<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 04 Sep 2026 11:07:31 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 4 செப். 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-4-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-4-september-2026#comments</comments><guid isPermaLink="false">acd0fb12-0d4b-4cd6-aa47-ddb31fcdc0f5</guid><pubDate>Fri, 04 Sep 2026 05:01:07 +0000</pubDate><atom:updated>2026-09-04T10:25:23.151Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/fhfb2j51/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ live news]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/fhfb2j51/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://maalai-malar.quintype.com/story/e50268af-e749-426a-a317-7ee47149cef8">கம்பத்தில் மோதிய பயணிகள் விமானம்.. ஸ்ரீநகர் விமான நிலையத்தில் பரபரப்பு</a></p><p>*யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>*அதிகாரிகள் விசாரிப்பார்கள் என்று ஸ்ரீநகர் விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/detergent-powder-delivered-instead-of-ordered-graphics-card-consumer-commission-orders-30000-compensation">கிராபிக்ஸ் கார்டு ஆர்டர் செய்தவருக்கு டிடர்ஜென்ட் பவுடர் டெலிவரி.. ரூ.30,000 இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு</a><br></p><p>*ரூ.1.98 லட்சம் தொகை முழுமையாகத் திரும்பச் செலுத்தப்பட்டது.</p><p>*மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு கிடைக்க வேண்டும் என்பதில் வாடிக்கையாளர் உறுதியாக இருந்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/leave-kenya-president-issues-stern-order-to-tata-chemicals-what-is-the-issue">கென்யாவை விட்டு வெளியேறுங்கள்.. டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்துக்கு அதிரடி உத்தரவிட்ட அதிபர் - என்ன பிரச்சனை?</a></p><p>*கென்யா அரசு வெறுமனே இயற்கை வளங்களை வெட்டி எடுத்து ஏற்றுமதி செய்வதை மட்டும் விரும்பவில்லை.</p><p>*ஆண்டுதோறும் 3.5 லட்சம் டன்களுக்கும் அதிகமான சோடா ஆஷ் ஏற்றுமதி செய்யப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/two-workers-rescued-alive-from-tunnel-of-nepal">நேபாளத்தின் திரிசூலி நீர்மின் நிலைய சுரங்கத்தில் இருந்து 2 தொழிலாளர்கள் உயிருடன் மீட்பு</a></p><p> *  சுரங்கப் பாதைக்குள் இருந்து மக்கள் பேசுவது குறித்த தகவல் கிடைப்பது ஒரு நம்பிக்கைக்குரிய அறிகுறியாகும்.

* மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-military-academy-young-officers-display-combat-skills" rel="nofollow">சென்னை ராணுவ அகாடமியில் இளம் அதிகாரிகளின் தீரச்செயல் நிகழ்ச்சி</a></p><p>* லெப்டினன்ட் ஜெனரல் மைக்கேல் ஏ.ஜே. பெர்னாண்டஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.</p><p>* இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/namakkal-road-accident-four-students-killed-chief-minister-financial-assistance" rel="nofollow">சாலை விபத்தில் 4 மாணவிகள் பலி- முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு</a></p><p>*  உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் வழங்க உத்தரவு.</p><p>*   4 பேர் தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் உயிரிழந்துள்ளனர்.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/6fc9fe6c-9fe9-4806-89a0-4979806f6196">CJP போராட்டத்தில் மண்டையை உடைத்தேன்.. ஜெயிலுக்கு செல்லவில்லை - பெருமையாக சொன்ன இன்ஸ்டா பிரபலத்தால் சர்ச்சை</a></p><p>*தனது தொடர்புகளே தன்னைத் தப்பவைத்ததாக அவர் அந்த பாட்காஸ்டில் பேசியிருக்கிறார்.</p><p>*இப்படிப்பட்ட குற்றவாளிக்கு உங்கள் கட்சியினர் ஏன் பாதுகாப்பு அளிக்கிறார்கள்? என ராகுல் கேள்வி </p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/krishna-jayanthi-governor-arlekar-wishes">கடமையை செய்வதையே கிருஷ்ணர் வாழ்க்கை கற்றுத் தருகிறது - ஆளுநர் அர்லேகர் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து</a></p><p>* கரியவன் கருணையில் பெரியவன் இறைவடிவங்களில் பன்முகத்தன்மை கொண்ட பரந்தாமன் </p><p>* இப்படி எல்லா நிலைகளிலும் ஏகமாய் பொருந்தும் இறைவடிவம் இவன் ஒருவனே!<br></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/we-will-not-abandon-sanitation-workers-ministers-assure-protesters">தூய்மை பணியாளர்களை விட்டுக்கொடுக்க மாட்டோம் - போராட்டம் நடத்தியவர்களிடம் உறுதி அளித்த அமைச்சர்கள்</a></p><p>* தூய்மை பணியாளர்களுக்கு செய்யாமல் வேறு யாருக்கு செய்ய போகிறோம்.</p><p>* தூய்மை பணியாளர்கள் போராட இங்கே அமருவதால் முதல்வர் விஜய்க்கு தூக்கம் வருவதில்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/harassment-issue-stray-dogs-saved-a-woman-from-a-young-man">பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி - சிறுவனிடம் இருந்து பெண்ணை காப்பாற்றிய தெருநாய்கள்</a></p><p>பெட்டிக்கடை தீ வைப்பு சம்பவத்தை தாண்டி அதிர்ச்சி தரும் வேறு ஒரு கொடூர சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது தெரிய வந்தது.</p><p>அந்த நாய்கள் மீண்டும் அந்த நபரை பார்த்து குரைத்து கொண்டே நின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/arms-paralyzed-in-a-road-accident-doctors-cured-the-condition-by-delivering-electric-shocks-to-the-spinal-cord">சாலை விபத்தில் செயலிழந்த கைகள்.. தண்டுவடத்தில் மின் அதிர்ச்சி தந்து குணப்படுத்திய மருத்துவர்கள்</a></p><p>*பாதிக்கப்பட்ட பகுதிக்குக் கீழ் தொடு உணர்ச்சி மட்டுமே இருக்கும். </p><p>*தண்டுவடத்தில் Electrodes எனும் சிறிய மின்முனைகள் பொருத்தப்படும்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vice-president-cp-radhakrishnan-tomorrow-chennai-visit">துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை சென்னை வருகை</a></p><p>* துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வந்து செல்லும் பகுதிகளான மீனம்பாக்கம், கிண்டி, நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. </p><p>* இதய வால்வு மற்றும் கட்டமைப்பு ரீதியான இதய நோய்களுக்கான சிகிச்சையை மேம்படுத்துவதற்காக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் இந்தியா வால்வ் பதிவேட்டை தொடங்கி வைக்கிறார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/operation-talash-3357-missing-children-rescued-bihar-police-takes-decisive-action">ஆபரேஷன் தலாஷ்: காணாமல் போன 3,357 குழந்தைகள் மீட்பு - அதிரடி காட்டிய பீகார் காவல்துறை<br></a></p><p>*3,359 காணாமல் போன குழந்தைகளை கண்டறிந்துள்ளனர்.<br><br>*குழந்தை திருமணங்கள் தொடர்பாக நிலுவையில் உள்ள கடத்தல் வழக்குகளையும் மறுவிசாரணை செய்து வருகின்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/estonian-defence-minister-resigns-over-768-crore-arms-procurement-scandal-involving-an-indian-company">இந்திய நிறுவனத்துடன் ரூ. 768 கோடி ஆயுத கொள்முதல் ஊழல் - எஸ்டோனிய பாதுகாப்பு அமைச்சர் ராஜினாமா</a><br></p><p>*ரஷியா உடனான போரில் கடும் ஆயுத பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள உக்ரைனுக்கு உதவ எஸ்டோனியா முன்வந்தது.</p><p>*ரஷியா உடனான போரில் கடும் ஆயுத பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள உக்ரைனுக்கு உதவ எஸ்டோனியா முன்வந்தது.<br><br></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/a-first-step-for-india-gslv-f17-rocket-successfully-launched-into-space-pm-modi-expresses-pride">இந்தியாவுக்கு முதல் படி.. விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்த GSLV-F17 ராக்கெட் - பிரதமர் மோடி பெருமிதம்</a></p><p>*மோடி பெருமிதம் பொங்க எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.</p><p>*நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு தேவையான முக்கிய தரவுகளை வழங்கும்.</p> <p><a href="https://maalai-malar.quintype.com/story/f78f143f-34cc-428d-abcc-b733ecc013f5">FCRA மசோதாவை ஆய்வு செய்ய 31 எம்.பி.க்கள் கொண்ட கூட்டுக்குழு அமைப்பு.. பின்னணி என்ன?</a></p><p>*எப்சிஆர்ஏ மசோதாவை கடந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கொண்டு வர எத்தனித்தது.</p><p>* மசோதாவானது நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பி ஆய்வு செய்ய முடிவெடுக்கப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-wishes-to-teachers-day">அனைவரையும் முன்னேற்றும் ஆசிரியர்கள் வாழ்வும் ஏற்றம் பெற வகை செய்ய வேண்டும்! அன்புமணி ராமதாஸ்</a></p><p>* உலகில் அனைவராலும் கொண்டாடப்படுபவர்களாக இருப்பவர்கள் ஆசிரியர்கள் தான். அரசர்களாலும் மதிக்கப்படுபவர்கள் அவர்கள் தான். </p><p>* கடந்த ஆண்டு முதல் ஆசிரியர்களுக்கு புதிய நெருக்கடி ஒன்றும் உண்டாகியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-04-09-2026">GOLD PRICE TODAY : இன்றும் உயர்ந்த தங்கம் விலை- எவ்வளவு தெரியுமா?</a></p><p>* தங்கம் இன்று கிராமுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 360 ரூபாய்க்கும் சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-pallikaranai-marshland-retaining-wall-a-plan-for-destruction-not-restoration">பள்ளிக்கரணை சதுப்புநிலத் தடுப்புச் சுவர்: "மீட்சி அல்ல, அழிவுத் திட்டம்!"- அன்புமணி ராமதாஸ் ஆவேசம்</a></p><p>* இனிவரும் காலங்களில்  பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதிக்கு வெளிநாட்டு பறவைகள் வலசை வருவது முழுமையாக நின்று விடும்.</p><p>* பள்ளிக்கரணை உள்ளிட்ட கடற்கரையோர ஈரநிலங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பும் இந்தத் திட்டத்தின் முதன்மையான 4 நோக்கங்களில் ஒன்றாக திமுக அரசு அறிவித்தது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/krishna-jayanthi-president-droupadi-murmu-and-pm-modi-wish">கிருஷ்ண ஜெயந்தி: ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து</a></p><p>* கிருஷ்ணர் சத்தியம், நேர்மை, நீதி, கருணை மற்றும் தன்னலமற்ற செயல் ஆகியவற்றின் பாதையைக் காட்டினார்.</p><p>* பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீகச் செய்திகளில் தன்னலமற்ற செயலுக்கான ஆழ்ந்த உத்வேகம் அடங்கியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/krishna-jayanthi-festival-cm-vijay-wishes">கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அனைவருக்கும் நல்வாழ்த்துகள் - முதலமைச்சர் விஜய்</a></p><p>* அநீதிக்கு எதிரான அறம் வெல்லும், எத்தகைய சூழலிலும் கடமை தவறாது செயல்பட வேண்டும்.</p><p>* ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசங்களைப் பின்பற்றி உயரிய வாழ்வியல் நெறிகளுடன் அன்பும் அறமும் தழைத்தோங்கும் நல்லுலகைப் படைத்திடுவோம்.</p>]]></content:encoded></item><item><title>பாகிஸ்தான்: பலுசிஸ்தானில்
ராணுவ வாகனங்கள் மீது தாக்குதல் - 25 வீரர்கள் பலி!</title><link>https://www.maalaimalar.com/news/world/pakistan-attack-on-army-vehicles-in-balochistan-25-soldiers-killed</link><comments>https://www.maalaimalar.com/news/world/pakistan-attack-on-army-vehicles-in-balochistan-25-soldiers-killed#comments</comments><guid isPermaLink="false">60e57d58-5b3a-4b3a-a6eb-99b1359f70f5</guid><pubDate>Fri, 04 Sep 2026 11:00:59 +0000</pubDate><atom:updated>2026-09-04T11:00:59.262Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Pakistan,ராணுவ வீரர்கள்,Soldiers,Baloch Liberation Army,பலூச் விடுதலைப் படை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/4qhvhtdg/New-Project-2026-09-04T162943.848.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பாகிஸ்தான்: பலுசிஸ்தானில்
ராணுவ வாகனங்கள் மீது தாக்குதல் - 25 வீரர்கள் பலி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/4qhvhtdg/New-Project-2026-09-04T162943.848.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனங்கள் மீது நடத்தப்பட்ட இரு வேறு தாக்குதல்களில் <strong>25 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்</strong>. மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.</p><p>இந்த தாக்குதல்களுக்கு பலுசிஸ்தான் விடுதலைப் படை பொறுப்பேற்றுள்ளது. பலுசிஸ்தானின் ஜியாரத் மற்றும் சுரப் மாவட்டங்களில் இந்த தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.</p><p>இந்த தாக்குதல்கள் தொடர்பான வீடியோவையும் பலுசிஸ்தான் விடுதலைப் படை வெளியிட்டு உள்ளது. </p><p>ஒரு நிமிடம் 11 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில் பாகிஸ்தான் ராணுவ வாகனங்கள் தீப்பிடித்து எரிவதும், அதன் அருகே ஆயுதம் ஏந்திய <a href="https://www.maalaimalar.com/news/world/soldiers-in-balochistan-are-physically-weak-pakistani-minister-807973">பலுசிஸ்தான் விடுதலை படை </a>அமைப்பினர் இருப்பதும், உடல்கள் சாலையில் கிடப்பதும் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.</p><p>சமீப நாட்களாக பலுசிஸ்தான் முழுவதும் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் காவல் படைகளை குறிவைத்து பலுசி ஆயுதக் குழுக்கள் நடத்தும் தாக்குதல்கள் அதிகரித்து, பெரும் உயிரிழப்புகளும், உள்கட்டமைப்பு சேதங்களும் ஏற்பட்டு வருகின்றன. </p><p>கடந்த மாதம், பலுசிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் படைகளுக்கு எதிராக நடத்தப்பட்ட 36 நடவடிக்கைகளுக்கு பலுசிஸ்தான் விடுதலைப் படை பொறுப்பேற்றது. இதில் 33 வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் அது கூறியது.</p><p>பலூசிஸ்தானின் “தேசிய விடுதலை இலக்கு” அடையப்படும் வரை பாகிஸ்தான் படைகளுக்கு எதிரான தங்களது தாக்குதல் நடவடிக்கை தொடரும் எனவும் அவ்வமைப்பு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>நேபாள பெருவெள்ளம் - ரூ.24,187 கோடி இழப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/world/nepals-massive-floods-loss-of-rs-24187-crore</link><comments>https://www.maalaimalar.com/news/world/nepals-massive-floods-loss-of-rs-24187-crore#comments</comments><guid isPermaLink="false">2b538067-40b7-405d-895a-d31976c1c346</guid><pubDate>Fri, 04 Sep 2026 10:26:12 +0000</pubDate><atom:updated>2026-09-04T10:26:12.476Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>disaster,பேரிடர்,பாதிப்புகள்,Damages,nepal flood,நேபாள பெருவெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/w2ongd7z/New-Project-2026-09-04T155504.531.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நேபாள பெருவெள்ளம் - ரூ.24,187 கோடி இழப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/w2ongd7z/New-Project-2026-09-04T155504.531.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த வாரம் நேபாளத்தில் ஏற்பட்ட பேரிடர் வெள்ளத்தில், குறைந்தது 387.5 பில்லியன் நேபாள ரூபாய் (2.56 பில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்புள்ள சொத்துக்கள், வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p><p>அதாவது இந்திய மதிப்பில் ரூ.24,187.59 கோடி மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்துள்ளன. </p><h2>4 மாதங்களுக்கு மட்டும் ரூ.500 கோடி</h2><p>இந்த சேதமதிப்புகளைத் தவிர சாலைகள், தற்காலிக முகாம்கள் அமைத்தல், குடிநீர் வழங்குதல், மின்சாரம் வழங்குதல் உள்ளிட்ட மீட்பு மற்றும் அத்தியாவசிய கட்டுமானப் பணிகளுக்கு அடுத்த நான்கு மாதங்களில் மட்டும் ரூ.497 கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குறைந்த 7500 வீடுகள் முற்றிலும் அடித்து செல்லப்பட்டதாகவும், தற்போது சுமார் 20 ஆயிரம் வீடுகளை மீண்டும் கட்டவேண்டிய சூழல் இருப்பதாகவும் அந்நாட்டின் தேசிய பேரிடர் இடர் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் தர்ம ராஜ் உப்ரேதி தெரிவித்தார்.</p><h2>நேபாள பெருவெள்ளம்</h2><p>ஆகஸ்ட் 26 அன்று, நேபாளம் மற்றும் சீன எல்லைப் பகுதியில் பனிப்பாறைகள் சரிந்து, திரிசூலி ஆற்றில் <a href="https://www.maalaimalar.com/news/world/glof-event-not-the-cause-of-nepals-massive-floods-glacier-collapse-is-the-reason-new-report-by-scientists">வெள்ளப்பெருக்கு </a>ஏற்பட்டு, அந்த வெள்ளப்பெருக்கு நேபாளத்தின் பல கிராமங்களையும், நகரங்களையும் அடித்துச் சென்றது. </p><p>இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி 1250க்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்னும் காணாமல் போயுள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>ஆப்பிரிக்காவில் பிறப்புறுப்பு திருடப்படுவதாக வதந்தி - 80க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்</title><link>https://www.maalaimalar.com/news/world/rumors-of-genital-theft-in-africa-over-80-civilians-killed</link><comments>https://www.maalaimalar.com/news/world/rumors-of-genital-theft-in-africa-over-80-civilians-killed#comments</comments><guid isPermaLink="false">12bdb447-be80-4dfd-896d-68e625d27375</guid><pubDate>Fri, 04 Sep 2026 10:24:50 +0000</pubDate><atom:updated>2026-09-04T10:24:50.545Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Africa,penis,genital,ஆப்பிரிக்கா,பிறப்புறுப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/2227jl8u/Untitled-design-11.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Fake genital theft claims on africa]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/2227jl8u/Untitled-design-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆப்பிரிக்காவில் கடந்த ஓராண்டாக ஆண்களின் பிறப்புறுப்பு திருடப்பட்டு காணாமல் போவதாக டிக்டாக் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தகவல் பரவியதை தொடர்ந்து, வன்முறை பரவி சுமார் 80க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.</p><h3><strong>பிறப்புறுப்பு திருடப்படுவதாக வதந்தி</strong></h3><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE">ஆப்பிரிக்காவில்</a> கடந்த ஏப்ரல் 1 அன்று மகாலா என்பவர் அவரது நண்பருடன் கார் விற்பனை தொடர்பாக ஒரு வாடிக்கையாளரை சந்திப்பதற்காக, துண்டுமா என்ற நகரத்திற்கு பயணம் செய்தார்.</p><p>அப்போது அவர்கள் ஒரு மதிய உணவிற்காக ஒரு உணவகத்தில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு இருந்த ஒருவரின் பிறப்புறுப்புகளை இவர்கள் திருடிவிட்டதாக, உணவகத்தில் இருந்த நபர்கள் கூச்சலிட தொடங்கினர்.</p><p>இதையடுத்து அங்கு திரளான கூட்டம் கூடியதால், அவர்களால் அங்கிருந்து தப்பிச் செல்வது கடினமாக இருந்ததாகவும், பின்னர் அங்கிருந்து தப்பித்து வந்ததாகவும் உயிர்பிழைத்த நபர்கள் தெரிவித்தனர்.</p><h3><strong>சமூக ஊட்கங்களில் வதந்தி</strong></h3><p>இந்த வகையிலான வதந்திகள் சமூக ஊடகங்கள் மூலமாக பரப்பப்பட்டு, பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். </p><p>இந்த தகவல் ஜாம்பியா, தான்சானியா, மொசாம்பிக், அங்கோலா, மலாவி, புருண்டி, கென்யா உள்ளிட்ட பிற நாடுகளுக்கும் பரவின.</p><p>இதன் காரணமாக கடந்த ஆறு வாரங்களில் சுமார் 55 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p>மேலும் இந்த தாக்குதலில் ஒரு காவல்துறை அதிகாரி, அரசு ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டவர்களும் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இது போன்ற வதந்திகள் கடந்த 2008-ஆம் ஆண்டும் பரவியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>சமூக ஊடகங்களில் அதிகப்படியான பின்தொடர்பவர்களை வைத்திருப்பவர்கள், மக்களின் கவனத்தையும் அதிகப்படியான பார்வைகளையும் ஈர்ப்பதற்காக இந்த வகையான வதந்திகள் மூலமாக நாட்டில் வன்முறைகளை தூண்டுவதாக கொம்பாசா மாவட்ட ஆணையர் முகமது நூர் கூறியுள்ளார்.</p><h3><strong>மொசாம்பிக் ஜனாதிபதி</strong></h3><p>மொசாம்பிக் நாட்டு ஜனாதிபதி டேனியல் சாப்போ, வதந்திகள் பரப்பப்படுவதையும் அதன் விளைவாக ஏற்படும் மரணங்களையும் பகிரங்கமாக கண்டித்தார்.</p><p>மேலும் உண்மையில் எந்த நபரும் தங்கள் உடல் உறுப்புகளை இழந்துள்ளதாக எந்த மருத்துவ ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>கம்பத்தில் மோதிய பயணிகள் விமானம்.. ஸ்ரீநகர் விமான நிலையத்தில் பரபரப்பு </title><link>https://www.maalaimalar.com/news/national/passenger-plane-hits-pole-while-landing-commotion-at-srinagar-airport</link><comments>https://www.maalaimalar.com/news/national/passenger-plane-hits-pole-while-landing-commotion-at-srinagar-airport#comments</comments><guid isPermaLink="false">e50268af-e749-426a-a317-7ee47149cef8</guid><pubDate>Fri, 04 Sep 2026 10:22:57 +0000</pubDate><atom:updated>2026-09-04T10:22:57.990Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>airport,விமான நிலையம்,plane crash,விமான விபத்து,Indigo Flight,இண்டிகோ விமானம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/hbtw5gwg/tn-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கம்பத்தில் மோதிய பயணிகள் விமானம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கம்பத்தில் மோதிய பயணிகள் விமானம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/hbtw5gwg/tn-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு பயணிகளை ஏற்றி வந்த இண்டிகோ விமானம் கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p>மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பை விமான நிலையத்தில் இருந்து ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு இன்று காலை 9 மணியளவில் இண்டிகோ பயணிகள் விமானம் ஒன்று வந்தடைந்தது.</p><h2>விபத்து</h2><p>ஸ்ரீநகர் விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டு நிறுத்தும் போது கம்பம் ஒன்றில் விமானம் மோதி <a href="https://www.maalaimalar.com/topic/plane-crash">விபத்து </a>ஏற்பட்டது.</p><p>அந்த கம்பம் விஷுவல் டாக்கிங் கைடன்ஸ் சிஸ்டம் எனப்படும் விமானங்கள் நிறுத்துவதற்காக வழிகாட்டுதல் அமைப்பை கொண்ட VDGS கம்பம் ஆகும்.</p><h2>காயம் ஏற்படவில்லை</h2><p>கம்பத்தில் மோதியபோது விமானத்தில் இருந்த பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளதாகவும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>விமானத்தில் இருந்த பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர். அவர்கள் தானியங்கி படிக்கட்டுகளில் அல்லாமல், கையால் இயக்கப்படும் விமானப் படிக்கட்டு வழியாக இறக்கிவிடப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.</p><p>இந்தச் சம்பவத்தால் விமான நிலையத்தின் இயல்பான செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை. விமானங்களின் வருகையும் புறப்பாடும் திட்டமிட்டபடி தொடர்ந்தன.</p> <h2>விசாரணை</h2><p>நடைமுறையின்படி, இந்தச் சம்பவத்திற்கு வழிவகுத்த சூழ்நிலை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரிப்பார்கள் என்று ஸ்ரீநகர் <a href="https://www.maalaimalar.com/topic/airport">விமான நிலைய</a> நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p>விசாரணை முடிந்த பின்னரே சம்பவத்திற்கான சரியான காரணம் தெரியவரும். இந்தக் கட்டத்தில் காரணம் குறித்து எந்த முடிவுக்கும் வர முடியாது என விமான நிலையம் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கனடாவில் 100 ஆண்டுகளில் இல்லாத  பேய் மழை.. இருளில் மூழ்கிய டொராண்டோ - மக்கள் தத்தளிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/record-breaking-torrential-rain-in-canadatoronto-plunged-into-darkness-residents-left-struggling</link><comments>https://www.maalaimalar.com/news/world/record-breaking-torrential-rain-in-canadatoronto-plunged-into-darkness-residents-left-struggling#comments</comments><guid isPermaLink="false">1f8237ba-febb-4512-baa5-5da242a59ac3</guid><pubDate>Fri, 04 Sep 2026 09:53:18 +0000</pubDate><atom:updated>2026-09-04T09:53:18.872Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,மழை,storm,புயல்,கனடா,canada</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/dx2w8t8y/tn-10.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/dx2w8t8y/tn-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கனடாவின் டொராண்டோ நகரை புயல் காரணமாக 100 ஆண்டுகளில் இல்லாத அளவு இடி மின்னலுடன் கூடிய கனமழை புரட்டி எடுத்தது.</p><p>நேற்று முன் தினம் நகரின் பல்வேறு பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை குறுகிய நேரத்தில் கொட்டித் தீர்த்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/2026-rise-in-natural-disasters-and-fatalities-the-26th-that-has-the-world-trembling-in-fear">புயலின் </a>காரணமாக நகரின் பல்வேறு பகுதிகள் சேதத்தை சந்தித்தன. முக்கிய நெடுஞ்சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி மூடப்பட்டன. சுரங்கப்பாதை ரெயில் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.</p><p>குறிப்பாக டொராண்டோவில் உள்ள புகழ்பெற்ற ரோஜர்ஸ் ஸ்டேடியம் பலத்த சேதமடைந்தது. மைதானம் முழுவதும் இடிபாடுகள் சிதறிக் கிடகின்றது. நல்வாய்ப்பாக எவருக்கும் காயங்கள் எதுவுமில்லை.</p><p>நகரின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் மின் கம்பங்கள் உடைந்து ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.</p><p>நேற்று மதியம் வரை சுமார் 5,300 வீடுகள் இருளில் மூழ்கியிருந்தன. மின்சாரம் திரும்பியபோதிலும் இன்றைய நிலவரப்படி பல பகுதிகளில் வெள்ள நீர் வடியாமல் மக்களின் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/catastrophes-and-the-26th">இயல்பு வாழ்க்கை</a> மிகுந்த பாதிப்படைந்துள்ளது.</p><p>24 மணி நேரத்தில் தீயணைப்புத் துறைக்கு மட்டும் சுமார் 1,500 அவசர அழைப்புகள் வந்துள்ளன.</p><h2>100 ஆண்டுகளில் இல்லாத மழை</h2><p>டொராண்டோ மேயர் ஒலிவியா சோ கூறுகையில், புயல் கடந்தபோதிலும் நகர நிர்வாகம் முழு வீச்சில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.</p><p>அனைத்து வீதிகளும் சீரமைக்கப்பட்டு, ஒவ்வொரு குடிமகனுக்கும் மின்சாரம் கிடைக்கும் வரை மீட்புக் குழுவினர் தொடர்ந்து பணியாற்றுவார்கள் என அவர் தெரிவித்தார்.</p><p>நகர அதிகாரி பால் ஜான்சன் பேசுகையில், "நகரத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் பெய்யாமல், டொராண்டோ முழுவதுமே 11 மி.மீ முதல் 110 மி.மீ வரை மிகக் கடுமையான மழையும் ஆலங்கட்டி மழையும் பெய்துள்ளது.</p><p>இதை 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் கடுமையான புயல் எனக் குறிப்பிடலாம்" என்றார்.</p>]]></content:encoded></item><item><title>சேலம் அருகே 7 மாத கர்ப்பிணி கொலையில் காதலன் அதிரடி கைது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/lover-arrested-in-7-month-pregnant-woman-murdered-case-near-salem</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/lover-arrested-in-7-month-pregnant-woman-murdered-case-near-salem#comments</comments><guid isPermaLink="false">e8c17f52-dcc3-4f0b-9d36-f7c6c695ee42</guid><pubDate>Fri, 04 Sep 2026 09:45:52 +0000</pubDate><atom:updated>2026-09-04T09:45:52.614Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>சேலம்,Salem,காதலன் கைது,Pregnant woman murdered,Lover arrested,கர்ப்பிணி கொலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/h84xc45h/arrested.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ pregnant woman - arrested]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/h84xc45h/arrested.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சேலம் அருகே தானகுட்டிவளவு பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் இருந்து சாக்கு மூட்டையில் கோகிலா பிணமாக மீட்கப்பட்டார்.</p> <p>சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கோண சமுத்திரம் கிராமம் கருங்குள்ளன் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பேராக்கவுண்டர். இவரது மகள் கோகிலா (வயது 23). கல்லூரி படிப்பை முடித்த இவர் வேலைக்கு ஏதும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.</p> <h2>7 மாத கர்ப்பிணி</h2><p>திருமணம் ஆகாத கோகிலா கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ந் தேதி தனக்கு கடுமையான வயிற்று வலி இருப்பதாக பெற்றோரிடம் தெரிவித்தார். இதனை அடுத்து கோகிலாவை அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். அப்போது கோகிலா 7 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கோகிலாவின் குடும்பத்தினர் இதுகுறித்து சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். </p> <h2>போலீசார் விசாரணை</h2><p>புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் கோகிலாவிடம் விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் கோண சமுத்திரம் கிராமம் அருகே உள்ள கன்னியாம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாரி என்பவரது மகன் அம்மாசி (26) என்பவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.</p> <p>அப்போது கோகிலாவின் கர்ப்பத்திற்கு அம்மாசிதான் காரணம் என்று தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் கோகிலாவை திருமணம் செய்து கொண்டு வாழும் படி அம்மாசிக்கு அறிவுரை வழங்கினர். அப்போது தனது ஊரில் கோவில் திருவிழா நடப்பதாகவும் திருவிழா முடிந்த பின் கோகிலாவை திருமணம் செய்து கொள்வதாகவும், அதுவரை கோகிலா தன் வீட்டில் இருக்கட்டும் என கூறிய அம்மாசி கோகிலாவை தன்னுடன் கன்னியாம்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.</p> <p>இந்நிலையில் அம்மாசியின் வீட்டிலிருந்த கோகிலா கடந்த மாதம் 25-ந் தேதி திடீரென காணாமல் போனதாக அம்மாசி, கோகிலாவின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து பல இடங்களில் தேடியும் கோகிலா கிடைக்காத நிலையில் இதுகுறித்து கோகிலாவின் பெற்றோர் கொங்கணாபுரம் போலீஸ் நிலையத்தில் மீண்டும் புகார் அளித்தனர்.</p> <p>இந்நிலையில் நேற்று கொங்கணாபுரம் அருகே உள்ள வெள்ளாளபுரம் கிராமம், தானகுட்டிவளவு பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் இருந்து சாக்கு மூட்டையில் கோகிலா பிணமாக மீட்கப்பட்டார்.</p><h2>அம்மாசி கைது</h2><p>போலீசாரின் விசாரணையில் கோகிலாவை கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசியதை அம்மாசி ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அம்மாசியை கைது செய்தனர். மேலும் அவர் போலீசில் வாக்குமூலமாக கூறியதாவது:-</p> <p>சம்பவத்தன்று இரவு நான் கோகிலாவிடம் நீ கர்ப்பமாக இருப்பதை வெளியில் சொல்லி என்னை அசிங்கப்படுத்தி விட்டாயே என்று கேட்டேன். அப்போது எங்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான் கோகிலாவை பலமாக தாக்கினேன். இதில் கோகிலா நிலைகுலைந்து மயங்கி விழுந்தார். பின்னர் நான் கோகிலாவை அவரது துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொடூரமாக கொலை செய்தேன்.</p> <p>தொடர்ந்து நள்ளிரவு நேரத்தில் வீட்டிலிருந்த ஒரு சாக்கு பையில் கோகிலாவின் உடலை திணித்து மூட்டையாக கட்டி எனது இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று வெள்ளாளபுரம் அருகே உள்ள விவசாய கிணற்றில் வீசினேன். பின்னர் கோகிலா பெற்றோரிடம் கோகிலா மாயமாகி விட்டதாக தெரிவித்தேன். இதையடுத்து அனைவரும் மாயமான கோகிலாவை தேடினர். நானும் அவர்களுடன் சேர்ந்து கோகிலாவை தேடுவது போல் நடித்தேன் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>மனிதர்களை தாக்கும் விசித்திர விலங்கு.. விழிபிதுங்கும் அமெரிக்கர்கள் - வீடியோ வைரல்</title><link>https://www.maalaimalar.com/news/world/bizarre-animal-attacking-humans-americans-alarmed-video-goes-viral</link><comments>https://www.maalaimalar.com/news/world/bizarre-animal-attacking-humans-americans-alarmed-video-goes-viral#comments</comments><guid isPermaLink="false">8a0a6cdd-4e83-44c6-a41d-86ca8882984c</guid><pubDate>Fri, 04 Sep 2026 09:35:37 +0000</pubDate><atom:updated>2026-09-04T09:35:37.500Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,USA,வைரல் வீடியோ,Wildlife,viral video,வனவிலங்கு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/dyxprsf2/tn-9.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விசித்திர விலங்கு வீடியோ ]]></media:title><media:description type="html"><![CDATA[ விசித்திர விலங்கு வீடியோ ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/dyxprsf2/tn-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயர் மாநிலத்தில் ஒரு மர்ம விலங்கு மக்களைத் தொடர்ந்து தாக்கி வருகிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/topic/usa">அமெரிக்காவின் </a>நியூ ஹாம்ப்ஷயர் மாநிலத்தில் ஆகஸ்ட் 30 ஞாயிற்றுக்கிழமை முதல் செப்டம்பர் 1 செவ்வாய்க்கிழமை வரை மட்டும் இத்தகைய மூன்று தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.</p><p>அதிலும் குறிப்பாக நியூ ஹாம்ப்ஷயர் மாநிலத்தின் லெபனான் நகரின் சென்டெர்ரா பார்க் அருகே நிறுத்தப்பட்டிருந்த டிரக்-க்கு அருகில் ஓட்டுநரை அந்த விசித்திர விலங்கு பாய்ந்து தாக்கும் <a href="https://www.maalaimalar.com/topic/video">வீடியோ </a>அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி வெளியாகியுள்ளது.</p> <h2>வீடியோ</h2><p>வீடியோ காட்சிகளின்படி, புல்வெளியில் இருந்து அதிவேகமாக ஓடிவரும் அந்த விலங்கு, நிறுத்தப்பட்டிருந்த வாகனத்திற்கு அடியில் புகுந்து, அதிலிருந்து இறங்கிய ஓட்டுநரின் மீது திடீரெனப் பாய்கிறது.</p><p>அந்த நபர் தன் கையில் இருந்த பையைக் கொண்டு விலங்கை விரட்டவும் முயல்கிறார். ஆனால், பையைப் பிடுங்கி எறியும் அந்த விலங்கு, மீண்டும் பாய்ந்து அவரது கால்களை கவ்விப் பிடிக்கிறது.</p><p>கடுமையாகப் போராடி அந்த நபர் விலங்கின் பிடியை உதறித் தள்ளுகிறார். மற்றொரு நபர் உதவிக்கு ஓடிவரும் வேளையில், அந்த விலங்கு மீண்டும் வாகனத்தின் அடியில் புகுந்து அருகில் உள்ள காட்டுப்பகுதிக்குள் ஓடி மறைகிறது.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">A mystery animal has attacked three separate people in Lebanon, New Hampshire in under 48 hours - grabbing one man’s bag, latching onto another’s legs. Police still can’t confirm if it’s a gray fox or a fisher cat. Their top concern: rabies.<br><br>They’re searching with drones and… <a href="https://t.co/fpCHP1i5bl">pic.twitter.com/fpCHP1i5bl</a></p>&mdash; Tony Lane  (@TonyLaneNV) <a href="https://x.com/TonyLaneNV/status/2095513403553091696?ref_src=twsrc%5Etfw">September 3, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>என்ன விலங்கு?</h2><p>தாக்குதல் நடத்தியது எந்த வகையான விலங்கு என்பதை போலிசாரால் உறுதிப்படுத்த முடியவில்லை. இருப்பினும், சாட்சியங்களின் கூற்றுப்படி, அது வீட்டுப் பூனையின் அளவில் இருக்கும் சாம்பல் நிற நரி அல்லது Weasel எனும் மர நாய் குடும்பத்தைச் சேர்ந்த மாமிசஉண்ணி விலங்காக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.</p><p>பிலிப் ராபர்ட்ஸ் என்ற போலீஸ் அதிகாரி கூறுகையில், "ஒரு வன விலங்கு மனிதர்களைத் தேடி வந்து தாக்குவது இயல்பானதல்ல. அந்த விலங்கு ரேபிஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்க அதிக வாய்ப்புள்ளது. அது மக்களை கடிப்பது கவலையளிக்கிறது" என தெரிவித்தார்.</p><p>வனப்பகுதிகள் மற்றும் புதர்கள் நிறைந்த இடங்களுக்கு அருகில் செல்லும்போது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், விசித்திர விலங்குகளை கண்டால் உடனடியாக போலிசாரை தொடர்பு கொள்ளுமாறும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.</p><h2>ரேபிஸ் தொற்று</h2><p>ரேபிஸ் தொற்றானது, விலங்கின் கடி, கீறல் அல்லது உமிழ்நீர் மூலம் மனிதர்களுக்குப் பரவக்கூடும்.</p><p>இதனால் காய்ச்சல், வாந்தி, மன பிரமை மற்றும் பக்கவாதம் ஆகியவை ஏற்படும். ரேபிஸ் உயிருக்கு ஆபத்தானது என்பதால், கடியுண்டவர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியம்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/viral-fever-spread-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/viral-fever-spread-in-chennai#comments</comments><guid isPermaLink="false">b8f3e4b8-122c-40e1-ab62-876ab8ee16ce</guid><pubDate>Fri, 04 Sep 2026 09:34:42 +0000</pubDate><atom:updated>2026-09-04T09:34:42.834Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>வைரஸ் காய்ச்சல்,viral fever</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/sigeffmy/fever.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சென்னையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/sigeffmy/fever.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தலைவலி, தொண்டை கரகரப்பு, இருமல், சளி, தொடர் தும்மல் ஆகியவற்றுடன் இருக்கவே முடியாத அளவுக்கு இந்த காயச்சல் ஆண்-பெண் பாகுபாடின்றி அனைவரையும் சாய்த்து விடுகிறது.</strong></em></p><p>சென்னையில் தற்போது புதுவித <a href="https://www.maalaimalar.com/topic/வைரஸ்-காய்ச்சல்">வைரஸ் காய்ச்சல்</a>  வேகமாக பரவி வருவதாக டாக்டர்கள் எச்சரித்துள்ளார்கள். </p><p>சென்னையின் சீதோஷ்ண நிலை அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கிறது. ஏப்ரல், மே மாதங் களை போன்று பகலில் வெயில் அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் மாலை மற்றும் இரவு நேரங்களிலும் அதிகாலை நேரத்திலும் மழை காலம் போன்று காணப்படுகிறது.</p><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒருநாள் விட்டு ஒருநாள் மழை பெய்வது வாடிக்கையாக உள்ளது. ஆனால் அந்த சுவடே தெரியாத அளவுக்கு பகலில் வெயில் வாட்டுகிறது.</p><h2><strong>காய்ச்சல் பாதிப்பு</strong></h2><p>இப்படி  கால நிலை மாற்றம் நிலவி வரும் நிலையில் பொதுமக்கள் கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார்கள். தலைவலி, தொண்டை கரகரப்பு, இருமல், சளி, தொடர் தும்மல் ஆகியவற்றுடன் இருக்கவே முடியாத அளவுக்கு இந்த காயச்சல் ஆண்-பெண் பாகுபாடின்றி அனைவரையும் சாய்த்து விடுகிறது.</p><p>காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவர்களால் எந்த உணவையும் சாப்பிட முடிவதில்லை. வாய் கசப்புடன் சாப்பாடே வேண்டாம் என்கிற மனநிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு வருகிறார்கள்.</p><h2><strong>5 நாட்கள் வரை</strong></h2><p>இந்த காய்ச்சல் 5 நாட்கள் வரை நீடிப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட மனநல, சுகாதார இயக்குனரும், குழந்தைகள் நல மருத்துவருமான டாக்டர் எஸ்.எம். பதூர் மொய்தீன் கூறும் போது, காய்ச்சல் பாதிப்பை கண்டு பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. எச்1என்1 என்ற வைரஸ் பாதிப்பால் ஒரு வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டாலோ  அதன்மூலம் மற்றவருக்கும் எளிதாக பரவி விடுகிறது. எனவே காய்ச்சல், சளி பாதிப்பு ஏற்பட்டவர்கள் உடனடியாக மருத்துவர்களை சந்தித்து உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.</p><p>முக கவசங்களையும் அணிந்து கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களை இந்த காய்ச்சல் எளிதில் தொற்றி கொள்கிறது. ஒரு வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் வந்து விட்டால் மற்றவர்கள் தற்காப்புக்காக டாக்டர்களின் அறிவுரையுடன் காய்ச்சல் மாத்திரைகளை உட்கொள்ளலாம் என்றார்.</p><h2><strong>மாணவ-மாணவிகள்</strong></h2><p>இந்த காய்ச்சல் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மாலை நேரங்களில் ஆஸ்பத்திரிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சிறிய கிளினிக்குகளிலும் நோயாளிகளின் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது. நோயாளிகளை பரிசோதிக்கும் டாக்டர்கள் முகக்கவசம் அணிந்து கொண்டே அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>நாளை ஆசிரியர் தினம்: ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்குகிறார் அமைச்சர் ராஜ்மோகன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-teachers-day-minister-rajmohan-present-dr-radhakrishnan-award-to-389-teachers</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-teachers-day-minister-rajmohan-present-dr-radhakrishnan-award-to-389-teachers#comments</comments><guid isPermaLink="false">124d4f6d-bf3d-428c-aad4-b0f7b82c4136</guid><pubDate>Fri, 04 Sep 2026 09:21:35 +0000</pubDate><atom:updated>2026-09-04T09:21:35.835Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>teachers day,ஆசிரியர் தினம்,நல்லாசிரியர் விருது,Dr Radhakrishnan Award,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/bpme179r/ministerrajmohan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Rajmohan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/bpme179r/ministerrajmohan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் விழாவில் பள்ளிக்கல்வித் துறை <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/we-will-not-abandon-sanitation-workers-ministers-assure-protesters">அமைச்சர் ராஜ்மோகன்</a> கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகளை வழங்கி சிறப்பு உரையாற்றுகிறார். </p> <h2>நல்லாசிரியர் விருது</h2><p>தமிழக அரசு சார்பில் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் நல்லாசிரியர் விருது அவரது பிறந்தநாளில் வழங்கப்பட்டு வருகிறது. அவரது பிறந்தநாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. </p><p>பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தின விழா நாளை (5-ந்தேதி) அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் காலை 10 மணிக்கு நடக்கிறது. விழாவிற்கு பள்ளிக்கல்வி கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தரமோகன் தலைமை தாங்குகிறார். பள்ளிக்கல்வி இயக்குனர் லதா வரவேற்கிறார். </p> <h2>அமைச்சர் ராஜ்மோகன்</h2><p>விழாவில் பள்ளிக்கல்வித் துறை <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D">அமைச்சர் ராஜ்மோகன்</a> கலந்து கொண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகளை வழங்கி சிறப்பு உரையாற்றுகிறார். இந்த ஆண்டு 389 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது. முடிவில் தொடக்கக் கல்வி இயக்குனர் நரேஷ் நன்றி கூறுகிறார்.</p> <p>விழாவில் மேயர் பிரியா, தமிழ்நாடு பாடநூல் நிறுவன கழக தலைவர் லயோலா மணி, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஜெயந்தி, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி, அருள் பிரகாசம் எம்.எல்.ஏ, மாநிலத் திட்ட இயக்குனர் கலைச்செல்வி, சென்னை கலெக்டர் மாலதி ஹெலன், உள்ளிட்டவர்கள் கலந்து கொள்கிறார்கள். </p><p>பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர், ஆசிரியைகள் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு சென்னைக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>கிராபிக்ஸ் கார்டு ஆர்டர் செய்தவருக்கு டிடர்ஜென்ட் பவுடர் டெலிவரி.. ரூ.30,000 இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/national/detergent-powder-delivered-instead-of-ordered-graphics-card-consumer-commission-orders-30000-compensation</link><comments>https://www.maalaimalar.com/news/national/detergent-powder-delivered-instead-of-ordered-graphics-card-consumer-commission-orders-30000-compensation#comments</comments><guid isPermaLink="false">95a8d003-6680-40a3-b716-689682a39652</guid><pubDate>Fri, 04 Sep 2026 09:16:56 +0000</pubDate><atom:updated>2026-09-04T09:16:56.333Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மேற்கு வங்கம்,நுகர்வோர் ஆணையம்,Consumer Commission,ஆன்லைன் டெலிவரி,Online Delivery,west bengal</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/9sw9rtqu/tn-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டிடர்ஜென்ட் பவுடர் டெலிவரி]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடர்ஜென்ட் பவுடர் டெலிவரி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/9sw9rtqu/tn-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆன்லைனில் ரூ.1.98 லட்சம் செலுத்தி ஆர்டர் செய்த கிராபிக்ஸ் கார்டுக்கு பதிலாக டிடர்ஜென்ட் பவுடர் டெலிவரி செய்யப்பட்ட சம்பவத்தில் வாடிக்கையாளருக்கு ரூ.30,000 வழங்க மேற்கு வங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/online-shopping-women-spend-42-percent-more-time-than-men">ஆன்லைன் ஷாப்பிங்</a> என்பது இன்று மக்களின் அன்றாட வாழ்வின் அங்கமாக மாறி வருகிறது. ஆன்லைனில் ஆர்டர் செய்தது ஒன்று, டெலிவரி ஆவது மற்றோரோன்றாக இருப்பதும் தொடர்கதையாகி வருகிறது. </p><p>அந்த வகையில் மேற்கு வங்கத்தில் ஈகாமர்ஸ் தளத்தில் ரூ.1.98 லட்சம் மதிப்பில் கணினிக்கான கிராபிக்ஸ் கார்டு ஆர்டர் செய்த நபருக்கு, 1 கிலோ துணி துவைக்கும் டிடர்ஜென்ட் பவுடர்  பாக்கெட் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் வைரலானது. </p><h2>அலைக்கழிப்பு</h2><p>இதுகுறித்து சம்பந்தப்பட்ட இகாமர்ஸ் நிறுவனத்திடம் உடனடியாக புகாரளித்தும், பலமுறை தொடர்பு கொண்டும் எவ்விதத் தீர்வும் கிடைக்கவில்லை.</p><p>இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வாடிக்கையாளர், தனக்கு உரியப் பணத்தைத் திரும்பப் பெறவும், ரூ.10 லட்சம் நஷ்டஈடு கோரியும் மேற்கு வங்க <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">நுகர்வோர் ஆணையத்தை</a> அணுகினார்.</p><p>நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்ட பிறகே,  வாடிக்கையாளரின் கணக்கில் ரூ.1.98 லட்சம் தொகை முழுமையாகத் திரும்பச் செலுத்தப்பட்டது.</p><p>ஆனால் தான் அடைந்த மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு கிடைக்க வேண்டும் என்பதில் வாடிக்கையாளர் உறுதியாக இருந்துள்ளார்.</p><h2>விசாரணை</h2><p>வழக்கு விசாரணையின் போது, வாடிக்கையாளர் தரப்பில் ஆன்லைன் ஆர்டர் ஸ்கிரீன்ஷாட்கள், இன்வாய்ஸ் பில், வங்கிப் பரிவர்த்தனை ஆவணங்கள், டெலிவரி செய்யப்பட்ட டிடர்ஜென்ட் பாக்கெட்டின் புகைப்படங்கள் மற்றும் நிறுவனத்திற்கு அனுப்பிய மின்னஞ்சல் ஆவணங்கள் ஆதாரங்களாகச் சமர்ப்பிக்கப்பட்டன.</p><p>எதிர்மனுதாரர்களான இ காமர்ஸ் நிறுவனம் மற்றும் விற்பனையாளர் நோட்டீஸ் வழங்கிய பிறகும் ஆஜராகவில்லை.</p><h2>ஆணையம் உத்தரவு</h2><p>விசாரணையின்போது, "வழக்கு பதிவு செய்யப்பட்ட பிறகே முழு தொகையும் திருப்பியளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தவறுதலான பொருள் அனுப்பப்பட்டது உண்மைதான் என்பது நிரூபணமாகிறது.</p><p>பணத்தைத் திரும்பப் பெற வாடிக்கையாளர் பலமுறை அலையவைக்கப்பட்டுள்ளார். பெரும் தொகையைச் செலுத்திவிட்டுப் பொருளும் கிடைக்காமல் அலையவிடப்பட்டது அவருக்குக் கடுமையான மன உளைச்சலையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது" என ஆணையம் தெரிவித்தது.</p><p>பணம் திருப்பிக் கொடுக்கப்பட்டுவிட்டது என்பதால் தனியாக ரீபண்ட் உத்தரவு தேவையில்லை என்று குறிப்பிட்ட ஆணையம், மன உளைச்சலுக்கான இழப்பீடாக ரூ.15,000, வழக்கு செலவுத் தொகை இழப்பீடாக ரூ.15,000 என மொத்தம் ரூ.30,000 தொகையை இகாமர்ஸ் நிறுவனம் மற்றும் விற்பனையாளர் இணைந்து 30 நாட்களுக்குள் வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>இதுபோன்ற பிரச்சனைகளை சந்திக்கும் நுகர்வோர் தேசிய நுகர்வோர் ஹெல்ப்லைன்: 1915 எண்ணுக்கு டயல் செய்து தங்கள் புகாரை பதிவு செய்யலாம்.</p>]]></content:encoded></item><item><title>‘முக்கிய பங்காற்றிய நட்புறவு’: இத்தாலியின் நீண்டநாள் பிரதமர் - மெலோனிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!</title><link>https://www.maalaimalar.com/news/world/a-friendship-that-played-a-key-role-pm-modi-congratulates-italys-long-serving-prime-minister-meloni</link><comments>https://www.maalaimalar.com/news/world/a-friendship-that-played-a-key-role-pm-modi-congratulates-italys-long-serving-prime-minister-meloni#comments</comments><guid isPermaLink="false">a6da5bd4-c943-4471-a43b-d9ea6417b550</guid><pubDate>Fri, 04 Sep 2026 09:16:10 +0000</pubDate><atom:updated>2026-09-04T09:16:10.624Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>narendra modi,நரேந்திர மோடி,இத்தாலி,Italy,ஜார்ஜியா மெலோனி,Giorgia Meloni</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/xcmxme3h/New-Project-2026-09-04T143536.390.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘முக்கிய பங்காற்றிய நட்புறவு’: இத்தாலியின் நீண்டநாள் பிரதமர் - மெலோனிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/xcmxme3h/New-Project-2026-09-04T143536.390.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய இத்தாலியின் வரலாற்றில் மிக நீண்ட காலம் தொடர்ச்சியாகப் பணியாற்றிய பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் <a href="https://www.maalaimalar.com/news/world/modi-meloni-meet-melody-chocolate-gift-exchange-highlights-rome-visit">ஜார்ஜியா மெலோனி</a>. அவரின் இந்த சாதனைக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது;</p><h2>மக்களின் நம்பிக்கை</h2><p>“போருக்குப் பிந்தைய வரலாற்றில், இத்தாலியின் மிக நீண்ட காலம், தொடர்ச்சியாகப் பிரதமராகப் பதவி வகித்தவர் என்ற பெருமையைப் பெற்ற எனது நண்பர் பிரதமர் மெலோனிக்கு வாழ்த்துகள். </p><p>இந்த மைல்கல், அவரது தலைமையின் மீது இத்தாலிய மக்கள் வைத்துள்ள நம்பிக்கையையும், உறுதியையும் பிரதிபலிக்கிறது.</p><h2>இருதரப்பு உறவு </h2><p>இந்தியா-இத்தாலி சிறப்பு உத்திசார் கூட்டாண்மையை வலுப்படுத்துவதிலும் அவரது நட்பு முக்கியப் பங்காற்றியுள்ளது. </p><p>நமது நாட்டு மக்களுக்கு ஒரு வளமான எதிர்காலத்தைக் கட்டமைக்க, நமது நெருங்கிய ஒத்துழைப்பைத் தொடர ஆவலுடன் உள்ளேன். வரும் ஆண்டுகளில் அவர் தொடர்ந்து வெற்றிபெற எனது நல்வாழ்த்துக்கள்.” எனக் கூறப்பட்டுள்ளது. </p><h2>முதல் பெண் பிரதமர் </h2><p>ஜார்ஜியா மெலோனி இத்தாலியின் முதல் பெண் பிரதமராகப் பொறுப்பேற்று இந்த இமாலயச் சாதனையை எட்டியுள்ளார். 2022 அக்டோபர் 22 அன்று இத்தாலியின் முதல் பெண் பிரதமரான மெலோனி அந்நாட்டின் வரலாற்றில் இன்றோடு (செப்.4) 1,413 நாட்களைத் தாண்டி தொடர்ச்சியாகப் பிரதமராக பதவியாற்றி வருகிறார். </p>]]></content:encoded></item><item><title>இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/districts-likely-to-receive-rain-today-and-tomorrow-2</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/districts-likely-to-receive-rain-today-and-tomorrow-2#comments</comments><guid isPermaLink="false">56ff4437-d86e-4146-867d-956a4d776c30</guid><pubDate>Fri, 04 Sep 2026 08:46:42 +0000</pubDate><atom:updated>2026-09-04T08:46:42.400Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,Chennai Rain,சென்னை மழை,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/4zvcz9s7/rain005.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மழை]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/4zvcz9s7/rain005.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.</strong></em> </p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>சுமார் 7.6 கிமீ உயரத்தில் கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.</p><p>சுமார் 0.9 கிமீ உயரத்தில் தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><p>நேற்று தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவிய பலவீனமான காற்றழுத்தத்தாழ்வுப் பாதை (Feeble Trough) மேல் குறிப்பிட்ட காற்றழுத்த தாழ்வு பாதையுடன் இணைந்துள்ளது.</p><h2><strong>லேசான மழை</strong></h2><p>இன்று மேற்கு மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p> <p>5-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>9 மற்றம் 10-ந்தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>இதனிடையே இன்று முதல் 8-ந்தேதி வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p>நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p>]]></content:encoded></item><item><title>கென்யாவை விட்டு வெளியேறுங்கள்.. டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்துக்கு அதிரடி உத்தரவிட்ட அதிபர் - என்ன பிரச்சனை?</title><link>https://www.maalaimalar.com/news/world/leave-kenya-president-issues-stern-order-to-tata-chemicals-what-is-the-issue</link><comments>https://www.maalaimalar.com/news/world/leave-kenya-president-issues-stern-order-to-tata-chemicals-what-is-the-issue#comments</comments><guid isPermaLink="false">6386e059-b39e-4afe-90f6-bdc4512c6f00</guid><pubDate>Fri, 04 Sep 2026 08:36:50 +0000</pubDate><atom:updated>2026-09-04T08:36:50.469Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tata Group,கென்யா,Kenya,கனிமவளம்,Mineral Resources,டாடா நிறுவனம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/nvds3ys2/tn-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கென்யா அதிபர் ]]></media:title><media:description type="html"><![CDATA[ கென்யா அதிபர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/nvds3ys2/tn-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கென்யாவில் செயல்பட்டு வரும் இந்தியாவை சேர்ந்த டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் தனது செயல்பாடுகளை உடனடியாக நிறுத்திவிட்டு நாட்டிலிருந்து வெளியேற வேண்டும் என அந்நாட்டின் அதிபர் வில்லியம் ரூட்டோ அதிரடி உத்தரவிட்டுள்ளார்.</p><p>தெற்கு <a href="https://www.maalaimalar.com/topic/kenya?botrequest=true">கென்யாவின் </a>காஜியாடோ மாகாணத்தில் உள்ள மகோடி ஏரிப் பகுதியில் <a href="https://www.maalaimalar.com/automobilenews/car/tata-motors-to-hike-car-prices-by-up-to-rs-25000-from-september-1">டாடா </a>கெமிக்கல்ஸ் மகோடி லிமிடெட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.</p><p>சோடா ஆஷ் தயாரிப்பில் பயன்படும் Trona என்ற கனிமம் மகோடி ஏரியில் அதிகளவில் கிடைக்கிறது.  கண்ணாடி தயாரிப்பு உள்ளிட்டவற்றுக்கு சோடா ஆஷ் பயன்படுகிறது. </p><p>மகோடியில் 1911 இல் பிரன்னர் மாண்ட் என்ற நிறுவனத்தால் சோடா ஆஷ் ஆலை ஒன்று தொடங்கப்பட்டது. </p><p>இந்த ஆலை 2005ஆம் ஆண்டு பிரன்னர் மாண்ட் என்ற நிறுவனத்தை கைப்பற்றியதன் மூலம் டாடா கெமிக்கல்ஸ் வசமானது.</p><p>இங்கிருந்து ஆண்டுதோறும் 3.5 லட்சம் டன்களுக்கும் அதிகமான சோடா ஆஷ் தென்கிழக்கு ஆசியா, இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.</p><h2>குற்றச்சாட்டு</h2><p>கடந்த ஜூலை 28 அன்று கென்யாவின் சுரங்கத்துறை அமைச்சகம் டாடா நிறுவனத்தின் சுரங்கப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. </p><p>ராயல்டி தொகையை செலுத்துவதில் உள்ள நிலுவைகள், கனிமங்களை உள்நாட்டிலேயே பயன்படும் வகையில் சுத்திகரிப்பு செய்யாதது, உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி அளிக்கத் தவறியது, சுற்றுச்சூழல் விதிமுறைகள் மற்றும் உள்ளூர் சமூக மேம்பாட்டு ஒப்பந்தங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தாதது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் டாடா நிறுவனம் மீது சுமத்தப்பட்டது.</p> <h2>அதிபர்</h2><p>இந்நிலையில் டாடா கெமிக்கல் நிறுவனத்தை நாட்டில் இருந்து வெளியேறும்படி கென்யா அதிபர் வில்லியம் ரூட்டோ பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.</p><p>கடந்த வியாழக்கிழமை காஜியாடோவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அதிபர் வில்லியம் ரூட்டோ அங்கு பேசுகையில், "டாடா நிறுவனத்திடம் 100 ஆண்டுகால ஒப்பந்தம் உள்ளது. ஆனால் அவர்கள் காஜியாடோவில் ஒரு தொழிற்சாலையை  கூடக் புதிதாக கட்டவில்லை. ஒரு கண்ணாடி தயாரிப்பு ஆலையையும்  ஏற்படுத்தவில்லை. </p><p>அவர்கள் நமது இயற்கை வளங்களை இந்தியாவுக்கும் பிற இடங்களுக்கும் எடுத்துச் செல்கிறார்கள். நாம் மற்றவர்களுக்கு அடிமைகளா?" என தெரிவித்தார்.</p> <p>மேலும், "கென்யா அரசு வெறுமனே இயற்கை வளங்களை வெட்டி எடுத்து ஏற்றுமதி செய்வதை மட்டும் விரும்பவில்லை. மாறாக, வளங்கள் கிடைக்கும் இடத்திலேயே தொழிற்சாலைகளைக் கட்டி உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பையும் தொழில் வளர்ச்சியையும் உருவாக்க வேண்டும் என எதிர்பார்க்கிறது.</p><p>டாடா நிறுவனத்திற்குப் பதிலாக புதிய இரண்டு நிறுவனங்களைக்கொண்டு வந்து இங்கு மிகப்பெரிய தொழிற்சாலைகளை அமைக்கப்படும்" என அதிபர் தெரிவித்துள்ளார்.</p> <h2>டாடா நிறுவனம் விளக்கம்</h2><p>கென்ய அரசின் அதிகாரத்தை மதிப்பதாகவும், சட்டப்பூர்வ முறையில் இந்தப் பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காண விரும்புவதாகவும் டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p>மகோடி பகுதியில் சுமார் 500 நேரடி ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் டாடா நிறுவனத்தைச் சார்ந்துள்ளனர் என்றும், சுமார் 30,000 உள்ளூர் மக்கள் நிறுவனத்தின் குடிநீர், சுகாதாரம் மற்றும் கல்விச் சேவைகளால் நேரடியாகப் பயனடைந்து வருகின்றனர் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p>கென்ய அதிபரின் உத்தரவை இறுதி முடிவாக கருதவில்லை எனவும் இதற்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் எனவும் டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சட்டமன்றத்திலும் கட்டா குஸ்திதான் நடக்கிறது-
அமைச்சர் ராஜ்மோகன் கலகல பேச்சு</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/minister-rajmohan-says-healthy-katta-kusthi-in-assembly</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/minister-rajmohan-says-healthy-katta-kusthi-in-assembly#comments</comments><guid isPermaLink="false">e666f47b-b88e-40e4-a636-4bd68d5d8abc</guid><pubDate>Fri, 04 Sep 2026 08:35:14 +0000</pubDate><atom:updated>2026-09-04T08:35:14.300Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>Vishnu Vishal,கட்டா குஸ்தி 2,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan,வெற்றி விழா,katta kusthi</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/3rk10zzw/rajmohan.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Rajmohan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/3rk10zzw/rajmohan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பில் செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியான படம் ‘கட்டா குஸ்தி-2’. </p><p>விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி  நடித்துள்ள இந்த படம் 50 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இதையடுத்து படத்தின் 50-வது நாள் வெற்றி விழா சென்னையில் நடந்தது.</p><p>இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது:-</p><p>சட்டமன்றத்திலும் கட்டாகுஸ்தி தான் நடக்குது. ஆரோக்கியமான சண்டைதான். மக்களுக்கு யார் நல்லது செய்றது என்ற ஆரோக்கியமான போட்டிதான்.</p><p>கூட்டம் முடிந்ததும் கைகுலுக்கிவிட்டு மக்கள் பணிகளில் கவனம் செலுத்த தொடங்கி விடுவோம். சினிமாவுக்கு இப்போது ஒரு போட்டி வந்துள்ளது. மக்கள், எப்படா மாண்புமிகு பேரவை தலைவரே என முதலமைச்சர் விஜய் கூறுவார் என்று டிவியை பார்க்க தொடங்கிவிட்டனர்.</p><p>தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவுக்கே ஒரு சகாப்தமானவர். இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று அனைவராலும் கொண்டாடப்படும் பத்மஸ்ரீ பிரபுதேவா மாஸ்டர் இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி.</p><p>எங்கள் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஒரு உண்மையான சினிமா காதலர். சினிமா மற்றும் கல்வித் துறை என இரண்டிலும் தொடர்ந்து பல சேவைகளை செய்து வருகிறார்.</p><p>‘கட்டா குஸ்தி 2’ 50 நாட்களைக் கடந்து ஓடுவது இந்தக் காலகட்டத்தில் மிகப்பெரிய சாதனை. இன்றைக்கு 5 நாட்கள், ஏன் ஒரு நாளில் 5 காட்சிகள் வெற்றிகரமாக ஓடுவதே சவாலான சூழ்நிலையில், 50 நாட்கள் என்பது படக்குழுவுக்கு கிடைத்த பெரிய மணிமகுடம்.</p><p>இப்படிப்பட்ட வெற்றிக்கு விஷ்ணு விஷால் போன்ற கடின உழைப்பாளியும், படத்தின் மீது முழுமையான நம்பிக்கை கொண்ட நடிகரும் தேவை.</p><p>ஐஸ்வர்யா லட்சுமி இந்தப் படத்தில் மிகச்சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். அவருடன் சிறுமி ஜாராவின் பங்களிப்பும் படத்திற்கு பெரிய பலமாக அமைந்தது.</p><p>நம் தமிழக முதல்வர் விஜய் ஆட்சியில் திரைத்துறைக்கு தேவையான அனைத்து உதவிகளும் கோரிக்கைகளும் செயல்படுத்தப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>இணைய வழியில் ஆண்டிற்கு 2 கோடி குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு உள்ளாகின்றனர்- புதிய ஆய்வில் அதிர்ச்சி  தகவல் </title><link>https://www.maalaimalar.com/news/national/2-crore-children-face-online-sexual-abuse-in-a-year</link><comments>https://www.maalaimalar.com/news/national/2-crore-children-face-online-sexual-abuse-in-a-year#comments</comments><guid isPermaLink="false">9a2675d2-db35-49bb-a87f-d7b412d18444</guid><pubDate>Fri, 04 Sep 2026 08:30:36 +0000</pubDate><atom:updated>2026-09-04T08:30:36.661Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆய்வில் தகவல்,பாலியல் தொல்லை,பாலியல் கொடுமை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/u3ioclj8/online.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இணைய வழியில் பாலியல் கொடுமை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/u3ioclj8/online.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>உலகளவில் பார்க்கும் போது பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை இன்னும் பல கோடிகளைத் தாண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</strong></em> </p><p>உலகெங்கிலும் இணையத்தைப் பயன்படுத்தும் 12 முதல் 17 வயதுடைய சிறுவர்களில் ஐந்தில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் ஆண்டிற்குப் பலமுறை இணையவழிப் பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகி வருகின்றனர்.</p><h2><strong>குழந்தைகள் பாதிப்பு</strong></h2><p>21 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், ஓராண்டில் மட்டும் சுமார் 2 கோடி குழந்தைகள் சமூக ஊடக தளங்கள் மற்றும் இணைய வழியில் <a href="https://www.maalaimalar.com/topic/பாலியல்-தொல்லை">பாலியல் ரீதியான</a> அச்சுறுத்தல்களையும் கொடுமைகளையும் சந்திக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.</p><p>இந்த ஆய்வின் தரவுகளின்படி, தோராயமாக 1.5 கோடி குழந்தைகள் அவர்களின் விருப்பமின்றி இணையத்தில் பாலியல் ரீதியான ஆபாச உள்ளடக்கங்களை பார்க்க நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். </p><p>மேலும் 90 லட்சம் குழந்தைகள் பாலியல் உரையாடல்களில் ஈடுபடவும், தங்களது ஆபாச  படங்களைப் பகிரவும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர, 40 லட்சம் குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் அவர்களின் சம்மதமின்றி இணையத்தில் பிறரால் பகிரப்பட்டுப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.</p><p>உலகளவில் பார்க்கும் போது பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை இன்னும் பல கோடிகளைத் தாண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், இணையவழிப் பாலியல் குற்றங்களைத் தடுக்கவும் டிஜிட்டல் தளங்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியத்தை இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.</p><p>இணையத்தைப் பயன்படுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவர்களை கவரும் வகையில் இணைய வழி குற்றவாளிகள் சமூக ஊடகங்கள் மற்றும் கேமிங் தளங்களைப் பயன்படுத்தி அவர்களை பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்துவது பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>துலீப் டிராபி இறுதிப்போட்டி: சேப்பாக்கத்தில் ரசிகர்களுக்கு அனுமதி இலவசம்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/tnca-announces-free-entry-for-duleep-trophy-2026-27-final-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/tnca-announces-free-entry-for-duleep-trophy-2026-27-final-in-chennai#comments</comments><guid isPermaLink="false">262afeed-470b-4785-9e6c-e493e4982dad</guid><pubDate>Fri, 04 Sep 2026 08:23:44 +0000</pubDate><atom:updated>2026-09-04T08:23:44.333Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ரசிகர்கள்,Fans,சேப்பாக்கம் மைதானம்,துலீப் டிராபி,Duleep Trophy,Chepaukam stadium</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/nki8f1hv/chepauk.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ chepauk]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/nki8f1hv/chepauk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>துலீப் டிராபி இறுதிப்போட்டியைக் காண ரசிகர்களுக்கு அனுமதி இலவசம் என தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.</strong></em></p><p>துலீப் டிராபி தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் பெங்களூருவில் நடைபெற்றன. இதில் நடப்பு சாம்பியனான மத்திய மண்டல அணியை கிழக்கு மண்டல அணி வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.</p><p>மற்றொரு அரையிறுதியில் வடக்கு மண்டல அணியை தெற்கு மண்டல அணி வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.</p><h2>இறுதிப்போட்டி</h2><p>இதற்கிடையே, துலீப் டிராபியின் இறுதிப்போட்டியில் தெற்கு மண்டல அணியுடன், கிழக்கு மண்டல அணி மோதுகிறது.</p><p>துலீப் டிராபி இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வரும் 6-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் தெற்கு மண்டலம், இஷான் கிஷன் தலைமையிலான கிழக்கு மண்டல அணியுடன் மோதுகிறது.</p><h2>அனுமதி இலவசம்</h2><p>இந்நிலையில், சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள துலீப் டிராபி இறுதிப்போட்டியை ரசிகர்கள் இலவசமாக நேரில் சென்று பார்க்கலாம். போட்டியைக் காண வரும் ரசிகர்களிடம் எந்தவித நுழைவுக் கட்டணமும் வசூலிக்கப்படாது. கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் மைதானத்திற்கு வந்து போட்டியை நேரில் கண்டு ரசிக்கலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கி மாயமானவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது</title><link>https://www.maalaimalar.com/news/world/nepal-floods-number-of-people-missing-rises</link><comments>https://www.maalaimalar.com/news/world/nepal-floods-number-of-people-missing-rises#comments</comments><guid isPermaLink="false">afdb7a1c-1173-437a-ad4b-5633a26b606e</guid><pubDate>Fri, 04 Sep 2026 08:13:40 +0000</pubDate><atom:updated>2026-09-04T08:13:40.454Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாளம்,nepal,Nepal Floods,people missing,நேபாள வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/sqocfniw/nepal.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nepal Floods]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/sqocfniw/nepal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாள வெள்ளத்தில் சிக்கி மாயமானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி உள்ளது. 600-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் குறித்து தகவல் எதுவும் இதுவரை கிடைக்காததால் பெற்றோர் தவித்து வருகிறார்கள்.</p> <h2>நேபாள காட்டாற்று வெள்ளம்</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">நேபாளத்தில்</a> கடந்த 26-ந்தேதி ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் அந்நாட்டின் 8 மாவட்டங்களை சீர்குலைத்து விட்டது. வெள்ளத்தில் ஆயிரக்கணக்கானோர் அடித்து செல்லப்பட்ட நிலையில் மீட்புப் பணிகள் இன்று 10-வது நாளாக நீடிக்கிறது. இதில் உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வரும் நிலையில் பலி எண்ணிக்கை 1,280-ஆக உயர்ந்தது.</p> <h2>5 ஆயிரத்தை தாண்டியது</h2><p>இந்த நிலையில் நேபாள வெள்ளத்தில் சிக்கி மாயமானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதுவரை வெளிநாட்டினர் உள்பட 5,083 பேரை காணவில்லை. இதில் ஆன்மீக யாத்திரை சென்ற இந்தியர்களும் அடங்குவர். </p> <h2>திபெத் பகுதி</h2><p>அதேபோல் வெள்ளம் உருவான <a href="https://www.maalaimalar.com/news/world/tibet-hit-by-5-0-magnitude-earthquake-days-after-devastating-floods">திபெத்</a> பகுதியில் 21 பேர் பலியாகி இருக்கிறார்கள். அங்கு 541 பேரை காணவில்லை. நேபாளத்தில் மாயமானவர்களின் உடல்கள் கிடைக்காததால் அவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று கருதி உருவ பொம்மைகளை வைத்து உறவினர்கள் இறுதிச்சடங்குகளை நடத்தி வருகிறார்கள்.</p> <h2>600 பள்ளி குழந்தைகள்</h2><p>காட்டாற்று வெள்ளத்தில் ரசுவா மாவட்டத்தில் 4 பள்ளிகளும், நுவாகோட் மாவட்டத்தில் 8 பள்ளிகளும் முழுமையாக சேதமடைந்தன. இந்த நிலையில் 600-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் குறித்து தகவல் எதுவும் இதுவரை கிடைக்காததால் பெற்றோர் தவித்து வருகிறார்கள். </p> <p>தகவல் தொடர்பு வசதிகள் முடங்கியுள்ளதால் பள்ளி குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வது மிகுந்த சிரமமாக உள்ளது. தகவல் தொடர்பு வசதிகள் சீரமைக்கப்பட்டு, அதிகாரிகள் நேரில் சென்று உயிர் பிழைத்தவர்களை உறுதிப்படுத்தும் வரை நூற்றுக்கணக்கான குழந்தைகளின் கதி என்ன என்பது குறித்து உறுதியாக எதுவும் கூற முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.</p> <p>நுவாகோட் கல்வி மேம்பாடு மற்றும் ஒருங்கிணைப்புப் பிரிவின் தலைவர் சூர்யா பகதூர் கத்ரி கூறும்போது, காணாமல் போன மாணவர்கள் குறித்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களைச் சேகரிக்கத் தலைமை ஆசிரியர்களுடன் தீவிரமாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம். ஆனால், தகவல் தொடர்பு வசதி முடங்கியுள்ளதால் துல்லியமான எண்ணிக்கையை வழங்க முடியவில்லை.</p> <p>எங்கள் மாவட்டத்தில் குறைந்தது 300 மாணவர்கள் காணாமல் போயிருக்கலாம் என்று மதிப்பிடுகிறோம் என்றார். காணாமல் போனவர்களை நேபாளம் முழுவதும் உறவினர்கள் தொடர்ந்து தேடி வரும் நிலையில், பள்ளி குழந்தைகளின் நிலை குறித்த நிச்சயமற்ற தன்மையும் நீடிக்கிறது.</p><h2>யுனிசெப் அமைப்பு</h2><p>இதற்கிடையே ரசுவா, நுவாகோட், தாடிங் ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுமார் 17 ஆயிரம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்து உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க ஆட்சி கலைந்து விடும் என எடப்பாடி பழனிசாமி புலம்புகிறார்- கிறிஸ்டோபர் திலக் </title><link>https://www.maalaimalar.com/news/topnews/edappadi-palaniswami-christopher-tilak-tvk-party</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/edappadi-palaniswami-christopher-tilak-tvk-party#comments</comments><guid isPermaLink="false">28e7f7aa-ed0c-438b-b222-0b33196ec669</guid><pubDate>Fri, 04 Sep 2026 08:00:51 +0000</pubDate><atom:updated>2026-09-04T08:00:51.452Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,எடப்பாடி பழனிசாமி,tvk,கிறிஸ்டோபர் திலக்,Christopher Tilak</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/fczwb9ic/eps.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/fczwb9ic/eps.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h2><strong>கொடைக்கானல்</strong></h2><p>கொடைக்கானல் அட்டு வம்பட்டியில் அமைந்துள்ள அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தேசிய செயலாளரும், சிக்கிம், நாகலாந்து, மணிப்பூர் மாநில தேர்தல் பொறுப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கிறிஸ்டோபர் திலக் கலந்து கொண்டார். அதன் பின்பு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-</p><h2><strong>சிறப்பான ஆட்சி</strong></h2><p>தமிழகத்தில் த.வெ.க. அரசின் 100 நாள் ஆட்சி சிறப்பாக முடிந்துள்ளது. 100 நாள் சிறப்பாக ஓடியதை திரைப்படம் போல கொண்டாட கூடாது. தற்போதுள்ள அரசுக்கு பல சவால்கள் உள்ளன. பொதுமக்களிடம் விசாரிக்கும் போது ஊழல், கமிஷன் குறைந்துள்ளதாக வெளிப்படையாக கூறுகின்றனர். லஞ்சம் வாங்க கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு அதில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.</p><h2><strong>சட்டசபை நிகழ்வுகள்</strong></h2><p>சட்டசபை நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுவதை பெண்கள் மற்றும் இளைஞர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இதனால் அவர்களின் அரசியல் ஆர்வம் கூடி வருகிறது.</p><h2><strong>அடுத்த பிரதமர்</strong></h2><p>கடந்த சில நாட்களாக அடுத்த பிரதமர் என்ற கருத்து கணிப்பு நடத்தி விஜய் 3ம் இடம் பிடித்துள்ளதாக செய்தி வெளியாகி வருகிறது. உண்மையில் இந்த கருத்து கணிப்புகளை நடத்துவது யார்? அதன் பின் புலத்தில் உள்ளவர்கள் யார்? இது உண்மையாக நடத்தப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் இதனை த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் கொண்டாடி வருகின்றனர். இதன் மூலம் தங்கள் தலைவரை குஷிபடுத்தி ரீல்ஸ் வெளியிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.</p><h2><strong>தி.மு.க. கூட்டணி</strong></h2><p>தி.மு.க. கூட்டணியில் பயணித்தபோது பலர் நெருக்கடியான சூழலில் இருந்தனர். தற்போது அங்கிருந்து வெளியேறி த.வெ.க. கூட்டணியில் இணக்கமாக செயல்பட்டு வருகின்றனர். இதனை விமர்சிப்பது எற்புடையது அல்ல. தமிழகத்தில் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கடுமையாக விலை உயர்ந்து வருகிறது. இதனை கட்டுபடுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><h2><strong>காவிரி நீர் பிரச்சினை</strong></h2><p>தமிழகத்துக்கு வழங்க வேண்டிய மத்திய அரசின் நிதியை தாமதமின்றி வழங்க வேண்டும். காவிரி நீர் பிரச்சினையில் கர்நாடகாவைப் போல தமிழகத்தில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. ஒவ்வொரு கட்சியும் தனித்தனியாக பேசி வந்தால் சரியாக வராது.</p><h2><strong>எடப்பாடி புலம்பல்</strong></h2><p>அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீப காலமாக வெறுப்பின் உச்சத்தில் உள்ளார். அவரது கட்சியில் உள்ள எம்.எல்.ஏ.க்களையே அவரால் தக்க வைக்க முடியவில்லை. கவுண்டமணி, செந்தில், வடிவேலு நடித்த ஒரு படத்தில் தேங்காயை திருடி மற்றொரு கடை அமைத்ததைப் போல அங்குள்ள எம்.எல்.ஏ.க்கள் முழுவதுமாக த.வெ.க. பக்கம் தாவி விடுவார்களோ என்ற அச்சம் எடப்பாடிக்கு வந்து விட்டது. அதன் காரணமாகத்தான் த.வெ.க. ஆட்சி நீண்ட நாள் நீடிக்காது என புலம்பி வருகிறார். அவர் எப்போது ஜோதிடரானார் என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை ராணுவ அகாடமியில் இளம் அதிகாரிகளின் தீரச்செயல் நிகழ்ச்சி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-military-academy-young-officers-display-combat-skills</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-military-academy-young-officers-display-combat-skills#comments</comments><guid isPermaLink="false">8c6dce2a-dd1a-41e6-8a7e-17c6454860b5</guid><pubDate>Fri, 04 Sep 2026 08:00:44 +0000</pubDate><atom:updated>2026-09-04T08:00:44.585Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>officers,சென்னை ராணுவ அகாடமி,இளம் அதிகாரிகள்,தீரச்செயல்,chennai military academy,combat skills</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/nq4rmrsh/Army.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ chennai Military Academy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/nq4rmrsh/Army.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையிலுள்ள இந்திய ராணுவத்தின் அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் நாளை தங்களது பயிற்சியை நிறைவு செய்யவுள்ள அதிகாரிகள் இன்று தங்களது தீரச்செயல் திறன்களை செய்து காண்பித்தனர்.</p><p>இந்நிகழ்ச்சியில் அதிகாரிகள் பயிற்சி அகாடெமியின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் மைக்கேல் ஏ.ஜே. பெர்னாண்டஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.</p><h2>தற்காப்புக் கலை நிகழ்ச்சி</h2><p>இளம் ராணுவ அதிகாரிகள், தங்கள் உடல் தகுதித் திறன்கள், ராணுவ தற்காப்புக் கலை, குதிரையேற்ற சாகசங்கள், களரிப்பயிற்று, பதுங்கு குழி தகர்ப்புப் பயிற்சி ஆகியவற்றை இந்நிகழ்ச்சியில் வெளிப்படுத்தினர்.</p><p>உடல் தகுதி மற்றும் வலிமைக்கு சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமி அளிக்கும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பு உடற்பயிற்சிகளுடன் இந்நிகழ்ச்சி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, ஆயுதங்கள் ஏதுமின்றி எதிரியை எதிர்கொள்ளும் ராணுவ தற்காப்புக் கலை நிகழ்ச்சி இதில் இடம்பெற்றது.</p><h2>சாகச நிகழ்ச்சி</h2><p>அகாடமியின் பயிற்சி அதிகாரிகள் மற்றும் பயிற்சியாளர்கள் பங்கேற்ற விறுவிறுப்பான குதிரையேற்ற சாகச நிகழ்ச்சி, குதிரைகளுக்கும் சவாரி செய்பவர்களுக்கும் இடையிலான அற்புதமான இணக்கத்தை வெளிப்படுத்தியது.</p><p>குதிரைகளின் துல்லியமான அசைவுகள் மற்றும் சுறுசுறுப்பான இயக்கத்துடன் கூடிய இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.</p><p>இதனைத் தொடர்ந்து, நடனம், தற்காப்பு, இசை, உடல் வளைந்து கொடுக்கும் திறன் ஆகியவற்றின் இணக்கமான கலவையான 'களரிப்பயிற்று' தற்காப்புக் கலை நிகழ்ச்சி நடைபெற்றது; இது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.</p><p>இறுதியாக, பயிற்சி அதிகாரிகளின் மன உறுதி மற்றும் திறனை வெளிப்படுத்தும் வகையிலான பதுங்கு குழி தகர்ப்புப் பயிற்சி நடைபெற்றது. </p><p>போர்க்களத்தில் வீரர்களை வழிநடத்திச் செல்லத் தயாராகி வரும் இந்த இளம் அதிகாரிகள், தங்களுக்கு முன் உள்ள சவால்களை எதிர்கொள்ள முழுமையாகத் தயாராக உள்ளனர் என்பதை இந்நிகழ்ச்சி சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்தது.</p><p>சென்னை அதிகாரிகள் பயிற்சி அகாடமியின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மைக்கேல் ஏ.ஜே. பெர்னாண்டஸ், இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் பாராட்டினார்.</p>]]></content:encoded></item><item><title>நேபாளத்தின் திரிசூலி நீர்மின் நிலைய சுரங்கத்தில் இருந்து 2 தொழிலாளர்கள் உயிருடன் மீட்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/two-workers-rescued-alive-from-tunnel-of-nepal</link><comments>https://www.maalaimalar.com/news/world/two-workers-rescued-alive-from-tunnel-of-nepal#comments</comments><guid isPermaLink="false">3ab47a0d-2b50-4354-9a53-5647f225669d</guid><pubDate>Fri, 04 Sep 2026 07:59:46 +0000</pubDate><atom:updated>2026-09-04T07:59:46.950Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாளம்,nepal,Tunnel,தொழிலாளர்கள் மீட்பு,Nepal Floods,workers rescue,சுரங்கப்பாதை,நேபாள வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/us2tf325/workers.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ workers rescued from tunnel of Nepal
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/us2tf325/workers.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ரசுவா லாங்டாங் கோலா நீர்மின் ​சுரங்கப்பாதைக்குள் சென்ற நேபாள ராணுவத்தினர் மற்றும் மீட்புக் குழுவினர் 2 தொழிலாளர்களின் உடல்களை மீட்டனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/nepal-tibet-flood-death-toll-rises-to-1243">நேபாளத்தில்</a> ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் அங்கு நீர்மின் நிலையங்களின் சுரங்கப்பாதைகளில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. </p><p>இதில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">நேபாளத்துக்கு</a> இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் மீட்புக்குழுக்கள் உதவி வருகின்றன. சுரங்கப் பாதைகளை அடைத்துள்ள சேறு-இடிபாடுகளை அகற்றுவதற்கு கனரக எந்திரங்கள் மற்றும் சிறப்பு உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கி இருக்கிறார்கள்.</p> <p>இந்த நிலையில் நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள திரிசூலி 3-ஏ நீர்மின் நிலையத்தின் சுரங்கப்பாதையில் இருந்து 2 தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர். அவர்கள் சஞ்சய் சா, கபீர் மஹர்ஜன் என தெரிய வந்தது. </p><p>அவர்கள் எந்திரப் பிரிவு மேற்பார்வையாளர்களாக பணியாற்றி வந்தனர். மீட்கப்பட்ட அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதற்கிடையே திரிசூலி நீர்மின் நிலைய சுரங்கப் பாதைக்குள் இருந்து மனிதக் குரல்கள் கேட்டதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மீட்புப் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அந்த சுரங்கத்தில் சுமார் 40 பேர் சிக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. </p> <p>இதுதொடர்பாக பாராளுமன்ற எம்.பியும், மீட்புப்பணியில் ஈடுபட்டு வருபவருமான ராம் நியு பனே கூறும்போது, சுரங்கப் பாதைக்குள் இருந்து ஒன்றுக்கு மேற்பட்ட குரல்கள் கேட்டுள்ளது. பயப்பட வேண்டாம். </p><p>நாங்கள் உங்களை மீட்கிறோம் என்று மீட்புக் குழுவினர் கூறியபோது, ​​உள்ளிருந்து அதற்கான பதில் கிடைத்தது. சுரங்கப் பாதைக்குள் இருந்து மக்கள் பேசுவது குறித்த தகவல் கிடைப்பது ஒரு நம்பிக்கைக்குரிய அறிகுறியாகும். </p> <p>அங்கு சிக்கி உள்ளவர்கள் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். இதற்கிடையே அந்த சுரங்கத்தில் இருந்து ஒரு தொழிலாளியை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.</p><p>இந்த நிலையில் ரசுவா லாங்டாங் கோலா நீர்மின் ​சுரங்கப்பாதைக்குள் சென்ற நேபாள ராணுவத்தினர் மற்றும் மீட்புக் குழுவினர் 2 தொழிலாளர்களின் உடல்களை மீட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>மண்டையை உடைத்தேன்.. ஜெயிலுக்கு செல்லவில்லை - பெருமையடித்த பிரபலம் -  போராட்டத்தில் குதித்த CJP </title><link>https://www.maalaimalar.com/news/national/i-cracked-a-skull-during-the-cjp-protest-but-didnt-go-to-jail-controversy-erupts-over-instagram-celebritys-boastful-claim</link><comments>https://www.maalaimalar.com/news/national/i-cracked-a-skull-during-the-cjp-protest-but-didnt-go-to-jail-controversy-erupts-over-instagram-celebritys-boastful-claim#comments</comments><guid isPermaLink="false">6fc9fe6c-9fe9-4806-89a0-4979806f6196</guid><pubDate>Fri, 04 Sep 2026 07:57:22 +0000</pubDate><atom:updated>2026-09-04T07:57:22.546Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,BJP,பாஜக,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/d535idj1/tn-5.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சுவதந்திர பரத்வாஜ், சஞ்சய் குமார், சஞ்சய் குமாரின் மகள் ]]></media:title><media:description type="html"><![CDATA[ சுவதந்திர பரத்வாஜ், சஞ்சய் குமார், சஞ்சய் குமாரின் மகள் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/d535idj1/tn-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் சிஜேபி போராட்டத்தின்போது மாணவி ஒருவரின் தந்தையின் தலையை உடைத்தும் தான் கைதகவில்லை என கூறிய இன்ஸ்டாகிராம் பிரபலத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p><h2>சிஜேபி போராட்டம்</h2><p>டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் 20 முதல் ஜூலை 25 வரை நீட் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடிகளை கண்டித்து <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">கரப்பான்பூச்சி ஜனதா கட்சி</a> (சிஜேபி) தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான இளைஞர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.</p><p>ஜூலை 20 அன்று மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் நாடாளுமன்றம் நோக்கி இளைஞர்கள் நடத்திய பேரணியில் டெல்லி போலீசார், ஆர்ஏஎப் மத்திய படையினர் தாக்குதல் நடத்தினர்.</p><p>கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் தாக்குதல் நடத்தப்பட்டது. பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதும் சீருடையற்ற சிலர் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதும் விமர்சனத்துக்கு உள்ளாகி இளைஞர்களுக்கு நாடு முழுவதும் ஆதரவு அதிகரித்தது.</p><p>கடும் அழுத்தத்தின் மத்தியில் மத்திய கல்வி அமைச்சராக இருந்த <a href="https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protest-dharmendra-pradhan-says-ministerial-post-not-important-after-resignation-amid-student-agitation">தர்மேந்திர பிரதான்</a> ஜூலை 25 அன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.</p> <h2>சர்ச்சை</h2><p>இதனிடையே ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது, மாணவர் செயற்பாட்டாளர் நிஷு ஆசாத்தின் தந்தையான சஞ்சய் குமார் என்பவரின் " மண்டையை உடைத்தேன், ஆனால் அதற்காக சிறைக்கு கூட செல்லவில்லை" என சுவதந்திர பரத்வாஜ் என்ற இன்ஸ்டா பிரபலம் பேசியது சர்ச்சையாகியுள்ளது.</p><p>இன்ஸ்டாகிராமில் 1.84 லட்சம் பின்தொடர்பாளர்களை கொண்ட 21 வயதான சுவதந்திர பரத்வாஜ், 'சுவதந்திர சனாதனி யோதா' எனத் தன்னை அழைத்துக்கொள்கிறார்.</p><p>அவர் பாட்காஸ்டில் பேசியதாவது,</p><p>"போராட்டக்காரரின் தந்தையின் மண்டையை நான் உடைத்தேன். அவருக்கு 60 தையல்கள் போடப்பட்டன. இது கொலை முயற்சி வழக்கு என்பது தெரியுமா? ஆம்புலன்ஸில் அவர் கிட்டத்தட்டச் சாகும் நிலையில் இருந்தார்.</p><p>ஆனால், நான் சிறையில் கூட அடைக்கப்படவில்லை. இரவெல்லாம் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்தேன். உலகத்திற்கு இது தெரிய வேண்டும்" என தெரிவித்தார்.</p><p>மேலும் பாஜக தலைவர்களுடனான தனது தொடர்புகளே தன்னைத் தப்பவைத்ததாக அவர் அந்த பாட்காஸ்டில் பேசியிருக்கிறார்.</p><p>பரத்வாஜ் குறிப்பிட்ட இந்த சம்பவம் ஜூன் 23 அன்று மாலை 5.30 மணியளவில் நடந்துள்ளது. சஞ்சய் குமார் தனது கைபேசியில் போராட்டத்தைப் படமாக்கியபோது ஏற்பட்ட தகராறில் தாக்குதலானது நடைபெற்றுள்ளது. சூரஜ் குமார், பரத்வாஜ் மற்றும் சிலர் இணைந்து சஞ்சய் குமாரை தாக்கியுள்ளனர்.</p><p>பரத்வாஜ் பேசிய வீடியோ தற்போது வைரலானதை தொடர்ந்து பல தரப்பில் இருந்தும் அவருக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.</p><p>பாதிக்கப்பட்ட சஞ்சய் குமாரின் மகள் நிஷு ஆசாத்    இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். </p><p>சர்ச்சை வலுத்ததையடுத்து பதிலளித்த பரத்வாஜ், "அது தற்காப்புக்காக செய்யப்பட்ட நடவடிக்கை. நான் அப்படிச் செய்யாவிட்டால், கும்பல் என்னைப் படுகொலை செய்திருக்கும். என் மீது தாக்குதல் நடத்தவே முயன்றார்கள், அதற்கான வீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது" என விளக்கம் அளித்துள்ளார்.</p><h2>ராகுல் கேள்வி</h2><p>இந்த விவகாரம் தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில்,</p><p>"அமித் ஷாவின் டெல்லி போலீஸ் ஒருபுறம் மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்துகிறது. மறுபுறம், தலித் மாணவியின் தந்தையின் மண்டையை உடைத்த குற்றவாளி திறந்தவெளியில் சுதந்திரமாகச் சுற்றி திரிகிறான்.</p><p>இப்படிப்பட்ட குற்றவாளிக்கு உங்கள் கட்சியினர் ஏன் பாதுகாப்பு அளிக்கிறார்கள்? இப்போது நடவடிக்கை எடுக்கப்படுமா, அல்லது அவரைத் தொடர்ந்து பாதுகாப்பீர்களா?" என கேள்வி எழுப்பியுள்ளார்</p><h2>சிஜேபி  </h2><p>இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபரை உடனடியாகக் கைது செய்யக் கோரி சிஜேபி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் இன்று காலை டெல்லி படேல் சவுக்கிலிருந்து பார்லிமென்ட் ஸ்ட்ரீட் காவல் நிலையம் நோக்கிப் பேரணியாகச் சென்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>இந்த சம்பவம் தொடர்பாக கொலை முயற்சி பிரிவில் வழக்குப்பதிவு செய்ய டெல்லி போலீசாரை சிஜேபி கட்சி ஒருங்கிணைப்பாளர்கள் சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.</p><p>ஆனால், போலீசார் எப்ஐஆரில் அந்தப் பிரிவை சேர்க்க மறுத்துவிட்டதாக சௌரவ் தாஸ் குற்றம் சாட்டினார்.</p><p>டெல்லி போலிஸ் அளித்த விளக்கத்தில் சஞ்சய் குமாருக்கு ஏற்பட்டது சாதாரண காயம் தான் என்றும், மண்டை ஓடு எதுவும் உடையவில்லை என்றும் தெரிவித்துள்து.</p><p>இந்தச் சம்பவம் தொடர்பாக சூரஜ் குமார், சுவதந்திர பரத்வாஜிடம் விசாரணை நடத்தப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் போலீஸ் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சாலை விபத்தில் 4 மாணவிகள் பலி- முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/namakkal-road-accident-four-students-killed-chief-minister-financial-assistance</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/namakkal-road-accident-four-students-killed-chief-minister-financial-assistance#comments</comments><guid isPermaLink="false">fdfce414-aac0-41f0-bee9-d3aa72f24143</guid><pubDate>Fri, 04 Sep 2026 07:32:45 +0000</pubDate><atom:updated>2026-09-04T07:32:45.173Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>சாலை விபத்து,road accident,Students Dead,CM relief fund,மாணவிகள் உயிரிழப்பு,முதலமைச்சர் நிதியுதவி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/6avgc5ba/TN-CM-Vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/6avgc5ba/TN-CM-Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாமக்கல் திருச்செங்கோட்டில் சாலை விபத்தில் உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்திற்கு முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/4-children-killed-rs-3-lakh-compensation-announced" rel="nofollow">நிதியுதவி</a> அறிவித்துள்ளார்.</p><p>திருச்செங்கோடு அருகே மொபட் மீது தனியார் கல்லூரி பஸ் மோதிய விபத்தில் அக்காள்-தங்கைகள் உள்பட 4 மாணவிகள் பலியானார்கள்.</p><h2>மாணவிகள்</h2><p>நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் அருகே உள்ள சக்க ராம்பாளையத்தை சேர்ந்தவர் சேகர். கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி அமுதா. இவர்களுக்கு 3 மகள்கள்.</p><p>இதில் சுபிதா கலைச்செல்வி (வயது 19), ராசிபுரம் அருகே உள்ள திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்சி. கணிதம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நிவேதிதா (16), தனுஸ்ரீ (13) ஆகிய 2 பேரும் எலச்சிபாளையம் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF" rel="nofollow">அரசு பள்ளி</a>யில் 11 மற்றும் 7-ம் வகுப்பு படித்து வந்தனர்.</p><p>நேற்று பள்ளிக்கு சென்ற மாணவிகள் நிவேதிதா, தனுஸ்ரீயை அழைத்து வருவதற்காக அக்காள் சுபிதா கலைச்செல்வி மொபட்டில் பள்ளிக்கு சென்றார். பின்னர் தங்கைகள் 2 பேரையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அந்த மொபட் டில் அவர்களது சித்தப்பா ரமேஷ்பாபுவின் மகளான 6-ம் வகுப்பு மாணவி அபிநயா (12) என்பவரும் உடன் வந்தார்.</p><h2>4 பேரும் பலி</h2><p>அவர்கள் வீட்டிற்கு செல்வதற்காக சக்கராம்பாளையம் பிரிவு ரோட்டை மொபட்டில் கடக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் கல்லூரி பஸ், மொபட் மீது பயங்கரமாக மோதியது.</p><p>இதில் மொபட்டில் சென்ற சுபிதா கலைச்செல்வி, அவ ரது தங்கைகள் நிவேதிதா, தனுஸ்ரீ மற்றும் அபிநயா ஆகிய 4 பேரும் தூக்கி வீசப் பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்கள். விபத்து குறித்து எலச்சிபாளையம் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். </p><p>விபத்தில் ஒரே குடும் பத்தை சேர்ந்த அக்காள்-தங்கைகள் 3 பேர், உறவுக்கார சிறுமி ஒருவர் என 4 மாணவிகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.</p><h2>முதலமைச்சர் நிதியுதவி</h2><p>நாமக்கல் திருச்செங்கோட்டில் சாலை விபத்தில் உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிதியுதவி அறிவித்துள்ளார்.</p><p>சாலை விபத்தில் உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டார்.</p><p>பள்ளி மாணவிகள் மூவரை பைக்கில் அழைத்து சென்ற கல்லூரி மாணவி என 4 பேர் தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>கடமையை செய்வதையே கிருஷ்ணர் வாழ்க்கை கற்றுத் தருகிறது - ஆளுநர் அர்லேகர் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/krishna-jayanthi-governor-arlekar-wishes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/krishna-jayanthi-governor-arlekar-wishes#comments</comments><guid isPermaLink="false">d35b364b-3e8d-407f-96b8-9ed608a137c7</guid><pubDate>Fri, 04 Sep 2026 07:25:38 +0000</pubDate><atom:updated>2026-09-04T07:25:38.055Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>கிருஷ்ண ஜெயந்தி,krishna jayanthi,Governor Arlekar,ஆளுநர் அர்லேகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/sm5ullxo/governor.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Krishnar - Governor Arlekar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/sm5ullxo/governor.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கிருஷ்ண ஜெயந்தியையொட்டி தமிழ்நாடு <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D">ஆளுநர் அர்லேகர்</a> வெளியிட்டுள்ள வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><p>கிருஷ்ணரின் அவதாரம், மனித குலத்திற்கு வாழ்வியல் நெறிகளையும், அறம், கடமை, பக்தி ஆகியவற்றின் உயர்ந்த தத்துவங்களையும் உணர்த்துகிறது. இத்தகைய மகத்தான கீதோபதேசத்தை வழங்கிய கண்ணனின் பிறப்பைத் தான் பக்தர்கள் கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி எனப் பல பெயர்களில் உலகெங்கும் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.</p> <h2>ஆளுநர் அர்லேகர் வாழ்த்து</h2><p>அந்த வகையில், நாடு முழுவதும் இன்று<a href="https://www.maalaimalar.com/news/national/krishna-jayanthi-president-droupadi-murmu-and-pm-modi-wish"> கிருஷ்ண ஜெயந்தி</a> கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தியையொட்டி தமிழ்நாடு ஆளுநர் அர்லேகர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-</p><h2>கிருஷ்ண ஜெயந்தி</h2><p>"கரியவன் கருணையில் பெரியவன்</p><p>இறைவடிவங்களில்</p><p>பன்முகத்தன்மை கொண்ட </p><p>பரந்தாமன்</p> <p>கண்களால் பேசும் </p><p>காதலன் </p><p>கானமிசைப்பதில்</p><p>வேங்குழல் வேந்தன்</p><p>வெண்ணெய் மட்டுமல்ல</p><p>உடையையும் திருடும் </p><p>உன்னதன் </p><p>கோபியருடன் </p><p>குலாவுவான் </p><p>ஆழ்நிலை தியானத்தில் </p><p>அமர்ந்திருப்பான்</p><p>சமர்த்தன் சமாதான முயற்சியில் சதுரன் </p> <p>வியூகம் வகுப்பதில்</p><p>வித்தகன் </p><p>நலிந்த குசேலனுக்கு</p><p>நல்ல தோழன்</p><p>போர்க்களத்தில் </p><p>அஸ்திரம் விடுத்து</p><p>அண்டங்களை </p><p>அதிரச்செய்தவன்</p><p>சரணடைந்தவளை </p><p>சடுதியில் காத்தவன் </p> <p>போர்க்களத்தில் புலம்பிய </p><p>அர்ஜூனனுக்கு</p><p>அச்சம் நீக்கி அருங்கீதை </p><p>அருளிய அச்சுதன் </p><p>காந்தாரி கடிந்த </p><p>சாபங்களை </p><p>அன்புடன் ஏற்ற</p><p>அருளாளன்</p> <p>இப்படி எல்லா </p><p>நிலைகளிலும்</p><p>ஏகமாய் பொருந்தும்</p><p>இறைவடிவம்</p><p>இவன் ஒருவனே!</p> <p>பிறந்தநாள் முதல்</p><p>பெரும் போராட்டம் </p><p>ஆயினும் </p><p>கடைசி நாள் வரை</p><p>கடமையில் நின்றவன்</p><p>எந்த சூழ்நிலையையும்</p><p>எதிர்கொண்டு</p><p>கிட்டிய பணியை</p><p>கீர்த்தியாய் செய்வதேயென்ற</p><p>கிருஷ்ணனின் வாழ்வே</p><p>கீதை தான்!" </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சாலை விபத்தில் செயலிழந்த கைகள்.. தண்டுவடத்தில் மின் அதிர்ச்சி தந்து குணப்படுத்திய மருத்துவர்கள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/arms-paralyzed-in-a-road-accident-doctors-cured-the-condition-by-delivering-electric-shocks-to-the-spinal-cord</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/arms-paralyzed-in-a-road-accident-doctors-cured-the-condition-by-delivering-electric-shocks-to-the-spinal-cord#comments</comments><guid isPermaLink="false">19d9c3bb-18b8-47cb-a8e4-707f7ef10a1c</guid><pubDate>Fri, 04 Sep 2026 07:14:42 +0000</pubDate><atom:updated>2026-09-04T07:14:42.530Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சாலை விபத்து,road accident,treatment,பக்கவாதம்,stroke,சிகிச்சை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/gq8g2n3b/tn-4.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Spinal cord stimulation]]></media:title><media:description type="html"><![CDATA[ Spinal cord stimulation]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/gq8g2n3b/tn-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>ஆரோக்யம் (Health)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விபத்தினால் கைகளை அசைக்க முடியாமல் போன ஆட்டோ ஓட்டுனருக்கு தண்டுவடத்தை மின் அதிர்வு மூலம் தூண்டும் சிகிச்சை வழங்கி மருத்துவர்கள் குணப்படுத்தியுள்ளனர்.</p><p>வேலூரை சேர்ந்த 30 வயது ஆட்டோ ஓட்டுநருக்கு கடந்த ஆண்டு ஏற்பட்ட <a href="https://www.maalaimalar.com/topic/road-accident">சாலை விபத்தை</a> தொடர்ந்து இரண்டு கால்களும் <a href="https://www.maalaimalar.com/health/generalmedicine/covid-19-impact-blood-vessels-age-faster-women-more-affected-study-warns-784718">பக்கவாதத்தால் </a>பாதிக்கப்பட்டதோடு, முழங்கைக்கு கீழ் கைகளை அசைக்கும் திறனும் பாதிக்கப்பட்டது.</p><p>இதனை குணப்படுத்த அவர் எம்.ஜி.எம் ஹெல்த்கேர் என்ற தனியார் மருத்துவமனையை அணுகினார். </p><p>கைகளில் தொடு உணர்ச்சி இருந்தபோதும் அவற்றை அசைக்கும் திறன் இல்லாமல் போனது பற்றி மருத்துவர்கள் செய்த பரிசோதனையில் அவருக்கு  'ASIA Grade B' என்ற ஒரு வகை தண்டுவடப் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. </p><p>இதன்படி பாதிக்கப்பட்ட பகுதிக்குக் கீழ் தொடு உணர்ச்சி மட்டுமே இருக்கும். ஆனால், இயல்பான தசை இயக்கச் செயல்பாடுகள் முற்றிலும் செயலிழந்துவிடும்.</p><h2>சிகிச்சை</h2><p>இந்நிலையில் இந்த நிலையை குணப்படுத்த எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவர்கள் அவருக்கு Spinal cord stimulation electrode implantation என்ற சிகிச்சையை மேற்கொண்டனர்.</p><p>மனித உடல் உறுப்புகளின் இயக்கம் முதுகில் உள்ள தண்டுவடத்துடன் இணைந்தது ஆகும்.</p><p>எனவே மின்சாரம் மூலம் நோயாளியின் தண்டுவடத்தை தூண்டி அசைவுகளை மீட்டெடுக்கும் முயற்சியாக இச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.</p><p>இந்த சிகிச்சை பற்றி எம்ஜிஎம் நரம்பியல் அறுவைசிகிச்சைப் பிரிவு இயக்குநர் டாக்டர் ரூபேஷ் குமார் கூறுகையில்,</p><p>"இந்தச் சிகிச்சையின் போது தண்டுவடத்தில் Electrodes எனும் சிறிய மின்முனைகள் பொருத்தப்படும்.</p><p>அவை கட்டுப்படுத்தப்பட்ட மின் தூண்டுதல்களை வழங்கி, தண்டுவடத்தின் செயல்பாட்டைச் சீரமைத்து, பாதிக்கப்பட்ட பகுதியின் இயக்கம் மற்றும் செயல்பாடுகள் மீள உதவும்.</p><p>சிகிச்சையின்போது நோயாளியின் பாதிக்கப்பட்ட கை செயல்பாடுகளுடன் தொடர்புடைய தண்டுவடப் பகுதியில் இந்த மின்முனைகள் பொருத்தப்பட்டன" என தெரிவித்தார்.</p> <h2>முன்னேற்றம்</h2><p>அந்த மின்முனைகள் மூலம் தண்டுவடம் தூண்டப்பட்டு அளிக்கப்பட்ட spinal cord stimulation சிகிச்சைக்குப் பிறகு, நோயாளியின் கை தசைகளில் படிப்படியான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.</p><p>அவரது கைகளின் இயக்கம் பூரண குணமடைய மேலும் ஒன்றரை ஆண்டுகள் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தூய்மை பணியாளர்களை விட்டுக்கொடுக்க மாட்டோம் - போராட்டம் நடத்தியவர்களிடம் உறுதி அளித்த அமைச்சர்கள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/we-will-not-abandon-sanitation-workers-ministers-assure-protesters</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/we-will-not-abandon-sanitation-workers-ministers-assure-protesters#comments</comments><guid isPermaLink="false">17dca78c-40dd-460d-99bb-cc34d05018f0</guid><pubDate>Fri, 04 Sep 2026 07:07:04 +0000</pubDate><atom:updated>2026-09-04T07:07:04.297Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தூய்மை பணியாளர்கள் போராட்டம்,sanitation workers strike,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan,அமைச்சர் நிர்மல்குமார்,Minister Anand,அமைச்சர் ஆனந்த்,minister nirmal kumar,அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,Minister Aadhav Arjuna</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/145qk6f3/ministers.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/145qk6f3/ministers.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை ரிப்பன் மாளிகை வெளியே போராட்டம் நடத்தும் தூய்மை பணியாளர்களை அமைச்சர்கள் சந்தித்து பேசினர்.</p> <p>பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி 15 நாட்களுக்கு மேலாக தூய்மை பணியாளர்கள் சென்னை ரிப்பன் மாளிகை வெளியே போராட்டம் நடத்தி வருகின்றனர். </p><p>இந்நிலையில் போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்களை அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், நிர்மல்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.</p><p>தூய்மை பணியாளர்களிடம் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-bussy-anand-reply-udhayanidhi-speech">அமைச்சர் ஆனந்த்</a> கூறியதாவது:</p> <p>* <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-assembly-action-vinayagar-statue">முதலமைச்சர் விஜய்</a> நிச்சயம் செய்வார் என்ற நம்பிக்கையில் சிரித்த முகத்துடன் அமைச்சர்களை வரவேற்றுள்ளீர்கள்.</p><p>* பல ஆண்டுகளாக போராடியும் யாரும் கேட்காத நிலையில் தற்போதைய முதல்வர் மக்கள் முதல்வராக செயல்படுவார்.</p><p>* பழைய ஆட்கள் கஜானாவை காலி செய்துள்ள நிலையில், மக்கள் வரிப்பணத்தை கஜானாவில் சேர்த்து கோரிக்கையை நிறைவேற்றுவோம்.</p><p>* சிரித்த முகத்தில் அமைச்சர்களாகிய எங்களை வரவேற்ற தூய்மை பணியாளர்களுக்கான அனைத்தையும் செய்வோம் என அவர் உறுதி அளித்தார்.</p> <p>இதைத்தொடர்ந்து அமைச்சர் நிர்மல் குமார் கூறியதாவது:</p><p>* இது உங்கள் அரசாங்கம். </p><p>* தூய்மை பணியாளர்களுக்கு செய்யாமல் வேறு யாருக்கு செய்ய போகிறோம்.</p><p>* உங்களை வருத்திக் கொள்ள வேண்டாம், உங்களுக்கு செய்வதற்காக தான் இந்த தவெக அரசு உள்ளது என்று உறுதி அளித்தார்.</p> <p>இதைத்தொடர்ந்து அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது:</p><p>* இது தூய்மை பணியாளர்கள் போராட்டம் அல்ல, மாநாடு போல் உள்ளது.</p><p>* 15 நாட்களாக யாருக்கும் இடையூறின்றி ராணுவ ஒழுக்கத்துடன் போராடிய தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டுகள்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> <p>இதைத்தொடர்ந்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியதாவது:</p><p>* தூய்மை பணியாளர்கள் போராட இங்கே அமருவதால் முதல்வர் விஜய்க்கு தூக்கம் வருவதில்லை.</p><p>* போராடிய தூய்மை பணியாளர்களை திமுக ஆட்சியில் கைது, தற்போதைய முதல்வர் ஒருவர் மீதும் கைவைக்க கூடாது என கூறி உள்ளார்.</p><p>* ஆட்சி அமைந்து 100 நாட்கள் தான் ஆகிறது, எங்களுக்கு அவகாசம் தாருங்கள், தூய்மை பணியாளர்களை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை சென்னை வருகை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vice-president-cp-radhakrishnan-tomorrow-chennai-visit</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vice-president-cp-radhakrishnan-tomorrow-chennai-visit#comments</comments><guid isPermaLink="false">7cfdf86a-71ce-414a-8785-c8f538a589da</guid><pubDate>Fri, 04 Sep 2026 07:05:29 +0000</pubDate><atom:updated>2026-09-04T07:05:29.814Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>துணை ஜனாதிபதி,சிபி ராதாகிருஷ்ணன்,CP Radhakrishnan,Vice President​</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/ikwtjc73/CPRadhakrishnan.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் ]]></media:title><media:description type="html"><![CDATA[ துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/ikwtjc73/CPRadhakrishnan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இதய வால்வு மற்றும் கட்டமைப்பு ரீதியான இதய நோய்களுக்கான சிகிச்சையை மேம்படுத்துவதற்காக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் இந்தியா வால்வ் பதிவேட்டை தொடங்கி வைக்கிறார்.</strong></em></p><p>துணை ஜனாதிபதி <a href="https://www.maalaimalar.com/topic/சிபி-ராதாகிருஷ்ணன்">சி.பி.ராதாகிருஷ்ணன்</a> நாளை சென்னை வருகிறார். கிண்டி ஐ.டி.சி. சோழா ஓட்டலில் மதியம் 3 மணிக்கு நடைபெறும் இந்தியா வால்வ்ஸ்-2026 தேசிய கல்வி கூட்டத்தில் பங்கேற்கிறார்.</p><p>இதய வால்வு மற்றும் கட்டமைப்பு ரீதியான இதய நோய்களுக்கான சிகிச்சையை மேம்படுத்துவதற்காக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் இந்தியா வால்வ் பதிவேட்டை தொடங்கி வைக்கிறார்.</p><p>அதன் பிறகு மாலை 4.30 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்கிறார்.</p><p>இதையொட்டி துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வந்து செல்லும் பகுதிகளான மீனம்பாக்கம், கிண்டி, நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. </p><p>இந்த பகுதிகளை போலீசார் பாதுகாப்பு காரணங்களுக்காக சிவப்பு மண்டலமாக அறிவித்து டிரோன் கேமராக்கள் பறப்பதற்கும் ஆளில்லா வான்வழி கருவிகள் பறக்க விடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும் ரிமோட் மூலம் இயக்கப்படும் மைக்ரோ லைட் ஏர்கிராப்ட், பாரா கிளைடர்ஸ், பாரா மோட்டர்ஸ், ஹேங் கிளைடர்ஸ், ஹாட் ஏர் பலூன்கள் போன்றவற்றை சென்னை பெருநகரில் பறக்க விட தடை செய்யப்பட்ட ஆணை நடை முறையில் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சோழவந்தானில் இன்று காலை வீடுகளின் மீது  பெட்ரோல் குண்டு வீச்சு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81#comments</comments><guid isPermaLink="false">0ee05e12-7d2a-4a2b-8907-2cd08bc47376</guid><pubDate>Fri, 04 Sep 2026 07:03:25 +0000</pubDate><atom:updated>2026-09-04T07:03:25.169Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>petrol bomb,பெட்ரோல் குண்டு வீச்சு,சோழவந்தான்,Sholavandan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/bteyvkvw/PETROLBOMB.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/bteyvkvw/PETROLBOMB.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை மாவட்டம் சோழவந்தானில் இருந்து மதுரை செல்லும் பிரதான சாலையில் காமராஜர் நடுநிலை பள்ளி எதிரே உள்ள தெருவில் சுமார் 10-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. நேற்று இரவு வழக்கமான பணிகளை முடித்துவிட்டு அந்த பகுதியைச் சேர்ந்த அனைவரும் வீடுகளை பூட்டி தூங்க சென்றனர்.</p><h2><strong>பெட்ரோல் குண்டு வீச்சு</strong></h2><p>இந்தநிலையில் இன்று அதிகாலையில் மர்ம நபர் ஒருவர் அந்த குடியிருப்பு பகுதிக்கு வந்துள்ளார். பின்னர் அவர் தெருவின் முன்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் சுவரில் திடீரென அடுத்தடுத்து இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசி உள்ளார். ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவர்கள் இந்த சத்தம் கேட்டு அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்து பார்த்தனர்.</p><p>அப்போது வீட்டின் சுவற்றில் தீ பற்றி எரிந்துள்ளது. மேலும் பெட்ரோல் குண்டு வீசியதில் எரிபொருள் ஆங்காங்கே சிதறி தீப்பிடித்து எரிந்தது. மேலும் அந்த தெருவில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்திலும் லேசாக தீ பற்றியது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.</p><h2><strong>சி.சி.டி.வி. கேமரா ஆய்வு</strong></h2><p>பின்னர் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் உடனடியாக சோழவந்தான் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபரை தேடி வருகின்றனர். மர்ம நபர் பெட்ரோல் குண்டு வீசும் போது அவரது தலையிலும் தீப்பற்றி எரிந்த நிலையில் அங்கிருந்து தப்பி ஓடியது அருகில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் முன் விரோதத்தால் நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.</p><h2><strong>கண்காணிப்பு கேமரா</strong></h2><p>கடந்த சில மாதங்களுக்கு முன்பு சோழவந்தான் பகுதியில் அடுத்தடுத்து இரு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நிகழ்ந்த நிலையில் தற்போதும் நடைபெற்றுள்ளது. பெட்ரோல் பங்க்குகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் கேன்களில் பெட்ரோல் நிரப்பி செல்லும் நபர்கள் யார், எதற்காக வாங்கி சென்றனர் என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இன்று அதிகாலை நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் சோழ வந்தான் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அறத்தைப் போற்றி தீமைகளை முறியடிப்போம்..!- கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இபிஎஸ் வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/krishna-jayanti-eps-message-on-defeating-evil-and-celebrating-dharma</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/krishna-jayanti-eps-message-on-defeating-evil-and-celebrating-dharma#comments</comments><guid isPermaLink="false">11fe5bd4-18c6-4917-a037-5a4631bf3de4</guid><pubDate>Fri, 04 Sep 2026 06:52:37 +0000</pubDate><atom:updated>2026-09-04T06:52:37.146Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,எடப்பாடி பழனிசாமி,edappadi palanisamy,krishna jayanthi,ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/6e441kvf/EPS.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Edappadi palanisamy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/6e441kvf/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.</p><p>கிருஷ்ணரின் அவதாரம், மனித குலத்திற்கு வாழ்வியல் நெறிகளையும், அறம், கடமை, பக்தி ஆகியவற்றின் உயர்ந்த தத்துவங்களையும் உணர்த்துகிறது.</p><p>இத்தகைய மகத்தான கீதோபதேசத்தை வழங்கிய கண்ணனின் பிறப்பைத் தான் பக்தர்கள் கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி எனப் பல பெயர்களில் உலகெங்கும் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.</p><p>நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தியையொட்டி ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர் விஜய் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.</p><p>இந்நிலையில், கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் கூறியதாவது:-</p><p>'நான் எல்லா உயிர்களிடத்தும் சமமானவன்; எனக்கு பகைவனுமில்லை, நண்பனுமில்லை. என்னை அன்புடன் வணங்குவோர் உள்ளத்தில் நிறைந்திருப்பேன்' என்று உலகம் போற்றும் ஒப்பற்ற ஞான நூலாம் பகவத் கீதையை அருளிய, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த திருநாளை 'கிருஷ்ண ஜெயந்தி' என்றும்; 'கோகுலாஷ்டமி' என்றும் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும், எனது இனிய ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்ததே இந்த உலகத்தில் தீமைகளை ஒழிப்பதற்காக என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். </p><p>ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடும் ஒவ்வொருவரும் அறத்தைப் போற்றி, தீமைகளை முறியடிக்க வேண்டும் என்று உறுதியேற்க வேண்டும்.</p><p>'அறம் பிறழ்கின்றபோது நான் இவ்வுலகில் அவதரிப்பேன்' என்ற கண்ணபிரானின் போதனைக்கேற்ப, அறத்தை வளர்ப்பதே நமது கடமை என்ற உயரிய குறிக்கோளுடன் அனைவரும் ஒன்றிணைந்து வாழ வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஆபரேஷன் தலாஷ்: காணாமல் போன 3,357 குழந்தைகள் மீட்பு - அதிரடி காட்டிய பீகார் காவல்துறை</title><link>https://www.maalaimalar.com/news/national/operation-talash-3357-missing-children-rescued-bihar-police-takes-decisive-action</link><comments>https://www.maalaimalar.com/news/national/operation-talash-3357-missing-children-rescued-bihar-police-takes-decisive-action#comments</comments><guid isPermaLink="false">9bbde622-a5e5-449b-a55e-24408f687151</guid><pubDate>Fri, 04 Sep 2026 06:43:49 +0000</pubDate><atom:updated>2026-09-04T06:43:49.713Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காவல்துறை,பீகார்,Bihar,குழந்தை கடத்தல்,police,child trafficking</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/p96pvd8f/tn-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ குழந்தைகள் மீட்பு]]></media:title><media:description type="html"><![CDATA[ குழந்தைகள் மீட்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/p96pvd8f/tn-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆபரேஷன் தலாஷ் என்ற பெயரில் பீகார் போலீஸ் மேற்கொண்ட நடவடிக்கையில் 3,359 காணாமல் போன குழந்தைகளை கண்டறிந்துள்ளனர். அவர்களில் 3,357 பேரை பத்திரமாக மீட்டுள்ளனர்.</p><h2>ஆபரேஷன் தலாஷ்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/national/why-bihar-youth-insist-on-government-jobs">பீகார் மாநிலத்தில்</a> காணாமல் போன, கடத்தப்பட்ட மற்றும் வீட்டை விட்டு வெளியேறிய குழந்தைகளை கண்டறிந்து மீட்பதற்காக மாநிலம் தழுவிய அளவில் ஆபரேஷன் தலாஷ் மேற்கொள்ளப்படுகிறது.</p><p>பீகார் சிஐடி பிரிவின் கூடுதல் தலைமை இயக்குநர் கே. சுஹிதா அனுபமின் வழிகாட்டுதலின் ஆகஸ்ட் 20 தொடங்கிய இந்த ஆபரேஷன் செப்டம்பர் 10 வரை நடைபெறுகிறது.</p><p>இந்தத் தேடுதல் வேட்டையில் சிறார்களுக்கான சிறப்பு சிறப்பு காவல் பிரிவினர், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல உதவி மையங்கள், மனித கடத்தல் தடுப்புப் பிரிவுகள், மற்றும் 'போலீஸ் தீதி', 'அபயா பிரிகேட்' போன்ற பெண் காவலர்களின் சிறப்பு படைகள் ஒருங்கிணைந்து இந்த ஆபரேஷனை மேற்கொள்கின்றன.</p> <h2>மீட்பு</h2><p>ஆகஸ்ட் 20 முதல் செப்டம்பர் 2 வரை மொத்தம் 14 நாட்களில் மட்டும் மொத்தம் 3,359 குழந்தைகள் கண்டறியப்பட்டு, அவர்களில் 3,357 குழந்தைகள் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளதாக பீகார் காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>மீட்கப்பட்டவர்களில் 2,705 பேர் சிறுமிகள் மற்றும் 652 பேர் சிறுவர்கள் ஆவர். பெண் குழந்தைகளின் எண்ணிக்கை இதில் மிக அதிகமாக உள்ளது கவனிக்கத்தக்கது.</p> <h2>மிஷன் வாத்சல்யா</h2><p>14 நாட்களில் 'மிஷன் வாத்சல்யா' என்ற இணையதளத்தில் புதிதாக 2,254 குழந்தைகளின் விவரங்கள் பதிவேற்றப்பட்டன.</p><p>அதில் ஏற்கனவே இருந்த பதிவுகளுடன் ஒப்பிட்டு 2,787 குழந்தைகளின் விவரங்கள் துல்லியமாகப் பொருத்தப்பட்டு அடையாளம் காணப்பட்டன.</p><p>பீகார் காவல்துறையின் அறிக்கையின்படி, 'மிஷன் வாத்சல்யா' இணையதளம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை மொத்தம் 6,857 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p> <h2>தொடரும் ஆபரேஷன்</h2><p>இந்த ஆபரேஷன் வெறும் காவல் நிலையப் பதிவுகளுடன் மட்டும் நின்றுவிடாமல், சிறுவர் நீதி வாரியங்களின் அனுமதியுடன் குழந்தைகள் காப்பகங்கள், சீர்திருத்தப் பள்ளிகள் மற்றும் சிறார் இல்லங்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.</p><p>அங்குள்ள குழந்தைகளுடன் அதிகாரிகள் கலந்துரையாடி, அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் வழங்கி, அவர்களின் குடும்பப் பின்னணியைக் கண்டறிந்து வருகின்றனர்.</p><p>மேலும், <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D">குழந்தை திருமணங்கள்</a> தொடர்பாக நிலுவையில் உள்ள கடத்தல் வழக்குகளையும் காவல்துறையினர் இந்த ஆபரேஷனின் கீழ் தீவிரமாக மறுவிசாரணை செய்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>புதுச்சேரி வரும் ‘கைலாசா’ அதிபர் நித்யானந்தாவுக்கு அரசு பாதுகாப்பு... சீடர்கள் கோரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/puducherry/government-security-requested-for-kailasa-chief-nithyanandas-visit-to-puducherry-disciples-make-the-plea</link><comments>https://www.maalaimalar.com/news/puducherry/government-security-requested-for-kailasa-chief-nithyanandas-visit-to-puducherry-disciples-make-the-plea#comments</comments><guid isPermaLink="false">2154cbde-4804-4b1e-a7ea-0198c9da46f6</guid><pubDate>Fri, 04 Sep 2026 06:31:37 +0000</pubDate><atom:updated>2026-09-04T06:31:37.735Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Puducherry,புதுச்சேரி,Nithyananda,நித்தியானந்தா,நித்யானந்தா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/ylnnz4ig/puducherry.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ புதுச்சேரிக்கு வருகை தரும் ‘கைலாசா’ நித்யானந்தாவிற்கு அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று முதல்-மந்திரி ரங்கசாமியிடம் சீடர்கள் கோரிக்கை]]></media:title><media:description type="html"><![CDATA[ புதுச்சேரிக்கு வருகை தரும் ‘கைலாசா’ நித்யானந்தாவிற்கு அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று முதல்-மந்திரி ரங்கசாமியிடம் சீடர்கள் கோரிக்கை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/ylnnz4ig/puducherry.jpg?w=280" width="280"></media:thumbnail><category>புதுச்சேரி (Puducherry)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தியான பீடத்திற்கு விரைவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்துள்ளதாகவும், விழாவில் பங்கேற்க நித்யானந்தா புதுச்சேரிக்கு வருகை தர உள்ளதாகவும் கைலாசா நிர்வாகிகள் தெரிவித்தனர்.</strong></em></p><p>பெங்களூரூ பிடதியில் கடந்த 2003-ம் ஆண்டு ஆசிரமத்தை தொடங்கி நடத்தி வந்தவர் நித்யானந்தா சுவாமிகள்.</p><h2><strong>பாலியல் புகார்</strong></h2><p>இவருக்கு தமிழகத்தில் திருவண்ணாமலை, ராஜபாளையம், புதுச்சேரி ஏம்பலம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆசிரமம் உள்ளது. பெங்களூரு ஆசிரமத்தில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் நடப்பதாக புகார் கடந்த 2018-ல் புகார் எழுந்தது.</p><h2><strong>மாயம்</strong></h2><p>இதனையடுத்து <a href="https://www.maalaimalar.com/topic/நித்தியானந்தா">நித்யானந்தா</a> மீது பாலியல் துன்புறுத்தல், ஆள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் பெங்களூரு போலீசாரால் பதிவு செய்யப்பட்டது. போலீசாரால் தேடப்பட்டு வந்த நிலையில நித்யானந்தா  மாயமானார். </p><p>இதனால் தேடப்படும் குற்றவாளியாக நித்யானந்தா அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு கைலாசா என்ற பெயரில் தனி நாட்டை நித்யானந்தா உருவாக்கினார். இவர் மீது வழக்குகள் உள்ளதால் அவரால் இந்தியா திரும்ப முடியவில்லை.</p><h2><strong>கும்பாபிஷேகம்</strong></h2><p>இதனிடையே புதுச்சேரியை அடுத்த ஏம்பலத்தில் உள்ள நித்யானந்தா தியான பீடத்திற்கு திருப்பணிகள் நடைபெற்று கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>இந்த நிலையில் புதுச்சேரி  நித்யானந்தா தியான பீடத்தின் நிர்வாகிகள், புதுச்சேரி சட்டசபையில் முதல்-மந்திரி ரங்கசாமியை சந்தித்து பேசினர். </p><h2><strong>பாதுகாப்பு வழங்க கோரிக்கை</strong></h2><p>அப்போது தியான பீடத்திற்கு விரைவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்துள்ளதாகவும், விழாவில் பங்கேற்க நித்யானந்தா புதுச்சேரிக்கு வருகை தர உள்ளதாகவும் கைலாசா நிர்வாகிகள் தெரிவித்தனர்.</p><p>மேலும் இதுதொடர்பாக மத்திய அரசிடம் பேசி வருகிறோம். நித்யானந்தா புதுச்சேரிக்கு வரும் போது மாநில அரசு சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என்றும் முதல்-மந்திரி ரங்கசாமியிடம் கோரிக்கை வைத்தனர்.</p><h2><strong>பரபரப்பு</strong></h2><p>இதனை கேட்ட முதல்-மந்திரி ரங்கசாமி, 'சரி... அவர் வரட்டும்... பார்த்துக் கொள்ளலாம்...' என்று தெரிவித்தார். தொடர்ந்து முதல்-மந்திரி ரங்கசாமிக்கு கைலாசாவின் சிறப்புகள் அடங்கிய புத்தகத்தையும் தியான பீட நிர்வாகிகள் வழங்கினர். நித்யானந்தா புதுச்சேரிக்கு வர இருப்பதாக தியான பீட நிர்வாகிகள் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி நிறைந்திருக்கட்டும்-  அண்ணாமலை கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/annamalai-extends-krishna-jayanti-wishes-to-people-of-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/annamalai-extends-krishna-jayanti-wishes-to-people-of-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">ea2a697e-c11b-4f83-8272-f7dbe9d867b8</guid><pubDate>Fri, 04 Sep 2026 06:23:36 +0000</pubDate><atom:updated>2026-09-04T06:23:36.690Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>அண்ணாமலை,கிருஷ்ண ஜெயந்தி,krishna jayanthi,annamalai,We the Leaders,வீ த லீடர்ஸ்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/h95qdbca/Annamalai.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Annamalai]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/h95qdbca/Annamalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கிருஷ்ணரின் அவதாரம், மனித குலத்திற்கு வாழ்வியல் நெறிகளையும், அறம், கடமை, பக்தி ஆகியவற்றின் உயர்ந்த தத்துவங்களையும் உணர்த்துகிறது.</p><p>இத்தகைய மகத்தான கீதோபதேசத்தை வழங்கிய கண்ணனின் பிறப்பைத் தான் பக்தர்கள் கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி எனப் பல பெயர்களில் உலகெங்கும் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.</p><p>நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தியையொட்டி ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர் விஜய் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.</p><p>இதுகுறித்து வீ த லீடர்ஸ் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழக மக்கள் அனைவருக்கும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரத் திருநாளான கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் அருளால், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் நிறைந்திருக்கட்டும். </p><p>இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>இந்தியாவை வல்லரசு நாடாக்கும் பயணத்தில் தொடர்ந்து முன்னேறுவோம்- இஸ்ரோ தலைவர் </title><link>https://www.maalaimalar.com/news/topnews/gslv-rocket-isro-narayanan</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/gslv-rocket-isro-narayanan#comments</comments><guid isPermaLink="false">62be0d23-a0cd-4fc8-b5e1-59a88360d206</guid><pubDate>Fri, 04 Sep 2026 06:20:27 +0000</pubDate><atom:updated>2026-09-04T06:20:27.248Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>செயற்கைக்கோள்,இஸ்ரோ தலைவர்,satellite,GSLV rocket,ஜிஎஸ்எல்வி ராக்கெட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/r63qzz60/isronarayanan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/r63qzz60/isronarayanan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <h2><strong>இ.ஓ.எஸ். -05 செயற்கைக்கோள்</strong></h2><p>ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரி கோட்டாவில் இருந்து ஜி.எஸ்.எல்.வி.-எப்17 ராக்கெட் மூலம் இ.ஓ.எஸ். -05 செயற்கைக்கோள் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. </p><h2><strong>இதையடுத்து இஸ்ரோ தலைவர் நாராயணன் பேசியதாவது:-</strong></h2><p>நாட்டு மக்களுக்கு காலை வணக்கம். நாடு இன்று சூரிய உதயத்தை பார்ப்பதற்கு முன்பாகவே, விண்ணில் ஜி.எஸ்.எல்.வி.-எப்17 ராக்கெட் மூலம் இ.ஓ.எஸ். -05 செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்தி உள்ளோம். இந்த உற்சாகமான தருணத்தில், இஸ்ரோ சார்பில் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2><strong>இஸ்ரோ குழுவினர்</strong></h2><p>நாட்டு மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க எங்களால் முடிந்தவரை தொடர்ந்து முயற்சி செய்வோம். நாங்கள் எதிர் பார்ப்பதைவிட அதிக சாதனைகளை பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த வெற்றிக்காகபாடுபட்ட இஸ்ரோ குழுவினர் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2><strong>இஸ்ரோவின் முன்னாள் தலைவர்கள்</strong></h2><p>இஸ்ரோவின் முன்னாள் தலைவர்களான ராதாகிருஷ்ணன், சோம்நாத், கிரண்குமார் ஆகியோர் இந்த வெற்றியை நேரில் காண வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களுக்கும், இஸ்ரோவுடன் இணைந்து பணியாற்றிய அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2><strong>ஸ்ரீ ஹரிகோட்டாவில்</strong></h2><p>இந்த நிதியாண்டில் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட முதல் ஏவுதல் இது. பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ், இந்த நிதியாண்டில் இங்கிருந்து மேலும் 6 ஏவுதல்களை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளோம்.</p><h2><strong>தொழில்துறை</strong></h2><p>முக்கியமான பணிகள் உள்ளிட்ட அடுத்தடுத்த ஏவுதல்களுக்கான நடவடிக்கைகள் தொழில்துறையினர் மற்றும் பிற நிறுவனங்களுடன் இணைந்து முறையாக நடைபெற்று வருகின்றன. திட்டமிட்டுள்ள ஏவுதல்களை இந்த ஆண்டிலேயே மேற்கொள்ள இலக்கு நிர்ணயித்துள்ளோம். </p><h2><strong>பரிசு</strong></h2><p>‘அதிக வேலைக்கான பரிசு இன்னும் அதிக வேலைதான்’ என்று ஒரு பழமொழி உண்டு. நமக்கு முன்னால் ஏராளமான பணிகள் உள்ளன. அவற்றை தொடர்ந்து மேற்கொண்டு நாட்டு மக்களுக்கும், நாட்டிற்கும் சிறந்த சேவைகளை வழங்குவோம். வரும் ஆண்டுகளில் இந்தியாவை ஒரு வல்லரசு நாடாக உருவாக்குவதற்கான பயணத்தில் தொடர்ந்து முன்னேறுவோம்.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>கனடா பெண்ணுக்கு வீடியோ காலில் நிர்வாண பூஜை- ஆபாச காட்சியை காட்டி மிரட்டிய ஜோதிடர் கைது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/astrologer-arrested-over-nude-puja</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/astrologer-arrested-over-nude-puja#comments</comments><guid isPermaLink="false">701f021a-9d3c-419d-a194-d4f414781b4c</guid><pubDate>Fri, 04 Sep 2026 06:10:49 +0000</pubDate><atom:updated>2026-09-04T06:10:49.706Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>நிர்வாண பூஜை,ஜோதிடர் கைது</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/2urs1fry/arrest1.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ கைது]]></media:title><media:description type="html"><![CDATA[ கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/2urs1fry/arrest1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கிளி ஜோதிடர் இதுபோன்று வேறு எந்த பெண்களையாவது மிரட்டி வீடியோ எடுத்து இருக்கிறாரா? என்பது பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது.</strong></em></p><p>கனடாவைச் சேர்ந்த 37 வயது பெண் ஒருவர் தமிழகம் வந்துள்ளார். ஜோதிடத்தில் அதிக நாட்டம் கொண்ட அவர் தொலைக்காட்சிகளிலும் அது தொடர்பாக பேசுபவர் என்று கூறப்படுகிறது.</p><h2><strong>கிளி ஜோதிடம்</strong></h2><p>இந்த நிலையில் அந்தப் பெண் பெசன்ட் நகர் கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்கு கிளி ஜோதிடம் பார்த்துக் கொண்டிருந்த ஜோதிடர் ஒருவரிடம் சென்று தனக்கு ஜோதிடம் பார்க்குமாறு கூறியுள்ளார்.</p><p>அப்போது கிளி ஜோதிடர் நான் உங்களை தொலைக்காட்சிகளில் பார்த்து உள்ளேன். நீங்கள் நன்றாக ஜோதிடம் பற்றி பேசுகிறீர்கள்.</p><p>நான் சொல்வதைக் கேட்டால் நீங்கள் இன்னும் உயரத்துக்கு சென்று விடலாம் என்று கூறியதுடன் அந்தப் பெண்ணின் வாழ்வில் நடந்த ஒரு விஷயத்தையும் துல்லியமாக குறிப்பிட்டு பல கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.</p><h2><strong>நிர்வாண பூஜை</strong></h2><p>இதனைத் தொடர்ந்து கனடா பெண் கிளி ஜோதிடரை முழுமையாக நம்பத் தொடங்கியுள்ளார். நீங்கள் ஒரு நிர்வாண பூஜை செய்தால் போதும். வீடியோ கால் மூலமாகவே இந்த பூஜையை செய்து விடலாம். அப்படி செய்து விட்டால் நீங்கள் நினைத்தது எல்லாம் நடக்கும் என்று கூறியிருக்கிறார்.</p><p>இதனை உண்மை என்று நம்பிய கனடா நாட்டுப் பெண்ணும் கிளி ஜோதிடர் கூறியபடி நிர்வாண பூஜைக்கு தயாராகி உள்ளார்.</p><p>ஜோதிடர் சொன்னபடி பொருட்களை எல்லாம் வாங்கி வீட்டில் வைத்து தனது ஆடைகளை எல்லாம் கலைந்து நிர்வாணமாக வீடியோ காலில் கிளி ஜோதிடருக்கு காட்சி தந்துள்ளார். கிளி ஜோதிடரும் தான் இருந்த இடத்தில் இருந்து பெண்ணை ரசித்த படி நிர்வாண பூஜைகளை செய்துள்ளார்.</p><h2><strong>பணம் கேட்டு மிரட்டல்</strong></h2><p>இந்த நிர்வாண பூஜைக்கு கிளி ஜோதிடர் ரூ.20 ஆயிரம் பணம் வாங்கி உள்ளார். இதன் பின்னர் கனடா பெண்ணிடம் போனில் பேசிய ஜோதிடர் உங்களது நிர்வாண வீடியோவை நான் செல்போனில் பதிவு செய்து வைத்துள்ளேன்.</p><p>அதனை வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் எனக்கு கூடுதலாக பணம் தர வேண்டும் எனக் கூறி மிரட்டல் விடுத்துள்ளார். மாம்பலம் பகுதியில் அறை எடுத்து தங்கியிருந்த கனடா பெண் ஜோதிடர் சொன்னதைக் கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.  இது பற்றி மாம்பலம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பெண்ணை ஏமாற்றி நிர்வாண பூஜை செய்த கிளி ஜோதிடர் யார்? என்பது பற்றி செல்போன் நம்பர் மூலமாக விசாரணை நடத்தினார்கள். இதில் கிளி ஜோதிடர் குற்றாலம் பகுதியை சேர்ந்த இசக்கி முத்து என்பது தெரிய வந்தது. </p><p>இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். கிளி ஜோதிடர் இதுபோன்று வேறு எந்த பெண்களையாவது மிரட்டி வீடியோ எடுத்து இருக்கிறாரா? என்பது பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி - சிறுவனிடம் இருந்து பெண்ணை காப்பாற்றிய தெருநாய்கள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/harassment-issue-stray-dogs-saved-a-woman-from-a-young-man</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/harassment-issue-stray-dogs-saved-a-woman-from-a-young-man#comments</comments><guid isPermaLink="false">f06384c3-b191-4b38-b23e-75945a52b774</guid><pubDate>Fri, 04 Sep 2026 06:07:17 +0000</pubDate><atom:updated>2026-09-04T06:07:17.010Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>harassment issue,தெரு நாய்கள்,சிறுவன் கைது,Boy arrested,Street dogs,பாலியல் வன்கொடுமை முயற்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/k5vbqw4f/woman.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/k5vbqw4f/woman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>போதை ஆசாமியிடம் இருந்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தெரு நாய்கள் போராடி காப்பாற்றிய சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், இதுதொடர்பாக விசாரணை நடத்தினர்.</p> <p>கோவை என்.ஜி.ஜி.ஓ. காலனி அசோகபுரம் பகுதியில் ஒரு பெட்டிக்கடைக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததாக துடியலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.</p><h2>அதிர்ச்சி சம்பவம்</h2><p>தகவலின்பேரில் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதன் ஒருபகுதியாக அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.</p> <h2>கண்காணிப்பு கேமரா</h2><p>பெட்டிக்கடை தீ வைப்பு சம்பவத்தையும் தாண்டி அதிர்ச்சி தரும் வேறு ஒரு கொடூர சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது தெரிய வந்தது. அதுபற்றிய விவரம் வருமாறு:-</p><p>கோவை அசோகபுரம் ரெயில்வே மேம்பால சாலையோரம் அதே பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அமர்ந்து உள்ளார். அப்போது அந்த வழியாக கஞ்சா-மதுபோதையுடன் ஒருவர் வருகிறார். அவரை பார்த்ததும்   அங்கு நின்றிருந்த 2 நாய்கள் இடைவிடாமல் தொடர்ந்து  குரைத்தன.</p> <h2>போதை நபர்</h2><p>இதனால் ஆத்திரமடைந்த நபர் அந்த பெண்ணிடம், "இது உங்களின் நாயா? எனக்கு பின்னால் வந்து கொண்டு உள்ளது" என்று கேட்டார். அதற்கு அந்த பெண், "கல்லை எடுத்து அடியுங்கள். நாய்கள் ஓடிவிடும். இந்த விஷயம் கூட உங்களுக்கு தெரியாதா?" என்று கூறினார்.</p><p>இதனை கேட்டு அந்த நபரும் உடனடியாக கல்லை எடுத்து வீசினார். தொடர்ந்து அந்த நாய்கள் சில அடி தூரம் ஓடி சென்றுவிட்டன. இருந்தபோதிலும் அந்த நாய்கள் மீண்டும் அந்த நபரை பார்த்து குரைத்து கொண்டே நின்றன.</p> <h2>பாலியல் வன்கொடுமை முயற்சி</h2><p>​அந்த நேரத்தில் போதை தலைக்கேறிய நிலையில் இருந்த நபருக்கு, சாலையோரம் தனியாக இருந்த மனநலம் பாதித்த பெண்ணை பார்த்ததும் சபலம் ஏற்பட்டது. இதனால் அவன் அந்த பெண்ணை திடீரென கற்பழிக்க முயன்றான். </p><p>எனவே அதிர்ச்சி அடைந்த பெண், காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டார். அப்போது அங்கு யாரும் இல்லை என்பதால் உதவிக்கு யாரும் வரவில்லை.</p> <p>இந்த நிலையில் மனநலம் பாதித்த பெண்ணிடம் போதையில் இருந்த நபர் அத்துமீறுவதை பார்த்த தெருநாய்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு ஓடோடி வந்தன. பின்னர் அந்த நபரை சுற்றி வளைத்து குரைத்தபடி இருந்தன. </p><h2>சிறுவன் கைது</h2><p>மேலும் அந்த பெண்ணிடம் அத்துமீற முயன்றவரின் கால்களை அந்த நாய்கள் கடித்து இழுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணை நெருங்க விடாமல் தடுத்தன. தெரு ​நாய்களின் தொடர் தாக்குதலால் நிலைகுலைந்து</p><p>போன அந்த நபர் உடனடியாக கற்பழிப்பு முயற்சியை கைவிட்டு அந்த பெண்ணிடம் அங்கு விலகியதுடன், தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடித்தான். இருப்பினும் அந்த நாய்கள் பலாத்காரம் செய்ய முயன்ற நபரை பின்தொடர்ந்து துரத்தி சென்றன.</p> <p>அசோகபுரம் மேம்பாலத்தில் கற்பழிக்க முயன்ற நபரிடம் இருந்து மனநலம் பாதித்த பெண்ணை தெரு நாய்கள் காப்பாற்றிய காட்சி, சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த துடியலூர் போலீசார், அந்த கேமராவில் பதிவாகி இருந்த நபர் தொடர்பாக விசாரணை நடத்தினர்.</p> <h2>போலீசார் விசாரணை</h2><p>போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் மனநலம் பாதித்த பெண்ணிடம் அத்துமீற முயன்றது, கணேஷ் நகர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் என்பதும், அசோகபுரம் மேம்பாலத்தில் தனியாக இருந்த மனநலம் பாதித்த பெண்ணை மதுபோதையில் பலாத்காரம் செய்ய முயன்றதும் தெரிய வந்தது. தொடர்ந்து அந்த சிறுவனை போலீசார் கைது செய்து அவனை கோவை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் ஒப்படைத்தனர்.</p><p>கோவை துடியலூர் அருகே போதை ஆசாமியிடம் இருந்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தெரு நாய்கள் போராடி காப்பாற்றிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>இந்திய நிறுவனத்துடன் ரூ. 768 கோடி ஆயுத கொள்முதல் ஊழல் - எஸ்டோனிய பாதுகாப்பு அமைச்சர் ராஜினாமா </title><link>https://www.maalaimalar.com/news/world/estonian-defence-minister-resigns-over-768-crore-arms-procurement-scandal-involving-an-indian-company</link><comments>https://www.maalaimalar.com/news/world/estonian-defence-minister-resigns-over-768-crore-arms-procurement-scandal-involving-an-indian-company#comments</comments><guid isPermaLink="false">64c004a0-33c8-4b09-991d-a57cf5128f80</guid><pubDate>Fri, 04 Sep 2026 06:02:46 +0000</pubDate><atom:updated>2026-09-04T06:02:46.081Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உக்ரைன் போர்,Russia,Ukraine War,Corruption,Estonia,ரஷியா,ஊழல்,எஸ்டோனியா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/2hjhgr1r/tn-1.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ எஸ்டோனிய பாதுகாப்பு அமைச்சர்]]></media:title><media:description type="html"><![CDATA[ எஸ்டோனிய பாதுகாப்பு அமைச்சர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/2hjhgr1r/tn-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ரஷியாவுக்கு எதிராக போரிட்டு வரும் உக்ரைனுக்கு பீரங்கி குண்டுகள் வழங்குவதற்காக இந்திய நிறுவனத்துடன் செய்த ஒப்பந்தத்தில் ஊழல் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் எஸ்டோனியா பாதுகாப்பு அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார். </p> <p>வட ஐரோப்பாவில் உள்ள பால்டிக் நாடுகளில் ஒன்று எஸ்டோனியா. ரஷியாவுக்கு அருகில்  அமைந்துள்ளது இந்நாடு. </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D">ரஷியாவிற்கு எதிரான போரில்</a> உக்ரைனுக்கு பல மேற்கத்திய நாடுகள் உதவி வருகின்றன. </p><p>அந்த வகையில் ரஷியா உடனான போரில் கடும் ஆயுத பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள உக்ரைனுக்கு உதவ எஸ்டோனியா முன்வந்தது. </p><p>அதன்படி <a href="https://www.maalaimalar.com/news/world/holding-elections-in-ukraine-would-be-a-disaster-why-was-the-defense-minister-dismissed-what-zelenskyy-said">உக்ரைனுக்கு </a>ராணுவ உதவி வழங்கும் நோக்கில் எஸ்டோனிய அரசு இந்திய நிறுவனத்துடன் 70 மில்லியன் யூரோ (சுமார் ரூ. 768 கோடி) மதிப்பிலான பீரங்கி குண்டுகள் கொள்முதல் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது.</p><p>இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் எஸ்டோனியாவின் தேசிய தணிக்கை அலுவலகம் அந்நாட்டின் பாதுகாப்புத் துறையின் நிதி நிர்வாகத்தில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக அறிக்கை வெளியிட்டது.</p><p>இந்த சர்ச்சைகளை தொடர்ந்து எஸ்டோனிய பாதுகாப்பு அமைச்சர் ஹன்னோ பெவ்கூர் தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார்.</p><h2>சர்ச்சை</h2><p>எஸ்டோனிய தேசிய தணிக்கை அலுவலக அறிக்கையின்படி,</p><p>2024ஆம் ஆண்டில் எஸ்டோனியாவின் பாதுகாப்பு முதலீட்டு மையம் இத்தாலியில் பதிவு செய்யப்பட்ட 'Datasel SRL' என்ற நிறுவனத்துடன் இந்த ஆயுத ஒப்பந்தத்தை மேற்கொண்டது.</p><p>Datasel SRL நிறுவனம் அதே ஆண்டில் 'Neco Defence Munitions' என்ற இந்திய நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டது.</p><p>ஆயுதங்களைத் தயாரிப்பதிலோ அல்லது விற்பனை செய்வதிலோ இந்த நிறுவனத்திற்கு முன் அனுபவம் இல்லை.</p><p>ஆனாலும் எஸ்டோனிய பாதுகாப்பு முதலீட்டு மையம், ஐரோப்பிய ஒன்றியத்தின் அமைதி நிதியின் கீழ் அந்நிறுவனத்துக்கு 70 மில்லியன் யூரோக்கள் முன்பணம் வழங்கப்பட்டுள்ளது.</p><p>ஒப்பந்தத்தின்படி, ஆயுதங்கள் சில மாதங்களுக்குள் உக்ரைனைச் சென்றடைய வேண்டும், ஆனால் உற்பத்திச் சிக்கல்கள் காரணமாக விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டன.</p><p>2025ல் சில ஆயுதங்கள் வழங்கப்பட்ட போதிலும், அவை தரநிலைகளை பூர்த்தி செய்யவில்லை என எஸ்டோனிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p>இதனிடையே அந்நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை எஸ்டோனியா ரத்து செய்தது. ஒப்பந்தத்தை நியாயமற்ற முறையில் ரத்து செய்ததாக அந்நிறுவனம் பிரான்சின் ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள சர்வதேச மத்தியஸ்த நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.</p><p>58 மில்லியன் யூரோ மதிப்பிலான பொருட்களைத் தடையின்றி வழங்கிய பின்னரும் எஸ்டோனியா ஒப்பந்தத்தை ஒருதரப்பாக ரத்து செய்ததால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தனது புகாரில் தெரிவித்துள்ளது.</p><p>இதனிடையே அந்நிறுவனத்துக்கு முன்பணமாக வழங்கிய 70 மில்லியன் யூரோக்களை மீட்க எஸ்டோனியா முயன்று வருகிறது. இதில் ஊழல் நடந்துள்ளதாக எஸ்டோனிய எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.</p><p>பாதுகாப்பு நிதிகளின் பயன்பாட்டில் வெளிப்படைத்தன்மை இல்லாததையும், ஒப்பந்தங்களின் முறையற்ற நிர்வாகத்தையும் எஸ்டோனிய தேசிய தணிக்கை அலுவலக அறிக்கை கடுமையாக விமர்சித்துள்ளது.</p><h2>ராஜினாமா</h2><p>இந்த சர்ச்சையை தொடர்ந்து தனிப்பட்ட முறையில் ஒப்பந்தங்களில் தனக்கு நேரடி பங்கில்லை என்றாலும், பாதுகாப்பு அமைச்சர் என்ற அடிப்படையில் பொறுப்பெற்று பதவி விலகுவதாக ஹன்னோ பெவ்கூர் அறிவித்துள்ளார்.</p><p>உக்ரைனுக்கான எஸ்டோனியாவின் ஆதரவும் தொடர்ந்து இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அரசு மதிப்பிட்டதை விட 32% குறைவு: முதலமைச்சரின் புதிய அலுவலக பணிக்கு தேர்வான பிரபல நிறுவனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-ministers-new-office-tender-selected-at-32-under-government-assessed-cost</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-ministers-new-office-tender-selected-at-32-under-government-assessed-cost#comments</comments><guid isPermaLink="false">e36017b4-c676-4292-a25f-71285bcf5949</guid><pubDate>Fri, 04 Sep 2026 05:48:40 +0000</pubDate><atom:updated>2026-09-04T05:48:40.591Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,tender,முதலமைச்சர் விஜய்,டெண்டர் தேர்வு,CM New Office</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/bpc6ojgk/Vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/bpc6ojgk/Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சரின் அலுவலகம் புதுப்பிப்பதற்கான டெண்டரில் ரூ.3.78 கோடிக்கு ராசி பில்டர்ஸ் நிறுவனம் தேர்வாகியுள்ளது.</p><h2>CM புதிய அலுவலகம்</h2><p>முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்திற்கு மாற உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.</p><p>முதலமைச்சர், முதலமைச்சரின் செயலாளர்கள், ஆலோசகர்களின் அறை 10வது மாடிக்கு மாறுகிறது என்றும், 10வது மாடியில் உள்ள செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையின் பல்வேறு பிரிவுகள் கலைவாணர் அரங்கிற்கு மாற்றப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.</p><p>தற்போதைய பிரதான கட்டிடத்தில் நிலவும் கடுமையான இடப் பற்றாக்குறை காரணமாக இந்த மாறுதல் நடைபெறுகிறது.</p><p>ஆனால் அரசியல் வட்டாரத்தில், தற்போதைய அறை <a href="https://www.maalaimalar.com/ampstories/web-stories/vasthu-fish" rel="nofollow">வாஸ்து</a>படி இல்லை என்றும், ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க உயரமான இடத்தில் அமர வேண்டும் என்ற ஜோதிடரின் ஆலோசனையும் இதற்குக் காரணம் எனப் பரவலாகப் பேசப்பட்டது.</p><h2>ராசி பில்டர்ஸ்</h2><p>புனித ஜார்ஜ் கோட்டையின் நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சரின் புதிய அலுவலகம் அமையவுள்ள நிலையில், டெண்டர் தேர்வாகியுள்ளது.</p><p>அரசு நிர்ணயித்த மதிப்பீட்டுத் தொகையை விட 32 சதவீதம் குறைவாக ரூ.3.78 கோடிக்கு ராசி பில்டர்ஸ் நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>FCRA மசோதாவை ஆய்வு செய்ய 31 எம்.பி.க்கள் கொண்ட கூட்டுக்குழு அமைப்பு.. பின்னணி என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/national/joint-committee-comprising-31-mps-formed-to-examine-the-fcra-bill</link><comments>https://www.maalaimalar.com/news/national/joint-committee-comprising-31-mps-formed-to-examine-the-fcra-bill#comments</comments><guid isPermaLink="false">f78f143f-34cc-428d-abcc-b733ecc013f5</guid><pubDate>Fri, 04 Sep 2026 05:17:34 +0000</pubDate><atom:updated>2026-09-04T05:17:34.600Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Joint Parliamentary Committee,FCRA Amendment Bill,எப்சிஆர்ஏ,எப்சிஆர்ஏ சட்டத்திருத்த மசோதா,நாடாளுமன்ற கூட்டுக் குழு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/79soll06/tn.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ FCRA ]]></media:title><media:description type="html"><![CDATA[ FCRA ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/79soll06/tn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/fcra-amendment-bill-resolution-passed-unanimously-in-tn-assembly">எப்சிஆர்ஏ சட்டத்திருத்த மசோதா</a>வை ஆய்வு செய்ய 31 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. </p><p>அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணித்து ஒழுங்குபடுத்தும், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதா (<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%8F-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE">எப்சிஆர்ஏ</a>)வுக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. </p><p>மத்தியில் பாஜக தலைமையிலான என்டிஏ அரசாங்கம் எப்சிஆர்ஏ மசோதாவை கடந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கொண்டு வர எத்தனித்தது. </p><p>ஆனால் ஆகஸ்ட் 12 அன்று மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு மற்றும் விவாதங்களுக்குப் பிறகு மசோதாவானது நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பி ஆய்வு செய்ய முடிவெடுக்கப்பட்டது. </p><h2>கூட்டுக்குழு</h2><p>இந்நிலையில் எப்சிஆர்ஏ மசோதாவை ஆய்வு செய்ய 31 எம்.பிக்களை உள்ளடக்கிய நாடாளுமன்ற கூட்டுக் குழுவை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அமைத்துள்ளார்.</p><p>இந்த கூட்டுக்குழுவில் பாஜக எம்பி சஞ்​சய் ஜெய்ஸ்வால் தலைமை வகிப்​பார்.</p><p>இதில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசை சேரந்த 5 எம்.பிக்கள் இடம்பெற்றுள்ளனர். திமுகவின் 2 எம்பிக்கள் இடம்பெற்றுள்ளனர். </p><p>சமாஜ்வாதி, சரத்பவார் தேசியவாத காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் தலா 1 எம்.பி.க்கள் குழுவில் இடம்பெற்றுள்ளனர். மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் இருவர் இடம்பெற்றுள்ளனர்.</p><p>2014 முதல் பல சர்ச்சைக்குரிய மசோதாக்களை மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ளது. அவ்வாறான மசோதாக்களை ஆய்வு செய்ய அமைக்கப்படும் 19வது நாடாளுமன்ற கூட்டுக் குழு இது. 2024இல் இருந்து 9வது கூட்டுக்குழு இது.</p><h2>எப்சிஆர்ஏ சர்ச்சை</h2><p>கடந்த 1976 ஆம் ஆண்டு அப்​போதைய பிரதமர் இந்​திரா காந்தி ஆட்​சிக் காலத்​தில் எப்சிஆர்ஏ சட்டம் கொண்டு வரப்​பட்​டது.</p><p>கடந்த 2010 ஆம் ஆண்​டில் அப்​போதைய பிரதமர் மன்​மோகன் சிங் ஆட்​சி​யில் இந்த சட்​டத்​தில் கடுமை​யான விதி​கள் சேர்க்​கப்​பட்​டன.</p><p>கடந்த 2020 ஆம் ஆண்​டில் பிரதமர் ​திர மோடி தலைமையிலான என்டிஏ அரசின் இரண்டாம் ஆட்சிக் காலத்தில் எப்சிஆர்ஏவில் ​மேலும் கடுமை​யான விதி​கள் சேர்க்கப்பட்டன.</p><p>தற்​போது மேலும் அதில் மேலும் 3 முக்​கிய திருத்​தங்​கள் செய்யப்பட்டுள்ளன.</p><h2>3 முக்​கிய திருத்​தங்​கள்</h2><p>எப்சிஆர்ஏ உரிமம் ரத்து செய்யப்பட்ட அமைப்புகளின் சொத்துக்களை நிர்வகிக்கவும், தேவைப்பட்டால் அவற்றை விற்கவும் ஒரு தனி அதிகாரியை அரசு நியமிப்பது,</p><p>உரிமம் ரத்து செய்யப்பட்ட அமைப்புகள் தங்களின் வெளிநாட்டு நிதி மற்றும் அசையும், அசையா சொத்துக்களைப் பயன்படுத்துவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பது, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விதிகளைப் பூர்த்தி செய்யாத அமைப்புகளின் சொத்துக்களை அரசாங்கம் தனது கட்டுப்பாட்டில் எடுப்பது ஆகியவை புதிய திருத்தங்கள் ஆகும்.</p><p>இது குறித்து புதிதாக அமைக்கப்பட்ட கூட்டுக்குழு ​​ செய்து தனது பரிந்துரைகளை சமர்ப்பிக்க உள்ளது. இதன் பின் மசோதா அடுத்த கூட்டத்தொடரில் மக்களவையில் வாக்கெடுப்புக்கு விடப்படும்.</p>]]></content:encoded></item><item><title>அனைவரையும் முன்னேற்றும் ஆசிரியர்கள் வாழ்வும் ஏற்றம் பெற வகை செய்ய வேண்டும்! அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-wishes-to-teachers-day</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-wishes-to-teachers-day#comments</comments><guid isPermaLink="false">e8e11445-3249-4375-adf4-4ddaa93e4f86</guid><pubDate>Fri, 04 Sep 2026 05:17:10 +0000</pubDate><atom:updated>2026-09-04T05:17:10.901Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,teachers day,ஆசிரியர் தினம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/ceojmvnu/Anbumaniramadoss01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/ceojmvnu/Anbumaniramadoss01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஆசிரியர்களின் வாழ்க்கை முன்னேற்றம் பெற அரசு வகை வேண்டும்; அந்த இலக்கை நோக்கி உழைக்க ஆசிரியர்கள் நாளில் அனைவரும் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>ஏணியாகவும், தோனியாகவும் இருந்து மாணவர்களை ஏற்றம் பெறவும், வாழ்வில் கரை சேரவும் வகை செய்யும்  ஆசிரியர்களை பெருமைப்படுத்துவதற்கான <a href="https://www.maalaimalar.com/topic/ஆசிரியர்-தினம்">ஆசிரியர்கள் நாளைக்</a> கொண்டாடும் ஆசிரியர்கள் அனைவருக்கும்  எனது நல்வாழ்த்துகளையும், வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>உலகில் அனைவரின் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும் ஆத்மாக்கள் ஆசிரியர்கள் தான்; அதேபோல், மற்றவர்களின் முன்னேற்றத்தைக் கண்டு பொறாமைப்படாமல், மகிழ்ச்சியடையும் மகாத்மாக்களும் ஆசிரியர்கள் தான். அதனால் தான் அவர்கள் அனைவராலும் வணங்கப்படுபவர்களாக உள்ளனர். இத்தகைய சிறப்புமிக்க ஆசிரியர்களை இந்த சமுதாயம் போற்ற வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் நாள் என்பதை ஆசிரியர்களும், மாணவர்களும் மட்டுமே கொண்டாடும் நிலையை மாற்றி ஒட்டுமொத்த மக்களும் கொண்டாடும் நிலையை உருவாக்க வேண்டும். அது தான் நமது சமுதாயத்தை வளர்ப்பதற்காக உழைக்கும் ஆசிரியர் பெருமக்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக இருக்கும்.</p><p>உலகில் அனைவராலும் கொண்டாடப்படுபவர்களாக இருப்பவர்கள் ஆசிரியர்கள் தான். அரசர்களாலும் மதிக்கப்படுபவர்கள் அவர்கள் தான். ஆனால், அவர்கள் வாழ்க்கை மட்டும் கொண்டாட்டமானதாக இல்லை. பழைய ஓய்வூதியத் திட்டம், சமவேலைக்கு சம ஊதியம், தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு என பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத கோரிக்கைகள் ஏராளமாக இருக்கும் நிலையில், கடந்த ஆண்டு முதல் ஆசிரியர்களுக்கு புதிய நெருக்கடி ஒன்றும் உண்டாகியுள்ளது. கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைப் படுத்தப்படுவதற்கு முன் ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள் 2028 ஆகஸ்ட் மாதத்திற்குள் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது தான் இதற்கு காரணமாகும். ஆசிரியர்களின் இந்த நெருக்கடியைப் போக்க கடந்த திமுக ஆட்சி மட்டுமின்றி, புதிய தவெக ஆட்சியும் எதுவும் செய்யாததால் ஆசிரியர்களின் நெருக்கடிகள் தொடர்கின்றன.</p><p>ஆசிரியர்கள் கவலையின்றி வாழ்ந்தால் தான் மாணவர்களை முன்னேற்ற முடியும். அதற்கு வசதியாக  ஆசிரியர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதுடன், தகுதித் தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண்களையும் குறைந்தபட்சம் 35% ஆக குறைக்க வேண்டும்.  இதன் மூலம் ஆசிரியர்களின் வாழ்க்கை முன்னேற்றம் பெற அரசு வகை வேண்டும்; அந்த இலக்கை நோக்கி உழைக்க ஆசிரியர்கள் நாளில் அனைவரும் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>&quot;இம்மார்ட்டல்&quot; படத்திற்கு முக்கியத்துவம் தரவில்லையா?- பட புரமோஷனில் பங்கேற்காதது குறித்து கயாடு லோகர் விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/immortal-movie-promotion-controversy-kayadu-lokar-breaks-silence</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/immortal-movie-promotion-controversy-kayadu-lokar-breaks-silence#comments</comments><guid isPermaLink="false">0bb70f32-364e-480a-8636-0eca011bc058</guid><pubDate>Fri, 04 Sep 2026 05:05:53 +0000</pubDate><atom:updated>2026-09-04T05:05:53.130Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>Kayadu Lohar,கயாடு லோகர்,Immortal,இம்மார்டல்,பட புரோமோஷன்,Movie promotion</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/u1c3cn00/Kayadu.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Actress Kayadu lohar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/u1c3cn00/Kayadu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டிராகன் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் கயாடு லோகர். தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் கயாடு இன்று வெளியாகி உள்ள ‘இம்மார்ட்டல்’, துல்கர் சல்மானுடன் ‘ஐ ஆம் கேம்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.</p><p>இம்மார்ட்டல் படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த வாரம் முதல் தீவிரமாக நடந்து வந்த நிலையில் படத்தின் கதாநாயகியான கயாடு லோகர் புரேமோஷன் விழாவில் பங்கேற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது.</p><p>இதுகுறித்து அவர் கூறும்போது:-</p><p>ஏன் இதைப்பற்றி பேச தொடங்கியுள்ளனர் என எனக்கு தெரியவில்லை. ‘ஐ ஆம் கேம்’ புரமோஷனுக்கு ஒரு நாள் கிடைத்தது.</p><p>ஆனால், இம்மார்ட்டல் படக்குழுவினரிடம் அந்த தேதி இல்லை. அடுத்து ஒரு படப்பிடிப்பில் பங்கேற்றேன். அதனால் இம்மார்ட்டல் பட விழாவுக்கு என்னால் செல்ல முடியவில்லை. இந்த படம் முக்கியம்.</p><p>அந்த படம் முக்கியம் என்பது போல் சித்தரித்து விமர்சனங்களை கொடுக்கிறார்கள். பரவாயில்லை எனக்கு இது பழகிவிட்டது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item></channel></rss>