<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 26 Jul 2026 05:43:48 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-26-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-26-july-2026#comments</comments><guid isPermaLink="false">31ef8afe-34cc-49f3-ad59-6c3bec2d6756</guid><pubDate>Sun, 26 Jul 2026 03:48:25 +0000</pubDate><atom:updated>2026-07-26T05:12:35.334Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/sgf9d9gb/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Today Live News]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/sgf9d9gb/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/thanks-to-critics-this-is-just-the-beginning-abijeet-deepke">எங்களை சந்தேகித்து விமர்சனம் செய்தவர்களுக்கு நன்றி, இது வெறும் தொடக்கம்தான்: அபிஜீத் தீப்கே... </a></p><p>* ஜந்தர் மந்தரில் 37 நாட்கள் காத்திருந்த மக்கள்   ஒவ்வொருவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்.</p><p>* எங்களைச் சந்தேகித்து, விமர்சனம் செய்த அனைவருக்கும் நன்றி. </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/students-demand-end-to-exam-paper-leaks-from-new-education-minister-pralhad-joshi">இனி வினாத்தாள் கசிவு இருக்கக் கூடாது: புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு மாணவர்கள் கோரிக்கை!... </a></p><p>*அனைவருக்கும் சமமான மற்றும் தரமான கல்வி வழங்கிட புதிய கல்வி அமைச்சருக்கு மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p><p> •வினாத்தாள் கசிவில் ஈடுபடும் 'தேர்வு மாஃபியாக்கள்' மீதுகடுமையான நடவடிக்கைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/rajnath-singh-lays-wreath-at-the-kargil-war-memorial-to-pay-tribute-to-bravehearts-who-laid-down-their-lives-in-kargil-war-in-1999">கார்கில் வெற்றி தினம்: போர் நினைவிடத்தில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மரியாதை</a></p><p>* போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கார்கில் தினம் கடைபிடிக்கப்படுகிறது.</p><p>* கார்கில் வெற்றி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/uddhav-thackeray-cjp-protest-failure-of-central-govt-opposition">ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் தோல்விதான் இளைஞர்களின் போராட்டம்: ஜனநாயகத்திற்கான ஆக்சிஜன்- உத்தவ் தாக்கரே</a></p><p>* டெல்லி முதல் மும்பை வரை, மக்கள் அச்சத்தைத் தாண்டி வந்துவிட்டதை நான் உணர்ந்துள்ளேன். இதுவரை துப்பாக்கி முனையில் வைக்கப்பட்டிருந்த மக்கள், இப்போது தங்கள் உயிருக்கு அஞ்சும் நிலையை உதறிவிட்டு வீதிகளில் இறங்கியுள்ளனர்.</p><p>* மத்திய அரசு முழுமையாகத் தோல்வியடைந்துவிட்டது. அவர்கள் நாட்டை முற்றிலுமாகச் சீரழித்துவிட்டனர். இளைஞர்களைக் கரப்பான் பூச்சிகள் என்று அழைப்பது அவர்களை அவமதிப்பதாகும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/noul-typhoon-prompts-red-alert-in-guangdong-flights-and-trains-suspended">சீனாவை அச்சுறுத்தும் 'நவுல்' புயல்: குவாங்டாங் கடலோரப் பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கை; விமானங்கள், ரயில்கள் ரத்து!...</a> </p><p>* சீனாவின் தெற்கு கடலோரப் பகுதியை நோக்கி அதிவேகமாக நகர்ந்து வரும் 'நவுல் புயல் காரணமாக, நாட்டின் தேசிய வானிலை மையம் மிக உயர்ந்த அபாய எச்சரிக்கையான 'சிவப்பு எச்சரிக்கையை' விடுத்துள்ளது. </p><p>* நடப்பு ஆண்டின் 12-வது புயலான இது, குவாங்டாங் மாகாணத்தின் கடலோரப் பகுதியில் தீவிரமாகத் தாக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/shock-in-germany-car-attack-at-berlin-pride-parade">ஜெர்மனியில் பேரதிர்ச்சி: பெர்லின் 'ப்ரைட்' பேரணியில் காரை ஏற்றித் தாக்குதல்-ஒருவர் பலி; 16 பேர் படுகாயம்!... </a></p><p>* வெள்ளை நிற கார் ஒன்று கூட்டத்திற்குள் அதிவேகமாகப் புகுந்தது.</p><p>* 16 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-bar-rules-relaxed-new-move-by-tamil-nadu-govt">டாஸ்மாக் பார் தொடங்குவதற்கான விதிகள் தளர்வு: தமிழக அரசு புதிய நடவடிக்கை!... </a></p><p>தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுடன் இணைந்து இயங்கும் பார்களைத் தொடங்குவது மற்றும் உரிமம் வழங்குவது தொடர்பாகப் புதிய தளர்வுகளையும் விதிமுறை மாற்றங்களையும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/cjp-volunteers-cleaning-the-streets-at-jantar-mantar">ஜந்தர் மந்தரில் அமைதி திரும்பியது: குப்பைகளை அகற்றிய கரப்பான் பூச்சி கட்சியினர்</a></p><p>* நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.</p><p>* இதன்மூலம் கரப்பான் பூச்சி இளைஞர்களின் 36 நாள் போராட்டம் வெற்றிகரமாக முடிந்திருக்கிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/anahat-singh-scripts-history-becomes-1st-indian-to-win-junior-world-championship">உலக ஜூனியர் ஸ்குவாஷ்: முதல் முறை சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்த அனாஹத் சிங்</a></p><p>* இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா கடந்த 2005-ம் ஆண்டில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார்.</p><p>* இந்த மோதலில் அனாஹத் சிங் 11-3, 11-7, 11-9 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்றார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/revanth-reddy-telangana-assembly-lower-minimum-age-to-contest-ls-assembly-polls-to-21">தேர்தலில் போட்டியிடும் வயது வரம்பை 21 ஆக குறைக்க வேண்டும்: தெலுங்கானாவில் தீர்மானம் நிறைவேற்ற ரேவந்த் ரெட்டி முடிவு</a></p><p>* ராகுல் காந்தி பிரதமரானால், Gen Z தலைவர் மத்திய அமைச்சர் ஆக முடியும் என்பதற்கு என்னால் உறுதி அளிக்க முடியும்.</p><p>* நான் இந்தியா பிளாக்கிடம் பேசுவேன். ஒவ்வொரு கட்சித் தலைவர்களையும் சந்திப்பேன். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/kandararu-brahmadathan-to-be-new-sabarimala-tantri">சபரிமலையில் புதிய தந்திரியாக கண்டரரு பிரம்ம தத்தன் தேர்வு</a></p><p>* புதிய தந்திரியாக கண்டரரு பிரம்ம தத்தனை நியமிக்க திருவிதாங்கூர் தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது.</p><p>* தீர்மான அறிக்கையை கேரள ஐகோர்ட்டின் தனி அமர்வுக்கு அனுப்பி வைத்து அதற்கான ஆணை பெறப்படும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நீட் விவகாரம்: நெட்டிசன்களின் வாயை அடைத்த ஜோதிகா!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/neet-issue-jyothika-shuts-trolls</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/neet-issue-jyothika-shuts-trolls#comments</comments><guid isPermaLink="false">be875d50-4670-4cb3-939a-1172a277115a</guid><pubDate>Sun, 26 Jul 2026 05:28:58 +0000</pubDate><atom:updated>2026-07-26T05:28:58.036Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜோதிகா,Jyothika,நீட் விவகாரம்,CJP Protest,காக்ரோச் ஜனதா கட்சி,NEET Controversy</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/eo0zncl6/jyothika.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jyothika  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/eo0zncl6/jyothika.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக நடிகை ஜோதிகா சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். மேலும், இந்த விவகாரத்திற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.</p><p>இதனைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்தன. குறிப்பாக சிலர் ஜோதிகாவை தனிப்பட்ட முறையில் விமர்சித்த நிலையில், அவர்களுக்கு அவர் நேரடியாகவும் காரசாரமாகவும் அளித்த பதிலடிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.</p><h2><strong>கொஞ்சம் சீக்கிரமா வந்துட்டீங்க மேடம்:</strong></h2><p>கொஞ்சம் சீக்கிரமா வந்துட்டீங்க மேடம் என்று கிண்டலடித்த நபருக்கு, எதுவுமே தாமதம் இல்லை. முதலில் சமூகத்திற்கு உங்களுடைய பங்களிப்பு என்ன என்பதை பற்றி யோசியுங்கள் என்றார்.</p><h2><strong>மும்பைக்கு போயிடுவீங்க:</strong></h2><p>என்ன வேணாலும் பேசிட்டு மும்பைக்கு போயிடுவீங்க என்ற விமர்சனத்திற்கு, நான் எங்கே போவேன்? இந்தியாவில்தான் வாழ்கிறேன். இன்னும் படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்றார்.</p><h2><strong>அரசியல் தான் நடக்கிறது:</strong></h2><p>மாணவர்கள் தாக்கப்படுவதை விட அரசியல் தான் நடக்கிறது என்ற கருத்துக்கு, அரசாங்கம் மாணவர்களின் மண்டையையும் உடலையும் அடித்து உடைப்பது பற்றி உங்கள் கருத்து என்ன? என கேள்வி எழுப்பினார்.</p><p>மேலும், இந்த பதிவுகளுக்காக உங்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டிற்கு, அப்படியானால் நீங்களும் எதிர்க்கட்சியிடம் இருந்து பணம் வாங்கிக் கொண்டுதான் பேசுகிறீர்கள் என்று நான் எடுத்துக்கொள்ளலாமா என சரவெடியாய் பதிலளித்துள்ளார். </p><p>ஜோதிகாவின் இந்த தைரியமான பதிலடிகள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>மாப்பிள்ளை சீமான்.., 2 மாதத்துக்கு முன்பு சேர்ந்திருந்தால்., அழைப்பு விடுத்த பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ntk-seeman-nainar-nagendran-bjp-sarath-kumar-birthday-party</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ntk-seeman-nainar-nagendran-bjp-sarath-kumar-birthday-party#comments</comments><guid isPermaLink="false">1f575132-0495-4d73-a3b1-a619f143f52d</guid><pubDate>Sun, 26 Jul 2026 05:18:25 +0000</pubDate><atom:updated>2026-07-26T05:18:25.735Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Sarath kumar,BJP,பாஜக,Seeman,நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,சரத் குமார்,சீமான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/9jng6jkq/SarathKumar0002.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சரத்குமார் பிறந்த நாள் விழா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/9jng6jkq/SarathKumar0002.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அகில இந்திய சரத்குமார் ரசிகர் நற்பணி மன்றம், நாட்டாமை குடும்பத்தினர் சார்பில் முன்னாள் எம்.பி.யும், பா.ஜனதா தேசிய பொதுக்குழு உறுப்பினருமான சரத்குமார் பிறந்த நாள் விழா நெல்லை அருகே உள்ள சீதபற்பநல்லூரில் நடைபெற்றது.</p><p>இந்த விழாவில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு ஆகியோரும் கலந்து கொண்டனர்.</p><h2>சீமானுக்கு அழைப்பு</h2><p>பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் தங்களது கூட்டணியில் சேருவதற்கு விழா மேடையிலேயே நேரடியாக அழைப்பு விடுத்தார்.    </p><h2>நயினார் நாகேந்திரன் பேசியதாவது:-</h2><p>சரத்குமாருக்கு 72 வயதானாலும் அவர் எண்ணத்தாலும், செயலாலும் அவரது வயது 27-தான். இந்த மேடையில் மாப்பிள்ளை சீமான் உள்பட அனைவரும் ஒரே மேடையில் அமர்ந்து இருப்பதை பார்க்கும்போது அழகாகத்தான் உள்ளது. இதுபோன்று மேடை 2 மாதங்களுக்கு முன்பு சேர்ந்திருந்தால் தமிழகத்தின் அரசியல் நிலைமை என்னவாகி இருக்கும். பார்ப்போம். இனிமேல் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.</p><figure><img alt="சரத்குமார் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டவர்கள்" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/lle51vn9/SarathKumar0003.jpg" /></figure> <p>தமிழகத்தில் சிலர் எடுத்த எடுப்பிலேயே முதல்-அமைச்சராக வந்து விடுகிறார்கள். ஆனால் முதல்-அமைச்சருக்கான முழு தகுதியும் சரத்குமாரிடம் உள்ளது. சரத்குமார் தேசிய உணர்வோடு அவரது கட்சியை பா.ஜனதாவுடன் இணைத்து கொண்டார். நிச்சயமாக அவருக்கு பதவி தேடிவரும்.</p><p>இவ்வாறு நயினார் நாககேந்திரன் பேசினார்.</p><h2>இடைத்தேர்தல்</h2><p>தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்து உள்ளனர். இந்த 6 தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.</p><p>இவற்றில் அம்பாசமுத்திரம் சட்டம்ன்ற தொகுதியில் சீமான் பொதுவேட்பாளராக களம் இறங்கப்போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதைத் தொடர்ந்து சீமானுக்கு இடைத்தேர்தலில் பா.ஜனதா கட்சி ஆதரவு அளிக்குமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.</p><p>பா.ஜனதா மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், பார்வர்டு பிளாக் மாநில பொதுச்செயலாளர் கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.</p><h2>விழாவில் நடிகர் சரத்குமார் பேசியதாவது:-</h2><p>நான் சினிமாவில் இருந்து திடீரென அரசியலுக்கு வந்தவன் அல்ல. எனது குடும்பமே அரசியல் பின்னணி கொண்ட குடும்பம்தான். உண்மையாகவும் நேர்மையாகவும் உழைப்பவர்களை யாராலும் எப்போதும் தோற்கடிக்க முடியாது. உடல் வலிமையும், கடின உழைப்பும் இருந்தால் இளைஞர்கள் சாதனையாளராக முடியும்.</p><p>எதையும் சாதிப்பதற்கு உடல் வலிமையும் மன வலிமையும் இருக்க வேண்டும். என்னால் 150 ஆண்டுகள் வரையிலும் வாழ முடியும். சீனர்கள் 150 ஆண்டுகளுக்கும் மேல் தாண்டி வாழ்கிறார்கள். அதற்கு உடல் வலிமையும் மன வலிமையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.</p><p>சீமான் இந்த மண்ணில் தேர்தலில் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், அது காலத்தின் கட்டாயமாக இருக்கும். சாதி, மத வேறுபாடற்ற ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>எங்களை சந்தேகித்து விமர்சனம் செய்தவர்களுக்கு நன்றி, இது வெறும் தொடக்கம்தான்: அபிஜீத் தீப்கே</title><link>https://www.maalaimalar.com/news/national/thanks-to-critics-this-is-just-the-beginning-abijeet-deepke</link><comments>https://www.maalaimalar.com/news/national/thanks-to-critics-this-is-just-the-beginning-abijeet-deepke#comments</comments><guid isPermaLink="false">eee9ce31-86e4-492c-84c3-f06b118c0d02</guid><pubDate>Sun, 26 Jul 2026 05:07:47 +0000</pubDate><atom:updated>2026-07-26T05:07:47.455Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>abhijeet dipke,அபிஜீத் தீப்கே,சிஜேபி,CJP Protest,CJP,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/inapr828/Untitled-design-76.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ NEET Protest Leader Abhijit Deepke thanks critics]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/inapr828/Untitled-design-76.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்விற்கு எதிராக 37 நாட்களாக நீடித்து வந்த போராட்டம் முடிவடைந்ததை அடுத்து, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே இன்று ஒரு வீடியோ வெளியிட்டார்.</p><h3><strong>அபிஜீத் தீப்கே வீடியோ பதிவு:</strong></h3><p>அந்த வீடியோவில் அபிஜீத் தீப்கே கூறியிருப்பதாவது:-</p><p>உங்கள் ஆதரவு இல்லாமல் இது சாத்தியமாகி இருக்காது. உடல்நலக் குறைபாடுகளை காரணம் காட்டி, ஜந்தர் மந்தரில் கூடியிருந்த ஆதரவாளர்களை நேரில் சந்திக்க இயலவில்லை, அதற்காக மன்னித்து கொள்ளுங்கள்.</p><p>நான் உண்மையிலேயே மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். ஜந்தர் மந்தரில் காத்திருந்த அனைவரையும் என்னால் சந்திக்கவோ, அவர்களுக்கு நன்றி சொல்லவோ முடியவில்லை.</p><p>ஏனென்றால், உங்களுக்குத் தெரியும், எனக்கு டைபாய்டு காய்ச்சல் இருந்தது. எனது உடல் வெப்பநிலை 101 டிகிரியாக இருந்தது. அதனால்தான் நான் வீட்டிற்கு வர வேண்டியிருந்தது.</p><p>உங்கள் அனைவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். மேலும். ஜந்தர் மந்தரில் 37 நாட்கள் காத்திருந்த மக்கள் ஒவ்வொருவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்.</p><p>இந்த நாட்டிற்காக நீங்கள் செய்ததை நான் மனதாரப் பாராட்டுகிறேன் என்பதை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். உங்கள் அனைவருக்கும் சல்யூட்.</p><p>எங்களைச் சந்தேகித்தும், விமர்சித்தும், உங்களுக்கு போராடத் தெரியவில்லை என்றும் கேள்வி எழுப்பியவர்களுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்.</p><p>நீங்கள் எங்களை விமர்சிக்காமலும், கேள்வி எழுப்பாமலும் இருந்திருந்தால், எங்களால் முன்னேறியிருக்க முடியாது.</p><p>கரப்பான்பூச்சி ஜனதா கட்சி இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. நிச்சயமாக நாங்கள் நீண்ட தூரம் பயணிப்போம். இது வெறும் தொடக்கம்தான். ஜெய் ஹிந்த்” என்று கூறியுள்ளார்.</p><h3><strong>நீட் வினாத்தாள் கசிவு போராட்டம்:</strong></h3><p>நீட் வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ-யின் கணினி வழியில் நடத்தப்படும் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகவும், காக்ரோச் ஜனதா கட்சியினர், ஜூன் 20 முதல் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர்.</p><p>இந்த இயக்கம் நாடு முழுவதிலுமுள்ள மாணவர்களின் ஆதரவைப் பெற்றதுடன், பல எதிர்க்கட்சிகளின் ஆதரவையும் பெற்றது.</p><p>ஜூன் 28 முதல் ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருந்து வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு ஜூலை 18 அன்று காவல்துறையினரால் சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.</p><p>இதையடுத்து, போராட்டங்கள் தீவிரமடைந்தன. ஜூலை 20 அன்று ஆயிரக்கணக்கானோர் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றபோது, இந்தப் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்தது. இதனால் காவல்துறையினருடன் மோதல்கள் ஏற்பட்டன.</p><h3>தர்மேந்திர பிரதான் ராஜினாமா:</h3><p>அவர்கள் போராட்டக்காரர்களைக் கலைக்கத் தடியடியும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளும் பயன்படுத்தினர். </p><p>அன்றைய தினம் பிற்பகலில், நட்டா தனது இல்லத்தில் சிஜேபி தலைவர்களுடன் முதல் முறையாக சந்திப்பு ஒன்றை நடத்தினார். இது இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் தொடக்கத்தை குறித்தது.</p><p>இதைத்தொடர்ந்து நேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மத்திய அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்தார். இதையடுத்து சிஜேபி தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது.</p><h3><strong>சிஜேபி கோரிக்கை:</strong></h3><p>இந்த நிலையில் நீட் பிரச்சினை தொடர்பாக ஜந்தர் மந்தரில் 36 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டத்தை கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நேற்று கைவிட்டது.</p><p>தர்மேந்திர பிரதானின் ராஜினாமா மற்றும் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குதல், போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளைத் திரும்பப் பெறுதல் உள்ளிட்ட தங்களின் அனைத்து கோரிக்கைகளையும் அரசு ஏற்றுக்கொண்டதாக சிஜேபி தெரிவித்தது.</p><p>அரசுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, நாடு முழுவதும் போராட்டம் உடனடியாக வாபஸ் பெறப்படுவதாக சிஜேபி கட்சியின் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் தெரிவித்தார்.</p><p>ஒப்புக்கொள்ளப்பட்ட நிபந்தனைகள், ஒப்புக்கொள்ளப்பட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையுடனும் புரிதலுடனும் நாங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம் என அவர் கூறினார்.</p><h3><strong>மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை:</strong></h3><p>தங்களது கோரிக்கைகள் அடங்கிய வரைவை அரசிடம் சமர்ப்பித்துள்ளதாகவும், செவ்வாய்க்கிழமைக்குள் எழுத்துப்பூர்வமான உத்தரவாதத்தை எதிர்பார்ப்பதாகவும் செளரவ் தாஸ் தெரிவித்தார்.</p><p>இதையடுத்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த நட்டா, போராட்டத்தின் போது தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளையும், தங்களின் எஞ்சிய கோரிக்கைகளையும் கோடிட்டு காட்டும் எழுத்துப்பூர்வ வரைவை சிஜேபி-யினர் சமர்ப்பித்ததாகக் கூறினார்.</p><p>போராட்டக்காரர்களுக்கு எதிராக எந்த பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும், தங்களது கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்றும் கட்சி உறுதிமொழி கோரியுள்ளதாகவும் நட்டா கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>இனி வினாத்தாள் கசிவு இருக்கக் கூடாது: புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு மாணவர்கள் கோரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/national/students-demand-end-to-exam-paper-leaks-from-new-education-minister-pralhad-joshi</link><comments>https://www.maalaimalar.com/news/national/students-demand-end-to-exam-paper-leaks-from-new-education-minister-pralhad-joshi#comments</comments><guid isPermaLink="false">94ecf578-0dec-4718-b958-6f3bf02bb806</guid><pubDate>Sun, 26 Jul 2026 04:59:49 +0000</pubDate><atom:updated>2026-07-26T04:59:49.583Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நீட் தேர்வு,Neet exam,பிரகலாத் ஜோஷி,Pralhad Joshi,CJP,காக்ரோச் ஜனதா கட்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/0w0v5ym5/prahalad.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pralhad Joshi ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/0w0v5ym5/prahalad.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு புகார்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து, மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சராக உள்ள 'பிரகலாத் ஜோஷி'க்கு கல்வித் துறையின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. </p><p>இந்நிலையில்தான், புதிய கல்வி அமைச்சர் வினாத்தாள் கசிவுகளை முற்றிலுமாகத் தடுத்து, அனைவருக்கும் கட்டுப்படியாகும் வகையில் கல்வியை முறைப்படுத்த வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><h2><strong>தொடர் போராட்டம்:</strong></h2><p>நீட் மற்றும் யு.ஜி.சி-நெட்  தேர்வுகளில் நடந்த முறைகேடுகளைக் கண்டித்து, 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) அமைப்பின் தலைமையிலான மாணவ அமைப்பினரும் லட்சக்கணக்கான மாணவர்களும் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். </p><p>போராட்டத்தின் உச்சகட்டமாக, வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்றுத் தர்மேந்திர பிரதான் தனது பதவி விலகல் கடிதத்தைக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் சமர்ப்பித்தார். அவரது ராஜினாமா உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.</p><h2><strong>புதிய கல்வி அமைச்சர் நியமனம்:</strong></h2><p>தர்மேந்திர பிரதானின் விலகலைத் தொடர்ந்து, கர்நாடகாவின் தார்வாடு தொகுதியில் இருந்து 5 முறை எம்பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூத்த பாஜக தலைவரும், நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சருமான பிரகலாத் ஜோஷிக்கு கல்வித் துறை கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டுள்ளது. "மிகுந்த கடமையுணர்வோடும் பணிவோடும் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன்" என ஜோஷி அறிவித்துள்ளார்.</p><h2><strong>மாணவர்களின் கோரிக்கைகள்:</strong></h2><p>சி.ஜே.பி போராட்டத்தில் ஈடுபட்ட பிரதிநிதிகள் மற்றும் மாணவர்கள் சார்பில் புதிய அமைச்சருக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>வினாத்தாள் கசிவுக்கு முற்றுப்புள்ளி:</strong></h2><p>இனிவரும் எந்தவொரு தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளிலும் வினாத்தாள் கசியாத வண்ணம் 'தேசிய தேர்வுகள் முகமையை' முற்றிலும் சீரமைக்க வேண்டும்.</p><h2><strong>கட்டுப்படியாகும் கல்வி:</strong></h2><p>ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்து மாணவர்கள் உயர்கல்வி பெறுவதை உறுதிசெய்யும் வகையில் கல்வி அமைப்பைக் குறைந்த செலவில் கிடைக்கச் செய்ய வேண்டும். வினாத்தாள் கசிவில் ஈடுபடும் 'தேர்வு மாஃபியாக்கள்' மீது புதிதாக முன்மொழியப்பட்டுள்ள சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.</p><p>தர்மேந்திர பிரதானின் ராஜினாமா மற்றும் மாணவர்களுக்கான இழப்பீடு, போராட்ட வழக்குகள் வாபஸ் போன்ற மத்திய அரசின் உறுதிமொழிகளைத் தொடர்ந்து, 40 நாட்களுக்கும் மேலாக நீடித்த மாணவர் போராட்டம் தற்காலிகமாகக் திரும்பப் பெறப்பட்டுள்ளது. </p><p>எனினும், புதிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையிலான கல்வித் துறை விரைந்து நடவடிக்கை எடுத்து மாணவர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும் என்று கல்வியாளர்களும் மாணவர்களும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கார்கில் வெற்றி தினம்: போர் நினைவிடத்தில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மரியாதை</title><link>https://www.maalaimalar.com/news/national/rajnath-singh-lays-wreath-at-the-kargil-war-memorial-to-pay-tribute-to-bravehearts-who-laid-down-their-lives-in-kargil-war-in-1999</link><comments>https://www.maalaimalar.com/news/national/rajnath-singh-lays-wreath-at-the-kargil-war-memorial-to-pay-tribute-to-bravehearts-who-laid-down-their-lives-in-kargil-war-in-1999#comments</comments><guid isPermaLink="false">1f64be70-bf3f-4295-af0e-cbc30c3d944e</guid><pubDate>Sun, 26 Jul 2026 04:45:47 +0000</pubDate><atom:updated>2026-07-26T04:45:47.074Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rajnath Singh,Kargil Vijay Diwas,கார்கில் வெற்றி தினம்,ராஜ்நாத் சிங்,kargil war memorial,கார்கில் போர் நினைவு சின்னம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/vxq2twiq/rajnath.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rajnath singh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/vxq2twiq/rajnath.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜம்மு காஷ்மீரில் உள்ள கார்கில் பகுதியை கடந்த 1999-ம் ஆண்டு ஆக்கிரமிக்க பாகிஸ்தான் முயற்சி செய்தது. இதனை நம் இந்திய ராணுவ வீரர்கள் தீரத்துடன் எதிர்கொண்டு முறியடித்தனர்.</p><h2>கார்கில் வெற்றி தினம்</h2><p>போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கார்கில் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த கார்கில் வெற்றி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கார்கில் வெற்றி தின 27-ம் ஆண்டு ஆகும். இதையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது.</p><p>இன்றைய தினத்தில் போர் நினைவு சின்னத்தில் தலைவர்கள் மற்றும் ராணுவ தளபதிகள் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவார்கள்.</p><p>கார்கில் போர் வெற்றி தின கொண்டாட்டங்கள் நாடு முழுக்க களைகட்டின. அரசியல் தலைவர்கள், ராணுவம், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலதரப்பினரும் போரில் உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.</p><p>இந்தியா-பாகிஸ்தான் இடையிலான கார்கில் போர் 27வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று காலை பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் லடாக்கில் உள்ள டிராஸ் பகுதிக்குச் சென்றார்.</p><h2>ராஜ்நாத் சிங் மரியாதை</h2><p>அங்குள்ள போர் நினைவிடத்தில் உயிர்நீத்த வீரர்களுக்கு அவர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.</p><p>முன்னதாக, லடாக் யூனியனில் உள்ள கார்கில் பகுதியில் குளிர் காலத்தில் வெப்பநிலை மைனஸ் 48 டிகிரி செல்சியஸ். 1999 ஏப்ரலில் பாகிஸ்தான் ராணுவம், பயங்கரவாதிகளுடன் ஊடுருவியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 'ஆபரேஷன் விஜய்' பெயரில் இந்திய ராணுவம் போரிட்டு பாகிஸ்தானை வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் தோல்விதான் இளைஞர்களின் போராட்டம்: ஜனநாயகத்திற்கான ஆக்சிஜன்- உத்தவ் தாக்கரே</title><link>https://www.maalaimalar.com/news/national/uddhav-thackeray-cjp-protest-failure-of-central-govt-opposition</link><comments>https://www.maalaimalar.com/news/national/uddhav-thackeray-cjp-protest-failure-of-central-govt-opposition#comments</comments><guid isPermaLink="false">a8c844e1-cfdb-43f1-86ad-c770437d4c21</guid><pubDate>Sun, 26 Jul 2026 04:39:34 +0000</pubDate><atom:updated>2026-07-26T04:39:34.877Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உத்தவ் தாக்கரே,தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,Uddav thackeray,CJP Protest,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/mjafyy7g/UddhavThackeray0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Uddhav Thackeray]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/mjafyy7g/UddhavThackeray0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவு ஏற்படும் போதெல்லாம் அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவிப்பார்கள். பின்னர் அந்த பிரச்சினை அப்படியே அடங்கிவிடும்.</p><p>2026-2027-ம் ஆண்டுக்கான UG மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. அப்போது வினாத்தாள் லீக் ஆனது. இதனைத் தொடர்ந்து தேர்வு ரத்து செய்யப்பட்டு மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது.</p><p>இந்த முறை <a href="https://www.maalaimalar.com/news/national/cjp-volunteers-cleaning-the-streets-at-jantar-mantar">கரப்பான்பூச்சி ஜனதா கட்சி</a> நீட் கசிவு பிரச்சினையை கையில் எடுத்தது. தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடந்த ஜூன் 20-ந்தேதி போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டத்திற்கு நாடு முழுவதும் இருந்து மாணவர்கள், இளைஞர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதன் தொடர்பாக நேற்று தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். இது மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் வெற்றியாக கருதப்படுகிறது.</p><p>இந்த நிலையில், சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே, மாணவர்களின் போராட்டம் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் தோல்விகளை வெளிப்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக உத்தவ் தாக்கரே கூறியதாவது:-</p><p>மக்களுக்குச் சிறை அல்லது துப்பாக்கிகளைக் கண்டு அச்சம் இல்லாதிருப்பது பாராட்டுக்குரியது. அதேவேளையில், இது ஆளும் கட்சிக்கு ஆபத்தான ஒன்றாகவும் உள்ளது.</p><h2>ஆளும் கட்சியின் தோல்விகள்</h2><p>இப்போராட்டங்கள், ஏறக்குறைய அழிவின் விளிம்பில் இருந்த ஜனநாயகத்திற்குப் புத்துயிர் அளித்துள்ளன.</p><p>CJP-யின் போராட்டம் என்பது ஆளும் கட்சியின் தோல்வி மட்டுமல்ல, எதிர்க்கட்சியின் தோல்வியும்கூட. இதை நான் முன்பே குறிப்பிட்டிருந்தேன். அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கையை நாடு இழந்துவிட்டது.</p><p>டெல்லி முதல் மும்பை வரை, மக்கள் அச்சத்தைத் தாண்டி வந்துவிட்டதை நான் உணர்ந்துள்ளேன். இதுவரை துப்பாக்கி முனையில் வைக்கப்பட்டிருந்த மக்கள், இப்போது தங்கள் உயிருக்கு அஞ்சும் நிலையை உதறிவிட்டு வீதிகளில் இறங்கியுள்ளனர்.</p><p>மத்திய அரசு முழுமையாகத் தோல்வியடைந்துவிட்டது. அவர்கள் நாட்டை முற்றிலுமாகச் சீரழித்துவிட்டனர். இளைஞர்களைக் கரப்பான் பூச்சிகள் என்று அழைப்பது அவர்களை அவமதிப்பதாகும்.</p><p>தர்மேந்திர பிரதான் ராஜினாமாவைத் தொடர்ந்து மாணவர்கள் மீது எந்த வழக்கும் பதியக் கூடாது. உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட 3 முக்கிய கோரிக்கைகள் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசு முன் வைக்கப்பட்டது. இதில் வழக்கு பதியப்படாது என்ற கோரிக்கை ஏறு்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் பார் தொடங்குவதற்கான விதிகள் தளர்வு: தமிழக அரசு புதிய நடவடிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-bar-rules-relaxed-new-move-by-tamil-nadu-govt</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-bar-rules-relaxed-new-move-by-tamil-nadu-govt#comments</comments><guid isPermaLink="false">d3d12106-0d5e-48f6-bd7a-4bb4b5f25288</guid><pubDate>Sun, 26 Jul 2026 04:06:53 +0000</pubDate><atom:updated>2026-07-26T04:06:53.927Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu government,டாஸ்மாக் பார்,Tasmac Bar,தமிழக அரசு.,wineshop,மதுக்கடை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/1anuumb4/tasmac.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TASMAC Bar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/1anuumb4/tasmac.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுடன் இணைந்து இயங்கும் பார்களைத் தொடங்குவது மற்றும் உரிமம் வழங்குவது தொடர்பாகப் புதிய தளர்வுகளையும் விதிமுறை மாற்றங்களையும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.</p><h2><strong>100 மீட்டர் சுற்றளவில் பார் அமைக்க அனுமதி:</strong></h2><p>இதுவரை டாஸ்மாக் மதுக்கடையை ஒட்டியே (இணைந்தே) பார் தொடங்க அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், இனி மதுக்கடையில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் பார்களைத் அமைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட உள்ளது.</p><h2><strong>பார் பரப்பளவு அதிகரிப்பு:</strong></h2><p>பார் அமைப்பதற்கான குறைந்தபட்ச இடத்தின் பரப்பளவு '15 சதுர மீட்டரில் இருந்து 20 சதுர மீட்டராக' உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பார்களில் கூடுதல் இடவசதி மற்றும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.</p><h2>ஏ<strong>கபோக உரிம நடைமுறைக்குச் முடிவு:</strong></h2><p>புதிய டெண்டர் மற்றும் தளர்வு விதிமுறைகளின் மூலம் குறிப்பிட்ட நபர்கள் அல்லது குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்கள் மட்டுமே தொடர்ந்து பார் நடத்தும் பழைய நடைமுறை மாற்றப்பட்டு, புதிய நபர்களுக்கும் ஏலம்/டெண்டரில் பங்கேற்க வாய்ப்பு உருவாகும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2><strong>டெண்டர் புதுப்பித்தல்:</strong></h2><p>டாஸ்மாக் பார்களுக்கான பழைய உரிமக் காலம் அண்மையில் நிறைவடைந்த நிலையில், புதிய டெண்டர் விதிமுறைகளை இறுதி செய்யும் வரை தற்காலிகமாக பார்களின் இயக்கம் நீட்டிக்கப்பட்டிருந்தது.</p><h2><strong>கட்டுப்பாடுகள் தீவிரமாக்கம்:</strong></h2><p>பார் அமைப்பதற்கான இட அமைப்பில் தளர்வுகள் தரப்பட்டாலும், பார்களில் பீடி-சிகரெட் விற்பனைக்கான தடை, சிற்றுண்டி மற்றும் குடிநீரை அதிக விலைக்கு விற்கக் கூடாது போன்ற இதர கட்டுப்பாடுகள் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து - 2 பேர் பலி என தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/firecracker-factory-explosion-in-sivakasi-2-killed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/firecracker-factory-explosion-in-sivakasi-2-killed#comments</comments><guid isPermaLink="false">88d03f9b-3963-4196-bacd-db6fdee53653</guid><pubDate>Sun, 26 Jul 2026 04:02:44 +0000</pubDate><atom:updated>2026-07-26T04:02:44.187Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>fire accident,Sivakasi accident,சிவசாசி வெடி விபத்து,சிவசாசி பட்டாசு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/l9zs7bw9/Untitled-design-75.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sivakasi Fire Accident: Two killed, several injured in fireworks warehouse blast]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/l9zs7bw9/Untitled-design-75.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டி கிராமத்தில் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த குடோனில் வெடி விபத்து ஏற்பட்டது.</p><p>இதையடுத்து அந்த இடம் கரும்புகை மூட்டத்துடன் காணப்பட்டது. இந்த விபத்து குறித்து அந்த பகுதி மக்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.</p><p>தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், தண்ணீரை கொண்டு பீச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். </p><p>இந்த விபத்தில் இரண்டு பேர் பலத்த காயமடைந்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஒருவர் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>இந்த விபத்தில் மேலும் பல பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தேர்தலில் போட்டியிடும் வயது வரம்பை 21 ஆக குறைக்க வேண்டும்: தெலுங்கானாவில் தீர்மானம் நிறைவேற்ற ரேவந்த் ரெட்டி முடிவு</title><link>https://www.maalaimalar.com/news/national/revanth-reddy-telangana-assembly-lower-minimum-age-to-contest-ls-assembly-polls-to-21</link><comments>https://www.maalaimalar.com/news/national/revanth-reddy-telangana-assembly-lower-minimum-age-to-contest-ls-assembly-polls-to-21#comments</comments><guid isPermaLink="false">b33059e7-c7c0-4323-a5cc-9a9992a9e7e9</guid><pubDate>Sun, 26 Jul 2026 03:39:38 +0000</pubDate><atom:updated>2026-07-26T03:39:38.786Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords></media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/po1qdyhg/RevanthReddy001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Revanth Reddy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/po1qdyhg/RevanthReddy001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வு வினாத்தாள் லீக் விவகாரம் தொடர்பாக தெலுங்கானா மாநிலத்தில் மெழுகுவர்த்தி ஏந்திச் செல்லும் பேரணி நடைபெற்றது. இதில் அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி கலந்து கொண்டார். இதில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:-</p><p>ஆகஸ்ட் முதல் வாரத்தில் நாங்கள் சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட இருக்கிறோம். எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.-க்கள் பதவிக்கு போட்டியிடுவதற்கான வயது வரம்பை 21 ஆக குறைக்கும் வகையில் அரசியலமைப்ப சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பாக  விவாதம் நடத்தி, தீர்மானம் நிறைவேற்றுவோம்.</p><h2>Gen Z போராட்டம்</h2><p>Gen Z போராட்டம் 56 இன்ஞ் மார்பு கொண்ட பிரதமர் மோடியை வீழ்த்தியுள்ளது. தர்மேந்திர பிரதானை அவரது பதவியில் இருந்து வலுக்கட்டாயமாக நீக்கச் செய்துள்ளது.</p><p>இந்தியாவில் Gen z-ன் மக்கள் தொகை 30 சதவீதம் ஆகும். ஆனால் மக்களவையில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான நபர்களே இருக்கிறார்கள். 21 வயதிற்கு மேற்பட்டோர் அமைச்சராக இருக்கும் நிலை ஏற்பட்டால், நாட்டின் எதிர்காலம் கட்டாயம் மாற்றம் அடையும்.</p><p>அவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். ஜெர்மனி மற்றும் இங்கிலாந்தில் 18 வயது இளைஞர்களால் பிரதமர் மற்றும் ஜனாதிபதியாக ஆக முடியும். சிங்கப்பூரில் கூட 21 வயதுடையோர் பிரதமராக முடியும்.</p><h2>Gen z குரல் உலகம் முழுவதும் கேட்க வேண்டும்</h2><p>ராகுல் காந்தி பிரதமரானால், Gen Z தலைவர் மத்திய அமைச்சர் ஆக முடியும் என்பதற்கு என்னால் உறுதி அளிக்க முடியும். நான் இந்தியா பிளாக்கிடம் பேசுவேன். ஒவ்வொரு கட்சித் தலைவர்களையும் சந்திப்பேன். தெருக்களில் குரல் எழுப்பிய பிறகு, வெறுமனே வீட்டிற்கு அவர்கள் திரும்பக்கூடாது. இந்த இளைஞர்கள் பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும். Gen z குரல் உலகம் முழுவதும் கேட்க வேண்டும்.</p> <h2>ராஜீவ் காந்தி கொண்டு வந்த மாற்றம்</h2><p>21 வயதுடையோர் ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ், மேயர் பதவிகளுக்கு தகுதிடையவர்கள் ஆவார்கள். ராஜீவ் காந்தி வாக்காளர்களின் வயது வரம்பை 21-ல் இருந்து 18 ஆக குறைத்தார். நரசிம்ம ராவ், மேயர் மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களில் போட்டியிடுபவர்களின் வயதை 21 ஆக நிர்ணயித்தார். மாணவர்களின் கோரிக்கைகளை காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் எழுப்பும்.</p><p>இவ்வாறு ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஜந்தர் மந்தரில் அமைதி திரும்பியது: குப்பைகளை அகற்றிய கரப்பான் பூச்சி கட்சியினர்</title><link>https://www.maalaimalar.com/news/national/cjp-volunteers-cleaning-the-streets-at-jantar-mantar</link><comments>https://www.maalaimalar.com/news/national/cjp-volunteers-cleaning-the-streets-at-jantar-mantar#comments</comments><guid isPermaLink="false">3552fd91-3792-4067-98de-dd7db5892ca5</guid><pubDate>Sun, 26 Jul 2026 03:38:17 +0000</pubDate><atom:updated>2026-07-26T03:38:17.861Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணவர்கள் போராட்டம்,நீட் தேர்வு,Neet exam,CJP Protest,ஜந்தர் மந்தர்,jandar mandar,கரப்பான் பூச்சி கட்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/ouoqznj8/cjp1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CJP cleaning]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/ouoqznj8/cjp1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது. ஜூன் மாதத் தொடக்கத்தில் அபிஜீத் தீப்கே, டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்களைத் திரட்டி போராட்டத்தை முன்னெடுத்தார். சிஜேபி கட்சி ஜூன் 20 அன்று காலவரையற்ற போராட்டத்தை டெல்லி ஜந்தர் மந்தரில் தொடங்கியது. </p><h2>தீவிரமடைந்த போராட்டம்</h2><p>கரப்பான்பூச்சி கட்சி இளைஞர்களின் போராட்டம் காரணமாக கடந்த மாதம் 20-ம் தேதியிலிருந்து டெல்லி ஜந்தர் மந்தரில் பரபரப்பு நிலவியது.</p><p>குறிப்பாக, கடந்த 20-ம் தேதி நாடாளுமன்றம் நோக்கிய பேரணியில் வன்முறை ஏற்பட்ட பிறகு அவ்வப்போது இரவு நேரங்களில் கல் வீச்சு, தடியடி சம்பவங்கள் நடந்தன. இதனால், ஜந்தர் மந்தர் பகுதியே பதற்ற பூமியாக காணப்பட்டது. ஒருபுறம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குவிய, பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. இணைய சேவை துண்டிப்பு, மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல் என அப்பகுதியை சார்ந்த பொதுமக்களுக்கும் சிக்கல்கள் ஏற்பட்டன.</p><h2>தர்மேந்திர பிரதான் ராஜினாமா</h2><p>இதையடுத்து, நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். </p><p>மேலும், நீட் தேர்வு ரத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும், பேரணியில் பங்கேற்ற இளைஞர்கள்மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட வேண்டும் மற்றும் மாணவர்களை தாக்கிய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற 2 கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக மத்திய அரசு வாக்குறுதி அளித்தது.</p><p>இதன் அடிப்படையில் டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்களின் போராட்டம் வாபஸ் பெறுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் கரப்பான் பூச்சி இளைஞர்களின் 36 நாள் போராட்டம் வெற்றிகரமாக முடிந்திருக்கிறது.</p><h2>ஜந்தர் மந்தரில் மீண்டும் அமைதி</h2><p>இந்நிலையில், சுமார் ஒரு மாத காலத்துக்குப் பிறகு போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் வீடு திரும்பியதால் ஜந்தர் மந்தர் பகுதியில் மீண்டும் அமைதி திரும்பியது.</p><p>இரவோடு இரவாக பந்தல்களை அகற்றிய கரப்பான் பூச்சி கட்சியினர் அப்பகுதியில் சேர்ந்திருந்த குப்பைகளை எல்லாம் தாங்களே அகற்றினர். மீண்டும் அங்கு கூட்டம் கூடாதவாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>ஜெர்மனியில் பேரதிர்ச்சி: பெர்லின் &apos;ப்ரைட்&apos; பேரணியில் காரை ஏற்றித் தாக்குதல்-ஒருவர் பலி; 16 பேர் படுகாயம்!</title><link>https://www.maalaimalar.com/news/world/shock-in-germany-car-attack-at-berlin-pride-parade</link><comments>https://www.maalaimalar.com/news/world/shock-in-germany-car-attack-at-berlin-pride-parade#comments</comments><guid isPermaLink="false">07e58e52-8065-475d-881c-c161973718cf</guid><pubDate>Sun, 26 Jul 2026 03:34:51 +0000</pubDate><atom:updated>2026-07-26T03:34:51.016Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பெர்லின்,ஜெர்மனி,Germany,Berlin,Pride parade,ப்ரைட் பேரணி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/3eefbhvu/nerlin.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Berlin Pride parade ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/3eefbhvu/nerlin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்ற ஆசிய-ஐரோப்பிய அளவிலான மிகப்பெரிய 'கிறிஸ்டோபர் ஸ்ட்ரீட் டே' 'ப்ரைட்' பேரணியின் நிறைவுப் பகுதியில், வெள்ளை நிற கார் ஒன்று கூட்டத்திற்குள் அதிவேகமாகப் புகுந்து நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 16 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>நேற்று இரவு சுமார் 10:00 மணியளவில், பெர்லினின் பிராண்டன்பெர்க் கேட் அருகே அமைந்துள்ள 'டீர்கார்ட்டன்' பூங்கா பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. மக்கள் அமைதியான முறையில் இசைக் கச்சேரியைக் கண்டுகளித்துக் கொண்டிருந்தபோது, கூட்டத்திற்குள் அதிவேகமாக நுழைந்த வெள்ளை நிற கார், மக்கள் மீது மோதியதுடன் மரத்தின் மீதும் மோதி நின்றது. வாகனத்தை ஓட்டி வந்த நபர் உடனடியாக தப்பி ஓடிவிட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.</p><p>இத்தாக்குதலில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். காயமடைந்த 16 பேரில் 3 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மூலம் காயமடைந்தவர்கள் பெர்லினின் பல்வேறு மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.</p><h2><strong>சந்தேக நபர்:</strong></h2><p>தாக்குதல் நடத்திய நபர் பெர்லினின் இஸ்லாமிய அமைப்புகளுடன் தொடர்புடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பெர்லின் காவல் துறை செய்தித் தொடர்பாளர் ஃபுளோரியன் நாத் தெரிவித்துள்ளார். குற்றவாளியைப் பிடிக்க நகரம் முழுவதும் 2,200-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.</p><h2><strong>நிகழ்ச்சி ரத்து:</strong></h2><p>தாக்குதலைத் தொடர்ந்து, நள்ளிரவு வரை நடைபெறவிருந்த அனைத்துப் பேரணிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் உடனடியாக ரத்து செய்யப்பட்டு, மக்களைப் பாதுகாப்பான வழிகளில் வீடுகளுக்குச் செல்லுமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர்.</p><h2><strong>அரசியல் தலைவர்களின் கண்டனம்:</strong></h2><p>இக்கொடூரத் தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள சான்சலர் மெர்ஸ், "இந்த வன்முறைச் செயல் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படும்" என உறுதி அளித்துள்ளார். இவரை தொடர்ந்து, பெர்லின் மேயர் காய் வேக்னர் "நமது சுதந்திரமான மற்றும் சமூகத்தின் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் இது. நமது வாழ்வியலையும் சுதந்திரத்தையும் யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டோம்" என்று தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சீனாவை அச்சுறுத்தும் &apos;நவுல்&apos; புயல்: குவாங்டாங் கடலோரப் பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கை; விமானங்கள், ரயில்கள் ரத்து!</title><link>https://www.maalaimalar.com/news/world/noul-typhoon-prompts-red-alert-in-guangdong-flights-and-trains-suspended</link><comments>https://www.maalaimalar.com/news/world/noul-typhoon-prompts-red-alert-in-guangdong-flights-and-trains-suspended#comments</comments><guid isPermaLink="false">cded5d1e-8ebd-49a2-8e2e-832ccc2851bf</guid><pubDate>Sun, 26 Jul 2026 03:04:59 +0000</pubDate><atom:updated>2026-07-26T03:04:59.986Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>China,சீனா,Red Alert,Typhoon Noul,நவுல் புயல்,சிவப்பு எச்சரிக்கை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/aarso1dd/Untitled-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ China Typhoon Noul ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/aarso1dd/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சீனாவின் தெற்கு கடலோரப் பகுதியை நோக்கி அதிவேகமாக நகர்ந்து வரும் 'நவுல்' (Typhoon Noul) புயல் காரணமாக, நாட்டின் தேசிய வானிலை மையம் மிக உயர்ந்த அபாய எச்சரிக்கையான 'சிவப்பு எச்சரிக்கையை' விடுத்துள்ளது. நடப்பு ஆண்டின் 12-வது புயலான இது, குவாங்டாங் மாகாணத்தின் கடலோரப் பகுதியில் தீவிரமாகத் தாக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>புயலின் மையம் :</strong></h2><p>சீன தேசிய வானிலை மையத்தின் (NMC) தகவல்படி, புயலின் மையம் குவாங்டாங் மாகாணத்தின் ஹுய்ஜோ நகருக்கு உட்பட்ட ஹுய்ஜோங் பகுதிக்கு தென்கிழக்கே சுமார் 100 கி.மீ தொலைவில் கடலில் மையம் கொண்டுள்ளது. இது வடமேற்கு திசையை நோக்கி மணிக்கு 20 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.</p><h2><strong>காற்றின் வேகம்:</strong></h2><p>புயல் மையத்திற்கு அருகே சுழன்றடிக்கும் காற்றின் வேகம் 'ஃபோர்ஸ் 14' (Force 14-சுமார் மணிக்கு 150 கி.மீ-க்கும் மேல்) என்ற அளவில் மிகத் தீவிரமாக உள்ளது. கரையை நெருங்க நெருங்க இதன் வீரியம் மேலும் அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>ஹாங்காங்கில் அவசரநிலை:</strong></h2><p>புயல் நெருங்குவதை அடுத்து, ஹாங்காங் அரசு உடனடியாக அவசரகால நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. முன்னெச்சரிக்கையாக 410-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட அதிவேக ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. உள்துறை நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்காக 28 அவசரகால நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.</p><h2><strong>அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:</strong></h2><p>சீனாவின் வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் வறட்சி நிவாரண தலைமையகம், குவாங்டாங் மாகாணத்திற்கான அவசரகாலப் பாதுகாப்பு நிலையை 'லெவல் III' ஆக உயர்த்தியுள்ளது. மேலும், அருகில் உள்ள ஜியாங்சி மற்றும் ஹுனான் மாகாணங்களுக்கு 'லெவல் IV' வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>வானிலை நிலவரம்:</strong></h2><p>நவுல் புயல் குவாங்டாங் கடலோரப் பகுதியில் கரையைக்கடந்த பிறகு, வடமேற்கு மற்றும் வடக்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதன் தாக்கத்தால் ஃபூஜியான், ஜியாங்சி, ஹெனான், ஹுபெய், ஹுனான், குவாங்டாங் மற்றும் குவாங்சி ஆகிய தென் மற்றும் மத்திய சீன மாகாணங்களில் பலத்த சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>உலக ஜூனியர் ஸ்குவாஷ்: முதல் முறை சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்த அனாஹத் சிங்</title><link>https://www.maalaimalar.com/sports/anahat-singh-scripts-history-becomes-1st-indian-to-win-junior-world-championship</link><comments>https://www.maalaimalar.com/sports/anahat-singh-scripts-history-becomes-1st-indian-to-win-junior-world-championship#comments</comments><guid isPermaLink="false">c73111df-116f-47f8-8b81-830142b1e8b0</guid><pubDate>Sun, 26 Jul 2026 02:49:03 +0000</pubDate><atom:updated>2026-07-26T02:49:03.378Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>anahat singh,அனாஹத் சிங்,World Junior Squash,உலக ஜூனியர் ஸ்குவாஷ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/v4e6s01i/anahat.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ anahat singh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/v4e6s01i/anahat.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>க​ன​டா​வின் ஆன்​டாரியோ நகரில் உலக ஸ்கு​வாஷ் ஜூனியர் தனி​நபர் சாம்​பியன்​ஷிப் நடை​பெற்றது.</p><p>இதில் பெண்கள் பிரிவு இறுதிச்சுற்​றில் உலகத் தரவரிசை​யில் 20-வது இடத்​தில் உள்ள இந்​தி​யா​வின் அனாஹத் சிங், எகிப்​தின் ருகையா சலேம் உடன் மோதி​னார்.</p><h2>சாதனை படைத்த அனாஹத் சிங்</h2><p>இந்த மோதலில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D">அனாஹத் சிங்</a> 11-3, 11-7, 11-9 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தார்.</p><p>முன்னதாக, இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா கடந்த 2005-ம் ஆண்டில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார்.</p><p>கடந்த ஆண்டு நடந்த சாம்பியன்ஷிப் போட்டியில் அனாஹத் சின் வெண்கலப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>கணவன்- மனைவி தகராறுக்கு பழிவாங்க குடும்பத்தினர் மீது வழக்கு போடுவது குறித்து சுப்ரீம் கோர்ட்டு கவலை</title><link>https://www.maalaimalar.com/news/national/supreme-court-expresses-concern-over-filing-cases-against-family-members-to-exact-revenge-in-husband-wife-disputes</link><comments>https://www.maalaimalar.com/news/national/supreme-court-expresses-concern-over-filing-cases-against-family-members-to-exact-revenge-in-husband-wife-disputes#comments</comments><guid isPermaLink="false">5b43e4b4-b52c-4f94-9599-fb9b33257ec4</guid><pubDate>Sun, 26 Jul 2026 02:27:32 +0000</pubDate><atom:updated>2026-07-26T02:27:32.074Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,Divorce case,உச்சநீதிமன்றம்,விவாகரத்து வழக்கு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/z9uasz4c/SupremeCourt0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Supreme Court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/z9uasz4c/SupremeCourt0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கணவன்- மனைவி இடையேயான தகராறுகளுக்கு பழிவாங்க குடும்பத்தினர் மீது வழக்கு போடுவது குறித்து <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/excluding-married-women-from-their-natal-families-is-unfair-supreme-court">சுப்ரீம் கோர்ட்டு</a> கவலை தெரிவித்து உள்ளது.</p><h2>விவாகரத்து பெற்ற தம்பதி</h2><p>மராட்டிய மாநிலம் புனேயை சேர்ந்த ஒரு தம்பதியர் கடந்த 2023-ம் ஆண்டு பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகனும், இரட்டை பெண் குழந்தைகளும் உள்ளனர். அவர்களை பராமரிப்பது தொடர்பாக கணவன்- மனைவிக்கு இடையே எழுந்த தகராறு காரணமாக இருவரும் அடுத்தவரின் குடும்பத்தினரை வழக்கில் சிக்க வைத்து உள்ளனர்.</p><p>அந்த வகையில் இரட்டை பெண் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக தாய் மாமன் மீது அந்த கணவன் புகார் அளித்து உள்ளார். அதற்கு பதிலடியாக மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கணவரின் சகோதரி மீது அந்த மனைவி புகார் அளித்தார். இந்த புகார்களின்பேரில் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்துள்ளனர்.</p><h2>போக்சோ வழக்கு தள்ளுபடி</h2><p>இந்த நிலையில் தன் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்யுமாறு சிறுவனின் அத்தை மும்பை ஐகோர்ட்டை நாடினார். ஆனால் அதை விசாரித்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்ய மறுத்தனர். இதை எதிர்த்து அவர் சுப்ரிம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இதை நீதிபதிகள் பர்திவாலா, வினோத் சந்திரன் அமர்வு விசாரித்தது. பின்னர் சிறுவனின் அத்தை மீதான போக்சோ வழக்கை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அப்போது நீதிபதிகள் பல்வேறு கவலைகளையும் வெளியிட்டனர்.</p><p>அவர்கள் கூறியதாவது:-</p><p>பொதுவாக திருமண வாழ்வில் கணவன்- மனைவி இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் எழும் வழக்குகளில், பழி வாங்குவதற்காக மாமியார்- மாமனாரை இழுத்து வருவது சர்வ சாதாரணம். மேலும், ஒருவரையொருவர் பழிசுமத்துவதற்காகப் பிள்ளைகளும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறார்கள்.</p><h2>அதிர்ச்சி அடைந்தோம்</h2><p>ஆனால் இங்கு, தனது மகன் அவனது தந்தை வழி அத்தையால் தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறான் என்று விவாகரத்து பெற்ற தாய் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகளால் நாங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளோம்.</p><h2>பழிவாங்கும் பதிலடி</h2><p>சிறுவனின் இரட்டை சகோதரிக்கு எதிராக தாய்மாமா மீது அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டை முன்வைத்த தந்தையால் பதிவு செய்யப்பட்ட வழக்குக்கு பதிலடியாக இந்த வழக்கானது பதியப்பட்டு உள்ளது. தாய்வழி உறவினர்களுக்கு எதிராக தந்தை வழக்கு பதிவு செய்த பின்னரே இந்த குற்றச்சாட்டுகள் வெளிவந்தன. இது குழந்தைகளுக்கு எதிரான உண்மையான குற்றச்சாட்டாக இல்லாமல், குழந்தை பராமரிப்பு உரிமை போராட்டத்தில் இருந்து பிறந்த ஒரு கசப்பான பழிவாங்கும் பதிலடி என்பது அம்பலமாகிறது.</p><p>இவ்வாறு நீதிபதிகள் அதிர்ச்சி மற்றும் கவலையுடன் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சபரிமலையில் புதிய தந்திரியாக கண்டரரு பிரம்ம தத்தன் தேர்வு</title><link>https://www.maalaimalar.com/news/national/kandararu-brahmadathan-to-be-new-sabarimala-tantri</link><comments>https://www.maalaimalar.com/news/national/kandararu-brahmadathan-to-be-new-sabarimala-tantri#comments</comments><guid isPermaLink="false">ba44acd4-ab02-4d5b-87df-039682b5c0ff</guid><pubDate>Sun, 26 Jul 2026 02:14:17 +0000</pubDate><atom:updated>2026-07-26T02:14:17.341Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>sabarimalai,சபரிமலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/5eafj6qi/KandararuBrahmadathan0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kandararu Brahmadathan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/5eafj6qi/KandararuBrahmadathan0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/sabarimala-ayyappa-temple-to-be-opened-this-evening">சபரிமலை</a> அய்யப்பன் கோவிலில் தற்போது தந்திரியாக கண்டரரு மகேஷ் மோகனரு உள்ளார். இவரது பணிக்காலம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 17-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து செங்கன்னூர் தாளமண் குடும்பத்தை சேர்ந்த ஒருவரை புதிய தந்திரியாக தேர்வு செய்ய திருவிதாங்கூர் தேவஸ்தானம் நடவடிக்கை மேற்கொண்டு வந்தது.</p><p>இந்த நிலையில் மூத்த தந்திரி கண்டரரு ராஜீவரரு மீதான வழக்கு காரணமாகவும், உடல்நிலையை கருத்தில் கொண்டும் அவர் தந்திரி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த போது அவரது மகன் கண்டரரு பிரம்ம தத்தனை நியமிக்க முன் மொழிந்து இருந்தார். இதையடுத்து தந்திரிக்கான அவரது தகுதியை உறுதி செய்ய காளிதாஸ் பட்டதிரிப்பாடு, சர்மன் வாசுவேன் பட்டதிலப்பாடு மற்றும் சுப்ரமணியன் நம் பூதிரி ஆகியோர் அடங்கிய ஆன்மிக பண்டிதர் நிபுணர் குழு அமைக்கப்பட்டது.</p><p>அவர்களின் சிபாரிசின் பேரில் சபரிமலை புதிய தந்திரியாக கண்டரரு பிரம்ம தத்தனை நியமிக்க திருவிதாங்கூர் தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான தீர்மான அறிக்கையை கேரள ஐகோர்ட்டின் தனி அமர்வுக்கு அனுப்பி வைத்து அதற்கான ஆணை பெறப்படும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.</p><p>புதிய தந்திரி அடுத்த மாதம் 18-ந்தேதி முதல் ஓராண்டு காலத்திற்கு சபரிமலை அய்யப்பன் கோவிலில் தந்திரியாக பணியாற்றுவார்.</p><p>சபரிமலையில் உள்ள காவல் தெய்வம் மற்றும் கதவுகளுக்கு தங்க தகடு பதிக்கப்பட்டபோது தங்கம் திருடப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் பலர் கைதானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2>கேரள ஐயப்பன் கோவில் நெய் விற்பனை முறைகேடு</h2><p>கேரளாவில் உள்ள சபரிமலை ஸ்ரீ தர்ம சாஸ்தா (ஐயப்பன்) கோவிலில் விற்பனை செய்யப்படும் அபிஷேக நெய்யில், கடந்த நவம்பர் 17, 2025 முதல் டிசம்பர் 27, 2025 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நிதி முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.</p><p>இந்த கால கட்டத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட 16,628 பாக்கெட் நெய்யில், திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஊழியர்கள் 43 பேர் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. நெய் பாக்கெட்டின் விற்பனைத் தொகை திருவிதாங்கூர் தேவசம் போர்டு செலுத்தப்படவில்லை என்றும், இதனால் ரூ.17 லட்சத்திற்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.</p><p>இதையடுத்து திருவிதாங்கூர் தேவசம் போர்டின் ஊழல் தடுப்புத் துறை அளித்த புகாரின் அடிப்படையில், கேரள உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து உடனடி குற்றவியல் விசாரணைக்கு உத்தரவிட்டது.</p><h2>நீதிபதிகள் விசாரணை</h2><p>இந்த வழக்கு குறித்து விசாரித்த நீதிபதிகள் வி.ராஜா விஜயராகவன் மற்றும் கே.வி. ஜெயக்குமார் அமர்வு, “இது ஊழல் தடுப்பு சட்டம் மற்றும் பாரதிய நியாய சம்ஹிதா ஆகியவற்றின் கீழ் குற்றங்களாக பதிவுசெய்யப்படும்.</p><p>குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக 1988 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், தண்டனைக்குரிய குற்றங்கள் ஏதேனும் நிரூபிக்கப்பட்டுள்ளனவா என்பதை ஆராய்ந்து, அந்த அறிக்கையை நான்கு வார காலத்திற்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இத்தகைய சூழ்நிலைகளில் இந்த விவகாரத்தை வெறும் நிர்வாக அலட்சியம் அல்லது குறைபாடுள்ள பதிவேடு என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்க முடியாது" என்று நீதிபதிகள் அமர்வு கூறியது.</p>]]></content:encoded></item><item><title>கடந்த 12 ஆண்டுகளில்  மருத்துவக் கல்லூரிகள், படிப்பு எண்ணிக்கை இரு மடங்குக்கு மேல் அதிகரிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/medical-colleges-and-seats-more-than-doubled-in-12-years</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/medical-colleges-and-seats-more-than-doubled-in-12-years#comments</comments><guid isPermaLink="false">351e2f80-284f-4a2f-a269-8e85672576c0</guid><pubDate>Sun, 26 Jul 2026 02:03:14 +0000</pubDate><atom:updated>2026-07-26T02:03:14.833Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>neet,நீட்,MBBS,மருத்துவ படிப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/r36vjfyh/MedicalCollege0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மருத்துவக் கல்லூரி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/r36vjfyh/MedicalCollege0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மருத்துவக் கல்வித்துறை கடந்த 12 ஆண்டுகளில் வரலாறு காணாத வளர்ச்சி கண்டிருக்கிறது. கல்லூரிகள், படிப்புகளுக்கான இடங்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது.</p><h2>மருத்துவ கல்வித்துறை</h2><p>ஒரு நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பின் முதுகெலும்பாக விளங்குவது அதன் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/two-more-days-granted-to-apply-for-mbbs">மருத்துவ கல்வித்துறை</a> ஆகும். வளர்ந்து வரும் மக்கள்தொகை மற்றும் புதிய நோய்களின் சவால்களை எதிர்கொள்ள போதுமான எண்ணிக்கையில் டாக்டர்களும், மருத்துவ வல்லுனர்களும் இருப்பது இன்றியமையாதது.</p><p>2014-க்கு முந்தைய காலக்கட்டத்தில், இந்தியாவில் எம்.பி.பி.எஸ். (இளங்கலை) மற்றும் முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான இடங்களின் பற்றாக்குறை மிகத்தீவிரமாக இருந்தது.</p><p>இதனால் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் உயர்கல்விக்காக வெளிநாடுகளை நாடுகின்ற கட்டாயச் சூழல் நிலவியது. மேலும், உள்நாட்டில் டாக்டர்-மக்கள் விகிதமும் உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைக்கப்பட்ட தரத்தைவிட குறைவாகவே இருந்தது.</p><h2>12 ஆண்டுகளில்...</h2><p>இந்த சவால்களை எதிர்கொள்ளும் வகையில், மத்திய அரசு கடந்த 12 ஆண்டுகளில் (2014 முதல் 2026 வரையில்) மருத்துவ கல்வித்துறையில் கட்டமைப்பு ரீதியான அதிரடி மாற்றங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது.</p><p>இதன் விளைவாக, புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படுவதுடன், மருத்துவக் கல்லூரிகளிலும் இடங்கள் பெருமளவில் உயர்த்தப்பட்டு மருத்துவக்கல்வி அனைவருக்கும் எட்டக்கூடிய ஒன்றாக மாறி வருகிறது.</p><p>அந்த வகையில் 2014-ம் ஆண்டில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 387 ஆக இருந்த நிலையில், 2026-ல் 844 ஆக அதிகரித்திருக்கிறது. இது 118.1 சதவீதம் அதிகம்.</p><h2>இருமடங்குக்கு மேல் அதிகரிப்பு</h2><p>இளங்கலை எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பில் 2014-ல் 51 ஆயிரத்து 348 இடங்கள் இருந்த சூழலில், 2026-ல் 1 லட்சத்து 39 ஆயிரத்து 489 ஆக உயர்ந்திருக்கிறது. முதுகலை மருத்துவ படிப்பு இடங்கள் 2014-ல் 31 ஆயிரத்து 185 ஆக இருந்து, இப்போது 86 ஆயிரத்து 360 ஆக அதிகரித்துள்ளது. அந்தவகையில் 12 ஆண்டுகளில் 2 மடங்குக்கு மேல் மருத்துவக் கல்லூரிகள், படிப்புகளுக்கான இடங்கள் அதிகரித்திருக்கின்றன.</p><p>மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கல்வி இடங்களின் இந்த கணிசமான உயர்வு, பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் மருத்துவ கனவை உள்நாட்டிலேயே நனவாக்குவதுடன், வெளிநாடுகளை சார்ந்திருக்கும் நிலையை மாற்றி அமைத்துள்ளது. எதிர்காலத்தில் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சமமான மற் றும் தரமான மருத்துவ சேவைகள் தடையின்றி கிடைப்பதை இந்த துணிச்சலான கல்வி விரிவாக்கம் உறுதி செய்யும் என்பகில் சந்தேகம் இல்லை.</p>]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 26 ஜூலை 2026: பிரதோஷம்</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-26-july-pradosham</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-26-july-pradosham#comments</comments><guid isPermaLink="false">29874de9-2fe5-48d5-a13d-92c4065474d5</guid><pubDate>Sun, 26 Jul 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-07-26T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/03/02/27178598-sivan9.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sivan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/03/02/27178598-sivan9.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம் </h2><p>பராபவ ஆண்டு ஆடி-10 (ஞாயிற்றுக்கிழமை) </p><p>பிறை : வளர்பிறை</p><p>திதி : துவாதசி பிற்பகல் 3.51 வரை பிறகு திரயோதசி</p><p>நட்சத்திரம் : கேட்டை காலை 10.01 வரை பிறகு மூலம்</p> <p>யோகம் : மரண / அமிர்தயோகம்</p><p>ராகு காலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை</p><p>எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை</p><p>சூலம் : மேற்கு</p><p>நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை</p> <h2>சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை</h2><p>பிரதோஷம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் காளிங்க நர்த்தனம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் காமதேனு வாகனத்தில் திருவீதியுலா. சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் பால் அபிஷேகம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர் பெருமாள் கோவில்களில் காலை அலங்கார திருமஞ்சனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம்.</p><p>திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சனம். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், தஞ்சை புன்னை நல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை ஸ்ரீ சுவாமி ஸ்ரீ அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம்-ஆர்வம்</p><p>ரிஷபம்-முயற்சி</p><p>மிதுனம்-பெருமை</p><p>கடகம்-இன்பம்</p><p>சிம்மம்-உற்சாகம்</p><p>கன்னி-உதவி</p> <p>துலாம்-யோகம்</p><p>விருச்சிகம்-சாதனை</p><p>தனுசு-ஆக்கம்</p><p>மகரம்-பரிசு</p><p>கும்பம்-நன்மை</p><p>மீனம்-உண்மை</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்றைய நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-diesel-price-status-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-diesel-price-status-in-chennai#comments</comments><guid isPermaLink="false">9c3baff7-8e28-4520-9b5e-74edac8fd10b</guid><pubDate>Sun, 26 Jul 2026 01:26:54 +0000</pubDate><atom:updated>2026-07-26T01:26:54.709Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல்,Petrol,Crude oil,deisel,கச்சா எண்ணெய்,,டீசல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-10/cf7voyax/Petrol-diesel-price.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ petrol, diesel]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-10/cf7voyax/Petrol-diesel-price.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் போர் ஓய்ந்து ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டு மத்திய கிழக்கில் இருந்து கச்சா எண்ணெய் வரத்து அதிகரித்த ஒரு சில நாட்களில் மீண்டும் போர் மூண்டுள்ளதால் சர்வதேச கச்சா எண்ணெய் விலைகளில் மீண்டும் தாக்கம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.</p><h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.</p><h2>பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</h2><p>இந்நிலையில், இன்றைய (26.07.2026 - ஞாயிற்றுக்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>Today Rasipalan | இன்றைய ராசிபலன் 26.7.2026: இந்த ராசிக்காரர்களுக்கு யோகமான நாள் </title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasipalan-2672026-in-tamil</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasipalan-2672026-in-tamil#comments</comments><guid isPermaLink="false">dac9dd94-c8c1-4278-9b73-0fff5dc50e2e</guid><pubDate>Sun, 26 Jul 2026 00:55:17 +0000</pubDate><atom:updated>2026-07-26T00:55:17.564Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/11/19903158-raasi.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/11/19903158-raasi.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். மதியத்திற்கு மேல் பணநெருக்கடி அகலும்.</p><h2>ரிஷபம்</h2><p>திட்டமிட்ட காரியம் திசை மாறிச் செல்லும் நாள். வாயில் தேடி வந்த வரன்கள் கைநழுவிச் செல்லலாம். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும்.</p><h2>மிதுனம்</h2><p>வசந்த காலத்திற்கு வழிகாட்டும் நாள். சுபச்செலவுகள் உண்டு. பேச்சுத் திறமையால் சூழ்ச்சிகளில் இருந்து விடுபடுவீர்கள்.</p><h2>கடகம்</h2><p>யோகமான நாள். பயணத்தால் பால்ய நண்பர்கள் ஒருவரைச் சந்தித்து மகிழ்வீர்கள். தொலைபேசி வழித்தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணை புரியும்.</p><h2>சிம்மம்</h2><p>நினைத்தது நிறைவேறும் நாள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் முக்கியப் பொறுப்புகளை வழங்குவர்.</p><h2>கன்னி</h2><p>புதிய திருப்பங்கள் ஏற்படும் நாள். உறவினர்களின் ஒத்துழைப்பு உண்டு. தொழிலில் அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனை கைகொடுக்கும்.</p><h2>துலாம்</h2><p>மகிழ்ச்சி கூடும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். பயணத்தால் பலன் உண்டு. உத்தியோகத்தில் இழந்த வேலை மீண்டும் கிடைக்கும்.</p><h2>விருச்சிகம்</h2><p>சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக மாறும் நாள். பிரியமானவர்களோடு இருந்த பிரச்சனை அகலும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் நட்பு பலப்படும்.</p><h2>தனுசு</h2><p>கனவுகள் நனவாகும் நாள். தொட்ட காரியம் வெற்றி பெறும். சொத்துகளில் இருந்த வில்லங்கங்கள் விலகும். கல்யாணப் பேச்சுகள் முடிவாகும்.</p><h2>மகரம்</h2><p>தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும். திருமண பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். வருமானம் எதிர்பார்த்தபடியே வந்து சேரும்.</p><h2>கும்பம்</h2><p>தெய்வ நம்பிக்கை கூடும் நாள். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் உருவாகும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.</p><h2>மீனம்</h2><p>திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். வாகன பராமரிப்புச் செலவு உண்டு. உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட சலுகைகள் மீண்டும் கிடைக்கும்.</p>]]></content:encoded></item><item><title>இந்த ஆண்டின் மிகக் குறுகிய நாள் இன்று!.. </title><link>https://www.maalaimalar.com/news/world/shortest-day-recorded-earth-spins-065-milliseconds-faster-impacting-satellite-timing</link><comments>https://www.maalaimalar.com/news/world/shortest-day-recorded-earth-spins-065-milliseconds-faster-impacting-satellite-timing#comments</comments><guid isPermaLink="false">4ea95182-58f9-43e5-9859-cdb4b0b338dc</guid><pubDate>Sun, 26 Jul 2026 00:08:00 +0000</pubDate><atom:updated>2026-07-26T00:08:00.806Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வைரல்,viral,earth,பூமி,Science,அறிவியல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/jz3rrale/tn-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பூமி ]]></media:title><media:description type="html"><![CDATA[ பூமி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/jz3rrale/tn-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இன்று (ஜூலை 26 - ஞாயிற்றுக்கிழமை), இந்த ஆண்டின் மிகக் குறுகிய நாளாக பதிவாக உள்ளது. </p><h2>பூமியின் சுழற்சி</h2><p>பூமியின் சுழற்சி வேகம் எப்போதும் ஒரே சீராக இருப்பதில்லை.</p><p>நிலவின் ஈர்ப்பு விசை, பூமியின் உட்பகுதியில் உள்ள திரவங்களின் இயக்கம் மற்றும் வளிமண்டல மாற்றங்கள் ஆகியவை பூமியின் வேகத்தை தீர்மானிக்கின்றன.</p><p>2020ஆம் ஆண்டிலிருந்து பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகப் பலமுறை மிகவும் குறுகிய நாட்கள் பதிவாகியுள்ளன. </p><p>கடந்த 2025 ஜூலை 10 அன்று வழக்கத்தை விட 1.37 மில்லி வினாடிகள் குறைவாக பதிவானது.</p> <h2>இன்று</h2><p>இந்நிலையில் இன்று (ஜூலை 26 - 2026) வழக்கமான 24 மணி நேரத்தை விட பூமி தனது அச்சில் ஒரு முழு சுழற்சியை சுமார் 0.65 மில்லி வினாடிகள் அதிவேகமாக நிறைவு செய்யவுள்ளது என Timeanddate.com அறிக்கை தெரிவித்துள்ளது. </p><p>சர்வதேச புவி சுழற்சி மற்றும் குறிப்பு அமைப்பு (IERS) இதை கணித்துள்ளது. </p><p>கண் சிமிட்டும் நேரத்தை விட மிகக் குறைவான இந்த நேர மாற்றத்தை மனிதர்களால் உணர முடியாது.</p><p>கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த முறை சுழற்சி வேகம் சற்று குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p> <h2>ஏன் முக்கியம்?</h2><p>இந்த மில்லி வினாடி நேர வித்தியாசங்கள் உலகளாவிய <a href="https://www.maalaimalar.com/news/world/spacex-starship-13th-test-flight-marks-new-space-history-milestone">செயற்கைக்கோள் </a>அமைப்புகளுக்கு மிகவும் முக்கியமானவை.</p><p>ஜி.பி.எஸ் மற்றும் செயற்கைக்கோள்கள் பூமியின் துல்லியமான சுழற்சி நிலையையே அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றன.</p><p>நேரத்திலும் வேகத்திலும் ஏற்படும் மிகச்சிறிய மாறுபாடுகள்கூட, செயற்கைக்கோள் செலுத்தலில் இருப்பிடத்தைக் துல்லியமாகக் கணிப்பதில் பிழைகளை ஏற்படுத்தக்கூடும்.</p> <h2>குறையும் நீண்டகால சுழற்சி வேகம்</h2><p>குறுகிய காலத்தில் பூமி வேகமாகச் சுழன்றாலும், நீண்டகால நோக்கில் அதன் சுழற்சி வேகம் படிப்படியாகக் குறைந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.</p><p>புவி வெப்பமயமாதல் காரணமாக துருவப் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகி, அந்த நீர் பூமத்திய ரேகையை நோக்கி நகர்வதே இதற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.</p><p>வியன்னா மற்றும் சூரிச் பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் ஆய்வின்படி, இந்த மாறுபாடு நூற்றாண்டிற்கு 1.33 மில்லி வினாடிகள் என்ற வீதத்தில் நிகழ்கிறது. இது கடந்த 3.6 மில்லியன் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிவேகமானது.</p> ]]></content:encoded></item><item><title>ஆர்.எஸ்.எஸ் பின்புலம்.. கல்வித் துறைக்கு பொறுப்பேற்கும் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி யார்? கல்வித் தகுதி என்ன? </title><link>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-row-pralhad-joshi-with-rss-background-given-additional-charge-of-education-ministry</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-row-pralhad-joshi-with-rss-background-given-additional-charge-of-education-ministry#comments</comments><guid isPermaLink="false">2d662af2-a3e3-4ea4-86cb-0d1aa2124ce4</guid><pubDate>Sat, 25 Jul 2026 23:54:00 +0000</pubDate><atom:updated>2026-07-25T23:54:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords></media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/j6sxeoe1/tn-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரகலாத் ஜோஷி]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரகலாத் ஜோஷி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/j6sxeoe1/tn-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பான சிஜேபி தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்திற்கும் மேலான போராட்டத்தை தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/national/neet-scam-protest-victory-education-minister-dharmendra-pradhan-resigns-rahul-gandhi-says-time-to-oust-government">தர்மேந்திர பிரதான்</a> தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். </p><p>அவருக்கு பதில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கல்வித் துறை பொறுப்பு கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. </p><p>பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரையை ஏற்று, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்த நியமனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார். </p><p>தற்போதைய அமைச்சகப் பொறுப்புகளுடன் சேர்த்து இனி கல்வித் துறையையும் ஜோஷி கவனிப்பார்.</p>  <h2>பிரகலாத் ஜோஷி</h2><p>1962ஆம் ஆண்டு கர்நாடகாவின் விஜய்புரா பகுதியில் பிறந்த இவர், ஆர்எஸ்எஸ் அமைப்பில் தீவிரமாகப் பணியாற்றி பின்னர் பாஜக வழியாக அரசியலுக்கு வந்தவர்.</p><p>கர்நாடகாவின் தார்வாட் மக்களவைத் தொகுதியிலிருந்து 2004ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்.</p><h2>கல்வித் தகுதி</h2><p>இவர் கர்நாடகா பல்கலைக்கழகத்தின் கீழ் ஹூப்ளியில் இயங்கி வரும் கே.எஸ். ஆர்ட்ஸ் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றவர்.</p> <h2>முக்கியப் பொறுப்புகள்</h2><p>2019இல் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை, நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சராகப் பணியாற்றினார்.</p><p>2024இல் 3வது முறையாக ஆட்சி அமைத்த மோடி அமைச்சரவையில் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.</p> <h2>நிர்வாகம்</h2><p>போட்டித் தேர்வுகள், நீட் வினாத்தாள் கசிவு வழக்குகள் மற்றும் கல்வித் துறைச் சீர்திருத்த கோரிக்கைகள் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ள சூழலில், மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்த தலைவரான பிரகலாத் ஜோஷிக்கு இப்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p>நாடாளுமன்ற நடவடிக்கைகளை சீராக நடத்துவதிலும், எதிர்க்கட்சிகளுடன் சுமுகமான ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதிலும் திறமை வாய்ந்த நிர்வாகியாக அறியப்படும் ஜோஷி, கல்வித் துறையில் நிர்வாகச் ஸ்திரத்தன்மையைக் கொண்டு வருவாரா என்பதற்கு காலமே பதில் சொல்ல வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>சர்வாதிகார ஆட்சியைக்கூட மண்டியிட வைக்க முடியும் என நிரூபித்துவிட்டீர்கள் - &apos;கரப்பான்பூச்சிகளுக்கு&apos; பிரகாஷ் ராஜ் வாழ்த்து </title><link>https://www.maalaimalar.com/news/national/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81</link><comments>https://www.maalaimalar.com/news/national/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81#comments</comments><guid isPermaLink="false">cde01987-ac05-4ea6-ac5a-9cd1b68f5314</guid><pubDate>Sat, 25 Jul 2026 23:24:00 +0000</pubDate><atom:updated>2026-07-25T23:24:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,prakash raj,பிரகாஷ் ராஜ்,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/do8j8hw6/tn-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரகாஷ் ராஜ்]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரகாஷ் ராஜ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/do8j8hw6/tn-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பான சிஜேபி தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்திற்கும் மேலான போராட்டத்தை தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை <a href="https://www.maalaimalar.com/news/national/youth-have-reclaimed-our-country-priyanka-gandhi-elated">ராஜினாமா </a>செய்துள்ளார்.</p><p>தர்மேந்திர பிரதான் ராஜினாமாவை  நடிகரும் அரசியல்வாதியுமான பிரகாஷ் ராஜ் வரவேற்றுள்ளார்.</p><p> இந்த வெற்றி குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.   </p><h2> பதிவு </h2><p>அதில், எனது அன்பான 'கரப்பான்பூச்சிகளுக்கு'  எனது வாழ்த்துகள்! அன்பிற்குரிய சோனம் வாங்சுக் சார் மற்றும் இளைஞர்களின் பக்கம் நின்ற ஒவ்வொருவருக்கும் எனது நன்றிகள். </p><p>ஒரு சர்வாதிகார ஆட்சியைக்கூட உங்களால் மண்டியிட வைக்க முடியும் என்பதை நீங்கள் நிரூபித்துவிட்டீர்கள் என பதவிவிட்டுள்ளார். </p>  <h2>ஜந்தர் மந்தரில் பிரகாஷ் ராஜ்</h2><p>நடிகர் பிரகாஷ் ராஜ், ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பங்கெடுத்து குறிப்பிடத்தக்கது. 23 நாட்களாக உண்ணவிரிதம் இருந்த இந்திய மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த 3 மாணவர்கள் உண்ணாவிரதத்தை கைவிடச் செய்ய நேரில் சென்று சமாதானம் கூறியவர்களில்  இவரும் ஒருவர். இவருடன் பாலிவுட் மூத்த நடிகை ஷாபனா அஸ்மியும் அம்மாணவர்களை உண்ணாவிரதத்தை கைவிட செய்தார்.</p> <h2>சிஜேபி நிலைப்பாடு</h2><p>இதனிடையே மத்திய கல்வி அமைச்சரின் ராஜினாமாவை தங்கள் பிரதான கோரிக்கையாக கொண்டு போராடிய நிலையில், தர்மேந்திர பிரதானின் விலகலை ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என சிஜேபி நிறுவனர் அபிஜீத் திப்கே மற்றும் சோனம் வாங்சுக் ஆகியோர் வர்ணித்துள்ளனர்.</p><p>அதேநேரம், நீட் வினாத்தாள் கசிவு மற்றும் மறுதேர்வு அழுத்தத்தால் உயிரிழந்த மாணவர்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் சிஜேபி வலியுறுத்தியுள்ளது.</p><h2>ராகுல் சொன்னது என்ன?</h2><p>முன்னதாக தர்மேந்திர பிரதான் ராஜினாமாவை வரவேற்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவரும் பிரியங்கா காந்தியின் சகோதரருமான ராகுல் காந்தி, இன்னும் இரண்டு கோரிக்கைகள் மிச்சம் இருப்பதாக தெரிவித்தார்.</p><p>அதாவது, குளறுபடிகளால் பாதிக்கப்பட்ட லட்சோபலட்சம் இளைஞர்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும். மாணவர் போராட்டத்தில் வன்முறையை பிரயோகித்த அதிகாரிகள் மற்றும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பிரான்ஸ், ஸ்பெயினை வாட்டும் காட்டுத் தீ.. 2.20 லட்சம் மக்கள் பாதிப்பு </title><link>https://www.maalaimalar.com/news/world/europe-wildfires-crisis-heat-fuelled-forest-fires-in-france-and-spain-affect-220000-people</link><comments>https://www.maalaimalar.com/news/world/europe-wildfires-crisis-heat-fuelled-forest-fires-in-france-and-spain-affect-220000-people#comments</comments><guid isPermaLink="false">3df24ea2-e41f-4eb0-9ff6-8d132da604fc</guid><pubDate>Sat, 25 Jul 2026 22:52:00 +0000</pubDate><atom:updated>2026-07-25T22:52:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பிரான்ஸ்,France,Spain,ஸ்பெயின்,காட்டுத் தீ,wildfires</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/r26jxc0c/tn-5.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ காட்டுத் தீ]]></media:title><media:description type="html"><![CDATA[ காட்டுத் தீ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/r26jxc0c/tn-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் கடும் வெயில் காரணமாக <a href="https://www.maalaimalar.com/news/world/wildfire-intensifies-in-the-us">காட்டுத்தீ </a>ஏற்பட்டுள்ளது. </p><h2>பிரான்ஸ் </h2><p> பிரான்ஸின் Bordeaux பகுதியில் பரவிய காட்டுத்தீயால் இதுவரை 19,000 ஹெக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பு பாதித்துள்ளது. </p> <p>தீ பரவலின் வேகம் காரணமாக, பல பகுதிகளில் மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.  பல வீடுகள் சேதமடைந்துள்ளன.</p><p>புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான Cap Ferret பகுதி காலி செய்யப்பட்டது. </p> <h2>ஸ்பெயின்</h2><p>ஸ்பெயினின் மாட்ரிட் நகரின் மேற்குப் பகுதியில் தனித்தனியாக இரு காடுகளில் பற்றிய காட்டுத் தீ பரவி தற்போது ஒன்றிணைந்து எரிந்து வருகிறது. இதனால் அதன் தாக்கம் பல மடங்காக அதிகரித்தது.</p><p>நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு அரசு அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது.</p><p>ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. பல பகுதிகளில் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.</p><h2>பாதிப்பு - மீட்பு </h2><p>இரு நாடுகளிலும் சேர்த்து சுமார் 2.20 லட்சம் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>தீயை அணைக்க ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள், ராணுவம், ஹெலிகாப்டர்கள் மற்றும் பிரத்யேக விமானங்கள் களமிறக்கப்பட்டுள்ளன. </p><p>ஐரோப்பிய யூனியனின் ஆதரவுடன் கிரீஸ் உள்ளிட்ட நாடுகள் அவசரகால உதவிகளை அனுப்பி வைத்துள்ளன.</p><p>வீசும் கடுமையான காற்று, வறண்ட நிலப்பரப்பு மற்றும் காற்றில் குறைந்த ஈரப்பதம் ஆகியவை தீயை விரைவாகப் பரவச் செய்வதால், தணிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.</p><p>வானிலை முக்கியக் காரணமாகக் கருதப்பட்டாலும், திட்டமிட்டு நாசவேலையில் ஈடுபட தீ வைக்கப்பட்டதா அல்லது மனிதத் தவறுகளால் தீ வைக்கப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.  </p>]]></content:encoded></item><item><title>&apos;கரப்பான்பூச்சிகள்&apos; என அழைத்த தலைமை நீதிபதி சூர்யகாந்திற்கு நன்றி தெரிவித்த அபிஜித் தீப்கே!</title><link>https://www.maalaimalar.com/news/national/karappanpoochi-protest-victory-youth-led-cjp-movement-forces-education-minister-to-resign-over-neet-scandal</link><comments>https://www.maalaimalar.com/news/national/karappanpoochi-protest-victory-youth-led-cjp-movement-forces-education-minister-to-resign-over-neet-scandal#comments</comments><guid isPermaLink="false">2f6430f0-b391-40f2-8294-0492ceed5a45</guid><pubDate>Sat, 25 Jul 2026 22:12:00 +0000</pubDate><atom:updated>2026-07-25T22:12:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சூர்யகாந்த்,Suryakant,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,Cockroach Janata Party,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/ztvoe8cf/tn-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தீப்கே, சூர்யகாந்த் ]]></media:title><media:description type="html"><![CDATA[ தீப்கே, சூர்யகாந்த் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/ztvoe8cf/tn-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் மத்தியில் உரையாற்றிய <a href="https://www.maalaimalar.com/news/national/dharmendra-pradhan-quits-a-look-back-at-his-political-career">CJP </a>நிறுவனர் அபிஜித் தீப்கே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்தை குறிப்பிட்டுப் பேசிய கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.</p><p> தீப்கே பேசுகையில், </p><p>"தலைமை நீதிபதி சூரியகாந்த் அவர்களுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர் எங்களை 'கரப்பான்பூச்சிகள்'  என்று அழைக்காமல் இருந்திருந்தால், நான் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பியிருக்க மாட்டேன். இந்த மாபெரும் மக்கள் போராட்டமும் தொடங்கியிருக்காது!" என்று தெரிவித்தார். </p>  <h2>'கரப்பான்பூச்சி' சர்ச்சை</h2><p>மே 15 அன்று வழக்கறிஞர் ஒருவரின் மனு மீதான விசாரணையின்போது, "பணியோ அல்லது வாழ்க்கையில் சரியான இடமோ இல்லாமல் சுற்றித் திரியும் 'கரப்பான்பூச்சிகள்' போன்ற இளைஞர்கள் பலர் உள்ளனர்" என்று தலைமை நீதிபதி சூரியகாந்த் கூறிய கருத்து சர்ச்சையானது.</p><p>அடுத்த நாளே மே 16 அன்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி உதயமானது. அமெரிக்காவின் போஸ்டனில் படித்து வந்த அபிஜித் தீப்கே, இக்கருத்தை எதிர்த்து எக்ஸ் தளத்தில் 'ரப்பான்பூச்சி ஜனதா கட்சி' என்ற பெயரில் நையாண்டியாக ஒரு இயக்கத்தை அறிவித்தார்.</p><p>சர்ச்சை வலுத்த நிலையில் , தாம் போலி சட்டப் பட்டம் பெற்றவர்களை மட்டுமே அவ்வாறு குறிப்பிட்டதாக சூர்யகாந்த் விளக்கமளித்தார்.</p><h2>சிஜேபி</h2><p>ஆனால் அதற்குள் சிஜேபி கட்சிக்கு இணையத்தில் பாலோயர்கள் குவிந்தனர். இன்ஸ்டா உள்ளிட்ட தளங்களிலும் சிஜேபி கணக்கு உருவாகி குறுகிய காலத்தில் பாஜகவின் அதிகாரபூர்வ இன்ஸ்டா பக்கத்துக்கு இருந்த பாலோயர்களை கடந்து அதிக பாலோயர்களை பெற்றது சிஜேபி.</p> <h2>காலவரையற்ற போராட்டம்</h2><p>தொடர்ந்து நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்ட நிலையில், ஜூன் மாதத் தொடக்கத்தில் இந்தியா திரும்பிய அபிஜீத் தீப்கே, டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்களைத் திரட்டி போராட்டத்தை முன்னெடுத்தார். பின்னர் அவரின் சொந்த மாநிலமான மகாராஷ்டிராவிலும், கர்நாடகாவின் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களிலும் போராட்டம் நடத்தினார். களத்திற்கு பல இளைஞர்கள் ஆர்வமுடன் வந்தனர்.</p><p>தொடர்ந்து சிஜேபி கட்சி ஜூன் 20 அன்று முறையே காலவற்றையற்ற போராட்டத்தை டெல்லி ஜந்தர் மந்தரில் தொடங்கியது. அவர்களின் பிரதான கோரிக்கை, தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதாகும்.</p><p>இப்போராட்டத்திற்கு ஆதரவாக ஜூன் 28 அன்று பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.</p> <h2>பெருகிய ஆதரவு</h2><p>ஜூலை 20 அன்று நாடாளுமன்றம் நோக்கி இளைஞர்கள் நடத்திய பேரணியில் போலீஸ் மற்றும் மத்திய படையினர் கடுமையாக தாக்குதல் நடத்தியது நாடு முழுவதும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. மேலும் போராட்டத்திற்கு ஆதரவு பன்மடங்கு பெருகியது. பிற மாநிலங்களிலும் போராட்டம் பரவியது.</p><h2>வெற்றி</h2><p>தொடர்ந்து மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக அளித்த வாக்குறுதிகளைத் தொடர்ந்து, 26 நாட்களாக நீடித்த தனது உண்ணாவிரதப் போராட்டத்தைச் சோனம் வாங்சுக் நிறைவு செய்தார். ஆனால் பிரதான் பதவி விலகும்வரை தங்கள் போராட்டம் தொடரும் என சிஜேபி அறிவித்தது. அவர்களுடனான 3 கட்ட பேச்சுவார்த்தையை மத்திய அரசு முன்னெடுத்த நிலையில் நேற்று தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினமா செய்தார்.</p><p>தலைமை நீதிபதியின் ஒரு சர்ச்சை வார்த்தையில் தொடங்கி, நாட்டின் கல்வி அமைச்சரின் ராஜினாமா வரை கொண்டு சென்ற இந்த கரப்பான்பூச்சி இயக்கத்தின் வெற்றி, இந்திய வரலாற்றில் ஒரு முக்கியப் போராட்டமாகப் பதிவாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பெங்களூரு: அரசுப் பேருந்தில் பெண்ணை சீண்டிய நபருக்கு ஓட்டுநர், சக பயணிகள் தர்ம அடி - வைரல் வீடியோ 
</title><link>https://www.maalaimalar.com/news/national/bengaluru-bmtc-bus-incident-woman-confronts-molester-driver-and-passengers-thrash-accused</link><comments>https://www.maalaimalar.com/news/national/bengaluru-bmtc-bus-incident-woman-confronts-molester-driver-and-passengers-thrash-accused#comments</comments><guid isPermaLink="false">a1c58230-dcd7-4dfa-bb0d-713a369efa5e</guid><pubDate>Sat, 25 Jul 2026 21:04:28 +0000</pubDate><atom:updated>2026-07-25T21:04:28.393Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sexual assault,வைரல் வீடியோ,பெங்களூரு,bengaluru,பாலியல் அத்துமீறல்,viral video</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/ctnlq51w/tn-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ 
பாலியல் அத்துமீறல் ]]></media:title><media:description type="html"><![CDATA[ 
பாலியல் அத்துமீறல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/ctnlq51w/tn-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அரசுப் பேருந்தில் பெண் பயணி ஒருவரிடம் தகாத முறையில் நடக்க முயன்ற நபரை பேருந்து ஓட்டுநரும் சக பயணிகளும் சரமாரியாக தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. </p><h2>அத்துமீறல் </h2><p>ஐடி காரிடார் பகுதியில் உள்ள மான்யதா டெக் பார்க் அருகே வெள்ளிக்கிழமை அன்று பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழக பேருந்தில் பெண் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்தபோது, அருகே இருந்த நபர் ஒருவர் அவரிடம் அநாகரீகமாக நடந்துகொண்டு தவறான முறையில் தொட்டுள்ளார்.</p><p>இதனால் ஆத்திரமடைந்த அப்பெண், உடனடியாக அந்த நபரை தைரியமாகத் தட்டிக்கேட்டு, அவரது கன்னத்தில் பளார் அறை விட்டுள்ளார்.</p> <h2>ஓட முயற்சி </h2><p>பயத்தில் அந்த நபர் உடனடியாகப் பேருந்தில் இருந்து இறங்கித் தப்பி ஓட முயன்றார்.</p><p>நிலமையை உணர்ந்த பேருந்து ஓட்டுநர் உடனடியாகப் பேருந்தின் கதவுகளை மூடி, அந்த நபர் தப்பிச் செல்வதைத் தடுத்தார்.</p><h2>தர்ம அடி </h2><p>பேருந்து ஓட்டுநர் மற்றும் சக பயணிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த நபரைப் பிடித்துத் தர்ம அடி கொடுத்தனர். சமூக வலைத்தளங்களில் இச்சம்பவத்தின் வீடியோ வேகமாக பரவி வருகிறது.</p><p>அந்த நபர் பின்னர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்துச் சம்பிகேஹள்ளி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p> <figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">A woman was allegedly sexually harrassed by another passenger on a bus in Bengaluru. The incident happened on July 23. She confronted the accused, the driver intervened and stopped the man from fleeing. <a href="https://t.co/eryo4zAiLq">pic.twitter.com/eryo4zAiLq</a></p>&mdash; Vani Mehrotra (@vani_mehrotra) <a href="https://x.com/vani_mehrotra/status/2080887577532596689?ref_src=twsrc%5Etfw">July 25, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>பல இரவுகள் தூக்கமின்றி தவித்தேன்.. மகன் அபிஜித் தீப்கே வெற்றி குறித்து கண்ணீருடன் தாய் சொன்ன விஷயம்</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-protest-victory-education-minister-dharmendra-pradhan-resigns-after-exam-leak-row</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-protest-victory-education-minister-dharmendra-pradhan-resigns-after-exam-leak-row#comments</comments><guid isPermaLink="false">6d38d937-643a-4749-a275-af715b5901aa</guid><pubDate>Sat, 25 Jul 2026 20:18:25 +0000</pubDate><atom:updated>2026-07-25T20:18:25.802Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,CJP Protest,அபிஜித் தீப்கே,சிஜேபி போராட்டம்,Abhijit Deepke</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/d1xdql9l/tn-9.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/d1xdql9l/tn-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பான சிஜேபி தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்திற்கும் மேலான போராட்டத்தை தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.</p><p>தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்த செய்தி வெளியானதும், போராட்ட்டதை முன்னின்று நடத்திய மகாராஷ்டிராவை சேர்ந்த சிஜேபி நிறுவனர் <a href="https://www.maalaimalar.com/news/national/dharmendra-pradhan-quits-a-look-back-at-his-political-career">அபிஜீத் தீப்கே</a>வின் தாயார் அனிதா திப்கே கேமராக்களின் முன் உணர்ச்சிவசப்பட்டுக் கண்ணீர் சிந்தினார்.</p> <h2>தாய் பேட்டி</h2><p>அபிஜீத் திப்கேவின் தாயார் அனிதா தீப்கே கூறுகையில்,</p><p>"அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்து நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக அவன் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தைத் தொடங்கியதிலிருந்து நான் பல இரவுகள் தூக்கமின்றித் தவித்தேன்.</p><p>முன்பு ஜெய்ப்பூரில் அவன் மீது நடந்த தாக்குதல்களும், டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தியபோது அவன் மீது மை வீசப்பட்ட சம்பவமும் எங்கள் ஒட்டுமொத்த குடும்பத்தையும் அச்சத்தில் ஆழ்த்தியது.</p><p>தினமும் காலையில் போனை பார்க்கவே பயமாக இருக்கும்; அவனது நண்பர்களை அழைத்து அவன் பாதுகாப்பாக இருக்கிறானா என்று விசாரித்துக் கொண்டே இருப்பேன்.</p><p>என் மகன் டெல்லி கொசுக்களுக்கு இடையே இரவுகளை கழித்தான். போராட்டத்தின் போது அவனுக்குத் டைபாய்டு காய்ச்சல் ஏற்பட்டது.</p><p>இருப்பினும் போராட்டத்தைக் கைவிட மறுத்துவிட்டான். அவனது உழைப்பிற்கும் மன உறுதிக்கும் கிடைத்த வெற்றி இது. " என்று தெரிவித்தார்.</p><p>மேலும் போராட்டத்தின் இனி இனிப்புகள் வழங்கித் தனது மகனை வரவேற்கப்போவதாகவும், இது தனது மகனின் வெற்றி மட்டுமல்ல, போராடிய அத்தனை மாணவர்களின் வெற்றி என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.</p> <figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Chhatrapati Sambhajinagar, Maharashtra | Parents of Cockroach Janta Party&#39;s Founding President Abhijeet Dipke get emotional after Union Minister Dharmendra Pradhan resigns. <a href="https://t.co/LkxTiKmLf6">pic.twitter.com/LkxTiKmLf6</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2080959156841038327?ref_src=twsrc%5Etfw">July 25, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2>தந்தை பேட்டி</h2><p>அபிஜீத்தின் தந்தை பகவான்ராவ் தீப்கே பேசுகையில்,</p><p>"எங்கள் குடும்பத்தில் யாருக்கும் அரசியல் பின்னணி கிடையாது. அவன் எனது விருப்பத்திற்கு மாறாகவே இதில் இறங்கினான்.</p><p>அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்ப வேண்டாம் என்றும், கைது செய்யப்படலாம் என்றும் கெஞ்சினோம்.</p><p>அவன் மீது இருமுறை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. மகன் உயிருடன் இருக்க மாட்டானோ என்று பயந்தோம். கடவுள் புண்ணியத்தில் அவன் பாதுகாப்பாக இருக்கிறான்." என்றார்.</p> <h2>பிரதானுக்கு பாராட்டு</h2><p>மேலும், "கல்வி அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்து, மாணவர்களைப் படிப்பில் கவனத்தை வைக்குமாறு கேட்டுக்கொண்டது அவரது பெரிய மனதை காட்டுகிறது.</p><p>இதை யாருடைய வெற்றியோ அல்லது தோல்வியோ பார்க்கத் தேவையில்லை" என்று தெரிவித்தார்.</p><p>தர்மேந்திர பிரதானுக்குப் பாராட்டு: என்றும், என்றும் அவர் குறிப்பிட்டதுடன், மகன் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் பணியாற்றிய அனுபவம் கொண்டவன் ம் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>சிரியா: ராணுவ வீரர்கள் சென்ற பேருந்துடன் பயணிகள் பேருந்து விபத்து - 35 பேர் பலி </title><link>https://www.maalaimalar.com/news/world/syria-bus-crash-35-killed-as-two-buses-collide-head-on-on-desert-highway-near-palmyra</link><comments>https://www.maalaimalar.com/news/world/syria-bus-crash-35-killed-as-two-buses-collide-head-on-on-desert-highway-near-palmyra#comments</comments><guid isPermaLink="false">ba1bef1a-3852-4c4e-b018-e20451dccdff</guid><pubDate>Sat, 25 Jul 2026 19:13:09 +0000</pubDate><atom:updated>2026-07-25T19:13:09.423Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சிரியா,syria,bus accident,சாலை விபத்து,road accident,பேருந்து விபத்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/h40tilv0/tn-4.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[  பேருந்து விபத்து]]></media:title><media:description type="html"><![CDATA[  பேருந்து விபத்து]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/h40tilv0/tn-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சிரியாவில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய <a href="https://www.maalaimalar.com/topic/bus-accident">விபத்தில் </a>35 பேர் பரிதாபமாக பலியாகினர். </p><p>மத்திய சிரியாவில் உள்ள பால்மைரா  மற்றும் அல் சுக்னா நகரங்களுக்கு இடையிலான பாலைவன நெடுஞ்சாலைப் பகுதியில் நேற்று இந்த விபத்து நடந்துள்ளது. </p> <h2>விபத்து</h2><p>சாலையில் எதிரெதிரே வந்த இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.</p><p>விபத்துக்குள்ளான இரு பேருந்துகளில் ஒன்று சிரிய நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்புப் படை வீரர்களை ஏற்றிச் சென்ற பேருந்தாகும். மற்றொன்று பொதுமக்கள் பயணித்த பேருந்தாகும்.</p><p>இந்த விபத்தில் குறைந்தது 35 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.</p><p>சிரியாவின் செய்தி நிறுவனமான சனா தகவல்களின்படி, விபத்து நடந்தவுடன் மீட்புக் குழுவினரும் ஆம்புலன்ஸ்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தன.</p><p>படுகாயமடைந்தவர்களை விரைவாக மீட்டு சிகிச்சை அளிப்பதற்காக பல ராணுவ ஹெலிகாப்டர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.</p><p>காயமடைந்தவர்கள் பால்மைரா விமான நிலையத்திலிருந்து வான்வழியாக ஹோம்ஸ் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.</p><h2>சிரியாவில் தொடரும் விபத்துகள்</h2><p>சுமார் 14 ஆண்டுகளாக நீடித்து வந்த உள்நாட்டுப் போரின் காரணமாக சிரியாவின் சிவில் உள்கட்டமைப்புகள் மற்றும் முக்கிய நெடுஞ்சாலைகள் பராமரிப்பின்றி மிகவும் மோசமான நிலையில் உள்ளன.</p><p>சிரியாவின் பேரிடர் மேலாண்மை மற்றும் அவசரகால துறை அமைச்சர் ரேத் அல் சலே கடந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் நாட்டில் 2,000 க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் நடந்துள்ளன.</p><p>கடந்த 2024 டிசம்பரில் அதிபர் பஷர் அல் அசாத்தின் ஆட்சி கழிவிக்கப்பட்டு, கிளர்ச்சி குழு தலைவரான அகமது அல் ஷரா புதிய அதிபராக பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>இளைஞர்கள் நம் நாட்டை மீட்டெடுத்துள்ளனர்  - பிரியங்கா காந்தி பூரிப்பு </title><link>https://www.maalaimalar.com/news/national/youth-have-reclaimed-our-country-priyanka-gandhi-elated</link><comments>https://www.maalaimalar.com/news/national/youth-have-reclaimed-our-country-priyanka-gandhi-elated#comments</comments><guid isPermaLink="false">c429f314-bb7b-40c6-bee4-77e5828c9129</guid><pubDate>Sat, 25 Jul 2026 18:21:17 +0000</pubDate><atom:updated>2026-07-25T18:21:17.447Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,BJP Protest,Priyanka gandhi,பிரியங்கா காந்தி,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/jaz2v50j/priyanka-gandhi.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ priyanka gandhi.]]></media:title><media:description type="html"><![CDATA[ priyanka gandhi.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/jaz2v50j/priyanka-gandhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பான சிஜேபி தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்திற்கும் மேலான போராட்டத்தை தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.</p><p>தர்மேந்திர பிரதான் ராஜினாமாவை வயநாடு காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி வரவேற்றுள்ளார்.  </p><h2> பிரியங்கா பேட்டி </h2><p>வயநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, "கடந்த 10-12 ஆண்டுகளாக நமது நாட்டின் இளைஞர்கள் எப்போது விழித்துக் கொள்வார்கள், குரல் எழுப்புவார்கள் என்று நான் பலமுறை எனக்குள்ளேயே கேட்டுக்கொண்டதுண்டு. </p><p>இன்று நாட்டின் இளைஞர்கள் ஒன்றிணைந்து தங்கள் குரலை உரக்கப் பதிவு செய்துள்ளனர். அவர்களின் குரல் அரசுக்குக் கேட்டுள்ளது. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. </p><p>ஆர்எஸ்எஸ் அமைப்பு தனது சித்தாந்தத்தால் நாட்டின் ஒட்டுமொத்தக் கல்வி முறையையும் ஆக்கிரமிக்க முயல்கிறது. நமது முன்னோர்களின் கொள்கைகள் திட்டமிட்டுச் சீரழிக்கப்பட்டு வருகின்றன.</p><p>ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது அரசு தனது அதிகார பலத்தைப் பிரயோகித்தது. </p><p>ஆனால், ஆட்சியாளர்களை விட மக்களே நாட்டின் மிக உயர்ந்த சக்தி என்பதை இந்தச் சம்பவம் உணர்த்தியுள்ளது. இன்று நமது நாட்டை இளைஞர்கள் மீட்டெடுத்துள்ளனர்." என தெரிவித்தார். </p> <h2>ராகுல் சொன்னது என்ன?</h2><p>முன்னதாக தர்மேந்திர பிரதான் ராஜினாமாவை வரவேற்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவரும் பிரியங்கா காந்தியின் சகோதரருமான <a href="https://www.maalaimalar.com/news/national/neet-scam-protest-victory-education-minister-dharmendra-pradhan-resigns-rahul-gandhi-says-time-to-oust-government?fbclid=IwY2xjawTR01tleHRuA2FlbQIxMABicmlkETFPdXJ6VjhhT2J2WG9KZnlHc3J0YwZhcHBfaWQQMjIyMDM5MTc4ODIwMDg5MgABHjXj2mFgxWQcFWVrX3_Xg7udAxq50qzKepdfsWZ5_CaQSmrigLGj2mU5uR7y_aem_Zlv7sVZVl6tCQWfp2hTrPg">ராகுல் காந்தி</a>, இன்னும் இரண்டு கோரிக்கைகள் மிச்சம் இருப்பதாக தெரிவித்தார்.</p><p>அதாவது, குளறுபடிகளால் பாதிக்கப்பட்ட லட்சோபலட்சம் இளைஞர்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும். மாணவர் போராட்டத்தில் வன்முறையை பிரயோகித்த அதிகாரிகள் மற்றும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.</p> <h2>சிஜேபி நிலைப்பாடு</h2><p>இதனிடையே மத்திய கல்வி அமைச்சரின் ராஜினாமாவை தங்கள் பிரதான கோரிக்கையாக கொண்டு போராடிய நிலையில், தர்மேந்திர பிரதானின் விலகலை ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என சிஜேபி நிறுவனர் அபிஜீத் திப்கே மற்றும் சோனம் வாங்சுக் ஆகியோர் வர்ணித்துள்ளனர்.</p><p>அதேநேரம், நீட் வினாத்தாள் கசிவு மற்றும் மறுதேர்வு அழுத்தத்தால் உயிரிழந்த மாணவர்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் சிஜேபி வலியுறுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஏமன் துறைமுகத்தை தாக்கிய சவுதி அரேபியா.. எண்ணெய் நிறுவன தளங்கள் மீது ஹவுதிக்கள் பதில் தாக்குதல் </title><link>https://www.maalaimalar.com/news/world/saudi-airstrike-on-hodeidah-port-houthis-warn-of-severe-retaliation</link><comments>https://www.maalaimalar.com/news/world/saudi-airstrike-on-hodeidah-port-houthis-warn-of-severe-retaliation#comments</comments><guid isPermaLink="false">28c15b9d-f8aa-423c-b1b7-ca81080bbceb</guid><pubDate>Sat, 25 Jul 2026 17:33:43 +0000</pubDate><atom:updated>2026-07-25T17:33:43.750Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Saudi Arabia,சவுதி அரேபியா,Yemen,ஏமன்,Houthi rebels,ஹவுதி கிளர்ச்சியலாளர்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/8ekahehg/tn-1.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அராம்கோ எண்ணெய் நிறுவன தளங்கள் மீது தாக்குதல் ]]></media:title><media:description type="html"><![CDATA[ அராம்கோ எண்ணெய் நிறுவன தளங்கள் மீது தாக்குதல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/8ekahehg/tn-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்கா மறறும் ஈரான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஏமனின் <a href="https://www.maalaimalar.com/news/world/red-sea-tensions-houthi-strike-on-saudi-oil-tankers-disrupts-key-shipping-lanes">ஹவுதி </a>அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய துறைமுக நகரமான ஹுதெய்தா மீது சவுதி அரேபியா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. </p><p>நள்ளிரவு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு சவுதி அரேபியா கடுமையான விலையைக் கொடுக்க வேண்டி வரும் என்றும், இதற்கு உரிய முறையில் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஹவுதிகள் எச்சரித்துள்ளனர்.</p><h2> தாக்குதல் </h2><p>ஹுதெய்தாவில் உள்ள தொலைத்தொடர்பு ஆணையத்திற்குச் சொந்தமான மையங்களைக் குறிவைத்து நேற்று நள்ளிரவு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.</p><p>ஹுதெய்தா துறைமுகப் பகுதியில் பயங்கர வெடிச்சத்தங்கள் கேட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.</p><h2>ஹுதெய்தா துறைமுகம் </h2><p>கடலோர நகரமான ஹுதெய்தா, ஹவுதிக்களின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு ஏமன் பகுதிகளுக்கு மிக முக்கியமான இணைப்பு பாதையாக திகழ்கிறது. </p><p>ஏமனுக்கு இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான வணிகப் பொருட்கள் மற்றும் சர்வதேச மனிதநேய உதவிகள் அனைத்தும் இந்தத் துறைமுகத்தின் வழியாகவே விநியோகிக்கப்படுகின்றன.</p><p>சவுதி அரம்கோ தாக்குதல் </p><p>பதிலடியாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் முக்கிய நகரங்களான ஜிசான் மற்றும் யான்பு  ஆகியவற்றில் அமைந்துள்ள சவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் தளங்களை  குறிவைத்து ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளனர்.</p><p>தாக்குதலைத் தொடர்ந்து சவூதியின் ஜிசான் மற்றும் யான்பு நகரங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பு இடங்களுக்குச் செல்லுமாறு சவுதி சிவில் பாதுகாப்புத் துறை அவசர எச்சரிக்கை விடுத்தது.</p><p>மேலும் செங்கடலில் பயணித்த சவுதிக்குச் சொந்தமான கப்பல் மீது ஹவுதிகள் நடத்திய தாக்குதலில் அதன் வெளிப்பகுதியில் லேசான சேதம் ஏற்பட்டது. இருப்பினும் மாலுமிகள் பாதுகாப்பாக இலக்கை அடைந்தனர்.</p> <h2>ஹவுதிகள் ஆவேசம்</h2><p>"ஹுதெய்தாவைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதன் மூலம் சவுதி அரசு இந்த மோதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.</p><p>இனி வரும் நாட்களில் தாக்குதலுக்குத் தகுந்த பதிலடி கொடுப்பதே எங்கள் முதன்மை நடவடிக்கையாக இருக்கும்" என்று ஹவுதி வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அடுத்து பாஜக அரசை அகற்றும் நேரம் வந்துவிட்டது - ராகுல் காந்தி</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-scam-protest-victory-education-minister-dharmendra-pradhan-resigns-rahul-gandhi-says-time-to-oust-government</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-scam-protest-victory-education-minister-dharmendra-pradhan-resigns-rahul-gandhi-says-time-to-oust-government#comments</comments><guid isPermaLink="false">8bd4393c-db76-4f76-8dc7-a44f40c80b5d</guid><pubDate>Sat, 25 Jul 2026 17:02:44 +0000</pubDate><atom:updated>2026-07-25T17:02:44.375Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,BJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/l6lv38kd/Rahul-gandhi.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Rahul gandhi]]></media:title><media:description type="html"><![CDATA[ Rahul gandhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/l6lv38kd/Rahul-gandhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பான சிஜேபி தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்திற்கும் மேலான போராட்டத்தை தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/national/bjp-veteran-mm-joshi-says-better-late-than-never-as-pradhan-quits-had-criticised-use-of-force-on-cjp-protesters">தர்மேந்திர பிரதான்</a> தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். </p><p>இதை வரவேற்றுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "அடுத்து இந்த அரசை அகற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது" என  தெரிவித்துள்ளார். </p><p>தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோவாக பேசி வெளியிட்டுள்ள ராகுல், </p><h2>முதல் வெற்றி </h2><p>"முதலாவதாக, இது நமது <a href="https://www.maalaimalar.com/news/national/peoples-democratic-verdict-arvind-kejriwal-on-people-power">மாணவர்களின் வெற்றி</a>. இது இந்தியாவின் எதிர்காலம். நமது பெருமையாக இருந்த, உலகமே வியந்து பாராட்டிய நமது கல்வி முறை பல ஆண்டுகளாகத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வந்தது. அது கைப்பற்றப்பட்டு, தனியார்மயமாக்கப்பட்டு வந்தது. அதற்கு எதிரான எதிர்வினை தான் இது.  </p><p>தர்மேந்திர பிரதான் ஒரு குறியீடு. அவர் ஊழலின் குறியீடு, கல்வி முறையின் அழிவின் குறியீடு, திறமையின்மையின் குறியீடு. </p><p>கல்வி அமைப்பை மறுசீரமைப்பதை நோக்கிய ஒரு மிகப்பெரிய முதல் அடிதான் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா. </p><p>நாட்டின் அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துகள்; உங்களை நினைத்து நாம் அனைவரும் பெருமைப்படுகிறோம். </p><p> மாணவர்களின் அசைக்க முடியாத உறுதியான போராட்டமே நாட்டின் ஜனநாயகம், அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அவர்களின் எதிர்காலம் ஆகியவற்றைப் பாதுகாத்துள்ளது . </p><h2></h2><h2>ராஜினாமா போதாது</h2><p>கல்வி அமைச்சரின் ராஜினாமா மட்டுமே இறுதித் தீர்வாகாது. மேலும் இரு முக்கிய கோரிக்கைகள் மிச்சம் உள்ளன.</p><p>நாட்டின் எதிர்காலமாகத் திகழும் மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தேர்வு முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட ஒட்டுமொத்த இளைஞர்களிடமும் பிரதமர் மோடி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.</p><p>டெல்லி மற்றும் பிற பகுதிகளில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது கொடூரமான வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.</p> <h2>நேரம் வந்துவிட்டது</h2><p>இந்த நாடு இந்திய மக்களுக்குச் சொந்தமானது. இது இந்திய அரசியலமைப்புக்குச் சொந்தமானது. இந்த நிறுவனங்கள் எதுவும் உங்களுக்குச் சொந்தமானவை அல்ல.</p><p>நாட்டின் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரும் தங்களின் உரிமைகளுக்காக அரசியலமைப்பு வழியில் தொடர்ந்து போராட வேண்டும்.</p><p>பயப்படாதீர்கள். இந்தியாவைத் தாக்கி, நமது அரசியலமைப்பை அழித்து, நமது அனைத்து நிறுவனங்களையும் தாக்கும் இந்த அரசாங்கத்தை அகற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது." என தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-25-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-25-july-2026#comments</comments><guid isPermaLink="false">d2490f83-5c37-441d-8937-34c77d9fb209</guid><pubDate>Sat, 25 Jul 2026 05:14:22 +0000</pubDate><atom:updated>2026-07-25T16:33:52.656Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/8cnfoez2/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/8cnfoez2/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/zim-v-ind-match-today">ஜிம்பாப்வேக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்- இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் ஆதிக்கம் தொடருமா?</a></p><p>* ஜிம்பாப்வேக்கு எதிராக இன்று நடக்கும் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தும் வேட்கையுடன் இந்திய அணி களம் காணுகிறது.... </p><p> * தொடரை இழக்காமல் இருக்க ஜிம்பாப்வே முடிந்த வரை கடுமையாக போராடுவார்கள் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பு நிறைந்ததாக அமையும் என நம்பலம்.</p><p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/sanam-shetty-indictment-to-fake-is-student-protest-taking-place-at-balan-illam-in-chennai">சென்னை பாலன் இல்லத்தில் நடக்கும் மாணவர்கள் போராட்டம் போலியானது- சனம் ஷெட்டி குற்றச்சாட்டு</a></p><p>* இந்த மேடையை அரசியலாக மாற்றினால் அதற்கு நான் ஆதரவு தெரிவிக்கமாட்டேன். இவர்கள் ஜனநாயகத்துக்காக போராடவில்லை. </p><p>* டெல்லியில் என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியாது. நான் அங்கு போகவில்லை. இப்போதும் சொல்கிறேன். </p> <p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-25-07-2026">GOLD PRICE TODAY : வார இறுதிநாளில் உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p>* நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.270-ம், சவரனுக்கு ரூ.2,160-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 230-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 840-க்கும் விற்பனை செய்யப்பட்டது.</p><p>* ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/congress-leader-manickam-tagore-urges-removal-of-dharmendra-pradhan" rel="nofollow">தர்மேந்திர பிரதானை உடனடியாக பதவி நீக்கம் செய்யுங்கள்- மாணிக்கம் தாகூர்</a></p><p>* 21 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.</p><p>* கேள்வித்தாள் கசிவு நடந்ததை மத்திய கல்வி அமைச்சரே ஒப்புக்கொண்டார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/south-korean-tycoon-ordered-to-pay-6200-crore-divorce-settlement" rel="nofollow">முன்னாள் மனைவிக்கு ரூ.6,200 கோடி இழப்பீடு: தென்கொரிய தொழிலதிபருக்கு சியோல் ஐகோர்ட் அதிரடி உத்தரவு!</a></p><p>* நிறுவனத்தின் பங்குகளை விற்காமல், முழு தொகையையும் ரொக்கமாக கொடுக்க உத்தரவு.</p><p>*  பரபரப்பான விவாகரத்து வழக்கில் சியோல் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-slams-third-spot-for-tamil-thai-anthem-at-manonmaniam-sundaranar">மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடமா?- அன்புமணி கண்டனம்</a></p><p>* தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மூன்றாவது இடத்திற்கு  திட்டமிட்டு தள்ளுவது கண்டிக்கத்தக்கது.</p><p>*   ஆளுனர் மாளிகை கட்டாயப்படுத்துவது அப்பட்டமான அதிகார வெளிப்பாடு ஆகும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/youth-wont-be-fooled-by-empty-promises-and-repression-manickam-thakur" rel="nofollow">வெற்று வாக்குறுதிகளாலும், அடக்குமுறைகளாலும் இளைஞர்களை ஏமாற்ற முடியாது!- மாணிக்கம் தாகூர்</a></p><p>* கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி நீக்கம் செய்க!</p><p>* பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் அரசு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/jyothika-backs-students-protest-against-neet-scam" rel="nofollow">பதவி விலகுங்கள் தர்மேந்திர பிரதான் - நடிகை ஜோதிகா இன்ஸ்டா பதிவு</a></p><p>* நான் பொறுப்புணர்வுடன் நிற்கிறேன்!</p><p>* நான் ஒரு ஜனநாயக இந்தியாவிற்காக நிற்கிறேன்!</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-questions-when-chief-minister-will-break-silence-on-custodial-deaths" rel="nofollow">தொடரும் காவல் மரணங்கள்.. முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது?- மு.க.ஸ்டாலின் கேள்வி</a></p><p>* Accountability, Apology – முதலமைச்சருக்குப் பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில் இருக்கிறதா?</p><p>* முதலமைச்சரானதும் அதைக் கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்?</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/delhi-metro-curbs-enter-4th-day-18-stations-closed-today-as-security-tightens-over-neet-protests">நீட் தேர்வு போராட்டம் எதிரொலி: டெல்லியில் 4-வது நாளாக மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடல்</a></p><p>* கூட்டம் அதிகரிப்பதை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>* இன்று காலை 7.30 மணி முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை 18 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்படுகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/amarnath-yatra-resumes-after-6-day-weather-halt-over-6000-pilgrims-leave-jammu">சீரடைந்த வானிலை: 6 நாளுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது அமர்நாத் யாத்திரை</a></p><p>* அமர்நாத் யாத்திரை கடந்த 19-ம் தேதி நிறுத்தி வைக்கப்பட்டது.</p><p>* 223 வாகனங்கள் கொண்ட அணிவகுப்பில் 18வது குழு பயணித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/third-round-talks-today-in-center-and-cjp-party-members">தர்மேந்திர பிரதான் பதவி விலகுவாரா? - இன்று மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை</a></p><p>* மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவுடனான முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.</p><p>* மாணவர்கள் போராட்டம் தற்போது இந்தியா முழுவதும் தீவிரமடைந்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minor-boy-allegedly-forced-into-sex-8-month-pregnant-girl-booked-under-pocso" rel="nofollow">சிறுவனை கட்டாயப்படுத்தி பாலியல் உறவு- கர்ப்பமான இளம்பெண் போக்சோ சட்டத்தின் கீழ் கைது</a></p><p>* சிறுவனின் தாயார் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.</p><p>* புகாரின் பேரில் இளம்பெண் மீது போலீசார்&nbsp;<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B">போக்சோ</a>&nbsp;வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.&nbsp;</p><p><a href="https://www.maalaimalar.com/news/puducherry/thirumavalavan-says-we-are-the-reason-for-the-dmk-winning-a-large-number-of-constituencies">தி.மு.க. அதிக தொகுதிகள் வெற்றிக்கு நாங்கள் தான் காரணம் - திருமாவளவன் பேச்சு</a></p><p>* மகாத்மா காந்தி பெயரில் இருந்த 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை மாற்றியது பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு. </p><p>* த.வெ.க. ஆட்சியில் விசிகவுக்கு முக்கியத்துவம் தந்துவிடக்கூடாது என்றுதான் இப்போதும் சிலர் இருக்கின்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/andhra-devotees-dies-idukku-pillaiyar-temple-cave">திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோவில் குகையில் சிக்கி ஆந்திர பக்தர் பலி </a></p><p>* குகை  வடிவத்தில் உள்ள கோவில் பகுதியில் படுத்தபடி நுழைந்தார். உடல் பருமன் அதிகம் என்பதால் குகையில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தார். </p><p>* உடல் பருமன் மற்றும் சுவாச பிரச்சனை உள்ள பக்தர்கள் இடுக்கு பிள்ளையார் கோவிலில் உள்ள குகை போன்ற பகுதியில் புகுந்து வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/central-to-gummidipoondi-train-service-change">இன்றும், நாளையும் சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி மின்சார ரெயில் சேவையில் மாற்றம்</a></p><p>* கும்மிப்பூண்டி- மூர் மார்க்கெட்  இரவு 10.30 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி- பொன்னேரி இடைய ரத்து செய்யப்பட்டுள்ளது. </p><p>* கும்மிடிப்பூண்டியில் புறப்பட்டு மூர் மார்க்கெட் வரக்கூடிய மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி-பொன்னேரி இடையே இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/pm-modi-greets-indian-lifter-jandukumar-for-commonwealth-bronze" rel="nofollow">காமன்வெல்த் போட்டியில் வெண்கலம்- இந்திய வீரர் ஜண்டுகுமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து</a></p><p>* வலிமையை அதிகரிப்பதற்காக மட்டுமே பளு தூக்கும் பயிற்சியை மேற்கொண்டார்.</p><p>*  130.9 புள்ளிகளை பெற்று பதக்க மேடையில் இடம்பிடித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ramadoss-announced-retiring-from-politics-starting-today">இன்று முதல் அரசியல் துறவறம்- ராமதாஸ்</a></p><p>* தலைசுற்றல் இருந்ததால் 20 நாட்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தேன் என்றார்.</p><p>* பா.ம.க.வை இனி அன்புமணி பார்த்துக்கொள்வார் என்று ராமதாஸ் கூறியபோது விழாவில் கூடியிருந்த தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். </p><p><a href="https://www.maalaimalar.com/technology/anthropic-claude-opus-5-new-ai-breakthrough">AI-ல் புதிய பாய்ச்சல்: ஆந்திரோபிக் நிறுவனத்தின் 'Claude Opus 5' அதிகாரப்பூர்வமாக வெளியீடு!... </a></p><p>செயற்கை நுண்ணறிவு (AI) ஆராய்ச்சியில் முன்னணி வகிக்கும் 'ஆந்திரோபிக்' நிறுவனம், தனது அடுத்த தலைமுறை முதன்மை AI மாடலான 'Claude Opus 5'-ஐ உலகளவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/assam-deluge-claims-61-lives-705000-people-impacted">அசாமில் தொடரும் பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 61 ஆக உயர்வு-7 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு... </a></p><p>பக்கத்து மாநிலமான நாகாலாந்தில் ஏற்பட்ட திடீர் மேகவெடிப்பு காரணமாகவே அசாமின் பல மாவட்டங்களில் இந்த அளவுக்குப் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-and-brother-appear-at-thiruvallikeni-police-station-in-rs-35-crore-bribery-case" rel="nofollow">ரூ.35 கோடி பேரம் வழக்கு: திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜரான செந்தில் பாலாஜியிடம் விசாரணை நிறைவு!</a></p><p>*  செந்தில் பாலாஜியும், அவரது தம்பி அசோக் குமாரும் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். </p><p>* இருவரும் வழக்கு விசாரணையின்போது தலைமறைவாகக் கூடாது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/gukesh-praggnanandhaa-vaishali-to-spearhead-indian-challenge-in-chess-olympiad">செஸ் ஒலிம்பியாட்: குகேஷ், பிரக்ஞானந்தா உள்பட 10 பேர் கொண்ட இந்திய அணி தேர்வு</a></p><p>* ஹங்கேரியில் நடந்த செஸ் ஒலிம்பியாட்டில் இரு பிரிவிலும் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. </p><p>* பெண்கள் பிரிவில் கோனெரு ஹம்பி, தமிழகத்தின் வைஷாலி உள்பட பலர் தேர்வாகினர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rameswaram-fishermen-strike-for-demanding-the-release-of-fishermen-arrested-by-srilanka">இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரி ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்</a></p><p>* மீனவர்கள் சிறை பிடிப்பு விவகாரம் ராமேசுவரத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.</p><p>* மீனவர்களுக்கு வரும் 6-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kamal-haasan-says-there-is-no-place-for-guns-and-lathi-charges-in-gandhis-land">துப்பாக்கிகள், தடியடிகளுக்கு காந்தியின் மண்ணில் இடமில்லை- கமல்ஹாசன்</a></p><p>*  பாதுகாப்பு படையினர் மற்றும் பொது சொத்துக்கள் மீதான தாக்குதல்களும் நேர்மையாக விசாரிக்கப்பட வேண்டும்.</p><p>* இப்போது, ​​உரையாடல் நீடித்த சீர்திருத்தத்திற்கு வழிவகுப்பதை நாம் உறுதி செய்வோம். முன்னால் உள்ள பாதை நீண்டது, ஆனால் இந்தியர்கள் அதை ஒன்றாகவே கடக்க வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/anahat-singh-first-indian-to-reach-world-junior-final-since-2005">உலக ஜூனியர் ஸ்குவாஷ்: 20 ஆண்டுக்கு பின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அனாஹத் சிங்</a></p><p>* இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா கடந்த 2005-ம் ஆண்டில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார்.</p><p>* கடந்த ஆண்டு நடந்த சாம்பியன்ஷிப் போட்டியில் அனாஹத் சிங் வெண்கலப் பதக்கம் வென்றார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cmrl-floats-tender-for-dpr-to-extend-metro-line-from-kilambakkam-to-chengalpattu">கிளாம்பாக்கம்-செங்கல்பட்டு மெட்ரோ ரெயில் விரிவாக்கம்: திட்ட அறிக்கை டெண்டர் வெளியீடு</a></p><p>* 15.46 கி.மீ. இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.</p><p>* இத்திட்டத்திற்கு ரூ.9,335 கோடி செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-airport-phase-2-completion-union-minister-murlidhar-mohol" rel="nofollow">சென்னை விமான நிலைய 2-ம் கட்ட பணிகள் டிசம்பரில் முடிவடையும்..!- மத்திய அமைச்சர் முரளிதர மகாலி</a></p><p>* மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார்.</p><p>* ரூ.14 கோடி செலவில் மாற்றங்கள் செய்யும் பணியும் தொடங்கி நடைபெற்று வருகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/cjp-protest-pakistan-social-media-accounts-blocked-delhi-police-warning">CJP போராட்டம்: பாகிஸ்தான் சமூக வலைதள கணக்குகள் முடக்கம்-டெல்லி காவல்துறை எச்சரிக்கை!... </a></p><p>இன்றைய பேச்சுவார்த்தையின் முடிவைப் பொறுத்து CJP தங்களின் அடுத்தகட்ட போராட்ட அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/spacex-starship-13th-test-flight-marks-new-space-history-milestone">ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் 13-வது சோதனை ஓட்டம் வெற்றி! விண்வெளி வரலாற்றில் புதிய சாதனை!</a></p> <p>* 20 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.</p><p>* ஸ்டார்ஷிப் இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பாக தரையிறங்கியது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-says-transfer-of-dharmendra-pradhan-to-another-portfolio-is-unacceptable">தர்மேந்திர பிரதானை வேறு துறைக்கு மாற்றுவதை ஏற்க முடியாது- ராகுல் காந்தி</a></p><p>* மோடியின் மந்திரிசபையில்  அவரை கல்வித்துறையில் இருந்து வேறு துறைக்கு மாற்றுவதே இதற்கான தீர்வு என்று பேசப்பட்டு வருகிறது. </p><p>* தர்மேந்திர பிரதானை அங்கிருந்து மாற்றுவது, பின்னுக்குத் தள்ளுவது அல்லது முன்னுக்கு கொண்டு வருவது போன்ற எந்தவொரு விவாதத்திற்கும் இடமில்லை.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/sonam-wangchuk-confronts-police-at-safdarjung-hospital">'என்னை கைது செய்யுங்கள்': மருத்துவமனையில் போலீசாரிடம் சோனம் வாங்சுக் வாக்குவாதம்!... </a></p><p>வைரலான வீடியோவில், சோனம் வாங்சுக்  அவரை வழிமறித்த காவல்துறை அதிகாரியிடம், "என்னை கைது செய்யுங்கள். 3 மணி நேரமாக என்னை ஏன் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறீர்கள்? நான் மன அழுத்தத்தால் இறந்தால் அதற்கு நீங்களே பொறுப்பு" என ஆவேசமாகப் பேசுவது பதிவாகியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/kanhaiya-kumar-arrested-after-clash-with-officer-at-delhi-kerala-house">அதிகாரியுடன் வாக்குவாதம்: டெல்லி கேரளா ஹவுஸில் காங்கிரஸ் தலைவர் கண்ணையா குமார் அதிரடி கைது!</a></p> <p>* கேரளா ஹவுஸில் அதிகாரியுடன் வாக்குவாதம், டெல்லி போலீசால் கைது.</p><p>* அமித் ஷாவின் அராஜகம் என கன்ஹையா கடும் கண்டனம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/students-protest-victory-dharmendra-pradhan-resigns">மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா!</a></p> <p>* நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நெருக்கடி முற்றியதால் ராஜினாமா.</p><p>* பிரதமர் மோடிக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/compensation-of-rs-1-crore-for-families-of-deceased-students">சிஜேபி தலைவர் மேலும் மூன்று கோரிக்கைகள்</a></p><p>* உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு</p><p>* மாணவர்கள் மீது எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கை ரத்து செய்யப்பட வேண்டும் </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rain-likely-chance-to-chennai-4">சென்னையில் மழைக்கு வாய்ப்பு...</a></p><p>* ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>* தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/its-a-victory-of-democracy-cjp-gen-z-youth-sonam-wangchuk-praise">IT'S A Victory OF DEMOCRAZY-CJP, Gen Z இளைஞர்களுக்கு சோனம் வாங்சுக் பாராட்டு!... </a></p><p>சோனம் வாங்சுக், இந்த வெற்றியை இளைஞர்களின் ஒற்றுமைக்குக் கிடைத்த வெற்றி எனப் பாராட்டியுள்ளார். இளைஞர்களின் இந்தத் துணிச்சலான ஜனநாயகப் போராட்டம் நாட்டிற்கே முன்மாதிரியாக உள்ளது என அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/dharmendra-pradhan-quits-a-look-back-at-his-political-career">மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த தர்மேந்திர பிரதான்: அரசியலில் கடந்து வந்த பாதை</a></p><p>* 2000-ம் ஆண்டு ஒடிசா மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார்.</p><p>* 2004-ம் ஆண்டு நடைபெற்ற 14-வது மக்களவை தேர்தலில் போட்டியிட்டு முதன்முறையாக எம்.பி. ஆனார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/stalin-congratulates-pmk-founder-ramadoss-as-he-retires-from-politics">பா.ம.க நிறுவனர் ராமதாஸூக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!... </a></p><p>இன்று தனது 88வது பிறந்தநாளைக் கொண்டாடும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும்  தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/congratulations-to-students-across-the-country-we-are-proud-of-you-rahul-gandhi">நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு பாராட்டுகள்: உங்களால் பெருமை கொள்கிறோம்- ராகுல் காந்தி</a></p><p>* தர்மேந்திர பிரதான் ராஜினாமா</p><p>* மேலும் 3 கோரிக்கைகளை முன்வைத்துள்ளது CJP</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/central-government-third-round-talks-with-cjb-protesters-in-delhi">டெல்லி சிஜேபி போராட்டக்காரர்களுடன் மத்திய அரசு 3-வது கட்ட பேச்சுவார்த்தை!</a></p><p>* இன்று டெல்லியில் சிஜேபி-யுடன் மத்திய அரசு 3-வது கட்ட பேச்சுவார்த்தை</p><p>* தர்மேந்திர பிரதான் ராஜினாமா; 2 கோரிக்கைகளுக்கு ஒப்புதல்</p><p>3-ம் கட்ட பேச்சுவார்த்தைக்குப்பின் போராட்டத்தை முடித்துக் கொள்ளவதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவிப்பு</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/gen-z-youth-cockroach-party-delhi-neet-exam-scandal">‘கரப்பான் பூச்சிகள்’ அமைத்த சாம்ராஜ்யம்: டெல்லியை பணியவைத்த Gen Z இளைஞர்களின் வரலாற்று நிகழ்வு!...</a></p><p>உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த், வழக்கு ஒன்றின் வாதத்தில் வேலை இல்லாத இளைஞர்களை கரப்பான்பூச்சிகள் என குறிப்பிட்டார் தனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக நீதிபதி சூரியகாந்த் பதில் கூறும் முன்பாகவே உதயமாகிவிட்டது ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’</p><p>3-ம் கட்ட பேச்சுவார்த்தைக்குப்பின் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவிப்பு</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/the-chief-minister-vijay-must-drop-plan-to-go-to-karnataka-for-talks-mk-stalin">பேச்சுவார்த்தைக்காக கர்நாடகம் செல்லும் முடிவை முதல்வர் கைவிட வேண்டும்: மு.க. ஸ்டாலின்</a></p><p>* காவிரி நீருக்காகக் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை எனும் சதிவலையில் தமிழ்நாடு முதலமைச்சர் சிக்கக் கூடாது. வேண்டாம் இந்த விஷப் பரீட்சை!</p><p>* நாம் பல்லாண்டுகள் சட்டப்பூர்வமாகப் போராடிப் பெற்ற உரிமைகளைச் சிதைப்பதாகவே பேச்சுவார்த்தை முயற்சிகள் அமையும். நீதிமன்றத்தில் பின்னடைவை ஏற்படுத்திவிடும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/peoples-democratic-verdict-arvind-kejriwal-on-people-power">மக்கள் அளித்த ஜனநாயக தீர்ப்பு: ஆட்சியாளர்களைப் பணியவைத்த ‘மக்கள் சக்தி’ குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் உருக்கம்!... </a></p><p>ஜனநாயகத்தில் மக்களே எஜமானர்கள்; அரசுகளும் ஆட்சியாளர்களும் அவர்களின் பணியாளர்களே, எஜமானர்களான பொதுமக்கள் தங்கள் உரிமைகளுக்காக உறுதியுடன் எழுந்து நிற்கும்போது, எவ்வளவு பெரிய ஆட்சியாளர்களாக இருந்தாலும் அவர்கள் பணிந்துதான் ஆக வேண்டும்" என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/you-made-unyielding-delhi-listen-minister-rajmohan-praises-in-chennai">யாருக்கும் செவிசாய்க்காத டெல்லியை நீங்கள் செவிசாய்க்க வைத்துள்ளீர்கள்!-சென்னையில் அமைச்சர் ராஜ்மோகன் புகழாரம்!... </a></p><p>மத்திய அரசின் பேச்சுவார்த்தை அழைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் அழுத்தங்கள் வந்தபோதும், Gen Z இளைஞர்கள் தங்களது நீதிக்கான கோரிக்கையில் சற்றும் பின்வாங்காமல் போராடினர். இளைஞர்களின் இந்த அமைதியான, ஜனநாயக ரீதியிலான மக்கள் சக்தி போராட்டம் இந்திய அரசியல் வரலாற்றில் மிக முக்கியப் புள்ளியாக மாறியுள்ளது என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/third-round-talks-with-central-government-conclude">டெல்லி போராட்டத்தை முடித்து கொள்வதாக சிஜேபி அறிவிப்பு</a></p><p>* மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவுடன் சிஜேபி பேச்சுவார்த்தை</p><p>* நான்கு வார காலத்திற்குள் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை</p> <p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/ishan-kishan-tilak-varma-blitz-india-set-220-target-vs-zimbabwe">இஷான் கிஷன், திலக் வர்மா அதிரடி: ஜிம்பாப்வேவுக்கு 220 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா</a></p><p>* இஷான் கிஷன் 44 பந்துகளில் 81 ரன்கள் விளாசினார்.</p><p>* திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 29 பந்தில் 60 ரன்கள் விளாசல்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kayalvizhi-alagiri-slaps-bank-manager-over-lift-repair-row">'லிப்ட் பழுது விவகாரத்தில் ஆத்திரம்': வங்கி மேலாளரை கன்னத்தில் அறைந்த கயல்விழி அழகிரி மீது வழக்குப் பதிவு!... </a></p><p>அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல், தகாத வார்த்தைகளால் பேசுதல், தாக்குதல் நடத்துதல் மற்றும் மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கயல்விழி அழகிரி மீது அடையாறு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cpm-shanmugam-slams-third-spot-for-tamil-thai-vaazhthu-at-sundaranar-university">சுந்தரனார் பல்கலைக் கழகத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடமா?-சிபிஎம் சண்முகம் ஆவேசம்!... </a></p><p>மத்திய அரசின் ஆளுநர் மாளிகை விதிகளைச் சுட்டிக்காட்டி முதலில் 'வந்தே மாதரம்', இரண்டாவதாக 'தேசிய கீதம்', மற்றும் மூன்றாவதாகவே 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடப்படும் எனப் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/india-easily-beats-zimbabwe-in-2nd-t20-to-clinch-series">2-வது டி20 போட்டியில் ஜிம்பாப்வேவை எளிதாக வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா</a></p><p>* யாஷ் தாகூர் மற்றும் பிரின்ஸ் யாதவ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.</p><p>* ரவி பிஷ்னோய், ஷிவம் துபே, திலக் வர்மா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/bjp-veteran-mm-joshi-says-better-late-than-never-as-pradhan-quits-had-criticised-use-of-force-on-cjp-protesters">ஒருபோதும் இல்லை என்பதை விட காலதாமதம் சிறந்தது: தர்மேந்திர பிரதான் ராஜினாமா குறித்து முரளி மனோகர் ஜோஷி</a></p><p>* போராட்டத்தை அமைதியான முறையில் நிறைவு செய்த அனைத்து மாணவர்களையும் நான் பாராட்டுகிறேன்.</p><p>* அவர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p>]]></content:encoded></item><item><title>ஹோண்டா பைக்.. அட்வென்ச்சர், இ-ஸ்கூட்டர் போன்ற 10 வகை வேரியண்டுகள் அறிமுகம்</title><link>https://www.maalaimalar.com/automobilenews/bike/honda-bike-adventure-e-scooter-10-variants-launched</link><comments>https://www.maalaimalar.com/automobilenews/bike/honda-bike-adventure-e-scooter-10-variants-launched#comments</comments><guid isPermaLink="false">937fb74e-ed03-4dad-822b-a9634319901b</guid><pubDate>Sat, 25 Jul 2026 16:33:40 +0000</pubDate><atom:updated>2026-07-25T16:33:40.297Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>honda,ஹோண்டா,Adventure bike,அட்வென்ச்சர் பைக்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/ihz0mk1m/Untitled-design-74.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Honda Launches 10 New Two-Wheeler Variants ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/ihz0mk1m/Untitled-design-74.jpg?w=280" width="280"></media:thumbnail><category>பைக் (Automobile)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஹோண்டா மோட்டார் சைக்கிள் &amp; ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், இருசக்கர வாகனங்களைக் கொண்ட தனது விரிவாக்கப்பட்ட தயாரிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>இந்த புதிய வரிசையில், ஸ்கூட்டர்கள், ரோட்ஸ்டர்கள், க்ரூஸர்கள், அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள்கள், எலக்ட்ரிக் மொபிலிட்டி மற்றும் ஃப்ளெக்ஸ்-ஃப்யூயல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கிய, ஏழு புதிய மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.</p><h3><strong>ஹோண்டா அட்வென்ச்சர்:</strong></h3><p>ஸ்கூட்டர் வரிசையில் புதிய ஹோண்டா ADV 160 முதலிடம் வகிக்கிறது. இது 160சிசி லிக்விட்-கூல்டு இன்ஜின் மூலம் இயக்கப்படும் என்றும், E85 எரிபொருளுடன் இணக்கமான இந்தியாவின் முதல் ஸ்கூட்டராக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும், இது 8. 1 லிட்டர் பெட்ரோல் டேங்கையும், இருக்கைக்கு அடியில் 27 லிட்டர் சேமிப்பு இடத்தையும் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.</p><p>இந்த ஸ்கூட்டர்கள் ஆயில் கூலருடன் கூடிய 501 சிசி சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் மூலம் இயங்கும். இது அலாய் வீல்கள், ஸ்போக் டியூப்லெஸ் வீல்கள் மற்றும் கிராபிக்ஸ் கொண்ட ஸ்போக் டியூப்லெஸ் வெர்ஷன் என மூன்று வேரியண்ட்டுகளில் வழங்கப்படும்.</p><h3><strong>ஹோண்ட CB:</strong></h3><p>இதனுடன், ஹோண்டா தனது CB350, CB350C மற்றும் CB350RS மாடல்களை, அவற்றின் தற்போதைய இயந்திர அமைப்புடன் புதிய வண்ணத்துடன் புதுப்பித்துள்ளது.</p><p>ரெபெல் 300 மற்றும் ரெபெல் 500 மாடல்கள், க்ரூஸர் வகை பைக்குகளின் வரிசையை விரிவுபடுத்தியுள்ளது. ரெபெல் 300 மாடல் 286சிசி லிக்விட் கூல்டு இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது ஸ்டாண்டர்ட் மற்றும் இ-கிளட்ச் வேரியன்ட்களில் வழங்கப்படும்.</p><h3><strong>ஹோண்டா XR:</strong></h3><p>சாகசப் பிரியர்களுக்கும் XR 300L மற்றும் XR 300 Rally என்ற இரண்டு பைக்குகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. XR 300L, நகரப் பயன்பாடு மற்றும் மலைப்பாதை சவாரிகள் ஆகிய இரண்டிற்கும் ஏற்ற, எடை குறைந்த அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><p>இது ஆயில் கூலருடன் கூடிய 293.5cc காற்று குளிரூட்டப்பட்ட இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. XR 300 Rally அதே பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டிருந்தாலும், இது நீண்ட தூரப் பயணங்கள் மற்றும் கலவையான நிலப்பரப்பு சவாரிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><h3><strong>ஹோண்டா மின்சார வாகனம்:</strong></h3><p>ஹோண்டா தனது மின்சார வாகன வரிசையை புதிய QC3 ஃபேமிலி ஸ்கூட்டருடன் விரிவுபடுத்தியுள்ளது. இது 3 kWh பேட்டரி பேக்குடன் சந்தைக்கு வர உள்ளது. மேலும் 151 கி.மீ. தூரம் வரை செல்லும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.</p><p>இதை 2 மணி 40 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும். இதன் இருக்கைக்கு அடியில் 32 லிட்டர் கொள்ளளவு கொண்ட சேமிப்புப் பகுதி, ஸ்மார்ட் கீ மற்றும் இணைப்பு அம்சங்களுடன் கூடிய 5-இன்ச் TFT டிஸ்ப்ளே ஆகியவற்றைக் கொண்டுள்ளது.</p><h3><strong>விலை மற்றும் அறிமுகம்:</strong></h3><p>இந்த 10 வகை மாடல்களின் பைக்குகளின் விலைகள் மற்றும் சந்தை வெளியீட்டு கால அட்டவணைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அசாமில் பாகிஸ்தான் ISI ஸ்லீப்பர் செல்லுடன் தொடர்புடைய 3 பேர் கைது</title><link>https://www.maalaimalar.com/news/national/three-arrested-linked-to-pakistan-isi-terror-network-in-assam</link><comments>https://www.maalaimalar.com/news/national/three-arrested-linked-to-pakistan-isi-terror-network-in-assam#comments</comments><guid isPermaLink="false">10e37756-5b1d-440f-8da1-ce71cc7f254c</guid><pubDate>Sat, 25 Jul 2026 16:01:40 +0000</pubDate><atom:updated>2026-07-25T16:01:40.340Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஐஎஸ்ஐ,ISI,அசாம்,Assam,special task force,சிறப்பு அதிரடி படை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/tf9yrv4p/Untitled-design-71.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Three linked to Pakistan-based Shazad Bhatti terror network arrested]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/tf9yrv4p/Untitled-design-71.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அசாமில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஷாசாத் பட்டி நெட்வொர்க் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் மூன்று பேரை சிறப்பு அதிரடிப் படையினர் கைது செய்தனர்.</p><p>அசாமில் புலனாய்வு தகவல்களின் அடிப்படையில், சிறப்பு அதிரடிப்படை காவல்துறையினர் ஒருங்கிணைந்த நடவடிக்கை ஒன்றை நேற்று மேற்கொண்டனர்.</p><h3><strong>ஷாசாத் பட்டி ஐஎஸ்எஸ் பயங்கரவாத அமைப்பு:</strong>   </h3><p>அப்போது பாகிஸ்தானின் ஷாசாத் பயங்கரவாத அமைப்பு இணையவழியில் தீவிரவாதத்தைப் பரப்புவது, உளவு பார்த்தல், சட்டவிரோதமாக ஆயுதங்களைக் கொள்முதல் செய்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தது கண்டறியப்பட்டது.</p><p>இந்த அமைப்பு பாகிஸ்தானின் உளவுத்துறை அமைப்புடன் (ISI) தொடர்புடைய பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.</p><p>காலிஸ்தான் ஆயுதப் படை, காலிஸ்தான் விடுதலை இராணுவம், ஷேர்-இ-பஞ்சாப் படைப்பிரிவு மற்றும் தெஹ்ரிக்-இ-தாலிபான் ஹிந்துஸ்தான் உள்ளிட்ட பல பயங்கரவாத அமைப்புகளுடன் இந்த அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறை கூறியது.</p><p>2026 பிப்ரவரி 22 மற்றும் மே 24 ஆகிய தேதிகளில் நடந்த தனித்தனி சம்பவங்களில் இரண்டு பஞ்சாப் காவல்துறை பணியாளர்களின் கொலைகளுக்கு, இந்த பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றதாகவும் காவல்துறை தெரிவித்தது.</p><h3><strong>காவல்துறை அறிக்கை:</strong></h3><p>இந்நிலையில் கைது நடவடிக்கைக்கு பிறகு காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், “பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஷாஜாத் பட்டி நெட்வொர்க், இந்தியாவில் ஸ்லீப்பர் செல்களை நிறுவ முயற்சி செய்து வருகிறது.</p><p>அதன் மூலம் அந்த அமைப்பு நாசவேலைத் திட்டங்கள் மற்றும் தேசவிரோத நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.</p><p>இந்த நெட்வொர்க் ஆரம்பத்தில் பஞ்சாப், ஹரியானா மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் தனது நடவடிக்கைகளைத் தொடங்கியது.</p><p>2026-ஆம் ஆண்டில், அசாம் மற்றும் வடகிழக்கில் அதன் நடவடிக்கைகள் எங்கள் கவனத்திற்கு வந்தன. அதன் அடிப்படையில், சிறப்பு அதிரடிப்படை துப்ரி, சிரங் மற்றும் பர்பேட்டாவில் ஒரே நேரத்தில் நடவடிக்கைகளை தொடங்கியது.</p><h3><strong>மூன்று பேர் கைது:</strong></h3><p>இதன் விளைவாக, இந்த நெட்வொர்க்கைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் அக்ரமுல் இஸ்லாம், அமினுர் ரஹ்மான் மற்றும் அப்துல் ஹுசைன் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.</p><p>இவர்களிடமிருந்து ஐந்து கைபேசிகள், ஏழு சிம் கார்டுகள், ஆதார் அட்டைகள், வங்கி பாஸ்புக்குகள், பற்று அட்டைகள் மற்றும் பிற ஆவணங்களை புலனாய்வாளர்கள் கைப்பற்றினர்” என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>குழந்தைகளை சமூக ஊடகங்களில் இருந்து விலக்கி வையுங்கள்.. பெற்றோர்களுக்கு மோகன் பகவத் அறிவுரை</title><link>https://www.maalaimalar.com/news/national/keep-children-away-from-social-media-mohan-bhagwat-advice-to-parents</link><comments>https://www.maalaimalar.com/news/national/keep-children-away-from-social-media-mohan-bhagwat-advice-to-parents#comments</comments><guid isPermaLink="false">d28ccfad-eb49-4c6e-8006-44f879e74403</guid><pubDate>Sat, 25 Jul 2026 15:54:09 +0000</pubDate><atom:updated>2026-07-25T15:54:09.670Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>RSS,மோகன் பகவத்,Mohan Bagwat,ஆர்.எஸ்.எஸ். தலைவர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/lebzn3e8/Untitled-design-73.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mohan Bhagwat advises parents to lead by example and protect kids ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/lebzn3e8/Untitled-design-73.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இளைஞர்கள் தோல்வியடையும்போது விமர்சனத்தை விட அவர்களுக்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவே தேவை என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறினார்.</p><p>விஸ்வமங்கள்ய சபா ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத், பெற்றோர்கள் குழந்தைகளின் ஆரம்ப ஆண்டுகளில் அவர்களின் குணநலன்களை வளர்ப்பதில் கவனம் செலுத்தி, அவர்கள் வளரும்போது படிப்படியாக அதிக சுதந்திரம் அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.</p><h3><strong>குழந்தைகள் வளர்ப்பு அறிவுரை:</strong></h3><p>சமூக ஊடகங்களின் தாக்கத்தைக் கையாள்வதில் பெற்றோர்கள் முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்றும், குழந்தைகள் வீட்டில் பார்ப்பதைப் பின்பற்றுவதாகவும், பெரியவர்களைக் கவனிப்பதன் மூலம் தங்கள் குணநலன்களை வளர்த்துக் கொள்வதாகவும் அவர் வலியுறுத்தினார்.</p><p>இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், “இன்றைய சொற்கள் நுண்ணறிவை (IQ) பற்றிப் பேசுகின்றன. ஆனால், உணர்ச்சி நுண்ணறிவுதான் உண்மையில் முக்கியமானது. </p><p>பின்னடைவுகளைச் சமாளிக்க முடியாமல் வாழ்க்கையில் தோல்வியடையும் திறமையானவர்களை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம்.</p><p>மதிப்புகளைத் திணிக்க முடியாது. பெரியோர்களின் நடத்தையைக் கவனிப்பதன் மூலம் அவை இயல்பாகவே உள்வாங்கப்படுகின்றன. </p><p>இது நல்லது, எனவே இதைச் செய்யுங்கள் என்று யாரோ சொல்வதால் மட்டும் அவை ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. </p><p>கவனிப்பதாலும், பின்பற்றுவதாலும் மட்டுமே அவை ஒருவரின் குணத்தின் ஒரு பகுதியாக மாறுகின்றன. ஐந்து வயது வரை குழந்தைகளை சின்னஞ்சிறு ராஜாக்கள் மற்றும் ராணிகளைப் போல நடத்த வேண்டும். </p><p>ஐந்து முதல் பதினாறு வயதுக்குள் அவர்களை முறையாக ஒழுங்குபடுத்த வேண்டும்; பதினாறு வயதுக்குப் பிறகு, அவர்களை நண்பர்களைப் போல நடத்த வேண்டும் என்று எங்கள் முன்னோர்கள் கூறுவார்கள். </p><p>ஏனென்றால், அந்த வயதில், இளம் வயதினர் சுயமாகப் புரிந்துகொள்ளவும் சிந்திக்கவும் கூடிய திறனை வளர்த்துக் கொள்கிறார்கள்.</p><h3><strong>பெற்றோர்களுக்கு அறிவுரை:</strong></h3><p>ஒரு குழந்தை தேர்வில் தோல்வியுற்றால், தான் தோல்வியடைந்துவிட்டோம் என்பது அக்குழந்தைக்கு ஏற்கெனவே தெரியும். அதை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை.</p><p>மாறாக, தங்களுடன் யாரோ ஒருவர் துணை நிற்கிறார் என்பதை அக்குழந்தை உணர வேண்டும். பெற்றோர்கள் குழந்தையிடம், கவலைப்படாதே.</p><p>நாங்கள் உன்னுடன் இருக்கிறோம், அடுத்த முறை நீ வெற்றி பெறுவாய். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம் என்று சொல்ல வேண்டும். அதுதான் குழந்தைகளுக்குத் தேவை.</p><p>விழுந்தாலும் எழுந்து முன்னேறிச் செல்ல வேண்டும் என்று ஒவ்வொரு குழந்தைக்கும் கற்பிக்கப்பட வேண்டும். அந்த நம்பிக்கை குடும்பத்திடமிருந்து வர வேண்டும்.</p><p>குடும்பங்கள் அத்தகைய ஆதரவை வழங்கினால், குழந்தைகள் இயல்பாகவே வலிமையானவர்களாகவும் திறமையானவர்களாகவும் மாறுவார்கள்.</p><p>குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் மிகவும் நெருக்கமாகப் பிணைந்திருப்பதாக உணர வேண்டும், அப்போதுதான் அவர்களால் தயக்கமின்றி தங்கள் பெற்றோரிடம் பேச முடியும்.</p><h3><strong>சமூக ஊடகப் பொறுப்பு:</strong> </h3><p>உங்கள் பிள்ளைகள் திரைப்படங்களில் வரும் சில உள்ளடக்கங்களைப் பார்ப்பதையோ அல்லது இழிவான வார்த்தைகளைக் கேட்பதையோ நீங்கள் விரும்பவில்லை என்றால், நீங்களும் அதைப் பார்க்கவோ கேட்கவோ கூடாது.</p><p>எல்லாவற்றிற்கும் மேலாக, அதைத் தவிர்ப்பதால் நாம் என்ன இழக்கப் போகிறோம்? குழந்தைகள் தாங்கள் பார்ப்பதைப் பின்பற்றுகிறார்கள்.</p><p>நாம் சரியான வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்தால், அவர்கள் இயல்பாகவே அதைப் பின்பற்றுவார்கள், படிப்படியாக அது அவர்களின் குணத்தின் ஒரு பகுதியாகி விடும்,” என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>அடுத்த கல்வித்துறை அமைச்சர் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/next-education-minister-central-government-shock-announcement</link><comments>https://www.maalaimalar.com/news/national/next-education-minister-central-government-shock-announcement#comments</comments><guid isPermaLink="false">1415e9b2-5006-406a-8061-2bfc9da3e2f5</guid><pubDate>Sat, 25 Jul 2026 15:17:53 +0000</pubDate><atom:updated>2026-07-25T15:17:53.098Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,பிரகலாத் ஜோஷி,Prahlad Joshi,neet protest,நீட் போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/vy4z2goz/Untitled-design-72.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dharmendra Pradhan resigns, Pralhad Joshi given additional education charge]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/vy4z2goz/Untitled-design-72.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய கல்வி அமைச்சராக பதவி வகித்த தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, உணவு மற்றும் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. </p><h3><strong>தர்மேந்திர பிரதான் ராஜினாமா:</strong></h3><p>டெல்லியில் நீட் தேர்விற்கு எதிராக காக்ரோச் ஜனதா கட்சியினர் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், தர்மேந்திர பிரதான் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக பிரதர் மோடிக்கு கடிதம் எழுதினார்.</p><p>தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.</p><p>இதையடுத்து சிஜேபி கட்சியினருடன் பாஜக மூத்த அமைச்சர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.</p><p>அப்போது சிஜேபி கட்சியின் சார்பாக மூன்று முக்கிய கோரிக்கைகள் வைக்கப்பட்டது. இந்த கோரிக்கைகளை  ஏற்றுக்கொள்வதாக மத்திய அரசு தெரிவித்தது. பின்னர் போராட்டம் கைவிடப்படுவதாக சிஜேபி அறிவித்தது. </p><p>மேலும் நான்கு வார காலத்திற்குள், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்தது.</p><p>தர்மேந்திர பிரதான் பதவி விலகியதையடுத்து, மத்திய கல்வித் துறை பதவி காலியாக இருந்தது.</p><h3><strong>கல்வித்துறை அமைச்சராக கூடுதல் பொறுப்பு:</strong></h3><p>இந்நிலையில் கர்நாடகாவின் முன்னாள் பாஜக மாநில தலைவரும், இந்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சருமான பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித்துறை இலாகா வழங்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>ஒருபோதும் இல்லை என்பதை விட காலதாமதம் சிறந்தது: தர்மேந்திர பிரதான் ராஜினாமா குறித்து முரளி மனோகர் ஜோஷி</title><link>https://www.maalaimalar.com/news/national/bjp-veteran-mm-joshi-says-better-late-than-never-as-pradhan-quits-had-criticised-use-of-force-on-cjp-protesters</link><comments>https://www.maalaimalar.com/news/national/bjp-veteran-mm-joshi-says-better-late-than-never-as-pradhan-quits-had-criticised-use-of-force-on-cjp-protesters#comments</comments><guid isPermaLink="false">d369b969-8e9c-445a-9268-1eb7d305d8bf</guid><pubDate>Sat, 25 Jul 2026 14:56:24 +0000</pubDate><atom:updated>2026-07-25T14:56:24.526Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,Murli Manohar Joshi,CJP Protest,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/8bxc7bry/DharmendraPradhan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தர்மேந்திர பிரதான்- முரளி மனோகர் ஜோஷி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/8bxc7bry/DharmendraPradhan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வு வினாத்தாள் லீக் விவகாரத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி <a href="https://www.maalaimalar.com/news/national/peoples-democratic-verdict-arvind-kejriwal-on-people-power">கரப்பான்பூச்சி ஜனதா கட்சி</a> சார்பில் ஜந்தர் மந்தரில் கடந்த 20-ந்தேதி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.</p><p>மாணவர்களின் கோரிக்கையை ஏற்று தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தனது போராட்டத்தை கைவிட்டுள்ளது.</p><p>தர்மேந்திர பிரதான் ராஜினாமா தொடர்பாக பாஜக கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் முன்னாள் தேசிய தலைவருமான முரளி மனோகர் ஜோஷி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-</p><p>ஒருபோதும் இல்லாதது என்பதைவிட காலதாமதம் சிறந்தது. தர்மேந்திர பிரதான் தனது ராஜினாமாவைச் சமர்ப்பித்துள்ளார். பிரதமரும் இதுகுறித்து உடனடி மற்றும் சரியான நேரத்தில் முடிவெடுப்பார் என்று நான் நம்புகிறேன்.</p><p>இப்போராட்டத்தை அமைதியான முறையில் நிறைவு செய்த அனைத்து மாணவர்களையும் நான் பாராட்டுகிறேன். அவர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியக் கல்விச் சூழலில் விரைவில் அமைதி நிலவும் என்றும், இளைஞர்கள் தங்கள் பிரகாசமான எதிர்காலத்திற்கும் முன்னேற்றத்திற்கும் ஏற்ற ஏராளமான வாய்ப்புகளைப் பெறுவார்கள் என்றும் நான் நம்புகிறேன்.</p><p>இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p><p>பாஜக முன்னாள் தலைவரான முரளி மனோகர் ஜோஷி, தர்மேந்திர பிரதான் ராஜினாமா சரிதான் எனப் பேசியுள்ளார். அரசியல் விமர்சனம், மோடி அரசின் கொள்கை பிரச்சினை தொடர்பாக இவர் விமர்சிக்காமல் இருந்தது இல்லை.</p><h2>மத்திய அரசு பணிவதற்கான தொடக்கம்</h2><p>நீட் தேர்வு வினாத்தாள் லீக் விவகாரத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் ஜந்தர் மந்தரில் கடந்த 20-ந்தேதி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.</p> <h2>நாடாளுமன்றம் முற்றுகை போராட்டம்</h2><p>இவர்கள் கடந்த 20-ந்தேதி நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் பேரணியை நடத்தினர். அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தனர். தடுப்பை மீறிச் செல்ல முயன்றதால் போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். கண்ணீர் புகைக்குண்டுகளும் வீசினர். இதில் பல மாணவர்கள் காயம் அடைந்தனர்.</p><p>இதனால் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் தொடரும். அவர் ராஜினாமா செய்யவில்லை என்றால் பிரதமர் மோடி ராஜினாமா செய்யக்கோரி போராடுவேம் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தெரிவித்தது.</p><h2>மேலும் 3 கோரிக்கைகள் வைத்த கரப்பான்பூச்சி ஜனதா தளம்</h2><p>இதனைத்தொடர்ந்து மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. இரண்டு கட்ட பேச்சுவார்த்தை முடிந்த நிலையில், இன்று 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது. அதற்கு முன்னதாக இன்று மதியம் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.</p><p>தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்த போதிலும், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜீத் தீப்கே போராட்டத்தை வாபஸ் பெறப்படாது. மேலும், 3 கோரிக்கைகளை நிறைவேற்றினால்தான் போராட்டம் கைவிடப்படும் என்று தெரிவித்தார்.</p><p>தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய பின், கராப்பான்பூச்சி ஜனதா தளம் மற்றும் மத்திய அரசு இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.</p><p>இந்த நிலையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, "நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு பாராட்டுக்கள். உங்கள் அனைவரையும் நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>3-ம் கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மற்ற விசயங்கள் 4 வாரங்கள் கழித்து பேசி முடிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தனது போராட்டத்தை முடித்துக் கொண்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சர்க்கரை சாப்பிடலனா உண்மையிலேயே உடல் எடை குறையுமா?-ஒரு ஆச்சரியமான பார்வை!</title><link>https://www.maalaimalar.com/health/generalmedicine/can-cutting-sugar-really-help-you-lose-weight-a-surprising-view</link><comments>https://www.maalaimalar.com/health/generalmedicine/can-cutting-sugar-really-help-you-lose-weight-a-surprising-view#comments</comments><guid isPermaLink="false">90840edd-5fc5-4a7d-a86f-620affde0883</guid><pubDate>Sat, 25 Jul 2026 14:42:46 +0000</pubDate><atom:updated>2026-07-25T14:42:46.762Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Health,HealthTips,சர்க்கரை,உடல்நலம்,Sugar cut,ஆரோக்கியம</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/l5wubixu/sug.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ sugar cut]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/l5wubixu/sug.jpg?w=280" width="280"></media:thumbnail><category>பொது மருத்துவம் (General Medicine)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இன்றைய நவீன உணவுப் பழக்கத்தில் சர்க்கரை (Refined Sugar) தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. ஆனால், நாம் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை 10 நாட்கள் முழுமையாகத் தவிர்த்தால், நம் உடலில் வியக்கத்தக்க பல நேர்மறை மாற்றங்கள் நிகழும்.</p><h2><strong>உடனடி உடல் எடை குறைவு:</strong></h2><p>சர்க்கரையைக் குறைக்கும் போது உடலில் தேங்கியுள்ள அதிகப்படியான நீர்ச்சத்து வெளியேறும்.</p><p>*சர்க்கரை உட்கொள்ளாத போது இன்சுலின் அளவு குறைகிறது.</p><p>* இதனால் சிறுநீரகம் உடலில் உள்ள அதிகப்படியான நீரையும் உப்பையும் வெளியேற்றுகிறது.</p><p>* இதன் விளைவாக, முதல் 10 நாட்களிலேயே உடல் எடையில் குறிப்பிடத்தக்க குறைவைக் காண முடியும்.</p><h2><strong>சீரான ரத்த சர்க்கரை மற்றும் அதிக ஆற்றல்:</strong></h2><p>சர்க்கரை உணவுகளைச் சாப்பிடும் போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென உயர்ந்து, பின்னர் வேகமாக குறைந்து செல்லும். இதனால் அடிக்கடி சோர்வு உண்டாகும்.</p><p>* சர்க்கரையைத் தவிர்க்கும் போது ரத்த சர்க்கரை அளவு சீராக பராமரிக்கப்படுகிறது.</p><p>* நாள் முழுவதும் உடலுக்கு மந்தநிலை இல்லாமல் நிலையான ஆற்றல் கிடைக்கும்.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/gc8gsrts/art.jpg" /></figure><h2><strong>வயிற்று உப்பசம் மற்றும் வீக்கம் குறையும்:</strong></h2><p>சர்க்கரை குடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களுக்கு உணவாகி, செரிமானக் கோளாறுகள் மற்றும் வயிற்று உப்பசத்தை ஏற்படுத்துகிறது. 10 நாட்கள் சர்க்கரையை நிறுத்துவதால் குடல் ஆரோக்கியம் மேம்பட்டு வயிற்று உப்பசம் குறையும்.</p><h2><strong>பொலிவான சருமம்:</strong></h2><p>அதிகப்படியான சர்க்கரை பயன்பாடு சருமத்தில் பருக்கள் மற்றும் சுருக்கங்களை உண்டாக்கும் 'கிளைகேஷன்' என்ற செயல்முறையை ஊக்குவிக்கிறது.</p><p>* சர்க்கரையைத் தவிர்ப்பதால் சருமத்தில் ஏற்படும் அழற்சி குறைகிறது.</p><p>* முகம் இயற்கையான பொலிவும், பிரகாசமும் பெறும்.</p><h2><strong>இனிப்பு மீதான ஆசை கட்டுப்படும்:</strong></h2><p>முதல் 2-3 நாட்களுக்கு சர்க்கரை சாப்பிட வேண்டும் என்ற தூண்டுதல் அதிகமாக இருக்கலாம். ஆனால் 10 நாட்களின் முடிவில்,</p><p>* மூளையின் சுவை நரம்புகள் சீரடைகின்றன.</p><p>* சர்க்கரை மீதான தீவிர ஆசை முற்றிலுமாகக் குறையும்.</p><p>* இயற்கை உணவுகளின் உண்மையான சுவையை உங்களால் உணர முடியும்.</p><h2><strong>ஆழ்ந்த மற்றும் சீரான தூக்கம்:</strong></h2><p>இரவில் சர்க்கரை சார்ந்த உணவுகளை உண்பது தூக்கத்தின் தரத்தைப் பாதிக்கும். சர்க்கரையைத் தவிர்ப்பதால் இரவில் ஆழ்ந்த, அமைதியான தூக்கம் கிடைக்கும்; காலையில் புத்துணர்ச்சியோடு விழித்தெழலாம்.</p><h2><strong>தெளிவான சிந்தனை மற்றும் மனநிலை மாற்றம்:</strong></h2><p>சர்க்கரை அளவின் அடிக்கடி மாற்றங்கள் பதற்றம், மன அழுத்தம் மற்றும் கவனச்சிதறலை உண்டாக்கும். சர்க்கரையை நிறுத்துவதன் மூலம் மூளையின் செயல்பாடு மற்றும் கவனம்  மேம்படும்.</p><h2>ச<strong>ர்க்கரையைத் தவிர்க்கும்போது கவனிக்க வேண்டியவை:</strong></h2><p>முதல் 2-3 நாட்களுக்கு தலைவலி, சோர்வு அல்லது எரிச்சல் போன்ற சிறிய கோளாறுகள் இருக்கலாம். இவை உடல் சர்க்கரையில் இருந்து விடுபடுவதற்கான இயல்பான அறிகுறிகளே ஆகும். சர்க்கரைக்கு பதிலாக பழங்கள், தேங்காய் நீர் மற்றும் போதிய அளவு தண்ணீர் குடிப்பது உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும்.</p><p>வெறும் 10 நாட்கள் சர்க்கரையைத் தவிர்ப்பது என்பது ஒரு பெரிய ஆரோக்கியப் பயணத்தின் சிறந்த தொடக்கமாகும். தொடர்ந்து சர்க்கரையைக் குறைத்து வாழ்வது நீரிழிவு, இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் கல்லீரல் பாதிப்புகளில் இருந்து நம்மைப் பாதுகாக்கும்!</p>]]></content:encoded></item><item><title>2-வது டி20 போட்டியில் ஜிம்பாப்வேவை எளிதாக வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா</title><link>https://www.maalaimalar.com/sports/india-easily-beats-zimbabwe-in-2nd-t20-to-clinch-series</link><comments>https://www.maalaimalar.com/sports/india-easily-beats-zimbabwe-in-2nd-t20-to-clinch-series#comments</comments><guid isPermaLink="false">e5df313c-2f5d-4c10-862d-2e52cef7a7dc</guid><pubDate>Sat, 25 Jul 2026 14:36:09 +0000</pubDate><atom:updated>2026-07-25T14:36:09.765Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Abhishek Sharma,INDvsZIM,Yash Thakur</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/6tk669e3/TeamIndia2507.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Team India]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/6tk669e3/TeamIndia2507.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியா- ஜிம்பாப்வே இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரேயில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியாவின் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். வைபவ் சூர்யவன்ஷி 20 ரன்களில் ஆட்டமிழந்தார். அபிஷேக் சர்மா 8 ரன்களில் வெளியேறினார்.</p><h2>இஷான் கிஷன் அதிரடி</h2><p>3-வது விக்கெட்டுக்கு இஷான் கிஷன் உடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இஷான் கிஷன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஷ்ரேயாஸ் அய்யர் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு இஷான் கிஷன் உடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் சிறப்பாக விளையாடியது. அரைசதம் அடித்த இஷான் கிஷன் 44 பந்தில் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.</p><h2>திலக் வர்மா 60 ரன்கள்</h2><p>திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 29 பந்தில் 60 ரன்கள் விளாச, இந்தியா 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்தது.</p><p>பின்னர் 220 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஜிம்பாப்வே களம் இறங்கியது.</p><h2>ஜிம்பாப்வே வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழப்பு</h2><p>தொடக்க வீரர் பிரையன் பென்னெட் 19 பந்தில் 32 ரன்களில் விளாசினார். இதில் 3 சிக்சர், 3 பவுண்டரி அடங்கும். அதன்பின் வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.</p><p>பென் கர்ரன் 1 ரன்னிலும், டியோன் மையர்ஸ் 12 ரன்களிலும், சிகந்தர் ரசா ரன்ஏதும் எடுக்காமலுமு், ரியான் பர்ல் 20 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.</p><p>இதனால் ஜிம்பாப்வே 17.5 ஓவர்களில் 129 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியா 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் அபிஷேக் சர்மா 3 விக்கெட்டுமு் யாஷ் தாகூர் மற்றும் பிரின்ஸ் யாதவ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p>ரவி பிஷ்னோய், ஷிவம் துபே, திலக் வர்மா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-0 எனக் கைப்பற்றியுள்ளது. 3-வது மற்றும் கடைசி போட்டி நாளை நடைபெறுகிறது.</p>]]></content:encoded></item><item><title>சுந்தரனார் பல்கலைக் கழகத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடமா?-சிபிஎம் சண்முகம் ஆவேசம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cpm-shanmugam-slams-third-spot-for-tamil-thai-vaazhthu-at-sundaranar-university</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cpm-shanmugam-slams-third-spot-for-tamil-thai-vaazhthu-at-sundaranar-university#comments</comments><guid isPermaLink="false">2c66a21e-5c7f-4dfb-a000-a1faa95d556c</guid><pubDate>Sat, 25 Jul 2026 14:12:51 +0000</pubDate><atom:updated>2026-07-25T14:12:51.880Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Manonmaniam Sundaranar University,தமிழ்த்தாய் வாழ்த்து,Tamil Thaai Vaazhthu,CPM Shanmugam,மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,பி.சண்முகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/ubep1up6/cpm.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CPM Shanmugam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/ubep1up6/cpm.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடல் மூன்றாவதாகப் பாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பி.சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், எந்தவொரு நிபந்தனைகளுக்கும் அடிபணியாமல் தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு மற்றும் பல்கலைக்கழக நிகழ்வுகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்தை முதன்மையதாகப் பாடுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் எனக் வலியுறுத்தினார்.</p><h2><strong>பல்கலைக்கழக விழா சர்ச்சை:</strong></h2><p>மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா வரும் 28ம் தேதி ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தலைமையில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில், மத்திய அரசின் ஆளுநர் மாளிகை விதிகளைச் சுட்டிக்காட்டி முதலில் 'வந்தே மாதரம்', இரண்டாவதாக 'தேசிய கீதம்', மற்றும் மூன்றாவதாகவே 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடப்படும் எனப் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.</p><h2><strong>எந்த நிபந்தனைக்கும் பணியக்கூடாது:</strong></h2><p>தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய மனோன்மணியம் சுந்தரனார் பெயரில் இயங்கும் பல்கலைக்கழகத்திலேயே, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாம் இடம் தருவது அவருக்கு இழைக்கப்படும் பெரும் அவமரியாதை என சிபிஎம் சுட்டிக்காட்டியுள்ளது. </p><p>இதுகுறித்துப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பி. சண்முகம், "ஆளுநர் பங்கேற்கிறார் என்பதற்காகவே ஒரு மாநிலத்தின் மாநிலப் பாடலைப் பின்வரிசைக்குத் தள்ளுவது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல. </p><p>ஆளுநர் மாளிகையின் இந்த அத்துமீறலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழ்நாடு அரசு எவ்வித நிபந்தனைக்கும் அடிபணியாமல் தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாகப் பாடப்படுவதை உறுதி செய்திட வேண்டும்" என்றார்.</p><h2><strong>தமிழ்நாடு அரசின் நீண்டகால நடைமுறை:</strong></h2><p>தமிழ்நாட்டின் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கல்வி நிறுவன விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாகவும், நிறைவில் தேசிய கீதம் பாடப்படுவதும் பல தசாப்தகால மரபாகும். ஆளுநர் மாளிகை நிகழ்ச்சி முறையைக் காரணம் காட்டி, மாநிலப் பல்கலைக்கழகங்களிலும் இந்த மரபை மாற்றுவதற்குப் பல்வேறு அரசியல் கட்சிகளும் தமிழ் அமைப்புகளும் தொடர்ந்து எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றன.</p> ]]></content:encoded></item></channel></rss>