<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 18 Sep 2026 12:07:34 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 18 செப். 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-18-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-18-september-2026#comments</comments><guid isPermaLink="false">f7bc1909-9f6e-45cd-ab52-a2e557cf3a39</guid><pubDate>Fri, 18 Sep 2026 04:10:11 +0000</pubDate><atom:updated>2026-09-18T11:45:30.290Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/93e5ueb1/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live news]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/93e5ueb1/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/at-45-speech-and-hearing-impaired-jammu-woman-clears-class-10-exam-with-82-percent">சாதிக்க எதுவும் தடையில்லை: 45 வயதில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அடைந்த மாற்றுத்திறனாளி தாய்</a></p><p>* சைகை மொழியை நன்கறிந்த நமன், தனது தாய்க்கு தானே ஆசிரியராக மாறினார்.</p><p>* என் கனவு நனவாகி உள்ளது. என் மகனால்தான் இவை அனைத்தும் சாத்தியமானது என்றார் ரேணு.</p> <p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/india-srilanka-womens-teams-enter-sf-in-asian-games">ஆசிய விளையாட்டு பெண்கள் கிரிக்கெட்: இந்தியா, இலங்கை அரையிறுதிக்கு முன்னேற்றம்</a></p><p>* இந்தியாவின் ஷபாலி வர்மா 40 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.</p><p>* இந்தியாவின் ஸ்ரீசரணி 4 விக்கெட்டும், ஷபாலி வர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/football-vs-envelope-mamata-banerjee-party-rebels-get-new-name-symbol">மம்தா பானர்ஜி தரப்புக்கு புதிய கட்சி பெயர், சின்னம்: தேர்தல் ஆணையம் அங்கீகாரம்</a></p><p>* மம்தா பிரிவுக்கு மம்தா அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் என்ற புதிய பெயரை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. </p><p>* அரூப் ராய், ரிதப்ரதா பானர்ஜி தரப்புக்கு ஜனநாயக அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் என்ற புதிய பெயரை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-to-expand-kamarajar-breakfast-scheme-statewide-on-22nd-rajmohan">22-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: அமைச்சர் ராஜ்மோகன்</a></p><p>* அனைவருக்கும் உணவு, ஆரோக்கியமான உணவு என்பதுதான் எங்களுடைய அனைவருடைய எதிர்பார்ப்பு.</p><p>* வருங்காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்க ஏற்பாடு செய்யப்படும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/princess-diana-brother-claims-on-charles">டயானா சகோதரர் எழுதிய புத்தகத்தில் மன்னர் சார்லஸ் மீது குற்றச்சாட்டு - பக்கிங்காம் அரண்மனை மறுப்பு</a></p><p>* டயானாவின் மரணம் உறுதி செய்யப்பட்ட உடனேயே சார்லஸ் என்னுடன் பேசினார்.​</p><p>* ஒரு சிறுவன் தன் தாயின் உடலுக்குப் பின்னால் நடந்து செல்வது எவ்வளவு பெரிய மன அதிர்ச்சியைத் தரும்?</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-property-taxes-in-urban-areas-should-not-be-raised-repeatedly">நகர்ப்புறங்களில் சொத்து வரியை மீண்டும், மீண்டும் உயர்த்தக் கூடாது:  அன்புமணி</a></p><p>* உள்ளாட்சி அமைப்புகள் நிதித் தற்சார்பு பெற்றால் மட்டுமே மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர முடியும்.</p><p>* முந்தைய திமுக ஆட்சியில் 2022-ஆம் ஆண்டில் சென்னை உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் 150% வரை சொத்துவரி உயர்த்தப்பட்டது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/trp-raaja-indictment-tvk-govt">முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணத்தில் ரீல்ஸ்தான் வந்தது, முதலீடு வரவில்லை- டி.ஆர்.பி.ராஜா</a></p><p>* புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருந்தால் அதைக் காட்டலாமே? நிறுவனத்தின் பெயரைக் கூட ஏன் சொல்லவில்லை?</p><p>*  ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்தவர்கள் ரீல் விட்டு ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-says-no-violations-regarding-madurai-meenakshi-amman-temple-kumbhabhishekam-pass-issue">மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக பாஸ் விவகாரத்தில் எந்த விதிமீறலும் இல்லை - அமைச்சர் நிர்மல்குமார்</a></p><p>* கும்பாபிஷேகம் நல்ல முறையில் நடந்து முடிந்த நிலையில் தேவையின்றி திமுகவினர் அவதூறு பரப்புகின்றனர்.</p><p>* இபிஎஸ்-ஐ வீழ்த்துவது தான் என் வாழ்நாள் லட்சியம் என்று கூறிய தினகரன் தற்போது அவரை முதல்வராக்க துடிக்கிறார்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-says-financial-assistance-will-be-provided-to-student-bharathidasan-within-two-days">மாணவர் பாரதிதாசனுக்கு 2 நாட்களில் உதவித்தொகை வழங்கப்படும் - அமைச்சர் வன்னி அரசு உறுதி</a></p><p>* தம்பி பாரதிதாசனை படிக்க வைப்போம்.</p><p>* பாரதிதாசன் மட்டுமின்றி அனைத்து மாணவர்களின் கல்விக்கும் தவெக அரசு உதவும்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/by-election-election-commission-grants-permission-for-40-aiadmk-star-speakers-to-campaign">மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுகவின் 40 நட்சத்திர பேச்சாளர்களுக்கு பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம்  அனுமதி</a></p><p>* மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. </p><p>* 2 தொகுதிகளிலும் த.வெ.க., தி.மு.க, அ.திமு.க, கம்யூனிஸ்டு கட்சிகள், நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-and-dharapuram-by-election-cm-vijay-campaign-4-days">மதுராந்தகம்-தாராபுரம் இடைத்தேர்தல்: முதலமைச்சர் விஜய் 4 நாட்கள் பிரசாரம்</a></p><p>* மதுராந்தகம், தாராபுரம் 2 தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் பிரசாரம் செய்ய திட்டமிட்டு இருக்கிறார். </p><p>* எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் பிரசார திட்டமும் தயாராகி வருகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/additional-special-buses-from-chennai-to-outstations">சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு  கூடுதல் சிறப்பு பேருந்துகள்- அரசு விரைவு போக்குவரத்து கழகம் ஏற்பாடு</a></p><p>* பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>*  சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/congress-mp-jothimani-writes-to-letter-finance-minister-charges-for-upi-merchant-transactions">யுபிஐ வணிக பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்: நிதியமைச்சருக்கு ஜோதிமணி கடிதம்</a></p><p>* ரெயில்வே, எரிபொருள் உள்ளிட்ட குறிப்பிட்ட பிரிவுகளில் ரூ. 2,000-க்கு மேல் ரூ.5 கட்டணம் விதிக்கப்படும்.</p><p>* நாடு முழுவதிலும் உள்ள சிறு வணிகர்கள், நெசவாளர்கள் மற்றும் சாதாரண மக்களைக் கடுமையாகப் பாதிக்கும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-asking-cm-vijay-going-to-do-for-tn-water-management">தமிழ்நாட்டின் நீர் மேலாண்மைக்காக முதலமைச்சர் விஜய் என்ன செய்யப் போகிறார் - அன்புமணி</a></p><p>* அனைத்து சாதிகளிலும் உள் ஒதுக்கீடு நிறைய உள்ளது.</p><p>* தண்ணீருக்காக நாம் அடுத்த மாநிலத்திடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறோம்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-sees-rapid-dengue-surge-with-over-200-daily-cases" rel="nofollow">தமிழகத்தில் வேகமாக பரவும் டெங்கு- தினமும் 200-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு</a></p><p>* மருத்துவமனைகளில் காய்ச்சல் வார்டுகளை அதிகரப்படுத்த உத்தரவு.</p><p>* இதுவரை 16,577 பேருக்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/irattaimalai-seenivasan-memorial-day-dmk-mp-kanimozhi-tribute" rel="nofollow">இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாள்: திமுக எம்பி கனிமொழி புகழஞ்சலி!</a></p><p>* 'திராவிட மணி' இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாள் இன்று.</p><p>* சமத்துவமும் சமூக நீதியும் தழைத்திட அயராது பாடுபட்ட அன்னாரின் நினைவைப் போற்றி வணங்குகிறேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-18-9-2026">GOLD PRICE TODAY: ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.145 உயர்ந்து ரூ.14,155-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/womens-cricket-india-japan-quarterfinal-today" rel="nofollow">பெண்கள் கிரிக்கெட்: கால் இறுதியில் இந்தியா- ஜப்பான் இன்று மோதல்</a></p><p>* போட்டியில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் நேரடியாக கால் இறுதியில் கால் பதித்தன.</p><p>*  அரை இறுதியில் இந்தியா-ஜப்பான் இடையிலான ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியை எதிர்கொள்ளும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/48-dead-from-poisonous-alcohol-in-nigeria" rel="nofollow">நைஜீரியாவில் விஷச்சாராயம் குடித்த 48 பேர் உயிரிழப்பு</a></p><p>* ஒண்டோ மாகாணத்தில் ஏராளமான பொதுமக்கள் வழக்கம்போல சாராயம் வாங்கி அருந்தியுள்ளனர்.</p><p>* விஷசாராயம் காய்ச்சிய முக்கிய நபர் உள்பட 15 பேரை அதிரடியாகக் கைது செய்தனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/amid-war-russia-parliament-election-begins-today" rel="nofollow">போர் சூழலுக்கு இடையே.. ரஷியாவில் நாடாளுமன்ற தேர்தல் இன்று தொடக்கம்</a></p><p>* உக்ரைன் உடனான போரில் ரஷியா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. </p><p>* புதின் தனது அதிகார பலத்தால் மீண்டும் நாடாளுமன்றத்தைக் கைப்பற்றுவது உறுதியாகிவிட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/governor-arlekar-granted-assent-to-12-bills-passed-in-legislative-assembly">சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 12 மசோதாக்களுக்கு ஆளுநர் அர்லேகர் ஒப்புதல்</a></p><p>* சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்களில் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார்.</p><p>* தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பான மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. </p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/student-bharathidasan-again-clarifies-overseas-scholarship-scheme-was-not-misused">அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தை தவறாக பயன்படுத்தவில்லை - மாணவர் பாரதிதாசன் விளக்கம்</a></p><p>* 2-ம் ஆண்டு படிப்பிற்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை என மாணவர் கூறுவது தவறானது.</p><p>* ஆராய்ச்சி செலவுகளுக்கான பில் அனைத்தும் ஆக.26-ந்தேதியே அனுப்பிவிட்டேன்.</p>]]></content:encoded></item><item><title>விநாயகர் சிலைகளை கரைப்பதை பார்த்து கதறும் சின்னஞ்சிறுசுகள்.... அப்பா தண்ணீரில் போடாதீங்க பிளீஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vinayagar-chaturthi-worship-11</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vinayagar-chaturthi-worship-11#comments</comments><guid isPermaLink="false">fd261211-0f85-4383-9390-e0f915deccf4</guid><pubDate>Fri, 18 Sep 2026 11:55:00 +0000</pubDate><atom:updated>2026-09-18T11:55:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vinayagar Chatuthi,vinayagar,விநாயகர்,விநாயகர்   சதுர்த்தி,Vinayagar Chaturthi 2026,விநாயகர் சதுர்த்தி 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/xf8rsp7q/vinayagar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/xf8rsp7q/vinayagar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிஞ்சு மனங்கள் விநாயகர் சிலைகளை பிரிய மனமில்லாமல் தவிப்பதும், அடம் பிடிப்பதும் நீர்நிலைகள் அருகில் நித்தமும் அரங்கேறும் காட்சிகளாகிவிட்டன.</p><p>வீடுகளிலும், பொதுஇடங்களிலும் விநாயகர் சதுர்த்தி தினத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்த விநாயகர் சிலைகளை பக்தி பரவசத்துடன் எடுத்துச்சென்று ஆறு, கடல், ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைத்து வருகிறார்கள்.</p><p>அழகிய வேலைப்பாடுகளுடன் விதவிதமாக வண்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் தூக்கிப்போடும் போது அது ஐதீகமாக தெரிந்தாலும், மனதில் லேசான கவலையும் தோன்றாமல் இருப்பதில்லை. கண் எதிரில் விநாயகர் சிலைகள் தண்ணீரில் உடைந்து நொறுங்கி சிதறுவது ஒன்றிரண்டு நாட்கள் மனக்கண் முன்பு வந்து செல்ல தவறுவதில்லை. அந்த உணர்வை பெரியவர்கள் வெளிக்காட்டுவதில்லை.</p><h2><strong>விநாயகர் சிலை</strong></h2><p>ஆனால் பிஞ்சு மனங்கள் விநாயகர் சிலைகளை பிரிய மனமில்லாமல் தவிப்பதும், அடம் பிடிப்பதும் நீர்நிலைகள் அருகில் நித்தமும் அரங்கேறும் காட்சிகளாகிவிட்டன.</p><p>விநாயகர் சதுர்த்திக்காக சிறு பிள்ளையார் சிலைகளை வாங்கி சென்று வீடுகளில் வைத்து பூஜை செய்வார்கள். அப்போது அந்த வீடுகளில் இருக்கும் குழந்தைகளும் விளையாட்டு தனத்தோடு வழிபட்டாலும் அந்த சிலைகளோடு ஒன்றிவிடுகிறார்கள். பின்னர் கரைப்பதற்காக பூக்களால் அலங்காரம் செய்து சிலைகளை எடுத்து வந்து நீர்நிலைகளின் அருகில் வைத்து கற்பூரம் ஏற்றி வழிபடுகிறார்கள். வீட்டில் நடக்கும் பூஜையை போல்தான் வெளியிலும் எடுத்து வந்து அப்பா-அம்மா பூஜை செய்கிறார்கள் என்று அதுவரை சந்தோஷமாக இருக்கும் குழந்தைகள் சிலையை எடுத்து தண்ணீரில் போடப்போகும் போதுதான் உடைந்து நொறுங்கி விடுகிறார்கள்.</p><h2><strong>சென்னை பட்டினப்பாக்கம்</strong></h2><p>சென்னை பட்டினப்பாக்கத்தில் ஒரு விநாயகர் சிலையை கரைக்க விடாமல் குழந்தை ஒன்று அடம்பிடித்தது. ஒரு வழியாக சிலையை கடலில் போட்டு திரும்பினாலும் ‘எனக்கு பிள்ளையார் சாமி’ வேணும்... என்று கண்ணீர் விட்டு அழுத குழந்தையிடம்,</p><p>“நீ எங்க செல்லக்குட்டித்தானே?”</p><p>“ம்”</p><p>“அப்போ அப்பா சொல்றதை கேட்பியா...”</p><p>“ம்”</p><p>“நம்ம செல்ல விநாயகரும் கடலில் குளித்துவிட்டு வந்து விடுவார்.. சரியா...?”</p><p>“அப்போ... நாம நின்னு கூட்டிட்டு போவோப்பா...”</p><p>“நாம வெயிட் பண்ண வேண்டாம்... அவர் வேகமாக வருவார்.”</p><p>நாம் வீட்டுக்கு போவதற்குள் அவர் வந்துவிடுவார் பாரேன் என்று அந்த குழந்தையை சமாதானப்படுத்தி அழைத்து சென்றார்கள்.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/2jvd26jz/vinayaga.jpg" /></figure><h2><strong>குழந்தை</strong></h2><p>ஆந்திர கடலோரங்களில் நடந்த காட்சிகள் மிகவும் உருக்கமாக இருந்தது. ஒரு குழந்தை விநாயகர் சிலையை கட்டித் தழுவியபடி ‘நான் விடமாட்டேன்’ என்று கண்ணீர் விட்டு கதறி அழுதது. அந்த குழந்தையை சமாதானப்படுத்தி சிலையை எடுத்து சென்று கரைப்பதற்கு பெற்றோர் பெரும்பாடுபட்டனர்.</p><p>ஒரு குழந்தைக்கு தாவணி எல்லாம் போட்டு அழைத்து வந்திருந்தார்கள். அதுவரை உற்சாகமாக இருந்த அந்த குழந்தையும் விநாயகர் சிலையை கடலில் போடப்போகிறார்கள் என்று தெரிந்ததும் ‘பிளீஸ்பா... வேண்டாம்பா... வீட்டுக்கு கொண்டு செல்வோம்’ என்று சிலையை கட்டிப்பிடித்து கதறியது.</p><h2><strong>விநாயகரை பிரியமனமில்லாமல் நடத்திய பாச போராட்டம்</strong></h2><p>இன்னொரு குட்டிகுழந்தை அவளது தந்தை விநாயகர் சிலையை தூக்கியதும் கொண்டு செல்லவிடாமல் தடுத்து தன்னிடம் கொடுத்து விடும்படி கெஞ்சி அழுவதை பார்க்க பரிதாபமாக இருந்தது. தாய் அந்த குழந்தையை பிடித்து வலுக்கட்டாயமாக தன் பக்கம் இழுத்து வைத்துக் கொண்டார். இன்னொரு குழந்தையின் சிறு பிள்ளைத்தனமான எதிர்ப்பையும் மீறி அந்த குழந்தையின் பெற்றோர் சிலையை கடலில் கொண்டு போட்டனர். அதை பார்த்து ஏங்கி ஏங்கி அழுத அந்த குழந்தையை சிறிது நேரம் சமாதானப்படுத்தவே முடியவில்லை. சிலை கரைக்க வந்திருந்த பலரும் அந்த குழந்தையை சமாதானப்படுத்த நீண்டநேரம் போராடினார்கள்.</p><p>விநாயகரோடு ஒன்றிவிட்ட குழந்தைகள் விநாயகரை பிரியமனமில்லாமல் நடத்திய பாச போராட்டம்தான் பார்ப்பவர்களை நெகிழ வைத்தது.</p>]]></content:encoded></item><item><title>டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள்: 15,000 ரன் குவித்து ஜோஸ் பட்லர் உலக சாதனை</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/jos-buttler-passes-kieron-pollard-becomes-first-batter-to-reach-15000-t20-runs</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/jos-buttler-passes-kieron-pollard-becomes-first-batter-to-reach-15000-t20-runs#comments</comments><guid isPermaLink="false">10878782-7a02-44a7-9be1-dd26146c49a5</guid><pubDate>Fri, 18 Sep 2026 11:50:23 +0000</pubDate><atom:updated>2026-09-18T11:50:23.129Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பொல்லார்டு,Jos Butler,ஜோஸ் பட்லர்,kieran pollard,15000</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/jx4kt6sx/butler.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ jos butler]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/jx4kt6sx/butler.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோஸ் பட்லர் டி20 கிரிக்கெட்டில் 15,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற உலக சாதனை படைத்துள்ளார். </strong></em></p><p>இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து வென்று 1-0 என முன்னிலை பெற்றது.</p><p>நேற்று நடந்த இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வென்று டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது. </p><p>இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெற இருக்கிறது.</p><h2>ஜோஸ் பட்லர் ரன் குவிப்பு</h2><p>இந்தத் தொடரில் ஜோஸ் பட்லர் முதல் போட்டியில் 44 பந்தில் 80 ரன்னும், இரண்டாவது போட்டியில் 16 பந்தில் 30 ரன்னும் எடுத்து அசத்தினார்.</p><h2>பட்லர் 15,000 ரன் </h2><p>இந்நிலையில், இந்த சிறப்பான பேட்டிங் மூலம் டி20 கிரிக்கெட்டில் ஜோஸ் பட்லர் 15,000 ரன்களைக் கடந்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் கெய்ரன் பொல்லார்டு 14,999 ரன்களுடன் இருக்கிறார்.</p><p>இந்தப் பட்டியலில் 6வது இடத்தில் இந்தியாவின் விராட் கோலி இடம் பிடித்துள்ளார்.</p><p>டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள்</p><p>ஜாஸ் பட்லர்: 15,000 ரன் (528 போட்டிகள்)</p><p>கெய்ரன் பொல்லார்டு: 14,999 ரன் (754 போட்டிகள்)</p><p>அலெக்ஸ் ஹேல்ஸ்: 14,581 ரன் ( 537 போட்டிகள்)</p><p>கிறிஸ் கெயில்: 14,562 ரன் (463 போட்டிகள்)</p><p>டேவிட் வார்னர்: 14,284 ரன் (439 போட்டிகள்)</p><p>விராட் கோலி: 14,218 ரன் (430 போட்டிகள்)</p><p>ஜேம்ஸ் வின்ஸ்: 14,081 ரன் (501 போட்டிகள்)</p><p>சோயப் மாலிக்: 13,571 ரன்</p><p>குயிண்டன் டி காக்: 13,046 ரன்</p><p>பாப் டூ பிளசிஸ்: 12,782 ரன்</p>]]></content:encoded></item><item><title>பெண் ஊழியருக்கு கத்திக்குத்து: சட்டம்- ஒழுங்கை தினமும் சர்வ நாசம் செய்து கொண்டிருக்கிறது த.வெ.க. அரசு- கனிமொழி எம்.பி. சாடல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/woman-employee-stabbed-tvk-govt-destroying-law-and-order-kanimozhi-mp-criticism</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/woman-employee-stabbed-tvk-govt-destroying-law-and-order-kanimozhi-mp-criticism#comments</comments><guid isPermaLink="false">b3ebf810-6f76-4750-aa55-01d96f41290c</guid><pubDate>Fri, 18 Sep 2026 11:29:40 +0000</pubDate><atom:updated>2026-09-18T11:29:40.164Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Kanimozhi MP,கனிமொழி எம்.பி.,தவெக அரசு,TVK Govt</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/uvu5iylr/KanimozhiMP001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/uvu5iylr/KanimozhiMP001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>த.வெ.க. அரசு ரீல்ஸ் விளம்பரங்களில் மூழ்கிக் கிடந்து மக்களின் உயிரோடுதான் விளையாடுமா?</p><h2>கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-</h2><p>பண்ருட்டியில் முதல்வர் மருந்தகப் பெண் ஊழியர் மீது நடந்துள்ள கத்திக்குத்துச் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பட்டப்பகலில் கொலைகளும், வெட்டுக்குத்துகளும் நடப்பது சர்வசாதாரணாமாகிவிட்டது.</p><p>பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள், ஏன் சிறைக் கைதிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை எனும் நிலையைத் தமிழ்நாட்டில் உருவாக்கி சட்டம் ஒழுங்கை தினமும் சர்வ நாசம் செய்து கொண்டிருக்கிறது த.வெ.க. அரசு.</p><p>பண்ருட்டி சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு உரிய மருத்துவச் சிகிச்சையும், பாதுகாப்பையும் அரசு வழங்க வேண்டும். குற்றவாளியின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம்- ஒழுங்கைப் பராமரிப்பதில் தாமதிக்காமல் இனியாவது இந்தப் பொறுப்பற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா? இல்லை ரீல்ஸ் விளம்பரங்களில் மூழ்கிக் கிடந்து மக்களின் உயிரோடுதான் விளையாடுமா?</p><h2>நடந்தது என்ன?</h2><p>கடலூர் மாவட்டம் பண்ருட்டி காமராஜ் நகரில் முதல்வர் மருந்தகம் செயல்பட்டு வருகிறது. இந்த மருந்தகம் வடகைலாசம் கூட்டுறவு சங்கத்தின் கீழ் இயங்கி வருகிறது.</p><h2>கத்திக்குத்து</h2><p>இங்கு காடாம்புலியூர் அடுத்த புறங்கணியை சேர்ந்த திவ்யா (23) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இன்று காலை அவர் வழக்கம் போல வேலைக்கு வந்தார். மருந்தகத்தை திறந்து பணியில் இருந்தார். அப்போது அங்கு அதே கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் (30) என்பவர் வந்தார். அவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இளம்பெண்ணை சரமாரியாக குத்தினார். இதில் அந்த பெண்ணுக்கு உடலில் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.</p><h2>சிகிச்சை</h2><p>வலியால் அலறி துடித்த அவர் சிறிது நேரத்தில் மயங்கி கீழே விழுந்தார். சத்தம் கேட்டு அருகே இருந்த ஊழியர்கள் ஓடிவந்து பார்த்தனர். அப்போது அங்கு இளம்பெண் கத்திக்குத்து காயங்களுடன் கிடந்தார். அருகே அந்த வாலிபர் நின்றிருந்தார்.</p><p>உடனடியாக அவர்கள், அந்த வாலிபரை பிடித்து வைத்து கொண்டு காடாம்புலியூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து கத்திக்குத்து காயங்களுடன் கிடந்த இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ஜிம்பாப்வே உடனான 2வது ஒருநாள் போட்டி: டிராவிஸ் ஹெட் சதத்தால் 356 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/zimbabwe-need-357-runs-to-win-against-australia-in-second-odi</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/zimbabwe-need-357-runs-to-win-against-australia-in-second-odi#comments</comments><guid isPermaLink="false">b57fbd23-7ff2-4ac0-b0b3-21bafe330eb0</guid><pubDate>Fri, 18 Sep 2026 11:10:22 +0000</pubDate><atom:updated>2026-09-18T11:10:22.947Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Travis Head,டிராவிஸ் ஹெட்,AUSvZIM,ஆஸ்திரேலியா ஜிம்பாப்வே தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/o223nbtz/head.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ head, marsh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/o223nbtz/head.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் சதமடித்து அசத்தினார்.</strong></em></p><p>ஆஸ்திரேலிய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.</p><p>இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி ஹராரேயில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பவுலிங் தேர்வு செய்தது.</p><p>அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர்.</p><h2>மார்ஷ் அரை சதம்</h2><p>முதல் விக்கெட்டுக்கு 130 ரன் சேர்த்த நிலையில் மிட்செல் மார்ஷ் 53 ரன்னில் அவுட்டானார்.</p><p>அடுத்து இறங்கிய கூப்பர் கானலி பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார்.</p><h2>சதமடித்த டிராவிஸ் ஹெட்</h2><p>2-வது விக்கெட்டுக்கு டிராவிஸ் ஹெட் உடன் கூப்பர் கானலி இணைந்தார். இந்த ஜோடி 60 ரன்கள் சேர்த்த நிலையில் டிராவிஸ் ஹெட் 112 ரன்னில் வெளியேறினார்.</p><p>கூப்பர் கானலி அரை சதம் கடந்து 78 ரன்னில் அவுட்டானார்.</p><p>கடைசி கட்டத்தில் ஆலிவர் பீக் அதிரடியாக ஆடி 18 பந்தில் 41 ரன் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.</p><p>இறுதியில், ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 356 ரன்கள் குவித்தது.</p><h2>பிராட் இவான்ஸ் 3 விக்கெட்</h2><p>ஜிம்பாப்வே சார்பில் பிராட் இவான்ஸ் 3 விக்கெட்டும், மசகட்சா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p>இதையடுத்து, 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>மம்தா பானர்ஜி தரப்புக்கு புதிய கட்சி பெயர், சின்னம்: தேர்தல் ஆணையம் அங்கீகாரம்</title><link>https://www.maalaimalar.com/news/national/football-vs-envelope-mamata-banerjee-party-rebels-get-new-name-symbol</link><comments>https://www.maalaimalar.com/news/national/football-vs-envelope-mamata-banerjee-party-rebels-get-new-name-symbol#comments</comments><guid isPermaLink="false">7fadf310-195c-4dd0-801d-b373d01a759a</guid><pubDate>Fri, 18 Sep 2026 10:46:13 +0000</pubDate><atom:updated>2026-09-18T10:46:13.074Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மம்தா பானர்ஜி,Mamata Banerjee,Trinamool Congress Party,திரிணாமுல் காங்கிரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/0i0pgvku/Mamata0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மம்தா பானர்ஜி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/0i0pgvku/Mamata0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜியின் <a href="https://www.maalaimalar.com/news/national/ec-bars-rival-tmc-factions-from-using-party-name-symbol-in-west-bengal-bypolls">திரிணாமுல் காங்கிரஸ்</a> படுதோல்வியை சந்தித்தது. அதன்பின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி பூசல் ஏற்பட்டது. சுமார் 60 எம்.எல்.ஏ.-க்கள் (மூன்றில் இரண்டு பங்கு) தனியாக செயல்பட முடிவு செய்தனர். இவர்கள் அரூப் ராய், ரிதப்ரதா பானர்ஜி தரப்பில் செயல்பட தொடங்கினர்.</p><p>அதேவேளையில் நாங்கள்தான் உண்மையான திரிணாமுல் காங்கிரஸ் என மம்தா பானர்ஜி தரப்பு கூறி வந்தது. இதற்கிடையே, திரிணாமுல் கட்சி எம்.பி.க்கள் 20 பேர், வேறு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சிறிய கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டார்.</p><h2>இடைத்தேர்தல்</h2><p>மேற்கு வங்க மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் நாங்கள்தான் உண்மையான திரிணாமுல் காங்கிரஸ் என இரு தரப்பினரும் தேர்தல் ஆணையத்தின் முறையிடப்பட்டனர். இதனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னம் (இரட்டைப் பூக்கள்) சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.</p><h2>மம்தா அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ்</h2><p>இந்த நிலையில் இரண்டு தரப்பிலும் பரிந்துரை செய்த கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மம்தா பிரிவுக்கு மம்தா அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் என்ற புதிய பெயரை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அத்துடன் கால்பந்து வீரர் சின்னத்தை ஒதுக்கியுள்ளது.</p><h2>ஜனநாயக அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ்</h2><p>அரூப் ராய், ரிதப்ரதா பானர்ஜி தரப்புக்கு ஜனநாயக அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் என்ற புதிய பெயரை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இந்த தரப்புக்கு அஞ்சல் உறை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>மேற்கு வங்கம், மேகாலயா, திரிபுரா மாநிலங்களில் நடைபெறும் இடைத்தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட இந்த கட்சியின் பெயரில் இருதரப்பினரும் செயல்படுவார்கள்.</p><p>மூன்றில் இரண்டு பங்கு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் ஆதரவு இருந்தால், கட்சிக்கு உரிமை கொண்டாடும் தரப்பிற்கு சாதகமான தீர்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/districts-in-tamil-nadu-likely-to-experience-rain-accompanied-by-thunder-and-lightning</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/districts-in-tamil-nadu-likely-to-experience-rain-accompanied-by-thunder-and-lightning#comments</comments><guid isPermaLink="false">710e3bde-ad57-470f-8990-93222a27c027</guid><pubDate>Fri, 18 Sep 2026 10:21:26 +0000</pubDate><atom:updated>2026-09-18T10:21:26.165Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/mwt9ytkb/rain.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/mwt9ytkb/rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது, வடக்கு உள் தமிழகம் மற்றும் மராத்வாடா-அரபிக்கடல் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி, காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக இன்று முதல் 24ஆம் தேதி வரை தமிழகத்தின் பல மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் கனமழை, மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் வாய்ப்பு உள்ளது.</strong></em></p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>சுமார் 4.5 கிமீ உயரத்தில் வடக்கு உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.</p><p>சுமார் 5.8 கிமீ உயரத்தில் மராத்வாடாயிலிருந்து தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை, உள் கர்நாடகா மற்றும் கேரளா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><h2><strong>லேசான மழை</strong></h2><p>இன்று நீலகிரி, கோயம்புத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சேலம், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், மதுரை, சிவகங்கை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், கரூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>நாளை நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், சேலம், ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கரூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>20 மற்றும் 21-ந்தேதிகளில் நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், மதுரை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், சேலம், ஈரோடு, நாமக்கல், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கரூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>22-ந்தேதி நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>23 மற்றும் 24-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>இதனிடையே இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong> </h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>இன்று தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>நாளை மற்றும் நாளை மறுநாள் தென்மேற்கு வங்கக்கடலின் தென் பகுதிகள் மற்றும் அந்தமான் கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடலின் அநேக பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>பெண் நிர்வாகி புகார்: கருப்பு முருகானந்தம் மீது பாஜக நடவடிக்கை..!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/bjp-removes-karuppu-muruganandam-after-female-member-complaint</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/bjp-removes-karuppu-muruganandam-after-female-member-complaint#comments</comments><guid isPermaLink="false">34531e1b-63bb-43c7-956a-2d45905c0fef</guid><pubDate>Fri, 18 Sep 2026 10:13:53 +0000</pubDate><atom:updated>2026-09-18T10:13:53.729Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,karuppu muruganantham</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/n2qy20uj/KaruppuMuruganandham.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கருப்பு முருகானந்தம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/n2qy20uj/KaruppuMuruganandham.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் மீது தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகபெண் புகாரளித்ததை அடுத்து, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக கூறி பொறுப்பில் இருந்து கருப்பு முருகானந்தம் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>பா.ஜ.க-வின் மாநில பிற்படுத்தப்பட்டோர் பிரிவு செயலாளராக இருப்பவர் திவ்யா சேஷாத்ரி. பா.ஜ.க மாநிலப் பொதுச் செயலாளர் கருப்பு எம். முருகானந்தம் தன்னை உடல் ரீதியான தாக்கியதாகவும், மனரீதியான துன்புறுத்தியதாகவும், தனக்கு மிரட்டல் விடுவதாகவும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோரி கட்சியின் தேசியத் தலைமையிடம் புகார் அளித்திருந்தாா். தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றியதாவும் கட்சி மேலிடத்திற்கு புகார் அளித்திருந்தார்.</p><p>இந்நிலையில், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக கூறி பொறுப்பில் இருந்து கருப்பு முருகானந்தம் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். </p><h2>விளக்கம்</h2><p>இதனிடையே, கருப்பு முருகானந்தம் "அந்தப் புகார் என்னவென்று எனக்கு இன்னும் தெரியவில்லை. அது குறித்து எனக்கு எந்தத் தகவலும் இல்லை. என் மீதான புகாரோ அல்லது குற்றச்சாட்டுகளோ என்னவென்று தெரியாமல் என்னால் எதற்கும் பதிலளிக்க முடியாது. விவரங்களை அறிந்த பிறகு, இது குறித்து விளக்கம் அளிப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>22-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: அமைச்சர் ராஜ்மோகன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-to-expand-kamarajar-breakfast-scheme-statewide-on-22nd-rajmohan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-to-expand-kamarajar-breakfast-scheme-statewide-on-22nd-rajmohan#comments</comments><guid isPermaLink="false">295fa2f5-f2af-4b55-9758-eac983b4dbae</guid><pubDate>Fri, 18 Sep 2026 09:54:21 +0000</pubDate><atom:updated>2026-09-18T09:54:21.442Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காலை உணவு திட்டம்,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/25fowcvp/MinisterRajmohan001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/25fowcvp/MinisterRajmohan001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக முதலமைச்சர் விஜய் இன்று காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம், தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் உள்ளிட்டவை குறித்து துறை அதிகாரிகள், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.</p><p>இந்த ஆலோசனைக்குப் பிறகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>* ஏற்கனவே, 19 லட்சத்து 34 ஆயிரத்து 230 மாணவர்கள் காலை உணவு திட்டத்தின் மூலம் பலன் அடைகிறார்கள். 37,440 பள்ளிகள் மூலமாக காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.</p><p>* காலை உணவு திட்டம் விரிவாக்கம் மூலமாக மேலும் 15,450 பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பயன்பெறுகிறார்கள்.</p><h2>பயனடையும் மாணவர்கள் எண்ணிக்கை 34.64 லட்சம்</h2><p>* புதிதாக 15 லட்சத்து 30 ஆயிரத்து 141 மாணவர்கள் பயன்பெற இருக்கிறார்கள். மொத்தமாக பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் மூலமாக 34 லட்சத்து 64 ஆயிரத்து 371 மாணவர்கள் காலை தோறும் உணவு பெறுவார்கள்.</p><p>* 22-ந்தேதி தமிழ்நாடு முழுவதும்<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/perunthalaivar-kamarajar-breakfast-scheme-tender-announced"> காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் </a>தொடங்கி வைக்கப்பட இருக்கிறது. 38 மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் தொடங்கப்படும்.</p><p>* தமிழ்நாட்டை பொறுத்தவரை அன்றும் இன்றும் இருமொழிக் கொள்கைதான். அதில் மாற்றுக் கருத்து கிடையாது. உச்சநீதிமன்ற நீதிபதி கருத்துதான் தெரிவித்துள்ளார். தீர்ப்பு கிடையாது. விசாரணை சென்று கொண்டிருக்கிறது. எந்த மொழிக்கும் எதிரானது தமிழ்நாடு அரசு அல்ல. இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது.</p><h2>உணவு மெனு தயாரிக்க கமிட்டி</h2><p>* அனைவருக்கும் உணவு, ஆரோக்கியமான உணவு என்பதுதான் எங்களுடைய அனைவருடைய எதிர்பார்ப்பு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உணவு என்ற வகையில் வழங்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். என்னென்ன வகையிலான உணவு என்ற மெனுவை தயாரிக்க புதிய கமிட்டியை ஆரம்பிக்க உத்தரவிட்டுள்ளார். திட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஓரிரு நாளில் இந்த கமிட்டி அமைக்கப்படும்.</p><p>* வருங்காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்க ஏற்பாடு செய்யப்படும்.</p><p>இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>சாதிக்க எதுவும் தடையில்லை: 45 வயதில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அடைந்த மாற்றுத்திறனாளி தாய்</title><link>https://www.maalaimalar.com/news/national/at-45-speech-and-hearing-impaired-jammu-woman-clears-class-10-exam-with-82-percent</link><comments>https://www.maalaimalar.com/news/national/at-45-speech-and-hearing-impaired-jammu-woman-clears-class-10-exam-with-82-percent#comments</comments><guid isPermaLink="false">c17c3d74-db8e-4879-94e5-3ba190f51d67</guid><pubDate>Fri, 18 Sep 2026 09:53:41 +0000</pubDate><atom:updated>2026-09-18T09:53:41.228Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Class 10,பத்தாம் வகுப்பு,jammu women,renu hans,naman kaul,ஜம்மு பெண்மணி,ரேணு ஹான்ஸ்,நமன் கவுல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/rl2lij02/naman.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Renu, Naman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/rl2lij02/naman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சாதனைக்கு வயதோ, உடலோ எதுவும் தடையில்லை என்பதை நிரூபித்துள்ளார் ஜம்முவைச் சேர்ந்த ஒரு மாற்றுத்திறனாளி பெண்.</strong></em></p><p>ஜம்முவைச் சேர்ந்த 45 வயதுடைய் பேசும் மற்றும் கேட்கும் திறனற்ற மாற்றுத்திறனாளி பெண்மணி ஒருவர், தனது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 82 சதவீத மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.</p><p>ஜம்முவின் ரூப் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரேணு ஹான்ஸ் (45). பேசும் மற்றும் கேட்கும் திறனற்றவர்.</p><p>கடந்த 2002-ம் ஆண்டு தனது 10-ம் வகுப்பு தேர்வை எழுதினார். எதிர்பாரா விதமாக கணிதத்தில் தோல்வி அடைந்தார். அதன்பின், திருமணம், குடும்பம், குழந்தைகள் என அவரது கல்விப் பயணம் முடங்கியது.</p><p>ஆனாலும், எப்படியாவது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறவேண்டும் என்ற எண்ணம் அவரது மனதில் ஆழமாக இருந்தது.</p><h2>தாய்க்கு ஆசிரியரான மகன்</h2><p>ரேணுவின் கனவை நனவாக்க அவரது 12-ம் வகுப்பு படிக்கும் மகன் நமன் கவுல் முன்வந்தார். சைகை மொழியை நன்கறிந்த நமன், தனது தாய்க்கு தானே ஆசிரியராக மாறினார்.</p><p>மாலையில் பள்ளி முடிந்து வந்ததும், நமன் தனது தாய்க்கு பாடங்களை சைகை மொழி மூலம் பொறுமையுடன் கற்றுக் கொடுத்தார். </p><p>கேட்கும் திறனற்ற ஒருவருக்கு கடினமான அறிவியல் மற்றும் கணிதக் கோட்பாடுகளைப் புரிய வைப்பது கடும் சவாலாக இருந்தது.</p><h2>82 சதவீதத்துடன் தேர்ச்சி</h2><p>ஜம்மு காஷ்மீர் திறந்தநிலைப் பள்ளி மூலம் கடந்த ஏப்ரல் மாதம் ரேணு ஹான்ஸ் தேர்வு எழுதினார். தேர்வு மையத்துக்குச் சென்ற ரேணுவுக்கு கொஞ்சம் டென்ஷனாகவே இருந்திருக்கிறது.</p><p>தன்னைவிட மிகவும் இளைய மாணவர்களும், வயதானவர்களும் அங்கு இருந்ததைப் பார்த்து முதலில் தயங்கினார். அவரது மகன் கொடுத்த ஊக்கத்தினால் தேர்வு எழுதினார்.</p><p>கடந்த 10-ம் தேதி அன்று வெளியான தேர்வு முடிவுகளில் அவர் 500-க்கு 410 மதிப்பெண்கள் (82 சதவீதம்) பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தார்.</p><h2>கனவு நனவானது</h2><p>இதுதொடர்பாக ரேணு ஹான்ஸ் கூறுகையில், இன்று என் கனவு நனவாகி உள்ளது. என் மகனால்தான் இவை அனைத்தும் சாத்தியமானது என பெருமிதத்துடன் தெரிவித்தார்.</p><p>மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்பதற்கேற்ப முறையான வழிகாட்டுதலும், தளராத நம்பிக்கையும் இருந்தால் மாற்றுத் திறனாளிகளாலும் எந்த சாதனையையும் படைக்க முடியும் என்பதை உலகிற்கு நிரூபித்த ரேணு ஹான்சுக்கு நாமும் ஒரு வாழ்த்து சொல்லலாமே.</p>]]></content:encoded></item><item><title>மகிஷாசுரனை வதம் செய்த சாமுண்டேஸ்வரி தேவி: மைசூர் தசரா திருவிழா வரலாறு</title><link>https://www.maalaimalar.com/news/national/goddess-chamundeshwari-slays-mahishasura-mysore-dasara-history</link><comments>https://www.maalaimalar.com/news/national/goddess-chamundeshwari-slays-mahishasura-mysore-dasara-history#comments</comments><guid isPermaLink="false">c4392bee-0b16-4ea9-a419-1a41d6db039f</guid><pubDate>Fri, 18 Sep 2026 09:25:12 +0000</pubDate><atom:updated>2026-09-18T09:25:12.672Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,தசரா திருவிழா,மைசூர்,Mysore,Dasara</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/wqsscxxy/Untitled-design-9.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mysuru Dasara]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/wqsscxxy/Untitled-design-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடகாவில் மகிஷாசுரன் என்ற எருமை அரக்கனை சாமுண்டேஸ்வரி தேவி மலையில் வைத்து கொன்ற நிகழ்வை அடுத்து, ராஜா உடையார் என்பவர் தசரா பண்டிகையை பாரம்பரியமாக கொண்டாட தொடங்கினார்.</p><h3><strong>விஜயநகரப் பேரரசு</strong></h3><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE">கர்நாடகாவில்</a> தசரா விழாவானது தீமையை நன்மையால் வென்ற நிகழ்வை கொண்டாடும் ஒரு அரச திருவிழாவாக பார்க்கப்படுகிறது. இந்த விழா அம்மாநிலத்தில் ‘நாதஹப்பா’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.</p><p>விஜயநகரப் பேரரசுகளின் ஆட்சிக்கு பிறகு 1610 ஆம் ஆண்டு ராஜா உடையார் தசரா பண்டிகையை பாரம்பரியமாக நிறுவினார். </p><h3><strong>சாமுண்டேஸ்வரி தேவி</strong></h3><p>இந்த விழாவானது முதலில் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் கொண்டாடப்பட்டது. இதையடுத்து மைசூர் தலைநகராக அறிவிக்கப்பட்டபோது, தசரா மைசூரில் கொண்டாடப்பட ஆரம்பித்தது.</p><p>மகிஷாசுரன் என்ற எருமை அரக்கனை சாமுண்டேஸ்வரி தேவி மலையில் வைத்து கொன்ற நிகழ்வை அடுத்து, ‘மைசூரு’ என்ற நகரின் பெயர் உருவானது.</p><p>இதையடுத்து ராஜா உடையார், சாமுண்டேஸ்வரியை குலதெய்வமாக ஆக்கி, தசராவை மைசூரில் கொண்டாட தொடங்கினார்.</p><h3><strong>மைசூர் தசரா</strong></h3><p>தசரா என்பது விஜயதசமியன்று முடிவடையும் ஒரு 10 நாள் திருவிழாவாகும். இந்த நாள் அதற்கு முந்தைய ஒன்பது நாட்களின் வெற்றியை குறிப்பதாக அமைந்துள்ளது.</p><p>நவராத்திரியின் முந்தைய ஒன்பது நாட்களுக்கான கொண்டாட்டங்கள், ஆறு நாட்களுக்குப் பிறகே தொடங்குகின்றன. ஆறாம் நாள் சரஸ்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.</p><p>இதையடுத்து எட்டாம் நாள் துர்கா தேவிக்கும், ஒன்பதாம் நாள் செல்வத்தின் தேவியான லட்சுமிக்கும் அர்ப்பணிக்கப்படுகிறது. பத்தாம் நாளில், மைசூர் அரண்மனையிலிருந்து தொடங்கி மணிமண்டபத்தில் முடிவடையும் ஒரு பிரம்மாண்டமான ஊர்வலம் நடைபெறுகிறது.</p><h3><strong>ஜம்போ சவாரி</strong></h3><p>பத்தாம் நாளான விஜயதசமி அன்று, 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியில் அலங்கரிக்கப்பட்ட யானையின் மீதுள்ள தங்க தொட்டிலில் சாமுண்டேஸ்வரி தேவியின் சிலை வைக்கப்பட்டு, மைசூர் அரண்மனையில் இருந்து மணிமண்டபம் வரை ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது.</p><p>மேலும் மகாநவமி அன்று மன்னனின் வாள், யானைகள் மற்றும் குதிரைகளுடன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு வழிபடப்படுகிறது.</p><p>இதைத்தொடர்ந்து அடுத்த நாள் மாலை, அந்த சிலை அம்பா விலாஸ் அரண்மனையில் இருந்து புறப்பட்டு, ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மணிமண்டபத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது.</p><p>அங்கு பாண்டவர்கள் தங்கள் ஆயுதங்களை ஒரு சமிக்குள் மறைத்து வைத்து, இந்த நாளில் அவற்றை மீண்டும் எடுத்ததை நினைவுகூறும் வகையில் கெளரவிக்கப்படுகிறது.</p><p>இந்த தசரா திருவிழாவில் 12 தசரா யானைகள், மைசூர் அரண்மனையிலிருந்து மண்டபம் வரையிலான ஊர்வலப் பாதையில் தினமும் இருமுறை அணிவகுத்துச் செல்கின்றன.</p><p>பத்து நாட்கள் இரவு நடைபெறும் ஜம்போ சவாரி மற்றும் குதிரைப்படை வீரர்கள் தீப்பந்தங்களை ஊர்வலமாக எடுத்து செல்லும் பஞ்சின கவசத்துடன் தசரா திருவிழா முடிவடைகிறது.</p><h3><strong>2026 தசரா பண்டிகை</strong></h3><p>இந்த நிலையில் இந்த ஆண்டு கொண்டாடப்படும் தசரா திருவிழாவானது, அக்டோபர் மாதம் 11ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 21 அன்று வரை நடைபெறவுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காவல் நிலைய சிசிடிவி பதிவுகளை 15 நாட்கள் மட்டுமே பாதுகாக்க முடியும் எனக் கூறுவதா?- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிருப்தி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/can-police-keep-cctv-recordings-only-15-days-asks-madurai-high-court</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/can-police-keep-cctv-recordings-only-15-days-asks-madurai-high-court#comments</comments><guid isPermaLink="false">ad7e05ad-627b-46ca-8acc-ffd9256bc812</guid><pubDate>Fri, 18 Sep 2026 09:19:22 +0000</pubDate><atom:updated>2026-09-18T09:19:22.393Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>CCTV,highcourt madurai branch,சிசிடிவி,உயர் நீதிமன்ற மதுரைக் கிளை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/k2c8abm2/madurai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ High court madurai bench]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/k2c8abm2/madurai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அலங்காநல்லூரைச் சேர்ந்த பெண்ணை மதுரை எஸ்.பி. அலுவலகத்தில் 36 மணி நேரம் சட்ட விரோதக் காவலில் அடைத்து வைத்தது தொடர்பான வழக்கில், சிசிடிவி பதிவுகளை சமர்பிக்க உத்தரவிடக்கோரி <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thoothukudi-shooting-incident-high-court-madurai-bench-key-order-to-government">உயர்நீதிமன்ற மதுரைக்கிளை</a>யில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது இன்று விசாரணை நடத்தப்பட்டது.</p><p>உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி..</p><p>அப்போது போலீஸ் தரப்பில் 15 நாட்கள் மட்டுமே சிசிடிவி பதிவுகளை பாதுகாக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஏற்க முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, காவல் நிலையங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை குறைந்தபட்சம் 18 மாதங்கள் பாதுகாக்க வேண்டும். CCTV கேமராக்களைப் பராமரிக்க வேண்டிய கடமை எஸ்.பி.க்கு உள்ளது எனத் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டயானா சகோதரர் எழுதிய புத்தகத்தில் மன்னர் சார்லஸ் மீது குற்றச்சாட்டு - பக்கிங்காம் அரண்மனை மறுப்பு
</title><link>https://www.maalaimalar.com/news/world/princess-diana-brother-claims-on-charles</link><comments>https://www.maalaimalar.com/news/world/princess-diana-brother-claims-on-charles#comments</comments><guid isPermaLink="false">c7e1a178-fb1c-4ec2-9833-3b1a85beaffc</guid><pubDate>Fri, 18 Sep 2026 09:03:24 +0000</pubDate><atom:updated>2026-09-18T09:03:24.103Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Buckingham Palace,சார்லஸ்,Charles,Diana,டயானா,பக்கிங்காம் அரண்மனை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/fyoykvki/charles.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Charles diana - Charles Spencer]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/fyoykvki/charles.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மன்னர் சார்லஸ் குறித்து ஸ்பென்சர் தெரிவித்து உள்ள குற்றச்சாட்டுகளை பக்கிங்காம் அரண்மனை திட்டவட்டமாக மறுத்து உள்ளது.</p><h2>இளவரசி டயானா</h2><p>இங்கிலாந்து மன்னர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D">சார்லசுக்கும்</a> அவரது முதல் மனைவியான இளவரசி டயானாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 1992-ம் ஆண்டு பிரிந்தனர். பின்னர் 1996-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். 1997-ம் ஆண்டு டயானா, பாரிசில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். </p> <h2>டயானா சகோதரர் ஸ்பென்சர்</h2><p>இந்த நிலையில் டயானாவின் சகோதரர் ஸ்பென்சர் தனது சகோதரி குறித்து ஸ்வான் சாங் டயானா மை சிஸ்டர் என்ற புத்தகத்தை எழுதி உள்ளார். அடுத்த வாரம் வெளியாக உள்ள இந்த புத்தகத்தில் இருந்து சில பகுதிகள் வெளியாகி உள்ளது. அதில் டயானா மரணம் அடைந்த பிறகு மன்னர் சார்லசுடன் நடந்த உரையாடலை ஸ்பென்சர் குறிப்பிட்டு உள்ளார். அது தொடர்பாக அவர் கூறியதாவது:-</p> <h2>சார்லஸ்</h2><p>டயானாவின் மரணம் உறுதி செய்யப்பட்ட உடனேயே சார்லஸ் என்னுடன் பேசினார்.​ அவர் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டார். மறுமணம் செய்து கொள்வதற்கான புதிய சுதந்திரம் கிடைத்த உணர்வே அதற்கு காரணமாக இருந்திருக்கலாம். அவர் அளவற்ற மகிழ்ச்சியில் இருந்தார். ஒரு லாட்டரி வென்றவரைப் போல அவர் பேசினார் என்று அப்போது நான் நினைத்தது எனக்கு நினைவிருக்கிறது. </p> <h2>டயானா இறுதி ஊர்வலம்</h2><p>டயானாவின் இறுதி ஊர்வலத்தில் அவரது மகன்கள் வில்லியம், ஹாரி ஆகியோர் நடந்து செல்வது குறித்து, எனக்கும் சார்லசுக்கும் இடையே காரசாரமான தொலைபேசி உரையாடல் நடைபெற்றது. அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். ஒரு சிறுவன் தன் தாயின் உடலுக்குப் பின்னால் நடந்து செல்வது எவ்வளவு பெரிய மன அதிர்ச்சியைத் தரும்? அது மிகவும் மோசமான ஒன்று. எனவே அதைத் தடுக்க நான் முயற்சித்தேன்.</p><p>டயானா தனது மகன்கள் இதுபோன்ற கடினமான சூழலுக்கு ஆளாவதை விரும்ப மாட்டார் என்று நான் கூறினேன். அதற்கு சார்லஸ், கவலைப்பட வேண்டாம். நாங்கள் அவரை விரைவில் மறந்து விடுவோம் என்றார். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன்.</p><p>இந்த உரையாடலில் சார்லஸ் தனது கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார். டயானா மீது தனக்குள்ளே அடக்கி வைத்திருந்த அவமதிப்பு உணர்வையும், அவரது மறைவால் உலகம் அடைந்த பெரும் அதிர்ச்சியைக் கண்டு தனக்கு ஏற்பட்ட வெறுப்பையும் அவர் கொட்டித் தீர்த்தார். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார்.</p> <h2>பக்கிங்காம் அரண்மனை மறுப்பு</h2><p>மன்னர் சார்லஸ் குறித்து ஸ்பென்சர் தெரிவித்து உள்ள குற்றச்சாட்டுகளை பக்கிங்காம் அரண்மனை திட்டவட்டமாக மறுத்து உள்ளது. இதுதொடர்பாக அரண்மனை வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-</p> <p>கொள்கை ரீதியாகப் புத்தகங்கள் குறித்து நாங்கள் கருத்து தெரிவிப்பதில்லை என்றாலும், சகோதர இழப்பால் ஏற்படும் துயரம் என்பது பகுத்தறிவை மங்கச் செய்து, முடிவெடுக்கும் திறனைப் பாதித்து, மற்றவர்கள் புரிந்துகொள்ள முடியாத வகையில் நினைவுகளை மாற்றியமைக்கவும் கூடும் என்பதை மன்னர் நன்கு அறிவார். இது பல ஆண்டுகள் கடந்த பிறகும் கூட நிகழலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மன்னர் சார்லஸ் கடந்த 2005-ம் ஆண்டு கமிலா பார்க்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>வருடாந்திர பிரம்மோற்சவ விழா - திருப்பதியில் நாளை கருட சேவை
</title><link>https://www.maalaimalar.com/spirituality/brahmotsavam-festival-garuda-seva-in-tirupati-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/spirituality/brahmotsavam-festival-garuda-seva-in-tirupati-tomorrow#comments</comments><guid isPermaLink="false">828f14b0-eeb7-44ec-8c9a-99ee3db34282</guid><pubDate>Fri, 18 Sep 2026 08:37:13 +0000</pubDate><atom:updated>2026-09-18T08:37:13.662Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,Tirupati temple,brahmotsavam,திருப்பதி கோவில்,பிரம்மோற்சவம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/08/19/17376952-tirupatitemple.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tirupati temple]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/08/19/17376952-tirupatitemple.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வான தங்க கருட வாகன சேவை நாளை நடைபெறுகிறது.</p><h2>திருப்பதி கோவில்</h2><p>திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 3-வது நாளான நேற்று இரவு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். </p><h2>கருட சேவை</h2><p>இன்று காலை கல்ப விருட்ச வாகனத்தில் எழுந்தருளினார். மாட வீதிகளில் பக்தர்கள் கோவிந்தா கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர். இன்று இரவு சர்வ பூபால வாகன உற்சவம் நடக்கிறது. </p> <h2>பிரம்மோற்சவ விழா</h2><p>பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வான தங்க கருட வாகன சேவை நாளை நடைபெறுகிறது. மாலை 6.30 மணி முதல் நள்ளிரவு வரை கருட சேவை நடைபெறும். </p><p>கருட சேவையைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கருட சேவையை முன்னிட்டு ஆந்திரா பிரதேச போக்குவரத்து துறை சார்பில் கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட உள்ளன. கருட சேவையை காண காலை முதலே பக்தர்கள் மாட வீதிகளில் குவிவார்கள். </p> <p>பக்தர்களின் வசதிக்காக மாட வீதிகளின் நுழைவு வாயிலில் சிறப்பு வழிகாட்டி பலகைகள் பொருத்தப்பட்டு உள்ளன.  பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் பல மடங்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. </p><h2>15 மணிநேரம்</h2><p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">திருப்பதியில்</a> நேற்று 68,265 பேர் தரிசனம் செய்தனர். 26,959 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ.4.16 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.</p><p>3.21 லட்சம் லட்டுக்கள் விற்பனையானது.நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 15 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>நகர்ப்புறங்களில் சொத்து வரியை மீண்டும், மீண்டும் உயர்த்தக் கூடாது- அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-property-taxes-in-urban-areas-should-not-be-raised-repeatedly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-property-taxes-in-urban-areas-should-not-be-raised-repeatedly#comments</comments><guid isPermaLink="false">b896709e-de23-458e-aa46-ddcc2c75c571</guid><pubDate>Fri, 18 Sep 2026 08:33:41 +0000</pubDate><atom:updated>2026-09-18T08:33:41.722Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,சொத்து வரி,property tax</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/y4nkl4g4/anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/y4nkl4g4/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>உள்ளாட்சிகளின் வருவாயை அதிகரிப்பதற்காக நியாயமான நிதிப்பகிர்வு, வரி அல்லாத வருவாய் ஆதாரங்களைப் பெருக்குவது உள்ளிட்ட பரிந்துரைகளை  மட்டுமே ஏழாம் மாநில நிதி ஆணையம் பரிந்துரைக்க வேண்டும். ஒருவேளை சொத்துவரியை உயர்த்த வேண்டும் என்று மாநில நிதி ஆணையம் பரிந்துரைத்தாலும் அதை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளக் கூடாது என அன்புமணி கூறியுள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல</strong></h2><p>உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலையை மேம்படுத்துவதற்காக சொத்துவரியை உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை அரசுக்கு அளிக்கவுள்ளதாக ஏழாம் மாநில நிதி ஆணையத்தின் தலைவர் அலாவுதீன் தெரிவித்திருக்கிறார். உள்ளாட்சிகளின் நிதிநிலையை மேம்படுத்த ஏராளமான வழிமுறைகள் இருக்கும் போது, மீண்டும், மீண்டும் மக்களை பாதிக்கும் சொத்து வரி உயர்வையே அனைத்து அரசுகளும் கையில் எடுப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.</p><p>சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு  செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் நிதிநிலையை மேம்படுத்துவதற்காக <a href="https://www.maalaimalar.com/topic/சொத்து-வரி">சொத்து வரி</a> உயர்வு, வரி அல்லாத வருவாயை அதிகரித்தல் உள்ளிட்ட மூன்று அம்சங்களை அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளதாக தெரிவித்தார். அவருடன் இருந்த நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, ''உள்ளாட்சி அமைப்புகளின் சொந்த வருவாயை அதிகரிக்க, சொத்து வரி உள்ளிட்டவைகளை அதிகரிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.</p><h2><strong>விலக்கு</strong></h2><p>உள்ளாட்சி அமைப்புகள் நிதித் தற்சார்பு பெற்றால் மட்டுமே மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர முடியும்; அதனால் உள்ளாட்சி அமைப்புகளின் வருவாயைப் பெருக்க வேண்டும் என்பதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அதற்காக மீண்டும், மீண்டும் சொத்து வரியை உயர்த்தி அதன் மூலம் மக்களைச் சுரண்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.</p><p>முந்தைய திமுக ஆட்சியில் 2022-ஆம் ஆண்டில் சென்னை உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் 150% வரை சொத்துவரி உயர்த்தப்பட்டது. அதன் சுமையையே மக்களால் தாங்க முடியாத நிலையில், ஆண்டுக்கு ஒருமுறை 6% சொத்து வரி உயர்த்தும் முறை கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. சட்டப்பேரவைத் தேர்தலின் போது மக்களின் அதிருப்தியை தவிர்ப்பதற்காக கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் சொத்துவரி உயர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.</p><p>தவெக ஆட்சிக்கு வந்த பிறகும் நிலைமை மாறவில்லை. சென்னையில் சில மாதங்களுக்கு முன் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் 10 மடங்கு வரை  சொத்துவரி உயர்த்தப்பட்டது. அதற்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து அந்த முடிவை தவெக அரசு கைவிட்டது. இத்தகைய சூழலில் மீண்டும் சொத்துவரி உயர்த்தப்படுவதை  மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது.</p><h2><strong>நியாயமல்ல</strong></h2><p>மாநில அரசின் வருவாயில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பங்கை முறையாக பகிர்ந்தளித்தாலே அவை சிறப்பாக செயல்படுவதற்கு தேவையான நிதி கிடைக்கும். ஆனால், மாநில அரசுகள் அதை செய்ய முன்வருவதில்லை. மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வில் மத்திய அரசு எத்தகைய மேலாதிக்க அணுகுமுறையை கடைபிடிக்கிறதோ, அதே அணுகுமுறையைத் தான் உள்ளாட்சிகளுக்கான நிதிப்பகிர்வில் மாநில  அரசும்  கடைபிடிக்கிறது.</p><p>உள்ளாட்சிகளுக்கு வருவாய் கிடைப்பதற்காக உள்ள பல வரிகளை அரசியல் ஆதாயம் தேடும் நோக்குடன் ரத்து செய்யும் மாநில அரசு, அதனால் ஏற்படும் இழப்புகளை சொத்துவரி உயர்வு மூலம் ஈடுகட்ட விரும்புவது நியாயமல்ல.</p><p>எனவே, உள்ளாட்சிகளின் வருவாயை அதிகரிப்பதற்காக நியாயமான நிதிப்பகிர்வு, வரி அல்லாத வருவாய் ஆதாரங்களைப் பெருக்குவது உள்ளிட்ட பரிந்துரைகளை  மட்டுமே ஏழாம் மாநில நிதி ஆணையம் பரிந்துரைக்க வேண்டும். ஒருவேளை சொத்துவரியை உயர்த்த வேண்டும் என்று மாநில நிதி ஆணையம் பரிந்துரைத்தாலும் அதை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளக் கூடாது என கூறியுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>மருந்து கடைகளில் கண்காணிப்பு கேமரா- மத்திய அமைச்சகம் பரிந்துரை</title><link>https://www.maalaimalar.com/news/national/health-ministry-proposes-cctv-in-medical-shops-to-monitor-prescription-drug-sales</link><comments>https://www.maalaimalar.com/news/national/health-ministry-proposes-cctv-in-medical-shops-to-monitor-prescription-drug-sales#comments</comments><guid isPermaLink="false">44bab348-e49c-458f-909e-47f8c0d42c2e</guid><pubDate>Fri, 18 Sep 2026 08:29:53 +0000</pubDate><atom:updated>2026-09-18T08:29:53.370Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Union Ministry,மத்திய அமைச்சகம்,சிசிடிவி கேமரா,CCTV camera,மருந்து கடை,pharmacies</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/jkvvzudv/CCTV.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CCTV Camera]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/jkvvzudv/CCTV.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மருந்து விதிகள் 1945-ல் பல்வேறு திருத்தங்களை செய்ய மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த திருத்தங்களுடன் வரைவு அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.</p><p>இதில் முக்கியமாக சரியான மருந்துச்சீட்டுகள் அல்லது டாக்டரின் பரிந்துரைச்சீட்டு இன்றி அட்டவணை எச்., எச்.1 மற்றும் எக்ஸ் பட்டியலில் உள்ள மருந்துகளை பெறுவதையும், விற்பனை செய்வதையும் தடுப்பதை இந்த திருத்தம் நோக்கமாக கொண்டுள்ளது.</p><p>எனவே டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து விற்பதை கண்காணிக்க மருந்து கடைகளில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE" rel="nofollow">கண்காணிப்பு கேமரா</a> வைக்க சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்து உள்ளது. </p><p>இந்த நடவடிக்கை பொது சுகாதாரத்துக்கான ஒழுங்குமுறை மேற்பார்வை மற்றும் பாதுகாப்புகளை வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதி என அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>அனைத்து செல்வங்களையும் தரும் புரட்டாசி சனிக்கிழமை விரதம்</title><link>https://www.maalaimalar.com/spirituality/worship/purattasi-month-perumal-worship-3</link><comments>https://www.maalaimalar.com/spirituality/worship/purattasi-month-perumal-worship-3#comments</comments><guid isPermaLink="false">de0a919b-c1f1-4a79-a4d5-ace57a836216</guid><pubDate>Fri, 18 Sep 2026 08:08:00 +0000</pubDate><atom:updated>2026-09-18T08:08:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,வழிபாடு,worship,பெருமாள் வழிபாடு,perumal worship,புரட்டாசி மாதம்,Purattasi Month</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/cgayr5yp/perumal.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/cgayr5yp/perumal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வழிபாடு</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>புரட்டாசி முதல் சனிக்கிழமையான நாளை விரதத்தை நாம் மேற்கொண்டு, பெருமாளின் அருளை பெறுவோம்.</p><p>நாளை புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை...</p><p>புரட்டாசி மாதம் என்றாலே நாராயணனின் நாமம் எங்கும் ஒலிக்கும் பக்தி மாதம். பூலோக வைகுண்டமான திருமலையில் ஸ்ரீ வெங்கடாசலபதி கலியுகரதனாக அவதரித்தது இந்த மாதத்தில்தான் என்பது ஐதீகம். அதிலும் குடும்பத்தில் அமைதியும், நீண்ட ஆயுளும், சகல ஐஸ்வர்யங்களும் அள்ளித்தரும் புரட்டாசி சனிக்கிழமை விரதம் மகத்துவம் நிறைந்தது.</p><h2><strong>கன்னி ராசி</strong></h2><p>பெருமாளின் அம்சமாக கருதப்படும் புதனுடைய வீடு கன்னி. இந்த கன்னி ராசியில் சூரியன் அமர்வது புரட்டாசி மாதத்தில்தான். ஆகவே இந்த மாதத்தில் பெருமாளுக்கு வேண்டிய பஜனைகள் பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன. புதனுக்கு நட்பு கிரகம் சனிபகவான். அதனால்தான் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகள் விஷேசமாக கொண்டாடப்படுகிறது.</p><h2><strong>புரட்டாசி சனிக்கிழமை</strong></h2><p>புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாடு மிகவும் பழமை வாய்ந்ததும், மகத்துவம் மிகுந்ததும் ஆகும். புரட்டாசி சனிக்கிழமைகளில் ஏதேனும் ஒரு நாளில் சிலர் திருப்பதிக்குச் சென்று தமது காணிக்கையைச் செலுத்தி வர வேண்டும். புரட்டாசி சனிக்கிழமையன்று சிவாலயங்களுக்குச் சென்று சனி பகவானை வழிபட்டு வணங்கினால், சனி தோஷம் நீங்கும். சூரியபகவானின் இச்சா சக்தியாகிய உஷாதேவியிடம் சூரியனுக்கு புத்திரனாக இச்சையின் வடிவமான சனீஸ்வரன் தோன்றினார் என்கிறது புராணம். இதனால் புரட்டாசி சனிக்கிழமை வழிபாட்டிற்கு விசேஷமானது.</p><h2><strong>சனி பகவான்</strong></h2><p>சனி பகவானால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது. அன்று பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை. இதற்காகத்தான் புரட்டாசி சனி விரதத்தை பக்தர்கள் வழி வழியாக கடைபிடிக்கின்றனர்.</p><h2><strong>பாவங்கள்</strong></h2><p>ஜாதக அமைப்பின்படி சனி, புதன் திசை நடப்பவர்கள் புரட்டாசி சனிக்கிழமை அன்று நல்லெண்ணெய் தீபம் போட்டு வழிபட தடைகள் அனைத்தும் நீங்கும். பாவங்கள் நீங்கி புண்ணியமும் சுபயோக சுபங்களும் கூடி வரும். புரட்டாசி சனிக்கிழமைகளில் யாருக்கும் கடன் கொடுக்கவும் கூடாது. கடன் வாங்கவும் கூடாது. ஆனால் தர்மம் நிறையச் செய்யலாம். காகத்திற்கு அன்று ஆலம் இலையில் எள்ளும் வெல்லமும் கலந்த அன்னம் வைத்தால் சனியின் தாக்கம் நீங்கும். வருடம் முழுவதும் சனிக்கிழமை விரதம் கடைப்பிடிக்க முடியாதவர்கள், புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் மட்டுமாவது விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால், வருடம் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருந்த பலனை பெற முடியும் என சொல்வார்கள். இதிலிருந்தே புரட்டாசி சனிக்கிழமை விரதம் எவ்வளவு மகத்தானது என்பதை புரிந்து கொள்ளலாம்.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/x8wi8day/vijayaragavan.jpg" /><figcaption>ஜி.விஜயராகவன் ஸ்ரீரங்கபுரம், தேனி</figcaption></figure><h2><strong>சனி பகவானின் கலியுக பயணம்</strong></h2><p>சனி பகவான், கலியுகத்திற்கு புறப்பட தயாரான சமயத்தில் அந்த வழியாக வந்த நாரதர், சனி பகவானின் கலியுக பயணம் பற்றி விசாரித்துள்ளார். பிறகு, “பூலோகத்தில் எங்கு வேண்டுமானாலும் செல். ஆனால், திருமலை பக்கம் மட்டும் தவறியும் சென்று விடாதே” என எச்சரித்து தனது கலகத்தை தொடங்கி உள்ளார். எதை செய்ய கூடாது என சொல்கிறார்களோ, அதை ஏன் செய்யக் கூடாது. செய்து பார்த்தால் என்ன நடக்கும் என்ற எண்ணம் அனைவருக்குள்ளும் இயல்பாக வருவது போல் சனி பகவானுக்கும் ஏற்பட்டுள்ளது. நேராக திருமலைக்கு சென்று கால் வைத்த அடுத்த நொடியே தூக்கி வீசப்பட்டார். அனைவரையும் துன்புறுத்தி பார்க்கும் சனி பகவானுக்கு, பூலோக வைகுண்டமாக திகழும் திருமலையில் என்ன வேலை என சனி பகவான் மீது கோபம் கொண்டார் திருமலை வேங்கடவன். அவரின் பாதம் பணிந்து மன்னிப்புக் கேட்ட சனிபகவானிடம், திருமலை வந்து தன்னை வழிபடும் பக்தர்களை துன்புறுத்தக் கூடாது என கட்டளையும் இட்டார் மகாவிஷ்ணு. பிறகு மன்னிப்பு கேட்ட சனி பகவானுக்கு மனம் இறங்கி, தனக்குரிய புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் விரதமிருந்து வழிபடும் பக்தர்களுக்கு தனது அருள் பரிபூரணமாக கிடைக்கும் என மகா விஷ்ணுவே வரமளித்ததாக புராணங்கள் சொல்கின்றன.</p><h2><strong>பாவ கிரகம்</strong></h2><p>மேலும் நவகிரகங்களில் தன்னை மட்டுமே அனைவரும் வெறுப்பதாகவும், பாவ கிரகம் என ஒதுக்குவதாக கவலை கொண்ட சனி பகவானுக்கு மகாவிஷ்ணுவை நோக்கி தவம் செய்து, இதற்கு ஒரு தீர்வு கேட்கும் படி யோசனை வழங்கி உள்ளார் நாரதர். அதை ஏற்று, சனி பகவானும் கடும் தவம் செய்துள்ளார். இதனை ஏற்று அவர் முன் தோன்றிய மகா விஷ்ணுவிடம், சனி பகவான் தனது மனக்குறையை கூறி உள்ளார். இதனால் சனிபகவானின் கவலையை போக்க விரும்பிய மகா விஷ்ணு, மற்ற மாதங்களை விட தனக்குரிய புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமையில் அதிகமானவர்கள் உன்னை விரும்பி வழிபடுவார்கள். அப்படி வணங்குபவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதாக வாக்களித்ததாக ஒரு கதையும் சொல்லப்படுவதுண்டு.</p><h2><strong>சனிக்கிழமை விரதம்</strong></h2><p>இத்தகைய சிறப்பு வாய்ந்த புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் எல்லா விதமான கஷ்டங்களும் நீங்கி, வளமான வாழ்க்கையை பெறலாம். புரட்டாசி மாத சனிக்கிழமையில் அதிகாலையில் எண்ணெய் தேய்த்து குளித்து சனிபகவானுக்கு நல்லெண்ணையில் எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்து, பெருமாள் ஆலயத்திற்கு சென்று வழிபட்டால் அனைத்து விதமான தோஷங்களும் நீங்கி, செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.</p><h2><strong>பாண்டவர்கள் வனவாசம்</strong></h2><p>பாண்டவர்கள் வனவாசம் சென்ற போது, புரட்டாசி சனிக்கிழமை தோறும் தவறாமல் விரதமிருந்து பெருமாளை வழிபட்டதன் பலனாகவே அவர்கள் போரில் வென்று, தாங்கள் இழந்த நாடு, ராஜ்ஜியம், செல்வம் அனைத்தையும் திரும்ப பெற்றதாக புராண கதைகள் சொல்கின்றன. இத்தகைய புரட்டாசி முதல் சனிக்கிழமையான நாளை விரதத்தை நாம் மேற்கொண்டு, பெருமாளின் அருளை பெறுவோம்.</p> ]]></content:encoded></item><item><title>6 மாத குழந்தையை கடித்த பிட்புல் நாய்: அரியானாவில் கொடூரம்</title><link>https://www.maalaimalar.com/news/national/pitbull-dog-bites-6-month-old-baby-walking-on-road</link><comments>https://www.maalaimalar.com/news/national/pitbull-dog-bites-6-month-old-baby-walking-on-road#comments</comments><guid isPermaLink="false">9699ebf0-031a-4334-a4ca-b03b1047de8e</guid><pubDate>Fri, 18 Sep 2026 08:05:09 +0000</pubDate><atom:updated>2026-09-18T08:05:09.345Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Pitbull,haryana,அரியானா,dog bite,நாய் கடி,பிட்புல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/ib241ttf/Untitled-design-7.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pitbull Attack in Haryana]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/ib241ttf/Untitled-design-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அரியானாவில் சாலையில் நடந்து சென்ற பெண்ணையும் அவருடன் இருந்த ஆறு மாத குழந்தையையும் பிட்புல் நாய் ஒன்று கடித்ததை அடுத்து, படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE">அரியானாவின்</a> சோனிபட் பகுதியில் ஆறு மாத குழந்தையுடன், அவரின் அத்தை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் இருந்த வீட்டு உரிமையாளரின் பிட்புல் நாய் ஒன்று அவிழ்த்து வெளியே விடப்பட்டிருந்தது. </p><p>இதையடுத்து குழந்தையுடன் நடந்து சென்ற பெண்ணை, திடீரென பார்த்து பிட்புல் நாய் ஆக்ரோஷமாக குரைக்க ஆரம்பித்தது.</p><p>இதனால் பதற்றம் அடைந்த அந்த பெண்மணி, அங்கிருந்து செல்ல முயன்றபோது, அந்த நாய் அவர்கள் மேலே தாவியது.</p><p>அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த பெண்ணை, பிட்புல் நாய் கை மற்றும் கால்களில் கடித்தது. இதையடுத்து அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், நாயை விரட்டிவிட்டு படுகாயமடைந்த பெண்ணையும், குழந்தையையும் ரோத்தக் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.</p><h3><strong>சிறுவனின் காதை கடித்த பிட்புல் நாய்</strong></h3><p>இதேபோன்று டெல்லியின் வினய் என்கிளேவ் பகுதியில் ஆறு வயது சிறுவனின் வலது காதின் ஒரு பகுதியை பிட்புல் நாய் கடித்து குதறியது.</p><p>இதையடுத்து ஆக்ரோஷமான நாயை கட்டி வைக்காமல் அலட்சியமாக செயல்பட்ட நாய் உரிமையாளர் மீது, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.</p><figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Pitbull pet attacks 6 month old kid in Sonipat Haryana.<br><br>Check how relaxed is the Pitbull owner, sorry parent, while the dog was brutally attacking the kid.<br><br>Kid is severely injured, in hospital.<br><br>But Dog Lovers will still defend it. Justify it by saying dog must be hungry,… <a href="https://t.co/K2LSXf8tUK">pic.twitter.com/K2LSXf8tUK</a></p>&mdash; Ankur Singh (@AnkurSingh) <a href="https://x.com/AnkurSingh/status/2100638076108521967?ref_src=twsrc%5Etfw">September 17, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><p>இதைத்தொடர்ந்து நாய் உரிமையாளர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.</p><h3><strong>சமூக ஆர்வலர்கள் கோரிக்கை</strong></h3><p>இந்த நிலையில் இந்தியாவில் காசியாபாத், சண்டிகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆக்ரோஷமான நாய் இனத்தை சேர்ந்த பிட்புல் மற்றும் ராட்வீலர் உள்ளிட்ட சில நாய்கள், வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பஞ்சாப்பில் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை</title><link>https://www.maalaimalar.com/news/national/police-officer-on-duty-shot-dead-in-punjab</link><comments>https://www.maalaimalar.com/news/national/police-officer-on-duty-shot-dead-in-punjab#comments</comments><guid isPermaLink="false">3fd40481-5ae6-4e15-94ad-3782f78b8aba</guid><pubDate>Fri, 18 Sep 2026 08:04:51 +0000</pubDate><atom:updated>2026-09-18T08:04:51.923Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சுட்டுக்கொலை,gun shot,பஞ்சாப்,Punjab,போலீஸ் அதிகாரி,Police officer</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/y9jwgver/punjab.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sub inspector ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/y9jwgver/punjab.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பஞ்சாப்பில் பணியில் இருந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>பஞ்சாப் மாநிலம் அம்ரித்சர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் ஹர்ஜித் சிங் (வயது 50). இவர் இன்று அதிகாலை அம்ரித்சரின் கேட் ஹகிமா பகுதியில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்தார்.</p><h2>சுட்டுக்கொலை</h2><p>அப்போது, துப்பாக்கியுடன் பைக்கில் வந்த இருவர் போலீஸ் அதிகாரி ஹர்ஜித் சிங் மீது <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81" rel="nofollow">துப்பாக்கி சூடு</a> நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.</p><p>இந்த துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த ஹர்ஜித் சிங்கை மீட்ட சக போலீசார் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். </p><p>அங்கு ஹர்ஜித் சிங்கை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பணியில் இருந்த உதவி சப்-இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச்சென்றவர்களை தேடி வருகின்றனர். மேலும், இந்த துப்பாக்கி சூட்டிற்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>அதேவேளை, சுட்டுக்கொல்லப்பட்ட உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஹர்ஜித் சிங்கின் குடும்பத்தினருக்கு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்று பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணத்தில் ரீல்ஸ்தான் வந்தது, முதலீடு வரவில்லை- டி.ஆர்.பி.ராஜா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/trp-raaja-indictment-tvk-govt</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/trp-raaja-indictment-tvk-govt#comments</comments><guid isPermaLink="false">205de3fb-cba8-4ce2-8b8c-bb6fee35daa5</guid><pubDate>Fri, 18 Sep 2026 07:58:14 +0000</pubDate><atom:updated>2026-09-18T07:58:14.978Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,விஜய்,vijay,டிஆர்பி ராஜா,TRB Rajaa,லண்டனன் பயணம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/ho197nbu/TRBRaaja.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்- டி.ஆர்.பி.ராஜா]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்- டி.ஆர்.பி.ராஜா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/ho197nbu/TRBRaaja.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணத்தில் ரீல்ஸ்தான் வந்தது, முதலீடு வரவில்லை என தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விமர்சித்துள்ளார்.</strong></em> </p><p>முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">விஜய்</a> அரசு முறை பயணமாக கடந்த 10-ந்தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு லண்டன் சென்றார். அதனை தொடர்ந்து நேற்று காலை முதலமைச்சர் விஜய் சென்னை திரும்பினார். முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணத்தில் சுமார் ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன் மூலம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழ்நாடு அரசு தெரிவித்து இருந்தது. </p><p>இதையடுத்து, முதலமைச்சர் விஜய் லண்டன் சென்று மேற்கொண்ட முதலீடுகள் குறித்து <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-ask-question-to-tn-govt-for-cm-vijay-london-trip">வெள்ளை அறிக்கை</a> வெளியிட வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். </p><p>இந்த நிலையில், முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணத்தில் ரீல்ஸ்தான் வந்தது, முதலீடு வரவில்லை என தி.மு.க. குற்றம்சாட்டி உள்ளது. இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-</p><h2><strong>ரீல் விடுகிறது தவெக அரசு</strong></h2><p>* முதலீடுகளில் அரசியல் இருக்கக்கூடாது என நினைத்து நானே சமூக வலைத்தளத்தில் வாழ்த்து கூறினேன். </p><p>* தொழில் முதலீடு தொடர்பாக தினம் தினம் த.வெ.க. அரசு ரீல் விடுகிறது.</p><p>* ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்தவர்கள் ரீல் விட்டு ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். </p><h2><strong>வெளிநாட்டில் மானத்தை வாங்காதீர்கள்</strong></h2><p>* முதலமைச்சர் தங்கியிருந்த ஓட்டலுக்கு வெளியே உள்ள மருத்துவமனை அருகே நின்று கத்துகின்றனர். </p><p>* வெளிநாட்டுக்கு சென்று தமிழ்நாட்டின் மானத்தை வாங்காதீர்கள். </p><p>* புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருந்தால் அதைக் காட்டலாமே? நிறுவனத்தின் பெயரைக் கூட ஏன் சொல்லவில்லை?</p><p>* ரூ.3000 கோடி முதலீடு செய்யும் நிறுவனத்தின் பெயரையே சொல்லாதது ஏன்? </p><h2><strong>பத்திரிகையாளர்களை சந்திக்காதது ஏன்?</strong></h2><p>* லண்டனில் கார் பந்தயத்தை பார்க்கச் செல்கிறேன் என்றால் யார் என்ன சொல்லப்போகிறார்கள். </p><p>* எஃப்1 கார் பந்தயம் நடத்த 2 ஆயிரம் ஏக்கம் நிலம் தேவை, அதை எந்த இடத்தில் எடுக்கப்போகிறார்கள்? </p><p>* உண்மையான தொழில் முதலீடு தமிழ்நாட்டுக்கு எப்போது வரும்? </p><p>* ஸ்டாலின் ஒவ்வொரு முறையும் வெளிநாடு செல்லும்போது பத்திரிகையாளர்களை சந்தித்திருக்கிறார்.</p><p>* வெளிநாடுகளில் ஒவ்வொரு நாளும் என்ன நடந்தது, எவ்வளவு முதலீடு என நாள்தோறும் அறிக்கை வெளியிட்டோம். </p><p>* முதலமைச்சர் வெளிநாடு செல்லும் முன்பும், சென்றுவிட்டு வந்த பின்பும் ஏன் பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை? </p><p>* வெற்றி முதலீட்டாளர் மாநாடு என்ற பெயரில் வெற்று முதலீட்டாளர் மாநாடு நடத்தினார்கள். </p><p>* திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட முதலீடுகளை தாங்கள் கொண்டு வந்ததாக த.வெ.க. அரசு கூறுகிறது. </p><p>* திமுக ஆட்சியில் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தில் உடனுக்குடன் தகவல்களை தந்தோம். </p><p>* முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணத்தில் ரீல்ஸ்தான் வந்தது, முதலீடு வரவில்லை என கூறினார். </p>]]></content:encoded></item><item><title>இரண்டாவது குழந்தையை தத்தெடுக்கும் ‘ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்’ நடிகை மில்லி பிரவுன்: காரணம் என்ன?</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/stranger-things-star-millie-brown-adoption</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/stranger-things-star-millie-brown-adoption#comments</comments><guid isPermaLink="false">7a6c5717-25df-4893-886d-cb3cae119109</guid><pubDate>Fri, 18 Sep 2026 07:56:42 +0000</pubDate><atom:updated>2026-09-18T07:56:42.725Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மில்லி பாபி பிரவுன்,StrangerThings,millie bobby brown,ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/0icc05b6/Untitled-design-8.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Millie Bobby Brown new child adoption]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/0icc05b6/Untitled-design-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இங்கிலாந்து நடிகையான மில்லி பாபி பிரவுன் தனது கணவர் ஜேக் போங்கியோவி-யுடன் இணைந்து இரண்டாவது குழந்தையை தத்தெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D">நெட்பிளிக்ஸ் தளத்தில்</a> கடந்த 2016-ஆம் ஆண்டு மிகவும் பிரபலமான வெப் சீரிஸான  ‘ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்’ வெளியானது. இந்த தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை மில்லி பாபு பிரவுன் நடித்திருந்தார்.</p><p>இவர் கடந்த 2024-ஆம் ஆண்டு ஜேக் போங்கியோவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இந்த தம்பதிகள் ஆகஸ்ட் 2025-இல் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்தனர்.</p><h3><strong>முதல் குழந்தை</strong></h3><p>இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட மில்லி, இந்த கோடையில், தத்தெடுப்பின் மூலம் எங்கள் அன்பு பெண் குழந்தையை வரவேற்பதாக பதிவிடிருந்தார்.</p><p>மேலும் பெற்றோராகும் இந்த அழகான அடுத்த அத்தியாயத்தை அமைதியாகவும் தனிமையாகவும் தொடங்குவதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் பதிவிட்டிருந்தார்.</p><h3><strong>குழந்தை தத்தெடுப்பு</strong></h3><p>நடிகை மில்லி குழந்தை தத்தெடுப்பு குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தத்தெடுப்பு எப்போதுமே தனது மனதிற்கு நெருக்கமான ஒன்றாக இருந்து வருவதாக கூறியுள்ளார்.</p><p>குழந்தையை பெற்றுக்கொள்வது என்பது என்றாவது ஒருநாள் எதிர்காலத்தில் அமையும் என தான் நம்புவதாகவும் கூறியிருந்தார்.</p><figure><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/Dc-4seFFR-K/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/Dc-4seFFR-K/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/Dc-4seFFR-K/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Millie Bobby Brown (@milliebobbybrown)</a></p></div></blockquote>
<script async src="//www.instagram.com/embed.js"></script></figure><h3><strong>இரண்டாவது குழந்தை</strong></h3><p>இந்த நிலையில் இத்தாலி நாட்டில் அமைந்துள்ள டோலோமைட்ஸ் மலைத்தொடருக்கு தனது கணவருடன் சுற்றுப்பயணம் சென்றதை, விடியோவாக பதிவு செய்து வலைதளத்தில் மில்லி பகிர்ந்துள்ளார்.</p><p>இதையடுத்து மில்லி பரவுன் தனது கணவருடன் இணைந்து இரண்டாவது குழந்தையை தத்தெடுக்க உள்ளதாக பீபிள் என்ற தனியார் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக பாஸ் விவகாரத்தில் எந்த விதிமீறலும் இல்லை - அமைச்சர் நிர்மல்குமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-says-no-violations-regarding-madurai-meenakshi-amman-temple-kumbhabhishekam-pass-issue</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-says-no-violations-regarding-madurai-meenakshi-amman-temple-kumbhabhishekam-pass-issue#comments</comments><guid isPermaLink="false">efe69372-2e40-4620-8ed7-ace969ebdfdc</guid><pubDate>Fri, 18 Sep 2026 07:53:44 +0000</pubDate><atom:updated>2026-09-18T07:53:44.689Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>கும்பாபிஷேகம்,Kumbhabhishekam,Madurai Meenakshi Amman temple,மதுரை மீனாட்சியம்மன் கோவில்,அமைச்சர் நிர்மல்குமார்,minister nirmal kumar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/hcxaehfc/nirmalkumar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ minister nirmal kumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/hcxaehfc/nirmalkumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறையை சரியான முறையில் கையாண்டுள்ளோம் என்று அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.</p> <p>சென்னை அண்ணாசாலையில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">அமைச்சர் நிர்மல்குமார்</a> செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது  அவர் கூறியதாவது:</p><p>* மக்கள் யாருக்கும் எவ்வித இடையூறும் இன்றி மதுரை <a href="https://www.maalaimalar.com/spirituality/madurai-meenakshi-amman-temple-kumbhabhishekam-devotees-worship">மீனாட்சியம்மன் கோவில்</a> குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்றது.</p><p>* மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா பாஸை நான் யாருக்கும் கொடுக்கவில்லை.</p> <p>* பாஸ் என்ன நிறம் என்பதே முந்தைய நாள் தான் எனக்கு தெரிய வந்தது.</p><p>* கும்பாபிஷேகத்திற்கான பாஸ் யாருக்கு கொடுக்க வேண்டும் என்ற முடிவை அறநிலையத்துறை தான் எடுத்தது.</p><p>* கும்பாபிஷேகத்திற்காக 9,000 பாஸ்கள் ஆன்லைன் மற்றும் கோவில் நிர்வாகம் தான் கொடுத்தது.</p> <p>* மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக டோக்கன் எனது குடும்பத்தினருக்கு கூட நான் கொடுக்கவில்லை.</p><p>* திமுக ஆட்சியில் அவர்களுடைய கட்சி சார்ந்த குடும்பத்தினர் தான் முன்வரிசையில் இருப்பர்.</p><p>* திமுகவை சேர்ந்த சிலர் தான் சில பிரச்சனைகளை கிளப்பினார்கள்.</p> <p>* கும்பாபிஷேகம் நல்ல முறையில் நடந்து முடிந்த நிலையில் தேவையின்றி திமுகவினர் அவதூறு பரப்புகின்றனர்.</p><p>* மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக பாஸ் விவகாரத்தில் எவ்வித விதிமீறலும் இல்லை.</p><p>* மின்சார தட்டுப்பாடு என்பது அனைத்து மாநிலங்களிலும் உள்ளது.</p> <p>* ஆர்.கே.நகர், ஸ்டான்லி நகரில் பிஎஸ்என்எல் வேலையின்போது மின்வாரிய ஒயருக்கு பாதிப்பு ஏற்பட்டதால் மின்தடை ஏற்பட்டது.</p><p>* மின் பற்றாக்குறையால் கேரளா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் 14 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு ஏற்பட்டது.</p><p>* மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறையை சரியான முறையில் கையாண்டுள்ளோம்.</p> <p>* கஜா புயலின்போது பாதிக்கப்பட்ட 1 லட்சம் மின் கம்பங்களை சரி செய்ய 5 மாதங்கள் தேவைப்பட்டது.</p><p>* பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.</p><p>* 10 ஆண்டு காலம் ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்டவர் டிடிவி தினகரன்.</p> <p>* இபிஎஸ்-ஐ வீழ்த்துவது தான் என் வாழ்நாள் லட்சியம் என்று கூறிய தினகரன் தற்போது அவரை முதல்வராக்க துடிக்கிறார்.</p><p>* தலைமை நீதிபதியை அமைச்சர் ஜெகதீஸ்வரி அவமதித்த புகார் பற்றி எனக்கு தெரியாது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>லண்டன் முதலீடுகள்: அதிகாரிகளுடன்  முதலமைச்சர் விஜய் ஆலோசனை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-holds-talks-on-london-investments</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-holds-talks-on-london-investments#comments</comments><guid isPermaLink="false">93cf9f28-e934-47ba-a8d3-8bba031e1825</guid><pubDate>Fri, 18 Sep 2026 07:51:07 +0000</pubDate><atom:updated>2026-09-18T07:51:07.969Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>london,Discussion,cm vijay,முதலமைச்சர் விஜய்,லண்டன் பயணம்,ஆலோசனை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/0ifb1huh/Vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/0ifb1huh/Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>லண்டன் முதலீடுகள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்து முதலமைச்சர் விஜய் இன்று ஆலோசனை நடத்தினார்.</p><h2>லண்டன் பயணம்</h2><p>தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் விஜய் 12-ந்தேதி, உலகத்தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் தமிழ்நாட்டில் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டுக்கு நேரில் சென்று, அங்குள்ள 'ரேஸ் கண்ட்ரோல்' மற்றும் 'ரேஸ் சர்க்யூட் பகுதிகளை பார்வையிட்டார்.</p><p>14-ந்தேதி முதலமைச்சர் விஜய் முன்னிலையில் லண்டனில் வாகன உதிரிபாக உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் மின்கட்டமைப்பு உபகரணங்கள் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், புதிய தொழில் முதலீட்டுக்கான கடிதம் என மொத்தம் 15,300 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.</p><h2>முதலமைச்சர் விஜய் ஆலோசனை</h2><p>இந்த நிலையில், லண்டனில் மேற்கொள்ளப்பட்ட ரூ.15,300 கோடி முதலீட்டு ஒப்பந்தங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார்.</p><p>அதைபோல வரும் 22-ம் தேதி காலை உணவு திட்ட விரிவாக்கம் மற்றும் 25-ம் தேதி 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டம் தொடக்கம் தொடர்பான நடைமுறைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.</p><p>அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் மோதிரம் வழங்கப்பட உள்ளது. தங்கமோதிரம் வழங்கும் திட்டத்தை தொடங்கும் தேதி, இடம் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.</p><h2>ஒப்பந்தம்</h2><p>முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில், சென்னை DLF DOWNTOWN தரமணி வளாகத்தில் வால்கிரீன்ஸ் இந்தியா நிறுவனம் தனது முதல் உலகளாவிய திறன் மையத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>ஆசிய விளையாட்டு பெண்கள் கிரிக்கெட்: இந்தியா, இலங்கை அரையிறுதிக்கு முன்னேற்றம்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/india-srilanka-womens-teams-enter-sf-in-asian-games</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/india-srilanka-womens-teams-enter-sf-in-asian-games#comments</comments><guid isPermaLink="false">eb364e6d-b189-423d-9242-b872918807dd</guid><pubDate>Fri, 18 Sep 2026 07:40:48 +0000</pubDate><atom:updated>2026-09-18T07:40:48.619Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,பெண்கள் கிரிக்கெட்,இலங்கை,srilanka,womens cricket,Asian Games,ஆசிய விளையாட்டு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/gxlfr8x7/charani.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ shree charani]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/gxlfr8x7/charani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஆசிய விளையாட்டில் பெண்கள் கிரிக்கெட்டின் அரையிறுதி சுற்றுக்கு இந்தியா, இலங்கை அணிகள் முன்னேறின.</strong></em></p><p>ஆசிய விளையாட்டில் பெண்கள் கிரிக்கெட்டின் காலிறுதி போட்டிகள் ஜப்பானில் நடந்து வருகின்றன.</p><p>ஜப்பானின் நிஷின் நகரில் இன்று நடைபெற்ற 3-வது காலிறுதி போட்டியில் இலங்கை, மலேசியா வீராங்கனைகள் மோதினர். டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது. </p><p>அதன்படி, முதலில் ஆடிய இலங்கை மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்தது. </p><h2>சமாரி அடப்பட்டு அரை சதம்</h2><p>கேப்டன் சமாரி அடப்பட்டு அரை சதம் கடந்து 63 ரன்கள் எடுத்தார்.</p><p>அடுத்து ஆடிய மலேசியா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 74 ரன்கள் மட்டுமே எடுத்தது.</p><p>இதன்மூலம் இலங்கை அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், அரையிறுதி சுற்றுக்கும் முன்னேறியது.</p><p>மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் இந்தியா, ஜப்பான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.</p><p>அதன்படி, முதலில் ஆடிய ஜப்பான் அணி 19.5 ஓவரில் 57 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.</p><h2>ஸ்ரீசரணி 4 விக்கெட்</h2><p>இந்தியாவின் ஸ்ரீசரணி 4 விக்கெட்டும், ஷபாலி வர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p>அடுத்து ஆடிய இந்திய அணி 5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 59 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், அரையிறுதிக்கும் முன்னேறியது.</p><p>ஏற்கனவே, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் விவகாரம்: ஊழல் வழக்கில் கைதாகிவிட்டு அனுதாபம் தேட முயற்சிப்பதா?- மூலனூர் கார்த்திக்கிற்கு நீதிமன்றம் கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/court-questions-moolanur-karthik-over-sympathy-bid-after-corruption-arrest</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/court-questions-moolanur-karthik-over-sympathy-bid-after-corruption-arrest#comments</comments><guid isPermaLink="false">d50e3de4-bcdf-428f-a672-d0b494421c6c</guid><pubDate>Fri, 18 Sep 2026 07:21:45 +0000</pubDate><atom:updated>2026-09-18T07:21:45.673Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>ஊழல் வழக்கு,corruption case,Chennai High court,நீதிமன்றம்,Tasmac,டாஸ்மாக்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/iuqjvouw/CH.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chennai Highcourt]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/iuqjvouw/CH.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஊழல் வழக்கில் கைதான நிலையில் அனுதாபம் தேட முயற்சிப்பதா? என மூலனூர் கார்த்திக் ஜாமீன் கோரிய வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் கேள்வி எழுப்பியுள்ளது.</p><p>டாஸ்மாக் நிறுவனத்துக்கு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/11-liquor-brands-banned-in-tasmac" rel="nofollow">மதுபானங்கள்</a> கொள்முதல் செய்தது, பார் உரிமங்கள் வழங்கியது, மதுபானங்களை கடைகளுக்குக் கொண்டுச் செல்ல போக்குவரத்து ஒப்பந்தப்புள்ளி வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். </p><p>இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் என்பவர் ஜாமீன் கோரி இரண்டாவது முறையாக சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.</p><p>இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், மனுதாரரை ஏற்கெனவே, 4 நாள்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால், எதுவும் பறிமுதல் செய்யவில்லை எனவே ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.</p><p>அப்போது குறுக்கிட்ட நீதிபதி, பேரம் பேசி எம்எல்ஏ-வை விலைக்கு வாங்க முயற்சித்த வழக்கில் மனுதாரர் சிறையில் இருந்து வருகிறார். ஊழல் வழக்கில் கைதான நிலையில் அனுதாபம் தேட முயற்சிப்பதா? என கேள்வி எழுப்பினார். இதையடுத்து, காவல்துறை தரப்பில் இந்த மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என கேட்கப்பட்டது.</p><p>இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, காவல்துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 25-ந்தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.</p><p>முன்னதாக கார்த்திக் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை நீதிபதி வி.லட்சுமிநாராயணன் கடந்த ஆகஸ்டு 28-ந்தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>25 ஆண்டுகளுக்கு முன்பு நட்ட அரச மரத்தை வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் பராமரித்து வரும் பா.ம.க.வினர்- நிர்வாகிகளை பாராட்டிய அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-praises-pmk-functionaries</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-praises-pmk-functionaries#comments</comments><guid isPermaLink="false">e4c573c6-18ad-4137-aad8-18c9fd2069ce</guid><pubDate>Fri, 18 Sep 2026 07:19:12 +0000</pubDate><atom:updated>2026-09-18T07:19:12.425Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani ramadoss,அன்புமணி ராமதஸ்,பா.ம.க,அரச மரம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/9pfl4wzl/tree.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/9pfl4wzl/tree.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கொள்ளுக்காரன் குட்டையில் அமைந்துள்ளது மாவீரன் தேசிங்கு நினைவு தூண். இந்த நினைவிடத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அரச மரம் ஒன்றை நடப்பட்டது.</p><h2><strong>அரச மரம்</strong></h2><p>இந்த மரம் வளர்ந்து தற்போது அந்த பகுதியில் நிழல் தந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் கொள்ளுகாரன்குட்டை பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.</p><h2><strong>நெடுஞ்சாலைத்துறை</strong></h2><p>இதற்காக சாலையோரம் உள்ள மரங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக அந்த அரச மரத்தை வெட்டி எடுக்க நெடுஞ்சாலைத்துறையினர் முயற்சித்தனர். இதை அறிந்த பா.ம.க நிர்வாகிகள் அங்கு திரண்டனர்.</p><p>அப்போது அவர்கள், மரத்தை வெட்ட வேண்டாம். நாங்கள் அந்த மரத்தை வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் வைத்து நாங்களே பராமரித்து கொள்கிறோம் என தெரிவித்தனர்.</p><h2><strong>மகிழ்ச்சி</strong></h2><p>இதனை தொடர்ந்து பா.ம.க நிர்வாகிகள் அந்த மரத்தை வேரோடு பிடுங்கி காப்பாற்றி அருகிலேயே வேறு இடத்தில் மீண்டும் நட்டு அதனை பராமரித்து வருகின்றனர். இந்த நிலையில் வன்னியர் இட ஒதுக்கீடு போராட்ட தியாகிகள் 39-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று மாவீரன் தேசிங்கு நினைவு தூணில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது தாங்கள் நட்டு, காப்பாற்றப்பட்ட அரச மரம் மீண்டும் துளிர்விட்டிருப்பதை கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தார்.</p><h2><strong>நிர்வாகிகளுக்கு பாராட்டு</strong></h2><p>மரத்தை காப்பாற்றிய கட்சி நிர்வாகிகளை அவர் நேரில் பாராட்டினர். தொடர்ந்து அவர் கூறும்போது, 25 ஆண்டுகளுக்கு முன்பு நட்ட அரச மரம் நடப்பட்டது. சாலை விரிவாக்க பணிக்காக இந்த மரம் வெட்ட வந்த போது, பா.ம.க நிர்வாகிகள் அதனை வெட்ட வேண்டாம். நாங்கள் மரத்தை வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் பராமரித்து கொள்கிறோம் என தெரிவித்து தற்போது இந்த மரத்தை பராமரித்து வருகிறார்கள். அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். இதை தான் அரசு செய்ய வேண்டும். நாங்கள் செய்துள்ளோம். சாலை விரிவாக்க பணிக்காக வெட்டப்படும் மரங்களை வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர் பாரதிதாசனுக்கு 2 நாட்களில் உதவித்தொகை வழங்கப்படும் - அமைச்சர் வன்னி அரசு உறுதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-says-financial-assistance-will-be-provided-to-student-bharathidasan-within-two-days</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-says-financial-assistance-will-be-provided-to-student-bharathidasan-within-two-days#comments</comments><guid isPermaLink="false">fbc776f2-fbb5-4907-96cb-547712a7720f</guid><pubDate>Fri, 18 Sep 2026 07:10:54 +0000</pubDate><atom:updated>2026-09-18T07:10:54.632Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Bharathidasan,பாரதிதாசன்,minister vanni arasu,அமைச்சர் வன்னி அரசு,அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/ti3b5xo8/student2.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Student Bharathidasan - Minister vanni arasu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/ti3b5xo8/student2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாரதிதாசனின் கல்வி தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் வன்னி அரசு உறுதியளித்துள்ளார்.</p> <p>அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழக மாணவர் பாரதிதாசன் என்பவர் இந்த கல்வி உதவித்தொகை இழுத்தடிக்கப்படுவதாக கண்ணீர் மல்க சமூக வலைத்தளத்தில் 'வீடியோ' பதிவு வெளியிட்டு இருந்தார்.</p> <p>மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தில் தனது இரண்டாம் ஆண்டு ஆராய்ச்சியை மேற்கொண்டு வரும் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/student-bharathidasan-again-clarifies-overseas-scholarship-scheme-was-not-misused">பாரதிதாசன்</a>, ஆராய்ச்சிக்குத் தேவையான உபகரணங்கள், பொருட்கள் மற்றும் புத்தகங்களை வாங்குவதற்கான நிதிக்காக தொடர்ந்து விண்ணப்பித்து வருவதாக தெரிவித்துள்ளார்.</p> <p>தனது ஆராய்ச்சி தொடர்பான ஆவணங்கள், எதிக்ஸ் கோடு உள்ளிட்ட விவரங்களை ஏற்கனவே சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் கூறி இருந்தார். </p><p>இருப்பினும், நிதி கிடைக்காததால் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், வரும் மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனையில் நடைபெற உள்ள ஆய்வு தொடர்பான பிரசன்டேஷனில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p> <p>மேலும், தனது குடும்பம் மற்றும் கிராமத்தில் இருந்து மருத்துவ ஆராய்ச்சித் துறைக்கு வந்த முதல் தலைமுறை நபர் தான்தான் எனக் குறிப்பிட்ட அவர், தன்னை மன உளைச்சலுக்கு உள்ளாக்க வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்து இருந்தார். </p><p>இதுதொடர்பாக விளக்கம் அளித்த சமூக நீதித்துறை, அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயிலும் மாணவர் பாரதிதாசனின் காணொலி தகவலுக்கு மறுப்பு தெரிவித்து இருந்தது.</p> <p>இதையடுத்து, மாணவர் பாரதிதாசன் வெளியிட்ட புதிய காணொலி மீண்டும் கவனம் பெற்றுள்ளது. </p><p>இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">அமைச்சர் வன்னி அரசு</a>, பாரதிதாசனின் கல்வி தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.</p><p>தம்பி பாரதிதாசனை படிக்க வைப்போம். அவருக்கான நிதித் தொகை இரண்டு நாட்களுக்குள் விடுவிக்கப்படும்.</p> <p>அயலக உயர்கல்வித் திட்டத்தின் கீழ் அதிகளவில் நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும், பாரதிதாசனைப் போன்ற மாணவர்கள் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியை தொடர வேண்டும் என்பதற்காகவே சமூகநீதித் துறை செயல்பட்டு வருகிறது. பாரதிதாசன் மட்டுமின்றி அனைத்து மாணவர்களின் கல்விக்கும் தவெக அரசு உதவும் என்று அவர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>இந்திய விமானப்படைக்கு புதிய LCA Mk-1A ரக போர் விமானம் - ஆண்டு இறுதிக்குள் வழங்க ஹிந்துஸ்தான் முடிவு </title><link>https://www.maalaimalar.com/news/national/india-air-force-new-lca-mk-1a-fighter-by-year-end</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-air-force-new-lca-mk-1a-fighter-by-year-end#comments</comments><guid isPermaLink="false">caaf3f92-1f75-4e27-aadd-841a841a89d1</guid><pubDate>Fri, 18 Sep 2026 06:57:48 +0000</pubDate><atom:updated>2026-09-18T06:57:48.370Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>போர் விமானம்,Aircraft,Indian Air Force,HAL,இந்திய விமான படை,ஹிந்துஸ்தான் நிறுவனம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/7u0h3gbt/Untitled-design-6.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ LCA Mk-1A Delivery]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/7u0h3gbt/Untitled-design-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய விமானப்படைக்கு இலகுரக LCA Mk-1A ரக போர் விமானத்தை வழங்கும் என அதன் இயக்குநர் கே. ரவி தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88">இந்திய விமானப்படை</a> ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரியில் 83 போர் விமானங்களை வாங்குவதற்கு முதல் கட்டமாக ஒப்பந்தம் செய்தது. </p><h3><strong>ரூ.1.1 லட்சம் கோடி மதிப்பில் ஒப்பந்தம்</strong></h3><p>அதைத்தொடர்ந்து செப்டம்பர் 2025-இல் 97 போர் விமானங்களை வாங்குவதற்கு இரண்டாவது கட்டமாக ஒப்பந்தம் செய்தது. மொத்தம் 180 எம்.கே-1ஏ ரக போர் விமானங்கள் ரூபாய் 1.1 லட்சம் கோடி மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டன.</p><p>இதையடுத்து 2021-ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்ட விமானங்களை, 2024-இல் ஹிந்துஸ்தான் ஒப்படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.</p><p>ஆனால் அமெரிக்க நிறுவனமான GE ஏரோஸ்பேஸ், F404-IN20 என்ஜின்களை உரிய நேரத்தில் வழங்க தவறியதால், போர் விமானங்கள் உற்பத்தியில் தாமதம் ஏற்பட்டது.</p><p>இந்த நிலையில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இயக்குநர் கே.ரவி, போர் விமானத்தில் சரி செய்யவேண்டிய ரேடார் உள்ளிட்ட சில சிக்கல்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் இறுதிகட்ட ஆயுத ஒருங்கிணைப்பு சோதனை நிலுவையில் உள்ளதாகவும், சுமார் ஒரு மாதத்திற்குள் இந்த சிக்கல்கள் சரிசெய்யப்பட்டு, விமானம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.</p><h3><strong>ஹிந்துஸ்தான் தலைமை நிர்வாகி</strong></h3><p>இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “GE ஏரோஸ்பேஸ் நிறுவனத்திடமிருந்து 10 என்ஜின்கள் பெறப்பட்டுள்ளன; மேலும் 27 LCA Mk-1A விமானக் கட்டமைப்புகள் தயாராக உள்ளன.</p><p>எங்களால் நிச்சயமாக 10 விமானங்களை வழங்க முடியும். ஆண்டுக்கு 24 Mk-1A ரக விமானங்களை உற்பத்தி செய்யும் எங்கள் திறனைக் கருத்தில் கொண்டு, அந்தக் காலக்கெடுவுக்குள் எங்களால் அவற்றை வழங்க முடியும்.</p><p>என்ஜின்கள் கிடைப்பதை பொருட்படுத்தாமல் நாங்கள் உற்பத்தியை நிறுத்தப் போவதில்லை. என்ஜின்கள் வந்தவுடன் விமானங்களைத் தொடர்ச்சியாக உற்பத்தி செய்யும் வகையில், நாங்கள் விமானக் கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறோம்.</p><p>97 Mk-1A ரக விமானங்களில், உத்தம் AESA (செயல்திறன் மிக்க மின்னணு முறையில் ஸ்கேன் செய்யப்படும் வரிசை) ரேடார் மற்றும் ஸ்வயம் ரக்ஷா கவச் (மின்னணுப் போர் அமைப்பு) உள்ளிட்ட பல்வேறு உள்நாட்டு அமைப்புகள் இருக்கும்.</p><p>இரண்டாவது ஒப்பந்தத்தை நாங்கள் செயல்படுத்தும்போது, முதல் 83 விமானங்களில் உள்ள சுமார் 40 இறக்குமதி செய்யப்பட்ட அமைப்புகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும்.</p><p>விமானத்தின் உடற்பகுதிகள் இணைக்கப்பட்டு, விமானத்தின் கட்டமைப்பு தயாராக உள்ளது. 2027 மார்ச் மாதத்திற்குள் முதல் தரை சோதனையை நடத்த இலக்கு வைத்துள்ளோம்” என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்கள்- அபராத தொகையை வசூலிக்க சிறப்பு மையங்களுக்கு ஏற்பாடு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-centres-set-up-to-collect-fines-from-traffic-rule-violators</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-centres-set-up-to-collect-fines-from-traffic-rule-violators#comments</comments><guid isPermaLink="false">be75904a-04e8-44e2-8b2d-143588b2de38</guid><pubDate>Fri, 18 Sep 2026 06:55:12 +0000</pubDate><atom:updated>2026-09-18T06:55:12.531Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>special camp,fine,சிறப்பு மையம்,Traffic Rules Violation,போக்குவரத்து விதி மீறல்,அபராத தொகை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/y44y8smh/traffic-rules.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Traffic rules]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/y44y8smh/traffic-rules.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களுக்கு கண்காணிப்பு கேமரா மூலம்  அபராதம் விதிக்கப்படுகிறது.</p><h2>அபராதம்</h2><p>ஹெல்மெட் இல்லாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டி செல்வது, செல்போன் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டுவது  மற்றும் லைசென்ஸ்  இல்லாமலும், மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவதற்காகவும் போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்கின்றனர்.</p><p>தானியங்கி எண் பலகை கண்டறிதல் கேமராக்கள் மற்றும் போக்குவரத்து ஒழுங்குமுறை கண்காணிப்பு அமைப்பு போன்றவை மூலம் உருவாக்கப்பட்ட மின் சலான்கள் பற்றி பல வாகன ஓட்டிகளுக்கு தெரியவில்லை.</p><p>அதனால் அபராத தொகை செலுத்தப் படாமல் நிலுவையில் உள்ளது. பல வாகன ஓட்டிகளுக்கு தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் என்னவென்று தெரியாமல் இருந்து வருகிறார்கள்.</p><p>சென்னையில் பல கோடி ரூபாய் அபராத நிலுவைத் தொகை உள்ளது. இதனை வசூலிக்க போக்கு வரத்து போலீஸ் சார் புதிய திட்டத்தை வகுத்துள்ளனர்.</p><h2>சிறப்பு மையம்</h2><p>போக்குவரத்து விதி மீறலுக்காக விதிக்கப்பட்டு நிலுவையில் உள்ள மின் சலான்களை வாகன ஓட்டிகள் சரிபார்த்து செலுத்துவதற்கு உதவ சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை நகரம் முழுவதும் 15 சிறப்பு அழைப்பு மையங்களை  அமைத்து வசூலிக்க திட்டமிட்டுள்ளது. </p><p>வருகிற 21-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை இந்த மையங்கள் செயல்படும். இந்த மையங்கள் 10 நாட்களும் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படும். காவல் துறையினர் வாகன ஓட்டிகளை தொடர்பு கொண்டு நிலுவையில் உள்ள செலான்கள் பற்றி தெரிவிப்பார்கள்.</p><p>மொத்தமாக எஸ்.எம்.எஸ். விழிப்புணர்வுகளை அனுப்புவார்கள். தொலைபேசி அல்லது நேரில் விவரங்களை கேட்பவர்களுக்கு தகவல்கள் வழங்கப்படும்.</p><p>வாகன ஓட்டிகள் நிலுவையில் உள்ள செலான் களை ஆன்லைனில் சரி பார்த்து ஆன்லைன் போர்ட்டல்கள், பேடிஎம், தபால் நிலையங்கள் மற்றும் மின் சேவை மையங்கள் மூலம் செலுத்தலாம். </p><p>மது போதை யில் வாகனம் ஓட்டியதற்கான அபராதங்களை நீதிமன்றம் மூலமாக செலுத்த வேண்டும். வாகன ஓட்டிகள் நிலுவையில் உள்ள செலான் களை சரி பார்த்து   அபரா தத்தை செலுத்த ஒரு வாரம் அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது.</p><p>15 இடங்கள் போக்குவரத்து போலீசார் அமைத்துள்ள 15 மையங்கள் விவரம் வருமாறு:</p><p> 1) அயனாவரத்தில் உள்ள ஐ.சி. எப். அனெக்ஸ் போலீஸ் பூத் </p><p>2) ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமி போலீஸ் பூத் </p><p>3) அபிராமபுரத்தில் உள்ள கிரீன்வேஸ் சந்திப்பு போலீஸ் பூத் </p><p>4) அண்ணா சாலையில் உள்ள டவர் க்ளாக் சந்திப்பு போலீஸ் பூத் </p><p>5) அண்ணா நகர் சுழற்சி </p><p>6) அண்ணா ஆர்.சி. போக்குவரத்து போலீஸ் பூத் </p><p>7) மதுரவாயல் போக்கு வரத்து போலீஸ் நிலையம்</p><p> 8) மாதவரம் போக்கு வரத்து காவல் நிலையம் </p><p>9) பூக்கடை போலீஸ் நிலையம்</p><p>10) வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையம் </p><p>11) புளியந்தோப்பு போலீஸ் நிலையம் </p><p>12) மாம்பலம் போலீஸ் நிலையம் </p><p>13) அடையாறு போலீஸ் நிலையம் </p><p>14) கத்திப்பாரா மேம்பா லத்தின் கீழ் உள்ள போக்குவரத்து மவுண்ட் சப்டிவிஷன் வளாகம் </p><p>15)  வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள  தலைமையகம்</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுகவின் 40 நட்சத்திர பேச்சாளர்களுக்கு பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம்  அனுமதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/by-election-election-commission-grants-permission-for-40-aiadmk-star-speakers-to-campaign</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/by-election-election-commission-grants-permission-for-40-aiadmk-star-speakers-to-campaign#comments</comments><guid isPermaLink="false">bf5df2d6-0784-44bb-a52d-bef9f4379c69</guid><pubDate>Fri, 18 Sep 2026 06:35:22 +0000</pubDate><atom:updated>2026-09-18T06:35:22.130Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,Election Commission,தேர்தல் ஆணையம்,by election,dharapuram,தாராபுரம்,மதுராந்தகம்,Madurantakam,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/5d741ecc/ADMK.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அதிமுக]]></media:title><media:description type="html"><![CDATA[ அதிமுக]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/5d741ecc/ADMK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான அதிமுகவின் 40 நட்சத்திர பேச்சாளர்களுக்கு பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம்  அனுமதி அளித்துள்ளது.</strong></em> </p><h2><strong>5 முனைப்போட்டி</strong></h2><p>மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 2 தொகுதிகளிலும் த.வெ.க., தி.மு.க, <a href="https://www.maalaimalar.com/topic/அதிமுக">அ.திமு.க</a>, கம்யூனிஸ்டு கட்சிகள், நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. இதன் மூலம் இடைத்தேர்தலில் 5 முனைப்போட்டி நிலவுகிறது. </p><p>மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. வேட்பாளராக பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ஜானகிராமன் ஆகியோர் களம் இறங்கி உள்ளனர். </p><p>தாராபுரத்தில் த.வெ.க. சார்பில் சத்தியபாமா, தி.மு.க. வேட்பாளராக சுகன்யா, அ.தி.மு.க. சார்பில் பானுமதி, இந்திய கம்யூனிஸ்டு சார்பில் லட்சுமணன், நாம் தமிழர் வேட்பாளராக கார்த்திகா ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.</p><h2><strong>தலைவர்கள் பிரசாரம்</strong></h2><p>2 தொகுதிகளிலும் போட்டியிடுபவர்களின் இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாக உள்ளது.  இதை தொடர்ந்து வருகிற 20-ந்தேதிக்கு பிறகு (அடுத்த வாரம்) அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்து இருக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மேற்கொண்டு உள்ளனர்.</p><p>அந்த வகையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுராந்தகம் தொகுதியில் வருகிற 25, 26-ந்தேதிகளிலும் அடுத்த மாதம் 3-ந்தேதியும் பிரசாரம் செய்ய முடிவு செய்து உள்ளதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர். இதேபோன்று தாராபுரம் தொகுதியிலும் 2 நாட்கள் தங்கியிருந்து அவர் பிரசாரம் செய்ய இருக்கிறார்.</p><h2><strong>தேர்தல் ஆணையம்</strong></h2><p>இந்த நிலையில், இடைத்தேர்தலில் நட்சத்திர பேச்சாளர்களாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் 40 பேரின் பெயர் பட்டியலையும்,  பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள் 20 பேரின் பெயர் பட்டியலையும்  தேர்தல் ஆணையம்  இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.</p><p>அந்த வகையில் அதிமுக நட்சத்திர பேச்சாளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தின்  இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. </p><p>அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கேபி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தம்பிதுரை, பொள்ளாச்சி ஜெயராமன், வளர்மதி, ஓ எஸ் மணியன், காமராஜ் உள்ளிட்ட 40 நட்சத்திர பேச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். </p><p>அதிமுக சார்பாக வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி பெயர்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>கூடலூரில் 2 பேரை கடித்து கொன்ற புலி கூண்டில் சிக்கியது- பொதுமக்கள் நிம்மதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/gudalur-near-tiger-trapped-in-the-cage</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/gudalur-near-tiger-trapped-in-the-cage#comments</comments><guid isPermaLink="false">1182549c-ce82-40ce-a91f-995ad21fbda3</guid><pubDate>Fri, 18 Sep 2026 06:24:44 +0000</pubDate><atom:updated>2026-09-18T06:24:44.139Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>gudalur,கூடலூர்,புலி,tiger,kumki elephants,கும்கி யானைகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/tprq1bjk/tiger.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/tprq1bjk/tiger.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கூடலூர் அருகே காட்டுப் புலி ஊருக்குள் புகுந்து 2 பேரை அடித்துக் கொன்றது. கடந்த மாதம் 9-ந் தேதி ஓவேலி லாரஸ்டன் பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவரையும், 21-ந் தேதி ரவிச்சந்திரனையும் தாக்கிக் கொன்றது. இந்த ஆட்கொல்லி புலியை பிடிக்கக்கோரியும், அந்த பகுதி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். </p><h2><strong>ரூ.10 லட்சம் நிதியுதவி</strong></h2><p>அதனைத் தொடர்ந்து, அங்குள்ள பொதுமக்கள் 50 பேர் சென்னை வந்து முதலமைச்சரிடம் முறையிட வந்தனர். வனத்துறை அமைச்சர் ஆர்.வீ.ரஞ்சித் குமாரிடம் புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர். சட்டசபையிலும் இந்த பிரச்சினை எழுப்பப்பட்டது. அத்துடன் புலி தாக்கியதில் மரணம் அடைந்த பாலகிருஷ்ணன் மற்றும் ரவிக்குமார் குடும்பத்திற்கு அரசு சார்பில் தலா 10 லட்சம் ரூபாய் வீதம் நிவாரண உதவி வழங்கப்பட்டது.</p><p>இதைத்தொடர்ந்து வனத்துறை அமைச்சர் ஆர்.வீ.ரஞ்சித் குமார் கூடலூருக்கு நேரில் சென்றபோது அந்த 2 குடும்பத்துக்கும் தனது சொந்த பணத்தில் இருந்து தலா ஒரு லட்சம் வீதம் வழங்கினார்.</p> <h2><strong>புலியைப் பிடிக்க ஏற்பாடு</strong></h2><p>இதைத் தொடர்ந்து புலியை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுமாறு முதலமைச்சர் விஜய் வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். வனத்துறை அமைச்சர் ஆர்.வீ.ரஞ்சித் குமார், வனத்துறையின் செயலாளர் காகர் லா உஷா, வனத்துறை எச்.ஓ.டி.உதயா, டோக்கரா, நீலகிரி மாவட்ட கலெக்டர், வனத்துறை அதிகாரிகள் ஏராளமானோர் கூடலூர் பகுதிக்கு சென்று புலியை பிடிக்கும் பணியை முடுக்கி விட்டனர்.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/iuf2uiwf/tigerg.jpg" /></figure><h2><strong>கேமராக்கள்</strong></h2><p>200-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் களத்தில் இறங்கி புலியை தேடும் பணியில் ஈடுபட்டனர். 3 அதிநவீன டிரோன் கேமராக்களை பறக்கவிட்டு புலியை தேடிக் கொண்டே இருந்தனர். புலியின் நடமாட்டத்தை கண்டறிய மொத்தம் 244 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. தினமும் அந்த கேமராக்கள் பரிசோதிக்கப்பட்டன. முக்கியமான இடங்களில் 13 இரும்புக் கூண்டுகளை அமைத்து அதில் ஆடுகள் கட்டிவைக்கப்பட்டன.</p><h2><strong>புலி சிக்கியது</strong></h2><p>இந்தநிலையில் 28 நாட்களுக்கு பிறகு நேற்று இரவு ஆட்கொல்லி புலி கூண்டில் சிக்கிக்கொண்டது. கூடலூர் நகரைஒட்டிய கே.கே. நகர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த இரும்புக் கூண்டில் புலி மாட்டிக் கொண்டது.</p><h2><strong>வனத்துறை அதிகாரிகள்</strong></h2><p>அந்த புலி ஆண் புலியாகும். அதற்கு 9 வயது முதல் 10 வயதுக்குள் இருக்கும். கூண்டில் சிக்கிய புலியை வனத்துறையினர் இரவோடு, இரவாக முதுமலைக்கு கொண்டு சென்றனர். புலியை மைசூர் காப்பகத்துக்கு கொண்டு செல்வதா அல்லது சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்வதா? என்ற வனத்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>டெல்லியில் 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை: சிறார்கள் கைது</title><link>https://www.maalaimalar.com/news/national/16-year-old-girl-raped-and-murdered-in-delhi-minors-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/national/16-year-old-girl-raped-and-murdered-in-delhi-minors-arrested#comments</comments><guid isPermaLink="false">20bc33b5-9be7-4de3-a696-d968ef7ce761</guid><pubDate>Fri, 18 Sep 2026 06:06:57 +0000</pubDate><atom:updated>2026-09-18T06:06:57.437Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாலியல் வன்கொடுமை,சிறுமி கொலை,gang rape,delhi,டெல்லி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/ljd3357p/Untitled-design-5.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Delhi minor girl rape-murder case]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/ljd3357p/Untitled-design-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் 16 வயது சிறுமி ஒருவரை மூன்று சிறார்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், சிறார்கள் உட்பட 19 வயது இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF">டெல்லி</a> ஸ்வரூப் நகரில் உள்ள குஷக் சாலைக்கு அருகில் உள்ள ஒரு வயல் பகுதியில் சிறுமி ஒருவரின் சடலம் கிடப்பதாக ஞாயிற்றுக்கிழமை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. </p><p>இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலத்தின் வலது கை காணாமல் போயிருந்ததையும், முகம் மற்றும் வயிறு பகுதிகள் சிதைந்து இருந்ததையும் கண்டறிந்தனர்.</p><p>இதுகுறுத்து காவல்துறையினர் அதிகாரிகள் கூறுகையில், “சிறுமி இறந்து இரண்டு நாட்களே ஆகியிருந்தபோதிலும், அந்த உடல் மிக வேகமாக சிதைந்து கொண்டிருந்தது.</p><p>இது பெரும்பாலும் இயற்கை சீற்றங்களுக்கு உள்ளானதால் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. சிறுமியின் முகத்தை அடையாளம் காண முடியவில்லை.</p><p>மருத்துவ அறிக்கை பாலியல் வன்புணர்வை உறுதி செய்ததுடன், அவரது உடலில் எட்டு இடங்களில் காயங்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.</p><p>மேலும் உயிரிழந்த சிறுமி பலமுறை கத்தியால் குத்தப்பட்டிருந்ததாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.</p><p>இதையடுத்து கூடுதல் துணை காவல் ஆணையர் லோகேஸ்வரன் மற்றும் உதவி காவல் ஆணையர் ரவீந்தர் ஆகியோர் தலைமையிலான குழுவினர், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.</p><p>அப்போது சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டபோது, லாரி ஓட்டுநர் ஒருவரை விசாரணை செய்தனர். இதையடுத்து அந்த ஓட்டுநர் தனது 17 வயது தம்பி அந்த வாகனத்தை அடிக்கடி பயன்படுத்தி வருவதாக கூறினார்.</p><p>இதையடுத்து லாரியின் சிசிடிவி காட்சிகளை காவல் ஆணையர் ஷோபித் சக்ஸேனா தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்ததில், அந்த லாரிக்குள் நான்கு சிறுவர்கள் இருந்தது தெரியவந்தது.</p><p>இதைத்தொடர்ந்து 19 வயதான சிவம் கணேஷ் மற்றும் 18 வயதுக்கு கீழ் இருந்த மூன்று சிறார்களை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து, கொலைக்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு கத்திகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.100 கோடி லஞ்ச வழக்கு: விசாரணைக்கு அன்பில் மகேஷ் ஆஜர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-100-crore-bribery-case-anbil-mahesh-appears-for-inquiry</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-100-crore-bribery-case-anbil-mahesh-appears-for-inquiry#comments</comments><guid isPermaLink="false">b5bbb8aa-80f5-4c81-8764-d982da18aa9c</guid><pubDate>Fri, 18 Sep 2026 06:03:33 +0000</pubDate><atom:updated>2026-09-18T06:03:33.597Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>corruption case,பள்ளிக்கல்வித்துறை,anbil mahesh,Education Department,லஞ்ச வழக்கு,அன்பில் மகேஷ்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/36dxob7u/Anbil-mahesh.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anbil Mahesh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/36dxob7u/Anbil-mahesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ரூ.100 கோடி லஞ்ச வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முன் விசாரணைக்காக ஆஜரானார்.</p><p>சென்னை தியாகராயநகரில் செயல்படும் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/goondas-act-invoked-against-dmk-pt-arasakumar-rs-100-crore-collected-from-private-school-administrators" rel="nofollow">தனியார் பள்ளி</a> சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் கொடுக்கப்பட்டது.</p><p>அந்த புகார் மனுவில், தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி, ரூ.100 கோடி வரை பணம் வசூலித்து மோசடி நடந்துள்ளது என்றும், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.</p><p>இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். தி.மு.க. பிரமுகரான பி.டி.அரசகுமாரும், அவரது உறவினர்களான ஆரோக்கியராஜ், சுரேஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். </p><p>பி.டி.அரசகுமார் தனியார் பள்ளிகளின் சங்க நிர்வாகிகளை சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் வைத்தும், போரூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வைத்தும் சந்தித்து, பணம் வசூலித்ததாக தெரியவந்தது.</p><p>அதன் அடிப்படையில்தான் அவர் கைது செய்யப்பட்டார். அவர் குண்டர் சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில், இதுவரை 177 பேர் புகார் கொடுத்துள்ளனர். </p><p>250 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 61 வங்கிக்கணக் குகள் முடக்கப்பட்டு உள்ளன. இந்த வழக்கில் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமாரை போலீசார் தேடிவருகிறார்கள்.</p><h2>வழக்கு</h2><p>அவர் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க, அனைத்து விமான நிலையங்களுக்கும் 'லுக்-அவுட்' நோட்டீஸ் கொடுக் கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தற்போது, லஞ்ச ஊழல் வழக்காக மாற்றப்பட் டுள்ளது. திமுக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.</p><p>இதனையடுத்து நேற்று முன்தினம் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு தொடர்புடைய இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.</p><h2>சோதனை</h2><p>சென்னை, திருச்சியில் 9 இடங்களில் சோதனை நடத்தினார்கள். இதில் சொத்து ஆவணங்கள், வங்கி விவரங்கள், காசோலைகள் ஆகியவற்றுடன் சேர்த்து வழக்கு சம்பந்தமாக 118 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 18 செல்போன்கள், 3 மடிக்கணி னிகள், 8 பென்டிரைவ் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.</p><p>சோதனை முடிவில் 18-ந்தேதி (அதாவது இன்று) விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு போலீசார் சம்மன் வழங்கி சென்றனர். </p><h2>ஆஜர்</h2><p>இந்நிலையில், போலீசாரின் சம்மனின்படி வழக்கு விசாரணைக்காக சென்னை மத்தியக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் அன்பில் மகேஷ் இன்று ஆஜரானார்.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம்-தாராபுரம் இடைத்தேர்தல்: முதலமைச்சர் விஜய் 4 நாட்கள் பிரசாரம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-and-dharapuram-by-election-cm-vijay-campaign-4-days</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-and-dharapuram-by-election-cm-vijay-campaign-4-days#comments</comments><guid isPermaLink="false">fb1d4f14-ab10-4908-851f-1af56f88aaa5</guid><pubDate>Fri, 18 Sep 2026 05:48:35 +0000</pubDate><atom:updated>2026-09-18T05:48:35.692Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,by election,dharapuram,தாராபுரம்,மதுராந்தகம்,tvk,Madurantakam,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/jjgbv3ns/vijay08.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/jjgbv3ns/vijay08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதலமைச்சர் விஜய் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் தலா 2 நாட்கள் என 4 நாட்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இந்த இடைத்தேர்தலில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் த.வெ.க. இருப்பதால் முதலமைச்சர் விஜய்யின் பிரசாரம் அதற்கு கை கொடுக்கும் என்று கட்சி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.</strong></em></p><p>மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.</p><h2><strong>5 முனை போட்டி</strong></h2><p>2 தொகுதிகளிலும் த.வெ.க., தி.மு.க, அ.திமு.க, கம்யூனிஸ்டு கட்சிகள், நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. இதன் மூலம் இடைத்தேர்தலில் 5 முனைப்போட்டி நிலவுகிறது. மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. வேட்பாளராக பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ஜானகிராமன் ஆகியோர் களம் இறங்கி உள்ளனர். </p><p>தாராபுரத்தில் த.வெ.க. சார்பில் சத்தியபாமா, தி.மு.க. வேட்பாளராக சுகன்யா, அ.தி.மு.க. சார்பில் பானுமதி, இந்திய கம்யூனிஸ்டு சார்பில் லட்சுமணன், நாம் தமிழர் வேட்பாளராக கார்த்திகா ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.</p><h2><strong>தலைவர்கள்</strong> </h2><p>2 தொகுதிகளிலும் போட்டியிடுபவர்களின் இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாக உள்ளது. </p><p>இதை தொடர்ந்து வருகிற 20-ந்தேதிக்கு பிறகு (அடுத்த வாரம்) அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்து இருக்கிறார்கள்.</p><p>இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மேற்கொண்டு உள்ளனர். </p><h2><strong>முதலமைச்சர் விஜய்</strong></h2><p>முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்</a> மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் தலா 2 நாட்கள் என 4 நாட்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.</p><p>இந்த இடைத்தேர்தலில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் த.வெ.க. இருப்பதால் முதலமைச்சர் விஜய்யின் பிரசாரம் அதற்கு கை கொடுக்கும் என்று கட்சி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.</p><h2><strong>இடம் தேர்வு</strong></h2><p>மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் முதலமைச்சர் விஜய் பேசுவதற்காக பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.</p><p>தாராபுரத்தில் வருகிற 25-ந்தேதியும், அடுத்த மாதம் 2-ந்தேதியும் விஜய் பிரசாரம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தாராபுரம் உடுமலை சாலையில் உள்ள திருமலைபாளையம் பகுதியில் பொதுக்கூட்டத்தை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டு உள்ளது.</p><h2><strong>எதிர்பார்ப்பு</strong></h2><p>கடந்த சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் விஜய் பிரசாரம் மேற்கொண்ட போது அவரை பார்ப்பதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது. அவரது பிரசாரக் கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.</p><p>இந்த நிலையில் தான் தற்போது முதலமைச்சராக விஜய் தேர்தல் பிரசாரத்திற்கு செல்ல உள்ளார். இதையொட்டி 2 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.</p><p>த.வெ.க. ஆளும் கட்சியான பிறகு முதலமைச்சர் விஜய் பங்கேற்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் என்பதால் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.</p><h2><strong>மு.க.ஸ்டாலின்</strong></h2><p>தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் கம்யூனிஸ்டு தலைவர்களும் 2 தொகுதிகளிலும் பிரசாரத்திற்கு தயாராகி வருகிறார்கள்.</p><p>மதுராந்தகம், தாராபுரம் 2 தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் பிரசாரம் செய்ய திட்டமிட்டு இருக்கிறார். இதேபோன்று எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் பிரசார திட்டமும் தயாராகி வருகிறது.</p><h2><strong>எடப்பாடி பழனிசாமி</strong></h2><p>அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுராந்தகம் தொகுதியில் வருகிற 25, 26-ந்தேதிகளிலும் அடுத்த மாதம் 3-ந்தேதியும் பிரசாரம் செய்ய முடிவு செய்து உள்ளதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.</p><p>இதேபோன்று தாராபுரம் தொகுதியிலும் 2 நாட்கள் தங்கியிருந்து அவர் பிரசாரம் செய்ய இருக்கிறார்.</p><h2><strong>சீமான்</strong></h2><p>நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகிற 20-ந்தேதிக்கு பிறகு தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். 2 தொகுதிகளிலும் அவர் தங்கியிருந்து ஒரு வாரத்திற்கு மேல் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பேச உள்ளார்.</p><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் வீரபாண்டியன் ஆகியோரும் கம்யூனிஸ்டு கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட இருக்கிறார்கள்.</p><h2><strong>களை கட்டுகிறது</strong></h2><p>இப்படி இடைத்தேர்தல்களில் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட ஆயத்தமாகி வருவதால் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் தேர்தல் களம் களை கட்டுகிறது.</p><p>தங்களது கட்சித் தலைவர்களை வரவேற்பதற்காக அனைத்து கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முழுவீச்சில் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>யுபிஐ வணிக பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்: நிதியமைச்சருக்கு ஜோதிமணி கடிதம்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/congress-mp-jothimani-writes-to-letter-finance-minister-charges-for-upi-merchant-transactions</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/congress-mp-jothimani-writes-to-letter-finance-minister-charges-for-upi-merchant-transactions#comments</comments><guid isPermaLink="false">7ee6c6df-afc4-4d2e-ab58-1570fd9e7c60</guid><pubDate>Fri, 18 Sep 2026 05:38:09 +0000</pubDate><atom:updated>2026-09-18T05:38:09.419Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>நிர்மலா சீதாராமன்,UPI,யுபிஐ,nirmala Sitharaman,jothimani,ஜோதிமணி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/v9j90x1e/jothimani.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nirmala Sitharaman - Jothimani]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/v9j90x1e/jothimani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.4% கட்டணம் வசூலிக்கப்படும் என்ற புதிய அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கடிதம் எழுதி உள்ளார். </p><p>வணிக ரீதியில் 2000 ரூபாய்க்கு மேல் <a href="https://www.maalaimalar.com/news/national/upi-charges-to-be-04-for-some-payments-above-rs-2000-free-for-consumers">யுபிஐ கட்டணம்</a> செலுத்துபவர்களிடம் 0.4 சதவீதம் வசூலிக்கப்படும் எனவும், இந்த நடைமுறை அக்டோபர் 15-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.</p><p>யுபிஐ வணிக பரிவர்த்தனைக்கு 0.4 சதவீதம் கட்டணம் மூலம் ரூ. 5000-க்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும். ரூ.75,000-க்கு மேல் யுபிஐ பரிவர்த்தனை செய்தால் ரூ.300 கட்டணம் வசூலிக்கப்படும்.</p> <p>ரெயில்வே, எரிபொருள் உள்ளிட்ட குறிப்பிட்ட பிரிவுகளில் ரூ. 2,000-க்கு மேல் ரூ.5 கட்டணம் விதிக்கப்படும்.</p><p>தனி நபர்களுக்கு இடையிலான யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு எந்தக் கட்டணமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <p>இந்நிலையில் ரூ.2000-க்கு மேலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.4% கட்டணம் வசூலிக்கப்படும் என்ற புதிய அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய நிதியமைச்சர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D">நிர்மலா சீதாராமனுக்கு</a> காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கடிதம் எழுதி உள்ளார். அதில்,</p><p>அக்டோபர் 15 முதல் அமலுக்கு வரவுள்ள இந்த கட்டணம், நாடு முழுவதிலும் உள்ள சிறு வணிகர்கள், நெசவாளர்கள் மற்றும் சாதாரண மக்களைக் கடுமையாகப் பாதிக்கும். </p> <p>சிறு வணிகர்களின் நலனைக் காக்கவும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும், யுபிஐ அனைவருக்கும் கட்டணமற்ற சேவையாகவே தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளார்.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">₹2,000-க்கு மேல் உள்ள UPI பரிவர்த்தனைகளுக்கு 0.4% (MDR) கட்டணம் வசூலிக்கப்படும் என்ற புதிய அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தி, ஒன்றிய நிதியமைச்சர் திருமிகு. நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.<br><br> அக்டோபர் 15 முதல் அமலுக்கு வரவுள்ள இந்த கட்டணம், நாடு… <a href="https://t.co/GeKGI0WBGH">pic.twitter.com/GeKGI0WBGH</a></p>&mdash; Jothimani (@jothims) <a href="https://x.com/jothims/status/2100808374233497608?ref_src=twsrc%5Etfw">September 18, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு  கூடுதல் சிறப்பு பேருந்துகள்- அரசு விரைவு போக்குவரத்து கழகம் ஏற்பாடு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/additional-special-buses-from-chennai-to-outstations</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/additional-special-buses-from-chennai-to-outstations#comments</comments><guid isPermaLink="false">abe5b4e7-5813-4bf8-a48b-43bebe204a97</guid><pubDate>Fri, 18 Sep 2026 05:34:51 +0000</pubDate><atom:updated>2026-09-18T05:34:51.514Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு பஸ்கள்,TN Govt,தமிழக அரசு,special bus,வார விடுமுறை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/176b3d9b/Buskilampakkam.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ சிறப்பு பேருந்துகள்]]></media:title><media:description type="html"><![CDATA[ சிறப்பு பேருந்துகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/176b3d9b/Buskilampakkam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>வார இறுதியில் இன்று 7812 பயணிகளும், நாளை 4001  பயணிகளும் மற்றும் நாளை மறுநாள் 8946 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.</strong></em> </p><p>தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-</p><h2><strong>சிறப்பு பேருந்துகள்</strong></h2><p>வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழ்நாடு  முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக <a href="https://www.maalaimalar.com/topic/சிறப்பு-பஸ்கள்">சிறப்பு பேருந்துகள்</a> இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><h2><strong>கிளாம்பாக்கம்</strong></h2><p>சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று (18-ந்தேதி) 760 பேருந்துகளும், நாளை (19-ந்தேதி) 520 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. </p><p>சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று 18-ந்தேதி வெள்ளிக்கிழமை அன்று 115 பேருந்துகளும், நாளை (19-ந் தேதி) 115 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களில் இருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. </p><h2><strong>மாதவரம்</strong></h2><p>பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்தில் இருந்து 18 மற்றும் 19-ந்தேதிகளில் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு ஒவ்வொரு நாளும் 70 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் நாளை மறுநாள் (20-ந் தேதி) அன்று 805  சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில், இந்த வார இறுதியில் இன்று 7812 பயணிகளும், நாளை 4001  பயணிகளும் மற்றும் நாளை மறுநாள் 8946 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். </p><p>இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் TNSTC Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p>இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை  மேற்கொள்ள இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் வேகமாக பரவும் டெங்கு- தினமும் 200-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-sees-rapid-dengue-surge-with-over-200-daily-cases</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-sees-rapid-dengue-surge-with-over-200-daily-cases#comments</comments><guid isPermaLink="false">5b551e4f-1a82-493c-a5ac-f975f725beeb</guid><pubDate>Fri, 18 Sep 2026 05:30:49 +0000</pubDate><atom:updated>2026-09-18T05:30:49.737Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Dengue,health department,சுகாதாரத்துறை,Dengue action,டெங்கு காய்ச்சல்,டெங்கு பரவல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/fgbmsx5q/Dengue.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dengue]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/fgbmsx5q/Dengue.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் தினந்தோறும் 200 நபர்களுக்கு மேல் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர் என்று பொது சுகாதரத்துறை தெரிவித்துள்ளது.</p><p>தமிழ்நாட்டில் நேற்று ஒரு நாளில் மட்டும் டெங்கு காய்ச்சலால் 244 நாபர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.</p><p>இந்த ஆண்டில் மட்டும் இதுவர 16,577 பேருக்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்தவும், மருத்துவமனைகளில் காய்ச்சல் வார்டுகளை அதிகரப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.</p><h2>சென்னையில் அதிகம்</h2><p>சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சேலம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டின் நீர் மேலாண்மைக்காக முதலமைச்சர் விஜய் என்ன செய்யப் போகிறார் - அன்புமணி
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-asking-cm-vijay-going-to-do-for-tn-water-management</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-asking-cm-vijay-going-to-do-for-tn-water-management#comments</comments><guid isPermaLink="false">c6be4775-3fb2-459a-8cca-5967331eb2db</guid><pubDate>Fri, 18 Sep 2026 05:07:21 +0000</pubDate><atom:updated>2026-09-18T05:07:21.547Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Anbumani ramadoss,caste census,அன்புமணி  ராமதாஸ்,சாதிவாரி கணக்கெடுப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/ggt8kd91/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay - Anbumani Ramadoss]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/ggt8kd91/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீர் மேலாண்மை குறித்து கடந்த 60 ஆண்டு காலமாக ஆட்சி செய்த கட்சியினர் யாரும் சிந்திக்கவில்லை. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு  நீர் மேலாண்மையில் பின்தங்கி உள்ளது என்று அன்புமணி கூறினார்.</p> <h2>வன்னியா் இட ஒதுக்கீடு</h2><p>வன்னியா்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தில் பங்கேற்று உயிா்நீத்த 21 தியாகிகளின் நினைவை  போற்றும் வகையில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் பா.ம.க. சார்பில் வீரவணக்கம் செலுத்தும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.</p><h2>சாதிவாரி கணக்கெடுப்பு</h2><p>கூட்டத்தில் பா.ம.க தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> பங்கேற்று பேசியதாவது:-</p> <p>ஆண்டுதோறும் செப்டம்பர் 17-ந் தேதி தியாகிகளை நினைவூட்டி அவர்களை போற்றி வருகிறோம். போராட்டத்தில் இறந்தவர்கள் படித்தவர்கள் அல்ல. அவர்களால் இன்று நிறைய இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். இட ஒதுக்கீடு போராட்டத்தில் இறந்தவர்கள் பற்றி இன்று வரை மற்றவர்கள் யாரும் பேசவில்லை. </p><p>பா.ம.க. சார்பில் எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் ஆகியோர் முதலமைச்சராக இருந்தபோது பலமுறை சந்தித்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கேட்டோம். ஆனால் அவர்கள் அதனை நடத்த முன்வரவில்லை.</p> <h2>இடஒதுக்கீடு போராட்டம்</h2><p>தற்போது முதலமைச்சராக உள்ள விஜய் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என கூறியுள்ளார். 95 ஆண்டுகளாக காத்து கிடக்கும் எங்களுக்கு  <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-vows-to-build-social-justice-society-on-periyar-birthday">முதலமைச்சர் விஜய்</a> சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அனைத்து சாதிகளிலும் உள் ஒதுக்கீடு நிறைய உள்ளது. அதனால் சாதிவாரி கணக்கெடுப்பு தோல்வி அடையாமல் இருக்க முதலமைச்சர் விஜய் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இதனால் அதிகம் பயன்பெற போவது பட்டியல் இன பழங்குடியின மக்கள் தான்.</p> <p>இந்திய அளவில் 2 இட ஒதுக்கீடு மற்றும் தமிழ்நாட்டில் 4 இட ஒதுக்கீடு என 6 இட ஒதுக்கீடு பா.ம.க நடத்திய போராட்டத்தால் தான் கிடைத்தது.</p><h2>நீர் மேலாண்மை</h2><p>நீர் மேலாண்மை குறித்து கடந்த 60 ஆண்டு காலமாக ஆட்சி செய்த கட்சியினர் யாரும் சிந்திக்கவில்லை. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு  நீர் மேலாண்மையில் பின்தங்கி உள்ளது. தண்ணீருக்காக நாம் அடுத்த மாநிலத்திடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறோம். </p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கும் முதலமைச்சர் விஜய் தமிழ்நாட்டின் நீர் மேலாண்மைக்காக என்ன செய்யப் போகிறார். 2031-ல் நாம் ஆட்சிக்கு வர போகிறோம். அதற்கான சூழ்நிலைகள் நமக்கு அமைந்துள்ளது. எனவே கட்சியில் உள்ளவர்கள் அதனை நோக்கி கவனம் செலுத்த வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>100 ஆண்டுகளுக்கு த.வெ.க ஆட்சி தான் நடக்கும்- மதுரை ஆதீனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurai-adheenam-says-tvk-will-rule-for-100-years</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurai-adheenam-says-tvk-will-rule-for-100-years#comments</comments><guid isPermaLink="false">8065bef8-4b00-48a8-8536-dc5808ede3ad</guid><pubDate>Fri, 18 Sep 2026 05:02:59 +0000</pubDate><atom:updated>2026-09-18T05:02:59.921Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,மதுரை ஆதீனம்,Madurai Adheenam,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/pi3zbbx5/maduraiaadheenam.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/pi3zbbx5/maduraiaadheenam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>லஞ்சம் வாங்கவும் கூடாது, கொடுக்கவும் கூடாது என்று சொல்வதால் 100 ஆண்டுகளுக்கு த.வெ.க. ஆட்சி தான் தமிழகத்தில் நடக்கும் என்று காஞ்சிபுரத்தில் மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்தார்.</strong></em></p><p>காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் வில்வநாத ஈஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கூறியதாவது:-</p><h2><strong>விஜய் குறித்த வாழ்க்கை வரலாற்று நூல்</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/தவெக">த.வெ.க.</a> அரசு சிறப்பான முறையில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. லஞ்சம் வாங்கவும் கூடாது, லஞ்சம் கொடுக்கவும் கூடாது என்று சொன்ன முதலமைச்சர் விஜயை பாராட்டுகிறேன். திருச்செந்தூருக்கு வந்து தரிசனம் செய்து விட்டு நெற்றியில் திருநீறு இட்டுக் கொண்டார் முதல்வர். 100 ஆண்டுகள் வரை த.வெக. ஆட்சி தான் நடக்கும். இடைத்தேர்தல்களிலும் த.வெ.க. தான் வெற்றி பெறும். வரும் அக்.11 ஆம் தேதி மதுரை தமிழச்சங்கத்தின் சார்பில் முதலமைச்சர் விஜய் குறித்த வாழ்க்கை வரலாற்று நூல் வெளியிடப்படுகிறது. நூலை அடியேன் தான் வெளியிடவுள்ளேன்.</p><h2><strong>அனைவரும் சமம்</strong></h2><p>இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கோவில்களில் பல நல்ல சீர்திருத்தங்களை செய்து வருகிறார். இறைவனுக்கு முன்பு உயர்ந்தவர், தாழ்ந்தவர் இல்லை என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் சமம் என்று செயல்படுகிறார். கோவிலுக்குள் கைப்பேசி எடுத்து செல்வதை தவிர்த்திருப்பதும் வரவேற்கத்தக்கது.</p><p>மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. நான் காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்தவன் என்பதாலும், 6 மாதத்துக்கு முன்பே பிள்ளையார் பாளையம் வில்வநாத ஈஸ்வரர் ஆலய கும்பாபிஷேகத்துக்கு வருவதாக உறுதியளித்திருந்ததாலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க இயலவில்லை.</p><p>எங்கள் மடத்துக்கு அருகிலேயே மீனாட்சி அம்மன் கோவில் இருப்பதால் நான் தினசரி அம்மனை தரிசிப்பதும் வழக்கம் என்றார். </p>]]></content:encoded></item><item><title>இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாள்: திமுக எம்பி கனிமொழி புகழஞ்சலி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/irattaimalai-seenivasan-memorial-day-dmk-mp-kanimozhi-tribute</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/irattaimalai-seenivasan-memorial-day-dmk-mp-kanimozhi-tribute#comments</comments><guid isPermaLink="false">4ad6e1bf-5d2e-4724-88e7-b30355c554ae</guid><pubDate>Fri, 18 Sep 2026 04:26:01 +0000</pubDate><atom:updated>2026-09-18T04:26:01.888Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,Kanimozhi,கனிமொழி,இரட்டைமலை சீனிவாசன்,irattaimalai srinivasan</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/wiu7akxf/kanimozhi1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ irattaimalai srinivasan- Kanimozhi MP]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/wiu7akxf/kanimozhi1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சமூகப்போராளியும் திராவிட இயக்கத்தின் முன்னோடியுமான திராவிட மணி <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D" rel="nofollow">இரட்டை மலை சீனிவாசன்</a> நினைவு நாளான இன்நாளில் அவரது நினைவைப் போற்றி வணங்குகிறேன் என்று திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, உரிமை, அரசியல் பிரதிநிதித்துவத்திற்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்த சமூகப் போராளியும், திராவிட இயக்கத்தின் முன்னோடியுமான 'திராவிட மணி' இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாள் இன்று.</p><p>சமத்துவமும் சமூக நீதியும் தழைத்திட அயராது பாடுபட்ட அன்னாரின் நினைவைப் போற்றி வணங்குகிறேன்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item></channel></rss>