொகையை விடுவித்தது மத்திய அரசு
</title><link>https://www.maalaimalar.com/news/national/central-government-released-tax-share-of-rs-4466-crore-to-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/news/national/central-government-released-tax-share-of-rs-4466-crore-to-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">afd310ea-658e-4b7f-b086-a88dbf01f8e8</guid><pubDate>Sat, 01 Aug 2026 09:04:20 +0000</pubDate><atom:updated>2026-08-01T09:04:20.867Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,TN,central government,தமிழ்நாடு,Tax share,வரிப்பகிர்வு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/lg58ajr5/nirmalasitharaman.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nirmala Sitharaman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/lg58ajr5/nirmalasitharaman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்நாட்டிற்கான  ரூ.4,466 கோடி வரிப்பகிர்வு தொகையை மத்திய அரசு விடுவித்தது.</strong></em></p><p>மூலதன செலவினங்களை விரைவுபடுத்தவும், மேம்பாடு, நலத்திட்டங்கள் தொடர்பான செலவினங்களுக்கு நிதியளிக்கவும் மாநிலங்களுக்கு வரி பகிர்வை <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">மத்திய அரசு</a> விடுவித்துள்ளது.</p><p>அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.1,09,019 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.</p> <h2>மத்திய அரசு</h2><p>28 மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு தொகையை மத்திய அரசு விடுவித்துள்ள நிலையில் அந்த பட்டியலில் தமிழ்நாட்டின் பெயரும் உள்ளது.</p><h2>தமிழ்நாடு</h2><p>தமிழ்நாட்டிற்கு ரூ.4,466 கோடி வரிப்பகிர்வு தொகையை விடுவித்துள்ளது. அதிகபட்சமாக உத்தரபிரதேசத்திற்கு ரூ.19,208 கோடி, பீகாருக்கு ரூ.10,845 கோடி, மத்திய பிரதேசத்திற்கு ரூ.8,010 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>CJP போராட்டம் எதிரொலி: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் நிகழ்ச்சி கடைசி நிமிடத்தில் ஒத்திவைப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/cjp-protest-aftermath-cji-event-postponed-at-last-minute</link><comments>https://www.maalaimalar.com/news/national/cjp-protest-aftermath-cji-event-postponed-at-last-minute#comments</comments><guid isPermaLink="false">ddb4aad4-15e6-4dad-b1cc-584f084af569</guid><pubDate>Sat, 01 Aug 2026 09:01:22 +0000</pubDate><atom:updated>2026-08-01T09:01:22.089Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Surya Kant,CJP,TISS UniverSity,CJP போராட்டம்,தலைமை நீதிபதி சூர்ய காந்த்&apos;</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/oob1merl/tata.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TISS UNIVERSITY-SURYA KANT]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/oob1merl/tata.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மும்பையில் உள்ள நாட்டின் முன்னணி உயர்கல்வி நிறுவனமான 'டாட்டா சமூக அறிவியல் கழகத்தின்' (TISS) 86வது பட்டமளிப்பு விழா, பாதுகாப்பு மற்றும் போராட்ட அச்சம் காரணமாகக் கடைசி நிமிடத்தில் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p>கல்வி நிறுவனத்தின் 86வது பட்டமளிப்பு விழா நாளை நடைபெறுவதாக இருந்தது. இதில் முதன்மை விருந்தினராக இந்திய தலைமை நீதிபதி 'சூர்ய காந்த்' கலந்துகொண்டு உரையாற்றுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு மாணவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிய TISS நிர்வாகம், "எதிர்பாராத சூழ்நிலைகள் காரணமாகப் பட்டமளிப்பு விழா ஒத்திவைக்கப்படுகிறது" என அறிவித்தது.</p><h2><strong>போராட்ட பயம்:</strong></h2><p> நீட் வினாத்தாள் கசிவு மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மைக்கு எதிராகத் தீவிரமாகப் போராடி வரும் 'காக்ரோச் ஜனதா கட்சி'  அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள், தலைமை நீதிபதி சூர்யா காந்த் வருகையின் போது வளாகத்தில் போராட்டம் நடத்தக்கூடும் என்ற உளவுத்துறை மற்றும் காவல்துறை அச்சமே இந்த ஒத்திவைப்புக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.</p><p>பட்டமளிப்பு விழாவுக்கு இரண்டு நாட்களே இருந்த நிலையில், நாட்டின் பல மாநிலங்களிலிருந்தும் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் விமானம் மற்றும் ரெயில்கள் மூலம் மும்பை வந்து சேர்ந்துவிட்டனர். கடைசி நிமிடத்தில் விழா ரத்து செய்யப்பட்டதால் அவர்களது பயணச் செலவு மற்றும் விடுதிச் செலவுகள் வீணாகிப் பெரும் ஏமாற்றத்தைச் சந்தித்துள்ளனர்.</p><h2><strong>நிவாரணம் அளிப்பதாக உறுதி:</strong></h2><p>திடீர் ஒத்திவைப்பால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புகள் மற்றும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, தகுந்த கோரிக்கைகளுக்கு நிதி உதவி/நிவாரணம் வழங்குவது குறித்துப் பரிசீலிப்பதாக TISS நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><h2><strong>மாணவர் அமைப்புகள் கண்டனம்:</strong></h2><p>மாணவர் அமைப்புகள் TISS நிர்வாகத்தின் இந்த முடிவைக் கடுமையாக விமர்சித்துள்ளன. முன்னறிவிப்பின்றி நள்ளிரவில் அனுப்பப்பட்ட இந்த மின்னஞ்சல் மாணவர்களை அவமதிக்கும் செயல் என்றும், நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளன. மாணவர் போராட்டங்களுக்கும் அமைதியற்ற சூழலுக்கும் பயந்து தலைமை நீதிபதி பங்கேற்கவிருந்த உயர்கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவே ஒத்திவைக்கப்பட்டிருப்பது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&apos;சார்பட்டா 2&apos; படப்பிடிப்பு ஆகஸ்டில் தொடக்கம்: நடிகை துஷாரா விஜயன் தகவல்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/sarpatta-2-to-start-shoot-in-august-dushara-vijayan-shares-update</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/sarpatta-2-to-start-shoot-in-august-dushara-vijayan-shares-update#comments</comments><guid isPermaLink="false">84b3e228-6f29-4590-b79b-42b6e5562920</guid><pubDate>Sat, 01 Aug 2026 08:47:48 +0000</pubDate><atom:updated>2026-08-01T08:47:48.699Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பா ரஞ்சித்,Dushara Vijayan,துஷாரா விஜயன்,ஆர்யா,Arya,PARanjith,Sarpatta2,சார்பட்டா2,SarpattaParambarai</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/xsczwksg/Sarpatta2" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sarpatta2 ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/xsczwksg/Sarpatta2?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் உருவான '<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%88">சார்பட்டா பரம்பரை</a>' படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு இந்த ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கவுள்ளது.</p><p>இந்த நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகை துஷாரா விஜயன், படத்தின் ரிலீஸ் திட்டம் குறித்த மிக முக்கியமான மற்றும் சுவாரசியமான தகவல் ஒன்றை அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளார்.</p><h2><strong>தியேட்டர் ரிலீஸ் உறுதி:</strong></h2><p>நேர்காணலில் பேசிய துஷாரா விஜயன், "சார்பட்டா பரம்பரை முதல் பாகம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. ஆனால், 'சார்பட்டா 2' திரைப்படம் கண்டிப்பாக தியேட்டர்களில் பிரம்மாண்டமாக வெளியாகும்" என்பதைத் திட்டவட்டமாக உறுதிப்படுத்தியுள்ளார். </p><p>இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும், பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.</p><h2><strong>முந்தைய பாகத்தின் ஏக்கம்:</strong></h2><p>கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக 'சார்பட்டா பரம்பரை' முதல் பாகம் திரையரங்குகளில் வெளியாகாமல், நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. </p><p>படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றாலும், வடசென்னையின் பாக்ஸிங் உலகத்தை தியேட்டரில் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் ரசிகர்களிடம் நீண்ட நாட்களாக இருந்தது. தற்போது இரண்டாம் பாகம் தியேட்டரில் வெளியாகும் என்ற அறிவிப்பு அந்த ஏக்கத்தைப் பூர்த்தி செய்யும் விதமாக அமைந்துள்ளது. </p><p>மேலும், இந்த இரண்டாம் பாகம் முதல் பாகத்தை விட மிகவும் பிரம்மாண்டமாகவும், சிறப்பாகவும் இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.</p><h2><strong>மீண்டும் '</strong>மாரியம்மா<strong>' அராஜகம்:</strong></h2><p>முதல் பாகத்தில் 'மாரியம்மா' என்ற துணிச்சலான பெண்ணாக நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்த துஷாரா, இந்த பாகத்திலும் தனது கதாபாத்திரம் இன்னும் அழுத்தமாகவும், தீவிரமாகவும் இருக்கும் என்பதை உறுதிபடுத்தியுள்ளர். </p><p>ஆர்யாவுடனான அவரது திரைக்கூட்டணி இந்த முறையும் ரசிகர்களைக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2><strong>சார்பட்டா - முதல் பாகம்:</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D">பா ரஞ்சித்</a> இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் 2021-ல் வெளியான 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம், 1970-களின் வடசென்னை குத்துச்சண்டை கலாச்சாரத்தையும், சார்பட்டா - இடியாப்ப பரம்பரைகளுக்கு இடையிலான கௌரவ மோதலையும் மிக எதார்த்தமாகப் பதிவு செய்தது. </p><p>கபிலன் என்ற எளிய இளைஞன் தடைகளைத் தாண்டி எப்படி சாம்பியனாக உயர்கிறான் என்ற விறுவிறுப்பான கதைக்களம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. நடிகர்களின் மிரட்டலான உடல்மொழி, அழுத்தமான வசனங்கள் மற்றும் சந்தோஷ் நாராயணனின் அதிரடி இசையால் இத்திரைப்படம் ஒட்டுமொத்த இந்திய சினிமா உலகிலும் பேசப்பட்டு, மாபெரும் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது.</p>]]></content:encoded></item><item><title>3 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/orange-alert-issued-for-three-districts-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/orange-alert-issued-for-three-districts-today#comments</comments><guid isPermaLink="false">cace66cc-5456-43a1-a4ef-5abbb9bc1574</guid><pubDate>Sat, 01 Aug 2026 08:30:40 +0000</pubDate><atom:updated>2026-08-01T08:30:40.347Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Heavy Rain,orange alert,ஆரஞ்சு அலர்ட்,பருவமழை,monsoon,கனமழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/0bjnxl3x/orange-alert.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Orange alert]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/0bjnxl3x/orange-alert.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழகத்தின் எல்லைப் பகுதி மாவட்டங்களில் பலத்த <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/august-rain-expected-above-normal-in-tamilnadu" rel="nofollow">மழை</a> பதிவாகி வருகிறது.</p><h2>ஆரஞ்சு அலர்ட்</h2><p>தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்யும் என ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும், திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><h2>மழை தீவிரமடையும்</h2><p>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p>24 மணி நேரத்தில் 11 செ.மீ முதல் 20 செ.மீ வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் ஆகஸ்டு மாதத்தில் இயல்பை விட அதிக மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/august-rain-expected-above-normal-in-tamilnadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/august-rain-expected-above-normal-in-tamilnadu#comments</comments><guid isPermaLink="false">787b88c4-2255-4e08-80e3-7b39979ceaa1</guid><pubDate>Sat, 01 Aug 2026 08:05:49 +0000</pubDate><atom:updated>2026-08-01T08:05:49.186Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Heavy Rain,chennai Meteorological Centre,August,வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை,கனமழை,ஆகஸ்டு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/l2wyrnyg/Rain.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rain]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/l2wyrnyg/Rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. இந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை ஆகிய 2 மாதமும் தென் மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. 21 சதவீதம் இயல்பை விட குறைவாக மழை பெய்து உள்ளது.</p><p>சென்னை உள்பட 34 மாவட்டங்களில் 35 சதவீதம் மழை இயல்பை விட பற்றாக்குறையாக பதிவாகியுள்ளது. </p><p>இந்த நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான ஆகஸ்டு மாத வானிலை முன்னறிவிப்பை சென்னை மண்டல வானிலை மைய இயக்குனர் துரை வெளியிட்டுள்ளார். </p><p>அதில் அவர் கூறியிருப்பதாவது:- </p><p>ஆகஸ்டு  மாதத்தில் வட தமிழ்நாடு பகுதியில் மழை பொழிவு இயல்பானதாகவோ அல்லது இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். தென் கடலோர பகுதியில் இயல்பை விட அதிகமாக இருக்கலாம்.</p><p>வட உள்மாவட்டங்கள், மற்றும் தென் உள்மாவட்டங்களில் மழைப் பொழிவு இயல்பானதாக இருக்கக் கூடும்.</p><h2>வெப்பநிலை </h2><p>ஆகஸ்டு மாதத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான பகுதிகளில் அதிகபட்ச <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88" rel="nofollow">வெப்பநிலை</a>  இயல்பான அளவிலோ அல்லது இயல்பைவிட சற்று அதிகமாகவோ இருக்கக்கூடும்.</p><p>அடிக்கடி மழை பெய்யும் பகுதிகளில் வெப்பநிலை இயல்பான அளவையொட்டி இருக்க வாய்ப்புள்ளது. </p><p>குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பான அளவிலோ அல்லது இயல்பை விட அதிகமாகவோ இருக்கக்கூடும்.</p><p>ஆகஸ்டு முதல் செப்டம்பர் வரை வடகடலோர தமிழக பகுதியில் மழைப்பொழிவு இயல்பானதாகவோ அல்லது இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். தென் கடலோர தமிழகத்தில் மழை இயல்பானதாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கக்கூடும்.</p><h2>மழைப்பொழிவு இயல்பை விட குறைவு</h2><p>வட உள்மாவட்டங்கள் தென் உள்மாவட்டங்களில் மழை பொழிவு இயல்பானதாக இருக்கும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைப்பொழிவு இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.</p><p>ஆகஸ்டு, செப்டம்பர் கால கட்டத்தில் நாடு முழுவதும் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/heavy-rain-raises-dam-levels-in-tamil-nadu" rel="nofollow">மழைப்பொழிவு</a> இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும் என்றாலும் தமிழகத்தின் கிழக்கு பகுதிகளில் குறிப்பிட்ட அளவில் சாதகமான மழைப் பொழிவு இருக்கும் என்றும் அதே வேளையில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இயல்பை விட குறைவான மழையே பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவிக்கிறது.</p><p>பசிபிக் பெருங்கடல் பகுதியில் மிதமான  எல்-நினோ சூழல் நிலவுகிறது. தென்மேற்கு பருவமழைக் காலத்தின் எஞ்சிய நாட்களில் இது மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>&apos;ரீலில் மட்டும்தானா மன்னிப்பு?&apos;- பிரதமர் மோடியின் வீடியோவுக்கு CJP தலைவர் அபிஜீத் தீப்கே சரமாரி கேள்வி!</title><link>https://www.maalaimalar.com/news/national/only-reel-apology-cjp-chief-abhijit-deepke-slams-modi-video</link><comments>https://www.maalaimalar.com/news/national/only-reel-apology-cjp-chief-abhijit-deepke-slams-modi-video#comments</comments><guid isPermaLink="false">35215e69-6d79-4c32-a800-ef882d0a8efc</guid><pubDate>Sat, 01 Aug 2026 07:40:21 +0000</pubDate><atom:updated>2026-08-01T07:40:21.427Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>pm modi,பிரதமர் மோடி,அபிஜீத் தீப்கே,CJP Protest,Abhijit Dipke,காக்ரோச் ஜனதா கட்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/um3zdsf3/abijit.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Abhijit Dipke -PM Modi ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/um3zdsf3/abijit.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து CJP சார்பில் மாணவர்கள், இளைஞர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது  பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது தாயார் குறித்து வார்த்தைகளைப் பயன்படுத்திய மாணவர்களை மன்னிப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி இன்ஸ்டாகிராமில் செல்ஃபி வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோவின் கீழ் 'காக்ரோச் ஜனதா கட்சி' நிறுவனர் அபிஜீத் தீப்கே பிரதமர் மோடியிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.</p><h2><strong>பிரதமர் மோடியின் 'மன்னிப்பு' வீடியோ:</strong></h2><p>ஜந்தர் மந்தர் போராட்டத்தில் தமக்கு எதிராகவும், தமது மறைந்த தாயார் குறித்தும் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்திய மாணவர்களை மன்னிப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி இன்ஸ்டாகிராமில் செல்ஃபி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், "அவதூறுகளால் எதுவும் மாறப்போவதில்லை. </p><p>மாணவர்களைத் தண்டிப்பதோ, நீதிமன்ற வழக்குகளில் இழுப்பதோ அல்லது சமூகத்தில் அவர்களைத் துன்புறுத்துவதோ எந்தத் தீர்வையும் தராது. நான் அவர்களை மன்னிக்க விரும்புகிறேன்... வழிதவறிய மாணவர்களுக்கு நல்வழி காட்டுவோம்" என்று பிரதமர் கூறினார்.</p><h2><strong>அபிஜீத் தீப்கேவின் கேள்வி:</strong></h2><p>பிரதமரின் இந்த வீடியோ பதிவின் கீழ் கருத்துத் தெரிவித்த CJP நிறுவனர் அபிஜீத் தீப்கே, "ரீலில் மட்டும் மன்னிப்பீர்களா அல்லது மாணவர்கள் மீதான வழக்குகளையும் திரும்பப் பெறுவீர்களா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக, வினாத்தாள் கசிவு தடுப்புச் சட்டத் திருத்தம் தொடர்பாகப் பிரதமர் வெளியிட்ட மற்றொரு வீடியோவில், "நாட்டின் எதிர்காலத்தை விட உங்கள் முகப் பொலிவு பிரகாசமாக இருக்கிறது" என்று தீப்கே கிண்டலாகப் பதிவிட்டிருந்தார்.</p><h2><strong>15 வயது சிறுமி மீதான வழக்கு:</strong></h2><p>டெல்லி ஜந்தர் மந்தரில் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது, பிரதமருக்கு எதிராக அவதூறாகப் பேசியதாக நோய்டாவைச் சேர்ந்த 15 வயது சிறுமி மீது 'ஜீரோ எஃப்.ஐ.ஆர்' பதிவு செய்யப்பட்டது.  வழக்கு தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, அச்சிறுமி ஒரு வீடியோ வெளியிட்டு, "இது எனது முதல் மற்றும் கடைசித் தவறு. </p><p>சூழ்நிலை காரணமாக உணர்ச்சிவசப்பட்டுப் பேசிவிட்டேன், என்னை மன்னித்துவிடுங்கள்" என மன்னிப்புக் கோரினார். சிறுமி மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, பா.ஜ.க தலைவர்கள் மற்றும் ஐ.டி விங் உறுப்பினர்கள் மீது இதுபோன்ற அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்படாதது ஏன் என்று CJP கேள்வி எழுப்பியது.</p><h2><strong>வழக்குகள் நிலவரம்:</strong></h2><p>போராட்டங்களில் பங்கேற்ற சாதாரண மாணவர்கள் மற்றும் குற்றப்பின்னணி இல்லாத இளைஞர்கள் மீதான வழக்குகளை விடுவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், மாநில அரசுகள் சில வழக்குகளைத் திரும்பப் பெற்று வருகின்றன. இருப்பினும், வழக்குகள் முழுமையாகத் திரும்பப் பெறப்பட வேண்டும் என CJP வலியுறுத்தி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>உக்ரைன் தலைநகர் மீது டிரோன் தாக்குதல் - 3 பேர் பலி!</title><link>https://www.maalaimalar.com/news/world/russian-missile-drone-attack-on-ukraine-capital</link><comments>https://www.maalaimalar.com/news/world/russian-missile-drone-attack-on-ukraine-capital#comments</comments><guid isPermaLink="false">0c4ce963-832a-4cf2-9aed-12c7650ed4cc</guid><pubDate>Sat, 01 Aug 2026 07:38:44 +0000</pubDate><atom:updated>2026-08-01T07:38:44.836Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Ukraine,ரஷ்யா,கீவ்,உக்ரைன்,DroneAttack,KyivAttack,RussiaUkraineWar,ஏவுகணைதாக்குதல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/vdv1r31h/RussiaUkraineWar" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ RussiaUkraineWar ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/vdv1r31h/RussiaUkraineWar?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE">ரஷ்யா </a>மற்றும்<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D"> உக்ரைன்</a> இடையேயான போர் 4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ்வை குறிவைத்து இன்று அதிகாலை ரஷ்யா மீண்டும் ஒரு பயங்கர ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.</p><p>நேற்று முன் தினம் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் மீது ரஷ்யா சரமாரியாகத் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இன்று அதிகாலை மீண்டும் இந்த வான்வழித் தாக்குதல் அரங்கேறியுள்ளது. </p><p>இன்று நடந்த தாக்குதலில் உக்ரைன் தலைநகரின் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.</p><h2><strong>கீவ் தாக்குதல்</strong></h2><p>இன்று அதிகாலை நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், சொலோமியன்ஸ்கி மாவட்டத்தில் உள்ள 5 மாடி குடியிருப்பு கட்டிடம் ஏவுகணை வீச்சில் பலத்த சேதமடைந்துள்ளது. மேலும் அக்கட்டிடத்தின் முன்பகுதியில் பயங்கர தீ விபத்தும் ஏற்பட்டுள்ளது.</p><p>இது மட்டுமில்லாமல் மற்றொரு குடியிருப்பு கட்டிடத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்கள் இடிந்து விழுந்து முற்றிலும் தரைமட்டமாகின. </p><p>அதேபோல் டார்னிட்ஸ்கி பகுதியில் உள்ள வணிகக் கிடங்கு கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், அவை அனைத்தும் முற்றிலும் தீப்பற்றி எரிந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>உயிரிழப்புகள்</strong></h2><p>ரஷ்யாவின் இந்த அடுத்தடுத்த ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களில் இதுவரை 3 பொதுமக்கள் பலியாகியுள்ளனர். </p><p>மேலும், கட்டிட இடிபாடுகளில் சிக்கியும், தீ விபத்துகளில் சிக்கியும் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். </p><p>காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய வழக்கு:
செந்தில் பாலாஜி காவல் நிலையத்தில் ஆஜர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-appears-at-thiruvallikeni-police-station-in-dmk-mla-bribery-bargain-case</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-appears-at-thiruvallikeni-police-station-in-dmk-mla-bribery-bargain-case#comments</comments><guid isPermaLink="false">b2fe6ea9-3b9d-48f0-9a76-c7d576223c38</guid><pubDate>Sat, 01 Aug 2026 07:26:25 +0000</pubDate><atom:updated>2026-08-01T07:26:25.255Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>செந்தில் பாலாஜி,பேரம் வழக்கு,காவல் நிலையத்தில் ஆஜர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/lfn09f0d/senthil-balaji.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Senthil balaji]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/lfn09f0d/senthil-balaji.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஊத்தங்கரை த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜா விடம் ரூ.35 கோடி பேரம் பேசிய வழக்கில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன் ஜாமீன் பெற்று திருவல்லிக் கேணி போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டு வருகிறார்.</p><h2>கையெழுத்து</h2><p>டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரும் செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக செந்தில் பாலாஜி போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடாமல் இருந்து வந்தார்.</p><p>டாஸ்மாக் முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு முன்ஜாமீன் வழங்கிய நிலையில் இன்று செந்தில் பாலாஜி திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட்டார்.</p><p>அதே நேரத்தில் செந்தில் பாலாஜி த.வெ.க. எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய வழக்கில் வருகிற 4-ந்தேதி வரை கையெழுத்து போடுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.</p><p>கடந்த 25-ந்தேதி முதல் செந்தில் பாலாஜி தினமும் கையெழுத்து போட்டு வரும் நிலையில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். விரைவில் இந்த மனு மீதான விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>டாஸ்மாக் முறைகேடு</h2><p>செந்தில்பாலாஜி அமைச்சராக இருந்தபோது டாஸ்மாக்கில் ரூ.100 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக தெரிவித்து உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசார் அது தொடர்பாக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி விசாகன் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.</p><p>இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு ஐகோர்ட்டு முன்ஜாமீன் வழங்காத நிலையில் அவர் சுப்ரீம் கோர்ட்டை நாடி முன்ஜாமீன் பெற்றார். இருப்பினும் டாஸ்மாக் முறைகேடு வழக்கில் போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.</p><h2>விரைவில் விசாரணை</h2><p>செந்தில் பாலாஜியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசா்ா விரைவில் விசாரணை நடத்த உள்ளனர். இதற்காக அவருக்கு சம்மன் அனுப்பி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்துக்கு நேரில் வரவழைக்க திட்டமிட்டுள்ளனர்.</p><p>இதற்கிடையே செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்களான கார்த்திக் மற்றும் ரமேஷ் ஆகிய இரு வரும் டாஸ்மாக் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக செந்தில் பாலாஜி சேர்க்கப்பட்டுள்ளார்.</p><h2>ஆவணங்கள்</h2><p>டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 45 இடங்களில் சோதனை நடத்திய போலீசார் அது தொடர்பான ஆவணங்களை  கைப்பற்றி இருக்கிறார்கள். இதன் அடிப்படையிலேயே செந்தில் பாலாஜியின் நண்பர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். </p><p>போலீஸ் விசாரணையில் அவர்களிடமும் பல்வேறு தகவல்கள் திரட்டப்பட்டு உள்ளது. அதனை மையமாக வைத்து செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட இருக்கிறது. </p>]]></content:encoded></item><item><title>மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை: அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/heavy-rain-raises-dam-levels-in-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/heavy-rain-raises-dam-levels-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">c5696618-875f-44d7-80fc-edb0c813c61b</guid><pubDate>Sat, 01 Aug 2026 07:15:31 +0000</pubDate><atom:updated>2026-08-01T07:15:31.702Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>rainfall,மேற்கு தொடர்ச்சி மலை,western ghats,Tamilnadu Dams,தொடர் மழை,தமிழ்நாடு அணைகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/rjaot7qm/servalaaru.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tamilnadu Dams]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/rjaot7qm/servalaaru.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, தமிழகத்தில் உள்ள முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால், குடிநீர் தேவை பூர்த்தியடைவதுடன் விவசாயப் பணிகளும் தீவிரமடைந்துள்ளதால் பொதுமக்களும் விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.</p><h2><strong>தென் மாவட்ட அணைகள்:</strong></h2><p>நெல்லை, தென்காசி மாவட்ட எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால், 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை மற்றும் சேர்வலாறு அணைக்கு நீர்வரத்து பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் பல அடிகள் உயர்ந்துள்ளதால், தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.</p><h2><strong>கோவை &amp; பொள்ளாச்சி மண்டலம்:</strong></h2><p>கோவை மாநகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையினால் அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதேபோல், ஆழியாறு மற்றும் அமராவதி அணைகளுக்கும் நீர்வரத்து தொடர்ந்து சீராக வந்து கொண்டிருக்கிறது.</p><h2><strong>கன்னியாகுமரி &amp; தேனி மாவட்ட அணைகள்:</strong></h2><p>பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் வைகை அணை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளின் நீர் இருப்பு அதிகரித்து காணப்படுகிறது.</p><h2><strong>குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு:</strong></h2><p>கோடைக்காலத்திற்குப் பின் அணைகளின் நீர்மட்டம் சரிந்து வந்த நிலையில், தற்போது பெய்துள்ள மழை நகர்ப்புற மற்றும் கிராமப்புற குடிநீர் விநியோகத்தை தடையின்றி வழங்க உதவியாக இருக்கும்.</p><h2><strong>பாசனப் பணிகள் தீவிரமடைதல்:</strong></h2><p>குறுவை / முதல்போக சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் நாற்று நடும் பணிகளையும் நில ஆயத்தப் பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர். வானிலை ஆய்வு மையத் தகவலின்படி., வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களான கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை தொடர வாய்ப்புள்ளது.</p><h2><strong>ஆற்றோர மக்களுக்கு எச்சரிக்கை:</strong></h2><p>அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதால், ஆற்றங்கரை மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாறுமாறும், ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட முடியுமா முடியாதா? - முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-issue-mk-stalin-question-to-cm-vijay-all-party-meeting</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-issue-mk-stalin-question-to-cm-vijay-all-party-meeting#comments</comments><guid isPermaLink="false">e1184a52-e648-4cbf-8817-ecfffffa2430</guid><pubDate>Sat, 01 Aug 2026 07:09:01 +0000</pubDate><atom:updated>2026-08-01T07:09:01.737Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,mekedatu dam,மேகதாது அணை,All Party Meeting,அனைத்து கட்சி கூட்டம்,Cauvery Issue,காவிரி விவகாரம்,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/pwz88hyx/mkstalin.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MK Stalin - CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/pwz88hyx/mkstalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாயிகள் சங்கத்தினர் எல்லோரும் மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனளிக்காது என்று எச்சரித்தோம். கர்நாடகம் செல்ல வேண்டாம் என்று தமிழ்நாடு முதலமைச்சருக்குக் கோரிக்கை வைத்தோம்.</p> <p>தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தரமுடியாது என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்ட மாநிலத்துடன் சட்டரீதியாகத்தான் போராட வேண்டும் என்பதே கடந்தகாலத்தில் நாம் பெற்ற படிப்பினை. உபரிநீரை வெளியேற்றும் வடிகால் பகுதியாகத்தான் அவர்கள் தமிழ்நாட்டைப் பார்க்கிறார்கள்.</p><h2>முதலமைச்சர் விஜய்</h2><p>ஆனால், தான் கர்நாடகம் சென்றால் காவிரியைக் கையோடு எடுத்துவந்து விடலாம் என்று தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சர் நினைத்தாரோ என்னவோ... நமது எச்சரிக்கைகளை மீறி கர்நாடகம் செல்வதற்குத் தூது அனுப்பினார். </p> <p>தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடச் சொல்லி CWMA உத்தரவிட்டதும் "நீங்கள் இப்போதைக்கு வரவேண்டாம்" என்று கேட்டைச் சாத்திவிட்டார்கள்.</p><h2>காவிரி விவகாரம்</h2><p>இதுபோன்ற சூழ்நிலைகளை முன்பே கணித்துதான், தமிழ்நாட்டிலுள்ள அனைவரும் எச்சரித்தோம். இனியேனும் தமிழ்நாட்டின் உயிர்ப் பிரச்சனையான <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-tn-decides-to-move-supreme-court-to-secure-cauvery-water-right-move">காவிரி விவகாரத்தை</a> முதலமைச்சர் ஆலோசனைகளோடு அணுக வேண்டும்.</p> <h2>அனைத்துக் கட்சிக் கூட்டம்</h2><p>நமது முதலமைச்சரை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு, கர்நாடகத்தில் ஆகஸ்ட் 2 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அம்மாநில முதலமைச்சர் அழைப்பு விடுத்து அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதைத் தனது செயலால் உணர்த்திவிட்டார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-340-crore-allocated-for-drinking-water-and-other-essential-works-chief-minister-vijay-orders">முதலமைச்சர்</a> அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது எப்போது? முடியுமா முடியாதா?</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவிலேயே மிகப்பெரிய சர்வதேச விமான நிலையம்- ஆந்திராவில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்</title><link>https://www.maalaimalar.com/news/national/new-mega-international-airport-in-andhra-pradesh-opened-by-modi</link><comments>https://www.maalaimalar.com/news/national/new-mega-international-airport-in-andhra-pradesh-opened-by-modi#comments</comments><guid isPermaLink="false">869c8bd9-c694-47c5-8c03-142baeae96e9</guid><pubDate>Sat, 01 Aug 2026 07:00:52 +0000</pubDate><atom:updated>2026-08-01T07:00:52.871Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Andhra Pradesh,சர்வதேச விமான நிலையம்,international airport,pm modi,ஆந்திரா,பிரதமர் மோடி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/1llagm4n/PM-modi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/1llagm4n/PM-modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆந்திர மாநிலம், போகபுரத்தில் ரூ.4,750 கோடி மதிப்பில் 223 ஏக்கர் பரப்பளவில் அல்லூரி சீதா ராமராஜூ சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது.</p><p>மாநில பிரிவினைக்கு பிறகு திறக்கப்படும் முதல் மற்றும் இந்தியாவிலேயே மிகப்பெரிய சர்வதேச விமான நிலையம் இதுவாகும்.</p><h2>உலக தரம் வாய்ந்த வசதிகள் </h2><p>3.8 கிலோ மீட்டர் நீளம் 45 மீட்டர் அகலம் கொண்ட 2 ஓடு பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏர்பஸ் மற்றும் போயிங் போன்ற மிகப்பெரிய விமானங்கள் கூட எளிதாக தரையிறங்கலாம்.</p><p>5 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் 25 ஆயிரம் டன் சரக்குகளை கையாளும் முனையும் மற்றும் தளவாட மண்டலங்களில் மருந்து, நீர் வாழ் மற்றும் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D" rel="nofollow">கடல் சார் பொருட்கள்</a> ஏற்றுமதி மூலம் தொழில் துறை வளர்ச்சிக்கு உதவும். உலக தரம் வாய்ந்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.</p><p>இந்த விமான நிலையம் மூலம் 15 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும் 5.85 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும். கடற்கரைக்கு அருகில் உள்ளதால் மீன் வடிவத்தில் விமான நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><h2>பிரமதர் மோடி </h2><p>இந்த விமான நிலையத்தை <a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-reacts-to-abusive-videos" rel="nofollow">பிரதமர் மோடி</a> இன்று காலை திறந்து வைத்தார். விமான நிலைய திறப்பு விழாவில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண், அமைச்சர்கள் நாரா லோகேஷ்,உள்துறை அமைச்சர் வாங்கலபுடி அனிதா மற்றும் அமைச்சர் கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.</p><p>13 ஆயிரத்து 750 பழங்குடியின பெண்கள் கலந்துகொண்டு தின்ஷா நடனமாடி பிரத மருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பிரதமர் மோடி 3 லட்சம் பேர் கலந்துகொள்ளும் பிரமாண்ட பொதுக்கூட் டத்தில் கலந்து கொண்டு பேசினார்.</p><p>பிரதமர் வருகையை முன்னிட்டு நகரம் முழுவதும் போலீ சாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Andhra Pradesh: Prime Minister Narendra Modi welcomed on stage in Bhogapuram in Vizianagaram. He will lay the foundation stone, inaugurate and dedicate to the nation multiple development projects worth over Rs 17,900 crores here. A short while ago, he inaugurated the… <a href="https://t.co/xiqAupztmt">pic.twitter.com/xiqAupztmt</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2083435879276929055?ref_src=twsrc%5Etfw">August 1, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>ஜம்மு-காஷ்மீரில் கொடூரம்: வெளிமாநிலத் தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு-இருவர் பலி</title><link>https://www.maalaimalar.com/news/national/jammu-kashmir-kulgam-attack-on-migrant-workers-two-killed</link><comments>https://www.maalaimalar.com/news/national/jammu-kashmir-kulgam-attack-on-migrant-workers-two-killed#comments</comments><guid isPermaLink="false">10cc0eaf-a082-469a-9528-a160788fb287</guid><pubDate>Sat, 01 Aug 2026 06:45:56 +0000</pubDate><atom:updated>2026-08-01T06:45:56.199Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜம்மு-காஷ்மீர்,Migrant workers,Jammu-Kashmir,Kashmir violence,வெளிமாநிலத் தொழிலாளர்கள்,குல்காம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/psm138s7/kashmir.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kashmir violence]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/psm138s7/kashmir.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜம்மு-காஷ்மீரின் தெற்குப் பகுதியில் உள்ள குல்காம் மாவட்டத்தில், வெளிமாநிலத் தொழிலாளர்களைக் குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் படுகாயமடைந்த மேலும் ஒரு தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் இத்தாக்குதலில் பலி எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது. பிழைப்பு தேடி காஷ்மீருக்கு வந்த ஏழைத் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்த வன்முறைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p><h2><strong>துப்பாக்கிச் சூடு:</strong></h2><p>நேற்று இரவு, தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்திற்குட்பட்ட 'கேலம்' பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, அப்பகுதிக்குள் மறைந்திருந்து புகுந்த ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகள், அங்கு வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்களை இலக்கு வைத்து மிக நெருக்கமான தொலைவில் இருந்து சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.</p><h2><strong>இருவர் உயிரிழப்பு:</strong></h2><p>இத்தாக்குதலில், சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த தீபக் ராத்ரே மற்றும் பூபேந்தர் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதில், தீபக் ராத்ரே குண்டுகள் பலமாகத் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். மேலும், உடலின் பல இடங்களில் குண்டடிபட்டுப் படுகாயமடைந்த பூபேந்தர், உடனடியாக அனந்தநாக் அரசு மருத்துவக் கல்லூரிக்குக் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஸ்ரீநகரில் உள்ள பிரசித்தி பெற்ற SKIMS மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இருப்பினும், இன்று காலை சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.</p><h2><strong>ராணுவ நடவடிக்கை:</strong></h2><p>தாக்குதல் நடைபெற்ற சில நிமிடங்களிலேயே ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) மற்றும் இந்திய ராணுவத்தின் கூட்டுப் படையினர் சம்பவ இடத்தை முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தப்பி ஓடிய பயங்கரவாதிகளைக் கண்டறிவதற்காக கேலம் பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்கள் முழுவதும் சீல் வைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, குல்காம் மற்றும் அனந்தநாக் மாவட்ட எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனத் தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.</p><h2><strong>அரசியல் தலைவர்கள் கண்டனம்:</strong></h2><h3><strong>துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா:</strong></h3><p>"குல்காமில் அப்பாவித் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்தக் கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காஷ்மீர் காவல் துறை தலைமை இயக்குநர் (DGP) நலின் பிரபாத் உடன் பேசப்பட்டு, இத்தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை உடனடியாகக் கண்டறிந்து ஒழிக்குமாறு பாதுகாப்புப் படைகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார்."</p><h3><strong>அரசியல் கட்சித் தலைவர்கள்:</strong></h3><p>ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முஃப்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் இத்தாக்குதலுக்குக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். உழைத்து வாழ வந்த அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்கள் மனிதநேயமற்ற செயல் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.</p><h2><strong>காஷ்மீரில் தொடரும் தாக்குதல்கள்:</strong></h2><p>கடந்த சில ஆண்டுகளாகவே ஜம்மு-காஷ்மீரில் வெளிமாநிலத் தொழிலாளர்கள், உள்ளூர் சிறுபான்மையினர் மற்றும் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து 'இலக்கு வைக்கப்பட்டத் தாக்குதல்கள்' நடத்தப்பட்டு வருகின்றன. சில நாட்களுக்கு முன்புதான் அனந்தநாக் நகரில் காவல் துறை அதிகாரி ஒருவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன் தொடர்ச்சியாக தற்போது தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல், பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள வெளிமாநிலத் தொழிலாளர்களிடையே மீண்டும் பாதுகாப்பற்ற சூழலையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காவிரியில் நீர் பெற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர தமிழகம் முடிவு: சரியான நடவடிக்கை! - அன்புமணி
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-tn-decides-to-move-supreme-court-to-secure-cauvery-water-right-move</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-tn-decides-to-move-supreme-court-to-secure-cauvery-water-right-move#comments</comments><guid isPermaLink="false">ae05b230-7877-4d30-98ed-2102d52cf24f</guid><pubDate>Sat, 01 Aug 2026 06:44:03 +0000</pubDate><atom:updated>2026-08-01T06:44:03.240Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,Supreme Court,mekedatu dam,மேகதாது அணை,சுப்ரீம் கோர்ட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/bo11tqfa/anbumaniramadoss.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anbumani Ramadoss]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/bo11tqfa/anbumaniramadoss.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,</p><p>காவிரியில் தமிழ்நாட்டுக்கான தண்ணீரைப் பெறுவதற்காக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு எதிராக நடைபெறவிருந்த இரு தரப்பு பேச்சுகளுக்கான கதவுகளை கர்நாடக அரசு மூடியதற்கு பிறகு மிகவும் தாமதமாகத் தான் இந்த முடிவை தமிழக அரசு எடுத்திருக்கிறது என்றாலும், காவிரி சிக்கலில் இது தான் சரியான நடவடிக்கையாகும்.</p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>காவிரி நீர்ப் பகிர்வு, <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">மேகதாது அணை</a> சிக்கல் ஆகியவை குறித்து கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரை  தமிழக முதலமைச்சர் விஜய் நாளை மறுநாள் பெங்களூருவில் சந்தித்து பேசுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், கர்நாடகத்திலும் வெடித்துள்ள போராட்டங்களைக் காரணம் காட்டி, இரு தரப்பு பேச்சுகளுக்கு உகந்த சூழல் நிலவவில்லை என்று கர்நாடக முதலமைச்சர் நேற்று அறிவித்ததைத் தொடர்ந்து அங்கு செல்லும் திட்டத்தை முதலமைச்சர் விஜய் கைவிட்டிருப்பதாக அரசு அறிவித்துள்ளது. </p> <h2>அமைச்சர் நிர்மல்குமார்</h2><p>அதற்கு மாறாக, காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீரை உடனடியாக திறந்து விடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக சட்ட அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்திருக்கிறார். ஆகஸ்ட் ஐந்தாம் தேதிக்குப் பிறகு இந்த வழக்கு தொடரப்படும் என்று தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p> <h2>கர்நாடக அரசு</h2><p>தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு மறுக்கும் சிக்கலாக இருந்தாலும், மேகதாது அணையை கட்ட கர்நாடகம் சதி செய்யும் சிக்கலாக இருந்தாலும் அதை சட்டப்படியாக எதிர்கொள்வது தான் சரியானதாக இருக்கும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால், அதற்கு மாறாக இந்த விவகாரத்தில் தவறான பாதையில் பயணித்த தமிழக அரசு, இப்போதாவது சரியான பாதைக்கு திரும்பி இருப்பது மனநிறைவு அளிக்கிறது. இனிவரும் காலத்திலும் கூட <a href="https://www.maalaimalar.com/news/national/cauvery-issues-mandya-karnataka-bjp-leader-former-cm-bs-yediyurappa">காவிரி நீர்ப்பகிர்வு</a>, மேகதாது விவகாரம்  ஆகியவற்றில் கர்நாடக அரசுடன் எந்த வகையிலும் பேசுவதில்லை என்ற கொள்கை முடிவை தமிழக அரசு எடுக்க வேண்டும்.</p> <p>தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய் அரசியலுக்கு புதிது என்பதால், புதுமையாக எதையாவது செய்து தமிழகத்திற்கு தண்ணீரை பெற வேண்டும் என்று நினைத்திருக்கலாம். ஆனால், கர்நாடகத்தில் எந்தக் கட்சியின் ஆட்சி நடந்தாலும் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க அம்மாநில முதலமைச்சர்கள் முன்வர மாட்டார்கள் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். </p> <p>காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு 205 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும். 1995-ஆம் ஆண்டில் கடுமையான வறட்சி நிலவிய சூழலில் உச்சநீதிமன்றமே ஆணையிட்ட பிறகும் கூட தமிழகத்திற்கு கர்நாடகம் தண்ணீர் வழங்கவில்லை. அதன்பின் இந்த விஷயத்தில் பிரதமர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்ட பிறகு, அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, கர்நாடக முதலமைச்சர் தேவகவுடா ஆகியோரை அழைத்து பேச்சு நடத்தினார். அதன்பயனாக நடுவர் மன்றம் ஆணையிட்ட 11 டி.எம்.சிக்கு பதிலாக 6 டிஎம்சி நீரை மட்டும் கர்நாடகம் திறந்து விட்டது.</p> <p>அதன்பின், 2002-ஆம் ஆண்டில் காவிரி பாசன மாவட்டங்களில் உழவர்கள் எலிக்கறி சாப்பிடும் அளவுக்கு கடுமையான வறட்சி நிலவியது. அப்போது சம்பா பயிர்களைக் காப்பாற்றுவதற்காக தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடகத்திற்கு பிரதமர் தலைமையிலான காவிரி நீர் ஆணையம் ஆணையிட்டது. ஆனால், கர்நாடகம் தண்ணீர் திறக்க மறுத்து விட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அதை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழகத்திற்கு  தினமும் 0.8 டி.எம்.சி தண்ணீர் திறக்க ஆணையிட்டது. ஆனால், அதையும் மதிக்காத கர்நாடக காங்கிரஸ் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தண்ணீர்  திறக்க முடியாது என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தமிழகம் தொடர்ந்தது.</p> <h2>டி.கே.சிவக்குமார்</h2><p>அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடாவிட்டால், கடுமையான விளைவுகள் ஏற்படும்; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை தண்டனை வழங்கவும் தயங்க மாட்டோம் என்று 26.10.2002-ஆம் நாள் ஆணையிட்டது. அதைத் தொடர்ந்து தான் கர்நாடகம் தமிழகத்திற்கு  காவிரியில் தண்ணீர் திறந்து விட்டது. அதன்பிறகும் எஸ்.எம். கிருஷ்ணா மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்காமல் நிலுவையில் வைத்துக் கொண்டே நவம்பர் 15-ஆம் தேதி வரை தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. மிதவாதிகள் என்று அறியப்பட்ட எஸ்.எம்.கிருஷ்ணாவும்,  எச்.டி.தேவகவுடாவுமே உச்சநீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் கூட தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முன்வராத நிலையில், காவிரி சிக்கலை தீவிரமாக்கியே அடுத்த தேர்தலிலும் முதலமைச்சர் பதவியைத் தக்க வைத்துக் கொள்ளத் துடிக்கும் டி.கே.சிவக்குமார் கேட்டவுடன் காவிரியில் தண்ணீர் திறந்து விடுவார் என்று எதிர்பார்ப்பது அரசியல் அறியாமையாகவே இருக்கும். இந்த அணுகுமுறையை அரசு கைவிட வேண்டும்.</p> <h2>காவிரி மேலாண்மை ஆணையம்</h2><p>காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆணைப்படி தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட ஆணையிடும்படி உச்சநீதிமன்றத்தில் விரைந்து வழக்கு தொடர்ந்து நீரைப் பெற வேண்டும். அதுமட்டுமின்றி, மேகதாது அணை விவகாரத்திலும் மத்திய அரசும், கர்நாடக அரசும் செய்யும் கூட்டுச் சதியை உரிய தரவுகளுடன் உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க தடைவிதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஸ்பெயினுக்குள் அத்துமீறி நுழைந்த அகதிகள்: கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 57-ஆக உயர்வு</title><link>https://www.maalaimalar.com/news/world/death-toll-hits-57-in-mass-refugee-crossing-to-spain</link><comments>https://www.maalaimalar.com/news/world/death-toll-hits-57-in-mass-refugee-crossing-to-spain#comments</comments><guid isPermaLink="false">e6b066e3-b138-48e8-910b-81c345cea47c</guid><pubDate>Sat, 01 Aug 2026 06:36:06 +0000</pubDate><atom:updated>2026-08-01T06:36:06.055Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அகதிகள்,Spain,ஸ்பெயின்,Refugee,death rate increase,உயிரிழப்பு அதிகரிப்பு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/88czh3fh/spain.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Refugee]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/88czh3fh/spain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் இருந்து ஏராளமானோர், அண்டை நாடான ஸ்பெயினில் உள்ள வட ஆப்பிரிக்க பகுதியான சியூட்டா நகருக்குள் சட்ட விரோதமாக நுழைய முயற்சிக்கிறார்கள்.</p><h2>நாடு கடத்த முடியாது</h2><p>இதற்கிடையே கடல் வழியாக வரும் அகதிகளை உடனடியாக நாடு கடத்த முடியாது என்று ஸ்பெயின் நாட்டு சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் தீர்ப்பளித்தது.</p><p>இதையடுத்து மொராக்கோவில் இருந்து ஆயிரகணக்கானோர் கடல் வழியாகவும், தரை வழியாகவும் சியூட்டா நகருக்குள்  நுழைய முயன்றனர். ஒரே நாளில் சுமார் 60 ஆயிரம் பேர் ஸ்பெயினுக்குள் செல்ல முயற்சித்தனர்.</p><p>எல்லையில் உள்ள தடுப்பு வேலியை கடக்க முயன்ற அகதிகளை ஸ்பெயின் ராணுவம் தடுத்தது. இதனால் அங்கு மோதல் ஏற்பட்டது. மேலும், சீயடாவுக்குள் மக்கள் நுழைவதை தடுக்க மொராக்கோ பாதுகாப்புப் படைகள் தடியடி நடத்தியது. கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியது. </p><p>இதில், ஸ்பெயின் மற்றும் மொராக்கோ பகுதிகளில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கியும், கடலில் மூழ்கியும் 34 பலியானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஸ்பெயினுக்குள் அத்துமீறி நுழைய முயன்ற சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்து உள்ளது. இதில் பெரும்பாலானோர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்து உள்ளனர்.</p><h2>60 ஆயிரம் பேர்</h2><p>இதற்கிடையே நேற்று முன்தினம் காலை முதல் தரை மற்றும் கடல் வழியாக சுமார் 60 ஆயிரம் பேர் சீயடாவிற்குள் நுழைந்ததாக ஸ்பெயின் உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.</p><p>அவர்களில் சுமார் 48 ஆயிரம் பேர்  மொராக்கோ விற்குத் திரும்பி சென்றுவிட்டதாக ஸ்பெயின் அரசு தெரிவித்து உள்ளது. மீதமுள்ளவர்களை கண்டு பிடித்து திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளது.</p><p>அகதிகளை சட்ட விரோதமாக ஸ்பெயினுக்குள் அனுப்பும் கும்பல்களின் வதந்திகளை நம்பி ஆயிரக்கணக்கானோர் ஸ்பெயினுக்கு நுழைய முயற்சித்து உள்ளனர் என்று ஸ்பெயின் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காவிரி தாயை போற்றும் ஆடிப்பெருக்கு</title><link>https://www.maalaimalar.com/spirituality/aadi-perukku-2</link><comments>https://www.maalaimalar.com/spirituality/aadi-perukku-2#comments</comments><guid isPermaLink="false">790dcae3-5cf2-47b1-b81b-d93d00517137</guid><pubDate>Sat, 01 Aug 2026 06:20:55 +0000</pubDate><atom:updated>2026-08-01T06:20:55.328Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,வழிபாடு,worship,ஆடி மாதம்,aadi perukku,ஆடிப்பெருக்கு,Aadi Month</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/mxlplm6m/adiperukku.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆடிப்பெருக்கு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/mxlplm6m/adiperukku.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆடிப்பெருக்கு, தமிழ் மக்களின் முக்கிய பண்டிகை ஆகும். 'ஆடிப் பட்டம் தேடி விதை' என்பது பழமொழி. ஆடி மாதத்தில் விவசாயிகள் நெல், கரும்பு போன்றவற்றை விதைத்தால்தான் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அன்றைய தினம் நதிகளின் கரையோரம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது. குறிப்பாக காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் நாளாகவே ஆடிப் பெருக்கு கொண்டாடப்படுகிறது.</p><h2>ஆடி மாதம்</h2><p>அம்மனுக்கு மிகவும் உகந்த மாதமாக கருதப்படும் ஆடி மாதத்தில் வரும் அனைத்து நாட்களும் விசேஷமானவை. பொதுவாக இந்து சமயத்தில் கொண்டாடப்படும் அனைத்து பண்டிகைகளும் நட்சத்திரம், திதி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே வரும். ஆனால் நாளின் அடிப்படையில் கொண்டாடப்படும் விழா தான், ஆடிப்பெருக்கு.</p> <h2>ஆடி 18-ம் பெருக்கு</h2><p>ஆன்மிகத்தில் 18 என்ற எண்ணிற்கு தனிச் சிறப்புண்டு. புராணங்கள் 18, மகாபாரத பர்வங்கள் 18, பகவத்கீதையில் உள்ள பிரிவுகள் 18, பாரதப் போர் நடைபெற்ற நாட்கள் 18, சபரிமலையில் உள்ள படிகள் 18 என 18 என்ற எண்ணிற்கு ஏராளமான சிறப்புகள் உள்ளன. அந்த வகையில், ஆடி மாதத்தில் வரும் 18-வது நாளை 'ஆடிப்பெருக்கு' என்று கொண்டாடுகிறோம். இதை 'ஆடி 18-ம் பெருக்கு' என்றும் சொல்வதுண்டு.</p> <h2>நதியை போற்றும் நாள்</h2><p>ஆடி மாதம் என்பது பருவ மழைகள் பெய்யும் காலமாகும். இதனால் நீர்நிலைகள் நிரம்பி, விவசாயத்திற்கு உயிர்கொடுக்கின்றன. பஞ்சபூதங்களில் மிகவும் முக்கியமானது நீர். அந்த நீரில் இருந்தே உலக உயிர்கள் தோன்றியதாக கூறப்படுகிறது. மற்ற நாட்களில் வறண்டு இருக்கும் ஆறுகள், ஆடிப்பெருக்கின் போது பொங்கி பெருகி வரும். இவ்வாறு நீர் வளம் பெருகுவதை கொண்டாடும் நாளாக ஆடிப்பெருக்கு உள்ளது.</p> <h2>காவிரி தாய்</h2><p>ஆடிப்பெருக்கு, தமிழ் மக்களின் முக்கிய பண்டிகை ஆகும். 'ஆடிப் பட்டம் தேடி விதை' என்பது பழமொழி. ஆடி மாதத்தில் விவசாயிகள் நெல், கரும்பு போன்றவற்றை விதைத்தால்தான் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அன்றைய தினம் நதிகளின் கரையோரம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது. குறிப்பாக காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் நாளாகவே ஆடிப் பெருக்கு கொண்டாடப்படுகிறது.</p> <h2>ஆடிப்பெருக்கு வழிபாடு</h2><p>தீபாவளி தினத்தன்று, எவ்வாறு கங்காதேவி அனைத்து நீர்நிலைகளிலும் நிறைந்திருப்பாரோ, அதே போல் ஆடிப்பெருக்கன்று, காவிரித்தாய் அனைத்து நீர் நிலைகளிலும் வியாபித்திருப்பார். நம் வீட்டின் அருகில் இருக்கும் நீர்நிலைகளிலும் காவிரித்தாய்தான் நிறைந்திருப்பார்.</p> <p>ஆடிப்பெருக்கு அன்று, அதிகாலையில் குளித்து விட்டு வீட்டில் விளக்கேற்றி வழிபட வேண்டும். பின்னர், ஆற்றங்கரையில் ஓர் இடத்தை தேர்வு செய்து, அதில் இலை விரித்து அகல் விளக்கு ஏற்றி வைக்கிறார்கள். மேலும் வெற்றிலை, எலுமிச்சம் பழம், பழங்கள் படைத்து, கற்பூர தீபம் காட்டி வழிபட வேண்டும்.</p><p>சிலர், வாழை இலையில் தீபம் ஏற்றி, மங்கலப் பொருட்களோடு நதியில் மிதக்கவிட்டு வணங்குவார்கள். அப்போது காவிரித்தாயை மனதில் நினைத்து கொள்ள வேண்டும். இது பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாகும். அதோடு, வீட்டில் இருந்து கலவை சாதம் தயார் செய்து கொண்டுவந்து, ஆற்றங்கரையில் அமர்ந்து குடும்பத்தோடு உண்டு மகிழ்வார்கள். அதில் தயிர்சாதம் முக்கிய இடம் வகிக்கிறது.</p><h2>தாலிச் சரடு மாற்றுதல்</h2><p>புதிதாக திருமணமான பெண்கள், ஆடிப்பெருக்கு அன்று தாலி கயிற்றை மாற்றிக்கொள்வர். அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, தங்கள் தாலியில் உள்ள மஞ்சள் கயிற்றை நீக்கிவிட்டு, புதிய மஞ்சள் கயிற்றை தங்கள் கணவன் கையால் கட்டிக் கொள்வார்கள். இதன்மூலம் மாங்கல்ய பாக்கியம் நீடிக்கும் என்பது நம்பிக்கை.</p> <p>கன்னிப் பெண்களும் அம்மனை நினைத்து மஞ்சள் கயிற்றை கட்டிக்கொள்கிறார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் விரைவில் அவர்களுக்கு நல்ல வரன் அமையும் என்கிறார்கள். சுமங்கலிகள், தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறார்கள்.</p><h2>நல்ல தொடக்கம்</h2><p>பொதுவாக ஆடி மாதத்தில் திருமணம் போன்ற எந்தவித சுபகாரியங்களையும் செய்ய மாட்டார்கள். ஏனென்றால் இந்த மாதம் முழுவதும் இறைவனுக்கு ஒதுக்கப்பட்ட மாதம் ஆகும். ஆனால் ஆடிப்பெருக்கு அன்று மட்டும் நல்ல நேரம் பார்த்து, நல்ல காரியங்களை மேற்கொள்ளலாம்.</p>]]></content:encoded></item><item><title>சுதந்திர தின பாதுகாப்பு: டெல்லியில் ஆகஸ்ட் 16 வரை டிரோன்கள் பறக்கத் தடை-காவல்துறை உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-independence-day-drone-ban-till-aug-16</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-independence-day-drone-ban-till-aug-16#comments</comments><guid isPermaLink="false">80a588cc-4804-4476-980b-9e789533e953</guid><pubDate>Sat, 01 Aug 2026 06:14:47 +0000</pubDate><atom:updated>2026-08-01T06:14:47.383Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DRONES,Independence Day,டிரோன்கள்,டெல்லி செங்கோட்டை,Red Fort Delhi,சுதந்திர தின பாதுகாப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/xwfgaojk/delhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Red Fort Delhi  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/xwfgaojk/delhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாட்டின் 78-வது சுதந்திர தினவிழா வரும் 15 அன்று தலைநகர் டெல்லி செங்கோட்டையில் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். இதனை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு டெல்லி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.</p><p>இதன் ஒரு பகுதியாக, தேசிய தலைநகர் பகுதியில் வான்வழி மூலம் நிகழக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களைத் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாளை முதல் 16ஆம் தேதி வரை டிரோன்கள் மற்றும் சிறிய ரக வான்வழி சாதனங்களைப் பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>காவல்துறை ஆணையர் உத்தரவு:</strong></h2><p>டெல்லி காவல்துறை ஆணையர் அனுராக் குமார், புதிய குற்றவியல் சட்டமான 'பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா' (BNSS), 2023 சட்டப் பிரிவு 163-ன் கீழ் இந்தத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளார். </p><figure><img alt="Police order ban on drones " src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/x38xlx3y/independence.jpg" /></figure><p>இந்த கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 16 ஆம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>தடை செய்யப்பட்ட சாதனங்கள்:</strong></h2><p>* ட்ரோன்கள் மற்றும் ட்ரோன் கேமராக்கள்</p><p>* ட்ரோன் அல்லாத வான்வழி வாகனங்கள்</p><p>* குவாட்காப்டர்கள் </p><p>* பாராகிளைடர்கள் மற்றும் பாரா-மோட்டார்கள்</p><p>* ஹேங் கிளைடர்கள் மற்றும் மைக்ரோலைட் விமானங்கள்</p><p>* ஹாட்டேர் பலூன்கள் </p><p>* பாரசூட் குதித்தல் </p><h2><strong>பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணம்:</strong></h2><p>சமூக விரோதிகள் அல்லது தீவிரவாத அமைப்புகள் இதுபோன்ற வான்வழி சாதனங்களைப் பயன்படுத்தி முக்கியத் தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் முக்கியமான அரசு தலைமை அலுவலகங்களுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடும் என்ற உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்தத் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.</p><h2><strong>மீறினால் கடுமையான நடவடிக்கை:</strong></h2><p>இந்த தடை உத்தரவை மீறி யாரேனும் டிரோன்கள் அல்லது பிற சாதனங்களைப் பறக்கவிட்டால், அவர்கள் மீது 'பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப் பிரிவு 223-ன் கீழ்' கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சம்பந்தப்பட்ட சாதனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் டெல்லி காவல்துறை எச்சரித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சுயராஜ்யம் எனது பிறப்புரிமை: தேசியவாதத்தின் தந்தை லோக்மான்ய திலகரின் நினைவு தினம் இன்று!</title><link>https://www.maalaimalar.com/news/national/swaraj-is-my-birthright-father-of-indian-nationalism</link><comments>https://www.maalaimalar.com/news/national/swaraj-is-my-birthright-father-of-indian-nationalism#comments</comments><guid isPermaLink="false">d1751b2f-14c8-48a8-b232-8a1d442aed1e</guid><pubDate>Sat, 01 Aug 2026 05:44:04 +0000</pubDate><atom:updated>2026-08-01T05:44:04.773Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Lokmanya Tilak,Father of the Indian Unrest,Gita Rahasya,இந்திய அமைதியின்மையின் தந்தை,பால் கங்காதர திலகர்,கீதா ரஹஸ்யம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/x4wb0ikb/tilak.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Lokmanya Tilak ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/x4wb0ikb/tilak.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய சுதந்திரப் போராட்டத்தை சாமானிய மக்களின் பெரும் இயக்கமாக மாற்றிய முன்னணித் தலைவரும், தீவிர தேசியவாதத்தின் தந்தையுமான 'லோக்மான்ய' பால் கங்காதர திலகரின் நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 1) அனுசரிக்கப்படுகிறது. இந்திய விடுதலையின் வரலாற்றில் திலகரின் பங்களிப்பு, அவரது இதழியல் பணி, பண்பாட்டு விழிப்புணர்வு மற்றும் வரலாற்றுத் தாக்கம் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.</p><h2><strong>சுயராஜ்யம் எனது பிறப்புரிமை:</strong></h2><p>1856 ஜூலை 23 அன்று மகாராஷ்டிராவின் ரத்னகிரியில் பிறந்த பால் கங்காதர திலகர், சிறுவயதிலிருந்தே கூர்மையான கணிதப் புலமையையும், சமூக அக்கறையையும் கொண்டிருந்தார். ஆங்கிலேயர் ஆட்சியை ஒருபோதும் நிரந்தரமான ஒன்றாக அவர் ஏற்றுக்கொண்டதில்லை. சுதந்திரப் போராட்டக் காலத்தில் அவர் முழங்கிய "சுயராஜ்யம் (சுய ஆட்சி) எனது பிறப்புரிமை, அதை நான் அடைந்தே தீருவேன்" என்ற புகழ்பெற்ற முழக்கம், நாடு முழுவதும் சுதந்திரத் தீயை மூட்டியது.</p><h2><strong>பத்திரிகைத் துறை மூலம் மக்கள் விழிப்புணர்வு:</strong></h2><p>ஆங்கிலேயர்களின் பொருளாதாரச் சுரண்டலை மக்களுக்கு வெளிப்படுத்தவும், அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் திலகர் இரண்டு முக்கியப் பத்திரிகைகளைத் தொடங்கினார். மராத்தி மொழியில் 'கேசரி' என்ற பத்திரிகையும், ஆங்கில மொழியில் 'தி மராட்டா' என்ற பத்திரிகையையும் தொடங்கினார். இப்பத்திரிகைகள் மூலம் பிரிட்டிஷ் அரசின் அடக்குமுறைகளை விமர்சித்து அவர் எழுதிய கட்டுரைகள், இந்தியர்களிடையே அச்சத்தைப் போக்கி வீரியத்தை விதைத்தன.</p><h2><strong>விநாயகர் சதுர்த்தி &amp; சிவாஜி ஜெயந்தி விழாக்கள்:</strong></h2><p>மக்களிடையே ஒற்றுமையையும் தேசபக்தியையும் உருவாக்க, வீடுகளுக்குள் முடங்கிக்கிடந்த 'விநாயகர் சதுர்த்தி' வழிபாட்டைப் பொதுமக்களுக்கான விழாவாக மாற்றினார். மேலும் 'சத்ரபதி சிவாஜி ஜெயந்தி' விழாவையும் மக்கள் திருவிழாவாக ஒருங்கிணைத்து, அரசியல் கருத்துக்களைக் கொண்டு சேர்க்கும் களமாகப் பயன்படுத்தினார்.</p><h2><strong>'லால் - பால் - பால்' கூட்டணி &amp; சுதேசி இயக்கம்:</strong></h2><p>லாலா லஜபதி ராய் (பஞ்சாப்), பால் கங்காதர திலகர் (மகாராஷ்டிரா), பிபின் சந்திர பால் (வங்காளம்) ஆகிய மூவரும் இணைந்து 'லால் - பால் - பால்' கூட்டணி உருவாக்கினர். வங்கப் பிரிவினைக்கு எதிராக அந்நியப் பொருட்களைப் புறக்கணிக்கும் 'சுதேசி இயக்கத்திற்கு' திலகர் வலுவான தலைமை தாங்கினார்.</p><h2><strong>ஹோம் ரூல் இயக்கம்:</strong></h2><p>1916-இல் அன்னி பெசண்ட் அம்மையாருடன் இணைந்து 'தன்னாட்சி இயக்கத்தை'  திலகர் தொடங்கினார். இது கிராமங்கள் தோறும் தன்னாட்சிக் கருத்தைக் கொண்டு சேர்க்க உதவியது.</p><h2><strong>பிரிட்டிஷாரின் சிறை தண்டனையும் 'கீதா ரஹஸ்யமும்':</strong></h2><p>பிரிட்டிஷ் அரசு திலகருக்கு 'இந்திய அமைதியின்மையின் தந்தை' என்று பெயரிட்டது. புரட்சியாளர்களை ஆதரித்து எழுதியதற்காக அவர் மீதான தேசத்துரோக வழக்குகளின் கீழ், பர்மாவின் (தற்போதைய மியான்மர்) மண்டாலே சிறையில் 6 ஆண்டுகள் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்த காலத்தில் அவர் எழுதிய 'கீதா ரஹஸ்யம்' என்ற நூல், பகவத் கீதையின் கடமை மற்றும் தியாகக் கருத்துக்களை விளக்கும் ஒரு தலைசிறந்த படைப்பாக இன்றளவும் போற்றப்படுகிறது.</p><h2><strong>வரலாற்று முக்கியத்துவம்:</strong></h2><p>1920 ஆகஸ்ட் 1 அன்று மும்பையில் திலகர் காலமானார். அவரது இறுதி ஊர்வலத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். திலகரின் மறைவுக்குப் பிறகுதான் மகாத்மா காந்தி இந்திய சுதந்திரப் போராட்டத்தின் அடுத்தகட்டப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். நாட்டின் இளம் தலைமுறையினருக்கு வீரியமிக்க தேசிய உணர்வை விதைத்த திலகரை, பண்டிட் ஜவஹர்லால் நேரு "இந்தியப் புரட்சியின் தந்தை" என்றும், மக்கள் அன்போடு 'லோக்மான்ய' (மக்களால் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்) என்றும் அழைத்து கவுரவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>&apos;இதுவே எனது முதல் மற்றும் கடைசி தவறு&apos;: பிரதமர் மோடியை விமர்சித்த 15 வயது சிறுமி பகிரங்க மன்னிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/this-is-my-first-and-last-mistake-15-year-old-girl-apologises-for-remarks-against-pm-modi</link><comments>https://www.maalaimalar.com/news/national/this-is-my-first-and-last-mistake-15-year-old-girl-apologises-for-remarks-against-pm-modi#comments</comments><guid isPermaLink="false">1105bdcf-16e0-44a1-bf64-20769ff2513d</guid><pubDate>Sat, 01 Aug 2026 05:17:56 +0000</pubDate><atom:updated>2026-08-01T05:17:56.400Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Jantar Mantar,pm modi,பிரதமர் மோடி,டெல்லி,காக்ரோச் ஜனதா கட்சி,CJPProtest</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/v37j81fx/modi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM MODI]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/v37j81fx/modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது, இந்தியப் <a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-reacts-to-abusive-videos">பிரதமர் நரேந்திர மோடி</a>க்கு எதிராக அவதூறு கோஷங்களை எழுப்பியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 15 வயது சிறுமி, சமூக வலைதளங்களில் கைகூப்பி மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியிட்டுள்ளார். </p><p>டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி அவதூறாகவும், அசிங்கமான முழக்கங்களையும் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு உள்ளான 15 வயதுச் சிறுமி, தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வெளியீட்டின் மூலம் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.</p><h2><strong>சம்பவம் பின்னணி:</strong></h2><p>கடந்த ஜூலை 23 அன்று டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் முறைகேட்டை  'காக்ரோச் ஜனதா கட்சி' சார்பாகப் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட நோய்டாவைச் சேர்ந்த ஒரு சிறுமி, பிரதமர் மோடி மற்றும் அவரது மறைந்த தாயாரைப் பற்றி மிகவும் அவதூறான முறையில் முழக்கங்களை எழுப்பியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, நோய்டாவின் எக்ஸ்பிரஸ்வே காவல் நிலையத்தில் கடந்த ஜூலை 29 அன்று அந்த சிறுமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.</p><h2><strong>சிறுமிக்கு எதிரான சட்டப் பிரிவுகள்:</strong></h2><p>இந்திய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ், அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் நோக்கில் செயல்படுதல், பொது அமைதியைக் கெடுக்கும் வகையில் வதந்தி அல்லது தகவல்களைப் பரப்புதல், அவதூறு வழக்கு போன்ற பிரிவுகளின் கீழ் சிறுமி மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.</p><p>சம்பவம் டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்ததால், இந்த Zero FIR தற்போது மேலதிக விசாரணைக்காக டெல்லியில் உள்ள பார்லிமென்ட் ஸ்ட்ரீட் காவல் நிலையத்திற்கு  மாற்றப்பட்டுள்ளது.</p><h2><strong>வழக்கு வேண்டாம்-வழிகாட்டுங்கள்:</strong></h2><p>இந்த விவகாரம் குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ செய்தியைப் பகிர்ந்திருந்தார்.</p><p>"எனக்கு எதிராகவும், எனது மறைந்த தாயாருக்கு எதிராகவும் எழுப்பப்பட்ட அவதூறு முழக்கங்கள் என்னை ஆழமாகப் காயப்படுத்தின. இருப்பினும், தவறு செய்யும் இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்கும் தண்டனையைத் தேடாமல், அவர்கள் தங்கள் தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ளவும், அவர்களைச் சரியான பாதையில் வழிகாட்டவும் சமூகம் வாய்ப்பளிக்க வேண்டும். நான் அந்த மாணவர்களை மன்னிக்கிறேன்,"* எனப் பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.</p><h2><strong>கைகளைக் கூப்பி மன்னிப்பு கேட்ட சிறுமி:</strong></h2><p>பிரதமரின் இந்தச் செய்தி வெளியான சில மணி நேரங்களிலேயே, அச்சிறுமியின் மன்னிப்பு வீடியோ இணையத்தில் வைரலானது. கன்னாட் பிளேஸ் பகுதிக்குச் சென்றுவிட்டுத் தனது நண்பர்களுடன் ஜந்தர் மந்தர் போராட்டத்தைப் பார்க்கச் சென்றதாகவும், அங்கு இருந்த சிலரின் தூண்டுதலால் உணர்ச்சிவசப்பட்டுத் தானும் அவ்வாறு முழக்கமிட்டதாகவும் சிறுமி கூறினார்.</p><h2><strong>மனவருத்தம்:</strong></h2><p>"எனக்கு 15 வயதுதான் ஆகிறது. நான் செய்த தவறு மன்னிப்புக்கு உரியது அல்ல. நான் மிகவும் வெட்கப்படுகிறேன். என்னால் என்னை நிமிர்ந்து கூடப் பார்க்க முடியவில்லை. இதுவே எனது முதல் மற்றும் கடைசித் தவறாக இருக்கும்," என்று கைகளைக் கூப்பியவாறு நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோரினார்.</p><h2><strong>காவல்துறை விசாரணை:</strong></h2><p>சிறுமி நோய்டாவில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் தனது தாயாருடன் வசித்து வந்த நிலையில், தற்போது அந்த வீடு பூட்டப்பட்டுள்ளது. காவல்துறை அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளது. போராட்டத்தை நடத்திய CJP கட்சியின் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் தெரிவிக்கையில், "தவறான அல்லது அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. </p><p>ஆனால், இதுபோன்ற கருத்துக்களுக்காகக் குற்றவியல் நடவடிக்கை எடுப்பது பேச்சு சுதந்திரத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும். பாதிப்படைந்தவர்கள் சிவில் அவதூறு வழக்கைச் சந்திக்கலாமே தவிர, காவல் துறை மூலம் நடவடிக்கை எடுப்பது சரியல்ல, எனக் கூறியுள்ளார். இவ்விகாரத்தில் காவல்துறை தனது அடுத்த கட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடர்ந்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சென்னை வருகை- தொண்டர்கள் உற்சாக வரவேற்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/congress-mp-rahul-gandhi-visits-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/congress-mp-rahul-gandhi-visits-chennai#comments</comments><guid isPermaLink="false">de61fb4b-c7f6-4217-8080-b32071689021</guid><pubDate>Sat, 01 Aug 2026 05:15:44 +0000</pubDate><atom:updated>2026-08-01T05:15:44.616Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Congress,காங்கிரஸ்,சென்னை வருகை,Chennai visit</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/i0orud0n/RG.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rahul gandhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/i0orud0n/RG.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாமல்லபுரத்தில் நடைபெறும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட தலைவர்களுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்க ராகுல் காந்தி சென்னைக்கு வருகை தந்துள்ளார்.</p><p>சென்னை விமான நிலையத்தில் மக்களவை ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.</p><h2>உற்சாக வரவேற்பு</h2><p>தமிழக காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் பயிற்சி முகாமின் நிறைவு விழாவில் பங்கேற்க வருகைத் தந்த ராகுல் காந்தியை மாநில காங்கிரஸ் தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-mekedatu-dam-issue-let-us-unite-avoid-politicizing-matter" rel="nofollow">மாணிக்கம் தாகூர்</a>, அமைச்சர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.</p><p>தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி முகாம் மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு சொந்தமான கடற்கரை விடுதியில் கடந்த 23-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.</p><h2>பயிற்சி முகாம்</h2><p>பயிற்சி முகாமின் நிறைவு நாளான இன்று (சனிக்கிழமை) நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்கிறார்.</p><p>இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட ராகுல் காந்தி காலை 10.05 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-if-rahul-gandhi-makes-a-single-statement-we-will-withdraw-from-the-alliance" rel="nofollow">ராகுல் காந்தி</a>க்கு மாநில காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், அமைச்சர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.</p><p>பின்னர் அங்கிருந்து மாமல்லபுரத்தில் நடைபெறும் பயிற்சி முகாமிற்கு செல்கிறார். அங்கு, மாவட்டத் தலைவர்கள் பயிற்சி முகாமில் பங்கேற்று உரையாற்றுகிறார்.</p><h2>நிர்வாகிகளுடன் சந்திப்பு</h2><p>பின்னர், மாவட்டத் தலைவர்களின் குடும்பத்தினரை சந்திக்கிறார். மாலை 4 மணியளவில் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து உரையாடுகிறார்.</p><h2>நீட்</h2><p>அதே போன்று, கோவை மற்றும் சேலம் பகுதிகளில் நீட் தேர்வால் பலியான 4 மாணவ-மாணவிகளின் பெற்றோரை சந்திப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. பின்னர் சென்னை வந்து இரவு 7 மணிக்கு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.</p>]]></content:encoded></item><item><title>7,000mAh பேட்டரியுடன் ரூ. 20,000 பட்ஜெட்டில் புது ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்!</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/oneplus-n6x-launches-in-india-with-7000mah-battery</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/oneplus-n6x-launches-in-india-with-7000mah-battery#comments</comments><guid isPermaLink="false">18797cef-0e57-4083-9236-8e39730ac2af</guid><pubDate>Sat, 01 Aug 2026 04:47:00 +0000</pubDate><atom:updated>2026-08-01T04:47:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>OnePlus,ஒன்பிளஸ்,smartphone,ஸ்மார்ட்போன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/mhhqpjng/OnePlus-N6x.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ OnePlus N6x]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/mhhqpjng/OnePlus-N6x.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/oneplus">ஒன்பிளஸ்</a> நிறுவனம், ஒன்பிளஸ் N6x ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் மூலம் இந்தியாவில் தனது மலிவு விலை ஸ்மார்ட்போன் சீரிசை ஒன்பிளஸ் நிறுவனம் விரிவுபடுத்தியுள்ளது.</p><p>புதிய <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மார்ட்போன்</a> ஒன்பிளஸ் N6 மாடலின் கீழ் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன், பேட்டரி லைஃப் மற்றும் நீடித்து உழைக்கும் தன்மைக்கு முன்னுரிமை அளிப்பதோடு, பல ஆண்டுகளாக அந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களில் இல்லாத 3.5mm ஹெட்போன் ஜாக் அம்சத்தையும் மீண்டும் அறிமுகப்படுத்துகிறது.</p><h2>அம்சங்கள்:</h2><p>ஒன்பிளஸ் N6x ஸ்மார்ட்போன் 6.8-இன்ச் HD+ (1570×720 பிக்சல்கள்) எல்.சிடி. ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டைமென்சிட்டி 6360 அபெக்ஸ் சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.</p><p>ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ஆக்சிஜன் ஓஎஸ் 16 கொண்டிருக்கும் புது ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் 7,000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 15 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் IP64 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி மற்றும் MIL STD-810H தர மிலிட்டரி கிரேடு சான்று பெற்றிருக்கிறது.</p><p>வடிவமைப்பைப் பொறுத்தவரை, ஒன்பிளஸ் N6x கடந்த ஆண்டு வெளியான ஒன்பிளஸ் நோர்ட் CE5 மாடலில் இருந்து பல அம்சங்களை கடன் வாங்கியுள்ளது. இதன் மேல் இடதுபுற ஓரத்தில் செங்குத்தாக அமைந்துள்ள டேப்லெட் வடிவ பின்புற கேமரா மாட்யூல் இடம்பெற்றுள்ளது.</p><p>அதே சமயம், முன்பக்கத்தில் வாட்டர்டிராப் நாட்ச் மற்றும் ஒப்பீட்டளவில் தடிமனான பெசல்களைக் கொண்ட டிஸ்ப்ளே ஆகியவை, இது ஒரு என்ட்ரி லெவல் மாடல் என்பதை பிரதிபலிக்கின்றன.</p><h2>விலை விவரங்கள்:</h2><p>இந்தியாவில் ஒன்பிளஸ் N6x-ன் விலை, 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட அடிப்படை வேரியண்ட்டிற்கு ரூ. 19,999-ல் தொடங்குகிறது. </p><p>இது 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மற்றொரு வேரியண்ட்டிலும் வருகிறது. இந்த கைபேசி பர்கண்டி ரெட் மற்றும் ஐஸ் ப்ளூ ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.</p><p>ஒன்பிளஸ் N6x-க்கான விற்பனை, ஒன்பிளஸ் இந்தியா ஆன்லைன் ஸ்டோர், அமேசான் இந்தியா மற்றும் பிற தளங்களில் ஆகஸ்ட் 04-ஆம் தேதி மதியம் 12 மணிக்குத் தொடங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>திமுக பொறுப்பில் இருந்து தோப்பு வெங்கடாசலம் விடுவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thoppu-venkatasalam-relieved-from-dmk-post</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thoppu-venkatasalam-relieved-from-dmk-post#comments</comments><guid isPermaLink="false">c9245c2c-874f-4f25-9f69-a6db1eaa4b32</guid><pubDate>Sat, 01 Aug 2026 04:39:19 +0000</pubDate><atom:updated>2026-08-01T04:39:19.568Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,duraimurugan,தோப்பு வெங்கடாசலம்,துறைமுருகன்,Thoppu venkadachalam</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/tuuj5jwt/thoppu.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Thoppu Venkadasalam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/tuuj5jwt/thoppu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுகவின் ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் பொறுப்பில் இருந்து <a href="https://www.maalaimalar.com/news/tamil-news-former-aiadmk-minister-thoppu-venkatachalam" rel="nofollow">தோப்பு வெங்கடாசல</a>ம் விடுவிக்கப்பட்டுள்ளார்.</p><p>அந்த மாவட்டத்திற்கு உட்பட்ட பெருந்துறை மற்றும் பவானி தொகுதிகள் முறையே ஈரோடு தெற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களுடன் இணைக்கப்பட்டு அந்தந்த மாவட்டச் செயலாளர்களின் கீழ் நிர்வகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் தோப்பு வெங்கடாசலம் அவர்களை, அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, ஈரோடு மத்திய மாவட்டத்திற்குரிய சட்டமன்ற தொகுதிகளான பெருந்துறை தொகுதி ஈரோடு தெற்கு மாவட்டத்திலும், பவானி தொகுதி ஈரோடு வடக்கு மாவட்டத்திலும் இணைக்கப்பட்டு அந்தந்த மாவட்ட கழகச் செயலாளர்கள் நிர்வகிப்பார்கள்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>அதிமுக டூ திமுக</h2><p>ஈரோட்டில் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராக இருப்பவர் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம்.</p><p>அதிமுகவில் இருந்தபோது ஈரோடு மாவட்டத்தில் கட்சியை வலுப்படுத்த முக்கிய பங்காற்றினார். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF" rel="nofollow">பெருந்துறை தொகுதி</a>யிலிருந்து  சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், அமைச்சராகவும் பணியாற்றினார்.</p><p>இதனையடுத்து 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது தோப்பு வெங்கடாச்சலத்திற்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாத காரணத்தால் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியால் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனையடுத்து 2021ஆம் ஆண்டு திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.</p><h2>காரணம் என்ன?</h2><p>உட்கட்சி பூசல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தோப்பு வெங்கடாச்சலத்திற்கும் முன்னாள் அமைச்சர் முத்துசாமிக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. </p><p>இதனால், கட்சி பணியில் ஈடுபடாமல் தோப்பு வெங்கடாச்சலம் ஒதுங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், பொறுப்பில் இருந்து தோப்பு வெங்கடாச்சலம் நீக்கப்பட்டுள்ளார்.</p><h2>தவெக-ல் இணைய முடிவு?</h2><p>அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த தோப்பு வெங்கடாசலம், கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெருந்துறை தொகுதியில் அதிமுக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். அதனால், திமுகவில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் ஆளுங்கட்சியான <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/continuous-changes-under-the-tvk-government-now-the-thayumanavar-scheme-has-been-renamed" rel="nofollow">தவெக</a>வில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிகின்றன.</p>]]></content:encoded></item></channel></rss>