<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 16 Aug 2026 15:35:40 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்- 16 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-16-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-16-august-2026#comments</comments><guid isPermaLink="false">114f1354-2cfc-439f-8ee1-fbc2ae5ae0a8</guid><pubDate>Sun, 16 Aug 2026 03:20:30 +0000</pubDate><atom:updated>2026-08-16T14:51:45.357Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/4rqpglxc/TodayLive001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இன்றைய முக்கிய செய்திகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/4rqpglxc/TodayLive001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/ai-solutions-most-diseases-next-10-years-anthropic-ceo-dario-amodei-prediction">அடுத்த 10 ஆண்டுகளில் பெரும்பாலான நோய்களுக்கு AI மூலம் தீர்வு: ஆந்த்ரோபிக் சிஇஓ டாரியோ அமோடி கணிப்பு!... </a></p><p>*AI-ன் உதவியால் சில வாரங்களிலேயே புதிய மருந்துகளை வடிவமைக்க முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.</p><p>*மருத்துவ ஆராய்ச்சி மற்றும் உயிரியல் துறையில் AI தொழில்நுட்பம் புகுத்தப்படுவதன் மூலம், ஆய்வுகளின் வேகம் 10 மடங்கு வரை அதிகரிக்கும் என்று டாரியோ அமோடி சுட்டிக்காட்டியுள்ளார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/64-crore-voters-seeking-change-in-2029-parliamentary-election-annamalai-prediction">2029 நாடாளுமன்றத் தேர்தலில் மாற்றத்தை விரும்பும் 64 கோடி வாக்காளர்கள்: அண்ணாமலை கணிப்பு!</a></p><p>*பாரம்பரிய அரசியல் வழிகளிலிருந்து விலகி, வெளிப்படைத்தன்மை மற்றும் தொலைநோக்குக் பார்வை கொண்ட தலைமைக்கே மக்கள் முன்னுரிமை அளிப்பார்கள்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/annamalai-says-he-still-trusts-honest-modi-on-mekedatu-issue">'மேகதாது விவகாரத்தில் நேர்மையான, தவறு செய்யாத மோடியை இன்றும் நான் நம்புகிறேன்'-அண்ணாமலை!</a></p><p>*தலைவர்கள் இனி டெல்லியிலோ, புனித ஜார்ஜ் கோட்டையிலோ, போயஸ் தோட்டத்திலோ, கோபாலபுரத்திலோ அல்லது பனையூரிலோ உட்கார்ந்து முடிவுகளை எடுக்கும் காலம் முடிந்துவிட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-shops-closure-annamalai-praises-tvk-government">த.வெ.க அரசிற்கு அண்ணாமலை பாராட்டு: டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நடவடிக்கைக்கு வரவேற்பு!</a></p><p>*த.வெ.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாட்கள் மட்டுமே நிறைவடைந்துள்ளதால், உடனடியாக முடிவுகளுக்கு வர இயலாது,</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/police-officer-dies-after-fainting-at-independence-day-parade">சுதந்திர தின அணிவகுப்பில் மயங்கி விழுந்து காவலர் உயிரிழப்பு: ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கி முதலமைச்சர் விஜய் உத்தரவு!</a></p><p>*காவலருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தபோதிலும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-needs-to-watch-his-tongue-cpm-urges-legal-action">நயினாருக்கு நாவடக்கம் தேவை: சட்டப்படி நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்!</a></p><p>*நயினார் நாகேந்திரனின் இந்தப் பேச்சுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலிருந்து கடுமையான எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhis-sarcastic-remark-regarding-the-arrest">"நான் கூட இதுக்கு தான் நினைச்சேன்..."-கைது குறித்து  உதயநிதி நையாண்டி பேச்சு!</a></p><p>* "அரசே சொந்தச் செலவில் எனக்கு ஒரு ரோடு ஷோ ஏற்பாடு செய்து அழைத்துச் சென்றது போல் இருந்தது" என்று நகைச்சுவையாகக் கூறினார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/sudden-ban-on-subsidised-fertiliser-sales-in-madhya-pradesh">மத்தியபிரதேசத்தில் மானிய உரங்கள் விற்பனைக்கு திடீர் தடை: காரீஃப் பயிர் விளைச்சல் பாதிக்கும் என விவசாயிகள் அச்சம்!</a></p><p>*இந்த தடையால் உரம் கருப்பு சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படும் அபாயம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/karnataka-three-tamils-shot-dead-protest-over-bodies">கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்கள் உடல்களை வாங்க மறுத்து 2-வது நாளாக போராட்டம்: வனத்துறையினர் 7 பேர் மீது வழக்குப்பதிவு!</a></p><p>*இந்த வழக்கால் அரசும் தர்மசங்கடத்திற்கு உள்ளாகியுள்ளது. நாங்கள் ஒரு முழுமையான விசாரணையை நடத்துவோம் என்று  கூறினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/delhi-ncr-youth-turn-dance-into-business">டெல்லி-என்.சி.ஆரில் உருவெடுக்கும் 'டான்ஸ்பிரீனர்ஸ்': நடனக் கலையை வெற்றிகரமான வணிகமாக மாற்றும் இளைஞர்கள்</a>!</p><p>*இன்றைய டான்ஸ்பிரீனர்ஸ் வெறும் நடனம் கற்பிப்பதோடு நின்றுவிடுவதில்லை. அவர்கள் தங்கள் நிறுவனங்கள் மூலமாகப் பல்வேறு நவீன வணிக மாதிரிகளைச் செயல்படுத்துகின்றனர். </p><p><a href="https://maalai-malar.quintype.com/story/697f8b2b-6ea2-4df2-82c8-51a68ab73f25">வாரணாசி விமான நிலையத்தில் சோதனையின்போது வெடித்த துப்பாக்கி.. குண்டடிபட்டு 2 பேர் காயம்</a></p><p>*ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணிக்க வந்திருந்தார்.</p><p>*இரண்டு பாதுகாப்பு ஊழியர்களின் மீது பாய்ந்தது.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/e5986a56-482a-401b-b017-f97d0b2c649a">மேகதாது விவகாரம் போல வாய்மூடி இருக்கக்கூடாது.. கர்நாடகாவில் 3 தமிழர்கள் கொலைக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்</a></p><p>*அந்தோணி சுவாமி, லாசர் டோடியா குமார் மற்றும் ஜெகநாதன் டோடியா பீட்டர் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.</p><p>*அவர்களுக்கு அரசுப் பணியும் கிடைக்கச் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்</p> <p><a href="https://maalai-malar.quintype.com/story/f845adee-a555-4331-baee-b546ce27480c">ராமநாதபுரம்: லஞ்ச வழக்கில் சிக்கியவருக்கு சிறந்த பணிக்கான நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு</a></p><p>*கடந்த 3 ஆண்டுகளில் ஜி பே மூலம் சுமார் 25 லட்ச ரூபாய் பண பறிமாற்றம்</p><p>*நகராட்சியின் வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் என்பவருக்கும் சிறந்த பணிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/31932a92-6497-472b-973c-21979f9f4fdd">சோனியா காந்தி செய்த பாவத்தை நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள் - அமித் ஷா</a></p><p>*சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் தியாகத்தை கொச்சைப்படுத்துவதாகும்</p><p>* தியாகிகள் தூக்குமேடை ஏறும்போது பாடிய தாரக மந்திரம்</p><p><strong><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-men-killed-by-karnataka-forest-officials-families-accept-bodies">கர்நாடகா வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள் - காலை முதல் நடந்த போராட்டம் வாபஸ் – உடல்களைப் பெற உறவினர்கள் சம்மதம்!</a></strong></p><p>* அரசு பேச்சுவார்த்தை: பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கையை ஏற்று அரசு தரப்பில் முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றது.</p><p>* இழப்பீடு அறிவிப்பு: உயிரிழந்த மூன்று பேர் குடும்பத்திற்கும் தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/fe62a5ce-a42c-4356-ac59-ed3a71cf4c4a">நான் அரசியலில் நுழைந்ததே தவறு.. வாழ்நாளில் ஊழல் செய்ததே இல்லை - திரிணாமுல் காங்கிரஸ் தலைவரின் தற்கொலை கடிதம்</a></p><p>* ஆசிஷ் பானர்ஜி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>*கட்சி அலுவலகத்தில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/wtc-points-table-changed-bangladesh-to-enter-the-wtc-final-race">உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை தக்கவைத்தது வங்கதேசம்</a></p><p>* வங்கதேச அணி புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது.</p><p>* இந்திய அணி 48.15 சதவீத புள்ளிகளைப் பெற்று 5வது இடத்தில் உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/apologize-to-tamil-nadu-people-for-vulgar-speech-ramesh-condemns-nainar-nagendran">தரக்குறைவான பேச்சுக்காக தமிழக மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள் - நயினார் நாகேந்திரனுக்கு அமைச்சர் ரமேஷ் கண்டனம்!</a></p><p>* நயினார் நாகேந்திரன் தமிழக மக்களிடம் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என அமைச்சர் ரமேஷ் வலியுறுத்தினார்.</p><p>* அரசியல் எதிர்ப்பு: விஜய் குடும்பம் பற்றிய அநாகரிக பேச்சுக்கு பல கட்சிகளிடமிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/p-shanmugam-urges-tn-govt-condemn-karnataka-govt-fake-encounter-of-3-tamilans-in-the-karnataka-forest">கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: தமிழக அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்- பெ. சண்முகம் வலியுறுத்தல்</a></p><p>* துப்பாக்கிச் சூட்டுக் கொலையை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.</p><p>* சம்பந்தப்பட்ட வனத்துறையினரைப் பணிநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/match-delayed-due-to-rain-in-second-day-for-srilanka-india-match">இந்தியா, இலங்கை இடையிலான முதல் டெஸ்ட்:  மழையால் பாதிப்பு</a></p><p>* சிறப்பாக விளையாடிய தேவ்தத் படிக்கல் 134 பந்துகளில் சதம் விளாசினார்.</p><p>* மழையால் ஆட்டம் தொடங்குவதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/bangladesh-beat-australia-in-first-test">டார்வின் டெஸ்ட்: ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் நொறுக்கியது வங்கதேசம்-சாதனை வெற்றி</a></p><p>* வங்கதேசம் 2வது இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 57 ரன்கள் எடுத்து வென்றது.</p><p>* ஹசன் மகமது ஆட்ட நாயகன் விருது வென்றார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/mob-baying-for-her-shashi-tharoor-backs-mahua-moitra-after-late-night-eviction-bid">நடுராத்திரியில் விருந்தினர் மாளிகையில் இருந்து வெளியேற்ற முயற்சி: மஹுவா மொய்த்ரா எம்.பி. குற்றச்சாட்டு</a></p><p>* மாலை 6.15 மணியளவில் நான் சர்க்யூட் ஹவுஸ் அறைக்குச் சென்றேன். ஊழியர்கள் எனக்கு வழக்கமாக ஒதுக்கப்படும் அறைக்கு என்னை அழைத்துச் சென்றனர்.</p><p>* அந்த அறை தங்குவதற்குத் தயாராக வைக்கப்பட்டிருந்தது. மாலை 7 மணிக்கு எனது அறைக்குத் தேநீர் கொண்டு வரப்பட்டது. இரவு 9.20 மணிக்கு இரவு உணவு அங்கேயே பரிமாறப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/president-murmu-pm-modi-pay-tribute-to-vajpayee" rel="nofollow">வாஜ்பாய் நினைவு நாள்: ஜனாதிபதி, பிரதமர் மோடி மலரஞ்சலி</a></p><p>* டெல்லியில் உள்ள நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மலரஞ்சலி செலுத்தினார்.</p><p>* டெல்லியில் உள்ள நினைவிடத்தில் டெல்லி முதலமைச்சர் ரேகா அஞ்சலி.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/8000-cusecs-flow-in-hogenakkal-cauvery" rel="nofollow">ஒகேனக்கல் ஆற்றில் 8,000 கனஅடி நீர் வரத்து..!- பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை</a></p><p>* தமிழகத்திற்கு 800 கனஅடி வீதம் நீர் திறக்கப்படுகிறது.</p><p>* குடிநீர் தேவைக்காக 2000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cannot-fool-the-youth-mr-prime-minister-manickam-thakur-criticism-on-sengottai-speech" rel="nofollow">இளைஞர்களை ஏமாற்ற முடியாது Mr. Prime Minister!- செங்கோட்டையில் பிரதமரின் உரை குறித்து மாணிக்கம் தாகூர் விமர்சனம்</a></p><p>* நேற்றைய மோடியின் பேச்சுக்கும், நிஜமான கள யதார்த்தத்திற்கும் எவ்வளவு பெரிய இடைவெளி!</p><p>* ரூ.63,000 கோடியில் தொடங்கப்பட்ட பிரதமரின் பயிற்சித் திட்டம் (PMIS) முற்றிலும் முடங்கிக் கிடக்கிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/myanmar-approves-return-of-3-lakh-rohingya" rel="nofollow">3 லட்சம் ரோஹிங்கியா அகதிகளை மீண்டும் ஏற்கிறது மியான்மர்</a></p><p>* தாய் நாட்டிற்கு அழைத்து வர வங்காளதேசத்துடன் இணைந்து மியான்மர் அரசு தீவிரமாகப் பணியாற்றி வருகிறது.</p><p>*  3 லட்சத்திற்கும் அதிகமான அகதிகள் மியான்மரின் ராகினே மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/south-railway-revenue-up-8-84-percent-in-2025-26" rel="nofollow">2025-26ம் நிதியாண்டில் தெற்கு ரெயில்வேயில்  ரூ.13,778 கோடி வருவாய்- பொதுமேலாளர் சுப்பாராவ்</a></p><p>* நடப்பு நிதியாண்டில் ஜூலை மாதம் வரை 13.48 மில்லியன் டன்களை எட்டியுள்ளோம்.</p><p>* 2025-26-ம் ஆண்டில் 42.184 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-aiadmk-alliance-not-possible-says-mp-kanimozhi" rel="nofollow">திமுக-அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை..!- திமுக எம்பி கனிமொழி</a></p><p>* பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குக்கூட பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.</p><p>*  தூத்துக்குடியிலேயே தொடர்ந்து இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/asish-banerjee-mamata-banerjee-close-aide-found-dead-at-trinamool-office">முன்னாள் அமைச்சர் கட்சி அலுவலகத்தில் சடலமாக கண்டெடுப்பு: மம்தாவுக்கு நெருக்கமானவர்..!</a></p><p>* கல்வி மற்றும் விவசாயத்துறை அமைச்சராகவும் மம்தா பானர்ஜி அரசின் கீழ் பணியாற்றியுள்ளார்.</p><p>* இந்த வருடம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக-வின் துருபா சஹாவிடம் தோல்வியடைந்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/india-beat-wales-in-hockey-world-cup">உலகக் கோப்பை ஹாக்கி: வேல்ஸ் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது இந்தியா</a></p><p>* இந்திய அணி டி பிரிவில் இடம்பெற்று உள்ளது.</p><p>* கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் இரு கோல்கள் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/chepauk-super-gillies-moves-in-second-place-in-tnpl-points-table">டிஎன்பிஎல்: புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது சேப்பாக்</a></p><p>* முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.</p><p>* மதுரை பாந்தர்ஸ் அணி 4 வெற்றியுடன் 8 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/djokovic-lose-second-round-in-cincinnati-open-tennis">சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி</a></p><p>* சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.</p><p>* முன்னணி வீரர்கள் நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/withdraw-coalition-support-jharkhand-protesters-demand-from-rahul-gandhi">ஜார்க்கண்ட் முதல்வர், ராகுல் காந்தி உருவ பொம்பை எரிப்பு: 20-ந்தேதி சோரன் வீடு முற்றுகை போராட்டம்- மாணவர்கள் அறிவிப்பு</a></p><p>* ராகுல் காந்தி மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார். ஆனால், உறுதியான நடவடிக்கை பின்பற்றப்படவில்லை.</p><p>* அதனால் ஹேமந்த் சோரன் ஆட்சிக்கு வழங்கும் ஆதரவை ராகுல் காந்தி திரும்பப் பெற வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>பிரதமர் மோடி பேசிய ஒரே வரி.. பொங்கியெழுந்த காங்கிரஸ் - &apos;திமாகி நக்சல்&apos; யார்? - ரிஜிஜூ விளக்கம் </title><link>https://www.maalaimalar.com/news/national/dimaki-naxal-row-modis-independence-day-speech-sparks-opposition-backlash</link><comments>https://www.maalaimalar.com/news/national/dimaki-naxal-row-modis-independence-day-speech-sparks-opposition-backlash#comments</comments><guid isPermaLink="false">7f07c034-91ab-4f6c-902c-4a8c6abc6d0a</guid><pubDate>Sun, 16 Aug 2026 15:34:08 +0000</pubDate><atom:updated>2026-08-16T15:34:08.750Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,Prime Minister Modi,Independence Day,சுதந்திர தினம்,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/s6b3id4b/tn.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரதமர் மோடி]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர் மோடி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/s6b3id4b/tn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாட்டின் 80வது சுதந்திர தினத்தில் <a href="https://www.maalaimalar.com/news/national/modi-speech-error-and-flag-row-ev-sales-misquote-and-inverted-tricolour-spark-controversy-at-independence-day-event">பிரதமர் மோடி</a> 'திமாகி நக்சல்' என்ற சொல்லாடலை பயன்படுத்தியது சர்ச்சை ஆனது. </p><p>திமாக் என்றால் ஹிந்தியில் அறிவு என அர்த்தமாகும். திமாகி நக்சல் என்றால் அறிவுஜீவி நக்சல் என்பது பொருள்.</p><p>80வது சுதந்திர தின உரையின் போது பிரதமர் மோடி, "காடுகளில் ஆயுதம் ஏந்திப் போராடிய நக்சலைட்டுகள் ஒடுக்கப்பட்டுவிட்ட போதிலும், அமைப்பிற்குள் இருக்கும் ‘திமாகி நக்சல்கள்’ இன்னும் வன்முறைக்கான வாய்ப்புகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்த வேண்டும்" என்று பேசினார். </p><h2>காங்கிரஸ்</h2><p>பிரதமரின் இந்த உரை எதிர்க்கட்சிகளை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாகக் காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டினர்.</p><p>முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், "நான் ஒரு திமாகி நக்சலாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்" என பதிலடி கொடுத்தார்.</p> <h2>கிரண் ரிஜிஜு விளக்கம்</h2><p>இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரையும் ‘திமாகி நக்சல்கள்’ என்று குறிப்பிடவில்லை என்று மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு விளக்கம் அளித்துள்ளார்.</p><p>மார்க்சிஸ்ட், மாவோயிஸ்ட் சித்தாந்தத்தை ஆதரித்து, இந்திய அரசியலமைப்பை நிராகரிப்பவர்கள், பிரிவினைவாதிகளை ஆதரித்து ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370ஐ ஆதரிப்பவர்கள், வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து பிரிக்க வேண்டும் என்று கோருபவர்கள் ஆகியோரையே பிரதமர் மோடி திமாகி நக்சல்கள் என்று குறிப்பிட்டதாக ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.</p> <p><a href="https://www.maalaimalar.com/topic/prime-minister-modi">பிரதமர் மோடி</a>, காங்கிரஸ் தலைவர்களை அர்பன் (நகர்ப்புற) நக்சல்கள் என பல முறை விமர்சித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370ஐ கடந்த 2019 இல் மோடி தலைமையிலான பாஜக அரசு ரத்து செய்து அம்மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் - லடாக் என இரு யூனியன் பிரதேசமாக மாற்றியது குறிப்பிடத்தக்கது.</p><p>அண்மையில் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, ஜம்மு காஷ்மீர் மாநில அந்தசஸ்தை பறிக்காமல் இருந்திருந்தால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைய போராடியிருப்பார்கள் என தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>2026-ன் மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்: பதிலடித் தாக்குதலில் இறங்கிய ரஷியா-ஜெலென்ஸ்கியின் சொந்த ஊரில் ஏவுகணை வீச்சு!</title><link>https://www.maalaimalar.com/news/world/2026s-largest-airstrike-russia-retaliatory-missile-attack-on-zelenskys-hometown</link><comments>https://www.maalaimalar.com/news/world/2026s-largest-airstrike-russia-retaliatory-missile-attack-on-zelenskys-hometown#comments</comments><guid isPermaLink="false">0b37a085-7ffb-4eab-b128-b79e9190a7a3</guid><pubDate>Sun, 16 Aug 2026 15:30:11 +0000</pubDate><atom:updated>2026-08-16T15:30:11.206Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Russia,Ukraine,airstrike,வான்வழித் தாக்குதல்,President Zelenskyy,ஜெலென்ஸ்கி,ரஷியா,உக்ரைன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/apzgfvpt/rush.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Zelenskyy's  hometown]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/apzgfvpt/rush.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உக்ரைன் மற்றும் ரஷியா இடையே போரின் தீவிரத்தன்மை மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 2026 ஆம் ஆண்டின் மிகப்பெரிய மற்றும் போரின் வரலாற்றிலேயே மிக பிரம்மாண்டமான ட்ரோன் தாக்குதலை ரஷியா எல்லைக்குள் உக்ரைன் நடத்தியுள்ளது. இதற்குப் பதிலடியாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் சொந்த ஊரை இலக்கு வைத்து ரஷிய படைகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளன.</p><h2>ரஷியாவுக்<strong>குள் ஊடுருவிய 8</strong>22 ட்ரோன்கள்</h2><p>ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலின்படி, உக்ரைன் ஏவிய 822 ட்ரோன்களை நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஷிய வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தியும், செயலிழக்கச் செய்தும் அழித்துள்ளன. <a href="https://www.maalaimalar.com/news/world/donald-trump-says-will-soon-declare-strait-of-hormuz-us-territory">ரஷியா</a>வின் தெற்கு மற்றும் மேற்கு எல்லைப்புற மண்டலங்கள் உட்பட 17 பிராந்தியங்களில் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன. </p><p>மாஸ்கோ பிராந்தியத்தை மட்டும் சுமார் 600 ட்ரோன்கள் வரை இலக்கு வைத்ததாகவும், அவற்றில் 187 ட்ரோன்கள் மாஸ்கோ நகரை அடையும் முன்னே சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் ஆளுநர் ஆண்ட்ரி வோரோபியோவ் தெரிவித்துள்ளார்.</p><h2>ஆன்லைன் வர்<strong>த்தக நிறுவன</strong> கிடங்கில் பெரும் தீ</h2><p>இந்த ட்ரோன் தாக்குதலில் ரஷியாவின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான Wildberries-க்குச் சொந்தமான கொலிடினோ லாஜிஸ்டிக்ஸ் கிடங்கு கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மாஸ்கோவிற்கு தெற்கே 45 கி.மீ தொலைவில் சுமார் 2,500,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த பிரம்மாண்ட கிடங்கு தீப்பற்றி எரிந்தது. வானளவு உயர்ந்த கருப்புப் புகையும் தீப்பிளம்புகளும் அப்பகுதியை உலுக்கின. இந்தத் தாக்குதல்களில் ரஷிய தரப்பில் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.</p><h2>ஜெலென்ஸ்கியி<strong>ன் சொந்த ஊரில் </strong>தாக்குதல்</h2><p>உக்ரைனின் இந்த அதிரடித் தாக்குதலுக்குப் பதிலடியாக, உக்ரை அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் பிறந்த ஊரான கிரிவி ரிஹ்  நகரத்தைக் குறிவைத்து ரஷிய படைகள் ஏவுகணைகளை வீசின. அங்குள்ள முக்கிய உள்கட்டமைப்புகள் மற்றும் நாட்டின் மிகப்பெரிய எஃகு உற்பத்தி ஆலை மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் 14 பேர் காயமடைந்தனர். ஆலையின் மின் உற்பத்தி மற்றும் உற்பத்தி அலகுகள் சேதமடைந்ததால் அதன் செயல்பாடுகள் பகுதி அளவு முடங்கியுள்ளன.</p><h2>போரின் <strong>போக்கு தீவிர</strong>மடைகிறது</h2><p>உக்ரைன் தலைநகர் கெய்வ் மீதும் ரஷியா பேலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைன் சமீபகாலமாக 2,400 கி.மீ தொலைவு வரை பாயக்கூடிய அதிநவீன ட்ரோன் தொழில் நுட்பங்களை உருவாக்கி ரஷியாவின் வர்த்தக கிடங்குகள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைத் தொடர்ந்து தாக்கி வருகிறது. இரு நாடுகளும் எல்லை தாண்டி வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளதால், இந்தப் பகுதியில் போரின் தாக்கம் மேலும் தீவிரமடைந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>உடலின் ஹார்மோன் சமநிலையைப் பாதிக்கும் ‘அடிசன் நோய்’: தொடக்கத்திலேயே கண்டறிவது எப்படி?</title><link>https://www.maalaimalar.com/health/generalmedicine/addison-disease-that-affects-the-bodys-hormonal-balance-how-to-detect-it-early</link><comments>https://www.maalaimalar.com/health/generalmedicine/addison-disease-that-affects-the-bodys-hormonal-balance-how-to-detect-it-early#comments</comments><guid isPermaLink="false">533121a8-c14c-4bef-81ea-9af0ec12c5e9</guid><pubDate>Sun, 16 Aug 2026 15:06:24 +0000</pubDate><atom:updated>2026-08-16T15:06:24.160Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Health,ஆரோக்கியம்,HealthTips,உடல்நலம்,Adrenal Crisis,Addison&apos;s disease,அடிசன் நோய்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/7ufq911w/adrinal.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Adrenal Crisis ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/7ufq911w/adrinal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>பொது மருத்துவம் (General Medicine)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அடிசன் நோய் அல்லது முதன்மை அட்ரினல் பற்றாக்குறை என்பது உடலின் முக்கிய செயல்பாடுகளுக்குத் தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் அட்ரினல் சுரப்பிகள் சேதமடைவதால் ஏற்படும் ஒரு அரிதான மருத்துவ நிலையாகும். </p><p>சிறுநீரகங்களின் மேல் பகுதியில் அமைந்துள்ள இந்தச் சிறிய சுரப்பிகள், உடலின் வளர்சிதை மாற்றம், ரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் கார்டிசோல் மற்றும் அல்டோஸ்டிரோன் ஆகிய அத்தியாவசிய ஹார்மோன்களைப் போதுமான அளவில் சுரக்கத் தவறும்போது இந்நோய் ஏற்படுகிறது.</p><h2><strong>தொடக்கக் கட்ட அறிகுறி</strong></h2><p>இந்நோயின் ஆரம்பக்கால அறிகுறிகள் மனச்சோர்வு அல்லது சாதாரண காய்ச்சல் போன்ற பொதுவான நோய்களின் அறிகுறிகளைப் போலவே இருக்கும். இதனால் இதனைத் தொடக்கத்திலேயே கண்டறிவது சவாலாக அமைகிறது. தீவிர சோர்வு, தசை பலவீனம், மனநிலை மாற்றம், பசியின்மை, உடல் எடை குறைதல் மற்றும் அதிக தாகம் ஆகியவை இதன் முதன்மை அறிகுறிகளாகும். நோய் தீவிரமடைதல் தலைச்சுற்றல், மயக்கம், தசைப்பிடிப்பு, கடுமையான சோர்வு மற்றும் சருமம் அல்லது உதடுகள் கருமையாதல் போன்ற மாற்றங்கள் உடலில் தோன்றும்.</p><h2>நோய் ஏற்<strong>படுவதற்கான முத</strong>ன்மை காரணங்கள்</h2><p>உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு தவறாகச் செயல்பட்டு, அட்ரினல் சுரப்பியின் வெளி அடுக்கைத் தாக்கி அழிப்பதே இந்நோய் ஏற்படுவதற்கு 70 முதல் 90 சதவீதக் காரணமாக அமைகிறது. இது தவிர, காசநோய் போன்ற தீவிர நோய்த்தொற்றுகள் அட்ரினல் சுரப்பிகளைப் பாதிப்பதாலும் அரிதாக இந்நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆண்களை விட பெண்களுக்கே இந்நோய் பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது.</p><h2>வாழ்<strong>நாள் சிகிச்</strong>சை</h2><p>அடிசன் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் வாழ்நாள் முழுவதும் விடுபட்ட ஹார்மோன்களை ஈடுசெய்யும் மருந்துகளைத் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். சரியான மருத்துவ வழிகாட்டுதல் மற்றும் சிகிச்சையின் மூலம் இந்நோயாளிகள் இயல்பான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கையை வாழ முடியும்.</p><p>எனினும், மருந்தைச் சரியாக உட்கொள்ளத் தவறினாலோ அல்லது பிற கடுமையான நோய்கள் தாக்கினாலோ உடலின் கார்டிசோல் அளவு திடீரெனக் குறைந்து 'அட்ரினல் கிரைசிஸ்' எனும் ஆபத்தான நிலை ஏற்படக்கூடும். கடுமையான குமட்டல், குழப்பம், காய்ச்சல் மற்றும் திடீர் பலவீனம் ஆகியவை இதன் அறிகுறிகளாகும். இந்நிலை ஏற்பட்டால் உடனடியாக அவசர மருத்துவ உதவியை நாடுவது மிக அவசியமாகும்.</p>]]></content:encoded></item><item><title>மேற்கு வங்கம்: காங்கிரஸ் தலைவர், மகன் கொடூர கொலை - திரிணாமுல் காங்கிரஸ் பஞ்சாயத்து தலைவர் கைது </title><link>https://www.maalaimalar.com/news/national/west-bengal-congress-leader-murder-district-chief-and-son-killed-in-shooting-and-sharp-weapon-attack</link><comments>https://www.maalaimalar.com/news/national/west-bengal-congress-leader-murder-district-chief-and-son-killed-in-shooting-and-sharp-weapon-attack#comments</comments><guid isPermaLink="false">bfee4d71-6911-42e4-aee4-65a7160337d4</guid><pubDate>Sun, 16 Aug 2026 14:55:02 +0000</pubDate><atom:updated>2026-08-16T14:55:02.331Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மேற்கு வங்கம்,காங்கிரஸ் தலைவர்,கொலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/vlzpvdwm/tn-23.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அபு சுபியான், அனிசூர் ரஹ்மான்]]></media:title><media:description type="html"><![CDATA[ அபு சுபியான், அனிசூர் ரஹ்மான்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/vlzpvdwm/tn-23.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">மேற்கு வங்கத்தில்</a> காங்கிரஸ் தலைவர் மற்றும் அவரின் மகன் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>மேற்கு வங்க மாநிலம்  நதியா மாவட்ட காங்கிரஸ் தலைவர் அனிசூர் ரஹ்மான் (50). இவரது 24 வயது மகன் அபு சுபியான் வழக்கறிஞராக உள்ளார். </p> <h2>கொலை</h2><p>நேற்று சனிக்கிழமை இரவு 9:30 மணியளவில் காரில் இருவரும் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, நகாடி ரெயில்வே கேட் அருகே ஒரு கும்பல் இவர்களை வழிமறித்துள்ளது.</p><p>காரை நோக்கி முதலில் துப்பாக்கியால் சுட்ட கும்பல், பின்னர் இருவரையும் கூர்மையான ஆயுதங்களால் தாக்கியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.</p><h2>கைது</h2><p>இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளாக கண்டறிப்பட்ட <a href="https://www.maalaimalar.com/news/national/west-bengal-tmc-leader-ashish-banerjee-dies-by-suicide-amid-corruption-row">திரிணாமுல் காங்கிரசை </a>சேர்ந்த ஹரநகர் கிராம பஞ்சாயத்து தலைவர் பாத்திமா பீவி, சாஜேப் ஷேக் மற்றும் மித்து ஷேக் ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர்.</p><p>கைது செய்யப்பட்ட மூன்று பேரும் கிருஷ்ணாநகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 9 நாட்கள் போலீஸ் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.</p> <p>சிறையில் இருக்கும் பாத்திமா பீவியின் கணவர் ஜப்பார் ஷேக் தான் இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருந்து செயல்பட்ட முக்கிய குற்றவாளி என தெரியவந்துள்ளது.</p><h2>காங்கிரஸ் கண்டனம் </h2><p>இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் அதீர் ரஞ்சன் சவுத்ரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக குற்றம் சாட்டிய அவர், சுதந்திர தின நாளில் இதுபோன்ற கொடூரமான குற்றங்கள் நடப்பது மக்களின் பாதுகாப்புக்கும், சுதந்திரமாக அரசியல் செய்வதற்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>அடுத்த 10 ஆண்டுகளில் பெரும்பாலான நோய்களுக்கு AI மூலம் தீர்வு: ஆந்த்ரோபிக் சிஇஓ டாரியோ அமோடி கணிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/world/ai-solutions-most-diseases-next-10-years-anthropic-ceo-dario-amodei-prediction</link><comments>https://www.maalaimalar.com/news/world/ai-solutions-most-diseases-next-10-years-anthropic-ceo-dario-amodei-prediction#comments</comments><guid isPermaLink="false">885b8827-a71e-481b-883d-9fcb3ee03c29</guid><pubDate>Sun, 16 Aug 2026 14:49:39 +0000</pubDate><atom:updated>2026-08-16T14:49:39.498Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>AI,செயற்கை நுண்ணறிவு,Anthropic,ஆந்த்ரோபிக்,Dario Amodei,டாரியோ அமோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/rvg4cx51/ANTHRO.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anthropic Dario Amodei]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/rvg4cx51/ANTHRO.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>செயற்கை நுண்ணறிவு (AI) துறையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஆந்த்ரோபிக் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி டாரியோ அமோடி, மருத்துவத் துறையில் AI ஏற்படுத்தப் போகும் புரட்சி குறித்து மிக முக்கியக் கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். வரும் 5 முதல் 10 ஆண்டுகளுக்குள் மனிதகுலத்தை அச்சுறுத்தும் பெரும்பாலான நோய்களுக்கு AI தொழில்நுட்பத்தின் மூலம் தீர்வு காண முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.</p><h2>100 ஆண்<strong>டு மருத்துவ வளர்</strong>ச்சி</h2><p>மருத்துவ ஆராய்ச்சி மற்றும் உயிரியல் துறையில் AI தொழில்நுட்பம் புகுத்தப்படுவதன் மூலம், ஆய்வுகளின் வேகம் 10 மடங்கு வரை அதிகரிக்கும் என்று <a href="https://www.maalaimalar.com/news/world/anthropic-ceos-wife-linked-to-jeffrey-epstein-luxury-porn-startup-funding-emails-revealed">டாரியோ அமோடி </a>சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாக, வழக்கமான மருத்துவ அறிவியலில் 50 முதல் 100 ஆண்டுகள் ஆகக்கூடிய ஆராய்ச்சிகள் மற்றும் மருந்து கண்டுபிடிப்புகள், இனி வரும் 5 முதல் 10 ஆண்டுகளுக்குள்ளேயே சாத்தியமாகும் நிலை உருவாகும் என்று அவர் விளக்கியுள்ளார்.</p><h2>புற்றுநோய் <strong>மற்றும் மரபணு நோய்</strong>களுக்கு முற்றுப்புள்ளி</h2><p>AI தொழில்நுட்பத்தின் துணையோடு புற்றுநோய், அல்சைமர், தொற்றுநோய்கள் மற்றும் சிக்கலான மரபணு சார்ந்த நோய்களுக்கான காரணங்களை எளிதில் கண்டறிந்து அவற்றுக்குத் துல்லியமான சிகிச்சைகளை வடிவமைக்க முடியும். புதிய மருந்துகளைக் கண்டறிவதற்கும், சோதிப்பதற்கும் பல ஆண்டுகள் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் செலவாகும் நிலையில், AI-ன் உதவியால் சில வாரங்களிலேயே புதிய மருந்துகளை வடிவமைக்க முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.</p><h2>மனித ஆயுட்<strong>காலம் அதிகரிக்கும்</strong> வாய்ப்பு</h2><p>நோய்களைக் குணப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மனிதர்களின் சராசரி ஆயுட்காலத்தை கணிசமாக உயர்த்தவும் AI உதவும் என்று கணித்துள்ள டாரியோ அமோடி, மனநலம் சார்ந்த கோளாறுகளுக்கும் AI மூலம் சிறந்த தீர்வுகள் கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். தொழில்நுட்பத்தின் இந்த அபரிமிதமான வளர்ச்சி மனித சமூகத்தின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்குப் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சுசீந்திரன் இயக்கத்தில் சாந்தனு - சீமான் இணையும் புதிய படம்: ‘ஒரு கைதியின் டைரி’ போஸ்டர் வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/susindran-directs-shanthanu-seeman-new-film-oru-kaithiyin-diary-poster-release</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/susindran-directs-shanthanu-seeman-new-film-oru-kaithiyin-diary-poster-release#comments</comments><guid isPermaLink="false">1c26f2f5-106d-4aee-82fb-29dd9d94f97b</guid><pubDate>Sun, 16 Aug 2026 14:33:14 +0000</pubDate><atom:updated>2026-08-16T14:33:14.478Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Shanthanu Bhagyaraj,Seeman,Suseenthiran,சீமான்,OruKaidhiyinDiary,ஒருகைதியின்டைரி,சாந்தனு பாக்யராஜ்,KRG10</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/fvaiifou/Shanthnu-Bhagyaraj-Seeman" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Shanthnu Bhagyaraj - Seeman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/fvaiifou/Shanthnu-Bhagyaraj-Seeman?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரபல இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில், நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81">சாந்தனு பாக்யராஜ் </a>மற்றும் -அரசியல் பிரமுகர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">சீமான் </a>ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. </p><p>கண்ணன் ரவி குரூப்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்திற்கு ‘ஒரு கைதியின் டைரி’ எனப் பெயரிடப்பட்டு, அதன் அதிரடியான போஸ்டர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.</p><h2>மிரட்டலான போஸ்டர்</h2><p>தயாரிப்பு நிறுவனமான KRG குரூப்ஸ் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் இத்திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது. <strong>"ஒரு மனிதன், ஒரு கதை, ஒரு சகாப்தம். இதுவே ஒரு கைதியின் டைரி!"</strong> என்ற அழுத்தமான வரிகளுடன் வெளியாகியுள்ள இந்த போஸ்டர், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு எகிற வைத்துள்ளது.</p><h2>சுசீந்திரன் - சாந்தனு - சீமான் கூட்டணி</h2><p>'வெண்ணிலா கபடி குழு', 'நான் மகான் அல்ல' போன்ற யதார்த்தமான மற்றும் விறுவிறுப்பான கதைகளை இயக்கி தனக்கென ஒரு முத்திரை பதித்த இயக்குனர் சுசீந்திரன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். </p><p>இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சாந்தனு பாக்யராஜும், மிக முக்கிய ஆளுமையான சீமானும் இணைந்து நடிக்கின்றனர். இவர்களின் கூட்டணி திரையில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற ஆர்வம் சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="und" dir="ltr">ஒரு மனிதன், ஒரு கதை, ஒரு சகாப்தம்.<br>இதுவே ஒரு கைதியின் டைரி! <br><br>Presenting the motion poster of <a href="https://x.com/hashtag/KRG10?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#KRG10</a> - <a href="https://x.com/hashtag/OruKaidhiyinDiary?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#OruKaidhiyinDiary</a><br><br> <a href="https://t.co/Py9uSmfPT0">https://t.co/Py9uSmfPT0</a><br><br>Starring <a href="https://x.com/imKBRshanthnu?ref_src=twsrc%5Etfw">@imKBRshanthnu</a> <a href="https://x.com/SeemanOfficial?ref_src=twsrc%5Etfw">@SeemanOfficial</a> <br><br>Produced By <a href="https://x.com/KRGOffl?ref_src=twsrc%5Etfw">@KRGOffl</a> <a href="https://x.com/hashtag/KannanRavi?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#KannanRavi</a><br>Co Produced By <a href="https://x.com/hashtag/DeepakRavi?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#DeepakRavi</a><br><br>Directed by <a href="https://x.com/hashtag/suseenthiran?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#suseenthiran</a> <a href="https://t.co/RsK1t2hJ6W">pic.twitter.com/RsK1t2hJ6W</a></p>&mdash; KANNAN RAVI GROUPS (@KRGOffl) <a href="https://x.com/KRGOffl/status/2088983615048999078?ref_src=twsrc%5Etfw">August 16, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2>தலைப்பால் ஈர்க்கப்பட்ட பழைய நினைவு</h2><p>1985-ஆம் ஆண்டு உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில், பாக்யராஜ் கதையமைப்பில் வெளியான மாபெரும் பிளாக்பஸ்டர் திரைப்படத்தின் தலைப்புதான் 'ஒரு கைதியின் டைரி'. </p><p>தற்போது அதே தலைப்பை பாக்யராஜின் மகனான சாந்தனு நடிக்கும் படத்திற்குப் பயன்படுத்தியிருப்பது சினிமா ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. </p><p>பழைய படத்திற்கும் இதற்கும் கதைக்கள ரீதியாக ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதும் சஸ்பென்ஸாக வைக்கப்பட்டுள்ளது.</p><h2>தயாரிப்பு குழு</h2><p>இத்திரைப்படத்தை தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான 'கண்ணன் ரவி குரூப்ஸ்' சார்பில் கண்ணன் ரவி பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். </p><p>இவருடன் இணைந்து தீபக் ரவி இணை தயாரிப்பு பணிகளை மேற்கொள்கிறார். இந்நிறுவனத்தின் 10-வது மைல்கல் திரைப்படமாக இது உருவாவது குறிப்பிடத்தக்கது.</p><h2>அடுத்தடுத்த அறிவிப்புகள்</h2><p>தற்போது வெளியாகியுள்ள போஸ்டர் இணையத்தில் மிக வேகமாகப் பரவி வருகிறது. </p><p>படத்தின் படப்பிடிப்பு விபரங்கள், இசையமைப்பாளர், பிற தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படம் வெளியாகும் தேதி குறித்த அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் படக்குழுவினரால் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>2029 நாடாளுமன்றத் தேர்தலில் மாற்றத்தை விரும்பும் 64 கோடி வாக்காளர்கள்: அண்ணாமலை கணிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/64-crore-voters-seeking-change-in-2029-parliamentary-election-annamalai-prediction</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/64-crore-voters-seeking-change-in-2029-parliamentary-election-annamalai-prediction#comments</comments><guid isPermaLink="false">094f41f4-7739-48e5-9c94-db94916638d1</guid><pubDate>Sun, 16 Aug 2026 14:28:18 +0000</pubDate><atom:updated>2026-08-16T14:28:18.560Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அண்ணாமலை,நாடாளுமன்றம்,parliament,annamalai,We the Leaders,வீ தி லீடர்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/zoe179cy/ana.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Annamalai  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/zoe179cy/ana.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் சார்பில், ஆகஸ்ட் மாதத்தைச் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மாதமாகக் கடைப்பிடிப்பதன் ஒரு பகுதியாக, சென்னையில் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தி பிரம்மாண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கான இளைஞர்களும் பொதுமக்களும் திரளாக பங்கேற்றனர்.</p><p>பேரணியின் நிறைவில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் பேசிய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/annamalai-says-he-still-trusts-honest-modi-on-mekedatu-issue">அண்ணாமலை</a>, நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான வாக்காளர்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்திய அரசியல் களம் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், வரவிருக்கும் 2029 நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் குறித்த அண்ணாமலையின் கணிப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. </p><h2>அ<strong>ரசியல் மாற்றம்</strong></h2><p>செய்தியாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே உரையாற்றிய அண்ணாமலை, 2029-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் கிட்டத்தட்ட 64 கோடி வாக்காளர்கள் பெரும் மாற்றத்தை விரும்புவார்கள் என்று குறிப்பிட்டார். நாட்டின் தற்போதைய அரசியல் சூழல், மக்களின் தேவைகள் மற்றும் எதிர்காலக் கனவுகளை மையமாகக் கொண்டு வாக்காளர்கள் தங்களது தீர்ப்பை அளிப்பார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.</p><h2>எதி<strong>ர்கால அரசியல்</strong> </h2><p>பாரம்பரிய அரசியல் வழிகளிலிருந்து விலகி, வெளிப்படைத்தன்மை மற்றும் தொலைநோக்குக் பார்வை கொண்ட தலைமைக்கே மக்கள் முன்னுரிமை அளிப்பார்கள் என அவர் சுட்டிக்காட்டினார். இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்களின் பங்களிப்பு இந்த மாற்றத்தில் மிக முக்கியமான காரணியாக இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், 2029 தேர்தல் இந்திய அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என உறுதியாகத் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஆபாச படங்களில் முதலீடு செய்ய எப்ஸ்டீனை அணுகிய ஆந்திரோபிக் சிஇஓவின் மனைவி  - வெளியான அதிர்ச்சி இமெயில் </title><link>https://www.maalaimalar.com/news/world/anthropic-ceos-wife-linked-to-jeffrey-epstein-luxury-porn-startup-funding-emails-revealed</link><comments>https://www.maalaimalar.com/news/world/anthropic-ceos-wife-linked-to-jeffrey-epstein-luxury-porn-startup-funding-emails-revealed#comments</comments><guid isPermaLink="false">8c394e17-6a33-4670-845c-1804374a3917</guid><pubDate>Sun, 16 Aug 2026 14:12:17 +0000</pubDate><atom:updated>2026-08-16T14:12:17.490Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Jeffrey Epstein,ஜெப்ரி எப்ஸ்டீன்,Epstein files,எப்ஸ்டீன் கோப்புகள்,ஆந்திரோபிக்,Anthropic</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/pjjocl52/tn-22.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[  எப்ஸ்டீன்]]></media:title><media:description type="html"><![CDATA[  எப்ஸ்டீன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/pjjocl52/tn-22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மறைந்த பாலியல் குற்றவாளி  <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D">ஜெப்ரி எப்ஸ்டீன்</a> மற்றும் <a href="https://www.maalaimalar.com/topic/anthropic">ஆந்திரோபிக் </a>ஏஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சிஇஓ டேரியோ அமோடியின்  மனைவி கேமி கிளார்க் இடையே வணிகத் தொடர்பு இருந்ததாக  தி வால் ஸ்டிரீட் ஜர்னல் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  </p><h2>எப்ஸ்டீன்</h2><p>அமெரிக்க பெரும் புள்ளிகளுடன் தொடர்பில் இருந்த எப்ஸ்டீன் சிறுமிகள் மற்றும் இளம் பெண்களை கடத்தி அவர்களுக்கு அனுப்பும் வேலையை செய்து வந்தவர் ஆவார். இதற்கென மிகப்பெரிய நெட்வொர்க், தனித் தீவு ஆகியவற்றை எப்ஸ்டீன் கொண்டிருந்தார்.</p><p>கடந்த 2019 இல் அவர் நியூ யார்க் சிறையில் தற்கொலை செய்துகொண்டார். அவர் தொடர்பில் இருந்தவர்களுடனான இமெயில் மற்றும் புகைப்படங்களை ஆவணப்படுத்தியிருந்தார். அவை எப்ஸ்டீன் பைல்ஸ் என அழைக்கப்படுகின்றன. அமெரிக்க நீதிமன்ற உத்தரவின்படி அவை பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன.</p> <h2>ஆபாசப் பட நிறுவனம்</h2><p>டேரியோ அமோடியின் மனைவி கேமி கிளார்க் 2010 இல் Eddice என்ற பெண்களுக்கான சொகுசு ஆபாசப் பட - Luxury Porn ஸடார்ட் அப் நிறுவனத்தை தொடங்கியிருந்தார்.</p><p>கேமி கிளார்க் மற்றும் அவரது பங்குதாரர் இணைந்து Eddice ஸ்டார்ட் நிதி திரட்டி வந்தனர்.</p> <h2>வால் ஸ்ட்ரீட் செய்தி</h2><p>வால் ஸ்ட்ரீட் செய்தியின்படி, 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜான் ப்ரோக்மேன் என்பவரால் கேமி கிளார்க் எப்ஸ்டீனுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.</p><p>எப்ஸ்டீன் 2008லேயே பாலியல் குற்றவாளியாக தண்டனை பெற்றவர் என்று தெரிந்தும் அவரை கிளார்க் அணுகியுள்ளார்.</p><p>கிளார்க் எப்ஸ்டீனுக்கு அனுப்பிய மின்னஞ்சல்களில், 'American Girl in Paris' உள்ளிட்ட தலைப்பிட்ட படங்களின் திரைக்கதைகளை அனுப்பி நிதி முதலீடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.</p><p>2012 மார்ச்சில் கிளார்க் மீண்டும் முதலீடு பற்றி கேட்டபோது, "Can't do TV sex" என்று கூறி எப்ஸ்டீன் அந்த முதலீட்டை நிராகரித்தார். எப்ஸ்டீன் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை.</p> <h2>கேமி கிளார்க் யார்?</h2><p>கேமி கிளார்க் ஆந்திரோபிக் நிறுவனத்தில் எந்த அதிகாரப்பூர்வப் பொறுப்பிலும் இல்லை. ஆனால், அவர் சிஇஓவான தனது கணவர் டேரியோ அமோடெய்க்கு முக்கிய ஆலோசகராகவும், முதலீட்டாளர்களை ஒருங்கிணைக்கும் நபராகவும் செயல்படுகிறார்.</p><p>அமோடெயைத் திருமணம் செய்வதற்கு முன்பு, 2014ஆம் ஆண்டு முதல் சுமார் 3 ஆண்டுகள் கூகுள் முன்னாள் சிஇஓ எரிக் ஸ்மித்துடன் கிளார்க் உறவில் இருந்தார்.</p><p>2016ல் கிளார்க் தான் டேரியோ அமோடெயை எரிக் ஸ்மித்திற்கு அறிமுகப்படுத்தினார்.</p><p>2021ல் அமோடெய் மற்றும் அவரது சகோதரி டேனியேலா சேர்ந்து ஆந்திரோபிக் நிறுவனத்தைத் தொடங்கியபோது, எரிக் ஸ்மித் அந்த நிறுவனத்தில் அதிக முதலீட்டை செய்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>வாரணாசி விமான நிலையத்தில் சோதனையின்போது வெடித்த துப்பாக்கி.. குண்டடிபட்டு 2 பேர் காயம் </title><link>https://www.maalaimalar.com/news/national/varanasi-airport-accidental-gunfire-two-security-staff-injured-during-firearm-check</link><comments>https://www.maalaimalar.com/news/national/varanasi-airport-accidental-gunfire-two-security-staff-injured-during-firearm-check#comments</comments><guid isPermaLink="false">697f8b2b-6ea2-4df2-82c8-51a68ab73f25</guid><pubDate>Sun, 16 Aug 2026 13:36:33 +0000</pubDate><atom:updated>2026-08-16T13:36:33.659Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விமான நிலையம்,துப்பாக்கிச்சூடு,வாரணாசி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/8p1wvxgj/tn-20.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கோப்புப் படம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ கோப்புப் படம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/8p1wvxgj/tn-20.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள<a href="https://www.maalaimalar.com/news/national/mumbai-airport-bomb-hoax-causes-flight-delay"> விமான நிலையத்தில்</a> சோதனையின்போது துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இருவர் காயமடைந்துள்ளனர். </p><h2></h2><h2>துப்பாக்கியுடன் பயணி வருகை</h2><p>இன்று, காலை சுமார் 9.30 மணியளவில் உத்திரப் பிரதேச மாநிலம் ஆசம்காரை சேர்ந்த ஒரு பயணி, தனது மனைவியுடன் வாரணாசியில் இருந்து மும்பை செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணிக்க வந்திருந்தார்.</p><p>அவர் உரிமம் பெற்ற கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் அடங்கிய மேகசினை உடன் எடுத்து வந்திருந்தார்.</p><p>விமானத்தில் ஏறுவதற்கு முன் பாதுகாப்பு விதிகளின்படி அவரிடம் துப்பாக்கி இருப்பதை அதிகாரிகளிடம் முறைப்படி தெரிவித்தார்.</p> <h2>சோதனை</h2><p>வாரணாசி விமான நிலைய இயக்குநர் புனீத் குப்தா தெரிவித்த தகவலின்படி, பயணியின் துப்பாக்கி மற்றும் அதற்கான உரிம ஆவணங்களை விமான நிலையப் பாதுகாப்பு ஊழியர்கள் சரிபார்த்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக துப்பாக்கி வெடித்தது.</p><p>துப்பாக்கியில் இருந்து வெளிவந்த தோட்டா முதலில் தரையில் பட்டு, பின்னர் அங்கிருந்த இரண்டு பாதுகாப்பு ஊழியர்களின் மீது பாய்ந்தது.</p> <h2>காயம்</h2><p>தனியார் நிறுவனத்தை சேர்ந்த பெண் ஊழியர் ஒருவரின் தொடையிலும், ஆண் ஊழியர் ஒருவரின் கையிலும் தோட்டா பாய்ந்து காயம் ஏற்பட்டது.</p><p>காயமடைந்த இருவரும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இருவரின் உடல்நிலையும் தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.</p> <h2>விசாரணை</h2><p>இச்சம்பவம் குறித்து உள்ளூர் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, துப்பாக்கி வெடித்ததற்கான காரணம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கர்நாடக வனப்பகுதியில் நடந்த சம்பவத்திற்கு பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் - பிரேமலதா!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/premalatha-demands-unbiased-investigation-into-karnataka-forest-shooting</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/premalatha-demands-unbiased-investigation-into-karnataka-forest-shooting#comments</comments><guid isPermaLink="false">36c8bc80-23cd-431c-adff-3170746de036</guid><pubDate>Sun, 16 Aug 2026 13:22:17 +0000</pubDate><atom:updated>2026-08-16T13:22:17.463Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,Forest Department,DMDK,பிரேமலதா,கர்நாடக வனத்துறை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/jw9a5mc3/Premalatha" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Premalatha ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/jw9a5mc3/Premalatha?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE">கர்நாடக </a>மாநிலம் ஹானூர் அருகே மரிமங்கலம் வனப்பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்டதாக கூறி வனத்துறையினர் நடத்திய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/karnataka-forest-shooting-three-tamil-men-killed-by-forest-officials-protests-erupt-over-alleged-unjust-firing">துப்பாக்கிச் சூட்டில் </a>மூன்று தமிழர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு தேமுதிக பொது செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D">பிரேமலதா விஜயகாந்த்</a> கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>மனித உயிர்களை மதிக்காமல் நடந்த இந்த கொடூரத்திற்கு உடனடியாக விசாரணை மற்றும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.</p><h2>இது குறித்து பிரேமலதா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது,</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE">கர்நாடக மாநிலம்</a> ஹானூர் அருகே உள்ள மரிமங்கலம் பகுதியில், மான் வேட்டையில் ஈடுபட்டதாகக் கூறி கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழர்களான அந்தோணிசாமி, ஜான் ரோஸ் பீட்டர் மற்றும் ஜெபஸ்டின் டேவிட் குமார் ஆகிய மூவர் உயிரிழந்திருக்கும் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் எற்படுத்தியுள்ளது.</p><p>வேட்டையில் ஈடுபட்டதாகவும், வனத்துறை அலுவலர்களைத் தாக்கியதாகவும் கூறப்படும் நிலையில், மூன்று பேரின் உயிரையும் பறிக்கும் அளவிற்கு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. </p><p>மனித உயிர்களின் மதிப்பை சிறிதும் கருத்தில் கொள்ளாமல் நிகழ்த்தப்பட்டுள்ள இந்தக் கொடூரச் சம்பவத்தை தேமுதிக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.</p><p>சட்டத்தை அமல்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள வனத்துறையினர், தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி உயிரைப் பறிக்கும் வகையில் செயல்பட்டிருந்தால், அதற்கு உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். </p><p>இந்தச் சம்பவம் தொடர்பாக உடனடியாக கொலை வழக்குப் பதிவு செய்து, வெளிப்படைத்தன்மை மிக்க, பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும். விசாரணையின் மூலம் உண்மை வெளிக்கொண்டு வரப்பட்டு, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>மேலும், உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்கும் தமிழக அரக உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் குடும்பங்களில் தகுதியான ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.</p><p>தமிழ்நாடு-கர்நாடக எல்லைப் பகுதிகளில் வாழும் தமிழர்களின் உயிருக்கும், உடைமைக்கும், உரிமைகளுக்கும் உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது இரு மாநில அரசுகளின் கடமையாகும். </p><p>எனவே, தமிழ்நாடு அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, கர்நாடக அரசிடம் உரிய முறையில் வலியுறுத்தி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>தமிழர்களின் உயிரிழப்பை சாதாரணமாகக் கடந்து செல்லாமல், இந்தச் சம்பவத்திற்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். </p><p>இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கைகளை கர்நாடக அரக மேற்கொள்ள வேண்டும் என தேமுதிக சார்பில் வலியுறுத்துக்கிறோம் என்று <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D">பிரேமலதா</a> கண்டனம் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்.. 2வது நாள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு இந்தியா 460 ரன்கள் 
</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/india-vs-sri-lanka-test-devdutt-padikkal-ton-puts-india-at-strong-4609</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/india-vs-sri-lanka-test-devdutt-padikkal-ton-puts-india-at-strong-4609#comments</comments><guid isPermaLink="false">f7e9d795-b5cb-47e8-90f3-73c36e4dcf7e</guid><pubDate>Sun, 16 Aug 2026 13:13:45 +0000</pubDate><atom:updated>2026-08-16T13:13:45.620Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டெஸ்ட் தொடர்,Test series,இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்,India-Sri Lanka Test series</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/q3pm2lb0/tn-21.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தேவ்தத் படிக்கல் ]]></media:title><media:description type="html"><![CDATA[ தேவ்தத் படிக்கல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/q3pm2lb0/tn-21.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி  2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. </p><p>காலே நகரில் நேற்று தொடங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. </p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/india-288-for-2-wickets-in-first-innings-for-end-of-first-day-against-srilanka-first-test">முதல்நாள் ஆட்டநேர முடிவில்</a> இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 288 ரன் சேர்த்திருந்தது.</p> <h2>இரண்டாம் நாள் ஆட்டம்</h2><p>இன்றைய ஆட்டம் மழை காரணமாக தாமதமான நிலையில் மீண்டும் தொடங்கியது.</p><p>படிக்கல்லும், பன்ட்டும் இன்று 2வது நாள் ஆட்டத்தை துவங்கினர். பன்ட் 39 ரன்னில் அவுட்டான பிறகு, கேஎல் ராகுல் பேட் செய்ய வந்தார்.</p><p>கேஎல் ராகுல், இன்றைய ஆட்டத்தில் 10 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 82 ரன்கள் எடுத்து அவுட்டானார்.</p><p>பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துருவ் ஜூரெல் அரைசதம் கடந்து 51 ரன்கள் சேர்த்தார்.</p><p>இலங்கை அணியின் அறிமுக வீரரான கேஷர நுவாந்தா, ரிஷப் பண்ட், கே.எல். ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.</p><p>இந்த ஆட்டத்தில் தேவ்தத் படிக்கல் தனது டெஸ்ட் வாழ்க்கையின் முதல் சதத்தைப் பதிவு செய்து, 15 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 230 பந்துகளில் 167 ரன்கள் குவித்தார்.</p><p>இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 460 ரன்கள் எடுத்துள்ளது.</p> <h2>படிக்கல் சாதனை</h2><p>இலங்கைக்கு எதிராக 3வது வரிசை வீரராக களமிறங்கி 150 ரன்கள் எடுத்த 3வது இந்திய வீரர் என்ற சாதனையை தேவ்தத் படிக்கல் படைத்துள்ளார். </p><p>முன்னதாக 2009 இல் ராகுல் டிராவிட் 177 ரன்கள் எடுத்து முதலிடத்திலும், 2017ஆம் ஆண்டு புஜாரா 153 ரன்கள் எடுத்து இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>&apos;மேகதாது விவகாரத்தில் நேர்மையான, தவறு செய்யாத மோடியை இன்றும் நான் நம்புகிறேன்&apos;- அண்ணாமலை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/annamalai-says-he-still-trusts-honest-modi-on-mekedatu-issue</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/annamalai-says-he-still-trusts-honest-modi-on-mekedatu-issue#comments</comments><guid isPermaLink="false">9a118262-c241-4b42-9206-0cbb0718637f</guid><pubDate>Sun, 16 Aug 2026 13:12:50 +0000</pubDate><atom:updated>2026-08-16T13:12:50.975Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமித்தா,அண்ணாமலை,Modi,Amit Shah,மேகதாது,annamalai,மோடி,We the Leaders</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/0fh6eip2/annamaka.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Modi-Annamalai   ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/0fh6eip2/annamaka.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் பேசிய அண்ணாமலை, மேகதாது அணை விவகாரம், மத்திய அரசுடனான தொடர்பு, தற்போதைய ஆட்சிமுறை மற்றும் தனது அரசியல் நகர்வுகள் குறித்து வெளிப்படையாக கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.</p><h2>மேகதாது விவ<strong>காரத்தில் பிரத</strong>மர் மோடிக்கு ஆதரவு</h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-shops-closure-annamalai-praises-tvk-government">மேகதாது அணை </a>விவகாரம் குறித்துப் பேசிய அண்ணாமலை, இதில் பிரதமர் நரேந்திர மோடி நேர்மையாகவும் நியாயமாகவும் செயல்பட்டுள்ளார் என்றும், அவர் மீதான தனது நம்பிக்கை இன்றளவும் தொடர்வதாகவும் தெரிவித்தார். கர்நாடகாவில் 15 லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் வாழ்ந்து வரும் சூழலில், எல்லைக்குச் சென்று பச்சைத் துண்டு அணிந்து போராட்டம் நடத்துவது, பேருந்துகளை சேதப்படுத்துவது போன்ற விளம்பர அரசியலைத் தாம் ஆதரிக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், இத்தகைய போலித்தனமான அரசியலால் தமிழர்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்று விமர்சித்தார்.</p><h2>சுற்றுச்சூழ<strong>ல் இலக்கு</strong> </h2><p>சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக, நடப்பு மாதத்திற்குள் 20 லட்சம் மரக்கன்றுகளை நடுவதுதான் தங்கள் அமைப்பின் முதன்மை இலக்கு எனத் தெரிவித்த அண்ணாமலை, தமிழகத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள அமைச்சர்கள் மீது முதலமைச்சர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.</p><h2>டெல்லி பய<strong>ணம் பற்றிய வி</strong>ளக்கம்</h2><p>தலைவர்கள் இனி டெல்லியிலோ, புனித ஜார்ஜ் கோட்டையிலோ, போயஸ் தோட்டத்திலோ, கோபாலபுரத்திலோ அல்லது பனையூரிலோ உட்கார்ந்து முடிவுகளை எடுக்கும் காலம் முடிந்துவிட்டது என்று அவர் அழுத்தமாகக் கூறினார். </p><figure><img alt=" Amit Shah -Annamalai   " src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/kwxmttr3/amit.jpg" /></figure><p>மேலும், உள்துறை அமைச்சர் அமித்ஷா தம்மை டெல்லிக்கு அழைத்து பொறுப்பேற்கச் சொன்னது உண்மைதான் எனக் குறிப்பிட்ட அவர், தம்மீது அல்லது பா.ஜ.க மீது சந்தேகம் இருப்பவர்கள் நேரடியாக அமித்ஷாவிடமே சென்று கேட்டுத் தெளிவுபெறலாம் என்று சவால் விடுத்தார்.</p><h2>ஒரு வருட <strong>கால அவகா</strong>சம்</h2><p>தான் பா.ஜ.கவின் ‘பி’ டீமாகச் செயல்படுகிறேனா அல்லது கட்சியின் வரம்புகளை மீறி இயங்குகிறேனா என்ற பல்வேறு விமர்சனங்களுக்கும் அவர் பதிலளித்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அரசியலில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த மாற்றத்திற்கு ஒரு வருட கால அவகாசம் அளித்துச் செயல்பட விட வேண்டும் என்றார். இந்த அரசு தவறு செய்தால் தட்டிக் கேட்போம், நல்ல விஷயங்களைச் செய்தால் பாராட்டுவோம், சரியாக ஆட்சி செய்யத் தவறினால் அரசை வீழ்த்துவோம் என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் கடைகள் மூடல்: த.வெ.க அரசிற்கு அண்ணாமலை பாராட்டு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-shops-closure-annamalai-praises-tvk-government</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-shops-closure-annamalai-praises-tvk-government#comments</comments><guid isPermaLink="false">09be4588-48bb-4ad3-bd99-9a8271185fcf</guid><pubDate>Sun, 16 Aug 2026 12:18:58 +0000</pubDate><atom:updated>2026-08-16T12:18:58.434Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>vijay,அண்ணாமலை,டாஸ்மாக் கடைகள்,tasmac shops,annamalai,tvk government,த.வெ.க அரசு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/3cfo6zbm/annamalai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Annamalai- vijay ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/3cfo6zbm/annamalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>எழும்பூர் ராணி மெய்யம்மை ஹாலில் இருந்து இயற்கை வளங்கள், நிலம், நீர் மற்றும் வனப்பாதுகாப்பை வலியுறுத்தி அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் திரளான மக்கள் கலந்துகொண்டனர். 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும் பொதுமக்களும் உணர்வுப்பூர்வமாகக் கலந்துகொண்டனர். இந்நிகழ்சியில் பேசிய அண்ணாமலை தவெக அரசை பாராட்டியுள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/student-beaten-to-death-is-tvk-govt-trying-to-cover-up-asks-mp-kanimozhi">தமிழக வெற்றிக் கழகம்</a> (த.வெ.க) தலைமையிலான புதிய அரசு அமைந்து 100 நாட்கள் கடந்துள்ள நிலையில், பாஜக முக்கியத் தலைவர் அண்ணாமலை த.வெ.க அரசின் சில குறிப்பிட்ட செயல்பாடுகளைப் பாராட்டிப் பேசியுள்ளார். புதிய அரசு பொறுப்பேற்று குறுகிய காலமே ஆகியுள்ளதால், அவர்களின் செயல்பாடுகளைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று அவர் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.</p><h2>டாஸ்<strong>மாக் கடைகள்</strong> மூடல்</h2><p>பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு, கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இயங்கி வந்த டாஸ்மாக் மதுபானக் கடைகளை த.வெ.க அரசு அதிரடியாக மூடியுள்ளது. அரசின் இந்த நடவடிக்கை மிகுந்த வரவேற்புக்குரியது என்றும், மக்கள் நலன் சார்ந்த இத்தகைய முடிவுகள் பாராட்டத்தக்கவை என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.</p><h2>பொறு<strong>மை காக்க வலியுறுத்த</strong>ல்</h2><p>த.வெ.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாட்கள் மட்டுமே நிறைவடைந்துள்ளதால், உடனடியாக முடிவுகளுக்கு வர இயலாது என்று கூறிய அண்ணாமலை, அரசின் அடுத்தகட்ட திட்டங்கள் மற்றும் வாக்குறுதிகளின் அமலாக்கத்தைப் பொறுத்திருந்து கண்காணிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகள் இருப்பினும், நன்மைகளை ஆதரிக்கும் அவரது இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது விவகாரம் போல வாய்மூடி இருக்கக்கூடாது.. கர்நாடகாவில் 3 தமிழர்கள் கொலைக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/karnataka-forest-shooting-three-tamil-men-killed-by-forest-officials-protests-erupt-over-alleged-unjust-firing</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/karnataka-forest-shooting-three-tamil-men-killed-by-forest-officials-protests-erupt-over-alleged-unjust-firing#comments</comments><guid isPermaLink="false">e5986a56-482a-401b-b017-f97d0b2c649a</guid><pubDate>Sun, 16 Aug 2026 12:10:47 +0000</pubDate><atom:updated>2026-08-16T12:10:47.111Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,மு.க. ஸ்டாலின்,Tamil Nadu government,Forest Department,M.k. stalin,கர்நாடக வனத்துறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/l0q9j2jk/tn-19.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[  மு.க.ஸ்டாலின் 

]]></media:title><media:description type="html"><![CDATA[  மு.க.ஸ்டாலின் 

]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/l0q9j2jk/tn-19.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>கொலை </h2><p>கர்நாடக மாநிலம் சாமராஜ்நகர் மாவட்டம் காவிரி வனவிலங்கு சரணாலயத்திற்கு உட்பட்ட ஆனூர் வனவிலங்கு மண்டலத்தில் உள்ள ஹோலேமுராடி வனப்பகுதிக்குள் நேற்று காலை வனத்துறை அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர்.</p><p>இதில் மரியமங்களா கிராமத்தை சேர்ந்த அந்தோணி சுவாமி, லாசர் டோடியா குமார் மற்றும் ஜெகநாதன் டோடியா பீட்டர் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.</p> <h2>காரணம்</h2><p>மான்களை வேட்டையாடியதாக கிடைத்த தகவலின் பேரில் அவர்கள் கொல்லப்பட்டனர். 3 பேர் உடல்களும் மைசூரில் உள்ள கே.ஆர். மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன.</p><p>கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-men-killed-by-karnataka-forest-officials-families-accept-bodies">பேச்சுவார்த்தையை </a>அடுத்து உடல்களை வாங்க சம்மதித்துள்ளனர்.  </p> <p>உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்தினருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி மற்றும் இழப்பீடு வழங்கப்படும் என அரசுத் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனிடையே 3 தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.</p> <h2>ஸ்டாலின் கண்டனம்</h2><p>அந்த வகையில் திமுக தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/mk-stalin">மு.க. ஸ்டாலின்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,</p><p>"கர்நாடக வனப்பகுதியில் தமிழர்கள் மூவரை அம்மாநில வனத்துறையினர் அநியாயமான முறையில் சுட்டுக் கொன்றிருக்கும் சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.</p><p>மனித உயிர்கள் குறித்த எந்த மதிப்பும் இல்லாமல் நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்தக் கொடூரச் செயல் கடும் கண்டனத்துக்குரியது.</p> <p>குற்றமிழைத்தவர்களைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் கர்நாடக வனத்துறையினர் ஈடுபடுவதாகத் தெரிகிறது.</p><p>அது தவிர்க்கப்பட்டு, இதனைக் கொலை வழக்காகப் பதிந்து, வெளிப்படைத்தன்மை மிக்க, பாரபட்சமற்ற நீதி விசாரணை நடைபெற்று இதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இனி இப்படி ஒரு குற்றத்தில் ஈடுபடும் துணிச்சல் எவருக்கும் வராது.</p> <p>மேகதாது விவகாரம் போல இதிலும் வாய்மூடி இருக்காமல், இச்சம்பவத்தில் தமிழ்நாடு அரசு கர்நாடக அரசுக்குத் தனது கண்டனத்தைப் பதிவுசெய்திட வேண்டும்.</p><p>உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தருவதோடு, அவர்களுக்கு அரசுப் பணியும் கிடைக்கச் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ராமநாதபுரம்: லஞ்ச வழக்கில் சிக்கியவருக்கு சிறந்த பணிக்கான நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/corruption-row-ramnathapuram-revenue-inspector-under-graft-probe-given-best-employee-award-later-withdrawn</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/corruption-row-ramnathapuram-revenue-inspector-under-graft-probe-given-best-employee-award-later-withdrawn#comments</comments><guid isPermaLink="false">f845adee-a555-4331-baee-b546ce27480c</guid><pubDate>Sun, 16 Aug 2026 11:48:09 +0000</pubDate><atom:updated>2026-08-16T11:48:09.581Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>லஞ்சம்,bribery,Ramanathapuram,Corruption,ராமநாதபுரம்,ஊழல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/je7tvl2c/tn-18.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சிறந்த பணிக்கான சான்றிதழ் பெறும் கார்த்திகேயன் ]]></media:title><media:description type="html"><![CDATA[ சிறந்த பணிக்கான சான்றிதழ் பெறும் கார்த்திகேயன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/je7tvl2c/tn-18.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேற்று நாட்டின் <a href="https://www.maalaimalar.com/news/national/modi-speech-error-and-flag-row-ev-sales-misquote-and-inverted-tricolour-spark-controversy-at-independence-day-event">80 வது சுதந்திர தினம்</a> நாடு முழவதும் கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் கோட்டை கொத்தளத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/vijay">முதல்வர் விஜய் </a>கொடியேற்றினார்.</p> <h2>சிறந்த ஊழியர்கள்</h2><p>மாவட்டந்தோறும் கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழாவில் அரசு பணிகளிலும், பொது சேவைகளிலும் சிறந்த பணியாற்றியவர்களுக்கு சிறந்த பணிக்கான விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கபட்டன.</p><p>அந்த வகையில் ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று சுதந்திர தின விழாவில் சிறந்த பணிக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.</p> <h2>விருது</h2><p>நகராட்சி தலைவர் கார்மேகம், நகராட்சி பொறுப்பு ஆணையர் சுகுமாறன் ஆகியோர் சிறந்த பணிக்கான சான்றிதழ்களை நகராட்சி ஊழியர்களுக்கு வழங்கினர்.</p><p>இதில் நகராட்சியின் வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் என்பவருக்கும் சிறந்த பணிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.</p> <h2>சர்ச்சை</h2><p>ஆய்வாளர் கார்த்திகேயன் கணக்கில் வராத பணத்தை வைத்திருந்த வழக்கு ராமநாதபுரம் லஞ்ச ஊழல் ஒழிப்பு துறையினரால் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் அவருக்கு சிறந்த பணியாளர் விருது வழங்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>ஊழல்</h2><p>கடந்த ஜூலை மாதம் 3ஆம் தேதி லஞ்ச ஊழல் ஒழிப்பு துறை டி.எஸ்.பி ராமச்சந்திரன் தலைமையில் ராமநாதபுரம் நகராட்சியில் நடந்த சோதனையில் கணக்கில் வராத 3 லட்சத்து 60 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.</p><p>கார்த்திகேயன் வங்கி கணக்கில் கடந்த 3 ஆண்டுகளில் ஜி பே மூலம் சுமார் 25 லட்ச ரூபாய் பண பறிமாற்றம் நடந்திருப்பதும் கண்டறியப்பட்டது.</p><p>இதையடுத்து முறைகேடான வழியில் பணம் பரிமாற்றம் நடந்ததாக கார்த்திகேயன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணை நடந்து வரும் நிலையில் கார்த்திகேயனுக்கு சிறந்த பணிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.</p><p>இந்த விவகாரம் கண்டனங்களை குவித்த நிலையில் கார்த்திகேயனுக்கு வழங்கப்பட்ட சான்றிதழை திரும்ப பெற்றுவிட்டதாக நகராட்சி பொறுப்பு ஆணையர் சுகுமாரன் தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>சுதந்திர தின அணிவகுப்பில் மயங்கி விழுந்து காவலர் உயிரிழப்பு: ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கி முதலமைச்சர் விஜய் உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/police-officer-dies-after-fainting-at-independence-day-parade</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/police-officer-dies-after-fainting-at-independence-day-parade#comments</comments><guid isPermaLink="false">5516ca60-728f-4167-8101-0cf5b2b525db</guid><pubDate>Sun, 16 Aug 2026 11:41:42 +0000</pubDate><atom:updated>2026-08-16T11:41:42.154Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Independence Day,சுதந்திர தினம்,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,காவலர் உயிரிழப்பு,Police constable dies</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/7151n5lw/cm.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chief Minister Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/7151n5lw/cm.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டையில்  நேற்று நடைபெற்ற 80-வது <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/80th-independence-day-cm-vijay-hoists-tricolour-at-fort-st-george">சுதந்திர தின விழா </a>அணிவகுப்புப் பணியின்போது, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த ஆவடி சிறப்புக் காவல் படை இசைக்குழு காவலரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். அத்துடன், உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கவும் ஆணை பிறப்பித்துள்ளார்.</p><h2>அணிவகுப்புப் ப<strong>ணியின்போது நேர்ந்</strong>த சோகம்</h2><p>சென்னை நேற்று (ஆகஸ்ட் 15) புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற  சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ஆவடி தமிழ்நாடு சிறப்புக் காவல் படைப்பயிற்சி மையத்தின் இசைக்குழுவைச் சேர்ந்த முதல்நிலைக் காவலரான தர்மராஜ் (வயது 56) பங்கேற்றுத் தன் கடமையை ஆற்றி வந்தார். அணிவகுப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த தருணத்தில், எதிர்பாராதவிதமாக அவர் திடீரென மயங்கி விழுந்தார்.</p><h2>மருத்துவமனையி<strong>ல் பலனின்றி</strong> முடிந்த சிகிச்சை</h2><p>மயக்கமடைந்து கீழே விழுந்த காவலர் தர்மராஜை, அங்கிருந்த சக காவலர்களும் மருத்துவக் குழுவினரும் உடனடியாக மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தபோதிலும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் விழாவுக்கு வந்திருந்தோரிடையேயும் சக காவலர்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.</p><h2>முதலமை<strong>ச்சர் நிதியு</strong>தவி </h2><p>காவலர் தர்மராஜின் மறைவு செய்தி அறிந்ததும் தமிழ்நாடு முதலமைச்சர் தனது வேதனையை வெளிப்படுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,  சுதந்திர தின அணிவகுப்புப் பணியின்போது திடீரென மயங்கி விழுந்து சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். </p><p>கடமை உணர்வுடன் பணியாற்றிய முதல்நிலைக் காவலர் தர்மராஜின் மறைவு தமிழ்நாடு காவல் துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் சக ஊழியர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்த முதலமைச்சர், அவரது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.30 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சோனியா காந்தி செய்த பாவத்தை நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள் - அமித் ஷா 
</title><link>https://www.maalaimalar.com/news/national/vande-mataram-row-amit-shah-slams-sonia-gandhi-over-gesture-during-anthem</link><comments>https://www.maalaimalar.com/news/national/vande-mataram-row-amit-shah-slams-sonia-gandhi-over-gesture-during-anthem#comments</comments><guid isPermaLink="false">31932a92-6497-472b-973c-21979f9f4fdd</guid><pubDate>Sun, 16 Aug 2026 11:23:21 +0000</pubDate><atom:updated>2026-08-16T11:23:21.080Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வந்தே மாதரம்,Vande Mataram,Amit Shah,அமித் ஷா,sonia gandhi,சோனியா காந்தி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/i1rxle6d/tn-17.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[  Amit Shah, Sonia Gandhi]]></media:title><media:description type="html"><![CDATA[  Amit Shah, Sonia Gandhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/i1rxle6d/tn-17.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>வாஜ்பாய் நினைவு தினம் </h2><p>இன்று (ஆகஸ்ட் 16) முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு தினம் ஆகும். இதையொட்டி  ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கரில் அடல் பிஹாரி வஜ்பாயின் 21 அடி உயரச் சிலையை மத்திய உள்துறை அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/amit-shah">அமித் ஷா</a> திறந்து வைத்தார். </p><p>இந்த நிகழ்வில் பேசிய அமித் ஷா, நேற்று 80வது சுதந்திர தின நிகழ்வின்போது காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வந்தே மாதரம் பாடப்படும் சோனியா காந்தி செய்த சைகை குறித்து விமர்சித்துள்ளார்.</p> <h2>சோனியா சைகை</h2><p>சோனியா காந்தி அந்நிகழ்வில் வந்தே மாதரம் பாடப் படும்போது கையை உயர்த்தி சைகை செய்ய, அது அவர் வந்தே மாதரத்தை பாதியில் நிறுத்த சொல்வது போல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. பாஜக இந்த குற்றச்சாட்டை முன்வைத்தது.</p><p>ஆனால் <a href="https://www.maalaimalar.com/news/national/bjp-claims-sonia-gandhi-tried-to-stop-singing-of-vande-mataram-congress-denies">காங்கிரஸ் தரப்பு அளித்த விளக்கத்தில்</a>, மூத்த தலைவர் கார்கே நீண்ட நேரம் நின்றுகொண்டிருந்ததால் அவர் அமர்வதற்காக நாற்காலி எடுத்துச் வரச் சொல்லியே சோனியா அச்சைகையை செய்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <h2>அமித் ஷா சாடல்</h2><p>இந்நிலையில் இன்றைய நிகழ்வில் பேசிய அமித் ஷா, "சோனியா ஜி, நாட்டின் 140 கோடி மக்களும் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.</p><p>நீங்கள் செய்த இந்த பாவத்தை இந்த நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். வந்தே மாதரம் பாடலை பாதியில் நிறுத்துவது பற்றி ஒருவரால் எப்படி நினைக்க முடியும்? காங்கிரஸ் தலைவர்கள் இதற்காக வெட்கப்பட வேண்டும்." என பேசியுள்ளார்.</p> <p>பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய வந்தே மாதரம் பாடல், சுதந்திரப் போராட்டத்தின் போது ஆயிரக்கணக்கான தியாகிகள் தூக்குமேடை ஏறும்போது பாடிய தாரக மந்திரம் என்றும், அந்தப் பாடலை முழுமையாகப் பாடாமல் அவமதிப்பது சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் தியாகத்தை கொச்சைப்படுத்துவதாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>அரசு நிகழ்வுகளில் வந்தே மாதரம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என மத்திய அரசு நடந்து முடிந்த</p>]]></content:encoded></item><item><title>நயினாருக்கு நாவடக்கம் தேவை: சட்டப்படி நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-needs-to-watch-his-tongue-cpm-urges-legal-action</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-needs-to-watch-his-tongue-cpm-urges-legal-action#comments</comments><guid isPermaLink="false">79884528-daef-4639-9c91-42d644f19265</guid><pubDate>Sun, 16 Aug 2026 11:15:54 +0000</pubDate><atom:updated>2026-08-16T11:15:54.179Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,Shanmugam,CPM,பெ.சண்முகம்,சிபிஎம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/l2cnhqts/cpm.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nainar Nagendran  CPM  Shanmugam ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/l2cnhqts/cpm.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினரைக் குறிவைத்துத் தனிப்பட்ட முறையில் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பொதுவெளியில் கண்ணியம் மீறிப் பேசிய இந்த உரை, தமிழக அரசியலில் பெரும் கொந்தளிப்பையும் பல்வேறு தலைவர்களின் கண்டனங்களையும் அலை அலையாகப் பெற்று வருகிறது.</p><h2>எ<strong>ல்லை மீறிய பேச்சுக்கு</strong> எழுந்த கடும் எதிர்ப்பு</h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/apologize-to-tamil-nadu-people-for-vulgar-speech-ramesh-condemns-nainar-nagendran">நயினார் நாகேந்திரனின்</a> இந்தப் பேச்சுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலிருந்து கடுமையான எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் இது குறித்து வெளியிட்ட காரசாரமான அறிக்கையில், பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள தலைவர்கள் கண்ணியத்துடனும் பொறுப்புடனும் பேச வேண்டும் என்ற குறைந்தபட்ச நாகரிகம் கூட இல்லாமல் நயினார் நாகேந்திரன் நடந்து கொண்டுள்ளார் என்று சாடியுள்ளார். </p><p>பெண்களை மதிப்பது என்பது பாஜகவின் அகராதியிலேயே இல்லாத ஒன்று என்பது இதன்மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளது என்றும், நயினாருக்கு நாவடக்கம் தேவை என்றும் அவர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.</p><h2>சட்டப்ப<strong>டி நடவடிக்கை எடுக்கக் கோரி</strong>க்கை</h2><p>அரசியல் நாகரிகத்தைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் செயல்பட்ட பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மீது தமிழ்நாடு அரசு உடனடியாகச் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். இத்தகைய அவதூறு பேச்சுகள் தமிழ்நாட்டின் ஆரோக்கியமான அரசியல் சூழலைச் சீர்குலைக்கும் என்பதால், அரசும் காவல் துறையும் இதில் தலையிட்டுத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தீவிரமடைந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கர்நாடகா வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள் - காலை முதல் நடந்த போராட்டம் வாபஸ் – உடல்களைப் பெற உறவினர்கள் சம்மதம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-men-killed-by-karnataka-forest-officials-families-accept-bodies</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-men-killed-by-karnataka-forest-officials-families-accept-bodies#comments</comments><guid isPermaLink="false">2dd5c183-922f-4126-8d44-c61824703e7a</guid><pubDate>Sun, 16 Aug 2026 10:49:40 +0000</pubDate><atom:updated>2026-08-16T10:49:40.258Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,தமிழர்கள் சுட்டுக்கொலை,Tamils ​​shot dead,Karnataka Forest Department,கர்நாடக வனத்துறை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/ld07i6ap/Karnataka" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Karnataka ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/ld07i6ap/Karnataka?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE">கர்நாடக </a>மாநிலம் சாமராஜ்நகர் மாவட்டம் காவிரி வனவிலங்கு சரணாலயத்திற்கு உட்பட்ட ஆனூர் வனவிலங்கு மண்டலத்தில் உள்ள ஹோலேமுராடி வனப்பகுதிக்குள் நேற்று காலை வனத்துறை அதிகாரிகள் நடத்திய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/karnataka-three-tamils-shot-dead-protest-over-bodies">துப்பாக்கிச் சூட்டில்</a> தமிழர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். </p><p>இதில் மரியமங்களா கிராமத்தை சேர்ந்த அந்தோணி சுவாமி, லாசர் டோடியா குமார் மற்றும் ஜெகநாதன் டோடியா பீட்டர் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.</p><p>மான்களை வேட்டையாடியதாக கிடைத்த தகவலின் பேரில் அவர்கள் கொல்லப்பட்டனர். 3 பேர் உடல்களும் மைசூரில் உள்ள கே.ஆர். மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தன.</p><p>சம்பவ இடத்தில் இருந்து 2 துப்பாக்கிகளும், 20 கிலோ விலங்கு இறைச்சி நிரம்பிய பைகளும் கைப்பற்றப்பட்டதாக காவிரி வனவிலங்கு சரணாலயத்தின் உதவி வனத்துறை அதிகாரி மாரிசாமி தெரிவித்தார்.</p><p>இந்த சம்பவத்தை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.</p><h2><strong>அரசுத் தரப்பில் முக்கிய உறுதிமொழி</strong></h2><p>பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் விடுத்த கோரிக்கைகளை ஏற்று, அரசுத் தரப்பில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. </p><p>இதில், துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது உரிய விசாரணை நடத்தி, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு உறுதியளித்துள்ளது. </p><p>உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்தினருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி மற்றும் இழப்பீடு வழங்கப்படும் என அரசுத் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>சடலங்களை வாங்க உறவினர்கள் சம்மதம்</strong></h2><p>அரசின் இந்த அதிரடி அறிவிப்பு மற்றும் சமரசப் பேச்சுவார்த்தையை அடுத்து, மைசூர் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த மூன்று தமிழர்களின் சடலங்களையும் பெற்றுக்கொள்ள அவர்களது குடும்பத்தினரும், கிராம மக்களும் இறுதியாகச் சம்மதம் தெரிவித்துள்ளனர்.</p><p>இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title> 2 நாட்களில் ரூ.100 கோடி வசூல்: ‘கருப்பு’ படத்தின் சாதனையை முறியடித்தது  ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்&apos;!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/vishwanath-and-sons-crosses-rs-100-crore-in-two-days-surpasses-karuppu</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/vishwanath-and-sons-crosses-rs-100-crore-in-two-days-surpasses-karuppu#comments</comments><guid isPermaLink="false">5fda3211-d600-4c23-8e96-95a7ece5a4eb</guid><pubDate>Sun, 16 Aug 2026 10:19:05 +0000</pubDate><atom:updated>2026-08-16T10:19:05.737Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Surya,Mamitha Baiju,vishwanath and sons,GvPrakashkumar,VenkyAtluri,விஸ்வநாத்அண்ட்சன்ஸ்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/3ovuent4/vishwanath-and-sons" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ vishwanath and sons]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/3ovuent4/vishwanath-and-sons?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/suriya">சூர்யா </a>மற்றும் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9C%E0%AF%81">மமிதா பைஜு</a> நடிப்பில், இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘<a href="https://www.maalaimalar.com/topic/vishwanath-and-sons">விஸ்வநாத் அண்ட் சன்ஸ்</a>’ திரைப்படம், திரையரங்குகளில் வெளியான 2 நாட்களில் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.</p><h2><strong>ரூ.100 கோடி வசூல்</strong></h2><p>இந்தத் திரைப்படத்தை தயாரித்த 'சித்தாரா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ்' நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில், "விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. வெறும் 2 நாட்களில் உலகளவில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது" என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. </p><p>இதன் மூலம், சூர்யாவின் திரைப்பயணத்தில் மிகக் குறுகிய காலத்தில் 100 கோடி ரூபாய் வசூலை எட்டிய முதல் திரைப்படம் என்ற பெருமையை ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ பெற்றுள்ளது.</p><h2><strong>'கருப்பு’ படத்தின் சாதனை முறியடிப்பு</strong></h2><p>இந்த ஆண்டில் சூர்யா நடிப்பில் வெளியாகி ரூ.100 கோடி வசூலைத் தாண்டும் இரண்டாவது தொடர்ச்சியான திரைப்படம் இதுவாகும். </p><p>இதற்கு முன்னதாக, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான ‘<a href="https://www.maalaimalar.com/topic/karuppu">கருப்பு</a>’ திரைப்படம் உலகளவில் ரூ. 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. </p><p>அந்தப் படம் வெளியாகி 3 நாட்களில் ரூ.100 கோடி வசூலை எட்டிய நிலையில், தற்போது ‘<a href="https://www.maalaimalar.com/topic/vishwanath-and-sons">விஸ்வநாத் அண்ட் சன்ஸ்</a>’ திரைப்படம் 2 நாட்களிலேயே அந்த மைல்கல்லை எட்டி, ‘கருப்பு’ படத்தின் ஆரம்பகால வசூல் சாதனையை முறியடித்துள்ளது.</p><h2><strong>படக்குழு</strong></h2><p>சித்தாரா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ், ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் மற்றும் ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்களின் கீழ் நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா தயாரித்துள்ள இந்தத் திரைப்படத்தில் ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். </p><p>ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார், நவின் நூலி படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>&apos;நான் கூட இதுக்கு தான் நினைச்சேன்...&apos;-கைது குறித்து  உதயநிதி கிண்டல் பேச்சு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhis-sarcastic-remark-regarding-the-arrest</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhis-sarcastic-remark-regarding-the-arrest#comments</comments><guid isPermaLink="false">ca38627e-414c-4573-b3a1-0e63a414268e</guid><pubDate>Sun, 16 Aug 2026 10:11:10 +0000</pubDate><atom:updated>2026-08-16T10:11:10.578Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,Udhayanidhi Stalin,tvk,தஞ்சாவூர்,உதயநிதி கைது,udhayanidhi stalin arrested,Thanjavur controversy</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/ih4u65a2/UDHANIYATH.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Udhayanidhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/ih4u65a2/UDHANIYATH.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக சட்டத்துறை கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/controversial-speech-opposition-leader-udhayanidhi-stalin-arrested">உதயநிதி ஸ்டாலின்</a>, தமது சமீபத்திய கைது மற்றும் சிறைவாசம் குறித்து நகைச்சுவையாகப் பேசி அரங்கத்தில் இருந்தவர்களைச் சிரிப்பலையில் மூழ்கடித்தார்.</p><p>கூட்டத்தில் பேசிய அவர், தம்மை கைது செய்து அழைத்துச் சென்ற விதம் குறித்துக் குறிப்பிடுகையில், "<em>அரசே சொந்தச் செலவில் எனக்கு ஒரு ரோடு ஷோ ஏற்பாடு செய்து அழைத்துச் சென்றது போல் இருந்தது"</em> என்று நகைச்சுவையாகக் கூறினார். மேலும், இந்த வழக்குகளையும் கைது நடவடிக்கைகளையும் சட்டரீதியாக எதிர்கொண்டு தம்மை வெளியில் கொண்டுவந்த திமுக சட்டத்துறை வழக்குரைஞர்களுக்குத் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.</p><p>அரசியல் ரீதியாகத் தம் மீது போடப்படும் வழக்குகள் குறித்தும், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் உரையாற்றிய அவர், ஆளுங்கட்சியின் அடக்குமுறைகளுக்கு திமுக அஞ்சாது என்றும், சட்டத்துறையின் துணை கொண்டு அனைத்துப் பொய் வழக்குகளையும் நீதிமன்றத்தில் முறியடிப்போம் என்றும் உறுதியளித்தார். உதயநிதி ஸ்டாலின் தனது வழக்கமான பாணியில் கிண்டலாகவும் சுவாரஸ்யமாகவும் பேசிய இந்த உரை, இணையதளங்களிலும் சமூக வலைதளங்களிலும் தற்போது வேகமாகப் பரவி வருகிறது.</p><h2>வழக்கி<strong>ன் பின்னணி</strong></h2><p>தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி நீர் பிரச்சனை தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் பேசிய உரையின் அடிப்படையில், திமுக மாநில இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு பின்னர் காவல் நிலையப் பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியது.</p><h2>சர்ச்சைக்<strong>குரிய பேச்சு</strong></h2><p>தஞ்சாவூர் ஆர்ப்பாட்டத்தில் பேசும்போது பெண் குறித்தும், தமிழக முதலமைச்சர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்தும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த சில கருத்துகள் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் அமைந்ததாகக் கூறி தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் அணியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில் தஞ்சாவூர் கிழக்குக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அவரைக் கைது செய்தனர். பின்னர் செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், விசாரணைக்குப் பின் பிணையில் விடுவிக்கப்பட்டார்.</p><h2>“<strong>நான் கூட இதுக்காக தா</strong>ன் நினைச்சேன்”</h2><p>தமது கைது நடவடிக்கை தொடர்பாகப் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், அரசு தன் மீது தேவையின்றி வழக்குகளைத் தொடுத்து திசை திருப்பும் முயற்சியில் ஈடுபடுவதாகச் சாடினார். </p><figure><img alt="Udhayanidhi " src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/vt3enpli/UDHAY.jpg" /></figure><p>தொலைக்காட்சியில் செய்தி பார்த்துக் கொண்டிருந்தபோது தனது உதவியாளர் வந்து கைது குறித்துத் தெரிவித்த சம்பவத்தைக் குறிப்பிட்ட அவர், "நான் கூட இதுக்காகத்தான் என்னைக் கைது செய்கிறார்கள் என்று நினைத்தேன்" எனக் நையாண்டியாகப் பேசினார். காவிரி மற்றும் மேகேதாது விவகாரங்களில் விவசாயிகள் சந்திக்கும் முக்கியச் சிக்கல்களை மூடிமறைக்கவே இத்தகைய கைது நாடகங்கள் நடத்தப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.</p><h2>அரசியல் <strong>கட்சிகளின் எதிர்</strong>வினை</h2><p>உதயநிதி ஸ்டாலினின் பேச்சைத் ஆளும்கட்சி மற்றும் எதிர்த்தரப்பு அமைப்புகள் வன்மையாகக் கண்டித்துள்ளன. பெண்களை இழிவுபடுத்தும் பேச்சுகளை எந்தக் காலத்திலும் சகித்துக் கொள்ள முடியாது என்றும், சட்ட நடவடிக்கை தொடரும் என்றும் தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்த வழக்கு சோடிக்கப்பட்டுள்ளதாக திமுக ஆதரவாளர்களும் நிர்வாகிகளும் பதிலளித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>அப்பாவி தமிழர்களை சுட்டுக் கொல்ல கர்நாடக வனத்துறைக்கு அதிகாரம்  தந்தது யார்? - டி.டி.வி தினகரன் ஆவேசம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/who-authorized-the-karnataka-forest-department-to-shoot-and-kill-innocent-tamils-ttv-dhinakaran-fumes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/who-authorized-the-karnataka-forest-department-to-shoot-and-kill-innocent-tamils-ttv-dhinakaran-fumes#comments</comments><guid isPermaLink="false">07161d91-b762-4a7e-82f9-e15993f3ce30</guid><pubDate>Sun, 16 Aug 2026 09:46:49 +0000</pubDate><atom:updated>2026-08-16T09:46:49.650Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழர்கள்,TTV Dhinakaran,டிடிவி தினகரன்,Tamils,Karnataka Forest Department,கர்நாடக வனத்துறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/iyo2jxkv/tn-16.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டி.டி.வி தினகரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ டி.டி.வி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/iyo2jxkv/tn-16.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>கொலை </h2><p>கர்நாடக மாநிலம் சாமராஜ்நகர் மாவட்டம் காவிரி வனவிலங்கு சரணாலயத்திற்கு உட்பட்ட  ஆனூர் வனவிலங்கு மண்டலத்தில் உள்ள ஹோலேமுராடி வனப்பகுதிக்குள் நேற்று காலை வனத்துறை அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர்.  </p><p>இதில் மரியமங்களா கிராமத்தை  சேர்ந்த அந்தோணி சுவாமி, லாசர் டோடியா குமார் மற்றும் ஜெகநாதன் டோடியா பீட்டர் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். </p> <h2>காரணம்</h2><p>மான்களை வேட்டையாடியதாக கிடைத்த தகவலின் பேரில் அவர்கள் கொல்லப்பட்டனர். 3 பேர் உடல்களும் மைசூரில் உள்ள கே.ஆர். மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன.</p><p>சம்பவ இடத்தில் இருந்து 2 துப்பாக்கிகளும், 20 கிலோ விலங்கு இறைச்சி நிரம்பிய பைகளும் கைப்பற்றப்பட்ட தாக காவிரி வனவிலங்கு சரணாலயத்தின் உதவி வனத்துறை அதிகாரி மாரிசாமி தெரிவித்தார். கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஷக்யா கிராமத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்தையும் பணியாளர் குடியிருப்புகளையும் முற்றுகையிட்டு அவற்றை சூறையாடினர். </p><p>இதனிடையே 3 தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/p-shanmugam-urges-tn-govt-condemn-karnataka-govt-fake-encounter-of-3-tamilans-in-the-karnataka-forest">கண்டனம் </a>தெரிவித்து வருகின்றனர்.</p> <h2>டிடிவி தினகரன் பதிவு</h2><p>இந்த சூழலில் இதுகுறித்து அமமுக தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/ttv-dinakaran">டிடிவி தினகரன் </a>தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,</p><p>"கர்நாடக மாநில வனப்பகுதிக்கு அருகே வசித்து வந்த அப்பாவி தமிழர்கள் மூவர் அம்மாநில வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பத்தில் நீதி விசாரணையின் மூலம் உண்மை வெளிவருவதை தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும்.</p><p>கர்நாடக மாநிலத்தின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில், அம்மாநில வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று தமிழர்கள் உயிரிழந்திருப்பதாகவும், ஒருவர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கின்றன.</p><p>பன்னெடுங்காலமாக வனப்பகுதிகளுக்கு அருகில் உள்ள கிராமங்களில் விவசாயம் செய்தும், மாடுகளை மேய்த்தும் தங்களது வாழ்வாதாரத்தை நடத்திக் கொண்டிருக்கும் அப்பாவி தமிழர்களை சுட்டுக் கொலை செய்யும் அளவிற்கான அதிகாரம் அம்மாநில வனத்துறைக்கு கொடுத்தது யார்?</p><p>இப்படுகொலையை கண்டித்து அப்பகுதி தமிழர்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராடும் நிலையில், மான் வேட்டையாடியதாலே சுட்டுக் கொன்றதாக அம்மாநில வனத்துறை அளித்திருக்கும் விளக்கம் ஏற்புடையதல்ல.</p><p>எனவே, கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் மீது நடைபெற்ற துப்பாக்கிச் சூடு குறித்து அம்மாநில அரசிடம் உரிய விளக்கம் கேட்பதோடு, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விசாரணையின் மூலம் உண்மை வெளிக்கொண்டுவரப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மத்தியபிரதேசத்தில் மானிய உரங்கள் விற்பனைக்கு திடீர் தடை: காரீஃப் பயிர் விளைச்சல் பாதிக்கும் என விவசாயிகள் அச்சம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/sudden-ban-on-subsidised-fertiliser-sales-in-madhya-pradesh</link><comments>https://www.maalaimalar.com/news/national/sudden-ban-on-subsidised-fertiliser-sales-in-madhya-pradesh#comments</comments><guid isPermaLink="false">36190769-d03c-40bc-b3ec-a22bf3b62d3a</guid><pubDate>Sun, 16 Aug 2026 09:26:55 +0000</pubDate><atom:updated>2026-08-16T09:26:55.724Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>farmers,விவசாயிகள்,Madhya Pradesh,subsidized fertilizers,மத்திய பிரதேச மாநிலம்,உரங்கள் விற்பனை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/iq24biot/fertilizers.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Madhya Pradesh ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/iq24biot/fertilizers.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய பிரதேச மாநிலத்தில் மானிய விலையில் வழங்கப்படும் உரங்களின் விற்பனைக்கு அம்மாநில அரசு திடீரென இடைக்காலத் தடை விதித்துள்ளது. காரீஃப் சாகுபடி பருவம் தீவிரமடைந்துள்ள நிலையில், அரசின் இந்த அதிரடி முடிவால் சுமார் 82 லட்சம் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.</p><h2>இருப்பு வி<strong>வரங்களை சரி</strong>பார்க்க நடவடிக்கை</h2><p>மத்திய அரசின் iFMS (Integrated Fertilizer Management System) இணையதளத்தில் பதிவாகியுள்ள உரங்களின் அளவிற்கும், விற்பனையாளர்களிடம் உள்ள உண்மையான உரக் கையிருப்புக்கும் இடையே உள்ள வித்தியாசங்களைச் சரிபார்ப்பதற்காகவே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறை தெரிவித்துள்ளது.</p><p>கடந்த 14-ஆம் தேதி மாலை 7 மணி முதல் அமலுக்கு வந்துள்ள இந்த உத்தரவு, மாநில மார்க்கெட்டிங் ஃபெடரேஷன் மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், எம்பி அக்ரோ மையங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்கள் உட்பட அனைத்து விநியோக மையங்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>விவசாயி<strong>கள் கொந்தளி</strong>ப்பு</h2><p>நெல், பருப்பு உள்ளிட்ட காரீஃப் பயிர்களுக்கு உரம் இட வேண்டிய இந்த முக்கியமான காலகட்டத்தில் உர விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதால், பயிர் மகசூல் பெருமளவில் குறையும் என விவசாயிகள் சங்கங்கள் கவலை தெரிவித்துள்ளன. மேலும், இந்த தடையால் உரம் கருப்பு சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படும் அபாயம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி, உடனடியாக உர விநியோகத்தை சீரமைக்காவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டங்களில் ஈடுபடப்போவதாக எச்சரித்துள்ளது.</p><h2>அரசு அளி<strong>த்துள்ள விளக்</strong>கம்</h2><p>இருப்பினும், விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை என்றும், மாநிலத்தில் போதிய அளவு உர இருப்பு உள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்புச் சரிபார்ப்புப் பணிகள் முடிவடைந்ததும், நாளை முதல் (ஆகஸ்ட் 17) முதல் உர விற்பனை மீண்டும் வழக்கம் போல் தொடங்கப்படும் என்றும் வேளாண் துறை அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்கள் உடல்களை வாங்க மறுத்து 2-வது நாளாக போராட்டம்: வனத்துறையினர் 7 பேர் மீது வழக்குப்பதிவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/karnataka-three-tamils-shot-dead-protest-over-bodies</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/karnataka-three-tamils-shot-dead-protest-over-bodies#comments</comments><guid isPermaLink="false">2bddb3b0-55a8-4f39-a2bc-866b61b4c428</guid><pubDate>Sun, 16 Aug 2026 09:16:37 +0000</pubDate><atom:updated>2026-08-16T09:16:37.757Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,தமிழர்கள் சுட்டுக்கொலை,Tamils ​​shot dead,Karnataka Forest Department,கர்நாடக வனத்துறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/eieg7wdl/karnataka.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Karnataka Tamils ​​shot dead]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/eieg7wdl/karnataka.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக மாநிலம் சாமராஜ்நகர் மாவட்டம் காவிரி வனவிலங்கு சரணாலயத்திற்கு உட்பட்ட  ஆனூர் வனவிலங்கு மண்டலத்தில் உள்ள ஹோலேமுராடி வனப்பகுதிக்குள் நேற்று காலை வனத்துறை அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். இதில் மரியமங்களா கிராமத்தை  சேர்ந்த அந்தோணி சுவாமி, லாசர் டோடியா குமார் மற்றும் ஜெகநாதன் டோடியா பீட்டர் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். </p><p>மான்களை வேட்டையாடியதாக கிடைத்த தகவலின் பேரில்  அவர்கள் கொல்லப்பட்டனர். 3 பேர் உடல்களும்  மைசூரில் உள்ள கே.ஆர். மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன. சம்பவ இடத்தில் இருந்து 2 துப்பாக்கிகளும், 20 கிலோ விலங்கு இறைச்சி நிரம்பிய பைகளும் கைப்பற்றப்பட்டதாக காவிரி வனவிலங்கு சரணாலயத்தின் உதவி வனத்துறை அதிகாரி மாரிசாமி தெரிவித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/three-tamils-shot-dead-in-karnataka-forest-anbumani-condemns">துப்பாக்கிச் சூடு </a>பற்றிய தகவல் பரவிய உடனேயே, உயிரிழந்தவரின் உறவினர்களும் கிராம மக்களும் ஆத்திரம் அடைந்து ஷக்யா கிராமத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்தையும் பணியாளர் குடியிருப்புகளையும் முற்றுகையிட்டு அவற்றை சூறையாடினர்.</p><p>பெயர் பலகையைக் கிழித்தெறிந்தும், அலுவலக தளவாடங்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் உபகரணங்களை வெளியே வீசியும் அவர்கள் தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர். மேலும், கல்லிடோடியில் உள்ள வேட்டைத் தடுப்பு முகாமுக்குள் புகுந்து, அங்கிருந்த சொத்துகளையும் சேதப்படுத்தினர்.</p><p>மேலும் அவர்கள் ஆனூர் நகரில் சாலையை மறித்து, வனத்துறை அதிகாரிகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளும் போராட்டத்தில் இணைந்ததால், துறை அலுவலகத்தின் முன்பு ஏராளமான போராட்டக்காரர்கள் திரண்டனர். </p><p>அப்போது கணவரை பறிகொடுத்த பீட்டரின் மனைவி கூறுகையில், எனது கணவர் பீட்டர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு, மக்காச்சோளப் பயிரைப் பராமரிக்க வயலுக்கு சென்றிருந்தார். தன் கணவர், தனிப்பட்ட விரோதம் காரணமாகச் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளார். இந்த வழக்கில் ஒரு பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.</p><p>அதுபோல் குமாரின் மனைவி கூறுகையில் "என் கணவர் தவறு செய்திருந்தால் அவரை  கைது செய்து இருக்கலாம். ஆனால் வனத்துறையினர் அவ்வாறு செய்யவில்லை. வேண்டும் என்றே திட்டம்  போட்டு கொன்று இருக்கிறார்கள். 2  மகள்கள் இருக்கிறார்கள், அவர்களின் எதிர்காலத்திற்கு யார் பொறுப்பேற்பார்கள்? என கண்ணீருடன் கூறினார். </p><p>அவர்களிடம் போலீஸ் துணை ஆணையர் ஸ்ரீரூபா மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எம்.முத்துராஜ் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு சமாதானப்படுத்தினர். தொடர்ந்து அவ்விடத்தில் பதற்றமான சூழல் நிலவியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாது காப்புக்காக ரிசர்வ் காவல் படை நிறுத்தப்பட்டுள்ளது.</p><p>தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த துயரத்தை தாங்க முடியாமல் உறவினர்கள் அழுதுகொண்டிருந்த காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது. காடுகள் மற்றும் வனவிலங்குகளை பாதுகாப்பதாக கூறி நடத்தப்பட்ட மோதலில் 3 மூன்று பேர் கொல்லப்பட்டது மனிதாபிமானமற்ற செயலாகும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 கோடி இழப்பீடும், அரசு வேலைகளும் வழங்கப்பட வேண்டும் என விவசாய தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.</p><p>இதுகுறித்து  மாநில பட்டு வளர்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்புத் துறை மந்திரி புட்டரங்கஷெட்டி கூறுகையில், வனத்துறையின் பொறுப்பற்றத்தனம் கண்கூடாகத் தெரிகிறது. இந்த வழக்கின் உண்மை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வழக்கால் அரசும் தர்மசங்கடத்திற்கு உள்ளாகியுள்ளது. நாங்கள் ஒரு முழுமையான விசாரணையை நடத்துவோம் என்று  கூறினார்.</p><h2>நீதிப<strong>தி விசாரணை</strong></h2><p>வனவிலங்கு சரணாலயத்தில் வனத்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தது குறித்து நீதிபதி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக  முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். அவர் நிருபர்களிடம் கூறுகையில், காலை 5 மணிக்கு இந்த  சம்பவம் குறித்த தகவல் எங்களுக்கு கிடைத்தது. </p><p>அதிகாரிகள் சில விவரங்களை அளித்துள்ளனர். சம்பவ இடத்தில் சில பொருட்களும் ஒரு துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டு, அவை பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணைக்குப் பிறகு உண்மை தெரியவரும்," என்றார்.</p><p>இந்த நிலையில் வனத்துறையினர் 7 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கர்நாடக காவல்துறை  நடவடிக்கை எடுத்துள்ளது. வனத்துறை அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிடாமல் அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இறந்த அந்தோணி சாமியின் மனைவி லௌர்டு மேரி அளித்த புகாரின் அடிப்படையில் ஆனூர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. </p><p>முதல் தகவல் அறிக்கையில் அதிகாரியின் பெயர் குறிப்பிடப்படவில்லை. மாறாக, “ஆனூர் பிரிவு வனத்துறை அதிகாரிகள்” குற்றவாளிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்த வழக்கு பதிவு தென் மண்டல ஐ.ஜி. போரலிங்கேகௌடா மற்றும் எஸ்.பி. முத்துராஜு ஆகியோர் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கி சூட்டில் பலி யானவர்களின் உடல்களை வாங்க மறுத்து இன்று 2-வது நாளாகவும் போராட்டம் நடந்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>நான் அரசியலில் நுழைந்ததே தவறு.. வாழ்நாளில் ஊழல் செய்ததே இல்லை - திரிணாமுல் காங்கிரஸ் தலைவரின் தற்கொலை கடிதம் </title><link>https://www.maalaimalar.com/news/national/west-bengal-tmc-leader-ashish-banerjee-dies-by-suicide-amid-corruption-row</link><comments>https://www.maalaimalar.com/news/national/west-bengal-tmc-leader-ashish-banerjee-dies-by-suicide-amid-corruption-row#comments</comments><guid isPermaLink="false">fe62a5ce-a42c-4356-ac59-ed3a71cf4c4a</guid><pubDate>Sun, 16 Aug 2026 09:16:31 +0000</pubDate><atom:updated>2026-08-16T09:16:31.893Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மம்தா பானர்ஜி,Mamata Banerjee,தற்கொலை,suicide,trinamool congress,திரிணாமுல் காங்கிரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/cnp8v86f/tn-15.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மம்தாவுடன் ஆசிஷ் பானர்ஜி  
]]></media:title><media:description type="html"><![CDATA[ மம்தாவுடன் ஆசிஷ் பானர்ஜி  
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/cnp8v86f/tn-15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்கத்தின் முன்னாள் துணைச் சபாநாயகரும் <a href="https://www.maalaimalar.com/topic/mamata-banerjee">திரிணாமுல் காங்கிரஸ்</a> மூத்த தலைவருமான ஆசிஷ் பானர்ஜி  தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  </p> <h2>அரசியல் பயணம்</h2><p>கல்லூரி பேராசிரியராக பணியாற்றிய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/asish-banerjee-mamata-banerjee-close-aide-found-dead-at-trinamool-office">ஆசிஷ் பானர்ஜி</a>, 2001 முதல் 2026 வரை தொடர்ந்து 5 முறை ராம்பூர்ஹட் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.</p><p>மம்தா பானர்ஜி ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித் துறை மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சராகவும், பின்னர் மேற்கு வங்க  சட்டமன்றத்தின் துணைச் சபாநாயகராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.</p><p>இந்நிலையில் பீர் பூம் மாவட்டம் ராம்பூர்ஹட் பகுதியிலுள்ள தனது வீட்டின் அருகே உள்ள கட்சி அலுவலகத்தில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.</p> <h2>ஊழல் குற்றச்சாட்டு</h2><p>தாராபீத் ராம்பூர்ஹட் மேம்பாட்டு ஆணையத்தின் டெண்டர்கள், காசோலைகள் விநியோகம், திட்ட ஒப்புதல்கள், தடையில்லா சான்றிதழ்கள் வழங்குவதில் அவர் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.</p><p>தான் ஊழல் செய்பவன் இல்லை என அவர் தனது கைப்பட எழுதிய ஒரு பக்க தற்கொலை கடிதத்தை போலீசார் கண்டெடுத்துள்ளனர்.</p> <h2>தற்கொலை கடிதம்</h2><p>அதில், "நான் அரசியலில் நுழைந்தது மிகப்பெரிய தவறு. எனது குடும்பத்தினர் இனி எதிர்காலத்தில் எந்தக் காலத்திலும் அரசியலுக்குள் நுழையக் கூடாது.</p><p>நான் எனது வாழ்நாளில் எந்தக் காலத்திலும் எந்த ஒரு ஊழலிலும் ஈடுபடவில்லை. எந்த ஒரு வேலைக்காகவும் யாரிடமிருந்தும் ஒரு பைசா கூட லஞ்சமாகப் பெறவில்லை.</p><p>தாராபீத் ராம்பூர்ஹட் மேம்பாட்டு ஆணையத்தின் எந்த ஒரு முடிவிலும் எனக்கு எந்தப் பங்கும் இல்லை.</p> <p>திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் நடைபெற்ற சில தவறான காரியங்களை என்னால் மனதார ஏற்றுக்கொள்ள முடியவில்லை. </p><p>அதே நேரத்தில், அவற்றுக்கு எதிராக என்னால் துணிந்து குரல் கொடுக்கவும் முடியவில்லை.</p><p>என் மீதும் எனது நேர்மையின் மீதும் களங்கம் ஏற்படுத்த சிலர் திட்டமிட்டு அவதூறு பரப்பி என்னை அவமானப்படுத்த முயன்றுள்ளனர்.</p><p>எனது இந்த முடிவிற்கு எந்த ஒரு தனிப்பட்ட நபரும் பொறுப்பல்ல." என்று தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை தக்கவைத்தது வங்கதேசம்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/wtc-points-table-changed-bangladesh-to-enter-the-wtc-final-race</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/wtc-points-table-changed-bangladesh-to-enter-the-wtc-final-race#comments</comments><guid isPermaLink="false">3c506343-6365-429b-b02e-6f8c39782d8b</guid><pubDate>Sun, 16 Aug 2026 08:52:34 +0000</pubDate><atom:updated>2026-08-16T08:52:34.472Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>WTC final,உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்,Points Table,புள்ளிப்பட்டியல்,AUSvBAN,ஆஸ்திரேலியா  வங்கதேசம் தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/0uj6zst0/bangla.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ bangladesh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/0uj6zst0/bangla.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்றதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை வங்கதேசம் தக்கவைத்தது.</p><h2>டார்வின் டெஸ்ட்</h2><p>வங்கதேச அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.</p><p>இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டார்வினில் நடைபெற்றது. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 198 ரன்னில் ஆல் அவுட்டானது. அடுத்து ஆடிய வங்கதேசம் முதல் இன்னிங்சில் 426 ரன்கள் குவித்தது. இதன்மூலம் வங்கதேசம் 228 ரன்கள் முன்னிலை பெற்றது.</p><h2>வரலாற்று வெற்றி</h2><p>தொடர்ந்து 2வது இன்னிங்ஸ் ஆடிய ஆஸ்திரேலியா 284 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 57 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் ஒரு விக்கெட்டுக்கு 57 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.</p><p>இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அபார வெற்றி பெற்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை வங்கதேசம் தக்கவைத்தது.</p><h2>உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்</h2><p>இந்த வரலாற்று வெற்றியின் மூலம் வங்கதேச அணியின் வெற்றி சதவீதம் 58.33 சதவீதத்தில் இருந்து 66.67 சதவீதமாக உயர்ந்தது. இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 40 புள்ளிகளைப் பெற்றுள்ள வங்கதேச அணி பட்டியலில் தொடர்ந்து 4வது இடத்தில் நீடிக்கிறது.</p><p>சொந்த மண்ணில் அதிர்ச்சி தோல்வி அடைந்த ஆஸ்திரேலிய அணி 77.77 சதவீத புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. </p><p>தென் ஆப்பிரிக்கா 75 சதவீத புள்ளிகளுடன் 2வது இடத்திலும், நியூசிலாந்து 72.22 சதவீதத்துடன் 3வது இடத்திலும் நீடிக்கின்றன.</p><p>இந்திய அணி தற்போது 9 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 48.15 சதவீத புள்ளிகளைப் பெற்று 5வது இடத்தில் உள்ளது.</p><p>தற்போதைய நிலையில், வங்கதேச அணிக்கு சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்கள் உள்ளன. இதில் வெற்றி பெற்றால் வங்கதேச அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வெடிகுண்டு இருப்பதாக பீதியை கிளப்பிய பயணி: மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு..!</title><link>https://www.maalaimalar.com/news/national/mumbai-airport-bomb-hoax-causes-flight-delay</link><comments>https://www.maalaimalar.com/news/national/mumbai-airport-bomb-hoax-causes-flight-delay#comments</comments><guid isPermaLink="false">213fa699-80b6-4c5b-8de9-7d09c6f3c7b8</guid><pubDate>Sun, 16 Aug 2026 08:52:17 +0000</pubDate><atom:updated>2026-08-16T08:52:17.188Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>bomb threat,வெடிகுண்டு மிரட்டல்,IndiGo,மும்பை விமான நிலையம்,Mumbai Airport,இண்டிகோ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/aijt9ilj/Untitled-design-67.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பயணி பொய் மிரட்டலால் இண்டிகோ விமானம் ஒரு மணி நேரம் தாமதம்]]></media:title><media:description type="html"><![CDATA[ Mumbai Airport]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/aijt9ilj/Untitled-design-67.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இண்டிகோ விமானத்தில் டெல்லிக்கு பயணம் செய்ய இருந்த பயணி ஒருவர், தனது பையில் வெடிகுண்டு இருப்பதாக பாதுகாப்பு ஊழியர்களிடம் தெரிவித்து பீதி ஏற்படுத்தியததை தொடர்ந்து, விமானம் ஒரு மணி நேரம் காலதாமதாக சென்றது. </p><h3><strong><a href="https://www.maalaimalar.com/topic/விமான-நிலையம்">மும்பை சத்ரபதி விமான நிலையம்</a></strong></h3><p>மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, சம்பவம் நடைபெற்ற அன்று காலை 8 மணிக்கு இண்டிகோ 6E333 பயணிகள் விமானம் டெல்லி புறப்பட இருந்தது.</p><p>அப்போது அந்த விமான நிலையத்தின் சஹார் முனையத்தில் உள்ள போர்டிங் கேட் 45A வழியாக, காலை 7.25 மணியளவில் 55 வயதான அனுஜ் ஜெயராம் சுவர்ணா என்பவர் விமானத்திற்கு பயணம் செய்வதற்கு வந்துள்ளார்.</p><p>அவரை பரிசோதனை செய்த அதிகாரிகள், அவரிடம் தீப்பெட்டி, லைட்டர், கத்தரிக்கோல், நகவெட்டி, திரவம் அல்லது ஸ்ப்ரே போன்ற பொருட்களை எடுத்து செல்கிறீர்களா என்று கேட்டுள்ளார்.</p><h3><strong>வெடிகுண்டு மிரட்டல்</strong></h3><p>அப்போது அந்த பயணி, தனது பையில் வெடிகுண்டு இருப்பதாக கூறியுள்ளார். இதனால் பீதியடைந்த அதிகாரிகள் மத்திய தொழில்துறை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p>தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள், இண்டிகோ விமானத்தில் டெல்லி செல்ல இருந்த பயணிகளை வெளியேற்றி, பின்னர் விமானம் முழுவதும் முழுவீச்சில் சோதனை மேற்கொண்டனர்.</p><p>இறுதியில் விமானத்தில் வெடிகுண்டு எதுவும் கைப்பற்றப்படாததை தொடர்ந்து, அந்த பயணி பொய் கூறியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 8 மணிக்கு புறப்பட இருந்த விமானம், 9 மணியளவில் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.</p><h3><strong>வழக்கு பதிவு</strong></h3><p>இண்டிகோ நிறுவனத்தின் உதவி பாதுகாப்பு மேலாளர் அளித்த புகாரின்பேரில், வெடிகுண்டு மிரட்டல் எனக் கூறி பயணிகளிடையே பீதியையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தி,</p><p>இண்டிகோ நிறுவனத்திற்கு நிதி இழப்புகளையும் விளைவித்ததற்காக, சஹார் போலீசார் பாரதிய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவு 125 மற்றும் 351(2) இன் கீழ் அனுஜ் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தரக்குறைவான பேச்சுக்காக தமிழக மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள் - நயினார் நாகேந்திரனுக்கு அமைச்சர் ரமேஷ் கண்டனம்! </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/apologize-to-tamil-nadu-people-for-vulgar-speech-ramesh-condemns-nainar-nagendran</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/apologize-to-tamil-nadu-people-for-vulgar-speech-ramesh-condemns-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">b7bfbdbb-066d-4104-8c90-0b4b7da28f62</guid><pubDate>Sun, 16 Aug 2026 08:40:24 +0000</pubDate><atom:updated>2026-08-16T08:40:24.140Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,Apologize,CMVIJAY,அமைச்சர் ரமேஷ்,Minister Ramesh,WomenRespect</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/e0n1f84c/Minister-Ramesh-Nainar-Nagendran" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Ramesh - Nainar Nagendran ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/e0n1f84c/Minister-Ramesh-Nainar-Nagendran?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அப்பாவை காணோம் என்று கூறியதற்கு, விஜய் மற்றும் அவரது குடும்பம் குறித்து அநாகரிகமாக பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.</p><p>இந்நிலையில், <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">நயினார் நாகேந்திரன் </a>பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில் இந்து சமய அறநிலையத்துறை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D">அமைச்சர் ரமேஷ்</a> கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><h2>இது குறித்து அமைச்சர் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-</h2><p>"பெண்களின் பெருமையையும், தாயின் அருமையையும் அறியாத மூன்றாம் தர நபரைப் போல இன்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் பேசியிருப்பது அருவருப்பின் உச்சம்!</p><p>ஒரு அரசியல் கட்சியின் மாநிலத் தலைவராக மட்டுமல்ல, குறைந்தபட்சம் ஒரு சாதாரண மனிதரிடம் இருக்க வேண்டிய நாகரிகம் கூட இல்லாமல், தாய்மார்களும் பெண்களும் முகம் சுளிக்கும் வகையில் அவர் பேசியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.</p><p>பெண்கள் மீதான அவரது தவறான பார்வை அவரது பேச்சில் தெளிவாக வெளிப்படுகிறது. அவர் சார்ந்த அரசியல் கட்சியும் பெண்களை இப்படித்தான் பார்க்கிறதா என்ற கேள்விக்கு, அக்கட்சியின் தேசியத் தலைவர்கள் தான் விளக்கம் அளிக்க வேண்டும். தரக்குறைவான பேச்சுக்காக தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">பெண்களின் பெருமையையும், தாயின் அருமையையும் அறியாத மூன்றாம் தர நபரைப் போல இன்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் பேசியிருப்பது அருவருப்பின் உச்சம்!<br><br>ஒரு அரசியல் கட்சியின் மாநிலத் தலைவராக மட்டுமல்ல, குறைந்தபட்சம் ஒரு சாதாரண மனிதரிடம் இருக்க வேண்டிய நாகரிகம் கூட…</p>&mdash; TVK Ramesh (@RameshOffcl) <a href="https://x.com/RameshOffcl/status/2088644733296075151?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: அன்புமணி கடும் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/three-tamils-shot-dead-in-karnataka-forest-anbumani-condemns</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/three-tamils-shot-dead-in-karnataka-forest-anbumani-condemns#comments</comments><guid isPermaLink="false">84ef203b-6544-4f23-8a80-2389e1d40ff5</guid><pubDate>Sun, 16 Aug 2026 08:29:36 +0000</pubDate><atom:updated>2026-08-16T08:29:36.498Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,anbumani,பாமக,அன்புமணி,#PMK,Fake Encounter,தமிழர்கள் சுட்டுக்கொலை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/9en01wrf/Anbumani.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PMK Leader Anbumani]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/9en01wrf/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்​நாடக மாநிலம், சாம்​ராஜநகர் மாவட்​டத்​தில் காவிரி வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்ட ஷாக்யா என்கிற வனப்​பகுதி உள்​ளது.</p><p>இங்​கு சிலர் சட்​ட​ விரோத​மாக மான்​களை வேட்​டை​யாடு​வ​தாக வனத்​துறை​யினருக்கு தகவல் கிடைத்​துள்ளது. இதனால், வனத்துறையினர் 7 பேர் இரு குழுக்​களாக பிரிந்து கண்​காணிப்பு பணி​யில் ஈடு​பட்​டனர்.</p><p>இந்தநிலையில், தோமை​யார்​பாளை​யத்தை ஒட்​டி​யுள்ள வனப்​பகுதி​யில் நேற்று அதி​காலை 5 மணி​யள​வில் வனத்​துறை​யினர் ரோந்து பணி​யில் ஈடுபட்டனர். அப்​போது, அங்கு மறைந்திருந்த 4 பேர் மீது போலீசார் அதிரடி துப்பாக்கியால் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.</p><p>இந்த தாக்குதலில், ம‌ரியமங்​கலம் கிராமத்தை சேர்ந்த அந்​தோனி​சாமி (50), ஜான்​ரோஸ் பீட்​டர் (42), லாசர் குமார் (33) ஆகிய 3 பேர் உயி​ரிழந்​தனர். படு​கா​யம் அடைந்த மகிமை தாஸ் (48) மைசூரு​வில் உள்ள அரசு மருத்துவமனை​யில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இறந்த மூன்று பேரும் தமிழர்கள் என தெரியவந்துள்ளது.</p><p>இந்நிலையில், இந்த சம்​பவத்​தில் உயி​ரிழந்​தவர்​களின் உறவினர்​கள் மற்​றும் கிராம மக்​கள் பல்வேறு பகுதிகளில் உள்ள வனத்​துறை அலு​வல​கத்தை அடித்து நொறுக்​கி சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>இந்த சம்​பவத்தை கண்​டித்து 100-க்​கும் மேற்​பட்​டோர் மைசூரு, மேட்​டூர், சத்​தி​யமங்​கலம் ஆகிய இடங்​களுக்கு செல்​லும் சாலைகளை மறித்து ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டு வருகின்றனர். இதனால் அங்கு பதற்​றம் ஏற்​பட்​ட​தால் போலீசார் குவிக்​கப்​பட்​டு, பலத்த பாது​காப்​பு போட‌ப்​பட்​டுள்​ளது.</p><p>அன்புமணி கண்டனம்</p><p>கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்</p><p>கொல்லப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை தேவை என்றும், உயிரிழந்தவர்களினம் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் </p><p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் காவிரி வனவிலங்கு சரணாலயத்தை ஒட்டிய வனப்பகுதியில் மான்வேட்டையாடியதாக பொய்யான குற்றச்சாட்டில் அப்பகுதியைச் சேர்ந்த 3 தமிழர்களை கர்நாடக வனத்துறை கொடூரமான முறையில் சுட்டுக்கொலை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. கொல்லப்பட்ட மூவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>கர்நாடக வனத்துறையினரால் கொலை செய்யப்பட்ட  அந்தோணிசாமி, ஜான்ரோஸ் பீட்டர், குமார் ஆகிய மூவரும் முறையே அப்பகுதியில் உள்ள ஜகன்னாததொட்டி, மரியமங்கலம், லாசர்தொட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.</p><p>அவர்கள் மூவரும் எந்த வகையான சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடாத நிலையில் அவர்களை சாக்யா பகுதி வன அலுவலகத்தைச்  சேர்ந்த  வனக்காவலர்கள் கொடூரமாக சுட்டுக் கொலை செய்துள்ளனர்.</p><p>இந்தக் கொலைகளை மறைப்பதற்காக  அவர்கள் மூவரும் மான்களை வேட்டையாட வந்ததாகவும்,  அப்போது வனத்துறையினருடன்  ஏற்பட்ட மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் வனத்துறை  கூறியுள்ளது. இது அப்பட்டமான பொய் என்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.</p><p>அவர்கள் மூவரும் எந்த வகையான சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடாத நிலையில் அவர்களை சாக்யா பகுதி வன அலுவலகத்தைச்  சேர்ந்த  வனக்காவலர்கள் கொடூரமாக சுட்டுக் கொலை செய்துள்ளனர்.</p><p>இந்தக் கொலைகளை மறைப்பதற்காக  அவர்கள் மூவரும் மான்களை வேட்டையாட வந்ததாகவும்,  அப்போது வனத்துறையினருடன்  ஏற்பட்ட மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் வனத்துறை  கூறியுள்ளது. இது அப்பட்டமான பொய் என்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.</p><p>கொல்லப்பட்ட மூவரும் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர்கள் ஆவர். சுமார்  100 ஆண்டுகளுக்கு முன் மேட்டூர் அணை கட்டுவதற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட போது,  வீடுகள் மற்றும் உடமைகளை இழந்து  வாழ்வாதாரம் தேடி கர்நாடகம் மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் மரியமங்கலம் பகுதியில் குடியேறியவர்கள் ஆவர்.</p><p>மரியமங்கலம் காட்டுப்பகுதியில் மான் வேட்டையாடியதற்கோ, இரு தரப்புக்கும் இடையே சண்டை நடந்ததற்கோ எந்த சான்றுகளும் இல்லை. கொல்லப்பட்டவர்கள் துப்பாக்கிகளை வைத்திருந்ததாக கூறப்படுவதிலும் உண்மையில்லை. தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருவதால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.</p><p>கர்நாடக ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாம்ராஜ்நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும்,  மாவட்ட பொறுப்பு அமைச்சருமான  புட்டரங்கா ஷெட்டி,  மதச்சார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்த ஹானூர் சட்டப்பேரவை  உறுப்பினர் மஞ்சுநாத்  ஆகியோர் அதிகாலை நேரத்தில் என்கவுன்டருக்கான தேவை ஏன் வந்தது?  என்று வினா எழுப்பியுள்ளனர். மனித உரிமை ஆர்வலர்களும் வனத்துறையினரின் செயலைக் கண்டித்துள்ளனர்.</p><p>தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக முரண்பட்ட செய்திகள் வெளியாகி வருவதால் உண்மையைக் கண்டறிய மாஜிஸ்திரேட் விசாரணைக்கு ஆணையிடப்பட்டிருப்பதாக  முதலமைச்சர்  டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த விசாரணையில் உண்மை வெளிவராது. இது குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிடப்பட வேண்டும்.</p><p>தமிழர்கள் படுகொலைக்காக கர்நாடக அரசுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் கண்டனம் தெரிவிப்பதுடன், பாதிக்கப்பட்ட மூவரின் குடும்பங்களுக்கும் கர்நாடக அரசிடமிருந்து தலா ரூ.1 கோடி இழப்பீட்டை வாங்கித் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: தமிழக அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்- பெ. சண்முகம் வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/p-shanmugam-urges-tn-govt-condemn-karnataka-govt-fake-encounter-of-3-tamilans-in-the-karnataka-forest</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/p-shanmugam-urges-tn-govt-condemn-karnataka-govt-fake-encounter-of-3-tamilans-in-the-karnataka-forest#comments</comments><guid isPermaLink="false">61a55577-3f12-45dd-bad4-976e8dac4a7f</guid><pubDate>Sun, 16 Aug 2026 08:24:20 +0000</pubDate><atom:updated>2026-08-16T08:24:20.799Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>CPM,Fake Encounter,P Shanmugam,தமிழர்கள் சுட்டுக்கொலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/71hzmw0y/Pshanmugam0002.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெ சண்முகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/71hzmw0y/Pshanmugam0002.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹானூர் தாலுகா தோமையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட விவசாயிகள் வழக்கமாக மாடு மேய்க்கும் வனப்பகுதிக்குள் காணாமல் போன மாடுகளைத் தேடிச் சென்ற அந்தோணி ராஜ், ஜான், குமார் ஆகியோரை கர்நாடக மாநில வனத்துறையினர் நேற்று சுட்டுக் கொலை செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.</p><p>தங்கள் குற்றத்தை மறைக்க, அவர்கள் வேட்டையாடினார்கள் என்று வனத்துறையினர் பொய்யான குற்றச்சாட்டைத் தெரிவிக்கின்றனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டுக் கொலையை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. சம்பந்தப்பட்ட வனத்துறையினரைப் பணிநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும். கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள் என்ற அடிப்படையில், தமிழ்நாடு அரசு தனது கண்டனத்தைக் கர்நாடக அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.</p><p>இவ்வாறு பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.</p><h2>அன்புமணி ராமதாஸ்</h2><p>பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக முரண்பட்ட செய்திகள் வெளியாகி வருவதால் உண்மையைக் கண்டறிய மாஜிஸ்திரேட் விசாரணைக்கு ஆணையிடப்பட்டிருப்பதாக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த விசாரணையில் உண்மை வெளிவராது. இது குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிடப்பட வேண்டும்.</p><p>தமிழர்கள் படுகொலைக்காக கர்நாடக அரசுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் கண்டனம் தெரிவிப்பதுடன், பாதிக்கப்பட்ட மூவரின் குடும்பங்களுக்கும் கர்நாடக அரசிடமிருந்து தலா ரூ.1 கோடி இழப்பீட்டை வாங்கித் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் எனக் குறிப்பிடடுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>டெல்லி-என்.சி.ஆரில் உருவெடுக்கும் &apos;டான்ஸ்பிரீனர்ஸ்&apos;: நடனக் கலையை வணிகமாக மாற்றும் இளைஞர்கள்!</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-ncr-youth-turn-dance-into-business</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-ncr-youth-turn-dance-into-business#comments</comments><guid isPermaLink="false">4d4c8a8d-98eb-47b1-90b0-7a73988465c5</guid><pubDate>Sun, 16 Aug 2026 08:20:35 +0000</pubDate><atom:updated>2026-08-16T08:20:35.674Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டெல்லி,Dancepreneurs,Delhi-NCR,Art of Dance,டான்ஸ்பிரீனர்ஸ்,நடனக் கலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/soqsj6wk/delhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dancepreneurs]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/soqsj6wk/delhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (என்.சி.ஆர்) கலைத் துறையில் ஒரு புதிய பொருளாதாரப் புரட்சி அலை வீசி வருகிறது. இதுவரை வெறும் பொழுதுபோக்காகவும் மேடை நிகழ்ச்சிகளாகவும் மட்டுமே பார்க்கப்பட்ட நடனக் கலையை, தொழிலாண்மையுடன் அணுகி வெற்றிகரமான வர்த்தக நிறுவனங்களாக மாற்றி வருகின்றனர் டெல்லி இளைஞர்கள். இவர்கள் 'டான்ஸ்பிரீனர்ஸ்' என்று அழைக்கப்படுகின்றனர்.</p><h2>நடனத் <strong>துறையில் ச</strong>வால்</h2><p>மேற்கத்திய பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பெற்றவர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிந்த இளைஞர்கள் பலர், தங்கள் பாரம்பரிய தொழில் வாய்ப்புகளைத் துறந்து முழுநேர நடன நிறுவனங்களை நிறுவி வருகின்றனர். </p><p>உதாரணமாக, பிரிட்டனில் உள்ள நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற 24 வயதான காம்னா அரோரா என்ற இளம் பெண், தனது கார்ப்பரேட் வாழ்க்கையை விடுத்து மும்பையில் பிரபல நடன இயக்குநர் ஷியாமக் தாவரின் தொழில்முறை பயிற்சியில் இணைந்தார். சிறுவயதில் வெறும் பொழுதுபோக்காக இருந்த நடனத்தை, தனது உண்மையான இலக்காக உணர்ந்து டெல்லியில் சொந்தமாக நடன ஸ்டுடியோ மற்றும் பயிற்சி மையத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.</p><h2>தொ<strong>ழில்முனைவோராக</strong> மாறும் நடனக் கலைஞர்கள்</h2><p>இன்றைய டான்ஸ்பிரீனர்ஸ் வெறும் நடனம் கற்பிப்பதோடு நின்றுவிடுவதில்லை. அவர்கள் தங்கள் நிறுவனங்கள் மூலமாகப் பல்வேறு நவீன வணிக மாதிரிகளைச் செயல்படுத்துகின்றனர். கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் சிறப்பு நடனப் பயிலரங்குகள் மற்றும் ஜூம்பா, ஏரோபிக்ஸ் போன்ற உடற்பயிற்சி சார்ந்த நடன வகுப்புகள் நடத்தி வருகின்றனர். </p><p>பிரமாண்ட திருமண நிகழ்வுகள் மற்றும் கார்ப்பரேட் கலை நிகழ்ச்சிகளுக்கான தொழில்முறை வடிவமைப்பில் ஈடுபட்டு வருகின்றனர். யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்கள் மூலம் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் மற்றும் உலகளாவிய வாடிக்கையாளர்களை ஈர்த்து அதன் மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர்.</p><h2>எதிர்<strong>கால வாய்ப்புகள்</strong></h2><p>கலைத்துறையை ஒரு தொழிலாக மாற்றுவது எளிதானதாக இருக்கவில்லை என இந்த இளம் தொழில்முனைவோர்கள் தெரிவிக்கின்றனர். ஆரம்பக்கட்ட நிதி திரட்டல், சரியான பயிற்சி இடங்களை அமைத்தல் மற்றும் நடனத்தை ஒரு நிலையான வருவாய் தரும் தொழிலாக சமூகத்தை நம்ப வைப்பது போன்ற பல தடைகளை இவர்கள் கடக்க வேண்டியிருந்தது.</p><p>இருப்பினும், டெல்லி-என்.சி.ஆர் பகுதியில் உள்ள மிகப்பெரிய சந்தை வாய்ப்புகளும், நவீன தலைமுறையினரின் கலை சார்ந்த ஆர்வமும் இவர்களை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. நடனக் கலையை வெறும் கலை வடிவமாக மட்டுமல்லாமல், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ஒரு வலுவான வர்த்தகத் துறையாக மாற்றியமைத்து இந்த 'டான்ஸ்பிரீனர்ஸ்' புதிய வரலாறு படைத்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மைனருக்கு விசா வேண்டுமா? இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதுரகம் வெளியிட்ட முக்கிய அறிவுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/national/us-visa-for-children-minors-of-all-ages-must-attend-interview-us-embassy-tells-indian-parents</link><comments>https://www.maalaimalar.com/news/national/us-visa-for-children-minors-of-all-ages-must-attend-interview-us-embassy-tells-indian-parents#comments</comments><guid isPermaLink="false">3664f711-135d-4c55-8f0a-82e6249c3e99</guid><pubDate>Sun, 16 Aug 2026 08:01:28 +0000</pubDate><atom:updated>2026-08-16T08:01:28.767Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்க தூதரகம்,US embassy</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/s3ee6xjg/USEmbassy001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமெரிக்க தூதரகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/s3ee6xjg/USEmbassy001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவைச் சேர்ந்தவர்கள் வெளிநாட்டிற்கு குறிப்பாக அமெரிக்கா செல்ல வேண்டுமென்றால், இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அமெரிக்கா செல்வதற்கான விசாவை தூதரகம் மூலம் பெறலாம்.</p><h2>மைனர் குழந்தைகளுக்கு விசா கேட்டு விண்ணப்பம்</h2><p>பெற்றோர் தங்களுடைய மைனர் குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டும் என்றாலும் விண்ணப்பிக்க வேண்டும். முன்னதாக, பெற்றோர்கள் தங்களுடைய மைனர் குழந்தைகளை அழைத்துச் செல்ல தேவையில்லை. விண்ணப்பத்தை பூர்த்தி செய்தால் மட்டும் போதுமானது என்று தெரிகிறது.</p><p>இந்த நிலையில் இனிமேல் மைனர் குழந்தைகளுக்கு விசா வேண்டி விண்ணப்பம் செய்யும்போது, அதிகாரிகள் விண்ணப்பத்தை பரிசீலனை செய்யும் போது நேர்காணலுக்காக மைனர் குழந்தைகளை கையோடு அழைத்து வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>பச்சிளம் குழந்தைகள்</h2><p>அது பிறந்த பச்சிளம் குழந்தைகள் என்றாலும் சரி, 17 வயது சிறுவன் மற்றும் சிறுமி என்றாலும் சரி நேரடியாக அழைத்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>அமெரிக்க விசா நடைமுறையில் தூதரக நேர்காணல் ஒரு முக்கியமான பகுதியாகும். இது விண்ணப்பதாரர்களை மதிப்பிட விசா அதிகாரிகளுக்கு உதவுவதுடன் எல்லைப் பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவும் அமைகிறது.</p><h2>எல்லை பாதுகாப்பு முக்கியம் என்கிறது அமெரிக்கா</h2><p>அமெரிக்காவின் எல்லையை பாதுகாப்பாக வைத்திருப்பது மிக முக்கியமானது. விசா நடைமுறையின் மூலம் தேசியப் பாதுகாப்பு மற்றும் பொதுப் பாதுகாப்புக்கான தரநிலைகளைத் தொடர்ந்து நிலைநிறுத்துவதில் அமெரிக்க வெளியுறவுத் துறை உறுதியாக இருக்கிறது என அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.</p><p>சிறு வயதுடைய குழந்தைக்கு அமெரிக்க விசா கோரி விண்ணப்பிக்கும் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள், குழந்தையின் வயதைப் பொருட்படுத்தாமல், திட்டமிடப்பட்ட தூதரக நேர்காணலுக்குக் குழந்தையை அழைத்துச் செல்லத் திட்டமிட வேண்டும்.</p><p>தூதரகத்தின் இந்த சமீபத்திய விளக்கத்தின்படி, கைக்குழந்தை அல்லது குறிப்பிட்ட வயதுக்குட்பட்ட குழந்தை நேரில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளத் தேவையில்லை என்று பெற்றோர்கள் கருதக்கூடாது. விசா நேர்காணலின் போது, ​​தூதரக அதிகாரி நேரில் பார்க்கும் வகையில் அனைத்து சிறு வயது விண்ணப்பதாரர்களும் அங்கு இருக்க வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>சினிமாவில் அறிமுகமானபோது என் பெற்றோருக்கு பயத்தை ஏற்படுத்தியது- நடிகை மமீதா பைஜூ</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/cinimavil-arimukamana-pothu-en-pettrorukku-bayathai-erpathithathu-nadigai-mameetha-paiju</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/cinimavil-arimukamana-pothu-en-pettrorukku-bayathai-erpathithathu-nadigai-mameetha-paiju#comments</comments><guid isPermaLink="false">e050ce46-0977-4d6e-9a2b-3c6d4ae3b543</guid><pubDate>Sun, 16 Aug 2026 07:58:47 +0000</pubDate><atom:updated>2026-08-16T07:58:47.789Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஸ்வநாத் அண்டு சன்ஸ்,நடிகை மமீதா பைஜூ,மமீதா பைஜூ</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/oq0lts88/Mamitha-baiju.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Actress Mamitha baiju]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/oq0lts88/Mamitha-baiju.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் மமீதா பைஜூ. முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து அவர் நடித்த ஜனநாயகன், சூர்யாவுடன் நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ஆகிய படங்கள் தொடர்ந்து வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.</p><p>இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-</p><p>நான் சினிமாவில் நடிக்கப்போவது என் பெற்றோருக்கு தெரிந்ததும் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் அவர்கள் அதை யாரிடமும் காட்டிக் கொள்ளவில்லை.</p><p>நான் எங்கே போகிறேன் என்னுடைய எதிர்காலம் என்ன என்ற உரையாடல்கள் குடும்பத்துக்குள் நடந்தன. அறிமுகம் இல்லாத துறைக்குள் நான் நுழைந்து கொண்டிருந்தேன் எனக்கு யாரையும் தெரியாது.</p><p>சினிமாவில் என் ஆரம்ப நாட்களை நினைத்துப் பார்க்கும்போது மிகவும் பெருமையாக இருந்தது. நான் படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த காலம்.</p><p>என் வாழ்க்கையில் மிகவும் சுவாரசியமான காலகட்டமாகும். அது சற்று மனஅழுத்தமும் ஏராளமான சந்தேகங்களும் நிறைந்த ஒரு காலகட்டமாக இருந்தது.</p><p>அது என் வாழ்வில் தற்போதைய நிலையை விட அதிகமாக நினைவில் வைத்திருக்கும் ஒரு காலகட்டம்.</p><p> இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்காவில் மனிதர்களின் தலைமுடியால் உருவான 10 அடி உயரம் கொண்ட பந்து: ஒப்பனை கலைஞர்கள் சாதனை</title><link>https://www.maalaimalar.com/news/world/68kg-human-hair-ball-nyc</link><comments>https://www.maalaimalar.com/news/world/68kg-human-hair-ball-nyc#comments</comments><guid isPermaLink="false">e8102c29-5fb0-4ec5-bff8-b2a515a2a79c</guid><pubDate>Sun, 16 Aug 2026 07:54:09 +0000</pubDate><atom:updated>2026-08-16T07:54:09.832Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நியூயார்க்,NewYork,தலைமுடி,முடி உதிர்வு,hair loss,tumblehair</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/amh9dpuy/Untitled-design-66.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Newyork human hair sphere]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/amh9dpuy/Untitled-design-66.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE">அமெரிக்கா</a>வின் நியூயார்க் நகரில் மக்கள் தொகை அதிமாக உள்ள மன்ஹட்டான் என்ற பெருநகரம் உள்ளது.</p><p>இந்த பகுதியில் மனிதர்களின் தலைமுடியை கொண்டு உருவாக்கப்பட்ட 10 அடி (3 மீட்டர்) உயரமும் 150 பவுண்டு (68 கிலோ) எடையும் கொண்ட,‘தி டம்பிள்ஹேர்’ என்ற கோள வடிவம் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிபடுத்தப்பட்டது.</p><p>இந்த உருண்டை கோளமானது CAD இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டெசிமேட்டட் டிசைன்ஸ் நிறுவனங்களின் ஒப்பனை பொருள் வடிவமைப்பாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.</p><p>k18 கூந்தல் பராமரிப்பு நிறுவனம் மற்றும் அன்காமன் கிரியேட்டிவ் ஸ்டுடியோ என்ற நிறுவனங்களுக்காக, மனிதர்களின் தலைமுடியால் உருவாக்கப்பட்ட கோள வடிவம் வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த கோள வடிவம், இளவேனிற் காலத்தில் மனிதர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் ஒரு தவிர்க்கமுடியாத முடி கொட்டுதலுக்கான உருவகமாக காட்சிபடுத்தப்பட்டது.</p><p>நியூயார்க் நகரில் உள்ள உள்ளுர் சலூன்களில் இருந்து பெறப்பட்ட மனிதர்களின் உண்மையான தலைமுடி மற்றும் செயற்கையான இழைகளின் கலவையை பயன்படுத்தி கையால் தைக்கப்பட்டுள்ளது.</p><p>தலைமுடியால் உருவாக்கப்பட்ட இந்த கோளத்தை நியூயார்க் நகரின் சாலைகள், பூங்காக்கள் மற்றும் தெருக்களில் வழியாக ஒப்பனை நிறுவன ஊழியர்கள் கொண்டு சென்று, மக்களின் கவனத்தை ஈர்த்தனர்.</p><p>இந்த சந்தை காட்சிபடுத்துதல் மன்ஹட்டான் நகரில் தொடங்கி, மீட்பேக்கிங் என்ற மாவட்டத்தில் முடிவடைந்தது.</p><p>சிகை அலங்கார ஒப்பனை கலைஞர்களின் சந்தைப் படுத்துதல் காட்சி, சமூக வலைதளத்தில் பரவி அமெரிக்க மக்களிடையே பெரும் வரவேற்பையும், கவனத்தையும் பெற்றது.</p>]]></content:encoded></item><item><title>ஜிம்பாப்வே ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து: பலி எண்ணிக்கை 72 ஆக அதிகரிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/death-toll-from-zimbabwe-ferry-disaster-rises-to-72</link><comments>https://www.maalaimalar.com/news/world/death-toll-from-zimbabwe-ferry-disaster-rises-to-72#comments</comments><guid isPermaLink="false">96001bed-ac71-453d-b0bb-4b17614fb191</guid><pubDate>Sun, 16 Aug 2026 07:34:28 +0000</pubDate><atom:updated>2026-08-16T07:34:28.639Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>zimbabwe,ஜிம்பாப்வே,படகு விபத்து,Boat Accident</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/otnmdhyx/boat.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ boat]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/otnmdhyx/boat.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜிம்பாப்வே நாட்டின் கரிபா ஏரியில் அதிக பயணிகளை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்ததில் பலி எண்ணிக்கை 72 ஆக உயர்ந்து உள்ளது.</p><h2>கரிபா ஏரி</h2><p>தென் ஆப்பிரிக்காவில் உள்ள கரிபா ஏரி ஜிம்பாப்வே மற்றும் அதன் அண்டை நாடான ஜாம்பியா ஆகியவற்றுக்கு இடையேயான எல்லையின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது.</p><p>இந்த ஏரி 200 கி.மீ-க்கும் அதிகமான நீளமும், சில இடங்களில் 40 கி.மீ. வரை அகலமும் கொண்டதாக உள்ளது.</p><p>ஜிம்பாப்வே மற்றும் ஜாம்பியா ஆகிய நாடுகள் இந்த ஏரியைப் பகிர்ந்து கொள்கின்றன. அவற்றுக்கு இடையேயான அதிகாரப்பூர்வ எல்லை ஏரியின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது.</p><p>கரிபா ஏரியில் அதிக பயணிகளை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது. இச்சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.</p><p>இந்த விபத்தில் 27 பேர் மாயமாகினர் எனவும், ஏரியில் இருந்து 77 பேர் மீட்கப்பட்டு அங்குள்ள ஒரு தீவுக்கு கொண்டு செல்லப்பட்டனர் என அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்தது. விசாரணையில் அந்தப் படகில் 150 பேர் பயணித்தனர் என கூறப்படுகிறது.</p><h2>மீட்புப் பணிகள்</h2><p>மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது என ஜிம்பாப்வே காவல்துறை தெரிவித்திருந்தது.</p><p>இந்நிலையில், கரிபா ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது. இதில் 18 சிறுவர்களும் அடங்குவர்.</p><h2>தேசிய பேரிடர்</h2><p>படகு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த ஜிம்பாப்வே அதிபர் எமர்சன் நகாவா, இந்தப் படகு விபத்தை தேசிய பேரிடர் என அறிவித்துள்ளார். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர். </p>]]></content:encoded></item><item><title>சின்னத்திரையில் களமிறங்கும் சமந்தா</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/samantha-hosts-cooking-show</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/samantha-hosts-cooking-show#comments</comments><guid isPermaLink="false">74156589-6196-4c76-9847-a5f2538a8d35</guid><pubDate>Sun, 16 Aug 2026 07:26:22 +0000</pubDate><atom:updated>2026-08-16T07:26:22.966Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Cooking Show,samantha,சமந்தா,சமையல் நிகழ்ச்சி,சின்னத்திரை,Television show</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/7teu7wpd/samantha.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Actress Samantha]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/7teu7wpd/samantha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திரையுலகில் முன்னணி கதாநாயகிகள் மற்றும் முன்னாள் கதாநாயகிகள் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றனர்.</p><p>அந்த வகையில் சமந்தாவும் சின்னத்திரையில் ஒளிபரப்பாக இருக்கும் சமையல் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க இருக்கிறார். </p><p>இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிரபல ஓடிடிதளமான சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க் இந்தியா நிறுவனம் நேற்று வெளியிட்டது.</p><p>இதுகுறித்து சமந்தா கூறியதாவது:-</p><p>நான் இதுவரை இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றதில்லை. அதனால் தான் சம்மதித்தேன். நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தவறுகள் செய்வதையும் ஒருவரை ஒருவர் ஆச்சரியப்படுத்துவதையும் பார்ப்பது மிகவும் சுவாரசியமாக இருக்கிறது.</p><p>மேலும் பிரபலங்களின் மற்றொரு பக்கத்தை இந்நிகழ்ச்சியில் காணலாம். </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><figure><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DcDqIeSpyJQ/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:658px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DcDqIeSpyJQ/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a></div></blockquote>
<script async src="//platform.instagram.com/en_US/embeds.js"></script></figure>]]></content:encoded></item><item><title>ரூ.500 கோடி செலவில் நீர்நிலைகள் சீரமைப்பு: அரசுடன் கைகோர்க்க பொதுமக்களுக்கு அமைச்சர் என்.ஆனந்த் அழைப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-500-crore-waterbodies-restoration-minister-n-anandhs-call-to-join-hands-with-government</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-500-crore-waterbodies-restoration-minister-n-anandhs-call-to-join-hands-with-government#comments</comments><guid isPermaLink="false">2a30a7fe-5a6b-4c19-8684-537dbec91caf</guid><pubDate>Sun, 16 Aug 2026 07:09:40 +0000</pubDate><atom:updated>2026-08-16T07:09:40.493Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,Water bodies,நீர்நிலைகள் சீரமைப்பு,அமைச்சர் என் ஆனந்த்,MInister N Anand</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/j3t91jbd/Anand.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister N Anand]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/j3t91jbd/Anand.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வருகிற அக்டோபர் மாதத்தில் தொடங்கும். ஒவ்வொரு ஆண்டும் இந்த பருவமழை காலம் சென்னை மக்களுக்கு பெரும்பாலும் சோதனை காலமாக இருக்கிறது.</p><p>முன்கூட்டியே எவ்வளவு திட்டமிட்டதாக கூறினாலும் மழை போட்டுதாக்கத்தான் செய்யும். இப்போது புதிதாக பொறுப்புக்கு வந்துள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு இந்த பருவமழை சவாலை சந்தித்து சமாளிக்க புதுமையான திட்டத்தை கொண்டு வந்துள்ளது. </p><p>அதன்படி, சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏரிகள், கூவம் ஆறு மற்றும் நீர் நிலைகளை தூர்வாரும் பணிகளை தீவிரமாக தொடங்கி உள்ளது. </p><p>கிராமப்புறங்களில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், தமிழகத்தின் கிராமப்புற நீர்வளத்தைப் பாதுகாத்து மேம்படுத்தும் வகையிலும் மாபெரும் நீர்நிலை புனரமைப்புப் பணிகள் நாளை (17-ந்தேதி)தொடங்கப்பட உள்ளன.</p><p>முதலமைச்சர்  விஜய் உத்தரவின்படி, வளர்ச்சியடைந்த பாரதம்- கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகள் மற்றும் நீர் வரத்துக் கால்வாய்களை புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.</p><p>இதன்படி, மாநிலம் முழுவதும் 10,185 நீர்வரத்துக் கால்வாய்கள் மற்றும் 809 ஏரிகள், குளங்கள், ஊரணிகள் ஆகியவற்றை தூர்வாரி புனரமைக்கும் பணிகள் தொடங்க உள்ளன.</p><p>ரூ.500 கோடி மதிப்பீட்டில் வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக நீர்நிலைகளில் தேங்கியுள்ள மண், கழிவுகள் உள்ளிட்டவற்றை அகற்றி, நீர்வரத்துப் பாதைகளைச் சீரமைப்பதன் மூலம் மழைக்காலத்தில் கிடைக்கும் நீரை அதிகளவில் சேமிக்க முடியும்.</p><p>இதன் மூலம் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளின் நீர்த்தேக்கத் திறன் அதிகரிப்பதுடன், நிலத்தடி நீர்மட்டத்தையும் உயர்த்துவதற்கான வாய்ப்பு ஏற்படும். குறிப்பாக, கிராமப்புறங்களில் விவசாயப் பாசனத்துக்கு தேவையான நீர்வளம் கிடைப்பதற்கும் இந்தப் பணிகள் பெரும் உதவியாக அமையும். மேலும் வெள்ளப் பாதிப்பையும் குறைக்கும்.</p><p>அதீத மழைப்பொழிவு ஏற்படும் நேரங்களில், நீர்வரத்துக் கால்வாய்கள் முறையாகப் பராமரிக்கப்படாமல் இருப்பது காரணமாக மழைநீர் தேங்கி விவசாய நிலங்களிலும் குடியிருப்புப் பகுதிகளிலும் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகிறது.</p><p>தற்போது மேற்கொள்ளப்படும் கால்வாய் தூர்வாரும் பணிகள் மூலம் மழைநீர் தடையின்றி நீர்நிலைகளைச் சென்றடைய வழிவகை செய்யப்படும். இதனால் மழைநீரை சேமிப்பதோடு மட்டுமின்றி, பல்வேறு பகுதிகளில் ஏற்படும் நீர்த்தேக்கம் மற்றும் வெள்ள அபாயத்தையும் குறைக்க முடியும்.</p><h2>பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு</h2><p>தமிழகத்தின் கிராமப்புற நீர்நிலைகளைப் பாதுகாப்பது அரசின் பணியாக மட்டுமின்றி, பொது மக்களின் பங்களிப்பும் அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது. எனவே, இந்தப் புனரமைப்புப் பணிகளில் உள்ளாட்சி அமைப்புகள், ஊர் பொது மக்கள் மற்றும் தன்னார்வ லர்களின் பங்களிப்பும் இடம்பெற உள்ளது.</p><p>முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தலின்பேரில் நடைபெறும் இந்த மாபெரும் பணியில்  அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்  என்.ஆனந்த், அன்புடன் அழைப்பு விடுத்துள்ளார்.</p><h2>பயன்கள் </h2><p>கிராமப்புற நீர்வளத்தை காக்கும் நீண்டகால நடவடிக்கை மழைநீரை வீணாக கடலில் கலக்காமல் சேமித்தல், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல், விவசாயத்துக்கான பாசன வசதியை மேம்படுத்துதல், வெள்ளப்பாதிப்பைத் தடுப்பது என பல்வேறு நோக்கங்களை ஒருங்கிணைத்து இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.</p><p>10,185 வரத்துக் கால்வாய்கள், 809 நீர்நிலைகள் என ஆயிரக்கணக்கான நீர்வள ஆதாரங்கள் ஒரே கட்டமாக புனரமைக்கப்படுவது, தமிழகத்தின் கிராமப்புற நீர்வளப் பாதுகாப்பில் முக்கியமான முன்னெடுப்பாக பார்க்கப்படுகிறது.</p><p>வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக பணிகள் முன்னெடுக்கப்படு வதால், வரும் மழைக் காலத்தில் கிடைக்கும் நீரை முழுமையாகப் பயன்படுத்து வதற்கான அடித்தளமாக உருவாகும்.</p><p>மேற்கண்ட தகவலை நீர்வளத் துறை தெரிவித்து உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>இந்தியா, இலங்கை இடையிலான முதல் டெஸ்ட்:  மழையால் பாதிப்பு</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/match-delayed-due-to-rain-in-second-day-for-srilanka-india-match</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/match-delayed-due-to-rain-in-second-day-for-srilanka-india-match#comments</comments><guid isPermaLink="false">fc390487-9e25-4035-a323-90810c2be047</guid><pubDate>Sun, 16 Aug 2026 07:07:26 +0000</pubDate><atom:updated>2026-08-16T07:07:26.334Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,மழை,SLvIND,இலங்கை இந்தியா தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/sgovyoxv/rain.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ galle]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/sgovyoxv/rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட்டின் 2-வது நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டு உள்ளது.</p><p>இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில், காலே நகரில் நடைபெறும் முதல் டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவெடுத்தது.</p><p>அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 32 ரன்களில் ரன்-அவுட் ஆனார். இந்தப் போட்டியில் கே.எல்.ராகுல் சிறப்பாக விளையாடி 77 ரன்கள் எடுத்தார். காயம் காரணமாக அவர் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். கேப்டன் சுப்மன் கில் 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.</p><h2>முதல் நாள் ஆட்டம்</h2><p>தொடர்ந்து சிறப்பாக ஆடிய விளையாடிய தேவ்தத் படிக்கல் 134 பந்துகளில் சதம் விளாசினார். ஆட்டம் மழையால் இடையிடையே பாதிக்கப்பட்டது.</p><p>முதல் நாள் முடிவில் இந்தியா முதல் இன்னிங்சில் 73 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 288 ரன்கள் எடுத்துள்ளது. ரிஷப் பண்ட் 27 ரன்னும், படிக்கல் 131 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.</p><p>இந்நிலையில், இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்க இருந்தது. காலை 10 மணியளவில் லேசாக தூறல் போட்டது. இதனால், களத்தில் நீர் தேங்காமல் இருப்பதற்காக பாதுகாப்பாக ‘கவர்’ செய்யப்பட்டது. எனினும், அதன்மீது மழை நீர் விழுந்தபடி இருந்தது.</p><h2>உணவு இடைவேளை</h2><p>அவ்வப்போது ஊழியர்கள் அதனை பாதுகாப்பாக வெளியேற்றினர். தொடர்ந்து, மழை தூறிக்கொண்டே இருந்தது. மழையால் ஆட்டம் தொடங்குவதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டது. 11.40 மணியளவில் மதிய உணவுக்கான இடைவேளை விடப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>தொலைந்து போன செருப்பை கண்டுபிடிக்க ChatGPT பயன்படுத்திய நபர்- வைரலாகும் வீடியோ</title><link>https://www.maalaimalar.com/news/national/man-uses-chatgpt-ai-to-find-his-lost-clog</link><comments>https://www.maalaimalar.com/news/national/man-uses-chatgpt-ai-to-find-his-lost-clog#comments</comments><guid isPermaLink="false">926ec478-e28a-4ad4-af75-5176437947aa</guid><pubDate>Sun, 16 Aug 2026 06:50:58 +0000</pubDate><atom:updated>2026-08-16T06:50:58.271Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஏஐ தொழில்நுட்பம்,சாட்ஜிபிடி,ChatGPT</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/jjtz33sf/Clogs0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Clogs]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/jjtz33sf/Clogs0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராஜஸ்தானில் உள்ள உஜ்ஜைனில் இருக்கும் கோவில் மிகவும் பிரசித்து பெற்றது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த கோவிலுக்கு ஒருவர் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். அவர் கோவிலுக்கு வெளியே தனது காலணியை விட்டுச் சென்றுள்ளார்.</p><figure><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DcFxQ1JNCwy/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:658px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DcFxQ1JNCwy/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a></div></blockquote>
<script async src="//platform.instagram.com/en_US/embeds.js"></script></figure><p>கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு, வெளியே வந்துள்ளார். அப்போது, வெளிப்பக்கத்தில் ஆயிரக்கணக்கான காலணிகள் மற்றும் ஷூக்கள் கிடந்துள்ளன. இதில் தனது Clogs வகை செருப்பை அவரால் தேடி கண்டுபிடிக்க முடியவில்லை.</p><p>இதனால் அந்த நபர் ஏ.ஐ. ஆன ChatGPT-யை பயன்படுத்தினார். இந்த செருப்பு குவியலில் இருந்து தனது செருப்பை கண்டுபிடிக்க டிப்ஸ் கொடுக்குமாறு கேட்டுள்ளார். ChatGPT-யும் வழிகாட்டுதல் வழங்க தனது செருப்பை கண்டுபிடித்துள்ளார்.</p><p>இது தொடர்பான வீடியோவை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மிகவும் சாதாரணமான ஒரு சூழலில் செயற்கை நுண்ணறிவு (AI) எவ்வாறு உதவியது என்பதைக் கண்டு பலர் ரசித்த நிலையில், ஏ.ஐ. எதற்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பது தொடர்பாக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item></channel></rss>