<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 30 Jul 2026 13:25:02 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-30-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-30-july-2026#comments</comments><guid isPermaLink="false">bf0c91f5-aaf3-410c-a1d3-867674186d8c</guid><pubDate>Thu, 30 Jul 2026 04:27:27 +0000</pubDate><atom:updated>2026-07-30T12:06:03.590Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/f9fzok5j/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/f9fzok5j/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/bmw-to-cut-several-thousand-jobs-in-latest-blow-to-german-auto-sector">அடுத்த ஆண்டுக்குள் 8000 ஊழியர்களை நீக்கும் BMW நிறுவனம்</a></p><p>* ஜெர்மனியின் வாகன உற்பத்தித் துறை கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது.</p><p>* மந்தமான பொருளாதார சூழலாலும் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்றது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/stephen-fleming-appointed-england-mens-test-coach-joe-root-returns-as-captain">இங்கிலாந்து டெஸ்ட் அணி தலைமை பயிற்சியாளராக பிளெமிங் நியமனம்</a></p><p>* சிஎஸ்கே அணியில் இருந்து ஸ்டீபன் பிளெமிங் கடந்த 13-ம் தேதி விலகினார்.</p><p>* இங்கிலாந்து அணி கேப்டனாக ஜோ ரூட் நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/balochistan-girl-killed-body-displayed-on-military-vehicle" rel="nofollow">சிறுமியை கொன்று உடலை வாகனத்தின் முன் வைத்து ஊர்வலம் சென்ற பாகிஸ்தான் ராணுவம்</a></p><p>* சிறுமியின் உடலை ஒரு ராணுவ கவச வாகனத்தின் முன்புறத்தில் வைத்தபடி சாலைகளில் ஊர்வலமாக சென்றனர். </p><p>*  8 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-rain-in-tamil-nadu-until-the-5th">தமிழகத்தில் வருகிற 5-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு</a></p><p>* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.</p><p>* மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/kiran-george-enter-qf-round-in-taipae-open-badminton">தைபே ஓபன் பேட்மிண்டன்: இந்தியாவின் கிரண் ஜார்ஜ் காலிறுதிக்கு முன்னேற்றம்</a></p><p>* தைபே ஓபன் பேட்மிண்டன் தொடர் தைவானில் நடந்து வருகிறது.</p><p>* இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் 2வது சுற்றில் தோல்வி அடைந்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/football/neymar-retires-from-the-brazil-national-team">பிரேசில் உடனான பயணம் முடிந்தது: ஓய்வு அறிவித்த நெய்மர்</a></p><p>* உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பிரேசில் ரவுண்டு 16 சுற்றிலேயே வெளியேறியது.</p><p>* பிரேசில் அணிக்காக 129 போட்டிகளில் விளையாடி 80 கோல்கள் அடித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/andhra-pradesh-tops-list-of-single-teacher-schools-in-india" rel="nofollow">இந்தியாவில் ஒற்றை ஆசிரியருடன் இயங்கும் ஒரு லட்சம் பள்ளிகள்- முதலிடத்தில் ஆந்திரா</a></p><p>* ஒற்றை ஆசிரியர் பள்ளிகளில் கிட்டத்தட்ட 65 சதவீதம் பங்கினை 7 மாநிலங்கள் மட்டுமே கொண்டுள்ளன.</p><p>* மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி இந்த புள்ளி விவரங்களை வழங்கி பதிலளித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/9999-mbbs-seats-counselling-in-second-week-of-august">9,999 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு ஆகஸ்ட் 2-வது வாரத்தில் கலந்தாய்வு-தரவரிசை பட்டியல் அடுத்த வாரம் வெளியாகிறது!... </a></p><p>*இந்த ஆண்டு திருப்பூர், திருவள்ளூர், நாமக்கல் ஆகிய 3 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் கூடுதலாக தலா 50 இடங்கள் கிடைத்து உள்ளன.</p><p>*இந்தநிலையில் தற்போதைய எம்.பி.பி.எஸ். இடங்களின் அடிப்படையில்  தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-government-appoints-over-100-new-principals-in-arts-and-science-colleges">தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 100-க்கும் மேற்பட்ட புதிய முதல்வர்கள் நியமனம்: உயர்கல்வித் துறை நடவடிக்... </a></p><p>*தேர்வான இணைப் பேராசிரியர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டு, இடங்களுக்கான கலந்தாய்வு விரைவில் நடத்தப்பட உள்ளது.</p><p>*ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அனைத்துக் கல்லூரிகளிலும் புதிய நிரந்தர முதல்வர்கள் பணியில் பொறுப்பேற்பார்கள்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-oversees-mou-for-rs-125-crore-international-university-in-velachery" rel="nofollow">சென்னை வேளச்சேரியில் ரூ.125 கோடியில் சர்வதேச பல்கலைக்கழக வளாகம்!- முதலமைச்சர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்</a></p><p>*  1,500 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்.</p><p>*   தமிழ்நாட்டை நிலைநிறுத்துவதில் முக்கியப் பங்காற்றும் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/unnati-hooda-tanvi-sharma-enter-qf-round-in-taipae-open-badminton">தைபே ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறினர் உன்னதி ஹூடா, தன்வி ஷர்மா</a></p><p>* தைபே ஓபன் பேட்மிண்டன் தொடர் தைவானில் நடந்து வருகிறது.</p><p>* சிறப்பாக ஆடிய உன்னதி ஹூடா காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/india-in-commonwealth-games-today">காமன்வெல்த் விளையாட்டு: இந்தியா இன்று பங்கேற்கும் போட்டிகள்</a></p><p>* இந்திய அணி 3 தங்கம், 9 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கம் வென்றுள்ளது.</p><p>* ஈட்டி எறிதல் தகுதிச்சுற்றில் நீரஜ் சோப்ரா இன்று களம் காணுகிறார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-if-rahul-gandhi-makes-a-single-statement-we-will-withdraw-from-the-alliance">ராகுல் காந்தி ஒரு வரி கூறினால் கூட்டணியில் இருந்து விலகுகிறோம்- அன்புமணி ராமதாஸ்</a></p><p>* தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், எங்களை டெல்லிக்கு, பிரதமரை சந்திக்க அழைத்து செல்லட்டும்</p><p>* ராகுல் காந்தி கர்நாடக அரசு மேகதாது அணை கட்டக்கூடாது என்று, ஒரே ஒரு வரி கூறிவிட்டால், நாங்கள் என்.டி.ஏ.வில் இருந்து விலகுகிறோம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennais-gateway-project-to-beautify-the-stretch-from-kathipara-flyover-to-the-airport">கத்திப்பாரா மேம்பாலம் To விமானநிலையம் வரை அழகுபடுத்தும் சென்னையின் கேட்-வே திட்டம்: ரூ.10.50 கோடி ஒதுக்கிய மாநகராட்சி</a></p><p>* தமிழ்நாடு மற்றும் சென்னையின் வரலாற்றுச் சிறப்புகளைப் பிரதிபலிக்கும் தீம் கலைப் படைப்புகள் மற்றும் சின்னங்கள் இங்கு நிறுவப்படவுள்ளன.</p><p>* திட்டத்தின் கீழ் பழுதடைந்த சிமெண்ட் நடைபாதைகள், பயன்பாடற்ற தடுப்புகள், காடாக மண்டிக்கிடக்கும் தேவையற்ற செடிகள் மற்றும் உடைந்த கட்டிடப் பகுதிகள் முற்றிலும் அகற்றப்படும்.  </p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/bihar-bypoll-tension-jan-suraaj-leaders-held-in-pankipur-as-prashant-kishor-challenges-bjp-stronghold">3 மாநில இடைத்தேர்தல் விறுவிறுப்பு.. பிரசாந்த் கிஷோர் போட்டியிடும் தொகுதியில் பரபரப்பு</a></p><p>*இன்று பதிவாகும் வாக்குகள் ஆகஸ்ட் 3ம் அன்று எண்ணப்படுகின்றன.</p><p>*தோல்வி பயத்தால் பீகார் அரசு நடுங்கிக்கொண்டிருக்கிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-will-present-medals-to-police-personnel-tomorrow">முதலமைச்சர் விஜய் நாளை போலீசாருக்கு பதக்கங்கள் வழங்குகிறார்- அணிவகுப்பு மரியாதையும் நடைபெறுகிறது</a></p><p>* முதலமைச்சர் விஜய் நாளை மாலை 4 மணி அளவில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடைபெறும் போலீசாருக்கு பதக்கங்கள் வழங்கும் விழாவில் பங்கேற்று பதக்கங்கள் வழங்க உள்ளார்.</p><p>* முதலமைச்சர் விஜய் ராஜரத்தினம் ஸ்டேடியத்துக்கு வந்ததும் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை நடைபெறுகிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-forms-7-member-expert-panel-on-el-nino-impact">’எல் நினோ’ தாக்கம் குறித்து ஆராய 7 பேர் கொண்ட நிபுணர் குழு அமைப்பு: தமிழகஅரசு அதிரடி உத்தரவு!... </a></p><p>*தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கீழ் இந்த நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.</p><p>*‘தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்' இக்குழுவின் முக்கிய நிபுணராக நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/parliament-clash-opposition-uproar-over-july-20-student-protest-crackdown-stalls-lok-sabha">மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு அமித் ஷா பொறுப்பேற்க வேண்டும்.. அமளியால் மக்களவை ஒத்திவைப்பு</a></p><p>*அமித் ஷா நாடாளுமன்றத்திற்கு நேரில் வந்து எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு விளக்கமளிக்க வேண்டும்</p><p>* பெல்லட் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களும் பயன்படுத்ததட்தற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/nyt-india-protests-pakistani-kashmir-reference-in-nyt-report">POK-ஐ 'பாகிஸ்தானி காஷ்மீர்' என குறிப்பிட்ட நியூயார்க் டைம்ஸ்.. இந்தியா கடும் கண்டனம்<br></a><br>*உள்ளாட்சித் தேர்தல் தொடங்கும் வேளையில் 'பாகிஸ்தானி காஷ்மீரில்' வன்முறை வெடித்தது.</p><p>*'பாகிஸ்தானி காஷ்மீர்' என்று ஒன்று கிடையாது. 'பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்' மட்டுமே உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-chicken-shops-to-remain-open-despite-shutdown-call" rel="nofollow">சென்னையில் சிக்கன் கடைகள் நாளை வழக்கம் போல் செயல்படும்- வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு</a></p><p>* சிறு ஓட்டல்கள் முதல் நட்சத்திர ஓட்டல்கள் வரை கோழி இறைச்சி பயன்பாடு உள்ளது. </p><p>* ஓட்டல்கள், சிறு சிறு சில்லறை விற்பனையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-announced-dmk-protest-against-tvk-govt-on-august-3rd">த.வெ.க. அரசைக் கண்டித்து ஆக. 3-ல் தஞ்சாவூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு</a></p><p>* மாநிலத்தின் முக்கியப் பிரச்சனையில் யார் குரலையும் கேட்காமல் indifferent ஆகவும், inactive ஆகவும் இந்த அரசு இருப்பது நல்லதல்ல.</p><p>* அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கும் தி.மு.க.தான் அழைப்பு விடுக்க வேண்டும் என முதலமைச்சர் எதிர்பார்க்கிறாரா? அரசால் முடியாது என்றால் சொல்லிவிடுங்கள்; </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-super-speciality-seats-to-central-pool-controversy" rel="nofollow">சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்கள்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்</a></p><p>*  திமுக ஆட்சியில் எந்த எதிர்ப்பும் இன்றி மத்திய அரசிற்கு சரண்டர் செய்யப்பட்டன.</p><p>* கட் ஆஃப் அதிகமாக இருப்பதால் மாணவர்களை முழுமையாக சேர்க்க முடியவில்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/grammy-racism-row-bts-to-boycott-after-recording-academy-adds-separate-best-asian-pop-category">இனப்பாகுபாடு?.. அடுத்த ஆண்டு கிராமி விருதுகளை புறக்கணித்த BTS இசைக்குழு</a></p><p>*ஜின், சுகா, ஜே ஹோப், ஜிமின், வி, ஜங்குக் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.</p><p>*கிராமி விருதுகளுக்கு தங்கள் படைப்பை சமர்ப்பிக்க போவதில்லை என்று அறிவித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/plan-for-officials-to-conduct-on-site-inspections-of-370-lakh-houses">மின் கட்டண உயர்வு புகார்: 3.70 லட்சம் வீடுகளில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய திட்டம்</a></p><p>* மின் கட்டண உயர்வு புகார் வந்ததை தொடர்ந்து 3.70 லட்சம் வீடுகளில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய மின்சார வாரியம் உத்தரவிட்டு உள்ளது.</p><p>* ஆய்வின்போது ஏதேனும் தவறுகள் கண்டறியப்பட்டால், அவற்றை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-anticipatory-bail-petition-dismissed">டாஸ்மாக் முறைகேடு வழக்கு : செந்தில் பாலாஜியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி</a></p><p>* முறைகேடு நடந்துள்ளதற்கும், அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதற்கும் ஆதாரங்கள் உள்ளன. </p><p>* குற்றம்சாட்டப்பட்டவர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர் என்பதற்கு முகாரந்திரம் உள்ளது. </p> <p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/ajinkya-rahane-retirement-india-batter-quits-all-formats-of-international-cricket">சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் ரஹானே!<br></a></p><p>*அஜிங்க்யா' என்றால் 'வெல்ல முடியாதவன்' என்று பொருள்.</p><p>* கேப் எண் 278 (ரஹானேவின் தொப்பி எண்), இத்துடன் விடைபெறுகிறது.   <br></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/assam-flood-death-toll-rises-to-78-heavy-rain-warning-issued">அசாம் வெள்ளப்பெருக்கில் உயிரிழப்பு எண்ணிக்கை 78 ஆக உயர்வு: கனமழை எச்சரிக்கை விடுத்தது வானிலை மையம்!...</a></p><p>*மாநிலம் முழுவதும் '3,00,031 பேர்' வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>*அசாம் மற்றும் அதன் சுற்றியுள்ள வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்கு மேலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-praise-to-doctor-muthulakshmi-reddy-birthday">டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாள்- முதலமைச்சர் விஜய் புகழாரம்</a></p><p>* முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.  </p><p>* பெண்களின் சமூக முன்னேற்றத்திற்காகவும் ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும் முத்துலட்சுமி ரெட்டி ஆற்றிய மகத்தான சேவைகளை அவர் நினைவு கூர்ந்துள்ளார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/cjp-new-protest-warning-delhi-jantar-mantar-security">CJP புதிய போராட்டம் எச்சரிக்கை: டெல்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் உச்சகட்ட பாதுகாப்பு!</a></p><p>*தற்போது நிலுவையில் உள்ள வழக்குகளை மையமாக வைத்து மீண்டும் அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.</p><p>*பாஜனதா ஆளும் மாநிலங்களில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கைது செய்யப்பட்டு வருவதாக சிஜேபி குற்றம் சாட்டியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/nasa-to-livestream-total-solar-eclipse-on-august-12">ஆகஸ்ட் 12-ல் முழு சூரிய கிரகணத்தை நேரலையில் ஒளிபரப்பும் நாசா!</a></p><p>*சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு கடந்து செல்லும் போது, நிலவின் நிழல் பூமியின் மீது விழுவதால் இந்த முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது.</p><p>*இந்திய நேரப்படி ஆகஸ்ட் 12 ஆம் தேதி இரவு இந்த நிகழ்வு நடைபெறுவதால், இந்தியாவில் இதனை நேரில் பார்க்க முடியாது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-metro-phase-2-works-cm-vijay-orders-speedy-completion">சென்னை மெட்ரோ 2-ம் கட்டப் பணிகள்: விரைந்து முடிக்க முதலமைச்சர் விஜய் உத்தரவு!... </a></p><p>*கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகள், அவசரகால பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பயணிகளுக்கான வசதிகளை விரிவாகக் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.</p><p>*முதலமைச்சரைக் கண்ட பயணிகள் அவருடன் ஆர்வத்துடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/pok-human-rights-abuses-over-30-civilians-killed-in-pakistan-security-forces-firing">POK பேரணி.. பாகிஸ்தான் பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் 30 பொதுமக்கள் பலி</a></p><p>*இணையம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளை பாகிஸ்தான் அரசு முற்றிலும் முடக்கியுள்ளது.</p><p>* 33க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/us-iran-airstrikes-us-hits-iranian-targets-after-jordan-base-missile-attack">ஜோர்டான் சம்பவத்துக்கு பதிலடி.. ஈரான் மீது மீண்டும் முழுவீச்சில் அமெரிக்கா தாக்குதல்</a></p><p>*டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு இடையேயான சந்திப்பைத் தொடர்ந்து தாக்குதல்கள் மீண்டும் தொடங்கியுள்ளன</p><p>* குடியிருப்புப் பகுதி மீது ஏவுகணை தாக்கியதாகவும் ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-diesel-prices-in-chennai">சென்னையில் இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்</a></p><p>*பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.</p><p>*கடல்வழிப்பாதையில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/telegram-international-warrant-shock-russia-targets-pavel-durov-over-alleged-terror-support">பயங்கரவாதத்திற்கு உதவியதாக டெலிகிராம் நிறுவனருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த ரஷியா</a></p><p>*ரஷியாவில் பிறந்த பாவெல் தற்போது பிரஞ்சு, ஐக்கிய அரபு அமீரக குடியுரிமையைக் கொண்டு வெளிநாட்டில் வாழ்ந்து வருகிறார்.</p><p>*பிரான்சிலும் துரோவ் மீது விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-30-07-2026">GOLD PRICE TODAY : இன்று அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... எவ்வளவு தெரியுமா?</a></p><p>* சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. </p><p>* ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-irregularities-case-senthil-balajis-anticipatory-bail-plea">டாஸ்மாக் முறைகேடு வழக்கு- செந்தில் பாலாஜி முன்ஜாமின் கோரி மனு</a></p><p>* டாஸ்மாக் மதுபான கொள்முதல், டெண்டர் உள்ளிட்டவற்றில் மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி, டாஸ்மாக் முன்னாள் எம்.டி.விசாகன் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. </p><p>* டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தி.மு.க. முன்னால் அமைச்சர் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமின் மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/notice-issued-to-woman-who-worked-for-125-days-demanding-tax-payment-of-rs-2-75-crore">ஊரக வேலை திட்டத்தில் பணியாற்றும் பெண்ணுக்கு ரூ.2.75 கோடி வரி செலுத்தும்படி நோட்டீஸ்</a></p><p>* தனது வங்கி கணக்கு முடக்கப்பட்டதால் அதில் இருந்து கூலி பணத்தை எடுக்க முடியாமல் திரும்பி உள்ளார்.</p><p>* 125 நாள் வேலை செய்யும் பெண்ணுக்கு ரூ.2.75கோடி ஜி.எஸ்.டி. செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நீட் போராட்டக்காரர்களுக்கு நிம்மதி: வழக்குகள் கைவிடல்... கைதானவர்களை விடுவிக்க டெல்லி அரசு உத்தரவு! </title><link>https://www.maalaimalar.com/news/national/relief-for-neet-protesters-cases-dropped-delhi-government-orders-release-of-those-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/national/relief-for-neet-protesters-cases-dropped-delhi-government-orders-release-of-those-arrested#comments</comments><guid isPermaLink="false">5dcc3a8d-7137-45bb-8c38-77dfcacc1cd5</guid><pubDate>Thu, 30 Jul 2026 13:01:10 +0000</pubDate><atom:updated>2026-07-30T13:01:10.047Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>டெல்லி அரசு,Delhi govt,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,CJP,நீட் போராட்டம்,NEET paper leak protesters</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/w3lfx7p9/New-Project-2026-07-30T174650.702.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நீட் போராட்டக்காரர்களுக்கு நிம்மதி: வழக்குகள் கைவிடல்... கைதானவர்கள் விடுவிக்க டெல்லி அரசு உத்தரவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/w3lfx7p9/New-Project-2026-07-30T174650.702.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவைக் கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு எதிராக, எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது என மாநில அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் உச்ச நீதிமன்ற உத்தரவிற்கிணங்க குற்றப்பின்னணி உள்ளவர்களுக்கு எதிரான நடவடிக்கைக்கு இது பொருந்தாது எனவும் தெளிவுப்படுத்தியுள்ளது. </p><p>மேலும் இந்தப் போராட்டம் தொடர்பாக டெல்லி காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட  13 வழக்குகளையும் டெல்லி அரசு முடித்து வைத்துள்ளது. இப்போராட்டம் தொடர்பாக ஏற்கனவே கைது அல்லது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நபர்களை, உரிய ஆய்வுக்குப் பிறகு விரைவாக விடுதலை செய்ய டெல்லி உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. </p><p>இந்த விவகாரம் இதோடு முடித்துக் கொள்ளப்படுவதாகவும், இது தொடர்பாக எதிர்காலத்தில் எந்த விசாரணையோ அல்லது தொடர் நடவடிக்கைகளோ இருக்காது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. </p><h2>போராட்டம்</h2><p>நீட்- யுஜி தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட கல்வித்துறையில் சமீபத்தில் நடைபெற்ற குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அமைப்பு சார்பில், டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூன்.20 முதல் போராட்டம் தொடங்கியது. </p><p>போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடைந்த நிலையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததையடுத்து, ஜூலை.25 முடிவுக்கு வந்தது. இதனிடையே இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்து, சிலரை கைது செய்தது. </p><p>கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும், போராட்டம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறவேண்டும் எனவும், இல்லையென்றால் மீண்டும் போராட்டம் வெடிக்கும் என கரப்பான்பூச்சி அமைப்பு எச்சரித்தது. இதனைத்தொடர்ந்து தற்போது அனைத்து வழக்குகளையும் டெல்லி காவல்துறை ரத்து செய்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>Kawasaki Ninja 300 | இந்தியாவில் கவாசகி நிஞ்ஜா பைக் 296 சிசி-யில் அறிமுகம்</title><link>https://www.maalaimalar.com/automobilenews/bike/kawasaki-ninja-indiyavil-ninja-300-bike-296-cc-udan-arimugam</link><comments>https://www.maalaimalar.com/automobilenews/bike/kawasaki-ninja-indiyavil-ninja-300-bike-296-cc-udan-arimugam#comments</comments><guid isPermaLink="false">c1b50450-2c24-4fb2-bb88-af02baf17cc2</guid><pubDate>Thu, 30 Jul 2026 12:47:12 +0000</pubDate><atom:updated>2026-07-30T12:47:12.377Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Kawasaki,கவாசகி,Ninja 300,நிஞ்சா 300</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/ouiqts44/Untitled-design-15.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Kawasaki Ninja 300 launched in India with 296cc engine]]></media:title><media:description type="html"><![CDATA[ Kawasaki Ninja]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/ouiqts44/Untitled-design-15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>பைக் (Automobile)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கவாசகி நிறுவனம் தனது 2027 நிஞ்ஜா 300 பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.</p><h3><strong>கவாசகி நிஞ்ஜா 300</strong></h3><p>இந்த பைக்கின் தோற்றத்தை பொறுத்தவரை, 2027 கவாசகி நிஞ்ஜா 300 அதன் முந்தைய மாடலில் இருந்து பெரும்பாலும் மாற்றமின்றி உள்ளது. தற்போது அறிமுகம் செய்யப்பட்ட மாடலில், கவசாகி ஒரு பெரிய மிதக்கும் விண்ட்ஷீல்டை பொருத்தியுள்ளது.</p><p>இந்த பைக், மேம்படுத்தப்பட்ட கிராபிக்ஸ்களுடன், அந்த பிராண்டின் தனித்துவமான லைம் கிரீன் வண்ணத்தில் மட்டுமே வழங்கப்படுகிறது.</p><h3><strong>என்ஜின்</strong></h3><p>இந்த பைக் 296 சிசி, லிக்விட்-கூல்டு, பேரலல்-ட்வின் என்ஜின் ஆற்றலுடன் இயங்குகிறது. </p><p>இது 11,000 ஆர்.பி.எம்.மில் 39 பிஎஸ் பவரையும், 10,000 ஆர்.பி.எம்.மில் 26.1 என்.எம் உச்சபட்ச டார்க்கையும் உருவாக்குகிறது. </p><p>இதன் என்ஜின், ஸ்டாண்டர்டாக அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் அம்சங்களைக் கொண்ட 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த பைக்கில், ஸ்டீல்-டியூப் டைமண்ட் ஃபிரேமைச் சுற்றி கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும், இது 37 மிமீ டெலஸ்கோபிக் முன்பக்க ஃபோர்க்குகளையும், கவாசகியின் யூனி-ட்ராக் பின்பக்க மோனோஷாக் சஸ்பென்ஷனையும் பயன்படுத்துகிறது.</p><p>இது டியூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்ட 17-இன்ச் அலாய் வீல்களில் இயங்குகிறது. மேலும், கவாசகி ஒரு திருத்தப்பட்ட டிரெட் பேட்டர்னை அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>இது பயனர்களுக்கு சிறந்த சாலை உணர்வையும், மேம்பட்ட பாதுகாப்பு வசதியையும் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதன் இரு முனைகளிலும் டிஸ்க் பிரேக்குகள் மூலம் பிரேக்கிங் வசதிகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இதில் டூயல்-சேனல் ஏபிஎஸ் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது.</p><h3><strong>விலை</strong></h3><p>இந்த பைக்கின் ஆரம்ப நிலை கடந்த ஆண்டு அறிமுகமாக இரட்டை சிலிண்டர் ஸ்போர்ட்ஸ் பைக்கின் முந்தைய விலையை விட ரூ. 17,000 அதிகமாகியுள்ளது.</p><p>இந்தியாவில் இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 3.34 லட்சம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>எகிப்து துறைமுகத்தில் டிரோன் தாக்குதல்.. பின்னணியில் ஈரான்?</title><link>https://www.maalaimalar.com/news/world/drone-attack-at-egyptian-port-fire-on-us-greek-ship</link><comments>https://www.maalaimalar.com/news/world/drone-attack-at-egyptian-port-fire-on-us-greek-ship#comments</comments><guid isPermaLink="false">ad6a0250-3a66-4013-befd-372d663409f0</guid><pubDate>Thu, 30 Jul 2026 12:45:10 +0000</pubDate><atom:updated>2026-07-30T12:45:10.995Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Egypt,எகிப்து,DroneAttack,டிரோன்தாக்குதல்,DamiettaPort,USShipFire,கிரீஸ்கப்பல்,InternationalConflict</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/mraei0ek/Egypt-DroneAttack" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Egypt DroneAttack]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/mraei0ek/Egypt-DroneAttack?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">எகிப்தில்</a> உள்ள முக்கியத் துறைமுகங்களில் ஒன்றான டாமியெட்டா துறைமுகம் மீது நடத்தப்பட்ட திடீர் ட்ரோன் தாக்குதலால் சர்வதேச கடல்சார் எல்லைப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. </p><p>இந்தத் தாக்குதலில் அமெரிக்க மற்றும் கிரீஸ் நாட்டு கப்பல்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.</p><h2><strong>இரு கப்பல்களில் பற்றிய தீ:</strong></h2><p>டாமியெட்டா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க நிறுவனத்திற்குச் சொந்தமான திரவ இயற்கை எரிவாயு சேமிப்புக் கப்பல் மற்றும் கிரீஸ் நாட்டைச் சேர்ந்த மற்றொரு கப்பல் ஆகியவற்றை இலக்கு வைத்து இந்த ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. </p><p>தாக்குதலைத் தொடர்ந்து இரு கப்பல்களிலும் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், பல மணி நேரம் கடுமையாகப் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.</p><h2><strong>துறைமுகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட கப்பல்கள்:</strong></h2><p>தீ முற்றிலும் அணைக்கப்பட்டு நிலைமை சீரானதை அடுத்து, பாதுகாப்பு கருதி பாதிக்கப்பட்ட இரண்டு கப்பல்களும் உடனடியாக டாமியெட்டா துறைமுகப் பகுதியிலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டன. </p><p>இந்த விபத்து மற்றும் தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித உடல்நலப் பாதிப்போ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என்று எகிப்து பெட்ரோலிய அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.</p><h2><strong>பின்னணி என்ன?</strong></h2><p>கப்பல்களில் தீ விபத்து ஏற்பட்டதற்கான தெளிவான காரணத்தையோ அல்லது இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருக்கும் அமைப்புகள் குறித்த விவரங்களையோ எகிப்து அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. </p><p>இதனால் இந்தத் தாக்குதலை நடத்தியது யார் என்பது தற்போதைக்குத் தெரியவில்லை. அதே நேரத்தில், எகிப்து துறைமுகத்தில் ஒரு வணிகக் கப்பல் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதைச் சர்வதேச கடல்சார் புலனாய்வு நிறுவனமான 'ஆம்ப்ரே' உறுதிப்படுத்தியுள்ளது. </p><p>இப்பிராந்தியத்தில் சமீபகாலமாக நடந்து வரும் பதற்றமான சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, இந்தத் தாக்குதலை ஈரான் நடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக அமெரிக்கா கூறிவருகிறது. இது குறித்து பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>இது குறித்துப் பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>பிரபல இன்சூரன்ஸ் நிறுவனத்தை ரூ.4,500 கோடி ஒப்பந்தத்தில் வாங்க உள்ள பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம்</title><link>https://www.maalaimalar.com/news/national/patanjali-ayurveda-to-acquire-major-insurance-firm-in-rs-4500-crore-deal</link><comments>https://www.maalaimalar.com/news/national/patanjali-ayurveda-to-acquire-major-insurance-firm-in-rs-4500-crore-deal#comments</comments><guid isPermaLink="false">e7fde140-b979-455e-be53-4cbc9db0f85c</guid><pubDate>Thu, 30 Jul 2026 12:42:31 +0000</pubDate><atom:updated>2026-07-30T12:42:31.113Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Patanjali,பதஞ்சலி நிறுவனம்,பாபா ராம்தேவ்,Baba Ramdev,IRDAI,ஐஆர்டிஏஐ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/38krn375/Untitled-design-14.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[  Patanjali to acquire Magma General Insurance in ₹4,500 crore IRDAI-approved takeover]]></media:title><media:description type="html"><![CDATA[ Patanjali Insurance Deal]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/38krn375/Untitled-design-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம், காப்பீட்டு  நிறுவனத்திலும் விரைவில் கால்பதிக்க உள்ளது.</p><p>பதஞ்சலி ஆயுர்வேதம் நிறுவனம், நுகர்வோர் பொருட்கள் மற்றும் ஆயுர்வேத மருந்துகள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.</p><h3><strong>இன்சூரன்ஸ் நிறுவனத்தை வாங்கவுள்ள பதஞ்சலி</strong></h3><p>இந்நிலையில், மக்மா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தை சுமார் 4,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாங்குவதற்கு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">பதஞ்சலி நிறுவனம்</a> கையெழுத்திட்டுள்ளது.</p><p>இந்த ஒப்பந்தம் பிரபல உணவு விற்பனை நிறுவனமான டி.எஸ் குழுமத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>மேக்மா இன்சூரன்ஸ் நிறுவனத்தை பதஞ்சலி கையகப்படுத்துவதற்கு இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) ஒப்புதல் அளித்துள்ளது.</p><p>இதன்மூலம் வேகமாக வளர்ந்து வரும் பொதுக் காப்பீட்டு சந்தையில் பதஞ்சலி நிறுவனம் இணைந்துள்ளது.</p><p>இந்த ஒப்பந்தத்தின்படி பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம், மக்மா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 73.56 சதவீத பங்குகளையும், டி.எஸ் குழுமம் 24.5 சதவீத பங்குகளையும் பெற்றுள்ளது.</p><h3><strong>ஐ.ஆர்.டி.ஏ.ஐ காலக்கெடு</strong></h3><p>இந்த ஒப்பந்தத்திற்கான பணப் பரிவர்த்தனையை மூன்று மாத காலத்திற்குள் முடிக்குமாறு ஐ.ஆர்.டி.ஏ.ஐ (IRDAI) தெரிவித்துள்ளது.</p><p>மக்மா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் சமீபத்திய ஆண்டுகளில் தனது வணிகத்தை சீராக விரிவுபடுத்தி உள்ளது.</p><p>இந்த காப்பீட்டு நிறுவனத்தின் மொத்த பிரீமியம் முந்தைய நிதியாண்டில் ரூ.3,334.4 கோடியாக இருந்த நிலையில், தற்போது இந்த நிதியாண்டில் இதன் பிரீமியம் ரூ.3,615.48 கோடியாக அதிகரித்துள்ளது.</p><p>இந்த ஒழுங்குமுறை பரிவர்த்தனை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் நிறைவடையும் பட்சத்தில், பதஞ்சலி நிறுவனம் இந்தியாவின் பொதுக் காப்பீட்டுத் துறை நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுக்க உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரஷிய ராணுவம் தாக்குதல்: உக்ரைன் நகரங்கள் மீது சரமாரியாக ஏவுகணைகள் வீச்சு</title><link>https://www.maalaimalar.com/news/world/russia-military-attack-missiles-pound-ukraine-cities</link><comments>https://www.maalaimalar.com/news/world/russia-military-attack-missiles-pound-ukraine-cities#comments</comments><guid isPermaLink="false">7b6ce622-e71e-4a8c-90cd-407848e61f2f</guid><pubDate>Thu, 30 Jul 2026 12:38:47 +0000</pubDate><atom:updated>2026-07-30T12:38:47.510Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஏவுகணை,ரஷிய ராணுவம்,உக்ரைன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/wsz4aphj/khiv.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Russia attack ukraine]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/wsz4aphj/khiv.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ரஷியா- உக்ரைன் இடையேயான போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இருதரப்பும் தொடர்ந்து பரஸ்பர தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன.</p><h2>ஏவுகணைகள் வீச்சு</h2><p>இந்தநிலையில் இன்று அதிகாலை உக்ரைன் தலைநகர் கீவ், டினிப்ரோ, கிரிவி ரிஹ் உள்பட பல நகரங்களை நோக்கி பல ஏவுகணைகளை வீசி ரஷியா தாக்குதல் நடத்தியது. உக்ரைன் முழுவதும் இந்த தாக்குதல் தீவிரமாக நடந்தது.</p><p>ரஷியா ஒரு பெரிய தாக்குதலுக்குத் தயாராகி வருகிறது என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி எச்சரித்த சில மணி நேரங்களில் இந்த தாக்குதல் நடந்தது.</p><p>இதையடுத்து பொது மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு உக்ரைன் அரசு அறிவுறுத்தியது. இந்த எச்சரிக்கையை தொடர்ந்து மக்கள், மெட்ரோ ரெயில் நிலைய சுரங்கப் பாதைகளில் தஞ்சம் அடைந்தனர். ரஷியாவின் தாக்குதல்களில் உக்ரைன் தலைநகர் கீவ் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசப்பட்டன.</p><p>மேலும், தெற்கு ரஷியாவின் நோவோரோசிஸ்க் பகுதியில் இருந்து குரூஸ் ஏவுகணைகள் உக்ரைனை நோக்கி ஏவப்பட்டன என்று உக்ரைன் ராணுவம் தெரிவித்தது. ஏவுகணைகளை தடுக்க வான்பாதுகாப்பு அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டன. ஆனாலும் ஏவுகணைகள் உக்ரைனுக்குள் விழுந்து வெடித்தன.</p><p>ரஷியாவின் இந்த தாக்குதலில் குழந்தைகள் உள்பட 7 பேர் பலியானார்கள். ஏராளமானோர் காயம் அடைந்து உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் விளையாட்டு: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் நீரஜ் சோப்ரா</title><link>https://www.maalaimalar.com/sports/neeraj-chopra-qualifies-for-javelin-throw-final-in-commonwealth-games</link><comments>https://www.maalaimalar.com/sports/neeraj-chopra-qualifies-for-javelin-throw-final-in-commonwealth-games#comments</comments><guid isPermaLink="false">f1050c7b-ac1e-45a1-91bb-ba92749dc9f1</guid><pubDate>Thu, 30 Jul 2026 12:24:51 +0000</pubDate><atom:updated>2026-07-30T12:24:51.729Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Commonwealth games,காமன்வெல்த் போட்டி,Neeraj Chopra,நீரஜ் சோப்ரா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/0rbchcgg/neeraj-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ neeraj chopra]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/0rbchcgg/neeraj-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்பட 74 நாடுகளைச் சேர்ந்த 3 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.</p><p>இதில் 126 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்று விளையாடி வருகிறது. ஆறாவது நாள் முடிவில் இந்திய அணி 3 தங்கம், 9 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களை வென்றுள்ளது.</p><p>இந்நிலையில், காமன்வெல்த் விளையாட்டின் 7-வது நாள் ஆட்டங்கள் இன்று நடைபெற்று வருகிறது. </p><p>ஆண்கள் ஈட்டி எறிதல் தகுதிச்சுற்றில் இந்தியாவின் நட்சத்திர வீரரான நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியிலேயே 79.61 மீட்டர் தூரம் வீசி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.</p><p>மேலும், இந்தியாவின் ரோகித் யாதவ், யஷ்வீர் சிங் ஆகியோரும் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.</p><p>நீரஜ் சோப்ரா 5வது இடமும், ரோகித் யாதவ் 9வது இடமும், யஷ்வீர் சிங் 10வது இடமும் பிடித்து இறுதிப்போட்டிக்கான டாப் 12 பட்டியலில் இடம்பெற்றனர்.</p>]]></content:encoded></item><item><title>“வாழ்நாள் முழுவதும் ராகா ரங்கராஜுடன் துணைநிற்பேன்” - தந்தை பொறுப்பை ஏற்ற மாதம்பட்டி ரங்கராஜ்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/i-will-stand-by-raga-rangaraj-throughout-my-life-madhampatti-rangaraj-assumes-the-role-of-a-father</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/i-will-stand-by-raga-rangaraj-throughout-my-life-madhampatti-rangaraj-assumes-the-role-of-a-father#comments</comments><guid isPermaLink="false">915be0d9-2fc9-4838-8c4b-b6da3d5a6551</guid><pubDate>Thu, 30 Jul 2026 12:13:53 +0000</pubDate><atom:updated>2026-07-30T12:13:53.306Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Joy Crizildaa,மாதம்பட்டி ரங்கராஜ்,ஜாய் கிரிசில்டா,Madampatti Rangaraj</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/3owew2hl/New-Project-2026-07-30T174058.985.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “வாழ்நாள் முழுவதும் ராகா ரங்கராஜுடன் துணைநிற்பேன்” - தந்தை பொறுப்பை ஏற்ற மாதம்பட்டி ரங்கராஜ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/3owew2hl/New-Project-2026-07-30T174058.985.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தனது இரண்டாவது மனைவிக்கு பிறந்த குழுந்தையை ஏற்று, அக்குழந்தைக்கு இனி வாழ்நாள் முழுவதும் துணைநிற்பதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில்.,</p><p>“அனைவருக்கும் வணக்கம். எனது மகன் ராகாவிற்கு, ஒரு தந்தையாகச் செய்யவேண்டிய அனைத்து கடமைகளையும் கடந்த ஆறு மாதங்களாக முழுப் பொறுப்புடனும், அன்புடனும் செய்து வருகிறேன். </p><p>இனி, என் வாழ்நாள் முழுவதும் ராகா ரங்கராஜின் நலன், மகிழ்ச்சி மற்றும் எதிர்காலத்திற்காக முழுப் பொறுப்புடனும், அன்புடனும் துணை நிற்பேன் என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p><h2>மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிசில்டா வழக்கு பின்னணி</h2><p>மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைத் திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாகவும், தான் கர்ப்பமாக இருந்தபோது தன்னை விட்டுப் பிரிந்துவிட்டதாகவும் ஜாய் கிரிசில்டா காவல்துறை மற்றும் மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார். </p><p>முதலில் கிரிசில்டாவின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த ரங்கராஜ், டிஎன்ஏ சோதனையில் தான்தான் அக்குழந்தைக்கு தந்தை என்று முடிவானால் குழுந்தையின் பொறுப்புகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார். இதனிடையே கடந்த ஆண்டு ஜாய் கிரிசில்டாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது.</p><p>தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, குழந்தைக்குத் தந்தை, ரங்கராஜ் தான் என டி.என்.ஏ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும் குழந்தையை சென்று பார்க்காமல் ரங்கராஜ் இருந்து வந்தார்.</p><p>இந்நிலையில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>அடுத்த ஆண்டுக்குள் 8000 ஊழியர்களை நீக்கும் BMW நிறுவனம்</title><link>https://www.maalaimalar.com/news/world/bmw-to-cut-several-thousand-jobs-in-latest-blow-to-german-auto-sector</link><comments>https://www.maalaimalar.com/news/world/bmw-to-cut-several-thousand-jobs-in-latest-blow-to-german-auto-sector#comments</comments><guid isPermaLink="false">487c5380-3b33-4b76-9269-79e7f43949be</guid><pubDate>Thu, 30 Jul 2026 12:00:06 +0000</pubDate><atom:updated>2026-07-30T12:00:06.812Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BMW,பிஎம்டபிள்யூ,ஜெர்மன்,German,பணிநீக்கம்,jobs cut</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/bnif6bz9/BMW.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ BMW car]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/bnif6bz9/BMW.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜெர்மனியின் வாகன உற்பத்தித் துறை கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது.</p><p>மின்சார வாகனங்களுக்கான அதிக செலவு, சீனா உடனான கடுமையான போட்டி மற்றும் அமெரிக்காவின் கூடுதல் வரிவிதிப்பு ஆகியவற்றால் வாகன உற்பத்தித்துறை நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.</p><p>இதன் காரணமாக பிரபல முன்னணி கார் நிறுவனங்களான வோக்ஸ்வேகன், மெர்சிடிஸ் பென்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே ஊழியர்களைக் குறைப்பதற்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன.</p><p>முனீச் நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிஎம்டபிள்யூ நிறுவனத்தில் உலகம் முழுவதும் சுமார் 1,50,000 பேர் பணிபுரிகின்றனர்.</p><p>இந்நிலையில், ஜெர்மனியில் உள்ள பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ நிறுவனம், 2027-ம் ஆண்டுக்குள் சுமார் 8,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளோம் என அறிவித்துள்ளது.</p><p>சீனாவில் கடும் போட்டி நிலவுவதாலும், மந்தமான பொருளாதார சூழலாலும் இந்த முடிவை எடுத்துள்ளோம் என அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.</p><p>இதுதொடர்பாக, அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், நிறுவனத்திற்கும் தொழிலாளர் நலச்சங்கத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, நிர்வாகம் மற்றும் ஆராய்ச்சி-மேம்பாட்டுப் பிரிவுகளை இலக்காகக் கொண்டு இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உற்பத்திப் பிரிவுக்கு மட்டும் இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>15 நாட்களுக்கு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கவேண்டும் - கர்நாடகாவிற்கு காவிரி ஆணையம் உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cwma-orders-the-release-of-3500-cusecs-of-water-to-tamil-nadu-for-15-days</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cwma-orders-the-release-of-3500-cusecs-of-water-to-tamil-nadu-for-15-days#comments</comments><guid isPermaLink="false">3c535016-e598-47aa-ab61-96b3ae17cb69</guid><pubDate>Thu, 30 Jul 2026 11:39:42 +0000</pubDate><atom:updated>2026-07-30T11:39:42.008Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,கர்நாடகா,Karnataka,காவிரி நீர் மேலாண்மை ஆணையம்,தமிழ்நாடு,CWRC</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/ueu2bg12/New-Project-2026-07-30T160834.540.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 15 நாட்களுக்கு தமிழ்நாட்டிற்கு 3500 கன அடி தண்ணீர் திறக்க CWMA உத்தரவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/ueu2bg12/New-Project-2026-07-30T160834.540.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 54வது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. நேற்று காவிரி ஒழுங்குமுறைக்குழு தமிழ்நாட்டிற்கு 3500 கன அடி நீர் திறக்க பரிந்துரைத்ததை எதிர்த்து கர்நாடகா மேல்முறையீடு செய்தநிலையில், இன்று காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற்றது.</p><p>இந்த கூட்டத்தைத் தொடர்ந்து, அடுத்த 15 நாட்களுக்குத் தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 3,500 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடகவிற்கு காவேரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. </p><p>இதன்மூலம் தமிழ்நாட்டிற்கு 4 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும்.</p><h2>கூட்டத்தில் கர்நாடகா முன்வைத்த வாதம் என்ன?</h2><p>காவிரிப் படுகை முழுவதும் போதிய மழைப்பொழிவு இல்லை என்றும், நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு குறைவாக இருப்பதாகவும், தற்போது தண்ணீர் திறக்க இயலாது என்றும் கர்நாடகா வாதிட்டது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 30,748 கன அடி நீர் பாய்ந்த நிலையில், இந்த ஆண்டு இதுவரை பிலிகுண்டுலுவில் 178 கன அடி நீர் மட்டுமே பாய்வதாக கர்நாடகா தெரிவித்தது. </p><p>காவிரிப் படுகை நீர்த்தேக்கங்களில் தற்போது 36.69 டிஎம்சி நீர் மட்டுமே உள்ளது என்றும், இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவான 99 டிஎம்சி அளவை விடக் கணிசமாகக் குறைவு என்றும் தெரிவித்தது. </p>]]></content:encoded></item><item><title>கவினின் &apos;ஹாய்&apos; படத்தின் மூன்றாவது சிங்கிள் &apos;பச்ச புள்ள&apos; ப்ரோமோ பாடல் நாளை வெளியாகிறது!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/third-single-pacha-pulla-promo-song-from-kavins-hai-out-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/third-single-pacha-pulla-promo-song-from-kavins-hai-out-tomorrow#comments</comments><guid isPermaLink="false">5ca811fc-d2df-429f-8b2e-6f19e5a10c4d</guid><pubDate>Thu, 30 Jul 2026 11:38:56 +0000</pubDate><atom:updated>2026-07-30T11:38:56.844Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Nayanthara,நயன்தாரா,kavin,கவின்,HiMovie,VishnuEdavan,PachaPullaSong,பச்சபுள்ள,RowdyPictures</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/ymkg0pm0/Hi-Movie-Third-Single" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ HiThirdSingle ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/ymkg0pm0/Hi-Movie-Third-Single?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இயக்குனர் விஷ்ணு எடவன் இயக்கத்தில், நடிகர் கவின் மற்றும் 'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா இணைந்து முதன்முறையாக நடிக்கும் திரைப்படம் '<a href="https://www.maalaimalar.com/topic/himovie">ஹாய்</a>'. இந்த திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>இவர்களின் கெமிஸ்ட்ரி எப்படி இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது. தற்போது இந்த திரைப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.</p><h2><strong>மூன்றாவது சிங்கிள்</strong></h2><p>ஏற்கனவே வெளியான பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வந்த நிலையில், தற்போது இப்படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான 'பச்ச புள்ள' வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதற்கான சிறப்பு விளம்பரப் பாடல் மற்றும் முழுப் பாடல் குறித்த அறிவிப்பு இந்த போஸ்டர் மூலம் வெளியாகியுள்ளது. ஜென் மார்ட்டின் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><h2>படக்குழு</h2><p>இயக்குனர் விஷ்ணு எடவன் இயக்கத்தில், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் 'ரவுடி பிக்சர்ஸ்', எஸ்.எஸ். லலித் குமாரின் 'செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ' மற்றும் 'ஜீ ஸ்டுடியோஸ்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் 'ஹாய்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.</p><p>இவர்கள் இருவருக்குள் மலரும் மென்மையான காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் கவின், நயன்தாரா இவர்களுடன் பாக்யராஜ், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>இங்கிலாந்து டெஸ்ட் அணி தலைமை பயிற்சியாளராக பிளெமிங் நியமனம்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/stephen-fleming-appointed-england-mens-test-coach-joe-root-returns-as-captain</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/stephen-fleming-appointed-england-mens-test-coach-joe-root-returns-as-captain#comments</comments><guid isPermaLink="false">3988a90c-493d-4578-b977-e8a1f95430b7</guid><pubDate>Thu, 30 Jul 2026 11:21:02 +0000</pubDate><atom:updated>2026-07-30T11:21:02.111Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Joe Root,ஜோ ரூட்,England,Stephen Fleming,ஸ்டீபன் பிளெமிங்,இங்கிலாந்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/a8r2mjxk/fleming.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ fleming]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/a8r2mjxk/fleming.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த 17 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளெமிங் தனது பொறுப்பில் இருந்து கடந்த 13ம் தேதி விலகினார். அவரின் பங்களிப்பிற்கு நன்றியும், பாராட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><h2>ஸ்டீபன் பிளெமிங்</h2><p>சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த 2008-ம் ஆண்டில் இணைந்த ஸ்டீபன் பிளெமிங் 2009 முதல் தலைமை பயற்சியாளராக இருந்தார்.</p><p>கடந்த 2023-ம் ஆண்டுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பை வெல்லாமல் திணறி வரும் நிலையில், ஸ்டீபன் பிளெமிங் விலகியது பேசுபொருளானது.</p><p>இந்நிலையில், இங்கிலாந்து ஆண்கள் டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>இதேபோல், இங்கிலாந்து அணி கேப்டனாக ஜோ ரூட் நியமிக்கப்பட்டுள்ளார்.</p><h2>ஜோ ரூட்</h2><p>பென் ஸ்டோக்ஸ் ஓய்வை அறிவித்துள்ள நிலையில், ஜோ ரூட் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.</p><p>பென் ஸ்டோக்ஸ் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை 122 டெஸ்ட் போட்டிகளுடன் முடித்துள்ளார். இதில் 44 போட்டிகளில் கேப்டனாக இருந்து 7,000-க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்துள்ளார்.</p><p>200-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், இங்கிலாந்து அணிக்காக 114 ஒருநாள் போட்டிகளிலும், 43 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>நீர்சத்து குறைபாடா..? அலட்சியம் வேண்டாம்-மருத்துவர்கள் அறிவுரை!</title><link>https://www.maalaimalar.com/health/generalmedicine/signs-of-dehydration-and-doctors-advice</link><comments>https://www.maalaimalar.com/health/generalmedicine/signs-of-dehydration-and-doctors-advice#comments</comments><guid isPermaLink="false">7c04eca4-b556-40bc-8f3f-a3f228c0bf01</guid><pubDate>Thu, 30 Jul 2026 10:53:47 +0000</pubDate><atom:updated>2026-07-30T10:53:47.033Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Health,HealthTips,Dehydration,உடல் ஆரோக்கியம்,நீர் சத்து குறைபாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/xty4ynp0/gehydrated.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dehydration ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/xty4ynp0/gehydrated.jpg?w=280" width="280"></media:thumbnail><category>பொது மருத்துவம் (General Medicine)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நமது உடலின் சுமார் 60 சதவீதம் நீரால் ஆனது. உடலின் ஒவ்வொரு உறுப்பும், ஒவ்வொரு செல்களும் சரியாக செயல்பட நீர் மிகவும் அவசியம். உடலில் தேவையான அளவு நீர் இல்லாத நிலையே நீர் சத்து குறைபாடு (Dehydration) எனப்படுகிறது. அதிக வெப்பம், போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது, அதிக வியர்வை, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற காரணங்களால் இந்த நிலை ஏற்படலாம். குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நீண்ட நேரம் வெயிலில் வேலை செய்பவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.</p><h2><strong>நீர் சத்து குறைபாடு என்றால் என்ன?</strong></h2><p>உடலில் இருந்து வெளியேறும் நீரின் அளவை விட, உடலுக்குள் செல்லும் நீரின் அளவு குறைவாக இருக்கும் போது நீர் சத்து குறைபாடு ஏற்படுகிறது. இதனால் உடலின் இயல்பான செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு, உடல்நலக் கோளாறுகள் உருவாகத் தொடங்குகின்றன.</p><h2><strong>நீர்சத்து குறைபாட்டிற்கான காரணங்கள்:</strong></h2><p>கோடை வெயிலில் நீண்ட நேரம் இருப்பது, போதுமான அளவு தண்ணீர் அருந்தாதது, அதிக உடற்பயிற்சி செய்வது, காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு, கட்டுப்பாடின்றி சிறுநீர் வெளியேறச் செய்யும் சில நோய்கள் அல்லது மருந்துகள் ஆகியவை நீர் சத்து குறைபாட்டை ஏற்படுத்தலாம். தாகம் எடுக்கும்போதுதான் தண்ணீர் குடிக்கும் பழக்கமும் இதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.</p><h2><strong>அறிகுறிகள்:</strong></h2><p>அடிக்கடி தாகம் எடுப்பது, வாய் மற்றும் உதடுகள் உலர்வது, சிறுநீர் அளவு குறைவது அல்லது அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுவது, தலைச்சுற்றல், சோர்வு, பலவீனம், தலைவலி, கண்கள் உள்ளே செல்வது போன்றவை பொதுவான அறிகுறிகளாகும். கடுமையான நிலையில் மயக்கம், குழப்பமான மனநிலை, இதயத் துடிப்பு அதிகரித்தல் போன்ற ஆபத்தான அறிகுறிகளும் தோன்றலாம்.</p><h2><strong>யாருக்கு அதிக ஆபத்து?</strong></h2><p>சிறு குழந்தைகள், வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், விளையாட்டு வீரர்கள், வெளியில் நீண்ட நேரம் வேலை செய்பவர்கள், நீரிழிவு நோயாளிகள் மற்றும் அதிக காய்ச்சல் அல்லது வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டவர்கள் நீர் சத்து குறைபாட்டால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள்.</p><h2><strong>சிகிச்சை மற்றும் பராமரிப்பு:</strong></h2><p>லேசான நீர் சத்து குறைபாடு இருந்தால், தண்ணீர், இளநீர், எலுமிச்சைச் சாறு, மோர், ஓஆர்எஸ் (ORS) கரைசல் போன்ற திரவங்களை அடிக்கடி அருந்த வேண்டும். குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு சிறிய அளவில் அடிக்கடி திரவங்களை வழங்குவது நல்லது. கடுமையான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி, தேவையானால் நரம்பு வழியாக திரவங்கள் செலுத்தும் சிகிச்சை பெற வேண்டும்.</p><h2><strong>தடுக்கும் வழிமுறைகள்:</strong></h2><p>தாகம் ஏற்படுவதற்காக காத்திருக்காமல் நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் அருந்துவது மிகவும் முக்கியம். கோடை காலங்களில் வெயிலில் நீண்ட நேரம் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். அதிக வியர்வை ஏற்படும் சூழலில் கூடுதல் திரவங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். தர்பூசணி, வெள்ளரிக்காய், ஆரஞ்சு போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களையும் உணவில் சேர்த்துக்கொள்வது உடலின் நீர்ச்சத்தை பராமரிக்க உதவும்.</p><p>நீர் சத்து குறைபாடு ஒரு சாதாரண பிரச்சனையாகத் தோன்றினாலும், கவனிக்காமல் விட்டால் உயிருக்கு ஆபத்தான நிலையை ஏற்படுத்தக்கூடும். தினமும் போதுமான அளவு தண்ணீர் அருந்துவது, உடலின் தேவையை உணர்ந்து திரவ உணவுகளை எடுத்துக்கொள்வது மற்றும் ஆரம்ப அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல் இருப்பது நல்ல ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் எளிய மற்றும் சிறந்த வழியாகும்.</p>]]></content:encoded></item><item><title>சிறுமியை கொன்று உடலை வாகனத்தின் முன் வைத்து ஊர்வலம் சென்ற பாகிஸ்தான் ராணுவம்</title><link>https://www.maalaimalar.com/news/world/balochistan-girl-killed-body-displayed-on-military-vehicle</link><comments>https://www.maalaimalar.com/news/world/balochistan-girl-killed-body-displayed-on-military-vehicle#comments</comments><guid isPermaLink="false">1307e12c-584d-4d2b-a34d-bdb13d716fc0</guid><pubDate>Thu, 30 Jul 2026 10:52:28 +0000</pubDate><atom:updated>2026-07-30T10:52:28.321Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான் ராணுவம்,pakistan army,சிறுமி கொலை,child murder,ஊர்லவம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/yvv4gdfu/pak.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pakistan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/yvv4gdfu/pak.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாகிஸ்தானின் தென்–மேற்கில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் தனி நாடு கோரி போராட்டங்கள் நடந்து வருகிறது. இதில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக ஆயுத குழுவினர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.</p><p>அவர்களை ஒடுக்க பாகிஸ்தான் ராணுவம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன.</p><p>இந்தநிலையில் பலுசிஸ்தானில் ஒரு அப்பாவி சிறுமியை பாகிஸ்தான் ராணுவத்தினர் சுட்டு கொன்று உள்ளனர். பின்னர் அந்த சிறுமியின் உடலை ஒரு ராணுவ கவச வாகனத்தின் முன்புறத்தில் வைத்தபடி சாலைகளில் ஊர்வலமாக சென்றனர். இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.</p><p>போராட்டம் நடத்தும் மக்களை அச்சுறுத்தும் விதமாக இந்த அட்டூழியத்தை பாகிஸ்தான் ராணுவம் நடத்தியதாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தானிடமிருந்து பலுசிஸ்தான் சுதந்திரம் அடைந்ததாக போராட்ட குழுவினர் அறிவித்த பிறகு இந்தச் சம்பவம் நடந்துள்ளது.</p><p>இதற்கிடையே பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்க்வாவின் ஹங்கு மாவட்டத்தில் உள்ள கசினா பண்டா போலீஸ் சோதனைச்சாவடி மீது ஆயுத குழுவினர் தாக்குதல் நடத்தினர். இதில் அதிகாரி உள்பட 7 போலீசார் பலியானார்கள்.</p><p>இதையடுத்து பாதுகாப்பு படையினர் எதிர்தாக்குதல் நடத்தினர். இதில் 8 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது. இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.</p>]]></content:encoded></item><item><title>உணவு தாமதமானதால் கோபம் - மனைவியின் தலையை வெட்டி மரத்தில் தொங்கவிட்ட கணவர்!</title><link>https://www.maalaimalar.com/news/national/husband-beheads-wife-over-delayed-meal</link><comments>https://www.maalaimalar.com/news/national/husband-beheads-wife-over-delayed-meal#comments</comments><guid isPermaLink="false">ac3419d6-4de9-43be-bc40-914fe711cdff</guid><pubDate>Thu, 30 Jul 2026 10:20:33 +0000</pubDate><atom:updated>2026-07-30T10:20:33.322Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime,பீகார்,Bihar,Murder,கொலை,கிரைம்,போலீஸ்விசாரணை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/g3qr32sv/Bihar-Murder" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bihar Murder ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/g3qr32sv/Bihar-Murder?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/bihar">பீகார்</a> மாநிலம் ஜெஹனாபாத்தை சேர்ந்த குணால் குமார், வயது 25 மனைவி அன்ஷூ தேவியை உணவு தாமதமான கோபத்தில் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>என்ன நடந்தது?</h2><p>குணால் குமார் வேலைக்கு செல்லாமல் எப்போதும் மது போதையில் சுற்றி வந்தார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற் பட்டது.</p><p>இந்த நிலையில் நேற்று குணால் குமாரின் குடும்பத் தினர் விவசாய நிலத்திற்கு வேலைக்கு சென்றனர். அவரது மனைவி மட்டும் வீட்டில் இருந்தார். அவர் குடும்பத்தினருக்காக மதிய உணவு தயார் செய்து கொண்டிருந்தார்.</p><p>அந்த நேரத்தில் வெளியே சென்ற குணால் குமார் நண்பர்களுடன் மது குடித்தார். </p><p>போதை தலைக் கேறியதும் அவருக்கு பசி ஏற்பட்டது. உடனே அவர் வீட்டிற்கு வந்தார். அவரது மனைவி அன்ஷூ தேவியி டம் உடனே சாப்பாடு வேண்டும் என கேட்டார். அவரது மனைவி சமையல் செய்து கொண்டிருக்கிறேன். சிறிது நேரத்தில் தயாராகி விடும் என கூறினார். </p><p>இதனைக் கேட்டதும் குணால் குமாருக்கு ஆத்திரம் ஏற்பட்டது. ஏன் தாமதமாக சமையல் செய்து கொண்டி ருக்கிறாய் என வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். அதற்கு மனைவி சிறிது நேரத்தில் உணவு தயாராகி விடும் என தெரிவித்தார். </p><p>இதனைக் கேட்டதும் குணால் குமாருக்கு மனைவி மீது கடும் ஆத்திரம் ஏற்பட்டது.</p><h2>கோடாரியால் கொடூர கொலை</h2><p>வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து வந்து மனைவியை கீழே தள்ளி சரமாரியாக தாக்கினார். அவரது மனைவி தன்னை எதுவும் செய்து விட வேண் டாம் என கெஞ்சினார். இருப்பினும் கோடாரியால் மனைவியின் கழுத்தில் வெட்டினார். இதில் தலை துண்டித்து 10 அடி தூரத்தில் விழுந்தது. </p><p>வீடு முழுவதும் ரத்த வெள்ளமாக காட்சிய ளித்தது. இறந்த மனைவியின் தலையை ஒரு கயிற்றில் கட்டி வீட்டின் முன்பாக உள்ள மரத்தில் தொங்க விட்டார். எங்கும் தப்பித்து செல்லாமல் மரத்துக்கு அடி யிலேயே அமர்ந்திருந்தார். </p><h2>போலீஸ் நடவடிக்கை</h2><p>இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். </p><p>போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அன்ஷூ தேவியின் தலை யையும் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.<br><br>குணால் குமாரை கைது செய்து போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜி மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-irregularities-case-senthil-balajis-appeal-to-be-heard-in-the-supreme-court-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-irregularities-case-senthil-balajis-appeal-to-be-heard-in-the-supreme-court-tomorrow#comments</comments><guid isPermaLink="false">1c102744-ce1d-48d4-8560-376fd2f3c8c9</guid><pubDate>Thu, 30 Jul 2026 10:17:54 +0000</pubDate><atom:updated>2026-07-30T10:17:54.702Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>senthil balaji,செந்தில் பாலாஜி,சென்னை உயர் நீதிமன்றம்,Madras High Court,Anticipatory bail,முன்ஜாமின் மனு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/frke6b8f/New-Project-2026-07-30T154740.572.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜி மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/frke6b8f/New-Project-2026-07-30T154740.572.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் டாஸ்மாக் செயல்பாடுகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டி, அப்போது மின்சாரம், மதுவிலக்கு மற்றும் கலால்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி உட்பட 7 பேர்மீது லஞ்ச ஒழிப்புத்துறை ஜூலை.28 அன்று வழக்குப்பதிவு செய்தது. </p><p>இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி அவசர மனுத்தாக்கல் செய்தார். இம்மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. </p><p>அப்போது வழக்கின் தீவிரத்தன்மையை கருத்தில்கொண்டு, அவரை காவலில் வைத்து விசாரணை செய்வது மிகவும் அவசியம் எனக்கூறி, நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. </p><p>இந்தத் தள்ளுபடி உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் முகுல் ரோஹத்கி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்கக் கோரி முறையிட்டனர்.</p><p>இந்த மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, நாளை வழக்கின் விசாரணையை பட்டியலிட ஒப்புக்கொண்டுள்ளது. உச்ச நீதிமன்றமும் மனுவை தள்ளுபடி செய்தால் செந்தில்பாலாஜி கைதாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் வருகிற 5-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-rain-in-tamil-nadu-until-the-5th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-rain-in-tamil-nadu-until-the-5th#comments</comments><guid isPermaLink="false">6183edef-b964-4e28-9bff-9bc3a9245b18</guid><pubDate>Thu, 30 Jul 2026 10:17:52 +0000</pubDate><atom:updated>2026-07-30T10:17:52.884Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/u5i9mmex/rain005.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மழை]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/u5i9mmex/rain005.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.</aside><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>லேசான மழை</strong></h2><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது. சராசரி கடல் மட்டத்தில் தெற்கு குஜராத்திலிருந்து வடக்கு கேரளா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><p>இன்று நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>நாளை கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>1-ந்தேதி கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்.</p><p>2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>3-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>இதனிடையே இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p>நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><h2><strong>தமிழக கடலோரப்பகுதிகள்</strong></h2><p>இன்று தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>நாளை தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>1-ந்தேதி குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>2 மற்றும் 3-ந்தேதிகளில் தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>இந்தியாவில் ஒற்றை ஆசிரியருடன் இயங்கும் ஒரு லட்சம் பள்ளிகள்- முதலிடத்தில் ஆந்திரா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/andhra-pradesh-tops-list-of-single-teacher-schools-in-india</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/andhra-pradesh-tops-list-of-single-teacher-schools-in-india#comments</comments><guid isPermaLink="false">5c2ebc1f-6903-4c2b-a401-f2173fd52722</guid><pubDate>Thu, 30 Jul 2026 10:06:15 +0000</pubDate><atom:updated>2026-07-30T10:06:15.225Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Andhra Pradesh,Union Ministry,மத்திய அரசு  India,one teacher,ஆந்திரா,ஒற்றை ஆசிரியர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/1g1ex9e5/school.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ School class room]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/1g1ex9e5/school.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்துப் பிரிவுகளையும் சேர்த்து மொத்தம் 1,00,843 பள்ளிகள் ஒரே ஒரு ஆசிரியருடன் மட்டுமே இயங்கி வருகின்றன என்று மத்திய அரசு வெளியிட்ட தரவுகள் வெளிப்படுத்தி உள்ளன.</p><h2>மாணவர்-ஆசிரியர் விகிதம்</h2><p>தேசிய கல்விக்கொள்கையின்படி மாணவர்-ஆசிரியர் விகிதம் தேசிய அளவில் வரம்பிற்குள் இருந்தபோதிலும், ஆசிரியர் நியமனத்தில் கடுமையான உள்ளூர் ஏற்றத்தாழ்வுகள் நிலவுவதை இந்த தரவு சுட்டிக்காட்டுகிறது.</p><p>மத்திய கல்வி அமைச்சகத்தின் கூற்றுப்படி, தேசிய அளவிலான மாணவர்-ஆசிரியர் விகிதம் பின்வருமாறு கட்டுக்குள் உள்ளது, தொடக்க நிலை 19, நடுநிலைப்பள்ளி நிலை 17, <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF" rel="nofollow">உயர்நிலைப்பள்ளி</a> நிலை 15, மேல் நிலைப்பள்ளி நிலை 23 என்ற விகிதாச்சாரப்படி உள்ளது.</p><h2>ஆந்திரா முதலிடம்</h2><p>ஒற்றை ஆசிரியர் பள்ளி கள் அதிகம் உள்ள மாநில ங்களில் ஆந்திரப் பிரதேசத்தில் 16,357 பள்ளிகள் முதலிடத்தில் உள்ளது. இது தேசிய அளவிலான மொத்த எண்ணிக்கையில் 16 சதவீதத்திற்கும் அதிகமான பங்காகும். நாட்டின் ஒட்டுமொத்த ஒற்றை ஆசிரியர் பள்ளிகளில் கிட்டத்தட்ட 65 சதவீதம் பங்கினை 7 மாநிலங்கள் மட்டுமே கொண்டுள்ளன.</p><p>மாநிலங்களில் ஒற்றை ஆசிரியர் பள்ளிகளின் எண்ணிக்கைப்படி ஆந்திரப் பிரதேசத்தில் 16,357, ஜார்க்கண்ட் 9,827, மகாராஷ்டிரா 9,269, கர்நாடகா 8,042, உத்தரப்பிரதேசம் 7,874, ராஜஸ்தான் 7,200, மேற்கு வங்காளம் 6,769 என்ற நிலையிலும், நடுத்தர எண்ணிக்கை உள்ள மாநிலங்களில் தெலுங்கானா 4,793, தமிழ்நாடு 3,957, அசாம் 3,159, </p><p>இமாச்சலப்பிரதேசம் 3,128, உத்தரகாண்ட் 2,655, சத்தீஸ்கர் 2,461 என்ற எண்ணிக்கையிலும், குறைந்த எண்ணிக்கை உள்ள மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின்படி கேரளா 67, நாகாலாந்து 35, சிக்கிம் 31, லடாக் 28, டெல்லி 7, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் 1 என்ற எண்ணிக்கையிலும் பள்ளிகள் உள்ளன.</p><h2>காலிப்பணியிடங்கள்</h2><p>மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி இந்த புள்ளி விவரங்களை வழங்கி பதிலளித்தார். <a href="https://www.maalaimalar.com/news/national/kerala-to-ban-religion-names-for-new-govt-schools-colleges-810941" rel="nofollow">அரசுப் பள்ளி</a>களுக்கான தரவு கோரப்பட்டிருந்தாலும், இந்த இணைப்பில் அனைத்து வகை நிர்வாகங்களின் (அரசு, உதவிபெறும், தனியார்) கீழ் இயங்கும் பள்ளிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.</p><p>வெளிப்படையான, தகுதியின் அடிப்படையிலான நியமனங்கள் மூலம் ஆசிரியர் காலியிடங்களை நிரப்பவும், எதிர்கால ஆசிரியர் தேவையை முன்கூட்டியே கணிக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் மாநிலங்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>9,999 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு ஆகஸ்ட் 2-வது வாரத்தில் கலந்தாய்வு-தரவரிசை பட்டியல் அடுத்த வாரம் வெளியாகிறது!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/9999-mbbs-seats-counselling-in-second-week-of-august</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/9999-mbbs-seats-counselling-in-second-week-of-august#comments</comments><guid isPermaLink="false">4fd92567-3f4c-4cdb-b262-4bdc9be77b87</guid><pubDate>Thu, 30 Jul 2026 09:53:59 +0000</pubDate><atom:updated>2026-07-30T09:53:59.581Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,medical colleges,மருத்துவக் கல்லூரிகள்,MBBS Counselling,தமிழ்நாடு,எம்பிபிஎஸ் கலந்தாய்வு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/5wnvux05/mbbs.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MBBS Counselling]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/5wnvux05/mbbs.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை கே.கே. நகர் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.</p><h2><strong>கூடுதலாக 50 இடங்கள்:</strong></h2><p>அரசு மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் மொத்தம் 5 ஆயிரத்து 349 மருத்துவ இடங்கள் உள்ளன. தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 4,650 உள்ளன. மொத்த 9,999 எம்.பி.பி.எஸ்.இடங்கள் உள்ளன. இந்த ஆண்டு திருப்பூர், திருவள்ளூர், நாமக்கல் ஆகிய 3 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் கூடுதலாக தலா 50 இடங்கள் கிடைத்து உள்ளன.</p><p>இவற்றையும் சேர்த்து இந்த மொத்த இடங்கள் கணக்கிடப்பட்டு உள்ளது. மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு 72 ஆயிரம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.</p><h2><strong>எண்ணிக்கை உயர வாய்ப்பு:</strong></h2><p>தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டுக்கு கீழ்  இயங்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் தற்போது  உள்ள மொத்த எம்.பி.பி.எஸ். இடங்கள் 9,999 ஆகும். கவுன்சிலிங் தொடங்குவதற்கு முன்பு இந்த எண்ணிக்கையில் மாற்றம் வரக்கூடும். ஒரு தனியார் மருத்துவக் கல்லூரிக்கு புதிதாக அனுமதி கிடைக்க வாய்ப்பு உள்ளது. அவை அகில இந்திய மருத்துவ ஆணையத்தின் அனுமதி பெற்று   வரும் பட்சத்தில் இந்த எண்ணிக்கை உயர வாய்ப்பு உள்ளது. </p><h2><strong>முதல்கட்ட மருத்துவ கலந்தாய்வு:</strong></h2><p>இந்தநிலையில் தற்போதைய எம்.பி.பி.எஸ். இடங்களின் அடிப்படையில்  தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.  அடுத்த வாரம் தரவரிசை பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. ஆகஸ்ட் 2-வது வாரத்தின் தொடக்கத்தில் முதல் கட்ட மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் என்று மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் லோகநாயகி தெரிவித்துள்ளார். </p><p>இந்திய மருத்துவ ஆணையத்தில் இருந்து அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு அட்டவணை இன்று மாலை அல்லது நாளைக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அதனைத் தொடர்ந்து அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு தொடங்கும். மாநில பொது கலந்தாய்வுக்கான பட்டியலும் தயாரிக்கப்பட்டு விரைவில் தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>தைபே ஓபன் பேட்மிண்டன்: இந்தியாவின் கிரண் ஜார்ஜ் காலிறுதிக்கு முன்னேற்றம்</title><link>https://www.maalaimalar.com/sports/kiran-george-enter-qf-round-in-taipae-open-badminton</link><comments>https://www.maalaimalar.com/sports/kiran-george-enter-qf-round-in-taipae-open-badminton#comments</comments><guid isPermaLink="false">6a7b5167-ffb9-49ae-8a5c-5382616ab026</guid><pubDate>Thu, 30 Jul 2026 09:51:30 +0000</pubDate><atom:updated>2026-07-30T09:51:30.357Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Kiran George,கிரண் ஜார்ஜ்,taipae open badminton,தைபே ஓபன் பேட்மிண்டன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/gqt9tou6/kiran.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ kiran george]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/gqt9tou6/kiran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தைபே ஓபன் பேட்மிண்டன் தொடர் தைவானின் தைபேயில் நடைபெற்று வருகிறது.</p><p>இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ், சக நாட்டு வீரரான தருண் மன்னேபள்ளி உடன் மோதினார்.</p><p>இதில் சிறப்பாக ஆடிய கிரண் ஜார்ஜ் 21-15, 21-16 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.</p><p>மற்றொரு போட்டியில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் 9-21, 19-21 என்ற செட் கணக்கில் ஹாங்காங்கின் ஜேசன் குணவானிடம் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.</p>]]></content:encoded></item><item><title>‘ஓரளவு சேதம் ஏற்படலாம்’ - எத்தனால் பெட்ரோல் குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில்!</title><link>https://www.maalaimalar.com/news/national/some-degree-of-damage-is-possible-central-governments-reply-in-parliament-regarding-ethanol-blended-petrol</link><comments>https://www.maalaimalar.com/news/national/some-degree-of-damage-is-possible-central-governments-reply-in-parliament-regarding-ethanol-blended-petrol#comments</comments><guid isPermaLink="false">80bcb85c-14ed-4f50-a377-bcc22263ca33</guid><pubDate>Thu, 30 Jul 2026 09:49:22 +0000</pubDate><atom:updated>2026-07-30T09:49:22.323Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>minister nitin gadkari,எத்தனால் பெட்ரோல்,E20 fuel,அமைச்சர் நிதின் கட்கரி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/0ynepucg/New-Project-2026-07-30T151907.453.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘ஓரளவு சேதம் ஏற்படலாம்’ - எத்தனால் பெட்ரோல் குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/0ynepucg/New-Project-2026-07-30T151907.453.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த சில மாதங்களாக எத்தனால் பெட்ரோல் விவகாரம் இந்தியாவில் பெரும் விவாதத்திற்கு வழிவகுத்துள்ள நிலையில், எத்தனால் கலந்த பெட்ரோலால் வாகனங்களின் இன்ஜின் சேதம் அடைவதாகவோ அல்லது மைலேஜ் குறைவதாகவோ எந்தவொரு அறிவியல் ஆய்வும் உறுதிப்படுத்தவில்லை என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.</p><p>இருப்பினும், ஏப்ரல் 2023-க்கு முன் தயாரிக்கப்பட்ட, அதாவது 2005 ஏப்ரல் 1 முதல் அறிமுகப்படுத்தப்பட்டு, 2016-க்கு முன்னர் தயாரிக்கப்பட்ட பழைய BS-III மற்றும் E10 இன்ஜின்கள் கொண்ட வாகனங்களில் மட்டும் சில ரப்பர் பாகங்கள் மற்றும் கேஸ்கெட்டுகளை மாற்ற வேண்டியிருக்கலாம். அது ஒரு சாதாரண வேலையே என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். </p><p>எத்தனால் பெட்ரோல் தொடர்பான கேள்விக்கு மாநிலங்களவையில் பதிலளித்த சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, எத்தனால் பெட்ரோலால் மைலேஜ் குறையாது என்றும், வாகனத்தின் மைலேஜ் என்பது எரிபொருளைத் தாண்டி பல்வேறு காரணிகளால் அடிவாங்குகிறது என்றும் விளக்கம் அளித்துள்ளார். </p><h2>எத்தனால் பெட்ரோல் மீதான விவாதம் என்ன?</h2><p>எத்தனாலாற்றலின் அடர்த்தி பெட்ரோலை விடக் குறைவு என்பதால், வாகனங்களின் மைலேஜ் 3% முதல் 10% வரை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மார்ச் 2023-க்கு முன் தயாரிக்கப்பட்ட பழைய வாகனங்களின் என்ஜின்கள் மற்றும் எரிபொருள் குழாய்கள் எத்தனாலின் ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மையால் துருப்பிடிக்கவோ அல்லது சேதமடையவோ வாய்ப்புள்ளது.</p><p>ஒரு லிட்டர் எத்தனால் தயாரிக்க அதிக அளவு தண்ணீர் தேவைப்படுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என்ற கவலையும் எழுந்துள்ளது. அரசு சொல்வதுபோல கரும்பு, உடைந்த அரிசி போன்ற பொருட்களில் இருந்து எத்தனால் தயாரிக்கப்பட்டாலும் அதனை விளைவிக்கவும் தண்ணீர் என்பது மிக அவசியம். </p><p>ஏற்கனவே இந்தியாவில் கோடைக்காலங்களில் குடிநீருக்கே அல்லல்படும் நிலை இருக்கும்போது, இதன் பயன்பாடும் தண்ணீர் பற்றாக்குறையை அதிகப்படுத்தும்.</p><p>எதிர்க்கட்சிகள், நுகர்வோர் என பலதரப்பட்ட மக்களின் வாதங்கள் மேற்குறிப்பிட்டவை. ஆனால் மத்திய அரசு அனைத்திற்கு விளக்கம் அளித்து இந்த திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கவே முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. </p>]]></content:encoded></item><item><title>இரட்டை குழந்தைகளுக்கு தந்தையான கவின்- ரசிகர்கள் வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-kavin-and-monica-have-been-blessed-with-twins</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-kavin-and-monica-have-been-blessed-with-twins#comments</comments><guid isPermaLink="false">e1fec0e7-9669-4cb3-b9a3-cfbfd09afbb1</guid><pubDate>Thu, 30 Jul 2026 09:41:44 +0000</pubDate><atom:updated>2026-07-30T09:41:44.373Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>kavin,கவின்,HI,ஹாய்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/zo8b1shn/kavin.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மனைவி மோனிகாவுடன் நடிகர் கவின்]]></media:title><media:description type="html"><![CDATA[ மனைவி மோனிகாவுடன் நடிகர் கவின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/zo8b1shn/kavin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>எங்கள் வாழ்க்கையை இரட்டிப்பு மகிழ்ச்சியால் நிறைத்த இறைவனுக்கு நன்றி. எங்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.</aside><h2><strong>ஹாய்</strong></h2><p>தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் முன்னணி இடத்தில் இருப்பவர் நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/கவின்">கவின்</a>. இவர் விஜய் டி.வியில் புகழ்பெற்ற ‘கனா காணும் காலங்கள்’ தொடர் மூலம் சின்னத்திரை பயணத்தை தொடங்கினார். பின் 'சரவணன் மீனாட்சி' தொடரில் வேட்டையனாக வந்து மக்கள் அனைவரையும் கவர்ந்தார். இதனால் கவினுக்கு ரசிகர்கள் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது.</p><p>பின்னர், கவின் 'நட்புனா என்ன தெரியுமா'படத்தில் கதாநாயகனாக வெள்ளித்திரைக்கு அறிமுகமாகினார். அதன்பின், கவின் பிக்பாஸ் மூன்றாம் சீசனில் பங்கேற்றார். பிக்பாஸ் கவினுக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்தது. பிக்பாஸிற்கு பிறகு 'லிஃப்ட்' என்ற படத்தில் நடித்தார். ஓடிடி- யில் மட்டும் வெளியான ‘லிஃப்ட்’ திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.</p><p>இதனை தொடர்ந்து ‘ஸ்டார்’, ‘கிஷ்’, ‘டாடா’, ‘ப்ளடி பக்கர்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின் நடித்துள்ள படம் ‘ஹாய்’. இப்படத்தில் நயன்தாரா மற்றும் சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் ஆகஸ்ட் 14-ந்தேதி வெளியாக உள்ளது. </p><p>‘ஹாய்’ படத்தை தொடர்ந்து தற்போது புதிய படத்தில் கமிட்டாகி உள்ளார் நடிகர் கவின். ராம் சங்கையா இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் கவின் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில், அவருக்கு ஜோடியாக 'லப்பர் பந்து', 'தக் லைஃப்' மற்றும் 'பரிமளா அன் கோ' பட புகழ் நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடிக்கவுள்ளார்.  பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படம், கிராமத்துப் பின்னணியைக் கொண்ட ஒரு உணர்வுப்பூர்வமான கதைக் களமாக அமையவுள்ளது.</p><p>இந்த நிலையில், நடிகர் கவின்- மோனிகா தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக மகிழ்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக நடிகர் கவின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><p>எங்கள் வாழ்க்கையை இரட்டிப்பு மகிழ்ச்சியால் நிறைத்த இறைவனுக்கு நன்றி. எங்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். இதை அடுத்து கவினுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். </p><p>நடிகர் கவின் தனது நீண்ட நாள் தோழியான மோனிகாவை 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொண்டார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">எங்கள் வாழ்க்கையை இரட்டிப்பு மகிழ்ச்சியால் நிறைத்த இறைவனுக்கு நன்றி. <br>எங்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளனர். :) ♥️</p>&mdash; Kavin (@Kavin_m_0431) <a href="https://x.com/Kavin_m_0431/status/2082745378924040576?ref_src=twsrc%5Etfw">July 30, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>பிரேசில் உடனான பயணம் முடிந்தது: ஓய்வு அறிவித்த நெய்மர்</title><link>https://www.maalaimalar.com/sports/football/neymar-retires-from-the-brazil-national-team</link><comments>https://www.maalaimalar.com/sports/football/neymar-retires-from-the-brazil-national-team#comments</comments><guid isPermaLink="false">087d57de-2303-451d-a937-d3e1bb58a904</guid><pubDate>Thu, 30 Jul 2026 09:33:10 +0000</pubDate><atom:updated>2026-07-30T09:33:10.406Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Brazil,கால்பந்து,FootBall,Neymar,நெய்மர்,பிரேசில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/8pjj4wun/neymar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ neymar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/8pjj4wun/neymar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கால்பந்து (Football)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D">நெய்மர்</a> (34), சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று முறைப்படி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.</p><h2>16 ஆண்டுகால பயணம்</h2><p>சுமார் 16 ஆண்டுகால சர்வதேச கால்பந்து பயணத்துக்கு நெய்மர் முற்றுப்புள்ளி வைத்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.</p><p>சான்டோஸ் கிளப் அணியின் போட்டிக்குப் பிறகு நெய்மர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p><p>தேசிய அணியுடனான எனது பயணம் முடிந்துவிட்டது. நான் சரித்திரம் படைத்தேன், மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். அணிக்காக என் ரத்தத்தையும், வாழ்க்கையையும் அர்ப்பணித்தேன். இனி பிரேசில் அணிக்காக விளையாட விரும்பவில்லை என தெரிவித்தார்.</p><h2>வெளியேறிய பிரேசில்</h2><p>நடப்பு உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பிரேசில் அணி ரவுண்டு 16 சுற்றிலேயே வெளியேறியது. உலகக் கோப்பை தோல்வி எதிரொலியால் நெய்மர் இந்த ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.</p><p>பிரேசில் அணியின் முக்கிய நட்சத்திரமாக நீண்ட காலம் விளங்கிய நெய்மரின் ஓய்வு அறிவிப்பு கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியது.<br></p><h2>விடைபெறுகிறார் சாதனை நாயகன்</h2><p>கடந்த 2010-ம் ஆண்டு பிரேசில் அணியில் அறிமுகமான நெய்மர், தனது 16 ஆண்டுகால சர்வதேச கால்பந்து வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைத்துள்ளார்.</p><p>பிரேசில் அணிக்காக 129 போட்டிகளில் விளையாடி 80 கோல்கள் அடித்து, அந்நாட்டின் அதிக கோல் அடித்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.</p><p>2013-ல் ஃபிஃபா கான்ஃபெடரேஷன்ஸ் கோப்பையையும், 2016 ரியோ ஒலிம்பிக்கில் பிரேசில் அணிக்கு கேப்டனாக இருந்து தங்கப் பதக்கத்தையும் வென்று தந்துள்ளார்.</p><p>காயங்கள் மற்றும் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பு எனப் பல சவால்களைச் சந்தித்த போதிலும், ஒரு தலைமுறையின் மிகச்சிறந்த கால்பந்து முகமாகத் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 100-க்கும் மேற்பட்ட புதிய முதல்வர்கள் நியமனம்: உயர்கல்வித் துறை நடவடிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-government-appoints-over-100-new-principals-in-arts-and-science-colleges</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-government-appoints-over-100-new-principals-in-arts-and-science-colleges#comments</comments><guid isPermaLink="false">ab734995-0679-4c52-ab9e-ff48c05b7e61</guid><pubDate>Thu, 30 Jul 2026 09:24:50 +0000</pubDate><atom:updated>2026-07-30T09:24:50.961Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,government arts colleges,உயர்கல்வித் துறை,Principals appointed,தமிழக அரசு கலை கல்லுரி,முதல்வர்கள் நியமனம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/igpg7qnl/dd.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Principals appointed]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/igpg7qnl/dd.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நீண்ட நாட்களாக காலியாக உள்ள கல்லூரி முதல்வர் பணியிடங்களை நிரப்பும் வகையில் 100-க்கும் மேற்பட்ட புதிய முதல்வர்களை நியமிப்பதற்கான பட்டியலை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.</p><h2><strong>நீண்ட நாள் கோரிக்கை:</strong></h2><p>தமிழ்நாட்டில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் 7 அரசு கல்வியல் கல்லூரிகளில் சுமார் 125-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் நிரந்தர முதல்வர்கள் இன்றி பொறுப்பு முதல்வர்கள் மூலமே இயங்கி வந்தன. இதனால் கல்வி நிர்வாகம், மாணவர் சேர்க்கை மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த முடிவுகளை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.</p><h2><strong>பணிமூப்பு பட்டியல் பிரச்சனை தீர்வு:</strong></h2><p>பேராசிரியர்களின் பணிமூப்பு சார்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் விதித்திருந்த தடைகள் விலக்கப்பட்டதைத் தொடர்ந்து, இப்பதவி உயர்வுக்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.</p><h2><strong>அரசாணை வெளியீடு:</strong></h2><p>இரண்டாம் நிலை கல்லூரிகளுக்கு முதல்வர்களாகப் பதவி உயர்வு வழங்குவதற்காக 129 இணைப் பேராசிரியர்கள் கொண்ட தகுதிப் பட்டியலுக்கு  உயர்கல்வித் துறை ஒப்புதல் அளித்து அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது.</p><h2><strong>கலந்தாய்வு நடைமுறை:</strong></h2><p>தேர்வான இணைப் பேராசிரியர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டு, இடங்களுக்கான கலந்தாய்வு விரைவில் நடத்தப்பட உள்ளது.</p><h2><strong>ஆகஸ்ட் இறுதிக்குள் பணி நியமனம்:</strong></h2><p>ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அனைத்துக் கல்லூரிகளிலும் புதிய நிரந்தர முதல்வர்கள் பணியில் பொறுப்பேற்பார்கள் என்று கல்லூரி கல்வி ஆணையரகம் மற்றும் உயர்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த நியமனங்களின் மூலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் நிர்வாகச் சிக்கல்கள் தீர்ந்து, கல்வித் தரம் மேலும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை வேளச்சேரியில் ரூ.125 கோடியில் சர்வதேச பல்கலைக்கழக வளாகம்!- முதலமைச்சர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-oversees-mou-for-rs-125-crore-international-university-in-velachery</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-oversees-mou-for-rs-125-crore-international-university-in-velachery#comments</comments><guid isPermaLink="false">819049a6-c8c0-4e76-a683-504d677c614b</guid><pubDate>Thu, 30 Jul 2026 09:19:59 +0000</pubDate><atom:updated>2026-07-30T09:19:59.440Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Memorandum of Understanding,முதலமைச்சர் விஜய்,tn cm vijay,புரிந்துணர்வு ஒப்பந்தம்,சர்வதேச பல்கலைக்கழக வளாகம்,international university campus</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/64s4yf2s/Vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/64s4yf2s/Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் தொழில் வழிகாட்டி நிறுவனத்தில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது.</p><p>இதில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் இன்று காலை அங்கு நேரில் சென்றிருந்தார். அவரை தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, தலைமைச் செயலாளர் சாய்குமார் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.</p><p>அதன் பிறகு நிகழ்ச்சிகளில் 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது வழிகாட்டி நிறுவனத்துக்கும், முன்னணி உலகளாவிய நிறுவனங்களுக்கும் இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.</p><p>இந்த உலகளாவிய திறன் மையங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், உற்பத்தித் துறை மற்றும் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF" rel="nofollow">உயர்கல்வி</a> உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய இந்த முதலீடுகள் வாயிலாக, தமிழ்நாட்டில் 2,920-க்கும் மேற்பட்டோருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><h2>ஒப்பந்தங்கள்</h2><p>சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சப் நிறுவனம், தனது உலகளாவிய திறன் மையம் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த நார்டெக்ஸ் நிறுவனம், தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் ஆகியவற்றை  தமிழ்நாட்டில் முதன்முறையாக நிறுவ முன்வந்துள்ளன.</p><p>சப் நிறுவனம் அமைக்கவுள்ள மையத்தின் மூலம் 220 பேருக்கும், நார்டெக்ஸ் நிறுவனம் அமைக்கவுள்ள மையத்தின் மூலம் 1,000 பேருக்கும் வேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு நிறுவனங்களின் முதலீடுகள் மூலம் மொத்தம் 1,220 உயர்தர ஊதியம் வழங்கும் வேலை வாய்ப்பு கள் உருவாக்கப்பட உள்ளன.</p><p>இந்த முதலீடுகள், உயர்மதிப்புடைய உலக ளாவிய திறன் மையங்கள் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கான முக்கிய சர்வதேச மையமாக சென்னை நகரின் நிலையை மேலும் வலுப்படுத்தும். </p><p>புத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்ட தொழில் வளர்ச்சியை ஊக்குவித்தல், அறிவுசார் திறன் சார்ந்த முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் திறன்மிக்க மனிதவளத்திற்கு உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-metro-phase-2-works-cm-vijay-orders-speedy-completion" rel="nofollow">முதலமைச்சர் விஜய்</a> தலைமையிலான அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்றாற்போல், இம்முதலீடுகள் அமைந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>மேலும், உயர்கல்வித் துறையில், ஆஸ்திரேலி யாவின் முன்னணி ஆராய்ச்சி சார்ந்த பல் கலைக்கழகங்களில் ஒன்றான மேற்கு ஆஸ்தி ரேலியா பல்கலைக்கழகம், இந்தியாவில் தனது வளாகத்தை சென்னை நகரில் நிறுவ உள்ளது. இது தமிழ்நாட்டில் அமையவுள்ள முதல் சர்வதேசப் பல்ல கலைக்கழக வளாகமாகும்.  1911-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம், உலகப்பல்கலைக்கழக தரவரிசை 2026-ல் 77-வது இடத்தைப் பிடித்துள்ளது. </p><p>சென்னை வேளச்சேரியில் சுமார் ரூ.125 கோடி முதலீட்டில் இப்பல்கலைக்கழகம் உருவாக்கப்பட உள்ளது. இதன்மூலம் 200-க்கும் மேற்பட்டோருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>தொழில்துறை அமைச்சர்  கீர்த்தனா கடந்த ஜூன் மாதம் தென் கொரியாவிற்கு மேற்கொண்ட பயணத்தின் தொடர்ச்சியாக, அந்நாட்டின் முன்னணி வாகன உதிரிபாக உற்பத்தி நிறுவனமான மோட்டிவ்லிங்க், காஞ்சிபுரம் மாவட்டம் சிப்காட் பிள்ளை ப்பாக்கம் தொழிற்பூங்காவில் ரூ.300 கோடி முதலீட்டில் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன்மூலம் 1,500 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்.</p><p>இந்த முதலீடுகள், தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதோடு, உலகளாவிய திறன் மையங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உயர்கல்வி மற்றும் மேம்பட்ட உற்பத்தித் துறைகளுக்கான உலகளாவிய மையமாக தமிழ்நாட்டை நிலைநிறுத்துவதில் முக்கியப் பங்காற்றும் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.</p><p>மேலும், இந்நிறுவனங்களின் முதலீடுகளை எளிதாக்குவதற்கும், அவற்றின் செயல்பாடுகள் தமிழ்நாட்டில் வெற்றிகரமாக அமைய தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து வழங்கும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உறுதியளித்தார்.</p>]]></content:encoded></item><item><title>காவிக்கு மாற்றப்பட்ட ஜெர்சி - ஹாக்கி இந்தியா விளக்கம்!</title><link>https://www.maalaimalar.com/sports/jersey-changed-to-saffron-hockey-india-explains</link><comments>https://www.maalaimalar.com/sports/jersey-changed-to-saffron-hockey-india-explains#comments</comments><guid isPermaLink="false">447a0228-be51-4a2d-9c58-d2d7d7868edc</guid><pubDate>Thu, 30 Jul 2026 09:13:34 +0000</pubDate><atom:updated>2026-07-30T09:13:34.666Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜெர்சி,Hockey India,ஹாக்கி இந்தியா,Saffron,Jersey,காவி,நீலம்,blue</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/xlbwgcim/New-Project-2026-07-30T142422.517.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காவிக்கு மாற்றப்பட்ட ஜெர்சி - ஹாக்கி இந்தியா விளக்கம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/xlbwgcim/New-Project-2026-07-30T142422.517.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய ஹாக்கி அணியின் ஜெர்சி நீல நிறத்தில் இருந்து, காவி நிறத்திற்கு மாற்றப்பட்டதற்கான காரணத்தை ஹாக்கி இந்தியா விளக்கியுள்ளது. </p><p>தற்போது ஹாக்கி மைதானங்களும் (நீல நிறம்), வீரர்களின் ஜெர்சியும் ஒரேநிறத்தில் இருப்பதால், பந்தை பாஸ் செய்வது, வீரர்களை அடையாளம் காண்பது சிரமமாக இருப்பதாக பயிற்சியாளர்களும், வீரர்களும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. </p><p>இதனையொட்டியே, மாற்று நிறங்களாக மஞ்சள் அல்லது காவி நிறத்தைப் பயன்படுத்தலாம் எனப் பரிந்துரைக்கப்பட்டதாகவும், அதில் காவி இந்தியாவின் தேசிய கொடியில் இருப்பதால், தைரியம், தியாகம் மற்றும் தேசியப் பெருமிதத்தை அடையாளப்படுத்துவதால் அந்த நிறம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஹாக்கி இந்தியா விளக்கம் அளித்துள்ளது. </p><h2>நிறம் மாற்றம்</h2><p>2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 30 வரை பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெறவுள்ள FIH உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் பங்கேற்கும் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகளுக்கு இந்த புதிய காவி நிற ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.</p><p>இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக இதற்கு பெரும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதுமையிலும் ஓயாத ஓட்டம்.. 80 வயதில் 16 மணி நேரம் டாக்ஸி ஓட்டும் முதியவர்!</title><link>https://www.maalaimalar.com/news/national/80-year-old-kolkata-taxi-driver-works-16-hours</link><comments>https://www.maalaimalar.com/news/national/80-year-old-kolkata-taxi-driver-works-16-hours#comments</comments><guid isPermaLink="false">e56adff3-e993-470d-a512-c0f0ea614633</guid><pubDate>Thu, 30 Jul 2026 08:52:01 +0000</pubDate><atom:updated>2026-07-30T08:52:01.299Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கொல்கத்தா,Kolkata,TaxiDriver,RabindranathSarkar,டாக்ஸிடிரைவர்,SupportSarkar,ரவீந்திரநாத்சர்க்கார்,SeniorCitizens,ElderMan</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/r43t1wuo/Kolkata-TaxiDriver" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kolkata TaxiDriver]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/r43t1wuo/Kolkata-TaxiDriver?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கொல்கத்தாவை சேர்ந்த 80 வயது டாக்சி டிரைவர் சைதாலி போஸ் என்ற பயனர் 80 வயதான டிரைவர் ரவீந்திரநாத் சர்க்கார் என்ற டிரைவரின் வாழ்க்கையை ஆவணப்படுத்தி உள்ளார். </p><p>தினமும் காலை 6 மணிக்கு, ரவீந்திரநாத் சர்க்கார் வாடகை டாக்சியில் கொல்கத்தா வீதிகளில் பயணிக்க தொடங்குகிறார்.</p><h2><strong>வாழ்வாதாரத்திற்காகத் தொடரும் போராட்டம்:</strong></h2><p>கொல்கத்தாவைச் சேர்ந்த 80 வயது டாக்ஸி ஓட்டுநர் ரவீந்திரநாத் சர்க்காரின் கடினமான வாழ்க்கை நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. </p><p>சைதாலி போஸ் என்ற பயனர், இந்த மூத்த ஓட்டுநரின் அன்றாட வாழ்க்கையையும், அவரது 77 வயது மனைவியுடன் வசிக்கும் எளிய சூழலையும் நேரில் கண்டு பகிர்ந்துள்ளார்.</p><h2><strong>அதிகாலை முதல் நள்ளிரவு வரை ஓயாத உழைப்பு:</strong></h2><p>தினமும் காலை 6 மணிக்குத் தனது வாடகை டாக்ஸியில் கொல்கத்தா வீதிகளில் பயணிக்கத் தொடங்கும் ரவீந்திரநாத், சுமார் 16 மணி நேரக் கடுமையான வேலைக்குப் பிறகு இரவு 10 அல்லது 11 மணி அளவிலேயே தனது வீட்டிற்குத் திரும்புகிறார்.</p><h2><strong>தினசரிச் செலவுகள்:</strong></h2><p>கடந்த 52 ஆண்டுகளாகத் தொடர்ந்து டாக்ஸி ஓட்டி வரும் இவர், சொந்த வாகனம் இல்லாததால் தினசரி ஒரு குறிப்பிட்ட தொகையை வாகன வாடகையாகச் செலுத்த வேண்டும். </p><p>அதோடு எரிபொருள் செலவுகளையும் அவரே ஏற்பதால், இச்செலவுகளுக்குப் பின் கையில் மிகக் குறைந்த பணமே எஞ்சுகிறது.</p><h2><strong>மருந்து வாங்கக்கூடப் பணமின்றித் தவிப்பு:</strong></h2><p>வயதான காரணமாகக் கைகள் நடுங்கினாலும், மூச்சுவிடச் சிரமப்பட்டாலும் பசியற்ற வாழ்க்கைக்காக மிகுந்த சிரமத்துடன் அவர் வாகனம் ஓட்டி வருகிறார். </p><p>கையில் போதியப் பணம் இல்லாததால், தனக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துகளைக்கூட அவரால் வாங்க முடிவதில்லை.</p><h2><strong>"உங்களுக்குச் சரியெனத் தோன்றும் தொகையைக் கொடுங்கள்":</strong></h2><p>கட்டணத்தைப் பொறுத்தவரை, இவர் பயணிகளிடம் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கேட்டு வற்புறுத்துவதில்லை. மாறாக, அவர்களிடம் மிகுந்த எளிமையுடன், "உங்களுக்குச் சரியெனத் தோன்றும் தொகையைக் கொடுங்கள்" என்று கூறி நெகிழ வைக்கிறார்.</p><h2><strong>முதிய தம்பதிக்குக் குவியும் நெட்டிசன்களின் ஆதரவு:</strong></h2><p>இந்த முதிய தம்பதியின் வறுமை நிலையை அறிந்த பலர், அவர்களுக்கு உதவ முன்வருமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். </p><p>இதைப் பார்த்த சமூக வலைத்தளவாசிகள் பலர், அந்த முதிய தம்பதிக்குத் தங்களால் இயன்ற நிதி உதவிகளையும், ஆதரவையும் வழங்கி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>இனி ஆன்லைனில்.. அனைத்து கோவில்களுக்கும் பொதுவான டெண்டர் முறை- அமைச்சர் ரமேஷ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/common-tender-system-for-all-temples-through-online-minister-ramesh</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/common-tender-system-for-all-temples-through-online-minister-ramesh#comments</comments><guid isPermaLink="false">679f7206-3f75-4c3f-bb2a-56e59b3cb992</guid><pubDate>Thu, 30 Jul 2026 08:35:41 +0000</pubDate><atom:updated>2026-07-30T08:35:41.394Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அறநிலையத்துறை,tender,Hindu Religious Charities Department,அமைச்சர் ரமேஷ்,Minister Ramesh,டெண்டர் முறை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/s9esz1zo/Ramesh.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Ramesh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/s9esz1zo/Ramesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைச்சர் ரமேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><h2>பொதுவான டெண்டர்</h2><p>அனைத்து கோவில்களுக்கும் டெண்டர் வழிகாட்டுமுறையில் சில மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறேன். அதன்படி பார்க்கிங், மொட்டை போடுதல், கடைகள் அமைப்பது உள்ளிட்டவற்றிற்கு பொதுவான <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D" rel="nofollow">டெண்டர்</a> முறை கொண்டு வரப்பட்டு உள்ளது.</p><p>அனைத்து கோவில்களுக்கும் உறுதிமொழி படிவங்கள் டெண்டருக்கான விண்ணப்பங்கள் எல்லாவற்றுக்கும் முறையான ஒரே மாதிரியான படிவங்களை கொண்டு வந்துள்ளோம். </p><p>தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அதை கொண்டு வந்துள்ளோம். <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/hindu-religious-charitable-endowments-department-extension-of-deadline-to-apply-for-trustee-posts-in-214-temples" rel="nofollow">இந்து சமய அறநிலையத்துறை</a>யில் இருக்கக் கூடிய அனைத்து டெண்டர்களும் இனிமேல் ஆன்லைனில் நடைபெறும்.</p><p>ஆன்-லைனில் டெண்டருக்கான ஒப்பந்தப் புள்ளி  கோருதலும் நடக்கும், அதற்கான ஏலமும் ஆன்-லைனில் நடைபெறும். </p><p>இதற்கு முன்பு பல கோவில்களில் இ.எம்.டி. என்கிற வைப்புத்தொகை கோவிலுக்கு கோவில் சில இடங்களில் மாறுபட்டு இருந்தது. இப்போது தமிழ்நாடு முழுவதும் பொதுவாக கொண்டு வந்துள்ளோம். </p><p>அனைத்து டெண்டர்களுக்கும் ஜி.எஸ்.டி, பான் கட்டாயம். அது இல்லாமல் எந்த டெண்டரையும் அனுமதிக்க மாட்டோம். அதேபோல் ஒருவருக்கே காண்டிராக்ட் கொடுக்காமல் 2-3 பேருக்கு பிரித்து கொடுப்பதற்கான வழிமுறைகளை கொண்டு வந்துள்ளோம். டெண்டரில் உள்ள விதிகளை மீறினால் அபராதம் விதிக்கும் நடைமுறையும் கொண்டு வந்துள்ளோம். </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ராகுல் காந்தி ஒரு வரி கூறினால் கூட்டணியில் இருந்து விலகுகிறோம்- அன்புமணி ராமதாஸ் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-if-rahul-gandhi-makes-a-single-statement-we-will-withdraw-from-the-alliance</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-if-rahul-gandhi-makes-a-single-statement-we-will-withdraw-from-the-alliance#comments</comments><guid isPermaLink="false">11b5ca90-a677-4c62-a0fb-67bf7eac4d9d</guid><pubDate>Thu, 30 Jul 2026 08:35:11 +0000</pubDate><atom:updated>2026-07-30T08:35:11.850Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,மேகதாது அணை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/p9xxte5o/Anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ் ]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/p9xxte5o/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>ராகுல் காந்தி கர்நாடக அரசு மேகதாது அணை கட்டக்கூடாது என்று, ஒரே ஒரு வரி கூறிவிட்டால், நாங்கள் என்.டி.ஏ.வில் இருந்து விலகுகிறோம் என்று அன்புமணி கூறியுள்ளார்.</aside><h2><strong>தமிழ்நாட்டுக்கு பாதகம்</strong></h2><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> இன்று சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் சென்றார். முன்னதாக அவர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-</p><p>முதலமைச்சர் விஜய், கர்நாடகா சென்று, கர்நாடக முதலமைச்சரை சந்தித்து பேசிவிட்டு, மேகதாது அணை கட்டும் பகுதியை பார்வையிட்டால், அது தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய ஒரு பாதகமாக இருக்கும். </p><p>மேகதாது அணையை, தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளவில்லை, அங்கீகரிக்கவில்லை. அவ்வாறு அங்கீகரிக்காத ஒன்றுக்காக, பேச்சுவார்த்தை நடத்துவதில், எந்த அர்த்தமும் கிடையாது. அது சம்பந்தமாக பேச்சுவார்த்தை, மத்திய அரசிடம், பிரதமர் மோடியிடம் நடத்த வேண்டும். </p><h2><strong>தமிழ்நாடு விழக்கூடாது</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/மேகதாது-அணை">மேகதாது அணை</a> கட்டுவதற்கு முன்னதாகவே, தமிழ்நாட்டுக்கு, தண்ணீர் கொடுக்க மறுக்கும் கர்நாடகா, அங்கு அணைக்கட்டி விட்டால், நமக்கு குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்காது. மத்தியில் உள்ள பா.ஜ.க., கர்நாடகத்தின் காங்கிரஸ் கூட்டு சதி செய்கின்றனர். இந்த சதியில், தமிழ்நாடு விழக்கூடாது. </p> <p>கர்நாடகா அணையே கட்டக்கூடாது என்று நாம் கூறிக் கொண்டு இருக்கையில், அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்துவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? முதலமைச்சர் விஜய்யை யார் அவ்வாறு வழி நடத்துகிறார்? என்று தெரியவில்லை. இது தவறான ஒரு போக்கு. இது கண்டிக்கத்தக்கது.</p><h2><strong>தைரியம் இருக்கிறதா?</strong> </h2><p>மத்திய மந்திரி நாடாளுமன்றத்தில், ஒரு பொய்யான தகவலை வெளியிட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு, டெல்லியில் உள்ள தமிழ்நாட்டின் மாநிலங்களவை உறுப்பினர்களிடம் பேசிக் கொண்டு இருக்கிறோம். </p><p>தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், எங்களை டெல்லிக்கு, பிரதமரை சந்திக்க அழைத்து செல்லட்டும். நாங்கள் செல்வதற்கு தயாராக இருக்கிறோம். </p><p>அந்தமான் நிக்கோபார் தீவுகளில், காடுகளை அழித்து, கிரேட் நிக்கோபார் திட்டத்தை அமைக்க கூடாது என்று ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் மேகதாது அணை கட்டும் போது 12,500 ஏக்கர் காடுகள், புலிகள் சரணாலயங்கள் 3, அவைகளை எல்லாம் அழித்து, அணை கட்ட வேண்டிய சூழ்நிலை வரும்.</p><p>எனவே மேகதாது அணையை கட்டக்கூடாது என்று சொல்லுவதற்கு ராகுல் காந்திக்கு தைரியம் இருக்கிறதா? இல்லையேல் மாணிக்கம் தாகூர் ஆவது, அதை கூறுவதற்கு தைரியம் இருக்கிறதா? </p><p>ராகுல் காந்தி கர்நாடக அரசு மேகதாது அணை கட்டக்கூடாது என்று, ஒரே ஒரு வரி கூறிவிட்டால், நாங்கள் என்.டி.ஏ.வில் இருந்து விலகுகிறோம்.</p><p>இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>கத்திப்பாரா மேம்பாலம் To விமான நிலையம் வரை அழகுபடுத்தும் சென்னையின் கேட்-வே திட்டம்: ரூ.10.50 கோடி ஒதுக்கிய மாநகராட்சி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennais-gateway-project-to-beautify-the-stretch-from-kathipara-flyover-to-the-airport</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennais-gateway-project-to-beautify-the-stretch-from-kathipara-flyover-to-the-airport#comments</comments><guid isPermaLink="false">a07e2f0b-aa35-48fb-b382-b77183e4482f</guid><pubDate>Thu, 30 Jul 2026 08:22:13 +0000</pubDate><atom:updated>2026-07-30T08:22:13.709Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Corporation,சென்னை மாநகராட்சி,சென்னை விமான நிலையம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/bpbbaqd8/guindy.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கத்திப்பாரா மேம்பாலம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கத்திப்பாரா மேம்பாலம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/bpbbaqd8/guindy.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>சென்னைக்கு விமானம் மூலம் வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு, நகரத்திற்குள் நுழையும் போதே மறக்க முடியாத மற்றும் வரவேற்கும் விதமான அழகிய அனுபவத்தை வழங்கும் நோக்கில் சென்னை மாநகராட்சி புதிய பொலிவூட்டும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.</aside><h2><strong>‘கேட்-வே ஆப் சென்னை’</strong></h2><p>கத்திப்பாரா மேம்பாலம் முதல் சென்னை சர்வதேச விமான நிலையம் வரையிலான 4.8 கி.மீ தூரப் பகுதியை ரூ.10.50 கோடி மதிப்பீட்டில்  ‘கேட்-வே ஆப் சென்னை’ என்ற பெயரில் நவீன முறையில் அழகுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>இத்திட்டத்திற்கான பணிகளை விரைவாகவும் திறம்படவும் முடிக்கும் வகையில், <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">சென்னை மாநகராட்சி</a> இதை இரண்டு முக்கியப் தொகுப்புகளாகப் பிரித்து உள்ளது.</p><p>முதலாவதாக, விமான நிலையத்திலிருந்து கத்திப்பாரா வரையிலான சாலையின் இருபுறமும் உள்ள நடைபாதைகள், பசுமைப் பகுதிகள் மற்றும் மின் விளக்கு அமைப்புகளை மேம்படுத்துவதற்காகத் தனியாக ரூ.5.65 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.</p><h2><strong>‘வி.ஐ.பி. பூங்கா’</strong></h2><p>2-வதாக விமான நிலையத்தின் வி.ஐ.பி. கேட் அருகே உள்ள சுமார் 1 ஏக்கர் பரப்புடைய ‘வி.ஐ.பி. <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/parks-and-car-parking-facilities-under-flyovers-in-chennai-city">பூங்கா</a>’ மற்றும் அதன் அருகில் உள்ள மாநகராட்சிப் பூங்கா ஆகியவற்றை அதி நவீன வசதிகளுடன் புதுப்பிப்பதற்காக ரூ. 4.92 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>ஐதராபாத் மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் விமான நிலையத்தில் இருந்து நகருக்குள் செல்லும் வழியில் தனித்துவமான வரவேற்புப் பகுதிகள் இருப்பது போல, சென்னைக்குள் நுழையும் ஒவ்வொரு நபரும் எமது ஊரின் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் உணரும் வகையிலான சூழலை உருவாக்குவதே இதன் முதன்மை நோக்கமாகும்.</p><p>இதற்காக தமிழ்நாடு மற்றும் சென்னையின் வரலாற்றுச் சிறப்புகளைப் பிரதிபலிக்கும் தீம் கலைப் படைப்புகள் மற்றும் சின்னங்கள் இங்கு நிறுவப்படவுள்ளன.</p><p>இத்திட்டத்தின் கீழ் பழுதடைந்த சிமெண்ட் நடைபாதைகள், பயன்பாடற்ற தடுப்புகள், காடாக மண்டிக்கிடக்கும் தேவையற்ற செடிகள் மற்றும் உடைந்த கட்டிடப் பகுதிகள் முற்றிலும் அகற்றப்படும்.  </p><p>அதற்குப் பதிலாக அகலமான நடைபாதைகள், பூச்செடிகள், அலங்கார மரங்கள், புல்வெளிகள் மற்றும் தானியங்கி நீர்ப்பாசன வசதிகள் அமைக்கப்பட்டு அப்பகுதி பசுமையாக்கப்படும். மேலும், இரவு நேரங்களில் அழகூட்டும் அலங்கார மின்விளக்குகள், பயணிகள் அமரப் பெஞ்சுகள், தகவல் பலகைகள் மற்றும் சிற்பங்கள் நிறுவப்படும். நங்கநல்லூர் சிக்னல் அருகில் உள்ள பழமையான காவல் சாவடி மற்றும் மின் கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டு, அப்பகுதியில் கைவிடப்பட்ட வாகனங்கள் மற்றும் கழிவுகள் அகற்றப்பட்டு, பழுதடைந்த கழிப்பறைகளும் புனரமைக்கப்படும்.</p><p>இப்பணிகளைத் தொடங்குவதற்கு முன், போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் மின்கம்பிகள் அல்லது குழாய்களை மாற்றியமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். டெண்டர் இறுதி செய்யப்பட்ட பிறகு, விரைவில் பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>3 மாநில இடைத்தேர்தல் விறுவிறுப்பு.. பிரசாந்த் கிஷோர் போட்டியிடும் தொகுதியில் பரபரப்பு </title><link>https://www.maalaimalar.com/news/national/bihar-bypoll-tension-jan-suraaj-leaders-held-in-pankipur-as-prashant-kishor-challenges-bjp-stronghold</link><comments>https://www.maalaimalar.com/news/national/bihar-bypoll-tension-jan-suraaj-leaders-held-in-pankipur-as-prashant-kishor-challenges-bjp-stronghold#comments</comments><guid isPermaLink="false">117936ed-f3e7-4ebc-834f-0802e6fc7b0b</guid><pubDate>Thu, 30 Jul 2026 08:20:23 +0000</pubDate><atom:updated>2026-07-30T08:20:23.328Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பீகார்,Bihar,by election,பிரசாந்த் கிஷோர்,Prashant Kishor,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/hbbqqaly/tn-13.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரசாந்த் கிஷோர் ]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரசாந்த் கிஷோர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/hbbqqaly/tn-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பீகார், குஜராத், மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள 3 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று பதிவாகும் வாக்குகள் ஆகஸ்ட் 3ம் அன்று எண்ணப்படுகின்றன. </p><h2>காலியான தொகுதிகள்  </h2><p>பீகார் மாநிலத்தின் பங்கிப்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தவர் பாஜகவைச் சேர்ந்த நிதின் நபின். இவர் மாநிலங்களவை எம்.பி.யாக சமீபத்தில் பதவியேற்றார். இதனால் அவரது தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.</p><p>மத்திய பிரதேத்தின் தாட்டியா தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த காங்கிரசைச் சேர்ந்த ராஜேந்திர பாரதி தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் அவரது தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.</p><p>குஜராத்தின் மஞ்சள்பூர் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான யோகேஷ்பாய் நரேந்தாஸ் படேல் சமீபத்தில் காலமானார். இதனால் அவரது தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.</p> <h2>இடைத்தேர்தல்</h2><p>இதைத்தொடர்ந்து அந்த தொகுதிகளுக்கு அறிவித்தபடி இன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை முதல் நடைபெற்று வருகிறது.</p><p>இதில் குறிப்பாக பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள பங்கிபூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரும் ஜன் சுராஜ் கட்சித் தலைவருமான பிரசாந்த் கிஷோர் போட்டியிடுகிறார்.</p><p>முன்னதாக அவரை எதிர்த்து பாஜக சார்பில் அபிஷேக் குமார் சின்ஹா என்பவர் போட்டியிட இருந்த நிலையில் அவர் குடும்ப காரணங்களை தெரிவித்து வாபஸ் பெற்றார். அவருக்கு மாற்றாக நீரஜ் குமார் சின்ஹா என்பவரை பாஜக களம் இறக்கியது.</p><h2>கைது</h2><p>இதனிடையே இன்று வாக்குப்பதிவு தொடங்குவதற்கும் உன் நேற்று இரவே ஜன் சுராஜ் கட்சியின் நிர்வாகிகள் 20 பேர் பாட்னா காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.</p><p>கைது செய்யப்பட்டவர்கள் வாக்குபதிவில் சலசலப்பை ஏற்படுத்த முயன்றதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>செய்தி அறிந்ததும் நள்ளிரவிலேயே பிரசாந்த் கிஷோர் தனது ஆதரவாளர்களுடன் காவல் நிலையத்திற்கு நேரடியாகச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.</p><p>இதுகுறித்து பேட்டியளித்த அவர், "எங்கள் கட்சியின் தொண்டர்கள் ஏதேனும் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது முறைப்படி வழக்குப்பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுங்கள்.</p><p>தோல்வி பயத்தால் பீகார் அரசு நடுங்கிக்கொண்டிருக்கிறது. நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட காரணத்தை காவல்துறை உடனடியாக விளக்க வேண்டும். இல்லையெனில் காவல்துறை மீதே கடத்தல் வழக்கு தொடருவோம்" என எச்சரித்தார்.</p> <h2>பீகார் வாக்குப்பதிவு</h2><p>பங்கிபூர் இடைத்தேர்தலில் 422 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணி வரை தொடரும்.</p><p>காலை 11 மணி வரை சுமார் 11.5 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.</p><p>பல ஆண்டுகளாக பாஜக பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று வந்த ஒரு தொகுதியில், கிஷோரின் நுழைவு போட்டியை விறுவிறுப்பாக்கியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய் நாளை போலீசாருக்கு பதக்கங்கள் வழங்குகிறார்- அணிவகுப்பு மரியாதையும் நடைபெறுகிறது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-will-present-medals-to-police-personnel-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-will-present-medals-to-police-personnel-tomorrow#comments</comments><guid isPermaLink="false">46a95fd1-f6d9-42dc-b464-2e1d11ce2364</guid><pubDate>Thu, 30 Jul 2026 07:57:36 +0000</pubDate><atom:updated>2026-07-30T07:57:36.612Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,முதலமைச்சர் பதக்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/k5t8vwjn/Vijay06.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய் ]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/k5t8vwjn/Vijay06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>முதலமைச்சர் விஜய் நாளை மாலை 4 மணி அளவில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடைபெறும் போலீசாருக்கு பதக்கங்கள் வழங்கும் விழாவில் பங்கேற்று பதக்கங்கள் வழங்க உள்ளார்.</aside><h2><strong>முதலமைச்சர் பதக்கம்</strong></h2><p>தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு ஆண்டுதோறும் முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கப்படுகிறது.</p><p>அந்த வகையில் இந்த ஆண்டுக்கான <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">முதலமைச்சர்</a> பதக்கம் பெறுபவர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டிருந்தது. இவற்றுடன் ஜனாதிபதி பதக்கம் பெறுபவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் பதக்கம் பெறுபவர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டிருந்தது. இதில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட காவல்துறையில் மெச்சத்தகுந்த வகையில் பணியாற்றிய காவலர்கள், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, ஊர்க்காவல் மற்றும் குடிமை பாதுகாப்பு படை மற்றும் தடய அறிவியல் துறையினருக்கு முதலமைச்சர் விஜய் நாளை பதக்கங்களை வழங்க உள்ளார்.</p><h2><strong>பொதுமக்களுக்கு அனுமதி</strong></h2><p>முதலமைச்சர் விஜய் ராஜரத்தினம் ஸ்டேடியத்துக்கு வந்ததும் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை நடைபெறுகிறது. அதை அவர் பார்வையிட்டு அணிவகுப்பை ஏற்றுக்கொள்கிறார். அதன் பிறகு நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. போலீஸ் டி.ஜி.பி. மகேஷ் குமார் அகர்வால் வரவேற்புரை நிகழ்த்துகிறார். </p><p>இந்த விழாவில் போலீஸ் உயர் அதிகாரிகள், அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். பதக்கங்கள் வழங்கப்பட்ட பிறகு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. இதை பொதுமக்களும் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>’எல் நினோ’ தாக்கம் குறித்து ஆராய 7 பேர் கொண்ட நிபுணர் குழு அமைப்பு: தமிழகஅரசு அதிரடி உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-forms-7-member-expert-panel-on-el-nino-impact</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-forms-7-member-expert-panel-on-el-nino-impact#comments</comments><guid isPermaLink="false">d44ccae2-21a0-4b46-b403-0fbaa19b36dc</guid><pubDate>Thu, 30 Jul 2026 07:52:16 +0000</pubDate><atom:updated>2026-07-30T07:52:16.382Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,Tamil Nadu government,Pradeep John,பிரதீப் ஜான்,எல் நினோ,El Niño</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/ctfpvdgb/el-nino.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ EL NINO]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/ctfpvdgb/el-nino.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் காலநிலை மாற்றமான ‘எல் நினோ’ தாக்கத்தால் நிகழும் வறட்சி, வெப்ப அலை, பருவமழை மாற்றங்கள் மற்றும் திடீர் வெள்ளப் பெருக்கு போன்ற பேரிடர் சூழல்களை அறிவியல் பூர்வமாகக் கண்காணிக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் 7 பேர் கொண்ட உயர்மட்ட நிபுணர் ஆலோசனைக் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிட்டுள்ளது.</p><p>‘பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005’-இன் பிரிவு 17(1)-ன் கீழ் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>குழுவின் தலைவரும் உறுப்பினர்களும்:</strong></h2><p>தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கீழ் இந்த நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் முருகானந்தம் இக்குழுவின் தலைவராகச் செயல்படுவார். அண்ணா பல்கலைக்கழக காலநிலை மாற்றத் துறைத் தலைவர் முனைவர் எஸ். கண்மணி உட்பட துறை சார்ந்த 7 காலநிலை மற்றும் பேரிடர் மேலாண்மை நிபுணர்கள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.</p><h2><strong>சிறப்பு உறுப்பினர்:</strong></h2><p>எளிய முறையில் மக்களிடம் வானிலை தகவல்களைக் கொண்டு சேர்த்து பிரபலமான ‘தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்' இக்குழுவின் முக்கிய நிபுணராக நியமிக்கப்பட்டுள்ளார்.</p><h2><strong>அரசு வகுத்துள்ள குழுவின் முதன்மைப் பணிகள்:</strong></h2><p>*தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலத்தில் நிலவும் மழைப்பொழிவு மற்றும் வறட்சி சூழல்களைத் தொடர்ந்து கண்காணித்து, அதிக பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய பகுதிகளைக் கண்டறிவது.</p><p>*‘தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை’க்கு அதிநவீன தொழில்நுட்ப முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களை வழங்குவது.</p><p>* பருவமழை பொய்க்கும்போது ஏற்படும் வறட்சியை எதிர்கொள்வதற்கும், வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் திடீர் பெருமழை-வெள்ளப் பெருக்கைச் சமாளிப்பதற்கும் உரிய நீர் மேலாண்மை ஆலோசனைகளை வழங்குவது.</p><p>*இக்குழு '2026-27 மற்றும் 2027-28' ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கான காலகட்டத்தில் தீவிரமாகச் செயல்படும்.</p><h2><strong>எல் நினோ என்றால் என்ன?</strong></h2><p>மத்திய பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும்போது 'எல் நினோ' உருவாகிறது. இதன் காரணமாக உலகளவில் வானிலை சீர்குலைந்து, சில இடங்களில் கடும் வறட்சியும், சில இடங்களில் வழக்கத்திற்கு மாறான பெருமழையும் புயலும் ஏற்படுவது வழக்கம். தமிழ்நாட்டில் இதன்காரணமாக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் விவசாயப் பகுதிகளில் நீர் வரத்து குறையும் அபாயம் உள்ளதால், அரசு போர்க்கால அடிப்படையில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>POK-ஐ &apos;பாகிஸ்தானி காஷ்மீர்&apos; என குறிப்பிட்ட நியூயார்க் டைம்ஸ்.. இந்தியா கடும் கண்டனம் 
</title><link>https://www.maalaimalar.com/news/world/nyt-india-protests-pakistani-kashmir-reference-in-nyt-report</link><comments>https://www.maalaimalar.com/news/world/nyt-india-protests-pakistani-kashmir-reference-in-nyt-report#comments</comments><guid isPermaLink="false">e3118fcc-bd80-4f29-a880-10734038a4b6</guid><pubDate>Thu, 30 Jul 2026 07:50:01 +0000</pubDate><atom:updated>2026-07-30T07:50:01.630Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PoK,பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்,Pakistan Occupied Kashmir,நியூயார்க் டைம்ஸ்,The New York Times</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/3hdqyr6l/tn-12.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ POK]]></media:title><media:description type="html"><![CDATA[ POK]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/3hdqyr6l/tn-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவின் 'தி நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரை (POK)  "பாகிஸ்தானி காஷ்மீர்" என்ற எனக் குறிப்பிட்டுச் செய்தி வெளியிட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. </p><h2>இந்தியா கண்டனம்</h2><p>அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகம் தனது எக்ஸ் தளத்தில், "நியூயார்க் டைம்ஸின் தலைப்பு தவறானது. 'பாகிஸ்தானி காஷ்மீர்' என்று ஒன்று கிடையாது. 'பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்' மட்டுமே உள்ளது.</p><p>ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்கள் எப்போதும் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதிகளாகவே இருந்துள்ளன, இருக்கின்றன, அதுவே தொடரும்.</p><p>பாகிஸ்தான் இந்த நிலப்பகுதிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து, அங்குள்ள மக்கள் மீது வன்முறையைப் பிரயோகித்து வருகிறது." என தெரிவித்துள்ளது. </p><p>ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி அம்பாசிடர் பர்வதனேனி ஹரிஷ் பேசுகையில், "ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி என்பதே சட்டப்பூர்வ உண்மை. பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு மட்டுமே இங்கு தீர்க்கப்பட வேண்டிய ஒரே பிரச்சினை" எனக் குறிப்பிட்டிருந்தார்.</p> <h2>நியூயார்க் டைம்ஸ் செய்தி</h2><p>"உள்ளாட்சித் தேர்தல் தொடங்கும் வேளையில் 'பாகிஸ்தானி காஷ்மீரில்' வன்முறை வெடித்தது" என்ற தலைப்பில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட செய்திக்கே இந்தியா தற்போது கண்டனம் தெரிவித்துள்ளது.</p><h2>தேர்தல்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/world/pok-unrest-over-30-civilians-killed-in-brutal-crackdown-by-pakistani-forces">பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்</a> ஜூலை 27 முதற்கட்ட சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. ஜாயிண்ட் அவாமி ஆக்ஷன் கமிட்டி (JAAC) என்ற அமைப்பு மக்களை தேர்தலை புறக்கணிக்கச் செய்து போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.</p><h2>துப்பாக்கிச்சூடு</h2><p>ஜூலை 27, 28,29 ஆகிய நாட்களில் ராவலாகோட்டில் இருந்து முசாபராபாத் நோக்கி JAAC அமைப்பின் தலைமையில் மக்கள் சென்ற பேரணியில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் துப்பாக்கிச்சூடு மற்றும் பிற வகைகளில் தாக்குதல் நடத்தின.</p><p>இந்த தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதில் JAAC மத்தியக் குழு உறுப்பினர் உமர் நசீரின் சகோதரர் உஸ்மான் நசீர் என்பவரும் உயிரிழந்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>தைபே ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறினர் உன்னதி ஹூடா, தன்வி ஷர்மா</title><link>https://www.maalaimalar.com/sports/unnati-hooda-tanvi-sharma-enter-qf-round-in-taipae-open-badminton</link><comments>https://www.maalaimalar.com/sports/unnati-hooda-tanvi-sharma-enter-qf-round-in-taipae-open-badminton#comments</comments><guid isPermaLink="false">39521a6f-1ee1-4eb4-8c10-22663460b338</guid><pubDate>Thu, 30 Jul 2026 07:47:27 +0000</pubDate><atom:updated>2026-07-30T07:47:27.780Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Unnati Hooda,உன்னதி ஹூடா,tanvi sharma,தன்வி ஷர்மா,taipae open badminton,தைபே ஓபன் பேட்மிண்டன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/uh4eiz21/unnati.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ unnati hooda]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/uh4eiz21/unnati.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தைபே ஓபன் பேட்மிண்டன் தொடர் தைவானின் தைபேயில் நடைபெற்று வருகிறது.</p><p>இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, சக நாட்டு வீராங்கனையான தன்யா ஹேமந்த் உடன் மோதினார்.</p><p>இதில் சிறப்பாக ஆடிய உன்னதி ஹூடா 21-19, 21-12 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.</p><p>மற்றொரு போட்டியில் இந்தியாவின் தன்வி ஷர்மா, இந்தோனேசியாவின் தலித ரமாதானி உடன் மோதினார். இதில் அதிரடியாக ஆடிய தன்வி ஷர்மா 21-17, 22-20 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.</p><p>இதேபோல் இந்தியாவின் தேவிகா சிஹாக்கும் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.</p><p>நாளை நடைபெறும் காலிறுதி சுற்றில் இந்தியாவின் தன்வி ஷர்மா, தாய்லாந்தின் சுபனிதா கடேதோங் உடன் மோதுகிறார்.</p>]]></content:encoded></item><item><title>இன்ஸ்டாகிராம் மூலம் காதல்: படங்களில் நடித்த திருநங்கையை திருமணம் செய்த ஆவடி வாலிபர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/avadi-man-marries-transgender-woman-who-acted-in-films</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/avadi-man-marries-transgender-woman-who-acted-in-films#comments</comments><guid isPermaLink="false">8e53cab0-6f62-49b5-ba1f-439c3ec7f916</guid><pubDate>Thu, 30 Jul 2026 07:45:03 +0000</pubDate><atom:updated>2026-07-30T07:45:03.756Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமணம்,Instagram,இன்ஸ்டாகிராம் காதல்,இன்ஸ்டாகிராம்,திருநங்கை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/9dld8yq8/insta.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ திருநங்கையை திருமணம் செய்த வாலிபர்]]></media:title><media:description type="html"><![CDATA[ திருநங்கையை திருமணம் செய்த வாலிபர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/9dld8yq8/insta.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு திருவள்ளுவர் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரும், திருச்செங்கோட்டை சேர்ந்த திருநங்கை ஒருவரும் 7 வருடங்களாக பழகி நேற்று கோபியில் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர்.</aside><h2><strong>இன்ஸ்டாகிராம் மூலம் காதல்</strong></h2><p>திருநங்கையை திருமணம் செய்து கொண்டது குறித்து தனியார் நிறுவன ஊழியர் பிரவீன் ராஜ் கூறும்போது, நான் திருவள்ளுவர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள மோரை பகுதியைச் சேர்ந்தவன். கணினி தகவல் தொழில்நுட்பம் (ஐடி) படித்துவிட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வருகிறேன். </p><p>இந்நிலையில் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு அதாவது 2019-ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம்  நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள வருகூராம்பட்டியைச் சேர்ந்த திருநங்கை கயல்விழி என்பவர் அறிமுகமானார் .</p><p>அவர் திருநங்கை என்பது எனக்கு முதலிலேயே தெரியும். முதலில் எங்களது பழக்கம் சாதாரண நட்பாக தொடங்கியது. தொடர்ந்து இரண்டு வருடம் நட்பாக பழகி வந்தோம். அவரை திருச்செங்கோடு நேரில் சென்று சந்தித்து பேசி இருக்கிறேன். அவரை பார்த்ததும் எனக்கு பிடித்து விட்டது . இருந்தாலும் இரண்டு வருடமாக நல்ல நட்புடன் பழகி வந்தோம். பின்னர் நான் தான் எனது காதலை முதல் முதலாக அவரிடம் தெரிவித்தேன். அதற்கு அவர் உடனடியாக காதலை ஏற்கவில்லை நண்பர்களாகவே பழகலாம் என்று கூறிவிட்டார். </p><p>பின்னர் அவருக்கும் என்னை பிடித்து நாங்கள் இருவரும் காதலில் விழுந்தோம் . இந்நிலையில் எங்கள் காதல் விவகாரத்தை எங்கள் வீட்டில் தெரிவித்தேன். கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதே சமயம் அவரது வீட்டில் எங்கள் காதலை ஏற்றுக் கொண்டனர். இதற்கிடையே வீட்டில் பெண் பார்க்கும் ஏற்பாடு நடந்ததால் இனியும் தாமதிக்கக்கூடாது என்பதால் கோபியில் சட்டப்படி சுயமரியாதை செய்து கொண்டோம் என்றார் .</p><p>இதுகுறித்து திருநங்கை கயல்விழி கூறும்போது,</p><p>நான் சினிமாவில் தோற்றம், கந்தமலை, ராவண ராமணன் போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். இதில் தோற்றம், கந்தமலை படம் ரிலீஸ் ஆகிவிட்டது.  இதைத்தொடர்ந்து தற்போது வெப் சீரியலான டாசிக் பார்ட்டியில் நடித்து வருகிறேன்.</p><p>முதலில் இன்ஸ்டாகிராம் மூலமே எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. 7 வருடங்களாக பழகி வந்தோம். அவர்தான் முதன்முதலில் காதலை என்னிடம் சொன்னார். நான் அப்போது சூழ்நிலை காரணமாக காதலை ஏற்கவில்லை. அதன்பிறகு நானும் காதலை ஏற்றுக்கொண்டேன் . </p><p>எங்கள் காதல் விவகாரம் பிரவீன் ராஜ் வீட்டிற்கு தெரிந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனினும் காதலில் உறுதியாக இருந்த நாங்கள் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் திருமணம் செய்து கொண்டோம். ஆனால் கோவிலில் நாங்கள் திருமணம் செய்து கொண்டதற்கான சான்றிதழ் கேட்டபோது திருநங்கைக்கு திருமணம் செய்து வைத்ததில்லை என்று கூறி சான்றிதழ் தரவில்லை. </p><p>இதனை அவர்கள் வீட்டில் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு எங்களை பிரிப்பதற்காக பிரவீன் ராஜை கட்டாயப்படுத்தி சென்னையில் உள்ள ஒரு தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர். அங்கே அவர் 3  வருடமாக தங்கியிருந்தார். எனினும் நாங்கள் காதலில் உறுதியாக இருந்தோம் . இந்நிலையில் பிரவீன் ராஜிக்கு அவசரமாக வேறொரு பெண்ணை திருமணத்துக்காக நிச்சயம் செய்தனர்.</p><p>இதனால் வீட்டை விட்டு வெளியேறிய அவர் திருச்செங்கோடு வந்தார். அதனை அடுத்து நாங்கள் சட்டப்படி திருமணம் செய்ய வேண்டும் என்ற காரணத்தினால் கோபியில் மனித சட்ட உதவி மையத்தை நாடினோம். எனது பெற்றோர் முன்னிலையில் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டோம் . தற்போது நாங்கள் திருச்செங்கோட்டில் இருக்கிறோம். கண்டிப்பாக எனது மாமியார் வீட்டில் என்னை ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்பிக்கை உள்ளது. பிரவீன் ராஜிக்கு நல்ல மனைவியாகவும், அவரது குடும்பத்தினருக்கு நல்ல மருமகளாகவும் இருப்பேன், என்றார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் சிக்கன் கடைகள் 
நாளை வழக்கம் போல் செயல்படும்- வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-chicken-shops-to-remain-open-despite-shutdown-call</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-chicken-shops-to-remain-open-despite-shutdown-call#comments</comments><guid isPermaLink="false">454ac728-5da0-48ec-8fe4-3f1197af4b11</guid><pubDate>Thu, 30 Jul 2026 07:30:19 +0000</pubDate><atom:updated>2026-07-30T07:30:19.636Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,Chicken,சிக்கன் தடை,வியாபாரிகள் சங்கம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/ec2vg0iu/chicken.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chicken]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/ec2vg0iu/chicken.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை (வெள்ளிக் கிழமை) கோழி கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>விற்பனைக்கு கொண்டு வரப்படும் கோழிகளுக்கு குறிப்பிட்ட நாட்களுக்கு முன்பு தீவனம் வழங்கக் கூடாது. அதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு கோழி கறி விற்பனையாளருக்கு  தொழில் ரீதியாக நஷ்டம் ஏற்படுவதாக கூறி இந்த கடை அடைப்பு போராட்டத்தை அறிவித்தனர். </p><p>திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் நாளை கடைகள் அடைக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>தமிழகத்தில் அதிக அளவு <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF" rel="nofollow">கோழி கறி</a> விற்பனை செய்யும் நகரமாக சென்னை தலைநகரம் இருப்பதால்  கடைகளை மூடினால் கடுமையான பாதிப்பு ஏற்படக்கூடும் என்று கருதி சென்னை கோழி மொத்த வியாபாரிகள் சங்கம் நாளை கோழிக்கறி கடைகள் வழக்கம் போல் செயல்படும். மூடப்பட மாட்டாது என்று  தெரிவித்துள்ளது. </p><p>சென்னையில் 8 ஆயிரம் கோழி கடைகள் செயல்பட்டு வருகின்றன. தினமும் 600 டன் கோழிக்கறி விற்பனை செய்யப்படுகிறது.  அதாவது 6 லட்சம் கிலோ  கோழிகள் உயிரோடு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>இதுகுறித்து சங்கத்தின் பொதுச்செயலாளர் ஞானம் கூறியதாவது:- </p><p>தமிழ்நாடு கோழி மொத்த விற்பனையாளர்கள் சங்கம் எடுத்துள்ள முடிவு சென்னை  பெருநகருக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். </p><p>பொதுமக்கள் மட்டுமல்லாது ஓட்டல்கள், சிறு சிறு சில்லறை விற்பனையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். </p><p>ஒரு நாள் கோழிக் கடை களை அடைத்தால் கூட கோழி தொழில் சார்ந்தவர்கள் மட்டுமல்லாது ஓட்டல் தொழிலும் கடுமையான  பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். அதனால்  எங்களது கோரிக்கை குறித்து  கோழி பண்ணையாளர்களிடம் ஆலோசிக்கப்பட்டு இருக்கிறது. நல்ல முடிவு எதிர்பார்க்கப்படுகிறது. எனவே சென்னையில் நாளை கோழி கறி கடைகள் வழக்கம் போல் செயல்படும். </p><p>இவ்வாறு அவர் கூறினார். </p><p>சென்னையையொட்டி உள்ள காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் கோழிக்கடைகள் நாளை மூடப்படாது. </p><p>சென்னை மாவட்டத்தை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளில் தான் அதிகளவு கோழி இறைச்சி கடைகள் இயங்குகிறது. </p><p>சிறு ஓட்டல்கள் முதல் நட்சத்திர ஓட்டல்கள் வரை <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-consult-with-chicken-biryani-with-nutritious-meal-for-government-school-students" rel="nofollow">கோழி இறைச்சி </a>பயன்பாடு உள்ளது.  அதனால் சென்னையையொட்டிய புறநகர் பகுதியில் வழக்கம் போல் நாளை கோழிக்கடைகள் செயல்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. அரசைக் கண்டித்து ஆக. 3-ல் தஞ்சாவூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-announced-dmk-protest-against-tvk-govt-on-august-3rd</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-announced-dmk-protest-against-tvk-govt-on-august-3rd#comments</comments><guid isPermaLink="false">54e136d7-8591-468e-8e0d-23d3e0117b09</guid><pubDate>Thu, 30 Jul 2026 07:18:30 +0000</pubDate><atom:updated>2026-07-30T07:18:30.140Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,மேகதாது அணை,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/1vdvj5cl/MKStalin09.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/1vdvj5cl/MKStalin09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தி.மு.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/முக-ஸ்டாலின்">மு.க.ஸ்டாலின்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>வேதனை தரும் த.வெ.க. ஆட்சி! விவசாயிகள் படும் துன்பமே அதற்கு சாட்சி! என நாட்டின் முதுகெலும்பாய் விளங்கும் விவசாயிகளை வீதிகளில் போராடவிட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்.</p><h2><strong>கடன் தள்ளுபடியில் ஏமாற்றம்</strong></h2><h3><strong>தேர்தலுக்கு முன்பு</strong></h3><p>“5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்கள் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும். 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்களில் 50 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும்.”</p><h2><strong>தேர்தலுக்குப் பின்பு</strong></h2><p>50 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே முழுக் கடன் தள்ளுபடி என்ற வெற்று அறிவிப்பை வெளியிட்டு, அதன் காரணமாக விவசாயிகள் வெகுண்டெழுந்து தற்போது வரை போராட்டம் நடத்திக் கொண்டிருப்பதால், 75 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே முழுக் கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டது.</p><p>சொன்னதைச் செய்ய நேரம் கேட்ட முதலமைச்சர், இன்னும் எவ்வளவு நேரம் வேண்டும் என்றாவது விவசாயிகளிடம் சொல்லியிருக்க வேண்டும்.</p><h2><strong>மேகதாது விவகாரத்தில் த.வெ.க. அரசின் செயல்படா நிலை</strong></h2><p>தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்தே மேகதாது அணை கட்டுவதில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது.</p><p>ஜூன் 11: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை கர்நாடக முதலமைச்சர் நேரில் சந்தித்து மேகதாது நிதியுதவி கோரி மனு அளித்துள்ளார்.</p><p>ஜூன் 12: ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சரை நேரில் சந்தித்து <a href="https://www.maalaimalar.com/topic/மேகதாது-அணை">மேகதாது</a> திட்டத்துக்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்தினார்.</p><p>ஜூலை 27: டெல்லியில் கர்நாடகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பி.க்களுடன் கூட்டம் நடத்தி, மேகதாது அணை கட்டக் கடைமடை மாநிலங்களின் அனுமதி தேவையில்லை என நாடாளுமன்றத்தில் ஒன்றிய ஜல்சக்தி துறை தெரிவித்த பதிலை மேற்கோள் காட்டிப் பேசியுள்ளார்.</p><p>அதேநாளில், கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி, கர்நாடக அரசின் டெல்லி பிரதிநிதி, கர்நாடக அரசின் தலைமை வழக்கறிஞர் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் மேகதாது அணை தொடர்பான ஆய்வுக் கூட்டத்தையும் நடத்தியுள்ளார்.</p><p>ஊடகங்களிடம் தொடர்ந்து மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் எனவும், தமிழ்நாடு அரசின் அனுமதி தேவையில்லை எனவும் பேசி வருகிறார்.</p><p>இதற்கு மாறாக, இவ்விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பிரதமருக்குக் கடிதம் எழுதியதோடு தனது கடமை முடிந்துவிட்டது என மவுனம் காத்து வருகிறார்.</p><p>இதற்கிடையில், தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடகம் சென்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என்று வேளாண் துறை அமைச்சர் சொன்னார். பின்னர் அவரும் இன்னும் சிலரும் இல்லை என்று மறுத்தார்கள்.</p><p>இப்போது தமிழ்நாடு சார்பில் சில விவகாரங்கள் தொடர்பாகத் தமிழ்நாடு முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளதாக, கர்நாடக முதலமைச்சரே தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடக செல்வதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில், காவிரியில் நமக்கு உரிய பங்கினை வழங்க காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டும், அதனை நிறைவேற்ற முடியாது என்று கர்நாடக மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் இன்னும் வாய் திறக்காமல் இருக்கிறார்.</p><p>அதுமட்டுமல்ல, மேகதாது விவகாரம் தொடர்பாக ஒரு தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தின் மூலம் வலியுறுத்தி இருக்கின்ற நிலையில், இந்த கர்நாடக பயணம் இதனை நீர்த்துபோகச் செய்யாதா? என்ற கேள்வியும் எழுகிறது.</p><p>இப்படி இந்த அரசைப் பொறுத்தவரையில் எந்தத் தகவல்களிலும் தெளிவு இல்லை; எதிலும் வெளிப்படைத்தன்மை இல்லை. எதற்கெடுத்தாலும் குழப்பம்; எல்லாவற்றிலும் ஏமாற்றம். இதுவே இந்த அரசின் வழக்கமாக மாறியிருக்கிறது.</p><p>தனது திரைப்படம் கர்நாடகம் வெளியாவதில் சிக்கல் ஏற்படக் கூடாது என்பதற்காகவே முதலமைச்சர் இதுகுறித்து வெளிப்படையாகப் பேசாமல் அமைதி காப்பதாக ஊடகங்களில் ஓயாமல் செய்திகள் வெளியாகின்றன. அதற்கும் எந்தப் பதிலும் இல்லை.</p><h2><strong>அனைத்துக் கட்சிக் கூட்டம்</strong></h2><p>அனைத்துக் கட்சிக் கூட்டத்தோடு, விவசாயச் சங்கப் பிரதிநிதிகளின் கூட்டத்தையும் கூட்டச் சொல்லி, முதலமைச்சருக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகள் உட்பட தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கட்சிகளும், விவசாயச் சங்கங்களும் அரசுக்குக் கோரிக்கை விடுத்தும் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்து வருகிறார் முதலமைச்சர்.</p><p>மாநிலத்தின் முக்கியப் பிரச்சனையில் யார் குரலையும் கேட்காமல் indifferent ஆகவும், inactive ஆகவும் இந்த அரசு இருப்பது நல்லதல்ல.</p><p>அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கும் தி.மு.க.தான் அழைப்பு விடுக்க வேண்டும் என முதலமைச்சர் எதிர்பார்க்கிறாரா? அரசால் முடியாது என்றால் சொல்லிவிடுங்கள்; அதற்கும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.</p><h2><strong>விவசாயிகளின் அடுத்த பெரும் பிரச்சனை</strong> </h2><h3><strong>குறுவை சிறப்பு நிவாரணத் தொகுப்பு</strong></h3><p>கடந்த ஆண்டு 6.5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடந்து சாதனை படைத்த நிலையில், இந்த ஆண்டு மேட்டூர் அணை திறக்கப்படாததால் 1.5 லட்சம் ஏக்கர் சாகுபடி மட்டுமே நடப்பதாகச் செய்திகள் வருகிறது.</p> <p>இதனால் 2,500 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டு 14 இலட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுத் தவிக்கிறார்கள். எனவே அவர்களுக்குக் கீழ்க்கண்ட வகையில் தமிழ்நாடு அரசு நிவாரணத் தொகுப்பினைக் காலம் தாழ்த்தாமல் அறிவித்திட வேண்டும்.</p><p>1) ஏக்கர் ஒன்றுக்குக் குறுவை நிவாரணமாக 25 ஆயிரம் ரூபாய்.</p><p>2) காப்பீட்டுத் திட்டத்துக்கான பிரீமியம் தொகையை அரசே செலுத்தி முழுக் காப்பீடு கிடைக்க உதவி.</p><p>3) சம்பா சாகுபடிக்கான மறுமுதலீடாக விதை, உரம், பூச்சிக்கொல்லி என இடுபொருட்கள் மானியமாக வழங்குதல்.</p><h2><strong>கழகம் சார்பில் டெல்டா மண்ணில் போராட்டம்</strong></h2><p>இப்படி, விவசாயப் பெருமக்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், காவிரி உரிமையை நிலைநாட்டுவதில் த.வெ.க. அரசின் மெத்தனப்போக்கைக் கண்டித்தும் வரும் 03-08-2026 அன்று காலை 10.00 மணியளவில், தஞ்சாவூர், பனகல் கட்டடம் அருகில் கழக இளைஞரணிச் செயலாளரும் மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த தி.மு.க. முடிவெடுத்துள்ளது.</p><p>இப்போராட்டத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கழகத் துணை அமைப்புகளானப் பல்வேறு சார்பு அணிகளின் நிர்வாகிகள் என அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு விவசாயிகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டும்.</p><p>மேலும், அனைத்து விவசாயச் சங்கங்களைச் சேர்ந்த தோழர்களும், இவ்விவகாரத்தில் ஒருமித்த கருத்துடைய அனைத்து அரசியல் கட்சிகளின் தோழர்களும் போராட்டத்தில் கலந்துகொண்டு விவசாயிகளின் கோரிக்கைகள் விரைவில் வென்றிடத் துணை நிற்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் என்பது, விவசாயிகளின் குரலைக் கேட்காமல் இருக்கும் த.வெ.க. அரசின் கவனத்தை ஈர்க்கும் முதல்கட்ட நடவடிக்கைதான். அரசின் இந்த மெத்தனப்போக்குத் தொடர்ந்தால், மிகப்பெரிய போராட்டத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதையும் எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு அமித் ஷா பொறுப்பேற்க வேண்டும்.. அமளியால் மக்களவை ஒத்திவைப்பு </title><link>https://www.maalaimalar.com/news/national/parliament-clash-opposition-uproar-over-july-20-student-protest-crackdown-stalls-lok-sabha</link><comments>https://www.maalaimalar.com/news/national/parliament-clash-opposition-uproar-over-july-20-student-protest-crackdown-stalls-lok-sabha#comments</comments><guid isPermaLink="false">93e51114-076f-47e3-8ff2-be2f8295f63c</guid><pubDate>Thu, 30 Jul 2026 07:15:15 +0000</pubDate><atom:updated>2026-07-30T07:15:15.226Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மக்களவை,Lok Sabha,monsoon session,மழைக்கால கூட்டத்தொடர்,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/rt0vh3sn/tn-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மக்களவை ]]></media:title><media:description type="html"><![CDATA[ மக்களவை ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/rt0vh3sn/tn-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்டம் கடந்த திங்கள் கிழமை தொடங்கிய நிலையில் வரும் ஆகஸ்ட் 2 வரை நடைபெறுகிறது. </p><p>இன்றைய கூட்டமும் வழக்கம்போல அமளியால் முடங்கியுள்ளது. ஜூலை 20 அன்று நாடாளுமன்றம் நோக்கி <a href="https://www.maalaimalar.com/news/national/cjp-new-protest-warning-delhi-jantar-mantar-security">பேரணி </a>வந்த இளைஞர்கள் மீது டெல்லி காவல்துறைக்கு மற்றும் ஆர்ஏஎப் மத்திய படை தடியடி, கண்ணீர் புகை உள்ளிட்டவையால் தாக்கியது. மேலும் பெல்லட் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களும் பயன்படுத்ததட்தற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. </p><p>இந்த தாக்குதல் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக மக்களவை இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.</p> <h2>ராகுல் காந்தி குற்றச்சாட்டு</h2><p>ஜூலை 20 அன்று டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின் போது காவல்துறை நடத்திய தாக்குதலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.</p><p>உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்திற்கு நேரில் வந்து எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு விளக்கமளிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி வலியுறுத்தினார்.</p> <h2>இந்தியா கூட்டணி போராட்டம்</h2><p>நாடாளுமன்றத்தின் மகார் துவார் பகுதியில் திரண்ட எதிர்க்கட்சி எம்பிக்கள், மாணவர்கள் மீதான காவல்துறை நடவடிக்கைக்கும், அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை நன்கொடை முறைகேடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.</p><h3>சபாநாயகர்</h3><p>முன்னதாக மக்களவை தொடங்கியபோது கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்த இந்திய வீரர்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வாழ்த்து தெரிவித்தார்</p><p>இன்று நடந்த நீளம் தாண்டுதல் பிரிவு போட்டியில் 8.09 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார்.</p><p>மாற்றுத்திறனாளிகளுக்கான ஆண்களுக்கான 100 மீட்டர் T47 ஓட்டப்பந்தயத்தில் திலீப் மகாது கவித் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.</p><p>அதே 100 மீட்டர் T47 பிரிவில் முகமது பாசில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.</p>]]></content:encoded></item><item><title>VIDEO- வதந்தி சீசன் 2: வெளியானது ‘டைவா கோட்டிங்’ பாடல் வீடியோ! </title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/vathanti-season-2-daiva-coating-song-video-release</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/vathanti-season-2-daiva-coating-song-video-release#comments</comments><guid isPermaLink="false">0a6facae-1447-4eb6-a9d2-bcbfadee4ba5</guid><pubDate>Thu, 30 Jul 2026 07:14:49 +0000</pubDate><atom:updated>2026-07-30T07:14:49.090Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சசிகுமார்,Sasikumar,Vadhandhi Season 2,வதந்தி சீசன் 2,Daiva Coatingu,டைவா கோட்டிங்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/wze3moeo/daiva.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vadhandhi Season 2  Daiva Coatingu ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/wze3moeo/daiva.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திரையுலகிலும் ஓடிடி தளங்களிலும் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘வதந்தி’ வெப் சீரிஸின் இரண்டாவது பாகம் வரவிருக்கும் ஆகஸ்ட் 7-ம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் உலகளவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், இந்தத் தொடரில் இடம்பெற்றுள்ள ‘டைவா கோட்டிங்’ என்ற வீடியோ பாடலை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/FPyHPOVLgQg"></iframe></figure><h2><strong>புதிய கதைக்களம்:</strong></h2><p>முதல் சீசனின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இதையும் இயக்கி எழுதியுள்ளார். முன்னணி தயாரிப்பாளர்களான புஷ்கர்-காயத்ரி தங்களது 'வால்வாட்சர் ஃபிலிம்ஸ்' நிறுவனம் சார்பில் இதன் கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாகச் செயல்பட்டுள்ளனர். முதல் பாகத்தில் எஸ்.ஜே.சூர்யா முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், இரண்டாம் பாகத்தில் பிரபல நடிகரும் இயக்குநருமான 'சசிகுமார்' சப்-இன்ஸ்பெக்டர் மூசா ராசா என்ற அதிரடியான காவலர் கதாபாத்திரத்தில் களமிறங்கியுள்ளார்.</p><p>இந்தக் க்ரைம்-த்ரில்லர் தொடரில் சசிகுமாருடன் இணைந்து, அபர்னா தாஸ், விவேக் பிரசன்னா, யஷ்வந்த், அனகா, ரேவதி சர்மா, அர்ஜுன் நந்தகுமார் உள்ளிட்டப் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்தொடருக்கு 'சைமன் கே.கிங்' இசையமைத்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள 'டைவா கோட்டிங்' பாடல் துள்ளலான இசையுடனும், அட்டகாசமான காட்சிகளுடனும் இணையதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.</p><h2><strong>ரசிகர்களின் எதிர்பார்ப்பு:</strong></h2><p>மதுரையின் பின்னணியில் நடைபெறும் அரசியல், வதந்தி மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த க்ரைம் புலனாய்வுக் கதையாக 'வதந்தி சீசன் 2' உருவாகியுள்ளது. தமிழ் தவிர தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் ஒரே நேரத்தில் 8 அத்தியாயங்களாக ஒளிபரப்பாகவுள்ள இத்தொடருக்கு ஓடிடி பார்வையாளர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.</p>]]></content:encoded></item></channel></rss>