<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 07 Sep 2026 09:12:35 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: முதலமைச்சர் பேசியது எதற்கும் ஆதாரம் கிடையாது..!- உதயநிதி- 07 செப். 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-07-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-07-september-2026#comments</comments><guid isPermaLink="false">8c774a06-0db5-4dde-8aa8-7f7fb7910b2b</guid><pubDate>Mon, 07 Sep 2026 03:57:28 +0000</pubDate><atom:updated>2026-09-07T08:59:42.989Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly,tvk</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/bazo2c3e/Udhay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay- Udhayanithi stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/bazo2c3e/Udhay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சாலை ஓரங்களில் நடைபாதை இல்லை. ஆனால், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 10 அடி அகலத்திற்கு கான்கிரீட் போட்டு நடைபாதை அமைத்துள்ளார்கள். தண்ணீர் செல்லும் பாதையை அடைத்து, 10 அடி உயரத்திற்கு கான்கிரீட் சுவர் அமைத்துள்ளார்கள்- சௌமியா அன்புமணி</p><p>பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி பேசும்போது, மானியக் கோரிக்கைகள் மீது விரிவாகப் பேசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடுகிறார். அதனால், காலம் போவதே தெரியவில்லை. வாழ்த்துகள் என மாற்று சபாநாயகரும், தஞ்சை சட்டமன்ற உறுப்பினருமான விஜய் சரவணன் புகழாரம் சூட்டினார்.</p><p>திருவண்ணாமலை மாவட்டம் மதுரா கிருஷ்ணாவரம் கிராமத்தில், வழியில் கிணறு உள்ளதால், சுடுகாடு வழியாகவே மக்கள் சென்று வருகின்றனர். இதனால், அந்த ஊரில் பெண் கொடுப்பதற்கும், பெண் எடுப்பதற்கும் மக்கள் தயங்குகின்றனர்- ஆரணி அதிமுக MLA ஜெயசுதா பேசியதும் மேஜையை தட்டி சிரித்த பாமக MLA கணேஷ்குமார்.</p><p>தொழிற்சாலைகளில் வேலை கொடுக்கிறார்கள். மாதம் ரூ.2 லட்சம் சம்பளம் கொடுப்பார்களா? ஏனென்றால், புற்றுநோய் சிகிச்சைக்கு ரூ.2 லட்சத்துக்கும் மேல் செலவாகலாம். இதுதான் வளர்ச்சியா? மக்களின் உயிரைப் பணயம் வைத்து தொழிற்சாலைகளும் வளர்ச்சியும் தேவையா?-  சௌமியா அன்புமணி</p><p>குழந்தைக்குக் கொடுக்கும் தாய்ப்பாலில் டையாக்சின் உள்ளது என பள்ளிக்கரணையில் கூறுகிறார்கள். கடலூரில் இளநீரில் டையாக்சின் இருப்பதாகக் கூறுகிறார்கள். இதையெல்லாம் ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.</p><p>'வளர்ச்சி, வளர்ச்சி' என்று கூறி புற்றுநோயை வளர்த்து வைத்துள்ளோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் புற்றுநோய்க்கு தனி மருத்துவமனை வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறோம். இதற்கு காரணம் இப்படிப்பட்ட வளர்ச்சிதான்- பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் சௌமியா அன்புமணி.</p><p>காற்று, நீர், ஒலி சார்ந்த சுற்றுச்சூழல் அளவுருக்களை நிகழ்நேரத்தில் கண்காணிக்க, தொழிற்சாலை ஆய்வுகள், மாசுபாடு தொடர்பான நிகழ்வுகள், பொதுமக்கள் புகார்களின் போது விரைவான அறிவியல் அடிப்படையிலான மதிப்பீடு செய்து நடவடிக்கை மேற்கொள்ள, நவீன சுற்றுச்சூழல் பகுப்பாய்வுக் கருவிகள் பொருத்தப்பட்ட 5 நடமாடும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு வாகனங்கள் ரூ.7.50 கோடி மதிப்பீட்டில் இயக்கப்படும்- சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் ராஜீவ்.</p><p>தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் காற்று தர கண்காணிப்பை வலுப்படுத்தும் நோக்கில், மாநிலம் முழுவதும் 80 இடங்களில் உணரிகை (சென்சார்) அடிப்படையிலான தொடர் சுற்றுப்புற காற்று தர கண்காணிப்பு நிலையங்கள் ரூ.8 கோடியில் நிறுவப்படும்- தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் டாக்டர் வே.க. ராஜீவ்.</p><p>சார்பதிவாளர் அலுவலகங்கள் இனி வார நாட்களில் மட்டும் செயல்படும் வருகையில்லா ஆவணப்பதிவு விரிவாக்கம் செய்யப்படவுள்ளதால், சார்பதிவாளர்களின் வேலைப்பளுவைக் குறைக்கும் நோக்கில், சனிக்கிழமைகளில் செயல்படும் 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் இனி வார நாட்களில் மட்டும் செயல்படும்.</p><p>சனிக்கிழமை கட்டாயப்பணி முறை கைவிடப்படும்- அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன்.</p><p>"இந்து சமய அறநிலையத் துறை மற்றும் வக்ஃபு வாரியம் தெரிவிக்கும் தடைசெய்யப்பட்ட நில விவரங்கள் STAR-ல் பதிவேற்றம் செய்யப்படும்.</p><p>மோசடி பதிவுகளைத் தடுக்கவும், பதிவுகளைப் பாதுகாக்கவும் API இணைப்பு வழங்கப்படும். மேலும், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் மற்றும் வக்ஃபு வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆகியோர் STAR இணையதளத்தில் நேரடியாக நிலப் பதிவுகளை உள்ளீடு செய்யும் வசதி ஏற்படுத்தப்படும்"-அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன்</p><p>வனத்துறையின் பல்வேறு நிலையில் பணியாற்றி வரும் சுமார் 6,260 சீருடை பணியாளர்கள் (Frontline Staff), பணியில் இருக்கும் போது சீருடை அணிந்த நிலையில் பேருந்துகளில் பயணிக்க, ஒரு பணியாளருக்கு மாதத்திற்கு ரூ.200 என்ற சலுகைக் கட்டணத்தில் ரூ.1.50 கோடி செலவில் பேருந்து பயண அட்டை, ஸ்மார்ட் அடையாள அட்டையாக (Smart Identity Card) வழங்கப்படும்- அமைச்சர் ரஞ்சித் குமார் </p><p>ஊழலுக்கு எதிரான, ஊழலில் ஊறித் திளைத்தவர்களைத் தோலுரித்துக் காட்டியதுமான அற்புதமான உரையாக முதலமைச்சர் விஜய்யின் உரை அமைந்தது- சட்டசபையில் காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன்.</p><p>ஆவணங்களை நேரில் தாக்கல் செய்ய தேவையில்லை. இணையவழியில் ஆவணங்களை பதிவேற்றம் செய்த பிறகு, சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் சென்று புகைப்படம் மற்றும் கைரேகை மட்டும் வழங்கினால் போதும்.</p><p>பதிவு முடிந்ததும் ஆவணம் இணையவழியில் . Settlement, Release, Partition, Revocation Settlement உள்ளிட்ட குடும்ப ஏற்பாடு ஆவணங்கள் 15.10.2026 முதல் காகிதமில்லா முறையில் மட்டுமே பதிவு செய்யப்படும்- அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன்</p><p>நாளைய தீர்ப்பை கேட்டவர் அல்ல, இன்றைய தீர்ப்பை எழுதியவர். கில்லியாக களம் கண்டவர், இன்று மக்கள் மனதில் தடம் பதித்தவர். துப்பாக்கி சத்தம் தேவையில்லை, அவர் சொல் ஒன்று போதும் தீப்பொறி பறக்க. மாஸ்டராய் திரையில், நம் வாத்தியார் வழியில் வந்த நம் அன்பு வாத்தியார்- தவெக அண்ணாநகர் எம்எல்ஏ ராம்குமார்</p><p>"போலி இறப்பு மற்றும் வாரிசுரிமைச் சான்றிதழ்கள் மூலம் நடைபெறும் மோசடி பதிவுகளைத் தடுக்க, சான்றிதழ் எண்கள் API மூலம் நிகழ்நேரத்தில் சரிபார்க்கப்படும். இதனால் பதிவு சேவைகள் விரைவுபடுத்தப்பட்டு, போலி ஆவணப் பதிவுகள் தடுக்கப்படும்"- அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன்</p><p>"மாநிலத்தில் முதலாம் விற்பனை நிலையில் மதிப்புக் கூட்டு வரி செலுத்திய பின்னர் பெட்ரோல் மற்றும் டீசல் மறுவிற்பனை செய்யும் சில்லறை விற்பனை நிலையங்கள் சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் கீழ் பதிவு பெற்று இருப்பின், தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரிச் சட்டத்தின் கீழ் பதிவு பெறுவதிலிருந்து விலக்களிக்கப்படும்"- வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் அறிவிப்பு.</p><p>மாற்று சபாநாயகராக தஞ்சாவூர் தவெக சட்டமன்ற உறுப்பினர் விஜய் சரவணன் அமர்ந்த போது, எதிரில் அமர்ந்திருந்த முதல்வர் விஜய்க்கு வணக்கம் தெரிவிக்க, பதிலுக்கு முதல்வர் விஜய்யும் புன்னகைத்தபடி அவருக்கு பதில் வணக்கம் வைத்து, 'எப்படி..' என கண் அசைவில் கேட்க, சபை முழுக்க மேஜையை தட்டி தவெகவினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.</p><p>“வரிவிதிப்பு, தணிக்கை மற்றும் திருப்புத்தொகை உள்ளடக்கிய வரி செலுத்துவோருக்கான சேவைகளின் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டு வரி நிர்வாகத்தில் 'முகம் அறியாத' நடைமுறை விரிவுபடுத்தப்படும்”- வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன்.</p><p>திமுக, அதிமுக இணைந்து ஆட்சியமைக்க முயற்சி என தவறான தகவல் சொல்கின்றனர். நாங்கள் திமுகவுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை.</p><p>திமுக தீயசக்தி என்று சொன்ன எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார்- அக்ரி கிருஷ்ணமூர்த்தி</p><p>திமுகவினரை போல் கோடிகளை கொட்டி அமைக்கப்பட்ட அரசு இல்லை, கோடிக்கணக்கான மக்களின் விஜய் சர்கார்- ராஜ்மோகன்.</p><p>ஐயுஎம்எல் கட்சியின் மீது தவறான குற்றச்சாட்டை பரப்பி வருகின்றனர். இது மிகவும் தவறு என்று அமைச்சர் ராஜ்மோகன் பேசினார்.</p><p>திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் அக்காட் ஓட்டலில் எம்எல்ஏக்களை தங்க வைத்தவர் யார் என மக்கள் அறிவர்.</p><p>திராவிட முன்னேற்றக் கழகம் தான் குதிரை பேரம் நடத்தியது என விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா குற்றச்சாட்டு.</p><p>தமிழக வெற்றிக் கழகம் மீது எதிர்க்கட்சியினர் பொய்யான குற்றச்சாட்டை வைத்து சென்றுள்ளனர்.</p><p>ஐயுஎம்எல் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சபையின் வெளியே பொய்யான குற்றச்சாட்டை வைக்கிறார்.</p><p>மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்கி காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி ஒத்துழைப்புடன் தவெகவுக்கு கடிதம் வந்தது.</p><p>எந்த கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களிடமும் தவெக அமைச்சர்கள் யாரும் பேசவில்லை- அமைச்சர் ஆதவ் திட்டவட்டம்.</p><p>ஐயுஎம்எல் கட்சியின் 2 சட்டமன்ற உறுப்பினர்களை அடைத்து வைத்து மிரட்டி உள்ளனர்.</p><p>மே 8ம் தேதி இரவு உணவகத்தில் அடைத்து வைத்து மிரட்டல் விடுத்தவர் யார் என்பதை சொல்ல வேண்டிய நிலை வரும்.</p><p>முதலமைச்சர் விஜய் ஆட்சி அமைந்துவிடக்கூடாது என்று திமுக ஒரு முடிவு சொன்னது, பின்பு மற்றொரு முடிவு சொன்னது.</p><p>2 எம்எல்ஏக்களை ஓட்டலில் அடைத்தது யார் என்று உடைத்து பேசினால், அது தமிழக அரசியலுக்கு நல்லதல்ல- அமைச்சர் ஷாஜகான்.</p><p>“திருவண்ணாமலை பொதுக்குழுவில் நான் தவறாக பேசியதாக சித்தரிக்கிறார்கள். எங்கள் தலைவர் சொன்னதை தான், நான் பேசினேன். திமுகவும் அதிமுகவும் இணைந்து முதல்வரை தேர்வு செய்ய முயன்றார்கள் என்று கூறியதை தான் நான் சொன்னேன். தரகர்கள் பலரும் சுயநலத்திற்காக பேரம் பேசியிருப்பார்கள்”- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ சையது பரூக்.</p><p>கேப்டன் விஜயகாந்தை எப்படியெல்லாம் சங்கடத்திற்கு உள்ளாக்கினரோ அதே வேலையை தான் இப்போதும் செய்கின்றனர். </p><p>கேப்டன் குறித்து தவறான தகவல் பரப்பியோர்போல் இப்போதும் திமுகவினர் ஃபேக் ஐடி உருவாக்கி செயல்படுகின்றனர்- அமைச்சர் நிர்மல் குமார்.</p><p>திமுகவினர் போலி கணக்கு மூலம் தவெக பெயரில் சமூக ஊடக கணக்குகள் தொடங்கி அவதூறு பரப்புகின்றனர்.</p><p>தவெகவினர் உள்ளிட்ட யாராக இருந்தாலும் பெண்களை அவதூறாக பேசினால் நடவடிக்கை என்றுதான் முதலமைச்சர் கூறியுள்ளார்- அமைச்சர் நிர்மல் குமார்.</p><p>சமூக ஊடகங்களில் பெண்கள் குறித்து விமர்சிக்கும் தவெகவினரும் உள்ளனர், அவர்களையும் கண்டிக்க வேண்டும்- தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா.</p><p>பெண்களை விமர்சித்து பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய முதலமைச்சருக்கு வரவேற்பு- பிரேமலதா.</p><p>"சட்டம் ஒழுங்கு பிரச்சினையில், ஜாதி மறுப்பு திருமணமும் காரணமாக இருப்பதாக முதல்வர் பேசினார். சமூக பிரச்சினையான கலப்பு திருமணம் தொடர்பான முக்கிய கருத்தை தெரிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்"- முதல்வர் விஜய்யின் பதிலுரைக்கு அமைச்சர் வன்னிஅரசு நன்றி</p><p>முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி என்று சொல்வது போல் அம்மா ஜெயலலிதா எனச் சொல்ல வேண்டும் என வேலுமணி கோரிக்கை வைத்தார்.</p><p>முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என்று சொல்வதனால் அவர்களை குறைத்து மதிப்பிடுவதாக எண்ண வேண்டாம்- வன்னி அரசு.</p><p>பஞ்சமி நிலங்களை கண்டறிய ஏற்கனவே இருந்த ஆணையத்தைவிட சிறப்பான ஆணையம் அமைக்கப்படும்- அமைச்சர் வன்னிஅரசு.</p><p>திமுகவினர் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடக்கலாம். அவற்றை சட்டரீதியாக சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்- உதயநிதி ஸ்டாலின்</p><p>முதலமைச்சர் பேசியது ஆதாரம் கிடையாது, அமலாக்கத்துறை, சர்காரியா ஆவணம் அனைத்தும் குற்றச்சாட்டு தான்.</p><p>கோடி கோடியாக பணத்துடன் வந்து எந்த அமைச்சர் பதவி வேண்டும் எனக் கேட்டதாக ஐயுஎம்எல் எம்எல்ஏ பேசியுள்ளார்.</p><p>திமுக மீதான ஊழல் புகார் நிரூபிக்கப்பட்டதா? ஊழல் புகாரில் தண்டிக்கப்பட்டவர் யார் என்று உங்களுக்கே தெரியும்- உதயநிதி ஸ்டாலின்.</p><p>கனிமவளத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள விஷ்ணு ரெட்டி உள்ளிட்டோர் என்ன பொறுப்பில் உள்ளனர்?</p><p>ஒருதலை பட்சமாக செயல்பட்ட சட்டசபை தலைவருக்கு திமுக சார்பில் கண்டனம் தெரிவிக்கிறோம். சினிமா சூட்டிங் டயலாக் போல முதலமைச்சர் பேசிக் கொண்டிருந்தார். அதனால் தான் தொடர்ந்து கோஷம் போட்டோம்.</p><p>முதலமைச்சர் விஜய் பேசும்போது சபாநாயகர் எங்கள் பக்கம் திரும்பக்கூடவில்லை. தவெக அரசுக்கும் முதலமைச்சர் விஜய்க்கும் சபாநாயகர் ஜால்ரா அடித்துக் கொண்டே இருந்தார்- உதயநிதி ஸ்டாலின்.</p><p>வழக்கு நிலுவையில் உள்ள விஜயபாஸ்கர், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்டோரை உடன் சேர்த்து வைத்துள்ளார் முதலமைச்சர் விஜய்.</p><p>எங்களை மிரட்டுவதற்காக லஞ்ச ஒழிப்புத்துறை வைத்து கே.என்.நேரு வீட்டில் ரெய்டு நடத்தினார்கள்.</p><p>முதல்வரின் நண்பர்கள், அவர்களுடைய ஆலோசகர் விஷ்ணு ரெட்டி, அவரது உறுப்பினர்கள் கனிமவளத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்- உதயநிதி ஸ்டாலின்</p><p>திரைப்பட ரிலீஸ்க்காக கொடநாடு சென்று வாட்ச்மேன் வேலை பார்த்தவர் முதலமைச்சர் விஜய்.</p><p>ரூ.15 கோடி வருமானத்தை மறைத்ததாக முதலமைச்சர் விஜய் மீது வழக்கு உள்ளது.</p><p>பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் மீதும் வழக்கு உள்ளது-  உதயநிதி ஸ்டாலின்.</p><p>திமுகவினர் மீது வழக்கு இருந்தால் நடவடிக்கை எடுங்கள் என்ற தான் நாங்களும் கூறுகிறோம்.</p><p>நேற்று நடந்த கொலை பற்றி பேசும்போது 1970-களுக்கு செல்கிறார், சர்காரியா கமிஷனுக்கு செல்கிறார் முதலமைச்சர்.</p><p>முதலமைச்சர் விஜய் அரசியலுக்கு வந்து ஆட்சியை பிடித்தது ஒரு பெரிய விபத்து, அவருக்கு மிசாவை பற்றி பேச தகுதியில்லை- உதயநிதி ஸ்டாலின்.</p><p>மனப்பாடம் செய்து ஒப்பிவித்தல் போட்டியைபோல் தவறான கருத்துக்களை ஒப்புவித்துள்ளார் முதலமைச்சர் விஜய்.</p><p>பஞ்ச் டயலாக் என ரீல்ஸ்க்காக மட்டுமே இன்றும் முதலமைச்சர் விஜய் பேசியுள்ளார்.</p><p>பஞ்ச் டயலாக் மற்றும் டைவர்ஷன் டேக்டிக்ஸ் மட்டுமே பயன்படுத்துகிறார் முதலமைச்சர் விஜய்- உதயநிதி ஸ்டாலின்</p><p>முதலமைச்சர் பேசி முடித்ததும் விளக்கம் அளிக்க அனுமதிக்குமாறு நாங்கள் கோரிக்கை வைத்தோம். </p><p>பேச அனுமதிப்பேன் என கூறிய சபாநாயகர் மீண்டும் யாருடைய அழுத்தத்தினாலோ என்னமோ அனுமதியை மறுத்துவிட்டார்.</p><p>திங்கள்கிழமை பதிலளிப்பதாக சொல்லி கடந்த வியாழக்கிழமை ஓடிவிட்டார் முதலமைச்சர் விஜய்- உதயநிதி ஸ்டாலின்</p><p>சட்டசபையில், முதலமைச்சர் விஜய் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை வைத்து பேசினார். </p><p>தற்போது திமுக ஆட்சி நடைபெறவில்லை, தவெக ஆட்சி நடைபெறுவதை நீங்கள் நம்புங்கள் என நான் ஏற்கனவே சொல்லியிருந்தேன்.</p><p>முதலமைச்சருக்கு 15 கேள்விகளை முன்வைத்திருந்தேன். ஒரு கேள்விக்கு கூட பதில் அளிக்கவில்லை- உதயநிதி ஸ்டாலின்.</p><p>சட்டசபையில் பேச அனுமதி மறுப்பதாக குற்றம்சாட்டி வெளிநடப்பு செய்த நிலையில் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.</p><p>சட்டசபைக்கு நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த திமுக உறுப்பினர்களை சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்த அதிமுக சட்டமன்ற குழு தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.</p><p>கவிஞர் கண்ணதாசன் திமுகவை பற்றி Short &amp; Sweetஆ ஒன்னு சொன்னாரு 'பேசிப்பழகிய பொய், வாங்கிப் பழகிய கை, போட்டுப் பழகிய பை' இதுதான் திமுக.. இவ்ளோதான் திமுக- பதிலுரையின்போது முதல்வர் விஜய் பேச்சு.</p><p>சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அறையில், அவர் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை.</p><p>வன உயிரினங்களால் ஏற்படும் பல்வேறு வகையான சேதங்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையானது சேதத்தின் தன்மைக்கேற்ப, அந்த இழப்பிற்கு உரிய நிவாரணமாக அமையும் வகையில் உயர்த்தி நிர்ணயிக்கப்படும்- அமைச்சர் ரஞ்சித் குமார்</p><p>தமிழ்நாட்டின் மாநில மரமான பனைமரத்தின் மரபணு பண்புகளை வகைப்படுத்துதல் மற்றும் மரபணு மேம்பாடு ஆகியவற்றை மேற்கொள்ளும் நோக்கில், "தமிழ்நாடு பனைமர மரபணு பாதுகாப்பு மற்றும் மரபணு மேம்பாட்டுத் திட்டம்" ரூ.50 லட்சத்தில் செயல்படுத்தப்படும்- அமைச்சர் ரஞ்சித் குமார்</p><p>வன விலங்குகளுக்கு ஏற்படும் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து நோய்பரவலைத் தடுக்க, வனவிலங்குகளைப் பாதுகாக்க, வனவிலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்களை (Zoonotic Diseases) தடுக்க, நடமாடும் வனவிலங்கு தடயவியல் மற்றும் நோய்கண்டறியும் ພໍ (Mobile Wildlife Forensic and Disease Diagnostic Laboratory) ரூ.1 கோடி செலவில் தென் தமிழ்நாட்டில் தயார் நிலையில் வைக்கப்படும்-அமைச்சர் ரஞ்சித் குமார்.</p><p>தமிழ்நாடு முழுவதும் கிராமப்புற, நகர்ப்புற மற்றும் நகரை ஒட்டிய புறநகர்ப் பகுதிகளில், அரசு, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பிற நிறுவனங்களுக்குச் சொந்தமான நிலங்களில் தலா ஒரு ஹெக்டேர் பரப்பளவில் 25 இயற்கைப் பூங்காக்கள் (Nature Parks) உருவாக்கப்படும். இத்திட்டத்திற்காக ரூ.10 கோடி செலவிடப்படும்-  வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார்</p><p>5 ஆண்டுகளில் தமிழ்நாடு வனத்தீ மேலாண்மைத் திட்டம் ரூ.60.58 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்- அமைச்சர் ரஞ்சித்குமார்.</p><p>தொடர்ந்து பேசிய தமிழ்நாடு வனப்படை ரூ.100.72 கோடியில் மறுசீரமைப்பு செய்து வலுப்படுத்தப்படும் என அமைச்சர் ரஞ்சித்குமார் அறிவிப்பு.</p><p>என்னை நிர்பந்தம் செய்வதுபோல் திமுகவினர் நடந்து கொள்வதால் சபையில் பேச அனுமதிக்க முடியாது- சபாநாயகர்.</p><p>சட்டசபையில் பேச அனுமதி மறுக்கப்படுவதை கண்டித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு.</p><p>எதிர்கட்சித் தலைவர் உதயநிதி பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததை அடுத்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.</p><p>தொடர்ந்து திமுக அமளியில் ஈடுபட்டிருந்த நிலையில், திமுக உறுப்பினர்கள் பேச மீண்டும் அனுமதி மறுத்தார் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்.</p><p>திமுக உறுப்பினர்கள் பேசுவதற்கு அனுமதிக்குமாறு முதலமைச்சர் விஜய் சொல்லியுள்ளார். அமைதியாக இருக்கையில் அமருங்கள்- சபாநாயகர்.</p><p>திமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட நிலையில் எதிர்கட்சியினர் பேச அனுமதியுங்கள் என முதலமைச்சர் விஜய் கோரிக்கை.</p><p>திமுக உறுப்பினர்கள் பேசுவதற்கு அனுமதிக்குமாறு முதலமைச்சர் விஜய் சொல்லியுள்ளார்- சபாநாயகர்.</p><p>சட்டமன்ற நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் திமுக உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அவை முன்னவர் பரிந்துரை.</p><p>முதலமைச்சர் பதிலுரையின்போது அமைதியாக இருந்திருந்தால் பேச அனுமதித்து இருப்பேன்- சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்.</p><p>சட்டசபையில் பேச அனுமதி கோரி அமளியில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏக்கள சபாநாயகர் இருக்கை முன்பாக அமர்ந்து தர்ணா.</p> <p>பேச அனுமதி மறுப்பதாக குற்றம்சாட்டி திமுக எம்எல்ஏக்கள் இருக்கையில் இருந்து எழுந்து நின்று குரல் கொடுத்து தொடர் அமளி.</p><p>எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனுமதியின்றி போஸ்டர் காட்டுவது குரல் கொடுப்பதை ஏற்க முடியாது- சபாநாயகர்.</p><p>முதலமைச்சர் விஜய் பதிலுரை அளித்தபோது அமைதியாக இருந்து கேட்டிருக்க வேண்டும் என எதிர்க்கட்சியினருக்கு சபாநாயகர் கண்டிப்பு.</p><p>எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பு குரலை பார்த்து சிரித்தவாறே பதிலுரையை முதலமைச்சர் விஜய் முடித்தார்.</p><p>பல்லாவரம் முன்னாள் எம்எல்ஏ மகன் வீட்டில் வேலைபார்த்த பெண் பாதிக்கப்பட்டபோது உடனடி நடவடிக்கை இல்லை.</p><p>தவெக ஆட்சியில் குற்றம் செய்வோர் மீது கட்சி பாகுபாடின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது- முதலமைச்சர் விஜய்.</p><p>ஆளுங்கட்சியினர் தொடர்புடைய வழக்கில் காலதாமதம், திமுக நிர்வாகிகள் காப்பாற்றப்பட்டது என பெரிய பட்டியல் உள்ளது- முதலமைச்சர் விஜய்.</p><p>திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினர் தரன் மனைவி சிவசங்கரி காவல் ஆய்வாளரை கன்னத்தில் அறைந்தார்.</p><p>கோவில் ஊழியர் மட்டும் கைது செய்யப்பட்டார். ஆய்வாளரை அறைந்த குற்றவாளி ஜாமின் பெற திமுக உதவியாக இருந்தது- முதலமைச்சர் விஜய்.</p><p>சென்னை விருகம்பாக்கத்தில் 2022ல் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த பெண் காவலரிடம் அத்துமீறல்.</p><p>பெண் காவலரின் புகாரை வாபஸ் பெற பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. 2023-ல் தான் வழக்கு பதிவு செய்யப்பட்டது- முதலமைச்சர் விஜய்.</p><p>தவெக ஆட்சியில் ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் உடனடி சட்ட நடவடிக்கை.</p><p>திமுக ஆட்சிக்காலத்தில் பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லை என்று முதலமைச்சர் விஜய் குற்றச்சாட்டு.</p><p>திமுக ஆட்சியில் குற்றங்கள் நடைபெற்றபோது அரசியல் தலையீட்டால் எப்ஐஆர் பதிவதில் கால தாமதம் அனைவரும் அறிந்ததே.</p><p>கடலூர் எம்.பி சுரேஷ் முந்திரி ஆலையில் பணியாற்றியவர் மரணம், தற்கொலை என சித்தரிப்பு- முதலமைச்சர் விஜய்.</p><p>மக்கள் நலனில் கண்ணும் கருத்துமாக உள்ள தவெக அரசு இனியும் அப்படி தான் இருக்கும்- முதலமைச்சர் விஜய்.</p><p>திமுக ஆட்சிக்காலத்தில் 4 ஆண்டுகள் மடிக்கணினி கொடுக்கவில்லை; ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் மூடப்பட்டது.</p><p>அம்மா மினி கிளினிக், தாலிக்கு தங்கம், அம்மா பைக், ஆடு மாடு வழங்கும் திட்டம் திமுக ஆட்சியில் நிறுத்தம்- முதலமைச்சர் விஜய்.</p><p>திமுக ஆட்சியில் மூடுவிழா கண்ட திட்டங்களுக்கு பட்டியலிட்டால் ஒரு நாளே போதாது.</p><p>திமுக செய்த தவறுகளை மக்கள் நினைவில் வைத்திருப்பதால் தான் தேர்தலில் தகுந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர்- முதலமைச்சர் விஜய்</p><p>ஊழல் செய்வோர் தான் ஆதாரம் கேட்பர், ஊழலே செய்யாதோர் அமைதியாக இருப்பார்கள்.</p><p>திமுக அரசு பொறுப்பேற்றதும் அதிமுக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் எதற்கு ரத்து செய்யப்பட்டது ஏன்?- முதலமைச்சர் விஜய்.</p><p>திமுக இருக்கும் இடத்தில் தான் தவறு நடக்கும், தவறு நடக்கும் இடத்தில் தான் திமுக இருக்கும்- முதலமைச்சர் விஜய்.</p><p>செய்யும் தவரையே முறையாக செய்யும் வகையில் விஞ்ஞான ஊழலில் ஈடுபட்டுள்ளனர். </p><p>மதுபாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.100 வரை கூடுதலாக ஊழல் வசூலித்ததை முறையாக செய்துள்ளனர்- முதலமைச்சர் விஜய்.</p><p>கரூர் கேங்க் என்று என்னவொரு சூப்பர் பெயர் பாருங்களேன், கரூர் கேங்க் தலைவர் யார் என்று தெரிந்துக்கொள்ள மக்கள் ஆவலாக உள்ளனர்- முதலமைச்சர் விஜய்.</p><p>மக்களை ஏமாற்றிய போலி பிம்பம், திமுகவின் பிராண்ட் உடைக்கப்படும். அண்ணா, எம்ஜிஆர், என்டிஆருக்கு பின் விஜய் தான். இறைவனும், இயற்கையும் என்றுமே நம் பக்கம் தான் இருப்பார்கள்- முதலமைச்சர் விஜய். </p><p>ஊழல் செய்வோர் தான் ஆதாரம் கேட்பர், ஊழலே செய்யாதோர் அமைதியாக இருப்பார்கள்- முதலமைச்சர் விஜய்</p><p>திமுக இருக்கும் இடத்தில் தான் தவறு நடக்கும், தவறு நடக்கும் இடத்தில் தான் திமுக இருக்கும்- முதலமைச்சர் விஜய்</p><p>ஆதாரம் வேணும் ஆதாரம் வேணும் என சொல்வோர்களுக்கு தற்போது ஆதாரம் போதுமா? முதலமைச்சர் விஜய் கேள்வி</p><p>மதுபாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.100 வரை கூடுதலாக ஊழல் வசூலித்ததை முறையாக செய்துள்ளனர்- முதலமைச்சர் விஜய்</p><p>செய்யும் தவறையே முறையாக செய்யும் வகையில் விஞ்ஞான ஊழலில் ஈடுபட்டுள்ளனர்- முதலமைச்சர் விஜய்</p><p>திமுகவினர் எப்போது எதை செய்தாலும் குடும்பமாக தான் செய்வார்கள்- முதலமைச்சர் விஜய்</p><p>குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரி ரத்தீஷ் துபாயில் ஒளிந்து கொண்டிருப்பது ஏன்?- முதலமைச்சர் கேள்வி</p><p>முன்னாள் அமைச்சருடன் பல ஐஏஎஸ் அதிகாரிகளும் ஊழலில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை அறிக்கை- முதலமைச்சர் விஜய்</p><p>திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது பதவியை தவறாக பயன்படுத்தினார் என்றும் அறிக்கையில் உள்ளது- முதலமைச்சர் விஜய்</p><p>கட்சி நிதியில் நேரடி பயனாளியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி இருந்ததாக ED அறிக்கையில் உள்ளது- முதலமைச்சர் விஜய்</p><p>7.5 முதல் 10 சதவீதம் வரை கட்சி நிதி திமுக பெற்றதாக அமலாக்கத்துறையை கூறியுள்ளது- முதலமைச்சர் விஜய்</p><p>ஆதாரத்தை பக்கத்திலேயே வைத்துக்கொண்டு தேடுவது தான் திமுகவின் பழக்கம் - முதலமைச்சர் விஜய்</p><p>அரசியல் பாரம்பரியம் தெரியுமா சீனியாரிட்டி தெரியுமா என பேசுவோர் குறித்து தான் மக்களுக்கு எடுத்து சொல்கிறேன். சர்க்காரியா கமிஷன் எழுதிய புத்தகம் சட்டமன்ற நூலகத்தில் உள்ளது, அதை எடுத்து படியுங்கள் - முதலமைச்சர் விஜய்</p><p>25 ஆண்டுகளுக்கு முன்பே கலைஞரின் மருமகன் டெண்ருக்கு ரூ.29 லட்சம் தவணை முறையில் லஞ்சம். கலைஞர் கருணாநிதி மேல் எனக்கு மதிப்பும் மரியாதையும் உள்ளது, நான் அமலாக்கத்துறை அறிக்கை தான் பேசுகிறேன். முதலமைச்சர் பதவியை கலைஞர் கருணாநிதி தவறாக பயன்படுத்தியதாக அமலாக்கத்துறை அறிக்கை அளித்துள்ளது- முதலமைச்சர் விஜய்</p><p>1970 களில் திமுக ஆட்சியில் வீராணம் திட்டத்திற்கு சத்யநாராயண பிரதர்ஸ் டெண்டருக்கு கமிஷன் கேட்டது தொடர்பாக ED அறிக்கை வைத்து முதலமைச்சர் விஜய் பேச்சு</p><p>திமுக ஆட்சிக்காலத்தில் அமலாக்கத்துறை அனுப்பிய ஆவணத்தை காட்டி முதலமைச்சர் விஜய் சட்டசபையில் ஆவேசமாக பேசி வருகிறார். </p><p>தமிழ்நாடு தான் என் வீடு, 8 கோடி மக்கள் தான் நமக்கு சொந்தங்கள்- முதலமைச்சர் விஜய்</p><p>எதற்கெடுத்தாலும் மிசாவை பார்த்தவங்க என்று பேசி வருகின்றனர், மிசா வரலாறு நமக்கு தெரியும்- முதலமைச்சர் விஜய்</p><p>சட்டசபையில் ஜெயலலிதா பட்ட அவமானங்கள் நமக்கு தெரியும்- முதலமைச்சர் விஜய்</p><p>பழிவாங்கும் எண்ணத்தில் நான் அரசியலுக்கு வரவில்லை, அப்படி நினைத்தால் அதற்கு நான் பொறுப்பில்லை- முதலமைச்சர் விஜய்</p><p>பெண்கள் குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசுவதை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்- முதலமைச்சர் விஜய்</p><p>ஒரு எம்எல்ஏ ஆர்தோ சர்ஜன் போல் பேசுகிறார், சட்டமன்றத்தில் எலும்பை உடைப்பாராம்- முதலமைச்சர் விஜய்</p><p>பெண்கள் உட்பட அனைவரையும் தரம் தாழ்ந்து பேசுவதை தவிர்க்க வேண்டும்- முதலமைச்சர் விஜய்</p><p>கருத்துரிமை, பேச்சுரிமையை எந்த அளவுக்கு பயன்படுத்துகிறார்கள் என்பதை யோசிக்க வேண்டும்- முதலமைச்சர் விஜய்</p><p>அரசியலுக்காக தனிப்பட்ட முறையில் பெண்களை தரம் தாழ்ந்து பேச வேண்டாம் என முதலமைச்சர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். </p><p>காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை துறை வாரியாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்- முதலமைச்சர் விஜய்</p><p>குற்றம் தெருவில் மட்டுமல்ல இணையத்திலும் நடைபெறுவதால் குற்றம் நடக்கும் முன்பே கண்டறிந்து தடுப்பது அவசியம்- முதலமைச்சர்</p><p>காவல்நிலையத்தில் உயிரிழப்பு என்பது சாதாரணமான நிகழ்வு அல்ல, காவல்துறை மீதான நம்பிக்கையை பாதிக்கும் பிரச்சனை- முதலமைச்சர்</p><p>போதைப்பொருள் தடுப்புப்படை நடவடிக்கைகளால் போதை என்கிற மரத்தின் ஒரு சில கிளைகளை அகற்றி இருக்கிறோம்- முதலமைச்சர் விஜய்</p><p>காவலில் எந்த மரணம் நடைபெற்றாலும் எந்த ஒரு பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்- முதலமைச்சர் விஜய்</p><p>பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக எந்த ஒரு குற்றம் நடைபெற்றாலும் நடவடிக்கை அறிவுறுத்தப்பட்டுள்ளது- முதலமைச்சர் விஜய்</p><p>போதைப்பொருள் கலாச்சாரம் கடந்த ஆட்சியாளர்கள் கவனிக்காமல் இருந்ததால் தற்போது ஆழமாக வேரூன்றி நிற்கிறது- முதலமைச்சர் </p><p>ஊழலற்ற நேர்மையான ஆட்சி செய்வதே தவெக அரசின் நோக்கம், அரசு ஊழியர்கள் ஊழல் செய்வதை ஏற்க முடியாது- முதலமைச்சர் விஜய்</p><p>குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் வலுவான சைபர் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கப்பட வேண்டும்- முதலமைச்சர் விஜய்</p><p>கோவை அமுதன் கொலை, சென்னை தனுஷ்குமார் கொலை சம்பவத்தில் 36 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்- முதலமைச்சர் விஜய்</p><p>குற்றத்திற்கு போதை கலாச்சாரம் காரணம் என ஒற்றை வார்த்தை கூறி தப்பிப்பது நல்ல பண்பு அல்ல- முதலமைச்சர்</p><p>2021 முதல் 2025 வரை நடைபெற்ற குற்றச் சம்பவங்களை கூறி ஒதுங்கிச் செல்ல எனது மனம் இடம் தரவில்லை- முதலமைச்சர் விஜய்</p><p>பள்ளி மாணவர்கள் தொடங்கி அனைவருக்கும் டிஜிட்டல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்- முதலமைச்சர் விஜய்</p><p>ஒவ்வொரு காவல் நிலையங்களும் தங்களுக்கு எல்லைக்குட்பட்ட மக்களின் நெருக்கமான தொடர்பாக ஏற்படுத்த வேண்டும்- முதலமைச்சர் விஜய்</p><p>சொத்து தகராறு, பழிவாங்கும் மனப்பான்மை கூட குற்றத்திற்கான காரணமாக இருக்கலாம்- முதலமைச்சர் விஜய்</p><p>அனைத்து குற்றங்களும் கடந்த 100 நாட்களில் தோன்றியதல்ல- முதலமைச்சர் விஜய்</p><p>ஒவ்வொரு குற்றத்திற்கு பின்னும் குடும்ப பிரச்சனை, போதைப்பொருள் பயன்பாடு இருக்கலாம்- முதலமைச்சர் விஜய்</p><p>எதிர்க்கட்சியினர் கூறிய கருத்தாக இருந்தாலும் அதில் உண்மை உள்ளதா என ஆராய்ந்து சரி செய்வதில் பாகுபாடில்லை- முதலமைச்சர் விஜய்</p><p>யாரிடமும் சார்பின்றி நடுநிலை தவறாது நீதி வழங்குவதே சரியான ஆட்சி என திருவள்ளுவர் கூறியுள்ளார்- முதலமைச்சர் விஜய்</p><p>குற்றவாளி எந்த கட்சியை சேர்ந்தவராயினும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதே த.வெ.க. அரசின் நிலைப்பாடு- முதலமைச்சர் விஜய்</p><p>சட்டத்தை மதித்து நடப்பவர்களுக்கு காவல்துறை உற்ற நண்பராக இருக்க வேண்டும்- முதலமைச்சர் விஜய்</p><p>சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருந்தால் தொழில் முதலீடு வரும், தொழில்கள் முறையாக நடைபெறும்- முதலமைச்சர் விஜய்</p><p>சாலைகள், ஆலைகள் அமைப்பதால் மாநிலத்தின் வளர்ச்சி தீர்மானிக்கப்படுவதில்லை- முதலமைச்சர் விஜய்</p><p>காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்சர் விஜய் பதிலுரை தொடங்கியது.</p><p>2026-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் இரண்டாம் திருத்த சட்டமுன்வடிவை அறிமுகம் செய்தார் அமைச்சர் ஆனந்த்</p><p>எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு கோரி முழக்கம் எழுப்பி வருகின்றனர். </p><p>2026-ம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் அரசினர் சட்ட முன்வடிவு அறிமுகம் செய்தார் அமைச்சர் செங்கோட்டையன்- இதனை தொடர்ந்து சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார். </p><p>3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டசபை இன்று மீண்டும் கூடியது.</p><p>தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து கேள்வி எழுப்புவோம் - திமுக கொறடா எ.வ.வேலு திட்டவட்டம்</p><p>சட்டசபைக்கு உறுப்பினர்கள் வருகை.</p><p>காவல்துறை மானியக்கோரிக்கை மீது முதலமைச்சர் விஜய் பதிலுரை அளிக்க உள்ளார். </p><p>3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது. </p>]]></content:encoded></item><item><title>விடுதலை அடைந்து 80 ஆண்டுகள்: தொடரும் தீண்டாமைப் பேரவலம்! - அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-80-years-since-independence-the-continuing-tragedy-of-untouchability</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-80-years-since-independence-the-continuing-tragedy-of-untouchability#comments</comments><guid isPermaLink="false">c471d204-ac2d-4842-87b8-59a558450115</guid><pubDate>Mon, 07 Sep 2026 09:10:14 +0000</pubDate><atom:updated>2026-09-07T09:10:14.946Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தற்கொலை முயற்சி,தீண்டாமை கொடுமை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/2w31muu6/anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/2w31muu6/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வரையிலும் புகார் அளிக்கப்பட்ட பிறகும் கூட, அதன் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததை ஏற்க முடியாது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க.தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>அநீதிகள்</strong></h2><p>மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கம்பூர் ஊராட்சி மன்றத்தில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வரும் பட்டியலினத்தைச் சேர்ந்த சசிகலா என்பவர் பணியிடத்தில் தமக்கு இழைக்கப்பட்ட தீண்டாமை மற்றும் சாதியக் கொடுமைகள் காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவத்திற்காக மேலூர் அரசு மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், கவலையும் அடைந்தேன். பட்டியலினப் பணியாளருக்கு சாதியின் அடிப்படையில் இழைக்கப்பட்ட அநீதிகள் கண்டிக்கத்தக்கவை.</p><p>தூய்மைப் பணியாளராக பணியாற்றி வரும்  சசிகலா உள்ளிட்ட சில பணியாளர்களுக்கு எதிராக தீண்டாமைக் கட்டவிழ்த்து விடப்பட்டதாகவும்,  ஊராட்சி மன்றத்தில் பயன்படுத்தப்படும் பொதுவான  தேநீர்க் குவளைகளை பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டு, காகிதக் குவளைகளைப் பயன்படுத்தும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. அதுமட்டுமின்றி, கம்பூர் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வரும் பெண்மணியின் காலணியை தூக்கி வரும்படி சசிகலா கட்டாயப்படுத்தப்பட்டதாகவும்  அவரது கணவர் டி.பிரகாஷ்  குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><h2><strong>தற்கொலை முயற்சி</strong></h2><p>கம்பூர் ஊராட்சி மன்றத்தில் தமக்கு  இழைக்கப்படும் தீண்டாமை மற்றும் சாதியக் கொடுமைகள் குறித்து சில மாதங்களுக்கு முன்பே  ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடமும், காவல்துறையிடமும் புகார் அளித்துள்ளார். அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா அவர்களிடமும் சசிகலா புகார் செய்துள்ளார். ஆனால், மாவட்ட ஆட்சியரும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தான் சசிகலா இந்த முடிவுக்கு தள்ளப்பட்டதாக அவரது கணவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p>இந்தியா விடுதலை அடைந்து 80 ஆண்டுகள் ஆகின்றன. பட்டியலின மக்களின் சமூக, பொருளாதார  முன்னேற்றத்திற்காக ஏராளமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  அவர்களின் முன்னேற்றத்திற்காகவும்,  சமூக நல்லிணக்கத்திற்காகவும் அரசு பதவிகளில் இருப்பவர்கள் துணை நிற்க வேண்டும். ஆனால், அவர்களே தீண்டாமை மற்றும் சாதியக் கொடுமைகளை முன்னெடுப்பவர்களாக இருப்பதை அனுமதிக்க முடியாது.</p><p>தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வரையிலும் புகார் அளிக்கப்பட்ட பிறகும் கூட, அதன் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததை ஏற்க முடியாது. தீண்டாமையை அரசே ஊக்குவிக்கிறதோ  என்ற ஐயத்தைத் தான் இந்த நடவடிக்கைகள் ஏற்படுத்துகின்றன.  இது தொடர்பாக தமிழக அரசு விசாரணை நடத்தி,  உண்மை நிலையை  வெளிக்கொண்டு வருவதுடன், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை  எடுக்க வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>தமிழக வனத்துறையை  மேம்படுத்த ரூ.100.72 கோடியில்  திட்டம் - அமைச்சர் ரஞ்சித் குமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-forest-development-scheme-worth-rs-100-72-crore-announced</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-forest-development-scheme-worth-rs-100-72-crore-announced#comments</comments><guid isPermaLink="false">1cd4fa5b-9b31-45a3-98b6-d2f17845614d</guid><pubDate>Mon, 07 Sep 2026 08:45:28 +0000</pubDate><atom:updated>2026-09-07T08:45:28.038Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,வனத்துறை,Forest Department,TN assembly,minister ranjith kumar,அமைச்சர் ரஞ்சித் குமார்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/f5e4b57i/Ranjith-kumar.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Ranjith kumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/f5e4b57i/Ranjith-kumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் வனத்துறை மானிய கோரிக்கை மீதான புதிய அறிவிப்புகளை அமைச்சர் ஆர். வீ.ரஞ்சித் குமார் வெளியிட்டார். </p><p>அந்த அறிவிப்புகள் வருமாறு:-</p><p>வனப்பாதுகாப்பு வன உயிரின மேலாண்மை மனித வனவிலங்கு மோதல் தணித்தல் மற்றும் கள அளவிலான அமலாக்க பணிகளில் அதிகரித்து வரும் சவால்களை எதிர்கொள்ள வனத்துறையை மேம்படுத்தும் நோக்கில் 2026 முதல் 2031 வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாடு வனப் பணி படை ரூ.100.72 கோடி மதிப்பீட்டில் மறு சீரமைக்கப்பட்டு வலுப்படுத்தப்படும்.</p><p>தமிழ்நாடு வனத் தீ மேலாண்மை திட்டம் ரூ 60.58 கோடி மதிப்பீட்டில் 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்.</p><p>வனத்துறையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 1947 சீருடை பணியாளர்களுக்கு 12 கோடி ரூபாய் செலவில் அறிமுக பயிற்சி அளிக்கப்படும்.</p><p>அரசு உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு சொந்தமான நிலங்களில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 25 இயற்கை பூங்காக்கள் அமைக்கப்படும்.</p><p>மாநில வன ஆராய்ச்சி நிறுவனத்தில் மர தடயவியல் மற்றும் மரப்பொருள் பகுப்பாய்வு மையம் மற்றும் ஆராய்ச்சி வசதிகளை 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்படும்.</p><p>நடமாடும் வன உயிரின தடயவியல் மற்றும் நோயை கண்டறியும் ஆய்வகம் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் தென் மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.</p><p>மனித வனவிலங்கு மோதல் மற்றும் வன விலங்குகளால் ஏற்படும் பல்வேறு வகையான சேதங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை உயர்த்தப்படும்.</p><p>பிச்சாவரத்தில் படகு சவாரி செய்வதற்கு இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 சூரிய ஆற்றல் மின்னாற்றலில் இயங்கும் படகுகள் வாங்கப்படும்.</p><p>வனத்துறையில் பணிபுரியும் சுமார் 6260 சீருடை பணியாளர்களுக்கு 1 கோடியே 50 லட்சம் செலவில் இலவச பேருந்து பயண அட்டை, ஸ்மார்ட் அட்டையாக வழங்கப்படும்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தி.மு.க. மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்: முதலமைச்சர் விஜய் பரபரப்பு குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-indictment-dmk-4</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-indictment-dmk-4#comments</comments><guid isPermaLink="false">e1846cb6-eb34-4b3a-b5db-73ce35fb37a1</guid><pubDate>Mon, 07 Sep 2026 08:25:38 +0000</pubDate><atom:updated>2026-09-07T08:25:38.298Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/1lr9t5md/vijay04.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/1lr9t5md/vijay04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நம் அரசு யாருக்கும் தனிப்பட்ட அடையாளமாக இருக்காது. 8 கோடி மக்கள் என் சொந்தங்கள். அவர்களுக்கு அடையாளமாகவே அரசு இருக்கும் என முதலமைச்சர் விஜய் பேசினார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபை</a> கூட்டம் 3 நாட்கள் விடுமுறைக்கு பின்னர்  இன்று காலை கூடியது. சட்டசபையில் கடந்த 3-ந்தேதி காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது.</p><h2><strong>முதலமைச்சர் விஜய் பதில் உரை</strong></h2><p>இதில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சிகளின் சட்ட மன்ற குழு தலைவர்கள் விவாதத்தில் பங்கேற்று பேசினர். இன்று சட்டசபை கூடியதும் அவை முன்னவர் செங்கோட்டையன் எழுந்து பேச தொடங்கினார். அப்போது தி.மு.க.வினர் எழுந்து நின்று கோஷம் போட்டனர். முதலமைச்சர் விஜய்யின் இன்றைய பதில் உரை மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் சட்டசபையில் இன்று ஆவேசமாக பதில் அளித்தார்.</p><p>அப்போது கடந்த கால தி.மு.க. ஆட்சிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக ஆதாரப்பூர்வமாக முன் வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-</p><h2><strong>பெண்களை பற்றி....</strong></h2><p>அரசியலுக்காக தனிப்பட்ட முறையில் பெண்களை தரம் தாழ்ந்து பேச வேண்டாம். இங்கு வன்ம நதி ஓடுகிறது. பெண்களை பற்றி இரட்டை அர்த்தங்கள், 3 அர்த்தங்களை எல்லாம் பேசுவதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் உள்ளார்கள்.</p><p>இதற்கு முன்பு நான் இருந்த இடமும், இப்போது எனக்கு கொடுக்கப்பட்ட இடமும் பெண்கள் கொடுத்ததுதான். பெண்களை பற்றி தேவையில்லாமல் பேசினால் சட்டம் தன் கடமையை செய்யும்.</p><p>கடந்த காலத்தில் இதே சட்டமன்றத்தில் மேடம் ஜெயலலிதா இன்றைய எதிர்க்கட்சியால் எவ்வளவு அவமானங்களை சந்தித்தார் என்பதை கேள்விப்பட்டு உள்ளோம்.</p><h2><strong>வன்மம் வேண்டாம்</strong></h2><p>அரசியல் ரீதியாக என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியால் வன்மம் வேண்டாம்.சட்டசபைக்குள்ளேயே ஒரு உறுப்பினர் எலும்பை உடைப்பேன் என்கிறார். இதுதான் அரசியலா? இது எதற்கு? இதையெல்லாம் மக்கள் பார்த்துதான்... பார்த்து தான்... இன்றைக்கு அந்த பக்கத்தில் (எதிர்க்கட்சி வரிசையில்) அமர்ந்து இருக்கிறார்கள். நான் இதை  அறிவுரையாக சொல்லவில்லை. இதுதான் ரியாலிட்டி.</p><p>தி.மு.க. மூத்த உறுப்பினர் ஒருவர் தங்களுக்கு ஓட்டு போடாதவர்களுக்கு நல்ல சாவே வராது என்று கூறுகிறார். இதே மக்கள் தானே கடந்த 50, 60 ஆண்டு களாக உங்களுக்கும் வாக்களித்தார்கள்.</p><h2><strong>நல்ல பண்பு அல்ல</strong></h2><p>2021 முதல் 2025 வரை நடைபெற்ற குற்றச்சம்பவங்களை ஒப்பிட்டு கூற மனம் இடம் தரவில்லை. போதைக் கலாச்சாரம் என்ற ஒற்றை வார்த்தையை கூறி தப்பிப்பது அரசின் நல்ல பண்பு அல்ல.</p><p>மாணவர்களுக்கு சரியான பாதை இதுவரை வகுத்துத் தரவில்லை என்பது தான் உண்மை. இத்தகைய நிகழ்வுகளை மேம்போக்காக எதிர்கொள்ளாமல் அனைத்து குடும்பங்களில் ஒருவனாக பொறுப்புடன் சிந்தித்து மாணவர் சமுதாயத்தை பொறுப்பானவர்களாக உருவாக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். ஊழலற்ற நேர்மையான அரசை வழங்குவதே இந்த அரசின் நோக்கம்.</p><h2><strong>என் சொந்தங்கள்</strong></h2><p>அரசு ஊழியர்கள் ஊழல் செய்வதை ஏற்க முடியாது. அரசு ஊழியர்கள் தங்களின் பணியில் நேர்மையாக இருக்க வேண்டும். அவப்பெயர் ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும்.</p><p>மிசாவை பற்றிய வரலாறு அனைவருக்கும் தெரியும். நடந்தது, நடக்க போறது எல்லாத்தையும் மக்கள் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள்.</p><p>நம் அரசு யாருக்கும் தனிப்பட்ட அடையாளமாக இருக்காது. 8 கோடி மக்கள் என் சொந்தங்கள். அவர்களுக்கு அடையாளமாகவே அரசு இருக்கும்.</p><h2><strong>எம்.ஜி.ஆர். பாட்டு</strong></h2><p>மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்வோம். தமிழக மக்கள் நலன் ஒன்றே தான் கருத்தில் கொள்வோம் என அன்றே பாடினார் எம்.ஜி.ஆர். அது இவர்களுக்காகதான்.</p><p>என் டேபிளில்  3 பைல் இருக்கு என்றேன். அதை ஓபன் பண்றதுக்கு முன்பு ஒரு சாம்பிள் பார்ப்போம். சர்க்காரியா கமிஷனில் உள்ளதை பார்க்கலாம். வீராணம் திட்டத்திற்கு தனி சேப்டர் உள்ளது.</p><p>அந்த கால கட்டத்தில் வீராணம் டெண்டர் வேணும் என்றால் 2 சதவீதம் கமிஷன் கருணாநிதியின் மருமகன் மாறன் கேட்டதாக கூறியுள்ளனர்.</p><p>பொன் விழா கண்ட கட்சியின் பவள விழா கண்டது தான்சர்க்காரியா கமிஷன் அறிக்கை.</p><h2><strong>மக்களுக்கு தெரியும்</strong></h2><p>கலைஞர் மீது எனக்கு பெரிய மதிப்பும் மரியாதையும் உள்ளது. எங்கள் அமைச்சர் கருணாநிதி எனக்கூறியதற்கு நான் மன்னிப்பு கேட்டேன். இது எல்லாம் நாங்கள் சொல்லும் குற்றச்சாட்டு இல்லை. </p><p>சர்க்காரியா கமிஷனில் அந்த அறிக்கை கொடுத்து இருக்கும் குற்றச்சாட்டு. </p><p>இன்று எங்கள் அரசியல் பாரம்பரியம் பற்றி தெரியுமா என்று கூறுபவர்களுக்கு அவர்களை பற்றி மக்களுக்கு தெரிய வைக்க வேண்டாமா?</p><h2><strong>பக்கத்திலே ஆதாரம்</strong></h2><p>மிஸ்டர் கிளீன் என சொல்லிக்கொள்கிறார்களே அப்போதே அப்படினா, இப்போ யோசித்து பாருங்கள். பார்ட்டி பண்ட் என்று சொல்லும் போது ஆதாரம் கேட்டார்கள். ஆதாரம் அவர்கள் பக்கத்தில் தான் உள்ளது. (முன்னாள் அமைச்சர் நேருவை நோக்கி கையை காட்டினார்.)</p><p>அமலாக்கத்துறை பார்ட்டி பண்டு குறித்து ஆதாரம் கொடுத்து இருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் இருந்த போது 7.5 முதல் 10 சதவீதம் வரை வாங்கியதாக அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.</p><h2><strong>யார் இந்த ரத்தீஷ்?</strong></h2><p>டாஸ்மாக்  துறைக்கு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தவறாக அதை பயன்படுத்தினார். அவரது சகோதரர் தலையீடும் இருந்தது. அதுமட்டுமல்ல ரத்தீஷ் என்பவரும் தலையிட்டுள்ளார். அவர் டி.ஆர்.ஒ. உடன் இணைந்து டிரான்ஸ்பர் போன்றவற்றையும் செய்திருக்கிறார். யார் இந்த ரத்தீஷ்? இவர் யாருக்கு நெருக்கமானவர். த.வெ.க ஆட்சி அமைந்த பின் ஏன் துபாய் சென்று ஓடி ஒளிந்துள்ளார்.</p><p>போன ஆட்சியில் டாஸ்மாக்கை கையில் வைத்திருந்த அமைச்சருடன் சில அதிகாரிகளும்  உள்ளனர். இந்த  ரத்தீஷ் உத்தரவு படி தான் டி.ஆர்.ஒ. மாற்றப்பட்டுள்ளார்.</p><h2><strong>கேங்க் தலைவர்கள் யாரு?</strong></h2><p>நம்ம ஆட்சி வந்தவுடன் அவர் வெளிநாட்டில் போய் ஒளிந்துகொண்டார். தி.மு.க. எதை எப்போது செய்தாலும் குடும்பமாக தான் செய்வார்கள் போல. கரூர் கேங். அந்த கேங் தலை வர்கள் யாரு?</p><p>விஞ்ஞான ஊழல் குறித்து தெரியுமா? இது தான் அது. ஆதாரம் வேணும் ஆதாரம் வேணும் என்று கேட்டீர்களே? இது போதுமா? இந்த 2 துறையின் ஆதாரத்தை ஓபன் பண்ணதுக்கே இப்படி இருக்கே? ஆதாரம் போதுமா?</p><h2><strong>போலி பிம்பமும்</strong></h2><p>தி.மு.க. இருக்கும் இடத்தில் தான் தப்பு நடக்கும்... தி.மு.க. தான் தப்பே செய்யும். ஊழல் என்று சொன்னால் எல்லோரும் எழுந்து கொள்வார்கள்... உடனே ஆதாரம் கேட்பார்கள். இவர்களின் போலி பிம்பமும் போலி பிராண்டும் உடைக்கப்படும்.</p><p>நம்ம நண்பர்கள் பேசும் போது ஊழல்  என்று பேசினாலே சொன்னாலே உடனே இங்கு எழுந்துடுவாங்க. ஆனால் ஊழல் பண்ணவில்லை என  சொல்லமாட்டார்கள்.  மக்கள் எங்கள் பக்கம் உள்ளனர்.</p><h2><strong>மக்கள் அன்பு</strong></h2><p>மக்கள் அன்புக்கு முன் நீங்கள் தோற்பது உறுதி.  மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்த மட்டுமே அரசியலுக்கு வந்துள்ளேன். இறைவனும் இயற்கையும் மக்களும் நம்மபக்கம் தான் இருப்பாங்க. இங்கே அமைச்சர் ராஜ்மோகன் சொன்னது தான் நியாபகம் வருது. நான் சும்மாவே காட்டு காட்டு காட்டுவேன்.</p><p>கூட்டு பொறுப்பை உணர்ந்து அமைச்சர்கள் பதில் சொல்வது இயல்பு தான். மக்கள் அனைவரும் பார்த்து கொண்டு இருப்பதால் 3-ந்தேதி நான் பேசவில்லை. விவரங்கள் எடுத்து வைத்து கொண்டு பேசவேண்டும் என்று தான்  அன்று பேசவில்லை.</p><p>இந்த ஆட்சியில் திட்டங்களின் பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக கூறினார்.</p><h2><strong>திட்டங்கள் ரத்து</strong></h2><p>ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் பல  தி.மு.க. ஆட்சியில் ரத்து செய்யப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட திட்டங்களை  ரத்து செய்துள்ளனர்.</p><p>உதாரணம் அம்மா மினி கிளீனிக். அதே போல் 4 வருடம் கழித்து தான் லேப்டாப் கொடுத்தார்கள்.</p><h2><strong>அரசு முனைப்பு</strong></h2><p>மக்களை சீரழித்தது போதாது என்று கனிம வளங்களை சீரழித்து இருக்கிறது. தி.மு.க. பல ஆண்டுகளாக தேங்கியுள்ள நிர்வாக சீர்கேடுகளை சரிசெய்ய இந்த அரசு முனைப்பு காட்டி வருகிறது.</p><p>கடந்த தி.மு.க. ஆட்சியில் சட்டம்- ஒழுங்கில் எழுந்த சர்ச்சை என்னவென்றால்  எப்.ஐ.ஆர். பதியாமலிருந்தது தான். தி.மு.க. ஆட்சியில் கட்சி நிர்வாகிகள் மீது குற்றம் பதிவு செய்யாமல் தடுத்து இருக்கிறார்கள். அதில் சில சாம்பிள் மட்டும் படிக்கிறேன்.</p><h2><strong>நடவடிக்கை</strong></h2><p>ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காலந்தாழ்த்தி அறிக்கையை சமர்பித்ததற்காக உயர்நீதிமன்றம் விமர்சனம் செய்தது. எங்களது ஆட்சியில் ஆளும் கட்சியாக இருந்தாலும் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிலவற்றில் விசாரணை நடைபெற்று வருகிறது.</p><p>இவ்வாறு முதலமைச்சர் விஜய் பேசினார்.</p><h2><strong>ஆக்ரோஷம்</strong></h2><p>முதலமைச்சர் விஜய் பேசும்போது அவரது முகம் கோபத்தில் கொந்தளித்தது. பேச்சும் ஆக்ரோஷமாக இருந்தது.</p>]]></content:encoded></item><item><title>ஹைலேண்டர்ஸ் ஸ்கல்.. மிரள வைக்கும் 600 வருட சாபம் - ஸ்காட்லாந்தின் மண்டை ஓட்டு மர்மம்!</title><link>https://www.maalaimalar.com/news/world/the-highlanders-skull-a-chilling-600-year-old-curse-scotlands-skull-mystery</link><comments>https://www.maalaimalar.com/news/world/the-highlanders-skull-a-chilling-600-year-old-curse-scotlands-skull-mystery#comments</comments><guid isPermaLink="false">04e2b7c0-270d-499f-836b-e0f27d6e91cf</guid><pubDate>Mon, 07 Sep 2026 08:23:21 +0000</pubDate><atom:updated>2026-09-07T08:23:21.999Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Scotland,ஸ்காட்லாந்து,Tribes,research,ஆய்வு,பழங்குடியினர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/5w7za7hm/tn-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஹைலேண்டர்ஸ் ஸ்கல்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஹைலேண்டர்ஸ் ஸ்கல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/5w7za7hm/tn-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஸ்காட்லாந்து நாட்டின் 600 ஆண்டு பழமையான மண்டை ஓடு ஒன்றின் கதை மீண்டும் கவனம் பெற்று வருகிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/bronze-statue-of-maharishi-sushruta-made-in-swamimalai-unveiled-at-royal-college-of-surgeons-of-edinburgh">ஸ்காட்லாந்தின் </a>வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளின் மலைப்பிரதேசங்கள் ஹைலேண்ட்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. இங்கு வாழ்பவர்கள் தொன்றுதொட்டு ஹைலேண்டர்ஸ் என அழைக்கப்படுகின்றனர். </p><p> இந்த ஹைலேண்ட்களில் பல பழங்குடியின வம்சங்கள் பல காலமாக வாழ்கின்றன. அதில் புகழ் பெற்ற வம்சம்  'கிராண்ட்' (Grant). இந்த வம்சத்தினரால்  600 ஆண்டுகளுக்கும் மேலாக மண்டை ஓடு ஒன்று பாதுகாக்கப்பட்டிருக்கிறது. </p><p>இந்த மண்டை ஓடு Highlander's skull என அழைக்கப்படுகிறது. இதைச் சுற்றி ஒரு வரலாற்று கதை உள்ளது.</p> <h2>கதை</h2><p>600 ஆண்டுகள் பழமையான இந்தக் கதையின்படி, 14ஆம் நூற்றாண்டில் ஸ்காட்லாந்தில் பரூகி (Freuchie) கோட்டை மற்றும் அதனையொட்டிய பகுதிகளை கைப்பற்ற கிராண்ட், மேக்ரிகோர், கோமின் ஆகிய மூன்று பழங்குடியின வம்சத்தினரிடையே போர் நடைபபெற்றது.</p><p>போரில் கிராண்ட் வம்சத்தினர் வென்றனர். இதனால் இந்த கோட்டை தற்போது கேஸ்ட்டில் கிராண்ட் என அழைக்கப்படுகிறது.</p><p>இந்தப் போரில் கொல்லப்பட்ட கோமின் வம்சத் தலைவரின் மண்டை ஓடு, கிராண்ட் வம்சத்தினரால் ஒரு நினைவுப் பொருளாகப் பாதுகாக்கப்பட்டது.</p> <h2>சாபம்</h2><p>இந்த மண்டை ஓடு கிராண்ட் வம்சத்தினரின் கையை விட்டு போனால், அவர்களின் சாம்ராஜ்யமும் செல்வாக்கும் அழியும் என்ற சாபம் இருப்பதாக கிராண்ட் வம்சத்தினர் தலைமுறை தலைமுறையாக நம்பி வந்தனர்.</p><p>1983இல் கிராண்ட் வம்ச குடும்பத்தினர் தங்கள் கோட்டையை விற்ற பிறகு, இந்த மண்டை ஓடு காணாமல் போனதாகக் கருதப்பட்டது.</p><p>ஆனால், கிராண்ட் வம்சாவளியை சேர்ந்த பிரபு 'லார்ட் ரீட்ஹேவன்' என்பவர், தங்கள் குடும்பச் சேமிப்பு அறையில் இருந்த பெட்டிக்குள் இருந்து இந்த மண்டை ஓட்டையும், அதனுடன் 1857ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு பழைய கடிதத்தையும் கண்டுபிடித்தார்.</p><p>கிரிகோர் ஸ்டூவர்ட் என்ற பாதிரியார் எழுதிய அந்தக் கடிதத்தில், இந்த மண்டை ஓட்டின் வரலாற்றுச் சம்பவங்களும் சாபத்தை பற்றிய விவரங்களும் விரிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தன.</p><h2>ஆய்வு</h2><p>எடின்பர்க்கில் உள்ள Surgeons Hall அருங்காட்சியகத்தை சேர்ந்த மனித எலும்பியல் நிபுணர் கேட் இர்விங் தலைமையிலான குழுவினர் இந்த மண்டை ஓட்டை ஆய்வு செய்து வருகின்றனர்.</p><p>ரேடியோகார்பன் டேட்டிங் மூலம் இது உண்மையில் 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோமின் தலைவரின் மண்டை ஓடு தானா என்பது குறித்துப் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.</p><p>The Legend of the Highland Skull என்ற பெயரில் இன்று (செப்டம்பர் 7) முதல் அக்டோபர் 31 வரை கிராண்ட்டவுன் அருங்காட்சியகம் சிறப்புப் புகைப்படக் கண்காட்சியை நடத்துகிறது.</p> ]]></content:encoded></item><item><title>6 வருஷம் ஜெயில்ல இருந்தும் மராத்தி வரல!- அமைச்சர் கோரிக்கைக்குச் சஞ்சய் தத்தின் கலகலப்பான பதில்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/six-years-in-jail-still-no-marathi-sanjay-dutt-hilarious-response-to-ministers-request</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/six-years-in-jail-still-no-marathi-sanjay-dutt-hilarious-response-to-ministers-request#comments</comments><guid isPermaLink="false">43ffed32-a8da-4f41-a1e3-f70f125ea773</guid><pubDate>Mon, 07 Sep 2026 08:20:15 +0000</pubDate><atom:updated>2026-09-07T08:20:15.316Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மும்பை,Marathi,நடிகர் சஞ்சய் தத்,Actor Sanjay Dutt,மராத்தி மொழி,Minister Pratap Sarnaik,அமைச்சர் பிரதாப் சர்நாயக்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/fjcbzcjf/sanjay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Actor Sanjay Dutt  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/fjcbzcjf/sanjay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மும்பையில் ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர்கள் தொழிலைத் தொடர மராத்தி மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற உத்தரவை போக்குவரத்துத் துறை சமீபத்தில் நடைமுறைப்படுத்தியிருந்தது. </p><p>மும்பையில் நடைபெற்ற பொதுநிகழ்ச்சி ஒன்றில், மகாராஷ்டிரா மாநில அமைச்சர் விடுத்த வேண்டுகோளை ஏற்று மராத்தி மொழியில் பேச மறுத்த பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், தனது சிறை வாழ்க்கையைக் குறிப்பிட்டு நகைச்சுவையாகப் பதிலளித்தது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.</p><p>தானே பகுதியில் நடைபெற்ற ‘சமஸ்கிருதி யுவா பிரதிஷ்டான்’ நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக் மற்றும் நடிகர் சஞ்சய் தத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் போது மைக் பிடித்த அமைச்சர் பிரதாப் சர்நாயக், "தற்போது நான் அனைவருக்கும் மராத்தி மொழி கற்றுக்கொடுத்து வருகிறேன். <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/bigg-boss-tamil-season-10-one-bedroom-on-stage-elimination-new-strategies">சஞ்சய் தத் </a>இந்தி மொழியில் பேசினாலும், நம் அனைவருக்கும் மராத்தி புரியும். எனவே அவரை இன்று மராத்தியில் பேச வைக்கலாம்" என்று அங்கு திரண்டிருந்த மக்களிடம் கூறினார்.</p><p>இதைக் கேட்ட சஞ்சய் தத், புன்னகையுடன் மைக்கை வாங்கி, "பிரதாப் பாய், நான் புனே ஏர்வாடா சிறையில் 6 ஆண்டுகள் இருந்தேன். அங்கே இவ்வளவு காலம் இருந்தும் கூட என்னால் மராத்தி மொழியைக் கற்றுக் கொள்ள முடியவில்லை. மிகக் குறைந்த அளவே கற்றுக் கொண்டேன்" எனக் கூறி கூட்டத்தினரைச் சிரிக்க வைத்தார். தொடர்ந்து, "தும்ஹி சர்வ்நாம் நமஸ்கார்" (அனைவருக்கும் எனது வணக்கம்) என்று மராத்தியில் கூறி 'ஹர் ஹர் மகாதேவ்' என்ற முழக்கத்தையும் எழுப்பினார்.</p><h2><strong>25 ஆண்டுகால ந</strong>ட்பு</h2><p>பின்னர் அமைச்சர் பிரதாப் சர்நாயக்கின் தோள் மீது கைபோட்டவாறு பேசிய சஞ்சய் தத், "பிரதாப் பாய் என்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுடைய நட்பு இன்று நேற்று தொடங்கியது அல்ல; கடந்த 25 ஆண்டுகளாகத் தொடரும் மிகவும் பழமையான நட்பு" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.</p><p>மும்பையில் ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர்கள் தொழிலைத் தொடர மராத்தி மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற உத்தரவை போக்குவரத்துத் துறை சமீபத்தில் நடைமுறைப்படுத்தியிருந்தது. இதன் பின்னணியிலேயே அமைச்சர் பிரதாப் சர்நாயக் இந்த விவகாரத்தைக் குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது.</p><p>இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பரவி வருகின்றன. அமைச்சரின் கோரிக்கையைச் சஞ்சய் தத் தனது பாணியில் நகைச்சுவையாகக் கடந்து சென்றதைச் சிலர் பாராட்டி வரும் வேளையில், மும்பையிலேயே இத்தனை ஆண்டுகள் வாழ்ந்தும் சஞ்சய் தத் மராத்தி பேசாதது குறித்துச் சிலர் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>வேலைக்கு போக பயந்து AI-யில் போலி புலி வீடியோ... கர்நாடக வாலிபருக்கு வனத்துறை கொடுத்த நூதன தண்டனை!</title><link>https://www.maalaimalar.com/news/national/ai-fake-tiger-video-to-escape-work-karnataka-forest-department-gives-innovative-punishment</link><comments>https://www.maalaimalar.com/news/national/ai-fake-tiger-video-to-escape-work-karnataka-forest-department-gives-innovative-punishment#comments</comments><guid isPermaLink="false">9ebea42e-1da6-4b2a-99ac-421e8f974c82</guid><pubDate>Mon, 07 Sep 2026 08:08:16 +0000</pubDate><atom:updated>2026-09-07T08:08:16.730Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,Forest Department,AI Video,வனத்துறை அதிகாரிகள்,போலி வீடியோ,Koppal,Fake Tiger Video</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/zt95q9cg/Fake-Tiger-Video" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Fake Tiger Video  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/zt95q9cg/Fake-Tiger-Video?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE">கர்நாடகாவில் </a>சோம்பேறித்தனத்தால் வேலைக்குச் செல்ல பயந்த வாலிபர் ஒருவர், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புலி வீடியோ ஒன்றை உருவாக்கி சமூக வலைதளங்களில் பரப்பிய வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.</p><h2><strong>சம்பவத்தின் பின்னணி</strong></h2><p>கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தின் டவுன் பகுதியில் உள்ள காவலி கிராமத்தைச் சேர்ந்த 25 வயது வாலிபரான ஈரண்ணாவுக்கு, வனப்பகுதியை ஒட்டியவாறு ஒரு தோட்டம் சொந்தமாக உள்ளது. </p><p>அந்தத் தோட்டத்திற்குச் சென்று வேலை பார்க்குமாறு அவரது குடும்பத்தினர் ஈரண்ணாவைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளனர்.</p><p>குடும்பத்தினரின் தொல்லையிலிருந்து தப்பிக்க நினைத்த ஈரண்ணா, தனது தோட்டத்தில் ஒரு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF">புலி </a>உலா வருவது போன்ற காட்சியை ஏ.ஐ. தொழில்நுட்ப உதவியுடன் போலியாக ஒரு வீடியோவாகத் தயாரித்தார். </p><p>பின்னர் அதைத் தனது குடும்பத்தினரிடம் காட்டி, "தோட்டத்தில் புலி சுற்றுகிறது, என்னால் வேலைக்குச் செல்ல முடியாது" என்று கூறி தப்ப முயன்றுள்ளார். </p><p>மேலும், அந்த வீடியோவை சமூக வலைதளங்களிலும் அவர் பதிவிட, அது காட்டுத்தீயாய் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><h2><strong>வனத்துறை விசாரணை மற்றும் அம்பலமான உண்மை</strong></h2><p>வீடியோவை உண்மை என்று நம்பிய ஈரண்ணாவின் குடும்பத்தினரும், கிராம மக்களும் உடனடியாக <a href="https://www.maalaimalar.com/topic/forest-officer">வனத்துறை அதிகாரிகளுக்கு</a> அச்சத்துடன் தகவல் தெரிவித்தனர்.</p><p>தகவலின் பேரில் வனத்துறை அதிகாரிகள் ஈரண்ணாவின் தோட்டத்திற்கு விரைந்து சென்று தீவிரமாக ஆய்வு செய்தனர்.</p><p>ஆனால், தோட்டம் முழுவதும் தேடியும் புலியின் கால் தடங்கள் எதுவும் சிக்காததால் அதிகாரிகளுக்குச் சந்தேகம் எழுந்தது.</p><p>இதையடுத்து ஈரண்ணாவை நேரில் அழைத்து வனத்துறையினர் தங்களது பாணியில் விசாரித்தனர். </p><p>அதிகாரிகளின் கிடுக்கிப்பிடி விசாரணையில், தான் வேலைக்குச் செல்வதைத் தவிர்ப்பதற்காகவே ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் போலி புலி வீடியோவை உருவாக்கி சமூக வலைதளத்தில் பரப்பியதை ஈரண்ணா ஒப்புக்கொண்டார்.</p><h2><strong>அதிகாரிகளின் நூதன தண்டனை</strong></h2><p>பொய்யான தகவலைப் பரப்பி கிராம மக்களிடையே பீதியை ஏற்படுத்தியதற்கும், வனத்துறையினரின் பொன்னான நேரத்தை வீணடித்ததற்கும் ஈரண்ணாவுக்கு ஒரு படிப்பினையான நூதன தண்டனையை அதிகாரிகள் வழங்கினர்.</p><p>ஈரண்ணாவை அவரது தோட்டத்திற்கே அழைத்துச் சென்ற <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">வனத்துறையினர்</a>, அங்கிருந்த கிராம மக்கள் அனைவரின் முன்னிலையிலும் அவரை <strong>50 தோப்புக்கரணம்</strong> போட வைத்தனர்.</p><p>அதோடு நின்றுவிடாமல், இனிமேல் இதுபோன்ற ஆபத்தான மற்றும் போலி வேலைகளில் ஈடுபடக் கூடாது என்று அவரைக் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர். </p><p>இந்நிலையில், ஈரண்ணா தோப்புக்கரணம் போடும் அந்த வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி நெட்டிசன்களிடையே வைரலாகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>இறந்துவிட்டதாக சுடுகாட்டில் தகனம்: 27 மாதங்களுக்கு பின் உயிருடன் வீடு திரும்பிய பெண்: லக்னோவில் அதிர்ச்சித் திருப்பம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/lucknow-woman-cremated-as-dead-returns-home-alive-after-27-months</link><comments>https://www.maalaimalar.com/news/national/lucknow-woman-cremated-as-dead-returns-home-alive-after-27-months#comments</comments><guid isPermaLink="false">a8964055-a950-49f4-bf42-aba2ba3ba806</guid><pubDate>Mon, 07 Sep 2026 07:57:49 +0000</pubDate><atom:updated>2026-09-07T07:57:49.258Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உத்தரபிரதேசம்,வரதட்சணை கொடுமை,uttarpradesh,லக்னோ,lucknow,DNATest</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/29dawgak/vadakki.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Woman returns home alive]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/29dawgak/vadakki.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், இறந்துவிட்டதாகக் கருதி குடும்பத்தினரால் இறுதிச்சடங்குகள் செய்து தகனம் செய்யப்பட்ட இளம்பெண் உயிருடன் வீடு திரும்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/shock-in-telangana-midnight-baby-thrown-from-auto">லக்னோவின் </a>பி.கே.டி பகுதிக்கு உட்பட்ட நாவிகோட் நந்தனா கிராமத்தைச் சேர்ந்த ஷிவானி என்ற பெண், கடந்த 2024-ஆம் ஆண்டு மே 2-ஆம் தேதி திடீரென காணாமல் போனார். இதைத் தொடர்ந்து அவரைத் தேடும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், 2024 ஜூலை 16 அன்று ஐ.ஐ.எம் சாலைக்கு பின்புறம் உள்ள ஒரு கழிவுநீர் கால்வாயில் இருந்து அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் சடலத்தை காவல்துறை மீட்டது.</p><p>மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்த அந்த உடலை பார்வையிட்ட ஷிவானியின் குடும்பத்தினர், கையில் கட்டப்பட்டிருந்த காப்பு மற்றும் விரலில் இருந்த மோதிரத்தை வைத்து அது ஷிவானிதான் என அடையாளம் காட்டினர். அதைத் தொடர்ந்து, அந்த உடலைப் பெற்றுக் கொண்ட குடும்பத்தினர் பைன்சாகுண்ட் மயானத்தில் தகனமும் செய்தனர்.</p><h2>வரதட்<strong>சணை வழக்கு</strong></h2><p>உடலை அடையாளம் காட்டிய கையோடு, ஷிவானியின் குடும்பத்தினர் அவருடைய கணவர் மற்றும் மாமனார் வீட்டினர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஷிவானியை வரதட்சணைக்காகக் கொடுமைப்படுத்தி கொலை செய்து உடலை வீசிவிட்டதாகக் குற்றம் சாட்டினர். இதன் அடிப்படையில் காவல்துறை வரதட்சணைக் கொடுமை, கடத்தல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியது.</p><h2>டி.எ<strong>ன்.ஏ சோதனையில் வெளிவ</strong>ந்த உண்மை</h2><p>அழுகிய நிலையில் மீட்கப்பட்ட உடலின் அடையாளம் உறுதியாகத் தெரியாததால், உடற்கூறாய்வு மற்றும் தடயவியல் சோதனைகளின் ஒரு பகுதியாக டி.என்.ஏ மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இதன் முடிவுகள் பின்னரே வெளிவந்தன. அதில், தகனம் செய்யப்பட்ட உடலின் டி.என்.ஏ மாதிரியும், ஷிவானியின் பெற்றோரின் டி.என்.ஏ மாதிரியும் பொருந்தவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், மீட்கப்பட்ட உடல் ஷிவானியுடையது அல்ல என்பது தெரியவந்ததை அடுத்து, வரதட்சணைக்கொடுமை பிரிவுகள் வழக்கில் இருந்து நீக்கப்பட்டன.</p><h2>27 மாதங்களு<strong>க்குப் பின் உயி</strong>ருடன் திரும்பிய ஷிவானி</h2><p>இந்நிலையில், காணாமல் போய் 27 மாதங்கள் கழித்து கடந்த சனிக்கிழமை அன்று ஷிவானி திடீரென தனது பெற்றோர் வீட்டிற்கு நேரில் வந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினரும் காவல்துறையினரும் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், ஷிவானி பரா பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை பராமரிப்பில் இருக்கும் கழிப்பறையை நிர்வகித்து வரும் ஜாவேத் என்பவருடன் தங்கியிருந்தது தெரியவந்தது. பலமுறை வீட்டிற்குத் திரும்புமாறு ஜாவேத் அறிவுறுத்தியும், அவர் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது தனது சொந்த விருப்பத்தின் பேரில் அவர் வீடு திரும்பியுள்ளார்.</p><p>ஷிவானி உயிருடன் திரும்பியதைத் தொடர்ந்து, காவல்துறையினர் இந்த வழக்கை மீண்டும் தீவிரமாக விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். ஷிவானி தானாகவே வீட்டை விட்டு வெளியேறினாரா அல்லது யாரேனும் அவரைக் கடத்தினார்களா என்பது குறித்து நீதிபதி முன் வாக்குமூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.</p><p>அதேவேளையில், லக்னோ காவல்துறைக்கு மற்றொரு பெரிய புதிர் எழுந்துள்ளது. ஷிவானி உயிருடன் இருக்கும் பட்சத்தில், கால்வாயில் இருந்து மீட்கப்பட்டு ஷிவானி என நம்பி குடும்பத்தினரால் எரிக்கப்பட்ட அந்த அடையாளம் தெரியாத பெண் யார், அவரைப் படுகொலை செய்தது யார் என்ற கோணத்தில் காவல்துறை தங்களது விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பதிலற்ற பதிலுரை- உதயநிதி விமர்சனம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-indictment-tvk-govt-4</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-indictment-tvk-govt-4#comments</comments><guid isPermaLink="false">23c9af89-ad0d-4648-b3f9-df68d596bbb2</guid><pubDate>Mon, 07 Sep 2026 07:45:37 +0000</pubDate><atom:updated>2026-09-07T07:45:37.096Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,தவெக,விஜய்,vijay,Udhayanidhi Stalin,tvk</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/zowdbajk/udhayanidhistalin004.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/zowdbajk/udhayanidhistalin004.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு? என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.</strong></em> </p><h2><strong>சட்டசபையில் அமளி</strong></h2><p>தமிழ்நாடு சட்டசபையில் காவல்துறை மானியக்கோரிகை மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் இன்று பதில் அளித்தார். இதனை தொடர்ந்து முதலமைச்சரின் பதிலுரை மீது பேச அனுமதிக்குமாறு கூறி தி.மு.க.உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். </p><p>இதனை தொடர்ந்து, தி.மு.க.உறுப்பினர்கள் பேச அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து <a href="https://www.maalaimalar.com/topic/உதயநிதி-ஸ்டாலின்">உதயநிதி ஸ்டாலின்</a> தலைமையிலான தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதை அடுத்து, செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். </p><p>இந்த நிலையில், அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு? என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். </p><p>இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><h2><strong>dummy CM</strong></h2><p>அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு?</p><p>பதிலற்ற பதிலுரை - பழிபோடும் பேச்சு - diversion tactics - மொத்தத்தில் எந்த preparation-ம் இல்லாமல், Roll Camera, Action mode-ல் Cringe டயலாக் பேசி இருக்கிறார் dummy CM.</p><p>எதிர்க்கட்சியின் பதிலைக் கேட்க பயந்து மீண்டும் ஒளியாமல், prepare well next time.Try to do better! என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு? <br><br>பதிலற்ற பதிலுரை - பழிபோடும் பேச்சு - diversion tactics - மொத்தத்தில் எந்த preparation-ம் இல்லாமல், Roll Camera, Action mode-ல் Cringe டயலாக் பேசி இருக்கிறார் dummy CM.<br><br>எதிர்க்கட்சியின் பதிலைக்…</p>&mdash; Udhay (@Udhaystalin) <a href="https://x.com/Udhaystalin/status/2096861333694406854?ref_src=twsrc%5Etfw">September 7, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title> 2029-க்குள் போதைப்பொருள் இல்லா இந்தியாவை உருவாக்க மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது - அமித்ஷா!</title><link>https://www.maalaimalar.com/news/national/special-plan-to-make-india-drug-free-by-2029-says-amit-shah</link><comments>https://www.maalaimalar.com/news/national/special-plan-to-make-india-drug-free-by-2029-says-amit-shah#comments</comments><guid isPermaLink="false">b4bc613b-d4a0-4562-8e07-74681c007632</guid><pubDate>Mon, 07 Sep 2026 07:37:48 +0000</pubDate><atom:updated>2026-09-07T07:37:48.050Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவா,அமித்ஷா,pmmodi,பிரதமர் மோடி,union minister Amitshah,Goa Visit,போதைப்பொருள் இல்லா இந்தியா,NationalSecurity,Dru gFree India</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/oo6ikdgs/AmitShah" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ AmitShah]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/oo6ikdgs/AmitShah?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE">மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா</a> கோவாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். </p><p>கோவாவின் தலைநகர் பனாஜியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு, அவர் செய்தியாளர்களைச் சந்தித்து ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.</p><h2>தேசிய பாதுகாப்புக்கான முன்னுரிமை</h2><p>செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி அமித்ஷா, "போதைப்பொருள் இல்லா இளைஞர் சக்தி இந்தியாவை 2047-ல் வளர்ந்த பாரதமாக மாற்றும் என்பதே<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF"> பிரதமர் மோடியின் </a>உறுதிப்பாடு ஆகும். </p><p>கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு வரை போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகள் ஆங்காங்கே சிறிய அளவிலேயே நடந்து வந்தன. </p><p>ஆனால், எங்களது தற்போதைய அரசு இந்த போராட்டத்தை தேசிய பாதுகாப்புக்கான முன்னுரிமையுடன் மிகத் தீவிரமாக நடத்தி வருகிறது" என்று குறிப்பிட்டார்.</p><h2><strong>2029-க்குள் போதைப்பொருள் இல்லா இந்தியா</strong></h2><p>மேலும் அவர் பேசுகையில், நாட்டில் <a href="https://www.maalaimalar.com/topic/naxals">நக்சல் </a>பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு அரசு எவ்வாறு பணியாற்றியதோ, அதேபோல போதைப்பொருளுக்கு எதிராகவும் அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். </p><p>அந்த வகையில், வரும் 2029-ம் ஆண்டுக்குள் இந்தியாவை போதைப்பொருள் இல்லா நாடாக மாற்றுவதற்கான ஒரு சிறப்புச் செயல் திட்டத்தைப் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தயாரித்து வைத்திருக்கிறது என்றும் மந்திரி அமித்ஷா உறுதிபடத் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>தெலுங்கானாவில் அதிர்ச்சி: நள்ளிரவில் ஆட்டோவில் இருந்து வீசப்பட்ட பச்சிளம் குழந்தை-வளர்க்க திரண்ட மக்கள்!</title><link>https://www.maalaimalar.com/news/national/shock-in-telangana-midnight-baby-thrown-from-auto</link><comments>https://www.maalaimalar.com/news/national/shock-in-telangana-midnight-baby-thrown-from-auto#comments</comments><guid isPermaLink="false">cf219580-1726-4bfd-9f50-27ebdc069056</guid><pubDate>Mon, 07 Sep 2026 07:14:51 +0000</pubDate><atom:updated>2026-09-07T07:14:51.377Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Telangana,Humanity,தெலுங்கானா,ChildProtection,Mahabubnagar,மகபூப் நகர்,குழந்தை தத்தெடுப்புச் சட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/ekaqb98i/baby.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ChildProtection]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/ekaqb98i/baby.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குழந்தை மீட்கப்பட்ட செய்தி அப்பகுதியில் பரவியதும், ஏராளமான பொதுமக்கள் மருத்துவமனைக்குத் திரண்டு வந்தனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/bye-bye-dad-young-woman-jumps-from-bridge-with-a-smile-shocking-video-what-happened">தெலுங்கானா மாநிலம்</a> மகபூப் நகரில் உள்ள நியூ டவுன் பகுதியில் நள்ளிரவில் அதிவேகமாக வந்த ஓர் ஆட்டோவில் இருந்த நபர்கள், சால்வை மற்றும் சிறிய மெத்தையில் சுற்றப்பட்ட நிலையில் ஒரு பச்சிளம் குழந்தையை  சாலையோரம் தூக்கி வீசிவிட்டுத் தப்பிச் சென்றனர். சாலையோரத்தில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டகவே அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் தாமதிக்காமல் உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.</p><h2>மருத்துவம<strong>னையி</strong>ல் அனுமதி </h2><p>தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையைப் பத்திரமாக மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகத் தெரிவித்தனர். இதற்கிடையே, குழந்தையை வீசிச் சென்ற மர்ம நபர்களைக் கண்டறிய அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.</p><h2>குழந்<strong>தையை வளர்</strong>க்க மக்கள் விருப்பம்</h2><p>குழந்தை மீட்கப்பட்ட செய்தி அப்பகுதியில் பரவியதும், ஏராளமான பொதுமக்கள் மருத்துவமனைக்குத் திரண்டு வந்தனர். மீட்கப்பட்ட அந்தப் பச்சிளம் குழந்தையைத் தாங்களே தத்தெடுத்து வளர்ப்பதாகக் கூறிப் பலரும் விருப்பம் தெரிவித்தனர்.  பொதுமக்களின் இந்த நெகிழ்ச்சியான கோரிக்கையை ஏற்ற மருத்துவர்கள், குழந்தையை நேரடியாகத் தத்துக் கொடுக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று தெளிவுபடுத்தினர். குழந்தை தத்தெடுப்புச் சட்ட நடைமுறைகளின்படி, இது குறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தை  அணுகுமாறு அங்கிருந்த மக்களுக்கு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>அத்தியாவசிய மளிகை பொருட்கள் விலை கடும் உயர்வு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/grocery-prices-on-rise</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/grocery-prices-on-rise#comments</comments><guid isPermaLink="false">a5ab3c51-e84a-4170-a7ad-55390ca3924f</guid><pubDate>Mon, 07 Sep 2026 07:14:40 +0000</pubDate><atom:updated>2026-09-07T07:14:40.235Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விலை உயர்வு,price hike,Grocery prices,மளிகை பொருட்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/kc7blwwz/grocery.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/kc7blwwz/grocery.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அரிசி விலை உயர்க்குவுக் முக்கிய காரணம் நெல் வரத்து குறைந்தது என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து தான் தமிழகத்திற்கு அதிக அளவில் அரிசி வருகிறது.</p><p>தமிழகத்தில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு மாதத்தில் 20 சதவீதம் வரை சமையலுக்கு பயன்படுத்தக் கூடிய உணவுப் பொருட்கள் விலை உயர்ந்துள்ளன.</p><h2><strong>கடந்த மாதம்</strong></h2><p>கடந்த மாதம் கிலோ ரூ.220-க்கு விற்கப்பட்ட மிளகாய் வற்றல் தற்போது 270 முதல் 300 ரூபாய்க்கு மேல் வரை விற்கப்படுகிறது. தனியா விலை ரூ.150-ல் இருந்து ரூ.220 ஆக உயர்ந்துள்ளது.</p><h2><strong>பூண்டு விலை</strong></h2><p>பூண்டு கிலோ 150-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.280 முதல் ரூ.300 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இரண்டு மடங்கு பூண்டு விலை கூடியிருப்பதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.</p><h2><strong>எண்ணெய்</strong></h2><p>அதேபோல சமையல் எண்ணெய் விலையும் உயர்ந்திருப்பது கவலை அளித்துள்ளது. சூரிய காந்தி ரீ பைண்டு சமையல் எண்ணெய் கிலோ ரூ.120-ல் இருந்து ரூ.150 ஆக உயர்ந்துள்ளது. ரூ.150 ஆக பாமாயில் விலை தற்போது ரூ.185 ஆக அதிகரித்துள்ளது.</p><h2><strong>வெல்லம்</strong></h2><p>கடந்த மாதம் வரை 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட வெல்லம் தற்போது ரூ.100 ஆக அதிகரித்துள்ளது. இதே போல ரூ.700க்கு விற்கப்பட்ட முந்திரி கிலோ தற்போது ரூ.950 ஆக கூடியுள்ளது. பாதாம் பருப்பு 250 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் ரூ.1200 ஆக உயர்ந்துள்ளது. சர்க்கரை விலை மட்டும் குறைந்துள்ளது. கிலோ ரூ.70 ஆக இருந்த சர்க்கரை தற்போது ரூ.55 ஆக குறைந்துள்ளது.</p><h2><strong>அரிசி</strong></h2><p>மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருளான அரிசியின் விலையும கிலோவுக்கு ரூ.8 முதல் ரூ.15 வரை கூடியுள்ளது. 26 கிலோ சாப்பாடு அரிசி மூட்டை ரூ.300 ரூபாய் முதல் ரூ.500 வரை அதிகரித்துள்ளது. ரூ.1000 ஆக இருந்த அரிசி மூட்டை ரூ.1500 ஆகவும் ரூ.1500 ஆக இருந்த மூட்டை ரூ.2000 ஆகவும் உயர்ந்துள்ளது.</p><h2><strong>நெல் வரத்து குறைந்தது</strong></h2><p>அரிசி விலை உயர்க்குவுக் முக்கிய காரணம் நெல் வரத்து குறைந்தது என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து தான் தமிழகத்திற்கு அதிக அளவில் அரிசி வருகிறது. அந்த மாநிலங்களில் விளைச்சல் குறைந்துள்ளதால் தமிழகத்துக்கான வரத்தும் குறைந்துள்ளது.</p><h2><strong>அரிசி வியாபாரிகள்</strong></h2><p>இதனால் அரிசியின் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு வரும் டிசம்பர் மாதம் வரை நீடிக்க வாய்ப்பு உள்ளது. புதிய அரிசி வரத்தை தொடங்கும் போது தான் விலை குறையும் என்று அரிசி வியாபாரிகள் தெரிவித்தனர்.</p><h2><strong>காய்கறிகள் விலை</strong></h2><p>மளிகை பொருட்களின் விலை மட்டுமல்லாது காய்கறிகள் விலையும் உயர்ந்துள்ளது. பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், கேரட் மற்றும் பீன்ஸ் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளன. இவற்றின் வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளன. தக்காளி, உருளைக்கிழங்கு விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை அதிகரி த்துள்ளதாக கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் தெரிவித்தனர். </p><h2><strong>மாதாந்திர பட்ஜெட்</strong></h2><p>அத்தியாவசிய மளிகை பொருட்கள் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் மாதாந்திர செலவு அதிகரிக்கிறது. இதனால் மாதாந்திர பட்ஜெட்டில் துண்டு விழுகிறது. பொருட்களை போதுமான அளவு வாங்க முடியவில்லை. வருகின்ற பண்டிகை காலங்களில் இது பொதுமக்களை அதிகளவு பாதிக்கும் என்பதால் அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>75வது பிறந்தநாள் காணும் மம்மூட்டி.. வெறித்தனமான டைட்டில் போஸ்டர் வெளியீடு </title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/mammootty-celebrates-his-75th-birthday-crazy-title-poster-release</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/mammootty-celebrates-his-75th-birthday-crazy-title-poster-release#comments</comments><guid isPermaLink="false">26ec2c93-334f-4676-bb4e-b7031fecbf29</guid><pubDate>Mon, 07 Sep 2026 07:09:03 +0000</pubDate><atom:updated>2026-09-07T07:09:03.184Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Mammootty,Malayalam,மம்மூட்டி,மலையாளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/fw07t21s/tn-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மம்மூட்டி]]></media:title><media:description type="html"><![CDATA[ மம்மூட்டி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/fw07t21s/tn-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மம்மூட்டி பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் வெளியாகி உள்ளது.</p><p>மலையாள சூப்பர் ஸ்டார் <a href="https://www.maalaimalar.com/topic/mammootty">மம்மூட்டி </a>இன்று தனது 75வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். </p><p>அவரின் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு அதிரிபுதிரி சர்ப்ரைஸ் ஒன்று வந்துள்ளது. </p><p>நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் மம்மூட்டி நடித்து வரும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் வெளியாகியுள்ளது.  இரவு 12.00 மணியளவில் செப்டம்பர் 7 (இன்றைய நாள்) தொடங்கியதும் வெளியான போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது. </p> <h2>மேளா</h2><p>படத்திற்கு மலையாளத்தில் "மேளா" என பெயர் சூட்டப்பட்டுள்ளது.</p><p>போஸ்டரில் கருப்பு சட்டை அணிந்து Rugged ஆன லுக்கில் இருக்கிறார் மம்மூட்டி. இவருக்கு 75 வயதா? என்று நம்பமுடியாத அளவுக்கு அவரின் தோற்றம் அமைந்துள்ளது.</p><p>இந்த போஸ்ட்ரை அவரே தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். இப்படத்தை மமூட்டி கம்பெனி நிறுவனம் சார்ப்பில் அவரே தயாரித்தும் உள்ளார். இது அவரின் தயாரிப்பில் 9வது படம் ஆகும்.</p><p>இதனிடையே மம்மூட்டிக்கு இணையத்தில் ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். சமீபத்தில் உடல்நலப் பிரச்சனைகளில் இருந்து மீண்டு வந்துள்ள மம்மூட்டி அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார்.</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/tpu1n0o0/tn-9.jpg" /></figure><h2>படங்களின் லைன் அப்</h2><p>கடைசியாக உழைப்பாளர் தினமான மே 1 அன்று அவரது நடிப்பில் பேட்ரியாட் படம் வெளியாகி இருந்தது. இதில் அவருடன் மோகன்லாலும் நடித்திருந்தார்.</p><p>மேளா படம் தருவித்து காலித் ரஹ்மான் இயக்கம் "மட்டன்சேரி மாபியா" படத்திலும் மம்மூட்டி நடிக்கிறார். அதுமட்டுமின்றி நீண்ட ஆண்டுகள் கழித்து தனது ஆஸ்தான இயக்குனரான அடூர் கோபாலகிருஷ்ணனுடன் கூட்டணி அமைத்துள்ள மம்மூட்டி 'பாதயாத்திரா' என்ற படத்தில் நடிக்க உள்ளார்.</p><p>மலையாளம் தவிர்த்து தமிழில் தனுஷ் நடிக்கும் "ஓம்" படத்திலும் மம்மூட்டி நடித்து வருகிறார். இதில் அவர் வில்லன் ரோல் செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content:encoded></item><item><title>25 ஏக்கர் நிலப்பரப்பளவில் பட்டினப்பாக்கத்தில் அமைகிறது புதிய தலைமை செயலகம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/new-secretariat-is-coming-up-in-pattinapakkam-spanning-an-area-of-25-acres</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/new-secretariat-is-coming-up-in-pattinapakkam-spanning-an-area-of-25-acres#comments</comments><guid isPermaLink="false">e14b7e6c-75c7-4714-b609-56726622dc6c</guid><pubDate>Mon, 07 Sep 2026 07:08:44 +0000</pubDate><atom:updated>2026-09-07T07:08:44.637Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,தலைமை செயலகம்,புதிய தலைமை செயலகம்,New Secretariat</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/e50fry3b/TNGovt.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தலைமை செயலகம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தலைமை செயலகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/e50fry3b/TNGovt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அரசின் முறையான கோரிக்கைகளை தொடர்ந்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மயிலாப்பூரில் உள்ள 21.37 ஏக்கர் நிலத்தை ஒரு பொதுத்துறைக்கு பயன்படுத்துவதற்காக அனுமதி அளித்துள்ளது.</strong></em> </p><p>ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் தமிழக அரசின் தலைமை செயலகம் செயல்பட்டு வருகிறது. பாரம்பரியமிக்க இந்த தலைமை செயலகத்தில் சட்டமன்ற கட்டிடமும் இயங்கி வருகிறது.</p><h2><strong>போதுமான இடவசதி இல்லை</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/புதிய-தலைமை-செயலகம்">தலைமை செயலகம்</a> மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி முழுவதும் வாகன நெரிசலை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள், ஊழியர்கள், வாகனங்களை நிறுத்துவதற்கு போதுமான இடவசதி இல்லை.</p><p>தலைமை செயலகத்திற்கு வரக்கூடிய பொதுமக்கள், கட்சி பிரமுகர்கள் எண்ணிக்கையும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இதனால் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட வேண்டும் என்பதில் முதலமைச்சர் விஜய் உறுதியாக உள்ளார். ரூ.1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என்றும் சட்டசபையில் அவர் சமீபத்தில் அறிவித்தார். அதன் அடிப்படையில் அதற்கான ஆரம்பக் கட்ட பணிகள் தொடங்கிவிட்டன.</p><h2><strong>25 ஏக்கர் நிலம்</strong></h2><p>25.16 ஏக்கர் பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் பிரம்மாண்டமாக கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் பிரதான கட்டிடம் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் 15 மாடிகளாக கட்டப்பட உள்ளது. சாந்தோம் பிரதான சாலையில் இருந்து அணுகு சாலையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இடத்தின் இன்றைய வழிகாட்டு மதிப்பு ஒரு சதுர அடி  ரூ.22,000 ஆகும். நிலத்தின் மொத்த மதிப்பு ரூ.2047 கோடியாக உள்ளது. புதிய தலைமை செயலகம்-சட்டமன்ற வளாகம் கட்டுவதற்காக பட்டினப்பாக்கம், கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நந்தம்பாக்கத்தில் உள்ள பின் டெக் சிட்டிக்கு எதிரே உள்ள நிலம்   ஆகிய 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. இவற்றில் பட்டினப்பாக்கத்தில் 25 ஏக்கர் நிலம் கிடைப்பது சிறப்பாகும்.</p><p>அரசின் முறையான கோரிக்கைகளை தொடர்ந்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மயிலாப்பூரில் உள்ள 21.37 ஏக்கர் நிலத்தை ஒரு பொதுத்துறைக்கு பயன்படுத்துவதற்காக அனுமதி அளித்துள்ளது. </p><p>இந்த நிலப்பகுதி 1958-ல் வீட்டு வசதி திட்டங்களுக்கு கையகப்படுத்தப்பட்டன. 1963 முதல் 1968-ம் ஆண்டு இடையான 1112 அரசு ஊழியர் குடியிருப்புகளும் 96 தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளும் கட்டப்பட்டன. </p><p>1986-ல் மேலும் 60 குடியிருப்புகளும் 1998-ல் 112 குடியிருப்புகளும் கட்டப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1380 ஆனது.  இவற்றில் 1284 குடியிருப்புகள் சிதலமடைந்ததால் கட்டிடங்கள் இடிக்கப்பட்டதில் இருந்து அந்த இடம் காலியாக உள்ளது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தனது சொந்த 96 குடியிருப்புகளை இடிப்பதற்கான நடவடிக்கை தொடங்கியுள்ளது. </p><p>இந்த நிலையில் சென்னை மாவட்ட கலெக்டருக்கு எழுதியுள்ள கடிதத்தில், நிலத்தை பயன்படுத்துவதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தெரிவித்துள்ளது. </p><p>இதே போல தலைமை செயலகம் கட்டுவதற்கு சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 0.93 இடத்தை வழங்கவும் கமிஷனர் சமீரன் ஒப்புதல் வழங்கி உள்ளார். நிலம், சாலை அமைப்பதற்கும் சில பயன்பாடுகளுக்கும் வருவாய்த் துறையின் கீழ் உள்ள கூடுதல் நிலம் வகைப்படுத்தப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மிசா பற்றி பேச முதலமைச்சருக்கு என்ன தகுதி இருக்கிறது?- உதயநிதி ஸ்டாலின் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-what-standing-does-the-chief-minister-have-to-speak-about-misa</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-what-standing-does-the-chief-minister-have-to-speak-about-misa#comments</comments><guid isPermaLink="false">214cb1c5-13a0-4c6b-941d-f2f49be1b1ce</guid><pubDate>Mon, 07 Sep 2026 06:53:54 +0000</pubDate><atom:updated>2026-09-07T06:53:54.159Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,விஜய்,vijay,Udhayanidhi Stalin,தமிழக சட்டசபை,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/jcmz9a1e/udhayanidhi02.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்- உதயநிதி ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்- உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/jcmz9a1e/udhayanidhi02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மிசா பற்றி பேச முதலமைச்சருக்கு என்ன தகுதி இருக்கிறது. இவர் அரசியலுக்கு வந்தது ஒரு விபத்து என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> பேச அனுமதி மறுப்பதாக குற்றம்சாட்டி வெளிநடப்பு செய்த நிலையில் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>*  சினிமா சூட்டிங் டயலாக் போல முதலமைச்சர் பேசிக் கொண்டிருந்தார். அதனால் தான் தொடர்ந்து கோஷம் போட்டோம்.</p><p>* முதலமைச்சர் விஜய் மீதே வழக்கு உள்ளது.  ரூ.15 கோடி வருமானத்தை மறைத்ததாக வழக்கின் போது தாமதமாக வழக்கு தொடர்ந்துள்ளதாக ஒப்புக்கொண்டவர் முதலமைச்சர் விஜய். </p><p>* பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் மீதும் அமலாக்கத்துறை வழக்கு உள்ளது.</p><p>* வழக்கு நிலுவையில் உள்ள விஜயபாஸ்கர், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்டோரை உடன் சேர்த்து வைத்துள்ளார் முதலமைச்சர் விஜய்.</p><p>* எங்களை மிரட்டுவதற்காக லஞ்ச ஒழிப்புத்துறை வைத்து கே.என்.நேரு வீட்டில் ரெய்டு நடத்தினார்கள்.</p><p>* முதலமைச்சரின் நண்பர்கள், அவர்களுடைய ஆலோசகர் விஷ்ணு ரெட்டி, அவரது உறவினர்கள் கனிமவளத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். </p><p>* கனிமவளத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள விஷ்ணு ரெட்டி உள்ளிட்டோர் என்ன பொறுப்பில் உள்ளனர்?</p><p>* விஷ்ணு ரெட்டி, சுஜய் மற்றும் அனில் கன்ட்ரோலில் கனிமவளம் உள்ளது என்று வெளிப்படையாக குற்றச்சாட்டுகிறேன். </p><p> * ஒருதலை பட்சமாக செயல்பட்ட சட்டசபை தலைவருக்கு தி.மு.க. சார்பில் கண்டனம் தெரிவிக்கிறோம். </p><p>* முதலமைச்சர் விஜய் பேசும்போது சபாநாயகர் எங்கள் பக்கம் திரும்பக்கூடவில்லை. தவெக அரசுக்கும் முதலமைச்சர் விஜய்க்கும் சபாநாயகர் ஜால்ரா அடித்துக் கொண்டே இருந்தார்.</p><p>* முதலமைச்சர் பேசியதற்கு ஆதாரம் கிடையாது, அமலாக்கத்துறை, சர்காரியா ஆவணம் அனைத்தும் குற்றச்சாட்டு தான்.</p><p>* திமுக மீதான ஊழல் புகார் நிரூபிக்கப்பட்டதா, ஊழல் புகாரில் தண்டிக்கப்பட்டவர் யார் என்று உங்களுக்கே தெரியும். </p><p>* திமுகவினர் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடக்கலாம், அவற்றை சட்டரீதியாக சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். </p><p>* மிசா பற்றி பேச முதலமைச்சருக்கு என்ன தகுதி இருக்கிறது. இவர் அரசியலுக்கு வந்தது ஒரு விபத்து. </p><p>* கோடி கோடியாக பணத்துடன் வந்து எந்த அமைச்சர் பதவி வேண்டும் எனக் கேட்டதாக IUML எம்எல்ஏ பேசியுள்ளார். </p><p>*  வெளிப்படையாக குதிரை பேரத்தில் தவெக அரசு ஈடுபடுகிறது என்றார். </p>]]></content:encoded></item><item><title>டெல்லியில் 5 மாடி கட்டிடம் இடிந்ததில் 6 பேர் பலி: இடிபாடுகளில் சிக்கிய
9 பேர் உயிருடன் மீட்பு - மாணவர்கள்  போராட்டம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/six-killed-five-storey-building-collapses-in-delhi</link><comments>https://www.maalaimalar.com/news/national/six-killed-five-storey-building-collapses-in-delhi#comments</comments><guid isPermaLink="false">0d3a8978-f25d-4d19-88ee-f30c6afcbeff</guid><pubDate>Mon, 07 Sep 2026 06:53:44 +0000</pubDate><atom:updated>2026-09-07T06:53:44.370Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>student protest,கட்டிட விபத்து,Building Collapse,ரேகா குப்தா,Rekha Gupta,delhi university,delhi,டெல்லி,Satya Niketan,சத்ய நிகேதன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/4o55fk3o/University-Student-Protest" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ University Student Protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/4o55fk3o/University-Student-Protest?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF">டெல்லி </a>தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள சத்ய நிகேதன் மண்டலத்தில், மாணவர்கள் தங்கியிருந்த ‘ஹாஸ்டல் டேஸ்’ என்ற 5 மாடி விடுதி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. </p><p>இக்கோர விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>கட்டுமான பணி</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">டெல்லி பல்கலைக்கழக</a> தெற்கு வளாகத்தின் அருகே அமைந்துள்ள இந்த கட்டிடத்தின் அடித்தளத்தில் மண் தோண்டும் பணிகளும், கட்டுமானப் பணிகளும் நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.</p><p>மேல்பகுதியை வலுப்படுத்திய போதிலும், கீழிருந்த தூண்கள் பலவீனமாக இருந்ததே <a href="https://www.maalaimalar.com/news/national/death-toll-rises-to-6-in-delhi-student-hostel-collapse-cctv-footage-of-the-incident-released">கட்டிடம் இடிந்து</a> விழக் காரணம் என அப்பகுதி வாசிகள் தெரிவித்துள்ளனர். சுமார்</p><p>40 முதல் 50 ஆண்டுகள் மட்டுமே பழமையான இந்த கட்டிடம் 100 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்டிருந்ததாகவும், வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த ஆபத்தான கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிகிறது.</p><p>நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் இந்த விபத்து நேரிட்டது. விடுமுறை நாள் என்பதால் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது அறைகளிலேயே தங்கியிருந்தனர்.</p><h2>9 பேர் மீட்பு</h2><p>கட்டிடம் இடிந்து விழுந்த அதிர்ச்சியில் இடிபாடுகளுக்குள் சிக்கிய சிலர், தங்களது தொலைபேசி மூலம் உறவினர்கள் மற்றும் மீட்பு குழுவினரை தொடர்பு கொண்டு உதவி கோரியது நெஞ்சை உருக்குவதாக அமைந்தது.</p><p>சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த தேசிய<a href="https://www.maalaimalar.com/topic/disaster-response-force"> பேரிடர் மீட்புப் படையினர்</a>, தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.</p><p>இதுவரை 9 பேர் மீட்கப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.</p><p>இடிந்த கட்டிடத்திற்கு அருகில் இருந்த மற்றொரு கட்டிடமும் சேதமடையும் அபாயம் ஏற்பட்டதால், டெல்லி முதல்-அமைச்சர் ரேகா குப்தாவின் உத்தரவின் பேரில் அங்கு தங்கியிருந்த அனைவரும் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டனர்.</p><h2>மாணவர்கள் போராட்டம்</h2><p>மேலும் விபத்தில் தொடர்புடைய விடுதியின் உரிமையாளரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.</p><p>இதனிடையே டெல்லியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான தனியார் விடுதிகளில் போதிய பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்றும், வணிக நோக்கத்திற்காக குறைந்த வசதிகளுடன் மாணவர்களின் உயிரோடு விளையாடுவதாகவும் கூறி மாணவர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.</p><p>இந்திய தேசிய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு மாணவர் அமைப்பினரும், டெல்லி பல்கலைக்கழக மாணவர்களும் மாநகராட்சி அலுவலகம் முற்றுகை மற்றும் தீவிரப் போராட்ட ங்களில் ஈடுபட்டு வருகின்றனர். </p><p>விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும், கட்டிட உரிமையாளர் மற்றும் அலட்சியமாகச் செயல்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>மேலும் டெல்லி முழுவதும் உள்ள அனைத்து தனியார் விடுதிகளிலும் உடனடியாக பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">மாணவர்கள் போராட்டத்தில்</a> ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>BIGG BOSS 20: குத்துச்சண்டை சாம்பியன் மேரி கோமிற்கு பிரியங்கா சோப்ரா வாழ்த்து! </title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/bigg-boss-20-priyanka-chopra-congratulates-boxing-champion-mary-kom</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/bigg-boss-20-priyanka-chopra-congratulates-boxing-champion-mary-kom#comments</comments><guid isPermaLink="false">7c332672-4839-4222-b647-d53e9a91caea</guid><pubDate>Mon, 07 Sep 2026 06:50:38 +0000</pubDate><atom:updated>2026-09-07T06:50:38.677Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>Mary Kom,Bigg Boss 20,Actress Priyanka Chopra,boxing champion,பிக்பாஸ் 20</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/6ursmseg/mary.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Priyanka Chopra-Mary Kom ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/6ursmseg/mary.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ரிங் களத்தில் பல உலக சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்ற மேரி கோம், தற்போது 24 மணி நேரமும் கேமராக்களின் கண்காணிப்பில் வாழும் பிக்பாஸ் என்ற முற்றிலும் மாறுபட்ட களத்தில் இறங்கியுள்ளார். </p><p>இந்திய சின்னத்திரையின் மிகப்பெரிய பொழுதுபோக்கு நிகழ்ச்சியான <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/bigg-boss-tamil-season-10-one-bedroom-on-stage-elimination-new-strategies">பிக்பாஸ்</a> தனது 20-வது பருவத்தில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்துள்ளது. இந்த புதிய சீசனில் நாடு முழுவதும் புகழ்பெற்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் போட்டியாளர்களாகப் பங்கேற்றுள்ளனர். அதில் மிகவும் குறிப்பிடத்தக்க நபராக, இந்தியாவின் உலகப் புகழ்பெற்ற குத்துச்சண்டை சாம்பியன் மேரி கோம் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.</p><h2>வாழ்த்<strong>துச் செய்தி</strong></h2><p>நிகழ்ச்சியின் பிரமாண்ட தொடக்க விழாவில், தொகுப்பாளர் சல்மான் கான் மேரி கோமிற்காக ஒரு சிறப்பு வீடியோ பதிவை ஒளிபரப்பினார். 2014-இல் வெளியான மேரி கோமின் சுயசரிதை திரைப்படத்தில் அவரது கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பியிருந்தார்.</p><p>வீடியோவில் பேசிய பிரியங்கா சோப்ரா, மேரி கோமின் விடாமுயற்சியையும் மனஉறுதியையும் பாராட்டி, பிக்பாஸ் பயணத்திற்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், "மேரி கோம் எந்த அளவுக்கு வலிமையானவர் என்பதை நான் நேரில் கண்டிருக்கிறேன். அவர் எப்போதும் போல இயல்பாகவும், திறந்த மனதோடும் விளையாட வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.</p><h2>போட்டியா<strong>ளர்களுக்கு எ</strong>ச்சரிக்கை</h2><p>மேரி கோமின் வருகையைக் குறித்து சக போட்டியாளர்களுக்குப் பிரியங்கா சோப்ரா ஒரு நகைச்சுவையான எச்சரிக்கையையும் விடுத்தார். "பிக் பாஸ் வீட்டில் மேரி கோமை எதிர்கொள்ள விரும்பினால், மற்ற போட்டியாளர்கள் நீண்ட தூரப் போட்டிக்குத் தயாராக இருக்க வேண்டும். ஏனெனில் அவரது 'நாக் அவுட்' பஞ்ச் மிகவும் பலமானது" என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டு சக போட்டியாளர்களை எச்சரித்தார்.</p><h2>பிக்<strong>பாஸ் வீட்டின் புதிய கள</strong>ம்</h2><p>ரிங் களத்தில் பல உலக சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்ற மேரி கோம், தற்போது 24 மணி நேரமும் கேமராக்களின் கண்காணிப்பில் வாழும் பிக்பாஸ் என்ற முற்றிலும் மாறுபட்ட களத்தில் இறங்கியுள்ளார். இந்த சீசனில் ஆசிஃப் கான், கனிகா மான், ஸ்காட் ஓபி, ஆம்ரபாலி துபே, மஹி விஜ், காசி தௌகீர் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ளனர்.</p><p>பிரியங்கா சோப்ராவின் இந்த உணர்ச்சிப்பூர்வமான ஆதரவு மேரி கோமிற்கு ஒரு சிறந்த தொடக்கமாக அமைந்துள்ள நிலையில், ரிங் களத்தில் காட்டிய அதே போராட்டக் குணத்தை பிக் பாஸ் வீட்டிலும் வெளிப்படுத்தி மேரி கோம் ரசிகர்களின் மனதை வெல்வாரா என்பதை அறிய ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>Bye Bye அப்பா.. சிரித்தபடி பாலத்தில் இருந்து குதித்த இளம்பெண் - அதிரவைத்த வீடியோ - என்ன நடந்தது? </title><link>https://www.maalaimalar.com/news/national/bye-bye-dad-young-woman-jumps-from-bridge-with-a-smile-shocking-video-what-happened</link><comments>https://www.maalaimalar.com/news/national/bye-bye-dad-young-woman-jumps-from-bridge-with-a-smile-shocking-video-what-happened#comments</comments><guid isPermaLink="false">48b0d31e-adb9-4883-9f42-4233e43ef3c6</guid><pubDate>Mon, 07 Sep 2026 06:37:25 +0000</pubDate><atom:updated>2026-09-07T06:37:25.344Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>young woman,ஜம்மு காஷ்மீர்,Suicide attempt,தற்கொலை முயற்சி,Jammu &amp; Kashmir,இளம்பெண்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/d9db0g14/tn-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ வீடியோ ]]></media:title><media:description type="html"><![CDATA[ வீடியோ ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/d9db0g14/tn-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>போனில் தனது தந்தையிடம் "பை, பை அப்பா" என சிரித்தபடி கூறியவாறு 21 வயது இளம்பெண் நதியில் குதித்த சம்பவம் ஜம்மு காஷ்மீரில் நடந்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/jammu-and-kashmir">ஜம்மு காஷ்மீர்</a> தோதா மாவட்டத்தில்  பிரேம் நகர் அருகே உள்ள சிவா தால்  பாலத்தில் இருந்து நேற்று முன் தினம் நண்பகல் பாயல் தேவி  என்ற அப்பெண் செனாப் நதியில் குதித்துள்ளார். </p> <h2>என்ன நடந்தது?</h2><p>நேற்று முன் தினம் காலை உள்ளூர் திருவிழாவிற்கு சென்ற அவர், உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனை சென்று வருவதாக தனது தந்தை கிருஷண லாலுக்கு போன் செய்து கூறியுள்ளார்.</p><p>ஆனால் மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் அவர் தனது கிராமத்தை சேர்ந்த ஒருவருடன் பைக்கில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.</p> <p>அப்போது எதிர்பாராதவிதமாக பாயலின் துப்பட்டா பைக்கின் சக்கரத்தில் சிக்கியுள்ளது.</p><p>இதனால் அந்த நபர் வண்டியை நிறுத்தி துப்பட்டாவை எடுக்க முயன்றுள்ளார். அதேநேரம் பாயல் திடீரென,  "நான் <a href="https://www.maalaimalar.com/topic/suicide">தற்கொலை </a>செய்து கொள்ளப் போறேன்" என கத்தியபடி அருகில் இருந்த பாலத்தை நோக்கி ஓடியுள்ளார்.</p><p>அங்கிருந்தவர்கள் இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்து அவரை சமாதானப்படுத்த முயன்றனர்</p> <h2>பை பை அப்பா</h2><p>பாயலை அழைத்து வந்த நபர் தந்தை கிருஷ்ண லாலுக்கு போன் செய்து உங்கள் மகள் பாலத்தில் இருந்து கீழே குதிக்க முயற்சிப்பதாகதெரிவித்துள்ளார்.</p><p>பதறிய தந்தை கிருஷ்ண லால், மகளிளின் போனுக்கு கால் அடித்துள்ளார். பாயல் போனை எடுக்க அவரிடம், "என்ன ஆச்சு, யாராவது உன்னை ஏதவாது செய்தார்களா?" என கிருஷண லால் கேட்டுள்ளார்.</p><p>அதற்குப் பாயல் தேவி, " அதெல்லாம் இல்ல அப்பா. இது என் வாழ்க்கை, எனக்கு இப்படிப் போக வேண்டும் என்று தோன்றுகிறது. பை பை அப்பா" எனக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார்.</p><p>அதன்பின்னர் அவர் அங்கிருந்தவர்களுக்கு பை பை சொல்லியபடி நதியில் குதித்துள்ளார்.</p><p>பாயல் பாலத்தில் நின்றிருந்த காட்சிகளும், சிரித்தபடி அவர் பை, பை சொன்னதும், அங்கிருந்தவர்கள் அவரைத் தடுக்க முயல்வதும் வீடியோவில் பதிவாகி உள்ளது.. இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் பரவி வருகிறது.</p><p>பாயல் நதியில் குதித்த செய்தி அறிந்து சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த காவல்துறை செனாப் நதியில் இறங்கி தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், இதுவரை அந்தப் பெண்ணைக் கண்டுபிடிக்க முடியவில்லை.</p><p>மருத்துவரைப் பார்க்கச் சென்ற பெண்ணுக்கு பாலத்திற்கு வருவதற்குள் என்ன நடந்தது? என்பது குறித்துகாவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">She Called Her Father to Say Goodbye... He Didn&#39;t Know It Was the Last Time.<br><br>A 21-year-old girl, Payal Devi, lost her life after jumping into the Chenab River.<br><br>It is heartbreaking to think about the pain she must have been carrying silently. <a href="https://t.co/fKl9O5Vs6T">pic.twitter.com/fKl9O5Vs6T</a></p>&mdash; زماں (@Delhiite_) <a href="https://x.com/Delhiite_/status/2096555025363579005?ref_src=twsrc%5Etfw">September 6, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>மத்திய பிரதேசத்தில் கள்ளச்சாராய பலி 12 ஆக உயர்வு- 14 பேர் கைது</title><link>https://www.maalaimalar.com/news/national/11-killed-liquor-in-madhya-pradesh-case-14-people-arrest</link><comments>https://www.maalaimalar.com/news/national/11-killed-liquor-in-madhya-pradesh-case-14-people-arrest#comments</comments><guid isPermaLink="false">5cd74302-3fd8-49ff-9b61-43efceeb9bac</guid><pubDate>Mon, 07 Sep 2026 06:31:12 +0000</pubDate><atom:updated>2026-09-07T06:31:12.656Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய பிரதேசம்,liquor,கள்ளச்சாராயம்,சாராயம்,Madhya Pradeshs</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/blnoxslv/madhyapradeshs.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Madhya Pradesh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/blnoxslv/madhyapradeshs.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.</p><p>மத்தியபிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் பண்டா தாலுகா உள்ளது. இதன் அருகே உள்ள 4 கிராமத்தை சேர்ந்தவர்கள் கள்ளச்சாராயம் அருந்தியுள்ளனர். இதில் பலரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவர்களுக்கு தலைவலி, வாந்தி ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். இதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.</p><h2><strong>கள்ளச்சாராயம்</strong></h2><p>நேற்று 11 பேர் கள்ளச்சாராயத்திற்கு பலியாகி இருந்தனர். 54 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. 30-க்கும் மேற்பட்டவர்கள் இன்னும் ஆஸ்பத்திரியில் கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள்.</p><h2><strong>கைது</strong></h2><p>இது தொடர்பாக போலீசார் 30 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>ரீல்ஸ்க்காக மட்டுமே இன்றும் முதலமைச்சர் விஜய் பேசியுள்ளார்- உதயநிதி ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-indictment-cm-vijay-3</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-indictment-cm-vijay-3#comments</comments><guid isPermaLink="false">1906caed-b082-4104-a2ce-b754ea61620d</guid><pubDate>Mon, 07 Sep 2026 06:28:39 +0000</pubDate><atom:updated>2026-09-07T06:28:39.878Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,விஜய்,vijay,Udhayanidhi Stalin,தமிழக சட்டசபை,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/judpxv4q/udhayanidhi.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ செய்தியாளர் சந்திப்பில் உதயநிதி ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ செய்தியாளர் சந்திப்பில் உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/judpxv4q/udhayanidhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மனப்பாடம் செய்து ஒப்பிவித்தல் போட்டியைபோல் தவறான கருத்துக்களை முதலமைச்சர் விஜய் ஒப்புவித்துள்ளார் என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> பேச அனுமதி மறுப்பதாக குற்றம்சாட்டி வெளிநடப்பு செய்த நிலையில் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>* சட்டசபையில், முதலமைச்சர் விஜய் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை வைத்து பேசினார். </p><p>* தற்போது திமுக ஆட்சி நடைபெறவில்லை, தவெக ஆட்சி நடைபெறுவதை நீங்கள் நம்புங்கள் என நான் ஏற்கனவே சொல்லியிருந்தேன்.</p><p>* முதலமைச்சருக்கு 15 கேள்விகளை முன்வைத்திருந்தேன். ஒரு கேள்விக்கு கூட பதில் அளிக்கவில்லை.</p><p>* முதலமைச்சர் பேசி முடித்ததும் விளக்கம் அளிக்க அனுமதிக்குமாறு நாங்கள் கோரிக்கை வைத்தோம். </p><p>* பேச அனுமதிப்பேன் என கூறிய சபாநாயகர் மீண்டும் யாருடைய அழுத்தத்தினாலோ என்னமோ அனுமதியை மறுத்துவிட்டார்.</p><p>* திங்கள்கிழமை பதிலளிப்பதாக சொல்லி கடந்த வியாழக்கிழமை ஓடிவிட்டார் முதலமைச்சர் விஜய்.</p><p>* மனப்பாடம் செய்து ஒப்பிவித்தல் போட்டியைபோல் தவறான கருத்துக்களை ஒப்புவித்துள்ளார் முதலமைச்சர் விஜய்.</p><p>* பஞ்ச் டயலாக் என ரீல்ஸ்க்காக மட்டுமே இன்றும் முதலமைச்சர் விஜய் பேசியுள்ளார்.</p><p>* பஞ்ச் டயலாக் மற்றும் டைவர்ஷன் டேக்டிக்ஸ் மட்டுமே பயன்படுத்துகிறார் முதலமைச்சர் விஜய்.</p><p>* தி.மு.க.வினர் மீது வழக்கு இருந்தால் நடவடிக்கை எடுங்கள் என்றுதான் நாங்களும் கூறுகிறோம். </p><p>இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார். </p>]]></content:encoded></item><item><title>BRI கனவுத் திட்டத்திற்கு முட்டுக்கட்டை: காத்மாண்டு-திபெத் ரெயில் பாதையைக் கேள்விக்குறியாக்கிய திடீர் வெள்ளம்!</title><link>https://www.maalaimalar.com/news/world/sudden-flood-disaster-raises-questions-over-kathmandu-tibet-railway-bri-dream-project</link><comments>https://www.maalaimalar.com/news/world/sudden-flood-disaster-raises-questions-over-kathmandu-tibet-railway-bri-dream-project#comments</comments><guid isPermaLink="false">8fefa9c2-f7e3-4538-9f9c-9d2694d1a23b</guid><pubDate>Mon, 07 Sep 2026 06:28:12 +0000</pubDate><atom:updated>2026-09-07T06:28:12.678Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சீனா,Kathmandu,நேபாள வெள்ளப் பேரழிவு,BRI,Gyirong Langtang,Nepal Flash floods,கியிரோங் எல்லை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/n8pnbjph/china.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gyirong  Langtang]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/n8pnbjph/china.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திபெத்தின் சிகாட்சே நகரில் இருந்து கியிரோங் வழியாக நேபாளத் தலைநகர் காத்மாண்டு வரை சுமார் 72 கி.மீ தொலைவுக்கு ரெயில் பாதை அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.</p><p>நேபாளம் மற்றும் சீனா இடையிலான எல்லைப் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக, இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள மிக முக்கியமான '<a href="https://www.maalaimalar.com/news/world/volcanic-eruption-rocks-indonesia-flight-services-cancelled">கியிரோங்</a>' எல்லை வர்த்தக மையம் முற்றிலுமாக அழிந்து பாழடைந்துள்ளது. இந்த இயற்கை பேரிடர் காரணமாகப் பல நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகியுள்ளதுடன், நேபாள நாட்டின் பொருளாதாரம் சுமார் 10 சதவீதம் வரை கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>திடீ<strong>ர் பனிப்பாறை வெ</strong>டிப்பு </h2><p>வடக்கு நேபாளத்தின் லாங்டாங் மலைப் பகுதியில் அமைந்திருந்த பனிப்பாறைகள் மற்றும் பாறைகள் திடீரெனச் சரிந்து விழுந்ததால் இந்த மாபெரும் ஆபத்து நேரிட்டது. இதனால் லெண்டே கோலா, போடேகோஷி மற்றும் திரிசூலி ஆகிய நதிகளில் கரைபுரண்டு ஓடிய வெள்ளமும் சேறும் சகதியும், எல்லைப் பகுதியில் இருந்த சாலைகள், பாலங்கள், நீர்மின் திட்டங்கள் மற்றும் கட்டிடங்களை முற்றிலுமாக அடித்துச் சென்றன. சீன மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோது, அங்கு கட்டிடங்களின் இடிபாடுகள் மட்டுமே எஞ்சியிருந்தன.</p><h2>சீனா<strong>வின் பி.ஆர்</strong>.ஐ ரெயில் திட்டத்திற்கு பலத்த அடி</h2><p>இந்த எதிர்பாராத வெள்ளப்பெருக்கு, சீன அரசு 2016-ல் முன்மொழிந்த இமயமலைப் பகுதிக்கான 'பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ்' (BRI) ரெயில் திட்டத்திற்குப் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. திபெத்தின் சிகாட்சே நகரில் இருந்து கியிரோங் வழியாக நேபாளத் தலைநகர் காத்மாண்டு வரை சுமார் 72 கி.மீ தொலைவுக்கு ரெயில் பாதை அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது எல்லைப் பகுதியே நிலைகுலைந்துள்ளதால், காகித அளவிலேயே நிலுவையில் இருக்கும் இந்த ரெயில் திட்டத்தின் வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களை முற்றிலும் மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் சீனாவிற்கு ஏற்பட்டுள்ளது.</p><p>இமயமலைப் பகுதி மிகவும் உணர்வுபூர்வமான மற்றும் நிலநடுக்க அபாயம் கொண்ட மண்டலமாகும். அங்கு சுரங்கங்கள் மற்றும் பாலங்களை அமைத்து ரெயில் பாதை உருவாக்குவது பேரழிவிற்கு வழிவகுக்கும் என இயற்கை ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p>நேபாள அரசு இத்திட்டத்தை முழுமையான மானிய உதவியாகவே சீனா வழங்க வேண்டும் என எதிர்பார்க்கிறது. ஏற்கனவே பொருளாதாரச் சரிவைச் சந்தித்துள்ள நேபாளத்திற்கு இத்தகைய ஆபத்தான திட்டங்கள் மேலதிகச் சுமையைக் கொடுக்கும். எல்லைக்கு மிக அருகில் சீனா தனது உள்கட்டமைப்புகளை விரிவாக்குவது இந்தியாவின் பாதுகாப்புக் கண்ணோட்டத்திலும் முக்கியக் கவனிப்பிற்குரிய ஒன்றாக மாறியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கேப்டன் சினி கிரியேஷன்ஸ் 10-வது படம் பிரம்மாண்ட பூஜையுடன் தொடக்கம்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/captain-cine-creations-10th-film-launches-with-grand-pooja</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/captain-cine-creations-10th-film-launches-with-grand-pooja#comments</comments><guid isPermaLink="false">174b9b35-18b2-4fe8-ba9d-b013e3e95a83</guid><pubDate>Mon, 07 Sep 2026 06:24:00 +0000</pubDate><atom:updated>2026-09-07T06:24:00.818Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>சண்முக பாண்டியன்,sivakarthikeyan,shanmuga pandian,premalatha vijayakanth,Captain Cine Creations,கேப்டன் சினி கிரியேஷன்ஸ்,ManiSeon</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/324fabih/Captain-Cine-Creations" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Captain Cine Creations]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/324fabih/Captain-Cine-Creations?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D">கேப்டன் விஜயகாந்த்</a> அவர்களால் துவங்கப்பட்டு, தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை வழங்கிய முன்னணி தயாரிப்பு நிறுவனமான கேப்டன் சினி கிரியேஷன்ஸ் தனது 10-வது மைல்கல் திரைப்படத்தின் படப்பிடிப்பை சென்னையில் பூஜையுடன் மிக பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ளது.</p><p>இப்படத்தில் கேப்டனின் இளைய மகனான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D">சண்முக பாண்டியன்</a> கதாநாயகனாக நடிக்கிறார். ‘கட்டப்பாவ காணோம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகி கவனம் ஈர்த்த மணிசியோன் இத்திரைப்படத்தை இயக்குகிறார்.</p><figure><img alt="Captain Cine Creations" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/f2yamgaa/Captain-Cine-Creations" /></figure><h2>திரைப்பிரபலங்கள் முன்னிலையில் கோலாகல பூஜை</h2><p>இன்று காலை சென்னையில் நடைபெற்ற படத்தின் தொடக்க விழாவில், தேமுதிக பொதுச்செயலாளர்<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D"> பிரேமலதா விஜயகாந்த்</a> கலந்துகொண்டு முறைப்படி கேமராவை ஆன் செய்து படப்பிடிப்பை துவங்கி வைத்தார். </p><p>தொடர்ந்து, பூர்ண ஜோதி சுதீஷ் கிளாப் போர்டை அடித்து துவங்கி வைத்தார். டாக்டர்.ஜானு ஸ்ரீ சுதீஷ், நடிகர் இளவரசு, தம்பி ராமையா, படூர் ரமேஷ், மைனா நந்தினி, இந்திரஜா ரோபோ சங்கர், பட்டிமன்றம் ராஜா, பிரகதி, காயத்ரி ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். </p><p>மேலும், இயக்குநர் திரு மற்றும் ஒளிப்பதிவாளர் அர்வி ஆகியோரும் இவ்விழாவை சிறப்பித்தனர்.</p><h2>இரண்டு படங்களுடன் முழு வீச்சில் கேப்டன் சினி கிரியேஷன்ஸ்</h2><p>தயாரிப்பாளர் எல்கே சுதீஷ் எம்.பி தயாரிப்பில், கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் தற்போது அடுத்தடுத்த பிரம்மாண்ட தயாரிப்புகளுடன் தமிழ் சினிமாவில் அதிரடி முத்திரை பதித்து வருகிறது. </p><p>ஏற்கனவே இயக்குநர் திரு இயக்கத்தில் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்து வரும் 'வாணவேடிக்கை' திரைப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. </p><p>அதனைத் தொடர்ந்து, தற்போது பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ள இந்த ‘புரொடக்சன் நம்பர் 10’ திரைப்படத்தின் படப்பிடிப்பும் இன்றிலிருந்து அதிவேகமாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.</p><figure><img alt="Captain Cine Creations" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/l07ngvkg/Captain-Cine-Creations" /></figure><h2>தொழில்நுட்பக் குழு</h2><p>இப்படத்திற்கு ‘மாநகரம்’, 'டானாக்காரன்' உள்ளிட்ட பல படங்களுக்குப் பணியாற்றிய திறமைமிக்க பிரசன்ன குமார் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். </p><p>வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளர் மனு ரவிச்சந்திரன் இப்படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.</p><p> படத்தின் மற்ற முக்கிய நடிகர், நடிகையர் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளன.</p><h2>மாலை 6 மணிக்கு ‘டைட்டில் லுக்’</h2><p>இன்னும் பெயரிடப்படாத இந்த ஆக்‌ஷன் கலந்த கமர்ஷியல் எண்டர்டெய்னர் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று மாலை 6:00 மணிக்கு தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D">சிவகார்த்திகேயன் </a>தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களின் வாயிலாக வெளியிட உள்ளார். </p><p>சிவகார்த்திகேயன் இந்த அறிவிப்பை வெளியிடுவதால், சமூக வலைத்தளங்களில் இப்போதே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு காட்டுத்தீயாய் பரவி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY : வார தொடக்கத்தில் குறைந்த தங்கம் விலை- இன்றைய நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-07-09-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-07-09-2026#comments</comments><guid isPermaLink="false">30614a3f-a74d-480d-9126-29fa9cf55256</guid><pubDate>Mon, 07 Sep 2026 06:14:10 +0000</pubDate><atom:updated>2026-09-07T06:14:10.276Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/o8ujij5t/gold.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ தங்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/o8ujij5t/gold.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 130 ரூபாய்க்கும் சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/தங்கம்">தங்கம்</a> விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. சென்னையில் கடந்த 1-ந்தேதி தங்கம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 175-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 400-க்கும் விற்பனையானது. இதனை தொடர்ந்து 2-ந்தேதி தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.225 குறைந்து, ரூ.13 ஆயிரத்து 950-க்கும், சவரனுக்கு ரூ.1,800 சரிந்து ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 600-க்கும் விற்றது. அதனை தொடர்ந்து 3-ந்தேதி தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு 290 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 240 ரூபாய்க்கும் சவரனுக்கு 2,320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 920-க்கு விற்பனையானது. அதனை தொடர்ந்து 4-ந்தேதி சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து சவரன் ரூ.1,14,880-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதை அடுத்து 5-ந்தேதி அதிரடியாக கிராமுக்கு 170 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14,190-க்கும் சவரனுக்கு ரூ.1360 குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 520-க்கு விற்பனையானது. நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படவில்லை.</p><h2><strong>சற்று குறைந்த தங்கம் விலை</strong></h2><p>இந்த நிலையில் வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 130 ரூபாய்க்கும் சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><h2><strong>வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>வெள்ளி விலையில் இன்றும் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது. </p><h2><strong>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்</strong></h2><p>06-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,520</p><p>05-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,520</p><p>04-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,880</p><p>03-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,920</p><p>02-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,600</p><h2><strong>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>06-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>05-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>04-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>03-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>02-08-2026- ஒரு கிராம் ரூ.250</p>]]></content:encoded></item><item><title>சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் தொழிலாளி பலி - அமைச்சர் வன்னி அரசுவின் சகோதரி உட்பட 4 பேர் மீது வழக்கு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/sattur-fireworks-factory-blast-worker-killed-case-against-four-including-minister-vanniyarasu-sister</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/sattur-fireworks-factory-blast-worker-killed-case-against-four-including-minister-vanniyarasu-sister#comments</comments><guid isPermaLink="false">f4eaab3e-5bbb-429b-8de8-c61e76aa4d42</guid><pubDate>Mon, 07 Sep 2026 06:08:36 +0000</pubDate><atom:updated>2026-09-07T06:08:36.539Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>fire accident,worker death,Virudhunagar accident,விருதுநகர் விபத்து,Sattur Cracker Blast,சாத்தூர் பட்டாசு ஆலை,வன்னியரசு சகோதரி,Fire cracker Factory</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/6qktawma/Sattur-Cracker-Blast" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sattur Cracker Blast ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/6qktawma/Sattur-Cracker-Blast?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர் மாவட்டம் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">சாத்தூர் </a>அருகேயுள்ள ஒத்தையால் கிராமத்தில் இயங்கி வந்த <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">பட்டாசு ஆலையை</a> மாரியப்பன் என்பவரும், மல்லாங்கிணற்றைச் சேர்ந்த வன்னி அரசின் சகோதரியான ஜெயசக்தியும் நடத்தி வருகின்றனர்.</p><h2>தொழிலாளி பலி</h2><p>மாவட்ட வருவாய்த் துறையின் உரிய உரிமத்துடன் இயங்கி வந்த இந்த ஆலையில் சிறு பட்டாசுகள் மற்றும் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தன. ஐந்து அறைகளைக் கொண்ட இந்த ஆலையில் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.</p><p>இந்தநிலையில் நேற்று முன்தினம் மீனம்பட்டியைச் சேர்ந்த மாடசாமி (38) என்ற தொழிலாளி, வேதிப்பொருட்களைக் கலக்கும் அறையில் கலவை தயாரித்துக் கொண்டிருந்தார். </p><p>அப்போது ஏற்பட்ட உராய்வு காரணமாக திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>4 பேர் மீது வழக்கு</h2><p>இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சண்முகராஜ் அளித்த புகாரின் பேரில், பட்டாசு ஆலையில் வேலை செய்யும் நபர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமலும், அதிகப்படியான பட்டாசுகளை உற்பத்தி செய்ய சொன்னதாலும், வெடி விபத்தில் ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்படும் எனத் தெரிந்திருந்தும் பட்டாசுகளை உற்பத்தி செய்யச் சொன்னதால் இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாகவும் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப் பட்டுள்ளது.</p><h2>ஆலை மேலாளர் கைது</h2><p>இதையடுத்து பட்டாசு ஆலை உரிமையாளர்களான சமூக நீதித்துறை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">அமைச்சர் வன்னியரசுவின்</a> சகோதரி ஜெயசக்தி, அவரது மகள் செல்வமாரி, செல்வமாரியின் கணவர் முரளீஸ்வரன், ஆலை மேலாளர் சூர்ய பிரகாஷ் ஆகிய 4 பேர் மீது அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணத்தை ஏற்படுத்தியது, வெடிபொருட்களை கவன குறைவாக கையாண்டது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.</p><p>இதில் சாத்தூர் தாலுகா போலீசார் ஆலை மேலாளர் சூர்ய பிரகாஷை கைது செய்ததுடன் தலைமறைவான மற்ற மூன்று பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>பிக்பாஸ் தமிழ் சீசன் 10: ஒரே படுக்கையறை, மேடையிலேயே எலிமினேஷன்! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் புதிய வியூகங்கள்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/bigg-boss-tamil-season-10-one-bedroom-on-stage-elimination-new-strategies</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/bigg-boss-tamil-season-10-one-bedroom-on-stage-elimination-new-strategies#comments</comments><guid isPermaLink="false">fdea4c14-d390-4bdc-b41d-7d7b749caf63</guid><pubDate>Mon, 07 Sep 2026 05:59:56 +0000</pubDate><atom:updated>2026-09-07T05:59:56.766Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய் சேதுபதி,Vijay sethupathi,Bigg Boss Tamil,சின்னத்திரை,Bigg Boss Tamil Season 10,பிக்பாஸ் தமிழ் சீசன்,பிக்பாஸ் தமிழ் சீசன் 10</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/uldmcs7m/bi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/uldmcs7m/bi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சின்னத்திரையின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'பிக்பாஸ் தமிழ் சீசன் 10' கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இந்த சீசனில், நடிகர்-நடிகையர், சமூக வலைதள பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலதரப்பட்ட பின்புலங்களைக் கொண்ட 19 போட்டியாளர்கள் இறுதி செய்யப்பட்டு வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.</p><p>சின்னத்திரையின் மிகப்பெரிய தனியார் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவான '<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/i-married-the-wrong-person-bigg-boss-contestant-pradeep-anthony">பிக்பாஸ் தமிழ் சீசன் 10</a>', நேற்று (செப்டம்பர் 6) முதல் நேரலையாகத் தொடங்கியுள்ளது. 10-வது சீசனை முன்னிட்டு நிகழ்ச்சியில் பல்வேறு புதிய விதிமுறைகள், புதுமையான வடிவமைப்பு மற்றும் சுவாரஸ்யமான போட்டியாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர்.</p><p>மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இரண்டாவது ஆண்டாகத் தொகுப்பாளராகத் தனது தனித்துவமான பாணியில் நிகழ்ச்சியை வழிநடத்துகிறார். தொடக்க விழாவிலேயே 29 போட்டியாளர்களில் இருந்து நேரலை பார்வையாளர்களின் வாக்களிப்பு மூலம் 19 பேர் மட்டுமே வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். யூடியூபர் பிரசாந்த் ரங்கசாமி, ஷப்னம் உட்பட 10 போட்டியாளர்கள் மேடையிலேயே வெளியேற்றப்பட்டனர்.</p><h2>19 போட்டியாளர்<strong>களின் விவ</strong>ரம்</h2><p>•லட்சுமி பிரியா: 'மகாநதி' சீரியல் மற்றும் 'பத்து தல' திரைப்படப் பிரபலம். &nbsp; </p><p>•சாத்திகா: 'நான் மகான் அல்ல', 'நெஞ்சில் துணிவிருந்தால்' படங்களின் நடிகை.</p><p>•சந்தினி தமிழரசன்: 'சித்து +2' படத்தின் மூலம் அறிமுகமான பிரபல திரைப்பட நடிகை.</p><figure><img alt="Bigg Boss Tamil Season 10 contestants" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/31e9ehyz/biggboss.jpg" /></figure> <p>•ராகவ்: 'ஜோடி நம்பர் ஒன்' நடனக் கலைஞர் மற்றும் திரைப்பட நடிகர்.</p><p>•'பிளாக்' பாண்டி: 'கனா காணும் காலங்கள்' மற்றும் 'அங்காடி தெரு' புகழ் நகைச்சுவை நடிகர். &nbsp; </p><p>•வினோத் பாபு: சின்னத்திரை நடிகர் மற்றும் கதாசிரியர். &nbsp;</p><p>•குமரன் தங்கராஜன்: தொலைக்காட்சி தொடர் நடிகர். &nbsp;</p><p>•அவினாஷ் அசோக்: 'காயல்' தொடர் நடிகர் மற்றும் 'டான்ஸ் ஜோடி டான்ஸ்' வெற்றியாளர்.</p><p>•முகேஷ்: 'நடுசென்டர்' டிஜிட்டல் தொடர் நடிகர்.</p><p>•முகமது அன்சார்: 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம் கவனம் ஈர்த்தவர்.</p><h2>மாடலிங் <strong>துறை சார்</strong>ந்தவர்கள்:</h2><p>•பிரித்விநாத்: நகைச்சுவை வீடியோக்கள் மூலம் பிரபலமான சமூக வலைதளப் பிரபலம். &nbsp; </p><p>•ஜாவீத் ஷெரீஃப்: ஃபேஷன் மாடல் மற்றும் வளரும் நடிகர்.</p><p>•முத்தழகி: 'மிஸ் பெங்களூர் 2021' பட்டம் வென்ற மாடல் மற்றும் நடிகை. &nbsp; </p><p>•அஸ்மிதா நீலமேகம்: ஒப்பனைக் கலைஞர் மற்றும் முன்னாள் குழந்தை நட்சத்திரம். &nbsp; </p><p>•சவின்யா வேலு: மாடலிங் மற்றும் சின்னத்திரை பிரபலம். &nbsp; </p><p>•தன்யா பல்லாத்: 'ரிசார்ட்' வெப் சீரிஸ் மூலம் அறியப்பட்ட இன்ஃப்ளூயன்ஸர். &nbsp; </p><h2>T<strong>he Common Man</strong></h2><p>•ஜெய்சன் கோஷி: தாய்ச்சி மற்றும் விளையாட்டுத் துறை சார்ந்த வல்லுநர். &nbsp; </p><p>•முனியம்மாள்: பொதுமக்களுக்கான திறந்தவெளி தடிமனான தகுதித்தேர்வில் வெற்றிபெற்ற இல்லத்தரசி. &nbsp; </p><p>•ஷாமா எம்: கார்ப்பரேட் நிறுவன ஊழியர் மற்றும் சமூக வலைதளப் பிரபலம்.</p><h2>புதுவி<strong>தமான அனுபவத்தைத் தரும்</strong></h2><p>'மகாநதி' சீரியல் மூலம் பிரபலமான லட்சுமி பிரியா, இந்த சீசனில் வீட்டின் முக்கிய போட்டியாளராக நுழைந்துள்ளார். அவர் கூறும்போது, "இந்த முறை சாதாரண மக்களும் பிரபலங்களுடன் இணைந்து விளையாட உள்நுழைந்துள்ளது நிகழ்ச்சிக்கு ஒரு புதிய பரிமாணத்தையும் சுவாரஸ்யத்தையும் கொடுக்கும். எனது இயல்பான குணமும் பங்களிப்பும் இந்த வீட்டில் நிச்சயம் எதிரொலிக்கும்" என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.</p><h2>சிறந்த பொழுதுபோக்கை வழங்குவதே என் இலக்கு: ஜேசன் கோஷி</h2><p>பிக்பாஸ் ஸ்பின் ஆஃப் மற்றும் 'தி காமன் மேன்' போட்டிகள் மூலமாகத் தேர்வாகி வீட்டிற்குள் சென்றுள்ள ஜேசன் கோஷி, "எனது தைவாண்டோ மற்றும் கலைத் துறை சார்ந்த அனுபவங்கள் எனக்கு உதவும். பார்வையாளர்களுக்கு ஒரு சிறந்த பொழுதுபோக்கு ஆட்டத்தை வெளிப்படுத்துவதே எனது முதன்மை நோக்கம்" என்று கூறியுள்ளார்.</p><h2>சீசன் <strong>10-ன் முக்கிய அம்</strong>சங்கள்</h2><p>இந்த சீசனில் ஆண், பெண் என்ற பாகுபாடின்றி அனைத்து போட்டியாளர்களுக்கும் ஒரே படுக்கையறை அமைக்கப்பட்டிருப்பதுடன், வீட்டின் தலைவருக்குத் தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சபாநாயகர் முன் தர்ணா.. திமுக எம்எல்ஏ கையை பிடித்து தூக்கிவிட்ட முதலமைச்சர்  விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mlas-outraged-by-chief-minister-vijays-remarks-commotion-ensues-as-they-surround-the-speaker-and-shout-slogans</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mlas-outraged-by-chief-minister-vijays-remarks-commotion-ensues-as-they-surround-the-speaker-and-shout-slogans#comments</comments><guid isPermaLink="false">fc49ff28-54ba-4a17-9c46-f80e955aa42c</guid><pubDate>Mon, 07 Sep 2026 05:46:40 +0000</pubDate><atom:updated>2026-09-07T05:46:40.124Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தமிழக சட்டசபை,Tamil Nadu Legislative Assembly,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/3x24nqqf/tn-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ திமுக எம்எல்ஏக்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ திமுக எம்எல்ஏக்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/3x24nqqf/tn-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய் பேச்சால் கொந்தளித்த திமுக எம்எல்ஏக்கள் சபாநாயகரை சூழ்ந்து கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. </p><p>சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நிறைவடைந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-speech-after-anna-mgr-and-ntr-it-is-vijay">முதலமைச்சர் விஜய்</a> இன்று பதில் அளித்துள்ளார்.</p><p>அப்போது அவர் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருந்ததாகவும் ஊழல், முறைகேடுகள் நடந்ததாகவும் பகரிங்கமாக குற்றம்சாட்டினார். </p><h2>விஜய் பேச்சு</h2><p>"திமுகவினர் எப்போது எதை செய்தாலும் குடும்பமாக தான் செய்வார்கள். செய்யும் தவறையே முறையாக செய்யும் வகையில் விஞ்ஞான ஊழலில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>கடந்த ஆட்சியில் பார்ட்டி ஃபண்ட் வாங்கியதற்கு ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. 7.5% முதல் 10% வரை பார்ட்டி ஃபண்ட் என்ற பெயரில் லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத் துறை கூறியுள்ளது</p><p>பார்ட்டி ஃபண்ட் வாங்கியதில் முக்கிய நபர்கள் ஸ்டாலின், உதயநிதிதான் என அமலாக்கத் துறை கூறியுள்ளது.</p><p>திமுக இருக்கும் இடத்தில் தான் தவறு நடக்கும், தவறு நடக்கும் இடத்தில் தான் திமுக இருக்கும்.</p><p>ஊழல் செய்வோர் தான் ஆதாரம் கேட்பர், ஊழலே செய்யாதோர் அமைதியாக இருப்பார்கள்." என முதலமைச்சர் விஜய் சட்டசபையில் பேசினார்.</p> <h2>திமுகவினர் அமளி</h2><p>முதலமைச்சர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் பேசிக்கொண்டிருந்தபோதே திமுக எம்எல்ஏக்கள் இருக்கையில் இருந்து எழுந்து நின்று முழக்கமிடத் தொடங்கினர்.</p><p>முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">விஜய் </a>சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க தங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும், பேச அனுமதி வேண்டும் என்று திமுகவினர் சபாநாயகரிடம் வலியுறுத்தினர்.</p><p>ஆனால் அவர்கள் உடனடியாக பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி தர மறுத்துவிட்ட்டார். இதனிடையே அவை முன்னவரான செங்கோட்டையன் திமுகவினரை வெளியேற்ற வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.</p> <h2>அனுமதி</h2><p>இதைத்தொடர்ந்து திமுகவினரின் அமளி அதிகரித்தது. சபாநாயகர் இருக்கை முன்னே சென்று திமுகவினர் கூச்சலிடத் தொடங்கினர். சில திமுக எம்எல்ஏக்கள் சபாநாயகர் இருக்கை முன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>தொடர்ந்து முதலமைச்சர் விஜய் எழுந்து, திமுகவினர் பேச அனுமதி அளிக்கும்படி சபாநாயகரை கேட்டுக்கொண்டார். இதன் பின்னர் சபாநாயகர் திமுகவினருக்கு பேச அனுமதி அளிப்பதாக தெரிவித்தார். </p><p>ஆனால் திமுகவினர் மீண்டும் கூச்சலிட்டதால் அனுமதி தரமாட்டேன் என திட்டவட்டமாக கூற, திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். </p><p>இதனிடையே, தனது மேஜைக்கு அருகே சபாநாயகரை நோக்கி கீழே தரையில் அமர்ந்திருந்த மூத்த திமுக எம்எல்ஏ ஒருவர் எழுந்துகொள்ள அவரது கையை பிடித்து முதலமைச்சர் விஜய் உதவினார்.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் இருந்து தி.மு.க.வினர் வெளிநடப்பு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-members-leaves-from-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-members-leaves-from-assembly#comments</comments><guid isPermaLink="false">97b07f2c-3314-44bc-aaf9-913194ab0f25</guid><pubDate>Mon, 07 Sep 2026 05:45:04 +0000</pubDate><atom:updated>2026-09-07T05:45:04.446Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தமிழ்நாடு சட்டசபை,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/rps2xeb6/assembly.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சட்டசபையில் இருந்து தி.மு.க.வினர் வெளிநடப்பு ]]></media:title><media:description type="html"><![CDATA[ சட்டசபையில் இருந்து தி.மு.க.வினர் வெளிநடப்பு ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/rps2xeb6/assembly.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சட்டசபையில் பேச அனுமதி மறுக்கப்படுவதை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் இன்று பதில் அளித்தார். இதனை தொடர்ந்து, முதலமைச்சர் பதிலுரை மீது பேச அனுமதிக்குமாறு கூறி தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயர் இருக்கையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். </p><p>இதற்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், முதலமைச்சர் விஜய் பதிலுரை அளித்த போது அமைதியாக இருந்து கேட்டிருக்க வேண்டும். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனுமதியின்றி போஸ்டர் காட்டுவது குரல் கொடுப்பதை ஏற்க முடியாது என கண்டிப்புடன தெரிவித்தார். </p><p>மேலும் முதலமைச்சர் பதிலுரையின் போது அமைதியாக இருந்திருந்தால் பேச அனுமதித்து இருப்பேன் என சபாநாயகர் தெரிவித்தார். இதற்கிடையே குறுக்கிட்ட அவை முன்னவர் செங்கோட்டையன் சட்டமன்ற நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் திமுக உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைத்தார். </p><p>இதனிடையே, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட நிலையில், எதிர்க்கட்சியினர் பேச அனுமதியுங்கள் என முதலமைச்சர் விஜய் சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்தார். </p><p>இதை அடுத்து,  தி.மு.க. உறுப்பினர்கள் பேசுவதற்கு அனுமதிக்குமாறு முதலமைச்சர் விஜய்  சொல்லியுள்ளார் என சபாநாயகர் தெரிவித்தார். ஆனால் திமுக உறுப்பினர்கள் பேச மீண்டும் அனுமதி மறுத்தார் சபாநாயகர். </p><p>இதனை தொடர்ந்து, சட்டசபையில் பேச அனுமதி மறுக்கப்படுவதை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். </p>]]></content:encoded></item><item><title>கர்நாடக மழையால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 92.37 அடி உயர்வு - 12,000 கனஅடி திறப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/from-today-water-release-for-irrigation-from-mettur-dam-12000-cusecs-increase</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/from-today-water-release-for-irrigation-from-mettur-dam-12000-cusecs-increase#comments</comments><guid isPermaLink="false">5a8bd17b-c6fb-4ccc-a98f-5ea3349ca481</guid><pubDate>Mon, 07 Sep 2026 05:44:00 +0000</pubDate><atom:updated>2026-09-07T05:44:00.084Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Karnataka,மேட்டூர் அணை,Mettur Dam,காவிரி நீர்,Cauvery water,டெல்டா பாசனம்,Delta Irrigation,Hogenakkal Water</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/zv3ma52q/Mettur-Dam" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mettur Dam  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/zv3ma52q/Mettur-Dam?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தென்மேற்கு பருவமழை குறைவால் நீர்வரத்து குறைந்தது, ஆனால் கர்நாடக மழையால் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">மேட்டூர் அணை</a> நீர்மட்டம் 92.37 அடியாக உயர்ந்து, டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.</p><h2>நீர்வரத்து சரிவு</h2><p>கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் தீவிரத்தை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை தீவிரம் இல்லாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. </p><p>இதனால் அணையில் போதிய தண்ணீர் இருப்பு இல்லாததால் காவிரி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">டெல்டா பாசனத்துக்கு</a> ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறக்க முடியாத நிலை உருவானது.</p><h2>மேட்டூர் அணை</h2><p>இந்த நிலையில் கடந்த மாதம் தொடக்கத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE">கர்நாடகாவில் </a>பெய்த மழையின் தீவிரம் காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பும் நிலையில் உள்ளது. </p><p>இதற்கிடையே அந்த அணைகளுக்கு வரும் உபரிநீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த மாதம் 4-ந் தேதி முதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. </p><p>அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே குடிநீர் தேவைக்கு திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து 90 அடியை தாண்டியது.</p><h2>பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு</h2><p>இதையடுத்து முதல்- அமைச்சர் விஜய் கடந்த 1-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைத்தார். </p><p>முதலில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி திறக்கப்பட்ட தண்ணீர் பின்னர் படிபடியாக அதிகரித்து திறக்கப்பட்டு வந்தது. </p><p>நேற்று மாலை வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து திறக்கப்பட்டு வருகிறது.</p><p>மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 92.37 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 512 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் 55.40 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.</p><p>அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் திறக்கப்பட்டு வருவதால் நீர்மட்டம் குறையும் நிலை உருவாகி உள்ளது.</p><h2>ஒகேனக்கல்</h2><p>இதே போல் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%92%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81">ஒகேனக்கல் காவிரி ஆற்றில்</a> இன்று காலை வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. </p><p>இதனால் காவிரி ஆற்றில் இருகரைகளையும் தொட்டப்படி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. அருவிகளிலும் தண்ணீர் கொட்டி வருகிறது. </p><p>கடந்த மாதம் 4-ந் தேதி முதல் தொடர்ந்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வந்து கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது- நடிகர் சூரி</title><link>https://www.maalaimalar.com/news/topnews/no-one-can-fill-the-place-of-chief-minister-vijay-actor-soori</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/no-one-can-fill-the-place-of-chief-minister-vijay-actor-soori#comments</comments><guid isPermaLink="false">5908c0a1-fd10-4e59-8f96-223e99f1f1e0</guid><pubDate>Mon, 07 Sep 2026 05:36:02 +0000</pubDate><atom:updated>2026-09-07T05:36:02.127Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,நடிகர் சூரி,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/225qchbt/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Actor Soori, Chief Minister Vijay ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/225qchbt/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>சினிமா (Cinema)</category><content:encoded><![CDATA[ <p>குழந்தைகள், இளைஞர்கள் முதல் அனைவரும் சட்டமன்றம் பற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள் இது மிகவும் ஆரோக்கியமான ஒரு விஷயம். நடிகர் விஜய் இல்லாத சினிமா துறை என்பது அந்த இடம் ஒரு ஏமாற்றம் தான்.</p><h2>கோவை விமான நிலையத்தில் <strong>நடிகர் சூரி நிருபர்களிடம் கூறியதாவது:-</strong></h2><p>மண்டாட்டி திரைப்படம் மிகவும் அருமையாக வந்துள்ளது. இந்த திரைப்படம் மீனவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இருக்கும் என்று நம்புகிறேன். ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பாய்மர படகு போட்டி பல வருடங்களாக நடைபெற்று வருகிறது. இந்த விளையாட்டை உலகம் முழுவதும் சேர்க்கின்ற படமாக இந்த படம் இருக்கும்.</p><h2><strong>பாக்கியம்</strong></h2><p>மீனவர்கள் சார்ந்த பிரச்சினைகளும் படத்தில் உள்ளது. அதனை படத்தில் பார்த்தால் அனைவருக்கும் தெரியும். பொழுதுபோக்கு படமாக மட்டும் இல்லாமல் ஒரு தேவையான படமாகவும் இது இருக்கும். மீனவராக நடித்தது பெரும் பாக்கியமாக நினைக்கிறேன். இதை ஒரு அனுபவம். ஒரு வாழ்க்கை படமாக நான் கருதுகிறேன்.</p><p>காமெடியனாக இருந்த என்னை மக்கள் ஒரு கதாநாயகனாக கொண்டு வந்து இருக்கிறார்கள். மக்கள் அங்கீகரித்தாலே யாராக இருந்தாலும் ஒரு துறையில் இருக்கலாம்.</p><h2><strong>சட்டசபை நிகழ்வுகள்</strong></h2><p>மக்களுக்கு தேவையான படங்களை கொடுப்பதற்கு நான் ஆசைப்படுகிறேன். காலை முதல் மாலை வரை சட்டசபையில் என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரிகிறது.</p><h2><strong>ஆரோக்கியமானது</strong></h2><p>குழந்தைகள், இளைஞர்கள் முதல் அனைவரும் சட்டமன்றம் பற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள் இது மிகவும் ஆரோக்கியமான ஒரு விஷயம். நடிகர் விஜய் இல்லாத சினிமா துறை என்பது அந்த இடம் ஒரு ஏமாற்றம் தான். அடுத்த திரைப்படம் அயலான் திரைப்படத்தை இயக்கிய இயக்குனருடன் நடிக்கப்போகிறேன். செப்டம்பர் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என நினைக்கிறேன். மீனவர்களில் ஒருவனாக நடித்தது எனக்கு கிடைத்த பாக்கியம். மீனவர்களின் வலியை இந்த படத்தின் மூலம் தெரிந்து கொண்டேன். மீனவர்கள் எப்பொழுதும் நன்றாக இருக்க வேண்டும். மீனவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். அனைத்து துறைகளிலும் அவர்கள் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>அண்ணா, எம்ஜிஆர், என்டிஆருக்கு பின் விஜய் தான் - சட்டசபையில் முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-speech-after-anna-mgr-and-ntr-it-is-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-speech-after-anna-mgr-and-ntr-it-is-vijay#comments</comments><guid isPermaLink="false">5c1886a9-0bad-495f-b8c8-a52253014f5b</guid><pubDate>Mon, 07 Sep 2026 05:26:13 +0000</pubDate><atom:updated>2026-09-07T05:26:13.232Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/1pn48i12/vijay02.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/1pn48i12/vijay02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தவெக ஆட்சியில் ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் உடனடி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபையில்</a> காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்சர் விஜய் பதில் அளித்து பேசினார். அப்போது முதலமைச்சர் விஜய் ஆவேசமாக பேசியதாவது:-</p><p>* கரூர் கேங் என்று என்னவொறு சூப்பர் பெயர் பாருங்களேன், கரூர் கேங்க் தலைவர் யார் என்று மக்கள் ஆவலாக உள்ளனர். </p><p>* மக்களை ஏமாற்றிய போலி பிம்பம், திமுகவின் பிராண்ட் உடைக்கப்படும். </p><p>* அண்ணா, எம்ஜிஆர், என்டிஆருக்கு பின் விஜய் தான், இறைவனும் இயற்கையும் என்றுமே நம் பக்கம் தான் இருப்பார்கள்</p><p>* திமுக அரசு பொறுப்பேற்றதும் அதிமுக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் ரத்து செய்யப்பட்டது ஏன்?</p><p>* அம்மா மினி கிளினிக், தாலிக்கு தங்கம், அம்மா பைக், ஆடு மாடு வழங்கும் திட்டம் தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்டது. </p><p>* திமுக ஆட்சியில் மூடுவிழா கண்ட திட்டங்களுக்கு பட்டியலிட்டால் ஒரு நாளே போதாது. </p><p>* திமுக ஆட்சிக்காலத்தில் 4 ஆண்டுகள் மடிக்கணினி கொடுக்கவில்லை, ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் மூடப்பட்டது. </p><p>* திமுக செய்த தவறுகளை மக்கள் நினைவில் வைத்திருப்பதால் தான் தேர்தலில் தகுந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். </p><p>* மக்கள் நலனில் கண்ணும் கருத்துமாக உள்ள த.வெ.க. அரசு இனியும் அப்படி தான் இருக்கும். </p><p>* சட்டமன்றத்தில் முதலமைச்சர் பேசவில்லை என நக்கல், நையாண்டியாக எதிர்க்கட்சியினர் பேசினார்கள்.</p><p>* ஒவ்வொரு உறுப்பினர் கேள்விக்கும் எல்லா நேரங்களிலும் இடமளித்து பேசுவது தலைமைக்கு அழகல்லா. </p><p>* முதலமைச்சருக்கு பதிலாக அமைச்சர்கள் பதிலளிப்பது எல்லா ஆட்சியிலும் நடப்பதுதான். </p><p>* திமுக ஆட்சிக்காலத்தில் பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லை. </p><p>* திமுக ஆட்சியில் குற்றங்கள் நடைபெற்றபோது அரசியல் தலையீட்டால் FIR பதிவதில் கால தாமதம் அனைவரும் அறிந்ததே. </p><p>* சென்னை விருகம்பாக்கத்தில் 2022-ல் நடந்த திமுக பொதுக்வட்டத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலரிடம் அத்துமீறல் தொடர்பாக பெண் காவலரிடன் புகாரை வாபஸ் பெற பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. 2023-ல் தான் வழக்கு பதிவு செய்யப்பட்டது. </p><p>* கடலூர் எம்பி ரமேஷ் முந்திரி ஆலையில் பணியாற்றியவர் மரணம், தற்கொலை என சித்தரிக்கப்பட்டது. </p><p>* ஆளுங்கட்சியினர் தொடர்புடைய வழக்கில் கால தாமதம், திமுக நிர்வாகிகள் காப்பற்றப்ப்டடது என பெரிய பட்டியல் உள்ளது. </p><p>* தவெக ஆட்சியில் ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் உடனடி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. </p><p>* மாநிலத்தின் முன்னேற்றம் என்பது குடிமக்களின் பாதுகாப்பில்தான் இருக்கிறது. </p><p>* அரசை குறைகூறும் நோக்கில் கூறிய கருத்துக்களையும் மக்கள் பாதுகாப்பு கருதி பொறுப்புடன் எடுத்துக்கொள்கிறோம். </p><p>* எதிர்க்கட்சிகள் உள்நோக்கத்தோடு கூறிய கருத்துகளாக இருந்தாலும் அதில் பாகுபாடு பார்க்க மாட்டோம். </p><p>* யார் மீது பழி போடலாம் என எதிர்க்கட்சிகள் போல் சிந்தித்து பழிபோடும் அரசியலை செய்ய மாட்டோம் என்றார். </p><p>எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பு குரலை பார்த்து சிரித்தவாறு முதலமைச்சர் விஜய் பதிலுரையை முடித்தார். </p>]]></content:encoded></item><item><title>காவல் மரணங்கள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை - சட்டசபையில் முதலமைச்சர் விஜய் உறுதி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/impartial-inquiry-into-police-deaths-cm-vijay-assures-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/impartial-inquiry-into-police-deaths-cm-vijay-assures-assembly#comments</comments><guid isPermaLink="false">e1b833f6-6433-4f5c-82c9-2632672cdc01</guid><pubDate>Mon, 07 Sep 2026 05:17:19 +0000</pubDate><atom:updated>2026-09-07T05:17:19.450Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,Tamil Nadu Legislative Assembly,Custodial deaths,காவல் மரணங்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/dyij7nvt/tn-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விஜய் ]]></media:title><media:description type="html"><![CDATA[ விஜய் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/dyij7nvt/tn-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவல் மரணங்கள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை மேற்கொள்ளப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.</p> <p>தமிழக சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்சர் விஜய் பதில் அளித்து பேசி வருகிறார். அப்போது, காவல் மரணங்கள் குறித்து முதலமைச்சர் விஜய் ஆவேசமாக பேசியதாவது, </p><p>"சட்டமன்ற உறுப்பினர்கள் பேசியபோது காவல் மரணங்கள் குறித்து பேசினர். </p><p>காவல் நிலையத்தில் ஓர் உயிரிழப்பு ஏற்படுவது என்பது சாதாரணமான ஒரு நிகழ்வு அல்ல. அது ஒரு குடும்பத்தின் இழப்பு மட்டுமல்ல காவல்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையும் பாதிக்கும் மிக முக்கியமான பிரச்சினை.</p> <p>எனவே காவலில் எந்த ஒரு மரணம் ஏற்பட்டாலும் அதன் காரணம் குறித்து வெளிப்படையான பாரபட்சமற்ற மற்றும் சட்டப்படி உரிய விசாரணை மேற்கோள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் வழிகாட்டுதல் படி காவல் மரணம் தொடர்பான தகவல்கள் உரிய காலத்திற்குள் தெரிவிக்கப்படுவதோடு தேவையான மருத்துவ உடற்கூறாய்வு மற்றும் மாஜிஸ்த்ரேட் விசாரணையும் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p> <p>ஒரு காவலர் தவறு செய்திருந்தால் அவருக்கு எந்தவித பாதுகாப்பும் வழங்கப்படுவதில்லை.&nbsp;தவறு செய்தவர் யாராக இருந்தாலும் சட்டம் தனது கடமையை சரிவர செய்து வருகிறது.&nbsp;</p><p>காவல் நிலைய மரணங்களை முற்றிலும் தவிர்க்க கண்காணிப்பு, பயிற்சி, மருத்துவ பரிசோதனை, தொழில்நுட்ப கண்காணிப்பு உள்ளிட்டவை மேற்கொள்ளப்படுகிறது." என தெரிவித்தார்.</p> ]]></content:encoded></item><item><title>பழைய பொருட்களை வீடுகளுக்கே சென்று பெற்று அழிக்கும் சென்னை மாநகராட்சியின் திட்டம்: மக்களிடையே பெரும் வரவேற்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-corporation-scheme-collecting-old-items-from-homes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-corporation-scheme-collecting-old-items-from-homes#comments</comments><guid isPermaLink="false">7a1a6b87-86b5-40eb-a464-10e4a2f6e4cd</guid><pubDate>Mon, 07 Sep 2026 05:11:27 +0000</pubDate><atom:updated>2026-09-07T05:11:27.876Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Corporation,சென்னை மாநகராட்சி,Namma Chennai,பெருநகர சென்னை மாநகராட்சி,Greater chennai corporation,நம்ம சென்னை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/l8gjef6e/CHENNA.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Greater Chennai Corporation   ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/l8gjef6e/CHENNA.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்த எளிய நடைமுறையால் வீடுகளில் உள்ள பழைய தேவையற்ற பொருட்களை எறிய சிரமப்பட்டு வந்த சென்னை மக்களுக்குப் பெரு பெருமூச்சு அளிப்பதாக அமைந்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tragedy-near-kattankolathur-minister-jegatheswaris-car-hits-youth-killed">பெருநகர சென்னை மாநகராட்சிப்</a> பகுதிகளில் வீடுகளில் தேங்கிக்கிடக்கும் சோஃபா, மெத்தை, பழைய மரச்சாமான்கள் உள்ளிட்ட கழிவுப் பொருட்களை நேரடியாக வீடுகளுக்கே சென்று சேகரித்து எாிக்கும் சிறப்புத் திட்டத்திற்குப் பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடக்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் இதுவரை 39.93 மெட்ரிக் டன் எடையுள்ள பழைய பழுதுபட்ட பொருட்கள் சேகரிக்கப்பட்டு எாிக்கப்பட்டுள்ளன.</p><p>பொதுவாக வீடுகளைப் புதுப்பிக்கும்போதோ அல்லது பண்டிகைக் காலங்களிலோ மக்கள் பயன்படாத சோஃபா, மெத்தைகள் மற்றும் உடைந்த மரச்சாமான்களை வீதி ஓரங்களிலோ அல்லது குப்பைத் தொட்டிகளுக்கு அருகிலோ வீசிச் செல்கின்றனர். இதனால் நகரத்தின் தூய்மை கெடுவதோடு போக்குவரத்து இடையூறுகளும் ஏற்படுகின்றன. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொதுமக்கள் தங்களின் பயன்பாடற்ற பெரிய கழிவுப் பொருட்களை எளிதாக அகற்ற சென்னை மாநகராட்சி சார்பில் கட்டணமில்லா வீடுகளுக்கே சென்று சேகரிக்கும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.</p><h2>39.93 மெட்ரிக் டன் கழிவுக<strong>ள் எாிப்பு</strong></h2><p>கடந்த ஆண்டு அக்டோபர் 11-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த இந்த விசேஷ சேவையின் கீழ், பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் இதுவரை 39.93 மெட்ரிக் டன் அளவிலான பயன்பாடற்ற சோஃபா, மெத்தை மற்றும் பழைய பொருட்கள் வீடுகளில் இருந்து நேரடியாகச் சேகரிக்கப்பட்டுத் தூய்மைப் பணியாளர்களால் பாதுகாப்பான முறையில் எாிக்கப்பட்டுள்ளன.</p><h2>ஒவ்வொ<strong>ரு வார சனிக்கிழமையும் சேவை</strong></h2><p>பொதுமக்கள் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில், மாநகராட்சி ஊழியர்கள் வாரந்தோறும் சனிக்கிழமையன்று நேரடியாக வீடுகளுக்கே சென்று கழிவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்கின்றனர். இந்த எளிய நடைமுறையால் வீடுகளில் உள்ள பழைய தேவையற்ற பொருட்களை எறிய சிரமப்பட்டு வந்த சென்னை மக்களுக்குப் பெரு பெருமூச்சு அளிப்பதாக அமைந்துள்ளது.</p><h2>முன்பதி<strong>வு செய்</strong>யும் எளிய முறைகள்</h2><p>பொதுமக்கள் தங்களது வீடுகளில் உள்ள பழைய கழிவுப் பொருட்களை அகற்றுவதற்கு மாநகராட்சியைத் தொடர்பு கொள்ள இரண்டு வழிகள் வழங்கப்பட்டுள்ளன. 'நம்ம சென்னை' செயலி வழியாகத் தங்களின் விவரங்களைப் பதிவு செய்து கோரிக்கை விடுக்கலாம். செயலியைப் பயன்படுத்த முடியாதவர்கள் '94450 61913' என்ற வாட்ஸ்அப் எண்ணிற்குத் தகவல் அளித்தால், மாநகராட்சி ஊழியர்கள் சனிக்கிழமை தோறும் நேரடியாக வீடுகளுக்கே சென்று பழைய பொருட்களைப் பெற்றுக்கொள்வர்.</p>]]></content:encoded></item><item><title>ஆபாச நதி, வன்ம நதி.. இரட்டை அர்த்த பேச்சு பற்றி சட்டசபையில் பொங்கிய முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/we-are-aware-of-the-humiliations-jayalalithaa-suffered-in-this-very-assembly-at-the-hands-of-this-very-opposition-party-chief-minister-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/we-are-aware-of-the-humiliations-jayalalithaa-suffered-in-this-very-assembly-at-the-hands-of-this-very-opposition-party-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">70850bd4-17c6-48c2-9272-bb49c5ed4498</guid><pubDate>Mon, 07 Sep 2026 05:02:08 +0000</pubDate><atom:updated>2026-09-07T05:02:08.025Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,Tamil Nadu Legislative Assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/uwtob23t/tn-5.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விஜய் ]]></media:title><media:description type="html"><![CDATA[ விஜய் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/uwtob23t/tn-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நிறைவடைந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் இன்று பதில் அளித்துள்ளார்.</p> <p>அவையில் முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/everyone-is-equal-before-the-law-no-matter-who-they-are-chief-minister-vijays-response-in-the-assembly">விஜய் </a>தனது பதிலுரையில்,</p><p>"பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் உறுப்பினர்கள் வைத்த கருத்துக்கள் பரிசீலித்து முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். </p><p>குற்றத்தில் சிக்கக்கூடிய இளைஞர்கள் குற்றவாளிகளாக மாறுவதற்கு முன்பே காப்பாற்றக்கூடிய சமூக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தமிழ்நாட்டில் மக்கள் அச்சமின்றி வாழவேண்டும் என்பதும் ஊழலற்ற நிர்வாகம் இருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். </p><p>கருத்துரிமை, பேச்சுரிமை என்பதை பற்றி நாம் யோசிக்க வேண்டும்.   அரசியல் ரீதியாக எந்தக் கருத்துகளையும் கூறலாம். ஆனால் தனிப்பட்ட தாக்குதல்கள் பேசக் கூடாது. ஆர்த்தோ சர்ஜன் போல பேரவைக்குள்ளேயே எலும்பை உடைப்பேன் என்று ஒரு எம்.எல்.ஏ. பேசுகிறார். சட்டப்பேரவையில் எலும்பை உடைப்பேன் என்று பேச்சு எதற்கு இதுதான் அரசியலா? இப்படிப் பேசி பேசித்தானே, இன்று அந்தப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறீர்கள். </p><p>தி.மு.க.வினருக்கு அறிவுரை கூற நான் வரவில்லை. மற்றொரு சட்டப்பேரவை உறுப்பினர் கூறுகிறார், தி.மு.க.வுக்கு வாக்களிக்காதவர்களுக்கு நல்ல சாவே வராது என்று கூறுகிறார். மக்களின் தீர்ப்பை ஏற்காத நீங்கள் ஏன் அரசியலில் இருக்க வேண்டும். </p><p>இது குறித்துக் கேட்டால், அரசியலில் பல காலமாக இருப்பவர்கள் என்ன கூறுகிறார்கள் என்றால், நாங்கள் அந்தக் காலத்தில் பேசாத பேச்சா என்று கேட்கிறார்கள்.</p> <p>அரசியலுக்காக தனிப்பட்ட முறையில் மக்களையும் பெண்களையும் தரம் தாழ்ந்து பேசுவது வேண்டாம் என்பது எனது வேண்டுகோள். சமீப காலமாக தமிழ்நாட்டில் ஆபாச நதியாக ஓடுகிறது. வன்ம நதியாக ஓடுகிறது. இதை மக்கள் பார்க்கிறார்கள். </p><p>பெண்களை பற்றி அவதூறாக அசிங்கமாக இரட்டை அர்த்தத்தில் பேசுவதை பெண்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். நம் வீட்டில் இருப்பதும் அதே பெண்கள் தான் என்பதை மனதில் வைத்து பேச வேண்டும்.</p><p>மக்கள் எனக்கு இதற்கு முன் கொடுத்த இடமும், தற்போது கொடுத்த இடமும் கிடைக்க காரணம் நம் வீட்டு பெண்கள் தான். எனவே பெண்களை பற்றி அவதூறாக அசிங்கமாக பேசினால் சட்டம் தன் கடமையை செய்யும்.</p><p>இது அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று நினைத்தால் நான் பொறுப்பல்ல. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இதே சட்டசபையில் இதே எதிர்கட்சியால் எவ்வளவு அவமானங்களை சந்தித்தார் என்பதை நாம் கேள்விபட்டியிருக்கிறோம். எனவே வருங்காலத்தில் பெண்களுக்கு அதுபோல நடந்துவிட கூடாது." என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>இந்த ஆதாரம் போதுமா?.. சட்டசபையில் கர்ஜித்த முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-indictment-dmk-3</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-indictment-dmk-3#comments</comments><guid isPermaLink="false">18be0a35-96cb-4bac-808a-d16f2fae8acf</guid><pubDate>Mon, 07 Sep 2026 05:00:52 +0000</pubDate><atom:updated>2026-09-07T05:00:52.465Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/1gb6jerd/vijay03.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/1gb6jerd/vijay03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>திமுக ஆட்சிக்காலத்தில் அமலாக்கத்துறை அனுப்பிய ஆவணத்தை காட்டி முதலமைச்சர் விஜய் சட்டசபையில் ஆவேசமாக பேசினார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபையில்</a> காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்சர் விஜய் பதில் அளித்து பேசி வருகிறார். அப்போது, சர்க்காரியா கமிஷன் அறிக்கையை குறிப்பிட்டு முதலமைச்சர் விஜய் ஆவேசமாக பேசியதாவது:-</p><p>* 1970 களில் திமுக ஆட்சியில் வீராணம் திட்டத்திற்கு சத்யநாராயண பிரதர்ஸ் டெண்டருக்கு கமிஷன் கேட்டது தொடர்பாக ED அறிக்கை வைத்து முதலமைச்சர் விஜய் பேச்சை தொடங்கினார். </p><p>* 25 ஆண்டுகளுக்கு முன்பே கலைஞரின் மருமகன் டெண்ருக்கு ரூ.29 லட்சம் தவணை முறையில் லஞ்சம். கலைஞர் கருணாநிதி மேல் எனக்கு மதிப்பும் மரியாதையும் உள்ளது, நான் அமலாக்கத்துறை அறிக்கை தான் பேசுகிறேன். முதலமைச்சர் பதவியை கலைஞர் கருணாநிதி தவறாக பயன்படுத்தியதாக அமலாக்கத்துறை அறிக்கை அளித்துள்ளது.</p><p>* அரசியல் பாரம்பரியம் தெரியுமா சீனியாரிட்டி தெரியுமா என பேசுவோர் குறித்து தான் மக்களுக்கு எடுத்து சொல்கிறேன். சர்க்காரியா கமிஷன் எழுதிய புத்தகம் சட்டமன்ற நூலகத்தில் உள்ளது, அதை எடுத்து படியுங்கள்.</p><p>* ஆதாரத்தை பக்கத்திலேயே வைத்துக்கொண்டு தேடுவது தான் திமுகவின் பழக்கம். 7.5 முதல் 10 சதவீதம் வரை கட்சி நிதி திமுக பெற்றதாக அமலாக்கத்துறையை கூறியுள்ளது.</p><p>* கட்சி நிதியில் நேரடி பயனாளியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி இருந்ததாக ED அறிக்கையில் உள்ளது.</p><p>* திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது பதவியை தவறாக பயன்படுத்தினார் என்றும் அறிக்கையில் உள்ளது.</p><p>* முன்னாள் அமைச்சருடன் பல ஐஏஎஸ் அதிகாரிகளும் ஊழலில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை அறிக்கையில் தெரியவந்துள்ளது. </p><p>* குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரி ரத்தீஷ் துபாயில் ஒளிந்து கொண்டிருப்பது ஏன்?</p><p>* திமுகவினர் எப்போது எதை செய்தாலும் குடும்பமாக தான் செய்வார்கள்.</p><p>* செய்யும் தவறையே முறையாக செய்யும் வகையில் விஞ்ஞான ஊழலில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>* மதுபாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.100 வரை கூடுதலாக ஊழல் வசூலித்ததை முறையாக செய்துள்ளனர்.</p><p>* ஆதாரம் வேணும் ஆதாரம் வேணும் என சொல்வோர்களுக்கு தற்போது ஆதாரம் போதுமா?.</p><p>* திமுக இருக்கும் இடத்தில் தான் தவறு நடக்கும், தவறு நடக்கும் இடத்தில் தான் திமுக இருக்கும்.</p><p>* ஊழல் செய்வோர் தான் ஆதாரம் கேட்பர், ஊழலே செய்யாதோர் அமைதியாக இருப்பார்கள் என்று ஆவேசமாக பேசினார். </p>]]></content:encoded></item><item><title>காட்டாங்கொளத்தூர் அருகே சோகம்: அமைச்சர் ஜெகதீஸ்வரியின் கார் மோதி இளைஞர் உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tragedy-near-kattankolathur-minister-jegatheswaris-car-hits-youth-killed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tragedy-near-kattankolathur-minister-jegatheswaris-car-hits-youth-killed#comments</comments><guid isPermaLink="false">6928a527-f37a-4597-aea3-451e1282072b</guid><pubDate>Mon, 07 Sep 2026 04:50:16 +0000</pubDate><atom:updated>2026-09-07T04:50:16.929Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காட்டாங்கொளத்தூர்,TNAssembly,சட்டசபைக் கூட்டத் தொடர்,அமைச்சர் ஜெகதீஸ்வரி,Minister Jagadeeswari,Kattankulathur</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/wdgw1ne5/minidatte.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Jagadeeswari  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/wdgw1ne5/minidatte.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காட்டாங்கொளத்தூர் பகுதியை வாகனங்கள் கடக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாகச் சாலையின் குறுக்கே வந்த இருசக்கர வாகனம் மீது அமைச்சரின் சொந்த கார் பலமாக மோதி விபத்துக்குள்ளானது.</p><p>தமிழ்நாடு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, தொடர் விடுமுறைக்குப் பிறகு சென்னையில் நடைபெறவுள்ள <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/everyone-is-equal-before-the-law-no-matter-who-they-are-chief-minister-vijays-response-in-the-assembly">சட்டமன்றக் கூட்டத்தொடரில் </a>பங்கேற்பதற்காக விருதுநகரில் இருந்து இன்று அதிகாலை சென்னை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தார். </p><p>அமைச்சரின் அரசு வாகனத்திற்கு முன்பாகக் பாதுகாப்பு வாகனமும், அதன் தொடர்ச்சியாக அமைச்சரின் குடும்பத்தினர் பயணித்த அவருக்குச் சொந்தமான மாருதி எர்டிகா காரும் அணிவகுப்பாக வந்துகொண்டிருந்தன. காலை நேரத்தில் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் பகுதியை வாகனங்கள் கடக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாகச் சாலையின் குறுக்கே வந்த இருசக்கர வாகனம் மீது அமைச்சரின் சொந்த கார் பலமாக மோதி விபத்துக்குள்ளானது.</p><h2>இளைஞ<strong>ர் உயிரிழப்பு</strong></h2><p>ஹோண்டோ டியோ ரக இருசக்கர வாகனத்தில் பயணித்த இளைஞர், அதிவேகமாக வந்த கார் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்டுச் சம்பவ இடத்திலேயே பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்துப் புலனாய்வுத் துறை காவல்துறையினர், உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசுப் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த இளைஞர் விருதுநகர் பகுதியைச் சேர்ந்த இறையன்பு (வயது 26) என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><h2>வாகன<strong>ம் பறிமுதல்</strong></h2><p>விபத்து நேரிட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் கூடி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.</p><p>மேலும், விபத்தை ஏற்படுத்திய அமைச்சரின் சொந்த வாகனத்தைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், காரை ஓட்டி வந்த ஓட்டுநரைக் காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து நடந்த பகுதியில் அமைந்துள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்து, அதிவேகப் பயணமா அல்லது கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து நிகழ்ந்ததா என்பது குறித்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>க்ரூயிஸ் கண்ட்ரோல் வசதியுடன் உருவாகும் ஹிமாலயன் 750</title><link>https://www.maalaimalar.com/automobilenews/newautomobile/royal-enfield-himalayan-750-with-cruise-control-tpms-showcased-in-india</link><comments>https://www.maalaimalar.com/automobilenews/newautomobile/royal-enfield-himalayan-750-with-cruise-control-tpms-showcased-in-india#comments</comments><guid isPermaLink="false">feaec6e8-95fc-4bb5-bb49-3ceda65a5fae</guid><pubDate>Mon, 07 Sep 2026 04:48:00 +0000</pubDate><atom:updated>2026-09-07T04:48:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>bike,பைக்,Royal Enfield,ராயல் என்பீல்டு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/utdrx1i8/himalayan-450.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ File Pic: HImalayan 450]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/utdrx1i8/himalayan-450.png?w=280" width="280"></media:thumbnail><category>இது புதுசு (Automobile)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/royal-enfield">ராயல்  என்பீல்டு</a> நிறுவனம் இந்திய சந்தையில் முதல் முறயாக ஹிமாலயன் 750 மாடலை காட்சிப்படுத்தியது. லடாக்கில் நடைபெற்ற ஹிமாலயன் பேஸ் கேம்ப் நிகழ்ச்சியில் இந்த பைக் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது வரை இந்த <a href="https://www.maalaimalar.com/automobilenews/bike">பைக்</a> அதன் உற்பத்திக்கு முந்தைய நிலையிலேயே உள்ளது. </p><p>எனினும், இந்த மாடல் தற்போது உற்பத்திக்கு கிட்டத்தட்ட தயாரான நிலையை அடைநேதிருக்கலாம் என்று தெரிகிறது. முன்னதாக ஹிமாலயன் 750 மாசஸ் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகியிருக்கின்றன.</p><p>முழுமையாக உற்பத்திக்கு நிறைவுற்ற ஹிமாலயன் 750 மாடல் வருகிற நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் EICMA 2026 நிகழ்வில் வைத்து புதிய அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.</p><h2>சிறப்பு அம்சங்கள்:</h2><p>காட்சிப்படுத்தப்பட்ட புதிய ஹிமாலயன் 750 மாடலில் க்ரூயிஸ் கண்ட்ரோல், டயர் பிரெஷர் மாணிட்டரிங் சிஸ்டம், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய முன்புற சஸ்பென்ஷன், டி.எஃப்.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்படுகிறது. அந்த வகையில், க்ரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் டி.பி.எம்.எஸ். அம்சங்களுடன் வரும் முதல் ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிளாக இது இருக்கும்.</p><p>இந்த பைக்கின் முன்புறம் 19-இன்ச் வீல், பின்புறம் 17-இன்ச் வீல் வழங்கப்படுகிறது. இத்துடன் ரெடிஸ்டைன் சென்ட்யூரோ டயர்கள் வழங்கப்படுகின்றன. முந்தைய ஸ்பை படங்களில் இந்த பைக் அலாய் வீல்களை கொண்டிருந்தன. எனினும், விற்பனைக்கு வரும் போது இந்த பைக் கிராஸ் ஸ்போக் வீல்களுடன் வரும் என்று எதிர்பார்க்கலாம்.</p><h2>சேசிஸ் மற்றும் ஹார்டுவேர்:</h2><p>ஹிமாலயன் 750 மாடல் முற்றிலும் புதிய ஃபிரேம் மற்றும் ஸ்விங்ஆர்ம் உடன் வரும். இது பெரிய மோட்டார்சைக்கிளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டதாக இருக்கும். இதன் பின்புறத்தில் டுவின் ஷாக் அப்சார்பர்களுக்கு மாற்றாக டுவின் சிலிண்டர் ராயல் என்பீல்டு பைக்கில் முதல் முறையாக மோனோஷாக் யூனிட் வழங்கப்படுகிறது. சஸ்பென்ஷனுக்கு முழுமையாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய யூனிட், பிரேக்கிங்கிற்கு முன்புறத்தில் இரு டிஸ்க்குகள், பின்புறம் ஒற்றை டிஸ்க் வழங்கப்படுகிறது.</p><p>என்ஜினை பொருத்தவரை புதிய 750 யூனிட் நீண்ட காலமாக தயாரிப்பு கட்டத்திலேயே உள்ளது. இது 650 சிசி பேரலல் டுவின் என்ஜினின் சற்றே பெரிய வெர்ஷனாக இருக்கும். செயல்திறனை பொருத்தவரை இந்த யூனிட் 50 ஹெச்பி பவர் மற்றும் 64 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தம் என தெரிகிறது.</p>]]></content:encoded></item><item><title>தீபாவளி  ரெயில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன! பயணிகள் அதிர்ச்சி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/diwali-train-tickets-sell-out-within-minutes-passengers-shocked</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/diwali-train-tickets-sell-out-within-minutes-passengers-shocked#comments</comments><guid isPermaLink="false">9a235f97-f233-4ea8-9361-06b88685afca</guid><pubDate>Mon, 07 Sep 2026 04:24:42 +0000</pubDate><atom:updated>2026-09-07T04:24:42.693Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Diwali,IRCTC,train tickets,train tickets sold out,IRCTC இணையதளம்,இந்தின் ரெயில்வே</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/uxv2pkhz/train.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  train tickets sold out   ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/uxv2pkhz/train.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கான விரைவு ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளன. </p><p>இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை நவம்பர் 8-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. பொதுமக்கள் பண்டிகைக்கு முன்னதாகவே சொந்த ஊர்களுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளதால், வார இறுதி மற்றும் பண்டிகைக்கு முந்தைய நாட்களுக்கான பயணச்சீட்டுகளுக்கு கடும் போட்டி நிலவுகிறது. இந்திய ரெயில்வேயின் 60 நாட்கள் முன்பதிவு விதியின்படி, நவம்பர் 6-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/officer-inform-night-time-electric-trains-between-beach-and-tambaram-will-operate-as-usual-starting-today">IRCTC இணையதளம் </a>மற்றும் ரெயில் நிலைய கவுண்டர்களில் தொடங்கியது.</p><h2>நிமிடங்களி<strong>ல் தீர்ந்த டிக்கெட்டு</strong>கள்</h2><p>முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே சென்னை மத்திய ரெயில் நிலையம், எழும்பூர் மற்றும் தாம்பரம் உள்ளிட்ட நிலையங்களில் இருந்து தென் மாவட்டங்களான மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை மற்றும் தூத்துக்குடி நோக்கிச் செல்லும் முக்கிய விரைவு ரெயில்களின் அனைத்து டிக்கெட்டுகளும் காலி ஆகின. </p><p>இதனால் இணையவழியிலும் ரெயில் நிலையங்களிலும் காத்திருந்த ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் ஏமாற்றமடைந்துள்ளனர். IRCTC இணையதளத்திலும் மொபைல் செயலியிலும் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பயணிகள் டிக்கெட் பதிவு செய்ய முயன்றதால், இணையதள சேவை மந்தமடைந்ததுடன், சில நிமிடங்களிலேயே 'காத்திருப்போர் பட்டியல்' நிலைக்கு ரெயில்கள் சென்றன.</p><h2>அடுத்தடு<strong>த்த நாட்களுக்கான மு</strong>ன்பதிவு அட்டவண</h2><p>நவம்பர் 7 பயணம்: இதற்கான டிக்கெட் முன்பதிவு நாளை (செப்டம்பர் 8) காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.</p><p>நவம்பர் 8 பயணம்: நாளை மறுநாள் (செப்டம்பர் 9) முன்பதிவு செய்யலாம்.</p><p>திரும்பி வருவதற்கான முன்பதிவு: தீபாவளி முடிந்து மீண்டும் பெருநகரங்களுக்குத் திரும்புவதற்கான முன்பதிவு செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.</p><h2>சிறப்பு ரெயில்கள் இய<strong>க்கக் கோ</strong>ரிக்கை</h2><p>வழக்கமான ரெயில்களில் டிக்கெட்டுகள் உடனடியாக விற்றுத் தீர்ந்துவிட்டதால், தென் மாவட்டங்கள் மற்றும் கொங்கு மண்டலங்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காகக் கூடுதலான சிறப்பு ரெயில்களைத் தெற்கு ரெயில்வே உடனே அறிவிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>அனைத்து குற்றங்களும் கடந்த 100 நாட்களில் தோன்றியது அல்ல.. சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பதிலுரை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/everyone-is-equal-before-the-law-no-matter-who-they-are-chief-minister-vijays-response-in-the-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/everyone-is-equal-before-the-law-no-matter-who-they-are-chief-minister-vijays-response-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">c419d21a-38b3-467c-b73b-fcae64bc4b08</guid><pubDate>Mon, 07 Sep 2026 04:21:46 +0000</pubDate><atom:updated>2026-09-07T04:21:46.687Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,தமிழக சட்டசபை,பட்ஜெட் தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/c360gad3/tn-4.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/c360gad3/tn-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நிறைவடைந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் இன்று பதில் அளித்துள்ளார். </p><p>அவையில் முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/vijay">விஜய் </a>தனது பதிலுரையில், </p><h2>சட்டம் ஒழுங்கு</h2><p>ஒரு மாநிலத்தின் முன்னேற்றம் என்பது சாலைகள் அமைப்பதால் மட்டுமோ தொழிற்சாலைகள் வருவதால் மட்டுமோ தீர்மானிக்கப்படுவதில்லை. அந்த மாநிலத்தில் வாழும் ஒவ்வொரு குடிமகனும் எவ்வளவு பாதுகாப்பாகவும் பயமில்லாமல் வாழ்கிறார் என்பதில் தான் உண்மையான முன்னேற்றம் இருக்கிறது. </p><p>சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்ததால் தான் புதிய தொழில்முதலீடுகள் வளரும், வேலைவாய்ப்பு உருவாகும், சுற்றுலாத்துறை வளரும். பெண்களும் இளைஞர்களும் சுதந்திரமாக கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பங்கேற்பார்கள். எனவே காவல்துறை குற்றவாளிகளை கைது செய்யும் அமைப்பு மட்டுமல்ல. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, முதலீட்டு சூழல், மக்களின் நம்பிக்கைக்கு அடித்தளமான அமைப்பாகும். </p> <p>சட்டத்தை மதித்து நடப்பவர்களுக்கு காவல்துறை உற்ற நண்பனாகவும், சட்டத்தையும், பிறரின் உரிமைகளையும் மீறுபவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் எதிரியாகவும் இருக்க வேண்டும். ஒரு காவலர் இந்த இரண்டு பண்புகளையும் கொண்டவராக இருக்க வேண்டும். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு எந்த அச்சமும் இடையூறும் இன்றி பணியை நேர்மையாகவும் துணிச்சலாகவும் மேற்கொள்வதற்கு உகந்த சூழலை உருவாக்க இந்த அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.</p><p>முதலமைச்சராக இருந்தாலும் அமைச்சராக இருந்தாலும், அதிகாரிகளாக இருந்தாலும், எந்த அரசியல் அதிகாரத்திற்கும் காவல்துறையின் சட்டபூர்வ நடவடிக்கைகளில் தலையீடு செய்யும் உரிமை இல்லை என்பதை கடுமையாக வலியுறுத்தியுள்ளேன். குற்றவாளி யாராக இருந்தாலும் எந்த கட்சியை சார்ந்து இருந்தாலும் நடவடிக்கை வேண்டும் என்பதும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதுமே இந்த அரசின் நிலைப்பாடு.</p> <p>இந்த அவையில் பலரும் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து தங்களின் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். அரசை குறைகூறும் நோக்கில் கருத்துக்களை கூறியவர்களின் கருத்துக்களையும் உள்வாங்கி மக்களின் பாதுகாப்பு குறித்த அவர்களின் அக்கறையையும் பொறுப்புணர்வையும் இந்த அரசு கவனத்தில் எடுத்துக்கொள்கிறது. உள்நோக்கத்துடன் கூறிய கருத்தாக இருந்தாலும் அதிலும் உண்மை இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து ஏற்பதில் பாகுபாடு காட்டமாட்டோம்.</p><p>சட்டம் ஒழுங்கு எப்படி செயல்பட வேண்டும் என்று அன்றே திருவள்ளுவர், எந்த சார்பும் அற்று யாருக்கும் சார்பு அற்று நடுநிலையுடன் நீதி வழங்குவதே உண்மையான ஆட்சி என கூறியுள்ளார். தந்தை பெரியார் சமூக நீதியையும் காமராஜர் நேராமையான் நிர்வாகத்தையும், பேரறிஞர் அண்ணா மக்கள் நல ஆட்சியை வலியுறுத்தினார். புரட்சி தலைவர் எம்ஜிஆர் ஏழை எளியோரின் நலனை தனது அரசின் மையமாக கொண்டிருந்தார். இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து பார்க்கும்போது காவல்துறை என்பது அதிகாரத்தின் அடையாளமாக இருக்கக்கூடாது. அது மக்கள் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையின் அடையளமாக இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.</p><p>குற்றத்தை பார்க்கும் பார்வையும் மாற்றம் வேண்டும். ஒரு குற்றம் நடைபெற்றுவிட்டது என்பதற்காக மட்டுமே ஒட்டுமொத்த மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என கூறிவிட முடியாது. தனிப்பட்ட குற்ற சம்பவத்திற்கும் மாநிலத்தின் ஒட்டுமொத்த சட்ட நிலைக்கும் வேறுபாடு உள்ளது. ஒரு குற்றம் நடைபெற்றுவிட்ட பிறகு அதற்கான பொறுப்பை அரசு மீது சுமத்தி மற்றவர்கள் ஒதுக்கிவிட முடியாது. அனைத்து குற்றங்களும் கடந்த 100 நாட்களில் தோன்றியது அல்ல.</p><p> ஒவ்வொரு குற்றத்தின் பின்னால் முன்விரோதம், பழிவாங்கும் மனநிலை, போதைப்பொருள் பயன்பாட்டின் தாக்கமாகவும் இருக்கலாம். கடந்த காலங்களில் சட்டத்தின் மீது பயமில்லாதது, சிலரின் ஆதிக்கத்தின் கீழ் காவல்துறையின் செயல்பாடு, போதைப்பொருள் கலாச்சார வளர்ச்சி, சமூக கட்டுப்பாடு குறைதல், சாதிய அடையாளம், நிலம், அதிகாரம் மீதான போட்டி, கலப்புத்திருமண எதிர்ப்பு, உள்ளூர் அரசியல் உள்ளிட்ட பல சமூக காரணிகள் குற்றங்களுக்கு பின்னணியாக இருக்கலாம். </p><p>எனவே 30.7.2026 அன்று நடந்த காவல்துறை மாநாட்டில் காவல்துறை பணி குற்றவாளியை கைது செய்வதோடு முடிந்துவிடக்கூடாது. குற்ற சூழலை மாற்றி குற்றம் நடைபெறுவதை தடுப்பதே இலக்கு என வலியுறுத்தினேன். </p><p>இதற்கு ஒவ்வொரு காவல்நிலையமும் அங்கிருக்கும் மக்களுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு தெருவிலும் நிலவும் பிரச்சனை குறித்து காவல்துறை முன்கூட்டியே அறிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>இந்த சட்டமொழுங்கு என்பது தெருவில் நடைபெறும் குற்றங்களோடு மட்டும் முடியவில்லை. சைபர் குற்றங்களும் நவீன சட்டம் ஒழுங்கின் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளன. </p><p>இணைய மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் நடைபெறுகின்றன. இதற்கு தொழில்நுட்பம் மட்டும் காரணம் அல்ல. டிஜிட்டல் அறிவு குறைவு, விரைவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற மனநிலை, சரிபார்க்காமல் முதலீடு செய்வது இதற்கு வழிவகுக்கின்றன. எனவே சைபர் குற்றங்களை வளர்க்க, காவல்துறை தொழில்நுட்ப திறனை அதிகரிப்பது மட்டும் போதாது. பள்ளி மாணவர்கள் முதல் முதியோர் வரை டிஜிட்டல் பாதுகாப்பு குறித்த கல்வி வழங்கப்பட வேண்டும். அனைவரும் இணைந்து செயல்படும் ஒரு வலுவான சைபர் பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். குற்றத்திற்கு இரையாகாமல் தடுப்பது தான் வெற்றி." என்றார்.</p> ]]></content:encoded></item><item><title>CNG கிட், லெவல் 2 ADAS உடன் புதிய பலேனோ ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்!</title><link>https://www.maalaimalar.com/automobilenews/car/maruti-suzuki-baleno-facelift-launched-in-india</link><comments>https://www.maalaimalar.com/automobilenews/car/maruti-suzuki-baleno-facelift-launched-in-india#comments</comments><guid isPermaLink="false">5574a0bf-73a5-4290-afc7-ad84d0d533a6</guid><pubDate>Mon, 07 Sep 2026 04:17:00 +0000</pubDate><atom:updated>2026-09-07T04:17:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Car,Maruti Suzuki,மாருதி சுசுகி,கார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/nconuhnx/Maruti-Suzuki-Baleno-Facelift.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Maruti Suzuki Baleno Facelift]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/nconuhnx/Maruti-Suzuki-Baleno-Facelift.png?w=280" width="280"></media:thumbnail><category>கார் (Automobile)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் தனது பலேனோ ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகம் செய்தது. புதிய <a href="https://www.maalaimalar.com/topic/maruti-suzuki">மாருதி சுசுகி</a> பலேனோ ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை ரூ. 6.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகிறது. </p><p>புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலில் ஸ்டைலிங் மாற்றப்பட்டு, கூடுதலாக புதிய அம்சங்கள் மற்றும் புதிய பெட்ரோல் <a href="https://www.maalaimalar.com/automobilenews/car">என்ஜின்</a> வழங்கப்பட்டு இருக்கிறது.</p><h2>புதிய என்ஜின் ஆப்ஷன்:</h2><p>அந்த வகையில், புதிய பலேனோ ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.2 லிட்டர் 3 சிலிண்ர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இதே யூனிட் ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.</p><p>இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதே என்ஜின் ஃபேக்டரி-ஃபிட் சி.என்.ஜி. கிட் உடனும் வழங்கப்படுகிறது.</p><p>அந்த வகையில், பலேனோ மாடலில் முதல் முறையாக சி.என்.ஜி. கிட் வழங்கப்படுகிறது. மேலும், AMT கியர்பாக்ஸ் கொண்ட மாடலிலும் சி.என்.ஜி. ஃபிட் செய்யப்படும் என மாருதி சுசுகி தெரிவித்துள்ளது.</p><h2>புதிய அம்சங்கள்:</h2><p>மாற்றங்களை பொருத்தவரை புதிய பலேனோ மாடலில் சற்றே அளவில் பெரிய முன்புற கிரில், கருப்பு நிற ஸ்லாட்களால் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இதன் ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லேம்ப்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. </p><p>இதன் பம்ப்பர்களில் சிறு மாற்றம் செய்யப்பட்டு புதிதாக ஃபாக் லேம்ப் ஹவுசிங் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் 16-இன்ச் அலாய் வீல்களில் புது டிசைன் வழங்கப்பட்டு இருக்கிறது.</p><p>உள்புறத்தில் கிட்டத்தட்ட ஒரே மாதிரி காட்சியளிக்கும் வகையில் 9-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் முன்புறம் வென்டிலேட்டெட் இருக்கைகள், டயர் பிரெஷர் மானிட்டர், லெவல் 2 ADAS வழங்கப்பட்டு இருக்கிறது.</p><p>இவைதவிர ஏற்கனவே உள்ள மாடலில் இருந்து உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் ஓட்டுநர் இருக்கை, வயர்லெஸ் சார்ஜர், ஹெட்-அப் டிஸ்ப்ளே, ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா வழங்கப்படுகிறது.</p><p>இந்திய சந்தையில் புதிய பலேனோ மாடல் டாடா அல்ட்ரோஸ் மற்றும் ஹூண்டாய் i20 ஆகிய மாடல்களுக்கு பிரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் போட்டியாக அமைகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஆண்டு விழாவை ஒட்டி வருடாந்தர சலுகையை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/reliance-jio-10th-anniversary-rs-3599-annual-plan-launched</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/reliance-jio-10th-anniversary-rs-3599-annual-plan-launched#comments</comments><guid isPermaLink="false">f2edb3c1-ceb0-44b5-af36-c1b49b0098dd</guid><pubDate>Mon, 07 Sep 2026 03:34:00 +0000</pubDate><atom:updated>2026-09-07T03:34:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Reliance Jio,ரிலையன்ஸ் ஜியோ,Offers,சலுகைகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/z0hkztwx/Jio-10-Years.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Reliance Jio  
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/z0hkztwx/Jio-10-Years.png?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ரிலையன்ஸ் <a href="https://www.maalaimalar.com/topic/reliance-jio">ஜியோ</a> நிறுவனம் ஸ்பெஷல் எடிஷன் வருடாந்திர பிரீபெயிட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஜியோவின் 10-ஆவது ஆண்டு விழாவை ஒட்டி இந்த <a href="https://www.maalaimalar.com/topic/offers">சலுகை</a> அறிவிக்கப்பட்டு இருக்கிறது. </p><p>செப்டம்பர் 2016-இல் வர்த்தக ரீதியில் பணிகளை தொடங்கிய ரிலையன்ஸ் ஜியோ தற்போது அறிவித்து இருக்கும் பிரீபெயிட் ரீசார்ஜ் திட்டத்தில் கிளவுட் ஸ்டோரேஜ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த சந்தாக்கள் மற்றும் டிஜிட்டல் பார்ட்னர் வவுச்சர் உள்ளிட்டவைகளை வழங்குகிறது.</p><h2>ஜியோ ரூ. 3599 பலன்கள்:</h2><p>தினமும் 2.5 ஜிபி அதிவேக 4ஜி டேட்டா</p><p>அன்லிமிட்டெட் 5ஜி டேட்டா</p><p>அன்லிமிட்டெட் அழைப்புகள்</p><p>தினமும் 100 எஸ்.எம்.எஸ்.</p><p>12 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 10 ஜிபி டேட்டா வீதம் 120 ஜிபி டேட்டா போனஸ்</p><p>கூகுள் ஜெமினி ப்ரோ சேவைக்கான 18 மாத சந்தா</p><p>5000 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ்</p><p>நானோ பனானா ஏ.ஐ.</p><p>ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா</p><p>ஒரு வருடத்திற்கு ஜியோ டிவி ப்ரோ சந்தா</p><p>EasemyTrip வழங்கும் விமானங்கள் மற்றும் ஓட்டல் புக்கிங்களில் ரூ. 2200 வவுச்சர்</p><p>ரூ. 200 AJIO தள்ளுபடி வவுச்சர்</p><p>Cinepolis திரையரங்குகளில் ரூ. 150 தள்ளுபடி வவுச்சர்</p><p>ரிலையன்ஸ் ஜியோவின் வருடாந்திர சிறப்பு சலுகை அனைத்து டிஜிட்டல் தளங்கள், மைஜியோ செயலி, ஜியோ அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மூன்றாம் தரப்பு சில்லறை நெட்வொர்க்குகளில் கிடைக்கிறது.</p><h2>சர்வதேச விரிவாக்கம்:</h2><p>முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவை தொடர்ந்து சர்வதேச சந்தையிலும் தனது சேவையை விரிவுப்படுத்த திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டது.</p><p>இது குறித்து ரிலையன்ஸ் ஜியோ தலைவர் ஆகாஷ் அம்பானி வெளியிட்ட அறிக்கையில், "இன்று ஜியோ ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தை விடவும் மேலானதாக திகழ்கிறது. இணைப்பு வசதி, டிஜிட்டல் தயாரிப்புகள், நிறுவனங்களுக்கான தீர்வுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகிய துறைகளில், இந்தியாவிலேயே சொந்தத் தொழில்நுட்பங்களை நாங்கள் உருவாக்கி வருகிறோம்.</p><p>தொழில்நுட்பத்தின் பலன்களை பெருமளவில் மக்களிடம் கொண்டு சேர்ப்பது, இத்தொழில்நுட்பங்களை உலகளாவிய நிலைக்குக் கொண்டு செல்வது மற்றும் உலகிற்கான தொழில்நுட்பங்களை உருவாக்கும் நாடாக இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவது ஆகியவையே நம் முன்னால் உள்ள வாய்ப்புகளாகும்," என்று கூறினார்.</p><h2>சர்வதேச விரிவாக்கம்:</h2><p>முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவை தொடர்ந்து சர்வதேச சந்தையிலும் தனது சேவையை விரிவுப்படுத்த திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டது.</p><p>இது குறித்து ரிலையன்ஸ் ஜியோ தலைவர் ஆகாஷ் அம்பானி வெளியிட்ட அறிக்கையில், "இன்று ஜியோ ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தை விடவும் மேலானதாக திகழ்கிறது. இணைப்பு வசதி, டிஜிட்டல் தயாரிப்புகள், நிறுவனங்களுக்கான தீர்வுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகிய துறைகளில், இந்தியாவிலேயே சொந்தத் தொழில்நுட்பங்களை நாங்கள் உருவாக்கி வருகிறோம்.</p><p>தொழில்நுட்பத்தின் பலன்களை பெருமளவில் மக்களிடம் கொண்டு சேர்ப்பது, இத்தொழில்நுட்பங்களை உலகளாவிய நிலைக்குக் கொண்டு செல்வது மற்றும் உலகிற்கான தொழில்நுட்பங்களை உருவாக்கும் நாடாக இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவது ஆகியவையே நம் முன்னால் உள்ள வாய்ப்புகளாகும்," என்று கூறினார்.</p>]]></content:encoded></item></channel></rss>