<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 27 Aug 2026 11:03:20 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: சமூகநீதி துறையில் புதிய அறிவிப்புகள்- அமைச்சர் வன்னி அரசு வெளியிட்டார்| 27 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-27-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-27-august-2026#comments</comments><guid isPermaLink="false">fdcac3cc-5277-4752-b476-f0f1c8922a11</guid><pubDate>Thu, 27 Aug 2026 04:02:06 +0000</pubDate><atom:updated>2026-08-27T10:43:49.594Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly,tvk</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/zok08jg6/vanni-arasu.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Vanni Arasu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/zok08jg6/vanni-arasu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசை ஏன் நம்பியிருக்க வேண்டும்? என்று சி.வி.சண்முகம் கேள்வி. </p><p>நம்மிடம் உள்ள பட்டியலை வைத்து மாநில அரசே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் என்ன பிரச்சனை? என கேள்வி எழுப்பினார்.</p><p>மத்திய அரசு தான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என ஜனார்த்தனன் கமிட்டி சொன்னதால் அதை பின்பற்றினோம் என்று எ.வ.வேலு கூறினார்.  </p><p>தாஹிராவுக்கு வாய்ப்பு... திமுக எதிர்ப்பு</p><p>திமுக கொறடா எ.வ.வேலு:</p><p>அலுவல் ஆய்வு குழு என்று உள்ளது, அதன் படி தான் அவை நடக்கிறது. அந்த பட்டியலில் இல்லாதவரை பேச அனுமதிப்பது எப்படி? </p><p>இதுக்கு எந்த முன் உதாரணமும் இல்லை. அனுபவம் உள்ள முன்னவர் செங்கோட்டையன், இது பற்றி சொல்ல வேண்டாமா?</p><p>பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார்</p><p>தமிழ்நாடு சட்டம் 45-ன் கீழ் 1994-ன்படி பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல்கள் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் ஒரு சமூகத்தை சேர்த்தல் அல்லது நீக்குதல் தொடர்பான திருத்தங்களை மேற்கொள்வதற்கு உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி அமைக்கப்பட்ட தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணயைத்தின் பரிந்துரைகளை பெற்று அரசு பரிசீலனை செய்யப்படும் அரசால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>அதிமுக எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி</p><p>ஈலுவாத்தியா சமூதாயத்தில் தமிழக முழுவதும் சுமார் 15 லட்சம்பேர் வசிக்கிறாரகள். இவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான சாதி சான்றிதழ் கன்னியாகுமரி மாவட்டம் செங்கோட்டை தாலுகாவில் மட்டுமே சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது. கடந்த முறை ஜூலை 2020ல் நானும் சமூதாயத் தலைவர்கள் அனைவரும் சேர்ந்து அன்னைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரடியாக சந்தித்து பரிந்துரை செய்யப்பட்டு தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வசிக்கும் ஈலுவாத்தியா சமூதாய மக்களுக்கு பிசி சான்றிதழ் ஆவாணம் செய்யப்பட்டது.</p><p>வங்கி பணிகளில் பணிப்புரிய விரும்புவோருக்கு ஓபிசி சான்றிதழ் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அது இன்னும் நிலுவையில் உள்ளது.</p><p>இதன் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு  பரிந்துரை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.</p> <p>தேர்தலுக்கு முன்னர் என்னைப் பார்த்து எதிர்க்கட்சித் தலைவர் சிரிப்பார். ஆனால் முதல் மாநாட்டிற்கு பிறகு அவர் எனக்கு நிறைய இடைஞ்சல்களை கொடுத்தார். - விஜய் தாமு </p><p>விலையில்லா விருந்தகத்தை பார்த்துதான் காலை உணவுத் திட்டத்தை கொண்டுவந்தனர். அதுபோல தாய்மாமன் தங்க மோதிரத் திட்டமும் எப்போதிலிருந்து நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். இப்போதுதான் திட்டமாக அறிவித்துள்ளோம். - சட்டமன்ற உறுப்பினர் விஜய் தாமு</p><p>சென்னையின் பழமையான தொகுதி ராயபுரம் மற்றும் முக்கிய தொகுதிகளில் ஒன்று. நட்சத்திர தொகுதி என்றுக் கூறுவார்கள். ஆனால் அதன் நிலை சொல்வதற்கு இல்லை.</p><p>ஏழ்மை நிலையில் இருக்கும் மக்கள் அங்கு நிறைய இருக்கிறார்கள். அங்கு வீடுகள் இன்று வசிக்கும் 850 குடும்பங்களுக்கு வீடு கட்டித்தர வேண்டும் என்று வேண்டுகிறேன். </p><p>காசிமேடு மீன் சந்தையை புதிப்பித்துத் தர வேண்டுகிறேன். மீனவர்களுக்கு தற்போது தரப்படும் நிவாரணத் தொகையை ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரமாக உயர்த்தி தரவேண்டும். </p><p>ராயபுரத்தில் அதிநவீன தொழில்நுட்ப பூங்கா அமைக்கவேண்டும். இதன்மூலம் வடசென்னை இளைஞர்களுக்கு அருகிலேயே வேலைவாய்ப்புகள் கிடைக்கும். </p><p>அதிக கொள்ளளவு கொண்ட குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்கள் அமைக்கப்பட வேண்டும் - ராயபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜய் தாமு அரசுக்கு வைத்த கோரிக்கைகள்.</p><p>தமிழக சிறையில் உள்ள சிறைவாசிகளை நன்னடத்தை விதிகளை கருத்தில் கொண்டு விரைவில் விடுவிக்க வேண்டுகிறேன்</p><p>புளியங்குடி நகராட்சியை தரம் உயர்த்த வேண்டும்.</p><p>கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும்.</p><p>தென்மலையில் நெல் சேமிப்பு கிடங்கு அமைத்து தரவேண்டும்.</p><p>பூலித்தேவன் மணிமண்டபத்தை பராமரிக்க வேண்டும்- திமுக எம்.எல்.ஏ. ராஜா</p><p>விஜயகாந்த் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த தலைவர்களுக்கு நன்றி.</p><p>மானிய கோரிக்கை மீதான விவாதத்தை தவிர்த்து மற்ற விஷயங்கள் நடந்து வருகின்றன.</p><p>சட்டப்பேரவையில் கடந்த 3 நாளாக சண்டை மட்டுமே நடந்து வருகிறது.</p><p>சட்டமன்றத்தில் சண்டையைப் பார்க்க நாங்கள் வரவில்லை.</p><p>ஆளும்கட்சியினர், எதிர்க்கட்சியினர் மாறி மாறி சண்டை போட்டுக் கொள்வதால் என்ன பயன்?</p><p>சட்டசபையில் நடைபெறும் சண்டையால் மக்களுக்கு என்ன பயன்? - பிரேமலதா</p><p>வாளோடு வரும் எதிர்க்கட்சியினரை ஆளும் கட்சி கேடயம் கொண்டு தடுக்க வேண்டுமே தவிர வாள் கொண்டு எதிர்க்கக் கூடாது.</p><p>இணக்கமான சுழ்நிலையை சுமுகமாக நடத்தவேண்டும் என்பது தான் அவையின் நோக்கம்: சபாநாயகர்</p><p>சமூக நீதி பேசக்கூடிய திமுக கடந்த ஆட்சியில் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசவே இல்லை. மேற்குவங்க், பீகாரில் 3 மாதத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி செயல்படுத்தினார்கள்.</p><p>சாதிவாரி கணக்கெடுப்பு கோப்பைகளை எங்கேயோ தூக்கிபோட்டுவிட்டது கடந்த திமுக அரசு.</p><p>தமிழக வெற்றிக் கழக அரசு தான் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என அறிவித்திருக்கிறது- அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</p><p>அண்ணன் சேகர்பாபு, பெரியார் பெயரை உச்சரிக்கவே கூடாது. கடந்த ஆட்சி பெரியார் பெயரை பெயரளவில் சொல்லிவிட்டு, அனைத்து ஜாதியினர் திட்டத்தை கைவிட்டுவிட்டார்கள். எல்லாம் பேப்பரில் தான் இருக்கிறது.</p><p>ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு கொடுத்தது தமிழக வெற்றிக் கழக அரசு. கடந்த தேர்தலில் 4 பேர் விசிக சார்பில் வெற்றி பெற்று வந்திருந்தோம், ஆனால் திமுக அரசு ஒரு அமைச்சர் பதவி கூட கொடுக்கவில்லை- வன்னி அரசு. </p><p>ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வேலை செய்வது ஒவ்வொரு அரசின் கடமை. திமுக ஏன் இதுவரை ஒரு தலித்தை கூட பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக்கவில்லை?- அமைச்சர் ராஜ்மோகன்.  </p><h2>அமைச்சர் ஷாஜகான்</h2><p>சிறுபான்மையினருக்கு 18 அறிவிப்புகளை கொடுத்து சரித்திரம் படைத்துள்ளது தவெக அரசு.</p><h2>திமுக எம்எல்ஏ சேகர் பாபு </h2><p>அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தில் 32 பேருக்கு அர்ச்சகர் பணிநியமன ஆணை திமுக ஆட்சியில் வழங்கப்பட்டது.</p><p>சில நல்ல மனம் படைத்தவரகள் நீதிமன்றத்திற்கு சென்ற காரணத்தினால் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதில் சிக்கல்.</p><p>அர்ச்சகர் வழக்கில் தனி குழு அமைத்து உச்சநீதிமன்றத்தில சட்ட போராட்டம் நடத்தியது திமுக அரசு.</p><p>கோவி செழியன்- இந்தியாவிலேயே பிற்படுத்தப்பட்டோருக்காக தீப்பிடித்து எரியாத கான்கிரீட் வீடு கட்டி தந்தது திமுக அரசு தான்.</p><p>5 ஆண்டுகளுக்கு தான் மக்கள் வாக்களித்துள்ளனர், 5 ஆண்டுக்கும் தவெக ஆட்சி இருக்கும் என சபாநாயகர் திட்டவட்டம்.</p><p>தலித் மக்களில் 28 சதவீதம் பேர் குடிசைகளில் தான் உள்ளனர். 75 ஆண்டுகளில் தலித் பெண்களுக்கு முக்கியத்துவம் தரவில்லை.</p><p>அமைச்சர் ஆதவ் பேசியபோது திமுகவினர் எழுந்துநின்று கோஷம் எழுப்பிய நிலையில் நாங்களும் எழுந்து நிற்போம் என ஆதவ் பேசினார்.</p><p>மேலும் அவர், எத்தனை மாற்று சாதியினர் அர்ச்சகராக தற்போது வரை கோவில்களில் உள்ளனர் என தகவல் எடுத்து நான் கொடுக்கிறேன்.</p><p>திமுக அரசாணை போட்டது, விழா நடத்தியது ஆனால் 32 பேருக்கு மட்டும் பணி நியமன ஆணை வழங்கியுள்ளது. 5 ஆண்டு ஆட்சியில் இருந்தது திமுக, ஆனால் நீதிமன்றத்தில் வழக்கில் வெற்றிபெற முடியவில்லை. அந்த வழக்கை தொடுத்தது யார்?- அமைச்சர் ஆதவ்</p><p>பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோருக்கு நிதியுதவி தொடர்பாக, சட்டப்பேரவையில் அமைச்சர் சம்பத்குமார் அறிவித்துள்ளார்.</p><p>அதன்படி, பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோருக்கு நவீன சிகைதிருத்தும் அழகு நிலையம் அமைக்க நிதியுதவி வழங்கப்படும்.</p><p>சலூன் கடை அமைக்க ஒரு பயனாளிக்கு ரூ.1.50 லட்சம் என 100 பேருக்கு ரூ.1.50 கோடி நிதியுதவி வழங்கப்படும்.</p><p>மதுரை, தேனி, திண்டுக்கல்லில் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் ரூ.4.50 கோடியில் உட்கட்டமைப்பு பணி மேற்கொள்ளப்படும்</p><p>ரூ.3 கோடியில் மிக பிற்படுத்தப்பட்டோர் நல வாரியம் புதிதாக உருவாக்கப்படும்</p><p>பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த 5,000 பேருக்கு இஸ்திரி பெட்டி வழங்கப்படும்.</p><h2>சிறப்பு அங்கன்வாடி மையங்கள்</h2><p>பழங்குடியின குழந்தைகளுக்கு மழலையர் கல்வி வழங்கவும், படித்த பழங்குடியின இளைஞர்களுக்கு வசிப்பிடத்திற்கு அருகே வேலைவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்யவும், தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 250 இடங்களில் ‘சிறப்பு அங்கன்வாடி மையங்கள்' உருவாக்கப்படும்- அமைச்சர் வன்னி அரசு.</p><h2>பூம்பொழில் தங்கும் வசதிகள்</h2><p>மலைப்பகுதிகளில் பழங்குடியின வாழ்விடத்திற்கு அருகில் அமைந்துள்ள இயற்கை வளம், உயிரியல் பன்முகத்தன்மை மற்றும் வாழ்வியலை கண்டு மகிழும் வகையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த 'பூம்பொழில் தங்கும் வசதிகள்' ஏற்படுத்தப்படும். </p><p>உள்ளூர் பழங்குடியின இளைஞர்களுக்கு வழிகாட்டி பயிற்சி வழங்கப்படும்- அமைச்சர் வன்னி அரசு.</p><h2>கொசுவலைகள் பொருத்த நடவடிக்கை</h2><p>1,238 சமூகநீதி பள்ளி, கல்லூரி விடுதிகளில் உள்ள அனைத்து ஜன்னல்களுக்கும் ரூ.26.85 கோடியில் தரமான கொசுவலைகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்- அமைச்சர் வன்னி அரசு</p><h2>சமூகநீதி விடுதிகளுக்கு Fridge</h2><p>சமூக நீதி விடுதிகளில் 20 கல்லூரி விடுதிகளுக்கு Inverter, fridge, Water Purifiers w 940 பள்ளி விடுதிகளுக்கு Inverter, Water Purifiers வழங்கப்படும்- அமைச்சர் வன்னி அரசு</p><h2>தூய்மை பணியாளர்களுக்கு சொந்த வீடு</h2><p>தூய்மை பணியாளர்களுக்கு சொந்த வீடு வழங்க ‘அகம் திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டு, 2500 கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்- அமைச்சர் வன்னி அரசு</p><h2>விடிவெள்ளி மகளிர் வாழ்வாதார திட்டம்</h2><p>பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒரு இலட்சம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின குடும்பத் தலைவிகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக 'விடிவெள்ளி மகளிர் வாழ்வாதார திட்டம்' செயல்படுத்தப்படும்- அமைச்சர் வன்னிஅரசு</p><h2>சென்னையில் பழங்குடியினர் பண்பாட்டு மையம்</h2><p>நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் செயல்படும் பழங்குடியினர் ஆய்வு மையத்தின் பணிகளை சென்னை மாநகருக்கும் விரிவுபடுத்தும் வகையில், சென்னை நந்தனத்தில் ‘பழங்குடியினர் பண்பாட்டு மையம்' அமைக்கப்படும்- அமைச்சர் வன்னிஅரசு</p><p>பள்ளி விடுதி மாணாக்கர்களுக்கு ரூ.1400ல் இருந்து ரூ.1800 ஆகவும், கல்லூரி விடுதி மாணாக்கர்களுக்கு ரூ.1500ல் இருந்து ரூ.2000 ஆகவும் உயர்த்தி மாதாந்திர உணவு கட்டணம் வழங்கப்படும்- அமைச்சர் வன்னி அரசு </p><p>ஊடகத் துறையில் இளம் திறமைகளை ஊக்குவிக்க உட்பயிற்சி உதவித்தொகை வழங்கும் “ஊடகத்திறன் ஊக்குவிப்பு திட்டம்” செயல்படுத்தப்படும் என பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார் அமைச்சர் வன்னி அரசு.</p><p>இதன் மூலம் மாணாக்கர் ஊடக நிறுவனங்களில் நடைமுறை பயிற்சி பெற்று, தொழில்முறைத் திறன்களை வளர்த்துக் கொண்டு ஊடகத் துறையில் சிறந்து விளங்க பயிற்சி.</p><p>மாணாக்கருக்கு பாதுகாப்பு, சுகாதாரமான மற்றுமு் கல்விக்கு உகந்த தகுமிடம் சூழலை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை.</p><p>ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர் மற்றும் காப்பாளர்களுக்கு 'அறிவொளி ஆசிரியர் விருது மற்றும் அறிவொளி காப்பாளர் விருது' வழங்கப்படும்.</p><p>இதன் மூலம், ஆசிரியர்கள் மற்றும் விடுதி காப்பாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் புதுமையான முயற்சிகளைப் பாராட்டி, சிறந்த கற்பித்தல் நடைமுறைகள் ஊக்குவிக்கப்படும்- வன்னி அரசு</p><p>ஆதிதிராவிடர், பழங்குடியினர் விடுதியை நிர்வகிக்க, மாணவர் பாதுகாப்பை உறுதிசெய்ய அரண்- விடுதி பராமரிப்பு மேலாண்மை.</p><p>தரமான, சத்தான உணவு வழங்கும் பொருட்டு விடுதி மாணவர்களுக்கு வழங்கும் மாதாந்திர உணவு கட்டணம் உயர்த்தப்படும்.</p><p>ஆதி திராவிட மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் சமுதாய நிகழ்வுகளை நடத்த ஏதுவாக 100 சமுதாய கூடங்கள் கட்டப்படும்- வன்னி அரசு</p><p>ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாமாக்கருக்கு ரூ.160 கோடியில் 150 சமூகநீதி விடுதிகள் கட்டப்படும்.</p><p>ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கல்லூரி விடுதி ஆண்டு பராமரிப்பு தொகை ரூ.50,000-ல் இருந்து ரூ. 1 லட்சமாக உயர்த்தப்படும்.</p><p>ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகளுக்கான வருடாந்திர பராமரிப்பு தொகை உயர்த்தி வழங்கப்படும்- வன்னி அரசு.</p><p>சமூகநீதித்துறையில் புதிய அறிவிப்புகள்</p><p>ஆதிதிராவிடர் மக்களுக்கு தேவையான நல உதவிகளை வழங்க ஏதுவாக சமூக நீதி நல வாரியம் அமைக்கப்படும்.</p><p>பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு கல்வி, மருத்துவம், திருமண உதவி தொகை வழங்கி பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ திட்டம்.</p><p>ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகளுக்கான வருடாந்திர பராமரிப்பு தொகை உயர்த்தி வழங்கப்படும்- வன்னி அரசு.</p><p>சட்டமன்றத்தில் கேள்வி, விடை நேரம் நிறைவு பெற்று பிற்படுத்தப்பட்டோர்-சிறுபான்மையினர்-சமூகநீதித்துறை தொடர்பான மானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது.</p><p>படம் நன்றாக இருந்தால், பொறுமையாக இருந்து மக்கள் கடைசி வரை க்ளைமாக்ஸ் பார்ப்பார்கள். நீங்கள் சொல்வதை பார்த்தால், இந்த படம் ஓடாது, நன்றாக இருக்காது, எனவே முன்பே க்ளைமாக்ஸ் போட்டு விடுவோம் என்பது போல இருக்கிறது- எதிர்கட்சி தலைவர் உதயநிதி.</p><p>இப்போதெல்லாம் படத்திற்கு இரு க்ளைமாக்ஸ் இருக்கிறது. படத்தின் துவக்கத்திலும், இறுதியிலும் அவை வருகிறது. மாற்றத்தை விரும்ப வேண்டும். நீங்கள் ஆட்சி மாற்றத்தையும் விரும்புவதில்லை, நடைமுறை மாற்றத்தையும் விரும்புவதில்லை- அமைச்சர் வன்னி அரசு.</p><p>அமைச்சர்கள் அறிவிப்புகளை வெளியிட்ட பிறகு பதிலுரை வழங்குவது என்பது, திரைப்படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியை முதலில் போடுவது போல இருக்கும். அது சரியா?- அமைச்சர் தங்கம் தென்னரசு.</p><p>என்னுடைய கருத்து, க்ளைமாக்ஸை மக்கள் பார்க்காமல் போய்விடுவார்களோ என்கிற கவலை- சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்</p><p>படம் நன்றாக இருந்தால், பொறுமையாக இருந்து மக்கள் கடைசி வரை க்ளைமாக்ஸ் பார்ப்பார்கள். நீங்கள் சொல்வதைப் பார்த்தால், இந்தப் படம் ஓடாது, நன்றாக இருக்காது. எனவே, முன்பே க்ளைமாக்ஸ் போட்டுவிடுவோம் என்பது போல இருக்கிறது- எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி</p><p>சென்ற ஆகஸ்ட் 25-ஆம் தேதி மானியக் கோரிக்கை விவாதம் சிறப்பாக நடந்தது. முதன்முறையாக 9:43 மணி நேரம் தொடர்ந்து அவை நடந்தது. இருப்பினும், நேரம் காரணமாக அறிவிப்பவர்களுக்கு, அவையில் இருப்பவர்களுக்கு ஏற்படும் பதற்றத்தைப் போக்கும் வகையில், இனி அறிவிப்புகளை வெளியிட்ட பிறகு அமைச்சர்கள் பேசும் நடைமுறை கொண்டுவரப்படும்- சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்.</p><p>கீர்த்தனாவின் திருத்த அறிக்கை.. ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய திமுக..</p><p>விதியின் கீழ் திருத்த அறிக்கை சமர்ப்பிக்க அமைச்சர் கீர்த்தனாவுக்கு உரிமை இருக்கிறது. அதே விதியில், திருத்தக் குறிப்பை பேரவை கூடும் அரை மணி நேரத்திற்கு முன்பாக உறுப்பினர்களின் தகவலுக்காக வைக்க வேண்டும். எனவே, இதை ஒழுங்குப் பிரச்சினையாக எடுத்துக்கொள்ள வேண்டும்-  திமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின்.</p><p>நிச்சயமாக, வருங்காலங்களில் திருத்த அறிக்கையை அரை மணி நேரத்திற்கு முன்பாக உறுப்பினர்களின் கவனத்திற்குக் கொண்டு வர அமைச்சர்கள் முன்வர வேண்டும்- சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்.</p><p>தமிழ்நாட்டில் முதலீடு செய்த நிறுவனம் ஆந்திராவிலும் முதலீடு செய்துள்ளது. சுஸ்லாண் நிறுவனம் ஆந்திராவுக்கு சென்றதாக செய்தி பரவும் நிலையில் அமைச்சர் கீர்த்தனா விளக்கம்.</p><p>மேலும் அவர்,"பல ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் இருந்து சென்ற நிறுவனம் அரசின் நடவடிக்கையால் தற்போது ரூ.500 கோடியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.500 கோடி முதலீடு செய்யும் நிறுவனத்தின் மூலம் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.</p><p>சின்னபிள்ளை சுயஉதவி குழு மூலம் மதுரையில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு என நான் பேசியது திருத்தி வெளியிடப்பட்டுள்ளது" என்றார்.</p><p>டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் பரவும் நிலையில், கட்டுப்பாடு நடவடிக்கை என்ன என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>இதற்கு பதில் அளித்த அமைச்சர் அருண்ராஜ்,"டெங்கு, பன்றிக்காய்ச்சல் பரவல் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது கொசு ஒழிப்பு பணியும் மேற்கொள்ளப்படுகிறது. </p><p>டெங்கு காய்ச்சல் தொடர்பாக 2  நாட்களுக்கு முன்னர் அனைத்து இயக்குநர், மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம்.</p><p>ஏடிஎஸ் கொசுவால் டெங்கு பாதிப்பு ஏற்படுவதால் வீடுகளை சுற்றி கொசு உற்பத்தியாகாமல் பாதுகாப்பது மக்களின் பொறுப்பு.</p><p>கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு ஆகஸ்ட்டில் கூடுதலாக 300 பேருக்கு டெங்கு பாதிப்பு உள்ளது என்றாலும் நிலை கட்டுப்பாட்டிற்குள்தான் உள்ளது.</p><p>அரசு நிகழ்வை முடித்துவிட்டு, முதல்வர் விஜய் வந்து கொண்டிருக்கிறார். அவர் தலைமையில் நேபாள சம்பவம் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான அவசரக் கூட்டம் நடைபெற உள்ளது- அமைச்சர் ராஜ்மோகன்.</p><p>துறை சார்ந்த அதிகாரிகள் அவையில் இருக்க வேண்டும் என்பதனை சபாநாயகர் அறிவுறுத்த வேண்டும் என்று சபாநாயகருக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலிறுத்தியுள்ளார்.</p><p>கேள்வி நேரம் இருக்கும்போது துறையின் செயலாளர்கள் இருக்க வேண்டும். அவர்கள் அதனைக் குறிப்பு எடுக்க வேண்டும். துறை சார்ந்த அதிகாரிகள் அவையில் இருக்க வேண்டும் என்பதனை சபாநாயகர் அறிவுறுத்த வேண்டும்- உதயநிதி</p><p>நேபாள நாட்டில் கைலாஷ் யாத்திரைக்கு தமிழகத்தை சேர்ந்த 103 பேர் பல குழுக்களாக சென்றுள்ளனர். நேபாள பெருவெள்ளம் ஏற்பட்ட ரஸ்வா மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியவில்லை.</p><p>நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழகர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 34 பேரின் விவரங்களை பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.</p><p>நேபாள வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் குறித்த விவரங்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்- சட்டசபையில் நேபாள வெள்ளம் தொடர்பான கவன ஈர்ப்புக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பதில்.</p><p>நேபாள சம்பவம் தொடர்பாக கவனஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பர்ட்,"பேச்சின் இறுதியில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க ஐடியா ஒன்றை தந்தார்.</p><p>அவர்"காலநிலை மாற்றம் ஏற்பட்டு வருவதால், எந்தந்த பகுதிகளில் காலநிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து ஒவ்வொரு மாதமும் தெரிவித்தால், சுற்றுலா செல்பவர்களுக்கும், மீட்பு பணிகளுக்கும் வசதியாக இருக்கும்" என்றார்.</p><p>திருக்குறுங்குடி நம்பி ஆண்டவர் கோயிலுக்குச் செல்லும் பாதை, காலம் செல்ல செல்ல குறுகிக்கொண்டே செல்கிறது. பொதுமக்களின் வசதிக்காக அதன் பாதையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?- எம்எல்ஏ ரெட்டியார்பட்டி நாராயணன்</p><p>எம்எல்ஏ ரெட்டியார்பட்டி நாராயணணின் கோரிக்கையை ஏற்று, அதிகாரிகளிடம் பரிசீலித்து ஆவண செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்- வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார்</p><p>நேபாளம் சென்ற தமிழர்கள் 57 பேர் மாயம், அரசு தரிதமாக செயல்பட்டு அவர்களை தாயகம் மீட்டுவர நடவடிக்கை தேவை.  நேபாளத்திற்கு கோவை ஈஷா மூலம் ஆன்மிக பயணம் சென்றோரின் நிலை என்ன?- இபிஎஸ்.</p><p>நேபாள நாட்டில் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 160 பேர் உயிரிழப்பு, 750 பேரை காணவில்லை என செய்திகள் வருகின்றன. சுற்றுலா சென்ற 110 இந்தியர்கள் சிக்கியுள்ளதாகவும், குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு மாவட்டங்களில் 40-க்கும் மேற்பட்டோர் சென்றிருப்பதாக கூறப்படுகிறது.</p><p>எத்தனை தமிழர்கள் சிக்கியுள்ளனர்? அவர்களில் எத்தனை பேர் மீட்கப்பட்டுள்ளார்கள்.</p><p>தமிழர்களை மீட்க சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்களா? ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சிக்கி இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. இதில் அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்- உதயநிதி</p><p>மேலும், கரூர் சம்பவம் நடந்தபோது இதே சபையில் முதலமைச்சர் பேசிய பின்னர் கேள்வி கேளுங்கள் என நடந்ததாக சபாநாயகர் விளக்கம் அளித்தார்- ஜே.சி.டி.பிரபாகர். </p><p>இருப்பினும் சட்டசபையில் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் எதிர்க்கட்சித் தலைவரே முதலில் பேசட்டும் என அமைச்சர் ராஜ்மோகன் பரிந்துரைத்த நிலையில் சபாநாயகர் அனுமதி வழங்கினார்- ஜே.சி.டி.பிரபாகர். </p><p>அரசிற்கு கவனத்திற்கு கொண்டுவருவதற்கு முன்பே அமைச்சர் பதிலளிப்பதா?. அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம் அதன் பின்னர் விளக்கம் அளியுங்கள் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். அதற்கு, சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், அமைச்சர் பேசிய பின் உறுப்பினர்கள் கேள்வி கேட்பதில் ஒன்றும் தவறில்லையே என்றார். </p><p>பதில் அளித்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்:- </p><p>நாட்டையே உலுக்கிய சம்பவம் தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் முன்னால் பேசினால் என்ன, பின்னால் பேசினால் என்ன?. நாங்கள் கவனத்திற்கு கொண்டு வந்ததால் தான் அமைச்சர் பதிலளிக்கிறார் என்பதல்ல. </p><p>அதற்கு எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய பின்னர் அமைச்சர் பதிலளிப்பது தான் முறையாக இருக்கும் என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. </p><p>நேபாள விவகாரம்.. எதிர்கட்சிகள் கோரிக்கை ஏற்பு</p><p>தமிழகத்தில் இருந்து நேபாளம் சென்றவர்கள் வெள்ளத்தில் சிக்கியது குறித்து எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தில், அவர்கள் விளக்கும் முன்பாக அமைச்சர் ராஜ்மோகன் பதிலளிக்க, எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், அமைச்சருக்கு முன்பாக எதிர்க்கட்சிகள் எடுத்துரைக்க சபாநாயகர் வாய்ப்பளித்தார்.</p><p>தமிழ்நாடு சட்டசபை ஒருநாள் விடுமுறைபின் இன்று கூடியது. சபைகூட்டத்தொடர் தொடங்கியதும் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். இதனை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், நேபாளத்தில் பெரு வெள்ளம் தொடர்பாக விளக்கம் அளிக்க தொடங்கினார். </p><p>அதற்கு நேபாளம் பெரு வெள்ளம் தொடர்பாக சபையில் கவன ஈர்ப்பு கொடுக்கப்பட்ட நிலையில், அதற்கு முன்பாகவே அமைச்சர் விளக்கம் அளிப்பதற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். </p><p>கோவை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாமல் உள்ளனர். கூடுதல் நியமனம் அவசியம். Liver Transplantation சிகிச்சை செய்யவும் அரசு முன்வர வேண்டும் என்று அதிமுகவின் எஸ்.பி வேலுமணி வலியுறுத்தினார்.</p><p>அதற்கு பதில் அளித்த அமைச்சர் அருண்ராஜ்,"அரசு மருத்துவமனைகளில் உயர் சிறப்பு மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கிறது. முதல் முறையாக 284 உயர்சிறப்பு மருத்துவர் பணியிடம் உருவாக்கி இருக்கிறோம். Liver Transplantation தேவை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கைகள் எடுப்போம்" என்றார்.</p><h2>அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்த பாமக எம்எல்ஏ</h2><p>சட்டமன்றத்தில் பாமக எம்எல்ஏ கணேஷ்குமார் கூறுகையில்," செஞ்சி மருத்துவமனையில் கடந்த ஆட்சிக் காலத்தில் மகப்பேறுக்கான தனிக் கட்டடம் கட்டப்பட்டு ஆபரேஷன் தியேட்டர் நடைமுறைக்கு வராமல் இருந்தது அமைச்சர் ஆனந்திடம் ஒரே ஒரு கோரிக்கைதான் வைத்தேன். மறுநொடியே DM-ஐ அழைத்து சொன்னதன் விளைவாக 10 நாட்களுக்கு முன்பாக ஆபரேஷன் தியேட்டர் முழு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.</p><p>சிசேரியன் மிக சிறப்பாக சிசேரியன் நடைபெற்றுள்ளது. நீர்வளத்துறை அமைச்சருக்கும்(ஆனந்த்) சுகாதாரத்துறை அமைச்சருக்கும்(அருண்ராஜ்) நன்றிக்கடனுடன் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.</p><p>கலசப்பாக்கம் ஜவ்வாது மலைப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தப்படுமா? என்று உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எழுப்பிய கேள்விக்கு, மலைவாழ் மக்கள் வாழும் பகுதியில் சாலை வசதி மேம்படுத்த தொடர் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று வனத்துறை அமைச்சர் தெரிவித்தார்.</p><p>ராதாபுரம் தொகுதி பணகுடியில் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்கப்படுமா?- எம்எல்ஏ சதீஷ் கிறிஸ்டோபர்</p><p>ராதாபுரம் தொகுதி பணகுடியில் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்கப்படுவது குறித்து குழு மூலம் ஆய்வு செய்து ஆட்சியர் மூலம் நடவடிக்கைகள் எடுப்போம்- அமைச்சர் வெங்கடரமணன்.</p><p>“சோழிங்கநல்லூரை தனி மாவட்டமாக அல்லது தனி மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும்” என தவெக எம்.எல்.ஏ., ஈசிஆர் சரவணன் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர்,“சோழிங்கநல்லூரை தனி மாவட்டமாக அல்லது தனி மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும். 7 ஊராட்சிகள் செங்கல்பட்டிலும் 20 வார்டுகள் சென்னை மாநகராட்சியிலும் இருப்பதால் இரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கும் சென்று மக்கள் அவதியடையும் சூழ்நிலை உள்ளது” என்றார்.</p><p>மொடக்குறிச்சியில் நீர்நிலை புறம்போக்கு எனக் கூறி 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு பட்டா மறுக்கப்படுவதாக தவெக எம்.எல்.ஏ. சண்முகன் கூறியதற்கு, நீர் ஓடக் கூடிய இடமாக இல்லை என்றால் பரிசீலித்து நடவடிக்கை என அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்தார். </p><p>என்னுடைய திருவெறும்பூர் தொகுதியில் மழைக்காலத்தில் நெல் வீணாவதை தடுக்க குடோன்கள் கட்டித் தரப்படுமா?- எம்எல்ஏ நாவல்பட்டு விஜி.</p><p>செப்டம்பரில் இருந்து காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை கொள்முதல் நிலையம் செயல்பட நடவடிக்கைகள் எடுத்து இருக்கிறோம். தார்பாய் மூலமாக நெல்மணியை காய வைக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். எந்த இடத்தில் பிரச்னை வந்தாலும், கோரிக்கை வந்தாலும் அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்- அமைச்சர் வெங்கடரமணன்.</p><p>ராமநாதபுரம் பணங்குடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் எப்போது அமைக்கப்படும் என எம்எல்ஏ சதீஷ் கிறிஸ்டோபர் எழுப்பிய கேள்விக்கு, 2026-27 கொள்முதல் பருவத்தில் நடக்கும் சாகுபடிக்கு ஏற்றவாறு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் செயல்பாட்டை கண்காணிப்பதற்காக ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்படும் என அமைச்சர் வெங்கட்ராமன் தெரிவித்தார். </p><p>திருத்தணி அரசு மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி இல்லை என அதிமுக எம்எல்ஏ அரி எழுப்பிய கேள்விக்கு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி உள்ளது. பயனாளிகளை கணக்கில் கொண்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதியை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கூறினார். </p><p>சோழிங்கநல்லூரில் உள்ள ஊராட்சிகளை சென்னை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் என எம்எல்ஏ சரவணன் கோரிக்கை விடுத்தார். சென்னை மாநகராட்சியுடன் இணைப்பது தொடர்பாக ஆய்வு செய்து ஆட்சியர்களுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.</p><p>தென்காசியில் உள்ள இருளர், காட்டுநாயக்கன் சமுதாயத்தினருக்கு சாதிச்சான்று கிடைக்க நடவடிக்கை தேவை. வீரகுடி வெள்ளாளர் சமுதாயத்தினருக்கு தென்காசியில் வைச பிள்ளை என்றுதான் சாதி சான்று தருகின்றனர் என எம்எல்ஏ ராஜா எழுப்பிய கேள்விக்கு, குறும்பர், நாயக்கர் மலைவாழ் நாயக்கர் என்று சாதி சான்றிதழ் தருவதில் சிக்கல் உள்ளது. சாதிச்சான்றிதழ் கோரிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளோம், அனுமதி கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். </p><p>கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவர், செவிலியர் பற்றாக்குறை நிலவுவதாக எஸ்.பி.வேலுமணி கூறியதற்கு கோவை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார். </p><p>H1N1 காய்ச்சலை கட்டுப்படுத்த முதியவர், கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை உள்ளதா? என்று உறுப்பினர் லட்சுமணன் எழுப்பிய கேள்விக்கு, H1N1 வைரஸ் காய்ச்சல் கட்டுப்பாட்டில்தான் உள்ளது, தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். H1N1 வைரஸ் குறித்து ஆய்வு செய்து தேவைப்பட்டால் தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். </p><p>சட்டசபை நிகழ்வுக்கு பின்னர் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் ஆய்வு நடத்தப்படும். அனைத்து மருத்துவமனைகளிலும் ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அருண் ராஜ் தெரிவித்தார். </p><p>கும்மிடிப்பூண்டியில் அரசு மருத்துவமனைக்கு டயாலிசஸ் செய்வதற்கான கருவி கூடுதலாக வழங்க வேண்டும் என எம்எல்ஏ விஜயகுமார் கோரிக்கை விடுத்தார். அதற்கு அமைச்சர் அருண்ராஜ், கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்து தேவைப்பட்டால் டயாலிசஸ் கருவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். </p><p>செஞ்சி அரசு மருத்துவமனைக்கு சி.டி.ஸ்கேன் உள்ளிட்ட கூடுதல் நவீன உபகரணங்கள் வழங்கப்படுமா? என பா.ம.க. எம்எல்ஏ கணேஷ் குமார் எழுப்பிய கேள்விக்கு, ஆய்வு செய்து தேவைப்பட்டால் கூடுதலாக வழங்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.</p><p>தாம்பரம்-செங்கல்பட்டு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க அதிமுக ஆட்சியில் நடவடிக்கை, கடந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது. மேம்பாலம் குறித்து இன்றைய அரசின் நிலை என்ன? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, செங்கல்பட்டு முதல் சென்னை வரை போக்குவரத்து நெரிசல் அதிகளவில் உள்ளதால் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை- கன்னியாகுமரி 8 வழிச்சாலைக்கான பணிகளை தொடங்கியுள்ளோம், திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெறுகிறது என்றார். </p><p>திருத்துறைப்பூண்டியில் போக்குவரத்து நெரிசலாக உள்ளதால் ரெயில்வே மேம்பாலம் கட்டப்படுமா? என்று உறுப்பினர் மாரிமுத்து எழுப்பிய கேள்விக்கு, மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து தண்டவாளத்தை கடந்து செல்வதால் ரெயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.</p><p>கீழ்வேளூர் ரெயில்வே மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என பா.ம.க. எம்எல்ஏ லதா கோரிக்கை விடுத்தார். அதற்கு பதில் அளித்த அமைச்சர், பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். </p><p>வேலூர் காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து பாலாறு பாலம் வரை உயர்மட்ட பாலம் கட்ட அரசு ஆவணம் செய்யுமா? என்று எம்.எல்.ஏ. சுதாகர் கேள்வி எழுப்பினார். சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து உரியநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார். </p><p>தமிழக சட்டசபையில் உறுப்பினர்களின் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். </p><p>சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு மானிய கோரிக்கை தாக்கல் செய்ய உள்ள நிலையில் சட்டசபைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வருகை</p><p>சட்டசபையில் இன்று சமூக நீதித்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மீதான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது.</p>]]></content:encoded></item><item><title>இலங்கை உடனான 2வது டெஸ்ட்: இந்தியாவை அச்சுறுத்திய சோனல் தினுஷா</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/sonal-dinusha-to-tough-india-win-in-second-test</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/sonal-dinusha-to-tough-india-win-in-second-test#comments</comments><guid isPermaLink="false">b67ec01d-ccf6-43e1-878f-6bfdc82d0996</guid><pubDate>Thu, 27 Aug 2026 10:51:37 +0000</pubDate><atom:updated>2026-08-27T10:51:37.739Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDvSL,இந்தியா இலங்கை தொடர்,sonal dinusha,சோனல் தினுஷா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/04hrj24d/sonal.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ sonal dinusha]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/04hrj24d/sonal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு இலங்கை வீரர் சோனல் தினுஷா முட்டுக்கட்டையாக இருந்தார்.</p><p>இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கடந்த 15-ம் தேதி நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.</p><p>இந்தியா, இலங்கை இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.</p><h2>இந்திய அணி ரன் குவிப்பு</h2><p>அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 503 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தேவ்தத் படிக்கல் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர்117 ரன்னில் வெளியேறினார். துருவ் ஜூரல் அபாரமாக ஆடி சதமடித்துஅசத்தினார். அவர் 115 ரன்னில் வெளியேறினார்.</p><p>ரிஷப் பண்ட் 63 ரன்னும், சுப்மன் கில் 50 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஜெய்ஸ்வால் 45 ரன்னிலும், ஜடேஜா 43 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.</p><p>இலங்கை சார்பில் அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், பிரபாத் ஜெயசூர்யா, கேஷரா நுவாந்தா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><h2>சோனல் தினுஷா சதம்</h2><p>இதையடுத்து ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 290 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சோனல் தினுஷா ஓரளவு தாக்குப் பிடித்து சதமடித்து 103 ரன்னில் அவுட்டானார். பசிந்து சூர்யபந்தாரா அரை சதம் கடந்து 80 ரன்னில் வெளியேறினார்.</p><p>இந்திய அணி சார்பில் பிரசித் கிருஷ்ணா, மானவ் சுதார் தலா 3 விக்கெட்டும், சரண்ஷ் ஜெயின் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால் இலங்கை அணி பாலோ ஆன் பெற்றது.</p><p>தொடர்ந்து, இலங்கை அணி 2வது இன்னிங்சில் களமிறங்கியது. இந்திய வீரர்கள் சிறப்பாக பந்துவீசினர். சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.</p><p>பசிந்து சூர்யபந்தாரா 92 ரன்னும், கமிந்து மெண்டிஸ் 52 ரன்னும் எடுத்தனர். 3-வது விக்கெட்டுக்கு இணைந்த இந்த ஜோடி 115 ரன்கள் சேர்த்தது. நான்காம் நாள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்கு 229 ரன்கள் எடுத்து, இந்தியாவை விட 16 ரன்கள் முன்னிலை பெற்றது.</p><p>இந்திய அணி சார்பில் மானவ் சுதார் 2 விக்கெட் வீழ்த்தினார். இன்னும் ஒரு நாள் மீதமுள்ளது என்பதால் இந்தியா எளிதில் வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.</p><h2>தூணாக நின்ற சோனல் தினுஷா</h2><p>இந்நிலையில், கடைசி நாளான இன்று இலங்கையின் சோனல் தினுஷா காலை முதலே பொறுப்புடன் ஆடினார். அவர் சதமடித்து இலங்கை அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார்.</p><p>கேஷரா நுவந்தா 45 ரன்னில் அவுட்டானார். 7வது விக்கெட்டுக்கு இணைந்த சோனல் தினுஷா- கேஷரா நுவந்தா ஜோடி 112 ரன்கள் சேர்த்தது.</p><p>9வது விக்கெட்டுக்கு இணைந்த சோனல் தினுஷா-லஹிரு குமாரா ஜோடி நிதானமாக ஆடி 47 ரன்களை எடுத்தது.</p><p>இறுதியில், இலங்கை அணி 2வது இன்னிங்சில் 400 ரன்களைக் கடந்துள்ளது.</p><p>இந்திய அணி எளிதில் வெற்றி பெறும் என நினைத்திருந்த ரசிகர்களுக்கு, சோனல் தினுஷா தூணாக நின்று இந்தியாவின் வெற்றிக்கு அச்சுறுத்தலாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>வெறுங்கண்களால் பார்க்கலாம்: இந்த ஆண்டின் மிக முக்கிய வானியல் நிகழ்வை தவறவிடாதீர்கள்!</title><link>https://www.maalaimalar.com/news/world/naked-eye-view-dont-miss-this-years-key-astronomy-event</link><comments>https://www.maalaimalar.com/news/world/naked-eye-view-dont-miss-this-years-key-astronomy-event#comments</comments><guid isPermaLink="false">0e80f259-5ad3-464f-8c56-b476ae41d88b</guid><pubDate>Thu, 27 Aug 2026 10:38:52 +0000</pubDate><atom:updated>2026-08-27T10:38:52.099Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>போர்ச்சுகல்,Portugal,Spain,ஸ்பெயின்,சந்திர கிரகணம்,lunar eclipse,Partial lunar eclipse,பகுதி சந்திர கிரகணம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/jnburq3w/nila.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Partial lunar eclipse ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/jnburq3w/nila.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்த ஆண்டின் பகுதி சந்திர கிரகணம், இன்று இரவு தொடங்கி நாளை அதிகாலை வரை நடைபெற உள்ளது. சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வராமல், சந்திரன் பூமியின் நிழல் பகுதி வழியாக கடந்து செல்லும்போது இந்த பகுதி சந்திர கிரகணம் நிகழ்கிறது. </p><p>இந்த ஆண்டின் முக்கியமான வானியல் நிகழ்வுகளில் ஒன்றான பகுதி சந்திர கிரகணம், இன்று இரவு தொடங்கி நாளை அதிகாலை வரை நடைபெற உள்ளது. சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வராமல், சந்திரன் பூமியின் நிழல் பகுதி வழியாக கடந்து செல்லும்போது இந்த பகுதி சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த நிகழ்வின் போது, பூமியின் அடர்ந்த நிழல் சந்திரனை மறைப்பதால், நிலவின் பெரும்பகுதி சிவந்த தாமிர நிறத்தில் காட்சியளிக்கும்.</p><h2>நிகழ்<strong>வின் நேரம்</strong></h2><p>சர்வதேச நேரப்படி, நாளை அதிகாலை 02:33 மணிக்கு சந்திரன் பூமியின் முதன்மை நிழலுக்குள் நுழையத் தொடங்குகிறது. இதன் உச்சகட்ட நிகழ்வு அதிகாலை 04:12 மணி அளவில் ஏற்படும். இந்த உச்சகட்டத்தின் போது சந்திரனின் 96 சதவீத பகுதி பூமியின் நிழலால் மறைக்கப்பட்டு, ஒரு சிறிய பகுதி மட்டுமே சூரிய வெளிச்சத்தைப் பெறும். இந்த நிகழ்வு விண்வெளி பிரியர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் ஒரு சிறந்த காட்சியாக அமையும்.</p><h2>பார்<strong>க்கக்கூடிய</strong> இடங்கள் </h2><p>இந்த சந்திர கிரகணத்தை மேற்கு ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் தெளிவாகக் காண முடியும். மேலும், அமெரிக்க கண்டங்களின் பெரும்பாலான பகுதிகளிலும் (ஹவாய் மற்றும் அலாஸ்காவின் சில பகுதிகளைத் தவிர) ஆப்பிரிக்க மண்டலங்களிலும் இதனைப் பார்வையிடலாம். இருப்பினும், இந்தியாவில் இந்த நேரத்தில் பகல் பொழுதாக இருப்பதால், இதனை இந்தியாவில் இருந்து நேரடியாகப் பார்க்க முடியாது.</p><p>சூரிய கிரகணத்தைப் போலல்லாமல், சந்திர கிரகணத்தைப் பார்ப்பதற்கு எந்தவொரு சிறப்பு பாதுகாப்புக் கண்ணாடிகளோ அல்லது கருவிகளோ தேவையில்லை என்று விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனை வெறுங்கண்களால் பாதுகாப்பாகக் காண முடியும். இருப்பினும், தொலைநோக்கி அல்லது பைனாகுலர் போன்ற கருவிகளைப் பயன்படுத்திப் பார்க்கும்போது, நிலவின் மேற்பரப்பில் தோன்றும் தாமிர நிற மாற்றங்களை மிகவும் தெளிவாகவும் அழகாகவும் ரசிக்க முடியும்.</p>]]></content:encoded></item><item><title>தலித் என்பதால் அடித்துக் கொல்லப்பட்ட இளைஞர் ஆகாஷ்... சிபிசிஐடி அதிர்ச்சி தகவல் - கைது செய்யப்படாத காவல் குற்றவாளிகள்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/akash-the-youth-beaten-to-death-for-being-a-dalit-shocking-details-from-the-cb-cid-police-perpetrators-remain-unarrested</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/akash-the-youth-beaten-to-death-for-being-a-dalit-shocking-details-from-the-cb-cid-police-perpetrators-remain-unarrested#comments</comments><guid isPermaLink="false">54f8b488-b829-4b34-981e-8a63fdd04173</guid><pubDate>Thu, 27 Aug 2026 10:16:07 +0000</pubDate><atom:updated>2026-08-27T10:16:07.473Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சிபிசிஐடி,மானாமதுரை,Manamadurai,cbcid,Akash Delison,Akash Delison case,ஆகாஷ் டெலிசன்,ஆகாஷ் டெலிசன் வழக்கு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/5nmu6o3p/New-Project-2026-08-27T154534.527.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தலித் என்பதால் அடித்துக் கொல்லப்பட்ட இளைஞர் ஆகாஷ்... சிபிசிஐடி அதிர்ச்சி தகவல் - கைது செய்யப்படாத காவல் குற்றவாளிகள்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/5nmu6o3p/New-Project-2026-08-27T154534.527.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுக ஆட்சியில் கைது செய்யப்பட்டு, தவெக ஆட்சியில் தகனம் செய்யப்பட்டது சிவகங்கை மாவட்டம், மானாமதுரை இளைஞர் ஆகாஷ் டெலிசனின் உடல். காவல்துறை மரணம் என்றபோதும், கைது செய்யப்பட்டபோது ஆட்சியில் இருந்த அரசும் சரி, உடல் தகனம் செய்யப்பட்டபோது ஆட்சியில் இருந்த, தற்போது இருக்கும் அரசும் சரி இந்த சம்பவம் தொடர்பாக வாய் திறக்கவில்லை.</p><p>பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்படாமலேயே, உயர் நீதிமன்ற உத்தரவின்படி, தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஆகாஷ் டெலிசனின் மரணத்தில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/was-the-police-responsible-for-the-death-of-young-man-akash-what-did-he-say-in-his-statement-812857">ஆகாஷ்</a> ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் (தேவேந்திர குல வேளாளர்) என்பதாலேயே அடித்துக் கொல்லப்பட்டதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது. </p><p>முழுவிவரம் என்ன காண்போம். </p><h2>குற்ற வழக்கில் மார்ச் மாதம் கைது</h2><p>சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ரயில்வே காலனியில் கடந்த மார்ச் 6-ஆம் தேதி நள்ளிரவில் ஜீவா நகரைச் சேர்ந்த ஜெயக்குமார் (35), ஆதனூரைச் சேர்ந்த அழகர் (33) ஆகியோர் தாக்கப்பட்டனர்.</p><p>இவர்களை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஆகாஷ் டெலிசன் (24) மற்றும் கோபி என இருவரை போலீசார் கைது செய்தனர்.</p><p>கைதின்போது தப்பி செல்ல முயன்ற ஆகாஷ் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்தார், இதில் அவரது காலில் முறிவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.</p><p>இதனால் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், 8-ஆம் தேதி அதிகாலை ஆகாஷ் உயிரிழந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் போலீசார் ஆகாஷை அடித்தே கொன்றதாக அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர். </p><p>இதில் சம்பந்தப்பட்ட போலீசாரை கைதுசெய்யக்கோரி ஆகாஷின் உறவினர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த வழக்கு பூதாகரமாக, </p><p>ஆகாஷ் மரண வழக்கில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்படும் திருப்புவனம் ஆய்வாளர் திலீபன், மானாமதுரை உதவி ஆய்வாளர் குகன், சிவகங்கை நகர் தலைமைக் காவலர் தெய்வேந்திரன், சிப்காட் தலைமைக் காவலர் சரத்குமார், மானாமதுரை முதல் நிலை காவலர் காளீஸ்வரன், திருப்புவனம் முதல் நிலை காவலர் மனோகரன் ஆகிய 6 காவலர்களை கடந்த மார்ச் 13ஆம் தேதி இடைநீக்கம் செய்து ராமநாதபுரம் சரக டிஐஜி உத்தரவிட்டார்.</p><h2>சிபிசிஐடிக்கு மாற்றம்</h2><p>இதனிடையே வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி ஆகாஷின் தந்தை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆகாஷ் வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்கும்படி உத்தரவிட்டது.</p><p>இருப்பினும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்படவில்லை உள்ளிட்ட குறைபாடுகளை சுட்டிக்காட்டி ஆகாஷ் குடும்பத்தின் போராட்டம் தொடர்ந்தது. இதனால் கிட்டத்தட்ட 3 மாதங்கள் ஆனபின்னும் ஆகாஷின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டிருந்தது.</p><h2>உடல் தகனம்</h2><p>வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தநிலையில், ஆகாஷின் உடலை பெற்றுக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் போலீசார் கைது செய்யப்படாததால் உடலை பெற்றோர் வாங்கவில்லை. இதனால் முறைப்படி ஆகாஷின் உடலுக்கு இறுதிச்சடங்கு நடத்தி, அவரது உடலை காவல்துறையே தகனம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. </p><p>இதனைத்தொடர்ந்து ஜூன்.17ம் தேதி ஆகாஷின் உடல் மதுரை தத்தனேரி மயானத்தில்  தகனம் செய்யப்பட்டது. </p><h2>சிபிசிஐடி அறிக்கை தாக்கல்</h2><p>இந்நிலையில் இந்த வழக்கில் சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆகாஷ் டெலிசன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே அவரை கொல்ல திட்டமிட்டு இந்த கொலை நிகழ்ந்ததாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். </p><p>இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஆறு காவலர்களும் ஆதிச்ச சாதியை சேர்ந்தவர்கள் என்றும், ஆகாஷ் தலித் என்பதை அறிந்தே அவரை ஆள் நடமாட்டம் இல்லாத யூகலிப்டஸ் காடு பகுதிக்கு அழைத்துச் சென்று ஈரசாக்கை வலது காலில் கட்டி இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட, ஃபேட் எம்பாலிசம் என்ற பக்களவிளைவு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். </p><h2>இதுவரை கைது செய்யப்படாத குற்றவாளிகள்</h2><p>இதில் முக்கிய குற்றவாளி ஆய்வாளர் திலீபன் உட்பட ஆறுபேர் மீதும் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆகாஷின் மரண வாக்குமூலத்தின் இந்த அனைத்து சம்பவங்களும் கூறப்பட்டநிலையில், தற்போதுவரை குற்றவாளிகள் ஆறுபேரும் கைது செய்யப்படவில்லை.</p><p>மேலும் இந்த வழக்கு தொடர்பாக 16 பேர்மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில், ஆறு பேர்மீது மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆகாஷ் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>மணல் கொள்ளையைத் தடுக்க உருப்படியான நடவடிக்கைகளை தவெக அரசு மேற்கொள்ள வேண்டும்!- டி.டி.வி. தினகரன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-says-tvk-government-must-take-concrete-measures-to-curb-sand-mining</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-says-tvk-government-must-take-concrete-measures-to-curb-sand-mining#comments</comments><guid isPermaLink="false">77dae2b1-7353-4b48-a2f0-31b3ea70f512</guid><pubDate>Thu, 27 Aug 2026 10:08:23 +0000</pubDate><atom:updated>2026-08-27T10:08:23.510Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,AMMK,அமமுக,டிடிவி தினகரன்,மணல் கொள்ளை,tvk,TTTV Dhinakaran</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/sp0rwalh/TTVDhinakaran001.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ டி.டி.வி. தினகரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ டி.டி.வி. தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/sp0rwalh/TTVDhinakaran001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கடந்த திராவிட ஆட்சிகளைக் குறைகூறிக் காலம் கடத்துவதை விடுத்து, மணல் கொள்ளையைத் தடுக்க உருப்படியான நடவடிக்கைகளை தவெக அரசு மேற்கொள்ள வேண்டும்! டி.டி.வி.தினகரன் வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">டி.டி.வி.தினகரன்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>பெரும் அச்சம்</strong></h2><p>திருவாரூர், திருப்பத்தூர், சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை நடைபெறுவதாக அடுத்தடுத்து புகார்கள் குவிந்து வருகின்றன. அதிலும், உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற மணல் கொள்ளை தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்த கல்லூரி மாணவி உள்ளிட்ட இரு பெண்கள் மீது அடையாளம் தெரியாத கும்பல் நடத்தியுள்ள கண்மூடித்தனமான தாக்குதல், பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.</p> <h2><strong>விமர்சனங்கள்</strong></h2><p>சட்டவிரோதமாக நடைபெறும் மணல் கொள்ளைச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்த வேண்டிய காவல்துறையே, பொதுமக்கள் தாமாக முன்வந்து அளிக்கும் புகார்கள் மீது அலட்சியம் காட்டி வருவதன் பின்னணியில், <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-indictment-tvk-govt-9">ஆளுங்கட்சியினர்</a> மற்றும் அரசு அதிகாரிகள் சிலரின் தலையீடு இருப்பதாகவும், மணல் கொள்ளையில் சில சட்டமன்ற உறுப்பினர்களே நேரடியாக ஈடுபட்டு வருவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.</p><p>எனவே, கடந்த திராவிட ஆட்சிகளைக் குறைகூறிக் காலம் கடத்துவதை விடுத்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் சட்டவிரோத மணல் கொள்ளையை அரசியல் பாரபட்சமின்றி இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதோடு, மணல் கொள்ளையைத் தடுக்கும் வகையில் ரோந்து மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>நேபாளத்தில் நிலச்சரிவுடன் கூடிய பெருவெள்ளம்: மாமரத்தை பிடித்து உயிர்தப்பிய தொழிலாளி!</title><link>https://www.maalaimalar.com/news/topnews/nepal-landslide-flash-flood-worker-survives-clinging-mango-tree</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/nepal-landslide-flash-flood-worker-survives-clinging-mango-tree#comments</comments><guid isPermaLink="false">6841cfa4-f1af-466e-a496-b87249a3cd68</guid><pubDate>Thu, 27 Aug 2026 10:00:21 +0000</pubDate><atom:updated>2026-08-27T10:00:21.387Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாளம்,nepal,நேபாள அரசு,Nepal Floods,நேபாள வெள்ளம்,Massive floods</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/80r3l8rc/neoa.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Massive floods ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/80r3l8rc/neoa.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>உலகம் (World)</category><content:encoded><![CDATA[ <p>நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது, கழிப்பறை குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த 24 வயதான கூலித்தொழிலாளி  மாமரத்தை  பிடித்து அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளார். </p><p>நேபாள நாட்டின் திபெத் எல்லைப் பகுதியான ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு மற்றும் அதைத் தொடர்ந்து உருவான பேரழிவு பெருவெள்ளம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>நிலச்சரிவினால் ஏற்பட்ட மிகப்பெரிய மண் மற்றும் பாறைச் சுவர்கள் ஆற்று நீரில் சரிந்து விழுந்ததால், பாய்ந்து வந்த அசுர வெள்ளத்தில் நூற்றுக்கணக்கானோர் சிக்கிக் கொண்டனர். இந்தத் திடுக்கிடும் இயற்கை பேரிடரில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்றும், நூற்றக்கணக்கானோரைக் காணவில்லை என்றும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>பிதுர் பகுதியில் கழிப்பறை குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த 24 வயதான பிபேக் குமால் என்ற தொழிலாளி, இந்த பெருவெள்ளத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். குழிக்குள் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது எழுந்த பலத்த இரைச்சல் சத்தத்தைக் கேட்டு சக தொழிலாளர்கள் எச்சரித்து ஓடியுள்ளனர். பிபேக் குழியை விட்டு வெளியேறுவதற்குள், <a href="https://www.maalaimalar.com/news/national/nepal-floods-amit-shah-speaks-to-cms-of-up-bihar">நிலநடுக்கம் </a>போல் சீறிப் பாய்ந்து வந்த சேறும் சகதியுமான பெருவெள்ளம் அவரை அடித்துச் சென்றது.</p><h2>உயிரைக் <strong>காத்த மாமர</strong>ம்</h2><p>வெள்ளத்தில் கட்டுக்கடங்காமல் அடித்துச் செல்லப்பட்ட பிபேக், வழியில் இருந்த ஒரு மாமரத்தில் பலமாகச் சிக்கிக் கொண்டார். மரத்தின் கிளையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு பல மணி நேரம் போராடிய அவரை, பின்னரே மீட்புக் குழுவினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். "அந்த மாமரம் மட்டும் அங்கில்லை என்றால் நான் நிச்சயமாக உயிருடன் இருந்திருக்க முடியாது" என காத்மாண்டு தேசிய சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள பிபேக் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.</p><h2>தீவிரம<strong>டையும் மீட்</strong>புப் பணிகள்</h2><p>வெள்ளத்தின் வேகம் மற்றும் இடிபாடுகளின் அடர்த்தி காரணமாக அப்பகுதியின் வீடுகள் மற்றும் வாகனங்கள் முற்றிலும் உருக்குலைந்துள்ளன. இதுவரை 114-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டு காத்மாண்டு மற்றும் ரசுவா பகுதியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். </p><p>நிலச்சரிவு ஏற்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அப்பகுதியில் 4.4 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் பதிவானதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பாதுகாப்புப் படையினரும் மீட்புக் குழுவினரும் தொடர்ந்து மாயமானவர்களைத் தேடும் பணியில் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY : ஒரே நாளில் இரண்டு முறை குறைந்த தங்கம் விலை- சவரனுக்கு ரூ.2,280 குறைவு</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-27-08-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-27-08-2026#comments</comments><guid isPermaLink="false">662d510d-4933-4521-a79a-0159072209cd</guid><pubDate>Thu, 27 Aug 2026 09:48:50 +0000</pubDate><atom:updated>2026-08-27T09:48:50.901Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/bde117eh/gold.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ தங்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/bde117eh/gold.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கடந்த சில நாட்களாக உயர்வு, சரிவு மாறி வந்த தங்கம் விலை இன்று முக்கிய திருப்பத்தை கண்டுள்ளது. திங்கட்கிழமை உயர்ந்த விலை, செவ்வாய்க்கிழமை சிறு சரிவுக்கு பின், விடுமுறை நாளில் நிலைத்திருந்தது. இன்று காலை குறைந்த விலைக்கு மேலாக, இரண்டாவது முறையாக பெரிய அளவில் வீழ்ச்சி ஏற்பட்டு, சவரனுக்கு ரூ.2,280 வரை குறைந்திருப்பது நகை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு கவனத்துக்குரிய மாற்றமாகும்.</strong></em></p><p>ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் பிறந்துள்ளதால் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">தங்கம்</a> விலை ஏறுமுகமாகவே உள்ளது. அந்த வகையில், வார தொடக்கநாளான திங்கட்கிழமை தங்கம் விலை கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 30-க்கும் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 240 ரூபாய்க்கும் செவ்வாய்கிழமை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 10-க்கும் சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று விடுமுறை தினம் என்பதால் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. </p><p>இந்த இன்று காலை தங்கம் கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் 14 ஆயிரத்து 940-க்கும் சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 520-க்கு விற்பனையானது. </p> <h2><strong>மேலும் குறைந்த தங்கம் விலை</strong></h2><p>இந்த நிலையில், இன்று இரண்டாவது முறையாக தற்போது தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 285 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 725-க்கும் சவரனுக்கு 1,720 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதனால் இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,280 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. </p><h2><strong>வெள்ளி விலை நிலவரம்</strong> </h2><p>வெள்ளி விலையில் மாற்றமில்லை. வெள்ளி கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 265 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. </p><h2><strong>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்</strong></h2><p>26-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,080</p><p>25-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,080</p><p>24-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,240</p><p>23-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,600</p><p>22-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,600</p><h2><strong>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>26-08-2026- ஒரு கிராம் ரூ.265</p><p>25-08-2026- ஒரு கிராம் ரூ.265</p><p>24-08-2026- ஒரு கிராம் ரூ.275</p><p>23-08-2026- ஒரு கிராம் ரூ.270</p><p>22-08-2026- ஒரு கிராம் ரூ.270</p>]]></content:encoded></item><item><title>டிஎன்பிஎல்: நாளை இறுதிப்போட்டி-மதுரை, கோவை அணிகள் மோதல்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/madurai-kovai-meet-tomorrow-in-tnpl-final</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/madurai-kovai-meet-tomorrow-in-tnpl-final#comments</comments><guid isPermaLink="false">f17b408d-3e14-4b61-b41a-faa5514737cf</guid><pubDate>Thu, 27 Aug 2026 09:47:59 +0000</pubDate><atom:updated>2026-08-27T09:47:59.973Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,madurai panthers,மதுரை பாந்தர்ஸ்,கோவை கிங்ஸ்,kovai Kings</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/ysjjkoab/TNPL.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TNPL]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/ysjjkoab/TNPL.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>டி.என்.பி.எல். தொடரில் நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.</strong></em></p><p>10-வது  டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த  4-ம் தேதி திண்டுக்கல் அடுத்த நத்தத்தில் உள்ள  என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இந்தப் போட்டி தொடங்கியது.  கடந்த 15-ம் தேதியுடன் அங்கு போட்டிகள் முடிவடைந்தது.</p><h2>பிளே ஆப் சுற்று </h2><p>2-வது கட்ட ஆட்டங்கள்  சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் 18-ம் தேதி தொடங்கியது. 22-ம் தேதியுடன் லீக் போட்டிகள் முடிவடைந்தன. </p><p>மதுரை பாந்தர்ஸ், திருச்சி கிராண்ட்  சோழாஸ், கோவை கிங்ஸ், நடப்பு சாம்பியன் திருப்பூர் தமிழன்ஸ் ஆகியவை முறையே முதல் 4 இடங்களை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின. நெல்லை ராயல் கிங்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ்,  திண்டுக்கல் டிராகன்ஸ், சேலம் ஸ்பர்டன்ஸ் ஆகியவை முறையே 5 முதல் 8-வது இடம் பிடித்து  வெளியேறின. </p><p>23-ம் தேதி நடைபெற வேண்டிய குவாலிபயர்-1 (மதுரை-திருச்சி) ஆட்டமும், 24-ம் தேதி  நடக்கவேண்டிய எலிமினேட்டர் (கோவை- திருப்பூர்) போட்டியும் மழையால் கைவிடப்பட்டது. இதனால் மதுரை அணி இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது. கோவை குவாலிபயர்-2  போட்டிக்கு முன்னேறியது. திருப்பூர் அணி வெளியேறியது.</p><h2>நாளை இறுதிப்போட்டி</h2><p>நேற்று நடந்த ‘குவாலிபயர்-2’  ஆட்டத்தில் கோவை கிங்ஸ் 84 ரன் வித்தியாசத்தில் திருச்சி கிராண்ட் சோழாசை வீழ்த்தி 2- வது அணியாக இறுதிப் போட்டியில் நுழைந்தது. இன்று ஓய்வு நாளாகும்.</p><p>இந்நிலையில், டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டி நாளை (28-ம் தேதி) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் அனிருதா  தலைமையிலான மதுரை பாந்தர்ஸ், ஷாருக் கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.</p><h2>கோப்பை யாருக்கு?</h2><p>டி.என்.பி.எல். கோப்பையை வெல்லப் போவது மதுரையா, கோவையா என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>மதுரை பாந்தர்ஸ் 2- வது தடவையாக சாம்பியன் பட்டம் வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. இதற்குமுன் அந்த அணி 2018-ல் கோப்பையை கைப்பற்றி இருந்தது. 2-வது முறையாக இறுதிப்போட்டியில் விளையாடும் மதுரை பாந்தர்ஸ் லீக் சுற்றில் 5 ஆட்டங்களில் வெற்றி பெற்றது. 2 போட்டியில் தோற்றது. கோவை அணிக்கு எதிராக 240 ரன் இலக்கை எடுத்து சாதனை படைத்தது. இதனால் மதுரை பாந்தர்ஸ் மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடும். </p><p>அந்த அணியில் அதிக்-உர்-ரகுமான் (212 ரன்), சதுர்வேத் (209), குர்ஜபனீத் சிங் (8 விக்கெட்), பெரியசாமி, சோயிப் முகமது கான், (தலா 7 விக்கெட்) போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.</p><h2>3-வது முறையாக</h2><p>கோவை கிங்ஸ் 4- வது தடவையாக இறுதிப்போட்டியில் ஆடுகிறது. இதில் 2022-ல் சேப்பாக் சூப்பர் கில்லீசுடன் இணைந்து முதல் முறையாக டி.என்.பி.எல் கோப்பையை வென்றது. 2023- ல் 2-வது பட்டத்தைக் கைப்பற்றியது. தற்போது மதுரை அணிக்கு பதிலடி கொடுத்து 3-வது தடவையாக  கோப்பையை வெல்லும்  வேட்கையில்  இருக்கிறது. </p><p>கோவை அணி தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் வென்று இறுதிப் போட்டியில் நுழைந்தது. இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் மதுரையை எதிர்கொள்ளும். 3 ஆட்டத்தில் தோற்று இருந்தது.</p><p>கோவை அணியின் பேட்டிங்கில் சச்சின் (389 ரன்), லோகேஷ்வர் (258 ), கேப்டன்  ஷாருக் கான் (211) , பந்துவீச்சில் தீபன் லிங்கேஷ் (15 விக்கெட்), சித்தார்த்,  ஜாதவேத் சுப்ரமணியன் (தலா 13 விக்கெட்) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்</p>]]></content:encoded></item><item><title>கவுண்ட்டவுன் ஸ்டார்ட்ஸ் - செப்டம்பர் 6-ல் பிரமாண்டமாக தொடங்கும் Bigg Boss - Season 10!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/bigg-boss-season-10-countdown-begins-september-6-launch</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/bigg-boss-season-10-countdown-begins-september-6-launch#comments</comments><guid isPermaLink="false">8f9e71ca-6809-4655-8e29-25a78b2964fa</guid><pubDate>Thu, 27 Aug 2026 09:40:57 +0000</pubDate><atom:updated>2026-08-27T09:40:57.742Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய் சேதுபதி,Vijay sethupathi,jio hotstar,பிக்பாஸ்தமிழ்10,Bigg BossTamil 10,Star Vijay,Bigg Boss 10 Contestants</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/fre0lvgw/Bigg-BossTamil-10" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bigg BossTamil 10]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/fre0lvgw/Bigg-BossTamil-10?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ் சின்னத்திரையின் மிக பிரம்மாண்டமான மற்றும் ரசிகர்களால் ஆவலோடு எதிர்பார்க்கப்படும் ரியாலிட்டி ஷோவான '<a href="https://www.maalaimalar.com/topic/bigg-boss">பிக்பாஸ் தமிழ்</a>' தனது வரலாற்றுச் சிறப்புமிக்க பத்தாவது சீசனில் அடியெடுத்து வைக்கிறது.</p><p>இதற்கான அதிகாரப்பூர்வ கவுண்ட்டவுன் தற்போது தொடங்கியுள்ளது.</p><p>கடந்த ஒன்பதாவது சீசனில் தனது தனித்துவமான பேச்சாலும், எதார்த்தமான அணுகுமுறையாலும் ரசிகர்களைக் கவர்ந்த '<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF">மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி</a>, இந்த மைல்கல் சீசனையும் தொகுத்து வழங்க மீண்டும் களம் இறங்குகிறார்.</p><p>புதிய ஆளுமைகள், எதிர்பாராத திருப்பங்கள், உணர்ச்சிப் போராட்டங்கள் மற்றும் அனல் பறக்கும் மோதல்கள் என புத்தம் புதிய கலவையோடு இந்த பத்தாவது சீசன் அமையவுள்ளது.</p><h2><strong>பிரம்மாண்ட தொடக்க விழா</strong></h2><p>பிக்பாஸ் தமிழ் சீசன் 10 மிகப் பிரம்மாண்ட தொடக்க விழா வரும் செப்டம்பர் 6 அன்று மாலை 06:00 முதல் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளது. </p><p>வழக்கம் போல் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சியை பார்வையாளர்கள் கண்டு மகிழலாம். இந்த முறை ஓடிடி தளமான ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் இந்நிகழ்ச்சி ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது. </p><p>பிக்பாஸ் வீட்டின் உள்ளே நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும், சுவாரஸ்யங்களையும் பார்வையாளர்கள் ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் நேரலையாகக் கண்டுகளிக்கலாம்.</p><h2><strong>பரபரப்பான எதிர்பார்ப்பு</strong></h2><p>உலகநாயகன் கமல்ஹாசனுக்குப் பிறகு <a href="https://www.maalaimalar.com/topic/bigg-boss">பிக்பாஸ் </a>மேடையை அலங்கரித்த விஜய் சேதுபதி, தனது முதல் சீசனிலேயே (சீசன் 9) போட்டியாளர்களைக் கையாண்ட விதம் மற்றும் வார இறுதி நாட்களில் அவர் காட்டிய 'மக்கள் செல்வன்' பாணிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.</p><p>தற்போது பிக்பாஸ் தமிழ் தனது 10-வது சீசனை எட்டியுள்ள நிலையில், விஜய் சேதுபதியின் வருகை இந்த மைல்கல் சீசனை இன்னும் விறுவிறுப்பாகவும், பொழுதுபோக்கு நிறைந்ததாகவும் மாற்றும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.</p><p>வீட்டிற்குள் நுழையப்போகும் பிரபலங்கள் யார் யார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே தற்போதே காட்டுத்தீயாய் பரவி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/districts-likely-to-receive-rain-today-and-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/districts-likely-to-receive-rain-today-and-tomorrow#comments</comments><guid isPermaLink="false">aa79fe3c-6cc0-47fa-85f6-a4edb5dc3548</guid><pubDate>Thu, 27 Aug 2026 09:30:47 +0000</pubDate><atom:updated>2026-08-27T09:30:47.444Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/1d9jluzn/rain005.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மழை]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/1d9jluzn/rain005.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.</strong></em> </p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p><h2><strong>லேசான மழை</strong></h2><p>இன்று மற்றும் நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்.</p><p>29-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>1-ந்தேதி மற்றும் 2-ந்தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.</p><p>இதனிடையே இன்று முதல் 31-ந்தேதி வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்...</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>இன்று முதல் 31-ந்தேதி வரை தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>நான் சொல்ல ஆரம்பித்தால் உங்களுக்கு நல்லதல்ல- ஆதவ் அர்ஜூனா ஆவேச பேச்சு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/aadhav-arjuna-says-it-wont-be-good-for-you-if-i-start-speaking</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/aadhav-arjuna-says-it-wont-be-good-for-you-if-i-start-speaking#comments</comments><guid isPermaLink="false">7a32a64d-6ca1-4860-b612-743095e26d51</guid><pubDate>Thu, 27 Aug 2026 08:50:13 +0000</pubDate><atom:updated>2026-08-27T08:50:13.816Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தமிழக சட்டசபை,TN assembly,அமைச்சர் ஆதவ் அர்ஜூனா,Minister Aadhav Arjuna</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/gvj3hu82/aadhavarjuna0.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் ஆதவ் அர்ஜூனா]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ஆதவ் அர்ஜூனா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/gvj3hu82/aadhavarjuna0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அண்ணா சொன்னது போல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெறும் கரண்டியோடு வருபவர்களுக்கு சமம். ஆளுங்கட்சியினர் எண்ணெய் உடன் கூடிய கரண்டியுடன் வரவேண்டும்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக மற்றும் தவெக உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.  அதன் விவரம் வருமாறு:-</p><h2><strong>உதயநிதி ஸ்டாலின்</strong></h2><p>ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அயோத்திதாசர் குடியிருப்பு கொண்டு  வந்தது திமுக அரசு. அம்பேத்கர் அயலக திட்டத்தை  கொண்டு வந்தது திமுக. சிலர் தேவையில்லாத விஷயங்களை எழுப்பி தவறான பாதைக்கு செல்கின்றனர் என்றார். </p><h2><strong>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</strong></h2><p>சமூக நீதி பேசக்கூடிய திமுக கடந்த ஆட்சியில் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசவே இல்லை. மேற்கு வங்கம், பீகாரில் 3 மாதத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி செயல்படுத்தினார்கள். மத்திய அரசு பாஜக அனுமதி கொடுக்க வேண்டும் என்று தப்பிக்க கூடாது என்று கூறினார். </p><h2><strong>கோவி செழியன்</strong></h2><p>அண்ணா சொன்னது போல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெறும் கரண்டியோடு வருபவர்களுக்கு சமம். ஆளுங்கட்சியினர் எண்ணெய் உடன் கூடிய கரண்டியுடன் வரவேண்டும். சாதி வாரி கணக்கெடுக்கும் உரிமை மத்திய அரசுக்கு உண்டு என்றார். </p><p>இதனை தொடர்ந்து பேசிய திமுக எம்எல்ஏ பேச்சிற்கு த.வெ.கவினர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பேசிய திமுக எம்எல்ஏவின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கி சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்தார். </p><p>திமுக எம்எல்ஏ பேசியது குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது, 2015 முதல் 2021 வரை திமுகவுக்கு பணியாற்றியது எல்லோருக்கு தெரியும், உங்கள் தலைவருக்கும் என் பணியும் தெரியும்.  உண்மையான பணியாற்றியவன் நான். உங்கள் அப்பாவிடன் தான் கேட்க வேண்டும், நான் சொல்ல ஆதரம்பித்தால் உங்களுக்கு நல்லதல்ல.  நான் பணி செய்தவரை என் பணியை முடித்துவிட்டு அடுத்த பணிக்கே வந்துவிட்டேன் என்றார். </p><p>இதையடுத்து பேசிய சபாநாயகர், வாளோடு வரும் எதிர்க்கட்சியினரை ஆளுங்கட்சி கேடயம் கொண்டு தடுக்க வேண்டுமே தவிர வாள் கொண்டு எதிர்க்க கூடாது என்றார். </p>]]></content:encoded></item><item><title>அமைச்சர் வன்னி அரசு பேச்சுக்கு &apos;SOFA MODEL&apos; என திமுக கிண்டல்: சட்டசபையில் பரபரப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/debate-on-dalit-representation-in-assembly-dmk-members-uproar-over-minister-vanni-arasu-speech</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/debate-on-dalit-representation-in-assembly-dmk-members-uproar-over-minister-vanni-arasu-speech#comments</comments><guid isPermaLink="false">3eadc35d-aedb-4682-a883-351daa87ce2e</guid><pubDate>Thu, 27 Aug 2026 08:35:04 +0000</pubDate><atom:updated>2026-08-27T08:35:04.185Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,vck,திமுக அரசு,தமிழ்நாடு சட்டசபை,TNAssembly,minister vanni arasu,அமைச்சர் வன்னி அரசு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/8y1dbrrr/vann.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Vanni Arasu  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/8y1dbrrr/vann.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு ஆற்றிய உரை பேரவையில் கடும் விவாதத்தை கிளப்பியுள்ளது. தலித் பிரதிநிதித்துவம் மற்றும் திராவிடக் கட்சிகளின் அணுகுமுறை குறித்து அவர் எழுப்பிய கேள்விகளுக்கு எதிர்ப்புக் தெரிவித்து, எதிர்கட்சியான திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரே நேரத்தில் எழுந்து நின்று முழக்கமிட்டதால் அவையில் கடுமையான கூச்சல் குழப்பமும் அமளியும் நிலவியது.</p><h2>த<strong>லித் பிரதிநிதித்துவ</strong>ம்</h2><p>பேரவையில் உரை நிகழ்த்திய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-announced-new-welfare-schemes-for-adi-dravidars-and-tribal-people">அமைச்சர் வன்னி அரசு</a>, தலித் சமுதாயத்தின் அரசியல் உரிமை மற்றும் ஆட்சியில் அதிகாரப் பகிர்வு குறித்து மிகக் காரசாரமான கேள்விகளை முன்வைத்தார். தலித் சமுதாயத்தைச் சேர்ந்த தன்னைச் சட்டமன்றத்தில் சுதந்திரமாகப் பேச விடாமல் தடுப்பதாகக் குற்றம்சாட்டிய அவர், திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதிமுக ஆகிய இரு முக்கியக் கட்சிகளின் அணுகுமுறையையும் கடுமையாக விமர்சித்தார்.</p><p>விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தபோதிலும், திமுக தனது ஆட்சிக் காலத்தில் அதிகாரத்திலும் அமைச்சரவையிலும் ஏன் பங்கு வழங்கவில்லை என்று அவர் கேள்வி எழுப்பினார். மேலும், தலித் தலைவர்களைப் பொதுத் தொகுதிகளில் போட்டியிட வைப்பதைச் சுட்டிக்காட்டி பெருமை பேசுவது, அவர்களைச் சம உரிமையோடு பார்க்காமல் பரிதாபத்தின் அடிப்படையில் அணுகுவதையே காட்டுகிறது என்றும் சாடினார்.</p><h2>சோஃபா மாட<strong>ல் என கிண்</strong>டல்</h2><p>விசிகவுக்கு வெறும் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக அரசு அவர்களுக்கு மதிப்பளித்து அமைச்சரவையில் இடம் வழங்கி சமூக நீதியை நிலைநாட்டியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டபோது எதிர்த்தரப்பினர் கொதிப்படைந்தனர். இதற்கிடையே அமைச்சர் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது, திமுக உறுப்பினர்கள் 'சோஃபா மாடல்' என்று கிண்டல் செய்து குரல் எழுப்பினர்.</p><p>இதனைத் தொடர்ந்து, அமைச்சரின் பேச்சுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்த திமுக உறுப்பினர்கள் பலர் ஆவேசமாக எழுந்து நின்று ஒரே நேரத்தில் முழக்கங்களை எழுப்பினர். அமைச்சர் வன்னி அரசுவை மேலும் பேச விடாமல் தடுத்துத் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், சட்டமன்றத்தில் சில நிமிடங்கள் கடுமையான காரசாரமான சூழல் நிலவியது.</p>]]></content:encoded></item><item><title>ஒரே நாளில் 10 பச்சிளம் குழந்தைகள்.. 3 வாரங்களில் 60 குழந்தைகள் - மேற்கு வங்க அரசு மருத்துவமனையில் பலி </title><link>https://www.maalaimalar.com/news/national/10-newborns-in-a-single-day-60-infants-in-three-weeks-deaths-at-a-government-hospital-in-malda</link><comments>https://www.maalaimalar.com/news/national/10-newborns-in-a-single-day-60-infants-in-three-weeks-deaths-at-a-government-hospital-in-malda#comments</comments><guid isPermaLink="false">d26d6672-2482-4170-8803-22526aac97d3</guid><pubDate>Thu, 27 Aug 2026 08:28:18 +0000</pubDate><atom:updated>2026-08-27T08:28:18.927Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அரசு மருத்துவமனை,Government Hospital,மேற்கு வங்கம்,Child,குழந்தை,west bengal</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/bvup91j6/tn-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ குழந்தை]]></media:title><media:description type="html"><![CDATA[ குழந்தை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/bvup91j6/tn-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்க மாநிலம் மால்டா<a href="https://www.maalaimalar.com/topic/government-hospital"> அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்</a> இந்த ஆகஸ்ட் மாதத்தின் முதல் 3 வாரங்களில் மொத்தம் 60 பிறந்த குழந்தைகள் உயிரிழந்துள்ளன. </p><p>இச்சம்பவத்தை தொடர்ந்து, மாநில சுகாதாரத் துறை மால்டா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது. </p><p>உயிரிழந்த பல குழந்தைகள் மால்டா மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்படுவதற்கு முன்பு சிகிச்சை பெற்ற தனியார் மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள் மற்றும் வட்டார அளவிலான சுகாதார மையங்களிலும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.</p> <h2>ஒரே நாளில் 10 குழந்தைகள் பலி</h2><p>ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் ஒரே நாளில் 10 பிறந்த குழந்தைகள் உயிரிழந்தன. இதில் 8 குழந்தைகள் பிற அரசுக் மருத்துவமனைகள் அல்லது தனியார் நர்சிங் ஹோம்களில் பிறந்த பிறகு, மேல் சிகிச்சைக்காக மால்டா மருத்துவக் கல்லூரிக்குக் கொண்டு வரப்பட்டவை ஆகும்.</p><p>மிகவும் ஆபத்தான நிலையிலேயே இக்குழந்தைகள் மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டதாகவும், மூச்சுத்திணறல் மற்றும் இதயப் பிரச்சினைகள் காரணமாகவே உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.</p> <p>மால்டா மருத்துவக் கல்லூரியின் மருத்துவ கண்காணிப்பாளர் பிரசென்ஜித் பார் கூறும்போது, "ஆகஸ்ட் 12 அன்று ஒரே நாளில் மால்டா மருத்துவக் கல்லூரியில் 10 குழந்தைகள் உயிரிழந்தன.</p><p>ஆனால் அவற்றில் இரண்டு குழந்தைகள் மட்டுமே இந்த மருத்துவக் கல்லூரியில் பிறந்தவை.</p><p>மற்ற குழந்தைகள் மிகவும் ஆபத்தான நிலையில் பிற மருத்துவமனைகளில் இருந்து இங்கு கொண்டு வரப்பட்டவை" என்று தெரிவித்தார்.</p><p>ஒரே நாளில் உயிரிழந்த 10 குழந்தைகளில், 4 குழந்தைகளுக்குப் பிறவி இதய நோய் இருந்ததாகவும், 2 குழந்தைகளுக்கு  கடுமையான மூச்சுத்திணறல் இருந்ததாகவும் பிரசென்ஜித் பார் மேலும் விளக்கமளித்தார்.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கலப்பு இரட்டையரில் சாம்பியன் பட்டம் வென்ற மென்சிக்-முசோவா ஜோடி</title><link>https://www.maalaimalar.com/sports/tennis/mensik-muchova-pair-won-the-title-in-us-open-mixed-doubles</link><comments>https://www.maalaimalar.com/sports/tennis/mensik-muchova-pair-won-the-title-in-us-open-mixed-doubles#comments</comments><guid isPermaLink="false">55f80aa5-cb0c-4fbc-ad3b-d9dfdc9640c9</guid><pubDate>Thu, 27 Aug 2026 08:21:08 +0000</pubDate><atom:updated>2026-08-27T08:21:08.999Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Karolina Muchova,US Open Tennis,அமெரிக்க ஓபன் டென்னிஸ்,jakub mensik,ஜாகுப் மென்சிக்,கரோலினா முசோவா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/dbgc2ljr/muchova.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ mensik, muchova]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/dbgc2ljr/muchova.jpg?w=280" width="280"></media:thumbnail><category>டென்னிஸ் (Tennis)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையரில் மென்சிக், முசோவா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.</p><p>கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் சுற்று நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.</p><p>கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிச்சுற்று போட்டி இன்று நடைபெற்றது. இதில் செக் குடியரசின் ஜாகுப் மென்சிக்-கரோலினா முசோவா ஜோடி, இத்தாலியின் பிளேவியோ கோபாலி-சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்கிக் ஜோடி உடன் மோதியது.</p><p>இதில் சிறப்பாக ஆடிய மென்சிக்-முசோவா ஜோடி 6-3, 1-6, 10-6 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.</p><p>செர்பியாவின் நோவக் ஜோகோவிச், நம்பர் ஒன் வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா ஜோடி, அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ்-ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் ஜோடி, ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா-ஆண்ட்ரே ரூப்லெவ் ஜோடி உள்ளிட்ட முன்னணி ஜோடிகள் தோல்வி அடைந்து வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள்: டெல்லி செல்லும் 4 அமைச்சர்கள்- முதலமைச்சர் உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-order-4-ministers-team-going-to-delhi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-order-4-ministers-team-going-to-delhi#comments</comments><guid isPermaLink="false">2080bfe0-1b16-4e1d-a6b8-470d7afd489f</guid><pubDate>Thu, 27 Aug 2026 08:08:04 +0000</pubDate><atom:updated>2026-08-27T08:08:04.976Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,TN Govt,தமிழக அரசு,nepal flood,நேபாளம் வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/oemdy6j2/Vijay07.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/oemdy6j2/Vijay07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஆஷிஷ் குமார் ஐ.ஏ.எ.ஸ் தலைமையிலான குழுவை நேபாளம் காத்மாண்டுவுக்கு அனுப்ப முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.</strong></em> </p><p>நேபாள நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி தவிக்கும்  தமிழர்களை மீட்டு வருவது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் இன்று அவசர ஆலோசனை மேற்கொண்டார். இந்த  ஆலோசனையில்  தலைமைச் செயலாளர் சாய்குமார் அமைச்சர்கள் ராஜ்மோகன், தென்னரசு மற்றும் அயலகத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். </p><p>அப்போது மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு தமிழர்களின் நிலை பற்றி கேட்டறிந்து அவர்களுக்கு  தேவையான உதவிகளை செய்து  கொடுக்கும்படி முதலமைச்சர் கேட்டுக் கொண்டார். அவர்களை பாதுகாப்பாக தமிழகம்  அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு  வலியுறுத்தினார். </p><p>இதனை தொடர்ந்து, நேபாளத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்கும் நடவடிக்கையாக 4 அமைச்சர்களை டெல்லி செல்ல முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-consult-with-ministers-and-officers-for-recover-for-tamils-stranded-in-nepal">விஜய்</a> உத்தரவிட்டுள்ளார். அமைச்சர் ஆதவ், ராஜ்மோகன், வினோத், தென்னரசு ஆகியோர் டெல்லி செல்ல உள்ளனர். </p><p>அமைச்சர்கள் டெல்லி சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை கண்காணிக்கவும்,  4 அமைச்சர்களும் மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். </p><p>மேலும் ஆஷிஷ் குமார் ஐ.ஏ.எ.ஸ் தலைமையிலான குழுவை நேபாளம் காத்மாண்டுவுக்கு அனுப்ப முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் தொடர்பு.. ஓய்வுபெற்ற வங்கி மேலாளரிடம் ரூ. 3.83 கோடி பறித்த கும்பல்</title><link>https://www.maalaimalar.com/news/national/gang-swindles-383-crore-from-retired-bank-manager-by-claiming-links-to-pahalgam-terror-attack</link><comments>https://www.maalaimalar.com/news/national/gang-swindles-383-crore-from-retired-bank-manager-by-claiming-links-to-pahalgam-terror-attack#comments</comments><guid isPermaLink="false">cc0f7513-9851-45da-9ab0-812874287ccc</guid><pubDate>Thu, 27 Aug 2026 08:05:29 +0000</pubDate><atom:updated>2026-08-27T08:05:29.157Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஜிட்டல் கைது,சைபர் மோசடி,Digital Arrest,cyber fraud,பஹல்காம் தாக்குதல்,Pahalgam attack</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/j727c4jp/tn-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சைபர் மோசடி ]]></media:title><media:description type="html"><![CDATA[ சைபர் மோசடி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/j727c4jp/tn-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>"பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உங்கள் மொபைல் சிம் கார்டு பயன்படுத்தப்பட்டுள்ளது" எனக் கூறி ஓய்வுபெற்ற வங்கி மேலாளரிடம் ஏமாற்றி ரூ.3.83 கோடி  பறிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. </p><p>2025 ஏப்ரலில் நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். </p><h2>போலி அழைப்பு</h2><p>மும்பை ஜூஹு பகுதியை சேர்ந்த 64 வயதான ஓய்வுபெற்ற வங்கி மேலாளருக்கு போன் ஒன்று வந்துள்ளது. மறுபக்கம் பேசிய நபர் தங்களை பயங்கரவாத எதிர்ப்புப் படை அதிகாரிகள் என கூறியுள்ளார்.</p><p>பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் அவரது பெயரிலான சிம் கார்டு பயன்படுத்தப்பட்டதாக கூறி அவரை பயமுறுத்தியுள்ளனர்.</p><p>கைது வாரண்ட் மற்றும் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் போல் சில போலி ஆவணங்களை வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளார்.</p><p>அவர்களின் மிரட்டலுக்கு பயந்து, தனது சேமிப்பு, முதலீடுகள் மற்றும் மியூச்சுவல் பண்டுகளின் விவரங்களை அவர்களிடம் பகிர்ந்துள்ளார்.</p><p>பின்னர், லக்னோவை சேர்ந்த ஐஜி விக்ரம் சிங் என்ற மூத்த அதிகாரி பேசுவதாக மற்றொரு நபர் தொடர்பு கொண்டுள்ளார்.</p><p>ஜம்மு காஷ்மீரில் இவரது பெயரில் கணக்கு தொடங்கப்பட்டு, அதில் ரூ.7 கோடி ரூபாய் பயங்கரவாத நிதி கைமாறியுள்ளதாக மிரட்டியுள்ளார்.</p><p>ரிசர்வ் வங்கியின் பெயரிலான போலி கடிதத்தை அனுப்பி, அவரது அனைத்து நிதி ஆதாரங்களையும் மோசடிக்காரர்கள் கேட்டுப் பெற்றுள்ளனர்.</p><h2>டிஜிட்டல் கைது</h2><p>விசாரணைக்காக பணத்தை சரிபார்த்துவிட்டு மீண்டும் திருப்பித் தருவதாக கூறியதை நம்பிய ஓய்வுபெற்ற அதிகாரி, ஆகஸ்ட் 7 முதல் ஆகஸ்ட் 17 வரையிலான காலகட்டத்தில் 4 கட்டங்களாக சுமார் ரூ.3.83 கோடி ரூபாயை மோசடி நபர்கள் கொடுத்த வங்கிக் கணக்குகளுக்குப் பரிமாற்றம் செய்துள்ளார்.</p><p>இந்த காலகட்டத்தில் அவரை டிஜிட்டல் கைது செய்திருப்பதாக கூறி அவரை வாட்ஸப் வீடியோ காலில் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர்.</p><p>பணத்தைத் திருப்பித் தராமல் மீண்டும் கூடுதல் பணம் கேட்டதால் சந்தேகமடைந்த அவர், வங்கி மேலாளர் ஒருவரை அணுகியுள்ளார்.</p><p>தான் ஏமாற்றப்பட்டதையும் உணர்ந்த முதியவர்<a href="https://www.maalaimalar.com/news/national/rs-30000-crore-cyber-fraud-ed-arrests-two-in-mumbai"> சைபர் கிரைம் </a>உதவி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள்- முதலமைச்சர் விஜய் அவசர ஆலோசனை </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-consult-with-ministers-and-officers-for-recover-for-tamils-stranded-in-nepal</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-consult-with-ministers-and-officers-for-recover-for-tamils-stranded-in-nepal#comments</comments><guid isPermaLink="false">c8698168-02bc-4933-819c-f5baaf184101</guid><pubDate>Thu, 27 Aug 2026 07:39:39 +0000</pubDate><atom:updated>2026-08-27T07:39:39.121Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,TN Govt,தமிழக அரசு,nepal flood,நேபாளம் வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/8lemffbn/vijaycm.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/8lemffbn/vijaycm.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நேபாளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்கும் நடவடிக்கை தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழ்நாடு சட்டசபை</a> ஒரு நாள் விடுமுறைக்கு பின் இன்று தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியதும் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். அதன்பின்னர், நேபாளம் நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பலியானவர்கள் மற்றும் அங்கு சிக்கி உள்ள தமிழர்கள் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இத்தீர்மானத்தின் மீது அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், </p><p>கைலாஷ் மானசரோவர் ஆன்மிக பயணம் மேற்கொண்டு நேபாளத்தில் சிக்கியுள்ள 103 தமிழர்களையும் போர்க்கால அடிப்படையில் மீட்கத் தமிழ்நாடு <a href="https://www.maalaimalar.com/news/topnews/nepal-floods-intense-efforts-to-rescue-103-tamils-minister-rajmohan">அரசு</a> தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறினார். </p><p>இந்த நிலையில், நேபாள நாட்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி தவிக்கும்  தமிழர்களை மீட்டு வருவது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் இன்று அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். </p><p>இந்த  ஆலோசனையில்  தலைமைச் செயலாளர் சாய்குமார், அமைச்சர்கள் ராஜ்மோகன், தென்னரசு மற்றும் அயலகத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு தமிழர்களின் நிலை பற்றி கேட்டறிந்து அவர்களுக்கு  தேவையான உதவிகளை செய்து  கொடுக்கும்படி முதலமைச்சர் கேட்டுக் கொண்டார். அவர்களை பாதுகாப்பாக தமிழகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு  வலியுறுத்தினார்.  </p><p>ஏற்கனவே தூதரக அதிகாரிகள் மூலம் டெல்லியில் உள்ள தமிழக அரசு அதிகாரிகள் மீட்பு பணி விவரம் சேகரிக்கும் நிலையில் ஆலோசனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. </p> ]]></content:encoded></item><item><title>பிரபல ஹாலிவுட் நடிகரும் பாடகருமான டிம் கர்ரி மறைவு </title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/renowned-hollywood-actor-and-singer-tim-curry-passes-away</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/renowned-hollywood-actor-and-singer-tim-curry-passes-away#comments</comments><guid isPermaLink="false">94dfc2d3-dc16-41a8-ac2d-133285268809</guid><pubDate>Thu, 27 Aug 2026 07:36:30 +0000</pubDate><atom:updated>2026-08-27T07:36:30.145Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மறைவு,Hollywood,Death,hollywood actor,ஹாலிவுட்,ஹாலிவுட் நடிகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/4xj7n80a/tn-9.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டிம் கர்ரி]]></media:title><media:description type="html"><![CDATA[ டிம் கர்ரி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/4xj7n80a/tn-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரபல <a href="https://www.maalaimalar.com/topic/hollywood">ஹாலிவுட் </a>நடிகரும் பாடகருமான  டிம் கர்ரி (80) காலமானார்.  </p><p>லாஸ் ஏஞ்சலஸில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று முன் தினம் அவர் அமைதியான முறையில் உயிர்நீத்ததாக அவரது மேலாளர் மார்சியா ஹர்விட்ஸ் அறிவித்துள்ளார்.</p><p>'தி ராக்கி ஹாரர் பிக்சர் ஷோ' திரைப்படத்தில் 'டாக்டர் பிராங்க் என் பர்ட்டர்'  என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சர்வதேச அளவில் அவர் புகழ் பெற்றார். </p><p>அவரது இறப்பிற்கான துல்லியமான காரணம் அறிவிக்கப்படவில்லை. </p><p>இருப்பினும், 2012ஆம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதில் இருந்து அவர் பல்வேறு உடல்நலக் கோளாறுகளுடன் போராடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>அவர் வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்து கொள்ளவில்லை. குழந்தைகளும் இல்லை. கர்ரிக்கு 12 வயது இருக்கும்போதே அமெரிக்க கடற்படையில் பணியாற்றிய அவரின் தந்தை பக்கவாதத்தால் உயிரிழந்தார். </p><p>1999 இல் அவரின் தாயார் மார்பக புற்றுநோயால் உயிரிழந்தார். மூத்த சகோதரி 2001 இல் மூளை புற்றுநோயால் உயிரிழந்தார். </p><h2>திரைப்பயணம்</h2><p>1973 இல் லண்டனில் மேடை நாடகமாகதில் 'டாக்டர் பிராங்க் என் பர்ட்டர்' கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார்.</p><p>பின்னர் 1975 இல் அதை தழுவி 'தி ராக்கி ஹாரர் பிக்சர் ஷோ' என திரைப்படமாக உருவான போதும் அதே கதாபாத்திரத்தில் அவர் நடித்தார்.</p><p>தொடக்கத்தில் பெரிய வரவேற்பைப் பெறாவிட்டாலும், பின்னாளில் அத்திரைப்படம் உலகளவில் மிகப்பெரிய கால்ட் கிளாசிக் திரைப்படமாக உருவெடுத்தது.</p><p>Clue, Annie, Legend, Home Alone 2: Lost in New York, The Three Musketeers மற்றும் Charlie's Angels ஆகிய தனது தனித்துவமான நடிப்பால் வில்லன் மற்றும் விசித்திரமான கதாபாத்திரங்களில் தோன்றி அசத்தியிருந்தார் அவர்.</p><p>நாடகத் துறையிலும் சிறந்து விளங்கிய அவர், Amadeus, My Favorite Year மற்றும் Monty Python's Spamalot ஆகிய நாடகங்களுக்காக மூன்று முறை மதிப்புமிக்க டோனி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.</p><p>2012இல் ஏற்பட்ட பக்கவாதத்திற்கு பிறகு இவரது நடிப்புப் பயணம் தொய்வை கண்டது. பின்னர் 2024ஆம் ஆண்டு வெளியான Stream என்ற ஹாரர் திரைப்படத்தின் மூலம் அவர் மீண்டும் திரைத்துறைக்குத் திரும்பினார்.</p> <h2>இசை</h2><p>இசைத் துறையிலும் ஆர்வம் கொண்ட இவர், சொந்த இசைக்குழுவுடன் சேர்ந்து பல இசை ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார்.</p><p>இசையில் ஆவரமுள்ள அவர் பாப் இசை பாடகராகவும் வளம் வந்தார். பல்வேறு இசைக்கச்சேரிகளை அவர் அமெரிக்கா நெடுக நடத்தியுள்ளார். ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சர்ச்சைக்குரிய விளம்பரம் வாபஸ்: நடிகை கிருத்தி சனோன் ஆடை விவகாரத்தில் ஜிவா நிறுவனம் நடவடிக்கை!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/controversial-ad-withdrawn-kriti-sanon-jiwa-action-over-outfit-row</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/controversial-ad-withdrawn-kriti-sanon-jiwa-action-over-outfit-row#comments</comments><guid isPermaLink="false">f47a1c1a-ea71-4e11-b41e-d218507d6ef1</guid><pubDate>Thu, 27 Aug 2026 07:36:03 +0000</pubDate><atom:updated>2026-08-27T07:36:03.457Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கிருத்தி சனோன்,kriti sanon,Kriti Sanon add,GIVA,Raksha Bandhan add,ஜிவா’ நகை நிறுவனம்,ரக்ஷா பந்தன் பண்டிகை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/kgft4g2a/KRUTHI.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Kriti Sanon]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/kgft4g2a/KRUTHI.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரபல பாலிவுட் நடிகை கிருத்தி சனோன் நடிப்பில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பெரும் புயலைக் கிளப்பிய ‘ஜிவா’ நகை நிறுவனத்தின் ரக்ஷா பந்தன் விளம்பரம், பொதுமக்களின் தீவிர எதிர்ப்பை அடுத்து அதிகாரப்பூர்வமாகத் திரும்பப் பெறப்பட்டுள்ளது.</p><p>பிரபல நகை பிராண்டான ஜிவா, ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/kriti-sanon-defends-raksha-bandhan-ad-outfit-amid-cultural-criticism">கிருத்தி சனோன்</a> நடித்த புதிய விளம்பரப் படத்தை வெளியிட்டது. அதில் கிருத்தி சனோன் அணிந்திருந்த ஆடை பண்டிகையின் கலாச்சாரத்திற்கு ஏற்ப இல்லை என்றும், உடலின் கழுத்துப்பகுதி மிகவும் திறந்த நிலையில் உள்ள ஆடையை அணிந்து கொண்டு ரக்ஷா பந்தன் கொண்டாடுவது போலக் காட்டப்பட்டதும் பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. </p><p>மேலும், அந்த விளம்பரத்தில் அவர் தனது செல்லப் பிராணியான நாய்க்கும் ராக்கி கட்டுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. பாரம்பரிய பண்டிகையையும் கலாச்சாரத்தையும் அவமதிக்கும் வகையில் இந்த விளம்பரம் இருப்பதாகக் கூறி சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.</p><h2>கிருத்தி ச<strong>னோன் பதில</strong>டி</h2><p>இந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்த கிருத்தி சனோன், பண்டிகைகளின் சாராம்சம் நாம் அணியும் ஆடைகளில் இல்லை, பாரம்பரியத்தின் மீது நாம் வைத்துள்ள உணர்வுகளில்தான் உள்ளது என்று தெரிவித்தார். ஒரு பெண்ணின் கலாச்சார மரியாதையை அவருடைய ஆடையின் கழுத்துப்பகுதியை வைத்தா தீர்மானிப்பது எனக் காட்டமாகக் கேள்வி எழுப்பினார். நடிகையும் நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரணாவத் இந்த விளம்பரத்தைக் கடுமையாக விமர்சித்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கிருத்தி சனோனுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துப் பெண்ணின் ஆடை உரிமை குறித்துப் பதிவிட்டார்.</p><h2>ஜிவா நிறுவனத்தின் <strong>அதிகாரப்</strong>பூர்வ அறிக்கை</h2><p>எதிர்ப்பு வலுத்ததைத் தொடர்ந்து, ஜிவா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டு விளம்பரத்தை அனைத்து ஊடகங்களிலிருந்தும் அகற்றியது. இந்திய கலாச்சாரம் மற்றும் பண்டிகைகள் மீது தங்களுக்கு மிகுந்த மரியாதை இருப்பதாகக் குறிப்பிட்ட அந்த நிறுவனம், குடும்பத்தினருடனும் செல்லப் பிராணிகளுடனும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதே தங்கள் நோக்கமாக இருந்தது என்றும், சில பிரிவினரின் மனதை அறியாமல் புண்படுத்தியதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறி விளம்பரத்தை வாபஸ் பெற்றது.</p>]]></content:encoded></item><item><title>ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்குப் புதிய நலத்திட்டங்கள்: அமைச்சர் வன்னி அரசு அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-announced-new-welfare-schemes-for-adi-dravidars-and-tribal-people</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-announced-new-welfare-schemes-for-adi-dravidars-and-tribal-people#comments</comments><guid isPermaLink="false">4a8a5be9-6b87-4195-9f03-3d3446dc2bfe</guid><pubDate>Thu, 27 Aug 2026 07:15:26 +0000</pubDate><atom:updated>2026-08-27T07:15:26.049Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,minister vanni arasu,அமைச்சர் வன்னி அரசு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/09p2tk11/vanniarasu.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் வன்னி அரசு]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் வன்னி அரசு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/09p2tk11/vanniarasu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஆதி திராவிடர், பழங்குடியினர் விடுதியை நிர்வகிக்க, மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய அரண்- விடுதி பராமரிப்பு மேலாண்மை அமைக்கப்படும்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> சமூக நீதித்துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை அமைச்சர் வன்னி அரசு வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-</p><p>* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகளுக்கான வருடாந்திர பராமரிப்பு தொகை உயர்த்தி வழங்கப்படும். </p><p>* ஆதிதிராவிட மக்கள் சமுதாய நிகழ்வுகளை நடத்த 100 சமுதாய கூடங்கள் கட்டப்படும். </p><p>* தூய்மை பணியாளர்களுக்கு சொந்த வீடு வழங்க அகம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு. இத்திட்டத்தில் 2500 கான்கிரிட் வீடுகள் வழங்கப்படும். </p><p>* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ரூ.160 கோடியில் 150 சமூக நீதி விடுதிகள் கட்டப்படும். </p><p>* தரமான, சத்தான உணவு வழங்கும் பொருட்டு விடுதி மாணவர்களுக்கு வழங்கும் மாதாந்திர உணவு கட்டணம் உயர்த்தப்படும். </p><p>* ஆதிராவிட குடும்ப தலைவிகளுக்காக விடிவெள்ளி மகளிர் வாழ்வாதார திட்டம் செயல்படுத்தப்படும். </p><p>* வீடற்ற ஆதிதிராவிடர் குடும்பங்களுக்காக இனிய இல்லம் திட்டம் செயல்படுத்தப்படும்.</p><p>* ஆதி திராவிடர், பழங்குடியினர் விடுதியை நிர்வகிக்க, மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய அரண்- விடுதி பராமரிப்பு மேலாண்மை அமைக்கப்படும். </p><p>* மாணவர்களுக்கு பாதுகாப்பு, சுகாதாரமான மற்றும் கல்விக்கு உகந்த தங்குமிடம் சூழலை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். </p><p>* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க கோவையில் வணிக மையம் கட்டப்படும். </p><p>* உதகையில் உள்ள பழங்குடியினர் ஆய்வு மையத்தின் பணிகளை விரிவுபடுத்தும் வகையில் சென்னையில் பண்பாட்டு மையம் அமைக்கப்படுகிறது. சென்னை நந்தனத்தில் பழங்குடியினர் பண்பாட்டு மையம் அமைக்கப்படும். </p><p>* பழங்குடியினர் மருத்துவம், பொறியியல் உயர்கல்வியை அதிகரிக்க சிறப்பு கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படும்.</p><p>* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் அறிவு திறனை மேம்படுத்திக்கொள்ள அம்பேத்கர் படிப்பகம் ஏற்படுத்தப்படும். </p>]]></content:encoded></item><item><title>சுஸ்லான் நிறுவனம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: அமைச்சர் கீர்த்தனா விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/end-to-rumors-regarding-suzlon-industries-minister-clarifies-in-the-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/end-to-rumors-regarding-suzlon-industries-minister-clarifies-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">a11e57ce-c4db-444c-9979-815135068b13</guid><pubDate>Thu, 27 Aug 2026 07:05:34 +0000</pubDate><atom:updated>2026-08-27T07:05:34.148Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TNAssembly,ஆந்திரா,சட்டசபை,Minister Keerthana,அமைச்சர் கீர்த்தனா,Suzlon,சுஸ்லான் நிறுவனம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/s01fyvy9/moni.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Keerthana]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/s01fyvy9/moni.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் தொழிற்பணிகளை மேற்கொண்டு வரும் பிரபல <a href="https://www.maalaimalar.com/news/topnews/nepal-floods-intense-efforts-to-rescue-103-tamils-minister-rajmohan">சுஸ்லான் நிறுவனம்</a> அண்டை மாநிலமான ஆந்திராவிற்குத் தனது முதலீடுகளை முழுமையாக மாற்றிவிட்டதாகப் பரவி வரும் வதந்திகளுக்குத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா திட்டவட்டமான விளக்கம் அளித்துள்ளார். சட்டமன்றத்தில் விதி எண் 111-ன் கீழ் திருத்த அறிக்கையைத் தாக்கல் செய்து பேசிய அவர், சுஸ்லான் நிறுவனம் தமிழ்நாட்டில் தொடர்ந்து இயங்குவதோடு, தொழில் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகவே ஆந்திராவிலும் முதலீடு செய்துள்ளதாக தெளிவுபடுத்தினார்.</p><h2>ரூ.500 <strong>கோடி புதிய</strong> முதலீடு மற்றும் 500 பேருக்கு வேலைவாய்ப்பு</h2><p>முந்தைய காலங்களில் தமிழ்நாட்டை விட்டுச் சென்ற குறிப்பிட்ட முன்னணி நிறுவனம் ஒன்று, தற்போதைய அரசின் தீவிர முயற்சியால் மீண்டும் மாநிலத்திற்கு ஈர்க்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தின்படி, இந்நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் புதிய தொழில் திட்டங்களைத் தொடங்கவுள்ளது. இதன் மூலம் மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 500 இளைஞர்களுக்கு நேரடி வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.</p><p>ஒரு தொழில் நிறுவனம் ஒரு மாநிலத்தில் செயல்படும் அதேவேளையில், சந்தை வாய்ப்புகளுக்காக அண்டை மாநிலங்களிலும் தனது முதலீடுகளை மேற்கொள்வது இயல்பான வர்த்தக நடைமுறையாகும். எனவே, ஆந்திராவில் சுஸ்லான் செய்துள்ள ஒப்பந்தங்களைத் தமிழ்நாட்டுடன் தவறாகத் தொடர்புபடுத்தி வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று அமைச்சர் கேட்டுக் கொண்டார். தமிழ்நாட்டில் இந்நிறுவனத்தின் தொழிற்பணிகள் தடங்கலின்றித் தொடரும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.</p><h2>சின்னப்பிள்<strong>ளை சுயஉதவிக்</strong> குழு </h2><p>பேரவை விவாதத்தின் போது, மதுரை மாவட்டத்தில் சின்னப்பிள்ளை சுயஉதவிக் குழுவின் மூலம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது தொடர்பாகத் தாம் பேசிய உரையின் சில பகுதிகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு செய்திகளில் வெளியானதாக அமைச்சர் குறிப்பிட்டார். அவ்வாறு தவறாகப் பதிவான கருத்துகள் பேரவைக் குறிப்பில் இருந்து முறைப்படி திருத்தப்பட்டுச் சரியான வடிவில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்தார்.</p> ]]></content:encoded></item><item><title>விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா கூட்டணியில் &quot;ரணபாலி&quot; திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/vijay-devarakonda-rashmika-ranapali-release-date-announcement</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/vijay-devarakonda-rashmika-ranapali-release-date-announcement#comments</comments><guid isPermaLink="false">0f0f4ef7-f3cd-4e99-a11f-88914805335b</guid><pubDate>Thu, 27 Aug 2026 07:04:33 +0000</pubDate><atom:updated>2026-08-27T07:04:33.782Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rashmika-Mandanna,ராஷ்மிகா மந்தனா,விஜய் தேவரகொண்டா,vijay deverakonda,mythri movie makers,Ranabaali,ரணபாலி,Endhayya Saami</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/u4whag1g/Vijay-Deverakonda-Rashmika-Mandanna" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vijay Deverakonda  - Rashmika Mandanna ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/u4whag1g/Vijay-Deverakonda-Rashmika-Mandanna?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>'கீதா கோவிந்தம்' மற்றும் 'டியர் காம்ரேட்'ஆகிய திரைப்படங்கள் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்களின் சிறந்த ஜோடியாகக் கொண்டாடப்பட்டவர்கள் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE">விஜய் தேவரகொண்டா</a> மற்றும் <a href="https://www.maalaimalar.com/topic/rashmika-mandanna">ராஷ்மிகா மந்தனா</a>.</p><p>நிஜ வாழ்க்கையில் தம்பதிகளான இவர்கள், திருமணத்திற்குப் பிறகு முதன்முறையாக இணைந்து நடிக்கும் பீரியட் ஆக்ஷன் திரைப்படமான "ரணபாலி" குறித்த அதிகாரப்பூர்வ போஸ்டர் மற்றும் ரிலீஸ் தேதி வெளியாகி இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.</p><h2><strong>1870-களின் பின்னணியில் ஒரு வரலாற்றுப் போர்!</strong></h2><p>இத்திரைப்படம் 19ஆம் நூற்றாண்டின், குறிப்பாக <strong>1870-களின் பின்னணியில்</strong>, பிரிட்டிஷ் இந்தியாவின் அடக்குமுறை மற்றும் பெரும் பஞ்சத்தின் காலத்தை மையமாகக் கொண்டு களமிறங்குகிறது. தனது நிலத்தையும் மக்களையும் காப்பதற்காக பிரிட்டிஷ் கமிஷனரை எதிர்த்துப் போராடும் ஒரு கிளர்ச்சிப் போராளியின் கதையாக இது உருவாகியுள்ளது.</p><p>இப்படத்தில் கம்பீரமான தோற்றத்தில், கட்டுமஸ்தான உடலமைப்புடன் ஆக்ரோஷமான கிராமத்து போர்வீரனாக '<a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF">ரணபாலி</a>' என்ற முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். </p><p>விஜய்க்கு ஜோடியாக 'ஜெயம்மா' என்ற பவர்ஃபுல்லான பெண் கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.</p><h2><strong>தொழில் நுட்பக்குழு</strong></h2><p>ராகுல் சாங்கிருத்தியன் இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்திற்கு அஜய் - அதுல் இசையமைக்கின்றனர். </p><p>நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நவீன் யெர்னேனி - ஒய். ரவிசங்கர் மற்றும் டி-சீரிஸ் ஃபிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன.</p><h2><strong>ரிலீஸ் தேதி</strong></h2><p>இத்திரைப்படம் முதலில்<strong> செப்டம்பர் 11</strong> அன்று திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில், தற்போது வரும் அக்டோபர் 16ஆம் தேதி தசரா பண்டிகையை முன்னிட்டு உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பதை திரைபடக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.</p><p>"ரணபாலி" திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் ஒரே நேரத்தில் பான்-இந்தியா திரைப்படமாக உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">This OCT 16. <br><br>Worldwide in Cinemas near you. <a href="https://x.com/hashtag/RANABAALI?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#RANABAALI</a> <a href="https://t.co/srJRfNE7Sn">pic.twitter.com/srJRfNE7Sn</a></p>&mdash; Vijay Deverakonda (@TheDeverakonda) <a href="https://x.com/TheDeverakonda/status/2092850586089890262?ref_src=twsrc%5Etfw">August 27, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2><strong>எந்தையா சாமி</strong></h2><p>இத்திரைப்படத்திற்கு இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களான அஜய் - அதுல் இசையமைத்துள்ளனர்.</p><p> <br>விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடிக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒரு ரொமாண்டிக் மெலடி மற்றும் மாஸ் கலந்த ஸ்பெஷல் ப்ரோமோ சாங் "எந்தையா சாமி" பாடல் சமீபத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் ஆனது. </p><p>இந்த பாடலின் வரிகளை பிரபல பாடலாசிரியர் விவேகா வரிகளில், கார்த்திக் மற்றும் பாடகி ஸ்வேதா மோகன் மற்றும் அஜய் கோகாவாலே ஆகியோர் பாடியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>டெங்கு காய்ச்சல் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம்- அமைச்சர் விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dengue-fever-resolution-in-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dengue-fever-resolution-in-assembly#comments</comments><guid isPermaLink="false">e22d9c5b-058c-4546-ad28-a5c3cd3e8f6b</guid><pubDate>Thu, 27 Aug 2026 06:38:54 +0000</pubDate><atom:updated>2026-08-27T06:38:54.844Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,dengue fever,TN assembly,டெங்கு காய்ச்சல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/tqy2o1yg/arunraj.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் அருண்ராஜ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் அருண்ராஜ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/tqy2o1yg/arunraj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>டெங்கு காய்ச்சல் தொடர்பாக 2 நாட்களுக்கு முன்னர் அனைத்து இயக்குநர், மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம் என்று அமைச்சர் தெரிவித்தார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபை</a> இன்று தொடங்கியதும் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். அதன்பின், நேபாள வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்கள் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்தார். </p><p>அதனை தொடர்ந்து, தி.மு.க. எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம், டெங்கு காய்ச்சல் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். </p><p>இத்தீர்மானத்தின் மீது முதலில் பேசிய எடப்பாடி பழனிசாமி, டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் பரவும் நிலையில் கட்டுப்பாடு நடவடிக்கை என்ன? என்று கேள்வி எழுப்பினார். </p><h2><strong>தளி ராமச்சந்திரன் எம்எல்ஏ</strong></h2><p>தமிழகம் முழுவதும் இன்றைக்கு டெங்கு, மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் பெருமளவில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. எனவே டெங்கு, மலேரியா ஆகியவற்றை கட்டுப்படுத்த மக்கள் நல்வாழ்வுத்துறை என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்பதை அறிய விரும்புகிறேன் என்றார். </p><h2><strong>சிவகுமார் எம்எல்ஏ</strong></h2><p>டெங்கு, மலேரியா காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இந்த அவையின் மூலமாக அறிய விரும்புவதாக தெரிவித்தார். </p><h2><strong>தி.மு.க. எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம்</strong></h2><p>இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் என்றும் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரம் மூலம் தெரியவந்துள்ளது. முந்தைய ஆட்சிக்காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக காய்ச்சல் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு கட்டுப்படுத்தப்பட்டதை புள்ளி விவரங்கள் மூலம் நாம் அறியலாம். பருவமழை தொடங்க உள்ளதால் தமிழக அரசு உடனடியாக மருத்துவ முகாம்களை அமைத்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை, சுகாதார நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வுகளை மேற்கொண்டு தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். </p><h2><strong>அமைச்சர் அருண்ராஜ்</strong></h2><p>டெங்கு, பன்றிக்காய்ச்சல் பரவல் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. வீடு வீடாக கண்காணிப்பு.  கொசு ஒழிப்பு பணியும் மேற்கொள்ளப்படுகிறது. டெங்கு காய்ச்சல் தொடர்பாக 2 நாட்களுக்கு முன்னர் அனைத்து இயக்குநர், மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம் என்று அமைச்சர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>நேபாள பெருவெள்ளம்: 103 தமிழர்களை மீட்கத் தீவிர நடவடிக்கை- அமைச்சர் ராஜ்மோகன் </title><link>https://www.maalaimalar.com/news/topnews/nepal-floods-intense-efforts-to-rescue-103-tamils-minister-rajmohan</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/nepal-floods-intense-efforts-to-rescue-103-tamils-minister-rajmohan#comments</comments><guid isPermaLink="false">4fded28d-bd36-44e8-a975-f55684198376</guid><pubDate>Thu, 27 Aug 2026 06:27:58 +0000</pubDate><atom:updated>2026-08-27T06:27:58.195Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>nepal flood,சட்டசபை,TN Assembl,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan,நேபாள பெருவெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/11k9wg0k/raj.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Rajmohan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/11k9wg0k/raj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நேபாள பெருவெள்ளம் குறித்து அமைச்சர் ராஜ்மோகன் சட்டசபையில் ஆற்றிய விளக்க உரை-</p><p>நேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாகப் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்த பேரிடரில் 35 பாலங்கள் மற்றும் 45 தொங்கு பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. </p><p>இந்நிலையில், கைலாஷ் மானசரோவர் ஆன்மீக பயணம் மேற்கொண்டு நேபாளத்தில் சிக்கியுள்ள 103 தமிழர்களையும் போர்க்கால அடிப்படையில் மீட்கத் தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.</p><h2>வெள்ள பாதிப்<strong>பு நிலவரம்</strong></h2><p>கும்பகோணம் ‘<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/nepal-flood-57-tamils-missing-opposition-demands-war-footing-rescue">சூப்பர் யாத்ரா</a>’ நிறுவனம் மூலம் புதுச்சேரியைச் சேர்ந்த 3 பேர் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 54 பேர் என மொத்தம் 57 பேர் ஆன்மீகச் சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் பயணித்த 3 பேருந்துகளில், நடுவில் சென்ற பேருந்து திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியது. அதேபோல, சென்னையின் ‘மகாதேவ் கைலாஷ் யாத்ரா’ நிறுவனம் மூலமாக 49 தமிழர்கள் நேபாளத்திற்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதன்மூலம் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்குள்ள பல்வேறு இடங்களில் சிக்கியுள்ளனர்.</p><p>பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள தமிழர்களை மீட்க டெல்லி தமிழ்நாடு இல்ல அதிகாரிகளும், இந்திய வெளியுறவு அமைச்சகமும் நேபாள அரசுடன் இணைந்து பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்டார். வெள்ளத்தில் சிக்கிய ஒரு பேருந்தில் இருந்த 20 பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, அவர்கள் வேறு மாற்றுப் பாதை வழியாகத் தலைநகர் காத்மாண்டுவிற்கு அழைத்து வரப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p><h2>தொடர்புகொ<strong>ள்ளத் தொடர் முய</strong>ற்சிகள்</h2><p>மேலும், மகாதேவ் கைலாஷ் யாத்ரா மூலம் சென்ற 49 பேரின் தற்போதைய நிலையை அறியத் தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் உள்ளூர் பேரிடர் மீட்புக் குழுக்கள் மூலம் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகம் வழியாக அனைவரையும் பாதுகாப்பாகத் தமிழ்நாடு அழைத்து வரத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஜீவாவின் &apos;ஜாலியா இருந்த ஒருத்தன்&apos; படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாகிறது!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/jiivaa-jaliya-irundha-oruthan-first-single-out-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/jiivaa-jaliya-irundha-oruthan-first-single-out-tomorrow#comments</comments><guid isPermaLink="false">9274dd9c-188f-415b-89be-f211c6e34970</guid><pubDate>Thu, 27 Aug 2026 06:14:09 +0000</pubDate><atom:updated>2026-08-27T06:14:09.682Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Ivana,ஜீவா,SMS,இவானா,Jolliya Iruntha Oruthan,Actor Jiiva,ஜாலியா இருந்த ஒருத்தன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/6q239x5n/Jolliya-Iruntha-Oruthan" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jolliya Iruntha Oruthan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/6q239x5n/Jolliya-Iruntha-Oruthan?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>16 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ் சினிமாவின் பிளாக்பஸ்டர் கூட்டணியாக நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE">ஜீவா </a>- இயக்குனர் எம். ராஜேஷ் - இசையமைப்பாளர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE">யுவன் சங்கர் ராஜா</a> ஆகியோர் மீண்டும் தற்போது இணைந்துள்ள திரைப்படம் '<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D">ஜாலியா இருந்த ஒருத்தன்</a>'.</p><p>இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளநிலையில், மிக முக்கியமான புதிய அப்டேட் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.</p><h2><strong>ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது?</strong></h2><p>'ஜாலியா இருந்த ஒருத்தன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியானது.</p><p>தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் வெள்ளிக்கிழமை மாலை 06:00 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.</p><h2><strong>நட்சத்திர பட்டாளம்</strong></h2><p>முன்னணி கதாபாத்திரத்தில் ஜீவா மற்றும் இவானா இருவரும் ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் பரிதாபங்கள்' சுதாகர், எம். எஸ். பாஸ்கர், பகவதி பெருமாள் (பக்ஸ்), துளசி, ராஜ் அய்யப்பா மற்றும் அப்துல் லீ உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்துள்ளனர்.</p><p>இத்திரைப்படம், காமெடி மற்றும் எனர்ஜி நிறைந்த ஒரு கலகலப்பான பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகும் என்றும் ரசிகர்களிடம் எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2><strong>தொழில் நுட்பக்குழு</strong></h2><p>இத்திரைப்படத்தின் கதையை எழுதி எம். ராஜேஷ் இயக்க, படத்திற்கு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE">யுவன் சங்கர் ராஜா</a> இசையமைத்துள்ளார்.</p><p>இவர்களுடன் எம். சுகுமார் ஒளிப்பதிவாளராகவும், ஆசிஷ் ஜோசப் படத்தொகுப்பாளராகவும், மற்றும் ஹாசினி பவித்ரா கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர். </p><p>இத்திரைப்படத்தை மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் சார்பில் டத்தோ அப்துல் மாலிக் தயாரித்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Get ready to switch ON the <a href="https://x.com/hashtag/SMS?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#SMS</a> vibe again! <br><br>The OG combo is BACK! <br><br>The FIRST SINGLE from <a href="https://x.com/hashtag/JolliyaIrundhaOruthan?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#JolliyaIrundhaOruthan</a> <a href="https://x.com/hashtag/JIO?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#JIO</a> drops this Friday at 6 PM!  Stay Tuned !!!<br><br>Produced by <a href="https://x.com/malikstreams?ref_src=twsrc%5Etfw">@malikstreams</a> <a href="https://x.com/hashtag/datoabdulmalik?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#datoabdulmalik</a><br>Co Produced by <a href="https://x.com/RazikAhamed16?ref_src=twsrc%5Etfw">@Razikahamed16</a><br><br>Starring <a href="https://x.com/JiivaOfficial?ref_src=twsrc%5Etfw">@jiivaofficial</a><br><br>A… <a href="https://t.co/RedvFU4UZ5">pic.twitter.com/RedvFU4UZ5</a></p>&mdash; Malik Streams Corporation (@malikstreams) <a href="https://x.com/malikstreams/status/2092589756370825661?ref_src=twsrc%5Etfw">August 26, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2><strong>ரிலீஸ் அப்டேட்</strong></h2><p>படத்தின் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் நிறைவடைந்து வருகிறது. இத்திரைப்படத்தின் தமிழ்நாடு தியேட்டர் விநியோக உரிமத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான <strong>ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் பெற்றுள்ளது</strong>. </p><p>இதனால் படம் மிக பிரம்மாண்டமான முறையில் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நேபாளில் தவிக்கும் தமிழர்கள் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம்:  தமிழர்களை உடனடியாக மீட்க உறுப்பினர்கள் வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/calling-attention-motion-regarding-tamils-stranded-in-nepal-members-urge-immediate-rescue-of-the-tamils</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/calling-attention-motion-regarding-tamils-stranded-in-nepal-members-urge-immediate-rescue-of-the-tamils#comments</comments><guid isPermaLink="false">7dfb5469-6870-44a1-939f-8b5613848885</guid><pubDate>Thu, 27 Aug 2026 06:13:27 +0000</pubDate><atom:updated>2026-08-27T06:13:27.091Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தமிழக சட்டசபை,TN assembly,nepal flood,நேபாளம் வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/dfb84dz0/Assembly01.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஆதவ் அர்ஜூனா- உதயநிதி ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆதவ் அர்ஜூனா- உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/dfb84dz0/Assembly01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சபை நிகழ்வுகள் தற்போது நேரலையில் உள்ளது, அதிகாரிகள் அதை பார்த்து குறிப்பெடுத்து கொள்வர். வார் ரூம் அமைத்துள்ளதால் அங்கு நேரலையை பார்த்து அதிகாரிகள் குறிப்பெடுத்துக்கொள்வர் என அமைச்சர் தெரிவித்தார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> இன்று நேபாள வெள்ளத்தில் சிக்கி உள்ள தமிழர்கள் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இத்தீர்மானத்தின் உறுப்பினர்கள் விவாதம் நடைபெற்றது. </p><h2><strong>சிபிஐ எம்எல்ஏ ராமச்சந்திரன்</strong> </h2><p>டெல்லியில் உள்ள தமிழக இல்லத்தில் மீட்பு குழு அமைத்து உடனடியாக விவரம் சேகரிக்க வேண்டும் என்றார். </p><h2><strong>காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பட்</strong></h2><p>நேபாளம் வெள்ளப்பெருக்கில் சிக்கிய தமிழர்களை போர்க்கால அடிப்படையில் மீட்க நடவடிக்கை தேவை. சுற்றுலா செல்வோருக்கு மாநில சுற்றச்சூழல் பற்றி முன்னறிவிப்பு கொடுக்க வேண்டும் என்றார். </p><h2><strong>தமிமுன் அன்சாரி</strong></h2><p>டெல்டா பகுதியை சேர்ந்த பெரும்பாலானோர் நேபாளம் வெள்ளப்பெருக்கில் சிக்கியுள்ளனர். தமிழ்நாடு அரசு மத்திய அரசுடன் இணைந்து தமிழர்களை உடனடியாக மீட்டு தமிழகத்திற்கு கொண்டு வரவேண்டும் என கோரிக்கை விடுத்தார். </p><p>இதையடுத்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், </p><p>கேள்வி நேரம் நடக்கும் போது துறை செயலாளர்கள் அவைக்கு வந்து குறிப்பு எடுக்க வேண்டும். அதை வலியுறுத்த வேண்டும். எந்தெந்த துறை பிரச்சனை வரும்போது அந்தந்த அரசு துறை அதிகாரிகள் இருக்க வேண்டும் என்றார். </p><p>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசுகையில், </p><p>சபை நிகழ்வுகள் தற்போது நேரலையில் உள்ளது, அதிகாரிகள் அதை பார்த்து குறிப்பெடுத்து கொள்வர். வார் ரூம் அமைத்துள்ளதால் அங்கு நேரலையை பார்த்து அதிகாரிகள் குறிப்பெடுத்துக்கொள்வர்.</p><p>திமுக எம்எல்ஏ கே.என்.நேரு</p><p>நேரலை என்பது எப்போதும் இருப்பது தான். எனவே துறை செயலாளர்கள் இருக்க வேண்டும். முதலமைச்சர் இல்லையென்றால் முதன்மை செயலாளராவது இருக்க வேண்டும் என்றார். </p>]]></content:encoded></item><item><title>நேபாள பெருவெள்ளம்: 57 தமிழர்கள் மாயம்- போர்க்கால அடிப்படையில் மீட்க சட்டசபையில் எதிர்கட்சிகள் முழக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nepal-flood-57-tamils-missing-opposition-demands-war-footing-rescue</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nepal-flood-57-tamils-missing-opposition-demands-war-footing-rescue#comments</comments><guid isPermaLink="false">18eed60f-7f39-456b-9e5b-c4a111bac3dd</guid><pubDate>Thu, 27 Aug 2026 06:05:09 +0000</pubDate><atom:updated>2026-08-27T06:05:09.817Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,எடப்பாடி பழனிசாமி,Udhayanidhi Stalin,CM Edappadi palaniswami announces,nepal flood,சட்டசபை,TN Assembl,நேபாள பெருவெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/xxf5j18j/rr.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Udhayanidhi Stalin   -Edappadi Palaniswami]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/xxf5j18j/rr.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாள நாட்டில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த பேரிடரில் கைலாஷ் மானசரோவர் ஆன்மீக பயணம் மேற்கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 57 பக்தர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் சிக்கியுள்ள சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அவசர நிலவரம் தொடர்பாக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-dmk-and-admk-members-arguments">தமிழ்நாடு சட்டசபையில்</a> விவாதம் நடைபெற்றது.</p><p>இதில் பேசிய எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், நேபாளத்தில் மாயமான தமிழர்களை மீட்பது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. நேபாள வெள்ளத்தில் 160 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சிவஞானம் உட்பட பலர் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மாநில அரசு உடனடியாக அமைத்துள்ள உதவி எண்களுக்கு வந்த அழைப்புகள் எத்தனை, அதன் பேரில் டெல்லி தமிழ்நாடு இல்லம் மற்றும் வெளியுறவு அமைச்சகம் மூலமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று கேள்வி எழுப்பினார்.</p><h2>அதிமுக <strong>பொதுச்செயலா</strong>ளர் இபிஎஸ் மற்றும் பாமக வலியுறுத்தல்</h2><p>அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டிலிருந்து ஆன்மீக சுற்றுலா சென்ற 57 பேரின் நிலையை சுட்டிக்காட்டினார். ஈஷா மையம் சார்பிலும், தனியார் சுற்றுலா நிறுவனங்கள் மூலமாகவும் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 57 பக்தர்கள் தற்போது தொடர்புகொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்கள் அனைவரையும் போர்க்கால அடிப்படையில் பாதுகாப்பாக மீட்டு வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.</p><p>இதற்கிடையில் பாமக சட்டமன்ற உறுப்பினர், மாயமான 57 தமிழர்களில் 20 பேர் நேபாள எல்லைப் பகுதியில் உள்ள ராணுவ மற்றும் காவல் முகாம்களில் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மீதமுள்ள 37 பேரைக் கண்டறியும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.</p><p>இந்த விவாதங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை உடனடியாக மீட்க டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அதிகாரிகளுக்கும் வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தொடர்புகொள்ள 24 மணி நேர உதவி மைய எண்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>சிறந்த ஆசிரியர் விருது.. போலீசிடம் சிக்காமல் 40 ஆண்டுகள் அரசு பள்ளி 
ஆசிரியராக பணியாற்றிய ஆயுள் தண்டனை கைதி! </title><link>https://www.maalaimalar.com/news/national/best-teacher-award-a-life-term-convict-who-worked-as-a-government-teacher-for-40-years-and-retired-without-ever-being-caught-by-the-police</link><comments>https://www.maalaimalar.com/news/national/best-teacher-award-a-life-term-convict-who-worked-as-a-government-teacher-for-40-years-and-retired-without-ever-being-caught-by-the-police#comments</comments><guid isPermaLink="false">6357a675-b193-4aa8-92b2-de16cd9baee6</guid><pubDate>Thu, 27 Aug 2026 05:59:52 +0000</pubDate><atom:updated>2026-08-27T05:59:52.497Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>school teacher,Telangana,Life imprisonment,ஆயுள் தண்டனை,தெலுங்கானா,பள்ளி ஆசிரியர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/l7ab9agv/tn-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கைதி]]></media:title><media:description type="html"><![CDATA[ கைதி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/l7ab9agv/tn-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/life-sentence">ஆயுள் தண்டனை</a> விதிக்கப்பட்ட கைதி ஒருவர் பரோலில் வெளியே வந்து, சுமார் 40 ஆண்டுகள் காவல்துறையின் கண்ணில் படாமல் சுதந்திரமாக வாழ்ந்துள்ள விசித்திர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. </p><p>தெலுங்கானா மாநிலம் மஹபூபாபாத் மாவட்டத்தில் தண்டலபல்லி மண்டலம் பெத்தமுப்பாரம் கிராமத்தை சேர்ந்தவர் சந்தெல வீரன்னா.</p><h2>தலைமறைவு</h2><p>இவருக்கு 1983இல் வாரங்கல் நீதிமன்றம் வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை விதித்தது.</p><p>அதே ஆண்டு டிசம்பரில் பரோலில் வெளிவந்த அவர் அதன்பின் தலைமறைவானார்.</p><p>அதன் பின் இவ்வளவு காலமும் மஹபூபாபாத் மாவட்டத்திலேயே அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி, சிறந்த ஆசிரியர் விருதையும் பெற்று, பணி ஓய்வும் பெற்றுள்ளார்.</p><h2>மீண்டும் சிறையில் அடைப்பு</h2><p>சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டு மே 16 அன்று வாரங்கல் மத்திய சிறை சிறப்பு அதிரடிப் படை போலிசார் வீரன்னாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.</p><p>அவருக்கு 3 ஆண்டுகளுக்குப் பரோல் மற்றும் தண்டனைக் குறைப்பு சலுகைகளை மறுத்து சிறைத்துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து வீரன்னாவின் மனைவி சாரம்மா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.</p><h2>நீதிமன்றம்</h2><p>இம்மனுவை விசாரித்த நீதிபதி டி. மாதவி தேவி அடங்கிய அமர்வு, குற்றவாளி வேண்டுமென்றே சட்டத்தின் பிடியில் இருந்து தப்பியோடி வாழ்ந்துள்ளார் என்பதைச் சுட்டிக்காட்டி மனுவைத் தள்ளுபடி செய்தது.</p><p>சிறைத்துறையின் அலட்சியப்போக்கிற்கு இந்தச் சம்பவம் ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.</p><p>ரோலில் செல்லும் கைதிகளை கண்காணிக்க டிராக்கிங் சிஸ்டம் மற்றும் புதிய வழிகாட்டுதல்களை உடனடியாக உருவாக்க வேண்டும் என்று சிறைத்துறைக்கு உத்தரவிட்டது.</p>]]></content:encoded></item><item><title>நேபாளில் தவிக்கும் தமிழர்கள் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம்: முதலில் உறுப்பினர்கள் பேச அனுமதிக்குமாறு அமளி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-dmk-and-admk-members-arguments</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-dmk-and-admk-members-arguments#comments</comments><guid isPermaLink="false">1f4dbb1f-bcc3-4c5c-8706-9c8f1aa80073</guid><pubDate>Thu, 27 Aug 2026 05:48:18 +0000</pubDate><atom:updated>2026-08-27T05:48:18.581Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,nepal flood,சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்,நேபாளம் வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/t8do3415/Assembly0.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்ட காட்சி]]></media:title><media:description type="html"><![CDATA[ உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்ட காட்சி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/t8do3415/Assembly0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சட்டசபையில் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் எதிர்க்கட்சித் தலைவரே முதலில் பேசட்டும் என அமைச்சர் ராஜ்மோகன் பரிந்துரைத்த நிலையில் சபாநாயகர் அனுமதி வழங்கினார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபை</a> ஒருநாள் விடுமுறை பின் இன்று கூடியது. சபை கூட்டத்தொடர் தொடங்கியதும் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். இதனை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், நேபாளத்தில் பெரு வெள்ளம் தொடர்பாக விளக்கம் அளிக்க தொடங்கினார். </p><p>அதற்கு நேபாளம் பெரு வெள்ளம் தொடர்பாக சபையில் கவன ஈர்ப்பு கொடுக்கப்பட்ட நிலையில், அதற்கு முன்பாகவே அமைச்சம் விளக்கம் அளிப்பதற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். </p><p>இதற்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், </p><p>நாட்டையே உலுக்கிய சம்பவம் தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் முன்னால் பேசினால் என்ன, பின்னால் பேசினால் என்ன?. நாங்கள் கவனத்திற்கு கொண்டு வந்ததால் தான் அமைச்சர் பதிலளிக்கிறார் என்பதல்ல என்றார்.</p><p>அதற்கு எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய பின்னர் அமைச்சர் பதிலளிப்பது தான் முறையாக இருக்கும் என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. </p><p>அரசிற்கு கவனத்திற்கு கொண்டுவருவதற்கு முன்பே அமைச்சர் பதிலளிப்பதா?. அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம் அதன் பின்னர் விளக்கம் அளியுங்கள் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். அதற்கு, சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், அமைச்சர் பேசிய பின் உறுப்பினர்கள் கேள்வி கேட்பதில் ஒன்றும் தவறில்லையே என்றார். </p><p>மேலும் கரூர் சம்பவம் நடந்தபோது இதே சபையில் முதலமைச்சர் பேசிய பின்னர் கேள்வி கேளுங்கள் என நடந்ததாக சபாநாயகர் விளக்கம் அளித்தார். </p><p>இருப்பினும் சட்டசபையில் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் எதிர்க்கட்சித் தலைவரே முதலில் பேசட்டும் என அமைச்சர் ராஜ்மோகன் பரிந்துரைத்த நிலையில் சபாநாயகர் அனுமதி வழங்கினார். </p> ]]></content:encoded></item><item><title>உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பு: பிரபல ஹரியான்வி பாடகர் அங்கித் பால்யான் சுட்டுக்கொலை</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/popular-haryanvi-singer-ankit-balyan-shot-dead-in-uttar-pradesh</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/popular-haryanvi-singer-ankit-balyan-shot-dead-in-uttar-pradesh#comments</comments><guid isPermaLink="false">a4fd91d9-ecee-477a-ab79-6b97e8517680</guid><pubDate>Thu, 27 Aug 2026 05:35:25 +0000</pubDate><atom:updated>2026-08-27T05:35:25.780Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Uttar Pradesh,உத்தரப் பிரதேசம்,Singer Ankit Balyan,Haryanvi singer dead,ஹரியான்வி பாடகர் கொலை,பாடகர் அங்கித் பால்யான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/71tur774/ANKIT.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ SinUttar Pradesh ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/71tur774/ANKIT.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரப் பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில், பிரபல ஹரியான்வி பாடகரும் யூடியூபருமான 32 வயதான அங்கித் பால்யான் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p><h2>உடற்பயி<strong>ற்சிகூடத்திற்கு</strong> வெளியே நடந்த துப்பாக்கிச்சூடு</h2><p>நேற்று மாலை ஷாம்லி நகர எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்திலிருந்து அங்கித் பால்யான் தனது காரை நோக்கி வெளியே வந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது. இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல், அங்கித்தை இலக்கு வைத்து சுமார் 18 முதல் 20 சுற்றுகள் சரமாரியாக <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/bollywood-mourns-celebrated-director-gugu-kohli-passes-away-after-heart-attack">துப்பாக்கிச்சூடு </a>நடத்தியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.</p><h2>உறவினர்க<strong>ள் போராட்டம்</strong></h2><p>இதுகுறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த ஷாம்லி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார், அங்கித்தின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அப்பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதனிடையே, இக்கொலையைக் கண்டித்து அங்கித்தின் குடும்பத்தினரும் ஆதரவாளர்களும் டெல்லி-முசாபர்நகர் சாலையில் உடலை வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி முழக்கங்களை எழுப்பினர். </p><p>கொலை செய்யப்பட்ட அங்கித் பால்யான் யூடியூபில் 3.6 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்டு புகழ்பெற்றவராக இருந்தார். வரவிருக்கும் பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட அவர் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மாநிலத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். </p><p>மேலும், இந்த கொலையின் பின்னணியில் அரசியல் பகை அல்லது முன்விரோதம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஹரியானாவின் பிரபல தாதா கும்பல் ஒன்று இக்கொலைக்கு பொறுப்பேற்றுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருவதையும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நேபாளத்தை திணறடிக்கும் திடீர் வெள்ளம்.. இந்தியாவுக்கும் ஆபத்து - இமயமலையில் என்ன நடக்கிறது?</title><link>https://www.maalaimalar.com/news/world/flash-floods-overwhelm-nepal-india-also-at-riskwhat-is-happening-in-the-himalayas</link><comments>https://www.maalaimalar.com/news/world/flash-floods-overwhelm-nepal-india-also-at-riskwhat-is-happening-in-the-himalayas#comments</comments><guid isPermaLink="false">b4bb34cf-da82-4845-a289-5abc51aad507</guid><pubDate>Thu, 27 Aug 2026 05:25:05 +0000</pubDate><atom:updated>2026-08-27T05:25:05.498Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாளம்,nepal,வெள்ளம்,floods,Himalayas,இமயமலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/pf1q35gp/tn-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நேபாள வெள்ளம்
]]></media:title><media:description type="html"><![CDATA[ நேபாள வெள்ளம்
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/pf1q35gp/tn-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் எல்லைக்கு அருகே இமயமலையை ஒட்டி அமைந்துள்ள அண்டை நாடு நேபாளம். அந்நாட்டின் திபெத் எல்லையோரம் அமைந்துள்ள ரசுவா மாவட்டத்தில் பாயும் போதே கோஷி நதியில் திடீரென ஏற்பட்ட <a href="https://www.maalaimalar.com/news/world/nepal-glacial-flood-disaster-157-dead-400-missing-as-india-rushes-relief-aid">வெள்ளப்பெருக்கு </a>160 உயிர்களைப் பலிவாங்கியுள்ளது. </p><p>400-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இதில் இந்தியாவில் இருந்து கைலாஷ் மானசரோவர் புனித பயணம் மேற்கொண்ட பக்தர்களில் 133 பேரும் அடங்குவர்.</p><p>சேறு மற்றும் இடிபாடுகளுக்கு அடியில் ஏராளமானோர் சிக்கியுள்ளனர். ரசுவாவுடன் சேர்த்து தாடிங், நுவாகோட் ஆகிய மாவட்டங்களும் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளன. பல கிராமங்கள், பாலங்கள் மற்றும் சாலைகள் பலத்த சேதமடைந்துள்ளன.</p><p>அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தியா முதற்கட்டமாக விமானப்படை விமானம் மூலம் நேற்று நள்ளிரவில் தற்காலிக கூடாரங்கள், கம்பளிகள், சோலார் விளக்குகள், உயிர்காக்கும் மருந்துகள் உள்ளிட்ட 10 டன் எடைகொண்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளது.</p><p>இந்தியப் பிரதமர் மோடி, நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்ததோடு, நேபாளத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும் என உறுதியளித்துள்ளார்.</p> <h2>மீட்புப் பணிகள்</h2><p>ரசுவா மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், நேபாள ராணுவமும் காவல்துறையும் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும், பல இடங்களுக்கான போக்குவரத்து பாதைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்புப் பணியில் சிக்கல் நீடிக்கிறது. ஹெலிகாப்டர்கள் மூலம் மக்களை மீட்கும் முயற்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.</p><p>தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். வெள்ளப் பாதிப்புகள் மற்றும் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் மீட்கப்படும் அதிரவைக்கும் காட்சிகளும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வருகின்றன.</p><p>பொதுவாகக் கனமழை பெய்யும்போது நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம். மழையை முன்கூட்டியே கணித்து, நதிக்கரையோர மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதன் மூலம் உயிர்ச்சேதங்களை தவிர்க்க முடியும். ஆனால் நேபாளத்தில் நிகழ்ந்தது முற்றிலும் வித்தியாசமான, யாரும் கணிக்க முடியாத ஒரு வெள்ளப்பெருக்கு. இது எவ்வாறு நிகழ்ந்தது என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது.</p> <h2>நிகழ்ந்தது எப்படி?</h2><p>இந்த அசம்பாவிதத்திற்கு நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நிலச்சரிவே காரணம் என நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் சிஷிர் கனால் நாடாளுமன்றத்தில் விளக்கமளித்தார்.</p><p>நேற்று காலை 8:30 மணிக்குத் திபெத் பகுதியில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் பதிவுகள் காட்டுகின்றன.</p><p>இந்த நிலநடுக்கத்தின் காரணமாகத் திபெத்தில் பனிப்பாறைகளும் பாறைகளும் சரிந்து, திபெத் - சீனா எல்லையில் உற்பத்தியாகும் லெண்டே கோலா என்ற நதியில் விழுந்து அதன் நீரோட்டத்தை அடைத்ததாக முதற்கட்டமாக சொல்லப்பட்டது.</p> <p>ஆனால், இமயமலை குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் International Centre for Integrated Mountain Development அமைப்பை சேர்ந்த நிபுணர்களின் முதற்கட்ட ஆய்வில், இமயமலையின் அதி உயர பகுதியில் ஏற்பட்ட பனி மற்றும் பாறைச் சரிவு லெண்டே கோலா நதியில் விழுந்து நீரோட்டத்தைத் தடுத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.</p><p>அங்கு நிலநடுக்கம் பதிவாகியிருந்தாலும், அதற்கும் பனிப்பாறை சரிவுக்கும் நேரடித் தொடர்பு இல்லை என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>பனிப்பாறைகள் சரிந்து நீரோட்டம் தடைப்பட்டதால், லெண்டே கோலா நதியில் பெருமளவு நீர் தேங்கி நீர்மட்டம் உயர்ந்தது. ஒரு கட்டத்தில் அணை போல் தேங்கியிருந்த அந்த அடைப்பு உடைந்தது. இதனால் தேங்கியிருந்த நீர் ஒரே நேரத்தில் கீழ்நோக்கிப் பாய்ந்தது.</p><p>இந்த லெண்டே கோலா நதி நேபாளத்தின் ரசுவா மாவட்டத்திற்குள் நுழையும் போது போதே கோஷி நதி என்று அழைக்கப்படுகிறது.</p><p>இவ்வாறு பெருமளவிலான நீர் ஒரே நேரத்தில் கீழ்நோக்கி வந்ததால் தான் போதே கோஷி நதியில் திடீர் பெருவெள்ளம் ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><h2>மீண்டும் வெள்ள அபாயமா?</h2><p>சீனா - நேபாள எல்லையில் உள்ள லெண்டே கோலா நதியில் இன்னும் பாறை அடைப்புகள் இருப்பதால், மீண்டும் ஒரு வெள்ளப்பெருக்கு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>குறிப்பாக, இதன் காரணமாக இந்தியாவில் உள்ள பீகார் மற்றும் உத்தரப் பிரதேச எல்லை மாநிலங்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p> <h2>எதிர்கால அச்சுறுத்தல்</h2><p>நேபாளத்தில் போதே கோஷி என்றும் திபெத்தில் லெண்டே கோலா என்றும் அழைக்கப்படும் இந்த நதியில் கடந்த 14 மாதங்களில் இரண்டு முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போதைய பாதிப்பு மிக அதிகம் என்பதால் இது பரவலாக கவனத்தை பெற்றுள்ளது.</p><p>நிலநடுக்கம் இல்லையென்றால் இமயமலையில் உறைநிலையில் உள்ள பனி மற்றும் பாறைகள் சரிந்தது ஏன் என்ற கேள்வி எழலாம்.</p><p>நிலநடுக்கம் மட்டுமே பனிச்சரிவை ஏற்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. இமயமலையில் உள்ள பாறைகளையும் பனிப்பாறைகளையும் பிணைத்து வைத்திருப்பது 'பெர்மா ப்ராஸ்ட்'  எனப்படும் அமைப்பாகும்.</p><p>ஆண்டுக் கணக்கில் உறைந்துபோயிருக்கும் மண் மற்றும் பனி அடுக்கே இந்த பெர்மாஃப்ராஸ்ட்.</p> <p>தற்போது தீவிரமடைந்து வரும் காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதல் காரணமாக உறைநிலையில் உள்ள இந்த பெர்மா ப்ராஸ்ட் உருகும்போது, பாறைகளுக்கும் பனிக்குமான பிடிப்பு தளர்வடைகிறது. இதனால் புவியீர்ப்பு விசையின் காரணமாக அவை மேலிருந்து சரிந்து கீழே விழுந்து நதியின் நீரோட்டத்தை அடைக்கின்றன. கோடைக் காலம் மற்றும் பருவமழைக் காலத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் போது இது நிகழ்கிறது.</p><p>பனி, பனிப்பாறைகள், பெர்மாஃப்ராஸ்ட் ஆகிய மூன்றும் சேர்ந்ததே 'உறைபனி மண்டலம்' எனப்படுகிறது. இது காலநிலை மாற்றத்தால் மிக வேகமாக உருமாறி வருகிறது. இமயமலைப் பனிப்பாறைகள் உலகச் சராசரியை விட அதிவேகமாக உருகி வருகின்றன.</p><p>புவி வெப்பமயமாதல் காரணமாக இமயமலைப் பகுதியில் வெப்பநிலை உலகளாவிய சராசரியை விட 2 முதல் 3 மடங்கு வேகமாக உயர்ந்து வருகிறது.</p> <p>இமயமலையில் நடக்கும் மாற்றங்கள் நேபாளத்தோடு நின்றுவிடாது; அது இந்தியாவிற்கும் நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தும்.</p><p>நேபாளத்தில் பாயும் போதே கோஷி, திரிசூலி போன்ற நதிகள் இந்தியாவின் கங்கை நதி அமைப்பில்தான் இணைகின்றன. நேபாளத்தில் இயற்கை அணைகள் உடைந்தால், அடுத்த சில மணிநேரங்களில் பீகார், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.</p><p>இத்தகைய எல்லை கடந்த பேரழிவுகளைச் சமாளிக்க இந்தியா, நேபாளம், சீனா ஆகிய மூன்று நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மோடி அரசின் துரோகப் போக்கு நாளுக்கு நாள் எல்லை மீறுகிறது- மாணிக்கம் தாகூர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-indictment-modi-govt</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-indictment-modi-govt#comments</comments><guid isPermaLink="false">46c3d081-0c0f-48f2-a114-04226e5a6e1b</guid><pubDate>Thu, 27 Aug 2026 05:19:13 +0000</pubDate><atom:updated>2026-08-27T05:19:13.091Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,Congress,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/sarueuiu/manickamtagore.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/sarueuiu/manickamtagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>எந்தவித நிபந்தனையுமின்றி தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய ரூ.5,109 கோடி கல்வி நிதி நிலுவைத் தொகையை உடனே விடுவிக்கக் கோரி மத்திய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.</strong></em></p><p>தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/மாணிக்கம்-தாகூர்">மாணிக்கம் தாகூர்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>வெட்கக்கேடானது</strong></h2><p>தமிழகத்திற்குச் சேர வேண்டிய ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட நிதியைத் தடுத்து நிறுத்தி, கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூபாய் 5,109 கோடியை விடுவிக்காமல் வஞ்சித்து வரும் மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் அரசியலை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.</p><p>தமிழக பள்ளிக்கல்வித் துறை கொள்கை விளக்கக் குறிப்பின்படி, 2024-25 நிதியாண்டில் ரூ.1,788 கோடி, 2025-26 இல் ரூ.1,496 கோடி, நடப்பு 2026-27 நிதியாண்டில் ரூ.1,825 கோடி என மொத்தம் ரூ.5,109 கோடி கல்வி நிதியை மோடி அரசு தடுத்து நிறுத்தியுள்ளது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு பெயரளவில் RTE திட்டத்திற்கு ரூ.714 கோடியை மட்டும் பெயரளவுக்கு விடுவித்துவிட்டு, பள்ளிக் கல்விக்கான ஒட்டுமொத்த நிதியையும் பிடித்து வைத்துப் பிளாக்மெயில் செய்வது வெட்கக்கேடானது.</p><h2><strong>கடுமையான நெருக்கடி</strong></h2><p>மத்திய அரசின் நிதியுதவி இல்லாத போதிலும், தமிழக அரசு தனது சொந்த நிதியிலிருந்து கடந்த 2 ஆண்டுகளில் ரூ.2,014 கோடியையும், நடப்பாண்டில் ரூ.647 கோடியையும் ஒதுக்கிப் பள்ளிகளை நடத்தி வருகிறது. ஆனால், மோடி அரசின் இந்த அதிகார மமதையால் அரசுப்பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாடு, ஆசிரியர் பயிற்சிகள் மற்றும் பள்ளிக் கட்டமைப்புப் பணிகள் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றன.</p><p>மும்மொழிக் கொள்கை விலக்கு உள்ளிட்ட தமிழகத்தின் நியாயமான குரலை நசுக்கி, பி.எம்.ஸ்ரீ. மற்றும் தேசிய கல்விக் கொள்கையை (NEP) கட்டாயமாகத் திணிக்கத் துடிக்கும் மோடி அரசின் அரசியல் பிடிவாதத்திற்குப் பிஞ்சுக் குழந்தைகளின் கல்வியைப் பணயம் வைப்பதா? இது கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான அப்பட்டமான தாக்குதல்.</p><p>தமிழக மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் இந்த அநீதியை உடனடியாகக் கைவிட வேண்டும். எந்தவித நிபந்தனையுமின்றி தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய ரூ.5,109 கோடி கல்வி நிதி நிலுவைத் தொகையை உடனே விடுவிக்கக் கோரி மத்திய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>517கி.மீ. ரேஞ்ச் வழங்கும் புது எம்.ஜி. எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்</title><link>https://www.maalaimalar.com/automobilenews/newautomobile/mg-hector-tomahawk-range-launched-in-india</link><comments>https://www.maalaimalar.com/automobilenews/newautomobile/mg-hector-tomahawk-range-launched-in-india#comments</comments><guid isPermaLink="false">09cd640d-2f32-4e19-9ac6-4d2bb55b6989</guid><pubDate>Thu, 27 Aug 2026 05:18:00 +0000</pubDate><atom:updated>2026-08-27T05:18:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>எலெக்ட்ரிக் கார்,MG Motor,எம்ஜி மோட்டார்,Electric Car</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/7hwyxf1v/MG-Hector-Tomahawk.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MG Hector Tomahawk]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/7hwyxf1v/MG-Hector-Tomahawk.png?w=280" width="280"></media:thumbnail><category>இது புதுசு (Automobile)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/mg-motor">எம்.ஜி. மோட்டார்</a> இந்தியா நிறுவனம் ஹெக்டர் டோமஹாக் எஸ்.யூ.வி. இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது . இந்த எலெக்ட்ரிக் காரின் அறிமுக விலைகள், BaaS மற்றும் நேரடி கொள்முதல் திட்டங்களுக்கு முறையே ரூ. 13.99 லட்சம் மற்றும் ரூ. 19.50 லட்சம் எனத் தொடங்குகின்றன. </p><p>PHEV பதிப்பின் விலை, BaaS மற்றும் நேரடி கொள்முதல் திட்டங்களுக்கு முறையே ரூ. 21.80 லட்சம் மற்றும் ரூ. 25.70 லட்சம் (அனைத்து விலைகளும், எக்ஸ்-ஷோரூம் விலைகள்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. </p><p>இந்த விலைகள், இந்த மாடலின் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான யூனிட் விற்பனைக்கு மட்டுமே செல்லுபடியாகும். இந்த மாடல் <a href="https://www.maalaimalar.com/topic/electric-car">EV</a> மற்றும் ICE ஆகிய இரண்டு வகைகளில் கிடைக்கிறது.</p><p>வாடிக்கையாளர்கள் எக்ஸைட், எக்ஸ்க்ளூசிவ் மற்றும் எசென்ஸ் ஆகிய மூன்று வேரியண்ட்களில் இருந்து தேர்வு செய்யலாம். இந்த காருக்கான முன்பதிவுகள் தொடங்கிய நிலையில், EV மற்றும் PHEV வேரியண்ட்களுக்கான டெலிவரி செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>சிறப்பு அம்சங்கள்:</h2><p>வெளிப்புற தோற்றத்தை பொறுத்தவரை, புதிய டோமஹாக் மூன்று வரிசை எஸ்.யூ.வி.-யில் எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், டைனமிக் டர்ன் இண்டிகேட்டர்கள், குரோம் இன்செர்ட்களுடன் கூடிய புதிய கருப்பு கிரில், புதிய 18-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள், எல்.இ.டி. டெயில் லைட்கள் மற்றும் பின்புற ஃபாக் லைட்கள், ஷார்க்-ஃபின் ஆன்டெனா மற்றும் ரூஃப் ரெயில்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.</p><p>2026 எம்.ஜி. டோமஹாக் ஐந்து இருக்கைகள் மற்றும் ஏழு இருக்கைகள் கொண்ட உள்ளமைப்புகளில் கிடைக்கிறது. அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் 256 வண்ண சுற்றுப்புற விளக்குகள், 10 ஸ்பீக்கர்கள் கொண்ட இன்ஃபினிட்டி மியூசிக் சிஸ்டம், வென்டிலேட்டெட் முன் இருக்கைகள், தானாக உள்ளிழுக்கும் மற்றும் மெமரி செயல்பாட்டுடன் கூடிய ஆறு வழிகளில் சரிசெய்யக்கூடிய மின்சார ஓட்டுநர் இருக்கை, பின்புற சன்ஷேடுகள், ஸ்லைடு மற்றும் சாய்வு வசதிகளுடன் கூடிய பின்புற இருக்கைகள், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 15.6-இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை அடங்கும்.</p><h2>கனெக்ட்டெட் கார் அம்சங்கள்:</h2><p>டோமஹாக் எஸ்.யூ.வி.யில் 80-க்கும் மேற்பட்ட கனெக்ட்டெட் கார் அம்சங்கள், 30-க்கும் மேற்பட்ட ஹிங்லிஷ் கட்டளைகள், வயர்லெஸ் ஆப்பிள் கார்-பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, வயர்லெஸ் சார்ஜர், ஐ-ஸ்வைப்+ ஜெஸ்டர் கண்ட்ரோல், 8.7-இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டெசர்ட் ஸ்குவாட்ரன் இன்டீரியர் தீம், பவர்டு டெயில்கேட், டிரான்ஸ்பேரண்ட் சேஸிஸ் மற்றும் வீல் வியூ கொண்ட 360-டிகிரி கேமரா, V2L தொழில்நுட்பம் உள்ளது.</p><p>இத்துடன் பல்வேறு இன்-கார் மோட்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. பாதுகாப்பு அம்சங்களில் ESP, TCS, HHC, EBD உடன் கூடிய ABS, EPB, லெவல் 2 ADAS மற்றும் ஆறு ஏர்பேக்குகள் அடங்கும். மேலும், இந்தியாவில் ஒரு காருக்கு முதல் முறையாக வழங்கப்படும் V2H தொழில்நுட்பமும் இதில் உள்ளது.</p><h2>பேட்டரி மற்றும் ரேஞ்ச்:</h2><p>எம்.ஜி. ஹெக்டர் டோமஹாக் EV-யின் இன்ஜின், 69.2kWh LFP பேட்டரி பேக் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட ஒற்றை எலெக்ட்ரிக் மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 517 கிலோமீட்டர் வரை செல்லும் என கூறப்படுகிறது. இது 201bhp மற்றும் 310 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்துகிறது. மேலும், இந்த கார் 8.2 நொடிகளில் 0-100 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் என கூறப்படுகிறது.</p><p>புதிய எம்.ஜி. ஹெக்டர் டோமஹாக்-இன் ஐ.சி.இ. (ICE) பதிப்பானது, 20.5kWh பேட்டரி பேக்குடன் இணைக்கப்பட்ட 1.5-லிட்டர், என்ஏ (NA) பெட்ரோல் என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இதன் மூலம் இது ஒரு PHEV வடிவில் கிடைக்கிறது. இந்த வெர்ஷன் 198bhp பவர், 230 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.</p><p>இந்த கார் மின்சாரத்தில் மட்டும் 115 கிலோமீட்டர் செல்லும் திறன் கொண்டுள்ளது. மேலும், எம்.ஜி. நிறுவனம் இந்த கார் 40 கிலோமீட்டர் மைலேஜ் தரும் என உறுதியளிக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை ஆழ்வார்பேட்டையில் அதிநவீன கண் அறுவை சிகிச்சை முறை அறிமுகம்: முதலமைச்சர் விஜய் பங்கேற்று தொடங்கி வைத்தார்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/advanced-eye-surgery-chennai-launch-by-cm-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/advanced-eye-surgery-chennai-launch-by-cm-vijay#comments</comments><guid isPermaLink="false">96e374fd-5c17-45ba-8c33-61307f1f7f96</guid><pubDate>Thu, 27 Aug 2026 05:07:20 +0000</pubDate><atom:updated>2026-08-27T05:07:20.094Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,Dr. Agarwal&apos;s Eye Hospital,Alwarpet eye hospital,ஆழ்வார்பேட்டை,டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/xanh32r0/Untitled-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chief Minister Vijay ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/xanh32r0/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள புகழ்பெற்ற டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையில் புதிய அதிநவீன கண் அறுவை சிகிச்சை தொழில்நுட்பத்தின் அறிமுக விழா இன்று நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் விஜய் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, புதிய மருத்துவ வசதிகள் மற்றும் நவீன கண் அறுவை சிகிச்சை முறைகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.</p><h2>மருத்துவத் து<strong>றையில் புதிய தொழில்</strong>நுட்ப மைல்கல்</h2><p>பொதுமக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கண் சிகிச்சைகளை மிகக் குறைந்த நேரத்திலும் துல்லியமாகவும் வழங்கும் நோக்கில் இந்த <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/inspection-of-all-hospitals-in-tamil-nadu-minister-arun-raj-announces-in-the-assembly">நவீன அறுவை சிகிச்சை</a> முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கண் கண்புரை, விழித்திரை பிரச்சனைகள் மற்றும் ஒளிவிலகல் குறைபாடுகளை அதிநவீன லேசர் மற்றும் கணினி சார்ந்த கருவிகளின் உதவியுடன் மிகக் குறைந்த காயம் மற்றும் விரைவான குணமடையும் வசதியோடு மேற்கொள்ள இத்தொழில்நுட்பம் வழிவகுக்கிறது.</p><h2>மருத்து<strong>வ நிபுணர்கள் பங்</strong>கேற்பு</h2><p>இந்த அறிமுக விழாவில் அகர்வால் கண் மருத்துவமனையின் முன்னணி கண் மருத்துவ நிபுணர்கள், மூத்த நிர்வாகிகள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர். நவீன கருவிகளின் செயல்பாடு மற்றும் சிகிச்சையின் நன்மைகள் குறித்து மருத்துவக் குழுவினர் நேரில் விளக்கமளித்தனர். சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு இப்புதிய சிகிச்சை முறை பெரும் பயனுள்ளதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY: சற்று குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்!</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-today-current-status-of-gold-rates</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-today-current-status-of-gold-rates#comments</comments><guid isPermaLink="false">8f50b4f5-63ed-4fea-b172-b91620b75619</guid><pubDate>Thu, 27 Aug 2026 05:06:20 +0000</pubDate><atom:updated>2026-08-27T05:06:20.188Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/0zpgn5pw/Gold" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/0zpgn5pw/Gold?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையை விட கிராமுக்கு ரூ. 70 மற்றும் சவரனுக்கு ரூ.560 வரை குறைந்து விற்பனையாகிறது.</p><h2><strong>தங்கம் விலை நிலவரம்</strong></h2><p>ஆவணி மாதம் பிறந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கம் விலை இன்று சரிவைச் சந்தித்துள்ளது.</p><ul><li><p><strong>ஆபரணத் தங்கம் (22 கேரட்):</strong> இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.<strong>14,940</strong>-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.<strong>1,19,520</strong>-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட சவரனுக்கு ரூ.560 குறைந்துள்ளது.</p></li><li><p><strong>24 கேரட்:</strong> இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.<strong>16,298</strong> என்ற விலையில் விற்பனையாகிறது.</p></li></ul><h2><strong>வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>வெள்ளி விலையிலும் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 265 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><h2><strong>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்</strong></h2><p><strong>26-08-2026- (22) - ரூ. 1,20,080</strong></p><p><strong>25-08-2026- (22 ) - ரூ.1,20,080</strong></p><p><strong>24-08-2026- (22 ) - ரூ.1,20,240</strong></p><p><strong>23-08-2026- (22 ) - ரூ.1,19,600</strong></p><p><strong>22-08-2026- (22 ) - ரூ.1,19,600</strong></p><h2><strong>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p><strong>26-08-2026- ஒரு கிராம் ரூ.265</strong></p><p><strong>25-08-2026- ஒரு கிராம் ரூ.265</strong></p><p><strong>24-08-2026- ஒரு கிராம் ரூ.275</strong></p><p><strong>23-08-2026- ஒரு கிராம் ரூ.270</strong></p><p><strong>22-08-2026- ஒரு கிராம் ரூ.270</strong></p> ]]></content:encoded></item><item><title>8000mAh பேட்டரியுடன் புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் அறிமுகம் - விலை மற்றும் முழு விவரங்கள்</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/realme-p4s-5g-with-8000mah-battery-launched-in-india</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/realme-p4s-5g-with-8000mah-battery-launched-in-india#comments</comments><guid isPermaLink="false">8c7ca5ba-4ef1-437f-a7e5-61d7cbe4696e</guid><pubDate>Thu, 27 Aug 2026 04:39:00 +0000</pubDate><atom:updated>2026-08-27T04:39:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Realme,ரியல்மி,smartphone,ஸ்மார்ட்போன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/mzq99s4g/Realme-P4s.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Realme P4s]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/mzq99s4g/Realme-P4s.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/realme">ரியல்மி</a> நிறுவனம் இந்திய சந்தையில் புதிய P சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. ரியல்மி P4s 5ஜி என அழைக்கப்படும்  இந்த ஸ்மார்ட்போன் P4 சீரீசில் எட்டாவது மாடல் ஆகும். </p><p>இந்த ஸ்மார்ட்போன் இருவித நிறங்களில் கிடைக்கிறது. மேலும் இதில் ஏற்படும் வெப்பத்தை கட்டுப்படுத்த வேப்பர் சேம்பர் வழங்கப்பட்டு இருக்கிறது. </p><p>இந்த <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மார்ட்போன்</a> ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 7000 சீரிஸ் சிப்செட், 8000mAh பேட்டரி, 80 வாட் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறது. </p><h2>ரியல்மி P4s சிறப்பு அம்சங்கள்:</h2><p>டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் ரியல்மி P4s 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ரியல்மி யு.ஐ. 7 ஓ.எஸ். உடன் வருகிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போனிற்கு மூன்று ஆண்டுகள் ஓ.எஸ். அப்கிரேடுகள், நான்கு ஆண்டுகள் செக்யூரிட்டி அபிடேட்கள் வழங்குவதாக ரியல்மி தெரிவித்து இருக்கிறது.</p><p>இந்த ஸ்மார்ட்போன் 6.78 இன்ச் 1.5K 1272x2772 பிக்சல் சாம்சங் M14 AMOLED டிஸ்ப்ளே, 144 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், HDR10+, அதிகபட்சம் 6500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உடன் வருகிறது. இத்துடன் IP66 + IP68 + IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.</p><p>புதிய ரியல்மி P4s ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 7400 அல்ட்ரா சிப்செட், ஹைப்பர் விஷன்+ ஏ.ஐ. சிப் வழங்கப்பட்டு இருக்கிறது. </p><p>இந்த ஸ்மார்ட்போன் அதிகபட்சம் 12 ஜிபி LPDDR4x ரேம், 14 ஜிபி வரை ரேம் எக்ஸ்பான்ஷன், 256 ஜிபி UFS3.1 ஸ்டோரேஜ் கொண்டிருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 16MP செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது.</p><p>இந்த ஸ்மார்ட்போன் 8000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 80 வாட் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, 4ஜி எல்டிஇ, வைபை 5, ப்ளூடூத் 5.4, யுஎஸ்பி டைப் சி போர்ட், eidou, GPS, GLONASS, Galileo, மற்றும் QZSS வழங்கப்பட்டு இருக்கிறது.</p><h2>விலை விவரங்கள்:</h2><p>ரியல்மி P4s ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 34,999 என்றும், 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 37,999 என்றும் டாப் எண்ட் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 41,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.</p><p>அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் ஹெச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் எஸ்பிஐ வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 3000 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. </p><p>இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை செப்டம்பர் 3-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் எலெக்ட்ரிக் சியான் மற்றும் டைட்டானியம் கிரே என இருவித நிறங்களில் கிடைக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் ஆய்வு - சட்டசபையில் அமைச்சர் அருண் ராஜ் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/inspection-of-all-hospitals-in-tamil-nadu-minister-arun-raj-announces-in-the-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/inspection-of-all-hospitals-in-tamil-nadu-minister-arun-raj-announces-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">9e33b084-d1ec-4154-b377-5ddb8a987214</guid><pubDate>Thu, 27 Aug 2026 04:31:36 +0000</pubDate><atom:updated>2026-08-27T04:31:36.127Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,Aadhav Arjuna,ஆதவ் அர்ஜுனா,Tamil Nadu Legislative Assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/yghrzg4w/tn-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அருண் ராஜ் ]]></media:title><media:description type="html"><![CDATA[ அருண் ராஜ் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/yghrzg4w/tn-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மீலாது நபியை முன்னிட்டு நேற்று சட்டமன்றம் நடைபெறவில்லை. ஒரு நாள் விடுமுறையை தொடர்ந்து சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கூட்டம் இன்று மீண்டும் தொடங்கியது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-27-august-2026">சட்டசபையில் இன்று</a> சமூக நீதித்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மீதான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது.</p><p>முன்னதாக, சட்டசபையில் உறுப்பினர்களின் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். </p><h2>கேள்வி பதில்</h2><h3>பாலங்கள்</h3><p>வேலூர் காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து பாலாறு பாலம் வரை உயர்மட்ட பாலம் கட்ட அரசு ஆவணம் செய்யுமா? என்று எம்.எல்.ஏ. சுதாகர் கேள்வி எழுப்பினார். சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து உரியநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார். </p> <p>கீழ்வேளூர் ரெயில்வே மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என பா.ம.க. எம்எல்ஏ லதா கோரிக்கை விடுத்தார். அதற்கு பதில் அளித்த அமைச்சர், பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.</p><p>திருத்துறைப்பூண்டியில் போக்குவரத்து நெரிசலாக உள்ளதால் ரெயில்வே மேம்பாலம் கட்டப்படுமா? என்று உறுப்பினர் மாரிமுத்து எழுப்பிய கேள்விக்கு, மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து தண்டவாளத்தை கடந்து செல்வதால் ரெயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.</p> <p>தாம்பரம்-செங்கல்பட்டு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க அதிமுக ஆட்சியில் நடவடிக்கை, கடந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது. </p><p>மேம்பாலம் குறித்து இன்றைய அரசின் தற்போதைய சூழ்நிலை என்ன? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, செங்கல்பட்டு முதல் சென்னை வரை போக்குவரத்து நெரிசல் அதிகளவில் உள்ளதால் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். </p><p>சென்னை- கன்னியாகுமரி 8 வழிச்சாலைக்கான பணிகளை தொடங்கியுள்ளோம், திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெறுகிறது என்றார்.</p><h2>செஞ்சி அரசு மருத்துவமனை</h2><p>செஞ்சி அரசு மருத்துவமனைக்கு சி.டி.ஸ்கேன் உள்ளிட்ட கூடுதல் நவீன உபகரணங்கள் வழங்கப்படுமா? என பா.ம.க. எம்எல்ஏ கணேஷ் குமார் எழுப்பிய கேள்விக்கு, ஆய்வு செய்து தேவைப்பட்டால் கூடுதலாக வழங்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.</p> <h2>கும்மிடிப்பூண்டிஅரசு மருத்துவமனை</h2><p>கும்மிடிப்பூண்டியில் அரசு மருத்துவமனைக்கு டயாலிசஸ் செய்வதற்கான கருவி கூடுதலாக வழங்க வேண்டும் என எம்எல்ஏ விஜயகுமார் கோரிக்கை விடுத்தார். அதற்கு அமைச்சர் அருண்ராஜ், கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்து தேவைப்பட்டால் டயாலிசஸ் கருவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.</p><p>சட்டசபை நிகழ்வுக்கு பின்னர் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் ஆய்வு நடத்தப்படும். அனைத்து மருத்துவமனைகளிலும் ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அருண் ராஜ் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>செப்டம்பர் நிகழ்வுக்கு தேதி குறித்த ஆப்பிள், வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/apple-surprise-and-shine-event-set-for-september-9</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/apple-surprise-and-shine-event-set-for-september-9#comments</comments><guid isPermaLink="false">75f4a58b-29fd-4815-9371-e0c5a8192d84</guid><pubDate>Thu, 27 Aug 2026 03:34:00 +0000</pubDate><atom:updated>2026-08-27T03:34:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Apple,ஆப்பிள்,Apple Event,ஆப்பிள் நிகழ்வு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/62vvmb6h/Apple-Surprise-and-Shine.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Apple Surprise and Shine]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/62vvmb6h/Apple-Surprise-and-Shine.png?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/apple">ஆப்பிள்</a> நிறுவனம் ஒருவழியாக தனது செப்டம்பர் நிகழ்வுக்கான தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த ஆண்டு செப்டம்பர் நிகழ்வுக்கு ஆப்பிள் நிறுவனம் "சர்ப்ரைஸ் அண்ட் ஷைன்" என்ற டேக்லைன் கொண்டுள்ளது. </p><p>2026 ஆண்டுக்கான ஐபோன் அறிமுக நிகழ்வு செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறும் என ஆப்பிள் அறிவித்துள்ளது. செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் நடைபெறும் நிகழ்வில் அறிமுகம் செய்யப்போகும் சாதனங்கள் குறித்து ஆப்பிள் எவ்வித தகவலும் வழங்கவில்லை. எனினும், ஆப்பிள் இந்த நிகழ்வில் அந்நிறுவனம் புதிய <a href="https://www.maalaimalar.com/topic/iphone">ஐபோன்</a> சீரிஸ் மற்றும் சாதனங்களை அறிமுகம் செய்யும் என்று கூறப்படுகிறது.</p><h2>ஆப்பிள் நிகழ்வு:</h2><p>ஆப்பிள் செப்டம்பர் நிகழ்வுகள் குறித்து இணையத்தில் வெளியான அழைப்பிதழ் பதிவுகளில், ஆப்பிள் நிகழ்வு செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.</p><p>மேலும், முந்தைய ஆண்டுகளை போன்றே இந்த ஆண்டு ஆப்பிள் நிகழ்வும் கலிஃபோர்னியாவில் உள்ள ஆப்பிள் பார்க் வளாகத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு தொடங்குகிறது.</p><h2>சர்ப்ரைஸ் அண்ட் ஷைன் நிகழ்வு:</h2><p>கொரோனா பெருந்தொற்று காலக்கட்டத்தில் தொடங்கி ஆப்பிள் தனது ஹார்டுவேர் நிகழ்வுகளை ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட காணொளிகளை ஆப்பிள் பார்க் அரங்கில் ஒளிபரப்புவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது. </p><p>இந்த முறை ஆப்பிள் இந்த வழக்கத்தை மாற்றி, மீண்டும் ஆப்பிள் நிர்வாகிகளை வைத்தே சாதனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.</p><p>இந்த நிகழ்வினை ஆன்லைனில் உலக நாடுகளில் மக்கள் நேரலையில் காண முடியும். இந்த நிகழ்வு ஆப்பிள் வலைதளம் மற்றும் அதன் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதேபோல் இந்த நிகழ்வு ஆப்பிள் டிவி செயலியிலும் நேரலை செய்ய்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>தலைமை மாற்றம்:</h2><p>முன்னதாக ஆப்பிள் வெளியிட்ட அறிவிப்பின் படி அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் டிம் குக் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது.</p><p>மேலும், ஆப்பிள் நிறுவனத்தின் ஹார்டுவேர் இன்ஜினியரிங் பிரிவின் மூத்த துணை தலைவராக இருக்கும் ஜான் டெர்னஸ் வருகிற செப்டம்பர் 1, 2026-ஆம் ஆண்டில் இருந்து ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பதவியேற்க இருக்கிறார்.</p><p>தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலகும் போதிலும், டிம் குக் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனத்தின் நிர்வாக குழுவின் தலைவராக பொறுப்பேற்க இருப்பதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்தது.</p>]]></content:encoded></item><item><title>நாட்டின் 7 முக்கிய ரெயில் வழித்தடங்கள் மேலும் விரிவாக்கம்- மத்திய ரெயில்வே அமைச்சர் தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/national/union-minister-ashwini-vaishnaw-inform-further-expansion-of-the-countrys-7-major-rail-routes</link><comments>https://www.maalaimalar.com/news/national/union-minister-ashwini-vaishnaw-inform-further-expansion-of-the-countrys-7-major-rail-routes#comments</comments><guid isPermaLink="false">d701f6be-e993-4947-8a84-059ae64ab7b9</guid><pubDate>Thu, 27 Aug 2026 03:23:01 +0000</pubDate><atom:updated>2026-08-27T03:23:01.006Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Ashwini Vaishnaw,அஸ்வினி வைஷ்ணவ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/qd3pyozf/vaishnaw.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்]]></media:title><media:description type="html"><![CDATA[ மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/qd3pyozf/vaishnaw.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நாட்டின் 7 முக்கிய ரெயில் வழித்தடங்கள் மேலும் விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாக மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.</strong></em></p><h2><strong>விரிவுபடுத்தும் பணி</strong></h2><p>இந்திய ரெயில்வேயில் 7 ரெயில் வழித்தடங்களில் அதிக அளவில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை நாட்டின் மொத்த ரெயில் போக்குவரத்தில் 41 சதவீதத்தை கையாள்வதில் முக்கிய பங்கை வகிக்கிறது. சுமார் 11 ஆயிரம் கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த வழித்தடங்களின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, அவற்றை 4 ரெயில் பாதைகளாக விரிவுபடுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதிகரித்து வரும் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தை திறம்பட கையாளும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.</p><h2><strong>7 வழித்தடங்கள்</strong></h2><p>இதுகுறித்து, மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வீடியோ வெளியிட்டு பேசியதாவது:-</p><p>டெல்லி – ஹவுரா, ஹவுரா – சென்னை, சென்னை – மும்பை, மும்பை – டெல்லி, டெல்லி – சென்னை, மும்பை – ஹவுரா மற்றும் டெல்லி – கவுகாத்தி ஆகிய 7 வழித்தடங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டு 4 ரெயில் பாதைகளாக மாற்றப்பட இருக்கிறது. இதன் மூலம் நாட்டின் நெரிசல் மிகுந்த வழித்தடங்களில் ரெயில் சேவைகள் மேம்படுத்தப்படும். மேலும், போக்குவரத்து செலவு குறைக்கப்பட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து முறை ஊக்குவிக்கப்படும்.</p><p>இந்த முக்கிய வழித்தடங்களை 4 பாதைகளாக விரிவுபடுத்துவது, எதிர்கால பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து வளர்ச்சிக்கு தேவையான கூடுதல் திறனை உருவாக்கும் முக்கிய நடவடிக்கையாகும். அதிக திறன், குறைந்த போக்குவரத்து செலவு மற்றும் தூய்மையான போக்குவரத்தை நோக்கமாகக் கொண்டு இந்திய ரெயில்வே தொடர்ந்து முன்னேறி வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் ரெயில்வே துறையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ரெயில்வேயின் இந்த உள்கட்டமைப்பு மேம்பாடு மிக முக்கியமானதாகும்.</p><p>இவ்வாறு அவர் பேசியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>160 பேர் பலி.. 133 இந்தியர்கள் மாயம் - நேபாள வெள்ள பாதிப்பின் வீடியோ, புகைப்படங்கள் </title><link>https://www.maalaimalar.com/news/world/nepal-glacial-flood-disaster-157-dead-400-missing-as-india-rushes-relief-aid</link><comments>https://www.maalaimalar.com/news/world/nepal-glacial-flood-disaster-157-dead-400-missing-as-india-rushes-relief-aid#comments</comments><guid isPermaLink="false">fa052eb9-0793-4d1f-ad74-30f8cbf9443e</guid><pubDate>Thu, 27 Aug 2026 02:32:59 +0000</pubDate><atom:updated>2026-08-27T02:32:59.536Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாளம்,nepal,வெள்ளம்,flood,வெள்ளப்பெருக்கு,Flash Flood</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/0ofvviqo/tn-5.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நேபாள வெள்ளம்]]></media:title><media:description type="html"><![CDATA[ நேபாள வெள்ளம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/0ofvviqo/tn-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திபெத்தை ஒட்டிய <a href="https://www.maalaimalar.com/news/world/52-magnitude-earthquake-hits-nepal-hours-after-tremor-triggered-deadly-floods">நேபாளத்தின் </a>ரசுவா மாவட்டத்தில், போதே கோஷி ஆற்றில்  பனிப்பாறை சரிவு காரணமாக ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது.</p><h2>பாதிப்பு </h2><p>இந்த வெள்ளத்தால் நேபாளத்தின் ரசுவா, நுவாகோட் மற்றும் தாடிங் ஆகிய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p>கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற 133 இந்தியர்கள் உட்பட சுமார் 400 பேர் மாயமாகியுள்ளனர். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Scary visuals from today show people desperately running for safety as the flash flood hits Gyirong Port, China, but they couldn’t find a safe place to escape.<br><br>The flood later hit Nepal, with hundreds reported missing, including 126 Indian tourists. <a href="https://t.co/4wzPFeYWYJ">pic.twitter.com/4wzPFeYWYJ</a></p>&mdash; Weather Monitor (@WeatherMonitors) <a href="https://x.com/WeatherMonitors/status/2092562900569493837?ref_src=twsrc%5Etfw">August 26, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Nepal: Visuals from the flood-affected Nuwakot district in Nepal. <br><br>The swollen Bhotekoshi River tore through Nuwakot, leading to homes being swept away, families being separated, and many people still missing. <a href="https://t.co/oQ2MJpnxsP">pic.twitter.com/oQ2MJpnxsP</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2092555899768566023?ref_src=twsrc%5Etfw">August 26, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>மோடி உறுதி</h2><p>"பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும், நாடு முழுவதும் இணைந்து செயல்பட வேண்டும்" என்று நேபாள பிரதமர் பாலேந்திர ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p><p>இந்தியப் பிரதமர் மோடி, நேபாள பிரதமருடன் தொலைபேசியில் பேசி இரங்கல் தெரிவித்ததுடன், தேவையான அனைத்து நிவாரணப் பொருட்களையும் மனிதநேய உதவிகளையும் வழங்க இந்தியா தயார் என உறுதி அளித்துள்ளார்.</p><p>நேபாளத்தில் பெருகிவரும் வெள்ளத்தால், அதை ஒட்டியுள்ள இந்திய மாநிலங்களான பீகார் மற்றும் உத்தரப் பிரதேச எல்லைப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">VIDEO | Nepal: Flash floods wash away villages, project sites in Rasuwa district; alert issued.<br><br>(Source: Third Party)<a href="https://x.com/hashtag/NepalFloods?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#NepalFloods</a> <br><br>(Full video available on PTI Videos - <a href="https://t.co/d8jp61yd2p">https://t.co/d8jp61yd2p</a>) <a href="https://t.co/dKMSgd757h">pic.twitter.com/dKMSgd757h</a></p>&mdash; Press Trust of India (@PTI_News) <a href="https://x.com/PTI_News/status/2092554516763922530?ref_src=twsrc%5Etfw">August 26, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Scary. Prayers for people of Nepal. <a href="https://t.co/9UXYCEMOzs">pic.twitter.com/9UXYCEMOzs</a></p>&mdash; Man Aman Singh Chhina (@manaman_chhina) <a href="https://x.com/manaman_chhina/status/2092531413023379965?ref_src=twsrc%5Etfw">August 26, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>இந்தியா நிவாரணம்</h2><p>இந்திய விமானப்படையின் C 130J விமானம் முதற்கட்டமாக மொத்தம் சுமார் 10 டன் எடையுள்ள அத்தியாவசிய பொருட்களுடன் நேற்று நள்ளிரவு நேபாளம் புற்பட்டுச் சென்றது.</p><p>இந்த பொருட்களில் தற்காலிகக் கூடாரங்கள், கம்பளிகள், தூய்மைப் பொருட்கள், சோலார் விளக்குகள் மற்றும் உயிர்காக்கும் முதலுதவி மருந்துகள் அடங்கும்.</p><p>காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம் சார்பில் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்காக 24 மணி நேர அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது.</p><p>நேபாள ராணுவம், காவல்துறை மற்றும் மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.</p><p>இதனிடையே நேபாள வெள்ளத்தின் வீடியோக்கள், சாட்டிலைட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/56w79082/tn-3.jpg" /></figure>]]></content:encoded></item></channel></rss>