<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 20 Jul 2026 07:46:36 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: எதிர்க்கட்சிகள் அமளி: மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-20-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-20-july-2026#comments</comments><guid isPermaLink="false">a891028b-8923-40ff-9440-b41df422083d</guid><pubDate>Mon, 20 Jul 2026 04:31:44 +0000</pubDate><atom:updated>2026-07-20T07:41:00.977Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/xyqaz6vp/WhatsApp-Image-2026-07-20-at-10.03.28-AM.jpeg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/xyqaz6vp/WhatsApp-Image-2026-07-20-at-10.03.28-AM.jpeg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://maalai-malar.quintype.com/story/06fdd6cb-ef0d-4c7b-a9b8-bfad79c1d376">நலமாக உள்ளேன்.. பேரணியில் பங்கேற்க என்னை டிஸ்சார்ஜ் செய்யுங்கள் - மருத்துவ அறிக்கைக்கு இடையில் வாங்சுக் வேண்டுகோள்</a></p><p>எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/454180a1-952a-429d-9307-925bdaf59cb4">பா.ம.க.வின் 19-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை- அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-question-to-tvk-govt">தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?- மு.க.ஸ்டாலின் கேள்வி</a></p><p>நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் தொடங்கிய நிலையில் அமளி காரணமாக மக்களவை, மாநிலங்களவை என நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நண்பகல் 12.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.</p> <p>நீட் விவகாரத்தில் மாணவர்களுக்கு நீதி வேண்டும் என மக்களவையில் காங்கிரஸ் எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.</p><p>மேகதாது விவகாரம் குறித்து 'போராடுவோம் போராடுவோம்' என திமுக எம்பிக்கள் மக்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.</p> <p>டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் போராட்டம் குறித்து கார்கே பேச ஆரம்பித்ததும் மாநிலங்களவையை ராதாகிருஷ்ணன் ஒத்திவைத்தார்.</p><p>நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கூட்டிய எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை திமுக எம்பிக்கள் புறக்கணித்தனர்.</p> <p>மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேச ஆரம்பித்ததும் அவை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/04774660-0332-4384-b7fe-ffffc97c38d6">நீட், ராமர் கோவில் முறைகேடு.. எதிர்க்கட்சி அமளியால் தொடங்கிய சில நிமிடங்களில் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/f2396a00-20a1-4788-a8ef-47068797740b">திருவள்ளூர் மாவட்டத்துக்கு 6-ந்தேதி உள்ளூர் விடுமுறை: கலெக்டர் கவிதா அறிவிப்பு</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/cb17767b-2d99-40a0-950c-c4a779e423bc">சோழிங்கநல்லூர் அருகே சதுப்பு நிலத்தில் கவிழ்ந்த மாநகர பேருந்து- 6 பேர் படுகாயம்</a></p><p>எதிர்க்கட்சியினர் அமளி காரணமாக மக்களவையை மதியம் 12 மணி வரை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.</p> <p>மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய சில நிமிடங்களில் மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். மக்களவையில் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சியினர் முழக்கமிட்டனர்.</p>  <p>மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்து  திமுக எம்பிக்கள் பச்சை துண்டு அணிந்து சென்றுள்ளனர்.</p> <p>பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. மறைந்த முன்னாள் உறுப்பினர்கள், தலைவர்களுக்கு நாடாளுமன்றத்தில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.</p><p>கத்தார் நாட்டின் முன்னாள் மன்னர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல்தானி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.</p> <p><a href="https://maalai-malar.quintype.com/story/d29a6d2a-ac90-492f-96b9-936f1e06b538">தோல்வியால் விரக்தி.. மைதானத்தில் ஸ்பெயின் வீரர்கள் மீது அர்ஜென்டினா வீரர் சரமாரி தாக்குதல் - வைரல் வீடியோ</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/7128e287-4e58-4a06-b295-7271896099ab">VIDEO: பாராளுமன்றம் நோக்கி பேரணிக்கு ஆயத்தம்.. ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் மீது போலீசார் தடியடி</a></p><p>பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. கத்தார் நாட்டின் முன்னாள் மன்னர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல்தானி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/86db5eea-b71a-48ff-b13e-a8cb62e6892e">விண்வெளி துறையில் வானளாவிய வளர்ச்சியை இந்தியா தொட்டுள்ளது - பிரதமர் மோடி</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/f8312ac4-143d-4ef2-afbf-5c142d2fee6f">சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/e5ab64bf-f201-41ca-8550-d9577780d25d">மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு 2 ஆண்டுகளில் ரூ.261 கோடி செலவு: RTI-யில் தகவல்!</a></p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/7hsdt38x/modi.jpg" /></figure><p>சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் ரெயிலை இந்தியா அறிமுகம் செய்துள்ளது. உலகின் எந்த போர்களும் இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க முடியாது - பிரதமர் மோடி</p> <p>விண்வெளி துறையில் வானளாவிய வளர்ச்சியை இந்தியா தொட்டுள்ளது. விக்ரம் 1 ராக்கெட் வெற்றியை அடுத்து தனியார் நிறுவனத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு பாராட்டுகள் - பிரதமர் மோடி</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/hnb3g8hj/modi1.jpg" /></figure><p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமானதாக அமையும் என நம்புகிறேன் - பிரதமர் மோடி</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/76bc8537-d996-44b1-8933-1f9769709c7b">என்ஜினீயரிங் படிப்புக்கான பொது கலந்தாய்வு தொடங்கியது</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/dc277594-7acd-4341-9e39-17e9e465efe2">அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான சமூகநீதியை வென்றெடுக்க உறுதியேற்போம்!- அன்புமணி</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/baa765ee-bf4b-47d5-8399-db6be4615c04">விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/e987724e-e437-406b-93b4-a72b467fd1fb">விளாத்திகுளம் எம்எல்ஏ கைது: தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க பாடம் புகட்டப்படும் - கனிமொழி</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/7824cb9d-6d11-4fb8-8b69-3182b2e561f0">நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று கூடுகிறது</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/aa19a0cc-e556-4402-8eb8-f9e0a9087dc3">முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு - விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. கைது</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-scam-protest-sonam-wangchuk-hunger-strike-at-jantar-mantar-with-three-key-demands">இன்றே உண்ணாவிரதத்தை கைவிட தயார்.. மூன்று நிபந்தனைகள் விதித்த சோனம் வாங்சுக்!</a></p> <p><a href="https://www.maalaimalar.com/sports/football/fifa-world-cup-spain-clinch-second-title-as-trump-hands-trophy-after-1-0-win-over-argentina">FIFA Worldcup: ஸ்பெயின் அணிக்கு உலகக்கோப்பையை வழங்கிய அமெரிக்க அதிபர் டிரம்ப்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/sports/football/world-cup-final-spain-beat-argentina-in-extra-time-to-claim-second-title-as-messi-bids-farewell-in-tears">நேசிக்கிறோம் லியோ.. மைதானத்திலேயே உடைந்து அழுத மெஸ்ஸி - அர்ஜென்டினா கால்பந்து கூட்டமைப்பு சமாதானம்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/sports/football/football-world-cup-full-details-on-prize-money-and-golden-and-silver-awards">உலகக்கோப்பை கால்பந்து.. பரிசுத்தொகை, கோல்டன், சில்வர் விருதுகள் முழு விவரம்</a></p> <p><a href="https://maalai-malar.quintype.com/story/44c7459f-2679-4b16-a8a1-ec3118c9c686">மத்தியப் பிரதேசத்தில் பொது சிவில் சட்டம்.. அமைச்சரவை ஒப்புதல் - இன்று சட்டமன்றத்தில் தாக்கல்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/e1474dd3-bd53-4fc3-92e3-55391f386b53">GOLD PRICE TODAY : வார தொடக்கத்தில் உயர்ந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/6bd77b89-90ea-4147-9ccc-2530e0701e29">பி.வி.சிந்து சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்- ஜி.கே.வாசன்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/52b8a0d4-0cab-43aa-a5dd-05f76c447996">அடுத்த Innings-ஐ ஆரம்பிக்கலாமா..!- உதயநிதி ஸ்டாலின்</a></p>]]></content:encoded></item><item><title>எலும்புகள் எல்லோருக்கும் உண்டு - வன்னி அரசு பதிலடி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vilathikulam-mla-speech-vanni-arasu-condemned</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vilathikulam-mla-speech-vanni-arasu-condemned#comments</comments><guid isPermaLink="false">1f8bbfc9-0341-4360-9d1e-5d91ca03e89e</guid><pubDate>Mon, 20 Jul 2026 07:38:34 +0000</pubDate><atom:updated>2026-07-20T07:38:34.041Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,vanni arasu,வன்னி அரசு,Vilathikulam MLA,விளாத்திகுளம் எம்எல்ஏ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/1nwatcxx/vanniyarasu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vanni Arasu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/1nwatcxx/vanniyarasu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக அமைச்சர் வன்னி அரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>“சட்டமன்றத்துக்குள் வைத்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜயின் எலும்புகளை உடைப்பேன்” என்று வன்முறையை தூண்டும் வகையில் விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பேசியுள்ளார்.</p><h2>அனிதா ராதாகிருஷ்ணன்</h2><p>ஏற்கனவே மேனாள் அமைச்சரும் திருச்செந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இவர்கள் மட்டுமல்ல பலரும் மிக மோசமான தாக்குதலை தொடுத்து வருகின்றனர்.</p><p>மக்களுக்காக சேவையாற்றும் தளமாக அரசியல் களத்தை பார்க்காமல், ஆட்சி அதிகாரத்தை தனிநபர் வளர்ச்சிக்கான வாய்ப்பாக கருதி வந்ததால், தோல்வியின் விரக்தியில் இவ்வாறு அநாகரிகமாக செயல்பட்டு வருகின்றனர். இத்தகைய போக்கு கடும் கண்டனத்திற்குரியது.</p> <p>சட்டமன்றத்துக்குள் முதலமைச்சருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோம் என்று மார்க்கண்டேயன் பேசியுள்ள நிலையில், அவர் மீது சட்டப்பேரவை தலைவர் அவர்கள் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.</p><p>எலும்புகள் எல்லோருக்கும் உண்டு என்பதை தான்  நினைவுபடுத்த விரும்புகிறோம்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p><h2>திமுக பொதுக்கூட்டம்</h2><p>தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் விளாத்திகுளம் எம்எல்ஏ <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/case-registered-against-vilathikulam-dmk-mla-under-three-sections">மார்க்கண்டேயன்</a> முதலமைச்சர் விஜய்யை குறித்து விமர்சித்து பேசி இருந்தார்.</p><p>கூட்டத்தில் விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் பேசியதாவது, விஜய் போன்ற ஒருவரை இதற்கு முன்பு தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவே பெற்றது கிடையாது. இனி வரும் தேர்தல்களில் 5 சதவீத வாக்குகள் கூட பெற முடியாமல் விஜய் மற்றும் அவருடைய கட்சி தோற்று போகும்.</p> <h2>எலும்பை உடைப்போம்</h2><p>சட்டமன்றத்தை கூட்டும் போது உங்கள் எலும்பு இருக்காது, உடைத்து விட்டு தான் அனுப்பி விடுவோம். சட்டமன்றத்தை கூட்டிப் பாருங்கள். யார் ஓடியது? என்பது தெரியும்.</p><p>கரூரில் கைது செய்து விடுவார்கள் என்று இரவோடு இரவாக கேரவனில் யாரை வைத்துக் கொண்டு ஓடுனீர்கள். பேய் அடிச்சது போல சட்டமன்றத்தில் உட்கார்ந்து இருக்கிறீர்களே.</p><p>கொத்து பரோட்டா போட போறாராம். உங்களை போல ஆயிரக்கணக்கான பரோட்டா கடைகளை நாங்க பார்த்திருக்கிறோம். இன்றைக்கு தமிழகத்தில் அந்த அன்பு மகளை போன்று, 3 வயது குழந்தை முதல் 95 வயது பாட்டி வரை யாரும் சுதந்திரமாக நடக்க முடியவில்லை. இன்று தமிழகத்தில் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது என்று பேசினார்.</p><p>முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலும், மிரட்டும் தொனியிலும் பேசிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதைத்தொடர்ந்து திமுக எம்எல்ஏவின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.</p><h2>வழக்குப்பதிவு</h2><p>இதையடுத்து முதலமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை விளாத்திகுளத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அவர் மீது தூத்துக்குடி போலீசார் கொலை மிரட்டல், அவமதிப்பு பேச்சு, தவறான தகவல்களை பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>
நலமாக உள்ளேன்.. பேரணியில் பங்கேற்க என்னை டிஸ்சார்ஜ் செய்யுங்கள் - மருத்துவ அறிக்கைக்கு இடையில் வாங்சுக் வேண்டுகோள் 
</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-protest-sonam-wangchuk-seeks-discharge-activist-asks-hospital-to-allow-him-join-parliament-march</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-protest-sonam-wangchuk-seeks-discharge-activist-asks-hospital-to-allow-him-join-parliament-march#comments</comments><guid isPermaLink="false">06fdd6cb-ef0d-4c7b-a9b8-bfad79c1d376</guid><pubDate>Mon, 20 Jul 2026 07:34:05 +0000</pubDate><atom:updated>2026-07-20T07:34:05.600Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>hunger strike,Sonam Wangchuk,சோனம் வாங்சுக்,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,Cockroach Janata Party,உண்ணாவிரதம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/vzg6xcfu/tn-25.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ சோனம் வாங்சுக்]]></media:title><media:description type="html"><![CDATA[ சோனம் வாங்சுக்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/vzg6xcfu/tn-25.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்சி விடைத்தாள் திருத்த குளறுபடி உள்ளிட்டவற்றால் நாட்டின் கல்வித் துறையை அதளபாதாளத்திற்கு கொண்டு சென்ற நிர்வாக தோல்விகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி நாடு முழுவதும் குரல்கள் வலுத்து வருகின்றன.</p><p>இதனை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் அபிஜித் தீப்கே தலைமையிலான கரப்பான்பூச்சி கட்சியினர் கடந்த ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் அமைப்புகளாகவும், தன்னிச்சையாகவும் வந்து கலந்துகொண்டு 1 மாத காலமாக போராடி வருகின்றனர்.</p><p>குறிப்பாக இதில் 20 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த கல்வியாளர் சோனம் வாங்சுக் நேற்று முன் தினம் டெல்லி காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்லப்பட்டு சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.</p><h2>பேரணி</h2><p>இதனையே இன்று பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள சூழலில் ஜந்தர் மந்தரில் இருந்து பாராளுமன்றம் நோக்கி பேரணி சென்று தங்கள் கோரிக்கை மனுக்களை வழங்க கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் திட்டமிட்டிருந்தனர்.</p><p>ஆனால் இந்த பேரணிக்கு நேற்றே தடை விதிக்கப்பட்டு அங்கு போலீசார் மற்றும் மத்திய படையினர் குவிக்கப்பட்டனர்.</p><p>பாராளுமன்றம் நோக்கி பேரணியை தொடங்க முனைப்பு காட்டி  டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டக்காரர்கள் தடுப்புகளை மீறி முன்னேற முயன்றதால், கூட்டத்தைக் கலைக்க போலீசார் <a href="https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protests-youth-march-to-parliament-stopped-with-lathicharge-in-delhi">தடியடி </a>நடத்தினர்.</p><p>டெல்லி காவல்துறை ஜந்தர் மந்தரைத் தவிர பிற பகுதிகளில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், பேரணிகள் நடத்துவதற்கும் தடை விதித்து, பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. </p><p>மேலும் நகரின் 5 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. இதனால் வேலைகளுக்கு செல்வோர் ரெயில் கிடைக்காமல் அவதியுற்றனர். </p><p>தடைகள் இருந்தபோதிலும் ஜந்தர் மந்தரில் அதிகளவில் கூடியுள்ள இளைஞர்கள் பேரணியை தொடங்க மும்முரம் காட்டி வருகின்றனர்.</p> <h2>சோனம் வாங்சுக் உடல்நிலை</h2><p>இன்று காலை 10 மணிக்கு சப்தர்ஜங் அரசு மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், <a href="https://www.maalaimalar.com/topic/sonam-wangchuk">சோனம் வாங்சுக் </a>உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவித்துள்ளது. அவரின் உடல்நிலை சிறப்பு மருத்தவ நிபுணர் குழுவால் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.</p><h2>சோனம் வாங்சுக் ஆர்வம்</h2><p>தான் நலமாக உள்ளதாகவும் நாடாளுமன்றம் நோக்கிய பேரணியில் தான் பங்கேற்க ஏதுவாக தன்னை டிஸ்சார்ஜ் செய்ய சோனம் வாங்சுக் கோரியுள்ளார்.</p><p>அவர் தன் எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ள கடிதத்தில்,</p><p>"இன்று எனது உடல்நிலை மிகவும் சீராக, நலமாக உள்ளது. எனவே, இன்று நடைபெறவுள்ள நாடாளுமன்றம் நோக்கிய பேரணியில் நான் கலந்துகொள்ளும் வகையில், தற்காலிகமாகவாவது என்னை மருத்துவமனையை விட்டு வெளியேற அனுமதிக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்." என தெரிவித்துள்ளார்.</p> <h2>பேச்சுவார்த்தை</h2><p>போராட்டத்திற்கு இடையே, சிஜேபி தலைமை செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் காவல்துறையினரால் துணை ஆணையர் அலுவலகத்திற்கு பேச்சுவார்த்தைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.</p><p>இது குறித்துப் பேசிய சௌரவ் தாஸ், "கல்வித் துறை சீர்திருத்தங்கள் குறித்த எங்களின் நீண்டகாலக் கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.</p><p>நிர்வாகத் தரப்பிலிருந்து இந்த அழைப்பு மிகவும் தாமதமாக வந்திருந்தாலும், கல்வி முறையில் உள்ள சீர்கேடுகளை தடுக்க நாங்கள் விவாதத்திற்குத் தயாராக உள்ளோம்" என்று கூறினார்.</p><h2>உண்ணாவிரதம் தொடரும்</h2><p>இதனிடையே மத்திய அரசு தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்கும் வரையோ, அல்லது இன்று தொடங்கும் மழைக்காலக் கூட்டத்தொடரில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கல்வித் துறை குறித்து விவாதிப்போம் என்று உறுதியளிக்கும் வரையோ தனது உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என்று சோனம் வாங்சுக் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>குறுங்காலீஸ்வரர் கோவில் தல வரலாறு</title><link>https://www.maalaimalar.com/spirituality/kurungaleeswarar-temple-history</link><comments>https://www.maalaimalar.com/spirituality/kurungaleeswarar-temple-history#comments</comments><guid isPermaLink="false">64f6cf1b-0e18-4d6e-b7d0-055e22353911</guid><pubDate>Mon, 20 Jul 2026 07:32:07 +0000</pubDate><atom:updated>2026-07-20T07:32:07.947Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Spirituality,worship,தல வரலாறு,கோயம்பேடு,devotional</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/r56u5xy7/news-3.png" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ குறுங்காலீஸ்வரர் கோவில் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/r56u5xy7/news-3.png?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை கோயம்பேட்டில் சுமார் 25,200 சதுரடி பரப்பளவில் குறுங்காலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. குச மற்றும் லவர்கள் ராமரின் அஸ்வமேத யாகக் குதிரையைக் கட்டி, அதை அம்புகளால் வேலியிட்டு (அம்பு-வேலி-பேடு) தடுத்த இடமே 'கோயம்பேடு' என்று மருவியதாக கூறப்படுகிறது.</p><p>இறைவன்: குறுங்காலீஸ்வர்</p><p>இறைவி: தர்மசம்வர்த்தினி</p><p>தலவிருட்சம்: மகிழ மரம்</p><h2>தல வரலாறு</h2><p>சோழ மன்னன் ஒருவன், இவ்வழியே தேரில் சென்றபோது சக்கரம் லிங்கம் மீது ஏறி, ரத்தம் வெளிப்பட்டது. பயந்த மன்னன் பூமிக்கடியில் லிங்கம் இருந்ததைக் கண்டு, கோயில் எழுப்பினான். </p><p>தேர்ச்சக்கரம் ஏறியதால் இந்த லிங்கத்தின் பாணம் பாதி புதைந்துவிட்டது. எனவே இங்கு சிவன் குறுகியவராக குள்ளமாக காட்சி தருகிறார். </p><p>இதனால் சுவாமிக்கு குறுங்காலீஸ்வரர் என்ற பெயர் உண்டானது. குசலவம் என்றால் குள்ளம் என்றும் பொருள் உண்டு. இந்த ஆலயம் பிற்கால சோழர்கள் காலத்தில், குறிப்பாக முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்ட வரலாற்றுச் சான்றுகளைக் கொண்டுள்ளது.</p><p>வால்மீகி முனிவர், பகவான் ராமனின் மகன்கள் லவன், குசன் ஆகியோர் வழிபட்ட புண்ணியஸ்தலமாக இக்கோவில் விளங்கி வருகிறது. அயோத்தியில் ராமபிரான் ஆட்சிப்பொறுப்பற்ற பின்பு, சீதையன் கற்பிற்கு களங்கம் உண்டாகும்படி சிலர் பேசினர். </p><p>சீதையின் கற்பை நிருபிக்க ராமர் சீதையை வனத்திற்கு அனுப்பினார். வால்மீகி ஆசிரமத்தில் தங்கிய சீதை, லவன், குசன் என்னும் இரு மகன்களை பெற்றெடுத்தாள் . ராமர் தனது தந்தை என தெரியாமலேயே, லவகுசர் வளர்ந்தனர். </p><p>இந்நேரத்தில் ராமபிரான், அயோத்தியில் அஸ்வமேத யாகம் நடத்தினார். அங்கு வால்மீகி முனிவரின் உத்தரவின் பேரில் சென்ற லவகுசர், மனைவி இல்லாமல் அஸ்வமேத யாகம் நடத்துவது சாஸ்திர விரோதம் என்பதாலும், சீதாவை காட்டுக்கு அனுப்பிவிட்டதை அறிந்தும் ராமபிரான் மீது கோபம்மடைந்து தாங்கள் வசித்த வனத்துக்கே திரும்பி விட்டனர்.</p><p>அப்போது ஒரு யாகக் குதிரை லவகுசர் வசித்த பகுதிக்கு வந்தது. அவர்கள் அவற்றை கட்டிபோட்டுவிட்டனர். குதிரையுடன் வந்த சத்ருக்கனன் குதிரையை விடுவிக்கச் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. அவனுடன் போரிட்டு வென்றதோடு, குதிரையை மீட்க வந்த லட்சுமணருடனும் போரிட்டு வென்றனர். இவர்களைத் தேடி ராமனும் இங்கு வந்தார்.</p><p>இதையறிந்த வால்மீகி லவகுசர்களிடம், ராமனே அவர்களது தந்தை என்பதையும், அவர்களது அன்னையே சீதா என்பதையும், எந்தச் சுழ்நிலையில் சீதாதேவியை ராமபிரான் காட்டுக்கு அனுப்பினார் என்பதையும் விளக்கினார்.</p><p>இருப்பினும், தந்தையை எதிர்த்ததால் லவகுசருக்கு பித்ரு தோஷம் ஏற்பட்டது. வால்மீகியின் ஆலசோனைப்படி இத்தலத்தில் சிவனை வேண்டி தவமிருந்து தோஷம் நீங்கப்பெற்றனர். சுவாமிக்கு குசலவபுரீஸ்வரர் என்று பெயர் சூட்டப்பட்டது.</p><h2>சிறப்பு</h2><p>பித்ரு தோஷம் உள்ளவர்கள், மகாளய அமாவாசை போன்ற நாட்களில் இங்குள்ள குசலவ தீர்த்தத்தில் நீராடி, சிவபெருமானை வழிபட்டால் முன்னோர்களின் சாபம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.</p><p>ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ராகு காலத்தில் ஆலிங்கண சரபேஸ்வரர் பெருமானுக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகிறது.</p><h2>நடை திறந்திருக்கும் நேரம்</h2><p>காலை 5.30 மணி முதல் 12 மணி வரை</p><p>மாலை 4.30 மணி முதல் 8.30 மணி வரை</p>]]></content:encoded></item><item><title>பா.ம.க.வின்  19-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை- அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-release-pmk-19th-agricultural-shadow-budget</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-release-pmk-19th-agricultural-shadow-budget#comments</comments><guid isPermaLink="false">454180a1-952a-429d-9307-925bdaf59cb4</guid><pubDate>Mon, 20 Jul 2026 07:13:18 +0000</pubDate><atom:updated>2026-07-20T07:13:18.889Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,வேளான் நிழல் நிதிநிலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/3lqolaap/anbumani.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பா.ம.க.சார்பில் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார். ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/3lqolaap/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>பாட்டாளி மக்கள் கட்சியின் 19-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை, அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னை தி.நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று வெளியிட்டார்.</aside><p>பின்னர் நிருபர்களிடம் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அவர்</a> கூறியதாவது:-</p><p>2026 மற்றும் 27ஆம் ஆண்டிற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் 19-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை மொத்தம் ரூ.93,000 கோடி மதிப்பு கொண்டதாக இருக்கும். இதில் ரூ.68,000 கோடி வேளாண்துறை மூலம் செலவிடப்படும். இதுதவிர, பாசனத் திட்டங்களுக்காக நீர்வளத்துறை மூலம் ரூ.25,000 கோடி செலவிடப்படும்.</p><h2><strong>வேளாண் துறை</strong></h2><p>2025 மற்றும் 26ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் (தி.மு‌.க) நிதிநிலை அறிக்கையில் வேளாண்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.15,230.30 கோடியுடன் ஒப்பிடும் போது, இது 446 சதவீதம் அதிகம்.</p><p>வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் ரூ.13,000 கோடி உழவர்கள் இடுபொருள் மானியத்திற்கு செலவிடப்படும்.</p><p>வேளாண் கட்டமைப்பு, வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டங்களுக்கு ரூ.25,000 கோடி செலவிடப்படும்.</p><p>பயிர்க் காப்பீடு உள்ளிட்ட பிற திட்டங்களுக்கு ரூ.30,000 கோடி செலவிடப்படும்.</p><p>பயிர்க் காப்பீடு உள்ளிட்ட பிற திட்டங்களுக்கு ரூ.30,000 கோடி செலவிடப்படும்.</p><p>தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கை மதிப்பில் 25 சதவீதம் வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பது பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். அதன்படி, நடப்பாண்டின் நிதிநிலை அறிக்கை மதிப்பான ரூ.6 லட்சம் கோடியில் ரூ.1.5 லட்சம் கோடி வேளாண்மை சார்ந்த துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>வேளாண்மை, நீர்வளத்துறைக்கு மட்டும் ரூ.93,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், வேளாண்மை சார்ந்த கால்நடைத்துறை, பால்வளத்துறை, மீன்வளத்துறை, கூட்டுறவுத்துறை, உணவுத்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகியவற்றில் வேளாண்மை சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்காக மட்டும் ரூ.57,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாத நிலையில், பாசனத் தேவைகளுக்கு ஏற்படும் கூடுதல் செலவை கருத்தில் கொண்டு ஏக்கருக்கு ரூ.5,000 சிறப்பு மானியம் வழங்கப்படும்.</p><p>நிலத்தடி நீர் ஆதாரம் இல்லாத பகுதிகளில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படாததால் ஏற்படும் இழப்பைக் கருத்தில் கொண்டு, உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 இழப்பீடு வழங்கப்படும்.</p><h2><strong>பாமக தேர்தல் அறிக்கை</strong></h2><p>கூட்டுறவு வங்கிகளில் இருந்து உழவர்கள் வாங்கிய பயிர்க் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். இதற்கான தொகையை அரசே வெளிச் சந்தையில் இருந்து கடனாக வாங்கி, கூட்டுறவு வங்கிகளுக்கு செலுத்தும்.</p><p>பொதுத்துறை வங்கிகளில் சிறு மற்றும் குறு விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன்களில் ரூ.1 லட்சம் வரையிலான தொகையை அரசே ஏற்றுக் கொண்டு நேரடியாக செலுத்தும்.</p><p>கூட்டுறவு வங்கிகளில் உழவர்கள் பெறும் குறுகியகால கடன்களுக்கு 10 சதவீதம் மானியம் வழங்கப்படும். ரூ.1 லட்சம் கடன் வாங்கினால், ரூ.90,000 திருப்பி செலுத்தினால் போதுமானது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/பாமக">பாமக</a> தேர்தல் அறிக்கையை நிறைவேற்றும் வகையில், வேளாண் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.24,000 உரிமைத் தொகை வழங்கப்படும். இது 3 தவணைகளில் வழங்கப்படும். </p><p>உழவர்களின் வாரிசுகளுக்கு முதுநிலை பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்படும். தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு இக்கட்டணத்தை அரசே செலுத்தும்.</p><p>நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.3,500, கரும்புக்கு டன்னுக்கு ரூ.5,000 ஆக உயர்த்தப்படும்.</p><h2><strong>நெல் கொள்முதல்</strong></h2><p>வேளாண் விளைபொருட்களை கொள்முதல் செய்வதற்காக தனி வாரியம் ஏற்படுத்தப்படும்.</p><p>நெல் உள்ளிட்ட விளைபொருட்களை கொள்முதல் செய்ய 6,000 நிலையங்கள் அமைக்கப்படும்.</p><p>கொள்முதல் பணிகளை மேற்கொள்ள 38,866 பருவகாலப் பணியாளர்கள் பணிநிலைப்பு செய்யப்படுவார்கள். 12,000 பணியாளர்கள் புதிதாக நியமிக்கப்படுவார்கள்.</p><p>தமிழ்நாட்டில் அனைத்து வகையான வேளாண் விளைபொருட்களையும் அரசே கொள்முதல் செய்வதை கட்டாயமாகும் வகையில், வேளாண் விளைபொருள்கள் சட்டம் 2026 இயற்றப்படும்.</p><p>கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைவதைத் தடுக்கும் வகையில், உழவர்கள் கொண்டுவரும் நெல் மூட்டைகள் அதே நாளில் கொள்முதல் செய்யப்படும்.</p><p>கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாத்து வைப்பதற்காக, அரசு கிடங்குகளின் எண்ணிக்கை இப்போதுள்ள 302-லிருந்து அடுத்த 3 ஆண்டுகளில் 1000ஆக உயர்த்தப்படும்.</p><p>காய்கறிகள், பழங்கள், மலர்கள் உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களை வீணாகாமல் பாதுகாத்து வைக்க அனைத்து வட்டங்களிலும் குளிர்ப்பதனக் கிடங்கு அமைக்கப்படும்.</p><p>அனைத்து மாவட்டங்களிலும் உணவுப் பதனத் தொழிற்சாலைகள் அமைக்கப்படும்.</p><p>நெல் கொள்முதல் அளவு ரூ.70 லட்சம் டன்னாக அதிகரிக்கப்படும்.</p><p>தமிழ்நாட்டில் துவரம்பருப்பு சாகுபடி செய்யப்படும் பரப்பு இப்போதுள்ள 1.25 இலட்சம் ஏக்கரில் இருந்து அடுத்த 3 ஆண்டுகளில் 3 லட்சம் ஏக்கராக உயர்த்தப்படும்.</p><p>துவரம் பருப்பு சாகுபடி செய்யும் உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்.</p><p>எண்ணெய் வித்துப் பயிர்களான எள் சாகுபடி பரப்பு ஆண்டுக்கு 50 ஆயிரம் ஏக்கர் வீதமும், சூரியகாந்தி சாகுபடி பரப்பு ஆண்டுக்கு 25 ஆயிரம் வீதமும் அதிகரிக்கப்படும்.</p><p>நிலக்கடலை சாகுபடி பரப்பு 5.62 லட்சம் ஏக்கரில் இருந்து 7 லட்சம் ஏக்கராக உயர்த்தப்படும்.</p><p>எண்ணெய் வித்துப் பயிர்களை சாகுபடி செய்ய ஏக்கருக்கு ரூ.7 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.</p><p>மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு உழவர்களிடம் இருந்து நாட்டுச் சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு, மானிய விலையில் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும்.</p><p>நல்லெண்ணெய், கடலெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவையும் நியாய விலைக் கடைகள் மூலம் மானிய விலையில் வழங்கப்படும்.</p><p>நீர்ப்பாசனம் திட்டம் மற்றும் கொள்முதல் செய்த உணவுப் பொருட்களை திமுக, அரசால் பாதுக்காக்க முடியவில்லை.  தமிழ்நாட்டில் ஒருநாளைக்கு 2 விவசாயிகள் தற்கொலை செய்து வருகிறார்கள்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ஈரானின் அணு உலை மீது அமெரிக்கா தாக்குதல்.. &apos;மறக்க முடியாத பாடம் கற்பிப்போம்&apos; என மொஜ்தபா சூளுரை</title><link>https://www.maalaimalar.com/news/world/us-airstrikes-on-iran-nuclear-site-darkhovin-reactor-and-key-southern-infrastructure-hit</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-airstrikes-on-iran-nuclear-site-darkhovin-reactor-and-key-southern-infrastructure-hit#comments</comments><guid isPermaLink="false">bc1f044f-c945-46f4-9810-3a9da47bf469</guid><pubDate>Mon, 20 Jul 2026 07:10:16 +0000</pubDate><atom:updated>2026-07-20T07:10:16.003Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,USA,அணுஉலை,Nuclear Reactor,Iran War,ஈரான் போர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/xbk0399f/iran-war.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மொஜ்தபா ]]></media:title><media:description type="html"><![CDATA[ மொஜ்தபா ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/xbk0399f/iran-war.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரானின் தென்மேற்குப் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மிக முக்கியத்துவம் வாய்ந்த 'தர்கோவின்' (Darkhovin) அணு உலை மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியிருப்பதாக ஈரான் அணுசக்தி முகமை தெரிவித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/us-military-says-it-has-begun-new-round-of-airstrikes-targeting-iran">ஈரானின் </a>தெற்கு மாகாணங்களை நாட்டின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கும் நோக்கத்துடன், தெற்கு ஈரானில் உள்ள முக்கிய பாலங்கள், ரெயில் பாதைகள், மின் நிலையங்கள், சுரங்கப்பாதைகள் மற்றும் சாலைகளை அமெரிக்க விமானப்படை தாக்கி வருகிறது. </p><p>இதனால் அங்குப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. மருத்துவமனைகள் காலி செய்யப்பட்டு, பள்ளித் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.</p> <h2>குவைத், பஹ்ரைனில் தாக்குதல்</h2><p>இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், குவைத்தில் உள்ள மின்சாரம் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.</p><p>பஹ்ரைனிலும் இதேபோன்ற தாக்குதல்கள் நடந்ததையடுத்து, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு பஹ்ரைன் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.</p><p>ஈரான் ஏவிய பல ஏவுகணைகளைத் தங்களது வான் பாதுகாப்பு அமைப்பு அழித்துவிட்டதாக பஹ்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.</p> <h2>ஹார்முஸ் ஜலசந்தியில் கட்டுப்பாடு</h2><p>இதற்கிடையே, சர்வதேச வர்த்தகத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியின் கட்டுப்பாட்டை ஈரான் முழுமையாகத் தன்வசப்படுத்தியுள்ளதுடன், வர்த்தகக் கப்பல்களைத் தடுத்து நிறுத்தியுள்ளது.</p><p>எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு கொண்டு செல்லும் கப்பல்கள் ஓமன் கடற்கரை வழியாகச் செல்வதற்குப் பதிலாக ஈரானின் கடற்கரையை ஒட்டிய பாதையில் மட்டுமே பயணிக்க வேண்டும் என்றும் தங்களது முன் அனுமதியின்றிப் பயணித்தால் மீண்டும் ஆபத்தை சந்திக்க நேரிடும் எனவும் ஈரான் எச்சரித்துள்ளது.</p> <h2>எச்சரிக்கை</h2><p>அமெரிக்காவின் இந்தத் தாக்குதல்கள் தொடர்ந்தால், அமெரிக்காவிற்கு ‘மறக்க முடியாத பாடத்தை’ கற்பிப்போம் என்று ஈரானின் உச்சத் தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/world/irans-new-supreme-leader-to-appear-publicly-at-tehran-memorial-for-ayatollah-ali-khamenei">மொஜ்தபா காமெனி</a> அறிக்கை மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p> <h2>அமெரிக்க வீரர்கள்</h2><p>ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தின் மீது ஈரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களில் இரண்டு அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். ஒருவரைக் காணவில்லை</p><p>இதன் மூலம் இந்தப் போரில் உயிரிழந்த அமெரிக்க வீரர்களின் மொத்த எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 430க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.</p><p>அமெரிக்க வீரர்களின் மரணம் மிகவும் துயரமளிப்பதாக தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எந்தவொரு சூழ்நிலையிலும் ஈரான் அணு ஆயுதங்களை பெற அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>தேசிய விருது வென்றவர்களுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-surya-congratulates-national-award-winners</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-surya-congratulates-national-award-winners#comments</comments><guid isPermaLink="false">1a00fd30-fb7c-4fe7-8d43-a2a03c0be358</guid><pubDate>Mon, 20 Jul 2026 07:01:14 +0000</pubDate><atom:updated>2026-07-20T07:01:14.345Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தேசிய விருது,national award,நடிகர் சூர்யா,Actor Suriya</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/kh77yr04/Surya.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Actor Surya]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/kh77yr04/Surya.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய சினிமாவில் உள்ள நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்து ஆண்டுதோறும் மத்திய அரசு விருது வழங்கி கவுரவித்து வருகிறது.</p><h2>தேசிய விருது</h2><p>அந்த வகையில் கடந்த 2024-ம் ஆண்டு வெளிவந்த படங்களுக்கான 72-வது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இதில் தமிழ் திரை உலகம் 10 தேசிய விருதுகளை வென்றுள்ளது.   </p><p>தொடர்ந்து தேசிய விருது வென்றவர்களுக்கு முதலமைச்சர் விஜய், அரசியல் கட்சி தலைவர்கள், திரைத்துறையினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். </p><p>அந்த வகையில், நடிகர் சூர்யா தேசிய விருது வென்றவரகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><p>நடிகர் சூர்யா நெகிழ்ச்சி</p><p>இதுகுறித்து நடிகர் சூர்யா தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>72-வது தேசிய திரைப்பட விருதுகளை வென்ற அனைத்துக் வெற்றியாளர்களுக்கும் எனது வாழ்த்துகள். எனது மூத்தக் கலைஞர்களுக்கும் நண்பர்களுக்கும் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள். சிறந்த படைப்புகளைத் தருவதற்கான உங்களின் இந்த தொடர் முயற்சி இந்தியச் சினிமா உலகை மேலும் செழுமைப்படுத்துகிறது.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Many congratulations to all the winners of the <a href="https://x.com/hashtag/72ndNationalFilmAwards?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#72ndNationalFilmAwards</a>.<br>Heartfelt wishes to my seniors and friends. Your pursuit of excellence enriches the world of Indian cinema.</p>&mdash; Suriya Sivakumar (@Suriya_offl) <a href="https://x.com/Suriya_offl/status/2079044667501682817?ref_src=twsrc%5Etfw">July 20, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?- மு.க.ஸ்டாலின் கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-question-to-tvk-govt</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-question-to-tvk-govt#comments</comments><guid isPermaLink="false">38fac6f0-6cb4-47b4-af57-e554afb49bb7</guid><pubDate>Mon, 20 Jul 2026 06:42:54 +0000</pubDate><atom:updated>2026-07-20T06:42:54.062Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,TN Govt,தமிழக அரசு,முக ஸ்டாலின்,விளாத்திகுளம் எம்எல்ஏ</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/gjfb9us9/MKstalin004.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/gjfb9us9/MKstalin004.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இணைய ஆதரவாளர்கள் என அனைவரையும் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது Take Diversion Model த.வெ.க. அரசு என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.</aside><h2><strong>கண்டனம்</strong></h2><p>தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான <a href="https://www.maalaimalar.com/topic/முக-ஸ்டாலின்">மு.க.ஸ்டாலின்</a> எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><p>ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றிச் செயல்படும் த.வெ.க. ஆட்சியில், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F">மார்க்கண்டேயன்</a> அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2><strong>மனித உரிமைகளும் கூட மறுக்கப்பட்டுள்ளன</strong></h2><p>ஆட்சியில் நடைபெறும் தவறுகளையும் அவலங்களையும் சுட்டிக்காட்டும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இணைய ஆதரவாளர்கள் என அனைவரையும் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது Take Diversion Model த.வெ.க. அரசு.</p><p>"அவதூறு வழக்குகளில் கூட எதற்குத் தொடர்பில்லாத குற்றப்பிரிவுகளைச் சேர்க்கிறீர்கள்?" என நீதிமன்றத்திடம் சமீபத்தில்தானே குட்டு வாங்கினீர்கள்?</p><p>கைது செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் தனது வழக்கறிஞர் மற்றும் ஆதரவாளர்களைச் சந்திக்கக் கூட மறுக்கப்பட்டுள்ளார். அவருக்கான மருந்துகளை வழங்கச் சென்றவர்களும் தடுக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவரின் அடிப்படைச் சட்ட உரிமைகளும் மனித உரிமைகளும்கூட மறுக்கப்பட்டுள்ளன.</p><h2><strong>கைது செய்வது ஏன்?</strong></h2><p> தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?</p><p>மைதானத்தில் மாத்திரை அரைத்த அமைச்சர் மீதும், சொந்தக் கட்சி பெண் உறுப்பினரின் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குமே நடவடிக்கை எடுக்க வக்கற்ற த.வெ.க. அரசு அரசியல் விமர்சனங்களுக்கு மட்டும் அலறித் துடித்துக் கைது செய்வது ஏன்?</p><p>ஆட்சியாளர்களின் சட்டத்துக்குப் புறம்பான உத்தரவுகளை எல்லாம் நிறைவேற்றி அவர்களின் மனதைக் குளிர்விப்பது காவல்துறையினரின் பணி அல்ல! சட்டப்படியும் மனசாட்சிப்படியும் செயல்படுங்கள். இல்லாவிட்டால், there will be consequences என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றிச் செயல்படும் த.வெ.க. ஆட்சியில், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.<br><br>ஆட்சியில் நடைபெறும் தவறுகளையும் அவலங்களையும் சுட்டிக்காட்டும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள்,…</p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2079089859294310618?ref_src=twsrc%5Etfw">July 20, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>நீட், ராமர் கோவில் முறைகேடு.. எதிர்க்கட்சி அமளியால் தொடங்கிய சில நிமிடங்களில் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/parliament-monsoon-session-lok-sabha-adjourned-amid-opposition-protests-over-neet-and-ayodhya-ram-temple-trust-funds</link><comments>https://www.maalaimalar.com/news/national/parliament-monsoon-session-lok-sabha-adjourned-amid-opposition-protests-over-neet-and-ayodhya-ram-temple-trust-funds#comments</comments><guid isPermaLink="false">04774660-0332-4384-b7fe-ffffc97c38d6</guid><pubDate>Mon, 20 Jul 2026 06:14:25 +0000</pubDate><atom:updated>2026-07-20T06:14:25.385Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மக்களவை,பாராளுமன்ற கூட்டத்தொடர்,சபாநாயகர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/j5rgjnq7/tn-24.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ நாடாளுமன்றம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ நாடாளுமன்றம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/j5rgjnq7/tn-24.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/parliament-monsoon-session-begin-today">நாடாளுமன்ற மழைக்காக கூட்டத்தொடர்</a> இன்று தொடங்கியது. தொடங்கிய சில நிமிடங்களில் மக்களவை கடும் அமளியால் ஒத்திவைக்கப்பட்டது. </p><p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பே எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகளை முன்னிருத்தி போர்க்கோலம் பூண்டது. </p><p>இன்று அவை கூடிய சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் முழக்கங்கள் மற்றும் அமளி காரணமாக மக்களவை, மாநிலங்களவை  நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. </p><h2>ஒத்திவைப்பு</h2><p>நீட் தேர்வு சர்ச்சை மற்றும் அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை நிதி முறைகேடு புகார் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் இந்தச் சலசலப்பில் ஈடுபட்டன.</p><p>மக்களவை தொடங்கியதும், சபாநாயகர் ஓம் பிர்லா முன்னாள் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்புகளை வாசித்தார்.</p><p>இரங்கல் குறிப்புகள் வாசித்து முடிக்கப்பட்ட உடனே, நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் அயோத்தி ராம ஜன்மபூமி அறக்கட்டளையின் நிதி மோசடிப் புகார் குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கங்களை எழுப்பினர்.</p><p>அவையின் அமளிக்கு இடையே, சபாநாயகர் ஓம் பிர்லா உறுப்பினர்களை அமைதி காக்குமாறு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தார்.</p><p>எனினும், முழக்கங்கள் தொடர்ந்ததால் சபாநாயகர் அவையை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார். இதேபோல மாநிலங்களவையும்  ஒத்திவைக்கப்பட்டது.</p><h2>காங்கிரஸ் குற்றச்சாட்டு</h2><p>இது குறித்துசெய்திலாயர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி கௌரவ் கோகோய், "மக்களுக்குத் தேவையான அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அரசு தயாராக இல்லை என்பது கடந்த சில நாட்களாகவே தெளிவாக புலப்படுகிறது.</p><p>ராமர் கோவில் விவகாரமோ அல்லது நீட் விவகாரமோ நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுமா என்பதை அவர்களால் இதுவரை உறுதியாகச் சொல்ல முடியவில்லை.</p><p>இந்த மழைக்கால கூட்டத்தொடரின் முக்கியப் பிரச்சினைகள் இவைதான் என்பது ஒட்டுமொத்த நாட்டுக்கும் தெரியும், ஆனால் அரசிடம் முறையான திட்டம் இல்லை" என்று குற்றம் சாட்டினார்.</p><p>முன்னதாக, காங்கிரஸ் எம்பி கே.சி. வேணுகோபால், ராமர் கோவில் அறக்கட்டளையின் நிதி மோசடிப் புகார் குறித்து விவாதிக்க மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை வழங்கியிருந்தார்.</p><p>அதேபோல், பல எதிர்க்கட்சித் தலைவர்களும் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் மாணவர்களின் போராட்டங்கள் குறித்து விவாதிக்கக் கோரி நோட்டீஸ் அளித்திருந்தனர்.</p><h2>ஜந்தர் மந்தரில் குழப்பம்</h2><p>இதனையே இன்று பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி உள்ள சூழலில் ஜந்தர் மந்தரில் இருந்து பாராளுமன்றம் நோக்கி பேரணி சென்று தங்கள் கோரிக்கை மனுக்களை வழங்க கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் திட்டமிட்டிருந்தனர்.</p><p>ஆனால் இந்த பேரணிக்கு நேற்றே தடை விதிக்கப்பட்டு அங்கு போலீசார் மற்றும் மத்திய படையினர் குவிக்கப்பட்டனர்.</p><p>இந்த சூழலில் பாராளுமன்றம் நோக்கி பேரணியை தொடங்க முனைப்பு காட்டிய டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டக்காரர்கள் மீது டெல்லி போலீசார் மற்றும் மத்திய படையினர் தடியடி நடத்தியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>உலக சதுரங்க நாள் - முதலமைச்சர் விஜய் வாழ்த்து
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/world-chess-day-cm-vijay-wishes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/world-chess-day-cm-vijay-wishes#comments</comments><guid isPermaLink="false">e93913c8-1048-4b2b-9e4f-a8c2845ee326</guid><pubDate>Mon, 20 Jul 2026 06:12:51 +0000</pubDate><atom:updated>2026-07-20T06:12:51.336Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,World Chess Day,உலக சதுரங்க நாள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/4gyzaz9h/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay -  Praggnanandhaa]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/4gyzaz9h/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>உலக சதுரங்க நாளான இன்று முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vilathikulam-dmk-mla-arrested">விஜய்</a> வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>உலக சதுரங்க நாளை முன்னிட்டு சதுரங்கத்தை நேசிக்கும் அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும், பயிற்சியாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2>மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்</h2><p>இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான இளம் கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கி தமிழ்நாடு சாதனை படைத்து வருகிறது. 1988 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் தொடங்கி, குகேஷ், பிரக்ஞானந்தா, செல்வி வைஷாலி உள்ளிட்ட பல இளம் கிராண்ட் மாஸ்டர்கள் சர்வதேச அளவிலான சதுரங்கப் போட்டிகளில் வெற்றிபெற்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்து வருகின்றனர். அவர்களுக்கு இந்நாளில் எனது நல்வாழ்த்துகள். </p><p>உலக அரங்கில் சதுரங்கத்தின் தலைநகராக தமிழ்நாடு முன்னேறி வரும் நிலையில், இளைய தலைமுறையினர் சதுரங்க நுட்பங்களைக் கற்றுத்தேர்ந்து, சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்திட வேண்டும். இத்தகைய முயற்சிகளுக்கு நமது அரசு அனைத்து வகையிலும் துணை நின்று எல்லா உதவிகளையும் வழங்கும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> <h2>சர்வதேச சதுரங்க தினம்</h2><p>ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 20 அன்று சர்வதேச சதுரங்க தினம் (International Chess Day) கொண்டாடப்படுகிறது. 1924 ஆம் ஆண்டு இதே நாளில் உலக சதுரங்கக் கூட்டமைப்பு (FIDE) நிறுவப்பட்டது. இந்த நாளை சதுரங்க விளையாட்டுக்கான சர்வதேச ஒத்துழைப்பை ஆதரிக்கும் விதமாக ஐக்கிய நாடுகள் சபை (UN) அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.</p><h2>பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு</h2><p>1924-ம் ஆண்டு ஜூலை 20 பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் 'பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு' (FIDE) தொடங்கப்பட்டது.</p><p>'பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு தொடங்கப்பட்ட தினத்தை நினைவுகூரும் வகையில், 1966-ம் ஆண்டு முதல் ஜூலை 20-ஐ சர்வதேச சதுரங்க நாளாகக் கொண்டாட யுனெஸ்கோ (UNESCO) முன்மொழிந்தது.</p><p>2019-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், ஐக்கிய நாடுகள் பொதுச்சபை (UNGA) இந்த நாளை அதிகாரப்பூர்வமாக உலக சதுரங்க நாளாக ஏற்றுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றியது.</p><h2>சதுரங்கம்</h2><p>சதுரங்கம் வெறும் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. இது வியூகங்களை வகுத்தல் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்தும் மூளையின் உடற்பயிற்சிக் கூடமாகும்.</p><p>மாணவர்களின் கவனச்சிதறலைக் குறைக்கவும், முடிவெடுக்கும் திறனை வளர்க்கவும் பள்ளிகளில் சதுரங்கத்தை ஒரு கல்விச் கருவியாக மாற்றுவதை இந்நாள் ஊக்குவிக்கிறது.</p> ]]></content:encoded></item><item><title>திருவள்ளூர் மாவட்டத்துக்கு 6-ந்தேதி உள்ளூர் விடுமுறை: கலெக்டர் கவிதா அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/local-holiday-for-thiruvallur-district-on-aug-6th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/local-holiday-for-thiruvallur-district-on-aug-6th#comments</comments><guid isPermaLink="false">f2396a00-20a1-4788-a8ef-47068797740b</guid><pubDate>Mon, 20 Jul 2026 06:01:53 +0000</pubDate><atom:updated>2026-07-20T06:01:53.535Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உள்ளூர் விடுமுறை,aadi krithigai,Tiruttani Murugan Temple,திருத்தணி முருகன் கோவில்,ஆடிக்கிருத்திகை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/n8lh46fh/tiruvallur.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ திருவள்ளூர் மாவட்டம்]]></media:title><media:description type="html"><![CDATA[ திருவள்ளூர் மாவட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/n8lh46fh/tiruvallur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>உள்ளூர் விடுமுறையானது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</aside><h2><strong>ஆடிக்கிருத்திகை</strong></h2><p>முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 5-ம் படை வீடாக திருத்தணி முருகன் கோவில் திகழ்கிறது.</p><p>கோவிலில் ஆண்டு தோறும் <a href="https://www.maalaimalar.com/topic/ஆடிக்கிருத்திகை">ஆடிக்கிருத்திகை</a> விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆடிக்கிருத்திகை விழா அடுத்த மாதம் 6-ந்தேதி (வியாழக்கிழமை) வருகிறது.</p><p>இதையொட்டி தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் திருத்தணி முருகன் கோவிலுக்கு திரளாக வந்து சாமி தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2><strong>உள்ளூர் விடுமுறை</strong></h2><p>இதையடுத்து ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு வருகிற 6-ந்தேதி திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.</p><p>இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கவிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-</p><p>திருத்தணியில் உள்ள முருகப்பெருமானின் 5-ம் படை வீடான சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருகிற 6-ந்தேதி (வியாழக்கிழமை) ஒருநாள் நடைபெற இருக்கும் ஆடிக்கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.</p><p>இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலவாணி முறிச் சட்டம் 1881-ன் கீழ் வராது என்பதால் மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும் சார் நிலைக் கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு 6.8.2026 அன்று செயல்பட வேண்டும். </p><p>இந்த விடுமுறைநாளை ஈடுசெய்யும் பொருட்டு 8.8.2026 (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறையானது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சோழிங்கநல்லூர் அருகே சதுப்பு நிலத்தில் கவிழ்ந்த மாநகர பேருந்து- 6 பேர் படுகாயம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/municipal-bus-overturns-in-marshland-near-sholinganallur-6-injured</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/municipal-bus-overturns-in-marshland-near-sholinganallur-6-injured#comments</comments><guid isPermaLink="false">cb17767b-2d99-40a0-950c-c4a779e423bc</guid><pubDate>Mon, 20 Jul 2026 05:58:40 +0000</pubDate><atom:updated>2026-07-20T05:58:40.559Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>bus accident,சாலை விபத்து,road accident,பேருந்து விபத்து,சோழிங்கநல்லூர்,sozhinganallur</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/9jesai93/bus2.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bus accident]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/9jesai93/bus2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சோழிங்கநல்லூர்-மேடவாக்கம் சாலையில் லாரிக்கு வழிவிட இடது புறம் திருப்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மாநகர பஸ், சதுப்பு நிலத்தில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் உள்பட 6 பேர் காயம் அடைந்தனர்.</p><p>மாநகர பேருந்து</p><p>சென்னை அடையாறில் இருந்து மேற்கு தாம்பரம் நோக்கி நேற்று பகல் சுமார் 1.30 மணியளவில் மாநகர பஸ்(தடம் எண் 99) சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் சாமிதாஸ்(வயது 50) ஓட்டினார். கண்டக்டராக ராமச்சந்திரன் பணியில் இருந்தார். பஸ்சில் சுமார் 20 பேர் பயணம் செய்தனர்.</p><p>பெருங்குடி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் வழியாக வந்த பஸ், பின்னர் சோழிங்கநல்லூரில் இருந்து பெரும்பாக்கம் வழியாக மேடவாக்கம் செல்லும் செம்மொழி பூங்கா சாலையில் சென்று கொண்டிருந்தது.</p><p>பெரும்பாக்கம்-சோழிங்கநல்லூர் சாலையில் மெட்ரோ ரெயில் கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. மேலும், சதுப்பு நிலத்தில் இருந்து மழைநீர் செல்ல சாலையின் நடுவே தரைப்பாலம் அமைக்கும் பணியும் நடைபெறுகிறது. இதனால் சாலையின் ஒரு பகுதியில் வாகனங்கள் ஒருவழி பாதையாக சென்று வருகின்றன.</p><h2>சதுப்பு நிலத்தில் கவிழ்ந்தது</h2><p>அப்போது, எதிரே லாரி ஒன்று வந்தது. அந்த லாரிக்கு வழிவிடுவதற்காக டிரைவர் சாமிதாஸ், பஸ்சை இடதுபுறமாக திருப்பினார். இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையின் இடதுபுறம் உள்ள சதுப்பு நிலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் இருந்த பயணிகள் பயத்தில் அலறினர்.</p><p>உடனடியாக அந்த சாலையில் சென்றவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களின் உதவியுடன் பஸ்சில் இருந்த சுமார் 20 பயணிகள் மற்றும் டிரைவர், கண்டக்டரை மீட்டனர்.</p><h2>6 பேர் காயம்</h2><p>இந்த விபத்தில் டிரைவர் சாமிதாஸ் காயம் அடைந்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், லேசான காயம் அடைந்த 2 பெண்கள் உள்பட 5 பேர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கண்டக்டர் மற்றும் இதர 15 பயணிகள் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினர்.</p><p>விபத்து காரணமாக அந்த சாலையின் இருபுறமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. பள்ளிக்கரணை போலீஸ் துணை கமிஷனர் பிரபாகரன், உதவி கமிஷனர்கள் வெங்கடேசன், சரவணன், பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ் பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர்.</p><h2>போக்குவரத்து பாதிப்பு</h2><p>மாநகர போக்குவரத்து அதிகாரிகள், பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார், செம்மஞ்சேரி போலீசார் ஆகியோர் 2 ராட்சத கிரேன்களை வரவழைத்து சதுப்பு நிலத்தில் கவிழ்ந்த மாநகர பஸ்சை மீட்டனர். இதில் பஸ்சின் முன்புற கண்ணாடி நொறுங்கியதுடன், முன்பகுதி சேதமடைந்தது.</p><p>இதையடுத்து சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது. இந்த சம்பவம் குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>VIDEO: பாராளுமன்றம் நோக்கி பேரணிக்கு ஆயத்தம்.. ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் மீது தடியடி </title><link>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protests-youth-march-to-parliament-stopped-with-lathicharge-in-delhi</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protests-youth-march-to-parliament-stopped-with-lathicharge-in-delhi#comments</comments><guid isPermaLink="false">7128e287-4e58-4a06-b295-7271896099ab</guid><pubDate>Mon, 20 Jul 2026 05:32:41 +0000</pubDate><atom:updated>2026-07-20T05:32:41.795Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>hunger strike,monsoon session,மழைக்கால கூட்டத்தொடர்,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,Cockroach Janata Party,உண்ணாவிரதம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/bxq4zjpf/tn-23.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ ஜந்தர் மந்தரில் தடியடி ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஜந்தர் மந்தரில் தடியடி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/bxq4zjpf/tn-23.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்சி விடைத்தாள் திருத்த குளறுபடி உள்ளிட்டவற்றால் நாட்டின் கல்வித் துறையை அதளபாதாளத்திற்கு கொண்டு சென்ற நிர்வாக தோல்விகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி நாடு முழுவதும் குரல்கள் வலுத்து வருகின்றன. </p><p>இதனை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் அபிஜித் தீப்கே தலைமையிலான கரப்பான்பூச்சி கட்சியினர் கடந்த ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் அமைப்புகளாகவும், தன்னிச்சையாகவும் வந்து கலந்துகொண்டு 1 மாத காலமாக போராடி வருகின்றனர். </p><p>குறிப்பாக இதில் 20 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த கல்வியாளர் சோனம் வாங்சுக் நேற்று முன் தினம் டெல்லி காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்லப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். </p><h2>போலீஸ் குவிப்பு</h2><p>இதனையே இன்று பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள சூழலில் ஜந்தர் மந்தரில் இருந்து பாராளுமன்றம் நோக்கி பேரணி சென்று தங்கள் கோரிக்கை மனுக்களை வழங்க கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் திட்டமிட்டிருந்தனர்.</p><p>ஆனால் இந்த பேரணிக்கு நேற்றே தடை விதிக்கப்பட்டு அங்கு போலீசார்  மற்றும் மத்திய படையினர் குவிக்கப்பட்டனர்.</p><p>சற்று நேரத்தில் பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் பிரதமர் மோடி, தொடரின் முன் பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம், தொடரை ஆக்கபூர்வமாக நடத்த எதிர்கட்சியினரை வலியுறுத்துவதாக தெரிவித்தார்.</p><p>இந்த சூழலில் பாராளுமன்றம் நோக்கி பேரணியை தொடங்க முனைப்பு காட்டிய டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டக்காரர்கள் மீது டெல்லி போலீசார் மற்றும் மத்திய படையினர் தடியடி நடத்தியுள்ளனர்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">LATEST: as feared, lathi charge, instances of stone pelting and total chaos at Jantar Mantar. In a democracy, the streets should never become a battlefield! Dialogue is being defeated by disorder sadly. Or is this designed to discredit what was a remarkably peaceful and organic… <a href="https://t.co/mpZs5RZTnU">pic.twitter.com/mpZs5RZTnU</a></p>&mdash; Rajdeep Sardesai (@sardesairajdeep) <a href="https://x.com/sardesairajdeep/status/2079070975715606732?ref_src=twsrc%5Etfw">July 20, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>பேரணிக்கு பெருகும் ஆதரவு</h2><p>தடைகள் இருந்தபோதிலும் ஜந்தர் மந்தரில் அதிகளவில் கூடியுள்ள இளைஞர்கள் பேரணியை தொடங்க மும்முரம் காட்டி வருகின்றனர்.</p><p>எதனாலும் கரப்பான்பூச்சிகளை தடுக்க முடியாது என கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>பேரணிக்காக மருத்துவமனையில் இருந்து சோனம் வாங்சுக் தனது வாழ்த்துக்களை தெரிவித்தனுப்பியுள்ளார்.</p><p>இந்த பேரணியில் பங்கேற்க நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் ஜந்தர் மந்தர் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p>இதனிடையே பேரணியை அமைதியான முறையில் நடத்துமாறு சோனம் வாங்சுக் மனைவி கீதாஞ்சலி ஆங்மோ அழைப்பு விடுத்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Delhi: Protesters were stopped near Kerala House while attempting to proceed towards the designated protest site at Jantar Mantar <a href="https://t.co/FIkcw8aqjC">pic.twitter.com/FIkcw8aqjC</a></p>&mdash; IANS (@ians_india) <a href="https://x.com/ians_india/status/2079070558990590267?ref_src=twsrc%5Etfw">July 20, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/4l9rfjwx/janthar-manthar.jpg" /></figure><h2>உண்ணாவிரதம் நிறைவு</h2><p>சோனம் வாங்சுகை போல இந்த போராட்டத்தில் கடந்த 23 நாட்களாக அகில இந்திய மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த 3 மாணவ செயல்பாட்டார்கள் உண்ணாவிரதம் இருந்து வந்த நிலையில் இன்று தங்கள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டனர்.</p><p>அவர்களின் உடல்நிலையும் மோசமடைந்த நிலையில் இன்று போராட்ட களத்திற்கு வந்த நடிகர் பிரகாஷ் ராஜ், பாலிவுட் மூத்த நடிகை ஷாபனா அஸ்மி, எம்.பி. மனோஜ் ஜா, அரசியல் செயல்பாட்டாளர் யோகேந்திர யாதவ் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அடங்கிய குழுவினர் நீண்ட அறிவுறுத்தலின் பேரில் அம்மாணவர்கள் தங்கள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டனர்.</p><p>தனது நிபந்தனைகளை ஏற்றால் உண்ணாவிரதத்தை கைவிடுவதாக சோனம் வாங்சுக் முன்னதாக மருத்துவமனையில் இருந்து செய்தி அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-to-hold-further-consultations-for-five-days-starting-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-to-hold-further-consultations-for-five-days-starting-today#comments</comments><guid isPermaLink="false">f8312ac4-143d-4ef2-afbf-5c142d2fee6f</guid><pubDate>Mon, 20 Jul 2026 05:27:36 +0000</pubDate><atom:updated>2026-07-20T05:27:36.373Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,Edappadi Palaniswami,அதிமுக,எடப்பாடி பழனிசாமி,அதிமுக நிர்வாகிகள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/gb12uu4u/EdappadiPalaniswami004.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/gb12uu4u/EdappadiPalaniswami004.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>எடப்பாடி பழனிசாமி நடத்தும் இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் அ.தி.மு.க.வில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</aside><p>அ.தி.மு.க. பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF">எடப்பாடி பழனிசாமி</a> சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு கட்சி நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.</p><p>கடந்த 15-ந்தேதி முதல் தொடர்ச்சியாக பல்வேறு மாவட்ட நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் திருவள்ளூர், புதுக்கோட்டை, விருதுநகர், நீலகிரி, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இடையில் சில நாட்கள் ஆலோசனை நடைபெறாமல் இருந்தது.</p> <h2><strong>மீண்டும் ஆலோசனை</strong></h2><p>இந்த நிலையில் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-take-action-party-posts-of-11-cve-shanmugam-supporters-stripped">எடப்பாடி பழனிசாமி</a> இன்று முதல் தொடர்ச்சியாக 5 நாட்கள் மீண்டும்  ஆலோசனை மேற்கொள்கிறார். இன்றைய கூட்டத்தில் மதுரை, ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். </p><h2><strong>தென்காசி</strong></h2><p>நாளை தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளுடனும், 22-ந்தேதி திருப்பூர், நாமக்கல், வட சென்னை மாவட்ட நிர்வாகிகளுடனும் 23-ந்தேதி கோவை, திண்டுக்கல், வட சென்னை மாவட்ட நிர்வாகிகளுடனும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்கிறார்.</p><p>24-ந்தேதி விழுப்புரம், திருவாரூர், சேலம் மாவட்ட நிர்வாகிகளும் 25-ந்தேதி கள்ளக்குறிச்சி மற்றும் சென்னை, திருவள்ளூர் தெற்கு மாவட்ட நிர்வாகிகளும் ஆலோசனை கூட்டங்களில் கலந்து கொள்கிறார்கள். </p><h2><strong>அதிரடி மாற்றங்கள்</strong></h2><p>சென்னையில் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. படுதோல்வியை சந்தித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி நடத்தும் இந்த ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. </p><p>சட்டமன்ற தேர்தலில் தலைநகரில் தொடர்ந்து தோல்வியை தழுவுவது ஏன்? என்பது பற்றி கட்சி நிர்வாகிகளுடன் அவர் விளக்கங்களை கேட்டு அதற்கான காரணத்தை கண்டறியவும் உத்தரவிட இருக்கிறார்.</p><p>எடப்பாடி பழனிசாமி நடத்தும் இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் அ.தி.மு.க.வில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு 2 ஆண்டுகளில் ரூ.261 கோடி செலவு: RTI-யில் தகவல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/261-crore-spent-on-rajya-sabha-mps-in-two-years-rti-reply</link><comments>https://www.maalaimalar.com/news/national/261-crore-spent-on-rajya-sabha-mps-in-two-years-rti-reply#comments</comments><guid isPermaLink="false">e5ab64bf-f201-41ca-8550-d9577780d25d</guid><pubDate>Mon, 20 Jul 2026 05:22:45 +0000</pubDate><atom:updated>2026-07-20T05:22:45.864Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மாநிலங்களவை எம்பி,ஆர்டிஐ,rti,rajyasabha mp,செலவினம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/l9alwnys/Rajyasabha-MP.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rajyasabha MPs]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/l9alwnys/Rajyasabha-MP.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாநிலங்களவை எம்.பி.க்களின் சம்பளம், படிகள் மற்றும் பல்வேறு வசதிகளுக்காக கடந்த 2 நிதியாண்டுகளில் ரூ.261 கோடிக்கும் அதிகமாக அரசு செலவிட்டு உள்ளது.</p><h2>தகவல் அறியும் உரிமை சட்டம்</h2><p>மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்தர் சேகர் கவுர் என்பவர் நாடாளுமன்ற மாநிலங்களவை செயலகத்துக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 2024-25 மற்றும் 2025-26 ஆகிய நிதியாண்டுகளில் மாநிலங்களவையில் எம்.பி.க்களுக்கு செய்யப்பட்ட செலவுகள் குறித்த தகவல்களை கேட்டிருந்தார். அவருக்கு கிடைத்த பதில்களில் தெரியவந்த விவரங்கள் வருமாறு:-</p><h2>ரூ.261 கோடி</h2><p>2024-25 மற்றும் 2025-26 ஆகிய நிதியாண்டுகளில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களின் சம்பளம், படிகள் மற்றும் பல்வேறு வசதிகளுக்காக ரூ.261 கோடிக்கும் அதிகமாக செலவிடப்பட்டு உள்ளது.</p><p>படி மற்றும் வசதிகளுக்காக 2024-25 நிதியாண்டில் மாநிலங்களவை உறுப்பினர்களுக்காக ரூ.98 கோடிக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளது. இந்த தொகை 2025-26 நிதியாண்டில் கணிசமாக உயர்ந்து ரூ.163 கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட ரூ.65 கோடி கூடுதலாகும்.</p><h2>சம்பள செலவு</h2><p>2024-25-ல் எம்.பி.க்களின் சம்பளத்துக்காக ரூ.25.71 கோடிக்கும் அதிகமாகவும், மருத்துவச் செலவுகளுக்கு ரூ.8.2 கோடியும், சுற்றுப்பயணச் செலவுகளுக்கு ரூ.24.99 கோடியும், படிகளுக்காக ரூ.33.33 கோடிக்கும் அதிகமாகவும் செலவிடப்பட்டு உள்ளது.</p><p>அதேபோல், 2025-26-ல் சம்பளச் செலவு ரூ.44.6 கோடியாகவும். மருத்துவச் செலவு ரூ.9.6 கோடியாகவும், பயணச் செலவு ரூ.36 கோடியாகவும். படிகள் ரூ.58.78 கோடிக்கும் அதிகமாகவும் இருந்துள்ளது.</p><h2>என்னென்ன வசதிகளுக்கு அனுமதி</h2><p>மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு சம்பளம். படிகள், உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணம். மருத்துவ வசதி. அலுவலக செலவுகள் உள்ளிட்ட 21 வகை யான செலவுத் தலைப்புகளின் கீழ் அரசு வசதிகளை வழங்குகிறது. அச்சிடுதல், டிஜிட்டல் சாதனங்கள், எரிபொருள், பராமரிப்பு மற்றும் பிற நிர்வாகச் செலவு களும் இதில் அடங்கும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விண்வெளி துறையில் வானளாவிய வளர்ச்சியை இந்தியா தொட்டுள்ளது -  பிரதமர் மோடி</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-says-india-has-achieved-soaring-growth-in-space-sector</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-says-india-has-achieved-soaring-growth-in-space-sector#comments</comments><guid isPermaLink="false">86db5eea-b71a-48ff-b13e-a8cb62e6892e</guid><pubDate>Mon, 20 Jul 2026 05:19:07 +0000</pubDate><atom:updated>2026-07-20T05:19:07.760Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>monsoon session,மழைக்கால கூட்டத்தொடர்,pm modi,parliament,பிரதமர் மோடி,பாராளுமன்றம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/aysa5dbo/modi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/aysa5dbo/modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 13-ந் தேதி வரை நடைபெறுகிறது.</p><p>இந்த கூட்டத்தொடரில் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, வருமான வரி (திருத்தம்) மசோதா, சுப்ரீம் கோர்ட்டு (நீதிபதிகளின் எண்ணிக்கை) திருத்த மசோதா, பிறப்பு மற்றும் இறப்புகள் (திருத்தம்) மசோதா, தேசிய கவுரவத் துக்கு அவமதிப்பு தடுப்பு (திருத்தம்) மசோதா (வந்தே மாதரத்துக்கு இடையூறு செய்தால் 3 ஆண்டு சிறை விதிக்கும் மசோதா), சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அபிவிருத்தி (திருத்தம்) மசோதா ஆகிய 6 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.</p><p>இதில் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா கடுமையான அரசியல் விவாதங்களை தூண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p> <p>இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் <a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-congratulates-pv-sindhu-on-historic-japan-open-title">பிரதமர் மோடி</a> செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நாடாளுமன்றத்தில் முக்கிய மசோதாக்கள் தாக்கலாக உள்ள நிலையில் எதிர்க்கட்சிகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். பிரதமர் மோடி கூறியதாவது:</p><p>* நாடாளுமன்ற கூட்டத்தொடர் பயனுள்ளதாக அமையும் என நம்புகிறேன்.</p><p>* நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமானதாக அமையும் என நம்புகிறேன்.</p><p>* நாட்டின் வளர்ச்சிக்கு நாடாளுமன்ற கூட்டத்தொடர் மிகவும் அவசியமானது.</p><p>* விண்வெளித்துறையில் வானளாவிய வளர்ச்சியை இந்தியா தொட்டுள்ளது.</p> <p>* விக்ரம் 1 ராக்கெட் வெற்றியை அடுத்து தனியார் நிறுவனத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு பாராட்டுகள்.</p><p>* இந்திய இளைஞர்களின் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.</p><p>* சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் ரெயிலை இந்தியா அறிமுகம் செய்துள்ளது.</p><p>* உலகின் எந்த போர்களும் இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க முடியாது.</p><p>* நாட்டில் 3-வது செமி கண்டக்டர் ஆலை அமைய உள்ளது.</p><p>* <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D">நாடாளுமன்ற</a> கூட்டத்தொடர் பயனுள்ளதாக அமையும் என நம்புகிறேன்.</p><p>* இந்தியாவில் இது இளைஞர்களுக்கான காலம். 56 வயது இளைஞர் என கூறி கொள்பவருக்கான காலம் இது இல்லை என ராகுலை மறைமுகமாக பிரதமர் மோடி விமர்சித்தார்.</p> ]]></content:encoded></item><item><title>என்ஜினீயரிங் படிப்புக்கான பொது கலந்தாய்வு தொடங்கியது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/engineering-counselling-for-degree-programmes-begins</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/engineering-counselling-for-degree-programmes-begins#comments</comments><guid isPermaLink="false">76bc8537-d996-44b1-8933-1f9769709c7b</guid><pubDate>Mon, 20 Jul 2026 05:02:12 +0000</pubDate><atom:updated>2026-07-20T05:02:12.367Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பொறியியல் படிப்பு,Engineering,கலந்தாய்வு,Engineering councilling,பொது கலந்தாய்வு,General councilling</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/mjq4ljqz/Engineer.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Englineering Coluncilling]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/mjq4ljqz/Engineer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>என்ஜினீயரிங் படிப்புக்கான பொது கலந்தாய்வு இன்று தொடங்கியது. 3 சுற்றுகளாக அடுத்த மாதம் 31-ந் தேதி வரை நடைபெற உள்ளது.</p><h2>என்ஜினீயரிங் படிப்பு</h2><p>என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு கடந்த 13-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, கடந்த 15-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடந்தது.</p><p>இதில் விளையாட்டு பிரிவில் 3 ஆயிரத்து 210 பேரும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 500 பேரும், முன்னாள் ராணுவத்தினரின் பிள்ளைகள் பிரிவில் 1,176 பேரும் விண்ணப்பித்திருந்தனர்.</p><p>அவர்களுக்கான கலந்தாய்வு நேற்று முன்தினம் நிறைவு பெற்ற நிலையில், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 258 பேரும், விளையாட்டுப் பிரிவில் 416 பேரும், முன்னாள் ராணுவத்தினரின் பிள்ளைகள் பிரிவில் 139 பேரும் என மொத்தம் 813 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன.</p><h2>பொது கலந்தாய்வு இன்று தொடக்கம்</h2><p>இதனைத்தொடர்ந்து பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று (திங்கட்கிழமை) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆன்லைன் மூலம் இந்த கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.</p><p>மொத்தம் 3 சுற்றுகளாக <strong><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81" rel="nofollow">கலந்தாய்வு</a></strong> நடக்க இருக்கும் நிலையில், முதல் சுற்று கலந்தாய்வு இன்று தொடங்கிய நிலையில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 3-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.</p><p>இதில் பொது தரவரிசையில் 1 முதல் 37,976 வரையிலான இடங்களில் உள்ள மாணவ-மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.</p><p>2-வது சுற்று கலந்தாய்வு அடுத்த மாதம் 3-ந்தேதி தொடங்கி 17-ந்தேதி வரையில் நடக்கிறது. அதில் பொது தரவரிசையில் இடம்பெற்ற 37,977 முதல் 1,31,093 வரையிலான மாணவ-மாணவிகள் பங்கேற்கிறார்கள்.</p><p>3-வது சுற்று கலந்தாய்வு அடுத்த மாதம் 17-ந்தேதி தொடங்கி 31-ந்தேதியுடன் நிறைவு பெறு கிறது. அதில் பொது தரவரிசையில் 1,31,094 முதல் 2,33,812 வரையில் இடம்பெற்றவர்கள் பங்கேற்க உள்ளனர்.</p><h2>31-ந் தேதியுடன் நிறைவு</h2><p>அதேபோல், அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்தவர்களுக் கும் 3 சுற்றுகளாக கலந்தாய்வு நடக்கிறது. அந்த கலந்தாய்வும் இன்று தொடங்கி அடுத்த மாதம் 31-ந் தேதியுடன் முடிவடைகிறது.</p><p>மொத்தத்தில் என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு அடுத்த மாதம் 31-ந் தேதியுடன் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருக்கும் பட்சத்தில் அடுத்தகட்டமாக துணை கலந்தாய்வு நடத்தப்படும்.</p>]]></content:encoded></item><item><title>அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான சமூகநீதியை வென்றெடுக்க உறுதியேற்போம்!- அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-let-us-pledge-to-secure-complete-social-justice-for-all-communities</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-let-us-pledge-to-secure-complete-social-justice-for-all-communities#comments</comments><guid isPermaLink="false">dc277594-7acd-4341-9e39-17e9e465efe2</guid><pubDate>Mon, 20 Jul 2026 05:01:25 +0000</pubDate><atom:updated>2026-07-20T05:01:25.579Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/nyw9rda2/Anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/nyw9rda2/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான சமூகநீதியை வென்றெடுக்க வேண்டும் என்பது தான் நமது இலக்கு. அந்த இலக்கை வென்றெடுக்க இந்த நாளில் நாம் அனைவரும் உறுதியேற்றுக் கொள்வோம் என அன்புமணி தெரிவித்துள்ளார்.</aside><p>பா.ம.க.  தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>வாழ்த்துகள்</strong></h2><p>தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின, சிறுபான்மை சமூகங்களுக்கு முழுமையான சமூகநீதியை வென்றெடுக்கும் நோக்கத்துடன்  46 ஆண்டுகளுக்கு முன் வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட நாள் இன்று.  சமூகநீதிக் காவலர் மருத்துவர் அய்யா அவர்களால் தொடங்கப்பட்ட வன்னியர் சங்கத்தின் 47-ஆம் தொடக்க நாளில் பாட்டாளி சொந்தங்களுக்கும், சமூகநீதிக்காக போராடி வருபவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2><strong>உறுதியேற்றுக் கொள்வோம்</strong></h2><p>வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட நாள் தான் தமிழ்நாட்டில் சமூகநீதி வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள் என்பதை எவராலும் மறுக்க முடியாது. இந்த நாளில் தான் தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதனடிப்படையில் ஒவ்வொரு சாதிக்கும், அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்ப கல்வி, வேலை வாய்ப்புகளில் வகுப்புவாரி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்;  தமிழ்நாட்டில் 2 கோடி மக்கள்தொகை கொண்ட மிகப் பெரிய சமுதாயமாக இருக்கிற வன்னியர்களுக்கு மாநிலத்தில் இருபது சதவிகிதமும் மத்தியில் இரண்டு சதவிகிதமும் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் ; தமிழ்நாட்டில்  தாழ்த்தப்பட்டவர்களுக்கான 18 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக 22 விழுக்காடாக உயர்த்த வேண்டும் ஆகிய 3 புரட்சிகரமான தீர்மானங்களை மருத்துவர் அய்யா அவர்கள் நிறைவேற்றச் செய்தார்.</p><p>மருத்துவர் அய்யா அவர்களால் அப்போது  தொடங்கப்பட்ட சமூகநீதி போராட்டம் இப்போது முக்கியக் கட்டத்தை அடைந்திருக்கிறது. மத்தியிலும், மாநிலத்திலும்  சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளன.  இவை நமது சமூகநீதி போராட்டத்தில்  எட்டப்பட்ட முதல் மைல்கல் தான்.  அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான சமூகநீதியை வென்றெடுக்க வேண்டும் என்பது தான் நமது இலக்கு. அந்த இலக்கை வென்றெடுக்க இந்த நாளில் நாம் அனைவரும் உறுதியேற்றுக் கொள்வோம்.</p>]]></content:encoded></item><item><title>தோல்வியால் விரக்தி.. மைதானத்தில் ஸ்பெயின் வீரர்கள் மீது அர்ஜென்டினா வீரர் சரமாரி தாக்குதல் - வைரல் வீடியோ  </title><link>https://www.maalaimalar.com/sports/football/argentina-shock-defeat-leandro-paredes-sent-off-after-attacking-spain-players-in-fifa-world-cup-2026-final</link><comments>https://www.maalaimalar.com/sports/football/argentina-shock-defeat-leandro-paredes-sent-off-after-attacking-spain-players-in-fifa-world-cup-2026-final#comments</comments><guid isPermaLink="false">d29a6d2a-ac90-492f-96b9-936f1e06b538</guid><pubDate>Mon, 20 Jul 2026 04:56:20 +0000</pubDate><atom:updated>2026-07-20T04:56:20.814Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>argentina,அர்ஜென்டினா,World Cup football,Spain,ஸ்பெயின்,உலகக்கோப்பை கால்பந்து</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/l7zn9yic/FIFA.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ ஸ்பெயின் வீரர்களுடன் லியாண்ட்ரோ பரேடெஸ் மோதல் ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஸ்பெயின் வீரர்களுடன் லியாண்ட்ரோ பரேடெஸ் மோதல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/l7zn9yic/FIFA.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கால்பந்து (Football)</category><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2026 பிஃபா உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியிடம் அர்ஜென்டினா அதிர்ச்சி தோல்வியடைந்தது.</p><p>தோல்வியை அடுத்து மைதானத்தில் அர்ஜென்டினா நட்சத்திர வீரர் லியாண்ட்ரோ பரேடெஸ், ஸ்பெயின் வீரர்களை தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. </p><h2>தாக்குதல் </h2><p>கூடுதல் ஆட்ட நேரத்தின் 106வது நிமிடத்தில் மாற்று ஆட்டக்காரர் பெரான் டோரஸ் அடித்த கோலால் ஸ்பெயின் அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.  </p><p>ஆட்ட முடிவில் நடுவர் இறுதி விசிலை ஊதியதும், ஸ்பெயின் வீரர்கள் தங்களது வெற்றியை மைதானத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டாடத் தொடங்கினர்.</p><p>அப்போது விரக்தியில் இருந்த அர்ஜென்டினாவின் லியாண்ட்ரோ பரேடெஸ், ஸ்பெயின் தற்காப்பு ஆட்டக்காரர் எரிக் கார்சியாவை நோக்கி ஆவேசமாக பாய்ந்து மோதலில் ஈடுபட்டார். </p><p>கார்சியாவின் கழுத்தைப் பிடித்து பரேடெஸ் இரண்டு முறை தாக்கினார். </p><p>இந்த மோதலைத் தடுக்க வந்த ஸ்பெயின் அணியின் இளம் நட்சத்திரம் காவி ஓடி வந்தார். ஆனால், இதனால் மேலும் ஆத்திரமடைந்த பரேடெஸ், காவியின் முகத்தில் பலமாக ஒரு குத்து விட்டார்.  </p><p>இதனுடன் அர்ஜென்டினாவின் தியாகோ அல்மாடா, தலையிட்டு காவியை கீழே தள்ளியது மேலும் பதற்றத்தை அதிகரித்தது.</p><p>நிலைமை மோசமாவதைக் கண்ட அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனிஉடனடியாக மைதானத்திற்குள் விரைந்து வந்து தன் அணி வீரர்களைக் கட்டாயப்படுத்தி அங்கிருந்து இழுத்துச் சென்றார்.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="es" dir="ltr">Y bueno, como nunca falta...<br><br>Leandro Paredes no soportó y quiso pleito después de perder la final.  <a href="https://t.co/PNaIrsIKtI">pic.twitter.com/PNaIrsIKtI</a></p>&mdash; Sopitas (@sopitas) <a href="https://x.com/sopitas/status/2078965814527484303?ref_src=twsrc%5Etfw">July 19, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>ரெட் கார்டு</h2><p>ஆட்டம் ஏற்கனவே முடிவடைந்துவிட்ட போதிலும், மைதானத்தில் சக வீரர்களை தாக்கியதற்காக நடுவர் ஸ்லாவ்கோ வின்சிச், பரேடெஸுக்கு ரெட் கார்டு காண்பித்து மைதானத்தை விட்டு வெளியேற்றினார்.</p><p>முன்னதாக, ஆட்டத்தின் வழக்கமான 90 நிமிடங்களின் போதே அர்ஜென்டினாவின் என்சோ பெர்னாண்டஸ் ரெட் கார்டு பெற்று வெளியேறியிருந்தார். இதனால், ஒரே போட்டியில் அர்ஜென்டினா அணிக்கு இரண்டு ரெட் கார்டு அட்டைகள் கிடைத்தன. </p><h2>ஆட்டம்</h2><p>முன்னதாக இறுதிப்போட்டி ஆட்டத்தின் முதல் பாதி வரை எந்த அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை.</p><p>இதேபோல் ஆட்டத்தின் 2-ஆவது பாதியிலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. </p><p>90 நிமிடங்கள் முடிவிலும் ஆட்டம் கோல் அடிக்கப்படமல் சமநிலையில் இருந்தது. </p><p>தொடர்ந்து ஆட்டம் கூடுதலாக 30 நிமிடங்கள் வரை நீட்டிக்கப்பட்டது. கூடுதல் நேரத்தில் ஸ்பெயின் வீரர் பெரான் டோரஸ் கோல் அடிக்க அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.</p><p>இதைத் தொடர்ந்து அர்ஜென்டினா அணி கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்ய அதிக முனைப்பு காட்டினர். </p><p>எனினும் ஆட்டத்தின் இறுதி வரை அர்ஜென்டினா அணி கோல் அடிக்க தவறியது. </p><p>இதையடுத்து ஸ்பெயின் அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று 23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றது.</p> ]]></content:encoded></item><item><title>ஐபோன்களின் விலை 11% வரை உயர்த்திய ஆப்பிள்</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/apple-raises-iphone-prices-by-up-to-11-in-japan</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/apple-raises-iphone-prices-by-up-to-11-in-japan#comments</comments><guid isPermaLink="false">9cb5001f-418d-442f-b0ac-444bce17bd34</guid><pubDate>Mon, 20 Jul 2026 04:39:00 +0000</pubDate><atom:updated>2026-07-20T04:39:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Apple,ஆப்பிள்,Iphone,price hike,ஐபோன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/zc90x67r/iphone-17-pro.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ iPhone 17 Pro]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/zc90x67r/iphone-17-pro.png?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/apple">ஆப்பிள்</a> நிறுவனம் தனது வன்பொருள் மற்றும் சேவைகள் சார்ந்த தயாரிப்புகளில் தொடர்ந்து மேற்கொண்டு வரும் விலை உயர்வுகளின் சமீபத்திய விரிவாக்கமாக, ஜப்பான் நாட்டில் பல <a href="https://www.maalaimalar.com/topic/iphone">ஐபோன்</a> மாடல்களின் விலைகளை 11.3 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. </p><p>ஜப்பானில் உள்ள ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில், ஐபோன் 16, ஐபோன் 17e, ஐபோன் 17, ஐபோன் ஏர், ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்களுக்கு இந்த திருத்தப்பட்ட விலைகள் பொருந்தும்.</p><p><strong>முந்தைய விலை உயர்வு:</strong></p><p>கடந்த மாதம் ஆப்பிள் நிறுவனம் உலகளவில் தனது மேக் மற்றும் ஐபேட் மாடல்களின் விலைகளை உயர்த்தியதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அந்நிறுவனம் பல சந்தைகளில் ஆப்பிள் மியூசிக் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் ஐகிளவுட் பிளஸ் ஆகியவற்றின் விலைகளையும் உயர்த்தியுள்ளது.</p><p>ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடலின் விலை 194,800 யென்னில் இருந்து 214,800 யென்னாக உயர்ந்துள்ளது, இது சுமார் 10.3 சதவிகித அதிகரிப்பை குறிக்கிறது. ஐபோன் 17 ப்ரோ விலை இப்போது 179,800 யென்னிலிருந்து 194,800 யென்னாக உயர்ந்துள்ளது, இது சுமார் 8.3 சதவிகித அதிகரிப்பாகும்.</p><p>ஆப்பிள் நிறுவனம் ஐபோன் ஏர் மாடலின் விலையை 159,800 யென்னிலிருந்து 177,800 யென்னாக உயர்த்தியுள்ளது. இதன் மூலம், பாதிக்கப்பட்ட மாடல்களிலேயே சுமார் 11.3 சதவீதம் என்ற மிகப்பெரிய விலை உயர்வை இது பதிவு செய்துள்ளது.</p><p>முந்தைய விலையான 129,800 யென்னுடன் ஒப்பிடுகையில், சாதாரண ஐபோன் 17-இன் விலை இப்போது 142,800 யென்னாக உயர்ந்துள்ளது, இது சுமார் 10 சதவிகித அதிகரிப்பைக் குறிக்கிறது.</p><p>இதற்கிடையில், ஐபோன் 17e-யின் விலை 99,800 யென்னிலிருந்து 107,800 யென்னாக உயர்ந்துள்ளது, இது சுமார் 8 சதவிகித அதிகரிப்பாகும். பழைய ஐபோன் 16-இன் விலை 114,800 யென்னிலிருந்து தற்போது 124,800 யென்னாக உயர்ந்துள்ளது, இது சுமார் 8.7 சதவிகித உயர்வாகும்.</p><p>ஜப்பானில் சமீபத்திய ஐபோன் விலை உயர்வுகளுக்கு ஆப்பிள் நிறுவனம் ஒரு குறிப்பிட்ட காரணத்தை அறிவிக்கவில்லை. இருப்பினும், அமெரிக்க டாலருக்கு எதிராக ஜப்பானிய யென்னின் மதிப்பு சரிந்ததன் பின்னணியில் இந்த விலை உயர்வுகள் ஏற்பட்டுள்ளன, இது உள்ளூர் விலைகளை சரிசெய்ய ஆப்பிள் எடுத்த முடிவுக்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.</p><p>அந்த நிறுவனம் அமெரிக்காவில் இதுபோன்ற ஐபோன் விலை உயர்வுகளை அறிமுகப்படுத்தவில்லை, மேலும் தற்போதுள்ள ஐபோன் விலைகளில் ஒரு பரந்த உலகளாவிய திருத்தம் செய்வதற்கான அறிகுறிகளும் இல்லை. இருப்பினும், ஆப்பிள் நிறுவனம் மற்ற பல தயாரிப்பு வகைகளில் விலைகளை உயர்த்திய சிறிது காலத்திலேயே இந்த உயர்வு நிகழ்ந்துள்ளதால், இந்த முன்னேற்றம் குறிப்பிடத்தக்கதாக உள்ளது.</p><p><strong>ஆப்பிள் விலை உயர்வு:</strong></p><p>தொடர்ந்து நிலவி வரும் உலகளாவிய மெமரி சிப் பற்றாக்குறை மற்றும் கடுமையாக உயர்ந்து வரும் உதிரிபாகங்களின் விலைகளைக் காரணம் காட்டி, கடந்த மாதம் ஆப்பிள் நிறுவனம் தனது மேக் மற்றும் ஐபேட் வரிசைகள் அனைத்தின் விலைகளையும் உயர்த்தியது .</p><p>அதிகரித்து வரும் மெமரி மற்றும் ஸ்டோரேஜ் செலவுகளை நிறுவனத்தால் இனி முழுமையாக ஈடுசெய்ய முடியாது என்பதால், விலை உயர்வுகள் தவிர்க்க முடியாததாகி வருகின்றன என்று ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் முன்னதாகவே எச்சரித்திருந்தார்.</p><p><strong>தொடரும் விலை உயர்வு:</strong></p><p>அதனைத் தொடர்ந்து அந்நிறுவனம், மேக்புக் ஏர், மேக்புக் ப்ரோ, ஐமேக், மேக் மினி, மேக் ஸ்டுடியோ, ஐபேட், ஐபேட் மினி, ஐபேட் ஏர் மற்றும் ஐபேட் ப்ரோ உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளின் விலைகளை உயர்த்தியது.</p><p>இந்தியா உட்பட பல சந்தைகளில் ஆப்பிள் மியூசிக் சந்தாக் கட்டணங்களை ஆப்பிள் நிறுவனம் உயர்த்தியுள்ளது , அதே நேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாடுகளில் ஐகிளவுட்+ கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY : வார தொடக்கத்தில் உயர்ந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-20-07-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-20-07-2026#comments</comments><guid isPermaLink="false">e1474dd3-bd53-4fc3-92e3-55391f386b53</guid><pubDate>Mon, 20 Jul 2026 04:23:38 +0000</pubDate><atom:updated>2026-07-20T04:23:38.317Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/iohywn5g/gold07.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/iohywn5g/gold07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.</aside><p>சர்வதேச பொருளாதார சூழல், போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது.</p><p>இதனால் <a href="https://www.maalaimalar.com/topic/தங்கம்">தங்கத்தின்</a> விலை கடந்த ஓரிரு நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக உள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 135-க்கும், பவுனுக்கு ரூ.280 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 80-க்கும் விற்பனையானது. இதனை தொடர்ந்து நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை. </p><h2><strong>தங்கம் விலை உயர்வு</strong></h2><p>இந்நிலையில் வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,150-க்கும் சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><h2><strong>வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>வெள்ளி விலையில் இன்றும் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><h2><strong>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-</strong></h2><p>19-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,080</p><p>18-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,080</p><p>17-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,800</p><p>16-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,200</p><p>15-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,440</p><h2><strong>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-</strong></h2><p>19-07-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>18-07-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>17-07-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>16-07-2026- ஒரு கிராம் ரூ.240</p><p>15-07-2026- ஒரு கிராம் ரூ.240</p>]]></content:encoded></item><item><title>உலகக்கோப்பை கால்பந்து.. பரிசுத்தொகை, கோல்டன், சில்வர் விருதுகள் முழு விவரம்</title><link>https://www.maalaimalar.com/sports/football/football-world-cup-full-details-on-prize-money-and-golden-and-silver-awards</link><comments>https://www.maalaimalar.com/sports/football/football-world-cup-full-details-on-prize-money-and-golden-and-silver-awards#comments</comments><guid isPermaLink="false">1a88d34f-c478-4264-91dc-bb4eba7e660a</guid><pubDate>Mon, 20 Jul 2026 04:08:18 +0000</pubDate><atom:updated>2026-07-20T04:08:18.685Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>FIFA,Spain,ஸ்பெயின்,உலகக்கோப்பை கால்பந்து,Football World Cup,பிஃபா</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/4hbqw20p/fifa.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ உலகக்கோப்பை கால்பந்து]]></media:title><media:description type="html"><![CDATA[ உலகக்கோப்பை கால்பந்து]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/4hbqw20p/fifa.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கால்பந்து (Football)</category><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>23-ஆவது உலகக் கோப்பை கால்நது தொடரின் இறுதிப்போட்டியிஸ் அர்ஜென்டினா அணியை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்ற ஸ்பெயின் அணிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் <a href="https://www.maalaimalar.com/sports/football/fifa-world-cup-spain-clinch-second-title-as-trump-hands-trophy-after-1-0-win-over-argentina">கோப்பையை </a>வழங்கினார்.</p><p>அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட்லைப் மைதானத்தில் இந்த இறுதிப் போட்டி நடந்தது. இதில் அர்ஜென்டினாவை வீழ்த்தியதன் மூலம் ஸ்பெயின் அணி 2-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.</p><h2>பரிசுத்தொகை </h2><p>உலகக்கோப்பையை வென்ற ஸ்பெயின் அணிக்கு 50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. </p><p>அதன்படி ஸ்பெயின் அணிக்கு இந்திய மதிப்பில் ரூ.4,814 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. </p><p>2வது இடம் பிடித்த அர்ஜென்டினா அணிக்கு 33 மில்லியன் டாலர்கள்  (இந்திய மதிப்பில் ரூ.3,177 கோடி) பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.</p><h2>விருதுகள்</h2><p>ஒட்டுமொத்தமாக தொடரில் தனிநபர் சாதனைகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் விவரங்கள் கீழ் வருமாறு,</p><h3>கோல்டன் பால் (Golden Ball)</h3><p>தொடரின் சிறந்த வீரருக்கான 'கோல்டன் பால்' விருதை ஸ்பெயின் அணியின் நட்சத்திர வீரர் ரோத்ரி வென்றார்.</p><p>மான்செஸ்டர் சிட்டி கிளப்பை சேர்ந்த இவர் தொடர் முழுவதும் ஸ்பெயின் அணியின் நடுகள (Midfield) வீரராக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.</p><p>இந்த உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது சிறந்த வீரருக்கான விருதான 'சில்வர் பால்' அர்ஜென்டினாவின் <a href="https://www.maalaimalar.com/sports/football/world-cup-final-spain-beat-argentina-in-extra-time-to-claim-second-title-as-messi-bids-farewell-in-tears">லியோனல் மெஸ்ஸி</a>க்கு வழங்கப்பட்டது.</p><p>பிரான்ஸ் கேப்டன் எம்பாப்பே சிறந்த வீரர்களில் 3வது இடம் பிடித்து Bronze ball வென்றார். </p><h3>கோல்டன் க்ளவ் (Golden Glove)</h3><p>தொடரின் சிறந்த கோல்கீப்பருக்கான 'கோல்டன் க்ளவ்' விருதை ஸ்பெயினின் கோல்கீப்பர் உனாய் சிமோன் தட்டிச் சென்றார்.</p><p>இத்தொடரில் ஸ்பெயின் அணி ஆடிய 8 போட்டிகளில், வெறும் ஒரே ஒரு கோலை மட்டுமே எதிரணிக்கு விட்டுக்கொடுத்து, 7 போட்டிகளில் ஒரு கோல் கூட விழாமல் தடுத்து சாதனை படைத்தார்.</p><p>மேலும், உலகக்கோப்பை வரலாற்றிலேயே தொடர்ச்சியாக 650 நிமிடங்கள் எதிரணியினரை ஒரு கோல் கூட அடிக்கவிடாமல் தடுத்த புதிய உலக சாதனையையும் உனாய் சிமோன் படைத்துள்ளார்.</p> <h3>கோல்டன் பூட் (Golden Boot)</h3><p>இறுதிப்போட்டியில் லியோனல் மெஸ்ஸி கோல் எதுவும் அடிக்காத நிலையில், பிரான்ஸ் அணி கேப்டன் எம்பாப்பே தனது இரண்டாவது 'கோல்டன் பூட்' விருதை வென்றார்.</p><p>இதன் மூலம், ஒன்றுக்கும் மேற்பட்ட உலகக் கோப்பைகளில் அதிக கோல் அடித்த வீரராக திகழும் முதல் வீரர் என்ற பெருமையை இந்த எம்பாப்பே பெற்றார். நான்காவது இடத்தைப் பிடித்த பிரான்ஸ் அணிக்காக எம்பாப்பே மொத்தம் 10 கோல்களையும் நான்கு 'அசிஸ்ட்'களையும் (கோல் அடிக்க உதவிய வாய்ப்புகள்) பதிவு செய்தார்.</p><p>மறுபுறம், தனது கடந்த 12 உலகக் கோப்பை ஆட்டங்களில் முதல் முறையாக கோல் அல்லது 'அசிஸ்ட்' எதுவும் இல்லாமல் ஆட்டத்தை முடித்த மெஸ்ஸி, மொத்தம் எட்டு கோல்கள் மற்றும் நான்கு 'அசிஸ்ட்'களுடன் போட்டியை நிறைவு செய்தார்.</p><p>பட்டியலில் 2-வது இடம் பிடித்து 'சில்வர் பூட்' விருதை மெஸ்ஸி வென்றுள்ளார்.</p> <h2>சிறந்த இளம் வீரர்</h2><p>சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணியின் 19 வயதான பாவ் குபார்சி, 2026 பிபா உலகக் கோப்பை தொடரின் 'சிறந்த இளம் வீரர்' விருதை வென்றுள்ளார்.</p><p>இந்த விருதுக்கான போட்டியில், தனது அணியின் நட்சத்திர வீரரான லமின் யமாலை பின்னுக்கு தள்ளி அவர் இந்த உயரிய அங்கீகாரத்தை கைப்பற்றியுள்ளார்.</p><p>இதன் மூலம், உலகக் கோப்பை வரலாற்றில் 'சிறந்த இளம் வீரர்' விருதை வென்ற மிகவும் இளம் வீரர்களில் ஒருவராக பாவ் குபார்சி இடம்பிடித்துள்ளார்.</p><h2>ஃபேர் பிளே (Fair play) விருது</h2><p>தொடர் முழுவதும் எவ்வித விதிமீறல்களும் இன்றி, ஒழுக்கத்துடன் சிறந்த விளையாட்டு திறனுடனும் விளையாடிய நெதர்லாந்து அணிக்கு இந்த ஆண்டிற்கான 'பிஃபா ஃபேர் பிளே' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.</p> ]]></content:encoded></item><item><title>விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/case-registered-against-vilathikulam-dmk-mla-under-three-sections</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/case-registered-against-vilathikulam-dmk-mla-under-three-sections#comments</comments><guid isPermaLink="false">baa765ee-bf4b-47d5-8399-db6be4615c04</guid><pubDate>Mon, 20 Jul 2026 04:01:20 +0000</pubDate><atom:updated>2026-07-20T04:01:20.966Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,Vilathikulam MLA,விளாத்திகுளம் எம்எல்ஏ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/e5vrqpke/VilathikulamMLA.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/e5vrqpke/VilathikulamMLA.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மீது தூத்துக்குடி போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.</p><h2>திமுக பொதுக்கூட்டம்</h2><p>தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று முன்தினம் இரவு திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பேசியபோது, சட்டமன்றத்தை கூட்டும்போது உனக்கு (முதலமைச்சர் விஜய்) எலும்பு இருக்காது உடைத்து விட்டு தான் அனுப்பி விடுவோம் சட்டமன்றத்தை கூட்டிப்பார் என்று பேசி இருந்தார்.</p><p>முதலமைச்சர் விஜய்யை குறித்து விமர்சித்தும், சர்ச்சைக்குரிய வகையிலும், மிரட்டும் தொனியிலும் பேசிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதைத்தொடர்ந்து திமுக எம்எல்ஏவின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.</p><h2>தவெக புகார்</h2><p>விளாத்திக்குளம் எம்எல்ஏ மார்க்கண்டேயனின் இந்த பேச்சு சர்ச்சையான நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக்கழகம் நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.</p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>இந்த புகாரின் அடிப்படையில் முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vilathikulam-dmk-mla-arrested">மார்க்கண்டேயன்</a> கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை விளாத்திகுளத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து அழைத்து சென்றனர்.</p><p>மார்க்கண்டேயனை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர். மேலும் போலீஸ் வாகனத்தை மறித்தனர். இதனால் அவர்களை குண்டு கட்டாக தூக்கிய போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயனிடம்  போலீசார் விசாரணை நடத்தினர்.</p><p>இதையடுத்து அவர் மீது தூத்துக்குடி போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.</p><h2>வழக்குப்பதிவு</h2><p>கொலை மிரட்டல், அவமதிப்பு பேச்சு, தவறான தகவல்களை பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மார்க்கண்டேயன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.</p><p>விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதற்கு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">திமுக</a>வினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>விளாத்திகுளம்  எம்எல்ஏ கைது: தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க பாடம் புகட்டப்படும் - கனிமொழி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vilathikulam-mla-arrested-dmk-mp-kanimozhi-condemned</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vilathikulam-mla-arrested-dmk-mp-kanimozhi-condemned#comments</comments><guid isPermaLink="false">e987724e-e437-406b-93b4-a72b467fd1fb</guid><pubDate>Mon, 20 Jul 2026 03:37:15 +0000</pubDate><atom:updated>2026-07-20T03:37:15.629Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தவெக,Kanimozhi,கனிமொழி,tvk,Vilathikulam MLA,விளாத்திகுளம் எம்எல்ஏ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/pa06j0ra/kanimozhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kanimozhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/pa06j0ra/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதற்கு திமுக எம்பி <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF">கனிமொழி</a> கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் எம்எல்ஏ மார்க்கண்டேயனை அராஜகமான முறையில் கைது செய்திருக்கும் தவெக அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கதக்கது.</p><p>விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ந்து திமுகவினர் மீது காவல்துறையை ஏவி அடக்கிடப் பார்க்கும் தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க பாடம் புகட்டப்படும். </p><p>உடனடியாக, மார்கண்டேயன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> <p>முன்னதாக, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று முன்தினம் இரவு திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பேசியபோது, சட்டமன்றத்தை கூட்டும்போது உனக்கு (முதலமைச்சர் விஜய்) எலும்பு இருக்காது உடைத்து விட்டு தான் அனுப்பி விடுவோம் சட்டமன்றத்தை கூட்டிப்பார் என்று பேசி இருந்தார்.</p><p>விளாத்திக்குளம் எம்எல்ஏ <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vilathikulam-dmk-mla-arrested">மார்க்கண்டேயனின்</a> இந்த பேச்சு சர்ச்சையான நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.</p><p>இந்த புகாரின் அடிப்படையில் விளாத்திக்குளம் எம்எல்ஏ மார்க்கண்டேயனை இன்று காலை போலீசார் கைது செய்தனர். மார்க்கண்டேயன் கைது நடவடிக்கையை எதிர்த்து அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.</p> ]]></content:encoded></item><item><title>3700mAh பேட்டரி, 45 நாட்கள் Standby கொடுக்கும் புது நோக்கியா மொபைல்</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/nokia-300-4g-power-bank-specs-revealed</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/nokia-300-4g-power-bank-specs-revealed#comments</comments><guid isPermaLink="false">92c91f5c-bc18-41dc-9316-a309d9386d9b</guid><pubDate>Mon, 20 Jul 2026 03:36:00 +0000</pubDate><atom:updated>2026-07-20T03:36:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மொபைல் போன்,Feature Phone,Nokia 300 4G Power Bank,நோக்கியா 300 4ஜி பவர் பேங்க்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/0nh7qvcg/nokia-300-4g.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நோக்கியா 300 4ஜி பவர் பேங்க்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/0nh7qvcg/nokia-300-4g.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஹெச்.எம்.எடி. குளோபல் நிறுவனம் தனது <a href="https://www.maalaimalar.com/topic/nokia">நோக்கியா </a>300 4ஜி பவர் பேங்க் மாடலை புதுப்பித்தள்ளது. முதற்கட்டமாக பிலிப்பைன்ஸ் சந்தையில் விற்பனைக்கு வரும் இந்த மொபைலின் முன்பதிவு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது. </p><p>புதிய நோக்கியா <a href="https://www.maalaimalar.com/topic/mobile-phone">மொபைல்</a> நம்பத்தகுந்த, நீண்ட நேர பேட்டரி பேக்கப் எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களை குறிவைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. பிலிப்பைன்ஸ்-இல் இந்த மொபைல் விலை PHP 1,990 இந்திய மதிப்பில் ரூ. 3,110 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. </p><p><strong>அம்சங்கள்:</strong></p><p>புதிய நோக்கியா 300 4ஜி மொபைல் போன் 2.4 இன்ச் QVGA ஸ்கிரீன், IP65 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி, ரக்கட் மற்றும் கைகளில் இருந்து நழுவாத வகையிலான வடிவமைப்பு கொண்டுள்ளது. இந்த மாடல் பழைய நோக்கியா 800 டஃப் அல்லது சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஹெச்.எம்.டி. டெரா எம் போன்ற மாடல்களின் மேம்பட்ட வெர்ஷனாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.</p><p>இத்துடன் 3700mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. ஃபீச்சர் போன் மாடலில் இத்தகைய பேட்டரி வழங்கப்படுவது இதுவே முதல் முறை எனலாம். இத்துடன் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இந்த மொபைல் கிட்டத்தட்ட 45 நாட்கள் வரை ஸ்டானட்-பை, 25 மணி நேர டாக்டைம் அல்லது மியூசிக், 23 மணி நேரத்திற்கு டார்ச் ஆன் செய்து வைக்கும் அளவுக்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது.</p><p><strong>பவர் பேங்க்:</strong></p><p>டார்ச் அளவை பொருத்தவரை வழக்கமான ஃபீச்சர் போன் மாடல்களில் இருப்பதைவிட இதில் ஐந்து மடங்கு வரை அளவில் பெரிய டார்ச் லைட் வழங்கப்பட்டுள்ளது. இவைதவிர இந்த மொபைலின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்றாக ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் வசதி உள்ளது.</p><p>இதை கொண்டு பக்கவாட்டில் உள்ள பட்டனை க்ளிக் செய்து இந்த மொபைல் போனை பவர் பேங்க்-ஆக பயன்படுத்த முடியும். இதை கொண்டு ஸ்மார்ட்போனிற்கு முழு சார்ஜ் ஏற்ற முடியாது என்றாலும், அளவில் சிறிய அக்சஸரீக்களை சார்ஜ் செய்து கொள்ளலாம். இத்துடன் இந்த மொபைலுடன் 4-இன்-1 யு.எஸ்.பி. கேபிள் மற்றும் ஏராளமான அடாப்டர்கள் வழங்கப்படுகின்றன.</p><p><strong>இதர அம்சங்கள்:</strong></p><p>புதிய நோக்கியா 300 4ஜி பவர் பேங்க் மாடல் அழைப்புகள், எஸ்.எம்.எஸ். மற்றும் எஃப்.எம். ரேடியோ வசதிகளை இயக்குவதற்கு ஏற்ற லைட் ஓ.எஸ். உடன் வருகிறது. இத்துடன் மைக்ரோ எஸ்.டி. கார்டு சப்போர்ட் உள்ளது. மேலும், 4ஜி வசதி, 0.3MP பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.</p><p>இந்த மொபைல் போன் பிளாக், கிரீன் மற்றும் கோல்டு என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது. முதற்கட்டமாக இந்த மாடல் பிலிப்பைன்ஸ் நாட்டில் விற்பனைக்கு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>அடுத்த Innings-ஐ ஆரம்பிக்கலாமா..!- உதயநிதி ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-shall-we-start-the-next-innings</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-shall-we-start-the-next-innings#comments</comments><guid isPermaLink="false">52b8a0d4-0cab-43aa-a5dd-05f76c447996</guid><pubDate>Mon, 20 Jul 2026 03:24:09 +0000</pubDate><atom:updated>2026-07-20T03:24:09.609Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,திமுக இளைஞர் அணி,Udhayanidhi Stalin,DMK Youth Wing</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/famso83x/udhayanidhistalin004.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/famso83x/udhayanidhistalin004.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தி.மு.க. இளைஞர் அணி இன்று 47ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் தொண்டர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.</aside><h2><strong>47-வது ஆண்டு</strong></h2><p>திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மைப் பிரிவுகளில் ஒன்றான <a href="https://www.maalaimalar.com/topic/திமுக-இளைஞர்-அணி">தி.மு.க. இளைஞர் அணி</a> இன்று தனது 47-வது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி, தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் தொண்டர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். </p><p>அவர் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- </p><h2><strong>அடுத்த Innings-ஐ ஆரம்பிக்கலாமா..!</strong> </h2><p>கழகம் நெருக்கடியில் இருந்த நேரத்தில், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான #MISA_Batch-ஐ கொண்டு தொடங்கப்பட்ட நம் தி.மு.க. இளைஞர் அணி இன்றைக்கு 47ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. </p><p>கொள்கைப் பணி-மக்கள் பணிகளைக் களத்திற்கும் காலத்திற்கும் ஏற்றார்ப் போல் முன்னெடுக்கக் காத்திருக்கும் கழக இளைஞர் அணியின் அடுத்த Innings-ஐ ஆரம்பிக்கலாமா..! என கூறியுள்ளார். </p><p>மேலும் தி.மு.க. இளைஞர் அணி தொடங்கியது தொடர்பான வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">கழகம் நெருக்கடியில் இருந்த நேரத்தில், கழகத் தலைவர் <a href="https://x.com/mkstalin?ref_src=twsrc%5Etfw">@mkstalin</a> அவர்கள் தலைமையிலான <a href="https://x.com/hashtag/MISA_Batch?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#MISA_Batch</a>-ஐ கொண்டு தொடங்கப்பட்ட நம் <a href="https://x.com/dmk_youthwing?ref_src=twsrc%5Etfw">@dmk_youthwing</a> , இன்றைக்கு 47ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. <br><br>கொள்கைப் பணி-மக்கள் பணிகளைக் களத்திற்கும் காலத்திற்கும் ஏற்றார்ப் போல் முன்னெடுக்கக்… <a href="https://t.co/W4aRR7yr6T">pic.twitter.com/W4aRR7yr6T</a></p>&mdash; Udhay (@Udhaystalin) <a href="https://x.com/Udhaystalin/status/2079035337486270716?ref_src=twsrc%5Etfw">July 20, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2><strong>தி.மு.க. இளைஞர் அணி</strong></h2><p>1980 ஜூலை 20 அன்று மதுரையில் நடைபெற்ற விழாவில், தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ துணை அமைப்பாக 'இளைஞர் அணி' முறைப்படி அறிவிக்கப்பட்டது. இதன் முதல் மாநில அமைப்பாளராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றார். சுமார் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக (1980 முதல் 2017 வரை) அவர் இந்த அணியை வழிநடத்தி, கட்சியின் மிக வலுவான அடித்தளமாக மாற்றினார்.  </p><p>தற்போது எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், 2019 ஜூலை 4 முதல் தி.மு.க. இளைஞர் அணியின் மாநில செயலாளராகப் பொறுப்பேற்று வழிநடத்தி வருகிறார்.  இவரின் தலைமையின் கீழ் இளைஞர் அணி உறுப்பினர்கள் சேர்க்கை, நீர்நிலைகள் தூர்வாருதல் மற்றும் பல்வேறு சமூகப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.</p><p>கழகக் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, இல்லந்தோறும் இளைஞர் அணிகளை உருவாக்குவது மற்றும் மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம்களை நடத்துவது போன்ற பணிகளை இவ்வணி முன்னெடுத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>இன்றே உண்ணாவிரதத்தை கைவிட தயார்.. மூன்று நிபந்தனைகள் விதித்த சோனம் வாங்சுக்!</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-scam-protest-sonam-wangchuk-hunger-strike-at-jantar-mantar-with-three-key-demands</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-scam-protest-sonam-wangchuk-hunger-strike-at-jantar-mantar-with-three-key-demands#comments</comments><guid isPermaLink="false">224c70ca-64cb-4990-b91f-cfc48a23f5d2</guid><pubDate>Mon, 20 Jul 2026 03:12:03 +0000</pubDate><atom:updated>2026-07-20T03:12:03.838Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sonam Wangchuk,monsoon session,மழைக்கால கூட்டத்தொடர்,சோனம் வாங்சுக்,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,Cockroach Janata Party</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/sabhj1p2/tn-18.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ Sonam Wangchuk ]]></media:title><media:description type="html"><![CDATA[ Sonam Wangchuk ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/sabhj1p2/tn-18.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பெற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி இளைஞர்கள் கடந்த ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். </p><p>இதில் தொடர்ந்து 20 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த லடாக்கை சேர்ந்த கல்வியாளர் சோனம் வாங்சுக் நேற்று முன் தினம் போலீசாரால் வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்லப்பட்டு சப்தர்ஜங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். </p><p>அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி வேண்டி அவரது மனைவி தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று <a href="https://www.maalaimalar.com/news/national/delhi-high-court-refuses-to-transfer-sonam-wangchuk-to-a-private-hospital">நிராகரித்தது</a>. </p><h2>பேரணி</h2><p>இன்று நாடாளுமன்றம் நோக்கி போராட்டக்காரர்கள் பேரணி நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கு தடை விதிக்கப்பட்டு அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ் ராஜ், மூத்த பாலிவுட் நடிகை சாபனா அஸ்மி ஆகியோர் ஜந்தர் மந்தர் சென்றுள்ளனர். </p><p>மருத்துவமனையில் உண்ணாவிரதத்தை தொடரும் சோனம் வாங்சுக் சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுத்து வருகிறார். </p><h2>நிபந்தனைகள்</h2><p>இந்நிலையில் தனது <a href="https://www.maalaimalar.com/news/national/sonam-wangchuks-father-undertook-a-five-day-fast-indira-gandhi-herself-traveled-to-ladakh-to-pacify-him-historical-background">உண்ணாவிரதத்தை </a>கைவிட வேண்டுமானால் தன் மூன்று நிபந்தனைகளை அரசு ஏற்க வேண்டும் என கோரியுள்ளார்.</p><p>ஒரு துண்டு காகிதத்தில் போலீஸ் கட்டுப்பாட்டை மீறி ரகசியமாக சமூக ஊடகத்தில் அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில்,</p> <p>நிபந்தனை 1:</p><p>இந்தியக் கல்வி முறையில் அண்மையில் நடந்துள்ள தொடர் தோல்விகளுக்கும், குறிப்பாக நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்கும் மத்திய அரசு முழுப் பொறுப்பேற்க வேண்டும். அப்படி அரசு முறைப்படி பொறுப்பேற்று நடவடிக்கை எடுத்தால் நான் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வேன்.</p><p>நிபந்தனை 2</p><p>ஒருவேளை மத்திய அரசு அதற்கு மறுக்கும் பட்சத்தில், எனக்கும் சிஜேபி கட்சி தலைமைப் பொறுப்பாளர்களுக்கும் நாடாளுமன்றத்தின் வாயில் வரை சென்று எங்களது கோரிக்கைகளை நேரடியாகச் சமர்ப்பிக்க அனுமதி வழங்க வேண்டும். அங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் எங்களது கோரிக்கைகளை நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எழுப்புவோம் என்று நேரில் உறுதியளிக்க வேண்டும்.</p><p>நிபந்தனை 3</p><p>என்னுடைய மோசமடைந்து வரும் உடல்நிலையோ அல்லது பிற காரணங்களோ எங்களை நாடாளுமன்றம் நோக்கிச் செல்ல அனுமதிக்கவில்லை என்றால், மதிப்பிற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் நான் அனுமதிக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனைக்கே நேரில் வந்து, கல்விச் சீர்திருத்தங்கள் குறித்த கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் என்ற மேற்சொன்ன உறுதியை எனக்கு வழங்க வேண்டும்.</p><p>இன்று திங்கட்கிழமை நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்குவதால், இந்த மூன்று நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்று நிறைவேற்றப்பட்டால், இன்றைய தினமே தான் உண்ணாவிரதத்தை முறித்துக் கொள்ளத் தயாராக இருப்பதாக சோனம் வாங்சுக் தெரிவித்துள்ளார்.</p> <h2>சட்டவிரோத காவல்</h2><p>மேலும், சப்தர்ஜங் மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டிருப்பதை 'சட்டவிரோத காவல்' என்று அவர் சாடியுள்ளார்.</p><p>தனது கடிதத்தின் முடிவில், "என்னுடைய நடமாடும் சுதந்திரம், பேச்சுரிமை மற்றும் அனைத்துத் தகவல் தொடர்பு வசதிகளும் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ள சப்தர்ஜங் மருத்துவமனையின் சட்டவிரோதக் காவலில் இருந்து..." என்று கையெழுத்திட்டு சோனம் வாங்சுக் தனது குறிப்பை நிறைவு செய்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று கூடுகிறது</title><link>https://www.maalaimalar.com/news/national/parliament-monsoon-session-begin-today</link><comments>https://www.maalaimalar.com/news/national/parliament-monsoon-session-begin-today#comments</comments><guid isPermaLink="false">7824cb9d-6d11-4fb8-8b69-3182b2e561f0</guid><pubDate>Mon, 20 Jul 2026 03:06:52 +0000</pubDate><atom:updated>2026-07-20T03:06:52.252Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>monsoon session,மழைக்கால கூட்டத்தொடர்,parliament,பாராளுமன்றம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-12/t1to0308/parliment.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ parliment]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-12/t1to0308/parliment.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு, <a href="https://www.maalaimalar.com/news/national/ayodhya-ram-temple-donation-scam-pm-silence-unacceptable-rahul-kharge-letter">அயோத்தி ராமர் கோவில்</a> காணிக்கை திருட்டு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் நாட்டையே உலுக்கியுள்ளன.</p><h2>நாடாளுமன்றம் கூடுகிறது</h2><p>இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 13-ந் தேதி வரை நடைபெறுகிறது.</p><p>இந்த கூட்டத்தொடரில் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, வருமான வரி (திருத்தம்) மசோதா, சுப்ரீம் கோர்ட்டு (நீதிபதிகளின் எண்ணிக்கை) திருத்த மசோதா, பிறப்பு மற்றும் இறப்புகள் (திருத்தம்) மசோதா, தேசிய கவுரவத் துக்கு அவமதிப்பு தடுப்பு (திருத்தம்) மசோதா (வந்தே மாதரத்துக்கு இடையூறு செய்தால் 3 ஆண்டு சிறை விதிக்கும் மசோதா). சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அபிவிருத்தி (திருத்தம்) மசோதா ஆகிய 6 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.</p><p>இதில் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா கடுமையான அரசியல் விவாதங்களை தூண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>போர்க்கோலம்</h2><p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பே எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகளை முன்னிருத்தி போர்க்கோலம் பூண்டுள்ளது.</p><p>எனவே நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும்போது இது கடுமையாக எதிரொலிக்கும். காரசார விவாதங்களால் நாடாளுமன்றத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை (21.07.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-29</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-29#comments</comments><guid isPermaLink="false">5b33a5fc-825f-40e7-a24b-9fe745d34aee</guid><pubDate>Mon, 20 Jul 2026 02:55:23 +0000</pubDate><atom:updated>2026-07-20T02:55:23.612Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மின்தடை,TNEB,மின்சார வாரியம்,Power Cut,தமிழ்நாடு மின்சார வாரியம்,சென்னையில் மின்தடை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/ezfadze1/powercut0.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/ezfadze1/powercut0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை:</p><p>சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><p>அந்த வகையில், நாளை <a href="https://www.maalaimalar.com/topic/சென்னையில்-மின்தடை">மின் தடை</a> செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (21.07.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.  அதன்படி, </p><h2><strong>ரெட்ஹில்ஸ்</strong></h2><p>புதுநகர், நாரவாரிகுப்பம் தெரு, தர்காஸ் சாலை, கோமதி அம்மன் நகர், ஜே.ஜே.நகர், தீர்த்தங்கரைப்பட்டு, பாலவிநாயகர் நகர், விவேக்அக்பர் அவென்யூ, பாடியநல்லூர், கும்மனூர், ஜெயதுர்கா நகர், பாலவாயில், மனிஷ்நகர், கண்ணம்பாளையம், சென்றம்பாக்கம், சிரங்காவூர், பெருங்காவூர், சோத்துபெரும்பேடு, காரனோடை, ஆத்தூர், தேவநேரி, சோழவரம், சிறுனியம், நல்லூர், ஒரக்காடு, புதூர், ஞாயிறு, நெற்குன்றம், கும்மனூர், ஆங்காடு, அருமந்தை விச்சூர்.</p><h2><strong>திருமுல்லைவாயல்</strong> </h2><p>மாகரல், கொழுக்கம்பேடு, தாமரைபாக்கம், காரணி.</p><h2><strong>சோழிங்கநல்லூர்</strong></h2><p>கணபதிபுரம், அதிபதி தோட்டம், வரதராஜபுரம், பாரதியார் தெரு, ஆசான் கல்லூரி, ராகவேந்திர நகர், தேவி கருமாரி அம்மன் நகர்.</p><h2><strong>தாம்பரம்</strong></h2><p>நூத்தஞ்சேரி பிரதான சாலை, காந்தி நகர் மற்றும் விரிவாக்கம், அக்ஷயம் ரோஹிலைன், ஆர்.கே.ஜே. எலைட், பஜனை கோவில் தெரு, கம்பர் தெரு, வேலவன் காலனி, தென்றல் நகர், தங்கம் நகர், அன்னை அவந்திகா அபார்ட்மெண்ட், பழனி நகர், வேங்கைவாசல்.</p><h2><strong>பல்லாவரம்</strong></h2><p>மல்லிகை நகர், பி.வி. வைத்தியலிங்கம் சாலை, வேல்ஸ் பல்கலைக்கழகம், ரோஜா தெரு, விக்னேஷ் தெரு, கோகுல் தெரு, மனோரஞ்சிதம் தெரு.</p><h2><strong>பாலவாக்கம்</strong></h2><p>விஜிபி லேஅவுட், அண்ணா சாலை, ராம் கார்டன், சாரி அவென்யூ, சீ ஷெல் அவென்யூ, காயிதே மில்லத் தெரு, ஜீவரத்தினம் 1வது, 2வது மற்றும் 3வது தெரு, சங்கராபுரம் 1வது மற்றும் 2வது தெரு, பாலவாக்கம் குப்பம் 1வது முதல் 5வது தெரு, ஃபாதர் ஹவுஸ் தெரு, எம்.ஜி.ஆர் சாலை, சிவசாமி அவென்யூ, புஷ்பா அவென்யூ, தாகூர் தெரு, எம்.ஜி.ஆர் சாலை 5வது, 6வது மற்றும் 7வது தெரு, சுப்பராவ் தெரு, சின்ன நீலாங்கரை குப்பம், சிங்காரவேலன் தெரு.</p><h2><strong>நசரத்பேட்டை</strong></h2><p>அகரமேல், ஸ்ரீவாரி நகர், காமராஜர் பிரதான சாலை, பாலாஜி நகர், அம்பாள் சிட்டி, சோழன் நகர், வெங்கடேஸ்வரா நகர், மலையம்பாக்கம், 400 அடி வண்டலூர் நெடுஞ்சாலை.</p><h2><strong>சித்தாலப்பாக்கம்</strong></h2><p>ஜெயா நகர், வள்ளுவர் நகர், மாம்பாக்கம் பிரதான சாலை, டி.வி. நகர், மகேஸ்வரி நகர், டி.என்.எச்.பி காலனி, மேடவாக்கம் பாபு நகர், பாம் கார்டன், ராயல் கார்டன், ஐஸ்வர்யா நகர், ஆர்.ஜி. நகர், மாடம்பாக்கம், பிரதான சாலை, கோவிலஞ்சேரி, அகரம் பிரதான சாலை, நூத்தஞ்சேரி, ஜாய் நகர், பாலா கார்டன், தெற்கு மாட வீதி, காந்தி நகர்.</p><h2><strong>ஆவடி</strong></h2><p>சிவ சக்தி நகர், 60 மற்றும் 40 அடி சாலை, ஜோதி நகர், நாகம்மை நகர், அந்தோனி நகர், ஈ.எஸ்.ஐ அண்ணா நகர்.</p><h2><strong>பெருங்களத்தூர்</strong></h2><p>காந்தி தெரு, நேரு நெடுஞ்சாலை, சேரன் தெரு, ஆர் எம் கே நகர், கிருஷ்ணா சாலை, முத்துவேலர் சாலை, காமாட்சி நகர், சேகர் நகர், கல்கி தெரு, டேவிட் நகர், கேனான் அவென்யூ, புதிய பெருங்களத்தூர்.</p><h2><strong>முடிச்சூர்</strong></h2><p>கலைஞர் சாலை, சிவா விஷ்ணு நகர், பஞ்சாயத்து சாலை, காந்தி தெரு, வைகை அம்மன் தெரு, ராஜராஜன் தெரு, லிங்கம் நகர், இ.பி காலனி மேற்கு, லட்சுமி நகர்.</p><h2><strong>அடையாறு</strong></h2><p>சாஸ்திரி நகர் 1வது மற்றும் 3வது சீவார்டு சாலை, பாலகிருஷ்ணா சாலை, ஜெயராம் நகர், குப்பம் பீச் சாலை, ராஜா ஸ்ரீனிவாச நகர் பிரதான சாலை, ராஜகோபாலன் பிரதான சாலை, டீச்சர்ஸ் காலனி 1வது முதல் 4வது தெருக்கள், வேம்புலியம்மன் கோவில் தெரு, சிஜிஇ காலனி, ஜெயராம் தெரு.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு - விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. கைது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vilathikulam-dmk-mla-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vilathikulam-dmk-mla-arrested#comments</comments><guid isPermaLink="false">aa19a0cc-e556-4402-8eb8-f9e0a9087dc3</guid><pubDate>Mon, 20 Jul 2026 02:47:45 +0000</pubDate><atom:updated>2026-07-20T02:47:45.577Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,விஜய்,vijay,Vilathikulam MLA,விளாத்திகுளம் எம்எல்ஏ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/zn2a7cj5/mla.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன்
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/zn2a7cj5/mla.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>கோவில்பட்டியில் நேற்று முன்தினம் இரவு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய அவர், முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் கொடுக்கும் வகையில் பேசியதாக புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>திமுக பொதுக்கூட்டம்</h2><p>தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று முன்தினம் இரவு திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பேசியபோது, சட்டமன்றத்தை கூட்டும்போது உனக்கு (முதலமைச்சர் விஜய்) எலும்பு இருக்காது உடைத்து விட்டு தான் அனுப்பி விடுவோம் சட்டமன்றத்தை கூட்டிப்பார் என்று பேசி இருந்தார்.</p><p>முதலமைச்சர் விஜய்யை குறித்து விமர்சித்தும், சர்ச்சைக்குரிய வகையிலும், மிரட்டும் தொனியிலும் பேசிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதைத்தொடர்ந்து திமுக எம்.எல்.ஏ.வின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.</p><p>விளாத்திக்குளம் எம்எல்ஏ மார்க்கண்டேயனின் இந்த பேச்சு சர்ச்சையான நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக்கழகம் நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.</p><h2></h2> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>இந்த புகாரின் அடிப்படையில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-filed-likely-chance-august-first-week">முதலமைச்சர் விஜய்க்கு</a> மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை விளாத்திகுளத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து அழைத்து சென்றனர்.</p><p>மார்க்கண்டேயனை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர். மேலும் போலீஸ் வாகனத்தை மறித்தனர். இதனால் அவர்களை குண்டு கட்டாக தூக்கிய போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.</p><p>விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் எஸ்பி அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிகிறது. </p><p>விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நேசிக்கிறோம் லியோ.. மைதானத்திலேயே உடைந்து  அழுத மெஸ்ஸி - அர்ஜென்டினா கால்பந்து கூட்டமைப்பு சமாதானம்</title><link>https://www.maalaimalar.com/sports/football/world-cup-final-spain-beat-argentina-in-extra-time-to-claim-second-title-as-messi-bids-farewell-in-tears</link><comments>https://www.maalaimalar.com/sports/football/world-cup-final-spain-beat-argentina-in-extra-time-to-claim-second-title-as-messi-bids-farewell-in-tears#comments</comments><guid isPermaLink="false">7960a84b-3dc4-4d1d-b07c-5a8332f1b8f7</guid><pubDate>Mon, 20 Jul 2026 02:32:53 +0000</pubDate><atom:updated>2026-07-20T02:32:53.768Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Lionel Messi,லியோனல் மெஸ்ஸி,argentina,அர்ஜென்டினா,World Cup football,உலகக்கோப்பை கால்பந்து</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/cgz2uc7v/messi.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மெஸ்ஸி ]]></media:title><media:description type="html"><![CDATA[ மெஸ்ஸி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/cgz2uc7v/messi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கால்பந்து (Football)</category><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அர்ஜென்டினா தோல்வியினால் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக உலகக்கோப்பையை வெல்ல முடியாமல் அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி தொடரில் இருந்து கண்ணீருடன் விடைபெற்றார். </p><h2>வெற்றி </h2><p>23-ஆவது உலகக் கோப்பை கால்நது தொடரின் இறுதிப்போட்டியிஸ் அர்ஜென்டினா அணியை கூடுதல் நேர ஆட்டத்தில் 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி  ஸ்பெயின் வெற்றி வெற்றி பெற்றது. </p><p> அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட்லைப் மைதானத்தில் இந்த இறுதிப் போட்டி நடந்தது. இதில் அர்ஜென்டினாவை வீழ்த்தியதன் மூலம் ஸ்பெயின் அணி 2-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஸ்பெயின் அணிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் <a href="https://www.maalaimalar.com/sports/football/fifa-world-cup-spain-clinch-second-title-as-trump-hands-trophy-after-1-0-win-over-argentina">கோப்பையை </a>வழங்கினார்.</p> <h2>மெஸ்ஸி கண்ணீர்</h2><p>அர்ஜென்டினா தோல்வியினால் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக உலகக்கோப்பையை வெல்ல முடியாமல் அணியின் கேப்டன் மெஸ்ஸி தொடரில் இருந்து கண்ணீருடன் விடைபெற்றார்.</p><p>உலகக்கோப்பையில் மெஸ்ஸியின் கடைசிப் போட்டியாகக் இது கருதப்படுகிறது.</p><p>இந்த தொடரில் ரன்னர்-அப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்ட பின், மைதானத்திலேயே மெஸ்ஸி கண்ணீர் விட்டு அழுதது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.</p> <figure><img alt="மெஸ்ஸி " src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/4i6gswia/messi.jpg" /><figcaption>மெஸ்ஸி </figcaption></figure><h2>நேசிக்கிறோம் லியோ</h2><p>அர்ஜென்டினா கால்பந்து கூட்டமைப்பு தனது எக்ஸ் பக்கத்தில் மெஸ்ஸிக்காக ஒரு நெகிழ்ச்சி பதிவை வெளியிட்டுள்ளது.</p><p>அதில், "எங்கள் கேப்டனே, உங்களுடைய கண்ணீர் எங்களின் கண்ணீர்! எங்கள் வாழ்நாளின் மிகச்சிறந்த மகிழ்ச்சியை நீங்கள் எங்களுக்கு வழங்கியுள்ளீர்கள்.</p><p>உங்களது அர்ப்பணிப்பிற்கும், மாயாஜால ஆட்டத்திற்கும், கடைசி நொடி வரை நீங்கள் கொடுத்த ஒட்டுமொத்த உழைப்பிற்கும் நன்றி. உங்களை நாங்கள் எப்போதும் நேசிக்கிறோம் லியோ!" என்று நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளது.</p><p>2021 மற்றும் 2024 கோபா அமெரிக்கா பட்டங்கள், 2022 உலகக்கோப்பை என அர்ஜென்டினாவின் பொற்காலத்தை வழிநடத்திய மெஸ்ஸியின் சகாப்தம் ஒரு சோகமான இறுதியை எட்டியுள்ளது.</p> <h2>பறிபோன கோல்டன் பூட் </h2><p>இறுதிப்போட்டியில் லியோனல் மெஸ்ஸி கோல் எதுவும் அடிக்காத நிலையில், பிரான்ஸ் அணி கேப்டன் எம்பாப்பே தனது இரண்டாவது '<a href="https://www.maalaimalar.com/sports/football/mbappe-becomes-first-two-time-golden-boot-winner">கோல்டன் பூட்</a>' விருதை வென்றார்.</p><p>இதன் மூலம், ஒன்றுக்கும் மேற்பட்ட உலகக் கோப்பைகளில் அதிக கோல் அடித்த வீரராக திகழும் முதல் வீரர் என்ற பெருமையை இந்த எம்பாப்பே பெற்றார். நான்காவது இடத்தைப் பிடித்த பிரான்ஸ் அணிக்காக எம்பாப்பே மொத்தம் 10 கோல்களையும் நான்கு 'அசிஸ்ட்'களையும்  (கோல் அடிக்க உதவிய வாய்ப்புகள்)  பதிவு செய்தார்.</p><p>மறுபுறம், தனது கடந்த 12 உலகக் கோப்பை ஆட்டங்களில் முதல் முறையாக கோல் அல்லது 'அசிஸ்ட்' எதுவும் இல்லாமல் ஆட்டத்தை முடித்த மெஸ்ஸி, மொத்தம் எட்டு கோல்கள் மற்றும் நான்கு 'அசிஸ்ட்'களுடன் போட்டியை நிறைவு செய்தார்.</p><h2>ஸ்பெயின் வெற்றி</h2><p>ஆட்டத்தின் வழக்கமான நேரத்தின் இறுதியில் அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் என்ஸோ பெர்னாண்டஸ் இரண்டாவது மஞ்சள் அட்டை பெற்று மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்.</p><p>10 பேர் கொண்ட அர்ஜென்டினாவின் பலவீனத்தைப் பயன்படுத்திய ஸ்பெயின், கூடுதல் நேரத்தின் 106-வது நிமிடம் வரலாற்று சிறப்புமிக்க கோலை அடித்தது.</p><p>இந்த ஒற்றைக் கோல் மூலம் ஸ்பெயின் அணி தனது 2வது உலகக்கோப்பை மகுடத்தைச் சூடியது. இதற்கு முன்னதாக 2010-ல் ஸ்பெயின் உலகக்கோப்பையை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 20 ஜூலை 2026: மதுரை மீனாட்சியம்மன் விருஷப சேவை</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-20-july-2026-madurai-meenakshi-amman</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-20-july-2026-madurai-meenakshi-amman#comments</comments><guid isPermaLink="false">0552cd93-4120-4379-b503-e0c71a2eed67</guid><pubDate>Mon, 20 Jul 2026 02:16:32 +0000</pubDate><atom:updated>2026-07-20T02:16:32.418Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/hv83lw9x/meenakshi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Madurai Meenakshi Amman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/hv83lw9x/meenakshi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆடி-4 (திங்கள்கிழமை)</p><p>பிறை : வளர்பிறை</p><p>திதி :   சஷ்டி காலை 8.29 வரை பிறகு சப்தமி</p><p>நட்சத்திரம் : அஸ்தம் நள்ளிரவு 12.07 வரை பிறகு சித்திரை</p><p>யோகம் :  சித்தயோகம்</p><p>ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை</p><p>எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை</p><p>சூலம் : கிழக்கு</p><p>நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை</p> <h2>திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி</h2><p>சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் காமதேனு வாகனத்தில் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் மூலவருக்கு திருமஞ்சனம். ராமநாதபுரம் ஸ்ரீ கோதண்டராம சுவாமி இந்திர விமானத்திலும், இரவு புஷ்பப் பல்லக்கிலும் திருவீதியுலா. மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் விருஷப சேவை. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சனம். நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் திருமஞ்சனம். </p><p>கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதர் காலை பால் அபிஷேகம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீ | பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மஹாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீகற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ அராளகேசி அம்பாள் சமேத ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - துணிவு</p><p>ரிஷபம் - அமைதி</p><p>மிதுனம் - ஆதரவு</p><p>கடகம் - உயர்வு</p><p>சிம்மம் - முயற்சி</p><p>கன்னி - களிப்பு</p><p>துலாம் - நன்மை</p><p>விருச்சிகம் - பரிவு</p><p>தனுசு - உதவி</p><p>மகரம் - ஆர்வம்</p><p>கும்பம் - பயணம்</p><p>மீனம் - கடமை</p> ]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 20.7.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு எடுத்த முயற்சி வெற்றி தரும்
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-20-july-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-20-july-2026#comments</comments><guid isPermaLink="false">02e0f246-d041-4a6a-bbe4-5649092e7f9b</guid><pubDate>Mon, 20 Jul 2026 01:47:57 +0000</pubDate><atom:updated>2026-07-20T01:47:57.589Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/01/27/25436530-rasipalan4.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/01/27/25436530-rasipalan4.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>ராசிபலன்(Rasipalan)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>குடும்ப ஒற்றுமை பலப்படும் நாள். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள்.</p><h2>ரிஷபம்</h2><p>புகழ் மிக்கவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். புதிய பாதை புலப்படும். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள்.</p><h2>மிதுனம்</h2><p>எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். தொழில் சம்பந்தமாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பிள்ளைகளின் வழியில் சுபச்செய்திகள் உண்டு.</p><h2>கடகம்</h2><p>வரவைக் காட்டிலும் செலவு கூடும் நாள். வாகன பழுதுகளால் வாட்டம் ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.</p> <h2>சிம்மம்</h2><p>எதிர்பாராத லாபம் இல்லம் தேடி வரும் நாள். சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்களின் நட்பு ஏற்படும். தொழில் வளர்ச்சி உண்டு.</p><h2>கன்னி</h2><p>யோகமான நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். கொள்கைப்பிடிப்போடு செயல்படுவீர்கள். வீடு கட்டும் முயற்சிக்கு வழிபிறக்கும்.</p><h2>துலாம்</h2><p>சந்தோஷ வாய்ப்புகளை சந்திக்கும் நாள். எடுத்த முயற்சி வெற்றி தரும். ஆடை, ஆபரணப்பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்களால் பலன் கிடைக்கும்.</p><h2>விருச்சிகம்</h2><p>பொருளாதார நிலையை உயர்த்த புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். முன்னேற்றத்திற்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர்.</p> <h2>தனுசு</h2><p>யோசித்து செயல்பட வேண்டிய நாள். அருகில் உள்ளவர்களால் அமைதிக்குறைவு ஏற்படலாம். மக்கள் செல்வங்களால் விரயம் உண்டு.</p><h2>மகரம்</h2><p>உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். கடன் பிரச்சனைகளை சாமர்த்தியமாகப் பேசி சமாளிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும்.</p><h2>கும்பம்</h2><p>நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். உறவினர் பகை உருவாகும். அலுவலகத்தில் வாக்குவாதம் அதிகரிக்கும். மனக்குழப்பம் உண்டு.</p><h2>மீனம்</h2><p>விரோதங்கள் விலகும் நாள். மாற்றினத்தவர்கள் உங்கள் கூட்டு முயற்சிக்கு கைகொடுத்து உதவுவர். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்று பெட்ரோல் - டீசல் விலை நிலவரம் </title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/fuel-price-hike-chennai-petrol-and-diesel-rates-rise-as-hormuz-tensions-push-up-crude-oil-prices</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/fuel-price-hike-chennai-petrol-and-diesel-rates-rise-as-hormuz-tensions-push-up-crude-oil-prices#comments</comments><guid isPermaLink="false">f55f3a9f-9ca1-4f19-9cea-0f215b135334</guid><pubDate>Mon, 20 Jul 2026 01:40:28 +0000</pubDate><atom:updated>2026-07-20T01:40:28.925Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,கச்சா எண்ணெய்,Crude oil,Petrol and Diesel Prices,பெட்ரோல்-டீசல் விலை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/ltvr2ucm/tn-15.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ சென்னை]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/ltvr2ucm/tn-15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/us-military-says-it-has-begun-new-round-of-airstrikes-targeting-iran">ஈரான் போரினால்</a> மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.</p><h2>எண்ணெய் நிறுவனங்கள்</h2><p>இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது. கச்சா எண்ணெய்யை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது.</p><p>அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.</p> <h2>பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்</h2><p>அந்த வகையில் இன்று (20.07.2026 - திங்கள்கிழமை)க்கான பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ. 99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p>அதேவேளை, இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கச்சா எண்ணெய்</h2><p>இன்று சர்வதேச சந்தையில் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 90 டாலர் என விற்பனை ஆகி வருகிறது.</p><p>வரும் நாட்களில் போர் மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுவதால் விலை மேலும் உயரக்கூடும். இதனால் வாகன ஓட்டிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.</p><p>மத்திய அரசு உலக சந்தை நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>FIFA Worldcup: ஸ்பெயின் அணிக்கு உலகக்கோப்பையை வழங்கிய அமெரிக்க அதிபர் டிரம்ப்
</title><link>https://www.maalaimalar.com/sports/football/fifa-world-cup-spain-clinch-second-title-as-trump-hands-trophy-after-1-0-win-over-argentina</link><comments>https://www.maalaimalar.com/sports/football/fifa-world-cup-spain-clinch-second-title-as-trump-hands-trophy-after-1-0-win-over-argentina#comments</comments><guid isPermaLink="false">79f21c6e-875f-42dd-80a5-0cc6f2c54489</guid><pubDate>Mon, 20 Jul 2026 01:32:14 +0000</pubDate><atom:updated>2026-07-20T01:32:14.195Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>trump,டிரம்ப்,Spain,ஸ்பெயின்,உலகக்கோப்பை கால்பந்து,FIFA World Cup</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/hz6dnijs/tn-14.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ டிரம்ப்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிரம்ப்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/hz6dnijs/tn-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கால்பந்து (Football)</category><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>23-ஆவது உலகக் கோப்பை கால்நது தொடரின் இறுதிப்போட்டியிஸ் அர்ஜென்டினா அணியை  1-0 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்ற  ஸ்பெயின் அணிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கோப்பையை வழங்கினார். </p><p>அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட்லைப் மைதானத்தில் இந்த இறுதிப் போட்டி நடந்தது. இதில் <a href="https://www.maalaimalar.com/sports/football/mbappe-becomes-first-two-time-golden-boot-winner">அர்ஜென்டினாவை </a>வீழ்த்தியதன் மூலம் ஸ்பெயின் அணி 2-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.</p><h2>டிரம்ப் </h2><p>விறுவிறுப்பாக நடந்த இந்த இறுதிப்போட்டியை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேரில் கண்டு களித்தார். </p><p>ஸ்பெயின் வெற்றிபெற்ற நிலையில் அவ்வணிக்கு டிரம்ப் உலகக்கோப்பையை வழங்கினார்.</p><p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பும், பிஃபா தலைவர் கியானி இன்பான்டினோவும் சேர்ந்து பிபா உலகக்கோப்பையை ஸ்பெயின் அணியிடம் வழங்கினர்.</p> <figure><img alt="டிரம்ப்" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/t6tjr5cb/tn-13.jpg" /><figcaption>டிரம்ப்</figcaption></figure><h2>ஆட்டம்</h2><p>இறுதிப்போட்டிக்கான பதற்றம் களத்தில் எதிரொலிக்க, ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணிகளும் கோல் கணக்கை தொடங்க தீவிரம் காட்டின. ஆட்டத்தின் முதல் பாதி வரை எந்த அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை.</p><p>இதேபோல் ஆட்டத்தின் 2-ஆவது பாதியிலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதற்காக பல வாய்ப்புகள் உருவான போதிலும் இரு அணி வீரர்களாலும் அவற்றை கோலாக மாற்ற தவறினர்.</p><p>90 நிமிடங்கள் முடிவிலும் ஆட்டம் கோல் அடிக்கப்படமல் சமநிலையில் இருந்தது. இதன் காரணமாக கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. (90+3) நேரத்தின் போது அர்ஜென்டினா வீரர் என்சோ பெர்னான்டஸ் ரெட் கார்டு பெற்று வெளியேற்றப்ட்டார். இதன் காரணமாக ஆட்டத்தின் மீதியை அந்த அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை உருவானது.</p><p>30 நிமிடங்கள்:</p><p>தொடர்ந்து ஆட்டம் கூடுதலாக 30 நிமிடங்கள் வரை நீட்டிக்கப்பட்டது. கூடுதல் நேரத்தில் ஸ்பெயின் வீரர் பெரான் டோரஸ் கோல் அடிக்க அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.</p><p>இதைத் தொடர்ந்து அர்ஜென்டினா அணி கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்ய அதிக முனைப்பு காட்டினர். எனினும், அவர்களது கோல் அடிக்கும் முயற்சி கடைசி வரை அவர்களுக்கு கைகூடவில்லை.</p><p>மறுப்பக்கம் கோல் அடித்த முன்னிலை பெற்ற ஸ்பெயின் அணி டிஃபென்ஸ் ஆட்டத்தில் மட்டும் கவனம் செலுத்தியது.</p><p>வெற்றி:</p><p>ஆட்டத்தின் இறுதி வரை அர்ஜென்டினா அணி கோல் அடிக்க தவறியது. இதையடுத்து ஸ்பெயின் அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று 23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றது.</p> ]]></content:encoded></item><item><title> மத்தியப் பிரதேசத்தில்  பொது சிவில் சட்டம்.. அமைச்சரவை ஒப்புதல் - இன்று சட்டமன்றத்தில் தாக்கல் </title><link>https://www.maalaimalar.com/news/national/madhya-pradesh-ucc-bill-womens-rights-fixed-marriage-age-and-mandatory-registration-of-marriages-and-live-in-relationships</link><comments>https://www.maalaimalar.com/news/national/madhya-pradesh-ucc-bill-womens-rights-fixed-marriage-age-and-mandatory-registration-of-marriages-and-live-in-relationships#comments</comments><guid isPermaLink="false">44c7459f-2679-4b16-a8a1-ec3118c9c686</guid><pubDate>Mon, 20 Jul 2026 01:17:19 +0000</pubDate><atom:updated>2026-07-20T01:17:19.122Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Madhya Pradesh,மோகன் யாதவ்,Mohan Yadav,Uniform Civil Code,பொது சிவில் சட்டம்,மத்தியப் பிரதேசம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/rx4lz5dg/ucc.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ ucc]]></media:title><media:description type="html"><![CDATA[ ucc]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/rx4lz5dg/ucc.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்தியப் பிரதேசத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">பொது சிவில் சட்ட </a>மசோதாவின் வரைவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. </p><p>மத்தியப் பிரதேச மாநிலத்திற்கான இந்த பொது சிவில் சட்ட வரைவை, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான உயர்மட்டக் குழு தயாரித்துள்ளது.</p><p>இன்று (திங்கட்கிழமை) தொடங்கவுள்ள சட்டமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக முதல்வர் மோகன் யாதவ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.</p><h2>மோகன் யாதவ் </h2><p>ஜகதீஷ்பூரில் நடைபெற்ற சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய  <a href="https://www.maalaimalar.com/news/national/ujjain-land-scam-row-bjp-releases-mp-cm-family-property-details-amid-illegal-land-grab-charges">மோகன் யாதவ்</a>, இந்த மசோதா பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும், சமூக சமத்துவத்தை ஏற்படுத்துவதிலும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p> இந்தச் சட்டத்தின்படி, ஆண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 21 ஆகவும், பெண்களுக்கான திருமண வயது 18 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p>மாநிலத்தில் நடக்கும் அனைத்து திருமணங்களையும் முறைப்படி பதிவு செய்வது கட்டாயமாக்கப்படுகிறது.</p><p>வழக்கமான திருமணங்கள் மட்டுமின்றி, லிவ்-இன் ரிலேஷன்ஷிப், தத்தெடுத்தல், வாடகைத் தாய் முறை மற்றும் ஏஆர்டி மருத்துவ முறை மூலமாகப் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் சமமான சட்டப்பூர்வ உரிமைகளை இந்தச் சட்டம் உறுதி செய்கிறது.</p> <h2>முஸ்லிம்கள்</h2><p>இந்தச் சட்டத்திற்கு பொதுமக்களிடையே, குறிப்பாக சிறுபான்மையினர் மத்தியில் பெரும் ஆதரவு இருப்பதாக முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.</p><p>அவர் கூறுகையில், "முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த 80 சதவீதப் பெண்களும், 40 சதவீத ஆண்களும் இந்த பொது சிவில் சட்ட மசோதாவை முழுமையாக ஆதரிக்கின்றனர்.</p><p>சமூக நல்லிணக்கம், பெண் மேம்பாடு மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை நோக்கமாகக் கொண்ட இந்த மசோதாவிற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது அரசியல் லாபங்களைக் கடந்து ஆதரவு அளிக்க வேண்டும்." என தெரிவித்துள்ளார்.</p><h2>காங்கிரஸ்</h2><p>இந்த விவகாரத்தை வெறும் 'இந்து-முஸ்லிம்' மதக் கண்ணோட்டத்திலும், வாக்கு வங்கி அரசியலாகவும் மட்டுமே பார்ப்பதாக காங்கிரசை முதல்வர் மோகன் யாதவ் சாடியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தொடர்ச்சியாக 9-ஆவது நாள்... ஈரான் மீது வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்திய அமெரிக்கா!</title><link>https://www.maalaimalar.com/news/world/us-military-says-it-has-begun-new-round-of-airstrikes-targeting-iran</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-military-says-it-has-begun-new-round-of-airstrikes-targeting-iran#comments</comments><guid isPermaLink="false">decb2466-f892-496c-9876-da154b140345</guid><pubDate>Mon, 20 Jul 2026 00:29:56 +0000</pubDate><atom:updated>2026-07-20T00:29:56.895Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,ஈரான்,Iran,us</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/hblxu3ks/irn-undr-atk.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Iran Under Attack]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/hblxu3ks/irn-undr-atk.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரானைக் குறிவைத்து வான்வழி தாக்குதல்களை தொடங்கியுள்ளதாக <a href="https://www.maalaimalar.com/topic/US">அமெரிக்க</a> இராணுவம் தெரிவித்துள்ளது. இதன் மூலம்</p><p>தொடர்ந்து ஒன்பதாவது இரவாக நடைபெறும் இந்த தாக்குதல்களை அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளை மையம் உறுதிப்படுத்தி இருக்கிறது.</p><p>உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:30 மணியளவில் வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக <a href="https://www.maalaimalar.com/topic/iran">ஈரானில்</a> உள்ள ஆர்வலர்கள் தெரிவிக்க தொடங்கினர்.</p><p><strong>பதிலடி தாக்குதல்:</strong></p><p>"ஹார்முஸ் நீரிணையை கடந்து செல்லும் வர்த்தக கப்பல்கள் மற்றும் பொதுமக்கள் மாலுமிகளை தாக்குவதற்கு பயன்படுத்தப்படும் ஈரானிய இராணுவத்தின் திறன்களை இந்த தாக்குதல்கள் தொடர்ந்து சீர்குலைக்கும்" என்று மத்திய கட்டளை மையம் ஒரு அறிக்கையில் கூறியது.</p><p>அமெரிக்க படையினர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஈரான் மீது மேலும் வான்வழி தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா, மற்றொரு படை வீரரின் மரணத்தை அறிவித்தது. மேலும், ஈரான் ஜோர்டான் மீது ஏவுகணைகளை ஏவியது, இது மோதலை அண்டை நாடான இஸ்ரேலுக்கு விரிவுபடுத்தும் அபாயத்தை ஏற்படுத்தியது.</p><p><strong>முழு அளவிலான போர்:</strong></p><p>சண்டையை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவருவதற்காக கடந்த மாதம் ஏற்படுத்தப்பட்ட இடைக்கால ஒப்பந்தம் சிதைந்துவிட்டதாலும், ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து பெருமளவில் முடங்கிவிட்டதாலும், அமெரிக்காவும் ஈரானும் படிப்படியாக முழு அளவிலான போருக்கு நெருங்கி வந்துள்ளன. இரு தரப்பினரும் மில்லியன் கணக்கான மக்கள் நம்பியிருக்கும் பொதுமக்கள் உள்கட்டமைப்புகளை குறிவைத்துள்ளனர்.</p><p>ஈராக்கில் சனிக்கிழமையன்று சுட்டு வீழ்த்தப்பட்ட ஈரானிய ஆளில்லா விமானத்தை 'கட்டுப்பாட்டுடன் வெடிக்கச் செய்ததில்' ஒரு படை வீரர் கொல்லப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.</p><p><strong>17 உயிரிழப்புகள்:</strong></p><p>முன்னதாக, ஜோர்டானில் வெள்ளிக்கிழமை நடந்த தாக்குதலில் துருப்புக்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, ஈரானின் துணை இராணுவ படையான புரட்சிகர காவலர்களை தங்கள் தாக்குதல்கள் குறிவைத்ததாக இராணுவம் கூறியிருந்தது. அந்த தாக்குதலுக்கு பிறகு ஒரு படை வீரர் காணாமல் போன நிலையில், "அடையாளம் தெரியாத எச்சங்கள்" ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருவதாக இராணுவத்தின் புதிய அறிக்கை தெரிவித்தது. போர் தொடங்கியதில் இருந்து, இதுவரை 17 அமெரிக்க படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.</p><p>தற்போது இரண்டாவது வாரமாக தொடரும் இந்த மீண்டும் தொடங்கியுள்ள துப்பாக்கி சண்டைகளில், ஈரானில் உள்ள பாலங்கள், கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் மின்சார வசதிகளை அமெரிக்கா குறிவைத்துள்ளது. மத்திய கிழக்கு முழுவதும் அமெரிக்காவுடன் கூட்டணி வைத்துள்ள நாடுகளை தெஹ்ரான் தாக்கி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஈரான் பயணம் வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/world/india-advises-citizens-to-postpone-travel-to-iran</link><comments>https://www.maalaimalar.com/news/world/india-advises-citizens-to-postpone-travel-to-iran#comments</comments><guid isPermaLink="false">39527230-f5a0-43c1-87e6-7c7efc0db748</guid><pubDate>Mon, 20 Jul 2026 00:00:21 +0000</pubDate><atom:updated>2026-07-20T00:00:21.345Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,ஈரான்,Iran</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/2ml382zb/iran-2.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Iran]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/2ml382zb/iran-2.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரானில் அதிகரித்து வரும் நிலையற்ற சூழல் காரணமாக, அங்கு செல்வதைத் தள்ளிவைக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது</p><p>ஈரானில் நிலவும் நிலையற்ற தன்மை மற்றும் மோதல்கள் அதிகரித்து வருவதால், பாதுகாப்பு சூழல் சீரடையும் வரை அங்கு செல்வதை தள்ளிவைக்குமாறும், ஏற்கனவே அங்கு இருப்பவர்கள் கிடைக்கக்கூடிய வணிக ரீதியான விமான சேவைகள் மூலம் வெளியேறுவது குறித்து பரிசீலிக்குமாறும் <a href="https://www.maalaimalar.com/topic/india">இந்திய</a> குடிமக்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது.</p><p><strong>அரசு அறிவுறுத்தல்:</strong></p><p>திருத்தப்பட்ட பயண வழிகாட்டுதலில், "சமீப நாட்களாக ஈரானில் நிலையற்ற தன்மை மற்றும் மோதல்கள் அதிகரித்துள்ளன என்றும், இதனால் இந்திய குடிமக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் வலியுறுத்தியது.</p><p>எந்தவொரு நோக்கத்திற்காகவும் ஈரானுக்கு செல்ல திட்டமிடும் இந்திய குடிமக்கள், பாதுகாப்பு சூழல் சீரடையும் வரை தங்கள் பயணத்தை தற்காலிகமாக தள்ளிவைக்க வேண்டும். அவர்கள் நிலவரத்தை முழுமையாக அறிந்துகொள்ள செய்திகளை தொடர்ந்து கவனிக்க வேண்டும்.</p><p>மேலும் நாட்டின் தெற்கு கடற்கரைப் பகுதிகள் போன்ற அதிக இராணுவ நடவடிக்கைகள் நடைபெறும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்" என்று கூறியுள்ளது.</p><p><strong>உயர்ந்த எச்சரிக்கை:</strong></p><p>ஏற்கனவே ஈரானில் உள்ள இந்தியர்கள், கிடைக்கக்கூடிய விமான சேவைகளைப் பயன்படுத்தி தற்காலிகமாக அங்கிருந்து வெளியேறுவது குறித்து பரிசீலிக்குமாறும் அது அறிவுறுத்தியது. ஈரானிலேயே தொடர்ந்து இருக்க முடிவு செய்பவர்கள் "மிக உயர்ந்த அளவிலான எச்சரிக்கையுடன்" இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர் என்று தூதரகம் கூறியது. </p><p>உள்ளூர் அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் இந்தியக் குடிமக்களைத் தூதரகம் வலியுறுத்தியது. </p><p>தூதரகத்தில் இதுவரை பதிவு செய்யாத ஈரானில் உள்ள அனைத்து இந்தியர்களும் உடனடியாக பதிவு செய்துகொள்ளுமாறும், கூடுதல் தகவல்களுக்கு தூதரகத்தின் இணையதளம் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களைத் தொடர்ந்து கவனிக்குமாறும் அது கேட்டுக்கொண்டது. </p><p>பிராந்திய பதற்றங்கள் மற்றும் இராணுவ நடவடிக்கைகள் அதிகரித்ததை தொடர்ந்து ஈரானில் ஏற்பட்டுள்ள புதிய பாதுகாப்பு கவலைகளுக்கு மத்தியில் இந்த வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. </p><p><strong>அவசர உதவி எண்:</strong></p><p>கடந்த சில நாட்களில், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. மேலும், மேற்கு ஆசியா முழுவதும் உள்ள அமெரிக்க நட்பு நாடுகளை ஈரான் தாக்கியுள்ளது.</p><p>மேற்கு ஆசியாவில் மோதல்கள் தீவிரமடைந்த காலங்களில் இந்தியா இதற்கு முன்பும் இதேபோன்ற வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது; மேலும் உதவிக்கு தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறு தனது குடிமக்களை வலியுறுத்தியுள்ளது.</p><p>உதவி தேவைப்படும் குடிமக்களுக்காக அவசர உதவி எண்களையும் இந்திய தூதரகம் பகிர்ந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இருமுறை கோல்டன் பூட் விருது வென்று சாதனை படைத்த எம்பாப்பே</title><link>https://www.maalaimalar.com/sports/football/mbappe-becomes-first-two-time-golden-boot-winner</link><comments>https://www.maalaimalar.com/sports/football/mbappe-becomes-first-two-time-golden-boot-winner#comments</comments><guid isPermaLink="false">4e33d4be-5542-4c3d-bc20-3276adab6887</guid><pubDate>Sun, 19 Jul 2026 23:35:25 +0000</pubDate><atom:updated>2026-07-19T23:35:25.880Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Kylian Mbappe,உலகக் கோப்பை கால்பந்து,FIFA World Cup,கிலியன் எம்பாப்பே</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/6vskdz2z/mbappe-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kylian Mbappe]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/6vskdz2z/mbappe-1.png?w=280" width="280"></media:thumbnail><category>கால்பந்து (Football)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கிலியன் எம்பாப்பே இப்போது <a href="https://www.maalaimalar.com/topic/fifa-world-cup">உலகக் கோப்பை</a> 'கோல்டன் பூட்' (Golden Boot) விருதின் உரிமையாளராக உள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி ஸ்பெயினிடம் 1-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தபோது லியோனல் மெஸ்ஸி கோல் எதுவும் அடிக்காத நிலையில், <a href="https://www.maalaimalar.com/topic/mbappe">எம்பாப்பே</a> தனது இரண்டாவது 'கோல்டன் பூட்' விருதை வென்றார். </p><p>இதன் மூலம், ஒன்றுக்கும் மேற்பட்ட உலகக் கோப்பைகளில் அதிக கோல் அடித்த வீரராக திகழும் முதல் வீரர் என்ற பெருமையை இந்த எம்பாப்பே பெற்றார். நான்காவது இடத்தைப் பிடித்த பிரான்ஸ் அணிக்காக எம்பாப்பே மொத்தம் 10 கோல்களையும் நான்கு 'அசிஸ்ட்'களையும் (கோல் அடிக்க உதவிய வாய்ப்புகள்) பதிவு செய்தார்.</p><p><strong>8 கோல் - 4 அசிஸ்ட்:</strong></p><p>மறுபுறம், தனது கடந்த 12 உலகக் கோப்பை ஆட்டங்களில் முதல் முறையாக கோல் அல்லது 'அசிஸ்ட்' எதுவும் இல்லாமல் ஆட்டத்தை முடித்த மெஸ்ஸி, மொத்தம் எட்டு கோல்கள் மற்றும் நான்கு 'அசிஸ்ட்'களுடன் போட்டியை நிறைவு செய்தார்.</p><p>போட்டியின் சிறந்த வீரருக்கான 'கோல்டன் பால்' (Golden Ball) விருதை மூன்றாவது முறையாக வென்று சாதனையை நீட்டிக்க மெஸ்ஸி நம்பிக்கையுடன் இருந்தார். 1978-இல் இந்த விருது அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து பலமுறை வென்ற ஒரே வீரர் அவர்தான். 39 வயதில் அர்ஜென்டினாவைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்றது அவருக்கு மற்றொரு விருதை வெல்வதற்கான வலுவான வாய்ப்பை அளித்தது.</p><p><strong>தொடரும் சோகம்:</strong></p><p>மெஸ்ஸியின் புகழ்பெற்ற விளையாட்டு வாழ்க்கையில் அவர் இதுவரை வெல்லாத சிலவற்றில் 'கோல்டன் பூட்' விருதும் ஒன்று. ஆனால் இறுதிப் போட்டி வார இறுதிக்கு அவர் முன்னிலையில் சென்றார். அரையிறுதி வரை மெஸ்ஸி மற்றும் எம்பாப்பே இருவரும் தலா எட்டு கோல்களை அடித்திருந்தனர், ஆனால் கூடுதல் 'அசிஸ்ட்' கணக்கில் மெஸ்ஸி முன்னிலையில் இருந்தார்.</p><p>பின்னர், மூன்றாம் இடத்திற்கான போட்டியில் பிரான்ஸ் அணி இங்கிலாந்திடம் 6-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தபோது, ​​எம்பாப்பே இரண்டு கோல்களை அடித்ததுடன் ஒரு 'அசிஸ்ட்' வழங்கினார். இதன் மூலம், 1970-இல் ஜெர்மனியின் ஜாம்பவான் கெர்ட் முல்லர் 10 கோல்களை அடித்த பிறகு, ஒரு உலகக் கோப்பையில் 10 கோல்களை அடித்த முதல் வீரராக எம்பாப்பே திகழ்கிறார்.</p>]]></content:encoded></item><item><title>உலகக் கோப்பை கால்பந்து: அர்ஜென்டினாவை வீழ்த்தி 2-வதுமுறை கோப்பையை வென்றது ஸ்பெயின்</title><link>https://www.maalaimalar.com/sports/football/fifa-world-cup-spain-beat-argentina-to-win-world-cup</link><comments>https://www.maalaimalar.com/sports/football/fifa-world-cup-spain-beat-argentina-to-win-world-cup#comments</comments><guid isPermaLink="false">ee4dba69-a18b-42a5-a553-7baf3519295b</guid><pubDate>Sun, 19 Jul 2026 22:19:04 +0000</pubDate><atom:updated>2026-07-19T22:19:04.805Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உலகக் கோப்பை கால்பந்து,FIFA World Cup</media:keywords><media:content height="3201" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/2uq5cwip/AP07202026000139B.jpg" width="4800"><media:title type="html"><![CDATA[ உலகக் கோப்பை கால்பந்து]]></media:title><media:description type="html"><![CDATA[ உலகக் கோப்பை கால்பந்து]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/2uq5cwip/AP07202026000139B.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கால்பந்து (Football)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியிஸ் அர்ஜென்டினா அணியை ஸ்பெயின் அணி 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் ஸ்பெயின் அணி 2-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.</p><p>அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட்லைஃப் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. </p><p>இந்தப் போட்டியில் 4-ஆவது முறை கோப்பை வெல்லும் முனைப்பில் அர்ஜென்டினா அணியும், 2-ஆவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் ஸ்பெயின் அணியும் களமிறங்கின. </p><p><strong>சமநிலை:</strong></p><p>இறுதிப்போட்டிக்கான பதற்றம் களத்தில் எதிரொலிக்க, ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணிகளும் கோல் கணக்கை தொடங்க தீவிரம் காட்டின. ஆட்டத்தின் முதல் பாதி வரை எந்த அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை. </p><p>இதேபோல் ஆட்டத்தின் 2-ஆவது பாதியிலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதற்காக பல வாய்ப்புகள் உருவான போதிலும் இரு அணி வீரர்களாலும் அவற்றை கோலாக மாற்ற தவறினர். </p><p>90 நிமிடங்கள் முடிவிலும் ஆட்டம் கோல் அடிக்கப்படமல் சமநிலையில் இருந்தது. இதன் காரணமாக கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. (90+3) நேரத்தின் போது அர்ஜென்டினா வீரர் என்சோ பெர்னான்டஸ் ரெட் கார்டு பெற்று வெளியேற்றப்ட்டார். இதன் காரணமாக ஆட்டத்தின் மீதியை அந்த அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை உருவானது.</p><p><strong>30 நிமிடங்கள்:</strong></p><p>தொடர்ந்து ஆட்டம் கூடுதலாக 30 நிமிடங்கள் வரை நீட்டிக்கப்பட்டது. கூடுதல் நேரத்தில் ஸ்பெயின் வீரர் பெரான் டோரஸ் கோல் அடிக்க அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. </p><p>இதைத் தொடர்ந்து அர்ஜென்டினா அணி கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்ய அதிக முனைப்பு காட்டினர். எனினும், அவர்களது கோல் அடிக்கும் முயற்சி கடைசி வரை அவர்களுக்கு கைகூடவில்லை. </p><p>மறுப்பக்கம் கோல் அடித்த முன்னிலை பெற்ற ஸ்பெயின் அணி டிஃபென்ஸ் ஆட்டத்தில் மட்டும் கவனம் செலுத்தியது.</p><p><strong>வெற்றி:</strong></p><p>ஆட்டத்தின் இறுதி வரை அர்ஜென்டினா அணி கோல் அடிக்க தவறியது. இதையடுத்து ஸ்பெயின் அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று 23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றது.</p>]]></content:encoded></item></channel></rss>