<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 17 Sep 2026 08:27:47 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 17 செப். 2026...
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-17-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-17-september-2026#comments</comments><guid isPermaLink="false">188cc8f4-2e10-453b-a877-d080750f3dbf</guid><pubDate>Thu, 17 Sep 2026 03:55:51 +0000</pubDate><atom:updated>2026-09-17T07:54:31.046Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/wgeqodsr/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live News]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/wgeqodsr/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dharapuram-by-election-tvk-dmk-and-admk-candidates-nomination-papers-accepted">தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக, திமுக, அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனு ஏற்பு</a></p><p>* நாளை மறுநாள் வேட்பு மனுக்கள் வாபஸ் பெறுவதற்கு கடைசி நாளாகும். </p><p>*  2 தொகுதிகளிலும் வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் தி.மு.க.வும் காய் நகர்த்தி வருகிறது.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/27c55c2c-c8fa-4e2d-83b8-3f5c06a0d286">700 வயது.. இந்தியாவில் உள்ள உலகில் உள்ள மிக வயதான ஆலமரம் பற்றி தெரியுமா?</a></p><p>*ஆலமரங்களில் அதன் வயதை கண்டறிய உதவும் வளையங்கள் உருவாவதில்லை.</p><p>*வளையங்களின் எண்ணிக்கையை வைத்து கணிப்பது டென்ட்ரோக்ரோனாலஜி எனும் அறிவியல் முறை </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mupperum-vizha-on-sep-19th">நாளை மறுநாள் தி.மு.க. முப்பெரும் விழா- துரைமுருகன் அறிவிப்பு</a></p><p>* 2026-ம் ஆண்டுக்கான தி.மு.க. முப்பெரும் விழா நேற்று முன்தினம் சென்னை அண்ணா அறிவாலயத்திடல் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.</p><p>* தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக தி.மு.க. முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டது</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-brought-feudal-politics-to-common-people-udayanidhi-stalin">ஜமீன்களிலும் பண்ணைகளிலும் அடைபட்டிருந்த அரசியலை பாமரர்களிடம் சேர்த்தது திமுக: உதயநிதி ஸ்டாலின் புகழாரம்!... </a></p><p>*ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கடந்த 78 ஆண்டுகளில் தமிழ்நாட்டைப் பல்வேறு நிலைகளில் உயர்த்தியதில் திமுகவின் பங்களிப்பு மகத்தானது.</p><p>*அடக்குமுறைகள், நெருக்கடிகள் மற்றும் புதிய எதிர்ப்புகளை கடந்து கழகம் இன்றளவும் வலிமையோடு நடைபோடுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/canada-invited-to-join-the-european-union-trump-turns-red">சிரிப்பு காட்டாதீங்க.. ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய கனடாவுக்கு வந்த அழைப்பு பற்றி டிரம்ப்<br></a><br>*கனடாவுக்கு ஐரோப்பிய ஆணையத்தின் தலைவா் உா்சுலா வான் டொ் லேயன் அழைப்பு விடுத்துள்ளாா்.</p><p>*அமெரிக்காவுக்கு ஏறக்குறைய 70 சதவீத ஏற்றுமதியை செய்து வருகிறது கனடா.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/former-union-minister-sudarsana-natchiappan-has-passed-away">மத்திய முன்னாள் அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்</a></p><p>* காங்கிரஸ் பாரம்பரியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.</p><p>* 1999ல் மக்களவைக்கு சிவகங்கை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/chinese-president-collapsed-after-suffering-a-stroke-upon-arriving-in-delhi-for-the-brics-summit-news-spreading-like-wildfire">"பிரிக்ஸ் மாநாட்டுக்கு டெல்லி வந்தபோது பக்கவாதம் வந்து மயங்கி விழுந்த சீன அதிபர்?.." தீயாக பரவும் தகவல் <br></a></p><p>*பிரதமர் மோடி ஏற்பாடு செய்த இரவு விருந்தில் ஜி ஜின்பிங் கலந்துகொள்ளவில்லை.</p><p>*ஜி ஜின் பிங்கைப் பார்த்து, "எல்லாம் சரியாக இருக்கிறதா?" என்று பிரதமர் மோடி கேட்டதும் விவாதப் பொருளாக இருந்தது.<br></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/pm-modi-birthday-mk-stalin-anbumani-and-annamalai-wishes">பிரதமர் மோடி பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின், அன்புமணி, அண்ணாமலை வாழ்த்து</a></p><p>* பிரதமர் மோடி நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ்ந்து பொதுவாழ்க்கையில் புதிய சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறேன் </p><p>* பிரதமர் மோடியின் இடைவிடாத உத்வேகம் லட்சக்கணக்கானோருக்குத் தொடர்ந்து ஊக்கமளித்து வருகின்றன. </p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-17-9-2026">GOLD PRICE TODAY: சற்றே சரிந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p>* தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. </p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.14,010-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-birthday-wishes-to-pm-modi">பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து</a></p><p>* இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 76-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.</p><p>* வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் பிரதமர் மோடிக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-upgrade-human-resources-and-infrastructure-without-closing-schools">அரசுப் பள்ளிகளின் மூடுவிழா: பள்ளிகளை மூடாமல், மனித வளம் மற்றும் கட்டமைப்பை உயர்த்துக! - அன்புமணி ராமதாஸ்</a></p><p>* அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைவது என்பது கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்கதையாகி வருகிறது. </p><p>* அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை 2024-25ஆம் ஆண்டில் 45.10 லட்சமாக இருந்தது. 2025-26 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 43.03 லட்சமாக குறைந்து விட்டது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/f-15-brought-down-houthis-shoot-down-saudi-warplane-with-a-missile-in-yemen-video">மண்ணோடு மண்ணான F15.. ஏமனில் சவுதி போர் விமானத்தை ஏவுகணையால் துளைத்த ஹவுதிக்கள்- வீடியோ</a></p><p>*ஹவுதிக்களுக்கு எதிராக சவுதி கூட்டுப்படைகள் களமிறங்கியுள்ளது.</p><p>*ஒரே வாரத்தில் சவுதி 450 வானவழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஏமன் குற்றம்சாட்டியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/us-passes-bill-granting-trump-full-authority-to-impose-100-tariffs-on-india">இந்தியா மீது 100% வரிவிதிக்க டிரம்புக்கு முழு அதிகாரம் வழங்கும் மசோதா அமெரிக்காவில் நிறைவேற்றம்</a></p><p>*ரஷியாவின் வர்த்தகத்தை மட்டுப்படுத்தும் பல அம்சங்கள் மசோதாவில் உள்ளன.</p><p>*இந்த மசோதாவில் புதிய சட்டபூர்வ வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijays-visit-to-england-has-proven-to-be-a-successful-one">முதலமைச்சர் விஜயின் இங்கிலாந்து பயணம் வெற்றிப் பயணமாக அமைந்துள்ளது- தமிழ்நாடு அரசு</a></p><p>* தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை விரிவுபடுத்துவதற்கும், நிறுவுவதற்கும் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.</p><p>* லண்டன் சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட் மற்றும் தான் தங்கியிருந்த ஹோட்டலில் சிறப்பான வரவேற்பு வழங்கிய தமிழ்ச் சொந்தங்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-honour-to-periyar">பெரியாரின் கொள்கைத் தடத்தில் பயணிப்போம்- முதலமைச்சர் விஜய்</a></p><p>* தந்தை பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தலைமுறைதோறும் தழைத்தோங்கட்டும்!</p><p>* வெற்றித் தமிழகத்தை உருவாக்கும் பயணத்தில் அவரது கொள்கைகள் நமக்கு வழிகாட்டட்டும்!</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thanthai-periyar-birthday-mk-stalin-says-revolutionary-salutations-to-sun-of-rationalism-thanthai-periyar">பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருக்குப் புரட்சி வணக்கம்! - மு.க.ஸ்டாலின்</a></p><p>* ஒரு தலைமுறை பெரியார் நிகழ்த்திய புரட்சியைக் கண்டது.</p><p>* “ஏன்? எதற்கு? எப்படி?” என்ற கேள்விகள் உயிரோடு இருக்கும் வரை, இருள் நம்மை அண்டாது.</p> ]]></content:encoded></item><item><title>தெருநாய்கள் தொல்லையால் ஆத்திரம்: அதிகாரி மேஜையில் நாய்க்குட்டிகளை விட்டு யுவசேனா வினோத போராட்டம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/stray-dogs-anger-yuvasena-protest-puppies-on-officer-desk</link><comments>https://www.maalaimalar.com/news/national/stray-dogs-anger-yuvasena-protest-puppies-on-officer-desk#comments</comments><guid isPermaLink="false">fc4c0b25-68a5-4f82-9785-f862414b8d83</guid><pubDate>Thu, 17 Sep 2026 08:27:21 +0000</pubDate><atom:updated>2026-09-17T08:27:21.017Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>stray dogs,maharashtra state,தெருநாய்கள்,நாசிக்,தெருநாய்கள் கருத்தடை,Yuva Sena,Nashik District,யுவசேனா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/6c2gxcj1/GRH.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ stray dogs]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/6c2gxcj1/GRH.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாசிக் மாவட்டத்தில் உள்ள நிஃபாட் நகர் பஞ்சாயத்து அலுவலகத்தில் அதிகாரிகளின் அலட்சியத்தைக் கண்டித்து ரூபாய் நோட்டு மாலையுடன் போராட்டம் நடைபெற்றது.</p><p>மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டம் நிஃபாட் நகர்ப் பகுதியில் கடந்த சில நாட்களாகத் தெருநாய்களின் தொல்லை கடுமையாக அதிகரித்து வந்துள்ளது. இதனால் அப்பகுதியில் நடந்து செல்லும் சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். </p><p>நாய்கள் கடித்து பலர் காயமடைந்துள்ள நிலையில், தற்போதைய கணபதி விசர்ஜன விழாக் காலத்திலும் மக்கள் நடமாட முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து நிஃபாட் நகர் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பலமுறை மனுக்கள் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.</p><h2>வி<strong>னோத போராட்டம்</strong></h2><p>அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் ஆத்திரமடைந்த சிவசேனாவின் இளைஞர் அமைப்பான <a href="https://www.maalaimalar.com/news/national/pile-of-torn-currency-notes-found-in-park-trader-discarded-them-out-of-fear-of-his-wife">யுவசேனாவின் </a>நாசிக் மாவட்டத் தலைவர் விக்ரம் ரந்தாவே தலைமையில் நிர்வாகிகள் வினோத போராட்டத்தைக் கையிலெடுத்தனர். நிஃபாட் நகர் பஞ்சாயத்து முதன்மை அதிகாரி தீரஜ் பாம்ரேவின் அலுவலகத்திற்குச் சென்ற போராட்டக்காரர்கள், தாங்கள் சாக்கில் அடைத்து எடுத்து வந்த இரண்டு தெருநாய்க்குட்டிகளைப் பிரித்து, அதிகாரியின் அலுவலக மேஜை மீதே திறந்து விட்டனர். திடீரென மேஜை மீது விடப்பட்ட நாய்க்குட்டிகள் அங்குமிங்கும் ஓடி பதற்றத்துடன் காணப்பட்டன.</p><h2>ரூபாய் நோ<strong>ட்டு மாலையுடன் கண்டன</strong> குரல்</h2><p>நாய்க்குட்டிகளை மேஜை மீது விட்டதோடு நிறுத்தாமல், அதிகாரி தீரஜ் பாம்ரேவின் மேஜை மீது ரூபாய் நோட்டுகளால் ஆன மாலை ஒன்றையும் வைத்து யுவசேனா தொண்டர்கள் தங்களுக்கெதிரான எதிர்ப்பைப் பதிவு செய்தனர். நகராட்சிக் கட்டுப்பாடு இல்லாதது குறித்தும், வெறும் டெண்டர் நடைமுறைகளில் மட்டுமே கவனம் செலுத்தி மக்கள் பிரச்சனைகளைப் புறக்கணிக்கும் நிர்வாகப் போக்கை கண்டித்தும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.</p><h2>போ<strong>ராட்டம் எச்சரிக்</strong>கை</h2><p>தெருநாய்களைக் கட்டுப்படுத்த உடனடி கருத்தடை முகாம்களை நடத்த வேண்டும், நாய்களைப் பிடிக்கும் முறையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், பொதுமக்களைத் திரட்டி மீண்டும் அதிகாரியின் அறையிலேயே தெருநாய்களை விட்டுப் பெரிய அளவிலான போராட்டங்களை முன்னெடுப்போம் என்று விக்ரம் ரந்தாவே எச்சரித்துள்ளார். அரசு அலுவலகத்தில் தெருநாய்களை விட்டு அரங்கேறிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம் இடைத்தேர்தல்: பதட்டமான வாக்குச்சாவடிகளில் கலெக்டர் ஆய்வு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/maduranthakam-by-election-collector-inspects-sensitive-polling-stations</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/maduranthakam-by-election-collector-inspects-sensitive-polling-stations#comments</comments><guid isPermaLink="false">f9277efe-bbb8-4b93-851a-e8eb0bbc9d43</guid><pubDate>Thu, 17 Sep 2026 08:23:18 +0000</pubDate><atom:updated>2026-09-17T08:23:18.749Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>by election,Maduranthakam,Chengalpattu Collector,செங்கல்பட்டு கலெக்டர்,மதுராந்தகம் தொகுதி,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/efsoz5bw/collector.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ chengalpattu collector veerappan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/efsoz5bw/collector.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p> மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் பதட்டமான வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வீரப்பன் ஆய்வு செய்தார்.</p><p>மதுராந்தகம்(தனி) சட்டமன்ற தொகுதி <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">இடைத்தேர்தல்</a> வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிந்தது. த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட மொத்தம் 48 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர்.</p> <p>இன்று <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dharapuram-by-election-tvk-dmk-and-admk-candidates-nomination-papers-accepted">வேட்பு மனுக்கள்</a> பரிசீலனை நடைபெறுகிறது. தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. </p><p>இந்த நிலையில் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் பதட்டமான வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள படாளம், மேலவலம் ஆகிய பகுதிகளில் அமைந்து உள்ள 74, 75, 76, 77, 1, 2, 62, 63 ஆகிய வாக்குச்சாடி மையங்களை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வீரப்பன் ஆய்வு செய்தார்.  அப்போது வாக்குச்சாவடியில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். </p> <p>தொடர்ந்து நெல்வாய் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தினை கலெக்டர் வீரப்பன் ஆய்வு செய்து அங்கு மாணவர்களுக்காக சமைக்கப்பட்டு இருந்த உணவினை சாப்பிட்டு பார்த்தார். மேலும் அங்குள்ள அரிசி, மற்றும் பருப்பு ஆகிய உணவு பொருள்களின் இருப்பு குறித்து கேட்டறிந்தார்.</p><p>இதன் பின்னர் மதுராந்தகம் ஏரி கால்வாயில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் வரப்பு கால்வாய் சீரமைப்பு பணிகளையும் கலெக்டர் வீரப்பன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.</p> ]]></content:encoded></item><item><title>நேபாள வெள்ளத்தில்  மாயமானவர்களின் எண்ணிக்கை 6150-ஆக உயர்வு!</title><link>https://www.maalaimalar.com/news/world/nepal-disaster-missing-people-toll-hits-6150</link><comments>https://www.maalaimalar.com/news/world/nepal-disaster-missing-people-toll-hits-6150#comments</comments><guid isPermaLink="false">ba672c9b-891f-49fd-8b63-a16db465f3fd</guid><pubDate>Thu, 17 Sep 2026 08:15:55 +0000</pubDate><atom:updated>2026-09-17T08:15:55.313Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பேரிடர் மேலாண்மை,nepal flood,RescueOperations,NaturalDisaster,நேபாள பெருவெள்ளம்,Tibet Floods</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/jg48d28k/Nepal-Floods" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nepal Flood]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/jg48d28k/Nepal-Floods?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திபெத் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">நேபாளத்தில் </a>அண்மையில் உருவான பிரம்மாண்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி, மாயமானவர்களின் எண்ணிக்கை 6,150 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>முன்னதாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக 1,000 பெயர்கள் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.</p><p>கடந்த மாதம் 26-ஆம் தேதி ஏற்பட்ட இந்த <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D">இயற்கைப் பேரிடர்</a>, நேபாளத்தின் 8 மாவட்டங்களை நிலைகுலையச் செய்துள்ளது.</p><h2><strong>மீட்புப் பணிகளும் உயிரிழப்புகளும்</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88">இமயமலைப் </a>பகுதியில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவின் காரணமாக ஆறுகளில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த காட்டாற்று வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான மக்கள், வீடுகள் மற்றும் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.</p><p>பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடந்த பல நாட்களாக மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போதைய நிலவரப்படி, இந்த கோர விபத்தில் சிக்கி 1,400-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக மீட்புக் குழுவினர் உறுதி செய்துள்ளனர்.</p><h2><strong>அதிகாரப்பூர்வ விளக்கம்</strong></h2><p>வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நடத்தப்பட்ட விரிவான கள ஆய்வுகளுக்குப் பிறகே மாயமானவர்களின் எண்ணிக்கை 6,150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. </p><p>இதுகுறித்து நேபாள பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் <strong>சாந்தி மஹத்</strong> செய்தியாளர்களிடம் கூறும்போது.</p><p>"வெள்ளம் பாதித்த அனைத்து மாவட்ட அலுவலகங்களிலிருந்தும் காணாமல் போனவர்கள் குறித்த துல்லியமான விவரங்களைச் சேகரித்தோம். </p><p>அந்த விபரங்கள் அனைத்தையும் முழுமையாகச் சரிபார்த்த பின்னரே, தற்போது அதிகாரப்பூர்வ தரவுகளைத் திருத்திப் புதிய பட்டியலை வெளியிட்டுள்ளோம்." என்று குறிப்பிட்டுள்ளார்.</p><h2>திபெத் பகுதியிலும் பாதிப்பு</h2><p>நேபாள எல்லையை ஒட்டியுள்ள <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D">திபெத் </a>பகுதியிலும் இந்த பனிச்சரிவு மற்றும் வெள்ளம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. திபெத் பகுதியில் மட்டும் இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 519 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் அண்டை நாட்டு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>ராணுவம் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தங்கி, சேற்றில் புதைந்த உடல்களையும் காணாமல் போனவர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>ராமேஸ்வரம் அருகே மீனவர் வலையில் சிக்கிய சூரை மீன் ரூ.22 ஆயிரத்துக்கு விற்பனை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/giant-tuna-caught-near-rameswaram-sold-for-rs-22k</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/giant-tuna-caught-near-rameswaram-sold-for-rs-22k#comments</comments><guid isPermaLink="false">d0a1f5ae-c848-4c1a-9959-c428d1d454f3</guid><pubDate>Thu, 17 Sep 2026 08:05:42 +0000</pubDate><atom:updated>2026-09-17T08:05:42.159Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>rameswaram,kerala,fisherman,கேரளா,Tuna,சூரை மீன்,ராமேஸ்வரம்,பாம்பன் வடக்கு கடற்கரை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/orv6yzas/dzgfhgghtfgb.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tuna caught in fisherman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/orv6yzas/dzgfhgghtfgb.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராமேஸ்வரம் அருகே மீனவர் வலையில் 112 கிலோ எடை கொண்ட சூரை மீன் சிக்கியது.</p><p>ராமேஸ்வரம் அருகே பாம்பன் வடக்கு கடற்கரையில் இருந்து 6 மீனவர்கள் ஒரு நாட்டுப்படகில் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நடுக்கடலில் மீனவர்கள் வழக்கம்போல் வலையை வீசி மீன்பிடித்தபோது, எதிர்பாராதவிதமாக ராட்சத அளவு கொண்ட மீன் ஒன்று வலையில் சிக்கியது. மிகவும் சிரமப்பட்டு அந்த மீனைப் படகில் ஏற்றி கரைக்குக் கொண்டு வந்து பார்த்தபோது, அது 112 கிலோ எடையும், 6 அடி நீளமும் கொண்ட அரிய வகை சூரை மீன் என்பது தெரியவந்தது.</p><h2><strong>கேரளாவுக்கு அனுப்பி வைப்பு</strong></h2><p>கரைக்கு கொண்டுவரப்பட்ட இந்த பிரம்மாண்ட மீனைக் காண அப்பகுதி மீனவர்களும், பொதுமக்களும், வியாபாரிகளும் திரண்டனர். தொடர்ந்து நடைபெற்ற ஏலத்தில், அந்த சூரை மீனை உள்ளூர் வியாபாரி ஒருவர் ரூ.22,000 கொடுத்து வாங்கினார். பின்னர் அந்த மீன் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு முன்பும் இதே போன்று 106 கிலோ எடை கொண்ட பெரிய சூரை மீன் ஒன்று பாம்பன் மீனவர்கள் வலையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>டெங்கு காய்ச்சல் தடுப்பில் அலட்சியம் ஏன்?- தமிழக அரசுக்கு டி.டி.வி.தினகரன் கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-question-to-tn-govt-for-dengue-fever-prevent</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-question-to-tn-govt-for-dengue-fever-prevent#comments</comments><guid isPermaLink="false">94dec147-db94-4194-ae2f-49e14527d6c0</guid><pubDate>Thu, 17 Sep 2026 08:01:01 +0000</pubDate><atom:updated>2026-09-17T08:01:01.567Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,AMMK,TTV Dhinakaran,அமமுக,டிடிவி தினகரன்,dengue fever,டெங்கு காய்ச்சல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/tgnmtpwj/TTVDhinakaran001.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ டி.டி.வி.தினகரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ டி.டி.வி.தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/tgnmtpwj/TTVDhinakaran001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலுக்கு அடிப்படைக் காரணமான கொசுக்களை ஒழிக்கும் பணிகளைத் தீவிரப்படுத்துவதோடு, டெங்குவால் பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சைகளை வழங்கிட வேண்டும் என சுகாதாரத்துறையையும், தவெக அரசையும் வலியுறுத்தும் இந்நேரத்தில், பொதுமக்களும் மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருந்திட வேண்டும் என டி.டி.வி.தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.</strong></em> </p><p>அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>வேதனை</strong></h2><p>தமிழகத்தில் சுமார் 16 ஆயிரம் பேர் <a href="https://www.maalaimalar.com/topic/டெங்கு-காய்ச்சல்">டெங்கு காய்ச்சலால்</a> பாதிக்கப்பட்டு, அதில் 9 பேர் உயிரிழந்திருப்பதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.</p><p>டெங்கு காய்ச்சலால் ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து, போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும், டெங்குவைப் பரப்பும் ஏடிஸ் (Aedes) கொசுக்களை ஒழிப்பதிலும் சுகாதாரத்துறை காட்டிய அலட்சியமே 9 பேரின் உயிரிழப்புக்குக் காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.</p><h2><strong>இனியாவது உணர்ந்து செயல்பட வேண்டும்</strong></h2><p>காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப பரவும் நோய்த்தொற்றுகளின் பாதிப்பு அதிகரித்த பின்னரே நடவடிக்கை எடுக்கும் அணுகுமுறையைக் கைவிட்டு, பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பாகவே அதற்குரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு சுகாதாரத்துறைக்கு உண்டு என்பதை இனியாவது உணர்ந்து செயல்பட வேண்டும்.</p><p>எனவே, தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலுக்கு அடிப்படைக் காரணமான கொசுக்களை ஒழிக்கும் பணிகளைத் தீவிரப்படுத்துவதோடு, டெங்குவால் பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சைகளை வழங்கிட வேண்டும் என சுகாதாரத்துறையையும், தவெக அரசையும் வலியுறுத்தும் இந்நேரத்தில், பொதுமக்களும் மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருந்திட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.</p>]]></content:encoded></item><item><title>டைனோசர்களை அழித்த விண்கல் விபத்தில் சில பறவைகள் எப்படி தப்பின? &apos;பாசில் மலம்&apos; மூலம் விடை தேடும் விஞ்ஞானிகள்!</title><link>https://www.maalaimalar.com/news/world/how-some-birds-survived-dinosaur-killing-asteroid-fossil-poop-clues</link><comments>https://www.maalaimalar.com/news/world/how-some-birds-survived-dinosaur-killing-asteroid-fossil-poop-clues#comments</comments><guid isPermaLink="false">2992099b-eafe-44e1-916a-ec8bfb6796fb</guid><pubDate>Thu, 17 Sep 2026 07:59:25 +0000</pubDate><atom:updated>2026-09-17T07:59:25.966Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டைனோசர்ஸ்,Dinosaur Extinction,டைனோசர் அழிவு,Bird Evolution,Fossil Poop,coprolite Research,Asteroid Strike,உயிரின பரிணாமம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/iio9mane/Dinosaur-Extinction" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dinosaur Extinction ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/iio9mane/Dinosaur-Extinction?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சுமார் 66 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியைத் தாக்கிய பிரம்மாண்ட விண்கல் விபத்தில் சிக்கி, ஒட்டுமொத்த <a href="https://www.maalaimalar.com/topic/dinosaur">டைனோசர் </a>இனமே அழிந்தபோது, சில பறவை இனங்கள் மட்டும் எப்படி உயிர் பிழைத்தன என்பது இன்றுவரை ஒரு பெரும் மர்மமாகவே நீடிக்கிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE">அமெரிக்காவின் </a>மொன்டானா பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பாசிலாக மாறிய விலங்கின் மலத்திற்குள் சிக்கியிருந்த சிறிய இறகுகள், இந்த மர்ம முடிச்சை அவிழ்க்க விஞ்ஞானிகளுக்கு ஒரு புதிய வழியைக் காட்டியுள்ளன.</p><p>பிரபல அறிவியல் இதழான 'கரண்ட் பயாலஜி'-ல் இந்த புதிய ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.</p><h2>ஹெஸ்பெரோர்னிதிஃபார்ம்ஸ்</h2><p>இந்த பாசில் கழிவானது, விண்கல் தாக்குதலுக்கு முன்பாக வாழ்ந்த 'டைரனோசரஸ் ரெக்ஸ்' அல்லது அதுபோன்ற மற்றொரு மாமிச உண்ணி டைனோசரால் வேட்டையாடி உண்ணப்பட்ட ஒரு சிறிய பறவையினுடையதாகும். </p><p>டைனோசர் காலத்தைச் சேர்ந்த (மெசோசோயிக் யுகம்) பறவைகளின் இறகுகளில், இதுவரை கண்டெடுக்கப்பட்டதிலேயே மிக மிக நேர்த்தியாகப் பதப்படுத்தப்பட்ட நிலையில் உள்ள இறகு இதுவே ஆகும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>இந்த பாசில் மலத்திற்குள் இறகுகளுடன் சேர்த்து சில எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டன. </p><p>அவை, தற்காலத்து 'லூன்' பறவைகளைப் போன்ற, நீரில் மூழ்கி நீந்தக்கூடிய, பறக்க முடியாத ஒரு சிறிய பறவையினுடையது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. </p><p>'ஹெஸ்பெரோர்னிதிஃபார்ம்ஸ்' எனப்படும் இந்த இனம் அந்த விண்கல் விபத்தில் முழுமையாக அழிந்துவிட்டது.</p><h2>பல ஆண்டுகள் நீடிக்கும் மர்மம் என்ன?</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/dinosaur">டைனோசர் </a>காலத்தில் வாழ்ந்த பல பறவை இனங்களில், 'நியோர்னிதிஸ்' என்ற ஒரே ஒரு நவீன பறவைக் குடும்பத்தின் வழித்தோன்றல்கள் மட்டுமே உயிர் பிழைத்து, இன்றைய பறவைகளாக மாறியுள்ளன.</p><p>இதற்கு முன்பு விஞ்ஞானிகள், 'நியோர்னிதிஸ்' பறவைகள் நீர்நிலைகளுக்கு அருகில் வாழ்ந்ததால் தப்பித்திருக்கலாம் என்று கூறினர். </p><p>ஆனால், விண்கல் விபத்தில் அழிந்துபோன 'ஹெஸ்பெரோர்னிதிஃபார்ம்ஸ்' பறவைகளும் நீர்நிலைகளில் தான் வாழ்ந்தன. அப்படியிருக்க, ஒன்று மட்டும் பிழைத்து மற்றொன்று அழியக் காரணம் என்ன என்ற கேள்வி எழுந்தது.</p><h2>மைக்ரோ-சிடி ஸ்கேனர் வெளிப்படுத்திய உண்மை</h2><p>கடந்த 2016-ஆம் ஆண்டு சீட்டில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆய்வாளர் டேவிட் டிமார் ஜூனியர் என்பவரால் இந்த பாசில் மலம் கண்டெடுக்கப்பட்டது.</p><p>ஆராய்ச்சியாளர்கள் இதனை மைக்ரோ-சிடி ஸ்கேனர் மூலம் பரிசோதித்தபோது, அதற்குள் பறவையின் காலெலும்புகள் மற்றும் இறகுகள் இருப்பது தெரிந்தது. </p><p>மேலும், அந்த பறவை கடைசியாக சாப்பிட்ட 'கார்' என்ற மீனின் வைர வடிவ செதில்களும் அதில் இருந்தன.</p><h2>இறகுகளில் இருந்த வித்தியாசம் தான் காரணமா?</h2><p>சிகாகோவின் ஃபீல்டு மியூசியத்தின் தொல்பொருள் ஆய்வாளர் ஜிங்மாய் ஓ'கானர் இதுகுறித்துக் கூறினார்.</p><p>"இந்த பாசிலில் இருந்த சில இறகுகள் நவீன பறவைகளின் இறகுகளைப் போலவே தட்டையாக, இலகுவாகவும், அதே சமயம் உறுதியாகவும் இருந்தன. </p><p>ஆனால், வேறு சில இறகுகள் மிகவும் சிறியதாகவும், பஞ்சு போன்றும் இருந்தன. இவை உடலை வெப்பமாக வைத்திருக்க போதுமானதாக இருந்திருக்காது ."</p><p>விண்கல் மோதிய பிறகு பூமியின் வெப்பநிலை மிகக் கடுமையாகக் குளிர்ந்த போது, இந்த பழங்காலப் பறவைகளின் பலவீனமான இறகுகளே அவற்றின் அழிவுக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்று ஓ'கானர் நம்புகிறார். </p><p>தப்பிப் பிழைத்த 'நியோர்னிதிஸ்' பறவைகளின் இறகுகள் தட்பவெப்ப நிலையைத் தாங்கும் அளவுக்கு மேம்பட்டதாக இருந்ததே அவை உயிர் பிழைக்கக் காரணம் என இந்த ஆய்வு கூறுகிறது.</p><p>எனினும், இந்த தியரியை முழுமையாக உறுதிப்படுத்த, விண்கல் தாக்குதலுக்குச் சற்று முந்தைய காலத்தைச் சேர்ந்த 'நியோர்னிதிஸ்' பறவையின் பாசில் இறகுகள் தேவை என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">அருங்காட்சியகங்களில் </a>உள்ள மற்ற பாசில் மலங்களை ஆய்வு செய்வதன் மூலம் டைனோசர்கள் அழிவு குறித்த இன்னும் பல ரகசியங்களை அறிய முடியும் என நம்பப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட மனித மூளை திசுக்கள் எலிகளுக்கு பொருத்தம்: மருத்துவ உலகில் புதிய சாதனை!</title><link>https://www.maalaimalar.com/news/world/lab-grown-human-brain-tissues-fitted-into-mice</link><comments>https://www.maalaimalar.com/news/world/lab-grown-human-brain-tissues-fitted-into-mice#comments</comments><guid isPermaLink="false">9a3cd3f7-d971-4adc-97f0-34eac79fd2a3</guid><pubDate>Thu, 17 Sep 2026 07:48:57 +0000</pubDate><atom:updated>2026-09-17T07:48:57.762Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,mice,Organoids,Cerebral cortex,Von Economo,மனித மூளை திசு,ஆர்கனாய்ட்ஸ்,வோன் எகனமோ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/mxpse4m4/yeli.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ human brain tissue transplanted into mice]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/mxpse4m4/yeli.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மனித மூளையின் வளர்ச்சி மற்றும் நரம்பியல் குறைபாடுகளை வாழும் மனிதர்களில் நேரடியாக ஆய்வு செய்வது மிகவும் கடினமான ஒன்றாகும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/new-zealand-parliament-passes-trade-deal-with-india">அமெரிக்கா</a>வின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ஆய்வகத்தில் செயற்கையாக வளர்க்கப்பட்ட மனித மூளை திசுக்களை மரபணு மாற்றம் செய்யப்பட்ட எலிகளின் மூளையில் வெற்றிகரமாக பொருத்தி மருத்துவ ஆராய்ச்சியில் மாபெரும் சாதனையை படைத்துள்ளனர். இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் மூளை தொடர்பான பல்வேறு தீவிர நோய்களுக்கான சிகிச்சைகளை கண்டறிய புதிய கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.</p><p>மனித மூளையின் வளர்ச்சி மற்றும் நரம்பியல் குறைபாடுகளை வாழும் மனிதர்களில் நேரடியாக ஆய்வு செய்வது மிகவும் கடினமான ஒன்றாகும். இதனை எதிர்கொள்ள, பேராசிரியர் செர்ஜியூ பாஷ்கா தலைமையிலான ஸ்டான்போர்ட் மருத்துவக் குழுவினர் மனிதனின் தோல் செல்லில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி "ஆர்கனாய்ட்ஸ்" எனப்படும் சிறிய அளவிலான மனித மூளை திசுக்களை ஆய்வகத்தில் வளர்த்தெடுத்தனர்.</p><p>பின்னர், எலிகளின் மூளைப் பகுதியில் உள்ள வெளிப்புற அடுக்கை மரபணு மாற்றம் மூலம் அகற்றி, அங்கு இந்த மனித மூளை திசுக்களைப் பொருத்தினர். எலியின் மூளையில் பொருத்தப்பட்ட மனித திசுக்கள் அழியாமல் தொடர்ந்து வளர்ந்ததுடன், எலியின் நரம்பு மண்டலம் மற்றும் தண்டுவடத்துடன் வெற்றிகரமாக இணைந்து இயங்கத் தொடங்கின. மூன்று மாத கால இடைவெளியில், அந்த எலிகளின் மூளைப் பகுதியில் 90 சதவீதத்திற்கும் அதிகமான பகுதி மனித மூளைச் செல்களால் நிரப்பப்பட்டது. </p><p>இந்த மனித நரம்பு செல்கள் எலிகளின் உடலில் மின் சமிக்ஞைகளை கடத்தி இயல்பாகச் செயல்பட்டதை ஆய்வாளர்கள் கவனித்தனர். மேலும், வழக்கமாக மனிதர்களின் மரணத்திற்கு பின் செய்யப்படும் ஆய்வுகளில் மட்டுமே காணப்படும் அபூர்வமான "வோன் எகனமோ" வகை நரம்பு செல்கள் இந்த எலிகளின் மூளையில் உருவாவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.</p><h2>மருத்துவ உ<strong>லகிற்கு கிடைக்</strong>கும் நன்மைகள்</h2><p>இந்த வெற்றி மூலம் குழந்தைகள் பிறப்பின் போது ஏற்படும் மூளை முடக்குவாதம், மனசிதைவு நோய், வலிப்பு மற்றும் ஆட்டிசம் போன்ற சிக்கலான நரம்பியல் குறைபாடுகளின் மூல காரணங்களை மிகத் துல்லியமாக புரிந்து கொள்ள முடியும். மேலும், மூளை நோய்களுக்கான புதிய மருந்துகள் மற்றும் மரபணு சிகிச்சைகளை மனிதர்களுக்கு வழங்குவதற்கு முன்பே, இந்த எலிகள் மூலம் சோதித்து பார்க்க ஒரு சிறந்த தளம் கிடைத்துள்ளது.</p><p>இந்த மகத்தான அறிவியல் வளர்ச்சி உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றாலும், சில உயிரியல் நெறிமுறை கேள்விகளையும் எழுப்பியுள்ளது. மனித மூளைச் செல்கள் விலங்குகளின் உடலுக்குள் செயல்படும் போது, அந்த விலங்குகளுக்கு மனிதனை போன்ற உணர்வுகளோ அல்லது சிந்தனைத் திறனோ உருவாக வாய்ப்புள்ளதா என்ற விவாதம் சர்வதேச விஞ்ஞானிகளிடையே எழுந்துள்ளது. இருப்பினும், இந்த ஆராய்ச்சி அனைத்து சர்வதேச உயிரியல் நெறிமுறைகளுக்கும் உட்பட்டே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் உறுதி அளித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: இன்று இரவு மீனாட்சியம்மன் - சுந்தரேசுவரர் வீதி உலா
</title><link>https://www.maalaimalar.com/spirituality/madurai-meenakshi-amman-temple-kumbhabhishekam-devotees-worship</link><comments>https://www.maalaimalar.com/spirituality/madurai-meenakshi-amman-temple-kumbhabhishekam-devotees-worship#comments</comments><guid isPermaLink="false">14e0f9f3-cee9-4abe-8fe9-1705687f5b64</guid><pubDate>Thu, 17 Sep 2026 07:24:31 +0000</pubDate><atom:updated>2026-09-17T07:24:31.341Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,வழிபாடு,worship,கும்பாபிஷேகம்,Kumbhabhishekam,Madurai Meenakshi Amman temple,மதுரை மீனாட்சி அம்மன் கோவில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/mwawlqyb/madurai8.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Meenakshi amman temple Kumbhabhishekam
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/mwawlqyb/madurai8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மதுரை மீனாட்சி- சுந்தரேசுவரர் கோவில்</h2><p>மதுரையில் சுமார் 4,500 ஆண்டுகள் பழமையானது மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவில். இங்கு வானுயர எழுந்து நிற்கும் 4 ராஜகோபுரங்களும், அதனை சுற்றியுள்ள 4 மாசி வீதிகளும்தான் மாநகரின் அடையாளமாக இருக்கிறது. </p><p>மதுரை மீனாட்சி- சுந்தரேசுவரர் கோவிலில் கடந்த 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கும்பாபிஷேகம் நடந்தது.  தற்போது கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு ரூ.32 கோடி மதிப்பீட்டில் 186 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. </p> <h2>பூர்வாங்க பூஜைகள்</h2><p>கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்ற இந்த பணிகள் நிறைவடைந்ததையொட்டி 17 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.</p><p>கும்பாபிஷேக விழாவிற்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த 6-ந்தேதி மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. கங்கை, யமுனை, காவிரி, வைகை உள்ளிட்ட புண்ணிய நதிகளில் இருந்து 1,008 லிட்டர் புனிதநீர் சேகரிக்கப்பட்டு கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. 11-ந்தேதியில் இருந்து யாகசாலை பூஜைகள் தொடங்கின. </p> <h2>யாக வேள்வி</h2><p>கோவிலில் உள்ள வடக்காடி வீதியில் 56 யாகசாலைகள் மற்றும் 186 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டன. இதில் மூலவர்கள் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் ஆகியோருக்கு தனித்தனியாக பிரம்மாண்டயாக குண்டங்கள் புனிதநீர் அடங்கிய தங்க குடங்களுடன் வைத்து பூஜைகள் நடந்தன. சுமார் 400-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் வேதமந்திரங்கள் முழங்க யாக வேள்விகளை நடத்தினர். </p> <h2>பிரம்மாண்ட மாலைகள்</h2><p>கும்பாபிஷேக விழாவிற்காக சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து 50 டன் மலர்கள் கொண்டு வரப்பட்டு மாலைகள் தொடுக்கப்பட்டன. 40 முதல் 160 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட மாலைகள் கட்டப்பட்டு ராஜகோபுரங்கள் உள்ளிட்ட சிறிய கோபுரங்கள் மற்றும் விமானங்களுக்கு சூட்டப்பட்டன.</p> <h2>பரிவார மூர்த்திகளுக்கு குடமுழுக்கு</h2><p>நேற்று காலை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவிலில் உள்ள சித்தி விநாயகர், சோமாஸ் கந்தர், ஊர்த் தாண்டவ மூர்த்தி, முக்குறுணி விநாயகர், காளி, 63 நாயன்மார்கள் உள்ளிட்ட 414 பரிவார மூர்த்திகளுக்கு குடமுழுக்கு நடைபெற்றது.</p> <h2>மகா கும்பாபிஷேகம்</h2><p>இதையடுத்து இன்று அதிகாலை 3.45 மணிக்கு 12-ம் கால யாக பூஜை நடைபெற்றது. பின்னர் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு 5.45 மணிக்கு தொடங்கியது. அதனை சிவாச்சாரியார்கள் 4 ராஜ கோபுரங்கள் உள்பட 12 கோபுரங்கள் மற்றும் தங்க விமானங்களுக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து காலை 7.35 மணிக்கு அனைத்து கோபுரங்களுக்கும் ஒரே நேரத்தில் சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க பக்தர்களின் கோஷம் விண்ணதிர கும்பாபிஷேகம் நடைபெற்றது. </p> <figure><img alt="Meenakshi amman temple Kumbhabhishekam
" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/0hltc9ge/madurai7.jpg" /></figure><h2>மூலவர் சன்னதி</h2><p>பின்னர் மூலவர் மீனாட்சி அம்மன் சன்னதி விமான கலசத்திற்கு காலை 8.10 மணிக்கும், சுந்தரேசுவரர் சன்னதி விமான கலசத்திற்கு காலை 8.20 மணிக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. </p> <h2>மகா தீபாராதனை</h2><p>அதன் பிறகு சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனைகள் நடந்தது. அப்போது மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் கோவில் மேல் தளங்கள் மற்றும் கோவிலை சுற்றி திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மீனாட்சி கோஷம் முழங்க தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் மீது டிரோன் மூலமாக புனித நீர் தெளிக்கப்பட்டது. அதனை பக்தர்கள் ஏற்றுக்கொண்டனர்.  இதனைத்தொடர்ந்து காலை 10 மணி முதல் கோவிலுக்குள் பக்தர்கள் பொது தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். நீண்ட வரிசையில் காத்திருந்து அவர்கள் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேசுவரரை தரிசனம் செய்தனர். </p> <h2>வீதி உலா</h2><p>இன்று  கோவில் நடை சாத்தப்படாமல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கும்பாபிஷேகத்தை அருகில் இருந்து காண முடியாத பக்தர்கள் நலன் கருதி இரவு 7 மணிக்கு 4 மாசி வீதிகளிலும் மீனாட்சியம்மன் மற்றும் சுந்தரேசுவரர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்கள்.  பாதுகாப்பு பணியில் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 6,500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>700 வயது.. இந்தியாவில்  உள்ள உலகின் மிக வயதான ஆலமரம் பற்றி தெரியுமா? </title><link>https://www.maalaimalar.com/news/national/700-years-old-do-you-know-about-the-oldest-banyan-tree-in-indiaand-the-world</link><comments>https://www.maalaimalar.com/news/national/700-years-old-do-you-know-about-the-oldest-banyan-tree-in-indiaand-the-world#comments</comments><guid isPermaLink="false">27c55c2c-c8fa-4e2d-83b8-3f5c06a0d286</guid><pubDate>Thu, 17 Sep 2026 07:13:27 +0000</pubDate><atom:updated>2026-09-17T07:13:27.287Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பீகார்,Bihar,banyan tree,study,ஆய்வு,ஆலமரம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/avcxre87/tn-12.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஆலமரம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆலமரம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/avcxre87/tn-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பீகாரில் 700 ஆண்டுகால ஆலமரம் உலகத்திலேயே தற்போதுள்ள மிக வயதான ஆலமரம் என்ற பெருமையை பெற்றுள்ளது.</p> <p>மரங்கள் மனித வரலாறை சுமந்து நிற்கும் தூபிகள். தலைமுறைகளின் நினைவை சுமக்கும் கலன்கள். </p><p>மரங்கள் வெவ்வேறு வகையாக மனிதனுக்கும் இயற்கை சமநிலைக்கும் உதவுகின்றன. குறிப்பாக கிராமங்களில் அவை மனிதர்களுடன் ஆழ்ந்த பிணைப்பை கொண்டுள்ளன.</p><p>பீகாரின் முங்கர் மாவட்டத்தை சேர்ந்த சேர்ந்த ஒரு <a href="https://www.maalaimalar.com/health/aalamaram-help-health">ஆலமரம் </a>பண்டைய காலம் முதல் இருப்பதாக மக்கள் நம்பி வந்தனர். </p> <p>இந்நிலையில் அந்த மரம் 700 வருட காலம் பழமையானது என விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதன்மூலம் உலகின் மிக வயதான ஆலமரம் என அங்கீகரிக்கப்பட்டுள்ளது.</p><h2>ஆலமரம்</h2><p>ஒரு குடும்பம் தலமைமுறை தலைமுறையாக தழைப்பதை, ஆலமரம் விழுது விடுவதற்கு ஒப்பாக பேசுவர். </p><p>இந்தியாவில் உள்ள மரங்களில் சாதரணமாக எங்கும் தென்படுவன ஆலமரம். ஆழாமாக அகலமாக வேர் விடும் ஆலமரங்கள் அதன் விழுதுகள் மற்றும் அகன்ற தோற்றத்தின் கீழ் பலருக்கு நிழல் தருகின்றன.</p><p>இந்த தன்மையால் கிராமங்களில் மக்கள் ஒன்றுகூடுவதும் இந்த ஆலமரங்களின் கீழேயாம். அதன் கலாச்சர முக்கியத்துவம் ஒருபுறம் இருந்தாலும், ஆலமரங்களில் அதன் வயதை கண்டறிய உதவும் வளையங்கள் உருவாவதில்லை.</p><p>மரங்களின் வயதை கண்டறிய அவற்றில் உருவாகும் வளையங்களின் எண்ணிக்கையை வைத்து கணிப்பது டென்ட்ரோக்ரோனாலஜி எனும் அறிவியல் முறை ஆகும். ஆனால் ஆலமரங்களில் அவ்வாறான வளையங்கள் உருவாவதில்லை என்பதால் அதன் வயதை கணக்கிடுவது சவாலாக உள்ளது.</p> <h2>எப்படி சாத்தியமானது?</h2><p>லக்னோவில் இயங்கி வரும் பீர்பால் சஹானி பேலோசைன்ஸ் கல்வி நிறுவனத்தில் பணிபுரியர்க் முனவைர் த்ரினா போஸிடம் பீகார் வனத்துறை ஒரு கோரிக்கையுடன் சென்றது. </p><p>மக்கள் பண்டைய காலத்தை சேர்ந்தது எனக் கருதும் அந்த ஆலமரத்தின் உண்மையான வயது என்ன என்பதை கண்டறிய ஒரு தனித்துவமான அறிவியல் முறைமை தேவையாக இருந்தது.</p><p>முனைவர் மாயங் சேகர், முனைவர் அகிலேஷ் யாதவ் உடன் இணைந்து முனைவர் த்ரினா போஸ் ஆராய்ச்சியில் இறங்கினார். அந்த மரத்தின் உள் மையத்தில் உள்ள ஆல்பா செலுலோஸ் (தாவர செல் சுவர்களில் காணப்படும்) ஐ சேகரித்த அவரின் குழு அதை ஆய்வுக்கு உட்படுத்தியது. ஏனெனில் pith எனும் உள் மையம் தான் அந்த மரம் உருவாக தொடங்கிய உயிரியல் புள்ளி. அங்கு தான் அந்த மரம் ஆரம்பத்தில் உருவாக்கிய மரக்கட்டை இருக்கும். </p> <p>இந்த மாதிரிகள் அறிவியல் ரீதியாக நவீன முறையில் ஆராயப்பட்டு அதன் வயது 700 ஆக இருக்கும் கண்டறியப்பட்டது.</p><p>அந்த மரத்தில் அருகில் 300 முதல் 350 ஆண்டுகளாக பழமையான பரோ பங்களா என்ற காலனிய கால மாளிகை உள்ளது. அந்த சமயத்தில் அந்த ஆலமரம் நடப்பட்டிருக்கலாம் என்று சில ஊகங்கள் இருந்தன. ஆனால் அந்த மரம் 700 ஆண்டுகள் முந்தையது என்றும் அந்த மரத்தை ஒட்டி தான் பங்களா கட்டப்பட்டது என்பதும் தற்போது ஊர்ஜிதமாகியுள்ளது.</p><p>இந்த ஆய்வு இந்த மரத்தின் வயதை கண்டுபிடித்ததோடு நில்லாமல் உலகெங்கிலும் பழமையான மரத்தின் வயதை கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>திரையுலகில் புதிய சாதனை: விமர்சகர்களை வியப்பில் ஆழ்த்திய ‘Resident Evil ’ ரீபூட் திரைப்படம்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/new-record-in-cinema-resident-evil-reboot-film-amazes-critics</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/new-record-in-cinema-resident-evil-reboot-film-amazes-critics#comments</comments><guid isPermaLink="false">ee81bec0-473f-4a91-be4f-d5ddf1330048</guid><pubDate>Thu, 17 Sep 2026 07:07:09 +0000</pubDate><atom:updated>2026-09-17T07:07:09.485Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Resident Evil,Rotten Tomatoes,Zach Cregger,ரெசிடென்ட் ஈவில்,பிரையன்,ராட்டன் டொமேட்டோஸ்,சாக் கிரெக்கர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/jfqsappg/resy.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Resident Evil]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/jfqsappg/resy.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த காலங்களில் ‘ரெசிடென்ட் ஈவில்’ கேம்களை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படங்கள் பலவும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யத் தவறியது.</p><p>ஹாலிவுட் திரையுலகில் பிரபல திகில் வீடியோ கேம் தொடரான ‘ரெசிடென்ட் ஈவில்’ அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள புதிய திரைப்படம், சர்வதேச திரை விமர்சகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இயக்குனர் சாக் கிரெக்கர் இயக்கியுள்ள இத்திரைப்படம், பிரபல விமர்சன இணையதளமான ‘ராட்டன் டொமேட்டோஸ்’ தளத்தில் 96 சதவீதத்திற்கும் அதிகமான சாதனை மதிப்பெண்களை பெற்று அசத்தியுள்ளது.</p><p>கடந்த காலங்களில் ‘<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/bharat-ratna-ms-subbulakshmi-biopic-kickstarts-kamal-haasan-sound-clap">ரெசிடென்ட் ஈவில்</a>’ கேம்களை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படங்கள் பலவும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யத் தவறியதோடு, விமர்சன ரீதியாகவும் பின்னடைவை சந்தித்தன. பெரும்பாலும் அதிரடி சண்டை காட்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால், அந்த வீடியோ கேமின் உண்மையான பயங்கரமும் ஆன்மாவும் விடுபட்டு போயிருந்தன. ஆனால், இயக்குனர் சாக் கிரெக்கர் இந்த பிராஞ்சைஸின் ஆழமான நுணுக்கத்தை புரிந்து கொண்டு முற்றிலும் புதிய கோணத்தில் இக்கதையை அணுகியுள்ளார்.</p><p>இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது அதில் கையாளப்பட்டுள்ள தனித்துவமான தொனி ஆகும். பயங்கரமான திகில் மற்றும் ரத்தக் கசிவு நிறைந்த சூழலிலும், இயல்பான நகைச்சுவை உணர்வை மிகச் சரியாக கலந்து இயக்குனர் காட்சிகளை அமைத்துள்ளார். வீடியோ கேம்களில் வரும் முதன்மை கதாபாத்திரங்களை அப்படியே நகலெடுக்காமல், ‘பிரையன்’ என்ற சாதாரண மருத்துவ பார்சல் விநியோகஸ்தர் ரக்கூன் சிட்டிக்குள் சந்திக்கும் ஆபத்துகளை மையமாக வைத்து இக்கதை நகர்கிறது. ஒரு சாதாரண மனிதன் ஜோம்பி ஆபத்தில் மாட்டிக்கொண்டால் எப்படி எதிர்வினையாற்றுவான் என்பதை இயல்பாகவும் நகைச்சுவையோடும் படமாக்கியுள்ளது பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது.</p><p>ஹாலிவுட்டின் முன்னணி விமர்சகர்கள் இத்திரைப்படத்தை இதுவரை வந்த வீடியோ கேம் திரைப்படங்களிலேயே மிகச்சிறந்த படைப்பு என்று பாராட்டி வருகின்றனர். திகில் காட்சிகளின் தீவிரத்தைக் குறைக்காமல், அதே நேரத்தில் பார்வையாளர்களை ரசிக்க வைக்கும் விதத்தில் நகைச்சுவையை இணைத்ததே கிரெக்கரின் மாபெரும் வெற்றி எனப் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். திரையரங்குகளில் வெளியாகவுள்ள இத்திரைப்படம், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரலாற்றுச் சாதனையைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக, திமுக, அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனு ஏற்பு
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dharapuram-by-election-tvk-dmk-and-admk-candidates-nomination-papers-accepted</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dharapuram-by-election-tvk-dmk-and-admk-candidates-nomination-papers-accepted#comments</comments><guid isPermaLink="false">514f34f4-5769-41c3-bf25-8b4191bcc2d8</guid><pubDate>Thu, 17 Sep 2026 07:00:07 +0000</pubDate><atom:updated>2026-09-17T07:00:07.436Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தவெக,by election,dharapuram,தாராபுரம்,tvk,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/zztcq8j1/byelection.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/zztcq8j1/byelection.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு ஏற்கப்பட்டது.</p><p>மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதி நடைபெறுகிறது. </p><h2>5 முனைப்போட்டி </h2><p>இந்த 2 தொகுதிகளிலும் 5 முனைப்போட்டி நிலவுகிறது. த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., கம்யூனிஸ்டுகள் மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகிய 5 கட்சிகளின் வேட்பாளர்கள் 2 தொகுதிகளிலும் களம் இறங்கி உள்ளனர். </p> <p>மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க. வேட்பாளராக மரகதம் குமரவேல், தி.மு.க. வேட்பாளராக பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், நாம் தமிழர் வேட்பாளர் ஜானகி ராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சுகந்தி ஆகியோர் போட்டியிடுகிறார்கள். </p> <p>தாராபுரத்தில் த.வெ.க. வேட்பாளராக சத்யபாமா, தி.மு.க. சார்பில் சுகன்யா, அ.தி.மு.க. வேட்பாளராக பானுமதி, நாம் தமிழர் சார்பில் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளராக லட்சுமணன் போட்டியிடுகிறார்கள்.</p><h2>வேட்பு மனுக்கள் பரிசீலனை</h2><p>இந்த 2 தொகுதிகளிலும் சேர்த்து 99 பேர் போட்டியிடுவதற்கு மனுதாக்கல் செய்து உள்ளனர். அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்புமனுக்கள் பரிசீலனை இன்று நடைபெற்றது.</p><p>இந்நிலையில், தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர் சத்திய பாமா, திமுக வேட்பாளர் சுகன்யா, அதிமுக வேட்பாளர் பானுமதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் லட்சுமணன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவின் வேட்பு மனு ஏற்கப்பட்டது.</p><p>நாளை மறுநாள் (19-ந்தேதி) வேட்பு மனுக்கள் வாபஸ் பெறுவதற்கு கடைசி நாளாகும். அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது. </p> <h2>தீவிர பிரசாரம்</h2><p>இதற்கிடையே 2 தொகுதிகளிலும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் உள்ளூர் கட்சி நிர்வாகிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். </p> <h2>மதுராந்தகம் தொகுதி</h2><p>மதுராந்தகம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் தற்போது த.வெ.க. வேட்பாளராக களம் இறங்கி இருக்கிறார். கடந்த தேர்தலில் இவரை பின் தொடர்ந்து த.வெ.க. வேட்பாளரும் அதிக வாக்குகளை பெற்று இருந்தார். இந்த தொகுதியில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mupperum-vizha-on-sep-19th">தி.மு.க.</a> 3-வது இடத்தையே பெற்று இருந்தது. இதன் காரணமாக இந்த தொகுதியில் அ.தி.மு.க., த.வெ.க. இடையே கடும் போட்டி நிலவுகிறது.</p> <h2>தாராபுரம் தொகுதி</h2><p>தாராபுரம் தொகுதியில் அ.தி.மு.க. பெருவாரியான வாக்குகளை பெற்று வெற்றி பெற்று இருந்த நிலையில் இந்த தொகுதியில் த.வெ.க. 3-வது இடத்தையே பிடித்து இருந்தது. இதனால் அங்கு வெற்றி பெறுவதற்கு த.வெ.க. தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. அதே நேரத்தில் இந்த தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்று விட வேண்டும் என்கிற முனைப்பில் அ.தி.மு.க.வும் களம் இறங்கி உள்ளது. </p><p>இதற்கிடையே 2 தொகுதிகளிலும் வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் தி.மு.க.வும் காய் நகர்த்தி வருகிறது.</p> <h2>அடுத்த வாரம்</h2><p>இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் அடுத்த வாரம் முதல் தொகுதிகளுக்கு நேரில் சென்று தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளனர்.</p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதலமைச்சர் விஜய்</a> மற்றும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் 2 தொகுதிகளிலும் முகாமிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர். தி.மு.க. சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அந்த கட்சியை சேர்ந்த தலைவர்கள் தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட உள்ளனர். இதன் மூலம் தேர்தல் களம் விரைவில் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>நாளை மறுநாள் தி.மு.க. முப்பெரும் விழா- துரைமுருகன் அறிவிப்பு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mupperum-vizha-on-sep-19th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mupperum-vizha-on-sep-19th#comments</comments><guid isPermaLink="false">16659a36-1aac-4050-a6e3-a1400de5fd42</guid><pubDate>Thu, 17 Sep 2026 06:32:25 +0000</pubDate><atom:updated>2026-09-17T06:32:25.643Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,Durai Murugan,துரைமுருகன்,முக ஸ்டாலின்,திமுக முப்பெரும் விழா</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/duw1p6oj/DMK.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ திமுக]]></media:title><media:description type="html"><![CDATA[ திமுக]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/duw1p6oj/DMK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை அண்ணா அறிவாலய கலைஞர் அரங்கில் நடைபெறவிருந்த தி.மு.க. முப்பெரும் விழா, தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டதால் முதலில் ஒத்திவைக்கப்பட்டது. மருத்துவர்களின் ஆலோசனையின்படி அவர் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். தற்போது பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பின்படி, விழா 19.09.2026 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.</strong></em></p><h2><strong>தி.மு.க. முப்பெரும் விழா</strong></h2><p>தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்தநாள்கள், தி.மு.க. தொடங்கப்பட்ட நாள் ஆகிய மூன்றையும் இணைத்து <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE">முப்பெரும் விழா</a> நடத்தப்படுகிறது. </p><p>அந்த வகையில், 2026-ம் ஆண்டுக்கான தி.மு.க. முப்பெரும் விழா நேற்று முன்தினம் சென்னை அண்ணா அறிவாலயத்திடல் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. </p><h2><strong>ஒத்திவைப்பு</strong></h2><p>ஆனால், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக தி.மு.க. முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுவதாகவும் முப்பெரும் விழாவுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்து இருந்தார். </p><p>இதனை தொடர்ந்து, தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட காய்ச்சலைத் தொடர்ந்து, மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறேன். இதன் காரணமாக, ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கழகப் பொதுச்செயலாளர் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் ஒத்திவைக்கப்பட்ட முப்பெரும் விழாவிற்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்து இருந்தார். </p><h2><strong>செப். 19-ல்</strong> </h2><p>இந்த நிலையில், தி.மு.க. முப்பெரும் விழா வருகிற சனிக்கிழமை அன்று மாலை நடைபெறும் என தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், </p><p>கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 15.09.2026 அன்று நடைபெறவிருந்த தி.மு.க. முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டு, தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவித்ததையொட்டி, தற்போது தி.மு.க. முப்பெரும் விழா வருகிற 19.09.2026 (சனிக்கிழமை) அன்று மாலை 5.00 மணியளவில், அண்ணா அறிவாலயம், "கலைஞர் அரங்கில்" நடைபெறும் என தெரிவித்து உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கை படமாகிறது - முதல் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார் கமல்ஹாசன்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/bharat-ratna-ms-subbulakshmi-biopic-kickstarts-kamal-haasan-sound-clap</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/bharat-ratna-ms-subbulakshmi-biopic-kickstarts-kamal-haasan-sound-clap#comments</comments><guid isPermaLink="false">f9e67ed5-ed60-4d67-b808-6d780164e43e</guid><pubDate>Thu, 17 Sep 2026 06:29:50 +0000</pubDate><atom:updated>2026-09-17T06:29:50.123Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>Gowtam Tinnanuri,Anirudh Ravichander,Rashmika-Mandanna,ராஷ்மிகா மந்தனா,Kamal Hassan,MS Subbulakshmi,எம்எஸ் சுப்புலட்சுமி,MS Subbulakshmi Biopic</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/rtf92ch9/Kamal-Haasan-Rashmika-Mandanna" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kamal Haasan - Rashmika Mandanna ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/rtf92ch9/Kamal-Haasan-Rashmika-Mandanna?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய இசை உலகின் மாபெரும் ஆளுமையான பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது. </p><p>சென்னையில் உள்ள மியூசிக் அகாடமியில் நடைபெற்ற இதன் பிரம்மாண்டத் தொடக்க விழாவில், உலகநாயகன் கமல்ஹாசன் கலந்துகொண்டு படத்தின் முதல் காட்சிக்கான கைதட்டலை அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.</p><p>இப்படத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/ms-subbulakshmi">எம்.எஸ். சுப்புலட்சுமி</a> அம்மாவின் கதாபாத்திரத்தில் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.</p><h2>கமல்ஹாசன் பேச்சு</h2><p>விழாவில் பேசிய <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D">கமல்ஹாசன்</a>, இந்த பாத்திரத்தில் நடிப்பது ராஷ்மிகாவுக்கு எவ்வளவு பெரிய சவால் என்பதை உலகப் புகழ்பெற்ற மைக்கேல் ஜாக்சனுடன் ஒப்பிட்டுப் பேசினார்.</p><p>"மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் ஒரு நடிகருக்கு எந்த அளவுக்கு பதற்றமும் அழுத்தமும் இருக்குமோ, அதே போன்ற ஒரு பதற்றம் உங்களுக்கும் இருக்கும் என்பது எனக்குத் தெரியும். </p><p>ஆனால், உங்களை வழிநடத்த ஒரு சிறந்த குழு இருக்கிறது, அவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்."</p><p>மேலும், தன் வழக்கமான நகைச்சுவை பாணியில் பேசிய அவர், <em>"என்னால் கூட இந்த பாத்திரத்தை செய்திருக்க முடியாது, என் தாடியை எடுத்தால் கூட இந்த பாத்திரத்தில் என்னால் நடிக்க இயலாது. </em></p><p><em>நான் எத்தனை வேடங்கள் வேண்டுமானாலும் போடலாம், ஆனால் எம்.எஸ். அம்மா அவர்களின் கண்களில் இருக்கும் அந்தப் பேரன்பையும் கருணையையும் உங்கள் கண்களில் கொண்டு வந்துவிட்டால், நீங்கள் பாதியைக் கடந்துவிட்டீர்கள் என்று அர்த்தம். துணிச்சலோடு இதைச் செய்யுங்கள்"</em> என்று ராஷ்மிகாவுக்கு தைரியம் ஊட்டினார்.</p><h2><strong>அகில இந்திய சூப்பர் ஸ்டார் 'எம்.எஸ். அம்மா' - </strong>கமல்</h2><p>எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் கலைப் பயணம் குறித்துப் பேசிய கமல், <em>"சினிமாவோ அல்லது அரசியலோ நாட்டை இணைப்பதற்கு முன்பே, தனது இசையால் ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒன்றிணைத்த ஒரு கலாச்சார சக்தி அவர். </em></p><p><em>இந்தியாவின், குறிப்பாக தென்னிந்தியாவின் மிக முக்கிய அடையாளமாகத் திகழ்ந்த அவர், அந்த காலத்திலேயே சமஸ்கிருதம், இந்தி எனப் பல மொழிகளில் பாடிய ஒரு அகில இந்திய சூப்பர் ஸ்டார்"</em> என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.</p><h2><strong>கண்ணீருடன் வாக்குறுதி அளித்த ராஷ்மிகா மந்தனா</strong></h2><p>விழா மேடையில் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய நடிகை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE">ராஷ்மிகா மந்தனா </a>பேசினார்.</p><p>"இப்போது என் இதயத்தில் இருக்கும் ஒரே உணர்வு நன்றியுணர்வு மட்டும்தான். எம்.எஸ். அம்மா அவர்களின் குரலில் ஒரு தனித்துவமான தெய்வீக சக்தி இருக்கிறது. அதைக் கேட்கும்போது கடவுளின் முன்னிலையில் அமர்ந்திருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.</p><p>அம்மா, உங்களது வாழ்வின் ஒரு சிறிய பகுதியாக இருக்க என்னை தேர்ந்தெடுத்ததற்கு நான் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன்.</p><p>எனது நூறு சதவீத உழைப்பையும், சிறந்த நடிப்பையும் இதற்கு வழங்குவேன் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்." என்று ஆனந்த கண்ணீருடன் பேசினார்.</p><h2><strong>யார் இந்த எம்.எஸ். சுப்புலட்சுமி?</strong></h2><p>மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி இந்தியாவின் மிகச்சிறந்த கர்நாடக இசைப் பாடகராகப் போற்றப்படுபவர்.</p><p>1998-ல் இந்தியாவின் மிக உயரிய விருதான 'பாரத ரத்னா' விருதைப் பெற்ற முதல் இசைக்கலைஞர் இவரே ஆவார்.</p><p>1966-ல் ஐநா பொதுச்சபையில் பாடிய முதல் இந்திய இசைக்கலைஞர் என்ற பெருமைக்குரியவர்.</p><p>இமாலயப் புகழ்பெற்ற <em>பஜ கோவிந்தம், குறை ஒன்றும் இல்லை, வெங்கடேச சுப்ரபாதம்</em> ஆகியவை இவரின் குரலால் உலகளவில் இன்றும் ஒலிக்கின்றன.</p><p>இவருக்கு ராமன் மக்சேசே விருது (1974), சங்கீத கலாநிதி (1968), <a href="https://www.maalaimalar.com/topic/padma-vibhushan">பத்ம விபூஷண்</a> (1975) போன்ற எண்ணற்ற விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.</p><p>தனது 10 வயதில் முதல் இசைப்பதிவைத் தொடங்கி, 1997 வரை சுமார் 7 தசாப்தங்களாக இசை உலகில் ராணியாகத் திகழ்ந்தவர். இவர் தனது 88-வது வயதில் (2004-ல்) சென்னையில் மறைந்தார்.</p><h2><strong>திரைபடக்குழு</strong></h2><p>'ஜெர்சி' திரைப்படப் புகழ் <a href="https://www.maalaimalar.com/topic/gowtam-tinnanuri">கௌதம் தின்னனூரி</a> இப்படத்தை இயக்குகிறார். ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். </p><p>கீதா ஆர்ட்ஸ் சார்பில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D">அல்லு அரவிந்த்</a>, ராக்லைன் என்டர்டெய்ன்மெண்ட்ஸ் சார்பில் ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் பிவி ஒர்க்ஸ் சார்பில் பன்னி வாசு ஆகியோர் இணைந்து மிக பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றனர்.</p><p>எம்.எஸ். சுப்புலட்சுமியின் 110-வது பிறந்தநாளை முன்னிட்டு இந்தத் தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் பங்கேற்றவர்கள் 'எம்.எஸ். புளூ' வண்ண ஆடையை அணிந்து வந்திருந்தனர். </p><p>மேலும், 'இந்தியன் கோரல் என்செம்பிள்' குழுவினரின் நேரடி இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இப்படம் பான்-இந்தியா திரைப்படமாகப் பல மொழிகளில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>புதுச்சேரியில் இளம் பெண் மருத்துவர் மயக்க ஊசி செலுத்தி தற்கொலை - கடிதத்தில் உருக்கம் </title><link>https://www.maalaimalar.com/news/puducherry/young-female-doctor-commits-suicide-by-injecting-anesthetic-in-puducherry-heart-wrenching-note-left-behind</link><comments>https://www.maalaimalar.com/news/puducherry/young-female-doctor-commits-suicide-by-injecting-anesthetic-in-puducherry-heart-wrenching-note-left-behind#comments</comments><guid isPermaLink="false">612f65bf-463a-4e78-9598-eef3c76d0fa1</guid><pubDate>Thu, 17 Sep 2026 06:19:46 +0000</pubDate><atom:updated>2026-09-17T06:19:46.308Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Puducherry,புதுச்சேரி,தற்கொலை,பெண் மருத்துவர்,Female doctor,suicide</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/ck32uzk8/tn-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தற்கொலை ]]></media:title><media:description type="html"><![CDATA[ தற்கொலை ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/ck32uzk8/tn-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>புதுச்சேரி (Puducherry)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>புதுச்சேரியில் இளம் பெண் மருத்துவர் மயக்க ஊசி செலுத்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/puducherry">புதுச்சேரி </a>வெங்கட்டா நகர் 2வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற வேளாண்துறை அதிகாரி வாசுதேவன் (68).  இவரது மனைவி விமலா (55). இவர்களது மகள் யோகலட்சுமி (26). </p><p>யோகலட்சுமி,  புதுவை கோரிமேட்டில் உள்ள <a href="https://www.maalaimalar.com/topic/jipmer-hospital">ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை</a>யில் நுரையீரல் மருத்துவத்தில் எம்.டி. இறுதியாண்டு படித்து வந்தார்.</p> <h2>தற்கொலை</h2><p>நேற்று காலை யோக லட்சுமி தனது அறைக் கதவை திறக்காததால் அச்சமடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துச் சென்று பார்த்தபோது அவர் கட்டிலில் சடலமாக கிடந்துள்ளார்.</p><p>அவரது அருகே காலியான மயக்க மருந்து பாட்டில், சர்க்கரை நோய்க்கு போடக்கூடிய இன்சுலின் பாட்டில்கள் மற்றும் 3 ஊசிகளும் கிடந்தன.</p><p>தகவலறிந்து பெரியகடை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p> <h2>கடிதம்</h2><p>முதற்கட்ட விசாரணையில், யோகலட்சுமி உடலில் மயக்க மருந்து மற்றும் சர்க்கரை நோய்க்கான மருந்தை ஊசி மூலம் செலுத்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.</p><p>மேலும் போலீசார் நடத்திய சோதனையில் யோகலட்சுமி அறையில் ஒரு டைரியில் அவர் எழுதிய கடிதம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.</p><p>அந்த கடிதத்தில், தற்கொலை முடிவை தானே எடுத்ததாகவும், இதற்காக யாரையும் துன்புறுத்த வேண்டாம் என்றும் இந்த முடிவுக்காக பெற்றோர் மற்றும் நண்பர்கள் தன்னை மன்னிக்க வேண்டும் எனவும் எழுதியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.</p><p>கல்லூரி தேர்வுக்கு தயாராகி வந்த யோகலட்சுமி, மிகவும் கடந்த சில நாட்களாக சோர்வுடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது. தற்கொலைக்கு முந்தைய தினம் இரவு யோகலட்சுமி அவரது தாய், தந்தையுடன் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு வழக்கம்போல் அவரது அறைக்கு தூங்கச்சென்றுள்ளார். ஆனால் மறுநாள் அவரின் சடலம் மட்டுமே பெற்றோருக்கு எஞ்சியுள்ளது.</p> <h2>தற்கொலை தீர்வல்ல</h2><p>தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். தற்கொலை எண்ணங்கள், மனநல பிரச்சனைகளில் இருந்து விடுபட, உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.</p><p>சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணிநேரமும் செயல்படும்)</p><p>மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணிநேரம் செயல்படும்)</p><p>சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண் – 1800-599-0019</p>]]></content:encoded></item><item><title>ஜமீன்களிலும் பண்ணைகளிலும் அடைபட்டிருந்த அரசியலை பாமரர்களிடம் சேர்த்தது திமுக: உதயநிதி ஸ்டாலின் புகழாரம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-brought-feudal-politics-to-common-people-udayanidhi-stalin</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-brought-feudal-politics-to-common-people-udayanidhi-stalin#comments</comments><guid isPermaLink="false">206c1125-e844-4faa-b667-bf9fa22c94f2</guid><pubDate>Thu, 17 Sep 2026 06:08:11 +0000</pubDate><atom:updated>2026-09-17T06:08:11.981Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Udhayanidhi Stalin,DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,M.K.Stalin,மு.க.ஸ்டாலின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/kw7qc6ju/fhfcjhk.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DMK]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/kw7qc6ju/fhfcjhk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கடந்த 78 ஆண்டுகளில் தமிழ்நாட்டைப் பல்வேறு நிலைகளில் உயர்த்தியதில் திமுகவின் பங்களிப்பு மகத்தானது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thanthai-periyar-birthday-mk-stalin-says-revolutionary-salutations-to-sun-of-rationalism-thanthai-periyar">திராவிட முன்னேற்றக் கழகம்</a> தன் பயணத்தில் 78-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். ஜமீன்களின் அரண்மனைகளிலும் பண்ணையார்களின் நிலங்களிலும் முடங்கிக் கிடந்த அரசியலை, சாதாரண பாமர மக்களின் கரங்களுக்குக் கொண்டு சேர்த்த பெருமை திமுகவையே சாரும் என்று அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>வ<strong>ரலாற்றுப் பயணம்</strong></h2><p>திராவிட இயக்கத்தின் முக்கிய அமைப்பான திமுக உருவான வரலாற்றை நினைவுகூர்ந்த உதயநிதி ஸ்டாலின், நாற்பதுகளில் இருந்த பேரறிஞர் அண்ணாவும், இருபதுகளில் இருந்த கலைஞர் கருணாநிதியும் கொட்டும் மழையில் தங்கள் தம்பிமார்களுடன் இணைந்து இந்த இயக்கத்தைத் தொடங்கினர் என்று தெரிவித்துள்ளார். அடக்குமுறைகள், நெருக்கடிகள் மற்றும் புதிய எதிர்ப்புகளை கடந்து கழகம் இன்றளவும் வலிமையோடு நடைபோடுகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.</p><h2>ச<strong>மூக நீதி</strong></h2><p>ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கடந்த 78 ஆண்டுகளில் தமிழ்நாட்டைப் பல்வேறு நிலைகளில் உயர்த்தியதில் திமுகவின் பங்களிப்பு மகத்தானது என்று அவர் குறிப்பிட்டார். சமூக நீதி, மாநில உரிமை, பெண் விடுதலை மற்றும் தொழிற்துறை வளர்ச்சி ஆகியவற்றைக் கொள்கை அடித்தளமாகக் கொண்டு செயல்பட்ட கழகம், 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டியது முதல் அதைத் தன்னிகரற்ற மாநிலமாக மாற்றியது வரை வரலாற்று சிறப்புமிக்கப் பணிகளை ஆற்றியுள்ளதாகக் கூறினார்.</p><h2>நூற்றாண்டை நோக்கி..</h2><p>தற்போது கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மேலும் துடிப்பாகச் செயல்பட்டு வருகிறது. நூறாண்டுகளை நோக்கிப் பயணிக்கும் இந்த இயக்கத்தின் மேன்மைக்காகத் தொடர்ந்து உழைப்போம் என்றும், "கருப்பு - சிவப்பு வெறும் நிறமல்ல, அது நம் உயிர்" என்ற உணர்வோடு தொண்டர்கள் செயலாற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>புண்ணியம் சேர்க்கும் புரட்டாசி மாத வழிபாடு
</title><link>https://www.maalaimalar.com/spirituality/purattasi-month-worship</link><comments>https://www.maalaimalar.com/spirituality/purattasi-month-worship#comments</comments><guid isPermaLink="false">e4186e65-a0fb-4b4c-9e4c-d607a5c64fc9</guid><pubDate>Thu, 17 Sep 2026 06:02:28 +0000</pubDate><atom:updated>2026-09-17T06:02:28.896Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,வழிபாடு,worship,பெருமாள் வழிபாடு,perumal worship,புரட்டாசி மாதம்,Purattasi Month</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/g2ll50rb/perumal11.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ perumal sridevi bhudevi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/g2ll50rb/perumal11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>புரட்டாசி மாதம்</h2><p>புரட்டாசி மாதம் என்றாலே பெருமாள் வழிபாடுதான் நம் நினைவுக்கு வரும். சிறப்புமிக்க புரட்டாசி மாதத்தில் பெருமாளை மனதார வழிபட்டால் எல்லாவித கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை. அதிலும் குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு என்பது மிகவும் விசேஷம்.</p> <h2>மகாவிஷ்ணு</h2><p>காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவிற்கு மிகவும் உகந்த மாதமாக புரட்டாசி கருதப்படுவதால், இந்த மாதத்தில் பல பெருமாள் கோவில்களில் உற்சவமும், சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்படுகின்றன. புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை, 'மகாளய அமாவாசை' என்று சிறப்பிக்கப்படுகிறது. இந்த நாளில் மூதாதையர்களுக்கு திதி கொடுப்பது மிகவும் சிறப்பானதாகும்.</p> <h2>அக்னி புராணம்</h2><p>புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப் பற்களில் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எனவே எம் பயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் விஷ்ணு பகவானை வழிபட வேண்டும்.</p><h2>புரட்டாசி சனிக்கிழமை</h2><p>பெருமாளின் அம்சமாக கருதப்படுபவர் புதன். அவருடைய வீடு கன்னி ராசி. புரட்டாசி மாதத்தில் தான் சூரியன் கன்னி ராசியில் அமர்கிறார். எனவேதான், இம்மாதத்தில் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. மேலும், புதனுக்கு நட்பு கிரகமாக கருதப்படுபவர், சனிபகவான். அதனால்தான் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை மேலும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.</p> <p>ஜாதகத்தில் ராகு, கேதுவால் ஏற்படும் கால சர்ப்ப தோஷம், நாக தோஷம், மாங்கல்ய தோஷம் போன்ற பல தோஷங்களும் புரட்டாசி மாத கருட வழிபாடால் விலகும். சனி, புதன் திசை நடப்பவர்கள், நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் தடைகள் அனைத்தும் நீங்கும். பாவங்கள் விலகி புண்ணியம் கூடும்.</p><p>மேலும், புரட்டாசி மாதத்தில் நடத்தப்படும் சிவபெருமான், விநாயகர், அம்மன் வழிபாடும் சிறப்பான பலனை பெற்றுத்தரும்.</p>]]></content:encoded></item><item><title>புரட்டாசி மாத பெருமாள் கோவில்கள் ஒருநாள் சுற்றுலா- சிறப்பு தரிசன ஏற்பாடு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/one-day-tour-of-perumal-temples-during-the-purattasi-month</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/one-day-tour-of-perumal-temples-during-the-purattasi-month#comments</comments><guid isPermaLink="false">d981f617-9d40-4263-9f43-b1529c38e958</guid><pubDate>Thu, 17 Sep 2026 06:01:43 +0000</pubDate><atom:updated>2026-09-17T06:01:43.795Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>perumal temple,புரட்டாசி,purattasi,பெருமாள் கோவில்கள்,சிறப்பு தரிசனம்,ஒருநாள் சுற்றுலா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/qo7dvf5g/purattasi.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பெருமாள் கோவில்]]></media:title><media:description type="html"><![CDATA[ பெருமாள் கோவில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/qo7dvf5g/purattasi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் சிறப்பு “பெருமாள் கோவில்கள் சுற்றுலா – ஒரு நாள் சுற்றுலா” திட்டம் நாளை முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF">புரட்டாசி</a> மாதத்தையொட்டி, பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் சென்னை, மதுரை, திருச்சி மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பெருமாள் கோவில்களை ஒரே நாளில் தரிசித்து பயன்பெறும் வகையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் சிறப்பு “பெருமாள் கோவில்கள் சுற்றுலா – ஒரு நாள் சுற்றுலா” திட்டம் நாளை முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><h2><strong>வைணவ திருக்கோவில்</strong></h2><p>சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலை தலைமை அலுவலகத்திலிருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டு, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோவில், திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில், மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவில், சிங்கபெருமாள் கோவில், பாடலாத்ரி நரசிம்மர் கோவில் மற்றும் திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் கோவில் உள்ளிட்ட 6 பெருமாள் கோவில்களில் தரிசனம் செய்யும் வகையில் இச்சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கட்டணம் ஒருவருக்கு ரூ.1,000 ஆகும்.</p><h2><strong>திருவல்லிக்கேணி</strong></h2><p>காலை 8.30 மணிக்கு புறப்பட்டு, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் கோவில், திருமழிசை ஜெகநாத பெருமாள் கோவில், திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோவில், ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோவில் மற்றும் பூந்தமல்லி வரதராஜபெருமாள் கோவில் உள்ளிட்ட 7 பெருமாள் கோவில்களில் தரிசனம் செய்யும் வகையில் இச்சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கட்டணம் ஒருவருக்கு ரூ.1,000 ஆகும். இதே போல் மதுரை, திருச்சி, தஞ்சாவூரில் உள்ள வைணவ கோவில்களுக்கும் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>மேற்கண்ட சுற்றுலாக்களுக்கு <a href="https://ttdconline.com/">www.ttdconline.com</a> என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு சுற்றுலா கழகம் தெரிவித்து உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஒடிசாவில் விநாயகர் சிலைகளை கரைக்கும்போது நீரில் மூழ்கி 9 பேர் உயிரிழப்பு </title><link>https://www.maalaimalar.com/news/national/9-people-drown-while-immersing-ganesha-idols-in-odisha</link><comments>https://www.maalaimalar.com/news/national/9-people-drown-while-immersing-ganesha-idols-in-odisha#comments</comments><guid isPermaLink="false">5d8ad1e6-63f7-40a3-95b6-7da9d2fe3ba2</guid><pubDate>Thu, 17 Sep 2026 05:56:22 +0000</pubDate><atom:updated>2026-09-17T05:56:22.836Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஒடிசா,Odisha,விநாயகர் சதுர்த்தி,நீரில் மூழ்கி பலி,drowned,Vinayaka Chaturthi</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/im48rf1s/tn-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விநாயகர் சிலை கரைப்பு ]]></media:title><media:description type="html"><![CDATA[ விநாயகர் சிலை கரைப்பு ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/im48rf1s/tn-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஒடிசாவில் விநாயகர் சிலைகளை கரைக்கும்போது நீரில் மூழ்கி 9 பேர் உயிரிழந்தள்ளனர்.</p><p>நாடு முழுவதும் கடந்த திங்களன்று <a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/rs-59000-crore-business-during-vinayagar-chaturthi">விநாயகர் சதுர்த்தி </a>விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதைத்தொடர்ந்து பண்டிகையின் ஒரு பகுதியாக செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கும் சடங்குகள் நடந்து வருகின்றன. </p><p>அந்த வகையில் வடகிழக்கு மாநிலமான ஒடிசாவில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நீர் நிலைகளில் சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சியின்போது பல உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது. </p> <h2>உயிரிழப்புகள்</h2><p>கடந்த 24 மணி நேரத்தில் ஒடிசாவில் நடைபெற்ற வெவ்வேறு சிலை கரைப்பு நிகழ்வுகளில் மொத்தம் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>ஒடிசாவின் கஞ்சம், சுந்தர்கார், பத்ரக், கோரபுட் மற்றும் காலஹண்டி உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த இறப்புகள் பதிவாகி உள்ளன.</p><p>ஒடிசா தீயணைப்பு மற்றும் அவசரகால சேவைக்கான துறையினர் வெளியிட்ட தகவலின்படி, ஜெகத்சிங்பூர் மாவட்டத்தில் எர்சாமா நகரில் உள்ள கோபால்பூர் பகுதியில் ஒடானலா என்ற இடத்தில் ஆற்றில் மூழ்கிய 4 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். 3 பேர் காணாமல் போயுள்ளனர்.</p> <p>இதுதவிர பல்வேறு பகுதிகளிலும் பலர் பலியாகியும், காணாமல் போயும் உள்ளனர். மொத்தம் 9 பேர் சடலங்களாகவும், 7 உயிருடனும் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது.</p><p>இந்த சம்பவங்களுக்கு ஒடிசா முதல்வர் மோகன் சரண், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் ஒடிசா காங்கிரஸ் தலைவர் பக்த சரண் தாஸ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>ஆர்.எஸ்.குளோபல் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்&quot;இராவணன் சோலையில் சிவன் மலை&quot;!
</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ravanan-solaiyil-sivan-malai-in-rs-global-movie-makers-production</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ravanan-solaiyil-sivan-malai-in-rs-global-movie-makers-production#comments</comments><guid isPermaLink="false">05d7e900-256a-4cb9-9bd9-fb97ee288775</guid><pubDate>Thu, 17 Sep 2026 05:54:43 +0000</pubDate><atom:updated>2026-09-17T05:54:43.087Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>Ilaiyaraaja,இளையராஜா,Gangai Amaran,Ravanan Solaiyil SivanMalai,இராவணன் சோலையில் சிவன் மலை,இளையராஜா இசைக்கோவில்,RS Global MovieMakers</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/5e0kteo8/Ilaiyaraaja" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ilaiyaraaja]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/5e0kteo8/Ilaiyaraaja?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆர்.எஸ்.குளோபல் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பாக உருவாகும் "இராவணன் சோலையில் சிவன் மலை" திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ பூஜை, சென்னையில் உள்ள இசைஞானி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE">இளையராஜாவின் </a>இசைக்கோவிலில் செப்டம்பர் 14 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.</p><p>திரைத்துறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில், இசைஞானி இளையராஜா, திரு. கங்கை அமரன், இயக்குனர் ஞான ராஜசேகரன், இயக்குனர் பாணர் மற்றும் தயாரிப்பாளர் எஸ்.கே. ஸ்ரீதர் ஆகியோர் குத்துவிளக்கேற்றி இந்த விழாவை முறைப்படி தொடங்கி வைத்தனர்.</p><h2>முதற்கட்ட படப்பிடிப்பு</h2><p>உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைப்படம் உருவாக்கப்படுகிறது. இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.</p><p>இயற்கை எழில் கொஞ்சும் <strong>வெள்ளிமலை</strong> பகுதியில் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய தென்னிந்திய மாநிலங்களின் பல்வேறு மலைப்பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.</p><h2><strong>நட்சத்திரப் பட்டாளம்:</strong></h2><p>தென்னக திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி மற்றும் பிரபல நட்சத்திரங்கள் இதில் இணைகிறார்கள். </p><p>ஆராதனா பட், ஸ்ரீ சத்யா, தலைவாசல் விஜய், <a href="https://www.maalaimalar.com/topic/ganja-karuppu">கஞ்சா கருப்பு</a>, முத்துகாளை, ஆத்தங்குடி இளையராஜா, பிரபா, ஷர்மிளா, ஜனனி அம்மாள் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.</p><h2>தொழில்நுட்பக் குழு</h2><p>இசைஞானி இளையராஜா இசையமைப்பில், உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இத்திரைப்படத்திற்கு எம். வி. பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு செய்கிறார். </p><p>இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை காசி விஸ்வநாதன் மேற்கொள்ள, விறுவிறுப்பான சண்டைக் காட்சிகளை மைக்கேல் வடிவமைக்கிறார்.</p><h2>ரசிகர்கள் எதிர்பார்ப்பு</h2><p>இவ்வாறு பலம் வாய்ந்த தொழில்நுட்பக் குழு, எதார்த்தமான கதைக்களம் மற்றும் தென்னிந்திய நட்சத்திரங்களின் பிரம்மாண்ட சேர்க்கையோடு உருவாகும் இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு: டாஸ்க் போட்டியில் நடிகை ஆனந்தி காயம்! லட்சுமி பிரியா மீது போட்டியாளர்கள் குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/bigg-boss-house-chaos-actress-anandi-injured-in-task</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/bigg-boss-house-chaos-actress-anandi-injured-in-task#comments</comments><guid isPermaLink="false">71065c66-3b1d-41d4-bf06-35542c9e94a6</guid><pubDate>Thu, 17 Sep 2026 05:50:06 +0000</pubDate><atom:updated>2026-09-17T05:50:06.681Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Lakshmi Priya,Bigg Boss Tamil,பிக்பாஸ்தமிழ்10,Actress Anandhi,நடிகை ஆனந்தி,லட்சுமி பிரியா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/7rwy1of6/ana.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Actress Anandhi -Lakshmi Priya]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/7rwy1of6/ana.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இடையே நாளுக்கு நாள் மோதல்களும் சவால்களும் அதிகரித்து வரும் நிலையில், வீட்டில் வைக்கப்பட்ட சிறப்பு போட்டியின் போது எதிர்பாராத அசம்பாவிதம் ஒன்று நிகழ்ந்துள்ளது.</p><p>சின்னத்திரையின் மிகப்பெரிய பொழுதுபோக்கு நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வெற்றிகரமாக இரண்டாம் வாரத்தை எட்டியுள்ளது. ஆரம்பம் முதலே விறுவிறுப்பிற்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாமல் நகர்ந்து வரும் இந்த சீசனில், தற்போது ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு இடையே நடைபெற்ற கடுமையான டாஸ்க் ஒன்றின் போது, நடிகை ஆனந்தி எதிர்பாராதவிதமாக காயமடைந்து அழுது துடித்த சம்பவம் பிக்பாஸ் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>மோதி<strong>க்கொண்ட போட்டியாளர்க</strong>ள்</h2><p>இந்த வாரத்திற்கான தலைவராக ஷமா தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், பிக்பாஸ் வீட்டின் அதிகாரத்தையும் சுவாரஸ்யத்தையும் தீர்மானிக்கும் புதிய போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டது. இதில் வீட்டின் அனைத்து போட்டியாளர்களும் தீவிரமாகப் பங்கேற்றனர். போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியபோது, வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் கடுமையாக மோதிக்கொண்டனர்.</p><h2><strong>காயமடைந்த ஆனந்தி</strong></h2><p>போட்டியின் நடுவே, சக போட்டியாளரான லட்சுமி பிரியா, நடிகை ஆனந்தியை தள்ளியதாகக் கூறப்படுகிறது. இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த ஆனந்திக்கு பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவர், டாஸ்க் களத்திலேயே கண்ணீர் விட்டு அழுது கதறினார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த சக போட்டியாளர்கள், உடனடியாக போட்டியை நிறுத்திவிட்டு ஆனந்திக்கு உதவ ஓடிவந்தனர். காயமடைந்த அவரைத் தாங்கிப் பிடித்து, தூக்கிச்சென்று டாஸ்க் பகுதியிலிருந்து வெளியே அழைத்துச் சென்றனர்.</p><h2>ரசிக<strong>ர்கள் கொந்தளிப்பு</strong></h2><p>இந்த விபத்தைத் தொடர்ந்து, பிக்பாஸ் வீட்டின் சூழலே முற்றிலும் மாறியுள்ளது. போட்டிகளில் எல்லை மீறி நடந்து கொள்ளும் போட்டியாளர்கள் மீது பிக்பாஸ் நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆனந்தியை காயப்படுத்திய லட்சுமி பிரியாவுக்கு '<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/vijay-sethupathis-paththa-teaser-released">ரெட் கார்டு</a>' வழங்கி வெளியேற்ற வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.</p><p>தற்போது ஆனந்தி மருத்துவ சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வருகிறாரா அல்லது போட்டியில் இருந்து தற்காலிகமாக விலக்கப்பட்டுள்ளாரா என்பது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் இனிவரும் எபிசோட்களில் தெரியவரும். பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியை தினமும் இரவு 9:30 மணிக்கு விஜய் டிவியிலும், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்திலும் நேரலையாகக் காணலாம்.</p>]]></content:encoded></item><item><title>தடைகளை அகற்றி வெற்றி அளிக்கும் தூர்வாஷ்டமி வழிபாடு</title><link>https://www.maalaimalar.com/spirituality/doorvashtami-worship</link><comments>https://www.maalaimalar.com/spirituality/doorvashtami-worship#comments</comments><guid isPermaLink="false">b3925fd0-62ad-4590-b065-af6229e7417e</guid><pubDate>Thu, 17 Sep 2026 05:47:42 +0000</pubDate><atom:updated>2026-09-17T05:47:42.486Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,வழிபாடு,worship,அருகம்புல்,vinayagar,விநாயகர்,Doorvashtami,தூர்வாஷ்டமி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/7v9iu29h/vinayagar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ vinayagar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/7v9iu29h/vinayagar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>தூர்வாஷ்டமி</h2><p>ஆன்மிக ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமான் வழிபாட்டில் மிக முக்கிய இடத்தை அருகம்புல் பிடித்துள்ளது. அருகம்புல் இல்லாமல் விநாயகர் வழிபாடு முழுமை பெறாது என்றும் கூறுவர். பூஜைக்காக பயன்படுத்தப்படும் இந்த அருகம்புல்லை போற்றி வழிபடும் நாளாக 'தூர்வாஷ்டமி' உள்ளது.</p> <h2>அருகம்புல் அஷ்டமி</h2><p>ஆவணி அல்லது புரட்டாசி மாதத்தில் வரும் வளர்பிறை அஷ்டமி தினம் 'தூர்வாஷ்டமி' என்று அழைக்கப்படுகிறது. அருகம்புல்லை 'தூர்வை' என்று கூறுவர். இந்நாளை 'அருகம்புல் அஷ்டமி' என்றும் அழைப்பர். அருகம்புல்லை லட்சுமி சொரூபமாக பாவித்து வழிபட வேண்டும் என்று வேதம் கூறுகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதி மதியம் முதல் 19-ந் தேதி மதியம் வரை தூர்வாஷ்டமி வருகிறது.</p> <h2>விநாயகர்</h2><p>தூர்வாஷ்டமி அன்று, விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபடுவது சிறப்பானது. மேலும் பூஜையறையில் ஒரு தாம்பாளத் தட்டின் மேல் அருகம்புல்லை வைத்து, அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு வணங்க வேண்டும். பழங்கள், மலர்கள், அரிசி, தயிர் படைத்து, தீபம் காட்டி வழிபட வேண்டும்.</p> <p>இந்நாளில் விரதம் இருந்து விநாயகரையும், சிவபெருமானையும் வழிபடுவது வழக்கம். தூர்வாஷ்டமி விரதத்தை யார் வேண்டுமானாலும் கடைப்பிடிக்கலாம். குறிப்பாக பெண்கள் மேற்கொள்ள வேண்டிய முக்கிய விரதமாக கருதப்படுகிறது.</p> <h2>புத்திர பாக்கியம் அருளும் தூர்வாஷ்டமி</h2><p>விரதம் இருப்பவர்களுக்கு திருமண வாழ்வு சிறப்பாகவும், அமைதியாகவும், ஆனந்தமாகவும் இருக்கும். தடைகள் அகன்று வெற்றி கைகூடும். புத்திர பாக்கியமும், நீண்ட ஆயுளும் கிடைக்கும். தூர்வாஷ்டமி நாளில் ஏழை, எளிய மக்களுக்கு இயன்ற அளவு உதவிகளையும், தானங்களையும் செய்தால் புண்ணியம் பெருகும்.</p> ]]></content:encoded></item><item><title>சிக்னல் கோளாறு: சென்னையில் புறநகர் மின்சார மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதம்; பயணிகள் கடும் அவதி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/signal-failure-suburban-and-express-trains-delayed-in-chennai-passengers-face-severe-hardship</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/signal-failure-suburban-and-express-trains-delayed-in-chennai-passengers-face-severe-hardship#comments</comments><guid isPermaLink="false">7e8dd022-3424-4c14-9112-d055ae86faa9</guid><pubDate>Thu, 17 Sep 2026 05:40:11 +0000</pubDate><atom:updated>2026-09-17T05:40:11.074Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,Signal failure,சிக்னல் கோளாறு,Suburban electric train,புறநகர் மின்சார ரெயில்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/mr15n889/trab.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Suburban electric train]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/mr15n889/trab.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தாம்பரம் வழியே சென்னை கடற்கரை நோக்கிச் செல்லும் மின்சார ரெயில்கள் சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை தாமதத்துடன் இயக்கப்பட்டு வருகின்றன.</p><p>சென்னையில் லட்சக்கணக்கான பயணிகள் தினமும் பயன்படுத்தும் முக்கிய பொதுப்போக்குவரத்து சேவைகளில் ஒன்றான புறநகர் மின்சார ரெயில் சேவை இன்று காலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. தொழில்நுட்பக் காரணங்களால் ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக, செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி இயக்கப்படும் மின்சார ரெயில்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு இயக்க முடியாமல் அடுத்தடுத்து தாமதமாக இயக்கப்பட்டன.</p><h2>இயல்பு வாழ்க்<strong>கை பாதிப்பு</strong></h2><p>குறிப்பாக, தாம்பரம் வழியே சென்னை கடற்கரை நோக்கிச் செல்லும் மின்சார ரெயில்கள் சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை தாமதத்துடன் இயக்கப்பட்டு வருகின்றன. காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி செல்வோர் மற்றும் பல்வேறு தனியார் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு பணிக்கு செல்வோர் சரியான நேரத்திற்குத் தங்கள் இடங்களை அடைய முடியாமல் நிலையங்களிலேயே நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. இதனால் ரெயில் நிலையங்களில் பயணிகளின் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.</p><h2>தெ<strong>ன் மா</strong>வட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/pm-modi-birthday-mk-stalin-anbumani-and-annamalai-wishes">மின்சார ரெயில்கள்</a> மட்டுமின்றி, தென் மாவட்டங்களில் இருந்து சென்னை எழும்பூர் மற்றும் மத்திய ரெயில் நிலையங்களை (சென்ட்ரல்) நோக்கி வந்தடைந்த முக்கிய எக்ஸ்பிரஸ் ரெயில்களும் சிக்னல் கோளாறு காரணமாக பாதையிலேயே ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன. இதன் காரணமாகப் பல எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாகவே சென்னை நகருக்குள் வந்து சேர்ந்தன.</p><p>சிக்னல் கோளாறு குறித்த தகவல் கிடைத்ததும், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டனர். போக்குவரத்து சீராகும் வரை பயணிகள் பொறுமை காக்குமாறும், ரெயில்வே அறிவிப்புகளை கவனித்து தங்கள் பயணங்களை திட்டமிடுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். கோளாறுகள் விரைவில் சரி செய்யப்பட்டு ரெயில் சேவைகள் இயல்பு நிலைக்குத் திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>சிரிப்பு காட்டாதீங்க.. ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய கனடாவுக்கு வந்த அழைப்பு பற்றி டிரம்ப்</title><link>https://www.maalaimalar.com/news/world/canada-invited-to-join-the-european-union-trump-turns-red</link><comments>https://www.maalaimalar.com/news/world/canada-invited-to-join-the-european-union-trump-turns-red#comments</comments><guid isPermaLink="false">e6d4da93-95e6-41d0-a507-24cb514b702c</guid><pubDate>Thu, 17 Sep 2026 05:35:42 +0000</pubDate><atom:updated>2026-09-17T05:35:42.904Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>trump,டிரம்ப்,கனடா,canada,European Union,ஐரோப்பிய யூனியன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/nrn1jv35/tn-9.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டிரம்ப்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிரம்ப்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/nrn1jv35/tn-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஐரோப்பிய ஒன்றியத்தில் கனடா இணைவதற்கு டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.</p><p>அண்டை நாடான <a href="https://www.maalaimalar.com/topic/canada">கனடாவுடன் </a>டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா வர்த்தக போர் நடத்தி வருகிறது. கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணம் என்றே டிரம்ப் சொல்லி வருகிறார். </p> <p>இதற்கு மார்க் கார்னி தலைமையிலான கனடா அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் பதில் வரிவிதிப்புகளை மேற்கொண்டு வருகிறது.</p><p>இதனிடையே, கனடா அமெரிக்காவிடம் இருந்து தனது நலன்களை பாதுகாத்துக்கொள்ள, ஐரோப்பிய யூனியனில் இணைவதற்கு முயற்சி செய்து வருகிறது. இதற்கான வேலைகளும் நடந்து வருகின்றன.</p> <h2>இணை உறுப்பினர் ஆக அழைப்பு</h2><p>ஐரோப்பிய யூனியனின் முதல் இணை உறுப்பினராக இணையுமாறு கனடாவுக்கு ஐரோப்பிய ஆணையத்தின் தலைவா் உா்சுலா வான் டொ் லேயன் அழைப்பு விடுத்துள்ளாா்.</p><p>பிரான்சில் நடைபெற்ற ஐரோப்பிய நாடாளுமன்ற கூட்டத்தொடரில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கனடா பிரதமா் மாா்க் காா்னியின் முன்னிலையில், யூனியனின் ஆண்டு நிலை குறித்த உரையாற்றியபோது உா்சுலா வான் டொ் லேயன் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டாா்.</p> <p>அமெரிக்காவுக்கு ஏறக்குறைய 70 சதவீத ஏற்றுமதியை செய்து வருகிறது கனடா.</p><p>ஐரோப்பிய யூனியனில் கனடா இணை உறுப்பினராவதன் மூலம் பாதுகாப்பு, எரிசக்தி, அரிய கனிம வளங்கள், பேட்டரி உற்பத்தி, ஏ.ஐ., குவாண்டம் தொழில்நுட்பம் மற்றும் சைபா் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கியத் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு பெரிய அளவில் மேம்படும்.</p> <h2>டிரம்ப் எதிர்ப்பு</h2><p>இது அமெரிக்க அதிபர் டிரம்ப்பை வெகுவாக எரிச்சலூட்டியுள்ளது. இதுகுறித்த பேசிய டிரம்ப் தனது ஆற்றாமையை வெளிப்படுத்தியுள்ளார்.</p><p>அவர் கூறுகையில், "ஐரோப்பிய ஒன்றியத்தில் கனடா இணைவது என்பது சிரிக்கத்தக்கது. ஐரோப்பிய தலைவர்கள் கனடாவை உறுப்பினராக சேர்த்து கொள்வது நல்ல நோக்கத்தில் இருந்தால் நலம்.</p> <p>அப்படி இல்லாமல் கெட்ட உள்நோக்கத்துடன் இருக்கும் என்றால், ஐரோப்பிய நாடுகள் மீது நாங்கள் பெரிய அளவில் வரிகளை விதிப்போம். ஐரோப்பாவின் சில பகுதிகளில் வர்த்தகங்களை நிறுத்தி கொள்வோம்" என தெரிவித்துள்ளார்.</p><p>தொடர்ந்து அவர் கூட்டம் ஒன்றில் பேசும்போது, "ஐரோப்பிய நாடுகளை நாம் சுமந்து கொண்டிருக்கிறோம். எங்களிடம் கார்கள் உள்ளன. கட்டிடங்கள் எழுப்ப தேவையான மரக்கட்டைகள் உள்ளன. உணவு உள்ளது. எல்லாமும் எங்களிடம் உள்ளது" என கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மத்திய முன்னாள் அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/former-union-minister-sudarsana-natchiappan-has-passed-away</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/former-union-minister-sudarsana-natchiappan-has-passed-away#comments</comments><guid isPermaLink="false">5f3348b0-4dcd-4272-9c7d-44a41c68610f</guid><pubDate>Thu, 17 Sep 2026 05:26:39 +0000</pubDate><atom:updated>2026-09-17T05:26:39.421Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Sudarsana Natchiappan,சுதர்சன நாச்சியப்பன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/745tslzo/sudarshana.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சுதர்சன நாச்சியப்பன்]]></media:title><media:description type="html"><![CDATA[ சுதர்சன நாச்சியப்பன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/745tslzo/sudarshana.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மத்திய முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சுதர்சன நாச்சியப்பன் இன்று காலமானார். அவருக்கு வயது 78.</strong></em></p><p>சிவகங்கையில் உள்ள இல்லத்தில் உடல்நலக்குறைவால் சுதர்சன நாச்சியப்பன் காலமானார். அவரது மறைவு செய்தி அறிந்து அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் சுதர்சன நாச்சியப்பன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. </p><h2><strong>சுதர்சன நாச்சியப்பனின் வாழ்க்கை குறிப்பு</strong></h2><p>இ.எம். சுதர்சன நாச்சியப்பனின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் ஏரியூர். எம்.ஏ.,பி.எல்., படித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து பிஎச்.டி. பட்டம் பெற்றுள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/காங்கிரஸ்">காங்கிரஸ்</a> பாரம்பரியக் குடும்பத்தைச் சேர்ந்தவர். 1999ல் மக்களவைக்கு சிவகங்கை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 2000-ஆம் ஆண்டில் தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைத் துறைத் தலைவராகவும், 2002-ஆம் ஆண்டில் தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவராகவும், 2003-ஆம் ஆண்டில் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி கொறடாவாகவும், 2004-ல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். 2004-ஆம் ஆண்டு முதல் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார். மாநிலங்களவை தலைமைக் கொறடாவாக பணியாற்றி, மத்திய அமைச்சராக பதவி வகித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பெங்களூருவில் பரபரப்பு: காதல் மனைவியை கடத்திய ராஜஸ்தான் குடும்பம்- சினிமா பாணியில் கார் சேஸிங், 6 பேர் படுகாயம்</title><link>https://www.maalaimalar.com/news/national/love-marriage-kidnap-drama-in-bengaluru-rajasthan-family-car-chase-ends-in-accident</link><comments>https://www.maalaimalar.com/news/national/love-marriage-kidnap-drama-in-bengaluru-rajasthan-family-car-chase-ends-in-accident#comments</comments><guid isPermaLink="false">83601813-1cee-46a5-9881-0d3b7fed24a3</guid><pubDate>Thu, 17 Sep 2026 05:18:14 +0000</pubDate><atom:updated>2026-09-17T05:18:14.219Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பெங்களூரு,bengaluru,Rajasthan,woman rescued,ராஜஸ்தான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/z28emmdm/car.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rajasthan ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/z28emmdm/car.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெற்றோருக்குத் தெரியாமல் தப்பி வந்த இளம் தம்பதியினர், பெங்களூருவில் உள்ள அக்ரஹாரா தசராஹள்ளி பகுதியில் வீடு எடுத்து அமைதியாக வசித்து வந்தனர்.</p><p>பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதலனைத் திருமணம் செய்து கொண்டு பெங்களூருவில் வசித்து வந்த 21 வயது இளம்பெண்ணை, அவரது குடும்பத்தினர் ஆட்களை அனுப்பி கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடத்தல்காரர்களின் காரை பொதுமக்கள் விரட்டிச் சென்றபோது ஏற்பட்ட விபத்துகளில் 6 பேர் படுகாயமடைந்தனர்.</p><h2>காதல் திரு<strong>மணம்</strong> </h2><p><a href="https://www.maalaimalar.com/sports/womens-t20-cricket-rankings-indias-srisarani-tops-icc-bowling-charts">ராஜஸ்தான் </a>மாநிலத்தைச் சேர்ந்த பூஜா(21) என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த ஓம் பிரகாஷ்(23) என்பவரும் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்திற்கு பூஜாவின் குடும்பத்தினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, பெற்றோருக்குத் தெரியாமல் தப்பி வந்த இளம் தம்பதியினர், பெங்களூருவில் உள்ள அக்ரஹாரா தசராஹள்ளி பகுதியில் வீடு எடுத்து அமைதியாக வசித்து வந்தனர்.</p><h2>கடத்தல் ச<strong>ம்பவம்</strong></h2><p>இந்நிலையில், நேற்று மாலை பூஜாவின் குடும்பத்தினரால் அனுப்பப்பட்ட நான்கு பேர் கொண்ட கும்பல், தம்பதியினரின் வீட்டிற்குள் புகுந்தது. ஓம் பிரகாஷை மிரட்டிய அக்கும்பல், பூஜாவை பலவந்தமாக இழுத்துச் சென்று காரில் ஏற்றி கடத்த முயன்றது. பூஜாவின் அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம் ்கத்தினர், உடனடியாக காரை மறிக்க முயன்றனர். ஆனால், கடத்தல்காரர்கள் காரை அதிவேகமாக இயக்கித் தப்பியோடினர்.</p><h2>சினி<strong>மா பாணி சே</strong>ஸிங்</h2><p>சுதாரித்துக் கொண்ட பகுதி மக்கள், தங்கள் வாகனங்களில் கடத்தல் காரரை சினிமா பாணியில் பின் தொடர்ந்து விரட்டிச் சென்றனர். இதனால் பீதியடைந்த காரை ஓட்டிச் சென்ற நபர், சாலையில் சென்ற பிற வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக மோதினார். இந்த விபத்தில் 6 பேர் படுகாயமடைந்தனர். இதில் படுகாயமடைந்த பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><h2><strong>3 பேர் கை</strong>து</h2><p>காரை நிறுத்த முயன்ற பொதுமக்களை கடத்தல்காரர்கள் வெட்டுக்கத்தியால் தாக்க முயன்றதாகவும், கல்வீச்சு தாக்குதலுக்குப் பிறகே கார் நிறுத்தப்பட்டதாகவும் சம்பவத்தைப் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். இறுதியில் பொதுமக்கள் காரைச் சூழ்ந்து பூஜாவை பத்திரமாக மீட்டு காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து விஜயநகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், ராஜஸ்தானைச் சேர்ந்த ராகேஷ் (31), கரண் (25) மற்றும் அயான் (18) ஆகிய மூவரைக் கைது செய்துள்ளனர். தப்பியோடிய கார் டிரைவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>&quot;பிரிக்ஸ் மாநாட்டுக்கு டெல்லி வந்தபோது பக்கவாதம் வந்து மயங்கி விழுந்த சீன அதிபர்?..&quot; தீயாக பரவும் தகவல் </title><link>https://www.maalaimalar.com/news/world/chinese-president-collapsed-after-suffering-a-stroke-upon-arriving-in-delhi-for-the-brics-summit-news-spreading-like-wildfire</link><comments>https://www.maalaimalar.com/news/world/chinese-president-collapsed-after-suffering-a-stroke-upon-arriving-in-delhi-for-the-brics-summit-news-spreading-like-wildfire#comments</comments><guid isPermaLink="false">8bc2af2d-ff58-4c0e-ab24-95d9ae5392f4</guid><pubDate>Thu, 17 Sep 2026 05:14:28 +0000</pubDate><atom:updated>2026-09-17T05:14:28.275Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,Xi Jinping,ஜி ஜின்பிங்,BRICS Summit,பிரிக்ஸ் உச்சிமாநாடு,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/yk0cskah/tn-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரிக்ஸ் மாநாடு]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரிக்ஸ் மாநாடு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/yk0cskah/tn-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சீன அதிபர் ஜி ஜின் பிங் கடந்த வாரம் டெல்லியில் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருந்தபோது மயங்கி விழுந்ததாகவும், அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டதாகவும் வதந்தி பரவி வருகிறது.</p> <p>கடந்த வார இறுதியில் செப்டம்பர் 12,13 டெல்லியில் 18வது <a href="https://www.maalaimalar.com/news/national/jaishankar-says-brics-summit-a-success">பிரிக்ஸ் உச்சிமாநாடு </a>நடைபெற்று முடிந்தது. இதில் ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் உள்ளிட்ட உறுப்பு நாட்டு தலைவர்கள் கலந்துகொண்டனர். </p><p>மாநாட்டில் கலந்துகொள்ள சனிக்கிழமை இந்தியா வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங் அன்றைய தினம் மாலை பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். </p><p>ஆனால் அதன்பின் பிரதமர் மோடி ஏற்பாடு செய்த இரவு விருந்தில் ஜி ஜின்பிங் கலந்துகொள்ளவில்லை. சவுதி இளவரசரும் கலந்துகொள்ளவில்லை. ஞாயிறு, மாநாடு முடிந்த பின் ஜி ஜின்பிங் சீனா திரும்பினார். </p> <h2>பக்கவாதம்?</h2><p>இதனிடையே சீன அதிபர் ஜி ஜின் பங் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்டபோது மயங்கி விழுந்ததாகவும், பின்னர் கடுமையான மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதாகவும் வதந்திகள் பரவின.</p><p>குறிப்பாக நாடுகடத்தப்பட்டு அமெரிக்காவில் வாழும் சீன எதிர்க்கட்சித் தலைவர் வான் ஜுன் ஷி இந்த வதந்தியை திட்டமிட்டு பரப்பியதாக கூறப்படுகிறது.</p><h2>வதந்தி</h2><p>சமூக ஊடகப் பதிவில், வான் ஜுன் ஷி, உச்சி மாநாட்டின் போது உடல்நலம் பாதிக்கப்பட்ட ஜின் பிங்கிற்கு தனிப்பட்ட மருத்துவக் குழு அவசர சிகிச்சை அளித்ததாகவும், இந்தியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் இந்த விஷயம் வெளிப்பட்டுவிடும் என்ற அச்சத்தில், அவர் தனது பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு ஒரு சிறப்பு விமானத்தில் சீனாவுக்குத் திரும்ப வேண்டியிருந்தது என்றும் கூறினார்.</p><p>பெய்ஜிங்கில் தரையிறங்கிய உடனேயே, அவர் ஹெலிகாப்டர் மூலம் நேரடியாக ஒரு இராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு அவருக்கு பக்கவாதத்திற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் ஷி தெரிவித்தார்.</p><h2>ஆதாரம் இல்லை</h2><p>இருப்பினும், இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. சீன வெளியுறவு அமைச்சகம் அட்டவணைப்படி, ஜின் பிங் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் உச்சிமாநாட்டில் கலந்துகொண்டார். அவர் செப்டம்பர் 12 அன்று டெல்லிக்கு வந்து முதல் அமர்வில் உரையாற்றினார். </p><p>பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். 13 ஆம் தேதி இரண்டாவது அமர்வில் கலந்துகொண்டு மதியம் டெல்லியிலிருந்து புறப்பட்டார். இந்திய அதிகாரிகள் விமான நிலையத்தில் அவருக்கு பிரியாவிடை அளித்தனர் என கூறப்பட்டுள்ளது.</p> <p>பிரதமர் மோடி ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்தில் ஜின் பிங் கலந்துகொள்ளவில்லை என்றாலும், நீண்ட பயணம் மற்றும் தொடர்ச்சியான சந்திப்புகள் காரணமாக அவர் ஓய்வு எடுத்திருந்ததாகவும், அவருக்குப் பதிலாக வெளியுறவு அமைச்சர் வாங் யி கலந்துகொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>மேலும், உச்சிமாநாட்டில் மோடி தனது உரையின் நடுவில் பேச்சை நிறுத்தி, ஜி ஜின் பிங்கைப் பார்த்து, "எல்லாம் சரியாக இருக்கிறதா?" என்று பிரதமர் மோடி கேட்டதும் விவாதப் பொருளாக இருந்தது.</p><p>இருப்பினும், இது உடல்நலப் பிரச்சினையால் அல்ல, மொழிபெயர்ப்பு ஹெட்போன்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே நிகழ்ந்தது என்று அறிக்கைகள் கூறுகின்றன.</p>]]></content:encoded></item><item><title>நாடு முழுவதும் சிலைகள் பிரதிஷ்டை: விநாயகர் சதுர்த்தியில் ரூ.59 ஆயிரம் கோடி வர்த்தகம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/rs-59000-crore-business-during-vinayagar-chaturthi</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/rs-59000-crore-business-during-vinayagar-chaturthi#comments</comments><guid isPermaLink="false">64a1f469-f48a-440f-81e9-472630d44484</guid><pubDate>Thu, 17 Sep 2026 05:05:06 +0000</pubDate><atom:updated>2026-09-17T05:05:06.920Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,விநாயகர் சிலைகள்,Vinayagar statue</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/2t4x1vnj/vinayagar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விநாயகர் சிலைகள்]]></media:title><media:description type="html"><![CDATA[ விநாயகர் சிலைகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/2t4x1vnj/vinayagar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தியின் போது ரூ.45,000 முதல் 59,000 கோடி வரை வர்த்தகம் நடந்துள்ளது. இதில் ஐதராபாத்தின் பங்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், அது சுமார் ரூ.10,000 கோடியாக இருக்கலாம் என்று வர்த்தக வட்டாரங்கள் மதிப்பிட்டுள்ளன.</strong></em> </p><h2><strong>விநாயக சதுர்த்தி விழா</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/விநாயகர்-சதுர்த்தி">விநாயக சதுர்த்தி</a> விழா நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டது.  மூலைமுடுக்குகளிலெல்லாம் விநாயகப் பெருமான் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.</p><p>அவரை அலங்கரிப்பதற்கும் வழிபடுவதற்கும் மண்டபங்கள், விளக்குகள், டிஜேக்கள், இசைக்குழுக்கள், கூடாரங்கள், மலர்கள், பழங்கள், பிரசாதங்கள் போன்றவை அவசியமாகின்றன. கணேஷ் ஆகமத்துடன் தொடங்கும் கொண்டாட்டங்கள், விசர்ஜனம் வரை தொடர்கின்றன. </p><p>அவை நகரத்தின் பொருளாதாரத்திற்குப் புத்துணர்வை அளிக்கின்றன. மங்களகரமான நிகழ்வுகள் அல்லது வர்த்தகங்களில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமல்லாமல், இசை நிகழ்ச்சிகள் மற்றும் கூடாரங்களை நடத்துபவர்களுக்கும் இவை பெரும் பலனை தந்துள்ளன.</p><p>மகாராஷ்டிராவிற்குப் பிறகு, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள்தான் விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாகக் கொண்டாடி உள்ளனர்.</p><h2><strong>வர்த்தகம்</strong></h2><p>சில சந்தை மதிப்பீடுகளின்படி, நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தியின் போது ரூ.45,000 முதல் 59,000 கோடி வரை வர்த்தகம் நடந்துள்ளது. இதில் ஐதராபாத்தின் பங்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், அது சுமார் ரூ.10,000 கோடியாக இருக்கலாம் என்று வர்த்தக வட்டாரங்கள் மதிப்பிட்டுள்ளன. </p><p>நாம் பக்தியுடன் விநாயகப் பெருமானுக்குச் செலவிடும் ஒவ்வொரு ரூபாயும், அது நமக்கு நேரடியாக மன மகிழ்ச்சியைத் தந்தாலும் சரி, மறைமுகமாக சில லட்சம் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது என்பது உண்மையே. </p><p>இந்த விநாயகர் சதுர்த்தியின் போது, ​​இரண்டு லட்சம் பேர் நேரடியாகவும், நான்கு லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.</p><p>விநாயகர் சதுர்த்தி என்பது ஒரு பக்திக் கொண்டாட்டம் மட்டுமல்ல, ஒரு பெரிய வணிக வாய்ப்பும் கூட என்றும் தெரியவந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பிரதமர் மோடி பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின், அன்புமணி, அண்ணாமலை வாழ்த்து
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/pm-modi-birthday-mk-stalin-anbumani-and-annamalai-wishes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/pm-modi-birthday-mk-stalin-anbumani-and-annamalai-wishes#comments</comments><guid isPermaLink="false">2484793c-a337-4a9d-911c-5581053e6a72</guid><pubDate>Thu, 17 Sep 2026 05:04:44 +0000</pubDate><atom:updated>2026-09-17T05:04:44.607Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,அண்ணாமலை,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,pm modi,annamalai,முக ஸ்டாலின்,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/vutgb0xl/mkstalin.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MK Stalin - Anbumani - Annamalai]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/vutgb0xl/mkstalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,  பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.</p> <p>இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 76-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, துணைக்குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜே.பி.நட்டா, தமிழ்நாடு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-birthday-wishes-to-pm-modi">முதலமைச்சர் விஜய்</a> மற்றும் பல மாநில முதல் மந்திரிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.</p> <p>இந்நிலையில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF">பிரதமர் மோடிக்கு</a> திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,</p><p>மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.</p><p>பிரதமர் மோடி நல்ல உடல் நலத்துடனும், மகிழ்ச்சியுடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.</p> <p>பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,</p><p>பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 76-ஆம் பிறந்தநாளில் அவருக்கு எனது உளப்பூர்வமான  நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ்ந்து பொதுவாழ்க்கையில் புதிய சாதனைகளைப் படைக்கவும், நாட்டிற்கு சேவையாற்றவும் வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.</p> <p>வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,</p><p>மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.</p> <p>நாட்டிற்கான அவரது அயராத சேவை, தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவம் மற்றும் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் மேம்படுத்துவதற்கான அவரது இடைவிடாத உத்வேகம் ஆகியவை லட்சக்கணக்கானோருக்குத் தொடர்ந்து ஊக்கமளித்து வருகின்றன. அவரது நல்ல ஆரோக்கியத்திற்காகவும் நீண்ட ஆயுளுக்காகவும் பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>எந்த மாற்றமும் இன்றி 2027 கவாசகி Z650RS இந்தியாவில் அறிமுகம்</title><link>https://www.maalaimalar.com/automobilenews/bike/2027-kawasaki-z650rs-launched-in-india</link><comments>https://www.maalaimalar.com/automobilenews/bike/2027-kawasaki-z650rs-launched-in-india#comments</comments><guid isPermaLink="false">5effd480-1107-4a5e-829d-0a7dcecabd47</guid><pubDate>Thu, 17 Sep 2026 05:02:00 +0000</pubDate><atom:updated>2026-09-17T05:02:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>bike,பைக்,Kawasaki,கவாசகி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/ui0si72r/2027-Kawasaki-Z650RS.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 2027 கவாசகி Z650RS]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/ui0si72r/2027-Kawasaki-Z650RS.png?w=280" width="280"></media:thumbnail><category>பைக் (Automobile)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/kawasaki">கவாசகி</a> நிறுவனம் தனது புதிய Z650RS பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய Z650RS விலை ரூ. 7.83 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. </p><p>இது இந்த பைக்கின் முந்தைய வெர்ஷன் விலை என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையில், அந்நிறுவனம் இந்த மோட்டார்சைக்கிளில் வண்ண விருப்பங்கள் உட்பட எதையும் மாற்றவில்லை. </p><p>அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதற்கு '2027' என்ற குறியீடு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது, இது இன்னும் ஒரு வருடத்திற்கு இந்த <a href="https://www.maalaimalar.com/topic/bike">பைக்</a> விற்பனையில் இருக்கும் என்பதை குறிப்பதாக இருக்கலாம்.</p><h2>என்ஜின் மற்றும் செயல்திறன்:</h2><p>புதிய Z650RS ஆனது எடை குறைந்த டிரெலிஸ் ஃபிரேமை கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. </p><p>மேலும், இதில் ட்ராக்ஷன் கண்ட்ரோல், டூயல்-சேனல் ஏ.பி.எஸ். மற்றும் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் போன்ற அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மோட்டார்சைக்கிளில் 649சிசி, பேரலல்-டுவின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.</p><p>இந்த யூனிட் 67bhp பவர் மற்றும் 64Nm டார்க் உற்பத்தி செய்கிறது. மேலும் இத்துடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதன் மென்மையான மற்றும் சீரான ஆற்றல் விநியோகத்திற்காக அறியப்படுகிறது, இது அன்றாட சவாரிக்கு எளிதாகவும் அதே சமயம் ஈர்க்கக்கூடியதாகவும் அமைகிறது.</p><h2>ஹார்டுவேர் மற்றும் சிறப்பு அம்சங்கள்:</h2><p>Z650RS-இன் முக்கிய சிறப்பம்சம் அதன் கம்பீரமான நியோ-ரெட்ரோ வடிவமைப்பு ஆகும். வட்ட வடிவ ஹெட்லைட், டூயல்-பாட் கன்சோல், டியர்-டிராப் வடிவ ஃபியூவல் டேன்க் மற்றும் நேர்த்தியான பின்பகுதியில் அமைந்துள்ள ஒற்றை இருக்கை ஆகியவற்றைக் கொண்டு இந்த பைக் மிகவும் அழகாகத் தெரிகிறது. தங்க நிற அலாய் வீல்கள் அதன் தோற்ற அழகை மேலும் மெருகூட்டுகின்றன.</p><p>17-இன்ச் வீல்களை கொண்டுள்ள இந்த பைக்கின் முன்புறத்தில் 41மில்லிமீட்டர் டெலஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் ப்ரீலோட்-அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டுள்ளது. பிரேக்கிங்கிற்கு, இதன் டைமண்ட்-டைப் சேசிஸ் முன்புறத்தில் இரட்டை டிஸ்க்குகளையும், பின்புறத்தில் ஒற்றை டிஸ்க்கையும் பயன்படுத்துகிறது.</p>]]></content:encoded></item><item><title>மகளிர் T20 கிரிக்கெட் தரவரிசை: ICC பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்ரீசரனி முதலிடம் பிடித்து சாதனை!</title><link>https://www.maalaimalar.com/sports/womens-t20-cricket-rankings-indias-srisarani-tops-icc-bowling-charts</link><comments>https://www.maalaimalar.com/sports/womens-t20-cricket-rankings-indias-srisarani-tops-icc-bowling-charts#comments</comments><guid isPermaLink="false">ba53e160-26ba-4a89-bbc3-0a9d8e70cb18</guid><pubDate>Thu, 17 Sep 2026 04:55:10 +0000</pubDate><atom:updated>2026-09-17T04:55:10.604Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ICC,Deepti Sharma,தீப்தி சர்மா,Womens T20 Cricket,Sree charani,ICC bowlers,மகளிர் T20 கிரிக்கெட்,ஸ்ரீசரனி,ICC பந்துவீச்சாளர்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/k68ullly/Sree-charani.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sree charani  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/k68ullly/Sree-charani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சமீபத்தில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கோப்பைத் தொடரில் இந்திய அணி கோப்பையைக் கைப்பற்ற இந்த இரு வீராங்கனைகளின் பந்துவீச்சும் முக்கியக் காரணமாக அமைந்தது. </p><p><a href="https://www.maalaimalar.com/sports/womens-premier-league-2027-tournament-dates-and-auction-announcement">சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்</a> (ICC) வெளியிட்டுள்ள மகளிர் T20 போட்டிகளுக்கான புதிய பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில், இந்திய அணியின் நட்சத்திர இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரீசரனி முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.</p><h2>800 பு<strong>ள்ளிகளை கடந்து மை</strong>ல்கல்</h2><p>துபாயில் நடைபெற்ற மகளிர் ஆசிய கோப்பை தொடரில் வெளிப்படுத்திய அபாரமான பந்துவீச்சு திறமையின் மூலம் ஸ்ரீசரனி 804 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை வலுப்படுத்தியுள்ளார். சர்வதேச மகளிர் T20 கிரிக்கெட் வரலாற்றில் 800 புள்ளிகள் என்ற மைல்கல்லை கடந்த முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற வரலாற்றுச் சாதனையை இவர் படைத்துள்ளார். அத்துடன், ஆஸ்திரேலியாவின் மேகன் ஷட் பெற்றுள்ள 806 புள்ளிகள் என்ற வரலாற்றுச் சாதனைக்கு மிக அருகில் இவர் வந்துள்ளார்.</p><h2>2-வது இடத்திற்<strong>கு முன்னே</strong>றிய தீப்தி சர்மா</h2><p>ஸ்ரீசரனியைத் தொடர்ந்து, மற்றொரு இந்திய சுழற்பந்து வீச்சாளரான தீப்தி சர்மா 729 புள்ளிகளுடன் 4 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். இதன் மூலம் மகளிர் T20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதல் இரண்டு இடங்களையும் இந்திய வீராங்கனைகளே கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.</p><h2>இந்திய வீரா<strong>ங்கனை</strong>களின் ஆதிக்கம்</h2><p>சமீபத்தில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கோப்பைத் தொடரில் இந்திய அணி கோப்பையைக் கைப்பற்ற இந்த இரு வீராங்கனைகளின் பந்துவீச்சும் முக்கியக் காரணமாக அமைந்தது. இறுதிப் போட்டியில் ஸ்ரீசரனி 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இத்தொடர் முழுவதிலும் தீப்தி சர்மா அதிகபட்சமாக 14 விக்கெட்டுகளையும், ஸ்ரீசரனி 12 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.</p><p>பந்துவீச்சு மட்டுமின்றி, பேட்டிங் தரவரிசையிலும் இந்திய வீராங்கனைகள் முன்னேற்றம் கண்டுள்ளனர். தொடரில் 236 ரன்கள் குவித்த துவக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா பேட்டிங் தரவரிசையில் 6-வது இடத்திற்கும், ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் 15-வது இடத்திற்கும் முன்னேறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அரசுப் பள்ளிகளின் மூடுவிழா: பள்ளிகளை மூடாமல், மனித வளம் மற்றும் கட்டமைப்பை உயர்த்துக! - அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-upgrade-human-resources-and-infrastructure-without-closing-schools</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-upgrade-human-resources-and-infrastructure-without-closing-schools#comments</comments><guid isPermaLink="false">daddf216-d237-452b-b274-5ae46168e268</guid><pubDate>Thu, 17 Sep 2026 04:49:13 +0000</pubDate><atom:updated>2026-09-17T04:49:13.362Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,govt schools,அரசு பள்ளிகள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/hw5icfpp/Anbumaniramadoss01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/hw5icfpp/Anbumaniramadoss01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அரசு பள்ளிகளுக்கு தேவையான அளவில் ஆசிரியர்களை நியமிக்கவும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியை  உடனடியாக 50 விழுக்காடும், அடுத்த மூன்றாண்டுகளில் 100 விழுக்காடும் உயர்த்த வேண்டும். அரசு பள்ளிகளுக்கு புத்துயிரூட்டுவதை ஒரு சிறப்பு இயக்கமாகவே தமிழ்நாடு அரசு முன்னெடுக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.</strong></em></p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>எச்சரிக்கை மணி</strong></h2><p>தமிழ்நாட்டில் உள்ள 14,829 அரசு தொடக்கப்பள்ளிகளில் 5 வகுப்புகளிலும் சேர்த்து 30-க்கும் குறைவான மாணவர்கள் தான் பயில்வதாக வெளியாகியுள்ள செய்திகள் கவலையளிக்கின்றன. அரசு பள்ளிகள் மீது மக்கள் நம்பிக்கையிழந்து விட்டனர்; இதே நிலை தொடர்ந்தால் இப்பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்த வேண்டியிருக்கும் என்பதை உணர்த்த அரசுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணியாகவே இந்தத் தரவுகள் வெளியாகியுள்ளன.</p><p>தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக வெளியாகியுள்ள புள்ளிவிவரங்களின்படி, மொத்தமுள்ள 24,349 அரசு தொடக்கப்பள்ளிகளில், 14,829 பள்ளிகளில், அதாவது 60.90 பள்ளிகளில் மொத்தமுள்ள 5 வகுப்புகளிலும் சேர்த்து 30-க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே பயின்று வருகின்றனர். அதிலும் கூட, 6,635 பள்ளிகளில் 20-க்கும் குறைவான மாணவர்களும், 3,027 பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவர்களும் தான் பயின்று வருகின்றனர். 20 முதல் 30 மாணவர்கள் வரை பயிலும் அரசு தொடக்கப்பள்ளிகளின் எண்ணிக்கை 5,167 ஆகும். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக வேகத்தில் வீழ்ச்சியடைந்து வருவதையே இந்த தரவுகள் காட்டுகின்றன.</p><p>இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், 30-க்கும் குறைவான மாணவர்கள் படிக்கும்  சுமார் 15 ஆயிரம் பள்ளிகளில் பாதிக்கும் மேற்பட்டவை வட மாவட்டங்களில் தான் உள்ளன என்பதாகும். குறிப்பாக, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், கடலூர், திருவள்ளூர் ஆகிய 5 வட மாவட்டங்களில் 30-க்கும் குறைவான மாணவர்கள் பயிலும் அரசு தொடக்கப் பள்ளிகள் 3,062 உள்ளன. இது மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் 20.65 விழுக்காடு என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2><strong>அரசு பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை வீழ்ச்சி</strong></h2><p>அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைவது என்பது கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்கதையாகி வருகிறது. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை 2024-25ஆம் ஆண்டில் 45.10 லட்சமாக இருந்தது. 2025-26 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 43.03 லட்சமாக குறைந்து விட்டது. அதாவது ஒரே ஆண்டில் அரசு பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை 2.07 லட்சம் குறைந்துள்ளது.</p><p>இதற்கு முன் 2022-23 ஆம் ஆண்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்து 42,026 ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடும் போது 3 ஆண்டுகளில் அரசு பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை 7.39 லட்சம் குறைந்துள்ளது. 2015-16 ஆம் ஆண்டில் அரசு பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை 75.52 லட்சமாக இருந்தது. ஆனால், 11 ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை 32 லட்சத்து 49 ஆயிரம் குறைந்திருக்கிறது. அதாவது 11 ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை 43.02% குறைந்துள்ளது.</p><p>அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவது ஏன்? என்பதைக் கண்டறிய ஆய்வுகள் எதுவும் தேவையில்லை. அரசு பள்ளிகளில் போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இல்லாததும், அரசு பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்புகள் கூட ஏற்படுத்தப்படாததும் தான் இதற்கு காரணம் என்பதை பாட்டாளி மக்கள் கட்சி கடந்த 15 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. 5 வகுப்புகளைக் கொண்ட அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு ஒன்று அல்லது இரண்டு ஆசிரியர்கள் மட்டும் இருந்தால், அவர்களால் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் எவ்வாறு பாடம் நடத்த முடியும்? அவ்வாறு பாடமே நடத்தப்படாத பள்ளிகளில் தங்களின் குழந்தைகள் பயில்வதை எந்தப் பெற்றோர் விரும்புவார்கள்? ஆகிய வினாக்களுக்கு விடைகளை கண்டறிந்தாலே அரசு பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை வீழ்ச்சிக்கு தீர்வு காண தமிழக அரசால் முடியும்.</p><p>பொதுத்தளத்தில் உள்ள புள்ளிவிவரங்களின் அடிப்படையில் கடந்த 12 ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. ஒரே ஒரு ஆண்டில் கூட அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. இந்த விவரங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசுக்கு நன்றாகத்  தெரியும். மத்திய அரசும் இது தொடர்பான புள்ளிவிவரங்களை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது.  அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியும் ஒவ்வொரு ஆண்டும் வலியுறுத்தி வருகிறது. ஆனால், பிரச்சனைகளை களைந்து பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.</p><p>இதே நிலை தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை. அதைத் தடுக்க வேண்டும் என்றால், அரசு பள்ளிகளுக்கு தேவையான அளவில் ஆசிரியர்களை நியமிக்கவும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியை  உடனடியாக 50 விழுக்காடும், அடுத்த மூன்றாண்டுகளில் 100 விழுக்காடும் உயர்த்த வேண்டும். அரசு பள்ளிகளுக்கு புத்துயிரூட்டுவதை ஒரு சிறப்பு இயக்கமாகவே தமிழ்நாடு அரசு முன்னெடுக்க வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>கால்பந்தில் புதிய மைல்கல் சாதனை படைத்த மெஸ்ஸி </title><link>https://www.maalaimalar.com/sports/football/messi-achieves-a-new-milestone-in-football</link><comments>https://www.maalaimalar.com/sports/football/messi-achieves-a-new-milestone-in-football#comments</comments><guid isPermaLink="false">5c0b67a7-bbb4-4dae-a0c3-80a3fa16ce43</guid><pubDate>Thu, 17 Sep 2026 04:46:25 +0000</pubDate><atom:updated>2026-09-17T04:46:25.473Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மெஸ்ஸி,Messi,கால்பந்து,FootBall,இன்டர் மியாமி,Inter Miami</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/pfb7eiqg/tn-5.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மெஸ்ஸி ]]></media:title><media:description type="html"><![CDATA[ மெஸ்ஸி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/pfb7eiqg/tn-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கால்பந்து (Football)</category><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி தனது வாழ்க்கையில் மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளார்.</p> <p>சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இன்டர் மியாமி அணி, குரூஸ் அஸுல் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. </p><p>இந்தப் போட்டியில் ஒரு கோல் அடித்தும், மற்றொரு கோலுக்கு உதவியும் <a href="https://www.maalaimalar.com/topic/lionel-messi">மெஸ்ஸி </a>அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார்.  </p> <h2>100வது கோல்</h2><p>ஆட்டத்தின் 24வது நிமிடத்தில், சக வீரர் லூயிஸ் சுவாரஸ் கொடுத்த கிராஸ் பந்தை, அவர் ஒரு அற்புதமான டைவிங் ஹெடர் மூலம் கோலாக மாற்றினார். இது இன்டர் மியாமி அணிக்காக அவர் அடித்த 100வது கோலாகும்.</p><p>வெறும் 115 போட்டிகளிலேயே இந்தச் சாதனையை நிகழ்த்தியதன் மூலம், 'மேஜர் லீக் சாக்கர்' (MLS) வரலாற்றில் ஒரு கிளப்பிற்காக 100 கோல்களை அடித்த அதிவேக வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்துள்ளார்.</p><p>மெஸ்ஸி இதுவரை மியாமி அணிக்காக 100 கோல்களை அடித்ததோடு மட்டுமில்லாமல் 55 கோல்களை அடிக்க உதவியும் உள்ளார்.</p><p>கடந்த ஆட்டத்திலும் 81வது நிமிடத்தில், மெஸ்ஸி கொடுத்த கார்னர் கிக்கை காசிமிரோ தலையால் முட்டி கோலாக்கி, அணியின் முன்னிலையை 2-0 என உயர்த்தினார்.</p><p>இந்த வெற்றியின் மூலம், இன்டர் மியாமி தனது வரலாற்றில் முதல் முறையாக சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது.</p> <h2>சாம்பியன்ஸ் கோப்பை</h2><p>இந்தப் போட்டி, அமெரிக்காவின் MLS கோப்பை வெற்றியாளருக்கும் மெக்சிகோவின் லிகா MX வெற்றியாளருக்கும் இடையே ஆண்டுதோறும் நடத்தப்படுகறது.</p><p>கடந்த மூன்று சீசன்களாக மெக்சிகன் அணிகள் இந்தக் கோப்பையை வென்று வந்த நிலையில், மியாமி அவர்களின் ஆதிக்கத்தை முறியடித்தது.</p> <p>இது புதிய தலைமைப் பயிற்சியாளர் கிறிஸ்டியன் கோன்சாலெஸின் முதல் போட்டியாகும். அவர் தனது முதல் போட்டியிலேயே அணிக்கு கோப்பையைப் பெற்றுத் தந்ததள்ளார்.</p><p>2023ல் இன்டர் மியாமியில் இணைந்தார் மெஸ்ஸி. 39 வயதிலும் சிறப்பான பார்மில் இருக்கும் மெஸ்ஸி, தனது வருகைக்குப் பிறகு லீக்ஸ் கோப்பை, சப்போர்ட்டர்ஸ் ஷீல்ட் மற்றும் MLS கோப்பை போன்ற பல பட்டங்களை அணிக்குப் பெற்றுத் தந்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY: சற்றே சரிந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-17-9-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-17-9-2026#comments</comments><guid isPermaLink="false">b07e0848-1034-4f07-9cfe-56550133d63d</guid><pubDate>Thu, 17 Sep 2026 04:35:09 +0000</pubDate><atom:updated>2026-09-17T04:35:09.958Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-20/pbxjnmn2/gold4.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-20/pbxjnmn2/gold4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.1,12,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p>தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. </p><p>சென்னையில் கடந்த 12-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.1,13,360-க்கும், கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.14,170-க்கும் விற்பனையானது. 13-ந்தேதி சவரன் ரூ.1,13,360-க்கும், ஒரு கிராம் ரூ.14,170-க்கும் விற்பனையானது. 14-ந்தேதி சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.1,13,000-க்கும், கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.14,125-க்கும் விற்பனையானது. 15-ந்தேதி சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.1,12,320-க்கும், கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.14,040-க்கும் விற்பனையானது.</p> <p>நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.1,12,520-க்கும், கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.14,065-க்கும் விற்பனையானது.</p><p>இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.1,12,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.14,010-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>கடந்த 6 நாட்களாக வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்</h2><p>16-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.112,520</p><p>15-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.112,320</p><p>14-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,000</p><p>13-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,360</p><p>12-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,360</p> <h2>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்</h2><p>16-09-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>15-09-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>14-09-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>13-09-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>12-09-2026- ஒரு கிராம் ரூ.250</p> ]]></content:encoded></item><item><title>ரீசார்ஜ் செய்தால் கேன்வா சந்தா முற்றிலும் இலவசம் - ஜியோவின் அசத்தல் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/jio-is-offering-canva-pro-subscription-for-free</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/jio-is-offering-canva-pro-subscription-for-free#comments</comments><guid isPermaLink="false">df0b4758-7d5e-4190-99f7-8160dc823706</guid><pubDate>Thu, 17 Sep 2026 04:23:00 +0000</pubDate><atom:updated>2026-09-17T04:23:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Jio,சலுகை,ஜியோ,Canva Pro</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/g9f1qm6o/Jio-and-Canva.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jio and Canva]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/g9f1qm6o/Jio-and-Canva.png?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/jio">ஜியோ</a> நிறுவனம் கேன்வாவுடன் இணைந்து, தகுதியுள்ள பயனர்களுக்கு 12 மாதங்கள் வரை கேன்வா ப்ரோ அல்லது கேன்வா ப்ரோ லைட் சந்தாவை இலவசமாக வழங்குகிறது. </p><p>இந்த தொகுப்பு , தனி சந்தா செலுத்தாமல் காட்சி உள்ளடக்கத்தை உருவாக்க விரும்பும் மாணவர்கள், கிரியேட்டர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் சிறு வணிகங்கள் போன்ற ஜியோ சந்தாதாரர்களுக்கு கேன்வாவின் பிரீமியம் டிசைன் டூல்ஸ் மற்றும் ஏஐ சார்ந்த அம்சங்களை வழங்குகிறது. </p><p>இந்த சலுகை செப்டம்பர் 16, 2026 முதல் படிப்படியாக வழங்கப்படும், மேலும் கேன்வா திட்டம் பயனரின் ஜியோ ரீசார்ஜ் பொறுத்து அமையும். </p><h2>இரு திட்டங்களுடன் கேன்வா சந்தா:</h2><p>இந்த புதிய கூட்டணி மூலம், தகுதியுள்ள ஜியோ பயனர்களுக்கு அவர்களின் தற்போதைய ரீசார்ஜை பொறுத்து, 12 மாதங்களுக்கு கேன்வா பிரீமியம் சேவை எந்த கூடுதல் கட்டணமும் இன்றி வழங்குகிறது. ரூ.399 திட்டத்தில் உள்ள பயனர்கள் கேன்வா ப்ரோவையும், ரூ.349 மற்றும் ரூ.349-க்கு மேல் விலையுள்ள, தகுதியுள்ள 2ஜிபி/நாள் திட்டங்களில் உள்ள பயனர்கள் கேன்வா ப்ரோ லைட் சந்தாவையும் பெறுவார்கள்.</p><p>இந்த இரண்டு திட்டங்களும் கேன்வாவின் பிரீமியம் டெம்ப்ளேட்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் எழுத்துருக்களுடன், பேக்ரவுண்ட் ரிமூவர், மேஜிக் ரீசைஸ், மேஜிக் எரேசர் போன்ற அம்சங்களை வழங்குகின்றன. இதன் மூலம் பயனர்கள் கேன்வாவின் பல பிரீமியம் வடிவமைப்பு அம்சங்களுக்கு தனியாக பணம் செலுத்தாமலேயே சேவையை பெறுகிறார்கள்.</p><h2>கேன்வா சந்தா பலன்கள்:</h2><p>தொடர்ந்து உள்ளடக்கத்தை உருவாக்கும் பயனர்களுக்காக கூடுதல் அம்சங்களை சேர்க்கும் கேன்வா ப்ரோவில்தான் முக்கிய வேறுபாடு உள்ளது. இதில் கன்டன்ட் பிளானர் (Content Planner), கேன்வா ஏஐ (Canva AI), அதிக ஏஐ பயன்பாட்டு வரம்புகள் மற்றும் ஒரு பெரிய பிராண்ட் கிட் (Brand Kit) ஆகியவை அடங்கும்.</p><p>அதேசமயம், ப்ரோ லைட் (Pro Lite) ஆனது வரையறுக்கப்பட்ட ஏஐ அணுகலுடன் (இலவசப் பதிப்பைப் போலவே) முக்கிய வடிவமைப்பு அம்சங்களுக்கு மட்டுமே தன்னை வரப்படுத்திக் கொள்கிறது.</p><p>தகுதியுள்ள பயனர்கள், மைஜியோ செயலி (MyJio app) மூலம் கேன்வா சலுகையை திறந்து அதை செயல்படுத்துவதன் மூலம் இந்த சலுகையை பெறலாம் என்று ஜியோ கூறுகிறது. இந்த 12 மாத பலன் செப்டம்பர் 16, 2026 முதல் வழங்கத் தொடங்கும், மேலும் சலுகை காலத்தில் கேன்வா சந்தாவிற்கு கூடுதல் கட்டணம் ஏதும் இல்லை.</p>]]></content:encoded></item><item><title>பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-birthday-wishes-to-pm-modi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-birthday-wishes-to-pm-modi#comments</comments><guid isPermaLink="false">8d09d422-0fe9-41e3-892d-60af232f7892</guid><pubDate>Thu, 17 Sep 2026 04:15:54 +0000</pubDate><atom:updated>2026-09-17T04:15:54.319Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,தவெக,விஜய்,vijay,pm modi,tvk,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/ld1qpol9/vijay1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay - PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/ld1qpol9/vijay1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.</p><p>இந்தியப் <a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-birthday-bjp-seva-sankalp-abhiyan-launch-president-murmu-greetings">பிரதமர் நரேந்திர மோடி</a> இன்று தனது 76-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, துணைக்குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜே.பி.நட்டா, மற்றும் பல மாநில முதல் மந்திரிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.</p> <p>இந்நிலையில் பிரதமர் மோடிக்கு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-honour-to-periyar">முதலமைச்சர் விஜய்</a> பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,</p><p>வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p> <p>தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் நீடுழி வாழ உளமார வாழ்த்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>VIDEO- பெரியார் பிறந்தநாள்: &apos;Fashion Statement-இல் மட்டும்தான் பெரியார் இருக்காரா?&apos;- டிரெண்டாகும் கனிமொழி எம்பியின் வீடியோ!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-mp-video-periyar-fashion-statement-trend</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-mp-video-periyar-fashion-statement-trend#comments</comments><guid isPermaLink="false">c3b9a2d9-8b32-4198-8864-e590be0efa60</guid><pubDate>Thu, 17 Sep 2026 04:13:16 +0000</pubDate><atom:updated>2026-09-17T04:13:16.793Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>கனிமொழி எம்பி,MP Kanimozhi,பெரியார்,பெரியார் பிறந்தநாள்,Periyars Birthday,fashion statements</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/er2bdftq/kani.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Periyars Birthday ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/er2bdftq/kani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வெறும் தோற்றத்திலும், ஆடை வடிவமைப்பு ஸ்டைல்களிலும் மட்டுமே பெரியாரை வெளிப்படுத்துவது போதாது.</p><p>தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு (செப்டம்பர் 17), திமுக நாடாளுமன்ற குழுத் தலைவரும் எம்பியுமான கனிமொழி கருணாநிதி வெளியிட்டுள்ள சிறப்புச் செய்தி மற்றும் வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.</p><p>தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள கனிமொழி எம்பி, தற்காலத்தில் பெரியாரின் உருவம் மற்றும் அடையாளங்கள் ஆடை வடிவமைப்புகள் மற்றும் ஃபேஷன் கலாச்சாரத்தில் மட்டுமே சுருக்கப்பட்டு வருகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">பெரியாரைப் படிப்போம்; அவர் விதைத்த சிந்தனைகளை உலகெங்கும் விதைப்போம்; நாளைய உலகை பகுத்தறிவும் சமத்துவமும் நிறைந்த உலகாகப் படைப்போம்!<a href="https://x.com/hashtag/SocialJusticeDay?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#SocialJusticeDay</a> <a href="https://x.com/hashtag/PeriyarForever?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#PeriyarForever</a> <a href="https://t.co/xe6vKHsCxl">pic.twitter.com/xe6vKHsCxl</a></p>&mdash; Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) <a href="https://x.com/KanimozhiDMK/status/2100400617344942407?ref_src=twsrc%5Etfw">September 17, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><p>வெறும் தோற்றத்திலும், ஆடை வடிவமைப்பு ஸ்டைல்களிலும் மட்டுமே பெரியாரை வெளிப்படுத்துவது போதாது; அவரது ஆழமான கொள்கைகளையும் சிந்தனைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை அவர் இதில் வலியுறுத்தியுள்ளார்.</p><h2>சிந்தனை<strong>களை உ</strong>லகெங்கும் விதைப்போம்</h2><p>பெரியாரின் கோட்பாடுகளைப் பற்றி குறிப்பிட்ட அவர், "<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-honour-to-periyar">பெரியாரை படிப்போம்</a>; அவர் விதைத்த முற்போக்குச் சிந்தனைகளை உலகெங்கும் விதைப்போம்! நாளைய உலகை வெறும் சடங்குகளால் அல்லாமல், பகுத்தறிவும் சமூகச் சமத்துவமும் நிறைந்த ஆரோக்கியமான உலகாகப் படைப்போம்" என்று அழைப்பு விடுத்துள்ளார்.</p><h2>பகுத்தறிவு<strong>ப் பாதை</strong></h2><p>சாதியக் கட்டமைப்பு, பெண் அடிமைத்தனம் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகத் தந்தை பெரியார் மேற்கொண்ட போராட்டங்களை நினைவு கூர்ந்த கனிமொழி எம்பி, இன்றைய இளைய தலைமுறை பெரியாரின் புத்தகங்களையும் எண்ணங்களையும் ஆழமாகக் கற்றுத் தேர வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார். சமத்துவ சமுதாயத்தைக் கட்டமைக்க பெரியாரிய சிந்தனைகளே அடித்தளம் என்பதை இந்த வீடியோ பதிவு மூலம் அவர் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜயின் இங்கிலாந்து பயணம் வெற்றிப் பயணமாக அமைந்துள்ளது- தமிழ்நாடு அரசு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijays-visit-to-england-has-proven-to-be-a-successful-one</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijays-visit-to-england-has-proven-to-be-a-successful-one#comments</comments><guid isPermaLink="false">d32de2bb-74ea-486c-9f66-3eb64c2519b2</guid><pubDate>Thu, 17 Sep 2026 04:03:38 +0000</pubDate><atom:updated>2026-09-17T04:03:38.412Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,TN Govt,தமிழக அரசு,லண்டன் பயணம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/rzg1nd4o/vijay0.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/rzg1nd4o/vijay0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்நாட்டை உலக முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்குரிய தொழில் முதலீட்டு மையமாக நிலைநிறுத்தும் நமது வெற்றிப் பயணம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</strong></em> </p><p>தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்</a> அவர்களின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர், தமிழ்நாட்டில் நேர்மையான, வெளிப்படைத்தன்மையுடன் கூடிய நிர்வாகம், அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையிலான நலத்திட்டங்கள் என மக்கள் போற்றும் சிறப்பான ஆட்சியை வழங்கி வருவதுடன், 2036-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை 1.5டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையோடு திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி வருகிறது.</p><p>அதன்படி, தமிழ்நாட்டை முதலீட்டுக்கு உகந்த முதன்மை மையமாக உருவாக்கிடும் வகையில், எண்ணற்ற தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு வருகின்றன. வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026-ன் வாயிலாக 67,452 கோடி ரூபாய் முதலீடுகள் மற்றும் 1,06,998 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதோடு, இந்த அரசு பொறுப்பேற்ற 100 நாட்களில் ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.</p><p>இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டிற்கு மேலும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகக் கடந்த 10.9.2026 அன்று இங்கிலாந்து நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டார். </p><h2><strong>இங்கிலாந்து நாட்டிற்கான இந்தியத் தூதர் சந்திப்பு</strong></h2><p>இலண்டனில் 12.9.2026 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை இங்கிலாந்து நாட்டிற்கான இந்தியத் தூதர் குமரன் பெரியசாமி, I.F.S. அவர்கள் சந்தித்து, இந்தியா–பிரிட்டன் விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின் (CETA) பின்னணியில், தமிழ்நாடு மற்றும் பிரிட்டனுக்கு இடையே உருவாகக்கூடிய வாய்ப்புகள் மற்றும் கூட்டாண்மைகள் குறித்துக் கலந்துரையாடினர்.</p><h2><strong>சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டைப் பார்வையிட்டு, 2026 மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தைத் தொடங்கி வைத்தல்</strong></h2><p>தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த 3.9.2026 அன்று விதி எண் 110-ன் கீழ், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், “உலகத்தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் (Motor Sports City) தமிழ்நாட்டில் அமைக்கப்படும்” என்று அறிவித்தார். அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டிற்கு நேரில் சென்று, அங்குள்ள Race Control மற்றும் Race circuit பகுதிகளைப் பார்வையிட்டார். மேலும், சர்வதேச அளவிலான நீண்டதூர கார் பந்தயத்தை நடத்துவதற்குத் தேவையான நவீன தொழில்நுட்பங்கள், செயல்பாட்டு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் குறித்துக் கேட்டறிந்ததோடு, சில்வர்ஸ்டோன் ரேஸ் மியூசியத்தையும் பார்வையிட்டார்.</p><p>அதனைத் தொடர்ந்து, சில்வர்ஸ்டோன் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத் திடலில், முன்னணி நடிகரும், மோட்டார் கார் பந்தய வீரருமான அஜித் குமார் அவர்கள் கலந்துகொண்ட 2026 மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.</p><h2><strong>தொழில் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்</strong></h2><p>தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில், இலண்டனில் 14.09.2026 அன்று, வாகன உதிரிபாக உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் மின்கட்டமைப்பு உபகரணங்கள் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் (Global Capability Centres) ஆகியவற்றை உள்ளடக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், புதிய தொழில் முதலீட்டிற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட நோக்கக் கடிதம் என மொத்தம் 15,300 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து, 10,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.</p><p>❖ சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் (Samvardhana Motherson International Ltd.,) நிறுவனம், அதன் ஐரோப்பா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் சுமார் 11,000 கோடி ரூபாய் முதலீட்டில், வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி,  ஒருங்கிணைப்பு மற்றும் தளவாடங்கள் சார்ந்த வசதிகளை நிறுவுவதன் மூலம் சுமார் 7,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.</p><p>❖ தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை (Global Capability Centres-GCCs) விரிவுபடுத்துவதற்கும், நிறுவுவதற்கும் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.</p><p>ஸ்வீடனைச் சேர்ந்த சிக்மா டெக்னாலஜி குழுமம், தமிழ்நாட்டில் எம்பெடட் சிஸ்டம்ஸ், மின்மயமாக்கல் மற்றும் தொழில்துறை டிஜிட்டல்மயமாக்கல் ஆகிய துறைகளில் 600 உயர் மதிப்பு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், திருச்சிராப்பள்ளி மற்றும் சென்னையில் உள்ள தனது உலகளாவிய திறன் மையங்களை, தனது இந்திய நிறுவனமான ஸ்ரியா சொல்யூஷன்ஸ் மூலம் விரிவாக்குவதற்கு உறுதியளித்து, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.</p><p>ஏர்ன்ஸ்ட் &amp; யங் நிறுவனம் (Ernst &amp;amp; Young) ஒரு சர்வதேச நிறுவனத்திற்காக, தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையத்தை (Global Capability Centre) அமைக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. ‘கட்டு – இயக்கு – மாற்றியமை - மாற்று’ (Build-Operate-Transform-Transfer -BOTT) ஏற்பாட்டின் கீழ், இந்த மையத்தை நிறுவுவதற்கும், அதன் ஆரம்பகட்ட செயல்பாடுகளுக்கும் ஏர்ன்ஸ்ட் &amp; யங் (Ernst &amp; Young) நிறுவனம் ஆதரவளிக்கும். பின்னர், அம்மையம் அச்சர்வதேச நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். இந்த உலகளாவிய திறன் மையம் (GCC) சுமார் 1,000 கோடி ரூபாய் முதலீட்டுடன், 2,000-க்கும் மேற்பட்ட உயர் மதிப்புள்ள புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்மையம், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சென்னையில் உள்ள மவுண்ட்- பூந்தமல்லி சாலைப் பகுதியிலுள்ள GCC வழித்தடத்தில் அமையும்.</p><p>❖ திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.300 கோடி முதலீட்டில் 400 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் பிரிட்டனைத் தலைமையிடமாகக் கொண்ட திறன்மிக்க மின்மாற்றிகளை தயாரிக்கும் ‘வில்சன் பவர் சொல்யூஷன்ஸ்’ (Wilson Power Solutions) நிறுவனம், தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.</p><p>❖ ஐரோப்பாவின் முன்னணி வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம் ஒன்று, இந்தியாவில் தான் மேற்கொள்ளவிருக்கும் ரூ.3,000 கோடி முதலீட்டிற்கு தமிழ்நாட்டையே விரும்பத்தக்க இடமாகக் கருதுவதாகத் தனது விருப்பத்தைத் தெரிவித்து, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அவர்களிடம் தனது விருப்பக் கடிதத்தைச் சமர்ப்பித்தது.</p><h2><strong>ஹிந்துஜா குழுமத்தின் தலைமை நிர்வாகிகள் சந்திப்பு</strong></h2><p>அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் தீரஜ் ஹிந்துஜா, ஃபினோலெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Finolex Industries Limited) நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் பிரகாஷ் பி. சாப்ரியா, இயக்குநர் ரீட்டா ஹிந்துஜா சாப்ரியா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைச் சந்தித்து, ஆகஸ்ட் 2026-ல் நடைபெற்ற ‘வெற்றி’ (VETTRI) தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது மேற்கொள்ளப்பட்ட 2,500 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள், தமிழ்நாட்டில் ஹிந்துஜா குழும முதலீடுகளின் முன்னேற்றம் குறித்து விளக்கினர்.</p><p>தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில், குறிப்பாக, காற்றாலை மின்சக்தித் துறையில் முதலீடுகளை மேலும் அதிகரிப்பதில் இக்குழுவினர் விருப்பம் தெரிவித்ததோடு, தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் வணிக வாகனங்களின் ஏற்றுமதியை அதிகரிப்பது குறித்தும், வாகன உற்பத்தித்துறைக்கான ஏற்றுமதி மையமாகத் தமிழ்நாட்டின் பங்கை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கலந்தாலோசித்தனர்.</p><h2><strong>முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுடன் சந்திப்பு</strong></h2><p>தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சந்திப்புகளுடன், விண்வெளி மற்றும் பாதுகாப்பு, இரசாயனங்கள், தளவாடங்கள், கட்டுமானம், நிதிச் சேவைகள், சில்லறை வர்த்தகம் மற்றும் சட்ட சேவைகள் ஆகிய துறைகளைச் சேர்ந்த 10 முன்னணி நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்களுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் நடத்தினர்.</p><p>பிரிட்டன் வர்த்தக நிறுவனங்களுக்கும், தமிழ்நாட்டின் ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தியாளர்களுக்கும் இடையேயான மூலப்பொருட்கள் கொள்முதல் ஒப்பந்தங்கள், ஓசூருக்கு இங்கிலாந்து விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை பிரதிநிதிகள் குழு வருகை புரிவதற்கான வாய்ப்பு, அக்டோபர் மாதம் சென்னைக்கு இங்கிலாந்து மேயர் ஆணையத்தின் (NEMSA) பிரதிநிதிகள் குழு வருகை, நிதிச் சேவைத் துறைக்கான திறன் மேம்பாட்டுக் கூட்டாண்மைகள், இந்த ஆண்டின் பிற்பகுதியில் பிரிட்டனுடன் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதிப் பயிலரங்கம், பிரிட்டன் - இந்தியா விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு உருவாகும் வாய்ப்புகளை அடையாளம் காட்டும் அறிக்கை தயாரித்தல் போன்றவை குறித்து விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.</p><p>தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டை நோக்கி வரும் மேற்கண்ட தொழில் முதலீடுகளை சாத்தியமாக்கவும், தமிழ்நாட்டில் அதன் செயல்பாடுகளை வெற்றிகரமாக நிறுவவும் தேவையான அனைத்து உதவிகளையும், நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.</p><p>தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இலண்டன் சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட் மற்றும் தான் தங்கியிருந்த ஹோட்டலில் சிறப்பான வரவேற்பு வழங்கிய தமிழ்ச் சொந்தங்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். மேலும், அங்கு தமிழ்ச் சொந்தங்களைச் சந்திக்க இருந்தபோது இலண்டன் காவல் துறையினரால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சந்திக்க இயலாமல் போனதற்காகத் தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டதோடு, பேராதரவு வழங்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.</p><p>தமிழ்நாட்டிற்குத் தொழில் முதலீடுகளை ஈர்த்திட மேற்கொண்ட இப்பயணத்தில் இலண்டனில் அனைத்து ஏற்பாடுகளையும் ஒருங்கிணைந்து மேற்கொள்வதற்குப் பேருதவியாக இருந்த இங்கிலாந்து நாட்டிற்கான இந்தியத் தூதர் அவர்களுக்கும், தூதரக உயர் அலுவலர்களுக்கும், தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்வதற்குப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்ட மற்றும் விருப்பக் கடிதம் வழங்கிய தொழில் நிறுவனங்கள், அதன் கூட்டு நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கும், உயர் அலுவலர்களுக்கும், தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைப்பதற்கு ஏதுவாக சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டின் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து எடுத்துக்கூறிய முன்னணி நடிகரும், மோட்டார் கார் பந்தய வீரருமான அஜித் குமார் அவர்களுக்கும் சிறப்பு நன்றியைத் தெரிவித்துக் கொண்டதோடு, சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட் மற்றும் மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை நிர்வாகிகள் மற்றும் அலுவலர்களுக்கும் இங்கிலாந்து பயணத்தின்போது நல்லாதரவு அளித்த அந்நாட்டில் வாழும் தமிழ்ச் சொந்தங்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.</p><p>தமிழ்நாட்டின் திறன்மிக்க மனிதவளம், வலுவான தொழில்துறை அடித்தளம், சிறந்த உட்கட்டமைப்பு வசதிகள், தொழில் தொடங்குவதற்கான அமைதியான சூழல் மற்றும் எளிய நடைமுறைகள் ஆகியவற்றை உலகிற்கு எடுத்துரைத்து, புதிய முதலீடுகளுக்கான வாய்ப்புகளை உருவாக்கியுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் இங்கிலாந்து வெற்றிப் பயணம் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும், முதலீட்டு ஈர்ப்புக்கும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் மேலும் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது.</p><p>தமிழ்நாட்டை உலக முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்குரிய தொழில் முதலீட்டு மையமாக நிலைநிறுத்தும் நமது வெற்றிப் பயணம் தொடரும்.</p><p>இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>6,000mAh பேட்டரியுடன் அறிமுகமான சாம்சங் ஸ்மர்ட்போன்</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/samsung-galaxy-a08-launched-with-6000mah-battery</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/samsung-galaxy-a08-launched-with-6000mah-battery#comments</comments><guid isPermaLink="false">90ac2c9d-98fa-4b60-8c1f-28c09a3d269d</guid><pubDate>Thu, 17 Sep 2026 03:43:00 +0000</pubDate><atom:updated>2026-09-17T03:43:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Samsung,சாம்சங்,smartphone,ஸ்மார்ட்போன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/yw7iureg/Samsung-Galaxy-A08.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Samsung Galaxy A08]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/yw7iureg/Samsung-Galaxy-A08.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான <a href="https://www.maalaimalar.com/topic/samsung">சாம்சங்</a> தனது புதிய என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன், சாம்சங் கேலக்ஸி A08 மாடலை தேர்ந்தெடுக்கப்பட்ட உலக சந்தைகளில் அறிமுகம் செய்துள்ளது. </p><p>இந்த புதிய ஸ்மார்ட்போன் தற்போது நிறுவனத்தின் இணையதளம் வழியாக விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் இந்த <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மார்ட்போன்</a> ஒற்றை ரேம் மற்றும் மெமரி ஆப்ஷனில் வழங்கப்படுகிறது.</p><p>இந்த ஸ்மார்ட்போன் மூன்று தனித்துவமான வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி A08 மாடல் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 50MP பிரைமரி கேமராவுடன் டூயல் லென்ஸ் செட்டப் உள்ளது. இது 6,000mAh பேட்டரியுடன் வருகிறது.</p><h2>சாம்சங் கேலக்ஸி A08 சிறப்பு அம்சங்கள்:</h2><p>சாம்சங் கேலக்ஸி A08 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ஒன் யுஐ 8 ஓ.எஸ். உடன் வருகிறது. டூயல் சிம் ஸ்லாட் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனிற்கு 2032 வரை அப்டேட்கள் வழங்குவதாக சாம்சங் நிறுவனம் உறுதியளிக்கிறது. புதிய கேலக்ஸி A08 ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் HD+ 720x1,600 பிக்சல் PLS LCD டச் ஸ்கிரீன் கொண்டுள்ளது.</p><p>சாம்சங் கேலக்ஸி A08 மாடலில் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ G99 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 6nm செயல்முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போனில் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி ஆப்ஷனில் கிடைக்கிறது. இத்துடன் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 2 டிபி வரை விரிவாக்க முடியும்.</p><p>கேமராக்களைப் பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி A08 இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 50MP பிரைமரி கேமரா, 2MP சென்சார், 8MP செல்ஃபி கேமரா உள்ளது.</p><p>சாம்சங் கேலக்ஸி A08, 6,000mAh பேட்டரி கொண்டுள்ளது. கனெக்டிவிட்டிக்கு இந்த மாடலில் 4ஜி எலடிஇLTE, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.3, யுஎஸ்பி டைப்-சி போர்ட், GPS, BeiDou, Galileo மற்றும் OZSS ஆகியவற்றை ஆதரிக்கிறது. இதில் உள்ள சென்சார்களின் பட்டியலில், பாதுகாப்பிற்கான கைரேகை ஸ்கேனர், ஆம்பியன்ட் லைட் சென்சார் மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார் ஆகியவை அடங்கும்.</p><h2>சாம்சங் கேலக்ஸி A08 விலை விவரங்கள்:</h2><p>4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒற்றை வேரியண்ட் சாம்சங் கேலக்ஸி A08 ஸ்மார்ட்போன் UAH 10,699 (இந்திய மதிப்பில் ரூ. 23,000) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் தற்போது சாம்சங் உக்ரைன் ஆன்லைன் ஸ்டோரில் விற்பனைக்கு கிடைக்கிறது.</p><p>புதிய சாம்சங் கேலக்ஸி A08 ஸ்மார்ட்போன் டார்க் புளூ, கிரீன் மற்றும் சில்வர் என மூன்று வண்ண விருப்பங்களில் வழங்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஜம்மு காஷ்மீர் உதம்பூரில் இரவு முழுவதும் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை</title><link>https://www.maalaimalar.com/news/national/two-terrorists-killed-in-overnight-gunfight-in-udhampur-jammu-and-kashmir</link><comments>https://www.maalaimalar.com/news/national/two-terrorists-killed-in-overnight-gunfight-in-udhampur-jammu-and-kashmir#comments</comments><guid isPermaLink="false">0129d010-da1b-4029-bbcb-2f80de419547</guid><pubDate>Thu, 17 Sep 2026 03:42:49 +0000</pubDate><atom:updated>2026-09-17T03:42:49.906Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>terrorists,ஜம்மு காஷ்மீர்,jammu kashmir,பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை,crpf,Udhampur,உதம்பூர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/xgogpnhi/hg.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ gun battle in Udhampur]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/xgogpnhi/hg.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இன்று அதிகாலை வரை நீடித்த இந்த கடுமையான துப்பாக்கிச்சூட்டின் முடிவில், இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். </p><p>ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நேற்று இரவு நடந்த கடுமையான மோதலில், ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.</p><h2>நள்<strong>ளிரவு மோத</strong>ல்</h2><p>உதம்பூர் மாவட்டத்தின் மஜால்தா எல்லைக்குட்பட்ட சோஹன் மற்றும் அதனை சுற்றியுள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில், இந்திய ராணுவம், <a href="https://www.maalaimalar.com/news/national/pakistan-vessel-collides-with-indian-navy-ship-india-summons-diplomat-and-lodges-protest">ஜம்மு காஷ்மீர் </a>காவல்துறை மற்றும் சி.ஆர்.பி.எஃப் ஆகிய படைகள் இணைந்து அந்தப் பகுதியை முழுமையாக வளைத்து தேடுதல் வேட்டையைத் தொடங்கின.</p><p>வளைத்து பிடிக்க முயன்றபோது, மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். உடனடியாகப் பதில் தாக்குதலில் ஈடுபட்ட வீரர்கள், தீவிரவாதிகளின் தப்பிச் செல்லும் முயற்சியை முறியடித்து நள்ளிரவு முழுவதும் தீவிர எதிர்தாக்குதலைத் தொடர்ந்தனர்.</p><h2>தீவிர தே<strong>டுதல் வே</strong>ட்டை</h2><p>இன்று அதிகாலை வரை நீடித்த இந்த கடுமையான துப்பாக்கிச்சூட்டின் முடிவில், இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். உயிரிழந்த பயங்கரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திலிருந்து பயங்கரவாதிகள் பயன்படுத்திய நவீன ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கொல்லப்பட்டவர்களின் துல்லியமான அடையாளங்களைக் கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.</p><p>மேலும் அப்பகுதியில் வேறு ஏதேனும் பயங்கரவாதிகள் ஒளிந்திருக்கின்றனரா என்பதை உறுதி செய்ய பாதுகாப்புப் படையினர் கூடுதல் வீரர்களை வரவழைத்து, பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தொடர்ந்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item></channel></rss>