<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 10 Sep 2026 10:13:10 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 10 செப். 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-10-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-10-september-2026#comments</comments><guid isPermaLink="false">cd1c0430-b0bb-4648-93d3-063900150d82</guid><pubDate>Thu, 10 Sep 2026 04:09:14 +0000</pubDate><atom:updated>2026-09-10T09:46:31.559Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/sjr5yp31/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live News]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/sjr5yp31/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-question-tn-govt-for-omni-bus-fare-issue">ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தவெக அரசும் ஆதரிக்கிறதா?- கூடுதல் கொள்ளை தான் மாற்றமா?- அன்புமணி கேள்வி</a></p><p>* வரும் 14-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னைக்கு  திரும்ப திருச்சியிலிருந்து ரூ.4499, மதுரையிலிருந்து ரூ.4899, கோவையிலிருந்து ரூ.4799 வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.</p><p>* தமிழக அரசு இனியாவது விழித்துக் கொண்டு தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/historic-deal-before-brics-summit-russia-plans-to-sell-105-passenger-planes-in-india">பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு முன்பாக வரலாற்று ஒப்பந்தம்: இந்தியாவில் 105 பயணிகள் விமானங்களை விற்பனை செய்ய ரஷியா திட்டம்!... </a></p><p>*இந்தியாவில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களை இணைக்கும் பிராந்திய வான்வழிப் போக்குவரத்து மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. </p><p>*இந்த பிரம்மாண்ட ஒப்பந்தத்தின் கீழ் ரஷியாவின் IL-114-300 ரக டர்போப்ராப் பயணிகள் விமானங்கள் இந்திய சந்தைக்கு வரவுள்ளன.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/east-zone-clinches-the-duleep-trophy">துலீப் டிராபி: 13 ஆண்டுக்கு பிறகு சாம்பியன் பட்டம் வென்றது கிழக்கு மண்டலம்</a></p><p>* கிழக்கு மண்டலம் முதல் இன்னிங்சில் 708 ரன்கள் குவித்தது.</p><p>* ஆட்ட நாயகன் விருது இஷான் கிஷனுக்கும், தொடர் நாயகன் விருது திலக் வர்மாவுக்கும் வழங்கப்பட்டது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-question-to-tn-govt-for-tiruvottiyur-youth-murder-case">புகார் கொடுத்த மறுநாளே வாலிபர் படுகொலை: இதுதான் சட்டம் - ஒழுங்கை காக்கும் அழகா?- அன்புமணி கேள்வி</a></p><p>* சென்னையில் கடந்த சில நாள்களுக்கு முன் ஆளும் தவெக நிர்வாகி உள்ளிட்ட இருவர் ஒரே நாளில் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். </p><p>* உயிருக்கு பாதுகாப்பு கேட்பவர்களுக்கு ஆதரவாக இல்லாமல், கொலை மிரட்டல் விடுப்பவர்களுக்கு ஆதரவாக செயல்படுவது தான் காவல்துறையின் கொள்கையா? </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-says-communist-parties-support-tvk-alliance">த.வெ.க. கூட்டணிக்கு கம்யூனிஸ்டு கட்சிகளின் ஆதரவு உண்டு - திருமாவளவன் </a></p><p>* த.வெ.க. ஆட்சி 5 ஆண்டு காலம் நீடிப்பதற்கு இடது சாரி கட்சிகளின் ஆதரவு உண்டு.</p><p>* மிசா ஒடுக்குமுறைக்கு ஆளானவர் மு.க.ஸ்டாலின் தனது உடல் மொழி எதேச்சையானது என முதலமைச்சர் விஜய் விளக்கம் அளித்து விட்டார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thaimaman-gold-ring-scheme-case-madras-high-court-dismisses-challenging-gold-ring-contract">தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் - டெண்டர் வழங்கியதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி</a></p><p>* டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என்று பொற்கொல்லர் ராஜ் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல்.</p><p>* தங்க மோதிரத்தை செய்து மாநிலம் முழுவதும் உள்ள 107 மையங்களுக்கு ஹால்மார்க் முத்திரையுடன் அனுப்ப வேண்டும் என டெண்டர் விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/misa-issue-dmk-vs-tvk-it-wing-crash">மிசா விவகாரம்: திமுக Vs தவெக ஐடி விங் மோதல்</a></p><p>* வரலாற்றில் நிலைத்து நிற்கும் மாபெரும் தியாகத்தை உருவ கேலி செய்த உங்களின் கேடுகெட்ட அற்பத்தனத்தை தமிழ்நாட்டு மக்கள் காரித் துப்புகிறார்கள்.</p><p>* நீங்கள் விமர்சிக்கும் அந்த 'கட்டுமரம்', இந்தியாவின் பல அரசியல் சுனாமிகளையே நெஞ்சை நிமிர்த்தி எதிர்கொண்டு தமிழ்நாட்டைக் காத்தது மாபெரும் வரலாறு!</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/the-voice-of-the-goddess-who-prevents-suicide-lakshmi-saves-the-lives-of-many-even-when-unable-to-walk">தற்கொலையை தடுக்கும் தேவதையின் குரல்.. நடக்க இயலாத நிலையிலும் பலரின் உயிரைக் காப்பாற்றும் லட்சுமி!<br></a></p><p>*இன்று (செப்டம்பர் 10) உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.</p><p>* வேறெதையும் விட மிக மிக அவசியமான ஒன்றாக உருவெடுத்துள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-first-sit-in-existing-legislative-assembly-and-serve-people">இருக்கின்ற சட்டசபையில் அமர்ந்து முதலில் மக்கள் பணியாற்றுங்கள் - கனிமொழி</a></p><p>* சட்டம் ஒழுங்கு பற்றி பதில் அளிக்காத முதலமைச்சர் விஜய் பஞ்ச் டயலாக்கையும் பழைய கதைகளையும் பேசுகிறார்.</p><p>* தற்போது நடைபெறும் இடைத்தேர்தல் என்பது தேவையில்லாத ஒன்று.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/election-commission-recognized-state-political-party-for-tvk">அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியானது த.வெ.க.: உறுதி செய்தது தேர்தல் ஆணையம்</a></p><p>* தமிழகத்தில் மாநில அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 6 இல் இருந்து 7-ஆக உயர்ந்துள்ளது.</p><p>* திமுக, அதிமுக, சிபிஐ, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர், தேமுதிக ஆகிய 6 கட்சிகள் மாநில அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆகும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-and-dharapuram-by-elections-admk-and-naam-tamilar-katchi-candidates-to-be-announced-soon">மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுக - நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் விரைவில் அறிவிப்பு</a></p><p>* அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டு வருகிறது.</p><p>* நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்போது மதுரையில் சேயோன் படப்பிடிப்பில் உள்ளார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/duraimurugan-says-history-will-repeat-itself-through-by-election">இடைத்தேர்தல் மூலம் வரலாறு திரும்பும் - துரைமுருகன்</a></p><p>* 2 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.&nbsp;</p><p>* எம்.ஜி.ஆர். ஆளுங்கட்சியாக இருந்த காலத்திலேயே அண்ணாநகர், மயிலாடுதுறை தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/trump-promises-5000-per-person-to-the-public-if-they-vote-for-the-republican-party-in-the-midterm-elections">இடைக்கால தேர்தலில் வெற்றி பெறச் செய்தால் ஆளுக்கு 5000 டாலர் - நாட்டு மக்களுக்கு டிரம்ப் வாக்குறுதி</a></p><p>*அதிபர் பதவியேற்று 2 ஆண்டுகள் முடிவடையும் போது இடைக் காலத் தேர்தல் (Midterm Election) நடக்கிறது.</p><p>*,000 டாலர் ( 4.4 லட்சம் ரூபாய்) வழங்கப்போவதாக அதிரடி வாக்குறுதியை அளித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-ask-question-to-tn-govt">கள்ளச்சாராய சாவுகள் குறித்த விசாரணை ஆணைய அறிக்கை மீது நடவடிக்கை என்ன?- அரசுக்கு அன்புமணி கேள்வி</a></p><p>* ஆளும் கட்சியான திமுக, இதில் திமுகவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைத்ததுடன், என் மீது அவதூறு வழக்கு தொடரப்போவதாகவும் அச்சுறுத்தல் விடுத்தனர். </p><p>* தமிழ்நாட்டில் இப்போதுள்ள 4038 மதுக்கடைகளையும் படிப்படியாக மூடி, அடுத்த இரு ஆண்டுகளில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vs-babu-mla-hospitalized">வி.எஸ்.பாபு எம்.எல்.ஏ. ஆஸ்பத்திரியில் அனுமதி</a></p><p>* சென்னை கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து த.வெ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வி.எஸ்.பாபு.</p><p>* மார்பு சளி பாதிப்பு காரணமாக வி.எஸ்.பாபு எம்.எல்.ஏ.வை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/announcement-of-candidates-for-the-secular-social-justice-victory-alliance">மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்- மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு</a></p><p>* மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>* நம் வெற்றி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுத் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/fire-on-passenger-boat-in-the-philippines-5-dead-87-missing">பிலிப்பைன்ஸில் பயணிகள் படகில் தீ விபத்து.. 5 பேர் பலி - 87 பேர் மாயம்</a></p><p>*இதுவரை 42 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.</p><p>*87 பேரைக் காணவில்லை என அந்நாட்டுக் கடலோரக் காவல் படை இன்று தெரிவித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/putin-to-visit-india-for-brics-summit-three-russian-military-aircraft-arrive-for-preparatory-and-security-operations">பிரிக்ஸ் மாநாட்டுக்கு இந்தியா வரும் புதின்.. முன்னெச்சரிக்கை பணிகளுக்கு 3 ரஷிய ராணுவ விமானங்கள் வருகை<br></a><br>*இந்தியாவின் தலைமையின் கீழ் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.</p> <p>*ரஷிய அதிபர் புதின், பிரேசில், தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-10-9-2026">GOLD PRICE TODAY: மீண்டும் ஏற்றத்தில் தங்கம் விலை! - இன்றைய நிலவரம்</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.14,255-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-another-brutal-murder-in-chennai">சென்னையில் மீண்டும் ஒரு கொடூர கொலை- என்ன பதில் வைத்திருக்கிறார் முதலமைச்சர்?: உதயநிதி</a></p><p>* காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டால் கொலை செய்யப்படுவார்கள் என்ற புதிய வரலாற்றை இந்த Circus ஆட்சியாளர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.</p><p>* தலைநகரில் மீண்டும் ஒரு கொலை நடக்காமல் இருப்பதற்கு தேவையான கடுமையான நடவடிக்கையை இந்த அரசு எடுக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். </p><p><a href="https://maalai-malar.quintype.com/story/46482b36-cf18-4d8f-b85e-6d948c78e90a">கணவன் மனைவியுடன் கட்டாய உறவு கொள்வது பாலியல் வன்கொடுமை குற்றமா? - உச்சநீதிமன்றம் சொன்னது இதுதான்</a></p><p>*கணவனால் கட்டாயப் பாலியல் உறவுக்கு உட்படுத்தப்படும் பெண் சந்தேகத்திற்கு இடமின்றி பாதிக்கப்பட்டவரே </p><p>*நாங்கள் நிச்சயமாக பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்குவோம்.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/c0a6b263-0dad-4f60-b584-9621b723bb3d">பாகிஸ்தானில் ஆப்கான் மாணவர்கள் மருத்துவம் பயில தடை.. ஏற்கனவே படித்து வரும் மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு</a></p><p>*படிப்பை நிறைவு செய்யும் தருவாயில் இருக்கும் பல நூற்றுக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.</p><p>*உடனடியாக தாயகம் திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/5be92010-e19b-4447-a4f9-35ec13094301">VIDEO: வங்கதேசத்தில் ராணுவ பயிற்சின்போது சீன தயாரிப்பு பீரங்கி வெடித்து விபத்து - 2 வீரர்கள் பலி</a></p><p>*வங்கதேச ராணுவம் இதனை நீண்ட காலமாகப் பயன்படுத்தி வருகிறது.</p><p>*2 வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/97d84f96-1449-43af-89c9-086e404098d1">SIR: பாரத ரத்னா பெற்றவருக்கே இந்த நிலைமையா?.. தேர்தல் ஆணையத்தின் கிடுக்குபிடியில் 92 வயது விஞ்ஞானி</a></p><p>*16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் நடந்து வருகிறது.</p><p>*நன்கறியப்பட்ட பிரபலங்களும் சிக்கலை சந்தித்து வருகின்றனர்.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/af314040-a47a-4091-8eea-f052c3a066e1">சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</a></p><p>*சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p><p>*இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/9b814c8d-4771-4bd0-b5f0-cf843398997d">குஜராத்: கட்டுமானப் பணியின்போது இடிந்து விழுந்த சாரம்.. சிக்கித் தவித்த 13 பேர் மீட்பு</a></p><p>*மீட்கும் பணி நள்ளிரவையும் தாண்டி தீவிரமாக நடைபெற்றது.</p><p>* அங்கிருந்த பெரிய கிரேன் ஒன்றும் இடிபாடுகளின் மீது சாய்ந்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-another-murder-in-chennai-cm-vijay-planning-hero-style-stunt">சென்னையில் மீண்டும் ஒரு கொலை! - முதலமைச்சர் விஜய் ஹீரோ சாகசம் காட்ட திட்டமா?: கனிமொழி</a></p><p>* தலைநகர் சென்னையில் மீண்டும் ஒரு கொலை!</p><p>* நாள்தோறும் தொடரும் கொலை கொள்ளை சம்பவங்களால் ஒரு சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-releases-video-regarding-misa-atrocities">வீட்ல சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்? - 'மிசா' கொடுமைகள் குறித்து மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியீடு</a></p><p>* யார் என்னை கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்ற முடியாது.</p><p>* விதவிதமான ரீல்ஸ் போட்டு ஒரு தலைமுறையையே வீணாக்கி வருகிறீர்கள்.</p>]]></content:encoded></item><item><title>அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியானது த.வெ.க.: உறுதி செய்தது தேர்தல் ஆணையம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/election-commission-recognized-state-political-party-for-tvk</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/election-commission-recognized-state-political-party-for-tvk#comments</comments><guid isPermaLink="false">d2bf1c36-5aa3-4759-85f2-0b901f4c8dbf</guid><pubDate>Thu, 10 Sep 2026 06:59:13 +0000</pubDate><atom:updated>2026-09-10T06:59:13.096Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,Election Commission of India,tvk,இந்திய தேர்தல் ஆணையம்,விசில் சின்னம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/bqrnkhin/TVK.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[  தவெக]]></media:title><media:description type="html"><![CDATA[  தவெக]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/bqrnkhin/TVK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியாக தமிழக வெற்றி கழகத்தை இந்திய தேர்தல் ஆணையம் உறுதி செய்தது.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/தவெக">தமிழக வெற்றிக்கழகம்</a> சந்தித்த முதல் தேர்தலிலேயே அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் விசில் சின்னத்தில் போட்டியிட்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரி, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்று ஆட்சி நடத்தி வருகிறார். </p><p>இந்த நிலையில், தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியாக தமிழக வெற்றிக்கழகத்தை இந்திய தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது. மேலும்,  தமிழக வெற்றிக்கழக தேர்தல் சின்னமான விசில் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது. </p><p>இதன் காரணமாக தமிழகத்தில் மாநில அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 6 இல் இருந்து 7-ஆக உயர்ந்துள்ளது.</p><p>திமுக, அதிமுக, சிபிஐ, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர், தேமுதிக ஆகிய 6 கட்சிகள் மாநில அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆகும். அந்த பட்டியலில் த.வெ.க.கட்சியும் இப்போது சேர்க்கப்பட்டுள்ளது.</p><p>எனவே இந்த இடைத்தேர்தலில் த.வெ. க. வேட்பாளர்களுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்படுவது உறுதியாகி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரூ.3 லட்சத்தில் புதிய &apos;iPhone Duo&apos;: பாங்காக் சென்று வாங்கியும் பணத்தை மிச்சப்படுத்தலாம்! ஒரு சுவாரஸ்யக் கணக்கீடு</title><link>https://www.maalaimalar.com/technology/new-iphone-duo-for-rs-3-lakh-you-can-save-money-by-buying-it-in-bangkok</link><comments>https://www.maalaimalar.com/technology/new-iphone-duo-for-rs-3-lakh-you-can-save-money-by-buying-it-in-bangkok#comments</comments><guid isPermaLink="false">6433c766-9242-49e3-a1c1-33d520df4ec9</guid><pubDate>Thu, 10 Sep 2026 10:08:14 +0000</pubDate><atom:updated>2026-09-10T10:08:14.293Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா,பாங்காக்,Bangkok,Indian,ஆப்பிள் நிறுவனம்,iPhone Duo,ஐபோன் டுவோ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/yrfnt848/iphone.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ iPhone Duo  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/yrfnt848/iphone.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தொழில்நுட்பம் (Technology)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் ஐபோன் டுவோ மாடலின் ஆரம்ப விலை (256GB storage) ரூ.2,99,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. </p><p>ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மடிப்புத் திறனுடைய போனான 'ஐபோன் டுவோ' மாடலைச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய போன் தொழில்நுட்ப உலகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், இந்தியாவில் இதன் அதிகப்படியான விலை நுகர்வோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.</p><h2><strong>இந்தியாவில் உச்சகட்ட வி</strong>லை</h2><p>இந்தியாவில் <a href="https://www.maalaimalar.com/technology/mobilephone/new-apple-ceo-unveils-latest-iphone-lineup">ஐபோன் டுவோ</a> மாடலின் ஆரம்ப விலை (256GB storage) ரூ.2,99,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் உயர் ரக 2TB மாடலின் விலை ரூ.4,49,900 வரை செல்கிறது. அதிகபட்ச இறக்குமதி வரிகள் மற்றும் பிற உள்ளூர் வரிகள் காரணமாக உலக நாடுகளிலேயே இந்தியாவில்தான் இதன் விலை மிக அதிகமாக உள்ளது.</p><h2>பாங்<strong>காக் சுற்றுலா</strong></h2><p>தாய்லாந்தின் பாங்காக்கில் இதன் ஆரம்ப விலை 78,999 தாய் பாட் (சுமார் ரூ. 2,30,000) ஆகும். இந்தியாவில் விற்கும் விலையை விட தாய்லாந்தில் ரூ.70,000 குறைவாக உள்ளது. ஒரு நபர் இந்தியாவில் இந்த போனை வாங்குவதற்குப் பதிலாக பாங்காக் சென்று, இரண்டு நாட்கள் தங்கி, போனை வாங்கி வந்தாலும் பணத்தை மிச்சப்படுத்த முடியும் என்பதைப் பின்வரும் கணக்கீடு உணர்த்துகிறது.</p><p>* தாய்லாந்தில் ஐபோன் டுவோ விலை: ரூ. 2,30,000</p><p>* டெல்லியிலிருந்து பாங்காக் இருவழி விமானக் கட்டணம்: ரூ.30,000</p><p>* இரண்டு நாட்கள் ஹோட்டல் தங்குமிடம்: ரூ.10,000</p><p>* உணவு மற்றும் இதர செலவுகள்: ரூ.15,000</p><p>* மொத்த செலவு: ரூ.2,85,000</p><p>இந்தியாவில் போனின் விலையான ரூ.2,99,900 உடன் ஒப்பிடும்போது, பாங்காக்கிற்குச் சென்று 2 நாட்கள் சுற்றுலா முடித்துத் திரும்பினாலும் ரூ.14,900 வரை சேமிக்க முடியும்.</p><p>அமெரிக்காவில் இதன் ஆரம்ப விலை சுமார் ரூ.1.90 லட்சமாக உள்ளது. அதேபோல் ஹாங்காங்கில் ரூ.2.12 லட்சத்திற்கும், துபாயில் ரூ.2.20 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெளிநாடுகளுக்கு அடிக்கடி பயணிக்கும் இந்தியர்கள், தங்களின் பயணத்தின்போதே இத்தகைய விலையுயர்ந்த மின்னணு சாதனங்களை வாங்குவது கூடுதல் நன்மையைத் தரும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>உத்தர பிரதேசத்தில் அரசு மருத்துவர்கள் இனி 70 வயது வரை பணியாற்றலாம் – மாநில அரசின் புதிய முடிவு!</title><link>https://www.maalaimalar.com/news/national/uttar-pradesh-extends-govt-doctors-service-reappointment-allows-practice-up-to-age-70</link><comments>https://www.maalaimalar.com/news/national/uttar-pradesh-extends-govt-doctors-service-reappointment-allows-practice-up-to-age-70#comments</comments><guid isPermaLink="false">5e652059-66b9-4bb2-b958-846b8119a638</guid><pubDate>Thu, 10 Sep 2026 10:06:05 +0000</pubDate><atom:updated>2026-09-10T10:06:05.484Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Uttar Pradesh,உத்தரபிரதேசம்,government doctors,Public Health,Retirement Age Extended,Doctor Shortage</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/uzap5p43/Government-Doctors" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Government Doctors ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/uzap5p43/Government-Doctors?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">உத்தர பிரதேச</a> மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிலவி வரும் மருத்துவர்கள் பற்றாக்குறையைப் போக்குவதற்காக, அரசு மருத்துவர்கள் ஓய்வு பெற்ற பிறகும் 70 வயது வரை பணியாற்றும் வகையில் மறு நியமனம் செய்ய அம்மாநில அரசு அதிரடி முடிவை எடுத்துள்ளது.</p><h2><strong>மருத்துவர்கள் பற்றாக்குறைக்கு தீர்வு</strong></h2><p>இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக உத்தர பிரதேசம் திகழ்கிறது. இங்குள்ள <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88">அரசு மருத்துவமனைகள்</a>, ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் சமுதாய சுகாதார மையங்களுக்கு தினமும் லட்சக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.</p><p>அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கையைக் கையாளுவதற்கும், தகுதியான நிபுணத்துவ மருத்துவர்களின் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கும் இந்த புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.</p><h2><strong>65-லிருந்து 70 ஆக உயர்வு</strong></h2><p>தற்போது நடைமுறையில், உத்தர பிரதேச அரசு மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயது 65 ஆக உள்ளது. புதிய திட்டத்தின்படி, 65 வயதை எட்டி ஓய்வு பெறும் தகுதியான மருத்துவர்கள், தங்களின் விருப்பத்தின் பேரில் மறு நியமனம் மூலம் 70 வயது வரை தங்களது சேவையைத் தொடரலாம் என்று<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81"> மத்திய அரசு</a> கூறியுள்ளது.</p><h2><strong>ஆணை பிறப்பிக்கும் பணிகள் தீவிரம்</strong></h2><p>இதுகுறித்து உத்தர பிரதேச மாநில சுகாதார அமைச்சரும், துணை முதல்வருமான <strong>பிரஜேஷ் பதக்</strong> கூறுகையில், "மாநிலத்தின் அரசு சுகாதாரக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தவும், மூத்த மற்றும் நிபுணத்துவ மருத்துவர்களின் மருத்துவ அனுபவத்தை ஏழை எளிய நோயாளிகளுக்கு முழுமையாகக் கொண்டு சேர்க்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. </p><p>இதற்கான அரசாணையை வெளியிடும் பணிகளைச் சுகாதாரத் துறை தற்போது தீவிரமாகத் தொடங்கியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.</p><p>இந்த மறு நியமன முறையின் மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற அரசு மருத்துவமனைகளில் மூத்த மருத்துவர்களின் வழிகாட்டுதல்களும், தடையற்ற மருத்துவச் சேவைகளும் பொதுமக்களுக்குத் துரிதமாகக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>இளையராஜாவின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் - டெல்லி உயர் நீதிமன்றத்தில் ‘சரிகம’ நிறுவனம் மனுத்தாக்கல்!</title><link>https://www.maalaimalar.com/news/topnews/saregama-files-petition-in-delhi-high-court-seeking-attachment-of-ilaiyaraajas-assets</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/saregama-files-petition-in-delhi-high-court-seeking-attachment-of-ilaiyaraajas-assets#comments</comments><guid isPermaLink="false">386c3f8a-2af8-46d0-af94-4fec884296d7</guid><pubDate>Thu, 10 Sep 2026 09:55:27 +0000</pubDate><atom:updated>2026-09-10T09:55:27.946Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இளையராஜா,Delhi HC,டெல்லி உயர் நீதிமன்றம்,ilaiyaraaja,Saregama,சரிகம</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/04u2n8ox/New-Project-2026-09-10T152211.436.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இளையராஜாவின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் - டெல்லி உயர் நீதிமன்றத்தில் ‘சரிகம’ நிறுவனம் மனுத்தாக்கல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/04u2n8ox/New-Project-2026-09-10T152211.436.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><content:encoded><![CDATA[ <p>இசைஞானி <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/why-work-with-young-directors-ilaiyaraaja-emotional-answer-to-karthik-subbaraj">இளையராஜா</a>வுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி,‘சரிகம’ நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. </p><p>நீதிமன்றம் விதித்த பதிப்புரிமை இடைக்காலத் தடையை மீறி, இளையராஜா பாடல்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகக் கூறி இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.</p><h2>சொத்துகளை பறிமுதல் செய்க...</h2><p>அந்த மனுவில், விதிமீறலில் ஈடுபட்டதற்காக இளையராஜாவை சிவில் சிறையில் அடைக்கவும், அவரது அசையும் மற்றும் அசையா சொத்துகளை பறிமுதல் செய்யவும் சரிகம நிறுவனம் கோரியுள்ளது. </p><p>மேலும், பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை விற்பனை செய்து, அதன் மூலம் கிடைக்கும் தொகையை சரிகம நிறுவனத்திடம் ஒப்படைக்க அதிகாரி ஒருவரை நியமிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.</p><h2>நீதிமன்ற தடை உத்தரவு என்ன?</h2><p>இளையராஜா இசையமைத்த 134 திரைப்படங்களின் பாடல்களுக்கு உரிமை கொண்டாடவோ, அவற்றைப் பயன்படுத்தவோ அல்லது பிறருக்கு உரிமம் வழங்கவோ கூடாது என பிப்ரவரி 13 அன்று டெல்லி உயர் நீதிமன்றம் ஒரு இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்திருந்தது. </p><p>இந்த இடைக்கால உத்தரவை ரத்து செய்யக்கோரி இளையராஜா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து, ஜூலை 1 அன்றும் அந்த உத்தரவை உறுதி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p>திரைப்படத் தயாரிப்பாளர்களிடமிருந்து அந்தப் பாடல்களின் முறையான பதிப்புரிமையைப் பெற்றுள்ளதாக ‘சரிகம’ தரப்பில் வாதிடப்பட்டது. </p><h2>வழக்கின் பின்னணி</h2><p>இந்தத் தடையையும் மீறி, அமேசான் மியூசிக், ஐடியூன்ஸ், ஜியோசாவன் மற்றும் ஸ்பாட்டிஃபை, யூடியூப் போன்ற தளங்களில் இளையராஜா தரப்பு பட்டியல்களின் கீழ் அந்தப் பாடல்கள் தொடர்ந்து கிடைக்கப் பெற்று வருகின்றன என்று சரிகம குற்றம் சாட்டியுள்ளது.</p><h2>நீதிமன்றத்தின் தற்போதைய நடவடிக்கை</h2><p>இந்நிலையில் இன்று சரிகம நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், சரிகம நிறுவனத்தின் புகாருக்கு பதிலளிக்குமாறு இளையராஜாவிற்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டு, வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தவெக அரசும் ஆதரிக்கிறதா?- கூடுதல் கொள்ளை தான் மாற்றமா?- அன்புமணி கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-question-tn-govt-for-omni-bus-fare-issue</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-question-tn-govt-for-omni-bus-fare-issue#comments</comments><guid isPermaLink="false">0eb3c820-4ea6-4297-9b32-3a345f827d2f</guid><pubDate>Thu, 10 Sep 2026 09:45:00 +0000</pubDate><atom:updated>2026-09-10T09:45:00.327Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,Omni Bus,ஆம்னி பேருந்து,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/77zw122a/anbumani.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்- ஆம்னி பேருந்து]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்- ஆம்னி பேருந்து]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/77zw122a/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழக அரசு இனியாவது விழித்துக் கொண்டு தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையையொட்டி சென்னையிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல திட்டமிட்டிருக்கும் நிலையில், அதைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் ஆம்னி பேருந்துகள் வரலாறு காணாத கட்டணக் கொள்ளையில்  ஈடுப்பட்டிருக்கின்றன. அதைத் தடுக்க வேண்டிய கடமையையும், பொறுப்பையும் கொண்ட தமிழக அரசு, இந்தக் கட்டணக் கொள்ளைக்கு எதிராக இதுவரை பெயரளவில் கூட எச்சரிக்கை விடுக்காதது கண்டிக்கத்தக்கது.</p><h2><strong>சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டம்</strong></h2><p>தமிழ்நாட்டில் வரும் 14-ஆம் தேதி விநாயகர்  சதுர்த்தி கொண்டாடப்படவுள்ளதையொட்டி அரசு விடுமுறை  விடப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய இரு நாள்களான சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் 3 நாள்கள் தொடர் விடுமுறையைக் கொண்டாடும் வகையில், வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வாழும் மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.  இதைப் பயன்படுத்திக் கொண்டு நாளை செப்டம்பர் 11-ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு சென்னையில் இருந்து புறப்படும் ஆம்னி பேருந்துகளில் திருச்சிக்கு ரூ.3,999 வரையிலும்,  மதுரைக்கு ரூ.4000 வரையிலும்,  கோவைக்கு ரூ.6154  வரையிலும் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.</p><p>வரும் 14-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னைக்கு  திரும்ப திருச்சியிலிருந்து ரூ.4499, மதுரையிலிருந்து ரூ.4899, கோவையிலிருந்து ரூ.4799 வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சென்னையிலிருந்து 300 கி.மீ.க்கும் குறைந்த தொலைவில் உள்ள கும்பகோணத்திற்கு செல்ல ரூ.3179 வரையிலும், அங்கிருந்து சென்னை திரும்ப ரூ.3419 வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  இந்த கட்டண விகிதத்தில் 4 பேர் கொண்ட குடும்பம் திருச்சிக்கு சென்று வர வேண்டும் என்றால் பேருந்துக்காக  ரூ.34 ஆயிரம் வரை செலவழிக்க வேண்டும். இது சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பும் மக்களில் 90 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை விட  அதிக தொகையாகும்.  வரலாறு காணாத கட்டணக் கொள்ளைக்கு எடுத்துக்காட்டு இது தான்.</p><p>இந்தக் கட்டணக் கொள்ளையை தனியார் ஆம்னி பேருந்துகள் ரகசியமாகக் கூட செய்யவில்லை.  இந்தக் கட்டண விவரங்கள் ஆன்லைன் முன்பதிவு இணைய தளங்களில்  வெளியிடப்பட்டு முன்பதிவுகள் செய்யப்பட்டு வருகின்றன. அனைத்து ஊடகங்களிலும் இந்தக்கட்டணக் கொள்ளை தொடர்பாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனாலும் இந்தக் கட்டணக் கொள்ளையைத் தடுக்க தவெக அரசு எதுவும் செய்யவில்லை.</p><p>திமுக ஆட்சியில் இருந்த ஐந்தாண்டுகளிலும் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் கொள்ளை கொடிகட்டி பறந்தது. இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியும், பிற கட்சிகளும் கண்டனம் தெரிவிக்கும் போது, பெயரளவுக்காகவாவது கட்டணக் கொள்ளையை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதைப் போல  திமுக அரசு  காட்டிக் கொண்டது.  ஆனால், தவெக அரசு அதையும்  செய்யவில்லை. மாறாக, திமுக ஆட்சியில்  தனியார் ஆம்னி பேருந்துகளில் வசூலிக்கப்பட்டதை விட 20% முதல் 50% வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  இது தான் தவெக ஆட்சியில்  ஏற்பட்ட மாற்றமா?</p><p>தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை  ஆட்சியாளர்கள் தடுக்க வேண்டும்; அதற்காக கட்டண நிர்ணயக் குழுவை அமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பல முறை ஆணையிட்டிருக்கிறது. ஆனால், கடந்த காலங்களில் அந்த ஆணைகள் மதிக்கப்படவில்லை. ஆனால், தூய சக்தி என்று கூறிக் கொள்ளும் தவெக ஆட்சியிலும் அதே நிலை  தொடர்வது கவலையளிக்கிறது.  தமிழக அரசு இனியாவது விழித்துக் கொண்டு தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு முன்பாக வரலாற்று ஒப்பந்தம்: இந்தியாவில் 105 பயணிகள் விமானங்களை விற்பனை செய்ய ரஷியா திட்டம்!</title><link>https://www.maalaimalar.com/news/world/historic-deal-before-brics-summit-russia-plans-to-sell-105-passenger-planes-in-india</link><comments>https://www.maalaimalar.com/news/world/historic-deal-before-brics-summit-russia-plans-to-sell-105-passenger-planes-in-india#comments</comments><guid isPermaLink="false">fb52dd41-d840-4987-8a8a-0adcd784cd26</guid><pubDate>Thu, 10 Sep 2026 09:36:23 +0000</pubDate><atom:updated>2026-09-10T09:36:23.415Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,Russia,BRICS Summit,பிரிக்ஸ் உச்சிமாநாடு,ரஷியா,Pinnacle Air</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/sn550g7p/air.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pinnacle Air]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/sn550g7p/air.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களை இணைக்கும் பிராந்திய வான்வழிப் போக்குவரத்து மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. </p><p>வரவிருக்கும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு முன்னோடியாக டெல்லியில் நடைபெற்று வரும் Innoprom.India தொழில்முறை கண்காட்சியில் ரஷியாவின் யுனைடெட் ஏர்கிராப்ட் கார்ப்பரேஷன் நிறுவனம், இந்திய விமான நிறுவனங்களுடன் சுமார் 105 பிராந்திய பயணிகள் விமானங்களை வழங்குவதற்கான முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. இது இரு நாடுகளுக்கு இடையேயான சிவில் விமானப் போக்குவரத்து உறவில் ஒரு பெரிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.  </p><h2>இந்திய விமா<strong>ன நிறுவனங்களின்</strong> பங்களிப்பு</h2><p>இந்த பிரம்மாண்ட ஒப்பந்தத்தின் கீழ் ரஷியாவின் IL-114-300 ரக டர்போப்ராப் பயணிகள் விமானங்கள் இந்திய சந்தைக்கு வரவுள்ளன. இதன்படி பினாகள் ஏர் நிறுவனம் 50 விமானங்களையும், ஏர் கேரளா நிறுவனம் 20 விமானங்கள் வரையிலும் வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன. மேலும் <a href="https://www.maalaimalar.com/news/world/trump-promises-5000-per-person-to-the-public-if-they-vote-for-the-republican-party-in-the-midterm-elections">Sleek Aviation </a>நிறுவனத்துடன் 35 விமானங்களை வழங்குவதற்கும், அந்த நிறுவனத்தின் தளத்தில் முழுமையான விமான சிமுலேட்டர் பயிற்சியகத்தை அமைப்பதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.  </p><h2>உள்நாட்டி<strong>லேயே தயாரிக்</strong>கும் முயற்சி</h2><p>பிராந்திய விமானங்களை நேரடியாக வழங்குவதோடு மட்டுமல்லாமல், ரஷியாவின் SJ-100 ரக 100 இருக்கைகள் கொண்ட பயணிகள் விமானங்களை இந்தியாவில் உரிமம் பெற்று தயாரிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளும் தீவிரமடைந்துள்ளன. இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான ஹெச்.ஏ.எல் (Hindustan Aeronautics Limited) நிறுவனத்துடன் இணைந்து இந்த விமானங்களின் பாகங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பது மற்றும் பராமரிப்புச் சேவைகளை வழங்குவது குறித்த பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.  </p><h2>மேக் இன் இந்<strong>தியா திட்ட</strong>த்திற்கு ஊக்கம்</h2><p>இந்தியாவில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களை இணைக்கும் பிராந்திய வான்வழிப் போக்குவரத்து மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. அதற்கு ஏற்ற வகையில் 64 முதல் 70 இருக்கைகள் கொண்ட IL-114-300 விமானங்கள் குறைந்த செலவில் இயக்கக்கூடியவையாக இருக்கும். மேலும் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின்கீழ் விமானப் பராமரிப்பு மற்றும் பாகங்கள் தயாரிக்கும் வசதிகள் இந்தியாவில் அமைவது உள்ளூர் வேலைவாய்ப்புகளையும் விண்வெளித் துறைத் திறன்களையும் மேம்படுத்தும்.  </p> ]]></content:encoded></item><item><title>துலீப் டிராபி: 13 ஆண்டுக்கு பிறகு சாம்பியன் பட்டம் வென்றது கிழக்கு மண்டலம்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/east-zone-clinches-the-duleep-trophy</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/east-zone-clinches-the-duleep-trophy#comments</comments><guid isPermaLink="false">c8d273a8-267a-4b55-b585-704eb2ea3263</guid><pubDate>Thu, 10 Sep 2026 09:32:00 +0000</pubDate><atom:updated>2026-09-10T09:32:00.989Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Ishan Kishan,இஷான் கிஷன்,திலக் வர்மா,Tilak Varma,துலீப் டிராபி,Duleep Trophy,East Zone,கிழக்கு மண்டலம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/x7edthl6/kishan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ishan kishan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/x7edthl6/kishan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>துலீப் டிராபி தொடரில் 13 ஆண்டுக்கு பிறகு கிழக்கு மண்டல அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.</strong></em></p><p>துலீப் டிராபி இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை தொடங்கியது. இதில் கிழக்கு மண்டலம், தெற்கு மண்டலம் அணிகள் மோதின. டாஸ் வென்ற கிழக்கு மண்டலம் அணி பேட்டிங் தேர்வு செய்தது.</p><h2>இஷான் கிஷான் இரட்டை சதம்</h2><p>அதன்படி, முதலில் பேட் செய்த கிழக்கு மண்டலம் அணி முதல் இன்னிங்சில் 708 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. கேப்டன் இஷான் கிஷன் பொறுப்புடன் ஆடி இரட்டை சதம் கடந்தார். அவர் 270 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். குமார் குஷாக்ரா சதமடித்து 101 ரன்னில் வெளியேறினார்.</p><p>தெற்கு மண்டல அணி சார்பில் திரிபுரன விஜய் 4 விக்கெட்டும், சமா மிலிந்த், ஷ்ரேயாஸ் கோபால் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p>அடுத்து ஆடிய தெற்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தேவ்தத் படிக்கல் அரை சதம் கடந்து 62 ரன்னில் அவுட்டானார்.</p><h2>சதத்தை தவறவிட்ட திலக் வர்மா</h2><p>கேப்டன் திலக் வர்மா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 99 ரன்னில் வெளியேறினார்.</p><p>இறுதியில், தெற்கு மண்டலம் அணி முதல் இன்னிங்சில் 336 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கிழக்கு மண்டல அணியை விட 372 ரன்கள் பின்தங்கியது தெற்கு மண்டல அணி.</p><p>கிழக்கு மண்டல அணி சார்பில் முகேஷ் குமார் 3 விக்கெட்டும், ஷமி, குரேஷி, ஷிகர் மோகன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.</p><p>இதையடுத்து, கிழக்கு மண்டல அணி 2வது இன்னிங்சில் களமிறங்கியது. 13 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து கிழக்கு மண்டல அணி தடுமாறியது.</p><h2>இஷான் கிஷன் 80</h2><p>இஷான் கிஷன், ஷிகர் மோகன் ஜோடி பொறுப்புடன் ஆடியது. ஷிகர் மோகன் அரை சதம் கடந்து 52 ரன்னில் ஆட்டமிழந்தார். 3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 126 ரன்கள் சேர்த்தது. இஷான் கிஷன் 80 ரன்னில் அவுட்டானார். 6வது விக்கெட்டுக்கு குமார் குஷாக்ரா-குரேஷி ஜோடி 52 ரன்கள் சேர்த்தது.</p><h2>சதமடித்த குரேஷி</h2><p>இந்நிலையில், ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. குஷாக்ரா 46 ரன்னில் அவுட்டானார். குரேஷி பொறுப்புடன் ஆடி சதம் கடந்தார். அவருக்கு அன்குல் ராய் ஒத்துழைப்பு கொடுத்து அரை சதம் கடந்தார். அவர் 64 ரன்னில் வெளியேறினார்.</p><p>7-வது விக்கெட்டுக்கு குஷாக்ரா - அன்குல் ராய் ஜோடி 150 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.</p><p>இறுதியில், கிழக்கு மண்டல அணி 2வது இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 388 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. குரேஷி 116 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதனால் ஆட்டம் சமனில் முடிந்தது.</p><p>இதன்மூலம் முதல் இன்னிங்சில் லீட் பெற்ற கிழக்கு மண்டல அணி 13 ஆண்டுக்கு பிறகு சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.</p><p>ஆட்ட நாயகன் விருது இஷான் கிஷனுக்கும், தொடர் நாயகன் விருது திலக் வர்மாவுக்கும் வழங்கப்பட்டது.</p> ]]></content:encoded></item><item><title>டெல்லியில் லாரியில் இருந்து கீழே விழுந்து வெடித்த ஆக்சிஜன் சிலிண்டர் – ஒருவர் பலி, 4 பேர் படுகாயம்!</title><link>https://www.maalaimalar.com/news/topnews/oxygen-cylinder-explodes-after-fall-from-truck-in-delhi-one-killed-four-injured</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/oxygen-cylinder-explodes-after-fall-from-truck-in-delhi-one-killed-four-injured#comments</comments><guid isPermaLink="false">a372ac2e-b481-442b-b68a-8918e6e8cb5c</guid><pubDate>Thu, 10 Sep 2026 09:28:07 +0000</pubDate><atom:updated>2026-09-10T09:28:07.224Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>cylinder explosion,delhi,Employee dies,டெல்லி,Tragic Incident,ஆக்சிஜன் சிலிண்டர்,Industrial Accident</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/adajb08j/Cylinder-Explosion" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Cylinder Explosion  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/adajb08j/Cylinder-Explosion?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p>தென்கிழக்கு <a href="https://www.maalaimalar.com/topic/delhi">டெல்லியின் </a>ஓக்லா தொழில்பேட்டை பகுதி - 1 இல் உள்ள ஒரு தனியார் வணிகக் குடோனில் ஆக்சிஜன் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது. </p><p>இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார் மற்றும் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.</p><h2>எப்படி நடந்தது?</h2><p>காசியாபாத்திலிருந்து ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு வந்த மினி லாரியிலிருந்து, ஊழியர்கள் சிலிண்டர்களைக் கீழே இறக்கிக் குடோனுக்குள் மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். </p><p>அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு சிலிண்டர் லாரியிலிருந்து நழுவி கீழே விழுந்ததில், அது பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.</p><h2>பாதிப்புகள்</h2><p>இந்த வெடிப்பின் தாக்கத்தால் அருகில் வேலை செய்துகொண்டிருந்த மோஹித் சிங் (35) என்ற ஊழியர் உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.</p><p>படுகாயமடைந்த மற்ற 4 ஊழியர்கள் உடனடியாக மீட்கப்பட்டு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8E%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88">டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்</a> தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>நடவடிக்கை</h2><p>பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாமல் அலட்சியமாக இருந்ததாகக் கூறி, டெல்லி போலீசார் குடோன் உரிமையாளரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>புகார் கொடுத்த மறுநாளே வாலிபர் படுகொலை: இதுதான் சட்டம் - ஒழுங்கை காக்கும் அழகா?- அன்புமணி கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-question-to-tn-govt-for-tiruvottiyur-youth-murder-case</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-question-to-tn-govt-for-tiruvottiyur-youth-murder-case#comments</comments><guid isPermaLink="false">9426f389-e534-4ea7-aab0-93f120494af8</guid><pubDate>Thu, 10 Sep 2026 09:27:05 +0000</pubDate><atom:updated>2026-09-10T09:27:05.153Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,வாலிபர் கொலை,youth murder</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/zjonvev3/Anbumaniramadoss01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/zjonvev3/Anbumaniramadoss01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னையில் இனியும் இத்தகைய கொலைகள் நடக்காத வகையில் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த பிரதீப் ராஜ் என்ற துறைமுக ஒப்பந்த பணியாளர்  அவரது வீட்டிற்கு அருகிலேயே  கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். சென்னையில் இத்தகைய கொலைகள் அதிகரித்து வருவது அச்சமும், கவலையும் அளிக்கிறது. கொல்லப்பட்ட பிரதீப் ராஜின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2><strong>பொய் வழக்கு</strong></h2><p>பிரதீப் இராஜின் பெற்றோர் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் கடன் வாங்கியது தொடர்பாக  இரு தரப்புக்கும் இடையே  பகை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் தரப்பிலிருந்து தமக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக  காவல்துறையில்  பிரதீப் இராஜ் புகார் செய்திருக்கிறார். சில வாரங்களுக்கு முன் இது தொடர்பாக திருவொற்றியூர் காவல் நிலையத்திலும், துணை ஆணையரிடமும் அவர் புகார் அளித்த நிலையில், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையினர், பிரதீப் இராஜையே பொய் வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.</p><p>அதைத் தொடர்ந்து நேற்று முன்நாள் திருவொற்றியூர் காவல் நிலையத்தில்  தமது உயிருக்கு அச்சுறுத்தல் விடப்படுவது குறித்து  பிரதீப் இராஜ் மீண்டும் புகார் செய்துள்ளார். அப்போதும் அதன் மீது நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளர், தமக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக ஊடகங்களிடம் பிரதீப் இராஜ் குற்றஞ்சாட்டியிருந்தார். அதற்கு அடுத்த நாளான நேற்றிரவு பிரதீப் இராஜ் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார்.</p><p>பிரதீப் இராஜ் அளித்த புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்க முடியும். ஆனால்,  நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியவர்களுக்கு ஆதரவாக  பிரதீப் இராஜையே காவல் ஆய்வாளர் மிரட்டியது தான் எதிரிகளுக்கு துணிச்சலைக் கொடுத்துள்ளது.  உயிருக்கு பாதுகாப்பு கேட்பவர்களுக்கு ஆதரவாக இல்லாமல், கொலை மிரட்டல் விடுப்பவர்களுக்கு ஆதரவாக செயல்படுவது தான் காவல்துறையின் கொள்கையா? இந்த  விஷயத்தில் கடமையை செய்யத் தவறிய ஆய்வாளர் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>சென்னையில் கடந்த சில நாள்களுக்கு முன் ஆளும் தவெக நிர்வாகி உள்ளிட்ட இருவர் ஒரே நாளில் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். அந்த பதட்டம் தணியும் முன்பே அடுத்தக் கொலை நிகழ்ந்துள்ளது. இதனால் அச்சமடைந்துள்ள மக்கள், இது தான் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் அழகா?  என வினா எழுப்புகின்றனர்.  சென்னையில்  இனியும் இத்தகைய கொலைகள் நடக்காத வகையில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க அரசும், காவல்துறையும் நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தொழிலதிபர் மர்ம கொலை: சிசிடிவி கண்காணிப்பால் ஆத்திரமடைந்து மருமகளே தீட்டிய சதித்திட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/national/businessman-mystery-murder-daughter-in-law-plot-over-cctv-surveillance</link><comments>https://www.maalaimalar.com/news/national/businessman-mystery-murder-daughter-in-law-plot-over-cctv-surveillance#comments</comments><guid isPermaLink="false">a02b5d3c-cec9-4fe5-8711-e0cde303458d</guid><pubDate>Thu, 10 Sep 2026 09:18:58 +0000</pubDate><atom:updated>2026-09-10T09:18:58.038Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Uttar Pradesh,கான்பூர்,Kanpur,business man murder,உத்தரப் பிரதேச மாநிலம்,தொழிலதிபர் கொலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/m5ux1enj/kill.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Business man Murder  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/m5ux1enj/kill.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாமனாரை கொலை செய்வதற்காகத் தனது வீட்டில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர் ஒருவரையும், மற்றொரு நபரையும் கூலிப்படையாக ஷாலு அமர்த்தியுள்ளார். </p><p>உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் முன்னணி தொழிலதிபரான வினீத் மின்சா பகுதியில் உள்ள தனது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்தத் திடீர் மரணம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.</p><h2>கொ<strong>ள்ளை நாடகம் முறி</strong>யடிப்பு</h2><p><a href="https://www.maalaimalar.com/news/world/controversy-erupts-over-trumps-lavish-gifts-to-white-house-female-aides">தொழிலதிபர் கொலை</a> செய்யப்பட்ட இடத்தில் சோதனை செய்த காவல்துறையினருக்குத் தொடக்கத்தில் இது அடையாளம் தெரியாத நபர்களால் நடந்த கொள்ளைச் சம்பவமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், வீட்டில் இருந்த பணமோ அல்லது விலைமதிப்பற்ற நகைகளோ எதுவும் திருடப்படவில்லை என்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதனால், குடும்பத்திற்குள் ஏற்பட்ட மோதல் அல்லது முன்விரோதம் காரணமாகவே இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை முடுக்கப்பட்டது.</p><h2>சி<strong>சிடிவி கேமரா பதிவு</strong></h2><p>போலீசாரின் தீவிர விசாரணையில், வினீத் மின்சாவின் மருமகள் ஷாலு மின் மீது சந்தேகம் வலுத்தது. விசாரணையில், வீட்டில் வினீத் மின்சா பொருத்தியிருந்த சிசிடிவி கேமராக்கள் மூலம் தன்மீது எப்போதும் தீவிர கண்காணிப்பு செலுத்தப்பட்டு வந்ததும், குடும்பத்தின் நிதி விஷயங்களில் தனக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததும் ஷாலுவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது தெரியவந்தது. இதனால், தன் மாமனாரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.</p><h2>கொ<strong>லை நடக்கும்போதே கொ</strong>ண்டாட்டம்</h2><p>மாமனாரை கொலை செய்வதற்காகத் தனது வீட்டில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர் ஒருவரையும், மற்றொரு நபரையும் கூலிப்படையாக ஷாலு அமர்த்தியுள்ளார். சம்பவத்தன்று அவர்கள் வீட்டிற்குள் புகுந்து வினீத் மின்சாவைக் கொலை செய்தபோது, வெளியில் எந்தச் சந்தேகமும் வராத வகையில் ஷாலு பார்ட்டியில் ஈடுபட்டுக்கொண்டிருந்துள்ளார். கொலை நடந்த பின்னர், ஒன்றும் அறியாதவர் போல் அழுது நாடகமாடியுள்ளார்.</p><h2> சிசிடிவி <strong>ஆதாரங்களால் கைதான மரு</strong>மகள்</h2><p>கொலை நடைபெற்ற இடத்தில் கைப்பற்றப்பட்ட ஆதாரங்கள், தொலைபேசி அழைப்புப் பதிவுகள்  மற்றும் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து காவல்துறையினர் ஆய்வு செய்தனர். இறுதியில், ஷாலுவுக்கும் கூலிப்படைக்கும் இடையேயான தொடர்பை உறுதி செய்த போலீசார், மருமகள் ஷாலுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. கூட்டணிக்கு கம்யூனிஸ்டு கட்சிகளின் ஆதரவு உண்டு - திருமாவளவன் 
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-says-communist-parties-support-tvk-alliance</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-says-communist-parties-support-tvk-alliance#comments</comments><guid isPermaLink="false">55f79639-88a9-4fcd-91b8-c10f1f4670e3</guid><pubDate>Thu, 10 Sep 2026 09:14:15 +0000</pubDate><atom:updated>2026-09-10T09:14:15.875Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,thirumavalavan,திருமாவளவன்,vijay,tvk,MISA,மிசா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/116gjazi/tirumavalavan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Thirumavalavan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/116gjazi/tirumavalavan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-</p><p>இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ் கட்சி ஆகிய 2 கட்சிகளும் கடந்த ஜூலை 1-ந் தேதி நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்திலும் பங்கேற்கவில்லை. ஆனால் த.வெ.கவுக்கு எங்கள் ஆதரவு உண்டு என்ற கருத்தை ஏற்கனவே தெளிவுபட கூறியிருக்கிறார்கள். இப்போதும் அதே நிலைபாட்டில் தான் 2 கட்சிகளும் உள்ளன. த.வெ.க. ஆட்சி 5 ஆண்டு காலம் நீடிப்பதற்கு இடது சாரி கட்சிகளின் ஆதரவு உண்டு. அதில் எந்த தயக்கவும் இல்லை என்ற கருத்தை அவர்கள் உறுதிபட தெரிவித்து இருக்கிறார்கள். </p> <p>தேர்தல் கூட்டணி தொடர்பாக எந்த நிலைப்பாட்டையும் இப்போதைக்கு அவர்கள் எடுக்கவில்லை. </p><p>தேர்தல் நேரத்தில் தொகுதி உடன்பாடு வைத்துக் கொள்வதில் எந்த நெருடலும் இல்லை. அது குறித்து தேர்தல் நேரத்தில் அறிவிப்போம் என்று இரு தரப்பிலும் 2 கட்சிகளின் தலைவர்களும் கூறியிருக்கிறார்கள். எனவே புதிதாக உருவாகி இருக்கிற மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணிக்கு இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி ஆகிய 2 கட்சிகளின் ஆதரவு உண்டு என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/misa-issue-dmk-vs-tvk-it-wing-crash">மிசா</a> ஒடுக்குமுறைக்கு ஆளானவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-releases-video-regarding-misa-atrocities">மு.க.ஸ்டாலின்</a> தனது உடல் மொழி எதேச்சையானது என முதலமைச்சர் விஜய் விளக்கம் அளித்து விட்டார்.</p><p>புதிய தலைமை செயலகம் கட்டுவது தொடர்பாக அந்த பகுதி மக்களின் கருத்துக் களை கேட்டறிந்து இந்த முடிவை நடைமுறைப்படுத்த வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>சூரியின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி - மண்டாடி படத்தை பாராட்டிய சிவகார்த்திகேயன்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/success-born-of-sooris-hard-work-sivakarthikeyan-praises-the-movie-mandela</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/success-born-of-sooris-hard-work-sivakarthikeyan-praises-the-movie-mandela#comments</comments><guid isPermaLink="false">065420bd-9e4f-4e4b-ad0f-985c10fc10b5</guid><pubDate>Thu, 10 Sep 2026 09:06:55 +0000</pubDate><atom:updated>2026-09-10T09:06:55.389Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>sivakarthikeyan,மண்டாடி,Soori,Mandaadi,சிவகார்த்திகேயன்,சூரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/48685dm9/New-Project-2026-09-10T143541.503.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சூரியின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி - மண்டாடி படத்தை பாராட்டிய சிவகார்த்திகேயன்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/48685dm9/New-Project-2026-09-10T143541.503.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இயக்குநர் மதிமாறன் புகழேந்தி மற்றும் நடிகர் சூரி கூட்டணியில் உருவாகி இன்று (செப்.10) திரையரங்குகளில் வெளியாகி கவனம் ஈர்த்துவரும் படம் <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-teaser-for-sooris-mandadi-has-been-released">மண்டாடி</a>. </p><p>படத்தில் சூரியுடன் மஹிமா நம்பியார், நடிகர்கள் சத்யராஜ், சுஹாஷ், ரவீந்திர விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். </p><p>மீனவர்களின் வாழ்க்கை பின்னணியை அடிப்படையாக கொண்டும், அவர்களுக்குள் நடக்கும் படகுப்போட்டியின் அடிப்படையிலும் மண்டாடி திரைக்கதை அமைந்துள்ளது.</p><p>ஆர்.எஸ்.இன்போடைன்மெண்ட் நிறுவனம் தயாரித்து இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். படம் இன்று வெளியான நிலையில் ரசிகர்கள் பலரும் நல்ல விமர்சனத்தை அளித்து வருகின்றனர். </p><p>இந்நிலையில் இப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயனும் பாராட்டியுள்ளார். படம் தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர்.,</p><p>“மண்டாடி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. சூரி அண்ணனின் கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் தளராத அர்ப்பணிப்புக்கு உண்மையான பலன் கிடைத்துள்ளது.</p><p>நல்ல கதை எப்போதும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்! இந்த மாபெரும் வெற்றிக்கு என் அன்பு அண்ணனுக்கும், ஒட்டுமொத்தக் குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் - டெண்டர் வழங்கியதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thaimaman-gold-ring-scheme-case-madras-high-court-dismisses-challenging-gold-ring-contract</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thaimaman-gold-ring-scheme-case-madras-high-court-dismisses-challenging-gold-ring-contract#comments</comments><guid isPermaLink="false">bac3c362-9378-48ab-9259-07f7647f6bf4</guid><pubDate>Thu, 10 Sep 2026 08:59:29 +0000</pubDate><atom:updated>2026-09-10T08:59:29.733Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Madras High Court,சென்னை ஐகோர்ட்,தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்,thaimaman gold ring scheme</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/538ec4k6/highcourt.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Madras High Court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/538ec4k6/highcourt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நகை தரமாக இல்லாவிட்டால் டெண்டரை அதிகாரிகள் ரத்து செய்வார்கள். இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.</p><p>அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராமில் (22 கேரட்) <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thaaimaman-thanga-modhiram-scheme-delay-arun-raj-explanation">தங்க மோதிரம்</a> அளிக்கும் திட்டத்துக்கான டெண்டர் ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.</p><p>இந்த திட்டத்தின் கீழ் 4 லட்சத்து 41 ஆயிரத்து 667 தங்க மோதிரங்களை கொள்முதல் செய்வதற்கான டெண்டரை தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் கோரியுள்ளது.</p> <p>ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்துக்கு வழங்கிய டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னையை சேர்ந்த பொற்கொல்லர் ராஜ் என்பவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%90%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D">சென்னை ஐகோர்ட்டில்</a> வழக்கு தாக்கல் செய்திருந்தார்.</p><p>இந்த வழக்கு தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், 'தங்க மோதிரத்தை செய்து மாநிலம் முழுவதும் உள்ள 107 மையங்களுக்கு ஹால்மார்க் முத்திரையுடன் அனுப்ப வேண்டும் என டெண்டர் விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> <p>ஹால்மார்க் முத்திரை பெறுவதற்கு ஒரு நகைக்கு ரூ.45 கட்டணம் செலுத்த வேண்டியுள்ள சூழலில், 4 லட்சத்து 41 ஆயிரத்து 667 தங்க மோதிரங்களை, ரூ.4,465 ரூபாய்க்கு சப்ளை செய்வதாக ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் கூறியிருப்பது, வணிக ரீதியாக சாத்தியமற்றது. இதை, அனுமதித்தால் அந்த நகைகள் தரமானதாக இருக்காது. மேலும் மருத்துவ சேவைகள் கழகம், மருந்து பொருட்கள் கொள்முதல் செய்வதில்தான் நிபுணத்துவம் பெற்றது. அந்த கழகத்துக்கு தங்கத்தை பற்றி என்ன தெரியும்' என்று வாதிடப்பட்டது.</p> <p>அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'மனுதாரர் திட்டத்தை எதிர்த்தும், டெண்டரை எதிர்த்தும்தான் வழக்கு தொடர முடியுமே தவிர, டெண்டர் வழங்கியதை எதிர்த்து வழக்கு தொடர முடியாது. இதன்மூலம், அரசுக்குதான் லாபம் வரும். ஒருவேளை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் ஏராளமான தங்கம் உள்ளதால் இந்த தொகையை அவர்கள் குறிப்பிட்டிருக்கக்கூடும். நகை தரமாக இல்லாவிட்டால், டெண்டரை அதிகாரிகள் ரத்து செய்வார்கள். இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல' எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.</p><p>இந்த வழக்கில் விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. கூட்டணியின் பெயரில் மட்டும்தான் மதச்சார்பின்மை- தமிழிசை சவுந்தரராஜன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/secularism-only-in-title-tamilisai-soundararajan-criticises-dmk-led-front</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/secularism-only-in-title-tamilisai-soundararajan-criticises-dmk-led-front#comments</comments><guid isPermaLink="false">787662fd-0d26-421c-acaf-362f4847d985</guid><pubDate>Thu, 10 Sep 2026 08:44:30 +0000</pubDate><atom:updated>2026-09-10T08:44:30.320Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,tamizhisai soundararajan,tvk,தமிழிசை சவுந்தரராஜன்,TVK alliance,தவெக கூட்டணி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/wjtz00h9/tamizhisai.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tamilisai soundararajan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/wjtz00h9/tamizhisai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>த.வெ.க. கூட்டணியின் பெயரில் மட்டும்தான் மதச்சார்பின்மை உள்ளதாக முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.</p><p>த.வெ.க. தலைமையில் உருவாகி இருக்கும் புதிய கூட்டணி பற்றி தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டு உள்ள வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>மதச்சார்பற்ற <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF" rel="nofollow">சமூகநீதி</a> வெற்றிக் கூட்டணியில் பெயரில் மட்டுமே மதச் சார்பின்மை, செயல்பாட்டில் முழுக்க குழப்பம். புதுச்சேரி மற்றும் தமிழ் நாட்டிற்கான இடைத் தேர்தலை முன்னிட்டு ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என்று ஒரு கூட்டணியை அறிவித்திருக்கிறார்கள்.</p><p>ஆனால், ஐ.யு.எம்.எல். போன்ற கட்சிகளை கூட்ட ணியில் வைத்துக்கொண்டு, இதை எப்படி ‘மதச்சார்பற்ற கூட்டணி’ என்று அழைக்க முடியும்? மதச்சார்பின்மை என்பது பெயரில் வைத்துக் கொள்ளும் அடையாள மல்ல.</p><p>அனைத்து மதங்களையும் சமமாக அணுகும் கொள்கையாக இருக்க வேண்டும். கொள்கையில் குழப்பம், கூட்டணியில் குழப்பம், பிரதமர் வேட்பாளரில் குழப்பம், மாநில உரிமையில் தோல்வி- ஒட்டுமொத்த மாக இது ஒரு ‘குழப்பமான கூட்டணி’. எனவே, இதை ‘மனிதா பிமானமற்ற, சமூகநீதியற்ற, கொள்கையற்ற குழப்பக் கூட்டணி’ என்றுதான் மக்கள் பார்ப்பார்கள்.</p><p>இவ்வாறு அதில் கூறி உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மிசா விவகாரம்: திமுக Vs தவெக ஐடி விங் மோதல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/misa-issue-dmk-vs-tvk-it-wing-crash</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/misa-issue-dmk-vs-tvk-it-wing-crash#comments</comments><guid isPermaLink="false">2c50ed07-c4c5-4c34-a76e-fed54a2ff48e</guid><pubDate>Thu, 10 Sep 2026 08:41:28 +0000</pubDate><atom:updated>2026-09-10T08:41:28.723Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,தவெக,விஜய்,vijay,tvk,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/xxtsek07/dmk.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்- விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/xxtsek07/dmk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>வரலாற்றில் நிலைத்து நிற்கும் மாபெரும் தியாகத்தை உருவ கேலி செய்த உங்களின் கேடுகெட்ட அற்பத்தனத்தை தமிழ்நாட்டு மக்கள் காரித் துப்புகிறார்கள்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">தி.மு.க.</a> தகவல் தொழில்நுட்ப அணியின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><p>எச்சில் பழம் பொறுக்கும் அணில்கள் கண்ணை மூடிக்கொண்டால், உழைப்பாலும் தியாகத்தாலும் கட்டமைக்கப்பட்ட திமுகவின் வரலாறு இருண்டு போய்விடாது! ஊர் முழுவதும் பொய்யைப் பரப்பும் சாக்கடைக் கூட்டத்தை அம்பலப்படுத்த அரசியல் நாகரிகத்தோடு எங்கள் தலைவர் அளித்த விளக்கம், அந்தத் தற்குறிகளுக்கானது அல்ல; அவர்களின் பொய்யை நம்பி அப்பாவி மக்கள் மீண்டும் ஒருமுறை ஏமாந்து விடக்கூடாது என்பதற்காகத்தான்.</p><p>வரலாறு, தியாகம் என்றால் என்னவென்றே தெரியாமல், சமூக வலைதளங்களில் பொய்யையும் அவதூறையும் வாந்தியெடுக்கும் Abuser பொறுக்கிகள் நடத்தும் கட்சிதான் தவெக என்பதை மறுபடியும் தாங்கள் எடுத்த வாந்தியால் நிரூபித்து இருக்கிறார்கள்.</p><h2><strong>ரத்தம் சிந்திய நிஜம்!</strong></h2><p>மூளையும் மூஞ்சியும் இல்லாமல், தந்தையின் தயவால் சினிமாவில் வளர்ந்து, ஏசி கேரவனுக்குள் பவுடர் பூசி, 'டூப்' வைத்துச் சண்டை போட்ட இந்தத் தற்குறிக்கு, சிறைக் கொட்டடியில் MISA கைதிகள் போலீசாரின் பூட்ஸ் காலால் மிதிபட்டுச் சிந்திய ரத்தத்தின் மதிப்பு எப்படித் தெரியும்?</p><p>பத்திரிகையாளர்களை நேருக்கு நேர் சந்திக்கத் துப்பில்லாமல், சட்டமன்றத்தில் கேட்ட கேள்விக்கான பதிலுரைக்கு மூன்று நாட்கள் மனப்பாடம் செய்து, கேமரா முன்னால் கத்தி, கதறி நடிக்கும் தற்குறிக்கு நிஜ வலிகளின் உணர்வு எப்படிப் புரியும்? மிசா தியாகம் என்பது, சினிமாவில் நடிப்பது போல, பின்னாடி கையை வைத்து தடவிக்கொண்டு பஞ்சு மெத்தையில் உருள்வதல்ல; அது கொள்கை உறுதி மாறாமல், சிறைச்சாலையின் இரும்புக் கம்பிகளுக்கிடையே ரத்தம் சிந்திய நிஜம்!</p><p>Call sheet காப்பியையும், வருமானத்தை மறைத்து வாங்கிய 'IT Raid' காப்பியையும், வசனகர்த்தாக்கள் எழுதிக்கொடுக்கும் Script பேப்பரையும் மட்டுமே பார்த்துப் பழகிய மூளையே! உனக்கு எமர்ஜென்சி காலத்தில் நடந்த மிசா கொடூரங்களை ஆவணப்படுத்திய இஸ்மாயில் கமிஷன் அறிக்கை எனும் வரலாற்று ஆவணத்தைப் படித்துப் புரிந்துகொள்ளும் வக்கு எங்கே இருக்கப் போகிறது?</p><p>முத்தமிழறிஞர் கலைஞர் அணிந்திருந்த 'மஞ்சள் துண்டு', இந்த மாநிலத்தின் சமூகநீதியைக் காத்த சுயமரியாதைக் குறியீடு! ஆனால், இந்த 'டம்மி' முதலமைச்சரின் மேக்கப்பை கலைத்துவிட்டால், உள்ளே மிஞ்சுவது வெற்று அரசியல் சூனியமும், நிர்வாகத் திறமையின்மையும்தான்.</p><p>நீங்கள் விமர்சிக்கும் அந்த 'கட்டுமரம்', இந்தியாவின் பல அரசியல் சுனாமிகளையே நெஞ்சை நிமிர்த்தி எதிர்கொண்டு தமிழ்நாட்டைக் காத்தது மாபெரும் வரலாறு! அதில் ஒன்றுதான் எங்கள் தலைவரும் கழக உடன்பிறப்புகளும் MISA சிறைவாசத்தை எதிர்கொண்ட எமர்ஜென்சி எனும் நெருக்கடி நெருப்பாறு. </p><h2><strong>காகிதக் கப்பல் மூழ்கும்</strong></h2><p>கொள்கை, சித்தாந்தம் எதுவும்  இல்லாமல், தியாகிகளைக் கொச்சைப்படுத்தி அரசியல் செய்ய நினைக்கும் உங்கள் அநாகரிகச் சாக்கடையிலேயே, தவெக எனும் காகிதக் கப்பல் மூழ்கும். </p><p>இதோ அந்த எமர்ஜென்சி காலத்து மிசா சிறைவாசம்  தொடர்பான வராலற்று ஆதாரங்கள். குரைக்கும் விலங்குகளே கவ்விக் கொண்டு ஓடுங்கள்.</p><p>வரலாற்றில் நிலைத்து நிற்கும் மாபெரும் தியாகத்தை உருவ கேலி செய்த உங்களின் கேடுகெட்ட அற்பத்தனத்தை தமிழ்நாட்டு மக்கள் காரித் துப்புகிறார்கள்.</p><p>காரணம், இந்த ஆவணங்களில் உள்ள பதிவுகளை அவர்கள் தங்கள் நெஞ்சில் பதிய வைத்திருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">எச்சில் பழம் பொறுக்கும் அணில்கள் கண்ணை மூடிக்கொண்டால், உழைப்பாலும் தியாகத்தாலும் கட்டமைக்கப்பட்ட திமுகவின் வரலாறு இருண்டு போய்விடாது! ஊர் முழுவதும் பொய்யைப் பரப்பும் சாக்கடைக் கூட்டத்தை அம்பலப்படுத்த அரசியல் நாகரிகத்தோடு எங்கள் தலைவர் அளித்த விளக்கம், அந்தத் தற்குறிகளுக்கானது… <a href="https://t.co/b9ONe1zPvC">pic.twitter.com/b9ONe1zPvC</a></p>&mdash; DMK IT WING (@DMKITwing) <a href="https://x.com/DMKITwing/status/2097949053216846160?ref_src=twsrc%5Etfw">September 10, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>தற்கொலையை தடுக்கும் தேவதையின் குரல்.. நடக்க இயலாத நிலையிலும் பலரின் உயிரைக் காப்பாற்றும் லட்சுமி!</title><link>https://www.maalaimalar.com/news/national/the-voice-of-the-goddess-who-prevents-suicide-lakshmi-saves-the-lives-of-many-even-when-unable-to-walk</link><comments>https://www.maalaimalar.com/news/national/the-voice-of-the-goddess-who-prevents-suicide-lakshmi-saves-the-lives-of-many-even-when-unable-to-walk#comments</comments><guid isPermaLink="false">6137199e-912a-4319-b834-a37733fcec90</guid><pubDate>Thu, 10 Sep 2026 08:34:54 +0000</pubDate><atom:updated>2026-09-10T08:34:54.620Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தற்கொலை,suicide,உலக தற்கொலை தடுப்பு தினம்,World Suicide Prevention Day,தற்கொலை தடுப்பு மையம்,Suicide Prevention Center</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/mfk5mcjd/tn-14.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ லட்சுமி நரசம்மா ]]></media:title><media:description type="html"><![CDATA[ லட்சுமி நரசம்மா ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/mfk5mcjd/tn-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலக தற்கொலை தடுப்பு தினமான இன்று, தற்கொலை தடுப்பு மையத்தில் பணியாற்றும் லட்சுமி நரசம்மா என்ற தேவதை பற்றி காண்போம். </p><p>இன்று (செப்டம்பர் 10)  உலக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/families-being-torn-apart-by-increasing-number-of-suicides-764533">தற்கொலை </a>தடுப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.  </p><p>இத்தினத்தின் கருப்பொருள் "<a href="https://www.maalaimalar.com/news/puducherry/puducherry-ranks-7th-in-suicide-cases-in-india">தற்கொலை </a>பற்றிய கருத்தாக்கத்தை மாற்றுவோம்", "தற்கொலை பற்றிய உரையாடலைத் தொடங்குவோம்" என்பவையாகும். </p><p>உலகளவில், குறிப்பாக இந்தியாவில் நாள்தோறும் பதிவாகும் தற்கொலைகள் எண்ணிக்கை கவலையளிக்கும் வகையில் அதிகரித்து வருகிறது. </p><p>குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள் அழுத்தத்தை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் போக்கு இந்தியாவில் அண்மைக் காலமாக அதிகம் காணப்படுகிறது. </p><p>எனவே தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்ற விழிப்புணர்வு தற்காலத்தில் வேறெதையும் விட மிக மிக அவசியமான ஒன்றாக உருவெடுத்துள்ளது. </p> <h2>தற்கொலைகளின் மூல காரணம்</h2><p>பெரும்பாலான தற்கொலைகள், குறிப்பாக இளைஞர்களின் தற்கொலைகளில் உள்ள பொதுவான விஷயம், அவர்கள் அந்த கணத்தில் தங்களின் பிரச்னையை கேட்பார் யாரும் இல்லை, நாம் உலகில் தனித்து விடப்பட்டுள்ளோம் என்று நினைப்பது தான்.</p><p>அவர்களின் இந்த எண்ணத்தை போக்க, அவர்களின் பிரச்சனையை முன்னறிந்து கேட்பது அவசியம். அவர்களே சில நேரம் யாரிடமாவது பேசினால் மன ஆறுதல் பெறலாம் என நினைப்பதுண்டு. ஆனால் அதற்கான சூழல் வாய்க்காமல் போவதும் தற்கொலைகள் நிகழ காரணம்.</p><h2>குரல்கள்</h2><p>அவ்வாறானவர்களிடம் அவர்களின் பிரச்னையை கேட்டறிந்து ஆறுதல் சொல்ல ஆலோசனை அளிக்க அரசு சார்பிலும், தன்னார்வ நிறுவனங்கள் சார்பிலும் தற்கொலை தடுப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் செயல்படும் உதவி எண்கள் வாயிலாக மன நல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.</p><p>அவ்வாறு தாங்கள் அழைத்துப் பேசும்போது மறுமுனையில் இருந்து ஆறுதலாக பேசுபர்களின் குரல்களை மட்டுமே தற்கொலை எண்ணம் கொண்டவர்கள் கேட்டிருப்பார்கள். </p><p>பின்னொரு கணத்தில் அந்த குரலே தங்களை தங்கள் வாழ்வின் இக்கட்டான கணத்தில் தாங்கள் எடுக்கவிருந்த விபரீத முடிவில் இருந்து காத்திருக்கின்றன என்பதை பலர் உணரலாம்.</p><p>ஆனால் அந்த குரல்கள் யாருடைவை, அவர்கள் எவ்வாறான வாழ்க்கையை வாழ்கின்றனர் என்பது பெரும்பாலும் சிந்திக்கப்படுவதில்லை. ஆனால் முகமறியா அவர்களே பலரின் உயிரைக் காப்பாற்றிய, காப்பாற்றி வரும் தேவதைகள்.</p><p>அப்படியான ஒரு தேவதையே ஐதராபாத்தை சேர்ந்த 55 வயதான லட்சுமி நரசம்மா.</p><p>பலரது வாழ்வை தற்கொலையில் இருந்து காத்துள்ள லட்சுமியின் சொந்த வாழ்க்கையே, வாழ்வின் கஷ்டங்களை எப்படி கடந்து வருவது என்ற படிப்பினையை வழங்குவதாக விளங்குகிறது.</p><h2>லட்சுமி நரசம்மாவின் கதை</h2><p>லட்சுமி நரசம்மா தனது 20வது வயதிலிருந்தே Rheumatoid Arthritis எனும் முடக்குவாத நோயினால் பாதிக்கப்பட்டவர் ஆவார்.</p><p>நோயின் தீவிரத்தால் 10 ஆண்டுகளாக உடல் செயலிழப்பு ஏற்பட்டு நடக்கவும் முடியாத நிலையில் வாழ்ந்து வரும் லட்சுமி நரசம்மா, தங்கள் வாழ்வில் ஒரு குறுகிய புள்ளியில் முடங்கி விபரீத முடிவை எட்டுபவர்களை ஆற்றுப்படுத்தி அவர்களின் வாழ்வை முன்னோக்கி நகர்த்த உதவுகிறார்.</p><p>கடந்த 2024 வரை லட்சமியும் ஒரு வித மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்தபோதோலும் தனது பக்கத்து வீட்டுக்காரர் அளித்த ஊக்கத்தினால் தன்னார்வ ஆலோசகராகப் பயிற்சி பெற்றார்.</p><p>தற்கொலை தடுப்பு உதவி மையமான '1Life' எண்களைத் தொடர்பு கொண்டு மன உளைச்சலில் பேசுபவர்கள் பலருக்கு, மறுமுனையில் தங்களுக்கு ஆறுதல் அளிக்கும் 55 வயதான லட்சுமி நரசம்மா கடந்த 10 ஆண்டுகளாக நடக்கக்கூட முடியாமல் முடங்கியுள்ளார் என்ற உண்மை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.</p> <h2>உயிர் காக்கும் தேவதை</h2><p>"மற்றவர்களின் துன்பங்களைக் கேட்கும்போது என் சொந்த வலி மிகவும் சிறியதாகத் தோன்றுகிறது. பிரச்சனைகளை மட்டுமே சிந்தித்து மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்ளத் துணிகிறார்கள், அந்த எண்ணத்திற்குத் தடை போடுவதே எங்கள் வேலை. எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வு உண்டு." என கூறுகிறார் நரசம்மா.</p><p>கடந்த ஒன்றரை ஆண்டுகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட அழைப்புகளைப் பேசி லட்சுமி நரசம்மா பல உயிர்களை காத்துள்ளார்.</p><p>வேலை கிடைக்காததாலும், காதலித்த பெண்ணை மணக்க குடும்பத்தினர் எதிர்த்ததாலும் மன அழுத்தத்தில் இருந்த இளைஞருக்கு நம்பிக்கையளித்து, தோல்வி என்பது தற்காலிகமானது எனப் புரியவைத்து வாழ்வின் மீதான விருப்பத்தை மீட்டுத் தந்துள்ளார்.</p> <p>தொழில் தோல்வியால் குடும்பத்தாரால் மதிக்கப்படவில்லை என எண்ணி தற்கொலை எண்ணத்திற்குத் தள்ளப்பட்ட நபருக்கு, சிறுகச் சிறுக மீண்டும் ஒரு புதிய வேலையை தொடங்கி வாழ்க்கையை மீட்டெடுக்க வழிகாட்டியுள்ளார்.</p><p>இவ்வாறாக, விவசாயியான கணவர் மற்றும் பிள்ளைகளின் உறுதியான ஆதரவோடு, லட்சுமி நரசம்மா இன்று  நூற்றுக்கணக்கானோருக்கு நம்பிக்கையின் முகவரியாக செயல்பட்டு வருகிறார்.</p>]]></content:encoded></item><item><title>சிறுநீரில் இருந்து யூரியாவை பிரித்து செங்கோட்டையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி - தேசிய புலனாய்வு முகமை</title><link>https://www.maalaimalar.com/news/national/terrorist-used-urea-extracted-from-urine-for-red-fort-attack-nia</link><comments>https://www.maalaimalar.com/news/national/terrorist-used-urea-extracted-from-urine-for-red-fort-attack-nia#comments</comments><guid isPermaLink="false">594f5008-b49b-45f5-a51c-92f6b36a3514</guid><pubDate>Thu, 10 Sep 2026 08:30:55 +0000</pubDate><atom:updated>2026-09-10T08:30:55.415Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>National Investigation Agency,Senkottai,Delhi RedFort</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/9dzwlkv5/Untitled-design-45.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Delhi Red Fort terror attack]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/9dzwlkv5/Untitled-design-45.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி செங்கோட்டையில் கடந்த ஆண்டு கார் குண்டுவெடிப்பு மூலம் பயங்கரவாதி நடத்திய தாக்குதலில், வெடிகுண்டுகளை தயாரிக்க சிறுநீரில் இருந்து யூரியாவை பயன்படுத்தி இருக்கலாம் என தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88">செங்கோட்டையில்</a> 2025 நவம்பர் 10 அன்று பயங்கரவாதி உமர் உன் நபி கார் குண்டுவெடிப்பை நடத்தினான். இந்த பயங்கரவாத தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். </p><h3><strong>குற்றப்பத்திரிக்கை தாக்கல்</strong></h3><p>இதையடுத்து இந்த தாக்குதல் நடந்தது குறித்து தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.</p><p>பயங்கரவாதி உமர் உன் நபி, தாக்குதலுக்கு முந்தைய நாள் வரை சுமார் 11 நாட்களாக நூஹ் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.</p><p>பயங்கரவாதியின் முதல் இலக்கு லால் மந்திர் ஆக இருந்ததாக தெரிகிறது, அவர் மாலை 6:37 மணியளவில் சுன்ஹாரி மசூதி வாகன நிறுத்துமிடத்தில் இருந்து வெளியே நடந்ததாக கூறப்பட்டது.</p><p>இதையடுத்து அவர் தனது காரை ஓட்டி சென்று லால் மந்திர் அருகே நிறுத்த முயற்சி செய்துள்ளார். ஆனால் மத்திய டெல்லியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால், கடைசி நிமிடத்தில் திட்டம் மாற்றப்பட்டு செங்கோட்டைக்கு சென்றுள்ளார்.</p><h3>கடைசி நேரத்தில் திட்டம் மாற்றம்</h3><p>டெல்லி செங்கோட்டையை சென்றடைந்த சில நிமிடங்களுக்கு பிறகு, மாலை 6:50 மணிக்கு குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.</p><p>2023 முதல் 2025-ஆம் ஆண்டு காலகட்டத்திற்குள் பயங்கரவாதி, 12 முறை செங்கோட்டைக்கு சென்றுள்ளார். அவரது கடைசி பயணம் குண்டுவெடிப்புக்கு 6 மாதங்களுக்கு முன்பு, மே 1 அன்று நிகழ்ந்தது.</p><p>இதுபோன்ற பயணங்களின் போது பயங்கரவாதியும், அவரது நண்பர்களும் தங்களது கைபேசிகளை அணைத்து விடுவார்கள். இது அவர்களின் டிஜிட்டல் நடமாட்ட பதிவுகளை மறைக்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டிருக்கலாம் என தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.</p><h3><strong>யூரியா நைட்ரேட் மூலம் வெடிபொருட்கள்</strong></h3><p>பயங்கரவாதிக்கு சொந்தமான பென் டிரைவ்களில் உள்ள தரவுகள், யூரியா நைட்ரேட்டை பயன்படுத்தி வெடிபொருட்கள் தயாரிக்கும் முறை குறித்து சேமிக்கப்பட்டு இருந்தது.</p><p>மேலும் சிறுநீரில் இருந்து யூரியாவை பிரித்தெடுப்பதற்கான மாற்று முறையும் அந்த தரவுகளில் இருந்துள்ளது.</p><p>பயங்கரவாதி தங்கி இருந்த அறையில் துர்நாற்றம் வீசக் காரணமாக இருந்த, சிறுநீர் நிரம்பிய ஒரு பாலித்தீன் பையை கண்டதாக நேரில் பார்த்த சாட்சிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>இவ்வாறு டெல்லி செங்கோட்டையில் பயங்கரவாதி நடத்திய தாக்குதல் குறித்து, தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்காவில் புதிய  AI கல்லூரிக்கு இந்திய தம்பதியின் பெயர் சூட்டப்படும் - டெக்சாஸ் பல்கலைக்கழகம் அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/world/indian-couple-to-name-new-ai-college-in-texas</link><comments>https://www.maalaimalar.com/news/world/indian-couple-to-name-new-ai-college-in-texas#comments</comments><guid isPermaLink="false">e00f6ffa-2b18-4683-b9e2-527ae62ca2e5</guid><pubDate>Thu, 10 Sep 2026 08:17:54 +0000</pubDate><atom:updated>2026-09-10T08:17:54.473Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய வம்சாவளி,donation,Indian Descent,Anuradha And VikasSinha,US College,AI and Data Science,அமெரிக்ககல்வி,நன்கொடை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/echdglx5/Anuradha-VikasSinha" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anuradha & VikasSinha  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/echdglx5/Anuradha-VikasSinha?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE">அமெரிக்காவின் </a>வடக்கு டெக்சாஸ் பல்கலைக்கழகத்திற்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பொறியாளர் தம்பதியினர் (20 மில்லியன்) இந்திய மதிப்பில் சுமார் ரூ.165 கோடிக்கும் மேல் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.</p><p> இவர்களின் இந்த பெருந்தொகையான பங்களிப்பைப் பாராட்டும் விதமாக, அங்கு புதிதாகத் தொடங்கப்படவுள்ள செயற்கை நுண்ணறிவு கல்லூரிக்கு இவர்களது பெயர் சூட்டப்படவுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p><p>புதிதாக உருவாக்கப்படும் இந்த கல்வி நிறுவனத்திற்கு "அனுராதா மற்றும் விகாஸ் சின்ஹா செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட பகுப்பாய்வுக் கல்லூரி" என்று பெயரிடப்படவுள்ளது.</p><h2>செயற்கை நுண்ணறிவின் புதிய மையப்புள்ளி</h2><p>இந்த புதிய கல்லூரி, செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல், சைபர் பாதுகாப்பு, ஹெல்த் இன்ஃபர்மேடிக்ஸ் மற்றும் தகவல் அறிவியல் போன்ற பல்வேறு அதிநவீன தொழில்நுட்பத் துறைகளை ஒருங்கிணைக்கும் ஒரு முதன்மை ஆராய்ச்சி மையமாகச் செயல்படும். </p><p>இது இரண்டு முக்கிய பிரிவுகளாகச் செயல்படவுள்ளது.</p><h2>Division of Applied Intelligence and Informatics: </h2><p>புத்திசாலித்தனமான கணினி அமைப்புகளை உருவாக்குவதிலும், அவற்றை செயல்படுத்துவதிலும் கவனம் செலுத்தும்.</p><h2>Division of Information and Learning Applications</h2><p> மனித மற்றும் நிறுவனச் சூழல்களில் இந்தத் தொழில்நுட்பங்கள் எவ்வாறு பயன்படுகின்றன என்பதை ஆராயும். </p><p>மேலும், இந்த நன்கொடை மூலம் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, பேராசிரியர் பதவிகள், தொழில்முனைவோர் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்ச்சி ஆகியவற்றை ஆதரிக்க ஆறு நிரந்தர நிதியுதவிகள் நிறுவப்படவுள்ளன.</p><h2>அமெரிக்க கனவை குடியேறியவர்கள் உருவாக்குகிறார்கள்</h2><p>இந்த நன்கொடை குறித்து பிராட்காம் நிறுவனத்தின் துணைத் தலைவரான விகாஸ் சின்ஹா பேசுகையில், "கல்வி மட்டுமே எங்கள் வாழ்வில் பல கதவுகளைத் திறந்துவிட்டுள்ளது. </p><p>அந்த வாய்ப்புகளை மற்றவர்களுக்கும் வழங்கவே நாங்கள் இதைச் செய்கிறோம். </p><p>அமெரிக்காவில் குடியேறுபவர்கள் வெறும் அமெரிக்கக் கனவில் பங்கேற்பவர்கள் மட்டுமல்ல, அதை உருவாக்குபவர்களும் கூட என்பதை உணர்த்துவதே இந்த நன்கொடையின் நோக்கம்" என்று பெருமிதத்துடன் கூறினார்.</p><h2>யார் இந்த அனுராதா - விகாஸ் சின்ஹா தம்பதி?</h2><p>இந்தியாவின் உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியரிங் இளங்கலை பட்டம் பெற்ற பிறகு, இந்த தம்பதியினர் மேல் படிப்பிற்காக அமெரிக்கா சென்றனர். </p><p>புளோரிடா அட்லாண்டிக் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்ற விகாஸ் சின்ஹா, பின்னர் 2023 இல் UNT பல்கலைக்கழகத்தில் தனது பிஎச்டி படிப்பை முடித்தார்.</p><p>முன்னதாக 2024 ஆம் ஆண்டில் தரவு அறிவியல் துறையை உருவாக்கவும், 2025 இல் 'சின்ஹா இன்னோவேஷன் லேப்' அமைக்கவும் இவர்கள் இந்த பல்கலைக்கழகத்திற்குப் பெருமளவில் நிதியுதவி செய்துள்ளனர்.</p><p>இவர்களின் இந்த மிகப்பெரிய பங்களிப்பு, மாறிவரும் உலகளாவிய வேலைவாய்ப்பு சந்தைக்கு ஏற்ப மாணவர்களைத் தயார்படுத்தவும், பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சித் திறனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் உதவும் என்று UNT தலைவர் ஹாரிசன் கெல்லர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ரவி மோகன் பிறந்தநாள் சிறப்பு: &apos;An Ordinary Man&apos; படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ravi-mohan-birthday-special-an-ordinary-man-first-look-poster-release</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ravi-mohan-birthday-special-an-ordinary-man-first-look-poster-release#comments</comments><guid isPermaLink="false">2f73f805-f0ff-4229-b46e-5f2a0c582e0f</guid><pubDate>Thu, 10 Sep 2026 08:13:51 +0000</pubDate><atom:updated>2026-09-10T08:13:51.820Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>Yogi-Babu,Ravi Mohan,ரவி மோகன்,நடிகர் யோகி பாபு,An Ordinary Man,Ravi Mohan&apos;s Birthday,ரவி மோகன் பிறந்தநாள்,அன் ஆர்டினரி மேன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/6ks1df1u/jay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ An Ordinary Man ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/6ks1df1u/jay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிறந்தநாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, படத்தின் முதல் பாடலான 'Higher' ப்ரொமோ பாடல் இன்று மாலை 5.05 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியாகிறது. </p><p>நடிகரும் இயக்குனருமான ரவி மோகன் தனது பிறந்தநாளைக் கொண்டாடும் இவ்வேளையில், அவர் இயக்கும் '<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-journey-with-ajith-elevated-me-editor-vijay-velukkutti">An Ordinary Man</a>' திரைப்படத்தின் படக்குழுவினர் அவருக்குச் சிறப்பு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். </p><figure><img alt="Ravi Mohan&apos;s Birthday" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/zvo5mbdl/ravu.jpg" /></figure><p>இதனை முன்னிட்டு, திரைப்படத்தின் சிறப்பு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை வெளியீடு செய்து படக்குழுவினர் தங்களது அன்பைப் பகிர்ந்து கொண்டனர்.</p><h2>யோகி பா<strong>பு கதாநாயகன்</strong></h2><p>முழுக்க முழுக்க நகைச்சுவை மற்றும் குடும்பப் பின்னணியைக் கொண்டு உருவாகும் இப்படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கிறார். 'கோமாளி' படப்பிடிப்பின் போதே யோகி பாபுவிடம், தான் இயக்கும் முதல் படத்தில் அவரையே கதாநாயகனாக்குவதாக ரவி மோகன் உறுதியளித்திருந்தார். அதைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  </p><h2>இன்று மாலை <strong>வெளியாகிற</strong>து Higher ப்ரொமோ பாடல்</h2><p>பிறந்தநாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, படத்தின் முதல் பாடலான 'Higher' ப்ரொமோ பாடல் இன்று மாலை 5.05 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியாகிறது. கெனிஷா பிரான்சிஸ் இசையமைத்துள்ள இந்த ப்ரொமோ பாடல், ரசிகர்களுக்குப் பிறந்தநாள் விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  திரையுலகில் இயக்குநராகப் புதிய பயணத்தைத் தொடங்கும் ரவி மோகனுக்கு, 'An Ordinary Man' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியளிக்கும் எனத் திரை வட்டாரங்கள் வாழ்த்தி வருகின்றன.  </p> ]]></content:encoded></item><item><title>7 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வரும் சீன அதிபர் - பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம் </title><link>https://www.maalaimalar.com/news/national/chance-to-hold-bilateral-talks-with-chinese-president-prime-minister-modi-who-is-coming-to-india-to-attend-the-brics-conference</link><comments>https://www.maalaimalar.com/news/national/chance-to-hold-bilateral-talks-with-chinese-president-prime-minister-modi-who-is-coming-to-india-to-attend-the-brics-conference#comments</comments><guid isPermaLink="false">991873f3-8c99-47c6-b1f1-0dc8785d5281</guid><pubDate>Thu, 10 Sep 2026 08:09:58 +0000</pubDate><atom:updated>2026-09-10T08:09:58.265Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Xi Jinping,ஜி ஜின்பிங்,India-China,BRICS Summit,பிரிக்ஸ் மாநாடு,இந்தியா-சீனா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/ey9b7x7f/tn-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரதமர் மோடி]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர் மோடி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/ey9b7x7f/tn-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா வருகை தரும் சீன அதிபருடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p> <p>இந்தியாவின் தலைமையின் கீழ் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/putin-to-visit-india-for-brics-summit-three-russian-military-aircraft-arrive-for-preparatory-and-security-operations">ரஷிய அதிபர் புதின்</a>, சீன அதிபர் ஜி ஜின் பிங், பிரேசில், தென்னாப்பிரிக்கா, ஈரான் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் நேரில் பங்கேற்கின்றனர்.</p><p>இந்த ஆண்டின் மாநாட்டு மையக்கருத்து "Building for Resilience, Innovation, Cooperation and Sustainability" என்பதாகும்.  </p> <h2>சீன அதிபருடன் பேச்சுவார்த்தை</h2><p>இந்நிலையில் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா வருகை தரும் சீன அதிபருடன் பிரதமர் மோடி, இரு நாட்டு உறவை மேம்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>2020ல் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு, சீன அதிபர் இந்தியாவிற்கு வருவது இதுவே முதல்முறையாகும்.</p><p>கடைசியாக கடந்த 2019 அக்டோபரில் தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் நடைபெற்ற 2nd India-China Informal Summit மாநாட்டிற்கு ஜி ஜின் பிங் வந்திருந்தார்</p> <p>சீன அதிபர் வரும் சனிக்கிழமை பிற்பகலில் டெல்லி வந்தடைவார் என்றும், மாநாட்டின் முதல் நாளான அன்றைய தினமே பிரதமர் மோடியுடன் இருதரப்பு சந்திப்பு நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>கல்வான் தாக்குதல் </h2><p>கடந்த 2019 இல் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி சீன வீரர்கள் கல்வான் பள்ளத்தாக்கில் புகுந்து நடத்திய தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.</p><p>இதையடுத்து <a href="https://www.maalaimalar.com/news/world/ajit-doval-in-china-agreement-on-demarcation-of-india-china-border">சீனாவுடனான இந்தியாவின் உறவு</a> பின்னடைவை சந்தித்த நிலையில் அந்த கசப்புகளை மறந்து பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின் பிங் சந்திப்பு 2025 ஷாங்காய் உச்சிமாநாட்டில் நடைபெற்றது.</p><p>முன்னதாக எல்லைக் கோட்டில் இரு நாட்டு வீரர்களும் இதன்முன் தாங்கள் இருந்த நிலைகளுக்கு திரும்புவதாக 2024 இல் ஒப்புக்கொள்ளப்பட்டது.</p><p>இருந்தபோதும் லடாக் உள்ளிட்ட எல்லைகளில் சீனா, தனது ராணுவ இருப்பை தொடர்ந்து அதிகப்படுத்தியும், ராணுவ கட்டமைப்புகளை மேற்கொண்டும், இமாச்சல பிரதேசத்தின் பகுதிகளை தங்களின் நாட்டு பகுதிகளாக வரைபடம் வெளியிட்டும் இந்தியாவுக்கு அச்சறுத்தலாக இருந்து வருகிறது. </p><p> இந்நிலையில் எல்லையில் அமைதியை மீட்டெடுப்பது மற்றும் பொருளாதாரத் தொடர்புகளை மீண்டும் சீரமைப்பது<sup> </sup>தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு இந்த சந்திப்பு ஒரு புதிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>ரீல்ஸ் பார்த்ததால் நேர்ந்த கொடூரம்: காதல் மனைவியை பீர் பாட்டிலால் அடித்துக் கொன்றுவிட்டு கணவனும் தற்கொலை!</title><link>https://www.maalaimalar.com/news/national/bengaluru-man-kills-wife-over-reels-addiction-and-dies-by-suicide</link><comments>https://www.maalaimalar.com/news/national/bengaluru-man-kills-wife-over-reels-addiction-and-dies-by-suicide#comments</comments><guid isPermaLink="false">321d1a2e-c5d6-4cd0-837a-20c7e1c5b407</guid><pubDate>Thu, 10 Sep 2026 08:05:38 +0000</pubDate><atom:updated>2026-09-10T08:05:38.868Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime,பெங்களூரு,Bangalore,Domestic Violence,கொலைவழக்கு,HALPolice,MurderAndSuicide,Reels Addiction</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/0wddadl8/MurderAndSuicide" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MurderAndSuicide  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/0wddadl8/MurderAndSuicide?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>செல்போனில் எந்நேரமும் ரீல்ஸ் வீடியோ பார்த்துக் கொண்டிருந்ததால் ஏற்பட்ட குடும்பத் தகராறில், 15 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த காதல் மனைவியைப் பீர் பாட்டிலால் அடித்துக் கொன்றுவிட்டு, கணவனும் தூக்குப்போட்டு தற்<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">கொலை</a> செய்துகொண்ட சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2><strong>15 ஆண்டுக்கால காதல் வாழ்க்கை</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE">கர்நாடக </a>மாநிலம் பெங்களூரு எச்.ஏ.எல். காவல் எல்லைக்கு உட்பட்ட விபூதிபுரா பகுதியில் வசித்து வந்தவர் ராகவேந்திரா (38). ஆட்டோ ஓட்டுநரான இவரும், சுருதி (34) என்பவரும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர்.</p><p>இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். குழந்தைகள் இருவரும் தாவணகெரேயில் உள்ள தங்களது பாட்டி வீட்டில் தங்கிப் படித்து வருகின்றனர். சுருதி விபூதிபுராவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.</p><h2><strong>கொலையில் முடிந்த ரீல்ஸ் விவகாரம்</strong></h2><p>ஆரம்பத்தில் மகிழ்ச்சியாகச் சென்ற இவர்களது குடும்ப வாழ்க்கையில், சமீபகாலமாகப் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. சுருதி எந்நேரமும் தனது செல்போனில் சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் வீடியோக்களைப் பார்ப்பதையும், அதில் மூழ்கிக் கிடப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. </p><p>இதனால் தம்பதியினருக்கு இடையே அடிக்கடி கடுமையான வாக்குவாதங்களும், குடும்பத் தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது.</p><h2><strong>நள்ளிரவில் நடந்த கொடூரம்</strong></h2><p>வழக்கம்போல நேற்று முன்தினம் நள்ளிரவிலும் சுருதி செல்போனில் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்ததால், ராகவேந்திராவுக்கும் அவருக்கும் இடையே மீண்டும் கடுமையான தகராறு வெடித்தது. இதில் பெரும் ஆத்திரமடைந்த ராகவேந்திரா, சுருதியைக் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளார்.</p><p>கோபத்தின் உச்சத்துக்கே சென்ற ராகவேந்திரா, வீட்டில் இருந்த பீர் பாட்டிலை எடுத்து சுருதியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த சுருதி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.</p><h2><strong>கணவன் தற்கொலை</strong></h2><p>ஆத்திரத்தில் தனது காதல் மனைவியைக் கொலை செய்துவிட்டதை உணர்ந்த ராகவேந்திரா, அதிர்ச்சியிலும் பயத்திலும் உறைந்தார். </p><p>சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்பதாலும், குற்ற உணர்ச்சியாலும் அவரும் அதே வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.</p><h2><strong><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88">போலீசார் விசாரணை</a></strong></h2><p>அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில், எச்.ஏ.எல். காவல் நிலைய போலீசார் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரின் உடல்களையும் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பினர்.</p><p>முதற்கட்ட விசாரணையில், செல்போன் ரீல்ஸ் வீடியோ பார்ப்பது தொடர்பான தொடர் தகராறே இந்த இரட்டை மரணத்திற்குக் காரணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. </p><p>இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். </p><p>சமூக வலைத்தள மோகத்தால் இரு உயிர்கள் பலியாகி, இரண்டு குழந்தைகள் அனாதையாக நின்றுள்ள இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு 3,520 அரசு சிறப்பு பஸ்கள்- இன்று முதல் இயக்கப்படுகிறது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/3520-special-government-buses-to-operate-from-kilambakkam-to-outstation-destinations-starting-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/3520-special-government-buses-to-operate-from-kilambakkam-to-outstation-destinations-starting-today#comments</comments><guid isPermaLink="false">1e8486b6-67cf-487f-a0a8-d017ace75aba</guid><pubDate>Thu, 10 Sep 2026 08:02:30 +0000</pubDate><atom:updated>2026-09-10T08:02:30.418Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு பஸ்கள்,TN Govt,தமிழக அரசு,special bus,விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/wcg2o8hr/Buskilampakkam.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ சிறப்பு பஸ்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ சிறப்பு பஸ்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/wcg2o8hr/Buskilampakkam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை நகரங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.</strong></em> </p><p>விநாயகர் சதுர்த்தி பண்டிகையான 14-ந்தேதி (திங்கட்கிழமை) அரசு விடுமுறையாகும். சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களோடு விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருவதால் 3 நாட்கள் தொடர் அரசு விடுமுறை  கிடைக்கிறது.</p><p>இதனால் வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்பதால் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் <a href="https://www.maalaimalar.com/topic/சிறப்பு-பஸ்கள்">சிறப்பு பஸ்கள்</a> இயக்கப்படுகிறது. </p><h2><strong>கிளாம்பாக்கம்</strong></h2><p>சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று வியாழக்கிழமை 585 சிறப்பு பஸ்களும் நாளை (வெள்ளிக்கிழமை) 1,255 பஸ்களும் 12-ந் தேதி (சனிக்கிழமை) 1,030 பஸ்களும், 13-ந் தேதி  650 பஸ்களும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. </p><p>கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு மேற்கண்ட இந்த நாட்களில் 585 பஸ்களும் இயக்கப்படுகிறது.</p><p>பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை நகரங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்தில் இருந்து  கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர், புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தலா 110 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது. </p><p>மேலும் 14-ந்தேதி சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் 765 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.</p><p>இன்று முதல் திங்கள்கிழமை வரை பயணம் செய்வதற்கு 95 ஆயிரம் பேர் அரசு பஸ்களில் முன்பதிவு செய்து உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>எளிமை மாறாதவர்..! கார்த்தி குறித்து சர்தார் 2 கதாநாயகி ஆஷிகா நெகிழ்ச்சி</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ashika-rangnath-on-karthis-humility-and-sardar-2-experience</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ashika-rangnath-on-karthis-humility-and-sardar-2-experience#comments</comments><guid isPermaLink="false">a8c399dd-6387-41ea-8247-681825aa1e18</guid><pubDate>Thu, 10 Sep 2026 07:57:26 +0000</pubDate><atom:updated>2026-09-10T07:57:26.616Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>Karthi,கார்த்தி,சர்தார் 2,Ashika Ranganath,ஆஷிகா ரங்கநாத்,sardhar 2</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/36zwu88d/karthi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Actor Karthi- Ashika Ranganath]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/36zwu88d/karthi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கன்னட திரை உலகில் அறிமுகமான ஆஷிகா ரங்கநாத் தற்போது தமிழ், தெலுங்கு திரை உலக ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.</p><p>சர்தார் 2 படத்தில் கார்த்தி ஜோடியாகவும், விஸ்வம்பரா படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-</p><p>கார்த்திக்கு சினிமா மீது மிகுந்த ஆர்வம் உண்டு. அவர் ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் கட்சிதமாக செய்ய விரும்பக் கூடியவர். அவர் இவ்வளவு பெரிய நடிகராக இருந்த போதிலும் மிகவும் எளிமையாகவும் பணிவாகவும் இருப்பது எனக்கு மிகவும் பிடித்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF" rel="nofollow">சிரஞ்சீவி</a> உடன் நடித்தது அற்புதமான அனுபவம். சிறுவயதிலிருந்தே அவரது பாடல்களை கேட்டு அவரது நடனங்களை பார்த்து வளர்ந்தேன் இப்போது அவருடன் நடிப்பதில் நான் பெருமைப்படுகிறேன்.</p><p>அவர் படப்பிடிப்பு தளத்தில் பகிர்ந்து கொள்ளும் அனுபவங்கள் மிகவும் உத்வேகம் அளிக்கின்றன. விஸ்வம்பரா படப்பிடிப்பு தளத்தில் திரிஷாவையும் சந்தித்தேன் அவர் மிகவும் அழகாக இருக்கிறார். </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>அஜித்துடனான பயணம் தான் என்னை உயர்த்தியது- எடிட்டர் விஜய் வேலுக்குட்டி</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-journey-with-ajith-elevated-me-editor-vijay-velukkutti</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-journey-with-ajith-elevated-me-editor-vijay-velukkutti#comments</comments><guid isPermaLink="false">a0a62633-18a3-48b3-928f-b754f35f4a01</guid><pubDate>Thu, 10 Sep 2026 07:50:01 +0000</pubDate><atom:updated>2026-09-10T07:50:01.424Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay velukutty,Ajith Kumar,குட் பேட் அக்லி,சர்தார் 2,அஜித்,Sardar2,PSMithran,விஜய் வேலுக்குட்டி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/13rxh0m9/good.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ajith Kumar -Vijay Velukutty]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/13rxh0m9/good.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சினிமா துறைக்கு வர விரும்புபவர்கள் எடிட்டிங் மேசையை வேறு துறைகளுக்கான நுழைவுவாயிலாகக் கருதக் கூடாது என்று விஜய் வேலுக்குட்டி அறிவுறுத்துகிறார். </p><p>தமிழ் திரையுலகின் முன்னணி படத்தொகுப்பாளர்களுள் ஒருவராக வலம் வரும் விஜய் வேலுக்குட்டி, கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/sardar-2-movie-review-karthi-ps-mithran-collaboration">சர்தார் 2</a>’ திரைப்படத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து தனது திரைப் பயணம் மற்றும் எடிட்டிங் அனுபவங்களை பகிர்ந்துள்ளார். ‘துணிவு’, ‘மார்க் ஆண்டனி’, ‘குட் பேட் அக்லி’ போன்ற பிரம்மாண்டப் படங்களில் பணியாற்றியுள்ள இவர், நடிகர் அஜித் குமாருடனான கூட்டணி தான் தனது தொழில் வாழ்க்கையிலும் பொருளாதார ரீதியாகவும் மிக முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தியது என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.</p><h2>படத்<strong>தொகுப்பு கலை</strong></h2><p>சினிமா துறைக்கு வர விரும்புபவர்கள் எடிட்டிங் மேசையை வேறு துறைகளுக்கான நுழைவுவாயிலாகக் கருதக் கூடாது என்று விஜய் வேலுக்குட்டி அறிவுறுத்துகிறார். கல்லூரி படிப்புக்காலத்தில் உருவான ஆர்வமே தம்மை முழுநேர எடிட்டராக மாற்றியதாகக் குறிப்பிடும் அவர், ரஜினிகாந்தின் ‘ஜானி’ படம் தான் திரைப்பட உருவாக்கத்தில் உள்ள பல்வேறு துறைகளின் பங்களிப்பைப் பற்றித் தாம் புரிந்துகொள்ள உதவிய முதல் படம் என்று கூறினார். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கல்லூரி குறும்படங்களின் போது, கைவசம் உள்ள காட்சிகளைக் கொண்டே கதையை சுவாரஸ்யமாக உருவாக்க முடியும் என்பதை உணர்ந்ததே எடிட்டிங் மீதான காதலை அதிகரித்ததாக அவர் நினைவுகூர்ந்தார்.</p><h2>‘சர்தார் 2’ படத்தி<strong>ன் தனித்துவமா</strong>ன படத்தொகுப்பு</h2><p>இயக்குநர் பி.எஸ்.மித்ரனுடன் இணைந்து பணியாற்றிய ‘சர்தார் 2’ திரைப்படம் பற்றிப் பேசிய விஜய் வேலுக்குட்டி, முதல் பாகத்தைக் காட்டிலும் இரண்டாம் பாகம் கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். முதல் பாகத்தில் தகவல்கள் மற்றும் தரவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட நிலையில், இதில் கதாபாத்திரங்களின் உணர்வுப்பூர்வமான பயணத்திற்கு அதிக இடம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுக்கு நடுவே உணர்ச்சிகளை பார்வையாளர்கள் உள்வாங்குவதற்காகக் காட்சிகளின் நீளத்தில் சில நொடிகள் கூடுதல் இடைவெளி விட்டுத் தொகுத்துள்ளதாக அவர் விளக்கினார்.</p><p>எச்.வினோத், ஆதிக் ரவிச்சந்திரன் போன்ற வேறுபட்ட பாணி கொண்ட இயக்குநர்களுடன் பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்த அவர், அஜித் ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் 'குட் பேட் அக்லி' உருவாக்கப்பட்டதாகவும், ஆனால் அவர்களின் அடுத்த படைப்பான 'டேர்டெவில்' அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் இருக்கும் என்றும் உறுதியளித்துள்ளார். மேலும் ஆக்‌ஷன் த்ரில்லர் படங்களை மட்டுமே செய்யாமல், ‘96’ போன்ற கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மென்மையான திரைப்படங்களிலும் பணியாற்ற வேண்டும் என்பதே தனது தற்போதைய விருப்பம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இருக்கின்ற சட்டசபையில் அமர்ந்து முதலில் மக்கள் பணியாற்றுங்கள் - கனிமொழி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-first-sit-in-existing-legislative-assembly-and-serve-people</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-first-sit-in-existing-legislative-assembly-and-serve-people#comments</comments><guid isPermaLink="false">a5ddbb54-7261-44b6-aaaf-4b56e459abfd</guid><pubDate>Thu, 10 Sep 2026 07:32:23 +0000</pubDate><atom:updated>2026-09-10T07:32:23.641Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தவெக,Kanimozhi,கனிமொழி,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/nl57b5fy/kanimozhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kanimozhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/nl57b5fy/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தற்போது நடைபெறும் இடைத்தேர்தல் என்பது தேவையில்லாத ஒன்று என்று கனிமொழி கூறி உள்ளார்.</p> <p>சென்னையில் திமுக எம்பி கனிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p><p>* மறுதேர்தல் நடைபெறக்கூடிய நிலையை உருவாக்கிய தவெக அரசு எப்படி நேர்மையான அரசியல் செய்ய முடியும்?</p><p>* ஏற்கனவே ஒருகட்சியின் பெயரில் நின்று வெற்றி பெற்றவர்கள் தற்போது மறுபடியும் போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது.</p> <p>* சட்டம் ஒழுங்கு பற்றி பதில் அளிக்காத முதலமைச்சர் விஜய் பஞ்ச் டயலாக்கையும் பழைய கதைகளையும் பேசுகிறார்.</p><p>* ஏற்கனவே உள்ள சட்டசபையில் இருந்து ஆட்சியை ஒழுங்காக நடத்துவது பற்றி <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vs-babu-mla-hospitalized">தவெக </a>அரசு சிந்திக்க வேண்டும்.</p><p>* சட்டசபைக்காகவே கலைஞர் கட்டிய ஓமந்தூரார் மருத்துவமனையை மாற்று இடத்திற்கு மாற்றி அதையே பயன்படுத்தலாம்.</p> <p>* நிதியில்லை நிதியில்லை என சொல்லும் தவெக அரசு மக்கள் வரிப்பணத்தை விரயம் செய்ய அனைத்து வகையிலும் முயற்சி செய்கிறது.</p><p>* இருக்கின்ற <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">சட்டசபையில்</a> அமர்ந்து முதலில் மக்கள் பணியாற்றுங்கள்.</p><p>* தற்போது நடைபெறும் இடைத்தேர்தல் என்பது தேவையில்லாத ஒன்று.</p> <p>* தவெக ஆட்சியில் தினந்தோறும் சட்டம் ஒழுங்கு சீரழிவு நடந்து கொண்டிருக்கிறது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>கார்த்தி-பி.எஸ்.மித்ரன் கூட்டணியில் ‘சர்தார்-2&apos;- திரை விமர்சனம்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/sardar-2-movie-review-karthi-ps-mithran-collaboration</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/sardar-2-movie-review-karthi-ps-mithran-collaboration#comments</comments><guid isPermaLink="false">298b25b8-62e1-49ed-b5c9-57823535c0cc</guid><pubDate>Thu, 10 Sep 2026 07:30:51 +0000</pubDate><atom:updated>2026-09-10T07:30:51.842Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>Karthi,கார்த்தி,Sardar 2,பி.எஸ்.மித்ரன்,P.S.Mithran,Sardar 2 Movie Review,சர்தார்-2</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/nyiq0a2c/sadrdar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sardar 2]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/nyiq0a2c/sadrdar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கார்த்தியின் நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்தாலும், சுவாரஸ்யம் குறைந்த திரைக்கதையால் ‘சர்தார் 2’ தடுமாறுகிறதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.</p><p>பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்து, பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியுள்ள ‘<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/karthi-starrer-sardar-2-sensor-update">சர்தார் 2</a>’ திரைப்படம் உலகளவில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் புதிதாக இணைந்துள்ள இந்தத் திரைப்படத்தின் முதல் காட்சி முடிவடைந்த நிலையில், சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் தங்கள் கலவையான விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.</p><p>முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தில், இந்திய உளவு அமைப்பின் முன்னாள் உளவாளியான ‘சர்தார்’ சந்திர போஸ் மற்றும் அவரது மகனான காவல் அதிகாரி விஜய் பிரகாஷ் என இரு வேறு கதாபாத்திரங்களில் கார்த்தி மீண்டும் நடித்துள்ளார். தனது முதிர்ச்சியான நடிப்பாலும், விறுவிறுப்பான சண்டைக் காட்சிகளாலும் கார்த்தி படத்தை முழுமையாகத் தாங்கிப் பிடிக்கிறார். மேலும், முக்கியத் திருப்புமுனையாக நுழைந்துள்ள எஸ்.ஜே.சூர்யாவின் ‘பிளாக் டேக்கர்’ வில்லன் கதாபாத்திரம் மற்றும் யோகி பாபு - நிழல்கள் ரவி காம்போ ஆகியவை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளன.</p><p>படத்தின் முதல் பாதி விறுவிறுப்பான இடைவேளைக் காட்சியுடன் நேர்த்தியாக நகர்ந்த போதிலும், இரண்டாம் பாதியில் படத்தின் வேகம் கணிசமாகக் குறைந்துள்ளது. சமூகத்திற்குத் தேவையான ஆண்டிபயாடிக் எதிர்ப்பு தொடர்பான நல்ல கருத்தை மையமாகக் கொண்டு கதை நகர்ந்தாலும், அது பிரசாரத் தொனியில் அமைந்துள்ளதாகக் விமர்சிக்கப்படுகிறது. மேலும், சாம் சி.எஸ் வழங்கியுள்ள பின்னணி இசை கதையின் சுவாரஸ்யத்திற்கு உதவவில்லை என்றும், சிஜிஐ பணிகள் மற்றும் தருக்கமற்ற சில காட்சிகள் படத்தின் வேகத்தைத் தடைசெய்வதாகவும் கருத்துகள் எழுந்துள்ளன.</p><h2>ஒட்டுமொ<strong>த்த திரை அனுபவ</strong>ம்</h2><p>எந்தவொரு காதல் காட்சிகளோ அல்லது பாடல்களோ இன்றி, படம் நேரடியாக உளவாளி கதைக் களத்திற்குள் செல்வது வரவேற்கத்தக்க அம்சமாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், முந்தைய பாகத்தில் இருந்த அளவுக்கு இறுக்கமான திரைக்கதை இல்லாதது மற்றும் பலவீனமான பின்னணி இசை காரணமாக ‘சர்தார் 2’ திரைப்படம் சராசரிக்கும் மேலான ஒரு திரையரங்க அனுபவமாக மட்டுமே அமைந்திருப்பதாக பெரும்பாலான ரசிகர்கள் கருதுகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பை படம் பிடிக்கச் சென்ற 8 பேர் மாயம் </title><link>https://www.maalaimalar.com/news/world/eight-people-who-went-to-film-a-volcanic-eruption-in-indonesia-are-missing</link><comments>https://www.maalaimalar.com/news/world/eight-people-who-went-to-film-a-volcanic-eruption-in-indonesia-are-missing#comments</comments><guid isPermaLink="false">531d852e-697d-4e3a-9a7a-06547e2a43f4</guid><pubDate>Thu, 10 Sep 2026 07:25:20 +0000</pubDate><atom:updated>2026-09-10T07:25:20.290Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தோனேசியா,எரிமலை வெடிப்பு,Volcano,Volcanic Eruption,indonesia,எரிமலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/y9e4itog/tn-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அனக் கிரகடாவ் ]]></media:title><media:description type="html"><![CDATA[ அனக் கிரகடாவ் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/y9e4itog/tn-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தோனேசியாவில் அனக் கிரகடாவ் எரிமலை வெடிப்பு சம்பவத்தை நேரில் படம் பிடிக்க காரிட்டா கடற்கரையில் இருந்து படகு மூலம் புறப்பட்டுச் சென்ற 5 புகைப்படப் பத்திரிகையாளர்கள், 2 ஊழியர்கள் மற்றும் வழிகாட்டி உள்பட 8 பேர் நடுக்கடலில் மாயமாகியுள்ளனர்.</p><h2></h2> <p><a href="https://www.maalaimalar.com/news/world/volcanic-eruption-rocks-indonesia-flight-services-cancelled">இந்தோனேசியாவில் </a>ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையே உள்ள சுண்டா ஜலசந்தி பகுதியில் 'அனக் கிரகடாவ்' என்ற எரிமலை அமைந்துள்ளது.</p><p>கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3:53 மணிக்கு எரிமலை வெடித்து சிதறியது.</p> <p>செயற்கைக்கோள் படங்களின்படி, <a href="https://www.maalaimalar.com/topic/volcanic-eruption">எரிமலையிலிருந்து </a>20,000 அடி மற்றும் 50,000 அடி உயரத்திற்கு இரு மாபெரும் சாம்பல் மேகங்கள் எழும்பி, ஜகார்த்தா, லம்பங் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளுக்குப் பரவின.</p><p>குடியிருப்பு பகுதிகள் எரிமலையிலிருந்து 16 கி.மீ தொலைவில் இருந்ததால் உடனடி உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.</p><p>தலைநகர் ஜகார்த்தா உள்ளிட்ட 6 முக்கிய விமான நிலையங்களின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தன.</p><h2>8 பேர் மாயம்</h2><p>இந்நிலையில் அனக் கிரகடாவ் எரிமலை வெடிப்புச் சம்பவத்தை நேரில் படம் பிடிக்க காரிட்டா கடற்கரையில் இருந்து படகு மூலம் புறப்பட்டுச் சென்ற 5 புகைப்படப் பத்திரிகையாளர்கள், 2 ஊழியர்கள் மற்றும் வழிகாட்டி உள்பட 8 பேர் நடுக்கடலில் மாயமாகியுள்ளனர்.</p><p>கடந்த திங்கட்கிழமை மாலை எரிமலைப் பகுதியை அடைந்துவிட்டதாக அவர்கள் அனுப்பிய குறுஞ்செய்திக்குப் பிறகு, இதுவரை அவர்களிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை.</p><p>காணாமல் போனவர்கள் முன்னணி செய்தி நிறுவனங்களை சேர்ந்தவர்கள் ஆவர். நடுக் கடலில் மாயமான பத்திரிகையாளர்களைத் தேடும் பணியில் இந்தோனேசிய கட லோரப் பாதுகாப்புப் படையினரும் மீட்புக் குழுவினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.</p> <h2>அனக் கிரகடாவ் எரிமலை</h2><p>'கிரகடாவ்வின் குழந்தை' என்று அழைக்கப்படும் அனக் கிரகடாவ் எரிமலை, 1883 ஆம் ஆண்டு உலகையே உலுக்கிய 'கிரகடாவ்' எரிமலை வெடிப்பிற்குப் பிறகு, 1927 ஆம் ஆண்டில் கடலுக்கு அடியில் இருந்து புதிதாக உருவாகத் தொடங்கியது.</p><p>2018ஆம் ஆண்டில் இந்த அனக் கிரகடாவ் எரிமலை வெடித்தபோது, அதன் ஒரு பகுதி கடலுக்குள் சரிந்து விழுந்து ஏற்பட்ட நிலச்சரிவால் பயங்கரச் சுனாமி உருவானது. இதில் சுமத்ரா மற்றும் ஜாவா தீவுகளில் 430க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.</p><p>அன்றிலிருந்து இன்றுவரை இந்த எரிமலை நாட்டின் 2வது மிக ஆபத்தான பகுதி என்ற நிலையிலேயே உள்ளது.</p><p>கடந்த காலங்களிலும் தற்போதும் ஏற்பட்ட இந்த தொடர் வெடிப்புகளால் எரிமலையின் அளவு அதன் ஆரம்ப அளவிலிருந்து கால் பங்காக குறைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>காவல் ஆய்வாளர் மிரட்டியதாகப் புகார் கூறிய வாலிபர் வெட்டிக் கொலை- டிடிவி தினகரன் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/youth-murdered-after-complaint-against-police-inspector-ttv-dhinakaran-condemns</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/youth-murdered-after-complaint-against-police-inspector-ttv-dhinakaran-condemns#comments</comments><guid isPermaLink="false">7a705187-b68e-4823-8dee-0bf6d60fb3df</guid><pubDate>Thu, 10 Sep 2026 07:16:18 +0000</pubDate><atom:updated>2026-09-10T07:16:18.028Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>AMMK,அமமுக,டிடிவி தினகரன்,TTV Dinakaran,youth murder,காவல் ஆய்வாளர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/pt5185d1/TTV1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TTV Dinakaran]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/pt5185d1/TTV1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>புகார் அளிக்க வந்த இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் காவல் ஆய்வாளர்; புகார் அளித்த மறுநாளே படுகொலை செய்யப்பட்ட இளைஞர் – ஒவ்வொரு குற்றச் சம்பவத்திற்கும் ஒவ்வொரு காரணம் கூறும் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள், இக்கொலைக்கு சொல்லப்போகும் காரணம் என்ன? என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>புகார் அளிக்க வந்த இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் காவல் ஆய்வாளர்; புகார் அளித்த மறுநாளே <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88" rel="nofollow">படுகொலை</a> செய்யப்பட்ட இளைஞர் – ஒவ்வொரு குற்றச் சம்பவத்திற்கும் ஒவ்வொரு காரணம் கூறும் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள், இக்கொலைக்கு சொல்லப்போகும் காரணம் என்ன?</p><p>சென்னை, திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் தன்னை அழைத்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும், பொய் வழக்குப் பதிவு செய்து தன்னை கைது செய்யவுள்ளதாகவும் இளைஞர் பிரதீப் ராஜ் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு மறுநாளே அவர் அடையாளம் தெரியாத கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.</p><p>“சட்டத்தை மதித்து நடப்பவர்களுக்கு உற்ற நண்பனாகவும், சட்டத்தை மீறுவோருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் எதிரியாகவும் காவல்துறை இருக்க வேண்டும்” என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் காவல்துறையைப் பாராட்டிப் பேசிய இரண்டு நாட்கள்கூட முழுமையாக நிறைவடையாத நிலையில், காவல்துறை ஆய்வாளர் ஒருவர் மிரட்டியதாகப் புகார் தெரிவித்த நபர் அடுத்த நாளே படுகொலை செய்யப்பட்டிருப்பது, காவல்துறை முதலமைச்சரின் முழுமையான கட்டுப்பாட்டில்தான் செயல்படுகிறதா என்ற கேள்வியையும், காவல்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது.</p><p>குடும்பப் பிரச்னை, சொத்துத் தகராறு, முன்விரோதம், பழிவாங்கும் மனநிலை என தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்த பிறகு நிகழும் ஒவ்வொரு குற்றச்சம்பவத்திற்கும் வெவ்வேறு காரணங்களைக் கூறி, அவை சட்டம் ஒழுங்குடன் தொடர்பில்லாதவை என்பது போல் சித்தரிக்கும் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் இளைஞர் பிரதீப் ராஜ் படுகொலை செய்யப்பட்ட இந்தச் சம்பவத்திற்கும் சொல்லப்போகும் காரணம் என்ன?</p><p>எனவே, தமிழகத்தில் அரங்கேறும் ஒவ்வொரு குற்றச் சம்பவத்திற்குப் பின்னரும் புதுப்புது காரணங்களைத் தேடாமல், குற்றச் சம்பவங்கள் நிகழ்வதற்கு முன்பாகவே அவற்றைத் தடுக்கும் வகையில் காவல்துறையைச் செயல்படச் செய்து, சட்டம் ஒழுங்கைப் பேணிக் காத்து, தமிழக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திட முன்வர வேண்டும் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>72 வயது மலேசிய கால்பந்து ஜாம்பவான் 20 வயது இளம்பெண்ணுடன் திருமணம்!</title><link>https://www.maalaimalar.com/sports/72-year-old-malaysian-football-legend-marries-20-year-old-woman</link><comments>https://www.maalaimalar.com/sports/72-year-old-malaysian-football-legend-marries-20-year-old-woman#comments</comments><guid isPermaLink="false">712407fa-194a-4bf8-b7f6-bcb49800bd97</guid><pubDate>Thu, 10 Sep 2026 07:10:14 +0000</pubDate><atom:updated>2026-09-10T07:10:14.305Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Abda Alif Wedding,Datuk Abdah Alif,Malaysian football legend,Datuk Yunus,அப்தா அலிப்,டத்தோக் அப்தா அலிப்,டத்தோக் யூனுஸ் அலிப்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/oqr7pahm/kilava.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Abda Alif Wedding]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/oqr7pahm/kilava.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முன்னாள் தேசிய வீரரும் அப்தா அலிப்பின் தம்பியுமான டத்தோக் யூனுஸ் அலிப் இந்தத் திருமணச் செய்தியை ஊடகங்களிடம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p>மலேசிய தேசிய கால்பந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான<a href="https://www.maalaimalar.com/news/world/rajnath-singh-meets-sri-lankan-president-discusses-regional-security"> டத்தோக் அப்தா அலிப்</a> தனது 72-வது வயதில் 20 வயது நிறைந்த இளம்பெண் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். 1970-களின் பிற்பகுதியிலும் 1980-களின் தொடக்கத்திலும் மலேசிய அணியின் முன்னணி வீரராகத் திகழ்ந்த இவர், 1980-ம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தேசிய அணியில் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>இவர்களது திருமணம் கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி கோலா திராங்கானுவில் இரு வீட்டாரின் பூரண சம்மதத்துடனும் ஆசிகளுடனும் எளிமையான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது. திருமணம் முடிந்து தம்பதியினர் தேனிலவு சென்றுள்ளதால், இந்த நிகழ்வு குறித்து அப்தா அலிப்பைத் தொலைபேசியில் உடனடியாகத் தொடர்புகொள்ள இயலவில்லை.</p><p>முன்னாள் தேசிய வீரரும் அப்தா அலிப்பின் தம்பியுமான டத்தோக் யூனுஸ் அலிப் இந்தத் திருமணச் செய்தியை ஊடகங்களிடம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். "இரு குடும்பங்களின் ஆசியுடன் திருமணம் இனிதே முடிந்துள்ளது. அவர்கள் இருவரும் தங்களின் வாழ்க்கைப் பயணத்தில் என்றென்றும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>தீ<strong>யாய் பரவும் புகைப்படம்</strong></h2><p>இளம் பெண்ணை கரம்பிடித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து, 52 ஆண்டுகள் வயது வித்தியாசம் கொண்ட இந்தத் திருமணம் மலேசியக் கால்பந்து ரசிகர்கள் மற்றும் சமூக வலைதளப் பயனர்களிடையே பெரும் விவாதத்தையும் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>வெள்ளை மாளிகை பெண் உதவியாளர்களுக்கு தலா ரூ.45 லட்சம் பரிசாக வழங்கிய டிரம்ப்</title><link>https://www.maalaimalar.com/news/world/controversy-erupts-over-trumps-lavish-gifts-to-white-house-female-aides</link><comments>https://www.maalaimalar.com/news/world/controversy-erupts-over-trumps-lavish-gifts-to-white-house-female-aides#comments</comments><guid isPermaLink="false">45f3494f-410a-4a6a-bd82-4a30c58f1e50</guid><pubDate>Thu, 10 Sep 2026 07:04:32 +0000</pubDate><atom:updated>2026-09-10T07:04:32.693Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Christmas,trump,டிரம்ப்,வெள்ளை மாளிகை,White House,கிறிஸ்துமஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/5rt60k81/tn-9.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டிரம்ப்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிரம்ப்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/5rt60k81/tn-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையில் தனது 3 பெண் உதவியாளர்களுக்கு கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பரிசாகப் பெருந்தொகையை வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது</p> <p>வெள்ளை மாளிகையில் இருந்து வெளிவந்துள்ள ஆண்டு சொத்து விவர அறிக்கையில் இது தெரியவந்துள்ளது. </p><p>வெள்ளை மாளிகையின் சிறப்பு மற்றும் நிர்வாக உதவியாளராகப் பணியாற்றும் நட்டாலி ஹார்ப், ஊடக ஆலோசகர் மார்கோ மார்ட்டின் மற்றும் ஓவல் அலுவலக துணை இயக்குனர் சேம்பர் லெய்ன் ஹாரிஸ் ஆகிய மூவருக்கும் இந்திய மதிப்பில்  தலா ரூ.45 லட்சத்தை <a href="https://www.maalaimalar.com/news/world/trump-promises-5000-per-person-to-the-public-if-they-vote-for-the-republican-party-in-the-midterm-elections">டிரம்ப் </a>ரொக்கமாக வழங்கியுள்ளார்</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88">வெள்ளை மாளிகை</a>யின் அறிக்கையின்படி இவர்கள் மூவரும் ஆண்டுக்கு தலா ரூ.1.35 கோடி சம்பளமாக பெற்று வருகின்றனர். ரூ.45 லட்சம் பரிசுத்தொகை  அவர்களின் ஆண்டுச் சம்பளத்தில் சுமார் 30 சதவீதத்திற்கு சமமாகும்.</p> <h2>விமர்சனம்</h2><p>அமெரிக்கக் கூட்டாட்சி சட்டத்தின்படி, அரசு ஊழியர்கள் அரசு வழங்கும் சம்பளத்தை தவிர்த்து பிற வழிகளில் தனியாகப் பண பலன்களை பெறத் தடை உள்ளது.</p><p>முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் நிர்வாகத்தில் பணியாற்றிய சட்ட ஆலோசகர் ரிச்சர்ட் பெயிண்டர், அரசு ஊழியர்களுக்கு இவ்வளவு பெரிய தொகையைப் பரிசாக வழங்குவது விதிமீறலாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>எனினும், இது தனிப்பட்ட முறையில் வழங்கப்பட்ட பரிசு என்பதால் நேரடியாகச் சட்ட மீறல் என்று சொல்ல முடியாது என்றும், ஆனால் அரசு ஊழியர்கள் இவ்வளவு பெரிய தொகையை பரிசாகப் பெறுவது அசாதாரணமானது என்றும் பிற சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.</p> <h2>விளக்கம்</h2><p>பரிசுகள் குறித்து விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.</p><p>டிரம்ப் தொழில் அதிபராக இருந்த காலத்திலிருந்தே, தன்னுடன் பணிபுரியும் ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் காலத்தில் சொந்தப் பணத்திலிருந்து பரிசுகளை வழங்குவது அவரது வழக்கமான ஒன்றாகும்.</p><p>இந்தப் பரிசுகள் முழுமையாகவும் அவரது சொந்த நிதியிலிருந்தே வழங்கப்பட்டுள்ளன. அரசுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுக - நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் விரைவில் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-and-dharapuram-by-elections-admk-and-naam-tamilar-katchi-candidates-to-be-announced-soon</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-and-dharapuram-by-elections-admk-and-naam-tamilar-katchi-candidates-to-be-announced-soon#comments</comments><guid isPermaLink="false">5a801725-4d29-43c5-aa55-3601d84e2f35</guid><pubDate>Thu, 10 Sep 2026 06:57:10 +0000</pubDate><atom:updated>2026-09-10T06:57:10.878Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,naam tamilar katchi,by election,தாராபுரம்,மதுராந்தகம்,நாம் தமிழர் கட்சி,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/lyz9ihsr/admk1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ADMK - Naam Tamilar Katchi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/lyz9ihsr/admk1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அ.தி.மு.க, நாம் தமிழர் கட்சி  சார்பில் களம் காணும் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர்.</p> <p>மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் போட்டியிட உள்ள தி.மு.க. வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-ammk-campaign-aiadmk-bypoll-victory">அ.தி.மு.க.</a>, நாம் தமிழர் கட்சி  சார்பில் களம் காணும் வேட்பாளர்களும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர்.</p> <h2>12-ந்தேதிக்கு பிறகு</h2><p>இந்த 2 கட்சிகளின் சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் விவரங்கள் வருகிற 12-ந்தேதிக்கு பிறகு வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.</p><p>அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டு வருகிறது. இதற்கு இன்று கடைசி நாளாகும்.</p> <p>இதை தொடர்ந்து போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களில் ஒருவரை தேர்வு செய்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட உள்ளார்.</p><p>நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">சீமான்</a> தற்போது மதுரையில் சேயோன் படப்பிடிப்பில் உள்ளார். 12-ந் தேதி தான் சென்னைக்கு வருகிறார். சென்னைக்கு வந்த பிறகு நாம் தமிழர் கட்சி சார்பில் 2 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் விவரங்கள் அறிவிக்கப்பட உள்ளன.</p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு அமமுக பாடுபடும்- டிடிவி தினகரன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-ammk-campaign-aiadmk-bypoll-victory</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-ammk-campaign-aiadmk-bypoll-victory#comments</comments><guid isPermaLink="false">8069aa3b-223f-4b14-b053-2794bdf1a663</guid><pubDate>Thu, 10 Sep 2026 06:43:49 +0000</pubDate><atom:updated>2026-09-10T06:43:49.540Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,டிடிவி தினகரன்,TTV Dinakaran,ByElection,tvk,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/ojkl6o4l/TTV-Dinakaran.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TTV Dinakaran]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/ojkl6o4l/TTV-Dinakaran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுராந்தகம், தாராபுரம்  சட்டமன்ற இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக்கழகத்திற்கு எதிராக  பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது நல்ல யோசனை என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்  தெரிவித்துள்ளார்.</p><p>திருச்சியில் டிடிவி தினகரன் இன்று நிருபர்களுக்கு  பேட்டி அளித்தார். </p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><h2>பொது வேட்பாளர்</h2><p>முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D" rel="nofollow">விஜய்</a> திரைப்படங்களில் கதாநாயகனாக  தோன்றினாலும், நிஜத்தில் அவர் ஒரு வில்லன் தான்.</p><p>மதுராந்தகம், தாராபுரம்  சட்டமன்ற இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக்கழகத்திற்கு எதிராக  பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது நல்ல யோசனை.</p><p>இதனை கூட்டணி கட்சிகளுடன் விரிவாக  கலந்தாலோசித்து இறுதி முடிவு எடுக்க வேண்டும். தற்போதைய சூழலில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றிக்கு  அ.ம.மு.க., பாடுபடும்.</p><h2>புதிய சட்டமன்றம் </h2><p>மீனவர்களின் வாழ்வா தாரத்தைப் பாதிக்கக்கூடிய மற்றும் கடும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தக்கூடிய பட்டினப்பாக்கத்தில்  புதிய சட்டமன்றத்தை அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பது எவ்விதத்திலும் ஏற்புடையது அல்ல.</p><p>தமிழக முதலமைச்சரின் வீட்டிற்கு அருகிலேயே சட்டமன்றத்தைக் கொண்டுவரத் திட்டமிடுகிறார்களோ என்ற பலத்த சந்தேகம் எழுகிறது . </p><p>அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு தற்போது விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது.</p><h2>அ.தி.மு.க.வுடன் இணைப்பா?</h2><p>அ.தி.மு.க., கூட்டணியில் அ.ம.மு.க. இணைந்து செயல்பட்டு வருகிறது. ஆனால், 2 கட்சிகளும் ஒன்றாக இணைக்கப்படப்போகிறது என்று வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மரகதம் குமரவேல்-சத்தியபாமா வாழ்க்கை குறிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/biographical-sketch-of-maragatham-kumaravel-and-sathyabhama</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/biographical-sketch-of-maragatham-kumaravel-and-sathyabhama#comments</comments><guid isPermaLink="false">8d154f9f-063f-430e-902e-f1c93d4f220e</guid><pubDate>Thu, 10 Sep 2026 06:41:06 +0000</pubDate><atom:updated>2026-09-10T06:41:06.453Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,by election,dharapuram,தாராபுரம்,மதுராந்தகம்,tvk,Madurantakam,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/s2u3zxd7/byelection.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மரகதம் குமரவேல்- சத்தியபாமா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/s2u3zxd7/byelection.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 1975-ம் ஆண்டு பிறந்த இவர் முதலில் அ.தி.மு.க. கட்சியில் தீவிரமாக செயல்பட்டு  பின்னர் 2026 மே மாதத்தில் த.வெ.க. கட்சியில் இணைந்தார்.</strong></em></p><p>மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி த.வெ.க. வேட்பாளர்கள் வாழ்க்கை குறிப்பு வருமாறு:-</p><h2><strong>மரகதம் குமரவேல்</strong></h2><p>மதுராந்தகம் தொகுதி த.வெ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மரகதம் குமரவேல், அ.தி.மு.க.வில் 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை ஒன்றிய கவுன்சிலராக பதவி வகித்தார். 2011-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை ஒன்றிய தலைவராக இருந்தார். 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அவர் மதுராந்தகம் தொகுதியில் அ.திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.</p><p>கடந்த சட்டசபை தேர்தலின் போது அ.தி.மு.க.வில் அவருக்கு மீண்டும் சீட் வழங்கப்பட்டது. இதையடுத்து மதுராந்தகம் தொகுதியில் 2-வது முறையாக வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். 2026 தேர்தலில் அவர் 69,284 வாக்குகள் பெற்று, த.வெ.க. வேட்பாளர் எழில் கேத்தரீனை 7,194 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.</p><p>கடந்த மே மாதம் 25-ந்தேதி அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் முதலமைச்சர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்தார். தற்போது மதுராந்தகம் சட்டசபை தொகுதி <a href="https://www.maalaimalar.com/topic/இடைத்தேர்தல்">இடைத்தேர்தலில்</a> போட்டியிட அவருக்கு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.</p><h2><strong>சத்தியபாமா</strong></h2><p>​திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் கடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பி.சத்தியபாமா. இவர் உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, திருப்பூர் மாவட்ட ஊராட்சித் தலைவராகப் பொறுப்பு வகித்தார். உள்ளாட்சியில் சிறப்பான களப்பணியாற்றிய இவருக்கு, கடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. தீவிர பிரசாரத்திற்குப் பிறகு, 81,100 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று எம்.எல்.ஏ.-வாகத் தேர்வானார்.</p><p>சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்ற பிறகு, அ.தி.மு.க.வில் நிலவி வந்த உட்கட்சிப் பூசல்கள் மற்றும் தலைமை மீது ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அதிருப்தி அடைந்தார்.</p><h2><strong>விலகினார்</strong></h2><p>​இதனைத் தொடர்ந்து, அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகியதோடு, தனது சட்டமன்ற உறுப்பினர்  பதவியையும் ராஜினாமா செய்தார். பின்னர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) அதிகாரப்பூர்வமாகத் தன்னை இணைத்துக் கொண்டார்.</p><p>​தற்போது காலியாக உள்ள தாராபுரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், த.வெ.க. சார்பில் மீண்டும் போட்டியிட சத்தியபாமாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. </p><h2><strong>மீண்டும் வாய்ப்பு</strong></h2><p>​மாவட்ட ஊராட்சித் தலைவராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் அப்பகுதியில் பணியாற்றிய அனுபவமும் செல்வாக்கும் அவருக்கு இருப்பதால், த.வெ.க. தலைமை அவரை மீண்டும் தாராபுரம் தொகுதியில் களமிறக்கத் திட்டமிட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் தாராபுரம் தொகுதியின் தேர்தல் களம் தற்போதே பெரும் பரபரப்பை அடைந்துள்ளது.</p><p>வேட்பாளராக எதிர்பார்க்கப்படும் சத்யபாமாவின்  தந்தை பெயர் பொன்னுசாமி. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 1975-ம் ஆண்டு பிறந்த இவர் முதலில் அ.தி.மு.க. கட்சியில் தீவிரமாக செயல்பட்டு  பின்னர் 2026 மே மாதத்தில் த.வெ.க. கட்சியில் இணைந்தார்.</p><p>2026-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் தாராபுரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.எல்.ஏ. ஆனார். தேர்தலில் 81,100 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் டி.இந்திராணியை 16,727 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>நேபாள வெள்ளப் பேரழிவு: காணாமல் போனவர்களை அடையாளம் காணும் இணைய தன்னார்வலர்கள்!</title><link>https://www.maalaimalar.com/news/world/nepal-flood-disaster-online-volunteers-identify-missing</link><comments>https://www.maalaimalar.com/news/world/nepal-flood-disaster-online-volunteers-identify-missing#comments</comments><guid isPermaLink="false">3cf60612-8c1c-4b71-88e8-37128f275782</guid><pubDate>Thu, 10 Sep 2026 06:38:52 +0000</pubDate><atom:updated>2026-09-10T06:38:52.625Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆஸ்திரேலியா,Facebook,nepal flood,நேபாள வெள்ளம்,நேபாள வெள்ளப் பேரழிவு,Nepal flood disaster,Sonia Patil,திபெத் எல்லைப் பகுதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/4xxi4m57/SONIA.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sonia Patil]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/4xxi4m57/SONIA.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆஸ்திரேலியாவில் வசிக்கும் சோனியா பாட்டீல் என்ற பெண், தனது ஓய்வு நேரத்தில் பலியானவர்களின் புகைப்படங்களை ஆராய்ந்து குடும்பத்தினருக்கு உதவி செய்து வருகிறார்.</p><p>நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட பனிப்பாறை சரிவைத் தொடர்ந்து, பெரும் வெள்ளமும் சேறும் சகதியும் கிராமப் பகுதிகளைத் தாக்கியது. இந்த பேரழிவில் இதுவரை 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், மேலும் 5,500-க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர்.</p><p>இந்த சூழலில், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண்பது அவர்களின் குடும்பத்தினருக்கு மிகுந்த மனவேதனையை அளிக்கும் பணியாக மாறியுள்ளது. <a href="https://www.maalaimalar.com/news/world/sudden-flood-disaster-raises-questions-over-kathmandu-tibet-railway-bri-dream-project">நேபாள காவல் துறை </a>சார்பில் பலியானவர்களின் உடல்களின் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன. இவற்றைத் நேரடியாகப் பார்த்து அடையாளம் காண முடியாமல் தவிக்கும் குடும்பங்களுக்கு உதவும் வகையில், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள் இணையம் வழியே ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.</p><p>ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் சமையல்காரராகப் பணியாற்றும் சோனியா பாட்டீல், தினசரி 12 மணி நேர வேலைக்கு பிறகும் இரவு நேரங்களில் இந்த சேவைப் பணியில் ஈடுபட்டு வருகிறார். காவல் துறை இணையதளத்தில் பதிவேற்றப்படும் புகைப்படங்களை கவனமாக ஆராய்ந்து, அதில் காணப்படும் பச்சை குத்தப்பட்ட அடையாளங்கள், ஆடைகள் மற்றும் நகைகள் போன்ற தனித்துவமான குறிப்புகளைப் பட்டியலிடுகிறார்.</p><p>இவ்வாறு தொகுக்கப்படும் தகவல்கள் முகநூல் குழுக்களில் பகிரப்பட்டு, காணாமல் போனவர்களின் உறவினர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகின்றன. இதில் ஏதேனும் சாத்தியமான அடையாளங்கள் கண்டறியப்பட்டால், நேபாளத்தில் உள்ள ஆய்வகங்களில் மரபணு பரிசோதனை செய்து உறுதிப்படுத்துமாறு அக்குடும்பத்தினர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p>அமெரிக்கா, ஐரோப்பா, நியூசிலாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த பலரும் இக்குழுவில் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். அழுகிய நிலையில் உள்ள உடல்களைத் தொடர்ந்து பார்த்து அடையாளம் காண்பது கடினமான பணியாக இருந்தாலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரத்தைக் குறைக்கும் நோக்கில் இச்சேவையைத் தொடர்ந்து செய்து வருவதாக சோனியா தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தல் மூலம் வரலாறு திரும்பும் - துரைமுருகன்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/duraimurugan-says-history-will-repeat-itself-through-by-election</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/duraimurugan-says-history-will-repeat-itself-through-by-election#comments</comments><guid isPermaLink="false">2c3be28b-f5cc-4baf-9ffe-a12d92af5335</guid><pubDate>Thu, 10 Sep 2026 06:30:52 +0000</pubDate><atom:updated>2026-09-10T06:30:52.473Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,by election,Durai Murugan,துரைமுருகன்,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/3alrv3c7/Duraimurugan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Durai Murugan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/3alrv3c7/Duraimurugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>எம்.ஜி.ஆர். ஆளுங்கட்சியாக இருந்த காலத்திலேயே அண்ணாநகர், மயிலாடுதுறை தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம். மீண்டும் வரலாறு திரும்பும் என்று துரைமுருகன் கூறினார்.</p> <p>மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும்<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/has-the-fake-image-of-prison-martyr-shattered-and-sparked-panic-thavek"> தி.மு.க. </a>வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.</p><p>தொகுதிகளில் தேர்தல் பணிகளையும் தி.மு.க. தொடங்கி உள்ளது. இதுகுறித்து தி.மு.க. பொதுச் செயலாளர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D">துரைமுருகன்</a> அளித்த பேட்டியில் கூறியதாவது:-</p> <p>2 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. போன முறையும் நின்றோம். இந்த முறையும் நிற்கிறோம். தேர்தல் காலத்தில் வந்து பாருங்கள். தி.மு.க.வின் வியூகத்தை இப்போதே சொல்லி விட்டால் கேள்வித்தாள் அவுட்டான  மாதிரி ஆகிவிடும். எம்.ஜி.ஆர். ஆளுங்கட்சியாக இருந்த காலத்திலேயே அண்ணாநகர், மயிலாடுதுறை தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம்.  </p> <p>மீண்டும் வரலாறு திரும்பும். இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தான் வெற்றி பெறும் என்பது இலக்கணம் கிடையாது. </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>இடைக்கால தேர்தலில் வெற்றி பெறச் செய்தால் ஆளுக்கு 5000 டாலர் - நாட்டு மக்களுக்கு டிரம்ப் வாக்குறுதி
</title><link>https://www.maalaimalar.com/news/world/trump-promises-5000-per-person-to-the-public-if-they-vote-for-the-republican-party-in-the-midterm-elections</link><comments>https://www.maalaimalar.com/news/world/trump-promises-5000-per-person-to-the-public-if-they-vote-for-the-republican-party-in-the-midterm-elections#comments</comments><guid isPermaLink="false">d2485c70-3e6b-4886-b3be-f4b100f91952</guid><pubDate>Thu, 10 Sep 2026 06:13:25 +0000</pubDate><atom:updated>2026-09-10T06:13:25.100Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,டிரம்ப்,ஈரான் போர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/lr2d7u6x/tn-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டிரம்ப்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிரம்ப்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/lr2d7u6x/tn-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இடைகால தேர்தலில் குடியரசு கட்சி வென்றால் நாட்டின் வயது வந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் 5,000 டாலர் வழங்கப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.</p><h2>இடைகால தேர்தல்</h2><p>வரும் 2026 நவம்பர் 3 அன்று, அமெரிக்கா முழுவதும் உள்ள அனைத்து 50 மாநிலங்களிலும் தேர்தல் நடைபெறவுள்ளது.  </p><p>அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் என்றாலும், நாடாளுமன்றத்தின் மக்கள் பிரதிநிதிகள் சபையின் ஆயுட்காலம் 2 ஆண்டுகள் மட்டுமே. </p><p>எனவே, அதிபர் பதவியேற்று 2 ஆண்டுகள் முடிவடையும் போது இடைக் காலத் தேர்தல் (Midterm Election) நடக்கிறது.</p><p>டிரம்ப்  குடியரசு கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் கிடைக்கிறதா அல்லது எதிர்க்கட்சிக்கு கிடைக்கிறதா என்பதை இந்தத் தேர்தல் தீர்மானிக்கும். </p><p>அமெரிக்கவில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சபையின் மொத்தம் 435 இடங்களுக்கும், செனட் சபையில் மூன்றில் ஒரு பங்கு, அதாவது 35 இடங்களுக்கும் தேர்தல் நடக்க உள்ளது. மேலும் அமெரிக்காவின் 39 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் நடக்க உள்ளது. </p><p>ஆளும் குடியரசுக் கட்சி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மையை இழந்தால், டிரம்ப் தனது மீதமுள்ள 2 ஆண்டு பதவிக்காலத்தில் புதிய சட்டங்களை  கொண்டு வருவதிலும், திட்டங்களுக்கு நிதி ஒப்புதல் பெறுவதிலும் பெரும் சவால்களை  சந்திக்க நேரிடும்.</p><p>இந்நிலையில் அமெரிக்க அதிபர் <a href="https://www.maalaimalar.com/topic/donald-trump">டொனால்ட் டிரம்ப்</a>, வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைகால தேர்தலில் குடியரசுக் கட்சி பிரதிநிதிகள் சபை மற்றும் செனேட் ஆகிய இரண்டிலும் பெரும்பான்மையைத் தக்கவைத்து கொண்டால், நாட்டின் ஒவ்வொரு வயது வந்த குடிமகனுக்கும் 5,000 டாலர் ( 4.4 லட்சம் ரூபாய்) வழங்கப்போவதாக அதிரடி வாக்குறுதியை அளித்துள்ளார்.</p><p>டல்லாஸில் நடைபெற்ற குடியரசுக் கட்சியின் மாநாட்டில் பேசிய டிரம்ப், இந்தத் தொகையை "Trump Dividend" என்று குறிப்பிட்டார்.</p><p>"குடியரசுக் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றால், நீங்களும் வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கு 5,000 டாலர் கிடைக்கும்" என்று டிரம்ப் தனது உரையில் தெரிவித்துள்ளார்.</p><p>இந்த இடைகால தேர்தலில் தான் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றாலும், வாக்காளர்கள் வாக்கு செலுத்தும் இடத்தில் தனது பெயர் இருப்பதைப்போல கருதி குடியரசுக் கட்சிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.</p><h2>திட்டம்</h2><p>அமெரிக்காவில் உள்ள சுமார் 24.5 கோடி வயது வந்த குடிமக்களுக்கு தலா 5,000 டாலர் வழங்க வேண்டுமானால், அதற்குச் சுமார் 1 டிரில்லியன் டாலர் நிதி தேவைப்படும்.</p><p>தனது நிர்வாகம் விதித்துள்ள இறக்குமதி வரிகள் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மூலமாகவே இது சாத்தியப்படும் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>குறைந்துவரும் ஆதரவு</h2><p>பணவீக்கம் மற்றும் ஈரான் உடனான போர் காரணமாக மக்களிடையே டிரம்ப் மீது அதிருப்தி நிலவுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.</p><p>சமீபத்திய கருத்துக்கணிப்புகளில் நாட்டில் டிரம்பை ஆதரிப்போம் எண்ணிக்கை 30% ஆக சரிந்துள்ளது.</p> <h2>விமர்சனம்</h2><p>எதிர் தரப்பில் உள்ள ஜனநாயக கட்சியினர் இந்த அறிவிப்பை தேர்தலில் தோல்வியடைவோம் என்ற பயத்தில் டிரம்ப் அளித்துள்ள நம்பகத்தன்மையற்ற வாக்குறுதி என்று விமர்சித்து வருகின்றனர்.</p><p>இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமெரிக்கக் காங்கிரஸின் ஒப்புதல் அவசியமாகும். எனினும், நாட்டின் கடன் 40 டிரில்லியன் டாலரை தாண்டியுள்ள நிலையில் இது பொருளாதார ரீதியாகச் சாத்தியமற்றது என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.</p> <h2>ஈரான் விவகாரம்</h2><p>தனது உரையின் போது ஈரான் மீதான போரைப் பற்றியும் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார். ஈரான் அணுஆயுதம் தயாரிக்கும் நிலைக்கு மிக அருகில் சென்றுவிட்டதாலேயே ராணுவ நடவடிக்கை தேவைப்பட்டது என்றும் இந்த பிரச்சனை இடைத்தேர்தலுக்கு பின் முடிவுக்கு வந்து கச்சா எண்ணெய் விலைகள் குறையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.</p><p>மேலும், ஹார்முஸ் ஜலசந்திக்கு தனது பெயரை சூட்டப் போவதாகவும் நகைச்சுவையாக குறிப்பிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>கள்ளச்சாராய சாவுகள் குறித்த விசாரணை ஆணைய அறிக்கை மீது நடவடிக்கை என்ன?- அரசுக்கு அன்புமணி கேள்வி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-ask-question-to-tn-govt</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-ask-question-to-tn-govt#comments</comments><guid isPermaLink="false">e014a44d-7f72-44c7-80b6-0214068a95e2</guid><pubDate>Thu, 10 Sep 2026 06:10:04 +0000</pubDate><atom:updated>2026-09-10T06:10:04.031Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/0bdx8hhn/anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/0bdx8hhn/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மதுவிலக்கு உள்ளிட்ட கோகுல்தாஸ் ஆணையத்தின் பரிந்துரைகளை  செயல்படுத்துவது தொடர்பான தனது நிலைப்பாட்டை தவெக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? </p><p>கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு நிகழ்ந்த கள்ளச்சாராய சாவுகள் குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதன்மூலம் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாம்ராஜ்யம் குறித்த உண்மைகள் அம்பலமாகியுள்ளன. திமுக ஆட்சியில் நிகழ்ந்த இந்தக் கொடூரம் குறித்த விசாரணை ஆணைய பரிந்துரைகள் மீது தவெக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? என்பது தான் இப்போது எழுந்துள்ள வினாவாகும்.</p><p>கள்ளக்குறிச்சி காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள கருணாபுரம் பகுதியில் 2024-ஆம் ஆண்டு ஜூன் 17-ஆம் தேதி விற்பனை செய்யப்பட்ட மெத்தனால் கலக்கப்பட்ட நச்சு சாராயத்தை குடித்தவர்களில் 70 பேர் அடுத்த சில நாள்களில் உயிரிழந்தனர்; மேலும் 161 பேர் கடுமையான உடல்நல பாதிப்புகளுடன் பிழைத்துள்ளனர். இது குறித்து விசாரணை நடத்துவதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி பி.கோகுல்தாஸ் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட  ஆணையத்தின் அறிக்கை, 18 மாதங்களுக்குப் பிறகு  சட்டப்பேரவையில் நேற்று முன்நாள் வெளியிடப்பட்டது.</p><p>கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள் அரசின் தோல்வி என்று குற்றஞ்சாட்டியுள்ள ஆணையம், ‘‘கள்ளச்சாராய வணிகர்களுடன் அதிகாரிகள் கூட்டணி வைத்திருந்தனர். அவர்களின் துணையின்றி, சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு நச்சு சாராயம் வந்திருக்க முடியாது. இந்தக் கூட்டணி தகர்க்கப்பட வேண்டும். கடமை தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கல்வராயன்மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு மாவட்டம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. பல ஊர்களில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் உரிமை ரூ.5 லட்சம் வரையிலான தொகைக்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளது’’ என்று கூறப்பட்டுள்ளது.</p><h2><strong>குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை</strong></h2><p>கள்ளச்சாராய சாவுகள் நடைபெற்ற ஒரு சில மணி நேரங்களிலேயே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழும் கள்ளச்சாராய வணிகத்திற்கு திமுகவைச் சேர்ந்த இரு சட்டமன்ற உறுப்பினர்கள் தான் முழு ஆதரவாக இருந்தனர் என்றும், திமுகவைச் சேர்ந்த கன்னுக்குட்டி என்பவரும், அவரது கூட்டாளிகளும் தான் நச்சு சாராயத்தை விற்பனை செய்துள்ளனர் என்றும் குற்றஞ்சாட்டியிருந்தேன். அப்போதைய ஆளும் கட்சியான திமுக, இதில் திமுகவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைத்ததுடன், என் மீது அவதூறு வழக்கு தொடரப்போவதாகவும் அச்சுறுத்தல் விடுத்தனர். ஆனால், அப்போது நானும், பாமகவும் முன்வைத்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என்பது இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p>கள்ளச்சாராய சாவுகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தல், கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மறுவாழ்வு வழங்குதல், இனிவரும் காலங்களில் கள்ளச்சாராய விற்பனை நடக்காமல் தடுத்தல் ஆகிய 3 வகைகளில் பல்வேறு பரிந்துரைகளையும் நீதிபதி கோகுல்தாஸ் ஆணையம் அளித்திருந்தது. கள்ளச்சாராயம் ஒழிக்கப்பட வேண்டும், அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற எண்ணம் திமுக அரசுக்கு இருந்திருந்தால், ஆணையத்தின் அறிக்கையை  உடனடியாக வெளியிட்டு அதன் பரிந்துரைகளை செயல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக, ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் 15 மாதங்கள் ஆட்சியில் இருந்தும் கூட, அதை  வெளியிடாமல் கிடப்பில் போட்டு வைத்ததிலிருந்தே திமுக அரசின் உண்மை முகம் அம்பலமாகி விட்டது.</p><p>கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகளைத் தடுக்கத் தவறியது மட்டுமின்றி, அது தொடர்பான விசாரணை அறிக்கையை வெளியிடுவதற்கும், அதில் இடம்பெற்றுள்ள பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் திமுக அரசு தவறி விட்டது. 18 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் அறிக்கையை இப்போது வெளியிட்டிருக்கும் தவெக அரசு, அதன் பரிந்துரைகள் மீது என்ன நடவடிக்கை  எடுக்கப் போகிறது? என்பது தான் இப்போது எழுந்துள்ள வினா. அதற்கு அரசு விடையளிக்க வேண்டும்.</p><p>கல்வராயன் மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதைத் தடுக்க தனியாக ஒரு மதுவிலக்குப் படையை  உருவாக்க வேண்டும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயச் சாவுகளில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் உணவு, உறைவிடம், கல்வி ஆகிய உதவிகளை வழங்க வேண்டும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டிருந்தாலும் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஆணையத்தின் பரிந்துரைகளை தவெக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்.  </p><p>இவை அனைத்தையும் விட நீதிபதி கோகுல்தாஸ் ஆணையம் தெரிவித்துள்ள ஒரு கருத்தும், அதைச் சார்ந்து அளித்துள்ள பரிந்துரையும் மிகவும் முக்கியமானவை. தமிழ்நாட்டில் 1971-ஆம் ஆண்டில் மதுவிலக்கு தளர்த்தப்பட்டு, தாராளமாக மது கிடைக்க வசதி செய்யப்பட்டதால், பெரும்பாலான மக்கள் குடிகாரர்களாக மாறி விட்டனர் என்று கவலை தெரிவித்திருக்கும் ஆணையத்தின் அறிக்கை, ‘‘மதுவிலக்கு சட்டத்தின் அனைத்து பிரிவுகளையும் அரசு கடுமையாக செயல்படுத்தினால் கள்ளச்சாராயத்தையும், பிற போதைப் பொருள்களையும் முற்றிலுமாக ஒழித்து விட முடியும். தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவணிகத்தைக் குறைத்து   குறிப்பிட்ட காலத்திற்குள் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும்’’ என்றும் பரிந்துரைத்துள்ளது.</p><p>இது தான் தமிழ்நாட்டுக்கு இன்றைய நிலையில் மிகவும் தேவையான பரிந்துரை ஆகும். எனவே, தமிழ்நாட்டில் இப்போதுள்ள 4038 மதுக்கடைகளையும் படிப்படியாக மூடி, அடுத்த இரு ஆண்டுகளில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும். இதற்கான கால அட்டவணையை தமிழக அரசு வெளியிட வேண்டும்.  மதுவிலக்கு உள்ளிட்ட கோகுல்தாஸ் ஆணையத்தின் பரிந்துரைகளை  செயல்படுத்துவது தொடர்பான தனது நிலைப்பாட்டை தவெக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். </p>]]></content:encoded></item><item><title>வி.எஸ்.பாபு எம்.எல்.ஏ. ஆஸ்பத்திரியில் அனுமதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vs-babu-mla-hospitalized</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vs-babu-mla-hospitalized#comments</comments><guid isPermaLink="false">3e59b482-120b-4e7a-9659-a252ce646d5f</guid><pubDate>Thu, 10 Sep 2026 05:54:45 +0000</pubDate><atom:updated>2026-09-10T05:54:45.870Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,tvk,விஎஸ் பாபு,VS Babu</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/h6kpvq5u/vsbabu.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ வி.எஸ்.பாபு]]></media:title><media:description type="html"><![CDATA[ வி.எஸ்.பாபு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/h6kpvq5u/vsbabu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மார்பு சளி பாதிப்பு காரணமாக வி.எஸ்.பாபு எம்.எல்.ஏ.வை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.</strong></em> </p><h2><strong>மூச்சு திணறல்</strong></h2><p>சென்னை கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து த.வெ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற <a href="https://www.maalaimalar.com/topic/விஎஸ்-பாபு">வி.எஸ்.பாபு</a> எம்.எல்.ஏ. திடீர் மூச்சு திணறல் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>கடந்த ஒரு மாதமாக சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்ற அவருக்கு மார்பு சளி பாதிப்பு அதிகமாக இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து வி.எஸ்.பாபு எம்.எல்.ஏ.வை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். </p><p>அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.  சளியின் காரணமாக ஏற்பட்ட மூச்சுத்திணறலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று அல்லது நாளை அவர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவார் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>&apos;சிறை சென்ற தியாகி&apos; என்ற போலி பிம்பம் உடைந்ததில் பதற்றம் பற்றிக்கொண்டதோ?- தவெக</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/has-the-fake-image-of-prison-martyr-shattered-and-sparked-panic-thavek</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/has-the-fake-image-of-prison-martyr-shattered-and-sparked-panic-thavek#comments</comments><guid isPermaLink="false">a7e7bccd-4225-464c-9ce1-7c3377cc03ba</guid><pubDate>Thu, 10 Sep 2026 05:47:44 +0000</pubDate><atom:updated>2026-09-10T05:47:44.166Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தவெக,MKStalin,tvk,முக ஸ்டாலின்,MISA,மிசா</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/rs9mi960/TVK-IT.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MK Stalin- TVK Flag]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/rs9mi960/TVK-IT.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பல ஆண்டுகளாகக் கட்டமைக்கப்பட்ட “சிறை சென்ற தியாகி” என்ற போலி பிம்பம் உடைந்ததில் பதற்றம் பற்றிக்கொண்டதோ? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவை விமர்சித்து தவெக ஐடி விங் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.</p><h2>மு.க.ஸ்டாலின் வீடியோ பதிவு</h2><p>திமுக தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-releases-video-regarding-misa-atrocities" rel="nofollow">மு.க.ஸ்டாலின்</a> எக்ஸ் தளத்தில், வீட்ல என்னை meet பண்ணப்ப சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்? என்று பதிவிட்டு வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில்,</p><p>மிசா காலத்தில் கைது செய்யப்பட்டபோது சிறையில் எங்களுக்கு பல கொடுமைகள் நடந்தது.</p><p>காவலர்கள் தாக்கியதில் எனது அருமை அண்ணன் சிட்டிபாபு இறந்தார். அவர்கள் தாக்கியதில் எனது தாடை எலும்பு உடைந்தது.</p><p>எதிர்த்து போராடுவதும் அதன் விளைவுகளை சந்திப்பதும் எங்களுக்கு புதியது அல்ல.</p><p>யார் என்னை கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்ற முடியாது.</p><p>உங்களுக்கு சந்தேகம் இருந்தால் சட்டசபையில் உள்ள நூலகத்திற்கு சென்று எனது போராட்ட வரலாற்றை படித்து பாருங்கள்.</p><p>சர்காரியாக கமிஷன் பற்றியும் தலைவர் கலைஞர் பற்றியும் தவறான தகவலை முதலமைச்சர் விஜய் கூறி உள்ளார்.</p><p>அரசியலுக்காக காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் சொன்ன பொய்யான குற்றச்சாட்டையும் முதலமைச்சர் விஜயும் கூறி உள்ளார்.</p><p>அமலாக்கத்துறை குற்றம்சாட்டிய 95% வழக்குகளில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல் குற்றம்சாட்டப்பட்டோர் விடுவிக்கப்பட்டனர்.</p><p>பெரும்பாலும் அரசியல் பழிவாங்கலுக்காகவே அமலாக்கத்துறை ஏவப்படுவது இங்கு உள்ள எல்லாருக்குமே தெரியும்.</p><p>தேர்தல் பிரசாரத்தின்போது கடுமையாக விமர்சித்ததற்கு சாரி என்று என்னிடம் கூறினீர்களே?</p><p>பரவாயில்லை தம்பி. நீங்க இப்போ மாநிலத்தின் முதலமைச்சர். யாரைப்பற்றியும் பேசும்போது கண்ணியத்தோடு பேசுங்கள் என்று சொன்னேன். அதையெல்லாம் மறந்துட்டீங்களே.</p><p>தமிழ்நாடு சட்டசபைக்கென ஒரு மாண்பும் மரியாதையும் இருக்கிறது. முதலமைச்சர் விஜய் தமிழ்நாடு சட்டசபையில் தேவையில்லாத சர்ச்சைகளை பேச வேண்டாம்.</p><p>தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு படுகுழியில் இருக்கிறது. வீட்ல என்னை meet பண்ணப்ப சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்?</p><p>தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றை பற்றி வாய் திறக்காமல் இருப்பது ஏன்? விதவிதமான ரீல்ஸ் போட்டு ஒரு தலைமுறையையே வீணாக்கி வருகிறீர்கள்.</p><p>வாக்களிக்கவில்லை என்பதற்காக மக்களை திமுகவினர் கைவிட்டு விடக்கூடாது.</p><p>இவ்வாறு அவர் கூறி உள்ளார்.</p><h2>தவெக பதிலடி</h2><p>தவெக ஐடி விங் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>பல ஆண்டுகளாகக் கட்டமைக்கப்பட்ட “சிறை சென்ற தியாகி” என்ற போலி பிம்பம் உடைந்ததில் பதற்றம் பற்றிக்கொண்டதோ?</p><p>எதை உலகறியக் கூடாது என்று மஞ்சள் துண்டு தந்தை முதல் ஆபாசநதி மகன் வரை கட்டி அடைகாத்தார்களோ, அது அம்பலமானதில் அச்சம் அதிகமாகியிருக்கிறது. அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மட்டும் மூச்சுவிடவில்லை.</p><p>உண்மைக்கு விளம்பரங்களோ, விளக்கங்களோ தேவையில்லை. ஆனால் இங்கே shooting video வெளியாகிறது என்றால், போலி பிம்பம் உடைந்தது உண்மையாகிறது.</p><p>பல cut-கள், உணர்வற்ற பேச்சு, மீண்டும் உண்மைக்கு மாறான ஒன்றை நம்ப வைக்க முயலும் படுதோல்வி முயற்சியாகவே தெரிகின்றன.</p><p>கட்டுமரக் கதைகளாலும் கட்டுக்கதைகளாலும் கட்டமைக்கப்பட்ட பொய்ப் பிம்பம், மெய்யைத் தாக்குப்பிடிக்காது என்பதை நிரூபித்திருக்கிறது இன்று வெளியான பொய் போராளியின் காணொளி.</p><p>இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>