<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 27 Aug 2026 18:32:14 +0000</lastBuildDate><item><title>தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் அதிகம்: கிட்டத்தட்ட 10 மணி நேரம் அவை நடைபெற்று சாதனை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-session-for-almost-ten-hours-sets-new-record</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-session-for-almost-ten-hours-sets-new-record#comments</comments><guid isPermaLink="false">724fee64-988e-4391-afa3-c825dcbcba65</guid><pubDate>Thu, 27 Aug 2026 18:26:40 +0000</pubDate><atom:updated>2026-08-27T18:26:40.406Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழ்நாடு சட்டசபை,Tamil Nadu assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/xtdvqu84/TN-Assembly-2.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN Assembly]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/xtdvqu84/TN-Assembly-2.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு <a href="https://www.maalaimalar.com/topic/tn-assembly">சட்டப்பேரவை</a> வரலாற்றில், இதுவரை இல்லாத வகையில், ஒரே நாளில் சுமார் 10 மணி நேரம் தொடர்ச்சியாக அவை அலுவல்கள் நடைபெற்றுள்ளன. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu">தமிழ்நாடு</a> சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 27) பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், சமூகநீதித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. </p><h2>அமைச்சர்களுடன் அமர்ந்த முதலமைச்சர்:</h2><p>வழக்கம்போல், இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. சட்டப்பேரவையில் காலையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா, என். ஆனந்த், வெங்கட்ரமணன், நிர்மல்குமார், அ.தி.மு.க. பொது செயலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.</p><p>மாலை வேளையில் சட்டப்பேரவைக்கு வந்த முதலமைச்சர் விஜய் அவரும் சிறிது நேரம் கலந்துகொண்டார். சட்டப்பேரவையில் முதல்வருக்கென தனியாக பிரத்யேக இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. எனினும், இன்றைய சட்டப்பேரவையில் முதல்வருக்கான பிரத்யேக இருக்கையை தவிர்த்துவிட்டு, அமைச்சர்களுக்கான முன்வரிசை இருக்கையில் முதல்வர் விஜய் அமர்ந்தார்.</p><h2>சுமார் 10 மணி நேரம்:</h2><p>மானிய கோரிக்கை விவாதத்தை கடந்து, பல்வேறு விவாதங்கள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து, இன்றைய சட்டப்பேரவையில் பல்வேறு விவாதங்கள் நடந்ததால், நேற்று முன்தினம் (ஆகஸ்ட். 25) போலவே சட்ட பேரவைக்கூட்டம் இரவு 7 மணியையும் கடந்து தொடர்ந்தது. அதன்பின், அமைச்சர்களின் பதிலுரை ஏதும் இல்லாமலேயே இரவு 7.20 மணியளவில் அவை நிறைவடைந்தது.</p><p>எம்.எல்.ஏ.க்கள் பலரையும் கேள்விகள் கேட்க அனுமதிப்பதை அடுத்து அவை நடைபெறும் நேரம் கடந்த சில நாள்களாக மாலை 6 மணியை தாண்டி நடைபெற்று வந்தது. இன்று மட்டும் அதிகபட்சமாக சட்டப்பேரவை சுமார் 9 மணி நேரம் 50 நிமிடங்கள் நடைபெற்றுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு 1 மில்லியன் டாலர்கள் நிதியுதவி அறிவித்தது இலங்கை</title><link>https://www.maalaimalar.com/news/world/sri-lanka-extends-usd-1-million-in-assistance-to-nepal-after-flash-floods</link><comments>https://www.maalaimalar.com/news/world/sri-lanka-extends-usd-1-million-in-assistance-to-nepal-after-flash-floods#comments</comments><guid isPermaLink="false">b3a1e264-6ab4-4dd9-9660-5d668009495a</guid><pubDate>Thu, 27 Aug 2026 17:13:05 +0000</pubDate><atom:updated>2026-08-27T17:13:05.060Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இலங்கை,நேபாளம்,nepal,Sri Lanka,Flash Floods,வெள்ள பாதிப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/tvchn8jq/Nepal-Flash-Floods-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nepal Flash Floods]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/tvchn8jq/Nepal-Flash-Floods-1.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போன நிலையில், அந்நாட்டிற்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்கவுள்ளதாக <a href="https://www.maalaimalar.com/news/world">இலங்கை</a> அறிவித்தது.</p><p>வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட <a href="https://www.maalaimalar.com/topic/nepal-floods">நேபாள</a> மக்களுடன் இலங்கை கொண்டுள்ள ஒற்றுமை உணர்வை இந்த உதவி வெளிப்படுத்துவதாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><h2>திடீர் வெள்ளப்பெருக்கு:</h2><p>திபெத்தில் உருவான இந்த திடீர் வெள்ளப்பெருக்கு, புதன்கிழமையன்று மத்திய நேபாளத்தின் வழியாக பாய்ந்து பல நகரங்கள் மற்றும் கிராமங்களை சேதப்படுத்தியது. முக்கிய பாலங்களை அடித்து சென்றதுடன், ஒரு டசனுக்கும் மேற்பட்ட நீர்மின் திட்டங்களையும் முடக்கியது; மேலும் பல மாவட்டங்களையும் பாதித்தது.</p><p>நேபாளத்திற்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்குமாறு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அரசாங்கத்திற்கு பணித்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்தது.</p><p>"தேவைப்படும் இக்கட்டான நேரத்தில் இலங்கை நேபாள மக்களுடன் உறுதியாக நிற்கிறது" என்று கூறிய அந்த அறிக்கை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கே இந்த நிதியுதவி அளிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டது.</p>]]></content:encoded></item><item><title>100 மீட்டர் தூரத்தை 8.86 வினாடிகளில் கடந்த அல்ட்ரா ரோபோ - தனது முந்தைய சாதனை முறியடிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/humanoid-robot-breaks-100m-record-with-8-86-seconds</link><comments>https://www.maalaimalar.com/news/world/humanoid-robot-breaks-100m-record-with-8-86-seconds#comments</comments><guid isPermaLink="false">0d311640-561e-4e26-ad97-0332c57549b7</guid><pubDate>Thu, 27 Aug 2026 16:36:37 +0000</pubDate><atom:updated>2026-08-27T16:36:37.914Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>China,சீனா,Humanoid Robot,மனித உருவ ரோபோ,Tiangong Ultra,தியாங்காங் அல்ட்ரா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/alxw3fub/Untitled-design-3.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tiangong Ultra]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/alxw3fub/Untitled-design-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE">சீனாவில்</a> நடைபெற்ற இரண்டாவது உலக மனித உருவ ரோபோ போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை 8.86 வினாடிகளில் கடந்து தனது முந்தைய சாதனையான 9.39 என்ற வினாடியை தியாஙாங் அல்ட்ரா ரோபோ முறியடித்துள்ளது.</p><h3><strong>மனித உருவ ரோபோ போட்டி</strong></h3><p>சீனாவின் பெய்ஜிங் நகரில் கடந்த 22-ஆம் தேதி இரண்டாவது <a href="https://www.maalaimalar.com/topic/ரோபோ-போட்டி">உலக மனித உருவ ரோபோ விளையட்டு போட்டி</a> தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது.</p><p>இந்த போட்டி உலகளவில் ரோபோட்டிக்ஸ் துறையில் சீனாவின் விரைவான முன்னேற்றங்களை வெளிக்காட்டும் ஒரு களமாக நடைபெற்றது.</p><h3><strong>புதிய சாதனை</strong></h3><p>இந்த ரோபோ முன்னதாக 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஜமைக்காவை சேர்ந்த தடகள வீரரான உசைன் போல்ட்டின் 9.58 என்ற சாதனையை 9.39 வினாடிகளில் கடந்து சாதனை படைத்தது.</p><p>இந்த நிலையில் சீனாவின் பீய்ஜிங் நகரில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டியில் பெய்ஜிங் மனித உருவ ரோபோட்டிக்ஸ் மையத்தால் உருவாக்கப்பட்ட தியாங்காங் அல்ட்ரா ரோபோ கலந்து கொண்டது.</p><p>இந்த போட்டியில் தனது முந்தைய சாதனையான 9.39 வினாடியை முறியடித்து, 8.86 வினாடிகளில் கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது.</p><h3><strong>அமெரிக்க பேராசிரியர் பாராட்டு</strong></h3><p>இந்த சாதனை குறித்து லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இயந்திர மற்றும் விண்வெளி பொறியியல் பேராசிரியர் டென்னிஸ் ஹாங் கூறுகையில், “இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்.</p><p>ரோபோ மனிதனை விட வேகமாக ஓடியதால் மட்டுமல்ல, இரண்டு கால்களில் நடக்கும் ஒரு ரோபோவை இந்த வேகத்தில் ஓட வைப்பதற்கு என்னவெல்லாம் தேவைப்படுகிறது என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.</p><p>வேகம் அதிகரிக்கும் போது சமநிலை, கட்டுப்பாடு, தாக்கங்கள், செயல்திறன் மற்றும் இயந்திர உறுதித்தன்மை ஆகிய அனைத்தும் மிகவும் சவாலனதாக மாறுகின்றன” என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்க பொருளாதார தடையை மீறி ஈரானுக்கு அரிசி ஏற்றுமதி: இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கம்</title><link>https://www.maalaimalar.com/news/national/india-rice-exports-to-iran-defy-us-sanctions-association</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-rice-exports-to-iran-defy-us-sanctions-association#comments</comments><guid isPermaLink="false">cdad463e-e5c6-480b-bb44-08479893cdbd</guid><pubDate>Thu, 27 Aug 2026 16:36:25 +0000</pubDate><atom:updated>2026-08-27T16:36:25.901Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>US sanctions,rice export,economic d day,பொருளாதார டி தினம்,அரிசி ஏற்றுமதி,அமெரிக்க தடை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/l47q6a9l/Untitled-design-22.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ India rice exports under US sanctions]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/l47q6a9l/Untitled-design-22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் நாட்டின் மீது <a href="https://www.maalaimalar.com/topic/அமெரிக்கா">அமெரிக்கா</a> விதித்துள்ள <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">பொருளாதார தடையை</a> மீறி, ஈரானுக்கு வழக்கம்போல அரிசி ஏற்றுமதி செய்யப்படும் என அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஜய் பலோதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.</p><p>இந்தியா உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளராக இருந்து வரும் நிலையில், <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">ஈரானுக்கு</a> அரிசி ஏற்றுமதி செய்யப்படுவதன் மூலம், அமெரிக்கா விதிக்க இருக்கும் பொருளாதார தடையை, இந்தியா தாங்கிக் கொள்ளும் நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><h3><strong>ஈரானுக்கு அரிசி ஏற்றுமதி</strong></h3><p>இந்தியா, ஈரானுக்கான விற்பனையானது கடுமையான அமெரிக்க தடைகளின் அச்சுறுத்தலை தாங்கும் என்றும், விலை உயர்வு மற்றும் பல மாதங்களாக நடந்து வரும் போர்க்கால இடையூறுகள் இருந்தபோதிலும், ஏற்றுமதி சீராக நடைபெற்று வருவதாக அஜய் தெரிவித்துள்ளார்.</p><p>இந்தியா ஈரான் ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தில் அரிசியே முதன்மையானதாக உள்ளது. மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில், ஈரானுக்கான இந்தியாவின் 1.25 பில்லியன் டாலர் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு அரிசியாக உள்ளதாக அரசாங்கத் தரவுகள் காட்டுகின்றன.</p><p>பதிலுக்கு, இந்தியாவின் 11.5 பில்லியன் டாலர் உலகளாவிய அரிசி ஏற்றுமதியில் சுமார் 7 சதவீதத்தை ஈரான் வாங்கியுள்ளது.</p><h3><strong>அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கம்</strong></h3><p>இந்த நிலையில் அகில இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஜய் பலோதியா கூறுகையில், “விலை உயர்வு மற்றும் பல மாதங்களாக நீடித்த போரினால் ஏற்பட்ட வர்த்தக இடையூறுகள் ஒருபுறம் இருந்தபோதிலும், ஈரான் உணவு பாதுகாப்பு காரணங்களுக்காக கொள்முதல் செய்து வருவதால், அந்நாட்டின் தேவை சீராக உள்ளது.</p><p>அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் திங்களன்று 60-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு எதிராகத் தடைகளை அறிவித்து, ஈரானுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாட்டிற்கும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என அச்சுறுத்திய போதிலும், ஈரானுடனான வர்த்தகம் தடையின்றி தொடருகிறது.</p><p>மனிதாபிமான விதிவிலக்கின் கீழ் வரும் இந்த பிரதான உணவின் அத்தியாவசிய தன்மையும், மாற்று விநியோகஸ்தர்கள் குறைவாக இருப்பதும் வர்த்தகத்தைத் தக்கவைக்க உதவும்.</p><h3><strong>கடந்த கால ஏற்றுமதி</strong></h3><p>கடந்த நிதியாண்டில் ஈரான் 10 லட்சம் டன்களுக்கும் அதிகமான அரிசியைக் கொள்முதல் செய்துள்ளது, இது ஓராண்டுக்கு முந்தைய ஏற்றுமதியை விட 17% அதிகம் என அரசாங்கத் தரவுகள் காட்டுகின்றன.</p><p>சமீப காலத்தில் இந்திய ஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதியையும் பணப் பரிமாற்றங்களையும் தடையின்றித் தொடர்ந்ததை இந்த உயர்வு பிரதிபலிக்கிறது; இது இரு தரப்பினருக்கும் வர்த்தகத்தை பேணுவதற்கான ஒரு ஊக்கத்தை அளிக்கிறது.</p><p>ஈரானிய வங்கிகளுடன் நேரடியாகப் பரிவர்த்தனை செய்வதற்குப் பதிலாக, ஐக்கிய அரபு அமீரகம், ஜெர்மனி, சீனா மற்றும் சமீபத்தில் துருக்கி ஆகிய நாடுகளில் உள்ள நிதி வழிமுறைகள் மூலம் ஈரானுடனான வர்த்தகத்திற்கான கொடுப்பனவுகளைச் செலுத்துவதற்கான வழிகளை இந்திய வர்த்தகர்கள் கண்டறிந்துள்ளனர்.</p><p>அந்த வழிமுறைகள் இதுவரை எந்த இடையூறும் இன்றி தொடர்ந்து இயங்கி வருகின்றன. ஈரானுக்கான மற்ற முக்கிய இந்திய ஏற்றுமதிகளில் மருந்துகள், தேயிலை, வாழைப்பழங்கள், தானியங்கள், மாட்டு இறைச்சி மற்றும் சில ரசாயனப் பொருட்கள் அடங்கும்.</p><p>மனிதாபிமான விதிவிலக்கு மற்றும் குறைந்த மாற்று வழிகளைக் காரணம் காட்டி, இவற்றின் ஏற்றுமதிக்கும் தடை ஏற்பட வாய்ப்பில்லை.</p><p>இதற்கிடையில், அமெரிக்காவின் விலக்குகளால் இந்த ஆண்டு ஏற்பட்ட ஒரு குறுகிய கால வாய்ப்பை தவிர, இந்தியா 2019 முதல் ஈரானிலிருந்து எந்த கச்சா எண்ணெயையும் இறக்குமதி செய்யவில்லை” என்று அவர் கூறினார்.</p><p>ஈரான் மீதான அமெரிக்க தடைகளுக்கு முன்பு, இந்தியா அந்நாட்டுடன் நீண்டகால உறவுகளைக் கொண்டிருந்தது, மேலும் தெஹ்ரான் அதன் மிகப்பெரிய எண்ணெய் விநியோகஸ்தர்களில் ஒன்றாக இருந்தது.</p><h3><strong>இந்தியா ஏற்றுமதி கூட்டமைப்பு தலைவர்</strong></h3><p>ஈரானுக்கான இந்திய ஏற்றுமதிகள் பாதிக்கப்படக்கூடாது என்று இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.சி. ரல்ஹான் கூறினார்.</p><p>ஈரானுக்கான ஏற்றுமதிகள் கணிசமான அளவில் இல்லை என்றாலும், ஏற்றுமதியாளர்களுக்கு உதவுவதற்கான சில ஏற்பாடுகளுடன், மனிதாபிமான அடிப்படையில் அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.</p>]]></content:encoded></item><item><title>‘ஐ எம் கேம்’ படத்தின் ‘லூசர்’ பாடல் வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/release-of-the-loser-song-from-the-movie-i-am-game</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/release-of-the-loser-song-from-the-movie-i-am-game#comments</comments><guid isPermaLink="false">46a956e9-de81-43aa-a2bd-5b495a3f1815</guid><pubDate>Thu, 27 Aug 2026 16:11:47 +0000</pubDate><atom:updated>2026-08-27T16:11:47.958Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Dulquer Salmaan,துல்கர் சல்மான்,I&apos;m Game,ஐ எம் கேம்,Loser Song</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/12i1ucng/New-Project-2026-08-27T212610.750.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘ஐ எம் கேம்’ படத்தின் ‘லூசர்’ பாடல் வெளியீடு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/12i1ucng/New-Project-2026-08-27T212610.750.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆர்டிஎக்ஸ் திரைப்படப் புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், துல்கர் சல்மான் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து, அவரே தயாரித்துள்ள ஒரு பிரம்மாண்டமான மலையாள ஆக்ஷன் த்ரில்லர் ‘ஐ எம் கேம்’. </p><p>சூதாட்டம், பந்தயம் மற்றும் கிரிக்கெட் விளையாட்டின் பின்னணியில், அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி, அதாவது தனது உயிரைவிட அதிர்ஷ்டமே பெரிது என வாழும் ஒருவனின் கதையை படம் விவரிக்கிறது. </p><p>துல்கர் சல்மானுடன் இணைந்து கயாடு லோஹர், மிஷ்கின், ஆண்டனி வர்கீஸ், சம்யுக்தா விஸ்வநாதன், வினய் ஃபோர்ட் மற்றும் கதிர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் படத்திற்கு இசையமைத்துள்ளார்.</p><p>இப்படம் ஆக.20ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பின் செப்.3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடல் ‘லூசர்’ வெளியாகி உள்ளது. சுஹைல் கோயா வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலை துல்கர் சல்மானும் இணைந்துப் பாடியுள்ளார். </p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/zuTvon1ugcU"></iframe></figure>]]></content:encoded></item><item><title>16வது திருமண நாள் - அழகிய புகைப்படங்களை பகிர்ந்த ஆர்த்தி சிவகார்த்திகேயன்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/16th-wedding-anniversary-aarthi-sivakarthikeyan-shares-beautiful-photos</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/16th-wedding-anniversary-aarthi-sivakarthikeyan-shares-beautiful-photos#comments</comments><guid isPermaLink="false">94c5bf64-4a82-452b-9059-4ea86ea0762a</guid><pubDate>Thu, 27 Aug 2026 15:47:54 +0000</pubDate><atom:updated>2026-08-27T15:47:54.529Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>sivakarthikeyan,Wedding Anniversary,Aarthi Sivakarthikeyan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/9fge2zj8/New-Project-2026-08-27T205647.043.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 16வது திருமண நாள் - அழகிய புகைப்படங்களை பகிர்ந்த ஆர்த்தி சிவகார்த்திகேயன்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/9fge2zj8/New-Project-2026-08-27T205647.043.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி தம்பதியினர், தங்களது 16-வது திருமண நாளை இன்று கொண்டாடும் நிலையில், இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை ஆர்த்தி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். </p><p>இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதிக்கு கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் 27 அன்று திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆராதனா, குகன், பவண் என ஒரு பெண் குழந்தையும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.</p><h2>சேயோன்</h2><p>சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘சேயோன்’ என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார். கமலஹாசனின் ராஜ்கமல் ஃபில்ம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படம் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>1984-இல் விண்வெளிக்கு சென்ற 3,301 தேனீக்கள் : நாசா</title><link>https://www.maalaimalar.com/news/world/3301-bees-sent-to-space-nasas-7-day-mission</link><comments>https://www.maalaimalar.com/news/world/3301-bees-sent-to-space-nasas-7-day-mission#comments</comments><guid isPermaLink="false">0a10eeef-ac4b-413c-8e28-4dc26f1d98b8</guid><pubDate>Thu, 27 Aug 2026 15:27:36 +0000</pubDate><atom:updated>2026-08-27T15:27:36.600Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Scientists,நாசா,விஞ்ஞானிகள்,Honeybees,nasa,தேனீக்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/4e6dujw6/Untitled-design-2.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ NASA Space Bees Experiment]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/4e6dujw6/Untitled-design-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவின் நாசா விண்கலத்தில் ஆயிரக்கணக்கான தேனீக்கள், புவிஈர்ப்பு விசையின் ஈர்ப்பு இல்லாமல் உயிர்வாழ முடியுமா என்பதையும், அவற்றால் தேன்கூட்டை கட்ட முடியுமா என்பதையும் சோதித்து பார்ப்பதற்காக விஞ்ஞானிகள் தேனீக்களை விண்வெளிக்கு கொண்டு சென்றனர்.        </p><h3><strong>விண்வெளிக்கு சென்ற 3,301 தேனீக்கள்</strong></h3><p>அமெரிக்காவில் நாசாவின் டிஸ்கவரி விண்கலம் மூலம் கடந்த 1984-ஆம் ஆண்டு 3,301 தேனீக்கள் விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்டன.</p><p>இந்த தேனீக்கள் STS-41C என்ற திட்டத்தின் மூலம் ஏழு நாள் பயணமாக விஞ்ஞானிகள் மூலம் விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்டன.</p><p>இந்த தேனீக்கள் விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்டதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருந்தன. அந்த தேனீக்கள் புவி ஈர்ப்பு விசை இல்லாமல் எவ்வாறு நடந்து கொள்கின்றன எனவும், அவை எவ்வாறு உயிர் வாழ்கின்றன என்பதை அறியவும் விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்டன.</p><p>மேலும் விஞ்ஞானிகள், விண்வெளியில் கட்டப்பட்ட தேனடையை, பூமியில் உள்ள தேனீக்களால் உருவாக்கப்பட்ட தேனடையுடன் ஒப்பிடவும் விரும்பினர்.</p><p>இந்த தேனீக்கள் ஒரு ராணி தேனீ மற்றும் அதற்கு தேவையான உணவுகளுடன் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மரச்சட்டங்களில் வைக்கப்பட்டன.</p><p>புவி ஈர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் சாதாரண திரவங்கள் மிதந்து கொண்டு இருக்கும் என்பதனால், தேனீக்களுக்கான உணவாக சர்க்கரை, நீர் மற்றும் அகர் அடங்கிய ஒரு கலவையை விஞ்ஞானிகள் உணவாக கொடுத்தனர்.</p><p>தேனீக்களால் விண்வெளியில் பறப்பது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. ஆரம்பகட்ட ஆய்வுகளில், சில தேனீக்கள் பறக்க முயன்றபோது, தங்கள் மரச்சட்டங்களில் உள்ள சுவர்களில் மோதிக்கொண்டன.</p><p>இதைத்தொடர்ந்து ஏழாவது நாளில், தேனீக்கள் புவி ஈர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் தங்களை தகவமைத்து கொண்டது.</p><p>மேலும் இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், பல தேனீக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்ற இடத்திற்கு பறந்து கொள்ள பழகிக்கொண்டதாகவும், மேலும் தேன்கூடு ஒன்றை வளர்க்க ஆரம்பித்ததாகவும் தெரிவித்தனர்.</p><p>விண்வெளியில் இருந்த அந்த தேனீக்கள் சுமார் 200 சென்டிமீட்டர் நீளத்தில் தேனடையை கட்டியதாகவும், ஆனால் அந்த தேனடை, பூமியில் கட்டப்பட்ட தேனடையை விட சிறிய விட்டங்களையும், தடிமனான சுவர்களை கொண்டிருந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.</p><h3><strong>35 முட்டைகள்</strong></h3><p>பெரும்பாலான தேனீக்கள் விண்வெளி பயணத்தில் உயிர் பிழைத்திருந்ததாகவும், ராணி தேனீ சுமார் 35 முட்டைகளை இட்டதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.</p><p>ஆனால் பூமிக்கு திரும்பிய பிறகு அந்த முட்டைகளை ராணி தேனீயால் பொரிக்கமுடியவில்லை என்றும், இதற்கான காரணம் தெரியவில்லை என்றும் விண்வெளிக்கு சென்ற விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>நிலநடுக்கத்தால் உருவான ராட்சத இயற்கை ஏரி: அடுத்த 3 நாட்களில் மீண்டும் ஒரு பேரழிவு? நேபாளத்திற்கு சீனா எச்சரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/world/massive-natural-lake-formed-by-earthquake-another-disaster-in-the-next-3-days-china-warns-nepal</link><comments>https://www.maalaimalar.com/news/world/massive-natural-lake-formed-by-earthquake-another-disaster-in-the-next-3-days-china-warns-nepal#comments</comments><guid isPermaLink="false">96865629-c57b-4d0f-8086-432d3d68659d</guid><pubDate>Thu, 27 Aug 2026 15:15:28 +0000</pubDate><atom:updated>2026-08-27T15:15:28.404Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சீனா,Nepal Floods,நேபாள வெள்ளம்,Chhochen Khola,Purepu Tsangpo,சோசென் கோலா,புரேபு சாங்போ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/tinx5vok/New-Project-2026-08-27T204501.757.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நிலநடுக்கத்தால் உருவான ராட்சத இயற்கை ஏரி: அடுத்த 3 நாட்களில் மீண்டும் ஒரு பேரழிவு? நேபாளத்திற்கு சீனா எச்சரிக்கை!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/tinx5vok/New-Project-2026-08-27T204501.757.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாளம் - திபெத் எல்லைப் பகுதியில் நிலச்சரிவு காரணமாக உருவான ஒரு தற்காலிக ஏரி அடுத்த 72 மணி நேரத்திற்குள் உடைந்து மீண்டும் ஒரு கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்று சீனா, நேபாளத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. </p><p>நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, சோசென் கோலா மற்றும் புரேபு சாங்போ ஆறுகள் சங்கமிக்கும் இடத்திற்கு அருகில் நிலச்சரிவால் தண்ணீர் தடுக்கப்பட்டு, தனி ஏரிபோன்று உருவாகி அதில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகிறது. </p><p>இதனை அறிவியலில் நிலச்சரிவு அணை எனக் குறிப்பிடுவர். நீரோட்டம் அதிகரிக்கும் பட்சத்தில் நிலநடுக்கத்தால் விழுந்த கற்கள், பாறைகள் நகர்ந்து, அடுத்த மூன்று நாட்களில் அந்த அணை அமைப்பு உடைவதற்கான அதிக அபாயத்தை கொண்டுள்ளதாக சீனா எச்சரித்துள்ளது.</p><p>இன்றைய நிலவரப்படி அந்த அணையின் மொத்த கொள்ளளவு 2 மில்லியன் கன மீட்டர் (70 மில்லியன் கன அடி) என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த அணை “ஏற்கனவே நிரம்பி வழிகிறது” என சீன நீர்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. </p><p>“அடுத்த மூன்று நாட்களில் மேலும் 3 மில்லியன் கன மீட்டர் தண்ணீர் ஏரிக்குள் பாயும் என எதிர்பார்க்கப்படுவதால், ஏரி உடைவதற்கான அதிக அபாயம் உள்ளது,” என அமைச்சகம் எச்சரித்துள்ளது.</p><p>இந்த இயற்கை அணை உடைந்தால், நேபாளத்தின் போதேகோஷி மற்றும் திரிசூலி ஆற்றங்கரைப் பகுதிகளில் மீண்டும் ஒரு பேரழிவு வெள்ளம் ஏற்படும். </p><p>இமயமலையில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவினால் தூண்டப்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் சுமார் 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், சீன மற்றும் நேபாள எல்லையின் இருபுறமும் கிட்டத்தட்ட 900 வெளிநாட்டினர் உட்பட 1,300-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>டெஸ்ட் கிரிக்கெட் வெற்றி பெற்றுள்ளது: சுப்மன் கில்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/test-cricket-won-today-shubman-gill-after-2nd-test-vs-sri-lanka-ends-in-draw</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/test-cricket-won-today-shubman-gill-after-2nd-test-vs-sri-lanka-ends-in-draw#comments</comments><guid isPermaLink="false">f992df07-4293-4f57-9fd5-f6eb57235ce8</guid><pubDate>Thu, 27 Aug 2026 14:53:16 +0000</pubDate><atom:updated>2026-08-27T14:53:16.104Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சுப்மன் கில்,Shubman Gill,INDvSL,இந்தியா இலங்கை தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/w7rp1ik7/gill.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ shubman gill]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/w7rp1ik7/gill.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பரிசளிப்புக்கு பின் பேசிய இந்திய கேப்டன் சுப்மன் கில், டெஸ்ட் கிரிக்கெட் வென்றுள்ளது என தெரிவித்தார்.</p><h2>டெஸ்ட் தொடரை வென்ற இந்தியா</h2><p>இந்தியா, இலங்கை இடையிலான 2வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதனால் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என கைப்பற்றியது.</p><p>இரண்டாவது டெஸ்டில் இந்திய அணியின் வெற்றியை இலங்கை வீரர் சோனல் தினுஷா சிறப்பாக விளையாடி தடுத்துவிட்டார்.</p><p>இந்நிலையில், போட்டிக்கு பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் இந்திய கேப்டன் சுப்மன் கில் பேசியதாவது:</p><p>உண்மையை சொல்ல வேண்டுமென்றால் எந்த மாற்றத்தையும் செய்திருந்தால் கூட மூலம் இந்த போட்டியில் நிச்சயம் வென்று இருக்க முடியாது. ஏனென்றால் கடந்த மூன்று நாட்களாக பல ஓவர்களை நாங்கள் வீசி களத்தில் இருந்தோம். எங்களால் செய்ய முடிந்ததை செய்து விட்டோம்.</p><p>இலங்கை வீரர்கள் பிரமாதமாக விளையாடினார்கள். அந்த அணியின் பேட்டர்கள் தங்களது திறமையை வெளிக்காட்டினார்கள். கொஞ்சம் அதிர்ஷ்டமும் அவர்களுக்கு உதவியது.</p><p>இந்தத் தொடர் எங்களுக்கு பல நல்ல விஷயங்களை தந்து இருக்கிறது. நாங்கள் இலங்கை அணியிடம் இருந்தும் சில விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கின்றோம்.</p><h2>பாலோ ஆன் நெருக்கடியில் இருந்து மீண்ட இலங்கை</h2><p>பாலோ ஆன் பெற்று கடும் நெருக்கடியில் இருந்து, அவர்கள் எப்படி மீண்டு வந்தார்கள் என்பதை பாராட்ட வேண்டும்.</p><p>எங்கள் அணியின் படிக்கல், மானவ் சுதார், ராகுல் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். வேகப்பந்து வீச்சாளர்களும் நன்றாக செயல்பட்டார்கள்.</p><h2>சிறப்பாக பந்து வீசிய மானவ் சுதார்</h2><p>மானவ் சுதார் செயல்பட்ட விதம் என்னைக் கவர்ந்தது. அவர் சிறப்பான முறையில் பந்து வீசி வருகிறார். அவர் பந்தை வீசும் விதமும் அதற்கு அவர் கை மற்றும் மணிக்கட்டை எப்படி பயன்படுத்துகிறார் என்பதையும் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இனி அவர் எங்களின் மிகவும் முக்கிய ஒரு பவுலராக இருக்கப் போகிறார்.</p><p>அடுத்ததாக நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட நியூசிலாந்து செல்ல இருக்கின்றோம். அது எங்களுக்கு ஒரு நல்ல தொடராக இருக்கும் என நினைக்கின்றோம். அதன் பிறகு சொந்த மண்ணில் நடைபெறும் தொடர் இருக்கின்றது.</p><p>நாங்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்வோம் என்ற நம்பிக்கை இருக்கின்றது.</p><p>பாலோ ஆன் வழங்கியபோது அதுதான் சிறந்த முடிவாக இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் இலங்கை வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். வெற்றி தோல்வி எங்களுக்கு இல்லை என்றாலும் டெஸ்ட் கிரிக்கெட் வெற்றி பெற்றுள்ளது என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஆணவக் கொலைக்கு எதிராக விரைவில் சிறப்பு சட்டம் இயற்றப்படும் - சட்டமன்றத்தில் அமைச்சர் வன்னி அரசு அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-law-against-honor-killings-to-be-enacted-soon-minister-vanni-arasu-announces-in-the-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-law-against-honor-killings-to-be-enacted-soon-minister-vanni-arasu-announces-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">99784b40-5da4-4375-bb8c-979d501f72fa</guid><pubDate>Thu, 27 Aug 2026 14:36:14 +0000</pubDate><atom:updated>2026-08-27T14:36:14.441Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Honor Killing,ஆணவப்படுகொலை,minister vanni arasu,அமைச்சர் வன்னி அரசு,special law,சிறப்புச் சட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/cvx4u29p/New-Project-2026-08-27T200551.413.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆணவக் கொலைக்கு எதிராக விரைவில் சிறப்பு சட்டம் இயற்றப்படும் - சட்டமன்றத்தில் அமைச்சர் வன்னி அரசு அறிவிப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/cvx4u29p/New-Project-2026-08-27T200551.413.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்காகக் தனிச்சட்டம் இயற்றப்படும் என்று சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு சட்டமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். </p><p>ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையிலான ஆணவப்படுகொலை தடுப்பு ஆணையத்தின் பரிந்துரைகளைப் பெற்ற பிறகு, முதலமைச்சர் விஜய் உடன் ஆலோசித்து நிச்சயம் சட்டம் இயற்றப்பட்டு, நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் வன்னி அரசு.,</p><p>“வன்கொடுமைக்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும், சமத்துவம் மற்றும் சமூகநீதியை நிலைநாட்டி, அனைவரிடையேயும் இணக்கமான சூழலை உருவாக்க அரசு முயன்றுவருகிறது. </p><p>இருப்பினும் தங்கள் சொந்தப் பிள்ளைகளையே ஆணவக்கொலை செய்யும் சம்பவல்கள் சமூகத்தில் அரங்கேறி வருகின்றன. </p><p>சமூகத்தில் தொடர்ந்து நடந்துவரும் ஆணவப்படுகொலை சம்பவங்களை தடுப்பதற்கு, சிறப்பு சட்டம் இயற்றுவதற்கு அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள், பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த திமுக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாட்ஷா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. </p><p>இக்குழு அரசு அலுவலர்களுடனும் கலந்து ஆலோசித்து கருத்துகள் கேட்கப்பட்டு உள்ளது. மேலும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசித்து கருத்துகளைப் பெற்று அறிக்கை தயார் செய்யவேண்டிய நிலை உள்ளதால், பாஷா குழுவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்தக் குழுவின் பரிந்துரைகள் பெறப்பட்ட உடன், ஆணவப்படுகொலைகளை தடுத்து நிறுத்துவதற்கு சிறப்புச் சட்டம் இயற்றப்படும் என்று திறந்த மனதோடு அறிவிக்கிறேன்.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>அமெரிக்க ஐடி வேலையை உதறிய இந்தியர் - மாதம் ரூ.60 கோடி லாபத்தில் விவசாயம்</title><link>https://www.maalaimalar.com/news/world/indian-quits-us-it-job-earns-60-crore-a-month-from-farming</link><comments>https://www.maalaimalar.com/news/world/indian-quits-us-it-job-earns-60-crore-a-month-from-farming#comments</comments><guid isPermaLink="false">992cbb03-dbdb-4946-a22f-adec3ad9daa5</guid><pubDate>Thu, 27 Aug 2026 14:15:37 +0000</pubDate><atom:updated>2026-08-27T14:15:37.812Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஐடி ஊழியர்,IT employee,Akshayakalpa,அக்‌ஷயகல்பா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/mi59pm1w/Untitled-design-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ American IT employee Sasi kumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/mi59pm1w/Untitled-design-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவில் உள்ள விப்ரோ நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநராக பணிபுரிந்து வந்த ஒருவர், தனது வசதியான வேலையை விட்டுவிட்டு விவசாயத்தில் ஈடுபட்டு அதன்மூலம் ரூபாய் 600 கோடி மதிப்பிலான தொழில் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியுள்ளார். </p><p>இதுகுறித்து விகாஷ் என்பவர் பகிர்ந்த எக்ஸ் பதிவில், ஐடி ஊழியரின் கடின உழைப்புக்கு பலனாக தொழில் முனைவோராக உருவெடுத்து, அவரது விவசாய நிறுவனம் மாதம் ரூ.60 கோடி லாபம் ஈட்டி வருவதாக தெரிவித்துள்ளார்.</p><h3><strong>அமெரிக்க ஐடி ஊழியர்</strong></h3><p>பெங்களூரு பல்கலைக்கழகத்தில் சசி குமார் என்பவர் பி.டெக் பட்டம் பெற்ற பிறகு, 12 ஆண்டுகளாக அமெரிக்காவில் உள்ள விப்ரோ நிறுவனத்தில், ஐடி ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார்.</p><p>பின்னர் அவர் அக்‌ஷயகல்பா என்ற திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு உதவுவதற்காக, அமெரிக்காவில் தனது வேலையை விட்டு விலகினார்.</p><p>இதையடுத்து இவர் ஆரம்பித்த விவசாய தொழில், முதல் 9 ஆண்டுகளில் ஆறு முறை திவால் நிலையின் விளிம்பிற்கு சென்றது.</p><p>அப்போது அவரது மனைவியின் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான சேமிப்புத் தொகையின் உதவியால், அவர் ஆரம்பித்த விவசாய தொழில் கடினமான காலங்களில் இருந்து மீண்டு வந்தது.</p><h3><strong>விவசாய தொழில்</strong></h3><p>இந்த நிலையில் ஐடி ஊழியரின் விவசாய தொழில் சாம்ராஜ்ஜியம் குறித்து விகாஷ் என்பவர் பகிர்ந்த எக்ஸ் பதிவில், அக்‌ஷயகல்பா அமைப்பில் தற்போது 2,800 விவசாயிகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.</p><p>இந்த விவசாய நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1.28 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டு வருவதாகவும், இதன் வருடாந்தர செலுத்துதல் தொகை ரூ.480 கோடியாக உள்ளதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.</p><p>மேலும் இந்த நிறுவனம் ஒவ்வொரு மாதமும் 60 கோடி ரூபாய் லாபம் ஈடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><h3><strong>பயனர்கள் வரவேற்பு</strong></h3><p>விகாஷ் என்பவர் பகிர்ந்த இந்த பதிவிற்கு பயனர்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். </p><p>ஒருவர் அந்த பதிவிற்கு, தான் அந்த விவசாய நிறுவனத்தினுடைய சாச் (மோர்) பானத்தை சுவைத்திருக்கிறதாகவும், அது மிகவும் சுவையுள்ளதாக இருப்பதாகவும் பதிவிட்டார்.</p><p>மேலும் அது சந்தையில் கிடைக்கும் மற்ற பிராண்டின் விலையை விட சற்று அதிகமாக இருப்பதாகவும், இருந்தாலும் அது அதன் விலைக்கு ஏற்ப தகுதியான தரத்துடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 350-ஐ தாண்டியது</title><link>https://www.maalaimalar.com/news/world/death-toll-in-nepal-flash-flood-rises-to-356</link><comments>https://www.maalaimalar.com/news/world/death-toll-in-nepal-flash-flood-rises-to-356#comments</comments><guid isPermaLink="false">54080dd4-5480-4c90-acc9-4769f2ff99f8</guid><pubDate>Thu, 27 Aug 2026 13:51:10 +0000</pubDate><atom:updated>2026-08-27T13:51:10.688Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாளம்,nepal,வெள்ளம்,flood,Death toll,பலி எண்ணிக்கை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/a77svjmr/flood.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ flood]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/a77svjmr/flood.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 356 ஆக அதிகரித்துள்ளது.</p><p>வடக்கு நேபாளத்தில் ஆற்றின் மேல் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக எல்லை நதி ஒன்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாலைகள் மற்றும் மின்சாரக் கட்டமைப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. </p><h2>கடும் சேதம்</h2><p>திபெத் எல்லைக்கு அருகே ஏற்பட்ட திடீர் வெள்ளம், குடியிருப்புகள், வாகனங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை கடுமையாக சேதப்படுத்தியது.</p><p>வெள்ளப் பெருக்கினால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்கும், தற்போதைய நிலவரத்தை ஆய்வு செய்வதற்கும் அமைச்சரவையின் முக்கிய அவசரக் கூட்டத்தினை நேபாள பிரதமர் பாலன் ஷா கூட்டினார்.</p><h2>ஹெலிகாப்டரில் மீட்புப்பணி</h2><p>வெள்ளத்தில் சிக்கிய பகுதிகளுக்குச் செல்லும் சாலைகள் மற்றும் பாலங்கள் சேதம் அடைந்ததால் பல இடங்களில் ஹெலிகாப்டர் மூலம் மீட்புப்பணி மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p><p>போட்டே கோஷி மற்றும் திரிசூலி ஆற்றுப் படுகைகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும், பாதுகாப்பான இடங்களுக்கு விரைந்து செல்லுமாறும் அதிகாரிகள் வலியுறுத்தினர். </p><h2>356 பேர் பலி</h2><p>இந்நிலையில், நேபாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 356 ஆக அதிகரித்துள்ளது. </p><p>மேலும் நூற்றுக்கணக்கானோரின் நிலை என்னவென தெரியவில்லை. </p><p>நேபாளம் மற்றும் திபெத் பகுதியில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் மாயமாகி உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.</p><p>நேபாள அரசுடன் சேர்ந்து இந்திய விமானப்படையும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மோசமான வானிலை மற்றும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளதால் தேடுதல் மற்றும் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பொறுப்பான கார் உரிமையில் நிதித் திட்டமிடல் வகிக்கும் பங்கு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/how-much-does-used-car-maintainance-cost-in-india</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/how-much-does-used-car-maintainance-cost-in-india#comments</comments><guid isPermaLink="false">5b355145-0b89-4b4d-8653-908e2eb43cb4</guid><pubDate>Thu, 27 Aug 2026 13:33:12 +0000</pubDate><atom:updated>2026-08-27T13:33:12.775Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Car,கார்,கார் பராமரிப்பு,car maintainance</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/1bpese07/car.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ car]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/1bpese07/car.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெரும்பாலான மக்கள் ஒரு காரை வாங்குவதற்கு முன் பல வாரங்கள் ஒப்பிட்டுப் பார்ப்பதில் செலவிடுகிறார்கள். ஆனால் அந்தக் காரை வைத்திருப்பதற்கு உண்மையில் எவ்வளவு செலவாகும் என்பதைப் பற்றி சிந்திக்க அதே அளவு நேரம் செலவிடுபவர்கள் மிகச் சிலரே.</p><p>வாங்குதல் என்பது வெறும் தொடக்கம் மட்டுமே. எரிபொருள், சர்வீஸிங், இன்சூரன்ஸ், பழுதுபார்ப்பு, தேய்மானம் ஆகியவை ஒவ்வொரு மாதமும் அமைதியாக, தொடர்ச்சியாக பின்தொடர்கின்றன. ஒரு திட்டமில்லாமல், இவை ஒருபோதும் அத்தகைய செலவுகளைத் தாங்குவதற்கு உருவாக்கப்படாத ஒரு குடும்ப பட்ஜெட்டின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.</p><h2>ஒரு காரை வாங்குவது ஒருமுறை மட்டும் செய்யும் செலவு அல்ல ஏன்?</h2><p>ஆன்-ரோடு விலையும் EMI-யும் தான் பெரும்பாலான வாங்குபவர்கள் கவனம் செலுத்தும் எண்கள். ஆனால் இரண்டுமே முழு கதையையும் சொல்வதில்லை. உரிமையின் இரண்டாம் ஆண்டு முதல், ஒரு காரை ஓட்டுவதற்கான செலவில் எரிபொருள், இன்சூரன்ஸ், சர்வீஸிங், பார்க்கிங், டோல், அவ்வப்போது தேவைப்படும் பழுதுபார்ப்பு ஆகியவை அடங்கும். இந்த செலவுகள் EMI-க்கு அப்பால் மொத்த மாதாந்திர கடமையைக் கணிசமாக அதிகரிக்கக்கூடும்.</p><p>அந்த இடைவெளியில்தான் உரிமை பட்ஜெட்டுகள் அமைதியாக சிதைந்துவிடுகின்றன. பெரும்பாலான இந்திய குடும்பங்கள் ஒரு காரை ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரை வைத்திருக்கின்றன. நிதி கடமை கடன் காலத்தில் மட்டுமல்ல, முழு காலத்திலும் தொடர்கிறது. எதையும் கையெழுத்திடுவதற்கு முன் இதைப் பற்றிய தெளிவான புரிதலைப் பெறுவது தான் கார் உரிமையை மன அழுத்தமாக இல்லாமல் நிர்வகிக்கக் கூடியதாக ஆக்குகிறது.</p><h2>காரை வாங்கிய விலைக்கு அப்பால் அதை வைத்திருப்பதற்கான உண்மையான செலவுகள் என்ன?</h2><p>பெரும்பாலான கார் உரிமையாளர்களுக்கு வாங்குதல் முடிந்த பின்னரும் ஒட்டுச் செலவுகள் தொடர்கின்றன. எரிபொருள், சர்வீஸிங், இன்சூரன்ஸ் புதுப்பித்தல்கள், பார்க்கிங் கட்டணங்கள், டோல், எதிர்பாராத பழுதுபார்ப்புகள் ஆகிய அனைத்தும் மொத்த உரிமை செலவில் பங்களிக்கின்றன. இந்த செலவுகளில் அடங்குவன: </p><p><strong>எரிபொருள்:</strong> இது எந்த விதிவிலக்கும் இல்லாமல் ஒவ்வொரு மாதமும் ஏற்படும் செலவு. காரை எவ்வளவு தூரம் ஓட்டுகிறோம், என்ன பாதைகளில் செல்கிறோம், இன்ஜின் எவ்வளவு திறமையாக இயங்குகிறது என்பதைப் பொறுத்து இது மாறுபடும்.</p><p><strong>இன்சூரன்ஸ் புதுப்பித்தல்:</strong> முதல் ஆண்டில் ஆன்-ரோடு விலையுடன் இணைக்கப்பட்டிருக்கும். இரண்டாம் ஆண்டு முதல் இது ஒரு தனி வருடாந்திர செலவாக மாறும். இதற்கு பல வாங்குபவர்கள் பட்ஜெட் ஒதுக்கியிருக்க மாட்டார்கள்.</p><p><strong>சர்வீஸிங்:</strong> உரிமையாளர் திட்டமிடட்டும் இல்லையோ, காருக்கு குறிப்பிட்ட இடைவெளிகளில் கவனிப்பு தேவை. ஒரு சர்வீஸை தவிர்ப்பது சேமிப்பாகத் தோன்றலாம். ஆனால் பின்னர் அதை சரிசெய்ய அதிக செலவாகும்.</p><p><strong>டயர்களும் பிரேக்குகளும்:</strong> இவை பயன்பாட்டால் தேய்ந்து, அவ்வப்போது மாற்றப்பட வேண்டும். வருடத்திற்கு சுமார் 15,000 கி.மீ. ஓடும் ஒரு கார், பொதுவாக மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை டயர் செட் மாற்றப்பட வேண்டியிருக்கும்.</p><p><strong>பேட்டரி:</strong> பெரும்பாலான கார் பேட்டரிகள் 4-5 ஆண்டுகள் நீடிக்கும். மாற்றுவது ஒருமுறை மட்டுமே ஏற்படும், ஆனால் தவிர்க்க முடியாத செலவு.</p><p><strong>பார்க்கிங்கும் டோலும்:</strong> தினசரி செலவுகள், இவை படிப்படியாக ஒரு காரை வைத்திருப்பதன் மற்றும் பயன்படுத்துவதன் மொத்த செலவை அதிகரிக்கக் கூடும்.</p><p><strong>தேய்மானம்:</strong> எரிபொருள் அல்லது சர்வீஸிங் போலல்லாமல் இது நேரடி செலவு அல்ல. ஆனால் காலப்போக்கில் வாகனத்தின் மறுவிற்பனை மதிப்பை பாதிக்கிறது.</p><p><strong>திட்டமிடப்படாத பழுதுபார்ப்புகள்:</strong> வாரண்டி முடிந்தவுடன் ஒவ்வொரு பழுதுபார்ப்பும் உரிமையாளரின் சொந்த பணத்தில் இருந்து தான். எதிர்பாராத பழுதுபார்ப்புகளுக்கு ஒரு அவசர நிதியை ஒதுக்கி வைப்பது, பராமரிப்பு தேவைகள் ஏற்படும்போது திடீர் நிதி நெருக்கடியைத் தவிர்க்க உதவும்.</p><h2>ஒரு நிலையான கார் உரிமை பட்ஜெட்டை உருவாக்க நிதி திட்டமிடல் எவ்வாறு உதவுகிறது?</h2><p>எந்தவொரு கார் உரிமை பட்ஜெட்டின் தொடக்க புள்ளியும், வெறும் EMI அல்ல, மாதாந்திர முழு எண்ணிக்கை. அனைத்தும் மீண்டும் நிகழும் மற்றும் அவ்வப்போது ஏற்படும் உரிமை செலவுகளும், பின்னர் எதிர்பாராத செலவுகளாக கருதப்படுவதற்குப் பதிலாக, ஆரம்பத்திலிருந்தே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.</p><p>கார் தொடர்பான செலவுகளுக்காக ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி வைப்பது, சர்வீஸிங், டயர் மாற்றங்கள், சிறிய பழுதுபார்ப்புகள் ஆகியவற்றை மற்ற நிதி இலக்குகளை பாதிக்காமல் ஈடுகட்ட உதவும்.</p><h2>ஒவ்வொரு கார் உரிமையாளரின் நிதி திட்டத்திலும் இன்சூரன்ஸ் ஏன் சேர்க்கப்பட வேண்டும்?</h2><p>இன்சூரன்ஸ் தான் புதுப்பித்தல் மாதம் வரும் வரை பெரும்பாலான வாங்குபவர்கள் குறைத்து மதிப்பிடும் செலவு. முதல் ஆண்டு இன்சூரன்ஸ் ஆன்-ரோடு விலையில் அமைதியாக இணைக்கப்பட்டிருக்கும். 13வது மாதம் அதை மாற்றிவிடும். ₹18,000 புதுப்பித்தல் அறிவிப்பு வந்திறங்குகிறது, ஆனால் பட்ஜெட்டில் அதற்காக எதுவும் ஒதுக்கப்படவில்லை.</p><p>பிரீமியத்தைத் தாண்டி, சரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கார் இன்சூரன்ஸ் பாலிசி தான், முன்கூட்டியே கணிக்க முடியாதவற்றை உள்வாங்கும் நிதி வழிமுறையாக செயல்படுகிறது. ஒரு விபத்து, ஒரு திருட்டு, ஒரு வெள்ளம், ஒரு மூன்றாம் தரப்பு பொறுப்புக் கோரிக்கை. உரிமையின் முதல் மாதத்திலிருந்தே வருடாந்திர புதுப்பித்தலுக்காக பட்ஜெட் ஒதுக்குவது, 13வது மாதத்தில் தொகையைத் தேடி அலைவதற்குப் பதிலாக, கார் உரிமையில் மிகவும் பொதுவான நிதி அதிர்ச்சிகளில் ஒன்றை நீக்கும் ஒரு எளிய பழக்கமாகும்.</p><h2>சாலையில் எதிர்பாராத நிதி அபாயங்களுக்கு கார் உரிமையாளர்கள் எவ்வாறு தயாராகலாம்?</h2><p>எதிர்பாராத நிதி அபாயங்களுக்குத் தயாராவது, அந்த அபாயங்கள் எங்கிருந்து வருகின்றன என்பதைப் புரிந்துகொள்வதில் தொடங்குகிறது. பெரும்பாலான கார் உரிமையாளர்களுக்கு, இவை பொதுவாக மூன்று வகைகளில் அடங்கும்: வாகனத்திற்கு ஏற்படும் சேதம், மற்றொருவருக்கு ஏற்படும் பொறுப்பு, மற்றும் வாகனம் பழுதுபார்க்கப்படும்போது ஏற்படும் தற்காலிக இடையூறு.</p><p>வாகனத்திற்கு ஏற்படும் சேதம்தான் மிகவும் தெரியும் ஒன்று. எலக்ட்ரானிக்ஸ் நிறைந்த நவீன காரின் பழுதுபார்ப்பு பில், மிதமான சேதத்திற்குக் கூட லட்சக்கணக்கில் செல்லலாம். திருட்டு அல்லது முழுமையான இழப்பு, கடன் தொடர்ந்து கொண்டிருக்கும்போதே வாகனத்தையே முழுமையாக அகற்றிவிடும்.</p><p>மூன்றாம் தரப்பு பொறுப்பு என்பது குறைவாகத் தெரியக்கூடிய, ஆனால் பெரியதாக இருக்கக்கூடிய அபாயம். மோட்டார் வாகன சட்டத்தின் கீழ், மற்றொருவருக்கு ஏற்படும் மரணம் அல்லது நிரந்தர ஊனத்திற்கான இழப்பீட்டிற்கு மேல் வரம்பு இல்லை. போதுமான இன்சூரன்ஸ் இல்லாத பட்சத்தில், அந்தப் பொறுப்பு நேரடியாக வாகன உரிமையாளர் மீது விழும்.</p><p>மூன்றுக்கும் தயாராவது ஒரே சில படிகளில் தொடங்குகிறது. காரின் இன்றைய உண்மையான மதிப்பை பிரதிபலிக்கும் ஒரு பாலிசியைத் தேர்ந்தெடுக்கவும். இடைவெளியில்லாமல் அதை செயலில் வைத்திருக்கவும். இன்சூரன்ஸ் தீர்க்கும் தொகைக்கும் உண்மையான பழுதுபார்ப்பு செலவுக்கும் இடையே விழும் தொகைகளுக்கு சில பணத்தை ஒதுக்கி வைக்கவும். இவை சிக்கலான படிகள் அல்ல, ஆனால் இவை அனைத்தும் சேர்ந்துதான், ஒரு சம்பவம் ஒரு நீடித்த நிதிப் பிரச்சினையாக மாறுவதைத் தடுக்கின்றன.</p><h2>நீண்டகால உரிமை செலவுகளை நிர்வகிப்பதில் காம்ப்ரிஹென்சிவ் பாதுகாப்பு என்ன பங்கு வகிக்கிறது?</h2><p>அடிப்படை மூன்றாம் தரப்பு பாலிசி மற்றவர்கள் மீதான பொறுப்பை மட்டுமே உள்வாங்குகிறது. இது காரையே முற்றிலும் பாதுகாப்பின்றி விட்டுவிடுகிறது. காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் விபத்துகள், திருட்டு, தீ, இயற்கை பேரிடர்கள் ஆகியவற்றால் ஏற்படும் சொந்த-வாகன சேதத்தை, மூன்றாம் தரப்பு பொறுப்புடன் சேர்த்து உள்வாங்குகிறது.</p><p>இங்கு ஆட்-ஆன்கள் முக்கியமானவை. ஜீரோ டெப்ரிசியேஷன் கவர் என்பது பாகங்கள் தேய்மான மதிப்பில் அல்ல, முழு மாற்று செலவில் தீர்க்கப்படுவதைக் குறிக்கிறது. இது ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான கார்களுக்கு உண்மையான வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. என்ஜின் பாதுகாப்பு, நீர் உட்புகுதல் அல்லது எண்ணெய் கசிவால் ஏற்படும் சேதத்தை உள்வாங்குகிறது, இது நிலையான பாலிசிகளில் விலக்கப்பட்டுள்ளது. ரிட்டர்ன் டு இன்வாய்ஸ் கவர், முழுமையான இழப்பு தீர்வு, தேய்மானத்திற்குப் பின் காரின் மதிப்பை அல்ல, அசல் வாங்கிய விலையை பிரதிபலிக்கிறது என்பதை உறுதி செய்கிறது.</p><p>இந்த ஆட்-ஆன்கள் ஒவ்வொன்றும், அவை உள்வாங்குவதன் ஒரு சிறு பகுதியே செலவாகும். உரிமைக் காலம் முழுவதும், இவை பழுதுபார்ப்பு மற்றும் கோரிக்கைகளின் சொந்த பண செலவை கணிசமாகக் குறைக்கின்றன. இதுதான் இன்சூரன்ஸ் வெறும் ஒரு சட்ட முறைமையாக இல்லாமல் ஒரு நிதி திட்டத்தின் பகுதியாக மாறும் விதம்.</p><h2>ஸ்மார்ட் நிதி முடிவுகள் ஒரு காரின் ஆயுள் மற்றும் மதிப்பை எவ்வாறு நீட்டிக்க முடியும்?</h2><p>நன்கு பராமரிக்கப்பட்ட ஒரு கார் ஓட்ட செலவு குறைவாக இருக்கும். இறுதியில் விற்கும்போது அதன் மதிப்பையும் சிறப்பாக தக்க வைத்திருக்கும். ஒழுங்குபடுத்தப்பட்ட பராமரிப்பின் நிதி பலன் இரண்டு முனைகளிலும் தெரியும், அதாவது உரிமைக் காலத்தில் குறைந்த ஓட்ட செலவுகள் மற்றும் முடிவில் சிறந்த மறுவிற்பனை விலை.</p><p>உற்பத்தியாளரின் சர்வீஸ் அட்டவணையைப் பின்பற்றுவது, சிறிய பிரச்சினைகள் விலையுயர்ந்தவையாக மாறுவதைத் தடுக்கிறது. சர்வீஸ் பதிவுகளை முழுமையாக வைத்திருப்பது மறுவிற்பனையின் போது உண்மையான மதிப்பைச் சேர்க்கிறது. வாங்குபவர்கள் ஒரு முழுமையான ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றைப் பார்க்கும்போது தொடர்ந்து அதிக விலை கொடுக்கிறார்கள். ஏனெனில் இது தாங்கள் வாங்குவது என்ன என்பது பற்றிய நிச்சயமற்ற தன்மையைக் குறைக்கிறது.</p><p>நோ கிளைம் போனஸை (NCB) புத்திசாலித்தனமாக நிர்வகிப்பதும் உரிமை செலவுகளைக் குறைக்க முடியும். காலப்போக்கில், அதிக NCB இன்சூரன்ஸ் புதுப்பித்தல் பிரீமியங்களில் கணிசமான சேமிப்பை ஏற்படுத்தலாம்.</p><h2>ஒரு நிதிரீதியாக பொறுப்புள்ள கார் உரிமையாளரை வரையறுக்கும் பழக்கங்கள் என்ன?</h2><p>ஒரு நிதிரீதியாக பொறுப்புள்ள கார் உரிமையாளர், வாகனத்தை ஒருமுறை மட்டும் எடுக்கும் முடிவாக அல்லாமல், தொடர்ந்து சுறுசுறுப்பான மேலாண்மை தேவைப்படும் ஒன்றாகக் கருதுகிறார்.</p><p>நடைமுறையில் இதன் பொருள், முதல் நாளிலிருந்தே முழு மாதாந்திர உரிமை செலவிற்காக பட்ஜெட் ஒதுக்குவது. காப்பீட்டை சரியான நேரத்தில் புதுப்பித்து, புதுப்பிக்கும்போது கவரேஜை மறுஆய்வு செய்வது, சாம் இன்சூர்டு இன்னும் காரின் மதிப்பையும் உரிமையாளரின் உண்மையான ஆபத்தையும் பிரதிபலிக்கிறதா என்பதை சரிபார்ப்பது. பதிவு, இன்சூரன்ஸ், PUC ஆவணங்களை புதுப்பித்த நிலையில் வைத்திருப்பது, ஏனெனில் காலாவதி ஆவது சட்ட மற்றும் நிதி ரீதியான ஆபத்தை ஒரே நேரத்தில் உருவாக்குகிறது.</p><p>சில முடிவுகள் அவ்வப்போது வரும். காரை எங்கு சர்வீஸ் செய்வது, ஒரு பழுதுபார்ப்புக்கு கோரிக்கை வைப்பது நல்லதா அல்லது நேரடியாக செலுத்துவது நல்லதா, மற்றும் ஒரு கட்டத்தில், காரை தொடர்ந்து ஓட்டுவது இன்னும் நிதி ரீதியாக அர்த்தமுள்ளதா அல்லது புதிதாக ஒன்றுக்கு மாறுவது புத்திசாலித்தனமான நகர்வா என்பது. இவை எதுவும் சிக்கலானவை அல்ல. இவை வெறுமனே இயல்பாக இல்லாமல் உணர்வுபூர்வமாக எடுக்கப்பட வேண்டும்.</p><h2>முடிவுரை</h2><p>பொறுப்புள்ள கார் உரிமை என்பது சரியான வாகனத்தைத் தேர்ந்தெடுப்பதைத் தாண்டியது. வருடங்களாக அதைப் பயன்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் வரும் செலவுகளுக்கு திட்டமிடுவதும் இதில் அடங்கும். சர்வீஸிங், இன்சூரன்ஸ் புதுப்பித்தல்கள், பழுதுபார்ப்புகள், தேய்மானம் போன்ற செலவுகள் முன்கூட்டியே எதிர்பார்க்கப்படும்போது, கார் உரிமை மேலும் கணிக்கக்கூடியதாகவும் நிதி ரீதியாக நிலையானதாகவும் மாறுகிறது. ஒரு கவனமான நிதி திட்டம், உரிமையாளர்கள் தங்கள் நீண்டகால நிதி நிலைமையின் மீது தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்தாமல் தங்கள் வாகனத்தின் பலன்களை அனுபவிக்க உதவுகிறது.</p><h2>Reference Links:</h2><p>https://fintoolbaba.com/blog/hidden-cost-owning-car-india</p><p>https://fintoolbaba.com/blog/used-car-maintenance-cost-india</p><p>https://tukkbook.in/car-ownership-cost-calculator/</p><p>https://www.godigit.com/motor-insurance/car-insurance/ncb-in-car-insurance </p>]]></content:encoded></item><item><title>சட்ட மன்றமா? சண்டை மன்றமா? ஆதவ் அர்ஜூனா பேசாதவரை அவை சுமூகமாக செல்கிறது - பிரேமலதா ஆவேசம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/things-proceed-smoothly-as-long-as-aadhav-arjuna-doesnt-speak-is-this-a-legislative-assembly-or-an-arena-for-brawls-premalatha-fumes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/things-proceed-smoothly-as-long-as-aadhav-arjuna-doesnt-speak-is-this-a-legislative-assembly-or-an-arena-for-brawls-premalatha-fumes#comments</comments><guid isPermaLink="false">c2cf0b6e-6936-4d71-b7a0-e233cf80c78a</guid><pubDate>Thu, 27 Aug 2026 13:20:57 +0000</pubDate><atom:updated>2026-08-27T13:20:57.807Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆதவ் அர்ஜூனா,Aadhav Arjuna,பிரேமலதா விஜயகாந்த்,premalatha vijayakanth,தமிழ்நாடு சட்டப்பேரவை,Tamil Nadu  Assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/ygjzyjqn/New-Project-2026-08-27T184358.336.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆதவ் அர்ஜூனா பேசாதவரை அவை அமைதியாக செல்கிறது... இது சட்ட மன்றமா? சண்டை மன்றமா? - பிரேமலதா ஆவேசம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/ygjzyjqn/New-Project-2026-08-27T184358.336.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும்நிலையில், நாளுக்கு நாள் தவெக - திமுக வார்த்தை போர் அதிகரித்து வருகிறது. </p><p>இந்நிலையில் இன்று இதுதொடர்பாக சட்டமன்றத்தில் பேசிய தேமுதிக பொதுச்செயலாளரும், விருத்தாசலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த்.,</p><p>“மக்கள் பிரச்னைகளை பேசுவதற்குதான் சட்டசபை. கருத்துகளை ஒரு 5 நிமிடம் பகிரலாம். ஆனால் மாலை 6.30 மணிவரை ஒருவரை ஒருவர் குறை சொல்வது, சண்டை போடுவதுதான் நடக்கிறது. இதனால் தமிழ்நாட்டு மக்களுக்கு என்னப் பலன்?</p><p>இதுவரை ஆட்சி செய்த அனைத்துக் கட்சிகளும் காலக்கட்டத்திற்கு ஏற்ப ஆட்சியை சிறப்பாகத்தான் செய்துள்ளனர். உங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதற்கு மக்களும், நாங்களும் துணைநிற்போம்.</p><p>இரவு முழுவதும் பேசவேண்டியவற்றை தயார் செய்துவருகிறோம். ஆனால் எங்களுக்கு பேச வாய்ப்பு கிடைப்பதில்லை. எப்போது பார்த்தாலும் சட்டமன்றத்தில் சண்டை, சண்டை, சண்டை. மக்களுக்கு இதனால் என்னப் பயன்? </p><p>இங்கு மக்களுக்காக பேசவேண்டும். அவர்களுக்காகத்தான் இந்த சட்டமன்றம் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். நேற்று முன்தினம் 2 மானியக் கோரிக்கை குறித்துக்கூட பேசமுடியவில்லை. </p><p>பேசியவர்களேதான் பேசுகிறார்கள். இது சட்டமன்றம், சண்டை மன்றம் அல்ல. ஆதவ் அர்ஜூனா பேசாதவரை அமைதியாக செல்கிறது. அவர் பேச ஆரம்பித்தால் சண்டை ஆரம்பித்துவிடுகிறது. அதற்கு நீங்கள் அனுமதி அளிக்கக்கூடாது. அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பேச அனுமதி அளிக்கவேண்டும்.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்| 27 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-27-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-27-august-2026#comments</comments><guid isPermaLink="false">fdcac3cc-5277-4752-b476-f0f1c8922a11</guid><pubDate>Thu, 27 Aug 2026 04:02:06 +0000</pubDate><atom:updated>2026-08-27T12:54:37.383Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly,tvk</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/zok08jg6/vanni-arasu.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Vanni Arasu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/zok08jg6/vanni-arasu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இடம் மாறி அமர்ந்த முதல்வர்</p><p>சட்டப்பேரவையில் தனது இருக்கையிலிருந்து எழுந்துவந்து அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா நடுவே அமர்ந்த முதலமைச்சர் விஜய்.</p><p>சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசை ஏன் நம்பியிருக்க வேண்டும்? என்று சி.வி.சண்முகம் கேள்வி. </p><p>நம்மிடம் உள்ள பட்டியலை வைத்து மாநில அரசே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் என்ன பிரச்சனை? என கேள்வி எழுப்பினார்.</p><p>மத்திய அரசு தான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என ஜனார்த்தனன் கமிட்டி சொன்னதால் அதை பின்பற்றினோம் என்று எ.வ.வேலு கூறினார்.  </p><p>தாஹிராவுக்கு வாய்ப்பு... திமுக எதிர்ப்பு</p><p>திமுக கொறடா எ.வ.வேலு:</p><p>அலுவல் ஆய்வு குழு என்று உள்ளது, அதன் படி தான் அவை நடக்கிறது. அந்த பட்டியலில் இல்லாதவரை பேச அனுமதிப்பது எப்படி? </p><p>இதுக்கு எந்த முன் உதாரணமும் இல்லை. அனுபவம் உள்ள முன்னவர் செங்கோட்டையன், இது பற்றி சொல்ல வேண்டாமா?</p><p>பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார்</p><p>தமிழ்நாடு சட்டம் 45-ன் கீழ் 1994-ன்படி பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல்கள் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் ஒரு சமூகத்தை சேர்த்தல் அல்லது நீக்குதல் தொடர்பான திருத்தங்களை மேற்கொள்வதற்கு உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி அமைக்கப்பட்ட தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணயைத்தின் பரிந்துரைகளை பெற்று அரசு பரிசீலனை செய்யப்படும் அரசால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>அதிமுக எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி</p><p>ஈலுவாத்தியா சமூதாயத்தில் தமிழக முழுவதும் சுமார் 15 லட்சம்பேர் வசிக்கிறாரகள். இவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான சாதி சான்றிதழ் கன்னியாகுமரி மாவட்டம் செங்கோட்டை தாலுகாவில் மட்டுமே சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது. கடந்த முறை ஜூலை 2020ல் நானும் சமூதாயத் தலைவர்கள் அனைவரும் சேர்ந்து அன்னைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரடியாக சந்தித்து பரிந்துரை செய்யப்பட்டு தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வசிக்கும் ஈலுவாத்தியா சமூதாய மக்களுக்கு பிசி சான்றிதழ் ஆவாணம் செய்யப்பட்டது.</p><p>வங்கி பணிகளில் பணிப்புரிய விரும்புவோருக்கு ஓபிசி சான்றிதழ் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அது இன்னும் நிலுவையில் உள்ளது.</p><p>இதன் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு  பரிந்துரை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.</p> <p>தேர்தலுக்கு முன்னர் என்னைப் பார்த்து எதிர்க்கட்சித் தலைவர் சிரிப்பார். ஆனால் முதல் மாநாட்டிற்கு பிறகு அவர் எனக்கு நிறைய இடைஞ்சல்களை கொடுத்தார். - விஜய் தாமு </p><p>விலையில்லா விருந்தகத்தை பார்த்துதான் காலை உணவுத் திட்டத்தை கொண்டுவந்தனர். அதுபோல தாய்மாமன் தங்க மோதிரத் திட்டமும் எப்போதிலிருந்து நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். இப்போதுதான் திட்டமாக அறிவித்துள்ளோம். - சட்டமன்ற உறுப்பினர் விஜய் தாமு</p><p>சென்னையின் பழமையான தொகுதி ராயபுரம் மற்றும் முக்கிய தொகுதிகளில் ஒன்று. நட்சத்திர தொகுதி என்றுக் கூறுவார்கள். ஆனால் அதன் நிலை சொல்வதற்கு இல்லை.</p><p>ஏழ்மை நிலையில் இருக்கும் மக்கள் அங்கு நிறைய இருக்கிறார்கள். அங்கு வீடுகள் இன்று வசிக்கும் 850 குடும்பங்களுக்கு வீடு கட்டித்தர வேண்டும் என்று வேண்டுகிறேன். </p><p>காசிமேடு மீன் சந்தையை புதிப்பித்துத் தர வேண்டுகிறேன். மீனவர்களுக்கு தற்போது தரப்படும் நிவாரணத் தொகையை ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரமாக உயர்த்தி தரவேண்டும். </p><p>ராயபுரத்தில் அதிநவீன தொழில்நுட்ப பூங்கா அமைக்கவேண்டும். இதன்மூலம் வடசென்னை இளைஞர்களுக்கு அருகிலேயே வேலைவாய்ப்புகள் கிடைக்கும். </p><p>அதிக கொள்ளளவு கொண்ட குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்கள் அமைக்கப்பட வேண்டும் - ராயபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜய் தாமு அரசுக்கு வைத்த கோரிக்கைகள்.</p><p>தமிழக சிறையில் உள்ள சிறைவாசிகளை நன்னடத்தை விதிகளை கருத்தில் கொண்டு விரைவில் விடுவிக்க வேண்டுகிறேன்</p><p>புளியங்குடி நகராட்சியை தரம் உயர்த்த வேண்டும்.</p><p>கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும்.</p><p>தென்மலையில் நெல் சேமிப்பு கிடங்கு அமைத்து தரவேண்டும்.</p><p>பூலித்தேவன் மணிமண்டபத்தை பராமரிக்க வேண்டும்- திமுக எம்.எல்.ஏ. ராஜா</p><p>விஜயகாந்த் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த தலைவர்களுக்கு நன்றி.</p><p>மானிய கோரிக்கை மீதான விவாதத்தை தவிர்த்து மற்ற விஷயங்கள் நடந்து வருகின்றன.</p><p>சட்டப்பேரவையில் கடந்த 3 நாளாக சண்டை மட்டுமே நடந்து வருகிறது.</p><p>சட்டமன்றத்தில் சண்டையைப் பார்க்க நாங்கள் வரவில்லை.</p><p>ஆளும்கட்சியினர், எதிர்க்கட்சியினர் மாறி மாறி சண்டை போட்டுக் கொள்வதால் என்ன பயன்?</p><p>சட்டசபையில் நடைபெறும் சண்டையால் மக்களுக்கு என்ன பயன்? - பிரேமலதா</p><p>வாளோடு வரும் எதிர்க்கட்சியினரை ஆளும் கட்சி கேடயம் கொண்டு தடுக்க வேண்டுமே தவிர வாள் கொண்டு எதிர்க்கக் கூடாது.</p><p>இணக்கமான சுழ்நிலையை சுமுகமாக நடத்தவேண்டும் என்பது தான் அவையின் நோக்கம்: சபாநாயகர்</p><p>சமூக நீதி பேசக்கூடிய திமுக கடந்த ஆட்சியில் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசவே இல்லை. மேற்குவங்க், பீகாரில் 3 மாதத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி செயல்படுத்தினார்கள்.</p><p>சாதிவாரி கணக்கெடுப்பு கோப்பைகளை எங்கேயோ தூக்கிபோட்டுவிட்டது கடந்த திமுக அரசு.</p><p>தமிழக வெற்றிக் கழக அரசு தான் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என அறிவித்திருக்கிறது- அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</p><p>அண்ணன் சேகர்பாபு, பெரியார் பெயரை உச்சரிக்கவே கூடாது. கடந்த ஆட்சி பெரியார் பெயரை பெயரளவில் சொல்லிவிட்டு, அனைத்து ஜாதியினர் திட்டத்தை கைவிட்டுவிட்டார்கள். எல்லாம் பேப்பரில் தான் இருக்கிறது.</p><p>ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு கொடுத்தது தமிழக வெற்றிக் கழக அரசு. கடந்த தேர்தலில் 4 பேர் விசிக சார்பில் வெற்றி பெற்று வந்திருந்தோம், ஆனால் திமுக அரசு ஒரு அமைச்சர் பதவி கூட கொடுக்கவில்லை- வன்னி அரசு. </p><p>ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வேலை செய்வது ஒவ்வொரு அரசின் கடமை. திமுக ஏன் இதுவரை ஒரு தலித்தை கூட பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக்கவில்லை?- அமைச்சர் ராஜ்மோகன்.  </p><h2>அமைச்சர் ஷாஜகான்</h2><p>சிறுபான்மையினருக்கு 18 அறிவிப்புகளை கொடுத்து சரித்திரம் படைத்துள்ளது தவெக அரசு.</p><h2>திமுக எம்எல்ஏ சேகர் பாபு </h2><p>அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தில் 32 பேருக்கு அர்ச்சகர் பணிநியமன ஆணை திமுக ஆட்சியில் வழங்கப்பட்டது.</p><p>சில நல்ல மனம் படைத்தவரகள் நீதிமன்றத்திற்கு சென்ற காரணத்தினால் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதில் சிக்கல்.</p><p>அர்ச்சகர் வழக்கில் தனி குழு அமைத்து உச்சநீதிமன்றத்தில சட்ட போராட்டம் நடத்தியது திமுக அரசு.</p><p>கோவி செழியன்- இந்தியாவிலேயே பிற்படுத்தப்பட்டோருக்காக தீப்பிடித்து எரியாத கான்கிரீட் வீடு கட்டி தந்தது திமுக அரசு தான்.</p><p>5 ஆண்டுகளுக்கு தான் மக்கள் வாக்களித்துள்ளனர், 5 ஆண்டுக்கும் தவெக ஆட்சி இருக்கும் என சபாநாயகர் திட்டவட்டம்.</p><p>தலித் மக்களில் 28 சதவீதம் பேர் குடிசைகளில் தான் உள்ளனர். 75 ஆண்டுகளில் தலித் பெண்களுக்கு முக்கியத்துவம் தரவில்லை.</p><p>அமைச்சர் ஆதவ் பேசியபோது திமுகவினர் எழுந்துநின்று கோஷம் எழுப்பிய நிலையில் நாங்களும் எழுந்து நிற்போம் என ஆதவ் பேசினார்.</p><p>மேலும் அவர், எத்தனை மாற்று சாதியினர் அர்ச்சகராக தற்போது வரை கோவில்களில் உள்ளனர் என தகவல் எடுத்து நான் கொடுக்கிறேன்.</p><p>திமுக அரசாணை போட்டது, விழா நடத்தியது ஆனால் 32 பேருக்கு மட்டும் பணி நியமன ஆணை வழங்கியுள்ளது. 5 ஆண்டு ஆட்சியில் இருந்தது திமுக, ஆனால் நீதிமன்றத்தில் வழக்கில் வெற்றிபெற முடியவில்லை. அந்த வழக்கை தொடுத்தது யார்?- அமைச்சர் ஆதவ்</p><p>பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோருக்கு நிதியுதவி தொடர்பாக, சட்டப்பேரவையில் அமைச்சர் சம்பத்குமார் அறிவித்துள்ளார்.</p><p>அதன்படி, பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோருக்கு நவீன சிகைதிருத்தும் அழகு நிலையம் அமைக்க நிதியுதவி வழங்கப்படும்.</p><p>சலூன் கடை அமைக்க ஒரு பயனாளிக்கு ரூ.1.50 லட்சம் என 100 பேருக்கு ரூ.1.50 கோடி நிதியுதவி வழங்கப்படும்.</p><p>மதுரை, தேனி, திண்டுக்கல்லில் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் ரூ.4.50 கோடியில் உட்கட்டமைப்பு பணி மேற்கொள்ளப்படும்</p><p>ரூ.3 கோடியில் மிக பிற்படுத்தப்பட்டோர் நல வாரியம் புதிதாக உருவாக்கப்படும்</p><p>பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த 5,000 பேருக்கு இஸ்திரி பெட்டி வழங்கப்படும்.</p><h2>சிறப்பு அங்கன்வாடி மையங்கள்</h2><p>பழங்குடியின குழந்தைகளுக்கு மழலையர் கல்வி வழங்கவும், படித்த பழங்குடியின இளைஞர்களுக்கு வசிப்பிடத்திற்கு அருகே வேலைவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்யவும், தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 250 இடங்களில் ‘சிறப்பு அங்கன்வாடி மையங்கள்' உருவாக்கப்படும்- அமைச்சர் வன்னி அரசு.</p><h2>பூம்பொழில் தங்கும் வசதிகள்</h2><p>மலைப்பகுதிகளில் பழங்குடியின வாழ்விடத்திற்கு அருகில் அமைந்துள்ள இயற்கை வளம், உயிரியல் பன்முகத்தன்மை மற்றும் வாழ்வியலை கண்டு மகிழும் வகையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த 'பூம்பொழில் தங்கும் வசதிகள்' ஏற்படுத்தப்படும். </p><p>உள்ளூர் பழங்குடியின இளைஞர்களுக்கு வழிகாட்டி பயிற்சி வழங்கப்படும்- அமைச்சர் வன்னி அரசு.</p><h2>கொசுவலைகள் பொருத்த நடவடிக்கை</h2><p>1,238 சமூகநீதி பள்ளி, கல்லூரி விடுதிகளில் உள்ள அனைத்து ஜன்னல்களுக்கும் ரூ.26.85 கோடியில் தரமான கொசுவலைகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்- அமைச்சர் வன்னி அரசு</p><h2>சமூகநீதி விடுதிகளுக்கு Fridge</h2><p>சமூக நீதி விடுதிகளில் 20 கல்லூரி விடுதிகளுக்கு Inverter, fridge, Water Purifiers w 940 பள்ளி விடுதிகளுக்கு Inverter, Water Purifiers வழங்கப்படும்- அமைச்சர் வன்னி அரசு</p><h2>தூய்மை பணியாளர்களுக்கு சொந்த வீடு</h2><p>தூய்மை பணியாளர்களுக்கு சொந்த வீடு வழங்க ‘அகம் திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டு, 2500 கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்- அமைச்சர் வன்னி அரசு</p><h2>விடிவெள்ளி மகளிர் வாழ்வாதார திட்டம்</h2><p>பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒரு இலட்சம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின குடும்பத் தலைவிகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக 'விடிவெள்ளி மகளிர் வாழ்வாதார திட்டம்' செயல்படுத்தப்படும்- அமைச்சர் வன்னிஅரசு</p><h2>சென்னையில் பழங்குடியினர் பண்பாட்டு மையம்</h2><p>நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் செயல்படும் பழங்குடியினர் ஆய்வு மையத்தின் பணிகளை சென்னை மாநகருக்கும் விரிவுபடுத்தும் வகையில், சென்னை நந்தனத்தில் ‘பழங்குடியினர் பண்பாட்டு மையம்' அமைக்கப்படும்- அமைச்சர் வன்னிஅரசு</p><p>பள்ளி விடுதி மாணாக்கர்களுக்கு ரூ.1400ல் இருந்து ரூ.1800 ஆகவும், கல்லூரி விடுதி மாணாக்கர்களுக்கு ரூ.1500ல் இருந்து ரூ.2000 ஆகவும் உயர்த்தி மாதாந்திர உணவு கட்டணம் வழங்கப்படும்- அமைச்சர் வன்னி அரசு </p><p>ஊடகத் துறையில் இளம் திறமைகளை ஊக்குவிக்க உட்பயிற்சி உதவித்தொகை வழங்கும் “ஊடகத்திறன் ஊக்குவிப்பு திட்டம்” செயல்படுத்தப்படும் என பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார் அமைச்சர் வன்னி அரசு.</p><p>இதன் மூலம் மாணாக்கர் ஊடக நிறுவனங்களில் நடைமுறை பயிற்சி பெற்று, தொழில்முறைத் திறன்களை வளர்த்துக் கொண்டு ஊடகத் துறையில் சிறந்து விளங்க பயிற்சி.</p><p>மாணாக்கருக்கு பாதுகாப்பு, சுகாதாரமான மற்றுமு் கல்விக்கு உகந்த தகுமிடம் சூழலை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை.</p><p>ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர் மற்றும் காப்பாளர்களுக்கு 'அறிவொளி ஆசிரியர் விருது மற்றும் அறிவொளி காப்பாளர் விருது' வழங்கப்படும்.</p><p>இதன் மூலம், ஆசிரியர்கள் மற்றும் விடுதி காப்பாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் புதுமையான முயற்சிகளைப் பாராட்டி, சிறந்த கற்பித்தல் நடைமுறைகள் ஊக்குவிக்கப்படும்- வன்னி அரசு</p><p>ஆதிதிராவிடர், பழங்குடியினர் விடுதியை நிர்வகிக்க, மாணவர் பாதுகாப்பை உறுதிசெய்ய அரண்- விடுதி பராமரிப்பு மேலாண்மை.</p><p>தரமான, சத்தான உணவு வழங்கும் பொருட்டு விடுதி மாணவர்களுக்கு வழங்கும் மாதாந்திர உணவு கட்டணம் உயர்த்தப்படும்.</p><p>ஆதி திராவிட மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் சமுதாய நிகழ்வுகளை நடத்த ஏதுவாக 100 சமுதாய கூடங்கள் கட்டப்படும்- வன்னி அரசு</p><p>ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாமாக்கருக்கு ரூ.160 கோடியில் 150 சமூகநீதி விடுதிகள் கட்டப்படும்.</p><p>ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கல்லூரி விடுதி ஆண்டு பராமரிப்பு தொகை ரூ.50,000-ல் இருந்து ரூ. 1 லட்சமாக உயர்த்தப்படும்.</p><p>ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகளுக்கான வருடாந்திர பராமரிப்பு தொகை உயர்த்தி வழங்கப்படும்- வன்னி அரசு.</p><p>சமூகநீதித்துறையில் புதிய அறிவிப்புகள்</p><p>ஆதிதிராவிடர் மக்களுக்கு தேவையான நல உதவிகளை வழங்க ஏதுவாக சமூக நீதி நல வாரியம் அமைக்கப்படும்.</p><p>பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு கல்வி, மருத்துவம், திருமண உதவி தொகை வழங்கி பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ திட்டம்.</p><p>ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகளுக்கான வருடாந்திர பராமரிப்பு தொகை உயர்த்தி வழங்கப்படும்- வன்னி அரசு.</p><p>சட்டமன்றத்தில் கேள்வி, விடை நேரம் நிறைவு பெற்று பிற்படுத்தப்பட்டோர்-சிறுபான்மையினர்-சமூகநீதித்துறை தொடர்பான மானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது.</p><p>படம் நன்றாக இருந்தால், பொறுமையாக இருந்து மக்கள் கடைசி வரை க்ளைமாக்ஸ் பார்ப்பார்கள். நீங்கள் சொல்வதை பார்த்தால், இந்த படம் ஓடாது, நன்றாக இருக்காது, எனவே முன்பே க்ளைமாக்ஸ் போட்டு விடுவோம் என்பது போல இருக்கிறது- எதிர்கட்சி தலைவர் உதயநிதி.</p><p>இப்போதெல்லாம் படத்திற்கு இரு க்ளைமாக்ஸ் இருக்கிறது. படத்தின் துவக்கத்திலும், இறுதியிலும் அவை வருகிறது. மாற்றத்தை விரும்ப வேண்டும். நீங்கள் ஆட்சி மாற்றத்தையும் விரும்புவதில்லை, நடைமுறை மாற்றத்தையும் விரும்புவதில்லை- அமைச்சர் வன்னி அரசு.</p><p>அமைச்சர்கள் அறிவிப்புகளை வெளியிட்ட பிறகு பதிலுரை வழங்குவது என்பது, திரைப்படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியை முதலில் போடுவது போல இருக்கும். அது சரியா?- அமைச்சர் தங்கம் தென்னரசு.</p><p>என்னுடைய கருத்து, க்ளைமாக்ஸை மக்கள் பார்க்காமல் போய்விடுவார்களோ என்கிற கவலை- சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்</p><p>படம் நன்றாக இருந்தால், பொறுமையாக இருந்து மக்கள் கடைசி வரை க்ளைமாக்ஸ் பார்ப்பார்கள். நீங்கள் சொல்வதைப் பார்த்தால், இந்தப் படம் ஓடாது, நன்றாக இருக்காது. எனவே, முன்பே க்ளைமாக்ஸ் போட்டுவிடுவோம் என்பது போல இருக்கிறது- எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி</p><p>சென்ற ஆகஸ்ட் 25-ஆம் தேதி மானியக் கோரிக்கை விவாதம் சிறப்பாக நடந்தது. முதன்முறையாக 9:43 மணி நேரம் தொடர்ந்து அவை நடந்தது. இருப்பினும், நேரம் காரணமாக அறிவிப்பவர்களுக்கு, அவையில் இருப்பவர்களுக்கு ஏற்படும் பதற்றத்தைப் போக்கும் வகையில், இனி அறிவிப்புகளை வெளியிட்ட பிறகு அமைச்சர்கள் பேசும் நடைமுறை கொண்டுவரப்படும்- சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்.</p><p>கீர்த்தனாவின் திருத்த அறிக்கை.. ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய திமுக..</p><p>விதியின் கீழ் திருத்த அறிக்கை சமர்ப்பிக்க அமைச்சர் கீர்த்தனாவுக்கு உரிமை இருக்கிறது. அதே விதியில், திருத்தக் குறிப்பை பேரவை கூடும் அரை மணி நேரத்திற்கு முன்பாக உறுப்பினர்களின் தகவலுக்காக வைக்க வேண்டும். எனவே, இதை ஒழுங்குப் பிரச்சினையாக எடுத்துக்கொள்ள வேண்டும்-  திமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின்.</p><p>நிச்சயமாக, வருங்காலங்களில் திருத்த அறிக்கையை அரை மணி நேரத்திற்கு முன்பாக உறுப்பினர்களின் கவனத்திற்குக் கொண்டு வர அமைச்சர்கள் முன்வர வேண்டும்- சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்.</p><p>தமிழ்நாட்டில் முதலீடு செய்த நிறுவனம் ஆந்திராவிலும் முதலீடு செய்துள்ளது. சுஸ்லாண் நிறுவனம் ஆந்திராவுக்கு சென்றதாக செய்தி பரவும் நிலையில் அமைச்சர் கீர்த்தனா விளக்கம்.</p><p>மேலும் அவர்,"பல ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் இருந்து சென்ற நிறுவனம் அரசின் நடவடிக்கையால் தற்போது ரூ.500 கோடியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.500 கோடி முதலீடு செய்யும் நிறுவனத்தின் மூலம் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.</p><p>சின்னபிள்ளை சுயஉதவி குழு மூலம் மதுரையில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு என நான் பேசியது திருத்தி வெளியிடப்பட்டுள்ளது" என்றார்.</p><p>டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் பரவும் நிலையில், கட்டுப்பாடு நடவடிக்கை என்ன என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>இதற்கு பதில் அளித்த அமைச்சர் அருண்ராஜ்,"டெங்கு, பன்றிக்காய்ச்சல் பரவல் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது கொசு ஒழிப்பு பணியும் மேற்கொள்ளப்படுகிறது. </p><p>டெங்கு காய்ச்சல் தொடர்பாக 2  நாட்களுக்கு முன்னர் அனைத்து இயக்குநர், மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம்.</p><p>ஏடிஎஸ் கொசுவால் டெங்கு பாதிப்பு ஏற்படுவதால் வீடுகளை சுற்றி கொசு உற்பத்தியாகாமல் பாதுகாப்பது மக்களின் பொறுப்பு.</p><p>கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு ஆகஸ்ட்டில் கூடுதலாக 300 பேருக்கு டெங்கு பாதிப்பு உள்ளது என்றாலும் நிலை கட்டுப்பாட்டிற்குள்தான் உள்ளது.</p><p>அரசு நிகழ்வை முடித்துவிட்டு, முதல்வர் விஜய் வந்து கொண்டிருக்கிறார். அவர் தலைமையில் நேபாள சம்பவம் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான அவசரக் கூட்டம் நடைபெற உள்ளது- அமைச்சர் ராஜ்மோகன்.</p><p>துறை சார்ந்த அதிகாரிகள் அவையில் இருக்க வேண்டும் என்பதனை சபாநாயகர் அறிவுறுத்த வேண்டும் என்று சபாநாயகருக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலிறுத்தியுள்ளார்.</p><p>கேள்வி நேரம் இருக்கும்போது துறையின் செயலாளர்கள் இருக்க வேண்டும். அவர்கள் அதனைக் குறிப்பு எடுக்க வேண்டும். துறை சார்ந்த அதிகாரிகள் அவையில் இருக்க வேண்டும் என்பதனை சபாநாயகர் அறிவுறுத்த வேண்டும்- உதயநிதி</p><p>நேபாள நாட்டில் கைலாஷ் யாத்திரைக்கு தமிழகத்தை சேர்ந்த 103 பேர் பல குழுக்களாக சென்றுள்ளனர். நேபாள பெருவெள்ளம் ஏற்பட்ட ரஸ்வா மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியவில்லை.</p><p>நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழகர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 34 பேரின் விவரங்களை பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.</p><p>நேபாள வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் குறித்த விவரங்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்- சட்டசபையில் நேபாள வெள்ளம் தொடர்பான கவன ஈர்ப்புக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பதில்.</p><p>நேபாள சம்பவம் தொடர்பாக கவனஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பர்ட்,"பேச்சின் இறுதியில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க ஐடியா ஒன்றை தந்தார்.</p><p>அவர்"காலநிலை மாற்றம் ஏற்பட்டு வருவதால், எந்தந்த பகுதிகளில் காலநிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து ஒவ்வொரு மாதமும் தெரிவித்தால், சுற்றுலா செல்பவர்களுக்கும், மீட்பு பணிகளுக்கும் வசதியாக இருக்கும்" என்றார்.</p><p>திருக்குறுங்குடி நம்பி ஆண்டவர் கோயிலுக்குச் செல்லும் பாதை, காலம் செல்ல செல்ல குறுகிக்கொண்டே செல்கிறது. பொதுமக்களின் வசதிக்காக அதன் பாதையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?- எம்எல்ஏ ரெட்டியார்பட்டி நாராயணன்</p><p>எம்எல்ஏ ரெட்டியார்பட்டி நாராயணணின் கோரிக்கையை ஏற்று, அதிகாரிகளிடம் பரிசீலித்து ஆவண செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்- வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார்</p><p>நேபாளம் சென்ற தமிழர்கள் 57 பேர் மாயம், அரசு தரிதமாக செயல்பட்டு அவர்களை தாயகம் மீட்டுவர நடவடிக்கை தேவை.  நேபாளத்திற்கு கோவை ஈஷா மூலம் ஆன்மிக பயணம் சென்றோரின் நிலை என்ன?- இபிஎஸ்.</p><p>நேபாள நாட்டில் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 160 பேர் உயிரிழப்பு, 750 பேரை காணவில்லை என செய்திகள் வருகின்றன. சுற்றுலா சென்ற 110 இந்தியர்கள் சிக்கியுள்ளதாகவும், குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு மாவட்டங்களில் 40-க்கும் மேற்பட்டோர் சென்றிருப்பதாக கூறப்படுகிறது.</p><p>எத்தனை தமிழர்கள் சிக்கியுள்ளனர்? அவர்களில் எத்தனை பேர் மீட்கப்பட்டுள்ளார்கள்.</p><p>தமிழர்களை மீட்க சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்களா? ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சிக்கி இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. இதில் அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்- உதயநிதி</p><p>மேலும், கரூர் சம்பவம் நடந்தபோது இதே சபையில் முதலமைச்சர் பேசிய பின்னர் கேள்வி கேளுங்கள் என நடந்ததாக சபாநாயகர் விளக்கம் அளித்தார்- ஜே.சி.டி.பிரபாகர். </p><p>இருப்பினும் சட்டசபையில் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் எதிர்க்கட்சித் தலைவரே முதலில் பேசட்டும் என அமைச்சர் ராஜ்மோகன் பரிந்துரைத்த நிலையில் சபாநாயகர் அனுமதி வழங்கினார்- ஜே.சி.டி.பிரபாகர். </p><p>அரசிற்கு கவனத்திற்கு கொண்டுவருவதற்கு முன்பே அமைச்சர் பதிலளிப்பதா?. அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம் அதன் பின்னர் விளக்கம் அளியுங்கள் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். அதற்கு, சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், அமைச்சர் பேசிய பின் உறுப்பினர்கள் கேள்வி கேட்பதில் ஒன்றும் தவறில்லையே என்றார். </p><p>பதில் அளித்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்:- </p><p>நாட்டையே உலுக்கிய சம்பவம் தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் முன்னால் பேசினால் என்ன, பின்னால் பேசினால் என்ன?. நாங்கள் கவனத்திற்கு கொண்டு வந்ததால் தான் அமைச்சர் பதிலளிக்கிறார் என்பதல்ல. </p><p>அதற்கு எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய பின்னர் அமைச்சர் பதிலளிப்பது தான் முறையாக இருக்கும் என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. </p><p>நேபாள விவகாரம்.. எதிர்கட்சிகள் கோரிக்கை ஏற்பு</p><p>தமிழகத்தில் இருந்து நேபாளம் சென்றவர்கள் வெள்ளத்தில் சிக்கியது குறித்து எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தில், அவர்கள் விளக்கும் முன்பாக அமைச்சர் ராஜ்மோகன் பதிலளிக்க, எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், அமைச்சருக்கு முன்பாக எதிர்க்கட்சிகள் எடுத்துரைக்க சபாநாயகர் வாய்ப்பளித்தார்.</p><p>தமிழ்நாடு சட்டசபை ஒருநாள் விடுமுறைபின் இன்று கூடியது. சபைகூட்டத்தொடர் தொடங்கியதும் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். இதனை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், நேபாளத்தில் பெரு வெள்ளம் தொடர்பாக விளக்கம் அளிக்க தொடங்கினார். </p><p>அதற்கு நேபாளம் பெரு வெள்ளம் தொடர்பாக சபையில் கவன ஈர்ப்பு கொடுக்கப்பட்ட நிலையில், அதற்கு முன்பாகவே அமைச்சர் விளக்கம் அளிப்பதற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். </p><p>கோவை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாமல் உள்ளனர். கூடுதல் நியமனம் அவசியம். Liver Transplantation சிகிச்சை செய்யவும் அரசு முன்வர வேண்டும் என்று அதிமுகவின் எஸ்.பி வேலுமணி வலியுறுத்தினார்.</p><p>அதற்கு பதில் அளித்த அமைச்சர் அருண்ராஜ்,"அரசு மருத்துவமனைகளில் உயர் சிறப்பு மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கிறது. முதல் முறையாக 284 உயர்சிறப்பு மருத்துவர் பணியிடம் உருவாக்கி இருக்கிறோம். Liver Transplantation தேவை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கைகள் எடுப்போம்" என்றார்.</p><h2>அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்த பாமக எம்எல்ஏ</h2><p>சட்டமன்றத்தில் பாமக எம்எல்ஏ கணேஷ்குமார் கூறுகையில்," செஞ்சி மருத்துவமனையில் கடந்த ஆட்சிக் காலத்தில் மகப்பேறுக்கான தனிக் கட்டடம் கட்டப்பட்டு ஆபரேஷன் தியேட்டர் நடைமுறைக்கு வராமல் இருந்தது அமைச்சர் ஆனந்திடம் ஒரே ஒரு கோரிக்கைதான் வைத்தேன். மறுநொடியே DM-ஐ அழைத்து சொன்னதன் விளைவாக 10 நாட்களுக்கு முன்பாக ஆபரேஷன் தியேட்டர் முழு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.</p><p>சிசேரியன் மிக சிறப்பாக சிசேரியன் நடைபெற்றுள்ளது. நீர்வளத்துறை அமைச்சருக்கும்(ஆனந்த்) சுகாதாரத்துறை அமைச்சருக்கும்(அருண்ராஜ்) நன்றிக்கடனுடன் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.</p><p>கலசப்பாக்கம் ஜவ்வாது மலைப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தப்படுமா? என்று உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எழுப்பிய கேள்விக்கு, மலைவாழ் மக்கள் வாழும் பகுதியில் சாலை வசதி மேம்படுத்த தொடர் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று வனத்துறை அமைச்சர் தெரிவித்தார்.</p><p>ராதாபுரம் தொகுதி பணகுடியில் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்கப்படுமா?- எம்எல்ஏ சதீஷ் கிறிஸ்டோபர்</p><p>ராதாபுரம் தொகுதி பணகுடியில் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்கப்படுவது குறித்து குழு மூலம் ஆய்வு செய்து ஆட்சியர் மூலம் நடவடிக்கைகள் எடுப்போம்- அமைச்சர் வெங்கடரமணன்.</p><p>“சோழிங்கநல்லூரை தனி மாவட்டமாக அல்லது தனி மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும்” என தவெக எம்.எல்.ஏ., ஈசிஆர் சரவணன் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர்,“சோழிங்கநல்லூரை தனி மாவட்டமாக அல்லது தனி மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும். 7 ஊராட்சிகள் செங்கல்பட்டிலும் 20 வார்டுகள் சென்னை மாநகராட்சியிலும் இருப்பதால் இரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கும் சென்று மக்கள் அவதியடையும் சூழ்நிலை உள்ளது” என்றார்.</p><p>மொடக்குறிச்சியில் நீர்நிலை புறம்போக்கு எனக் கூறி 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு பட்டா மறுக்கப்படுவதாக தவெக எம்.எல்.ஏ. சண்முகன் கூறியதற்கு, நீர் ஓடக் கூடிய இடமாக இல்லை என்றால் பரிசீலித்து நடவடிக்கை என அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்தார். </p><p>என்னுடைய திருவெறும்பூர் தொகுதியில் மழைக்காலத்தில் நெல் வீணாவதை தடுக்க குடோன்கள் கட்டித் தரப்படுமா?- எம்எல்ஏ நாவல்பட்டு விஜி.</p><p>செப்டம்பரில் இருந்து காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை கொள்முதல் நிலையம் செயல்பட நடவடிக்கைகள் எடுத்து இருக்கிறோம். தார்பாய் மூலமாக நெல்மணியை காய வைக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். எந்த இடத்தில் பிரச்னை வந்தாலும், கோரிக்கை வந்தாலும் அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்- அமைச்சர் வெங்கடரமணன்.</p><p>ராமநாதபுரம் பணங்குடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் எப்போது அமைக்கப்படும் என எம்எல்ஏ சதீஷ் கிறிஸ்டோபர் எழுப்பிய கேள்விக்கு, 2026-27 கொள்முதல் பருவத்தில் நடக்கும் சாகுபடிக்கு ஏற்றவாறு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் செயல்பாட்டை கண்காணிப்பதற்காக ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்படும் என அமைச்சர் வெங்கட்ராமன் தெரிவித்தார். </p><p>திருத்தணி அரசு மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி இல்லை என அதிமுக எம்எல்ஏ அரி எழுப்பிய கேள்விக்கு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி உள்ளது. பயனாளிகளை கணக்கில் கொண்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதியை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கூறினார். </p><p>சோழிங்கநல்லூரில் உள்ள ஊராட்சிகளை சென்னை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் என எம்எல்ஏ சரவணன் கோரிக்கை விடுத்தார். சென்னை மாநகராட்சியுடன் இணைப்பது தொடர்பாக ஆய்வு செய்து ஆட்சியர்களுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.</p><p>தென்காசியில் உள்ள இருளர், காட்டுநாயக்கன் சமுதாயத்தினருக்கு சாதிச்சான்று கிடைக்க நடவடிக்கை தேவை. வீரகுடி வெள்ளாளர் சமுதாயத்தினருக்கு தென்காசியில் வைச பிள்ளை என்றுதான் சாதி சான்று தருகின்றனர் என எம்எல்ஏ ராஜா எழுப்பிய கேள்விக்கு, குறும்பர், நாயக்கர் மலைவாழ் நாயக்கர் என்று சாதி சான்றிதழ் தருவதில் சிக்கல் உள்ளது. சாதிச்சான்றிதழ் கோரிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளோம், அனுமதி கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். </p><p>கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவர், செவிலியர் பற்றாக்குறை நிலவுவதாக எஸ்.பி.வேலுமணி கூறியதற்கு கோவை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார். </p><p>H1N1 காய்ச்சலை கட்டுப்படுத்த முதியவர், கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை உள்ளதா? என்று உறுப்பினர் லட்சுமணன் எழுப்பிய கேள்விக்கு, H1N1 வைரஸ் காய்ச்சல் கட்டுப்பாட்டில்தான் உள்ளது, தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். H1N1 வைரஸ் குறித்து ஆய்வு செய்து தேவைப்பட்டால் தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். </p><p>சட்டசபை நிகழ்வுக்கு பின்னர் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் ஆய்வு நடத்தப்படும். அனைத்து மருத்துவமனைகளிலும் ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அருண் ராஜ் தெரிவித்தார். </p><p>கும்மிடிப்பூண்டியில் அரசு மருத்துவமனைக்கு டயாலிசஸ் செய்வதற்கான கருவி கூடுதலாக வழங்க வேண்டும் என எம்எல்ஏ விஜயகுமார் கோரிக்கை விடுத்தார். அதற்கு அமைச்சர் அருண்ராஜ், கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்து தேவைப்பட்டால் டயாலிசஸ் கருவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். </p><p>செஞ்சி அரசு மருத்துவமனைக்கு சி.டி.ஸ்கேன் உள்ளிட்ட கூடுதல் நவீன உபகரணங்கள் வழங்கப்படுமா? என பா.ம.க. எம்எல்ஏ கணேஷ் குமார் எழுப்பிய கேள்விக்கு, ஆய்வு செய்து தேவைப்பட்டால் கூடுதலாக வழங்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.</p><p>தாம்பரம்-செங்கல்பட்டு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க அதிமுக ஆட்சியில் நடவடிக்கை, கடந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது. மேம்பாலம் குறித்து இன்றைய அரசின் நிலை என்ன? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, செங்கல்பட்டு முதல் சென்னை வரை போக்குவரத்து நெரிசல் அதிகளவில் உள்ளதால் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை- கன்னியாகுமரி 8 வழிச்சாலைக்கான பணிகளை தொடங்கியுள்ளோம், திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெறுகிறது என்றார். </p><p>திருத்துறைப்பூண்டியில் போக்குவரத்து நெரிசலாக உள்ளதால் ரெயில்வே மேம்பாலம் கட்டப்படுமா? என்று உறுப்பினர் மாரிமுத்து எழுப்பிய கேள்விக்கு, மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து தண்டவாளத்தை கடந்து செல்வதால் ரெயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.</p><p>கீழ்வேளூர் ரெயில்வே மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என பா.ம.க. எம்எல்ஏ லதா கோரிக்கை விடுத்தார். அதற்கு பதில் அளித்த அமைச்சர், பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். </p><p>வேலூர் காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து பாலாறு பாலம் வரை உயர்மட்ட பாலம் கட்ட அரசு ஆவணம் செய்யுமா? என்று எம்.எல்.ஏ. சுதாகர் கேள்வி எழுப்பினார். சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து உரியநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார். </p><p>தமிழக சட்டசபையில் உறுப்பினர்களின் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். </p><p>சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு மானிய கோரிக்கை தாக்கல் செய்ய உள்ள நிலையில் சட்டசபைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வருகை</p><p>சட்டசபையில் இன்று சமூக நீதித்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மீதான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை மெட்ரோவுக்கு புதிய இயக்குநர் நியமனம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/new-director-appointed-for-chennai-metro</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/new-director-appointed-for-chennai-metro#comments</comments><guid isPermaLink="false">e664474e-912f-431c-aaf0-eff34953eaa9</guid><pubDate>Thu, 27 Aug 2026 12:43:13 +0000</pubDate><atom:updated>2026-08-27T12:43:13.054Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai metro,சென்னை மெட்ரோ,IAS Ashish Chatterjee,cadre Tamil Nadu,ஐஏஎஸ் ஆஷிஷ் சாட்டர்ஜி,தமிழ்நாடு கேடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/ozyek7qg/New-Project-2026-08-27T180843.371.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை மெட்ரோவுக்கு புதிய இயக்குநர் நியமனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/ozyek7qg/New-Project-2026-08-27T180843.371.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குநராக ஆஷிஷ் சாட்டர்ஜி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றி வந்த எம்.ஏ.சித்திக் ஐஏஎஸ், தமிழ்நாடு அரசின் புதிய நிதித்துறை செயலாளராக மாற்றப்பட்டார். </p><p>இந்நிலையில் எம்.ஏ. சித்திக்குக்குப் பதிலாக, புதிய நிர்வாக இயக்குநராக ஆஷிஷ் சாட்டர்ஜி பொறுப்பேற்றுள்ளார்.</p><p>1999-ஆம் ஆண்டு தமிழ்நாடு கேடர் ஐஏஎஸ் அதிகாரியான ஆஷிஷ் சாட்டர்ஜி, சமீபத்தில் மத்திய அரசின் எஃகு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் மற்றும் நிதி ஆலோசகர் பொறுப்பில் இருந்து, தமிழ்நாடு அரசுப்பணிக்கு மீண்டும் மாற்றப்பட்டார். இந்நிலையில் அவருக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p>இதற்கு முன்பு இந்தியப் பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டுக் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றி வந்தார்.</p>]]></content:encoded></item><item><title>அமைதியாய் தாக்கும் சிறுநீரக புற்றுநோய்: கவனிக்க வேண்டிய முக்கிய எச்சரிக்கைகள்!</title><link>https://www.maalaimalar.com/health/generalmedicine/silent-attack-kidney-cancer-key-warning-signs-to-watch</link><comments>https://www.maalaimalar.com/health/generalmedicine/silent-attack-kidney-cancer-key-warning-signs-to-watch#comments</comments><guid isPermaLink="false">b514b222-e4ea-4d29-a1ef-27288e8ff906</guid><pubDate>Thu, 27 Aug 2026 12:26:14 +0000</pubDate><atom:updated>2026-08-27T12:26:14.610Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Health,Health Tips,ஆரோக்கியம்,உடல்நலம்,Kidney Cancer,Wilms&apos; Tumor,சிறுநீரக புற்றுநோய்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/guc83j28/GGGG.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kidney Cancer]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/guc83j28/GGGG.jpg?w=280" width="280"></media:thumbnail><category>பொது மருத்துவம் (General Medicine)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மனித உடலில் ரத்தத்தில் உள்ள கழிவுகளையும் தேவையற்ற திரவங்களையும் வடிகட்டி சிறுநீராக வெளியேற்றும் மிக முக்கியமான உறுப்பு சிறுநீரகமாகும். இந்த சிறுநீரக திசுக்களில் அசாதாரண செல்கள் கட்டுப்பாடன்றிப் பெருகி கட்டியாக உருவெடுப்பதே சிறுநீரக புற்றுநோய் ஆகும்.</p><p>சிறுநீரகப் புற்றுநோயில் பல வகைகள் இருப்பினும், பெரியவர்களுக்குக் கண்டறியப்படும் 80 சதவீதத்திற்கும் அதிகமான வழக்குகள் 'ரீனல் செல் கார்சினோமா' வகையைச் சேர்ந்தவையாகும். இது சிறுநீரகத்தின் வெளிப்பகுதியான 'ரீனல் கார்டெக்ஸ்' என்ற அமைப்பில் உள்ள சிறிய குழாய்களில் தொடங்குகிறது. இதுதவிர சிறுநீரகப் பாதையைப் பாதிக்கும் 'அப்பர் யூரினரி ட்ராக்ட் யூரோதெலியல் கேன்சர்' மற்றும் சிறுவர்களுக்கு ஏற்படும் 'வில்ம்ஸ் டியூமர்' போன்ற அரிய வகை புற்றுநோய்களும் காணப்படுகின்றன.</p><h2>அறிகுறிகளும் <strong>அபாயக் கா</strong>ரணிகளும்</h2><p>ஆரம்ப கட்டத்தில் எந்தவொரு வலியோ அல்லது தெளிவான அறிகுறிகளோ தென்படுவதில்லை. ஆனால் நோய் தீவிரமடையும் போது சில முக்கிய எச்சரிக்கை சமிக்ஞைகள் வெளிப்படுகின்றன:</p><p>* சிறுநீரில் ரத்தம் கலந்து போதல் (சிவப்பு அல்லது டீ நிறத்தில் மாறுவது).</p><p>* முதுகு அல்லது விலா எலும்புகளுக்குக் கீழே ஒரு பக்கத்தில் தொடர்ச்சியாக ஏற்படும் வலி.</p><p>* இடுப்பு அல்லது வயிற்றின் பக்கவாட்டில் தென்படும் கட்டி போன்ற வீக்கம்.</p><p>* காரணமின்றி உடல் எடை குறைதல், கடுமையான சோர்வு மற்றும் அடிக்கடி வரும் காய்ச்சல்.</p><p>சிகரெட் மற்றும் புகையிலைப் பயன்பாடு, உடல் பருமன், தொடர்ச்சியான உயர் ரத்த அழுத்தம், நீண்டகால டயாலிசிஸ் சிகிச்சை மற்றும் குடும்ப மரபியல் வரலாறு ஆகியவை இந்நோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கின்றன.</p><h2>மேம்பட்<strong>ட சிகிச்சை</strong>கள்</h2><p>ரத்த மற்றும் சிறுநீர்ப் பரிசோதனைகள் மூலம் நோயின் முதற்கட்ட அறிகுறிகள் ஆராயப்படுகின்றன. பின்னர் அல்ட்ராசவுண்ட், சிடி ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ போன்ற துல்லியமான இமேஜிங் சோதனைகள் மற்றும் பயாப்ஸி மூலம் புற்றுநோயின் நிலை உறுதி செய்யப்படுகிறது.</p><p>கட்டியின் அளவு மற்றும் பரவலைப் பொறுத்துச் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. பாதிப்படைந்த சிறுநீரகப் பகுதியை மட்டும் அல்லது முழு சிறுநீரகத்தையும் அகற்றும் 'நெஃப்ரெக்டமி' அறுவை சிகிச்சை முதன்மையான தீர்வாகும்.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/kd41gpo6/jj.jpg" /></figure><p> இதுதவிர, புற்றுநோய் செல்களை மட்டும் இலக்கு வைத்து அழிக்கும் 'டார்கெட்டட் தெரபி' , உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டும் 'இம்யூனோதெரபி' மற்றும் வெப்பம் அல்லது குளிரூட்டல் மூலம் கட்டியை அழிக்கும் 'அப்லேஷன்' முறைகளும் தற்போது வெற்றிகரமாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது முழுமையான குணமடைதலுக்கு வழிவகுக்கும்.</p>]]></content:encoded></item><item><title>எலுமிச்சை பழத்தை வெட்டி மழையை நிறுத்தினேன்: பாஜக எம்பி-யின் கருத்துக்கு காங்கிரஸ் விமர்சனம்</title><link>https://www.maalaimalar.com/news/national/i_cut_a_lemon_to_stop_the_rain_bjp_mps_comment_draws_congress_response</link><comments>https://www.maalaimalar.com/news/national/i_cut_a_lemon_to_stop_the_rain_bjp_mps_comment_draws_congress_response#comments</comments><guid isPermaLink="false">45131e7d-63a1-4c7b-a1e1-a92f16014dae</guid><pubDate>Thu, 27 Aug 2026 12:12:04 +0000</pubDate><atom:updated>2026-08-27T12:12:04.970Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சத்தீஸ்கர்,BJP,பாஜக,Congress,காங்கிரஸ்,chattisgarh</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/zombj0nn/Untitled-design-23.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ BJP MP’s lemon rain]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/zombj0nn/Untitled-design-23.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D">சத்தீஸ்கர்</a> மாநிலத்தின் முதல்-மந்திரி விஷ்ணு தியோ சாய் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், மழை குறுக்கிட்டதால் ஒரு எலுமிச்சை பழத்தை வெட்டி மழையை தடுத்து நிறுத்தியதாக <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">பாரதிய ஜனதா கட்சியின்</a> எம்.பி. போஜ்ராஜ் நாக் கூறிய கருத்து விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள தெளண்டி லோஹாரா பகுதியில் மஹ்தாரி வந்தன் என்ற ஒரு திட்ட நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் விஷ்ணு தியோ சாய் கலந்து கொண்டார்.   </p><h3><strong>பா.ஜ.க எம்.பி</strong></h3><p>அப்போது அந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முன்பு வானிலை மோசமாக இருந்ததாகவும், நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முதலமைச்சரின் மருத்துவ குழு நள்ளிரவு நேரத்தில் வந்ததாக பாஜக எம்.பி. போஜ்ராஜ் நாக் கூறினார்.</p><p>இதுகுறித்து பாஜக எம்.பி நாக் கூறுகையில், நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடைபெறுவதற்காக மழையை நிறுத்தும்படி புத்ததேவர் மற்றும் மகாதேவரிடம் பிரார்த்தனை செய்து, ஒரு எலுமிச்சை பழத்தை வெட்டியதாக கூறினார்.</p><p>இதையடுத்து தான் ஒரு எலுமிச்சை பழத்தை வெட்டி மழையை நிறுத்தியதாக பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் போக்ராஜ் நாக் கூறினார்.</p><p>மேலும், தற்போது இந்த திட்டம் வெற்றி பெற்றுள்ளது, மழை பெய்ய வேண்டுமென்றால் பெய்யட்டும் என்றும் பாஜக எம்.பி. கூறினார்.</p><h3><strong>சத்தீஸ்கர் காங்கிரஸ் தலைவர்</strong></h3><p>இந்த நிலையில் சத்தீஸ்கர் காங்கிரஸ் தலைவர் தீபக் பைஜ், பாஜக எம்.பி.யின் கருத்து குறித்து விமர்சனம் செய்துள்ளார்.</p><p>இதுகுறித்து தீபக் பைஜ் கூறுகையில், “ஒரு எலுமிச்சை பழத்தை வெட்டினால் மழையை நிறுத்த முடியும் என்றால், சர்க்கரை விலையையும் பணவீக்கத்தையும் குறைப்பதற்கு, பாஜக எம்.பி ஒரு எலுமிச்சை பழத்தை வெட்ட வேண்டும்” என்று கூறினார்.</p><p>இதையடுத்து பாஜக எம்.பி.யின் இந்த கருத்து, மூட நம்பிக்கையையும் தவறான தகவல்களையும் பரப்புவதாகவும், இதே முறையை பயன்படுத்தி மின்சார கட்டணங்கள், எரிபொருள் விலைகள் மற்றும் வீட்டு செலவுகளை குறைக்க முடியுமா என்று சமூக ஊடகங்களில் பயனர்கள் கேள்வி எழுப்பினர்.</p>]]></content:encoded></item><item><title>2வது போட்டி டிரா: இலங்கை உடனான டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றியது இந்தியா</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/match-drawn-in-india-srilanka-second-test</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/match-drawn-in-india-srilanka-second-test#comments</comments><guid isPermaLink="false">cdb581cf-72fd-4b22-86fa-0cd3b8a53d25</guid><pubDate>Thu, 27 Aug 2026 12:09:08 +0000</pubDate><atom:updated>2026-08-27T12:09:08.203Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDvSL,Devdutt Padikkal,தேவ்தத் படிக்கல்,இந்தியா இலங்கை தொடர்,sonal dinusha,சோனல் தினுஷா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/9de1dkxf/ind.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ team india]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/9de1dkxf/ind.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சோனல் தினுஷாவின் சிறப்பான சதத்தால் இந்தியா, இலங்கை இடையிலான 2வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.</p><p>இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கடந்த 15-ம் தேதி நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.</p><p>இந்நிலையில், இந்தியா, இலங்கை இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.</p><h2>இந்திய அணி ரன் குவிப்பு</h2><p>அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 503 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தேவ்தத் படிக்கல் சிறப்பாக ஆடி சதமடித்து 117 ரன்னில் வெளியேறினார். துருவ் ஜூரல் அபாரமாக ஆடி சதமடித்து 115 ரன்னில் வெளியேறினார்.</p><p>இலங்கை சார்பில் அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், பிரபாத் ஜெயசூர்யா, கேஷரா நுவாந்தா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><h2>சோனல் தினுஷா சதம்</h2><p>தொடர்ந்து ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 290 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சோனல் தினுஷா சதமடித்து 103 ரன்னில் அவுட்டானார். பசிந்து சூர்யபந்தாரா அரைசதம் கடந்து 80 ரன்னில் வெளியேறினார்.</p><p>இந்திய அணி சார்பில் பிரசித் கிருஷ்ணா, மானவ் சுதார் தலா 3 விக்கெட்டும், சரண்ஷ் ஜெயின் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால் இலங்கை அணி பாலோ ஆன் பெற்றது.</p><p>தொடர்ந்து, ஆடிய இலங்கை அணி 2வது இன்னிங்சில் களமிறங்கியது. சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.</p><p>பசிந்து சூர்யபந்தாரா 92 ரன்னும், கமிந்து மெண்டிஸ் 52 ரன்னும் எடுத்தனர். 4-ம் நாள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்கு 229 ரன்கள் எடுத்து, இந்தியாவை விட 16 ரன்கள் முன்னிலை பெற்றது.</p><h2>சோதித்த சோனல் தினுஷா</h2><p>இந்தியா எளிதில் வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இலங்கை வீரர் சோனல் தினுஷா தூணாக நின்றார். அவர் காலை முதலே பொறுப்புடன் ஆடி சதமடித்து இலங்கையை தோல்வியில் இருந்து காப்பாற்றினார்.</p><p>7-வது விக்கெட்டுக்கு இணைந்த சோனல் தினுஷா-கேஷரா நுவந்தா ஜோடி 112 ரன் சேர்த்தது. கேஷரா நுவந்தா 45 ரன்னில் அவுட்டானார். இதேபோல், 9வது விக்கெட்டுக்கு இணைந்த சோனல் தினுஷா-லஹிரு குமாரா ஜோடி நிதானமாக ஆடி 47 ரன் எடுத்தது.</p><p>இறுதியில், இலங்கை அணி 2வது இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 429 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் 2வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. சோனல் தினுஷா 133 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றியது.</p><p>இந்திய அணி சார்பில் மானவ் சுதார், ரவீந்திர ஜடேஜா தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.</p>]]></content:encoded></item><item><title>கான்பூரில் விமான விபத்து - விமானி உள்பட இருவர் உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/training-aircraft-crash-in-kanpur-flight-instructor-and-trainee-pilot-killed</link><comments>https://www.maalaimalar.com/news/national/training-aircraft-crash-in-kanpur-flight-instructor-and-trainee-pilot-killed#comments</comments><guid isPermaLink="false">705788c3-9f9f-4d6a-b270-fd67cd2f3d33</guid><pubDate>Thu, 27 Aug 2026 12:07:54 +0000</pubDate><atom:updated>2026-08-27T12:07:54.877Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விமானி,Pilot,plane crash,விமான விபத்து,flight instructor,விமான பயிற்றுநர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/84ytt10d/Untitled-design.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kanpur Training Aircraft Crash]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/84ytt10d/Untitled-design.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">உத்தரப் பிரதேச</a> மாநிலம் கான்பூர் நகரத்தில் நான்கு இருக்கைகள் கொண்ட இரட்டை என்ஜின் பயிற்சி விமானம் ஒன்று எதிர்பாராத விதமாக சிக்கிய விபத்தில், விமானத்தில் பயணித்த பயிற்றுநர் மற்றும் பயிற்சி விமானி என இரண்டு பேர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>இந்த விபத்தில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த விமான பயிற்றுநரான சச்சின் பாட்டியா மற்றும் கர்நாடகாவை சேர்ந்த பயிற்சி விமானி அபிஷேக் பூஜாரி உயிரிழந்துள்ளதாக கான்பூர் காவல் ஆணையர் ரகுவீர் லால் தெரிவித்தார்.</p><h3><strong>காவல் ஆணையர் ரகுவீர் லால்</strong></h3><p>இந்த விபத்து குறித்து காவல் ஆணையர் ரகுவீர் லால் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்த டெக்னாம் விமானம் 2023-ஆம் ஆண்டில் பயிற்சிக்காக இங்கு கொண்டுவரப்பட்டது. விபத்தில் விமானத்தின் பயிற்றுநர் மற்றும் பயிற்சி விமானி ஆகிய இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>பயிற்றுவிப்பாளர் மற்றும் பயிற்சி விமானி இருவரும் இங்குள்ள கார்க் விமானப் பயிற்சி மையத்திலிருந்து காலை 11:30 மணிக்கு புறப்பட்டனர். அவர்கள் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, காலை 11:50 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p><p>அந்த விமானம் நான்கு இருக்கைகள் கொண்ட, இரட்டை என்ஜின் டெக்னாம் விமானமாக இருந்தது. விமானத்தின் ஓட்டுநர் பாட்டியாவுக்கு 3,000 மணிநேரம் மட்டுமே ஓட்டுநர் அனுபவம் இருந்தது.</p><p>இந்த விபத்து குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திற்கு (DGCA) தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் குழு இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தும்.</p><p>விபத்து ஏற்பட்ட பகுதியை பாதுகாப்பதற்காக காவல்துறையினர் முழுப் பகுதியையும் சுற்றி வளைத்துள்ளனர். சம்பவ இடத்திலிருந்து உடல்கள் அகற்றப்பட்டுள்ளன,” என்றும் லால் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>&apos;நெஞ்சில் குடியிருக்கும்&apos;: முதலமைச்சர் விஜய்யின் பயோபிக் தலைப்பு குறித்து மனம் திறந்த அஸ்வத் மாரிமுத்து!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/aswath-marimuthu-on-residing-in-the-heart-title-for-chief-minister-vijay-biopic</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/aswath-marimuthu-on-residing-in-the-heart-title-for-chief-minister-vijay-biopic#comments</comments><guid isPermaLink="false">d3043b73-9236-48c6-9a40-8324c8d3869c</guid><pubDate>Thu, 27 Aug 2026 12:02:59 +0000</pubDate><atom:updated>2026-08-27T12:02:59.627Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அஸ்வத் மாரிமுத்து,Ashwath Marimuthu,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,Nenjil Kudiyirukkum,நெஞ்சில் குடியிருக்கும்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/tdp3r3i3/jj.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ashwath Marimuthu-Chief Minister Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/tdp3r3i3/jj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திரையுலகில் உச்சம் தொட்ட விஜய், தீவிர அரசியலில் களமிறங்க எடுத்த முடிவை அந்தத் திரைப்படத்தின் முக்கிய இடைவேளைக் காட்சியாக வைப்பேன் என அஷ்வத் கூறியுள்ளார். </p><p>தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/rajini-ashwath-marimuthu">அஸ்வத் மாரிமுத்து</a>, சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது நடிகர் மற்றும் முதலமைச்சரான ஜோசப் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தைக் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மிகவும் சுவாரஸ்யமான பதில்களை அளித்துள்ளார்.  'ஓ மை கடவுளே' படத்தின் மூலம் அறிமுகமாகி, 'டிராகன்' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் 'தர்மன்' திரைப்படத்தை இயக்கி வரும் அவர், இந்த பயோபிக் குறித்த தகவலை பகிர்ந்துள்ளார்.</p><h2>படத்<strong>தின் தலைப்பு</strong></h2><p>ஒருவேளை முதலமைச்சர் விஜய்யின் பயோபிக்கை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால், அதற்கு "நெஞ்சில் குடியிருக்கும்" என்று தலைப்பிடுவேன் என அஸ்வத் மாரிமுத்து கூறியுள்ளார். மேலும் அப்படத்தின் திரைக்கதை அமைப்பைப் பற்றி விவரித்த அவர், படத்தின் முதல் பாதியை விஜய்யின் திரையுலக சாதனைகள் மற்றும் சினிமா பயணத்தை மையமாகக் கொண்டு உருவாக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.</p><p>திரையுலகில் உச்சம் தொட்ட விஜய், தீவிர அரசியலில் களமிறங்க எடுத்த முடிவை அந்தத் திரைப்படத்தின் முக்கிய இடைவேளைக் காட்சியாக வைப்பேன் என்று கூறிய இயக்குநர், இரண்டாம் பாதி முழுவதையும் அவரது அரசியல் பிரவேசம் மற்றும் மக்கள் சேவையை அடிப்படையாகக் கொண்டு அமைப்பேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>தற்போது இத்தகைய பயோபிக் திட்டங்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாக உருவாகவில்லை என்ற போதிலும், விஜய்யின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கும் எண்ணமே தமக்கு மிகுந்த உற்சாகத்தை அளிப்பதாக அஸ்வத் மாரிமுத்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். எச்.வினோத் இயக்கத்தில் உருவான தனது 69-வது திரைப்படமான 'ஜன நாயகன்' திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, விஜய் முழுநேர அரசியல் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.</p><p>மறுபுறம், கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த், சிம்ரன், ராஷி கண்ணா நடிக்கும் 'தர்மன்' திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகளை அஸ்வத் மாரிமுத்து மேற்கொண்டு வருகிறார். இத்துடன் பிரதீப் ரங்கநாதன் தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அவர் அறிமுகமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>&apos;டாக்ஸிக்&apos; படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/toxic-film-first-day-box-office-collection</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/toxic-film-first-day-box-office-collection#comments</comments><guid isPermaLink="false">72b21fff-5268-4dfb-964f-5ebe43c47147</guid><pubDate>Thu, 27 Aug 2026 12:02:25 +0000</pubDate><atom:updated>2026-08-27T12:02:25.775Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Nayanthara,Kiara Advani,யஷ்,Yash,Toxic,டாக்ஸிக்,BoxOfficeCollection,GeetuMohandas,Toxic BoxOffice</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/33niv6rk/Toxic-BoxOffice-Collection" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Toxic BoxOffice Collection]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/33niv6rk/Toxic-BoxOffice-Collection?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலகெங்கும் உள்ள சினிமா ரசிகர்களால் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட 'ராக்ஸ்டார்' <a href="https://www.maalaimalar.com/topic/yash">யஷ் </a>நடிப்பில் பிரமாண்ட திரைப்படமான '<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D">டாக்ஸிக்</a>' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. </p><p>ரசிகர்கள் பலர் கலவையான விமர்சனங்களை அளித்திருந்தாலும், <a href="https://www.maalaimalar.com/topic/box-office">பாக்ஸ் ஆபீஸில்</a> முதல் நாளிலேயே வசூல் வேட்டையை தொடங்கியுள்ளது.</p><p>இந்தியாவில் மட்டும் முதல் நாளில் ரூ.101.10 கோடி நிகர் வசூலை பெற்று இப்படம் புதிய சாதனை படைத்துள்ளது. </p><p>இருப்பினும் யஷ் நடிப்பின் முன்னதாக வெளியான மெகா ஹிட் திரைப்படமான '<a href="https://www.maalaimalar.com/topic/kgf">KGF </a>Chapter 2' படத்தின் முதல் நால் இந்திய வசூல் சாதனையான ரூ.116 கோடியை இந்த திரைப்படத்தில் முறியடிக்க வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><h2><strong>முதல் நாள் வசூல் விவரம்</strong></h2><p>'டாக்ஸிக்' திரைப்படம் உலகளவில் மொத்தம் ரூ.1<strong>40.75 கோடி</strong> வசூலித்து மாபெரும் சாதனையை படைத்துள்ளது. </p><p>இதில் இந்தியாவில் மட்டும் 24,579 காட்சிகள் மூலம் ரூ.101.10 கோடி நிகர வசூலும், ரூ.120.75 கோடி மொத்த வசூலும் கிடைத்துள்ளதுடன், வெளிநாடுகளில் இருந்து ரூ.20.00 கோடி வசூலைப் பெற்றுள்ளது.</p><h2><strong>மாநில வாரியான வசூல் விவரம்</strong></h2><p>'டாக்ஸிக்' திரைப்படத்தின் மாநில வாரியான வசூலில் வட இந்திய திரையரங்குகள் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளன. </p><p>இதில் அதிகபட்சமாக இந்தி திரையுலகில் ரூ.55.00 கோடியும், கன்னடத்தில் ரூ.23.30 கோடியும், தெலுங்கில் ரூ.16.00 கோடியும், தமிழில் ரூ.5.50 கோடியும் மற்றும் மலையாள திரையுலகில் ரூ.1.30 கோடியும் வசூலாகியுள்ளது.</p><h2><strong>'KGF' பிரான்ச்சைஸ் வசூல் ஒப்பீடு</strong></h2><p>KGF திரைப்படம் 2018 ஆண்டு வெளியானபோது கன்னட திரையுலகைத் தாண்டி யஷ் பெரிய அளவில் அறியப்படவில்லை.</p><p> முதல் நாளில் அனைத்து மொழிகளையும் சேர்த்து இப்படம் ரூ.21.80 கோடி வசூலித்தது. ஆனால், 9 வாரங்களின் முடிவில் இந்தியாவில் மட்டும் ரூ.228 கோடி வசூலை வாரிக்குவித்தது. </p><p>ஆனால் இப்படத்தின் பட்ஜெட் ரூ.80 கோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p>முதல் பாகத்தின் அசாத்திய வெற்றியால் உருவான எதிர்பார்ப்பில், 2022 ஆம் ஆண்டு வெளியான இரண்டாம் பாகம் முதல் நாளிலேயே இந்தியாவில் ரூ.116 கோடி வசூலித்து மிரட்டியது. </p><p>ஒட்டுமொத்தமாக உலகளவில் ரூ.1,215 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்தியாவில் மட்டும் இதன் நிகர வசூல் ரூ.434.70 கோடியாகும். இப்படத்தின் பட்ஜெட் ரூ.100 கோடி ஆகும்.</p><h2><strong>'டாக்ஸிக்' திரைப்படம்</strong></h2><p>'Toxic: A Fairytale for Grown-Ups' இத்திரைப்படத்தை KVN புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் சார்பில் வெங்கட் கே. நாராயணா மற்றும் யஷ் இணைந்து தயாரித்துள்ளனர்.</p><p>கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் நேரடியாக உருவாக்கப்பட்டு தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு பான்-இந்தியா படமாக வெளியாகியுள்ளது.</p><p>பிரபல இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் யஷ் உடன் இணைந்து நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா சுதாரியா மற்றும் ருக்மிணி வசந்த் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படவில்லை- ஐகோர்ட்டில் முதலமைச்சர் தரப்பு விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-use-of-children-in-poll-campaign-cm-explains-to-high-court</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-use-of-children-in-poll-campaign-cm-explains-to-high-court#comments</comments><guid isPermaLink="false">169c414f-e476-41bd-83d6-f72da5b40da2</guid><pubDate>Thu, 27 Aug 2026 11:50:03 +0000</pubDate><atom:updated>2026-08-27T11:50:03.068Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,தவெக,Election campaign,தேர்தல் பிரச்சாரம்,tvk,முதலமைச்சர் விஜய்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/ltyrlrkb/VJ.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chennai high court- TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/ltyrlrkb/VJ.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குழந்தைகளை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறு என ஐகோர்ட்டில் முதல்வர் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.</p><p>முதல்வர் விஜய் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட தேர்தல் வழக்கில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.</p><p>பிரச்சாரத்திற்கு குழந்தைகளை பயன்படுத்தியதற்காக எனது வெற்றியை செல்லாது என அறிவிக்க முடியாது என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.</p><p>தேர்தல் செலவு கணக்கு, வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெற்றதை மறைத்ததாக கூறும் புகார்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை.</p><p>வழிபாட்டு தலங்களில் பிரச்சாரம் செய்ததாகக்கூறிய குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரங்கள் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>குறைகூறிக் காலம் கடத்துவதை விடுத்து மணல் கொள்ளையை தடுக்க தவெக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் - டிடிவி தினகரன்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-tvk-government-must-take-concrete-measures-to-curb-sand-mining-instead-of-wasting-time-merely-finding-fault-ttv-dhinakaran</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-tvk-government-must-take-concrete-measures-to-curb-sand-mining-instead-of-wasting-time-merely-finding-fault-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">3ec89936-c2dc-469d-807b-fb898907684a</guid><pubDate>Thu, 27 Aug 2026 11:49:19 +0000</pubDate><atom:updated>2026-08-27T11:49:19.345Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,மணல் கொள்ளை,sand theft,தவெக அரசு,tvk government</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/9scar6az/New-Project-2026-08-27T171858.478.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ குறைகூறிக் காலம் கடத்துவதை விடுத்து மணல் கொள்ளையை தடுக்க தவெக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் - டிடிவி தினகரன்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/9scar6az/New-Project-2026-08-27T171858.478.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த திராவிட ஆட்சிகளைக் குறைகூறிக் காலம் கடத்துவதை விடுத்து, மணல் கொள்ளையைத் தடுக்க உருப்படியான நடவடிக்கைகளை தவெக அரசு மேற்கொள்ள வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,</p><p>“திருவாரூர், திருப்பத்தூர், சிவகங்கை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை நடைபெறுவதாக அடுத்தடுத்து புகார்கள் குவிந்து வருகின்றன. </p><p>அதிலும், உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற மணல் கொள்ளை தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்த கல்லூரி மாணவி உள்ளிட்ட இரு பெண்கள் மீது அடையாளம் தெரியாத கும்பல் நடத்தியுள்ள கண்மூடித்தனமான தாக்குதல், பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>சட்டவிரோதமாக நடைபெறும் மணல் கொள்ளைச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்த வேண்டிய காவல்துறையே, பொதுமக்கள் தாமாக முன்வந்து அளிக்கும் புகார்கள் மீது அலட்சியம் காட்டி வருவதன் பின்னணியில், ஆளுங்கட்சியினர் மற்றும் அரசு அதிகாரிகள் சிலரின் தலையீடு இருப்பதாகவும், மணல் கொள்ளையில் சில சட்டமன்ற உறுப்பினர்களே நேரடியாக ஈடுபட்டு வருவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.</p><p>எனவே, கடந்த திராவிட ஆட்சிகளைக் குறைகூறிக் காலம் கடத்துவதை விடுத்து, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் சட்டவிரோத மணல் கொள்ளையை அரசியல் பாரபட்சமின்றி இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதோடு, மணல் கொள்ளையைத் தடுக்கும் வகையில் ரோந்து மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>நாளை 4 படங்கள் ரிலீஸ்..!- திரையரங்குகளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து..!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/tomorrow-four-movies-hit-theaters-a-grand-treat-for-cinema-fans</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/tomorrow-four-movies-hit-theaters-a-grand-treat-for-cinema-fans#comments</comments><guid isPermaLink="false">d42926e1-b8a7-4a10-a948-5945253182c1</guid><pubDate>Thu, 27 Aug 2026 11:31:47 +0000</pubDate><atom:updated>2026-08-27T11:31:47.890Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Ravi Mohan,Nayanthara,Karathey Babu,arjun das,Once More,HI,Amaram,Tejesh Rajan</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/sxp021v4/Tamil-Movies" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tamil Movies]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/sxp021v4/Tamil-Movies?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாளை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய திரையரங்கு விருந்து காத்திருக்கிறது. </p><p>ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹாய்', 'ஒன்ஸ் மோர்', 'கராத்தே பாபு' மற்றும் 'அமரம்' ஆகிய நான்கு முக்கியத் திரைப்படங்கள் நாளை ஒரே நாளில் நேரடியாகத் திரையரங்குகளில் வெளியாகின்றன.</p><p>ஆக்ஷன், காதல், காமெடி மற்றும் த்ரில்லர் என அனைத்து வகையான கதைகளும் இதில் அடங்கியுள்ளதால் பாக்ஸ் ஆபீஸில் பலத்த போட்டி நிலவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2><strong>ஹாய்! - </strong>கவின் &amp; நயன்தாரா</h2><p>இளமைத் துள்ளல் மற்றும் ஃபீல்-குட் காதல் திரைப்படமாக உருவாகியுள்ளது <strong>"</strong><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D">ஹாய்</a><strong>"</strong>. அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில், கவின் மற்றும் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE">நயன்தாரா </a>முதன்முறையாக நடித்துள்ளனர். </p><p>ஒரு நடுத்தர வர்க்க இளைஞனுக்கும், அவனது எதிர்பார்ப்புகளுக்கு முற்றிலும் மாறான ஒரு பெண்ணுக்கும் இடையே நடக்கும் சுவாரசியமான காதல் மற்றும் திருமண வாழ்க்கையை மையமாகக் கொண்டது இக்கதை. </p><p>ஜென் மார்ட்டின் இசையமைப்பில் உருவான இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களிடையே ஏற்கனவே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று, தியேட்டர்களுக்கு குடும்பங்களை ஈர்க்கத் தயாராகியுள்ளது.</p><h2><strong>ஒன்ஸ் மோர் - </strong>அர்ஜுன் தாஸ் &amp; அதிதி சங்கர்</h2><p>மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள காதல் திரைப்படம் '<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D">ஒன்ஸ் மோர்</a>'. </p><p>வழக்கமான தனது தீவிரமான ஆக்ஷன் கதாபாத்திரத்தில் இருந்து மாறி, <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அர்ஜுன் தாஸ்</a> இதில் காதல் நாயகனாக களம் இறங்குகிறார். அவருக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்துள்ளார். காதலில் ஏற்படும் ஏமாற்றம், மனக்காயங்கள் மற்றும் வாழ்க்கையில் கிடைக்கும் இரண்டாவது காதல் வாய்ப்பு ஆகியவற்றை உணர்வுபூர்வமான பாணியில் இத்திரைப்படம் விவரிக்கிறது. </p><p>ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் டிரெண்டாகி படத்தின் மீதான ஆர்வமும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பில் வைத்துள்ளது.</p><h2><strong>கராத்தே பாபு - </strong>ரவி மோகன் &amp; தவ்தி&nbsp;ஜிவால்</h2><p>ரசிகர்களின் அதிரடி ஆக்ஷன் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் நாளை வெளியாகிறது ஜெயம் ரவியின் '<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81">கராத்தே பாபு</a>'.</p><p>'டாடா' பட புகழ் இயக்குநர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில், <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D">ரவி மோகன்</a> மற்றும் தவ்தி&nbsp;ஜிவால் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அரசியல் சதிவலைகள், பழிவாங்குதல் மற்றும் அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் நகர்கிறது. </p><p>ஸ்கிரீன் சீன் மீடியா தயாரித்துள்ள இப்படத்திற்கு, பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ் தனது மிரட்டலான பின்னணி இசையை வழங்கியுள்ளார். மாஸ் ஆக்ஷன் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு செம ட்ரீட்டாக அமையும்.</p><h2><strong>அமரம் - </strong>தேஜேஷ் ராஜன் &amp; இரா அகர்வால்</h2><p>இயக்குநர் திருஅருள் கிருஷ்ணன் இயக்கத்தில், தேஜேஷ் ராஜன் மற்றும் இரா அகர்வால் இணையாக நடித்துள்ள ஆக்ஷன் ரொமாண்டிக் த்ரில்லர் திரைப்படமாக நாளை வெளியாக இருக்கிறது<strong>"</strong><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">அமரம்</a><strong>"</strong>. சாய்தீனா மற்றும் ஜார்ஜ் மரியான் ஆகியோர் முக்கிய மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளனர். </p><p>அழகான காதலுக்குள் நுழையும் எதிர்பாராத ஆபத்துகளும், அதை நாயகன் எப்படி எதிர்கொள்கிறான் என்ற விறுவிறுப்பான திரைக்கதையோடும் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. </p><p>மிக்கி மேயரின் இசை இப்படத்திற்குப் பெரும் பலம் சேர்த்துள்ளது. சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் விரும்பிகளுக்கு இப்படம் சிறந்த தேர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2><strong>பாக்ஸ் ஆபீஸ் எதிர்பார்ப்பு</strong></h2><p>ஒரே நாளில் இந்த நான்கு திரைப்படங்களும் மோதுவதால், தமிழகத்தில் உள்ள திரையரங்குகளுக்குப் பெரிய அளவில் கூட்டங்கள் வரும் என திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். </p><p>இந்த வார இறுதி பாக்ஸ் ஆபீஸ் ரேஸில் எந்தத் திரைப்படம் முதலிடத்தைப் பிடிக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>‘பணம் கொட்டும்’... சிறுமியை நிர்வாணமாக்கி பூஜை - மந்திரவாதி உட்பட 4 பேர்மீது வழக்குப்பதிவு!</title><link>https://www.maalaimalar.com/news/national/money-will-pour-in-girl-stripped-naked-for-ritual-case-registered-against-4-people-including-a-sorcerer</link><comments>https://www.maalaimalar.com/news/national/money-will-pour-in-girl-stripped-naked-for-ritual-case-registered-against-4-people-including-a-sorcerer#comments</comments><guid isPermaLink="false">a5df182d-9858-49d2-89ed-5066a6938ba8</guid><pubDate>Thu, 27 Aug 2026 11:31:11 +0000</pubDate><atom:updated>2026-08-27T11:31:11.191Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Andhra,superstition,மூட நம்பிக்கை,Puja,பூஜை,ஆந்திரா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/rfrcx3zk/New-Project-2026-08-27T155759.558.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘பணம் கொட்டும்’... சிறுமியை நிர்வாணமாக்கி பூஜை - மந்திரவாதி உட்பட 4 பேர்மீது வழக்குப்பதிவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/rfrcx3zk/New-Project-2026-08-27T155759.558.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த சில மாதங்களுக்கு முன்பு இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி பல்வேறு கேள்விகளுக்கு வழிவகுத்தது, பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. பெண் ஒருவர் சாலையில் நின்று ஆன்மிகவாதி ஒருவர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக கதறி அழுதார். </p><p>ஆனால் அங்கு இருப்பவர்கள் யாரும் அவருடைய பேச்சை கேட்காமல் அந்த ஆசாமியை பார்க்க வரிசையில் நின்று கொண்டிருந்தனர். </p><p>இந்நிலையில் இதேபோன்ற ஒரு பாணியில் ஆந்திராவில் நடந்துள்ள ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூஜை என்ற பெயரில் சிறுமி ஒருவர் ஆறு மாதங்களாக பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார். </p><p>ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், அனந்தபுரம் நகரத்திற்கு ஓட்டல் வைப்பதற்காக குடிபெயர்ந்துள்ளார். அப்போது மகாலட்சுமி என்ற உள்ளூர் பெண் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். மகாலட்சுமி குடும்பத்தினருடன் நன்கு பழகிய நிலையில், அவர்களின் வறுமை நிலையை பயன்படுத்தத் தொடங்கியுள்ளார்.</p><p>ஓட்டல் தொழிலில் பெரிதாக லாபம் வராது, எளிதாக நீங்கள் செல்வந்தர் ஆவதற்கு என்னிடம் யோசனை உள்ளது என, “உங்கள் மகள் நிர்வாணமாக அமர்ந்து சிறப்புப் பூஜைகள் செய்தால், அளவற்ற செல்வத்தையும், செழிப்பையும் பெறலாம்” என தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் பெற்றோர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும், பின்பு மகாலட்சுமியின் வற்புறுத்தலின்பேரில் ஒப்புக்கொண்டுள்ளனர்.</p><h2>வழிபாடு என்ற பெயரில் பாலியல் அத்துமீறல்கள்</h2><p>மகாலட்சுமியின் பேச்சை நம்பி சிறுமியை பூஜைக்கு அனுப்பியுள்ளனர். அங்கு ஹேமந்த் என்ற போலி மந்திரவாதி பூஜைக்காக வரவழைக்கப்பட்டு, சிறுமியை ரகசிய இடம் ஒன்றிற்கு அழைத்துச் சென்றுள்ளறனர்.</p><p>அங்கு சிறுமியின் ஆடையை முழுமையாக அகற்றி, ஹேமந்த் தவறான இடங்களில் சிறுமியை தொட்டுள்ளான். தொடர்ந்து முதல் பூஜை முடிந்தும் பலனளிக்கவில்லை என்று, மீண்டும் பூஜை செய்ய குடும்பத்தினரை சம்மதிக்க வைத்துள்ளனர். </p><p>சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு (ஆகஸ்ட் 8 அன்று), ஹேமந்த், அவனது மகன் பாலசுப்ரமணியம் மற்றும் விஜய் குமார் ஆகியோருடன் மீண்டும் அங்கு வந்து, மீண்டும் பூஜை செய்துள்ளனர். தொடர்ந்து மறுநாளே ஆக.9ம் தேதி சிறுமியையும், அவரது தாயாரையும் ஒய்.எஸ்.ஆர். கடப்பா மாவட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். </p><p>அங்கு வெங்கடேஷ் யாதவ் என்ற மற்றொரு ஆசாமி முன்பும் வழிபாடு என்ற பெயரில் அந்த சிறுமி சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். பின்னர், தாயும் மகளும் பாக்கியலட்சுமி என்ற பெண்ணின் வீட்டில் பூட்டி வைக்கப்பட்டுள்ளனர்.</p><p>ஆகஸ்ட் 11 ஆம் தேதி, மீண்டும் சிறுமியை வழிபாடு என்ற பெயரில் அழைத்துச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது நீண்ட நாட்களாக இவர்களின் நடமாட்டத்தை கண்காணித்து வந்த ஊர்மக்கள், சந்தேகம் கொண்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். </p><p>காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அறிந்தவர்கள் சிறுமியையும், தாயையும் இறக்கிவிட்டு, சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.</p><h2>போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு</h2><p>இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில், கடப்பா ஒன் டவுன் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆரம்பத்தில் பூஜ்ஜிய முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டது. </p><p>பின்னர், சம்பவத்தின் சூழ்நிலைகளின் அடிப்படையில், இந்த வழக்கு அனந்தபுரம் ஒன் டவுன் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. </p><p>சிறுமியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது மற்றும் மாந்திரீக வழிபாடு ஆகிய குற்றங்களுக்காக, மகாலட்சுமி, ஹேமந்த், பாலசுப்ரமணியம் மற்றும் வெங்கடேஷ் யாதவ் ஆகியோர் மீது போக்சோ சட்டம் மற்றும் இன்னும் சில பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. </p><p>சிறப்புப் படைகள் அமைத்து குற்றவாளிகளை காவல்துறை தேடிவருகிறது. இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இலங்கை உடனான 2வது டெஸ்ட்: இந்தியாவை அச்சுறுத்திய சோனல் தினுஷா</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/sonal-dinusha-to-tough-india-win-in-second-test</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/sonal-dinusha-to-tough-india-win-in-second-test#comments</comments><guid isPermaLink="false">b67ec01d-ccf6-43e1-878f-6bfdc82d0996</guid><pubDate>Thu, 27 Aug 2026 10:51:37 +0000</pubDate><atom:updated>2026-08-27T10:51:37.739Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDvSL,இந்தியா இலங்கை தொடர்,sonal dinusha,சோனல் தினுஷா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/04hrj24d/sonal.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ sonal dinusha]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/04hrj24d/sonal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு இலங்கை வீரர் சோனல் தினுஷா முட்டுக்கட்டையாக இருந்தார்.</p><p>இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கடந்த 15-ம் தேதி நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.</p><p>இந்தியா, இலங்கை இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.</p><h2>இந்திய அணி ரன் குவிப்பு</h2><p>அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 503 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தேவ்தத் படிக்கல் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர்117 ரன்னில் வெளியேறினார். துருவ் ஜூரல் அபாரமாக ஆடி சதமடித்துஅசத்தினார். அவர் 115 ரன்னில் வெளியேறினார்.</p><p>ரிஷப் பண்ட் 63 ரன்னும், சுப்மன் கில் 50 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஜெய்ஸ்வால் 45 ரன்னிலும், ஜடேஜா 43 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.</p><p>இலங்கை சார்பில் அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், பிரபாத் ஜெயசூர்யா, கேஷரா நுவாந்தா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><h2>சோனல் தினுஷா சதம்</h2><p>இதையடுத்து ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 290 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சோனல் தினுஷா ஓரளவு தாக்குப் பிடித்து சதமடித்து 103 ரன்னில் அவுட்டானார். பசிந்து சூர்யபந்தாரா அரை சதம் கடந்து 80 ரன்னில் வெளியேறினார்.</p><p>இந்திய அணி சார்பில் பிரசித் கிருஷ்ணா, மானவ் சுதார் தலா 3 விக்கெட்டும், சரண்ஷ் ஜெயின் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால் இலங்கை அணி பாலோ ஆன் பெற்றது.</p><p>தொடர்ந்து, இலங்கை அணி 2வது இன்னிங்சில் களமிறங்கியது. இந்திய வீரர்கள் சிறப்பாக பந்துவீசினர். சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.</p><p>பசிந்து சூர்யபந்தாரா 92 ரன்னும், கமிந்து மெண்டிஸ் 52 ரன்னும் எடுத்தனர். 3-வது விக்கெட்டுக்கு இணைந்த இந்த ஜோடி 115 ரன்கள் சேர்த்தது. நான்காம் நாள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்கு 229 ரன்கள் எடுத்து, இந்தியாவை விட 16 ரன்கள் முன்னிலை பெற்றது.</p><p>இந்திய அணி சார்பில் மானவ் சுதார் 2 விக்கெட் வீழ்த்தினார். இன்னும் ஒரு நாள் மீதமுள்ளது என்பதால் இந்தியா எளிதில் வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.</p><h2>தூணாக நின்ற சோனல் தினுஷா</h2><p>இந்நிலையில், கடைசி நாளான இன்று இலங்கையின் சோனல் தினுஷா காலை முதலே பொறுப்புடன் ஆடினார். அவர் சதமடித்து இலங்கை அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார்.</p><p>கேஷரா நுவந்தா 45 ரன்னில் அவுட்டானார். 7வது விக்கெட்டுக்கு இணைந்த சோனல் தினுஷா- கேஷரா நுவந்தா ஜோடி 112 ரன்கள் சேர்த்தது.</p><p>9வது விக்கெட்டுக்கு இணைந்த சோனல் தினுஷா-லஹிரு குமாரா ஜோடி நிதானமாக ஆடி 47 ரன்களை எடுத்தது.</p><p>இறுதியில், இலங்கை அணி 2வது இன்னிங்சில் 400 ரன்களைக் கடந்துள்ளது.</p><p>இந்திய அணி எளிதில் வெற்றி பெறும் என நினைத்திருந்த ரசிகர்களுக்கு, சோனல் தினுஷா தூணாக நின்று இந்தியாவின் வெற்றிக்கு அச்சுறுத்தலாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>வெறுங்கண்களால் பார்க்கலாம்: இந்த ஆண்டின் மிக முக்கிய வானியல் நிகழ்வை தவறவிடாதீர்கள்!</title><link>https://www.maalaimalar.com/news/world/naked-eye-view-dont-miss-this-years-key-astronomy-event</link><comments>https://www.maalaimalar.com/news/world/naked-eye-view-dont-miss-this-years-key-astronomy-event#comments</comments><guid isPermaLink="false">0e80f259-5ad3-464f-8c56-b476ae41d88b</guid><pubDate>Thu, 27 Aug 2026 10:38:52 +0000</pubDate><atom:updated>2026-08-27T10:38:52.099Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>போர்ச்சுகல்,Portugal,Spain,ஸ்பெயின்,சந்திர கிரகணம்,lunar eclipse,Partial lunar eclipse,பகுதி சந்திர கிரகணம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/jnburq3w/nila.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Partial lunar eclipse ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/jnburq3w/nila.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்த ஆண்டின் பகுதி சந்திர கிரகணம், இன்று இரவு தொடங்கி நாளை அதிகாலை வரை நடைபெற உள்ளது. சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வராமல், சந்திரன் பூமியின் நிழல் பகுதி வழியாக கடந்து செல்லும்போது இந்த பகுதி சந்திர கிரகணம் நிகழ்கிறது. </p><p>இந்த ஆண்டின் முக்கியமான வானியல் நிகழ்வுகளில் ஒன்றான பகுதி சந்திர கிரகணம், இன்று இரவு தொடங்கி நாளை அதிகாலை வரை நடைபெற உள்ளது. சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வராமல், சந்திரன் பூமியின் நிழல் பகுதி வழியாக கடந்து செல்லும்போது இந்த பகுதி சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த நிகழ்வின் போது, பூமியின் அடர்ந்த நிழல் சந்திரனை மறைப்பதால், நிலவின் பெரும்பகுதி சிவந்த தாமிர நிறத்தில் காட்சியளிக்கும்.</p><h2>நிகழ்<strong>வின் நேரம்</strong></h2><p>சர்வதேச நேரப்படி, நாளை அதிகாலை 02:33 மணிக்கு சந்திரன் பூமியின் முதன்மை நிழலுக்குள் நுழையத் தொடங்குகிறது. இதன் உச்சகட்ட நிகழ்வு அதிகாலை 04:12 மணி அளவில் ஏற்படும். இந்த உச்சகட்டத்தின் போது சந்திரனின் 96 சதவீத பகுதி பூமியின் நிழலால் மறைக்கப்பட்டு, ஒரு சிறிய பகுதி மட்டுமே சூரிய வெளிச்சத்தைப் பெறும். இந்த நிகழ்வு விண்வெளி பிரியர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் ஒரு சிறந்த காட்சியாக அமையும்.</p><h2>பார்<strong>க்கக்கூடிய</strong> இடங்கள் </h2><p>இந்த சந்திர கிரகணத்தை மேற்கு ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் தெளிவாகக் காண முடியும். மேலும், அமெரிக்க கண்டங்களின் பெரும்பாலான பகுதிகளிலும் (ஹவாய் மற்றும் அலாஸ்காவின் சில பகுதிகளைத் தவிர) ஆப்பிரிக்க மண்டலங்களிலும் இதனைப் பார்வையிடலாம். இருப்பினும், இந்தியாவில் இந்த நேரத்தில் பகல் பொழுதாக இருப்பதால், இதனை இந்தியாவில் இருந்து நேரடியாகப் பார்க்க முடியாது.</p><p>சூரிய கிரகணத்தைப் போலல்லாமல், சந்திர கிரகணத்தைப் பார்ப்பதற்கு எந்தவொரு சிறப்பு பாதுகாப்புக் கண்ணாடிகளோ அல்லது கருவிகளோ தேவையில்லை என்று விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனை வெறுங்கண்களால் பாதுகாப்பாகக் காண முடியும். இருப்பினும், தொலைநோக்கி அல்லது பைனாகுலர் போன்ற கருவிகளைப் பயன்படுத்திப் பார்க்கும்போது, நிலவின் மேற்பரப்பில் தோன்றும் தாமிர நிற மாற்றங்களை மிகவும் தெளிவாகவும் அழகாகவும் ரசிக்க முடியும்.</p>]]></content:encoded></item><item><title>தலித் என்பதால் அடித்துக் கொல்லப்பட்ட இளைஞர் ஆகாஷ்... சிபிசிஐடி அதிர்ச்சி தகவல் - கைது செய்யப்படாத காவல் குற்றவாளிகள்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/akash-the-youth-beaten-to-death-for-being-a-dalit-shocking-details-from-the-cb-cid-police-perpetrators-remain-unarrested</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/akash-the-youth-beaten-to-death-for-being-a-dalit-shocking-details-from-the-cb-cid-police-perpetrators-remain-unarrested#comments</comments><guid isPermaLink="false">54f8b488-b829-4b34-981e-8a63fdd04173</guid><pubDate>Thu, 27 Aug 2026 10:16:07 +0000</pubDate><atom:updated>2026-08-27T10:16:07.473Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சிபிசிஐடி,மானாமதுரை,Manamadurai,cbcid,Akash Delison,Akash Delison case,ஆகாஷ் டெலிசன்,ஆகாஷ் டெலிசன் வழக்கு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/5nmu6o3p/New-Project-2026-08-27T154534.527.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தலித் என்பதால் அடித்துக் கொல்லப்பட்ட இளைஞர் ஆகாஷ்... சிபிசிஐடி அதிர்ச்சி தகவல் - கைது செய்யப்படாத காவல் குற்றவாளிகள்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/5nmu6o3p/New-Project-2026-08-27T154534.527.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுக ஆட்சியில் கைது செய்யப்பட்டு, தவெக ஆட்சியில் தகனம் செய்யப்பட்டது சிவகங்கை மாவட்டம், மானாமதுரை இளைஞர் ஆகாஷ் டெலிசனின் உடல். காவல்துறை மரணம் என்றபோதும், கைது செய்யப்பட்டபோது ஆட்சியில் இருந்த அரசும் சரி, உடல் தகனம் செய்யப்பட்டபோது ஆட்சியில் இருந்த, தற்போது இருக்கும் அரசும் சரி இந்த சம்பவம் தொடர்பாக வாய் திறக்கவில்லை.</p><p>பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்படாமலேயே, உயர் நீதிமன்ற உத்தரவின்படி, தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஆகாஷ் டெலிசனின் மரணத்தில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/was-the-police-responsible-for-the-death-of-young-man-akash-what-did-he-say-in-his-statement-812857">ஆகாஷ்</a> ஒரு பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் (தேவேந்திர குல வேளாளர்) என்பதாலேயே அடித்துக் கொல்லப்பட்டதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது. </p><p>முழுவிவரம் என்ன காண்போம். </p><h2>குற்ற வழக்கில் மார்ச் மாதம் கைது</h2><p>சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ரயில்வே காலனியில் கடந்த மார்ச் 6-ஆம் தேதி நள்ளிரவில் ஜீவா நகரைச் சேர்ந்த ஜெயக்குமார் (35), ஆதனூரைச் சேர்ந்த அழகர் (33) ஆகியோர் தாக்கப்பட்டனர்.</p><p>இவர்களை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஆகாஷ் டெலிசன் (24) மற்றும் கோபி என இருவரை போலீசார் கைது செய்தனர்.</p><p>கைதின்போது தப்பி செல்ல முயன்ற ஆகாஷ் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்தார், இதில் அவரது காலில் முறிவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.</p><p>இதனால் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், 8-ஆம் தேதி அதிகாலை ஆகாஷ் உயிரிழந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் போலீசார் ஆகாஷை அடித்தே கொன்றதாக அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர். </p><p>இதில் சம்பந்தப்பட்ட போலீசாரை கைதுசெய்யக்கோரி ஆகாஷின் உறவினர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த வழக்கு பூதாகரமாக, </p><p>ஆகாஷ் மரண வழக்கில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்படும் திருப்புவனம் ஆய்வாளர் திலீபன், மானாமதுரை உதவி ஆய்வாளர் குகன், சிவகங்கை நகர் தலைமைக் காவலர் தெய்வேந்திரன், சிப்காட் தலைமைக் காவலர் சரத்குமார், மானாமதுரை முதல் நிலை காவலர் காளீஸ்வரன், திருப்புவனம் முதல் நிலை காவலர் மனோகரன் ஆகிய 6 காவலர்களை கடந்த மார்ச் 13ஆம் தேதி இடைநீக்கம் செய்து ராமநாதபுரம் சரக டிஐஜி உத்தரவிட்டார்.</p><h2>சிபிசிஐடிக்கு மாற்றம்</h2><p>இதனிடையே வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி ஆகாஷின் தந்தை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆகாஷ் வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்கும்படி உத்தரவிட்டது.</p><p>இருப்பினும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்படவில்லை உள்ளிட்ட குறைபாடுகளை சுட்டிக்காட்டி ஆகாஷ் குடும்பத்தின் போராட்டம் தொடர்ந்தது. இதனால் கிட்டத்தட்ட 3 மாதங்கள் ஆனபின்னும் ஆகாஷின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டிருந்தது.</p><h2>உடல் தகனம்</h2><p>வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தநிலையில், ஆகாஷின் உடலை பெற்றுக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் போலீசார் கைது செய்யப்படாததால் உடலை பெற்றோர் வாங்கவில்லை. இதனால் முறைப்படி ஆகாஷின் உடலுக்கு இறுதிச்சடங்கு நடத்தி, அவரது உடலை காவல்துறையே தகனம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. </p><p>இதனைத்தொடர்ந்து ஜூன்.17ம் தேதி ஆகாஷின் உடல் மதுரை தத்தனேரி மயானத்தில்  தகனம் செய்யப்பட்டது. </p><h2>சிபிசிஐடி அறிக்கை தாக்கல்</h2><p>இந்நிலையில் இந்த வழக்கில் சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆகாஷ் டெலிசன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே அவரை கொல்ல திட்டமிட்டு இந்த கொலை நிகழ்ந்ததாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். </p><p>இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஆறு காவலர்களும் ஆதிச்ச சாதியை சேர்ந்தவர்கள் என்றும், ஆகாஷ் தலித் என்பதை அறிந்தே அவரை ஆள் நடமாட்டம் இல்லாத யூகலிப்டஸ் காடு பகுதிக்கு அழைத்துச் சென்று ஈரசாக்கை வலது காலில் கட்டி இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட, ஃபேட் எம்பாலிசம் என்ற பக்களவிளைவு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். </p><h2>இதுவரை கைது செய்யப்படாத குற்றவாளிகள்</h2><p>இதில் முக்கிய குற்றவாளி ஆய்வாளர் திலீபன் உட்பட ஆறுபேர் மீதும் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆகாஷின் மரண வாக்குமூலத்தின் இந்த அனைத்து சம்பவங்களும் கூறப்பட்டநிலையில், தற்போதுவரை குற்றவாளிகள் ஆறுபேரும் கைது செய்யப்படவில்லை.</p><p>மேலும் இந்த வழக்கு தொடர்பாக 16 பேர்மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில், ஆறு பேர்மீது மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆகாஷ் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>மணல் கொள்ளையைத் தடுக்க உருப்படியான நடவடிக்கைகளை தவெக அரசு மேற்கொள்ள வேண்டும்!- டி.டி.வி. தினகரன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-says-tvk-government-must-take-concrete-measures-to-curb-sand-mining</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-says-tvk-government-must-take-concrete-measures-to-curb-sand-mining#comments</comments><guid isPermaLink="false">77dae2b1-7353-4b48-a2f0-31b3ea70f512</guid><pubDate>Thu, 27 Aug 2026 10:08:23 +0000</pubDate><atom:updated>2026-08-27T10:08:23.510Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,AMMK,அமமுக,டிடிவி தினகரன்,மணல் கொள்ளை,tvk,TTTV Dhinakaran</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/sp0rwalh/TTVDhinakaran001.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ டி.டி.வி. தினகரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ டி.டி.வி. தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/sp0rwalh/TTVDhinakaran001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கடந்த திராவிட ஆட்சிகளைக் குறைகூறிக் காலம் கடத்துவதை விடுத்து, மணல் கொள்ளையைத் தடுக்க உருப்படியான நடவடிக்கைகளை தவெக அரசு மேற்கொள்ள வேண்டும்! டி.டி.வி.தினகரன் வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">டி.டி.வி.தினகரன்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>பெரும் அச்சம்</strong></h2><p>திருவாரூர், திருப்பத்தூர், சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை நடைபெறுவதாக அடுத்தடுத்து புகார்கள் குவிந்து வருகின்றன. அதிலும், உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற மணல் கொள்ளை தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்த கல்லூரி மாணவி உள்ளிட்ட இரு பெண்கள் மீது அடையாளம் தெரியாத கும்பல் நடத்தியுள்ள கண்மூடித்தனமான தாக்குதல், பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.</p> <h2><strong>விமர்சனங்கள்</strong></h2><p>சட்டவிரோதமாக நடைபெறும் மணல் கொள்ளைச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்த வேண்டிய காவல்துறையே, பொதுமக்கள் தாமாக முன்வந்து அளிக்கும் புகார்கள் மீது அலட்சியம் காட்டி வருவதன் பின்னணியில், <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-indictment-tvk-govt-9">ஆளுங்கட்சியினர்</a> மற்றும் அரசு அதிகாரிகள் சிலரின் தலையீடு இருப்பதாகவும், மணல் கொள்ளையில் சில சட்டமன்ற உறுப்பினர்களே நேரடியாக ஈடுபட்டு வருவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.</p><p>எனவே, கடந்த திராவிட ஆட்சிகளைக் குறைகூறிக் காலம் கடத்துவதை விடுத்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் சட்டவிரோத மணல் கொள்ளையை அரசியல் பாரபட்சமின்றி இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதோடு, மணல் கொள்ளையைத் தடுக்கும் வகையில் ரோந்து மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>நேபாளத்தில் நிலச்சரிவுடன் கூடிய பெருவெள்ளம்: மாமரத்தை பிடித்து உயிர்தப்பிய தொழிலாளி!</title><link>https://www.maalaimalar.com/news/topnews/nepal-landslide-flash-flood-worker-survives-clinging-mango-tree</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/nepal-landslide-flash-flood-worker-survives-clinging-mango-tree#comments</comments><guid isPermaLink="false">6841cfa4-f1af-466e-a496-b87249a3cd68</guid><pubDate>Thu, 27 Aug 2026 10:00:21 +0000</pubDate><atom:updated>2026-08-27T10:00:21.387Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாளம்,nepal,நேபாள அரசு,Nepal Floods,நேபாள வெள்ளம்,Massive floods</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/80r3l8rc/neoa.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Massive floods ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/80r3l8rc/neoa.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>உலகம் (World)</category><content:encoded><![CDATA[ <p>நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது, கழிப்பறை குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த 24 வயதான கூலித்தொழிலாளி  மாமரத்தை  பிடித்து அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளார். </p><p>நேபாள நாட்டின் திபெத் எல்லைப் பகுதியான ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு மற்றும் அதைத் தொடர்ந்து உருவான பேரழிவு பெருவெள்ளம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>நிலச்சரிவினால் ஏற்பட்ட மிகப்பெரிய மண் மற்றும் பாறைச் சுவர்கள் ஆற்று நீரில் சரிந்து விழுந்ததால், பாய்ந்து வந்த அசுர வெள்ளத்தில் நூற்றுக்கணக்கானோர் சிக்கிக் கொண்டனர். இந்தத் திடுக்கிடும் இயற்கை பேரிடரில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்றும், நூற்றக்கணக்கானோரைக் காணவில்லை என்றும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>பிதுர் பகுதியில் கழிப்பறை குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த 24 வயதான பிபேக் குமால் என்ற தொழிலாளி, இந்த பெருவெள்ளத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். குழிக்குள் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது எழுந்த பலத்த இரைச்சல் சத்தத்தைக் கேட்டு சக தொழிலாளர்கள் எச்சரித்து ஓடியுள்ளனர். பிபேக் குழியை விட்டு வெளியேறுவதற்குள், <a href="https://www.maalaimalar.com/news/national/nepal-floods-amit-shah-speaks-to-cms-of-up-bihar">நிலநடுக்கம் </a>போல் சீறிப் பாய்ந்து வந்த சேறும் சகதியுமான பெருவெள்ளம் அவரை அடித்துச் சென்றது.</p><h2>உயிரைக் <strong>காத்த மாமர</strong>ம்</h2><p>வெள்ளத்தில் கட்டுக்கடங்காமல் அடித்துச் செல்லப்பட்ட பிபேக், வழியில் இருந்த ஒரு மாமரத்தில் பலமாகச் சிக்கிக் கொண்டார். மரத்தின் கிளையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு பல மணி நேரம் போராடிய அவரை, பின்னரே மீட்புக் குழுவினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். "அந்த மாமரம் மட்டும் அங்கில்லை என்றால் நான் நிச்சயமாக உயிருடன் இருந்திருக்க முடியாது" என காத்மாண்டு தேசிய சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள பிபேக் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.</p><h2>தீவிரம<strong>டையும் மீட்</strong>புப் பணிகள்</h2><p>வெள்ளத்தின் வேகம் மற்றும் இடிபாடுகளின் அடர்த்தி காரணமாக அப்பகுதியின் வீடுகள் மற்றும் வாகனங்கள் முற்றிலும் உருக்குலைந்துள்ளன. இதுவரை 114-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டு காத்மாண்டு மற்றும் ரசுவா பகுதியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். </p><p>நிலச்சரிவு ஏற்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அப்பகுதியில் 4.4 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் பதிவானதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பாதுகாப்புப் படையினரும் மீட்புக் குழுவினரும் தொடர்ந்து மாயமானவர்களைத் தேடும் பணியில் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY : ஒரே நாளில் இரண்டு முறை குறைந்த தங்கம் விலை- சவரனுக்கு ரூ.2,280 குறைவு</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-27-08-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-27-08-2026#comments</comments><guid isPermaLink="false">662d510d-4933-4521-a79a-0159072209cd</guid><pubDate>Thu, 27 Aug 2026 09:48:50 +0000</pubDate><atom:updated>2026-08-27T09:48:50.901Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/bde117eh/gold.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ தங்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/bde117eh/gold.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கடந்த சில நாட்களாக உயர்வு, சரிவு மாறி வந்த தங்கம் விலை இன்று முக்கிய திருப்பத்தை கண்டுள்ளது. திங்கட்கிழமை உயர்ந்த விலை, செவ்வாய்க்கிழமை சிறு சரிவுக்கு பின், விடுமுறை நாளில் நிலைத்திருந்தது. இன்று காலை குறைந்த விலைக்கு மேலாக, இரண்டாவது முறையாக பெரிய அளவில் வீழ்ச்சி ஏற்பட்டு, சவரனுக்கு ரூ.2,280 வரை குறைந்திருப்பது நகை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு கவனத்துக்குரிய மாற்றமாகும்.</strong></em></p><p>ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் பிறந்துள்ளதால் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">தங்கம்</a> விலை ஏறுமுகமாகவே உள்ளது. அந்த வகையில், வார தொடக்கநாளான திங்கட்கிழமை தங்கம் விலை கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 30-க்கும் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 240 ரூபாய்க்கும் செவ்வாய்கிழமை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 10-க்கும் சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று விடுமுறை தினம் என்பதால் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. </p><p>இந்த இன்று காலை தங்கம் கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் 14 ஆயிரத்து 940-க்கும் சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 520-க்கு விற்பனையானது. </p> <h2><strong>மேலும் குறைந்த தங்கம் விலை</strong></h2><p>இந்த நிலையில், இன்று இரண்டாவது முறையாக தற்போது தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 285 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 725-க்கும் சவரனுக்கு 1,720 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதனால் இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,280 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. </p><h2><strong>வெள்ளி விலை நிலவரம்</strong> </h2><p>வெள்ளி விலையில் மாற்றமில்லை. வெள்ளி கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 265 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. </p><h2><strong>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்</strong></h2><p>26-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,080</p><p>25-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,080</p><p>24-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,240</p><p>23-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,600</p><p>22-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,600</p><h2><strong>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>26-08-2026- ஒரு கிராம் ரூ.265</p><p>25-08-2026- ஒரு கிராம் ரூ.265</p><p>24-08-2026- ஒரு கிராம் ரூ.275</p><p>23-08-2026- ஒரு கிராம் ரூ.270</p><p>22-08-2026- ஒரு கிராம் ரூ.270</p>]]></content:encoded></item><item><title>டிஎன்பிஎல்: நாளை இறுதிப்போட்டி-மதுரை, கோவை அணிகள் மோதல்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/madurai-kovai-meet-tomorrow-in-tnpl-final</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/madurai-kovai-meet-tomorrow-in-tnpl-final#comments</comments><guid isPermaLink="false">f17b408d-3e14-4b61-b41a-faa5514737cf</guid><pubDate>Thu, 27 Aug 2026 09:47:59 +0000</pubDate><atom:updated>2026-08-27T09:47:59.973Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,madurai panthers,மதுரை பாந்தர்ஸ்,கோவை கிங்ஸ்,kovai Kings</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/ysjjkoab/TNPL.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TNPL]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/ysjjkoab/TNPL.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>டி.என்.பி.எல். தொடரில் நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.</strong></em></p><p>10-வது  டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த  4-ம் தேதி திண்டுக்கல் அடுத்த நத்தத்தில் உள்ள  என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இந்தப் போட்டி தொடங்கியது.  கடந்த 15-ம் தேதியுடன் அங்கு போட்டிகள் முடிவடைந்தது.</p><h2>பிளே ஆப் சுற்று </h2><p>2-வது கட்ட ஆட்டங்கள்  சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் 18-ம் தேதி தொடங்கியது. 22-ம் தேதியுடன் லீக் போட்டிகள் முடிவடைந்தன. </p><p>மதுரை பாந்தர்ஸ், திருச்சி கிராண்ட்  சோழாஸ், கோவை கிங்ஸ், நடப்பு சாம்பியன் திருப்பூர் தமிழன்ஸ் ஆகியவை முறையே முதல் 4 இடங்களை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின. நெல்லை ராயல் கிங்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ்,  திண்டுக்கல் டிராகன்ஸ், சேலம் ஸ்பர்டன்ஸ் ஆகியவை முறையே 5 முதல் 8-வது இடம் பிடித்து  வெளியேறின. </p><p>23-ம் தேதி நடைபெற வேண்டிய குவாலிபயர்-1 (மதுரை-திருச்சி) ஆட்டமும், 24-ம் தேதி  நடக்கவேண்டிய எலிமினேட்டர் (கோவை- திருப்பூர்) போட்டியும் மழையால் கைவிடப்பட்டது. இதனால் மதுரை அணி இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது. கோவை குவாலிபயர்-2  போட்டிக்கு முன்னேறியது. திருப்பூர் அணி வெளியேறியது.</p><h2>நாளை இறுதிப்போட்டி</h2><p>நேற்று நடந்த ‘குவாலிபயர்-2’  ஆட்டத்தில் கோவை கிங்ஸ் 84 ரன் வித்தியாசத்தில் திருச்சி கிராண்ட் சோழாசை வீழ்த்தி 2- வது அணியாக இறுதிப் போட்டியில் நுழைந்தது. இன்று ஓய்வு நாளாகும்.</p><p>இந்நிலையில், டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டி நாளை (28-ம் தேதி) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் அனிருதா  தலைமையிலான மதுரை பாந்தர்ஸ், ஷாருக் கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.</p><h2>கோப்பை யாருக்கு?</h2><p>டி.என்.பி.எல். கோப்பையை வெல்லப் போவது மதுரையா, கோவையா என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>மதுரை பாந்தர்ஸ் 2- வது தடவையாக சாம்பியன் பட்டம் வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. இதற்குமுன் அந்த அணி 2018-ல் கோப்பையை கைப்பற்றி இருந்தது. 2-வது முறையாக இறுதிப்போட்டியில் விளையாடும் மதுரை பாந்தர்ஸ் லீக் சுற்றில் 5 ஆட்டங்களில் வெற்றி பெற்றது. 2 போட்டியில் தோற்றது. கோவை அணிக்கு எதிராக 240 ரன் இலக்கை எடுத்து சாதனை படைத்தது. இதனால் மதுரை பாந்தர்ஸ் மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடும். </p><p>அந்த அணியில் அதிக்-உர்-ரகுமான் (212 ரன்), சதுர்வேத் (209), குர்ஜபனீத் சிங் (8 விக்கெட்), பெரியசாமி, சோயிப் முகமது கான், (தலா 7 விக்கெட்) போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.</p><h2>3-வது முறையாக</h2><p>கோவை கிங்ஸ் 4- வது தடவையாக இறுதிப்போட்டியில் ஆடுகிறது. இதில் 2022-ல் சேப்பாக் சூப்பர் கில்லீசுடன் இணைந்து முதல் முறையாக டி.என்.பி.எல் கோப்பையை வென்றது. 2023- ல் 2-வது பட்டத்தைக் கைப்பற்றியது. தற்போது மதுரை அணிக்கு பதிலடி கொடுத்து 3-வது தடவையாக  கோப்பையை வெல்லும்  வேட்கையில்  இருக்கிறது. </p><p>கோவை அணி தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் வென்று இறுதிப் போட்டியில் நுழைந்தது. இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் மதுரையை எதிர்கொள்ளும். 3 ஆட்டத்தில் தோற்று இருந்தது.</p><p>கோவை அணியின் பேட்டிங்கில் சச்சின் (389 ரன்), லோகேஷ்வர் (258 ), கேப்டன்  ஷாருக் கான் (211) , பந்துவீச்சில் தீபன் லிங்கேஷ் (15 விக்கெட்), சித்தார்த்,  ஜாதவேத் சுப்ரமணியன் (தலா 13 விக்கெட்) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்</p>]]></content:encoded></item><item><title>கவுண்ட்டவுன் ஸ்டார்ட்ஸ் - செப்டம்பர் 6-ல் பிரமாண்டமாக தொடங்கும் Bigg Boss - Season 10!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/bigg-boss-season-10-countdown-begins-september-6-launch</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/bigg-boss-season-10-countdown-begins-september-6-launch#comments</comments><guid isPermaLink="false">8f9e71ca-6809-4655-8e29-25a78b2964fa</guid><pubDate>Thu, 27 Aug 2026 09:40:57 +0000</pubDate><atom:updated>2026-08-27T09:40:57.742Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய் சேதுபதி,Vijay sethupathi,jio hotstar,பிக்பாஸ்தமிழ்10,Bigg BossTamil 10,Star Vijay,Bigg Boss 10 Contestants</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/fre0lvgw/Bigg-BossTamil-10" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bigg BossTamil 10]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/fre0lvgw/Bigg-BossTamil-10?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ் சின்னத்திரையின் மிக பிரம்மாண்டமான மற்றும் ரசிகர்களால் ஆவலோடு எதிர்பார்க்கப்படும் ரியாலிட்டி ஷோவான '<a href="https://www.maalaimalar.com/topic/bigg-boss">பிக்பாஸ் தமிழ்</a>' தனது வரலாற்றுச் சிறப்புமிக்க பத்தாவது சீசனில் அடியெடுத்து வைக்கிறது.</p><p>இதற்கான அதிகாரப்பூர்வ கவுண்ட்டவுன் தற்போது தொடங்கியுள்ளது.</p><p>கடந்த ஒன்பதாவது சீசனில் தனது தனித்துவமான பேச்சாலும், எதார்த்தமான அணுகுமுறையாலும் ரசிகர்களைக் கவர்ந்த '<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF">மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி</a>, இந்த மைல்கல் சீசனையும் தொகுத்து வழங்க மீண்டும் களம் இறங்குகிறார்.</p><p>புதிய ஆளுமைகள், எதிர்பாராத திருப்பங்கள், உணர்ச்சிப் போராட்டங்கள் மற்றும் அனல் பறக்கும் மோதல்கள் என புத்தம் புதிய கலவையோடு இந்த பத்தாவது சீசன் அமையவுள்ளது.</p><h2><strong>பிரம்மாண்ட தொடக்க விழா</strong></h2><p>பிக்பாஸ் தமிழ் சீசன் 10 மிகப் பிரம்மாண்ட தொடக்க விழா வரும் செப்டம்பர் 6 அன்று மாலை 06:00 முதல் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளது. </p><p>வழக்கம் போல் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சியை பார்வையாளர்கள் கண்டு மகிழலாம். இந்த முறை ஓடிடி தளமான ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் இந்நிகழ்ச்சி ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது. </p><p>பிக்பாஸ் வீட்டின் உள்ளே நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும், சுவாரஸ்யங்களையும் பார்வையாளர்கள் ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் நேரலையாகக் கண்டுகளிக்கலாம்.</p><h2><strong>பரபரப்பான எதிர்பார்ப்பு</strong></h2><p>உலகநாயகன் கமல்ஹாசனுக்குப் பிறகு <a href="https://www.maalaimalar.com/topic/bigg-boss">பிக்பாஸ் </a>மேடையை அலங்கரித்த விஜய் சேதுபதி, தனது முதல் சீசனிலேயே (சீசன் 9) போட்டியாளர்களைக் கையாண்ட விதம் மற்றும் வார இறுதி நாட்களில் அவர் காட்டிய 'மக்கள் செல்வன்' பாணிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.</p><p>தற்போது பிக்பாஸ் தமிழ் தனது 10-வது சீசனை எட்டியுள்ள நிலையில், விஜய் சேதுபதியின் வருகை இந்த மைல்கல் சீசனை இன்னும் விறுவிறுப்பாகவும், பொழுதுபோக்கு நிறைந்ததாகவும் மாற்றும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.</p><p>வீட்டிற்குள் நுழையப்போகும் பிரபலங்கள் யார் யார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே தற்போதே காட்டுத்தீயாய் பரவி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/districts-likely-to-receive-rain-today-and-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/districts-likely-to-receive-rain-today-and-tomorrow#comments</comments><guid isPermaLink="false">aa79fe3c-6cc0-47fa-85f6-a4edb5dc3548</guid><pubDate>Thu, 27 Aug 2026 09:30:47 +0000</pubDate><atom:updated>2026-08-27T09:30:47.444Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/1d9jluzn/rain005.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மழை]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/1d9jluzn/rain005.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.</strong></em> </p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p><h2><strong>லேசான மழை</strong></h2><p>இன்று மற்றும் நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்.</p><p>29-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>1-ந்தேதி மற்றும் 2-ந்தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.</p><p>இதனிடையே இன்று முதல் 31-ந்தேதி வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்...</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>இன்று முதல் 31-ந்தேதி வரை தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>நான் சொல்ல ஆரம்பித்தால் உங்களுக்கு நல்லதல்ல- ஆதவ் அர்ஜூனா ஆவேச பேச்சு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/aadhav-arjuna-says-it-wont-be-good-for-you-if-i-start-speaking</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/aadhav-arjuna-says-it-wont-be-good-for-you-if-i-start-speaking#comments</comments><guid isPermaLink="false">7a32a64d-6ca1-4860-b612-743095e26d51</guid><pubDate>Thu, 27 Aug 2026 08:50:13 +0000</pubDate><atom:updated>2026-08-27T08:50:13.816Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தமிழக சட்டசபை,TN assembly,அமைச்சர் ஆதவ் அர்ஜூனா,Minister Aadhav Arjuna</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/gvj3hu82/aadhavarjuna0.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் ஆதவ் அர்ஜூனா]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ஆதவ் அர்ஜூனா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/gvj3hu82/aadhavarjuna0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அண்ணா சொன்னது போல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெறும் கரண்டியோடு வருபவர்களுக்கு சமம். ஆளுங்கட்சியினர் எண்ணெய் உடன் கூடிய கரண்டியுடன் வரவேண்டும்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக மற்றும் தவெக உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.  அதன் விவரம் வருமாறு:-</p><h2><strong>உதயநிதி ஸ்டாலின்</strong></h2><p>ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அயோத்திதாசர் குடியிருப்பு கொண்டு  வந்தது திமுக அரசு. அம்பேத்கர் அயலக திட்டத்தை  கொண்டு வந்தது திமுக. சிலர் தேவையில்லாத விஷயங்களை எழுப்பி தவறான பாதைக்கு செல்கின்றனர் என்றார். </p><h2><strong>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</strong></h2><p>சமூக நீதி பேசக்கூடிய திமுக கடந்த ஆட்சியில் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசவே இல்லை. மேற்கு வங்கம், பீகாரில் 3 மாதத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி செயல்படுத்தினார்கள். மத்திய அரசு பாஜக அனுமதி கொடுக்க வேண்டும் என்று தப்பிக்க கூடாது என்று கூறினார். </p><h2><strong>கோவி செழியன்</strong></h2><p>அண்ணா சொன்னது போல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெறும் கரண்டியோடு வருபவர்களுக்கு சமம். ஆளுங்கட்சியினர் எண்ணெய் உடன் கூடிய கரண்டியுடன் வரவேண்டும். சாதி வாரி கணக்கெடுக்கும் உரிமை மத்திய அரசுக்கு உண்டு என்றார். </p><p>இதனை தொடர்ந்து பேசிய திமுக எம்எல்ஏ பேச்சிற்கு த.வெ.கவினர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பேசிய திமுக எம்எல்ஏவின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கி சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்தார். </p><p>திமுக எம்எல்ஏ பேசியது குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது, 2015 முதல் 2021 வரை திமுகவுக்கு பணியாற்றியது எல்லோருக்கு தெரியும், உங்கள் தலைவருக்கும் என் பணியும் தெரியும்.  உண்மையான பணியாற்றியவன் நான். உங்கள் அப்பாவிடன் தான் கேட்க வேண்டும், நான் சொல்ல ஆதரம்பித்தால் உங்களுக்கு நல்லதல்ல.  நான் பணி செய்தவரை என் பணியை முடித்துவிட்டு அடுத்த பணிக்கே வந்துவிட்டேன் என்றார். </p><p>இதையடுத்து பேசிய சபாநாயகர், வாளோடு வரும் எதிர்க்கட்சியினரை ஆளுங்கட்சி கேடயம் கொண்டு தடுக்க வேண்டுமே தவிர வாள் கொண்டு எதிர்க்க கூடாது என்றார். </p>]]></content:encoded></item><item><title>அமைச்சர் வன்னி அரசு பேச்சுக்கு &apos;SOFA MODEL&apos; என திமுக கிண்டல்: சட்டசபையில் பரபரப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/debate-on-dalit-representation-in-assembly-dmk-members-uproar-over-minister-vanni-arasu-speech</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/debate-on-dalit-representation-in-assembly-dmk-members-uproar-over-minister-vanni-arasu-speech#comments</comments><guid isPermaLink="false">3eadc35d-aedb-4682-a883-351daa87ce2e</guid><pubDate>Thu, 27 Aug 2026 08:35:04 +0000</pubDate><atom:updated>2026-08-27T08:35:04.185Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,vck,திமுக அரசு,தமிழ்நாடு சட்டசபை,TNAssembly,minister vanni arasu,அமைச்சர் வன்னி அரசு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/8y1dbrrr/vann.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Vanni Arasu  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/8y1dbrrr/vann.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு ஆற்றிய உரை பேரவையில் கடும் விவாதத்தை கிளப்பியுள்ளது. தலித் பிரதிநிதித்துவம் மற்றும் திராவிடக் கட்சிகளின் அணுகுமுறை குறித்து அவர் எழுப்பிய கேள்விகளுக்கு எதிர்ப்புக் தெரிவித்து, எதிர்கட்சியான திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரே நேரத்தில் எழுந்து நின்று முழக்கமிட்டதால் அவையில் கடுமையான கூச்சல் குழப்பமும் அமளியும் நிலவியது.</p><h2>த<strong>லித் பிரதிநிதித்துவ</strong>ம்</h2><p>பேரவையில் உரை நிகழ்த்திய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-announced-new-welfare-schemes-for-adi-dravidars-and-tribal-people">அமைச்சர் வன்னி அரசு</a>, தலித் சமுதாயத்தின் அரசியல் உரிமை மற்றும் ஆட்சியில் அதிகாரப் பகிர்வு குறித்து மிகக் காரசாரமான கேள்விகளை முன்வைத்தார். தலித் சமுதாயத்தைச் சேர்ந்த தன்னைச் சட்டமன்றத்தில் சுதந்திரமாகப் பேச விடாமல் தடுப்பதாகக் குற்றம்சாட்டிய அவர், திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதிமுக ஆகிய இரு முக்கியக் கட்சிகளின் அணுகுமுறையையும் கடுமையாக விமர்சித்தார்.</p><p>விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தபோதிலும், திமுக தனது ஆட்சிக் காலத்தில் அதிகாரத்திலும் அமைச்சரவையிலும் ஏன் பங்கு வழங்கவில்லை என்று அவர் கேள்வி எழுப்பினார். மேலும், தலித் தலைவர்களைப் பொதுத் தொகுதிகளில் போட்டியிட வைப்பதைச் சுட்டிக்காட்டி பெருமை பேசுவது, அவர்களைச் சம உரிமையோடு பார்க்காமல் பரிதாபத்தின் அடிப்படையில் அணுகுவதையே காட்டுகிறது என்றும் சாடினார்.</p><h2>சோஃபா மாட<strong>ல் என கிண்</strong>டல்</h2><p>விசிகவுக்கு வெறும் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக அரசு அவர்களுக்கு மதிப்பளித்து அமைச்சரவையில் இடம் வழங்கி சமூக நீதியை நிலைநாட்டியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டபோது எதிர்த்தரப்பினர் கொதிப்படைந்தனர். இதற்கிடையே அமைச்சர் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது, திமுக உறுப்பினர்கள் 'சோஃபா மாடல்' என்று கிண்டல் செய்து குரல் எழுப்பினர்.</p><p>இதனைத் தொடர்ந்து, அமைச்சரின் பேச்சுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்த திமுக உறுப்பினர்கள் பலர் ஆவேசமாக எழுந்து நின்று ஒரே நேரத்தில் முழக்கங்களை எழுப்பினர். அமைச்சர் வன்னி அரசுவை மேலும் பேச விடாமல் தடுத்துத் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், சட்டமன்றத்தில் சில நிமிடங்கள் கடுமையான காரசாரமான சூழல் நிலவியது.</p>]]></content:encoded></item><item><title>ஒரே நாளில் 10 பச்சிளம் குழந்தைகள்.. 3 வாரங்களில் 60 குழந்தைகள் - மேற்கு வங்க அரசு மருத்துவமனையில் பலி </title><link>https://www.maalaimalar.com/news/national/10-newborns-in-a-single-day-60-infants-in-three-weeks-deaths-at-a-government-hospital-in-malda</link><comments>https://www.maalaimalar.com/news/national/10-newborns-in-a-single-day-60-infants-in-three-weeks-deaths-at-a-government-hospital-in-malda#comments</comments><guid isPermaLink="false">d26d6672-2482-4170-8803-22526aac97d3</guid><pubDate>Thu, 27 Aug 2026 08:28:18 +0000</pubDate><atom:updated>2026-08-27T08:28:18.927Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அரசு மருத்துவமனை,Government Hospital,மேற்கு வங்கம்,Child,குழந்தை,west bengal</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/bvup91j6/tn-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ குழந்தை]]></media:title><media:description type="html"><![CDATA[ குழந்தை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/bvup91j6/tn-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்க மாநிலம் மால்டா<a href="https://www.maalaimalar.com/topic/government-hospital"> அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்</a> இந்த ஆகஸ்ட் மாதத்தின் முதல் 3 வாரங்களில் மொத்தம் 60 பிறந்த குழந்தைகள் உயிரிழந்துள்ளன. </p><p>இச்சம்பவத்தை தொடர்ந்து, மாநில சுகாதாரத் துறை மால்டா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது. </p><p>உயிரிழந்த பல குழந்தைகள் மால்டா மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்படுவதற்கு முன்பு சிகிச்சை பெற்ற தனியார் மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள் மற்றும் வட்டார அளவிலான சுகாதார மையங்களிலும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.</p> <h2>ஒரே நாளில் 10 குழந்தைகள் பலி</h2><p>ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் ஒரே நாளில் 10 பிறந்த குழந்தைகள் உயிரிழந்தன. இதில் 8 குழந்தைகள் பிற அரசுக் மருத்துவமனைகள் அல்லது தனியார் நர்சிங் ஹோம்களில் பிறந்த பிறகு, மேல் சிகிச்சைக்காக மால்டா மருத்துவக் கல்லூரிக்குக் கொண்டு வரப்பட்டவை ஆகும்.</p><p>மிகவும் ஆபத்தான நிலையிலேயே இக்குழந்தைகள் மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டதாகவும், மூச்சுத்திணறல் மற்றும் இதயப் பிரச்சினைகள் காரணமாகவே உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.</p> <p>மால்டா மருத்துவக் கல்லூரியின் மருத்துவ கண்காணிப்பாளர் பிரசென்ஜித் பார் கூறும்போது, "ஆகஸ்ட் 12 அன்று ஒரே நாளில் மால்டா மருத்துவக் கல்லூரியில் 10 குழந்தைகள் உயிரிழந்தன.</p><p>ஆனால் அவற்றில் இரண்டு குழந்தைகள் மட்டுமே இந்த மருத்துவக் கல்லூரியில் பிறந்தவை.</p><p>மற்ற குழந்தைகள் மிகவும் ஆபத்தான நிலையில் பிற மருத்துவமனைகளில் இருந்து இங்கு கொண்டு வரப்பட்டவை" என்று தெரிவித்தார்.</p><p>ஒரே நாளில் உயிரிழந்த 10 குழந்தைகளில், 4 குழந்தைகளுக்குப் பிறவி இதய நோய் இருந்ததாகவும், 2 குழந்தைகளுக்கு  கடுமையான மூச்சுத்திணறல் இருந்ததாகவும் பிரசென்ஜித் பார் மேலும் விளக்கமளித்தார்.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கலப்பு இரட்டையரில் சாம்பியன் பட்டம் வென்ற மென்சிக்-முசோவா ஜோடி</title><link>https://www.maalaimalar.com/sports/tennis/mensik-muchova-pair-won-the-title-in-us-open-mixed-doubles</link><comments>https://www.maalaimalar.com/sports/tennis/mensik-muchova-pair-won-the-title-in-us-open-mixed-doubles#comments</comments><guid isPermaLink="false">55f80aa5-cb0c-4fbc-ad3b-d9dfdc9640c9</guid><pubDate>Thu, 27 Aug 2026 08:21:08 +0000</pubDate><atom:updated>2026-08-27T08:21:08.999Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Karolina Muchova,US Open Tennis,அமெரிக்க ஓபன் டென்னிஸ்,jakub mensik,ஜாகுப் மென்சிக்,கரோலினா முசோவா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/dbgc2ljr/muchova.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ mensik, muchova]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/dbgc2ljr/muchova.jpg?w=280" width="280"></media:thumbnail><category>டென்னிஸ் (Tennis)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையரில் மென்சிக், முசோவா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.</p><p>கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் சுற்று நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.</p><p>கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிச்சுற்று போட்டி இன்று நடைபெற்றது. இதில் செக் குடியரசின் ஜாகுப் மென்சிக்-கரோலினா முசோவா ஜோடி, இத்தாலியின் பிளேவியோ கோபாலி-சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்கிக் ஜோடி உடன் மோதியது.</p><p>இதில் சிறப்பாக ஆடிய மென்சிக்-முசோவா ஜோடி 6-3, 1-6, 10-6 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.</p><p>செர்பியாவின் நோவக் ஜோகோவிச், நம்பர் ஒன் வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா ஜோடி, அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ்-ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் ஜோடி, ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா-ஆண்ட்ரே ரூப்லெவ் ஜோடி உள்ளிட்ட முன்னணி ஜோடிகள் தோல்வி அடைந்து வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள்: டெல்லி செல்லும் 4 அமைச்சர்கள்- முதலமைச்சர் உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-order-4-ministers-team-going-to-delhi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-order-4-ministers-team-going-to-delhi#comments</comments><guid isPermaLink="false">2080bfe0-1b16-4e1d-a6b8-470d7afd489f</guid><pubDate>Thu, 27 Aug 2026 08:08:04 +0000</pubDate><atom:updated>2026-08-27T08:08:04.976Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,TN Govt,தமிழக அரசு,nepal flood,நேபாளம் வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/oemdy6j2/Vijay07.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/oemdy6j2/Vijay07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஆஷிஷ் குமார் ஐ.ஏ.எ.ஸ் தலைமையிலான குழுவை நேபாளம் காத்மாண்டுவுக்கு அனுப்ப முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.</strong></em> </p><p>நேபாள நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி தவிக்கும்  தமிழர்களை மீட்டு வருவது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் இன்று அவசர ஆலோசனை மேற்கொண்டார். இந்த  ஆலோசனையில்  தலைமைச் செயலாளர் சாய்குமார் அமைச்சர்கள் ராஜ்மோகன், தென்னரசு மற்றும் அயலகத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். </p><p>அப்போது மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு தமிழர்களின் நிலை பற்றி கேட்டறிந்து அவர்களுக்கு  தேவையான உதவிகளை செய்து  கொடுக்கும்படி முதலமைச்சர் கேட்டுக் கொண்டார். அவர்களை பாதுகாப்பாக தமிழகம்  அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு  வலியுறுத்தினார். </p><p>இதனை தொடர்ந்து, நேபாளத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்கும் நடவடிக்கையாக 4 அமைச்சர்களை டெல்லி செல்ல முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-consult-with-ministers-and-officers-for-recover-for-tamils-stranded-in-nepal">விஜய்</a> உத்தரவிட்டுள்ளார். அமைச்சர் ஆதவ், ராஜ்மோகன், வினோத், தென்னரசு ஆகியோர் டெல்லி செல்ல உள்ளனர். </p><p>அமைச்சர்கள் டெல்லி சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை கண்காணிக்கவும்,  4 அமைச்சர்களும் மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். </p><p>மேலும் ஆஷிஷ் குமார் ஐ.ஏ.எ.ஸ் தலைமையிலான குழுவை நேபாளம் காத்மாண்டுவுக்கு அனுப்ப முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். </p>]]></content:encoded></item></channel></rss>