<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 28 Aug 2026 14:32:18 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: பிரேமலதா வாழ்த்து- நன்றி தெரிவித்தார் சபாநாயகர் - 28 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-28-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-28-august-2026#comments</comments><guid isPermaLink="false">9bc913c5-ed9d-43ae-847f-c4bc775f64fc</guid><pubDate>Fri, 28 Aug 2026 04:01:44 +0000</pubDate><atom:updated>2026-08-28T11:40:41.397Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/85q6eeqo/prematha.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரேமலதா - சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரேமலதா - சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/85q6eeqo/prematha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டிற்கு இது ஒரு புதிய அரசியல் அனுபவம். சட்டமன்றம் இன்று கோட்டைக்குள் மட்டும் நடைபெறவில்லை. தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டு வரவேற்பறையிலும் நடைபெற்று வருகிறது. அரசியலும், அரசின் செயல்பாடுகளும் பொதுமக்களின் அன்றாட உரையாடலாக மாறி வருகின்றன- அமைச்சர் ராஜ்குமார்</p><p>திமுக, அதிமுக இருவரும் ஒருவர் ஆளுங்கட்சி என்றால் மற்றவர் எதிர்க்கட்சி, ஒருவர் இந்த பக்கம் அமர்ந்தால் மற்றவர்கள் அந்த பக்கம் அமர்வார்கள். இப்படி மாறி மாறி ஆட்சி செய்தவர்களுக்கு 2026ஆம் ஆண்டு தமிழக மக்கள், முதல்வர் விஜய் வாயிலாக ஒரு புதிய தீர்ப்பை எழுதியுள்ளார்கள்- அமைச்சர் ராஜ்குமார்.</p><p>வால்பாறையில் 40 எஸ்டேட்டில் செல்போன் டவர் இல்லை" என வால்பாறை திமுக எம்எல்ஏ குட்டி என்கிற சுதாகர் பேசிக்கொண்டிருக்கும் போது, அருகில் இருந்து சிலர் கமெண்ட் அடிக்க, "டவர் இல்லாததால் தான் எம்எல்ஏ ஆனேன். டவர் இருந்திருந்தால் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் வந்திருக்கும் என கலகலப்பாக பதிலளித்தார்.</p><p>மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும். ஐகோர்ட் கிளை உள்ளிட்டவை மதுரையில் உள்ளன.</p><p>சென்னையில் மட்டுமே நிர்வாக மையங்கள் குவிந்து கிடப்பதால், தென்மாவட்ட மக்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. மதுரையை நிர்வாக தலைநகராக மாற்ற வேண்டும்- மதுரை தெற்கு தவெக எம்எல்ஏ கோபிசன்.</p><p>கான்பிடன்ஸுக்கும், ஓவர் கான்பிடன்ஸுக்கும் ஒரே ஒரு சிறிய வித்தியாசம் தான். கான்பிடன்ஸ் ஆளுங்கட்சியாக இந்த சபையில் அமர்ந்திருக்கிறது. ஓவர் கான்பிடன்ஸை நாம் தான் தேடி பார்க்க வேண்டும்- மதுரை தெற்கு தவெக எம்எல்ஏ கோபிசன்.</p><p>என் கோரிக்கைகளை சொல்ல நேரம் கொடுங்கள், அதையெல்லாம் நான் சொல்லாவிட்டால் மக்கள் என்னை அடித்து விடுவார்கள். அனைத்தையும் சொல்லாமல், நீ வரக்கூடாது என்று மக்கள் கூறிவிட்டார்கள். 760 கி.மீ., தூரத்தில் இருந்து வந்திருக்கிறேன். எனக்கு கொஞ்சம், நேரம் கொடுங்க..!- வால்பாறை திமுக எம்எல்ஏ குட்டி என்கிற சுதாகர் கோரிக்கை.</p><p>வால்பாறை திமுக எம்எல்ஏ குட்டி என்கிற சுதாகர் பேசிக்கொண்டிருந்த போது, நேரம் கடப்பதை குறிக்கும் விதமாக மணி அடித்து சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் நினைவூட்டிய போது, "அய்யோ.. பெல் அடிக்காதீங்க, எனக்கு சாமி வந்துவிடும். நிறுத்து என்று சொல்லுங்கள் நிறுத்திவிடுகிறேன்" என அவர் கூற, திமுகவினர் சிரிக்க, "உண்மை தான், எனக்கு சாமி வந்துவிடும், இதோ பாருங்க, எனக்கு இப்போதே ஒரு மாதிரி ஆகிறது" என்று தன் தோற்றத்தை அவர்களிடம் காண்பித்தார்.</p><p>2016ல் தேர்தலில் நின்று ஒருவர் தோற்க, மக்கள் வாக்களிக்கவில்லையே என அவருடைய மகள், 2 நாட்களாக உண்ணாமல் கவலையில் இருந்தார். 2026ல் மீண்டும் அவர் தேர்தலில் நின்றார், திருமணமான அந்த பெண், ஓட்டளிக்க ஐதராபாத்தில் இருந்து வந்தார். </p><p>யாருக்கு ஓட்டளித்தாய் என மகளிடம் அவர் கேட்ட போது, "அப்பா நீ ஜெயிச்சிடுவ, நான் உனக்கு ஓட்டு போடவில்லை, எங்க அண்ணனுக்காக விசில் சின்னத்தில் போட்டேன்" என்று அந்த மகள் கூறியுள்ளார். அந்த எம்எல்ஏ இந்த சபையில் இருக்கிறார்- அமைச்சர் என்.ஆனந்த்</p><p>மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள், வாக்குறுதிகள் அனைத்தையும் முதலமைச்சர் அறிவிப்பாக வெளியிடுவார்- அமைச்சர் என்.ஆனந்த்</p><p>ஆளும் அரசு செய்ய வேண்டியதை நினைவூட்டிக்கொண்டே இருப்பது தான் எதிர்கட்சிகளின் வேலை- கே.என்.நேரு</p><p>தவெக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என அமைச்சர் விளக்கம்.</p><p>தவெக நிறைவேற்றாத வாக்குறுதிகளின் பட்டியலை எதிர்கட்சியினர் வாசித்த நிலையில் அமைச்சர் ஆனந்த் விளக்கம்.</p><p>சட்டப்பேரவையில் அமைச்சர் விக்னேஷுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சபாநாயகர் JCD பிரபாகர்.</p><p>அவை உறுப்பினர்கள் அனைவரது சார்பாக வாழ்த்துவதாக தெரிவித்த சபாநாயகருக்கு அமைச்சர் விக்னேஷ் நன்றி தெரிவித்தார்.</p><p>ஜல்லிக்கட்டு என்ன Gladiator போட்டியா? ஊருக்கு வெளியே கட்டிய மைதானத்தால் பிரயோஜனம் இல்லை - அமைச்சர் நிர்மல் குமார்</p><p>ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு. அதனால் புதிய மைதானம் கட்டப்பட்டது - திமுக MLA எ.வ.வேலு</p><p>திமுக ஆட்சியில் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மைதானத்தை கட்டியதற்கு பதிலாக அந்த தொகையை சர்க்கரை ஆலைக்கு வழங்கியிருக்கலாம்- தவெக MLA கருப்பையா</p><p>திருவள்ளூர் தொட்டா ரெட்டி குப்பத்தில் ஆசிட் ஊற்றி பெண் எரித்துக்கொன்றவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்- பிரேமலதா</p><p>அனைத்து சகோதரர்களுக்கும் ரக்ஷா பந்தன் வாழ்த்துகள் எனக் கூறிய பிரேமலதாவுக்கு சபாநாயகர் நன்றி தெரிவித்தார். </p><p>கலைஞருக்கு பேனா சிலை வைப்பதற்கு பல்வேறு எதிர்ப்புகள் இருந்தது, அதனால்தான் கைவிடப்பட்டது என்றும் சபாநாயகர் தெரிவித்தார். </p><p>கலைஞரின் சேவையைப் பாராட்டி தமிழ்நாட்டின் சிற்பி என பேனா சிலை அமைக்க எழுத்தாளர்கள் கோரிக்கை வைத்தனர். பொதுமக்கள் கருத்து கேட்டு மத்திய அரசின் அனுமதி பெற்றுத்தான் கலைஞர் பேனா சிலை அமைக்க நடவடிக்கை எடுத்தோம். தற்போதைய பொருளாதார நிலையில் கலைஞருக்கு பேனா சிலை வேண்டாம் என்று தான் மு.க.ஸ்டாலின் கூறினார்- எ.வ.வேலு</p><h2><strong>கடலில் பேனா சிலை எதற்கு? அருண்ராஜ்</strong></h2><p>நிதியில்லை என்றால் கலைஞரின் பேனா சிலையை கடலில் வைக்க முயன்றது ஏன்?. நிதி பற்றாக்குறை என்று கூறித்தான் 24 மாதங்களாக மகளிர் உரிமைத்தொகை கொடுக்காமல் காலம் தாழ்த்தினீர்கள். இன்னொருத்தரை சார்ந்து இருக்கும் நிலையை தவிர்க்க தான் சட்டமன்ற உறுப்பினருக்கு கார் வழங்குகிறார் முதலமைச்சர் என  அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.</p><p>விளையாட்டு துறை அமைச்சராக செங்கோட்டையன் இருந்த போது ரூ.10 கோடியில் பதக்கம் கூட தராமல் இருந்தது ஏன்?. உங்களை போல் நாங்களும் ஒன்றுமே செய்யாமல் இருக்க வேண்டுமா என செங்கோட்டையனுக்கு கேஎன் நேரு கேள்வி எழுப்பினார். </p><p>செஸ் போட்டிகளை போலத்தான் கார் ரேஸை விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த உதயநிதி நடத்தினார்- கேஎன் நேரு</p><p>நீங்கள் கார் ரேஸை கொச்சைப்படுத்தவில்லை, கார் ரேஸ் வீரர்களை கொச்சைப்படுத்துகிறீர்கள்- உதயநிதி ஆவேசம்</p><p>சென்னை நகரத்திற்குள் இரவு நேரத்தில் முதன்முறையாக கார் ரேஸ் நடத்தி சாதித்து காட்டினோம்- உதயநிதி</p><p>கார் ரேஸ் ரூ.24 கோடியில் நடத்தினீர்கள், சட்டமன்ற உறுப்பினருக்கு கார் தருவதை கேள்வி கேட்கிறீர்களே நியாயமா? என அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பினார். </p><p>தொகுதியை சுற்றி வந்து ஆய்வு மேற்கொள்ளவே எம்எல்ஏக்களுக்கு கார் கொடுக்கப்படுகிறது- அமைச்சர் நிர்மல்குமார்</p><p>எம்எல்ஏக்கள் பல கார்கள் வைத்திருந்து பலன் இல்லை, கார் எடுத்துக் கொண்டு தொகுதிக்கு செல்ல வேண்டும்- அமைச்சர் நிர்மல்குமார்</p><p>எம்எல்ஏக்களுக்கு கார் கொடுத்து என்ன பயன்? முழு பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய முடியவில்லை, மக்கள் வாழ்வாதாரம் உயர்த்தாது எம்எல்ஏக்கு கார் தநந்து என்ன பயன்? என திமுக எம்எல்ஏ மார்கண்டேயன் கேள்வி எழுப்பினார். </p><p>சாதிய பிரச்சனைகள் அதிகம் நடக்கும் கிராமங்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும்- அமைச்சர் வன்னி அரசு</p><p>சமத்துவ சுடுகாடு வைத்துள்ள ஊராட்சிக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும்-அமைச்சர் வன்னி அரசு</p><p>ஏகனாபுரம் பகுதியில் புதிதாக ஒரு சமூக நல கூடம் கட்டித்தரப்படும்- அமைச்சர் வன்னி அரசு</p><p>புதிய சமூக நல்லிணக்க ஊராட்சி விருது வழங்கப்படும்- வன்னிஅரசு</p><p>பதவி, பரிசுக்காக நாங்கள் அரசியலுக்கு வரவில்லை, நாங்கள் பதவிக்காக போனோம் என யாரும் சொல்ல முடியாது- வன்னி அரசு</p><p>அமைச்சர் இருக்கையில் என்னை அமர வைத்த திருமா நாளையே அழைத்தாலும் போராட்டக்களத்திற்கு சென்றுவிடுவேன்- வன்னி அரசு</p><p>எங்கள் இலக்கு என்பது சமூகநீதி, சமத்துவம்; அதன் அடிப்படையில் தான் த.வெ.க. அமைச்சரவையில் பங்கு பெற்றுள்ளோம்- வன்னி அரசு</p><p>விசிக தலைவர் திருமாவளவனுக்கு நன்றி கூறுகிறேன் என உதயநிதி கூறியதம் முதன்முறையாக நன்றி கிடைத்துள்ளது என வன்னி அரசு மகிழ்ச்சி அடைந்தார்.</p><p>திருமாவளவனுக்கும் எனக்கும் இருந்த உறவு அண்ணன் தம்பி போன்ற உறவு. திமுகவும், விசிகவும் தேர்தலுக்கான கூட்டணி மட்டுமின்றி கொள்கைக் கூட்டணியாக செயல்பட்டது - உதயநிதி ஸ்டாலின்</p><p>என் அரசியல் ஆசான் திருமாவளவன் தான் என ஏற்கனவே கூறியிருக்கிறேன்- உதயநிதி ஸ்டாலின்</p><p>வெற்றி பெற்ற திமுகவினர் திருமாவளவனுக்கு நன்றி கூறவில்லை என அமைச்சர் வன்னி அரசு பேசினார்.</p><p>கூட்டணியில் வெற்றி கிடைக்கும் போது அது இருதரப்புக்கும் பொருந்தும், நாங்கள் நன்றி கூறிவிட்டோம்- அமைச்சர் </p><p>அமைச்சர்கள் மானியக்கோரிக்கை மீது பேசுவார்கள் நாங்கள் பார்த்திருக்கிறோம், இன்று எங்களுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது- அமைச்சர் வன்னி அரசு</p><p>தமிழ்த்தேசிய பேரியக்கம் த.வெ.க. ஆட்சியில் இடம்பெற்றிருப்பது மிகப்பெரிய வரலாறு- அமைச்சர் வன்னி அரசு</p><p>சாதி ஒழிப்பு களத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது- அமைச்சர் வன்னி அரசு</p><p>எனது தேர்தல் வெற்றிக்காக உழைத்த பாமக நிர்வாகிகளுக்கும் எனது நன்றிகள்- அமைச்சர் வன்னி அரசு</p><p>தமிழ்நாட்டின் முக்கிய ஊடகங்கள், பத்திரிகைகளின் பெயர்களை குறிப்பிட்ட சட்டசபையில் நன்றி தெரிவத்தார் அமைச்சர் வன்னி அரசு</p><p>எனது வெற்றியை விட வன்னி அரசுவின் வெற்றிதான் முக்கியமானது என எனக்காக தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்ட உதயநிதிக்கு நன்றி- வன்னி அரசு</p><p>என்னை கைது செய்ய வேண்டும் என முழக்கமிட்டப்பட்ட அதே சபையில் என்னை அமரவைத்து அழகு பார்த்திருக்கிறார் திருமாவளவன்- வன்னி அரசு</p><p>பேரவையில் இன்று நான் பேசுவது கன்னி உரையல்ல, வன்னி உரை- சமூகநீதி துறை மானியக்கோரிக்கை விவாதங்கள் மீதான உரையை தொடங்கிய அமைச்சர் வன்னி அரசு</p><p>நன்றி சொல்லியிருக்க வேண்டும் என்று தான் கூறினாரே தவிர வேறு தவறாக கூறவில்லை- அமைச்சர் செங்கோட்டையன்</p><p>நன்றி சொல்ல தகுதியில்லை என தமிமுன் அன்சாரியை பார்த்து எப்படி கூற முடியும்? என அமைச்சர் ஷாஜகானுக்கு கே.என்.நேரு கேள்வி எழுப்பினார்.</p><p>மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின் சமூகநீதி கணக்கெடுப்பு நடத்தப்படும்- அமைச்சர் சம்பத்குமார் அறிவிப்பு</p><p>கலைஞர் மஞ்சள் துண்டு அணிந்தது குறித்து அமைச்சர் ஒருவர் சபையில் பேசியிருந்தார். இடஒதுக்கீடு வழங்கியதற்காக கலைஞர் கருணாநிதிக்கு ராமதாஸ் மஞ்சள் துண்டு அணிவித்தார். பாராட்டு விழா நடத்தி அந்த மேடையிலேயே கலைஞருக்கு மஞ்சள் துண்டு அணிவித்தார் ராமதாஸ். 10.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கும் சாதிவாரி கணக்கெடுப்புக்கும் தொடர்பில்லை- பாமக எம்எல்ஏ கணேஷ்குமார். </p><p>திமுக கூட்டணியில் இருந்து ஐயூஎம்எல் நன்றி கெட்டத்தனமாக வெளியே வரவில்லை- அமைச்சர் நிர்மல்குமார்</p><p>திமுகவும் அதிமுகவும் சேர்ந்து ஆட்சியமைக்க முயன்றதால் கூட்டணியில் இருந்து வெளியேறியதாக காதர் மொய்தீன் கூறினார்- நிர்மல்குமார்</p><p>யாரால் வென்றோம் என திமுகவை குறிப்பிட்டு அமைச்சர் ஷாஜகான் பேசியதே நன்றி உணர்வுதானே- சபாநாயகர்</p><p>எந்த துறை சார்ந்த அமைச்சர் பதலளிக்க வேண்டுமோ அவருக்குத்தான் சட்டசபை விவாதத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்- சபாநாயகர்</p><p>தேவையற்ற வார்த்தைகளை பேசாமல் இருந்தால் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கலாம்- அமைச்சர் நிர்மல்குமார்</p><p>அமைச்சர் ஷாஜகான் குறித்து தமிமுன் அன்சாரி பேசிய பேச்சு  அமளி ஏற்பட்டது.</p><p>IUML அலுவலகத்துக்கு வந்த முதல் முதலமைச்சர் விஜய் தான். முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சி நல்ல திசை நோக்கி செல்கிறது- அமைச்சர் ஷாஜகான்</p><p>ஒரு கையில் குர்ஆனையும் மறு கையில் அரசியலமைப்பை தாங்கிப் பிடியுங்கள் எங்களை வழிநடத்தியவர் காதர் மொய்தீன்- அமைச்சர் ஷாஜகான்</p><p>சட்டமன்ற தேர்தலில் தனது வெற்றிக்கு உழைத்த முக ஸ்டாலின், உதயநிதிக்கு நன்றி- சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான்</p><p>வன்னியருக்கான உள்இடஒதுக்கீடு கேட்டு நீண்ட நாட்களாக வன்னியர் சங்கத்தினர் போராடி வருகின்றனர்- எடப்பாடி பழனிசாமி</p><p>வன்னியர் இடஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டதாக சிவி சண்முகம் பேசியதற்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். </p><p>10.5% ஒதுக்கீட்டை வழங்கக்கூடாது என 2021-ல் நடந்த சபையில் தீர்மானம், ஸ்டாலின் உறவினர் வழக்கு தொடர்ந்தார்-சிவி சண்முகம்</p><p>வன்னியருக்கான இடஒதுக்கீடு தொடர்பாக சிவி சண்முகம் கூறிய குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கொடுக்க வேண்டும்- எம்ஆர்கே பன்னீர்செல்வம்</p><p>வன்னியர்களுக்கு இடஒதுக்கீடுக்கு முட்டுக்கட்டை என சிவி சண்முகம் நேற்று பேரவையில் பேசியது தவறு- எம்ஆர்கே பன்னீர்செல்வம்</p><p><strong>வன்னியர் இடஒதுக்கீடு- சட்டசபையில் வாக்குவாதம்</strong> </p><p>வன்னியர்களுக்கான 10.5% ஒதுக்கீட்டுக்கு எதிராக ஸ்டாலினின் உறவினர் வழக்கு தொடுத்து முட்டுக்கட்டை போட்டனர்-சிவி சண்முகம்</p><p>விடுதியை ஆய்வு செய்தபோது மாணவர்களுடன் உரையாடிய முதலமைச்சர் எங்களை அழைத்து அறிவுறுத்தினார்- அமைச்சர்</p><p>கனவுகளுடன் விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களுக்கான அனைத்து வசதியும் செய்து கொடுக்க முதலமைச்சர் அறிவுறுத்தினார்- அமைச்சர்</p><p>575 விடுதிகளில் கண்காணிப்பு கேமராமக்கள் பொருத்தப்பட்டுள்ளன- அமைச்சர் சம்பத்குமார்</p><p>மாதந்தோறும் விடுதியில் ஆய்வு நடைபெறுகிறது, மாணவர் விடுதிகளை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்ய அனுமதி- அமைச்சர்</p><p>பிளஸ் 1 மாணவர்களுக்கான ஹெல்மெட், குடிநீர் பாட்டிலுடன் நவீன சைக்கிள் வழங்க ரூ.277 கோடி நிதி ஒதுக்கீடு- அமைச்சர்</p><p>விடுதிகளில் காலி பணியிடங்கள் ஆசிரியர் தேர்வாணையம் மூலம் பூர்த்தி செய்ய நடவடிக்கை- அமைச்சர் சம்பத்குமார்</p><p>5 லட்சம் மாணவர்களுக்கு நவீன மிதிவண்டி வழங்குவதற்கு 11 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைப்பு- அமைச்சர் சம்பத்குமார்</p><p>ஒரு தலைமுறையை மாற்ற வேண்டுமென்றால் அந்த தலைமுறைக்கு கல்வியை கொடுக்க வேண்டும்- அமைச்சர் சம்பத்குமார்</p><p>திறமை இருந்தும் வாய்ப்பு இல்லாத நிலை இருக்க கூடாது, வாய்ப்பு கிடைத்தால் எந்த சமூகமும் உயரும்- அமைச்சர் சம்பத்குமார்</p><p>விஜய் தமிழ்நாடு முதலமைச்சராவார் என 12 ஆண்டுகளுக்கு மு ன்பே கணித்தவர் அமைச்சர் ஆனந்த்- அமைச்சர் சம்பத்குமார்</p><p>பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கும் அமைச்சர் பாடிய எம்ஜிஆர் பாடலுக்கும் என்ன சம்பந்தம் என தெரியவில்லை- கே.என்.நேரு</p><p>மக்கள் நலன் என்று கூறி தன் மக்கள் நலனை மட்டும் பார்த்தனர் என எம்ஜிஆர் பாடல் பாடி அமைச்சர் சம்பத்குமார் உரை</p><p>பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மீதான மானிய கோரிக்கை- அமைச்சர் சம்பத்குமார் பதிலுரை அளித்து வருகிறார். </p><p>இந்தாண்டு மழைப்பொழிவு கூடுதலாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை- சேகர்பாபு</p><p>பருவமழைக்கு முன்னதாக சென்னையில் மழைநீர் கால்வாய்கள் தூர்வாருவதற்கு ஒப்பந்ததாரர்களுக்கு நிதிவிடுவிக்கவில்லை- சேகர்பாபு</p><p>அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து தீவிர ஆலோசனை- அமைச்சர் வெங்கட்ரமணன்</p><p>கடந்த ஆட்சிகளில் நடந்தது போல் ரேஷன் கடை மூலம் மட்டுமல்ல பசுமை அங்காடி மூலமும் பொருட்கள் வழங்க நடவடிக்கை அமைச்சர் வெங்கட்ரமணன்</p><p>உணவுத்துறை அமைத்து கண்காணித்து வரும் நிலையில் விலை அதிகமாக உள்ள பொருளை அரசு விற்பனை செய்ய நடவடிக்கை- அமைச்சர் வெங்கட்ரமணன்</p><p>வெங்காயம் உள்ளிட்ட 41 பொருட்களுக்கான விலையை தினமும் கவனித்து வருகிறோம்- அமைச்சர் வெங்கட்ரமணன்</p><p>ஈரான் போர், எரிபொருள் விலை உயர்வால் தான் விலைவாசி பொருட்களும் விலை உயர்ந்துள்ளது- அமைச்சர் வெங்கட்ரமணன்</p><p>எரிபொருள் விலை உயரும் நேரத்தில் மளிகை பொருட்கள் பதுக்கல், அதனால் விலை உயர்வு சாதாரணம்- சிபிஎம் எம்எல்ஏ செல்லசாமி</p><p>பண்டிகை காலம் வருவதால் அத்தியாவசிய பொருட்களும் ரேஷன் கடை மூலம் வழங்க வேண்டும்- சிபிஐ எம்எல்ஏ ராமச்சந்திரன்</p><p>பண்டிகை காலங்களில் மளிகை பொருள் தொகுப்பு தருவதை போல் ரேஷனில் தற்போதும் வழங்க வேண்டும்- தாரகை கத்பட்</p><p>அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலைவாசி 30 முதல் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது- பாமக எம்எல்ஏ கணேஷ்குமார்</p><p>வறட்சி காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து வந்த அரிசியின் வரத்தும் குறைந்ததால் விலை உயர்வு- எடப்பாடி பழனிசாமி</p><p>துவரம் பருப்பு, அரிசி, சர்க்கரை, எண்ணெய் விலைவாசி உயர்வால மக்கள் அவதி- உதயநிதி ஸ்டாலின்</p><p>த.வெ.க. அரசு அமைந்தது முதல் அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது- உதயநிதி ஸ்டாலின்</p><p>அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு தொடர்பாக சபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்</p><p>தொடங்கியது சட்டசபை- எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரை</p><p>சட்டசபைக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வருகை.</p>]]></content:encoded></item><item><title>தேசிய தேர்வு முகமையின் புதிய இயக்குநராக ஐஏஎஸ் பிரசன்ன வெங்கடேஷ் நியமனம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/ias-officer-prasanna-venkatesh-appointed-as-the-new-director-of-the-national-testing-agency</link><comments>https://www.maalaimalar.com/news/national/ias-officer-prasanna-venkatesh-appointed-as-the-new-director-of-the-national-testing-agency#comments</comments><guid isPermaLink="false">d737b6a5-255e-4a0e-a929-a69ff58c3a72</guid><pubDate>Fri, 28 Aug 2026 13:45:15 +0000</pubDate><atom:updated>2026-08-28T13:45:15.261Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>neet,நீட்,தேசிய தேர்வு முகமை,National Testing Agency,Prasanna Venkatesh,பிரசன்ன வெங்கடேஷ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/qesr02zi/New-Project-2026-08-28T191015.172.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தேசிய தேர்வு முகமையின் புதிய இயக்குநராக ஐஏஎஸ் பிரசன்ன வெங்கடேஷ் நியமனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/qesr02zi/New-Project-2026-08-28T191015.172.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/protest-intensifies-nta-removes-47-officials-en-masse">தேசிய தேர்வு முகமை</a>யின் புதிய இயக்குநராக ஆந்திராவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி பிரசன்ன வெங்கடேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த ஐந்து ஆண்டுகள் இந்த பணியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>பிரசன்ன வெங்கடேஷ் இதற்கு முன்னர் ஏலூர் மாவட்ட ஆட்சியராகவும், விஜயவாடா மாநகராட்சி ஆணையராகவும் பணியாற்றியுள்ளார்.</p><p>நிர்வாகக் கட்டமைப்பை பலப்படுத்த பிரசன்ன வெங்கடேஷுடன் சேர்த்து, ஐபிஎஸ் அதிகாரி ரவிக்குமார் சிங் மற்றொரு இயக்குநராகவும், ஐஆர்எஸ் அதிகாரி அமித் சம்தாரியா இணை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>நீட் சர்ச்சை</h2><p>யுஜி - நீட் மற்றும் யுசிஜி நெட் உள்ளிட்ட தேசிய அளவிலான உயர்கல்வி நுழைவுத்தேர்வுகளில் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, இந்த அதிரடி சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை  மேற்கொண்டுள்ளது.</p><p>மூன்று பேரும், மூன்று வாரங்களுக்குள் பொறுப்பேற்க வேண்டும் என்று பணியாளர் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் பணியில் சேரத் தவறினால், மத்திய பணியாளர் திட்டத்திலிருந்து தகுதிநீக்கம் செய்யப்படும் என்றும் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>மீட்புப் படைகள், ராணுவ ஹெலிகாப்டர்களை அனுப்ப முன்வந்த நாடுகள்: நிராகரித்த நேபாளம்- காரணம் என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/world/nepal-flood-past-lessons-why-nepal-declined-rescue-help-offer-from-india-china-and-others</link><comments>https://www.maalaimalar.com/news/world/nepal-flood-past-lessons-why-nepal-declined-rescue-help-offer-from-india-china-and-others#comments</comments><guid isPermaLink="false">88cc4008-c32e-4e55-b28b-3d220282501a</guid><pubDate>Fri, 28 Aug 2026 13:35:33 +0000</pubDate><atom:updated>2026-08-28T13:35:33.358Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>nepal flood,நேபாளம் வெள்ளம்,Rasuwa,ரசுவா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/35abplv4/NepalFlood0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நேபாளம் வெள்ளப் பெருக்கு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/35abplv4/NepalFlood0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பல நாடுகள் மீட்புப்படைகள் அனுப்ப தயாராக இருந்த நிலையில், நேபாளம் அதை ஏற்க மறுத்துள்ளது.</p><p>நேபாளத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட திடீரென வெள்ளப்பெருக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்று மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில் சுமார் 600 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், ஏராளமானோர் சேறு சகதிகளுடன் கூடிய ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோர் மண்ணில் புதைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.</p><h2>மீட்புப்படைகள் அனுப்பு முன் வந்த நாடுகள்</h2><p>நேபாளத்தில் ஏற்பட்டுள்ள இந்த பெரும் சோக சம்பவத்திற்கு இந்தியா, இலங்கை, சீனா போன்ற நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. இந்தியா இரண்டு விமானங்கள் மூலம் மனிதாபிமான உதவிகளை அனுப்பி வைத்துள்ளது.</p><p>இந்தியா, சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் மீட்புப்படை வீரர்களையும், ஹெலிகாப்டர்களையும் அனுப்ப முன்வந்துள்ளன. ஆனால் நேபாள பிரதமர் பாலேந்திர ஷா, வெளிநாட்டின் உதவிகளை ஏற்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.</p><h2>2015-ல் கற்றுக் கொண்ட பாடம்</h2><p>இதற்கு 2015-ம் ஆண்டு நடைபெற்ற சம்பவம்தான் காரணம் எனக் கூறப்படுகிறது. 2015-ல் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் காரணமாக நேபாளம் வெளிநாட்டு உதவிகளை கோரியது. அப்போது, வெளிநாட்டில் இருந்து மீட்புப்படைகள் வந்தன.</p><p>உலகம் முழுவதிலுமிருந்து மீட்புக் குழுக்கள், ராணுவ விமானங்கள் மற்றும் நிவாரண அமைப்புகள் வந்தன. இது நேபாளத்தின் அவசரகாலத் திறனை விரிவுபடுத்திய அதே வேளையில், இந்த திடீர் வருகை கடுமையான போக்குவரத்து மற்றும் நிர்வாக சிக்கல்கள் உருவாக்கியது.</p><p>விமான நிலையங்கள், சாலைகள் மற்றும் தகவல் தொடர்புகள் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வெளிநாட்டுக் குழுக்களுக்கு இடையேயான போட்டியும், அவற்றின் நகர்வுகளை ஒருங்கிணைப்பதில் உள்ள சிரமங்களும் நிர்வாகத்தைச் சிக்கலாக்கியதாக நேபாள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p>தனித்தனியாகச் செயல்படும் பல வெளிநாட்டு மீட்புக் குழுக்களுக்கு இடமளிப்பதற்குப் பதிலாக, ஒரு தெளிவான நேபாள காமாண்ட் தொடரைத் தக்க வைத்துக் கொள்வதன் மூலம், இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் தவிர்க்க இப்போது விரும்புவதாக தெரிகிறது.</p><p>தற்போது நேபாளம் மட்டுமே மீட்பு பணியை கையாண்டால் உத்தரவு பிறப்பிக்கும் ஒரு தலைமையின் கீழ் அனைத்து தகவல்களையும் பெற முடிவும் என நேபாளம் நினைக்கிறது. அதேவேளையில் நிவாரணம் அளிப்பதாக இருந்தால் பிரதமர் நிவாணர நிதிக்கு அளிக்க விருப்பம் தெரிவித்துள்ளது.</p><p>அப்போதுதான் ஒரு இடம் வழியாக முறையாக நிவாரணம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்றடையும் எனவும் நினைக்கிறது. இதற்கிடையே உடல்கள் தொடர்ந்து கண்டெடுக்கப்பட்டு வருவதால் மருத்துவமனையில் உடல்கள் குவிந்து வருவதாக கூறப்படுகிறது.</p><h2>ரசுவாவில் மருத்துவமனைகள் சேதம்</h2><p>ரசுவா மாவட்டத்தில் மருத்துவமனை, சுகாதார மையங்கள், சாலைகள் உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உடனடியாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நேபாளம் தன்னிச்சையாக விரைவாக மீட்புப் பணியை மேற்கொள்ள முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் அதற்கான திறன் தங்களிடம் இருப்பதாக நேபாளம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.</p><p>எப்படியோ இடுபாடுகள், தகவல் தொடர்பு இல்லாத இடங்களில் தவித்துக் கொண்டிருப்போரை விரைவாக மீட்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அருள்நிதி நடிக்கும் ‘வேட்ட சாமி’!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/vetta-saami-starring-arulnithi</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/vetta-saami-starring-arulnithi#comments</comments><guid isPermaLink="false">d2812968-a2a5-4daf-9bbd-da691c4e2892</guid><pubDate>Fri, 28 Aug 2026 13:28:02 +0000</pubDate><atom:updated>2026-08-28T13:28:02.044Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Arulnithi,அருள்நிதி,ameer,அமீர்,வேட்ட சாமி,Vetta Saami</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/x6186ns1/New-Project-2026-08-28T185714.034.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அருள்நிதி நடிக்கும் ‘வேட்ட சாமி’!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/x6186ns1/New-Project-2026-08-28T185714.034.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அருள்நிதி நடிக்கும் புதிய படத்திற்கு வேட்ட சாமி எனப் பெயரிடப்பட்டுள்ளது. மேலும் படத்தின் அறிமுக வீடியோவும் வெளியாகி உள்ளது. </p><p>‘பம்பர்’ திரைப்படத்தை இயக்கிய செல்வக்குமார் எழுதி, இயக்கும் திரைப்படம் வேட்டசாமி. இப்படத்தில் அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.</p><p>7 மைல்ஸ் பெர் செகண்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு, ஜிப்ரான் இசையமைக்கிறார். படம் குறித்த பிற அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Elated to unveil the glimpse of <a href="https://x.com/hashtag/VettaSaami?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#VettaSaami</a> <br><br>My hearty wishes and congratulations to <a href="https://x.com/arulnithitamil?ref_src=twsrc%5Etfw">@arulnithitamil</a> bro, <a href="https://x.com/hashtag/Ameer?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Ameer</a> sir and the entire team ❤️<a href="https://x.com/7mpsProductions?ref_src=twsrc%5Etfw">@7mpsProductions</a> <a href="https://x.com/directormskumar?ref_src=twsrc%5Etfw">@directormskumar</a><a href="https://x.com/AntonyLRuben?ref_src=twsrc%5Etfw">@AntonyLRuben</a> <a href="https://x.com/GhibranVaibodha?ref_src=twsrc%5Etfw">@GhibranVaibodha</a> <a href="https://x.com/RDRajasekar?ref_src=twsrc%5Etfw">@RDRajasekar</a> <a href="https://x.com/dineshashok_13?ref_src=twsrc%5Etfw">@dineshashok_13</a> <a href="https://x.com/Jegan_kaviraj?ref_src=twsrc%5Etfw">@Jegan_kaviraj</a> <a href="https://x.com/hashtag/MadhaviVillisai?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#MadhaviVillisai</a>… <a href="https://t.co/j1iTDUNz8y">pic.twitter.com/j1iTDUNz8y</a></p>&mdash; Lokesh Kanagaraj (@Dir_Lokesh) <a href="https://x.com/Dir_Lokesh/status/2093300175397880126?ref_src=twsrc%5Etfw">August 28, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>எகிறிய வெங்காய விலை: கிலோ ரூ.35-க்கு விற்க மத்திய அரசு நடவடிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/national/centre-intervenes-onion-to-be-sold-at-rs35-per-kg</link><comments>https://www.maalaimalar.com/news/national/centre-intervenes-onion-to-be-sold-at-rs35-per-kg#comments</comments><guid isPermaLink="false">9104ba1a-133f-484b-aa68-df934fd3df7d</guid><pubDate>Fri, 28 Aug 2026 13:13:55 +0000</pubDate><atom:updated>2026-08-28T13:13:55.540Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,onion price,கவுகாத்தி,வெங்காய விலை உயர்வு,guwahati train,Kanda Express,கந்தா எக்ஸ்பிரஸ்.</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/4jc9jirc/Onion" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Onion ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/4jc9jirc/Onion?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடு முழுவதும் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான உணவுப் பொருள்களில் ஒன்றான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88">வெங்காயத்தின் விலை</a> கடந்த சில நாட்களாகக் கடுமையாக உயர்ந்து வருகிறது. இது நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களைப் பெரிதும் பாதித்துள்ளது.</p><h2>சில்லறை விற்பனையில் 59% விலை உயர்வு</h2><p>இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் விளைவாக, முக்கிய வெங்காய உற்பத்தி மாநிலங்களில் விளைச்சல் வெகுவாகக் குறைந்துள்ளது. </p><p>இதனால் சந்தைகளுக்கு வரும் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">வெங்காயத்தின்</a> வரத்து சரிந்து, நாடு முழுவதும் சில்லறை விற்பனையில் இதன் விலை சுமார் 59 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.</p><p>தமிழகத்தைப் பொறுத்தவரை, சென்னையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.80 முதல் ரூ.100 வரை விற்கப்படுவதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.</p> <h2>டெல்லி வந்தடைந்த 'கந்தா எக்ஸ்பிரஸ்'</h2><p>வெங்காய விலையைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் தடையின்றி வெங்காயம் கிடைக்கவும் மத்திய அரசு தற்போது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. </p><p>அதன்படி, மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் இருந்து 'கந்தா எக்ஸ்பிரஸ்' சிறப்பு சரக்கு ரயில் மூலம் முதற்கட்டமாக 400 டன் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">வெங்காயம் </a>டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது.</p><p>மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் நிதி காரே இந்த மானிய விலை வெங்காய விநியோகப் பணியைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.</p> <h2><strong>கிலோ ரூ.35-க்கு மானிய விலை வெங்காயம்</strong></h2><p>மத்திய அரசின் இந்த வெங்காயங்கள் நுகர்வோர் கூட்டுறவு அமைப்புகளான,<strong> இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் நாபெட் </strong>ஆகியவற்றின் நடமாடும் வாகனங்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் <strong>ஒரு கிலோ ரூ.35 என்ற மானிய விலையில்</strong> பொதுமக்களுக்கு நேரடி விற்பனை செய்வதற்காக மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.</p><h2>விரைவில் சென்னை, மதுரைக்கு சிறப்பு ரயில்கள்!</h2><p>தலைநகர் டெல்லியைத் தொடர்ந்து, விலை அதிகமாக உள்ள நாட்டின் பிற முக்கிய நகரங்களுக்கும் சிறப்பு சரக்கு ரயில்கள் மூலம் வெங்காயத்தை விநியோகிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.</p><p>அதன்படி, சென்னை, மதுரை, எர்ணாகுளம் (கொச்சி) மற்றும் கவுகாத்தி ஆகிய நான்கு முக்கிய மையங்களுக்கு விரைவில் 'கந்தா எக்ஸ்பிரஸ்' ரயில்கள் மூலம் வெங்காயம் கொண்டு வரப்பட்டு, பொதுமக்களுக்கு மலிவு விலையில் விநியோகம் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>இதனால் தமிழகத்தில் விரைவில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88">வெங்காய விலை</a> குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>ரசுவா சுரங்கத்தில் இருந்து 63 இந்தியர்கள் உள்பட 350 பேரை மீட்ட நேபாள ராணுவம்</title><link>https://www.maalaimalar.com/news/world/rasuwa-nepal-flood-nepal-army-has-intensified-rescue-operations-for-people-trapped-inside-the-rasuwa-tunnel</link><comments>https://www.maalaimalar.com/news/world/rasuwa-nepal-flood-nepal-army-has-intensified-rescue-operations-for-people-trapped-inside-the-rasuwa-tunnel#comments</comments><guid isPermaLink="false">60340840-e170-4b0c-a7d2-401399d9986b</guid><pubDate>Fri, 28 Aug 2026 12:49:44 +0000</pubDate><atom:updated>2026-08-28T12:49:44.703Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>nepal flood,நேபாளம் வெள்ளம்,Rasuwa,ரசுவா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/6tpylpru/NepalFllood0002.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  நேபாளம் வெள்ளப் பெருக்கு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/6tpylpru/NepalFllood0002.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திபெத்- நேபாளம் எல்லையில் திடீரென ஏற்பட்ட பனிப்பாறை சரிவு காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இதுவரை 500-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.</p><p>நேபாளத்தில் பனிப்பாறை சரிவு காரணமாக கடந்த 26-ந்தேதி மிகப்பெரிய <a href="https://www.maalaimalar.com/news/world/nepal-flash-flood-massive-devastation-and-rising-death-toll-of-500">வெள்ளப்பெருக்கு</a> ஏற்பட்டது. இதில் சுற்றுலா பயணிகள், உள்ளூர்வாசிகள், நீர்மின் நிலையம் உள்ளிட்டவைகளில் பணியாற்றியவர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்னும் மாயமான நிலையில் உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமான நடைபெற்று வருகிறது.</p><p>வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். சிலரின் உடல்களை அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.</p><h2>ரசுவா நீர்மின் நிலையம்</h2><p>இதற்கிடையே கடுமையாக பாதிக்கப்பட்ட ரசுவா மாவட்டத்தில நீர்மின் நிலைய சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்தில் 450-க்கும் மேற்பட்டோர் பணியாற்றியதாக தெரியவந்தது.</p><p>இந்த சுரங்கமும் வெள்ளத்தால் கடுமையாக பாதித்தது. இந்த பகுதியை ராணுவம் இன்ற வானி வழியாக சென்றடைந்தது. பின்னர், சுரங்கத்திற்குள் நுழைத்து அங்கு தவித்துக் கொண்டிருந்த ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்டனர்.</p><p>இதில் 63 இந்தியர்கள் உள்பட 350 பேரை நேபாள ராணுவம் மீட்டுள்ளது. இன்னும் சுமார் 100 பேர் சுரங்கத்தில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.</p><p>இந்தியாவைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் இந்த வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 101 பேர் அடங்குவர். இவர்களில் 21 பேர் இன்று டெல்லி அழைத்து வரப்பட்டனர். அவர்கள் இன்று இரவு சென்னை திரும்புகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>நேபாளத்தில் சிக்கிய எஞ்சியவர்களை மீட்க போராடி வருகிறோம்- அமைச்சர் ராஜ்மோகன்</title><link>https://www.maalaimalar.com/news/national/minister-rajmohan-says-efforts-underway-to-rescue-remaining-tamils-in-nepal</link><comments>https://www.maalaimalar.com/news/national/minister-rajmohan-says-efforts-underway-to-rescue-remaining-tamils-in-nepal#comments</comments><guid isPermaLink="false">67e8d169-7b9a-4a65-8472-fe9f4b142030</guid><pubDate>Fri, 28 Aug 2026 12:37:43 +0000</pubDate><atom:updated>2026-08-28T12:37:43.221Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>delhi,nepal flood,டெல்லி,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan,நேபாளம் வெள்ளம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/djub84ut/Raj-mohan.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Rajmohan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/djub84ut/Raj-mohan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாளத்தில் இருந்து தமிழர்கள் மீட்கப்பட்டது குறித்து அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார்.</p><p>நேபாளம் வெள்ளப்பெருக்கில் சிக்கி மீட்கப்பட்ட 21 பேருடன் காத்மண்டுவில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்பட்ட விமானம் 3.45-க்கு டெல்லி வந்தடைந்தது. </p><p>இதனைதொடர்ந்து, தமிழர்களை மீட்டு அழைத்துவர முதலமைச்சர் விஜய் அமைத்த அமைச்சர்கள் குழு நேபாளத்தில் இருந்து  மீட்டு வரப்பட்ட 21 பேரையும் டெல்லி விமான நிலையத்தில் சந்தித்தனர்.</p><p>அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், தென்னரசு, வினோத் ஆகியோர் தப்பிப்பிழைத்து 21 தமிழர்களுடன் சந்தித்து பேசினர்.</p><p>மீட்கப்பட்ட 21 பேரும் டெல்லி விமான நிலையத்தில் இருந்து, இன்று இரவு 8 மணிக்கு சென்னைக்கு அழைத்து வரப்படவுள்ளனர். மற்றவர்களை மீட்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.</p><h2>அமைச்சர் ராஜ்மோகன்</h2><p>செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது:-</p><p>நேபாளத்தில் இருந்து மீட்கப்பட்ட 21 தமிழர்களுடன் பத்திரமாக டெல்லி அழைத்து வரப்பட்டுள்ளனர்.</p><p>நேபாளத்தில் தொலைத்தொடர்பு பாதிக்கப்பட்டுள்ளதால் எஞ்சியவர்களை மீட்க போராடுகிறோம்.</p><p>மீட்கப்பட்டவர்கள் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. டெல்லி வந்தடைந்த 21 தமிழர்களும் உடல் நலத்துடன் உள்ளனர். பலர் வெள்ளத்தில் பாஸ்போர்டுகளை இழந்துள்ளனர்.</p><p>மீட்கப்பட்டு டெல்லி அழைத்து வரப்பட்ட 21 தமிழர்களும் இன்றிரவு விமானம் மூலம் சென்னை அழைத்து செல்லப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>நார்வே மன்னர் 5ம் ஹரால்டு காலமானார்!  பட்டத்து இளவரசர் ஹாக்கோன் மன்னராக பதவியேற்பு!</title><link>https://www.maalaimalar.com/news/world/norways-king-harald-v-has-passed-away-crown-prince-haakon-assumes-the-throne-as-king</link><comments>https://www.maalaimalar.com/news/world/norways-king-harald-v-has-passed-away-crown-prince-haakon-assumes-the-throne-as-king#comments</comments><guid isPermaLink="false">698b9b87-e839-4fde-a9fe-82f5258930d3</guid><pubDate>Fri, 28 Aug 2026 12:26:21 +0000</pubDate><atom:updated>2026-08-28T12:26:21.018Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>norway,நார்வே,King Harald V,King Haakon VIII,மன்னர் ஹரால்டு,ஹாக்கோன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/rcgayr4p/New-Project-2026-08-28T175120.075.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நார்வே மன்னர் 5ம் ஹரால்டு காலமானார்... பட்டத்து இளவரசராக ஹக்கான் பதவியேற்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/rcgayr4p/New-Project-2026-08-28T175120.075.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்டு, அரிய வகை இரத்த நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை 6.35 மணிக்கு காலமானார்.</p><p>நார்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவில் உள்ள தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். </p><p>அவர் மறைவைத் தொடர்ந்து அவரது ஒரே மகனான பட்டத்து இளவரசர் ஹாக்கோன், ‘எட்டாம் ஹாக்கோன்’ என்ற பெயருடன் நார்வேயின் புதிய மன்னராகப் பொறுப்பேற்றுள்ளார்.</p><h2>ஹரால்டு </h2><p>14 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு நார்வே மண்ணில் பிறந்த முதல் மன்னர் ஹரால்ட் ஆவார். தனது தந்தை மன்னர் 5ம் ஒலாவின் மறைவுக்குப் பிறகு, 1991-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ஆம் நார்வேயின் மன்னராகப் பதவியேற்றார். </p><p>சுமார் 35 ஆண்டுகள் அவர் அந்நாட்டை வழிநடத்தினார். நார்வே மன்னராட்சி முறையை மிகவும் எளிமையாக்கி, மக்களுடன் மக்களாக நெருக்கமாகப் பழகியவர். </p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/ych5ygzz/New-Project-2026-08-28T174903.699.jpg" /><figcaption>ஹரால்டு தனது மனைவி சோன்யா ஹரால்ட்சென் உடன்</figcaption></figure><p>அரசக் குடும்பம் அல்லாத, நாட்டின் சாதாரண குடிமகள் சோன்யாவை மணந்தார். 2011-இல் நார்வேயில் நடந்த தீவிரவாதத் தாக்குதலின் போது நாட்டை ஒற்றுமைப்படுத்தியதில் இவரது பங்கு முக்கியமானது.</p><p>ஹரால்டுக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு பிள்ளைகள் இருந்த நிலையில், ஹாக்கோன் தற்போது நார்வே மன்னராக பொறுப்பேற்றுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>ரூ.19,694.33 கோடி கடன் மோசடி வழக்கு: ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் முன்னாள் துணைத் தலைவருக்கு ஜாமீன்</title><link>https://www.maalaimalar.com/news/national/vishwanath-rao-granted-bail-in-rcom-19694-crore-loan-fraud-case</link><comments>https://www.maalaimalar.com/news/national/vishwanath-rao-granted-bail-in-rcom-19694-crore-loan-fraud-case#comments</comments><guid isPermaLink="false">22fd239b-91f3-4194-b178-3060f2e4169b</guid><pubDate>Fri, 28 Aug 2026 12:24:43 +0000</pubDate><atom:updated>2026-08-28T12:24:43.977Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சிபிஐ,cbi,ரிலையன்ஸ்,Reliance,Bombay High Court,பம்பாய் உயர்நீதிமன்றம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/chjsmx0g/Untitled-design-2.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Reliance Loan Default Case]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/chjsmx0g/Untitled-design-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/ரிலையன்ஸ்">ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்</a> நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவரான விஸ்வநாத் ராவ், வங்கிகளை ஏமாற்றி கடன் பெற்று, 26 இந்திய வங்கிகள் அடங்கிய குழுமத்திற்கு ரூ.19,694.33 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ-யில் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், பொதுவான மற்றும் கற்பனையான வாதங்களை ஏற்க முடியாது என்று கூறி அவருக்கு ஜாமீன் வழங்கி பம்பாய் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><h3><strong>ரிலையன்ஸ் நிறுவனம்</strong></h3><p>ரிலையன்ஸ கம்யூனிகேசன்ஸ் நிறுவனத்தில் 2000-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடைநிலை மேலாண்மை பதவியில் விஸ்வநாத் ராவ் என்பவர் பணியில் சேர்ந்துள்ளார்.</p><p>அவர் ஒரு மூத்த மேலாளராக, வரவு செலவு திட்டங்கள், மேலாண்மை தகவல் அமைப்பு மற்றும் பணப்புழக்க அறிக்கைகளை தயாரித்தல், திட்டம் தொடர்பான செலவினங்களை ஒருங்கிணைத்தல் மற்றும் வழக்கமான வங்கி பரிவர்த்தனைகளை செயல்படுத்துதல் உள்ளிட்ட வணிக மற்றும் வங்கி செயல்பாடுகளை கண்காணித்து வந்துள்ளார்.</p><h3><strong>எஸ்.பி.ஐ வங்கி புகார்</strong></h3><p>கடந்த 2013-ஆம் ஆண்டு ரிலையன்ஸ் குழுமம் அரசுக்கு சொந்தமான வங்கியை பல்வேறு கடன் வசதிகளை வழங்க தூண்டி, இறுதியில் ரூ.2,929.05 கோடி தவறான இழப்பை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டி சிபிஐ-யிடம் பாரத ஸ்டேட் வங்கி புகார் அளித்தது.</p><p>இந்த புகாரின் அடிப்படையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சில மூத்த நிர்வாகிகளுக்கு எதிராக ஆகஸ்ட் 21, 2025 அன்று முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.</p><h3><strong>ரூ.19,694.33 கோடி கடன் மோசடி</strong></h3><p>மேலும் 26 இந்திய வங்கிகள் அடங்கிய குழுமத்திடம் இருந்து ரூ.19,694.33 கோடி கடன் பெற்று, அதனை திரும்ப செலுத்தவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டது.</p><p>இதையடுத்து இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் விஸ்வநாத் ராவை மத்திய புலனாய்வு பிரிவு கைது செய்தது.</p><p>இதற்கிடையில் ராவ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவில், “ராவ் இயக்குநர் குழுவில் உறுப்பினராகவோ, கருவூலம் அல்லது நிதிக் கொள்கை படிநிலையின் ஒரு பகுதியாகவோ இல்லாததால், நிதிகளை தன்னிச்சையாக அனுமதிக்கவோ, கட்டமைக்கவோ அல்லது பயன்படுத்தவோ அவருக்கு அதிகாரம் இல்லை.</p><p>மேலும், அவர் கடன் வழங்குபவர்களுடனான பேச்சுவார்த்தைகளிலோ அல்லது கடன் வாங்கும் உத்தியை வகுப்பதிலோ பங்கேற்கவில்லை என்றும், அவரால் பயன்படுத்தப்பட்ட கையொப்பமிடும் அதிகாரம் முற்றிலும் நடைமுறை சார்ந்தது மற்றும் செயல்பாட்டுத் தேவையிலிருந்து உருவானது” என்றும் ராவ் தனது ஜாமீன் மனுவில் கூறினார்.</p><p>இருப்பினும், சிறப்பு நீதிமன்றம் ராவின் ஜாமீன் மனுவை நிராகரித்ததால், அவர் உயர் நீதிமன்றத்தை அணுகினார்.</p><p>அங்கு, அவரது வழக்கறிஞர்களான பி.கே. சங்ராஜ்கா மற்றும் ஸ்ரீசங்கர் பிரஜாபதி ஆகியோர், 67 வயதான அவர் கட்டுப்படுத்த முடியாத வகை-2 நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய தமனி நோயால் அவதிப்படுவதாகவும், இந்த ஆண்டு பிப்ரவரியில் ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகவும் சுட்டிக்காட்டினர்.</p><p>ராவ் ஒரு ரூபாய் கூட பயனாளியாக இருக்கவில்லை என்றும், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொதுவானவை என்றும், குற்றப்பத்திரிகையில் பெயரிடப்பட்ட 20 நபர்களில் மூன்று பேரை மட்டுமே சிபிஐ கைது செய்துள்ளது என்றும் ராவின் வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டினர்.</p><h3>சிபிஐ வழக்கறிஞர்</h3><p>சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அமித் முண்டே, ஜாமீன் மனுவை எதிர்த்து, விசாரணையின் போது சேகரிக்கப்பட்ட வங்கிப் பதிவுகள், தகவல் தொடர்புகள், பரிவர்த்தனைகள் மற்றும் சாட்சி வாக்குமூலங்கள் உள்ளிட்ட ஆதாரங்கள், கடன் அனுமதி விதிமுறைகளை மீறி, கடன் நிதியைத் திசைதிருப்புவதாக கூறினார்.</p><p>மேலும் வசதியாக வடிவமைக்கப்பட்ட அடுக்குமுறை பரிவர்த்தனைகள், பில் தள்ளுபடி ஏற்பாடுகள் மற்றும் ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள் மூலம் நிதியை வழிப்படுத்துவதில் ராவ்-இன் நேரடி மற்றும் தீவிர ஈடுபாட்டை முதற்கட்டமான சுட்டிக்காட்டுகின்றன எனவும் சிபிஐ வழக்கறிஞர் வாதிட்டார்.</p><p>ராவ் பணிபுரிந்த ஆர் காம் நிறுவனம், நிதியைச் சுற்றி வளைத்து அனுப்பிய சிக்கலான பரிவர்த்தனைகள் மூலம் இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களுக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி இழப்பை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டு, ஜாமீன் மனுவை நிராகரிக்குமாறும் சிபிஐ வழக்கறிஞர் நீதிமன்றத்தை வலியுறுத்தினார்.</p><h3><strong>பம்பாய் உயர்நீதிமன்றம்</strong></h3><p>இந்த வழக்கு நீதிபதி மிலிந்த் ஜாதவ் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, பொதுவான மற்றும் கற்பனையான வாதங்களை ஏற்க மறுத்து, விசாரணை ஏற்கனவே முடிந்துவிட்டதாலும், அவரை மேலும் காவலில் வைப்பதால் எந்த பயனும் இல்லை என்பதாலும் ராவுக்கு பிணை (bail) வழங்கி உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY : காலையில் குறைந்து மாலையில் உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்!</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/sharp-rise-in-gold-prices-evening-market-update</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/sharp-rise-in-gold-prices-evening-market-update#comments</comments><guid isPermaLink="false">a6283abf-0fcf-45be-9f1d-38e65d65b346</guid><pubDate>Fri, 28 Aug 2026 12:07:18 +0000</pubDate><atom:updated>2026-08-28T12:07:18.297Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Silver,Gold price,இன்றைய தங்கம் விலை,Today Gold Price,வெள்ளி,Today silver price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/guqydvrd/Gold" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/guqydvrd/Gold?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 குறைந்திருந்த நிலையில், தற்போது மாலையில் அதிரடியாக சவரனுக்கு ரூ.1200 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p>ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் பிறந்துள்ளதால் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">தங்கம் </a>விலை ஏறுமுகமாகவே உள்ளது. அந்த வகையில், வார தொடக்கநாளான திங்கட்கிழமை தங்கம் விலை கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 30-க்கும் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 240 ரூபாய்க்கும் செவ்வாய்கிழமை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 10-க்கும் சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்றுமுன்தினம் விடுமுறை தினம் என்பதால் விலையில் மாற்றம் ஏற்படவில்லை.</p><p>இதனை தொடர்ந்து நேற்று <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">தங்கம் </a>இரண்டு முறை குறைந்தது. காலை தங்கம் கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் 14 ஆயிரத்து 940-க்கும் சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 520-க்கும் மாலை கிராமுக்கு 285 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 725-க்கும் சவரனுக்கு 1,720 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனையானது. இதனால் நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,280 குறைந்தது குறிப்பிடத்தக்கது. இன்றைய மாலை நேர நிலவரப்படி கிராமிற்கு ரூ.1200 உயர்ந்துள்ளது.</p><h2><strong>தங்கம் விலை</strong></h2><p>இந்த நிலையில் இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனையானது. எனினும், மாலையில் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. </p><p>கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 14 ஆயிரத்து 890-க்கும், சவரனுக்கு ரூ.1200 உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 120 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.</p><h2><strong>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்</strong></h2><ul><li><p>27-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,800</p></li><li><p>26-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,080</p></li><li><p>25-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,080</p></li><li><p>24-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,240</p></li><li><p>23-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,600</p></li></ul><h2><strong>வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>தங்கத்துடன் வெள்ளியின் விலையும் மாலையில் அதிகரித்துள்ளது. <a href="https://www.maalaimalar.com/topic/silver">வெள்ளி </a>விலையானது கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 270 ரூபாய்க்கும், கிலோவிற்கு 5,000 ரூபாய் அதிகரித்து பார் வெள்ளி 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><h2><strong>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்</strong></h2><ul><li><p>27-08-2026- ஒரு கிராம் ரூ.265</p></li><li><p>26-08-2026- ஒரு கிராம் ரூ.265</p></li><li><p>25-08-2026- ஒரு கிராம் ரூ.265</p></li><li><p>24-08-2026- ஒரு கிராம் ரூ.275</p></li><li><p>23-08-2026- ஒரு கிராம் ரூ.270</p></li></ul>]]></content:encoded></item><item><title>சோனியா காந்தியின் சுயசரிதை: வெளியீட்டில் இருந்து விலகியது பென்குயின் நிறுவனம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/sonia-gandhis-autobiography-penguin-withdraws-from-publication</link><comments>https://www.maalaimalar.com/news/national/sonia-gandhis-autobiography-penguin-withdraws-from-publication#comments</comments><guid isPermaLink="false">505a2ea2-6735-42d7-a411-8385023d1363</guid><pubDate>Fri, 28 Aug 2026 11:32:33 +0000</pubDate><atom:updated>2026-08-28T11:32:33.012Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>sonia gandhi,சோனியா காந்தி,Penguin Random House India,Belonging A Journey of Love,பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா,பிலாங்கிங் எ ஜெர்னி ஆஃப் லவ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/jwhcvt6t/New-Project-2026-08-28T160612.230.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சோனியா காந்தியின் சுயசரிதை: வெளியீட்டில் இருந்து விலகியது பென்குயின் நிறுவனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/jwhcvt6t/New-Project-2026-08-28T160612.230.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதை புத்தகமான ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்’ (Belonging: A Journey of Love) நூலை இந்தியாவில் வெளியிடுவதிலிருந்து பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா (Penguin Random House India) பதிப்பகம் விலகியுள்ளது.</p><p>மேலும், புத்தகத்தில் சில மாற்றங்களை செய்ய பதிப்பதகம் கோரிய நிலையில், அதற்கு சோனியா காந்தி மறுப்பு தெரிவித்ததால் பதிப்பகம் விலகியதாக பரவும் தகவல்களுக்கும் மறுப்பு தெரிவித்துள்ளது. </p><p>இதுதொடர்பாக பதிப்பகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள விளக்கச் செய்தியில்.,</p><p>“இந்தியாவில் 'Belonging' (பிலாங்கிங்) நூலை பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா வெளியிடவில்லை. ஆசிரியர் பதிப்புரீதியான மாற்றங்களை ஏற்க மறுத்ததால் நிறுவனம் நூலை வெளியிட வேண்டாம் என்று முடிவெடுத்ததாகக் கூறப்படும் கருத்து, உண்மைக்கு புறம்பானது.</p><p>ஒரு பதிப்பாளராக, புத்தகங்களில் கொடுக்கப்படும் தகவல்களின் உண்மைத்தன்மையைச் சரிபார்ப்பதும், புத்தகத்திற்கு தேவையான பரிந்துரையை எழுத்தாளருக்கு வழங்குவதும் எங்கள் உரிமையும், பொறுப்பும் ஆகும். இது ஒரு புத்தக வெளியீட்டில் நடைபெறும் சாதாரண நடைமுறை.</p><p>இந்த விவகாரம் தொடர்பான அனைத்து கலந்துரையாடல்களிலும் புத்தகத்தை வெளியீட வேண்டும் என்பதே ‘பெங்குவின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா’வின் நிலைப்பாடாக இருந்தது.</p><p>ஆசிரியருடனான ரகசிய விவாதங்கள் குறித்து நாங்கள் மேலும் எந்தக் கருத்தும் தெரிவிக்க மாட்டோம்.” எனக் குறிப்பிட்டுள்ளது. </p><p>பென்குயின் நிறுவனம் விலகியதை அடுத்து, ‘ஹார்ப்பெர் காலின்ஸ்’ (HarperCollins) நிறுவனம் இப்புத்தகத்தை இந்தியாவில் வெளியிடுவதற்கு ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. </p><h2>சர்வதேச வெளியீடு </h2><p>இந்த விலகல் இந்தியாவின் பதிப்புரிமையை மட்டுமே பாதிக்கும். சர்வதேச அளவில் அமெரிக்காவின் புகழ்பெற்ற 'ஆல்ஃபிரட் ஏ. நாஃப்' (Alfred A. Knopf) நிறுவனம் மூலம் நவம்பர் 10 ஆம் தேதி இப்புத்தகம் வெளியாகிறது. </p><h2>“பிலாங்கிங்: தி ஜர்னி ஆஃப் லவ்” (Belonging: A Journey of Love)</h2><p>சோனியா காந்தி இத்தாலியின் ஒரு சிறிய நகரில் கழித்த தனது குழந்தைப் பருவம் மற்றும் போருக்குப் பிந்தைய வாழ்க்கை நினைவுகள், <a href="https://www.maalaimalar.com/news/national/it-has-been-35-years-since-i-last-saw-you-and-father-together-rahul-gandhis-emotional-words-about-his-mother-sonia">ராஜீவ் காந்தி உடனான திருமணம்</a>, அவரது இழப்பு என தனது வாழ்வின் முக்கிய அங்கங்களை இதில் பகிர்ந்துள்ளார்.</p><h2>'ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி' </h2><p>கடந்த பிப்ரவரி மாதம் முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவனேவின் <a href="https://www.maalaimalar.com/news/national/delhi-police-notice-mukund-naravane-opens-up-about-the-book-for-the-first-time-808959">'ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி'</a> என்ற சுயசரிதை நூலை வெளியிடுவதில் இருந்தும் பென்குயின் நிறுவனம் பின்வாங்கியது.</p><p>இந்நூலை குறிப்பிட்டு, 2020-ல் லடாக்கில் நடந்த இந்தியா-சீனா ராணுவ மோதல் குறித்து ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் விவாதித்திருந்தார். அந்த விவகாரம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்த, அப்புதக வெளியீட்டில் இருந்து விலகியது பென்குயின் நிறுவனம். </p>]]></content:encoded></item><item><title>ஆணாக இருந்து பெண்ணாக மாறிய அனயா பாங்கரை பெண்கள் அணியில் விளையாட அனுமதிப்பதா?- காப் கடும் எதிர்ப்பு</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/anaya-banger-in-wbbl-marizanne-kapp-slams-inclusion-of-transgender-cricketer</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/anaya-banger-in-wbbl-marizanne-kapp-slams-inclusion-of-transgender-cricketer#comments</comments><guid isPermaLink="false">6aa0c41a-23e9-46fb-84c8-2ec941f38772</guid><pubDate>Fri, 28 Aug 2026 11:26:13 +0000</pubDate><atom:updated>2026-08-28T11:26:13.046Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Cricket Australia,மகளிர் பிக் பாஷ் லீக்,Anaya Banger,WBBL,அனயா பாங்கர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/yp6s207y/AnayaBanger001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அனயா பாங்கர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/yp6s207y/AnayaBanger001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் <a href="https://www.maalaimalar.com/sports/cricket/sanjay-bangars-son-shares-his-10-month-hormonal-transformation-journey-from-aryan-to-anaya-746450">அனயா</a> பாங்கரை பெண்கள் கிரிக்கெட் விளையாட அனுமதித்த நிலையில், தென்ஆப்பிரிக்கா வீராங்கனை விமர்சனம் செய்துள்ளார்.</p><p>இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் பாங்கர். இவர் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். இவரது மகன் திடீரென ஆணாக இருந்து பெண்ணாக மாறினார். தனது பெயரை அனயா பாங்கர் என மாற்றிக் கொண்டார்.</p><p>இவர் சிறுவனாக இருந்தபோது கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். இதனால் பெண்ணாக மாறிய நிலையிலும் கிரிக்கெட்டை தொடர்ந்தார்.</p><h2>மரிசேன் காப் எதிர்ப்பு</h2><p>ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான பிக்பாஷ் டி20 லீக் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க அவருக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது.</p><p>இதற்கு தென்ஆப்பிரிக்கா வீராங்கனை மரிசேன் காப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அவர் இது கேலிக்கூத்தானது எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>மேலும், இதை அனுமதிக்கக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அனுமதி</h2><p>அனயா சிறு வயதில் மும்பை இளையோர் கிரிக்கெட் அணியில் விளையாடினார். டாப் ஆர்டர் பேட்டராகவும், ஆல்-ரவுண்டராகவும் திகழந்தார். பின்னர் அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறினார். 2023-ல் ஹார்மோன் மாற்றுச் சிகிச்சையைத் தொடங்கியதாகப் பகிரங்கமாகத் தெரிவித்தார். பின்னர் 2026-ல் பாலின உறுதிப்படுத்தல் அறுவை சிகிச்சையை மேற்கொண்டார்.</p><p>அனைத்து மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களிலும் நடைபெறும் மகளிர் சமூக அளவிலான மற்றும் 'பிரீமியர்' கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க அனாயாவிற்கு (Anaya) 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' இப்போது அனுமதி அளித்துள்ளது. இந்த முடிவு உயர்மட்ட மகளிர் கிரிக்கெட்டில் நுழைவதற்கான வாய்ப்பை உருவாக்கியிருந்தாலும், எந்தவொரு அணியிலும் தனக்கு இடம் கிடைக்கும் என்று உறுதியளிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.</p><p>போட்டித்தன்மை வாய்ந்த கிரிக்கெட்டிற்குத் திரும்புவதிலும், களத்தில் தனது திறமையை நிரூபிப்பதிலுமே அவர் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.</p>]]></content:encoded></item><item><title>நேபாளத்தில் இருந்து டெல்லி வந்தடைந்த 21 தமிழர்களை சந்தித்த அமைச்சர்கள் குழு</title><link>https://www.maalaimalar.com/news/national/tamil-nadu-ministers-welcome-21-rescued-tamils-from-nepal</link><comments>https://www.maalaimalar.com/news/national/tamil-nadu-ministers-welcome-21-rescued-tamils-from-nepal#comments</comments><guid isPermaLink="false">e2a7406a-3abe-401d-8160-c09d5a5d176c</guid><pubDate>Fri, 28 Aug 2026 11:10:36 +0000</pubDate><atom:updated>2026-08-28T11:10:36.049Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அமைச்சர்கள்,டெல்லி,நேபாளம் வெள்ளம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/cw6zg72a/Adhav.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tamizhans in Delhi airport]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/cw6zg72a/Adhav.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாளத்தில் இருந்து  மீட்டு வரப்பட்ட 21 பேரையும், தமிழர்களை மீட்டு அழைத்துவர முதலமைச்சர் விஜய் அமைத்த அமைச்சர்கள் குழு டெல்லி விமான நிலையத்தில் சந்தித்தனர்.</p><p>கைலாஷ் மானசரோவர் யாத்திரை எனப் பல்வேறு பயணங்களுக்காக நேபாளம் சென்றிருந்த 101 தமிழர்களை மீட்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி மற்றும் தகவல் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்திருந்தார்.</p><p>இந்த மீட்பு பணிகள் தொடர்பாக ராஜ்மோகன், ஆதவ் அர்ஜூனா, தென்னரசு உள்ளிட்ட நான்கு அமைச்சர்கள் நேற்று டெல்லி விரைந்தனர். தொடர்ந்து, தமிழர்களை மீட்பது தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டனர்.</p><p>இதற்கிடையே, நேபாள வெள்ளப்பெருக்கால் அங்கு சிக்கியுள்ள 21 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளதாக, மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. அவர்கள் விமானம் மூலம் இன்று இரவு சென்னை திரும்புவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.</p><p>மத்திய அமைச்சகம் அறிவித்த தகவலின்படி, மீட்கப்பட்ட 21 பேரும் இன்று தமிழ்நாடு வரவுள்ளனர். </p><p>இந்நிலையில் மீட்கப்பட்ட 21 பேருடன் காத்மண்டுவில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்பட்ட விமானம் 3.45க்கு டெல்லி வந்தடைந்தது. </p><p>இதனைதொடர்ந்து, நேபாளத்தில் இருந்து  மீட்டு வரப்பட்ட 21 பேரிடம், தமிழர்களை மீட்டு அழைத்துவர முதலமைச்சர் விஜய் அமைத்த அமைச்சர்கள் குழு டெல்லி விமான நிலையத்தில் சந்தித்தனர்.</p><p>அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், தென்னரசு, வினோத் ஆகியோர் தப்பிப்பிழைத்து 21 தமிழர்களுடன் சந்தித்து பேசினர்.</p><p>மீட்கப்பட்ட 21 பேரும் டெல்லி விமான நிலையத்தில் இருந்து, இன்று இரவு 8 மணிக்கு சென்னைக்கு அழைத்து வரப்படவுள்ளனர். மற்றவர்களை மீட்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>லார்ட்ஸ் டெஸ்ட்: இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 290 ரன்களில் ஆல்-அவுட்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/eng-vs-pak-lords-test-england-1st-innings-290-all-out</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/eng-vs-pak-lords-test-england-1st-innings-290-all-out#comments</comments><guid isPermaLink="false">e9098761-a6b4-4033-b6d4-c3dc7e1d7358</guid><pubDate>Fri, 28 Aug 2026 10:59:13 +0000</pubDate><atom:updated>2026-08-28T10:59:13.424Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Lords Test,லார்ட்ஸ் டெஸ்ட்,ENG vs PAK</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/951lxpcm/mohammedabbas0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முகமது அலி- முகமது அப்பாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/951lxpcm/mohammedabbas0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இங்கிலாந்து வீரர்கள் ஜோர்டன் காக்ஸ் மற்றும் ஜேமி ஸ்மித் அரைசதம் அடிக்க முதல் இன்னிங்சில் 290 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆகியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/pak-team-has-already-lost-a-lot-of-fans-ramiz-raja-blunt-warning-to-cricketers">பாகிஸ்தான்</a> அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.</p><p>இந்த நிலையில் 2-வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்தின் முகமது அப்பாஸ் மற்றும் முகமது அலி சிறப்பாக பந்து வீச, இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிக்க திணறினர்.</p><h2>ஜோர்டன் காக்ஸ், ஜேமி ஸ்மித் அரைசதம்</h2><p>ஜோர்டன் காக்ஸ் (55), ஜேமி ஸ்மித் (61) ஆகியோர் அரைசதம் அடித்தனர். நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்திருந்தது. கஸ் அட்கின்சன் 34 ரன்களுடனும், ஜோஸ் டாங்க் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர. மழைக்காரணமாக நேற்று 56 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது.</p> <h2>அட்கின்சன் 45 ரன்கள்</h2><p>இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. அட்கின்சன் மற்றும் ஜோஸ் டாங்க் நிலைத்து நின்று விளையாடினர். அட்கின்சன் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து 66.4 ஓவரில் 290 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ஜோஸ் டாங்க் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.</p><p>இந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 எனக் கைப்பற்றும். 3-வது மற்றும் கடைசி போட்டி செப்டம்பர் 9-ந்தேதி பர்மிங்காமில் தொடங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>உலகம் முழுவதும் வானை ஒளிரச் செய்த &apos;ரத்த நிலவு&apos; - நிலவு ஏன் சிவப்பாக மாறியது?</title><link>https://www.maalaimalar.com/news/world/global-blood-moon-phenomenon-why-the-moon-glowed-red</link><comments>https://www.maalaimalar.com/news/world/global-blood-moon-phenomenon-why-the-moon-glowed-red#comments</comments><guid isPermaLink="false">b5f6f1a9-7abb-44d5-8fd8-05d79b6d9f62</guid><pubDate>Fri, 28 Aug 2026 10:55:59 +0000</pubDate><atom:updated>2026-08-28T10:55:59.996Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>nasa,Partial lunar eclipse,Lunar Eclipse 2026,சந்திர கிரகணம் 2026,Eclipse Timings,Space Event,Stargazing,கிரகண நேரம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/s2lgxj6x/Lunar-Eclipse-2026" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Lunar Eclipse 2026 ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/s2lgxj6x/Lunar-Eclipse-2026?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வானியல் ஆர்வலர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த 2026 ஆம் ஆண்டின் மிக முக்கிய வானியல் நிகழ்வான பகுதி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D">சந்திர கிரகணம்</a> நிகழ்ந்தது. </p><p>சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்த நேரத்தில் பூமியின் நிழல் சந்திரனின் மீது விழுவதால், அது இரவு வானில் ஒரு சிவப்பு நிறப் பந்து போலக் காட்சியளிக்கும்.</p><p>இன்று நிகழ்ந்த கிரகணம் ஒரு முழுமையான சந்திர கிரகணம் இல்லை என்றாலும், அதற்கு மிக நெருக்கமான ஒரு ஆழ்ந்த பகுதி சந்திர கிரகணம் ஆகும்.</p><h2>விண்வெளியில் நடந்தது என்ன?</h2><p>இந்த கிரகணத்தின் போது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி கடந்து சென்றது. எனினும், இவை மூன்றும் துல்லியமான நேர்க்கோட்டில் அமையாததால் இது பகுதி கிரகணமாகக் கருதப்படுகிறது.</p><p>அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த கிரகணத்தின் உச்சக்கட்ட நேரத்தில் நிலவின் 96.3 சதவீத பகுதி பூமியின் அடர்ந்த நிழலால் மறைக்கப்பட்டது.</p><p> இதனால், மிக அழகான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D">சந்திர கிரகணமாக</a> இது இருந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>நாசாவின் கூற்றுப்படி, <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">பகுதி கிரகண நிலை </a>UTC நேரம் அதிகாலை 2:34 மணிக்குத் தொடங்கியது. அப்போது, ​​பூமியின் நிழல் முதன்முதலில் முழு நிலவின் மீது கண்ணுக்குத் தெரியும் ஒரு பகுதியைக் கீறியது. </p><p>இது UTC நேரம் அதிகாலை 4:13 மணியளவில் அதன் உச்சத்தை அடைந்து, பின்னர் UTC நேரம் காலை 7:01 மணி அளவில் பகுதி மற்றும் புறநிழல் நிலைகள் வழியாகப் படிப்படியாக மங்கியது.</p><h2>நிலவு ஏன் சிவப்பு நிறமாக மாறியது?</h2><p>பூமியின் நிழலுக்குள் சந்திரன் முழுமையாக மறைந்தாலும், அது முற்றிலும் இருண்டு போகவில்லை. சூரியனின் கதிர்கள் பூமியின் வளிமண்டலத்தைக் கடந்து நிலவின் மீது விழுந்தன.</p><p>பூமியின் வளிமண்டலமானது நீல நிற ஒளியை வடிகட்டி, சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிற அலைநீளங்களை மட்டுமே நிலவின் மீது விழச் செய்தது. </p><p>அந்த ஒளிரும் சிவப்பு ஒளி நிலவிலிருந்து பிரதிபலித்ததால், கிரகணத்தின் போது நிலவு சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது.</p><h2>கிரகணம் எங்கு தென்பட்டது?</h2><p>வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்கப் பகுதிகளில், மக்கள், தெளிவான இரவு வானில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81">கிரகணத்தை </a>முழுமையாக ரசித்தனர். இது தவிர, மேற்கு ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி மற்றும் மேற்கு ஆப்பிரிக்கப் பகுதிகளில் விடியற்காலை வேளையில் சந்திர அஸ்தமனத்திற்கு முன் மக்கள் கண்டனர்.</p><h2>இந்தியாவில் தெரியவில்லை</h2><p>புவியியல் அமைப்பின்படி, இந்த கிரகண நேரத்தின்போது இந்தியாவில் பகல் பொழுது. இதனால் இந்தியாவில் இந்த கிரகணத்தை நேரடியாகப் பார்க்க முடியவில்லை.</p><p>இந்தியாவில் இருப்பவர்கள் மற்றும் மேகமூட்டம் காரணமாக இதைப் பார்க்க முடியாதவர்களுக்காக, நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமை, தங்களது அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களில் இந்நிகழ்வை நேரலை செய்தன.</p>]]></content:encoded></item><item><title>பி.எம். கிசான் திட்டத்தில் ரூ.60 கோடி மோசடி கண்டுபிடிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-kisan-scheme-rs-60-crore-fraud-fake-farmer-records</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-kisan-scheme-rs-60-crore-fraud-fake-farmer-records#comments</comments><guid isPermaLink="false">aecdd55a-c779-466e-afc1-1e57a27ff819</guid><pubDate>Fri, 28 Aug 2026 10:52:43 +0000</pubDate><atom:updated>2026-08-28T10:52:43.025Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Uttar Pradesh,உத்தரப் பிரதேசம்,Kunda tehsil,PM Kisan,குண்டா தாலுகா,பி.எம்.கிசான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/yv18uans/Untitled-design-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM-Kisan scam in UP]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/yv18uans/Untitled-design-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் விவசாயிகள் பயனடைவதற்காக மத்திய அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்ட பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் (தகுதியான விவசாயிகளுக்கு வருடந்தோறும் 6 ரூபாய் நிதியுதவி திட்டம்) ரூபாய் 60 கோடிக்கும் அதிகமான அளவில் மோசடி நடந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. </p><p>இதையடுத்து துறை ரீதியான விசாரணையையை மேற்கொள்ளுமாறு வேளாண்மை துறை இயக்குநர் அஷ்வினி குமார் சிங் காவல்துறையிடம் புகார் அளித்தார்.</p><h3><strong>பிரதன் மந்திரி கிசான் சம்மான் நிதி</strong></h3><p>இந்தியாவில் மத்திய அரசால் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் மூலம் தகுதியுள்ள விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்பட்டு வருகிறது.</p><p>மேலும் இந்த தொகையானது நேரடி பணப் பறிமாற்றம் மூலம் விவசாயிகளின் ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.</p><p>இந்த திட்டத்தின் கீழ் பலன்களை பெற விரும்பும் விவசாயிகள், தங்களது கைபேசிகள் மூலமாகவோ அல்லது ஜன் சேவா கேந்திரங்கள் வழியாகவோ பதிவு செய்ய வேண்டும்.</p><p>இதையடுத்து விண்ணப்பங்கள் முதலில் தாலுகா அளவில் பரிசீலிக்கப்பட்டு, பின்னர் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பப்படுகின்றன. </p><p>மாவட்ட, மாநில மற்றும் மத்திய அளவில் சரிபார்க்கப்பட்ட பிறகு, தகுதியுள்ள பயனாளிகள் இந்த திட்டத்தின் கீழ் நிதி உதவியை பெறுகிறார்கள்.</p><h3><strong>உத்தரப் பிரதேசத்தில் மோசடி</strong></h3><p>இந்த நிலையில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள குண்டா தாலுகாவில் வழக்கமான செயல்முறையின் மூலம் பதிவு செய்ய முடியாத விவசாயிகள் பலன்பெறும் வகையில், தாலுகா அளவில் நேரடி நுழைவு வசதி அறிமுகம் செய்யப்பட்டது.</p><p>இந்த திட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள், வழக்கமான சரிபார்ப்பு வழிமுறையை தவிர்த்து, நேரடியாக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><p>இதையடுத்து இதன் பதிவுகளை ஆய்வு செய்தபோது, குண்டா தாலுகாவில் பெருமளவிலான சந்தேகத்திற்கிடமான பதிவுகள் இடம்பெற்றிருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.</p><p>மேலும் இந்த வழிமுறை வழியாக பதிவு செய்திருந்த பல பயனாளிகள், சிறார்கள் எனவும் மாவட்டத்திற்கு வெளியேயும் மாநிலத்திற்கு வெளியேயும் வசிப்பவர்கள் எனவும் தெரியவந்தது.</p><p>இந்த முறைகேடுகளை தொடர்ந்து நடத்தப்பட்ட துறைசார் விசாரணையில், நேரடி பதிவு வசதியை பயன்படுத்தி 3,18,846 பதிவுகள் இடம்பெற்றிருந்தது தெரியவந்தது. </p><p>இந்த பதிவுகள் தொடர்பாக கூறப்படும் மோசடி பணப்பட்டுவாடா மதிப்பு ரூ.60 கோடியை தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p>இதைத் தொடர்ந்து இணையத்தில் இருந்து நேரடி நுழைவு வசதி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை அடுத்து வேளாண்மை துறை துணை இயக்குநர் அஷ்வினி குமார் சிங் காவல்துறையிடம் புகார் அளித்தார்.</p><p>அதனைத் தொடர்ந்து 1700 ஐபி முகவரிகள் மற்றும் போலி பயனாளிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் தீபக் பூக்கர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>இலங்கை தொடர் சுமாராக இருந்தாலும் 4-ம் இடத்தில் சிறப்பான சராசரி வைத்திருக்கும் சுப்மன் கில்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/shubman-gill-might-have-had-a-lukewarm-sri-lanka-tour-but-his-average-at-no-4-continues-to-be-impressive</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/shubman-gill-might-have-had-a-lukewarm-sri-lanka-tour-but-his-average-at-no-4-continues-to-be-impressive#comments</comments><guid isPermaLink="false">4e61010a-0cb0-46e4-8e81-8eed104e282a</guid><pubDate>Fri, 28 Aug 2026 10:39:23 +0000</pubDate><atom:updated>2026-08-28T10:39:23.746Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சுப்மன் கில்,Shubman Gill,IND vs SL</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/artjnbf7/ShubmanGill001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சுப்மன் கில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/artjnbf7/ShubmanGill001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சுப்மன் கில் இதுவரை 43 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3043 ரன்கள் அடித்துள்ளார். இதில் 11 சதங்கள் அடங்கும்.</p><p>இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் சுப்மன் கில். இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 4-வது இடத்தில் களம் இறங்கி வருகிறார்.</p><p>நேற்றுடன் முடிவடைந்த <a href="https://www.maalaimalar.com/sports/cricket/match-drawn-in-india-srilanka-second-test">இலங்கை</a>க்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 1-0 எனக் கைப்பற்றியது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், 2-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.</p><h2>இலங்கை தொடரில் சுப்மன் கில்</h2><p>சுப்மன் கில் முதல் போட்டியின் முதல் இன்னிங்சில் 16 ரன்களும், 2-வது இன்னிங்சில் 8 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார். 2-வது டெஸ்ட் முதல் இன்னிங்சில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்யவில்லை.</p><p>இருந்தபோதிலும் அவருடைய சராசரி இன்றும் சிறப்பாகவே உள்ளது. குறைந்தது ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்த வீரர்களில் 4-வது வரிசையில் சுப்மன் கில் இன்னும் முதலிடத்தில் உள்ளார். அவருடைய சராசரி 75.93 சதவீதமாக உள்ளது. சவுரவ் கங்குலியின் சராசரி 66 சதவீதமாக உள்ளது. கேரி சோபர்ஸ் சராசரி 63.75 ஆகும். எவர்டன் வீக்ஸ் சராசரி 63.62 சதவீதம் ஆகும். கிரேம் பொல்லாக்கின் சராசரி 62.57 சதவீதம் ஆகும்</p><h2>டெஸ்ட் கிரிக்கெட்டில் சுப்மன் கில்</h2><p>சுப்மன் கில் இதுவரை 43 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3043 ரன்கள் அடித்துள்ளார். இதில் 11 சதம், 9 அரைசதம் ஆகும். அதிகபட்சமாக ஒரு இன்னிங்சில் 269 ரன்கள் அடித்துள்ளார். தொடக்க காலத்தில் ஓபனிங் பேட்ஸ்மேனாக விளையாடி வந்தார். தற்போது 4-வது இடத்தில் விளையாடுகிறார்.</p>]]></content:encoded></item><item><title>உலக கோப்பை ஹாக்கி பெண்கள் இறுதிப் போட்டி: நெதர்லாந்து- அர்ஜென்டினா அணிகள் நாளை மோதல்</title><link>https://www.maalaimalar.com/sports/womens-hockey-world-cup-final-netherlands-vs-argentina</link><comments>https://www.maalaimalar.com/sports/womens-hockey-world-cup-final-netherlands-vs-argentina#comments</comments><guid isPermaLink="false">f8b8ca3e-144c-460f-ae06-2e31d2a6501e</guid><pubDate>Fri, 28 Aug 2026 10:35:04 +0000</pubDate><atom:updated>2026-08-28T10:35:04.614Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அர்ஜென்டினா,Netherland,நெதர்லாந்து,World cup Hockey,உலக கோப்பை ஆக்கி,Hockey Final</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/hhadmct5/netherland.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ World Womens Hockey]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/hhadmct5/netherland.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>16-வது உலக கோப்பை ஹாக்கி போட்டி பெல்ஜியத்தில் உள்ள  வேவ்ரே, நெதர்லாந்தின் ஆம்ஸ்டல்வீன் ஆகிய 2 நகரங்களில் நடைபெற்று வருகிறது.</p><h2>நெதர்லாந்து வெற்றி</h2><p>பெண்கள் பிரிவில் நடைபெற்ற அரை இறுதி ஆட்டம் ஒன்றில் நெதர்லாந்து- பெல்ஜியம் அணிகள் மோதின.</p><p>இதில் நடப்பு சாம்பியன் நெதர்லாந்து 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.</p><p>பிரடெரிக் மாட்லா 28-வது நிமிடத்தில் கோல் அடித்தார். 9 முறை உலக கோப்பையை வென்ற நெதர்லாந்து 14-வது  தடவையாக இறுதிப் போட்டியில் நுழைந்துள்ளது.</p><p>போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A8%E0%AF%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81" rel="nofollow">நெதர்லாந்து</a> மகளிர் அணி இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினாவை சந்திக்கிறது. 2-வது அரை இறுதியில் அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. ஜூலிட்டா ஜான்குனாஸ் 47-வது நிமிடத்தில் கோலை பதிவு செய்தார். </p><p>2 முறை சாம்பியனான அர்ஜென்டினா  7-வது தடவையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. நெதர்லாந்து- அர்ஜென்டினா அணிகள் மோதும் இறுதிப்போட்டி நாளை (29-ந் தேதி) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. கடந்த முறையும் இந்த இரு அணிகளுமே இறுதிப் போட்டியில் விளையாடின.</p><p>முன்னதாக மாலை 4.30 மணிக்கு நடைபெறும்  3-வது இடத்துக்கான போட்டியில் பெல்ஜியம்- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.</p><h2>இந்தியா 5-வது இடம் </h2><p>இந்திய பெண்கள் அணி 5-வது இடத்துக்கான  போட்டியில் ஜெர்மனியை எதிர்கொண்டது. இதில் இந்தியா 3-1 கோல் கணக்கில் வெற்றி பெற்று 5-வது இடத்தை பிடித்தது. ஜெர்மனிக்கு  6-வது இடம் கிடைத்தது.</p><p>ஸ்பெயின், சீனா, இங்கிலாந்து, அமெரிக்கா,  ஜப்பான், ஸ்காட்லாந்து, அயர்லாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, சிலி ஆகிய  நாடுகள் முறையே 7 முதல் 16-வது இடங்களை பிடித்தன.</p><h2>ஆண்கள் பிரிவு </h2><p>ஆண்கள் பிரிவில் அரை இறுதி மற்றும் ஒவ்வொரு இடத்துக்கான‌ போட்டிகள் இன்று நடக்கிறது. இந்திய அணி 7 - வது இடத்துக்கான ஆட்டத்தில் பெல்ஜியத்தை இரவு  9.30 மணிக்கு சந்திக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>மராத்தி கற்க ஒரு வருடம் அவகாசம் - ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்கு நிம்மதி அளித்த முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ்! </title><link>https://www.maalaimalar.com/news/national/one-year-grace-period-to-learn-marathi-chief-minister-devendra-fadnavis-brings-relief-to-auto-and-taxi-drivers</link><comments>https://www.maalaimalar.com/news/national/one-year-grace-period-to-learn-marathi-chief-minister-devendra-fadnavis-brings-relief-to-auto-and-taxi-drivers#comments</comments><guid isPermaLink="false">603021bd-c0e3-4648-9c06-7927ca04e2c9</guid><pubDate>Fri, 28 Aug 2026 10:33:18 +0000</pubDate><atom:updated>2026-08-28T10:33:18.832Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,மகாராஷ்டிரா,Marathi,மராத்தி,Taxi Drivers,டாக்சி ஓட்டுநர்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/vsmxcs7y/New-Project-2026-08-28T153842.583.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மராத்தி கற்க ஒரு வருடம் அவகாசம் - ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்கு நிம்மதி அளித்த முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ்! ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/vsmxcs7y/New-Project-2026-08-28T153842.583.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/hindi-takes-first-place-in-maharashtra-marathi-ranks-second-actor-riteish-deshmukh-expresses-dismay">மராத்தி மொழி</a> கற்பதற்கு ஒரு வருடம் அவகாசம் அளிக்கப்படுவதாகவும், அதுவரை அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார். </p><p>கடந்தாண்டு மும்மொழிக் கொள்கை விவகாரம் தீவிரமடைந்த நிலையில், மகாராஷ்டிராவில் மராத்தி மொழி கற்றல் தொடர்பான தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக அங்கு பணிபுரியும் ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள் கட்டாயம் மராத்தி பேசவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. </p><h2>ஓட்டுநர் உரிமம் ரத்து</h2><p>அண்மையில் நடத்தப்பட்ட சோதனைகளில் மராத்தி தெரியாத ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஒரு மாதத்திற்குள் மொழியைக் கற்காவிட்டால் 3 மாதங்கள் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டது.</p><p>போக்குவரத்துத் துறை அமைச்சரும் சிவசேனா தலைவருமான பிரதாப் சர்நாயக்கின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தற்போது ஒரு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. </p><h2>அவகாசத்தை நீட்டித்த மகாராஷ்டிர அரசு</h2><p>பாஜக போக்குவரத்துப் பிரிவுத் தலைவர் ஹாஜி அராஃபத் ஷேக் தலைமையிலான ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் குழு, நேற்று முதலமைச்சர் பட்னாவிஸை சந்தித்து. </p><p>அப்போது, ஏராளமான ஓட்டுநர்களுக்கு மராத்தி பேசத் தெரியாது என்றும், வெறும் மூன்று மாதங்களில் அவர்களால் மொழியை மொத்தமாக கற்க இயலாது என்றும் நடைமுறையில் இருக்கும் சிக்கலை சுட்டிக் காட்டினர்.</p><p>இக்கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த பட்னாவிஸ்.,</p><p>“இன்று மதியம், ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் அடங்கிய ஒரு குழுவினர் என்னைச் சந்தித்து, மராத்தி மொழியைக் கற்றுக்கொள்ள கூடுதல் அவகாசம் கோரினர்.</p><p>அவர்களில் பெரும்பாலானோர் அதிகம் படித்தவர்கள் அல்ல, எனவே அவர்களுக்கு அதிக நேரம் தேவைப்படும். அவர்களுக்கு ஓராண்டு கால அவகாசம் வழங்க நான் முடிவு செய்துள்ளேன். இன்றிலிருந்து ஓராண்டுக்கு அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது,” என்றார்.</p>]]></content:encoded></item><item><title>11-ம் வகுப்பு மாணவர்களுக்கு நவீன சைக்கிள் வழங்கும் திட்டம் - தமிழ்நாடு அரசு மின் ஒப்பந்தம் கோரியது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/scheme-to-provide-modern-bicycles-to-class-11-students-tamil-nadu-government-invites-e-tenders</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/scheme-to-provide-modern-bicycles-to-class-11-students-tamil-nadu-government-invites-e-tenders#comments</comments><guid isPermaLink="false">d34bb41c-3424-4886-b66f-0896a966ac71</guid><pubDate>Fri, 28 Aug 2026 10:28:33 +0000</pubDate><atom:updated>2026-08-28T10:28:33.256Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,இலவச சைக்கிள் திட்டம்,நவீன சைக்கிள் வழங்கும் திட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/mwklmhky/cycle.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நவீன சைக்கிள் வழங்கும் திட்டம்]]></media:title><media:description type="html"><![CDATA[ நவீன சைக்கிள் வழங்கும் திட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/mwklmhky/cycle.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கொள்முதல் ஆணை பெறப்பட்ட 150 நாட்களுக்குள் மிதிவண்டிகள் மற்றும் உபகரணங்கள் முழுமையாக விநியோகிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</strong></em></p><p>தமிழ்நாட்டில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா நவீன மிதி வண்டிகள், தலைக்கவசம் மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்குவதற்காகத் <a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-அரசு">தமிழ்நாடு அரசு</a> மின்னணு ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.</p><h2><strong>இணையதளங்கள்</strong></h2><p>நடப்பு 2026-27-ம் கல்வியாண்டிற்காக 11-ஆம் வகுப்பு படிக்கும் 2,37,133 மாணவர்களுக்கும், 2,95,255 மாணவிகளுக்கும் என மொத்தம் 5,32,388 நவீன மிதிவண்டிகள், அவற்றுடன் தலைக்கவசம் மற்றும் தண்ணீர் பாட்டில் கொள்முதல் செய்யப்பட உள்ளன. தகுதியான உற்பத்தி நிறுவனங்கள் வரும் நாளை முதல் செப்டம்பர் 28, 2026 பிற்பகல் 3 மணி வரை <a href="https://tntenders.gov.in/nicgep/app">https://tntenders.gov.in</a>, <a href="https://tntenders.gov.in/nicgep/app">https://tntenders.gov.in</a> என்ற இணையதளங்கள் வழியாக விண்ணப்பிக்கலாம்.</p><p>செப்டம்பர் 8, 2026 அன்று முற்பகல் 11 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககத்தில் நடைபெறும்.</p><p>இதில் ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவிக்கான மாதிரி மிதிவண்டிகளைச் செப்டம்பர் 28, 2026 மாலை 5  மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். பெறப்பட்ட தொழில்நுட்ப ஒப்பந்தப்புள்ளிகள் செப்டம்பர் 29, 2026 அன்று முற்பகல் 11.30 மணிக்கு இணையவழியாகத் திறக்கப்படும். கொள்முதல் ஆணை பெறப்பட்ட 150 நாட்களுக்குள் மிதிவண்டிகள் மற்றும் உபகரணங்கள் முழுமையாக விநியோகிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>GTA-6 | வீடியோ கேம் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதிய வெர்சன் வெளியீடு</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/gta-6-highly-anticipated-new-version-release</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/gta-6-highly-anticipated-new-version-release#comments</comments><guid isPermaLink="false">d30a66b3-ca69-4361-9a1d-477258d4f402</guid><pubDate>Fri, 28 Aug 2026 10:02:03 +0000</pubDate><atom:updated>2026-08-28T10:02:03.835Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Video game,Rockstar Games,GTA 6,ராக்ஸ்டார் கேம்ஸ்,ஜிடிஏ 6,வீடியோ கேம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/fu8y5rq0/Untitled-design.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ GTA-6 video game version]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/fu8y5rq0/Untitled-design.jpg?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வீடியோ கேம் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஜி.டி.ஏ (Grand Theft Auto) கேமின் அடுத்த வெர்சனான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D">ஜி.டி.ஏ.6</a>-இன் முன்னோட்ட 26 நிமிட காணொளி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.</p><p>ராக்ஸ்டார் வெளியிட்டுள்ள காணொளியில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் வசிக்கும் முக்கிய கதாபாத்திரங்களான ஜேசன் டுவால் மற்றும் லூசியா கமீனோஸின் வாழ்க்கை இடம்பெற்றிருந்தன.</p><h3><strong>ஜி.டி.ஏ வீடியோ கேம்</strong></h3><p>ஜி.டி.ஏ (GTA) கேம் என்பது அமெரிக்க நகரத்தில் வசிக்கும் ஒருவர், அந்த தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களையோ அல்லது காரில் வரும் வேறொருவரை வெளியே இழுத்து தள்ளிவிட்டு, அந்த வாகனத்தை திருடி செல்வதுதான் கதைக்களமாக உள்ளது.</p><p>இதையடுத்து அந்த நபர் காரை எடுத்தவுடன், அவருக்கு ஒரு வேலையை முடிக்குமாறு ஒரு டாஸ்க் (task) கொடுக்கப்படுகிறது. </p><p>அந்த டாஸ்கை எந்த நபர் முடிக்க திருடப்பட்ட வாகனத்தில் செல்லும்போது, காரில் உள்ள ஜிபிஎஸ் கருவி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து, அந்த காரை காவல்துறை விரட்டி துரத்துவதும் கதைக்களமாக உள்ளது.</p><h3><strong>1997-இல் அறிமுகம்</strong></h3><p>இந்த கேமில் பல அம்சங்கள் வீடியோ கேம் பயனர்களுக்கு அளிக்கப்பட்டு, சுவாரஸ்யமாக விளையாட தூண்டுகிறது. இந்த வீடியோ கடந்த 1997-ஆம் ஆண்டு வெளியானதில் இருந்து, உலகம முழுவதும் பல கோடி கேம் பிரியர்களால் விளையாடப்பட்டு வருகிறது.</p><p>இதையடுத்து வெளியான தொடர்களில், ஜேசன் டுவால் என்ற கதாபாத்திரத்திற்கும் லூசியா கமீனோஸ் என்ற மற்றொரு கதாபாத்திரத்திற்கும் இடையேயான காதல் உறவு அறிமுகம் செய்யப்பட்டது.</p><p>ராக்ஸ்டார் நிறுவனம் கடந்த 2018-இல் வெளியிட்ட ‘ரெட் டெட் ரிடெம்ப்ஷன் 2’ என்ற தொடரில், பயனர்கள் விளையாடும் முக்கிய கதாபாத்திரம் செய்யும் செயலானது, அந்த கதாபாத்திரத்தின் நற்பெயரை பாதிப்பதாக அமைந்தது.</p><p>இதைத்தொடர்ந்து 2013-இல் வெளியான ஜிடிஏ-5 வீடியோ கேம், 2,000 கோடிக்கும் அதிகமான பிரதிகளை விற்பனை செய்தது.</p><p>மேலும் உலகம் முழுவதும் அதிகம் விளையாடப்படும் விளையாட்டுகளில் ஒன்றாக மாறியது. இது ராக்ஸ்டார் நிறுவனத்திற்கு கோடிக்கணக்கான பணத்தை ஈட்டித் தருவதாக அமைந்தது.</p><h3><strong>புதிய வெர்சன்</strong></h3><p>இந்த நிலையில் ராக்ஸ்டார் நிறுவனம் தனது அடுத்த மேம்படுத்தப்பட்ட வெர்சனான ஜிடிஏ-6 வீடியோ கேமின் டிரெய்லரை நெட்ஃபிளிக்ஸ் மற்றும் யூடியூப் தளத்தில் இன்று வெளியிட்டுள்ளது. இந்த 26 நிமிட காணொளி 5,000 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.</p><p>இந்த புதிய வெர்சன் நவம்பர் 19 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>மேலும் ராக்ஸ்டார் வெளியிடவுள்ள ஜிடிஏ-6 வீடியோ கேம், பார்வையாளர்களை எந்த அளவுக்கு ஈர்க்கிறது என்பதை பொறுத்தே இதன் வெற்றி தீர்மானிக்கப்படும்.</p>]]></content:encoded></item><item><title>நேபாளத்தை உலுக்கிய வெள்ளம்..  தோண்ட, தோண்ட பிணங்கள்.. பலி எண்ணிக்கை
500-ஆக உயர்வு</title><link>https://www.maalaimalar.com/news/world/nepal-flash-flood-massive-devastation-and-rising-death-toll-of-500</link><comments>https://www.maalaimalar.com/news/world/nepal-flash-flood-massive-devastation-and-rising-death-toll-of-500#comments</comments><guid isPermaLink="false">cfbad3c0-f079-49eb-967a-bd84ac843c5b</guid><pubDate>Fri, 28 Aug 2026 10:01:41 +0000</pubDate><atom:updated>2026-08-28T10:01:41.869Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாளம்,nepal,பலி எண்ணிக்கை உயர்வு,Death toll,nepal flood,நேபாளம் வெள்ளம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/0aqsixbm/Nepal.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nepal flood]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/0aqsixbm/Nepal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நேபாளத்தை உலுக்கிய வெள்ளப்பெருக்கில் பலர் சிக்கியுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 500-ஆக உயர்ந்துள்ளது.</strong></em></p><p>நேபாளத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம், அங்குள்ள மத்திய மாவட்டங்களை உருக்குலைத்து உள்ளது.</p><p>திபெத்தின் இமயமலை பகுதியில் உருவாகும் கோலா ஆறு, நேபாளம் எல்லைப்பகுதி வழியாக பாய்ந்து நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தை அடைகிறது. </p><p>அதன்பின் சிறு ஆறுகளுடன் இணைந்து ரசுவா பகுதியில் போடே கோஷி ஆறாக ஓடுகிறது. இதற்கிடையே <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81" rel="nofollow">பனிச்சரிவு</a> காரணமாக லெண்டே கோலா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நேபாளத்தை நோக்கி அசுர வேகத்தில் பாய்ந்தது.</p><p>சுமார் 30 அடி உயரத்தில் பாறைகள், மண் உள்ளிட்டவைகளுடன் சீறி வந்த காட்டாற்று வெள்ளம் நேபாளத்தின் ரசுவா, தாடிங் ஆகிய மாவட்டங்களில் ஓடும் போடே கோஷி ஆற்றில்  நுழைந்தது. அந்த ஆற்றின் வழியாக திரிசூலி ஆற்றில் கலந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. </p><p>கட்டுக்கடங்காமல் சென்ற காட்டாற்று வெள்ளம் ஆறுகளின் இருபுறமும் உள்ள வீடுகள், பெரிய கட்டிடங்கள், சாலைகள், பாலங்கள், வாகனங்கள்,மின் நிலையங்களை அடித்துச் சென்றது. இதில் ஒரு கிராமத்தை சில வினாடிகளில் வெள்ளம் வாரி சுருட்டி சென்றது.</p><h2>தோண்ட, தோண்ட உடல்கள்</h2><p>இந்த காட்டாற்று வெள்ளத்தில் 32 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் அடித்து செல்லப்பட்டனர்.</p><p>இதையடுத்து மீட்புப்பணிகளில் நேபாள ராணுவம், போலீசார் மற்றும் மீட்புக்குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன. அக்கு ழுக்கள் சேறு-சகதிகளில் இருந்து உடல்களை மீட்டு வருகிறார்கள். </p><p>இதில் தோண்ட, தோண்ட உடல்கள் வந்த வண்ணம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று நிலவரப்படி வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 392-ஆக அதிகரித்தது. இன்று 3-வது நாளாக  மீட்புப்பணிகள் நடந்து வரும் நிலையில் சேறு-சகதிகளில் இருந்து தொடர்ந்து உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. </p><p>பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வெள்ளம் பாய்ந்த பகுதிகளில் சேறு-சகதி, மண் குவியல்கள் காணப்படுகின்றன. அதில் உடல்கள் புதைந்திருந்த நிலையில் கடும் சவாலுக்கு மத்தியில் மீட்புப்பணிகள் நடந்து வருகிறது. சேறு-சகதிகள், பாறைகளை அகற்றி உடல்கள் மீட்கப்படுகின்றன.</p><p>பெரும்பாலும் உடல்கள் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டன. மீட்புப்பணிகளில் பொதுமக்களும் உதவி வருகிறார்கள். அவர்களும் சிலரது உடல்களை மீட்டனர்.</p><h2>பலி 500-ஆக உயர்வு</h2><p>இந்த நிலையில் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 500-ஆக உயர்ந்து உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களது உடல்கள் 8 மாவட்டங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக நேபாள போலீசார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p><p>இதில் அதிகபட்சமாக சித்வான் மாவட்டத்தில் 178 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. நவல்ப்பராசி கிழக்கு மாவட்டத்தில் 110 உடல்களும், கோர்கா மாவட் டத்தில் 44 உடல்களும், நுவாகோட் மாவட்டத்தில் 37 உடல்களும், தாடிங் மாவட்டத்தில் 33 உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. </p><p>தனஹு மாவட்டத்தில் 28 உடல்களும், நவல்ப்பராசி மேற்கு மாவட்டத்தில் 27 உடல்களும், ரசுவா மாவட் டத்தில் 12 உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.</p><p>பல்வேறு பகுதிகளில் இருந்து காயமடைந்த மற்றும் சிக்கித் தவித்த 1,545 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 84 பேர் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p> மீட்பு - நிவாரணப் பணிகளுக்காக 14 ஹெலிகாப்டர்கள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக நேபாள ராணுவம் தெரிவித்துள்ளது.</p><p>இந்தியர்கள் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D" rel="nofollow">நேபாளம்</a>, திபெத்தில் வெள்ள பாதிப்பில் சிக்கி வெளிநாட்டினர் உள்பட 1468 பேர் மாயமாகி உள்ளனர். இதில் நேபாளத்தில் உள்ள 517 வெளிநாட்டினர் உள்பட  910 பேரை இன்னும் தொடர்பு கொள்ள முடியவில்லை.</p><p>இதற்கிடையே நேபாளத்துக்கு ஆன்மிக சுற்றுலா சென்ற 21 தமிழர்கள் மீட்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு நேற்று தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் நேபாளத்தின் திரிசூலி-1 மின் திட்ட பகுதியில் பணிபுரிந்த 63 இந்திய தொழிலாளர்கள் மீட்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மீட்கப்பட்ட தொழிலா ளர்களின் பெயர் விவரங்களை மத்திய வெளியுற வுத்துறை வெளியிட்டது. </p><p>இதற்கிடையே 90 அமெரிக்கர்கள் வெள்ளத்தில் சிக்கி மாயமாகி உள்ளனர் என்றும் அவர்களின் நிலை குறித்த தகவல் ஏதும் இல்லை என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். </p><p>இதுதொடர்பாக அமெ ரிக்க வெளியுறவுத்துறை கூறும்போது, அமெரிக்கர்கள் யாரும் உயிரிழந்ததாகத் தகவல் இல்லை என்றும், 3 அமெரிக்கர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தது.</p>]]></content:encoded></item><item><title>‘எந்தக் குழந்தையும் சாதியால் அடையாளம் காணப்படக் கூடாது’ - பள்ளி சேர்க்கை படிவங்களில் இருந்து சாதிப் பத்தியை நீக்க இமாச்சல் அரசு உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/national/no-child-should-be-identified-by-caste-himachal-government-orders-removal-of-the-caste-column-from-school-admission-forms</link><comments>https://www.maalaimalar.com/news/national/no-child-should-be-identified-by-caste-himachal-government-orders-removal-of-the-caste-column-from-school-admission-forms#comments</comments><guid isPermaLink="false">67030a98-13a7-45e8-922c-2c9f906bc015</guid><pubDate>Fri, 28 Aug 2026 09:54:30 +0000</pubDate><atom:updated>2026-08-28T09:54:30.403Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>schools,பள்ளிகள்,சாதி,Himachal Pradesh,இமாச்சலப் பிரதேசம்,caste column,CM Sukhvinder Singh Sukhu,முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/b3w2vbqh/New-Project-2026-08-28T152345.328.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘எந்தக் குழந்தையும் சாதியால் அடையாளம் காணப்படக் கூடாது’ - பள்ளி சேர்க்கை படிவங்களில் இருந்து சாதிப் பத்தியை நீக்க இமாச்சல் அரசு உத்தரவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/b3w2vbqh/New-Project-2026-08-28T152345.328.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2027-28 கல்வியாண்டு முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் மாணவர் சேர்க்கை படிவத்தில் உள்ள, சாதி விவரங்களை கோரும் பகுதியை நீக்கவேண்டும் என இமாச்சலப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. </p><p>முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையில் ஆக.26ம் தேதி நடைபெற்ற பட்டியல் சாதியினர் நல வாரியக் கூட்டத்தில் இந்த முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p><p>சாதி அடிப்படையிலான பாகுபாட்டைக் குறைத்து, சமூகத்தில் சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் மேம்படுத்துவதே இந்த முடிவின் நோக்கம் என்று முதலமைச்சர் சுக்விந்தர் சிங் தெரிவித்துள்ளார்.</p><p>பள்ளி சேர்க்கைப் படிவங்களிலிருந்து சாதிப் பகுதியை நீக்குவது, குழந்தைகள் தங்கள் சாதியின் அடிப்படையில் தாழ்வு மனப்பான்மை கொள்வதைத் தடுக்கவும் உதவும் என்றும் அவர் கூறினார்.</p><h2>சலுகைகள் தொடரும்</h2><p>இந்த உத்தரவால் மாணவர்களுக்கான அரசு சலுகைகள் எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என்றும் அரசு உறுதி அளித்துள்ளது.</p><p>சேர்க்கை படிவங்களில் சாதிப் பத்தி நீக்கப்பட்டாலும், அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை, இடஒதுக்கீடு மற்றும் இதர நலத்திட்டங்களைப் பெற விரும்பும் தகுதியுடைய மாணவர்கள் தங்களின் சாதி சான்றிதழ் விவரங்களைத் தனியாகச் சமர்ப்பித்து சலுகைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>ஆசிய கோப்பை கிரிக்கெட்: வசதி வாய்ப்பு, ஏற்பாடு சரியில்லை என பிசிசிஐ அதிருப்தி- &quot;பி&quot; டீமை அனுப்ப ஆலோசனை</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/india-b-team-likely-for-asian-games-2026-as-bcci-unhappy-with-facilities-and-arrangements-in-japan</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/india-b-team-likely-for-asian-games-2026-as-bcci-unhappy-with-facilities-and-arrangements-in-japan#comments</comments><guid isPermaLink="false">45b94ea3-69ef-4e3d-8548-bf40502360be</guid><pubDate>Fri, 28 Aug 2026 09:52:57 +0000</pubDate><atom:updated>2026-08-28T09:52:57.214Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BCCI,Team India,டீம் இந்தியா,பிசிசிஐ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/ile2jysc/BCCI001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிசிசிஐ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/ile2jysc/BCCI001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆசிய விளையாட்டு போட்டிக்கான ஏற்பாட்டில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதால், பி அணியை அனுப்பி வைக்கலாமா? என்று பிசிசிஐ ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.</p><p>ஆசிய விளையாட்டு போட்டிக்கான ஏற்பாட்டில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதால், பி அணியை அனுப்பி வைக்கலாமா? என்று <a href="https://www.maalaimalar.com/sports/cricket/test-cricket-won-today-shubman-gill-after-2nd-test-vs-sri-lanka-ends-in-draw">பிசிசிஐ</a> ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.</p><p>ACC கூட்டத்தின்போது ஜப்பான் ஒலிம்பிக் அதிகாரிகளிடம் நாங்கள் ஒரு விஷயத்தைத் தெரிவித்தோம். அதாவது, உடை மாற்றும் அறைகள் கூடாரங்களில் அமைக்கப்பட்டிருந்தன மற்றும் கழிவறைகள் அந்தக் கூடாரங்களிலிருந்து 500மீ தொலைவில் இருந்தன. இது வீரர்களுக்கு அதிருப்தி அளிக்கும் சூழலை உருவாக்கியுள்ளது. மேலும், ஹோட்டல் அறைகள் மிகவும் சிறியதாக இருப்பதும் ஒரு பெரிய கவலையாக உள்ளது என்று பிசிசிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.</p><p>2023-ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி தங்கப் பதக்கம் வென்றன.</p><h2>ஆசிய போட்டிக்கான ஆண்கள் டி20 அணி:-</h2><p>ஷ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (வி.கீ.), அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் (வி.கீ.), ஷிவம் துபே, திலக் வர்மா (துணைக்கேப்டன்), அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், வைபவ் சூர்யவன்ஷி, பும்ரா.</p> <p>இந்திய பெண்கள் டி20 அணி:-</p><p>ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிரிதி மந்தனா (துணைக் கேப்டன்), ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ் (வி.கீ.), ஜி. கமாலினி (வி.கீ.), பாரதி புல்மாலி, ஸ்ரீ சாரணி, ரேனுகா தாகூர், கிராந்தி காட், அருந்ததி ரெட்டி, ஷ்ரேயங்கா பாடீல், ராதா யாதவ், நந்தி ஷர்மா.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-thunderstorms-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-thunderstorms-in-chennai#comments</comments><guid isPermaLink="false">3b371b18-89bc-45f3-a1fb-c24b152798ad</guid><pubDate>Fri, 28 Aug 2026 09:51:37 +0000</pubDate><atom:updated>2026-08-28T09:51:37.014Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,Chennai Rain,சென்னை மழை,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/ebm5rj05/rain.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மழை]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/ebm5rj05/rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.</strong></em> </p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>லேசான மழை</strong></h2><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p><p>இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்.</p><p>நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>30-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழையும் பெய்யக்கூடும்.</p><p>31-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழையும் பெய்யக்கூடும்.</p><p>01-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.</p><p>2-ந்தேதி மற்றும் 3-ந்தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.</p><p>இதனிடையே இன்று முதல் 1-ந்தேதி வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>இன்று முதல் 1-ந்தேதி வரை தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>நேபாளத்தில் இருந்து இன்றிரவு சென்னை திரும்பும் 21 தமிழர்கள் - தமிழ்நாடு அரசு ஏற்பாடு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/21-tamils-returning-to-chennai-from-nepal-tonight-tamil-nadu-government-makes-arrangements</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/21-tamils-returning-to-chennai-from-nepal-tonight-tamil-nadu-government-makes-arrangements#comments</comments><guid isPermaLink="false">7853d1d3-07cc-470e-93e1-adf57eaafa29</guid><pubDate>Fri, 28 Aug 2026 09:21:30 +0000</pubDate><atom:updated>2026-08-28T09:21:30.041Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,Government of Tamil Nadu,nepal flood,நேபாள பெருவெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/lz4ug0i3/New-Project-2026-08-28T143320.090.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நேபாளத்தில் இருந்து இன்றிரவு சென்னை திரும்பும் 21 தமிழர்கள் - தமிழ்நாடு அரசு ஏற்பாடு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/lz4ug0i3/New-Project-2026-08-28T143320.090.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாள வெள்ளப்பெருக்கால் அங்கு சிக்கியுள்ள 21 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளதாக, மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்கள் விமானம் மூலம் இன்று இரவு சென்னை திரும்புவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>கைலாஷ் மானசரோவர் யாத்திரை எனப் பல்வேறு பயணங்களுக்காக நேபாளம் சென்றிருந்த 101 தமிழர்களை மீட்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி மற்றும் தகவல் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்திருந்தார்.</p><p>இந்த மீட்பு பணிகள் தொடர்பாக ராஜ்மோகன், ஆதவ் அர்ஜூனா, தென்னரசு உள்ளிட்ட நான்கு அமைச்சர்கள் நேற்று டெல்லியும் விரைந்தனர். </p><p>சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதிலளித்த ராஜ்மோகன், கும்பகோணத்தை தளமாகக் கொண்ட சூப்பர் யாத்ரா நிறுவனம், </p><p>நேபாளத்தை தளமாகக் கொண்ட சாம்ராட் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டின் 10 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 57 பேர் கொண்ட குழு நேபாளத்திற்குச் சென்றிருந்ததில், அக்குழுவில் இருந்த 20 பேர் மீட்கப்பட்டதாகத் தெரிவித்தார். </p><p>கடலூரிலிருந்து 11 பேர், கிருஷ்ணகிரியிலிருந்து ஐந்து பேர், தஞ்சாவூரிலிருந்து 16 பேர், தர்மபுரியிலிருந்து ஒருவர், திருச்சியிலிருந்து நான்கு பேர், திருவண்ணாமலையிலிருந்து ஒருவர், திருவாரூரிலிருந்து இரண்டு பேர், நாமக்கல்லிலிருந்து ஒருவர், மயிலாடுதுறையிலிருந்து ஏழு பேர், சென்னையிலிருந்து ஆறு பேர் மற்றும் புதுச்சேரியிலிருந்து மூன்று பேர் மீட்கப்பட்டவர்களில் அடங்குவர்.</p><p>இந்நிலையில் மத்திய அமைச்சகம் அறிவித்த தகவலின்படி, மீட்கப்பட்ட 21 பேரும் இன்று தமிழ்நாடு வரவுள்ளனர். காத்மண்டுவில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்படும் விமானம் 3.45க்கு டெல்லி வரவுள்ளது. அங்கிருந்து 8 மணிக்கு சென்னைக்கு அழைத்து வரப்படவுள்ளனர். மற்றவர்களை மீட்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. </p><h2>நேபாள பெருவெள்ளம்</h2><p>நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஆக.26ம் தேதி ஏற்பட்ட பயங்கர <a href="https://www.maalaimalar.com/news/world/95-dead-rapidly-melting-himalayas-did-an-earthquake-pave-the-way-for-disaster-what-caused-the-floods-in-nepal">நிலச்சரிவு மற்றும் பனிப்பாறை சரிவு </a>காரணமாக திரிசூலி மற்றும் போதேகோஷி ஆறுகளில் கடுமையான பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த இயற்கைப் பேரிடரால் இதுவரை 480-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>ஈரான் போரால் தான் தமிழ்நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளதாக சட்டசபையில் உணவுத்துறை அமைச்சர் தகவல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/iran-war-blamed-for-price-rise-in-tamil-nadu-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/iran-war-blamed-for-price-rise-in-tamil-nadu-assembly#comments</comments><guid isPermaLink="false">0ccb38f0-167f-45d1-991e-98559b59757b</guid><pubDate>Fri, 28 Aug 2026 09:04:45 +0000</pubDate><atom:updated>2026-08-28T09:04:45.990Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>essential commodities,price hike,விலைவாசி உயர்வு,assembly,Iran War,ஈரான் போர்,சட்டசபை,அத்தியாவசியபொருட்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/ywgqfiwo/Price-Hike-TN-Assembly" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Price Hike - TN Assembly ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/ywgqfiwo/Price-Hike-TN-Assembly?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்ததாக உதயநிதி, எடப்பாடி உள்ளிட்டோர் குற்றம்சாட்டினர். </p><p>ஈரான் போர், வறட்சியே காரணம் என அமைச்சர் விளக்கி, ரேஷன், பசுமை கடைகள் மூலம் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.</p><h2><strong>எதிர்க்கட்சி தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">உதயநிதி ஸ்டாலின்</a></strong></h2><p>விலைவாசி தற்போது நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே இருக்கின்றது. அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை என எந்த பொருளை எடுத்தாலும் கடந்த 3 மாதங்களில் பல மடங்கு விலை உயர்ந்திருக்கின்றது. இதனால் நடுத்தர வர்க்க பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.</p><p>குறிப்பாக இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து அத்தியாவசிய பொருட்களுடைய விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. கம்யூனிஸ்டு கட்சிகள் கூட விலை வாசி உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.</p><h2><strong>விலைவாசி உயர்வு - உதயநிதி</strong></h2><p>விலைவாசி உயர்வில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க தி.மு.க. ஆட்சியில் சிறப்பு பொதுவினியோக திட்டத்தை அறிமுகப்படுத்தி பருப்பு, ரவா, மைதா உள்ளிட்ட பொருட்களை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கபட்டது.</p><p>இந்த ஆட்சியில் மே மாதம் ஒரு கிலோ அரிசி 55 ரூபாய்க்கு, இன்றைக்கு 75 ரூபாயாக விற்பனை ஆகிறது.</p><p>மே மாதம் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 40 ரூபாய் இன்றைக்கு கிலோ 80 ரூபாய். மே மாதம் ஒரு கிலோ துவரம் பருப்பு 150 ரூபாய் இன்றைக்கு கிலோ 180 ரூபாய்.</p><p>மே மாசம் ஒரு கிலோ சர்க்கரை ரூபாய் 40 இன்னைக்கு ஒரு கிலோ 70 ரூபாய் வரை வந்துள்ளது.</p><p>எனவே முதல்-அமைச்சர் தலைமையில் நிதி, உணவு கூட்டுறவு உள்ளிட்ட துறை அமைச்சர்கள் அதிகாரிகள் பங்கேற்கின்ற அளவில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தி விலைவாசி உயர்வை கட்டுபடுத்த உடனடியாக நல்ல தீர்வை காண வேண்டும் என்று <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">உதயநிதி </a>வலியுறுத்தல்.</p><h2><strong>கடும் விலைவாசி உயர்வு - எடப்பாடி பழனிசாமி</strong></h2><p>அ.தி.மு.க. பொதுச் செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF">எடப்பாடி பழனிசாமி</a> கூறுகையில், தமிழ்நாட்டில் அரிசி விலை கிலோ ரூ. 20 வரை உயர்ந்து விட்டது சர்க்கரை ஒரு கிலோ 48 லிருந்து 72 ரூபாயாக உயர்ந்துள்ளது. </p><p>மஞ்சள் ஒரு கிலோ 200 ல் இருந்து 250 ஆகவும் மிளகாய் கிலோ ரூ.200 ல் இருந்து 300 ஆகவும் வெல்லம் ஒரு கிலோ 55 லிருந்து 75 ஆகவும் புளி கிலோ ரூ. 150 ல் இருந்து 250 ஆக உயர்ந்துள்ளது.</p><h2><strong>அரிசி தட்டுப்பாடு</strong></h2><p>இப்போது இங்கும் வறட்சி ஆந்திராவிலும் வறட்சி. இதனால் ஆந்திராவில் இருந்து வரும் அரிசி வரத்து குறைந்துவிட்டது. எனவே விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு முயற்சி எடுக்க வேண்டும். </p><p>இதைத் தொடர்ந்து கணேஷ்குமார்(பா.ம.க ) தாரகை கத் பட், (காங்கிரஸ்) டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்) செல்ல சுவாமி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) ஆகியோரும் விலைவாசி உயர்வு பற்றி எடுத்துச் சொன்னார்கள்.</p><h2><strong>உணவுத்துறை அமைச்சர் விளக்கம்</strong></h2><p>இதைத் தொடர்ந்து உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் பதில் அளித்து கூறியதாவது:- ஈரான் போரால் தான் தமிழ்நாட்டில் விலை வாசி உயர்ந்துள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்ந்ததால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது.</p><p>நம் மாநிலத்தில் மட்டுமல்ல மற்ற மாநிலங்களிலும் விலைவாசி ஏறி உள்ளது. எனவே 41 அத்தியாவசியப் பொருட்களின் விலையை கண்காணித்து வருகிறோம். மக்களுக்கு தங்கு தடையின்றி அத்தியா வசியப் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.</p><h2><strong>விலைக் கட்டுப்பாடு</strong></h2><p>எந்த பொருள் விலை அதிகமாக இருக்கிறதோ அதனை கண்டறிந்து அதனை கட்டுப்படுத்துவதற்கான வழிகளை ஆராய்ந்து வருகிறோம். </p><p>அரிசி சர்க்கரை உருளைக்கிழங்கு உள்ளிட்ட பொருட்களையும் விலையையும் மானிட்டர் செய்கிறோம். மக்களுக்கு தட்டுப்பாடு இருக்கக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக உள்ளோம். </p><p>இதனால் வாரா வாரம் எந்த பொருளின் விலை அதிகமாகிறது என்பதையும் கண்காணிக்கிறோம்.</p><p>எனவே ரேசன் கடைகள் மட்டுமல்லாமல் பசுமை கடைகள் மூலமாகவும் மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்ய அரசு உரிய நடவடிக்கைகளை விரைவில் எடுக்கும்.</p><p>எனவே விலைக்கட்டுப்பாட்டை கட்டுக்குள் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் என்று கூறி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>‘யாரையும் யாரையும் யாரையும் வாழ்க்கையில்  நம்பாதீர்கள்’ - இயக்குநர் செல்வராகவனின் திடீர் பதிவு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/dont-trust-anyoneanyone-at-allin-life-director-selvaraghavans-sudden-post</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/dont-trust-anyoneanyone-at-allin-life-director-selvaraghavans-sudden-post#comments</comments><guid isPermaLink="false">17a4c164-4af8-416b-bf48-357768eedf80</guid><pubDate>Fri, 28 Aug 2026 09:00:06 +0000</pubDate><atom:updated>2026-08-28T09:00:06.804Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Cinema,Director selvaraghavan,சினிமா,இயக்குநர் செல்வராகவன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/sro2dqas/New-Project-2026-08-28T142942.249.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘யாரையும் யாரையும் யாரையும் வாழ்க்கையில்  நம்பாதீர்கள்’ - இயக்குநர் செல்வராகவனின் திடீர் பதிவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/sro2dqas/New-Project-2026-08-28T142942.249.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இயக்குநராக மட்டுமல்லாமல், சமீபகாலமாக படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து, தனது நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/dont-lie-down-in-agony-for-any-reason-selvaraghavans-advice-740689">இயக்குநர் செல்வராகவன்</a>. </p><p>இதனிடையே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர் செல்வராகவன். அவ்வப்போது அவர் பதிவிடும் பதிவுகளும் ரசிகர்களிடையே பெரும் கவனம் ஈர்க்கும். </p><p>அந்தவகையில், தற்போது அவர் ஒரு பதிவை வெளியிட்டு ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார். அப்பதிவில்.,</p><p>“யாரையும் யாரையும் யாரையும் வாழ்க்கையில்  நம்பாதீர்கள்.  எப்பொழுது யார் கவிழ்ப்பார்கள் என்று சொல்லவே முடியாது.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p><p>இப்பதிவால் அவரது குடும்பத்தில் ஏதேனும் பிரச்னையா என இணையவாசிகள் கேள்வி எழுப்பிவருகின்றனர். சமீபகாலமாகவே அவரது மனைவியுடன் பிரச்னை என்பதுபோல தகவல்கள் பரவிவரும் நிலையில் இந்த பதிவு கவனம் ஈர்த்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பெரம்பூர் மக்களின் 30 ஆண்டு கோரிக்கை நிறைவேறியது: முதலமைச்சர் விஜய்க்கு பொதுமக்கள் நன்றி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/peoples-thanks-to-cm-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/peoples-thanks-to-cm-vijay#comments</comments><guid isPermaLink="false">b5502e91-183e-4273-80cd-c819909ce11e</guid><pubDate>Fri, 28 Aug 2026 08:56:36 +0000</pubDate><atom:updated>2026-08-28T08:56:36.570Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,Perambur,tvk,பெரம்பூர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/furepv2d/perambur.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பெரம்பூர் கணபதி தெரு, ராமகிருஷ்ணன் தெரு இடையே சாலை அமைக்கப்பட்டு உள்ளது.]]></media:title><media:description type="html"><![CDATA[ பெரம்பூர் கணபதி தெரு, ராமகிருஷ்ணன் தெரு இடையே சாலை அமைக்கப்பட்டு உள்ளது.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/furepv2d/perambur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கணபதி தெரு, ராமகிருஷ்ணன் தெரு இடையே சாலை வசதி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதி மக்களின் 30 ஆண்டு கோரிக்கை நிறைவேறி இருக்கிறது.</strong></em></p><p>பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட  கணபதி தெரு மற்றும் ராமகிருஷ்ணா தெரு இடையே போதுமான சாலை வசதிகள் இல்லை. இதனால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை இருந்தது. </p><p>எனவே இப்பகுதியில் பாதை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் 30 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இது நிறைவேற்றப்படாமல் இருந்தது.</p><p>இந்த நிலையில் தனது சொந்த தொகுதி மக்களின் 30 ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக முதலமைச்சர் விஜய்யின் உத்தரவுப்படி கணபதிதெரு, ராம கிருஷ்ணன் தெரு இடையே பாதை ஏற்படுத்தப்பட்டு சாலை அமைக்கப்பட்டு உள்ளது.</p><p>இதன் மூலம் மாணவர்கள் சிரமமின்றி பள்ளிக்கு செல்ல முடியும். இதனை அப்பகுதி மக்கள் வரவேற்று உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, கணபதி தெரு, ராமகிருஷ்ணன் தெரு இடையே சாலை வசதி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதி மக்களின் 30 ஆண்டு கோரிக்கை நிறைவேறி இருக்கிறது.</p><p>முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்க்கு</a> எங்களது நன்றி. இதுபோலவே, பெரம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள அடிப்படை வசதிகள், கழிவுநீர் தேங்குவதை தடுக்கவும் மற்றும் தெரு விளக்குகள் எரியாமல் இருப்பதை  கண்டறிந்து மாற்றி அமைப்பது உள்ளிட்ட பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும், அனைத்து பகுதிகளிலும் சாலை வசதிகள் ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவித்து உள்ளனர் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>செப்டம்பர் 1-ந்தேதி நடைபெற இருந்த தமிழ் சினிமா வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு - 
தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/tamil-cinema-strike-postponed-from-september-1</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/tamil-cinema-strike-postponed-from-september-1#comments</comments><guid isPermaLink="false">287e708c-eaca-4bb1-a5f0-67ace0d3dfb6</guid><pubDate>Fri, 28 Aug 2026 08:30:04 +0000</pubDate><atom:updated>2026-08-28T08:30:04.907Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தயாரிப்பாளர்கள் சங்கம்,Tamil Film Producers Council,cm vijay,முதலமைச்சர் விஜய்,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan,Kollywood Strike,Strike Postponed,வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/fyg90v9n/Tamil-Film-Producers-Council" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tamil Film Producers Council ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/fyg90v9n/Tamil-Film-Producers-Council?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திரையரங்குகளில் வெளியிடும் திரைப்படங்களை 8 வாரங்கள் கழித்து மட்டுமே ஓடிடியில் வெளியிட வேண்டும் என விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்தது.</p><h2>வேலை நிறுத்தம்</h2><p>தயாரிப்பாளர்களுடன் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளதாக கூறி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்</a> மற்றும் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் வருகிற 1-ந்தேதி முதல் புதிய தமிழ் திரைப்படங்களை வெளியிடமாட்டோம் எனவும் புதிய படப்பிடிப்புகள் நடைபெறாது என வேலை நிறுத்தத்தை அறிவித்தது. </p><p>தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அறிவிப்பு திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><p>முன்னணி கதாநாயகர்கள் நடித்துள்ள பெரிய பட்ஜெட் படங்கள், சிறு பட்ஜெட் படங்களும் வெளியாக இருந்த நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தம் திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D">வேலை நிறுத்தத்தை</a> கைவிட வேண்டும் என அரசு மற்றும் பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்த நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இன்று வேலை நிறுத்தத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்து உள்ளது.</p><h2>தயாரிப்பாளர்கள் மனு</h2><p>இதுகுறித்து<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D"> தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்</a> மற்றும் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் விடுக்கப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,</p><p>தமிழ்த் திரைப்படத்துறையில் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு கவனத்திற்கு கொண்டு சேர்க்கும் வகையில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், மற்றும் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகியோர் இணைந்து கடந்த 26-ந்தேதி அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ராஜ்மோகனை சந்தித்து திரைத்துறையில் உள்ள பிரச்சினைகளை எடுத்துரைத்து மனுவாக அளித்துள்ளோம்.</p><h2>அமைச்சர் ராஜ்மோகன் அறிவுறுத்தல்</h2><p>அந்த மனுவினை பரிசீலித்த <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D">அமைச்சர் ராஜ்மோகன்</a> சம்பந்தப்பட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்திற்கும் தற்போது தமிழ்நாட்டில் திரைப்பட வெளியீட்டில் என்ன நடைமுறை உள்ளதோ அதனை தொடர்ந்து பின்பற்றுங்கள்.</p><p>சட்டசபை கூட்டத் தொடர் முடிந்தவுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள், ஆகியோரை தமிழ்நாடு அரசு அழைத்து மேற்படி பிரச்சினைக்கு தீர்வு காணும் என்று தெரிவித்துள்ளார். </p><p>மேலும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களையும் தற்போது வேலை நிறுத்தம் என்பது வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.</p><h2>வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு</h2><p>மேற்படி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதலமைச்சர் ஜோசப் விஜய்யின்</a> கவனத்திற்கு கொண்டு சென்று, முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலோடு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று உறுதியாக தெரிவித்ததின் அடிப்படையில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் இணைந்து செப்டம்பர் 1-முதல் அறிவித்த புதிய திரைப்படங்கள் வெளியீடு, படப்பிடிப்பு பணிகள், போஸ்ட் புரொடக்‌ஷன் போன்ற வேலை நிறுத்தம் தற்போது ஒத்திவைக்கப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நேபாள பேரழிவு ஆரம்பம்தான்.. சீனா கட்டும் அணையால்  இந்திய மாநிலங்கள் அழியும் அபாயம்</title><link>https://www.maalaimalar.com/news/world/the-disaster-in-nepal-is-just-the-beginning-indian-states-in-danger-of-total-destruction-due-to-the-dam-built-by-china</link><comments>https://www.maalaimalar.com/news/world/the-disaster-in-nepal-is-just-the-beginning-indian-states-in-danger-of-total-destruction-due-to-the-dam-built-by-china#comments</comments><guid isPermaLink="false">bf2cfb1d-44a8-4a93-ad1a-f17a245a53e9</guid><pubDate>Fri, 28 Aug 2026 08:24:40 +0000</pubDate><atom:updated>2026-08-28T08:24:40.112Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>China,சீனா,நேபாளம்,nepal,வெள்ளம்,flood,வடகிழக்கு மாநிலங்கள்,northeastern states,dam,அணை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/ah2x5w8l/tn-16.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சீனா கட்டும் அணை]]></media:title><media:description type="html"><![CDATA[ சீனா கட்டும் அணை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/ah2x5w8l/tn-16.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">நேபாளத்தில் </a>நேற்று முன் தினம் ஏற்பட்ட திடீர் <a href="https://www.maalaimalar.com/news/world/broken-dam-in-tibet-risk-of-flooding-again-in-nepal-warning-to-people">வெள்ளப்பெருக்கில் </a>பலியானோர் எண்ணிக்கை 469 ஆக உயர்ந்துள்ளது.  2015 நிலநடுக்கத்திற்குப் பிறகு நேபாளத்தில் ஏற்பட்ட மிக மோசமான பேரிடர் இது. </p><p>இதில் நூற்றுக்கணக்கானோர் மாயமாகியுள்ள நிலையில் அவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.</p><h2>எப்படி ஏற்பட்டது?</h2><p>இமயமலையில் திபெத் சீன எல்லையில் உற்பத்தியாகும் கைரோங் நகருக்கு அருகே ஏற்பட்ட பனிச்சரிவு தான் இந்த வெள்ளபெருக்குக்கு காரணம் என்று கூறப்படுகிறது.</p><p>போதே கோஷி நதியில் பனிப்பாறைகள் விழுந்து ஏற்பட்ட அடைப்பினால் அதிகளவில் நீர் அடைபட்டு அணை உடைந்து இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.</p><p>திபெத்தில் மீண்டும் அணை உடைந்ததால் நேபாளத்தில் இன்று மீண்டும் வெள்ளபெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.</p><p>மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதால், திபெத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த மீட்புப் பணிகளை சீனா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக சீன அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p> <h2>பிரம்மாண்ட அணை</h2><p>இமயமலை உலகிலேயே மிக அதிகமான நிலநடுக்க அபாயம் கொண்ட மலைத்தொடராகும்.</p><p>இந்த பேரிடர், இந்தியா-சீனா எல்லைக்கு அருகில் சீனா கட்டி வரும் 'மெடோக்' (Medog) என்ற பிரம்மாண்டமான நீர்மின் அணை மீதான சர்வதேச கவனத்தை திருப்பியுள்ளது.</p> <p>சீன ஆக்கிரமிப்பில் உள்ள திபெத் தன்னாட்சிப் பகுதியின் மெடோக் பகுதியில், யார்லுங் சாங்போ (இந்தியாவில் பிரம்மபுத்திரா) நதியின் குறுக்கே சீனா 60,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன்கொண்ட அணையை அமைத்து வருகிறது.</p><p>2033க்குள் பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ள இந்த அணை, நிலநடுக்கங்கள் அதிகம் நிகழக்கூடிய அதிபாயகரமான மண்டலத்தில் அமைந்துள்ளது.</p><p>எனவே இந்த அணை ஒரு "நீர் வெடிகுண்டு" போன்றது என எச்சரிக்கப்படுகிறது.</p> <h2>எச்சரிக்கை</h2><p>இந்திய மூலோபாய நிபுணர் பிரம்மா செல்லானி, "இமயமலை மண்டலத்தில் உலகின் மிகப்பெரிய அணையைத் தொடர்ந்து கட்டும் சீனாவின் அறியாமையின் மீது இந்த நேபாள பேரிடர் சர்வதேச கவனத்தைத் திருப்புவதோடு ஒரு முக்கிய எச்சரிக்கையும் விடுத்துள்ளது.</p><p>இந்திய திபெத் எல்லைக்கு அருகில் அமையும் இத்திட்டம், கட்டுமானத்தில் உள்ள ஒரு நீர் வெடிகுண்டாகும்.</p><p>இது நேபாளத்தை தாண்டி இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை மூழ்கடிப்பதோடு, வங்கதேசத்திலும் பேரழிவை ஏற்படுத்தும்" என்று எச்சரித்துள்ளார்.</p> <p>முன்னாள் இந்தியத் தூதர் ராஜீவ் டோக்ராவும், சீனா இந்த 60,000 மெகாவாட் அணையை நிறைவு செய்தால் இந்தியாவின் வடகிழக்குப் பகுதிக்கு மிகப்பெரிய ஆபத்து காத்திருப்பதாகக் கவலை தெரிவித்துள்ளார்.</p><p>சுமார் 167 பில்லியன் டாலர் செலவில் கட்டப்படும் இந்த மெடோக் அணை திட்டத்தின் பாதுகாப்பு குறித்து சீன அரசு சார்ந்த புவியியல் ஆய்வு அமைப்பின் வல்லுநர்களே கடந்த ஜூலை மாதம் ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தனர்.</p><p>அதில் இந்த மெடோக் அணை அமையவிருக்கும் தளத்திற்கு நேர் அடியில் Paizhen Fault எனப்படும் செயலில் உள்ள Active fault line, அதாவது நிலநடுக்க அபாய கோடு இருப்பது கண்டறியப்பட்டது குறிப்பிடப்பட்டுள்ளது.</p> <figure><img alt=" &apos;U&apos; வளைவு 
" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/cw6knttl/tn-17.jpg" /><figcaption> 'U' வளைவு 
</figcaption></figure><h2>இந்தியாவுக்கு பேராபத்து</h2><p>திபெத்தில் இருந்து பாயும் யார்லுங் சாங்போ நதி, அருணாச்சல பிரதேசத்தில் 'சியாங்' என்ற பெயரில் நுழைந்து, பின்னர் அசாமில் 'பிரம்மபுத்திரா'வாக உருவெடுத்து வங்கதேசத்திற்குச் செல்கிறது.</p><p>நதி மிகப்பெரிய 'U' வளைவை எடுக்கும் நம்சா பர்வா மலைப் பகுதியில் தான் சீனா இந்த அணையை கட்டுகிறது.</p> <p>கீழ்நோக்கி பாயும் நதியின் நீரை கட்டுப்படுத்தும் ஆற்றல் சீனாவிற்கு செல்வதால், மழைக்காலத்தில் திடீரென தண்ணீரை திறந்துவிட்டால் இந்தியாவில் கடுமையான வெள்ளமும், வறட்சிக் காலத்தில் தண்ணீரைத் தேக்கினால் விவசாயப் பாதிப்பும் ஏற்படும்.</p><p>மேலும் அணையானது நிலநடுக்க மண்டலத்தில் அமைந்திருப்பதால், அணை உடையும் பட்சத்தில் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம் மற்றும் அசாம் மாநிலங்கள் முற்றிலும் அழியும் அபாயம் உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மோசமாக பாதிக்கப்பட்ட தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க என்ன தயக்கம்?- அன்புமணி கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-question-to-tn-govt</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-question-to-tn-govt#comments</comments><guid isPermaLink="false">5f108595-788b-461d-9735-8a47542324f9</guid><pubDate>Fri, 28 Aug 2026 08:17:39 +0000</pubDate><atom:updated>2026-08-28T08:17:39.905Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/g89lhy44/anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/g89lhy44/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். அத்துடன் விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க.  தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>வறட்சி பாதிப்பு</strong></h2><p>கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை சுமார் 30% அளவுக்கு குறைவாக பெய்திருப்பதால் பாதிக்கப்பட்டுள்ள 101 வட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும், குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவும் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் கர்நாடக அரசு அறிவித்திருக்கிறது.  இத்தகைய சூழலில் கர்நாடகத்தை விட கொடுமையாக பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டின் பெரும்பான்மையான பகுதிகள் இன்னும் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்படாதது ஏன்? என்ற வினா எழுகிறது.</p> <p>கர்நாடகத்தில் ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஆகஸ்ட் 26-ஆம் தேதி வரை கர்நாடகத்தில் 666 மி.மீ மழை பெய்ய வேண்டிய நிலையில், 465 மி.மீ மழை மட்டுமே பெய்திருக்கிறது;  வழக்கமாக சாகுபடி செய்யப்படும் 84.10 லட்சம் ஹெக்டேருக்கு பதிலாக 60 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில், அதாவது 71 விழுக்காடு மட்டுமே  சாகுபடி செய்யப்பட்டிருப்பது தான் 101 வட்டங்கள் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருப்பதற்கு காரணமாக கூறப்பட்டிருக்கிறது.</p><p>ஆனால், தமிழகத்தின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது.  ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் 180 மிமீ அளவுக்கு மட்டுமே மழை பெய்திருக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த ஆண்டு  6.31 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட நிலையில் நடப்பாண்டில்  சுமார் 2 லட்சம்  ஏக்கரில் மட்டுமே  குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் அளவில் வெறும் 30% மட்டும் தான்.</p><h2><strong>பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்</strong></h2><p>தமிழகத்தில் மொத்தம் உள்ள 14,141 நீர்நிலைகளில், 4208 நீர்நிலைகள், அதாவது 29.25% நீர்நிலைகள் முற்றிலுமாக வறண்டு விட்டன. மேலும், 5,814 நீர்நிலைகளில் 1% முதல் 25% வரை மட்டுமே நீர் உள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் பயனளிக்கும் வகையில் தண்ணீர் இல்லை.  காவிரி பாசன மாவட்டங்களில் காவிரி, கல்லணைக் கால்வாய், வெண்ணாறு ஆகிய ஆறுகளில் இருந்து கால்வாய்கள் மூலம் தண்ணீர் பெறும் 737 நீர்நிலைகளில் 694 நீர்நிலைகள், அதாவது 95% தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கின்றன.</p><p>நிலத்தடி நீர்மட்டமும் வேகமாக குறைந்து விட்டதால்  காவிரி பாசன மாவட்டங்களில் குறுவைப் பயிர்கள் கருகுகின்றன.  இதே நிலை இன்னும் சில வாரங்களுக்கு நீடித்தால் தமிழ்நாட்டில் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து  ஏற்பட்டிருக்கிறது.  நிலைமை இந்த அளவுக்கு மோசமாக மாறியிருக்கும் நிலையில் தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து வறட்சி தணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது தான் சிறந்ததாக இருக்கும்.</p><p>எனவே, தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். அத்துடன் விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்; குறுவை சாகுபடி செய்யாத விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 வீதமும், குறுவை சாகுபடி செய்து நீரின்றி பயிர்கள் வாடியதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதமும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். சம்பா சாகுபடி செய்யமுடியாத நிலை  உருவாகும் சூழலில் அதனால் பாதிக்கப்படும் உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.10000 உதவி வழங்க வேண்டும். நிலமில்லா தொழிலாளர்களுக்கு ஒருமுறை உதவியாக ரூ.25,000 வழங்க வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.972 கோடியில் கொள்ளிடம்-வெள்ளாறு, நொய்யல் ஆறுகளை பாதுகாக்க நடவடிக்கை-
அமைச்சர் என்.ஆனந்த்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/government-allocates-rs-972-crore-to-safeguard-key-tamil-nadu-rivers</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/government-allocates-rs-972-crore-to-safeguard-key-tamil-nadu-rivers#comments</comments><guid isPermaLink="false">65d5911c-cc30-45a3-8621-17db84d1664e</guid><pubDate>Fri, 28 Aug 2026 08:16:59 +0000</pubDate><atom:updated>2026-08-28T08:16:59.208Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,rivers,TN assembly,ஆறுகள்,அமைச்சர் என் ஆனந்த்,MInister N Anand</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/4twzznhh/Minister-Anand.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister N Anand]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/4twzznhh/Minister-Anand.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ரூ.972 கோடியில் கொள்ளிடம்-வெள்ளாறு, நொய்யல் ஆறுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.</strong></em></p><p>தமிழக சட்டப்பேரவை யில் இன்று கேள்வி நேரத்தின்போது, சிதம்பரம் மற்றும் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏக்கள் எழுப்பிய கோரிக்கைகளுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் பதில் அளித்தார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><p>கொள்ளிடம் ஆற்றின் கடைமடை பகுதியில் தடுப்புச்சுவர் பருவநிலை மாற்றத்தின் காரணமாக கடல் நீர்மட்டம் உயர்ந்து, கொள்ளிடம் ஆற்றின் முகத்துவாரம் வழியாக சுமார் 18 கிலோமீட்டர் தூரத்திற்கு கடல்நீர் உட்புகுவதால் சுற்றியுள்ள கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p>இதனைத் தடுக்கும் வகையில், <a href="https://www.maalaimalar.com/news/national/boy-swam-from-dharamdar-bay-to-gateway-of-india-in-8-hours-576322" rel="nofollow">வங்காள விரிகுடா</a> கடலிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில், கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் திருக்கழிப் பாலை கிராமத்திற்கும், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் அளக்குடி கிராமத்திற்கும் இடையே, கொள்ளிடம் ஆற்றின் கடைமடை பகுதியில் சுவர் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p>இந்தத் திட்டத்தின் மூலம் வீரன் கோயில்திட்டு, கொட்டாமேடு, கவரப்பட்டு, ஜெயங்கொண்டபட்டினம், அளக்குடி, ஆச்சாள்புரம், கொள்ளிடம் உள்ளிட்ட பல கிராமங்கள் பயன்பெறுவது டன், நிலத்தடி நீர் செறி வூட்டல் மூலம் சுமார் 13,220 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும்.</p><p>இத்திட்டத்திற்காக முதற்கட்டமாக ரூ.773 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது துறை மேற்கொண்ட மாதிரி ஆய்வுகளின் முடிவுகளின் அடிப்படையில் திருத்தப்பட்ட விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது. அது பெறப்பட்டவுடன் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.</p><p>வெள்ளாற்றில் ரூ.194 கோடியில் தடுப்பணை மேலும், கடல் நீர் உட்புகுவதைத் தடுக்கும் வகையில் கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம், தீத்தாம்பாளையம் கிராமம் அருகே ஆதிவராகநல்லூர் பகுதியில் வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p>பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், ஆதிவராக நல்லூர் பகுதியில் தடுப்பணை அமைப்பதற்கான திட்டத்தில் நில எடுப்புப் பணிக்கு ரூ.44.39 கோடி உட்பட மொத்தம் ரூ.194 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு துறையின் பரிசீலனையில் உள்ளது.</p><p>தொழிற்சாலைகளிலிருந்து கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதைத் தடுக்க <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D" rel="nofollow">தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்</a> தொடர்ந்து கண்காணித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.</p><p>திருப்பூர் மாநகராட்சி பகுதிக்குள் மங்கலம் பாலம் முதல் மணியகாரம் பாளையம் பாலம் வரையிலான நொய்யல் ஆற்றுப் பகுதியில், ஓடைகள் மற்றும் மழைநீர் வடிகால்கள் வழியாக சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நீண்ட காலமாக கலந்ததன் காரணமாக ஆகாயத்தாமரை, சீமைக்கரு வேலம் உள்ளிட்ட செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன.</p><p>இதனை கருத்தில் கொண்டு, முதலமைச்சர்  விஜய்யின் அறிவுறுத்தலின் படி, நொய்யல் ஆற்றை புனரமைக்கும் பணிக்காக ரூ.5 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, தற்போது அரசின் பரிசீலனையில் உள்ளது.</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதி இடைத்தேர்தல் தடையை நீக்கக் கோரி முதலமைச்சர் விஜய் ஐகோர்ட்டில் மனு தாக்கல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-files-plea-to-allow-byelections-in-five-barred-constituencies</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-files-plea-to-allow-byelections-in-five-barred-constituencies#comments</comments><guid isPermaLink="false">4709b298-fd6f-4f21-8ccb-ab1d2a4efc7f</guid><pubDate>Fri, 28 Aug 2026 07:55:57 +0000</pubDate><atom:updated>2026-08-28T07:55:57.623Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Madras High Court,by-election,சென்னை ஐகோர்ட்டு,இடைத்தேர்தல்,cm vijay,முதலமைச்சர் விஜய்,ராஜினாமா,Election Petition</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/6s2heicu/By-Election" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ By-Election]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/6s2heicu/By-Election?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>5 தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கப்பட்ட வழக்கில், <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதலமைச்சர் விஜய்</a> ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்தார். ராஜினாமா செய்தபோது வழக்கு இல்லை, தடையை நீக்கி தேர்தல் நடத்த வேண்டும் என்றார்.</p><h2><strong>இடைத்தேர்தலுக்கு தடை</strong></h2><p>தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளதால் திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதி களுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் <a href="https://www.maalaimalar.com/topic/chennai-high-court">சென்னை ஐகோர்ட்டில்</a> பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.</p><p>இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு, 5 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் அறிவிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.</p><p>தேர்தல் ஆணையமும், தேர்தல் வழக்கு முடியும் வரை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட மாட்டாது என பதில்மனு தாக்கல் செய்திருந்தது.</p><h2><strong>ராஜினாமா செல்லும்</strong></h2><p>இந்த வழக்கில் எதிர் மனுதாரர், <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதலமைச்சர் விஜய் </a>தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், திருச்சி கிழக்கு தொகுதி வெற்றியை எதிர்த்து ஜூன் 17-ந்தேதி தான் தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. </p><p>ஆனால் மே 10-ந்தேதியே தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டேன். என் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்ற நாளில் எந்த தேர்தல் வழக்கும் நிலுவையில் இல்லை.</p><p>காலியான தொகுதிக்கு தேர்தல் வழக்கு தாக்கல் செய்ய முடியாது. இடைத் தேர்தல் அறிவிக்க தடை கோரி வழக்கு தாக்கல் செய்தவர், தேர்தல் வழக்கு தாக்கல் செய்தவரல்ல. தொகுதியின் வாக்காளருமல்ல.</p><h2><strong>வழக்கு உள்நோக்கம்</strong></h2><p>திருச்சி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என்ற உள்நோக்கத்தில், அடிப்படை உரிமையில்லாமல் , இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. </p><p>தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், தொகுதியின் லட்சக்கணக்கான மக்கள், எம்.எல்.ஏ. இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். பொது நலனுக்கு எதிரான இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல.</p><h2><strong>இடைத்தேர்தல் அவசியம்</strong></h2><p>5 தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக தேர்தல் வழக்கு தாக்கல் செய்தவர்களுக்காக, இந்த பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது.</p><p>திருச்சி கிழக்கு தொகுதியில் 20 பேர் போட்டியிட்ட நிலையில், தேர்தல் வழக்கை தாக்கல் செய்தவரை வெற்றி பெற்றவராக அறிவிக்க முடியாது. காலியாக உள்ள திருச்சி கிழக்கு தொகுதிக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தல் ஆணையம், இடைத்தேர்தல் அறிவிக்க வேண்டும்.</p><h2><strong>தடை நீக்குக</strong></h2><p>இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கப்பட்ட 5 தொகுதிகளிலும் பல முனைப் போட்டி நடந்து உள்ளது. இரு வேட்பாளர்கள் மட்டும் போட்டியிடவில்லை என்பதால், பொதுநலன் கருதி, இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>புழல் ஜெயிலை தொடர்ந்து காவல் நிலையத்திலும் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-suddenly-inspection-puzhal-jail</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-suddenly-inspection-puzhal-jail#comments</comments><guid isPermaLink="false">889cb67e-f14a-4a9e-9b34-0a85e6df6b15</guid><pubDate>Fri, 28 Aug 2026 07:49:21 +0000</pubDate><atom:updated>2026-08-28T07:49:21.111Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,புழல் சிறை,Puzhal Jail,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/9tzoqulb/vijay.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ புழல் ஜெயிலை தொடர்ந்து காவல் நிலையத்திலும் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு]]></media:title><media:description type="html"><![CDATA[ புழல் ஜெயிலை தொடர்ந்து காவல் நிலையத்திலும் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/9tzoqulb/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதலமைச்சர் விஜய்யை பார்த்ததும் கைதிகள் உற்சாகம் அடைந்தனர். அவர்களிடம் பேசிய விஜய் உங்களை நன்றாக கவனித்து கொள்கிறார்களா? ஏதேனும் குறைகள் இருக்கிறதா? என்று கேட்டறிந்தார்.</strong></em></p><p>முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்</a> அவ்வப்போது அதிரடியாக அரசு அலுவலகங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகிறார். </p><p>கடந்த மாதம் எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரி, நெமிலிசேரியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிறுவனம், கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரெயில் நிறுவனம் ஆகியவற்றை அவர் ஆய்வு செய்தார். </p><h2><strong>திடீர் ஆய்வு</strong></h2><p>இன்று திடீரென புழல் ஜெயிலில் முதலமைச்சர் விஜய் ஆய்வு மேற்கொண்டார்.  அவர் வருவதை கேள்விபட்டதும் ஜெயில் வாசலில் ஏராளமானவர்கள் திரண்டனர். முதலமைச்சர் விஜய் சென்ற கார் நேரடியாக ஜெயில் வளாகத்துக்குள் சென்றது. அங்கு அவரை சிறைத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். </p><p>அதை தொடர்ந்து தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் ஜெயிலுக்கு சென்றார். விஜய்யை பார்த்ததும் கைதிகள் உற்சாகம் அடைந்தனர். அவர்களிடம் பேசிய விஜய் உங்களை நன்றாக கவனித்து கொள்கிறார்களா? ஏதேனும் குறைகள் இருக்கிறதா? என்று கேட்டறிந்தார்.</p><p>அதைத் தொடர்ந்து ஜெயிலின் மற்ற பகுதிகளையும் சுற்றிப்பார்த்து கைதிகளிடம் பேசி குறகைளை கேட்டார். பின்னர் அதிகாரிகளிடம் சிறைத்துறைக்கு என்னென்ன தேவை என்று கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து புழல் காவல்நிலையத்துக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார்.</p>]]></content:encoded></item><item><title>திபெத்தில் உடைந்த அணை.. நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு அபாயம் - மக்களுக்கு எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/world/broken-dam-in-tibet-risk-of-flooding-again-in-nepal-warning-to-people</link><comments>https://www.maalaimalar.com/news/world/broken-dam-in-tibet-risk-of-flooding-again-in-nepal-warning-to-people#comments</comments><guid isPermaLink="false">df764878-cec0-4245-8423-9dfef3c39533</guid><pubDate>Fri, 28 Aug 2026 07:48:32 +0000</pubDate><atom:updated>2026-08-28T07:48:32.185Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாளம்,nepal,வெள்ளம்,flood,dam,திபெத்,Tibet,அணை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/0n11niup/tn-13.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நேபாள வெள்ளப்பெருக்கு ]]></media:title><media:description type="html"><![CDATA[ நேபாள வெள்ளப்பெருக்கு ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/0n11niup/tn-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திபெத்தில் மற்றொரு அணை உடைந்ததால் மீண்டும் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">நேபாளத்தில் </a>வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><h2>நேபாள வெள்ளம்</h2><p>நேபாளத்தில் நேற்று முன் தினம் ஏற்பட்ட <a href="https://www.maalaimalar.com/news/world/is-china-responsible-for-the-floods-in-nepal-a-shocking-backstory">திடீர் வெள்ளப்பெருக்கில்</a> பலியானோர் எண்ணிக்கை 469 ஆக உயர்ந்துள்ளது.</p><p>நூற்றுக்கணக்கானோர் மாயமாகியுள்ள நிலையில் அவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.</p><p>இமயமலையில் திபெத் சீன எல்லையில் உற்பத்தியாகும் கைரோங் நகருக்கு அருகே ஏற்பட்ட பனிச்சரிவு தான் இந்த வெள்ளபெருக்குக்கு காரணம் என்று கூறப்படுகிறது.</p><p>போதே கோஷி நதியில் பனிப்பாறைகள் விழுந்து ஏற்பட்ட அடைப்பினால் அதிகளவில் நீர் அடைபட்டு அணை உடைந்து இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.</p><h2>புதிய ஏரிகள்</h2><p>முன்னதாக திபெத் பகுதியில் மீண்டும் புதிதாக ஒரு பெரிய ஏரி உருவாகி உள்ளதாக சீனா எச்சரிக்கை விடுத்தது.</p><p>சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் கியிராங் எல்லைத் துறைமுகத்திற்கு அருகே ஏற்பட்ட நிலச்சரிவு ஒரு தடுப்பு ஏரியை உருவாக்கி உள்ளது என்றும் இதனால் அடுத்த 3 நாட்களில் மீண்டும் வெள்ள அபாயம் உள்ளதாகவும் சீனா தெரிவித்தது.</p><p>நேற்று காலை நிலவரப்படி, அந்த ஏரியில் சுமார் 2 மில்லியன் கன மீட்டர் நீர் தேங்கியிருந்தது.</p><p>தொடர்ந்து மழை பெய்து வருவதால், அடுத்த மூன்று நாட்களில் நீர்வரத்து சுமார் 3 மில்லியன் கன மீட்டரை எட்டும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.</p><p>இது ஏரி உடைந்து, கீழ்நிலைப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.</p><p>நேற்று காலை நிலவரப்படி, அந்த ஏரியில் சுமார் 20 லட்சம் கன மீட்டர் நீர் தேங்கியிருந்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், அடுத்த 3 நாட்களில் நீர்வரத்து சுமார் 30 லட்சம் கன மீட்டரை எட்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>இந்தத் தடுப்பு ஏரி, பெருமளவிலான நீரைத் தடுத்து நிறுத்தி வருகிறது. இதில் பாறைத் தடுப்பு உடைந்தால், அந்த நீர் நேபாளத்தை நோக்கி கீழ்நோக்கிப் பாயும் என்று எச்சரிக்கப்பட்டது.</p><p>இதையடுத்து தங்களது எல்லைக்கு அருகே 2 தடுப்பு ஏரிகள் உருவானதைத் தொடர்ந்து, நேபாளமும் சீனாவும் புதிய வெள்ள எச்சரிக்கைகளை விடுத்தன.</p><h2>மீண்டும் வெள்ளப்பெருக்கு?</h2><p>இந்நிலையில் திபெத் பகுதியில் உள்ள மற்றொரு அணை உடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் திபெத் பகுதியில் உள்ள ஏரியின் அணை உடைந்துவிட்டதாக கூறப்படுகிறது.</p><p>இதையடுத்து மீட்புக் குழுவினரும் அப்பகுதி மக்களும் பாதுகாப்பான, உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு நேபாளக் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.</p><p>இதுதொடர்பாக நேபாள போலீசார் கூறும்போது, திபெத் பகுதியில் மீண்டும் ஒரு நீர் அணை உடைந்த தாகத் தகவல் கிடைத்து உள்ளது. </p><p>எனவே தற்போது மீட்புப்பணியில் ஈடுபட்டு உள்ள மீட்புக்குழுவினர், பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கைகளை விடுத்து உள்ளோம். </p><p>அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளோம் என்றனர்.</p><p>மீண்டும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதால் நேபாளத்தில் மீட்புப்ப ணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. அங்கு ராணுவத்தினர், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.</p><p>இதற்கிடையே ரசுவா மாவட்டத்தில் உள்ள ஒரு ஏரி கரை உடைந்து நீர்மட்டம் உயர்ந்து வருவ தாக அதிகாரிகள் தெரி வித்தனர்.</p><h2>திபெத்</h2><p>காட்டாற்று வெள்ளம் காரணமாக திபெத்தில் 550க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர் இதில் 260 பேர் வெளிநாட்டினர் ஆவர். </p><p>இந்த நிலையில் இமயமலை பகுதியில் பயங்கர பனிச்சரிவால் உருவான ஏரியிலிருந்து மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால் திபெத்தில் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்புப் பணிகளை தற்காலிகமாக நிறுத்துமாறு மீட்புக் குழுவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சீன அரசு ஊடகங்கள் தெரிவித்து உள்ளன.</p> <p>இதற்கிடையே திபெத்தில் மீட்புப்பணிகள் குறித்து சீன அதிபர் ஜின்பிங், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். </p><p>இதில் பனிப்பாறை மற்றும் தடுப்பு ஏரிகளைத் தீவிரமாகக் கண்காணிப்பது, காணாமல் போனவர்களைக் கண்டறியும் முயற்சிகள், நேபாளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவசரகால உதவி வழங்குவது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.</p> ]]></content:encoded></item><item><title>சமத்துவ இடுகாடு வைத்துள்ள ஊராட்சிகளுக்கு ரூ.10 லட்சம் பரிசு- அமைச்சர் வன்னி அரசு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/equal-burial-grounds-village-councils-10-lakh-reward-vanni-arasu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/equal-burial-grounds-village-councils-10-lakh-reward-vanni-arasu#comments</comments><guid isPermaLink="false">fce9a202-2657-484a-a277-cffa3f2e4ed2</guid><pubDate>Fri, 28 Aug 2026 07:44:05 +0000</pubDate><atom:updated>2026-08-28T07:44:05.684Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,minister vanni arasu,அமைச்சர் வன்னி அரசு,சமத்துவ இடுகாடு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/dvx0u6t9/vanni-arasu.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Vanni arasu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/dvx0u6t9/vanni-arasu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சமத்துவ இடுகாடு வைத்துள்ள ஊராட்சிகளுக்கு ரூ.10 லட்சம் பரிசு- அமைச்சர் வன்னி அரசு</p><p>சமூகநீதி துறை மானியக்கோரிக்கை விவாதங்கள் மீது அமைச்சர் வன்னி அரசு பதிலளித்தார்.</p><p>அப்போது, சட்டசபையில் இன்று நான் பேசுவது கன்னி உரையல்ல, வன்னி உரை என அமைச்சர் வன்னி அரசு தனது உரையை தொடங்கினார்.</p><p>அவர் கூறியதாவது:-</p><p>என்னை கைது செய்ய வேண்டும் என முழக்கமிடப்பட்ட அதே சபையில் என்னை அமரவைத்து அழகு பார்த்திருக்கிறார் திருமாவளவன்.</p><p>விடுதலை புலிகளுக்கு ஆதரவு அளித்ததால் திருமாவளவனை கைது செய், வன்னி அரசுவை கைது செய் என 2007-ல் சட்டசபையில் முழக்கமிட்டனர்.</p><p>எனது வெற்றியைவிட வன்னி அரசுவின் வெற்றிதான் முக்கியமானது என எனக்காக தேர்தல் பரப்புரை மேற்கொண்ட உதயநிதிக்கு நன்றி. சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>தீக்கிரையாக்கப்பட்ட குடிசைகளின் சம்பலில் இருந்து வந்தவன் நான். அமைச்சர் இருக்கையில் என்னை அமர வைத்த திருமா நாளையே அழைத்தாலும் போராட்டக் களத்திற்கு சென்றுவிடுவேன்.</p><p>பதவி, பரிசுக்காக நாங்கள் அரசியலுக்கு வரவில்லை. நாங்கள் பதவிக்காக போனோம் என யாரும் சொல்ல முடியாது. பொதுத்தொகுதியில் தலித்தை நிறுத்தவிடமாட்டோம் என்கின்றனர். ஆனால், 234 தொகுதியிலும் போட்டியிட சட்டத்தில் இடமுண்டு.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>அறிவிப்புகள்</h2><p>சமத்துவ இடுகாடு வைத்துள்ள ஊராட்சிகளுக்கு ரூ.10 லட்சம் பரிசு. சாதிய பிரச்சனைகள் அதிகம் நடக்கும் கிராமங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. </p><p>இந்த ஆண்டு மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் மேலவளவு கிராமத்திற்கு சிறப்பு கவனம் செலுத்த உள்ளோம்.</p><p>ஏகனாபுரம் மக்களின் கோரிக்கைக்கு இணங்க புதிய சமூக நலக்கூடம் கட்டித்தரப்படும்.</p><h2>"மேலவளவு" கிராமத்தில் அம்பேத்கர் படிப்பகம்</h2><p>மேலவளவு கிராமம் தொடர்ந்து சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு வருகிறது. அந்த கிராமத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்தி அங்கு அம்பேத்கர் படிப்பகம் உருவாக்கப்படும். சாதிய வன்கொடுமை இல்லாத கிராமமாக மேலவளவு கிராமம் மாற்றப்படும் என அமைச்சர் வன்னி அரசு அறிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>&quot;பாசம் எப்போதும் நிலைத்திருக்கட்டும்&quot; – பிரதமர் மோடி ரக்ஷா பந்தன் வாழ்த்து!</title><link>https://www.maalaimalar.com/news/national/nationwide-raksha-bandhan-celebrations-pm-modi-amit-shah-and-cms-extend-greetings</link><comments>https://www.maalaimalar.com/news/national/nationwide-raksha-bandhan-celebrations-pm-modi-amit-shah-and-cms-extend-greetings#comments</comments><guid isPermaLink="false">2b75f41e-36af-4d89-ab5d-812ba2969d09</guid><pubDate>Fri, 28 Aug 2026 07:33:29 +0000</pubDate><atom:updated>2026-08-28T07:33:29.946Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Amitshah,raksha bandhan,pm modi,பிரதமர் மோடி,Droupadi Murmu,ரக்ஷா பந்தன்,Indian Festivals</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/3fb8do7z/Raksha-Bandhan" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Raksha Bandhan ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/3fb8do7z/Raksha-Bandhan?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடு முழுவதும் இன்று <a href="https://www.maalaimalar.com/topic/raksha-bandhan">ரக்ஷா பந்தன்</a> பண்டிகை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. சகோதர-சகோதரிகளுக்கு இடையேயான அன்பையும், பாதுகாப்பையும் பலப்படுத்தும் இந்த உன்னத நாளில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட நாட்டின் முக்கியத் தலைவர்கள் மக்களுக்கு தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.</p><h2>பாரம்பரியத்தை நினைவூட்டிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு</h2><p>ரக்ஷா பந்தன் தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81">திரௌபதி முர்மு</a> விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், "இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் அங்கமாக ரக்ஷா பந்தன் விளங்கி வருகிறது.</p><p>நம்பிக்கையுடன் மணிக்கட்டில் கட்டப்படும் 'ராகி' கயிறு, பாதுகாப்பின் புனிதமான பிணைப்பாகக் கருதப்படுகிறது. 'ரக்‌ஷே, மா சலா, மா சலா' என்ற மந்திர வரிகள், இந்த பாதுகாப்பு பிணைப்பு என்றென்றும் தொடர வேண்டும் என்பதை உணர்த்துகின்றன.</p><p>ஒவ்வொரு உறவும் நம்பிக்கை, உணர்திறன், பரஸ்பர ஒத்துழைப்பு ஆகியவற்றின் தூண்களில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை இப்பண்டிகை நமக்கு நினைவூட்டுகிறது. </p><p>குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு இடையிலான உறவை வலுப்படுத்த இந்த நன்னாளில் நாம் உறுதியேற்போம். 'விக்சித் பாரத்' (வளர்ச்சியடைந்த இந்தியா) நோக்கிய பயணத்தில் ஆக்கப்பூர்வமான சிந்தனையோடு நாம் முன்னோக்கிச் செல்வோம்" என்று தெரிவித்துள்ளார்.</p><h2>"பாசம் எப்போதும் நிலைத்திருக்கட்டும்" – பிரதமர் மோடி</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF">பிரதமர் நரேந்திர மோடி</a> தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "ரக்ஷா பந்தன் திருநாளை முன்னிட்டு அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். இந்த புனிதமான பண்டிகை உங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் மகிழ்ச்சி, வளம் மற்றும் வெற்றியைக் கொண்டுவரட்டும். </p><p>சகோதரத்துவத்தின் மீதான பாசம், அன்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கை என்றென்றும் உடையாத பிணைப்பாக நீடிக்க வேண்டும் என்பதே எனது மனமார்ந்த விருப்பம்" என்று குறிப்பிட்டுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="hi" dir="ltr">रक्षाबंधन की बहुत-बहुत शुभकामनाएं। <br><br>यह पावन पर्व आप सभी के जीवन में खुशहाली, समृद्धि और सफलता लेकर आए। <br><br>स्नेह, अपनत्व और आपसी विश्वास की डोर सदैव अटूट बनी रहे, यही कामना है। <a href="https://t.co/bfH7GRVwUe">pic.twitter.com/bfH7GRVwUe</a></p>&mdash; Narendra Modi (@narendramodi) <a href="https://x.com/narendramodi/status/2093158719052005705?ref_src=twsrc%5Etfw">August 28, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2>"அன்பின் அடையாளம்" – மத்திய அமைச்சர் அமித் ஷா</h2><p>மத்திய உள்துறை அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE">அமித் ஷா </a>விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "சகோதர சகோதரிகளுக்கு இடையிலான அசைக்க முடியாத அன்பு மற்றும் நம்பிக்கையைப் போற்றும் புனிதமான ரக்ஷா பந்தன் திருநாளில், சக நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். </p><p>இந்த திருவிழா ஒவ்வொருவரின் வாழ்விலும் அமைதியையும், மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டு வர பிரார்த்திக்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="hi" dir="ltr">समस्त देशवासियों को भाई-बहन के अटूट स्नेह और विश्वास को समर्पित ‘रक्षाबंधन’ के पावन पर्व की हार्दिक शुभकामनाएँ।<br><br>यह पर्व सभी के जीवन में सुख, शांति और समृद्धि लेकर आए। <a href="https://t.co/iOVnSZT2l5">pic.twitter.com/iOVnSZT2l5</a></p>&mdash; Amit Shah (@AmitShah) <a href="https://x.com/AmitShah/status/2093161949454623013?ref_src=twsrc%5Etfw">August 28, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2>பள்ளி குழந்தைகளுடன் கொண்டாடிய டெல்லி முதல்வர்</h2><p>டெல்லி முதல்வர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE">ரேகா குப்தா</a>, பள்ளி குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்தார். டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பள்ளி மாணவிகள், முதல்வருக்கு ராகி கயிறுகளைக் கட்டி தங்களது அன்பை வெளிப்படுத்தினர்.</p><p>இதுகுறித்து முதல்வர் கூறுகையில், "டெல்லி முழுவதும் உள்ள விளிம்புநிலைச் சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகள், 'முக்கியமந்திரி ஜன சேவா சதன்' இல்லத்திற்கு வந்து ராக்கி கயிறுகளைக் கட்டினர். அவர்களின் புன்னகையும், உற்சாகமும், அவர்கள் வெளிப்படுத்திய அன்பும் இந்நிகழ்வை மிகவும் சிறப்பானதாக மாற்றின.</p><p>டெல்லியின் வீதிகளிலும் சந்துகளிலும் எண்ணற்ற குழந்தைகள் வளர்கிறார்கள்; அவர்களின் எதிர்காலம் இன்னும் எழுதப்பட வேண்டிய ஒன்றாகவே உள்ளது. </p><p>இந்த ரக்ஷா பந்தன் நன்னாளில், ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பான குழந்தைப் பருவம், தரமான கல்வி, முறையான சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றைப் பெறுவதையும், முன்னேறுவதற்கான அனைத்து வாய்ப்புகளை கொண்டிருப்பதையும் உறுதி செய்வதே எனது முக்கிய நோக்கமாகும். அனைவருக்கும் ரக்ஷா பந்தன் நல்வாழ்த்துகள் என்று தெரிவித்தார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Children from marginalised communities across Delhi came to Mukhyamantri Jan Seva Sadan to tie rakhis. Their smiles, their excitement and the affection with which they celebrated made the occasion deeply special.<br><br>In Delhi’s streets and lanes, countless children are growing up… <a href="https://t.co/jKEjEeHjWG">pic.twitter.com/jKEjEeHjWG</a></p>&mdash; Rekha Gupta (@gupta_rekha) <a href="https://x.com/gupta_rekha/status/2093187496527950299?ref_src=twsrc%5Etfw">August 28, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2>பீகார் 'ஜீவிகா திதி'களுக்கு சூரிய ஒளி மின்சார திட்டம் – முதல்வர் சாம்ராட் சௌத்ரி பரிசு</h2><p>பீகார் மாநில முதல்வர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF">சாம்ராட் சௌத்ரி</a>, ரக்ஷா பந்தனை முன்னிட்டு அம்மாநிலத்தைச் சேர்ந்த 'ஜீவிகா திதி'களுக்கு (சுயஉதவிக் குழுப் பெண்கள்) சூரிய ஒளி மின்சார திட்டம் என்ற சிறப்பான பரிசை அறிவித்துள்ளார்.</p><p>மேலும் அவர் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், ரக்ஷா பந்தன் எனும் இந்த நன்னாளில், என் சகோதரிகள் அன்போடும் ஆசிகளோடும் ரக்ஷியைக் கட்டியுள்ளனர். நமது சகோதரிகள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, அமைதி, செழிப்பு மற்றும் ஆனந்தம் என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="hi" dir="ltr">इस पवित्र धागे में सिमटा है स्नेह अपार<br><br>आज रक्षाबंधन के पावन अवसर पर मेरी बहनों ने स्नेह और आशीर्वाद से मेरी कलाई पर राखी बाँधी।<br><br>ईश्वर से कामना है कि हमारी सभी बहनों के जीवन में सुख, शांति, समृद्धि और खुशियाँ सदैव बनी रहें। रक्षाबंधन की सभी प्रदेशवासियों को हार्दिक शुभकामनाएँ।… <a href="https://t.co/rV9Mdxyvc4">pic.twitter.com/rV9Mdxyvc4</a></p>&mdash; Samrat Choudhary (@samrat4bjp) <a href="https://x.com/samrat4bjp/status/2093206343385805220?ref_src=twsrc%5Etfw">August 28, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வழக்கு: மு.க.ஸ்டாலினுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/high-court-notice-to-mk-stalin-in-athav-arjuna-defamation-suit</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/high-court-notice-to-mk-stalin-in-athav-arjuna-defamation-suit#comments</comments><guid isPermaLink="false">e44701c9-aa9a-41a4-8a46-c4712e99a404</guid><pubDate>Fri, 28 Aug 2026 07:19:30 +0000</pubDate><atom:updated>2026-08-28T07:19:30.464Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,சென்னை ஐகோர்ட்,ஆதவ் அர்ஜூனா,Madras highcourt,அவதூறு வழக்கு,defamation case,முக ஸ்டாலின்,Minister Adhav Arjuna,திமுக ஐடிவிங்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/qet8hbc0/Adhav-Arjuna-MK-Stalin" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Adhav Arjuna - MK Stalin  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/qet8hbc0/Adhav-Arjuna-MK-Stalin?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுக ஐடி விங் அவதூறு பரப்பியதாக ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு ஆதவ் அர்ஜூனா வழக்கு தொடர்ந்தார். இதற்கு செப்.15க்குள் பதிலளிக்க ஸ்டாலினுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.</p><p>சென்னை ஐகோர்ட்டில் அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BE">ஆதவ் அர்ஜுனா</a>, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், " தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க.ஸ்டாலின்</a>, கட்டுப்பாட்டிலும், மேற்பார்வையிலும் செயல்படக் கூடிய திமுக ஐடி விங்க் சமூக வலைதளத்தில் கடந்த ஜூன் 8-ந்தேதி ஒரு பதிவை வெளியாகியுள்ளது.</p><p>அதில் "அமலாக்க துறையின் அதிகாரப்பூர்வ செய்தி குறிப்பின்படி சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.258 கோடி மதிப்புலான போதை பொருள் கடத்தலில் செயல்பட்ட ஜான் பிரிட்டோ தற்போது த.வெ.க அரசின் சிறு தொழில் முகங்கள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் நெருங்கிய உறவினர் என அதிர்ச்சியூட்டும் உண்மை அம்பலமாகியுள்ளது" என்று கூறியுள்ளது.</p><h2><strong>வைரல் பதிவு</strong></h2><p>இந்தப் பதிவு வெளியிட்டு இரண்டு நாட்களில் சுமார் 2 லட்சத்து 67 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். அந்த பதிவை 2,600 பேர் மறு பதிவு செய்துள்ளனர் 4,400 பேர் விருப்பம் (லைக்) தெரிவித்துள்ளனர். 150 பேர் பதிலும் தெரிவித்துள்ளனர். </p><p>இந்தப் பதிவு மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி அனுமதியுடன் வெளியிடப்பட்டுள்ளது. திமுக தான் இந்த சமூக வலைதள கணக்கை பராமரித்து வருகின்றது. எனவே இந்த பதிவுக்கு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க.ஸ்டாலின்</a> தான் பொறுப்பு.</p><h2><strong>இழப்பீடு கோரிக்கை</strong></h2><p>இந்த ஜான் பிரிட்டோ எனக்கு உறவினர் இல்லை. மேலும் பி.ஜான் பிட்டோ என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்து, அமலாக்கத்துறை சொல்லும் ஜான் பிட்டோ நான் இல்லை என்றும் கூறியுள்ளார். </p><p>எனவே அவதூறு பதிவை வெளியிட்டதற்காக திமுக ஐடி விங் மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இணைந்து ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடவேண்டும். </p><p>அந்த பதிவையும் சமூக வலைதளத்தில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும்" என்று கூறியுள்ளார்.</p><h2><strong>நோட்டீஸ் உத்தரவு</strong></h2><p>இந்த வழக்கு நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பின் வக்கீல் ஏ.பி.சூரிய பிரகாசம் ஆஜராகி வாதிட்டார். </p><p>இவரது வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்த மனுவுக்கு வருகிற செப்டம்பர் 15-ந்தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க.ஸ்டாலின்</a> மற்றும் திமுக தகவல் தொடர்பு குழுவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பள்ளிக் கல்வியின் தரத்தில் முதல் 10 மாநிலங்கள்.. தமிழ்நாட்டிற்கு எத்தனையாவது இடம் தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/news/national/top-10-states-in-school-education-quality-do-you-know-what-rank-tamil-nadu-holds</link><comments>https://www.maalaimalar.com/news/national/top-10-states-in-school-education-quality-do-you-know-what-rank-tamil-nadu-holds#comments</comments><guid isPermaLink="false">4242df54-2c81-4bbb-b47d-33257bd604c9</guid><pubDate>Fri, 28 Aug 2026 07:18:18 +0000</pubDate><atom:updated>2026-08-28T07:18:18.826Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,kerala,School Education,கேரளா,தமிழ்நாடு,பள்ளிக் கல்வி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/5npnunn1/tn-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பள்ளி]]></media:title><media:description type="html"><![CDATA[ பள்ளி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/5npnunn1/tn-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2025-26 ஆம் ஆண்டிற்கான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">பள்ளிக் கல்வி</a> வளர்ச்சிப் குறியீடு பட்டியல் வெளியாகி உள்ளது. </p><p>அதில், இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள் அங்கு வழங்கப்படும் கல்வித் தரம் மற்றும் வளர்ச்சியின் அடிப்படையில்  தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. </p><p>பள்ளி கல்விக்கான அணுகல், பங்களிப்பு, தக்கவைப்பு, தரம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய 5 பிரிவுகளின் கீழ் இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது. </p><p>பள்ளிகள் கிடைக்கும் தன்மை, சேர்க்கை மற்றும் சமத்துவம், மாணவர் தக்கவைப்பு, கற்றல் முடிவுகள் மற்றும் பள்ளி வசதிகள் உள்ளிட்ட காரணிகளும் அடங்கும்.</p><h2>பட்டியல்</h2><p>அதன்படி இந்த குறியீட்டில் டாப் 10 பட்டியலில் யூனியன் பிரதேசமான சண்டிகர் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் நம் அண்டை மாநிலமான கேரளா உள்ளது.</p><p>பட்டியலில் புதுச்சேரி 3வது இடத்தையும், கோவா 4வது இடத்தையும், டெல்லி 5வது இடத்தையும், பஞ்சாப் 6வது இடத்தையும் பிடித்துள்ளது.</p> <h2>தமிழ்நாடு</h2><p>இந்த பட்டியலில் 7வது இடத்தை பிடித்துள்ளது தமிழ்நாடு. கடந்த முறையைவிட 0.018 மதிப்பெண் தமிழ்நாட்டிற்கு அதிகரித்தாலும், 7 வது இடத்தையே தக்கவைத்துள்ளது.</p><p>பட்டியலில் அடுத்தாக அந்தமான் நிகோபார் தீவு 8வது இடத்திலும் லட்சத்தீவு 9வது இடத்திலும், அரியானா 10வது இடத்திலும் உள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>