<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 02 Aug 2026 12:37:57 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்- 2 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-2-august-2026-2</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-2-august-2026-2#comments</comments><guid isPermaLink="false">48999084-21c9-4682-8ced-862e589bbdef</guid><pubDate>Sun, 02 Aug 2026 04:01:11 +0000</pubDate><atom:updated>2026-08-02T08:58:10.928Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/f9fzok5j/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Today Live News]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/f9fzok5j/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/mumbai-tv-actress-aditi-sharma-files-complaint-against-husband">மும்பை சின்னத்திரையில் பரபரப்பு: கணவர், புகுந்த வீட்டினர் மீது நடிகை அதிதி சர்மா புகார்!</a></p><p>* கணவர் சந்தேகம் மாமியார் நகை பறித்ததாக அதிதி குற்றச்சாட்டு</p><p>* கோரேகான் போலீஸ் மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்தது</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/india-china-border-trade-resumes-after-6-years">6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது இந்தியா-சீனா எல்லை வர்த்தகம்!... </a></p><p>*இந்த வர்த்தகப் பாதையில் இந்தோ-திபெத்திய எல்லைப் போலீஸ் படையினர் தீவிர பாதுகாப்பு சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். </p><p>*இந்த எல்லை வர்த்தகம் ஒவ்வொரு ஆண்டும் மே முதல் நவம்பர் மாதம் வரை மட்டுமே நடைபெறும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-if-the-mekedatu-dam-had-already-been-built-even-the-water-now-being-released-from-kabini-would-not-have-reached-tn">மேகதாது அணை கட்டப்பட்டிருந்தால் கபினியிலிருந்து இப்போது வரும் தண்ணீரும் கிடைத்திருக்காது: அன்புமணி ராமதாஸ்</a></p><p>* கர்நாடக அரசால் புதிதாக கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள மேகதாது அணை மேற்கண்ட 4 அணைகளுக்கும் கீழாக, தமிழக  எல்லைக்கு அருகில் அமையும்.</p><p>* ஹாரங்கி, ஹேமாவதி அணைகளில் இருந்து திறக்கப்பட்டு, கிருஷ்ணராஜ சாகர் அணை வழியாக காவிரியில் விடப்படும் தண்ணீரும் கூட மேகதாது அணையில் தடுக்கப்பட்டு விடும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kerala-heavy-rains-trigger-landslide-risk-in-pamba-sabarimala-devotees-warned">கேரளாவில் கனமழை-பம்பையில் நிலச்சரிவு அபாயம்: சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய எச்சரிக்கை!... </a></p><p>*கேரளாவில் நிலவும் மோசமான வானிலை காரணமாக பம்பை ஆற்றில் நீர்மட்டம் மிக வேகமாக உயர்ந்துள்ளது.</p><p>*இன்று மற்றும் நாளை நடைபெறவுள்ள சிறப்பு 'நிறபுத்தரி' பூஜையைக் காண பக்தர்கள்  திட்டமிட்டிருந்தனர். </p><p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/jessica-pegula-enter-final-round-in-citi-open-tennis">சிட்டி ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினர் ஜெசிகா பெகுலா</a></p><p>* சிட்டி ஓபன் டென்னிஸ் தொடர் வாஷிங்டனில் நடந்து வருகிறது.</p><p>* மற்றொரு அரையிறுதியில் ஜப்பானின் நவோமி ஒசாகா தோல்வி அடைந்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/250-km-in-2-hours-donor-heart-races-via-vande-bharat-to-save-life">வந்தே பாரத் ரெயிலில் பறந்து வந்த இதயம்: சாதித்து காட்டிய இந்திய ரெயில்வே</a></p><p>* சூரத்தில் இருந்து புறப்​பட்டு அகம​தா​பாத்​துக்கு 2 மணி நேரத்தில் வந்தடைந்தது.</p><p>* இந்​திய ரெயில்வேயின் ஒரு வரலாற்​றுச் சிறப்​புமிக்க நிகழ்​வு இது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/why-should-people-who-love-india-settle-in-dubai">இந்தியாவை நேசிப்பவர்கள் ஏன் துபாயில் குடியேற வேண்டும்? - விவேக் ஒபராய் மற்றும் ஆர். மாதவனை விமர்ச்சித்த ராஜ் தாக்கரே!</a></p><p>* மோடியை புகழும் நடிகர்கள் ஏன் துபாய் சென்றனர்</p><p>* இந்தியா நன்றாக இருந்தால் வெளிநாட்டில் ஏன் வாழ்கிறீர்கள்</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/i-did-not-run-or-hide-i-have-seen-prison-senthil-balaji">'நான் சிறையைப் பார்த்தவன்'- திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜரான பின் செந்தில் பாலாஜி பேட்டி!... </a></p><p>*காவல்துறையினர் பதிவு செய்த எஃப்.ஐ.ஆர்-இல் எனது பெயரோ அல்லது எனது சகோதரர் அசோக் குமாரின் பெயரோ தொடக்கத்தில் இடம்பெறவில்லை. </p><p>*அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே பின்னணியில் எங்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. சட்ட ரீதியாக இந்தப் பொய் வழக்குகளை எதிர்கொண்டு முறியடிப்பேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/litton-das-added-to-bangladesh-squad-for-darwin-test">ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: வங்கதேச அணியில் லிட்டன் தாஸ் சேர்ப்பு</a></p><p>* முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 13 முதல் 17 வரை டார்வினில் நடைபெறுகிறது.</p><p>* வங்கதேச அணி கேப்டனாக நஜ்முல் ஹொசைன் ஷான்டோ செயல்படுகிறார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/tanvi-sharma-won-the-title-in-taipae-open-badminton">தைபே ஓபன் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் தன்வி ஷர்மா</a></p><p>* தைபே ஓபன் பேட்மிண்டன் தொடர் தைவானில் நடந்து வருகிறது.</p><p>* மற்றொரு வீராங்கனை உன்னதி ஹூடா அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-issue-tn-cm-vijay-nirmal-kumar-dmk-former-miniser-regupathy">கட்சித்தாவல் வல்லுநர் நிர்மல் குமார்: காவிரி தொடர்பாக முதல்வர் உறக்கம் கலைத்து திருவாய் மலர்வது எப்போது?- முன்னாள் அமைச்சர் ரகுபதி கேள்வி</a></p><p>* ஊடகங்களைச் சந்தித்தால் தனது இமேஜ் சரிந்துவிடும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அஞ்சுவதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். </p><p>* ஆனால், காவிரி போன்ற முக்கியப் பிரச்சினையில் முதலமைச்சர் தனது நிலைப்பாட்டை மக்களுக்கு அறிவிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அவருக்கு இருக்கிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kaveri-water-dispute-tamil-nadu-politics">டி.கே. சிவக்குமார் உடன் சேர்ந்து கொண்டு திமுக முட்டுக்கட்டை: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு</a></p><p>* ஒரே மாநிலத்தில் காவிரி நதி நீர் தொடர்பாக பல வழக்குகள் தொடரப்பட்டால், அது குழப்பத்தை ஏற்படுத்தும்</p><p>* கடந்த முப்பது ஆண்டுகளாக காவிரி நதி நீர் பிரச்சனையில், தமிழகத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியது திமுக தான்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/broad-peak-avalanche-in-pakistan-claims-life-of-record-breaking-climber-nirmal-purja">பாகிஸ்தான் பிராட் பீக் சிகரத்தில் பனிச்சரிவு: புகழ்பெற்ற மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா பலி!... </a></p><p>*ஹெலிகாப்டர்கள் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்பு மீட்புக் குழுவினர் கடந்த இரண்டு நாட்களாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். </p><p>*உலகின் 8,000 மீட்டருக்கு மேல் உயரமுள்ள 14 சிகரங்களையும் வெறும் '6 மாதங்கள் மற்றும் 6 நாட்களில்' ஏறி சாதனை படைத்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-rights-dmk-mp-dayanidhimaran-critics-rahul-gandhi">தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டு காவிரி உரிமைகள் குறித்து பேசாமல் இருப்பவர்கள் துரோகிகள்: ராகுல்காந்திக்கு தயாநிதி மாறன் பதிலடி</a></p><p>பாஜக-வின் குதிரைப் பேரங்களைக் கண்டிக்கிறவர்கள், தவெக-வின் அருவருப்பான குதிரைப் பேரங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் துரோகத்தின் தொடர்ச்சியே!</p><p>ஆட்சியையும் அமைச்சர்களையும் விமர்சித்து X-இல் பதிவிட்டால்கூட கைது செய்யும் பாசிச தவெக ஆட்சியைக் கண்டிக்காததும் துரோகமே!</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/we-the-leaders-beach-cleanup-campaign-annamalai-launches">'WE THE LEADERS' இயக்கம் சார்பில் கடற்கரை தூய்மைப் பணி: அண்ணாமலை தொடங்கி வைத்தார்!... </a></p><p>*கடற்கரை தூய்மை இயக்கம் கன்னியாகுமரி கடற்கரைச் சாலையில் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.</p><p>* சுற்றுச்சூழல் மற்றும் கடலோரப் பாதுகாப்பை வலியுறுத்தி இந்த மாநிலத் தழுவிய கடற்கரை தூய்மை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/if-i-wear-coat-suit-too-vijay-prabhakaran-jabs-cm-vijay">நானும் கோட் ஷூட் போட்டால்.., முதல்வர் விஜயை சீண்டிய விஜய பிரபாகரன்</a></p><p>*காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக சார்பில் போராட்டம்.</p><p>* நானும் கோட் ஷூட் கண்ணாடி எல்லாம் போட்டால், நானும் அழகாகதான் இருப்பேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/trump-says-us-halts-military-attack-on-iran">ஈரானுக்கு எதிரான ராணுவத் தாக்குதலை ரத்து செய்தது அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!... </a></p><p>*உலகின் நன்மைக்காகவும், ஈரானின் எதிர்கால வாழ்விற்காகவும் இந்த தாக்குதலை நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்டுள்ளேன்.</p><p>*அமெரிக்கப் படைகள் இரண்டாம் உலகப்போருக்குப் பின் இல்லாத அளவிற்குத் தயாராக இருக்கின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/special-camp-today-to-register-fingerprints-of-left-out-ration-cardholders">ரேசன் கடைகளில் விடுபட்டவர்கள் கைவிரல் ரேகையை பதிவு செய்ய இன்று சிறப்பு முகாம்</a></p><p>* மத்திய அரசு குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கையை வைத்து உணவு பொருட்களை ஒதுக்கீடு செய்து வருகிறது.</p><p>* இதனால் பயனாளிகளின் உண்மைத் தன்மையை அறிய கைவிரல் ரேகை அல்லது கருவிழிரேகை பதிவு செய்வது என்பது கட்டாயம்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/mumbai-indians-have-denied-hardik-pandya-negotiations-with-csk-or-other-outfits-at-present">ஹர்திக் பாண்ட்யா விடுவிப்பா? - மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் விளக்கம்</a></p><p>* கடந்த 3 சீசனிலும் மும்பை இந்தியன்ஸ் அணி ஏமாற்றம் அளித்தது.</p><p>* ஹர்திக் பாண்ட்யாவை வாங்க பெரும்பாலான அணிகள் ஆர்வம் காட்டி வருகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/gautam-gambhir-warned-questions-will-be-asked-with-india-in-tough-fight-for-wtc-final-spot">உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்கு முன்னேறனும், இல்லைனா... எச்சரித்த கம்பீர்</a></p><p>* அனைவரிடமும் கேள்விகள் கேட்கப்படும்.</p><p>* ஏனென்றால், நாம் சொந்த மண்ணில் தோற்றிருக்கிறோம். </p><p><a href="https://www.maalaimalar.com/sports/india-jump-to-fourth-after-day-10-australia-continue-to-lead-medal-standings">காமன்வெல்த் விளையாட்டு: டாப் 5 பட்டியலில் சட்டென முன்னேறிய இந்தியா</a></p><p>* இந்திய அணி இதுவரை 13 தங்கப் பதக்கம் வென்றுள்ளது.</p><p>* காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்றுடன் நிறைவடைய உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kabini-dam-water-release-cut-to-10000-cusecs-warning-to-riverbank-residents-continues">கபினி அணையில் நீர் திறப்பு 10,000 கன அடியாக குறைப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை தொடர்கிறது!... </a></p><p>*இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முயற்சித் நிலையில் இயற்கையே தற்போது கைகொடுத்துள்ளது.</p><p>*கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீர், கர்நாடக-தமிழக எல்லையான 'பிலிகுண்டுலு' பகுதி வழியாக தமிழகத்திற்கு வந்தடையும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-cm-vijay-offers-condolences-on-iuml-president-kader-mohideen-sons-death">IUML தேசியத் தலைவர் காதர் மொகிதீன் மகன் மறைவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்</a></p><p>தனது அன்பு மகனை இழந்து தவிக்கும் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்தின் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p>]]></content:encoded></item><item><title>காமன்வெல்த்: ஒரே நாளில் 18 பதக்கம்..! 4-வது இடத்துக்கு முன்னேறியது இந்தியா</title><link>https://www.maalaimalar.com/sports/india-advances-to-fourth-with-18-medals-in-a-day-at-commonwealth-games</link><comments>https://www.maalaimalar.com/sports/india-advances-to-fourth-with-18-medals-in-a-day-at-commonwealth-games#comments</comments><guid isPermaLink="false">136f0140-4886-4c27-97e3-58d6e0dc9043</guid><pubDate>Sun, 02 Aug 2026 12:23:23 +0000</pubDate><atom:updated>2026-08-02T12:23:23.754Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>குத்துச்சண்டை,medals,Commonwealth Games 2026,காமன்வெல்த் 2026,தமிழக வீரர்கள்,TN Players</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/mmzcrml9/commonwealth.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 2026 Common Wealth games]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/mmzcrml9/commonwealth.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது.</p><h2>ஒரே நாளில் 16 பதக்கம்</h2><p>8-வது நாள் போட்டி முடிவில் இந்தியா 5 தங்கம், 12 வெள்ளி, 6 வெண்கலம் ஆக மொத்தம் 23 பதக்கம் பெற்று இருந்தது. மீராபாய் சானு (பளு தூக்குதல்), ஷர்மிளா தன்கர் (பாரா குண்டு எறிதல்), திலீப் கவிட் (பாரா 100 மீட்டர் ஓட்டம்), அஸ்மிதா டே, ஹர்ஷ் சிங் (ஜூடோ) ஆகியோர் தங்கம் வென்றனர்.</p><p>தமிழகத்தை சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி, ரிஷி காந்த் சிங், ஞானேஸ்வரி யாதவ், அஜயா பாபு, ஹர் ஜிந்தர் கவுர், லவ்பிரீத்சிங் (பளு தூக்குதல்), சர்வேஷ் குஷாரே (உயரம் தாண்டுதல்), குல்வீர்சிங் (10 ஆயிரம் மீட்டர்), முரளி ஸ்ரீசங்கர்  (நீளம் தாண்டுதல்), முகமது பசில் (பாரா 100 மீட்டர் ஓட்டம்), யாமினி மவுரியா (ஜூடோ), நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்) ஆகியோர் வெள்ளிப் பதக்கமும், ஜண்டு குமார் (பாரா வலு தூக்குதல்), பிந்த்யா ராணி தேவி (பளு தூக்குதல்), ஷில்பா ஷைலா (பாரா குண்டு எறிதல்), சீமா (வட்டு எறிதல்), தேஜஸ்வின் சங்கர் (டெகத்லான்), யஷ்வீர் சிங் (ஈட்டி எறிதல்) ஆகியோர் வெண்கல பதக்கமும் பெற்று இருந்தனர்.</p><p>நேற்றைய 9-வது நாளில் இந்தியாவுக்கு 8 தங்கம் உள்பட 16 பதக்கம் கிடைத்தது.</p><h2>குத்துச்சண்டை</h2><p>குத்துச்சண்டையில் 7 தங்கமும், 3 வெள்ளியும் கிடைத்தது. பிரீத்தி பவார், ஜாஸ்மின் லம்போரியா, சாக்‌ஷி சவுத்ரி, பிரியா கங்காஸ், அருந்ததி சவுத்ரி, சச்சின் சிவாச், அங்குஷ் பங்கல் ஆகியோர் தங்கமும், லவ்லினா போர்கோஹைன், ஜடுமணி சிங், நரேந்தர் பெர்வால் ஆகியோர் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். </p><p>பாரா ஆண்களுக்கான குண்டு எறிதலில் (எப் 57) சோமன் ரானா தங்கமும், இதே பிரிவில் சுபம் ஜூயல் வெள்ளியும் பெற்றனர். </p><h2>தமிழக வீரர்கள் </h2><p>ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் பந்தயத்தில் தமிழக வீரர்கள் பிரவீன் சித்ரவேல் வெள்ளிப் பதக்கமும், செல்வ பிரபு வெண்கலமும் கைப்பற்றினார்கள்.  ஜூடோவில் உனதி சர்மாவும், (பெண்கள் 63 கிலோ பிரிவு), 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் குல்வீர் சிங்கும் வெண்கலம் பெற்றனர்.</p><h2>39 பதக்கம் </h2><p>நேற்றைய போட்டி முடிவில் இந்தியா 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் ஆக மொத்தம் 39 பதக்கம் பெற்று 4-வது இடத்துக்கு முன்னேறியது. இன்றுடன் போட்டி முடிவடைகிறது. கடைசி நாளில் ஜூடோவில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.</p><p>இஷ்ரூப் நரங் (பெண்கள் 78 கிலோ பிரிவு), அவ்தார் சிங் (100 கிலோ), யாஷ் கங்காஸ் (100 கிலோவுக்கு மேற்பட்ட பிரிவு) ஆகிய 3 பேர் பங்கேற்கிறார்கள். இதே போல சைக்கிளிங் பந்தயத்தில் கலந்து கொள்கிறார்கள்.</p><h2>இன்று முடிகிறது </h2><p>ஆஸ்திரேலியா 65 தங்கம், 41 வெள்ளி, 52 வெண்கலம் ஆகமொத்தம் 158 பதக்கத்துடன் முதல் இடத்தை பிடித்தது. இங்கிலாந்து 26 தங்கம் உள்பட 102 பதக்கத்துடன் 2-வது இடத்தையும், கனடா 18 தங்கம் உள்பட 59 பதக்கத்துடன் 3-வது இடத்தையும் பிடித்தன.</p><p>கடைசி நாளில் 15 தங்கம் (டிராக் சைக்கிளிங் 6, ஜூடோ 4, லான் பவுல்ஸ் 4, நெட் பால்1 ) வழங்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து நிறைவு விழா நடைபெறுகிறது.</p>]]></content:encoded></item><item><title>சிப்ஸ் பாக்கெட்டில் இருந்த விளையாட்டுப் பொருளை விழுங்கி 5 வயது சிறுவன் பரிதாப பலி!</title><link>https://www.maalaimalar.com/news/national/five-year-old-boy-chokes-on-free-toy-in-chips-packet-mysuru</link><comments>https://www.maalaimalar.com/news/national/five-year-old-boy-chokes-on-free-toy-in-chips-packet-mysuru#comments</comments><guid isPermaLink="false">70a011d1-f71e-49bd-88be-7ee8fd14bfbc</guid><pubDate>Sun, 02 Aug 2026 12:06:44 +0000</pubDate><atom:updated>2026-08-02T12:06:44.523Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,Child safety,ChokingHazard,HunsurPolice,ChipsPacket Toy,குழந்தை பாதுகாப்பு,Karnataka Tragedy</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/vszcxdxn/Karnataka-Choking-Hazard" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Karnataka Choking Hazard ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/vszcxdxn/Karnataka-Choking-Hazard?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தில், சிப்ஸ் பாக்கெட்டுக்குள் பரிசாகக் கிடைத்த சிறிய பிளாஸ்டிக் பொம்மை பந்தை விளையாட்டாக வாயில் போட்ட 5 வயது சிறுவன், அது தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2><strong>விளையாட்டாக தொடங்கிய விபரீதம்:</strong></h2><p> மைசூரு மாவட்டம் ஹுன்சூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் நேற்று இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்த சிறுவன் முகுந்த் மயூர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p>சிறுவன் முன்னாள் கிராம பஞ்சாயத்து துணைத் தலைவர் கௌரம்மா - சங்கர் நாயக் தம்பதியின் பேரனும், சந்தோஷ் - ஐஸ்வர்யா தம்பதியின் ஒரே மகனும் ஆவார்.</p><p>போலீசாரின் முதற்கட்ட விசாரணையின்படி, சிறுவன் கடையில் வாங்கிய சிப்ஸ் பாக்கெட்டைத் திறந்து சாப்பிட்டுள்ளார். அப்போது அந்தப் பாக்கெட்டுக்குள் குழந்தைகளுக்குப் பரிசாக வழங்கப்படும் சிறிய அளவிலான பிளாஸ்டிக் பந்து ஒன்று இருந்துள்ளது. </p><p>அதை எடுத்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், எதிர்பாராதவிதமாக அந்தப் பந்தை வாயில் போட்டு விழுங்கியதாகக் கூறப்படுகிறது.</p><h2>தொண்டையில் சிக்கிய பந்து:</h2><p>சிறுவன் விழுங்கிய அந்தப் பிளாஸ்டிக் பந்து அவரது தொண்டைப் பகுதியில் பலமாகச் சிக்கிக் கொண்டது. இதனால் சிறுவனுக்குக் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. </p><p>உடனே பதறிப்போன குடும்பத்தினர் சிக்கிய சிறு பந்தை எடுக்க முயன்றும், துரதிர்ஷ்டவசமாகச் சிறுவன் மூச்சுதிணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். </p><p>இச்சம்பவம் குறித்து ஹுன்சூர் ஊரகக் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p><h2>தொடரும் சோகங்கள்: </h2><p>மைசூருவின் ஹுன்சூர் பகுதியில் இதுபோன்ற அஜாக்கிரதை மற்றும் எதிர்பாராத விபத்துகளால் குழந்தைகள் உயிரிழப்பது இது முதல் முறையல்ல. </p><p>கடந்த மார்ச் மாதம், இதே தாலுகாவில் உள்ள தொட்டஹெஜ்ஜூர் கிராமத்தில் 6 மாதக் குழந்தை ஒன்று பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த காய்ந்த செம்பருத்திப் பூவை விழுங்கியதால் மூச்சுத்திணறி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.</p><p>சின்மய் கவுடா என்ற அந்த ஆண் குழந்தை, தனது மூத்த சகோதரனுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது வாசலில் இருந்த காய்ந்த பூவை வாயில் வைத்துள்ளது. </p><p>அதை மூத்த சகோதரன் பிடுங்க முயன்றபோது குழந்தை அதை அவசரமாக விழுங்கியதால், தொண்டையில் சிக்கிச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.</p><h2>சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை:</h2><p>திருமணங்கள், விழாக்கள் மற்றும் பலகாரப் பாக்கெட்டுகளில் வரும் சிறிய பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் விளையாட்டுப் பொம்மைகளைக் குழந்தைகளுக்குக் கொடுக்கும்போது பெற்றோர்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>‘நான் உயிரோடு இருக்கும்வரை இனி 4 பேரும் ஒன்றாவதற்கு வாய்ப்பில்லை’ -  நடிகர் ரவிமோகன்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/as-long-as-i-am-alive-there-is-no-chance-for-the-four-of-us-to-come-together-again-actor-ravi-mohan</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/as-long-as-i-am-alive-there-is-no-chance-for-the-four-of-us-to-come-together-again-actor-ravi-mohan#comments</comments><guid isPermaLink="false">57cc56f0-abad-4220-91da-9985c400e9db</guid><pubDate>Sun, 02 Aug 2026 11:49:26 +0000</pubDate><atom:updated>2026-08-02T11:49:26.154Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆர்த்தி ரவி,Actor ravi mohan,Aarti Ravi,நடிகர் ரவிமோகன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/ir1s0krh/New-Project-2026-08-02T171754.684.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘நான் உயிரோடு இருக்கும்வரை இனி 4 பேரும் ஒன்றாவதற்கு வாய்ப்பில்லை’ -  நடிகர் ரவிமோகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/ir1s0krh/New-Project-2026-08-02T171754.684.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகர் ரவிமோகன் தனது மனைவியை விட்டுப் பிரிவதாக கடந்த 2024ம் ஆண்டு அறிவித்தார். ஆனால் ஆர்த்தி ரவி தனது ஒப்புதல் இன்றி இந்த அறிவிப்பு வெளியானதாக அறிவித்தார். இவர்களின் விவாகரத்து வழக்கு தற்போது சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. </p><p>இந்நிலையில் அண்மையில் இந்த வழக்கில் ரவிமோகன் ஆர்த்திக்கு மாதம் ரூ.3 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டதாக செய்திகள் வெளியாகின. அவர் ரூ.40 லட்சம் கேட்டநிலையில், ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டதாக கூறப்பட்டது.</p><p>இந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து, ஆர்த்தியின் தாயும், தயாரிப்பாளர் சுஜாதாவும் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது குழந்தைகளின் செலவுக்காகத்தான் ஆர்த்தி இவ்வளவு பணத்தை கேட்டதாகவும், தனிப்பட்ட செலவுகளுக்காக அல்ல என விளக்கம் அளித்திருந்தார். </p><p>இந்நிலையில் நடிகர் ரவிமோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்.,</p><p>“அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள். உண்மையான நண்பர்களாக எனக்கு எப்போதும் உறுதுணையாக நின்றவர்களுக்கு நன்றி. சிலர் தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்புக்கு வழிவகுக்கும் வகையிலான செயல்களில் ஈடுபடுவது வருந்தத்தக்கது.</p><p>என்னைப் பொறுத்தவரை, ஒரு விஷயத்தைத் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன்: நான் உயிரோடு இருக்கும் வரை, நாங்கள் நால்வரும் ஒருபோதும் ஒரே அறையில் ஒன்றாக இருக்கப்போவதில்லை.</p><p>எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்;  உங்கள் நண்பர்களை புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுங்கள்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>நகங்களை சுத்தமாக வைத்திருப்பது ஏன் அவசியம்?-மருத்துவர்கள் அறிவுறுத்தல்!</title><link>https://www.maalaimalar.com/health/generalmedicine/importance-of-clean-nails-for-health-doctors-advice</link><comments>https://www.maalaimalar.com/health/generalmedicine/importance-of-clean-nails-for-health-doctors-advice#comments</comments><guid isPermaLink="false">9bf79664-fdc2-4417-9bb5-5d585fb676d7</guid><pubDate>Sun, 02 Aug 2026 11:36:34 +0000</pubDate><atom:updated>2026-08-02T11:36:34.352Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Health,ஆரோக்கியம்,HealthTips,உடல்நலம்,Nails clean,நகங்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/xv1ui06s/nails.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ NAILS CLEAN]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/xv1ui06s/nails.jpg?w=280" width="280"></media:thumbnail><category>பொது மருத்துவம் (General Medicine)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நமது உடலின் ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் முக்கிய அடையாளங்களில் நகங்களும் ஒன்றாகும். நகங்கள் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பது அழகுக்காக மட்டுமல்ல, பல்வேறு தொற்றுநோய்களைத் தடுப்பதற்கும் மிகவும் அவசியமானது. தினசரி செயல்பாடுகளின்போது கைகளிலும் கால்களிலும் உள்ள நகங்களில் தூசி, அழுக்கு மற்றும் கிருமிகள் எளிதில் சேரக்கூடும். எனவே, நகங்களை சரியான முறையில் பராமரிப்பது தனிப்பட்ட சுகாதாரத்தின் முக்கியமான பகுதியாகும்.</p><h2><strong>நகங்களை ஏன் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்?</strong></h2><p>நகங்களின் கீழ் தேங்கும் அழுக்குகளில் பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சைகள் வளரக்கூடும். இவை உணவு உண்ணும்போது அல்லது கண்கள், மூக்கு, வாய் போன்ற உறுப்புகளைத் தொடும்போது உடலுக்குள் நுழைந்து பல்வேறு நோய்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு இது அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.</p><h2><strong>நகங்களை சுத்தமாக பராமரிக்கும் முறைகள்:</strong></h2><p>கைகளை சோப்பு மற்றும் சுத்தமான நீரால் அடிக்கடி கழுவுவதுடன், நகங்களின் அடிப்பகுதியையும் நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். நகங்களை நீளமாக வளர விடாமல், அவ்வப்போது வெட்டி ஒழுங்காக வைத்திருப்பது நல்லது. நகங்களை வெட்டுவதற்கு சுத்தமான நக வெட்டியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நகங்களை கடிக்கும் பழக்கத்தைத் தவிர்ப்பதும் மிகவும் முக்கியம்.</p><h2><strong>நகங்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது:</strong></h2><p>சரிவிகித உணவுமுறையைப் பின்பற்றுவது நகங்களின் வலிமைக்கு உதவுகிறது. புரதம், இரும்புச் சத்து, கால்சியம், பயோட்டின் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வதால் நகங்கள் உறுதியாக வளரும். வீட்டுப் பணிகள் அல்லது ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தும் பணிகளில் ஈடுபடும்போது கையுறைகளை அணிவது நகங்களை பாதுகாக்க உதவும்.</p><h2><strong>கவனிக்க வேண்டிய மாற்றங்கள்:</strong></h2><p>நகங்களில் நிறமாற்றம், உடைதல், தடிமனாகுதல், வலி அல்லது வீக்கம் போன்ற மாற்றங்கள் நீண்ட நாட்களாக இருந்தால் மருத்துவரை அணுகுவது அவசியம். சில நேரங்களில் இத்தகைய மாற்றங்கள் உடல்நலப் பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்கலாம்.</p><p>நகங்களை சுத்தமாக வைத்திருப்பது ஒரு சிறிய பழக்கமாகத் தோன்றினாலும், அது உடல்நலத்தைப் பாதுகாக்கும் முக்கியமான சுகாதார நடைமுறையாகும். தினசரி நகங்களை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் கிருமித் தொற்றுகளைத் தவிர்த்து, ஆரோக்கியமான மற்றும் சுத்தமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற முடியும்.</p>]]></content:encoded></item><item><title>&apos;கார்த்தி 30&apos; படத்தில் இணைந்தார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/karthi-30-movie-music-composer-devi-sri-prasad-joins</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/karthi-30-movie-music-composer-devi-sri-prasad-joins#comments</comments><guid isPermaLink="false">85490dee-8ec6-45f8-9377-f50cf33fbc32</guid><pubDate>Sun, 02 Aug 2026 11:24:08 +0000</pubDate><atom:updated>2026-08-02T11:24:08.565Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Devi Sri Prasad,Meenakshi Chaudhary,Karthi,கார்த்தி,தேவி ஸ்ரீ பிரசாத்,நடிகை மீனாட்சி சவுத்ரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/izptft8t/dsp.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Karthi-Meenakshi Chaudhary   ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/izptft8t/dsp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான கார்த்தியின் 30-வது திரைப்படமான 'கார்த்தி 30' படத்தின் இசை அமைப்பாளராகப் பிரபல பாப் நட்சத்திரமும், முன்னணி இசையமைப்பாளருமான 'தேவி ஸ்ரீ பிரசாத்' இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>பிறந்தநாள் பரிசு:</strong></h2><p>தேவி ஸ்ரீ பிரசாத்தின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்ட படத்தின் தயாரிப்பு நிறுவனமான 'சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ்', சமூக வலைத்தளங்களில் சிறப்புப் பதிவொன்றைப் பகிர்ந்து வரவேற்பு அளித்துள்ளது. "ராக்ஸ்டார் நம்மோடு இணைகிறார்! வருக வருக @ThisIsDSP. எங்கள் இசையமைப்பாளருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். இணைந்து புதிய சாதனை படைக்கக் காத்திருக்கிறோம் என பதிவிட்டுள்ளனர்.</p><p>வசூல் சாதனை படைத்த பல வெற்றிப்படங்களின் பின்னணியில் உள்ள இளம் மற்றும் திறமை வாய்ந்த இயக்குநர் கல்யாண் சங்கர் இப்படத்தை இயக்குகிறார்.  கார்த்திக்கு ஜோடியாக முன்னணி நடிகை மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடிக்கிறார். 'வாத்தி', 'லக்கி பாஸ்கர்' போன்ற பிளாக்பஸ்டர் வெற்றிப் படங்களைத் தந்த சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட வரவு செலவுத் திட்டத்தில் இப்படத்தைத் தயாரிக்கிறது.</p><h2><strong>விறுவிறுப்பாக நடைபெறும் படப்பிடிப்பு:</strong></h2><p>ஏற்கனவே கார்த்தியின் பிறந்தநாளின் போது படப்பிடிப்பு குறித்த அப்டேட்டைத் தந்த தயாரிப்பு நிறுவனம், தற்போது இப்படத்தின் முக்கியக் காட்சிகள் மிக அதிவேகமாகப் படமாக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. கார்த்தியை இதுவரை ரசிகர்கள் பார்த்திராத முற்றிலும் மாறுபட்ட, எனர்ஜெட்டிக்கான புதிய கோணத்தில் திரையில் காட்ட இயக்குநர் திட்டமிட்டுள்ளார்.</p><h2><strong>எதிர்பார்ப்பில் ரசிகர்கள்:</strong></h2><p>முன்னதாக கார்த்தி-தேவி ஸ்ரீ பிரசாத் கூட்டணியில் வெளியான படங்களின் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்த நிலையில், மீண்டும் இக்கூட்டணி இணைந்துள்ளதால் இப்படத்தின் ஆல்பம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் கணிசமாக அதிகரித்துள்ளது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>“காவிரி விவகாரத்தில் மேகதாது திட்டம்தான் ஒரே தீர்வு” - டி.கே. சிவகுமார்</title><link>https://www.maalaimalar.com/news/national/the-mekedatu-project-is-the-only-solution-to-the-cauvery-issue-dk-shivakumar</link><comments>https://www.maalaimalar.com/news/national/the-mekedatu-project-is-the-only-solution-to-the-cauvery-issue-dk-shivakumar#comments</comments><guid isPermaLink="false">c346bcf6-d647-4734-83c9-3489fcd73b76</guid><pubDate>Sun, 02 Aug 2026 11:00:23 +0000</pubDate><atom:updated>2026-08-02T11:00:23.637Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DK Shivakumar,டி.கே.சிவகுமார்,Mekedatu project,Cauvery Issue,மேகதாது திட்டம்,காவேரி விவகாரம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/dgnnrjgk/New-Project-2026-08-02T160900.711.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “காவிரி விவகாரத்தில் மேகதாது திட்டம்தான் ஒரேத் தீர்வு” - டி.கே. சிவகுமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/dgnnrjgk/New-Project-2026-08-02T160900.711.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிற்கு இடையே இருக்கும் தண்ணீர் பிரச்னைக்கு மேகதாது திட்டம்தான் ஒரே நிரந்தர தீர்வு என கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். </p><p>அவரது இல்லத்தில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பின் பேசிய அவர்.,</p><p>“எனது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கர்நாடகப் பயணத்தை ஒத்திவைத்துள்ளார். இந்தப் பிரச்னையைத் தீர்க்க நாம் அனைவரும் முழு ஒத்துழைப்புடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே எங்கள் அரசின் நிலைப்பாடாகும். </p><p>எங்கள் அமைச்சர்கள் அனைவரும் ஏற்கனவே தங்கள் பொறுப்பிலுள்ள மாவட்டங்களுக்குச் சென்று கள நிலவரத்தை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர். அடுத்தடுத்த நாட்களை தொடர்ந்து விவசாயிகளை சந்தித்துப் பேசி கிராமங்களில் உள்ள யதார்த்த நிலைகுறித்து அறிக்கை சமர்பிப்பார்கள். </p><p>அதன் பிறகு, வருவாய்த்துறை அமைச்சர் தொழில்நுட்ப அம்சங்கள், அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் இந்திய அரசின் விதிமுறைகள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு நிலைமையை மதிப்பீடு செய்வார். அந்த மதிப்பீட்டின் அடிப்படையில், அரசு தனது முடிவுகளையும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளையும் அறிவிக்கும்.</p><p>பிரச்னைகளுக்கு மேகதாது திட்டம்தான் ஒரு நிரந்தரத் தீர்வு. உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தனது தீர்ப்பை வழங்கிவிட்டது, மத்திய அரசும் தனது பதிலை அளித்துள்ளது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, நாம் இனியும் நேரத்தை வீணாக்காமல் அடுத்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.</p><p>இது தமிழ்நாட்டிற்கு அதிகம் கிடைப்பதோ அல்லது கர்நாடகாவிற்கு குறைவாகக் கிடைப்பதை பற்றியது அல்ல. கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து, சுமூகமான முறையில் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.</p><p>இம்முயற்சியில் அனைவரின் ஒத்துழைப்பையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>இனிமே கெஸ்ட் ரோல் பண்ண மாட்டேன்!- விஜய் சேதுபதி எடுத்த திடீர் முடிவு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/vijay-sethupathi-says-no-more-guest-roles</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/vijay-sethupathi-says-no-more-guest-roles#comments</comments><guid isPermaLink="false">a6939600-effd-45cf-839e-c8d9fca851c8</guid><pubDate>Sun, 02 Aug 2026 10:44:27 +0000</pubDate><atom:updated>2026-08-02T10:44:27.178Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Train,டிரெயின்,Jailer 2,ஜெயிலர் 2,விஜய் சேதுபதி,Vijay sethupathi</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/z13wm91q/vjs.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vijay Sethupathi ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/z13wm91q/vjs.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, இனி திரைப்படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதை முற்றிலும் நிறுத்தப்போவதாகத் தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' படத்திற்கு மட்டுமே தாம் இதில் ஒரே விலக்கு அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><h2><strong>சிறு படங்களின் வியாபார பாதிப்பு:</strong></h2><p>நான் கதாநாயகனாக நடிக்கும் படங்கள் ஒருபுறம் இருக்க, நட்பின் அடிப்படையில் சில சிறிய படங்களில் கெஸ்ட் ரோலில் நடிக்க ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அந்தப் படங்களின் விளம்பர போஸ்டர்களில் எனது புகைப்படத்தைப் பெரிய அளவில் போட்டு விளம்பரம் செய்கிறார்கள். இது நான் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் படங்களின் வணிகத்தையும் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பையும் பெரிதும் பாதிக்கிறது என்று கூறியுள்ளார்.</p><h2><strong>பிரமோஷன் உத்திகள்:</strong></h2><p>தான் உதவும் மனப்பான்மையோடு செய்யும் சிறு கதாபாத்திரங்கள், தவறான முறையில் விளம்பரம் செய்யப்படுவதால் தான் கதாநாயகனாக நடிக்கும் படங்களுக்குப் பின்னடைவு ஏற்படுவதாக உணர்ந்து இந்த முடிவை எடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><h2><strong>'ஜெயிலர் 2' படத்திற்கு மட்டும் ஏன் இந்த விலக்கு?</strong></h2><p>ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' படத்தில் மட்டும் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பது குறித்துப் பேசிய அவர், ஜெயிலர் 2 படத்தில் ரஜினி சாருக்காக மட்டுமே நடிக்க ஒப்புக்கொண்டேன். ரஜினி சார் போஸ்டரில் இருக்கும்போது மக்கள் அனைவரும் அவரையேதான் பார்ப்பார்கள், என் புகைப்படம் இருந்தால் யாருடைய கவனமும் அதில் செல்லாது. </p><p>அதோடு, அவருடன் இணைந்து பணியாற்றுவதையும் அவர் அருகே இருப்பதையும் ஒரு சிறந்த கற்றல் அனுபவமாகப் பார்க்கிறேன். அதனால்தான் ரஜினி சாருக்காக இந்த ஒரு விதிவிலக்கைச் செய்தேன்" எனக் கூறியுள்ளார்.</p><h2><strong>வில்லன் வேடங்களுக்கும் 'நோ':</strong></h2><p>முன்னதாக, முன்னணி கதாநாயகர்களின் படங்களில் நெகட்டிவ் பாத்திரங்களில் நடிப்பதை நிறுத்தப்போவதாகவும் விஜய் சேதுபதி அறிவித்திருந்தார். "இயக்குநர்கள் என்னிடம் வரும்போது ஒரு தனித்துவமான வில்லன் கதாபாத்திரத்தைக் கொடுக்காமல், கதாநாயகனை உயர்த்திப் பிடிப்பதற்காகவே என்னை அணுகுகிறார்கள்" எனக் கூறியிருந்த அவர், தற்போது கெஸ்ட் ரோல்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.</p><h2><strong>'ஜெயிலர் 2' மற்றும் அடுத்தடுத்த படங்கள்:</strong></h2><p>நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'ஜெயிலர் 2' திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், விஜய் சேதுபதி கைவசம் மிஷ்கினின் 'டிரெயின்', வெற்றிமாறனின் 'அரசன்', மணிரத்னம் - சாய் பல்லவி இணையும் புதிய படம் உள்ளிட்ட பல முக்கியப் படங்கள் அணிவகுத்து நிற்கின்றன.</p>]]></content:encoded></item><item><title>தி.மு.க. தலைமை மீது அதிருப்தி: அ.தி.மு.க.வில் இணைகிறாரா தோப்பு வெங்கடாசலம்?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dissatisfaction-with-dmk-leadership-will-thoppu-venkatasalam-join-aiadmk</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dissatisfaction-with-dmk-leadership-will-thoppu-venkatasalam-join-aiadmk#comments</comments><guid isPermaLink="false">dcec4765-bf0a-443e-8e4d-9a1def9e0be9</guid><pubDate>Sun, 02 Aug 2026 10:40:37 +0000</pubDate><atom:updated>2026-08-02T10:40:37.017Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,ADMK,அதிமுக,தோப்பு வெங்கடாசலம்,Thoppu venkadachalam</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/8rhzqucg/thoppu.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Thoppu venkatasalam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/8rhzqucg/thoppu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராக இருந்த தோப்பு வெங்கடாச்சலம் அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் ஈரோடு மத்திய மாவட்ட தி.மு.க. கலைக்கப்பட்டு அதிலிருந்த பெருந்துறை, பவானி சட்டமன்ற தொகுதிகளில் பெருந்துறை தொகுதி ஈரோடு தெற்கு மாவட்டத்திலும், பவானி தொகுதி  ஈரோடு வடக்கு மாவட்டத்திலும் இணைக்கப்பட்டு விட்டது.</p><p>அ.தி.மு.க.வில் இருந்த போது 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பெருந்துறை தொகுதியில் போட்டியிட்ட தோப்பு வெங்கடாசலம் முதன்முறையாக எம்.எல்.ஏ. ஆனார். சில மாதங்களில் அவரை வருவாய்த்துறை அமைச்சராக அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா நியமித்தார்.</p><p>2 ஆண்டுகள் அப்பதவியில் நீடித்த தோப்பு வெங்கடா சலம், பின்னர் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். </p><p>கே.ஏ.செங்கோட்டையன் வகித்து வந்த வேளாண் மற்றும் வனத்துறை அமைச்சர் பதவியை பறித்த ஜெயலலிதா ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் பதவி யையும் பறித்து தோப்பு வெங்கடாசலத்திடம் கொடுத்தார்.</p><p>அதற்கு முன்பு வரை ஈரோடு மாவட்டத்தில் கே.ஏ.செங்கோட்டையனும், சு.முத்துசாமியும் அ.தி.மு.க.வின் முக்கிய புள்ளிகளாக இருந்தனர். 2009-ம் ஆண்டில் சு.முத்துசாமி தி.மு.க.வில் சேர்ந்தார். பின்னர் செங்கோட்டையனின் கரம் வலுவானது. </p><p>செங்கோட்டையனின் அமைச்சர் பதவியையும், மாவட்ட செயலாளர் பதவியையும் பறித்த பிறகு கிட்டத்தட்ட ஈரோடு மாவட்ட அ.தி.மு.க .தோப்பு வெங்கடாச்சலத்தின் கட்டுப்பாட்டில் வந்தது. </p><p>தோப்பு வெங்கடாசலம், 2016-ம் ஆண்டு மீண்டும் பெருந்துறை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.</p><p>அந்த தேர்தலில் தோப்பு வெங்கடாசலம் வெற்றி பெற்ற போதிலும் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சராக ஓ.பன்னீர் செல்வமும் இருந்தபோது தோப்பு வெங்கடாசலத்திற்கு பதவி தரவில்லை.</p><p>2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தோப்பு வெங்கடாசலத்திற்கு பெருந்துறை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக ஜெயக்குமாருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.</p><p>இதன் காரணமாக அதிருப்தி அடைந்த தோப்பு வெங்கடாச்சலம் சுயேட்சையாக போட்டியிட்டு 9,900 வாக்குகளை பெற்றார். தேர்தல் தோல்விக்கு பின் தோப்பு வெங்கடாச்சலம் தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் இணைந்தார்.</p><p>2025-ம் ஆண்டு பெருந்துறை, பவானி ஆகிய 2 தொகுதி களையும் பிரித்து ஈரோடு மத்திய மாவட்டம் உருவாக்கப்பட்டு அதன் மாவட்ட பொறுப்பாளராக தோப்பு வெங்கடாச்சலம் நியமிக்கப்பட்டார்.</p><p>கட்சி பொறுப்பை ஏற்றுக்கொண்ட திலிருந்து இவ்விரு தொகுதிகளிலும் தி.மு.க.வின் வளர்ச்சிக்காக வேகமாக பணியாற்றினார்.பெருந்துறை மற்றும் பவானி சட்டமன்ற தொகுதிகள் எப்போதும் அ.தி.மு..கவின் கோட்டையாகவே இருந்து வந்துள்ளது.</p><p>2026 சட்டமன்ற தேர்தலில் இந்த 2 தொகுதி களிலும் நிச்சயம் வெற்றி பெற்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அர்ப்ப ணிப்பேன் என்று கூறி பணியாற்றி வந்தார். ஆனால் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயக்குமார் வெற்றி பெற்றார். தோப்பு வெங்க டாசலம் தோல்வி அடைந்தார். </p><p>பின்னர் ஜெயக்குமார் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு த.வெ.க.வில் இணைந்தார். விரைவில் பெருந்துறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திடீரென தி.மு.க. மத்திய மாவட்ட பொறுப்பாளராக இருந்து தோப்பு வெங்கடாசலம் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டிருப்பது பேசு பொருளாகியுள்ளது.</p><p>இன்னும் ஒரு வாரத்தில் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பேன் என தோப்பு வெங்கடாசலம் தெரிவித்துள்ளார். பெருந்துறை  இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வலுவான வேட்பாளரை நிறுத்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். அதன்படி தோப்பு வெங்கடாசலத்தை மீண்டும் அ.தி.மு.க.வில் இணைத்து கொள்ள பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><p>மேலும் அவர் த.வெ.க.விலும் இணையலாம் என்ற ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் தெளிவான முடிவை அறிவிப்பேன் என தோப்பு வெங்கடாசலம் கூறிவிட்டார். எனவே மீண்டும் அவர் அ.தி.மு.க.வில் இணைவாரா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இந்தோனேசியாவில் கடல் நடுவே தீப்பிடித்த பயணிகள் கப்பல் - 5 பேர் உயிரிழப்பு... 41 பேர் மாயம்!</title><link>https://www.maalaimalar.com/news/world/passenger-ship-catches-fire-at-sea-in-indonesia-5-dead-41-missing</link><comments>https://www.maalaimalar.com/news/world/passenger-ship-catches-fire-at-sea-in-indonesia-5-dead-41-missing#comments</comments><guid isPermaLink="false">64414128-cc46-4c49-9bed-661b4ab2f5b3</guid><pubDate>Sun, 02 Aug 2026 10:33:56 +0000</pubDate><atom:updated>2026-08-02T10:33:56.379Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தோனேசியா,indonesia,Mutiara Sentosa 2,முதியோரா செந்தோசா 2</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/4rkjobj5/New-Project-2026-08-02T160029.784.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இந்தோனேசியாவில் கடல்நடுவே தீப்பிடித்த பயணிகள் கப்பல் - 5 பேர் உயிரிழப்பு... 41 பேர் மாயம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/4rkjobj5/New-Project-2026-08-02T160029.784.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தோனேசியாவின் மதுரா தீவுக்கு அருகே கடலில் பயணிகள் படகு தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்ததாகவும், 41 பேரைக் காணவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. </p><p>இந்தோனேசியாவின் சுரபயாவில் இருந்து இன்று காலை மக்காசரை நோக்கி சுமார் 250க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் பணியாளர்களை ஏற்றிக்கொண்டு ‘முதியாரா செந்தோசா 2’ என்ற கப்பல் சென்றுள்ளது. </p><p>கப்பல் புறப்பட்ட சிலமணிநேரங்களிலேயே மதுரா தீவுக்கு அருகே தீவிபத்து ஏற்பட்டுள்ளது. உடனே இதுகுறித்து கப்பல் கேப்டன் தகவல் அளிக்க பலரும் பாதுகாப்பு ஜாக்கெட்டுகளை அணிந்துகொண்டு கடலில் குதித்துள்ளனர். கடலில் குதித்தவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.</p><p>இதனிடையே மற்றவர்கள் மாற்றுக் கப்பல்கள் மூலம் மாற்றப்பட்டு, கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடலில் மாயமானவர்களை மீட்க அனைத்து பாதுகாப்பு முகமைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதாகவும்  இந்தோனேசிய போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>படகில் தீ விபத்து ஏற்பட்டதற்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. 17,000க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவில், படகுப் போக்குவரத்து ஒரு பிரபலமான போக்குவரத்து முறையாகும். </p><p>இங்கு, மோசமான பாதுகாப்புத் தரங்களால், போதுமான உயிர்காக்கும் உபகரணங்கள் இல்லாமலும், கப்பல்களில் அடிக்கடி அதிக சுமை ஏற்றப்படுவதால், விபத்துகள் சாதாரணமாக நிகழ்கின்றன.</p>]]></content:encoded></item><item><title>என்னைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?-காதல் முறிவு வதந்திகளுக்குப் பதிலடி கொடுத்த நடிகை அனுபமா பரமேஸ்வரன்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/anupama-parameswaran-responds-to-rumours-about-dhruv-vikram-relationship</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/anupama-parameswaran-responds-to-rumours-about-dhruv-vikram-relationship#comments</comments><guid isPermaLink="false">6729e2c1-8430-4a1b-be2b-a3f47ece6905</guid><pubDate>Sun, 02 Aug 2026 10:22:29 +0000</pubDate><atom:updated>2026-08-02T10:22:29.525Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அனுபமா பரமேஸ்வரன்,Bison,anupama parameswaran,பைசன்,துருவ் விக்ரம்,Dhuruv vikram</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/t95dc016/anupama.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anupama Parameswaran ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/t95dc016/anupama.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகின் பிரபல நடிகையான அனுபமா பரமேஸ்வரன், நடிகர் துருவ் விக்ரமுடனான காதல் முறிவு குறித்து சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளுக்குத் தனது பாணியில் நேரடியாகப் பதிலளித்துள்ளார்.</p><h2>ச<strong>ர்ச்சையைக் கிளப்பிய இன்ஸ்டாகிராம் பதிவுகள்:</strong></h2><p>சில மாத இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில் மீண்டும் இன்ஸ்டாகிராமிற்கு வந்த அனுபமா பரமேஸ்வரன், சுதந்திரம், மன அமைதி மற்றும் "என்னை நானே தேர்ந்தெடுத்துக்கொள்கிறேன்" போன்ற வரிகளுடன் உணர்ச்சிப்பூர்வமான பல பதிவுகளைப் பகிர்ந்திருந்தார்.</p><p>குறிப்பாக, "யாரோ ஒருவரின் ஒப்புதலுக்காகவோ அல்லது தலைப்பிற்காகவோ காத்திருக்கத் தேவையில்லை என்பதை உணரும்போதுதான் சமூக வலைத்தளம் மகிழ்ச்சியாக மாறுகிறது எனக் குறிப்பிட்டிருந்தார். இப்பதிவுகள், மாரி செல்வராஜின் 'பைசன் காளமாடன்' படத்தில் அவருடன் இணைந்து நடித்த துருவ் விக்ரமுடனான காதல் முறிவை மறைமுகமாக உணர்த்துவதாக ரசிகர்களிடையே வதந்திகள் வேகமாகப் பரவின.</p><h2><strong>எனது வாழ்க்கை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?</strong> </h2><p>தனது புதிய தெலுங்குத் திரைப்படமான 'கிரேஸி கல்யாணம்' படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அனுபமாவிடம், இந்தச் சர்ச்சை பதிவுகள் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்துப் பேசிய அவர், "இது எனது சொந்த சோஷியல் மீடியா கணக்கு. </p><p>அதில் என்ன பதிவிட வேண்டும் என்பதை நானே தீர்மானிக்கிறேன். நான் யாருக்கும் எதிராகக் கோபத்தையோ, ஆதங்கத்தையோ வெளிப்படுத்தவில்லை. ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றத்தையும் கடந்து வந்த பாதையையும்தான் நான் பகிர்ந்துகொண்டேன். அதற்காக நான் பெருமைப்படுகிறேன்" என்றார்.</p><p>தொடர்ந்து பேசிய அவர், என்னைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? என் வாழ்க்கையைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? எனவே, மக்கள் எதையும் யூகிக்கத் தேவையில்லை. அது என் இன்ஸ்டாகிராம், எனக்கு விருப்பமானதை நான் பதிவிடுகிறேன் என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.</p><h2><strong>வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி:</strong></h2><p>'பைசன்' படப்பிடிப்பின் போது அனுபமாவும் துருவ் விக்ரமும் காதலித்து வருவதாக இணையத்தில் பரவலாகப் பேசப்பட்டது. இருப்பினும், இருவரும் தங்களது உறவு குறித்து எப்போதுமே அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை. தற்போது அனுபமா அளித்துள்ள இந்தத் தெளிவான விளக்கம், சமூக வலைத்தளங்களில் பரவி வந்த பல்வேறு யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வரும் 10ம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வருகிறது திருவள்ளூர் புதிய பேருந்து நிலையம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/new-thiruvallur-bus-terminal-begins-operations-on-10th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/new-thiruvallur-bus-terminal-begins-operations-on-10th#comments</comments><guid isPermaLink="false">bde37d70-2a2a-43fa-938c-0794e9e54f29</guid><pubDate>Sun, 02 Aug 2026 10:14:40 +0000</pubDate><atom:updated>2026-08-02T10:14:40.644Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Thiruvallur,New Bus Stand,புதிய பேருந்து நிலையம்,public,திருவள்ளூர்,பொதுமக்கள் வரவேற்பு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/0s2mdxq9/TVK.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TVK]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/0s2mdxq9/TVK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர் ராஜாஜி சாலையில் தற்போது செயல்பட்டு வரும் திரு.வி.க. பஸ் நிலையம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது.</p><p>அரை ஏக்கருக்கும் குறைவான இடத்தில் செயல்பட்டு இந்த பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, பெரிய பாளையம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் ஆந்திர மாநிலம் திருப்பதி, காளஹஸ்தி, கர்நாடக மாநிலம் பெங்களூரு போன்ற பல்வேறு பகுதிகளுக்கும் தினமும் நுாற்றுக்கணக்கான பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.  ஆனால் இங்கு ஒரே நேரத்தில் 10 பஸ்களை மட்டுமே நிறுத்த முடியும். இதனால் கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.</p><p>இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு திருவள்ளூர்- ஊத்துக்கோட்டை சாலை வேடங்கிநல்லுாரில் ரூ.36 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு உள்ளது. இதில் பணிகள் முழுதுமாக முடிவதற்கு முன்னரே கடந்த மார்ச் 4-ந் தேதி திறக்கப்பட்டது. எனினும் புதிய பஸ் நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாமல் இருந்தது.</p><p>எனவே புதிய பஸ் நிலையத்தை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொது மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.</p><p>இதைத்தொடர்ந்து புதிய பஸ் நிலையத்தில் மீதம் உள்ள கட்டுமான பணிகள் விரைந்து நடைபெற்று வந்தது. தற்போது இந்த பணிகள் முழுவதும் முடிந்து உள்ளதால் திருவள்ளூர் புதிய பஸ் நிலையம் வருகிற 10-ந் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரப்பட உள்ளது. </p><p>அனைத்து பகுதிகளுக்கு செல்லும் பஸ்களும் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மட்டுமே இயக்கப் டும் பழைய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படாது என்று மாவட்ட கலெக்டர்  கவிதா தெரிவித்துள்ளார். </p><p>திருவள்ளூர் புதிய பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வருவதை பொதுமக்கள் வரவேற்று உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>கரப்பான்பூச்சி கட்சி நிறுவனருக்கு சிக்கல்... அமெரிக்காவில் படிக்க பணம் ஏது? விசாரணைக்கோரும் புதிய மனு!</title><link>https://www.maalaimalar.com/news/national/trouble-for-the-cockroach-party-founder-where-did-the-money-for-us-studies-come-from-new-petition-seeks-rti-inquiry</link><comments>https://www.maalaimalar.com/news/national/trouble-for-the-cockroach-party-founder-where-did-the-money-for-us-studies-come-from-new-petition-seeks-rti-inquiry#comments</comments><guid isPermaLink="false">a65a2d7b-2890-41c6-a51b-1230c68f4e1b</guid><pubDate>Sun, 02 Aug 2026 10:00:05 +0000</pubDate><atom:updated>2026-08-02T10:00:05.778Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>abhijeet dipke,அபிஜீத் தீப்கே,RTI activist,ஆர்டிஐ ஆர்வலர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/e1l2dodo/New-Project-2026-08-02T145807.377.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கரப்பான்பூச்சி கட்சி நிறுவனருக்கு சிக்கல்... அமெரிக்காவில் படிக்க பணம் ஏது? ஆர்டிஐ விசாரணைக்கோரும் புதிய மனு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/e1l2dodo/New-Project-2026-08-02T145807.377.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கேவின் அமெரிக்க கல்வி செலவு தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி சூரத்தைச் சேர்ந்த அமித் திவாரி என்ற தகவல் அறியும் உரிமை செயற்பாட்டாளர் மனு அளித்துள்ளார்.</p><p>அதாவது அபிஜீத் தீப்கேவின் தந்தை பகவான்ராவ் தீப்கே ஒரு ஓய்வுபெற்ற அரசு ஊழியர். அவர் பணியில் இருந்தபோது அவரது மாதச் சம்பளம் சுமார் ரூ.60,000 முதல் ரூ.65,000 வரை மட்டுமே இருந்திருக்கும். </p><p>அமெரிக்காவின் போஸ்டன் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி படிப்பதற்கு சராசரி ஆண்டிற்கு ரூ.30  லட்சம் முதல் ரூ.1 கோடி வரை ஆகும். அப்படி இருக்கும்போது, அவரால் அமெரிக்காவில் படித்த தன் பிள்ளைகளின் கல்விச் செலவை எப்படி ஏற்க முடிந்தது? இது விசாரிக்கப்பட வேண்டும்.</p><p>வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்கப்பட்டிருந்தால் அதுகுறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என மகாராஷ்டிரா அரசு, வருமான வரித்துறை, இந்திய தேர்தல் ஆணையம் ஆகியவற்றுக்கு அமித் திவாரி மனு எழுதியுள்ளார். </p><p>மேலும் மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல், நீட் போராட்டத்தில் ஈடுபட்டு டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்களுக்கு ரூ.1 கோடி நிதி வழங்குவதாக அறிவித்தார். இதுகுறித்தும் விசாரணை நடத்தக் கோரியுள்ளார். </p><p>“கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்பது பதிவு செய்யப்படாத ஒரு அமைப்பு, ஆனால் அது ஒரு அரசியல் கட்சியாகச் செயல்பட்டு வருகிறது. சட்டப் பாதுகாப்பு நிதியாக அதற்கு&nbsp;ரூ.1 கோடி கொடுக்கப்பட்டிருந்தால், சிஜேபி 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 29A பிரிவின் கீழ் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதைத் தேர்தல் ஆணையம் சரிபார்க்க வேண்டும்” எனக் கோரியுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>கர்நாடகாவில் மழை தீவிரம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மண்ணில் புதைந்து உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/karnataka-monsoon-intensifies-three-family-members-killed-in-landslide</link><comments>https://www.maalaimalar.com/news/national/karnataka-monsoon-intensifies-three-family-members-killed-in-landslide#comments</comments><guid isPermaLink="false">7b99246d-6636-4a84-99e1-c17cac7f44bc</guid><pubDate>Sun, 02 Aug 2026 09:23:56 +0000</pubDate><atom:updated>2026-08-02T09:23:56.052Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,உயிரிழப்பு,Heavy Rain,dead,மழை தீவிரம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/ay2ji1jg/rain.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Heavy rain]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/ay2ji1jg/rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக மலை மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது. </p><p>இதே போல் கொப்பல் மாவட்டம் கங்காவதி பகுதியிலும் கடந்த2 நாட்களாக இடைவிடாமல் மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது.</p><p>இந்தநிலையில் இன்று அதிகாலை 2.30 மணிளவில் கங்காவதி அடுத்த கொக்கரேகரு என்ற கிராமத்தில் மண்சரிவு ஏற்பட்டு அருகில் இருந்த ஒரு வீட்டின் மீது விழுந்தது.</p><p>இதில் அந்த வீட்டில் இருந்த மல்லிகார்ஜூனா (35), அவரது மனைவி நாகவேணி (28). அவர்களது 3 வயது குழந்தை சந்தோஷ் ஆகியோர் மண்ணில் புதைந்து பலியானார்கள்.</p><p>இதுப்பற்றி தெரியவந்ததும் சம்பவ இடத்துக்கு போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு படையின் அங்கு  விரைந்து சென்று மண்ணில் புதைந்து பலியான 3 பேரின் உடல்களையும் மீட்கும் பணயில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கர்நாடக அணைகளில் 57 டிஎம்சி நீர் உள்ளது: அனைத்து கட்சி கூட்டத்தில் டி.கே. சிவகுமார் பேச்சு</title><link>https://www.maalaimalar.com/news/national/tamil-nadu-cm-requests-karnataka-cm-dk-shivakumar-to-release-9-9-tmc-water-in-cauvery</link><comments>https://www.maalaimalar.com/news/national/tamil-nadu-cm-requests-karnataka-cm-dk-shivakumar-to-release-9-9-tmc-water-in-cauvery#comments</comments><guid isPermaLink="false">1e68608a-6bbc-44a6-b3ff-60b76e22c7d3</guid><pubDate>Sun, 02 Aug 2026 09:21:08 +0000</pubDate><atom:updated>2026-08-02T09:21:08.080Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,DK Shivakumar,டிகே சிவகுமார்,Cauvery Issue,காவேரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/k228rxe9/Untitled-design-9.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/k228rxe9/Untitled-design-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடகாவில் காவிரி நதி நீர் பிரச்சனை தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது.</p><p>கர்நாடகா முதலமைச்சர் டி.கே. சிவகுமாரின் இல்லத்தில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில், வீரப்ப மொய்லி (காங்கிரஸ்), சித்தராமையா (காங்கிரஸ்), பி.எஸ். எடியூரப்பா (பாஜக), ஹெச்.டி. குமாரசாமி (மதச்சார்பற்ற ஜனதா தளம்), டி.வி. சதானந்த கௌடா (பாஜக) மற்றும் பசவராஜ் பொம்மை (பாஜக) உள்ளிட்ட ஆறு முன்னாள் முதல்வர்கள் உட்பட, கட்சி வேறுபாடின்றி பல மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர்.</p><p>கர்நாடகாவில் அணைகள் நிரம்பி வழிகிறது என்றும் நீரை தேக்கி வைப்பது சாத்தியமில்லை என்றும் அம்மாநில முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்தார்.</p><h3><strong>கர்நாடகாவில் அனைத்து கட்சி கூட்டம்</strong></h3><p>மேலும் இந்த கூட்டத்தில் பேசும்போது அவர் கூறியதாவது:-</p><p>பதினைந்து நாட்களுக்கு தினமும் 3,500 கனஅடி காவிரி நீரை திறந்துவிட காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு உத்தரவிட்டது. அந்த உத்தரவை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உறுதி செய்தது.</p><p>தற்போது குடகு நல்ல மழையை பெற்றிருக்கிறது. இதையடுத்து அணைகளில் 57 டி.எம்.சி. நீர் உள்ளது. மேலும் நீர்வரத்து அதிகரிக்க உள்ளது.</p><p>விவசாயிகள் ஏற்கனவே பயிரிட்ட பயிர்களை பாதுகாப்பதற்காக கே.ஆர்.எஸ் மற்றும் கபினி கால்வாய்களில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருக்கிறது.</p><p>கர்நாடகாவில் வெவ்வேறு கட்சிகள் இருந்தாலும், காவிரி நதிநீர் விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.</p><p>இந்த முறை வறட்சி ஏற்படும் என ஏற்கனவே மத்திய அரசு எச்சரித்திருந்ததால், அதன்படி குடிநீருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என விவசாயிகளிடம் தெரிவிக்கப்பட்டது.</p><p>காவிரி நீர் ஒழுங்கு முறை ஆணையம் மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டங்களுக்கு முன்பு, அரசாங்கம் மத்திய அமைச்சர்களையும், மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தொடர்புகொண்டது.</p><p>இந்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு கட்சி வேறுபாடின்றி வந்து அனைவரும் ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.</p><p>கிருஷ்ண சாகர் நீர் பிரச்சனையிலும், அனைத்து நிலையிலும் மத்திய நீர் வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் சிறந்த ஒத்துழைப்பை வழங்கி இருக்கிறார்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற ரஹானேவுக்கு மாதம் ரூ.70 ஆயிரம் வழங்கவுள்ள பிசிசிஐ!</title><link>https://www.maalaimalar.com/sports/bcci-to-pay-rs-70000-per-month-to-rahane-following-his-retirement-from-international-cricket</link><comments>https://www.maalaimalar.com/sports/bcci-to-pay-rs-70000-per-month-to-rahane-following-his-retirement-from-international-cricket#comments</comments><guid isPermaLink="false">8825568b-888e-4bf9-bc28-1ade93dd35c0</guid><pubDate>Sun, 02 Aug 2026 09:04:20 +0000</pubDate><atom:updated>2026-08-02T09:04:20.019Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>BCCI,Ajinkya Rahane,pension scheme,ஓய்வூதியத் திட்டம்,பிசிசிஐ,அஜிங்க்யா ரஹானே</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/y1z4ww40/New-Project-2026-08-02T141838.282.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற ரஹானேவுக்கு மாதம் ரூ.70 ஆயிரம் வழங்கும் பிசிசிஐ!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/y1z4ww40/New-Project-2026-08-02T141838.282.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய கிரிக்கெட் வீரர் அஜிங்க்யா ரஹானே ஜூலை.30ம் தேதியன்று, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். இந்தியாவிற்காக மூன்று வடிவங்களிலும் பல போட்டிகளில் விளையாடியுள்ள ரஹானேவின் இந்த அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இருப்பினும் ஐபிஎல்லில் அவர் விளையாடுவார் என்பது ஒரு ஆறுதலே. </p><p>இந்நிலையில் ரஹானேவின் ஓய்வூதியம் தொடர்பான செய்திகள் இணையத்தில் உலா வருகின்றன. அதாவது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அஜிங்க்யா ரஹானேவுக்கு, பிசிசிஐ மாதந்தோறும் ரூ.70,000 ஓய்வூதியம் வழங்கவுள்ளது.</p><p>பிசிசிஐ-யின் விதிகளின்படி, சர்வதேச அளவில் 25 அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர்களுக்கு மிக உயர்ந்த பிரிவின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. </p><p>ரஹானே 85 டெஸ்ட் போட்டிகள், 90 ஒருநாள் போட்டிகள் மற்றும் 20 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளதால் இந்த ஓய்வூதியத்தைப் பெற தகுதி பெற்றுள்ளார். </p><h2><strong>ரஹானேயின் ஓய்வூதியம் எப்போது நிறுத்தப்படும்?</strong></h2><p>இருப்பினும் ரஹானே பிசிசிஐயின் ஏதேனும் பொறுப்பில் பணியமர்த்தப்படாத நிலையிலேயே இந்த ஊதியம் வழங்கப்படும். அப்படி பிசிசிஐயில் ஏதேனும் பதவிப் பெற்றால் இந்த ஓய்வூதியம் தற்காலிகமாக நிறுத்தப்படும். </p><p>அந்தப் பதவிக்காலம் முடிந்தவுடன் மீண்டும் ஓய்வூதியம் தொடரும். ஆனால் ஊடக வர்ணனை போன்றவற்றுக்கு இந்த நிபந்தனை பொருந்தாது. </p><p>கடந்த 2022 ஆம் ஆண்டில் ஓய்வூதியத் தொகையை பிசிசிஐ மாற்றியமைத்தது. இதற்கு முன் ரூ.50,000 ஆக இருந்த இந்த உயர் பிரிவு ஓய்வூதியம், தற்போது ரூ.70,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>மும்பை சின்னத்திரையில் பரபரப்பு: கணவர், புகுந்த வீட்டினர் மீது நடிகை அதிதி சர்மா புகார்!</title><link>https://www.maalaimalar.com/news/topnews/mumbai-tv-actress-aditi-sharma-files-complaint-against-husband</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/mumbai-tv-actress-aditi-sharma-files-complaint-against-husband#comments</comments><guid isPermaLink="false">176ca2b2-dda3-4aac-a8c4-953ace9a4db5</guid><pubDate>Sun, 02 Aug 2026 08:53:50 +0000</pubDate><atom:updated>2026-08-02T08:53:50.554Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>FIR,மும்பை,Mumbai Police,குடும்ப வன்முறை,AditiSharma,அதிதி சர்மா,DomesticViolenceCase</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/7ov8abd2/Actress-Athithi-Sharma" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Actress Athithi Sharma]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/7ov8abd2/Actress-Athithi-Sharma?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><content:encoded><![CDATA[ <p>மும்பை கோரேகான் பகுதியில் வசித்து வரும் பிரபல சின்னத்திரை நடிகை அதிதி சர்மா, தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கடுமையான குடும்ப வன்முறை மற்றும் மன உளைச்சல் புகார்களை குற்றச்சாட்டுகளாக முன்வைத்துள்ளார். </p><p>இது தொடர்பாக மும்பை கோரேகான் காவல் நிலையத்தில் ஜூலை 31 அன்று அதிகாரப்பூர்வமாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>'ரப் ஸே ஹை துவா' தொடர் மூலம் இல்லத்தரசிகளின் மனதைக் கவர்ந்த அதிதி சர்மாவின் இந்த திடீர் புகார், ஒட்டுமொத்த சின்னத்திரை வட்டாரத்திலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.</p><h2><strong>நட்பில் தொடங்கிய காதல்</strong></h2><p>கடந்த 2021 ஜூன் மாதம் நடந்த ஆன்லைன் நடிப்புப் பயிற்சி வகுப்பின் போது அதிதிக்கும் அபினீத் வித்யானந்த் கௌஷிக்கிற்கும் இடையே நட்பு ஏற்பட்டு, பின்னர் அது காதலாக மாறியுள்ளது.<strong> </strong></p><p>பின்னர், இருவீட்டாரின் முழுச் சம்மதத்துடன் கடந்த 2024 நவம்பர் 12 அன்று இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்த சில நாட்களிலேயே அபினீத்தின் அசல் முகம் தெரியத் தொடங்கியதாக அதிதி குறிப்பிட்டுள்ளார். </p><p>ஆடை அணியும் விதம் மற்றும் அன்றாட வீட்டுச் செலவுகளுக்குப் பணம் தராமல் அதிதியிடமே பணம் பறிப்பது எனப் பல தொல்லைகளை அவர் கொடுத்து வந்ததாக காவல்துறையினரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தின்படி தெரிய வந்துள்ளது.</p><h2><strong>காபி சண்டையும், சந்தேகப் புத்தியும்</strong></h2><p>கடந்த 2025 புத்தாண்டு அன்று, வீட்டில் காபி அருந்தும் போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட ஒரு சிறிய வாக்குவாதம் அவர்களின் குடும்பத்தையே உடைக்கும் அளவிற்குப் பெரிய சண்டையாக உருவெடுத்துள்ளது. </p><p>அதன்பிறகு அதிதியின் நடத்தை மீது அபினீத் கடுமையான சந்தேகப் புத்தியுடன் செயல்படத் தொடங்கியுள்ளார். அதிதிக்கு வேறொரு நபருடன் தொடர்பு இருப்பதாகக் கூறி, அவரது மொபைல் போனை அடிக்கடி சோதனை செய்துள்ளார். </p><p>மேலும், அதிதியை அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினருடன் பேசாவிட்டால் முற்றிலும் தனிமைப்படுத்தி, தனி அறையில் தக்க வைத்துள்ளார் என்பதையும் கூறியுள்ளார்.</p><h2><strong>நகைகளைப் பறித்துக் கொண்ட மாமியார்</strong></h2><p>கணவரின் கொடுமைகளுக்கு அவரது தாயார் ஊர்மிளா கௌஷிக் மற்றும் சகோதரி கீர்த்தி கௌசிக் ஆகியோரும் முழு உடந்தையாக இருந்துள்ளனர். </p><p>அதிதிக்குத் திருமணத்தின் போது போடப்பட்ட வைர மோதிரம், தங்கச் சங்கிலிகள், வளையல்கள் மற்றும் மாங்கல்யம் உள்ளிட்ட ஒட்டுமொத்த 'ஸ்திரீதன' நகைகளையும் அவரது மாமியார் பறித்து வைத்துக் கொண்டு திருப்பித் தர மறுத்துள்ளார். </p><p>குடும்பப் பிரச்சினையைத் தீர்க்க முயன்ற போதெல்லாம், மாமியாரும் நாத்தனாரும் அபினீத்தின் பக்கமே நின்றதாகவும் தான் மனரீதியாக பாதிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><h2><strong>போலீஸ் விசாரணை</strong></h2><p>நடிகை அதிதி சர்மா கொடுத்த இந்த விரிவான புகாரின் அடிப்படையில், அவரது கணவர் அபினீத், மாமியார் ஊர்மிளா மற்றும் நாத்தனார் கீர்த்தி ஆகிய மூவர் மீதும் கோரேகான் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>அதே சமயம், இக்குற்றச்சாட்டுகள் குறித்து குற்றம் சாட்டப்பட்ட அபினீத் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு பதிலும், விளக்கமும் பொதுவெளியில் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது இந்தியா-சீனா எல்லை வர்த்தகம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/india-china-border-trade-resumes-after-6-years</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-china-border-trade-resumes-after-6-years#comments</comments><guid isPermaLink="false">075b5098-17d2-4e8b-b4dd-36cc2d8ac338</guid><pubDate>Sun, 02 Aug 2026 08:44:06 +0000</pubDate><atom:updated>2026-08-02T08:44:06.998Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,China,சீனா,India-China border trade,இந்தியா-சீனா எல்லை வர்த்தகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/113q7go0/border-trade.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ India-China border trade]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/113q7go0/border-trade.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த 2020 ஆம் ஆண்டு பரவிய கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு எல்லைப் பதற்றம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த 'இந்தியா-சீனா' இடையிலான எல்லை வர்த்தகம், சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு ஆகஸ்ட் 1 முதல் மீண்டும் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.</p><h2><strong>நாதுலா மற்றும் ஷிப்கி லா கணவாய்கள்:</strong></h2><p>சிக்கிம் மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற நாதுலா கணவாய் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் ஷிப்கி லா கணவாய் வழியாக இரு நாடுகளுக்கு இடையேயான பருவகால எல்லை வர்த்தகம் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது.</p><h2>ப<strong>ண்டைய பட்டுப் பாதை புத்துயிர்:</strong></h2><p>கடல் மட்டத்திலிருந்து சுமார் 14,000 அடி உயரத்தில் அமைந்துள்ள நாதுலா கணவாய், பண்டைய பட்டுப் பாதையின் வரலாற்றுச் சிறப்புமிக்க வணிகப் பாதையாகத் திகழ்கிறது.</p><h2><strong>அனுமதிக்கப்பட்ட பொருட்கள்:</strong></h2><p>மத்திய வணிக அமைச்சகம் மற்றும் சுங்கத்துறை வரைமுறைப்படுத்தியப் பட்டியலின்படி, கைவினைப் பொருட்கள், கைத்தறி ஆடைகள், பாரம்பரியப் பொருட்கள், ஆயத்த ஆடைகள், அரிசி, சர்க்கரை மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட 36 வகைப் பொருட்கள் வர்த்தகத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளன.</p><h2><strong>பலத்த பாதுகாப்பு:</strong></h2><p>இந்த வர்த்தகப் பாதையில் இந்தோ-திபெத்திய எல்லைப் போலீஸ் படையினர் தீவிர பாதுகாப்பு சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். முதல் முறையாக நாதுலா எல்லைப் பகுதியில் ITBP பெண் படைப்பிரிவும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்த எல்லை வர்த்தகம் ஒவ்வொரு ஆண்டும் மே முதல் நவம்பர் மாதம் வரை மட்டுமே நடைபெறும். வாரத்தில் திங்கள் முதல் வியாழன் வரை வர்த்தகர்கள் எல்லை கடந்து வியாபாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>உள்ளூர் வாழ்வாதாரம் மீட்பு:</strong></h2><p>கடந்த 6 ஆண்டுகளாக வர்த்தகம் முடங்கியதால் வாழ்வாதாரத்தை இழந்த எல்லைப்புறப் பகுதி வர்த்தகர்கள், போக்குவரத்து உரிமையாளர்கள் மற்றும் சிறு தொழிலதிபர்களுக்கு இது பெரிய நிம்மதியை அளித்துள்ளது.</p><h2><strong>இருதரப்பு உறவில் முன்னேற்றம்:</strong></h2><p>எல்லைப் பகுதியில் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கிலும், இருதரப்புப் பொருளாதார உறவை இயல்பு நிலைக்குக் கொண்டுவரும் முயற்சியாகவும் இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.</p><p>1962 இந்திய-சீனப் போருக்குப் பிறகு 44 ஆண்டுகள் மூடப்பட்டிருந்த நாதுலா கணவாய் வர்த்தகம், கடந்த 2006-இல் மீண்டும் திறக்கப்பட்டது. பின்னர் 2020-இல் மீண்டும் முடங்கிய நிலையில், தற்போது இரு நாட்டு தூதரகப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது அணை கட்டப்பட்டிருந்தால் கபினியிலிருந்து இப்போது வரும் தண்ணீரும் கிடைத்திருக்காது: அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-if-the-mekedatu-dam-had-already-been-built-even-the-water-now-being-released-from-kabini-would-not-have-reached-tn</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-if-the-mekedatu-dam-had-already-been-built-even-the-water-now-being-released-from-kabini-would-not-have-reached-tn#comments</comments><guid isPermaLink="false">f66677cd-7529-48c6-9a03-16ce0738f923</guid><pubDate>Sun, 02 Aug 2026 08:38:22 +0000</pubDate><atom:updated>2026-08-02T08:38:22.041Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,mekedatu dam,மேகதாது அணை,Cauvery Issue,காவிரி நீர் பிரச்சனை</media:keywords><media:content height="269" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-07/w5gcs7m4/anbumani.jpg" width="480"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-07/w5gcs7m4/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</h2><p>கர்நாடகத்தில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kabini-dam-how-did-the-dam-fill-up-in-just-two-days-cpm-shanmugam-asks">கபினி அணை</a> நிரம்பியதால் தமிழ்நாட்டுக்கு காவிரியியில் நேற்று வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்ட நிலையில், இன்று காலை வினாடிக்கு 10 ஆயிரமாக குறைக்கப்பட்டு விட்டது. பின்னர் நீர்வரத்து வினாடிக்கு 28,009 கன அடியாக அதிகரித்ததைத் தொடர்ந்து நீர் திறப்பு வினாடிக்கு 14,958 கன அடியாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.</p><p>தமிழ்நாட்டிற்கு சட்டப்படியாக வழங்கப்பட வேண்டிய நீரை வழங்க கர்நாடக அரசு தயாராக இல்லை என்பதையும், உபரிநீரை திறந்து விடும் வெள்ள வடிகாலாக மட்டுமே தமிழகத்தின் காவிரியை பயன்படுத்துகிறது என்பதையுமே இது காட்டுகிறது.</p><h2>4 அணைகளில் 74.05 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது</h2><p>கர்நாடகத்தில் உள்ள அணைகளில் இன்று காலை நிலவரப்படி 74.05 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. இது அங்குள்ள 4 அணைகளின் மொத்தக் கொள்ளளவான 114.57 டி.எம்.சியில் 64% ஆகும். கபினி அணையில் 94%, ஹாரங்கி அணையில் 92%, ஹேமாவதி அணையில் 73%, கிருஷ்ணராஜசாகர் அணையில் 42% நீர் உள்ளது.</p><p>ஜூலை மாத இறுதி வரை தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் 40 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டியுள்ள நிலையில், தமிழகத்திற்கு சட்டப்படியும், நியாயப்படியும் தண்ணீர் வழங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால் கிருஷ்ணராஜ சாகர் தவிர மீதமுள்ள 3 அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு கர்நாடகம் தண்ணீரை திறந்து விட்டிருக்கலாம்.</p><h2>கபினி அணை உபரி நீரை தேக்கி வைக்க முடியாது</h2><p>ஆனால், கபினி அணை நிரம்பிய நிலையில் அதன் உபரி நீரை எங்கும் தேக்கி வைக்க முடியாது என்பதால்தான் வேறு வழியின்றி காவிரியில் திறந்து விட்டிருக்கிறது. ஹாரங்கி அணை நிரம்பி விட்ட நிலையில், அந்த அணைக்கு 10430 கன அடி நீர் வரும் நிலையில், அதைவிட அதிகமாக 14470 கன அடி நீரை திறந்து விட்டு கிருஷ்ணராஜசாகர் அணையில் சேமித்து வைக்கிறது.</p><p>ஹேமாவதி அணை இன்னும் ஒரு வாரத்தில் நிரம்பி விடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதன்பின் அதன் உபரி நீரையும் கிருஷ்ணராஜசாகர் அணையில்தான் சேமித்து வைக்கும். தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது என்ற கர்நாடகத்தின் நிலைப்பாட்டையே இது காட்டுகிறது.</p><h2>மேகதாது அணை</h2><p>கர்நாடக அரசால் புதிதாக கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள மேகதாது அணை மேற்கண்ட 4 அணைகளுக்கும் கீழாக, தமிழக  எல்லைக்கு அருகில் அமையும். அந்த அணை மட்டும் கட்டப்பட்டிருந்தால் கபினி அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீரும் கூட தமிழ்நாட்டுக்கு கிடைக்காது. ஹாரங்கி, ஹேமாவதி அணைகளில் இருந்து திறக்கப்பட்டு, கிருஷ்ணராஜ சாகர் அணை வழியாக காவிரியில் விடப்படும் தண்ணீரும் கூட மேகதாது அணையில் தடுக்கப்பட்டு விடும்.</p><p>மேகதாது அணையும் நிரம்பி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கிடைப்பது என்பது எட்டாவது அதிசயமாகவும், குதிரைக் கொம்பாகவும்தான் இருக்கும். அதனால்தான் மேகதாது அணையை கட்ட அனுமதிக்கக் கூடாது என்று கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது.</p><h2>தமிழக அரசு இரையாகி விடக் கூடாது</h2><p>எனவே, மேகதாது அணை விவகாரத்தில் தவறான நிலைப்பாடுகளை எடுத்து கர்நாடக அரசின் சதிகளுக்கும், சூழ்ச்சிகளுக்கும் தமிழக அரசு இரையாகி விடக் கூடாது. மேகதாது அணையை கட்ட அனுமதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகள், வேளாண் அமைப்புகள் ஆகியவற்றின் கருத்துகளை அறிந்து  தெளிவான செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கேரளாவில் கனமழை-பம்பையில் நிலச்சரிவு அபாயம்: சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய எச்சரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kerala-heavy-rains-trigger-landslide-risk-in-pamba-sabarimala-devotees-warned</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kerala-heavy-rains-trigger-landslide-risk-in-pamba-sabarimala-devotees-warned#comments</comments><guid isPermaLink="false">441bf6f8-ee15-4180-b31c-e070e92ca259</guid><pubDate>Sun, 02 Aug 2026 08:34:21 +0000</pubDate><atom:updated>2026-08-02T08:34:21.861Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,Sabarimala,Tamilnadu Government,கேரளாவில் கனமழை,Kerala Rains,Pamba river,பம்பை ஆறு,கேரளா கனமழை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/64qmy627/sabarimala.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sabarimala ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/64qmy627/sabarimala.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பம்பா நதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், பம்பை ஆற்றில் நீர்மட்டம் மிக வேகமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் தங்கள் பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியமும் பத்தனம் திட்டா மாவட்ட நிர்வாகமும் மற்றும் தமிழக அரசும் அவசர அறிவுறுத்தல் விடுத்துள்ளன. </p><p>கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2><strong>நிலச்சரிவு எச்சரிக்கை</strong></h2><p>இன்று மற்றும் நாளை நடைபெறவுள்ள சிறப்பு 'நிறபுத்தரி' பூஜையைக் காண பக்தர்கள்  திட்டமிட்டிருந்தனர். &nbsp;இந்நிலையில், பம்பை, சந்நிதானம் செல்லும் மலைப்பாதைகள் மற்றும் வனப்பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.</p><h2><strong>தமிழக அரசு &amp; தேவஸ்வம் வாரிய அறிவுறுத்தல்:</strong> </h2><p>பக்தர்களின் பாதுகாப்பைக் கருதி பயணத்தைத் தற்காலிகமாகத் தவிர்க்கவோ அல்லது ஒத்திவைக்கவோ வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. "கனமழை காரணமாக பம்பை மற்றும் சந்நிதானத்திற்கு செல்லும் மலைப்பாதைகளில் நிலச்சரிவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதனால் பக்தர்களுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் எழுந்துள்ளதால், தற்போதைய சூழலில் சபரிமலைப் பயணத்தை மேற்கொள்வது ஆபத்தானது." &nbsp; </p><h2><strong>பயணத்தை ஒத்திவைத்தல்:</strong> </h2><p>'நிறபுத்தரி' வழிபாட்டுக்காக வரும் ஐயப்ப பக்தர்கள் வானிலை சீரடையும் வரை தங்களது பயணத் திட்டங்களை மறுபரிசீலனை செய்து ஒத்திவைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><h2><strong>ஆற்றுக்குச் செல்லத் தடை:</strong></h2><p>பம்பை ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால், ஆற்றில் இறங்குவதோ அல்லது குளிப்பதோ முற்றிலுமாகத் தவிர்க்கப்பட வேண்டும். &nbsp;பக்தர்கள் உள்ளூர் நிர்வாகம், தேவஸ்வம் வாரியம் மற்றும் காவல் துறையின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பின்பற்ற வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் மட்டும் தான் தண்ணீரை விட அரசியல் முக்கியமாக உள்ளது: மாணிக்கம் தாகூர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/only-in-tamil-nadu-politics-matters-more-than-water-manickam-thakur</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/only-in-tamil-nadu-politics-matters-more-than-water-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">b5f7349c-ac68-4fe1-a7f5-047d19bfddd5</guid><pubDate>Sun, 02 Aug 2026 08:19:33 +0000</pubDate><atom:updated>2026-08-02T08:19:33.797Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணிக்கம் தாகூர்,Cauvery,Manickam Tagore,தொகுதி மறுவரையறை,Delimitation,காவேரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/38l1ab8o/Untitled-design-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Manickam Tagore says politics prioritized over water issues]]></media:title><media:description type="html"><![CDATA[ Manickam Tagore]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/38l1ab8o/Untitled-design-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><h3><strong>தொகுதி மறுவரையறை</strong></h3><p>காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் தொகுதி  மறுவறையறை என்பது, தமிழகர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் எதிரானது. </p><p>இந்த மசோதா சாமானிய மக்களுக்கு எதிராக வர உள்ளது, இதற்கு நாங்கள் முழு அளவில் எதிர்ப்பு தெரிவிப்போம்.</p><p>கடந்த 2026 ஏப்ரல் 17 அன்று தொகுதி மறுவரையறை மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் போது, பாரதிய ஜனதா கட்சி, அதிமுக மற்றும் பாமக ஆகிய மூன்று கட்சிகள் அதற்கு ஆதரவாக வாக்களிப்போம் என்று தெரிவித்தனர்.</p><p>அப்போது இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்படவில்லை. இந்த சமயத்தில் அதிமுக மற்றும் பாமக ஆகிய இரண்டு கட்சிகள் மாநிலங்களவையில் அங்கம் வகித்ததால், அவர்களால் வாக்களிக்க முடியவில்லை.</p><p>தற்போது இந்த மூன்று கட்சிகளை தவிற, வேறு எந்த கட்சி தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவளிக்கிறதோ, அது தமிழ்நாட்டிற்கு செய்யும் துரோகம்.</p><p>காங்கிரஸ் கட்சியில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து 13 எம்.பி.க்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 62 மாநிலங்களவை உறுபினர்கள் உள்ளனர்.</p><p>அவர்கள் இந்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களிப்பார்களா என்பதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.</p><p>இந்த மசோதா கடந்த 2026 ஏப்ரல் 17ஆம் தேதி, தோற்கடிக்கப்பட்ட போது இருந்த மனநிலை தான், தற்போதும் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது.</p><h3><strong>காவிரி விவகாரம்</strong></h3><p>கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரை பொறுத்தவரையில், அவர் அம்மாநிலத்தின் நலனுக்காக தான் குரல் கொடுப்பார்.</p><p>நான் எனது தமிழ்நாடு மாநிலத்திற்கு தான் ஆதரவாக குரல் கொடுக்க முடியும். தமிழ்நாட்டின் நலன் தான் எனக்கு முக்கியம்.</p><p>தமிழக முதல்வர் இதுகுறித்து கர்நாடகா சென்று பேசுவதாக இருந்தால், அதில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. நம்முடைய பிரச்சனை எப்படியாவது தமிழகத்திற்கு தண்ணீர் வர வேண்டும் என்பது தான்.</p><p>தமிழ்நாட்டில் காவிரி பிரச்சனை குறித்து நீதிமன்றத்தில் பல வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. கர்நாடகாவை பொறுத்தவரையில், அவர்களுக்கு அரசியலை விட தண்ணீர் தான் முக்கியமாக உள்ளது. அவர்கள் காவிரி விவகாரத்தில் ஒன்றாக நிற்கிறார்கள்.</p><p>ஆனால் தமிழ்நாட்டில் தண்ணீரை விட அரசியல் தான் முக்கியமாக உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் தான், நாட்டு நலனை விட, கட்சி மட்டுமே முக்கியமாக உள்ளது.</p><p>இவ்வாறு மாணிக்கம் தாகூர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவை நேசிப்பவர்கள் ஏன் துபாயில் குடியேற வேண்டும்? - விவேக் ஒபராய் மற்றும் ஆர். மாதவனை விமர்ச்சித்த ராஜ் தாக்கரே!</title><link>https://www.maalaimalar.com/news/national/why-should-people-who-love-india-settle-in-dubai</link><comments>https://www.maalaimalar.com/news/national/why-should-people-who-love-india-settle-in-dubai#comments</comments><guid isPermaLink="false">91cf02fd-598a-40a6-af1d-c5b54b61bca2</guid><pubDate>Sun, 02 Aug 2026 07:59:14 +0000</pubDate><atom:updated>2026-08-02T07:59:14.586Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராஜ் தாக்கரே,Vivek Oberoi,விவேக் ஓபராய்,mns,RajThackeray,R Madhavan,ஆர் மாதவன்,NEETPaperLeak,CJPProtests</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/35s0avra/RajThackeray" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Raj Thackeray  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/35s0avra/RajThackeray?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் இந்தியா மிகச்சிறப்பாக வளர்ந்து வருவதாகப் புகழும் நடிகர்கள் விவேக் ஒபராய்மற்றும் ஆர். மாதவன் ஆகியோர், ஏன் இந்தியாவை விட்டுவிட்டு துபாயில் குடியேறியுள்ளனர் என்று மகாராஷ்டிர நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற MNS கட்சியின் மாணவர் பிரிவு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராஜ் தாக்கரே, மத்திய பாஜக அரசின் கொள்கைகளையும், நாட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலையையும் கடுமையாக விமர்சித்தார்.</p><h2>துபாயில் குடியேறியது ஏன்?</h2><p>கூட்டத்தில் பேசிய ராஜ் தாக்கரே, "2019 ஆண்டு மோடியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் மோடியாக நடித்த நடிகர் விவேக் ஒபராய், இப்போது துபாயில் வசிக்கச் சென்றுவிட்டார். அதேபோல் பிரதமர் மோடியைப் பாராட்டிப் பேசும் நடிகர் ஆர். மாதவனும் துபாயில்தான் தன் குடும்பத்துடன் வாழ்கிறார். </p><p>பிரதமர் மோடி இந்தியாவை வல்லரசாக்குகிறார் என்றும், இங்கு எல்லாம் சிறப்பாக இருக்கிறது என்றும் இவர்கள் நம்பினால், ஏன் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாட்டில் வாழ வேண்டும்?" என்று கேள்வி எழுப்பினார்.</p><p>மேலும், இவர்கள் இந்தியாவுக்கு வந்து பிரபலமான திரைப்படங்களில் நடித்துவிட்டு, சம்பாதித்த பணத்துடன் மீண்டும் துபாய்க்கே சென்றுவிடுவதாகக் குற்றம் சாட்டினார். </p><p>நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழல் காரணமாக ஆயிரக்கணக்கான தொழிலதிபர்கள் ஏற்கனவே தங்கள் தொழில்களை மூடிவிட்டு இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><h2>நடிகர்களின் விளக்கம்?</h2><p>ராஜ் தாக்கரேவின் இந்த விமர்சனங்களுக்கு நடிகர்கள் தரப்பில் ஏற்கனவே காரணங்கள் கூறப்பட்டுள்ளன.</p><p>கோவிட்-19 பொதுமுடக்கக் காலத்தில், தனது மகனின் நீச்சல் விளையாட்டுப் பயிற்சிக்காக துபாய்க்கு தற்காலிகமாக இடம்பெயர்ந்ததாக ஆர். மாதவன் குறிப்பிட்டிருந்தார்.</p><p>அங்கு தனது புதிய தொழில் மற்றும் வணிக முயற்சிகளைத் தொடங்குவதற்காகவே துபாயில் குடியேறியதாக விவேக் ஓபராய் தெரிவித்திருந்தனர்.</p><h2>அரசியல் தலைவர்கள் மீதான அவதூறு குறித்து பேச்சு</h2><p>டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற 'காக்ரோச் ஜனதா கட்சி' போராட்டங்களில் ஈடுபட்டபோது பிரதமர் மோடிக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட தரம் தாழ்ந்த மொழிகள் தவறானவை என்று ராஜ் தாக்கரே ஒப்புக்கொண்டார்.</p><p>மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி முதல் தாக்கரே குடும்பத்தினர் வரை அனைவரையும் பாஜாகவின் 'டிரோல்'குழுக்கள் மிக மோசமாக விமர்சிப்பதாகக் கூறினார். "எதை விதைக்கிறீர்களோ, அதையே அறுவடை செய்வீர்கள். </p><p>பாஜாகவினர் முதலில் தங்களது ஆதரவாளர்களை மற்றவர்களைப் பற்றி அவதூறாகப் பேசுவதை நிறுத்தச் சொல்ல வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.</p><h2>நீட் தேர்வு விவகாரம்</h2><p>நீட் தேர்வுத் தாள் கசிவு விவகாரம் என்பது மாணவர் போராட்டத்திற்கு ஒரு தூண்டுதல் மட்டுமே என்றும், கடந்த பல ஆண்டுகளாக மக்கள் மனதில் சேர்ந்த ஏமாற்றங்களின் வெளிப்பாடே இந்தப் போராட்டம் என்றும் ராஜ் தாக்கரே தனது உரையில் சுட்டிக்காட்டினார்.</p>]]></content:encoded></item><item><title>&apos;SPIDER-MAN&apos;:BRAND NEW DAY&apos;-இந்தியாவில் வசூல் மழை எவ்வளவு தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/spider-man-brand-new-day-box-office-rain-in-india</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/spider-man-brand-new-day-box-office-rain-in-india#comments</comments><guid isPermaLink="false">d65c2bf3-dece-4b43-9fc8-d40bd33ea24b</guid><pubDate>Sun, 02 Aug 2026 07:54:44 +0000</pubDate><atom:updated>2026-08-02T07:54:44.485Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tom Holland,Spider Man Brand New Day,ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே,Sadie Sink,டாம் ஹாலண்ட்,சேடி சிங்க்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/x3jg572g/spider.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Spider Man Brand New Day]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/x3jg572g/spider.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டாம் ஹாலண்ட் (Tom Holland) நடிப்பில் வெளியாகியுள்ள புதிய மார்வெல் சூப்பர்ஹீரோ திரைப்படமான '<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/avengers-endgame-record-broken-spider-man-brand-new-day-opening-day-collection">ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே</a>', இந்திய பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை புரிந்து வருகிறது. திரையரங்குகளில் வெளியான இரண்டே நாட்களில் இந்தியாவில் ரூ.100 கோடி வசூல் என்ற இமாலய இலக்கைக் கடந்து சாதனை படைத்துள்ளது.</p><h2><strong>முதல் நாள் வசூலில் புதிய வரலாறு!</strong></h2><p>இந்தியாவில் கடந்த ஜூலை 30 அன்று வெளியான இத்திரைப்படம், முதல் நாளிலேயே ரூ.73.96 கோடி மொத்த வசூல் ஈட்டி வரலாற்றுச் சாதனை படைத்தது. இதன் மூலம், இந்தியாவில் வெளியான ஹாலிவுட் திரைப்படங்களிலேயே மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த படம் என்ற பெருமையை இத்திரைப்படம் பெற்றுள்ளது. </p><p>இதற்கு முன் 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' மற்றும் 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' ஆகிய படங்கள் வைத்திருந்த முதல் நாள் வசூல் சாதனைகளை இது முறியடித்துள்ளது. ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் 90%-க்கும் அதிகமான இருக்கை நிரப்பல் பதிவாகிய நிலையில், தென்னிந்திய மொழிகளிலும் குறிப்பிடத்தக்க வசூலை அள்ளியுள்ளது.</p><h2><strong>சுவாரஸ்யமான கதைக்களம்:</strong></h2><p>2021-இல் வெளியான ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம் படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இப்படத்தில், பீட்டர் பார்க்கரின்நினைவுகள் உலக மக்கள் அனைவரின் மனதிலிருந்தும் முற்றிலும் அழிக்கப்படுகின்றன. தன் காதலி எம்.ஜே (ஜெண்டயா), நண்பன் நெட் (ஜேக்கப் படலான்) என அனைவரும் தன்னை மறந்த நிலையில், தனிமையில் வாழும் பீட்டர் பார்க்கர், புதிய வில்லன்களையும் சவால்களையும் எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதே இதன் கதைக்களம்.</p><p>டெஸ்டின் டேனியல் க்ரெட்டன் இயக்கியுள்ள இப்படத்தில், டாம் ஹாலண்ட், ஜெண்டயா ஆகியோருடன் சேடி சிங்க், ஜான் பெர்ந்தல் , மார்க் ரஃப்பாலோ எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். வார இறுதி நாட்களான நேற்றும் இன்றும் கணக்கிட்டால் முதல் நான்கு நாட்களிலேயே இந்தியாவில் ரூ.200 கோடி வசூல் மைல்கல்லை இத்திரைப்படம் சுலபமாகக் கடந்துவிடும் என்று பாக்ஸ் ஆபீஸ் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழக அரசின் நடவடிக்கையால் தடை நீங்கியது: ஆம்ஸ்ட்ராங் கொலையில் சி.பி.ஐ. அதிரடி விசாரணை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cbi-launches-probe-into-armstrong-murder-after-tamil-nadu-withdraws-appeal</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cbi-launches-probe-into-armstrong-murder-after-tamil-nadu-withdraws-appeal#comments</comments><guid isPermaLink="false">37892d03-caa7-4994-a4c5-d876c619ecb1</guid><pubDate>Sun, 02 Aug 2026 07:52:12 +0000</pubDate><atom:updated>2026-08-02T07:52:12.801Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சிபிஐ,cbi,Armstrong murder case,ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/ve3qgrej/ArmstrangMurdercase.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/ve3qgrej/ArmstrangMurdercase.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 5-ந்தேதி பெரம்பூரில் உள்ள தனது வீட்டின் அருகே ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.</p><h2>29 பேர் கைது</h2><p>ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக ரவுடி ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு, ரவுடி திருவேங்கடம் உட்பட 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் ரவுடி நாகேந்திரன், அவரது மகன் வக்கீல் அஸ்வத்தாமன் உள்பட 29 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ரவுடி திருவேங்கடம் போலீசாரின் என்கவுன்டரில் உயிரிழந்தார்.</p><p>ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் சிலர், அறிவுரை கழகத்தில் முறையீடு செய்து, குண்டர் சட்ட நடவடிக்கையை நீக்கினார்கள். மேலும் சிலர் இந்த வழக்கில் ஜாமீன் பெற்று ஜெயிலில் இருந்து வெளியே வந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ரவுடி நாகேந்திரன் உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.</p><h2>குற்றப்பத்திரிகை</h2><p>ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விசாரித்து வந்த சென்னை போலீசார் 7,800 பக்க குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இதற்கிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி அவரது சகோதரர் இம்மானுவேல் சென்னை ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு மனுதாக்கல் செய்தார்.</p><p>இதையடுத்து, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி கடந்த ஆண்டு டிசம்பர் 24-ந்தேதி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து அப்போதைய தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு சி.பி.ஐ. விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்தது.</p><h2>சிபிஐ விசாரணைக்கு இருந்த தடை நீங்கியது</h2><p>இதற்கிடையே தமிழகத்தில் விஜய் தலைமை யிலான த.வெ.க. ஆட்சி பொறுப்பேற்றது. அதன் பிறகு, அந்த மேல்முறையீட்டு மனுவை தமிழக அரசு திரும்ப பெற்றுக்கொண்டது. இதையடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு இருந்த தடை நீங்கியது. இதையடுத்து ஆம்ஸ்ட் ராங் கொலை வழக்கு தொடர்பான ஆவ ணங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் சமீபத்தில் தமிழக போலீசாரிடம் பெற்றனர். இதன் அடிப்படையில் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக அதிரடி விசாரணையை சி.பி.ஐ. அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.</p><h2>தனியாக வழக்கு</h2><p>இன்னும் ஓரிரு நாள்களில், இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள், தனியாக ஒரு வழக்கை பதிவு செய்ய உள்ளனர். இந்த வழக்கில் விசாரணை அதிகாரியும் நியமிக்கப்பட உள்ளார். இதைத்தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது.</p><p>ஆம்ஸ்ட்ராங் கொலையில் மொத்தம் 29 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர். மீதமுள்ள 27 பேரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலையில் 27 பேருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டாலும், இந்த வழக்கில் ரவுடிகளுக்கு, பல வழிகளிலும் அரசியல் பிரமுகர்கள் பலர் உடந்தையாக இருந்ததாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டது.</p><h2>விசாரணை தொடங்கியது</h2><p>இதைத்தொடர்ந்தே பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் மாநில தலைவர் வக்கீல் ஆனந்தன் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதனால்தான் அவரது சார்பில் கோர்ட்டில் முறையிட்டனர். தி.மு.க. ஆட்சியில் சி.பி.ஐ. விசாரணையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை, முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.</p><p>இதன் அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மேல்முறையீட்டு மனுவை தமிழக அரசு திரும்ப பெற்றது. இதையடுத்து இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணையை தொடங்கியுள்ளது.</p><p>இந்த கொலை வழக்கு தொடர்பாக ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விரைவில் விசாரணை நடத்தி யார் மீதாவது சந்தேகம் உள்ளதா என்கிற தகவல்களை திரட்டுகிறார்கள். ஆம்ஸ்ட்ராங் கொலையில் 2 அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக அவர்களின் பெயர் அடிபடுகிறது. அவர்கள் மீது ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் வெளிப்படை யாகவே குற்றம் சாட்டி இருந்தனர்.</p><h2>அரசியல் கட்சி பிரமுகர்கள் கலக்கம்</h2><p>எனவே அடுத்த கட்டமாக சி.பி.ஐ. அதிகாரிகள் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்த இருப்பதை தொடர்ந்து, குறிப்பிட்ட அரசியல் கட்சி பிரமுகர்களிடமும் விசாரணை நடத்தப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஏற்கனவே பல அரசியல் கட்சி பிரமுகர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.</p><p>இப்போது சி.பி.ஐ. விசாரணை தொடங்கி உள்ளதால் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஏதோ ஒரு வகையில் உடந்தையாக இருந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>வந்தே பாரத் ரெயிலில் பறந்து வந்த இதயம்: சாதித்து காட்டிய இந்திய ரெயில்வே</title><link>https://www.maalaimalar.com/news/national/250-km-in-2-hours-donor-heart-races-via-vande-bharat-to-save-life</link><comments>https://www.maalaimalar.com/news/national/250-km-in-2-hours-donor-heart-races-via-vande-bharat-to-save-life#comments</comments><guid isPermaLink="false">9ecbf8d2-bd20-401d-bf95-1e6071e6cdb5</guid><pubDate>Sun, 02 Aug 2026 07:37:25 +0000</pubDate><atom:updated>2026-08-02T07:37:25.171Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vande Bharat,heart,இதயம்,இந்தியன் ரெயில்வே,வந்தே பாரத்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/bowcatk2/train.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ vande bharat]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/bowcatk2/train.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உறுப்பு மாற்று சிகிச்சைக்காக தானம் பெறப்பட்ட இதயம் வந்தே பாரத் ரெயில் மூலம் 2 மணி நேரத்தில் 250 கி.மீ தூரம் பயணித்து வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.</p><h2>இதய மாற்று அறுவைச்சிகிச்சை</h2><p>குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத் நகரில் உள்ள யுஎன் மேத்தா இதய​வியல் ஆராய்ச்சி மையத்​தில் நோயாளி ஒரு​வருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்​ட​மிடப்​பட்​டது.</p><p>சூரத் நகரில் உள்ள ஒருவரிடம் இருந்து இதயம் தானமாகப் பெறப்பட்டது. அந்த இதயத்தை சுமார் 250 கிலோமீட்டர் தூரமுள்ள அகம​தா​பாத்​துக்கு வந்தே பாரத் ரெயி​லில் விரை​வாக கொண்டு செல்ல திட்​ட​மிடப்​பட்​டது.</p><p>இதற்காக அகம​தா​பாத் ரெயில் நிலை​யத்​தில் இருந்து மேத்தா இதய​வியல் ஆராய்ச்சி மையத்​துக்கு கொண்டு செல்​ல சிறப்பு வழித்தடம் உரு​வாக்​கப்​பட்​டது.</p><p>இதற்​கான ஏற்​பாடு​களில் மருத்​து​வக் குழு​வினர், ரயில்வே துறை​யினர், ரயில்வே பாது​காப்பு படை போலீசார், குஜ​ராத் போலீ​சார் ஆகியோர் ஈடு​பட்​டனர்.</p><p>இந்த வந்தே பாரத் ரெயில் சூரத் நகரில் இருந்து புறப்​பட்டு அகம​தா​பாத்​துக்கு 2 மணி நேரத்தில் ஜெட் வேகத்தில் வந்தடைந்தது.</p><p>அகமதா​பாத் ரெயில் ​நிலை​யத்​தின் முதல் நடைமேடையி​ல் தானம் பெறப்​பட்ட அந்த இதயம், உடனடி​யாக யுஎன் மேத்தா இதய​வியல் ஆராய்ச்சி மையத்​துக்கு கொண்டு செல்​லப்​பட்டு இதய மாற்று அறுவைச்சிகிச்சை மேற்​கொண்​ட​வருக்கு வெற்​றிகர​மாக பொருத்தப்​பட்​டது.</p><p>வழக்​க​மாக சூரத் நகரில் இருந்து புறப்​படும் வந்தே பாரத் ரெயில் இரண்டரை மணி நேரத்துக்குப் பிறகே அகம​தா​பாத் ரெயில் நிலையம் வந்தடை​யும் என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2>வரலாற்​றுச் சிறப்​புமிக்க நிகழ்​வு</h2><p>இந்​திய ரெயில்வேயின் ஒரு வரலாற்​றுச் சிறப்​புமிக்க நிகழ்​வு இது என்றும், இச்​சம்​பவம் சேவை​யின் தனித்​து​வ​மான உதா​ரணம் என்றும் குஜராத் முதல் மந்திரி பூபேந்​திர படேல் தெரி​வித்​துள்​ளார்.</p><p>இது இந்​திய ரெயில்​வேக்கு ஒரு பெருமை மற்​றும் மனநிறைவை அளித்த தருணம். இந்​திய ரெயில்வே வரலாறு படைத்​துள்​ளது. முதல் ​முறை​யாக மும்பை சென்ட்ரல் - ​காந்​திநகர் வந்தே பாரத் எக்​ஸ்​பிரஸ் ரெயில் தான​மாகப் பெறப்​பட்ட ஒரு இதயத்​தை சூரத்​தில் இருந்து அகம​தா​பாத்​திற்கு வெற்​றிகரமாகக்​ கொண்​டு சேர்த்​துள்​ளது என அகம​தா​பாத் ரயில்வே கோட்ட மேலா​ளர் வேத் பிர​காஷ் எக்ஸ் தளத்​தில் பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>லோகேஷ் கனகராஜ்-அல்லு அர்ஜுன் கூட்டணியின் &apos;AA23&apos;: இதுவரை பார்த்திராத புதிய தோற்றத்தில் அல்லு அர்ஜுன்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/aa23-lokesh-kanagaraj-allu-arjun-iconic-transformation</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/aa23-lokesh-kanagaraj-allu-arjun-iconic-transformation#comments</comments><guid isPermaLink="false">c9831426-5a04-40db-8df6-97b9b5e38155</guid><pubDate>Sun, 02 Aug 2026 07:34:21 +0000</pubDate><atom:updated>2026-08-02T07:34:21.958Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Anirudh Ravichander,லோகேஷ் கனகராஜ்,அல்லு அர்ஜுன்,allu arjun,Lokesh Kanagaraj,அனிருத் ரவிச்சந்தர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/tndclsw9/lolesh.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Lokesh Kanagaraj -Allu Arjun  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/tndclsw9/lolesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தென்னிந்திய திரையுலகின் முன்னணி இயக்குநரான <a href="https://www.maalaimalar.com/topic/லோகேஷ்-கனகராஜ்">லோகேஷ் கனகராஜ் </a>மற்றும் பான்-இந்திய நட்சத்திரமான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D">அல்லு அர்ஜுன் </a>இணைப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'AA23'. பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் இப்படத்தில், அல்லு அர்ஜுன் இதுவரை ரசிகர்கள் பார்த்திராத முற்றிலும் மாறுபட்ட புதிய அவதாரத்தில் நடிக்கவுள்ளதாகப் படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. </p><p>லோகேஷ் கனகராஜுடன் மீண்டும் கைகோர்க்கும் 'அனிருத் ரவிச்சந்தர்' இப்படத்திற்கு இசையமைக்கிறார் இப்படத்தைப் பிரம்மாண்டமான வரவு செலவுத் திட்டத்தில் 'மைத்ரி மூவி மேக்கர்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது.</p><h2><strong>அட்டகாசமான புதிய லுக்:</strong></h2><p>அல்லு அர்ஜுனும் இயக்குநர் லோகேஷ் கனகராஜும் இணைந்து கதாபாத்திரத்தின் தோற்றத்தை வடிவமைக்கப் பல மாதங்களாக தீவிர ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்துள்ளனர். முந்தைய படங்களின் சாயல் எதுவுமின்றி, பார்வையாளர்களுக்கு முற்றிலும் புதிய அனுபவத்தைத் தரும் வகையில் இந்த லுக் உருவாக்கப்பட்டுள்ளது.</p><p>இது அல்லு அர்ஜுனின் திரைப்பயணத்திலேயே மிகவும் 'ஐகானிக்' ஆன தோற்றமாக மாறும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கதையின் தன்மைக்கும் கதாபாத்திரத்தின் பண்புகளுக்கும் ஏற்ப இந்த பிரத்யேக மேக்-ஓவர் வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>நாயகி இல்லாத கதைக்களம்:</strong></h2><p>லோகேஷ் கனகராஜின் 'கைதி' திரைப்படத்தைப் போல, இப்படத்திலும் வழக்கமான கதாநாயகி அல்லது காதல் காட்சிகள் இல்லாமல், முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் கதைக்களத்தை மட்டுமே மையமாகக் கொண்டு படம் உருவாகவுள்ளதாகக் கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இப்படத்திற்கான கதை மற்றும் திரைக்கதை அமைக்கும் பணிகள் பிரபல எழுத்தாளர் மற்றும் இயக்குநர் ரத்னகுமார் குழுவினரால் ஏற்கனவே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.</p><h2><strong>உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்:</strong></h2><p>சமீபத்தில் அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் 'ராக்கா' படத்தின் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது 'AA23' படத்தின் இந்த மாஸ் லுக் அப்டேட் சினிமா ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>நடிகை மிருணாளினி ரவிக்கு நிச்சயதார்த்தம்: நீண்ட நாள் காதலரை கரம்பிடிக்கிறார்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actress-mrunalini-ravi-engagement-longtime-lover</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actress-mrunalini-ravi-engagement-longtime-lover#comments</comments><guid isPermaLink="false">65d1c0f3-e443-4b94-89cd-8e2b65ccc1b0</guid><pubDate>Sun, 02 Aug 2026 07:20:14 +0000</pubDate><atom:updated>2026-08-02T07:20:14.421Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Mahavishnu,மஹாவிஷ்ணு,Actress Mrinalini Ravi,Paramporul Foundation,நடிகை மிருணாளினி,பரம்பொருள் ஃபவுண்டேஷன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/gkblrbx9/mirnalini.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Actress Mrinalini Ravi ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/gkblrbx9/mirnalini.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் பிரபலமான முன்னணி நடிகையான மிருணாளினி ரவி, தனது நீண்ட நாள் காதலரான மஹாவிஷ்ணுவுடன் தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாகச் சமூக வலைத்தளங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.</p><h2><strong>சோஷியல் மீடியாவில் நெகிழ்ச்சிப் பதிவு:</strong></h2><p>தான் காதலிக்கும் புகைப்படங்களை வெளியிட்ட மிருணாளினி, "உன்னை நேசிப்பது என்பது இறுதியாக என்னையே நான் நேசித்துக்கொள்வது போல் உணர்கிறேன். ஒவ்வொரு பிறவியிலும், எந்த உலகத்திலும் நான் உன்னையே தேர்ந்தெடுப்பேன்" என்ற உணர்ச்சிப்பூர்வமான வரிகளுடன் நிச்சயதார்த்த மோதிரத்தின் குறியீட்டைப் பகிர்ந்துள்ளார்.</p><p>அதேவேளையில் காதலன் மஹாவிஷ்ணு தனது பதிவில், "7 வருட நட்பு தற்போது என் வாழ்க்கையின் காதலாக மாறியுள்ளது. சர்வதேச காதலிகள் தினத்தில் எனது வாழ்க்கையின் இந்த புதிய அத்தியாயத்தை அறிமுகப்படுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><h2><strong>திரையுலகினர் மற்றும் ரசிகர்களின் வாழ்த்து மழை:</strong></h2><p>முன்னறிவிப்பு ஏதுமின்றி திடீரென வெளியான இந்த நிச்சயதார்த்த செய்தியால் ரசிகர்கள் பெரும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர். நடிகை அதுல்யா ரவி உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள், யூடியூப் மற்றும் சோஷியல் மீடியா கிரியேட்டர்கள், ரசிகர்கள் எனப் பலரும் இத்தம்பதியினருக்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.</p><h2><strong>காதலன் மஹாவிஷ்ணு யார்?</strong></h2><p>மிருணாளினியைக் கரம்பிடிக்கவிருக்கும் மஹாவிஷ்ணு, ஆன்மீகப் பேச்சாளராகவும் பயிற்றுநராகவும் விளங்குகிறார். இவர் 'பரம்பொருள் ஃபவுண்டேஷன்' என்ற அமைப்பின் மூலம் ஆன்மீக வகுப்புகளையும் சமூகச் சேவைகளையும் முன்னெடுத்து வருகிறார்.</p><h2><strong>மிருணாளினியின் திரைப்பயணம்:</strong></h2><p>டிக்டாக் மற்றும் ரீல்ஸ் வீடியோக்கள் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்து, தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான 'சூப்பர் டீலக்ஸ்' படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் மிருணாளினி. தெலுங்கில் வருண் தேஜுடன் 'கட்டாலக்கொண்ட கணேஷ்' படத்திலும், தமிழில் விஷாலுடன் 'எனிமி', விக்ரமுடன் 'கோப்ரா' மற்றும் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியனுடன் 'படைத்தலைவன்', விஜய் ஆண்டனியுடன் 'ரோமியோ'போன்ற பல முக்கியப் படங்களிலும் நடித்துப் பிரபலமானவர். விரைவில் இவர்களது திருமண தேதி அறிவிக்கப்படும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content:encoded></item><item><title>நீட்டுக்கு எதிரான போராட்டம்: மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து- அமைச்சர் ராஜ்மோகன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/neet-opposition-student-cases-withdrawn-announces-minister-rajmohan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/neet-opposition-student-cases-withdrawn-announces-minister-rajmohan#comments</comments><guid isPermaLink="false">7af422ba-2214-4ca3-aa81-0ab0154801b7</guid><pubDate>Sun, 02 Aug 2026 07:00:43 +0000</pubDate><atom:updated>2026-08-02T07:00:43.314Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>neet,நீட்,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/9dgxhm58/Untitled-design-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ NEET Protest Cases Dropped: All Student FIRs to be Withdrawn in Tamil Nadu]]></media:title><media:description type="html"><![CDATA[ Minister Rajmohan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/9dgxhm58/Untitled-design-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் நீட் தேர்வை எதிர்த்து போராடிய மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.</p><p>டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் வினாத்தாள் குளறுபடிக்கு எதிராக காக்ரோச் ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், தமிழகத்திலும் மாணவர்கள் சார்பாக போராட்டம் நடைபெற்றது.</p><p>முன்னாள் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும்படியும், ஒட்டுமொத்தமாக நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.</p><p>தர்மேந்திர பிரதான் பதவி விலகியதை அடுத்து, டெல்லி ஜந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்கள் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர். </p><p>நீட் தேர்விற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது.</p><p>சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வாறு அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீது வழக்குகள் தொடரப்படும் என தமிழக அரசு எச்சரித்திருந்தது. </p><p>இந்தநிலையில் தமிழகத்திலும் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><p>தமிழக முதலமைச்சர் விஜய்-யின் உத்தரவின் பேரில், பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>&apos;நான் சிறையைப் பார்த்தவன்&apos;- திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜரான பின் செந்தில் பாலாஜி பேட்டி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/i-did-not-run-or-hide-i-have-seen-prison-senthil-balaji</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/i-did-not-run-or-hide-i-have-seen-prison-senthil-balaji#comments</comments><guid isPermaLink="false">57abe684-6195-419f-85e4-cba13d9a4588</guid><pubDate>Sun, 02 Aug 2026 07:00:15 +0000</pubDate><atom:updated>2026-08-02T07:00:15.647Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>senthil balaji,செந்தில் பாலாஜி,தமிழக வெற்றிக் கழகம்,tvk,Triplicane police station,திருவல்லிக்கேணி காவல் நிலையம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/wggfu6wi/senthil.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Senthil Balaji]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/wggfu6wi/senthil.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) சட்டமன்ற உறுப்பினரிடம் குதிரைப் பேரம் பேச முயன்றதாகப் பதியப்பட்ட வழக்கில், சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி நிபந்தனை கையெழுத்திட்ட பின்னர் முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார்.</p><h2><strong>ஓடி ஒளியவில்லை:</strong></h2><p>"நான் எந்த தவறும் செய்யவில்லை. சட்டத்திற்கு அஞ்சி நான் எங்கும் ஓடி ஒளியவும் இல்லை. ஏற்கனவே சிறைவாசத்தைப் பார்த்தவன் நான், அதனால் இந்த அரசியல் பழிவாங்கல் வழக்குகளுக்கு எதற்கும் நான் அஞ்சப்போவதில்லை" எனத் தெரிவித்தார்.</p><h2><strong>முன்ஜாமீன் நடைமுறை:</strong></h2><p> உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படியே வழக்கறிஞர்களைச் கலந்தாலோசிக்க கால அவகாசம் கோரப்பட்டதாகவும், தற்போது நீதிமன்ற உத்தரவுக்குக் கட்டுப்பட்டு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் கூறினார்.</p><h2><strong>வழக்கில் பெயரே இல்லை:</strong></h2><p>"காவல்துறையினர் பதிவு செய்த எஃப்.ஐ.ஆர்-இல் எனது பெயரோ அல்லது எனது சகோதரர் அசோக் குமாரின் பெயரோ தொடக்கத்தில் இடம்பெறவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே பின்னணியில் எங்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. சட்ட ரீதியாக இந்தப் பொய் வழக்குகளை எதிர்கொண்டு முறியடிப்பேன்" என்று கூறினார்.</p><h2><strong>அரசுக்குக் கண்டனம்:</strong></h2><p>மக்கள் சந்திக்கும் அத்தியாவசியப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதை விட்டுவிட்டு, அரசியல் எதிரிகள் மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்வதிலேயே அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.</p><p>த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜா அளித்த புகாரின் பேரில் பதியப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது. அதனடிப்படையில், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு விசாரணைக்கு விளக்கமளித்து வருகிறார்.</p>]]></content:encoded></item><item><title>கட்சித்தாவல் வல்லுநர் நிர்மல் குமார்: காவிரி தொடர்பாக முதல்வர் உறக்கம் கலைத்து திருவாய் மலர்வது எப்போது?- முன்னாள் அமைச்சர் ரகுபதி கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-issue-tn-cm-vijay-nirmal-kumar-dmk-former-miniser-regupathy</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-issue-tn-cm-vijay-nirmal-kumar-dmk-former-miniser-regupathy#comments</comments><guid isPermaLink="false">a6b8055e-91cc-4247-9cab-2555db8696f7</guid><pubDate>Sun, 02 Aug 2026 06:43:22 +0000</pubDate><atom:updated>2026-08-02T06:43:22.368Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Regupathy,Cauvery Issue,காவிரி நீர் பிரச்சனை,ரகுபதி எம்.எல்.ஏ.,முதலமைச்சர் விஜய்,tn cm vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/l9m3e131/Regupathy0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் நிர்மல் குமார் மற்றும் முதலமைச்சர் விஜய்- முன்னாள் அமைச்சர் ரகுபதி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/l9m3e131/Regupathy0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</h2><p>திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில், காவிரி நீரை உடனடியாகத் தமிழ்நாட்டுக்கு விடுவிக்க உச்சநீதிமன்றத்தில் தி.மு.க சார்பில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p>கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தினமும் உயர்நிலைக் கூட்டங்களைக் கூட்டி வருகிறார். டெல்லி சென்று ஒன்றிய அமைச்சர்களைச் சந்திக்கிறார். முன்னாள் முதலமைச்சர்கள், கர்நாடக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் அடங்கிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் அறிவித்திருக்கிறார்.</p><h2>தூங்குமூஞ்சி த.வெ.க. அரசு</h2><p>ஆனால், தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினையில் தூங்குமூஞ்சி த.வெ.க. அரசு மெத்தனத்தோடும் மிதப்போடும் செயல்பட்டு வருகிறது. கட்சித்தாவல் வல்லுநர் நிர்மல் குமார் ஒருபடி மேலே சென்று த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளித்து வரும் கட்சிகள் உட்பட தமிழ்நாட்டின் அனைத்து எதிர்க்கட்சிகளும் கர்நாடகத்துக்கு ஆதரவாகச் செயல்படுவது போல கொச்சைப்படுத்திப் பேசியுள்ளார். காவிரி நடுவர் மன்றம் கண்ட தலைவர் கலைஞர் குறித்தும் அவதூறாகப் பேசியிருக்கிறார்.</p><p>தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கும் ஜோசப் விஜயோ, நீர்வளத்துறைக்கு அமைச்சரான ஆனந்தோ மேகதாது அணை தொடர்பாக இதுவரை வெளிப்படையாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் குறித்த நிர்மல் குமாரின் கருத்தையும், அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவையில்லை எனும் அவரது நிலைப்பாட்டையும் அவர்கள் ஏற்றுக்கொள்கின்றனரா என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.</p><h2>முதலமைச்சர் விஜயின் நிலைப்பாடு என்ன?</h2><p>ஊடகங்களைச் சந்தித்தால் தனது இமேஜ் சரிந்துவிடும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அஞ்சுவதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். ஆனால், காவிரி போன்ற முக்கியப் பிரச்சினையில் முதலமைச்சர் தனது நிலைப்பாட்டை மக்களுக்கு அறிவிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அவருக்கு இருக்கிறது. மாநில நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் எல்லாவற்றிலும் வாய்மூடியே இருப்பது தமிழ்நாட்டில் பலவீனமான ஆட்சி இருப்பதான தோற்றத்தை ஏற்படுத்திவிடும். அண்டை மாநிலங்கள் மட்டுமல்ல, இங்குள்ள ஆளுநரும் நமது மாநில அரசைக் கிள்ளுக்கீரையாக எண்ணுவதற்கே இது வழிவகுக்கும்.</p><p>மாநிலத்தின் உயிர்ப் பிரச்சினைகளில் கூட யாரையும் கலந்தாலோசிக்காமல் முதலமைச்சர் உறக்கத்தில் இருப்பதும், வார இறுதி நாட்களில் Complete Rest Mode-க்குச் சென்று விடுவதும் காவிரி விவசாயிகளைக் கடும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. நமது முதலமைச்சரையும் அரசையும் நம்பி எந்தப் பிரயோஜனமும் இல்லை. மழை பெய்து கர்நாடகம் தானாகத் தண்ணீர் திறந்துவிட்டால்தான் உண்டு எனும் அளவுக்கு அவநம்பிக்கையில் அவர்களைத் த.வெ.க. அரசு தள்ளுவது கடும் கண்டனத்துக்குரியது.</p><h2>அனைத்துக் கட்சிக் கூட்டம்</h2><p>உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாட்டின் காவிரி உரிமையை நிலைநாட்டும் வகையில் தமிழ்நாடு அரசு தீவிரமாகச் செயல்பட வேண்டும். தான்தோன்றித்தனமாகப் பேசியுள்ள அமைச்சர் நிர்மல் குமார் தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். காவிரிப் பிரச்சினையில் அரசுடன் ஒத்துழைக்கவும் ஆலோசனைகள் கூறவும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தயாராகவே இருக்கின்றன.</p><p>மாநில நலன் சார்ந்த விவகாரங்களில் குறுகிய மனப்பான்மையுடன் செயல்படுவதைத் த.வெ.க. அரசு இனியேனும் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு ரகுபதி அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>டி.கே. சிவக்குமார் உடன் சேர்ந்து கொண்டு திமுக முட்டுக்கட்டை: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kaveri-water-dispute-tamil-nadu-politics</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kaveri-water-dispute-tamil-nadu-politics#comments</comments><guid isPermaLink="false">b01d8145-0253-4ca0-952e-689efd80ab22</guid><pubDate>Sun, 02 Aug 2026 06:25:50 +0000</pubDate><atom:updated>2026-08-02T06:25:50.630Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,DK Shivakumar,டிகே சிவகுமார்,Cauvery,சிடிஆர் நிர்மல்குமார்,ctr nirmal kumar,காவேரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/420qae4d/Untitled-design-5.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Cauvery political row: Nirmalkumar blames DMK-Karnataka ties for confusion]]></media:title><media:description type="html"><![CDATA[ Nirmalkumar blames Dk shivakumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/420qae4d/Untitled-design-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h3><strong>கர்நாடக முதல்வருடன் திமுக நெருங்கிய உறவு</strong></h3><p>சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-</p><p>காவிரி நதிநீர் தொடர்பாக நேற்று காலை முதல்வர் பல தரப்பு ஆலோசனையை முடித்துவிட்டு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து, வழக்கறிஞர் உமாபதியிடம் வழக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து காவிரி குறித்தான வழக்கை திமுக அவசரமாக ஐந்து மணிக்குமேல் பதிவு செய்கிறார்கள். </p><p>இந்த மாதிரி ஒரே மாநிலத்தில் காவிரி நதி நீர் தொடர்பாக பல வழக்குகள் தொடரப்பட்டால், அது பல்வேறு விதமான குழப்பத்தை ஏற்படுத்தி, மாநிலத்திற்கான உரிமைகளை பின்னோக்கித் தள்ளும்.</p><p>திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் காவிரி பிரச்சனை குறித்து கடந்த ஐந்து வருடங்களாக எந்தவொரு வழக்கும் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்படவில்லை. </p><p>கடந்த முப்பது ஆண்டுகளாக காவிரி நதி நீர் பிரச்சனையில், தமிழகத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியது திமுக-வும் அதன் தலைவர் கருணாநிதியும்தான். மறுபடியும் அதே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள்.</p><p>மற்றொரு புறம் காவிரி பிரச்சனை தொடர்பாக சரியான முடிவை எடுத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராகவும், பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாகவும், அதிமுக செயல்பட்டு வருகிறது.</p><p>இந்த மாதிரியான சூழலில் தமிழக மக்களின் உரிமைகளை காக்க, நாளை உச்சநீதிமன்றத்தில் முதல்வரின் உத்தரவின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட உள்ளது.</p><p>திமுக-விற்கும் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாருக்கும் இடையே இருக்கும் நெருங்கிய உறவு, இந்த மாதிரியான பல குழப்பங்கள் மூலமாக தெளிவாக தெரிகிறது. </p><p>இந்த மாதிரியான செயல்களை திமுக குறைத்து கொள்ள வேண்டும். முதலில் மக்கள் உங்களுக்கு அளித்த தீர்ப்பை குறித்து உணருங்கள்.</p><p>தமிழகத்திற்கு எதிரான இந்த செயல்பாடுகளை, நீங்கள் தொடர்ந்து செய்யாதீர்கள். இந்த பிரச்சனைக்கு தமிழக முதல்வர் சுமூகமான வழியில் தீர்வை காண அனைத்து வகையிலும் முயற்சி மேற்கொண்டார்.</p><p>ஆனால் அனைத்து வகையிலும், கர்நாடக முதல்வருடன் திமுக சேர்ந்து கொண்டு, ஏதாவது ஒரு வகையில் முட்டுக்கட்டை போட்டுக்கொண்டே வருகிறது.</p><p>முதலமைச்சர் விஜய் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறுகிறார்.</p><p>தமிழகத்திற்கு 17 டி.எம்.சி காவிரி நீர் வர வேண்டி இருக்கிறது, வினாடிக்கு 3,500 கன அடி என்பது மட்டும் போதாது.</p><p>ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறக்க கூடாது என முன்னாள் முதல்வர் கருணாநிதி அழுத்தம் கொடுத்தார்.</p><p>ஜெயலலிதாவுக்கு பெயர் கிடைத்து விடக்கூடாது என்பதற்காக கருணாநிதி செய்தது போல், தற்போது செய்கிறார்கள்.</p><p>த.வெ.க. எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் விஷயத்தில், பெரும்பாலான பணங்கள் பெங்களூரில் இருந்துதான் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.</p><p>திமுக தலைமை எவ்வாறு பெங்களூரில் இருந்து, பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டது. பெங்களூர் உடன் திமுக தலைமை அவ்வளவு நெருக்கமாக உள்ளது.</p><p>கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் காங்கிரஸ் தலைமை சொல்வதை கேட்பதே இல்லை, மாறாக திமுக சொல்வதைத்தான் கேட்கிறார்.</p><p>இவ்வாறு அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் 3, 4 ஆகிய தேதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-36</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-36#comments</comments><guid isPermaLink="false">3c4209f9-6aef-4ff5-94c9-e6d8b47a865b</guid><pubDate>Sun, 02 Aug 2026 06:24:01 +0000</pubDate><atom:updated>2026-08-02T06:24:01.035Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மின்தடை,TNEB,Power Cut,தமிழ்நாடு மின்சார வாரியம்,சென்னையில் மின்தடை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/hhiepebk/powercut.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ powercut]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/hhiepebk/powercut.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>உள்ளூர் செய்திகள் (District News)</category><content:encoded><![CDATA[ <p>மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் நாளை (3-ந்தேதி) மற்றும் நாளை மறு நாள் (4-ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின் தடை </a>செய்யப்படுகிறது.  </p><h2><strong>3-ந்தேதி மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்</strong></h2><h2><strong>அம்பத்தூர்:</strong> </h2><p>கொரட்டூர், மண்ணூர்பேட்டை, டிஎன்ஹெச்பி, சென்ட்ரல் அவென்யூ, எம்.டி.எச். சாலை, ஆர்.எஸ். சாலை, முகப்பேர் சாலை, கிழக்கு அவென்யூ, மேனாம்பேடு சாலை, திருமுல்லைவாயல் சாலை.</p><h2><strong>அடையாறு</strong></h2><p>இரட்டைப்பிள்ளையார் கோயில் தெரு, அண்ணா தெரு, பாரதி தெரு, சான் அகாடமி, வ.ஊ.சி. நகர் 1வது முதல் 4வது தெருக்கள் வரை, ஜோஷ்னா பிளாட்ஸ், ஸ்ரீனிவாச நகர், தேவி பிளாட்ஸ், முருகு நகர், கோமதி நகர், ஜெயின் பிளாட்ஸ்.</p><h2><strong>தாம்பரம்</strong></h2><p>பெரியார் நகர், தேவராஜ் பிள்ளை தெரு, விஜிஎன், நித்யானந்தம் நகர், பெருமாள் கோவில் தெரு, ஜி.எஸ்.டி. சாலை, சர்வீஸ் சாலை, இரும்புலியூர்.</p><h2><strong>4-ந்தேதி மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்</strong></h2><h2><strong>வேளச்சேரி</strong></h2><p>சாரதி நகர், தாம்பரம் வேளச்சேரி பிரதான சாலை, மாதவமணி அவென்யூ, சீதாராம் நகர்.</p><figure><img alt="powercut area" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/3ps0f1ux/powercutt.jpg" /></figure><h2><strong>அடையாறு</strong></h2><p>காந்தி மண்டபம் சாலை, சர்தார் பட்டேல் சாலை, கோட்டூர்புரம், ஸ்ரீ நகர் காலனி, வெங்கடாபுரம், சின்னமலை, தரமணி, எல்லையம்மன் கோயில் தெரு, காணகம், கலிகுன்றம், பள்ளிப்பட்டு, ஸ்ரீராம் நகர், நேரு நகர் 1வது முதல் 4வது தெருக்கள் வரை, கே.பி. நகர் 1 வது முதல் 5வது பிரதான சாலைகள், அடையாறு 6வது பிரதான சாலை, கோவிந்தராஜபுரம், பக்தவத்சலம் நகர் 1வது முதல் 5வது சாலைகள்.</p><h2><strong>முடிச்சூர்</strong></h2><p>அஷ்டலட்சுமி நகர், மகாலட்சுமி நகர், குமரன் நகர், ஏ.என். காலனி, மணிமங்கலம் பிரதான சாலை, சாஸ்திரி நகர், கணேசபுரம் பிரதான சாலை.</p><h2><strong>மேடவாக்கம்</strong></h2><p>பெரும்பாக்கம் சேகரன் மால், கைலாஷ் நகர், ஸ்ரீ பெருமாள் நகர், அந்தோணி நகர், பஜனை கோயில் தெரு, நுக்கம்பாளையம் சாலை, மாடம்பாக்கம் கண்ணதாசன் தெரு, கருணாநிதி 1வது முதல் 7வது தெருக்கள் வரை, விசாலாட்சி நகர், ஜான் தெரு, தாமஸ் தெரு, விக்னராஜபுரம் 6வது தெரு, கோபாலபுரம் நகர், விக்னராஜபுரம் மோஹி ப்ளோரன்ஸ், குரு கணேஷ் நகர், பார்த்தசாரதி நகர், பள்ளிக்கரணை, ராஜலட்சுமி நகர், வள்ளல் பாரி நகர், சாய் பாலாஜி நகர், கிருஷ்ணா நகர், துளுக்காத்தம்மன் கோயில் பிரதான சாலை, அருண் நகர், வெங்கடேஸ்வரா நகர், ஜெயபால் நகர், மல்லிகேஸ்வரன் நகர், ஆதிசாமி நகர்.</p><h2><strong>செயின்ட் தாமஸ் மவுண்ட்</strong></h2><p>ராமர் கோயில் தெரு, மவுண்ட் பூந்தமல்லி சாலை, நசரத்புரம், கணபதி காலனி, வசந்தம் நகர், கலைஞர் நகர், தண்டுமா நகர், போலீஸ் குடியிருப்பு, செவன் ஹில்ஸ் தெரு, மீனம்பாக்கம், பாண்டியன் தெரு, மாரிசன் 1வது முதல் 6வது தெரு வரை, திருவள்ளுவர் நகர், எம்.கே.என் சாலை, குமரன் நகர், குளத்துமேடு, மாங்காளியம்மன் கோயில் தெரு, டிபன்ஸ் காலனி, பர்மா காலனி, கரையார் கோயில் தெரு, நார்த் பரேட் சாலை, இந்திரா நகர், அதிகாரி பயிற்சி அகாடமி, நேவி ரெசிடென்சி பகுதி, வுட்கிரீக் கன்ட்ரி, துளசிங்கபுரம், மாரியாபுரம், மாத்தியாஸ் நகர், ஐரோப்பியன் லைன், பஜார் சாலை, மேட்டு தெரு, ஆர்காட் பேட்டை, ஹாப்மேன் 1வது மற்றும் 2வது தெரு, வி.ஜி.பி முர்பி சதுக்கம், நோபல் தெரு, கண்ணன் காலனி, ஆசிரியர் காலனி, எம்.ஜி.ஆர் நகர்.</p><p>இவ்வாறு மின்வாரிய கூடுதல் இயக்குனர் தெரிவித்து உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டு காவிரி உரிமைகள் குறித்து பேசாமல் இருப்பவர்கள் துரோகிகள்: ராகுல்காந்திக்கு தயாநிதி மாறன் பதிலடி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-rights-dmk-mp-dayanidhimaran-critics-rahul-gandhi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-rights-dmk-mp-dayanidhimaran-critics-rahul-gandhi#comments</comments><guid isPermaLink="false">94902f0e-104c-4d2c-a6ed-dc16343a39df</guid><pubDate>Sun, 02 Aug 2026 06:13:49 +0000</pubDate><atom:updated>2026-08-02T06:13:49.457Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,தயாநிதி மாறன்,Dayanidhi Maran</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/dq23y48w/dayanidhimaran.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தயாநிதி மாறன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/dq23y48w/dayanidhimaran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மக்களவை திமுக எம்.பி. தயாநிதி மாறன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>நம்பிக்கையை விற்று, பதவியை வாங்கும் நச்சுப்பாம்புகள்!</p><p>தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டு #CauveryRights குறித்து பேசாமல் இருப்பவர்கள் துரோகிகள்!</p><p>காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையைக் காவு வாங்கும் #MekedatuDam-க்கு எதிர்ப்புத் தெரிவிக்காதவர்கள் துரோகிகள்!</p><p>#NEET தேர்வு முறையையே ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தாமல், தேர்வில் முறைகேடு நடப்பதாக மட்டும் பேசுகிறவர்கள் துரோகிகள்!</p><h2>துரோகிகள்</h2><p>பாஜக-வின் குதிரைப் பேரங்களைக் கண்டிக்கிறவர்கள், தவெக-வின் அருவருப்பான குதிரைப் பேரங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் துரோகத்தின் தொடர்ச்சியே!</p><p>ஆட்சியையும் அமைச்சர்களையும் விமர்சித்து X-இல் பதிவிட்டால்கூட கைது செய்யும் பாசிச தவெக ஆட்சியைக் கண்டிக்காததும் துரோகமே!</p><p>டெல்லி போலீசுக்கு சற்றும் குறைவில்லாமல், தமிழ்நாடு போலீசும் #NEETProtest மாணவர்கள் மீது அராஜகத் தாக்குதலை நடத்தியதைக் கண்டிக்காததும் துரோகத்தின் உச்சமே!</p><p>தமிழ்நாட்டுக்கு வந்து ஒருவர் அரசியல் பாடம் எடுத்ததைப் படித்தபோது, இதெல்லாம் வரிசையாக நினைவுக்கு வந்தது!</p><p>அப்பப்பா… எவ்வளவு துரோகங்கள்!</p><p>இவ்வாறு தயாநிதிமாறன் தெரிவித்துள்ளார்.</p><h2>ராகுல் காந்தி</h2><p>காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசிய தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி நேற்று தமிழகத்திற்கு வந்திருந்தார். அப்போது பாஜக கொண்டு வரும் தொகுதி மறுவரையறை ஆதரிப்பவர்கள் எட்டப்பவர்கள் என்று திமுக-வை மறைமுகமாக விமர்சனம் செய்திருந்தார். இந்த நிலையில் தயாநிதிமாறன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>&apos;WE THE LEADERS&apos; இயக்கம் சார்பில் கடற்கரை தூய்மைப் பணி: அண்ணாமலை தொடங்கி வைத்தார்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/we-the-leaders-beach-cleanup-campaign-annamalai-launches</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/we-the-leaders-beach-cleanup-campaign-annamalai-launches#comments</comments><guid isPermaLink="false">e85064c9-91a0-4470-8331-0357ee507de8</guid><pubDate>Sun, 02 Aug 2026 06:13:27 +0000</pubDate><atom:updated>2026-08-02T06:13:27.530Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அண்ணாமலை,kanyakumari,annamalai,கன்னியாகுமரி,We the Leaders,வி த லீடர்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/ajwq5zec/annamalai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Annamalai  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/ajwq5zec/annamalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>'வி த லீடர்ஸ்' (We The Leaders) அமைப்பின் சார்பில் தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு சமூக விழிப்புணர்வு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 'கடற்கரை தூய்மை இயக்கம்' கன்னியாகுமரி கடற்கரைச் சாலையில் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது. இப்பணியை 'வி த லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் கே.அண்ணாமலை நேரில் பங்கேற்றுத் தொடங்கி வைத்தார்.</p><h2><strong>தென் மாவட்டங்களில் கடற்கரை தூய்மைப் பணி:</strong></h2><p>கன்னியாகுமரி தொடங்கி திருநெல்வேலியின் உவரி, தூத்துக்குடி மாவட்டத்தின் மணப்பாடு மற்றும் திருச்செந்தூர் ஆகிய கடலோரப் பகுதிகளில் இந்தத் தூய்மைப் பிரசார இயக்கம் தொடர்ந்து தீவிரமாக நடைபெறவுள்ளது. கடற்கரைப் பகுதிகளில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பிற குப்பைகளை அகற்றி, கடலோரச் சூழலையும் கடல்வாழ் உயிரினங்களையும் பாதுகாக்கும் நோக்கில் இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.</p><h2><strong>தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு:</strong></h2><p>இந்தத் தூய்மைப் பணியில் 'வி த லீடர்ஸ்' அமைப்பின் தன்னார்வலர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் உள்ளூர் மீனவச் சமூகத்தினர் திரளாகக் கலந்துகொண்டு கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தூய்மைப் பணியைத் தொடர்ந்து, அப்பகுதி மீனவர்கள் மற்றும் உள்ளூர் மக்களுடன் அண்ணாமலை கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகளையும் வாழ்வாதாரச் சவால்களையும் கேட்டறிந்தார்.</p><p> 'வி த லீடர்ஸ்' இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்து, போதைப்பொருள் ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு, இளைஞர்களுக்கான திறன் பயிற்சி போன்ற ஆறு முக்கிய தலைப்புகளில் மக்கள் சார்ந்த களப்பணிகளை முன்னெடுத்து வருகிறது.</p><p>அதன் தொடர்ச்சியாக, இம்மாதம் சுற்றுச்சூழல் மற்றும் கடலோரப் பாதுகாப்பை வலியுறுத்தி இந்த மாநிலத் தழுவிய கடற்கரை தூய்மை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>பூமியை நோக்கி பாயும் விண்வெளிக் குப்பைகள்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/world/scientists-warn-of-space-junk-falling-towards-earth</link><comments>https://www.maalaimalar.com/news/world/scientists-warn-of-space-junk-falling-towards-earth#comments</comments><guid isPermaLink="false">cf3f7433-667d-4b87-a559-bcd962ed5697</guid><pubDate>Sun, 02 Aug 2026 05:50:27 +0000</pubDate><atom:updated>2026-08-02T05:50:27.829Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>spacecraft,earth,நாசா,பூமி,nasa,Space Debris,விண்வெளிக் குப்பைகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/abd0kstf/earth.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Space Debris ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/abd0kstf/earth.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பூமியின் தாழ்வட்டப் பாதையில் வலம் வரும் பல்லாயிரக்கணக்கான டன் எடையுள்ள 'விண்வெளிக் கழிவுகள்', கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி விழும் அபாயம் அதிகரித்து வருவதாக விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் சர்வதேச ஆய்வாளர்கள் தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p><h2><strong>டன் கணக்கில் குவியும் கழிவுகள்:</strong></h2><p>கடந்த சில தசாப்தங்களாக மனிதர்களால் விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்கள், ராக்கெட்டுகளின் பாகங்கள் மற்றும் உடைந்த நுண் பொருட்கள் என சுமார் 13,000 டன்களுக்கும் அதிகமான விண்வெளிக் கழிவுகள் பூமியின் சுற்றுப்பாதையில் மிதந்து வருகின்றன.</p><h2><strong>பூமியை நோக்கி விழும் அபாயம்:</strong></h2><p>ஆயுட்காலம் முடிவடைந்த விண்கலங்கள் மற்றும் செயலிழந்த செயற்கைக்கோள்கள், புவியீர்ப்பு விசையின் காரணமாக மெல்ல மெல்லத் தன் பாதையிலிருந்து விலகி பூமிக்குத் திரும்பி வருகின்றன. பெரும்பாலானவை வளிமண்டல உராய்வால் எரிந்து சாம்பலாகிவிட்டாலும், பெரிய அளவிலான உலோகப் பாகங்கள் பூமியின் மேற்பரப்பில் வந்து விழும் அபாயம் உள்ளது.</p><h2><strong>அதிவேக ஆபத்து:</strong></h2><p>இந்த விண்வெளிக் கழிவுகள் மணிக்கு பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் வேகத்தில் (விநாடிக்கு சுமார் 7 கி.மீ வரை) சுற்றி வருவதால், அவை தற்போதைய செயல்பாட்டில் உள்ள பிற தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் மீது மோதி பெரிய விபத்துகளை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.</p><h2><strong>கண்காணிப்பு அமைப்புகள்:</strong></h2><p>விண்வெளிக் கழிவுகளின் நகர்வைக் கண்காணிக்க நாசா, ஐரோப்பிய விண்வெளி முகமை மற்றும் சீனா ஆகியவை சிறப்பு செயற்கைக்கோள் நெட்வொர்க்குகளைப் பயன்படுத்தி வருகின்றன.</p><h2><strong>தூய்மைப்படுத்தும் முயற்சிகள்:</strong></h2><p>சுவிட்சர்லாந்து மற்றும் பல சர்வதேச அமைப்புகள் 'ரோபோடிக் கை' மற்றும் ரோபோட் காந்தங்கள் மூலம் விண்வெளி குப்பைகளைச் சேகரித்து அழிக்கும் புதிய தொழில்நுட்பங்களைச் சோதித்து வருகின்றன.</p><p>கட்டுப்பாடற்ற முறையில் பூமியை நோக்கி வரும் விண்வெளிக் கழிவுகள் வளிமண்டலத்தில் நுழையும் போது உருவாகும் வெளிச்சமும், அதனால் ஏற்படும் அசாதாரண மாற்றங்களும் மனித குலத்திற்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் புதிய சவாலாக உருவெடுத்துள்ளன.</p>]]></content:encoded></item><item><title>தைபே ஓபன் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் தன்வி ஷர்மா</title><link>https://www.maalaimalar.com/sports/tanvi-sharma-won-the-title-in-taipae-open-badminton</link><comments>https://www.maalaimalar.com/sports/tanvi-sharma-won-the-title-in-taipae-open-badminton#comments</comments><guid isPermaLink="false">e721b675-778f-48aa-872c-aa2ba2d38b4a</guid><pubDate>Sun, 02 Aug 2026 05:31:20 +0000</pubDate><atom:updated>2026-08-02T05:31:20.655Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tanvi sharma,தன்வி ஷர்மா,taipae open badminton,தைபே ஓபன் பேட்மிண்டன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/x0cuj18t/tanvi-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ tanvi sharma]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/x0cuj18t/tanvi-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தைபே ஓபன் பேட்மிண்டன் தொடர் தைவானின் தைபேயில் நடைபெற்று வருகிறது.</p><h2>தன்வி ஷர்மா அசத்தல்</h2><p>இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்றில் இந்தியாவின் தன்வி ஷர்மா, வியட்நாமின் நியூயென் து லின் உடன் மோதினார்.</p><p>இதில் ஆரம்பம் முதலே தன்வி ஷர்மா அதிரடியாக ஆடினார்.</p><p>சிறப்பாக ஆடிய தன்வி ஷர்மா முதல் செட்டை 21-16 என வென்றார். </p><h2>சாம்பியன் பட்டம்</h2><p>இதேபோல், விறுவிறுப்பாக ஆடிய தன்வி ஷர்மா இரண்டாவது செட்டையும் 21-16 என கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.</p><p>இந்தியாவின் மற்றொரு வீராங்கனையான உன்னதி ஹூடா அரையிறுதியில் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ் காலிறுதியி தோல்வி அடைந்தார். ஆண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய ஜோடி தோல்வி அடைந்தது. </p>]]></content:encoded></item><item><title>ஈரானுக்கு எதிரான ராணுவத் தாக்குதலை ரத்து செய்தது அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/world/trump-says-us-halts-military-attack-on-iran</link><comments>https://www.maalaimalar.com/news/world/trump-says-us-halts-military-attack-on-iran#comments</comments><guid isPermaLink="false">7084d266-1a15-4c42-b3c6-614e1b228eba</guid><pubDate>Sun, 02 Aug 2026 05:29:26 +0000</pubDate><atom:updated>2026-08-02T05:29:26.317Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Donald Trump,அமெரிக்கா,America,ஈரான்,Iran,டொனால்ட் டிரம்ப்,Strait of Hormuz</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/xt0rn6tg/trump.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Donald Trump  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/xt0rn6tg/trump.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் மீது நடத்த திட்டமிட்டிருந்த பெரிய அளவிலான ராணுவத் தாக்குதலை அமெரிக்கா தற்காலிகமாக ரத்து செய்துள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.</p><h2><strong>அமைதி ஒப்பந்தத்திற்கான முன்நிபந்தனைகள்:</strong></h2><p>தமது சமூக வலைதளமான Truth Social-இல் இது குறித்து பதிவிட்டுள்ள டிரம்ப், ஒரு ஒப்பந்தத்திற்கான அடிப்படை வரைமுறைகள் எட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். </p><h2><strong>ஹார்முஸ் நீரிணை திறப்பு:</strong></h2><p>சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் நீரிணையை ஈரான் உடனடியாகவும் முழுமையாகவும் திறக்க வேண்டும் என்றும், ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும் என்றும், இந்த அமைதி முயற்சிக்கு இஸ்ரேல் நாடும் ஒப்புதல் அளித்துள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.</p><h2><strong>டிரம்பின் எச்சரிக்கை:</strong></h2><p>தாக்குதல் ரத்து செய்யப்பட்டாலும், ஈரான் மிக விரைவாக இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையையும் டிரம்ப் விதித்துள்ளார். "உலகின் நன்மைக்காகவும், ஈரானின் எதிர்கால வாழ்விற்காகவும் இந்த தாக்குதலை நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்டுள்ளேன். ஆனால், இந்த ஒப்பந்தம் மிக விரைவாக எட்டப்பட வேண்டும். அமெரிக்கப் படைகள் இரண்டாம் உலகப்போருக்குப் பின் இல்லாத அளவிற்குத் தயாராக இருக்கின்றன" என டிரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளார்.</p><h2><strong>சவுதி அரேபியாவின் தலையீடு:</strong> </h2><p>அமெரிக்கா தாக்குதலைத் தீவிரப்படுத்த ஆயத்தமான நிலையில், சவுதி இளவரசர் முஹம்மது பின், டிரம்பை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தி பதற்றத்தைத் தணிக்குமாறு கோரிக்கை விடுத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><h2><strong>ஈரானின் எச்சரிக்கை:</strong></h2><p>சமீபகாலமாக அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணிக்கும் ஈரானுக்கும் இடையே போர் பதற்றம் உச்சத்தை எட்டியிருந்தது. ஈரான் மீது புதிய தாக்குதல்கள் நடத்தப்பட்டால் அதற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி எச்சரித்திருந்தார்.</p><p>இந்நிலையில்தான், சவுதி அரேபியா உள்ளிட்ட பிராந்திய நாடுகளின் தலையீட்டால் இந்த பேச்சுவார்த்தை சூழல் உருவாகியுள்ளது. ஒப்பந்தம் விரைவாக முடிவுக்கு வராவிட்டால், மீண்டும் தாக்குதல் நடத்த அமெரிக்கா தயங்காது என்பதை டிரம்ப் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ரேசன் கடைகளில் விடுபட்டவர்கள் கைவிரல் ரேகையை பதிவு செய்ய இன்று சிறப்பு முகாம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-camp-today-to-register-fingerprints-of-left-out-ration-cardholders</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-camp-today-to-register-fingerprints-of-left-out-ration-cardholders#comments</comments><guid isPermaLink="false">384670cd-ccb6-431c-b8aa-3e46d3c62264</guid><pubDate>Sun, 02 Aug 2026 05:26:18 +0000</pubDate><atom:updated>2026-08-02T05:26:18.972Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,Ration Card,ரேசன் கடைகள்,ரேசன் கார்டு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/b8xsi8or/RationCard001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைவிரல் ரேகை பதிவு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/b8xsi8or/RationCard001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய அரசு குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கையை வைத்து உணவு பொருட்களை ஒதுக்கீடு செய்து வருகிறது. இதனால் பயனாளிகளின் உண்மைத் தன்மையை அறிய கைவிரல் ரேகை அல்லது கருவிழிரேகை பதிவு செய்வது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து ரேசன் கடைகளிலும் இன்று விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களின் கைவிரல் ரேகையை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.</p><p>தமிழ்நாட்டில் 2 கோடியே 20 லட்சத்திற்கும் அதிகமான ரேசன் கார்டுகள் உள்ளன. இந்த கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் தங்களது கை விரல் ரேகையை ரேசன் கடைக்கு சென்று பதிவு செய்வது அவசியம் என்று அரசு அறிவித்திருந்தது.</p><h2>சிறப்பு முகாம்</h2><p>கை விரல் ரேகை அல்லது கருவிழி பதிவை மேற்கொள்ள ஏற்கனவே பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்பட்டு இருந்தது. அதன்படி பலர் கைவிரல் ரேகையை பதிவு செய்திருந்தனர். இதைத் தொடர்ந்து இன்று விடுபட்ட பயனாளிகளுக்கு ரேகையை பதிவு செய்ய தமிழ்நாடு முழுவதும் ரேசன் கடைகளில் இன்று சிறப்பு முகாம் நடைபெற்றது.</p><p>இதில் ஏராளமானோர் சென்று கைவிரல் ரேகையை பதிவு செய்தனர். பணி நிமித்தமாக வேறு ஊர்களில் இருப்பவர்கள் அங்கு அருகில் உள்ள எந்த ரேசன் கடைக்கும் சென்று கைவிரல் ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். அவ்வாறு செல்பவர்கள் ஆதார் அட்டை நகலையும் கொண்டு செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.</p><h2>இது குறித்து உணவுத்துறை அதிகாரி கூறியதாவது:-</h2><p>மத்திய அரசு குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கையை வைத்து உணவு பொருட்களை ஒதுக்கீடு செய்து வருகிறது. இதனால் பயனாளிகளின் உண்மைத் தன்மையை அறிய கைவிரல் ரேகை அல்லது கருவிழிரேகை பதிவு செய்வது என்பது கட்டாயம்.</p><p>அப்போதுதான் எவ்வளவு உணவுப் பொருள் தேவை என்பதை அறிந்து அதற்கேற்ப ஒதுக்கீடு செய்ய முடியும். ஆனால் சிலர் ரேசன் கார்டுகளில் இறந்தவர்களின் பெயர்களை இன்னும் நீக்காமல் வைத்துள்ளனர். எனவே அவற்றை சரி செய்ய ரேசன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் கைரேகை பெறப்படுகிறது.</p><p>அப்போதுதான் உண்மைத்தன்மை தெரிய வரும். எனவே கைரேகை பதியாதவர்களுக்கு ஒரு சிறப்பு வாய்ப்பாக இன்று ரேசன் கடைகளில் சிறப்பு முகாம் மாலை 6 மணி வரை நடத்தப்படுகிறது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.</p><p>இவ்வாறு அதிகாரி தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>நானும் கோட் ஷூட் போட்டால்.., முதல்வர் விஜயை சீண்டிய விஜய பிரபாகரன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/if-i-wear-coat-suit-too-vijay-prabhakaran-jabs-cm-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/if-i-wear-coat-suit-too-vijay-prabhakaran-jabs-cm-vijay#comments</comments><guid isPermaLink="false">35c745ba-bd37-4140-8e82-900991004501</guid><pubDate>Sun, 02 Aug 2026 04:57:39 +0000</pubDate><atom:updated>2026-08-02T04:57:39.328Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMDK,Vijaya Prabhakaran,DK Sivakumar,Cauvery</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/75gl7g5f/Untitled-design-4.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Cauvery Protest Politics: Vijay Prabhakaran slams CM Vijay over Karnataka issue]]></media:title><media:description type="html"><![CDATA[ Vijay Prabhakaran]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/75gl7g5f/Untitled-design-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h3><strong>விஜய பிரபாகரன் ஆவேசம்</strong></h3><p>காவிரியில் மேகதாது அணை கட்ட துடிக்கும் கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக சார்பில் ஒகேனக்கல் காவிரி அருகே போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் கலந்து கொண்டார். </p><p>அப்போது அவர் பேசியதாவது:-</p><p>முன்னாள் தி.மு.க. ஆட்சியை போடோ ஷூட் நடத்துவதாக கூறினார்கள். ஆனால் இன்றைக்கு இருக்கக்கூடிய, நமது முதல்வர் விஜய் அவர்கள் என்ன செய்கிறார்?. ஒகேனக்கலுக்கு வந்து ஏன் உங்களால் மக்களை சந்திக்க முடியவில்லை. </p><p>கடந்த ஐ.பி.எல். போட்டியில் கோப்பை வென்றபோது, விராட் கோலியை கர்நாடகாவிற்கு வரும்படி அம்மாநில முதல்வர் கூறினார். அன்றைக்கு அங்கு பல உயிரிழப்புகள் நிகழ்ந்தன. அப்போதும் நிலைமை மோசமாகத்தான் இருந்தது.</p><h3><strong>காவிரி பிரச்சனை</strong></h3><p>ஆனால் முதல்வர் விஜயை தற்போது மட்டும் கர்நாடகாவிற்கு வரவேண்டாம், நிலைமை மோசமாக இருக்கிறது என்று டி.கே. சிவகுமார் கூறுகிறார்.</p><p>தனது வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணித்த ஒரே தலைவர் விஜயகாந்த் தான்.</p><p>இன்றைக்கு நானும் கோட் ஷூட் கண்ணாடி எல்லாம் போட்டால், நானும் அழகாகதான் இருப்பேன். முதல்வர் விஜய் கர்நாடகாவிற்கு முதலில் செல்லுங்கள்.</p><p>இன்றைக்கு ஜனநாயகன் ஓடவில்லை என்றால் மட்டும் எல்லாரும் கண்ணீர் விடுகிறார்கள் என்று முதல்வர் கூறுகிறார். தவெக கட்சியை சேர்ந்தவர்கள் எல்லாரும் கர்நாடகாவை நோக்கி ஓடு ஓடு என்று ஓடுங்கள்.</p><p>உண்மையான வேட்டைக்காரன் வீரப்பன் இல்லாதது வருத்தமாக உள்ளது. அவர் தான் உண்மையான வேட்டைக்காரர்.</p><p>இன்றைக்கு வீரப்பன் இல்லை, ஆனால் நான் உங்களுடன் கடைசி வரை இருப்பேன்.</p><p>இந்த காவிரி உங்களுக்கு மட்டும் அல்லது எங்களுக்கு மட்டும் கிடையாது. நாம் அனைவருக்கும் பொதுவானது.</p><h3><strong>நீட் தேர்வு போராட்டம்</strong></h3><p>நீட் தேர்விற்கு எதுக்கு சீன் போடுகிறீர்கள். இதை நாம் பின்னால் பிரதமர் மோடியிடம் கேட்கலாம். இன்றைக்கு கர்நாடகாவில் ஆட்சி நடத்துவது காங்கிரசாக உள்ளது.</p><p>இன்றைக்கு திமுக-வால் வென்ற காங்கிரஸ் கட்சி, தவெக பக்கம் உள்ளது. இந்த நிலையில் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலத்திலும் காங்கிரஸ்தான் ஆட்சியில் உள்ளது.</p><p>எனவே இந்த பிரச்சனைக்கு ராகுல் காந்திதான் பதில் கூற வேண்டும், மோடி கிடையாது. இப்படித்தான் நம்ம மக்களை திருப்புகிறார்கள்.</p><p>அதற்காக பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு என்ற சொல்ல வரவில்லை. பிரதமர் மோடியும் இந்த பிரச்சனைக்கு தீர்வு கொண்டு வர வேண்டும்.</p><p>நீட் தேர்விற்கு எதிராக போராடிய அபிஜீத் தீப்கேவிடம் நான் ஒன்றை கேட்கிறேன். டெல்லி வரை போராட முடிந்த உன்னால், தமிழ்நாட்டிற்குள் நுழைய முடியவில்லை.</p><p>ஏனென்றால் முட்டாள்கள் அங்கே அதிகம், தமிழ்நாட்டில் அறிவாளிகள்தான் அதிகமாக உள்ளனர். முட்டாள் கூட்டத்தை நீங்கள் ஏமாற்றலாம், ஆனால் அறிவாளிகள் கூட்டத்தை ஏமாற்ற முடியாது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ஹர்திக் பாண்ட்யா விடுவிப்பா? - மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/mumbai-indians-have-denied-hardik-pandya-negotiations-with-csk-or-other-outfits-at-present</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/mumbai-indians-have-denied-hardik-pandya-negotiations-with-csk-or-other-outfits-at-present#comments</comments><guid isPermaLink="false">8d941829-1de0-469e-b919-4f5344a988ca</guid><pubDate>Sun, 02 Aug 2026 04:54:53 +0000</pubDate><atom:updated>2026-08-02T04:54:53.677Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Hardik Pandya,ஹர்திக் பாண்ட்யா,Mumbai Indians,மும்பை இந்தியன்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/eu1ccviv/pandya.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ pandya]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/eu1ccviv/pandya.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்ட்யா இடம் பிடித்துள்ளார். இவர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சென்று, பின்னர் 2024 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பினார். அப்போது கேப்டனாக நியமிக்கப்பட்டார். மும்பை அணியில் அவருக்கு சக வீரர்களால் சரியான மரியாதை கிடைக்கவில்லை. அதைவிட அந்த அணி சிறப்பாக செயல்படவில்லை. வீரர்கள் அறையில் அடிக்கடி சலசலப்பு ஏற்பட்டது.</p><h2>கடந்த 3 சீசனில் மும்பை இந்தியன்ஸ் ஏமாற்றம்</h2><p>2024-ல் 10-வது இடத்தை பிடித்தது. 2025-ல் பிளேஆஃப் வரை சென்றது. 2026 சீசனில் மிகவும் மோசமான நிலையை எட்டியது. இதனால் ஹர்திக் பாண்ட்யா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேற முயன்றார். அதேவேளையில் மும்பை இந்தியன்ஸ் அணியும் அவரை விடுவிடுக்க முடிவு செய்தது.</p><h2>ஹர்திக் பாண்ட்யாவுக்கு போட்டி</h2><p>ஹர்திக் பாண்ட்யாவை வாங்க (Trade) பெரும்பாலான அணிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. தற்போது இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் பேசி வருதாக தகவல் வெளியானது.</p><h2>மும்பை இந்தியன்ஸ் விளக்கம்</h2><p>இந்நிலையில், வீரர்களின் Trade தொடர்பாக தற்போது வரை எந்த அணியுடனும் பேச்சுவார்த்தையில் மும்பை அணி ஈடுபடவில்லை.</p><p>அணியின் செயல் திறன் ஆய்வு தற்போது நடைபெற்று வருகிறது. இது முழுமையாக நிறைவடைந்த பின்னரே, அணியின் மற்ற முடிவுகளை மும்பை அணி எடுக்கவுள்ளது என தகவல் வெளியாகியது.</p>]]></content:encoded></item></channel></rss>