<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 23 Aug 2026 20:21:46 +0000</lastBuildDate><item><title>சென்னையில் நடைபெற இருந்த டாக்ஸிக் பட நிகழ்ச்சி ஒத்திவைப்பு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/toxic-movie-chennai-event-postponed</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/toxic-movie-chennai-event-postponed#comments</comments><guid isPermaLink="false">21584dc6-223c-478f-b70d-bcad247c9946</guid><pubDate>Sun, 23 Aug 2026 19:46:21 +0000</pubDate><atom:updated>2026-08-23T19:46:21.995Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Yash,Toxic,டாக்ஸிக்,நயன்தாரா,Nayanthara,யாஷ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/8zzvbknj/Toxic-Poster.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Toxic Poster]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/8zzvbknj/Toxic-Poster.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும்  "<a href="https://www.maalaimalar.com/topic/toxic">டாக்ஸிக்</a>" திரைப்பட நிகழ்வு ரத்து செய்யப்பட்டது. சென்னையில் நடைபெற இருந்த பட நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. </p><p>முன்னதாக "டாக்ஸிக்" திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத் நகரில் உள்ள கல்லூரி ஒன்றில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 22) நடைபெற்றது. இதில் <a href="https://www.maalaimalar.com/topic/yash">யாஷ்</a>, கியாரா அத்வானி உள்பட படக்குழுவினர் திரளாக கலந்துகொண்டனர்.</p><h2>ஐதராபாத் விபத்து:</h2><p>இந்த நிகழ்ச்சியில் நடிகர் யாஷ் உரையாற்றினார். அப்போது, நிகழ்ச்சியில் பங்கேற்ற இளைஞர்கள் சிலர், உயரமான இடத்தில் அமைக்கப்பட்டிருந்த ஸ்பீக்கரை தாங்கும் பலகைகள் கொண்ட கட்டுமானத்தின் மீது ஏறினர்.</p><p>அப்போது, ஸ்பீக்கருடன் ஒட்டுமொத்த கட்டுமானமும் கீழே சரிந்து விழுந்ததில் 4 பேர் காயமடைந்தனர்.</p><p>இதில், மாணவர் ஒருவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மற்ற மூவருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.</p><h2>நிகழ்ச்சி தேதி மாற்றம்:</h2><p>இந்த சம்பவம் தொடர்பாக, அந்நிகழ்வை நடத்திய கல்வி நிறுவனத்தின் நிர்வாகம் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்தே சென்னையில் நேற்று நடைபெற இருந்த ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p>மேலும், நேற்று நடைபெற இருந்த நிகழ்ச்சி இன்று (ஆகஸ்ட் 24) நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.</p><p>கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடித்துள்ள திரைப்படம் டாக்ஸிக். 1940-களில் கோவாவை மையமாக கொண்ட ஆக்ஷன் த்ரில்லர் கதையம்சத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது. கே.வி.என். ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள "டாக்ஸிக்" திரைப்படம் ஆகஸ்ட் 26-ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&apos;காணாமல் போன&apos; 5 பள்ளிகளை கண்டுபிடித்தால் ரூ. 1 லட்சம் பரிசு: ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்</title><link>https://www.maalaimalar.com/news/national/aap-sanjay-singh-announce-rs-1-lakh-to-anyone-who-finds-5-missing-schools-in-up</link><comments>https://www.maalaimalar.com/news/national/aap-sanjay-singh-announce-rs-1-lakh-to-anyone-who-finds-5-missing-schools-in-up#comments</comments><guid isPermaLink="false">56ffb929-c6ff-40ea-9ada-21b7c9cf5db1</guid><pubDate>Sun, 23 Aug 2026 18:16:27 +0000</pubDate><atom:updated>2026-08-23T18:16:27.061Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>UP,உத்தர பிரதேசம்,AAP,ஆம் ஆத்மி கட்சி,சஞ்சய் சிங்,Sanjay Singh</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/lmepjy80/Sanjay-Singh.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sanjay Singh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/lmepjy80/Sanjay-Singh.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தர பிரதேச மாநிலத்தின் <a href="https://www.maalaimalar.com/news/national">ஜான்பூர்</a> மாவட்டத்தில் உள்ள ஐந்து அரசு தொடக்க பள்ளிகள் U-DISE இணையதளத்தில் செயல்படுவதாக பட்டியலிடப்பட்டுள்ளன, ஆனால் அவற்றின் கட்டிடங்களையோ அல்லது அவை உண்மையில் இருப்பதற்கான ஆதாரத்தையோ களத்தில் காண முடியவில்லை என்று ஆம் ஆத்மி கட்சியின் (AAP) மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் தெரிவித்தார். </p><p>லக்னோவில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சிங், "ஜான்பூர் மாவட்டத்தில் ஐந்து தொடக்க பள்ளிகள் உள்ளன. அவை உண்மையில் களத்தில் இல்லை, ஆனால் அரசுப் பதிவுகளில் (UDISE) 'செயல்படுவதாக' காட்டப்படுகின்றன" என்று கூறினார்.</p><h2>ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு:</h2><p>வெளிப்படையான சவால் ஒன்றை விடுத்த அந்த ஆம் ஆத்மி எம்.பி., காணாமல் போனதாகக் கூறப்படும் இந்த ஐந்து பள்ளிகளில் ஏதேனும் ஒன்றை கண்டுபிடிப்பவருக்கு தனது சொந்த ஊதியத்தில் இருந்து ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தார்.</p><p>நகர கல்வி அதிகாரி ஒருவரின் கடிதத்தை மேற்கோள் காட்டி, அந்த ஐந்து பள்ளிகளையும் அவர் அடையாளம் காட்டினார்: தல்கர் டோலா தொடக்க பள்ளி, மிசிர்பூர் பெண்கள் தொடக்கப் பள்ளி, கடான் அர்சானி பள்ளி, உருது பஜார் தொடக்க பள்ளி மற்றும் பாக் ஹாஷிம் தொடக்க பள்ளி ஆகியவை அந்தப் பட்டியலில் அடங்கும். இவை அனைத்தும் அரசு இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன, ஆனால் பட்டியலிடப்பட்ட இடங்களில் அவை தற்போது இல்லை என்று கூறப்படுகிறது.</p><h2>கட்டிடங்களே இல்லை:</h2><p>"யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தின் கீழ், நன்கொடைகள், நிலம் மற்றும் சர்க்கரை ஆகியவை திருடப்பட்டதை தொடர்ந்து, இப்போது 'பள்ளி திருட்டு' என்ற புதிய முறை உருவாகியுள்ளது. இந்த பள்ளிகள் UDISE இணையதளத்தில் செயல்படுவதாக காட்டப்படுகின்றன. ஆனால் உண்மையில் அங்கு ஆசிரியர்களோ, குழந்தைகளோ அல்லது கட்டிடங்களோ இல்லை" என்று அவர் குற்றம் சாட்டினார்.</p><p>முன்பு பள்ளி கட்டிடங்கள் இருந்தும் அவை மோசமான நிலையில் இருந்ததையும், உள்ளே குப்பைகள் குவிந்து கிடந்ததையும், சமையலறை மற்றும் கழிப்பறைகள் சிதிலமடைந்த நிலையில் இருந்ததையும் தான் சுட்டிக்காட்டி இருந்ததை அவர் நினைவுபடுத்தினார்.</p><p>இந்த விவகாரம் குறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும் என்றும், இருப்பிடமே இல்லாத இந்த ஐந்து பள்ளிகள் ஏன் இன்னும் UDISE இணையதளத்தில் செயல்படுவதாக காட்டப்படுகின்றன என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் சிங் வலியுறுத்தினார்.</p>]]></content:encoded></item><item><title>மதுபான ஊழல் வழக்கு: ஆந்திர பிரதேச முன்னாள் அமைச்சர் கைது</title><link>https://www.maalaimalar.com/news/national/ex-andhra-minister-karumuri-nageswara-rao-arrested-in-alleged-liquor-scam</link><comments>https://www.maalaimalar.com/news/national/ex-andhra-minister-karumuri-nageswara-rao-arrested-in-alleged-liquor-scam#comments</comments><guid isPermaLink="false">36cabb47-8162-4eb1-8976-eb0f5497191b</guid><pubDate>Sun, 23 Aug 2026 17:26:16 +0000</pubDate><atom:updated>2026-08-23T17:26:16.699Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Andhra Pradesh,ஆந்திர பிரதேசம்,Liquor scam,மதுபான ஊழல்,Karumuri Nageswara Rao,கருமுரி நாகேஸ்வர ராவ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/vr21rnyj/Karumuri-Nageswara-Rao.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Karumuri Nageswara Rao]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/vr21rnyj/Karumuri-Nageswara-Rao.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான கூட்டணி அரசால் 'அரசியல் பழிவாங்கும் செயல்' எனக் கூறப்படும் <a href="https://www.maalaimalar.com/news/national">ஆந்திர பிரதேச</a> மதுபான போக்குவரத்து ஊழல் வழக்கில், அம்மாநில முன்னாள் அமைச்சர் கருமுரி வெங்கட நாகேஸ்வர ராவ் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>முன்னாள் அமைச்சர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை <a href="https://www.maalaimalar.com/topic/supreme-court">உச்ச நீதிமன்றம்</a> தள்ளுபடி செய்த ஒரு மாதத்திற்கு பிறகு இந்த கைது நடவடிக்கை நடைபெற்றுள்ளது.</p><h2>ஒப்பந்த செயல்முறை முறைகேடு:</h2><p>இந்த வழக்கு, 2020 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் ஆந்திர பிரதேச மாநில பானங்கள் கழகத்தின் (APSBCL) மதுபான போக்குவரத்து ஒப்பந்தப்புள்ளி செயல்முறையில் நடந்ததாக கூறப்படும் முறைகேடு தொடர்பானது.</p><p>மாநிலத்தின் முன்னாள் அமைச்சர்களான செல்லுபோயின வேணுகோபால கிருஷ்ணா, அனில் குமார் யாதவ் மற்றும் விடதலா ரஜினி ஆகியோர் கூட்டறிக்கை ஒன்றில், எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர்களை குறிவைப்பதற்காக ஒரு 'பொய் வழக்கு' புனையப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.</p><h2>மதுக்கடைகள் எண்ணிக்கை குறைப்பு:</h2><p>மூத்த தலைவரான கருமுரி நியாயமற்ற முறையில் கைது செய்யப்பட்டதாக கூறிய அவர்கள், அவரது மகன் சுனிலும் முன்னதாகவே கைது செய்யப்பட்டதை சுட்டிக்காட்டியதோடு, "முழு குடும்பமும் திட்டமிட்டு குறிவைக்கப்படுகிறது" என்றும் தெரிவித்தனர்.</p><p>தங்களது கடிதத்தில், ஒய்.எஸ்.ஆர்.சி.பி. ஆட்சி காலத்தில் மதுபான கொள்முதல் மற்றும் விற்பனை வெளிப்படையாக நடத்தப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். "கள்ளச்சாராயம் கட்டுப்படுத்தப்பட்டது, மதுக்கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் அரசாங்கத்தால் இயக்கப்பட்டன. அனுமதி அறைகள் மற்றும் பெல்ட் கடைகளும் ஒழிக்கப்பட்டன," என்று தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்- 23 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-23-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-23-august-2026#comments</comments><guid isPermaLink="false">6d7f3163-989e-430c-80b7-807a84f93590</guid><pubDate>Sun, 23 Aug 2026 04:56:09 +0000</pubDate><atom:updated>2026-08-23T16:47:00.575Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/ykyip0uq/TodayLiveNews001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இன்றைய முக்கியச் செய்திகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/ykyip0uq/TodayLiveNews001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-minister-says-vijay-as-future-pm-manickam-thakur-sharp-reply">வருங்கால பிரதமர் விஜய்: அமைச்சரின் பேச்சுக்கு மாணிக்கம் தாகூர் அளித்த பதில்..!</a></p><p>* தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சி நடத்திவரும் முதலமைச்சர் விஜய், வருங்கால பிரதமர்- அமைச்ரச் ஜெகதீஸ்வரி</p><p>* காங்கிரஸ் ஆதரவால்தான் விஜய் முதலமைச்சர்... அது த.வெ.க அமைச்சர்களுக்கும் தெரியும்</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/ticket-checker-praised-for-returning-rs-25000-and-documents-left-on-train">ரெயிலில் தவறவிட்ட ரூ.25,000 பணம் மற்றும் ஆவணங்களை பயணியிடம் பத்திரமாக ஒப்படைத்த டிக்கெட் பரிசோதகருக்கு பாராட்டு!... </a></p><p>*கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) அன்று ஸ்ரீ மாதா வைஷ்ணவோ தேவி கத்ரா ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரெயில் எண் 26402-ல் இந்தச் சம்பவம் நடைபெற்றது.</p><p>*தனது உடைமைகளும் பணமும் எவ்வித சேதமுமின்றி திரும்பக் கிடைத்ததால், அந்தப் பயணி நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/daring-robbery-near-vandalur-railway-station-7-sovereigns-gold-chain-snatched-from-teacher-on-census-duty">வண்டலூர் ரெயில் நிலையம் அருகே துணிகரம்: மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு சென்ற ஆசிரியையிடம் 7 பவுன் நகை பறிப்பு!... </a></p><p>*செல்வி தனியாக நடந்து வந்ததைப் பயன்படுத்திக் கொண்ட முகமூடி அணிந்த வாலிபர் ஒருவன், அவரைப் பின்தொடர்ந்து வந்துள்ளான். </p><p>*கொள்ளையன் சங்கிலியைப் பலமாக இழுத்துப் பறித்ததில், சங்கிலி அறுந்து அதிலிருந்த 2 பவுன் மாங்கல்யம் மட்டும் தனியாகக் கீழே விழுந்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-ramesh-says-sekar-babu-spying-what-is-happening-in-hindu-religious-charitable-endowments">இந்து சமய அறநிலையத்துறையில் என்ன நடக்கிறது என்று வேவு பார்க்கும் சேகர்பாபு: அமைச்சர் ரமேஷ்</a></p><p>* கோவில்களில் நடைபெறும் தவறுகளை களைவதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.</p><p>* 100 நாளில் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது. தலைகீழாக மாற்றுவதற்கு அரசு ஒன்றும் சினிமா கிடையாது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ops-speech-in-dmk-district-secretary-meeting">தி.மு.க.வில் நான் எல்.கே.ஜி.: செயற்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு</a></p><p>* தி.மு.க.வில் 70 வயதுக்கு மேல் பதவி கிடையாது என்பது கட்சி தலைமைக்கு மட்டும் விதிவிலக்கு.</p><p>* ஓபிஎஸ் பேசுகையில் பி.எச்.டி. பட்டம் பெறும் அளவுக்கு கட்சியில் எனது செயல்பாடுகள் இருக்கும் என்றார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/people-alert-deadline-for-lpg-e-kyc-ends-today">மக்களே உஷார்! இன்றோடு முடிகிறது அவகாசம்- உடனே செய்யாவிட்டால் கேஸ் புக் பண்ண முடியாது!... </a></p><p>*வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) இணைப்புகளுக்கு மின்னணு முறையில் வாடிக்கையாளர் விவரங்களைச் சரிபார்க்கும் e-KYC நடைமுறையை நிறைவு செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் (ஆகஸ்ட் 23) நிறைவடைகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/australia-beat-bangladesh-in-second-test">2வது டெஸ்டில் அபார வெற்றி: வங்கதேசத்தை நசுக்கி பழி தீர்த்தது ஆஸ்திரேலியா</a></p><p>* வங்கதேசம் 2வது இன்னிங்சில் 95 ரன்னுக்கு சுருண்டது.</p><p>* ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை மிட்செல் ஸ்டார்க் வென்றார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-playoff-madurai-panthers-trichy-grand-cholas-to-meet-today">டிஎன்பிஎல் பிளே ஆப்: முதல் தகுதிச்சுற்றில் மதுரை, திருச்சி அணிகள் இன்று மோதல்</a></p><p>* புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடம்பிடித்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.</p><p>* டிஎன்பிஎல் தொடரில் இன்று முதல் பிளே ஆப் சுற்று போட்டிகள் தொடங்குகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/likelihood-of-20-dmk-district-secretaries-losing-their-posts">வயது மற்றும் ஆண்டு வரம்பு எதிரொலி: தி.மு.க.வில் 20 மாவட்ட செயலாளர்கள் பதவி இழக்க வாய்ப்பு?</a></p><p>* தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.</p><p>* இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vs-babu-fires-at-dmk-aiadmk-from-perambur-stage">இனி திமுக, அதிமுக கிடையாது-ஒரே கட்சி தவெக மட்டும்தான்: வி.எஸ்.பாபு ஆவேசம்!</a></p><p>* சென்னை பெரம்பூரில் நடந்த தவெக நிகழ்ச்சியில் கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு பரபரப்பு பேச்சு.</p><p>* கருணாநிதியே நின்றிருந்தாலும் தோற்கடித்திருப்பேன் என சவால் விடுத்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/heavy-rush-in-murugan-temples-for-muhurtham-day">திருத்தணி, திருப்போரூர், குன்றத்தூர் முருகன் கோவிலில் 200 திருமணம்: பக்தர்கள் கூட்டத்தால் நெரிசல்</a></p><p>* ஆவணி மாத முதல் முகூர்த்த நாள் என்பதால் ஏராளமான ஜோடிகளுக்கு இன்று திருமணம் நடந்தது.</p><p>* காலை முதலே பஸ், மின்சார ரெயில்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/linda-noskova-marie-bouzkova-won-the-title-in-cincinnati-open-tennis-womens-doubles">சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றது செக் குடியரசு ஜோடி</a></p><p>* சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.</p><p>* ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டி இன்று இரவு நடைபெறவுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/padikkal-gill-cross-half-century-against-srilanka-second-test">2வது டெஸ்டில் இந்தியா நிதான ஆட்டம்: அரை சதம் கடந்த படிக்கல், சுப்மன் கில்</a></p><p>* டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.</p><p>* 3வது விக்கெட்டுக்கு இணைந்த தேவ்தத் படிக்கல், சுப்மன் கில் ஜோடி 100 ரன்களைக் கடந்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/reservation-is-a-constitutional-right-chirag-paswan-responds-to-jantar-mantar-protest">இடஒதுக்கீடு என்பது சலுகை அல்ல உரிமை.. இடஒதுக்கீட்டுக்கு எதிராக போராடுபவர்களுக்கு சிராக் பஸ்வான் பாடம்</a><br><br>*சமூக பாகுபாடு என்பது இன்னும் நம் சமூகத்தில் புரையோடியுள்ளது.</p><p>*இடஒதுக்கீட்டின் நோக்கம் குறித்தும், அது ஏன் தொடர வேண்டும் என்பது குறித்தும் புரிய வைப்போம் </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/indian-businessman-shot-dead-tennessee-liquor-store-robbery-turns-fatal">அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் மகளின் கண் முன்னே சுட்டுக் கொலை</a></p><p>*சுரேஷ் படேல் சமீபத்தில்தான் அந்தக் கடையை வாங்கியிருந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>*பணத்தைப் பெற்ற பிறகு, அந்த நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.</p> <p><a href="https://maalai-malar.quintype.com/story/f254e3a1-ccc2-4f1b-9b12-f7ae39c8310b">ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 37 பேர் காயம்</a></p><p>*குடிநீர் செல்லும் குழாய்கள் உடைந்து சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.</p><p>*டோக்கியோ நகரில் நிலநடுக்க அதிர்வுகள் மிகவும் பலமாக உணரப்பட்டதாக சமூக வலைதளங்களில் பலர் தெரிவித்துள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/deadline-extended-for-submitting-documents-for-gas-cylinder-booking" rel="nofollow">கியாஸ் சிலிண்டர் முன்பதிவுக்கு ஆவணங்கள் சமர்ப்பிக்க காலக்கெடு மேலும் நீட்டிப்பு</a></p><p>* ‘இ-கே.ஒய்.சி.’ ஆவணங்களை ஆகஸ்டு 16-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்து இருந்தது.</p><p>* இ-கே.ஒய்.சி. பதிவு தொடர்பாக வாடிக்கையாளர்கள் எந்தவித அச்சமும் படவேண்டாம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/iran-warns-gulf-countries-against-aiding-america" rel="nofollow">அமெரிக்காவுக்கு உதவக்கூடாது..!- வளைகுடா நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை</a></p><p>* டிரம்ப் ஏதாவது செய்ய விரும்பினால், நாங்கள் ஒரு பெரும் அதிர்வை ஏற்படுத்தும் வகையில் பதிலடி கொடுப்போம்.</p><p>* டிரம்ப் அணுசக்தி பாதுகாப்பை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, அணு சக்தி பாதுகாப்பின்மையையே உருவாக்கி உள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/central-government-vacancies-over-823-lakh-posts-lying-vacant-across-ministries-revealed-by-rti-data">8.23 லட்சம் மத்திய அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.. RTI-யில் அம்பலம்</a><br><br>*ஒவ்வொரு 5 பணியிடங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன.</p> <p>* மத்திய நிதி அமைச்சம் தந்துள்ள பதிலில் இதன் தரவுகள் இடம்பெற்றுள்ளன.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/piyush-goyal-japan-visit-to-attract-investments" rel="nofollow">முதலீடுகளை ஈர்க்க பியூஷ் கோயல் ஜப்பான் பயணம்</a></p><p>* இருதரப்பு வர்த்தகம், முதலீட்டு உறவுகளை மேம்படுத்தும் குழுவுடன் ஜப்பான் பயணம்.</p><p>* ஜப்பானின் டோக்கியோ, நகோயா, ஒசாகா நகரங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.</p>]]></content:encoded></item><item><title>கற்காலத்திற்கு திரும்பிய காசா.. இஸ்ரேல் முற்றுகையால் நிம்மதியாக மலம் கழிக்கும் உரிமையையும் இழந்த மக்கள் </title><link>https://www.maalaimalar.com/news/world/gaza-blockade-worsens-sanitation-crisis-as-toilets-become-unaffordable-and-disease-spreads</link><comments>https://www.maalaimalar.com/news/world/gaza-blockade-worsens-sanitation-crisis-as-toilets-become-unaffordable-and-disease-spreads#comments</comments><guid isPermaLink="false">d662960d-aadd-47a7-ae1c-00b8d75eb792</guid><pubDate>Sun, 23 Aug 2026 16:45:43 +0000</pubDate><atom:updated>2026-08-23T16:45:43.922Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காசா,இஸ்ரேல்,gaza,Israel,Toilet,கழிவறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/sggsfdf3/tn-29.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ காசா]]></media:title><media:description type="html"><![CDATA[ காசா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/sggsfdf3/tn-29.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2023 அக்டோபர் முதல் <a href="https://www.maalaimalar.com/news/world/israeli-minister-calls-for-daily-killings-ben-gvir-urges-expulsion-and-systematic-killing-of-palestinians-in-gaza">காசா </a>மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் 72 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கொண்றுகுவித்தது. கடந்த அக்டோபரில் போர் நிறுத்தம் ஏற்பட்டபோதும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. </p><p>அதுமட்டுமின்றி காசாவுக்குள் செல்லும் அத்தியாவசிய பொருட்களை செல்ல விடாமல் எல்லைகளிலேயே சோதனைச் சாவடிகள் அமைத்து இஸ்ரேல் தடுத்து நிறுத்தி வருகிறது. </p><p>உணவின்றி காசாவில் மனிதனால் ஏற்படடுத்தப்பட்ட பெரும் பஞ்சம் இஸ்ரேலால் உருவாக்கப்பட்டுள்ளது. பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக குழந்தைகள் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. </p><p>மருந்து பொருட்கள் செல்வதும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதால் சுகாதார நெருக்கடியும் காசாவை பிடித்துள்ளது. </p><p>இவற்றின் உச்சமாக காசாவில் கழிப்பறைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. </p> <h2>கழிவறை தட்டுப்பாடு</h2><p>இஸ்ரேலின் தொடர் முற்றுகை காரணமாக காசாவிற்குள் சுகாதாரப் பொருட்கள் மற்றும் கழிப்பறை உபகரணங்களின் வரத்து கடுமையாகக் குறைந்துள்ளது.</p><p>ஒரு சாதாரண கழிப்பறை இருக்கை தற்போது அமெரிக்க மதிப்பில் சுமார் 503 முதல் 671 டாலர் வரை விலை வைத்து விற்கப்படுகிறது.</p><p>அதிக விலை காரணமாக சாதாரண மக்களுக்கு கழிப்பறை இருக்கைகள் எட்டாக்கனியாக மாறியுள்ளது.</p><p>இதனால் முகாம்களில் ஒரு வினோதமான கழிவறை முறை பின்பற்றப்படுகிறது.</p> <h2>கழிவறை</h2><p>நிலத்தில் ஆழமான ஒரு குழி தோண்டப்படுகிறது.</p><p>ஒரு சாதாரண பிளாஸ்டிக் நாற்காலியின் நடுவில் துளையிட்டு, அதைத் தோண்டப்பட்ட குழியின் மேல்பகுதியில் வைக்கின்றனர்.</p><p>குழியின் அடிப்பகுதியிலும் ஓரங்களிலும் மெல்லிய அடுக்காக மணல் பரப்பப்படுகிறது.</p><p>திரவக் கழிவுகள் மணல் வழியாக உறிஞ்சப்பட்டு பூமிக்கு அடியில் செல்லும். திடக் கழிவுகள் குழியின் அடியில் தங்கும். மணல் ஒரு இயற்கை வடிகட்டியாகச் செயல்பட்டு துர்நாற்றத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.</p><p>சுவர்களோ அல்லது முறையான கதவுகளோ இல்லாததால், நாற்காலியை சுற்றித் தற்காலிக மறைப்புகளை ஏற்படுத்தி, கதவுக்குப் பதிலாக ஒரு சாதாரண துணியைத் தொங்கவிட்டுள்ளனர்.</p><p>இது கிட்டத்தட்ட கற்காலத்தில் மக்கள் பயன்படுத்தும் அளவு பழைய முறை ஆகும்.</p><p>இதுபோன்று முகாம்களில் 20 முதல் 25 பேருக்கு ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே உள்ளது. மேலும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி வசதிகள் இல்லாததால் பெண்கள் அதிக சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/wzsxqv03/tn-30.jpg" /></figure><h2>ஈமானின் வேதனை</h2><p>நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது கணவர் மற்றும் 11 வயதிற்குட்பட்ட 5 குழந்தைகளுடன் 33 வயதான ஈமான் மஹ்மூத் ஷாமியா பலமுறை வாழிடங்களை இழந்து, இறுதியாக முகாம் ஒன்றில் தற்காலிக அமைக்கப்பட்ட கூடாரத்தில் வசித்து வருகிறார்.</p><p>முகாமில் உள்ள அடிப்படை வசதியற்ற தற்காலிகக் கழிப்பறையைப் பயன்படுத்துவது பெரும் வேதனையளிப்பதாக அவர் கூறுகிறார்.</p> <h2>நோய்கள் பரவும் அபாயம்</h2><p>ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, காசாவில் உள்ள மக்களில் பாதி பேருக்கு மட்டுமே அடிப்படை சுகாதார வசதிகள் கிடைக்கின்றன.</p><p>காசாவில் கூடாரங்களில் தங்கியுள்ள மக்களில் 60% பேர், அவர்கள் வாழும் இடத்திலிருந்து வெறும் 10 மீட்டர் சுற்றளவிற்குள்ளேயே திறந்தவெளி மனிதக் கழிவுகளுடனும், சுத்திகரிக்கப்படாத கழிவுநீருடனும் வாழக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.</p> <p>குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு வயிற்றுப்போக்கு, தோல் நோய்கள் மற்றும் செரிமானப் பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன.</p><p>காசாவுக்குள் தேவையான பொருட்களை கொண்டு செல்லும் தங்கள் முயற்சிகள்அனைத்தையும் இஸ்ரேலிய எல்லைச் சாவடிகள் தொடர்ந்து தடுத்து நிறுத்துவதாக வர்த்தக சபை சாடியுள்ளது.</p><p>சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மற்றும் யுனிசெப் உடனடியாகத் தலையிட்டு காசா மக்களுக்கு இலவசமாகக் கழிப்பறை உபகரணங்களை விநியோகிக்க வேண்டும் என்பதே பாலஸ்தீனியர்களின் கோரிக்கையாக உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>ஊழல் வழக்கில் முன்னாள் டிஜிசிஏ இயக்குநர் மற்றும் 4 விமானத்துறை நிறுவனங்கள்மீது சிபிஐ வழக்குப்பதிவு!</title><link>https://www.maalaimalar.com/news/national/cbi-registers-case-against-former-dgca-director-and-four-aviation-companies-in-corruption-case</link><comments>https://www.maalaimalar.com/news/national/cbi-registers-case-against-former-dgca-director-and-four-aviation-companies-in-corruption-case#comments</comments><guid isPermaLink="false">869b9f9d-c7ef-4f3c-825c-ec1862ef8236</guid><pubDate>Sun, 23 Aug 2026 16:30:28 +0000</pubDate><atom:updated>2026-08-23T16:30:28.484Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சிபிஐ,cbi,DGCA,டிஜிசிஏ,விமான நிறுவனங்கள்,aviation firms</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/fu4i3pf8/New-Project-2026-08-23T211238.212.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஊழல் வழக்கில் முன்னாள் டிஜிசிஏ இயக்குநர் மற்றும் 4 விமானத்துறை நிறுவனங்கள்மீது சிபிஐ வழக்குப்பதிவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/fu4i3pf8/New-Project-2026-08-23T211238.212.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் முன்னாள் பயிற்சி இயக்குநர் அனில் கில் மற்றும் அவருக்கு தொடர்புடைய 4 விமான நிறுவனங்கள்மீது ஊழல், அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டின்கீழ் மத்திய சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. </p><p>டிஜிசிஏவில் விமானப் பயிற்சி இயக்குநராக கேப்டன் அனில் கில் பணியாற்றியபோது, தனது நெருங்கிய உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை இயக்குநர்களாகக் கொண்டு போலி (பினாமி/ஷெல்) நிறுவனங்களை உருவாக்கி, </p><p>அதன்மூலம் பயிற்சி விமானங்களை மிகக் குறைந்த விலையில் கொள்முதல் செய்து, பின்னர் அவற்றை  எல்லைப் பாதுகாப்பு பயிற்சி நிறுவனங்களுக்கு அதிக விலையில் குத்தகைக்கு விட்டு மோசடியில் ஈடுபட்டுள்ளார்.</p><p>இந்தக் குற்றச்சாட்டில் புளூத்ரோட் ஏரோ குளோபல் பிரைவேட் லிமிடெட், ரெட்பேர்ட் ஏவியேஷன் அகாடமி பிரைவேட் லிமிடெட், சாப்ரேஸ் கார்ப்பரேட் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், சேண்ட்ஹில்ஸ் ஏவியேஷன் ஐஎஃப்எஸ்சி பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன.</p><p>புளூத்ரோட் ஏரோ குளோபல் பிரைவேட் லிமிடெட் இரண்டு செஸ்னா விமானங்களை முறையே ரூ.10 லட்சம் மற்றும் ரூ.37.5 லட்சத்திற்கு வாங்கியதாகவும், பின்னர் இந்த விமானங்கள், கில்லின் அதிகாரபூர்வ அனுமதியோடு 'ரெட்பேர்ட் ஏவியேஷன் அகாடமி' என்ற நிறுவனத்திற்கு அதிக விலைக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.</p><p>இதன் மூலம் 2021 முதல் 2023 வரை ரூ.2.16 கோடிக்கும் அதிகமாக குத்தகை வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 2022-ல் அனில் கில் ஒரு தேர்வுக் குழுவிற்குத் தலைமை தாங்கி, தனது உறவினரான விகாஸ் நைன் என்பவரை துணைத் தலைமை பறக்கும் பயிற்றுவிப்பாளராக நியமித்ததாகவும், அவர் பின்னர் 'ரெட்பேர்ட் ஏவியேஷன் அகாடமி'யில் மாதத்திற்கு சுமார் ரூ.6.5 லட்சம் சம்பளத்தில் பணியமர்த்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.</p><p>கடந்தாண்டு ஏப்ரல் 7ம் தேதியன்று பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு, நேற்று முன்தினம்தான் இதுதொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>வேவு பார்ப்பது திமுக-வின் வேலை அல்ல..! அமைச்சர் ரமேஷின் கருத்துக்கு சேகர் பாபு பதிலடி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-works-for-people-not-spying-sekar-babu-slams-ramesh-remarks</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-works-for-people-not-spying-sekar-babu-slams-ramesh-remarks#comments</comments><guid isPermaLink="false">ec39c6f2-bf7c-4238-9c23-6d36c774bfc6</guid><pubDate>Sun, 23 Aug 2026 15:37:23 +0000</pubDate><atom:updated>2026-08-23T15:37:23.928Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தவெக,சேகர் பாபு,sekar babu,tvk,அமைச்சர் ரமேஷ்,Minister Ramesh</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/8nu5cdsc/sekar-babu.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Ramesh- Sekar babu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/8nu5cdsc/sekar-babu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுக மக்கும் குப்பை, தவெக மக்காத குப்பை. மக்கும் குப்பை என்பது பூமிக்கு உரமாகும், நன்மை தரும் என்று முன்னாள் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.</p><p>இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திருச்சி விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-</p><h2>ஜனநாயகம்</h2><p>சட்டசபையில் ஜனநாயகம் இருப்பதால் அனைவரின் குரல்களுக்கும் இடம் அளித்து வருகிறோம். அதில் தேவையற்ற வார்த்தைகள் இருந்தால் அதை நீக்குவது மரபுதான். ஜனநாயகம் கடந்த ஆட்சியில் இல்லை. அதனால் அது போன்ற வார்த்தைகளை மக்கள் கேட்டிருக்க முடியாது. எங்கள் ஆட்சியில் ஜனநாயகம் இருப்பதால் அதைக் கேட்க முடிகிறது.</p><p>சட்டசபையில் சில முன்னாள் அமைச்சர்கள் தகாத வார்த்தைகள் பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்கு மாண்பு இருக்கிறதா? நாங்கள் எந்த வார்த்தைகளையும் பயன்படுத்தவில்லை.</p><p>எங்கள் அரசின் மீதும் முதல்-அமைச்சரை நோக்கியும் கேள்வி வரும்போது அதற்கு மற்ற அமைச்சர்கள் பதில் கூறுவதில் என்ன தவறு?</p><h2>முன்னாள் அமைச்சருக்கு பயம்</h2><p>முன்னாள் அமைச்சர் சேகர் பாபு தன் மீது எந்த தவறும் இல்லை என தொடர்ச்சியாக கூறி வருகிறார். ஆனால் இந்து சமய அறநிலையத்துறையில் என்ன நடக்கிறது என்பதை அவர் வேவு பார்த்து வருகிறார். அவர் பயத்தின் காரணமாகத்தான் அவ்வாறு செய்கிறார்.</p><p>தவறை கண்டுபிடித்து விடுவார்கள் என்கிற பயத்தின் காரணமாகத்தான் அரசு என்ன செய்கிறது என்பதை வேவு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த பயமே எங்கள் ஆட்சிக்கு கிடைத்த முதல் வெற்றி.</p><p>கடந்த ஆட்சியில் விளம்பரத்திற்காக இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்துவிட்டார்கள். அதில் தொடங்கப்படாத பல பணிகள் உள்ளது. அதை நாங்கள் ஆய்வு செய்தோம். அதில் பன்னெடுக்கு கார் நிறுத்துமிடம், பக்தர்கள் தங்குவதற்கு சொகுசு விடுதி உள்ளிட்டவற்றை அறிவித்துள்ளார்கள். </p><p>எந்த பக்தர்கள் சொகுசு விடுதியில் தங்குகிறார்கள் என தெரியவில்லை. அதனால் அந்த திட்டங்களை நாங்கள் ரத்து செய்துள்ளோம்.</p><h2>சினிமா கிடையாது</h2><p>கோவில்களில் நடைபெறும் தவறுகளை களைவதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். 100 நாளில் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது. தலைகீழாக மாற்றுவதற்கு அரசு ஒன்றும் சினிமா கிடையாது.</p><p>தமிழ்நாட்டில் உள்ள 50 முதுநிலை கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள் செல்போனை எடுத்து செல்லக்கூடாது என்கிற நடைமுறையை அறிவித்து பின்பற்றி வருகிறோம். கோவில்களுக்கு வெளியே செல்போனை பாதுகாப்பாக வைப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு பணம் வசூலிக்கப்படுவது வழக்கமான நடைமுறைதான். மக்கள் அதனை சரியாக பின்பற்ற வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><p>இந்நிலையில், அமைச்சர் ரமேஷின் கருத்துக்கு முன்னாள் அமைச்சர் சேகர் பாபு பதிலடி கொடுத்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் கூறியதாவது:-</p><p>வேவு பார்ப்பது திமுக வேலை இல்லை, மக்களுக்கு வேலை பார்ப்பதே திமுகவின் வேலை.</p><p>அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், அதிகாரிகளை கடுமையாக மிரட்டுகிறார்.</p><p>திமுகவின் 5 ஆண்டுகள் அதிகாரிகளுடன் அன்புடன் பழகி உள்ளோம். இப்போதைய அமைச்சர் மிரட்டுகிறார்.</p><p>அறநிலையத்துறை அறிவிப்பு குறித்து அனுமானத்தில் கூறினேன், கோவிலில் தணிக்கை செய்வது எப்படி தெரியாமல் இருக்கும்.</p><p>திமுக மக்கும் குப்பை, தவெக மக்காத குப்பை. மக்கும் குப்பை என்பது பூமிக்கு உரமாகும், நன்மை தரும்.</p><p>திமுக எப்போதும் மக்களுக்கு நன்மையே செய்யும். தவெக மக்காத குப்பை போல உள்ளது. இதனால் எப்போதும் ஆபத்து தான்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>“2035-க்குள் இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை அமைக்கும்” - இஸ்ரோ தலைவர் வி.நாராயணன்</title><link>https://www.maalaimalar.com/news/national/india-will-set-up-its-own-space-station-by-2035-isro-chairman-v-narayanan</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-will-set-up-its-own-space-station-by-2035-isro-chairman-v-narayanan#comments</comments><guid isPermaLink="false">5c8e2d8f-1260-48ff-9d59-93e12b8be9b1</guid><pubDate>Sun, 23 Aug 2026 15:36:01 +0000</pubDate><atom:updated>2026-08-23T15:36:01.251Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,இஸ்ரோ,V Narayanan,Bharatiya Antariksha Station,பாரதிய அந்தரிக்ஷா நிலையம்,வி நாராயணன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/tarixyr3/New-Project-2026-08-23T210342.780.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “2035-க்குள் இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை அமைக்கும்” - இஸ்ரோ தலைவர் வி.நாராயணன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/tarixyr3/New-Project-2026-08-23T210342.780.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2035 ஆம் ஆண்டிற்குள் இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை அமைக்கும் என்று இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.</p><p>அகமதாபாத்தில் நடைபெற்ற மூன்றாவது தேசிய விண்வெளி தினக் கொண்டாட்டத்தில் பேசிய நாராயணன், இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், பாரதிய அந்தரிக்ஷா நிலையத்தின் முதல் தொகுதிக்கு ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.</p><p>கொண்டாட்ட விழாவில் பேசிய அவர்.,</p><p>“இன்று, நாம் மூன்றாவது தேசிய விண்வெளி தினத்தைக் கொண்டாடுகிறோம். இதன் கருப்பொருள் மிகவும் முக்கியமானது: விண்வெளித் துறையில் புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் உலகளாவிய தலைமைத்துவத்தை நோக்கிய இலட்சியம். </p><p>இந்தியா 64 ஆண்டுகளுக்கு முன்பு தனது விண்வெளித் திட்டத்தைத் தொடங்கியது. இன்று நாம் புவி கண்காணிப்பு, தொலை உணர்வு, தொலைத்தொடர்பு, தொலைக்காட்சி ஒளிபரப்பு, தொலைதூரக் கல்வி, பேரிடர் எச்சரிக்கை மற்றும் தணிப்பு, ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பை உறுதி செய்தல், வழிசெலுத்தல், நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் தடமறிதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட துறைகளில் சாமானிய மக்களுக்குச் சேவை செய்து வருகிறோம்.</p><p>பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், பல திட்டங்கள் வரிசையில் உள்ளன. நாங்கள் ககன்யான் திட்டத்தில் பணியாற்றி வருகிறோம். மேலும், நமது சொந்த விண்வெளி நிலையமான பாரதிய அந்தரிக்ஷா நிலையத்தை நிறுவும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளோம்.</p><p>முதல்கட்ட பணிகளுக்கு ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டது, 2035-ஆம் ஆண்டுக்குள் விண்வெளி நிலையத்தை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.” என தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>ஆபரேஷன் சிந்தூரில் தகர்க்கப்பட்ட &apos;ஜெய்ஷ் இ முகமது&apos; தலைமையகம் பாகிஸ்தான் அரசு நிதியுடன் புனரமைப்பு?</title><link>https://www.maalaimalar.com/news/world/jaish-headquarters-rebuilt-pakistan-funded-bahawalpur-terror-hub-fully-restored-after-operation-sindhur-strikes</link><comments>https://www.maalaimalar.com/news/world/jaish-headquarters-rebuilt-pakistan-funded-bahawalpur-terror-hub-fully-restored-after-operation-sindhur-strikes#comments</comments><guid isPermaLink="false">8db99984-ce68-4206-913f-f5fc44660b6f</guid><pubDate>Sun, 23 Aug 2026 15:29:17 +0000</pubDate><atom:updated>2026-08-23T15:29:17.080Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Pakistan,ஆபரேஷன் சிந்தூர்,ஜெய்ஷ் இ முகமது,Jaish-e-Mohammed,Operation Sindhur</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/m9w8s2jp/tn-28.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ 'ஜெய்ஷ் இ முகமது' தலைமையகம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ 'ஜெய்ஷ் இ முகமது' தலைமையகம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/m9w8s2jp/tn-28.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். </p><p>இதைத்தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தருவதாக பாகிஸ்தான் மீது மே 7 அன்று இந்திய ராணுவம் <a href="https://www.maalaimalar.com/topic/operation-sindoor">ஆபரேஷன் சிந்தூர்</a> என்ற பெயரில் ராணுவ தாக்குதல் நடத்தியது. </p><p>பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கவராத முகாம்கள் குறிவைத்து தாக்கப்பட்டன.</p> <p>பாகிஸ்தான் ராணுவம் பதில் தாக்குதல் நடத்த தொடங்கியதை தொடர்ந்து ஏற்பட்ட ராணுவ மோதல் மே 10 அமைதி பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்தது.</p><p>ஆபரேஷன் சிந்தூரில் பல பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்தது.</p> <h2>ஜெய்ஷ் இ முகமது தலைமையகம்</h2><p>இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் கடுமையாக சேதமடைந்த பாகிஸ்தானின் பஹவல்பூரில் உள்ள <a href="https://www.google.com/search?q=%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%87+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81+MAALAIMALAR&amp;oq=%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%87+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81+MAALAIMALAR&amp;gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIICAEQABgWGB4yCAgCEAAYFhgeMgsIAxAAGBYYHhjHAzILCAQQABgWGB4YxwMyCwgFEAAYFhgeGMcDMg0IBhAAGAoYFhgeGMcD0gEIMTkxMWowajmoAgCwAgA&amp;sourceid=chrome&amp;source=chrome.ob&amp;ie=UTF-8">ஜெய்ஷ் இ முகமது</a> பயங்கரவாத அமைப்பின் தலைமையகம் முழுமையாக சீரமைக்கப்பட்டு மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.</p> <p>ஆபரேஷன் சிந்தூரின்போது பஹவல்பூர் மையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், ஜெய்ஷ் அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் உறவினர்கள் 10 பேர் உட்பட மொத்தம் 13 பேர் கொல்லப்பட்டனர்.</p><p>இந்தியாவில் நடத்தப்பட்ட 2001 நாடாளுமன்ற தாக்குதல், 2016 பத்தான்கோட் தாக்குதல் மற்றும் 2019 புல்வாமா தாக்குதல்களுக்கு சதித்திட்டம் தீட்ட இந்த இடம் பயன்படுத்தப்பட்டது என கூறப்படுகிறது.</p> <h2>புனரமைப்பு   </h2><p>தற்போது கிடைத்துள்ள சாட்டிலைட், புகைப்படங்கள் மற்றும் பிற ஆதாரங்களின்படி, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள இந்த 18 ஏக்கர் வளாகம், புதிய பளிங்கு கற்கள் பாதிக்கப்பட்டு, புதிய பிளாஸ்டரிங் மற்றும் வண்ணப் பூச்சுகள் செய்யப்பட்டுள்ளது.</p> <p>தாக்குதலில் தகர்க்கப்பட்ட குவிமாடங்கள் மீண்டும் கட்டப்பட்டுள்ளன. </p><p>முதன்மை மண்டபத்தில் ஏவுகணை தாக்குதலால் விழுந்த பள்ளங்கள் சிமெண்ட் மற்றும் கான்கிரீட் கொண்டு மூடப்பட்டு, தடயமே தெரியாதவாறு முழுமையாக மறைக்கப்பட்டுள்ளது</p><p>முதன்மை வளாகத்தை ஒட்டிச் சேதமடைந்திருந்த ஜெய்ஷ் அமைப்பு தளபதிகளின் இருப்பிடங்கள் அகற்றப்பட்டு, அந்த இடங்களில் புதிய கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p><h2>பாகிஸ்தான் அரசின் நிதியுதவி</h2><p>உளவுத்துறை தகவல்களின்படி, இந்த மறுசீரமைப்பு பணிகளுக்காக பாகிஸ்தான் அரசு ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பிற்கு தவணை முறையில் சுமார் பாகிஸ்தான் ரூபாயில் 25 கோடி நிதி வழங்கியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>இதில் மத்திய மண்டபத்தைச் சீரமைக்க மட்டுமே பாகிஸ்தான் ரூபாயில் சுமார் 11 கோடி செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது</p>]]></content:encoded></item><item><title>பரஸ்பர சம்மதத்துடன் வயது வந்தோர் இணைந்து வாழும் லிவ்-இன் உறவு திருமணத்திற்கு ஒப்பானது - டெல்லி உயர் நீதிமன்றம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/a-live-in-relationship-between-consenting-adults-is-akin-to-marriage-delhi-high-court</link><comments>https://www.maalaimalar.com/news/national/a-live-in-relationship-between-consenting-adults-is-akin-to-marriage-delhi-high-court#comments</comments><guid isPermaLink="false">c31ffb25-e05e-4a0f-8283-3e78b604dc5f</guid><pubDate>Sun, 23 Aug 2026 15:19:02 +0000</pubDate><atom:updated>2026-08-23T15:19:02.090Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Delhi High Court,டெல்லி உயர் நீதிமன்றம்,Live-In Relationship,லிவ் இன் உறவுகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/86og87a0/New-Project-2026-08-23T204809.876.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பரஸ்பர சம்மதத்துடன் வயது வந்தோர் இணைந்து வாழும் லிவ்-இன் உறவு திருமணத்திற்கு ஒப்பானது - டெல்லி உயர் நீதிமன்றம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/86og87a0/New-Project-2026-08-23T204809.876.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பரஸ்பர சம்மதத்துடன் வயது வந்தோர் இருவர் இணைந்து வாழும் லிவ்-இன் உறவு திருமணத்திற்கு ஒப்பானது என்றும், பெற்றோர்களோ, உறவினர்களோ அவர்களின் முடிவில் தலையிடக் கூடாது என்றும், அவர்களுக்கு மிரட்டல் விடுக்கக்கூடாது எனவும் டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><p>பெண்ணின் குடும்பத்தினரால் தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி லிவ்-இன் உறவில் இருக்கும் இளம் ஜோடி பாதுகாப்புக் கோரி   தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கி, வயது வந்தவர்கள் என்ற வகையில் அந்தத் தம்பதியினருக்கு, யாருடைய தலையீடும் இன்றி, தாங்கள் விரும்பும் துணையைத் தேர்ந்தெடுத்து அவருடன் வசிப்பதற்கு அனைத்து உரிமைகளும் உண்டு என கூறியுள்ளது.</p><p>“மனுதாரர்கள் தாங்களாகவே விரும்பி, பரஸ்பர சம்மதத்துடன் மற்றும் மிகுந்த பொறுப்புடன் சேர்ந்து வாழத் தேர்ந்தெடுத்துள்ளதால், அவர்களுடைய பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் என யாருக்கும், அவர்களின் இந்தத் தேர்வுக்கு எந்தத் தடையையும் ஏற்படுத்தவோ அல்லது அதில் தலையிடவோ உரிமையோ அதிகாரமோ இல்லை. </p><p>அதிலும் குறிப்பாக அவர்களின் உயிருக்கோ அல்லது சுதந்திரத்திற்கோ அச்சுறுத்தல் விடுப்பதற்கு எந்த உரிமையும் இல்லை,” என்று நீதிமன்றம் கூறியது.</p><p>மனுதாரர்கள் சேர்ந்து வாழ்ந்தாலும், சட்டப்படி ஒருவரையொருவர் திருமணம் செய்துகொள்ளவில்லை; ஆயினும், சம்மதம் தெரிவித்த வயது வந்தவர்கள் என்பதால், இது திருமணத்தைப் போன்றதே.” எனக் குறிப்பிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காதல் விவகாரத்தால் சட்டக்கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை - பெண்ணின் தந்தை, தம்பி கைது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/law-college-student-hacked-to-death-over-love-affair</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/law-college-student-hacked-to-death-over-love-affair#comments</comments><guid isPermaLink="false">e049adbe-8790-4339-a9da-f8a6233b12f7</guid><pubDate>Sun, 23 Aug 2026 14:48:42 +0000</pubDate><atom:updated>2026-08-23T14:48:42.273Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Arrest,Murder,போலீஸ் விசாரணை,law student,வெட்டிக்கொலை,சட்டக்கல்லூரி மாணவர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/m4fan9mg/Arrest.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ youth murder- police investigation]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/m4fan9mg/Arrest.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சிவகங்கை மாவட்டம் சின்ன புதுக்கோட்டை கிராமத்தில் காதல் விவகாரத்தில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், உறவுக்கார பெண்ணின் தந்தை முருகேசன், சகோதரர் அருண்ராஜா ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>படுகொலை</h2><p>சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சின்ன புதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சிவபாலன்(வயது 35).</p><p>மானாமதுரை சட்டக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த தனது உறவினர் முருகேசன் (வயது 50) என்பவரின் மகளை காதலித்து வந்துள்ளார்.</p><p>ஒரே ஊர் என்பதால் பெண்ணின் குடும்பத்தினருக்கு காதல் விவகாரம் தெரியவந்து, இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். </p><p>ஆனால் இருவரும் காதலை கைவிடவில்லை. மேலும் பெண்ணின் தம்பி அருண்ராஜா(19) இவர்கள் காதலுக்கு எதிராக இருந்து வந்ததாக தெரிகிறது.</p><p>இதனால் ஆத்திரமடைந்த சிவபாலன் பெண்ணின் தம்பியை கொலை செய்வதற்காக சென்றுள்ளார் . இதனை அறிந்த பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள் சிவபாலனை வழிமறித்து கத்தி மற்றும் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த சிவபாலன் ரத்த வெள்ளத்தில் மிதந்து பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில், கொலையில் ஈடுபட்ட பெண்ணின் தந்தை மற்றும் தம்பியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட சிவபாலன் மீது பல்வேறு குற்றவழக்குகள் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>3 நாடுகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய எனக்கே இந்த நிலைமை என்றால்.. SIR செயல்பாடு குறித்து முன்னாள் தூதர் வேதனை</title><link>https://www.maalaimalar.com/news/national/ex-envoy-citizenship-row-navdeep-suri-faces-hurdles-proving-indian-nationality-in-punjab-sir-process</link><comments>https://www.maalaimalar.com/news/national/ex-envoy-citizenship-row-navdeep-suri-faces-hurdles-proving-indian-nationality-in-punjab-sir-process#comments</comments><guid isPermaLink="false">65453b23-f484-4231-b299-b36f03c394ad</guid><pubDate>Sun, 23 Aug 2026 14:43:29 +0000</pubDate><atom:updated>2026-08-23T14:43:29.627Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Election Commission,Sir,தேர்தல் ஆணையம்,எஸ்ஐஆர்,வாக்காளர் பட்டியல் திருத்தம்,Voter List Revision</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/vxzmsq1e/tn-27.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நவ்தீப் சூரி]]></media:title><media:description type="html"><![CDATA[ நவ்தீப் சூரி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/vxzmsq1e/tn-27.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/election-commission-sir-phase-3-40-crore-voters-under-review-518-crore-names-deleted-sparking-controversy">3 ஆம் கட்ட வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள்</a> (SIR) பஞ்சாப், தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடந்து வருகிறது. </p><p>இந்நிலையில் பஞ்சாபில் எஸ்ஐஆர் நடவடிக்கையில் தனது இந்தியக் குடியுரிமையை நிரூபிப்பதில் தனக்கு ஏற்பட்ட சிரமங்கள் குறித்து ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கான இந்தியாவின் முன்னாள் தூதரான நவ்தீப் சூரி வேதனை தெரிவித்துள்ளார்.  </p><h2>பதிவு</h2><p>இதுகுறித்துத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் இந்த நடைமுறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் தெளிவு இல்லை எனக் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>அவரது பதிவில், " பஞ்சாபில் எஸ்ஐஆர் செயல்முறையில் வாக்குச்சாவடி நிலை அதிகாரியிடம் எனது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையை சமர்ப்பித்தேன்.</p><p>அப்போது அனைத்து ஆவணங்களும் சரியாக இருப்பதாகவே கூறப்பட்டுள்ளது.</p><p>பின்னர், தன்னார்வலர் ஒருவரிடமிருந்து வந்த தகவலில், அவரது விவரங்கள் 2003ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் பதிவுகளுடன் பொருந்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>வாக்குச்சாவடி நிலை அதிகாரியிடம் பேசிய போது, இந்தியக் குடியுரிமையை நிரூபிப்பதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கூறினர்.</p> <p>2003 ஆம் ஆண்டில் பணி நிமித்தமாக இந்தியாவில் இல்லை எனத் தெரிவித்ததைத் தொடர்ந்து, குடியுரிமைக்கான சான்றாகக் கடவுச்சீட்டை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகள் கேட்டனர்.</p><p>வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதாரைத் தவிர வேறு ஆவணங்கள் என்னிடம் உள்ளன.</p><p>ஆனால் ஒன்றை மட்டும் கேட்கத் தோன்றுகிறது. </p><p>மூன்று நாடுகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய பிறகும், எனது குடியுரிமையை நிரூபிக்க நான் போராட வேண்டி இருந்தால், நாட்டின் சாதாரணக் குடிமகனின் நிலை என்னவாகும்? இதுதான் 'வாழ்வை எளிதாக்கும்' முறையா?" என்று பதிவிட்டுள்ளார்.</p> <h2>விதி</h2><p>எஸ்ஐஆர் விதிகளின்படி, 2002 அல்லது 2003ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல்களில் பெயர்கள் இல்லாத வாக்காளர்கள், அப்போதைய பழைய பதிவுகளுடன் தங்களை இணைத்துக் காட்டும் ஆவணங்களை வழங்க வேண்டும்.</p><p>முன்னதாக தேர்தல் ஆணையம் 11 ஆவணங்களை மட்டுமே அனுமதித்த நிலையில், உச்ச நீதிமன்ற கெடுபிடிக்கு பின்னர் ஆதார் அட்டையும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆவணங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.</p> ]]></content:encoded></item><item><title>நிஜவாழ்க்கையின் ‘பேட்மேன்..!- ராகுல்காந்தியை புகழ்ந்து இளைஞர் காங்கிரசார் போஸ்டர் </title><link>https://www.maalaimalar.com/news/national/real-life-batman-youth-congress-praises-rahul-gandhi-poster</link><comments>https://www.maalaimalar.com/news/national/real-life-batman-youth-congress-praises-rahul-gandhi-poster#comments</comments><guid isPermaLink="false">8ebe1bb7-b448-4a89-9523-2c04eddc798a</guid><pubDate>Sun, 23 Aug 2026 14:12:22 +0000</pubDate><atom:updated>2026-08-23T14:12:22.198Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Congress,காங்கிரஸ்,Batman,பேட்மேன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/h7x3rqyi/Rahul.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Congress MP Rahul gandhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/h7x3rqyi/Rahul.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காங்கிரஸ் எம்எபி ராகுல் காந்தியை பாராட்டி இளைஞர் காங்கிரசார் நிஜ வாழ்க்கையின் ‘பேட்மேன்’ என்று அவரை புகழ்ந்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பு போஸ்டர் ஒட்டியுள்ளது.</p><p>டெல்லி ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்திய கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் மாணவர்கள் மீது போலீசார் பெல்லட் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தினார்கள். </p><h2>ராகுல்காந்தி</h2><p>இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட இளைஞர் சாஹில் லோச்சவ் வக்கீலுடன் சென்று புகார் அளித்தும் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படவில்லை. இதனை தொடர்ந்து பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி டெல்லி பாராளுமன்ற வீதியில் உள்ள துணை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு பாதிக்கப்பட்ட இளைஞருடன் சென்று எப்.ஐ.ஆர். பதிவு செய்து அந்த நகலை அளிக்குமாறு வலியுறுத்தினார். </p><p>அவரது கோரிக்கை ஏற்கப்படாததை தொடர்ந்து துணை கமிஷனர் அலுவலகம் முன்பு ராகுல் காந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதை தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். </p><h2>பாராட்டி போஸ்டர்</h2><p>இந்தநிலையில் ராகுல்காந்தியை பாராட்டி இளைஞர் காங்கிரசார் போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளனர். நிஜ வாழ்க்கையின் ‘பேட்மேன்’ என்று அவரை புகழ்ந்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பு போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது.</p><p>ராகுல்காந்தியின் படமும், ‘பேட்மேன்’ படமும் அதில் இடம் பெற்றுள்ளது. அமைதியான பாதுகாவலர், டெல்லியின் பாதுகாவலன் என்ற வாசகம் போஸ்டரில் இடம் பெற்றுள்ளது. ராகுலின் செயலை பாராட்டி இந்த போஸ்டரை அச்ச டித்து வெளியிட்டு உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>அலுவலகங்களில் அபிஜித் தீப்கேவின் படத்தை வையுங்கள் - ஜென் இசட்களை கவரும் பாஜகவின் முயற்சி குறித்து சஞ்சய் ராவத்</title><link>https://www.maalaimalar.com/news/national/bjps-gen-z-outreach-sanjay-raut-mocks-fadnavis-credits-abhijit-deepkewal-for-partys-gen-z-focus</link><comments>https://www.maalaimalar.com/news/national/bjps-gen-z-outreach-sanjay-raut-mocks-fadnavis-credits-abhijit-deepkewal-for-partys-gen-z-focus#comments</comments><guid isPermaLink="false">3d0c7899-428f-455c-918d-84d1624cb27d</guid><pubDate>Sun, 23 Aug 2026 14:06:59 +0000</pubDate><atom:updated>2026-08-23T14:06:59.063Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜென் இசட்,Gen z,சஞ்சய் ராவத்,Sanjay Raut,அபிஜித் தீப்கே,Abhijit Deepke</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/cxn4pwea/tn-26.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அபிஜித் தீப்கே, சஞ்சய் ராவத்]]></media:title><media:description type="html"><![CDATA[ அபிஜித் தீப்கே, சஞ்சய் ராவத்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/cxn4pwea/tn-26.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் <a href="https://www.maalaimalar.com/news/national/bjp-launches-gen-z-outreach-new-high-level-team-formed-under-modi-and-nitin-naveen-to-woo-youth">ஜென் இசட் </a>தலைமுறையினரைக் கவர எடுத்து வரும்  பகிரத பிரயர்த்தனத்தை உத்தவ் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கேலி செய்துள்ளார். </p><p>இந்தியாவில் ஜென் இசட் என்ற ஒரு இளம் தலைமுறை இருப்பதே கரப்பான்பூச்சி கட்சி நிறுவனர் <a href="https://www.maalaimalar.com/news/national/maharashtra-school-fir-cjp-founder-booked-for-unauthorized-entry-and-questioning-students-in-government-school">அபிஜீத் தீப்கே</a>வால்தான் பாஜகவுக்கு தெரியவந்தது என்றும் அதற்கு அவர்கள் அவருக்குத்தான் நன்றி கடன் பட்டிருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>நாக்பூரில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் 'மந்தன் 4 யுவா' என்ற இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்டதன் பின்னணியில் செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் ராவத்,</p><p>"பாஜக தலைவர்கள் தங்கள் அலுவலகங்களில் அபிஜீத் தீப்கேயின் புகைப்படத்தைத் தொங்கவிட வேண்டும். ஏனென்றால், அவரால்தான் 'ஜென் இசட்' என்றொரு பிரிவு நாட்டிலிருப்பதே அவர்களுக்கு நினைவுக்கு வந்துள்ளது" என தெரிவித்தார்.</p><h2>தேவேந்திர பட்னாவிஸ்</h2><p>முன்னதாக நாக்பூர் இளைஞர் மாநாட்டில் உரையாற்றிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ராகுல் காந்தியின் நிகழ்ச்சிகள் வெறும் திட்டமிடப்பட்ட ஈவென்ட் மட்டுமே எனக் விமர்சித்துள்ளார்.</p><p>"எங்கள் நிகழ்வுக்கு வந்த இளைஞர்கள் அனைவரும் எந்தப் பலனுமின்றி தன்னிச்சையாக, இயல்பாக வந்தவர்கள். ஆனால் ராகுல் காந்தியின் நிகழ்ச்சிக்கு காசு கொடுத்து ஆட்களைக் கூட்டியதாகத் தகவல்கள் வருகின்றன</p><p>ராகுல் காந்தி மேடைகளில் பெண்கள் அதிகாரம் பெறுவது பற்றிப் பேசினாலும், வரலாற்றுச் சிறப்புமிக்க மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைத் நாடாளுமன்றத்தில் எதிர்த்து வாக்களித்தவர்" என்று பட்னாவிஸ் சாடினார்.</p> <p>இதற்கு பதிலளித்த சஞ்சய் ராவத், "ராகுல் காந்தியின் மாணவர் கூட்டம் காசு கொடுத்து கூட்டப்பட்டது என்றால், மகாராஷ்டிர சட்டசபை தேர்தலுக்கு முன்பாக 'முக்கியமந்திரி லட்கி பாகின்' திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்பட்டதை என்னவென்று சொல்வது?" எனக் கேள்வி எழுப்பினார்.</p><p>புனேவில் அண்மையில் ராகுல் காந்தி மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தியது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி - முதல் இன்னிங்ஸில் இந்தியா 300 ரன்கள் குவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/sports/2nd-test-against-sri-lanka-india-piles-up-300-runs-in-the-first-innings</link><comments>https://www.maalaimalar.com/sports/2nd-test-against-sri-lanka-india-piles-up-300-runs-in-the-first-innings#comments</comments><guid isPermaLink="false">4b323725-7903-472a-b4c6-7ff3c3a72d0e</guid><pubDate>Sun, 23 Aug 2026 14:02:45 +0000</pubDate><atom:updated>2026-08-23T14:02:45.413Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா,இலங்கை,டெஸ்ட் தொடர்,test match,IND vs SL</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/n33p38do/New-Project-2026-08-23T192958.831.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி - முதல் இன்னிங்ஸில் இந்தியா 300 ரன்கள் குவிப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/n33p38do/New-Project-2026-08-23T192958.831.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்தியா 300 ரன்களை குவித்துள்ளது. </p><p>இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, இன்று கொழும்பில் உள்ள எஸ்.எஸ்.சி மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.</p><p>இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே. எல். ராகுல் களம் இறங்கினர். தொடக்க ஜோடி மெதுவாக ஆட்டத்தை தொடங்க, தேவ்தத் படிக்கல் அதிரடியாகவும், நேர்த்தியாகவும் விளையாடி 117 ரன்கள் விளாசி சதம் அடித்து அசத்தினார். </p><p>இது டெஸ்ட் போட்டிகளில் அவரது 2-வது சதமாகும். கேப்டன் பொறுப்புடன் விளையாடி 50 ரன்கள் எடுத்து அரைசதம் அடித்தார். ஜடேஜா 43 எடுத்து ஆட்டமிழந்தார். இதனிடையே ரிஷப் பந்த் காயத்தால் ரிட்டைட் அவுட் ஆகி வெளியேறினார்.</p><p>முதல் நாள் ஆட்ட முடிவில் துருவ் ஜுரெல் 7 ரன்களுடனும், இந்த டெஸ்ட் போட்டியில் புதிதாக அறிமுகமாகியுள்ள ஆல்-ரவுண்டர் சாரன்ஷ் ஜெயின் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். </p><p>இலங்கை தரப்பில் அசிதா பெர்னான்டோ 3 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். லகிரு குமாரா, கேஷரா நுவந்தா தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.</p><p>இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா ஏற்கனவே முதல் போட்டியில் வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சரின் எம்.எல்.ஏ. அலுவலகத்தை  முற்றுகையிட முயன்ற தூய்மைப் பணியாளர்கள் குண்டுகட்டாக கைது!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/sanitation-workers-forcibly-arrested-while-attempting-to-lay-siege-to-the-chief-ministers-mla-office</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/sanitation-workers-forcibly-arrested-while-attempting-to-lay-siege-to-the-chief-ministers-mla-office#comments</comments><guid isPermaLink="false">cfd603a3-91ea-43d8-8b1d-b69cd5b20c6e</guid><pubDate>Sun, 23 Aug 2026 13:35:39 +0000</pubDate><atom:updated>2026-08-23T13:35:39.910Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Arrest,கைது,காவல்துறை,police,Sanitation workers,தூய்மைப் பணியாளர்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/p7ejlmgy/New-Project-2026-08-23T190510.487.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சரின் எம்.எல்.ஏ. அலுவலகத்தை  முற்றுகையிட முயன்ற தூய்மைப் பணியாளர்கள் குண்டுகட்டாக கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/p7ejlmgy/New-Project-2026-08-23T190510.487.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் பணி நிரந்தரம், தூய்மைப் பணிகளைத் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட இதர கோரிக்கைகளை வலியுறுத்தி மண்டலம் 4,7,8, ஆகியவற்றைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் கடந்த 3 நாட்களாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>இந்நிலையில் இன்று முதலமைச்சரின் பெரம்பூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக தகவல்கள் வெளியானது. இதனால் பெரம்பூர் அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். </p><p>இதனால் தண்டையார்பேட்டை மண்டலத்தை சூழ்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கு விரைந்த போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து அவர்களை தடுக்க முயன்றனர். அப்போது போலீசாருக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.</p><p>கலைந்து போக மறுத்து, சாலையிலேயே அமர்ந்து போராடிய பெண் பணியாளர்கள் உள்ளிட்ட பலரைக் காவல்துறையினர் குண்டுகட்டாகத் தூக்கிச் சென்று வலுக்கட்டாயமாக வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.</p>]]></content:encoded></item><item><title>முதலீடுகளை ஈர்க்க பியூஷ் கோயல் ஜப்பான் பயணம்</title><link>https://www.maalaimalar.com/news/national/piyush-goyal-japan-visit-to-attract-investments</link><comments>https://www.maalaimalar.com/news/national/piyush-goyal-japan-visit-to-attract-investments#comments</comments><guid isPermaLink="false">5465b8cb-0311-48dc-bb5a-1add2bad6b80</guid><pubDate>Sun, 23 Aug 2026 13:28:25 +0000</pubDate><atom:updated>2026-08-23T13:28:25.262Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பியூஷ் கோயல்,piyush goyal,japan,Investment,முதலீடுகள்,ஜப்பான் பயணம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/axluddid/Piyush.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Piyush Goal]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/axluddid/Piyush.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 4 நாள் அரசுமுறை பயணமாக ஜப்பான் செல்கிறார். ஆகஸ்டு 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை நான்கு நாட்களில் ஜப்பானின் டோக்கியோ, நகோயா, ஒசாகா நகரங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.</p><p>ஜப்பான் தொழில்துறை அமைச்சர், முன்னணி தொழிலதிபர்கள், ஜப்பான் வணிக கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் பியூஷ் ஆலோசிக்க உள்ளார்.</p><p>உற்பத்தி, குறைக்கடத்திகள் (செமிகண்டக்டர்), தூய்மையான எரிசக்தி, எஃகு, வாகனத் துறை, நிதிச் சேவைகள், சுகாதாரம் மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த 200-க்கும் அதிகமான வர்த்தகப் பிரதிநிதிகள் கொண்ட குழு அவருடன் ஜப்பான் செல்கிறது.</p><p>அத்துடன், 1,500-க்கும் மேற்பட்ட முன்னணி ஜப்பானிய நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உச்ச அமைப்பான கெய்டன்ரென்(ஜப்பான் வர்த்தகக் கூட்டமைப்பு) சார்பில் நடத்தப்படும் வட்டமேசை மாநாட்டில் பியூஷ் கோயல் பங்கேற்கவுள்ளார்.</p><p>ஜப்பான் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் அகசாவா ரியோசேவுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கும் பியூஷ் கோயல், ஜப்பானிய அரசு, நாடாளுமன்றத்தின் மூத்த உறுப்பினர்களையும் சந்திக்கிறார். மேலும், ஜப்பானில் உள்ள இந்திய சமூகத்தினருடனும் அவர் கலந்துரையாடுகிறார்.</p>]]></content:encoded></item><item><title>மாணவிகளுடன் குளித்த வீடியோ வைரல்.. அரசுப் பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் </title><link>https://www.maalaimalar.com/news/national/video-of-bathing-with-female-students-goes-viral-govt-school-teacher-suspended</link><comments>https://www.maalaimalar.com/news/national/video-of-bathing-with-female-students-goes-viral-govt-school-teacher-suspended#comments</comments><guid isPermaLink="false">5d363a18-d5fb-4760-add5-19d7c97374c4</guid><pubDate>Sun, 23 Aug 2026 13:28:04 +0000</pubDate><atom:updated>2026-08-23T13:28:04.382Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rajasthan,government school,தலைமை ஆசிரியர்,Headmaster,ராஜஸ்தான்,அரசுப்பள்ளி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/6qcoluxy/tn-25.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சஸ்பெண்டு]]></media:title><media:description type="html"><![CDATA[ சஸ்பெண்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/6qcoluxy/tn-25.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராஜஸ்தானில் மாணவிகளுடன் அணையில் ஆடையின்றி குளித்த விவகாரத்தில் <a href="https://www.maalaimalar.com/news/national/maharashtra-school-fir-cjp-founder-booked-for-unauthorized-entry-and-questioning-students-in-government-school">அரசு பள்ளி</a> தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. </p><h2>அரசுப் பள்ளி </h2><p>ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் தானாகாசி பகுதியில் ரவுபாவி படக் சப்ளி அரசு மேல்நிலைப் பள்ளி  அமைந்துள்ளது. இதன் தலைமை ஆசிரியராக  லால் சந்த் மீனா உள்ளார். </p><p>கடந்த ஆகஸ்ட் ஆகஸ்ட் 15 சுதந்திர தின கொண்டாட்டங்கள் முடிந்த பிறகு, 9 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 200 மாணவ மாணவிகளை 2 கி.மீ தொலைவில் உள்ள படாஜ் அணைக்கு காட்டுப்பாதை வழியாக தலைமை ஆசிரியர் அழைத்துச் சென்றுள்ளார்.  </p> <h2>சுற்றுலா என்ற பெயரில்</h2><p>சுற்றுலா என்ற பெயரில் மாணவ மாணவிகளை அவர் கூட்டிச் சென்ற நிலையில் இதன்போது மாணவிகளுடன் பாதுகாப்புக்கு எந்த ஒரு பெண் ஆசிரியரும் உடன் செல்லவில்லை.</p><p>அணையில் 11 அடிக்கும் மேல் தண்ணீர் இருந்த நிலையில், தலைமை ஆசிரியர் மேலாடையின்றி மாணவிகளுடன் நீரில் குளித்துள்ளார். </p><p>மேலும் நீச்சல் கற்றுத்தருவதாகக் கூறி சில மாணவிகளின் கைகளை தூக்கியதாகவும் கூறப்படுகிறது.</p><p>மாணவர்கள் சிலர் இந்த காட்சிகளை தங்கள் மொபைலில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட, அது காட்டுத்தீ போல் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.</p><h2>மக்கள் கொந்தளிப்பு</h2><p>வீடியோ வைரலானதை அடுத்து, கிராம மக்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டுத் தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.</p><p>படாஜ் அணையின் கரை வெறும் 5 முதல் 6 அடி மட்டுமே அகலமுடையது என்றும், ஆபத்தான பகுதி என்பதால் கடந்த நான்கு ஆண்டுகளாக அங்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டிருந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>மேலும், அப்பகுதியில் புலிகள் நடமாட்டமும் உள்ள நிலையில், முறையான பாதுகாப்பு உடைகளோ அல்லது பாதுகாப்பு ஏற்பாடுகளோ இன்றி, நீச்சல் தெரியாத மாணவர்களை அங்கு அழைத்துச் சென்றது ஏன் என கிராம மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.</p> <h2>நடவ்டிக்கை</h2><p>சம்பவம் தொடர்பாகத் தானாகாசி காவல்துறையினர் பள்ளிக்கு வந்து விசாரணை மேற்கொண்டு, தலைமை ஆசிரியரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.</p><p>வீடியோவின் உண்மைத்தன்மை மற்றும் சூழ்நிலைகள் குறித்துப் பொலீசார் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.</p> <p>இதனிடையே, தலைமை ஆசிரியர் லால் சந்த் மீனாவின் இந்த செயல் அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகளுக்கு முற்றிலும் எதிரானது எனக் கூறி, கல்வி இயக்குனரகம் அவரை உடனடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.</p><p>மேலும் அவர் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கையும் தொடங்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காணாமல் போகவில்லை - கர்நாடகா ஐஏஎஸ் அதிகாரி ஞானேந்திர குமார் விவகாரத்தில் அமைச்சர் பிரியங்க் கார்கே விளக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/karnataka-ias-officer-gnanendra-kumar-not-missing-priyank-kharge-explains-controversy</link><comments>https://www.maalaimalar.com/news/national/karnataka-ias-officer-gnanendra-kumar-not-missing-priyank-kharge-explains-controversy#comments</comments><guid isPermaLink="false">3ff39c4f-e3f4-41be-b8c5-ea1d56cf3ac3</guid><pubDate>Sun, 23 Aug 2026 12:59:45 +0000</pubDate><atom:updated>2026-08-23T12:59:45.961Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Priyank Kharge,பிரியங்க் கார்கே,Gyanendra Kumar Gangwar,ஞானேந்திர குமார் காங்வார்,Karnataka IAS Officer,KPSC ED Raid,FakeNews Busted</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/xu1na94a/Gyanendra-Kumar-Gangwar" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gyanendra Kumar Gangwar ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/xu1na94a/Gyanendra-Kumar-Gangwar?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்புகொள்ள முடியாமல் 'காணாமல் போய்விட்டார்' என்று ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்ட கர்நாடக கேடர் <a href="https://www.maalaimalar.com/topic/ias-officer">ஐஏஎஸ் அதிகாரி</a> ஞானேந்திரகுமார் காங்வார், தனது தந்தையின் அவசர மருத்துவக் காரணங்களுக்காக உத்தரப் பிரதேசத்தில் உள்ள தனது சொந்த ஊருக்குச் சென்றுள்ளதாக கர்நாடக மாநில அமைச்சர் பிரியங்க் கார்கே அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.</p><h2><strong>கிளம்பிய வதந்திகள்</strong></h2><p>2016-ஆம் ஆண்டு பேட்ச் <a href="https://www.maalaimalar.com/topic/ias-officer">ஐஏஎஸ் அதிகாரி</a>யான ஞானேந்திர குமார், தற்போது <a href="https://www.maalaimalar.com/topic/karnataka">கர்நாடக</a> தொழில் மற்றும் வர்த்தகத் துரையின் MSME இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். </p><p>கடந்த வியாழக்கிழமை முதல் இவரது அதிகாரபூர்வ அரசு தொலைபேசி எண் செயலில் இல்லை அதனால் இவரை தொடர்புகொள்ள முடியவில்லை.</p><p>பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் வரை அவர் சென்றதும், அங்கிருந்து டெல்லிக்கு விமான டிக்கெட் முன்பதிவு செய்திருந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. </p><p>அவர் கர்நாடக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தேர்வுக்கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றியவர் என்பதால், அங்கு நடந்த ED சோதனைகளுக்குப் பயந்து அவர் தலைமறைவாகிவிட்டார் என செய்திகள் பரவின.</p><h2><strong>அமைச்சர் விளக்கம்</strong></h2><p>இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பிரியங்க் கார்கே, "அதிகாரி <a href="https://www.maalaimalar.com/topic/ias-officer">ஞானேந்திர குமார்</a> எங்கும் செல்லவில்லை. இது வெறும் தகவல் தொடர்பு இடைவெளியால் ஏற்பட்ட குழப்பம். அவரது தந்தை ஒரு இதய நோயாளி. </p><p>திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்ததால், அதிகாரி உடனடியாகச் சொந்த ஊருக்குக் கிளம்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது" என்றார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">There have been reports that an IAS officer in Karnataka has gone missing.<br><br>The officer concerned has since communicated with the Government and clarified that, due to a family emergency, he had sought leave and had to travel urgently to his hometown.<br><br>During this period, he was…</p>&mdash; Priyank Kharge / ಪ್ರಿಯಾಂಕ್ ಖರ್ಗೆ (@PriyankKharge) <a href="https://x.com/PriyankKharge/status/2091124522309341691?ref_src=twsrc%5Etfw">August 22, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2><strong>விடுப்பு கடிதம்</strong></h2><p>அதிகாரி ஞானேந்திர குமார் அவசரமாகக் கிளம்புவதற்கு முன், தனது தவிர்க்க முடியாத சூழ்நிலையைக் குறிப்பிட்டு ஒரு வார கால விடுப்பு வேண்டி கையால் எழுதப்பட்ட கடிதத்தை அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளார். </p><p>ஆனால், அதற்கு முந்தைய நாள் அரசு விடுமுறை என்பதால், அரசு அலுவலகங்கள் முழுமையாகச் செயல்படவில்லை. இதனால் அந்த விடுப்புக் கடிதம் உடனடியாக நடைமுறைக்கு வரவில்லை என அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><h2><strong>நான் காணாமல் போகவில்லை</strong></h2><p>அமைச்சர் பிரியங்க் கார்கே அந்த அதிகாரியைத் தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது <a href="https://www.maalaimalar.com/topic/ias-officer">அதிகாரி ஞானேந்திர குமார்</a>, "தந்தையின் இக்கட்டான சூழ்நிலை மற்றும் பயணத்தில் இருந்ததால் என்னைத் தொடர்புகொள்ள முடியவில்லை. </p><p>இன்னும் சில நாட்களில் பெங்களூரு திரும்பி விடுப்புக்கான அரசு நடைமுறைகளை முடிப்பேன். என் மீது தற்போது எந்தப் புகாரும் இல்லை. அப்படியே ஏதேனும் முகமைகள் விசாரணை நடத்த உத்தரவிட்டால், அதைச் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்" என்று கூறியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.</p><p>இதன் மூலம் கர்நாடக ஐஏஎஸ் அதிகாரி திடீரென காணாமல் போனதாக எழுந்த அத்தனை சர்ச்சைகளுக்கும் தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>8.23 லட்சம்  மத்திய அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.. RTI-யில் அம்பலம்</title><link>https://www.maalaimalar.com/news/national/central-government-vacancies-over-823-lakh-posts-lying-vacant-across-ministries-revealed-by-rti-data</link><comments>https://www.maalaimalar.com/news/national/central-government-vacancies-over-823-lakh-posts-lying-vacant-across-ministries-revealed-by-rti-data#comments</comments><guid isPermaLink="false">35d1aaa0-b566-4e52-bf1e-3f7d1686eae7</guid><pubDate>Sun, 23 Aug 2026 12:50:25 +0000</pubDate><atom:updated>2026-08-23T12:50:25.343Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Unemployment,அரசு வேலை,government job,ஆர்டிஐ,rti,வேலையின்மை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/b7jgiwqg/tn-24.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ RTI]]></media:title><media:description type="html"><![CDATA[ RTI]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/b7jgiwqg/tn-24.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடு முழுவதும் <a href="https://www.maalaimalar.com/news/national/india-youth-jobs-crisis-rahul-gandhi-warns-on-rising-education-costs-unemployment-and-ai-risks">வேலையில்லாத் திண்டாட்டம்</a> நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் மத்திய அரசின்  8.23 லட்சத்திற்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளதாக ஆர்டிஐ மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. </p><p>தகவல் அறியும் உரிமைச் சட்டமான ஆர்டிஐயின் கீழ் சமூக ஆர்வலர் சந்திர சேகர் கவுர் எழுப்பிய கேள்விக்கு மத்திய நிதி அமைச்சம் தந்துள்ள பதிலில் இதன் தரவுகள் இடம்பெற்றுள்ளன. </p> <h2>தரவுகள்</h2><p>தரவுகளின்படி, நாடு முழுவதும் வெவ்வேறு துறைகளை சேர்த்து மத்திய அரசின் கீழ் 39 லட்சத்து 23 ஆயிரத்து 212 உள்ளன. ஆனால் மார்ச் 1, 2024 நிலவரப்படி 30 லட்சத்துக்கு 99 ஆயிரத்து 556 ஊழியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.</p><p>இதன் மூலம் 8 லட்சத்துக்கு 23 ஆயிரத்து 656 பணியிடங்கள், அதாவது சுமார் 21 சதவீதம் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது தெரியவந்துள்ளது.</p><p>ஒவ்வொரு 5 பணியிடங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன.</p> <h2>பாதுகாப்பு, ரெயில்வே, உள்துறை</h2><p>நாட்டின் மிகப்பெரிய துறையான பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் ராணுவ வீரர்கள் அல்லாத சிவிலியன் பணியிடங்களில் 5,56,248 இடங்களில் 2,42,243 இடங்கள் (43.5%) காலியாக உள்ளன.</p><p>அதேபோல, இந்திய ரெயில்வேயில் 14,79,701 பணியிடங்களில் 2,40,125 இடங்கள் காலியாகக் கிடக்கின்றன.</p><p>இது நாட்டின் மொத்த காலியிடங்களில் 30 சதவீதமாகும். பாதுகாப்பு மற்றும் ரெயில்வே ஆகிய இவ்விரு துறைகளில் மட்டுமே 4.82 லட்சத்திற்கும் அதிகமான பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.</p><p>மத்திய உள்துறை அமைச்சகத்தில், 11,18,233 அனுமதிக்கப்பட்ட இடங்களில் 1,10,885 பணியிடங்கள் காலியாக உள்ளன.</p><p>பாதுகாப்புத் துறை, ரெயில்வே மற்றும் உள்துறை ஆகிய மூன்றிலும் மட்டுமே சேர்த்து 5.93 லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.</p><h2>பிற துறைகள்</h2><p>வருவாய்த் துறையில் 1,79,374 இடங்களில் 69,662 இடங்கள் (38.8 சதவீதம் ) காலியாக உள்ளன. அஞ்சல் துறையில் 2,53,124 இடங்களில் 61,546 இடங்கள் (24.3 சதவீதம்) காலியாக உள்ளன.</p><p>அணுசக்தித் துறையில் 37,250 இடங்களில் 10,234 இடங்கள் (27.47 சதவீதம்) காலியாக உள்ளன. விண்வெளித் துறையான இஸ்ரோவில் 19,200 இடங்களில் 4,126 இடங்கள் (21.48 சதவீதம்) காலியாக உள்ளன.</p><p>இதுபோல வெவ்வேறு துறைகளுக்கான தரவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவற்றில் பொதுத்துறை வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் காலியிடங்கள் சேர்க்கப்படவில்லை.</p> <h2>கவலை</h2><p>இந்த ஆர்டிஐ தகவலைப் பெற்ற சமூக ஆர்வலர் சந்திர சேகர் கவுர் கூறுகையில், "வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத்தில் இருக்கும் இந்தச் சூழலில், இத்தனை லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பது கவலையளிக்கிறது.</p><p>அரசு வேலை என்பது இளைஞர்களின் உரிமை. மத்திய அரசு உடனடியாக போர்க்கால அடிப்படையில் இந்த காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.</p><p>இது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதோடு, அரசுத் துறைகளின் செயல்பாட்டுத் திறனையும் அதிகரிக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>‘அடுத்த பிறவியில் விவசாயியாக பிறக்க ஆசைப்படும் முதலமைச்சர், இந்த ஜென்மத்தில் அவர்களை காக்க வேண்டும்’ - இபிஎஸ்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-chief-minister-who-wishes-to-be-born-as-a-farmer-in-the-next-life-must-protect-farmers-in-this-lifetime-eps</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-chief-minister-who-wishes-to-be-born-as-a-farmer-in-the-next-life-must-protect-farmers-in-this-lifetime-eps#comments</comments><guid isPermaLink="false">6547a793-7e92-4a83-b33b-d1c900254748</guid><pubDate>Sun, 23 Aug 2026 12:14:32 +0000</pubDate><atom:updated>2026-08-23T12:14:32.292Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Edappadi Palaniswami,எடப்பாடி பழனிசாமி,farmers,விவசாயிகள்,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/f2hp0s3b/New-Project-2026-08-23T174340.794.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘அடுத்த பிறவியில் விவசாயியாக பிறக்க ஆசைப்படும் முதலமைச்சர், இந்த ஜென்மத்தில் விவசாயிகளை காக்க வேண்டும்’ - இபிஎஸ்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/f2hp0s3b/New-Project-2026-08-23T174340.794.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட 2000 ஏக்கர் நெற்பயிர்களுக்கு தமிழ்நாடு அரசு இழப்பீடு தரவேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;</p><p>கடந்த இரண்டு நாட்களாக திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பெய்த திடீர் மழையினால் சுமார் 2000 ஏக்கர் நிலத்தில் விளைவித்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.</p><p>விவசாயத்திற்கு ஆதாரம் தண்ணீர். தண்ணீருக்கு மழைதான் ஆதாரம்! கடந்த இரண்டு நாட்களாக டெல்டா மாவட்டங்களில் சில இடங்களில் பெய்த கன மழை, சுமார் 2000 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்த விவசாயிகளின் வாழ்வை அடியோடு புரட்டிப்போட்டுள்ளது.</p><p>கன மழையால் அறுவடைக்குத் தயாரான நெற்கதிர்கள் எதிர்பாராத மழையால் சேதமடைந்ததை எண்ணி அப்பகுதி விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள். இவர்களின் கண்ணீரைத் துடைப்பது த.வெ.க. கூட்டணி அரசின் கடமையாகும். </p><p>அடுத்த ஜென்மத்தில் விவசாயியாகப் பிறக்க கனவு காணும் பொய்க்கால் அரசின் முதலமைச்சர் ஜோசப் விஜய், இந்த ஜென்மத்தில் அல்லலுறும் விவசாயிகளைக் காக்கும் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.</p><p>இந்த அரசு ஜூன் 12-ல், குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடாத நிலையில், நிலத்தடி நீரை நம்பி கடன் வாங்கி வேளாண் பயிர் செய்திருந்த விவசாயிகள், தற்போது கதிர்கள் முற்றி அறுவடைக்குத் தயாராக இருக்கும் நேரத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த திடீர் மழையினால், பாடுபட்டு விளைவித்திருந்த நெற்கதிர்கள் மழையில் மூழ்கிய நிலையைப் பார்த்து விவசாயிகள் கடும் வேதனையில் உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.</p><p>ஏற்கெனவே, த.வெ.க. தேர்தல் நேரத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய வேளாண் கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு, தவணை முறையில் சிறிது, சிறிதாக வேளாண் கடனை தள்ளுபடி செய்யும் அறிவிப்புகளை வெளியிடும் த.வெ.க. அரசின் முதலமைச்சரின் செய்கைகளைக் கண்டு விவசாயிகள் கொதித்துப்போய் உள்ளனர்.</p><p>தற்போது பெய்த கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு கைக் கொடுக்க இந்த அரசு முன்வர வேண்டும். தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறை மற்றும் வேளாண் துறை அதிகாரிகளை உடனடியாக மழையால் பாதிக்கப்பட்ட திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு அனுப்பி, பயிர் சேத விவரங்களை முழுமையாக கணக்கெடுக்க வேண்டும். </p><p>பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் அனைவருக்கும் ஏக்கர் ஒன்றுக்கு 30,000 ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று பொய்க்கால் த.வெ.க. அரசை வலியுறுத்துகிறேன்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கேடில் விழுச்செல்வம்.. 64 வயதில் எம்.டெக் தேர்ச்சி.. IIM-இல் சேர முயற்சி - சாதித்த முதியவர்</title><link>https://www.maalaimalar.com/news/national/inspiring-lifelong-learning-64-year-old-up-man-completes-mtech-while-working-and-rejoins-government-service</link><comments>https://www.maalaimalar.com/news/national/inspiring-lifelong-learning-64-year-old-up-man-completes-mtech-while-working-and-rejoins-government-service#comments</comments><guid isPermaLink="false">e109727f-c6c9-4e1e-aacb-14ad7b53e2f2</guid><pubDate>Sun, 23 Aug 2026 12:07:33 +0000</pubDate><atom:updated>2026-08-23T12:07:33.649Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Uttar Pradesh,iim,உத்தரப் பிரதேசம்,ஐஐஎம்,எம். டெக்,M.Tech</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/5vha4boa/tn-22.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[  கோப்புப் படம்]]></media:title><media:description type="html"><![CDATA[  கோப்புப் படம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/5vha4boa/tn-22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>"கேடில் விழுச்செல்வம்  கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றவை யவை" - கல்வியை விட சிறந்த செல்வம் எதுவும் கிடையாது என்பது வள்ளுவர் வாக்கு </p><p>அவ்வகையில் வாழ்க்கையை வாழ்ந்து முடிந்துவிட்டதாக பலரும் ஓய்வெடுக்கும் வயதில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">உத்தரப் பிரதேசத்தை </a>சேர்ந்த முதியவர்கல்வியை தலைமேற்கொண்டுள்ளார். </p> <h2>ஒய்வின்றி உழைப்பு </h2><p>உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஷஷாங்க் ஸ்ரீவஸ்தவா தனது 64 வயது தந்தையின் சாதனையை எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். </p><p>அவரது 64 வயது தந்தை கடந்த 2022 இல் கடந்த அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இருப்பினும் வீட்டில் சும்மா இருக்க விரும்பாமல் உத்தரப் பிரதேசத்தின் மாநகராட்சிகளைக் கண்காணிக்கும் ஒழுங்குமுறை அமைப்பின் துணை தலைமை செயல் அதிகாரியாக மீண்டும் பணியில் இணைந்துள்ளார். </p> <h2>பணிக்கு இடையில் படிப்பு   </h2><p>பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று கள ஆய்வுகளை மேற்கொள்வது இவரது பணி என்பதால், ஒவ்வொரு வாரமும் சுமார் 1,000 கிலோமீட்டர் வரை பயணம் செய்ய வேண்டியிருந்தது. </p><p>பயணங்களின் இடைப்பட்ட நேரத்தை பயன்படுத்தி படித்துள்ளார். கடந்த மாதம் தனது எம் டெக் பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்தார். </p><p>வகுப்பில் பெரும்பாலான மாணவர்கள் இவருடைய வயதில் பாதியளவு இருந்தபோதிலும், இவர் சிறந்த 10 மாணவர்களுள் ஒருவராகத் தேர்ச்சி பெற்றுள்ளார். </p><p>64 வயதில் எம்டெக் பட்டம் பெற்றதோடு நிறுத்திவிடாமல், தனது அடுத்த இலக்காக இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் (IIM) லக்னோவில் உள்ள Executive Education படிப்பிற்கு விண்ணப்பிக்க முடிவெடுத்துள்ளார். </p> <h2>மகன் நெகிழ்ச்சி</h2><p>மகன் ஷஷாங்க் கூறுகையில், "வாழ்க்கையின் ஓட்டத்தில் தங்களை காலத்திற்கு ஏற்ப புதுப்பித்து கொள்வதை பெரும்பாலானோர் மறந்துவிடுகிறார்கள். </p><p>ஆனால், எனது தந்தை பணி மற்றும் வயதுச் சுமையை காரணம் காட்டாமல் படிப்புக்கு எப்போதும் முதலிடம் கொடுத்தார். </p><p>அவருடைய மகனான நான் சுய முன்னேற்றத்திற்கான ஊக்கத்தை வெளியில் தேடத் தேவையில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார். </p><p>இப்பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி பலருக்கும் தங்களின் முதிய வயதிலும் கல்வி கற்கும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>குருவாயூர் கோவிலில் இன்று ஒரே நாளில் 437 ஜோடிகளுக்கு திருமணம்</title><link>https://www.maalaimalar.com/news/national/437-marriages-in-a-single-day-at-guruvayur-temple</link><comments>https://www.maalaimalar.com/news/national/437-marriages-in-a-single-day-at-guruvayur-temple#comments</comments><guid isPermaLink="false">98240968-1645-4a78-8a8e-1af486afa645</guid><pubDate>Sun, 23 Aug 2026 12:06:30 +0000</pubDate><atom:updated>2026-08-23T12:06:30.520Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமணம்,marriage,கல்யாணம்,குருவாயூர்,Guruvayur</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/zgfup8v4/guruvayur.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Guruvayur temple]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/zgfup8v4/guruvayur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரளம் மாநிலம் திருச்சூரில் பிரசித்திபெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.</p><p>மாநில மக்கள் மட்டுமின்றி, வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட மக்களும் இங்கு வந்து தரிசனம் செய்வார்கள். இந்த கோவிலுக்கு வந்து ஏராளமானோர் திருமணம் செய்வதும் வாடிக்கை.</p><p>அதுவும் ஆவணி மாதங்களில் வரும் முகூர்த்த நாட்கள் இங்கு பிரசித்தம் பெற்றவை. மேலும் மலையாள மாதமான சிங்கத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையாக இன்று அமைந்துள்ளது.</p><p>இந்த நாளில் குருவாயூரில் திருமணங்கள் நடத்தப்படுவது சிறப்பானதாக இருக்கும் என பக்தர்கள் கருதுகின்றனர். இதனாலேயே இந்த நாளில் குருவாயூர் கோவிலில் திருமணம் செய்ய ஏராளமான ஜோடிகள் வருவதுண்டு.</p><p>அதன்படி இந்த ஆண்டும் ஆவணி மாத முதல் முகூர்த்த நாளான இன்று திருமணம் செய்ய ஏராளமான ஜோடிகள் முன்பதிவு செய்திருந்தனர்.   நேற்று வரை 444 ஜோடிகள் திருமணத்திற்கு முன்பதிவு செய்திருந்த நிலையில் இன்று காலையும் முன்பதிவு செய்யாமல் ஏராளமான திருமண ஜோடிகள் கோவிலுக்கு வந்திருந்தனர்.</p><p>ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த ஜோடிகள், அவர்களது உறவினர்கள் என பலரும் கோவிலுக்கு வந்ததால் அங்கு கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கோயிலில் அதிகாலை 4.10 மணிக்கு திருமணங்கள் தொடங்கியது.</p><p>முதல் 2 மணிநேரத்திலேயே 137 திருமணங்கள் நடத்தப்பட்டன. திருமணங்கள் நடத்தப்படுவதற்காக கோவில் முற்றத்தில் 6 மண்டபங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த மண்டபங்களில் ஒவ்வொரு மணிநேரத்துக்கும் 60-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடத்தப்பட்டன.</p><p>தொடர்ந்து வைபவங்கள் நடைபெற்று வந்ததால் கோவிலில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். இதுதொடர்பாக குருவாயூர் கோவில் தேவஸ்தான தலைவர் கோபிநாத் கூறுகையில்,"குருவாயூரில் இன்று 437 திரு மணங்கள் நடைபெற்றுள்ளன.</p><p>குருவாயூர் கோவில் வரலாற்றில் முதல்முறையாக இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான திருமணங்கள் தற்போது தான் நடை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. </p><p>கோயிலில் கூட்ட நெரிசலைத தவிர்ப்ப தற்காக, மணமக்களுடன் வருபவர்களின் எண்ணிக்கையை 24-ஆக கட்டுப்படுத்தப பட்டுள்ளது என்றார்.</p>]]></content:encoded></item><item><title>100 நாட்களை நிறைவு செய்த கருப்பு..!- ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சூர்யா - ஆர்.ஜே. பாலாஜி</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-surya-and-rj-balaji-thank-fans-as-karuppu-completes-100-days</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-surya-and-rj-balaji-thank-fans-as-karuppu-completes-100-days#comments</comments><guid isPermaLink="false">56a1a4e9-6a8a-498d-87a4-7550ac191a30</guid><pubDate>Sun, 23 Aug 2026 11:25:13 +0000</pubDate><atom:updated>2026-08-23T11:25:13.641Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சூர்யா,RJ-Balaji,Suriya,Sai Abhyankkar,ஆர்ஜே பாலாஜி,Karuppu BoxOffice,100CroreClub,Generational Blockbuster</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/c4mc63a6/Suriya-RJ-Balaji" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Suriya  - RJ Balaji ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/c4mc63a6/Suriya-RJ-Balaji?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE">சூர்யா </a>நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியாகி உலகளவில் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து பிரமாண்ட வரலாற்றுச் சாதனை படைத்துள்ள '<a href="https://www.maalaimalar.com/topic/karuppu">கருப்பு</a>' திரைப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக 100 நாட்களை நிறைவு செய்துள்ளது. </p><p>இந்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சூர்யா மற்றும் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF">ஆர்.ஜே பாலாஜி</a> தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.</p><h2><strong>நடிகர் சூர்யாவின் நெகிழ்ச்சி பதிவு!</strong></h2><p>கருப்பு திரைப்படம் 100 நாட்களைக் கடந்ததையொட்டி நடிகர் சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில், "கண்ணுங்களா... செல்லங்களா... சாமிகளா... என் சாமிகளா! கருப்பு திரைப்படத்தை உங்கள் சொந்தப் படமாக ஏற்றுக்கொண்டு கொண்டாடியதற்கு கோடான கோடி நன்றிகள் - இந்த மாபெரும் வெற்றி உங்கள் ஒவ்வொருவருக்கும் சொந்தமானது" என்று தனது நெகிழ்ச்சிப்பதிவை பகிர்ந்துள்ளார்.</p><h2><strong>ஆர்.ஜே பாலாஜியின் பதிவு!</strong></h2><p>இப்படத்தின் இயக்குநரும், முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தவருமான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF">ஆர்.ஜே. பாலாஜி</a>, "ஒரு தேவதைக் கதைப் பயணத்தின் 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது.</p><p>வெவ்வேறு நம்பிக்கைகள், வெவ்வேறு கலாச்சாரங்கள், வெவ்வேறு தலைமுறைகள், ஆனாலும், கருப்பு திரைப்படம் உலகெங்கிலும் உள்ள மக்களின் இதயங்களில் ஆழமாகப் பதிந்து வாழ்கிறது. இது ஒரு தலைமுறை பிளாக்பஸ்டர்.</p><p>நன்றி இறைவா..! நன்றி மக்களே.! இதைவிடச் சிறந்த வரவேற்பையும் அங்கீகாரத்தையும் கேட்டிருக்க முடியாது.! கருப்பா, என்னுடன் வா" என்று பதிவிட்டுள்ளார்.</p><h2><strong>கருப்பு </strong>படத்தின் <strong>வசூல்!</strong></h2><p>ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், சூர்யாவின் 45-வது திரைப்படமாக வெளியான '<a href="https://www.maalaimalar.com/topic/karuppu">கருப்பு</a>', அவரது திரைப்பயணத்திலேயே <strong>மிக அதிக வசூல் செய்த திரைப்படமாக</strong> உருவெடுத்துள்ளது. </p><p>திரைப்படம் வெளியான 3 நாட்களிலேயே உலகளவில் 120 கோடி ரூபாயைக் கடந்த இப்படம், வெறும் 8 நாட்களில் 200 கோடியைத் தாண்டியது. தற்போது 100 நாட்களை நிறைவு செய்துள்ள நிலையில், 300 கோடி ரூபாய் வசூலைக் கடந்து 'ஜெனரேஷனல் பிளாக்பஸ்டர்' என திரையுலகினரால் பாராட்டப்பட்டு வருகிறது.</p><p>ஒரு நேர்மையான வழக்கறிஞரின் உடலுக்குள் '<a href="https://www.maalaimalar.com/topic/karuppu">வேட்டை கருப்பு</a>' என்ற காவல் தெய்வம் புகுந்து நீதிமன்றத்திலேயே அமானுஷ்ய சக்தியுடன் நீதியை நிலைநாட்டும் ஒரு அருமையான அதிரடித் திரைப்படமாக இது உருவாகியிருந்தது ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது.</p><p>படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் பின்னணி இசை மற்றும் ஜி.கே. விஷ்ணுவின் ஒளிப்பதிவு ஆகியவை இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு மிக முக்கியக் தூண்களாக அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது</p>]]></content:encoded></item><item><title>ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 37 பேர் காயம்</title><link>https://www.maalaimalar.com/news/world/japan-earthquake-59-magnitude-quake-hits-ibaraki-region-near-tokyo-injuring-37-and-disrupting-water-supply-and-traffic</link><comments>https://www.maalaimalar.com/news/world/japan-earthquake-59-magnitude-quake-hits-ibaraki-region-near-tokyo-injuring-37-and-disrupting-water-supply-and-traffic#comments</comments><guid isPermaLink="false">f254e3a1-ccc2-4f1b-9b12-f7ae39c8310b</guid><pubDate>Sun, 23 Aug 2026 11:23:43 +0000</pubDate><atom:updated>2026-08-23T11:23:43.727Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>japan,ஜப்பான்,Earthquake,நில அதிர்வு,நிலநடுக்கம்,tremor</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/eyobccf2/tn-20.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[   டோக்கியோ]]></media:title><media:description type="html"><![CDATA[   டோக்கியோ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/eyobccf2/tn-20.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜப்பானில் இன்று அதிகாலை 5.9 ரிக்டர் அளவில்  ஏற்பட்ட சக்திவாய்ந்த <a href="https://www.maalaimalar.com/topic/earthquake">நிலநடுக்கத்தில் </a>37 பேர் காயமடைந்துள்ளனர். </p><h2>நிலநடுக்கம் </h2><p><a href="https://www.maalaimalar.com/topic/japan">ஜப்பான் </a>நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில்,  தலைநகர் டோக்கியோவிற்கு வடகிழக்கே உள்ள இபாராகி மாகாணத்தில் பூமிக்கு அடியில் சுமார் 70 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.</p> <h2>பாதிப்பு</h2><p>டோக்கியோ நகரில் நிலநடுக்க அதிர்வுகள் மிகவும் பலமாக உணரப்பட்டதாக சமூக வலைதளங்களில் பலர் தெரிவித்துள்ளனர்.</p><p>இந்த நிலக்கடுத்தால் டோக்கியோ, இபாராகி மற்றும் கனகாவா ஆகிய மாகாணங்களில் குறைந்தது 37 பேர் காயமடைந்துள்ளதாக ஜப்பான் பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.</p><p>டோக்கியோவில் 15 பேர், சைதாமாவில் 9 பேர், கனகாவாவில் 8 பேர், சிபாவில் 4 பேர், இபாராகியில் ஒருவர் 1 காயமடைந்துள்ளார். </p><p>நிலநடுக்கத்தின் அதிர்வால் டோக்கியோ உள்ளிட்ட பல பகுதிகளில் குடிநீர் செல்லும் குழாய்கள் உடைந்து சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.</p><p>ரெயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. </p> <h2>எச்சரிக்கை</h2><p>நிலநடுக்கத்திற்குப் பிந்தைய அதிர்வுகள் அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு அதிகமாக இருக்கக்கூடும் என்பதால் மக்கள் தொடர்ந்து அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.  </p><p>பாதிப்புகளின் அளவைக் துல்லியமாகக் கணக்கிடவும், மக்களுக்கு உடனுக்குடன் உதவி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி சமூக வலைதளம் மூலம்  தெரிவித்துள்ளார்.  </p>]]></content:encoded></item><item><title>75 நாடுகளுக்கு விசா வழங்க தடைவிதித்த ட்ரம்ப் நிர்வாக உத்தரவு ரத்து... அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றம் அதிரடி!</title><link>https://www.maalaimalar.com/news/world/trumps-order-banning-visas-for-75-countries-struck-down-us-federal-courts-bold-move</link><comments>https://www.maalaimalar.com/news/world/trumps-order-banning-visas-for-75-countries-struck-down-us-federal-courts-bold-move#comments</comments><guid isPermaLink="false">729d2ab9-3522-457e-a489-e86a8297cb60</guid><pubDate>Sun, 23 Aug 2026 11:00:13 +0000</pubDate><atom:updated>2026-08-23T11:00:13.575Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Donald Trump,டொனால்ட் ட்ரம்ப்,visa policy,அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றம்,விசாக் கொள்கை,US Federal Court</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/spa9kund/New-Project-2026-08-23T162925.182.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 75 நாடுகளுக்கு விசா வழங்க தடைவிதித்த ட்ரம்ப் உத்தரவு ரத்து... அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றம் அதிரடி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/spa9kund/New-Project-2026-08-23T162925.182.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆப்கானிஸ்தான், ஈரான், ரஷ்யா மற்றும் சோமாலியா உள்ளிட்ட 75 நாடுகளில் இருந்து வரும் மக்களுக்கு குடியேற்ற விசா வழங்க தடைவிதித்த டொனால்ட் ட்ரம்ப் அரசின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார் அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்ற நீதிபதி ஜேனட் வர்காஸ்.</p><p>இக்கொள்கை சட்டத்திற்கு முரணானது எனக்கூறி வெள்ளிக்கிழமை (ஆக.21) அன்று ரத்து செய்து உத்தரவிட்டார். </p><p>“சட்டப்பூர்வமாக எந்தவொரு அடிப்படையும் இல்லாதபோது, தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு விசாக்களை மறுக்கக் கட்டாயப்படுத்துவதன் மூலம், குடிவரவு மற்றும் குடியுரிமைச் சட்டத்தை மீறும்” கொள்கையை வெளியிட்டு, வெளியுறவுத்துறைச் செயலர் மார்கோ ரூபியோ தனது அதிகார வரம்பை மீறியுள்ளார்,” என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.</p><h2>தூதரக அதிகாரிகளுக்கே அதிகாரம்</h2><p>சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட மற்றும் விரிவான அளவுகோல்களை மதிப்பாய்வு செய்வதன் அடிப்படையில், ஒரு குடியேறி விசாவுக்குத் தகுதியானவரா என்பதைத் தீர்மானிக்கும் பிரத்யேக அதிகாரம் தூதரக அதிகாரிகளுக்கே உள்ளது என்றும் குறிப்பிட்டார்.</p><p>இரண்டு குடியேற்ற உரிமை அமைப்புகளுடன் சேர்ந்து, 11 பேர் தாக்கல் செய்த மனுமீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p><h2>விசா தடைக் கொள்கை</h2><p>இந்த விசா தடை கொள்கை கடந்த ஜனவரி மாதம் டிரம்ப் நிர்வாகத்தால் கொண்டு வரப்பட்டது. ஆப்கானிஸ்தான், பிரேசில், எகிப்து, ஈராக், நைஜீரியா, சோமாலியா, ரஷ்யா, ஈரான் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட உலகளவில் சுமார் 75 நாடுகள் இதனால் பாதிக்கப்பட்டன. இது உலக நாடுகளின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 40 விழுக்காடு ஆகும்.</p><p>இந்த நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு குடியேறுபவர்கள், அங்குள்ள அரசு நலத்திட்ட உதவிகளைப் பயன்படுத்தி “அந்நாட்டிற்கு பொதுச்சுமையாக” மாற அதிக வாய்ப்புள்ளது என்று டிரம்ப் நிர்வாகம் குறிப்பிட்டிருந்தது.</p>]]></content:encoded></item><item><title>ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகள்: எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் தொடங்கி வைத்தார்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/isha-gramotsavam-sports-competitions-mla-kanimozhi-santhosh-inaugurates</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/isha-gramotsavam-sports-competitions-mla-kanimozhi-santhosh-inaugurates#comments</comments><guid isPermaLink="false">e0a01fa7-cc22-4b9f-824f-672a3de7ee0b</guid><pubDate>Sun, 23 Aug 2026 10:32:56 +0000</pubDate><atom:updated>2026-08-23T10:32:56.083Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஈஷா,Sports,விளையாட்டுப் போட்டிகள்,ISHA,Kanimozhi Santhosh,கனிமொழி சந்தோஷ்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/dpkxjyht/isha.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Isha Gramahotsavam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/dpkxjyht/isha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈஷா சார்பில் நடத்தப்படும் 'ஈஷா கிராமோத்சவம்' 2026 விளையாட்டுத் திருவிழாவின் கோவை மண்டல அளவிலான போட்டிகள் கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று சிறப்பாக நடைபெற்றன.</p><p>தமிழ்நாட்டில் கோவை, சேலம், வேலூர், கடலூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய 6 இடங்களில் இன்று மண்டல அளவிலான போட்டிகள் நடைபெற்றன.</p><p>இதில், கோவையில் நடைபெற்ற போட்டிகளை கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் மற்றும் கொங்குநாடு கல்லூரியின் செயலாளர் வாசுகி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர்.</p><p>இதில் முதற்கட்ட கிளஸ்டர் போட்டிகளில் வெற்றி பெற்ற ஆயிரக்கணக்கான கிராமப்புற விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர். </p><p>கனிமொழி சந்தோஷ் பேசுகையில்,“சமூகத்தில் பலரும் பல்வேறு சங்கங்களையும் இயக்கங்களையும் தொடங்குகிறார்கள். ஆனால், அவற்றைத் தொய்வின்றித் தொடர்ந்து நடத்துவது இல்லை. ஒரு நிகழ்வைத் தொடர்ந்து நடத்துவது என்பது மிகப்பெரிய மற்றும் கடினமான செயலாகும். </p><p>ஆனால், ஈஷாவிடம் நான் கண்ட ஒரு முக்கியச் சிறப்பு அவர்களின் ஒருங்கிணைப்புத் திறன் மற்றும் அர்ப்பணிப்பு ஆகும். 18 ஆண்டுகளாக இளைஞர்களுக்காகவும் மக்களுக்காகவும் ஒரு சமூக நோக்கத்தோடு ஈஷா கிராமோத்சவத்தை தொடர்ந்து நடத்துவது என்பது மிகப்பெரிய செயலாகும். </p><p>நமது முதலமைச்சர் அவர்களும், விளையாட்டுத்துறை அமைச்சர் அவர்களும் விளையாட்டிற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று, அங்குள்ள இளைஞர்களின் திறமைகளைக் கண்டறிந்து, அவர்களை வெளிக்கொண்டு வருவதில் நமது முதலமைச்சர் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். </p><p>தற்போதைய காலகட்டத்தில், தொழில்நுட்பம் எந்த அளவிற்கு வளர்கிறதோ, அந்த அளவிற்கு நமது உடல்நலனும் குறைந்துகொண்டே வருகிறது. இன்றைய சூழலில், குழந்தைகள் காலை முதல் இரவு வரை அலைபேசியிலேயே மூழ்கிக் கிடக்கின்றனர்.</p><p>மது மற்றும் புகைப்பழக்கத்தை விட, அலைபேசியின் அதீதப் பயன்பாடு குழந்தைகளின் சிந்தனைத் திறனைக் கடுமையாகப் பாதிக்கக்கூடியது. எனவே, குழந்தைகளுக்கு அலைபேசியை அளவோடு பயன்படுத்தக் கற்றுக் கொடுக்க வேண்டும்.</p><p>பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் செல்லும் தற்போதைய சூழலில், குழந்தைகளின் கவனத்தைத் சரியான திசையில் செலுத்த ஈஷா நடத்தும் இதுபோன்ற விளையாட்டு நிகழ்வுகள் பெரிதும் உதவுகின்றன. </p><p>விளையாட்டை ஊக்குவிப்பது என்பது உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு மட்டுமல்லாமல், மனத்தெளிவையும், எதிர்கால இலக்குகளை நோக்கிய கவனத்தையும் குழந்தைகளுக்கு வழங்குகிறது. </p><p>விளையாட்டுத் துறை அமைச்சர் சட்டமன்றத்தில் கூறியது போல் உங்களின் வேலைப்பளு எவ்வளவு இருந்தாலும், தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது விளையாட்டிற்காக நேரம் ஒதுக்க வேண்டும்" எனக் கூறினார். </p><p>இதில் வெற்றி பெற்ற வாலிபால் மற்றும் த்ரோபால் அணிகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. குறிப்பாக த்ரோபால் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய ஒரு வீராங்கனைக்கு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. போட்டிகள் நடைபெற்ற 6 மண்டலங்களிலும் ஒரு சிறந்த த்ரோபால் வீராங்கனைக்கு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. </p><p>கிராமப்புற மக்களின் அன்றாட வாழ்வில் விளையாட்டை ஒரு அங்கமாக மாற்றி, அவர்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் சத்குருவின் வழிகாட்டுதலில் 'ஈஷா கிராமோத்சவம்' விளையாட்டுத் திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. </p><p>கிராமோத்சவ விளையாட்டுத் திருவிழா கிளஸ்டர், டிவிஷனல் மற்றும் இறுதிப் போட்டிகள் ஆகிய நிலைகளில் நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுவையில் கிளஸ்டர் அளவிலான முதற்கட்ட போட்டிகள் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் இம்மாத முதல் 2 வாரங்களில் நடைபெற்றது. </p><p>தற்போது மண்டல அளவிலான போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து பிரம்மாண்ட இறுதிப்போட்டி செப்டம்பர் 6 அன்று கோவை ஆதியோகி வளாகத்தில் சத்குருவின் முன்னிலையில் நடைபெறும்.</p><p>ஈஷா கிராமோத்சவம் 2026-இன் இறுதிப் போட்டியில் வெல்லும் கைப்பந்து மற்றும் எறிபந்து அணிகளுக்கு தலா ரூ.5 லட்சமும், இரண்டாம் இடத்திற்கு ரூ.3 லட்சமும் பரிசாக வழங்கப்படும். மூன்று மற்றும் நான்காம் இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ.1 லட்சமும், ரூ.50,000-மும் வழங்கப்படும். </p><p>மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறும் அணிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும். இந்த விளையாட்டுத் திருவிழாவில், கிராமப்புற இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மொத்தம் ஒரு கோடிக்கும் மேல் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. </p><p>ஈஷா கிராமோத்சவம் இந்தாண்டு புதிதாக உத்தரப் பிரதேசம், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஒடிசா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய வட மாநிலங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.</p><p>இதனுடன் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரி இணைந்து மொத்தம் 10 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் போட்டிகள் நடைபெறுகின்றன.</p><p>இந்த மாபெரும் விளையாட்டுத் திருவிழாவில், சுமார் 7,005 அணிகள் மூலம் 40,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து கிட்டத்தட்ட 20,000 பெண்கள் உட்பட 80,352 கிராமப்புற மக்கள் பங்கேற்றுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>‘சர்க்காரா அல்லது சர்க்கஸ் கம்பெனியா? என தெரியவில்லை’ - தவெக அரசு குறித்து உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/is-it-a-government-or-a-circus-troupe-i-cannot-tell-udhayanidhi-stalin-criticizes-the-tvk-administration</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/is-it-a-government-or-a-circus-troupe-i-cannot-tell-udhayanidhi-stalin-criticizes-the-tvk-administration#comments</comments><guid isPermaLink="false">35a6bab0-b377-44e2-9eb4-af26dc4b96fe</guid><pubDate>Sun, 23 Aug 2026 10:19:57 +0000</pubDate><atom:updated>2026-08-23T10:19:57.613Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,தவெக அரசு,tvk government</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/f92wf4oe/New-Project-2026-08-23T154937.040.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘சர்க்காரா அல்லது சர்க்கஸ் கம்பெனியா? என தெரியவில்லை’ - தவெக அரசு குறித்து உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/f92wf4oe/New-Project-2026-08-23T154937.040.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் திமுக நிர்வாகி வி.கே.வெங்கடேசன் என்பவரின் மகன் திருமணத்தில் கலந்துகொண்டு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வாழ்த்துரை வழங்கினார். அப்போது பேசிய அவர்.,</p><h2>தொடர் தஞ்சாவூர் பயணம்</h2><p>கடந்த சில மாதங்களாகவே இந்த தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அடிக்கடி வந்துகொண்டிருக்கிறேன். கடந்த மூன்று மாதங்களில், நான்கு முறை வருகை தந்துள்ளேன். அப்படியே நான் வரவில்லை என்றாலும், இந்த அரசு என்னைக் கைது செய்து, அவர்களே இந்த தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அழைத்து வருகிறார்கள். </p><p>இரண்டு வாரங்களுக்குள் மூன்று முறை வந்துவிட்டேன். கடந்த 3-ஆம் தேதி என்ன நடந்தது என்பதை, நீங்கள் அனைவரும் பாத்திருப்பீர்கள். தமிழ்நாட்டில் எங்கு பேசினாலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் பேசும்போது மிகவும் ஜாக்கிரதையாகப் பேச வேண்டும். </p><p>நாம் பேசவில்லை என்றாலும், பரவாயில்லை, கீழே இருந்து பேசி, நம்மை மாட்டிவிட்டுவிடுவார்கள். இன்றைக்கு அந்தமாதிரி அண்ணன் துரை.சந்திரசேகரன் அவர்கள் சில வார்த்தைகளைக் கூறி, என்னை மாட்டிவிட்டிருக்கிறார்.</p><p>அதற்கும் நான்தான் பொறுப்பேற்க வேண்டும். பரவாயில்லை, இந்தக் கைது நடவடிக்கைகளுக்கெல்லாம் பயந்தவன் கிடையாது, இந்த உதயநிதி என்பது இந்த அரசுக்கு இந்நேரம் தெரிந்திருக்கும்.</p><h2>கைதுக்கு அஞ்சுபவன் அல்ல</h2><p>கடந்த 3-ஆம் தேதி, தஞ்சையில் விவசாயிகளுக்கு ஆதரவாக, அவர்களின் கோரிக்கைகளை இந்த அரசு நிறைவேற்ற வேண்டும் என்று ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினோம். </p><p>நான் கலந்துகொண்டு என் தலைமையில் நடந்தது. நம் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், விவசாயிகள் சங்கத்தைச் சார்ந்தவர்கள் எல்லாம் வந்து கலந்துகொண்டார்கள். நான் தலைமை தாங்கி கடைசியாகப் பேசினேன்.  </p><p>கிட்டத்தட்ட 22 நிமிடம் பேசியிருக்கிறேன். காவிரியில் தண்ணீர் வரவில்லை என்று சொன்னேன். அதுமட்டும் சொல்லவில்லை, இன்னும் நிறைய பேசியிருக்கிறேன். டம்மி முதலமைச்சர் என்றேன், ஒரு கேடுகெட்ட அரசாங்கம் அமைந்திருக்கிறது. ஒரு வெட்கங்கெட்ட முதலமைச்சர் தமிழ்நாட்டுக்கு அமைந்திருக்கிறார் என்று சொன்னேன். </p><p>தேர்தல் வாக்குறுதி கொடுத்தீர்களே, அதையெல்லாம் செயல்படுத்துவதற்கு உங்களுக்கு வக்கில்லை என்று சொன்னேன். அதற்கெல்லாம், அவர்களுக்கு கோபம் வரவில்லை. காவிரியில் தண்ணீர் வரவில்லை என்று சொன்னதும், கோபம் வந்துவிட்டது. </p><p>அதற்காக, என்னை இரவோடு இரவாக தஞ்சாவூரில் இருந்து காவல்துறையினரை அனுப்பி, அதிகாலையில் என் வீட்டுக்கு வந்துவிட்டார்கள். என்னைக் கைது செய்தார்கள். </p><h2>சர்க்காரா அல்லது சர்க்கஸ் கம்பெனியா? </h2><p>சட்டமன்றத்தில் மக்கள் பிரச்னை, விவசாயிகள் பிரச்னை, சட்டம் ஒழுங்கு பிரச்சினை இதைப் பற்றியெல்லாம் பேசலாம் என்று நாங்களெல்லாம் குறிப்புகளெல்லாம் எடுத்துக்கொண்டு போகிறோம். </p><p>ஆனால், நாங்கள் கேட்கக்கூடிய எந்தக் கேள்விக்கும் முதலமைச்சர் எழுந்து பதில் சொல்வது கிடையாது. நீங்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறீர்கள், தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள்.</p><p>ஒரு மூன்று அமைச்சர்கள் மட்டுமே இருக்கிறார்கள். அனைத்துக் கேள்விகளுக்கும் அந்த மூன்று அமைச்சர்கள்தான் எழுந்து பதில் சொல்கிறார்கள். அதுவும் நாங்கள் கேட்கக்கூடிய கேள்விக்கான பதில் கிடையாது. அனைத்தையும் திசை திருப்புவது போலத்தான் இருக்கிறது. திசை திருப்பும் உத்திகள் அவ்வளவுதான்.</p><p>உதாரணத்திற்கு, அன்று செந்தில் பாலாஜி மின்சாரத் துறையில் மானியக் கோரிக்கையில் பேசிக்கொண்டிருக்கிறார். அவர் என்ன கேட்கிறார்? மின்சாரக் கட்டணம் இந்த மூன்று மாதங்களில் அதிகமாகிவிட்டது. அளவீட்டைச் சரியாக எடுக்கமாட்டேன் என்கிறார்கள் என்பதுதான் அவர் கேட்ட கேள்வி. </p><p>ஆனால், சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் அதற்குப் பதில் சொல்ல வக்கில்லாமல், அந்தப் பிரச்சினையைத் திசை திருப்புவது போல ஒரு பதிலைக் கூறுகிறார். </p><p>தொடர்ந்து இந்த அரசு இதைச் செய்துகொண்டிருக்கிறது. அமைச்சர் பெருமக்களும் ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களும் மக்கள் பிரச்சினையைப் பேசுவதற்கு வரவில்லை. </p><p>அவர்களுக்குத் தேவையானதெல்லாம் அன்று ஒரு நான்கு ரீல்ஸ் கிடைத்தால் போதும். இவர்கள் சர்க்கார் நடத்துகிறார்களா அல்லது சர்க்கஸ் கம்பெனி நடத்துகிறார்களா என்று கேட்கும் அளவுக்குத்தான் இன்று அரசின் செயல்பாடுகள் இருக்கின்றன.</p><h2>இந்தியாவின் முதன்மை மாநிலம்</h2><p>இதையே சற்றுப் பின்னோக்கி பாருங்கள். கடந்த 5 ஆண்டுகளாக நம்முடைய கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக நம் தமிழ்நாட்டைக் கொண்டுவந்தார். </p><p>11.19 சதவிகித வளர்ச்சியோடு இந்தியாவில் வளரும் மாநிலங்களில் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு இருந்தது. இன்று அதைக்கொண்டு போய் பாதாளத்தில் தள்ளிவிட்டார்கள். </p><p>இன்றைக்கு இந்த அரசாங்கம் ஒரு டம்மி அரசாங்கமாக, தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பின்னோக்கி இழுத்துக்கொண்டு போய்க்கொண்டிருக்கிறது.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>117-வது பிறந்தநாள் கொண்டாடிய உலகின் மிக அதிக வயதுடைய மூதாட்டி!</title><link>https://www.maalaimalar.com/news/world/worlds-oldest-woman-celebrates-117th-birthday</link><comments>https://www.maalaimalar.com/news/world/worlds-oldest-woman-celebrates-117th-birthday#comments</comments><guid isPermaLink="false">0c8ceed4-9a65-4b69-bf4c-68b571204399</guid><pubDate>Sun, 23 Aug 2026 10:12:02 +0000</pubDate><atom:updated>2026-08-23T10:12:02.211Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பிரிட்டன்,Ethel Caterham,எத்தல் கேத்தர்ஹாம்,WorldsOldestPerson,உலகின் மிகவயதான மூதாட்டி,Living History,Titanic Era,World War Survivor,Covid Survivor</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/5rolgown/WorldsOldestPerson" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Worlds Oldest Person ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/5rolgown/WorldsOldestPerson?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தற்போது உலகிலேயே மிக அதிக வயதுடைய உயிருள்ள நபராகக் கருதப்படும் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D">பிரிட்டனை</a>ச் சேர்ந்த மூதாட்டி எத்தல் கேத்தர்ஹாம், தனது 117-வது பிறந்தநாளைக் குடும்பத்தினருடன் உற்சாகமாகக் கொண்டாடியுள்ளார்.</p><p>இரண்டு உலகப் போர்கள், வரலாற்றுச் சிறப்புமிக்கப் பேரழிவுகள் என மனித வரலாற்றின் பல முக்கியக் கட்டங்களை நேரில் பார்த்த இவரது வாழ்க்கை வரலாறு தற்போதைய தலைமுறையினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.</p><h2>1909-ல் பிறந்த மூதாட்டி!</h2><p>பிரிட்டனின் ஹாம்ப்ஷயர் மாகாணத்தில் உள்ள ஷிப்டன் பெல்லிங்கர் என்ற ஊரில், கடந்த 1909-ஆம் ஆண்டு எத்தல் கேத்தர்ஹாம் பிறந்தார். தற்போது அவர் பிரிட்டனின் சர்ரே பகுதியில் உள்ள ஒரு முதியோர் காப்பகத்தில் வசித்து வருகிறார். </p><p>பிரிட்டிஷ் ராணுவ லெப்டினென்ட் கர்னலான நார்மன் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட எத்தலுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். </p><p>தனது 117-வது பிறந்தநாளை தனது மகள்கள், பேரக்குழந்தைகள் மற்றும் கொள்ளுப் பேரக் குழந்தைகளுடன் கேக் வெட்டி அவர் மகிழ்ச்சியாகக் கொண்டாடினார்.</p><h2>1927-ல் இந்தியா வருகை</h2><p>எத்தல் கேத்தர்ஹாமின் வாழ்க்கையில் இந்தியாவிற்கும் ஒரு முக்கியப் பின்னணி உள்ளது. பிரிட்டன் மன்னர் 7-ஆம் எட்வர்ட்டின் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்தவர்களில் தற்போது உயிருடன் இருக்கும் ஒரே நபரான இவர், தனது பதின்ம வயதில் அதாவது 1927-ஆம் ஆண்டில்<a href="https://www.maalaimalar.com/topic/india"> இந்தியா</a>வுக்குப் பயணம் செய்துள்ளார். </p><p>அங்கு ஒரு ராணுவக் குடும்பத்தில் தங்கி, குழந்தைகளைப் பராமரிக்கும் பணியை அவர் சில ஆண்டுகள் மேற்கொண்டுள்ளார். அதன் பிறகு தனது கணவருடன் ஹாங்காங் உள்ளிட்ட பல நாடுகளிலும் அவர் வாழ்ந்துள்ளார்.</p><h2>டைட்டானிக் விபத்து முதல் கொரோனா வரை</h2><p>எத்தலின் ஆயுட்காலம் மனித வரலாற்றின் பெரும் திருப்புமுனைகளை உள்ளடக்கியது. புகழ்பெற்ற 'டைட்டானிக்' கப்பல் விபத்துக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பும், ரஷ்யப் புரட்சி நடப்பதற்கு 8 ஆண்டுகளுக்கு முன்பும் இவர் பிறந்துவிட்டார். </p><p>மனிதகுலத்தையே உலுக்கிய 1 மற்றும் 2-வது உலகப் போர்களை இவர் நேரில் கண்டுள்ளார். </p><p>கடந்த 2020-ஆம் ஆண்டில், தனது 110-வது வயதில் உலகைப் அச்சுறுத்திய கொரோனா தொற்றால் எத்தல் பாதிக்கப்பட்டார். ஆனால், அந்த அதிமுதிய வயதிலும் கொரோனாவை வெற்றிகரமாக வென்று மீண்டு வந்து சாதனை படைத்தார்.</p><h2>உலகின் மிக மூத்த நபர்?</h2><p>உலகிலேயே மிக மூத்த உயிருள்ள நபராக இருந்த பிரேசிலைச் சேர்ந்த கன்னியாஸ்திரி சிஸ்டர் இனா கனபரோ லூகாஸ், தனது 116-வது வயதில் காலமானார். </p><p>அவரது மறைவுக்குப் பிறகு, கடந்த ஏப்ரல் 2025-ல் எத்தல் கேத்தர்ஹாம் "உலகின் மிக மூத்த உயிருள்ள நபர்" என்ற பெருமையைப் பெற்றார். </p><p>தற்போது வெற்றிகரமாக 116 ஆண்டுகளைக் கடந்து 117-வது வயதில் தடம் பதித்து உலக சாதனைப் புத்தகங்களில் இடம்பிடித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்காவுக்கு உதவக்கூடாது..!- வளைகுடா நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/world/iran-warns-gulf-countries-against-aiding-america</link><comments>https://www.maalaimalar.com/news/world/iran-warns-gulf-countries-against-aiding-america#comments</comments><guid isPermaLink="false">50835af8-8a8b-4576-b5b7-22c87605002a</guid><pubDate>Sun, 23 Aug 2026 10:08:28 +0000</pubDate><atom:updated>2026-08-23T10:08:28.723Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,America,Gulf countries,ஈரான்,Iran,வளைகுடா நாடுகள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/9t4v8yfw/gulf.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Iran warns Gulf Countries]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/9t4v8yfw/gulf.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்த நிலையில் அதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை ஈரான் தாக்கியது.</p><p>தற்போது இரு நாடுகள் இடையே நடக்கும் பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதற்கிடையே ஈரான் மீது இதுவரை இல்லாத கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்து உள்ளார்.</p><p>இந்தநிலையில் அமெரிக்காவுக்கு உதவக் கூடாது என்று வளைகுடா நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்து உள்ளது.</p><p>இதுகுறித்து ஈரானின் உயர்மட்ட தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மொஹ்சென் ரெசாயி கூறியதாவது:-</p><p>அமெரிக்காவின் பொருளாதார அழுத்த தந்திரங்களுக்கு வளைகுடா நாடுகள் ஆதரவளிக்க வேண்டாம். ஈரானுக்கு எதிராக டிரம்ப் அறிவித்துள்ள  பொருளாதாரப் போர் நடவடிக்கையில் அண்டை நாடுகள் இணைந்தால், ஹோர்முஸ் ஜலசந்திக்கு வெளியே உள்ள எண்ணை கப்பல் வழித்தடங்களை ஈரான் குறிவைக்கக்கூடும்.</p><p>டிரம்ப் ஏதாவது செய்ய விரும்பினால், நாங்கள் ஒரு பெரும் அதிர்வை ஏற்படுத்தும் வகையில் பதிலடி கொடுப்போம்.</p><p>டிரம்ப்பின் பொறுப்பற்ற செயல்பாடுகளும் ஈரான் மீதான தாக்குதல்களும் பல நாடுகளிடையே அணு ஆயுதங்களைப் பெறுவதற்கான விருப்பத்தை அதிகரித்துள்ளன.</p><p>டிரம்ப் அணுசக்தி பாதுகாப்பை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, அணு சக்தி பாதுகாப்பின்மையையே உருவாக்கி உள்ளார்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><p>இதற்கிடையே ஹோர் முஸ் ஜலசந்தி, அமெரிக்கா வின் ஒரு பிராந்தியம் என்று கூறி மீண்டும் அந்த புகைப்படத்தை டிரம்ப் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். </p><p>அந்த ஜலசந்தியில் 1,000-க்கும் மேற்பட்ட கப்பல்களுக்கு அமெரிக்கப் படைகள்  பாதுகாப்பு அளித்து அழைத்துச் சென்றதாகவும் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பெங்களூரு உணவகத்தில் பெயருக்கு பதிலாக ‘குண்டான நபர்’ என அச்சிடப்பட்ட பில்: ஊழியர் மீது நடவடிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/national/bengaluru-restaurant-bill-labels-customer-fat-man-instead-of-name-employee-punished</link><comments>https://www.maalaimalar.com/news/national/bengaluru-restaurant-bill-labels-customer-fat-man-instead-of-name-employee-punished#comments</comments><guid isPermaLink="false">996822a8-7569-4264-bde3-b56e30de211f</guid><pubDate>Sun, 23 Aug 2026 10:08:05 +0000</pubDate><atom:updated>2026-08-23T10:08:05.072Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Bengaluru restaurant,பெங்களூரு உணவகம்,Body Shaming,Subko The Craftery,உருவக் கேலி,சுப்கோ தி கிராஃப்டரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/64ccnaxq/bangaluru.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bengaluru restaurant ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/64ccnaxq/bangaluru.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெங்களூரில் உள்ள பிரபல உணவகத்தில் வாடிக்கையாளரின் பெயருக்குப் பதிலாக அவரது உடல் அமைப்பைக் குறிப்பிட்டு 'உருவக் கேலி' செய்யப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><p>பெங்களூரு கோரமங்களா பகுதியில் இயங்கி வரும் '<a href="https://www.maalaimalar.com/news/national/removal-of-tv-ad-duration-cap-central-government">சுப்கோ தி கிராஃப்டரி'</a> என்ற பிரபல காபி உணவகத்திற்குச் சென்ற வாடிக்கையாளர் ஒருவர் உணவு ஆர்டர் செய்துள்ளார். உணவை முடித்துவிட்டு பில் வாங்கிப் பார்த்தபோது, அதில் வாடிக்கையாளரின் பெயரோ அல்லது மேஜை எண்ணோ குறிப்பிடப்படாமல், "கருப்புச் சட்டை அணிந்த சிறு குண்டான நபர்" என்று அச்சிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அந்த பில்லின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து தனது வேதனையை வெளிப்படுத்தினார்.</p><h2>சமூக வ<strong>லைத்தளங்களில் எழுந்த</strong> எதிர்ப்பு</h2><p>வாடிக்கையாளரை மரியாதையுடன் நடத்தாமல், அவரது உடல் உருவத்தைக் கொண்டு அவமதித்தது இணையவாசிகளிடையே பலத்த கண்டனங்களை எழுப்பியது. பாலின பாகுபாடின்றி உருவக் கேலி செய்வது கண்டிக்கத்தக்கது என்றும், கணினி அமைப்பில் வேண்டுமென்றே ஊழியர் இவ்வாறு பதிவிட்டுள்ளார் என்றும் பயனர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.</p><h2>நிறுவனத்<strong>தின் அறிக்கை</strong> </h2><p>இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து, 'சுப்கோ' காபி நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது. “எங்கள் உணவகத்தில் நடந்த இந்தச் சம்பவம் மிகவும் தவறானது. உருவக் கேலியை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது” என தெரிவித்துள்ள நிர்வாகம், இந்தச் செயலில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட ஊழியர் மீது மிகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் இருக்க பில்லிங் முறையில் மாற்றங்கள் செய்யப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இணைய ஈரானுக்கு அழைப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/world/iran-invited-to-join-the-mecca-collective-security-pact</link><comments>https://www.maalaimalar.com/news/world/iran-invited-to-join-the-mecca-collective-security-pact#comments</comments><guid isPermaLink="false">ead289f8-ea85-46c7-a2a6-db0322b3134c</guid><pubDate>Sun, 23 Aug 2026 10:02:46 +0000</pubDate><atom:updated>2026-08-23T10:02:46.480Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ஈரான்,Iran,Mecca Defense Pact,மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/6arr2sqa/New-Project-2026-08-23T153214.631.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஆக.7ம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தானபோது]]></media:title><media:description type="html"><![CDATA[ மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இணைய ஈரானுக்கு அழைப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/6arr2sqa/New-Project-2026-08-23T153214.631.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இணைய சமீபத்தில் வங்கதேசம் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், தங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. </p><p>ஈரானிய நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ‘கானே மெல்லட்’அமைப்பின் தலைவர் மெஹ்தி ரஹிமி, இந்த ஒப்பந்தத்தில் இணைவதற்கான அழைப்பு ஈரானுக்குக் கிடைத்துள்ளதாகவும், இது குறித்து ஈரான் பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.</p><h2>மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் </h2><p>சவூதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இணைந்து இம்மாத தொடக்கத்தில் கையெழுத்திட்ட கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தின்படி, இதில் உள்ள எந்தவொரு நாட்டின்மீதாவது மற்ற நாடுகள் ஏதேனும் தாக்குதல் நடத்தினால், அது தங்கள்மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாக கருதி மற்ற இரண்டு நாடுகளும் தாக்குதலில் இறங்கும்.</p><p>ஈரான் இந்த அழைப்பைப் பெற்றுள்ளதாகக் கூறினாலும், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள சவூதி அரேபியா, பாகிஸ்தான் அல்லது துருக்கி ஆகிய நாடுகள் இந்த அழைப்பு குறித்து எதனையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.</p><h2>இந்தியா கண்காணிப்பு</h2><p>மத்திய கிழக்கில் ஏற்பட்டு வரும் இந்த புதிய ராணுவக் கூட்டணி போன்ற நகர்வுகளை இந்திய வெளியுறவு அமைச்சகம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக ஆரம்பத்திலேயே தெரிவித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் மகளின் கண் முன்னே சுட்டுக் கொலை</title><link>https://www.maalaimalar.com/news/world/indian-businessman-shot-dead-tennessee-liquor-store-robbery-turns-fatal</link><comments>https://www.maalaimalar.com/news/world/indian-businessman-shot-dead-tennessee-liquor-store-robbery-turns-fatal#comments</comments><guid isPermaLink="false">e3602871-6093-4f13-bdb3-94c053922836</guid><pubDate>Sun, 23 Aug 2026 09:55:14 +0000</pubDate><atom:updated>2026-08-23T09:55:14.990Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,துப்பாக்கிச்சூடு,USA,shooting,தொழிலதிபர்,businessman</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/85io7xgx/tn-19.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கொலை]]></media:title><media:description type="html"><![CDATA[ கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/85io7xgx/tn-19.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95">அமெரிக்காவில் </a>இந்திய தொழிலதிபர் மகளின் கண்முன்னே துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>குஜராத்தைச் சேர்ந்த சுரேஷ் படேல் (56), அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தின் ஜாக்சன் நகரில்  ரிட்ஜ்கிரெஸ்ட் செல்லர்ஸ் என்ற மதுபான கடையை நடத்தி வந்துள்ளார். </p><h2>கொள்ளை</h2><p>ஜாக்சன் காவல்துறையின் தகவல்படி, கடந்த விளையாழக்கிமை இரவு அவர் தனது 19 வயது மகளுடன் இருந்தபோது, முகமூடி அணிந்த மர்ம நபர் கடைக்குள் நுழைந்து துப்பாக்கியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார்.</p><p>பணத்தைப் பெற்ற பிறகு, அந்த நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். </p><p>இந்தத் துப்பாக்கிச் சூட்டில் சுரேஷ் படேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  </p><p>இச்சம்பவத்தின் போது அருகிலிருந்த சுரேஷ் படேலின் 19 வயது மகள் காயமின்றி தப்பினார். </p><p>அதே கடையில் பணியாற்றிய 70 வயது ஊழியர் ஒருவர் கீழே விழுந்ததில் கை மணிக்கட்டில் முறிவு ஏற்பட்டது.</p><p>சுரேஷ் படேல் சமீபத்தில்தான் அந்தக் கடையை வாங்கியிருந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.</p><h2>தேடுதல் வேட்டை</h2><p>சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், அந்த சந்தேக நபர் சாம்பல் நிற ஹூடி மற்றும் ஜீன்ஸ் அணிந்திருந்தது அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p>சம்பவத்திற்குப் பிறகு அந்த சந்தேக நபர் ஒரு வெள்ளை நிற காரில் தப்பிச் சென்றதும் தெரியவந்துள்ளது.</p><p>இந்தச் சம்பவம் தொடர்பாக ஜாக்சன் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதுடன், குற்றவாளியைத் தேடும் பணியையும் தீவிரப்படுத்தியுள்ளது.</p><h2>அமெரிக்காவில் தொடரும் தாக்குதல்கள்</h2><p>அமெரிக்காவில் வணிக நிறுவனங்கள் நடத்தி வரும் இந்தியர்கள் குறிவைக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. </p><p>முன்னதாக கடந்த ஜூன் மாதம் வர்ஜீனியாவின் நார்போக் நகரில் மேக்னா படேல் என்ற பெண் தனது கடைக்குள் சுட்டுக் கொல்லப்பட்டார்.</p><p>கடந்த ஆண்டு மே 2025 இல் டென்னசியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பிரின்ஸ் படேல் என்பவர் கொள்ளையனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.</p>]]></content:encoded></item><item><title>அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்யப்படாத நாடாளுமன்ற கூட்டத்தொடர் - மீண்டும் அறிமுகமாகும் தொகுதி மறுவரையறை மசோதா?</title><link>https://www.maalaimalar.com/news/national/parliament-session-not-officially-concluded-plan-to-table-the-constituency-delimitation-bill</link><comments>https://www.maalaimalar.com/news/national/parliament-session-not-officially-concluded-plan-to-table-the-constituency-delimitation-bill#comments</comments><guid isPermaLink="false">c7184ec1-6e7f-4b1a-88c4-e15ce4a90624</guid><pubDate>Sun, 23 Aug 2026 09:41:20 +0000</pubDate><atom:updated>2026-08-23T09:41:20.823Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>monsoon session,மழைக்கால கூட்டத்தொடர்,தொகுதி மறுவரையறை மசோதா,Constituency Delimitation Bill</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/tfm1zef7/New-Project-2026-08-23T151037.792.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்யப்படாத நாடாளுமன்ற கூட்டத்தொடர் - மீண்டும் அறிமுகமாகும் தொகுதி மறுவரையறை மசோதா?]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/tfm1zef7/New-Project-2026-08-23T151037.792.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடப்பாண்டு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை.20ம் தேதி தொடங்கிய நிலையில், கடந்த ஆக.13ம் தேதி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. </p><p>இந்தக் கூட்டத்தொடரில் மொத்தம் 13 மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, இவற்றில் 12 மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறைவேறியது. எஃப்சிஆர்ஏ திருத்த மசோதா மட்டும் பரிசீலனைக்காக இரு கூட்டுக் குழுவிற்குப் பரிந்துரைக்கப்பட்டது. </p><h2>முடித்து வைக்கப்படவில்லை</h2><p>கூட்டத் தொடர் நிறைவு நாளின்போது நாடாளுமன்றம் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஒத்திவைக்கப்பட்டு கிட்டதட்ட 10 நாட்கள் ஆகியும் மழைக்கால கூட்டத்தொடர் அதிகாரப்பூர்வமாக குடியரசுத் தலைவரால் முடித்து வைக்கப்படவில்லை.</p><h2>தொகுதி மறுவரையறை மசோதா மீண்டும் அறிமுகம்?</h2><p>இந்நிலையில் தொகுதி மறுவரையறையுடன் கூடிய மகளிர் இட ஒதுக்கீடு திருத்த மசோதாவை கொண்டுவர மத்திய அரசு மீண்டும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாகவே இந்த தாமதம் என தகவல் வெளியாகி உள்ளது.</p><h2>காங்கிரஸ் கேள்வி</h2><p>இதுதொடர்பாக, கூட்டத்தொடர் இன்னும் அதிகாரப்பூர்வமாக முடித்து வைக்கப்படாதது ஏன் என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் கூறியதாவது:- </p><p>தொகுதி மறுவரையறை தொடர்பான அரசியலமைப்புத் திருத்த மசோதாவை  ஒரு சிறப்பு கூட்டத் தொடரில் நிறைவேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்காக தேடிக் கொண்டு இருக்கிறாரா?</p><p>மக்களவை காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதற்கும், அது அதிகாரப்பூர்வமாக முடித்து வைக்கப்படுவதற்கும் இடையிலான கால இடைவெளி பொதுவாக 2 முதல் 4 நாட்கள் வரை இருக்கும்.</p><p>இந்த மக்களவை ஒத்தி வைக்கப்பட்டு 10 நாட்கள் ஆகிவிட்டன. ஆனால் அது முடித்து வைக்கப்பட்டது குறித்த எந்த தகவலும் இன்னும் இல்லை.” என்று கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கியாஸ் சிலிண்டர் முன்பதிவுக்கு ஆவணங்கள் சமர்ப்பிக்க காலக்கெடு மேலும் நீட்டிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/deadline-extended-for-submitting-documents-for-gas-cylinder-booking</link><comments>https://www.maalaimalar.com/news/national/deadline-extended-for-submitting-documents-for-gas-cylinder-booking#comments</comments><guid isPermaLink="false">7f31f953-5bc9-4a97-b2cc-bb9535770b0d</guid><pubDate>Sun, 23 Aug 2026 09:29:03 +0000</pubDate><atom:updated>2026-08-23T09:29:03.847Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>முன்பதிவு,Gas cylinder,கியாஸ் சிலிண்டர்,Date Extended,காலக்கெடு நீட்டிப்பு,gas booking</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/odxic55j/gas.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gas Cylinder]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/odxic55j/gas.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கியாஸ் நிறுவனங்கள் மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சகத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் மாதம் ஒன்றுக்கு 25 லட்சத்திற்கும் அதிகமான வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண் டர் இணைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக சந்தேகம் எழுந்தது.</p><h2>12 சிலிண்டர்கள்</h2><p>அதாவது மானியத்துடன் கூடிய சிலிண்டரை பெற்று வணிக பயன்பாடுகளுக்கு பயன்படுத்துவதாகவும், ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகள் இருப்பதாகவும், இறந்துபோன நபர்கள் பெயரில் உள்ள இணைப்புகளை வேறு சிலர் பயன்படுத்தி வருவதாகவும், 5 பேர் உள்ள ஒரு குடும்பத்திற்கு 35 முதல் 40 நாட்கள் வரை ஒரு சிலிண்டர் போதுமானதாக இருக்கும் நிலையில், ஒரே ஒரு நபர் மட்டுமே உள்ள வீடுகளில் கூட வருடத்திற்கு 12 சிலிண்டர்கள் பெறப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.</p><p>இதையடுத்து கள்ளச் சந்தையில் சமையல் கியாஸ் சிலிண்டர் விற்பனை செய்வதை தடுக்கவும், சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கத்திலும் சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கு ‘இ-கே.ஒய்.சி.’ அடிப்படையில் ஆதார் உள்ளிட்ட ஆவ ணங்களை செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது.</p><h2>புதிய கட்டுப்பாடு</h2><p>மேலும், மத்திய கிழக்கு போர் காரணமாக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டதால். சமையல் கியாஸ் சிலிண்டர் முன்பதிவில் மத்திய அரசு சமீபத்தில் புதிய கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்தது.</p><p>அதன்படி கியாஸ் சிலிண்டர் முன்பதிவு செய்யும் கால அளவு உயர்த்தப்பட்டது. நகர்புறங்களில் வசிப்பவர்கள் 25 நாட்களுக்கு ஒரு முறையும், கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் 45 நாட்களுக்கு ஒருமுறையும் கியாஸ் சிலிண்டர் முன்பதிவு செய்யும் புதிய நடை முறை கொண்டு வரப்பட்டது.</p><p>மேலும், ‘இ-கே.ஒய்.சி.’ ஆவணங்களை ஆகஸ்டு 16-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்து இருந்தது.</p><h2>இன்று வரை கெடு</h2><p>இதனைத்தொடர்ந்து வாடிக்கையாளர்கள் பலரும் ஆன்லைன் மூலமும், சிலிண்டர் வினியோக அலுவலகங்களுக்கு நேரடியாக சென்றும் ஆவணங்களை சமர்ப்பித்து வருகின்றனர்.</p><p>இந்த நிலையில் வாடிக்கையாளர்களின் கோரிக்கையை ஏற்று ஆவணங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசத்தை மத்திய அரசு இன்று வரை நீட்டித்து இருந்தது.</p><p>வீடுகளுக்கு தற்போது மானிய விலையில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 நிறுவனங்கள் மூலம் கியாஸ் விநியோகம் செய்யப்படுகிறது.</p><p>தமிழகம் முழுவதும் சராசரியாக 85 சதவீத வாடிக்கையாளர்கள் தங்களது ஆவணங்களை பதிவேற்றம் செய்துவிட்ட நிலையில் 15 சதவீத வாடிக்கையாளர்கள் பதிவு செய்யவில்லை என்று தெரிகிறது.</p><h2>கோரிக்கை</h2><p>ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவதால் தமிழகம் முழுவதும் சுமார் 50 லட்சம் வாடிக்கையாளர்கள் நாளை (24-ந்தேதி) முதல் மானியத்துடன் கூடிய வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.</p><p>இதனால் ஆவணங்களை பதிவேற்றம் செய்யாத வாடிக்கையாளர்கள் தவித்தனர். அவர்கள் மேலும் கால அவகாசம் வழங்க என்று கோரிக்கை வைத்தனர்.</p><h2>அவகாசம் நீடிப்பு</h2><p>இதனை ஏற்று கியாஸ் சிலிண்டர்கள் பெற ஆவணங்களை சமர்ப்பிப்பது வருகிற 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கியாஸ் வினியோகஸ்தர்கள் சார்பில் வீடுகளுக்கு கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் பணியாளர்கள், தங்களிடம் உள்ள ஆண்ட்ராய்டு போனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள செயலி மூலம் வீடுகளுக்கு சிலிண்டர் வினியோகம் செய்யும் போது ஆவணங்களை பதிவேற்றம் செய்தனர்.</p><p>அதாவது யார் பெயரில் சிலிண்டர் இணைப்பு உள்ளதோ அவரை, மொபைல் கேமராவை பயன்படுத்தி புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்தனர். இது மிகவும் எளிமையான நடைமுறையாகும்.</p><h2>செயலி அறிமுகம்</h2><p>ஒரு சிலர் கியாஸ் வினியோகஸ்தர்களின் அலுவலகத்திற்கு சென்று அவர்களிடம் உள்ள மொபைல் போனில் ஆவணங்களை பதிவேற்றம் செய்தனர். வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு எண்ணை நிறுவனங்கள் சார்பில் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.</p><p>அந்த செயலியில் நுழைந்து ஆவண விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். தமிழகத்தில் இணைப்பு பெற்றுள்ள குடும்பத் தலைவர்களின் குடும்பம் தமிழகத்தில் வசித்து வரும் நிலையில், குடும்பத் தலைவர்கள் மட்டும் உலகில் கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் பணியாற்றி வருகின்றனர்.</p><p>அவர்களுக்கு இத்தகைய செயலி மொபைல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. அதன் மூலம் அவர்கள் ஆவணங்களை சமர்ப்பித்தனர்.</p><p>தற்போது சிலிண்டர்களுக்கு ஆவணங்களை சமர்ப்பிக்க வருகிற 31-ந்தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. </p><h2>கியாஸ் நிறுவனம்</h2><p>இதுகுறித்து மதுரையை சேர்ந்த கியாஸ் நிறுவன உரிமையாளர் பாண்டி  கூறியதாவது:-</p><p>கியாஸ் முன்பதிவு செய்வதற்கு இ-கே.ஒய்.சி. எனப்படும் ஆவணங்களை சமர்ப்பிக்க காலக்கெடு கடந்த 16-ந்தேதி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் இன்று (23-ந்தேதி) வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டது.</p><p>இதனால் நாளை முதல் கியாஸ் சிலிண்டர் பதிவு செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் இந்த வாரம் முழுவதும், அதாவது வருகிற 31-ந்தேதி வரை ஆவணங்கள் சமர்ப்பிக்க மீண்டும் கால நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று இரவுதான் எங்களுக்கு கிடைத்தது.</p><h2>தவறான தகவல்</h2><p>இதனால் இ-கே.ஒய்.சி. பதிவு தொடர்பாக வாடிக்கையாளர்கள் எந்தவித அச்சமும் படவேண்டாம். அதேபோல் இ-கே.ஒய்.சி. பதிவு என்பது தவறான முறையில் சிலிண்டர்களுக்கான மானியத்தொகை செல்லாததை தடுக்கவே உருவாக்கப்பட்டுள்ளது. தவறான பெயர்களில் சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுவதும் தடுக்கப்படும்.</p><p>மேலும் இ-கே.ஒய்.சி. பதிவுக்காக வாடிக்கையாளர்கள் கியாஸ் நிறுவன அலுவலகத்திற்கு நேரில் செல்லவேண்டிய அவசியம் இல்லை. அதற்கான செயலி மூலம் வீட்டில் இருந்தபடியே பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம்.</p><p>இ-கே.ஒய்.சி. புதுப்பித்தால் மட்டுமே கியாஸ் சிலிண்டர் முன்பதிவு ஆகும் என்பது தவறான தகவல். ஒருவர் தனது அங்க அடையாளங்களை தெரி விக்க விருப்பம் இல்லாத நிலையில் அவரை கட்டாயப்படுத்த முடியாது. </p><p>அதே நேரத்தில் ஒரே சிலிண்டரை 2 பேர் பயன்படுத்துவதை தடுக்கவே ஆவணங்களை பதிவு செய்வது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>இடஒதுக்கீடு என்பது சலுகை அல்ல உரிமை.. இடஒதுக்கீட்டுக்கு எதிராக போராடுபவர்களுக்கு சிராக் பஸ்வான்  பாடம்</title><link>https://www.maalaimalar.com/news/national/reservation-is-a-constitutional-right-chirag-paswan-responds-to-jantar-mantar-protest</link><comments>https://www.maalaimalar.com/news/national/reservation-is-a-constitutional-right-chirag-paswan-responds-to-jantar-mantar-protest#comments</comments><guid isPermaLink="false">1dcccb49-cff0-497e-95c2-63f204db5e80</guid><pubDate>Sun, 23 Aug 2026 09:27:47 +0000</pubDate><atom:updated>2026-08-23T09:27:47.267Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மல்லிகார்ஜுன கார்கே,இடஒதுக்கீடு,சிராக் பஸ்வான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/t5p3z24p/tn-18.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சிராக் பஸ்வான்]]></media:title><media:description type="html"><![CDATA[ சிராக் பஸ்வான்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/t5p3z24p/tn-18.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதானை மத்திய கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகிச் செய்ததன் டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற இளைஞர்களின் <a href="https://www.maalaimalar.com/topic/cjpprotest">கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் </a>வெற்றி கண்டது. </p><p>இந்த வெற்றியால் உந்தப்பட்டு உந்தப்பட்டு <a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/reduced-vehicle-mileage-opposition-to-e20-petrol-in-india">இ20 பெட்ரோல் எதிர்ப்பு</a>, சாதி வாரி இடஒதுக்கீடு எதிர்ப்பு என பல ஆன்லைன் இயக்கங்கள் உருவாகின. </p> <h2>போராட்டம்</h2><p>அதில், இட ஒதுக்கீடு எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்த சிலர் நேற்று டெல்லி ஜந்தர் மந்தரில் அனுமதியின்றி போராட்டம் நடத்தினர். அவர்களை டெல்லி போலீஸ் கைது செய்தது. இருப்பினும் இன்றும் சிலர் ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து மத்திய உணவு பதப்படுத்தல் தொழிலாளர் துறை அமைச்சரும் லோக் ஜனதா சக்தி (ராம் விலாஸ்) கட்சித் தலைவருமான சிராக் பஸ்வான் பேசியுள்ளார்.</p><p>டெல்லிக்கு புறப்படும்முன் பீகாரின் பாட்னா விமான நிலையத்தில் சிராக் பஸ்வான் செய்தியாளர்களை சந்தித்தார். </p><p>அப்போது டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.</p><h2>இடஒதுக்கீட்டின் தேவை</h2><p>இதற்கு பதிலளித்து பேசிய அவர்,</p><p>யாருடைய கோரிக்கையின் பேரிலும் இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கூடிய ஒன்று அல்ல. இட ஒதுக்கீடு என்பது தான தர்மம் கிடையாது. </p><p>தலைமுறை தலைமுறையாக சமூக பாகுபாட்டை சந்தித்து வந்த சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு என்பது அரசியலமைப்பு உரிமை.</p><p>இட ஒதுக்கீடு என்பது எந்தவொரு அரசாங்கத்தின் விருப்பத்தின் பேரில் நீட்டிக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும் சலுகை அல்ல, மாறாக அது ஒரு அரசியலமைப்புச் சட்ட விதி.</p><p>நீண்ட நெடிய காலமாக உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களை பொதுச் சமூகத்துடன் இணைக்க கொண்டு வரப்பட்டதே இடதுகீடு முறை ஆகும்.</p><p>பட்டியலின, பழங்குடியின சமூகங்களை கண்டறிந்து அவற்றின் முன்னேற்றத்திற்கு ஆதரவளிக்கும் ஒரு அம்சமாக இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது</p> <h2>கார்கே எதிர்கொண்ட பாகுபாடு</h2><p>உத்ரகாண்டில் காங்கிரஸ் தலைவர் கார்கே ராம் லீலா மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பின் அந்த மேடையை "சுத்திகரிப்பு" செய்வதாக இந்துத்துவா அமைப்பொன்று பூஜை செய்த நிகழ்வை சுட்டிக்காட்டிய பஸ்வான், "சமூக பாகுபாடு என்பது இன்னும் நம் சமூகத்தில் புரையோடியுள்ளது. சமூக நீதியை வலிமைப்படுத்தி வேண்டிய அவசியம் இன்னும் தேவையாக உள்ளது." என்று தெரிவித்தார்.</p> <h2>பேச்சுவார்த்தை</h2><p>ஜந்தர் மந்தரில் போராட்டம் இடஒதுக்கீட்டுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் குறித்து பேசிய அவர், யாரும் அவர்களின் கருத்தை வெளிப்படுத்த உரிமை உள்ளது. </p><p>அவர்களிடம் பேச்சுவார்த்தை மூலம் இடஒதுக்கீட்டின் நோக்கம் குறித்தும், அது ஏன் தொடர வேண்டும் என்பது குறித்தும் புரிய வைப்போம் என தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர்களாக வனத்துறையினரை நியமிப்பதை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-tamil-nadu-government-must-abandon-the-practice-of-appointing-forest-department-personnel-as-rural-development-project-directors-anbumani-urges</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-tamil-nadu-government-must-abandon-the-practice-of-appointing-forest-department-personnel-as-rural-development-project-directors-anbumani-urges#comments</comments><guid isPermaLink="false">1ac5ae58-4864-40e0-b5af-11b9a8d5545e</guid><pubDate>Sun, 23 Aug 2026 09:13:36 +0000</pubDate><atom:updated>2026-08-23T09:13:36.289Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,Forest Service officers,Project Directors,DRDA,ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர்,வனப்பணி அலுவலர்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/yyzildno/New-Project-2026-08-23T144310.513.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர்களாக வனத்துறையினரை நியமிப்பதை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/yyzildno/New-Project-2026-08-23T144310.513.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வனப்பணி அலுவலர்களை ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர்களாக நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதற்கு பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;</p><h2>மக்களுடன் நேரடியாக தொடர்புள்ளத் துறை</h2><p>தமிழ்நாட்டில் தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களின் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர்களாக  இந்திய வனப்பணி அலுவலர்களை (Indian Forest Service - IFS) நியமித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p><p>கிராமப்புற மக்களுக்கு நேரடியாக சேவை வழங்க வேண்டிய பொறுப்புகளில், அத்துறைக்கு எந்த வகையிலும்  தொடர்பில்லாத வனப்பணி அலுவலர்களை நியமிப்பது ஊரக மக்களுக்கான சேவையை சீர்குலைத்து விடும்.</p><p>தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் வருவாய்த்துறைக்கு அடுத்தபடியாக மக்களுடன் நேரடியாக தொடர்புள்ள துறை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தான். </p><h2>வனப்பணிக்கும், கிராம ஊரகப் பணிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லாத</h2><p>கிராமப்பகுதிகளில் சாலைகள், பாலங்கள், வீட்டு வசதி, குடிநீர், கழிப்பிடங்கள் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இந்தத் துறை தான் ஏற்படுத்தித்  தருகிறது. இவை அனைத்தையும் விட, கடந்த காலங்களில் 100 நாள் வேலைத் திட்டத்தையும், இப்போது அறிவிக்கப்பட்டுள்ள 150 நாள் வேலைத் திட்டத்தையும் இந்தத் துறை தான் செயல்படுத்துகிறது. </p><p>இந்தத் துறையின் மாவட்ட அளவிலான தலைமை அதிகாரிகள் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநரும் தான். </p><p>வனப் பணி அலுவலர்களுக்கும் இந்தப் பணிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலையில், அவர்களை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின்  திட்ட இயக்குநர்களாக நியமித்தால் ஊரக வளர்ச்சித் துறையின் செயல்பாடுகள் மெச்சத்தக்கதாக அமையாது.</p><h2>டிஎன்பிஎஸ்பி மூலம் பணித்தேர்வு</h2><p>ஊரக வளர்ச்சித் துறைக்காக தனியாக பணியாளர் படிநிலைகள் உள்ளன. இந்தத் துறையின் தொடக்க நிலை பணி என்பது இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் தான். </p><p>இந்தப் பணிகளுக்கு தகுதியானவர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். </p><p>அடுத்தடுத்த நிலைகளில் அவர்கள் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  வட்டார வளர்ச்சி அலுவலர் என பதவி உயர்வு பெறுகிறார்கள். இந்தப் பணிகளில் 20 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றுபவர்கள் ஊரக வளர்ச்சித் துறையில் உதவி இயக்குனர் நிலைக்கு உயர்த்தப்படுகிறார்கள்.</p><h2>இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் நியமனம்</h2><p>இதுதவிர தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் முதல் தொகுதி பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் மூலம் ஊரக வளர்ச்சித் துறைக்கு நேரடியாக உதவி இயக்குனர்கள் நியமிக்கப்படுகின்றனர். </p><p>அவர்கள் ஊரக வளர்ச்சித் துறையில் இணை இயக்குனர் நிலைக்கு உயரும் போது ஊரக வளர்ச்சி முகமையின்  திட்ட இயக்குனர்களாக நியமிக்கப்படலாம். அவ்வாறு நியமிக்கப்படும் போது ஊரக வளர்ச்சித் துறை, ஊராட்சிகள், கிராமப்புற மக்களின் தேவைகள் ஆகியவற்றை மிகவும் நன்றாக அறிந்திருப்பார்கள் என்பதால் சிறப்பாக பணியாற்ற முடியும். </p><p>ஆனால், அந்த வாய்ப்பை அவர்களுக்கு வழங்காமல் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை நேரடியாக திட்ட இயக்குநர்களாக நியமிப்பதை தமிழ்நாடு அரசு வாடிக்கையாக வைத்திருந்தது.</p><p>இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் இப்பணிக்கு நியமிக்கப்பட்டதற்குக் கூட ஓரளவு ஏற்கத்தக்க வகையில் ஒரு காரணம் கற்பிக்கப்பட்டது. இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் பிற்காலத்தில் மாவட்ட ஆட்சியர்களாக பணி செய்ய வேண்டியிருக்கும் என்பதால், அதற்கு இந்தப் பணி சிறந்த பயிற்சிக் களமாக இருக்கும் என்று கூறப்பட்டது. </p><p>ஆனால், இப்போது இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை நியமிப்பதை விட்டு விட்டு, இந்திய வனப்பணி அதிகாரிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர்களாக நியமிப்பதற்கு எந்த  நியாயமான காரணங்களும் இல்லை. </p><p>இது ஊரக வளர்ச்சித் துறையில் பல்வேறு நிலைகளில் பணியாற்றும் அதிகாரிகளுக்கும், ஊரகப் பகுதிகளில் வாழும் மக்களுக்கும் வழங்கப்படும் தண்டனையாகவே அமையும்.</p><h2>துறையின் ஒட்டுமொத்த செயல்பாடுகளும் முடங்கும் நிலை</h2><p>ஊரகப்பகுதி மக்களின் தேவைகள் என்னவென்பதை அறிந்து அவற்றை நிறைவேற்றுவதற்கு தேவையான  அனுபவம் இந்திய வனப்பணி அலுவலர்களுக்கு இருக்காது. அதனால் ஊரக வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும். </p><p>இந்த நியமனங்களுக்கு ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அவர்களுக்கும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைகளின் திட்ட இயக்குநர்களுக்கும் இடையே சரியான  ஒத்துழைப்பு இல்லாத நிலை உருவாகி அது ஒட்டுமொத்த துறையின் செயல்பாடுகளையும் முடக்கி விடும்.</p><p>இன்னொருபுறம், தமிழ்நாடு அரசின் இந்த முடிவால் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளின் பதவி உயர்வு  வாய்ப்புகள் கடுமையாக பாதிக்கப்படும். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பதவி என்பது ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குநர் பதவிக்கு ஒப்பானதாகும். </p><p>இந்தப் பணிக்கு ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளை பதவி உயர்வின் மூலம் நியமித்தால் தான் அவர்களுக்கு உதவி இயக்குநர், துணை இயக்குநர், இனை இயக்குநர், கூடுதல் இயக்குநர் என பல்வேறு நிலைகளுக்கு பதவி உயர்வு பெற முடியும். </p><p>மாறாக, திட்ட இயக்குநர் பணிக்கு  அகில இந்திய பணி அலுவலர்களை தொடர்ந்து நியமித்து வருவதால்,  ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் 35 ஆண்டுகள் என பணி செய்தாலும் அவர்களுக்கு இயல்பாகக் கிடைக்க வேண்டிய பதவி  உயர்வுகள் கிடைப்பதில்லை. இந்த அநீதி போக்கப்பட வேண்டும்.</p><p>எனவே, ஊரகப் பகுதிகளின் வளர்ச்சி, மக்களுக்கு கிடைக்க வேண்டிய சேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், ஊரகவளர்ச்சித் துறை அதிகாளுக்கு பதவி உயர்வு கிடைப்பதை உறுதி செய்யவும் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர்களாக இந்திய வனப்பணி அதிகாரிகளை நியமிக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். </p><p>அதற்கு பதிலாக திட்ட இயக்குநர் பதவியை ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதன் மூலம் நிரப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>2வது டெஸ்டில் இந்தியா நிதான ஆட்டம்: அரை சதம் கடந்த படிக்கல், சுப்மன் கில்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/padikkal-gill-cross-half-century-against-srilanka-second-test</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/padikkal-gill-cross-half-century-against-srilanka-second-test#comments</comments><guid isPermaLink="false">c5aff53a-cf07-4238-997f-c21e0e27c760</guid><pubDate>Sun, 23 Aug 2026 09:01:07 +0000</pubDate><atom:updated>2026-08-23T09:01:07.847Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சுப்மன் கில்,Shubman Gill,INDvSL,Devdutt Padikkal,தேவ்தத் படிக்கல்,இந்தியா இலங்கை தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/keujiki6/gill.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ padikkal, gill]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/keujiki6/gill.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இலங்கைக்கு எதிரான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் படிக்கல், சுப்மன் கில் அரை சதம் கடந்தனர்.</p><p>இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கடந்த 15-ம் தேதி நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.</p><h2>கடைசி டெஸ்ட்</h2><p>இந்நிலையில், இந்தியா, இலங்கை இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்புவில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. </p><p>குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சரண்ஷ் ஜெயின் அறிமுகம் ஆகிறார்.</p><p>அதன்படி, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் இறங்கினர்.</p><p>முதல் விக்கெட்டுக்கு 37 ரன் சேர்த்த நிலையில் கே.எல்.ராகுல்18 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து பொறுப்புடன் ஆடிய ஜெய்ஸ்வால் 45 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 66 ஆக இருந்தது.</p><p>3வது விக்கெட்டுக்கு இணைந்த தேவ்தத் படிக்கல் - சுப்மன் கில் ஜோடி சிறப்பாக ஆடியது. இந்த ஜோடி 100 ரன்களைக் கடந்தது.</p><h2>படிக்கல், சுப்மன் கில் அரைசதம்</h2><p>முதலில் படிக்கல் அரை சதம் கடந்தார். அவரை தொடர்ந்து சுப்மன் கில் அரை சதம் கடந்தார்.</p><p>அப்போது இந்திய அணி 50 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 183 ரன்களை எடுத்திருந்தது.</p>]]></content:encoded></item><item><title>கள்ளக்குறிச்சியில் கம்யூனிஸ்ட் தலைவர்கள்மீது தாக்குதல் - பெ.சண்முகம் கண்டனம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/attack-on-communist-leaders-in-kallakurichi-p-shanmugam-condemns-it</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/attack-on-communist-leaders-in-kallakurichi-p-shanmugam-condemns-it#comments</comments><guid isPermaLink="false">a4ee280e-d5bc-417d-9bc2-d14d00313afc</guid><pubDate>Sun, 23 Aug 2026 08:56:45 +0000</pubDate><atom:updated>2026-08-23T08:56:45.106Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>P. Shanmugam,பெ.சண்முகம்,சிபிஎம்,CPI(M)</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/4td6n8s4/New-Project-2026-08-23T142519.136.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கள்ளக்குறிச்சியில் கம்யூனிஸ்ட் தலைவர்கள்மீது தாக்குதல் - பெ.சண்முகம் கண்டனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/4td6n8s4/New-Project-2026-08-23T142519.136.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கள்ளக்குறிச்சியில் சிபிஎம் கட்சி தலைவர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு அக்கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்.,</p><p>“கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் டி.எம்.ஜெய்சங்கர், முன்னாள் மாவட்டச் செயலாளர் தோழர் டி.ஏழுமலை, </p><p>மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் டி.எஸ்.மோகன் மற்றும் கார் ஓட்டுநர் ஆகியோர் மீது சமூக விரோதிகள் நடத்தியுள்ள கொடூரமான தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.</p><p>உளுந்தூர்பேட்டையில் நடைபெறவிருந்த போராட்டத்திற்கான தயாரிப்புப் பணிகளை முடித்துவிட்டு, ஆகஸ்ட் 21 அன்று இரவு கிளியூர் கிராமத்தைக் கடந்து காரை நிறுத்தியிருந்தபோது, வடமாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 8 பேர் கொண்ட கும்பல் கட்சித் தலைவர்களையும், கட்சியின் பெயரையும் மிக அசிங்கமாகத் திட்டி, காரிலிருந்த கட்சிக் கொடி மற்றும் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளனர். </p><p>மேலும், தோழர்கள் அனைவரையும் கொலைவெறியோடு தாக்கியுள்ளனர். வடமாம்பாக்கம் கிராமத்தின் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர், 'பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின்' கீழ் 22 வீடுகளை கட்டாமலே அவராகவே பணத்தை எடுத்துக் கொண்டு மக்களை ஏமாற்றியுள்ளார். </p><p>இதற்கெதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாதிக்கப்பட்ட மக்களை திரட்டி போராட்டம் நடத்தியுள்ளது. மேலும் இப்பகுதி மக்களுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் போராடி வருகின்றனர். </p><p>இதை மனதில் வைத்துக் கொண்டு, ஆத்திரமடைந்த முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவரின் மகன்கள் இருவர் உட்பட 8 பேர் கொண்ட கும்பல் திட்டமிட்டு இந்த வன்முறை மற்றும் கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.</p><p>இச்சம்பவம் குறித்து களமருதூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டும், காயமடைந்த தோழர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், காவல்துறை இதுவரை ஒரே ஒருவரை மட்டுமே கைது செய்துள்ளது.</p><p>பொதுமக்களுக்கு ஆதரவாகப் போராடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட வடமாம்பாக்கம் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவரின் மகன்கள் இருவர் உள்ளிட்ட அனைத்து குற்றவாளிகளையும் காவல்துறை உடனடியாகக் கைது செய்து, </p><p>கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டுமென தமிழ்நாடு காவல்துறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>90-களில் சென்னையில் தொடங்கியது என் திரைக்கள போராட்டம்: நடிகர் ரவி தேஜா நெகிழ்ச்சி!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ravi-teja-remembers-90s-chennai-film-struggles</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ravi-teja-remembers-90s-chennai-film-struggles#comments</comments><guid isPermaLink="false">e1ceaa92-e235-439e-aa69-43e19434f2e3</guid><pubDate>Sun, 23 Aug 2026 08:53:09 +0000</pubDate><atom:updated>2026-08-23T08:53:09.977Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Priya Bhavani Shankar,G.V.Prakash Kumar,Actor Ravi Teja,Irumudi Kattu,நடிகர் ரவி தேஜா,ஜீ.வி.பிரகாஷ் குமார்,சிவா நிர்வாணா,இருமுடி கட்டு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/n5d1048f/ravi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Actor Ravi Teja ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/n5d1048f/ravi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரபல தெலுங்கு திரைப்பட நட்சத்திரமான ரவி தேஜா நடிப்பில், இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள 'இருமுடி கட்டு' திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மேலும், ஜீ.வி.பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.</p><h2>தமிழ் மொழி மீ<strong>து தீராத ஆர்வம்</strong></h2><p>விழாவில் கலந்து கொண்டு பேசிய <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/1000-films-stuck-in-tamil-cinema-rk-selvamani-slams-ott-platforms">நடிகர் ரவி தேஜா</a>, தனக்கும் தமிழ் மொழிக்கும் இடையிலான ஆழமான பிணைப்பு குறித்துப் பகிர்ந்து கொண்டார். தமிழ் மொழியின் மீது தனக்கு எப்போதுமே ஒரு தனித்துவமான ஈர்ப்பும், அதன் பேச்சு வழக்கில் இருக்கும் நகைச்சுவை மற்றும் இயல்பான அழகின் மீது மிகுந்த விருப்பமும் உண்டு என்று குறிப்பிட்டார்.</p><p>தொடர்ந்து பேசிய அவர், 1990-களின் நடுப்பகுதியில் தனது திரையுலக வாழ்க்கைக்கான ஆரம்ப கட்ட போராட்டங்கள் அனைத்தும் சென்னையிலேயே தொடங்கின என்பதை நினைவுகூர்ந்தார். சென்னை நகரம் தான் தனது சினிமா பயணத்தின் அடித்தளமாக விளங்கியது என்றும், இங்குள்ள மனிதர்களுடனும் திரையுலகத்துடனும் தனக்கு நீங்காத நினைவுகள் உண்டு என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.</p><h2>ஜி<strong>.வி.பிரகாஷின் இ</strong>சை </h2><p>இத்திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாரைப் பற்றிப் பேசிய ரவி தேஜா, "இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் தான் உண்மையான ஆன்மா" என்று புகழாரம் சூட்டினார். பின்னணி இசை இல்லாமலேயே படத்தைப் பார்த்தபோது தனக்குள் பெரும் உணர்ச்சிப் பெருக்கு ஏற்பட்டதாகக் கூறிய அவர், 'இருமுடி கட்டு' திரைப்படம் பார்க்கும் ஒவ்வொருவரின் இதயத்தையும் தொடும் ஒரு உணர்வுப்பூர்வமான படைப்பாக இருக்கும் என உறுதி அளித்தார்.</p>]]></content:encoded></item></channel></rss>