<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 08 Sep 2026 06:25:41 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: கடந்த ஆட்சியில் பொதுப்பணித்துறையில் ரூ.2,000 கோடி முறைகேடு: அமைச்சர் ஆதவ்  புகார் - 8 செப். 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-8-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-8-september-2026#comments</comments><guid isPermaLink="false">271c6b9f-172f-4ef3-bb75-008623eab7d3</guid><pubDate>Tue, 08 Sep 2026 03:42:33 +0000</pubDate><atom:updated>2026-09-08T06:18:11.697Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/un7xbzuk/aadhav.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/un7xbzuk/aadhav.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மக்களிடம் கேட்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் பட்டியல் வைத்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் - சி.வி.சண்முகம்</p><p>தமிழகத்தில் மட்டும் மொத்தம் 370 சாதிகள் உள்ள நிலையில் மத்திய அரசின் பட்டியலில் 290 சாதிகள் மட்டுமே உள்ளது.</p><p>மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதுதான் தவெக அரசின் கோரிக்கை</p><p>ரூ.12,000 கோடி செலவு செய்யும் மத்திய அரசு, மாநில  அரசுக்கு ஏற்றவாறு சாதிப்பெயரின் பட்டியல் தேவை.</p><p>சமத்துவமான மரியாதையுடன் வாய்ப்பையும் தருவதுதான் சமூக நீதி - அமைச்சர் ஆதவ் </p><h2>அமைச்சர் ஆதவ் உரை</h2><p>இந்தியாவிலேயே கடந்த 100 வருடங்களாக சமூகநீதிக்கான குரலை எழுப்பும் மாநில அரசாக தமிழ்நாடு அரசு உள்ளது.</p><p>சமூகநீதிக்காக பிரதமர், முதலமைச்சர் பதவியை இழந்தவர்களின் வழியில் தவெக அரசும் தீர்மானம் நிறைவேற்றுகிறது.</p><p>நான் சார்ந்த சமூகம் ஓபிசி பட்டியலில் இருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பை எடுப்போம் என்று தான் மத்திய அரசு கூறி இருக்கிறது.</p><p>சாதிப்பட்டியலை வைத்துக்கொண்டு கணக்கெடுப்பு நடத்தவும். சாதிப்பட்டியலை டவுன்லோடு செய்து மக்களே பார்க்கும் வசதி தேவை - சி.வி.சண்முகம்</p><p>சுதந்திரத்திற்கு முன்பு சாதிவாரி கணக்கெடுப்பு - 4147 சாதிகள் இருந்தன.</p><p>2011-ல் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது - சி.வி.சண்முகம்</p><h2>அதிமுக  சி.வி.சண்முகம் உரை</h2><p>நான் கவுண்டர் என கூறுவேன், வன்னியர் குல சத்திரியர் என சான்றிதழில் உள்ளது.</p><p>ஒரே சாதி பல்வேறு பிரிவுகளின் பெயரில் இருக்கிறது.</p><p>கடலூரில் படையாட்சி எனவும் சென்னையில் நாயக்கர் எனவும் கூறிக்கொள்வர்.</p><p>யாதவர்கள் தங்களது சாதி அடையாளத்தை 1931-ல் சரியாக தீர்மானித்துவிட்டனர்.</p><p>சாதி பற்றிய திறந்தவெளி பதிவுமுறையை மத்திய அரசு கைவிடக்கோரி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் தீர்மானம்</p><p>மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதி விவரம் தொடர்பான திறந்தவெளி முறையை கைவிட வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம்</p><p>பட்டியலில் உள்ள சாதி அடிப்படையில் மட்டும் பதிவு செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு கோரி தமிழ்நாடு அரசு சார்பில் தீர்மானம்</p><p>பதிவேற்றம் செய்யப்பட்ட சாதிகளின் பட்டியலில் இருந்து சாதி விவரத்தை குறிப்பிடும் வகையில் வழிவகை செய்யக்கோரி தீர்மானம்</p><p>சாதி பற்றிய திறந்தவெளி பதிவுமுறையை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு சார்பில் தீர்மானம்</p><p>பட்ஜெட் அனுமதி இல்லாமலேயே 14-1-2026 அரசாணை மூலம் 2026-27-ம் ஆண்டு பணிகளுக்கு ரூ.2000 கோடி எடுத்துள்ளதாக அமைச்சர் ஆதவ் குற்றச்சாட்டு</p><p>சட்டசபையில் அனுமதியின்றி எதிர்கால பட்ஜெட்டில் இருந்து ரூ.2000 கோடி எடுக்கப்பட்டது குறித்த விசாரணை தேவை.</p><p>80 பணிகளுக்கு எதிர்கால பட்ஜெட்டில் முன்கூட்டியே ரூ.2,000 கோடி ஒதுக்கியது மிகப்பெரிய தவறு - அமைச்சர் ஆதவ்</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உரிமை மீறல் புகார்</h2><p>கடந்த ஆட்சியில் பொதுப்பணித்துறையில் ரூ.2000 கோடி முறைகேடு என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உரிமை மீறல் புகார்.</p><p>சட்டசபையில் அனுமதியின்றி எதிர்கால பட்ஜெட்டில் இருந்து ரூ.2000 கோடி எடுத்துள்ளது திமுக.</p><p>தாங்கள் தான் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்றெண்ணி எதிர்கால பட்ஜெட்டில் ரூ.2,000 கோடி முறைகேடு என குற்றச்சாட்டு</p><p>அவையை முடிக்கவிடாமல் திமுகவினர் தடுத்தால் நான் என்ன செய்ய முடியும்?</p><p>முதலமைச்சர் பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்க முடியாது என்பதற்கு காரணத்தையும் கூறி விட்டேன்.</p><p>தவெக எம்எல்ஏக்கள் அமைதி காத்தது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. </p><p>என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என பார்த்துக்கொண்டிருந்தார் எடப்பாடி பழனிசாமி - சபாநாயகர்</p><h2>சபாநாயகர் உரை</h2><p>திமுகவினர் பேசுவதற்கு அனுமதி கொடுப்பது தான் நான் செய்த தவறா?</p><p>சபையை நடத்தவிடாமல் தடுக்க வேண்டும் என திமுகவினருக்கு உள்நோக்கம்.</p><p>அவையின் மாண்பு தான் முக்கியம், திமுகவினரை வெளியேற்றியதை தவறாக கருதவில்லை.</p><p>பிற்பகல் 1.30 மணிக்குள்ளாக சட்டசபையை முடிக்க வேண்டும்</p> <p>சபாநாயகர் இருக்கை முன் அமர்ந்திருந்த திமுக எம்எல்ஏக்களை அவை காவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கி சென்று வெளியேற்றினர்.</p><p>சட்டசபை மாண்பை குலைக்கும் வகையில் செயல்படும் திமுக உறுப்பினர்களை அவை காவலர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு</p><p>திமுக கொறடா எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுவதற்கு நான் அனுமதி தருகிறேன், அனைவரும் இருக்கையில் அமருங்கள் - சபாநாயகர்</p><p>அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும், நீக்க வேண்டும் என்று தொடர்து திமுக உறுப்பினர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர்.</p><p>சபாநாயகர் இருக்கைக்கு முன்பாக அமர்ந்தும், சூழ்ந்து நின்றும் திமுக உறுப்பினர்கள் கூச்சல் எழுப்பி வருகின்றனர்.</p><p>அவையின் மாண்பை எப்படி குறைக்க வேண்டும் என்று பயிற்சி எடுத்துக்கொண்டு திமுக உறுப்பினர்கள் வந்துள்ளீர்கள்.</p><p>சட்டசபையை நடத்தவிடாமல் தடைசெய்யும் நோக்கத்திலேயே திமுக உறுப்பினர்கள் வந்துள்ளனர் - சபாநாயகர்</p><p>2 நாட்களாக பிரச்சனையில் ஈடுபடும் திமுக உறுப்பினர்களை அவையிலிருந்து வெளியேறுங்கள் - அவை முன்னவர் செங்கோட்டையன்</p><p>சட்டசபையில் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு திமுக உறுப்பினர்கள் அமளி</p><p>நேற்று முதலமைச்சர் விஜய் பேசிய எதையும் அவை குறிப்பில் இருந்து நீக்க தேவையில்லை - சபாநாயகர்</p> <p>சட்டசபையில் திமுகவினர் என் அனுமதியின்றி போஸ்டர்களை காட்டினீர்கள்.</p><p>சர்காரியாக கமிஷன் செய்தி பற்றி பலமுறை மாமன்றத்தில் பேசப்பட்டுள்ளது.</p><p>மிசா சட்டத்தில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டது பற்றி முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டது உண்மையான செய்தி - சபாநாயகர்</p><p>சட்டசபையில் நேற்று முதலமைச்சர் விஜய் பேசியபோது ஒரு நிமிடம் கூட திமுகவினர் கவனிக்கவில்லை -சபாநாயகர் குற்றச்சாட்டு</p><p>திமுக ஆட்சியின் மீது சர்காரியா கமிஷனிடம் புகார் அளித்ததே கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கல்யாண சுந்தரம் தான் - அமைச்சர் ஆதவ்</p><h2>அமைச்சர் ஆதவ் உரை</h2><p>திமுக ஆட்சியில் என்னென்ன ஊழல் நடந்தது என்று காட்டும் பொறுப்பு தவெக அரசுக்கு உள்ளது.</p><p>திமுக ஆட்சியில் நடந்தவற்றை ஒவ்வொரு துறையாக கிளீன் செய்து வருகிறார் முதலமைச்சர் விஜய்.</p><p>ஊழல் என்ற புற்றுநோயை திமுக உருவாக்கி உள்ளதை சுட்டிக்காட்டி உள்ளார் முதலமைச்சர் விஜய்.</p><p>மறைந்தவர்கள் பற்றியும் அவையில் இல்லாதவர் பற்றியும் முதலமைச்சர் பேரவையில் பேசுவது நியாயமில்லை - கே.என்.நேரு</p><p>என்னை பேச விடமாட்டார்கள், தவெகவினர் பேசினாலே பயந்து எழுந்து நின்று கூச்சல் போடுவர் - அமைச்சர் ஆதவ்</p><p>எம்ஜிஆரும் அவையில் சர்காரியா கமிஷன் குறித்து பேசி உள்ளதால் அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டாம் - செங்கோட்டையன்</p><p>ஸ்டாலின் கைது குறித்த அமைச்சர் நிர்மல் குமாரின் பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சல்</p><p>முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்படவில்லை, பெண்கள் தொடர்பான வழக்கிற்கு தான் கைது செய்யப்பட்டார்.</p><p>21-வது அம்ச திட்டம் என்று அம்மையார் இந்திரா காந்தி குறித்து மோசமாக பேசியதால் தான் ஸ்டாலின் கைது - அமைச்சர் நிர்மல்குமார்</p><h2>அமைச்சர் நிர்மல்குமார் உரை</h2><p>விசாரணையையோ நீதிமன்றத்தை பற்றியோ நேற்று முதலமைச்சர் விஜய் பேசவில்லை.</p><p>கலைஞர் எங்கெங்கு எல்லாம் பணம் வாங்கினார் என்பது ஏற்கனவே சர்காரியாக கமிஷனில் உள்ளது. </p><p>திருட்டு, வழிப்பறி, பெண்கள் குறித்த வழக்கு கூட இருக்கலாம், அது எல்லாம் மிசா வழக்கு ஆகாது.</p> <p>முதலமைச்சர் விஜய் ஆதாரம் இன்றி பேசிய அனைத்தையும் அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் - எ.வ.வேலு</p><p>கலைஞர் கருணாநிதி மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை என சர்காரியா கமிஷனே கூறிவிட்டது.</p><p>குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லாததால் வழக்கு தொடர முடியாது என்றும் சர்காரியா கமிஷன் கூறிவிட்டது - எ.வ.வேலு</p><p>நேற்று மாறன் பற்றி முதலமைச்சர் விஜய் பேசினார், அவைக்குள் இல்லாதவர் பற்றி பேசக்கூடாது என விதியில் உள்ளது -  எ.வ.வேலு </p> <p>மிசா சட்டத்தை பற்றி முதலமைச்சர் விஜய் பேசியதற்கு திமுக எதிர்ப்பு </p><p>பெரியார் கொள்கையை ஏற்றுள்ள திராவிட கழக தலைவர் வீரமணி கூட முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் சிறையில் இருந்தார் - எ.வ.வேலு</p><p>நேற்று பேரவையில் முதலமைச்சர் விஜய் பேசும்போது நாங்கள் அமைதியாகவே இருந்தோம்.</p><p>அமலாக்கத்துறை அறிக்கையை முதலமைச்சர் விஜய் பேசியது அவையை மீறிய செயல், விதிக்குட்பட்டது அல்ல என்பது திமுக கருத்து.</p><p>ஜனநாயகத்திற்கு எதிராக வந்த மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையில் இருந்தார் மு.க.ஸ்டாலின் - எ.வ.வேலு </p> <h2>சட்டசபையில் திமுக கொறடா எ.வ.வேலு உரை</h2><p>பேரவைக்கு என்று மரபுகள் உள்ளன. முதலமைச்சர் கண்ணியமாகவே பேசுவார்.</p><p>அவை மரபை மீறி முதலமைச்சர் பேசி இருக்கிறார்.</p><p>நீதி விசாரணையில் இருப்பதை பேச அனுமதி இல்லை.</p><p>சட்டசபையில் இன்று பொதுத்துறை, அயலக தமிழர் நலன், மாநில சட்டசபை, ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நிதித்துறை, திட்டம் மற்றும் வளர்ச்சி, ஓய்வூதியங்களும் ஓய்வுக்கால நன்மைகளும், போக்குவரத்து ஆகிய துறைகளின் மானிய கோரிக்கைகள் மீது, விவாதம் நடக்க உள்ளது. </p><p>அமைச்சர்கள் செங்கோட்டையன், மரிய வில்சன், பார்த்திபன், தென்னரசு ஆகியோர் விவாதத்திற்கு பதில் அளித்து பேசுவார்கள்.</p> ]]></content:encoded></item><item><title>டாக்டர் சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த் இணையும் &apos;பிக்காசோ&apos; படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/dr-sivarajkumar-abhishan-jeevind-join-for-picasso-first-look-poster-release</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/dr-sivarajkumar-abhishan-jeevind-join-for-picasso-first-look-poster-release#comments</comments><guid isPermaLink="false">7a1e22bf-a809-44ab-b798-316737a2d38b</guid><pubDate>Tue, 08 Sep 2026 06:20:15 +0000</pubDate><atom:updated>2026-09-08T06:20:15.089Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>Abishan Jeevinth,சிவராஜ் குமார்,Shiva Rajkumar,Rishab Shetty,Picasso,அபிஷன் ஜீவிந்த்,பிக்காசோ,Gautham Sivaraman,Gaana Vinoth</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/2f6kdoth/Shiva-Rajkumar-Abishan-Jeevinth" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Shiva Rajkumar - Abishan Jeevinth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/2f6kdoth/Shiva-Rajkumar-Abishan-Jeevinth?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கன்னடத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான 'கருணாட சக்ரவர்த்தி' டாக்டர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">சிவராஜ்குமார் </a>மற்றும் இளம் தலைமுறையின் கவனம் பெற்ற நடிகர் அபிஷன் ஜீவிந்த் இணைந்து நடிக்கும் புதிய தலைமுறை பொழுதுபோக்கு திரைப்படத்திற்கு '<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8B">பிக்காசோ</a>' எனப் பெயரிடப்பட்டுள்ளது.</p><p>பிக்காசோ படத்தின் அதிரடியான மற்றும் கலைநயமிக்க ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல நடிகரும் இயக்குநருமான<a href="https://www.maalaimalar.com/search?q=%20%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%B7%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF"> ரிஷப் ஷெட்டி</a> அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.</p><h2><strong>இரண்டு தலைமுறைகளின் சுவாரஸ்யமான திரை இணைப்பு</strong></h2><p>டிராமா கம்பெனி வழங்கும் இப்படத்தின் மூலம் கவுதம் சிவராமன் இயக்குநராக அறிமுகமாகிறார்.</p><p>பழம்பெரும் நட்சத்திரமான டாக்டர் சிவராஜ்குமாரின் தனித்துவமான மிரட்டலான திரை ஆளுமையுடன், அடுத்த தலைமுறை கலைஞரான <a href="https://www.maalaimalar.com/topic/abishan-jeevinth">அபிஷன் ஜீவிந்த்தின்</a> புதிய தலைமுறை நடிப்புத் திறனும் இதில் இணையவுள்ளது.</p><p>இரண்டு வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த இரு முன்னணி நடிகர்களின் இந்தத் திரை விந்தையானது, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2><strong>பட்டாசு போஸ்டரின் பின்னணி மற்றும் கலைநயமிக்க தலைப்பு</strong></h2><p>தற்போது வெளியாகியுள்ள ‘பிக்காசோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வழக்கமான பாணியில் இல்லாமல் மிகவும் வித்தியாசமான காட்சியமைப்புடன் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. </p><p>டாக்டர் சிவராஜ்குமாரும் அபிஷன் ஜீவிந்த்தும் பாரம்பரிய வெள்ளை உடையில், வெடித்துச் சிதறிய பட்டாசுகளின் நடுவே மாஸாக அமர்ந்திருக்கிறார்கள்.</p><p>இருவரின் இயல்பான, அதே சமயம் குறும்புத்தனமான தோற்றமும், அவர்களைச் சுற்றியுள்ள வெடித்த பட்டாசுகளும் படத்திற்கு ஒரு மாறுபட்ட சூழலை உருவாக்குகிறது. </p><p>படத்தின் 'பிக்காசோ' என்ற தலைப்பு மஞ்சள் நிற எழுத்துக்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. </p><p>இது இந்த ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ஒரு தனித்துவமான கலைநயமிக்க தோற்றத்தை வழங்குகிறது. இந்த போஸ்டர் படத்தின் கதை முற்றிலும் புதியதொரு அணுகுமுறையில் இருக்கும் என்பதை உணர்த்துகிறது.</p><h2><strong>வலுவான நட்சத்திரப் பட்டாளம் அறிமுகம்</strong></h2><p>இப்படத்தில் அபிஷன் ஜீவிந்திற்கு ஜோடியாக ஷிவானி நாகரம் கதாநாயகியாக நடிக்கிறார். </p><p>மேலும், தமிழ் திரையுலகின் பிரபல சுயாதீன பாடகர் கானா வினோத் இப்படத்தின் மூலம் முதன்முறையாக நடிகராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2><strong>தொழில்நுட்பக் குழு</strong></h2><p>இப்படத்திற்கு கவுதம் சிவராமன் கதை எழுதி இயக்குகிறார். லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். </p><p>பிரகதீஷ் பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். சுரேஷ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். </p><p>ஸ்வாதி ராமகிருஷ்ணன் ஆடை வடிவமைப்பையும், விஜு விஜயன் கலை இயக்கத்தையும் கவனிக்கின்றனர்.</p><h2><strong>தயாரிப்பு மற்றும் தற்போதைய நிலை</strong></h2><p>டிராமா கம்பெனி சார்பில் ஏ. பாலமுருகன் இப்படத்தைப் பிரமாண்டமாகத் தயாரிக்கிறார். </p><p>இவர்களுடன் ஆர். கார்த்திகேயன், தினேஷ் பாலச்சந்திரன் மற்றும் ஆர்.ஆர். தீபன் ராஜ் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாகப் பணியாற்றுகின்றனர். </p><p>மேலும், கிரீன் காட் மற்றும் டி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிப்பில் இணைந்துள்ளன.</p><p>இப்படத்தின் முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. </p><p>முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘பிக்காசோ’ படத்தின் டீசர், பாடல்கள் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மிக விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. தோழமைக் கட்சிகள் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பங்கேற்காது- கே.பாலகிருஷ்ணன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/k-balakrishnan-says-cpm-will-not-participate-in-the-meeting-of-tvks-alliance-parties</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/k-balakrishnan-says-cpm-will-not-participate-in-the-meeting-of-tvks-alliance-parties#comments</comments><guid isPermaLink="false">29449ff1-b528-40e1-b1c8-12ad7809b6ac</guid><pubDate>Tue, 08 Sep 2026 06:16:37 +0000</pubDate><atom:updated>2026-09-08T06:16:37.168Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,vijay,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,CPM,CPI,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/udt1s6dn/CPM.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன்]]></media:title><media:description type="html"><![CDATA[ சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/udt1s6dn/CPM.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எந்த கூட்டணியிலும் இல்லை என்று சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.</strong></em> </p><p>முதலமைச்சர் விஜய் தலைமையில் நாளை நடைபெறும் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பது குறித்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆலோசனைக்கு பின்னர் தெரிவிக்கப்படும் என அறிவித்து இருந்தனர். </p><p>அதன்படி, முதலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு பேசிய சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், <a href="https://www.maalaimalar.com/topic/தவெக">த.வெ.க.வின்</a> கூட்டணி கட்சி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பங்கேற்காது என  தெரிவித்தார். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், த.வெ.க. கூட்டணியில் இல்லை, அதனால் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம். கடந்த மாத கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இப்போது எப்படி செல்வோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எந்த கூட்டணியிலும் இல்லை என்றார். </p><p>இதனால் நாளை நடைபெறும் கூட்டத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என்பது திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இதனை தொடர்ந்து, சென்னை தி.நகர் பாலன் இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நாளை நடைபெறும் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. </p><p>ஆலோசனை கூட்டத்திற்கு பிறகே நாளை நடைபெறும் த.வெ.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் பங்கேற்குமா? பங்கேற்காதா? என்பது குறித்து தெரியவரும். </p><p>முன்னதாக த.வெ.க. கூட்டணி கட்சி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பங்கேற்பதில்லை என அறிவித்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>தாம்பரம் ரெயில் நிலையத்தில் தண்டவாளங்களின் எண்ணிக்கையை 10-ல் இருந்து 15 ஆக உயர்த்த தென்னக ரெயில்வே திட்டம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/southern-railways-plan-to-increase-number-of-tracks-to-15-at-tambaram-railway-station</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/southern-railways-plan-to-increase-number-of-tracks-to-15-at-tambaram-railway-station#comments</comments><guid isPermaLink="false">984a1694-761c-4a86-a963-7fe142b531b4</guid><pubDate>Tue, 08 Sep 2026 06:12:39 +0000</pubDate><atom:updated>2026-09-08T06:12:39.351Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Southern Railway,tambaram railway station,Indian Railway,சென்னை எழும்பூர்,தென்னக ரெயில்வே,தாம்பரம் ரெயில் நிலையம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/e4xpty8g/tambaram.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tambaram Railway Station ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/e4xpty8g/tambaram.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தாம்பரம் நிலையத்தில் தண்டவாள மேம்பாடு மற்றும் நடைமேடைகளை நீட்டிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. </p><p>சென்னை புறநகர் மற்றும் தொலைதூர ரெயில் பயணங்களில் மிக முக்கியமான முனையமாக விளங்கும் தாம்பரம் ரெயில் நிலையத்தை, நகரின் இரண்டாவது பெரிய ரெயில் செயல்பாட்டு மையமாக மேம்படுத்த தென்னக ரெயில்வே விரிவான திட்டத்தை தயாரித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, தற்போதுள்ள தண்டவாளங்களின் எண்ணிக்கையை 10-ல் இருந்து 15 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.</p><h2>முதன்<strong>மை முனையமாக மாறும் தா</strong>ம்பரம்</h2><p>சென்னையின் மூன்றாவது ரெயில் முனையமாக அறிவிக்கப்பட்டுள்ள தாம்பரம் ரெயில் நிலையம், இந்த விரிவாக்கப் பணிகளுக்குப் பிறகு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/diwali-train-tickets-sell-out-within-minutes-passengers-shocked">சென்னை எழும்பூர்</a> ரெயில் நிலையத்தை விட பெரிய மையமாக உருவெடுக்கும். இதன் மூலம் தென் மாவட்டங்களுக்கும் நாட்டின் பிற வட மாநிலங்களுக்கும் இயக்கப்படும் தொலைதூர ரெயில் சேவைகளை தாம்பரத்தில் இருந்தே தடையின்றி இயக்க முடியும். மேலும், எழும்பூர் ரெயில் நிலையத்தில் நிலவும் கடும் போக்குவரத்து மற்றும் நடைமேடை நெரிசலுக்கு இது பெரிய தீர்வாக அமையும்.</p><h2>நடைமேடை <strong>விரிவாக்கம்</strong> </h2><p>தற்போது தாம்பரம் நிலையத்தில் தண்டவாள மேம்பாடு மற்றும் நடைமேடைகளை நீட்டிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் அனைத்தும் வரும் மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், நிலையத்தின் வடக்குப் பகுதியில் ரூ.19 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் இரண்டாவது நடைமேடைப் பாலம் மற்றும் அதனுடன் இணைந்த பயன்பாட்டுப் பகுதிகளும் மார்ச் மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு வரும். கிழக்குப் பகுதியில் அமைந்த பாரதமாதா சாலையுடன் புதிய அணுகுசாலையை இணைக்கும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.</p><h2>ரூ.<strong>19 கோடியில் ந</strong>வீன உள்கட்டமைப்பு</h2><p>ஆண்டுதோறும் 3.50 கோடிக்கும் அதிகமான பயணிகள் பயன்படுத்தும் தாம்பரம் ரெயில் நிலையம் ‘பிரிவு 1’ தரவரிசையில் உள்ளது. இங்கு வருகை தரும் பயணிகள், குறிப்பாக மூத்த குடிமக்கள் நீண்ட தூர ரெயில்களை அணுகுவதில் சிரமம் அடைவதைத் தவிர்க்க பல்வேறு புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. புதிய நடைமேடைப் பாலத்தில் நவீன காத்திருப்போர் அறை மற்றும் உயர்த்தப்பட்ட பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் அமைக்கப்படவுள்ளன. மேலும், அனைத்து நடைமேடைகளையும் இணைக்கும் வகையில் 9 மின்தூக்கிகள் மற்றும் 10 தானியங்கிப் படிக்கட்டுகள் நிறுவப்பட உள்ளன.</p><h2>விரிவான திட்<strong>ட அறிக்கை</strong> </h2><p>தாம்பரம் ரெயில் நிலையத்தை சர்வதேச தரத்திலான பெரிய முனையமாக முழுமையாக மறுசீரமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை ரெயில் நில மேம்பாட்டு ஆணையம் தற்போது தயாரித்து வருகிறது. இத்திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்படும் போது, தென் சென்னைப் பிராந்தியத்தின் மிக முக்கியப் போக்குவரத்து மையமாக தாம்பரம் உருவெடுக்கும்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY : இன்று தங்கம் விலை- எவ்வளவு தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/news/topnews/business-and-gold-rate-gold-price-details-08-09-2026</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/business-and-gold-rate-gold-price-details-08-09-2026#comments</comments><guid isPermaLink="false">b0dc083c-aa02-4b57-bb17-03406b383690</guid><pubDate>Tue, 08 Sep 2026 06:01:41 +0000</pubDate><atom:updated>2026-09-08T06:01:41.328Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/bxvt918k/gold.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ தங்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/bxvt918k/gold.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>வணிகம் (Business)</category><content:encoded><![CDATA[ <p>தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. சென்னையில் கடந்த 1-ந்தேதி தங்கம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 175-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 400-க்கும் விற்பனையானது. இதனை தொடர்ந்து 2-ந்தேதி தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.225 குறைந்து, ரூ.13 ஆயிரத்து 950-க்கும், சவரனுக்கு ரூ.1,800 சரிந்து ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 600-க்கும் விற்றது. அதனை தொடர்ந்து 3-ந்தேதி தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு 290 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 240 ரூபாய்க்கும் சவரனுக்கு 2,320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 920-க்கு விற்பனையானது. அதனை தொடர்ந்து 4-ந்தேதி சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து சவரன் ரூ.1,14,880-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதை அடுத்து 5-ந்தேதி அதிரடியாக கிராமுக்கு 170 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14,190-க்கும் சவரனுக்கு ரூ.1360 குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 520-க்கு விற்பனையானது. </p><h2><strong>சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை</strong></h2><p>இதையடுத்து இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.1,14,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ரூ.14,270க்கு விற்பனையாகிறது.</p> <h2><strong>வெள்ளி விலையில் இன்று</strong></h2><p>வெள்ளி விலையில் இன்றும் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.</p><h2><strong>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்</strong></h2><p>07-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,040</p><p>06-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,520</p><p>05-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,520</p><p>04-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,880</p><p>02-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,600</p><p>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்</p><p>06-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>05-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>04-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>03-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>02-08-2026- ஒரு கிராம் ரூ.250</p>]]></content:encoded></item><item><title>கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் - விசாரணை அறிக்கை சட்டசபையில் சமர்ப்பிப்பு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/inquiry-report-on-kallakurichi-illicit-liquor-deaths-submitted-to-legislative-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/inquiry-report-on-kallakurichi-illicit-liquor-deaths-submitted-to-legislative-assembly#comments</comments><guid isPermaLink="false">4d16b5c0-ef22-4b5b-ab31-e3c862ee38c4</guid><pubDate>Tue, 08 Sep 2026 05:57:25 +0000</pubDate><atom:updated>2026-09-08T05:57:25.729Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>உயிரிழப்பு,Illegal Liquor Death,kallakurichi,கள்ளச்சாராயம்,கள்ளக்குறிச்சி விவகாரம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/jbkepu5h/kallakuruchi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/jbkepu5h/kallakuruchi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை அருந்தி பலர் உயிரிழந்தது தொடர்பாக இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.</p> <h2>கள்ளக்குறிச்சி</h2><p>கடந்த 2024-ம் ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தனர். </p><p>இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது.</p> <h2>நீதியரசர் கோகுல்தாஸ்</h2><p>இந்த ஆணையம் தீவிர விசாரணை நடத்தி தனது இறுதி அறிக்கையை இன்று தாக்கல் செய்தது.</p><p>நீதியரசர் கோகுல்தாஸ் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் அறிக்கை <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-2000-crore-the-move-made-by-ev-velu-in-the-confidence-of-returning-to-poweraadhav-arjuna-levels-allegations-in-the-assembly">சட்டசபையில்</a> சமர்ப்பிக்கப்பட்டது. அதில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை, காவல்துறை, மதுவிலக்கு அமலாக்கத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் தரப்பில் கடுமையான அலட்சியமும் கடமை தவறிய போக்கும் இருந்துள்ளது என்று நீதியரசர் குறிப்பிட்டுள்ளார்.</p> <p>இதுதொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்,</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">கள்ளச்சாராயம்</a> விற்பனைக்கு பெயர் போன பகுதிகளிலும் காவல் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்காததன் விளைவே உயிரிழப்புகள் அதிகரிக்க வழிவகுத்தது. </p><p>கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்ட பகுதிகளின் அதிகார வரம்பைக் கொண்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அதிகாரிகளே இதற்கு பொறுப்பு. </p> <p>கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் மற்றும் கச்சிராப்பாளையம் வட்டங்களின் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் வட்டாட்சியர்கள் இந்நிகழ்வுக்கு பொறுப்பானவர்கள்.</p><p>விழுப்புரம் மாவட்டத்தில் 2023-ம் ஆண்டு மே மாதம் ஏற்பட்ட கள்ளச்சாராய துயர சம்பவத்திலிருந்து இச்சம்பவம் நிகழ்ந்த 2024 வரை பணியாற்றிய இச்சம்பவத்திற்கு பொறுப்பான பல்வேறு பதவிகளை வகித்துவந்த அதிகாரிகள் மீது துறை சார்ந்த விசாரணையை தொடங்கிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <p>கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சார்ந்த கல்வி கற்ற திறன்மிக்க திறன்சாரா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் தொழிற்சாலைகளை அமைக்க கோகுல்தாஸ் ஆணையம் பரிந்துரையும் செய்துள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>ஆந்திராவில் விசித்திரம்: பெண்ணின் வயிற்றில் இருந்து 14 பேனாக்கள், 5 மரக் கரண்டிகள் அகற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/national/bizarre-case-in-andhra-14-pens-5-wooden-spoons-removed-from-womans-stomach</link><comments>https://www.maalaimalar.com/news/national/bizarre-case-in-andhra-14-pens-5-wooden-spoons-removed-from-womans-stomach#comments</comments><guid isPermaLink="false">962f78fd-234f-4725-af22-0abed24d62b6</guid><pubDate>Tue, 08 Sep 2026 05:55:02 +0000</pubDate><atom:updated>2026-09-08T05:55:02.589Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Andhra,ஆந்திரா,Laparoscopic procedure,Wooden Spoons,Pica Syndrome,பல்நாடு மாவட்டம்,நரசராவ்பேட்டை,லாப்ரோஸ்கோபி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/uh81jcl6/ccc.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bizarre incident in Andhra]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/uh81jcl6/ccc.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அப்பெண் இவ்வளவு பொருட்களை எவ்வாறு விழுங்கினார் என்பது குறித்து ஆராய்ந்தபோது, அவர் கடந்த 10 ஆண்டுகளாகப் மனநலப் பாதிப்பினால் சிகிச்சையில் இருந்து வந்தது தெரியவந்தது. </p><p>ஆந்திரப் பிரதேசம், பல்நாடு மாவட்டம், நரசராவ்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பெட்லூரிவாரிபாலெம் கிராமத்தைச் சேர்ந்த 33 வயது பெண் ஒருவர், கடந்த சில நாட்களாகக் கடுமையான நெஞ்சு மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். வலியின் தாக்கம் அதிகரித்ததையடுத்து, அவரது குடும்பத்தினர் அவரை நரசராவ்பேட்டையில் உள்ள மாதாஸ்ரீ என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.</p><h2>ஸ்கேனி<strong>ங் பரிசோதனை</strong>யில் அதிர்ச்சி</h2><p>மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்குக் முதல்கட்டப் பரிசோதனைகள் மற்றும் வயிற்றுப்பகுதி ஸ்கேனிங் செய்யப்பட்டது. ஸ்கேன் அறிக்கையைப் பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அப்பெண்ணின் வயிற்றுக்குள் ஏராளமான அநாவசியப் பொருட்கள் உள்கொள்ளப்பட்டுச் சிக்கியிருப்பது தெரியவந்தது.</p><h2>லாப்ரோ<strong>ஸ்கோபி சிகிச்சை</strong></h2><p>மருத்துவர் பி.ராமசந்திர ரெட்டி தலைமையிலான நிபுணர் குழுவினர், பெண்ணுக்கு உடனடியாக '<a href="https://www.maalaimalar.com/news/national/father-held-for-smuggling-rs-1-crore-gold-in-babys-diaper">லாப்ரோஸ்கோபி</a>' எனும் நுண் துளை அறுவை சிகிச்சையைத் தொடங்கினர். வயிற்றுப் பகுதியில் சிறிய துளையிட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவை சிகிச்சையின் மூலம், பெண்ணின் வயிற்றிலிருந்து மொத்தம் 14 பேனாக்கள், 5 மரக் கரண்டிகள் மற்றும் 1 மெழுகுவர்த்தி ஆகிய 20 பொருட்கள் பத்திரமாக வெளியே எடுக்கப்பட்டன.</p><p>வெளியே எடுக்கப்பட்ட பேனாக்களில் ஒன்றின் மூடி கழன்ற நிலையில் இருந்தது. அந்தப் பேனாவின் கூர்மையான பகுதி பெண்ணின் வயிற்றின் உட்புறச் சுவரில் குத்தியதால் தான் அவருக்குத் தாங்க முடியாத அளவு கடுமையான வலியும் அசௌகரியமும் ஏற்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது அப்பெண் நலமாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறார்.</p><p>அப்பெண் இவ்வளவு பொருட்களை எவ்வாறு விழுங்கினார் என்பது குறித்து ஆராய்ந்தபோது, அவர் கடந்த 10 ஆண்டுகளாகப் மனநலப் பாதிப்பினால் சிகிச்சையில் இருந்து வந்தது தெரியவந்தது. மேலும், இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே அவரது கணவர் அவரை விவாகரத்து செய்துள்ளார். உணவு அல்லாத பிற தேவையற்ற பொருட்களை உண்ணும் ‘பைகா சின்ட்ரோம்’ அல்லது தீவிர மன அழுத்தப் பாதிப்பே பெண்ணின் இந்தச் செயலுக்குக் காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் கணித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்பில் மிரட்டும் &apos;என்ன விலை&apos; டிரெய்லர்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/karunas-nimisha-sajayan-starrer-ennavilai-trailer</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/karunas-nimisha-sajayan-starrer-ennavilai-trailer#comments</comments><guid isPermaLink="false">b92784cb-a7d7-47ff-9b05-704945748d82</guid><pubDate>Tue, 08 Sep 2026 05:51:42 +0000</pubDate><atom:updated>2026-09-08T05:51:42.570Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>நிமிஷா சஜயன்,Nimisha Sajayan,Karunas,கருணாஸ்,Sam CS,Enna Vilai,என்ன விலை,Sajeev Pazhoor</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/mx305k7m/Enna-Vilai-Trailer" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Enna Vilai Trailer]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/mx305k7m/Enna-Vilai-Trailer?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேசிய விருது பெற்ற மலையாளத் திரைக்கதை ஆசிரியர் சஜீவ் பாழூர் இயக்கத்தில், நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/karunas">கருணாஸ் </a>மற்றும் பிரபல நடிகை நிமிஷா சஜயன் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள 'என்ன விலை' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.</p><h2>நீதிமன்ற பின்னணியில் ஒரு பரபரப்பான கதைக்களம்</h2><p>தற்போது வெளியாகியுள்ள '<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88">என்ன விலை</a>' திரைப்படத்தின் டிரெய்லர், இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே நடக்காத ஒரு விசித்திரமான மற்றும் மிகவும் அரிய வழக்கை மையமாகக் கொண்டு கதை நகர்வதை உணர்த்துகிறது.</p><p>டிரெய்லரின் தொடக்கத்திலேயே வழக்கறிஞர் ஒருவர், "மை லார்ட், இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே முதல் முறையாக..." என வாதாடும் வசனம் படத்தின் மீதான எதிர்பார்ப்பைக் கூட்டுகிறது.</p><p>இப்படத்தில் கருணாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். <a href="https://www.maalaimalar.com/topic/nimisha-sajayan">நிமிஷா சஜயன்</a> வழக்கறிஞராக நடித்துள்ளார். </p><p>ஒரு முக்கிய சமூக அல்லது மாநிலப் பிரச்சனைக்கு இந்த வழக்கு எப்படி காரணமாக அமைகிறது என்பதை விறுவிறுப்பான நீதிமன்றக் காட்சிகளுடன் டிரெய்லர் வெளியாகி விறுவிறுப்பான கதைக்களத்தைக் கொண்டுள்ளது.</p><h2>நட்சத்திரப் பட்டாளம்</h2><p>இப்படத்தில் கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயனுடன் இணைந்து விஜயலட்சுமி வீரமணி, கமலேஷ் ஜெகன், சேத்தன் சீனு, மோகன் ராமன், பூர்ணிமா பாக்யராஜ், தீபா சங்கர், டி.எஸ்.ஆர் சீனிவாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/KmQg4xxu18U"></iframe></figure><h2>தொழில்நுட்பக் குழு</h2><p>தேசிய விருது பெற்ற சஜீவ் பாழூர் எழுத்து மற்றும் இயக்கத்தில், 'விக்ரம் வேதா', 'கைதி' படப்புகழ் சாம் சி.எஸ் இசையமைப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு ஆல்பி ஆண்டனி ஒளிப்பதிவையும், ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பையும் கையாண்டுள்ளனர்.</p><p>'களமயா சினிவெர்ஸ்' வழங்கும் கிதேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் டிரெய்லர் பின்னணி இசை மற்றும் டொல்பி அட்மாஸ் ஒலிப்பதிவு ஆகியவை மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளன.</p><p>தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிகட்டத்தில் உள்ள இத்திரைப்படம், செப்டம்பர் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>திடீர்ன்னு சாமி வந்துடுச்சு.. சட்டசபையில் ஆவேசமாக துள்ளிய திமுக எம்.எல்.ஏ! </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/suddenly-possessed-dmk-mla-leaps-about-furiously-in-the-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/suddenly-possessed-dmk-mla-leaps-about-furiously-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">0f569b2c-2297-42e0-9693-70504e558409</guid><pubDate>Tue, 08 Sep 2026 05:50:54 +0000</pubDate><atom:updated>2026-09-08T05:50:54.502Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,தமிழக சட்டசபை,திமுக எம்எல்ஏ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/dgu96ips/tn-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சட்டசபை  ]]></media:title><media:description type="html"><![CDATA[ சட்டசபை  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/dgu96ips/tn-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அவையில் இருந்து வெளியேற்றப்படும் திமுக எம்எல்ஏ சாமி ஆடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-8-september-2026">தமிழ்நாடு சட்டசபை</a>யில் சர்காரியா அறிக்கை குறித்து நேற்று முதலமைச்சர் விஜய் பேசியது குறித்து அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று தி.மு.க. தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-ministers-remarks-cannot-be-expunged-from-the-house-records-speaker-asserts-firmly">சபாநாயகர் </a>நிராகரித்தார். </p><p>சபாநாயகர் பேசிக்கொண்டு இருக்கும்போதே, அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும், நீக்க வேண்டும் என்று தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.</p> <h2>வெளியேற்றம்</h2><p>அப்போது பேசிய அவை முன்னவர் செங்கோட்டையன், 2 நாட்களாக பிரச்சனையில் ஈடுபடும் திமுக உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்றுங்கள் என்றார்.</p><p>இருப்பினும் சபாநாயகர், தி.மு.க. கொறடா எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுவதற்கு நான் அனுமதி தருகிறேன், அனைவரும் இருக்கையில் அமருங்கள் என பல முறை கூறினார். ஆனால் தி.மு.க. உறுப்பினர் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டு அமளி செய்தனர்.</p><p>இதனால் அவை காவலர்களை அழைத்து அமளியில் ஈடுபடும் தி.மு.க. உறுப்பினர்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து அவைக் காவலர்கள் தி.மு.க. உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்றினர்.</p> <h2>சாமி ஆடிய எம்எல்ஏ</h2><p>அதன்படி திமுக எம் எல் ஏ க்களை அவைக்காவலர்கள் வெளியேற்ற முற்பட்ட போது வால்பாறை தொகுதி திமுக எம் எல் ஏ குட்டி (எ) சுதாகர் சாமி வந்ததுபோல் ஆவேசம் அடைந்தார்.</p><p>சட்ட சபையில் கோஷம் எழுப்பிய படி தரையில் அமர்ந்திருந்த அவர் திடீரென துள்ள ஆரம்பித்தார்.</p> <p>இதைப் பார்த்த சபாநாயகர், அவருக்கு உடல்நிலை சரியில்லை பாதுகாப்பாக அப்புறப்படுத்துங்கள் என்று கேட்டுக்கொண்டார்.</p><p>அதை தொடர்ந்து 5 பேர் அவரை பாதுக்காப்பாக பத்திரமாக வெளியேற்றினார்கள்.</p><p>அப்போது அவர் தனக்கு திடீரென சாமி வந்து விட்டதாக தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>பிரிட்டன் திரும்பினாலும் ஹாரி-மேகன் ஜோடிக்கு அரச குடும்ப அந்தஸ்து இல்லை : மன்னர் சார்லஸ் அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/world/harry_meghan_to_be_treated_as_private_citizens_not_royal_representatives_says_king_charles</link><comments>https://www.maalaimalar.com/news/world/harry_meghan_to_be_treated_as_private_citizens_not_royal_representatives_says_king_charles#comments</comments><guid isPermaLink="false">aaf56af4-5600-4a98-9700-6b6e8c355973</guid><pubDate>Tue, 08 Sep 2026 05:44:40 +0000</pubDate><atom:updated>2026-09-08T05:44:40.004Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>King Charles,மன்னர் சார்லஸ்,Royal Family,British,பிரிட்டன்,Prince Harry Meghan,ஹாரி மேகன்,DukeOfSussex,Sandringham Agreement</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/0en0e7ow/Prince-Harry-Meghan" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Prince Harry Meghan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/0en0e7ow/Prince-Harry-Meghan?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அரச குடும்பப் பொறுப்புகளில் இருந்து விலகி, தற்போது <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D">பிரிட்டன் </a>திரும்பியுள்ள <a href="https://www.maalaimalar.com/topic/prince-harry">இளவரசர் ஹாரி</a> மற்றும் மேகன் ஜோடி, அரச குடும்பத்தின் பிரதிநிதிகளாக அல்லாமல் 'தனிப்பட்ட குடிமக்களாகவே' கருதப்படுவார்கள் என்று பிரிட்டன் மன்னர் சார்லஸ் அதிகாரப்பூர்வமாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D">மன்னர் சார்லஸ்</a> தரப்பில் இருந்து திங்கட்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ கடிதத்தில், கடந்த 2020-ஆம் ஆண்டு அரச குடும்பப் பொறுப்புகளில் இருந்து ஹாரி-மேகன் தம்பதியினர் விலகியபோது ஒப்புக்கொள்ளப்பட்ட 'சாண்ட்ரிங்ஹாம் ஒப்பந்தத்தின்' விதிமுறைகள் தற்போதும் அவர்களுக்குப் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.</p><h2>பாதி உள்ளே, பாதி வெளியே</h2><p>இந்தக் கடிதம் இளவரசர் ஹாரியின் குழுவினர், அரசுத் துறைகள், ராணுவ அதிகாரிகள் மற்றும் லார்ட் லெப்டினன்ட்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.</p><p>அதில் கூறப்பட்டுள்ளதாவது, டக் மற்றும் டச்சஸ் ஆஃப் சசெக்ஸ் (ஹாரி - மேகன்) ஆகியோர் இனி அரச குடும்பத்தின் பணிபுரியும் உறுப்பினர்கள் அல்ல.</p><p>அவர்கள் எந்தவொரு பொது நிகழ்ச்சிகளிலும் பிரிட்டன் மன்னரின் பிரதிநிதிகளாகச் செயல்பட முடியாது. தங்களுக்குரிய '<a href="https://www.maalaimalar.com/news/world/harry-and-meghan-plan-permanent-return-to-england">ஹெச்.ஆர்.ஹெச்</a>' என்ற அரச குடும்பப் பட்டங்களை அவர்கள் பயன்படுத்தக் கூடாது.</p><p>அவர்களின் அறக்கட்டளை மற்றும் வணிகப் பணிகள் அனைத்தும் அவர்களின் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தவை. </p><p>சுருக்கமாகக் கூறின், அவர்கள் வணிக மற்றும் தொண்டு நோக்கங்களைக் கொண்ட தனிப்பட்ட குடிமக்களாகவே நடத்தப்படுவார்கள்.</p><p>அரச குடும்பப் பணிகளில் இருந்துகொண்டே தனிப்பட்ட வணிக நலன்களையும் கவனிக்கும் "பாதி உள்ளே, பாதி வெளியே" என்ற நிலைக்கு அரச குடும்பத்தில் இடமில்லை என்பது இதன் மூலம் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><h2>பாதுகாப்பு பிரச்சனை</h2><p>பிரிட்டனில் தங்களுக்கு வழங்கப்படும் போலீஸ் பாதுகாப்பு போதுமானதாக இல்லை என்று இளவரசர் ஹாரி தொடர்ந்து புகார் கூறி வரும் நிலையில், இந்தக் கடிதம் அதற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.</p><p>இவர்களது பாதுகாப்பு தொடர்பான எந்தவொரு செயல்பாட்டுப் பிரச்சினைகளும் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளிடமே நேரடியாகக் கொண்டு செல்லப்பட வேண்டும் என்றும், இதற்கும் அரச குடும்பத்திற்கும் தொடர்பில்லை என்றும் கடிதத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.</p><h2>மீண்டும் பிரிட்டன் திரும்பிய தம்பதி</h2><p>கடந்த 2020-ஆம் ஆண்டு அரச குடும்பப் பொறுப்புகளைத் துறந்து அமெரிக்காவின் கலிபோர்னியாவிற்குச் சென்ற ஹாரி-மேகன் தம்பதி, சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் மீண்டும் பிரிட்டன் திரும்பினர்.</p><p>அரச குடும்பத்தில் நிலவிய நிறவெறிப் போக்கு, ஊடகங்களின் எல்லை மீறிய தலையீடு மற்றும் குடும்பக் கசப்புகள் காரணமாக அவர்கள் பிரிட்டனை விட்டு வெளியேறினர்.</p><p>தற்போது பிரிட்டன் திரும்பியுள்ள மேகன், வரும் வாரங்களில் சில தொண்டு நிறுவனப் பணிகளில் ஈடுபட உள்ளார். இளவரசர் ஹாரியும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளார்.</p><p>மேலும், இவர்களது குழந்தைகளான இளவரசர் ஆர்ச்சி மற்றும் இளவரசி லிலிபெட் காட்ஸ்வொல்ட்ஸ் பகுதியில் உள்ள அவர்களது இல்லத்திற்கு அருகிலுள்ள பள்ளியில் சேர்க்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.</p><p>எனினும், இவர்களின் வருகை அரச குடும்பப் பணிகளுக்குத் திரும்புவதைக் குறிக்காது என்பதை மன்னரின் கடிதம் திட்டவட்டமாக உணர்த்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தோப்பு வெங்கடாசலம் மனுவை நிராகரித்தது ஐகோர்ட்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-hc-dismissed-thoppu-venkatachalam-petition</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-hc-dismissed-thoppu-venkatachalam-petition#comments</comments><guid isPermaLink="false">726949df-fa59-4383-a8f2-0e6b7479c53e</guid><pubDate>Tue, 08 Sep 2026 05:44:14 +0000</pubDate><atom:updated>2026-09-08T05:44:14.269Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,ADMK,அதிமுக,சென்னை ஐகோர்ட்,Madras HC,பெருந்துறை தொகுதி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/zknnh4wq/MadrasHC.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/zknnh4wq/MadrasHC.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பெருந்துறை தொகுதி அதிமுக எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயக்குமாரின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.</strong></em></p><p>கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெருந்துறை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜெயக்குமார், 9 ஆயிரத்து 693 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அதன்பின்னர், தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த ஜெயக்குமார், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தார்.</p><p>இதனிடையே,தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தோப்பு வெங்கடாசலம், ஜெயக்குமாரின் வெற்றியை எதிர்த்து <a href="https://www.maalaimalar.com/topic/சென்னை-ஐகோர்ட்">சென்னை ஐகோர்ட்டில்</a> தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி ஜெயக்குமார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><p>இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி, தோப்பு வெங்கடாசலம் தாக்கல் செய்த தேர்தல் வழக்கில் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட எந்த காரணங்களும் இல்லை எனக்கூறி, ஜெயக்குமாரின் மனுவை ஏற்று, தோப்பு வெங்கடாசலத்தின் தேர்தல் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டுள்ளார்.</p><p>பெருந்துறை தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில், தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளதால், தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கக்கூடாது என தொடரப்பட்ட வழக்கில் இடைத்தேர்தல் அறிவிக்க ஐகோர்ட்  தலைமை நீதிபதி அமர்வு இடைக்காலத் தடை விதித்திருந்தது என்பதும், தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இருந்து சமீபத்தில் விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>திபெத் பனிப்பாறை சரிவு பேரழிவு: சீன ஆய்வாளர்களின் அதிர்ச்சித் தகவல்!</title><link>https://www.maalaimalar.com/news/world/tibet-glacier-collapse-disaster-chinese-researchers-shocking-report</link><comments>https://www.maalaimalar.com/news/world/tibet-glacier-collapse-disaster-chinese-researchers-shocking-report#comments</comments><guid isPermaLink="false">a067a9ef-abe2-44b4-8258-730f7b6e4c2c</guid><pubDate>Tue, 08 Sep 2026 05:35:52 +0000</pubDate><atom:updated>2026-09-08T05:35:52.611Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Nepal disaster,Tibet glacier collapse,Chinese researchers,திபெத் பனிப்பாறை சரிவு,திபெத்திய பீடபூமி,நேபாள வெள்ளப்பபெருக்கு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/23golues/gka.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tibet glacier collapse ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/23golues/gka.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>லங்டாங் லிருங் மலையின் உயர் பகுதியில் சுமார் 5,200 மீட்டர் உயரத்தில் இருந்த பனிப்பாறை மற்றும் பாறைப் பகுதிகள் திடீரென சரிந்து வீழ்ந்துள்ளன. </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/sudden-flood-disaster-raises-questions-over-kathmandu-tibet-railway-bri-dream-project">திபெத்</a> மற்றும் நேபாள எல்லைப் பகுதியில் அண்மையில் நடந்த கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவுக்குப் பின்னால் புவி வெப்பமயமாதலின் கொடூரப் பங்கு இருப்பதாக சீன அறிவியல் அகாடமியின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சீன-நேபாள எல்லையில் ஆகஸ்ட் 26 அன்று நிகழ்ந்த பனிப்பாறை உடைப்பு, பெரும் சேதத்தை ஏற்படுத்திய நிலையில், அது குறித்த விரிவான ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.</p><h2>7 நிமிடங்களி<strong>ல் 22 கி.மீ பா</strong>ய்ந்த பேராபத்து</h2><p>லங்டாங் லிருங் மலையின் உயர் பகுதியில் சுமார் 5,200 மீட்டர் உயரத்தில் இருந்த பனிப்பாறை மற்றும் பாறைப் பகுதிகள் திடீரென சரிந்து வீழ்ந்துள்ளன. இவ்வாறு சரிந்த பனி, பாறை மற்றும் களிமண் கலவை வெறும் 6 முதல் 7 நிமிடங்களுக்குள் 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜிரோங் துறைமுகப் பகுதியைச் சென்றடைந்துள்ளது. மலையிலிருந்து சரிந்து வரும் வழியில் பாயும் ஆற்றின் படுக்கையிலிருந்த மணல், கற்கள் மற்றும் கரைகளின் இடிபாடுகளை இழுத்துக் கொண்டு வந்ததால், இது அதிவேகக் களிமண் வெள்ளமாக மாறியது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.</p><h2>கடந்த 60 <strong>ஆண்டுகளில் 24% சரிந்த பனி</strong>ப்பரப்பு</h2><p>சீன தேசிய காலநிலை மையத்தின் தகவலின்படி, கடந்த 60 ஆண்டுகளில் திபெத்திய பீடபூமியில் இருந்த பனிப்பாறை பரப்பளவு 51,000 சதுர கிலோமீட்டரிலிருந்து 39,000 சதுர கிலோமீட்டராகக் குறைந்துள்ளது. இதன்மூலம் சுமார் 24 சதவீத பனிப்பாறைகள் உருகி மறைந்துள்ளதாகவும், 7,000 சிறிய பனிப்பாறைகள் முற்றிலுமாக அழிந்துவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>திபெத்திய பீடபூமிப் பகுதியில் உள்ள பனிப்பாறைகளின் கட்டமைப்பு நிலைத்தன்மை வரும் நாட்களில் மேலும் பலவீனமடையும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். வழக்கமான கனமழை அல்லது ஏரிகள் உடைவது போன்ற எச்சரிக்கை அறிகுறிகள் இன்றி, உயர் மலைப்பகுதிகளில் திடீரென ஏற்படும் இத்தகைய பனிப்பாறைச் சரிவுகளைக் கண்டறிவது தற்போதைய தொழில்நுட்ப அமைப்புகளுக்கு சவாலாக உள்ளது. இதனால், செயற்கைக்கோள் அடிப்படையிலான நவீன கண்காணிப்பு முறைகளை உடனடியாக அதிகரிக்க வேண்டுமென வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. உறுப்பினர்கள், எடப்பாடி பழனிசாமியை பாராட்டி பேசிய சபாநாயகர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/speaker-jcd-prabhakar-praise-tvk-members-and-edappdi-palaniswami</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/speaker-jcd-prabhakar-praise-tvk-members-and-edappdi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">399d7177-ff64-4e58-87fb-1ff3ab6931c6</guid><pubDate>Tue, 08 Sep 2026 05:32:26 +0000</pubDate><atom:updated>2026-09-08T05:32:26.710Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,JCD Prabhakar,ஜேசிடி பிரபாகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/uy5spdte/speaker.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்]]></media:title><media:description type="html"><![CDATA[ சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/uy5spdte/speaker.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> சர்காரியா அறிக்கை குறித்து நேற்று முதலமைச்சர் விஜய் பேசியது குறித்து அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று தி.மு.க. தரப்பில் இன்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தனது தீர்ப்பை கூறினார். அதில், முதலமைச்சரின் பதிலுரையில் குறிப்பிட்ட எதையும் அவைக்குறிப்பில் இருந்து தேவையில்லை, நீக்க முடியாது என்றார். இதையடுத்து சட்டசபையில் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். </p><p>இதனால் தி.மு.க. உறுப்பினர்களை வெளியேற்றுமாறு அவைக்காவலர்களுக்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் உத்தரவிட்டார். இதையடுத்து அவைக்காவலர்கள் தி.மு.க. உறுப்பினர்களை வெளியேற்றினர். </p><p>இதன்பின், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பேசியதாவது:-</p><p>* திமுகவினர் பேசுவதற்கு அனுமதி கொடுப்பது தான் நான் செய்த தவறா?</p><p>* சபையை நடத்தவிடாமல் தடுக்க வேண்டும் என திமுகவினருக்கு உள்நோக்கம் உள்ளது.</p><p>* அவையின் மாண்பு தான் முக்கியம், திமுகவினரை வெளியேற்றியதை தவறாக கருதவில்லை.</p><p>* பிற்பகல் 1.30 மணிக்குள்ளாக சட்டசபையை முடிக்க வேண்டும்.</p><p>* அவையை முடிக்கவிடாமல் திமுகவினர் தடுத்தால் நான் என்ன செய்ய முடியும்?</p><p>* முதலமைச்சர் பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்க முடியாது என்பதற்கு காரணத்தையும் கூறி விட்டேன்.</p><p>* தவெக எம்எல்ஏக்கள் அமைதி காத்தது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. </p><p>* என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என பார்த்துக்கொண்டிருந்தார் எடப்பாடி பழனிசாமி என்றார். </p>]]></content:encoded></item><item><title>ரூ.2000 கோடி.. மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் எ.வ. வேலு செய்த வேலை - சட்டசபையில் ஆதவ் அர்ஜுனா புகார் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-2000-crore-the-move-made-by-ev-velu-in-the-confidence-of-returning-to-poweraadhav-arjuna-levels-allegations-in-the-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-2000-crore-the-move-made-by-ev-velu-in-the-confidence-of-returning-to-poweraadhav-arjuna-levels-allegations-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">2458f3a7-14ce-40bf-b38a-9b9216aeceee</guid><pubDate>Tue, 08 Sep 2026 05:29:03 +0000</pubDate><atom:updated>2026-09-08T05:29:03.854Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,Aadhav Arjuna,ஆதவ் அர்ஜுனா,Tamil Nadu Legislative Assembly,E.V. Velu,எ.வ. வேலு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/9m5i58ma/tn-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஆதவ் அர்ஜுனா, எ.வ. வேலு]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆதவ் அர்ஜுனா, எ.வ. வேலு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/9m5i58ma/tn-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆதவ் அர்ஜுனா, திமுக கொறடா எ.வ. வேலு குறித்த  பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.</p><p>சட்டசபையின் கடைசி நாள் இன்று. நேற்று முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/vijay">விஜய் </a>காவல்துறை மானிய கோரிக்கை பதிலுரையில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-ministers-remarks-cannot-be-expunged-from-the-house-records-speaker-asserts-firmly">சர்க்காரியா கமிஷன் </a>குறித்து பேசியவற்றை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை சபாநாயகர் மறுத்த நிலையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். </p><p>இதையடுத்து அவை நடவடிக்கைகள் தொடர்தன. </p><p>அப்போது எழுந்த விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுக கொறடா எ.வ. வேலு குறித்த குற்றச்சாட்டை முன்வைத்தார். </p> <p>ஆதவ் அர்ஜுனா அவையில் பேசியதாவது, "சட்டப்சபையின் உரிமை மீறல் பிரச்னையை நாங்கள் கொண்டுவந்தோம். </p><p>தமிழ்நாடு சட்டசபை விதிகளின் கீழ் முன்னாள் அமைச்சர் மற்றும் இன்றைய எம்எல்ஏ எவ வேலு 2021 - 2026 ஆம் காலகட்டத்தில் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணி துறை அமைச்சராக இருந்தபோது 14.1.2026 நாளிட்ட அரசாணை எண் 06 மூலம் 2026-27 ஆம் ஆண்டிற்கான சிஆர்ஐடிபி திட்டத்தின் கீழ் 80 பணிகளுக்கு ரூ.2000 கோடி முன்கூட்டிய நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, அத்தொகை 2026-27 இல் மொத்த திட்ட அனுமதிக்குள் சரிசெய்யப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. </p><p>ஆனால் அந்த நேரத்தில் அந்த மானிய கோரிக்கைக்கள் சட்டசபையில் அப்போது வாக்களிக்கப்பட்டு நிறைவேற்றப்படவில்லை. </p><p>இருப்பினும் இப்பணிகளுக்கு ஒப்பந்தங்கள் கோரப்பட்டு 2025-26 நிதியாண்டிலே 80 பணி ஆணைகளும் வழங்கப்பட்டு எதிர்கால பட்ஜெட் புரொவிஷன் மீது ரூ.2000 கோடி காமிட்ட் லயபிலிட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இது சட்டமன்ற நடைமுறைக்கு எதிரானது.</p><p>சட்டமன்றத்தில் ஒப்புதல் இல்லாமலேயே ஆட்சி வந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் எதிர்கால பட்ஜெட்டில் இருந்து ரூ. 2000 கோடியை ஒதுக்கியுளளனர். </p><p>இதனால் மானிய கோரிக்கையை பரிசீலித்து அனுமதி வழங்கும் சட்டசபையின் அதிகாரம் செயல்முறையில் பறிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பொறுப்பற்ற செயல் குறித்த அறிக்கையை ஆய்வக்கு சட்டமன்றம் அனுப்ப வேண்டும் என கோருகிறேன்" என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்குக்கு வழி சொல்கிறார் முதலமைச்சர்- எ.வ.வேலு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ev-velu-indictment-cm-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ev-velu-indictment-cm-vijay#comments</comments><guid isPermaLink="false">ee457877-b141-41b1-8b0d-e317a510952b</guid><pubDate>Tue, 08 Sep 2026 05:13:50 +0000</pubDate><atom:updated>2026-09-08T05:13:50.801Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,kn nehru,தமிழக சட்டசபை,கேஎன் நேரு,ev velu,எவ வேலு,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/q9ln2jpq/evvelu.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ செய்தியாளர் சந்திப்பில் எ.வ.வேலு]]></media:title><media:description type="html"><![CDATA[ செய்தியாளர் சந்திப்பில் எ.வ.வேலு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/q9ln2jpq/evvelu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>காவல்துறை மானியக்கோரிக்கை மீது எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலளிக்கவில்லை என்று எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">சட்டசபையில்</a> நேற்று சர்காரியா அறிக்கை தொடர்பாக முதலமைச்சர் விஜய் பேசியது குறித்து அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று தி.மு.க. தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இக்கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்ததை தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவைக்காவலர்கள் மூலம் சபையில் இருந்து தி.மு.க. வினர்கள் உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். </p><p>இதை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த கே.என்.நேரு கூறுகையில், </p><p>தி.மு.க.வை அசிங்கப்படுத்தும் நோக்கில் பொய்யான செய்திகளை சினிமா பாணியில் முதலமைச்சர் பேசினார். அமலாக்கத்துறை பற்றி முதலமைச்சர் பேசிய நிலையில் பதிலளிக்க எங்களுக்கு அனுமதி தாருங்கள் என சபாநாயகரிடம் கேட்டோம். அதற்கு நாங்கள் பதில் சொல்லும் முயலும்போது எங்களை அவையில் இருந்து வெளியேற்றி இருக்கிறார்கள் என்றார். </p><p>தி.மு.க. கொறடா எ.வ.வேலு கூறுகையில், </p><p>* எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் பதிலளிப்பார் என எதிர்பார்த்தோம். </p><p>* காவல்துறை மானியக்கோரிக்கை மீது எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலளிக்கவில்லை.</p><p>* மிசாவைப் பற்றி பேசிய போது முதலமைச்சர் விஜய் வெளிப்படுத்திய மோசமான உடல்மொழியை எல்லோரும் பார்த்திருப்பீர்கள். </p><p>* மிசாவில் சிறை சென்ற முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தியாகத்தை கொச்சைப்படுத்தியுள்ளனர். </p><p>* முரசொலி மாறன் குடும்பத்தினரிடம் பணம் வாங்கி படம் நடித்த முதலமைச்சர் அவரை ஏன் கொச்சைப்படுத்தினார்?</p><p>* பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்குக்கு வழி சொல்கிறார் முதலமைச்சர் விஜய்.</p><p>* பெண் மாற்று தலைவரே இதுவரை இல்லை என்று ரீல்ஸ் போடுவதற்காக சத்யபாமாவை சபாநாயகர் இருக்கையில் அமரவைத்தனர் என்றார். </p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் இருந்து தி.மு.க.வினர் அவைக்காவலர்களால் வெளியேற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-members-evicted-from-the-assembly-by-marshals</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-members-evicted-from-the-assembly-by-marshals#comments</comments><guid isPermaLink="false">ecbd125c-054c-4a37-9d93-bf40b7d57bdb</guid><pubDate>Tue, 08 Sep 2026 04:54:13 +0000</pubDate><atom:updated>2026-09-08T04:54:13.612Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தமிழக சட்டசபை,TN assembly,JCD Prabhakar,ஜேசிடி பிரபாகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/qzb0zobr/Assembly.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தி.மு.க.வினர் அவைக்காவலர்களால் வெளியேற்றம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தி.மு.க.வினர் அவைக்காவலர்களால் வெளியேற்றம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/qzb0zobr/Assembly.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அவை காவலர்களை அழைத்து அமளியில் ஈடுபடும் தி.மு.க. உறுப்பினர்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து அவைக் காவலர்கள் தி.மு.க. உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்றினர்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழ்நாடு சட்டசபையில்</a>  சர்காரியா அறிக்கை குறித்து நேற்று முதலமைச்சர் விஜய் பேசியது குறித்து அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று தி.மு.க. தரப்பில் இன்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தனது தீர்ப்பை கூறினார். அதில்,</p><p>முதலமைச்சரின் பதிலுரையில் குறிப்பிட்ட எதையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது என்றார். இதையடுத்து சட்டசபையில் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். </p><p>அப்போது பேசிய சபாநாயகர், இதுபொதுக்கூட்ட மேடை அல்ல, இது உங்கள் கட்சிக்கூட்டம் அல்ல. அவையின் மாண்பை எப்படி குறைக்க வேண்டும் என்று பயிற்சி எடுத்துக்கொண்டு தி.மு.க. உறுப்பினர்கள் வந்துள்ளீர்கள். பேரசையை நடத்தவிடாமல் தடை செய்யும் நோக்கத்திலேயே திமுக உறுப்பினர்கள் வந்துள்ளனர். தி.மு.க. கொறடா எ.வ.வேலு அல்லது கே.என்.நேரு பேச அனுமதி தருகிறேன் என்றார். </p><p>சபாநாயகர் பேசிக்கொண்டு இருக்கும்போதே, அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும், நீக்க வேண்டும் என்று தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். </p><p>அப்போது பேசிய அவை முன்னவர் செங்கோட்டையன், 2 நாட்களாக பிரச்சனையில் ஈடுபடும் திமுக உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்றுங்கள் என்றார். </p><p>இருப்பினும் சபாநாயகர், தி.மு.க. கொறடா எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுவதற்கு நான் அனுமதி தருகிறேன், அனைவரும் இருக்கையில் அமருங்கள் என பல முறை கூறினார். ஆனால் தி.மு.க. உறுப்பினர் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர். </p><p>இதனால் அவை காவலர்களை அழைத்து அமளியில் ஈடுபடும் தி.மு.க. உறுப்பினர்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து அவைக் காவலர்கள் தி.மு.க. உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்றினர். </p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது  - சபாநாயகர் சொன்ன காரணம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-ministers-remarks-cannot-be-expunged-from-the-house-records-speaker-asserts-firmly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-ministers-remarks-cannot-be-expunged-from-the-house-records-speaker-asserts-firmly#comments</comments><guid isPermaLink="false">79bf8e1a-84e4-42dc-9f6e-4e65a2d83517</guid><pubDate>Tue, 08 Sep 2026 04:54:04 +0000</pubDate><atom:updated>2026-09-08T04:54:04.283Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,விஜய்,தமிழக சட்டசபை,சபாநாயகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/e3v99a53/tn-5.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சபாநாயகர் ]]></media:title><media:description type="html"><![CDATA[ சபாநாயகர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/e3v99a53/tn-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய் நேற்று சர்க்காரியா கமிஷன் பற்றி பேசியவற்றை அவைகுறிப்பில் இருந்து நீக்க முடியாது என சபாநாயகர் அறிவித்துள்ளார்.</p> <p>நேற்று காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலுரை அளித்த <a href="https://www.maalaimalar.com/topic/vijay">முதலைச்சர் விஜய்</a>, 1970களில் ஒரு நபர் விசாரணை ஆணையமான சர்க்காரியா கமிஷன், <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-says-mk-stalin-was-not-arrested-under-misa">திமுக ஊழல்கள் </a>செய்ததாக தந்த அறிக்கை பற்றியும் அதை முன்வைத்து கடந்த திமுக ஆட்சியில் அமலாக்கத்துறை அனுப்பிய ஆவணத்தையும் குறிப்பிட்டு பேசினார். </p><p>அதில் குறிப்பாக, வீராணம் திட்டத்தின் கீழ் குழாய் தயாரிப்பு டெண்டருக்காக  அப்போதைய திமுக அரசின் கீழ் முதலமைச்சர் கருணாநிதியின் மருமகன் முரசொலி மாறன்,  சத்யநாராயணா பிரத்ர்ஸ் என்ற நிறுவனத்திடம் இன்ஸ்டால்மென்டில் ரூ.29 லட்சம் லஞ்சம் வாங்கினார் எனவும், சத்யநாராயணா பிரதர்ஸ்க்கு டெண்டர்  ஒதுக்க கருணாநிதி தனது பதவியை தவறாக பயன்படுத்தினார் எனவும் சர்க்காரியா கமிஷன் அறிக்கையை சுட்டிக்காட்டி விஜய் பேசினார். </p><h2></h2><h2>திமுக வலியுறுத்தல்</h2><p>இவை அனைத்தும் குற்றச்சாட்டுகள் தவிர எதுவும் நிரூபிக்கப்படவில்லை ஆதலால், திமுக நேற்று அவையில் கடும் அமளியில் ஈடுபட்டது. மேலும் சபாநாயகர் பேச அனுமதி தராததால் அவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது.</p><p>இந்த சூழலில் இன்று அவை தொடங்கியதும் திமுக கொறடா எவ வேலு, நேற்று முதலமைச்சர் விஜய், சர்க்காரியா கமிஷன் பற்றி பேசிய விஷயங்களை அவைகுறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தினார்.</p> <h2>சபாநாயகர் பதில் </h2><p>இதற்கு பதிலளித்த சபாநாயகர் பிரபாகர்,</p><p>"நேற்று இந்த சபையில் முதலமைச்சர் பதிலுரை அளித்தார். அவர் பேச ஆரம்பித்து முடிக்கும் வரைக்கும் திமுக உறுப்பினர்கள் யாராவது அதை கவனித்து கேட்டீர்களா என மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்.</p><p>எனது அனுமதி இல்லாமல் போஸ்டர்களை எல்லாம் கொண்டுவந்து காண்பித்தீர்கள். அதற்கு நான் நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு நிமிடம் கூட அவர் பேச்சை யாருக்கும் கேட்கவில்லை. சத்தம் போட்டுகொண்டு தான் இருந்தீர்கள்.</p><p>முதலைச்சர் நேற்று அவையில் பேசிய சில ஆதாரங்களை முன்கூட்டியே என்னிடம் காட்டினார். அவைகள் இந்த அவையிலே சர்க்காரியா கமிஷன் பற்றி எப்படி எல்லாம் விரிவாக விவாதிக்கப்பட்டது.</p><p>பலமுறை சொல்லப்பட்ட செய்தியை தான் அவர் படித்தார். புதிதாக எதுவும் சொல்லவில்லை. மிசாவிலே முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டது பற்றி அவர் குறிப்பிடுகிறார். அது உண்மை செய்திதான். முரசொலி மாறன் பற்றி ஏற்கனவே இங்கே குறிப்பிடப்பட்டுள்ள செய்தியை தான் அவர் குறிப்பிட்டார்.</p><p>அமலாக்கத்துறையை பற்றி சொல்லும்போது பொதுத் தளத்தில் இருக்கும் செய்தியை தான் இங்கு ஏற்கனவே சொல்லியிருக்கிறார்கள். அதை அவையில் சொல்வது பொருத்தமானது தான். நீங்கள் (திமுக) ஆட்சியில் இருக்கும்போது அமலாக்கத்துறை வழங்கிய ஆவணங்களை நீங்கள் வெளியிடுவதற்கோ நடவடிக்கை எடுக்கவோ வாய்ப்பில்லாமல் போயிருக்கலாம். ஆனால் புதிய அரசாங்கம், அமலாக்கத்துறை கொடுத்த ஆணவம் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என மக்களின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய இடத்தில் உள்ளது.</p><p>அமலாக்கத்துறை சொன்னத்தை தான் முதலமைச்சர் சொல்லியிருக்கிறாரே தவிர தீர்ப்பு பற்றியோ, அதன் மீதான நடவடிக்கை பற்றியோ அவர் பேசவில்லை.</p><p>ஒரு துறை, ஒரு செய்தியை சொல்லியிருக்கிறது என்று குறிப்பிடுவதில் தவறில்லை. எனவே அவைகுறிப்பில் இருந்து அவர் பேசியதை நீக்க வேண்டிய தேவை இல்லை என்று நான் அறிவிக்கிறேன்" என தெரிவித்தார்.</p><p>இதைத்தொடர்ந்து திமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.</p> ]]></content:encoded></item><item><title>669கிமீ ரேன்ஜ் வழங்கும் புது பிஎம்டபிள்யூ கார் அறிமுகம் - விலை மற்றும் முழு விவரங்கள்</title><link>https://www.maalaimalar.com/automobilenews/newautomobile/bmw-i5-lwb-launched-in-india</link><comments>https://www.maalaimalar.com/automobilenews/newautomobile/bmw-i5-lwb-launched-in-india#comments</comments><guid isPermaLink="false">e2b42fc6-db25-4141-be54-d15ef48d4a88</guid><pubDate>Tue, 08 Sep 2026 04:51:00 +0000</pubDate><atom:updated>2026-09-08T04:51:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Car,BMW,பிஎம்டபிள்யூ,கார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/axari9n5/BMW-i5-LWB.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ BMW i5 LWB]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/axari9n5/BMW-i5-LWB.png?w=280" width="280"></media:thumbnail><category>இது புதுசு (Automobile)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/bmw">பி.எம்.டபிள்யூ.</a> இந்தியா நிறுவனம் தனது i5 LWB மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த எலக்ட்ரிக் செடான் மாடலின் விலை ரூ. 79.60 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என தொடங்குகிறது. இது அதன் ICE 5 சீரிஸ் மாடலை விட ரூ. 3 லட்சம் அதிகம் ஆகும். புதிய பி.எம்.டபிள்யூ. மாடலின் விநியோகம் உடனடியாக தொடங்குகிறது.</p><p>வடிவமைப்பைப் பொறுத்தவரை, புதிய i5 LWB மாடலில் ஃபுல் எல்.இ.டி. லைட்டிங், BMW M-ஸ்போர்ட் டூயல்-டோன் அலாய் வீல்கள், ஒளிரும் கிரில், இழுக்கும் வகை கதவு கைப்பிடிகள், 20-இன்ச் டயர்கள், 5 சீரிஸ் பேட்ஜிங் மற்றும் மெல்லிய டெயில் லைட்கள் இடம்பெற்றுள்ளன. </p><h2>சிறப்பு அம்சங்கள்:</h2><p>அளவீடுகளில் இந்த கார் 5.18 மீட்டர் நீளம், 2.15 மீட்டர் அகலம் மற்றும் 1.52 மீட்டர் உயரம் கொண்டது, மேலும் இதன் வீல்பேஸ் 3.1 கொண்டுள்ளது. இதன் கேபினில், க்ரிஸ்டலைஸ்டு டிரைவ் செலக்டர் மற்றும் டிரைவ் மோட் டயல்கள், 12.3-இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 14.9-இன்ச் சென்டர் ஸ்கிரீன், வீகன் லெதர் அப்ஹோல்ஸ்டரி மற்றும் ஒரு பனோரமிக் கிளாஸ் ரூஃப் ஆகியவை உள்ளன.</p><p>முன் இருக்கை வென்டிலேட் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் சரவுண்ட் லைட்டிங், 4-ஜோன் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், போவர்ஸ் &amp; வில்கின்ஸ் ஆடியோ, பி.எம்.டபிள்யூ. ஓ.எஸ். 8.5 மற்றும் டிஜிட்டல் கீ பிளஸ் ஆகியவை இதன் சிறப்பம்சங்களில் அடங்கும். மேலும், முன் இருக்கைகளின் பின்புறத்தில் தொலைபேசி/டேப்லெட் வைக்கும் செட்பேக் வழங்கப்படுகிறது.</p><p>இந்த மாடல் கார்பன் பிளாக் மெட்டாலிக் நிறத்தில் டைட்டானியம் பிரான்ஸ் அக்சன்ட்கள் செய்யப்பட்டுள்ளன. சில்வர் பிரான்ஸ் இன்டீரியர் அக்சென்ட்களுடன் 'ஃபர்ஸ்ட் எடிஷன்' என்ற என்கிரேவிங் உள்ளது.</p><h2>சார்ஜிங் மற்றும் செயல்திறன்:</h2><p>புதிய பி.எம்.டபிள்யூ. i5 LWB மாடலில் 264 ஹெச்.பி. பவர், 410 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும் RWD என்ஜின் மற்றும் 81.6kWh பேட்டரி பேக் வழங்கப்படுகிறது. இந்த யூனிட் 669 கிலோமீட்டர் வரை செல்லும் என கூறப்படுகிறது. இந்த கார் 6.7 நொடிகளில் 0-100 கிலோமீட்டர் வேகத்தை எட்டுகிறது.</p><p>இத்துடன் 1kW (AC) மற்றும் 160kW (DC) சார்ஜிங் வேகங்கள் ஆதரவு வழங்கப்படுகிறது. இதில் DC சார்ஜிங் மூலம் 33 நிமிடங்களில் பேட்டரியை 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும்.</p><p>பாதுகாப்பு அம்சங்களில் எட்டு ஏர்பேக்குகள், 360° கேமரா மற்றும் பக்கவாட்டு மோதல் பாதுகாப்பு ஆகியவை அடங்கும். குறிப்பிடத்தக்க வகையில், இந்த ஃபர்ஸ்ட் எடிஷன் மாடல் முதலில் 99 யூனிட்டுகளாக மட்டுமே தயாரிக்கப்பட்டது, அவை அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் இன்றும் எதிரொலித்த சர்காரியா அறிக்கை- மு.க.ஸ்டாலின் மிசாவில் கைதாகவில்லை- அமைச்சர் நிர்மல்குமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-says-mk-stalin-was-not-arrested-under-misa</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-says-mk-stalin-was-not-arrested-under-misa#comments</comments><guid isPermaLink="false">872789a9-e61b-46d2-b1df-1df975a71def</guid><pubDate>Tue, 08 Sep 2026 04:34:13 +0000</pubDate><atom:updated>2026-09-08T04:34:13.329Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தவெக,தமிழக சட்டசபை,ev velu,எவ வேலு,TN assembly,tvk,அமைச்சர் நிர்மல்குமார்,minister nirmal kumar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/y8koiaw1/nirmalkumar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் நிர்மல்குமார்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் நிர்மல்குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/y8koiaw1/nirmalkumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மு.க.ஸ்டாலின் கைது குறித்த அமைச்சர் நிர்மல்குமாரின் பேச்சுக்கு தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் அமளி ஏற்பட்டது.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> இன்று பொதுத்துறை, போக்குவரத்து துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. இதற்கு முன்பாக, சர்க்காரியா அறிக்கை குறித்து நேற்று முதலமைச்சர் விஜய் பேசியது தொடர்பாக திமுக கொறடா எ.வ.வேலு பேசினார். அப்போது எ.வ.வேலு பேசியதாவது:-</p><p>* பேரவைக்கு என்று மரபுகள் உள்ளன. முதலமைச்சர் கண்ணியமாகவே பேசுவார். அவை மரபை மீறி முதலமைச்சர் பேசி இருக்கிறார்.</p><p>* நீதி விசாரணையில் இருப்பதை பேச அனுமதி இல்லை.</p><p>* நேற்று பேரவையில் முதலமைச்சர் விஜய் பேசும்போது நாங்கள் அமைதியாகவே இருந்தோம்.</p><p>* அமலாக்கத்துறை அறிக்கையை முதலமைச்சர் விஜய் பேசியது அவையை மீறிய செயல், விதிக்குட்பட்டது அல்ல என்பது திமுக கருத்து.</p><p>* ஜனநாயகத்திற்கு எதிராக வந்த மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையில் இருந்தார் மு.க.ஸ்டாலின்.</p><p>* பெரியார் கொள்கையை ஏற்றுள்ள திராவிட கழக தலைவர் வீரமணி கூட முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் சிறையில் இருந்தார்.</p><p>* நேற்று மாறன் பற்றி முதலமைச்சர் விஜய் பேசினார், அவைக்குள் இல்லாதவர் பற்றி பேசக்கூடாது என விதியில் உள்ளது.</p><p>* கலைஞர் கருணாநிதி மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை என சர்காரியா கமிஷனே கூறிவிட்டது. </p><p>* குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லாததால் வழக்கு தொடர முடியாது என்றும் சர்காரியா கமிஷன் கூறிவிட்டது.</p><p>* சர்காரியா கமிஷன் குறித்து முதலமைச்சர் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்கம் வேண்டும் என்றார். </p><p>இதற்கு பதிலளித்து சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் பேசியதாவது:-</p><p>* விசாரணையையோ நீதிமன்றத்தை பற்றியோ நேற்று முதலமைச்சர் விஜய் பேசவில்லை. </p><p>* கலைஞர் எங்கெங்கு எல்லாம் பணம் வாங்கினார் என்பது ஏற்கனவே சர்காரியா கமிஷனில் உள்ளது. </p><p>* திருட்டு, வழிப்பறி, பெண்கள் குறித்த வழக்கு கூட இருக்கலாம், அது எல்லாம் மிசா வழக்கு ஆகாது. </p><p>* முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்படவில்லை, பெண்கள் தொடர்பான வழக்கிற்கு தான் கைது. </p><p>* 21-வது அம்ச திட்டம் என்று அம்மையார் இந்திரா காந்தி குறித்து மோசமாக பேசியதால் தான் ஸ்டாலின் கைது என்றார். </p><p>மு.க.ஸ்டாலின் கைது குறித்த அமைச்சர் நிர்மல்குமாரின் பேச்சுக்கு தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் அமளி ஏற்பட்டது. </p>]]></content:encoded></item><item><title>200MP கேமரா, 6000mAh பேட்டரியுடன் சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்</title><link>https://www.maalaimalar.com/technology/newgadgets/xiaomi-18-fold-launched-with-200mp-camera-price-features</link><comments>https://www.maalaimalar.com/technology/newgadgets/xiaomi-18-fold-launched-with-200mp-camera-price-features#comments</comments><guid isPermaLink="false">638c0eeb-e00d-45a4-875f-2a35bc09aae9</guid><pubDate>Tue, 08 Sep 2026 04:14:00 +0000</pubDate><atom:updated>2026-09-08T04:14:00.000Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Xiaomi,Foldable Smartphone,மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்,சியோமி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/rs6gnoyq/Xiaomi-18-Fold.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Xiaomi 18 Fold]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/rs6gnoyq/Xiaomi-18-Fold.png?w=280" width="280"></media:thumbnail><category>புதிய கேஜெட்டுகள் (New gadgets)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/xiaomi">சியோமி</a> 18 ஃபோல்ட், நிறுவனத்தின் புதிய புத்தக வடிவ மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்டு 8-ஐ தொடர்ந்து இந்த மாடல் அறிமுகமாகி இருக்கிறது. </p><p>இந்த இரண்டு மடிக்கக்கூடிய <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மார்ட்போன்</a> மாடல்களும் ஒரே மாதிரியாக அகலமான, கச்சிதமான வடிவமைப்பை கொண்டுள்ளன. சியோமி 18 ஃபோல்டு மாடலில் 5.38-இன்ச் கவர் டிஸ்ப்ளே மற்றும் 7.58-இன்ச் ஸ்கிரீன் உள்ளது. இத்துடன் சியோமியின் புதிய Xring O3 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. </p><h2>சிறப்பு அம்சங்கள்:</h2><p>சியோமி 18 ஃபோல்டு மாடலில், 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட 5.38-இன்ச் AMOLED கவர் டிஸ்ப்ளே மற்றும் அதே 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட 7.58-இன்ச் மடிக்கக்கூடிய AMOLED டிஸ்ப்ளே ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன், சியோமி நிறுவனத்தின் 3nm டெகா-கோர் Xring O3 AI முதன்மை SoC மூலம் இயக்கப்படுகிறது.</p><p>இத்துடன் 16GB வரையிலான ரேம் மற்றும் 1TB UFS 4.1 மெமரியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த போன், ஆண்ட்ராய்டு 17 சார்ந்த ஹைப்பர்ஓஎஸ் 4 கொண்டிருக்கிறது.</p><p>புகைப்படங்களை எடுக்க 200MP OIS பிரைமரி கேமரா, OIS கொண்ட 50MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா, 50MP அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்காக, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை மற்றும் முகத்தை அடையாளம் காணும் வசதியை ஆதரிக்கிறது.</p><p>கனெக்டிவிட்டிக்கு டூயல் நானோ-சிம் சப்போர்ட், 5ஜி, வைபை 7, ப்ளூடூத் 6.0, என்எஃப்சி மற்றும் ஒரு யுஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும். இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதிக்காக IP58 மற்றும் IP59 சான்று பெற்றுள்ளது.</p><p>சியோமி 18 ஃபோல்டு மாடல் 6000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது, இது 67W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. விரித்த நிலையில் இது 5.02 மிமீ மற்றும் மடித்த நிலையில் 10.68 மிமீ அளவுடையது, மேலும் இதன் எடை 219 கிராம் ஆகும்.</p><h2>விலை மற்றும் முன்பதிவு:</h2><p>சியோமி 18 ஃபோல்டு மாடலின் 12GB + 256GB வேரியன்ட்டின் ஆரம்ப விலை CNY 10,999 (சுமார் ரூ. 1,55,000) ஆகும். இதன் 12GB + 512GB மாடலின் விலை CNY 11,999 (சுமார் ரூ. 1,69,000) ஆகவும், 16GB + 512GB மாடலின் விலை CNY 12,999 (சுமார் ரூ. 1,83,000) ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. </p><p>LPDDR6 ரேம் கொண்ட உயர் ரக 16GB + 1TB மாடலின் விலை CNY 14,999 (சுமார் ரூ. 2,11,300) ஆகும். இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் கருப்பு, நிஷினோ ரெட் மற்றும் வார்ம் கோல்ட் ஒயிட் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது .</p><p>சியோமி, LPDDR6 ரேம் உடன் கூடிய 16GB + 1TB ரேம் மற்றும் ஸ்டோரேஜ் உள்ளமைப்பில், செராமிக் ஸ்பெஷல் எடிஷன் ஒன்றை CNY 15,999 (தோராயமாக ரூ. 2,25,400) விலையில் வழங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>டெல்லியில்  3 ஆண்டுகளில் 1,133  கட்டிடங்கள் சரிந்து விழுந்து 98 பேர் உயிரிழப்பு - அச்சத்தில் வாழும் மக்கள் 
</title><link>https://www.maalaimalar.com/news/national/1133-buildings-collapsed-and-98-people-lost-their-lives-in-delhi-over-three-years-residents-living-in-fear</link><comments>https://www.maalaimalar.com/news/national/1133-buildings-collapsed-and-98-people-lost-their-lives-in-delhi-over-three-years-residents-living-in-fear#comments</comments><guid isPermaLink="false">a82c87b0-652d-45b2-8566-85a5be4dd571</guid><pubDate>Tue, 08 Sep 2026 04:12:44 +0000</pubDate><atom:updated>2026-09-08T04:12:44.501Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கட்டிட விபத்து,Building Collapse,hostel,தங்கும் விடுதி,delhi,டெல்லி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/ocw1o5i3/tn-4.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டெல்லி]]></media:title><media:description type="html"><![CDATA[ டெல்லி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/ocw1o5i3/tn-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் மூன்று ஆண்டுகளில் மட்டும் 1,133 கட்டிடச் சரிந்து விழுந்து அதில் மொத்தம் 98 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது. </p> <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF">டெல்லியில் </a>சத்ய நிகேதன் பகுதியில் டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் சுமார் 50 பேர் தங்கியிருந்த தனியார் விடுதி கட்டிடம் கடந்த ஞாயிறன்று இடிந்து விழுந்ததில் 7 பேர் கொல்லபட்டனர்.</p><p>இந்த சம்பவம் தலைநகரில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் ஏற்கனவே டெல்லியில் நிகழ்ந்த பல்வேறு கட்டிட விபத்து சம்பவங்கள் கவனம் பெற்று வருகின்றன.</p><p>இந்த விபத்து வெறும் தனிப்பட்ட சம்பவமாக அல்லாமல் தலைநகர் டெல்லி முழுவதிலும் உள்ள கட்டிடங்களின் பாதுகாப்பு குறித்த பெரும் கேள்வி எழுந்துள்ளது.</p> <h2>முறைகேடு</h2><p>இந்த <a href="https://www.maalaimalar.com/news/national/delhi-lodge-building-accident-owner-arrested-in-rajasthan">விடுதி கட்டிட விபத்து</a> சமபவத்தில் டெல்லி மாநகராட்சி நடத்திய முதற்கட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>வெறும் 165 அடி பரப்பளவில் கட்டப்பட்ட இந்த 5 மாடிக் கட்டிடத்திற்கு மாநகராட்சியின் அனுமதி பெற்ற வரைபடம் எதுவும் இல்லை.</p><p>மேலும், கட்டிடத்தின் அடித்தளத்தில்உரிய அனுமதியின்றி புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்ததும், அனுமதிக்கப்பட்ட அவளை 5வது தளம் கட்டப்பட்டதும் தெரியவந்துள்ளது.</p><p>விதிகளின்படி 9 மீட்டருக்கு மேல் உயரமும், 20க்கும் மேற்பட்ட மாணவர்களும் தங்கும் விடுதிகளுக்கு தீயணைப்புத் துறையின் தடையில்லாச் சான்றிதழ் கட்டாயம். ஆனால், இந்த விடுதிக்கு எந்தவித அனுமதியும் பெறப்படவில்லை.</p> <h2>நடவடிக்கை</h2><p>விபத்தைத் தொடர்ந்து கட்டிடத்தின் உரிமையாளர் ஹரிராம் குப்தா, அவருடைய மனைவி ஊர்மிளா மற்றும் மகன் மகேஷ் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>அதேபோல, சட்டவிரோத கட்டுமானத்தைக் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்ததாக டெல்லி மாநகராட்சியின்5 அதிகாரிகள் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.</p> <h2>அதிர்ச்சி புள்ளிவிவரம்</h2><p>இதனிடையே தான் டெல்லி தீயணைப்புத் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் டெல்லியில் கட்டிடங்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.</p><p>டெல்லியில் 2022ஆம் ஆண்டில் 349 கட்டிடச் சரிவு சம்பவங்கள் பதிவாகியுன. இதில் 43 பேர் உயிரிழந்தனர்.</p><p>2023இல் 371 கட்டிட சரிவு சம்பவங்களில் 23 பேரும், 2024 இல் 413 கட்டிட சரிவு சம்பவங்களில் 32 பேரும் பலியாகினர்.</p><p>ஒட்டுமொத்தமாக 2022 முதல் 2024 வரையிலான மூன்று ஆண்டுகளில் மட்டும் 1,133 கட்டிடச் சரிவு சம்பவங்கள் பதிவாகி, மொத்தம் 98 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>2026ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் மட்டும் (ஜனவரி முதல் ஜூலை வரை) 233 கட்டிடச் சரிவு அழைப்புகள் பெறப்பட்டு, அதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்; 101 பேர் காயமடைந்துள்ளனர்.</p><h2>சத்ய நிகேதன் சோதனை</h2><p>சத்ய நிகேதன் பகுதி, தொடக்கத்தில் குறைந்த குடியிருப்புகளை கொண்ட பகுதியாகவே இருந்துள்ளது. ஆனால் டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகம் இங்கு அமைந்துள்ளதால் சிக்கல் எழுந்தது.</p><p>பல்கலைக்கழக விடுதிகளில் போதிய இடமில்லாமல், மாணவர்களின் தேவையைப் பயன்படுத்தி, குடியிருப்பு வீடுகள் அனைத்தும் அனுமதி இன்றி பல மாடி தனியார் விடுதிகளாகவும் உணவகங்களாகவும் மாற்றப்பட்டன.</p><p>ஒரு சதுர கிலோமீட்டருக்கு 11,320 பேர் வாழும் அடர்த்தியான டெல்லியில், இது போன்ற கட்டுப்பாடற்ற மற்றும் சட்டவிரோதக் கட்டிட மாற்றங்களே தொடர் விபத்துக்களுக்கு முக்கியக் காரணமாக அமைகின்றன.</p>]]></content:encoded></item><item><title>நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்!- மாணிக்கம் தாகூர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-indictment-bjp-govt-2</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-indictment-bjp-govt-2#comments</comments><guid isPermaLink="false">ccd4d006-a24c-4c1c-9a02-1d63c4de64a1</guid><pubDate>Tue, 08 Sep 2026 04:12:22 +0000</pubDate><atom:updated>2026-09-08T04:12:22.326Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,தற்கொலை,நீட் தேர்வு,மாணிக்கம் தாகூர்,Neet exam,Manickam Tagore</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/ob52yb8t/manickamtagore.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/ob52yb8t/manickamtagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மாணவர்களின் தொடர் மரணங்களை ஒரு தீவிரமான பிரச்சனையாகவே கருதாமல், தமிழகத்தின் நியாயமான குரலைத் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வரும் மக்கள் விரோத பாஜக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன் என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.</strong></em> </p><p>தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><h2><strong>தற்கொலை</strong></h2><p>பல்லாவரத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/நீட்-தேர்வு">நீட் தேர்வு</a> அழுத்தத்தால் தம்பி சாய் அபினவ் தற்கொலை செய்து கொண்ட செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.</p><p>​"இனி ஒரு உயிர்கூட நீட் தேர்வால் போகக்கூடாது" என்று மக்கள் மன்றத்தில் நாங்கள் தொடர்ந்து குரல் எழுப்பி போராடி வருகிறோம். ஆனால், கல்நெஞ்சம் கொண்ட நரேந்திர மோடி  அரசு அதை ஒரு துளியும் காதுகொடுத்துக் கேட்கத் தயாராக இல்லை!</p><p>இன்னும் எத்தனை மாணவர்களின் ரத்தம் இந்த பாஜக அரசுக்குத் தேவைப்படுகிறது? மாணவர்களின் தொடர் மரணங்களை ஒரு தீவிரமான பிரச்சனையாகவே கருதாமல், தமிழகத்தின் நியாயமான குரலைத் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வரும் மக்கள் விரோத பாஜக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.</p><h2><strong>துணை நிற்போம்</strong></h2><p>அன்பு மாணவச் செல்வங்களே, தற்கொலை எதற்கும் தீர்வல்ல; ஒருபோதும் இதுபோன்ற விபரீத முடிவுகளை எடுக்காதீர்கள்! இந்த அநீதியான நீட் தேர்வுக்கு எதிராக நாம் அனைவரும் ஓரணியில் திரண்டு போராடி நிச்சயம் தீர்வு காண்போம். நாங்கள் உங்கள் பக்கம் என்றும் துணை நிற்போம்.</p><p>மாணவர்களின் உயிரோடு விளையாடும் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்! என்று பதிவிட்டுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">பல்லாவரத்தில் நீட் தேர்வு அழுத்தத்தால் தம்பி சாய் அபினவ் தற்கொலை செய்து கொண்ட செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.<br><br>​&quot;இனி ஒரு உயிர்கூட நீட் தேர்வால் போகக்கூடாது&quot; என்று மக்கள் மன்றத்தில் நாங்கள் தொடர்ந்து குரல் எழுப்பி போராடி வருகிறோம். ஆனால், கல்நெஞ்சம் கொண்ட <a href="https://x.com/narendramodi?ref_src=twsrc%5Etfw">@narendramodi</a> அரசு அதை…</p>&mdash; Manickam Tagore .Bமாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) <a href="https://x.com/manickamtagore/status/2097161577640480945?ref_src=twsrc%5Etfw">September 8, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>அக்கவுண்ட் இல்லாமலும் அழைப்புகளில் இணையலாம் - வாட்ஸ்அப்-இல் வரப்போகும் புது அப்டேட்</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/whatsapp-may-allow-people-without-an-account-to-join-calls</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/whatsapp-may-allow-people-without-an-account-to-join-calls#comments</comments><guid isPermaLink="false">6358ee4a-0c76-4dd3-9eb1-8875ebcc2182</guid><pubDate>Tue, 08 Sep 2026 03:32:00 +0000</pubDate><atom:updated>2026-09-08T03:32:00.000Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>செயலி,WhatsApp,Apps,வாட்ஸ்அப்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2024/03/08/2016845-whatsapp-logo.webp" width="1500"><media:title type="html"><![CDATA[ Whatsapp Logo]]></media:title><media:description type="html"><![CDATA[ Whatsapp Logo]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2024/03/08/2016845-whatsapp-logo.webp?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலகின் முன்னணி குறுந்தகவல் செயலிகளில் ஒன்று <a href="https://www.maalaimalar.com/topic/whatsapp">வாட்ஸ்அப்</a>. அவ்வப்போது செயலிகளில் புது அம்சத்தை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில், வாட்ஸ்அப் விரைவில் புதிதாக "கெஸ்ட் காலிங்" (guest calling) என்ற அம்சத்தினை வழங்க இருக்கிறது. </p><p>தற்போது இந்த அம்சத்திற்கான அப்டேட் வழங்குவதில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இந்த அம்சம், வாட்ஸ்அப் அக்கவுண்ட் இல்லாதவர்களையும் வாட்ஸ்அப் அழைப்புகளில் சேர அனுமதிக்கும். </p><p>இதன் மூலம், பயனர்கள் செயலியை இன்ஸ்டால் செய்யவோ அல்லது அக்கவுண்ட் உருவாக்க தேவையில்லாமல், <a href="https://www.maalaimalar.com/technology">வெப் பிரவுசர்</a> வழியாக நேரடியாக அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.</p><h2>விரைவில் கெஸ்ட் காலிங் அம்சம்:</h2><p>தற்போது, ​​வாட்ஸ்அப் செயலி மற்றும் அக்கவுண்ட் இல்லாத பயனர்களால் வாட்ஸ்அப் அழைப்பில் இணைய முடியாது. இந்த புதிய கெஸ்ட் காலிங் அம்சம் இந்த குறைபாட்டை நீக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, வாட்ஸ்அப் விரைவில் அக்கவுண்ட் இல்லாமலேயே பயனர்களை அழைப்புகளில் இணைய அனுமதிக்கலாம்.</p><p>இது குறித்து WABetaInfo வெளியிட்டுள்ள தகவல்களின் படி, வாட்ஸ்அப் அக்கவுண்ட் இல்லாதவர்கள் பாதுகாப்பான இணைப்பு மூலம் அழைப்புகளில் சேர அனுமதிக்கும் கெஸ்ட் காலிங் அம்சத்தில் வாட்ஸ்அப் பணியாற்றி வருகிறது. </p><p>இந்த செயல்பாடு, வாட்ஸ்அப்பின் ஏற்கனவே உள்ள கெஸ்ட் சாட் வழிமுறையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் என்று கூறப்படுகிறது. இது, வாட்ஸ்அப் பயனர்கள் இந்த மெசேஜிங் தளத்தை பயன்படுத்தாத நபர்களை அழைக்க வழிவகுக்கும்.</p><h2>வெப் பிரவுசரில் வாட்ஸ்அப் அழைப்புகள்:</h2><p>இந்த அம்சத்தின் மூலம், அழைப்பை ஏற்பவர் 'அழைப்புகள்' (Calls) பகுதியில் இருந்து ஒரு அழைப்பு இணைப்பை உருவாக்க முடியும் என்று கூறப்படுகிறது. </p><p>அழைப்பை ஏற்பவர், அழைப்பின் வகையைத் தேர்ந்தெடுத்து, உருவாக்கப்பட்ட இணைப்பை நகலெடுத்து மற்ற பங்கேற்பாளர்களுடன் பகிரலாம். இந்த இணைப்பு, வாட்ஸ்அப் வெப் (WhatsApp Web) தளத்தில் உள்ள அழைப்பு இடைமுகத்தை திறக்கும் என்று சொல்லப்படுகிறது.</p><p>வாட்ஸ்அப் அக்கவுண்ட் இல்லாத பயனர்கள், வாட்ஸ்அப் செயலியை பதிவிறக்கம் செய்யாமலோ அல்லது கணக்கை உருவாக்காமலோ, வெப் பிரவுசரில் அந்த இணைப்பை திறந்து கெஸ்ட்-ஆக அழைப்பில் இணைய முடியும் என்று கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>&quot;படித்தவர்கள் வாழும் பகுதிகளை விட ரெட் லைட் பகுதிகளில் இருந்தே எனக்கு அதிக வாக்குகள் கிடைக்கின்றன&quot; - நிதின் கட்கரி பெருமிதம்</title><link>https://www.maalaimalar.com/news/national/i-receive-more-votes-from-red-light-areas-than-from-localities-where-educated-people-live-nitin-gadkari-says-with-pride</link><comments>https://www.maalaimalar.com/news/national/i-receive-more-votes-from-red-light-areas-than-from-localities-where-educated-people-live-nitin-gadkari-says-with-pride#comments</comments><guid isPermaLink="false">46b31a34-83d9-4999-8ef7-23b5230c60b6</guid><pubDate>Tue, 08 Sep 2026 03:02:56 +0000</pubDate><atom:updated>2026-09-08T03:02:56.325Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,nagpur,Nitin gadkari,நிதின் கட்கரி,நாக்பூர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/n8esd8nr/tn-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நிதின் கட்கரி ]]></media:title><media:description type="html"><![CDATA[ நிதின் கட்கரி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/n8esd8nr/tn-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>படித்த மக்கள் வாழும் பகுதிகளை விடக் குற்றப் பின்னணி கொண்டவர்கள் மற்றும் சிவப்பு விளக்கு பகுதிகள் உள்ள இடங்களில் இருந்தே தனக்கு அதிக வாக்குகள் கிடைப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளார்.</p><p>மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக உள்ள <a href="https://www.maalaimalar.com/topic/nitin-gadkari">நிதின் கட்கரி </a>நேற்று ராஜாஸ்தான் மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். </p><p>அப்போது அவர், நாக்பூரில் உள்ள மிகவும் படித்த மக்கள் வாழும் பகுதிகளில் தனக்கு 70% முதல் 75% வரை மட்டுமே வாக்குகள் கிடைத்ததாகவும், அதே நேரத்தில் குற்றப் பின்னணி (Underworld), பாதாள உலகத் தொடர்புகள் மற்றும் சிவப்பு விளக்கு பகுதிகள் நிறைந்த இடங்களில் 92% வாக்குகள் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.</p><h2>காரணம்</h2><p>அதற்கான காரணத்தை விலக்கிய அவர், "நான் அரசியலில் நல்லவை, கெட்டவை என அனைத்தையும் பரிசோதித்துப் பார்த்துவிட்டேன்.</p><p>அப்பகுதிகளுக்குச் சாலை வசதிகளை அமைத்துத் தந்து, பல்வேறு சமூக நலத்திட்டப் பணிகளை மேற்கொண்டதால் தான் மக்கள் வாக்களித்தார்களே தவிர, நான் குற்றச்செயல்களுக்கு ஆதரவளிப்பதாக இதன் பொருள் அல்ல" என்று தெளிவுபடுத்தியுள்ளார்.</p> <h2>இலவசம்</h2><p>"வாக்காளர்கள் மிகவும் புத்திசாலிகள். அவர்கள் இலவசங்களைப் பெற்றுக்கொண்டாலும், தங்களுக்கு யார் உண்மையாக வேலை செய்வார்கள் என்பதைப் புரிந்து கொண்டுதான் வாக்களிப்பார்கள்" என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>கடந்த காலத்தில் தேர்தலில் போட்டியிட்டபோது வாக்காளர்களுக்கு தலா 1 கிலோ ஆட்டிறைச்சி வழங்கியதாகவும், ஆனால் அந்தத் தேர்தலில் தான் தோல்வியடைந்ததாகவும் அவர் நினைவுகூர்ந்தார்.</p> <p>சில நாட்களுக்கு முன்பு மற்றொரு நிகழ்வில் பேசிய கட்கரி, "என்னால் இனி பழையபடி தீவிரமாகப் பணியாற்ற முடியாது. பொறுப்புகளைப் புதிய தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டும்" என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p>கடந்த 2024 மக்களவை தேர்தலில் நாக்பூர் தொகுதியில் நிதின் கட்கரி தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விகாஸ் தாக்கரேவை விட சுமார் 1 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை (09.09.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-40</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-40#comments</comments><guid isPermaLink="false">82855979-78a1-436e-aa88-474a6203a4cb</guid><pubDate>Tue, 08 Sep 2026 02:48:42 +0000</pubDate><atom:updated>2026-09-08T02:48:42.470Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>மின்தடை,TNEB,மின்சார வாரியம்,Power Cut,தமிழ்நாடு மின்சார வாரியம்,சென்னையில் மின்தடை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/iumo6wv4/powercut3.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மின்தடை]]></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/iumo6wv4/powercut3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</strong></em></p><p>அந்த வகையில், நாளை <a href="https://www.maalaimalar.com/topic/சென்னையில்-மின்தடை">மின் தடை</a> செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (09.09.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.  அதன்படி, நாளை திருவொற்றியூர் பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-</p><h2><strong>போரூர்</strong></h2><p>மூகாம்பிகை நகர், குன்றத்தூர் பிரதான சாலை, ராம் நகர், குமரன் நகர், பெரிய பனிச்சேரி, தண்டலம் பிரதான சாலை, பாபு கார்டன், இரண்டம் கட்டளை, சிக்கராயபுரம், கொள்ளசேரி.</p><h2><strong>ராமாபுரம்</strong></h2><p>முகலிவாக்கம், சபரி நகர், ஸ்ரீ ராம் நகர், சுபஸ்ரீ நகர், கமலா நகர், காமாட்சி நகர், சக்தி நகர், எம்.கே.எம். பள்ளி சாலை, மாரியம்மன் கோவில் தெரு, எல்லையம்மன் கோவில் தெரு, வி.வி. கோவில் தெரு, எஸ்.எஸ். கோவில் தெரு, மவுண்ட் பூந்தமல்லி சாலை, தேஸ்மா கார்டன், கேதார் மருத்துவமனை சாலை.</p>]]></content:encoded></item><item><title>இந்த வார விசேஷங்கள்: 8-9-2026 முதல் 14-9-2026 வரை
</title><link>https://www.maalaimalar.com/spirituality/this-week-specials-8-9-2026-to-14-9-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/this-week-specials-8-9-2026-to-14-9-2026#comments</comments><guid isPermaLink="false">6d1dc4df-4943-4dfe-bc0f-29fa86d1ee93</guid><pubDate>Tue, 08 Sep 2026 02:44:27 +0000</pubDate><atom:updated>2026-09-08T02:44:27.563Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,வழிபாடு,Astrology,this week special,இந்த வார விசேஷங்கள்,worship</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/08/26/17704861-vinayagar.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/08/26/17704861-vinayagar.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>8-ந் தேதி (செவ்வாய்)</h2><p>* பிரதோஷம்.</p><p>* மதுரை நவநீத கிருஷ்ணர், ரெங்க நாதன் திருக்கோலம்.</p><p>* திருச்செந்தூர் முருகன் தங்கக் கயிலாய பர்வத வாகனத்தில் பவனி.</p><p>* தேவகோட்டை, திண்டுக்கல், தேரெழுந்தூர் தலங்களில் விநாயகர் திருவீதி உலா.</p><p>* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கமல வாகனத்தில் பவனி.</p><p>* மேல்நோக்கு நாள்.</p> <h2>9-ந் தேதி (புதன்)</h2><p>* திருச்செந்தூர், பெருவயல் தலங்களில் முருகப்பெருமான் ரத உற்சவம்.</p><p>* மதுரை நவநீத கிருஷ்ணர் ராமாவதாரம், மாலையில் தவழ்ந்த கண்ணன் அலங்காரம். </p><p>* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் வெள்ளி கேடயத்தில் திருவீதி உலா.</p><p>* கீழ்நோக்கு நாள்.</p> <h2>10-ந் தேதி (வியாழன்)</h2><p>* அமாவாசை.</p><p>* திருச்செந்தூர் சுப்பிரமணியர் தெப்ப உற்சவம்.</p><p>* மதுரை நவநீத கிருஷ்ணர் ஆண்டாள் அலங்காரம்.</p><p>* சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.</p><p>* கீழ்நோக்கு நாள்.</p> <h2>11-ந் தேதி (வெள்ளி)</h2><p>* திருவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு.</p><p>* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். </p><p>* திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை பவனி.</p><p>* கீழ்நோக்கு நாள்.</p> <h2>12-ந் தேதி (சனி)</h2><p>* திருக்குறுங்குடி ஸ்ரீநம்பி சன்னிதியில் உறியடி உற்சவம்.</p><p>* உப்பூர் விநாயகப்பெருமான் திருக்கல்யாணம்.</p><p>* சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்மர் புறப்பாடு. </p><p>* மேல்நோக்கு நாள்.</p> <h2>13-ந் தேதி (ஞாயிறு)</h2><p>* முகூர்த்த நாள்.</p><p>* உப்பூர் விநாயகர் ரத உற்சவம்.</p><p>* சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்மர் திருவீதி உலா. </p><p>* தேவகோட்டை, திண்டுக்கல், மிலட்டூர், திருவலஞ்சுழி தலங்களில் விநாயகர் பவனி.</p><p>* சமநோக்கு நாள்.</p> <h2>14-ந் தேதி (திங்கள்)</h2><p>* விநாயகர் சதுர்த்தி. </p><p>* மதுரை நவநீத கிருஷ்ணர் மச்சவதாரம். </p><p>* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.</p><p>* சமநோக்கு நாள்.</p> ]]></content:encoded></item><item><title>72 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறை.. தேசிய திரைப்பட விருது விழா டெல்லியில் இருந்து குஜராத்துக்கு மாற்றம்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/for-the-first-time-in-its-72-year-history-national-film-awards-ceremony-shifting-from-delhi-to-gujarat</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/for-the-first-time-in-its-72-year-history-national-film-awards-ceremony-shifting-from-delhi-to-gujarat#comments</comments><guid isPermaLink="false">d03f364d-b682-432b-adbd-01407abd6f92</guid><pubDate>Tue, 08 Sep 2026 02:26:46 +0000</pubDate><atom:updated>2026-09-08T02:26:46.156Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>குஜராத்,தேசிய திரைப்பட விருதுகள்,தனுஷ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/jjhfbk7d/tn-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தேசிய திரைப்பட விருது விழா]]></media:title><media:description type="html"><![CDATA[ தேசிய திரைப்பட விருது விழா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/jjhfbk7d/tn-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>72வது தேசிய திரைப்பட விருதுகள் விழா  டெல்லிக்கு பதிலாக குஜராத்தில் நடைபெற உள்ளது.</p><p>இந்தியத் திரைப்படத்துறையின் மிக உயரிய விருதாக மத்திய அரசு வழங்கும் தேசிய திரைப்பட விருதுகள்  இருக்கிறது. </p><p>இந்நிலையில் 72வது <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81">தேசிய திரைப்பட விருதுகள்</a> வழங்கும் விழா வரும் செப்டம்பர் 22 அன்று, குஜராத் மாநிலத்தில் உள்ள ஏக்தா நகரில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  </p><p>குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெற்றியாளர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவிக்கவுள்ளார். </p> <h2>டெல்லி டூ குஜராத்</h2><p>1954-இல் தொடங்கப்பட்ட தேசிய திரைப்பட விருது விழாக்கள், 72 ஆண்டு காலமாக தலைநகர் டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தன.</p><p>தற்போது முதன்முறையாக இந்த மரபு உடைக்கப்பட்டு தலைநகருக்கு வெளியே குஜராத்தில் நடைபெறுகிறது.</p><p>1974 முதல் 2022 வரை திரைப்பட விழாக்கள் இயக்ககத்தால் (DFF) நடத்தப்பட்டு வந்த இந்த விழா, 2022 முதல் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் (NFDC) மூலம் நடத்தப்பட்டு வருகிறது.</p> <h2>விருதுகள்</h2><p>2024ஆம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுக்கு இவ்வாண்டு விருதுகள் வழங்கப்பட உள்ளன. விருதுப் பட்டியல் கடந்த ஜூலை மாதம் டெல்லியில் அறிவிக்கப்பட்டது.</p><p>அதன்படி, சிறந்த திரைப்படமாக 'ஆர்ட்டிகிள் 370' படம் இவ்வாண்டு விருதுக்கு தேர்வாகியுள்ளது. சிறந்த நடிகையாக 'ஆர்ட்டிகிள் 370' படத்தில் நடித்ததற்காக யாமி கௌதம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.</p><p>'பிரம்மயுகம்' படத்தில் நடித்த மம்முட்டி மற்றும் 'சந்து சேம்பியன்' படத்தில் நடித்த கார்த்திக் ஆர்யன் ஆகியோருக்கு சிறந்த நடிகர் விருது பகிர்ந்தளிக்கப்படுகிறது.</p> <p>சிறந்த அறிமுக இயக்குநர் விருதுக்கு 'வீர் சவார்க்கர்' படத்தை இயக்கிய ரந்தீப் ஹூடா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.</p><p>சிறந்த ஜனரஞ்சகப் படமாக பிரபாஸின் கல்கி 2898 ஏ.டி தேர்வாகியுள்ளது.</p><p>தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புள்ள சிறந்த படம் என்ற பிரிவில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/mammoottys-mass-introduction-video-from-the-dhanush-starrer-om-chapter-1">தனுஷ் </a>நடித்த 'கேப்டன் மில்லர்' தேர்வாகியுள்ளது.</p><p>தனுஷ் இயக்கி நடித்த 'ராயன்' திரைப்படம் சிறந்த தமிழ் படத்திற்கான விருதுக்கு தேர்வாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 8 செப்டம்பர் 2026: பிரதோஷம்
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-8-september-2026-pradosham</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-8-september-2026-pradosham#comments</comments><guid isPermaLink="false">b8904393-f3f3-496f-a896-11958212e8c8</guid><pubDate>Tue, 08 Sep 2026 02:10:24 +0000</pubDate><atom:updated>2026-09-08T02:10:24.419Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/15/26514511-pradosham.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Siva peruman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/15/26514511-pradosham.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆவணி-22 (செவ்வாய்க்கிழமை)</p><p>பிறை : தேய்பிறை</p><p>திதி :   துவாதசி பிற்பகல் 2.28 மணி வரை பிறகு  திரயோதசி</p><p>நட்சத்திரம் : பூசம் மாலை 5.11 மணி வரை பிறகு ஆயில்யம்</p> <p>யோகம் :  சித்தயோகம்</p><p>ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை</p><p>எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை</p><p>சூலம் : வடக்கு</p><p>நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை</p> <h2>முருகர் தலங்களில் அபிஷேகம், அலங்காரம்</h2><p>பிரதோஷம். மதுரை ஸ்ரீ நவநீத கிருஷ்ண சுவாமி ரங்கநாதன் திருக்கோலம் பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் கமல வாகனத்தில் புறப்பாடு, திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. தேவக்கோட்டை, தேரெழுந்தூர், திண்டுக்கல் தலங்களில் ஸ்ரீ விநாயகப் பெருமான் திருவீதியுலா. சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். </p> <p>திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் தலங்களில் அபிஷேகம், அலங்காரம். திருநெல்வேலி சமீபம் 3-ஆம் நவதிருப்பதி ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை. திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் திருக்கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. எழுந்தருளல். ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமான் பவனி. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் தலங்களில் மாலை ஸ்ரீ சுவாமி ஸ்ரீ அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - கடமை</p><p>ரிஷபம் - வரவு</p><p>மிதுனம் - தாமதம்</p><p>கடகம் - அனுகூலம்</p><p>சிம்மம் - ஆதரவு</p><p>கன்னி - உறுதி</p> <p>துலாம் - ஜெயம்</p><p>விருச்சிகம் - அன்பு</p><p>தனுசு - நன்மை</p><p>மகரம் - அமைதி</p><p>கும்பம் - உற்சாகம்</p><p>மீனம் - பணிவு</p> ]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 8.9.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு சொத்துகள் வாங்கும் யோகமுண்டு
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-8-september-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-8-september-2026#comments</comments><guid isPermaLink="false">74ecb115-1973-4559-b457-5d5ccfe1b51e</guid><pubDate>Tue, 08 Sep 2026 02:00:13 +0000</pubDate><atom:updated>2026-09-08T02:00:13.269Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/12/30/23956404-rasipalan3.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/12/30/23956404-rasipalan3.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>கொள்கைப் பிடிப்போடு செயல்படும் நாள். பிள்ளைகளின் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். தொழிலில் புதியவர்கள் அறிமுகமாவர்.</p><h2>ரிஷபம்</h2><p>கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும் நாள். புதிய உத்தியோகத்திற்காக எடுத்த முயற்சி கைகூடும். நண்பர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் நடைபெறும்.</p> <h2>மிதுனம்</h2><p>யோகமான நாள். அதிகாலையிலேயே வரவு வந்து சேரும். தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும்.</p><h2>கடகம்</h2><p>தகராறு செய்தவர்கள் தானாக விலகும் நாள். தனவரவு திருப்தி தரும். இடம் வாங்கும் முயற்சி கைகூடும். மாற்று மருத்துவம் உடல்நலத்தைச் சீராக்கும்.</p> <h2>சிம்மம்</h2><p>எப்படி நடக்குமோ என்று நினைத்த காரியம் நல்ல விதமாக நடைபெறும் நாள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு.</p><h2>கன்னி</h2><p>பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். ஆக்கபூர்வமாகச் சிந்தித்துச் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.</p> <h2>துலாம்</h2><p>முக்கியப் புள்ளிகளால் முன்னேற்றம் கூடும் நாள். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.</p><h2>விருச்சிகம்</h2><p>சேமிப்பு உயரும் நாள். நண்பர்கள் நல்ல தகவல்களைத் தருவர். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.</p> <h2>தனுசு</h2><p>பக்கத்தில் உள்ளவர்களால் சிக்கல்கள் ஏற்படும் நாள். தொலைபேசி வழித் தகவல் தொல்லை தரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.</p><h2>மகரம்</h2><p>கல்யாண முயற்சி கைகூடும் நாள். கடன் சுமை குறையும். சொத்துகள் வாங்கும் யோகமுண்டு. பொதுவாழ்வில் புகழ் கூடும். உத்தியோக முன்னேற்றம் உண்டு.</p> <h2>கும்பம்</h2><p>ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் மேலோங்கும்.</p><h2>மீனம்</h2><p>பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் அயல்நாட்டு அழைப்புகள் வரலாம்.</p> ]]></content:encoded></item><item><title>தனுஷ் நடிக்கும் &quot;ஓம் - சாப்டர் 1..&quot; மம்மூட்டியின் மாஸான அறிமுக வீடியோ </title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/mammoottys-mass-introduction-video-from-the-dhanush-starrer-om-chapter-1</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/mammoottys-mass-introduction-video-from-the-dhanush-starrer-om-chapter-1#comments</comments><guid isPermaLink="false">f8c0a64b-b57a-468d-a0ef-13b7f8f1d875</guid><pubDate>Tue, 08 Sep 2026 01:55:58 +0000</pubDate><atom:updated>2026-09-08T01:55:58.852Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Mammootty,Dhanush,தனுஷ்,மம்மூட்டி,ஓம் சாப்டர் 1,Om Chapter 1</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/zriugr0f/tn-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/zriugr0f/tn-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் 'ஓம்' படத்தில் மம்மூட்டியின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியாகியுள்ளது. </p> <p>'அமரன்' வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி திரைக்கதை இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/alaga-luva-first-single-from-om-chapter-1-released">ஓம் - சாப்டர் 1</a>’</p><p>தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/mammootty-celebrates-his-75th-birthday-crazy-title-poster-release">மம்மூட்டி </a>முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.</p><p>முன்னணி நடிகைகளான சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.</p> <h2>இசை</h2><p>நேற்று மம்மூட்டி தனது 75வது பிறந்தநாளை கொண்டாடியதை ஒட்டி அவரின் கதாபாத்திர அறிமுக வீடியோவை ஓம் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ 2 நிமிட நீளம் அமைந்துள்ளது.</p><p>இப்படத்தில் மம்மூட்டி பர்மா கார்த்திகேயன் என்ற கடத்தல் மன்னன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அறிமுக வீடியோவில், "பழையன கழிதலும் புதியன புகுதலும்", "பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்" என தமிழ் பழமொழிகளை அள்ளித் தெளிக்கிறார். வீடியோவின் இறுதியில் தனுஷ் உடன் அவர் தோன்றும் பிரேம் தனி ரகம்.</p><p>ஒட்டுமொத்தத்தில் இவ்வீடியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிரச் செய்துள்ளது.</p><p>முன்னதாக நடிகர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘அலாகா லூவா’ பாடல் வெளியாகியிருந்தது. சாய் அப்யங்கர் இசையில் இப்பாடல் வைப் மெட்டீரியல் ஆக வந்திருந்தது.</p> <h2>ரிலீஸ்</h2><p>படத்திற்கு எழில் அரசு கே ஒளிப்பதிவு செய்ய, ஆர். கலைவாணன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். படத்தின் சண்டைக் காட்சிகளைச் சர்வதேச அளவில் புகழ்பெற்ற மாஸ்டர்களான யானிக் பென், கேச்சா ஆகியோர் வடிவமைத்துள்ளனர்.</p><p>பிரமாண்ட பட்ஜெட்டில் பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் அக்டோபர் 16 அன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.</p><p>வொண்டர்பார் ஃபிலிம்ஸ் சார்பில் தனுஷ், ஷ்ரத்தா அகர்வால், அஸ்மத் ஜக்மாக் ஆகியோர் இணைந்து இப்படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/chennai-fuel-price-update-iran-conflict-pushes-crude-oil-up-todays-petrol-and-diesel-rates-announced-2</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/chennai-fuel-price-update-iran-conflict-pushes-crude-oil-up-todays-petrol-and-diesel-rates-announced-2#comments</comments><guid isPermaLink="false">bfc94ecd-053a-4c1c-8e00-9db4c93d5b7c</guid><pubDate>Tue, 08 Sep 2026 01:26:39 +0000</pubDate><atom:updated>2026-09-08T01:26:39.021Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டீசல் விலை,Diesel price,Petrol Price,பெட்ரோல் விலை,இன்றைய பெட்ரோல் விலை,Todays petrol price</media:keywords><media:content height="576" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/1xkldom8/maalai-malar2026-08-14alj4ing3maalai-malar2026-07-28zqvhuwkktn-2.avif" width="1024"><media:title type="html"><![CDATA[ பெட்ரோல், டீசல் விலை நிலவரம்]]></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல், டீசல் விலை நிலவரம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/1xkldom8/maalai-malar2026-08-14alj4ing3maalai-malar2026-07-28zqvhuwkktn-2.avif?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/iran-increases-gasoline-price-for-its-heaviest-consumers-as-economy-struggles">ஈரான் போரினால் </a>மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p><h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது.</p><p>அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.</p><h2>இன்றைய பெட்ரோல், டீசல் விலை</h2><p>அந்த வகையில் இன்றைய (08.09.2026 - செய்வ்வாய்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><h2>கச்சா எண்ணெய் விலை</h2><p>இன்று சர்வதேச சந்தையில் பிரனட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 97.20 டாலர் என விற்பனை ஆகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>இந்து அமைப்பினர் வருகையின்போது பெண் ஊழியர்கள் புறக்கணிப்பு.. போராட்டத்தால் ஈபிள் கோபுரம் மூடல்</title><link>https://www.maalaimalar.com/news/world/female-employees-sidelined-during-visit-by-hindu-group-members-eiffel-tower-closed-due-to-protest</link><comments>https://www.maalaimalar.com/news/world/female-employees-sidelined-during-visit-by-hindu-group-members-eiffel-tower-closed-due-to-protest#comments</comments><guid isPermaLink="false">2b7c06a2-3150-423a-bc6d-5a2c3d138da3</guid><pubDate>Tue, 08 Sep 2026 01:03:41 +0000</pubDate><atom:updated>2026-09-08T01:03:41.255Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>women,பிரான்ஸ்,France,eiffel tower,இந்து அமைப்பினர்,பெண்கள்,ஈபிள் கோபுரம்,Hindu organization members</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/kg1hnijb/tn.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஈபிள் கோபுரத்தில் BAPS அமைப்பினர் விசிட் ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஈபிள் கோபுரத்தில் BAPS அமைப்பினர் விசிட் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/kg1hnijb/tn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p> இந்து அமைப்பினர் வருகையின்போது பெண் ஊழியர்கள் புறக்கணிப்பு காரணமாக வெடித்த போராட்டத்தால் பிரான்சின் புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் மூடபட்டுள்ளது. </p><p>பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உலகப் புகழ்பெற்ற <a href="https://www.maalaimalar.com/topic/eiffel-tower">ஈபிள் கோபுரம்</a> அமைந்துள்ளது. பிரான்ஸ் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் லிஸ்டில் ஈபிள் கோபுரம் நிச்சயம் இருக்கும். </p><p>ஆனால் நேற்று (திங்கள்கிழமை) ஈபிள் டவர் திடீரென மூடப்பட்டது. இதற்கு இந்து மதக் குழுவினர் ஏற்படுத்திய சர்ச்சையே மூல காரணம். </p> <h2>பெண்கள் கூடாது</h2><p>பிரான்ஸில் புதிய கோயில் திறப்பு விழாவிற்காக வந்த சுவாமிநாராயண் சன்ஸ்தா (BAPS) அமைப்பைச் சேர்ந்த 100 பேர் அடங்கிய குழுவினர் கடந்த சனிக்கிழமை ஈபிள் டவரைப் பார்வையிட்டனர்.</p><p>இந்தக் குழுவினர் செல்லும்போது, ஈபிள் டவரில் பணிபுரியும் பெண் ஊழியகர்கள் ஷிப்டில் இருந்து நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு பதிலாக ஆண் ஊழியர்கள் மட்டுமே இருக்கும்படி செய்துள்ளது நிர்வாகம்.</p><p>இந்து மதக் குழுவினரின் வருகையின் போது, பெண் ஊழியர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டதாக கூறி நேற்று ஊழியர்கள் நேற்று திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>இதற்குக் காரணமாக ஈபிள் டவர் சுற்றுலாப் பயணிகளுக்கு நேற்று மூடப்பட்டுள்ளது.</p> <h2>மன்னிப்பு - கண்டனம்</h2><p>ஈபிள் டவரை நிர்வகிக்கும் 'SETE' நிறுவனம், "பெண்களுடனான தொடர்பை குறைக்குமாறு இந்து அமைப்பின் குழுவினர் கோரிக்கை விடுத்தது உண்மைதான், ஆனால் அந்த நிபந்தனையை நிர்வாகம் ஏற்றுக் கொண்டிருக்கக் கூடாது" என தன் தவறை ஒப்புக்கொண்டுள்ளது.</p><p>இந்தச் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள பாரிஸ் BAPS கோயில் நிர்வாகம், "நாங்கள் யாருடைய பிரவேசத்தையும் தடுக்கவில்லை.</p><p>மற்ற பார்வையாளர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் மட்டுமே நேரத்தை ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டோம். பரஸ்பர மரியாதையையே நாங்கள் நம்புகிறோம்" எனக் கூறி மன்னிப்பு கோரியுள்ளது.</p><p>பாரிஸ் மேயர் இமானுவேல் கிரிகோயர் கூறுகையில், "பெண்களை ஒதுக்கி வைக்கும் இத்தகைய நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டது ஏற்றுக்கொள்ள முடியாதது. பிரெஞ்சு மதிப்பீடுகளுக்கு எதிரானது" எனக் கூறி இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p>பிரான்ஸ் தேசிய பேரவைத் தலைவர் யேல் பிரவுன் பிவெட்கூறுகையில், "வெளிநாட்டுப் பார்வையாளர்களின் கோரிக்கைகளுக்காக பெண்கள் ஒதுங்கி நிற்க வேண்டும் என்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது" என சாடியுள்ளார்.</p> <h2>மோடியின் வாழ்த்து</h2><p>இந்தச் சம்பவத்திற்கு முந்தைய நாள் தான், பிரான்ஸின் முதலாவது பெரிய சுவாமிநாராயண் திருக்கோயில் பாரிஸில் கோலாகலமாகத் திறக்கப்பட்டது.</p><p>இந்த கோவிலை இணைய வழியே திறந்து வைத்து பேசிய <a href="https://www.maalaimalar.com/amp/story/news/national/pm-modi-said-india-france-relations-have-reached-new-heights">பிரதமர் மோடி</a>, இந்தியா - பிரான்ஸ் இடையேயான கலை, கலாச்சார மற்றும் அரசியல் உறவுகள் புதிய உயரத்தை எட்டியுள்ளன என்றும், இந்த கோயில் இரு நாடுகளின் கூட்டுறவுக்கு சான்றாக பல நூற்றாண்டுகள் விளங்கும் என்றும் வாழ்த்திப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>பொருளாதார நெருக்கடியால் எரிபொருள் விலையை உயர்த்தியது ஈரான்</title><link>https://www.maalaimalar.com/news/world/iran-increases-gasoline-price-for-its-heaviest-consumers-as-economy-struggles</link><comments>https://www.maalaimalar.com/news/world/iran-increases-gasoline-price-for-its-heaviest-consumers-as-economy-struggles#comments</comments><guid isPermaLink="false">fc8f3e1b-ca1d-4b15-a44b-efe05ae8d309</guid><pubDate>Tue, 08 Sep 2026 00:30:51 +0000</pubDate><atom:updated>2026-09-08T00:30:51.968Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Economy,ஈரான்,Iran,எரிபொருள் விலை,gasoline price</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/p7tzuyt2/Iran-Gasoline.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Iran Gasoline]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/p7tzuyt2/Iran-Gasoline.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாதக்கணக்கில் நீடிக்கும் போரினால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் ஒரு பகுதியாக, அதிக அளவில் பெட்ரோல் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கான விலையை <a href="https://www.maalaimalar.com/topic/Iran">ஈரான்</a> உயர்த்தியதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டிசம்பர் மாதத்திற்கு பிறகு மேற்கொள்ளப்படும் இரண்டாவது விலை உயர்வு இது ஆகும்.</p><p>பெட்ரோல் விலை உயர்வு என்பது மக்கள் மத்தியில் உணர்வுப்பூர்வமான ஒரு விஷயமாகவும், பணவீக்கத்தை அதிகரிக்கக்கூடிய காரணியாகவும் அமையக்கூடியது. </p><p>2019-இல் மேற்கொள்ளப்பட்ட விலை உயர்வு நாடு தழுவிய போராட்டங்களை தூண்டியது. அதை ஒடுக்க <a href="https://www.maalaimalar.com/news/world">அரசு</a> மேற்கொண்ட நடவடிக்கைகளில் 300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><h2>குடும்பங்களுக்கு கூடுதல் வருவாய்:</h2><p>அமெரிக்காவுடனான போரை பற்றி நேரடியாக குறிப்பிடாமல், "தற்போதைய சூழல்" காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. மேலும், இந்த விலை உயர்வு மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாய் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>புதிய நடைமுறையின்படி, மாதத்திற்கு 110 லிட்டர் (29 கேலன்) என்ற ஒதுக்கீட்டிற்கு மேல் பெட்ரோல் வாங்குபவர்கள், இனி ஒரு லிட்டருக்கு 100,000 ரியால்கள் (சுமார் 7 சென்ட்) செலுத்த வேண்டும். இது டிசம்பர் முதல் அவர்கள் செலுத்தி வந்த விலையை விட இரு மடங்கு அதிகமாகும்.</p><h2>நாணய மதிப்பு சரிவு:</h2><p>உலகிலேயே மிகக் குறைந்த பெட்ரோல் விலையைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஈரான் இன்னும் திகழ்கிறது. எனினும், இந்த விலை உயர்வு அந்நாட்டின் 9 கோடியே 20 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு அன்றாட செலவு சுமையை மேலும் அதிகரிக்கிறது.</p><p>ஏற்கனவே அந்நாட்டின் நாணய மதிப்பு வரலாறு காணாத சரிவை சந்தித்து வருகிறது, மேலும் மக்களின் வாங்கும் திறனும் குறைந்துள்ளது. நேற்று (திங்கள்கிழமை) ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு 2.22 மில்லியன் ரியால்களாக இருந்தது.</p><p>அரசுக்கு சொந்தமான எண்ணெய் விநியோக நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கெரமத் வெய்ஸ் கரமி கூறுகையில், புதிய பெட்ரோல் விலை விகிதம் 15 சதவீத நுகர்வோரை பாதிக்கும் என்று தெரிவித்ததாக அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான IRNA செய்தி வெளியிட்டுள்ளது.</p><h2>பெட்ரோல் நுகர்வு:</h2><p>ஆகஸ்ட் மாதத்தில் பெட்ரோல் நுகர்வு நாளொன்றுக்கு 145 மில்லியன் லிட்டராக (38 மில்லியன் கேலன்) உயர்ந்து சாதனை படைத்ததாகவும், அதே வேளையில் உள்நாட்டு உற்பத்தித் திறன் நாளொன்றுக்கு 122 மில்லியன் லிட்டராக மட்டுமே இருந்ததாகவும் அவர் கூறினார். மீதமுள்ள தேவை இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது.</p><p>விலை உயர்வு அதிகப்படியான நுகர்வை குறைக்க உதவும். ஈரானில் பழைய வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்களின் பயன்பாடு, அத்துடன் போதுமான பொதுப் போக்குவரத்து வசதி இல்லாமை ஆகியவை அதிக நுகர்வுக்குக் காரணமென நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ரூ. 1.10 லட்சம் கோடியில் ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல்</title><link>https://www.maalaimalar.com/news/national/govt-clears-rs-110-lakh-crore-proposals-to-buy-military-hardware</link><comments>https://www.maalaimalar.com/news/national/govt-clears-rs-110-lakh-crore-proposals-to-buy-military-hardware#comments</comments><guid isPermaLink="false">b0e57e3f-37b3-4a0c-b60b-d812c16fb971</guid><pubDate>Mon, 07 Sep 2026 23:46:36 +0000</pubDate><atom:updated>2026-09-07T23:46:36.950Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rajnath Singh,ராஜ்நாத் சிங்,Military hardware,ராணுவம் தளவாடங்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/zwuhc3df/Rajnath-Singh.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rajnath Singh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/zwuhc3df/Rajnath-Singh.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/rajnath-singh">ராஜ்நாத் சிங்</a> தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில், முப்படைகளுக்கான ராணுவ தளவாடங்களை வாங்குவதற்கு கொள்கை ரீதியான ஒப்புதலை வழங்கியது. </p><p>இதில், போர் விமானங்களை நவீனமயமாக்குதல் மற்றும் மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்கள், இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி உளவு வாகனங்கள், ரேடார்கள், பால அமைப்புகள் மற்றும் கண்ணிவெடிகளை இடும் கருவிகள் உள்ளிட்டவை ரூ. 1.10 லட்சம் கோடி மதிப்பில் கொள்முதல் செய்யப்படுகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/defence">பாதுகாப்பு துறை</a> ஒப்புதல்களின் ஒரு முக்கிய அம்சம், இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைத்து, உள்நாட்டு கொள்முதலை ஊக்குவிப்பதும், அரசின் 'ஆத்மநிர்பர் பாரத்' முயற்சிக்கு ஊக்கமளிப்பதுமாகும்.</p><p>இது குறித்து பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், "வழங்கப்பட்ட மொத்த தேவை ஏற்பில், ஏறத்தாழ 98 சதவீத கொள்முதல்கள் இந்திய தொழில்துறையில் இருந்தே செய்யப்படும். இது, இந்தியாவில் ஒரு வலுவான பாதுகாப்பு தொழில்துறை தளத்தை உருவாக்குவதில் எங்களது அர்ப்பணிப்பைக் காட்டுகிறது," என்றார்.</p><h2>அதிநவீன வாகனங்கள் கொள்முதல்:</h2><p>ராணுவத்தைப் பொறுத்தவரை, CBRN உளவு வாகனங்கள், அதிவேக வாகனங்கள் (HMVகள்), தானாக இயங்கும் இயந்திரக் கண்ணிவெடி இடும் வாகனங்கள், மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்கள் (ALHகள்), இழுவை டாங்கிகள் மற்றும் சர்வத்ரா பால அமைப்பு ஆகியவற்றைக் கொள்முதல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>CBRN உளவு வாகனங்கள், CBRN நச்சுப் பொருட்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்டறிதல், அடையாளம் காணுதல், கண்காணித்தல் மற்றும் குறித்தல் ஆகிய திறன்களை கொண்டிருக்கும் அதே வேளையில், இழுவை டாங்கிகள் என்பவை, எதிரி கண்ணிவெடிகளில் இருந்து பாதையைத் தெளிவுபடுத்துவதற்காக நிலக்கண்ணிவெடிகளை வெடிக்கச் செய்ய வடிவமைக்கப்பட்ட முன்பக்க அமைப்புடன் கூடிய சிறப்பு இராணுவப் போர் வாகனங்களாகும்.</p><p>கனரக வாகனங்கள் சவாலான நிலப்பரப்புகளில் செயல்பாட்டுத் திறன்கள், தளவாட ஆதரவு மற்றும் இயங்குதிறனை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. "இந்த ஏஎல்ஹெச் வாகனங்கள், ராணுவம் மற்றும் இந்திய விமானப்படைக்காக அனைத்து நிலப்பரப்புகளிலும் மற்றும் செயல்பாட்டுச் சூழ்நிலைகளிலும் சிக்கலான பணிகளை நிறைவேற்றும்," என்று அது கூறியது.</p>]]></content:encoded></item><item><title>பீகார் வெள்ள பாதிப்பு: தேசிய பேரிடராக அறிவிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு தேஜஸ்வி யாதவ் கடிதம்</title><link>https://www.maalaimalar.com/news/national/tejashwi-urges-pm-to-declare-bihar-floods-national-disaster</link><comments>https://www.maalaimalar.com/news/national/tejashwi-urges-pm-to-declare-bihar-floods-national-disaster#comments</comments><guid isPermaLink="false">3c10c01d-aacb-438f-a5dc-8929d643b556</guid><pubDate>Mon, 07 Sep 2026 23:16:44 +0000</pubDate><atom:updated>2026-09-07T23:16:44.490Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tejashwi Yadav,pm modi,Bihar floods,பீகார் வெள்ளம்,பிரதமர் மோடி,s, தேஜஸ்வி யாதவ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/0wulh9iq/bihar-floods.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bihar Floods]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/0wulh9iq/bihar-floods.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பீகாரின் வெள்ள பாதிப்பை “தேசியப் பேரிடராக” அறிவித்து, நிவாரணம், மீட்பு மற்றும் மறுவாழ்வு பணிகளுக்காக ரூ.5,000 கோடி மத்திய உதவித் தொகுப்பை வழங்க வேண்டும் என <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">பிரதமர்</a> நரேந்திர மோடியை எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி பிரசாத் யாதவ் வலியுறுத்தினார்.</p><p>வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தியாரா பகுதிகளை பார்வையிட்ட பிறகு பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், உயர்ந்து வரும் நதி நீர்மட்டம் மற்றும் பரவலான <a href="https://www.maalaimalar.com/topic/bihar-floods">வெள்ளப்பெருக்கு</a> ஆகியவை மில்லியன் கணக்கான மக்களை பாதித்து, இயல்பு வாழ்க்கையை சீர்குலைத்து, பொது உள்கட்டமைப்பை சேதப்படுத்தியுள்ளதாக தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.</p><h2>மீட்புப் பணிகள் போதுமானதாக இல்லை:</h2><p>நெருக்கடியின் தீவிரத்தோடு ஒப்பிடும் போது மாநில அரசின் நிவாரண மற்றும் மீட்புப் பணிகள் போதுமானதாக இல்லை என்றும், கூடுதல் உதவிக்காக மத்திய அரசை வலியுறுத்த தவறியதாக மாநில என்.டி.ஏ. தலைவர்களையும் அவர் குற்றம் சாட்டினார்.</p><p>வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உணவு, பாதுகாப்பான குடிநீர், மருந்துகள், மின்சாரம், கால்நடை தீவனம் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றை பெறுவதற்கு போராடி வருவதாக தேஜஸ்வி யாதவ் கூறினார்.</p><p>துண்டிக்கப்பட்ட பகுதிகளில் கூடுதல் படகுகளையும் மீட்பு வளங்களையும் உடனடியாக அனுப்ப வேண்டும் என்றும், கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக ராணுவம் மற்றும் விமானப்படை ஹெலிகாப்டர்களின் உதவியை அவர் கோரினார்.</p><p>பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் போதுமான உணவு, குடிநீர், மருந்துகள், கால்நடைத் தீவனம் மற்றும் தற்காலிக தங்குமிடங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் தேஜஸ்வி கோரிக்கை விடுத்தார். வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட விவசாயிகள், தொழிலாளர்கள், கால்நடை உரிமையாளர்கள் மற்றும் பிறருக்கு சிறப்பு நிதியுதவி வழங்க அவர் அழைப்பு விடுத்தார்.</p><h2>சுதந்திரமான ஆய்வு நடத்த வேண்டும்:</h2><p>நீண்டகால நடவடிக்கைகளை நாடி, அவர் பீகாருக்கான வெள்ள தடுப்பு திட்டத்தை முன்மொழிந்தார். இத்திட்டம், ஆறு மற்றும் கரை மேலாண்மை, வடிகால் மேம்பாடு, நீர்நிலைகளை புனரமைத்தல் மற்றும் நவீன வெள்ள முன்னறிவிப்பு அமைப்புகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.</p><p>மேலும், நேபாளம் மற்றும் பிற அண்டை நாடுகளுடன் வலுவான நீர் மேலாண்மை ஒருங்கிணைப்பின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். பீகாரின் பேரிடர் மேலாண்மைத் தயார்நிலை மற்றும் அவசரகால நிதிகளின் பயன்பாடு குறித்து ஒரு சுதந்திரமான ஆய்வு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கோரினார்.</p>]]></content:encoded></item><item><title>அச்சுறுத்தல்களுக்கு தீர்க்கமாக பதிலளிக்க ஆயுத படைகளுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது: ராஜ்நாத் சிங்</title><link>https://www.maalaimalar.com/news/national/rajnath-singh-said-armed-forces-given-freedom-resources-to-respond-decisively-to-threats</link><comments>https://www.maalaimalar.com/news/national/rajnath-singh-said-armed-forces-given-freedom-resources-to-respond-decisively-to-threats#comments</comments><guid isPermaLink="false">c0ce0db8-18a0-41ed-989e-fe2b803d039a</guid><pubDate>Mon, 07 Sep 2026 20:29:31 +0000</pubDate><atom:updated>2026-09-07T20:29:31.957Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Rajnath Singh,armed forces,ஆயுத படை,ராஜ்நாத் சிங்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/9wkmt9fj/Rajnath-Singh.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rajnath Singh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/9wkmt9fj/Rajnath-Singh.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>எதிரிகளின் எல்லைக்குள்ளேயே சென்று தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட அச்சுறுத்தல்களுக்கு தீர்க்கமாக பதிலளிப்பதற்கான "சுதந்திரமும் வளங்களும்" இந்திய ஆயுத படைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்  தெரிவித்தார். </p><p>இங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்தியா அமைதியை விரும்புவதாகவும், போரையோ அல்லது எந்தவொரு நாட்டின் நிலப்பகுதியையும் ஆக்கிரமிப்பதையோ அது விரும்பவில்லை என்றும் மீண்டும் வலியுறுத்தினார். </p><p>இருப்பினும், அமைதிக்கும் பலவீனத்திற்கும் இடையே தெளிவான வேறுபாடு உள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.</p><h2>பேச்சுவார்த்தைக்கு இடமிருக்காது:</h2><p>"போர் குறித்த அச்சத்தால் ஏற்படும் அமைதி கண்டிக்கத்தக்கது; அதேவேளையில், அமைதிக்காக நடத்தப்படும் போர் போற்றுதலுக்குரியது. இந்தியாவுக்கு எதிராக ஏதேனும் ஒரு நாடு பயங்கரவாதத்தை ஊக்குவித்தால், பேச்சுவார்த்தைக்கு இடமிருக்காது; மாறாக, நமது பாதுகாப்பு படைகள் தகுந்த பதிலடியை கொடுக்கும் என்பதை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம்," என்று அவர் கூறினார்.</p><p>எதிரிகளின் எல்லைக்குள்ளேயே சென்று தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட அச்சுறுத்தல்களுக்கு தீர்க்கமாக பதிலளிக்க ஆயுத படைகளுக்கு சுதந்திரமும் வளங்களும் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். புவிசார் அரசியல் நிச்சயமற்ற சூழலிலும், இந்தியா தனது சுயமான முடிவெடுக்கும் திறன் மற்றும் மூலோபாய சுதந்திரத்துடன் முன்னேறி வருகிறது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் தனது உரையில் வலியுறுத்தினார்.</p><h2>பாதுகாப்பை எதிரிகள் முயற்சி:</h2><p>ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களை தவறான பாதைக்கு இட்டுச் செல்லுதல், இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு நிதியுதவி அளித்தல், வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை பரப்புதல் மற்றும் சமூகத்தில் பிளவுகளை உருவாக்க முயற்சித்தல் உள்ளிட்ட அனைத்து தீய வழிகளிலும் இந்தியாவின் பாதுகாப்பை குலைக்க எதிரிகள் முயற்சித்ததாக சிங் கூறினார்.</p><p>தவறான பாதையில் சென்ற இளைஞர்களை மீண்டும் நல்வழிக்கு கொண்டு வருதல், மறுவாழ்வு மற்றும் தீவிரவாத சிந்தனைகளை அகற்றும் முயற்சிகளை மேற்கொள்ளுதல், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம், இத்தகைய தீய திட்டங்களை முறியடித்து அனைத்து முனைகளிலும் அரசு பதிலடி கொடுத்துள்ளது என்று அவர் உறுதியாகக் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சண்முக பாண்டியனின் புதிய திரைப்படம் - டைட்டில் வீடியோவை வெளியிட்ட நடிகர் சிவகார்த்திகேயன்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-sivakarthikeyan-releases-shanmuga-pandian-new-movie-title</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-sivakarthikeyan-releases-shanmuga-pandian-new-movie-title#comments</comments><guid isPermaLink="false">0ffc332d-b9f0-4912-9fc8-ac11e8e83f2f</guid><pubDate>Mon, 07 Sep 2026 19:48:30 +0000</pubDate><atom:updated>2026-09-07T19:48:30.316Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>sivakarthikeyan,shanmuga pandian,சண்முக பாண்டியன்,சிவகார்த்திகேயன்,ManiSeon</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/t50wbjrw/SK-and-Shanmuga-Pandian.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ SK and Shanmuga Pandian]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/t50wbjrw/SK-and-Shanmuga-Pandian.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேப்டன் விஜயகாந்த் அவர்களால் துவங்கப்பட்டு, தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை வழங்கிய முன்னணி தயாரிப்பு நிறுவனமான கேப்டன் சினி கிரியேஷன்ஸ் தனது 10-ஆவது மைல்கல் திரைப்படத்தின் படப்பிடிப்பை சென்னையில் பூஜையுடன் மிக பிரம்மாண்டமாக தொடங்கியது.</p><p>இந்தப் படத்தில் கேப்டனின் இளைய மகனான <a href="https://www.maalaimalar.com/topic/shanmuga-pandian">சண்முக பாண்டியன்</a> கதாநாயகனாக நடிக்கிறார். ‘கட்டப்பாவ காணோம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகி கவனம் ஈர்த்த மணி சியோன் இத்திரைப்படத்தை இயக்குகிறார்.</p><h2>தலைப்பு அறிவிப்பு:</h2><p>இன்று காலை சென்னையில் நடைபெற்ற படத்தின் தொடக்க விழாவில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு முறைப்படி கேமராவை ஆன் செய்து படப்பிடிப்பை துவங்கி வைத்தார். இந்த நிலையில், இந்தப் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டது.</p><p>அதன்படி நடிகர் சண்முக பாண்டியன் மற்றும் இயக்குநர் மணி சியோன் இணையும் புதிய படத்திற்கு "கிங் அண்ட் குயின்ஸ்" என தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும், இது குறித்த அறிவிப்பு வீடியோ வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை நடிகர் சிவகார்த்திகேயன் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.</p><h2>படக்குழுவுக்கு வாழ்த்து:</h2><p>முன்னதாக இந்தப் படத்தின் படப்பிடிப்பை பூர்ண ஜோதி சுதீஷ் கிளாப் போர்டை அடித்து துவங்கி வைத்தார். டாக்டர்.ஜானு ஸ்ரீ சுதீஷ், நடிகர் இளவரசு, தம்பி ராமையா, படூர் ரமேஷ், மைனா நந்தினி, இந்திரஜா ரோபோ சங்கர், பட்டிமன்றம் ராஜா, பிரகதி, காயத்ரி ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.</p><p>மேலும், இயக்குநர் திரு மற்றும் ஒளிப்பதிவாளர் அர்வி ஆகியோரும் இவ்விழாவை சிறப்பித்தனர். தயாரிப்பாளர் எல்கே சுதீஷ் எம்.பி தயாரிப்பில், கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் தற்போது அடுத்தடுத்த பிரம்மாண்ட தயாரிப்புகளுடன் தமிழ் சினிமாவில் அதிரடி முத்திரை பதித்து வருகிறது.</p><h2>விறுவிறு படப்பிடிப்பு:</h2><p>ஏற்கனவே இயக்குநர் திரு இயக்கத்தில் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்து வரும் 'வாணவேடிக்கை' திரைப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து, தற்போது பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ள "கிங் அண்ட் குயின்ஸ்" திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்றே தொடங்கி அதிவேகமாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>இந்தப் படத்திற்கு 'மாநகரம்', 'டானாக்காரன்' உள்ளிட்ட பல படங்களுக்கு பணியாற்றிய திறமைமிக்க பிரசன்ன குமார் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளர் மனு ரவிச்சந்திரன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.</p> <figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/hMnj8TX0fVg"></iframe></figure>]]></content:encoded></item><item><title>மகளிர் ஆசிய கோப்பை: ஹாங் காங்-ஐ பந்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி - 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/womens-asia-cup-2026-pakistan-women-beat-hong-kong-women-by-72-runs</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/womens-asia-cup-2026-pakistan-women-beat-hong-kong-women-by-72-runs#comments</comments><guid isPermaLink="false">cc4f96e2-301d-4eb0-b393-3f1041b1cfb4</guid><pubDate>Mon, 07 Sep 2026 18:49:51 +0000</pubDate><atom:updated>2026-09-07T18:49:51.623Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Womens Asia Cup,மகளிர் ஆசிய கோப்பை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/8t01o9wu/Pak-W-Win.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pakistan Women Win]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/8t01o9wu/Pak-W-Win.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகளிர் ஆசிய கோப்பை 2026 டி20 <a href="https://www.maalaimalar.com/sports/cricket">கிரிக்கெட்</a> தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் க்ரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் மற்றும் ஹாங் காங் மகளிர் அணிகள் களம்கண்டன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.</p><p>இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் மகளிர் அணிக்கு தொடக்கம் கொடுத்த முனீபா அலி 6 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இவருடன் களமிறங்கிய ஷவால் சுல்ஃபிகர் அதிரடியாக ஆடி 35 பந்துகளில் 47 ரன்கள் (6 பவுண்டரிகள்) விளாசினார். பிறகு ஜாய்லீன் கௌர் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.</p><h2>பாகிஸ்தான் பேட்டிங்:</h2><p>பிறகு களமிறங்கிய கல் ஃபெரோஸா 3 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய ஆயிஷா சஃபார் 19 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிறகு வந்தவர்களில் துபா ஹாசன் மட்டும் 14 ரன்கள் எடுக்க மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஃபாதிமா சனா மட்டும் 24 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.</p><p>இதையடுத்து பாகிஸ்தான் மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்களை எடுத்தது. ஹாங் காங் மகளிர் அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஜாய்லீன் கௌர் 4 விக்கெட்டுகளையும், இக்ரா சஹர் மற்றும் கேரி சான் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.</p><h2>ஹாங் காங் சொதப்பல்:</h2><p>144 எனும் எளிய இலக்கை துரத்திய ஹாங் காங் மகளிர் அணிக்கு தொடக்கம் கொடுத்த கேப்டன் நடாஷா மைல்ஸ் 1 ரன்னுக்கும், மரிகோ ஹில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய யாஸ்மின் தாஸ்வானி 13 ரன்களிலும், கேரி சான் 47 பந்துகளில் 30 ரன்களை எடுத்தார்.</p><p>இவர்களைத் தொடர்ந்து களமிறங்கியவர்களில் ஜாய்லீன் கௌர் மட்டுமே 10 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் ஹாங் காங் அணி 19 ஓவர்கள் முடிவில் வெறும் 71 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.</p><p>இதனால், பாகிஸ்தான் மகளிர் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் மகளிர் அணி சார்பில் நஷ்ரா சந்து 6 விக்கெட்டுகளையும், ஃபாதிமா சனா, சதியா இக்பால், உம் இ ஹானி மற்றும் ஆயிஷா சஃபர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.</p>]]></content:encoded></item><item><title>போர்களில் மனித உருவ ரோபோக்களை பயன்படுத்த தீவிரம் காட்டும் சீனா</title><link>https://www.maalaimalar.com/news/world/china-plans-to-use-humanoid-robots-in-war</link><comments>https://www.maalaimalar.com/news/world/china-plans-to-use-humanoid-robots-in-war#comments</comments><guid isPermaLink="false">f1f9e53c-8370-4f92-851c-035ab2f8ac6b</guid><pubDate>Mon, 07 Sep 2026 18:13:36 +0000</pubDate><atom:updated>2026-09-07T18:13:36.986Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>China,சீனா,போர்,war,ரோபோட்,Humanoid Robots</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/nbp29aml/humanoid-robot-military.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Humanoid Robot Military]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/nbp29aml/humanoid-robot-military.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த மாதம் <a href="https://www.maalaimalar.com/news/world">சீனாவில்</a> நடைபெற்ற உலக மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகளில், ரோபோக்கள் குதித்தன, குத்துச்சண்டை போட்டன மற்றும் நடனமாடின. சில அதிவேக ரோபோக்கள் 100 மீட்டர் தூரத்தை உசேன் போல்ட்டை விட வேகமாக ஓடின. </p><p>இயந்திரங்களின் மேம்பட்ட திறன்களையும், மீம்களில் இடம்பெற தகுந்த அவற்றின் தடுமாற்றங்களையும் கண்டு பார்வையாளர்கள் ஆரவாரம் செய்தனர்.</p><p>போட்டிகள் முடிந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு, மக்கள் விடுதலை ராணுவத்தின் அதிகாரப்பூர்வ செய்தித்தாள் அந்த நிகழ்ச்சியில் இருந்து தனக்கென சில முடிவுகளை எடுத்தது.</p><p>ஆய்வகங்களில் இருந்து <a href="https://www.maalaimalar.com/topic/robot">ரோபோ</a> "போராளிகளுக்கான" ராணுவ பயிற்சி தளங்களுக்கு அதிநவீன தொழில்நுட்பங்களை மாற்றுவதை ஆராய்ச்சியாளர்கள் விரைவுபடுத்த வேண்டும் என்று பி.எல்.ஏ. டெய்லி அழைப்பு விடுத்தது.</p><h2>போர்க்களத்தில் மனித உருவ ரோபோ:</h2><p>100-க்கும் மேற்பட்ட சீன ராணுவ கொள்முதல் அறிவிப்புகள், கல்விசார் ஆய்வுகள், காப்புரிமைகள், அதிகாரப்பூர்வ வெளியீடுகள், அரசாங்க பதிவுகள் மற்றும் பாதுகாப்பு நிறுவன ஆவணங்கள் ஆகியவற்றை ராய்ட்டர்ஸ் ஆய்வு செய்ததன் படி, சீனாவின் பாதுகாப்பு துறை மனித உருவ ரோபோக்களின் ராணுவப் பயன்பாடுகள் குறித்த ஆராய்ச்சியை துரிதப்படுத்துவதோடு, அவற்றை எதிர்காலத்தில் போர்க்காலத்தில் நிலைநிறுத்துவதற்கான திட்டமிடலையும் மேற்கொண்டு வருகிறது.</p><p>முன்னர் வெளியிடப்படாத பதிவுகளின்படி, ராணுவ நிறுவனங்கள் போர்க்கள தேவைகளுக்கு ஏற்ப மனித உருவ ரோபோக்களை சோதித்து வருகின்றன; அவற்றுக்கு பயிற்சி அளிக்க ரோபோக்களையும் தொழில்நுட்பங்களையும் பெற முயல்கின்றன. மேலும், அவை துருப்புக்களுடன் இணைந்து எவ்வாறு செயல்படக்கூடும் என்பதையும் ஆய்வு செய்கின்றன.</p><p>ரோபோக்களின் புலனுணர்வு, கையாளுதல் மற்றும் பயிற்சி தரவுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்திய இந்த பணிகள், 2025 மற்றும் 2026-ஆம் ஆண்டுகளில் வேகம் பெற்றன.</p><h2>ஏற்றுமதியில் சீனா முன்னிலை:</h2><p>BofA குளோபல் ரிசர்ச் அறிக்கையின்படி, 2025-ஆம் ஆண்டில் உலகளாவிய மனித உருவ வாகன ஏற்றுமதிகளில் சுமார் 95 சதவீதத்தை சீன உற்பத்தியாளர்கள் மேற்கொண்டனர். </p><p>இந்த வணிக ஆதிக்கம், மக்கள் விடுதலை ராணுவத்திற்கு (PLA) விரிவடைந்து வரும் ஒரு தொழில்துறையை அணுகுவதற்கான வாய்ப்பை வழங்குவதோடு, அதன் சொந்த ராணுவ பயன்பாடுகளையும் மேம்படுத்திக்கொள்ள உதவுகிறது.</p><p>சீனாவின் ரோபோ பாதுகாப்பு ஆராய்ச்சி, உலகளவில் ராணுவ தொழில்நுட்பங்கள் எவ்வளவு வேகமாக வளர்ந்து வருகின்றன என்பதை அடிக்கோடிட்டு காட்டுகிறது.</p>]]></content:encoded></item><item><title>கடந்த 6 மாதத்தில் 60,000 சிறார் பிரசவங்கள்: அரசு நலத்திட்டம் ரத்து செய்யப்படும் என சுவேந்து அதிகாரி எச்சரிக்கை </title><link>https://www.maalaimalar.com/news/national/west-bengal-records-60000-minor-deliveries-in-six-months-government-warns-action</link><comments>https://www.maalaimalar.com/news/national/west-bengal-records-60000-minor-deliveries-in-six-months-government-warns-action#comments</comments><guid isPermaLink="false">bf08fc95-6807-47b9-9121-7e95b5e8b494</guid><pubDate>Mon, 07 Sep 2026 16:40:31 +0000</pubDate><atom:updated>2026-09-07T16:40:31.741Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மேற்கு வங்கம்,சுவேந்து அதிகாரி,child marriage,குழந்தை திருமணம்,west bengal,suvendhu adhikari</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/rttacz94/Untitled-design-37.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bihar child marriage]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/rttacz94/Untitled-design-37.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பீகாரில் குழந்தை திருமணம் செய்து கொள்பவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு, அவருக்கு வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகள் திரும்ப பெறப்படும் என அம்மாநில முதலமைச்சர் சுவேந்து அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">பீகார்</a> மாநிலத்தில் இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரை, 18 வயது குறைந்த சிறுமிகளுக்கு சுமார் 60,000 பிரசவங்கள் மருத்துவமனையில் நடைபெற்றதாக மாநில சுகாதார துறை ஒரு அறிக்கை வெளியிட்டது. </p><p>இந்த நிலையில் நபான்னாவில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு மேற்கு வங்கத்தின் முதல்வர் சுவேந்து அதிகாரி செய்தியாளர்களை சந்தித்தார்.  </p><h3><strong>குழந்தை திருமணத்தில் முதலிடம்</strong></h3><p>அப்போது அவர் கூறுகையில், “ஆறு மாத காலப்பகுதியில், முர்ஷிதாபாத்தில் 12,847 சிறுமிகள் மருத்துவமனைகளில் பிரசவித்ததன் மூலம் அதிகபட்ச எண்ணிக்கை பதிவாகியுள்ளது.</p><p>தெற்கு பர்கானாஸ் பகுதி 4,178 வழக்குகளுடன் அடுத்த இடத்தில் உள்ளது. 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளின் குழந்தை திருமணங்கள் மற்றும் பிரசவங்களில் மேற்கு வங்கம் நாட்டிலேயே முதலிடம் வகிக்கிறது.</p><p>18 வயதுக்குட்பட்ட சிறுமி சம்பந்தப்பட்ட ஒவ்வொரு கர்ப்பம் மற்றும் பிரசவ வழக்கும் பதிவு செய்யப்பட வேண்டும்.</p><p>சந்தேகத்திற்கிடமான குழந்தை திருமணங்களைக் கண்டறியவும், அதற்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் சுகாதாரப் பதிவேடுகளைப் பயன்படுத்துவார்கள்.</p><h3><strong>வயது சரிபார்க்கப்படும்</strong></h3><p>சிறுவயதில் திருமணம் செய்து வைக்கப்பட்ட பெண்கள் கண்டறியப்பட்டால், அவர்களின் கணவர்களுக்கு விளக்கம் கோரும் அறிவிப்புகள் வழங்கப்பட்டு, மனைவியின் வயதுக்கான சரியான ஆதாரத்தை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.</p><p>வயதுக்கான சரியான ஆதாரத்தை அவர்கள் வழங்கத் தவறினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>இந்த அதிரடி நடவடிக்கையின் போது கண்டறியப்படும் வழக்குகளில், காவல்துறை குற்றவியல் நடவடிக்கையைத் தொடங்கி, கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளும்.</p><p>குழந்தை திருமணங்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டவர்களிடம் இருந்து நலத்திட்டங்கள் மற்றும் இதர திட்டங்களின் பலன்கள் திரும்பப் பெறப்படும்.</p><p>சிறுவர் திருமணங்களை நடத்தி வைக்கும் அல்லது அதற்கு வழிவகுக்கும் மதகுருக்கள் மற்றும் இதில் ஈடுபடுபவர்களுக்கு சட்டப்படி சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்” என்று அவர் கூறினார்.</p><h3><strong>கடுமையான போக்சோ சட்டம்</strong></h3><p>மேலும், 18 வயதுக்குட்பட்ட பெண்ணுடன், அவர் திருமணமானவரா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் பாலியல் உறவு கொள்வது குற்றமாகும் என்று சுட்டிக்காட்டிய சுவேந்து அதிகாரி, போக்சோ சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் என்று கூறினார்.</p><p>18 வயதுக்குட்பட்ட சிறுமியுடன் உடல் உறவு கொள்வது போக்சோ சட்டத்தின் பிரிவுகளுக்கு உட்பட்டது என்றும், அதற்கான சிறைத் தண்டனை 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையிலும், சில சூழ்நிலைகளில் மரண தண்டனையும் விதிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.</p><p>சிறார் கர்ப்பம் தொடர்பான வழக்குகள் குறிப்பாகக் கடுமையான விசாரணைக்கும் நடவடிக்கைக்கும் உள்ளாகும் என்று மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி கூறினார்.</p>]]></content:encoded></item></channel></rss>