<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 07 Aug 2026 21:13:04 +0000</lastBuildDate><item><title>வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மகன்... முடிவுக்கு வந்த விவாகரத்து வழக்கு: விஜய் - சங்கீதா எதிர்காலம் என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/son-puts-an-end-to-rumors-divorce-case-concluded-what-does-the-future-hold-for-vijay-and-sangeetha</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/son-puts-an-end-to-rumors-divorce-case-concluded-what-does-the-future-hold-for-vijay-and-sangeetha#comments</comments><guid isPermaLink="false">33ba657d-0626-425e-b2b4-7ba7ded9818e</guid><pubDate>Fri, 07 Aug 2026 11:42:55 +0000</pubDate><atom:updated>2026-08-07T11:42:55.672Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Sangeetha,ஜோசப் விஜய்,joseph vijay,சங்கீதா,Divorce Petition,விவாகரத்து மனு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/v5d51v91/New-Project-2026-08-07T171220.708.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மகன்... முடிவுக்கு வந்த விவாகரத்து வழக்கு: விஜய் - சங்கீதா எதிர்காலம் என்ன?]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/v5d51v91/New-Project-2026-08-07T171220.708.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய்யிடம் இருந்து விவாகரத்துக் கோரி அவரது மனைவி சங்கீதா சொர்ணலிங்கம் தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெற்றுள்ளார். </p><p>மனுவை திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து வழக்கை முடித்துவைப்பதாக செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் நீண்டநாட்களாக தமிழ்நாட்டில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வந்த வழக்கு முடிவுப் பெற்றுள்ளது. </p><p>வழக்கு இன்று விசாரணைக்கு வந்தநிலையில், லண்டனில் இருக்கும் சங்கீதா காணொலி காட்சி வாயிலாக ஆஜராக நீதிபதியிடம் சுமார் 15 நிமிடங்கள் பேசியதாகவும், அப்போது மனப்பூர்வமாக மனுவை திரும்பப் பெற்றுக்கொள்வதாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. </p><p>இதனைத் தொடர்ந்து, நீதிமன்றம் இந்த விவாகரத்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.</p><h2>மனைவியான ரசிகை </h2><p>வெவ்வெறு மதங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், 1999ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி சென்னையில் இந்து முறைப்படி விஜய்யும், சங்கீதாவும் திருமணம் செய்துகொண்டனர்.  விஜய் கிறிஸ்தவர், சங்கீதா இந்து. விஜய்யின் ரசிகையாக இருந்தப் பெண்ணை, அவரது மணப்பெண்ணாக மாற்றியது விஜய்யின் தந்தை இயக்குநர் சந்திரசேகர்தான்.</p><p>இந்தத் தம்பதியருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். திருமணமான மறுஆண்டே மகன் ஜேசன் சஞ்சயும், 2005-ல் மகள் திவ்யா சாஷாவும் பிறந்தனர். </p><p>இவ்வாறு இப்பந்தம் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் நீடித்தநிலையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம், விஜய்யிடம் இருந்து விவாகரத்துக் கோரி சங்கீதா மனுத்தாக்கல் செய்து விஜய்யின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். ரசிகர்களை தாண்டி இந்தச் செய்தி அப்போது மட்டுமின்றி இன்றுவரை தமிழ் சினிமாத்துறையிலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் பேசுபொருளாக இருந்தது.</p><h2>விவாகரத்து மனுவில் கூறப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள்</h2><p>சங்கீதா சொர்ணலிங்கம் தனது விவாகரத்துக் கோரிய மனுவில், விஜய் நீண்டநாட்களாக மூன்றெழுத்துப் பிரபல நடிகை ஒருவருடன் திருமணத்தைத் தாண்டிய உறவில் இருந்து வருவதாகவும், இது தனக்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாக குறிப்பிட்டிருந்தார்.</p><p>விஜய் உடன் இருக்கும் புகைப்படங்களை நடிகை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி வந்தது தனக்கு மட்டுமின்றி, தனது பிள்ளைகளுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.</p><p>மேலும் இருவருக்கும் இடையே நீண்டநாட்களாகவே இந்த பிரச்னை நிலவிவந்ததாகவும், முன்னரே சங்கீதா விவாகரத்து கோரியதாகவும், இதனால் அவரை விஜய் வீட்டுச்சிறையில் வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார். </p><p>மேலும் இந்த திருமண உறவை ரத்து செய்யக்கோரியதுடன், நிரந்தர ஜீவனாம்சமும், திருமண வீட்டில் தொடர்ந்து வசிக்கும் உரிமையையும் கோரியிருந்தார். </p><h2>மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட வழக்கு</h2><p>விஜய்யின் அரசியல் பிரவேசத்தினாலும், சங்கீதா லண்டனில் இருப்பதாலும், மனுதாரர்கள் ஆஜராகாமல் இந்த விவாகரத்து வழக்கு பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.</p><p>கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற முந்தைய விசாரணையின்போது, ​​இரு தரப்பினரும் ஆஜராகவில்லை. அவர்களுக்காக அவரவர் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.</p><p>இந்நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு சட்டசபைக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும்நிலையில் விஜய் தரப்பில் இருந்து ஆஜராவதில் இருந்து விலக்கு கோரப்பட்டது. ஆனால் சட்டசபை முடிந்தபின் ஆஜராகுமாறு நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.</p><p>மறுபுறம் சங்கீதா காணொலி காட்சி வாயிலாக ஆஜராக நீதிபதி அவரிடம் 15 நிமிடங்கள் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. அதன்போது, வழக்கை தொடர தான் விரும்பவில்லை எனவும், முழு சுயநினைவுடன் விவாகரத்து வழக்கை திரும்பப் பெறுவதாகவும் சங்கீதா தெரிவித்ததாக கூறப்படுகிறது. </p><p>இதனைத்தொடர்ந்து செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றம் இந்த வழக்கை முறைப்படி முடித்து வைத்துள்ளது.</p><h2>வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜேசன் சஞ்சய்</h2><p>விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தான் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக தனியார் ஊடக நிறுவனம் ஒன்றிற்கு சமீபத்தில் பேட்டியளித்திருந்தார். அந்தப் பேட்டியில் தனது தந்தை மற்றும் குடும்பத்தினர் குறித்துப் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பல்வேறு சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்திருந்தார். </p><p>இந்த நேர்காணல் வெளியான சில நாட்களிலேயே, விவாகரத்து மனுவும் வாபஸ் பெறப்பட்டுள்ளது. </p><h2>எதிர்காலம் என்ன?</h2><p>சங்கீதா சொர்ணலிங்கம் விவாகரத்து மனுவை திரும்பப் பெற்றதால், சட்ட நடவடிக்கைகள் முடிவுக்கு வந்தபோதிலும், தம்பதியினர் முறைப்படி சமரசம் செய்துகொண்டனரா அல்லது தொடர்ந்து சேர்ந்து வாழ்வார்களா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.</p><p>இருதரப்பினரும் இதுதொடர்பாக இதுவரை அறிக்கை எதையும் வெளியிடவும் இல்லை.</p>]]></content:encoded></item><item><title>டி.என்.பி.எல்.: திண்டுக்கல் அணிக்கு எதிரான போட்டியில் அபார வெற்றி பெற்ற நெல்லை ராயல் கிங்ஸ்!</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-nellai-royal-kings-beat-dindigul-dragons-by-6-wickets</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-nellai-royal-kings-beat-dindigul-dragons-by-6-wickets#comments</comments><guid isPermaLink="false">11e95847-066b-4539-8589-e16a24ba15ef</guid><pubDate>Fri, 07 Aug 2026 20:23:26 +0000</pubDate><atom:updated>2026-08-07T20:23:26.769Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,Nellai Royal Kings,நெல்லை ராயல் கிங்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/bph1ry20/Nellai-Royal-Kings.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nellai Royal Kings]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/bph1ry20/Nellai-Royal-Kings.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>10-வது <a href="https://www.maalaimalar.com/topic/tnpl">டி.என்.பி.எல்.</a> டி20 கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் திருப்பூர் தமிழன்ஸ், <a href="https://www.maalaimalar.com/topic/chepauk-super-gillies">சேப்பாக் சூப்பர் கில்லீஸ்</a>, கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்றுள்ளன. </p><p>ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.</p><h2>டாஸ்:</h2><p>திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெற்ற லீக் சுற்று போட்டியில், டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து, திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.</p><p>தொடக்க வீரர் அனுராக் ராஜேஷ் 35 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்தார். மற்றொரு தொடக்க வீரர் ஷிவம் சிங் 7 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய ஜெயந்த் 5 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இதையடுத்து களமிறங்கிய விமல் குமார் மற்றும் ஹன்னி சய்லி ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.</p><h2>171 ரன்கள் இலக்கு:</h2><p>ஹன்னி சய்லி 27 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் பாபா இந்திரஜித் 9 ரன்களிலும், கார்த்தி சரண் ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினர். ஒரு முனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய விமல் குமார் அரைசதம் விளாசி, 63 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.</p><p>இறுதியில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் குவித்தது. விமல்குமார் 63 ரன்களும், அனுராக் 35 ரன்களும் விளாசினர். வேகப்பந்து வீச்சாளர் சோனு யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.</p><h2>நெல்லை அபாரம்:</h2><p>கடின இலக்கை துரத்திய நெல்லை அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய சந்தோஷ்குமார் 44 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய அதிஷ் 8 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய குருசாமி அஜிதேஷ் 46 ரன்களையும், முகிலேஷ் 43 ரன்களையும் குவித்தனர்.</p><p>இறுதியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 17.4 ஓவர்களில் வெறும் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.</p>]]></content:encoded></item><item><title>அசாம் வெள்ளம்: பலி எண்ணிக்கை 98-ஆக உயர்வு; 13 மாவட்டங்களில் 1.55 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/assam-floods-toll-rises-to-98-over-155-lakh-people-affected-across-13-districts</link><comments>https://www.maalaimalar.com/news/national/assam-floods-toll-rises-to-98-over-155-lakh-people-affected-across-13-districts#comments</comments><guid isPermaLink="false">9f74ca36-82cf-4a2b-9efd-d061998161cb</guid><pubDate>Fri, 07 Aug 2026 19:59:07 +0000</pubDate><atom:updated>2026-08-07T19:59:07.457Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உயிரிழப்பு,Death toll,அசாம் வெள்ளம்,Assam Floods</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/jd1nit23/assam-floods-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ assam floods]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/jd1nit23/assam-floods-1.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அசாமில் வெள்ள சூழல் மோசமாகவே நீடித்தது. அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, பலி எண்ணிக்கை 98-ஐ எட்டியுள்ளது.  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 13-ஆகவும், பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 1.55 லட்சமாகவும் குறைந்துள்ளது.</p><p>சாரைடியோ (Charaideo) மாவட்டத்தில் உள்ள மஹ்மோரா வருவாய் வட்டத்தில்தான் இந்த சமீபத்திய உயிரிழப்பு பதிவாகி இருப்பதாக <a href="https://www.maalaimalar.com/topic/assam-floods">அசாம்</a> மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (ASDMA) அறிக்கை தெரிவிக்கிறது.</p><h2>33 வட்டங்களில் பாதிப்பு:</h2><p>சிவசாகர், கோலாகாட், நாகான், ஹோஜாய், சோனித்பூர், தேமாஜி, தர்ராங், பிஸ்வநாத், காம்ரூப் (மெட்ரோ), லக்கிம்பூர், உதல்குரி, ஜோர்ஹாட் மற்றும் சாரைடியோ ஆகிய 13 மாவட்டங்கள் வெள்ளத்தால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளன; இதனால் 33 வருவாய் வட்டங்களும் 464 கிராமங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p>மாநிலத்தில் மொத்தம் 1,55,849 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கோலாகாட் மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து சிவசாகர் மற்றும் ஜோர்ஹாட் மாவட்டங்கள் உள்ளன. கடந்த வியாழக்கிழமையன்று 15 மாவட்டங்களும், 1.68 லட்சத்துக்கும் அதிகமான மக்களும் பாதிக்கப்பட்டிருந்தனர்.</p><h2>சேத விவரம்:</h2><p>நிர்வாகம் 55 நிவாரண முகாம்களை நடத்தி வருகிறது; இவற்றில் இடம்பெயர்ந்த 10,000-க்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் 18 நிவாரண பொருட்கள் விநியோக மையங்களும் செயல்பட்டு வருகின்றன.</p><p>கோலாகாட் மாவட்டத்தில் உள்ள கோலாகாட் நகரம் மற்றும் நுமாலிகர் ஆகிய இடங்களில் தன்சிரி ஆறும், ஸ்ரீபூமி மாவட்டத்தில் குஷியாரா ஆறும் அபாய அளவைத் தாண்டி ஓடுகின்றன.</p><p>10,748.64 ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன; அதேவேளையில் 47,000-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சாலைகள், பாலங்கள் மற்றும் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்புகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>நகைச்சுவை, ஃபேண்டஸி கலந்த ‘மாஸ்டர் பிளான்’: ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் ஃபர்ஸ்ட் லுக்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/master-plan-movie-first-look-gains-attraction</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/master-plan-movie-first-look-gains-attraction#comments</comments><guid isPermaLink="false">5bae1162-d4bc-439a-8a87-08ba151399c7</guid><pubDate>Fri, 07 Aug 2026 19:04:35 +0000</pubDate><atom:updated>2026-08-07T19:04:35.023Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மாஸ்டர் பிளான்,தருண் விஜய்,அக்‌ஷரா ரெட்டி,Master Plan,Tharun Vijay,Akshara Reddy</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/z5z5mgq1/Master-Plan-First-Look.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Master Plan First Look]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/z5z5mgq1/Master-Plan-First-Look.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்ரா புரொடக்ஷன்ஸ், டி.ஜே. இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி, இயக்கி, தயாரிக்கும் ‘மாஸ்டர் பிளான்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. </p><p>பிளாக் ஹூமர், ஃபேண்டஸி மற்றும் குடும்ப பொழுதுபோக்கு அம்சங்கள் கலந்த கதையாக உருவாகி வரும் இப்படம் மீதான எதிர்பார்ப்பை இந்த ஃபர்ஸ்ட் லுக் மேலும் அதிகரித்துள்ளது.</p><h2>ஃபர்ஸ்ட் லுக்:</h2><p>தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், பொன்னிற ஒளி வீசும் மர்ம பெட்டியை கையில் ஏந்தியபடி வயதான பாட்டி மற்றும் சிறுவன் நிற்கிறார்கள். சுற்றி குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆச்சரியம், பயம், பதற்றம் கலந்த முகபாவனையுடன் அந்த பெட்டியை நோக்கி நிற்கும் காட்சி, கதையின் மையமாக இந்த மாயப் பெட்டி அமையப்போகிறது என்பதை உணர்த்துகிறது.</p><p>பழமையான வீட்டின் பின்னணி, சிதறிக் கிடக்கும் பணக்கட்டுகள், துப்பாக்கி உள்ளிட்ட காட்சிகள், திரில் நிறைந்த குடும்ப கதைக்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன. வித்தியாசமான காட்சியமைப்பால் சமூக வலைதளங்களிலும் இந்த ஃபர்ஸ்ட் லுக் கவனம் ஈர்த்து வருகிறது.</p><h2>சுவாரஸ்ய கதை:</h2><p>தகுதிக்கு மீறிய வாழ்க்கையை வாழ விரும்பும் ஒரு நடுத்தர குடும்பம், அதனால் உருவாகும் பிரச்சனைகளில் இருந்து, ஃபேண்டஸி மற்றும் நகைச்சுவை அம்சங்கள் கலந்து எப்படி மீண்டு வருகிறது என்பதையே இப்படம் சுவாரஸ்யமாக சொல்லவுள்ளது. கோலமாவு கோகிலா, டாக்டர், டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற படங்களின் பாணியில் பிளாக் ஹூமர் கலந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக இது உருவாகி வருகிறது.</p><p>தருண் விஜய் மற்றும் பிக்பாஸ் புகழ அக்‌ஷரா ரெட்டி நாயகன்–நாயகியாக நடிக்கும் இப்படத்தில் பாவல் நவகீதன், திவ்ய ஜகத், அப்புகுட்டி, தீபா சங்கர், தேனப்பன், சம்பத் ராம், கஜராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.</p><p>தற்போது தேனி, விழுப்புரம், செஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஜார்க்கண்ட் அரசுடன் பேச்சுவார்த்தை நிறைவு: கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை தொடர மாணவர்கள் முடிவு</title><link>https://www.maalaimalar.com/news/national/students-to-continue-agitation-despite-talks-with-jharkhand-govt</link><comments>https://www.maalaimalar.com/news/national/students-to-continue-agitation-despite-talks-with-jharkhand-govt#comments</comments><guid isPermaLink="false">038701dc-5e0f-439f-b596-8c8bb64c4a6a</guid><pubDate>Fri, 07 Aug 2026 18:20:05 +0000</pubDate><atom:updated>2026-08-07T18:20:05.718Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>protest,Jharkhand,போராட்டம்,ஜார்க்கண்ட்,Students,மாணவர்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/kfwgmmh7/Ranchi-Students-Protest.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ranchi Students Protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/kfwgmmh7/Ranchi-Students-Protest.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/jharkhand">ஜார்க்கண்ட்</a> பணி நியமன தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக, மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் தங்கள் போராட்டத்தை தொடரப்போவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள <a href="https://www.maalaimalar.com/topic/student-protest">மாணவர்கள்</a> தெரிவித்தனர். </p><p>14-ஆவது JPSC தேர்வை ரத்து செய்வது உள்ளிட்ட தங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை என்றும் அவர்கள் கூறினர். ஞாயிற்றுக்கிழமைக்குள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், ஆகஸ்ட் 10-ஆம் தேதி மாநில சட்டமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்தப்போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.</p><h2>போராட்டம் தொடரும்:</h2><p>அரசுக்கும், 'JPSC/JSSC சீர்திருத்த மன்றத்தின்' 10 பேர் கொண்ட குழுவுக்கும் இடையிலான முதல் கட்டப் பேச்சுவார்த்தை இன்று (வெள்ளிக்கிழமை) மாலை நடைபெற்றது.</p><p>"ஜார்க்கண்ட் அரசுடனான கூட்டம் சுமூகமான சூழலில் நடைபெற்றது. எங்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று அரசு உறுதியளித்தது. இருப்பினும், 14-ஆவது JPSC தேர்வை ரத்து செய்வது உள்ளிட்ட எங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை தொடர முடிவு செய்துள்ளோம்," என்று கூட்டத்திற்குப் பிறகு 'JPSC/JSSC சீர்திருத்த மன்றத்தின்' தலைவர் செய்தியாளர்களிடம் கூறினார்.</p><h2>விரைவில் தீர்வு:</h2><p>மாணவர்களின் கவலைகள் குறித்து அரசு உணர்வுப்பூர்வமாக செயல்படுவதாக மாநில உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி துறை அமைச்சர் சுதிவ்யா குமார் தெரிவித்தார்.</p><p>"போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் குழுவை நாங்கள் சந்தித்தோம். அவர்களின் கோரிக்கைகள் குறித்து அரசு உணர்வுப்பூர்வமாக உள்ளது மற்றும் அவற்றை அனுதாபத்துடன் பரிசீலிக்க தயாராக உள்ளது. இதற்கான தீர்வு விரைவில் தெரியவரும்," என்று குமார் செய்தியாளர்களிடம் கூறினார்.</p><p>மாணவர்களின் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஹேமந்த் சோரனிடம் குழுவினர் எடுத்துரைத்துள்ளதாக அமைச்சர் தீபிகா பாண்டே சிங் தெரிவித்தார்.</p><h2>சுதந்திர விசாரணை:</h2><p>"முதலமைச்சர் மாணவர்கள் மீது அக்கறை கொண்டுள்ளார், விரைவில் ஒரு தீர்வு கிடைக்கும்," என்று அவர் கூறினார்.</p><p>இதற்கிடையில், கடந்த ஆறு நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தேவேந்திர மஹ்தோ தலைமையிலான மற்றொரு போராட்ட குழு, பேச்சுவார்த்தைக்காக அரசிடமிருந்து அழைப்பு வந்துள்ளதாக தெரிவித்தது.</p><p>பேச்சுவார்த்தைக்காக எட்டு பேர் கொண்ட குழுவின் பெயர்களை அரசுக்கு அளித்துள்ளதாக மஹ்தோ தலைமையிலான குழு கூறியது. 14-ஆவது JPSC தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து சி.பி.ஐ. அல்லது மாநிலத்திற்கு வெளியேயுள்ள ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழுவை கொண்டு சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோரி வருகின்றனர்.</p><p>ஜார்க்கண்ட் பொதுப் பணி ஆணையத்தின் (JPSC) பணி நியமனத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பான போராட்டம் வெள்ளிக்கிழமையுடன் 14-வது நாளை எட்டியது; இதில் ஆறு போராட்டக்காரர்கள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>துருக்கி, பாகிஸ்தான் உடனான &quot;காகித ஒப்பந்தம்&quot; சவுதிக்கு பாதுகாப்பை வழங்காது - ஈரான் அதிரடி!</title><link>https://www.maalaimalar.com/news/world/iran-said-paper-agreement-with-turkey-pak-will-not-bring-security-to-saudi</link><comments>https://www.maalaimalar.com/news/world/iran-said-paper-agreement-with-turkey-pak-will-not-bring-security-to-saudi#comments</comments><guid isPermaLink="false">66588ac7-7268-4b82-88e7-674e718325fc</guid><pubDate>Fri, 07 Aug 2026 17:20:04 +0000</pubDate><atom:updated>2026-08-07T17:20:04.280Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஈரான்,Iran,Saudi,சவுதி,பாதுகாப்பு ஒப்பந்தம்,defence pact</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/ql2gbktd/Mohammed-Bin-Salman-and-Ebrahim-Rezaei.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mohammed Bin Salman and Ebrahim Rezaei]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/ql2gbktd/Mohammed-Bin-Salman-and-Ebrahim-Rezaei.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/Iran">ஈரான்</a> நாடாளுமன்றம், தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கை ஆணையத்தின் உறுப்பினர் ஒருவர், பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் துருக்கிக்கு இடையேயான புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை விமர்சித்துள்ளார். மேலும், இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தாலும், அது ரியாத்துக்கு நீடித்த பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p>பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து இப்ராஹிம் ரெசாயி எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அந்த பதிவில், "பல ஆண்டுகளாக அமெரிக்கர்களுக்கு ஒருதலைப்பட்சமாக ஆதரவளித்தது அவர்களுக்கு பாதுகாப்பை தராதது போலவே, துருக்கி மற்றும் <a href="https://www.maalaimalar.com/topic/pakistan">பாகிஸ்தான்</a> உடனான ஒரு காகித ஒப்பந்தம் அவர்களுக்கு பாதுகாப்பை தராது என்பதை சவுதியர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.</p><h2>பாதுகாப்பு ஒப்பந்தம்:</h2><p>சவுதி அரேபியா தனது கொள்கைகளை சீர்திருத்தினால், பாதுகாப்புக்காக மற்றவர்களிடம் 'யாசிக்க' வேண்டிய அவசியம் இருக்காது என்றும் அவர் கூறினார்.</p><p>முன்னதாக இன்று, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்துவரும் போரின் பின்னணியில் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், மூன்று நாடுகளும் "மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம்" என்றழைக்கப்படும் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.</p><p>இந்தப் போரானது, விருப்பமில்லாத வளைகுடா நாடுகளையும் உள்ளிழுத்து, ஹார்முஸ் நீரிணை மற்றும் செங்கடல் வழியாக செல்லும் கப்பல் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தியுள்ளது.</p><h2>பாகிஸ்தான் அறிக்கை:</h2><p>இஸ்லாத்தின் புனித நகரமும், நபிகள் நாயகம் முஹம்மது அவர்கள் பிறந்த இடமுமான மெக்காவில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி, மூன்று நாடுகளில் ஒன்றின் மீதான தாக்குதல், அவை அனைத்து நாடுகளின் மீதான தாக்குதலாக கருதப்படும்.</p><p>"எந்தவொரு ஆக்கிரமிப்பு செயலுக்கும் எதிரான கூட்டு தடுப்பாற்றலை வலுப்படுத்துவதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும். மேலும், மூன்று நாடுகளில் ஏதேனும் ஒன்றின் மீதான எந்தவொரு ஆயுத தாக்குதலும், அவை அனைத்தின் மீதான தாக்குதலாக கருதப்படும் என்றும் இது குறிப்பிடுகிறது. அதுமட்டுமின்றி, மூன்று நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பின் அனைத்து அம்சங்களையும் மேம்படுத்துவதற்கும் இது வழிவகை செய்கிறது," என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>GCT செயின்ட் லூயிஸ் ரேபிட் &amp; பிளிட்ஸ் செஸ் தொடரில் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-congratulates-praggnanandhaa-on-winning-the-gct-st-louis-rapid-blitz-chess-tournament</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-congratulates-praggnanandhaa-on-winning-the-gct-st-louis-rapid-blitz-chess-tournament#comments</comments><guid isPermaLink="false">0f390911-f79f-4801-a45c-6b12b288d17d</guid><pubDate>Fri, 07 Aug 2026 16:20:38 +0000</pubDate><atom:updated>2026-08-07T16:20:38.273Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>PragGnanandhaa,பிரக்ஞானந்தா,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/vop0o1ke/New-Project-2026-08-07T215011.147.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ GCT செயின்ட் லூயிஸ் ரேபிட் & பிளிட்ஸ் செஸ் தொடரில் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/vop0o1ke/New-Project-2026-08-07T215011.147.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>செஸ் தலைநகரமான செயின்ட் லூயிஸில் நடைபெற்ற 2026 கிராண்ட் செஸ் டூர் செயின்ட் லூயிஸ் ரேபிட் &amp; பிளிட்ஸ் சர்வதேச செஸ் தொடரில், இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். </p><p>இந்நிலையில் பிரக்ஞானந்தாவிற்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர்.,</p><p>“அமெரிக்காவில் நடைபெற்ற 2026 செயின்ட் லூயிஸ் ரேபிட் &amp; பிளிட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள். </p><p>உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்ற இத்தொடரில், பிரக்ஞானந்தா தன்னைவிட அதிக ரேட்டிங் கொண்ட அமெரிக்கா, உஸ்பெகிஸ்தான், ஜெர்மனி வீரர்களை எதிர்கொண்டு, வெற்றிவாகை சூடி சாதனை படைத்துள்ளார். </p><p>சர்வதேச செஸ் அரங்கில் தான் ஒரு சிறந்த சாம்பியன் என்பதை அவர் மீண்டும் ஒருமுறை நிரூபித்து, இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.   </p><p>இவரைப் போன்ற இளம் விளையாட்டு வீரர்கள் சர்வதேச அளவில் வெற்றிபெறத் தேவையான ஆதரவையும், வழிகாட்டுதலையும் SDAT வழங்கி வருகிறது. ELITE திட்டத்தின்கீழ், பயன்பெற்றுவரும் செஸ் வீரர்  பிரக்ஞானந்தா அவர்களுக்கு எனது பாராட்டுகள்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 5 பைசா உயர்வு</title><link>https://www.maalaimalar.com/news/national/rupee-settles-with-5-paise-gain-at-95-point-17-against-us-dollar</link><comments>https://www.maalaimalar.com/news/national/rupee-settles-with-5-paise-gain-at-95-point-17-against-us-dollar#comments</comments><guid isPermaLink="false">34411ebc-11cc-4d9e-8c1a-0038a48c6b6f</guid><pubDate>Fri, 07 Aug 2026 15:49:57 +0000</pubDate><atom:updated>2026-08-07T15:49:57.185Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்க டாலர்,இந்திய ரூபாய் மதிப்பு,Indian Rupee Value,US dollar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/2ekev7bv/IndianRupee001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இந்திய ரூபாயின் மதிப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/2ekev7bv/IndianRupee001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உள்நாட்டு பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட நேர்மறை வர்த்தக சூழல் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீட்டு வரவு ஆகியவற்றின் ஆதரவால், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 பைசா உயர்ந்து, ஒரு டாலருக்கு ₹95.17 என்ற நிலையில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.</p><p>அந்நியச் செலாவணி சந்தையில், ரூபாய் சற்று வலுவான நிலையில் வர்த்தகத்தைத் தொடங்கியது. நாள் முழுவதும் டாலருக்கு எதிராக ரூபாய் குறுகிய வரம்பில் ஏற்ற, இறக்கத்துடன் நகர்ந்தாலும், இறுதியில் முந்தைய வர்த்தக நாளை விட 5 பைசா உயர்வுடன் முடிவடைந்தது.</p><h2>ரூபாய் மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகள்</h2><p>சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் மாற்றம், அமெரிக்க டாலரின் வலிமை, உலகளாவிய பொருளாதார சூழல் மற்றும் முதலீட்டாளர்களின் வர்த்தக மனநிலை ஆகியவை ரூபாயின் மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளாக உள்ளன. அதே நேரத்தில், உள்நாட்டு பங்குச் சந்தைகளில் காணப்பட்ட உற்சாகமான வர்த்தகம் மற்றும் சில வெளிநாட்டு முதலீட்டு வரவுகள் ரூபாயின் மதிப்பை ஆதரித்ததாக நாணய சந்தை வல்லுநர்கள் தெரிவித்தனர்.</p><p>இருப்பினும், உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை, அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதக் கொள்கை குறித்த எதிர்பார்ப்புகள் மற்றும் சர்வதேச நிதிச் சந்தைகளின் போக்கு ஆகியவை வரும் நாட்களில் ரூபாயின் நகர்வை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக இருக்கும் என சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவராக ஃபெலிக்ஸ் ஜெரால்டு நியமனம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/felix-gerald-appointed-as-chairman-of-the-minorities-welfare-commission</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/felix-gerald-appointed-as-chairman-of-the-minorities-welfare-commission#comments</comments><guid isPermaLink="false">be362906-aecc-4a6e-947d-c6e450e5009a</guid><pubDate>Fri, 07 Aug 2026 15:40:17 +0000</pubDate><atom:updated>2026-08-07T15:40:17.107Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Felix Gerald,தவெக அரசு,tvk government,Minorities Welfare Commission,ஃபெலிக்ஸ் ஜெரால்டு,சிறுபான்மையினர் நல ஆணையம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/zgi3i5n1/New-Project-2026-08-07T205553.833.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவராக ஃபெலிக்ஸ் ஜெரால்டு நியமனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/zgi3i5n1/New-Project-2026-08-07T205553.833.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவராக தவெக செய்தித் தொடர்பாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு நியமனம் செய்யப்பட்டுள்ளார். பணி நியமனத்திற்கான ஆணையை பெற்றநிலையில் முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளார் ஃபெலிக்ஸ். </p><p>இவர் இந்தப் பதவியில் 3 ஆண்டுகள் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளரான ஃபெலிக்ஸ் ஜெரால்டு, சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகத்தின் தீவிர செய்தித் தொடர்பாளராகச் செயல்பட்டு வந்தவர். </p><h2>ஆணையத் தலைவரின் பணிகள்</h2><ul><li><p>சிறுபான்மையின மக்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாத்தல். </p></li><li><p>அரசின் நலத்திட்டங்கள் சிறுபான்மையினரைச் சென்றடைவதைக் கண்காணித்தல். </p></li><li><p>அவர்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் அரசுக்கு வழங்குதல். </p></li></ul><p>தவெக செய்தித் தொடர்பாளர்களுக்கு அரசுத் துறைகளில் பதவிகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>வறட்சி, குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க ரூ.288.97 கோடி ஒதுக்கீடு - தமிழ்நாடு அரசு உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-government-orders-allocation-of-rs-28897-crore-to-tackle-drought-and-drinking-water-shortage</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-government-orders-allocation-of-rs-28897-crore-to-tackle-drought-and-drinking-water-shortage#comments</comments><guid isPermaLink="false">348a8223-e60e-4211-84b6-5c55a70b1f99</guid><pubDate>Fri, 07 Aug 2026 15:19:57 +0000</pubDate><atom:updated>2026-08-07T15:19:57.929Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,Government of Tamil Nadu,drought relief,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,வறட்சி நிவாரணம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/ebz1l2xy/New-Project-2026-08-07T204934.233.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வறட்சி, குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க ரூ.288.97 கோடி ஒதுக்கீடு - தமிழ்நாடு அரசு உத்தரவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/ebz1l2xy/New-Project-2026-08-07T204934.233.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் நிலவும் வறட்சி மற்றும் குடிநீர் தட்டுப்பாடு பாதிப்புகளை சமாளிக்க ரூ.288.97 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.</p><p>எல் நினோ தாக்கம் மற்றும் பருவமழை பற்றாக்குறை காரணமாக ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க மாநிலப் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து இந்த அவசர நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>கிராமப்புறங்களில் குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்தவும், வறட்சி நிவாரணப் பணிகளுக்காகவும் நிதி பிரிக்கப்பட்டுள்ளது. </p><p>அதன்படி பேரூராட்சிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க ரூ.96.41 கோடியும், குடிநீர் விநியோகக் கட்டமைப்புகளைச் சீரமைக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு ரூ.58.55 கோடியும், ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.36.65 கோடியும், நகராட்சி நிர்வாகத்துறைக்கு ரூ.97.36 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. </p><p>நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தங்கு தடையின்றி லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவும், வறண்ட பகுதிகளில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் நீர் நிலைகளை தூர்வாரிப் புதுப்பிக்கவும்,  வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள கால்நடைகளுக்குத் தேவையான தீவனங்களைச் சேமித்து தட்டுப்பாடின்றி வழங்கவும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கியச் செய்திகள்- 7 ஆகஸ்ட் 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-7-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-7-august-2026#comments</comments><guid isPermaLink="false">9e161214-bae4-4b21-8ad3-fb9c9fa000ef</guid><pubDate>Fri, 07 Aug 2026 03:49:59 +0000</pubDate><atom:updated>2026-08-07T15:12:33.049Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/lt2l5fku/speaker.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக சட்டசபை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/lt2l5fku/speaker.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/remarks-made-by-rijiju-in-ls-targeting-opposition-expunged">எதிர்க்கட்சிகளை குறிவைத்து ரிஜிஜு பேசிய கருத்துகள் மக்களவைக் குறிப்பில் இருந்து நீக்கம்</a></p><p>* உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவை மற்றும் மாநிலங்களைவக்கு வராதது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.</p><p>* எந்த அமைச்சர் அவைக்கு வர வேண்டும் என்பதை எதிர்க்கட்சியால் தீர்மானிக்க முடியாது என்று கிரண் ரிஜிஜு பதில் அளித்திருந்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/no-threats-no-late-night-calls-rbi-issues-new-rules-for-loan-recovery">கடன் வாங்கியவர்களை மிரட்டக் கூடாது, இரவு நேரத்தில் போனில் அழைக்கக் கூடாது: வங்கிகளுக்கு RBI அறிவுறுத்தல்</a></p><p>* வசூல் முகவர்கள் தங்களது அடையாளத்தை தெளிவாக தெரிவிக்க வேண்டும்.</p><p>* அவர்கள் வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/tirupur-beat-chepauk-in-tnpl-2026">டிஎன்பிஎல் 2026: துஷார் ரஹேஜா அதிரடியால் சேப்பாக்கத்தை வீழ்த்தியது திருப்பூர்</a></p><p>* முதலில் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 205 ரன்கள் குவித்தது.</p><p>*  திருப்பூரின் துஷார் ரஹேஜா அவர் 52 பந்தில் 8 சிக்ஸ், 5 பவுண்டரி உள்பட 102 ரன் குவித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-hc-order-tasmac-administration-overpricing-liquor-sales">டாஸ்மாக்கில் கூடுதல் வசூல்: புகார் அளித்தால் வழக்கு பதிய வேண்டும் என சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு</a></p><p>* டாஸ்மாக் மதுபான கடைகளில் கூடுதல் தொகை வசூலித்தால் நுகர்வோர் புகார் அளிக்கலாம்.</p><p>* டாஸ்மாக் கடைகளில் ரசீது வழங்குவதில் என்ன சிக்கல் உள்ளது? </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-very-bad-chief-minister-not-amma-government-just-summa-government-os-manian-slams">மிகவும் மோசமான முதலமைச்சர்: இது அம்மா ஆட்சியல்ல "சும்மா ஆட்சி": ஓ.எஸ். மணியன் விமர்சனம்</a></p><p>* சிறுகுறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் தள்ளுபடி சென்று சொன்னீர்கள். சொன்னதை செய்தீர்களா?. இதைப் பற்றி பேசியிருக்கிறீர்களா?. </p><p>* அல்லது கஜானாவில் பணம் இல்லை. என்னால் இயலவில்லை, என்னால் செய்ய இயலவில்லை சொல்லியிருக்கிறீர்களா? வாய் திறக்காமல் மவுனமாக இருந்து சாதிப்பது என்பது மோசமான நிலை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/congress-issues-whip-to-its-mps-in-rs-ls-asks-them-to-be-present-on-aug-10-to-12">மூன்று நாட்கள் பாராளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர்கள் கட்டாயம் இருக்க வேண்டும்: காங்கிரஸ் கொறடா உத்தரவு</a></p><p>* சர்ச்சைக்குரிய வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா 2026 (FCRA Bill) அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படலாம் என வாய்ப்பு</p><p>* அதேபோல் தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்படவும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-edappadi-palanisami-speech-live-not-cut-says-minister-rajmohan">எடப்பாடி பழனிசாமி பேசும்போது நேரலை துண்டிக்கப்பட்டதா?: அமைச்சர் ராஜ்மோகன்</a></p><p>* அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பேசும்போது நேரலை துண்டிக்கப்பட்டது எனக் குற்றம்சாட்டின்னார்.</p><p>* ஒரு நொடி கூட நேரலையில் துண்டிக்கப்படவில்லை. நேரலையில் சென்று கொண்டிருக்கிறது. உங்களுடைய சிரித்த முகத்தை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்- ராஜ்மோகன்</p><h2>சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்</h2><p>பொதுவெளியில் ஆபாசமாகப் பேசிய மார்க்கண்டேயனை கட்சித் தலைமை கண்டித்திருக்க வேண்டும்.</p><p>பொதுவெளியில் மார்க்கண்டேயன் பேசியது மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>அவரிடம் விளக்கம் கேட்டு உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்தார்.</p><p>திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அமைச்சர்கள் கடிதம் மூலம் கோரிக்கை</p><h2>திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் உரை</h2><p>திமுகவின் திட்டங்கள் அனைத்தையும் தவெக ஏற்றுக்கொண்டுள்ளது.</p><p>பனை மேம்பாட்டு இயக்கம் பனை பாதுகாப்பு இயக்கமாக மாறியுள்ளது.</p><p>பட்ஜெட்டில் பெயர் மாற்றம் மட்டும்தான் இருக்கிறது.</p><p>திமுக ஆட்சியில் 25000 கோடி ரூபாய் அளவுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி</p><p>பட்ஜெட்டில் தேடிப் பார்க்கிறேன், இருப்பது போல் இருக்கிறது, கண்ணுக்குப் புலப்படவில்லை.</p><p>கடன் வாங்கி வீட்டிற்கு எடுத்துச் செல்லவில்லை, மக்கள் திட்டங்களுக்கு செலவிட்டுள்ளோம்.</p><p>திமுகவின் திட்டங்கள் அனைத்திலும் முக ஸ்டாலின் இருப்பார் - திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன்</p><p>விருகம்பாக்கம் பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என பிரேமலதா கோரிக்கை.</p><h2>பிரேமலதா விஜயகாந்த்</h2><p>மேகதாது, காவிரி விவகாரத்தில் இரு மாநில முதல்வர்கள் சந்தித்து பேசினால் என்ன?</p><p>காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா செல்ல முதல்வர் விஜய் முடிவெடுத்தது சரிதான்.</p><p>டி.கே.சிவக்குமாரும், விஜயும் இருமாநிலத்தின் புதிய முதல்வர்கள், பேசினால் என்ன? ஏன் தடுக்கிறீர்கள்?</p><p>முதல்வர் கர்நாடகா செல்லும்போது அவமரியாதை ஏற்பட்டால் என்ன செய்வது என்கிறார்கள், அப்படி நடக்க நாங்கள் விட மாட்டோம்.</p><p>முதலமைச்சர் விஜய்க்கு ஒரு தலைகுனிவு ஏற்பட்டால் தமிழக மக்கள் நாங்கள் சும்மா இருப்போமா?</p> <p>விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி இல்லை என்பது ஏமாற்றமாக உள்ளது.</p><p>காவிரி நமது உரிமை, மேகதாதுவில் அணை கட்டக்கூடாது, இதற்காக நாம் ஒன்றிணைய வேண்டும்  - பிரேமலதா</p><h2>பிரேமலதா விஜயகாந்த்</h2><p>மழை பெய்ய தொடங்கிய நிலையில் திறந்தவெளியில் உள்ள நெல்மூட்டைகள் நனைந்து முளைக்கும் அபாயம் உள்ளது. மழை பெய்யும் காலம் என்பதால் நெல்லை சேமிக்க கிடங்குகள் அமைக்க வேண்டும். மழைநீரை சேமித்து தன்னிறைவு பெற்றவர்களாக இருக்க வேண்டும்.</p><p>அனைத்துக்கட்சியினரையும் அழைத்து சென்று பிரதமரை சந்திக்க வேண்டும்.</p><p>நீருக்காக யாரிடமும் கையேந்தாத நிலைக்கு தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்று பிரேமலதா கூறினார்.</p><p>பட்ஜெட் மீதான விவாதத்தில் தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில்,</p><p>மக்கள் விரும்பும் திட்டங்கள் எந்த ஆட்சி வந்தாலும் தொடரப்பட வேண்டும் என்பதே தேமுதிகவின் நிலைப்பாடு. </p><p>திட்டங்களின் பெயர்களை மாற்றுங்கள் மாற்றாதீர்கள், ஆனால் திட்டங்கள் தொடரப்பட வேண்டும்.</p><p>மக்கள் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அவர்களுக்காக தொடரப்பட வேண்டும்.</p><p>விருத்தாச்சலத்தை மாவட்டமாக பட்ஜெட்டில் அறிவிப்பார்கள் என எதிர்பார்த்தேன் என்று கூறினார்.</p> <p>தவெக அளித்த வாக்குறுதிகளில் 4 வாக்குறுதிகள் மட்டும் நிறைவேற்றம் - கணேஷ்</p><p>இபிஎஸ் பேசியபோது நேரலை துண்டிக்கப்பட்டதாக அதிமுக குற்றம் சாட்டிய நிலையில், ஒரு நொடி கூட நேரலை துண்டிக்கப்படவில்லை என அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்தார்.</p> <p>அவையில் இல்லாத அப்பா, மாமனார் என பேசுவதை அவை குறிப்பிலிருந்து நீக்குமாறு கே.என்.நேரு சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார்.</p><h2> ஓ.பன்னீர்செல்வம்</h2><p>தவறான உதாரணங்களை குறிப்பிட்டு பேசி இருக்கிறார் அமைச்சர் ஆதவ்.</p><p>அகில இந்திய அளவில் பாஜக, காங்கிரஸ் என எல்லோருமே கட்சிக்கு நன்கொடை வாங்குகிறார்கள்.  </p><p>கட்சிக்கான நிதியை ஊழல் லஞ்சப்பணமாக கூறியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்குமாறு ஓபிஎஸ் சபாநாயகரிடம் வேண்டுகோள்</p><h2>எ.வ.வேலு</h2><p>தொழிலதிபர் மார்ட்டின் ரூ.900 கோடி கொடுத்தது குறித்து பேரவையில் பேசுவது சரியாக இருக்காது.</p><p>தொழில் என்ற அடிப்படையில் முறையாக அரசிடம் அனுமதி பெற்று தான் திமுகவினர் மது ஆலை நடத்துகின்றனர்.</p><p>தேர்தல் நேரத்தில் அரசியல் இயக்கங்களுக்கு தொழிலதிபர்கள் நன்கொடை அளிப்பது இயல்பு.</p><p>ரூ.900 கோடி வாங்கியது உதயநிதியின் அப்பாவுக்கு நன்றாக தெரியும். அவர் இங்கு இல்லை. அவரிடம் கேட்க சொல்லுங்கள் - ஆதவ்</p><p>உதயநிதி</p><p>திமுக நிதி வாங்கியது தொடர்பாக அவரது மாமனாரிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும்.</p><p>லாட்டரி நிறுவனத்தில் விற்றது யார் என ஆதவின் மாமனாருக்கு தான் தெரியும், அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளட்டும் - அமைச்சர் உதயநிதி</p><p>லாட்டரி நிறுவனத்தில் ரூ.900 கோடி திமுகவினர் வாங்கியது குறித்து உதயநிதி சொல்வாரா? - அமைச்சர் ஆதவ்</p> <p>திமுகவின் பொருளாளர் சாராய ஆலை நடத்துகிறாரா? இல்லையா? </p><p>திமுக லாட்டரி நிறுவனத்திடமிருந்து ரூ.900 கோடி வாங்கியதா? இல்லையா ? - ஆதவ் அர்ஜூனா</p> <p>டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை நீண்ட அறிக்கையை கொடுத்துள்ளது - அருண்ராஜ்</p><p>அதிமுக ஆட்சி காலத்தில் அறிவுரை சொல்ல தவறியது ஏன்?</p><p>ஆதாரமில்லாமல் ஊழல் என்று பேச கூடாது  - எ.வ.வேலு</p><p>மதுவிலக்கை முதலில் கொண்டுவந்தது யார் என நன்றாக தெரியும், அதற்கு வக்காலத்து வாங்காதீர் - செங்கோட்டையன்</p><p>வருடத்தில் எத்தனை கடைகளை குறைக்க போகிறார்கள் என்பதை தெரிவிக்க வேண்டும் - எ.வ.வேலு</p><p>கடந்த ஆட்சியாளர்கள் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என கூறினர். மதுவினால் வரும் வருமானத்தை உயர்த்துவோம் என தவெக கூறாது  - அமைச்சர் விக்னேஷ்</p><p>ஆன்லைனில் மது புக்கிங் செய்யப்படுவது மட்டுமே நடக்கும்.</p><p>ஆன்லைனில் ஆர்டர  செய்தாலும் டாஸ்மாக் கடைக்கு சென்று தான் மதுபானங்களை வாங்க முடியும் - அமைச்சர் விக்னேஷ்</p><p>டாஸ்மாக் கடைகளுக்கு பணம் செல்லாமல் நேரடியாக நிர்வாகத்திற்கு பணம் செல்லும் வகையில் ஆன்லைன் ஆர்டர் - அமைச்சர் விக்னேஷ்</p><h2>அமைச்சர் விக்னேஷ்</h2><p>தவெக ஆட்சியில் மூடப்பட்ட 717 கடைகளின் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது.</p><p>ஆன்லைனில் ஆர்டர் செய்தால் மதுபானம் வீட்டிற்கு டெலிவரி செய்யப்படும் என்பது தவறான தகவல்.</p> <p>திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா சிப்காட் விரிவாக்கம் செய்யப்பட கூடாது. அது விவசாய பகுதி  - பாமக எம்எல்ஏ கணேஷ் குமார். </p><p>மேல்மா விவசாயிகளுடைய கண்ணீருக்கு கூடிய விரைவில் தீர்வு காணப்படும்.  எந்த விவசாயினுடைய அனுமதி இல்லாமல் நிலம் கையகப்படுத்தக்கூடாது என மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. -  அமைச்சர் ஆதவ் அர்ஜுனா </p><p>நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதை தவறாக புரிந்துகொண்டு இந்த அரசு நல்ல பெயர்களை எல்லாம் எடுத்துவிட்டு அதன் மீது ஸ்டிக்கர் ஒட்டி வருகிறது. இவர்களின் பட்ஜெட் ரீல்ஸ் பட்ஜெட். இது வெற்றி அரசு அல்ல, வெட்டி அரசு - வசந்த் கார்த்திகேயன்</p><p>நான் காலேஜ் படிக்கும்போது முதல்வரின் லவ் டுடே படத்தை 6 முறை பார்த்தேன் - திமுக எம்எல்ஏ வசந்த் கார்த்திகேயன் </p> <p>கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை குறைந்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்திடம் போராடித்தான் நீரை பெற்றோம். கர்நாடக அரசு அளித்த விளக்கத்தை தான் அமைச்சர் ஆனந்த் பேரவையில் பதிவு செய்தார் - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</p><p>புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வழியில் ஜெயலலிதாவை போல் தைரியமான முடிவெடுக்கிறார்.</p><p>அம்மா ஆட்சியை மீண்டும் அமைப்போம் எனக்கூறிய அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு அமைச்சர் ஆதவ் விளக்கம்</p><p>தமிழ்நாட்டில் தற்போது நடந்து கொண்டிருப்பதும் ஜெயலலிதாவின் ஆட்சிதான் - அமைச்சர் ஆதவ் விளக்கம்</p><p>திட்டமிட்டு நேரலை துண்டிக்கப்படவில்லை, எதால் நேரலை துண்டிக்கப்பட்டது என்ற காரணம் கண்டறியப்படும் - சபாநாயகர்</p><p>தூய ஆட்சி என சொல்லிக்கொள்ளும் நீங்கள் இபிஎ பேசியபோது நேரலையை துண்டித்தது ஏன்?</p><p>வரும் காலங்களில் அதிமுக சட்டமன்றக்குழு தலைவர் இபிஎஸ் பேசும்போது நேரலை துண்டிக்கப்படக்கூடாது - அக்ரி கிருஷ்ணமூர்த்தி</p> <p>சட்டசபையில் இபிஎஸ் பேசிய போது நேரலை துண்டிக்கப்பட்டதாக அதிமுக குற்றச்சாட்டு.</p><p>அதிமுக, திமுக ஆட்சியில் அம்மா உணவகம் எப்படி இருந்தது என்ற உண்மை மக்களுக்கு தெரியும் - அமைச்சர் ஆதவ்</p><h2>எஸ்.பி.வேலுமணி</h2><p>அம்மா உணவகத்திற்கு அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கவில்லை என அமைச்சர் ஆதவ் கூறியது தவறு.</p><p>இபிஎஸ் தலைமையிலான அதிமுக ஆட்சியில் அம்மா உணவகத்திற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.</p> <p>திமுக, அதிமுக ஆட்சி காலங்களிலும் திட்டங்களுக்கான பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன - செங்கோட்டையன்</p><p>கடந்த ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களுக்கான பெயர்களை மாற்ற கூடாது - எடப்பாடி பழனிசாமி</p><p>திமுக ஆட்சியில் அம்மா உணவகங்கள் செயல்படவில்லை என எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு</p><h2>கே.என்.நேரு விளக்கம்</h2><p>திமுக ஆட்சியில் அம்மா உணவகங்கள் செயல்பட்டது.</p><p>அம்மா உணவகத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று தான் முதல்வராக இருந்த போது ஸ்டாலினும் கூறினார்.</p><p>அதிமுக கொண்டு வந்த அம்மா உணவகத்தை திமுக ஆட்சியிலும் தொடர்ந்து நடத்தினோம், தற்காலிக ஊழியரையும் நீக்கவில்லை.</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</h2><p>திமுக, அதிமுக கொண்டு வந்த திட்டங்களை தவெக அரசு செயல்படுத்தும்.</p><p>தவெக ஆட்சி அமைந்த உடன் அம்மா உணவகம் பெயர் மாற்றாமல் தரத்தை மேம்படுத்தி செயல்படுத்தி உள்ளோம்.</p><p>அம்மா உணவகத்திற்கு நிதி ஒதுக்கி சிறப்பாக செயல்படுத்துகிறது தவெக அரசு.</p><p>திமுக, அதிமுக என யார் ஆட்சியிலும் அறிவிக்கப்பட்ட நல்ல திட்டங்களை தவெக அரசு தரம் உயர்த்தி தொடர்கிறது.</p><p>திமுக ஆட்சியில் அம்மா உணவகங்கள் செயல்படவில்லை.</p><p>ஸ்டிக்கர் என்ற வார்த்தை யாருக்காக உருவானது என்பது தெரியும் - நிர்மல்குமார்</p><h2>அக்ரி கிருஷ்ணமூர்த்தி</h2><p>மாற்றம் மாற்றம் என கூறியது பெயர் மாற்றத்தை தானா?  </p><p>அதிமுக திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி அறிவித்துள்ளது தவெக.</p><p>தாலிக்கு தங்கம் திட்டம் அண்ணனின் சீர் திட்டமாக மாறி உள்ளது. </p><p>நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து தவெக மக்களை ஏமாற்றி உள்ளது. வேளாண் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.  சிறுகுறு விவசாயிகள் கடனை கட்டமுடியாமல் தவித்து வருகின்றனர். சிறுகுறு விவசாயிகளிடம் பாகுபாடு செய்வது ஏற்புடையதல்ல - அக்ரி கிருஷ்ணமூர்த்தி</p><h2>அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி</h2><p>மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் பட்ஜெட்டாக இல்லை.</p><p>நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி மக்கள் நலத்திட்டங்களை நிறுத்த கூடாது.</p><p>மக்களின் கவனக்குறைவால் ஆட்சி பீடத்தில் தவெக அரசு உள்ளது.</p><p>நிதி பற்றாக்குறை இருப்பது தெரிந்து தான் வாக்குறுதி அளித்தீர்கள்.</p><h2>எம்எல்ஏ சரவணன்</h2><p>திமுக அரசு ரூ.3,000 விலையில் வழங்கிய சைக்கிளை தொடர்ந்து பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.</p><p>முன்னாள் ஆட்சியாளர்கள் வழங்கியதை போல் தரமற்று இல்லாமல், ஹெல்மெட், குடிநீர்பாட்டில் வசதியுடன் நவீன சைக்கிள் தரும் புதிய திட்டத்திற்கு வரவேற்பு.</p><p>தவெக அரசு 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு தருவதாக அறிவித்த நவீன சைக்கிள் திட்டத்திற்கு எம்எல்ஏ சரவணன் பாராட்டு தெரிவித்தார்.</p><p>2 மாதத்தில் தவெக அரசு ரூ.20,000 கோடி கடன் வாங்கி உள்ளது. கடன் வாங்காமல் ஆட்சி நடத்த முடியாது - கே.என்.நேரு</p><p>கடன் வாங்கி தான் அத்தனை அரசும் செயல்படும் என நிதித்துறை செயலர் கூறினார் - கே.என்.நேரு</p><p>ஒவ்வொருவரின் தலை மேல் ரூ.1.28 லட்சம் கடன் உள்ளது - அமைச்சர் மரிய வில்சன்</p><h2>அண்ணன் சீர் திட்டம்</h2><p>அண்ணனின் சீர் திட்டத்தை தவெக அரசால் செயல்படுத்த முடியாது. அண்ணனின் சீர் திட்டத்தை செயல்படுத்த 2000 கோடி ரூபாய் தேவைப்படும் - ரகுபதி </p><h2>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி</h2><p>தொகுதி மறுவரையறையில் ஒட்டுமொத்த மாநிலங்களுக்குமே முன்னுதாரணம் திமுக தான்.</p><p>தொகுதி மறுவரையறைக்கு எதிராக 5 மாநில முதல்வர்களுடன் ஆலோசித்து எதிர்ப்பை பதிவு செய்தோம். </p><p>எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து திமுக தலைவர் முடிவெடுப்பார்.</p> <p>தொகுதி மறுவரையறை குறித்து முதல்வர் அழைத்த கூட்டத்திற்கு திமுக உறுப்பினர்கள் வருவார்களா? என உதயநிதி பதில் தரட்டும்- அமைச்சர் ஆதவ்</p><p>அனைத்துக்கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் திமுக பங்கேற்குமா- அமைச்சர் ஆதவ்</p><p>திமுக உறுப்பினர் ரகுபதி அரசியல் மேடை போல் பேசி கொண்டிருக்கிறார் - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>விபி ஜி ராம் ஜி சட்டத்தை திமுக எதிர்த்த நிலையில் தற்போது நடைமுறை படுத்தி உள்ளனர் - ரகுபதி</p><p>ரூ.2 லட்சம் வழங்கும் திட்டம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது - அமைச்சர் அருண்ராஜ்</p><p>விபத்து காப்பீடு திட்டம் குறித்த செய்திகள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை - ரகுபதி</p><p>விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளதா? என ரகுபதி கேள்வி எழுப்பினார்.</p><h2>அமைச்சர் மரிய வில்சன்</h2><p>கசிவு பற்றி ஆய்வு செய்து அதன் அறிக்கை முதல்வரின் டேபிளில் உள்ளது, அவர் சரியான நேரத்தில் வெளியிடுவார்.</p><p>ஆடிட்டிங் முடிந்துவிட்டது, கசிவு என்றால் என்ன என்பது குறித்து சரியான நேரத்தில் முதலமைச்சர் பேசுவார்.</p><p>முதல்வரிடம் நாங்கள் அளித்த அறிக்கையை படிக்கவே உங்களுக்கு 100 நாட்கள் தேவை என ரகுபதிக்கு அமைச்சர் மரிய வில்சன் பதில் அளித்தார்.</p><p>நீங்கள் தந்த பட்ஜெட்டை வைத்து தான் பேசுகிறேன், அப்படி பேசக்கூடாது என்றால் வேறு ஒரு  நிதிநிலை அறிக்கை தாருங்கள் - ரகுபதி</p><p>பழக்க தோஷத்தில் பேசாதீர்கள், ஆதாரத்துடன் பேசுங்கள் என ரகுபதிக்கு அமைச்சர் ஆனந்த் அறிவுறுத்தல்.</p><p>நீர்வளத்துறையில் பில்களை கிளியர் செய்ய கமிஷன் வாங்கியது கடந்த ஆட்சிக்காலம் - அமைச்சர் ஆனந்த்</p><p>நீர்வளத்துறையில் ஒரு பில் பெற 2 சதவீதம் கமிஷன் கேட்கிறார்கள் - ரகுபதி</p><p>முன்னாள் அமைச்சர் ரகுபதியின் கேள்விக்கு அமைச்சர் விஸ்வநாதன் பதில் அளித்தார்.</p><p>அவையில் இல்லாதவர் ஒருவரை பற்றி பேசுவது அவையை மீறிய செயல் என அமைச்சர் விஸ்வநாதன் காட்டம்</p><p>திருப்பதி ஏழுமலையானை தரிசித்துவிட்டு வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் வினோத்.</p><p>திமுக திராவிட மாடல் ஆட்சியை இந்தியா முழுவதும் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் நடத்தியவர் ஸ்டாலின்.</p><p>தகவல் அறியும் உரிமை கமிஷனில் உறுப்பினர் நியமிக்காததால் தகவல்களை மக்கள் அறிய முடியவில்லை என்று  ரகுபதி கூறினார்.</p><p>பிரவின் சக்ரவர்த்தி தமிழகத்தின் கொள்கை வடிவமைப்பாளர் என்ற செய்தி உண்மையா? என்று திமுக கேள்வி எழுப்பியது.</p><p>தமிழகத்திற்கு நியாயமான வரிப்பகிர்வு கோரி சட்டசபையில் அரசினர் தனித்தீர்மானம்</p><p>சட்டசபையில் அரசினர் தனித்தீர்மானத்தை நிதியமைச்சர் மரிய வில்சன் முன்மொழிந்தார்.</p><p>இதையடுத்து நியாயமான வரிப்பகிர்வு கோரி தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் அறிவித்தார்.</p><p>தவெக அரசு கொண்டு வந்த தனிநபர் தீர்மானத்திற்கு திமுக, அதிமுக வரவேற்பு.</p><p>தனிநபர் தீர்மானத்தின் மீது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறுகையில்,</p><p>வளர்ச்சி அடைந்த மாநிலங்களை பாதிக்காத அளவிற்கு நிதி பகிர்வு இருக்க வேண்டும் என்று கூறினார்.</p><p>மாநிலங்களுக்கு 50 சதவீத நிதிப்பகிர்வை உறுதி செய்ய வேண்டும் என திமுக சார்பில் தங்கம் தென்னரசு வலியுறுத்தினார். </p><h2>தங்கம் தென்னரசு</h2><p>நிதி பங்களிப்பு குறைவதால் தமிழகத்தில் நிதி சுமை அதிகரித்துள்ளது. </p><p>தமிழ்நாடு வரியாக செலுத்தும் 1 ரூபாய்க்கு 21 காசுகள் மட்டுமே திரும்ப கிடைக்கிறது. உ.பி.க்கு ரூ.2-க்கு மேல் தரப்படுகிறது. </p><p>தமிழ்நாடு அளிக்கும் பங்களிப்புக்கு ஏற்றவகையில் மத்திய அரசு நிதியை நமக்கு தருவதேயில்லை.</p><p>நிதி பகிர்வில் தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.</p><p>ஒட்டுமொத்த வருவாய் அதிகாரமும் மத்திய அரசிடம் உள்ளது. செலவினம் மட்டும் மாநில அரசின் கையில் உள்ளது - தங்கம் தென்னரசு</p><p>நிதிப்பகிர்வு தொடர்பான தனித்தீர்மானத்தின் மீது திருத்தம்கோரி முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார். அப்போது அவர் கூறுகையில்,</p><p>மாநிலங்களுக்கு 50 சதவீத நிதிப்பகிர்வை உறுதி செய்ய வேண்டும்.</p><p>இந்தியாவிலேயே 2-வது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் உள்ளது.</p><p>மாநில வருவாய்க்கான ஆதாரம் குறையும் சூழல் ஏற்பட்டுள்ளது.</p><p>மத்திய அரசுக்கு செலுத்தப்படும் வரிகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு உரிய நிதிப்பகிர்வு கோரி தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது.</p><p>தமிழ்நாட்டிற்கான நிதிப்பகிர்வை உறுதி செய்ய வலியுறுத்தி நிதியமைச்சர் மரிய வில்சன் தனித்தீர்மானத்தை கொண்டு வந்தார்.</p><h2>அமைச்சர் வினோத்</h2><p>அனைத்து விவசாயிகளையும் பயிர் காப்பீட்டிற்குள் கொண்டு வர முயற்சி.</p><p>பயிர் காப்பீடு கடந்தாண்டை வி நடப்பாண்டில் 44% கூடுதலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>காவிரி நீரை கர்நாடகாவிடமிருந்து பெறுவது பல ஆண்டுகளாக சவாலாகவே உள்ளது.</p><p>சூழலை கருத்தில்கொண்டு மேட்டூர் அணையில் நீர் திறக்கப்படும் - அமைச்சர் ஆனந்த்</p><p>காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எந்த சமரசமும் செய்யாது.</p><p>காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை காக்க நிர்வாக, சட்டரீதியாக தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் ஆனந்த்</p><p>காவிரி நீரை கர்நாடகாவிடமிருந்து பெறுவது பல ஆண்டுகளாக சவாலாகவே உள்ளது.</p><p>காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் கர்நாடகா நீர் திறக்கவில்லை - அமைச்சர் ஆனந்த்</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/7f456r52/anand.jpg" /></figure><p>காவிரி விவகாரத்தில் உறுப்பினர்களின் கருத்திற்கு நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p><p>பேச்சுவார்த்தைக்கு தமிழ்நாடு முதலமைச்சரால் கேட்டு கொள்ளப்பட்டது.</p><p>கர்நாடக முதலமைச்சர் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டாம் என கூறினார்.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/rwllwdmz/sowmiya.jpg" /></figure><p>காவிரி விவகாரம் தொடர்பாக பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி பேசுகையில்,</p><p>கர்நாடக அரசு உரிய காலத்தில் காவிரி நீரை ஒருபோதும் திறந்து விட்டது இல்லை.</p><p>காவிரி நீர் வராத காரணத்தால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>தற்போது கர்நாடகா திறந்து விட்டது உபரிநீரை மட்டும்தான்.</p><p>பேச்சுவார்த்தை முயற்சியே தேவையில்லை. அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என பாமகவும் வலியுறுத்துகிறது என்று கூறினார்.</p><p>உச்சநீதிமன்றத்தில் திமுக அரசு வலுவான வாதங்களை எடுத்து வைக்கவில்லை - அமைச்சர் ஆதவ்</p><p>திமுக ஆட்சியின்போது தமிழக அரசின் மனுக்களை 3 முறை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது ஏன்?</p><p>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி அவைக்கு தவறான தகவலை அளித்துள்ளார் - அமைச்சர் ஆதவ்</p><p>இங்கேயே அனைத்துக்கட்சியினரும் உள்ள நிலையில் இங்கேயே தீர்மானம் நிறைவேற்றலாம் - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>சம்பந்தம் இல்லாத பிரச்சனையை பேசுவதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி காட்டம்</p><p>அமைச்சர் நிர்மல்குமார் காவிரி பிரச்சனையை திசை திருப்ப முயல்கிறார் - உதயநிதி</p><p>முதலமைச்சர் 3 ஆண்டுகளாக யாருக்கும் பயந்தது இல்லை. எம்பிக்கள் கூட்டத்தில் திமுகவினர் பங்கேற்பார்களா? - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>காவிரி பிரச்சனை என்பது தமிழ்நாட்டின் உயிர்நாடி பிரச்சனை. காவிரி விவகாரத்தை சட்டரீதியாக எதிர்கொள்வது தான் தீர்வு. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பேச்சுவார்த்தைக்கு சென்று தீர்வு எட்டப்படவில்லை - சிபிஐ ராமசந்திரன்</p><p>காவிரி விவகாரத்தில் தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்  - செல்லசுவாமி</p><p>முதலமைச்சருக்கு அவமானம் ஏற்பட்டால் அது தமிழ்நாட்டிற்கான அவமானம் - செல்லசுவாமி</p><p>காவிரி நீருக்காக கர்நாடகத்திடம் மண்டியிட தேவையில்லை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்</p><p>அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என தவெக கூட்டணியினரே கூறுகின்றனர். </p><p>கர்நாடக அணையிலே போதிய நீர் இருந்தும் திறக்கப்படவில்லை - இபிஎஸ்</p><p>பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும். மேகதாது அணை தொடர்பான திருத்தத்தை நாங்கள் ஏற்கவில்லை -  இபிஎஸ்</p><h2>முதலமைச்சர் விஜய்</h2><p>காவிரி விவகார பேச்சுவார்த்தையில் அவமானம் ஏற்பட்டால் அதனையும் தமிழக மக்களுக்காக தாங்குவேன்.</p><p>காவிரி விவகாரம் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் உரிய விளக்கம் தருவார்.</p><p>அரசியலே நாங்கள் தான் எனக்கூறுவோருக்கு குறுவை தொகுப்பு தந்தது குறித்து தெரியாமல் போனது எப்படி?</p><p>தினசரி செய்தித்தாள் வாசித்திருந்தால் தெரிந்திருக்கும்.</p><p>கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக நாம் அனைவரும் சேர்ந்து தான் தீர்மானம் நிறைவேற்றினோம். </p><p>காவிரி நதிநீர் மற்றும் மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை நமது அரசு ஒருபோதும் விட்டுத்தராது.</p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>கர்நாடக பயணம் குறித்து யோசித்தது நான் தான், அதற்கு பல விமர்சன கருத்துகள் வந்தன. </p><p>நேர்மறையான விளைவு வரும் என்பதால் தான் பேசித் தீர்க்கும் முடிவு முயற்சி செய்தேன்.</p><p>பகை நாடுகளே பிரச்சனையை பேசி தீர்க்கப் பார்க்கிறோம். பக்கத்து மாநிலத்திடம் பேசி பார்க்க நினைத்தோம் என்று முதலமைச்சர் விஜய் கூறினார்.</p> <p>காவிரி நதிநீர் மற்றும் மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை நமது அரசு ஒருபோதும் விட்டுத்தராது - முதலமைச்சர் விஜய்</p><p>மேகதாது தொடர்பாக அனுமதி அளிக்க கூடாது என பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளோம் - முதலமைச்சர்</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/q3vadxbg/vijay2.jpg" /></figure><p>காவிரி நமக்கு உயிர் ஆதாரம், அதை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் இல்லை - முதலமைச்சர் விஜய்</p><p>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர், விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக பேரவையில் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கி உள்ளோம்.</p><p>முழு தள்ளுபடி என சொல்லிவிட்டு பயிக்கடனை அரைகுறையாக தள்ளுபடி செய்தது ஏன் என அரசு பதில் அளிக்க வேண்டும்.</p><p>டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் தர வேண்டும்.</p><p>தவெக அரசு அமைந்த பின்னர் மேகதாது விவகாரத்தில் அதிக வேகம் காட்டும் கர்நாடகா.</p><p>அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டவேண்டும் என அனைத்து கட்சிகளும் வலியுறுத்துகின்றன என்று கூறினார்.</p> <p>மறைந்த திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் பாக்யராஜ், கவிஞர் மற்றும் எழுத்தாளர் புவியரசு, மறைந்த பின்னணி பாடகி ஜானகி, எழுத்தாளர் பூமணி, முன்னாள் சட்டசபை உறுப்பினர் சுருளிவேல் ஆகியோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இதையடுத்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.</p> <p>தமிழ்நாடு சட்டசபை இன்று கூடியது. சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெற்றது.</p><p>சட்டசபை கூடியதும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் இரங்கல் குறிப்பு வாசித்தார்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/condolence-resolution-for-deceased-celebrities-in-tamil-nadu-assembly" rel="nofollow">தமிழக சட்டமன்றத்தில் மறைந்த பிரபலங்களுக்கு இரங்கல் தீர்மானம்</a></p><p>* மறைந்த பின்னணி பாடகி ஜானகிக்கு பேரவையில் இரங்கல் தீர்மானம்.</p><p>* எழுத்தாளர் பூமணிக்கு பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/centre-says-tamil-nadu-has-not-sought-changes-to-parandur-green-airport-plan">பரந்தூர் விமான நிலைய திட்டத்தை மாற்றியமைக்க தமிழக அரசு கோரவில்லை- நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!</a></p><p>* தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு மத்திய அரசு கொள்கை அளவிலான ஒப்புதலை அளித்தது.</p><p>* தமிழ்நாடு அரசிடம் இருந்து மத்திய அரசுக்கு ஏதேனும் கடிதம் வரப்பெற்றதா? என கேள்வி எழுப்பினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-assembly-to-pass-resolution-on-just-tax-distribution" rel="nofollow">தமிழகத்திற்கு நியாயமான வரிப்பகிர்வு கோரி சட்டசபையில் இன்று தீர்மானம்</a></p><p>* மாநிலத்தின் நியாயமான நிதி நலன்கள் பாதுகாக்கப்படுவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.</p><p>* தேசிய பொருளாதாரத்திற்கு தொடர்ந்து முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-and-sangeetha-divorce-case-hearing-today">முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணை</a></p><p>* சங்கீதா விவாகரத்து கோரி கடந்த ஆண்டு டிசம்பரில் செங்கல்பட்டு முதன்மை அமர்வு  நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.</p><p>* விவாகரத்து கேட்டுள்ள இருவரையும் சமரச மையத்துக்குதான் அனுப்ப வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/80th-independence-day-5-layer-security-at-chennai-airport"> 80-வது சுதந்திர தினம்: சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு</a></p><p>* நாட்டின் 80-வது&nbsp;சுதந்திர தின விழா வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது.</p><p>* விமான நிலையம் வரும் வாகனங்கள் மற்றும் பயணிகள் பலத்த சோதனைக்கு பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.&nbsp;</p> ]]></content:encoded></item><item><title>எதிர்க்கட்சிகளை குறிவைத்து ரிஜிஜு பேசிய கருத்துகள் மக்களவைக் குறிப்பில் இருந்து நீக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/national/remarks-made-by-rijiju-in-ls-targeting-opposition-expunged</link><comments>https://www.maalaimalar.com/news/national/remarks-made-by-rijiju-in-ls-targeting-opposition-expunged#comments</comments><guid isPermaLink="false">855700a4-39e1-49b2-8223-a3b5423bccfe</guid><pubDate>Fri, 07 Aug 2026 15:09:24 +0000</pubDate><atom:updated>2026-08-07T15:09:24.785Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நாடாளுமன்றம்,Amit Shah,அமித் ஷா,Kiren Rijiju,கிரண் ரிஜிஜு,parliament</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/9fo0reur/KirenRijiju0708.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கிரண் ரிஜிஜு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/9fo0reur/KirenRijiju0708.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மக்களவையில் மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசியபோது, எதிர்க்கட்சிகளை விமர்சித்து தெரிவித்த சில கருத்துகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அவை நடவடிக்கைகளின் போது, அரசின் செயல்பாடுகள் மற்றும் மசோதாக்கள் குறித்து ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே கடும் விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய ரிஜிஜு, எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததாக கூறப்படுகிறது.</p><p>இதையடுத்து, ரிஜிஜுவின் சில கருத்துகள் அவை விதிமுறைகளுக்கு முரணானவை என்றும், அவை எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், மக்களவைத் தலைவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவை மரபுகளுக்கும் விதிகளுக்கும் ஒவ்வாத சில வார்த்தைகள் மற்றும் குறிப்புகளை அதிகாரப்பூர்வ பதிவிலிருந்து நீக்க உத்தரவிட்டார்.</p><h2>அவைக்கு வராத அமித் ஷா</h2><p>நாடாளுமன்ற நடைமுறைகளின்படி, அவையில் பேசப்படும் கருத்துகள் அவதூறாகவோ, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளாகவோ அல்லது அவையின் கண்ணியத்தை பாதிக்கும் வகையிலோ இருந்தால், அவற்றை பதிவிலிருந்து நீக்குவதற்கு மக்களவைத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது. நீக்கப்பட்ட கருத்துகள் அதிகாரப்பூர்வ அவைக் குறிப்பில் இடம்பெறாது.</p><p>இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், நாடாளுமன்ற விவாதங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெற வேண்டும் என்பதையும், அவை மரபுகளை அனைவரும் மதிக்க வேண்டியது அவசியம் என்பதையும் இந்த நடவடிக்கை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.</p><h2>தகாத வார்த்தையை பயன்படுத்திய கிரண் ரிஜிஜு</h2><p>உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவை மற்றும் மாநிலங்களைவக்கு வராதது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அதற்கு நாடளுமன்ற விவகாரங்களுக்கான துறை அமைச்சர் ரிஜிஜு, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கங்களுக்கு மத்தியில், எந்த அமைச்சர் அவைக்கு வர வேண்டும் என்பதை எதிர்க்கட்சியால் தீர்மானிக்க முடியாது என்று ரிஜிஜு என்றார். அப்போது சில வார்த்தைகளை தவறாக பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.</p><p>அமித் ஷா தினந்தோறும் நாடாளுமன்றத்திற்கு வருகை தருகிறார். நள்ளிரவு வரை அங்கேயே இருக்கிறார் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>விஷாலின் ‘மகுடம்’ டிரெய்லர் வெளியானது!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/vishals-magudam-trailer-released</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/vishals-magudam-trailer-released#comments</comments><guid isPermaLink="false">7538facf-6c2f-4673-9244-3a86e19efd3c</guid><pubDate>Fri, 07 Aug 2026 14:54:55 +0000</pubDate><atom:updated>2026-08-07T14:54:55.424Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Vishal,Magudam,மகுடம்,விஷால்,Super Good Films,சூப்பர் குட் ஃபிலிம்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/h4bcbd1u/New-Project-2026-08-07T202432.617.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விஷாலின் ‘மகுடம்’ டிரெய்லர் வெளியானது!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/h4bcbd1u/New-Project-2026-08-07T202432.617.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விஷால் இயக்கி, நடித்துள்ள புதியப் படம் மகுடம். இப்படம் மூலம் விஷால் தமிழ் திரையுலகில் இயக்குநராகவும் கால்பதிக்கிறார்.</p><p>ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாகியுள்ள இப்படத்தில் அஞ்சலி, துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் விஷால் மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.</p><p>தனது 99வது படமாக இப்படத்தை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாக உள்ளது. சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்துடன் மோதுகிறது. </p><p>இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி உள்ளது. </p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/jEAQp6jjmQA"></iframe></figure>]]></content:encoded></item><item><title>கடன் வாங்கியவர்களை மிரட்டக் கூடாது, இரவு நேரத்தில் போனில் அழைக்கக் கூடாது: வங்கிகளுக்கு RBI அறிவுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/national/no-threats-no-late-night-calls-rbi-issues-new-rules-for-loan-recovery</link><comments>https://www.maalaimalar.com/news/national/no-threats-no-late-night-calls-rbi-issues-new-rules-for-loan-recovery#comments</comments><guid isPermaLink="false">e1143381-cfe8-4b80-8081-bd8eea8152cf</guid><pubDate>Fri, 07 Aug 2026 14:44:37 +0000</pubDate><atom:updated>2026-08-07T14:44:37.583Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>RBI,வங்கி கடன்,Bank loan,ஆர்பிஐ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/yq6wplxz/RBI0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ RBI]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/yq6wplxz/RBI0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடன் வசூல் நடவடிக்கைகளில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் மற்றும் தொல்லைகளை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் 2027 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரவுள்ளன. கடன் வசூல் நடவடிக்கைகள் வெளிப்படையாகவும், மனிதநேயத்துடனும் நடைபெற வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.</p><h2>இரவு நேரங்களில் போனில் அழைக்கக் கூடாது</h2><p>புதிய விதிகளின்படி, கடன் வசூல் முகவர்கள் கடன் வாங்கியவர்களை மிரட்டவோ, அவமதிக்கவோ, தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தவோ கூடாது. அதிகாலை அல்லது இரவு நேரங்களில் தொடர்ந்து அழைத்து தொந்தரவு செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. அனைத்து வசூல் அழைப்புகளும் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும், வசூல் முகவர்கள் தங்களது அடையாளத்தை தெளிவாக தெரிவிக்க வேண்டும். அவர்கள் வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். கடன் வாங்கியவரின் தனியுரிமையை மதித்து, தொழில்முறை முறையில் மட்டுமே நடந்து கொள்ள வேண்டும் என RBI வலியுறுத்தியுள்ளது. அடமானச் சொத்துகளை கைப்பற்றுவதற்கும் தெளிவான நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.</p><h2>கடன் வசூல் நடவடிக்கைகள் நியாயமானதாக இருக்க வேண்டும்</h2><p>இந்த புதிய விதிகள் மூலம் கடன் வாங்கியவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதுடன், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் வசூல் நடைமுறைகளும் ஒழுங்குபடுத்தப்படும் என்று RBI தெரிவித்துள்ளது. இதனால் கடன் வசூல் நடவடிக்கைகள் நியாயமான, வெளிப்படையான மற்றும் மரியாதையான முறையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஏன் ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தை மூடக்கூடாது? - மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஆலோசனை!</title><link>https://www.maalaimalar.com/news/national/why-shouldnt-the-jantar-mantar-protest-site-be-closed-delhi-high-court-suggests-to-the-central-government</link><comments>https://www.maalaimalar.com/news/national/why-shouldnt-the-jantar-mantar-protest-site-be-closed-delhi-high-court-suggests-to-the-central-government#comments</comments><guid isPermaLink="false">377c946f-a425-497d-84ff-7664e43b0e0d</guid><pubDate>Fri, 07 Aug 2026 14:40:49 +0000</pubDate><atom:updated>2026-08-07T14:40:49.746Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,Centre,Delhi High Court,Jantar Mantar,டெல்லி உயர் நீதிமன்றம்,ஜந்தர் மந்தர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/a9ua8oyk/New-Project-2026-08-07T201024.121.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஏன் ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தை மூடக்கூடாது? - மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஆலோசனை!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/a9ua8oyk/New-Project-2026-08-07T201024.121.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தை ஏன் மூடக்கூடாது எனவும், அதனை ஏன் பரிசீலிக்கவில்லை எனவும் மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கி, கேள்வியும் எழுப்பியுள்ளது டெல்லி உயர் நீதிமன்றம்.</p><p>போராட்டங்கள் மூலம் ஒட்டுமொத்த தேசிய தலைநகரையும் “முன்னெச்சரிக்கையின்றி முடக்குவது அல்லது பணயக்கைதியாக மாற்றுவது” ஏன் அனுமதிக்கப்பட வேண்டும் என்று நீதிபதி அமித் மகாஜன் கேள்வி எழுப்பியுள்ளார். </p><h2>வழக்கு</h2><p>ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதிக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது டெல்லி காவல்துறை பதிலளிக்க உத்தரவிடக் கோரி, அகில இந்திய தலித் கிறிஸ்தவ உரிமைகள் பாதுகாப்புக் குழு தாக்கல் செய்த மனுவை விசாரித்தபோது நீதிபதி மகாஜன் இந்தக் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.</p><p>மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் கோஸ் , காவல்துறை தங்கள் மனுவை நிராகரிக்கவும் இல்லை, போராட்டத்திற்கு அனுமதி அளிக்கவும் இல்லை, கிடப்பில் போட்டுள்ளது என தெரிவித்தார். </p><p>இதற்கு,“என் கருத்துப்படி, நீங்கள் ஏன் இதை மூடிவிடக் கூடாது? இது டெல்லிக்குள் நடக்கக் கூடாது” என கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சேத்தன் சர்மாவிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். </p><p>அதற்கு, டெல்லியில் எந்தவிதமான போராட்டங்களும் நடைபெறக்கூடாது என்பதுதான் மத்திய அரசின் நிலைப்பாடா என்று கோஸ் கேள்வி எழுப்பினார்.</p><p>அதற்கு பதிலளித்த நீதிபதி மகாஜன், “அதை காவல்துறையினர்தான் முடிவு செய்ய வேண்டும். நகரத்திற்குள் போராட்டங்களை நடத்த அனுமதிக்கும் வசதி அல்லது சூழல் அவர்களுக்கு இல்லை என்றால் முடிவு அவர்களுடையது” என்றார்.</p><p>உடனே, “சரி, டெல்லியில் ஜனநாயகப்பூர்வமான, அமைதியான போராட்டங்கள் நடத்தப்படாது என்று அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கட்டும். அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.” என கோஸ் பதிலளித்தார்.  </p><p>இந்தப் போராட்டங்கள் ஜனநாயகமானவையா அல்லது ஜனநாயகமற்றவையா என்பதைப் பற்றித் தாம் பேசவில்லை என்றும், மாறாக "நகரம் ஏன் பணயக் கைதியாக வைக்கப்பட வேண்டும்?" என்பதைப் பற்றியே பேசுவதாகவும் நீதிபதி மகாஜன் கூறினார்.</p><p>இதற்கிடையில், அப்பகுதியில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 144 அமலில் உள்ளதாகவும், ஆகஸ்ட் 15 நெருங்கி வருவதாகவும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சர்மா தெரிவித்தார்.</p><p>“பாதுகாப்புப் படைகள் களமிறக்கப்பட்டுள்ளன. 75 பேர் எப்போது 75,000 பேராக மாறுவார்கள் என்று எங்களுக்குத் தெரியாது” என்றும் ஷர்மா கூறினார்.</p><p>தொடர்ந்து “தனிப்பட்ட முறையில் நீங்கள் என்னிடம் கேட்டால், எனக்கு வேறுபட்ட கருத்து உள்ளது. ஆம்புலன்ஸ்கள் ஆகட்டும் அல்லது வேறு எதுவாகட்டும், நகரம் முழுவதும் முடங்கிக் கிடக்கும்போது, ​​போராட்டம் ஏன் நகரத்தில் நடக்க வேண்டும்?” என்று நீதிபதி மகாஜன் மீண்டும் வலியுறுத்தினார். </p><p>இறுதியாக, மனுமீது நாளைக்குள் (ஆக.8) முடிவெடுக்குமாறு உத்தரவிட்டு, மனுவை தள்ளுபடி செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தாய்லாந்தில் சோகம்: பள்ளியில் மாணவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் பலி</title><link>https://www.maalaimalar.com/news/world/seven-killed-by-teen-in-thailand-mass-shooting</link><comments>https://www.maalaimalar.com/news/world/seven-killed-by-teen-in-thailand-mass-shooting#comments</comments><guid isPermaLink="false">c2e211d6-da8c-404c-9ea4-8aaf23d6cafa</guid><pubDate>Fri, 07 Aug 2026 14:39:35 +0000</pubDate><atom:updated>2026-08-07T14:39:35.466Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தாய்லாந்து,thailand,துப்பாக்கிச்சூடு,shooting</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/bcsa20v9/shoot.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ police]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/bcsa20v9/shoot.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து வடமேற்கே 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நொந்தபுரி மாகாணம் பாங் க்ருவாய் மாவட்டத்தில் டெப்சிரின் என்ற உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.</p><p>இன்று காலை பள்ளிக்கு மாணவர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது பள்ளிக்குள் 8-ம் வகுப்பு மாணவர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.</p><p>இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள், ஆசிரியர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். பலர் பள்ளி அறைகளின் கதவுகளைப் பூட்டிக்கொண்டு அங்கு பதுங்கினர். இதனால் பள்ளியில் பெரும் பரபரப்பு நிலவியது.</p><p>துப்பாக்கிச்சூடு குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் அந்தப் பள்ளிக்கு விரைந்து சென்றனர். அவர்கள் பள்ளிக்குள் சென்று மாணவ-மாணவிகளை பத்திரமாக வெளியே கொண்டு வந்தனர்.</p><p>இந்தத் துப்பாக்கி சூட்டில் ஆசிரியர்கள் உள்பட 7 பேர் பலியாகினர். 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.</p><p>துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பள்ளிக்குள் இருந்த ஒரு மாணவரே என்பதை உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>டிஎன்பிஎல் 2026: துஷார் ரஹேஜா அதிரடி சதத்தால் சேப்பாக்கத்தை வீழ்த்தியது திருப்பூர்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/tirupur-beat-chepauk-in-tnpl-2026</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/tirupur-beat-chepauk-in-tnpl-2026#comments</comments><guid isPermaLink="false">dd434bd1-b0fc-4079-9fcf-2ea6cb119353</guid><pubDate>Fri, 07 Aug 2026 13:40:47 +0000</pubDate><atom:updated>2026-08-07T13:40:47.876Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,திருப்பூர் தமிழன்ஸ்,Chepauk super gillies,சேப்பாக் சூப்பர் கில்லீஸ்,IDream Tiruppur Tamizhans,tushar raheja,துஷார் ரஹேஜா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/ufpfd1c6/tushar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ tushar raheja]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/ufpfd1c6/tushar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 10-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. வரும் 28-ம் தேதி வரை இரு கட்டமாக இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.</p><p>மொத்தம் உள்ள 32 ஆட்டங்களில் திண்டுக்கல்லில் 20 போட்டிகளும், சென்னையில் 12 ஆட்டங்களும் நடக்கிறது. 16 மற்றும் 17-ம் தேதி ஓய்வு தினமாகும்.</p><p>முதல் கட்ட போட்டிகள் வரும் 15-ம் தேதி வரை திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி  மைதானத்தில் நடக்கின்றன.</p><p>இந்நிலையில், டிஎன்பிஎல் தொடரின் 5-வது லீக் போட்டி திண்டுக்கல்லில் இன்று நடைபெறுகிறது. இதில் திருப்பூர் தமிழன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன. </p><p>டாஸ் வென்ற திருப்பூர் தமிழன்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.</p><h2>சதத்தை தவறவிட்ட ஆஷிக்</h2><p>அதன்படி, முதலில் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. </p><p>ஆஷிக் அதிரடியாக ஆடி சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆஷிக் 56 பந்தில் 7 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 98 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜெகதீசன் 27 ரன்னில் அவுட்டானார். </p><p>திருப்பூர் தமிழன்ஸ் அணி சார்பில் மோகன் பிரசாத், சிலம்பரசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.</p><h2>சதமடித்த துஷார் ரஹேஜா</h2><p>இதையடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே திருப்பூர் அணி அதிரடியாக ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் துஷார் ரஹேஜா சிக்சர், பவுண்டரிகளாக விளாசி சதமடித்து அசத்தினார். அவர் 52 பந்தில் 8 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 102 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.</p><p>அவருக்கு பிரதோஷ் ரஞ்சன் பால் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் 41 பந்தில் ச் சிக்சர், 9 பவுண்டரி உள்பட 73 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.</p><p>இறுதியில், திருப்பூர் அணி 18 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 206 ரன்கள் எடுத்து வென்றதுடன், நடப்பு தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.</p><p>சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு இது 2வது தோல்வி ஆகும்.</p>]]></content:encoded></item><item><title>மிகவும் மோசமான முதலமைச்சர்: இது அம்மா ஆட்சியல்ல &quot;சும்மா ஆட்சி&quot;: ஓ.எஸ். மணியன் விமர்சனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-very-bad-chief-minister-not-amma-government-just-summa-government-os-manian-slams</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-very-bad-chief-minister-not-amma-government-just-summa-government-os-manian-slams#comments</comments><guid isPermaLink="false">500283ec-475c-4bc9-9a97-edf29a2c0b56</guid><pubDate>Fri, 07 Aug 2026 13:28:05 +0000</pubDate><atom:updated>2026-08-07T13:28:05.536Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>OS Manian,TN assembly,தமிழக சட்டசபை |,ஓஎஸ் மணியன்,முதலமைச்சர் விஜய்,tn cm vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/k44wwc25/TNCMVIjayOSManian0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்- ஓ.எஸ். மணியன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/k44wwc25/TNCMVIjayOSManian0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது, சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் திலீபன் ஜெய்சங்கர் பேசினார். அப்போது, அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த பல்வேறு திட்டங்கள் தற்போது மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார். அதற்கு, அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/aadav-arjuna-and-udhayanidhi-stalin-argument-in-tn-assembly">ஆதவ் அர்ஜூனா</a> "தற்போது நடைபெறுவது அம்மாவின் ஆட்சிதான்" அதற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மா ஆட்சி என்கிறீர்கள். ஏன் அம்மா பெயரில் திட்டங்களை வழங்கிடக்கூடாது? என்றார்.</p><p>இந்த நிலையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா இது அம்மாவின் ஆட்சிதான் என்று கூறினாரே? என்று அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ். மணியனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.</p><h2>அதற்கு ஓ.எஸ். மணியன் பதில் அளித்து கூறியதாவது:-</h2><p>முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சி "சும்மா ஆட்சி". சும்மா ஆட்சியை மறைப்பதற்காக அம்மா ஆட்சி என்று சொல்கிறார்கள். அம்மா உடைய மாண்பை, அம்மா உடைய சிறப்பை., அம்மா அவர்கள் இந்த தமிழகத்திற்காக,, குறிப்பாக ஜீவாதார உரிமைகளுக்காக ஆட்சியில் இருந்தபோதிலும் சரி, ஆட்சியில் இல்லாதபோதிலும் சரி காவிரி நீர் பிரச்சனைக்காக, முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்காக, வீராணம் தண்ணீரை கொண்டு வருவதாக இருந்தாலும் சரி அனைத்தையும் சாதித்து காட்டியவர், சட்டம் போராட்டம் நடத்தி வெற்றிப் பெற்று காண்பித்தவர் புரட்சித் தலைவி அம்மா.</p><h2>அம்மா ஆட்சியுடன் ஒப்பிடக் கூடாது</h2><p>பெண்ணினத்தை உயர்த்தி பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு அதில் வெற்றிக் கண்டவர் புரட்சித் தலைவர் அம்மா. அம்மாவின் ஆட்சிக்காலம் இந்தியாவுக்கு மட்டுமல்ல துணைக் கண்டத்திற்கும் ஒரு எடுத்துக்காட்டு. மாறுதலை ஏற்படுத்தி தந்திருக்கின்ற ஒரு உன்னதமான ஆட்சிதான் அம்மா உடைய ஆட்சி. அம்மா உடைய ஆட்சியை விஜய் உடைய ஆட்சியுடன் ஒப்பிடக் கூடாது.</p><p>வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று வள்ளலார் சொன்னரே, அதேபோல விவசாயிகளாக இருந்தாலும், நெசவாளராக இருந்தாலும், வணிகராக இருந்தாலும், மீனவராக இருந்தாலும் அவர்கள் எங்கேயோ, வெளிநாட்டில் கூட பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொன்னால் கூட, தானே பாதித்தவர் போல நடவடிக்கைகள் எடுத்தவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.</p><h2>கண்ணீரில் தத்தளிக்கும் விவசாயிகள்</h2><p>ஆனால், விவசாயிகள் இன்று கண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை இருந்த முதலமைச்சர்களில் மிகவும் மோசமான முதலமைச்சர் என்றால் அது விஜய்தான். விவசாயிகள் எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும், தேர்தல் வாக்குறுதியில் சொன்னதைத்தான் கேட்கிறோம் தவிர, அவர் கூடியதாக கேட்கவில்லை. மாறுதலாக செய்ய வேண்டிய அவசியம் இல்லை.</p><p>சிறுகுறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் தள்ளுபடி சென்று சொன்னீர்கள். சொன்னதை செய்தீர்களா?. இதைப் பற்றி பேசியிருக்கிறீர்களா?. அல்லது கஜானாவில் பணம் இல்லை. என்னால் இயலவில்லை, என்னால் செய்ய இயலவில்லை சொல்லியிருக்கிறீர்களா? வாய் திறக்காமல் மவுனமாக இருந்து சாதிப்பது என்பது மோசமான நிலை. இதனால்தான் விஜய் ஆட்சி சும்மா ஆட்சி. தலையில் முக்காடுபோடும் விதமாக அம்மா ஆட்சி என்று அவர்கள் பேசுகிறார்கள்.</p><p>இவ்வாறு ஓ.எஸ். மணியன் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>‘பாகிஸ்தானை தாக்கினால் துருக்கி, சவுதி அரேபியா வரும்’ - 3 நாடுகள் இடையே கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!</title><link>https://www.maalaimalar.com/news/world/if-pakistan-is-attacked-turkey-and-saudi-arabia-will-step-in-joint-defense-pact-signed-between-the-three-nations</link><comments>https://www.maalaimalar.com/news/world/if-pakistan-is-attacked-turkey-and-saudi-arabia-will-step-in-joint-defense-pact-signed-between-the-three-nations#comments</comments><guid isPermaLink="false">2606b40e-d279-449b-8c95-a1e6f50dd91c</guid><pubDate>Fri, 07 Aug 2026 13:27:51 +0000</pubDate><atom:updated>2026-08-07T13:27:51.422Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Pakistan,துருக்கி,Turkey,Saudi Arabia,சவுதி அரேபியா,Joint Defense Pact,கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/z3forlj3/New-Project-2026-08-07T183830.687.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘பாகிஸ்தானை தாக்கினால் துருக்கி, சவுதி அரேபியா வரும்’ - 3 நாடுகள் இடையே கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/z3forlj3/New-Project-2026-08-07T183830.687.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்கா - ஈரான் இடையேயான தொடர் மோதலால், மத்திய கிழக்கில் பதற்றம் நிலவிவரும் நிலையில், சவுதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி இடையே கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. </p><p>மெக்காவில் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் ஆகியோர் கூட்டாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீரும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டார்.</p><h2>ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம்</h2><p>இதன்மூலம் மூன்று நாடுகளில் எந்த நாடுமீது தாக்குதல் நடத்தப்பட்டாலும், அவை மூன்று நாடுகள்மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாக கருதப்படும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. </p><p>ஒரு நாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில், மற்ற நாடுகள் தங்களின் கூட்டுப் பாதுகாப்பு பலத்தைப் பயன்படுத்தி அதற்குப் பதிலடி கொடுக்கவோ அல்லது உதவவோ முன்வரும்.</p><h2>கூட்டணி பலம்</h2><p>பாகிஸ்தான், இஸ்லாமிய நாடுகளில் அணுஆயுத வல்லமை கொண்ட ஒரே நாடு. துருக்கி நேட்டோ அமைப்பில் இரண்டாவது பெரிய ராணுவப் படையைக் கொண்ட மற்றும் மேம்பட்ட ட்ரோன் தொழில்நுட்பத்தைக் கொண்ட நாடு.</p><p>பலமான பொருளாதார நிதி ஆதாரங்கள் மற்றும் பிராந்திய செல்வாக்கைக் கொண்ட நாடு சவுதி அரேபியா. </p><h2>இந்தியா பதில் </h2><p>இந்த ஒப்பந்தம் “முற்றிலும் தற்காப்பு நோக்கமுடையது” என்றும், இது எந்தவொரு குறிப்பிட்ட நாட்டையும் குறிவைக்கவில்லை என்றும், மற்ற பிராந்திய நாடுகளுக்கும் இது பொருந்தும் என்றும் ஒரு துருக்கி தெரிவிக்க, அனைத்தையும் உற்றுநோக்கி வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. </p><p>கடந்தாண்டு சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் இடையே இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்  கையெழுத்தான நிலையில், தற்போது துருக்கியும் இணைந்து இது ஒரு முத்தரப்பு கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>ஆகஸ்ட் 28-ல் வெளியாகிறது கவின், நயன்தாராவின் ‘ஹாய்’!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/hi-releases-on-august-28</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/hi-releases-on-august-28#comments</comments><guid isPermaLink="false">5e8cc7fa-ad8b-4995-9271-2efc51afec3a</guid><pubDate>Fri, 07 Aug 2026 13:02:24 +0000</pubDate><atom:updated>2026-08-07T13:02:24.040Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>நயன்தாரா,Nayanthara,kavin,கவின்,HI,ஹாய்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/zubw9zce/New-Project-2026-08-07T175916.292.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆகஸ்ட் 28-ல் வெளியாகிறது கவின், நயன்தாராவின் ‘ஹாய்’!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/zubw9zce/New-Project-2026-08-07T175916.292.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின், நயன்தாரா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள காதல் திரைப்படம் ஹாய், ஆகஸ்ட் 28ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. </p><p>படத்தைத் தயாரித்துள்ள செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ், கவின், நயன்தாரா இணைந்து ரிலீஸ் தேதியை அறிவிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரிலீஸை உறுதிப்படுத்தியுள்ளது. </p><p>இப்படம் முதலில் ஆக.14ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், விஸ்வநாத் அண்ட் சன்ஸ், விஷாலின் மகுடம் உள்ளிட்ட படங்களின் வெளியீட்டைத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது. </p><p>அதனைத்தொடர்ந்து தற்போது ஆகஸ்ட் 28 அன்று வெளியிட முடிவு செய்துள்ளனர்.</p><p>ஜீ ஸ்டுடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். </p><p>படத்தில் கவின், நயன்தாராவுடன் இணைந்து மறைந்த இயக்குநர் பாக்யராஜ், பிரபு, ராதிகா, சத்யன், ஆதித்யா கதிர் மற்றும் குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். </p><p>இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் விஷ்ணு எடவன், பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜின் 'கைதி', 'மாஸ்டர்' மற்றும் 'விக்ரம்' உள்ளிட்ட பல படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ChatGPT-யில் இனிமேல் பணம் செலுத்த வேண்டாம்: வரம்புகள் இல்லாமல் பயன்படுத்தலாம் என அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/no-more-payment-for-chatgpt-unlimited-use-announced</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/no-more-payment-for-chatgpt-unlimited-use-announced#comments</comments><guid isPermaLink="false">68af81ce-4a00-485a-9016-dfd8edd22fee</guid><pubDate>Fri, 07 Aug 2026 12:29:40 +0000</pubDate><atom:updated>2026-08-07T12:29:40.268Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சாட்ஜிபிடி,ஓபன் ஏஐ,ChatGPT,OpenAI,இலவச சேவை,free version</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/p40fxiqx/Untitled-design-9.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ChatGPT Free Now Offers Unlimited Text Conversations: GPT-5.6 Luna Becomes Default for Free and Go Users]]></media:title><media:description type="html"><![CDATA[ ChatGPT]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/p40fxiqx/Untitled-design-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>OpenAl நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ChatGPT-யின் இலவசப் பதிப்பை பயன்படுத்தும் பயனர்கள், இனிமேல் வரம்பற்ற உரைவழி உரையாடல்களைப் பெறலாம் என்று அறிவித்துள்ளது.</p><p>இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், மூன்று GPT-5.6 மாடல்களில் மிகச் சிறியதான GPT-5.6 Luna, இலவச மற்றும் Go பயனர்களுக்கு இயல்புநிலையாக மாற உள்ளதாக தெரிவித்துள்ளத்து.</p><h3><strong>ChatGPT-யில் இலவச பயன்பாடு</strong></h3><p>GPT-5.6 லூனா பதிப்பிற்கு மாறும் பணி இந்த வாரத்தில் நடைபெறும் என்றும் அதே சமயம், வரம்பற்ற உரை வழி உரையாடல்கள் அடுத்த வாரம் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>OpenAl, Plus அல்லது Pro திட்டங்களுக்குப் பணம் செலுத்துபவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் அதன் முதன்மை GPT-5.6 Sol மாடலும் மேம்படுத்தப்பட்டு வருகிறது.</p><p>இந்த மேம்படுத்தல்கள், “பயனர்களுக்கு மிகவும் நேரடியான பதில்களை அளிக்கவும், சரியான வடிவமைப்பை பயன்படுத்தவும், கூடுதல் விவரங்களைத் தவிர்க்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளன” என்று அந்நிறுவனம் கூறுகிறது.</p><p>மேலும், “பயனர்களுக்கு தேவையான சூழலுடன் கூடிய நேரடியான பதில் கிடைக்கும்” என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><p>புதிய GPT-5.6 Sol, குறிப்பாக எண்கள், தேதிகள், ஆதாரங்கள், விதிகள் அல்லது அனுமானங்கள் போன்றவற்றில், குறைவான தவறுகளைச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><p>உண்மை விவரங்கள் தேவைப்படும் நிதி, மருத்துவம் மற்றும் சட்டரீதியான கேள்விகள் குறித்த ஒரு உள் மதிப்பீட்டில் GPT-5.5 Instant உடன் ஒப்பிடும்போது, புதிய GPT-5.6 Sol-இல் பிழைகள் குறைவாக இருந்ததாக OpenAl கூறுகிறது.</p><p>பிளஸ் மற்றும் ப்ரோ சந்தாதாரர்கள் தங்களின் அன்றாடக் கேள்விகளுக்கு இதை விரைவாக வைத்துக்கொள்ளலாம் என்றும், திட்டமிடல், ஆராய்ச்சி, எழுதுதல், கோடிங் அல்லது அதிக சிந்தனை தேவைப்படும் முடிவுகளுக்கு அடுத்த நிலைக்கு நகர்த்தலாம் என்றும் OpenAl கூறுகிறது.</p><h3><strong>நிபந்தனைகள்</strong></h3><p>ChatGPT யில் உரைவழி உரையாடல்களுக்கு இனி வரம்புகள் இருக்காது என்றாலும், இலவச மற்றும் கோ பயனர்கள் கோப்பு பதிவேற்றங்கள் மற்றும் பட உருவாக்கத்தில் தொடர்ந்து வரம்புகளை எதிர்கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக்கில் கூடுதல் வசூல்: புகார் அளித்தால் வழக்கு பதிய வேண்டும் என சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-hc-order-tasmac-administration-overpricing-liquor-sales</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-hc-order-tasmac-administration-overpricing-liquor-sales#comments</comments><guid isPermaLink="false">d3aa5c8a-87d9-4c42-9ef7-fc2bbc799d9c</guid><pubDate>Fri, 07 Aug 2026 12:29:13 +0000</pubDate><atom:updated>2026-08-07T12:29:13.609Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai High court,சென்னை ஐகோர்ட்,Tasmac,டாஸ்மாக்,over price,கூடுதல் விலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/kmkczjdp/court.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ high court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/kmkczjdp/court.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்றால் போலீசில் புகார் அளிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.</p><p>சென்னையில் பெரம்பூர், கொளத்தூர், மாதவரம் உட்பட 30 இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்த ஊழியர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரி தேவராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.</p><p>இதுபோல, 2022ம் ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டு வரை கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையை சம்பந்தப்பட்ட பணியாளர்களிடமிருந்து வசூலித்து அரசுக்கு செலுத்த வேண்டும், சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு எதிராக பணி நீக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.</p><h2>இனி ரசீது கட்டாயம்</h2><p>இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும், ரசீது புத்தகங்களை பராமரிக்க வேண்டும் என்றும் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.</p><p>இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.</p><p>அப்போது, விற்கப்படும் மதுபானங்களுக்கு ரசீது வழங்கவேண்டும் என மதுபான கடைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. மது வாங்குவோரின் கூட்டம் அதிகமாக இருப்பதால் ரசீது வழங்குவதில் சிரமங்கள் இருக்கிறது என டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.</p><p>ஆனாலும், நேற்று கூட மது வாங்கியபோது ரசீது வழங்கப்படவில்லை. கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது என மனுதாரர் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.</p><h2>நுகர்வோர் புகார் அளிக்கலாம்</h2><p>அப்போது குறுக்கிட்ட நீதிபதி, சூப்பர் மார்க்கெட்களில் டூத் பேஸ்ட் வாங்கினால் கூட ரசீது கொடுக்கும் நிலையில், மாநிலத்துக்கு பெரும் வருவாயை தரும் டாஸ்மாக் கடைகளில் ரசீது வழங்குவதில் என்ன சிக்கல் உள்ளது? கூட்டத்தை முறைப்படுத்த ஏன் காவலர்களை பணியமர்த்தக் கூடாது என கேள்வி எழுப்பினார்.</p><p>மேலும், டாஸ்மாக் மதுபான கடைகளில் கூடுதல் தொகை வசூலித்தால் நுகர்வோர் புகார் அளிக்கலாம். அப்படி புகார் வந்தால், அந்த புகார் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டது.</p><p>அரசு சுற்றறிக்கையைப் பின்பற்றாமல், கூடுதல் தொகை வசூலித்தால் சம்பந்தப்பட்ட போலீசிடம் புகார் அளிக்க வேண்டும். மனுதாரர் புகாரை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஐகோர்ட் நீதிபதி உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>இந்திய - சீன எல்லைப் பிரச்னைகள்: தூதரக மற்றும் ராணுவ பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுகாண இருநாடுகளும் ஒப்புதல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/india-china-border-issues-both-nations-agree-to-seek-a-resolution-through-diplomatic-and-military-talks</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-china-border-issues-both-nations-agree-to-seek-a-resolution-through-diplomatic-and-military-talks#comments</comments><guid isPermaLink="false">64484378-c931-45ef-8502-f5fcca7ab39e</guid><pubDate>Fri, 07 Aug 2026 12:23:05 +0000</pubDate><atom:updated>2026-08-07T12:23:05.616Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,China,சீனா,border issues,எல்லைப் பிரச்னைகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/xewecfl0/New-Project-2026-08-07T171716.651.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இந்திய - சீன எல்லைப் பிரச்னைகள்: தூதரக மற்றும் ராணுவ பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுகாண இருநாடுகளும் ஒப்புதல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/xewecfl0/New-Project-2026-08-07T171716.651.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சீனாவிற்கும், இந்தியாவிற்கும் இடையே இருக்கும் தீர்க்கமுடியாத எல்லைப் பிரச்னைகளை களைய தூதரக மற்றும் ராணுவ ரீதியிலான வழிமுறைகளை தொடர்ந்து மேற்கொள்ள இருநாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. </p><p>டெல்லியில் நேற்று (ஆக.6) நடைபெற்ற இந்தியா-சீனா எல்லை விவகாரங்கள் குறித்த ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புக்கான செயற்குழுவின் 36வது கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டது. </p><p>கூட்டத்தில் எல்லை நிர்ணயம், எல்லை மேலாண்மை, எல்லைத் தாண்டிய ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இந்தியக் குழுவிற்கு வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜித் கோஷ் தலைமை தாங்கினார். அதே சமயம் சீனத் தரப்பிற்கு சீனாவின் வெளியுறவு அமைச்சகத்தின் எல்லை மற்றும் கடல்சார் விவகாரங்கள் துறையின் தலைமை இயக்குநர் ஹூ யான்சி தலைமை தாங்கினார்.</p><p>எல்லை தாண்டிய ஆறுகள் தொடர்பான நிபுணர் மட்டக் குழுவின் கூட்டம் விரைவில் நடைபெற வேண்டியதன் அவசியமும், மேல்நிலைத் திட்டங்கள் தொடர்பான தொழில்நுட்ப விவரங்களைப் பகிர்ந்துகொள்ளவும் இந்திய தரப்பில் வலியுறுத்தப்பட்டது. </p><h2>35வது WMCC சந்திப்பு</h2><p>முன்னதாக 35வது மேற்கு ஆசிய ஒத்துழைப்பு கவுன்சில் கூட்டம் மே 27 அன்று பெய்ஜிங்கில் நடைபெற்றது. இதில், இரு தரப்பினரும் இந்தியா-சீனா எல்லைப் பகுதியில் நிலவும் சூழ்நிலையை ஆய்வு செய்ததுடன், எல்லைப் பகுதிகளில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பேணுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து திருப்தி தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>மூன்று நாட்கள் பாராளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர்கள் கட்டாயம் இருக்க வேண்டும்: காங்கிரஸ் கொறடா உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/national/congress-issues-whip-to-its-mps-in-rs-ls-asks-them-to-be-present-on-aug-10-to-12</link><comments>https://www.maalaimalar.com/news/national/congress-issues-whip-to-its-mps-in-rs-ls-asks-them-to-be-present-on-aug-10-to-12#comments</comments><guid isPermaLink="false">2cd471a7-7ac9-42e9-998f-89e8bf4735c3</guid><pubDate>Fri, 07 Aug 2026 12:17:48 +0000</pubDate><atom:updated>2026-08-07T12:17:48.945Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,நாடாளுமன்றம்,parliament,தொகுதி மறுவரையறை மசோதா,Delimitation Bill</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/aq0aoqma/Parliament0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நாடாளுமன்றம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/aq0aoqma/Parliament0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மிக முக்கியமான விவகாரங்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதால், மாநிலங்களவை மற்றும் மக்களவையில் உள்ள தங்கள் கட்சி உறுப்பினர்கள் ஆகஸ்ட் 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் அவையில் கட்டாயம் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கொறடாக்கள் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>இந்த மூன்று நாட்களிலும் தங்கள் கட்சி உறுப்பினர்கள் அவையில் இருப்பதை உறுதி செய்யுமாறு இந்தியா (INDIA) கூட்டணியில் உள்ள அனைத்துக் கூட்டணி கட்சிகளிடமும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><h2>தொகுதி வரையறை மசோதா தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்ப்பு</h2><p>சர்ச்சைக்குரிய வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026 (FCRA Bill) அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கும் நிறைவேற்றத்திற்கும் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது என்ற தகவல்களுக்கு மத்தியில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், தொகுதி மறுவரையறை தொடர்பான அரசியலமைப்புத் திருத்த மசோதாவையும் அரசு பரிசீலித்து வருவதாகப் பேசப்படுகிறது.</p><p>மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை கொறடா (Chief Whip) ஜெய்ராம் ரமேஷ் பிறப்பித்த three-line உத்தரவில், "திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் (அதாவது ஆகஸ்ட் 10, 11 மற்றும் 12 தேதிகளில்) மாநிலங்களவையில் மிக முக்கியமான விவகாரங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.</p><p>மாநிலங்களவையில் உள்ள காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அனைவரும், ஆகஸ்ட் 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் (திங்கள், செவ்வாய் மற்றும் புதன்) காலை 11 மணி முதல் அவை ஒத்திவைக்கப்படும் வரை தவறாமல் அவையில் இருக்கவும், கட்சியின் நிலைப்பாட்டை ஆதரிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிக முக்கியமான விஷயமாகக் கருதப்பட வேண்டும்," என்று ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இதேபோன்றதொரு உத்தரவை மக்களவையில் உள்ள கட்சி உறுப்பினர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் தலைமை கொறடா கே. சுரேஷ் பிறப்பித்தார்.</p><h2>தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற 3-ல் 2 பங்கு ஆதரவு தேவை</h2><p>அடுத்த வாரத்திற்கான அரசின் தற்காலிக அலுவல் பட்டியலை குறிப்பிடும்போது, ​​பாராளுமன்ற விவகாரங்களுக்கான இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், FCRA மசோதா மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறையைச் செயல்படுத்துவதற்கான அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.</p><p>FCRA மசோதாவை நிறைவேற்ற எளிய பெரும்பான்மை போதுமானது. ஆனால் அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படுகிறது. அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை இந்தக் கூட்டத்தொடரில் கொண்டுவராவிட்டால் அடுத்த கூட்டத்தொடரில் கொண்டுவரலாம் என்றும், அப்படியிருந்தாலும் 2029 மக்களவைத் தேர்தலுக்குள் அதைச் செயல்படுத்தப் போதுமான நேரம் இருக்கும் என்றும் அரசாங்கத் தரப்பில் ஒரு கருத்து நிலவுகிறது.</p>]]></content:encoded></item><item><title>சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/trailer-for-suriyas-viswanath-and-sons-released</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/trailer-for-suriyas-viswanath-and-sons-released#comments</comments><guid isPermaLink="false">3f1cec38-2d86-4a5b-8044-c4271fa90c7f</guid><pubDate>Fri, 07 Aug 2026 12:04:44 +0000</pubDate><atom:updated>2026-08-07T12:04:44.947Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சூர்யா,suriya,mamitha baiju,மமிதா பைஜூ,vishwanath and sons,விஸ்வநாத் அண்ட் சன்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/jrlze6p1/New-Project-2026-08-07T173422.835.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/jrlze6p1/New-Project-2026-08-07T173422.835.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ, ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளப் படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். </p><p>சித்தாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் டீசர், பாடல்கள் எல்லாம் வெளியாகி நல்ல வரவேற்பைப்  பெற்றுள்ளன. </p><p>குறிப்பாக மமிதாவிற்கும், அவரைவிட 20 வயது அதிகமாக இருக்கும் சூர்யாவுக்கும் இடையே படத்தில் காண்பிக்கப்பட்டுள்ள காதல் காட்சிகள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் படம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாக உள்ளது. </p><p>இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி உள்ளது. </p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/jZHoM2YhFCY"></iframe></figure>]]></content:encoded></item><item><title>டிஎன்பிஎல் 2026: சதத்தை தவறவிட்ட ஆஷிக்: 205 ரன்களைக் குவித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/tirupur-need-206-runs-against-chepauk-in-tnpl-2026</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/tirupur-need-206-runs-against-chepauk-in-tnpl-2026#comments</comments><guid isPermaLink="false">406ce830-4402-4e10-8707-f86a69e20102</guid><pubDate>Fri, 07 Aug 2026 11:50:11 +0000</pubDate><atom:updated>2026-08-07T11:50:11.063Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,Chepauk super gillies,சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி,aashiq,ஆஷிக்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/ltq9os4r/aashiq.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ aashiq]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/ltq9os4r/aashiq.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 10-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. வரும் 28-ம் தேதி வரை இரு கட்டமாக இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.</p><p>மொத்தம் உள்ள 32 ஆட்டங்களில் திண்டுக்கல்லில் 20 போட்டிகளும், சென்னையில் 12 ஆட்டங்களும் நடக்கிறது. 16 மற்றும் 17-ம் தேதி ஓய்வு தினமாகும்.</p><p>முதல் கட்ட போட்டிகள் வரும் 15-ம் தேதி வரை திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி  மைதானத்தில் நடக்கின்றன.</p><h2>டாஸ் வென்ற திருப்பூர்</h2><p>இந்நிலையில், டிஎன்பிஎல் தொடரின் 5-வது லீக் போட்டி திண்டுக்கல்லில் இன்று நடைபெறுகிறது. இதில் திருப்பூர் தமிழன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற திருப்பூர் தமிழன்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.</p><p>அதன்படி, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 21 ரன் சேர்த்த நிலையில் தொடக்க ஆட்டக்காரர் வாசீம் அகமது 16 ரன்னில் அவுட்டானார். </p><p>2வது விக்கெட்டுக்கு இணைந்த கேப்டன் ஜெகதீசன்-ஆஷிக் ஜோடி 57 ரன்கள் எடுத்த நிலையில் ஜெகதீசன் 27 ரன்னில் அவுட்டானார். </p><h2>சதத்தை தவறவிட்ட ஆஷிக்</h2><p>பொறுப்புடன் ஆடிய ஆஷிக் அரை சதம் கடந்தார். அதன்பின் அதிரடியாக ஆடினார். சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆஷிக் 56 பந்தில் 7 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 98 ரன்னில் ஆட்டமிழந்தார். </p><h2>205 ரன்கள் குவிப்பு</h2><p>இறுதியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்துள்ளது. </p><p>திருப்பூர் தமிழன்ஸ் அணி சார்பில் மோகன் பிரசாத், சிலம்பரசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.</p><p>இதையடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>எடப்பாடி பழனிசாமி பேசும்போது நேரலை துண்டிக்கப்பட்டதா?: அமைச்சர் ராஜ்மோகன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-edappadi-palanisami-speech-live-not-cut-says-minister-rajmohan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-edappadi-palanisami-speech-live-not-cut-says-minister-rajmohan#comments</comments><guid isPermaLink="false">8a465eb2-fb70-4b57-8bdc-30cf42426622</guid><pubDate>Fri, 07 Aug 2026 11:29:47 +0000</pubDate><atom:updated>2026-08-07T11:29:47.137Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,EPS,தமிழக சட்டசபை,TN assembly,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/n46vnn99/EPSRajmohan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக சட்டசபை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/n46vnn99/EPSRajmohan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.</p><p>இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது அ.தி.மு.க. கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசினார். அதிமுக கொண்டு வந்த பெரும்பாலான திட்டம் மீண்டும் கொண்டு வரப்பட்டு ஸ்டிக்கர் ஒட்டப்படுவதாக தெரிவித்தார். அப்போது ஸ்டிக்கர் என்பதை குறிப்பிட வேண்டும். அது அவை குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்று சபாநாயகர் வலியுறுத்தினார்.</p><h2>எடப்பாடி பழனிசாமி பேசும்போது நேரலை துண்டிப்பு எனக் குற்றச்சாட்டு</h2><p>பின்னர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பேசும்போது நேரலை துண்டிக்கப்பட்டது எனக் குற்றம்சாட்டின்னார்.</p><p>இது தொடர்பாக ராஜ்மோகன் பதில் அளிக்கையில் "எடப்பாடி பழனிசாமி பேசும்போது நேரலை துண்டிக்கப்பட்டது என்று அதிமுக உறுப்பினர் வேதனைப்பட்டு கூறினார். உடனே, நான் ஓடோடி சென்று, அதிகாரிகளை அழைத்து அதை காட்டச் சொல்லி கண்களால் பார்த்து வந்து பேரவைத் தலைவர் மூலம் தெரிவிக்கிறேன். ஒரு நொடி கூட நேரலையில் துண்டிக்கப்படவில்லை. நேரலையில் சென்று கொண்டிருக்கிறது. உங்களுடைய சிரித்த முகத்தை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்." என்றார்.</p><p>மீண்டும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வெளியே மக்கள் பார்த்துக் கொண்டிருந்தபோது நேரலை துண்டிக்கப்பட்டதாக எங்களிடம் சொன்னார்கள். இங்கு பதிவு செய்யப்பட்டது. வெளியில் ஒளிப்பரப்பு செய்யப்படவில்லை என்பதுதான் நிதர்சமான உண்மை. இதை மறுக்கக் கூடாது" என்றார்.</p><h2>சபாநாயகர் பதில்</h2><p>இதற்கு சபாநாயகர் "நான் அவையில் இருந்து வெளியே சென்றபோது, இதுகுறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டேன். ஒரு நிமிடம் கூட தடையில்லாமல் நேரலையாக சென்றது என்ற தகவலை எனக்கு தெரிவித்து இருக்கிறார்கள். சில வீடுகளில் பார்க்கும்போது தடை ஏற்பட்டிருக்கலாம். இங்கு இருந்து எந்தவொரு உத்தரவோ, தடையும் செய்யும் எண்ணமோ இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY: நகைப்பிரியர்களுக்கு ஷாக்... மாலையில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-hike-today-afternoon</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-hike-today-afternoon#comments</comments><guid isPermaLink="false">46574822-54f8-48c5-a213-112db7bcb785</guid><pubDate>Fri, 07 Aug 2026 11:09:43 +0000</pubDate><atom:updated>2026-08-07T11:09:43.663Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/jwuumnph/gold.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ gold]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/jwuumnph/gold.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காலையில் உயராத தங்கத்தின் விலை மாலையில் கிராமுக்கு 150 ரூபாய் உயர்ந்துள்ளது.</p><p>தங்கம் விலை நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.280-ம், பவுனுக்கு ரூ.2,240-ம் எகிறியது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 480-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 840-க்கும் விற்கப்பட்டது. நேற்று தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்திருந்தது. நேற்று கிராமுக்கு ரூ.270-ம் பவுனுக்கு ரூ.2,160-ம் அதிரடியாக உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,750-க்கும் ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக் கும் விற்பனையானது.</p><h2>இன்றைய தங்கம் விலை</h2><p>இன்று காலை தங்கம் விலையில் மாற்றமில்லை. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.1,10,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் ரூ.13,750-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p><p>தங்கம் விலை இந்த மாதத்தில், அதாவது கடந்த 1-ந் தேதி முதல் நேற்று வரையில் கிராமுக்கு ரூ.530-ம், பவுனுக்கு ரூ.4,240-ம் அதிகரித்துள்ளது.</p><h2>வெள்ளி விலை</h2><p>தங்கம் விலையை போல வெள்ளி விலையும் ஏற்றம் கண்டு வருகிறது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.240-க்கும் ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனையான நிலையில் நேற்று கிராமுக்கு ரூ.10-ம் கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் அதிகரித்து ஒரு கிராம் ரூ.250-க்கும் ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனையானது.</p><p>வெள்ளி விலையும் இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250-க்கும் ஒரு கிலோ ரூ.2,50,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p><h2>மாலையில் உயர்ந்த தங்கம்</h2><p>இந்நிலையில், இன்று மாலை ஆபரண தங்கம் விலை கிராமுக்கு 150 ரூபாயும், சவரனுக்கு 1,200 ரூபாயும் உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் 13,900 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 1,11,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p>வெள்ளி விலை இன்று மாலையும் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250-க்கும் ஒரு கிலோ ரூ.2,50,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பிற்கான சேர்க்கை: பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-chief-minister-vijay-letter-to-pm-modi-for-bvsc-and-ah-degree-admission</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-chief-minister-vijay-letter-to-pm-modi-for-bvsc-and-ah-degree-admission#comments</comments><guid isPermaLink="false">a65220f1-f579-4be5-b29f-d13b82a40bf2</guid><pubDate>Fri, 07 Aug 2026 10:47:48 +0000</pubDate><atom:updated>2026-08-07T10:47:48.754Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>pm modi,பிரதமர் மோடி,முதலமைச்சர் விஜய்,tn cm vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/x287z6d8/PMModiTVKVijay0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர் மோடி- முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/x287z6d8/PMModiTVKVijay0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு (BVSc &amp; AH) பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையானது, மேல்நிலைப் பள்ளித் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் அல்லது அந்தந்த மாநில அரசுகளால் தீர்மானிக்கப்படும் மாணவர் சேர்க்கை அளவுகோல்களின் அடிப்படையில் மட்டுமே நடைபெற வேண்டுமென வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்  கடிதம் எழுதியுள்ளார்.</p><h2>தமிழக முதலமைச்சர் விஜய் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் முதலமைச்சர் விஜய் கூறியிருப்பதாவது:-</h2><p>கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு (BVSc &amp; AH) பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பான மிக முக்கியமான பொருண்மை குறித்து பிரதமர் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.</p><p>இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் சட்டம், 1984-ன் விதிமுறைகளின்படி, அனைத்து கால்நடை மருத்துவக் கல்லூரிகளிலும் கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையானது, பொது நுழைவுத் தேர்வின் (Common Entrance Examination) அடிப்படையில் மையப்படுத்தப்பட்ட கலந்தாய்வு முறை (Centralized Counselling Process) மூலம் இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் பரிந்துரைத்துள்ளதோடு, அதற்கு மாற்று ஏற்பாடாக, மேற்படி 2026-27 கல்வியாண்டு முதல் தனியாக நுழைவுத் தேர்வு நடத்த முடியாத பட்சத்தில், நீட் (NEET UG-2026) தேர்வின் தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறவேண்டும் என இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில், மாநிலங்களுக்கு அறிவுறுத்தியிருப்பது தனது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.</p><p>மேலும், இந்த முன்மொழிவு, தமிழ்நாடு மாநிலத்திற்குப் பல்வேறு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். கால்நடை மருத்துவக் கல்வியானது தமிழகத்தின் வளர்ச்சிக்கான முன்னுரிமைகளில் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது.</p><h2>கால்நடை மருத்துவக் கல்வி என்பது வெறும் தொழில்சார் படிப்பு மட்டுமல்ல</h2><p>கால்நடை மருத்துவக் கல்வி என்பது வெறும் தொழில்சார் படிப்பு மட்டுமல்ல, மாறாக, மாநிலத்தின் கால்நடை பராமரிப்பை வலுப்படுத்துவதற்கும், கால்நடைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், பால்வள மேம்பாட்டினை வலுப்படுத்துவதற்கும், லட்சக்கணக்கான கிராமப்புறக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்குமான நமது முயற்சிகளின் அடித்தளமாகும்.</p><p>இன்று கால்நடை மருத்துவக் கல்வியில் சேர்க்கை பெறும் மாணவர்களே, வரும் ஆண்டுகளில் நமது விவசாயிகளுக்கும், கிராமங்கள் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறைக்கும் சேவை செய்யும் கால்நடை மருத்துவர்களாகவும் உருவெடுக்கிறார்கள்.</p><p>தமிழ்நாடு, மேல்நிலைப் பள்ளித் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தொழிற்கல்விப் படிப்புகளுக்கான சேர்க்கை முறையை பல தசாப்தங்களாக பின்பற்றி வருகிறது என்பதை சுட்டிகாட்டுகிறேன். இந்த முறையானது (Model), திறமையான தொழில்முறை வல்லுநர்களைத் தொடர்ந்து உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், கிராமப்புறங்கள், அரசுப் பள்ளிகள், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் மற்றும் சமூகரீதியாகப் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த தகுதியான மாணவர்களுக்கு, உயர்கல்வியைப் பெறுவதற்கான நியாயமான வாய்ப்பை உறுதிசெய்துள்ளது. இத்தேர்வு முறை, சமூக நீதி, பிராந்திய சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான ஒரு பயனுள்ள கருவியாகச் செயல்பட்டுள்ளது.</p><h2>தேசிய தேர்வுகள் முகமை நீட் தேர்வுகளை நடத்துவதில் பல்வேறு சிக்கல்கள்</h2><p>2007-2008 ஆம் கல்வியாண்டு முதல், தமிழ்நாடு அரசு, தொழிற்கல்விப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்துள்ளது என்றும், குறிப்பாக கிராமப்புற மற்றும் பின்தங்கிய பின்னணியைக் கொண்ட பல திறமையான மாணவர்களுக்கு நுழைவு நிலையில் பெரும் தடைகளை நீட் (NEET) உள்ளிட்ட ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுகள் ஏற்படுத்துகின்றன என்பதை மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.</p><p>தேசியத் தேர்வுகள் முகமை (NTA), நீட் தேர்வுகளை நடத்துவதில் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருவதையும், அண்மையில் சில முறைகேடுகள் காரணமாக, தேர்வை ரத்து செய்துவிட்டு, மறுதேர்வு நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு மேற்படி முகமை ஆளான நிலையில், 2024-ஆம் ஆண்டில் வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணைக்கும் வழிவகுத்தன என்பதையும் கருத்தில்கொண்டு, கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கு நீட் தேர்வை அறிமுகப்படுத்துவது பொருத்தமானதாக இருக்காது.</p><p>பள்ளிப் படிப்பின் மூலம் வெளிப்படும் தகுதியை பிரதிபலிப்பதற்குப் பதிலாக, சிறப்புப் பயிற்சிக்கான வாய்ப்புகள், நிதி ஆதாரங்கள் மற்றும் பலமுறை தேர்வு எழுதுவதற்கான வாய்ப்புகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இதுபோன்ற நுழைவுத் தேர்வுகளில் பெறப்படும் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது என்ற எண்ணத்தை சமீபத்திய ஆண்டுகளின் அனுபவங்கள் மேலும் உறுதிப்படுத்தியுள்ளன.</p><p>இத்தகைய நடைமுறையைக் கால்நடை மருத்துவக் கல்விச் சேர்க்கைக்கும் விரிவுபடுத்துவது என்பது, அதைப் போன்ற பாதிப்புகளையே ஏற்படுத்தும். மேலும், கால்நடை மருத்துவக் கல்வியானது ஒவ்வொரு மாநிலத்தின் வேளாண் மற்றும் கிராமப்புறப் பொருளாதாரத்துடன் இயல்பாகப் பிணைக்கப்பட்டுள்ளது.</p><p>கால்நடை மருத்துவ வல்லுநர்களுக்கான தேவை, இத்துறையில் சேரும் மாணவர்களின் பின்புலம் மற்றும் கால்நடைத் துறையின் வளர்ச்சிக்கான முன்னுரிமைகள் ஆகியவை நாடு முழுவதும், மாநிலத்திற்கு மாநிலம் கணிசமாக மாறுபடுகின்றன. இந்தச் சூழலில், கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அளவுகோல்களைத் தீர்மானிக்கும் உரிமையை அந்தந்த மாநில அரசுகளிடமே விட்டுவிடுவதுதான் சரியானதாக இருக்கும்.</p><p>இத்தகைய அணுகுமுறையே, நமது கூட்டாட்சி அமைப்பை மதிப்பதாக அமைவதோடு, கல்வித் தரத்தைத் தொடர்ந்து உயர்த்தவும், தகுதியான கால்நடை மருத்துவர்கள் உருவாவதை உறுதி செய்யவும் உதவும் என்றும், அதேவேளையில், மாநிலங்கள் தங்களது சமூக பொருளாதார நிலைகளுக்கும் கல்வி அமைப்புகளுக்கும் ஏற்புடைய மாணவர் சேர்க்கைக் கொள்கைகளை உருவாக்கிக் கொள்ளவும் இது வழிவகுக்கும்.</p><p>எனவே, இப்பொருண்மை குறித்து இந்தியப் பிரதமர் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டுமென்று கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர், இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய அறிவுறுத்துமாறும், மேல்நிலைப் பள்ளித் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பிற்கான சேர்க்கையைத் தொடரவோ அல்லது மாணவர் சேர்க்கை அளவுகோல்களை அந்தந்த மாநில அரசுகளே தீர்மானிக்கவே அனுமதிக்க வேண்டும்.</p><p>மேலும், இக்கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்து, கால்நடை மருத்துவக் கல்வியை அனைவரும் சமமாகப் பெறுவதை உறுதி செய்யுமாறும், கிராமப்புற மற்றும் சமூகரீதியாகப் பின்தங்கிய பின்னணியைக் கொண்ட மாணவர்களுக்கான வாய்ப்புகளைப் பாதுகாக்குமாறும், நமது கூட்டாட்சி அமைப்பிற்குள் மாநிலங்களின் தங்களுக்கான சட்டபூர்வ கொள்கை முடிவுகளை எடுக்கும் நிலையை உறுதிசெய்யுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இப்படி முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>‘திட்டங்களில் இருந்து வேண்டுமானால் அவரது பெயரை நீக்கலாம்... ஆனால்’ - கருணாநிதியின் நினைவு நாளில் கனிமொழியின் பதிவு! </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/his-name-might-be-removed-from-the-schemes-but-kanimozhis-post-on-karunanidhis-memorial-day</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/his-name-might-be-removed-from-the-schemes-but-kanimozhis-post-on-karunanidhis-memorial-day#comments</comments><guid isPermaLink="false">ac0b6067-c1f8-4c74-b242-cabd9e2b6434</guid><pubDate>Fri, 07 Aug 2026 10:31:35 +0000</pubDate><atom:updated>2026-08-07T10:31:35.596Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,Kanimozhi,கனிமொழி,Karunanidhi,கருணாநிதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/fq545iq9/New-Project-2026-08-07T160115.147.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘திட்டங்களில் இருந்து வேண்டுமானால் அவரது பெயரை நீக்கலாம்... ஆனால்’ - கருணாநிதியின் நினைவு நாளில் கனிமொழியின் பதிவு! ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/fq545iq9/New-Project-2026-08-07T160115.147.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதியின் நினைவு நாள் இன்று கட்சித் தொண்டர்களால் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் தனது தந்தையின் நினைவு நாளன்று திமுக எம்.பி.கனிமொழி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.</p><p>அந்தப் பதிவில்.,</p><p>“திட்டங்களிலிருந்து அவர் பெயரை நீக்குவது எளிதாக இருக்கலாம். ஆனால், நவீன தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றி எழுத எவராலும் முடியாது.</p><p>அந்த வரலாற்றின் முதல் வரியிலேயே, “இதற்கு விதையிட்டவர் தலைவர் கலைஞர்” என்று எழுதப்பட்டிருக்கிறது!” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர் கருணாநிதி கொண்டு வந்த சில முக்கியத் திட்டங்களையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">திட்டங்களிலிருந்து அவர் பெயரை நீக்குவது எளிதாக இருக்கலாம்.<br>ஆனால், நவீன தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றி எழுத எவராலும் முடியாது.<br><br>அந்த வரலாற்றின் முதல் வரியிலேயே, &quot;இதற்கு விதையிட்டவர் தலைவர் கலைஞர்&quot; என்று எழுதப்பட்டிருக்கிறது!<a href="https://x.com/hashtag/KalaignarForever?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#KalaignarForever</a> <a href="https://t.co/ATYAtJ86MY">pic.twitter.com/ATYAtJ86MY</a></p>&mdash; Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) <a href="https://x.com/KanimozhiDMK/status/2085587231260262611?ref_src=twsrc%5Etfw">August 7, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய்க்கு தலைகுனிவு ஏற்பட்டால் தமிழக மக்கள் நாங்கள் சும்மா இருப்போமா?: பிரேமலதா விஜயகாந்த்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-wont-stay-silent-if-cm-vijay-faces-humiliation-premalatha</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-wont-stay-silent-if-cm-vijay-faces-humiliation-premalatha#comments</comments><guid isPermaLink="false">34a704c3-049f-4aaf-8532-2d6e75fbffc7</guid><pubDate>Fri, 07 Aug 2026 10:14:31 +0000</pubDate><atom:updated>2026-08-07T10:14:31.689Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பிரேமலதா விஜயகாந்த்,Cauvery,TN budget,தமிழக சட்டப்பேரவை,TN assembly,Premalatha Vijayakant,காவேரி,tamilnadu legislative assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/x2ih0p42/Untitled-design-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ காவிரி உரிமைக்காக முதல்வர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த்.]]></media:title><media:description type="html"><![CDATA[ Premalatha Vijayakanth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/x2ih0p42/Untitled-design-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h3><strong>தமிழக சட்டப்பேரவையில் பிரேமலதா</strong></h3><p>தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உரையாற்றினார்.</p><p>அப்போது அவர் கூறுகையில்,</p><p>மக்கள் விரும்பும் திட்டங்கள் எந்த ஆட்சி வந்தாலும் தொடரப்பட வேண்டும் என்பதே தேமுதிகவின் நிலைப்பாடாக உள்ளது.</p><p>திமுக மற்றும் அதிமுக என யார் கொண்டு வந்த திட்டமாக இருந்தாலும், அது தொடர வேண்டும் என்பதே தேமுதிகவின் நிலைப்பாடாக உள்ளது.</p><p>மக்கள் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அவர்களுக்காக தொடர வேண்டும்.</p><p>விருத்தாச்சலத்தை மாவட்டமாக பட்ஜெட்டில் அறிவிப்பார்கள் என எதிர்பார்த்தேன்.</p><h3><strong>மழையில் நனையும் நெல் மூட்டைகள்</strong></h3><p>விருத்தாச்சலத்தை சுற்றியுள்ள கிராமங்களில் மழை காலங்களில் திறந்தவெளியில் உள்ள நெல்மூட்டைகள் நனைந்து முளைக்கும் அபாயம் உள்ளது. மழை பெய்யும் காலம் என்பதால் நெல்லை சேமிக்க கிடங்குகள் அமைக்க வேண்டும்.</p><p>தமிழகத்தில் பெய்யும் மழைநீரை சேமித்து தன்னிறைவு பெற்றவர்களாக நாம் இருக்க வேண்டும். இப்பொழுது மழைக்காலமாக இருப்பதால் அனைத்து ஏரிகளையும் தூர்வாறி, மழைநீரை சேமிக்க வேண்டும்.</p><h3><strong>ஏரிகளை தூர்வார கோரிக்கை</strong></h3><p>நீருக்காக யாரிடமும் கையேந்தாத நிலைக்கு தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும்.</p><p>விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி இல்லை என்பது ஏமாற்றமாக உள்ளது.</p><p>காவிரி நமது உரிமை, மேகதாதுவில் அணை கட்டக்கூடாது, இதற்காக நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.</p><p>மேகதாது, காவிரி விவகாரத்தில் இரு மாநில முதல்வர்கள் சந்தித்து பேசினால் என்ன?</p><p>காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா செல்ல முதல்வர் விஜய் முடிவெடுத்தது சரிதான். டி.கே.சிவக்குமாரும், விஜயும் இருமாநிலத்தின் புதிய முதல்வர்கள், பேசினால் என்ன? ஏன் தடுக்கிறீர்கள்?</p><h3><strong>முதல்வரின் பின்னால் தமிழகம் நிற்கிறது</strong></h3><p>முதல்வர் கர்நாடகா செல்லும்போது அவமரியாதை ஏற்பட்டால் என்ன செய்வது என்கிறார்கள், அப்படி நடக்க நாங்கள் விட மாட்டோம்.</p><p>முதலமைச்சர் விஜய்க்கு ஒரு தலைகுனிவு ஏற்பட்டால் தமிழக மக்கள் நாங்கள் சும்மா இருப்போமா?</p><p>விருகம்பாக்கம் பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடை நீண்ட காலமாக மூடாமல் உள்ளது, அதை அமைச்சர்கள் தலையிட்டு மூடுவதற்கான நடவடிகையில் ஈடுபட வேண்டும்” என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>விவாகரத்து மனுவை திரும்பப் பெற்றார் முதலமைச்சர் மனைவி சங்கீதா!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-ministers-wife-sangeetha-has-withdrawn-the-divorce-petition</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-ministers-wife-sangeetha-has-withdrawn-the-divorce-petition#comments</comments><guid isPermaLink="false">fdba5a8f-9480-407b-8876-6d3e95757805</guid><pubDate>Fri, 07 Aug 2026 10:09:55 +0000</pubDate><atom:updated>2026-08-07T10:09:55.251Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Divorce,விவாகரத்து,Sangeetha,சங்கீதா,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/x77xwnvh/New-Project-2026-08-07T153934.643.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விவாகரத்து மனுவை திரும்பப் பெற்றார் முதலமைச்சர் மனைவி சங்கீதா!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/x77xwnvh/New-Project-2026-08-07T153934.643.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு எதிராக அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை திரும்பப் பெற்றுள்ளார். </p><p>மனு திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு முடித்து வைக்கப்படுவதாக செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றம் தெரிவித்துள்ளது. </p><p>இன்று இந்த விவாகரத்து வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் முதலமைச்சர் விஜய் தரப்பில் ஆஜராக விலக்கு கோரப்பட்டது. ஆனால் நீதிமன்றம், சட்டசபை கூட்டத்தொடர் முடிந்தபின்பு ஆஜராக கோரியிருந்தது. பின்னர் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.</p><p>இந்நிலையில் தற்போது மனுவை திரும்பப் பெற்றுள்ளார் சங்கீதா.</p><h2>விவாகரத்து </h2><p>நடிகர் விஜய் பிரபல மூன்று எழுத்து நடிகை ஒருவருடன் உறவில் இருப்பதாகவும், இதனால் தன்னை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் நீண்டநாட்களாக ஒதுக்கி வந்ததாகவும் குற்றம்சாட்டி அவரின் மனைவி சங்கீதா விவாகரத்துக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். </p><p>கடந்த 2021-ல் இருந்து இந்த பிரச்னை நிலவி வந்ததாகவும் தனது விவாகரத்து மனுவில் குறிப்பிட்டிருந்தார். இது தமிழ்நாடு அரசியல் மற்றும் சினிமாத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தனது மனுவை திரும்பப் பெற்றுள்ளார் சங்கீதா. </p>]]></content:encoded></item><item><title>‘காங்கிரஸ்தான் என்னை விலகுமாறு கேட்டுக்கொண்டது’ -  கர்நாடகா சட்டசபை மேலவைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த பசவராஜ் ஹொரட்டி!</title><link>https://www.maalaimalar.com/news/national/it-was-the-congress-that-asked-me-to-step-down-basavaraj-horatti-who-resigned-as-karnataka-legislative-council-chairman</link><comments>https://www.maalaimalar.com/news/national/it-was-the-congress-that-asked-me-to-step-down-basavaraj-horatti-who-resigned-as-karnataka-legislative-council-chairman#comments</comments><guid isPermaLink="false">d60d128d-a22a-4752-bd84-45ef5d9c4973</guid><pubDate>Fri, 07 Aug 2026 09:23:53 +0000</pubDate><atom:updated>2026-08-07T09:23:53.220Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,கர்நாடகா,Karnataka,Basavaraj Horatti,பசவராஜ் ஹொரட்டி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/6uw452rz/New-Project-2026-08-07T143703.962.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘என்னை ஏன் காங்கிரஸ் விலகச்சொன்னது எனத் தெரியவில்லை’ - சட்டசபைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த பசவராஜ் ஹொரட்டி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/6uw452rz/New-Project-2026-08-07T143703.962.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காங்கிரஸ் கட்சியின் வேண்டுகோளை ஏற்று, கர்நாடக சட்டசபை மேலவைத் தலைவர் பதவியை பசவராஜ் ஹொரட்டி ராஜினாமா செய்தார். இந்த ராஜினாமாவைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்.,</p><p>“ஆளும் கட்சி நான் பதவி விலக வேண்டும் என விரும்புகிறது. முதலமைச்சர் (டி.கே.சிவகுமார்) என்னிடம் தொலைபேசியில் இரண்டு முறை பேசினார். நேற்று, அவர் என்னை நேரில் சந்தித்து, நான் பதவி விலகுமாறு கூறும்படி கட்சியின் மேலிடம் தனக்கு உத்தரவிட்டதாகத் தெரிவித்தார். </p><p>நான் பதவி விலகாவிட்டால், எனக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவோம் என்றும் அவர் கூறினார்.” என தெரிவித்தார்.</p><p>தொடர்ந்து பேசிய அவர், தாம் ‘மரியாதையுடன்’ பதவி விலக விரும்புவதாகவும், ஆகஸ்ட் 14  அன்று ராஜினாமா செய்ய இருந்ததாகவும், இந்த நிகழ்வுகளால் தான் மிகுந்த வேதனை அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் சட்டசபை மேலவைத் தலைவரையும், சட்டமன்ற சபாநாயகரையும் தேர்ந்தெடுப்பது சபையின் தனிப்பட்ட உரிமை என்றும், கட்சியின் மேலவைத் தலைமையின் உரிமையல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார். </p>]]></content:encoded></item><item><title>மேகவெடிப்பால் கடும்பாதிப்பு: பிரதமர் மோடியை சந்தித்து நிவாரண தொகுப்பு கேட்பேன்- உமர் அப்துல்லா</title><link>https://www.maalaimalar.com/news/national/cm-omar-to-personally-take-flood-package-for-rajouri-poonch-with-pm-modi</link><comments>https://www.maalaimalar.com/news/national/cm-omar-to-personally-take-flood-package-for-rajouri-poonch-with-pm-modi#comments</comments><guid isPermaLink="false">6fe65dc1-f493-4274-abbd-bdd0083639cd</guid><pubDate>Fri, 07 Aug 2026 09:21:31 +0000</pubDate><atom:updated>2026-08-07T09:21:31.266Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜம்மு காஷ்மீர்,jammu kashmir,omar abdullah,உமர் அப்துல்லா,heavy rains,pm modi,பிரதமர் மோடி,கனமழை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/el0vcs0y/Omar0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உமர் அப்துல்லா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/el0vcs0y/Omar0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதோடு மேகவெடிப்பு (cloudbursts) ஏற்பட்டு நிலச்சரிவு ஏற்பட்டு பலத்த சேதம் ஏற்பட்டது. இதனால் பலர் உயிரிழந்தனர். வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.</p><p>இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் பாதிக்கப்பட்ட இடத்தை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார். பின்னர், சேதமதிப்புகளை மதிப்பிட்டு, சிறப்பு நிதி வழங்கும்படி பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன் என்று உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.</p><p>வெள்ள பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணம், மறுவாழ்வு மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தபின், செய்தியாளர்களை சந்தித்தார்.</p><h2>அப்போது உமர் அப்துல்லா கூறியதாவது:-</h2><p>சில விஷயங்களை நம்மால் சுயமாக சமாளிக்க முடியும் என்றாலும், சீரமைப்பு பணிகளுக்கான முழுச் செலவையும் ஏற்கும் நிதித்திறன் ஜம்மு காஷ்மீரிடம் இல்லை என்பதே யதார்த்தம். கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்திற்குப் பிறகு, ஜம்மு காஷ்மீருக்காக மத்திய அரசு சுமார் 1400 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத் தொகுப்பிற்கு ஒப்புதல் அளித்தது. இந்த முறையும், நாங்கள் ஒரு விரிவான திட்டத் தொகுப்பைத் தயாரித்து, மத்திய அரசின் உதவியைக் கோருவோம்.</p><h2>பிரதமரை நேரில் சென்று சந்திப்பேன்- உமர் அப்துல்லா</h2><p>வெள்ளம், திடீர் வெள்ளம் மற்றும் மேகவெடிப்பு ஆகியவை இயற்கை பேரிடர்களாகக் கருதப்படுகின்றன. எனவே, மத்திய அரசின் உதவியைக் கோருவதற்கு முன்னதாக இவை குறித்து தனியாக அறிவிப்பு ஏதும் வெளியிடத் தேவையில்லை. மறுசீரமைப்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்கு தேவையான நிதியுதவியைக் கோரும் வகையிலான முன்மொழிவு தயாரானதும், அதை நானே நேரில் சென்று பிரதமரிடம் சமர்ப்பிப்பேன்.</p><p>ஜூலை 19-ந்தேதி கனமழை ஏற்பட்டது நிவாரணம், மறுவாழ்வு மற்றும் சீரமைப்பு ஆகிய 3 வடிவுகளில் மீட்புப் பணி நடைபெற்றது. மனித உயிரிழப்புகளை குறைப்பதே எங்களின் முதல் முன்னுரிமையாக இருந்தது. இந்த மாவட்டத்தில் நான்கு விலைமதிப்பற்ற உயிர்கள் பலியானதை எண்ணி வருந்துகிறோம். மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர்கள் இரவோடு இரவாக உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால், உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருந்திருக்கக் கூடும்.</p><p>உயிரிழப்புகளை குறைப்பதே முதல் முன்னுரிமையாக இருந்தது. அதன்பிறகு, காணாமல் போனவர்களைத் தேடிக் கண்டறிவதன் மூலம் அவர்களை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்தப்பட்டது. தற்போது நாங்கள் மறுவாழ்வு மற்றும் மறுகட்டமைப்புப் பணிக்கான கட்டத்தில் அடியெடுத்து வைக்கிறோம். இக்கட்டத்தில், தற்காலிக மற்றும் நிரந்தர நடவடிக்கைகள் மூலம் சேதமடைந்த உள்கட்டமைப்புகளும் வாழ்வாதாரங்களும் சீரமைக்கப்படும்.</p><h2>SDRF நிவாரணத் தொகையை உயர்த்த முடிவு</h2><p>தற்போதைய SDRF இழப்பீட்டு விகிதங்கள் ஏழு முதல் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்டவை. அதன்பிறகு, பணவீக்கம் மற்றும் கட்டுமானச் செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளன. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மிகவும் யதார்த்தமான இழப்பீடு கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், SDRF நிவாரணத் தொகையை உயர்த்த நாங்கள் முடிவு செய்துள்ளோம்.</p><p>இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் ஊழல் தொடர்பான விவாதம்: சட்டசபையில் உதயநிதி-ஆதவ் அர்ஜூனா காரசார விவாதம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/aadav-arjuna-and-udhayanidhi-stalin-argument-in-tn-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/aadav-arjuna-and-udhayanidhi-stalin-argument-in-tn-assembly#comments</comments><guid isPermaLink="false">70ebe264-0499-4cde-aa84-b6f1f30028b8</guid><pubDate>Fri, 07 Aug 2026 08:54:49 +0000</pubDate><atom:updated>2026-08-07T08:54:49.395Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Udhayanidhi Stalin,உதயநிதி ஸ்டாலின்,ஆதவ் அர்ஜூனா,தமிழக சட்டசபை,Aadhav Arjuna,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/27bw2f5v/arjuna.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ aadav arjuna, udhayanidhi stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/27bw2f5v/arjuna.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் இன்று டாஸ்மாக் ஊழல் தொடர்பான விவாதம் நடைபெற்றது.</p><h2>டாஸ்மாக் ஊழல் தொடர்பான விவாதம்</h2><p>அமைச்சர் விக்னேஷ், டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு கூடுதல் பணம் வசூலிப்பது பற்றி விளக்கம் அளித்தார். </p><p>மேலும், த.வெ.க. ஆட்சியில் மூடப்பட்ட 717 கடைகளின் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் ஆர்டர் செய்தால் மதுபானம் வீட்டிற்கு டெலிவரி செய்யப்படும் என்பது தவறான தகவல். டாஸ்மாக் கடைகளுக்கு பணம் செல்லாமல் நேரடியாக நிர்வாகத்திற்கு பணம் செல்லும் வகையில் ஆன்லைன் ஆர்டர். ஆன்லைனில் மது புக்கிங் செய்யப்படுவது மட்டுமே நடக்கும். ஆன்லைனில் ஆர்டர  செய்தாலும் டாஸ்மாக் கடைக்குச் சென்றுதான் மதுபானங்களை வாங்க முடியும். மதுவினால் வரும் வருமானத்தை உயர்த்துவோம் என தவெக கூறாது என தெரிவித்தார்.</p><p>இடையில் பேசிய அமைச்சர் அருண்ராஜ், டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை நீண்ட அறிக்கையை கொடுத்துள்ளது என தெரிவித்தார்.</p><h2>ஆதவ் அர்ஜூனா-உதயநிதி விவாதம்</h2><p>அப்போது பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, திமுகவின் பொருளாளர் சாராய ஆலை நடத்துகிறாரா? இல்லையா?</p><p>லாட்டரி நிறுவனத்தில் ரூ.900 கோடி திமுகவினர் வாங்கியது குறித்து உதயநிதி சொல்வாரா? என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.</p><p>அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, திமுக நிதி வாங்கியது தொடர்பாக அவரது மாமனாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.</p><p>லாட்டரி நிறுவனத்தில் விற்றது யார் என ஆதவின் மாமனாருக்கு தான் தெரியும், அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளட்டும் என பதில் அளித்தார்.</p><p>ரூ.900 கோடி வாங்கியது உதயநிதியின் அப்பாவுக்கு நன்றாக தெரியும். அவர் இங்கு இல்லை. அவரிடம் கேட்கச் சொல்லுங்கள் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார். இந்த காரசார விவாதத்தால் அவையில் சிறிது கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.</p><p>அதன்பின் பேசிய திமுக கொறடா எ.வ.வேலு, தொழிலதிபர் மார்ட்டின் ரூ.900 கோடி கொடுத்தது குறித்து பேரவையில் பேசுவது சரியாக இருக்காது. தொழில் என்ற அடிப்படையில் முறையாக அரசிடம் அனுமதி பெற்றுதான் திமுகவினர் மது ஆலை நடத்துகின்றனர். தேர்தல் நேரத்தில் அரசியல் இயக்கங்களுக்கு தொழிலதிபர்கள் நன்கொடை அளிப்பது இயல்பு என கூறினார்.</p><p>அவையில் இல்லாத அப்பா, மாமனார் என பேசுவதை அவைக்குறிப்பிலிருந்து நீக்குமாறு நேரு சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார்.</p>]]></content:encoded></item><item><title>எங்கள் திட்டங்களுக்கு தவெக அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது: அதிமுக குற்றச்சாட்டுக்கு அமைச்சர்கள் பதில்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/aiadmk-accuses-dmk-of-sticker-politics-on-welfare-schemes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/aiadmk-accuses-dmk-of-sticker-politics-on-welfare-schemes#comments</comments><guid isPermaLink="false">08d6e277-52dd-42f5-8051-b57a829caf7f</guid><pubDate>Fri, 07 Aug 2026 08:30:58 +0000</pubDate><atom:updated>2026-08-07T08:30:58.326Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அம்மா உணவகம்,தமிழக சட்டப்பேரவை,Amma Unavagam,Agri Krishnamoorthy,அக்ரி கிருஷ்ணமூர்த்தி,tamilnadu legislative assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/sbk9zfs0/Untitled-design-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அதிமுக திட்டங்களுக்கு தவெக அரசு ஸ்டிக்கர்: நலத்திட்டங்கள் மீதான குற்றச்சாட்டு சட்டப்பேரவையில் விவாதம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ Agri krishnamoorthy ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/sbk9zfs0/Untitled-design-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தவெக தேர்தல் அறிவிப்பில் கூறியபடி, விவசாயிகளின் முழு பயிர் கடனும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று அதிமுக எம்.எல்.ஏ அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தினார். </p><h3><strong>தவெக தேர்தல் வாக்குறுதி</strong></h3><p>தமிழக சட்டபேரவையில் பட்ஜெட் மீது நடைபெற்ற விவாதத்தில் அதிமுக எம்.எல்.ஏ அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி உரையாற்றினார்.</p><p>அப்போது அவர், "நிதி பற்றாக்குறைகளை மட்டுமே காரணம் காட்டி, தமிழ்நாட்டு மக்களுக்கான திட்டங்களை நிறுத்தக்கூடாது.</p><p>தமிழ்நாடு அரசின் நிதிநிலையை கருத்தில் கொண்டு தான், தவெக அரசு தேர்தல் அறிக்கையை அறிவித்திருக்கும். அதில் வாக்குகள் வரவேண்டும் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு, தவெக அரசால் செயல்படுத்த முடியாத பல வாக்குறுதிகளை கொடுத்து, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி விட்டார்கள். </p><p>நிதிநிலை அறிக்கையில் புதிய வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கான எந்தவித அறிவிப்பும் இல்லை.</p><p>அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட மழை நீர் சேகரிப்பு திட்டம், குடிமராமத்து திட்டம், அத்திக்கடவு அவினாசி திட்டம் போன்ற பல்வேறு பாசன திட்டங்கள் அதிமுக ஆட்சியின் காலத்தில்தான் அறிமுகம் செய்யப்பட்டன.</p><p>அதிமுக ஆட்சி காலம் விவசாயிகளின் பொற்காலமாக போற்றப்பட்டது.</p><p>முழு கடன் தள்ளுபடி கிடைக்கும் என எதிர்பார்த்த சிறு குறு விவசாயிகள் இன்று கடனை செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.</p><h3><strong>அதிமுக நலத்திட்டங்கள் மீது ஸ்டிக்கர்</strong></h3><p>எனவே தேர்தல் அறிவிப்பில் கூறியபடி, முழுக்கடனையும் தள்ளுபடி செய்யுங்கள் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.</p><p>அதிமுக கொண்டு வந்த பல்வேறு நலத்திட்டங்களை, இந்த அரசு ஸ்டிக்கர் ஒட்டி மீண்டும் தமிழகத்திலே அறிவித்துள்ளது" என்று கூறினார்.</p><p><strong>அமைச்சர் நிர்மல்குமார் பதில்</strong></p><p>இந்த கருத்துக்கு பதில் அளித்த தமிழக அரசின் எரிசக்தி வளங்கள் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், “பல திட்டங்கள் கடந்த 60 முதல் 70 ஆண்டுகளாக இருந்து வருவதுதான்... ஆனால் பெரும்பாலான திட்டங்கள் கடந்த ஆட்சி காலத்தில் நிறுத்தப்பட்டன.</p><p>தற்போது தவெக ஆட்சிக்கு வந்த பிறகு, புது செயல்வடிவம் கொடுக்கப்பட்டு அது செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.</p><h3><strong>அம்மா உணவகம்</strong></h3><p>இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “தவெக ஆட்சியில் திமுக மற்றும் அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட நல்ல திட்டங்களை வரவேற்று, அதனை மேம்படுத்தி வருகிறோம்.</p><p>அம்மா உணவகம் சரியாக செயல்படாமல் இருந்தது. அதன் பெயர் எதையும் மாற்றாமல், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது” என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>நீரிழிவு நோயாளிகளே கவனம்! காலில் வரும் இந்த அறிகுறிகளை தவறவிடாதீர்கள்!</title><link>https://www.maalaimalar.com/health/generalmedicine/diabetic-foot-ulcer-warning-signs-to-never-ignore</link><comments>https://www.maalaimalar.com/health/generalmedicine/diabetic-foot-ulcer-warning-signs-to-never-ignore#comments</comments><guid isPermaLink="false">4f3a934d-2333-46b0-98d0-b6fca7045e43</guid><pubDate>Fri, 07 Aug 2026 08:30:00 +0000</pubDate><atom:updated>2026-08-07T08:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Health,ஆரோக்கியம்,HealthTips,diabetics,நீரிழிவு நோயாளிகள்,உடல்நலம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/c3je1gz3/diabetic.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Diabetics ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/c3je1gz3/diabetic.jpg?w=280" width="280"></media:thumbnail><category>பொது மருத்துவம் (General Medicine)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீரிழிவு நோய் உலகம் முழுவதும் அதிகரித்து வரும் முக்கியமான நாள்பட்ட நோய்களில் ஒன்றாகும். இந்த நோய் உடலில் ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், பல்வேறு உடல் உறுப்புகளையும் பாதிக்கும். குறிப்பாக, நீரிழிவு நோயாளிகளுக்கு கால்களில் ஏற்படும் புண்கள் மிகவும் கவலைக்கிடமான பிரச்சனையாகும். ஆரம்ப நிலையிலேயே சரியான சிகிச்சை பெறாவிட்டால், இந்தப் புண்கள் தீவிர தொற்றாக மாறி, சில நேரங்களில் அறுவை சிகிச்சை அல்லது உறுப்பு அகற்றும் நிலைக்குக் கூட வழிவகுக்கலாம்.</p><h2><strong>புண்கள் வர காரணம்</strong></h2><p>நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு தொடர்ந்து அதிகமாக இருப்பதால், நரம்புகள் மற்றும் ரத்த நாளங்கள் பாதிக்கப்படுகின்றன. இதன் காரணமாக கால்களில் உணர்வு குறைகிறது. சிறிய காயம், கல் குத்துதல், காலணியால் ஏற்படும் உராய்வு அல்லது தீக்காயம் போன்றவை ஏற்பட்டாலும் வலி தெரியாமல் போகலாம். மேலும், ரத்த ஓட்டம் குறைவதால் காயங்கள் விரைவாக ஆறாமல் நீண்ட நாட்கள் புண்களாகவே நீடிக்கின்றன. அதிக ரத்தச் சர்க்கரை காரணமாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைவதால், புண்களில் தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.</p><h2><strong>அறிகுறிகள்</strong></h2><p>நீரிழிவு நோயினால் ஏற்படும் புண்கள் பெரும்பாலும் பாதத்தின் அடிப்பகுதி, விரல்களின் இடைவெளி, குதிகால் மற்றும் விரல் நுனிப் பகுதிகளில் காணப்படுகின்றன. ஆரம்பத்தில் சிறிய சிவப்பு நிறத் தழும்பு அல்லது கொப்புளமாகத் தோன்றும் காயம், கவனிக்கப்படாமல் விட்டால் ஆழமான புண்ணாக மாறக்கூடும். சிலருக்கு புண்ணில் இருந்து சீழ் வெளியேறுதல், துர்நாற்றம், வீக்கம், தோல் நிறம் மாறுதல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம். இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.</p><h2><strong>கால்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்</strong></h2><p>நீரிழிவு நோயால் ஏற்படும் புண்களைத் தடுப்பதற்கு கால்களின் பராமரிப்பு மிகவும் முக்கியமானது. தினமும் கால்களை நன்றாகக் கழுவி உலர்த்த வேண்டும். பாதங்களில் காயம், வெடிப்பு, சிவத்தல் அல்லது வீக்கம் உள்ளதா என்பதை தினமும் கவனிக்க வேண்டும். </p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/9wk4jrtv/feet.jpg" /></figure><p>காலணியின்றி நடப்பதைத் தவிர்க்க வேண்டும். கால்களுக்கு சரியான அளவில் பொருந்தக்கூடிய மென்மையான காலணிகளை அணிவது அவசியம். நகங்களை கவனமாக வெட்ட வேண்டும். சிறிய காயம் ஏற்பட்டாலும் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும்.</p><h2>எ<strong>வ்வாறு கட்டுப்படுத்த வேண்டும்</strong></h2><p>நீரிழிவு நோயாளிகள் ரத்தச் சர்க்கரை அளவை மருத்துவரின் ஆலோசனைப்படி கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிகவும் அவசியம். சத்தான உணவுமுறை, தினசரி உடற்பயிற்சி, போதுமான தண்ணீர் அருந்துதல், புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற பழக்கங்களைத் தவிர்ப்பது ஆகியவை புண்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன. மேலும், கால்களை பரிசோதிப்பதற்காக குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்திப்பதும் முக்கியமானதாகும்.</p><h2><strong>சிகிச்சை முறைகள்</strong> </h2><p>நீரிழிவு நோயினால் ஏற்படும் புண்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது, புண்ணை சுத்தமாக வைத்தல், தொற்றைக் கட்டுப்படுத்த தேவையான மருந்துகளைப் பயன்படுத்துதல், இறந்த திசுக்களை அகற்றுதல் மற்றும் தேவையான கட்டுப்போடுதல் போன்ற சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. சில நேரங்களில் தீவிர தொற்று இருந்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறப்பு சிகிச்சையும் தேவைப்படலாம்.</p><h2><strong>விழிப்புணர்வு அவசியம்</strong></h2><p>நீரிழிவு நோயால் ஏற்படும் புண்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு முக்கிய உடல்நலப் பிரச்சனையாக இருந்தாலும், சரியான முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு மூலம் அவற்றை பெரும்பாலும் தடுக்க முடியும். </p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/vmc6l51r/kk.jpg" /></figure><p>ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, கால்களின் ஆரோக்கியத்தை தினமும் கவனிப்பது மற்றும் சிறிய காயங்களைக் கூட அலட்சியப்படுத்தாமல் உடனடியாக சிகிச்சை பெறுவது ஆகியவை நீரிழிவு நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதோடு, தீவிர சிக்கல்களிலிருந்தும் பாதுகாக்கும்.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-sangeetha-divorce-case-adjourned-again-video-appearance-next-hearing-deferred-without-date</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-sangeetha-divorce-case-adjourned-again-video-appearance-next-hearing-deferred-without-date#comments</comments><guid isPermaLink="false">66c69cfc-3fca-4542-93c7-1518275cc591</guid><pubDate>Fri, 07 Aug 2026 08:17:01 +0000</pubDate><atom:updated>2026-08-07T08:17:01.306Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Divorce,விவாகரத்து,Sangeetha,சங்கீதா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/1sliqrne/tn-44.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விஜய் - சங்கீதா]]></media:title><media:description type="html"><![CDATA[ விஜய் - சங்கீதா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/1sliqrne/tn-44.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-row-tamil-nadu-cm-ready-to-face-humiliation-for-bengaluru-talks-with-karnataka">முதல்வர் விஜய்</a><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-and-sangeetha-divorce-case-hearing-today"> </a>மற்றும் அவரது மனைவியின் விவாகரத்து வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. </p><h2>விவாகரத்து</h2><p>த.வெ.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டநிலையில், சங்கீதா விவாகரத்து கோரி கடந்த ஆண்டு டிசம்பரில் செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.</p><p>சங்கீதா தாக்கல் செய்த மனுவில், கணவர் விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். மேலும், ஜீவனாம்சம் மற்றும் நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வசிப்பதற்கான உரிமையும் வழங்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.</p><p>இந்த மனு கடந்த பிப்​ர​வரி 26-ந்தேதி விசா​ரணைக்கு வந்​த​போது, செங்​கல்​பட்டு முதலா​வது குடும்ப நல நீதி​மன்​றத்​துக்கு மாற்றப்பட்டது. அங்கு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.</p> <h2>நீதிபதி விசாரணை</h2><p>இந்த வழக்கு விசாரணை கடந்த ஜூன் மாதம் 15-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, சங்கீதா தரப்பு வக்கீலிடம் நீங்கள் ஏன்? வக்காலத்து தாக்கல் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினார்.</p><p>மேலும் முதலமைச்சர் விஜய் மற்றும் சங்கீதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வீடியோ கான்பரன்ஸ் மனுவில் மெயில் ஐ.டி. ஏன் குறிப்பிடவில்லை எனவும், விவாகரத்து கேட்டுள்ள இருவரையும் சமரச மையத்துக்குதான் அனுப்ப வேண்டும் என்று கூறி வழக்கை ஆகஸ்டு 7ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.</p> <h2>இன்றைய விசாரணை</h2><p>அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்றிருந்ததால், இந்த வழக்கில் அவர் நேரில் ஆஜராக முடியவில்லை என்று அவரது தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.</p><p>அதேவேளையில், லண்டனில் இருக்கும் சங்கீதா, வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகினார். இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிமன்றம், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டது.</p>]]></content:encoded></item><item><title>கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: அஷ்மிதா சலிஹா, ரக்ஷிதா ராம்ராஜ் அரையிறுதிக்கு முன்னேற்றம்</title><link>https://www.maalaimalar.com/sports/ashmita-chaliha-rakshita-ramraj-enter-sf-in-korea-mastesr-badminton</link><comments>https://www.maalaimalar.com/sports/ashmita-chaliha-rakshita-ramraj-enter-sf-in-korea-mastesr-badminton#comments</comments><guid isPermaLink="false">f8c59ae8-b1b0-4ba0-b965-15b2b2f52215</guid><pubDate>Fri, 07 Aug 2026 08:13:12 +0000</pubDate><atom:updated>2026-08-07T08:13:12.040Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ashmita chaliha,அஷ்மிதா சலிஹா,korea masters badminton,கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/qxx2w8cx/ashmita.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ashmita chaliha]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/qxx2w8cx/ashmita.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கொரியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் தொடர் கொரியாவில் நடந்து வருகிறது.</p><p>இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை தன்வி ஷர்மா, சக நாட்டு வீராங்கனையான ரக்‌ஷிதா ராம்ராஜ் உடன் மோதினார்.</p><p>இதில் சிறப்பாக ஆடிய தன்வி ஷர்மா முதல் செட்டை 21-18 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட ரக்‌ஷிதா ராம்ராஜ் அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 21-19, 21-18 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.</p><p>மற்றொரு போட்டியில் இந்தியாவின் அஷ்மிதா சலிஹா 20-22, 21-15, 21-19 என்ற செட் கணக்கில் ஜப்பானின் ஹீனா அகாச்சியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.</p><p>நாளை நடைபெற உள்ள அரையிறுதியில் ரக்‌ஷிதா ராம்ராஜ், சக நாட்டு வீராங்கனையான அஷ்மிதா சலிஹா உடன் மோதுகிறார்.</p><p>ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், ரவுனக் சவுகான், கிரண் ஜார்ஜ், மிதுன் மஞ்சுநாத், சனீத் தயானந்த், தருண் மன்னேபள்ளி ஆகியோரும் முதல் சுற்றிலேயே தோல்வியைத் தழுவினர்.</p>]]></content:encoded></item><item><title>ஸ்டிக்கர் ஒட்டும் அரசு.. அக்ரி கிரிஷ்ணமூர்த்தியால் அவையில் வெடித்த விவாதம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/opposition-slams-dmk-budget-aiadmk-alleges-broken-promises-and-neglect-of-farmers</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/opposition-slams-dmk-budget-aiadmk-alleges-broken-promises-and-neglect-of-farmers#comments</comments><guid isPermaLink="false">b81895c1-c737-49dc-ac48-cdeca27c8c9b</guid><pubDate>Fri, 07 Aug 2026 08:01:12 +0000</pubDate><atom:updated>2026-08-07T08:01:12.132Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பெயர் மாற்றம்,அம்மா உணவகம்,Amma Unavagam,அக்ரி கிருஷ்ணமூர்த்தி,Agri Krishnamurthy</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/o6r24xar/tn-43.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அக்ரி கிரிஷ்ணமூர்த்தி]]></media:title><media:description type="html"><![CDATA[ அக்ரி கிரிஷ்ணமூர்த்தி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/o6r24xar/tn-43.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தவெக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று முன் தினம் பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் தொடர்ந்து நேற்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். அதன் தொடர்ச்சியாக இன்று<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-debate-dmk-and-thaveg-mlas-clash-over-debt-burden-and-inadequate-allocations"> பட்ஜெட் மீதான விவாதம் </a>நடைபெற்று வருகிறது.</p><h2>அக்ரி கிருஷ்ணமூர்த்தி</h2><p>இதில் அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது, </p><p>"மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் பட்ஜெட்டாக இல்லை. நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி மக்கள் நலத்திட்டங்களை நிறுத்த கூடாது.</p><p>மக்களின் கவனக்குறைவால் ஆட்சி பீடத்தில் தவெக அரசு உள்ளது. நிதி பற்றாக்குறை இருப்பது தெரிந்து தான் வாக்குறுதி அளித்தீர்கள்.</p><p>நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து தவெக மக்களை ஏமாற்றி உள்ளது.  வேளாண் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.  </p><p>சிறுகுறு விவசாயிகள் கடனை கட்டமுடியாமல் தவித்து வருகின்றனர். சிறுகுறு விவசாயிகளிடம் பாகுபாடு செய்வது ஏற்புடையதல்ல. விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.</p><h2>ஸ்டிக்கர்</h2><p>அம்மா மற்றும் எடப்படியார் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட எண்ணற்ற திட்டங்களுக்கு இந்த ஆட்சியில் வெற்றி திட்டம் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகிறது.</p><p>மாற்றம் மாற்றம் என்றீர்கள். இதுதான் மாற்றமா? பள்ளி கல்வித்துறைக்கு நிதி குறைக்கப்பட்டுள்ளது, </p><p>அம்மா ஆட்சியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மிதிவண்டிகள் திட்டம், நவீன பிராண்டட் மிதிவண்டிகள் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. </p><p>எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் தொடர்ந்து வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினி திட்டத்திற்கு வெற்றி மடிக்கணினி திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் வழங்கப்பட்ட மகளிர்களுக்கான விலையில்லா ஆடுகள் வழங்கிய திட்டத்திற்கு வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டம் என மாற்றப்பட்டுள்ளது" என கூறினார். </p><p>அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், ஸ்டிக்கர் என்ற வார்த்தை அவைகுறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவித்தார். </p><h2>ஆதவ் அர்ஜுனா</h2><p>இதன்பின் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "எங்கள் ஆட்சியில் நல்ல திட்டங்களை வரவேற்று அதை அப்படியே செயல்படுத்தி உள்ளோம். அம்மா உணவகத்தைப் பெயர் மாற்றாமல் அப்படியே வைத்துள்ளோம். </p><p>நிதி ஒதுக்கி இன்று ஒவ்வொரு தெருவிலும் அம்மா உணவகம் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. </p><p>கடந்த 5 ஆண்டுகளில் அது எப்படி நடந்தது என்பது உங்களுக்கு தெரியும் " என்றார். </p><h2>கே.என்.நேரு</h2><p>இதற்கு பதிலளித்த திமுக எம்எல்ஏ கே. நெஹ்ரு, "அம்மா உணவகத்தித்கு கடந்த ஆட்சி எவ்வளவு செலவு செய்துள்ளோம் என கணக்கு பார்த்தால் தெரியும். மாவட்ட வாரியாக கணக்குகள் உள்ளன. பேரிடர் காலத்தில் பயன்படுத்தப்பட்டது." என்றார். </p><h2>இபிஎஸ்</h2><p>இதன்பின் வேலுமணி, இபிஎஸ் ஆட்சியில் அம்மா உணவகத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டதாகவும், கடந்த திமுக ஆட்சியில் அம்மா உணவகம் சிறப்பாக செயல்படவில்லை என கூறினார். </p><p>அப்போது, அவர் தவறான தகவலை கூறுவதாகவும், அம்மா உணவகத்திற்கான நிதி நகராட்சிகளில் இருந்து தான் செல்கிறது, தனியே நிதி ஒதுக்கப்படுவதில்லை என தெரிவித்தார். </p><p>விவாதம் தொடர, இபிஎஸ் எழுந்து, பழைய திட்டங்களுக்கு பெயர் மாற்றுவதால் தான் இந்த பிரச்சனையே வருகிறது" என்று சுருக்கமாக கூறி முடித்தார். </p><p>இதற்கு பதில் சொன்ன அமைச்சர் செங்கோட்டையன், கடந்த ஆட்சிகளிலும் பெயர் மாற்றங்கள் பரவலாக நிகழ்ந்துள்ளன என கூறினார். </p>]]></content:encoded></item></channel></rss>