<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 11 Aug 2026 14:57:11 +0000</lastBuildDate><item><title>
Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 11 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-11-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-11-august-2026#comments</comments><guid isPermaLink="false">a3c449d5-f099-414e-8242-4ebc0475b347</guid><pubDate>Tue, 11 Aug 2026 03:54:39 +0000</pubDate><atom:updated>2026-08-11T13:44:41.427Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/lbx76f8s/speaker1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/lbx76f8s/speaker1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-regulation-committee-urges-daily-release-to-tamil-nadu">தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு தலா 1 டி.எம்.சி. தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை!</a></p><p>* டெல்லி கூட்டத்தில் தமிழகத்திற்கு தினமும் 1 டிஎம்சி காவிரி நீர் திறக்க பரிந்துரை</p><p>* ஆகஸ்ட் மாதம் 45 டிஎம்சி நீரை வழங்க ஆணையம் விரைவில் இறுதி முடிவு</p><p>மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார், அவ்வாறு உயர்த்தப்படவில்லை- அமைச்சர் நிர்மல்குமார்</p><p>குதிரைபேரம் குறித்து சட்டசபையில் பேசக்கூடாது, கூவத்தூரில் நடந்தது பற்றி நாங்கள் யாரும் பேசவில்லை- அமைச்சர் ராஜ்மோகன்</p><p>ஆக்கப்பூர்வ, ஆரோக்கியமாக கருத்தை கருத்தால் எதிர்கொள்வோம்- அமைச்சர் ராஜ்மோகன்</p><p>சட்டசபையில் சபாநாயகர் எழுந்து நின்ற பின்பும் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூச்சல் போடுவது சரியல்ல- ராஜ்மோகன்</p><p>நாங்கள் கூறியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கியது போல், அமைச்சர் ஆதவ் கூறியதையும் சபாநாயர் நீக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி</p><p>பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தேவையில்லாத கருத்துகளை சட்டசபையில் பதிவு செய்திருக்கிறார்- எடப்பாடி பழனிசாமி</p><p>எடப்பாடி பழனிசாமி இறுதியாக பேசியது ஆத்திரம் மூட்டும் வகையில் இருந்தது- முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு</p><p>திமுக, அதிமுக ஒன்றாக சேர்ந்து பேசுகிறோம் என்று சபாநாயகர் கூறினார், அது தேவையற்றது- முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு</p><p>திமுகவும், அதிமுகவும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை- முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு</p><p>கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வேண்டும்- அமைச்சர் ராஜ்மோகன்</p><p>குதிரை பேரம் குறித்து அதிமுக- தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் மாறி மாறி முழக்கமிட்டதால் சட்டசபையில் அமளி ஏற்பட்டது.</p><p>அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் உங்களுடைய நலனுக்காக டெல்லியில் சரணடைந்தீர்கள். எடப்பாடி பழனிசாமியின் தலைமை மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைகின்றனர். அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் அங்கிருந்து விலகி தமிழக வெற்றிக்கழகத்தில் பயணிக்கின்றனர்- ஆதவ் அர்ஜூனா</p><p>ஜெயலலிதா இருந்த வரை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு கொண்டுவரப்படவில்லை - ஆதவ் அர்ஜூனா</p><p>இந்த ஆட்சியில் ஒரு கட்சியில் வெற்றி பெற்று ராஜினாமா செய்கிறார்கள். உடனே வேறு கட்சியில் சேருகிறார்கள். 'குதிரை பேரம்' இதனை தவிர்க்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.</p> <p>நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.</p><p>மத்திய அரசு 60% மாநில அரசின் 40% பங்களிப்புடன் நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.</p><p>காவிரி-குண்டாறு-வைகை இணைப்பு திட்டத்திற்கு தேவையான திட்ட அறிக்கை முன்னதாக தயாரிக்கப்பட்டு விட்டது - எடப்பாடி பழனிசாமி</p><h2>எடப்பாடி பழனிசாமி உரை</h2><p>கலப்பின பசுக்கள் குறித்து ஆய்வு செய்து விவசாயிகள் நலனை காக்கும் வகையில் அறிமுகம் செய்ய வேண்டும்.</p><p>3 மாவட்டங்களை உள்ளடக்கிய அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் உள்ள சிறுசிறு குறைபாடுகளை நீக்க வேண்டும்.</p><p>அத்திக்கடவு-அவினாசி திட்டம் கட்டம் 2-ஐ செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.</p><p>மாசடைந்த அமராவதி, நொய்யல் ஆறுகளை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.</p> <h2>உழவன் செயலி</h2><p>அதிமுக கொண்டு வந்த உழவன் செயலி திட்டத்தை தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.</p><p>விவசாயிகள் நலன் கருதி ஓசூரில் உள்ள சர்வதேச மலர் ஏல மையத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>மாம்பழ விளைச்சல் அதிகம், விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கடுமையாக பாதிப்பு, தேவையான நிவாரணம் தரப்பட வேண்டும்.</p><p>தட்கல் முறையில் விண்ணப்பித்து காத்திருக்கும் 65,000 விவசாயிகளுக்கு உடனடியாக பம்பு செட் தரப்பட வேண்டும்.</p><p>சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி</p><h2>பயிர்க்கடன் தள்ளுபடி</h2><p>தவெக அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.</p><p>வறட்சியால் தவிக்கும் விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் சிறு, குறு விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் - எடப்பாடி பழனிசாமி</p><p>ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நிதி ஒதுக்கி கண்டமான பேருந்துகளை ஒதுக்கிவைத்து விட்டு புதிய பேருந்துகளை வாங்க வேண்டும்.</p><p>நெல், கரும்புக்கு தவெக அரசு அறிவித்த ஊக்கத்தொகை போதாது.</p><p>அதிமுக அரசு இருந்தபோது 2 முறை விவசாய கடனை தள்ளுபடி செய்தோம். இப்போது விவசாயிகள் காத்திருக்கின்றனர் - எடப்பாடி பழனிசாமி </p><p>தமிழ்நாட்டில் அனைத்து பேருந்துகளையும் ஏசி பேருந்துகளாக தரம் உயர்த்த முதலமைச்சர் கூறி உள்ளார் - அமைச்சர் தமிழன் பார்த்திபன்</p><p>அனைத்து குக்கிராமங்களையும் இணைக்கும் வகையில் பேருந்து சேவைகள் ஏற்படுத்த வேண்டும் - எடப்பாடி பழனிசாமி</p><h2>பணியிடங்கள்</h2><p>மின்துறையில் அதிக காலிப்பணியிடங்கள் இருப்பதன் காரணமாக தான் அதிக மின்தடைகள் ஏற்படுகிறது.</p><p>ஒவ்வொரு ஆண்டும் ஓய்வு பெறுவோர் எண்ணிக்கை 5 முதல் 7% வரை உள்ளதால் காலி பணியிடம் அதிகரித்துள்ளது.</p><p>விரைந்து செயல்பட்டால் தான் காலிப்பணியிடங்களை நிரப்ப முடியும் - எடப்பாடி பழனிசாமி</p><h2>எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு</h2><p>தமிழ்நாட்டில் உள்ள அரசு துறைகளில் 13.30 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளது.</p><p>காலி பணியிடங்களை படிப்படியாக நிரப்பினால் தான் அரசின் திட்டங்களை நிறைவேற்ற முடியும்.</p><p>ஆட்சிக்கு வந்த உடன் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் எனக்கூறினீர்கள், அதனை செயல்படுத்த வேண்டும்.</p><p>பொதுப்பணித்துறை நிறுவனங்களில் ஒன்றரை லட்சம் காலிப்பணியிடம், மின்சாரத்துறையிலும் பல காலிப்பணியிடங்கள் உள்ளன.</p><h2>எடப்பாடி பழனிசாமி உரை</h2><p>அவையில் திறம்பட பேசும் அமைச்சர் ராஜ்மோகன், 40,000 பள்ளிகளுக்கு தேவையான நிதியை கேட்டுப் பெறுவார் என நம்புகிறேன்.</p><p>பேசாமல் செயல்படுவோம் என்பது வரவேற்கத்தக்கது தான். ஆனால் சில இடங்களில் பேசினால் தான் தீர்வு காண முடியும்.</p><p>தமிழகத்திற்கு நிதியை பெற மத்திய அரசுக்கு கடிதம் எழுதினால் மட்டும் போதாது, பேச வேண்டும் </p><p>பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் இல்லை. அதிமுக கொண்டுவந்த திட்டங்களுக்கு வெற்றி என பெயர் மாற்றி உள்ளீர்கள். தமிழ்நாட்டில் உள்ள 40,000 அரசு பள்ளிகளிலும் தரமும் உயர்த்தப்பட வேண்டும். அதற்கு உரிய நிதி ஒதுக்கப்பட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி</p> <h2>எடப்பாடி பழனிசாமி உரை</h2><p>பள்ளிக்கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் குளறுபடி.</p><p>ஒதுக்கப்பட்ட நிதியில் முரண்பாடு உள்ளதால் ஓய்வூதியம் முறையாக தரப்படுமா என விளக்கம் அளிக்க வேண்டும்.</p><p>வருவாயை பெருக்க நடவடிக்கை இல்லை, வருவாய் பற்றாக்குறையை குறைக்கவும் நடவடிக்கை இல்லை.</p><p>நிதி மேலாண்மைக்கு சரியான பாதை போடப்படவில்லை என்பதையே இந்த பட்ஜெட் காட்டுகிறது.</p><p>இதே நிலை தொடர்ந்தால் 5 ஆண்டுகளில் 20 லட்சம் கோடியாக உயர்த்தி விடுவீர் என்பதில் சந்தேகமில்லை.</p> <p>அடுத்த 6 மாதங்களில் 8000 கோடி கிடைக்க வேண்டுமென்றால் அது ஏன் வரி வருவாயில் சேரவில்லை -எடப்பாடி பழனிசாமி</p><p>2026-2027 வரி வருவாயைப் பார்க்கும்போது நிதி மேலாண்மையை சீர் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது - எடப்பாடி பழனிசாமி</p><h2>எடப்பாடி பழனிசாமி உரை</h2><p>புதிய அரசின் பாதையை தீர்மானிப்பது முதல் 100 நாள்கள் தான்.</p><p>100 நாள் செயல் திட்டங்களை புதிய அரசு வெளியிடுவது வழக்கம். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் முதலீடுகள் கிடைக்கும்.</p><p>வெள்ளை அறிக்கையில் மாநில வரி வருவாய் கணிசமாக கசிந்துள்ளதாக தவெக அரசு கூறியுள்ளது.</p><p>தவெகவை போல திமுகவும், அதிமுகவும் வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளன - எடப்பாடி பழனிசாமி</p><p>வேளாண் பட்ஜெட் மீதான விவாதம்</p><h2>எடப்பாடி பழனிசாமி (அதிமுக) உரை</h2><p>புதிய அரசு பொறுப்பேற்ற முதல் சில மாதங்கள் நிதி மேலாண்மையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.</p><p>FCRA சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிரான தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது.</p><p>FCRA சட்டதிருத்த மசோதா மூலம் இந்தியாவிலேயே தமிழகம் தான் அதிகம் பாதிக்கப்படும் - அமைச்சர் வன்னிஅரசு</p><p>கிறிஸ்தவர்களை குறிவைத்து தான் FCRA திருத்த மசோதாவை பாஜக அரசு கொண்டுவந்துள்ளது.</p><p>தொண்டு நிறுவனங்களை முடக்க, சொத்துக்களை அபகரிக்க ஏற்கனவே 4 முறை பாஜக அரசு சட்டத்திருத்தம். 4 முறை சட்டத்திருத்தம் கொண்டு வந்த பாஜக இப்போது கிறிஸ்தவ அமைப்பை முடக்குவதை நோக்கமாக புதிய சட்டம் கொண்டுவர முயற்சி</p><p>காலம் காலமாக கல்வி நிறுவனங்களை நடத்திவரும் கிறிஸ்தவ அமைப்புகள் நடைமுறையில் சிறு தவறு செய்தால் சொத்தை முடக்குவதா? - அமைச்சர் வன்னிஅரசு</p><h2>அமைச்சர் வன்னிஅரசு உரை</h2><p>நீட் விலக்கு, FCRA மசோதா எதிர்ப்பு தீர்மானம் இரண்டுமே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள்.</p><p>FCRA மசோதா எதிர்ப்பு தீர்மானத்தை வரவேற்கிறோம், வாழ்த்துகிறோம்.</p><p>நேற்று தான் சிறுபான்மை அமைப்பினருடன் முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்தோம். இன்று தீர்மானம்.</p><p>கேளுங்கள் கொடுக்கப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என விவிலியத்தில் கூறியதை  நிஜத்தில் நிறைவேற்றி உள்ளார் முதல்வர்.</p><p>RSS திட்டங்களை கொண்டுவருவதை தான் பாஜக அரசு வேலையாக வைத்துள்ளது.</p><p>அரசியலமைப்பு சட்டத்தை நீர்த்துப்போக வைப்பதுதான் பாஜகவின் வேலை.</p><p>FCRA திருத்த மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்டசபையில் இயற்றிய தீர்மானத்திற்கு விசிக ஆதரவு - அமைச்சர் வன்னிஅரசு</p><p>FCRA திருத்த மசோதா சட்டமானால் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். மத்திய அரசின் நோக்கம் நாட்டை வளர்ச்சி நோக்கி கொண்டு செல்வதா? சிறுபான்மை நிறுவங்களை முடக்குவதா? அமைச்சர் ஷாஜகான் </p><h2>அமைச்சர் ஷாஜகான் உரை</h2><p>தமிழ்நாட்டில் 50% உயர்கல்வி அடைவதற்கு சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்கள் காரணம்.</p><p>வெளிநாடுகளில் இருந்து வரும் நிதி கண்காணிக்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.</p><p>உயர்கல்வியில் 50% படிக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. அதற்கு சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தான் காரணம்.</p><p>முதல்வர், பேரவை தலைவர், அமைச்சர், நான் உள்பட பலர் சிறுபான்மையினரின் கல்வி நிறுவனத்தில் தான் படித்தோம்.</p><p>FCRA திருத்த மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்டசபையில் இயற்றிய தீர்மானத்திற்கு ஐயுஎம்எல் ஆதரவு - அமைச்சர் ஷாஜகான்</p><h2>திமுக எம்எல்ஏ ஆஸ்டின் உரை</h2><p>சிறுபான்மையினரால் நடத்தப்படும் தொண்டு நிறுவனங்கள் மீது மிகப்பெரிய தாக்குதலே FCRA திருத்த மசோதா </p><p>16 சிறுபான்மை நல அமைப்பினருடன் திமுக எம்பி வில்சன், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து மசோதா குறித்த பேசினார்.</p><p>சிறுபான்மை அமைப்புகளின் தொண்டு நிறுவனங்களை மிரட்டுவதற்கு அமலாக்கத்துறை போல் செயல்படுகிறது FCRA.</p><p>50 ஆண்டுகளாக நாம் கட்டிக்காத்த சமூக நல அமைப்புகள் ஒரே கையெழுத்தில் மத்திய அரசின் கைக்கு சென்று விடும்.</p><p>இது சட்டத்தின் பெயரில் துப்பாக்கி முனையில் அடிக்கப்படும் கொள்ளை மட்டுமல்ல சட்டப்பூர்வமாக மேற்கொள்ளப்படும் கொள்ளை. இந்த தீர்மானத்தை மத்திய பாஜக அரசு திரும்பப்பெற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த FCRA மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு திமுக ஆதரவு - எம்எல்ஏ ஆஸ்டின்</p><p>சிறுபான்மையினருக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வரக்கூடாது என்ற நோக்கத்தில் தான் மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது - சிபிஎம்</p><p>நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட FCRA மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு சிபிஎம் ஆதரவு</p><p>சிறுபான்மை அமைப்புகளுக்கு வரும் நிதி பறிக்கப்பட்டால் லட்சக்கணக்கான மக்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்படும் - சிபிஎம்</p><h2>மனித நேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா உரை</h2><p>நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட FCRA மசோதாவை எதிர்க்கும் தீர்மானத்திற்கு மனித நேய மக்கள் கட்சி ஆதரவு.</p><p>தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களை கண்காணிக்க வருமான வரித்துறை இருக்கும்போது FCRA எதற்கு?</p><p>FCRA சட்டமே தேவையற்றது. அதில் சட்டத்திருத்தமும் தேவையற்றது.</p><p>தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு வங்கிகள் மூலம் தான் பணம் வருகிறது. அதுவும் கண்காணிக்கப்படுகிறது.</p><p>வெளிநாட்டு நிதி வங்கிகள் மூலம் தான் வரும் போது புதிதாக சட்டத்திருத்தம் கொண்டு வந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் என்ன?</p> <h2>அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி</h2><p>வெளிநாட்டில் இருந்து வரும் பணம் முறையாக செலவழிக்கப்படுகிறதா? என கண்காணிக்கவே மசோதா.</p><p>FCRA பதிவு புதுப்பிக்கப்படவில்லை என்றால் சொத்துகள் அரசின் கட்டுப்பாட்டில் செல்லும் அபாயம் உள்ளது. நேர்மையாக நடத்தப்படும் நிறுவனங்கள் நடைமுறை சிக்கல்களால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.</p> <h2>பாஜக எம்எல்ஏ போஜராஜன் உரை </h2><p>FCRA வேண்டாம் என சொல்லவில்லை. திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியதால் தான் மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. நல்ல சமூக திட்டங்களுக்காக வரும் பணத்திற்கு மத்திய அரசு எதிர்ப்பு இல்லை, அதனை வரைமுறைப்படுத்துவதே நோக்கம்.</p><p>நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட FCRA மசோதாவை எதிர்க்கும் தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு - எம்எல்ஏ போஜராஜன்</p><p>நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட FCRA மசோதாவை எதிர்க்கும் தீர்மானத்திற்கு சிபிஐ ஆதரவு - எம்எல்ஏ மாரிமுத்து</p><h2>பிரேமலதா உரை</h2><p>தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து நேற்று இயற்றப்பட்ட தீர்மானத்திற்கும் தேமுதிக சார்பில் ஆதரவு.</p><p>தமிழ்மொழி தவிர வேறு எந்த மொழியிலும் நடிக்காதவர் கேப்டன் விஜயகாந்த் தமிழ் மொழி மட்டுமே பேசினார்.</p><p>இலங்கை வாழ் தமிழர்களுக்கும் தமிழ்த்தாய் வாழ்த்து உரித்தாகும்.</p><p>நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தனித்தீர்மானத்திற்கு தேமுதிக ஆதரவு.</p><p>நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவின் இறுதி சடங்கில் தகனமேடைக்கு அருகே நின்று அஞ்சலி செலுத்தினார் கேப்டன்.</p> <p>இன்று 2 முக்கியமான தீர்மானங்கள் அவையில் நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு தேமுதிக சார்பில் நன்றி.</p><p>நேரலையில் பேரவை நிகழ்வை காண்பிக்க வேண்டுமென கேப்டன் விஜயகாந்த் கோரிக்கை வைத்த நிலையில் இன்று நிறைவேற்றம் - பிரேமலதா</p><h2>அமைச்சர் ராஜ்மோகன் உரை</h2><p>FCRA விதிமுறைகள் தொண்டு நிறுவனங்களின் தன்னாட்சி, சிறுபான்மையினர் கல்வி நிறுவன செயல்பாட்டை பாதிக்கும்.</p><p>மத, கல்வி, மருத்துவ, சமூக அமைப்புகள், மாநில அரசுகளுடன் மத்திய அரசு விரிவான ஆலோசனை நடத்த வேண்டும்.</p><p>FCRA சட்டத்தால் சிறுபான்மையினர் பாதிக்கப்படுவர். FCRA மசோதாவை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். FCRA மசோதாவிற்கு எதிராக தவெக அரசு மத்திய அரசை வலியுறுத்தும்.</p><p>மத்திய அரசு கொண்டுவந்த FCRA மசோதாவுக்கு தமிழ்நாடு அரசு கடும் ஆட்சேபனை தெரிவிக்கிறது.</p><p>வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானத்தை அமைச்சர் ராஜ்மோகன் முன்மொழிந்தார்.</p><p>மத்திய அரசு கொண்டுவந்த FCRA திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.</p><p>பாஜகவை தவிர எஞ்சிய கட்சிகளின் முழுமையான ஆதரவுடன் நீட் தேர்வுக்கு எதிரான தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்.</p><p>டெல்லி போராட்டத்திற்கு ராகுல்காந்தி ஆதரவு தந்தது தொடர்பாக அமைச்சர் விஸ்வநாதன் பேசியதற்கு திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.</p><p>மாணவர்கள் சமூகத்திற்கு இனியும் இழுக்கு ஏற்படக்கூடாது என தனித்தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார் முதலமைச்சர். நீட் தேர்வை எதிர்க்கும் போராட்டக்களத்தில் ராகுல்காந்தி நின்று கொண்டிருக்கிறார் - அமைச்சர் விஸ்வநாதன்</p> <p>நீட் தேர்வுக்கு எதிரான தனித்தீர்மானத்திற்கு காங்கிரஸ் தரப்பில் ஆதரவு - உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதன்</p><p>நீட் இந்தியா முழுவதும் கொண்டு வந்தார்கள். ஆனால் அதனை தமிழ்நாட்டிற்கு கலைஞர் ஏற்கவில்லை. </p><p>நீட் தேர்வு இந்தியா முழுவதற்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகத்திற்குள் நுழையாமல் தடுத்தவர் கலைஞர் கருணாநிதி  - எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி</p><p>நீட் தேர்வை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்தவர் திமுகவை சேர்ந்த மத்திய இணையமைச்சர் காந்தி செல்வன் - அமைச்சர் ஆதவ்</p><p>பலனடையும் ஒரு சில குழந்தைகளை விட பாதிக்கப்படும் குழந்தைகளே அதிகம்.</p><p>நீட் தேர்வால் உயிரிழந்த அனிதா வீட்டின் தரையில் அமர்ந்து அவர்களுக்கு ஆறுதல் கூறியவர் முதலமைச்சர் விஜய்.</p><p>அனிதாவின் மதிப்பெண்ணை டீசர்ட்டாக அணிந்தவர் நமது முதலமைச்சர் விஜய்.</p><p>ஆயிரம் அவதூறுகளை அள்ளி வீசினாலும் அந்த மாமனிதன் முதலமைச்சர் விஜயை அவமதிக்க முடியாது - அமைச்சர் ராஜ்மோகன் </p><p>நீட் தொடர்பான தீர்மானத்தில் அரசியல் தேவையில்லை. இதில் மாணவர் நலனே முக்கியம். </p><p>நீட் விவகாரத்தில் பாஜகவை தவிர தமிழகத்தின் அனைத்துக்கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளோம். </p><p>நீட் விவகாரத்தில் திமுக என்ன செய்துள்ளது என்பது எங்களுக்கும் தெரியும், ஆதாரம் உள்ளது - அமைச்சர் ஆதவ்</p><p>நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டத்திற்கு சரியான வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டனரா? என தவெக அரசு விளக்கம் தர வேண்டும்.</p><p>நீட் மட்டும் தான் உலகமா? என தேர்தலுக்கு முன்பு முதலமைச்சர் விஜய் பேசியிருக்கிறார்.</p><p>மருத்துவம் மட்டும் தான் படிப்பா? பிளம்பர், கார்பெண்டருக்கு நிறைய தேவை இருக்கிறது என அமைச்சர் பேசி இருக்கிறார் - திமுக எம்எல்ஏ முத்துராஜா</p><h2>திமுக எம்எல்ஏ முத்துராஜா உரை</h2><p>நீட் தேர்வை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது. ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை நீட் தேர்வு நடைமுறைப்படுத்த அனுமதிக்கவில்லை.</p><p>நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தனித்தீர்மானத்தை திமுக ஆதரிக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கூறியபடி தீர்மானத்தை ஆதரிக்கிறோம்.</p><p>இந்தியாவிலேயே நீட் தேர்வை முதல்முதலில் எதிர்த்தவர் கலைஞர் கருணாநிதி. 2017-ல் அமலுக்கு வந்த நீட் தேர்வை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்தது திமுக.</p><p>நீட் விலக்கு தொடர்பாக 12 மாநில முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.</p> <h2>தமிமுன் அன்சாரி உரை</h2><p>நீட் ரத்து கருத்தியலை நாடு முழுவதும் வலுப்படுத்த வேண்டும்.</p><p>நீட் தேர்வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் கொண்டுவருவதை ஒரு சடங்காக செய்யக்கூடாது. நிரந்தர தீர்வு தேவை.</p><p>பாஜக ஆளாத இதர மாநிலங்களிலும் தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்த வேண்டும்.</p><p>நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிராக சட்டசபையில் கொண்டு வரப்பட்ட தனித்தீர்மானத்திற்கு மனிதநேய ஜனநாயக்கட்சி ஆதரவு - தமிமுன் அன்சாரி</p><h2>ஓ.எஸ்.மணியன் உரை</h2><p>நீட் எதிர்ப்பு கொள்கையில் அதிமுக உறுதியாக உள்ளது.</p><p>திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது தான் நீட் தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டது.</p><p>மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்தது அதிமுக.</p><p>நீட் பாதிப்பில் தமிழ்நாட்டில் அதிகாரப்பூர்வமாக 31 பேர் உயிரிழந்துள்ளது.</p> <p>நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிராக சட்டசபையில் கொண்டு வரப்பட்ட தனித்தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு - ஓ.எஸ்.மணியன்</p> <p>மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கு நீட், CUTE உள்ளிட்ட எந்தவிதமான நுழைவுத்தேர்வும் வைக்கக்கூடாது.</p><p>சமூக நீதி, அரசு பள்ளி மாணவர், கிராமப்புற மாணவர், ஏழை மாணவர்களுக்கு எதிரானது நீட் தேர்வு. நீட் கோச்சிங் என்பது மிகப்பெரிய வணியமயமாகி விட்டது.</p><p>இதுவரை நீட் தேர்வால் நாடு முழுவதும் 500 மாணவர்கள் உயிரிழப்பு, தமிழ்நாட்டில் மட்டும் 50 பேர் உயிரிழப்பு. இந்த முறை நீட் வினாத்தாள் கசிவு, அதன்பின் நடந்த தேர்வு நடைமுறைகளால் மட்டும்  13 மாணவர்கள் பலியாகி உள்ளனர் - சவுமியா அன்புமணி</p><h2>சவுமியா அன்புமணி உரை</h2><p>நீட் ரத்து தீர்மானத்தை பாமக ஆதரிக்கிறது.</p><p>2006-ம் ஆண்டே நீட் தேர்வு கொண்டு வர இருந்தபோது அன்புமணி அதனை தடுத்தார்.</p><p>நீட்டில் 110 மதிப்பெண் எடுத்த மாணவர் வசதியாக இருந்தால் மருத்துவராகலாம்.</p><p>590 மதிப்பெண் எடுத்த ஏழை மாணவரால் மருத்துவராக முடியவில்லை.</p><p>ஆண்டுக்கு 23 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதுகிறார்கள். ஆனால் ஆண்டுக்கு 1 லட்சம் பேருக்கு மட்டுமே சீட் கிடைக்கிறது.</p><h2>சிபிஐ எம்எல்ஏ செல்லசுவாமி உரை</h2><p>கல்வியை மாநிலப்பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றியது பெரிய துரோகம். அரசுப்பள்ளி மாணவர்களால் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியவில்லை</p><h2>சிபிஐ எம்எல்ஏ ராமச்சந்திரன் உரை</h2><p>நீட் தேர்வால் ஏற்படும் மனஅழுத்தத்தால் பல மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.</p><p>சமூக நீதியின் வேரில் வெந்நீரை ஊற்றுகிறது நீட்.</p><p>நாடு முழுவதும் நீட் கோச்சிங் சென்டர்கள் புற்றீசல் போல் முறைத்துள்ளன.</p><p>நீட் மட்டுமல்ல எந்த படிப்புக்கும் நுழைவுத்தேர்வு கூடாது என்பது தான் எங்களது நிலைப்பாடு.</p><p>நீட் ரத்து தீர்மானத்தை ஆதரிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது.</p><p>நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிரான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் பாஜக எம்எல்ஏ போஜராஜன் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.</p><p>நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தனித்தீர்மானத்திற்கு பாஜக எம்எல்ஏ போஜராஜன் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p><p>நமது மாணவர்களின் திறமையை குறைவாக மதிப்பிடாதீர்கள். தரமான கல்வியை கொடுத்த நீட் தேர்வில் தேர்ச்சி பெற செய்யுங்கள்.</p><p>நீட் தேர்வு மாணவர்களின் எதிர்காலத்திற்கு தேவையானது.</p><p>தமிழ்நாட்டு மாணவர்களை ஏன் தாழ்வுமனப்பான்மையுடன் பார்க்க வேண்டும்.</p><p>நீட் பயிற்சி முகாமை அரசே நடத்த வேண்டும்.</p><p>நீட் தேர்வு எழுதாமல் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவர் ஆனவன் நான். ஐஆர்எஸ் ஆவதற்கு முன்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றியவன் நான் - அமைச்சர் அருண்ராஜ்</p> <p>நீட் தேர்வால் பிள்ளைகளுக்கு பெற்றோர் அதிகம் செலவு செய்ய வேண்டி உள்ளது. நீட் தேர்வு - விவசாயிகளின் குழந்தைகளுக்கு ஒரே மாதிரியான பயிற்சி கிடைப்பதில்லை. சமூகத்தில் ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளது.</p><p>நீட் தேர்வில் தோல்வி அடைபவர்களில் சிலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலையும் உள்ளது.</p><p>தமிழக சட்டசபையின் தீர்மானத்தை மத்திய அரசு மதிக்க வேண்டும். கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப்பட்டியலுக்கு மாற்ற வேண்டும் - சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ்</p><h2>சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் உரை</h2><p>மருத்துவக்கல்வி திறமை உள்ள அனைவருக்கும் வேண்டும். மருத்துவக் கல்வி வசதி படைத்தவர்களுக்கான மட்டும் அல்ல.</p><p>முன்னர் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.</p><p>பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படை - கிராமப்புற மாணவர்கள் மருத்துவம் பயின்றனர். தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பு மேம்பட்டது.</p><p>நீட் தேர்வால் சமூக சமநிலை கட்டமைப்பு சீர்குலைந்து விட்டது. ஒரு நாள் நடக்கும் தேர்வு மாணவரின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடாது.</p><p>நீட் தேர்வால் தனியார் பயிற்சி மையங்கள்தான் பலன் பெறுகின்றன.</p><p>நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்ற தனித்தீர்மானத்தை அமைச்சர் அருண்ராஜ் முன்மொழிந்தார்.</p><p>தமிழ்நாட்டை வழிநடத்திய திராவிட கட்சிகளின் மூத்த தலைவர்களின் அனுபவ பாடங்களை இளம் தலைமுறையினர் கேட்க வேண்டும்.</p><p>அரசியல் களத்தில் பார்வைகளும் பயணங்களும் வேறாக இருக்கலாம். ஆனால் அனுபவசாலிகளின் அறிவுரைகளை கேட்கலாம் -  நித்தியானந்தன் </p> <p>முதலமைச்சர் உத்தரவின் பேரில் பொள்ளாச்சியில் மைக்ரோ டெக் பார்க் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது- அமைச்சர் கீர்த்தனா</p><p>வேட்டி, சேலை திட்டத்திற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு ரூ.300 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் விஜய் பாலாஜி</p><p>பரம்பிக்குளம் - ஆழியார் திட்டம் குறித்து தவறான புரிதல் உள்ளது. ஆனைமலை ஆற்றின் குறுக்கே அணை கட்டினால் 2.5 டிஎம்சி தண்ணீரை சேமிக்கலாம்.</p><p>பிஏபி பிரதான மற்றும் கிளை கால்வாய்களை உடனடியாக தூர்வார வேண்டும்.</p><p>தமிழ்நாட்டில் கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் -  நித்தியானந்தன் </p> <p>பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் வேண்டும். முழு பயிர்க்கடன் தள்ளுபடி இல்லாதது ஏமாற்றம் - நித்தியானந்தன் </p><p>பட்ஜெட் மீதான விவாதத்தில் கொமதேக எம்எல்ஏ நித்தியானந்தன் உரையாற்றினார்.</p><p>விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் திட்டங்கள் பட்ஜெட்டில் குறைவு தான்.</p> <p>மக்களுக்கும் விவசாயிகளுக்கும் தேவையான அனைத்தும் செய்து தரப்படும் - கால்நடைத்துறை அமைச்சர் கமலி உறுதி</p><p>நீர்வளத்துறைக்கு கடந்த ஆண்டுகளில் ஒதுக்கப்பட்டதை விட தவெக அரசு கூடுதலாகவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் எங்களுக்கும் தான் மாவட்டம். விவசாயிகளின் கோரிக்கை கண்டிப்பாக நிறைவேற்றுவோம்.</p><p>முதல்வருடன் கலந்தாலோசித்து சவுமியா கேட்ட அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்  - அமைச்சர் ஆனந்த்</p><p>கானல் நீராக அரசு வேலை இருக்கும் நிலையில் அது குறித்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை.</p><p>3000 பணியிடத்திற்கு 30,000 பேர் தேர்வெழுதும் நிலை, அந்தளவுக்கு வேலைவாய்ப்பு இன்றி இளைஞர்கள் தவிக்கின்றனர்.</p><p>அரசு பணிக்கான தேர்வுகளில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தாலும் கூட பணி கிடைப்பதில்லை  - சவுமியா அன்புமணி</p> <p>தமிழ்நாட்டில் உள்ள 27,000 குளங்களை தூர்வாரினால் போதும் 150 டிஎம்சி வரை நீர் சேமிக்க முடியும். 42,000 ஏரிகள் இருந்த தமிழ்நாட்டில் தற்போது 27,000 ஏரிகள் மட்டுமே உள்ளன. அவற்றை 1 மீட்டர் அளவு தூர்வார வேண்டும் - சவுமியா அன்புமணி</p><p>ஆறுகள் இணைப்பு உள்ளிட்ட நீர்ப்பாசன திட்டத்திற்கு இன்னும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். 10 கிமீ ஒரு தடுப்பணைகளை கட்டினால் கேரளா, கர்நாடகாவிடம்  நீர் எதிர்பார்க்க வேண்டிய அவசியமே இல்லை.</p><p>ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரும் திட்டங்கள் தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. நிலத்தடி நீர்மட்டத்தை நம்பியே விவசாயிகள் உள்ள நிலையில் அதை உயர்த்துவதற்கான எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை - சவுமியா அன்புமணி</p> <h2>சவுமியா அன்புமணி உரை</h2><p>வேளாண் பட்ஜெட்டில் மிகமிக குறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>நம்மாழ்வார் பெயரில் வேளாண் கல்லூரி தொடங்குவதற்கு பாமக சார்பில் நன்றி, வாழ்த்துகள்.</p><p>கால்நடை, பால்வளம், நீர்ப்பாசனம் வேளாண்துறைக்கு பட்ஜெட்டில் மிகமிக குறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>வீட்டில் பெண்கள் பட்ஜெட் போடும்போது சாப்பாடுக்கு உரிய நிதி ஒதுக்காமல் இருப்பார்களா?</p><p>பட்ஜெட் மீதான விவாதத்தில் சவுமியா அன்புமணி உரையாற்றினார்.</p><p>பாமகவின் 13 வருட கோரிக்கையான சேவை உரிமை சட்டத்தி அமல்படுத்திய தவெக அரசுக்கு வாழ்த்துகள் - சவுமியா</p><p>பிறப்பு, இறப்பு உள்ளிட்ட சான்றுகளை விரைவாக வழங்கும் சேவை உரிமைச்சட்டத்தை நிறைவேற்ற ஒப்புதலுக்கு நன்றி.</p><p>முன்னர் ஆட்சியில் இருந்தோர் பட்டா வழங்கியதாக கூறினார்கள். பட்டா உள்ளது இடம் எங்கே என கேட்கின்றனர் மக்கள்.</p><p>பட்டாவுடன் இடத்திற்கான நடவடிக்கையை நாங்கள் எடுப்போம் என கூறி உள்ளோம் - கால்நடைத்துறை அமைச்சர்</p><p>முதல்வர் எப்போது அழைப்பார் என்ற நிலை மாறி தற்போது முதல்வரிடம் இருந்து அழைப்பு வந்தாலே பயமாக இருக்கிறது - அமைச்சர் ஆனந்த்</p><p>மக்கள் குறையை சரிசெய்ததன் விளைவு தான் தவெக ஆட்சியில் உள்ளது - சூலூர் எம்எல்ஏ சுகுமார்</p><p>வார்த்தைகள் மற்றவரை புண்படுத்தாத வகையில் இருக்க வேண்டும் என எம்எல்ஏ சுகுமாருக்கு சபாநாயகர் அறிவுறுத்தினார்.</p><p>உங்களுக்கும் சிபிஐ வழக்குகள் உள்ளது என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பதில் அளித்தார்.</p><p>திமுகவினர் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை வந்துவிடுமோ என அஞ்சுகிறார்கள் என தவெக எம்எல்ஏ சுகுமார் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.</p><p>மூலதன செலவு குறைவாக இருக்கும்போது கடன் பெறுவதற்கு என்ன காரணம் என கேள்வி எழுகிறது. திராவிட மாடல் உருவாக்கிய வலுவான அடித்தளத்தில் நிற்கும் தவெக அரசு அதன் பலனை பயன்படுத்தி வருகிறது.</p><p>மத்திய அரசின் மானியங்களும் மூலதன செலவில் குறைப்பும் தான் வருவாய் பற்றாக்குறை அதிகரிக்க காரணம். நிதி, அதிகார பகிர்வுக்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.</p><p>மக்கள் நலனில் ஸ்டாலினை மிஞ்சி யாரும் சிந்திக்க முடியாது என்பதை புலப்படுத்துகிறது தவெகவின் பட்ஜெட் என்று  ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.</p> <h2>ஓ.பன்னீர்செல்வம்</h2><p>மாநில வரி வருவாயை உயர்த்த புதிய திட்டமோ அணுகுமுறையோ இந்த பட்ஜெட்டில் காணப்படவில்லை. வெள்ளை அறிக்கை தயாரிக்க காட்டிய முனைப்பை வருவாய் உயர்த்தும் திட்டத்திற்கு காட்டவில்லை.</p><p>திராவிட மாடல் அரசில் பொறுப்பான நிதி மேலாண்மை செய்த முன்னாள் முதல்வர் ஸ்டாலினை குறை சொல்லக்கூடாது. அரசு கடன் வாங்காமல் இருக்க முடியாது, கடன் வாங்கி எத்தனை திட்டங்களை செயல்படுத்தியது என்பதுதான் முக்கியம்.</p><p>தமிழ்நாடு நிதிநிலை பொறுப்புடைமை சட்டத்தின் அடிப்படையில் எல்லை கோட்டை மீறி எந்த அரசும் கடன் வாங்க முடியாது. வருவாய் மதிப்பீட்டை கணிப்பது தொடர்பான தவெக அரசின் கணக்கீட்டில் நம்பிக்கை இல்லை.</p><p>மின் கட்டணம், நூல் கட்டணம் உயர்வு, நெசவாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.30,000 அறிவிப்புகள் தேர்தல் அறிக்கையில் தூங்குகிறது. மாநிலத்தை திராவிட மாடல் அரசு கடன் கடலில் ஆழ்த்திவிட்டதாக பிரசாரம் செய்கிறது தவெக அரசு.</p><p>அடுத்த 50 ஆண்டுகள் வரை கடன் இன்றி யாரும் ஆட்சி செய்ய முடியாது என நிதித்துறை செயலரே கூறுகிறார். கடன் குறித்த முதலமைச்சர் விஜயின் விமர்சனம் தவறு என்பது தற்போது புரிகிறதா? என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.</p> <h2>ஓ.பன்னீர்செல்வம்</h2><p>திராவிட இயக்கத்தை சுற்றித்தான் என் நிலை இருக்கும், நான் எப்படிப்பட்டவன் என அனைவருக்கும் 200% தெரியும்.</p><p>பயிர்க்கடன் முழு தள்ளுபடி, பழைய ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு வரவில்லை.</p><p>வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையிலேயே தூங்கி கொண்டிருக்கின்றன.</p><p>கடன் வாங்காமல் 50 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்ய முடியாது என்கிறார் நிதித்துறை செயலாளர்.</p><p>தேர்தல் பிரசாரத்தில் பேசியது தவறு என முதலமைச்சருக்கு இப்போது தெரிந்திருக்கும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.</p><p>தற்போது சட்டமன்ற உறுப்பினராக பேரவையில் நான் இருப்பதற்கு காரணம் ஸ்டாலின், எனவே அவர் படத்தை வைத்துள்ளேன் - ஓபிஎஸ்</p><p>5 ஆண்டுகளுக்குள் சொன்னவற்றை நிறைவேற்றுவோம், ஓபிஎஸ் சொல்வதை போல் 3 மாதத்தில் சரித்திரம் படைக்க முடியாது - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>மாநிலம் முழுவதும் அனைத்து அரசு பேருந்திலும் இலவச பயணம் என்ற விடியல் பயண திட்டம் அறிவிக்கப்படவில்லை - ஓபிஎஸ்</p> <p>மாணவர் இடைநிற்றலை தவிர்ப்பதற்கான திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பில்லை -  ஓபிஎஸ்</p><p>அண்ணா, ஜெயலலிதா, கலைஞர் என அனைவரும் இதயத்தில் உள்ளனர். படம் வைத்து ஏமாற்ற வேண்டிய தேவையில்லை - ஓபிஎஸ்</p><p>ஜெயலலிதா இருந்த காலத்திலேயே முதலமைச்சராக பொறுப்பேற்ற ஓபிஎஸ், யார் படத்தை தற்போது வைத்துள்ளார் - ஆதவ்</p><h2>அமைச்சர் ராஜ்மோகன்</h2><p>செங்கோட்டையன் இடம் மாறினாலும் அவரது பாக்கெட்டில் புகைப்படம் மாறவில்லை.</p><p>ஓபிஎஸ் இடத்தை மட்டும் அல்ல இதயத்தையும் மாற்றிவிட்டார் - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>படத்தை காட்டி ஏமாற்றும் எண்ணம் எங்களுக்கு இல்லை - ஓபிஎஸ்</p><p>முதலில் இடம் மாறியது செங்கோட்டையன் என்று முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் பதில்</p><p>இடம் மாறியதால் துதி பாட வேண்டாம் என ஓபிஎஸ்-க்கு அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள்.</p><p>மாணவர் இடைநிற்றலை தவிர்க்க நிதி ஒதுக்கீடு திட்டம் இந்த பட்ஜெட்டில் வெளியாகவில்லை - ஓ.பன்னீர்செல்வம்</p><p>உரிமைத்தொகை உயரவில்லை, 6 சிலிண்டர் என எந்த அறிவிப்பும் வராததால் மகளிர் ஏமாற்றம்  - ஓ.பன்னீர்செல்வம்</p><p>புதிய அரசின் திட்டங்களை தேடுகிறேன், தேடுகிறேன், தேடிக் கொண்டே இருக்கிறேன் - ஓபிஎஸ்</p><p>திருப்புகின்ற பக்கமெல்லாம் திமுக ஆட்சியின் திட்டங்களே பட்ஜெட்டில் உள்ளன - ஓபிஎஸ்</p><p>பெயர் மாற்ற பட்டியல் போல் வெளியாகி உள்ளது தமிழக பட்ஜெட் - ஓபிஎஸ்</p><p>செய்வதை மட்டும் தான் சொல்வோம் என கூறி அள்ளித்தெறித்த வாக்குறுதிகளை தவெக அரசு மறந்துவிட்டது - ஓ.பன்னீர்செல்வம்</p><p>3-வது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.</p><p>சட்டசபையில் இன்று 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.</p><p>சட்டசபையில் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் தொடங்கியது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/special-resolution-against-neet-exam-and-fcra-tn-assembly-toady">நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தனித்தீர்மானம்!</a></p><p>* நீட் தேர்வில் இருந்து தமிழ் நாட்டிற்கு விலக்கு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதாவை கடந்த 2021-இல் தமிழக சட்டப்பேரவை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.</p><p>* நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளால் மருத்துவ கனவு கொண்ட லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.&nbsp;</p>]]></content:encoded></item><item><title>ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி ஏற்ற வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/national/modi-urges-people-to-take-developed-india-pledge-on-i-day</link><comments>https://www.maalaimalar.com/news/national/modi-urges-people-to-take-developed-india-pledge-on-i-day#comments</comments><guid isPermaLink="false">e4725875-a7c2-4057-9a72-7fa452b2f5f7</guid><pubDate>Tue, 11 Aug 2026 14:54:54 +0000</pubDate><atom:updated>2026-08-11T14:54:54.443Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>national flag,தேசிய கொடி,Independence Day,சுதந்திர தினம்,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/ve9dygsy/modi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ pm modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/ve9dygsy/modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சுதந்திர தினத்தன்று மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசியக் கொடி ஏற்றவேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.</p><p>'ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ண கொடி' எனப்படும் ,' ஹர் கர் திரங்கா' என்ற இயக்கத்தை மத்திய கலாசார அமைச்சகம் கடந்த 2022-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. அப்போது முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான மக்கள் தங்களது வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி வருகின்றனர்.</p><p>இதற்கிடையே, வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது இந்தியர்கள் தங்களது வீடுகளில் மூவர்ணக் கொடி ஏற்றி Harghartiranga.com என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் என மத்திய கலாசாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. பிரதமர் நரேந்திர மோடியும் இதனை வலியுறுத்தி இருந்தார்.</p><p>இந்நிலையில், பிரதமர் மோடி இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.</p><p>அந்த வீடியோவில், நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p><p>ஹர் கர் திரங்கா இயக்கத்தில் உற்சாகத்துடன் பங்கேற்போம். 'விக்சித் பாரத்'தை உருவாக்குவதில் பங்களிக்க நமது கூட்டு உறுதிப்பாட்டைப் புதுப்பிப்போம். இந்த ஆண்டுக்கான முயற்சிகள் 'வந்தே மாதரம்' பாடலுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருப்பதிலும், அதுவும் அப்பாடலின் 150-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில் இது அமைந்திருப்பதிலும் மகிழ்ச்சி அடைகிறேன்.</p><p>வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டதன் 150-வது ஆண்டைக் கொண்டாடும் வகையிலும், நாட்டின் பெருமை, ஒற்றுமையைக் கொண்டாடும் வகையிலும் தேசியக் கொடி ஏற்றவேண்டும் என பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அருணாச்சல பிரதேச மாநில எல்லையில் சீன ராணுவம் ஊடுருவல்? இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதில்</title><link>https://www.maalaimalar.com/news/national/state-of-border-will-reflect-state-of-ties-india-warns-china-on-arunachal</link><comments>https://www.maalaimalar.com/news/national/state-of-border-will-reflect-state-of-ties-india-warns-china-on-arunachal#comments</comments><guid isPermaLink="false">ee82dee6-81f7-4030-8af0-b15be204ce4b</guid><pubDate>Tue, 11 Aug 2026 14:52:27 +0000</pubDate><atom:updated>2026-08-11T14:52:27.026Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>அருணாச்சல பிரதேசம்,arunachala pradesh</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/xoh3iedq/ArunachalaPradesh001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அருணாச்சல பிரதேசம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/xoh3iedq/ArunachalaPradesh001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அருணாச்சலப் பிரதேசத்தின் அப்பர் சுபான்சிரி மாவட்டத்தில் சீனப் படைகள் அத்துமீறி நுழைந்ததாக வெளியான தகவல்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, எல்லை விவகாரங்களின் நிலை இரு நாடுகளுக்கும் இடையிலான பரந்த இருதரப்பு உறவுகளின் தன்மையை பிரதிபலிக்கும் என்று வெளியுறவு அமைச்சகம் (MEA) எச்சரித்துள்ளது.</p><h2>சீனப்படைகள் ஊடுருவல்</h2><p>உள்ளூர் மக்களை மேற்கோள் காட்டி வெளியான சமீபத்திய செய்திகளின்படி, சீனப் படைகள் உண்மைக் கட்டுப்பாட்டுக் கோட்டை (LAC) கடந்து, டாக்ஸிங் (Taksing) வட்டாரத்தில் உள்ள புகார் லா (Pukar La) மற்றும் ஒல்லோ (Ollo) ஆகிய பகுதிகளுக்குள் நுழைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.</p><p>இதுகுறித்து கடந்த வாரம் கேட்கப்பட்டபோது, ​​அருணாச்சலப் பிரதேச முதல்வர் பீமா கண்டு அத்தகவல்களை மறுத்தார். மேலும், உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிய ராணுவம் மற்றும் உள்ளூர் அமைப்புகளுடன் பேசுவதாகவும் அவர் கூறினார்.</p><h2>பீமா கண்டு மறுப்பு</h2><p>ராணுவம் எல்லையைத் திறம்படக் காத்து வருவதாலும், இந்தியப் பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்வதாலும், அத்தகைய அத்துமீறல் எதுவும் நடைபெறுவதாக தான் கருதவில்லை என்று காண்டு தெரிவித்தார்.</p><p>இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், அப்பகுதியில் அமைதியை பேணுவதே மிக முக்கியமானது என்று கூறினார். அத்துடன் எல்லை விவகாரங்கள் குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் பற்றிய விவரங்களையும் அவர் அளித்தார்.</p><p>"இந்தியா மற்றும் சீனா இடையிலான எல்லைப் பகுதிகள் தொடர்பான விவகாரங்களில், இப்பிரச்சனைகளை நாங்கள் மிகவும் தீவிரமானதாகக் கருதுவதாகவும், இப்பகுதிகளில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுவது மிக முக்கியம் என்றும் சீனத் தரப்புடனான பேச்சுவார்த்தைகளில் நாங்கள் எப்போதும் வலியுறுத்தி வருகிறோம்.</p><p>எல்லை விவகாரங்களின் நிலை, எங்களின் பரந்த இருதரப்பு உறவுகளின் தன்மையை பிரதிபலிக்கும் என்றும் நாங்கள் கூறியுள்ளோம்," என்று ஜெய்ஸ்வால் கூறினார்.</p><p>ஆகஸ்ட் 6, 2026 அன்று நடைபெற்ற இந்தியா-சீனா எல்லை விவகாரங்களுக்கான ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புக்கான பணி அமைப்பின் (WMCC) 36-வது கூட்டத்திலும் இது மீண்டும் வலியுறுத்தப்பட்டது.</p><p>இக்கூட்டத்தில், இரு தரப்பினரும் வெளிப்படையான விவாதங்களை மேற்கொண்டதுடன், உண்மைக் கட்டுப்பாட்டுக் கோடு (LAC) நெடுகிலும் நிலவும் சூழலை ஆய்வு செய்தனர். இருதரப்பு உறவுகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு எல்லைப் பகுதிகளில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுவது அவசியம் என்பதை இந்தியத் தரப்பு மீண்டும் வலியுறுத்தியது," என்றும் அவர் மேலும் கூறினார்.</p><p>நிலுவையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், உண்மைக் கட்டுப்பாட்டுக் கோடு (LAC) பகுதியில் "தவறான புரிதல்கள் மற்றும் தவறான கணிப்புகளைத் தவிர்ப்பதற்கும்", WMCC மற்றும் உள்ளூர் தளபதி அளவிலான கூட்டங்கள் உள்ளிட்ட ஏற்கனவே உள்ள தூதரக மற்றும் ராணுவ வழிமுறைகளைத் தொடர்ந்து பயன்படுத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.</p><h2>27 இடங்களின் நிலையான பெயர்களை இந்தியா அறிவித்தது</h2><p>அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களின் பெயர்களை மாற்ற சீனா மேற்கொள்ளும் முயற்சிகளை எதிர்கொள்ளும் வகையில், கடந்த வாரம் இந்தியா அம்மாநிலத்திலுள்ள 27 இடங்கள் மற்றும் அம்சங்களை அதிகாரப்பூர்வ இந்திய வரைபடத்தில் அவற்றின் 'நிலையான பெயர்கள்' (standard names) மூலம் குறிப்பிட்டிருந்தது.</p><p>சீனா இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், அருணாச்சலப் பிரதேசத்தை அங்கீகரிக்கவில்லை என்றும் கூறியது.</p><p>"சீனா நீண்ட காலமாகப் பயன்படுத்தி வரும் பெயர்களுக்குப் பதிலாக, இந்தியா தனது 'நிலையான பெயர்கள்' என்று கூறப்படுபவற்றை மாற்ற முயற்சிப்பது சட்டவிரோதமானது மற்றும் செல்லுபடியாகாதது," என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் கூறினார்.</p><p>இந்தியா வலுவான மறுப்பைத் தெரிவித்தது. அருணாச்சலப் பிரதேசம் நாட்டின் "பிரிக்க முடியாத பகுதி" என்ற தனது நிலைப்பாட்டை ஜெய்ஸ்வால் மீண்டும் வலியுறுத்தினார்.</p>]]></content:encoded></item><item><title>அ.தி.மு.க.வில் இருந்து விலகிய சிங்கை ராமச்சந்திரன் த.வெ.க.வில் இணைவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/singai-ramachandran-who-left-the-aiadmk-joins-the-tvk</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/singai-ramachandran-who-left-the-aiadmk-joins-the-tvk#comments</comments><guid isPermaLink="false">81a96e2b-5a42-4ece-bd3f-07ba3ce7cc77</guid><pubDate>Tue, 11 Aug 2026 14:41:58 +0000</pubDate><atom:updated>2026-08-11T14:41:58.087Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,ADMK,அதிமுக,tvk,Singai Ramachandran,சிங்கை ராமச்சந்திரன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/c72i1v4z/New-Project-2026-08-11T200005.333.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அ.தி.மு.க.வில் இருந்து விலகிய சிங்கை ராமச்சந்திரன் த.வெ.க.வில் இணைவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/c72i1v4z/New-Project-2026-08-11T200005.333.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அதிமுகவில் இருந்து விலகிய சிங்கை ராமச்சந்திரன் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய் முன்னிலையில் அவர் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.</p><p>அதிமுகவில் மாநில மாணவரணிச் செயலாளர் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநிலத் தலைவராகச் சிறப்பாகச் செயல்பட்டவர் சிங்கை ராமச்சந்திரன். </p><p>கடந்த மாதம் அதிமுகவின் அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதிமுக தலைமை மீது ஏற்பட்ட மனவருத்தம் மற்றும் சில உள் கட்சி மாற்றங்கள் காரணமாக விலகுவதாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தவெகவில் இணைந்துள்ளார்.</p><p>கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டார் இவரது தந்தை சிங்கை கோவிந்தராசும் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ ஆவார்.</p>]]></content:encoded></item><item><title>நிலவில் ஆராய்ச்சி மையம்... இஸ்ரோவிற்கு அழைப்பு விடுத்த நாசா!</title><link>https://www.maalaimalar.com/news/national/research-center-on-the-moon-nasa-invites-isro</link><comments>https://www.maalaimalar.com/news/national/research-center-on-the-moon-nasa-invites-isro#comments</comments><guid isPermaLink="false">df9f0911-1c05-456e-ad1e-4c2671e54ac6</guid><pubDate>Tue, 11 Aug 2026 14:15:51 +0000</pubDate><atom:updated>2026-08-11T14:15:51.968Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ISRO,இஸ்ரோ,நாசா,nasa,Moon Base program,நிலாவில் ஆராய்ச்சி மையம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/m8vdon1j/New-Project-2026-08-11T192633.786.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நிலவில் ஆராய்ச்சி மையம்... இஸ்ரோவிற்கு அழைப்பு விடுத்த நாசா!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/m8vdon1j/New-Project-2026-08-11T192633.786.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நிலவில் ஆய்வு தளம் அமைக்கும் தனது பிரம்மாண்ட திட்டத்தில் இணைய இஸ்ரோவிற்கு அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாசா அழைப்பு விடுத்துள்ளது. </p><p>ஆக.5 மற்றும் 6ம் தேதிகளில் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் நடைபெற்ற 9-வது இந்தியா - அமெரிக்கா சிவில் விண்வெளி கூட்டுப் பணிக்குழு கூட்டத்தில் இந்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. </p><h2>அமெரிக்காவின் மூன் பேஸ் திட்டம்  </h2><p>நாசா, நிலவின் தென் துருவத்தில் மனிதர்கள் தங்கி நீண்ட காலம் ஆராய்ச்சி செய்வதற்காக ஒரு நிரந்தர ஆராய்ச்சி மையத்தை அமைக்கத் திட்டமிட்டு வருகிறது. இது மனிதகுலத்தின் அடுத்த மாபெரும் விண்வெளி பாய்ச்சலாகக் கருதப்படுகிறது.</p><h2>ஏன் இஸ்ரோவுக்கு அழைப்பு?</h2><p>நிலவின் தென்துருவத்தில் வெற்றிக்கரமான கால்பதித்த முதல் நாடு இந்தியா. குறைந்த செலவில் துல்லியமாக விண்கலங்களை ஏவும் இஸ்ரோவின் திறமையைப் பயன்படுத்திக் கொள்ள நாசா விரும்புகிறது. </p><p>இந்தியா ஏற்கனவே 2023-ல் அமெரிக்காவின் 'ஆர்டெமிஸ் ஒப்பந்தத்தில்' கையெழுத்திட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, இந்த மூன் பேஸ் திட்டத்தின் மூலம் இரு நாடுகளின் விண்வெளி உறவு அடுத்த கட்டத்திற்குச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>டிஎன்பிஎல்: நெல்லையை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்தது திருச்சி</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/trichy-beat-nellai-in-tnpl-2026</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/trichy-beat-nellai-in-tnpl-2026#comments</comments><guid isPermaLink="false">e1707d16-6437-4a81-832e-dfbd9c8990bd</guid><pubDate>Tue, 11 Aug 2026 13:30:51 +0000</pubDate><atom:updated>2026-08-11T13:30:51.262Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,Trichy Grand Cholas,திருச்சி கிராண்ட் சோழாஸ்,Nellai Royal Kings,நெல்லை ராயல் கிங்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/54d3kpyo/davidson.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ asirvatham]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/54d3kpyo/davidson.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் நெல்லை அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி வெற்றி பெற்றது.</p><p>டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்தது. </p><p>இந்நிலையில், டிஎன்பிஎல் தொடரின் 12-வது லீக் போட்டி இன்று மதியம் 3.30 மணிக்கு நடைபெற்றது. இதில் நெல்லை ராயல் கிங்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற நெல்லை அணி பவுலிங் தேர்வு செய்தது.</p><h2>182 ரன் குவித்த திருச்சி</h2><p>அதன்படி, முதலில் ஆடிய திருச்சி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் சுரேஷ் குமார் அரை சதம் கடந்து 58 ரன்கள் எடுத்தார்.</p><p>7வது விக்கெட்டுக்கு இணைந்த ராஜ்குமார், அந்தோனி தாஸ் ஜோடி அதிரடியாக ஆடி 57 ரன்கள் சேர்த்தனர். ராஜ்குமார் 19 பந்தில் 5 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 45 ரன்கள் குவித்தார். </p><p>நெல்லை அணி சார்பில் சச்சின் ராதி 3 விக்கெட்டும், ஹரிஷ் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.</p><p>இதையடுத்து, 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நெல்லை அணி களமிறங்கியது. முதல் ஓவரில் 2 விக்கெட்களை இழந்து திணறியது. சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.</p><h2>டேவிட்சன் அதிசயராஜ் அசத்தல்</h2><p>ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் முகிலேஷ் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். அவர் 45 பந்தில் 63 ரன் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.</p><p>இறுதியில், நெல்லை அணி 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.</p><p>இதன்மூலம் திருச்சி அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் திருச்சி அணி பெறும் 2வது வெற்றி இதுவாகும்.</p><p>திருச்சி அணி சார்பில் டேவிசன் அதிசயராஜ் 4 விக்கெட்டும், ஈஸ்வரன், சஞ்சய் யாதவ், ராஜ்குமார் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p>]]></content:encoded></item><item><title>வட மாநிலங்களில் வெளுத்து வாங்கும் கனமழை: உத்தரகாண்டில் மேகவெடிப்பால் இரும்புப் பாலம் அடித்துச் செல்லப்பட்டது - 16 மாநிலங்களுக்கு எச்சரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/national/cloudburst-in-uttarakhand-iron-bridge-swept-away-heavy-rain-alert-for-16-states</link><comments>https://www.maalaimalar.com/news/national/cloudburst-in-uttarakhand-iron-bridge-swept-away-heavy-rain-alert-for-16-states#comments</comments><guid isPermaLink="false">a3a65c7a-99c0-4e3a-97fd-18f17a68cac1</guid><pubDate>Tue, 11 Aug 2026 13:27:10 +0000</pubDate><atom:updated>2026-08-11T13:27:10.758Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உத்தரகாண்ட்,Madhyapradesh,monsoon,மேகவெடிப்பு,Uttarakhand Flood,NorthIndiaRain,Uttarakhand Cloudburst,MadhyaPradeshFloods,BridgeWashedAway</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/ldqhzh2j/Uttarakhand-Cloudburst" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Uttarakhand Cloudburst ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/ldqhzh2j/Uttarakhand-Cloudburst?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பெய்து வரும் அதிகனமழை காரணமாகப் பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. </p><p>இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளதோடு, உள்கட்டமைப்புகளும் பெருமளவில் சேதமடைந்துள்ளன.</p><h2>உத்தரகாண்டில் மேகவெடிப்பு - பாலம் அடித்துச் செல்லப்பட்டது:</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D">உத்தரகாண்ட் </a>மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில், இந்தியா - சீனா எல்லை அருகே திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பால் கொட்டித்தீர்த்த கனமழையால் நீர்நிலைகளில் அபாயகரமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. </p><p>அங்குள்ள நிதி பள்ளத்தாக்கில் பாய்ந்து வந்த பெருவெள்ளம், தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த இரும்புப் பாலத்தை அடித்துச் சென்றது. இந்த விபத்தின்போது அப்பகுதியில் நின்றிருந்த ஒரு நபரும், ஒரு வாகனமும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். </p><p>மேலும், தமக் பகுதியில் அறுவடைக்குத் தயாராக இருந்த ஆப்பிள் மரங்கள் அனைத்தும் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு விவசாயிகளுக்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளன.</p><h2><strong>மத்திய பிரதேசத்தில் இயல்பு வாழ்க்கை முடக்கம்:</strong></h2><p>மத்திய பிரதேச மாநிலத்திலும் கனமழை நீடித்து வருகிறது. தலைநகர் போபாலில் பெய்த மழையால் நிஷாத்புரா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், மக்கள் பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.</p><p>பாதுகாப்பு கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மலைப்பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் காரணமாக 106 முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன. பல இடங்களில் மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>16 மாநிலங்களுக்குக் கனமழை எச்சரிக்கை:</strong></h2><p>மறுபுறம், பீகாரின் தென்மேற்கு மாவட்டங்களுக்குக் கனமழைக்கான 'மஞ்சள் எச்சரிக்கை' விடுக்கப்பட்டுள்ளது. </p><p>இந்திய வானிலை ஆய்வு மையம், நாடு முழுவதும் மொத்தம் 16 மாநிலங்களில் இன்று மிகக் கனமழை பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளதால், மீட்புக் குழுவினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>டவுசர் பனியனுடன் மக்களின் புகார்களை பெற்ற ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.: வீடியோ வெளியான நிலையில் முதல்வரின் பதில்..!</title><link>https://www.maalaimalar.com/news/national/wear-proper-clothes-rekha-gupta-tells-aap-mla-after-video-in-undergarments</link><comments>https://www.maalaimalar.com/news/national/wear-proper-clothes-rekha-gupta-tells-aap-mla-after-video-in-undergarments#comments</comments><guid isPermaLink="false">c1ab8c96-99ae-47a4-a282-89f601068796</guid><pubDate>Tue, 11 Aug 2026 13:17:44 +0000</pubDate><atom:updated>2026-08-11T13:17:44.477Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆம் ஆத்மி,ரேகா குப்தா,Rekha Gupta,AAP</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/e5lkg1tz/RekhaGupta0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ AAP MLA- Rekha Gupta]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/e5lkg1tz/RekhaGupta0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வடமேற்கு டெல்லியில் உள்ள கிராரி சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் அனில் ஜா வாட்ஸ். அவர் மக்களை சந்தித்து, அவர்கள் கேட்டுக்கொண்டபடி விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு வழங்கினார். அப்போது டவுசர் மற்றும் பனியனை அணிந்து கொண்டு ஒரு சேரில் அமர்ந்து கொண்டு மனுக்களை கையெழுத்திட்டு உதவியாளரிடம் வழங்குவார். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.</p><p>இந்த நிலையில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.-வை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக ரேகா குப்தா கூறியதாவது:-</p><p>ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.-வின் செயல்பாடு வெட்கக்கேடானது. உங்களிடம் பெண்கள் கையெழுத்திற்காக வரும்போது, நீங்கள் முறையான ஆடைகளை அணிந்திருக்க வேண்டும்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Meet Aam Aadmi Party&#39;s MLA : Anil Jha Vats!!<br><br>&gt; MLA from Kirari Assembly <br><br>&gt; Wears Kacha and Baniyan <br><br>&gt; Sits outside his home <br><br>&gt; Signs documents without even reading them<br><br>&gt; Claims to be an MLA from Padhi-Likhi Political Party!! <a href="https://t.co/xYozn5liVH">pic.twitter.com/xYozn5liVH</a></p>&mdash; Rohit (@Iam_Rohit_G) <a href="https://x.com/Iam_Rohit_G/status/2086764846276866394?ref_src=twsrc%5Etfw">August 10, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure> <p>இதுபோன்ற நடத்தையை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அவருடைய சட்டசபை உறுப்பினர் அந்தஸ்து ரத்து செய்யப்பட வேண்டும்.</p><p>இவ்வாறு ரேகா குப்தா தெரிவித்தார்.</p><p>அதேவேளையில் அந்த எம்.எல்.ஏ. "நான் ஏதேனும் தவறான சைகைகளைச் செய்திருந்தால், அதற்கான காணொளியை அவர் காட்ட வேண்டும். மக்களுடைய பிரச்சனைகளுக்கு அவரிடம் தீர்வுகள் இல்லை. அதனால்தான் அவர் இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்." என்றார்.</p>]]></content:encoded></item><item><title>காலையில் உயர்ந்து மாலையில் குறைந்த தங்கம் விலை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/gold-price-drops-by-rs-800-per-sovereign</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/gold-price-drops-by-rs-800-per-sovereign#comments</comments><guid isPermaLink="false">cd351e4b-c5d2-4d90-82cb-edb259328a59</guid><pubDate>Tue, 11 Aug 2026 13:07:41 +0000</pubDate><atom:updated>2026-08-11T13:07:41.071Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Price drop,விலைக்குறைவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/hauidql9/New-Project-2026-08-11T183717.401.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காலையில் உயர்ந்து மாலையில் குறைந்த தங்கம் விலை!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/hauidql9/New-Project-2026-08-11T183717.401.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மாலை கிராமுக்கு ரூ.100 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,150க்கும், ஒரு சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p>ஆபரணத் தங்கத்தின் விலை காலையில் சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்த நிலையில், மதியம் ரூ.800 குறைந்துள்ளது. வெள்ளி விலை மாற்றமின்றி விற்பனையாகிறது. </p><p>கடந்த சில தினங்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று காலை உயரந்தது. கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து கிராம் வெள்ளி 260 ரூபாய்க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>குழந்தைகள் கண் முன்னே மனைவியை சுட்டுக் கொலை - கணவரின் வெறிச்செயல்! </title><link>https://www.maalaimalar.com/news/national/husband-gun-attack-kills-wife-in-front-of-children</link><comments>https://www.maalaimalar.com/news/national/husband-gun-attack-kills-wife-in-front-of-children#comments</comments><guid isPermaLink="false">e08a716b-38ec-41d8-b307-2fa5f57f6509</guid><pubDate>Tue, 11 Aug 2026 13:04:59 +0000</pubDate><atom:updated>2026-08-11T13:04:59.583Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime,பீகார்,Bihar,துப்பாக்கிச்சூடு பலி,DomesticViolence,BiharCrime,HusbandArrest,குடும்பத்தகராறு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/0aa5rl1m/Bihar-Crime" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bihar Crime ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/0aa5rl1m/Bihar-Crime?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">பீகார் </a>மாநிலம் பூர்னியா பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக, பள்ளி ஆசிரியை ஒருவர் அவரது குழந்தைகளின் கண் முன்னாலேயே கணவரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2><strong>நில முதலீட்டுத் தகராறு:</strong></h2><p>பூர்னியா பகுதியைச் சேர்ந்த ராஜ் குமார் யாதவ் அங்குள்ள ஒரு கூட்டுறவு வங்கியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஷாலினி (34), அப்பகுதியில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். </p><p>இவர்கள் இருவரும் இணைந்து கூட்டாக நிலம் ஒன்று வாங்கியுள்ளனர். அந்த நிலத்தில் தான் முதலீடு செய்த பணத்தைத் திருப்பித் தருமாறு ராஜ் குமார் தனது மனைவியிடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். </p><p>ஆனால், தன்னால் பணம் தர முடியாது என்று ஷாலினி மறுத்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.</p><h2><strong>குழந்தைகள் முன்னே தாக்குதல்:</strong></h2><p>சம்பவத்தன்று மாலை இருவருக்கும் இடையிலான தகராறு முற்றவே, ராஜ் குமார் தனது மகன்களின் கண் முன்னால் ஷாலினியை கொடூரமாகத் தாக்கியுள்ளார். </p><p>பின்னர் ஆத்திரத்துடன் வீட்டை விட்டு வெளியேறிய அவர், இரவு 8 மணியளவில் மீண்டும் வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.</p><h2><strong>துப்பாக்கிச் சூடு:</strong></h2><p>இரவு கணவர் வீடு திரும்புகையில், வீட்டில் குழந்தைகள் படித்துக் கொண்டும், மனைவி ஷாலினி சமையல் செய்துகொண்டும் இருந்த நேரத்தில், எதிர்பாராதவிதமாக ராஜ் குமார் தனது துப்பாக்கியை எடுத்து, மகனின் கண் முன்னே ஷாலினியை நோக்கிச் சுட்டார். </p><p>இதில் குண்டு பாய்ந்து ஷாலினி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதைப் பார்த்த குழந்தைகள் அலறித் துடித்த நிலையில், ராஜ் குமார் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.</p><h2><strong>வீடியோ காலில் மரண வாக்குமூலம்:</strong></h2><p>பயந்துபோன மூத்த மகன், உடனடியாகத் தனது மாமா விக்ரம் ஆனந்திற்கு செல்போனில் வீடியோ கால் செய்துள்ளார். அப்போது ரத்த வெள்ளத்தில் கிடந்த ஷாலினி, தனது சகோதரனிடம் "இப்போது நாம் என்ன செய்வோம்? அவர் என்னைச் சுட்டுவிட்டார்" என்று முனகியபடியே பேசியுள்ளார்.</p><p>இதனைத் தொடர்ந்து பதறியடித்து வந்த உறவினர்கள், ஷாலினியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். </p><p>எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய ராஜ் குமாரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>VIVO S2:  அசத்தல் அம்சங்களுடன் விவோ அறிமுகப்படுத்திய S2.. என்னென்ன features இருக்கு?</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/vivo-launches-all-new-s2-sales-at-chennai</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/vivo-launches-all-new-s2-sales-at-chennai#comments</comments><guid isPermaLink="false">3eed3d3d-df5e-4b00-87a5-c6fe913a969d</guid><pubDate>Tue, 11 Aug 2026 13:02:57 +0000</pubDate><atom:updated>2026-08-11T13:02:57.688Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vivo,விவோ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/81855ax2/VIVOS2.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ VIVO S2]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/81855ax2/VIVOS2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விவோ செல்போன் நிறுவனம் தனது புதிய வகை S2 மாடல் ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் கடந்த 6-ந்தேதி விற்பனைக்காக வெளியிட்டது. இந்த புதிய வகை செல்போன் விற்பனை இன்றுமுதல் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.</p><p>புதிய வகை S2 ஸ்மார்ட்போன் விவோவின் அதிகாரப்பூர்வ இணைய தளம், பிளிப்கார்ட், அமேசான், பார்ட்னர் சில்லறை விற்பனைக் கடைகளில் வாங்கலாம்.</p><p>8 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை 39,999 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை 44,999 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p>சில்க் ஒயிட் (Silk White), ரீகல் பிரான்ஸ் (Regal Bronze) மற்றும் ஷப்பையர் ப்ளூ (Sapphire Blue) ஆகிய மூன்று கலர்களில் கிடைக்கும்.</p><p>MediaTek Dimensity 7360-Turbo processor பவர் கொண்டது. 3D Curved AMOLED display வசதி கொண்டது.</p><p>50 எம்.பி. மெயின் கேமரா9, 2 எம்பி செகண்டரி கேமரா9, 32 எம்பி ஃப்ரண்ட் கேமரா போன்ற வசதிகளை கொண்டுள்ளது.</p><p>ஃப்ரண்ட் மற்றும் பின்புற கேமராக்கள் மூலம் 4K வீடியோக்களை ரெக்கார்டு செய்ய முடியும். டூயல் வியூ வீடியோ, முன்பக்க மற்றும் பின்பக்க கேமராக்களைப் பயன்படுத்தி ஒரே நேரத்தில் பதிவுசெய்ய பயனர்களை அனுமதிப்பதால், இது வ்லாக்ஸ், நேர்காணல்கள், பயிற்சிகள் மற்றும் எதிர்வினை வீடியோக்களுக்கு மிகவும் ஏற்றதாக அமைகிறது.</p><p>120 HZ ரீபிரஸ் ரேட் உடன் 1.5K அல்ட்ரா கிளீயர் அமோல்டு டிஸ்பிளே (1.5K Ultra Clear AMOLED display) வசதி கொண்டுள்ளது.</p><p>44W பிளாஷ்சார்ஜ் உடன் 7050 mAh பேட்டரியை கொண்டுள்ளது. கேமிங், உள்ளடக்க உருவாக்கம் (Content Creation) மற்றும் அன்றாடப் பயன்பாடு என அனைத்திற்கும் ஏற்றது. எனவே, குறைவான நேரம் மட்டுமே சார்ஜ் செய்ய வேண்டியிருப்பதால், நாள் முழுவதும் நீங்கள் தொடர்ந்து இணைப்பிலும் உற்பத்தித் திறனுடனும் இருக்க முடியும்.</p><p>கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வகச் சூழலில், தூசி மற்றும் நீர் புகாத்தன்மைக்காக vivo S2-க்கு IP68 மற்றும் IP69 தரச்சான்று அளிக்கப்பட்டுள்ளது.</p><p>S2 ஆனது Android 16-ஐ அடிப்படையாகக் கொண்ட சமீபத்திய OriginOS 6-இல் இயங்குகிறது; பாதுகாப்பான மற்றும் நவீனமான ஸ்மார்ட்போன் அனுபவத்தை உறுதிசெய்யும் வகையில், இதற்கு 3 ஆண்டுகளுக்கான Android OS மேம்படுத்தல்களும் 5 ஆண்டுகளுக்கான பாதுகாப்புப் புதுப்பிப்புகளும் வழங்கப்படுகின்றன.</p>]]></content:encoded></item><item><title>அர்ச்சனா கல்பாத்தியை நியமித்தது ஏன்? - விளக்கம் கொடுத்த அமைச்சர் ரமேஷ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-ramesh-explain-why-archana-kalpathi-appoint-that-post</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-ramesh-explain-why-archana-kalpathi-appoint-that-post#comments</comments><guid isPermaLink="false">b4484604-4232-4904-be29-88660f8ffc74</guid><pubDate>Tue, 11 Aug 2026 12:44:46 +0000</pubDate><atom:updated>2026-08-11T12:44:46.532Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>HRCE,Archana Kalpathi,அமைச்சர் ரமேஷ்,Minister Ramesh,அர்ச்சனா கல்பாத்தி,இந்துசமய அறநிலையத்துறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/6vzpwzq7/ramesh.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ minister ramesh, archana kalpathi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/6vzpwzq7/ramesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அர்ச்சனா கல்பாத்தியை நியமித்தது ஏன்? என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார்.</p><h2>அர்ச்சனா கல்பாத்தி நியமனம்</h2><p>தமிழ்நாட்டில் உள்ள கோயில்களுக்கு பரம்பரை சாரா அறங்காவலர்களைத் தேர்வு செய்வதற்கான குழு உறுப்பினர்களில் ஒருவராக பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரம் நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை மூலம் அமைக்கப்பட்டும் இந்தக் குழுவில் இவர் இடம்பெற்றுள்ளார். மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் இக்குழுவிற்குத் தலைமை தாங்குகிறார். இந்தத் தேர்வுக் குழுவில் மொத்தம் 7 பேர் இடம்பெற்றுள்ளனர்.</p><p>இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஜோசப் விஜய், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன்  உள்ளிட்டோருக்கு அர்ச்சனா கல்பாத்தி நன்றி தெரிவித்தார்.</p><p>அர்ச்சனா கல்பாத்தியின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விமர்சனங்கள் எழுந்தன.</p><p>இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:</p><h2>நியமனம் ஏன்?</h2><p>மாநில அறங்காவலர் குழுவைப் பொறுத்தவரைக்கும் ரொம்ப முக்கியமான ஒரு பங்கை ஆற்றுகிறது. பத்து லட்சத்திற்கு மேல் வருவாய் இருக்கக்கூடிய கோயில்களில் அறங்காவலர் குழுக்களை நியமிப்பதில் இக்குழு மிகப்பெரிய பங்காற்றுகிறது.</p><p>இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகளுக்கு இந்தக்குழு ஒரு மிகப்பெரிய உறுதுணையாகச் செயல்படப் போகிறது.</p><p>இந்தக் குழுவில் மொத்தம் 7 பேரை நியமித்துள்ளோம்.</p><p>ஆன்மிக ரீதியாக தேவையான வழிகாட்டுதல்களைப் பெறுவதற்காக மயிலம் ஆதினம் அவர்களைத் தலைவராகப் போட்டிருக்கிறோம்.</p><p>சட்ட ரீதியான வழிகாட்டுதல்களுக்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை இணைத்துள்ளோம்.</p><p>அர்ச்சனா கல்பாத்தி மேடத்தைப் பொறுத்தவரை, அவரை இந்த உலகம் வெறும் சினிமா தயாரிப்பாளராக மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பதால், இது போன்ற விமர்சனங்களை வேண்டுமென்றே எழுப்பி வருகிறார்கள்.</p><p>அர்ச்சனா கல்பாத்தி அவர்களுக்கும் மற்றொரு முகம் உள்ளது. அவர் தமிழ்நாட்டில் 10-க்கு மேற்பட்ட கோவில்களில் தனது சொந்தப் பணத்தை நன்கொடையாக வழங்கி பல்வேறு திருப்பணிகளைச் செய்துள்ளார். அவருடைய மாமனார் சீனிவாசன் மிகப்பெரிய தனியார் குழுமத்தின் வாயிலாகத் தமிழ்நாட்டில் உள்ள கோவில்களுக்கு பல 100 கோடிகள் செலவு செய்து நிறைய திருப்பணிகளைச் செய்துள்ளார்.</p><h2>ரூ.100 கோடி செலவில் திருப்பணிகள்</h2><p>அந்தக் குடும்பத்திலிருந்து கோவில்களுக்கு பல திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளதாலும், அந்த நல்லெண்ணம் இருப்பதாலும்தான் அவரை இந்தக்குழுவிற்குள் கொண்டு வந்தோம்.</p><p>இதன்மூலம், கோவில்களுக்கு தங்களது சொந்த நிதியிலிருந்து நன்கொடைகள் வழங்கி திருப்பணிகள் செய்ய விரும்புபவர்களை ஊக்குவிப்பதற்கான ஒரு சிறந்த முன்னெடுப்பாக இது இருக்கும்.</p><p>இந்தக் குழுவின் செயல்பாடுகள் எதிர்வரும் காலங்களில் மிகவும் ஆக்கப்பூர்வமாகவும் சிறப்பாகவும் இருக்கும் என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>‘ராம் இன் லீலா’ டிரெய்லர் நாளை வெளியாகிறது!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ram-leela-trailer-releases-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ram-leela-trailer-releases-tomorrow#comments</comments><guid isPermaLink="false">4e4ccd8b-a2b2-485d-b1a3-c9f6f19bc62c</guid><pubDate>Tue, 11 Aug 2026 12:28:48 +0000</pubDate><atom:updated>2026-08-11T12:28:48.838Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ரியோ ராஜ்,rio raj,Ram In Leela,ராம் இன் லீலா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/4cz418a4/New-Project-2026-08-11T175827.325.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘ராம் இன் லீலா’ டிரெய்லர் நாளை வெளியாகிறது!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/4cz418a4/New-Project-2026-08-11T175827.325.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராமச்சந்திரன் கண்ணன் எழுத்து மற்றும் இயக்கத்தில் ரியோ ராஜ், வர்த்திகா ஜெயின் நடிப்பில் உருவாகி உள்ள காதல் திரைப்படம் ராம் இன் லீலா. </p><p>இப்படத்தில் மாளவிகா அவினாஷ், சேத்தன், மாகாபா ஆனந்த், முனிஷ்காந்த், தீபா வெங்கட் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ட்ரைடண்ட் ஆர்ட்ஸ், ஒய்வா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அங்கித் மேனன் இசையமைத்துள்ளார்.</p><p>இப்படம் ஆக.21ம் தேதி மொத ராத்திரி படத்துடன் மோதுகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் நாளை காலை 11.11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>அப்ளாஸ்டிக் அனீமியா: எலும்பு மஜ்ஜை செயலிழக்கும்போது ஏற்படும் ஆபத்தான ரத்த நோய்!</title><link>https://www.maalaimalar.com/health/generalmedicine/aplastic-anemia-dangerous-blood-disease-when-bone-marrow-fails</link><comments>https://www.maalaimalar.com/health/generalmedicine/aplastic-anemia-dangerous-blood-disease-when-bone-marrow-fails#comments</comments><guid isPermaLink="false">16c6dd2d-d100-494b-b186-da2a14fc279b</guid><pubDate>Tue, 11 Aug 2026 12:06:49 +0000</pubDate><atom:updated>2026-08-11T12:06:49.415Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Health,ஆரோக்கியம்,HealthTips,உடல்நலம்,Aplastic Anaemia,iron-deficiency,அப்ளாஸ்டிக் அனீமியா,இரும்புச்சத்து குறைபாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/lo4ky6ur/jj.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Aplastic Anaemia]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/lo4ky6ur/jj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>பொது மருத்துவம் (General Medicine)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நமது உடலில் ரத்த அணுக்களை உருவாக்குவதில் எலும்பு மஜ்ஜை முக்கியப் பங்கு வகிக்கிறது. சிவப்பு ரத்த அணுக்கள், வெள்ளை ரத்த அணுக்கள் மற்றும் பிளேட்லெட்டுகள் ஆகியவை எலும்பு மஜ்ஜையில்தான் உருவாகின்றன. இந்த எலும்பு மஜ்ஜை போதுமான அளவில் புதிய ரத்த அணுக்களை உருவாக்க முடியாத நிலையே Aplastic Anaemia எனப்படும். </p><p>தமிழில் இதை அப்ளாஸ்டிக் அனீமியா அல்லது எலும்பு மஜ்ஜை செயலிழப்பு காரணமான ரத்தசோகை என்று குறிப்பிடலாம். இது அரிதானதாக இருந்தாலும், தீவிரமான ரத்தக் கோளாறாக மாறக்கூடியது.</p><h2>அப்ளாஸ்டிக் <strong>அனீமியா எ</strong>ன்றால் என்ன?</h2><p>அப்ளாஸ்டிக் அனீமியா ஏற்படும்போது ரத்த அணுக்களை உருவாக்கும் stem cells பாதிக்கப்படுகின்றன. பல நோயாளிகளிடம் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு தவறுதலாக இந்த செல்களைத் தாக்குவதால் நோய் உருவாகலாம். சிலரிடம் நோய்க்கான காரணத்தைத் தெளிவாகக் கண்டறிய முடியாது. சில மருந்துகள், chemotherapy மற்றும் radiation சிகிச்சை, குறிப்பிட்ட நச்சு வேதிப்பொருட்களுடன் தொடர்பு, சில வைரஸ் தொற்றுகள் மற்றும் அரிதான மரபியல் காரணிகளும் இந்த நோயுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.</p><h2>ரத்த  சிவப்<strong>பு அணுக்கள்</strong> குறைவு </h2><p>இந்த நோயின் முக்கியமான தன்மை என்னவென்றால், சிவப்பு ரத்த அணுக்கள் மட்டுமல்லாமல் வெள்ளை ரத்த அணுக்கள் மற்றும் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையும் குறையக்கூடும். </p><figure><img alt="red blood cells" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/r256tzgm/apl.jpg" /></figure><p>இதனால் Pancytopenia எனப்படும் நிலை ஏற்படலாம். சிவப்பு ரத்த அணுக்கள் குறைவதால் உடலின் திசுக்களுக்கு ஆக்சிஜன் செல்வது குறைந்து, அதிக சோர்வு, உடல் பலவீனம், தலைச்சுற்றல், வெளிறிய தோல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.</p><h2>அ<strong>றிகுறிக</strong>ள் </h2><p>வெள்ளை ரத்த அணுக்கள் குறைந்தால் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்பட்டு தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும். காய்ச்சல் போன்ற அறிகுறிகளை அலட்சியம் செய்வது ஆபத்தானதாக இருக்கலாம். பிளேட்லெட்டுகள் குறைந்தால் ரத்தம் உறையும் திறன் பாதிக்கப்படும். இதனால் காரணமின்றி உடலில் நீலக்காயங்கள் தோன்றுதல், மூக்கில் அல்லது ஈறுகளில் ரத்தக்கசிவு, தோலில் சிறிய சிவப்பு அல்லது ஊதா நிறப் புள்ளிகள் போன்றவை ஏற்படலாம்.</p><h2>சிகி<strong>ச்சைகள்</strong></h2><p>அப்ளாஸ்டிக் அனீமியாவை கண்டறிய முதலில் Complete Blood Count (CBC) போன்ற ரத்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைந்திருப்பது கண்டறியப்பட்டால், காரணத்தை அறிய Bone Marrow Aspiration மற்றும் Biopsy போன்ற பரிசோதனைகள் செய்யப்படலாம். நோயின் தீவிரம் மற்றும் காரணத்தைப் பொறுத்து சிகிச்சை மாறுபடும்.</p><p>சில நோயாளிகளுக்கு ரத்தம் அல்லது பிளேட்லெட் transfusion மூலம் தற்காலிகமாக ரத்த அணுக்களின் அளவை உயர்த்தலாம். நோய் எதிர்ப்பு அமைப்பு எலும்பு மஜ்ஜையைத் தாக்கும் நிலையில், immunosuppressive therapy பயன்படுத்தப்படலாம். தகுதியான சில நோயாளிகளுக்கு Blood and Bone Marrow Stem Cell Transplantation முக்கியமான சிகிச்சை வாய்ப்பாக இருக்கலாம். பொருத்தமான donor கிடைத்தால், இந்த சிகிச்சை சிலருக்கு நோயிலிருந்து நீண்டகால மீட்சிக்கான வாய்ப்பை வழங்கக்கூடும்.</p><h2>ஆ<strong>பத்தான நி</strong>லை</h2><p>அப்ளாஸ்டிக் அனீமியா சிகிச்சையின்றி தீவிரமடைந்தால் கடுமையான தொற்று, அதிகமான ரத்தக்கசிவு மற்றும் பிற உயிருக்கு ஆபத்தான சிக்கல்கள் ஏற்படலாம். </p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/z3qban4q/symptoms.jpg" /></figure><p>எனவே தொடர்ந்து சோர்வு, அடிக்கடி தொற்று, காரணமின்றி ரத்தக்கசிவு அல்லது உடலில் அதிகமாக நீலக்காயங்கள் போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகுவது அவசியம்.</p><p>மொத்தத்தில், அப்ளாஸ்டிக் அனீமியா என்பது சாதாரண இரும்புச்சத்து குறைபாடு ரத்தசோகையிலிருந்து வேறுபட்ட ஒரு தீவிரமான நோயாகும். ஆரம்பத்திலேயே கண்டறிந்து ரத்தநோய் நிபுணரின் கண்காணிப்பில் உரிய சிகிச்சை பெறுவது மிகவும் முக்கியம். சரியான நேரத்தில் சிகிச்சை தொடங்குவது நோயின் சிக்கல்களைத் தவிர்க்கவும், நோயாளியின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் உதவும்.</p>]]></content:encoded></item><item><title>‘சிக்மா’ படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/second-song-from-sigma-releases-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/second-song-from-sigma-releases-tomorrow#comments</comments><guid isPermaLink="false">3930cb64-4569-4318-990e-259d45fe6b7e</guid><pubDate>Tue, 11 Aug 2026 12:06:33 +0000</pubDate><atom:updated>2026-08-11T12:06:33.106Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>jason sanjay,Sundeep Kishan,ஜேசன் சஞ்சய்,சிக்மா,sigma,சுந்தீப் கிஷன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/69ah5k7h/New-Project-2026-08-11T173545.523.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘சிக்மா’ இரண்டாவது பாடல் நாளை வெளியீடு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/69ah5k7h/New-Project-2026-08-11T173545.523.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகர் விஜய்யின் மகனானா ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட், சம்பத் ராஜ், ராஜு சுந்தரம் உள்ளிட்டோர் நடித்துள்ளப் படம் சிக்மா. லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜி.கே.தமிழ்க்குமரன் தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். </p><p>இப்படத்தின் டீசர், போஸ்டர்கள் எல்லாம் வெளியாகி வரவேற்பை பெற்றநிலையில், சமீபத்தில் முதல் பாடல் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடலான அய்யய்யோ அம்மாடி நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. </p><p>முதலில் இப்படம் ஜூலை.31ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பின் ஒத்திவைக்கப்பட்டது. </p>]]></content:encoded></item><item><title>டிஎன்பிஎல் 2026: நெல்லை அணி வெற்றி பெற 183 ரன்களை இலக்காக நிர்ணயித்தது</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/nellai-need-183-runs-to-win-against-trichy-in-tnpl-2026</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/nellai-need-183-runs-to-win-against-trichy-in-tnpl-2026#comments</comments><guid isPermaLink="false">12d94e37-6a2a-46c3-9bdc-76c6ef354c53</guid><pubDate>Tue, 11 Aug 2026 11:47:29 +0000</pubDate><atom:updated>2026-08-11T11:47:29.195Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,Trichy Grand Cholas,திருச்சி கிராண்ட் சோழாஸ்,Nellai Royal Kings,நெல்லை ராயல் கிங்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/s9uhr2zl/suresh.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ sureshkumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/s9uhr2zl/suresh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் நெல்லைக்கு எதிரான போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 182 ரன்கள் எடுத்துள்ளது.</p><p>டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. </p><p>திருப்பூர் தமிழன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.</p><p>இந்நிலையில், டிஎன்பிஎல் தொடரின் 12-வது லீக் போட்டி இன்று மதியம் 3.30 மணிக்கு நடைபெற்றது. இதில் நெல்லை ராயல் கிங்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற நெல்லை அணி பவுலிங் தேர்வு செய்தது.</p><p>அதன்படி, முதலில் ஆடிய திருச்சி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் சுரேஷ் குமார் அரை சதம் கடந்து 58 ரன்கள் எடுத்தார்.</p><p>7வது விக்கெட்டுக்கு இணைந்த ராஜ்குமார், அந்தோனி தாஸ் ஜோடி அதிரடியாக ஆடி 57 ரன்கள் சேர்த்தனர். ராஜ்குமார் 19 பந்தில் 5 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 45 ரன்கள் குவித்தார். </p><p>நெல்லை அணி சார்பில் சச்சின் ராதி 3 விக்கெட்டும், ஹரிஷ் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.</p><p>இதையடுத்து, 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நெல்லை அணி களமிறங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>ரூ.13 லட்சம் வேலையைத் துறந்து ஏ.ஐ படிப்பு; அமெரிக்காவில் ரூ.1.5 கோடி சம்பளத்தில் சாதனை படைத்த ஐ.ஐ.டி பட்டதாரி!</title><link>https://www.maalaimalar.com/news/national/quit-13-lakh-job-for-ai-studies-iit-grad-earns-1-5-crore-in-us</link><comments>https://www.maalaimalar.com/news/national/quit-13-lakh-job-for-ai-studies-iit-grad-earns-1-5-crore-in-us#comments</comments><guid isPermaLink="false">797d56e8-5e20-431f-9d01-38285d36ea49</guid><pubDate>Tue, 11 Aug 2026 11:40:38 +0000</pubDate><atom:updated>2026-08-11T11:40:38.344Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>software engineer,AI,aditya,University at Buffalo,மென்பொறியார்,யுனிவர்சிட்டி அட் பஃப்பலோ,ஆதித்யா அரேபல்லி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/0vbgdcuu/aditya.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Software Engineer  Aditya 
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/0vbgdcuu/aditya.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஐ.ஐ.டி-யில் பட்டம் பெற்ற சாய் வெங்கட ஆதித்யா அரேபல்லி, அமெரிக்காவில் உள்ள அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.1.5 கோடி சம்பளத்தில் மென்பொறியாளராகப் (Software Engineer) பணியில் சேர்ந்து அசத்தியுள்ளார்.</p><h2>தொட<strong>க்கக் கல்வி</strong> </h2><p>2022-இல் ஐ.ஐ.டி தார்வாடில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பி.டெக் முடித்த ஆதித்யா, பெங்களூரில் உள்ள 'ரிவர்பெட் டெக்னாலஜி' நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.13 லட்சம் சம்பளத்தில் பணியில் சேர்ந்தார்.</p><h2>ஏ.<strong>ஐ துறையை</strong> நோக்கிய மாற்றம்</h2><p>செயற்கை நுண்ணறிவு (AI) துறையின் அசுர வளர்ச்சியைக் கண்டு, தனது நிலையான வேலையைத் துறந்து அமெரிக்காவிலுள்ள 'யுனிவர்சிட்டி அட் பஃப்பலோ' பல்கலைக்கழகத்தில் AI பாடப்பிரிவில் எம்.எஸ் பட்டம் பயின்றார்.</p><h2>பயிற்சியும் <strong>வெற்</strong>றியும்</h2><p>மேல்படிப்பின் போது கோடிங், தயாரிப்புகள் உருவாக்கம் மற்றும் சான்றிதழ் பயிற்சிகளில் கவனம் செலுத்திய இவர், படிப்பை முடித்ததும் சீட்டிலில் உள்ள அமேசான் AWS கிளையில் ரூ.1.5 கோடி பேக்கேஜில் வேலை வாய்ப்பைப் பெற்றார்.</p><h2>குடும்பப் <strong>பின்ன</strong>ணி</h2><p>ஒரு புகைப்படக் கலைஞரின் மகனான ஆதித்யாவின் இந்த மகத்தான வெற்றி குறித்து அவரது தந்தை நெகிழ்ச்சியுடன் கூறுகையில், "ஒரு புகைப்படக் கலைஞராக எனது மகனுக்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன்; இன்று என் மகன் என் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டான்" எனக் கூறியுள்ளார். துணிச்சலாக வேலையை விட்டுவிட்டு புதிய தொழில்நுட்பத்தைக் கற்ற ஆதித்யாவின் இந்த சாதனை பயணம் சமூக வலைத்தளங்களில் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>பாலியல் வன்கொடுமை புகாரில் பிரபல கிரிக்கெட் வீரர் கைது</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/bengal-cricketer-abhishek-porel-arrested-on-woman-complaint</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/bengal-cricketer-abhishek-porel-arrested-on-woman-complaint#comments</comments><guid isPermaLink="false">a84fa82b-fb03-4345-a708-3fc8b5576f16</guid><pubDate>Tue, 11 Aug 2026 11:40:16 +0000</pubDate><atom:updated>2026-08-11T11:40:16.507Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Delhi Capitals,ஐபிஎல்,அபிஷேக் பொரேல்,Abhishek Porel</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/1r9q5qhf/AbhishekPorel0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அபிஷேக் பொரேல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/1r9q5qhf/AbhishekPorel0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவர், கடந்த ஜூன் 23-ந்தேதி மோக்ரா காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில் தனக்கும் கிரிக்கெட் வீரரான அபிஷேக் பொரேலுக்கும் இடையில் மூன்றரை வருடங்கள் பழக்கம் இருந்தது. நாங்கள் திருமணம செய்து கொள்ள முடிவு செய்தோம். இரண்டு பேரும் வெளிநாட்டிற்கு ஒன்றாக பயணம் மேற்கொண்டுள்ளோம். ஆனால், என்னுடன் தொடர்பு வைத்திருந்ததை பொரேல் மறுக்கிறார் என புகார் அளித்திருந்தார்.</p><h2>நீதிமன்றம் உத்தரவின் பேரில் கைது</h2><p>ஆனால், போலீசார் இந்த புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் அவர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தை நாடினார். அதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் அபிஷேக் பொரேலை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p>அதனடிப்படையில் அபிஷேக் பொரேலை நேற்று போலீசாரை கைது செய்தனர். அபிஷேக் பொரேல் மீது போலீசார் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.</p><p>அபிஷேக் பொரேல் கைது கிரிக்கெட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் கடந்த ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>மருத்துவ மாணவியின் குற்றச்சாட்டை அபிஷேக் பொரேல் மறுத்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>2026ம் ஆண்டிலும் தெருக்கள், சாலைகளில் சாதிப் பெயர்கள் - தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த சென்னை உயர் நீதிமன்றம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/caste-names-on-streets-and-roads-in-tamil-nadu-even-in-2026-high-court-takes-suo-motu-cognizance</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/caste-names-on-streets-and-roads-in-tamil-nadu-even-in-2026-high-court-takes-suo-motu-cognizance#comments</comments><guid isPermaLink="false">d920c273-cf71-4322-a39f-08deaf670874</guid><pubDate>Tue, 11 Aug 2026 11:37:45 +0000</pubDate><atom:updated>2026-08-11T11:37:45.378Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,சென்னை உயர் நீதிமன்றம்,Madras High Court,சாதி,caste,தமிழ்நாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/wfj6avae/New-Project-2026-08-11T161443.075.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 2026ம் ஆண்டிலும் தமிழ்நாட்டில் தெருக்கள், சாலைகளில் சாதிப் பெயர்கள் - தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த உயர் நீதிமன்றம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/wfj6avae/New-Project-2026-08-11T161443.075.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டின் தெருக்கள் மற்றும் சாலைகளின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. </p><p>ஒரு ஜாமின் மனு மீதான விசாரணையின் போது, ​​நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், 'பள்ளர் தெரு' என்று குறிப்பிடப்பட்டிருந்ததை கண்ட நீதிபதி ரமேஷ், இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துள்ளார்.</p><p>தெருக்கள் மற்றும் சாலைகளுக்குப் பெயரிடும்போது சாதியக் குறிப்புகளைத் தவிர்க்க வேண்டும் என்று 1978-ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக அரசாணைகளும், நீதிமன்ற வழிகாட்டுதல்களும் பிறப்பிக்கப்பட்ட பின்னரும், ‘பள்ளர் தெரு’ என்பது புழக்கத்தில் இருப்பது குறித்து வேதனை தெரிவித்த நீதிபதி,</p><p>“ஒரு தெருவுக்கோ அல்லது சாலைக்கோ ஒரு சாதியின் பெயரைச் சூட்டுவதால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படுகின்றன. ஏனெனில் அந்த இடங்களில் வசிப்பவர்கள் தங்கள் சாதியின் மூலம் அடையாளம் காணப்படுகிறார்கள். </p><p>மேலும் அந்தப் பெயர்கள் அவர்களின் ரேஷன் அட்டைகள், ஆதார் அட்டைகள், ஓட்டுநர் உரிமங்கள் போன்ற அனைத்து அதிகாரப்பூர்வ ஆவணங்களிலும் இடம்பெறுகின்றன.” என தெரிவித்தார். </p><p>மேலும், “அந்தத் திசையில்தான் உயர் நீதிமன்ற நீதிபதி பாரத சக்கரவர்த்தி, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் பெயர்களில் இருந்து சாதிப் பெயர்களை நீக்குமாறு சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார்.” என்று கூறினார்.</p><p>தொடர்ந்து ஆதிதிராவிடர் நலத்துறையின் பெயர் மாற்றத்தைக் குறிப்பிட்டு பேசிய நீதிபதி, தெருக்கள் மற்றும் சாலைகளின் பெயர்களில் இருந்து அனைத்து சாதிப் பெயர்களும் முற்றிலுமாக நீக்கப்படாவிட்டால் இந்த முயற்சி முழுமையடையாது என்றும் தெரிவித்தார். </p><h2>தாமாக முன்வந்து வழக்குப்பதிவு</h2><p>இதனையடுத்து ஜாமின் மனுவை பரிசீலித்த பின்னர், தெருக்கள் மற்றும் சாலைகளில் இருந்து சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த நீதிபதி ரமேஷ், உரிய உத்தரவுகளுக்காக தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியிடம் சமர்ப்பிக்குமாறு உயர் நீதிமன்றப் பதிவகத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார் . </p><p>தாமாக முன்வந்து தொடரப்படும் இந்த வழக்கை எந்த அமர்வின் முன் வைக்க வேண்டும் என்பதை தலைமை நீதிபதி முடிவு செய்தவுடன் , சாலைப் பெயர்களில் இருந்து சாதிப் பெயர்கள் நூறு சதவீதம் நீக்கப்படுவதை உறுதிசெய்ய அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் குறித்த விரிவான நிலை அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு தலைமைச் செயலாளருக்கு உத்தரவிடப்படலாம்.</p>]]></content:encoded></item><item><title>அலாஸ்கா கடலில் சர்ச்சை: ஆபத்தில் உதவியை மறுத்ததா மார்க் ஜூக்கர்பெர்க்கின் $300 மில்லியன் சொகுசுப் படகு?</title><link>https://www.maalaimalar.com/news/world/mark-zuckerberg-superyacht-accused-of-ignoring-distress-call-in-alaska-waters</link><comments>https://www.maalaimalar.com/news/world/mark-zuckerberg-superyacht-accused-of-ignoring-distress-call-in-alaska-waters#comments</comments><guid isPermaLink="false">35fa9554-0c18-4755-8eed-464488286fc1</guid><pubDate>Tue, 11 Aug 2026 10:59:15 +0000</pubDate><atom:updated>2026-08-11T10:59:15.349Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Meta,மெட்டா,Launchpad,Alaskan waters,அலாஸ்கா கடல்,லாஞ்ச்பேட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/t0tus13o/Launchpad.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Launchpad]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/t0tus13o/Launchpad.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மெட்டா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க்கிற்குச் சொந்தமான 'லாஞ்ச்பேட்' என்ற 387 அடி நீளமுள்ள $300 மில்லியன் மதிப்பிலான சூப்பர்யாட் கடலில் நடுவழியில் நின்ற சிறிய படகு ஒன்றிற்கு உதவவில்லை என்ற குற்றச்சாட்டு சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>சம்பவ<strong>ம் நடந்தது எப்</strong>படி?</h2><p>அலாஸ்காவின் பீட்டர்ஸ்பர்க் மற்றும் ஜூனோ நகரங்களுக்கு இடையே கடலில் பயணித்த 21 அடி நீளமுள்ள சிறிய படகில் திடீரென எரிபொருள் தீர்ந்துவிட்டது. படகில் இருந்தவர்கள் உதவி கேட்கவே, அமெரிக்கக் கடலோரக் காவல் படை அக்கம் பக்கத்தில் இருந்த கப்பல்களுக்கு உதவக் கோரி அவசர வானொலி செய்தி அனுப்பியது. </p><p>கப்பல் கண்காணிப்புத் தரவுகளின்படி, உதவி கோரிய படகிற்கு மிக அருகில் ஜூக்கர்பெர்க்கின் 'லாஞ்ச்பேட்' படகு தான் இருந்தது. ஆனால், அதிலிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. சற்று தொலைவில் இருந்த 'Wilderness Legacy' என்ற சிறிய சொகுசுக் கப்பல், தகவலைப் பெற்றதும் விரைந்து வந்து சிறிய படகை மீட்டு ஃபாராகுட் பே பகுதிக்கு பாதுகாப்பாக இழுத்துச் சென்றது.</p><h2>பயணிக<strong>ளின் கொந்</strong>தளிப்பு</h2><p>மீட்புப் பணியில் ஈடுபட்ட கப்பலின் கேப்டன், "ஜூக்கர்பெர்க்கின் அதிநவீன படகு அருகில் இருந்தும் உதவி செய்ய மறுத்துவிட்டது" என்று அறிவித்ததும், கப்பலில் இருந்த பயணிகள் அனைவரும் ஒருசேர கண்டனக் கூச்சலிட்டனர். கப்பலில் பயணித்த ஒருவர் புளூஸ்கை சமூக வலைதளத்தில், "ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவக் கிடைத்த வாய்ப்பை ஜூக்கர்பெர்க் தவறவிட்டுவிட்டார்" என்று பதிவிட, அது வைரலாகி பெரும் விமர்சனங்களை உருவாக்கியது.</p><h2>ஜூக்கர்<strong>பெர்க் தரப்பு</strong> அளித்துள்ள விளக்கம்</h2><p>இந்தச் சர்ச்சைக்கு பதிலளித்த ஜூக்கர்பெர்க் மற்றும் பிரிசில்லா சான் தம்பதியினரின் செய்தித் தொடர்பாளர் பிரையன் பேக்கர், சம்பவம் நடந்த நேரத்தில் மார்க் ஜூக்கர்பெர்க் அல்லது அவரது குடும்பத்தினர் யாட்டில் இல்லை. படகின் ஊழியர்கள் வேறு ரேடியோ அலைவரிசையைக் கண்காணித்துக் கொண்டிருந்ததால், அவசர அழைப்பை உடனடியாகக் கவனிக்கவில்லை. </p><p>அவர்கள் அந்தச் செய்தியைப் பார்த்து அறிவதற்கு முன்பே, மற்றொரு கப்பல் மீட்புப் பணிகளைத் தொடங்கிவிட்டது. மேலும், அந்தச் சிறிய படகு உடனடி பேராபத்தில் இல்லை என்பதால் சர்வதேசக் கடல்சார் சட்டங்கள் எதும் மீறப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் தண்டனைக்குரிய குற்றம் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்</title><link>https://www.maalaimalar.com/news/national/president-murmu-gives-assent-to-bill-criminalising-insult-to-vande-mataram</link><comments>https://www.maalaimalar.com/news/national/president-murmu-gives-assent-to-bill-criminalising-insult-to-vande-mataram#comments</comments><guid isPermaLink="false">da75ec9a-19ca-4bc6-ae9a-b7dce4b33bbf</guid><pubDate>Tue, 11 Aug 2026 10:58:55 +0000</pubDate><atom:updated>2026-08-11T10:58:55.947Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,Central govt,வந்தே மாதரம்,Vande Mataram</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/m1oxlf8y/Murmu11082026.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜனாதிபதி திரவுபதி முர்மு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/m1oxlf8y/Murmu11082026.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேசியப் பாடலான வந்தே மாதம் பாடலை அவமதிப்பதை தண்டனைக்குரிய குற்றமாக்க வகை செய்யும் மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.</p><p>தேசிய கௌரவம் மீதான அவமதிப்புகள் தடுப்புச் சட்ட திருத்த மசோதா-2026 எனும் மசோதா, மக்களவையில் கடந்த மாதம் 30-ந்தேதி நிறைவேற்றப்பட்டது. அதற்கு முந்தைய நாள் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.</p><p>தற்போது ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளதால், தேசிய கீதமான "ஜன கண மன" பாடலுக்கு வழங்கப்படும் கவுரவம், தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலுக்கு கொடுக்கப்படும்.</p><p>அரசு நிகழ்ச்சிகள் உள்ப்ட எந்தவொரு நிகழ்ச்சியிலும் ஜன கண மன பாடல் பாடப்படுவதற்கு முன்னதாக வந்தே மாதரம் பாடல் பாடப்பட வேண்டும்.</p><p>வருகிற 15-ந்தேதி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடி ஏற்றி உரையாற்ற இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் முதன்முறையாக முழுமையாக வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டு, அதன்பின் ஜன கண மன பாடல் பாடப்படும்.</p><h2>மூன்று ஆண்டுகள் வரை சிறை</h2><p>தேசிய கௌரவம் மீதான அவமதிப்புகள் தடுப்புச் சட்ட திருத்த மசோதா-2026இன்படி, தேசிய சின்னங்களான தேசியக் கொடி, அரசமைப்புச் சட்டம், தேசிய கீதம் உள்ளிட்டவற்றுடன் தேசியப் பாடலான வந்தே மாதரத்தை அவமதிப்பதையும் தண்டனைக்குரிய குற்றமாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தேசிய கீதத்துக்கு உள்ள அதே சட்டபூர்வ பாதுகாப்பை தேசியப் பாடலுக்கும் வழங்கும் புதிய மசோதாவின்படி, வந்தே மாதரம் பாடல் பாடுவதைத் தடுப்பது, இடையூறு விளைவிப்பது உள்ளிட்ட செயல்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.</p><p>வந்தே மாதரம் பாடலின் 150-ஆவது ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலின் 6 சரணங்களையும் பாட வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையில் பெயர் நீக்கம்... வீடியோ வெளியிட்ட பிரகாஷ் ராஜ்!</title><link>https://www.maalaimalar.com/news/national/name-removed-from-sir-operation-prakash-raj-releases-video</link><comments>https://www.maalaimalar.com/news/national/name-removed-from-sir-operation-prakash-raj-releases-video#comments</comments><guid isPermaLink="false">d978cb63-ffee-4308-ba7e-e3af33e33d62</guid><pubDate>Tue, 11 Aug 2026 10:36:06 +0000</pubDate><atom:updated>2026-08-11T10:36:06.932Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Sir,பெங்களூரு,bengaluru,பிரகாஷ் ராஜ்,Actor Prakash Raj,சிறப்பு தீவிரத் திருத்தம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/inv2b8m7/New-Project-2026-08-11T160532.450.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையில் பெயர் நீக்கம்... வீடியோ வெளியிட்ட பிரகாஷ் ராஜ்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/inv2b8m7/New-Project-2026-08-11T160532.450.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெங்களூரில் நடைபெற்ற சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கைக்குப் பிறகு தனது பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாக நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நடிகர் பிரகாஷ் ராஜ்.,</p><p>“பெங்களூரு தொகுதியில் எஸ்ஐஆர் நடவடிக்கைக்குப் பிறகு பெயர் நீக்கம் செய்யப்பட்ட சுமார் 65 லட்சம் வாக்காளர்களில் நானும் ஒருவன். நான் பிறந்து, வளர்ந்து, படித்து, இதே தொகுதியில் எம்பி வேட்பாளராகவும் போட்டியிட்டேன். அப்படிப்பட்ட எனது பெயர் நீக்கப்பட்டுள்ளது ஒரு நல்ல நகைச்சுவை, இல்லையா?” என வீடியோவில் பேசியுள்ளார். </p><p>2019 மக்களவைத் தேர்தலில், பிரகாஷ் ராஜ் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டார் .</p><p>இதே ஆண்டு பிரகாஷ் ராஜ் கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் ஒரே நேரத்தில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளதாக பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. </p><p>இந்திய தேர்தல் விதிமுறைகளின்படி ஒரு நபர் ஒரு தொகுதியில் மட்டுமே வாக்காளராக இருக்க முடியும் என்பதால், இந்த வழக்கில் நேரில் ஆஜராகாததால் அவருக்கு எதிராக ஜூன் 2026-இல் பிணையில் வரமுடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, பின்னர் ஜூலை மாதம் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமின் பெற்றார்.</p><h2>எஸ்ஐஆர் பணிகள்</h2><p>பெங்களூருவில் நடைபெற்று வரும் எஸ்ஐஆர் பணிகள் ஆகஸ்ட் 17 அன்று முடிவடைகிறது. அதனைத்தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியல்கள் ஆகஸ்ட் 24 அன்று வெளியிடப்படும். அதனையடுத்து மீண்டும் பெயர் சேர்ப்பது உள்ளிட்ட பணிகளுக்கு ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 23 வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.</p><p>இறுதி வாக்காளர் பட்டியல் அக்டோபர் 27 அன்று வெளியிடப்படும்.</p>]]></content:encoded></item><item><title>&apos;கேரளா&apos; இனி &apos;கேரளம்&apos;: மக்களவையில் வரலாற்று சிறப்புமிக்க மசோதா நிறைவேற்றம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/kerala-to-keralam-name-change-bill-cleared-in-lok-sabha</link><comments>https://www.maalaimalar.com/news/national/kerala-to-keralam-name-change-bill-cleared-in-lok-sabha#comments</comments><guid isPermaLink="false">267d6d02-ae48-45e8-aa60-7764d5ab71e6</guid><pubDate>Tue, 11 Aug 2026 10:26:45 +0000</pubDate><atom:updated>2026-08-11T10:26:45.395Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மக்களவை,kerala,Lok Sabha,கேரளம்,கேரளா,Keralam</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/dwpu8oef/lok-sabha.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Lok Sabha ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/dwpu8oef/lok-sabha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மக்களவையில் கேரளா (பெயர் மாற்றம்) மசோதா, 2026' குரல் வாக்கெடுப்பு மூலம் விவாதமின்றி அதிகாரப்பூர்வமாக நிறைவேற்றப்பட்டது.  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்குப் பதிலாக, மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் இந்த மசோதாவை மக்களவையில் கொண்டு வந்தார். எதிர்க்கட்சிகளின் அமளி மற்றும் எதிர்ப்புகளுக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.</p><h2>சட்டம<strong>ன்றத் தீர்மான</strong>ம்</h2><p>மலையாள மொழியில் இந்த மாநிலம் எப்போதுமே 'கேரளம்' என்றே அழைக்கப்படுகிறது. இதையேற்கும் வகையில், கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூன் 24 அன்று கேரள சட்டமன்றத்தில் அப்போதைய முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களாலும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.</p><h2>அரசியல<strong>மைப்புத் திரு</strong>த்தம்</h2><p>இந்திய அரசியலமைப்பின் உறுப்பு 3 விதிகளின்படி, மாநிலங்களின் பெயரை மாற்ற பாராளுமன்றத்திற்கு அதிகாரம் உண்டு. இதன் கீழ், அரசியலமைப்பின் முதலாவது அட்டவணையில் 'கேரளா' என்றிருப்பதை 'கேரளம்' என திருத்த இம்மசோதா வழிவகை செய்கிறது.</p><h2>மத்திய <strong>கேபின</strong>ட் ஒப்புதல்</h2><p>2026 பிப்ரவரி மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இதற்கு ஒப்புதல் அளித்தது. உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் இம்மசோதாவை தாக்கல் செய்தார். எதிர்க்கட்சியினரின் தொடர் அமளி மற்றும் கூச்சல்-குழப்பத்திற்கு இடையே எவ்வித விவாதமும் இன்றி இம்மசோதா நிறைவேறியது.</p><p>அடுத்து இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும். அதன்பின் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்றவுடன் பெயர் மாற்றம் அதிகாரப்பூர்வமாக அரசாங்க இதழில் வெளியிடப்பட்டு அமலுக்கு வரும்.</p>]]></content:encoded></item><item><title>உக்ரைன் மீது ரஷியா வான் தாக்குதல்: 9 பேர் உயிரிழப்பு- வடகொரியா உதவுவதாக ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/world/russian-aerial-attacks-kill-9-in-ukraine-as-zelenskyy-warns-moscow-getting-more-north-korea-help</link><comments>https://www.maalaimalar.com/news/world/russian-aerial-attacks-kill-9-in-ukraine-as-zelenskyy-warns-moscow-getting-more-north-korea-help#comments</comments><guid isPermaLink="false">2c9a6642-8284-45cb-adba-d8875b2de2f4</guid><pubDate>Tue, 11 Aug 2026 10:25:32 +0000</pubDate><atom:updated>2026-08-11T10:25:32.445Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜெலன்ஸ்கி,உக்ரைன் ரஷியா போர்,ukraine russia war,zelensky</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/rmqsbiqc/zelensky001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜெலன்ஸ்கி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/rmqsbiqc/zelensky001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ரஷியா மீது உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலுக்குப் பதிலாக உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><h2>ரஷியா மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழப்பு</h2><p>உக்ரைன் நேற்று இரவு மத்திய ரஷியாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் அதிகமான நகரம் மீது டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் ரஷியாவில் பொதுமக்கள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். உக்ரைன் எல்லையில் இருந்து சுமார் 1000 கி.மீ. தொலைவில் உள்ள தொழில் நகரமான நிஸ்னேகாம்ஸ்க்கில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் தெரிவித்தது. உக்ரைன் ஏவிய 456 டிரோன்களை தாக்கி அழித்ததாக ரஷியா தெரிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில் உக்ரைனில் உள்ள பல்வேறு நகரங்கள் மீது ஏவுகணைகள், டிரோன்கள் மற்றும் கிளைடு குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியது. ஜபோரிஸ்சியா நகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர்.</p><h2>வடகொரியா உதவி என ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு</h2><p>ரஷியா படைகள் பயன்படுத்திய பாலிஸ்டிக் ஏவுகணைகள் வடகொரியாவில் இருந்து சப்ளை செய்யப்பட்டதாகும். வடகொரியாவிடம் இருந்து ரஷியா கூடுதல் பாலிஸ்டிக் ஏவுகணைகளை பெற்றுள்ளது. அத்துடன் மேலும் அதிகமான வடகொரிய வீரர்களை குவிக்க தயாராகி வருகிறது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார.</p><p>ரஷிய அதிபர் புதின் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் இடையே இரண்டு வருடத்திற்கு முன்னதாக, மூலோபாயக் கூட்டாண்மை ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தில், இரண்டு நாடுகளில் ஏதாவது ஒரு நாடு போரை எதிர்கொண்டால், ஒரு நாட்்டிற்கு மற்றொரு நாட்டிற்கு உதவி செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>முன்னதாக, உக்ரைனுக்கு எதிராக போரிடுவதற்கான ஆயிரக்கணக்கான வீரர்களை ரஷியா படைக்கு அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.</p><p>நேற்று ரஷியாவின் டாடர்ஸ்டான் எண்ணெய் வளங்களுக்கான மிகப்பெரிய பிராந்தியம் ஆகும். இங்கு ஏராளமான மிகப்பெரிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளன. ரஷியாவின் பதிலடி தாக்குதலுக்கான இந்த பகுதியை இலக்காக கொண்டு உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு பதிலடியாக ரஷியாவும் பதில் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-rain-in-chennai-at-night</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-rain-in-chennai-at-night#comments</comments><guid isPermaLink="false">6df0dc2f-42df-451d-9d04-210b16a28522</guid><pubDate>Tue, 11 Aug 2026 10:22:27 +0000</pubDate><atom:updated>2026-08-11T10:22:27.587Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,Chennai Rain,சென்னை மழை,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/cjs8qzc6/rain007.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மழை]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/cjs8qzc6/rain007.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.</strong></em> </p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.</p><h2><strong>மிதமான மழை</strong></h2><p>இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நாமக்கல் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>நாளை மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>13-ந்தேதி மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>14-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>15-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>இதனிடையே இன்று முதல் 14-ந்தேதி வரை வட உள்தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட சற்று அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p>நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26.27° செல்கியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>இன்று மற்றும் நாளை குமரிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>அதே போல் 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>Big Boss தமிழ் சீசன் 10: புதிய logo வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/big-boss-tamil-season-10-new-logo-launch</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/big-boss-tamil-season-10-new-logo-launch#comments</comments><guid isPermaLink="false">325eaead-f020-414f-8f53-5d3c3c691aca</guid><pubDate>Tue, 11 Aug 2026 10:11:33 +0000</pubDate><atom:updated>2026-08-11T10:11:33.201Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijaysethupathi,விஜய்சேதுபதி,BiggBossTamil10,பிக்பாஸ்தமிழ்10,CarniVizha,கார்னிவிழா,BiggBoss10,BiggBoss10 Promo,VijayTV</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/fepyca13/BiggBossTamil-Season10" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ BiggBossTamil Season10]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/fepyca13/BiggBossTamil-Season10?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'பிக் பாஸ் தமிழ் சீசன் 10' நிகழ்ச்சியின் பிரம்மாண்ட ப்ரோமோ அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. </p><p>பிக் பாஸ் தமிழ் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் விதமாக, 'கார்னி விழா' என்ற புதிய தீமுடன் லோகோ வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><h2>நூறு நாள் திருவிழா – கார்னி விழா கொண்டாட்டம்!</h2><p>இந்த 10-வது சீசன் வெறும் போட்டியாக மட்டுமில்லாமல், ஊரே சேர்ந்து கொண்டாடும் நூறு நாள் திருவிழாவாக அமையவுள்ளது. வண்ணமயமான செட்டிங்குகள், மக்கள் கொண்டாடும் பாடல் வரிகள் ஆகியவற்றுடன் இந்த சீசன் தொடங்குகிறது. </p><p>"மக்கள் அனைவருக்கும் பத்தாண்டு வாழ்த்துக்கள், எல்லா சீசனும் கெத்து.. இப்போ இது சீசன் பத்து" என்ற வரிகள் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 10 ஆண்டுகால வெற்றிகரமான பயணம் இந்த ப்ரோமோவில் பெருமையோடு நினைவுகூரப்பட்டுள்ளது.</p><h2>"இங்க ஒன்னு நினைச்சா பத்து நடக்கும்" – விஜய் சேதுபதியின் அதிரடி பஞ்ச்!</h2><p>கடந்த சீசனைப் போலவே, இந்த மைல்கல் பத்தாவது சீசனையும் மக்கள் செல்வன் <a href="https://www.maalaimalar.com/topic/actor-vijay-sethupathi">விஜய் சேதுபதி</a> மிரட்டலான அவதாரத்தில் தொகுத்து வழங்குகிறார். </p><p>ப்ரோமோவின் இறுதிக் காட்சியில், ஒரு அசத்தலான திருவிழா பின்னணியில் கூலிங் கிளாஸ் அணிந்து மாஸாகத் தோன்றும் அவர், "இங்க ஒன்னு நினைச்சா... பத்து நடக்கும்" என்ற அதிரடி பஞ்ச் லைனைப் பேசி, இந்த சீசனில் வரப்போகும் பல நூதனமான ட்விஸ்டுகளுக்குப் பிள்ளையார் சுழி போட்டுள்ளார்.</p><h2>24 மணி நேர நேரலை மற்றும் எவிக்சன் கணிப்புகள்!</h2><p>வழக்கமான பிக் பாஸ் சுவாரசியங்களான காலை நேர வேக்கப் பாடல்கள், மாலை நேரக் கொண்டாட்டங்கள், ரூஃப் சாட்டில் நடக்கும் சண்டைகள் மற்றும் விறுவிறுப்பான ப்ரோமோக்கள் என அனைத்தும் இந்த சீசனிலும் தொடர்கின்றன. </p><p>மேலும், "பிடித்த போட்டியாளர்களைக் காப்பாற்ற தேங்காய் உடைப்பது", "டாஸ்க்குகளை முடிக்காவிட்டால் எவிக்சன் பூஜை நடப்பது", மற்றும் "24 மணி நேரமும் ரசிகர்கள் தொடர்ந்து நேரலையாகப் பார்த்து இணையத்தில் எவிக்சன் கணிப்புகளைச் செய்வது" என பிக் பாஸ் ரசிகர்களின் அன்றாட வாழ்க்கை முறையே இந்த ப்ரோமோ பாடலில் சுவாரசியமாக பிரதிபலிக்கப்பட்டுள்ளது.</p><p>"பிக் பாஸ் சீசன் 10 – விரைவில்..." என்ற அறிவிப்போடு இந்த ப்ரோமோ நிறைவடைந்துள்ளது. இந்த பத்தாவது சீசன், முந்தைய சீசன்களை விட பல மடங்கு கூடுதல் சுவாரசியங்களுடனும், புதிய விதிகளுடனும் இருக்கும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்போதே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/7BI2QqcvjJE"></iframe></figure>]]></content:encoded></item><item><title>‘எல்.கே.ஜி’ பாணியில் அரசியல் வருகையா? ரசிகரின் கேள்விக்கு ஆர்.ஜே. பாலாஜியின்  பதில்! </title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/lkg-style-political-entry-rj-balaji-answer-to-fan-question</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/lkg-style-political-entry-rj-balaji-answer-to-fan-question#comments</comments><guid isPermaLink="false">2e56e24d-5a67-420a-925d-70315d25ff5f</guid><pubDate>Tue, 11 Aug 2026 10:06:33 +0000</pubDate><atom:updated>2026-08-11T10:06:33.842Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>RJBalaji In politics,RJBalaji,ஆர்ஜேபாலாஜி,RJBalajiOpenTalk,LKGMovie,எல்கேஜி,TamilPolitics</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/kwwaj0qd/RJ-Balaji" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ RJ Balaji ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/kwwaj0qd/RJ-Balaji?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அண்மையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மாணவர்களுடனும், ரசிகர்களுடனும் கலந்துரையாடினார் <a href="https://www.maalaimalar.com/topic/rj-balaji">ஆர்.ஜே. பாலாஜி</a>. அப்போது ரசிகர் ஒருவர், "நீங்கள் நடித்த 'எல்.கே.ஜி' திரைப்படத்தைப் போல நிஜ வாழ்க்கையிலும் அரசியலுக்கு வருவீர்களா?" என்று மேடையை நோக்கி நேரடியாகக் கேள்வி எழுப்பினார். </p><p>இந்தக் கேள்விக்கு ஆர்.ஜே. பாலாஜி தனது வழக்கமான பாணியில் வெளிப்படையாக பதிலளித்தார்.</p><h2>ஆர்.ஜே.பாலாஜியின் அடுத்த அதிரடி!</h2><p>நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் கிரிக்கெட் வர்ணையாளர் என்று தனது திறமையை பல்வேறு விதமாக நிரூபித்தவர் ஆர். ஜே பாலாஜி. சமீபத்தில் அவரது இயக்கத்தில் வெளியான சூர்யா நடித்த கருப்பு படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சூர்யாவிற்கும் நல்ல ஒரு கம்பேக் ஆக இருந்தது. இந்த படம் ரூ.300 கோடி வசூலித்து திரைத்துறையை கலக்கியது.</p><p>தற்போது ஆர். ஜே பாலாஜி புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார் என்ற செய்தியும், சிறப்பான கதை ஒன்றை எழுதி வருகிறார் என்ற செய்தியும் சமீபத்தில் வெளியாகியுள்ளது.</p><h2>"ஏற்கனவே கூட்டமா இருக்கு!" - அரசியல் வருகையை மறுத்த பாலாஜி!</h2><p>நீங்கள் நடித்த 'எல்.கே.ஜி' திரைப்படத்தைப் போல நிஜ வாழ்க்கையிலும் அரசியலுக்கு வருவீர்களா? என்று ரசிகர்கள் கேள்வி கேட்டதும் சிரித்துக்கொண்டே பதிலளித்த ஆர்.ஜே. பாலாஜி, "ஏற்கனவே தமிழ்நாட்டு அரசியலில் ஏகப்பட்ட பேர் இருக்கிறார்கள் என உங்களுக்குத் தெரியவில்லையா? இன்னும் நிறைய பேர் வந்து கொண்டே இருக்கிறார்கள். </p><p>இவ்வளவு பேர் இருக்கும் போது, நானும் அந்தப் பெரிய கூட்டத்தில் போய் இணைய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?" எனப் பொதுமக்களை நோக்கிக் கேள்வி எழுப்பினார்.</p><h2>"நோ! ரிஜெக்டட்!" – உறுதியான அறிவிப்பு!</h2><p>தொடர்ந்து பேசிய அவர், "அரசியலுக்கு நான் வர வேண்டுமா? தேவையே இல்லை! நோ, ரிஜெக்டட்! நான் எப்போதும் அரசியலுக்கு வரமாட்டேன், எனக்கு அந்த அசையும் இல்லை. அது நடக்கவும் நடக்காது" என்று மிகத் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் கூறி தனது அரசியல் வருகை குறித்த வதந்திகளுக்கு முற்றிலும் முற்றுப்புள்ளி வைத்தார்.</p><h2>எல்.கே.ஜி' படமும் நிஜ அரசியலும்:</h2><p>கடந்த 2019-ஆம் ஆண்டு ஆர்.ஜே. பாலாஜி கதை எழுதி, கதாநாயகனாக நடித்த 'எல்.கே.ஜி' திரைப்படம் ஒரு மாபெரும் அரசியல் கிண்டல் படமாக வெளியாகிப் பெரிய வெற்றியைப் பெற்றது. </p><p>நிஜ அரசியல்வாதிகளின் தேர்தல் உத்திகளை அப்படியே திரையில் காட்டியதால், பாலாஜிக்கு நிஜ வாழ்க்கையிலும் அரசியல் ஆசை இருக்குமோ என்ற விவாதம் தொடர்ந்து ரசிகர்களிடையே இருந்து வந்தது. தற்போதைய அவரது இந்த வெளிப்படையான பேச்சு, அந்த விவாதங்களுக்குப் பதிலடியாக அமைந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>குதிரை பேரம் என பேசிய இபிஎஸ்: பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜூனா - களேபரமான சட்டசபை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/aadav-arjuna-answer-to-eps-speech-in-tn-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/aadav-arjuna-answer-to-eps-speech-in-tn-assembly#comments</comments><guid isPermaLink="false">585e2752-4273-4945-8491-24816087022a</guid><pubDate>Tue, 11 Aug 2026 09:57:18 +0000</pubDate><atom:updated>2026-08-11T09:57:18.398Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,EPS,தமிழக சட்டசபை,TN assembly,Aadav Arjuna,அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/7ry210n9/aadhav.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ aadav arjuna]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/7ry210n9/aadhav.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று நடைபெற்றது.</p><p>அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் பேசும்போது, இந்த ஆட்சியில் ஒரு கட்சியில் வெற்றி பெற்று ராஜினாமா செய்கிறார்கள். உடனே வேறு கட்சியில் சேருகிறார்கள். 'குதிரை பேரம்' இதனை தவிர்க்க வேண்டும் என பேசினார்.</p><p>அப்போது எழுந்து குறுக்கிட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது:</p><p>2017-க்கு பிறகு நடைபெற்றது உண்மையான அதிமுக ஆட்சி.</p><p>2017-க்கு பிறகு இருந்தது அதிமுக இல்லை.</p><p>ஜெயலலிதா ஆட்சியில் இருந்த வரை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கொண்டு வரப்படவில்லை.</p><p>ஜெயலலிதா ஆட்சியில் இருந்த வரை நீட், ஜிஎஸ்டி வரவில்லை.</p><p>அதிமுக ஆட்சிக் காலத்தில் உங்களுடைய நலனுக்காக நீங்கள் டெல்லியில் சரணடைந்தீர்கள்.</p><p>எடப்பாடி பழனிசாமியின் தலைமை மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைகின்றனர். </p><p>அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் அங்கிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் பயணிக்கின்றனர் என தெரிவித்தார்.</p><p>இதையடுத்து, அவையில் அதிமுகவினர் அமளியில் ஏற்பட்டனர். </p><p>குதிரை பேரம் குறித்து அதிமுக- தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் மாறி மாறி முழக்கமிட்டதால் சட்டசபையில் அமளி ஏற்பட்டது.</p><p>அவர்களை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அமைதிப்படுத்தினார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு தலா 1 டி.எம்.சி.  தண்ணீர்  திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-regulation-committee-urges-daily-release-to-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-regulation-committee-urges-daily-release-to-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">d24d5ae8-858e-482a-bc58-2e339a0909d6</guid><pubDate>Tue, 11 Aug 2026 09:49:31 +0000</pubDate><atom:updated>2026-08-11T09:49:31.602Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>delhi,CauveryWaterIssue,காவிரிநீர்விவகாரம்,CauveryDispute,CauveryRiver,TamilNaduFarmers</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/0sxq4rlt/CauveryWater-Issue" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CauveryWater Issue ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/0sxq4rlt/CauveryWater-Issue?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2><strong>டெல்லியில் தொடர் கூட்டம்:</strong></h2><p>தமிழகத்தில் போதிய தண்ணீர் கிடைக்காமல் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D">காவிரி நீர்</a> மேலாண்மை ஆணையத்தின் உத்தரவைச் செயல்படுத்தக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் அவசர மனுத் தாக்கல் செய்துள்ளது. </p><p>இந்த மனு வரும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ள நிலையில், டெல்லியில் காவிரி ஒழுங்குமுறைக் குழுவின் கூட்டம் தொடர்ந்து பரபரப்புடன் நடைபெற்று வருகிறது.</p><p>இக்கூட்டத்தில், தமிழகத்திற்கு <strong>தினசரி 1 டி.எம்.சி வீதம்</strong> 15 நாட்களுக்கு தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு ஒழுங்குமுறைக் குழு அதிரடியாகப் பரிந்துரை செய்துள்ளது. </p><p>தமிழ்நாடு சார்பில் அரசு அதிகாரிகள் வீடியோ கான்பிரென்ஸ் மூலம் சென்னையில் இருந்து கலந்துகொண்டனர்.</p><h2><strong>தமிழகத்தின் நிலைப்பாடும் பரிந்துரையும்:</strong></h2><p>தமிழகத்திற்குத் தேவையான தண்ணீரை கர்நாடகா உரிய நேரத்தில் திறந்து விடாததால் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை இக்கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். </p><p>இரு மாநில நிலவரங்களையும் ஆய்வு செய்த குழு, தற்போதைய இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு உடனடியாக தினசரி 1 டி.எம்.சி வீதம் தண்ணீரைத் திறக்க வேண்டும் 15 நாட்களுக்கு் நீர் திறக்க காவிரி ஒழுங்கற்று பரிந்துரைக்குழு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. </p><p>மேலும் ஆகஸ்ட் மாதம் வழங்க கூடிய 45 டிஎம்சி நீரை திறந்து வைக்க உரிய அறிவுறுத்தலை வழங்க வேண்டும்.</p><p>இது தொடர்பான இறுதி முடிவை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>சிரியாவின் முன்னாள் அதிபருக்கு மரண தண்டனை விதிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/world/death-sentence-imposed-on-syrias-former-president</link><comments>https://www.maalaimalar.com/news/world/death-sentence-imposed-on-syrias-former-president#comments</comments><guid isPermaLink="false">11748cd4-3ed6-4d46-8d5e-d29deee969f9</guid><pubDate>Tue, 11 Aug 2026 09:39:01 +0000</pubDate><atom:updated>2026-08-11T09:39:01.424Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சிரியா,syria,மரண தண்டனை,death sentence,Bashar al Assad,பஷார் அல் அசாத்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/olrmj1ry/New-Project-2026-08-11T144658.914.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிரியாவின் முன்னாள் அதிபருக்கு மரண தண்டனை விதிப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/olrmj1ry/New-Project-2026-08-11T144658.914.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சிரியாவின் உள்நாட்டுப் போரின்போதான ‘போர்க்குற்றங்கள்’ மற்றும் ‘மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்’ ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் முன்னாள் அதிபர் பஷார் அல்-அசாத்திற்கு உள்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. </p><p>பஷார் அல்-அசாத் சிரியாவில் இல்லாத நிலையில் இந்த மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2024-ல் கிளர்ச்சியாளர்கள் டமாஸ்கஸைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அசாத் தனது குடும்பத்துடன் ரஷ்யாவின் மாஸ்கோவிற்குத் தப்பிச் சென்றார். </p><p>பஷார் அல்-அசாத்துடன் சேர்ந்து அவரது தம்பியான மாஹெர் அல்-அசாத் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி மற்றும் அசாத்தின் உறவினரான ஆதிப் நஜீப் ஆகியோருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும் ஆதிப் நஜீப் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அசாத் மற்றும் அவரது தம்பியை சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>சிரியாவில் 14 ஆண்டுகள் நீடித்த உள்நாட்டுப் போரின் போது, திட்டமிட்ட கொலைகள், சித்திரவதை, 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொன்றது மற்றும் சட்டவிரோதக் காவல் போன்ற மனிதநேயமற்ற குற்றங்களுக்காக இந்தத் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. </p><p>சிரியாவில் அசாத்தின் 24 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சி வீழ்ந்த பிறகு, அங்கு பொறுப்பேற்றுள்ள புதிய <strong>இடைக்கால அரசு </strong>முன்னாள் ஆட்சியாளர்களுக்கு எதிராகத் தொடங்கிய சட்ட நடவடிக்கைகளின் முதல் மரண தண்டனைத் தீர்ப்பு இதுவாகும்.</p>]]></content:encoded></item><item><title>காலி பணியிடங்கள் நிரப்புதல், பேருந்து கொள்முதல்: சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு..!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-filling-vacant-posts-bus-purchases-edappadi-palaniswami-speech-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-filling-vacant-posts-bus-purchases-edappadi-palaniswami-speech-assembly#comments</comments><guid isPermaLink="false">9230c16e-61fe-4a6c-b9eb-4aff8a702641</guid><pubDate>Tue, 11 Aug 2026 09:35:16 +0000</pubDate><atom:updated>2026-08-11T09:35:16.348Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,EPS,தமிழக சட்டசபை,TN budget,தமிழக பட்ஜெட்,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/rxddu4gz/EPS00002.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/rxddu4gz/EPS00002.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-</p><p>* பள்ளிக்கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் குளறுபடி.</p><p>* ஒதுக்கப்பட்ட நிதியில் முரண்பாடு உள்ளதால் ஓய்வூதியம் முறையாக தரப்படுமா என விளக்கம் அளிக்க வேண்டும்.</p><p>* வருவாயை பெருக்க நடவடிக்கை இல்லை, வருவாய் பற்றாக்குறையை குறைக்கவும் நடவடிக்கை இல்லை.</p><p>* நிதி மேலாண்மைக்கு சரியான பாதை போடப்படவில்லை என்பதையே இந்த பட்ஜெட் காட்டுகிறது.</p><p>* 3 மாதங்களில் 20 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் 5 ஆண்டுகளில் 20 லட்சம் கோடியாக உயர்த்திவிடுவீர்கள் என்பதில் சந்தேகமில்லை.</p><p>* பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் இல்லை. அதிமுக கொண்டுவந்த திட்டங்களுக்கு வெற்றி என பெயர் மாற்றி உள்ளீர்கள். தமிழ்நாட்டில் உள்ள 40,000 அரசு பள்ளிகளிலும் தரமும் உயர்த்தப்பட வேண்டும். அதற்கு உரிய நிதி ஒதுக்கப்பட வேண்டும்.</p><p>* அவையில் திறம்பட பேசும் அமைச்சர் ராஜ்மோகன், 40,000 பள்ளிகளுக்கு தேவையான நிதியை கேட்டுப் பெறுவார் என நம்புகிறேன்.</p><p>* பேசாமல் செயல்படுவோம் என்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் சில இடங்களில் பேசினால்தான் தீர்வு காண முடியும்.</p><p>* தமிழகத்திற்கு நிதியை பெற மத்திய அரசுக்கு கடிதம் எழுதினால் மட்டும் போதாது, பேச வேண்டும்.</p><h2>எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு</h2><p>* தமிழ்நாட்டில் உள்ள அரசு துறைகளில் 13.30 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளது. காலி பணியிடங்களை படிப்படியாக நிரப்பினால்தான் அரசின் திட்டங்களை நிறைவேற்ற முடியும்.</p><p>* ஆட்சிக்கு வந்த உடன் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் எனக் கூறினீர்கள், அதனை செயல்படுத்த வேண்டும்.</p><p>* பொதுப்பணித்துறை நிறுவனங்களில் ஒன்றரை லட்சம் காலிப்பணியிடம், மின்சாரத்துறையிலும் பல காலிப்பணியிடங்கள் உள்ளன.</p><p>* மின்துறையில் அதிக காலிப்பணியிடங்கள் இருப்பதன் காரணமாகத்தான் அதிக மின்தடைகள் ஏற்படுகிறது.</p><p>* ஒவ்வொரு ஆண்டும் ஓய்வு பெறுவோர் எண்ணிக்கை 5 முதல் 7% வரை உள்ளதால் காலி பணியிடம் அதிகரித்துள்ளது. விரைந்து செயல்பட்டால்தான் காலிப்பணியிடங்களை நிரப்ப முடியும். அனைத்து குக்கிராமங்களையும் இணைக்கும் வகையில் பேருந்து சேவைகள் ஏற்படுத்த வேண்டும்.</p><p>* தமிழ்நாட்டில் அனைத்து பேருந்துகளையும் ஏ.சி. பேருந்துகளாக தரம் உயர்த்த முதலமைச்சர் கூறி உள்ளார்.</p><p>* ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நிதி ஒதுக்கி கண்டமான பேருந்துகளை ஒதுக்கிவைத்து விட்டு புதிய பேருந்துகளை வாங்க வேண்டும். தற்போது 20 ஆயிரம் பேருந்துகள் உள்ளன. இந்த பேருந்துகளுக்கு மாற்று பேருந்துகள் வாங்குவது ஐந்து வருடத்தில் இயலாத காரியம்.</p><p>* நெல், கரும்புக்கு தவெக அரசு அறிவித்த ஊக்கத்தொகை போதாது.</p><p>* அ.தி.மு.க. அரசு இருந்தபோது 2 முறை விவசாய கடனை தள்ளுபடி செய்தோம். இப்போது விவசாயிகள் காத்திருக்கின்றனர்</p><p>* தவெக அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.</p><p>* வறட்சியால் தவிக்கும் விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் சிறு, குறு விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.</p><h2>உழவன் செயலி</h2><p>* அதிமுக கொண்டு வந்த உழவன் செயலி திட்டத்தை தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.</p><p>* விவசாயிகள் நலன் கருதி ஓசூரில் உள்ள சர்வதேச மலர் ஏல மையத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>* மாம்பழ விளைச்சல் அதிகம், விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கடுமையாக பாதிப்பு, தேவையான நிவாரணம் தரப்பட வேண்டும்.</p><p>* தட்கல் முறையில் விண்ணப்பித்து காத்திருக்கும் 65,000 விவசாயிகளுக்கு உடனடியாக பம்பு செட் தரப்பட வேண்டும்.</p><p>* சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>எஃப்.சி.ஆர்.ஏ. திருத்த மசோதாவிற்கு எதிரான தீர்மானம் - ஆதரவளிக்காத பாஜக!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/resolution-against-the-fcra-amendment-bill-bjp-does-not-support-it</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/resolution-against-the-fcra-amendment-bill-bjp-does-not-support-it#comments</comments><guid isPermaLink="false">ebe35a05-665d-4b82-a9ea-4da0ddc06e91</guid><pubDate>Tue, 11 Aug 2026 09:14:17 +0000</pubDate><atom:updated>2026-08-11T09:14:17.902Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,தமிழ்நாடு சட்டப்பேரவை,Tamil Nadu Legislative Assembly,FCRA Amendment Bill,எஃப்சிஆர்ஏ திருத்த மசோதா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/gbb5irhe/New-Project-2026-08-11T144044.490.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எஃப்.சி.ஆர்.ஏ. திருத்த மசோதாவிற்கு எதிரான தீர்மானம் - ஆதரவளிக்காத பாஜக!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/gbb5irhe/New-Project-2026-08-11T144044.490.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>எஃப்சிஆர்ஏ சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேறியது. இந்த தீர்மானத்திற்கு திமுக, அதிமுக, பாமக, விசிக, இடதுசாரிகள் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. </p><p>தீர்மானம் தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் போகராஜன்.,</p><p>“சரியான பொறுப்புக்கூறல்கள் இல்லாமல் இருக்கக்கூடாது என்பதற்காகவே சில திருத்தங்களை மத்திய அரசு கொண்டுவருகிறது. சமூக திட்டங்களுக்காக வருகிற பணத்தை நிச்சயமாக மத்திய அரசு எதிர்க்கவில்லை. இதனை வரைமுறைப்படுத்த வேண்டும்.</p><p>நல்ல காரியங்களுக்கு உபயோகப்படுத்த வேண்டும். தேசத்தின் நலனுக்கு எதிரான காரியங்களுக்கு இந்த பணம் சென்றுவிடக்கூடாது என்ற நல்ல அக்கறையுடன் இந்த சட்டத்திருத்ததை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.</p><p>ஆகவே இந்த திருத்தம் அவசியம் என்பதை பாஜக முன்மொழிகிறது.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய்  OG சமூக நீதி மாடல் அரசை  நடத்தி வருகிறார்-எம்எல்ஏ அபிஷேக் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-og-social-justice-model-government-mla-abhishek</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-og-social-justice-model-government-mla-abhishek#comments</comments><guid isPermaLink="false">f1e291c1-d2b6-46a2-ba64-db4a3745c019</guid><pubDate>Tue, 11 Aug 2026 09:03:54 +0000</pubDate><atom:updated>2026-08-11T09:03:54.158Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>neet,நீட்,TNAssembly,சட்டப்பேரவை,MLA Abhishek,எம்எல்ஏ அபிஷேக்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/fc5k50h8/abi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/fc5k50h8/abi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பட்ஜெட் மீது பொது விவாதத்தின் மீது  தவெக எம்எல்ஏ அபிஷேக் உரையாற்றியதாவது,</p><p>முதலமைச்சர் விஜய்  OG சமூக நீதி மாடல் அரசை  நடத்தி வருகிறார், என்னை போன்ற GEN-Z தலைமுறையை எம்எல்ஏ ஆக்கி அழகு பார்த்தவர்,  இந்த சட்டப்பேரவையில் நிறைய சிறப்புகள் உள்ளது.</p><p>கடந்த 16 முறை இல்லாத தனிச்சிறப்பு இந்த 17 சட்டமன்றத்தில் உள்ளது. ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற உண்மையான சமூக நீதியை உருவாக்கியுள்ளது. இந்த ஆட்சியில் பெண்களுக்காக ஆட்சி‘</p><p>நாங்களே ஆட்சியாளர்கள் நாங்களே எஜமானர்கள் என்ற பழைய மாடலின் தோரணையை விஜய் ஆட்சி தகர்த்திருக்கிறது. ஊழலற்ற ஆட்சி என்பது தினம் தினம் உறுதியாகிக்கொண்டிருக்கிறது. </p><p>கற்பி ஒன்றுசேர் அரசியல் பழகு என்று எங்களுக்கு கற்று கொடுத்தவர் தமிழக முதலமைச்சர் விஜய். இந்த பட்ஜெட் அனைவருக்கும் திருப்பி அளிக்கும் விதமாக அமைந்துள்ளது என்றார். விவசாயிகளுக்கான பட்ஜெட்டாக அமைந்து விவசாயிகளின் மகனாக விஜய் உருவெடுத்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பேசினால் தான் தீர்வு காண முடியும்- பட்ஜெட் மீதான உரையில் இபிஎஸ் பேச்சு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-says-solution-can-be-found-only-through-dialogue</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-says-solution-can-be-found-only-through-dialogue#comments</comments><guid isPermaLink="false">82afffe2-e7ae-45e5-ae89-604f09806efc</guid><pubDate>Tue, 11 Aug 2026 08:55:25 +0000</pubDate><atom:updated>2026-08-11T08:55:25.949Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,ADMK,Edappadi Palaniswami,அதிமுக,எடப்பாடி பழனிசாமி,தமிழக சட்டசபை,TN assembly,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/lkk4fyx4/EPS.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/lkk4fyx4/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பேசாமல் செயல்படுவோம் என்பது வரவேற்கத்தக்கது தான், ஆனால் சில இடங்களில் பேசினால் தான் தீர்வு காண முடியும் என்றார்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபையில்</a> இன்று நீட் தேர்வுக்கு எதிராகவும் வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறைப்படுத்தும் திருத்த மசோதாவை தற்போதைய வடிவில் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி என இரு தனித்தீர்மானங்கள் மீது விவாதம் நடைபெற்று ஒருமனதான நிறைவேற்றப்பட்டது. </p><p>இதனை தொடர்ந்து, பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், </p><h2><strong>வெள்ளை அறிக்கை</strong></h2><p>* புதிய அரசு பொறுப்பேற்ற முதல் 100 நாட்கள் நிதி மேலாண்மையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். </p><p>* புதிய அரசின் பாதையை தீர்மானிப்பது முதல் 100 நாட்கள் தான். </p><p>* 100 நாள் செயல்திட்டங்களை புதிய அரசு வெளியிடுவது வழக்கம், அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் முதலீடுகள் கிடைக்கும். </p><p>* த.வெ.க.வை போல் ஏற்கெனவே வெள்ளை அறிக்கையை அதிமுக, திமுகவும் வெளியிட்டுள்ளது. </p><p>* வெள்ளை அறிக்கையில் மாநில வரி வருவாய் கணிசமாக கசிந்துள்ளதாக தவெக அரசு கூறியுள்ளது. </p><p>*  2026-2027 வரி வருவாயை பார்க்கும் போது நிதி மேலாண்மையை சீர் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. </p><p>* அடுத்த 6 மாதங்களில் ரூ.8ஆயிரம் கோடி கிடைக்க வேண்டும் என்றால் அது ஏன் வரி வருவாயில் வரவில்லை? </p><p>* நீர் மேலாண்மைக்கு அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. </p><p>* பள்ளிக்கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் குளறுபடி உள்ளது.</p><h2><strong>கவர்ச்சி வார்த்தைகள்</strong></h2><p>* மக்களின் கவனத்தை ஈர்க்க கவர்ச்சி வார்த்தைகளே உள்ளன. </p><p>* ஒதுக்கப்பட்ட நிதியில் முரண்பாடு உள்ளதால் ஓய்வூதியம் முறையாக தரப்படுமா என விளக்கம் அளிக்க வேண்டும். </p><p>* வருவாயை பெருக்க நடவடிக்கை இல்லை, வருவாய் பற்றாக்குறையை குறைக்கவும் நடவடிக்கை இல்லை. </p><p>* நிதி மேலாண்மைக்கு சரியான பாதை போடப்படவில்லை என்பதையே இந்த பட்ஜெட் காட்டுகிறது. </p><p>* 3 மாதத்தில் ரூ.20 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளது தவெக அரசு, இதே நிலை தொடர்ந்தால் 5 ஆண்டுகளில் 20 லட்சம் கோடியாக உயர்த்தி விடுவீர் என்பதில் சந்தேகமில்லை. </p><p>* பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் இல்லை, அதிமுக கொண்டு வந்த திட்டங்களுக்கு வெற்றி என பெயர் மாற்றியுள்ளீர்கள். </p><p>* மக்கள் பிரச்சனைகளை தீர்க்க புதிய சிந்தனை இல்லை. </p><p>* தமிழ்நாட்டில் உள்ள 40 ஆயிரம் அரசு பள்ளிகளிலும் தரமும் உயர்த்தப்பட வேண்டும், அதற்குரிய நிதி ஒதுக்கப்பட வேண்டும்.</p><p>* அவையில் திறம்பட பேசும் அமைச்சர் ராஜ்மோகன் 40,000  பள்ளிகளுக்கும் தேவையான நிதியை கேட்டுப்பெறுவார் என நம்புகிறேன். </p><p>* பேசாமல் செயல்படுவோம் என்பது வரவேற்கத்தக்கது தான், ஆனால் சில இடங்களில் பேசினால் தான் தீர்வு காண முடியும். </p><p>* தமிழகத்திற்கு நிதியை பெற மத்திய அரசுக்கு கடிதம் எழுதினால் மட்டும் போதாது, பேச வேண்டும். </p><p> என்றார். </p>]]></content:encoded></item><item><title>அடுத்து 133 ஆண்டுகள் கழித்து தான்.. நாளை பொழியும் எரிகற்கள் மழை - எங்கு பார்க்கலாம்?</title><link>https://www.maalaimalar.com/news/world/rare-perseid-meteor-shower-where-to-watch-tomorrows-once-in-133-years-fireball-rain</link><comments>https://www.maalaimalar.com/news/world/rare-perseid-meteor-shower-where-to-watch-tomorrows-once-in-133-years-fireball-rain#comments</comments><guid isPermaLink="false">68dc1f0f-bb29-4db2-b04b-e65a52d5d6a6</guid><pubDate>Tue, 11 Aug 2026 08:38:29 +0000</pubDate><atom:updated>2026-08-11T08:38:29.042Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>space,விண்வெளி,விண்கல் மழை,வானியல் நிகழ்வு,meteor shower,astronomical event</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/tgumuh3g/tn-27.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ எரிகற்கள் மழை]]></media:title><media:description type="html"><![CDATA[ எரிகற்கள் மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/tgumuh3g/tn-27.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சூரியனை சுற்றி வரும்போது  'ஸ்விப்ட் டட்டில்' என்ற வால் நட்சத்திரத்தில் இருந்து உருகும் பனி,  தூசி துகள்களாகவும் சிற்சிறிய பாறைகளாகவும் தனியே பிரிந்து <a href="https://www.maalaimalar.com/news/world/china-new-kande-satellite-network-to-track-space-debris">விண்ணில் </a>எஞ்சுகிறது. </p><p>இவ்வாறு எஞ்சுவனவற்றை விண்வெளி தூசிகள் என்றும் சில நேரங்களில் அவற்றின் அளவை பொறுத்து சிறிய விண்கற்கள் என்றும் வகைப்படுத்தலாம். </p><p>அவ்வாறான விண்கற்கள் பெர்செய்ட் (Perseid) என அழைக்கப்படுகின்றன. </p><h2>விண்கல் மழை</h2><p>பூமி சூரியனை ஒரு முறை முழுமையாக சுற்றி வருவது ஒரு ஆண்டு என்று கணக்கிடப்படுகிறது.</p><p>இவ்வாறு பூமியானது சூரியனை சுற்றி வரும்போது விண்வெளியில் உள்ள இந்த பெர்செய்ட் விண்கற்கள் மற்றும் தூசிகள் வளிமண்டலத்திற்குள் நுழைகின்றன.</p><p>இவ்வாறாக பிரகாசமாக எரியும் கற்கள் (எரிகற்கள் - எரி நட்சத்திரம்) நெருப்பு பந்துகளை போல மழையாக பொழிவதாக நமக்கு தென்படும். அதுவே விண்கல் அல்லது எரிகல் மழை என்று அழைக்கப்படுகிறது.</p><p>இந்த வண்ணமயமான பெர்செய்ட் விண்கற்கள் பொழிவு கோடைக்காலத்தை ஒட்டி இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் நிகழ்கிறது. </p><p>ஏனெனில் ஆண்டின் இந்த சமயத்தில் பூமியானது சூரியனை சுற்றிவரும்போது விண்வெளியில் உள்ள இந்த பெர்செய்ட் விண்கற்கள் குப்பைகளுடன் மோதுகிறது.</p><p>அவை அதிவேகமாக வளிமண்டலத்தில் நுழைவதால் காற்றுடன் ஏற்படும் உராய்வு காரணமாக அவை சூடாகி நெருப்பு பந்துகளை போல ஒளிவிடுகின்றன. </p><h2></h2><h2>எங்கு பார்க்கலாம்?</h2><p>இவற்றை வட அரைக்கோளத்தில், அதாவது பூமத்திய ரேகைக்கு வடக்கே உள்ள பூமியின் ஒரு பாதியில் இருந்து நன்றாக பார்க்க முடியும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் வட அரைக்கோளத்தில் உள்ள எந்தெந்த நாடுகளில் தெளிவாக தெரியும் என குறிப்பிடப்படவில்லை. ஆகஸ்ட் 12, நாளை இந்த பெர்செய்ட் விண்கற்கள் பொழிவு அதன் உச்சத்தை எட்டும்.</p><p>தொடர்ந்து அடுத்த நாள், ஆகஸ்ட் 13, வியாழக்கிழமை, ஸ்பெயின், ஐஸ்லாந்து, கிரீன்லாந்து ஊடாக நிகழ உள்ள சூரிய கிரகனத்துடனும், அதே நாளில் ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள் தோன்றும் 'கிரகங்களின் அணிவகுப்பு'டனும் இந்த விண்கற்கள் பொழிவு நிகழ உள்ளது கூடுதல் சிறப்பு.</p><p>தெளிவான வானிலையில் ஒரு மணி நேரத்திற்கு 50 முதல் 100 விண்கற்கள் பொழிவதை காண முடியும் என நாசா தெரிவித்துள்ளது. கிராமப்புறப் பகுதிகளில் 30 முதல் 50 விண்கற்கள் வரை தெளிவாகத் தெரியும்.</p><p>இருட்டான இடத்தைத் தேர்வு செய்து, சுமார் 30 நிமிடங்கள் கண்கள் இருளுக்குப் பழக்கப்படும் வரை காத்திருந்து திறந்தவெளியில் இதைக் காணலாம்.</p><p>விண்கற்கள் மழையின் உச்சக்கட்டத்தின் போது நிலவு அமாவாசை கட்டத்தில் இருக்கும். இதனால் நிலவின் ஒளி வானத்தை அடைக்காது என்பதால், வழக்கத்தை விட அதிகமான எரிகற்களைத் தெளிவாகக் காண முடியும்.</p><h2>சிறப்பு என்ன?</h2><p>133 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே ஸ்விப்ட் டட்டில் சூரியனை சுற்றி வருகிறது. அப்போதே அதன் பனி உருகி பெஸ்ட்ராய்ட்கள் உருவாகின்றன. எனவே இந்தாண்டு நாளை - நாளை மறுநாள் நடக்கும் இந்த நிகழ்வுக்குபின், இது மீண்டும் 2125ல் தான் மீண்டும் இது நிகழும்.</p><p>கடந்த 2000 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பெஸ்ட்ராய்ட்கள் விண்கல் மழை மனிதர்களால் கவனிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>FCRA திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானம் சட்டசபையில் நிறைவேறியது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/fcra-amendment-bill-resolution-passed-unanimously-in-tn-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/fcra-amendment-bill-resolution-passed-unanimously-in-tn-assembly#comments</comments><guid isPermaLink="false">461913b9-2b50-46a3-8c0c-075117df2b5e</guid><pubDate>Tue, 11 Aug 2026 08:31:20 +0000</pubDate><atom:updated>2026-08-11T08:31:20.406Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,FCRA Bill,எப்சிஆர்ஏ மசோதா,ஜேசிடி பிரபாகர்,speaker prabakar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/pr03ohok/JCD.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ speaker JCD prabhakar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/pr03ohok/JCD.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில், வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானத்தை அமைச்சர் ராஜ்மோகன் முன்மொழிந்தார். அப்போது அவர் கூறுகையில், FCRA மசோதாவை திரும்பப்பெற வேண்டும். FCRA விதிமுறைகள் தொண்டு நிறுவனங்களின் தன்னாட்சி, சிறுபான்மையினர் கல்வி நிறுவன செயல்பாட்டை பாதிக்கும். மத, கல்வி, மருத்துவ, சமூக அமைப்புகள், மாநில அரசுகளுடன் மத்திய அரசு விரிவான ஆலோசனை நடத்தவேண்டும். FCRA சட்டத்தால் சிறுபான்மையினர் பாதிக்கப்படுவர். FCRA திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். மத்திய அரசு கொண்டுவந்த FCRA திருத்த மசோதாவுக்கு தமிழ்நாடு அரசு கடும் ஆட்சேபணை தெரிவிக்கிறது என தெரிவித்தார்.</p><p>FCRA திருத்த மசோதாவுக்கு எதிரான தனித்தீர்மானத்தை உறுப்பினர்கள் நிறைவேற்றி தருமாறு கேட்டுக்கொண்டார். அதனை தொடர்ந்து தனித்தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது.</p><p>தனித்தீர்மானத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட், பாமக, அதிமுக, மஜக, திமுக, விசிக ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.</p><p>இதனை தொடர்ந்து FCRA திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்திற்கு பாஜக ஆதரவு அளிக்கவில்லை.</p><p>இதனை தொடர்ந்து பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தனித்தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தினார். இதில் பாஜகவை தவிர எஞ்சிய கட்சிகளின் முழுமையான ஆதரவுடன் நீட் தேர்வுக்கு எதிரான தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனை சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>FCRA மசோதா எதிர்ப்பு தீர்மானத்தை வரவேற்கிறோம்- வன்னி அரசு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vanni-arasu-welcome-the-resolution-opposing-the-fcra-bill</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vanni-arasu-welcome-the-resolution-opposing-the-fcra-bill#comments</comments><guid isPermaLink="false">032daf7b-837c-4cd5-b8b3-ce18b80788d0</guid><pubDate>Tue, 11 Aug 2026 08:30:24 +0000</pubDate><atom:updated>2026-08-11T08:30:24.256Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,vanni arasu,FCRA Bill,எப்சிஆர்ஏ மசோதா,வன்னி அரசு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/06vohwhw/vanniarasu.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் வன்னி அரசு ]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் வன்னி அரசு ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/06vohwhw/vanniarasu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>FCRA மசோதா எதிர்ப்பு தீர்மானத்தை வரவேற்கிறோம், வாழ்த்துகிறோம் என்று அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.</strong></em></p><p>தமிழக சட்டசபையில் இன்று வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறைப்படுத்தும் திருத்த <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%8F-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE">மசோதாவை</a> தற்போதைய வடிவில் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் தனித்தீர்மானத்தை பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தாக்கல் செய்தார். தனித்தீர்மானத்தை அமைச்சர் வன்னி அரசு வரவேற்றார். அமைச்சர் வன்னி அரசு பேசியதாவது:-</p><p>* FCRA மசோதா எதிர்ப்பு தீர்மானத்தை வரவேற்கிறோம், வாழ்த்துகிறோம். </p><p>* நேற்று தான் சிறுபான்மை அமைப்பினருடன் முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்தோம், இன்று தீர்மானம். </p><p>* கேளுங்கள் கொடுக்கப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என விவிலியத்தில் கூறியதை நிஜத்தில் நிறைவேற்றியுள்ளார் முதல்வர். </p><p>* ஆர்எஸ்எஸ் திட்டங்களை கொண்டு வருவைதை தான் பாஜக அரசு வேலையாக வைத்துள்ளது. </p><p>*  அரசியலமைப்பு சட்டத்தை நீர்த்துப்போக வைப்பது தான் பாஜகவின் வேலை. </p><p>* கிறிஸ்தவர்களை குறிவைத்து தான் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cbi-and-admk-support-to-fcra-bill">FCRA</a> திருத்த மசோதாவை பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. </p><p>* தொண்டு நிறுவனங்களை முடக்க, சொத்துக்களை அபகரிக்க ஏற்கெனவே 4 முறை பாஜக அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. </p><p>* 4 முறை சட்டத்திருத்தம் கொண்டு வந்த பாஜக இப்போது கிறிஸ்தவ அமைப்பை முடக்குவதை நோக்கமாக புதிய சட்டம் கொண்டு வர முயற்சி. </p><p>* காலம் காலமாக கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் கிறிஸ்தவ அமைப்புகள் நடைமுறையில் சிறு தவற செய்தால் சொத்தை முடக்குவதா? </p><p>* கிறிஸ்தவ அமைப்புகளின் சொத்தை முடக்கி அதனை முழுமையாக விற்கக்கூட அரசுக்கு அனுமதி தருகிறது புதிய சட்டத்திருத்த மசோதா. </p><p>* FCRA சட்டத்திருத்தம் மூலம் நாடு முழுவதும் 37 ஆயிரம் அமைப்புகளின் சொத்துக்களை முடக்க பாஜக திட்டம்.</p><p>* புதிய சட்டதிருத்த மசோதா மூலம் இந்தியாவிலேயே தமிழகம் தான் அதிகம் பாதிக்கப்படும். தொண்டு நிறுவனங்களும் அதன் மூலம் செயல்படும் கல்வி நிறுவனங்களும் தமிழ்நாட்டில் தான் அதிகம். </p><p>* தமிழ்நாட்டில் உள்ள 6ஆயிரம் தொண்டு நிறுவனங்களில் 2000-க்கு மட்டும் தான் FCRA பதிவு உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சுமார் 4ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் சொத்துக்களை அபகரிக்க பாஜக காத்திருக்கிறது. </p><p>* கிறிஸ்தவ அமைப்புகளின் சொத்தை முடக்கி அதனை முழுமையாக விற்கக்கூட அரசுக்க அனுமதி தருகிறது புதிய சட்டத்திருத்த மசோதா என்றார். </p>]]></content:encoded></item><item><title>மத்திய அரசின் FCRA மசோதாவிற்கு எதிராக தமிழ்நாடு பேரவையில்  திமுக-ஐயுஎம்எல் ஆதரவு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-iuml-support-against-central-govt-fcra-bill-in-tamil-nadu-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-iuml-support-against-central-govt-fcra-bill-in-tamil-nadu-assembly#comments</comments><guid isPermaLink="false">ab4d9502-93b0-4ce2-862b-0b4751825ff3</guid><pubDate>Tue, 11 Aug 2026 08:25:08 +0000</pubDate><atom:updated>2026-08-11T08:25:08.966Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,IUML,TNAssembly,ஐயுஎம்எல்,FCRA,தமிழ்நாடு பேரவை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/6gqbiy8t/dmk.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DMK and IUML ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/6gqbiy8t/dmk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ள வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத் திருத்த (FCRA) மசோதாவைக் கண்டித்தும், அதைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தனித் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து, திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் பேசினார்.</p><p>மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த FCRA திருத்த மசோதா, குறிப்பாகச் சிறுபான்மையினரால் நடத்தப்பட்டு வரும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சேவை அமைப்புகளின் செயல்பாடுகளை முடக்கும் மிகப்பெரிய தாக்குதலாகும். </p><p>இந்த மசோதாவால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து 16 சிறுபான்மை நல அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் சென்று, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஆர்.வில்சன் மற்றும் பிரதிநிதிகள் குழு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துப் பேசித் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.</p><h2>அமலாக்<strong>கத்துறை போ</strong>ல் செயல்படும் FCRA</h2><p>தொண்டு நிறுவனங்களை மிரட்டுவதற்கும், அச்சத்திலேயே வைத்திருப்பதற்கும் மத்திய அரசால் அமலாக்கத்துறை எவ்வாறு பயன்படுத்தப்படுகிறதோ, அதே போல் இந்த FCRA சட்டமும் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என குற்றம் சாட்டினார்.</p><p>கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் ஏழை, எளிய மக்களுக்குக் கல்வி, மருத்துவம் மற்றும் சமூகப் பணிகளை ஆற்றி கட்டிக்காக்கப்பட்ட தொண்டு நிறுவனங்கள், மத்திய அரசின் ஒரே ஒரு கையெழுத்தின் மூலம் அவர்களின் கைக்குச் சென்றுவிடும் ஆபத்து இதில் உள்ளது.</p><h2>ச<strong>ட்டப்பூர்வக் கொள்ளை</strong></h2><p>"இது வெறும் சட்டத்தின் பெயரால் துப்பாக்கி முனையில் நடத்தப்படும் கொள்ளை மட்டுமல்ல; சட்டப்பூர்வமாக அரங்கேற்றப்படும் மிகப்பெரிய கொள்ளை" என்று கடுமையாக விமர்சித்த அவர், இந்த ஆபத்தான தீர்மானத்தை மத்திய பாஜக அரசு உடனடியாகத் திரும்பப் பெற தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.</p><h2>ஐயுஎம்எ<strong>ல் ஆதரவு -அமைச்சர்</strong> ஷாஜகான்</h2><p>FCRA திருத்த மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்டசபையில் இயற்றிய தீர்மானத்திற்கு அமைச்சர் ஷாஜகான் ஆதரவு தெரிவித்து பேசியதாவது, தமிழ்நாட்டில் 50% உயர்கல்வி அடைவதற்கு சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்கள் காரணம். வெளிநாடுகளில் இருந்து வரும் நிதி கண்காணிக்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. உயர்கல்வியில் 50% படிக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. </p><p>அதற்கு சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தான் காரணம். முதல்வர், பேரவை தலைவர், அமைச்சர், நான் உள்பட பலர் சிறுபான்மையினரின் கல்வி நிறுவனத்தில் தான் படித்தோம். கல்வி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லம் நடத்துவோர் கலங்கிப்போய் உள்ளனர். FCRA திருத்த மசோதா சட்டமானால் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். மத்திய அரசின் நோக்கம் நாட்டை வளர்ச்சி நோக்கி கொண்டு செல்வதா? சிறுபான்மை நிறுவங்களை முடக்குவதா? என அமைச்சர் ஷாஜகான் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>FCRA மசோதாவுக்கு எதிரான தீர்மானம்: சிபிஐ, அதிமுக ஆதரவு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cbi-and-admk-support-to-fcra-bill</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cbi-and-admk-support-to-fcra-bill#comments</comments><guid isPermaLink="false">f090ea36-bb69-47b9-904a-110aaeefe2e6</guid><pubDate>Tue, 11 Aug 2026 08:11:03 +0000</pubDate><atom:updated>2026-08-11T08:11:03.853Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,FCRA Bill,எப்சிஆர்ஏ மசோதா,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/pldxwdtx/FCRA.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ FCRA மசோதா]]></media:title><media:description type="html"><![CDATA[ FCRA மசோதா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/pldxwdtx/FCRA.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட FCRA மசோதாவை எதிர்க்கும் தீர்மானத்திற்கு சிபிஐ, அதிமுக, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.</strong></em> </p><p>தமிழக சட்டசபையில் இன்று நீட் தேர்வுக்கு எதிராக தனித்தீர்மானம் கொண்டு வந்து உறுப்பினர்களின் ஆதரவோடு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. </p><p>இதனை தொடர்ந்து, வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறைப்படுத்தும் திருத்த <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%8F-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE">மசோதாவை</a> தற்போதைய வடிவில் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் தனித்தீர்மானத்தை பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தாக்கல் செய்தார். தனித்தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் விவாதம் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு:-</p><p>நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajmohan-moved-a-special-resolution-against-the-fcra-act">FCRA</a> மசோதாவை எதிர்க்கும் தீர்மானத்திற்கு சிபிஐ ஆதரவு தெரிவித்தது. </p><h2><strong>பாஜக எதிர்ப்பு</strong></h2><p>நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட FCRA மசோதாவை எதிர்க்கும் தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பதாக எம்எல்ஏ போஜராஜன் தெரிவித்தார். இதுதொடர்பாக போஜராஜன் பேசுகையில், </p><p>FCRA வேண்டாம் என சொல்லவில்லை. திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியதால் தான் மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. நல்ல சமூக திட்டங்களுக்காக வரும் பணத்திற்கு மத்திய அரசு எதிர்ப்பு இல்லை, அதனை வரைமுறைப்படுத்துவதே நோக்கம் என்றார்.</p><h2><strong>ஆதரவு</strong></h2><h2><strong>அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி</strong></h2><p>FCRA தீர்மானத்திற்கு அ.தி.மு.க. ஆதரவு தெரிவிக்கிறது. வெளிநாட்டில் இருந்து வரும் பணம் முறையாக செலவழிக்கப்படுகிறதா? என கண்காணிக்கவே மசோதா. FCRA பதிவு புதுப்பிக்கப்படவில்லை என்றால் சொத்துகள் அரசின் கட்டுப்பாட்டில் செல்லும் அபாயம் உள்ளது. நேர்மையாக நடத்தப்படும் நிறுவனங்கள் நடைமுறை சிக்கல்களால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றார். </p><h2><strong>மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா</strong></h2><p>நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட FCRA மசோதாவை எதிர்க்கும் தீர்மானத்திற்கு மனித நேய மக்கள் கட்சி ஆதரவு. தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களை கண்காணிக்க வருமான வரித்துறை இருக்கும்போது FCRA எதற்கு? FCRA சட்டமே தேவையற்றது. அதில் சட்டத்திருத்தமும் தேவையற்றது என்றார். </p>]]></content:encoded></item><item><title>FCRA திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்தார் அமைச்சர் ராஜ்மோகன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajmohan-moved-a-special-resolution-against-the-fcra-act</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajmohan-moved-a-special-resolution-against-the-fcra-act#comments</comments><guid isPermaLink="false">bed6abe2-3edf-4b93-bf1a-e0449200e5ad</guid><pubDate>Tue, 11 Aug 2026 07:52:39 +0000</pubDate><atom:updated>2026-08-11T07:52:39.756Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,FCRA Bill,எப்சிஆர்ஏ மசோதா,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/0iwx27he/raj.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minster Raj Mohan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/0iwx27he/raj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில், வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானத்தை அமைச்சர் ராஜ்மோகன் முன்மொழிந்தார். அப்போது அவர் பேசியதாவது:</p><h2>FCRA மசோதாவை திரும்பப்பெற வேண்டும்</h2><p>FCRA விதிமுறைகள் தொண்டு நிறுவனங்களின் தன்னாட்சி, சிறுபான்மையினர் கல்வி நிறுவன செயல்பாட்டை பாதிக்கும்.</p><p>மத, கல்வி, மருத்துவ, சமூக அமைப்புகள், மாநில அரசுகளுடன் மத்திய அரசு விரிவான ஆலோசனை நடத்தவேண்டும்.</p><p>FCRA திருத்த சட்டத்தால் சிறுபான்மையினர் பாதிக்கப்படுவர்.</p><p>FCRA மசோதாவை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.</p><p>FCRA திருத்த மசோதாவிற்கு எதிராக தவெக அரசு மத்திய அரசை வலியுறுத்தும்.</p><p>மத்திய அரசு கொண்டுவந்த FCRA திருத்த மசோதாவுக்கு தமிழ்நாடு அரசு கடும் ஆட்சேபணை தெரிவிக்கிறது என தெரிவித்தார்.</p><h2>பிரேமலதா விஜயகாந்த்</h2><p>இந்த தீர்மானம் தொடர்பாக தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:</p><p>இன்று 2 முக்கியமான தீர்மானங்கள் அவையில் நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு தேமுதிக சார்பில் நன்றி.</p><p>நேரலையில் பேரவை நிகழ்வை காண்பிக்க வேண்டுமென கேப்டன் விஜயகாந்த் கோரிக்கை வைத்த நிலையில் இன்று நிறைவேற்றப்பட்டு உள்ளது.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து நேற்று இயற்றப்பட்ட தீர்மானத்திற்கும் தேமுதிக சார்பில் ஆதரவு.</p><p>தமிழ்மொழி தவிர வேறு எந்த மொழியிலும் நடிக்காதவர், கேப்டன் விஜயகாந்த் தமிழ் மொழி மட்டுமே பேசினார்.</p><p>இலங்கைவாழ் தமிழர்களுக்கும் தமிழ்த்தாய் வாழ்த்து உரித்தாகும்.</p><p>நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தனித்தீர்மானத்திற்கு தேமுதிக ஆதரவு.</p><p>நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவின் இறுதிச்சடங்கில் தகனமேடைக்கு அருகே நின்று அஞ்சலி செலுத்தினார் கேப்டன்.</p><p>FCRA பணம் புறவாசல் வழியாக வந்துவிடாமல் தவெக அரசு பார்த்துக்கொள்ள வேண்டும்.</p><p>தவறான வழியில் தமிழகத்தில் நுழையும் பணத்தை கட்டுப்படுத்துவதில் அரசு கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item></channel></rss>