<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 08 Aug 2026 05:54:58 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 8 ஆகஸ்ட் 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-8-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-8-august-2026#comments</comments><guid isPermaLink="false">b54f04e3-e267-4cba-9339-bc533284a1e5</guid><pubDate>Sat, 08 Aug 2026 04:51:00 +0000</pubDate><atom:updated>2026-08-08T05:53:41.613Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/272sbpdk/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live News]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/272sbpdk/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/us-senate-approves-100-percent-tariff-on-russian-oil-buyers-what-it-means-for-india">ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 100% வரி: அமெரிக்க செனட் சபை மசோதா ஒப்புதல்-இந்தியாவிற்குப் பெரும் சவாலா?... </a></p><p>*ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 100 சதவீத வரி விதிக்கும் அதிகாரம் அளிக்கும் புதிய தடைகள் மசோதாவிற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. </p><p>*உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து இந்தியா மலிவு விலையில் ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/people-are-watching-those-who-boycott-mps-meeting-manickam-thakur" rel="nofollow">எம்பிக்கள் கூட்டத்தை புறக்கணிப்பவர்களை மக்கள் கவனிக்கின்றனர்- மாணிக்கம் தாகூர்</a></p><p>* தவெக அரசு நடத்தும் அரசியல் நாடகத்தில் திமுக பங்கேற்காது என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.</p><p>* சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-8-8-2026">GOLD PRICE TODAY: தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம்: நகை வாங்குவோர் கலக்கம்!</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.13,965-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/death-threat-audio-targeting-mla-zeeshan-siddique-goes-viral" rel="nofollow">உனது தந்தைக்கு அடுத்து நீதான்.. ஜீஷான் சித்திக் எம்எல்ஏவுக்கு கொலை மிரட்டல்</a></p><p>*  மிரட்டல் விடுக்கப்பட்ட அந்த ஆடியோ பதிவின் உண்மைத்தன்மை என்ன? </p><p>* கொலை மிரட்டல் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/amit-shah-visit-tn-today">2 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார் அமித்ஷா</a></p><p>* அமித்ஷா மகாராஷ்டிர மாநில நிகழ்ச்சிகளை இன்று முடித்தபின் அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வருகிறார்.</p><p>* அமித்ஷா திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு கார் மூலம் சாலை மார்க்கமாக புதுச்சேரி செல்கிறார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/constituency-delimitation-issue-thirumavalavan-calls-upon-dmk-and-admk">தொகுதி மறுவரையறை விவகாரம்: திமுக, அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு</a></p><p>* தமிழக எம்.பி.க்களுடன் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.</p><p>* மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் சாய்குமார் தனித்தனியாக கடிதம் அனுப்பியுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 100% வரி: அமெரிக்க செனட் சபை மசோதா ஒப்புதல்-இந்தியாவிற்குப் பெரும் சவாலா?</title><link>https://www.maalaimalar.com/news/world/us-senate-approves-100-percent-tariff-on-russian-oil-buyers-what-it-means-for-india</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-senate-approves-100-percent-tariff-on-russian-oil-buyers-what-it-means-for-india#comments</comments><guid isPermaLink="false">321c4453-1924-4e6b-84c8-b5bcfc55e768</guid><pubDate>Sat, 08 Aug 2026 05:51:26 +0000</pubDate><atom:updated>2026-08-08T05:51:26.216Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,Russia,trump,ரஷ்யா,டொனால்ட் டிரம்ப்,US Senate,அமெரிக்க செனட் சபை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/iav4t1sw/trump.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TRUMP]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/iav4t1sw/trump.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 100 சதவீத வரி விதிக்கும் அதிகாரம் அளிக்கும் புதிய தடைகள் மசோதாவிற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதாவுக்கு லிண்ட்சே ஓ.கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026 எனப் பெயரிடப்பட்டுள்ளது. செனட் சபையில் 86-11 என்ற வாக்கு வித்தியாசத்தில் இது நிறைவேறியுள்ளது.</p><h2>பா<strong>திக்கப்படும் நாடுகள்</strong></h2><p>ரஷ்யாவின் ஆற்றல் வளங்களை அதிகம் வாங்கும் முதன்மை 5 நாடுகளை இலக்காகக் கொண்டு இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா, சீனா, அஜர்பைஜான், ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. உக்ரைன் மீதான போரை நிறுத்துவதற்கும், ரஷ்யாவிற்கான நிதி ஆதாரங்களை முடக்குவதற்கும், இந்த நாடுகளின் ஏற்றுமதி பொருட்கள் மீது 100% வரை வரிகளை விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிற்கு இம்மசோதா முழு அதிகாரம் அளிக்கிறது.</p><h2><strong>ஈரான் தடைகள் நீட்டிப்பு</strong></h2><p>ரஷ்யா மீதான கட்டுப்பாடுகளுடன் சேர்த்து, 1996-ஆம் ஆண்டின் ஈரான் தடைகள் சட்டத்தையும் 2031 வரை நீட்டிக்க இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.</p><h2><strong>இந்தியாவிற்கு</strong> ஏற்படும் பாதிப்புகள்</h2><p>உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து இந்தியா மலிவு விலையில் ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது. அமெரிக்க செனட்டின் இந்த நடவடிக்கை இந்திய அமெரிக்க வர்த்தக உறவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.</p><h2><strong>ஏற்றுமதிச் செலவு உயர்வு</strong></h2><p>அமெரிக்காவிற்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு 100% வரி விதிக்கப்பட்டால், இந்தியப் பொருட்களின் விலை உயர்ந்து அமெரிக்கச் சந்தையில் கடும் போட்டி நிலவலைச் சந்திக்க நேரிடும்.</p><h2>அடுத்<strong>தகட்ட நடவடிக்கை</strong></h2><p>செனட் சபையில் ஒப்புதல் பெற்றுள்ள இம்மசோதா, பிரதிநிதிகள் சபையின் பரிசீலனைக்கு அனுப்பப்படும். அவர்கள் ஆகஸ்ட் 31 அன்று மீண்டும் கூடும்போது இந்த மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்பட்டால் குடியரசுத் தலைவரின் கையொப்பத்திற்கு அனுப்பப்படும்.</p>]]></content:encoded></item><item><title>எம்பிக்கள் கூட்டத்தை புறக்கணிப்பவர்களை மக்கள் கவனிக்கின்றனர்- மாணிக்கம் தாகூர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/people-are-watching-those-who-boycott-mps-meeting-manickam-thakur</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/people-are-watching-those-who-boycott-mps-meeting-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">df79da8f-d5a3-43f5-a71b-ec83de613c34</guid><pubDate>Sat, 08 Aug 2026 05:47:28 +0000</pubDate><atom:updated>2026-08-08T05:47:28.699Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN MPs,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore,தொகுதி மறுவரையறை,Delimitation,தமிழக எம்பிக்கள் கூட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/pbwf6wy9/Manickam-tgore.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Manickam tagore]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/pbwf6wy9/Manickam-tgore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>எம்பிக்கள் கூட்டத்தை புறக்கணிப்பவர்களை மக்கள் கவனிக்கின்றனர் என்றும் புறக்கணித்தவர்களை நினைவில் கொள்வர் என்றும் காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழக நலன்களை விடத் தங்கள் அரசியலுக்கு முன்னுரிமை அளிப்பவர்கள் கலந்துகொள்ளாமல் இருக்கலாம்.</p><p>ஆனால், தமிழகத்திற்கு முதலிடமும், அரசியலுக்கு இரண்டாமிடமும் கொடுப்பவர்கள், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் கூட்டப்பட்டுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள்.</p><p>இது கட்சி அரசியல் பற்றியது அல்ல.</p><p>இது தமிழகத்தின் உரிமைகள், நலன்கள் மற்றும் எதிர்காலம் பற்றியது.</p><p>தமிழக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தேவைப்பட்ட நேரத்தில் தமிழகத்துடன் நின்றவர்கள் யார் என்பதை அவர்கள் நினைவில் கொள்வார்கள்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>தொகுதி மறுவரையறை</h2><p>மத்திய பா.ஜ.க. அரசு தொகுதி மறுவரையறை மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டி நிறைவேற்ற ஆலோசித்து வருகிறது. இதனால் தென்மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் நிலவுகிறது. </p><p>இந்த விவகாரம் குறித்து ஆலோசித்து உரிய முடிவெடுக்கத் தமிழக எம்.பி.க்களுடன் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.</p><h2>முதலமைச்சர் விஜய்</h2><p>தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான எம்.பி.க்கள் கூட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக எம்பிக்கள் பங்கேற்கின்றன. திமுக, அதிமுக புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.</p><p>இதையடுத்து திமுக, அதிமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்குமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்து இருந்தார்.</p><h2>திமுக - அதிமுக</h2><p>இந்நிலையில் தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான எம்.பி.க்கள் கூட்டத்தை அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. அதிமுகவை சேர்ந்த எம்.பி.க்கள் இன்பதுரை, தம்பிதுரை, தனபால், தர்மர் ஆகிய 4 பேரும் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தவெக அரசு நடத்தும் அரசியல் நாடகத்தில் திமுக பங்கேற்காது என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.</p><p>மாநிலங்களவை எம்.பி.யும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன், தேமுதிகவை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. சுதீஷூம் பங்கேற்க மாட்டார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Those who place their politics above Tamil Nadu’s interests may choose not to attend.<br><br>But those who put Tamil Nadu first, and politics second, will attend the all-party meeting called by the Hon’ble <a href="https://x.com/CMOTamilnadu?ref_src=twsrc%5Etfw">@CMOTamilnadu</a> .<br><br>This is not about party politics. <br>It is about Tamil Nadu’s…</p>&mdash; Manickam Tagore .Bமாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) <a href="https://x.com/manickamtagore/status/2085946567107002548?ref_src=twsrc%5Etfw">August 8, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>எம்பிக்கள் கூட்டம்: காவிரி பிரச்சனையை திசைத்திருப்ப த.வெ.க. அரசு நடத்தும் நாடகம் - கனிமொழி
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-constituency-delimitation-mps-meeting-tvk-government-drama-divert-attention-from-cauvery-issue</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-constituency-delimitation-mps-meeting-tvk-government-drama-divert-attention-from-cauvery-issue#comments</comments><guid isPermaLink="false">b3991184-e57c-42b5-ace5-74540c0b0c80</guid><pubDate>Sat, 08 Aug 2026 05:46:31 +0000</pubDate><atom:updated>2026-08-08T05:46:31.839Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Kanimozhi,கனிமொழி,vijay,தொகுதி மறுவரையறை,Constituency Delimitation,தவெக அரசு,tvk government</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/c5o0bp7n/kanimozhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kanimozhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/c5o0bp7n/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுக எம்பி <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF">கனிமொழி</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><h2>தொகுதி மறுவரையறை</h2><p>தொகுதி மறுவரையறையில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் காப்பதிலும் Fair Delimitation என்பதிலும் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.கழகம் தனது முந்தைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது.</p><p>இப்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், தொகுதி மறுவரையறை சட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றப் போவதாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. திருத்தப்பட்ட சட்டமுன்வடிவு இன்னும் கையில் கிடைக்கப்பெறவும் இல்லை.</p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>இந்த விவகாரத்தில், தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை ஏற்கெனவே நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானங்களில் தெரிவித்துவிட்டோம். அதனை ஒருமனதாக நிறைவேற்றிய கட்சிகளுக்கும் அதே நிலைப்பாட்டில் உள்ளபோது,<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-consultation-with-tamil-nadu-mps-on-delimitation"> முதலமைச்சர்</a> கூட்டும் கூட்டத்துக்கான தேவை என்ன? முந்தைய நிலைப்பாட்டில் இருந்து அந்தக் கட்சிகளை மாற்ற வேண்டும் என்றா?</p> <h2>காவிரி பிரச்சனை</h2><p>காவிரிக்காகப் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், மேகதாது அணைக்கு எதிராக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாமல், காவிரி பிரச்சனையைத் திசைத்திருப்ப த.வெ.க. அரசு நடத்தும் நாடகம்தான் இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டம். எனவே, தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் ஒருமித்த கோரிக்கையை நிராகரித்துள்ள த.வெ.க. அரசின் இன்றைய கூட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது.</p> <h2>மேகதாது அணை</h2><p>உழவர்கள் மேல் உண்மையான அக்கறை இருந்தால், மேகதாது அணைக்கு எதிராகச் சட்டமன்றத்தில் நாம் நிறைவேற்றிய தீர்மானத்தை தமிழ்நாட்டின் M.P.க்களுடன் இணைந்து ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வழங்கிடத் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகளை அனுப்ப முதலமைச்சர் தயாரா?</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>14 மாதங்கள் முடங்கியிருந்த போது அவர்தான் ஊக்கமளித்தார்-நடிகர் விஷால் உருக்கம்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-vishal-emotional-about-fiancee-sai-tanshika-support-during-14-month-hiatus</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-vishal-emotional-about-fiancee-sai-tanshika-support-during-14-month-hiatus#comments</comments><guid isPermaLink="false">cd555ba5-7a03-4c9d-a5ee-a9b9074a36fb</guid><pubDate>Sat, 08 Aug 2026 05:22:57 +0000</pubDate><atom:updated>2026-08-08T05:22:57.794Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sai Dhanshika,Magudam,மகுடம்,நடிகர் விஷால்,Actor Vishal,சாய் தன்ஷிகா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/pbxekqgw/Untitled-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Actor Vishal -Sai Dhanshika]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/pbxekqgw/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சினிமா பயணத்தில் சந்தித்த சவால்கள் மற்றும் தயாரிப்புச் சிக்கல்கள் காரணமாகத் தாம் கடந்த 14 மாதங்களாகப் படங்களில் நடிக்க முடியாமல் வீட்டில் முடங்கியிருந்ததாகவும், அந்த இக்கட்டான காலகட்டத்தில் தனக்குத் தொடர்ந்து நம்பிக்கையும் ஊக்கமும் அளித்தது தனது வருங்கால மனைவி சாய் தன்ஷிகா என நடிகர் விஷால் உருக்கமாகப் பேசியுள்ளார். திரையுலக நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய நடிகர் விஷால், தனது சினிமா வாழ்க்கை மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து மனம் திறந்து பகிர்ந்து கொண்டார்.</p><h2><strong>14 மாத இடைவெளி</strong></h2><p>திரைப்படத் தயாரிப்பில் ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகள், வழக்குகள் மற்றும் தொழில்ரீதியான முடக்கங்கள் காரணமாகக் கடந்த 14 மாதங்களாகத் தன்னால் எந்தவொரு புதிய திரைப்படத்திலும் நடிக்க இயலவில்லை என்று <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/vishals-magudam-trailer-released">விஷால் </a>சுட்டிக்காட்டினார். திரைத்துறை வாழ்வில் இது மிகவும் மன உளைச்சலைத் தந்த காலகட்டமாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.</p><h2><strong>தடைகளைத் தாண்டிய ஊக்கம்</strong></h2><p>வீட்டில் முடங்கியிருந்த அந்தச் சோதனையான சூழலில், "மீண்டும் பழைய வேகத்துடன் களமிறங்க முடியும்" என்ற எண்ணத்தையும் தன்னம்பிக்கையையும் விதைத்து, தொடர்ந்து ஊக்கமளித்தவர் எனது வருங்கால மனைவி சாய் தன்ஷிகா விஷால் தெரிவித்தார். மேலும், அவர் இல்லையென்றால் இவ்வளவு பாசிட்டிவாக உங்கள் முன் என்னால் நின்றிருக்க முடியாது என கூறி சாய் தன்ஷிகாவுக்கு தனது நன்றியை விஷால் நெகிழ்ச்சியுடன் பதிவு செய்தார்.</p><h2><strong>இயக்குநராக புதிய பரிமாணம்:</strong></h2><p>நடிகராக மட்டுமின்றி, திரைப்படங்களை இயக்கும் புதிய பயணத்திலும் விஷால் கவனம் செலுத்தி வருகிறார். அவரது இயக்கத்திலும் நடிப்பிலும் உருவாகி வரும் ‘மகுடம்’ உள்ளிட்ட திரைப்படங்களின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், இப்பேச்சு சினிமா வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.</p><h2><strong>திரையுலகினர் வரவேற்பு</strong></h2><p>சினிமாவில் பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து மீண்டு வந்துள்ள விஷாலின் இந்த நேர்மையான பேச்சு, அவரது ரசிகர்களாலும் திரையுலகப் பிரபலங்களாலும் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. தடைகளைத் தாண்டி அவர் மீண்டும் முழு வீச்சில் களமிறங்குவது அவரது திரைப்பயணத்திற்குப் புதிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY: தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம்: நகை வாங்குவோர் கலக்கம்!
</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-8-8-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-8-8-2026#comments</comments><guid isPermaLink="false">fbb52bbf-9e77-4bde-91fb-66a7a1ccecbd</guid><pubDate>Sat, 08 Aug 2026 05:15:00 +0000</pubDate><atom:updated>2026-08-08T05:15:00.810Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-16/epody74y/gold4.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-16/epody74y/gold4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றத்துடன் காணப்படுகிறது. </p><p>ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.1,05,760-க்கும், கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.13,220-க்கும் விற்பனையானது. 2-ந்தேதி ஒரு சவரன் ரூ.1,05,760-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.13,220-க்கும் விற்பனையானது. </p><p>3-ந்தேதி சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,06,000-க்கும், கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.13,250-க்கும் விற்பனையானது. 4-ந்தேதி சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,05,600-க்கும், கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.13,200-க்கு விற்பனையானது.</p> <p>5-ந்தேதி காலை சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ரூ.1,06,880-க்கும், கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.13,360-க்கும் விற்பனையான நிலையில் மீண்டும் மாலையில் விலை அதிகரித்தது. மாலையில் சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.1,07,840-க்கும் கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.13,480 விற்பனையானது.</p><p>6-ந்தேதி சவரனுக்கு ரூ.2,160 உயர்ந்து ரூ.1,10,000-க்கும், கிராமுக்கு ரூ.270 உயர்ந்து ரூ.13,750-க்கும் விற்பனையானது.</p> <p>நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 900-க்கும், சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து,  ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. </p><h2>தங்கம் விலை உயர்வு</h2><p>இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.1,11,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.13,965-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p> <h2>வெள்ளி விலை நிலவரம்</h2><p>வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி விலை ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-</h2><p>07-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,200</p><p>06-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,10,000</p><p>05-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,07,840</p><p>04-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,600</p><p>03-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,000</p> <h2>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-</h2><p>07-08-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>06-08-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>05-08-2026- ஒரு கிராம் ரூ.240</p><p>04-08-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>03-08-2026- ஒரு கிராம் ரூ.235</p> ]]></content:encoded></item><item><title>உனது தந்தைக்கு அடுத்து நீதான்.. ஜீஷான் சித்திக் எம்எல்ஏவுக்கு கொலை மிரட்டல்</title><link>https://www.maalaimalar.com/news/national/death-threat-audio-targeting-mla-zeeshan-siddique-goes-viral</link><comments>https://www.maalaimalar.com/news/national/death-threat-audio-targeting-mla-zeeshan-siddique-goes-viral#comments</comments><guid isPermaLink="false">32b0266b-ea92-4774-8249-16a52b5fd6c1</guid><pubDate>Sat, 08 Aug 2026 05:11:20 +0000</pubDate><atom:updated>2026-08-08T05:11:20.975Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாபா சித்திக்,தேசியவாத காங்கிரஸ் கட்சி,ஜீஷான் சித்திக்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/qm3e2ado/sid1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/qm3e2ado/sid1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உனது தந்தைக்கு அடுத்து நீ தான்' என ஜீஷான் சித்திக் எம்.எல்.ஏ.வுக்கு ஆடியோவில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><h2>ஆடியோவில் மிரட்டல்</h2><p>முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான பாபா சித்திக் கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மும்பை பாந்திரா பகுதியில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியான ஜிஷான் அக்தர் என்பவரின் பெயரில் தற்போது ஒரு மிரட்டல் ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. </p><p>அதில் பாபா சித்திக்கின் மகனும், எம்.எல்.ஏ.வுமான ஜீஷான் சித்திக்கை மிரட்டும் வகையில் இந்தி மொழியில் உள்ள அந்த ஆடியோவில் கூறப்பட்டு இருப்பதாவது:-</p><h2>ஜீஷான் சித்திக்</h2><p>"உன்னுடைய தந்தையை நான்தான் கொன்றேன். இப்போது உனக்கான மரண வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு விட்டது. உன்னுடைய பாதுகாப்பை எவ்வளவு வேண்டுமானாலும் பலப்படுத்திக்கொள். கடந்த முறை நீ அதிர்ஷ்டவசமாக தப்பிவிட்டாய், ஆனால் இந்த முறை எங்களிடம் இருந்து தப்பவே முடியாது."</p><p>இவ்வாறு அந்த ஆடியோவில் மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.</p><h2>போலீசார் தீவிர விசாரணை</h2><p>இந்த ஆடியோ குறித்து ஜீஷான் சித்திக்கின் சகோதரி பாந்திரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கி உள்ளனர். மிரட்டல் விடுக்கப்பட்ட அந்த ஆடியோ பதிவின் உண்மைத்தன்மை என்ன? </p><p>அது நிஜமாகவே தலைமறைவாக உள்ள குற்றவாளி ஜிஷான் அக்தர் பேசியதுதானா? மற்றும் அது எந்த ஐ.பி முகவரியிலிருந்து இணையதளத்தில் பதி வேற்றம் செய்யப்பட்டது? என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.</p><p>இந்த கொலை மிரட்டல் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பழனி நில மோசடி வழக்கில் கைதான வழக்கறிஞர் அன்வர்தீன் உயிரிழப்பு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-temple-land-fraud-arrested-lawyer-anwardeen-death</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-temple-land-fraud-arrested-lawyer-anwardeen-death#comments</comments><guid isPermaLink="false">d4e0f825-f54f-4615-9480-b52171d6dd95</guid><pubDate>Sat, 08 Aug 2026 04:30:49 +0000</pubDate><atom:updated>2026-08-08T04:30:49.773Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உயிரிழப்பு,dead,pazhani,பழனி நில மோசடி,வழக்கறிஞர் அன்வர்தீன்,Anwardheen</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/24gxm0us/pazhani2.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Advocate Anwardeen- Palani]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/24gxm0us/pazhani2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பழனி ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் கைதான சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனிடம், திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கே வந்து மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினார். பின்னர் அவரை 21-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.</p><h2>மோசடி பத்திரப்பதிவு</h2><p>பழனி கோவில் அடிவாரம் பகுதியில் தண்டபாணி சுவாமிகள் மடத் தின் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் உள்ளது. இந்த நிலம் கடந்த மாதம் 6-ந்தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில், தனி நபர்களுக்கு ரூ.2 கோடிக்கு கிரையமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது.</p><p>தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த மோசடி தொடர்பாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் நிலத்தை விற்பனை செய்த விழுப்புரத்தைச் சேர்ந்த ஆசிரியர் முருகதாஸ், நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை (60), சேதுபதி (67) அவர்களுக்கு உதவிய பழனி கவுண்டன்குளம் பகுதியை சேர்ந்த வக்கீல் அன்வர்தீன் (65) ஆகிய 4 பேரை கைது செய்தனர். </p><p>அவர்களை போலீஸ் காவலில் எடுத்து கடந்த 3 நாட்களாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.</p><h2>நேரில் விசாரணை</h2><p>அதேநேரம் இந்த வழக்கில் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்ட சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் நெஞ்சுவலி காரணமாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். </p><p>இதனால் அவரை நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்த முடியவில்லை. இதையடுத்து மாஜிஸ் திரேட் பாக்கியராஜ் அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் வந்து ஜஸ்டின் மணிகண்டனிடம் விசாரணை நடத்தினார். பின்னர் அவரை வருகிற 21-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுச்சென்றார்.</p><p>திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் ஜஸ்டின் மணிகண்டனுக்கு 2 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட இருக்கிறது. அதன் பிறகு அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டால் மதுரை சிறைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.</p><p>இதனிடையே ஆசிரியர் முருகதாஸ், சேதுபதி, அன்வர்தீன் ஆகியோர் தரப்பில் ஜாமீன் கேட்டு திண்டுக் கல் 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. </p><p>அந்த மனுக்களை தள்ளுபடி செய்து நேற்று கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து மாலையில் ஆசிரியர் முருகதாஸ் உள்பட 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 12-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் பாக்கியராஜ் உத்தரவிட்டார். பின்னர் அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.</p><h2>அன்வர்தீன் உயிரிழப்பு</h2><p>இந்நிலையில், பழனி கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கில் கைதான வழக்கறிஞர் அன்வர்தீன் சிறையில் உயிரிழந்துள்ளார்.</p><p>நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் நீதிமன்றக்காவலில் அடைக்கப்பட்டிருந்த அன்வர்தீன் உயிரிழந்துள்ளார்.</p><p>சர்க்கரை நோய், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் அன்வர்தீனுக்கு சிறையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என்றும் இதுகுறத்து விசாரித்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை விவகாரம் - விஜய் தலைமையிலான கூட்டத்தை புறக்கணிக்கும் திமுக - அதிமுக
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/constituency-delimitation-issue-dmk-and-admk-to-boycott-meeting</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/constituency-delimitation-issue-dmk-and-admk-to-boycott-meeting#comments</comments><guid isPermaLink="false">34619411-edfb-416b-b268-80202383a1a3</guid><pubDate>Sat, 08 Aug 2026 04:30:29 +0000</pubDate><atom:updated>2026-08-08T04:30:29.433Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,விஜய்,ADMK,அதிமுக,vijay,தொகுதி மறுவரையறை,Constituency Delimitation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/xeghepke/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay  - Inbadurai - Kanimozhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/xeghepke/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக விஜய் தலைமையிலான கூட்டத்தை திமுக - அதிமுக புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளது.</strong></em></p><h2>தொகுதி மறுவரையறை</h2><p>மத்திய பா.ஜ.க. அரசு <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%88">தொகுதி மறுவரையறை</a> மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டி நிறைவேற்ற ஆலோசித்து வருகிறது. இதனால் தென்மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் நிலவுகிறது. இந்த விவகாரம் குறித்து ஆலோசித்து உரிய முடிவெடுக்கத் தமிழக எம்.பி.க்களுடன் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.</p> <h2>தமிழக அரசு</h2><p>இக்கூட்டத்தில் பங்கேற்க தமிழகத்தில் உள்ள மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் சாய்குமார் தனித்தனியாக கடிதம் அனுப்பியுள்ளார்.</p>  <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான எம்.பி.க்கள் கூட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக எம்பிக்கள் பங்கேற்கின்றன. திமுக, அதிமுக புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து திமுக, அதிமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்குமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்து இருந்தார்.</p><h2>திமுக - அதிமுக</h2><p>இந்நிலையில் தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான எம்.பி.க்கள் கூட்டத்தை அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. அதிமுகவை சேர்ந்த எம்.பி.க்கள் இன்பதுரை, தம்பிதுரை, தனபால், தர்மர் ஆகிய 4 பேரும் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தவெக அரசு நடத்தும் அரசியல் நாடகத்தில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/aadav-arjuna-and-udhayanidhi-stalin-argument-in-tn-assembly">திமுக</a> பங்கேற்காது என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.</p><p>மாநிலங்களவை எம்.பி.யும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன், தேமுதிகவை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. சுதீஷூம் பங்கேற்க மாட்டார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>ரூ. 7000 தள்ளுபடியுடன் விற்பனைக்கு வரும் விவோ ஸ்மார்ட்போன்</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/vivo-x200t-to-sell-for-rs-62999-during-flipkart-freedom-sale</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/vivo-x200t-to-sell-for-rs-62999-during-flipkart-freedom-sale#comments</comments><guid isPermaLink="false">26137caf-59ec-4588-9fa9-1eee581c3b1d</guid><pubDate>Sat, 08 Aug 2026 04:24:00 +0000</pubDate><atom:updated>2026-08-08T04:24:00.000Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Vivo,Flipkart,smartphone,ஸ்மார்ட்போன்,விவோ,ப்ளிப்கார்ட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/ci6xiuch/Vivo-X200T.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vivo X200T]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/ci6xiuch/Vivo-X200T.png?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/vivo">விவோ</a> நிறுவனத்தின் X200T ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தலைசிறந்த கேமரா, பிளாக்ஷிப் தர செயல்திறன் மற்றும் நீண்ட நேர பேட்டரி பேக்கப் இந்த ஸ்மார்ட்போனின் குறிப்பிடத்தக்க அம்சங்களாக உள்ளன. </p><p>இந்திய சந்தையில் ரூ. 69,999 விலையில் விற்பனை செய்யப்ட்டு வரும் விவோ X200T <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மார்ட்போன்</a> ப்ளிப்கார்ட் ஃப்ரீடம் சேல் சிறப்பு விற்பனையில் சிறப்பு தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது.</p><h2>சலுகை விவரம்:</h2><p>ப்ளிப்கார்ட் ஃப்ரீடம் சேல் சிறப்பு விற்பனையில் இந்த விவோ X200T ஸ்மார்ட்போனின் 512 ஜிபி மெமரி வேரியண்ட் ரூ. 7,000 தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது.</p><p>இதனால் ரூ. 69,999-க்கு விற்பனை செய்யப்பட்ட விவோ X200T ஸ்மார்ட்போன் தற்போது ரூ. 62,999 விலையிலேயே விற்பனைக்கு கிடைக்கிறது. இ்த சலுகையை பெற பயனர்கள் எஸ்.பி.ஐ. வங்கி கிரெடிட் கார்டு வைத்திருக்க வேண்டும்.</p><p>மேலும், இந்த தள்ளுபடி ஸ்டாக் இருக்கும் வரை அல்லது குறிப்பிட்ட நேரம் என குறுகிய காலத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த சலுகை ஒவ்வொரு பகுதிக்கு ஏற்ப வேறுபடலாம்.</p><h2>சிறப்பம்சங்கள்:</h2><p>அம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் 2800x1260 பிக்சல் Full HD+ AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 9400+ பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.</p><p>புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமராவுடன் மூன்று 50MP சென்சார்களும், 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கேமரா சார்ந்து பல்வேறு அம்சங்கள் மற்றும் பிரத்யேக போட்டோ மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது.</p><p>ஆண்ட்ராய்டு 15 ஓ.எஸ். கொண்டிருக்கும் விவோ X200T ஆண்ட்ராய்டு 16 அப்டேட் பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மாரட்போன் 6200mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் விவோ X200T 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ் மற்றும் பல்வேறு கனெக்டிவிட்டி சென்சார்களுடன் வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>முன்பதிவில் மாஸ் காட்டிய சாம்சங் ஃபோல்டபில் ஸ்மார்ட்போன்கள்</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/samsung-reports-30-higher-global-pre-orders-for-galaxy-z-fold-8-series</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/samsung-reports-30-higher-global-pre-orders-for-galaxy-z-fold-8-series#comments</comments><guid isPermaLink="false">0c3eef33-3482-4498-bb75-74281f79b7d5</guid><pubDate>Sat, 08 Aug 2026 03:44:00 +0000</pubDate><atom:updated>2026-08-08T03:44:00.000Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Samsung,சாம்சங்,Foldable Smartphone,மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/bq5migci/samsung-Galaxy-Z-Fold8.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ samsung Galaxy Z Fold8]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/bq5migci/samsung-Galaxy-Z-Fold8.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/samsung">சாம்சங்</a> நிறுவனத்தின் சமீபத்திய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சீரிஸ் கேலக்ஸி Z ஃபோல்டு 8 அல்ட்ரா, கேலக்ஸி Z ஃபோல்டு 8 மற்றும் கேலக்ஸி Z ப்ளிப் 8 ஆகியவற்றிற்கான உலகளாவிய முன்பதிவுகள், முந்தைய தலைமுறை மாடல்களுடன் ஒப்பிடும் போது  30% அதிகரித்துள்ளதாக சாம்சங் தெரிவித்துள்ளது.</p><p>உலகளாவிய முன்பதிவுகளின் போது, ​​கேலக்ஸி Z ஃபோல்டு 8 அல்ட்ரா மற்றும் கேலக்ஸி Z ஃபோல்டு 8 ஆகிய இரண்டிற்கும் கிராஃபைட் (Graphite) நிறம் முதன்மை தேர்வாக அமைந்தது. அதேவேளையில், கேலக்ஸி Z ப்ளிப் 8 மாடலுக்கான முன்பதிவுகளில் பின்க் (Pink) நிறம் முன்னிலை வகித்தது.</p><h2>இந்திய முன்பதிவு நிலவரம்:</h2><p>இந்தியாவில், கடந்த ஜூலை 22-ஆம் தேதியன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்ட 72 மணி நேரத்திற்குள்ளேயே முன்பதிவுகள் 2,71,000 யூனிட்டுகளை கடந்துள்ளன. ஒப்பிட்டுப் பார்க்கும் போது, முந்தைய தலைமுறை மாடல்களான கேலக்ஸி Zஃபோல்டு 7 மற்றும் Z ப்ளிப் 7 ஆகியவை இந்திய சந்தையில் இதே அளவிலான எண்ணிக்கையை எட்ட 15 நாட்கள் தேவைப்பட்டன.</p><p>இந்தியாவில் புதிய கேலக்ஸி Z சீரிஸ் போன்களுக்கு, முன்பணம் ஏதுமின்றி 30 மாதங்களுக்கான வட்டியில்லா மாத தவணை முறை (no-cost EMI) திட்டத்தை சாம்சங் அறிமுகப்படுத்தியுள்ளது. இது சந்தையில் முதன்முறையாக வழங்கப்படும் ஒரு திட்டமாகும்.</p><h2>விலை விவரங்கள்:</h2><p>கேலக்ஸி Z ஃபோல்டு 8 அல்ட்ரா: ஆரம்ப விலை ரூ. 1,99,999</p><p>இந்த ஸ்மார்ட்போன் வயலெட் ஷேடோ, கிராஃபைட், க்ரீம், கிரீன் ஷேடோ ஆகிய நிறங்களில் கிடைக்கிறது</p><p>கேலக்ஸி Z ஃபோல்டு: ஆரம்ப விலை ரூ. 1,79,999</p><p>இந்த ஸ்மார்ட்போன் லாவெண்டர், கிராஃபைட், க்ரீம் மற்றும் பிஸ்டாச்சியோ ஆகிய நிறங்களில் கிடைக்கிறது</p><p>கேலக்ஸி Z ப்ளிப் 8: ஆரம்ப விலை ரூ. 1,24,999</p><p>இந்த ஸ்மார்ட்போன் பின்க், கிராஃபைட், க்ரீம் மற்றும் மின்ட் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.</p><p>புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் முன்னணி ஆன்லைன் வலைதளங்கள் மற்றும் ஆஃப்லைன் சில்லறை விற்பனை கடைகள், சாம்சங் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர் (Samsung Experience Store) மற்றும் சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் விற்பனைக்கு கிடைக்கின்றன.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை முதல் தொடங்குகிறது தமிழ் ஆக்கி லீக் போட்டி</title><link>https://www.maalaimalar.com/sports/tamil-hockey-league-begins-in-chennai-from-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/sports/tamil-hockey-league-begins-in-chennai-from-tomorrow#comments</comments><guid isPermaLink="false">7d41c9cd-b82b-4a8b-ba62-e189ed6711c9</guid><pubDate>Sat, 08 Aug 2026 03:21:53 +0000</pubDate><atom:updated>2026-08-08T03:21:53.835Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>hockey,லீக் போட்டி,League,ஹாக்கி,தமிழ் ஆக்கி லீக் போட்டி,Tamil hockey league</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/95pprbs8/hockey1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tamil Hockey League]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/95pprbs8/hockey1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆக்கி திருவள்ளூர் சார்பில் தமிழ் ஆக்கி லீக் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் செப்டம்பர் 12-ந் தேதி வரை நடக்கிறது.</p><p>ரேலா மருத்துவமனை ஆதரவுடன் நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்கும் 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி 'ஏ' பிரிவில் இந்தியன் வங்கி, வருமான வரி, தெற்கு ரெயில்வே, எஸ்.எம்.நகர், ஜி.எஸ்.டி. மற்றும் கலால் வரி, எஸ்.டி.ஏ.டி. விளையாட்டு விடுதி அணியும், 'பி' பிரிவில் இந்தியன் ஓவர் சீஸ் வங்கி, ஏ.ஜி.அலுவலகம், தயாந்த் வீரன்ஸ், பட்டாபிராம் ஸ்டிரைக்கர்ஸ், இந்திய உணவு கழகம், ஐ.சி.எப். அணியும் இடம் பெற்றுள்ளன.</p><p>லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் 'டாப்-3' இடங்களை பிடிக்கும் அணிகள் 'சூப்பர் சிக்ஸ்' சுற்றுக்குள் நுழையும். சூப்பர் சிக்ஸ் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.</p><p>இந்த போட் டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ. 1 லட்சமும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.50 ஆயி ரமும் பரிசாக வழங்கப்படும்.</p><p>தொடக்க நாளில் நடைபெறும் ஆட்டத்தில் ஜி.எஸ்.டி. -எஸ்.டி.ஏ.டி அணிகள் (பிற்பகல் 2.30 மணி) மோதுகின்றன.</p><p>இது தவிர பெண்களுக்கு மினி லீக் ஆக்கி போட்டி நடத்தப்படுகிறது. இதில் 4 அணிகள் கலந்து கொள்கின்றன.</p><p>இந்த தகவலை போட்டி அமைப்பு குழு தலைவர் டாக்டர் பிரகாஷ் அய்யாதுரை சென்னையில் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். அப்போது போட்டி இயக்குனரும், இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டனுமான வி.பாஸ்கரன், டெக்னிக்கல் அதிகாரி முனீர் சேட்.</p><p>இந்திய அணியின் முன்னாள் வீரர் திரு மால்வளவன், சென்னை ஆக்கி சங்க செயலாளர் உதயகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்த நிகழ்ச்சியில், போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் பரிசுக் கோப்பை அறிமுகம் செய்யப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>தாம்பரம்- திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/southern-railway-announced-special-train-between-tambaram-to-thiruvananthapuram</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/southern-railway-announced-special-train-between-tambaram-to-thiruvananthapuram#comments</comments><guid isPermaLink="false">7134b44e-716c-4ada-a2d2-fe4a18fe10ce</guid><pubDate>Sat, 08 Aug 2026 03:20:45 +0000</pubDate><atom:updated>2026-08-08T03:20:45.184Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Southern Railway,special train,சிறப்பு ரெயில்,ஓணம்,onam festival,தெற்கு ரெயில்வே</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/hf3lirs7/train01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ ரெயில்]]></media:title><media:description type="html"><![CDATA[ ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/hf3lirs7/train01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஓணம் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம்-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87">தெற்கு ரெயில்வே </a>வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><h2><strong>56 சிறப்பு ரெயில்கள்</strong></h2><p>ஓணம் பண்டிகையை முன்னிட்டு வருகிற 12-ந்தேதி முதல் அடுத்த மாதம் 6-ந்தேதி வரை தெற்கு ரெயில்வே சார்பில் 56 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து வருகிற 19-ந்தேதி முதல் அடுத்த மாதம் 2-ந்தேதி வரை (புதன்கிழமை மட்டும்) கேரளம் மாநிலம் கொல்லத்திற்கு சிறப்பு ரெயில் (வண்டி எண்-06119) இயக்கப்படுகிறது. அதே போல, கொல்லத்தில் இருந்து வருகிற 20-ந்தேதி முதல் அடுத்த மாதம் 3-ந்தேதி வரை (வியாழக்கிழமை மட்டும்) சென்னை சென்ட்ரலுக்கு சிறப்பு ரெயில் (06120) இயக்கப்படுகிறது.</p><h2><strong>தாம்பரம்-திருவனந்தபுரம்</strong></h2><p>திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து வருகிற 19-ந்தேதி முதல் அடுத்த மாதம் 2-ந்தேதி வரை (புதன்கிழமை மட்டும்) தாம்பரத்திற்கு சிறப்பு ரெயில் (06110) இயக்கப்படுகிறது.</p><p>அதே போல, <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/egmore-railway-station-redevelopment-work-express-trains-to-be-diverted-to-tambaram-and-mambalam">தாம்பரத்தில்</a> இருந்து வருகிற 20-ந்தேதி முதல் அடுத்த மாதம் 3-ந்தேதி வரை (வியாழக்கிழமை மட்டும்) திருவனந்தபுரம் சென்ட்ரலுக்கு சிறப்பு ரெயில் (06109) இயக்கப்படுகிறது.</p><p>மங்களூரு சென்ட்ரலில் இருந்து வருகிற 17-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை (திங்கட்கிழமை மட்டும்) சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரெயில் (06126) இயக்கப்படுகிறது.</p><p>அதே போல, சென்னை எழும்பூரில் இருந்து வருகிற 18-ந்தேதி முதல் அடுத்த மாதம் 1-ந்தேதி வரை (செவ்வாய்க்கிழமை மட்டும்) மங்களூரு சென்ட்ரலுக்கு சிறப்பு ரெயில் (06125) இயக்கப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>2 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார் அமித்ஷா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/amit-shah-visit-tn-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/amit-shah-visit-tn-today#comments</comments><guid isPermaLink="false">99c6bdd2-2d47-4c55-bfd7-ba6c22d4463c</guid><pubDate>Sat, 08 Aug 2026 03:12:43 +0000</pubDate><atom:updated>2026-08-08T03:12:43.650Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN,Amit Shah,அமித்ஷா,Tiruvannamalai,திருவண்ணாமலை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/12/26372197-amit.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Amit Shah]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/12/26372197-amit.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.</strong></em> </p><p>மத்திய உள்துறை மந்திரி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE">அமித்ஷா</a> மகாராஷ்டிர மாநில நிகழ்ச்சிகளை இன்று முடித்தபின் அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் இன்று மாலை 4.20 மணியளவில் திருவண்ணாமலைக்கு வருகிறார்.</p> <h2>அருணாசலேஸ்வரர் கோவில்</h2><p>ஹெலிகாப்டரிலிருந்து இறங்கும் அமித்ஷா காரில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88">திருவண்ணாமலை</a> கிரிவலப்பாதையில் உள்ள ரமண ஆசிரமத்திற்கு செல்கிறார். அங்கு சுமார் 1 மணி நேரம் நடைபெற உள்ள சிறப்பு பூஜையில் பங்கேற்கும் அவர் பின்னர் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார். </p> <h2>அமித்ஷா</h2><p>இதைத்தொடர்ந்து அமித்ஷா மாலை 6 மணியளவில் திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு கார் மூலம் சாலை மார்க்கமாக புதுச்சேரி செல்கிறார். இதையொட்டி திருவண்ணாமலையில் பாதுகாப்பு பணிகள் மற்றும் அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் ஹெலிபேடு தயார் செய்யும் பணிகளில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&apos;ஜனநாயகன்&apos; திரைப்படத்தால் வெளிச்சத்திற்கு வந்த கொடுமை: போக்சோ சட்டத்தில் சிக்கிய முதியவர்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/jananayagan-movie-awareness-elderly-man-arrested-under-pocso-act</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/jananayagan-movie-awareness-elderly-man-arrested-under-pocso-act#comments</comments><guid isPermaLink="false">869cca78-822f-44c5-9294-a117bce5c856</guid><pubDate>Sat, 08 Aug 2026 02:46:45 +0000</pubDate><atom:updated>2026-08-08T02:46:45.883Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Arrested,போக்சோ சட்டம்,pocso act,JanaNayagan,ஜனநாயகன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/byko4mnv/girlmolested.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Girl harassment]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/byko4mnv/girlmolested.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, தாய் வேலை செய்து வந்த வீட்டின் உரிமையாளரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.</strong></em></p><h2>வீட்டு வேலை</h2><p>சென்னை கே.கே. நகரைச் சேர்ந்த தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக பிரிந்து வசித்து வருகின்றனர். இவர்களது 11 வயது மகனும், 8 வயது மகளும் தந்தையுடன் வசித்து வருகின்றனர்.</p><p>குழந்தைகளின் தாய், கோடம்பாக்கத்தில் உள்ள சண்முகப்பிரியன் (வயது 50) என்பவரது வீட்டில் வேலை செய்து வருகிறார். அவர் அவ்வப்போது தனது குழந்தைகளை அந்த வீட்டுக்கு அழைத்து வந்து தன்னுடன் தங்க வைத்ததாக கூறப்படுகிறது.</p> <h2>சிறுமிக்கு பாலியல் சீண்டல்</h2><p>இந்த நிலையில், சிறுமியை அவரது தந்தை, முதலமைச்சர் விஜய் நடித்த '<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/jananayagan-success-due-to-vijays-magic-producer-k-venkat-narayana-interview">ஜனநாயகன்</a>' திரைப்படத்தை பார்க்க அழைத்துச் சென்றார். அந்த படத்தில் குழந்தைகளுக்கு 'நல்ல தொடுதல், கெட்ட தொடுதல்' குறித்து விஜய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் காட்சி இடம்பெற்றுள்ளது.</p><p>அந்த காட்சியை பார்த்த சிறுமி, தனது தந்தையிடம், "நான் ஒரு விஷயம் சொல்ல வேண்டும். என்னை திட்டக்கூடாது" என்று கூறிவிட்டு, தாய் வேலை செய்யும் வீட்டில் தங்கியிருந்தபோது. அந்த வீட்டின் உரிமையாளர் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.</p> <h2>உரிமையாளர் கைது</h2><p>இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை, வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குற்றச்சாட்டு உறுதியானதால் சண்முகப்பிரியனை போலீசார் கைது செய்தனர்.</p><p>அவர் மீது <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">போக்சோ சட்டத்தின்</a> கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.</p> <h2>ஜனநாயகன்</h2><p>'ஜனநாயகன்' திரைப்படத்தில் இடம்பெற்ற விழிப்புணர்வு காட்சியால் சிறுமி தைரியமாக நடந்த சம்பவத்தை வெளிப்படுத்தியதை தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டு வெளிச்சத்துக்கு வந்து, போலீசார் நடவடிக்கை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>சட்டசபையில் பயோமெட்ரிக் முறை விரைவில் அறிமுகம்- சபாநாயகர் தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-assembly-to-introduce-biometric-system-soon-says-speaker</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-assembly-to-introduce-biometric-system-soon-says-speaker#comments</comments><guid isPermaLink="false">d8667789-ee6b-46da-83b1-e56969033e3b</guid><pubDate>Sat, 08 Aug 2026 02:36:10 +0000</pubDate><atom:updated>2026-08-08T02:36:10.885Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN assembly,Biometric system,TN Assembly speaker,சபாநாயகர்,பயோமெட்ரிக்,தமிழக சட்டமன்ற கூட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/arxooeh3/JCD.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN Speaker JCD Prabhakarar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/arxooeh3/JCD.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ. பிரேமலதா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், தற்போது பதிவேடுகளில் எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட வேண்டியதுள்ளது. அதை பயோமெட்ரிக் முறையில் நவீனப்படுத்த வேண்டும் என்று கேட்டார்.</p><p>அதற்கு பதிலளித்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், பயோமெட்ரிக் முறை ஆய்வில் உள்ளது. விரைவில் அது அமல்படுத்தப்படும் என்றும் கூறினார்.</p><p>பின்னர் பேசிய பிரேமலதா, அவையில் உறுப்பினர்களுக்கு டம்ளரில் தண்ணீர் தரப்படுகிறது.</p><p>பாதுகாப்பான நீரை பெறுவதற்காக அனைவருக்கும் பாட்டிலில் தண்ணீர் தர வேண்டும் என்று ஏற்கனவே கேட்டேன். அதற்கு ஓ.பன்னீர்செல்வம் (தி.மு.க. எம்.எல்.ஏ.) தடை போடுகிறார் என்று கூறினார்.</p><p>அப்போது குறுக்கிட்டு பேசிய ஓ.பன்னீர்செல்வம், நான் தடை போடவில்லை. அவர் கேட்பதை கொடுத்து விடுங்கள் என்று சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார். அப்போது அவையில் சிரிப்பொலி எழுந்தது.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை விவகாரம்: திமுக, அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/constituency-delimitation-issue-thirumavalavan-calls-upon-dmk-and-admk</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/constituency-delimitation-issue-thirumavalavan-calls-upon-dmk-and-admk#comments</comments><guid isPermaLink="false">f09c8c03-4204-4315-9056-02823619e130</guid><pubDate>Sat, 08 Aug 2026 02:13:34 +0000</pubDate><atom:updated>2026-08-08T02:13:34.843Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,விஜய்,thirumavalavan,திருமாவளவன்,ADMK,அதிமுக,vijay,தொகுதி மறுவரையறை,Constituency Delimitation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/ltw459cl/thirumavalavan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Thirumavalavan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/ltw459cl/thirumavalavan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்க திமுக, அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.</strong></em></p><p>மத்திய பா.ஜ.க. அரசு <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%88">தொகுதி மறுவரையறை</a> மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டி நிறைவேற்ற ஆலோசித்து வருகிறது. இதனால் தென்மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் நிலவுகிறது. </p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>இந்த விவகாரம் குறித்து ஆலோசித்து உரிய முடிவெடுக்கத் தமிழக எம்.பி.க்களுடன் முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-very-bad-chief-minister-not-amma-government-just-summa-government-os-manian-slams">விஜய்</a> தலைமையில் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.</p><p>இக்கூட்டத்தில் பங்கேற்க தமிழகத்தில் உள்ள மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் சாய்குமார் தனித்தனியாக கடிதம் அனுப்பியுள்ளார்.</p><p>இந்த ஆலோசனைக் கூட்டத்தை தி.மு.க. எம்.பி.க்கள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.</p> <h2>தொகுதி மறுவரையறை</h2><p>இந்நிலையில், தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான எம்.பி.க்கள் கூட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக எம்பிக்கள் பங்கேற்கும் நிலையில், திமுக, அதிமுகவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.</p><h2>திமுக - அதிமுக</h2><p>பாஜக அரசின் சட்டத்தை எதிர்க்க திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை விவகாரம்: தமிழக எம்.பி.க்களுடன் முதலமைச்சர் விஜய் இன்று ஆலோசனை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-consultation-with-tamil-nadu-mps-on-delimitation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-consultation-with-tamil-nadu-mps-on-delimitation#comments</comments><guid isPermaLink="false">777b0964-b7ca-4297-9f0b-95d11eb7e561</guid><pubDate>Sat, 08 Aug 2026 01:35:19 +0000</pubDate><atom:updated>2026-08-08T01:35:19.055Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN MPs,Constituency Delimitation,தொகுதி மறுவரையறை மசோதா,முதலமைச்சர் விஜய்,tn cm vijay,தமிழக எம்பிக்கள் கூட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/l0gmqrcp/Untitled-design.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/l0gmqrcp/Untitled-design.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.</p><h2>முதலமைச்சர் அழைப்பு</h2><p>தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக ஆலோசனை நடத்த, தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கும் முதலமைச்சர் விஜய் அழைப்பு விடுத்திருந்தார்.</p><p>இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று (ஆக.8) சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது.</p><p>நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.</p><p>இந்த மசோதா சட்டமானால் தென் மாநிலங்கள் பாதிக்கப்படக்கூடும் என திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.</p><p>இந்நிலையில் இந்த மசோதா தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழ்நாட்டின் அனைத்து மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்களும் முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அனைவருக்கும் அழைப்பிதழும் அனுப்பப்பட்டுள்ளது.</p><h2>தொகுதி மறுவரையறை ஆலோசனை கூட்டம்</h2><p>சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் இன்று பிற்பகல் 3 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது.</p><p>இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இந்த கூட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக எம்பிக்கள் பங்கேற்கின்றனர். பாமக பங்கேற்பது குறித்து அன்புமணி இன்று காலை 10 மணியளவில் அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.</p><h2>புறக்கணிப்பு?</h2><p>தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக எம்பிக்கள் கூட்டத்தை திமுக, அதிமுக புறக்கணிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 8 ஆகஸ்ட் 2026:  குச்சனூர் சனிபகவான் சிறப்பு திருமஞ்சனம் 
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-8-august-2026-kuchanur-saneeswaran</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-8-august-2026-kuchanur-saneeswaran#comments</comments><guid isPermaLink="false">ad522e54-dfab-49e1-8740-813c52af54d4</guid><pubDate>Sat, 08 Aug 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-08-08T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/01/30/25616771-sanibagavan1.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kuchanur sani bhagavan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/01/30/25616771-sanibagavan1.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆடி-23 (சனிக்கிழமை)</p><p>பிறை : தேய்பிறை</p><p>திதி :  தசமி காலை 11.34 மணி வரை பிறகு ஏகாதசி</p><p>நட்சத்திரம் :  ரோகிணி பிற்பகல் 3.16 வரை பிறகு மிருகசீர்ஷம்</p><p>யோகம் :  அமிர்த / சித்தயோகம்</p> <p>ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை</p><p>எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை</p><p>சூலம் : கிழக்கு</p><p>நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை</p> <h2>ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை</h2><p>குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சனம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் தந்தப்பரங்கி நாற்காலியிலும், ஸ்ரீ ரெங்கமன்னார் அனுமன் வாகனத்திலும் பவனி. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் தெப்பம். இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் பவனி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். நயினார் கோவில் ஸ்ரீ சௌந்தரநாயகி, திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம். </p> <p>திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - சுகம்</p><p>ரிஷபம் - வரவு</p><p>மிதுனம் - நன்மை</p><p>கடகம் - தாமதம்</p><p>சிம்மம் - அனுகூலம்</p><p>கன்னி - மகிழ்ச்சி</p> <p>துலாம் - தெளிவு</p><p>விருச்சிகம் - பாராட்டு</p><p>தனுசு - வெற்றி</p><p>மகரம் - நன்மை</p><p>கும்பம் - பாராட்டு</p><p>மீனம் - விருத்தி</p> ]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 8.8.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் வளர்ச்சி மேலோங்கும்... </title><link>https://www.maalaimalar.com/Today-Transit/today-rasi-palan-in-tamil-39</link><comments>https://www.maalaimalar.com/Today-Transit/today-rasi-palan-in-tamil-39#comments</comments><guid isPermaLink="false">7ec7c596-2da6-41b2-8762-c76ead3648b7</guid><pubDate>Sat, 08 Aug 2026 01:26:45 +0000</pubDate><atom:updated>2026-08-08T01:26:45.323Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-05-18/fbpverq5/rasipalan.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Todays Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-05-18/fbpverq5/rasipalan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இன்றைய ராசி பலன்கள்</category><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>சந்தோஷம் அதிகரிக்கும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். அலைபேசி வழித்தகவல் ஆச்சரியப்படவைக்கும்.</p><h2>ரிஷபம்</h2><p>நல்லவர்களின் தொடர்பால் நலம் காண வேண்டிய நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும்.</p><h2>மிதுனம்</h2><p>உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். நண்பர்கள் ஒத்துழைப்புச் செய்வர். வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.</p><h2>கடகம்</h2><p>யோகமான நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.</p><h2>சிம்மம்</h2><p>சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.</p><h2>கன்னி</h2><p>தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படும் நாள். தனவரவில் இருந்த தடைகள் அகலும். பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும்.</p><h2>துலாம்</h2><p>யோசித்து செயல்பட வேண்டிய நாள். தொழில் பங்கு தாரர்களிடம் விழிப்புணர்ச்சி தேவை. பிறருக்குப் பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.</p><h2>விருச்சிகம்</h2><p>பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பாதியில் நின்ற கட்டிடப்பணி மீதியும் தொடரும். புதிய தொழில் தொடங்கும் தொடங்கும் எண்ணம் மேலோங்கும்.</p><h2>தனுசு</h2><p>புதிய பொறுப்புகள் வந்து சேரும் நாள். வியாபாரம் சூடுபிடிக்கும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கும்.</p><h2>மகரம்</h2><p>பெருமைப்படத்தக்க செய்தி வந்து சேரும் நாள். பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள். வருங்கால நலன் கருதி திட்டங்களைத் தீட்டுவீர்கள்.</p><h2>கும்பம்</h2><p>வரன்கள் வாயிற்கதவைத் தட்டும் நாள். வருமானம் உயரும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.</p><h2>மீனம்</h2><p>உற்சாகத்துடன் செயல்படும் நாள். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு உண்டு. தொழிலில் புதிய பங்கு தாரர்கள் வந்திணைவர் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/chennai-fuel-prices-today-petrol-diesel</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/chennai-fuel-prices-today-petrol-diesel#comments</comments><guid isPermaLink="false">90126871-ffc8-4842-b98a-0f12905643e3</guid><pubDate>Sat, 08 Aug 2026 01:15:43 +0000</pubDate><atom:updated>2026-08-08T01:15:43.670Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல் டீசல் விலை,Petrol Diesel Price,Diesel price,Petrol Price,பெட்ரோல் விலை,வணிகம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/eyp4pp4l/petrol.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ petrol- Diesel price]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/eyp4pp4l/petrol.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் போரினால் மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p><h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.</p><h2>இன்றைய பெட்ரோல், டீசல் விலை</h2><p>அந்த வகையில் இன்றைய (08.08.2026 - சனிக்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><h2>கச்சா எண்ணெய்</h2><p>இன்று சர்வதேச சந்தையில் பிரனட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 82.27 டாலர் என விற்பனை ஆகி வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>யூட்டாவில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் விபத்து</title><link>https://www.maalaimalar.com/news/world/helicopter-battling-utah-wildfire-crashes-with-no-word-on-2-people-aboard</link><comments>https://www.maalaimalar.com/news/world/helicopter-battling-utah-wildfire-crashes-with-no-word-on-2-people-aboard#comments</comments><guid isPermaLink="false">00d50d5c-3b9f-49aa-b814-08e57a183fb1</guid><pubDate>Sat, 08 Aug 2026 00:27:19 +0000</pubDate><atom:updated>2026-08-08T00:27:19.590Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>helicopter,ஹெலிகாப்டர் விபத்து,ஹெலிகாப்டர்,chopper crash,Utah wildfire,யூட்டா காட்டுத்தீ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/g3xo1vtz/widemouth-2.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ யூட்டாவில் காட்டுத்தீ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/g3xo1vtz/widemouth-2.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவின் யூட்டாவில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்க உதவிய கனரக <a href="https://www.maalaimalar.com/topic/helicopter">ஹெலிகாப்டர்</a> ஒன்று விபத்துக்குள்ளானதாக ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த இருவரின் உடல்நிலை குறித்து எந்தத் தகவலும் இல்லை.</p><p>ஜூலை 27-ஆம் தேதியன்று மின்னலால் மத்திய யூட்டாவில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஏழு ஹெலிகாப்டர்களில் இதுவும் ஒன்றாகும்.</p><h2>விபத்து உறுதி:</h2><p>யூட்டாவின் ரிச்ஃபீல்டில் சிகோர்ஸ்கி S64 ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதை ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் உறுதிப்படுத்தியது.</p><p>விபத்து குறித்த கேள்விகளுக்கு செவியர் கவுண்டி ஷெரிஃப் உடனடியாக பதிலளிக்கவில்லை. மேலும், FAA மற்றும் காட்டுத்தீ அதிகாரிகளிடம், ஹெலிகாப்டரில் இருந்த இருவரின் உடல்நிலை குறித்த தகவல்கள் இல்லை.</p><p>தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியமும் (NTSB) FAA-வும் இந்த விபத்து குறித்து விசாரிக்கும். ஆனால், அருகிலேயே காட்டுத்தீ எரிந்து கொண்டிருந்தால், அவர்களால் உடனடியாக சம்பவ இடத்திற்கு பாதுகாப்பாக சென்றடைய முடியாமல் போகலாம்.</p><h2>வானிலை எச்சரிக்கை:</h2><p>வெள்ளிக்கிழமை நிலவரப்படி, தீ 165 சதுர மைல்கள் (427 சதுர கிலோமீட்டர்கள்) பரப்பளவிற்கு பரவி இருந்ததுடன், 19 சதவீதம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஏழு ஹெலிகாப்டர்களில் ஒன்றாகும்.</p><p>நிலையற்ற காற்று, வறண்ட எரிபொருட்கள் மற்றும் கடும் வெப்பநிலை நிலவக்கூடும் என்றும், அத்துடன் வறண்ட இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் மீட்புக் குழுவினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 'ரெட் ஃபிளாக்' எச்சரிக்கைகள் நடைமுறையில் இருந்தன.</p><h2>தீவிர விசாரணை:</h2><p>ஹெலிகாப்டர் விபத்து குறித்து செவியர் கவுண்டி ஷெரிஃப் ஃபேஸ்புக் பக்கத்தில் விபத்து நடந்த பகுதிக்குள் எப்போது செல்ல முடியும் என்பதை பொர்க்க வேண்டும். இது தொடர்பான விசாரணை நடத்தப்படும். தேசிய போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் இது குறித்த விசாரணையை நடத்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இந்தியா - இஸ்ரேல் உறவை மேலும் வலுப்படுத்துவோம் - பெஞ்சமின் நெதன்யாகு</title><link>https://www.maalaimalar.com/news/world/israeli-pm-benjamin-netanyahu-says-continue-to-strengthen-bond-between-israel-and-india</link><comments>https://www.maalaimalar.com/news/world/israeli-pm-benjamin-netanyahu-says-continue-to-strengthen-bond-between-israel-and-india#comments</comments><guid isPermaLink="false">081ce5e6-8fe4-49cb-8ff5-af83919b9a9e</guid><pubDate>Fri, 07 Aug 2026 23:54:16 +0000</pubDate><atom:updated>2026-08-07T23:54:16.097Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இஸ்ரேல்,Israel,Benjamin Netanyahu,பெஞ்சமின் நெதன்யாகு,pm modi</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/f6dwzgdl/PM-Modi-and-Netabyahu.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi & Benjamin Netanyahu



]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/f6dwzgdl/PM-Modi-and-Netabyahu.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/india">இந்தியா</a> மற்றும் இஸ்ரேல் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவோம் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.</p><p>இரு தலைவர்களுக்கும் இடையே வியாழக்கிழமையன்று நடைபெற்ற உரையாடல் குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் எக்ஸ் தள பதிவை பகிர்ந்துகொண்டபோது <a href="https://www.maalaimalar.com/topic/benjamin-netanyahu">நெதன்யாகு</a> இவ்வாறு குறிப்பிட்டார். </p><p>அந்த உரையாடலில் 'சிறப்பு உத்திசார் கூட்டாண்மையை' (Special Strategic Partnership) மேலும் வலுப்படுத்துவது மற்றும் மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் சூழல் குறித்து விவாதிக்கப்பட்டது.</p><h2>உறவை வலுப்படுத்துவோம்:</h2><p>"எனது நண்பரும் இந்திய பிரதமருமான நரேந்திர மோடிக்கு நன்றி. இஸ்ரேல் மற்றும் இந்தியா இடையிலான உறவை நாங்கள் இணைந்து தொடர்ந்து வலுப்படுத்துவோம்," என்று அவர் கூறினார்.</p><p>இருதரப்பு உறவுகளை ஆய்வு செய்யவும் விரிவுபடுத்தவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் வியாழக்கிழமையன்று தொலைபேசி வாயிலாக உரையாடினர். பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவது மற்றும் பிராந்திய நிகழ்வுகள் குறித்து விவாதிப்பது ஆகியவை இந்த உரையாடலின் மையமாக இருந்தன.</p><p>டெல்லியில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, ​​வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இந்த உரையாடல் குறித்த விவரங்களை வெளியிட்டார். இஸ்ரேல் தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், பிரதமர் மோடி அதை ஏற்றுப் பேசியதாகவும் ஜெய்ஸ்வால் குறிப்பிட்டார்.</p><h2>வலுவான கட்டமைப்பு:</h2><p>"இஸ்ரேலுடனான நமது நட்பையும் உறவையும் பல்வேறு துறைகளில் எவ்வாறு மேலும் வலுப்படுத்துவது என்பது குறித்து இந்த உரையாடலின்போது விவாதிக்கப்பட்டது," என்று கூறிய ஜெய்ஸ்வால், இந்தியா-இஸ்ரேல் இடையிலான சிறப்பு உத்திசார் கூட்டாண்மையின் வலுவான கட்டமைப்பை வலியுறுத்தினார்.</p><p>பிரதமர் அலுவலகம் (PMO) வெளியிட்ட அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பின்படி, இருநாட்டு தலைவர்களும் இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான முன்னேற்றங்களை ஆய்வு செய்ததுடன், பரஸ்பர நலனுக்காக ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர். மேற்கு ஆசியாவில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள நிகழ்வுகள் குறித்தும் கருத்துகள் பரிமாறப்பட்டன; மேலும், தொடர்ந்து நெருங்கிய தொடர்பில் இருக்கவும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுமா? மத்திய அரசு விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/national/upi-payments-to-remain-free-for-consumers-says-pci</link><comments>https://www.maalaimalar.com/news/national/upi-payments-to-remain-free-for-consumers-says-pci#comments</comments><guid isPermaLink="false">4b2f29f2-4bb5-49de-aaf4-6458c6908c72</guid><pubDate>Fri, 07 Aug 2026 23:29:24 +0000</pubDate><atom:updated>2026-08-07T23:29:24.864Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>UPI,யுபிஐ,UPI Payments,யுபிஐ பரிவர்த்தனை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/04/18/11813782-upi.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ UPI ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/04/18/11813782-upi.webp?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/upi">யு.பி.ஐ.</a> (UPI) பரிவர்த்தனைகளில் வணிகர்களுக்கான கட்டணங்களின் எதிர்காலம் குறித்த விவாதங்கள் அதிகரித்து வரும் நிலையில், நுகர்வோர் தொடர்ந்து யு.பி.ஐ. சேவையை இலவசமாக பயன்படுத்தலாம் என்றும், இந்த தளம் மூலம் பணம் பெறுவதற்கு சிறு வணிகர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் இந்திய பேமன்ட் கார்ப்பரேஷன் (PCI) தெளிவுபடுத்தியுள்ளது.</p><p>யு.பி.ஐ. கட்டணங்கள் குறித்து இந்திய பேமன்ட் கார்ப்பரேஷன் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்த எக்ஸ் தள பதவில், 2016-இல் தொடங்கப்பட்டதில் இருந்து யு.பி.ஐ. நுகர்வோருக்கு இலவசமாகவே இருந்து வருவதாகவும், இந்த தளத்தை பயன்படுத்தும் தனிநபர்களிடம் பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.</p><h2>அதிகாரப்பூர்வ விளக்கம்:</h2><p>சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அணுகக்கூடியதாக மாற்றுவதற்காக யு.பி.ஐ. வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனை சூழலமைப்பில் அது தொடர்ந்து முக்கிய பங்காற்றி வருகிறது என்று இந்திய பேமன்ட் கார்ப்பரேஷன் மேலும் கூறியது.</p><p>"2016-ல் தொடங்கப்பட்டதில் இருந்து யு.பி.ஐ. நுகர்வோருக்கு எப்போதும் இலவசமாகவே இருந்து வருகிறது. ஒவ்வொரு இந்தியரும் எந்தவித பரிவர்த்தனை கட்டணமும் செலுத்தாமல் உடனடி டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை தொடர்ந்து மேற்கொள்ளலாம்," என்று அது கூறியது.</p><p>நாட்டின் அதிவேகமாக விரிவடைந்து வரும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை உள்கட்டமைப்பை இயக்குவதன் நிலைத்தன்மை குறித்த விவாதங்கள் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.</p><h2>பில்லியன் பரிவர்த்தனை:</h2><p>இந்த விவாதம் நுகர்வோரிடம் கட்டணம் வசூலிப்பது பற்றியது அல்ல, மாறாக ஒவ்வொரு மாதமும் பில்லியன் கணக்கான பரிவர்த்தனைகளை செயலாக்கும் ஒரு சூழல் அமைப்புக்கு நீண்டகால ஆதரவை உறுதி செய்வது பற்றியது என்று பி.சி.ஐ. கூறியது.</p><p>யு.பி.ஐ. பரிவர்த்தனைகளை ஏற்றுக்கொள்வதற்கு சிறு வணிகர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. அத்தகைய வணிகங்களை பாதுகாப்பது அந்த தளத்தின் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி உத்தியின் மையமாக தொடர்கிறது.</p>]]></content:encoded></item><item><title>வசூலில் புது சாதனைகளை படைக்கும் Spider-Man Brand New Day</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/spider-man-brand-new-day-box-office-collection-day-9</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/spider-man-brand-new-day-box-office-collection-day-9#comments</comments><guid isPermaLink="false">46e2ddc3-e268-481d-8531-0a26d6aee0c8</guid><pubDate>Fri, 07 Aug 2026 22:59:28 +0000</pubDate><atom:updated>2026-08-07T22:59:28.770Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tom Holland,Spider Man Brand New Day,டாம் ஹாலண்ட்,ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/hpd9ekm8/spider-man-brand-new-day.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ spider man brand new day]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/hpd9ekm8/spider-man-brand-new-day.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இரண்டாவது வாரத்தில் நுழைந்த போதிலும், 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' இந்திய பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த திரைப்படம், பல்வேறு மொழிகளில் ரசிகர்களின் தொடர் ஆதரவுடன் திரையரங்குகளில் வலுவான ஓட்டத்தை தக்கவைத்துக் கொண்டு வருகிறது.</p><p>இதன் காரணமாக இந்தியாவில் இந்த ஆண்டின் மிகப்பெரிய ஹாலிவுட் வெளியீடுகளில் ஒன்றாக தனது நிலையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே இந்திய வசூல் தொடர்ந்து அதிகரித்து வருவதோடு, வசூலில் புது சாதனைகளையும் படைத்து வருகிறது.</p><h2>பாக்ஸ் ஆபிஸ் வசூல்:</h2><p>வர்த்தக கண்காணிப்பு நிறுவனமான சாக்னில்க் தகவலின்படி, 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' திரைப்படம் 9-ஆவது நாளில் இதுவரை ரூ. 2.13 கோடி வசூலித்துள்ளது. இப்படம் தற்போது 7,513 காட்சிகளில் 39.3% இருக்கைகள் நிரம்பிய நிலையில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சமீபத்திய வசூலுடன், இப்படத்தின் மொத்த இந்திய நிகர வசூல் ரூ. 336.83 கோடியை எட்டியுள்ளது, அதே நேரத்தில் அதன் மொத்த இந்திய வசூல் ரூ. 402.73 கோடியாக உள்ளது.</p><p>அதன் முதல் வாரத்துடன் ஒப்பிடும்போது காட்சிகளின் எண்ணிக்கை குறைந்திருந்தபோதிலும், வலுவான வாய்மொழி பிரசாரம் மற்றும் முக்கிய சந்தைகளில் நிலவும் தொடர்ச்சியான தேவை ஆகியவற்றின் ஆதரவுடன், இந்தத் திரைப்படம் பார்வையாளர்களைத் தொடர்ந்து ஈர்த்து வருகிறது.</p><h2>வாராந்திர பாக்ஸ் ஆபிஸ்:</h2><p>சமீபத்திய பாக்ஸ் ஆபிஸ் புள்ளிவிவரங்களின்படி, 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' திரைப்படம் அதன் முதல் வாரத்தில் ரூ. 334.70 கோடி வசூலித்துள்ளது. </p><p>இப்படம் முதல் நாளில் ரூ. 60.60 கோடியும், அதனைத் தொடர்ந்து இரண்டாம் நாளில் ரூ. 49.35 கோடியும், மூன்றாம் நாளில் ரூ. 70.25 கோடியும், நான்காம் நாளில் ரூ. 77.75 கோடியும், ஐந்தாம் நாளில் ரூ. 23.80 கோடியும், ஆறாம் நாளில் ரூ. 21.75 கோடியும், ஏழாம் நாளில் ரூ. 17 கோடியும், மற்றும் எட்டாம் நாளில் ரூ. 14.20 கோடியும் வசூலித்துள்ளது.</p><p>9-வது நாளான (இரண்டாவது வெள்ளிக்கிழமை) அன்று இதுவரையில் ரூ. 2.13 கோடி வசூலித்துள்ள இப்படம், இந்தியாவின் ஒட்டுமொத்த நிகர வசூலை ரூ. 336.83 கோடியாக உயர்த்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டி.என்.பி.எல்.: திண்டுக்கல் அணிக்கு எதிரான போட்டியில் அபார வெற்றி பெற்ற நெல்லை ராயல் கிங்ஸ்!</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-nellai-royal-kings-beat-dindigul-dragons-by-6-wickets</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-nellai-royal-kings-beat-dindigul-dragons-by-6-wickets#comments</comments><guid isPermaLink="false">11e95847-066b-4539-8589-e16a24ba15ef</guid><pubDate>Fri, 07 Aug 2026 20:23:26 +0000</pubDate><atom:updated>2026-08-07T20:23:26.769Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,Nellai Royal Kings,நெல்லை ராயல் கிங்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/bph1ry20/Nellai-Royal-Kings.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nellai Royal Kings]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/bph1ry20/Nellai-Royal-Kings.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>10-வது <a href="https://www.maalaimalar.com/topic/tnpl">டி.என்.பி.எல்.</a> டி20 கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் திருப்பூர் தமிழன்ஸ், <a href="https://www.maalaimalar.com/topic/chepauk-super-gillies">சேப்பாக் சூப்பர் கில்லீஸ்</a>, கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்றுள்ளன. </p><p>ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.</p><h2>டாஸ்:</h2><p>திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெற்ற லீக் சுற்று போட்டியில், டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து, திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.</p><p>தொடக்க வீரர் அனுராக் ராஜேஷ் 35 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்தார். மற்றொரு தொடக்க வீரர் ஷிவம் சிங் 7 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய ஜெயந்த் 5 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இதையடுத்து களமிறங்கிய விமல் குமார் மற்றும் ஹன்னி சய்லி ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.</p><h2>171 ரன்கள் இலக்கு:</h2><p>ஹன்னி சய்லி 27 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் பாபா இந்திரஜித் 9 ரன்களிலும், கார்த்தி சரண் ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினர். ஒரு முனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய விமல் குமார் அரைசதம் விளாசி, 63 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.</p><p>இறுதியில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் குவித்தது. விமல்குமார் 63 ரன்களும், அனுராக் 35 ரன்களும் விளாசினர். வேகப்பந்து வீச்சாளர் சோனு யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.</p><h2>நெல்லை அபாரம்:</h2><p>கடின இலக்கை துரத்திய நெல்லை அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய சந்தோஷ்குமார் 44 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய அதிஷ் 8 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய குருசாமி அஜிதேஷ் 46 ரன்களையும், முகிலேஷ் 43 ரன்களையும் குவித்தனர்.</p><p>இறுதியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 17.4 ஓவர்களில் வெறும் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.</p>]]></content:encoded></item><item><title>அசாம் வெள்ளம்: பலி எண்ணிக்கை 98-ஆக உயர்வு; 13 மாவட்டங்களில் 1.55 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/assam-floods-toll-rises-to-98-over-155-lakh-people-affected-across-13-districts</link><comments>https://www.maalaimalar.com/news/national/assam-floods-toll-rises-to-98-over-155-lakh-people-affected-across-13-districts#comments</comments><guid isPermaLink="false">9f74ca36-82cf-4a2b-9efd-d061998161cb</guid><pubDate>Fri, 07 Aug 2026 19:59:07 +0000</pubDate><atom:updated>2026-08-07T19:59:07.457Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உயிரிழப்பு,Death toll,அசாம் வெள்ளம்,Assam Floods</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/jd1nit23/assam-floods-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ assam floods]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/jd1nit23/assam-floods-1.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அசாமில் வெள்ள சூழல் மோசமாகவே நீடித்தது. அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, பலி எண்ணிக்கை 98-ஐ எட்டியுள்ளது.  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 13-ஆகவும், பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 1.55 லட்சமாகவும் குறைந்துள்ளது.</p><p>சாரைடியோ (Charaideo) மாவட்டத்தில் உள்ள மஹ்மோரா வருவாய் வட்டத்தில்தான் இந்த சமீபத்திய உயிரிழப்பு பதிவாகி இருப்பதாக <a href="https://www.maalaimalar.com/topic/assam-floods">அசாம்</a> மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (ASDMA) அறிக்கை தெரிவிக்கிறது.</p><h2>33 வட்டங்களில் பாதிப்பு:</h2><p>சிவசாகர், கோலாகாட், நாகான், ஹோஜாய், சோனித்பூர், தேமாஜி, தர்ராங், பிஸ்வநாத், காம்ரூப் (மெட்ரோ), லக்கிம்பூர், உதல்குரி, ஜோர்ஹாட் மற்றும் சாரைடியோ ஆகிய 13 மாவட்டங்கள் வெள்ளத்தால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளன; இதனால் 33 வருவாய் வட்டங்களும் 464 கிராமங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p>மாநிலத்தில் மொத்தம் 1,55,849 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கோலாகாட் மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து சிவசாகர் மற்றும் ஜோர்ஹாட் மாவட்டங்கள் உள்ளன. கடந்த வியாழக்கிழமையன்று 15 மாவட்டங்களும், 1.68 லட்சத்துக்கும் அதிகமான மக்களும் பாதிக்கப்பட்டிருந்தனர்.</p><h2>சேத விவரம்:</h2><p>நிர்வாகம் 55 நிவாரண முகாம்களை நடத்தி வருகிறது; இவற்றில் இடம்பெயர்ந்த 10,000-க்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் 18 நிவாரண பொருட்கள் விநியோக மையங்களும் செயல்பட்டு வருகின்றன.</p><p>கோலாகாட் மாவட்டத்தில் உள்ள கோலாகாட் நகரம் மற்றும் நுமாலிகர் ஆகிய இடங்களில் தன்சிரி ஆறும், ஸ்ரீபூமி மாவட்டத்தில் குஷியாரா ஆறும் அபாய அளவைத் தாண்டி ஓடுகின்றன.</p><p>10,748.64 ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன; அதேவேளையில் 47,000-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சாலைகள், பாலங்கள் மற்றும் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்புகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>நகைச்சுவை, ஃபேண்டஸி கலந்த ‘மாஸ்டர் பிளான்’: ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் ஃபர்ஸ்ட் லுக்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/master-plan-movie-first-look-gains-attraction</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/master-plan-movie-first-look-gains-attraction#comments</comments><guid isPermaLink="false">5bae1162-d4bc-439a-8a87-08ba151399c7</guid><pubDate>Fri, 07 Aug 2026 19:04:35 +0000</pubDate><atom:updated>2026-08-07T19:04:35.023Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மாஸ்டர் பிளான்,தருண் விஜய்,அக்‌ஷரா ரெட்டி,Master Plan,Tharun Vijay,Akshara Reddy</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/z5z5mgq1/Master-Plan-First-Look.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Master Plan First Look]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/z5z5mgq1/Master-Plan-First-Look.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்ரா புரொடக்ஷன்ஸ், டி.ஜே. இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி, இயக்கி, தயாரிக்கும் ‘மாஸ்டர் பிளான்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. </p><p>பிளாக் ஹூமர், ஃபேண்டஸி மற்றும் குடும்ப பொழுதுபோக்கு அம்சங்கள் கலந்த கதையாக உருவாகி வரும் இப்படம் மீதான எதிர்பார்ப்பை இந்த ஃபர்ஸ்ட் லுக் மேலும் அதிகரித்துள்ளது.</p><h2>ஃபர்ஸ்ட் லுக்:</h2><p>தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், பொன்னிற ஒளி வீசும் மர்ம பெட்டியை கையில் ஏந்தியபடி வயதான பாட்டி மற்றும் சிறுவன் நிற்கிறார்கள். சுற்றி குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆச்சரியம், பயம், பதற்றம் கலந்த முகபாவனையுடன் அந்த பெட்டியை நோக்கி நிற்கும் காட்சி, கதையின் மையமாக இந்த மாயப் பெட்டி அமையப்போகிறது என்பதை உணர்த்துகிறது.</p><p>பழமையான வீட்டின் பின்னணி, சிதறிக் கிடக்கும் பணக்கட்டுகள், துப்பாக்கி உள்ளிட்ட காட்சிகள், திரில் நிறைந்த குடும்ப கதைக்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன. வித்தியாசமான காட்சியமைப்பால் சமூக வலைதளங்களிலும் இந்த ஃபர்ஸ்ட் லுக் கவனம் ஈர்த்து வருகிறது.</p><h2>சுவாரஸ்ய கதை:</h2><p>தகுதிக்கு மீறிய வாழ்க்கையை வாழ விரும்பும் ஒரு நடுத்தர குடும்பம், அதனால் உருவாகும் பிரச்சனைகளில் இருந்து, ஃபேண்டஸி மற்றும் நகைச்சுவை அம்சங்கள் கலந்து எப்படி மீண்டு வருகிறது என்பதையே இப்படம் சுவாரஸ்யமாக சொல்லவுள்ளது. கோலமாவு கோகிலா, டாக்டர், டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற படங்களின் பாணியில் பிளாக் ஹூமர் கலந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக இது உருவாகி வருகிறது.</p><p>தருண் விஜய் மற்றும் பிக்பாஸ் புகழ அக்‌ஷரா ரெட்டி நாயகன்–நாயகியாக நடிக்கும் இப்படத்தில் பாவல் நவகீதன், திவ்ய ஜகத், அப்புகுட்டி, தீபா சங்கர், தேனப்பன், சம்பத் ராம், கஜராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.</p><p>தற்போது தேனி, விழுப்புரம், செஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஜார்க்கண்ட் அரசுடன் பேச்சுவார்த்தை நிறைவு: கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை தொடர மாணவர்கள் முடிவு</title><link>https://www.maalaimalar.com/news/national/students-to-continue-agitation-despite-talks-with-jharkhand-govt</link><comments>https://www.maalaimalar.com/news/national/students-to-continue-agitation-despite-talks-with-jharkhand-govt#comments</comments><guid isPermaLink="false">038701dc-5e0f-439f-b596-8c8bb64c4a6a</guid><pubDate>Fri, 07 Aug 2026 18:20:05 +0000</pubDate><atom:updated>2026-08-07T18:20:05.718Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>protest,Jharkhand,போராட்டம்,ஜார்க்கண்ட்,Students,மாணவர்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/kfwgmmh7/Ranchi-Students-Protest.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ranchi Students Protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/kfwgmmh7/Ranchi-Students-Protest.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/jharkhand">ஜார்க்கண்ட்</a> பணி நியமன தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக, மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் தங்கள் போராட்டத்தை தொடரப்போவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள <a href="https://www.maalaimalar.com/topic/student-protest">மாணவர்கள்</a> தெரிவித்தனர். </p><p>14-ஆவது JPSC தேர்வை ரத்து செய்வது உள்ளிட்ட தங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை என்றும் அவர்கள் கூறினர். ஞாயிற்றுக்கிழமைக்குள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், ஆகஸ்ட் 10-ஆம் தேதி மாநில சட்டமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்தப்போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.</p><h2>போராட்டம் தொடரும்:</h2><p>அரசுக்கும், 'JPSC/JSSC சீர்திருத்த மன்றத்தின்' 10 பேர் கொண்ட குழுவுக்கும் இடையிலான முதல் கட்டப் பேச்சுவார்த்தை இன்று (வெள்ளிக்கிழமை) மாலை நடைபெற்றது.</p><p>"ஜார்க்கண்ட் அரசுடனான கூட்டம் சுமூகமான சூழலில் நடைபெற்றது. எங்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று அரசு உறுதியளித்தது. இருப்பினும், 14-ஆவது JPSC தேர்வை ரத்து செய்வது உள்ளிட்ட எங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை தொடர முடிவு செய்துள்ளோம்," என்று கூட்டத்திற்குப் பிறகு 'JPSC/JSSC சீர்திருத்த மன்றத்தின்' தலைவர் செய்தியாளர்களிடம் கூறினார்.</p><h2>விரைவில் தீர்வு:</h2><p>மாணவர்களின் கவலைகள் குறித்து அரசு உணர்வுப்பூர்வமாக செயல்படுவதாக மாநில உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி துறை அமைச்சர் சுதிவ்யா குமார் தெரிவித்தார்.</p><p>"போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் குழுவை நாங்கள் சந்தித்தோம். அவர்களின் கோரிக்கைகள் குறித்து அரசு உணர்வுப்பூர்வமாக உள்ளது மற்றும் அவற்றை அனுதாபத்துடன் பரிசீலிக்க தயாராக உள்ளது. இதற்கான தீர்வு விரைவில் தெரியவரும்," என்று குமார் செய்தியாளர்களிடம் கூறினார்.</p><p>மாணவர்களின் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஹேமந்த் சோரனிடம் குழுவினர் எடுத்துரைத்துள்ளதாக அமைச்சர் தீபிகா பாண்டே சிங் தெரிவித்தார்.</p><h2>சுதந்திர விசாரணை:</h2><p>"முதலமைச்சர் மாணவர்கள் மீது அக்கறை கொண்டுள்ளார், விரைவில் ஒரு தீர்வு கிடைக்கும்," என்று அவர் கூறினார்.</p><p>இதற்கிடையில், கடந்த ஆறு நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தேவேந்திர மஹ்தோ தலைமையிலான மற்றொரு போராட்ட குழு, பேச்சுவார்த்தைக்காக அரசிடமிருந்து அழைப்பு வந்துள்ளதாக தெரிவித்தது.</p><p>பேச்சுவார்த்தைக்காக எட்டு பேர் கொண்ட குழுவின் பெயர்களை அரசுக்கு அளித்துள்ளதாக மஹ்தோ தலைமையிலான குழு கூறியது. 14-ஆவது JPSC தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து சி.பி.ஐ. அல்லது மாநிலத்திற்கு வெளியேயுள்ள ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழுவை கொண்டு சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோரி வருகின்றனர்.</p><p>ஜார்க்கண்ட் பொதுப் பணி ஆணையத்தின் (JPSC) பணி நியமனத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பான போராட்டம் வெள்ளிக்கிழமையுடன் 14-வது நாளை எட்டியது; இதில் ஆறு போராட்டக்காரர்கள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>துருக்கி, பாகிஸ்தான் உடனான &quot;காகித ஒப்பந்தம்&quot; சவுதிக்கு பாதுகாப்பை வழங்காது - ஈரான் அதிரடி!</title><link>https://www.maalaimalar.com/news/world/iran-said-paper-agreement-with-turkey-pak-will-not-bring-security-to-saudi</link><comments>https://www.maalaimalar.com/news/world/iran-said-paper-agreement-with-turkey-pak-will-not-bring-security-to-saudi#comments</comments><guid isPermaLink="false">66588ac7-7268-4b82-88e7-674e718325fc</guid><pubDate>Fri, 07 Aug 2026 17:20:04 +0000</pubDate><atom:updated>2026-08-07T17:20:04.280Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஈரான்,Iran,Saudi,சவுதி,பாதுகாப்பு ஒப்பந்தம்,defence pact</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/ql2gbktd/Mohammed-Bin-Salman-and-Ebrahim-Rezaei.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mohammed Bin Salman and Ebrahim Rezaei]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/ql2gbktd/Mohammed-Bin-Salman-and-Ebrahim-Rezaei.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/Iran">ஈரான்</a> நாடாளுமன்றம், தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கை ஆணையத்தின் உறுப்பினர் ஒருவர், பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் துருக்கிக்கு இடையேயான புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை விமர்சித்துள்ளார். மேலும், இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தாலும், அது ரியாத்துக்கு நீடித்த பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p>பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து இப்ராஹிம் ரெசாயி எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அந்த பதிவில், "பல ஆண்டுகளாக அமெரிக்கர்களுக்கு ஒருதலைப்பட்சமாக ஆதரவளித்தது அவர்களுக்கு பாதுகாப்பை தராதது போலவே, துருக்கி மற்றும் <a href="https://www.maalaimalar.com/topic/pakistan">பாகிஸ்தான்</a> உடனான ஒரு காகித ஒப்பந்தம் அவர்களுக்கு பாதுகாப்பை தராது என்பதை சவுதியர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.</p><h2>பாதுகாப்பு ஒப்பந்தம்:</h2><p>சவுதி அரேபியா தனது கொள்கைகளை சீர்திருத்தினால், பாதுகாப்புக்காக மற்றவர்களிடம் 'யாசிக்க' வேண்டிய அவசியம் இருக்காது என்றும் அவர் கூறினார்.</p><p>முன்னதாக இன்று, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்துவரும் போரின் பின்னணியில் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், மூன்று நாடுகளும் "மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம்" என்றழைக்கப்படும் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.</p><p>இந்தப் போரானது, விருப்பமில்லாத வளைகுடா நாடுகளையும் உள்ளிழுத்து, ஹார்முஸ் நீரிணை மற்றும் செங்கடல் வழியாக செல்லும் கப்பல் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தியுள்ளது.</p><h2>பாகிஸ்தான் அறிக்கை:</h2><p>இஸ்லாத்தின் புனித நகரமும், நபிகள் நாயகம் முஹம்மது அவர்கள் பிறந்த இடமுமான மெக்காவில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி, மூன்று நாடுகளில் ஒன்றின் மீதான தாக்குதல், அவை அனைத்து நாடுகளின் மீதான தாக்குதலாக கருதப்படும்.</p><p>"எந்தவொரு ஆக்கிரமிப்பு செயலுக்கும் எதிரான கூட்டு தடுப்பாற்றலை வலுப்படுத்துவதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும். மேலும், மூன்று நாடுகளில் ஏதேனும் ஒன்றின் மீதான எந்தவொரு ஆயுத தாக்குதலும், அவை அனைத்தின் மீதான தாக்குதலாக கருதப்படும் என்றும் இது குறிப்பிடுகிறது. அதுமட்டுமின்றி, மூன்று நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பின் அனைத்து அம்சங்களையும் மேம்படுத்துவதற்கும் இது வழிவகை செய்கிறது," என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>GCT செயின்ட் லூயிஸ் ரேபிட் &amp; பிளிட்ஸ் செஸ் தொடரில் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-congratulates-praggnanandhaa-on-winning-the-gct-st-louis-rapid-blitz-chess-tournament</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-congratulates-praggnanandhaa-on-winning-the-gct-st-louis-rapid-blitz-chess-tournament#comments</comments><guid isPermaLink="false">0f390911-f79f-4801-a45c-6b12b288d17d</guid><pubDate>Fri, 07 Aug 2026 16:20:38 +0000</pubDate><atom:updated>2026-08-07T16:20:38.273Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>PragGnanandhaa,பிரக்ஞானந்தா,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/vop0o1ke/New-Project-2026-08-07T215011.147.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ GCT செயின்ட் லூயிஸ் ரேபிட் & பிளிட்ஸ் செஸ் தொடரில் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/vop0o1ke/New-Project-2026-08-07T215011.147.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>செஸ் தலைநகரமான செயின்ட் லூயிஸில் நடைபெற்ற 2026 கிராண்ட் செஸ் டூர் செயின்ட் லூயிஸ் ரேபிட் &amp; பிளிட்ஸ் சர்வதேச செஸ் தொடரில், இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். </p><p>இந்நிலையில் பிரக்ஞானந்தாவிற்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர்.,</p><p>“அமெரிக்காவில் நடைபெற்ற 2026 செயின்ட் லூயிஸ் ரேபிட் &amp; பிளிட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள். </p><p>உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்ற இத்தொடரில், பிரக்ஞானந்தா தன்னைவிட அதிக ரேட்டிங் கொண்ட அமெரிக்கா, உஸ்பெகிஸ்தான், ஜெர்மனி வீரர்களை எதிர்கொண்டு, வெற்றிவாகை சூடி சாதனை படைத்துள்ளார். </p><p>சர்வதேச செஸ் அரங்கில் தான் ஒரு சிறந்த சாம்பியன் என்பதை அவர் மீண்டும் ஒருமுறை நிரூபித்து, இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.   </p><p>இவரைப் போன்ற இளம் விளையாட்டு வீரர்கள் சர்வதேச அளவில் வெற்றிபெறத் தேவையான ஆதரவையும், வழிகாட்டுதலையும் SDAT வழங்கி வருகிறது. ELITE திட்டத்தின்கீழ், பயன்பெற்றுவரும் செஸ் வீரர்  பிரக்ஞானந்தா அவர்களுக்கு எனது பாராட்டுகள்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 5 பைசா உயர்வு</title><link>https://www.maalaimalar.com/news/national/rupee-settles-with-5-paise-gain-at-95-point-17-against-us-dollar</link><comments>https://www.maalaimalar.com/news/national/rupee-settles-with-5-paise-gain-at-95-point-17-against-us-dollar#comments</comments><guid isPermaLink="false">34411ebc-11cc-4d9e-8c1a-0038a48c6b6f</guid><pubDate>Fri, 07 Aug 2026 15:49:57 +0000</pubDate><atom:updated>2026-08-07T15:49:57.185Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்க டாலர்,இந்திய ரூபாய் மதிப்பு,Indian Rupee Value,US dollar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/2ekev7bv/IndianRupee001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இந்திய ரூபாயின் மதிப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/2ekev7bv/IndianRupee001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உள்நாட்டு பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட நேர்மறை வர்த்தக சூழல் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீட்டு வரவு ஆகியவற்றின் ஆதரவால், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 பைசா உயர்ந்து, ஒரு டாலருக்கு ₹95.17 என்ற நிலையில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.</p><p>அந்நியச் செலாவணி சந்தையில், ரூபாய் சற்று வலுவான நிலையில் வர்த்தகத்தைத் தொடங்கியது. நாள் முழுவதும் டாலருக்கு எதிராக ரூபாய் குறுகிய வரம்பில் ஏற்ற, இறக்கத்துடன் நகர்ந்தாலும், இறுதியில் முந்தைய வர்த்தக நாளை விட 5 பைசா உயர்வுடன் முடிவடைந்தது.</p><h2>ரூபாய் மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகள்</h2><p>சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் மாற்றம், அமெரிக்க டாலரின் வலிமை, உலகளாவிய பொருளாதார சூழல் மற்றும் முதலீட்டாளர்களின் வர்த்தக மனநிலை ஆகியவை ரூபாயின் மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளாக உள்ளன. அதே நேரத்தில், உள்நாட்டு பங்குச் சந்தைகளில் காணப்பட்ட உற்சாகமான வர்த்தகம் மற்றும் சில வெளிநாட்டு முதலீட்டு வரவுகள் ரூபாயின் மதிப்பை ஆதரித்ததாக நாணய சந்தை வல்லுநர்கள் தெரிவித்தனர்.</p><p>இருப்பினும், உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை, அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதக் கொள்கை குறித்த எதிர்பார்ப்புகள் மற்றும் சர்வதேச நிதிச் சந்தைகளின் போக்கு ஆகியவை வரும் நாட்களில் ரூபாயின் நகர்வை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக இருக்கும் என சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவராக ஃபெலிக்ஸ் ஜெரால்டு நியமனம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/felix-gerald-appointed-as-chairman-of-the-minorities-welfare-commission</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/felix-gerald-appointed-as-chairman-of-the-minorities-welfare-commission#comments</comments><guid isPermaLink="false">be362906-aecc-4a6e-947d-c6e450e5009a</guid><pubDate>Fri, 07 Aug 2026 15:40:17 +0000</pubDate><atom:updated>2026-08-07T15:40:17.107Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Felix Gerald,தவெக அரசு,tvk government,Minorities Welfare Commission,ஃபெலிக்ஸ் ஜெரால்டு,சிறுபான்மையினர் நல ஆணையம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/zgi3i5n1/New-Project-2026-08-07T205553.833.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவராக ஃபெலிக்ஸ் ஜெரால்டு நியமனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/zgi3i5n1/New-Project-2026-08-07T205553.833.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவராக தவெக செய்தித் தொடர்பாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு நியமனம் செய்யப்பட்டுள்ளார். பணி நியமனத்திற்கான ஆணையை பெற்றநிலையில் முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளார் ஃபெலிக்ஸ். </p><p>இவர் இந்தப் பதவியில் 3 ஆண்டுகள் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளரான ஃபெலிக்ஸ் ஜெரால்டு, சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகத்தின் தீவிர செய்தித் தொடர்பாளராகச் செயல்பட்டு வந்தவர். </p><h2>ஆணையத் தலைவரின் பணிகள்</h2><ul><li><p>சிறுபான்மையின மக்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாத்தல். </p></li><li><p>அரசின் நலத்திட்டங்கள் சிறுபான்மையினரைச் சென்றடைவதைக் கண்காணித்தல். </p></li><li><p>அவர்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் அரசுக்கு வழங்குதல். </p></li></ul><p>தவெக செய்தித் தொடர்பாளர்களுக்கு அரசுத் துறைகளில் பதவிகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>வறட்சி, குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க ரூ.288.97 கோடி ஒதுக்கீடு - தமிழ்நாடு அரசு உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-government-orders-allocation-of-rs-28897-crore-to-tackle-drought-and-drinking-water-shortage</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-government-orders-allocation-of-rs-28897-crore-to-tackle-drought-and-drinking-water-shortage#comments</comments><guid isPermaLink="false">348a8223-e60e-4211-84b6-5c55a70b1f99</guid><pubDate>Fri, 07 Aug 2026 15:19:57 +0000</pubDate><atom:updated>2026-08-07T15:19:57.929Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,Government of Tamil Nadu,drought relief,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,வறட்சி நிவாரணம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/ebz1l2xy/New-Project-2026-08-07T204934.233.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வறட்சி, குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க ரூ.288.97 கோடி ஒதுக்கீடு - தமிழ்நாடு அரசு உத்தரவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/ebz1l2xy/New-Project-2026-08-07T204934.233.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் நிலவும் வறட்சி மற்றும் குடிநீர் தட்டுப்பாடு பாதிப்புகளை சமாளிக்க ரூ.288.97 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.</p><p>எல் நினோ தாக்கம் மற்றும் பருவமழை பற்றாக்குறை காரணமாக ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க மாநிலப் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து இந்த அவசர நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>கிராமப்புறங்களில் குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்தவும், வறட்சி நிவாரணப் பணிகளுக்காகவும் நிதி பிரிக்கப்பட்டுள்ளது. </p><p>அதன்படி பேரூராட்சிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க ரூ.96.41 கோடியும், குடிநீர் விநியோகக் கட்டமைப்புகளைச் சீரமைக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு ரூ.58.55 கோடியும், ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.36.65 கோடியும், நகராட்சி நிர்வாகத்துறைக்கு ரூ.97.36 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. </p><p>நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தங்கு தடையின்றி லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவும், வறண்ட பகுதிகளில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் நீர் நிலைகளை தூர்வாரிப் புதுப்பிக்கவும்,  வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள கால்நடைகளுக்குத் தேவையான தீவனங்களைச் சேமித்து தட்டுப்பாடின்றி வழங்கவும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>எதிர்க்கட்சிகளை குறிவைத்து ரிஜிஜு பேசிய கருத்துகள் மக்களவைக் குறிப்பில் இருந்து நீக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/national/remarks-made-by-rijiju-in-ls-targeting-opposition-expunged</link><comments>https://www.maalaimalar.com/news/national/remarks-made-by-rijiju-in-ls-targeting-opposition-expunged#comments</comments><guid isPermaLink="false">855700a4-39e1-49b2-8223-a3b5423bccfe</guid><pubDate>Fri, 07 Aug 2026 15:09:24 +0000</pubDate><atom:updated>2026-08-07T15:09:24.785Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நாடாளுமன்றம்,Amit Shah,அமித் ஷா,Kiren Rijiju,கிரண் ரிஜிஜு,parliament</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/9fo0reur/KirenRijiju0708.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கிரண் ரிஜிஜு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/9fo0reur/KirenRijiju0708.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மக்களவையில் மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசியபோது, எதிர்க்கட்சிகளை விமர்சித்து தெரிவித்த சில கருத்துகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அவை நடவடிக்கைகளின் போது, அரசின் செயல்பாடுகள் மற்றும் மசோதாக்கள் குறித்து ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே கடும் விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய ரிஜிஜு, எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததாக கூறப்படுகிறது.</p><p>இதையடுத்து, ரிஜிஜுவின் சில கருத்துகள் அவை விதிமுறைகளுக்கு முரணானவை என்றும், அவை எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், மக்களவைத் தலைவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவை மரபுகளுக்கும் விதிகளுக்கும் ஒவ்வாத சில வார்த்தைகள் மற்றும் குறிப்புகளை அதிகாரப்பூர்வ பதிவிலிருந்து நீக்க உத்தரவிட்டார்.</p><h2>அவைக்கு வராத அமித் ஷா</h2><p>நாடாளுமன்ற நடைமுறைகளின்படி, அவையில் பேசப்படும் கருத்துகள் அவதூறாகவோ, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளாகவோ அல்லது அவையின் கண்ணியத்தை பாதிக்கும் வகையிலோ இருந்தால், அவற்றை பதிவிலிருந்து நீக்குவதற்கு மக்களவைத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது. நீக்கப்பட்ட கருத்துகள் அதிகாரப்பூர்வ அவைக் குறிப்பில் இடம்பெறாது.</p><p>இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், நாடாளுமன்ற விவாதங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெற வேண்டும் என்பதையும், அவை மரபுகளை அனைவரும் மதிக்க வேண்டியது அவசியம் என்பதையும் இந்த நடவடிக்கை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.</p><h2>தகாத வார்த்தையை பயன்படுத்திய கிரண் ரிஜிஜு</h2><p>உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவை மற்றும் மாநிலங்களைவக்கு வராதது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அதற்கு நாடளுமன்ற விவகாரங்களுக்கான துறை அமைச்சர் ரிஜிஜு, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கங்களுக்கு மத்தியில், எந்த அமைச்சர் அவைக்கு வர வேண்டும் என்பதை எதிர்க்கட்சியால் தீர்மானிக்க முடியாது என்று ரிஜிஜு என்றார். அப்போது சில வார்த்தைகளை தவறாக பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.</p><p>அமித் ஷா தினந்தோறும் நாடாளுமன்றத்திற்கு வருகை தருகிறார். நள்ளிரவு வரை அங்கேயே இருக்கிறார் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>விஷாலின் ‘மகுடம்’ டிரெய்லர் வெளியானது!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/vishals-magudam-trailer-released</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/vishals-magudam-trailer-released#comments</comments><guid isPermaLink="false">7538facf-6c2f-4673-9244-3a86e19efd3c</guid><pubDate>Fri, 07 Aug 2026 14:54:55 +0000</pubDate><atom:updated>2026-08-07T14:54:55.424Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Vishal,Magudam,மகுடம்,விஷால்,Super Good Films,சூப்பர் குட் ஃபிலிம்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/h4bcbd1u/New-Project-2026-08-07T202432.617.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விஷாலின் ‘மகுடம்’ டிரெய்லர் வெளியானது!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/h4bcbd1u/New-Project-2026-08-07T202432.617.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விஷால் இயக்கி, நடித்துள்ள புதியப் படம் மகுடம். இப்படம் மூலம் விஷால் தமிழ் திரையுலகில் இயக்குநராகவும் கால்பதிக்கிறார்.</p><p>ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாகியுள்ள இப்படத்தில் அஞ்சலி, துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் விஷால் மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.</p><p>தனது 99வது படமாக இப்படத்தை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாக உள்ளது. சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்துடன் மோதுகிறது. </p><p>இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி உள்ளது. </p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/jEAQp6jjmQA"></iframe></figure>]]></content:encoded></item><item><title>கடன் வாங்கியவர்களை மிரட்டக் கூடாது, இரவு நேரத்தில் போனில் அழைக்கக் கூடாது: வங்கிகளுக்கு RBI அறிவுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/national/no-threats-no-late-night-calls-rbi-issues-new-rules-for-loan-recovery</link><comments>https://www.maalaimalar.com/news/national/no-threats-no-late-night-calls-rbi-issues-new-rules-for-loan-recovery#comments</comments><guid isPermaLink="false">e1143381-cfe8-4b80-8081-bd8eea8152cf</guid><pubDate>Fri, 07 Aug 2026 14:44:37 +0000</pubDate><atom:updated>2026-08-07T14:44:37.583Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>RBI,வங்கி கடன்,Bank loan,ஆர்பிஐ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/yq6wplxz/RBI0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ RBI]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/yq6wplxz/RBI0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடன் வசூல் நடவடிக்கைகளில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் மற்றும் தொல்லைகளை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் 2027 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரவுள்ளன. கடன் வசூல் நடவடிக்கைகள் வெளிப்படையாகவும், மனிதநேயத்துடனும் நடைபெற வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.</p><h2>இரவு நேரங்களில் போனில் அழைக்கக் கூடாது</h2><p>புதிய விதிகளின்படி, கடன் வசூல் முகவர்கள் கடன் வாங்கியவர்களை மிரட்டவோ, அவமதிக்கவோ, தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தவோ கூடாது. அதிகாலை அல்லது இரவு நேரங்களில் தொடர்ந்து அழைத்து தொந்தரவு செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. அனைத்து வசூல் அழைப்புகளும் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும், வசூல் முகவர்கள் தங்களது அடையாளத்தை தெளிவாக தெரிவிக்க வேண்டும். அவர்கள் வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். கடன் வாங்கியவரின் தனியுரிமையை மதித்து, தொழில்முறை முறையில் மட்டுமே நடந்து கொள்ள வேண்டும் என RBI வலியுறுத்தியுள்ளது. அடமானச் சொத்துகளை கைப்பற்றுவதற்கும் தெளிவான நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.</p><h2>கடன் வசூல் நடவடிக்கைகள் நியாயமானதாக இருக்க வேண்டும்</h2><p>இந்த புதிய விதிகள் மூலம் கடன் வாங்கியவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதுடன், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் வசூல் நடைமுறைகளும் ஒழுங்குபடுத்தப்படும் என்று RBI தெரிவித்துள்ளது. இதனால் கடன் வசூல் நடவடிக்கைகள் நியாயமான, வெளிப்படையான மற்றும் மரியாதையான முறையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஏன் ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தை மூடக்கூடாது? - மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஆலோசனை!</title><link>https://www.maalaimalar.com/news/national/why-shouldnt-the-jantar-mantar-protest-site-be-closed-delhi-high-court-suggests-to-the-central-government</link><comments>https://www.maalaimalar.com/news/national/why-shouldnt-the-jantar-mantar-protest-site-be-closed-delhi-high-court-suggests-to-the-central-government#comments</comments><guid isPermaLink="false">377c946f-a425-497d-84ff-7664e43b0e0d</guid><pubDate>Fri, 07 Aug 2026 14:40:49 +0000</pubDate><atom:updated>2026-08-07T14:40:49.746Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,Centre,Delhi High Court,Jantar Mantar,டெல்லி உயர் நீதிமன்றம்,ஜந்தர் மந்தர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/a9ua8oyk/New-Project-2026-08-07T201024.121.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஏன் ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தை மூடக்கூடாது? - மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஆலோசனை!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/a9ua8oyk/New-Project-2026-08-07T201024.121.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தை ஏன் மூடக்கூடாது எனவும், அதனை ஏன் பரிசீலிக்கவில்லை எனவும் மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கி, கேள்வியும் எழுப்பியுள்ளது டெல்லி உயர் நீதிமன்றம்.</p><p>போராட்டங்கள் மூலம் ஒட்டுமொத்த தேசிய தலைநகரையும் “முன்னெச்சரிக்கையின்றி முடக்குவது அல்லது பணயக்கைதியாக மாற்றுவது” ஏன் அனுமதிக்கப்பட வேண்டும் என்று நீதிபதி அமித் மகாஜன் கேள்வி எழுப்பியுள்ளார். </p><h2>வழக்கு</h2><p>ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதிக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது டெல்லி காவல்துறை பதிலளிக்க உத்தரவிடக் கோரி, அகில இந்திய தலித் கிறிஸ்தவ உரிமைகள் பாதுகாப்புக் குழு தாக்கல் செய்த மனுவை விசாரித்தபோது நீதிபதி மகாஜன் இந்தக் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.</p><p>மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் கோஸ் , காவல்துறை தங்கள் மனுவை நிராகரிக்கவும் இல்லை, போராட்டத்திற்கு அனுமதி அளிக்கவும் இல்லை, கிடப்பில் போட்டுள்ளது என தெரிவித்தார். </p><p>இதற்கு,“என் கருத்துப்படி, நீங்கள் ஏன் இதை மூடிவிடக் கூடாது? இது டெல்லிக்குள் நடக்கக் கூடாது” என கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சேத்தன் சர்மாவிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். </p><p>அதற்கு, டெல்லியில் எந்தவிதமான போராட்டங்களும் நடைபெறக்கூடாது என்பதுதான் மத்திய அரசின் நிலைப்பாடா என்று கோஸ் கேள்வி எழுப்பினார்.</p><p>அதற்கு பதிலளித்த நீதிபதி மகாஜன், “அதை காவல்துறையினர்தான் முடிவு செய்ய வேண்டும். நகரத்திற்குள் போராட்டங்களை நடத்த அனுமதிக்கும் வசதி அல்லது சூழல் அவர்களுக்கு இல்லை என்றால் முடிவு அவர்களுடையது” என்றார்.</p><p>உடனே, “சரி, டெல்லியில் ஜனநாயகப்பூர்வமான, அமைதியான போராட்டங்கள் நடத்தப்படாது என்று அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கட்டும். அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.” என கோஸ் பதிலளித்தார்.  </p><p>இந்தப் போராட்டங்கள் ஜனநாயகமானவையா அல்லது ஜனநாயகமற்றவையா என்பதைப் பற்றித் தாம் பேசவில்லை என்றும், மாறாக "நகரம் ஏன் பணயக் கைதியாக வைக்கப்பட வேண்டும்?" என்பதைப் பற்றியே பேசுவதாகவும் நீதிபதி மகாஜன் கூறினார்.</p><p>இதற்கிடையில், அப்பகுதியில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 144 அமலில் உள்ளதாகவும், ஆகஸ்ட் 15 நெருங்கி வருவதாகவும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சர்மா தெரிவித்தார்.</p><p>“பாதுகாப்புப் படைகள் களமிறக்கப்பட்டுள்ளன. 75 பேர் எப்போது 75,000 பேராக மாறுவார்கள் என்று எங்களுக்குத் தெரியாது” என்றும் ஷர்மா கூறினார்.</p><p>தொடர்ந்து “தனிப்பட்ட முறையில் நீங்கள் என்னிடம் கேட்டால், எனக்கு வேறுபட்ட கருத்து உள்ளது. ஆம்புலன்ஸ்கள் ஆகட்டும் அல்லது வேறு எதுவாகட்டும், நகரம் முழுவதும் முடங்கிக் கிடக்கும்போது, ​​போராட்டம் ஏன் நகரத்தில் நடக்க வேண்டும்?” என்று நீதிபதி மகாஜன் மீண்டும் வலியுறுத்தினார். </p><p>இறுதியாக, மனுமீது நாளைக்குள் (ஆக.8) முடிவெடுக்குமாறு உத்தரவிட்டு, மனுவை தள்ளுபடி செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தாய்லாந்தில் சோகம்: பள்ளியில் மாணவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் பலி</title><link>https://www.maalaimalar.com/news/world/seven-killed-by-teen-in-thailand-mass-shooting</link><comments>https://www.maalaimalar.com/news/world/seven-killed-by-teen-in-thailand-mass-shooting#comments</comments><guid isPermaLink="false">c2e211d6-da8c-404c-9ea4-8aaf23d6cafa</guid><pubDate>Fri, 07 Aug 2026 14:39:35 +0000</pubDate><atom:updated>2026-08-07T14:39:35.466Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தாய்லாந்து,thailand,துப்பாக்கிச்சூடு,shooting</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/bcsa20v9/shoot.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ police]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/bcsa20v9/shoot.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து வடமேற்கே 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நொந்தபுரி மாகாணம் பாங் க்ருவாய் மாவட்டத்தில் டெப்சிரின் என்ற உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.</p><p>இன்று காலை பள்ளிக்கு மாணவர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது பள்ளிக்குள் 8-ம் வகுப்பு மாணவர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.</p><p>இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள், ஆசிரியர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். பலர் பள்ளி அறைகளின் கதவுகளைப் பூட்டிக்கொண்டு அங்கு பதுங்கினர். இதனால் பள்ளியில் பெரும் பரபரப்பு நிலவியது.</p><p>துப்பாக்கிச்சூடு குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் அந்தப் பள்ளிக்கு விரைந்து சென்றனர். அவர்கள் பள்ளிக்குள் சென்று மாணவ-மாணவிகளை பத்திரமாக வெளியே கொண்டு வந்தனர்.</p><p>இந்தத் துப்பாக்கி சூட்டில் ஆசிரியர்கள் உள்பட 7 பேர் பலியாகினர். 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.</p><p>துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பள்ளிக்குள் இருந்த ஒரு மாணவரே என்பதை உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>டிஎன்பிஎல் 2026: துஷார் ரஹேஜா அதிரடி சதத்தால் சேப்பாக்கத்தை வீழ்த்தியது திருப்பூர்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/tirupur-beat-chepauk-in-tnpl-2026</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/tirupur-beat-chepauk-in-tnpl-2026#comments</comments><guid isPermaLink="false">dd434bd1-b0fc-4079-9fcf-2ea6cb119353</guid><pubDate>Fri, 07 Aug 2026 13:40:47 +0000</pubDate><atom:updated>2026-08-07T13:40:47.876Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,திருப்பூர் தமிழன்ஸ்,Chepauk super gillies,சேப்பாக் சூப்பர் கில்லீஸ்,IDream Tiruppur Tamizhans,tushar raheja,துஷார் ரஹேஜா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/ufpfd1c6/tushar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ tushar raheja]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/ufpfd1c6/tushar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 10-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. வரும் 28-ம் தேதி வரை இரு கட்டமாக இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.</p><p>மொத்தம் உள்ள 32 ஆட்டங்களில் திண்டுக்கல்லில் 20 போட்டிகளும், சென்னையில் 12 ஆட்டங்களும் நடக்கிறது. 16 மற்றும் 17-ம் தேதி ஓய்வு தினமாகும்.</p><p>முதல் கட்ட போட்டிகள் வரும் 15-ம் தேதி வரை திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி  மைதானத்தில் நடக்கின்றன.</p><p>இந்நிலையில், டிஎன்பிஎல் தொடரின் 5-வது லீக் போட்டி திண்டுக்கல்லில் இன்று நடைபெறுகிறது. இதில் திருப்பூர் தமிழன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன. </p><p>டாஸ் வென்ற திருப்பூர் தமிழன்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.</p><h2>சதத்தை தவறவிட்ட ஆஷிக்</h2><p>அதன்படி, முதலில் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. </p><p>ஆஷிக் அதிரடியாக ஆடி சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆஷிக் 56 பந்தில் 7 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 98 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜெகதீசன் 27 ரன்னில் அவுட்டானார். </p><p>திருப்பூர் தமிழன்ஸ் அணி சார்பில் மோகன் பிரசாத், சிலம்பரசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.</p><h2>சதமடித்த துஷார் ரஹேஜா</h2><p>இதையடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே திருப்பூர் அணி அதிரடியாக ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் துஷார் ரஹேஜா சிக்சர், பவுண்டரிகளாக விளாசி சதமடித்து அசத்தினார். அவர் 52 பந்தில் 8 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 102 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.</p><p>அவருக்கு பிரதோஷ் ரஞ்சன் பால் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் 41 பந்தில் ச் சிக்சர், 9 பவுண்டரி உள்பட 73 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.</p><p>இறுதியில், திருப்பூர் அணி 18 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 206 ரன்கள் எடுத்து வென்றதுடன், நடப்பு தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.</p><p>சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு இது 2வது தோல்வி ஆகும்.</p>]]></content:encoded></item></channel></rss>