<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 03 Sep 2026 12:20:29 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: நீட் ஒழிப்பு ரகசியம் இருக்கிறது என கூறியது தான் காதுகுத்து: அமைச்சர் ராஜ்மோகன் - 3 செப். 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-3-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-3-september-2026#comments</comments><guid isPermaLink="false">ea8bcccc-7a9b-4b92-af1a-1b1e45c9f097</guid><pubDate>Thu, 03 Sep 2026 03:50:13 +0000</pubDate><atom:updated>2026-09-03T12:18:09.323Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/40phxesb/rajmohan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/40phxesb/rajmohan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நான் பயன்படுத்துவது சாதாரண கண்ணாடிதான். இதை அணிந்துகொண்டுதான் பேரவைக்கு செல்கிறேன். இதில் கேமரா இருப்பதாகப் பொய்யான தகவல்களை பரப்புபவர்களுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>META AI கேமரா கொண்ட மூக்குக்கண்ணாடி மூலம் பேரவை நிகழ்வுகளை படம் பிடிப்பதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களுக்கு அமைச்சர் பர்வேஸ் விளக்கம்.</p><p>எம்எல்ஏக்கள் நினைத்தால் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிக்கலாம்.</p><p>அந்தந்த தொகுதி எம்எல்ஏக்களுக்கு தெரியாமல் அந்த தொகுதியில் நடக்காது என முதல்வர் கூறினார்- அமைச்சர் ஆதவ் அர்ஜூனா.</p><p>தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு. </p><p>தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் குற்றச்சாட்டு.</p><p>தமிழகத்தில் முதியவர்கள் தனியாக வகிக்கும் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.</p><p>சேலத்தில் உள்ள எனது தோட்டத்தில் இருந்த மின்மோட்டாரின் ஒயர்களை திருடி சென்றுள்ளனர்- இபிஎஸ்.</p><p>தமிழகத்தில் அரிசி விலை உயர்ந்து வரும் நிலையில், அரிசி கடத்தலை தடுக்க வேண்டும்- இபிஎஸ்.</p><p>நியாயமான போராட்டங்களுக்கு தமிழக வெற்றிக் கழக அரசு அனுமதி அளிக்க வேண்டும்.</p><p>பொது மக்களின் பிரச்சனைகளுக்காக தான் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துகின்றன- இபிஎஸ்.</p><p>இணையவழி குற்றங்களை ஆரம்ப காலத்திலேயே தடுக்க தமிழக வெற்றிக் கழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- இபிஎஸ்</p><p>மக்களிடம் ஆதாரங்கள் இருந்தாலும் போக்குவரத்து காவல்துறை அபராதம் வசூலிப்பதாக புகார் வருகிறது. அதை தடுக்க வேண்டும்.</p><p>வாகன ஓட்டிகளிடம் வசூலித்த அபராதத்தை கரூவூலத்தில் செலுத்தாமல் வட்டிக்கு விடுவதாக செய்தி வருகிறது, கண்காணிக்க வேண்டும்- இபிஎஸ்.</p><p>வாகன ஓட்டிகளிடம் வசூலித்த அபராதத்தை கருவூலத்தில் செலுத்தாமல் வட்டிக்கு விடுவதாக செய்தி வருகிறது, கண்காணிக்க வேண்டும்.</p><p>இன்னும் பல இடங்களில் பைக் ரேஸ் நடப்பதாக செய்திகள் வருகிறது, அதனை தடுக்க தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>இணையவழி குற்றங்களை ஆரம்ப காலத்திலேயே தடுக்க தமிழக வெற்றிக் கழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- இபிஎஸ்</p><p>சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் இடங்களை கண்டறிந்து, அதனை சரி செய்ய வேண்டும்.</p><p>மக்களிடம் ஆதாரங்கள் இருந்தாலும் போக்குவரத்து காவல்துறை அபராதம் வசூலிப்பதாக புகார் வருகிறது, அதை தடுக்க வேண்டும் -  எடப்பாடி பழனிசாமி</p><p>காவல் நிலையங்களின் உள்ளே 24 மணி நேரமும் சிசிடிவி கேமராக்கள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>சாலைகளில் உள்ள சிசிடிவி-களில் தூசுகள் படிந்து பதிவுகள் முறையாக கிடைப்பதில்லை, அதை பராமரிக்க வேண்டும் -  எடப்பாடி பழனிசாமி</p> <p>பெண் காவலர்களை இரவு நேரங்களில் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்படுவதை தவிர்க்க வேண்டும்.</p><p>காவலர்களின் மன அழுத்தத்தை குறைக்க அதிமுக ஆட்சியில் அளித்தது போல தவெகவும் சிறப்பு புத்தாக்க பயிற்சி அளிக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி</p> <p>காவலர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும் என தவெக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.</p><p>காவல் ஆய்வாளர்கள் பலர் ஓய்வு பெற உள்ளனர். அவர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி உயர்வு வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி</p><p>மக்கள்தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப காவலர் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்.</p><p>அதிமுக ஆட்சியில் காவலர்களுக்கு முறையாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. பணியிடங்கள் நிரப்பப்பட்டன.</p><p>காவலர்கள் எண்ணிக்கையை அதிகரியுங்கள், ஒருவர் பணி ஓய்வு பெறுகிறார் என்றால் ஓராண்டு முன்பே பணியிடத்தை நிரப்புங்கள் -  எடப்பாடி பழனிசாமி</p> <p>எடப்பாடி தொகுதியில் ஜலகண்டபுரத்தில் புறவழிச்சாலை அமைக்க 80% நிலம் எடுப்பு பணிகள் முடிந்து விட்டது.</p><p>திமுக ஆட்சியில் கைவிட்ட புறவழிச்சாலை திட்டத்தை தவெக அரசு செயல்படுத்த வேண்டும்.</p><p>அதிமுக ஆட்சியை போல் விவசாயிகள் 22 மணி நேரம் மின் மோட்டாரை இயக்க அனுமதி வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி</p><p>சட்டசபையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரை</p><p>கொரோனா காலகட்டத்தில் காவல்துறையினர் சிறப்பாக கணியாற்றினர். அவர்களால் பல உயிர்கள் காக்கப்பட்டது.</p><p>அதிமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாக்கப்பட்டனர். சட்டம், ஒழுங்கு சீராக இருந்தது.</p><p>உலகத்தரத்தில் தமிழ்நாடு காவல்துறையினருக்கு சீருடை வழங்க வேண்டும் - பிரேமலதா கோரிக்கை</p><p>திருநங்கைகள் மிகவும் தைரியமானவர்கள், அவர்களை சிங்கப்பெண் அதிரடிப்படையில் சேர்க்க வேண்டும்.</p><p>அதிக வழக்குகளை கையாளும் காவல்நிலையங்களில் கூடுதல் காவலர்களை நியமிக்க வேண்டும்.</p><p>போக்குவரத்து காவலர்களுக்கு உணவு, பழச்சாறு, கழிப்பறை வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் -  பிரேமலதா</p> <p>காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>காவல்துறையில் கூடுதல் பணியிடங்களை உருவாக்கி புதியவர்களை நியமிக்க வேண்டும்.</p><p>8 மணி நேரம் வேலை, வார விடுப்பு போன்றவற்றை படிப்படியாக அமல்படுத்த வேண்டும்  - பிரேமலதா</p> <p>நான் 2 மணி நேரம் பேசவில்லை. வெறும் 35 நிமிடங்கள் தான் பேசி உள்ளேன் என அக்கா பிரேமலதாவிற்கு கூறிக்கொள்கிறேன் - உதயநிதி</p><p>காவல்துறைக்கு அடையாளமாக வாழ்ந்தவர் கேப்டன் விஜயகாந்த் - பிரேமலதா</p><p>இது சட்டசபை, சண்டை சபை இல்லை.</p><p>தங்களுக்கான அறிவிப்புகள் வரப்போகிறது என ஆயிரக்கணக்கான காவலர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் - பிரேமலதா</p><h2>சட்டசபையில் பிரேமலதா உரை</h2><p>நாங்கள் எதிர்க்கட்சிகள் தான் எதிரி கட்சிகள் இல்லை. கடந்த 2 மணி நேரத்தில் விவாதம் மட்டும் நடந்து வருகிறது.</p><p>இன்று சட்டசபையில் உதயநிதி மட்டும் தான் பேசியிருக்கிறார். எந்த உறுப்பினரும் பேசவில்லை.</p> <p>ஆபத்து இருக்கும்போது தயாராக இருப்பது நல்லதுதான், தவெக ஆட்சியில் அதிக ஆபத்து உள்ளதால் தயாராக உள்ளோம்- உதயநிதி ஸ்டாலின்.</p><p>தவெக ஆட்சியை மைக்ரோ ஸ்கோப் வைத்து பார்த்து 100 நாள் தயார் செய்த ஸ்கிரிப்டை உதயநிதி வாசித்துள்ளார்.</p><p>கேள்வி கேட்டுகும் இடத்தில் மட்டும் தான் திமுக இருக்கும்- சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ்.</p><p>அமைச்சர் ஒவ்வொருவரும் பாடம் எடுப்பதுபோல் ஒரு மணி நேரம் பேசினால் எப்படி?- கே.என்.நேரு</p><p>நீதியரசர் அருணா ஜெகதீசன் அறிக்கை நாங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை, நீங்கள் நடவடிக்கை எடுங்கள்.</p><p>தவெக அரசுக்கு தைரியம் இருந்தால் நீதியரசர் அருணா ஜெகதீசன் அறிக்கை மீது நடவடிக்கை எடுக்கட்டும் என உதயநிதி சவால் விடுத்துள்ளார்.</p><p>தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் உத்தரவிட்ட அதிகாரிகள் மீது திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.</p><p>நீதியரசர் அருணா ஜெகதீசன் அறிக்கை மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? உயிரிழந்த மக்களுக்கு என்ன பதில்?- அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</p><p>நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறற எதிர்கட்சி தலைவருக்கும் 3 நாள் அவகாசம் உள்ளது.</p><p>காவல்துறையில் தவறு நடந்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கும் அரசு தவெக அரசு.</p><p>கன்னியாகுமரி காவல்நிலைய மரணத்தில் தொடர்புபகைய அனைத்து காவலர்களும் கைது செய்யப்பட்டனர்.</p><p>போதைப்புழக்கம், மதுப்பழக்கத்தால் திமுக ஆட்சியில் குற்றங்கள் அதிகரிப்பு, போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க தவறிவிட்டனர்- ஆதவ் அர்ஜூனா. </p><p>பட்டிமன்றத்தில் பேசியவர் என உதயநிதி கூறியதை இழிவாக பேச வேண்டாம் - அமைச்சர் ராஜ்மோகன்.</p><p>இழிவாக பேசவில்லை, நான் பட்டிமன்றத்தை விரும்பிப் பார்ப்பவன் என எதிர்கட்சித்தலைவர் உதயநிதி விளக்கம்.</p><p>பட்டிமன்றத்திற்கு பேசிய என்னை சட்டமன்றத்திற்கு அழைத்து வந்தவர் முதலமைச்சர் விஜய்.</p><p>பட்டிமன்றத்தில் பேசியவர் என உதயநிதி கூறியதை இழிவாக பேச வேண்டாம் - அமைச்சர் ராஜ்மோகன்.</p><p>நான் அவைக்கு சரியாக வருவதில்லை என அமைச்சர் கூறினார், வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டுள்ளேன், பாருங்கள். </p><p>பட்டிமன்ற பேச்சாளர் ராஜ்மோகன் அமைச்சராவதற்கு முன்பு திமுகவை ஆதரித்து பல மேடைகளில் பேசினார். தற்போது தவெகவில் இருப்பதால் அமைச்சர் ராஜ்மோகன் மாற்றி பேசி வருகிறார்- உதயநிதி ஸ்டாலின்.</p><p>தவெக ஆட்சியில் சிங்கப்பெண்களுக்கே பாதுகாப்பில்லை என எதிர்கட்சி தலைவர் உதயநிதி குற்றம்சாட்டினார்.</p><p>மெரினாவுக்கு எப்படி பூட்டு போடுவது என சொல்லிக்கொடுத்தது முந்தைய திமுக அரசு தான். கடந்த 5 ஆண்டுகளாக பீச்சிற்கு பூட்டு போடுவதில் பிஎச்டி செய்தவர்கள் திமுக தான்.</p><p>திமுக ஆட்சியில் மெரினா கடற்கரையில் எந்த போராட்டத்திற்கு அனுமதி அளித்தார்கள் என ராஜ்மோகன் கேள்வி எழுப்பினார். </p><p>நான் பதிலளிக்கும்போது யாரும் ஓடிவிடக்கூடாது என முதமைச்சர் கூறிய வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்.</p><p>அந்த வார்த்தையை எல்லாம் நீக்க முடியாது என ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கையை நிராகரித்தார் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர். </p><p>திமுக ஆட்சியில் குற்றங்களே நடக்காததுபோல் நாடகம் ஆடினார்கள் என அமைச்சர் ராஜ்மோகன் குற்றச்சாட்டு.</p><p>தவெக ஆட்சியில் குற்றங்களை தடுக்க வரலாற்றில் முதன்முறையாக சிங்கப்பெண் அதிரடிப்படை உருவாக்கப்பட்டது- அமைச்சர் ராஜ்மோகன்.</p><p>அண்ணா பல்கலை மாணவி வழக்கின் எப்ஐஆர்-ஐ ஆன்லைனில் பதிவிட்டு அவரது அடையாளத்தை வெளிப்படுத்தியது திமுக அரசு. </p><p>புகார் அளித்த அரைமணி நேரத்தில் மாணவி பெயர், வீட்டின் முகவரியை வெளியிட்டு அவரை அச்சுறுத்தியது திமுக அரசு- அமைச்சர் ராஜ்மோகன்.</p><p>திமுக உறுப்பினர் ஜாபர் சாதிக் பல கோடி போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார்- அமைச்சர் ராஜ்மோகன்.</p><p>பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களில் அடையாளம் வெளியிடப்பட்டது - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>அமைச்சர் ராஜ்மோகன் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் அமளி</p><p>உண்மையில் நீட் ஒழிப்பு ரகசியம் எனக்குத்தெரியும் என்று உதயநிதி கூறியது தான் மிகப்பெரிய காதுகுத்து- அமைச்சர் ராஜ்மோகன்.</p><p>தரமான பதிலடி முதலமைச்சர் மூலமாக தரப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>சட்டசபையில் இருந்து இப்போது யார் ஓடியது என அனைவருக்கும் தெரியும் - உதயநிதி</p><p>நான் பதிலளிக்கும் போது யாரும் ஓடிவிடக்கூடாது என பிராமிஸ் தர வேண்டும் என புன்னகையுடன் கூறிவிட்டு புறப்பட்டார் முதலமைச்சர் விஜய்</p> <p>அனைத்து கேள்விகளுக்கும் திங்களன்று பதில் கூறுகிறேன். நான் பதில் கூறும்போது யாரும் ஓடிவிடக்கூடாது - முதலமைச்சர் விஜய்</p><p>டிஜிபி நியமனத்தில் யுபிஎஸ்சி-க்கும் அன்றைய திமுக அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது - உதயநிதி</p><p>3 ஆண்டுகளில் ஒரே மாதிரி 1,597 கொலைகள் பதிவானது எப்படி?- அமைச்சர் ஆதவ்</p> <p>சட்டசபையில் தவெகவினர் - திமுகவினர் இடையில் கடும் வாக்குவாதம்</p><p>எங்கள் முதலமைச்சருக்கு யாரும் உபதேசம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.</p><p>2020-ல் 1,597 கொலைகள், 2021-ல் 1,597 கொலைகள், 2022-ல் 1,597 கொலைகள் - அமைச்சர் ஆதவ்</p><p>முதலமைச்சர் தயாரானதால் தான் முதலமைச்சராக இருக்கிறார், நீங்கள் எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறீர்கள் - உதயநிதிக்கு ஆதவ் பதிலடி</p><p>திங்கள்கிழமை உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறப்படும். முதலமைச்சர் அமைதியாக இருப்பதே அவர் தயாராக இருப்பதற்கு சமம்  - சபாநாயகர் விளக்கம்</p><p>முதல்வரை விமர்சித்தால் கைது, ஆனால் பாஜகவினர் விமர்சித்தால் தவெக அரசு கண்டுகொள்வதில்லை.</p><p>உலகத்திலேயே கடற்கரைக்கு பூட்டு போட்ட ஒரே அரசு தவெக அரசு தான் - உதயநிதி ஸ்டாலின் </p><p>கடந்த 106 நாட்களில் தவெகவினர் சிக்கிய பல்வேறு புகார்களை சட்டசபையில் குறிப்பிட்டு உதயநிதி ஸ்டாலின் பேச்சு</p><p>106 நாட்களில் ஆளுங்கட்சியினர் பெண்களுக்கு எதிராக செய்த அட்ரா சிட்டிக்கு பெரிய லிஸ்டே உள்ளது.</p><p>தவெகவின் 106 நாளில் 8 காவல், சிறை மரணங்கள் நடந்துள்ளது. இதுகுறித்து முதல்வர் ஒரு Sorry கூட சொல்லவில்லை.</p><p>திமுக ஆட்சியின் காவல்நிலைய மரணத்தின்போது Sorry  வேண்டாம் நீதி வேண்டும் என்றவர் இப்போது Sorry கூட சொல்லவில்லை.</p><p>திமுக ஆட்சியில் கட்சியினர் தவறு செய்தால் வழக்கு பதியலாமா? வேண்டாமா? என 10 நாள் யோசிப்பீர்கள், நாங்கள் அப்படியில்லை.</p><p>தவெக ஆட்சியில் யார் தவறு செய்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ஆனந்த்</p><p>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசும்போது குறுக்கீடு வேண்டாம் - சபாநாயகர்</p> <p>தவறு செய்தவர் யாராக இருந்தாலும் முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.</p><p>புலன் விசாரணையில் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏவுக்கு தொடர்பில்லை என தெரிய வந்தது - அமைச்சர் ஆனந்த்</p><p>ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ மீதான புகாருக்கு அமைச்சர் ஆனந்த் பதில்</p><p>பெண் அளித்த புகாரில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>பாலியல் வன்கொடுமை புகாரில் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏவுக்கு தொடர்பில்லை.</p><p>ஆணவ கொலைகள் தற்போது காதல் மரணங்களாக மாறிவிட்டன.</p><p>தவெக எம்எல்ஏ மீதான பாலியல் வன்கொடுமை புகார் குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை - உதயநிதி</p><p>பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் விரைந்து தீர்ப்பு வாங்கி கொடுத்தோம்.</p><p>தமிழ்நாட்டில் கொலை நடக்காத நாளே இல்லை.</p><p>தவெக ஆட்சியில் 10 ஆணவ கொலைகள் நடந்துள்ளன - உதயநிதி</p><p>வருடத்திற்கு 6 இலவச சிலிண்டர் என வாக்குறுதி அளித்துவிட்டு இப்போது 3 சிலிண்டர் மட்டும் தான் என்கிறீர்கள்.</p><p>இதுவரை இல்லாத அளவில் திமுக ஆட்சியில் போதை பொருட்கள் பறிமுதல் - உதயநிதி</p><p>கொடுத்த வாக்குறுதிகளை பாதி பாதியாக நிறைவேற்றுவது ஏன்? - உதயநிதி</p> <p>திமுக ஆட்சியில் தமிழ்நாடு டாப் கியரில் சென்று கொண்டிருந்த தவெக ஆட்சியில் ரிவர்ஸ் கியரில் சென்று கொண்டிருக்கிறது.</p><p>தாய்மாமன் காது குத்து திட்டம் என பெயர் மாற்றம் செய்யலாம் - உதயநிதி</p><p>முந்தைய ஆண்டுகளை விட திமுக ஆட்சியில் சாதிய பாகுபாடு, பாலியல் வன்கொடுமைகள் குறைந்ததாக ஒப்புக்கொண்டதற்கு நன்றி.</p><p>தவெகவின் 100 நாள் ஆட்சியில் ஒன்று பழைய திட்டத்தை ரத்து செய்கிறீர்கள், இல்லை பழைய திட்டத்தை தொடர்கிறீர்கள்  -  உதயநிதி</p><p>திமுக ஆட்சியில் சாதிய கொலைகள் குறைந்துள்ளதாக கொள்கை விளக்க குறிப்பில் கூறி உள்ளீர்கள்.</p><p>பெயர் மாற்ற அறிவிப்பு அல்ல திட்டம் ரத்து என்ற அறிவிப்பு தான் வருகிறது -  உதயநிதி</p><h2>சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி உரை</h2><p>நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு எங்கள் மீதே பழி போடாமல் முதலமைச்சர் பதில் கூற வேண்டும்.</p><p>திமுக ஆட்சியில் குற்றங்கள் குறைந்திருப்பதாக கொள்கை விளக்கக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p> <p>காவல்துறை சிறப்பு பிரிவுகளுக்கு எதிர்பாரா செலவீனம் உயர்த்தப்படும்.</p><p>வண்டலூரில் உள்ள காவலர் உயர்பயிற்சியத்தில் உள் விளையாட்டு அரங்கு, விளையாட்டு வசதிகள் ரூ.23 கோடியில் ஏற்படுத்தப்படும்  - முதலமைச்சர் விஜய்</p> <p>நடப்பாண்டில் 10,000 பணியிடங்கள் நிரப்பப்படும்.</p><p>பணியின்போது துணிச்சலுடன் பணியாற்றி உயிரிழக்கும் காவலர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்கப்படும்.</p><p>பணியின்போது உயிரிழக்கும் காவலர் குடும்பத்திற்கு தரப்படும் கருணைத்தொகை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்வு - முதலமைச்சர் விஜய்</p><p>கூடுதல் காவல் பணியிடங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் உயர்த்தப்படும்.</p><p>போதைப்பொருளை ஒழிக்கும் கிராமங்களுக்கு ரூ.10 லட்சம் வீதம் 50 கிராமங்களுக்கு வழங்கப்படும்.</p><p>ரூ.212 கோடி ஒதுக்கீட்டில் காவல்துறை நவீனமயமாக்கப்படும் - முதலமைச்சர் விஜய்</p><p>காவல் நிலையங்களில் 29,108 கூடுதல் காவல் பணியிடங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் உருவாக்கப்படும்- முதலமைச்சர் விஜய்</p><p>காவல்துறை மீதான மானிய கோரிக்கையை தாக்கல் செய்தார் முதலமைச்சர் விஜய்</p><p>கலைஞரால் எப்போதும் பிள்ளையார் சுழி போட முடியாது பெரியார் சுழி தான் போட முடியும்.</p><p>தமிழ் வழக்காடு மொழியாக மாற்ற வேண்டும் என கோரிக்கைக்கு பிள்ளையார் சுழி போட்டவர் கலைஞர் என ரகுபதி பேசியதற்கு பதிலடி</p><p>ஐகோர்ட்டில் தமிழை முதன்மை மொழியாக்கக்கோரி முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்திற்கு விசிக ஆதரவு.</p><p>ஐகோர்ட்டில் தமிழை முதன்மை மொழியாக்கக்கோரி முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்திற்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆதரவு</p><p>முதலமைச்சர் விஜய் ஆட்சியில் தமிழுக்கு தான் எப்போதும் முதலிடம் - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>முதலமைச்சர் 110 விதியின் கீழ் அறிவிக்கும் எல்லா அறிவிப்புகளும் மிகச் சிறப்பாக வரவேற்றும் வகையில் உள்ளது.</p><p>புதிய தலைமை செயலகத்தை யார் ஆட்சிக்கு வந்தாலும் தடை செய்யாத வகையில் ஒரு சட்டத்தை உருவாக்க வேண்டும்.</p><p>ஐகோர்ட்டில் தமிழை முதன்மை மொழியாக்கக்கோரி முதலமைச்சர் விஜய் கொண்டுவந்த தீர்மானத்திற்கு தேமுதிக ஆதரவு - பிரேமலதா</p><p>ஐகோர்ட்டில் தமிழை முதன்மை மொழியாக்கக்கோரி முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாஜக,  ஆதரவு</p><p>மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்ற பெயரி சென்னை உயர்நீதிமன்றமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் - சிபிஎம் எம்எல்ஏ செல்லசாமி</p><p>உலகில் மக்கள் அதிகம் பேசும் முதல் 25 மொழிகளில் தமிழும் உள்ளது. ஒரு வாரத்திற்கு 2 மொழிகள் அழிகிறது.</p><p>10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் தமிழ் மொழிப்பாடம் என்ற வார்த்தையே இல்லை.</p><p>மொழிப்பாடம் என்று தான் இருக்கிறது, அதை சரி செய்ய வேண்டும் - சவுமியா அன்புமணி </p> <p>பழமையாக நெல் ரகங்களில் பெயர், நாட்டு மாடுகளின் பெயர்களை குறிப்பிட்டு சட்டசபையில் சவுமியா அன்புமணி பேச்சு</p><p>ஐகோர்ட்டில் தமிழை முதன்மை மொழியாக்கக்கோரி முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்திற்கு பாமக முழு மனதுடன் வரவேற்பு</p><p>ராஜஸ்தான், உ.பி., ம.பி. உயர்நீதிமன்றங்களில் இந்தி அலுவல் மொழி - சி.வி.சண்முகம்</p><p>மெட்ராஸ் ஐகோர்ட் என்பதை இன்று வரை மாற்ற முடியவில்லை. ஜென் Z இளைஞர்களுக்கு மெட்ராஸ் என்பதே தெரியாது.</p><p>தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயரை மாற்ற தனி தீர்மானம் தேவை. சென்னை உயர்நீதிமன்றம் என பெயர் மாற்ற வேண்டும் - சி.வி.சண்முகம்</p> <p>முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்திற்கு திமுக வரவேற்பு, அதிமுக ஆதரவு</p><p>முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு</p><p>என்னை பேச அழைக்காமல் தளவாய் சுந்தரத்தை அழைக்கலாமா? </p><p>என்னை விட தளவாய் சுந்தரம் அதிகம் பேசி விடுவாரா? - டென்ஷன் ஆன சி.வி.சண்முகம்</p><p>எதிர்க்கட்சி கொறடா எழுந்தவுடன் திமுகவினர் எழுந்து நிற்பதை ஏற்க முடியாது - சபாநாயகர்</p><p>ஆங்கிலத்திற்கு பிறகே தமிழ் என்று தான் திமுக ஆட்சியில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.</p><p>இது யாருடைய குழந்தையும் கிடையாது என ரகுபதிக்கு அமைச்சர் நிர்மல் குமார் பதிலடி</p> <p>சட்ட சொற்களஞ்சியங்களை உருவாக்கினால் உச்சநீதிமன்றம் மறுக்காது.</p><p>ஐகோர்ட்டில் ஒரே மொழியாக தமிழை கொண்டு வர முடியாது. ஆங்கிலம் உடன் இருக்கத்தான் செய்யும் - ரகுபதி</p><p>இந்த தீர்மானம் எங்கள் குழந்தை, இதை வரவேற்கிறோம்.</p><p>மக்கள் நேரலையில் பார்த்துக்கொண்டிருப்பதால் வரலாறு முக்கியம் - ரகுபதி</p><p>சென்னையில் உச்சநீதிமன்றக் கிளை வேண்டும் என முதலில் கேட்டவர் ஸ்டாலின்.</p><p>2022-ல் பிரதமரிடம் நேரடியாக தைரியமாக குரல் எழுப்பியர் ஸ்டாலின்.</p><p>உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என கேட்டார் ஸ்டாலின் - திமுக எம்எல்ஏ ரகுபதி</p><h2>தீர்மானத்தின் மீது திமுக எம்எல்ஏ ரகுபதி உரை</h2><p>தமிழ் வழக்காடு மொழி என்பதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் கருணாநிதி.</p><p>தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்றுத் தந்தவர் கருணாநிதி.</p><p>சட்ட சொற்களஞ்சியம் இல்லாத காரணத்தால் 2006-ல் தீர்மானத்தை ஏற்க மறுப்பு.</p> <p>நீதிமன்றங்களில் தமிழ் மொழி பயன்பாட்டுக்கு சட்ட அங்கீகாரம்.</p><p>மாநில மொழியை நீதிமன்றங்களில் பயன்படுத்த சட்ட வாய்ப்புள்ளது - முதலமைச்சர் விஜய் </p> <p>இந்த கோரிக்கை எந்த மொழிக்கும் எதிரானது அல்ல. தமிழ் மொழிக்கான சட்ட அங்கீகாரம் கேட்கும் கோரிக்கை.</p><p>குடியரசுத் தலைவரும் மத்திய அரசும் இதற்கு ஒப்புதல் தர வேண்டும்.</p><p>தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாக தமிழ் அறிவிக்கப்பட்டுள்ளது - முதலமைச்சர் விஜய் </p> <p>மாவட்ட நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக உள்ளது.</p><p>தீர்ப்பு, தீர்ப்பாணை, உத்தரவுகளை தமிழில் வழங்க வேண்டும்.</p><p>வழக்கு தொடர்பான வாதங்கள் தமிழில் இருந்தால் எளிதாக புரியும்  - முதலமைச்சர் விஜய் </p> <p>வருங்கால தலைமுறைக்கும் தமிழ் மொழியின் வளத்தையும் பெருமையையும் கொண்டு சேர்ப்பது நமது கடமை.</p><p>தமிழை முதன்மை மொழியாக அங்கீகரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.</p><p>ஆளுநரால் அனுப்பப்படும் முன்மொழிவுகளுக்கு உடனடி நடவடிக்கை - முதலமைச்சர் விஜய் </p> <p>தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பது நமக்கெல்லாம் கிடைத்த பெருமை.</p><p>பல்லாயிரம் ஆண்டுகள் உயிர்ப்புடன் பேசப்படும் மொழி தமிழ் மொழி -  முதலமைச்சர் விஜய் </p> <p>சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்கக் கோரி சட்டசபையில் தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார் முதலமைச்சர் விஜய்</p> <p>ரூ.1200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும்  - முதலமைச்சர் விஜய் </p><p>தற்போது தலைமைச் செயலகம் 2 கட்டடங்களில் இயங்கி வருகிறது. 2 கட்டிடங்களில் 6000 பேர் பணியாற்றும் நிலை உள்ளது  - முதலமைச்சர் விஜய் </p> <p>மோட்டார் ஸ்போர்ட் சிட்டி உருவாக்கப்படும்.</p><p>இளைஞர்களின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் திறமைகளை அறிந்து பயிற்சி அளிக்கப்படும்  - முதலமைச்சர் விஜய் </p> <p>தேசிய, உலக அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெறும் வகையில் ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும்.</p><p>ஒலிம்பிக் நகரத்தில் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்களுக்கான நவீன உள்கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்படும் - முதலமைச்சர் விஜய் </p> <p>சுற்றுச்சூழல் மாறு ஏற்படுத்தாத நிறைய நிறுவனங்கள் கொண்டு வருவோம் - அமைச்சர் ராஜீவ்</p><p>தொழில் வளமும், சுற்றுச்சூழலும் உறுதி செய்யப்படும் - அமைச்சர் கீர்த்தனா</p><p>பெங்களூருவில் இருந்து 1400 எம்எல்டி கழிவுநீர் தென்பெண்ணையில் திறக்கப்படுகிறது. கர்நாடக அரசிடம் பேசி தீர்வு காணப்படும் - அமைச்சர் ராஜீவ் உறுதி</p> <p>தென்பெண்ணையாற்றில் கர்நாடக ஆலைக்கழிவுகள் கலப்பு - பாலகிருஷ்ணாரெட்டி</p><p>20% அளவுக்கு அனுமதி பெறாமல் மோர் மிளகாய் தயாரிக்கப்படுகிறது -  அமைச்சர் ராஜீவ்</p><p>திண்டுக்கல்லில் முறையாக அனுமதி பெற்று மோர் மிளகாய் தயாரிப்பு. மோர் மிளகாய் தயாரிப்பால் நிலத்தடி நீர் பாதிப்பு என சில விவசாயிகள் புகார் - ஐ.பெரியசாமி</p><p>கடந்த ஆட்சியில் சுற்றுச்சூழல் துறையில் சரியான நடவடிக்கை இல்லை.</p><p>பவானி, ஈரோடு தொகுதிகளில் தான் எனக்கு அதிக சவால்கள்.</p><p>விதிகளை மீறி சாயக்கழிவுகளை வெறியேற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ராஜீவ்</p><p>நிலக்கரியை சாலைகளில் கொண்டு செல்வதற்கு விதிகள் உள்ளன. </p><p>துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ராஜீவ்</p><p>அதானி துறைமுகத்திற்கு நிலக்கரியை கொண்டு செல்லும்போது காற்றுமாசு உருவாகிறது - ஜவாஹிருல்லா</p><p>அரசு அதிகாரிகள், முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ராஜீவ் உறுதி</p><p>சாய ஆலைக்கழிவுகளை சுத்திகரிப்பதே இந்த திட்டத்தின் நோக்கம். ரூ.11 ஆயிரம் கோடி செலவில் நடந்தாய் வாழி காவிரி திட்டம். நடந்தாய் வாழி காவிரி திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்து விட்டது - எடப்பாடி பழனிசாமி </p><p>நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை தவெக அரசு தொடருமா? - எடப்பாடி பழனிசாமி </p> <p>வேதாரண்யத்திற்காகவும் வேதா ஜவுளி பூங்கா, வேதா நிலையத்தை நினைவில் வைத்தும் வேதா ஜவுளி பூங்கா என்று வைத்தீர்கள்.</p><p>இதில் 40 சதவீதம் மத்திய அரசு பங்கு, 9 சதவீதம் மாநில அரசு பங்கு.</p><p>தொழில் முதலீட்டாளர்கள் முழு மானியம் போட்டு தொழில் தொடங்க முடியாது என்று தெரிவித்தனர்.</p><p>உடனடியாக டெல்லி சென்று மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தோம். அவர்களும் பரிசீலனை செய்வதாக தெரிவித்துள்ளார்கள்.</p><p>நீங்களும் கூட்டணியில் உள்ளீர்கள். நீங்களும் முயற்சி செய்தால் இணைந்து இந்த திட்டத்தை நிறைவேற்றி விடலாம் - அமைச்சர் விஜய் பாலாஜி</p> <p>வேதாரண்யத்தில் வேதா ஜவுளி பூங்கா முழுமை பெறுமா? மாநில அரசின் நிதியில் வேதா ஜவுளி பூங்கா முடிக்கப்படுமா? - ஓ.எஸ்.மணியன்</p><p>தொழில் முதலீட்டாளர்கள் முன்வரும் பட்சத்தில் திருத்தணியில் புதிய ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை - அமைச்சர் விஜய் பாலாஜி</p><p>திருத்தணியில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும். எங்கள் தொகுதியில் எந்த தொழிற்சாலையும் இல்லை.</p><p>ஜவுளி பூங்கா அமைந்தால் 500 - 1000 பேர் வேலைவாய்ப்பு பெறுவர்  - எம்எல்ஏ கோ அரி </p><p>அனைத்து பாலங்களின் பணிகளும் தொடர்வதாகவும் எந்த பணியும் நிறுத்தப்படவில்லை - அமைச்சர் ஆதவ்</p><p>திமுக ஆட்சியில் காவிரி டெல்டா பகுதிகளில் 1,000-க்கும் மேற்பட்ட பாலங்கள் அமைக்கும் பணி நடந்து வந்தது. பாலம் அமைக்கும் பணிகள் தவெக ஆட்சியில் தொடர்கிறதா? - எம்ஆர்கே பன்னீர்செல்வம்</p><p>குளித்தலையில் ரெயில்வே மேம்பாலம் அமைத்துத்தர வேண்டும் - எம்எல்ஏ சந்திரன் கோரிக்கை</p><p>செய்யாற்றின் குறுக்கே, விருகண்டா நதியின் குறுக்கே  மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும் - அக்ரி கிருஷ்ணமூர்த்தி</p><p>புவனகிரி தொகுதியில் புறச்சாலையில் மேம்பாலம் கட்டிக்கொடுக்க வேண்டும் - எம்எல்ஏ அருள்மொழித்தேவன் வேண்டுகோள்</p><p>துரைப்பாக்கம் to நீலாங்கரை வரையிலான மேம்பாலப்பணிகள் முடிந்து 6 மாதங்கள் ஆகியும் இன்னும் திறக்கப்படவில்லை - சரவணன்</p><p>மொடக்குறிச்சி: நால்ரோடு பகுதிகளில் பாலம் தேவை - சண்முகம்</p><p>அனைத்து கோரிக்கைகளையும் ஆய்வு செய்து நடவடிக்கை - அமைச்சர் ஆதவ்</p><p>ரெயில்வே பாலங்கள் தேவை என பல எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். </p><p>மாநிலம் முழுவதும் 42 இடங்களில் ரெயில்வே பாலம் கட்ட எம்எல்ஏக்கள் கோரிக்கை, அதுகுறித்து பரிசீலிக்கப்படும்.</p><p>அனைத்து கோரிக்கைகளையும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ஆதவ்</p><p>30 நொடிகளில் சுருக்கமாக பேசி முடிக்க வேண்டும் - சபாநாயகர்</p> <p>சூலூரில் உயர்மட்ட பாலம் - ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>திருச்சி - கோவை இடையே பசுமை வழித்தடத்திற்கு DPR தயாரிப்பு - அமைச்சர் ஆதவ்</p><p>சூலூர் மையப்பகுதியில் உயர்மட்ட பாலம் கட்ட அரசு முன்வருமா? - உறுப்பினர் கேள்வி</p><p>தமிழக சட்டசபையில் இன்று காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகள் மீதான  மானிய கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது. முதலமைச்சர் விஜய் பதில் அளித்து, முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக லக்ஷ்மண் நியமனம்!</title><link>https://www.maalaimalar.com/sports/laxman-appointed-as-coach-of-the-indian-cricket-team</link><comments>https://www.maalaimalar.com/sports/laxman-appointed-as-coach-of-the-indian-cricket-team#comments</comments><guid isPermaLink="false">4650728b-30d3-424f-8d54-2e83ddc66445</guid><pubDate>Thu, 03 Sep 2026 12:12:29 +0000</pubDate><atom:updated>2026-09-03T12:12:29.518Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>vvs laxman,India coach,விவிஎஸ் லக்ஷ்மண்,Asian Games 2026,ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026,இந்திய பயிற்சியாளர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/0jd6t7ot/New-Project-2026-09-03T172045.377.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக லக்ஷ்மண் நியமனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/0jd6t7ot/New-Project-2026-09-03T172045.377.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மணை நியமித்து பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. </p><p>ஜப்பானின் நகோயாவில் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4ம் தேதி வரை நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், செப்.24ம் தேதி அன்று கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது. </p><p>இந்தியாவின் தொடக்க ஆட்டம் செப்டம்பர் 28 அன்று நடைபெற உள்ளது. இந்திய ஆண்கள் அணிக்கு <a href="https://www.maalaimalar.com/sports/t20-series-against-afghanistan-indian-squad-led-by-shreyas-iyer-announced">ஸ்ரேயாஸ் ஐயர் </a>தலைமை தாங்குவார் என்றும், பெண்கள் கிரிக்கெட் அணிக்கு ஹர்மன்பிரீத் கவுர்  தலைமை தாங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய ஆண்கள் அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண் நியமிக்கப்பட்டுள்ளார். அமோல் மஜும்தார் இந்திய பெண்கள் அணியின் தலைமைப் பயிற்சியாளராகத் தொடர்கிறார். </p><h2>2023-ல் தங்கப்பதக்கம்</h2><p>இதற்கு முன்னர், சீனாவின் நடைபெற்ற 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் லக்ஷ்மணை இந்திய அணிக்குப் பயிற்சியளித்தார். அப்போது ஆண்கள் அணி தங்கப்பதக்கம் வென்றது. </p><h2>2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய ஆண்கள் அணி:</h2><p>ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஷிவம் துபே, திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், மற்றும் வைபவ் சூர்யவன்ஷி. </p><h2>2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய மகளிர் அணி:</h2><p>ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, பிரதிகா ராவல், தீப்தி சர்மா, ரிச்சா கோஷ், குணாளன் கமலினி, பார்தி ஃபுல்மாலி, ஸ்ரீ சரணி, ரேணுகா தாக்கூர், கிராந்தி கவுட், அருந்ததி ரெட்டி, ஸ்ரேயங்கா பாட்டீல், ராதா யாதவ், மற்றும் நந்தனி சர்மா. </p>]]></content:encoded></item><item><title>விசேஷ நாட்களில் விதிவிலக்கு..
கர்ப்பிணிகள், முதியோர்களுக்கு கோவில்களில் செல்போன் அனுமதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-minister-allows-mobile-phones-for-pregnant-elderly-on-special-temple-days</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-minister-allows-mobile-phones-for-pregnant-elderly-on-special-temple-days#comments</comments><guid isPermaLink="false">29a63a96-d094-4daa-ba1c-eec5c7f4f086</guid><pubDate>Thu, 03 Sep 2026 11:42:14 +0000</pubDate><atom:updated>2026-09-03T11:42:14.998Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>cellphone,Temples,கோவில்கள்,செல்போன்,அமைச்சர் ரமேஷ்,Minister Ramesh</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/qdgoj75u/Minister-Ramesh.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Ramesh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/qdgoj75u/Minister-Ramesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கோவில்களில் விசேஷ நாட்களில் கர்ப்பிணி பெண்கள், கைக்குழந்தைகளுடன் வரும் பெண்கள், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் செல்போன் எடுத்துச்செல்ல விலக்கு அளிக்கப்படுகிறது என்றும் அவர்களிடம் மொபைல்போன்களை வாங்கி வைக்க வேண்டிய அவசியம் கிடையாது என அமைச்சர் ரமேஷ் அறிவித்துள்ளார்.</p><p>அமைச்சர் ரமேஷ் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><h2>செல்போனுக்கு தடை</h2><p>கோவிலில் செல்போனுக்கு தடை விதித்திருப்பது  புதிய நடைமுறை கிடையாது. 2022 டிசம்பர் மாதம் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D" rel="nofollow">நீதிபதிகள்</a> மகாதேவன், சத்திய நாராயணா ஆகியோர் தீர்ப்பு கொடுத்தனர். திருச்செந்தூர் கோவிலுக்குள் செல்போன் பயன்படுத்த வழக்கு ஒன்று போட்டிருந்தனர்.</p><p>அந்த வழக்கில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும் செல்போன் தடையை அமல்படுத்த வேண்டும் என்று தீர்ப்பு கொடுத்தனர்.</p><p>அந்த தீர்ப்பின்படி பல கோவில்களில் செல்போன்களுக்கு தடை அமல்படுத்தப்பட்டு வந்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருச்செந்தூர், பழனி, ராமேசுவரம் கோவில்களில் அப்போதே செல்போன் கவுண்டர் வைத்து 5 ரூபாய் கட்டணம் வசூலித்தனர்.</p><p>அதன் பிறகு எல்லா கோவில்களிலும் செல்போனுக்கு தடை என்பது இருந்தது. அதற்கான பாதுகாப்பு பெட்டகம் இல்லாத 52 முதுநிலை கோவில்களிலும் அந்த தடையை கொண்டு வந்து அமல்படுத்தி இருக்கிறோம்.</p><h2>அறிவுறுத்தல்</h2><p>பொதுமக்களை கஷ்டபடுத்த வேண்டும் என்பதற்காக இதை செய்யவில்லை. </p><p>பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்பது போன்ற சூழ்நிலையை உருவாக்கி விட கூடாது என்று மிக தெளிவாக எல்லா கோவில்களுக்கும் அறிவுறுத்தி இருக்கிறோம். மொபைல் போனை பாதுகாப்பாக வைப்பது பெரிய பாரமாக மாறிவிடக்கூடாது.</p><p>இதையெல்லாம் பார்த்துவிட்டு அந்தந்த <a href="https://www.maalaimalar.com/spirituality/aanmiga-kalanjiyam/kula-deivam-worship-15" rel="nofollow">கோவில்கள்</a> அதற்குதகுந்தாற் போல் முடிவுகளை செய்யுங்கள் என்று அறிவுறுத்தி உள்ளோம்.</p><h2>கர்ப்பிணிகளுக்கு</h2><p>கர்ப்பிணி பெண்கள், கைக்குழந்தைகளுடன் வரும் பெண்கள், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு கட்டுப்பாடு இல்லை. அவர்களிடம்<a href="https://www.maalaimalar.com/technology/youtube-reaches-80-of-internet-users-in-india" rel="nofollow"> மொபைல்போன்</a>களை வாங்கி வைக்க வேண்டிய அவசியம் கிடையாது.</p><p>கோவில்களில் செல்போன் வாங்கி வைப்பற்காக மகளிர் சுய உதவிக்குழுவினரை வேலைக்கு எடுத்து அவர்களை பயன்படுத்துகிறோம். அவர்களுக்கு சம்பளம் அதில் இருந்து கொடுக்க போகிறோம்.</p><p>செல்போனுக்கு டோக்கன் பிரிண்ட் செய்து கொடுக்கிறோம். அதற்காக பேப்பர் ரோல் வாங்குகிறோம். இந்த மாதிரி விஷயங்களுக்காகத்தான் செல்போனுக்கு கட்டணமாக பெறப்படும் ரூ.5 பயன்பட போகிறது.</p><p>அன்னதானத்துக்கு பயன்படுத்துவோம்</p><p>அதில் வருமானம் மிச்சம் இருந்தால் அந்த கோவிலுக்கு வழங்கக்கூடிய ஏழை எளிய பக்தர்கள் அன்னதானத்தில் சாப்பிட அந்த பணத்தை பயன்படுத்த போகிறோம்.</p><p>இதை தனி நபர்கள் எடுத்து செல்வது போலவோ, கோவிலில் கொள்ளையடிப்பது போலவோ பலர் பேசிக்கொள்கிறார்கள். அவர்களின் உள்நோக்கம் தெளிவாக தெரிகிறது.</p><p>அரசாங்கம் ஒரு விஷயத்தை செய்யும்போது அதை எதிர்ப்பவர்கள் கண்மூடித்தனமாக எதிர்க்க கூடாது. இதை அமல்படுத்தும்போது உண்மையிலேயே பொதுமக்களுக்கு சிக்கல்கள் இருக்கிறது. பிரச்சினைகள் இருக்கிறது. மனஅழுத்தம் இருக்கிறது என்றால் அதற்கான மாற்று ஏற்பாடுகளை முதலில் அரசாங்கம்தான் செய்யும். </p><h2>மாற்று ஏற்பாடுகள்</h2><p>அதில் நாங்கள் தயக்கம் காட்ட மாட்டோம். பொது மக்களுக்கு ஒரு கஷ்டம் இருந்தால் அதற்கான மாற்று ஏற்பாடுகளை நாங்களே செய்வோம். பொதுமக்கள் இதை செய்தே ஆக வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கக் கூடிய அரசாங்கம் இது கிடையாது.</p><p>இது மக்களுக்கான அரசாங்கம் தான். இதை தவறாக சிலர் வெளியே கொண்டு செல்கிறார்கள். அவர்களின் நோக்கம் இந்து சமய அறநிலையத் துறையே இருக்கக் கூடாது என்று யோசிக்கக் கூடிய கும்பல் அவர்கள்.</p><p>கோவிலில் நடைமுறையாக என்ன இருக்கிறது என்று பார்க்க வேண்டும். நடைமுறையில் பிரச்சினைகள் இருந்தால் அதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்வதற்கு இந்து சமய அறநிலையத்துறை தயாராக  இருக்கிறது.</p><p>இதை கோவில்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம். கோவில்களின் நிதிநிலையை கருத்தில் கொண்டு 5 ரூபாய் வாங்கலாமா, வேண்டாமா? என்பதை வருங்காலத்தில் கோவில்களே முடிவு எடுக்கலாம் என்று சொல்லி இருக்கிறோம்.</p><h2>அரசியல் செய்கிறார்கள்</h2><p>அதில் அவர்களை கட்டாயப்படுத்தவில்லை. எதுவுமே இல்லாத விஷயத்தை பெரிதுப்படுத்தி கோவிலை வைத்து அரசியல் செய்கிறார்கள். கோவில் அரசியல் செய்வதற்கான இடம் கிடையாது.</p><p>அங்கு சாமி கும்பிட வரும் பக்தர்களுக்கு எந்த தொந்தரவும் இருக்கக்கூடாது. அமைதியாக தரிசனம் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இதை நடைமுறைப்படுத்துகிறோம்.</p><p>இந்த 52 கோவில்களும் வரலாற்று சிறப்பு மிக்க கோவில்கள். அந்த கோவில்களில் உள்ளே செல்லும்போது கல்வெட்டுகள், தமிழ் எழுத்துக்கள், தமிழ் பக்தி இலக்கியங்களை நிறைய இடங்களில் வைத்திருக்கிறோம்.</p><p>அதையெல்லாம் அவர்கள் பார்க்க வேண்டும். படிக்க வேண்டும். சிற்பக் கலையை ரசிக்க வேண்டும். கட்டுமான  கலையை ரசிக்க வேண்டும்  ஆகியவை கோவிலில் செல்போன் பயன்படுத்துவதால் தடைபட்டுவிடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான் கோர்ட்டு உத்தரவை நடைமுறைப்படுத்தி உள்ளோம்.</p><p>பொதுமக்களிடம் கருத்து பா.ஜ.க. ஆளக்கூடிய வடமாநிலங்களிலும் கோவில்களில் செல்போன் பயன்படுத்த தடை உள்ளது. எனவே இதை வைத்து அரசியல் செய்யும் வேலையை செய்ய வேண்டாம்.</p><p>இது சம்பந்தமாக பக்தர்களிடம் கருத்து கேட்டு வருகிறோம். அவர்களின் கருத்துக்களை பொறுத்து நிச்சயமாக மாற்று ஏற்பாடு செய்யப்படும்.</p><p>கோவில்களில் கூட்டம் அதிகமாக வரக்கூடிய விசேஷ நாட்களில் மொபைல்போன் கவுண்டர்களில் செல்போன் வாங்குவதை வேண்டாம் என்று அறிவுறுத்தி இருக்கிறோம்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ஜி.வி. பிரகாஷ் இசை நிறுவனம் கைப்பற்றிய &apos;என்ன விலை&apos; படத்தின் ஆடியோ உரிமை!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/gv-prakash-music-label-acquires-enna-vilai-audio-rights</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/gv-prakash-music-label-acquires-enna-vilai-audio-rights#comments</comments><guid isPermaLink="false">70c1a996-16fa-434b-8f21-f2681bf97b96</guid><pubDate>Thu, 03 Sep 2026 11:42:00 +0000</pubDate><atom:updated>2026-09-03T11:42:00.952Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>S. Sam,karunas,கருணாஸ்,nimisha sajayan,Enna Vilai,என்ன விலை,GV Prakash Music Label,ஜிவி பிரகாஷ் இசை நிறுவனம்,Sajeew Pazhoor</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/ssd0toah/Enna-Vilai-Movie" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Enna Vilai Movie]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/ssd0toah/Enna-Vilai-Movie?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><strong>தேசிய விருது பெற்ற சஜீவ் பழூர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'என்ன விலை' திரைப்படத்தின் ஆடியோ உரிமையை ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை நிறுவனம் கைப்பற்றியுள்ளது.</strong></p><p>தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், நடிகருமான<a href="https://www.maalaimalar.com/topic/gv-prakash-kumar"> ஜி.வி. பிரகாஷ் குமார்</a>, தனது இசை நிறுவனம் மூலம் சக இசையமைப்பாளர்களின் படைப்புகளை ஊக்குவித்து வருகிறார். </p><p>அந்த வகையில், <a href="https://www.maalaimalar.com/topic/sam-cs">சாம் சி.எஸ்</a>. இசையமைத்துள்ள 'என்ன விலை' படத்தின் ஆடியோ உரிமையை அவர் பெற்றுள்ளார். இப்படத்தில் கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். </p><p>கலாமயா சினிவெர்ஸ் சார்பில் ஜிதேஷ் விஸ்வாம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் தயாரித்துள்ளனர்.</p><h2>'கடலாடும்' பாடல் ரிலீஸ்</h2><p>இப்படத்தின் முதல் பாடலான 'கடலாடும்' ஏற்கனவே ஜி.வி. பிரகாஷின் அதிகாரப்பூர்வ இசைத் தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. அந்தோணி தாசன் பாடியுள்ள இப்பாடல் ரசிகர்களை கவர்ந்துள்ளது.</p><h2>சர்வதேச விருதுகளை குவித்த 'என்ன விலை':</h2><p>இப்படம் ஏற்கனவே சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. ஜெர்மனியின் மேன்ஹெய்ம் ஆர்ட் அண்ட் ஃபிலிம் பெஸ்டிவலில் சிறந்த திரைப்பட விருதையும், தாதாசாகேப் பால்கே சர்வதேச விழாவில் சிறந்த திரைக்கதை விருதையும் வென்றுள்ளது. </p><p>மேலும் இஸ்தான்புல் கயா மற்றும் அட்லாண்டா இந்திய திரைப்பட விழாக்களிலும் தேர்வாகியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">கருணாஸின் </a>25-வது ஆண்டு திரைப்பயணத்தில் வெளியாகும் இப்படம் வரும் செப்டம்பர் மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>8 மாத குழந்தையின் டயப்பரில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்திய தந்தை கைது</title><link>https://www.maalaimalar.com/news/national/father-held-for-smuggling-rs-1-crore-gold-in-babys-diaper</link><comments>https://www.maalaimalar.com/news/national/father-held-for-smuggling-rs-1-crore-gold-in-babys-diaper#comments</comments><guid isPermaLink="false">61800aff-d7e3-4b53-9565-28b40be531dd</guid><pubDate>Thu, 03 Sep 2026 11:41:21 +0000</pubDate><atom:updated>2026-09-03T11:41:21.284Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold smuggling,தங்க கடத்தல்,Kozhikode airport,கேரளம்,Keralam,கோழிக்கோடு விமான நிலையம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/12t5nydj/Untitled-design-6.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold Smuggling in Diaper]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/12t5nydj/Untitled-design-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரளாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் எட்டு மாத குழந்தையின் டயப்பருக்குள் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை மறைத்து வைத்து, தங்க கடத்தலில் ஈடுபட்ட குழந்தையின் தந்தையை போலீசார் கைது செய்தனர்.</p><h3><strong>கோழிக்கோடு விமான நிலையம்</strong></h3><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">கேரளம்</a> மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், தனது ஆறு வயது குழந்தை, நான்கு வயது குழந்தை மற்றும் எட்டு மாத குழந்தையுடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ராஸ் அல் கைமாஹ் விமான நிலையத்தில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.</p><p>அப்போது விமான நிலையத்தில் பயணம் செய்யும் நபர் ஒருவர், தங்க கடத்தலில் ஈடுபடுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சந்தேகத்திற்கிடமான அந்த குடும்பத்திடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.</p><h3><strong>அதிகாரிகள் சோதனை</strong></h3><p>விமான நிலையத்திற்கு தந்தை தூக்கிவந்த எட்டு மாத குழந்தையை அதிகாரிகள் சோதனை செய்தனர்.</p><p>அப்போது குழந்தையின் டயப்பருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை அதிகாரிகள் கண்டறிந்தனர்.</p><p>இதையடுத்து தங்க கடத்தலில் ஈடுபட்ட தந்தையை புலானாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர்.</p><h3><strong>மனைவி கைது</strong></h3><p>முன்னதாக கைது செய்யப்பட்ட நபரின் மனைவி, தான் அணிந்து வந்த சானிட்டரி நாப்கினில் மறைத்து வைத்திருந்த சுமார் 1.7 கிலோ மதிப்பிலான தங்கத்தை நெடும்பாசேரி விமான நிலையத்தில் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.</p><h3><strong>புலனாய்வுத் துறை அதிகாரிகள்</strong></h3><p>இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், கைக்குழந்தையுடன் பயணம் செய்யும் குடும்பத்தினரிடம் சோதனை குறைவாக இருக்கும் என்பதால், விமான நிலைய சோதனையை தவிர்ப்பதற்காக, குழந்தையின் தந்தை இவ்வாறு செயல்பட்டதாக தெரிவித்தனர்.</p><p>மேலும் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் தொடர்பாக, கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய மற்ற நபர்களை அடையாளும் காணும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>இதையடுத்து சர்வதேச வழிகள் மூலமாக இந்தியாவிற்குள் கொண்டுவரப்படும் வெளிநாட்டு தங்கம் தொடர்பான புலனாய்வு நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>மகாராஷ்டிராவில் விபரீதம்: ரெயில் வருவதற்குச் சில நிமிடங்களுக்கு முன் வாக்கர் உதவியுடன் தண்டவாளத்தைக் கடந்த மாற்றுத்திறனாளி</title><link>https://www.maalaimalar.com/news/national/maharashtra-incident-disabled-man-crosses-tracks-with-walker</link><comments>https://www.maalaimalar.com/news/national/maharashtra-incident-disabled-man-crosses-tracks-with-walker#comments</comments><guid isPermaLink="false">7041ee87-9ae7-4615-bfe1-90522f05159b</guid><pubDate>Thu, 03 Sep 2026 11:29:07 +0000</pubDate><atom:updated>2026-09-03T11:29:07.067Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,மகாராஷ்டிரா,indian railways,இந்தியன் ரெயில்வே,ரெயில்வே நிர்வாகம்,RAILWAY ADMINISTRATION,DisabilityPerson,அம்பர்நாத் ரெயில் நிலையம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/jf91iu3k/pp.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Railway Administration ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/jf91iu3k/pp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிரா மாநிலத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர், வாக்கர் உதவியுடன் ரெயில் தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடந்து செல்ல முயன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>மகாராஷ்டிராவின் அம்பர்நாத் ரெயில் நிலையத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ராகுல் பங்கர் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், கால்களில் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி ஒருவர் அடுத்த நடைமேடைக்குச் செல்வதற்காகச் சிரமப்பட்டு தண்டவாளத்தில் இறங்கி நடப்பது பதிவாகியுள்ளது.</p><p>ரெயில் நிலையத்திற்குள் ரெயில் வரவிருப்பதை அறிவிக்கும் ஒலி பெருக்கியின் சத்தமும், தூரத்தில் ரெயில் வரும் சத்தமும் கேட்கும் நிலையிலும், அவர் வாக்கரின் ஆதரவோடு ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து மெதுவாகத் தண்டவாளத்தைக் கடந்து செல்கிறார். </p><p>இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, தண்டவாளங்களைக் கடப்பது எவ்வளவு ஆபத்தானது என்பது குறித்தும், ரெயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் எந்த அளவிற்குப் பின்தங்கியுள்ளன என்பது குறித்தும் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். </p><p>இருப்பினும், மற்றொரு புறம் இந்திய ரெயில்வே நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் எந்த அளவிற்குப் போதுமானதாக இருக்கின்றன என்ற முக்கியமான விவாதத்தையும் இது கிளப்பியுள்ளது.</p><p>நடைமேடைகளுக்கு இடையே செல்வதற்கு மின்தூக்கி அல்லது சாய்வுப் பாதை வசதிகள் முறையாக இயங்காததே அல்லது இல்லாததே இதுபோன்ற அபாயகரமான முடிவுகளை எடுக்க மக்களைத் தள்ளுகிறது எனப் பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். ரெயில்வே நிர்வாகம் ஆபத்தான தண்டவாளக் குறுக்கீடுகளைத் தடுப்பதோடு, மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பாகப் பயணிக்கத் தேவையான அடிப்படை வசதிகளை அனைத்து நிலையங்களிலும் விரைந்து செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>என்னை முதலில் பேச அனுமதிக்க வேண்டும்: ஆவேசம் அடைந்த சி.வி.சண்முகம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cv-shanmugam-show-his-dissatisfaction-the-assembly-opposing-aiadmk-thalavai-sundaram-speaking-first</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cv-shanmugam-show-his-dissatisfaction-the-assembly-opposing-aiadmk-thalavai-sundaram-speaking-first#comments</comments><guid isPermaLink="false">1b621df4-b17a-4209-b2d3-61f426cb695c</guid><pubDate>Thu, 03 Sep 2026 11:25:45 +0000</pubDate><atom:updated>2026-09-03T11:25:45.070Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,CV Shanmugam,சிவி சண்முகம்,TN assembly,thalavai sundaram,தளவாய் சுந்தரம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/aocyej46/CVS.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ cv shanmugam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/aocyej46/CVS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழக சட்டசபையில் தன்னை முதலில் பேச அனுமதிக்க வேண்டும் எனக்கோரி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், மயிலம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான சி.வி.சண்முகம் ஆவேசம் அடைந்தார்.</strong></em> </p><h2>தனித்தீர்மானம்</h2><p>தமிழக சட்டசபையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்கக் கோரி தனித்தீர்மானத்தை கொண்டு வந்து முதலமைச்சர் விஜய் பேசினார்.</p><p>இதைதொடர்ந்து முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் </p><p>தீர்மானத்தை வரவேற்பதாக தி.மு.க.வும், தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதாக அ.தி.மு.க., சிபிஐ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக, தேமுதிக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் தெரிவித்தனர்.</p><p>அதனை சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்க கோரி முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்தார்.</p><p>அரசின் தனித்தீர்மானம் மீதான விவாதத்தில் அனைத்து கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களும் பேசினர். தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ரகுபதி பேசினார்.</p><p>அதன்பின், அ.தி.மு.க. சார்பாக தளவாய் சுந்தரத்தைப் பேச சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அழைப்பு விடுத்தார்.</p><h2>சி.வி.சண்முகம் ஆவேசம்</h2><p>அப்போது ஆவேசமாக எழுந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், மயிலம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான சி.வி.சண்முகம் தன்னைப் பேச அனுமதிக்க வேண்டும் எனக்கோரி கோபம் அடைந்தார்.</p><p>தனக்கு பேச அனுமதி தரவேண்டும் என ஆவேசமாக கேட்ட சி.வி.சண்முகம் அவையில் இருந்து கிளம்பி வெளியே போவதுபோல சென்றார்.</p><p>உடனே சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், சிவி சண்முகத்திடம் உங்களுக்கு அடுத்து பேச வாய்ப்பு தருகிறேன் எனக்கூறி சமாதானம் செய்தார்.</p><p>அப்போது முன் இருக்கையில் இருந்த எம்.எல்.ஏ. கே.பி.அன்பழகனும் எழுந்து சென்று சி.வி.சண்முகத்தை இருக்கையில் அமர வைத்தார். அதன்பிறகே சி.வி.சண்முகம் சமாதானம் ஆனார். தளவாய் சுந்தரத்தை தொடர்ந்து, சி.வி.சண்முகத்திற்கு பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதனால் சட்டசபையில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>திட்டங்கள் அனைத்தும் 110 விதியின் கீழ் அறிவிக்கப்படும் என்றால் தனியாக நிதிநிலை அறிக்கை எதற்கு? - சீமான் கேள்வி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/if-all-schemes-are-to-be-announced-under-rule-110-then-what-is-the-need-for-a-separate-budget-seeman-asks</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/if-all-schemes-are-to-be-announced-under-rule-110-then-what-is-the-need-for-a-separate-budget-seeman-asks#comments</comments><guid isPermaLink="false">46218fb8-f83a-4465-b1dd-c7c8fe567428</guid><pubDate>Thu, 03 Sep 2026 11:19:37 +0000</pubDate><atom:updated>2026-09-03T11:19:37.016Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Seeman,தமிழ்நாடு சட்டப்பேரவை,சீமான்,Tamil Nadu Legislative Assembly,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/jlvs7tqf/New-Project-2026-09-03T164805.104.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திட்டங்கள் அனைத்தும் 110 விதியின் கீழ் அறிவிக்கப்படும் என்றால் தனியாக நிதிநிலை அறிக்கை எதற்கு? - சீமான் கேள்வி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/jlvs7tqf/New-Project-2026-09-03T164805.104.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் முக்கிய திட்டங்களுக்கான அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் விஜய், அதனை 110 விதியின் கீழ் அறிவித்து வருகிறார். </p><p>இந்நிலையில் அனைத்து திட்டங்களும் 110 விதியின் கீழ் அறிவிக்கப்படும் என்றால், தனியாக நிதிநிலை அறிக்கை எதற்கு? அதன்மீதான விவாதங்கள் எதற்கு? என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/why-is-chief-minister-vijay-showing-such-urgency-regarding-the-arrest-when-he-failed-to-show-similar-speed-in-the-cauvery-river-water-dispute-seeman-asks">சீமான்</a> கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில்.,</p><h2>மக்களுக்கு எதிரானது</h2><p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியைப் பயன்படுத்தி அரசின் திட்டங்கள் பலவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அறிவித்து வருவது மக்களாட்சிக்கும், அதனை நம்பி வாக்களித்த மக்களுக்கும் எதிரானதாகும்.</p><p>நடைபெற்று வரும் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 2026-27 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்த நிறை - குறைகள் குறித்து விவாதித்து முடிவெடுக்கக் கடந்த ஒரு மாத காலமாகச் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.</p><p>ஆனால், 110 விதியின் கீழ் சிறப்பு அறிவிப்புகள் என்ற பெயரில், நிதிநிலை அறிக்கையில் இல்லாத புதிய திட்டங்களை ஒவ்வொரு நாளும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்து வருவது ஏன்? எல்லாத் திட்டங்களும் 110 விதியின் கீழே அறிவிக்கப்படும் என்றால் தனியாக நிதிநிலை அறிக்கை என்ற ஒன்று எதற்கு? அதன் மீதான விவாதங்கள்தான் எதற்கு? </p><p>சட்டப்பேரவையில் முதலமைச்சர் வெளியிடுவது அனைத்தும் முக்கியத் திட்டங்கள் என்றால் அதன் நன்மை தீமைகள் குறித்து அவையில் விவாதங்கள் நடைபெற வேண்டாமா?</p><h2>இதுதான் மாற்றமா?</h2><p>மக்களுக்குத் தேவையான இன்றியமையாத திட்டங்கள் என்றால் அவை ஏன்<sub> </sub>நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை? பொது முக்கியத்துவம் வாய்ந்த அரசு முடிவுகள் மற்றும் புதிய திட்டங்களைப் பேரவைத்தலைவர் அனுமதியுடன் சட்டப்பேரவையில் அறிவிக்கவும், அறிவிக்கும் நேரத்தில் அதன் மீது விவாதம் நடைபெறாமல் இருக்கவும் கடந்த திமுக அதிமுக அரசுகள் விதி 110யை பயன்படுத்தினார்கள். </p><p>அதை, மாற்றம் எனச் சொல்லி வந்த தவெக அரசு, விளம்பர வெற்று அறிவுப்புகளுக்குப் பயன்படுத்துவது நம்பி வாக்களித்த மக்களுக்குச் செய்யும் துரோகமல்லவா? இதுதான் மாற்றமா?</p><p>சட்டங்களை உருவாக்கவும், விவாதிக்கவும், நிறைவேற்றவும் அமைக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் அவையான சட்டப்பேரவையில் இவ்விதியை பயன்படுத்தி நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாத திட்டங்களை ஒவ்வொரு நாளும் வெளியிடுவதும் அதன் மீது விவாதமில்லாமல் கடந்து போவதும் சட்டப்பேரவை உருவாக்கப்பட்டதற்கான நோக்கத்தையே சிதைக்காதா?</p><p>மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் நிறைந்திருக்கும் அவையில், மக்களுக்காக அறிவிக்கப்படும் திட்டங்கள் குறித்து, சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்தும் தெரிவிக்கும் வாய்ப்பை பறிப்பது கொடுங்கோன்மை அல்லவா?</p><h2>இதற்கு மட்டும் எதற்கு முதலமைச்சர்?</h2><p>முதலமைச்சரின் பொறுப்பிலிருந்த துறைகளையே, மற்ற அமைச்சர்களுக்கு ஒதுக்கிவிட்ட நிலையில், மற்ற அமைச்சகம் சார்ந்த அறிவிப்புகளை வெளியிடுவதற்கு மட்டும் முதலமைச்சர் எதற்கு? அமைச்சர்கள் வெளியிட வேண்டிய அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிடுவது, அமைச்சர்களின் தனித்துவத்தைக் குறைக்காதா? </p><p>இதன் மூலம் தவெக அரசு தமிழ்நாட்டு மக்களுக்குச் சொல்ல வரும் செய்தி என்ன? அனைத்து முக்கியத் திட்டங்களும் முதலமைச்சரின் மூளையில் உதித்தது என்பதையா?</p><h2>ரூ.73,900 கோடி திட்டங்கள்</h2><p>கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதியிலிருந்து இன்று வரை தவெக அரசு விதி 110-ன் கீழ் வெளியிடப்பட்ட திட்டங்களுக்கான மதிப்பு மட்டும் ஏறத்தாழ ரூ.73,900 கோடி. </p><p>அதற்கு மேலாக எரிகாற்று உருளை, இலவச பேருந்து, பால் கொள்முதல் உள்ளிட்டவற்றுக்கு ஆண்டுதோறும் தொடர் செலவாக 10,720 கோடி ரூபாய் வரை தேவைப்படுகிறது. இத்தனை ஆயிரம் கோடிகள் செலவிடப்படும் திட்டங்களின் வரவு செலவுகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாதது ஏன்?</p><h2>உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்</h2><p>நிதிநிலை அறிக்கையின்படி ஏற்கனவே இந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சத்தி எழுபத்தாறாயிரம் கோடி கடன் வாங்குவதாக அறிவித்திருக்கிறீர்கள். இப்பொழுது புதிதாக 110 விதியின் கீழ் அறிவித்திருக்கிற திட்டங்களுக்கான ரூ.73,900 கோடிக்கான நிதியை எப்படி பெறுவீர்கள்? யாரிடம் கடன் வாங்குவீர்கள்? இதுதான் கடன் சுமையை குறைக்கும் முறையா? இதுதான் தமிழ்நாட்டை முன்னேற்றுவதற்கான மாற்றமா?</p><p>மக்களாட்சிக்கு எதிரான, நிதி ஆதாரமில்லாத வெற்று விளம்பர திட்டங்களை 110 விதியின் கீழ் அறிவிப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>Gen Z களுக்கான ஃபீல் குட் விருந்து - புதுமுகங்கள் நடித்த &apos;கோல்ட் கால்&apos; படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/feel-good-feast-for-gen-z-release-date-of-debutant-led-cold-call-film-announced</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/feel-good-feast-for-gen-z-release-date-of-debutant-led-cold-call-film-announced#comments</comments><guid isPermaLink="false">88665cd6-ccbe-47ab-b4fb-1bc4d86fe044</guid><pubDate>Thu, 03 Sep 2026 11:04:56 +0000</pubDate><atom:updated>2026-09-03T11:04:56.872Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>Cold Call,கோல்ட் கால்,Dir Thambidurai,Feel Good Entertainer,ஃபீல் குட் என்டர்டெயின்மென்ட்,Gen Z Movie</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/s5ieindq/Cold-Call-Movie" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Cold Call Movie]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/s5ieindq/Cold-Call-Movie?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ் சினிமாவில் புதுமுகங்களின் படைப்புகளுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. வித்தியாசமான கதைக்களங்களில் கதையை சொல்லி பார்வையாளர்களை அசத்தும் புதுமுக கலைஞர்களுக்கு <a href="https://www.maalaimalar.com/topic/tamil-cinema">தமிழ் சினிமா</a> எப்போதும் சிவப்பு கம்பளத்தை விரித்து வரவேற்றிருக்கிறது. </p><p>புதுமுக நடிகர்கள் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'கோல்ட் கால்' திரைப்படம் வரும் 18 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது என படக்குழுவினர் உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.</p><h2>தொழில் நுட்பக்குழு</h2><p>இயக்குநர் தம்பிதுரை இயக்கத்தில் உருவாகியுள்ள 'கோல்ட் கால்' திரைப்படத்தில் சித்து மூலி மணி, ஸ்ரீ வைஷ்ணவ் ,சந்தோஷ், கிருஷ்ணா விஜய் சந்திரன், வி. ஸ்ரீகாந்த், பாலாஜி ராஜசேகர், அமிதா ரங்கநாதா, நிஷா ஹெக்டே ,கீர்த்தனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.</p><p>ஜி. என். சரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பிரணவ் கிரிதரன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை சுரேஷ் ஆறுமுகம் மேற்கொண்டிருக்கிறார்.</p><p>ஃபீல் குட் திரைப்படமாக உருவாகி இருக்கும் இதனை வாக் த்ரோ என்டர்டெயின்மென்ட் - Walkthrough Entertainment நிறுவனம் சார்பில் கேசவ மூர்த்தி தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஆக்சன் ரியாக்ஷன் நிறுவனம் சார்பில் ஜெனீஷ் வெளியிடுகிறார்.</p><h2>நகைச்சுவை கதைக்களம்</h2><p>படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' இந்த சமூகத்தில் விற்பனை பிரதிநிதிகள் என்பவர்களும் உண்டு. </p><p>இவர்களின் வாழ்வியலில் நடைபெறும் சம்பவங்களை காமெடியாகவும், ஃபீல் குட் என்டர்டெய்ன்மென்ட்டாகவும் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.</p><p>இந்த படத்தை திரையரங்குகளில் பார்க்கும்போது ஜென் ஸீ தலைமுறையினரும் தங்களை இணைத்துக் கொண்டு ஜாலியாக ரசிப்பார்கள். </p><p>விற்பனை பிரதிநிதிகளான நால்வர் நண்பர்கள். அவர்களுக்குள் ஏற்படும் காதல்- மோதல்- காமெடி- ஆகியவற்றை இரண்டு மணி நேரத்திற்குள் பொழுதுபோக்கு அம்சங்களுடன் சொல்லி இருக்கிறோம்'' என்றார்.</p><h2>ரிலீஸ் தேதி</h2><p>இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி இணையவாசிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருந்தது. </p><p>இந்நிலையில் இந்த திரைப்படம் செப்டம்பர் 18ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் போஸ்டரும் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>ரஷியா - உக்ரைன் இடையே மத்தியஸ்தராக செயல்பட தயார் - அமைச்சர் ஜெய்சங்கர்!</title><link>https://www.maalaimalar.com/news/national/ready-to-act-as-a-mediator-between-russia-and-ukraine-minister-jaishankar</link><comments>https://www.maalaimalar.com/news/national/ready-to-act-as-a-mediator-between-russia-and-ukraine-minister-jaishankar#comments</comments><guid isPermaLink="false">17929000-ab86-4d33-aaad-fed4b67d034f</guid><pubDate>Thu, 03 Sep 2026 10:43:55 +0000</pubDate><atom:updated>2026-09-03T10:43:55.310Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Russia,Ukraine,Jaishankar,ரஷியா,உக்ரைன்,ஜெய்சங்கர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/14ctkzfw/New-Project-2026-09-03T161330.510.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரஷியா - உக்ரைன் இடையே மத்தியஸ்தராக செயல்பட தயார் - அமைச்சர் ஜெய்சங்கர்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/14ctkzfw/New-Project-2026-09-03T161330.510.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/city-got-angry-humanoid-robot-tried-to-attack-after-being-pushed-by-its-owner-in-russia">ரஷியா</a> - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா எந்த வகையிலும் உதவ தயாராக இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். </p><p>உக்ரைன் தலைநகர் கீவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், இன்று உக்ரைன் வெளியுறவுத் அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹாவுடன் நடத்திய கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.</p><h2>மத்தியஸ்தம் செய்யத் தயார்</h2><p>செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், “இந்தியாவால் எந்த வகையிலாவது உதவ முடியும் என்றால், நாங்கள் அதற்குத் தயாராக இருக்கிறோம்” என்றுக்கூறி, தேவைப்பட்டால் இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தராகச் செயல்படவும் இந்தியா தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். </p><h2>உக்ரைன் பயணம்</h2><p>வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தற்போது உக்ரைன் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தின்போது, ​​அவர் தனது உக்ரைன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா மற்றும் போலந்து துணைப் பிரதமர் ரடோஸ்லாவ் சிகோர்ஸ்கி ஆகியோருடன் இருதரப்பு ஆலோசனைகளை நடத்துகிறார்.</p><h2>வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்</h2><p>சமீப நாட்களாக கருங்கடல் பகுதியில் ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ள நிலையில் வணிகக் கப்பல்கள் மற்றும் மாலுமிகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து இரு நாட்டு அமைச்சர்களும் தீவிரமாக விவாதித்தனர்.</p><p>இந்தியர்கள் மற்றும் பிற நாட்டு மாலுமிகளின் பாதுகாப்பை மீண்டும் வலியுறுத்தியுள்ள இந்தியா, பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டுவரவும் வலியுறுத்தியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>கனடாவில் நாய் போட்டி - 56 நபர்களை தாண்டி உலக சாதனை படைத்த பெண் நாய்</title><link>https://www.maalaimalar.com/news/world/canada-dog-jump-contest-australian-shepherd-sets-world-record</link><comments>https://www.maalaimalar.com/news/world/canada-dog-jump-contest-australian-shepherd-sets-world-record#comments</comments><guid isPermaLink="false">add45863-972f-4f82-96ba-de6059008aab</guid><pubDate>Thu, 03 Sep 2026 10:40:29 +0000</pubDate><atom:updated>2026-09-03T10:40:29.862Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>guiness world record,நாய் போட்டி,கின்னஸ் உலக சாதனை,dog jump</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/w4rk601b/Untitled-design-5.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Canada Dog Jump Record]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/w4rk601b/Untitled-design-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கனடாவில் அதிகம் தூரம் தாண்டும் நாய்களுக்கான போட்டியில், 56 நபர்களை தாண்டி ஆஸ்திரேலியன் ஷெப்பர்ட் நாய் ஒன்று உலக சாதனை படைத்தது.</p><h3><strong>கனடா நாய் போட்டி</strong></h3><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE">கனடாவின்</a> எட்மன்டன் நகரில் உ ள்ள ஒரு பொதுவெளி மைதானத்தில் கடந்த ஜூன் 14 அன்று, எட்மன்டன் ரிவர்ஹாக்ஸ் பேஸ்பால் அணி ஒரு போட்டியை நடத்தியது.</p><p>அந்த போட்டியில் மைதானத்தில் சற்று குனிந்த நிலையில் இருந்த மனிதர்களை, பயிற்சி பெற்ற நாய்கள் ஒரு நிமிடத்திற்குள் தாண்டும் போட்டி நடைபெற்றது.</p><p>அந்த போட்டியில் ஜெனிபர் ஃப்ரேசர் என்பவரால் பயிற்சி அளிக்கப்பட்ட நான்கு வயது ஆஸ்திரேலியன் ஷெப்பர்ட் நாயான ‘ஷார்டோனே’ என்ற பெண் நாய் கலந்துகொண்டது.</p><h3><strong>56 நபர்களை தாண்டிய பெண் நாய்</strong></h3><p>எட்மன்டன் மைதானத்தில் 56 நபர்கள் வரிசையாக சற்று குனிந்த நிலையில் நின்றனர். </p><p>அப்போது ஷார்டோனே, 16 வினாடிகளில் அங்கே நின்று கொண்டிருந்த நபர்களை தாண்டி கின்னஸ் உலக சாதனை படைத்தது.</p><h3><strong>நாய் பயிற்சியாளர்</strong></h3><p>இந்த போட்டி குறித்து நாய் பயிற்சியாளர் ஃப்ரேசர் கூறுகையில், சில ஆண்டுகளுக்கு முன்பு ஷார்டோனேயை தன் முதுகை தாண்டுவதற்கு பயிற்சி அளித்ததாகவும், அதன் பிறகு அந்த நாயின் திறமைகள் பெரிதளவில் அதிகரித்ததாகவும் கூறினார்.</p><p>மேலும் மனிதர்களை தாண்டுவது ஷார்டோனே நாயின், பல திறமைகளில் ஒன்றுதான் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>ரேசன் கடைகளில் ரூ.35-க்கு வெங்காயம் விற்பனை: இன்று முதல் வினியோகம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/onions-sold-at-rs-35-in-ration-shops</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/onions-sold-at-rs-35-in-ration-shops#comments</comments><guid isPermaLink="false">ffc1d1df-81c5-4446-b6aa-cfb2d36457ab</guid><pubDate>Thu, 03 Sep 2026 10:39:17 +0000</pubDate><atom:updated>2026-09-03T10:39:17.819Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Onion,வெங்காயம்,ரேஷன் கடை,ration shop</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/7wo67o72/onion.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/7wo67o72/onion.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னையில் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் 251 ரேசன் கடைகளிலும், நுகர்வோர் வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் 350 அமுதம் கூட்டுறவு ரேசன் கடைகளிலும் குறைந்த விலையில் வெங்காயத்தை வாங்கி கொள்ளலாம்.</strong></em></p><p>சமையலுக்கு மிகவும் அத்தியாவசியமாக இருந்து வரும் பெரிய <a href="https://www.maalaimalar.com/topic/வெங்காயம்">வெங்காயத்தின்</a> விலை கடந்த சில நாட்களாகவே உச்சத்தில் இருந்து வருகிறது.</p><p>இதனால் தமிழகத்தில் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் கூட்டுறவுத்துறை ரேசன் கடைகள் மூலமாக குறைந்த விலைக்கு வெங்காயத்தை விற்பனை செய்ய முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தினார். </p><p>இதன்படி நகர்புறங்களில் செயல்பட்டு வரும் ரேசன் கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.35-க்கு இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. </p><h2><strong>2 அமைச்சர்கள்</strong></h2><p>இதற்கான முதல் விற்பனையை அமைச்சர் வெங்கடரமணன் மற்றும் காந்தி ராஜன் ஆகியோர் இன்று சென்னை, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையில் உள்ள ரேசன் விலைக் கடையில் தொடங்கி வைத்தனர். </p><p>இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் செயலாளர் அமுதா,  மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் லதா ஆகியோரும் கலந்து கொண்டனர்.</p><p>இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-</p><h2><strong>குறைந்த விலையில்</strong> </h2><p>முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தலின் பேரில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மூலம் பொது மக்களுக்கு தரமான வெங்காயம் குறைந்த விலையில் தடையின்றிக் கிடைக்கும் வகையில் சந்தை குறுக்கீட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>வெளிச்சந்தையில் அத்தியாவசியப் பொருளான வெங்காயத்தின் விலை உயர்ந்து வருவதைக் கட்டுப்படுத்தவும், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் பொருளாதார சுமையைக் குறைக்கவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.</p><h2><strong>ஆயிரம் மெட்ரிக் டன்</strong></h2><p>இதற்காக, தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையம்  மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு  ஆகியவற்றின் மூலம் முதற் கட்டமாக 1,000 மெட்ரிக் டன் வெங்காயம் மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் இருந்து தமிழ்நாடு அரசால் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, இன்று முதல் குடும்ப அட்டை ஒன்றுக்கு ஒரு கிலோ வீதம், கிலோ ரூ.35 என்ற மானிய விலையில் தமிழ்நாடு முழுவதும் வெங்காயம் விற்பனை செய்யப்படும்.</p><p>நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள ரேசன் கடைகள், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டக சாலைகள், பிரதம கூட்டுறவு பண்டக சாலைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் நடத்தப்படும் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் பண்ணை பசுமைக் கடைகள் உள்ளிட்ட மொத்தம் 8,914 கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வெங்காயம் விற்பனை செய்யப்படும்.</p><h2><strong>தடையின்றி கிடைக்க</strong></h2><p>இந்த நடவடிக்கையின் மூலம் பொதுமக்களுக்கு தரமான வெங்காயம் குறைந்த விலையில் தடையின்றிக் கிடைப்பது உறுதி செய்யப்படும். நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள பொது மக்கள் அனைவரும் இன்று முதல் தங்களுக்குரிய ரேசன் விலைக் கடைகளை அணுகி, கிலோ ரூ.35- என்ற மானிய விலையில் வெங்காயத்தைப் பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p><p>சென்னையில் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் 251 ரேசன் கடைகளிலும், நுகர்வோர் வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் 350 அமுதம் கூட்டுறவு ரேசன் கடைகளிலும் குறைந்த விலையில் வெங்காயத்தை வாங்கி கொள்ளலாம்.</p>]]></content:encoded></item><item><title>திபெத்தில் அடுத்தடுத்து இயற்கைச் சீற்றங்கள்: பேரழிவு வெள்ளத்தைத் தொடர்ந்து 5.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/world/tibet-hit-by-5-0-magnitude-earthquake-days-after-devastating-floods</link><comments>https://www.maalaimalar.com/news/world/tibet-hit-by-5-0-magnitude-earthquake-days-after-devastating-floods#comments</comments><guid isPermaLink="false">61528655-6c70-4b2a-a378-d84f6ee45174</guid><pubDate>Thu, 03 Sep 2026 10:32:06 +0000</pubDate><atom:updated>2026-09-03T10:32:06.475Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாளம்,nepal,திபெத்,Tibet,நிலநடுக்கம்,Nepal  Disaster,Tibet  Earthquake</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/d1zyyl42/TIBET.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tibet  Earthquake ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/d1zyyl42/TIBET.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாள எல்லையை ஒட்டிய திபெத் பிராந்தியத்தில், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் பேரழிவு நிகழ்ந்த சில நாட்களிலேயே, அப்பகுதியில் ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.</p><p>திபெத் தன்னாட்சிப் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப் பெருக்கின் வடு மாறுவதற்குள், அங்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பொதுமக்கள் இடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் தகவலின்படி, இன்று பதிவான இந்த <a href="https://www.maalaimalar.com/news/world/us-passport-rule-shakeup-parents-must-prove-citizenship-for-kids">நிலநடுக்கம்</a> ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆகப் பதிவாகியுள்ளது. பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலஅதிர்வு மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உடனடி சேதங்களோ அல்லது உயிர்ச்சேதங்களோ குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.</p><h2><strong>பேரழிவு வெள்ளம்</strong></h2><p>இதற்கு முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி நேபாள எல்லைக்கு அருகே உள்ள திபெத் மலைப்பகுதியில் பெரும் பனிப்பாறை ஒன்று திடீரென சரிந்து விழுந்தது. இதனால் ஏற்பட்ட மெகா வெள்ளப்பெருக்கு, ஆற்றோர நகரங்கள் மற்றும் பள்ளத்தாக்குகளைத் தரைமட்டமாக்கியது. வெள்ளத்தின் வீரியத்தால் நூற்றுக்கணக்கான கட்டிடங்களும் பாலங்களும் அடித்துச் செல்லப்பட்டன.</p><p>இந்த வெள்ளப் பெருக்கில் சிக்கி 1,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 4,000க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் மீட்புக் குழுவினருக்குப் கூடுதல் சவாலை ஏற்படுத்தியுள்ளது.</p><h2><strong>மீட்புப் பணிகளில் முட்டுக்கட்டை</strong></h2><p>நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் தொடர்ச்சியாக ஏற்படும் நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக அப்பகுதிக்கான தொடர்பு முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம் காரணமாக மீண்டும் நிலச்சரிவு ஏற்படுமோ என்ற அச்சத்தில் எல்லைப்புற கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கிப் புலம்பெயர்ந்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>வறட்சியால் தேயிலை மகசூல் சரிவு: நீலகிரியில் தேயிலை எஸ்டேட்டுகளுக்கு 5 நாட்கள் விடுமுறை - தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nilgiris-tea-estates-5-day-closure-workers-livelihood-hit</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nilgiris-tea-estates-5-day-closure-workers-livelihood-hit#comments</comments><guid isPermaLink="false">2d9e3723-a901-4b5e-8175-e9c66b24fae8</guid><pubDate>Thu, 03 Sep 2026 10:18:58 +0000</pubDate><atom:updated>2026-09-03T10:18:58.148Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Nilgiris,Tea Estate,நீலகிரி,தேயிலை எஸ்டேட்,Nilgiris Farmers,AVD Groups,Kothari Estate</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/ycy3q8ia/Tea-Estate" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tea Estate ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/ycy3q8ia/Tea-Estate?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF">நீலகிரி </a>மாவட்டத்தில் ஏ.வி.டி. குழுமத்தின் நீலமலை அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு உட்பட்ட சட்டன், லூசியானா, பவானி, காட்டேரி, வாட்டர்பால் உள்ளிட்ட எஸ்டேட்டுகள் மற்றும் கோத்தாரி நிறுவனத்திற்குட்பட்ட கிரேக்மோர், வுட்லேண்ட்ஸ், மானார், பழனியப்பா, தைமலை, சாம்ராஜ், கோரக்குந்தா, சன்னிசைடு, ஆலாடா வேலி, குன்னக்கொம்பை, பில்லி மலை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட எஸ்டேட்டுகளில் தொடாந்து 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>வறட்சி</h2><p>போதிய மழையின்மை காரணமாக தேயிலைத் தோட்டங்களில் மண்ணின் ஈரப்பதம் குறைந்து, <a href="https://www.maalaimalar.com/topic/tea-estate">பச்சைத்தேயிலை </a>கொழுந்துகளின் வரத்து கடுமையாக சரிந்துள்ளதாக விவசாயிகள் மற்றும் தேயிலைத் துறையினர் தெரிவிக்கின்றனர்.</p><p>வழக்கமாக ஒரு ஏக்கரில் மாதந்தோறும் சுமார் 500 கிலோ பச்சைத் தேயிலை கிடைக்கும் இடங்களில் தற்போது சுமார் 200 கிலோ அளவுக்கே கிடைப்பதாகவும், இதனால் எஸ்டேட்டுகளின் உற்பத்தி மற்றும் தொழிலாளர்களுக்கான வேலை நாட்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.</p><h2>மழை குறைவு</h2><p>நீலகிரியில் கடந்த சில ஆண்டுகளாக மழைப்பொழிவின் தன்மையில் ஏற்பட்டுள்ள மாற்றமும் தேயிலை சாகுபடிக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. </p><p>குறுகிய காலத்தில் அதிக மழை பெய்துவிட்டு, அதன்பின் நீண்ட நாட்களுக்கு வறண்ட வானிலை நீடிப்பது தேயிலை செடிகளின் இளம் தளிர்களின் வளர்ச்சியை பாதிப்பதாக தேயிலைத் துறையினர் கூறுகின்றனர்.</p><h2>வாழ்வாதாரம்</h2><p>நீலகிரி மாவட்டத்தின் பொருளாதாரத்தில் தேயிலைத் தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. தேயிலைத் தோட்டங்கள் மற்றும் தொழிற்சாலைகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.</p><p>இந்தநிலையில், தொடர்ச்சியாக 5 நாட்கள் எஸ்டேட்டுகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது தொழிலாளர்களின் வருமானத்தை நேரடியாக பாதிக்கும் என தொழிற்சங்கத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.</p><p>தேயிலை உற்பத்தி தொடர்ந்து குறைந்தால் தொழிலாளர்களுக்கான வேலை நாட்கள் மேலும் குறைவதுடன், சிறு தேயிலை விவசாயிகள், தேயிலைத் தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்த வர்த்தகமும் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.</p><h2>கோரிக்கை</h2><p>“நீலகிரி தேயிலைத் துறைக்கு ஏற்பட்டுள்ள தற்போதைய நிலையை அரசு ஆய்வு செய்து, பாதிக்கப்படும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். </p><p>தேயிலை விவசாயிகளையும் பாதுகாக்க நீண்டகால திட்டங்களை செயல்படுத்த வேண்டும்” என தொழிற்சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் மானியக்கோரிக்கை மீது எடப்பாடி பழனிசாமி, பிரேமலதா விவாதம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-and-premalatha-debate-on-the-demand-for-grants-in-the-legislative-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-and-premalatha-debate-on-the-demand-for-grants-in-the-legislative-assembly#comments</comments><guid isPermaLink="false">aead1f74-a02c-4fcc-8b22-cc968e0da179</guid><pubDate>Thu, 03 Sep 2026 09:44:20 +0000</pubDate><atom:updated>2026-09-03T09:44:20.024Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Edappadi Palaniswami,எடப்பாடி பழனிசாமி,தமிழக சட்டசபை,பிரேமலதா விஜயகாந்த்,premalatha vijayakanth,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/p2fwp6f8/eps.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி- பிரேமலதா விஜயகாந்த்]]></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி- பிரேமலதா விஜயகாந்த்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/p2fwp6f8/eps.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>காவலர்கள் எண்ணிக்கையை அதிகரியுங்கள், ஒருவர் பணி ஓய்வு பெறுகிறார் என்றால் ஓராண்டு முன்பே பணியிடத்தை நிரப்புங்கள் என கூறியுள்ளார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-</p><p>* நாங்கள் எதிர்க்கட்சிகள் தான் எதிரி கட்சிகள் இல்லை. கடந்த 2 மணி நேரத்தில் விவாதம் மட்டும் நடந்து வருகிறது.</p><p>* இன்று சட்டசபையில் உதயநிதி மட்டும் தான் பேசியிருக்கிறார். எந்த உறுப்பினரும் பேசவில்லை.</p><p>* இது சட்டசபை, சண்டை சபை இல்லை.</p><p>* தங்களுக்கான அறிவிப்புகள் வரப்போகிறது என ஆயிரக்கணக்கான காவலர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.</p><p>* காவல்துறைக்கு அடையாளமாக வாழ்ந்தவர் கேப்டன் விஜயகாந்த் என்றார். </p><p>இதற்கிடையே குறுக்கிட்ட உதயநிதி ஸ்டாலின், நான் 2 மணி நேரம் பேசவில்லை. வெறும் 35 நிமிடங்கள் தான் பேசி உள்ளேன் என அக்கா பிரேமலதாவிற்கு கூறிக்கொள்கிறேன் என்றார். </p><p>இதையடுத்து பேச்சை தொடங்கிய பிரேமலதா விஜயகாந்த், </p><p>* காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>* காவல்துறையில் கூடுதல் பணியிடங்களை உருவாக்கி புதியவர்களை நியமிக்க வேண்டும்.</p><p>* 8 மணி நேரம் வேலை, வார விடுப்பு போன்றவற்றை படிப்படியாக அமல்படுத்த வேண்டும்.</p><p>* திருநங்கைகள் மிகவும் தைரியமானவர்கள், அவர்களை சிங்கப்பெண் அதிரடிப்படையில் சேர்க்க வேண்டும்.</p><p>* அதிக வழக்குகளை கையாளும் காவல்நிலையங்களில் கூடுதல் காவலர்களை நியமிக்க வேண்டும்.</p><p>* போக்குவரத்து காவலர்களுக்கு உணவு, பழச்சாறு, கழிப்பறை வசதி ஏற்படுத்தித்தர வேண்டும்.</p><p>* உலகத்தரத்தில் தமிழ்நாடு காவல்துறையினருக்கு சீருடை வழங்க வேண்டும் என்றார். </p><p>இதையடுத்து பேசிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, </p><p>* கொரோனா காலகட்டத்தில் காவல்துறையினர் சிறப்பாக கணியாற்றினர். அவர்களால் பல உயிர்கள் காக்கப்பட்டது.</p><p>* அதிமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாக்கப்பட்டனர். சட்டம், ஒழுங்கு சீராக இருந்தது.</p><p>* எடப்பாடி தொகுதியில் ஜலகண்டபுரத்தில் புறவழிச்சாலை அமைக்க 80% நிலம் எடுப்பு பணிகள் முடிந்து விட்டது.</p><p>* திமுக ஆட்சியில் கைவிட்ட புறவழிச்சாலை திட்டத்தை தவெக அரசு செயல்படுத்த வேண்டும்.</p><p>* அதிமுக ஆட்சியை போல் விவசாயிகள் 22 மணி நேரம் மின் மோட்டாரை இயக்க அனுமதி வழங்க வேண்டும்.</p><p>* மக்கள்தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப காவலர் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்.</p><p>* அதிமுக ஆட்சியில் காவலர்களுக்கு முறையாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. பணியிடங்கள் நிரப்பப்பட்டன.</p><p>* காவலர்கள் எண்ணிக்கையை அதிகரியுங்கள், ஒருவர் பணி ஓய்வு பெறுகிறார் என்றால் ஓராண்டு முன்பே பணியிடத்தை நிரப்புங்கள்.</p><p>* காவலர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும் என தவெக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.</p><p>* காவல் ஆய்வாளர்கள் பலர் ஓய்வு பெற உள்ளனர். அவர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி உயர்வு வழங்க வேண்டும்.</p><p>* பெண் காவலர்களை இரவு நேரங்களில் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்படுவதை தவிர்க்க வேண்டும்.</p><p>* காவலர்களின் மன அழுத்தத்தை குறைக்க அதிமுக ஆட்சியில் அளித்தது போல தவெகவும் சிறப்பு புத்தாக்க பயிற்சி அளிக்க வேண்டும். </p><p>* காவல் நிலையங்களின் உள்ளே 24 மணி நேரமும் சிசிடிவி கேமராக்கள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>* சாலைகளில் உள்ள சிசிடிவி-களில் தூசுகள் படிந்து பதிவுகள் முறையாக கிடைப்பதில்லை, அதை பராமரிக்க வேண்டும்.</p><p>* சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் இடங்களை கண்டறிந்து, அதனை சரி செய்ய வேண்டும்.</p><p>* மக்களிடம் ஆதாரங்கள் இருந்தாலும் போக்குவரத்து காவல்துறை அபராதம் வசூலிப்பதாக புகார் வருகிறது, அதை தடுக்க வேண்டும் என்றார். </p>]]></content:encoded></item><item><title>மேகதாது அணை: மேலும் மேலும் முன்னேறும் கர்நாடக அரசு... தமிழ்நாடு? - அன்புமணி கேள்வி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-dam-karnataka-government-forging-ahead-what-about-tamil-nadu-anbumani-asks</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-dam-karnataka-government-forging-ahead-what-about-tamil-nadu-anbumani-asks#comments</comments><guid isPermaLink="false">a9674411-aa44-4fe4-812b-6199ebdeb893</guid><pubDate>Thu, 03 Sep 2026 09:38:42 +0000</pubDate><atom:updated>2026-09-03T09:38:42.436Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,தமிழ்நாடு அரசு,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,mekedatu dam,மேகதாது அணை,Government of Tamil Nadu</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/s0tm4m56/New-Project-2026-09-03T150628.962.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மேகதாது அணை: மேலும் மேலும் முன்னேறும் கர்நாடக அரசு... தமிழ்நாடு? - அன்புமணி கேள்வி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/s0tm4m56/New-Project-2026-09-03T150628.962.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகம் மேலும், மேலும் முன்னேறி வரும் நிலையில், தமிழ்நாடு அரசு தொடர்ந்து அமைதி காப்பது கவலையை ஏற்படுத்துவதாக பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். </p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;</p><h2>தொடர் முன்னேற்றத்தில் கர்நாடக அரசு</h2><p>காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு விரைவாக அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய நீர்வள ஆணையத் தலைவர் அனுபம் பிரசாத்தை கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சாலுவராய சாமி நேரில் சந்தித்து தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். </p><p>மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகம் மேலும், மேலும் முன்னேறி வரும் நிலையில், தமிழ்நாடு அரசு தொடர்ந்து அமைதி காப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.</p><p>மேகதாது அணை கட்டப்படவுள்ள இடத்தை மத்திய நீர்வள ஆணையத்தின் குழு உடனடியாக நேரில் ஆய்வு செய்ய வேண்டும்; ஆய்வுப் பணிகள் விரைந்து முடிக்கப்படுவதற்கு தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று இந்த சந்திப்பின் போது கர்நாடக அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>மேகதாது அணை தொடர்பாக மத்திய நீர்வள ஆணையம் கோரும் கூடுதல் தொழில்நுட்பத் தகவல்களை உடனுக்குடன் வழங்கவும் கர்நாடக அரசு தயாராக இருக்கிறது என்றும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார். </p><p>இதன் மூலம் மேகதாது அணை கட்டும் முயற்சிகளில் கர்நாடக அரசு மேலும் ஒரு படி முன்னேறியுள்ளது.</p><h2>தீவிரம்</h2><p>மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை  கடந்த 2019ஆம் ஆண்டில் மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு தாக்கல் செய்தது. </p><p>அந்த அறிக்கையின் சில அம்சங்கள் காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் கூறுகளுக்கு எதிராக இருப்பதால், அதை திருத்தி வழங்கும்படி கடந்த ஜூன் 29ஆம் தேதி மத்திய நீர்வள ஆணையம் திருப்பி அனுப்பியது. </p><p>அடுத்த 50 நாள்களுக்குள், அதாவது ஆகஸ்ட் 19&amp;ஆம் தேதிக்கு முன்பாக திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு தாக்கல் செய்து விட்டது.</p><p>அடுத்த 10 நாள்களில், அதாவது ஆகஸ்ட் 29ஆம் தேதி மைசூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், மேகதாது அணை கட்டும் பணிகளை விரைவுபடுத்தும் நோக்குடன் அணைக்கு அனுமதி கோரி மத்திய நீர்வள ஆணையத்தை கர்நாடகம் அணுகும் என்று கூறியிருந்தார். </p><p>அடுத்த நான்காம் நாளில் கர்நாடக அமைச்சர் மத்திய நீர்வள ஆணையத் தலைவரை சந்தித்து புதிய அணைக்கு விரைவாக அனுமதி தர வேண்டும் என்று கோரியிருக்கிறார். மேகதாது அணையை கட்டுவதில் கர்நாடகம் காட்டும் தீவிரத்தை இது உணர்த்துகிறது.</p><h2>தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்</h2><p>அதே நேரத்தில், மேகதாது அணை தொடர்பாக கர்நாடக அரசு ஒவ்வொரு அடியை எடுத்து வைக்கும் போதும், அதை சுட்டிக்காட்டி, கர்நாட அரசின் முயற்சிகளை முறியடிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தி வருகிறேன். </p><p>கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில்,‘‘மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டிற்கு, குறிப்பாக, காவிரி பாசன மாவட்டங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் நினைத்துப்பார்க்க முடியாதவை. </p><p>மேகதாது அணையை கட்டுவதற்கான நடவடிக்கைகளை கர்நாடக அரசு நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வரும் நிலையில், தமிழ்நாடு அமைதியாக இருப்பது நல்லதல்ல. </p><p>தமிழ்நாடு அரசின் அலட்சியம் காவிரி நீரில் தமிழ்நாட்டின் உரிமையை தாரைவார்ப்பதாக அமைந்துவிடும். </p><p>எனவே, இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு இனியும் அலட்சியம் காட்டக்கூடாது. மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.</p><p>இது குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக கூட்ட வேண்டும்’’ என்று வலியுறுத்தியிருந்தேன். ஆனால், தமிழ்நாடு அரசு அதன் அலட்சிய அணுகுமுறையை மாற்றிக்கொள்ளவில்லை.</p><h2>கண்டும் காணாமல் இருக்கும் அரசு</h2><p>மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டுக்கு பாசனத் தேவை, குடிநீர்த் தேவை உள்ளிட்டவற்றில் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும், கர்நாடகத்தில் சுற்றுச்சூழலுக்கும், வன உயிரினங்களுக்கும் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து இதுவரை 100 முறைகளுக்கு மேல் விளக்கிக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளேன். </p><p>அதன் பயனாக, மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகி விடும் என்பதையும், சென்னை உள்பட 28 மாவட்டங்களில் உள்ள 5 கோடி மக்களுக்கு குடிநீர் கிடைக்காது என்பதையும் தமிழ்நாடு ஆட்சியாளர்கள் நன்கு அறிந்திருப்பார்கள். </p><p>இவ்வளவுக்கும் பிறகும் மேகாதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் நகர்வுகளை கண்டும் காணததைப் போல தமிழ்நாடு அமைதி காப்பதன் காரணத்தை  புரிந்து கொள்ள முடியவில்லை. இது என்ன வகையான அரசியல் உத்தி என்பதும் எங்களுக்குத் தெரியவில்லை.</p><h2>தமிழ்நாடு அரசு எப்போது கடமையை நிறைவேற்றும்?</h2><p>மேகதாது அணை கட்ட விரைவாக அனுமதி அளிக்க வேண்டும் என்று கர்நாடக அரசின் சார்பில் மத்திய நீர்வள ஆணையத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில், மேகதாது அணை கட்டப்படுவது உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு எதிரானது என்பதால், அதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று மத்திய நீர்வள ஆணையத்தை வலியுறுத்த வேண்டியது தமிழ்நாடு அரசின் அடிப்படையானக் கடமை ஆகும்.</p><p>அந்தக் கடமையை தமிழ்நாடு அரசு எப்போது நிறைவேற்றி, காவிரியை பாதுகாக்கப் போகிறது?</p><h2>விழித்துக்கொண்டால்தான்...</h2><p>அரசியலாக இருந்தாலும், நிர்வாகமாக இருந்தாலும், மாநில உரிமைகளை பாதுகாப்பதாக இருந்தாலும் விழித்துக் கொண்டவர்கள் தான் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அலட்சியமாக இருந்தவர்கள் உரிமைகளை இழந்திருக்கிறார்கள். </p><p>1970ஆம் ஆண்டுகளில் கர்நாடகத்தில் காவிரி துணை ஆறுகளின் குறுக்கே கபினி, ஹாரங்கி, ஹேமாவதி, சுவர்ணவதி ஆகிய 4 அணைகள் கட்டப்பட்டது தான் இதற்கு சான்றாகும். </p><p>அந்த அணைகளால் தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை இன்று வரை நம்மால் சரி செய்ய முடியவில்லை. இத்தகைய சூழலில் இன்னும் ஒரு அணை கட்டப்பட்டால் காவிரி பாசன மாவட்டங்களின் நிலை என்னவாகும்?</p><p>தமிழ்நாடு அரசிடம் மீண்டும், மீண்டும் வலியுறுத்துவதெல்லாம் காவிரி விவகாரத்தில் கடைபிடித்து வரும் அலட்சியமான அணுகுமுறையை உடனடியாக கைவிடுங்கள் என்பது தான். </p><p>மத்திய நீர்வள ஆணையர், மத்திய நீர்வள அமைச்சர், பிரதமர் ஆகியோரை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேரில் சந்தித்து மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி தரக் கூடாது; அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்ய 2018&amp;ஆம் ஆண்டில் அளிக்கப்பட்ட அனுமதியை திரும்பப் பெறும்படி வலியுறுத்த வேண்டும்.</p><p>அவ்வாறு செய்யும் போது மேகதாது அணை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடத்தும் போது இதை சுட்டிக் காட்டி வாதிட முடியும் என்பதால் உடனடியாக இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>சட்டமன்றம்... பட்டிமன்றம்... ராஜ்மோகன் Vs உதயநிதி- சட்டசபையில் நடந்த காரசார விவாதம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajmohan-vs-udhayanidhi-stalin-arguments-in-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajmohan-vs-udhayanidhi-stalin-arguments-in-assembly#comments</comments><guid isPermaLink="false">5d8ef164-3243-49a5-8255-2cee40eec32d</guid><pubDate>Thu, 03 Sep 2026 08:59:18 +0000</pubDate><atom:updated>2026-09-03T08:59:18.282Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,தமிழக சட்டசபை,TN assembly,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/662rwe6g/assembly06.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராஜ்மோகன்- உதயநிதி ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ ராஜ்மோகன்- உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/662rwe6g/assembly06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>உண்மையில் நீட் ஒழிப்பு ரகசியம் எனக்குத் தெரியும் என்று உதயநிதி கூறியது தான் மிகப்பெரிய காதுகுத்து என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> இன்றைய நிகழ்வில் காரசார விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றைய காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திட்டங்களுக்கு கட்டுபாடு விதிக்கும் அரசு தாய் மாமன் காது குத்தும் திட்டம் என மொத்தமாக பெயரிடலாம் என கூறினார். </p><p>இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், உண்மையில் நீட் ஒழிப்பு ரகசியம் எனக்குத் தெரியும் என்று உதயநிதி கூறியது தான் மிகப்பெரிய காதுகுத்து என்றார். </p><p>அமைச்சர் ராஜ்மோகன் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டனர். </p><p>இதைதொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், தி.மு.க. உறுப்பினர் ஜாபர் சாதிக் பல கோடி போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார். அண்ணா பல்கலை மாணவி வழக்கின் FIR-ஐ ஆன்லைனில் பதிவிட்டு அவரது அடையாளத்தை வெளிப்படுத்தியது தி.மு.க. அரசு. </p><p>புகாரளித்த அரைமணி நேரத்தில் மாணவி பெயர், வீட்டின் முகவரியை வெளியிட்டு வரை தி.மு.க. அரசு அவரை அச்சுறுத்தியது. தி.மு.க. ஆட்சியில் குற்றங்களே நடக்காதது போல் நாடகம் ஆடினார்கள். </p><p>த.வெ.க. ஆட்சியில் குற்றங்களை தடுக்க வரலாற்றில் முதன்முறையாக சிங்கப்பெண் அதிரப்படை உருவாக்கப்பட்டது. தரமான பதிலடி முதலமைச்சர் மூலமாக தரப்படும். போன வருடம் நடைபெற்ற சட்டசபையில் துணை முதலமைச்சர் அவைக்கு வரவே இல்லை. அவருக்கு பதில் அன்றைய முதலமைச்சரே எழுந்து நின்று அவருக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் மானியக்கோரிக்கையை நானே வாசிக்கிறேன் என்றார். </p><p>மேலும், மெரினாவுக்கு எப்படி பூட்டு போடுவது என சொல்லிக்கொடுத்தது முந்தைய தி.மு.க. அரசு தான். கடந்த 5 ஆண்டுகளாக மெரினாவுக்கு பூட்டு போடுவதில் PHD செய்தவர்கள் தி.மு.க. தான். தி.மு.க. ஆட்சியில் மெரினா கடற்கரையில் எந்த போராட்டத்திற்கு அனுமதி அளித்தார்கள் என்றார். </p><p>இதனை தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், நான் அவைக்கு சரியாக வருவதில்லை என அமைச்சர் கூறினார், வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டுள்ளேன், பாருங்கள்.  அமைச்சர் ராஜ்மோகனின் வரவலாறு எங்களுக்கு தெரியும். பட்டிமன்ற பேச்சாளர் ராஜ்மோகன் அமைச்சராவதற்கு முன்பு திமுகவை ஆதரித்து பல மேடைகளில் பேசினார். தற்போது தவெகவில் இருப்பதால் அமைச்சர் ராஜ்மோகன் மாற்றி பேசி வருகிறார் என்றார். </p><p>இதனிடையே பேசிய  ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவரின் குற்றச்சாட்டிற்கு முதலமைச்சர் பதலளிக்க கால அவகாசம் உள்ளது. நான் பதிலளிக்கும் போது யாரும் ஒடிவிடக்கூடாது என முதலமைச்சர் கூறிய வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றார். </p><p>அந்த வார்த்தையை எல்லாம் நீக்க முடியாது என ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கையை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் நிராகரித்தார். </p>]]></content:encoded></item><item><title>வாரணாசியில் இருந்து டெல்லி சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் லக்னோவில் அவசர தரையிறக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/air-india-express-flight-from-varanasi-to-delhi-makes-emergency-landing-in-lucknow</link><comments>https://www.maalaimalar.com/news/national/air-india-express-flight-from-varanasi-to-delhi-makes-emergency-landing-in-lucknow#comments</comments><guid isPermaLink="false">f0515a68-9a2a-46d5-bcef-95f0245ffccf</guid><pubDate>Thu, 03 Sep 2026 08:48:40 +0000</pubDate><atom:updated>2026-09-03T08:48:40.397Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வாரணாசி,varanasi,ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்,Air India Express,delhi,டெல்லி,உத்தரப்பிரதேச மாநிலம்,Cargo Hold</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/puy6re1d/air.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Air India Express  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/puy6re1d/air.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து டெல்லி நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், நடுவானில் எழுந்த புகை எச்சரிக்கை காரணமாக லக்னோவில் உள்ள செளத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.</p><p>விமானம் உயரே பறந்து கொண்டிருந்தபோது, அதன் சரக்கு வைக்கும் பகுதியில் புகை வருவதற்கான எச்சரிக்கை மணிகள் ஒலித்துள்ளன. இதையடுத்து எச்சரிக்கையான விமானி, உடனடியாக லக்னோ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்புகொண்டு அவசரமாகத் தரையிறங்க அனுமதி கோரினார். அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து, காலை 8:52 மணியளவில் விமானம் லக்னோ விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த 155 பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் காலை 9:02 மணியளவில் எவ்வித ஆபத்துமின்றி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.</p><p>உடனடியாகச் செயல்பட்ட விமான நிலைய அவசரகால மீட்புக் குழு மற்றும் தீயணைப்புப் படையினர் விமானத்தைச் சோதனையிட்டனர். முதற்கட்ட ஆய்வில் சரக்குப் பகுதியில் புகையோ அல்லது தீப்பிடித்ததற்கான சுவடுகளோ எதுவும் கண்டறியப்படவில்லை. போலியான எச்சரிக்கை மணி ஒழித்ததா அல்லது தொழில்நுட்பக் கோளாறா என்பது குறித்துப் பொறியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.</p><p>பயணிகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்தே விமானம் லக்னோவிற்கு திருப்பி விடப்பட்டதாகத் தெரிவித்துள்ள <a href="https://www.maalaimalar.com/news/world/us-passport-rule-shakeup-parents-must-prove-citizenship-for-kids">ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்</a> நிறுவனம், பயணிகள் டெல்லி செல்வதற்கு மாற்று விமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் கோவாவில் இருந்து டெல்லி சென்ற இண்டிகோ விமானம் ஒன்றின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டு அவசரமாகத் தரையிறக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஒரு பயணிகள் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட சம்பவம் விமானப் பயணிகள் மத்தியில் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்க பாஸ்போர்ட் விதிகளில் அதிரடி மாற்றம்: குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் பெற பெற்றோரின் குடியுரிமை சான்று கட்டாயம்!</title><link>https://www.maalaimalar.com/news/world/us-passport-rule-shakeup-parents-must-prove-citizenship-for-kids</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-passport-rule-shakeup-parents-must-prove-citizenship-for-kids#comments</comments><guid isPermaLink="false">266b5687-7f61-4a04-a80e-ccb0ed30171f</guid><pubDate>Thu, 03 Sep 2026 08:33:49 +0000</pubDate><atom:updated>2026-09-03T08:33:49.203Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,குடியுரிமை,Green Card,டொனால்ட் டிரம்ப்,US passport rules,Birthright Citizenship,அமெரிக்க பாஸ்போர்ட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/9ezxl76s/PASS.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ US passport rules  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/9ezxl76s/PASS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் குடியுரிமை மற்றும் பாஸ்போர்ட் விதிகளில் கடுமையான மாற்றங்களைக் கொண்டுவர டிரம்பின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. </p><p>அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பான விதிகளில் கடுமையான மாற்றங்களை கொண்டு வர அமெரிக்க வெளியுறவுத்துறை திட்டமிட்டுள்ளது. புதிய வரைவு வழிகாட்டுதலின்படி, இனி தங்களின் குழந்தைகளுக்கு அமெரிக்க பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்கும் பெற்றோர்கள், தங்களது சொந்த குடியுரிமை அல்லது சட்டப்பூர்வ அமெரிக்க வாழ்வுக்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட உள்ளது.</p><h2>‘பிறப்<strong>பு சுற்றுலா’வுக்கு</strong> முற்றுப்புள்ளி </h2><p>அமெரிக்க அதிபர் <a href="https://www.maalaimalar.com/news/world/iran-is-under-total-surveillance-they-cannot-even-go-to-the-restroom-without-our-permission-trump">டொனால்ட் டிரம்ப்</a>, அந்நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு தானாகவே கிடைக்கும் 'பிறப்புரிமை குடியுரிமையை' கட்டுப்படுத்தும் நோக்கில் ஆகஸ்ட் 6 அன்று பிறப்பித்த நிர்வாக உத்தரவைச் செயல்படுத்தவே இந்த புதிய விதிகளை வெளியுறவுத்துறை வரைவு செய்துள்ளது. வெளிநாட்டினர் சுற்றுலா விசா மூலம் அமெரிக்கா வந்து குழந்தை பெற்று, அதன் மூலம் அக்குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை பெறுவதை தடுப்பதே இதன் முதன்மை நோக்கமாகும்.</p><p>தற்போதைய நடைமுறைப்படி, அமெரிக்காவில் பிறந்த குழந்தைக்கு பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும்போது பெற்றோர் தங்களின் அடையாளச் சான்றையும், குழந்தையுடனான உறவையும் நிரூபித்தால் போதுமானது. ஆனால் புதிய விதிகளின்படி, பெற்றோர்கள் தங்களின் குடியுரிமையை நிரூபிக்க அமெரிக்க பாஸ்போர்ட் அல்லது பிறப்பு சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். குடியுரிமை பெறாத சட்டப்பூர்வ குடியிருப்பாளர்கள் தங்களின் நிரந்தர குடியிருப்பு அட்டை அல்லது I-94 படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.</p><p>டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக மனித உரிமை அமைப்புகளும் வழக்கறிஞர்களும் ஏற்கனவே மேரிலாந்தின் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர். இந்த உத்தரவு அமெரிக்க அரசியலமைப்பின் 14-வது திருத்தத்திற்கு எதிரானது என்று எதிர்தரப்பினர் வாதிடுகின்றனர். இருப்பினும், நாட்டின் குடியுரிமை அமைப்பின் மதிப்பைப் பாதுகாக்கவும், முறைகேடுகளைத் தடுக்கவுமே இத்தகைய கட்டுப்பாடுகள் அவசியம் என டிரம்ப் நிர்வாகம் தனது முடிவை தீவிரமாக நியாயப்படுத்தி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>போலவரம் கால்வாய் வழியாக வட ஆந்திராவிற்குள் பாயும்  கோதாவரி நீர்...</title><link>https://www.maalaimalar.com/news/topnews/godavari-water-flows-into-north-andhra-through-polavaram-canal</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/godavari-water-flows-into-north-andhra-through-polavaram-canal#comments</comments><guid isPermaLink="false">1fecfd2f-ac5c-4f94-a1a0-ff4de9a6d8ca</guid><pubDate>Thu, 03 Sep 2026 08:23:14 +0000</pubDate><atom:updated>2026-09-03T08:23:14.154Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Andhra Pradesh,ChandraBabu Naidu,ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு,Polavaram project,போலவரம் கால்வாய்,Godavari Water,கோதாவரி நீர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/boac4qo0/Chandrababu-Naidu" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chandrababu Naidu ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/boac4qo0/Chandrababu-Naidu?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p>வட ஆந்திர மக்களின் பல தசாப்த கனவு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாக நேற்று நனவாகியுள்ளது. </p><p>போலவரம் இடது பிரதான கால்வாய் மூலமாக உத்தர ஆந்திராவிற்குள் நுழைந்த <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81">கோதாவரி நதிநீரை</a>, ஆந்திர மாநில முதல்-மந்திரி <a href="https://www.maalaimalar.com/topic/chandrababu-naidu">என். சந்திரபாபு நாயுடு</a> அனகாபள்ளி மாவட்டம் பாயகாராவுபேட்டா மண்டலத்தின் சீதாரம்புரத்தில் முறைப்படி ‘ஜல ஹாரத்தி’ எடுத்து மலர் தூவி வரவேற்றார்.</p><h2>பொறியியல் சாதனை: 213 கி.மீ நீளப் பிரம்மாண்ட கால்வாய்</h2><p>கிழக்குத் தொடர்ச்சி மலையின் மிகக் கடினமான நிலப்பரப்புகளைக் கடந்து, சுரங்கப் பாதைகள், நீர் பாலங்கள் மற்றும் ஏலேரு ஆற்றின் அடிவாரத்தில் அமைக்கப்பட்ட பிரத்யேக சைஃபோன் கட்டமைப்பு போன்ற பல கடினமான பொறியியல் சவால்களைக் கடந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த 213 கிலோமீட்டர் நீளமுள்ள இடது பிரதான கால்வாய், பாசனம், குடிநீர் மற்றும் தொழில்துறை தேவைகளுக்காக 23.44 டிஎம்சி கோதாவரி நீரை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், இத்திட்டத்திற்காக இதுவரை சுமார் ரூ.4,192 கோடி செலவிடப்பட்டுள்ளது.</p><h2>முதல் கட்டத்தால் பயன்பெறும் மாவட்டங்களும், விவசாய நிலங்களும்</h2><p>இந்த முதற்கட்ட நீர் வெளியீட்டின் மூலம் 4 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 5.23 லட்சம் மக்களும், 2.87 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களும் நேரடியாகப் பயன்பெறவுள்ளனர்.</p><p>அனகாபள்ளி மாவட்டத்தில் மட்டும் சுமார் 1.5 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு நீர்ப்பாசனம் கிடைக்கும். இந்த நீர் பகிர்வு ஏலேரு கால்வாய் மற்றும் அப்பகுதியில் உள்ள 110 ஏரிகளை நிரப்பப் பயன்படுத்தப்படும். மேலும், ஏலேரு, பம்பா, தாண்டவா, வராஹா, சாரதா ஆகிய நதி அமைப்புகளின் வழியாக இந்த நீர் பயணிக்கும். </p><p>புஷ்கரா பாசன மண்டலத்தின் கீழ் 1.48 லட்சம் ஏக்கர் நிலங்கள் இதனால் ஸ்திரத்தன்மை பெறும். இதில் ஏலேருவின் கீழ் 80,700 ஏக்கர், பம்பா கீழ் 12,000 ஏக்கர், மற்றும் தாண்டவா, வராஹா, மாமிடி கெட்டா மண்டலங்களில் 46,620 ஏக்கர் நிலங்கள் அடங்கும்.</p><h2>"உத்தர ஆந்திரா இனி வளர்ச்சி மையம்" - முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பேச்சு</h2><p>பாயகாராவுபேட்டாவில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் சந்திரபாபு நாயுடு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்:</p><p>இந்த இடது பிரதான கால்வாய் மேலும் விரிவுபடுத்தப்பட்டு, 'உத்தராந்திர சுஜல ஸ்ரவந்தி' திட்டத்துடன் இணைக்கப்படும். இதன் மூலம் அனகாபள்ளி, விசாகப்பட்டினம், விஜயநகரம், பார்வதிபுரம் மன்யம் மற்றும் ஸ்ரீகாகுளம் மாவட்டங்களின் மேட்டுப்பாங்கான பகுதிகளுக்கும் கோதாவரி நீர் கொண்டு செல்லப்படும்.</p><p>"இனி வாழ்வாதாரத்திற்காக மக்கள் உத்தர ஆந்திராவை விட்டு வெளியேற மாட்டார்கள், மாறாக மற்ற பகுதிகளில் இருந்து மக்கள் உத்தர ஆந்திராவை நோக்கி வேலை தேடி புலம்பெயர்ந்து வருவார்கள்" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். </p><p>கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் நீர்ப்பாசனத்திற்காக அரசு ரூ. 25,000 கோடி செலவிட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.35,000 கோடி செலவில் 36 முக்கிய நீர்ப்பாசனத் திட்டங்கள் முழுமையாக நிறைவு செய்யப்படும் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>ஈரான் முழு கண்காணிப்பில் உள்ளது.. எங்கள் அனுமதியின்றி அவர்கள் கழிவறைக்கு கூட செல்ல முடியாது - டிரம்ப்</title><link>https://www.maalaimalar.com/news/world/iran-is-under-total-surveillance-they-cannot-even-go-to-the-restroom-without-our-permission-trump</link><comments>https://www.maalaimalar.com/news/world/iran-is-under-total-surveillance-they-cannot-even-go-to-the-restroom-without-our-permission-trump#comments</comments><guid isPermaLink="false">55933a62-f7ad-43c9-b957-d8ab3c5fa39b</guid><pubDate>Thu, 03 Sep 2026 08:21:16 +0000</pubDate><atom:updated>2026-09-03T08:21:16.812Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>trump,டிரம்ப்,Iran War,ஈரான் போர்,ஹார்முஸ் ஜலசந்தி,Strait of Hormuz</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/rponenim/tn-26.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டிரம்ப்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிரம்ப்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/rponenim/tn-26.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/attacks-on-60-positions-in-a-single-day-40-tankers-carrying-18-million-barrels-of-oil-pass-through-the-strait-of-hormuz-us-reports-incident">ஈரானை </a>அமெரிக்கா முழுமையாக கண்காணித்து வருவதாகவும் தங்களது கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு ஈரானால் எதையும் செய்ய முடியாது என்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். </p><h2>கண்காணிப்பு </h2><p>வெள்ளை மாளிகை ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய <a href="https://www.maalaimalar.com/topic/donald-trump">டிரம்ப்</a>,  "நாங்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எங்களது அனுமதியின்றி அவர்களால் நகரக்கூட முடியாது. கழிப்பறைக்குக் கூடச் செல்ல முடியாது" என்று கூறியுள்ளார்.</p><p>தேவைப்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல்களை நடத்தத் நாங்கள் தயார் நிலையில் உள்ளோம் என்றும், இந்தத் தற்காலிக மோதல் நீண்ட காலம் நீடிக்காது என நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். </p><h2>அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் ஹார்முஸ்</h2><p>ஹார்முஸ் ஜலசந்தியின் முழுமையான கட்டுப்பாடு தற்போது அமெரிக்காவின் கைகளில் உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>அங்கிருந்து தினமும் மில்லியன் கணக்கான பேரல் எண்ணெய் ஏற்றிக்கொண்டு தங்களது கப்பல்கள் பாதுகாப்பாகப் புறப்படுவதாகவும், ஈரானின் டிரோன்கள் தென்பட்டால் அவை சுட்டு வீழ்த்தப்படுவதாகவும் அவர் கூறினார்.</p><p>ரேடார் அமைப்புகள் மற்றும் ஏவுகணைகளை மீண்டும் நிறுவுவதற்கும், கண்ணிவெடிகளைப் பதிப்பதற்குமான ஈரானின் புதிய முயற்சிகள் அனைத்தையும் தங்களது ஏவுகணைத் தாக்குதல்கள் மூலம் தகர்த்தெறிந்துள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.</p><p>ஹார்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை பதிப்பதற்காக ஈரான் தயாரித்து வந்த ஒரு பெரிய ராக்கெட்டின் பணி நிறைவடையும் தருவாயில், அதைத் தங்களது படைகள் கண்டறிந்து அழித்ததாகவும் டிரம்ப் மேலும் கூறினார்.</p><h2>அமெரிக்கா - ஈரான் மோதல்</h2><p>அமெரிக்கா - ஈரான் இடையே ஹார்முஸ் மற்றும் அதனை சுற்றிய பகுதியில் பரஸ்பர தாக்குதல் நடந்து வருகிறது.</p><p>ஈரான் மீது இந்த வாரம் அமெரிக்கா நடத்திய இந்தத் தாக்குதலில் ஈரானில் குறைந்தது 18 பேர் உயிரிழந்தனர் மற்றும் 108 பேர் காயமடைந்தனர்.</p><p>ஈரான் குஹெஸ்டாக் நகரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றின் மீது அமெரிக்க வான்வழித் தாக்குதல் நடத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.</p><h2>ஈரான் பதிலடி</h2><p>பதிலடியாக குவைத், ஜோர்டான், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்து ஈரான் எதிர்த்தாக்குதல் நடத்தியுள்ளது.</p><p>அமெரிக்காவின் அடித்தளத்தையே ஆட்டிப்படைக்கும் வகையிலான புதிய உத்தியை ஈரான் கையாண்டு வருவதாக ஈரானின் பாதுகாப்பு கவுன்சில் தலைவர் மொஹ்சென் ரெசாய் எச்சரித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>யாரும் ஓடிவிடக்கூடாது... முதலமைச்சர் விஜய் Vs உதயநிதி: சட்டசபையில் வெடித்த வார்த்தை மோதல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-vs-udhayanidhi-stalin-arguments</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-vs-udhayanidhi-stalin-arguments#comments</comments><guid isPermaLink="false">f9cb10f7-44fb-49be-be6f-e4176b15fd57</guid><pubDate>Thu, 03 Sep 2026 08:18:07 +0000</pubDate><atom:updated>2026-09-03T08:18:07.141Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,விஜய்,vijay,Udhayanidhi Stalin,தமிழக சட்டசபை,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/eb35vanq/vijay01.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்- உதயநிதி ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்- உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/eb35vanq/vijay01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>எல்லாத்துக்கும் நான் தெளிவா பதில் சொல்றேன். உங்கள் சார்பாக அவர்களிடம் ஒரு ப்ராமிஸ் கேட்கிறேன். யாரும் எழுந்திருச்சி ஓடிவிடக் கூடாது என முதலமைச்சர் விஜய் பேசினார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">சட்டசபையில்</a> இன்று காவல்துறை மானிய கோரிக்கை மீது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-</p><p>சட்டம் ஒழுங்கு பிரச்சனை சார்ந்த நான் வைக்கும் கேள்விகளுக்கு முதலமைச்சர் உரிய பதிலை வழங்குவார் என நம்பி எனது உரையை தொடங்குகிறேன். திமுக ஆட்சியில் குற்றச்சம்பவங்கள் குறைந்திருப்பதை சுட்டிக்காட்டி கொள்கை விளக்க குறிப்பில் குறிப்பிட்டுள்ள தகவலுக்கு நன்றி. </p> <p>தற்போதைய ஆட்சியில் சட்டம் இருக்கிறது, ஆனால் ஒழுங்கு இல்லை, பெண்களுக்கு Tragedy ஆக ஆட்சி மாறிவிட்டது.  தவெக அரசு ரிவர்ஸ் கியரில் தற்போது சென்று கொண்டிருக்கிறது. தவெக ஆட்சியமைந்த பின் பெயர் மாற்ற அறிவிப்பு வருகிறது இல்லை என்றால் திட்டமே இல்லை என்ற அறிவிப்பு தான் வருகிறது.</p><p>இதுவரை எந்த கேள்விக்கும் முதலமைச்சர் பதில் சொல்லவில்லை. ஒரு கேள்விக்கு மற்றொரு அமைச்சர் பதில் சொல்கிறார். டிவி சீரியலில் வரும் கதாபாத்திரம் போல அவருக்கு பதில் இவர், இவருக்கு பதில் அவர் என்பது போல அமைச்சர்கள் பதில் அளிக்கின்றனர்.</p><p>காவல்துறை முதலமைச்சர் கட்டுப்பாட்டில் தான் இருப்பதாக நம்பி நான் பேசிக்கொண்டிருக்கிறேன்.  முதலமைச்சரின் பதிலுரைக்கு மூன்று நாட்கள்  நேரம் இருக்கு. நல்லா பிரிப்பேர் பண்ணிட்டு வாங்க.</p><p>சபாநாயகர் ஜே சி.டி.பிரபாகர் :- முதலமைச்சரை பார்க்கும் போது தயார் படுத்துபவர் போல அல்ல, தயாரான நிலையில் தான் வந்திருக்கிறார் என தெரிகிறது.</p><p>இவ்வாறு சட்டசபையில் த.வெ.க. மற்றும் தி.மு.க.வினர் இடையே காரசார விவாதம் நடைபெற்று வந்தது. </p><p>அதனை தொடர்ந்து த.வெ.க. ஆட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து பேசிய உதயநிதி ஸ்டாலின், எங்களுடைய ஆட்சி காலத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைளை மேற்கொண்ட அமல்ராஜ் ஐபிஎஸை இன்றைக்கு சென்னை மாநகர காவல் ஆணையராக ஏன் பதவி உயர்வு கொடுத்து வைத்தீர்கள் என்ற கேள்வியையும் இந்த அரசுக்கு வைக்கிறேன் என்றார். </p><p>இதையடுத்து பேசிய முதலமைச்சர் விஜய், பேரவைத் தலைவர் அவர்களே, உறுப்பினர்கள் கேட்கிற எல்லா கேள்விகளுக்கும், அதற்கான தெளிவான விளக்கத்தை நான் திங்கட்கிழமை பேசுகிறேன். நான் இங்கே இல்லை என்றாலும் கூட யார், யார் என்னென்ன கேள்வி கேட்குகிறார்கள் என்பது குறித்து எனக்கு வந்துவிடும். எல்லாத்துக்கும் நான் தெளிவா பதில் சொல்றேன். உங்கள் சார்பாக அவர்களிடம் ஒரு ப்ராமிஸ் கேட்கிறேன். யாரும் எழுந்திருச்சி ஓடிவிடக் கூடாது என்றார். </p><p>இதனால் த.வெ.க. தரப்பில் கை தட்டி ஆரவாரம் செய்தனர். அதன்பிறகு முதலமைச்சர் விஜய் அவையில் இருந்து சென்றுவிட்டார். </p><p>இதையடுத்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், சட்டசபையில் இருந்து இப்போது யார் ஓடியது என அனைவருக்கும் தெரியும். 3 நாட்கள் நன்றாக தயாராகிவிட்டு முதலமைச்சர் வரட்டும் என்றுதான் நான் முன்னதாகவே கூறினேன் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>மத்திய அரசுத் துறைகளில் 70,584 ஊழல் புகார்: வங்கி மற்றும் ரெயில்வே துறைகள் முதலிடம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/70584-corruption-complaints-against-central-government-departments-banks-and-railways-top-list</link><comments>https://www.maalaimalar.com/news/national/70584-corruption-complaints-against-central-government-departments-banks-and-railways-top-list#comments</comments><guid isPermaLink="false">c8a6a4a5-4efd-46aa-bd84-45217ca53c88</guid><pubDate>Thu, 03 Sep 2026 08:18:06 +0000</pubDate><atom:updated>2026-09-03T08:18:06.987Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,central government,Corruption,ஊழல் புகார்கள்,Delhi administration,Railway sectors,ரெயில்வே துறைகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/plrry401/CURRUPTI.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Corruption]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/plrry401/CURRUPTI.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பொதுமக்களிடம் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், பொதுத்துறை வங்கிகள் மற்றும் ரெயில்வே துறை ஆகியவை அதிக அளவிலான ஊழல் குற்றச்சாட்டுகளைச் சந்தித்துள்ளன. </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/india-gdp-growth-claims-challenged-ex-finance-secretary-subhash-chandra-garg-says-real-growth-below-2-5-percent">மத்திய ஊழல் கண்காணிப்பு </a>ஆணையத்தின் (CVC) 2025-ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. இதில், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு எதிராக மொத்தம் 70,584 ஊழல் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>பொதுமக்களிடம் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், பொதுத்துறை வங்கிகள் மற்றும் ரெயில்வே துறை ஆகியவை அதிக அளவிலான ஊழல் குற்றச்சாட்டுகளைச் சந்தித்துள்ளன. பெறப்பட்ட மொத்த புகார்களில் வங்கித் துறை தொடர்பாக 9,933 புகார்களும், ரெயில்வே துறை தொடர்பாக 9,381 புகார்களும் பதிவாகி முதலிடத்தில் உள்ளன. இதனைத்தொடர்ந்து, நகர்ப்புற மேம்பாட்டுத் துறை மீது 6,531 புகார்களும், உள்ளாட்சி அமைப்புகள் மீது 4,834 புகார்களும், நிலக்கரித் துறை பணியாளர்கள் மீது 4,118 புகார்களும், நிதித் துறை மீது 3,107 புகார்களும் பதிவாகியுள்ளன.</p><p>டெல்லி நிர்வாகத்திற்கு எதிராக 2,804 புகார்களும, பெட்ரோலிய அமைச்சகத்திற்கு எதிராக 2,722 புகார்களும் வந்துள்ளன. டெல்லி காவல்துறையினருக்கு எதிராக 2,633 புகார்கள் பெறப்பட்ட வேளையில், மத்திய உள்துறை அமைச்சகம் (டெல்லி காவல்துறை நீங்கலாக) தொடர்பாக 2,036 புகார்கள் பதிவாகியுள்ளன.</p><p>கூடுதலாக, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மீது 2,139 புகார்கள், மனிதவள மேம்பாட்டுத் துறை மீது 2,030 புகார்கள், தொழிலாளர் நல அமைச்சகம் மீது 1,894 புகார்கள், காப்பீட்டு நிறுவனங்கள் மீது 1,536 புகார்கள் மற்றும் தொலைத்தொடர்புத் துறை மீது 1,469 புகார்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்புத் துறை (1,410), நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் பொது விநியோகத் துறை (1,123), எஃகு துறை (1,023) மற்றும் அஞ்சல் துறை (1,003) ஆகியவையும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.</p><h2>புகார்<strong>கள் மீதான நட</strong>வடிக்கை </h2><p>பதிவு செய்யப்பட்ட 70,584 புகார்களில், டிசம்பர் 31-ஆம் தேதி நிலவரப்படி 64,905 புகார்கள் பரிசீலிக்கப்பட்டு முடித்து வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 5,679 புகார்கள் தற்போது விரிவான விசாரணையில் உள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது. பொதுவாக, ஊழல் தொடர்பான புகார்கள் மீது மூன்று மாதங்களுக்குள் தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான அனைத்து முன்னெடுப்புகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஊழல் கண்காணிப்பு ஆணையம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கிருஷ்ண தேவராயராக நடிக்கும் கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப்! </title><link>https://www.maalaimalar.com/news/topnews/kannada-superstar-kiccha-sudeep-as-krishnadevaraya</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/kannada-superstar-kiccha-sudeep-as-krishnadevaraya#comments</comments><guid isPermaLink="false">b0fdd67a-5453-4922-baf7-d08d8ef9a278</guid><pubDate>Thu, 03 Sep 2026 08:11:59 +0000</pubDate><atom:updated>2026-09-03T08:11:59.700Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>Kichcha Sudeep,தேவராயா,Devaraaya,SriKrishna Devaraya,கிருஷ்ண தேவராயர்,Historical Movie,Pan India project,கிச்சா சுதீப்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/cbgu9ogc/Kichcha-Sudeep" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kichcha Sudeep ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/cbgu9ogc/Kichcha-Sudeep?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><content:encoded><![CDATA[ <p>பான் இந்திய நட்சத்திரம் கிச்சா சுதீப், தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ஒன்றை அளித்துள்ளார். விஜயநகரப் பேரரசின் மாபெரும் மன்னனான ஸ்ரீ கிருஷ்ணதேவராயரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகும் 'தேவராயா' என்று புதிய திரைப்படத்தில் அவர் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். </p><p>இத்திரைப்படத்தின் பிரம்மாண்ட 'டைட்டில் அனவுன்ஸ்மென்ட்' வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.</p><h2>சுதீப்பின் நீண்ட நாள் தயக்கமும்... தற்போதைய முடிவும்!</h2><p>வரலாற்றுப் பின்னணி கொண்ட திரைப்படங்களில் நடிப்பதற்கு தனக்கிருந்த தயக்கம் குறித்து <a href="https://www.maalaimalar.com/topic/kicha-sudeep">கிச்சா சுதீப்</a> இதற்கு முன்பு பலமுறை பேசியுள்ளார். படத்தின் பிரம்மாண்டம் அவருக்குப் பயத்தை தரவில்லை.</p><p>மாறாக, நிஜமாக வாழ்ந்த ஒரு வரலாற்று நாயகனின் பாத்திரத்தை ஏற்கும் போது, அவரது வரலாற்றை எந்தவித தவறும் இல்லாமல் மிகத் துல்லியமாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற பொறுப்புணர்வே அவரது தயக்கத்திற்கு முக்கியக் காரணமாக இருந்தது. </p><p>ஆனால், தற்போது அந்தத் தயக்கங்களை உடைத்து, இந்திய வரலாற்றின் மிக முக்கிய மன்னரான ஸ்ரீ கிருஷ்ணதேவராயர் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார்.</p><h2>டைட்டில் வீடியோ மற்றும் சுதீப்பின் மிரட்டலான தோற்றம்</h2><p>நடிகர் சுதீப்பின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் வெளியிட்டுள்ள பிரத்யேக டைட்டில் அனவுன்ஸ்மென்ட் வீடியோ, படத்தின் பிரம்மாண்டத்தை எதிர்பார்க்க வைக்கிறது.</p><p>பாரம்பரிய அரச உடையில், நவரத்தினங்கள் மற்றும் முத்துக்கள் பதிக்கப்பட்ட பிரம்மாண்ட கிரீடத்துடன் சுதீப் கம்பீரமாகத் தோன்றும் ஃபர்ஸ்ட் லுக் காட்சிகள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/R4Xej28XR5M"></iframe></figure><p>இந்த ஆரம்பக்கட்ட வீடியோவில் சண்டைக் காட்சிகளோ அல்லது வசனங்களோ எதுவும் இடம்பெறவில்லை. மாறாக, சுதீப்பின் முகபாவனைகளும், அவரது கம்பீரமான நிற்கும் தோரணையும் மட்டுமே அந்த மாமன்னரின் ஆளுமையை அப்படியே பிரதிபலிக்கிறது. </p><p>கௌரா ஹரி கே-வின் பின்னணி இசையும், காலகட்டத்தை அப்படியே பிரதிபலிக்கும் கலை இயக்கமும் படத்திற்கு மிகப் பெரிய பலமாக அமைந்துள்ளது.</p><p>படக்குழுவினர் இந்தத் திரைப்படத்தை "வரலாற்றை செதுக்கிய ஒரு பேரரசு. ஒரு சகாப்தத்தை வரையறுத்த ஒரு மன்னன். காலத்தைக் கடந்து வாழும் ஒரு ஜாம்பவான்" என்ற மூன்று வரிகளுடன் அறிமுகப்படுத்தியுள்ளனர்.</p><h2>தொழில் நுட்பக்குழு</h2><p>கிச்சா சுதீப் கதாநாயகனாக (ஸ்ரீ கிருஷ்ணதேவராயர் வேடத்தில்) நடிக்கும் இத்திரைப்படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம், TG விஸ்வ பிரசாத், பிரசாத் ஆகியோர் தயாரிக்கின்றனர். </p><p>சுப்ரியான்வி பிக்சர் ஸ்டுடியோ சார்பில் பிரியா சுதீப் வழங்கும் இப்படத்திற்கு, சுஜித் கொல்லி தலைமை நிர்வாகத் தயாரிப்பாளராகவும், கௌரா ஹரி கே இசையமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். </p><p>இத்திரைப்படத்தின் இயக்குநர் யார் இதில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் யார் என்பது குறித்த விவரங்களை படக்குழுவினர் தற்போது ரகசியமாக வைத்துள்ளனர்.</p><h2>ரிலீஸ் எப்போது?</h2><p>மிகப்பெரிய பட்ஜெட்டில், பான்-இந்திய திரைப்படமாக உருவாகவிருக்கும் இந்த வரலாற்றுத் காவியம் 2027-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பதிலுரைக்கு இன்னும் 3 நாட்களே உள்ளன.. நன்றாக தயார் செய்து வாருங்கள்- முதலமைச்சருக்கு சவால்விட்ட உதயநிதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/three-days-left-for-response-udayanidhi-throws-challenge-at-chief-minister</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/three-days-left-for-response-udayanidhi-throws-challenge-at-chief-minister#comments</comments><guid isPermaLink="false">75e3d91a-aa61-4af0-84ba-36ecc794853a</guid><pubDate>Thu, 03 Sep 2026 07:59:13 +0000</pubDate><atom:updated>2026-09-03T07:59:13.512Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Udhayanidhi Stalin,உதயநிதி ஸ்டாலின்,தமிழக சட்டசபை,TN assembly,முதலமைச்சர் விஜய்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/3uzu5bfx/VJ.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay- Udhayanithi stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/3uzu5bfx/VJ.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த 106 நாட்களில் தவெகவினர் சிக்கிய பல்வேறு புகார்களை சட்டசபையில் குறிப்பிட்டு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><p>106 நாட்களில் ஆளுங்கட்சியினர் பெண்களுக்கு எதிராக செய்த அட்ரா சிட்டிக்கு பெரிய லிஸ்டே உள்ளது.</p><p>தவெகவின் 106 நாளில் 8 காவல், சிறை மரணங்கள் நடந்துள்ளது. இதுகுறித்து முதல்வர் ஒரு Sorry கூட சொல்லவில்லை.</p><p>திமுக ஆட்சியின் காவல்நிலைய மரணத்தின்போது Sorry  வேண்டாம் நீதி வேண்டும் என்றவர் இப்போது Sorry கூட சொல்லவில்லை.</p><p>காவல் மரணங்களுக்கு நீதியும் கிடைக்கவில்லை, சாரியும் கிடைக்கவில்லை.</p><p>முதல்வரை விமர்சித்தால் கைது, ஆனால் பாஜகவினர் விமர்சித்தால் தவெக அரசு கண்டுகொள்வதில்லை.</p><p>எங்களுக்கு வந்தால் ரத்தம், உங்களுக்கு வந்தால் தக்காளி சட்டினியா?</p><p>உலகத்திலேயே கடற்கரைக்கு பூட்டு போட்ட ஒரே அரசு தவெக அரசு தான் - உதயநிதி ஸ்டாலின்</p><p>நாங்கள் எழுப்பும் எந்த கேள்விக்கும் முதலமைச்சர் என்றும் நேரடியாக உடனடியாக பதில் கூறவில்லை.</p><p>டிவி சீரியலில் இனி இவருக்கு பதில் அவர் என கார்டு போடுவதுபோல குறிப்பிட்ட அமைச்சர்கள் மட்டும் தான் பதில் கூறுகிறார்கள்.</p><p>உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் கூறுவதில்லை.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><p>திங்கட்கிழமை அன்று உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறப்படும் என சபாநாயகர் விளக்கம் அளித்தார்.</p><p>தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின்," நாங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு 3 நாட்கள் தயாராகி வந்து முதலமைச்சர் திங்களன்று பதிலளிப்பார் என நினைக்கிறேன். நன்றாக தயார் செய்து வாருங்கள், தேவையற்ற குட்டிக்கதைகள் கூறாமல் லாஜிக்கின்றி பேசாமல் உரிய ஆதாரத்துடன் முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும். டேக் டைவர்ஷன் இன்றி முதலமைச்சர் எங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்" என்றார்.</p><p>முதலமைச்சர் தயாராகி வரவேண்டிய அவசியமில்லை. முதலமைச்சர் தயாராகி முதலமைச்சர் விஜய் தற்போதே தயாராக தான் இருக்கிறார். தங்கட்கிழமை பதில் அளிப்பார்.</p><p>அமைதியாக அமர்ந்திருக்கிறார் என நினைக்க வேண்டாம், அவர் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார் என்று சபாநாயகர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>&apos;சுத்திகரிப்பு&apos; சடங்கு செய்தவர்கள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.. ஜே.பி நட்டாவுக்கு கார்கே கடிதம்</title><link>https://www.maalaimalar.com/news/national/no-action-has-been-taken-yet-against-those-who-performed-the-purification-ritual-kharge-writes-to-jp-nadda</link><comments>https://www.maalaimalar.com/news/national/no-action-has-been-taken-yet-against-those-who-performed-the-purification-ritual-kharge-writes-to-jp-nadda#comments</comments><guid isPermaLink="false">5cefd9ae-1746-4073-9a73-71a8808de9ee</guid><pubDate>Thu, 03 Sep 2026 07:44:59 +0000</pubDate><atom:updated>2026-09-03T07:44:59.777Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,மல்லிகார்ஜுன கார்கே,mallikarjun kharge,ஜேபி நட்டா,JP Nadda</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/wovwf945/tn-25.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஜே.பி நட்டா, கார்கே ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஜே.பி நட்டா, கார்கே ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/wovwf945/tn-25.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தான் பேசிச்சென்ற இடத்தை சுத்தம் செய்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்களவை தலைவர் ஜே.பி நட்டாவுக்கு மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.</p><h2></h2><h2>மல்லிகார்ஜூன கார்கே </h2><p>உத்​த​ராகண்ட் மாநிலம் ஹல்த்​வானி​யில் உள்ள ராம்​லீலா மைதானத்​தில் கடந்த 8ந் தேதி நடை​பெற்ற  பொதுக்​கூட்​டத்​தில் காங்​கிரஸ்  தலை​வர் <a href="https://www.maalaimalar.com/topic/mallikarjuna-kharge">மல்​லி​கார்​ஜுன கார்கே</a> பங்​கேற்​றார்.</p><p>அதனைத் தொடர்ந்​து 10ந் தேதி அந்த மைதானத்​தில் வலது​சாரி அமைப்​பினர் மற்​றும் பா.ஜ.க. - ஆர்​.எஸ்.​எஸ். ஆதர​வாளர்​கள் ‘சுத்​தி​கரிப்​பு’ (புனிதப்​படுத்​தும்) சடங்​கு​களை மேற்​கொண்​ட​தாக குற்​றச்​சாட்டு  எழுந்தது.</p><p>இந்த விவ​காரத்தை காங்​கிரஸ் செயற்​குழு கூட்​டத்​தி​லும், பாராளுமன்றத்திலும் கார்​கேவே நேரடி​யாக எழுப்​பி தனது ஆதங்​கத்​தைப் பதிவு செய்து இருந்​தார்.</p><p>இதுதொடர்பாக ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். அவர் மீது உத்தரகாண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து இருந்தனர். </p> <h2>கடிதம்</h2><p>இந்த நிலையில் மல்லிகார்ஜூன கார்கே, மாநிலங்களவை தலைவரும் மத்திய மந்திரியுமான ஜே.பி. நட்டாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.</p><p>அதில் புனிதப்படுத்தும் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்ய உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர்சிங் தாமிக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த கடிதத்தில் வலியுறுத்தி இருக்கிறார்.</p> <h2>பதிவு</h2><p>இது தொடர்பாக கார்கே தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது,</p><p>"ஹல்த்வானியில் நான் நடத்திய பொதுக்கூட்டத்திற்கு பிறகு ராம்லீலா மைதானத்தில் மேற் கொள்ளப்பட்ட புனிதப்படுத்துதல் நடவடிக்கை தொடர்பான விவகாரம் குறித்து மேல் சபையின் அவைத் தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு நான் ஒரு கடிதம் எழுதியுள்ளேன்.</p><p>அவையில் அவர் அளித்து இருந்த உறுதியை அவருக்கு நினைவூட்டியதுடன் இந்த விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தி உள்ளேன்.</p> <h2>பாடம் புகட்டுவது அவசியம்</h2><p>24 நாட்கள் ஆன பிறகும் இந்த இழிவான செயலுக்கு காரணமானவர்கள் மற்றும் அமைப்புகள் மீது இதுவரை எந்தவொரு முதல் தகவல் அறிக்கையும் ( எப். ஐ. ஆர்.) பதிவு செய்யப்படவில்லை.</p><p>அந்தக் கடிதத்தில், இந்த விவகாரம் என்னையோ அல்லது காங்கிரசின் தலைவராக எனது பதவியையோ மட்டும் சார்ந்ததல்ல.</p> <p>ஒவ்வொரு நாளும் இத்தகைய கொடூரமான யதார்த்தத்தை எதிர்கொள்ளும் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளுடன் பரந்த அளவில் இது தொடர்புடையது. இத்தகைய தவறு செய்பவர்களுக்கு பாடம் புகட்டுவது அவசியமாகும்.</p><p>இந்த உண்மைகள் மற்றும் மேல் சபையில் அளிக்கப்பட்ட உறுதியின் அடிப்படை யில் ஹல்த்வானியில் எனது பொதுக்கூட்டத்திற்கு பிறகு ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற ‘சுத்திகரிப்பு’ சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மற்றும் அமைப்புகள் மீது வழக்கு பதிவு செய்யப்படுவதை உறுதி செய்யுமாறு உத்தரகண்ட் முதல்வருக்கு ஜேபி நட்டா அறிவுறுத்த வேண்டும்" என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ரிஷப் பண்ட்டுடன் பார்ட்டி செய்த தோனி: &apos;ஹூக்கா&apos; குடிக்கப் போவதாகப் பேசிய வீடியோ இணையத்தில் வைரல்!</title><link>https://www.maalaimalar.com/sports/dhoni-parties-with-rishabh-pant-hookah-video-goes-viral</link><comments>https://www.maalaimalar.com/sports/dhoni-parties-with-rishabh-pant-hookah-video-goes-viral#comments</comments><guid isPermaLink="false">8e6c71ed-5c89-4fc6-89e8-c126a65fa281</guid><pubDate>Thu, 03 Sep 2026 07:39:38 +0000</pubDate><atom:updated>2026-09-03T07:39:38.771Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rishabh Pant,Dhoni,எம்.எஸ்.தோனி,இந்திய கிரிக்கெட் அணி,ஹூக்கா,Hookah,ரிஷப் பண்ட்,Dhoni parties with Rishabh Pant</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/j32joi12/dhoni.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dhoni parties with Rishabh Pant]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/j32joi12/dhoni.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/sports/t20-series-against-afghanistan-indian-squad-led-by-shreyas-iyer-announced">இந்திய கிரிக்கெட் அணியின்</a> முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி மற்றும் தற்போதைய முன்னணி விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பண்ட் ஆகியோர் ஒன்றாகப் பங்கேற்ற தனியார் விருந்தின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.</p><p>ஹோட்டல் அறை போன்ற சூழலில் நண்பர்களுடன் ரிஷப் பண்ட் சோபாவில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருப்பது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. அப்போது அங்கு வரும் எம்.எஸ்.தோனி, மற்றவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட பிறகு, ரிஷப் பண்ட்டிற்கு கை கொடுத்துவிட்டு இந்தி மொழியில் "நான் போய் ஹூக்கா குடித்துவிட்டு வருகிறேன்" என்று சொல்வது போன்ற குரல் கேட்கிறது.</p><p>இந்த வீடியோ இணையத்தில் வெளியான சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலானது. தோனி புகையிலை கலந்த 'ஹூக்கா' புகைப்பது குறித்துப் பேசியது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் பல்வேறு விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>இருப்பினும், இந்த வீடியோவின் உண்மைத்தன்மை மற்றும் அது எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்திய அணியின் மூத்த வீரரான தோனிக்கும் இளைய வீரரான ரிஷப் பண்ட்டுக்கும் இடையே இருக்கும் நெருங்கிய நட்பு அனைவரும் அறிந்ததே. கிரிக்கெட்டிற்கு வெளியே இருவரும் ஒன்றாக நேரம் செலவிடும் பல வீடியோக்கள் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில், தற்போது இந்த புதிய வீடியோ இணையத்தில் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தவறு செய்தவர் யாராக இருந்தாலும் நடவடிக்கை: உதயநிதி பேச்சுக்கு சட்டசபையில் அமைச்சர் ஆனந்த் பதிலடி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-bussy-anand-reply-udhayanidhi-speech</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-bussy-anand-reply-udhayanidhi-speech#comments</comments><guid isPermaLink="false">d1ed84c0-106c-4370-a4ba-5846703417a5</guid><pubDate>Thu, 03 Sep 2026 07:29:01 +0000</pubDate><atom:updated>2026-09-03T07:29:01.568Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,தமிழக சட்டசபை,Bussy Anand,TN assembly,அமைச்சர் புஸ்சி ஆனந்த்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/4pzxjlp5/bussy.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் ஆனந்த்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ஆனந்த்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/4pzxjlp5/bussy.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தவறு செய்தவர் யாராக இருந்தாலும் முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார் என்று அமைச்சர் புஸ்சி ஆனந்த் தெரிவித்தார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. முதலில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-</p><p>தற்போதை ஆட்சியில் சட்டம் இருக்கிறது, ஆனால் ஒழுங்கு இல்லை, பெண்களுக்கு Tragedy ஆக ஆட்சி மாறிவிட்டது.  தவெக அரசு ரிவர்ஸ் கியரில் தற்போது சென்று கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியின் திட்டங்களை தவெக அரசு ரத்து செய்தது ஏன்?</p><p>பாலியல் வழக்கில் கைதான தவெக பிரமுகர் தவெக எம்எல்ஏ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பெண்ணின் பாலியல் புகாரில் வழக்கு பதிவு செய்தும் தவெக நிர்வாகிகள் கைது செய்யப்படவில்லை என்று பேசினார். </p><p>அப்போது நீர்வளத்துறை அமைச்சர் புஸ்சி ஆனந்த் குறுக்கிட்டு பேசியதாவது:-</p><p>த.வெ.க.வை சேர்ந்த பெண் பிரமுகர் கொடுத்த பாலியல் புகாரில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவறு செய்தவர் யாராக இருந்தாலும் முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். பெண் பிரமுகரிடம் அத்துமீறிய நபர் த.வெ.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். த.வெ.க பெண் அளித்த புகாரில் த.வெ.க. எம்.எல்.ஏ. சரவணனுக்கு தொடர்ப்பு இல்லை என தெரியவந்துள்ளது. தவெக ஆட்சியில் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். </p><p>உதயநிதி ஸ்டாலின் பேசிக்கொண்டு இருந்த போது அமைச்சர் புஸ்சி ஆனந்த் குறுக்கிட்டு பேசியதற்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். </p>]]></content:encoded></item><item><title>த.வெ.க ஆட்சியில் ரிவர்ஸ் கியரில் செல்லும் தமிழ்நாடு- உதயநிதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-moving-in-reverse-gear-under-tvk-rule-udayanidhi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-moving-in-reverse-gear-under-tvk-rule-udayanidhi#comments</comments><guid isPermaLink="false">3368fceb-862b-43dd-b053-87b4fa4fa2db</guid><pubDate>Thu, 03 Sep 2026 07:12:15 +0000</pubDate><atom:updated>2026-09-03T07:12:15.165Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Udhayanidhi Stalin,உதயநிதி ஸ்டாலின்,தவெக,தமிழக சட்டசபை,TN assembly,TVK Govt</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/2tyc55pc/udhayanithi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Udhayanithi stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/2tyc55pc/udhayanithi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவல்துறை மீதான மானிய கோரிக்கையை முதலமைச்சர் வஜய் தாக்கல் செய்தார். அப்போது, புதிய அறிவுப்புகளை முதலமைச்சர் விஜய் வெளியிட்டார்.</p><p>இதைதொடர்ந்து, காவல்துறை மீதான மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி உரையாற்றினார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><p>நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு எங்கள் மீதே பழி போடாமல் முதலமைச்சர் பதில் கூற வேண்டும்.</p><p>திமுக ஆட்சியில் குற்றங்கள் குறைந்திருப்பதாக கொள்கை விளக்கக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>திமுக ஆட்சியில் சாதிய கொலைகள் குறைந்துள்ளதாக கொள்கை விளக்க குறிப்பில் கூறி உள்ளீர்கள்.</p><p>பெயர் மாற்ற அறிவிப்பு அல்ல திட்டம் ரத்து என்ற அறிவிப்பு தான் வருகிறது. </p><p>முந்தைய ஆண்டுகளை விட திமுக ஆட்சியில் சாதிய பாகுபாடு, பாலியல் வன்கொடுமைகள் குறைந்ததாக ஒப்புக்கொண்டதற்கு நன்றி.</p><p>தவெகவின் 100 நாள் ஆட்சியில் ஒன்று பழைய திட்டத்தை ரத்து செய்கிறீர்கள், இல்லை பழைய திட்டத்தை தொடர்கிறீர்கள்.</p><p>திமுக ஆட்சியில் தமிழ்நாடு டாப் கியரில் சென்று கொண்டிருந்த தவெக ஆட்சியில் ரிவர்ஸ் கியரில் சென்று கொண்டிருக்கிறது.</p><p>தாய்மாமன் காது குத்து திட்டம் என பெயர் மாற்றம் செய்யலாம். கொடுத்த வாக்குறுதிகளை பாதி பாதியாக நிறைவேற்றுவது ஏன்?</p><p>வருடத்திற்கு 6 இலவச சிலிண்டர் என வாக்குறுதி அளித்துவிட்டு இப்போது 3 சிலிண்டர் மட்டும் தான் என்கிறீர்கள்.</p><p>இதுவரை இல்லாத அளவில் திமுக ஆட்சியில் போதை பொருட்கள் பறிமுதல். நீண்ட நாட்களாக சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளுக்கு நீண்ட கால விடுப்பு வழங்க வேண்டும்.</p><p>பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் விரைந்து தீர்ப்பு வாங்கி கொடுத்தோம்.</p><p>தமிழ்நாட்டில் கொலை நடக்காத நாளே இல்லை. </p><p>தவெக ஆட்சியில் 10 ஆணவ கொலைகள் நடந்துள்ளன.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>வான்வெளியில் நாட்டைக் காத்த போர் நாயகன் இனி பயணிகள் விமானியாக பயணம்: விங் கமாண்டர் அபினந்தனின் புதிய அத்தியாயம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/air-hero-who-guarded-nation-in-sky-now-flies-as-commercial-pilot-abhinandans-new-chapter</link><comments>https://www.maalaimalar.com/news/national/air-hero-who-guarded-nation-in-sky-now-flies-as-commercial-pilot-abhinandans-new-chapter#comments</comments><guid isPermaLink="false">90135768-df83-4f59-83b1-c3512a0d9875</guid><pubDate>Thu, 03 Sep 2026 07:04:42 +0000</pubDate><atom:updated>2026-09-03T07:04:42.745Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய விமானப்படை,Wing Commander Abhinandan,Vir Chakra,wing commander abhinandan varthman,MiG-21 Bison,விங் கமாண்டர் அபினந்தன்,வீர சக்ரா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/l7izbow3/abinandhan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Wing Commander Abhinandan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/l7izbow3/abinandhan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வீர சக்ரா விருதாளர் குரூப் கேப்டன் அபினந்தன் வர்த்தமான் தனியார் பயணிகள் விமானத்தின் விமானியாக இணைந்தார்.</p><p>கடந்த 2019-ஆம் ஆண்டு பாகிஸ்தானின் எஃப்-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தி நாட்டிற்கே பெருமை சேர்த்த இந்திய விமானப்படையின் வீர சக்ரா விருதாளர் குரூப் கேப்டன் அபினந்தன் வர்த்தமான், இந்திய விமானப்படைப் பணியில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து தனியார் பயணிகள் விமான நிறுவனத்தில் விமானியாக இணைந்துள்ளார். &nbsp;</p><p>சுமார் 22 ஆண்டுகாலம் இந்திய விமானப்படையில் தீவிர சேவைக்கு பின், கடந்த மார்ச் மாதத்தில் ஓய்வு பெற்ற இவர், தற்போது கோவாவை தளமாகக் கொண்டு இயங்கும் 'FLY91' என்ற பிராந்திய பயணிகள் விமான நிறுவனத்தில் சேர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><h2><strong>பாகிஸ்தான் சிறைப்பிடிப்பு</strong></h2><p>பிப்ரவரி 2019-ல் நடைபெற்ற புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, <a href="https://www.maalaimalar.com/news/national/retired-air-marshal-jitendra-mishra-appointed-as-ceo-of-the-ayodhya-ram-temple-trust">இந்திய விமானப்படை</a> பாகிஸ்தானின் பாலக்கோட் பகுதியில் இருந்த பயங்கரவாத முகாம்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து மறுநாள் எல்லைப் பகுதியில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் போர் விமானங்களை இந்தியப் படை எதிர்த்துத் தாக்கியது. &nbsp; </p><p>அப்போது ஸ்ரீநகர் விமானப்படை தளத்திலிருந்து மிஃக்-21 பைசன் போர் விமானத்தில் புறப்பட்ட அப்போதைய விங் கமாண்டர் அபினந்தன் வர்த்தமான், தொழில்நுட்ப ரீதியாக மிகவும் மேம்பட்ட பாகிஸ்தானின் எஃப்-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தி ராணுவ வரலாற்றில் புதிய சாதனை படைத்தார். &nbsp; </p><p>இருப்பினும், இந்த வான்வழி மோதலின் போது இவரது விமானமும் எதிரி படையின் ஏவுகணையால் தாக்கப்பட்டு சேதமடைந்ததால், அபினந்தன் விமானத்தில் இருந்து அவசரமாக வெளியேறி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் விழுந்தார். அங்கிருந்த பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறைப்பிடிக்கப்பட்ட அவர், கடுமையான விசாரணைக்கும் அச்சுறுத்தல்களுக்கும் நடுவிலும் காட்டிய மனவுறுதியும் தைரியமும் ஒட்டுமொத்த இந்திய மக்களையும் நெகிழ வைத்தது. இந்தியாவின் தீவிர அழுத்தத்தை அடுத்து சுமார் 60 மணி நேரத்திற்குப் பின் பாகிஸ்தான் அவரை தாயகம் திருப்பி அனுப்பியது. </p><h2>தாயக மரி<strong>யாதை</strong></h2><p>தாயகம் திரும்பிய அவருக்கு, எதிரியின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் காட்டிய இணையற்ற வீரத்திற்காக இந்தியாவின் மூன்றாவது உயரிய போர் விருதான 'வீர சக்ரா' விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. பின்னர், இந்திய விமானப்படை அவருக்கு 'குரூப் கேப்டன்' என்ற உயரிய பதவி உயர்வை அளித்தது. &nbsp; </p><h2>ப<strong>யணிகள்</strong> விமானத்தில் புதிய அத்தியாயம்</h2><p>விமானப்படையில் இருந்து முறைப்படி ஓய்வுபெற்ற 43 வயதான அபினந்தன், ஃப்ளை91 நிறுவனத்தின் ஏடிஆர் 72-600 (ATR 72-600) ரக பயணிகள் விமானங்களை இயக்குவதற்காக சிறப்புப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். 2024 மார்ச் முதல் செயல்பட்டு வரும் இந்த தனியார் நிறுவனம், கோவா மற்றும் ஐதராபாத்தை முக்கிய மையங்களாகக் கொண்டு நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இடையே விமான சேவைகளை வழங்கி வருகிறது. வான்வெளியில் நாட்டைக் காத்த நாயகன் தற்போது பயணிகள் விமானத்தின் மூலம் சிவிலியன் சேவையில் தடம் பதித்திருப்பது நாடு முழுவதிலும் உள்ள மக்களுக்குப் பெருமகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் வரவழைத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பனிப்பிரதேசமாக மாறிய உலகின் மிக வறண்ட அட்டகாமா பாலைவனம் - எப்படி? </title><link>https://www.maalaimalar.com/news/world/worlds-driest-atacama-desert-turned-into-ice-how</link><comments>https://www.maalaimalar.com/news/world/worlds-driest-atacama-desert-turned-into-ice-how#comments</comments><guid isPermaLink="false">18188dde-bd59-4229-b86f-07654d721cf6</guid><pubDate>Thu, 03 Sep 2026 07:04:17 +0000</pubDate><atom:updated>2026-09-03T07:04:17.789Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சிலி,Chile,Desert,பாலைவனம்,Wind Storm,பனிப்புயல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/9oc8a72c/tn-22.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அட்டகாமா பாலைவனம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ அட்டகாமா பாலைவனம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/9oc8a72c/tn-22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தென் அமெரிக்க நாடான <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/catastrophes-and-the-26th">சிலியில் </a>அட்டகாமா என்ற பாலைவனம் அமைந்துள்ளது. உலகின் மிக வறண்ட பாலைவனம் இதுவாகும். இந்த பாலைவனத்தை திடீரென <a href="https://www.maalaimalar.com/news/world/unprecedented-heavy-snowfall-in-russia-normal-life-affected-806031">பனிப்படலம் </a>போர்த்தியுள்ளது. அதுவும் ஆகஸ்ட் மாதத்தில்.</p><h2>புகைப்படங்கள் </h2><p>பனிப்புயல் காரணமாக பாலைவனத்தின் வறண்ட பரப்பை பனி போர்த்தி பனிப்பிரதேசம் போல காட்சியளிக்கிறது. </p><p>கடந்த ஆகஸ்ட் 6 பனிப்புயலுக்கு முன் பாலைவனம் வறண்ட நிலையில் இருந்த சாட்டிலைட் புகைப்படம், ஆகஸ்ட் 14 மற்றும் 19 இல் பனிப்புயலுக்கு பின் பனி போர்த்திய நிலையில் பாலைவனம் இருந்த சாட்டிலைட் புகைப்படங்கள் ஒப்பிடப்பட்டு குறுகிய காலத்தில் நேர்ந்த நேரெதிர் மாற்றம் குறித்து பலரும் ஆச்சரியம் தெரிவித்து வருகின்றனர்.</p><p>ஆனால் ஆகஸ்ட் மாதத்தில் பனிப்புயல் எப்படி வந்தது என்பதே இதில் மறைந்துள்ள கேள்வி.</p><figure><img alt="அட்டகாமா பாலைவனம் " src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/u3azpnlk/tn-23.jpg" /><figcaption>அட்டகாமா பாலைவனம் </figcaption></figure><h2>பனிப்புயல்கள்</h2><p>நாம் (இந்தியா) பூமியின் வடக்கு அரைக்கோளத்தில் இருக்கிறோம். பூமியின் வடக்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ள சிலி உள்ளிட்ட நாடுகளில் இது பனிக்காலம். இந்த பனிப் படலம் ஏற்பட்ட பின்னர் மற்றொரு புயல் ஆகஸ்ட் அன்று பாலைவனத்தை தாக்கியது. இதனால் பாலைவனம் மேலும் பனிப்படலாமாக காட்சி அளித்து வருகிறது.</p><p>கடந்த ஆகஸ்டில் இந்த பனிப்புயல்களானது சிலி உட்பட 7 லத்தீன் அமெரிக்க நாடுகளின் ஊடே செல்லும் ஆண்டெஸ் மலைப்பகுதியில் இருக்கும் பனியை, அட்டகாமா பாலைவனம் அமைந்துள்ள பசிபிக் கரை வரை கொண்டு வந்துள்ளது.</p><p>பெரும்பாலும் வறண்டு காணப்படும் அட்டகாமா பாலைவனம் அனைத்து பனிக்காலத்திலும் இப்படி பனிப்பிரதேசமாக மாறுவதில்லை. ஆனால் கடந்த 2025 மற்றும் 2011 இல் இதுப்போன்ற பனிப்படலம் ஏற்பட்டது. மற்றைய ஆண்டுகளில் இவ்வாறு இல்லை.</p> <figure><img alt="அட்டகாமா பாலைவனம் " src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/55cpuz01/tn-21.jpg" /><figcaption>அட்டகாமா பாலைவனம் </figcaption></figure><p>பனிப்படலத்துடன் பாலைவனத்தில் இந்த காலகட்டத்தில் அதிகளவில் பூத்துக்குலுங்கும் காட்டு மலர்களும் வென் பனிக்கு மேட்சிங் ஆக அழகுற காட்சி அளிக்கிறது.</p><p>அட்டகாமா பாலைவனம் மட்டுமின்றி வடக்கு சிலியின் பல பகுதிகள் பனி போர்த்திய நிலையில் காணப்படுகிறது. நாசா எடுத்த இந்த பனி படர்வின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.அட்டகாமா பாலைவனம் </p><figure><img alt="அட்டகாமா பாலைவனம் " src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/qb6f2ehi/tn-24.jpg" /><figcaption>அட்டகாமா பாலைவனம் </figcaption></figure>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றம்- சபாநாயகர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/resolution-moved-by-the-chief-minister-passed-unanimously-in-the-legislative-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/resolution-moved-by-the-chief-minister-passed-unanimously-in-the-legislative-assembly#comments</comments><guid isPermaLink="false">82b8b633-472d-4b2e-80a4-9359c92ca62b</guid><pubDate>Thu, 03 Sep 2026 06:59:39 +0000</pubDate><atom:updated>2026-09-03T06:59:39.030Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,தனித்தீர்மானம்,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/c52lbsei/JCDPrabhakar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்]]></media:title><media:description type="html"><![CDATA[ சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/c52lbsei/JCDPrabhakar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்க கோரி முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> இன்றைய நிகழ்வில் முதலில் வினாக்கள்-விடை நேரம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்கக் கோரி தனித்தீர்மானத்தை கொண்டு வந்து முதலமைச்சர் விஜய் பேசினார்.</p><p>இதைதொடர்ந்து முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் விவாதம் நடைபெற்றது. விவாத்தில் தீர்மானத்தை வரவேற்பதாக தி.மு.க.வும், தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதாக அ.தி.மு.க., சிபிஐ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக, தேமுதிக உள்ளிட்ட பெரும்பாலான  கட்சிகள் தெரிவித்தனர். </p><p>அதனை சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்க கோரி முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்தார். </p><p>முன்னதாக, தனித்தீர்மானம் மீதான விவாதத்தின் போது திமுக- த.வெ.க. இடையே காரசார விவாதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.  </p>]]></content:encoded></item><item><title>ரூ.212 கோடி ஒதுக்கீட்டில் காவல்துறை நவீனமயமாக்கப்படும்- புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-police-to-be-modernised-with-rs-212-crore-announces-cm-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-police-to-be-modernised-with-rs-212-crore-announces-cm-vijay#comments</comments><guid isPermaLink="false">74c3c525-29b6-4113-8468-53d18a758d56</guid><pubDate>Thu, 03 Sep 2026 06:56:43 +0000</pubDate><atom:updated>2026-09-03T06:56:43.165Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,காவல்துறை,தமிழக சட்டசபை,TN assembly,Police department,முதலமைச்சர் விஜய்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/9ybdtimu/Vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/9ybdtimu/Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவல்துறை மீதான மானிய கோரிக்கையை முதலமைச்சர் வஜய் தாக்கல் செய்தார்.</p><p>அப்போது, புதிய அறிவுப்புகளை முதலமைச்சர் விஜய் வெளியிட்டார்.</p><p>அதன் விவரம்:-</p><p>காவல் நிலையங்களில் 29,108 கூடுதல் காவல் பணியிடங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் உருவாக்கப்படும்.</p><p>போதைப்பொருளை ஒழிக்கும் கிராமங்களுக்கு ரூ.10 லட்சம் வீதம் 50 கிராமங்களுக்கு வழங்கப்படும்.</p><p>ரூ.212 கோடி ஒதுக்கீட்டில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88" rel="nofollow">காவல்துறை</a> நவீனமயமாக்கப்படும்.</p><p>பணியின்போது துணிச்சலுடன் பணியாற்றி உயிரிழக்கும் காவலர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்கப்படும்.</p><p>பணியின்போது உயிரிழக்கும் காவலர் குடும்பத்திற்கு தரப்படும் கருணைத்தொகை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்படும்.</p><p>வண்டலூரில் உள்ள காவலர் உயர்பயிற்சியகத்தில் உள்விளையாட்டு அரங்கு, விளையாட்டு வசதிகள் ரூ.23 கோடியில் ஏற்படுத்தப்படும்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சொத்தை விற்றதால் ஆத்திரம்:  பெற்றோரை வீதியில் வைத்து தடியால் தாக்கிய மகன்கள்- புனேயில் பரபரப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/sons-beat-elderly-parents-on-street-over-land-sale-in-pune</link><comments>https://www.maalaimalar.com/news/national/sons-beat-elderly-parents-on-street-over-land-sale-in-pune#comments</comments><guid isPermaLink="false">f1e95ed9-a16f-41a7-ba8c-a52d1d352574</guid><pubDate>Thu, 03 Sep 2026 06:47:26 +0000</pubDate><atom:updated>2026-09-03T06:47:26.920Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,புனே,Pune,property dispute,மகாராஷ்டிரா மாநிலம்,இந்தாப்பூர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/p0pwfgjq/onsters.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sons attack parents ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/p0pwfgjq/onsters.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் நில விற்பனை தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறில், வயதான பெற்றோரையே வீதியில் வைத்து இரண்டு மகன்கள் தடியால் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>புனே மாவட்டம் இந்தாப்பூர் பகுதியைச் சேர்ந்த 65 வயதான துகாராம் கிசான் ராவத் என்பவரும், அவரது மனைவி அஞ்சனாவும் வழக்கம்போல் மாலை நேரத்தில் வீதியின் வழியே நடைபயிற்சி மேற்கொண்டிருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த அவர்களின் மகன்களான சஞ்சய் மற்றும் ராஜேந்திர ராவத் ஆகியோர், பெற்றோரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>தனது மனைவியின் பெயரில் இருந்த நிலத்தை துகாராம் விற்பனை செய்ததே இந்த மோதலுக்குக் காரணம் எனத் தெரிகிறது. நிலத்தை விற்றதால் ஆத்திரமடைந்த மகன்கள் இருவரும், பெற்றோரிடம் தகாத வார்த்தைகளால் பேசி, உடனடியாக அந்த நிலப் பரிவர்த்தனையை ரத்து செய்ய வேண்டும் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.</p><p>விவாதம் முற்றிய நிலையில், தாங்கள் கையோடு கொண்டு வந்திருந்த மரத்தடிகளால் <a href="https://www.maalaimalar.com/news/national/barefoot-mother-wins-marathon-to-fund-daughters-studies">பெற்றோர் </a>இருவரையும் மகன்கள் இரக்கமின்றி சரமாரியாகத் தாக்கினர். இந்த கொடூரத் தாக்குதலில் துகாராமின் முதுகு, முகம், தொடைகள் மற்றும் இடது தோள்பட்டையில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. மேலும் அவரது மனைவி அஞ்சனாவுக்கு மணிக்கட்டு மற்றும் இடுப்புப் பகுதியில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.</p><p>இச்சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விரைந்து வந்த காவலர்கள் காயமடைந்த தம்பதிய மீட்டெடுத்து, சிகிச்சைக்காக இந்தாப்பூர் துணை மாவட்ட மருத்துவமனையில் சேர்த்தனர்.</p><p>பாதிக்கப்பட்ட துகாராம் அளித்த புகாரின் அடிப்படையில், அவரது மகன்கள் சஞ்சய் மற்றும் ராஜேந்திர ராவத் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் உள்ள சாலையில் பெற்றோரையே மகன்கள் தடியால் தாக்கிய இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பாஜக அரசின் தவறான கல்விக் கொள்கையால் 84,318 பள்ளிகள் மூடல்- மாணிக்கம் தாகூர் விமர்சனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/congress-leader-manickam-thakur-slams-bjp-over-84318-school-closures</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/congress-leader-manickam-thakur-slams-bjp-over-84318-school-closures#comments</comments><guid isPermaLink="false">adc7db26-6e6f-4eff-862b-eb85bb8b7995</guid><pubDate>Thu, 03 Sep 2026 06:41:42 +0000</pubDate><atom:updated>2026-09-03T06:41:42.914Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அரசுப் பள்ளிகள்,govt schools,பாஜக அரசு,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore,bjp govt</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/b6xefi61/manickam-tagore.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Manickam Tagore]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/b6xefi61/manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மோடி அரசின் திட்டமிட்ட அலட்சியத்தாலும் தவறான கல்விக் கொள்கைகளாலும் நம் நாட்டின் அரசுப் பள்ளிக் கல்வி கட்டமைப்பு மிகக் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து வருவதாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>மோடி அரசின் திட்டமிட்ட அலட்சியத்தாலும் தவறான கல்விக் கொள்கைகளாலும் நம் நாட்டின் அரசுப் பள்ளிக் கல்வி கட்டமைப்பு மிகக் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது.</p><p>கடந்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் 84,318 பள்ளிகள் காணாமல் போயுள்ளன. இதில் அதிர்ச்சியூட்டும் உண்மை என்னவென்றால், மூடப்பட்டவற்றில் 93 சதவீதப் பள்ளிகள் அரசுப் பள்ளிகள்தான். </p><p>சுமார் 78,502 அரசுப் பள்ளிகளுக்கு மோடி அரசு மூடுவிழா நடத்தியுள்ள அதே வேளையில், 15,461 தனியார் சுயநிதிப் பள்ளிகள் காளான்கள் போலப் பெருகியிருப்பது இவர்கள் யாருக்காக ஆட்சி நடத்துகிறார்கள் என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது.</p><p>சமூக நீதியையும் பொதுக் கல்வியையும் உயிர்மூச்சாகக் கொண்ட நமது தமிழ்நாட்டிலும் கூட, இந்த ஒன்றிய அரசின் தவறான அணுகுமுறையால் சுமார் 1,976 பள்ளிகள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.</p><p>கிராமப்புற ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட சமூகத்து மாணவர்களின் ஒரே புகலிடமாக விளங்கும் அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்துவதற்கு உரிய நிதி ஒதுக்காமல், பள்ளிக் கல்வியை திட்டமிட்டுச் சீரழிக்கும் வேலையை பாஜக அரசு தீவிரமாகச் செய்து வருகிறது.</p><p>குறிப்பாக, தேசிய கல்விக் கொள்கை மற்றும் பிஎம் ஸ்ரீ திட்டத்தை ஏற்கவில்லை என்பதற்காகவே, கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய மொத்தம் ₹5,109 கோடி கல்வி நிதியை மோடி அரசு தடுத்து நிறுத்தியுள்ளது.</p><p>நீதிமன்றம் தலையிட்டதால் வேறு வழியின்றி RTE-க்கு மட்டும் ₹714 கோடியை கிள்ளிப் போட்டுவிட்டு, ஒட்டுமொத்த பள்ளி கல்வி நிதியையும் தடுத்து வைத்து தமிழக மாணவர்களின் எதிர்காலத்தோடு பிளாக்மெயில் அரசியல் செய்வது கண்டனத்திற்குரியது! </p><p>"பள்ளி சீரமைப்பு மற்றும் முறைப்படுத்துதல்" என்ற போலி அறிக்கையை வைத்துக்கொண்டு, ஒற்றை ஆசிரியர் பள்ளி, குறைவான மாணவர்கள் என்ற காரணங்களைக் கூறி எளிய மக்களின் கல்வி உரிமையைப் பறிக்கப் பார்க்கிறார்கள்.</p><p>பள்ளிகளை ஒருங்கிணைக்கிறோம் என்ற பெயரில் அரசுப் பள்ளிகளை இழுத்து மூடி, ஒட்டுமொத்தக் கல்வியையும் கார்ப்பரேட் மற்றும் தனியார் கல்வி மாஃபியாக்களின் கைகளில் தாரைவார்ப்பதே மோடி அரசின் உண்மையான நோக்கம்.</p><p>அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்கி மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்குத் திறனற்ற ஒன்றிய அரசு, மாநிலங்களுக்கான சட்டப்பூர்வ நிதிப் பங்கையும் வஞ்சகமாக மறுத்து, தனியார் முதலாளிகளுக்கு சேவை செய்யும் வகையில் அரசுப் பள்ளிகளை ஒழித்துக் கட்டுவதை உடனடியாகக் கைவிட வேண்டும்.</p><p>இதை மாற்ற #RahulGandhiForPM</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் அறிவிக்கின்ற அறிவிப்புகள் எல்லாம் வரவேற்கத்தக்கது- பிரேமலதா </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/premalatha-vijayakanth-says-all-announcements-made-by-the-chief-minister-are-welcome</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/premalatha-vijayakanth-says-all-announcements-made-by-the-chief-minister-are-welcome#comments</comments><guid isPermaLink="false">edd6f6a6-a64c-4c51-b09c-e31e6c37ff3e</guid><pubDate>Thu, 03 Sep 2026 06:36:11 +0000</pubDate><atom:updated>2026-09-03T06:36:11.233Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,DMDK,தேமுதிக,பிரேமலதா விஜயகாந்த்,premalatha vijayakanth,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/szy5acvr/premalatha.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரேமலதா விஜயகாந்த்]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரேமலதா விஜயகாந்த்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/szy5acvr/premalatha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதலமைச்சர் 110 விதியின் கீழ் அறிவிக்கின்ற எல்லா அறிவிப்புகளும் மிக மிக சிறப்பாக வரவேற்கக்கூடியதாக இருக்கிறது என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழ்நாடு சட்டசபையில்</a> இன்றைய நிகழ்வில் முதலில் வினாக்கள்-விடை நேரம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்கக் கோரி தனித்தீர்மானத்தை கொண்டு வந்து முதலமைச்சர் விஜய் பேசினார். </p><p>இதனை தொடர்ந்து தனித்தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் விவாதம் நடைபெற்றது. தனித்தீர்மானத்தை திமுக வரவேற்றது. , அதிமுக ஆதரவு தெரிவித்தது. இதையடுத்து பா.ம.க. எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி பேசியதாவது:-</p><p>ஐகோர்ட்டில் தமிழை முதன்மை மொழியாக்கக்கோரி முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்திற்கு பாமக முழு மனதுடன் வரவேற்கிறது. உலகில் மக்கள் அதிகம் பேசும் முதல் 25 மொழிகளில் தமிழும் உள்ளது. ஒரு வாரத்திற்கு 2 மொழிகள் அழிகிறது.  10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் தமிழ் மொழிப்பாடம் என்ற வார்த்தையே இல்லை. மொழிப்பாடம் என்று தான் இருக்கிறது, அதை சரி செய்ய வேண்டும் என்றார். </p><p>தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-</p><p>முதலமைச்சர் 110 விதியின் கீழ் அறிவிக்கின்ற எல்லா அறிவிப்புகளும் மிக மிக சிறப்பாக வரவேற்கக்கூடியதாக இருக்கிறது. இன்று மட்டும் இல்லை தினந்தோறும் பார்க்கிறேன். அந்த அறிவிப்புகள் எல்லாம் ஆக்கப்பூர்வமாக வெகு விரைவில் செயல்வடிவம் பெற வேண்டும் என்பதையும் இந்த அவையில் குறிப்பிட கடமைப்பட்டுள்ளேன். கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன்பு இருந்தே உருவானது தான் தமிழ். நான் முதல்வரிடம் கேட்டுக்கொள்வது ஒன்றுதான். இது தமிழ்நாடு தமிழ்மொழிக்கு மிகமிக முக்கியத்துவம் தர வேண்டும். தமிழ் மொழி தமிழ்நாட்டில் முக்கிய இடத்தை பெற வேண்டும் என்றால் பள்ளிகளில் இருந்தே அதை கண்டிப்பாக கொண்டு வரவேண்டும். </p><p>புதிதாக தலைமைச் செயலகம் கட்டப்படும் என்று முதலமைச்சர் அறிவித்து உள்ளார். இது வரவேற்கத்தக்கது. எந்த ஆட்சி வரட்டும், போகட்டும் ஆனால் நீங்கள் உருவாக்கப்போகும் புதிய தலைமைச் செயலகம் யார் வந்தாலும் எந்த காலத்திற்கும் தடை செய்யவே முடியாத அளவிற்கு கடுமையான சட்டத்தை உருவாக்கி விட்டு அந்த பணிகளை நீங்கள் தொடங்கவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். உங்களின் அனைத்து தீர்மானத்தையும் வரவேற்கிறேன் என்றார். </p>]]></content:encoded></item><item><title>6 நாட்கள் இடைவெளி.. 14வது மாடியிலிருந்து விழுந்து பலி - சுஷாந்த் சிங் மேலாளர் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/national/a-gap-of-six-days-death-after-a-fall-from-the-14th-floor-sushant-singhs-managers-death-case-transferred-to-the-cbi</link><comments>https://www.maalaimalar.com/news/national/a-gap-of-six-days-death-after-a-fall-from-the-14th-floor-sushant-singhs-managers-death-case-transferred-to-the-cbi#comments</comments><guid isPermaLink="false">d54d4e34-87e1-413f-9b8b-01c064a3ec31</guid><pubDate>Thu, 03 Sep 2026 06:23:51 +0000</pubDate><atom:updated>2026-09-03T06:23:51.381Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sushanth Singh Rajput,சிபிஐ,cbi,பாலிவுட்,Bollywood,சுஷாந்த் சிங் ராஜ்புத்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/p62rnz8x/tn-20.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ திஷா சாலியன், சுஷாந்த் சிங் ராஜ்புத் ]]></media:title><media:description type="html"><![CDATA[ திஷா சாலியன், சுஷாந்த் சிங் ராஜ்புத் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/p62rnz8x/tn-20.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மறைந்த நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/sushant-singh-rajput">சுஷாந்த் சிங் ராஜ்புத்தின்</a> மேலாளர் திஷா சாலியன் மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p> <p>2020ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் தேதி இரவு மும்பையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் 14வது மாடியில் இருந்து விழுந்து திஷா சாலியன் உயிரிழந்தார்.  </p> <h2>சுஷாந்த் தற்கொலை</h2><p>தீஷா உயிரிழந்த 6 நாட்களுக்கு பிறகு நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பை பாந்ராவில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் தற்கொலை செய்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.</p><p>பட வாய்ப்புகள் இல்லாமல் போனது அவரது தற்கொலைக்கு காரணமாக கூறப்பட்டது. அதேநேரம் சுஷாந்தின் முன்னாள் காதலி மற்றும் நடிகை <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-sushant-singhs-suicide-girlfriend-rhea-chakraborty-has-no-connection-cbi-final-report-794276">ரியா சக்கரபர்த்தி </a>அவரை தற்கொலைக்கு தூண்டியதாகவும் பணத்தை கையாடல் செய்ததாவும் குற்றச்சாட்டு எழுந்தது.</p><p>இதுகுறித்து சிபிஐ நடத்திய 5 ஆண்டு விசாரணைக்கு பின் ரியா நிரபராதி என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.</p> <h2>திஷா சாலியன் சர்ச்சை</h2><p>இதனிடையே சுஷாந்த் தற்கொலை செய்துகொள்வதற்கு 6 நாட்களுக்கு முன் 26 வயதான அவரின் மேலாளர் திஷா சாலியன் 14 வது மாடியில் இருந்து விழுந்து இறந்ததன் பின்னணியில் பல்வேறு சந்தேகங்கள் கிளம்பின.</p><p>அவர் தற்கொலை செய்ததாக மும்பை போலீஸ் தனது விசாரணைக்கு பின் தெரிவித்தது.</p> <p>ஆனால் திஷாவின் தந்தை சதீஷ் சாலியன் தன் மகள் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டி, அவரது தந்தை கடந்த ஆண்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.</p><p>இந்த மனு மீதான முந்தைய விசாரணையில் திஷா சாலியன் இறந்து ஐந்து ஆண்டுகள் ஆகியும், அவரது குடும்பத்தினருக்கு உடற்கூறாய்வு அறிக்கை நகல்கள் வழங்கப்படாததற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். </p><p>மேலும் பெற்றோர் முன்வைத்த கொலை குற்றச்சாட்டு தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படாதது குறித்தும் காவல்துறையை கண்டித்தனர்.</p> <h2>சிபிஐ விசாரணை</h2><p>இதைதொடர்ந்து நேற்று நடந்த விசாரணையில் நீதிபதிகள் சாரங் கோட்வால் மற்றும் ரஞ்சித்சிங் ராஜா போன்ஸ்லே ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியது, திஷா சாலியன் மரண வழக்கை சிபிஐக்கு மாற்றுவதாக மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது.</p><p>எப்ஐஆர் பதிவு செய்து அதிகாரியை நியமித்து விசாரணையை தொங்க சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனுதாரர் சதீஷ் சாலியனின் வாக்குமூலத்தை பதிவு செய்யுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது</p><p>மேலும் எந்தவொரு நபர் மீதும் போதுமான ஆதாரங்களை விசாரணை அதிகாரி கண்டறியும் வரை, யாரையும் குற்றவாளியாகக் கருதக்கூடாது என்றும் நீதிபதிகள் வலியுறுத்தியினர்.</p>]]></content:encoded></item><item><title>VIDEO- Harry Potter HBO Series: ரசிகர்களைக் கவர்ந்த புதிய டிரெய்லர் வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/video-harry-potter-hbo-series-new-trailer-charms-fans</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/video-harry-potter-hbo-series-new-trailer-charms-fans#comments</comments><guid isPermaLink="false">7cf1d3b5-e17c-429d-b6dd-48910dc512c2</guid><pubDate>Thu, 03 Sep 2026 06:18:46 +0000</pubDate><atom:updated>2026-09-03T06:18:46.900Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Harry Potter,ஹாரி பாட்டர்,ஜேம்ஸ்,James,Harry Potter HBO Series,HBO Max,Lily,லிலி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/xe1x4mlo/horry.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Harry Potter HBO Series]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/xe1x4mlo/horry.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டிரெய்லரில் பயன்படுத்தப்பட்டுள்ள நீலம் மற்றும் சாம்பல் நிறம் சார்ந்த டார்க் பின்னணி லைட்டிங், 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தொடரைப் போன்று இருப்பதாக சில ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/GyEpwGQIEZw"></iframe></figure><p>உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஹாரி பாட்டர்' கதையின் புதிய எச்பிஓ (HBO) தொலைக்காட்சித் தொடருக்கான டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>வழக்கமான கதையமைப்பைத் தாண்டி,<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-trailer-for-the-movie-street-fighters-featuring-vidyut-jammwal-as-the-villain-has-been-released"> ஹாரி பாட்டரின் </a>பெற்றோர்களான ஜேம்ஸ் மற்றும் லிலியின் கடந்த கால வாழ்க்கையைப் பற்றிய கூடுதல் காட்சிகளை இந்தத் தொடர் வெளிப்படுத்த உள்ளது. அத்துடன் ஹாரி பாட்டர், ரோன் மற்றும் ஹெர்மியோனி ஆகிய முதன்மை கதாபாத்திரங்களில் புதிய இளம் நட்சத்திரங்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். முதல் பாகத்தில் வரும் பாத்ரூம் டிரோல் காட்சி, இந்த புதிய பதிப்பில் மிகவும் பயங்கரமாகவும் ஆபத்தானதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.</p><h2>திரைவ<strong>ண்ணம்</strong> </h2><p>டிரெய்லரில் பயன்படுத்தப்பட்டுள்ள நீலம் மற்றும் சாம்பல் நிறம் சார்ந்த டார்க் பின்னணி லைட்டிங், 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தொடரைப் போன்று இருப்பதாக சில ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். முதல் பாகத்தின் மாயாஜால உணர்வுக்கு பிரகாசமான வண்ணங்களே பொருத்தமாக இருக்கும் என ஒரு தரப்பும், கதையின் தீவிரத்தன்மைக்கு இந்த இருண்ட வண்ண அமைப்பே சரியானது என மற்றொரு தரப்பும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.</p><h2>வெளியீட்டு தேதி <strong>அறிவி</strong>ப்பு</h2><p>ஜான் லித்கோ, பாப்பா எஸீடு, சாநெட் மொக்டீர் போன்ற பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இத்தொடர், 'ஹாரி பாட்டர் அண்ட் தி ஃபிலாசஃபர்ஸ் ஸ்டோன்' என்ற தலைப்பில் 2026-ஆம் ஆண்டு டிசம்பர் 25 கிறிஸ்மஸ் பண்டிகையன்று எச்பிஓ மேக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>Reels-க்காக &quot;தூய்மை தேவதைகள்&quot; என்பதா?- தவெக அரசை சாடிய டிடிவி தினகரன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/reels-praise-vs-job-security-ttv-dhinakaran-attacks-tvk-govt</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/reels-praise-vs-job-security-ttv-dhinakaran-attacks-tvk-govt#comments</comments><guid isPermaLink="false">8b53fe97-2fec-42b2-9e09-c510cbbb2427</guid><pubDate>Thu, 03 Sep 2026 06:08:12 +0000</pubDate><atom:updated>2026-09-03T06:08:12.771Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>டிடிவி தினகரன்,Sanitation workers,TTV Dinakaran,தவெக அரசு,TVK Govt,தூய்மை பணியாளர்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/z8tfix3u/TTV-Dinakaran.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TTV Dinakaran]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/z8tfix3u/TTV-Dinakaran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>15 நாட்களுக்கும் மேலாக தூய்மைப் பணியாளர்கள் போராடும் நிலையில், Reels-க்காக “தூய்மை தேவதைகள்” எனப் புகழாரம் சூட்டினால் மட்டும் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுமா? என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-  </p><p>15 நாட்களுக்கும் மேலாகப் போராடும் தூய்மைப் பணியாளர்கள் – Reels-க்காக “தூய்மை தேவதைகள்” எனப் புகழாரம் சூட்டினால் மட்டும் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுமா? </p><p>தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல், அவர்களைத் தொடர்ந்து போராட விடுவது எந்த விதத்தில் நியாயம்?</p><p>பணிநிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-rajinikanth-praise-to-padma-807774" rel="nofollow">தூய்மைப் பணியாளர்</a>களின் போராட்டம் 15 நாட்களையும் கடந்து தொடர்ந்து நடைபெற்று வருவதால், மாநகரின் தூய்மைப் பணிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p>ஐந்து ஆண்டுகள் மற்றும் அதற்கும் மேலாகப் பணியாற்றி வரும் ஒப்பந்தப் பணியாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என வாக்குறுதியளித்த தவெக, ஆட்சிக்கு வந்து நூறு நாட்களைக் கடந்தும், தூய்மைப் பணியாளர்களின் அடிப்படைக் கோரிக்கையான பணிநிரந்தரம் குறித்து விவாதிக்க மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது.</p><p>15 நாட்களுக்கும் மேலாக நீடித்துவரும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தைப் பேச்சுவார்த்தையின் மூலம் முடிவுக்குக் கொண்டுவர எந்தவித நடவடிக்கையும் எடுக்காத தவெக அரசு, அவர்கள் போராடுவதற்கு ரிப்பன் மாளிகை வளாகத்தில் இடம் ஒதுக்கிக் கொடுத்ததையே பெருமையாகப் பேசுவது வெட்கக்கேடானது.</p><p>ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, பணி நிரந்தரம் கோரி போராடிய தூய்மைப் பணியாளர்களை தனது பனையூர் இல்லத்திற்கு அழைத்து அவர்களது கோரிக்கையை நிறைவேற்றுவதாக சொன்ன <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D" rel="nofollow">முதலமைச்சர் ஜோசப் விஜய்</a> அவர்கள் தற்போது சட்டமன்றத்திற்கு அருகேயே உள்ள ரிப்பன் மாளிகை வளாகத்தில் போராடுபவர்களை சந்திப்பதற்கு என்ன தயக்கம்?</p><p>சென்னை மாநகரத்தைத் தூய்மையாக வைத்திருப்பதிலும், பொதுமக்களின் சுகாதாரத்தைப் பேணிக்காப்பதிலும் அளப்பரிய பங்களிப்பை வழங்கி வரும் முன்களப் பணியாளர்களான தூய்மைப் பணியாளர்களை, குறைந்தபட்சம் அமைச்சர்களாவது நேரில் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிவதில் என்ன தயக்கம்?</p><p>எனவே, சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதோடு, தவெக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, ஐந்து ஆண்டுகள் மற்றும் அதற்கும் மேலாகப் பணியாற்றி வரும் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/they-are-not-cleaners-they-are-cleanliness-angels-minister-rajmohan" rel="nofollow">ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள்</a> அனைவரையும் பணிநிரந்தரம் செய்திட வேண்டும் எனவும் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>தீர்மானம் எங்கள் குழந்தை... இது யாருடைய குழந்தையும் கிடையாது: சட்டசபையில் காரசார விவாதம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-resolution-dmk-and-tvk-arguments-in-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-resolution-dmk-and-tvk-arguments-in-assembly#comments</comments><guid isPermaLink="false">1424405c-dd87-48fb-a60c-9bca3c50b153</guid><pubDate>Thu, 03 Sep 2026 06:03:01 +0000</pubDate><atom:updated>2026-09-03T06:03:01.389Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தவெக,விஜய்,vijay,தமிழக சட்டசபை,தனித்தீர்மானம்,TN assembly,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/55rpg7ti/Assembly0.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் நிர்மல்குமார்- ரகுபதி]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் நிர்மல்குமார்- ரகுபதி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/55rpg7ti/Assembly0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சட்டசபையில் முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்தின் மீது காரசார விவாதம் நடைபெற்றது.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழ்நாடு சட்டசபையில்</a> இன்றைய நிகழ்வில் முதலில் வினாக்கள்-விடை நேரம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்கக் கோரி தனித்தீர்மானத்தை கொண்டு வந்து முதலமைச்சர் விஜய் பேசினார். </p><p>இதனை தொடர்ந்து தனித்தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் விவாதம் நடைபெற்றது. முதலில் தனி தீர்மானத்தின் மீது திமுக எம்எல்ஏ ரகுபதி பேசியதாவது:-</p><p>* தமிழ் வழக்காடு மொழி என்பதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் கருணாநிதி.</p><p>* தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்றுத் தந்தவர் கருணாநிதி.</p><p>* சட்ட சொற்களஞ்சியம் இல்லாத காரணத்தால் 2006-ல் தீர்மானத்தை ஏற்க மறுக்கப்பட்டது. </p><p>* சென்னையில் உச்சநீதிமன்றக் கிளை வேண்டும் என முதலில் கேட்டவர் ஸ்டாலின்.</p><p>* 2022-ல் பிரதமரிடம் நேரடியாக தைரியமாக குரல் எழுப்பியர் ஸ்டாலின்.</p><p>* உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என கேட்டார் ஸ்டாலின் என்றார். </p><p>அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், தீர்மானம் குறித்து சுருக்கமாக சொல்லும்படி கேட்டார். </p><p>இதையடுத்து பேசிய ரகுபதி, </p><p>* இந்த தீர்மானம் எங்கள் குழந்தை, இதை வரவேற்கிறோம்.</p><p>* மக்கள் நேரலையில் பார்த்துக்கொண்டிருப்பதால் வரலாறு முக்கியம்.</p><p>* ஆங்கிலத்திற்கு பிறகே தமிழ் என்று தான் திமுக ஆட்சியில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.</p><p>* சட்ட சொற்களஞ்சியங்களை உருவாக்கினால் உச்சநீதிமன்றம் மறுக்காது என்றார். </p><p>அமைச்சர் நிர்மல் குமார் பேசுகையில், கோரிக்கை விடுப்பது எல்லாம் வரலாறு ஆகாது. எப்போது செயல்வடிவத்திற்க வருதோ யார் செயல்படுத்துகிறாரோ அதுதான் வரலாறு. இதுவரை ஆயிரம் கோரிக்கைகள் வந்து இருக்கலாம்.  இது யாருடைய குழந்தையும் கிடையாது என்றார். </p><p>இவ்வாறு முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. </p>]]></content:encoded></item></channel></rss>