<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 13 Aug 2026 06:32:44 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இந்துஜா குரூப் நிறுவனத்துடன் ரூ.2,500 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-13-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-13-august-2026#comments</comments><guid isPermaLink="false">6b1cd842-7f06-457b-93b8-c38a9bb7ae73</guid><pubDate>Thu, 13 Aug 2026 04:13:24 +0000</pubDate><atom:updated>2026-08-13T06:24:09.695Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/ccug8f5l/vijay3.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/ccug8f5l/vijay3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>WOWsemi நிறுவனம் கோவையில் செமிகண்டக்டர் துறை திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் அமைக்க திட்டம்.</p><p>அடுத்த 2 ஆண்டில் ரூ.75 கோடி முதலீட்டில் Wafer on Wheels அனுபவ மையம், திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் அமைக்கப்படும்.</p><p>அடுத்த 5 ஆண்டுகளில் 75,000-க்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி அளித்து, 15,000 நபர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.</p> <p>ஜெர்மனி நாட்டை சேர்ந்த டைம்லர் நிறுவனம் 400 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ரூ.4,000 கோடி முதலீடு செய்கிறது.</p><p>ஜெர்மனியின் முன்னணி நிறுவனமான BIZER தமிழகத்தில் ரூ.300 கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.</p><p>ஆஸி.ன் Avid Group திருவள்ளூர், தூத்துக்குடியில் ரூ.7000 கோடி முதலீட்டில் 12,000 பேருக்கு வேலை தரும் வகையில் ஒப்பந்தம்.</p><p>ஷைலி என்ஜினீயரிங் பிளாஸ்டிக்ஸ் நிறுவனம் தமிழகத்தில் 400 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ரூ.500 கோடி முதலீடு.</p><p>ஜப்பானின் YKK நிறுவனம் திருவள்ளூரில் ரூ.1651 கோடி முதலீட்டில் 4,316 பேருக்கு வேலை தரும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்.</p><p>அமெரிக்காவை சேர்ந்த FORTUNE நிறுவனம் 4,000 பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் ரூ.477 கோடி முதலீடு செய்கிறது.</p><p>ரூ.400 கோடி முதலீட்டில் 1500 பேருக்கு வேலை தரும் வகையில் தூத்துக்குடியில அக்னிகுல் காஸ்மோஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம்.</p><p>செயிண்ட் கோபைன் நிறுவனம் தமிழகத்தில் ரூ.2,000 கோடி முதலீடு செய்தவற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.</p><p>ரூ.1000 கோடியில் பீனிக்ஸ் கோத்தாரி நிறுவனம் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.</p><p>தூத்துக்குடியில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ரூ.250 கோடி முதலீடு செய்கிறது ஸ்கை ரூட்.</p><p>ஜே.கே. டயர்ஸ் ரூ.5,143 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து.</p><p>கேப்லின் குரூப் நிறுவனம் ரூ.925 கோடியில் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு தரும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.</p><p>மின் வாகன தயாரிப்பு நிறுவனமான அல்ட்ரா வைலட் தமிழகத்தில் ரூ.777 கோடி முதலுடு செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.</p><p>டைட்டன் நிறுவனம் ரூ.1000 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.</p><p>அக்னி கோல் நிறுவனம் ரூ.400 கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் கையெழுத்தானது.</p><p>முதலமைச்சர் முன்னிலையில் இந்துஜா குரூப் நிறுவனத்துடன் ரூ.2,500 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து.</p><p>முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழக அரசின் அனைத்து துறைகளும் ஓரணியில் உள்ளது - அமைச்சர் கீர்த்தனா</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/z3y0ou8m/keerthana.jpg" /></figure><p>தமிழக வெற்றிக்கழகத்தில் 100 நாள் ஆட்சியில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஈர்ப்பு - அமைச்சர் கீர்த்தனா</p><p>ஜெர்மனி, அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட 15 நாடுகளை சேர்ந்த நிறுவனங்களுடன் ஒப்பந்த கையெழுத்தாகிறது.</p><p>மாநாட்டில் 1,06,998 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு.</p><p>வெற்றி முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.67,452 கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்படும் என தமிழ்நாடு அரசு உறுதி.</p><p>சென்னையில் நடைபெறும் வெற்றி முதலீட்டாளர்கள் மாநாட்டில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு.</p><p>சென்னை கிண்டியில் 'வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு' தொடங்கியது.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கியது வெற்றி முதலீட்டாளர்கள் மாநாடு.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-13-8-2026">GOLD PRICE TODAY: நாளுக்கு நாள் ஏறும் தங்கம் விலை - இன்றைய நிலவரம் </a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.14,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. </p><p><a href="https://maalai-malar.quintype.com/story/b0aaf1c8-3178-4559-b174-fc3eb50e1661">தந்தை மறைந்த 5வது நாளில் ஆடுகளத்திற்கு திரும்பிய மெஸ்ஸி - ரசிகர்கள் நெகிழ்ச்சி</a></p><p>*நீங்கள் எனது தந்தையும், நண்பனும், பிரதிநிதியும் ஆவீர்கள்</p><p>*கால்பந்தில் தான் தொடர்வது குறித்து உறுதியாக தெரியவில்லை என உருக்கமாக பதிவிட்டிருந்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/platforms-1-to-5-at-egmore-railway-station-closed">எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைமேடை 1 முதல் 5 வரை மூடல்</a></p><p>* எழும்பூரிலிருந்து புறப்பட்டு தென்மாவட்டங்களுக்குச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சில தாம்பரம் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. </p><p>* எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 6 முதல் 9 வரை உள்ள நடைமேடைகளில் இருந்து இயக்கப்படும். மின்சார ரெயில்கள் வழக்கம்போல நடைமேடை 10, 11-ல் இருந்து இயக்கப்படும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/haridwar-ganga-pollution-outrage-7000-tonnes-of-plastic-and-urine-bottle-waste-cleared-after-kanwar-yatra">சிறுநீர் நிரம்பிய பாட்டில்கள்.. கன்வர் யாத்திரை நிறைவில் ஹரித்வாரில் 7 ஆயிரம் டன் குப்பைகள்</a></p><p>*கங்கை நதி உற்பத்தியாகும் இமயமலைப் பகுதியான கங்கோத்ரியிலும் இதே போன்ற சூழலே நிலவுகிறது.</p><p>*சுமார் 5 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் ஹரித்வாருக்கு வருகை தந்தனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/old-modi-congress-leaders-wedding-reception-clip-not-linked-to-revati-sule-event-fact-check-confirms">ஆளே மாறிட்டீங்க.. திருமண விழாவில் மோடியுடன் கார்கே கலகல - வீடியோ உண்மையா?</a></p><p>*கார்கே, "நீங்கள் ஆள் கொஞ்சம் மாறிவிட்டீர்கள்" என கூற, அதற்கு மோடி "ஓ அப்படியா" என கூறுவது பதிவாகியுள்ளது.</p><p>*தற்போதைய நிகழ்வோடு இதற்கு எவ்வித தொடர்பும் இல்லை</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/jantar-mantar-season-2-protest-cjbp-alleges-hall-cancellations-and-threats-blocking-meetings-in-delhi">'ஜந்தர் மந்தர் சீசன் 2' போராட்டத்தை அறிவித்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி</a></p><p>*தலைகீழாக தொங்கவிடப்படுவீர்கள் என்று மிரட்டியுள்ளனர்.</p><p>*சீசன் 2 போராட்டம் தொடங்கும் என்பதை அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/afghanistan-girls-denied-secondary-and-higher-education-under-taliban-rule">மூடத்தனத்தால் ஒரு தலைமுறையையே முடக்கிய தாலிபான்.. ஆப்கானிஸ்தானில் 24 லட்சம் பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுப்பு</a></p><p>*2030ஆம் ஆண்டிற்குள் உயர்நிலை பள்ளிக் கல்வி மறுக்கப்பட்ட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 40 லட்சமாக உயரும்</p><p>*முற்றிலுமாகத் தடை செய்துள்ள ஒரே நாடு ஆப்கானிஸ்தான் மட்டுமே.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/iran-us-war-to-continue-until-trumps-term-ends-warns-irgc-adviser">டிரம்ப் பதவிக்காலம் முடியும் வரை போரை நீட்டிப்போம் - ஈரான் தடாலடி</a></p><p>*அமெரிக்க ராணுவம் நினைத்ததை விட பலவீனமாக இருப்பதை இந்தப் போரின் மூலம் அறிந்துகொண்டதாக தெரிவித்தார்.</p><p>*பெரும் விலை கொடுக்க நேரிடும் என்பதைப் புரிந்துகொள்வார்கள்</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vice-president-cp-radhakrishnan-to-visit-tamil-nadu-on-16th">2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்</a></p><p>* துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் நடக்கும் புத்தக வெளியிட்டு விழாவில் பங்கேற்கிறார்.</p><p>* தஞ்சையில் உள்ள சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/9-rameswaram-fishermen-arrested-sri-lankan-navy-action">ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர்  கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்</a></p><p>* ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர்  இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>* மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களது 9 பேரை படகுகளையும் பறிமுதல் செய்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>மன அழுத்தத்தால் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் திடீர் விலகல்!</title><link>https://www.maalaimalar.com/news/world/white-house-press-secretary-caroline-levitt-resigns-amid-stress</link><comments>https://www.maalaimalar.com/news/world/white-house-press-secretary-caroline-levitt-resigns-amid-stress#comments</comments><guid isPermaLink="false">a1fc0c1e-c296-4a0c-8420-92e52136b595</guid><pubDate>Thu, 13 Aug 2026 06:18:50 +0000</pubDate><atom:updated>2026-08-13T06:18:50.017Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>trump,வெள்ளை மாளிகை,White House,டொனால்ட் டிரம்ப்,Karoline Leavitt,கரோலின் லீவிட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/x82qe70b/karoline.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Karoline Leavitt  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/x82qe70b/karoline.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தில் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றி வந்த கரோலின் லீவிட், தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மிகக் குறைந்த வயதில் இந்தப் பொறுப்பை ஏற்ற நபர் என்ற பெருமையைப் பெற்ற இவர், தனது குடும்பத்துடனும் குழந்தைகளுடனும் கூடுதல் நேரத்தைச் செலவிடுவதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். </p><h2>கடு<strong>மையான பணிச்சு</strong>மை</h2><p>இருப்பினும், கடுமையான பணிச்சுமை, தூக்கமின்மை மற்றும் கடுமையான மன அழுத்தம் ஆகியவையே இவரின் இந்தத் திடீர் விலகலுக்கு முக்கியக் காரணமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இரண்டாவது குழந்தை பிறந்த இரண்டே மாதங்களில் மீண்டும் பணிக்குத் திரும்பிய லீவிட், பிரசவ விடுப்பில் இருந்தபோதே பணியிலிருந்து விலகுவது குறித்து யோசித்து வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>ஆனால், அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து அவரைத் தொடர்புகொண்டு பணிக்குத் திரும்புமாறு கேட்டுக்கொண்டதால் அவர் மீண்டும் பணியில் இணைந்தார். ஜூலை மாதம் மீண்டும் பொறுப்பேற்ற பிறகு, பணிக்கும் குடும்பப் பொறுப்புகளுக்கும் இடையே தீவிரப் போராட்டத்தைச் சந்தித்த இவர், கடுமையான பணி அழுத்தத்தைச் சமாளிக்க முடியாமல் விலக முடிவெடுத்தார்.</p><h2>தடுத்<strong>து நிறுத்த முய</strong>ன்ற அதிபர் டொனால்ட் டிரம்ப்</h2><p>டிரம்பிற்கு லீவிட் மீது மிகுந்த நம்பிக்கையும் மதிப்பும் இருந்ததால், அவரைத் பதவியில் தொடருமாறு பலமுறை வலியுறுத்தினார். செய்தித் தொடர்பாளர் பதவியிலிருந்து விலகினாலும், வரவிருக்கும் இடைத்தேர்தல் பணிகளிலும், குடியரசுக் கட்சியின் முக்கிய வெளியுறவு ஆலோசகராகவும் லீவிட் தொடர்வார் என்று டிரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில் அறிவித்துள்ளார். </p><h2><strong>குடியரசுக் கட்சியின் முக்கிய ஆலோசகரா</strong>கப் புதிய பயணம்</h2><p>லீவிட்டின் முடிவை மதிப்பதாகத் தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப், "கரோலின் வெள்ளை மாளிகையில் ஒரு சிறந்த தலைவராகச் செயல்பட்டு, நீதிக்காகவும் சுதந்திரத்திற்காகவும் மிகச் சிறப்பாகப் போராடியுள்ளார்" என்று பாராட்டினார். செய்தித் தொடர்பாளர் பதவியிலிருந்து லீவிட் விலகினாலும், வரவிருக்கும் இடைத்தேர்தல் பணிகளிலும், குடியரசுக் கட்சியின் வெளியுறவு மற்றும் ஊடகப் பிரிவின் முதன்மை ஆலோசகராகவும் அவர் தொடர்ந்து செயல்படுவார் என்று டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>மழைக்கால கூட்டத்தொடர் கடைசி நாள்: விவாதம் இல்லை.. வந்தே மாதரத்துடன் தொடங்கிய மக்களவை தேதி குறிப்பிடாமல்  ஒத்திவைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/parliament-clash-amit-shah-to-address-police-action-on-students-exam-protest-in-lok-sabha</link><comments>https://www.maalaimalar.com/news/national/parliament-clash-amit-shah-to-address-police-action-on-students-exam-protest-in-lok-sabha#comments</comments><guid isPermaLink="false">57b3ff38-f589-4eaa-9d18-3b744e172bd4</guid><pubDate>Thu, 13 Aug 2026 06:04:29 +0000</pubDate><atom:updated>2026-08-13T06:04:29.186Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,Amit Shah,அமித் ஷா,monsoon session,மழைக்கால கூட்டத்தொடர்,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/cdn1isfi/tn-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மழைக்கால கூட்டத்தொடர்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழைக்கால கூட்டத்தொடர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/cdn1isfi/tn-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடாளுமன்ற <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D">மழைக்கால கூட்டத்தொடரின்</a> கடைசி நாளான இன்று (ஆகஸ்ட் 13), தொடங்கிய உடனே மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. </p><p>தேர்வு முறைகேடுகளை கண்டித்து ஜூலை 20 நாடாளுமன்றம் நோக்கி அமைதியான முறையில் பேரணி வந்த மானவர்கள் மீது போலீசார் மற்றும்  ஆர்ஏஎப் மத்திய படையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியது. மேலும் மாணவர்கள் மீது பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தியதும் கண்டறியப்பட்டது. </p> <h2>விவாதம்</h2><p>இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் இன்று அமித் ஷா மக்களவையில் இதுகுறித்து விவாதிக்க உள்ளதாக கூறப்பட்டது. </p><p>பிரதமர் மோடி, அமித் ஷா இருவரும் மக்களவைக்கு வருகை தந்தனர். வந்தே மாதரம் பாடலுடன் அவை தொடங்கிய பின்னர் சபாநாயகர் ஓம் பிர்லா அவையை உடனே தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.</p><p>இதன்மூலம் பிரதமர் மோடி, அமித் ஷா இருவரும் மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின்  குரல்களுக்கு செவி சாய்க்கப்படவில்லை என்று ஊர்ஜிதம் ஆகியுள்ளது. </p> <p>மறுபுறம் இன்று மாநிலங்களவை வந்தே மாதரம் பாடலுடன் தொடங்கியது. கேரளாவின் பெயரை கேரளம் என மாற்றும் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. </p><p>முன்னதாக அரசு நிகழ்வுகளில் வந்தே மாதரம் முதலில் இசைக்க வேண்டும் என்ற மசோதா நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதல் பெற்று சட்டமான நிலையில் இன்று இரு அவைகளிலும் வந்தே மாதரம் பாடப்பட்டது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>‘அந்நியன்’ போன்ற காதலரால் நர்சிசிஸ்டிக் கொடுமைக்கு ஆளானேன்!-அனுபமா பரமேஸ்வரன் பரபரப்பு பேட்டி!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/anupama-parameswaran-on-narcissistic-abuse-by-anniyan-like-ex-lover</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/anupama-parameswaran-on-narcissistic-abuse-by-anniyan-like-ex-lover#comments</comments><guid isPermaLink="false">af455f69-2379-46e9-8750-63377e5f1f8e</guid><pubDate>Thu, 13 Aug 2026 05:54:26 +0000</pubDate><atom:updated>2026-08-13T05:54:26.449Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அனுபமா பரமேஸ்வரன்,Anupama Parameswaran,Anniyan,நர்சிசிஸ்டிக்,narcissistic,அந்நியன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/u2kfapau/anupama.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anupama Parameswaran]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/u2kfapau/anupama.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுபமா பரமேஸ்வரன், தனது சமீபத்திய பேட்டியில் தனக்கு ஏற்பட்ட காதல் தோல்வி குறித்தும், கடந்த 2 ஆண்டுகளாக தான் சந்தித்த கொடுமையான நர்சிசிஸ்டிக் மன அழுத்த அனுபவங்கள் குறித்தும் வெளிப்படையாகப் பேசியுள்ளார். </p><h2>2 <strong>ஆண்டுகால</strong> வேதனை</h2><p>தான் அனுபவித்த உடல் ரீதியான மற்றும் மன ரீதியான துயரங்களை விவரித்த அனுபமா, கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தான் சந்தித்த மன உளைச்சலே தனது கடந்தகால சமூக வலைத்தளப் பதிவுகளுக்குக் காரணம் என்று கூறினார். தன்னைச் சுற்றியுள்ள குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உடன் பணிபுரிபவர்கள் என அனைவரும் தனது மாற்றத்தை உணர்ந்ததாகவும், அந்த உறவிலிருந்து விலகுவதே தனக்கு நல்லது என்பதை அனைவரும் சுட்டிக்காட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>‘அந்நி<strong>யன்’ போன்ற மாறுபட்</strong>ட குணம்</h2><p>அவர் தனது முன்னாள் காதலரின் நடவடிக்கைகளை நடிகர் விக்ரம் நடித்த ‘அந்நியன்’ திரைப்படக் கதாபாத்திரங்களுடன் ஒப்பிட்டுப் பேசினார். ஒரு நாள் அவர் 'ரெமோ' போல மிகவும் அன்பாகவும், மறுநாள் இரக்கமற்ற 'அந்நியன்' போலக் கொடூரமாகவும் நடந்துகொள்வார் என்றும், அதன் பிறகு தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்பார் என்றும் அனுபமா கூறினார். இந்தத் தொடர்ச்சியான மனமாற்றம் தமக்கு மிகப்பெரிய குழப்பத்தையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியதாகச் சுட்டிக்காட்டினார்.</p><h2>திரை<strong>ப்பட வாழ்க்கையில் ஏற்</strong>பட்ட பாதிப்புகள்</h2><p>இந்த நர்சிசிஸ்டிக் மனநிலையுடைய உறவினால் தனது திரைப்பட வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டதாக அவர் ஆதங்கப்பட்டார். தனது வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் அவர் கட்டுப்படுத்தத் தொடங்கியதால், பல நல்ல பட வாய்ப்புகளைத் தவறவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும், தனது திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற 'டிராகன்' திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கூடத் தன்னால் கலந்துகொள்ள முடியாமல் போனதற்கு இந்த உறவின் கட்டுப்பாடுகளே காரணம் என்று அனுபமா விளக்கியுள்ளார்.</p><h2><strong>சுயமரியாதையைக்</strong> காப்பாற்ற எடுத்த முடிவு</h2><p>மூன்று மாதங்களுக்குள்ளேயே திருமணப் பேச்சுகளைத் தொடங்கி அவசரப்படுத்தியதாகவும், ஆனால் நிலைமையை உணர்ந்து தான் திருமணத்தை நிராகரித்ததாகவும் அனுபமா கூறினார். இதன் மூலம் தான் ஒரு 'கோல்ட் டிக்கர்' அல்ல என்பதை நிரூபித்துள்ளதாகவும், சரியான நேரத்தில் எடுத்த இந்த முடிவே தன்னை ஒரு மோசமான திருமண வாழ்க்கையிலிருந்து காப்பாற்றியுள்ளது என்றும் அவர் அந்த பேட்டியில் உறுதிபடக் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு- 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/victory-tamil-nadu-investors-conference-97-mous-signed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/victory-tamil-nadu-investors-conference-97-mous-signed#comments</comments><guid isPermaLink="false">c3578f43-c350-48a1-9b70-2f19fbaef8e9</guid><pubDate>Thu, 13 Aug 2026 05:54:00 +0000</pubDate><atom:updated>2026-08-13T05:54:00.142Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,முதலீட்டாளர்கள் மாநாடு,புரிந்துணர்வு ஒப்பந்தம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/9vnhop3k/TN-CM-Vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Keerthana- TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/9vnhop3k/TN-CM-Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது.</p><p>சென்னை கிண்டியில் வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநாட்டில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.</p><p>அதன்படி, தவெக அரசு ஆட்சியமைத்து முதன்முறையாக நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.</p><p>வெற்றி முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.67,452 கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்படும் என தமிழ்நாடு அரசு உறுதி அளித்துள்ளது.</p><p>மாநாட்டில் 1,06,998 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.</p><p>ஜெர்மனி, அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட 15 நாடுகளை சேர்ந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.</p><p>100 நாட்களுக்குள் தவெக அரசு ஒரு லட்சம் கோடிக்கு மேல் தொழில்துறையில் புதிய முதலீடுகளை செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமாகிறது.</p><h2>அமைச்சர் கீர்த்தனா</h2><p>தமிழக வெற்றிக்கழகத்தில் 100 நாள் ஆட்சியில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஈர்ப்பு.</p><p>முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழக அரசின் அனைத்து துறைகளும் ஓரணியில் உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பக்கிங்காம் கால்வாயில் படகு போக்குவரத்து: திட்ட அறிக்கை தயாரிக்க மெட்ரோ ரெயில் நிறுவனம் டெண்டர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/boat-traffic-on-buckingham-canal-metro-rail-corporation-tenders-to-prepare-project-report</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/boat-traffic-on-buckingham-canal-metro-rail-corporation-tenders-to-prepare-project-report#comments</comments><guid isPermaLink="false">72ce0f65-8521-4344-ac81-c5f0b9729fe6</guid><pubDate>Thu, 13 Aug 2026 05:52:28 +0000</pubDate><atom:updated>2026-08-13T05:52:28.122Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Metro Train,மெட்ரோ ரெயில்,Water Metro Project,வாட்டர் மெட்ரோ திட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/1b6sx24n/Metrowater.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/1b6sx24n/Metrowater.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதற்கட்டமாக முட்டுக்காடு-நேப்பியர் பாலம் வரை 30 கிலோ மீட்டருக்கு வாட்டர் மெட்ரோ அமைக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் பரிந்துரைத்துள்ளது.</strong></em></p><p>சென்னை பெருநகரை சுற்றி ஓடும் கூவம் ஆறு, அடையாறு மற்றும் பக்கிங்காம் கால்வாய் போன்றவை பருவமழை காலங்களில் வெள்ளப்பாதிப்பை ஏற்படுத்துகின்றது. ஒரு காலத்தில் ஆறுகளாக இருந்த இவை தற்போது குறுகி கால்வாயாக சுருங்கி விட்டது. </p><h2><strong>முகம் சுளிக்க வைக்கிறது</strong></h2><p>பெருகிவரும் குடியிருப்புகள், மக்கள் நெருக்கத்தின் காரணமாக கால்வாய்கள் ஆறுகள் ஆக்கிரமிக்கப்பட்டு கழிவு நீர் ஓடையாக மாறி உள்ளது. பெருநகர சென்னை என்ற அந்தஸ்தை சென்னை பெற்றாலும் இந்த கால்வாய்கள் மற்றும் ஆறுகள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை முகம் சுளிக்க வைக்கிறது.  </p><p>ஆங்கிலேயர் காலத்தில் படகு போக்குவரத்து பக்கிங்காம் கால்வாயில் இருந்துள்ளது. காலப்போக்கில் அந்த அடையாளமே தெரியாமல் கூவமாக மாறிவிட்டது.</p><h2><strong>தூய்மைப்படுத்த முயற்சி</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/மெட்ரோ-ரெயில்">சென்னை</a> பெருநகரை அழகுப்படுத்தும் விதமாக பல்வேறு  திட்டங்களை செயல்படுத்தி வரும் மாநகராட்சி பக்கிங்காம் கால்வாய் மற்றும் கூவம் ஆற்றையும் தூய்மைப்படுத்த முயற்சி மேற்கொண்டது. </p><p>இந்த நிலையில் ‘வாட்டர் மெட்ரோ திட்டம்’  என்ற புதிய முயற்சி மூலம் பக்கிங்காம் கால்வாயை புதுப்பித்து அதில் படகு போக்குவரத்து தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது.</p><p>சென்னையில் வாட்டர் மெட்ரோ சேவையை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் பரிந்துரையின் அடிப்படையில் அதன் சாத்தியக்கூறு மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது. </p><h2><strong>படகு போக்குவரத்து</strong></h2><p>எண்ணூரில் இருந்து நேப்பியர் பாலம் வழியாக மாமல்லபுரம் வரை 53 கி. மீட்டருக்கு இந்த கால்வாயில் படகு போக்குவரத்து தொடங்குவது தான் இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். </p><p>சென்னையை அழகுப்படுத்தும் நோக்கு மட்டுமல்லாது சுற்றுலா பயணிகளையும் கவரும் வகையில் இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மூலம் செயல்படுத்த அரசு தீர்மானித்துள்ளது. </p><h2><strong>திட்ட அறிக்கை</strong></h2><p>முதற்கட்டமாக முட்டுக்காடு-நேப்பியர் பாலம் வரை 30 கிலோ மீட்டருக்கு வாட்டர் மெட்ரோ அமைக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் பரிந்துரைத்துள்ளது. எண்ணூரில் இருந்து மாமல்லபுரம் வரை முழுமையாக வாட்டர் மெட்ரோ திட்டம் கொண்டு வர திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்த புள்ளியை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. </p><p>இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அறிக்கை கொடுக்கப்படும். அதன் பின்னர் இதனை செயல்படுத்துவது குறித்த அடுத்த கட்ட நடவடிக்கை தொடங்கும்.</p>]]></content:encoded></item><item><title>லடாக்கில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு</title><link>https://www.maalaimalar.com/news/national/ladakh-earthquake-5-5-richter-recorded</link><comments>https://www.maalaimalar.com/news/national/ladakh-earthquake-5-5-richter-recorded#comments</comments><guid isPermaLink="false">a9843535-5247-46e4-befc-4f6b37f39134</guid><pubDate>Thu, 13 Aug 2026 05:31:19 +0000</pubDate><atom:updated>2026-08-13T05:31:19.827Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Earthquake,ladakh,லடாக் நிலநடுக்கம்,நிலநடுக்கம்,ரிக்டர அளவு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/dc58rzj2/ladakh.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ladakh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/dc58rzj2/ladakh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>லடாக் பகுதியில் இன்று காலை 6.05 மணிக்கு திடிரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. லடாக் பகுதியில் லே நகரில் சுமார் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. </p><p>இது ரிக்டர் அளவுகோலில், 5.5 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. </p><p>இந்த நிலநடுக்கத்தால், பாதிப்புகள், உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. </p><p>இதன் எதிரொலி, கார்கிலிலும், காஷ்மீர் பள்ளத்தாக்கன் சில பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.    </p><p>இதைதொடர்ந்து, லடாக் மாநிலம் லே பகுதியில் இன்று காலை 9.54 மணிக்கு லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.</p><p>இது, ரிக்டர் அளவு கோலில் 4.3-ஆக பதிவாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தந்தை மறைந்த 4 நாட்களில் ஆடுகளத்திற்கு திரும்பிய மெஸ்ஸி - ரசிகர்கள் நெகிழ்ச்சி</title><link>https://www.maalaimalar.com/sports/football/lionel-messi-returns-after-fathers-death-inter-miami-appearance-inspires-fans</link><comments>https://www.maalaimalar.com/sports/football/lionel-messi-returns-after-fathers-death-inter-miami-appearance-inspires-fans#comments</comments><guid isPermaLink="false">b0aaf1c8-3178-4559-b174-fc3eb50e1661</guid><pubDate>Thu, 13 Aug 2026 05:23:37 +0000</pubDate><atom:updated>2026-08-13T05:23:37.390Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மெஸ்ஸி,Messi,கால்பந்து,FootBall,Father,தந்தை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/em8kvexf/tn-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ 
களத்தில் மெஸ்ஸி, தந்தையுடன் மெஸ்ஸி ]]></media:title><media:description type="html"><![CDATA[ களத்தில் மெஸ்ஸி, தந்தையுடன் மெஸ்ஸி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/em8kvexf/tn-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கால்பந்து (Football)</category><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அர்ஜென்டினாவில் ஆஸ்தான வீரர், உலக கால்பந்து கடவுள் என போற்றப்படும் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் <a href="https://www.maalaimalar.com/topic/lionel-messi">மெஸ்ஸி </a>கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி தனது 68வது அகவையில் காலமானார். </p><p>இந்நிலையில் தந்தை இறந்த 4 நாட்களுக்கு பிறகு லியோனல் மெஸ்ஸி மீண்டும் கால்பந்து களத்திற்கு வந்தது ரசிகர்களை பரவசப்படுத்தியுள்ளது. </p><p>முன்னதாக தந்தை இறப்பின் பின், கால்பந்து விளையாட்டில் தொடர்வேனா என உறுதியாக தெரியவில்லை என்று மெஸ்ஸி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியிருந்த நிலையில் இந்த மீள்வருகை நிகழ்ந்துள்ளது. </p> <h2>தந்தை மறைவு</h2><p>ஆகஸ்ட் 8 அன்று இயற்கை எய்திய ஜோர்ஜ் மெஸ்ஸியின் நீண்ட கால உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதுகுறித்து மேலதிக தகவல் கூறப்படவில்லை. நடந்து முடிந்த பிபா உலகக் கோப்பையில் மெஸ்ஸி தலைமையில் அர்ஜென்டினா அணி இறுதிப் போட்டி வரை சென்று கோப்பையை ஸ்பெயினிடம் நழுவவிட்டது.</p><p>கால்பந்தில் மெஸ்ஸி, தி கோட் ஆக வளம் வர, அவரின் தந்தையின் பக்கபலமும் முக்கிய காரணம்.</p><p>லீக்ஸ் கோப்பை தொடரில் இன்டர் மியாமி சார்பில் விளையாடும் மெஸ்ஸி, தந்தை மறைவை அடுத்து அதிலிருந்து வெளியேறினார்.</p><p>தந்தையின் இறுதிச்சடங்குகளுக்காக அர்ஜென்டினாவில் உள்ள தனது சொந்த ஊரான ரோசரியோவிற்கு சென்றிருந்தார்.</p><p>அதைத்தொடர்ந்தே அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் தந்தையின் இறப்பு குறித்த இரங்கல் உரையில், கால்பந்தில் தான் தொடர்வது குறித்து உறுதியாக தெரியவில்லை என உருக்கமாக பதிவிட்டிருந்தார்.</p><p>அதில், "நீங்கள் இல்லாமல் நான் என்ன செய்யப்போகிறேன் என தெரியவில்லை. இங்கிருந்து எப்படி தொடர்பது என்று தெரியவில்லை. நான் வாழ்வு முழுக்க கால்பந்து மட்டுமே விளையாடியிருக்கிறேன். ஆனால் அதை இன்னும் எவ்வளவு தூரம் தொடருவேன் என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது" என எழுதியுள்ளார்.</p><p>மேலும் தனது தந்தை தன்னை பயிற்சி ஆட்டங்களுக்கு அழைத்துச் செல்வதை நினைவுகூர்ந்த அவர், "நீங்கள் எனது தந்தையும், நண்பனும், பிரதிநிதியும் ஆவீர்கள்" என குறிப்பிட்டுள்ளார்.</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/z9rn14yw/tn-6.jpg" /></figure><h2>மீள்வருகை</h2><p>மெஸ்ஸி கால்பந்தில் இருந்து நீண்ட இடைவெளி எடுத்துக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று லீக்ஸ் தொடரில் லியோன் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் இன்டர் மியாமி சார்பில் மீண்டும் மெஸ்ஸி களமிறங்கினார்.</p><p>லீக்ஸ் கோப்பையில் மாண்டரி அணிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் இன்டர் மியாமி 2-1 என தோல்வியை தழுவி தடுமாறிய நிலையில் நேற்றைய போட்டியில் லியோன் அணியை தோற்கடிக்க வேண்டிய கட்டாயம் இன்டர் மியாமிக்கு இருந்த நிலையில் மெஸ்ஸியின் வருகை நிகழ்ந்துள்ளது.</p><p>நேற்றைய ஆட்டத்தின் 2ஆம் பாதியில் மெஸ்ஸி இன்டர் மியாமி சார்பில் களமிறங்கினார். இருந்தும், லியோன் அணி 3-2 என்ற கணக்கில் இன்டர் மியாமியை வீழ்த்தியது.</p><p>வெற்றி தோல்விகளை தாண்டி, மெஸ்ஸியின் மீள்வருகை ரசிகர்களுக்கு புது தெம்பூட்டியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>உலக உறுப்பு தான தினம்: ஒரே ஒரு &apos;YES&apos; எட்டு பேருக்கு மறுவாழ்வு அளிக்கும் உயரிய கொடை!</title><link>https://www.maalaimalar.com/news/world/world-organ-donation-day-one-yes-eight-lives</link><comments>https://www.maalaimalar.com/news/world/world-organ-donation-day-one-yes-eight-lives#comments</comments><guid isPermaLink="false">fd5fa2ca-8b02-4363-bdba-593499ac927d</guid><pubDate>Thu, 13 Aug 2026 05:19:02 +0000</pubDate><atom:updated>2026-08-13T05:19:02.574Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Health,உடல் உறுப்பு தானம்,organ donation,உடல்நலம்,World Organ Donation Day,உலக உறுப்பு தான தினம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/33ssqk9e/organ.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ World Organ Donation Day   ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/33ssqk9e/organ.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலக உறுப்பு தான தினம் ஆண்டுதோறும் இன்று (ஆகஸ்ட் 13) அனுசரிக்கப்படுகிறது. ஒரு தனிநபரின் உறுப்பு தான முடிவு, கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், இதயம், இரண்டு நுரையீரல்கள், கணையம் மற்றும் குடல் என எட்டு பேரின் உயிரைக் காப்பாற்ற முடியும். இதுமட்டுமின்றி, திசு தானத்தின் மூலம் மேலும் 50-க்கும் மேற்பட்டோருக்குப் புதிய வாழ்க்கையை வழங்க முடியும்.</p><h2>இந்தி<strong>யாவில் உறுப்பு</strong> மாற்ற சிகிச்சையின் வளர்ச்சி</h2><p>இந்தியாவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. 2013-ஆம் ஆண்டில் 5,000-க்கும் குறைவாக இருந்த அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை, 2025-ஆம் ஆண்டில் 20,000-ஐத் தாண்டியுள்ளது. </p><p>இதன் மூலம் உயிருள்ள கொடையாளர்கள் மூலம் உறுப்பு மாற்று சிகிச்சை அளிப்பதில் இந்தியா உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக உருவாகியுள்ளது. இருப்பினும், உறுப்பு தேவைப்படுபவர்களுக்கும் உறுப்பு தானம் செய்பவர்களுக்கும் இடையேயான இடைவெளி இன்னும் மிகப்பெரிய சவாலாகவே நீடிக்கிறது.</p><h2>மக்களிடையே <strong>நிலவும் தவ</strong>றான எண்ணங்கள்</h2><p>இதற்கு மருத்துவ அமைப்புகளின் குறைபாடுகளை விட, மக்களிடையே பரவியுள்ள மூடநம்பிக்கைகளே முதன்மையான காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சர்க்கரை நோய், புற்றுநோய், மூப்பு அல்லது மாரடைப்பு போன்ற மருத்துவ வரலாறுகள் இருந்தால் உறுப்பு தானம் செய்ய முடியாது என்ற தவறான எண்ணம் மக்களிடையே நிலவுகிறது. ஆனால், மருத்துவர்கள் ஒவ்வொரு உறுப்பின் நிலையையும் தனித்தனியாக ஆய்வு செய்தே தானம் பெறத் தகுதியானதா என்பதைத் தீர்மானிக்கின்றனர்.</p><h2>மூளைச்சாவு <strong>பற்றிய தெ</strong>ளிவு அவசியம்</h2><p>மேலும், 'மூளைச்சாவு' மற்றும் 'இதயத் துடிப்பு' குறித்த தவறான புரிதல்களும் தானத்திற்குப் பெரும் தடையாக உள்ளன. மூளைச்சாவு அடைந்த நபரின் உடலை செயற்கை சுவாசம் மூலம் பராமரிக்கும் போது இதயத் துடிப்பு இருந்தாலும், அது மூளைச்சாவு அடைந்த நிலையை மாற்றாது. மருத்துவரீதியாகவும் சட்டரீதியாகவும் மூளைச்சாவே மரணமாகக் கருதப்படுகிறது. அந்த குறுகிய காலத்தில் எடுக்கப்படும் ஒரே ஒரு சரியான முடிவு, பல உயிர்களைக் காக்கும் அமுதமாக மாறுகிறது.</p><h2>குடும்பங்களி<strong>ன் சம்மதமும் ச</strong>மூகப் பொறுப்பும்</h2><p>பொதுமக்கள் உறுப்பு தானத்திற்குப் பதிவு செய்வதுடன், தங்கள் விருப்பத்தை குடும்பத்தினரிடம் பகிர்ந்து கொள்வது மிகவும் அவசியமாகும். அவசர காலங்களில் குடும்பத்தினரின் சம்மதமே உறுப்பு தானத்தை சாத்தியமாக்குகிறது. சட்டப்பூர்வமான விழிப்புணர்வும், குடும்பங்களுக்கிடையேயான திறந்த உரையாடலும் அதிகரிக்கும் போதே இந்த உறுப்பு தான இயக்கம் முழுமையான வெற்றியைப் பெறும்.</p>]]></content:encoded></item><item><title>ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம்</title><link>https://www.maalaimalar.com/spirituality/aadi-pooram-3</link><comments>https://www.maalaimalar.com/spirituality/aadi-pooram-3#comments</comments><guid isPermaLink="false">3a768fb0-97a6-4e73-9040-2bf727a43eb6</guid><pubDate>Thu, 13 Aug 2026 04:59:54 +0000</pubDate><atom:updated>2026-08-13T04:59:54.086Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,வழிபாடு,worship,அம்மன் கோவில்,ஆடிப்பூரம்,aadi pooram,Amman temple</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/zd7e4flc/aadipooram.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Amman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/zd7e4flc/aadipooram.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆடி மாதத்தில் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் ஒன்று, ஆடிப்பூரம். ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திர நாளை 'ஆடிப்பூரம்' என்று கொண்டாடுகிறோம். உலக நன்மைக்காக ஆடிப்பூர நாளில் உமா தேவி அவதரித்ததாக கூறப்படுகிறது. எனவே, இது தேவிக்குரிய நாளாக போற்றப்படுகிறது.</p> <h2>ஆடிப்பூரம்</h2><p>தாய்மை அடைந்த பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவது வழக்கம். அதுபோல உலகை காக்கும் அன்னைக்கு ஆடிப்பூர நாவறு ஆலயங்களில் ஆடிப்பூரம் 10 நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.</p><p>இந்த நாளில் அனைத்து அம்மன் கோவில்களிலும், அன்னைக்கு வண்ண வண்ண வளையல்களால் அலங்காரம் செய்கிறார்கள். பின்னர் அந்த வளையல்கள் பெண் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகின்றன. அந்த வளையல்களை பெற்று, அணிந்துகொண்டால் மனம் போல் வாழ்க்கை அமையும், மங்கலம் நிலைத்திருக்கும், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.</p> <h2>திருமணம் கைகூடும்</h2><p>ஆடிப்பூர நாளில் அம்மன் ஆலயங்களுக்கு சென்று அம்மனுக்கு கண்ணாடி வளையல்கள் அணிவித்தும், மஞ்சள், குங்குமம், தாலிச்சரடு, புடவை சாற்றியும், நெய் தீபம் ஏற்றியும் வழிபட்டால் திருமணத் தடை விலகி விரைவில் திருமணம் கைகூடும். ஆடிப்பூர நாளில்தான், சித்தர்களும், முனிவர்களும் தங்கள் தவத்தை தொடங்குவதாகவும் புராணங்கள் கூறுகின்றன.</p><p>இந்த ஆண்டு ஆடிப்பூரம், ஆகஸ்டு 14-ந்தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. அந்நாளில் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபடுவது சிறப்பாகும். இயலாதவர்கள், வீட்டு பூஜையறையில் உள்ள அம்மன் படத்திற்கு முன்பு வளையல், பட்டு புடவை சாற்றியும், நெய் விளக்கேற்றியும் வழிபடலாம்.</p> <h2>ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம்</h2><p>பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வாராக போற்றப்படுபவர், ஆண்டாள் நாச்சியார். இவர் திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிய பாடல்களை அருளியவர். திருவில்லிபுத்தூரில், பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாரின் நந்தவனத்தில் துளசிச் செடியின் கீழ் குழந்தையாக கண்டெடுக்கப்பட்டவர், ஆண்டாள். அவ்வாறு பெரியாழ்வாரின் திருக்கரங்களில் ஆண்டாள் வரப்பெற்ற நாளாக ஆடிப்பூரம் கொண்டாடப்படுகிறது. </p> <h2>பெரியாழ்வார்</h2><p>பெரியாழ்வார் ஆண்டாளை அன்போடும், பண்போடும் வளர்த்தார். ஆண்டாளை வளர கண்ணன் மீது அளவுகடந்த அன்பு கொண்டார். பெரியாழ்வார், தினமும் அதிகாலையில் பூக்களை பறித்து, அதை மாலையாக தொடுத்து பெருமாளுக்கு அளிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார். அப்படி பெருமாளுக்கு கொடுத்து அனுப்பும் மாலைகளை, பெருமாளுக்கு சாற்றுவதற்கு முன்பாகவே ஆண்டாள் அணிந்து பார்ப்பார். ஒரு நாள் பெரியாழ்வார் இதைப் பார்த்துவிட்டார்.</p>  <p>இதனால் கோபம் கொண்ட அவர், “இறைவனுக்கு சாற்றும் மாலையை இப்படி அசுத்தம் செய்துவிட்டாயே” என்று ஆண்டாளை கடிந்து கொண்டார். பின்னர் பெரியாழ்வார், இதற்காக இறைவனிடம் மன்னிப்பும் கேட்டார். இதையடுத்து, அன்றிரவு பெரியாழ்வாரின் கனவில் தோன்றிய பெருமாள், “எனக்கு ஆண்டாள் உமை சூடிக்கொடுத்த மாலையே தர வேண்டும்" என்றார்.</p> <h2>தெய்வக்குழந்தை</h2><p>அப்போதுதான், ஆண்டாள் சாதாரண குழந்தை இல்லை, தெய்வக்குழந்தை என்பது பெரியாழ்வாருக்கு தெரியவந்தது. ஆண்டாள் திருமண வயதை அடைந்ததும், பெருமாளின் கட்டளைப்படி, பெரியாழ்வார் ஆண்டாளை திருவரங்கம் அழைத்துச் சென்றார். அங்கு ஆண்டாள், அரங்கநாதரிடம் ஒளியாக கலந்துவிட்டார்.</p><h2>சிறப்பு பூஜை</h2><p>இதனால் ஆடிப்பூரத்தன்று, வைணவ தலங்களில் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். திருமணமாகாத பெண்கள் அதில் கலந்து கொண்டு ஆண்டாளை வழிபட்டால் விரைவில் திருமணம் நடந்தேறும் என்பது நம்பிக்கை.</p> ]]></content:encoded></item><item><title>எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைமேடை 1 முதல் 5 வரை மூடல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/platforms-1-to-5-at-egmore-railway-station-closed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/platforms-1-to-5-at-egmore-railway-station-closed#comments</comments><guid isPermaLink="false">b13b98c2-a7dc-4379-af06-ac5a9086fa0f</guid><pubDate>Thu, 13 Aug 2026 04:47:35 +0000</pubDate><atom:updated>2026-08-13T04:47:35.588Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Egmore railway station,எழும்பூர் ரெயில் நிலையம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/4kbngydy/chennaiegmore.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ எழும்பூர் ரெயில் நிலையம்]]></media:title><media:description type="html"><![CDATA[ எழும்பூர் ரெயில் நிலையம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/4kbngydy/chennaiegmore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மறுசீரமைப்பு பணி காரணமாக எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைமேடை 1 முதல் 5 வரை மூடப்பட்டது.</strong></em></p><h2><strong>மறுசீரமைப்பு பணி</strong></h2><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">எழும்பூர் ரெயில் நிலையத்தில்</a> ரூ.842 கோடியில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மறுசீரமைப்பு பணியானது புதிய வருகை மற்றும் புறப்பாடு முனையங்கள், மின்தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள், மேம்படுத்தப்பட்ட நிலைய உள்கட்டமைப்பு மற்றும் பிற அதிநவீன வசதிகளை அமைப்பதை உள்ளடக்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக தற்போது வருகை மற்றும் பார்சல் பிரிவுக்கான நடைமேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.</p><p>முதல் கட்டமாக நடைமேடை 1 முதல் 5 வரையில் 18 மீட்டர் அகலம், 120 மீட்டர் நீளத்துக்கு புதிய இரும்பு நடைமேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன்காரணமாக, எழும்பூரிலிருந்து புறப்பட்டு தென்மாவட்டங்களுக்குச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சில <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/egmore-railway-station-redevelopment-work-express-trains-to-be-diverted-to-tambaram-and-mambalam">தாம்பரம்</a> நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், நேற்று முதல் நடைமேடை 1 முதல் 5 வரையில் மூடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக, நடைமேடை 4-ல் பள்ளம் தோண்டப்பட்டு பில்லர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.</p><h2><strong>தண்டவாளங்கள் மூடல்</strong></h2><p>இதுகுறித்து, ரெயில்வே அதிகாரிகள் கூறியபோது, 'மறுசீரமைப்பு பணி காரணமாக தற்போது நடைமேடை 1 முதல் 5-வரை உள்ள தண்டவாளங்கள் முழுமையாக மூடப்பட்டுள்ளன. எனவே, எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 6 முதல் 9 வரை உள்ள நடைமேடைகளில் இருந்து இயக்கப்படும். மின்சார ரெயில்கள் வழக்கம்போல நடைமேடை 10, 11-ல் இருந்து இயக்கப்படும். </p><p>தற்போது நடைபெறும் முதல் கட்ட பணிகள் முடிவடைந்ததும், 2-ம் கட்டமாக நடைமேடைகள் 6 முதல் 8 வரையிலான பகுதிகளில் நடைமேம்பாலத்திற்கான தூண்கள் மற்றும் தாங்கு சட்டங்களை அமைப்பதற்கான பணிகள் நடைபெற இருக்கிறது. அப்போது அதற்கேற்ப ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படும். 3-ம் கட்டமாக நடைமேடைகள் 9 முதல் 11 வரையில் நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அந்த நேரத்தில் இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படும்' என்றார்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY: நாளுக்கு நாள் ஏறும் தங்கம் விலை - இன்றைய நிலவரம் 
</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-13-8-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-13-8-2026#comments</comments><guid isPermaLink="false">ee8b1847-9d02-4cfa-b30e-b139a76a1cd3</guid><pubDate>Thu, 13 Aug 2026 04:37:28 +0000</pubDate><atom:updated>2026-08-13T04:37:28.081Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/12/19/23383098-gold.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/12/19/23383098-gold.webp?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றம்-இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த 3-ந்தேதி தங்கம் ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 500 ஆக இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து நேற்று முன்தினம் தங்கம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 150-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.</p><p>நேற்று ரூ.50 அதிகரித்து கிராம் ரூ.14 ஆயிரத்து 200-க்கும், ரூ.400 அதிகரித்து சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.  கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ.7 ஆயிரத்து 600 உயர்ந்துள்ளது.</p> <h2>தங்கம் விலை உயர்வு</h2><p>இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1,13,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.14,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p> <h2>வெள்ளி விலை நிலவரம்</h2><p>வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி விலை ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-</h2><p>12-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,600</p><p>11-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,200</p><p>10-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,600</p><p>09-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,720</p><p>08-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,720</p> <h2>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-</h2><p>12-08-2026- ஒரு கிராம் ரூ.260</p><p>11-08-2026- ஒரு கிராம் ரூ.260</p><p>10-08-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>09-08-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>08-08-2026- ஒரு கிராம் ரூ.250</p> ]]></content:encoded></item><item><title>குறைந்த விலை ரீசார்ஜ்களை சட்டென தட்டித்தூக்கிய ஏர்டெல் - பயனர்கள் அதிர்ச்சி!</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/airtel-ends-all-prepaid-mobile-plans-offering-15-gb-data-per-day-with-unlimited-calls</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/airtel-ends-all-prepaid-mobile-plans-offering-15-gb-data-per-day-with-unlimited-calls#comments</comments><guid isPermaLink="false">d859d86c-7e2f-44a6-a31c-015ece2b5e7a</guid><pubDate>Thu, 13 Aug 2026 04:36:00 +0000</pubDate><atom:updated>2026-08-13T04:36:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prepaid Plan,airtel,ஏர்டெல்,ப்ரீபெயிட் திட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/003qva87/Airtel-Logo.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Airtel Logo]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/003qva87/Airtel-Logo.png?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/airtel">பாரதி ஏர்டெல்</a> நிறுவனம், தினமும் 1.5 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வசதியை வழங்கி வந்த அனைத்து ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களையும் நிறுத்தியது. இதனால், வாடிக்கையாளர்கள் அதிக டேட்டா பயன்பாட்டை கொண்ட, அதிக விலை கொண்ட திட்டங்களையே தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செயலி (app) மூலம் இது தெரியவருகிறது. </p><p>இந்திய டெலிகாம் சந்தையில் ஏர்டெல் நிறுவனம் ரூ. 299, ரூ. 319, ரூ. 579, ரூ. 619 மற்றும் ரூ. 649 ஆகிய ஐந்து ப்ரீபெய்ட் திட்டங்களை நீக்கியுள்ளது. இதனால், பிரபலமான ரூ. 299 திட்டத்தை பயன்படுத்தியவர்கள் இனி அதிக விலை கொண்ட திட்டங்களையே தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டயம் ஏற்பட்டுள்ளது. </p><h2>விலை உயர்வு:</h2><p>தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒரு பயனருக்கான சராசரி வருவாயை (ARPU) அதிகரிப்பதில் கவனம் செலுத்தி வருவதால், ஏர்டெல் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை கட்டண உயர்வை நோக்கிய தவிர்க்க முடியாத ஒரு மாற்றத்தை குறிப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.</p><p>மாற்றியமைக்கப்பட்ட ப்ரீபெய்ட் திட்டங்களின் பட்டியலில், ஆரம்ப நிலை திட்டங்களான ரூ. 199 மற்றும் ரூ. 219 ஆகியவற்றில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால், பிரபலமான ரூ. 299 திட்டத்தை பயன்படுத்தியவர்கள், தினமும் அதிக டேட்டா தேவைப்பட்டால் இனி ரூ. 349 திட்டத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும்; இது அவர்களுக்கு சுமார் 16 சதவீத விலை உயர்வாக அமைகிறது.</p><h2>அதிகாரப்பூர்வ அறிவிப்பு:</h2><p>ப்ரீபெயிட் திட்டங்கள் நீக்கப்பட்டது குறித்து ஏர்டெல் நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில், இந்த நடவடிக்கை நிலையான ARPU வளர்ச்சியை நோக்கிய ஏர்டெல் நிறுவனத்தின் முயற்சிகளில் ஒரு பகுதி என்று இந்த மாற்றம் குறித்த விவரம் அறிந்தவர்கள் தெரிவித்தனர்.</p><p>ரூ. 299 திட்டத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட டேட்டா அளவை விரைவாக பயன்படுத்திவிட்டு, கூடுதல் டேட்டாவுக்காக 'டாப்-அப்' செய்வதையோ அல்லது மீண்டும் ரீசார்ஜ் செய்வதையோ வழக்கமாக கொண்டிருந்தனர் என்று அவர்கள் சுட்டிக்காட்டினர். ஒப்பிட்டு பார்க்கையில், ரூ. 349 திட்டம் அன்லிமிட்டெட் 5G டேட்டா வசதியை வழங்குகிறது.</p><p>நிறுத்தப்பட்ட ரூ. 299 திட்டமானது, 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் தினமும் 1.5 ஜிபி டேட்டாவை வழங்கியது. அதே சேவைகள் 30 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் ரூ. 319 திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்தன. ரூ. 579 திட்டம் 56 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் தினமும் 1.5 ஜிபி டேட்டாவையும், ரூ. 619 திட்டம் 60 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் அதே போன்ற பலன்களையும், ரூ. 649 திட்டம் 56 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் தினமும் 2 ஜிபி டேட்டாவையும் வழங்கின.</p>]]></content:encoded></item><item><title>டிரம்ப் பதவிக்காலம் முடியும் வரை போரை நீட்டிப்போம் - ஈரான் தடாலடி  
</title><link>https://www.maalaimalar.com/news/world/iran-us-war-to-continue-until-trumps-term-ends-warns-irgc-adviser</link><comments>https://www.maalaimalar.com/news/world/iran-us-war-to-continue-until-trumps-term-ends-warns-irgc-adviser#comments</comments><guid isPermaLink="false">42455167-254e-429d-b9e9-e08fa6fdce18</guid><pubDate>Thu, 13 Aug 2026 04:12:14 +0000</pubDate><atom:updated>2026-08-13T04:12:14.952Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>trump,டிரம்ப்,Iran War,ஈரான் போர்,ஹார்முஸ் ஜலசந்தி,Strait of Hormuz</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/85od2k6w/tn-5.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டிரம்ப் - மொஜ்தபா காமேனி]]></media:title><media:description type="html"><![CDATA[ டிரம்ப் - மொஜ்தபா காமேனி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/85od2k6w/tn-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வரும் 2029 உடன் அமெரிக்க அதிபர் <a href="https://www.maalaimalar.com/news/world/iran-missile-threat-trump-secretly-escapes-air-force-one">டிரம்ப்பின் </a>பதவிக்காலம் முடிகிறது. அதுவரை அமெரிக்காவுடனான போரை நீட்டிக்க உள்ளதாக ஈரான் புரட்சிகரக் காவல் படை தலைமைத் தளபதியின் மூத்த ஆலோசகரான முகமது ரேசா நக்தி தெரிவித்துள்ளார்.</p> <h2>பேட்டி</h2><p>பிபிஎஸ் ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில் "எதிரி மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அஞ்சும் நிலையை உருவாக்குவதே எங்களின் முதன்மை இலக்கு</p><p>இதற்கான ஒரு வழி, இந்தப் போரை டிரம்ப்பின் அதிபர் பதவிக்காலம் முடியும் வரை நீட்டித்து, அவர்களுக்குப் பெரும் இழப்புகளை ஏற்படுத்துவதாகும்.</p><p>இதன் மூலம் எதிர்காலத்தில் ஈரான் மீது தாக்குதல் நடத்த நினைக்கும் எவரும் அதற்குப் பெரும் விலை கொடுக்க நேரிடும் என்பதைப் புரிந்துகொள்வார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.</p> <h2>ஏவுகணைகள் இருப்பு</h2><p>அமெரிக்க ராணுவம் தாங்கள் முன்பு நினைத்ததை விட பலவீனமாக இருப்பதை இந்தப் போரின் மூலம் ஈரான் அறிந்துகொண்டதாக அவர் தெரிவித்தார்.</p><p>ஈரான் அதிக எண்ணிக்கையில் ஏவுகணைகளை உற்பத்தி செய்து வருவதாகவும் "ஒருவேளை ஈரானிடம் ஏவுகணைகள் தீர்ந்துபோகும் நிலை வந்தாலும், அன்றைய தினம் அமெரிக்காவுக்கு நாங்கள் இன்னும் ஆபத்தானவர்களாக மாறுவோம்.</p><p>ஏனெனில், உலகம் முழுவதும் அமெரிக்காவிற்கு ஆயிரக்கணக்கில் பொருளாதார நலன்கள் உள்ளன. அவை அனைத்தையும் எளிதில் அழிக்க முடியும்" என எச்சரித்தார்.</p> <h2>புதிய புயல்</h2><p>அமெரிக்க படைகள் சந்தித்து வரும் இழப்புகளாலும், உள்நாட்டில் குறைந்து வரும் செல்வாக்காலும் போரை விரைந்து முடிக்க டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.</p><p>அணுசக்தி ஒப்பந்தம் கூட வேண்டாம், ஹார்முஸ் பிரச்சனையில் உடன்பாடு ஏற்பட்டால் போதும் என அவர் இறங்கி வந்ததாக அண்மையில் ரிப்போர்ட் ஒன்று வெளியானது.</p><p>ஆனால் டிரம்ப் பதவிக்காலம் முடியும்வரை போரை தொடர உள்ளதாக ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது புதிய புயலை உருவாகியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>கழுத்தில் அறுவை சிகிச்சை... செல்போனால் ஷகீலாவுக்கு நேர்ந்த கதி!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/shakeela-neck-surgery-mobile-gaming</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/shakeela-neck-surgery-mobile-gaming#comments</comments><guid isPermaLink="false">a8cabca5-30bf-40be-91d4-4149664a6cb1</guid><pubDate>Thu, 13 Aug 2026 04:02:28 +0000</pubDate><atom:updated>2026-08-13T04:02:28.190Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Shakeela,ஷகீலா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/c42pu1tv/Shakeela.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கழுத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஷகீலா]]></media:title><media:description type="html"><![CDATA[ கழுத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஷகீலா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/c42pu1tv/Shakeela.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கட்டிலில் ஒருபுறமாகச் சாய்ந்து படுத்துக் கொண்டு நீண்ட நேரம் மொபைல் போனில் கேம் விளையாடியதால், அவரது கழுத்தில் உள்ள முக்கிய நரம்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அவர் ரூ. 3 லட்சம் செலவில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டியதாயிற்று.</strong></em> </p><p>நடிகை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B7%E0%AE%95%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BE">ஷகீலா</a> உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் கழுத்து அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதற்கு அதிகளவில் மொபைல் போன் பயன்படுத்தியதே காரணம் எனக் கூறப்படுகிறது. மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பிறகு, தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோவில் தனது நிலைமை மற்றும் அனுபவங்களை அவரே விரிவாகப் பகிர்ந்து கொண்டுள்ளார்.</p><p>அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அவர் கழுத்துப்பட்டை (neck collar) அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார். வீட்டில் இருந்தபடியே அவர் வெளியிட்ட அந்த வீடியோவில் கழுத்துப்பட்டை அணிந்திருந்துள்ளார். மேலும், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சில காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன. </p><h2><strong>ரூ.3 லட்சம் செலவில்</strong></h2><p>கட்டிலில் ஒருபுறமாகச் சாய்ந்து படுத்துக் கொண்டு நீண்ட நேரம் மொபைல் போனில் கேம் விளையாடியதால், அவரது கழுத்தில் உள்ள முக்கிய நரம்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அவர் ரூ. 3 லட்சம் செலவில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டியதாயிற்று. மொபைல் போன்களை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட அவர், குழந்தைகளுக்கு போன்களை கொடுக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.</p><p>தான் வெளியிட்ட வீடியோவில் தன்னைத்தானே சுய கிண்டல் செய்து பேசிய <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/vanitha-gave-me-a-very-big-family-shakeela-at-the-mrs-mr-film-festival-774240">ஷகீலா</a>, படுக்கையிலிருந்து எழுந்திருப்பது, சாப்பிடுவது போன்ற அடிப்படை விஷயங்களுக்குக் கூட தற்போது பராமரிப்பாளர்களின் உதவி தேவைப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். "நான் சமீபத்தில் ஒரு பெரிய அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். உங்களிடம் ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். போன் மிகவும் பயனுள்ள ஒரு பொருள், ஆனால் அதை தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்தாதீர்கள்" என்று அவர் கூறியுள்ளார். </p><p>தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்கான காரணத்தை கூறும் ஷகீலா, "நான் கட்டிலில் ஒருபுறமாகச் சாய்ந்து படுத்துக் கொண்டு தொடர்ந்து நான்கு மணி நேரம் வரை போனில் கேம் விளையாடுவேன். டீ அல்லது காபி குடிப்பதற்காக மட்டுமே எழுந்திருப்பேன். டீ குடித்த பிறகு மீண்டும் வந்து அதே கேமைத் தொடர்வேன். அதன்பிறகு யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் பல மணிநேரம் ரீல்ஸ்  பார்ப்பேன். தவறான உடல் நிலைப்பாடு மற்றும் அதிகப்படியான போன் பயன்பாடு காரணமாக எனது கழுத்தில் உள்ள முக்கிய நரம்புகள் பாதிக்கப்பட்டு, இறுதியில் அறுவை சிகிச்சை வரை கொண்டு சென்றுவிட்டது" என்றார்.</p>]]></content:encoded></item><item><title>பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிக்சல் 11 சீரிஸ் மாடல்களை அறிமுகப்படுத்திய கூகுள்!</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/google-pixel-11-series-unveiled-with-new-chip-check-price</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/google-pixel-11-series-unveiled-with-new-chip-check-price#comments</comments><guid isPermaLink="false">542015fb-1487-41ca-92c9-9a333b331d24</guid><pubDate>Thu, 13 Aug 2026 03:38:00 +0000</pubDate><atom:updated>2026-08-13T03:38:00.000Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Google,smartphone,கூகுள்,ஸ்மார்ட்போன்,Pixel 11,பிக்சல் 11</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/6o3s6b9o/Pixel-11-Series.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pixel 11 Series]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/6o3s6b9o/Pixel-11-Series.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/google">கூகுள்</a> தனது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிக்சல் ஸ்மார்ட்போன் சீரிசை வெளியிட்டது. இதில் பிக்சல் 11, பிக்சல் 11 ப்ரோ, பிக்சல் 11 ப்ரோ XL மற்றும் மடிக்கக்கூடிய பிக்சல் 11 ப்ரோ ஃபோல்ட் ஆகிய மாடல்கள் அடங்கும். இந்த சமீபத்திய சீரிசில், மென்மையான பயன்பாட்டிற்கு உதவும் வகையில் மெல்லிய கேமராக்கள், மேம்பட்ட ஜூம் மற்றும் செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. </p><p>"இன்று நாங்கள் பிக்சல் 11, பிக்சல் 11 ப்ரோ மற்றும் பிக்சல் 11 ப்ரோ XL ஆகிய மாடல்களை அறிமுகப்படுத்தினோம். இவை முக்கிய கேமரா அப்டேட்கள், மேம்படுத்தப்பட்ட பேட்டரி மற்றும் சமீபத்திய ஜெமினி நானோ மாடலில் இயங்கும் எங்களின் அதிவேகமான, மிகவும் சக்திவாய்ந்த சிப்செட் கூகுள் டென்சர் ஜி6 உடன் வருகின்றன. </p><p>இந்த <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மார்ட்போன்</a> சாதனங்கள், நேரத்தை சேமிக்கும் தனிப்பட்ட உதவியை வழங்குவதற்காக ஜெமினி இன்டெலிஜென்ஸ் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், உங்களின் தனித்துவமான பாணியில் அந்த தருணத்தை நீங்கள் சிறப்பாக படம்பிடிக்க உதவும் புதிய கேமரா அனுபவங்களையும் இவை கொண்டுள்ளன," என்று கூகுளின் வலைப்பதிவு ஒன்று தெரிவித்தது. </p><h2>ஜெமினி ஏஐ:</h2><p>புதிய பிக்சல் சீரிசில் உள்ள நான்கு ஸ்மார்ட்போன்களும் கூகுளின் புதிய டென்சர் ஜி6 சிப்செட் மூலம் இயக்கப்படுகின்றன. மேலும், இவை IP68 தரப் பாதுகாப்பு, மேம்படுத்தப்பட்ட 5x டெலிஃபோட்டோ கேமராக்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஜெமினி ஏஐ திறன்களை கொண்டுள்ளன.</p><p>ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்கள் அளவுக்கு பிரபலமாக இல்லாத பட்சத்திலும், கூகுள் நிறுவனம் கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் பிக்சல் ஸ்மார்ட்போன்களில் தொடர்ச்சியாக ஏஐ சார்ந்த அம்சங்களை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.</p><h2>கேமரா அம்சங்கள்:</h2><p>பிக்சல் 10-ஐ விட 40 சதவீதம் மெல்லிய கேமராவுடன், பிக்சல் 11 மாடல்கள் மேம்படுத்தப்பட்ட கேமரா அம்சம் கொண்டிருக்கிறது. இதன் பின்புறத்தில் 48MP வைடு கேமரா, 13MP அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 10.8MP 5x டெலிஃபோட்டோ கேமராவும், முன்புறத்தில் 10.5MP செல்ஃபி கேமராவும் உள்ளன.</p><p>ஷட்டர் பட்டனை ஒரே ஒரு முறை தட்டுவதன் மூலம் தானாகவே தொடர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுக்கும் 'மேஜிக் கேப்சர்' எனப்படும் புதிய அம்சம் ஒரு மேம்பாடாக வருகிறது. கூகுளின் கூற்றுப்படி, 'இன்ஸ்டன்ட் நைட் சைட்' அம்சம் இருண்ட சூழல்களில் காட்சிகளை வேகமாகப் படம்பிடிக்கிறது, இதனால் பயனர்கள் வெளிச்சத்திற்காக காத்திருக்கும்போது தங்கள் தொலைபேசியை அசைக்காமல் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.</p><p>புதிய பிக்சல் 11 ஸ்மார்ட்போன் பிஸ்தா, ஹைபிஸ்கஸ், ஃப்ராஸ்ட் மற்றும் அப்சிடியன் ஆகிய வண்ணங்களிலும், பிக்சல் 11 ப்ரோ மற்றும் பிக்சல் 11 ப்ரோ XL ஆகியவை கேன்யன், ஃபாக், ஆலிவ் மற்றும் ஃபுல் மேட் அப்சிடியன் வண்ணத்திலும் கிடைக்கின்றன.</p><h2>இந்திய விலை விவரங்கள்:</h2><p>இந்தியாவில் பிக்சல் 11 சீரிஸ் பேஸ் மாடலின் விலை ரூ. 89,999-இல் இருந்து தொடங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட டாப் வேரியண்ட் விலை ரூ. 1,04,999 ஆகும்.</p><p>இதேபோல் பிக்சல் 11 ப்ரோ பேஸ் மாடலின் விலை ரூ. 1,19,999-இல் இருந்து தொடங்குகிறது, அதே சமயம் டாப் எண்ட் மாடலின் விலை ரூ. 1,34,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p>பிக்சல் 11 ப்ரோ XL பேஸ் மாடலின் விலை ரூ. 1,34,999 ஆகவும், டாப்-எண்ட் மாடலின் விலை ரூ. 1,49,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வார விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 2,120 சிறப்பு பஸ்கள் இயக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/2120-special-buses-operated-across-tamil-nadu-for-the-weekend</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/2120-special-buses-operated-across-tamil-nadu-for-the-weekend#comments</comments><guid isPermaLink="false">401765eb-4351-43b6-9f18-aa8771f20002</guid><pubDate>Thu, 13 Aug 2026 03:30:16 +0000</pubDate><atom:updated>2026-08-13T03:30:16.211Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Special buses,சிறப்பு பஸ்கள்,TN Govt,தமிழக அரசு,வார விடுமுறை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/93vrv0zd/Buskilampakkam.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ சிறப்பு பஸ்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ சிறப்பு பஸ்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/93vrv0zd/Buskilampakkam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய முக்கிய நகரங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.</strong></em> </p><p>வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காகச் சென்னையில் உள்ள முக்கியப் பேருந்து முனையங்கள் மற்றும் பிற நகரங்களில் இருந்து <a href="https://www.maalaimalar.com/topic/சிறப்பு-பஸ்கள்">சிறப்புப் பேருந்துகளை</a> இயக்க தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது. </p><p>இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள் பின்வருமாறு:-</p><h2><strong>கிளாம்பாக்கம் பேருந்து முனையம்</strong></h2><p>கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) 505 சிறப்புப் பேருந்துகள், 15-ந் தேதி (சனிக்கிழமை) 570 சிறப்புப் பேருந்துகள்.</p><h2><strong>கோயம்பேடு பேருந்து முனையம்</strong></h2><p>கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) 110 சிறப்புப் பேருந்துகள்,  15-ந் தேதி (சனிக்கிழமை) 110 சிறப்புப் பேருந்துகள்.</p><h2><strong>மாதவரம் பேருந்து முனையம்</strong></h2><p>மாதவரத்திலிருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, போளூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு  14 மற்றும் 15-ந் தேதிகளில் நாள் ஒன்றுக்கு தலா 80 சிறப்புப் பேருந்துகள்.</p><h2><strong>பிற மாவட்டங்கள் &amp; சென்னை திரும்பும் பேருந்துகள்</strong></h2><p>வெளி மாவட்டங்கள் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய முக்கிய நகரங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. </p><h2><strong>சென்னை/பெங்களூரு திரும்பும் வசதி</strong></h2><p>வார விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து பயணிகள் சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக, 16-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேவைகேற்ப பல்வேறு இடங்களில் இருந்து 465 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் 
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vice-president-cp-radhakrishnan-to-visit-tamil-nadu-on-16th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vice-president-cp-radhakrishnan-to-visit-tamil-nadu-on-16th#comments</comments><guid isPermaLink="false">69e290e0-9203-4e37-a49e-9521cbe22b26</guid><pubDate>Thu, 13 Aug 2026 03:25:47 +0000</pubDate><atom:updated>2026-08-13T03:25:47.255Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN,சிபி ராதாகிருஷ்ணன்,CP Radhakrishnan,தமிழ்நாடு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/22/26891876-cpradhakrishnan.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CP Radhakrishnan ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/22/26891876-cpradhakrishnan.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>துணை ஜனாதிபதி <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D">சி.பி.ராதாகிருஷ்ணன்</a> செங்கல்பட்டு, திருவாரூர் மற்றும் தஞ்சாவூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க என 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார். டெல்லியில் இருந்து வருகிற 16-ந்தேதி காலை தனிவிமானம் மூலம் சென்னை வருகிறார். </p> <h2>பட்டமளிப்பு விழா</h2><p>அதனைத்தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் 22-வது பட்டமளிப்பு விழாவிலும், அதன்பின்னர் தியாகராயநகரில் உள்ள வாணி மகாலில் நடைபெறும் நாகாலாந்து முன்னாள் கவர்னர் இல.கணேசனின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சியிலும், தொடர்ந்து டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் நடக்கும் புத்தக வெளியிட்டு விழாவிலும் பங்கேற்கிறார்.</p> <p>அதன்பின்னர் 17-ந்தேதியன்று சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் புறப்பட்டு திருச்சி சென்றடைகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் செல்கிறார். பின்னர் அங்கு நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.</p> <p>இதையடுத்து தஞ்சையில் உள்ள சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதனை முடித்துவிட்டு திருச்சியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு அன்றைய தினம் இரவு 8.30 மணிக்கு டெல்லி சென்றடைகிறார்.</p>]]></content:encoded></item><item><title>&apos;ஜந்தர் மந்தர் சீசன் 2&apos; போராட்டத்தை அறிவித்த  கரப்பான்பூச்சி ஜனதா கட்சி</title><link>https://www.maalaimalar.com/news/national/jantar-mantar-season-2-protest-cjbp-alleges-hall-cancellations-and-threats-blocking-meetings-in-delhi</link><comments>https://www.maalaimalar.com/news/national/jantar-mantar-season-2-protest-cjbp-alleges-hall-cancellations-and-threats-blocking-meetings-in-delhi#comments</comments><guid isPermaLink="false">57ddd1e3-388b-4cf7-be7e-cb329040694f</guid><pubDate>Thu, 13 Aug 2026 03:22:33 +0000</pubDate><atom:updated>2026-08-13T03:22:33.452Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சிஜேபி,CJP Protest,CJP,அபிஜித் தீப்கே,சிஜேபி போராட்டம்,Abhijit Deepke</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/rrojjmgw/tn-4.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கரப்பான்பூச்சி ஜனதா கட்சி]]></media:title><media:description type="html"><![CDATA[ கரப்பான்பூச்சி ஜனதா கட்சி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/rrojjmgw/tn-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி ஜந்தர் மந்தரில் 'சீசன் 2', அதாவது இரண்டாம்கட்ட போராட்டம் தொடங்கப்படும் என கரப்பான்பூச்சி ஜனதாக கட்சியின்  நிறுவனர் அபிஜித் தீப்கே அறிவித்துள்ளார். </p><p>இருப்பினும் எதன் காரணமாக இப்போராட்டம் என அவர் விளக்கவில்லை. </p> <h2>ஜந்தர் மந்தர் சீசன் 2</h2><p>"ஜந்தர் மந்தரில் சீசன் 2 போராட்டம் எப்போது தொடங்கும் என இன்ஸ்டாகிராமில் பலரும் கேட்டு வருகின்றனர். மிக விரைவில் ஜந்தர் மந்தரில் சீசன் 2 போராட்டம் தொடங்கும் என்பதை அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்" என அவர் கூறியுள்ளார்.</p><p>சிஜேபி முதன்மை செய்தி தொடர்பாளர் சௌரவ் தாஸ் கூறுகையில், சுதந்திர தினம் முதல் கல்விப் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்து நாடு தழுவிய அளவில் மக்களின் கருத்துக்களைக் கேட்கும் பிரச்சாரம் மற்றும் லிசனிங் டூர் தொடங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>பிரச்சனை</h2><p>இதனிடையே டெல்லியில் சிஜேபி கூட்டங்களை நடத்தவிடாமல் சதி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.</p><p>டெல்லியின் நாராயணா பகுதியில் சிஜேபி தன்னார்வலர்கள் கூட்டத்திற்காக அரங்கம் ஒன்று முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.</p><p>ஆனால், கூட்டம் நடைபெறவிருந்த நாளன்று கடைசி நேரத்தில் அரங்கின் உரிமையாளர் முன்பதிவை ரத்து செய்து, உள்ளே நுழைய அனுமதி மறுத்துவிட்டார்.</p><p>ஆளும் பாஜகவின் அழுத்தத்தின் காரணமாகவே இது நடந்துள்ளதாக அபிஜித் தீப்கே குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>டெல்லியில் வேறு இடங்களைத் தேடியபோதும் யாருமே அரங்கை வாடகைக்குத் தர முன்வரவில்லை என்றும், மேலிடத்து அழுத்தம் உள்ளது என அனைவரும் கூறியதாகவும் தீப்கே தெரிவித்தார்.</p><p>"இறுதியாக ஒரு இடத்தை முடிவு செய்தோம். ஆனால், கூட்டத்தின் அன்றைய நாள் காலையில் அந்த அரங்கின் உரிமையாளருக்கு கடுமையான மிரட்டல் வந்தது.</p><p>சிஜேபி கூட்டத்திற்கு அனுமதி அளித்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும், தலைகீழாகத் தொங்கவிடப்படுவீர்கள் என்றும் மிரட்டியுள்ளனர்" என தீப்கே பகிரங்கக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். </p><p>நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளை எதிர்த்து  டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் சிஜேபி நடத்திய போராட்டத்தால் தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர்  கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/9-rameswaram-fishermen-arrested-sri-lankan-navy-action</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/9-rameswaram-fishermen-arrested-sri-lankan-navy-action#comments</comments><guid isPermaLink="false">1019d4c2-1f3e-4e80-877d-245498ffb156</guid><pubDate>Thu, 13 Aug 2026 02:58:19 +0000</pubDate><atom:updated>2026-08-13T02:58:19.912Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Srilankan Navy,தமிழக மீனவர்கள் கைது,இலங்கை கடற்படை,Fishermen Arrested,TN Fishermens Arrest</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/02/09/9104140-fishermen.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Fishermen arrested]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/02/09/9104140-fishermen.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>எல்லைதாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்தனர்.</strong></em></p><h2>மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு</h2><p>எல்லைதாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப்படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது.</p> <h2>ராமேஸ்வரம் மீனவர்கள் கைது</h2><p>இந்நிலையில் கச்சத்தீவு - தலைமன்னார் இடையே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர்  இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>படகுகள் பறிமுதல்</h2><p>எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி<a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81"> மீனவர்களை கைது</a> செய்த இலங்கை கடற்படையினர் அவர்களது 9 பேரை படகுகளையும் பறிமுதல் செய்தனர்.</p><p>இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.<br></p> ]]></content:encoded></item><item><title>மூடத்தனத்தால் ஒரு தலைமுறையையே முடக்கிய தாலிபான்.. ஆப்கானிஸ்தானில் 24 லட்சம் பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுப்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/afghanistan-girls-denied-secondary-and-higher-education-under-taliban-rule</link><comments>https://www.maalaimalar.com/news/world/afghanistan-girls-denied-secondary-and-higher-education-under-taliban-rule#comments</comments><guid isPermaLink="false">65253e14-fe73-483b-9064-9b9850670134</guid><pubDate>Thu, 13 Aug 2026 02:50:08 +0000</pubDate><atom:updated>2026-08-13T02:50:08.017Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Afghanistan,Taliban,பெண் கல்வி,ஆப்கானிஸ்தான்,தாலிபான்,women&apos;s education</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/d0usqelj/tn-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஆப்கானிஸ்தான் ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆப்கானிஸ்தான் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/d0usqelj/tn-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[  <p><a href="https://www.maalaimalar.com/topic/afghanistan">ஆப்கானிஸ்தானில் </a>தாலிபான் ஆட்சியின்கீழ் 24 லட்சம் பெண் குழந்தைகளுக்கு உயர்நிலைக் ககல்வி மறுப்பட்டுள்ளதாக ஐநாவின் யுனெஸ்கோ அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. </p><p>உலகிலேயே பெண்களுக்குப் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியை முற்றிலுமாகத் தடை செய்துள்ள ஒரே நாடு ஆப்கானிஸ்தான் மட்டுமே. </p><h2>தடை</h2><p>2021 ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது. மத அடிப்படைவாதத்தில் ஊறிய தாலிபான் ஒரு நாட்டையே தன் பிற்போக்குத்தனத்தால் பல ஆண்டுகள் பின்னோக்கி தள்ளியுள்ளது.</p><p>2022 மார்ச்சில் பெண்கள் ஆரம்ப பள்ளியை முடித்து உயர்நிலைப் பள்ளி செல்லவும், அதே ஆண்டு டிசம்பரில் பல்கலைக்கழம் செல்லவும் தடையை அமல்படுத்தியது.</p><p>இந்நிலையில் அங்கு ஆரம்ப கல்வி முடித்து உயர்நிலை பள்ளிக் கல்வியில் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 24 லட்சம் ஆக உயர்ந்துள்ளது.</p><p>இதே நிலை நீடித்தால், வரும் 2030ஆம் ஆண்டிற்குள் உயர்நிலை பள்ளிக் கல்வி மறுக்கப்பட்ட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 40 லட்சமாக உயரும் என ஐநா சபை எச்சரித்துள்ளது.</p><p>மேலும் கடந்த ஆண்டை விட மேலும் 2 லட்சம் பெண் குழந்தைகள் புதிதாகப் பள்ளிக் கல்வியை இழந்துள்ளனர்.</p> <h2>பெண் ஆசிரியர் பற்றாக்குறை</h2><p>பெண் ஆசிரியர்கள் ஆண் மாணவர்களுக்கு கற்பிக்க விதிக்கப்பட்ட தடையால், கல்வித்துறையில் கடும் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.</p><p>2030ஆம் ஆண்டிற்குள் தகுதியான 11,000க்கும் மேற்பட்ட பெண் ஆசிரியர்களின் பற்றாக்குறை உருவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.</p><p>ஆப்கானிஸ்தானின் பாதிக்கும் மேற்பட்ட பள்ளிகளில் குடிநீர், சுகாதாரமான கழிப்பறை வசதிகள் இல்லை.</p><p>ஆரம்பப் பள்ளி அளவிலும் நிலைமை மோசமடைந்துள்ளது. 10 வயதுடைய குழந்தைகளில் 90% பேருக்கு ஒரு எளிய வாக்கியத்தை கூடப் படிக்கத் தெரியவில்லை.</p><p>நாட்டின் ஒட்டுமொத்த எழுத்தறிவு விகிதம் 37% ஆக குறைந்துள்ளது.</p> <h2>சுரணையற்ற தாலிபான்</h2><p>சர்வதேச அளவிலிருந்து கடும் எதிர்ப்புகளும் விமர்சனங்களும் எழுந்த போதிலும், பெண்களுக்கான கல்வித் தடை என்பது தங்களின் உள்நாட்டு விவகாரம் என்பதில் தாலிபான் நிர்வாகம் பிடிவாதமாக உள்ளது.</p><p>இத்தனை லட்சம் பெண்களுக்குக் கல்வி மறுக்கப்படுவது ஆப்கானிஸ்தானின் எதிர்காலத் தலைமுறையையும் அதன் பொருளாதாரத்தையும் வெகுவாகப் பாதிக்கும் என சர்வதேச சமூகம் கவலை தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆளே மாறிட்டீங்க.. திருமண விழாவில் மோடியுடன் கார்கே கலகல - வீடியோ உண்மையா?</title><link>https://www.maalaimalar.com/news/national/old-modi-congress-leaders-wedding-reception-clip-not-linked-to-revati-sule-event-fact-check-confirms</link><comments>https://www.maalaimalar.com/news/national/old-modi-congress-leaders-wedding-reception-clip-not-linked-to-revati-sule-event-fact-check-confirms#comments</comments><guid isPermaLink="false">c05de73d-186a-46a2-aad2-5c46b9d3abab</guid><pubDate>Thu, 13 Aug 2026 02:04:31 +0000</pubDate><atom:updated>2026-08-13T02:04:31.329Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,வைரல் வீடியோ,கார்கே,Kharge,viral video,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/uyi3zsw8/tn-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ வீடியோ ]]></media:title><media:description type="html"><![CDATA[ வீடியோ ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/uyi3zsw8/tn-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேசியவாத காங்கிரஸ் பிரிவு தலைவர் சரத்சந்திர பவார் மகளும் எம்.பியுமான சுப்ரியா சுலேயின் மகள் ரேவதி சுலேயின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கடந்த ஆகஸ்ட் 10 அன்று டெல்லியில் நடைபெற்றது. </p><p>இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பலர் தனித்தனியே கலந்துகொண்டனர்.  </p><p>இந்த நிகழ்வின் பின்னணியில், பிரதமர் மோடி காங்கிரஸ் தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பிரியங்கா காந்தி, சோனியா காந்தி ஆகியோருடன் கலகலப்பாகப் பேசுவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. </p><p>இது ரேவதி சுலே திருமண வரவேற்பில் எடுக்கப்பட்ட வீடியோ எனக் கூறிப் பரப்பப்பட்டு வருகிறது.</p><p>ஜூலை 20, <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">சிஜேபி பேரணியில்</a> மாணவர்கள் மீது போலீஸ் அடக்குமுறை தொடர்பாக மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் நிலையில் இவ்வாறு கார்கேவும், மோடியும், பிரியங்காவும் சந்தித்து கொண்டது சங்கடமான ஒன்று என்று இணையத்தில் இந்த வீடியோவை பார்த்த பலரும் கருதினர். </p><p>ஆனால், இந்த வீடியோ பழையது என்பதும், தற்போதைய நிகழ்வோடு இதற்கு எவ்வித தொடர்பும் இல்லை என்பதும் உண்மை சரிபார்ப்பில் தெரியவந்துள்ளது. </p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">• PM Modi: “And Priyanka, how are you?”<br><br>• Priyanka Vadra: “I’m good, sir! How are you?”<br><br>• PM Modi: “I’m still the same.”<br><br>• Kharge: “Bhai Sahab, you’ve changed a little. Aap thoda sa badal gaye hain.”<br><br>• PM Modi: “Oh, really?” <br><br>A light-hearted exchange at Supriya Sule’s… <a href="https://t.co/mua0ThApQf">pic.twitter.com/mua0ThApQf</a></p>&mdash; Bhavesh Gujrati (@Bhaveshlivelife) <a href="https://x.com/Bhaveshlivelife/status/2087500055012089885?ref_src=twsrc%5Etfw">August 12, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h3>வீடியோ</h3><p>வைரலாகும் வீடியோவில் பிரதமர் மோடியை பார்த்து கார்கே, "நீங்கள் ஆள் கொஞ்சம் மாறிவிட்டீர்கள்" என கூற, அதற்கு மோடி "ஓ அப்படியா" என கூறுவது பதிவாகியுள்ளது. மேலும் பிரியங்காவுடன் பேசுவதும் இடம்பெற்றுள்ளது.</p><p>இந்த வீடியோ 'கவுண்டே சிங்' என்ற இன்ஸ்டாகிராம் பயனரால் கடந்த 2025 அன்று பதிவேற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.</p><p>கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகானின் மகன் திருமண விழாவின் போது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை என அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>அதே இன்ஸ்டாகிராம் பயனர், பிரதமர் மோடியின் பிறந்தநாளான செப்டம்பர் 17, 2025 அன்றும் இதே வீடியோவைப் பகிர்ந்து பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். எனவே, இந்த வீடியோ 2025ஆம் ஆண்டிலிருந்தே இணையத்தில் உள்ளது என்பது தெளிவாகிறது.</p> <h2>ஊர்ஜிதம்</h2><p>ஆகஸ்ட் 10 அன்று நடைபெற்ற ரேவதி சுலேயின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அணிந்திருந்த ஆடையின் நிறமும், வைரல் வீடியோவில் அவர் அணிந்திருக்கும் கோட்டின் நிறமும் வேறுபடுகின்றன.</p><p>எனவே பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருடன் உரையாடும் வீடியோ 2025ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பழைய வீடியோவா என்பதும் இது சுப்ரியா சுலேயின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டது அல்ல என்பதும் ஊர்ஜிதமாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 13.8.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு நட்பால் நன்மை கிட்டும்
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-13-august-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-13-august-2026#comments</comments><guid isPermaLink="false">1e9d85f4-7de6-482f-8a92-30ef2a80953d</guid><pubDate>Thu, 13 Aug 2026 01:48:58 +0000</pubDate><atom:updated>2026-08-13T01:48:58.570Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/03/10/27281868-rasipalan4.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/03/10/27281868-rasipalan4.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>ராசிபலன்(Rasipalan)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்தபடியே லாபம் கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் மறையும்.</p><h2>ரிஷபம்</h2><p>நட்பால் நன்மை கிட்டும் நாள். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.</p> <h2>மிதுனம்</h2><p>எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். வியாபாரப் போட்டிகள் அகலும். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்ப்பர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.</p><h2>கடகம்</h2><p>யோகமான நாள். தாமதப்பட்ட காரியங்கள் இன்று துரிதமாக நடைபெறும். தொழில் முன்னேற்றம் உண்டு. வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை.</p> <h2>சிம்மம்</h2><p>பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். தொழிலில் அதிக முதலீடுகள் செய்ய முன்வருவீர்கள். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் வந்து சேரும்.</p><h2>கன்னி</h2><p>தெய்வீக சிந்தனை அதிகரிக்கும் நாள். தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.</p> <h2>துலாம்</h2><p>துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். சொத்துகளிலிருந்து வில்லங்கங்கள் அகலும். தொழில் ரீதியாக வெளியூர் பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.</p><h2>விருச்சிகம்</h2><p>மகிழ்ச்சி கூடும் நாள். வரவு திருப்தி தரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பக்கத்து வீட்டாருடன் இருந்த பகை மாறும். உத்தியோகத்தில் கேட்ட சலுகை கிடைக்கும்.</p> <h2>தனுசு</h2><p>மனக்குழப்பம் ஏற்படும் நாள். திட்டமிட்ட காரியங்களை செய்ய இயலாது. உத்தியோகத்தில் பணத்தைக் கையாளும்பொழுது கவனம் தேவை.</p><h2>மகரம்</h2><p>விரயங்களைத் தவிர்க்க விழிப்புணர்ச்சி தேவை. உத்தியோகத்தில் உங்களிடம் கொடுத்த பொறுப்பை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம்.</p> <h2>கும்பம்</h2><p>நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். நினைத்த காரியம் நிறைவேறும். பிள்ளைகளுக்கு வேலை கிடைத்த தகவல் வரலாம்.</p><h2>மீனம்</h2><p>வரவு திருப்தி தரும் நாள். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம் 
</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/todays-petrol-and-diesel-price-status-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/todays-petrol-and-diesel-price-status-in-chennai#comments</comments><guid isPermaLink="false">9fa7bfe5-3868-4337-aeae-162f54299640</guid><pubDate>Thu, 13 Aug 2026 01:38:16 +0000</pubDate><atom:updated>2026-08-13T01:38:16.975Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,பெட்ரோல் டீசல் விலை,Petrol and diesel price</media:keywords><media:content height="576" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/pi5s1hs9/maalai-malar2026-08-07d9lkl9l7tn-31.avif" width="1024"><media:title type="html"><![CDATA[ பெட்ரோல் டீசல் விலை]]></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல் டீசல் விலை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/pi5s1hs9/maalai-malar2026-08-07d9lkl9l7tn-31.avif?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/iran-missile-threat-trump-secretly-escapes-air-force-one">ஈரான் போரினால்</a> மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p><h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.</p> <h2>இன்றைய பெட்ரோல், டீசல் விலை</h2><p>அந்த வகையில் இன்றைய (13.08.2026 - வியாழக்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><h2>கச்சா எண்ணெய்</h2><p>இன்று சர்வதேச சந்தையில் பிரனட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 88.09 டாலர் என விற்பனை ஆகி வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 13 ஆகஸ்ட் 2026: குருபகவானுக்கு திருமஞ்சனம்
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-13-august-2026-guru-bhagavan-tirumanjanam</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-13-august-2026-guru-bhagavan-tirumanjanam#comments</comments><guid isPermaLink="false">b7720dce-e18a-4068-a6e4-520e0d8bc98e</guid><pubDate>Thu, 13 Aug 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-08-13T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/11/19/21853306-gurubhagavan3.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Guru bhagavan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/11/19/21853306-gurubhagavan3.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆடி-28 (வியாழக்கிழமை)</p><p>பிறை : வளர்பிறை</p><p>திதி :  பிரதமை இரவு 10.38 மணி வரை பிறகு துவிதியை</p><p>நட்சத்திரம் :  ஆயில்யம் காலை 8.06 வரை பிறகு மகம்</p> <p>யோகம் :  சித்த / அமிர்தயோகம்</p><p>ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை</p><p>எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை</p><p>சூலம் : தெற்கு</p><p>நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை</p> <h2>திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்</h2><p>சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். நாகபட்டினம் ஸ்ரீ நீலாயதாட்சியம்மன் கண்ணாடி பல்லக்கில் பவனி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் புஷ்பப் பல்லக்கு, ஸ்ரீ ரெங்கமன்னார் குதிரை வாகனத்தில் புறப்பாடு. இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் திருவீதியுலா. சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச்சாற்று வைபவம். </p> <p>திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஸ்ரீ உடையவர் கூட புறப்பாடு, திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - செலவு</p><p>ரிஷபம் - நன்மை</p><p>மிதுனம் - வரவு</p><p>கடகம் - நலம்</p><p>சிம்மம் - லாபம்</p><p>கன்னி - போட்டி</p> <p>துலாம் - விவேகம்</p><p>விருச்சிகம் - ஆசை</p><p>தனுசு - பொறுமை</p><p>மகரம் - மகிழ்ச்சி</p><p>கும்பம் - வெற்றி</p><p>மீனம் - இன்பம்</p> ]]></content:encoded></item><item><title>சிறுநீர் நிரம்பிய பாட்டில்கள்.. கன்வர் யாத்திரை நிறைவில் ஹரித்வாரில் 7 ஆயிரம் டன் குப்பைகள்</title><link>https://www.maalaimalar.com/news/national/haridwar-ganga-pollution-outrage-7000-tonnes-of-plastic-and-urine-bottle-waste-cleared-after-kanwar-yatra</link><comments>https://www.maalaimalar.com/news/national/haridwar-ganga-pollution-outrage-7000-tonnes-of-plastic-and-urine-bottle-waste-cleared-after-kanwar-yatra#comments</comments><guid isPermaLink="false">42e344e1-22c6-421a-a768-8e058da3dd43</guid><pubDate>Thu, 13 Aug 2026 01:01:45 +0000</pubDate><atom:updated>2026-08-13T01:01:45.027Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Haridwar,Garbage,Kanwar Yatra,கன்வர் யாத்திரை,ஹரித்வார்,குப்பைகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/b5tatigj/tn.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஹரித்வார்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஹரித்வார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/b5tatigj/tn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/kanwar-yatra">கன்வர் யாத்திரை</a> நிறைவடைந்ததை தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கங்கை நதிக் கரைகளில் இருந்து சுமார் 7,000 டன்னுக்கு மேற்பட்ட கழிவுகள் அகற்றுப்பட்டுள்ளன. </p><p>இந்த ஆண்டு கன்வர் யாத்திரையில் கங்கை தீர்த்தம் சேகரிப்பதற்காகச் சுமார் 5 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் ஹரித்வாருக்கு வருகை தந்தனர்.</p> <h2>குப்பைகள்</h2><p>யாத்திரை முடிந்த நிலையில், புனிதமாகக் கருதப்படும் 'ஹர் கி பௌரி' உட்பட 100க்கும் மேற்பட்ட கங்கைக் கரைகளில் டன்கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகள், ஆடைகள் சிதறிக் கிடக்கின்றன.</p><p>குறிப்பாக, கரைகளில் உள்ள உடை மாற்றும் அறைகளில் பக்தர்கள் சிறுநீர் நிரப்பப்பட்ட லட்சக்கணக்கான பிளாஸ்டிக் பாட்டில்களை அப்படியே போட்டுவிட்டுச் சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>பொதுக்கழிப்பிட வசதிகள் குறைவால் பக்தர்கள் பாட்டில்களில் இவ்வாறு பாட்டில்களில் சிறுநீர் கழிகின்றன .</p><p>புனித நதியை வழிபட வந்துவிட்டு, அதே நதியையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் இந்த அளவிற்கு மாசடையச் செய்து சென்ற பக்தர்களின் போக்கிற்குப் உள்ளூர் வாசிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/a8wsspys/tn-1.jpg" /></figure><h2>அகற்றம்</h2><p>மாஸ்க் அல்லது கையுறைகள் போன்ற எவ்வித அடிப்படைப் பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி, தூய்மைப் பணியாளர்கள் சிறுநீர் பாட்டில்கள் மற்றும் கழிவுகளை மண்வாரிகளைக் கொண்டு அகற்றும் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.</p><p>மாநகராட்சி ஆணையர் நந்தன் குமார் தலைமையிலான தூய்மைப் பணியாளர்கள் குழு இரவு முழுதும் பணியாற்றி, இதுவரை சுமார் 7,000 டன் கழிவுகளைக் குப்பை சேகரிப்பு மையங்களுக்கு அனுப்பியுள்ளது.</p> <h2>கங்கோத்ரி</h2><p>ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷ் மட்டுமல்லாது, கங்கை நதி உற்பத்தியாகும் இமயமலைப் பகுதியான கங்கோத்ரியிலும் இதே போன்ற சூழலே நிலவுகிறது.</p><p>பிளாஸ்டிக் தடை செய்யப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்ட கங்கோத்ரிக்கு இந்த ஆண்டு ஆன்மீக பயணமாக சுமார் 57,000 பக்தர்கள் வருகை தந்தனர்.</p><p>இமயமலை சூழலியல் மண்டலத்தில் பக்தர்கள் பெருமளவில் குப்பைகளைக் கொட்டிச் சென்றுள்ளதால் அரிய வகை உயிரினங்களுக்கும் வனப்பகுதிக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.</p><p>யாத்திரைக்குப் பிறகு வனத்துறை நடத்திய சிறப்புத் தூய்மை முகாமில் மட்டும் 57 மூட்டைகள் கொண்ட பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.</p> <h2>கன்வர் யாத்திரை</h2><p>கன்வர் யாத்திரை என்பது வட இந்தியாவில் ஆண்டுதோறும் சிராவண (ஆடி) மாதத்தில் சிவபெருமானை வேண்டி சிவபக்தர்களால் மேற்கொள்ளப்படும் ஒரு முக்கியமான பாதயாத்திரையாகும்.</p><p>இவர்கள் ஹரித்வார், கங்கோத்ரி போன்ற புனிதத் தலங்களுக்கு சென்று கங்கை நீரைச் சேகரித்து, அதனைத் தங்களது தோள்களில் கன்வர் என்ற காவடி போன்ற அமைப்பில் சுமந்து கொண்டு பல நூறு கிலோமீட்டர்கள் நடந்து வந்து உள்ளூர் சிவன் கோயில்களில் உள்ள சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வர்.</p> ]]></content:encoded></item><item><title>ட்ரூத் சோஷியல் API: அதிபர் டிரம்ப்-க்கு எதிராக வழக்குப் பதிவு</title><link>https://www.maalaimalar.com/news/world/donald-trump-sued-over-paid-access-to-truth-social-posts</link><comments>https://www.maalaimalar.com/news/world/donald-trump-sued-over-paid-access-to-truth-social-posts#comments</comments><guid isPermaLink="false">9c427ce3-c5ab-43e3-8108-a56e2f4e4d65</guid><pubDate>Thu, 13 Aug 2026 00:24:43 +0000</pubDate><atom:updated>2026-08-13T00:24:43.090Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>டொனால்டு டிரம்ப்,Donald Trump,Truth API,ட்ரூத்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-26/gewqg8fo/donald.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அதிபர் டிரம்ப்]]></media:title><media:description type="html"><![CDATA[ Donald Trump]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-26/gewqg8fo/donald.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world">அமெரிக்க</a> அதிபர் டொனால்டு டிரம்ப்-இன் 'ட்ரூத் சோஷியல்' தளத்தில், சந்தை நிலவரத்தை மாற்றக்கூடிய சில பதிவுகள் உட்பட, அவரது பதிவுகளுக்கான கட்டண அணுகலை விற்கும் ஒரு புதிய சேவையை முடக்கக் கோரி, இரண்டு ஊடக நிறுவனங்கள் புதன்கிழமை அன்று டொனால்ட் டிரம்ப் மீது வழக்கு தொடர்ந்தன.</p><p>மன்ஹாட்டன் கூட்டாட்சி நீதிமன்றத்தில் இன்டர்செப்ட் மற்றும் ஃப்ரீடம் ஆஃப் தி பிரஸ் ஃபவுண்டேஷன் தாக்கல் செய்துள்ள புகாரானது, <a href="https://www.maalaimalar.com/topic/donald-trump">டிரம்ப்</a> மீடியா &amp; டெக்னாலஜி குரூப் வழங்கும் 'ட்ரூத் ஏ.பி.ஐ.' என்ற சேவையை எதிர்த்து சவால் விடுத்தது. இந்த சேவை, அதிபர் டிரம்பின் சொந்த கணக்கு உட்பட, 10 முக்கிய பிரமுகர்களின் 'ட்ரூத் சோஷியல்' கணக்குகளுக்கான முன்கூட்டிய அணுகலுக்காக மாதத்திற்கு 100,000 டாலர் வரை கட்டணம் வசூலிக்கிறது.</p><h2>ட்ரூத் ஏ.பி.ஐ. தொடக்கம்:</h2><p>வால் ஸ்ட்ரீட், செல்வந்தர்கள் மற்றும் டிரம்ப் ஆகியோரை வளப்படுத்திய அதே வேளையில், நிதி சந்தைகளின் நேர்மையை அது சீர்குலைத்ததா என்பதை விசாரிக்க அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தை, மாசசூசெட்ஸின் ஜனநாயகக் கட்சி செனட்டர் எலிசபெத் வாரன் மற்றும் கலிபோர்னியாவின் ஆடம் ஷிஃப் ஆகியோர் வலியுறுத்திய நான்கு நாட்களுக்கு பிறகு, ஆகஸ்ட் 1-ஆம் தேதி அன்று ட்ரூத் ஏ.பி.ஐ. தொடங்கப்பட்டது.</p><p>பங்குகள், எண்ணெய் மற்றும் பிற சந்தைகளின் விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சுங்க வரிகள் மற்றும் மத்திய கிழக்கு மோதல்கள் போன்ற செய்திகளை வெளியிடுவதற்கு, டிரம்ப் நீண்ட காலமாக 'ட்ரூத் சோஷியல்' தளத்தை பயன்படுத்தி வருகிறார்.</p><p>புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, கட்டண சேவை இருக்கும் வரை, வெள்ளை மாளிகை தனது அதிகாரப்பூர்வ அரசாங்க அறிவிப்புகளை 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பிரத்தியேகமாக பதிவிடுவதை தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.</p><h2>ஆழமான ஊழல்:</h2><p>இதுகுறித்த புகாரில், சந்தாதாரர்கள் பதிவு செய்யும்போது அதிபதிர் நிதி ஆதாயம் அடைவதால், ட்ரூத் ஏ.பி.ஐ. சேவை "ஆழமான ஊழல் நிறைந்தது" என்று மனுதாரர்கள் குறிப்பிட்டனர்.</p><p>டிரம்பின் அறிவிப்புகளை அனைவரும் சமமாக அணுகும் உரிமை பெற்றிருப்பதாலும், டிரம்பின் பதிவுகளை தனியார் சந்தாதாரர்களுக்கு விற்று அவரை லாபம் ஈட்ட அனுமதிப்பதில் அரசாங்கத்திற்கு முறையான ஆர்வம் எதுவும் இல்லாததாலும், அந்த சேவை அமெரிக்க அரசியலமைப்பின் முதல் திருத்தத்தை மீறுவதாகவும் அவர்கள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>விபத்தில் சிக்கிய அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் - 2 பேர் பலி</title><link>https://www.maalaimalar.com/news/world/2-killed-after-us-army-apache-helicopter-crashes-in-texas</link><comments>https://www.maalaimalar.com/news/world/2-killed-after-us-army-apache-helicopter-crashes-in-texas#comments</comments><guid isPermaLink="false">1b5a1fd6-8efa-4def-a011-fdd6f46ba588</guid><pubDate>Wed, 12 Aug 2026 23:44:53 +0000</pubDate><atom:updated>2026-08-12T23:44:53.443Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>helicopter crash,ஹெலிகாப்டர் விபத்து,அமெரிக்க ராணுவம்,டெக்சாஸ்,texas,US army</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/jmv0yj16/Helicopter-Crash.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Helicopter Crash]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/jmv0yj16/Helicopter-Crash.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய டெக்சாஸ் வயல்வெளி ஒன்றில் புதன்கிழமையன்று ராணுவத்தின் அபாச்சி தாக்குதல் ரக <a href="https://www.maalaimalar.com/topic/Helicopter-Crash">ஹெலிகாப்டர்</a> ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த இருவரும் உயிரிழந்தனர். மேலும், இதனால் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக பல வீடுகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர் என ஷெரிப் அதிகாரி தெரிவித்தார்.</p><p>அருகில் உள்ள ஃபோர்ட் ஹூட் அதிகாரிகள், ஏ.எச். 64 அபாச்சி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக அறிவித்தனர். பெல் கவுண்டி ஷெரிஃப் அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் கிளிஃப் கோல்மன், அதில் இருந்த இருவரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினார்.</p><h2>விசாரணை தீவிரம்:</h2><p>விபத்துக்கான காரணம் உடனடியாக அறிவிக்கப்படவில்லை. ஃபோர்ட் ஹூட்டின் குற்றப் புலனாய்வுப் பிரிவு விபத்து விசாரணையை முன்னெடுத்து வருவதாக கோல்மன் தெரிவித்தார். ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானபோது எந்த வீடுகளின் மீதோ அல்லது பிற கட்டிடங்களின் மீதோ மோதவில்லை என்று கோல்மன் கூறினார்.</p><p>அது ஒரு பயங்கரமான விபத்து என்பதைப் பார்க்க முடிந்தது, என்று கோல்மன் கூறினார்.</p><p>"அந்த இடத்தைப் பாதுகாப்பதும், முதற்கட்ட மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதுமே எங்களின் உடனடி முன்னுரிமையாகும்," என்று தற்காலிகத் தளபதியான பிரிகேடியர் ஜெனரல் ஈதன் டைவன் கூறினார். "மேலதிக தகவல்களுக்காக நாங்கள் காத்திருக்கும் வேளையில், எங்கள் எண்ணங்கள் மீட்புக் குழுவினருடனும் அவர்களது குடும்பத்தினருடனும் உள்ளன."</p><h2>கட்டுக்கடங்காத தீ:</h2><p>விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் ஃபோர்ட் ஹுட் (Fort Hood) தளத்தை மையமாக கொண்டது என்று ராணுவம் தெரிவித்துள்ளது. அபாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்கள் இருவர் அமரக்கூடிய வகையை சேர்ந்தவை.</p><p>உள்ளூர் நேரப்படி மதியம் 1:30 மணிக்குப்பிறகு, ஹெலிகாப்டர் விபத்து குறித்த '911' அவசர அழைப்பு ஒன்று தங்களுக்கு வந்ததாக ஷெரிப் அலுவலகம் தெரிவித்தது. இந்த விபத்தினால் புல்வெளியில் தீப்பிடித்தது; ஷெரிப் அலுவலக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தடைந்தபோது அந்தத் தீ "கட்டுக்கடங்காத" நிலையில் இருந்தது.</p>]]></content:encoded></item><item><title>ரசிகர்கள் காட்டும் அன்பை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது - இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/yuvan-shankar-raja-said-he-is-happy-with-fans-love</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/yuvan-shankar-raja-said-he-is-happy-with-fans-love#comments</comments><guid isPermaLink="false">8141db5b-a590-4833-b03b-1bf2ea2b289b</guid><pubDate>Wed, 12 Aug 2026 23:14:17 +0000</pubDate><atom:updated>2026-08-12T23:14:17.328Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Yuvan Shankar Raja,யுவன் சங்கர் ராஜா,பியார் பிரேமா கல்யாணம்,pyar prema kalyanam</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/xvdy6rpo/Yuvan.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Yuvan ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/xvdy6rpo/Yuvan.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இயக்குநர் இளன் நடிப்பில் உருவாகி இருக்கும் "பியார் பிரேமா கல்யாணம்" <a href="https://www.maalaimalar.com/cinema">திரைப்படம்</a> ரிலீசுக்கு தயாராகி வருகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய இசையமைப்பாளர் <a href="https://www.maalaimalar.com/topic/yuvan-shankar-raja">யுவன் சங்கர் ராஜா</a>, தான் இந்தப் படத்தை பார்த்துவிட்டதாக தெரிவித்தார்.</p><p>தொடர்ந்து பேசிய அவர், ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் தொடங்கிய ஒரு விஷயம் இப்போதும் தொடர்கிறது. பொதுவாக ஒரு படத்தின் ஆரம்பத்தில் இரண்டு அல்லது மூன்று பாடல்களைத்தான் அறிவிப்பார்கள். ஆனால் படம் முடியும் நேரத்தில் 13, 14 டிராக்குகள் இருக்கும். ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் முதலிலேயே முழு டிராக் லிஸ்ட்டையும் அறிவித்தோம். அதே மாதிரியான விஷயத்தை இந்தப் படத்திலும் செய்திருக்கிறோம்.</p><p>இது இப்போது இளனுடன் இணைந்த ஒரு ட்ரெண்ட் மாதிரி ஆகிவிட்டது. பாடல்கள் தொடர்ந்து வெளியாகி, சமூக வலைதளங்களிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.</p><h2>மகிழ்ச்சி:</h2><p>இந்தப் பாடலுக்கு ரசிகர்களிடம் இருந்து வரும் அனைத்து ரியாக்ஷன்களும் பாசிட்டிவாக இருக்கின்றன. நான் கமெண்ட்ஸ் உள்ளிட்டவற்றை படித்துக்கொண்டிருக்கிறேன். ரசிகர்கள் காட்டும் அன்பை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.</p><p>மேலும், இந்தப் படத்தை நான் முழுமையாகப் பார்த்துவிட்டேன். படம் மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது. ஒரு நல்ல என்டர்டெயினராக இருக்கிறது. குடும்பத்துடன் சேர்ந்து பார்த்து ரசிக்கக்கூடிய படமாக இது இருக்கும். இந்தப் படம் ரசிகர்களின் பிளே லிஸ்ட்டில் தொடர்ந்து இடம்பெறும் படமாகவும், மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் படமாகவும் இருக்கும் என்று நினைக்கிறேன். படம் மிகவும் அருமையாக வந்திருக்கிறது,” என்று கூறினார்.</p><p>இளன் இயக்குநராக மட்டுமின்றி இப்படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமாகிறார். அவருடன் சான்வீ மேக்னா கதாநாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், செந்தில், மாறன், டீப்ஸ் சைரஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.</p><h2>நெட்ஃப்ளிக்ஸ் ரிலீஸ்:</h2><p>யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் காதல் மற்றும் குடும்ப உணர்வுகளுக்கு கூடுதல் வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.</p><p>காதல், குடும்பம், நகைச்சுவை மற்றும் திருமண வாழ்க்கையின் எதிர்பாராத திருப்பங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 21 முதல் உலகம் முழுவதும் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஹூதிக்களை குறி வைத்த அமெரிக்க தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் 153 பேர் உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/us-strikes-targeting-houthis-killed-153-civilians-in-yemen-last-year</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-strikes-targeting-houthis-killed-153-civilians-in-yemen-last-year#comments</comments><guid isPermaLink="false">bbace9ee-13bf-4c5e-a09a-1669baf82fe2</guid><pubDate>Wed, 12 Aug 2026 21:29:38 +0000</pubDate><atom:updated>2026-08-12T21:29:38.400Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Yemen,Houthi,us</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/4j3x1sqz/us-attacks-houthis.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ us attacks houthis]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/4j3x1sqz/us-attacks-houthis.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/donald-trump">டிரம்ப்</a> நிர்வாகத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் போது பொதுமக்கள் உயிரிழப்பது குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஆண்டு ஏமனில் ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து நடத்தப்பட்ட <a href="https://www.maalaimalar.com/news/world">அமெரிக்க</a> வான்வழித் தாக்குதல்களில் 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக பென்டகன் ஆய்வு தெரிவித்தது.</p><p>'அசோசியேட்டட் பிரஸ்' (AP) செய்தி நிறுவனத்தால் பெறப்பட்ட இந்த ரகசியமற்ற மதிப்பீட்டு அறிக்கை, பொதுமக்கள் உயிரிழப்புகள் குறித்த வருடாந்திர அறிக்கையின் ஒரு பகுதியாக அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட்டது. இது குறித்து 'என்பிசி நியூஸ்' (NBC News) ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது. </p><h2>வான்வழித் தாக்குதல்:</h2><p>ஹூதிகளுக்கு எதிரான அமெரிக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஏப்ரல் 2025-இல் நடத்தப்பட்ட மூன்று வான்வழித் தாக்குதல்கள் மீது இந்த பென்டகன் ஆய்வு கவனம் செலுத்தியது. சூயஸ் கால்வாய் மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிக்கும், இஸ்ரேலுக்கும் செல்லும் மிக முக்கியமான உலகளாவிய வர்த்தக பாதையான செங்கடலில் வணிக கப்பல்கள் மீது இந்த ஆயுதமேந்திய குழுவினர் தாக்குதல் நடத்தி வந்தனர்.</p><p>கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமனின் தலைநகரான சனா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள், அத்துடன் ராஸ் இசா துறைமுகம் ஆகியவற்றில் இருந்த எதிரி படைகளை அந்த தாக்குதல்கள் குறிவைத்ததாக அறிக்கை தெரிவித்தது. இதில் மொத்தம் 153 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 243 பேர் காயமடைந்தனர்.</p><h2>80 பேர் உயிரிழப்பு:</h2><p>துறைமுகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலே மிகவும் மோசமானதாக அமைந்தது; இதில் 80 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 171 பேர் காயமடைந்தனர். இத்தாக்குதல் வானத்தை நோக்கிப் பெரும் தீப்பிழம்புகளை எழுப்பியதுடன், எரிபொருள் டேங்கர் லாரிகளை எரிந்துபோன சிதைவுகளாக மாற்றியது. </p><p>தாக்குதலுக்குப் பிந்தைய காட்சிகளை ஹூதிகள் தங்கள் 'அல்-மசிரா' செயற்கைக்கோள் செய்தி சேனலில் ஒளிபரப்பினர்; அதில் துறைமுக பகுதியில் உடல்கள் சிதறிக் கிடப்பது காட்டப்பட்டது.</p><p>மத்திய கிழக்கில் இராணுவ நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் அமெரிக்க மத்திய கட்டளை மையம், அந்த நேரத்தில், "இந்தத் தாக்குதல் ஏமன் மக்களைப் பாதிக்கும் நோக்கில் நடத்தப்படவில்லை" என்று கூறியது.</p>]]></content:encoded></item><item><title>இந்தியா - வங்கதேச எல்லையில் பாக். உளவாளி அதிரடி கைது!</title><link>https://www.maalaimalar.com/news/national/spy-from-pak-arrested-near-bangladesh-border</link><comments>https://www.maalaimalar.com/news/national/spy-from-pak-arrested-near-bangladesh-border#comments</comments><guid isPermaLink="false">ceb6ea7e-be7a-4f75-9881-c4834626df7e</guid><pubDate>Wed, 12 Aug 2026 20:55:49 +0000</pubDate><atom:updated>2026-08-12T20:55:49.118Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Pakistan,spy,உளவாளி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/tqcdnj6u/ind-ban-border.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ind ban border]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/tqcdnj6u/ind-ban-border.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/india">இந்தியா</a> - வங்கதேசம் எல்லைப் பகுதிக்கு அருகே, பாகிஸ்தான் நாட்டவர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் உட்பட இரண்டு பேரை <a href="https://www.maalaimalar.com/news/national">மேற்கு வங்க</a> சிறப்பு அதிரடிப்படை கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>பாகிஸ்தானின் பைசலாபாத்தை சேர்ந்த ராணா ரவுஃப் என்ற வஹாப் ஆலம், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் ஹப்ரா பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.</p><h2>தேடுதல் வேட்டை:</h2><p>கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், பங்காவோன் அருகே உள்ள ஹப்ரா பகுதியில் சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் தேடுதல் வேட்டை நடத்தி ரவுஃபை கைது செய்ததாக அவர்கள் தெரிவித்தனர்.</p><p>ரவுஃபிற்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.-யுடன் தொடர்பு இருப்பதாக புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர் என்றும், இந்தியாவில் அவரது செயல்பாடுகள், தொடர்புகள் மற்றும் நடமாட்டங்களை விசாரித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>கொல்கத்தாவின் டாப்சியாவில் செவ்வாயன்று கைது செய்யப்பட்ட முகமது எஜாஸ் என அடையாளம் காணப்பட்ட மற்றொரு நபருக்கு, ரவுஃபுடன் நேரடித் தொடர்பு இருந்ததாகவும், அவர் இந்திய அடையாள அட்டைகளைப் பெற உதவியதாகவும் கூறப்படுகிறது என அவர்கள் தெரிவித்தனர், ஆனால் அவரது அடையாளத்தை வெளியிடவில்லை.</p><h2>ரகசிய தகவல்:</h2><p>"போங்கான் எல்லையை நோக்கி ரவுஃப் நகர்வது குறித்த குறிப்பிட்ட தகவல்கள் எங்களுக்குக் கிடைத்தன. அதனையடுத்து, ஹப்ரா பகுதியில் உள்ள ஜெஸ்ஸோர் சாலையில் அவரை கைது செய்தோம். ஐ.எஸ்.ஐ.-யுடன் அவருக்கு உள்ளதாகக் கூறப்படும் தொடர்புகள், அவர் இந்திய அடையாள ஆவணங்களை பயன்படுத்தியது, மற்றும் அவர் வங்கதேசத்திற்குள் நுழைய முயன்றாரா என்பது குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம்.</p><p>இந்தியாவுக்குள் நுழைவதற்கு முன்பு அவர் சிறிது காலம் நேபாளத்தில் தங்கியிருந்தார், பின்னர் மேற்கு வங்கத்தில் குடியேறினார். அவரிடமிருந்து பல இந்திய அடையாள அட்டைகள் மீட்கப்பட்டன. அவரிடமிருந்து கண்டெடுக்கப்பட்ட ஆதார் அட்டையில் டாப்சியா முகவரி இருந்தது," என்று சிறப்பு அதிரடிப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.</p><h2>சட்டவிரோத என்ட்ரி:</h2><p>புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, ரவுஃப் 2012-இல் நேபாளம் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தார்.</p><p>ரவுஃப், நாட்டில் உள்ள பல்வேறு ரயில்கள் மற்றும் ஆயுதப் படைகளின் நடமாட்டங்களைக் கண்காணித்து வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். முக்கியத்துவம் வாய்ந்த வில்லியம் கோட்டை உட்பட, கொல்கத்தாவில் உள்ள முக்கிய இடங்களை ரவுஃப் கண்காணித்து வந்ததை சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் கண்டறிந்தனர்.</p><p>ராணா தனது கைபேசியை அழித்துவிட்டதாகவும், அவர் கைது செய்யப்பட்டபோது அவரிடமிருந்து எந்த மின்னணு சாதனமும் மீட்கப்படவில்லை என்றும் அந்த அதிகாரி கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மேற்கு வங்கம் பெயரை &quot;பச்சிம் பங்கா&quot; என மாற்ற வேண்டும் - பா.ஜ.க. எம்.பி. வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/national/bjp-mp-wants-bengal-renamed-paschim-banga</link><comments>https://www.maalaimalar.com/news/national/bjp-mp-wants-bengal-renamed-paschim-banga#comments</comments><guid isPermaLink="false">d1bcc092-44b1-4784-8686-2dea327bb2dc</guid><pubDate>Wed, 12 Aug 2026 20:17:40 +0000</pubDate><atom:updated>2026-08-12T20:17:40.341Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,மேற்கு வங்கம்,bjp mp,west bengal,Paschim Banga,பச்சிம் பங்கா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/5ranzsrw/Samik-Bhattacharya.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Samik Bhattacharya]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/5ranzsrw/Samik-Bhattacharya.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national">மேற்கு வங்க</a> மாநிலத்தின் பெயர் அதன் வரலாறு மற்றும் 1947-இல் அது உருவாக்கப்பட்ட சூழ்நிலைகளுடன் தொடர்புடையது என்று கூறி, அம்மாநிலத்திற்கு 'பச்சிம் பங்கா' எனப் பெயர் மாற்றப்பட வேண்டும் என <a href="https://www.maalaimalar.com/topic/bjp">பா.ஜ.க.</a> மாநிலங்களவை உறுப்பினர் சமிக் பட்டாச்சார்யா கோரிக்கை விடுத்தார்.</p><p>கேரளாவை 'கேரளம்' என பெயர் மாற்றம் செய்ய முன்மொழியும் கேரள (பெயர் மாற்றம்) மசோதா, 2026 மீதான மாநிலங்களவை விவாதத்தில் பங்கேற்ற பட்டாச்சார்யா, தென்னிந்திய மாநில மக்கள் இந்த பெயர் மாற்றத்திற்காக பல தசாப்தங்களாக போராடி வருகின்றனர் என்று கூறி அதனை வரவேற்றார்.</p><h2>பிரதமருக்கு பாராட்டு:</h2><p>கேரள மக்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, இந்த நடவடிக்கைக்கு வழிவகுத்ததற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கும் பட்டாச்சார்யா பாராட்டு தெரிவித்தார்.</p><p>மேற்கு வங்கத்தில் இருந்த முந்தைய திரிணாமூல் காங்கிரஸ் அரசை குறிவைத்து பேசிய பட்டாச்சார்யா, மாநில சட்டமன்றத்தில் தங்கள் கட்சிக்கு பெரும்பான்மை இருந்த ஒரே காரணத்திற்காக, மாநிலத்திற்கு வங்காளம் என பெயர் மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார்.</p><p>"1947 ஜூன் 20 அன்று ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் தலைமையில் மேற்கு வங்காளம் உருவானது. வங்காள இந்துக்களின் நலனுக்காக ஒரு தனி மாநிலம் தேவை என்று காங்கிரஸ் கூட கூறியிருந்தது. மேற்கு வங்கம் என்பது வெறும் பெயர் மட்டுமல்ல; அதற்கு ஒரு வரலாறு உண்டு. அதன் பெயரை 'பச்சிம் பங்கா' என மாற்ற வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்," என்று பட்டாச்சார்யா கூறினார்.</p><h2>ஏற்றுக்கொள்ள முடியாதது:</h2><p>மேற்கு வங்கத்தின் பெயரை வங்காளம் என மாற்றுவது, வங்காள இந்துக்களுக்கு தனி மாநிலத்திற்காக போராடியவர்களை அவமதிப்பதாக அமையும் என்று அவர் கூறினார்.</p><p>சி.பி.ஐ. நிறுவன உறுப்பினர் முசாஃபர் அகமதுவின் சுயசரிதையைக் குறிப்பிட்டு, பங்கிம் சந்திர சட்டர்ஜியின் வந்தே மாதரம் மற்றும் ஆனந்தமடம் ஆகியவை வெறுப்பு நிறைந்தவை என்று அகமது விவரித்திருந்ததாக அவர் கூறினார்.</p><p>"வந்தே மாதரம் மற்றும் ஆனந்தமடம் வெறுப்பு நிறைந்தவை. என்னைப் போன்ற ஒரு முஸ்லிமுக்கு இது ஏற்றுக்கொள்ள முடியாதது," என்று பட்டாச்சார்யா கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>டி.என்.பி.எல்.: திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மதுரை அணி அபார வெற்றி</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-mp-beat-dd-by-21-runs</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-mp-beat-dd-by-21-runs#comments</comments><guid isPermaLink="false">6fb4cee5-4354-4f4e-963a-c4678ba49f58</guid><pubDate>Wed, 12 Aug 2026 19:06:58 +0000</pubDate><atom:updated>2026-08-12T19:06:58.325Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,திண்டுக்கல் டிராகன்ஸ்,Dindigul Dragons,madurai panthers,மதுரை பேந்தர்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/pv65osd2/Madurai-Panthers-Win.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Madurai Panthers]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/pv65osd2/Madurai-Panthers-Win.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>10-ஆவது <a href="https://www.maalaimalar.com/topic/tnpl">டி.என்.பி.எல்.</a> டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முறை தொடரின் அனைத்து போட்டிகளும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.</p><p>இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற 15-ஆவது லீக் ஆட்டத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/madurai-panthers">மதுரை பேந்தர்ஸ்</a> மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற  திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து, மதுரை பேந்தர்ஸ் முதலில் பேட்டிங் செய்தது.</p><h2>அதிரடி தொடக்கம்:</h2><p>மதுரை அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கிய ராம் அரவிந்த் 15 பந்துகளில் 40 ரன்களை (3 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) குவித்தார். இவருடன் களமிறங்கிய சத்தார்த் மகாதேவன் 17 பந்துகளில் 22 ரன்களை (3 பவுண்டரிகள், 1 சிக்சர்) எடுத்தார். என்.எஸ். சதுர்வேத் 31 பந்துகளில் 42 ரன்களை (3 பவுண்டரிகள், 1 சிக்சர்) அடித்தார்.</p><p>அடுத்து களமிறங்கியவர்களில் அத்திக் உர் ரஹ்மான் 19 பந்துகளில் 26 ரன்களை அடித்தார். பி சரவணன் 11 பந்துகளில் 12 ரன்கள் (1 சிக்சர்), குர்ஜப்நீத் சிங் 6 பந்துகளில் 13 ரன்கள் (1 பவுண்டரி, 1 சிக்சர்) அடித்தார். 18 ஓவர்கள் முடிவில் மதுரை பேந்தர்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை குவித்தது.</p><p>திண்டுக்கல் டிராகன்ஸ் சார்பில் சந்தீப் வாரியர் மற்றும் விஜு அருள் தலா 2 விக்கெட்டுகளையும், புவனேஸ்வரன் 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.</p><h2>டிராகன்ஸ் ஏமாற்றம்:</h2><p>சற்றே கடின இலக்கை துரத்திய திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு ஓரளவு நல்ல தொடக்கம் கிடைத்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய சிவம் சிங் 26 பந்துகளில் 40 ரன்களையும் (4 பவுண்டரிகள்,  2 சிக்சர்கள்), வி.கே. வினீத் 19 பந்துகளில் 28 ரன்களையும் (4 பவுண்டரிகள், 1 சிக்சர்) எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர்.</p><p>பின்னர் களமிறங்கியவர்களில் விமல் குமார் மற்றும் மோகித் மிட்டன் தலா 17 ரன்களும், ஹூனி சைனி 20 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். போட்டியின் முடிவில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 150 ரன்களை மட்டுமே எடுத்தது. </p><p>இதனால், மதுரை பேந்தர்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. திண்டுக்கல் டிராகன்ஸ் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ரோஹன் பத்ரா 2 விக்கெட்டுகளையும், குர்ஜப்நீத் சிங், சரவணன், கணேஷன் பெரியசாமி மற்றும் ராஜலிங்கம் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.</p>]]></content:encoded></item><item><title>அயர்லாந்துக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தான் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/afghanistan-beat-ireland-by-42-runs</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/afghanistan-beat-ireland-by-42-runs#comments</comments><guid isPermaLink="false">d34e1dbe-61b6-4f64-8f6a-0b43c6a7ea9e</guid><pubDate>Wed, 12 Aug 2026 18:44:10 +0000</pubDate><atom:updated>2026-08-12T18:44:10.644Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Ibrahim Zadran,IREvAFG,அயர்லாந்து ஆப்கானிஸ்தான் தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/5aclc02p/Afghanistan-Win-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Afghanistan Win]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/5aclc02p/Afghanistan-Win-1.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/sports/cricket">ஆப்கானிஸ்தான்</a> அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. தொடரின் முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. </p><p>2-ஆவது மற்றும் 3-ஆவது ஒருநாள் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 4-ஆவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற <a href="https://www.maalaimalar.com/topic/irevafg">அயர்லாந்து</a> அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.</p><h2>ஆப்கன் பேட்டிங்:</h2><p>ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கிய ரஹ்மனுல்லா குர்பாஸ் 12 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இவருடன் களமிறங்கிய இப்ராகிம் ஜட்ரன் அதிரடியாக ஆடி சதம் விளாசினார். </p><p>இவருடன் ஆடிய செடிகுல்லா சதம் விளாசினார். ஜட்ரன் 118 பந்துகளில் 107 ரன்கள் (11 பவுண்டரிகள், 1 சிக்சர்), செடிகுல்லா 120 பந்துகளில் 143 ரன்களை (17 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) விளாசினார்.</p><p>2-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த இந்த ஜோடி 231 ரன்கள் சேர்த்த நிலையில், இப்ராகிம் ஜட்ரன் 107 ரன்னில் அவுட்டானார். சிறப்பாக ஆடிய செடிகுல்லா அடல் 143 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்தடுத்து களமிறங்கியவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.</p><h2>அயர்லாந்து போராட்டம்:</h2><p>அயர்லாந்து சார்பில் பிரியன் மெக்டொனவ் 3 விக்கெட்டுகளையும், மார்க் அடைர், கேவின் ஹோய் தலா 2 விக்கெட்டுகளையும், லியாம் மெக்கார்த்தி 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 344 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து களமிறங்குகியது.</p><p>கடின இலக்கை துரத்திய அயர்லாந்து அணிக்கு தொடக்க வீரரான ஆன்டி பால்பிர்னி அபாரமாக ஆடினார். இவருடன் களமிறங்கிய கேப்டன் பால் ஸ்டிர்லிங் 27 ரன்களும், கேட் கார்மைக்கேல் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஹேரி டெக்டர் நிதானமாக ஆடி 34 ரன்களை எடுத்த போது தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.</p><p>ஆன்டி பால்பிர்னி சிறப்பாக ஆடி சதம் விளாசினார். இவர் 119 பந்துகளில் 109 ரன்கள் (9 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) எடுத்து தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். பின்னர் களமிறங்கிய குர்டிஸ் கேம்பர் அதிரடியாக ஆடி அரைசதம் கடந்தார். இவர் 46 பந்துகளில் 84 ரன்கள் (8 பவுண்டரிகள், 5 சிக்சர்கள்) எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார்.</p><h2>ஆப்கன் வெற்றி:</h2><p>அடுத்தடுத்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அயர்லாந்து அணி 48 ஓவர்கள் முடிவில் 301 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.</p><p>ஆப்கானிஸ்தான் சார்பில் சிறப்பாக பந்துவீசிய யாமின் அகமதுசாய் 4 விக்கெட்டுகளையும், ரஷித் கான் 3 விக்கெட்டுகளையும், அஸ்மதுல்லா ஓமர்சாய் 2 விக்கெட்டுகளையும், கசன்ஃபர் 1 விக்கெட் வீழ்த்தினர். </p><p>இந்த வெற்றி மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 3-0 கணக்கில் முன்னிலை பெற்று தொடரை கைப்பற்றியது.</p>]]></content:encoded></item><item><title>டி.என்.பி.எல்.: திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு 172 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மதுரை பேந்தர்ஸ்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-mp-set-172-runs-as-target-for-dd</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-mp-set-172-runs-as-target-for-dd#comments</comments><guid isPermaLink="false">7e907ce1-4eb4-4ca3-be19-8c70cbd46534</guid><pubDate>Wed, 12 Aug 2026 17:04:24 +0000</pubDate><atom:updated>2026-08-12T17:04:24.094Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,திண்டுக்கல் டிராகன்ஸ்,Dindigul Dragons,madurai panthers,மதுரை பேந்தர்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/hv7idtjc/MP.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MP Batting]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/hv7idtjc/MP.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>10-ஆவது <a href="https://www.maalaimalar.com/topic/tnpl">டி.என்.பி.எல்.</a> டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முறை தொடரின் அனைத்து போட்டிகளும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.</p><p>இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற 15-ஆவது லீக் ஆட்டத்தில் மதுரை பேந்தர்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற  திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து, <a href="https://www.maalaimalar.com/topic/madurai-panthers">மதுரை பேந்தர்ஸ்</a> முதலில் பேட்டிங் செய்தது.</p><h2>அதிரடி தொடக்கம்:</h2><p>மதுரை அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கிய ராம் அரவிந்த் 15 பந்துகளில் 40 ரன்களை (3 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) குவித்தார். இவருடன் களமிறங்கிய சத்தார்த் மகாதேவன் 17 பந்துகளில் 22 ரன்களை (3 பவுண்டரிகள், 1 சிக்சர்) எடுத்தார். என்.எஸ். சதுர்வேத் 31 பந்துகளில் 42 ரன்களை (3 பவுண்டரிகள், 1 சிக்சர்) அடித்தார்.</p><p>அடுத்து களமிறங்கியவர்களில் அத்திக் உர் ரஹ்மான் 19 பந்துகளில் 26 ரன்களை அடித்தார். பி சரவணன் 11 பந்துகளில் 12 ரன்கள் (1 சிக்சர்), குர்ஜப்நீத் சிங் 6 பந்துகளில் 13 ரன்கள் (1 பவுண்டரி, 1 சிக்சர்) அடித்தார். 18 ஓவர்கள் முடிவில் மதுரை பேந்தர்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை குவித்தது.</p><p>திண்டுக்கல் டிராகன்ஸ் சார்பில் சந்தீப் வாரியர் மற்றும் விஜு அருள் தலா 2 விக்கெட்டுகளையும், புவனேஸ்வரன் 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.</p>]]></content:encoded></item><item><title>மல்லையாவின் வழக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்: அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு </title><link>https://www.maalaimalar.com/news/national/court-orders-ed-to-clarify-mallya-case</link><comments>https://www.maalaimalar.com/news/national/court-orders-ed-to-clarify-mallya-case#comments</comments><guid isPermaLink="false">a275de66-4b2b-45a7-8e32-398593875326</guid><pubDate>Wed, 12 Aug 2026 16:49:06 +0000</pubDate><atom:updated>2026-08-12T16:49:06.060Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய் மல்லையா,Vijay mallaya,kingfisher,கிங்ஃபிஷர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/g6wujden/Untitled-design-40.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமலாக்கத்துறைக்கு சமரச நிலை தெளிவுபடுத்த பம்பாய் உயர்நீதிமன்றம் உத்தரவு]]></media:title><media:description type="html"><![CDATA[ Vijay Mallya Case]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/g6wujden/Untitled-design-40.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தொழிலதிபர் விஜய் மல்லையாவிடம் இருந்து நிலுவைத் தொகையை வசூலிப்பது தொடர்பான நீண்டகாலப் பிரச்சினைக்கு, ஒரு முடிவுகட்டப்பட வேண்டும் என்று பம்பாய் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.</p><h3><strong>விஜய் மல்லையாவின் நீதிமன்ற வழக்கு</strong> </h3><p>ஜூலை 2015-ல், ஐடிபிஐ வங்கி தலைமையிலான வங்கிகளின் கூட்டமைப்பிடமிருந்து கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் பெற்ற கடன்களில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக, மத்திய புலனாய்வுப் பிரிவின் வங்கிப் பத்திரங்கள் மற்றும் மோசடி பிரிவு மல்லையா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.</p><p>அவர் மீது குற்றச் சதி, குற்றவியல் நம்பிக்கை மீறல் மற்றும் குற்றவியல் முறைகேடு ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.</p><p>கடன்களைத் திருப்பிச் செலுத்தத் தவறியது, மோசடி, பணமோசடி மற்றும் அந்தக் கடன்கள் தொடர்பான நிதி முறைகேடுகள் குறித்து மல்லையா மீது இந்தியாவில் பல சட்ட வழக்குகள் தொடரப்பட்டது. </p><p>இதையடுத்து விஜய் மல்லையா, 2016 மார்ச் மாதம் இந்தியாவை விட்டு வெளியேறி, அன்று முதல் இங்கிலாந்தில் வசித்து வருகிறார். குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்காக இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவதை அவர் எதிர்த்து வருகிறார்.</p><p>தலைமறைவான மல்லையாவின் கடன்களை மீட்பதற்காக அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை, எஸ்பிஐ தலைமையிலான கூட்டமைப்பு பயன்படுத்தி கொள்ள, தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று அமலாக்கத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது.</p><p>2018-ல் வெளிநாட்டு உரிமை மீறல் தடுப்புச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு, அச்சட்டத்தின் கீழ் மல்லையா மீது நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, அவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.</p><p>இங்கிலாந்து நீதிமன்றங்கள் அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த ஒப்புதல் அளித்திருந்த போதிலும், அவர் அரசியல் தஞ்சம் கோருவதற்கான ஒரு விண்ணப்பத்தை பயன்படுத்தி தொடர்ந்து இங்கிலாந்தில் வசித்து வருகிறார்.</p><p>கடந்த 2020-ஆம் ஆண்டு மல்லையாவின் செலுத்தப்படாத நிலுவைத் தொகையை வசூலிப்பதற்காக, அமலாக்க இயக்குநரகத்தால் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை பயன்படுத்திக்கொள்ள, பாரத ஸ்டேட் வங்கி (SBI) தலைமையிலான கடன் வழங்கும் வங்கிகளின் கூட்டமைப்பிற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.</p><p>இந்த பணமோசடி தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, மல்லையா வழக்கு தொடர்ந்து இருந்தார்.</p><h3><strong>மல்லையா தரப்பு வழக்கறிஞர்</strong></h3><p>இந்த வழக்கில் இன்று, மல்லையா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அமித் தேசாய், சமரசப் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்தபோது 2020-ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டதாகவும், அதில் குறிப்பிட்ட சொத்துக்களுக்கு பாதுகாப்பு கோரப்பட்டிருந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.</p><p>இருப்பினும், குறிப்பிடப்பட்ட பெரும்பாலான சொத்துக்கள் ஏற்கனவே முடக்கப்பட்டு, அவை தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டதால், அந்த மனு இனி செல்லுபடியாகாது என்றும் தேசாய் வாதிட்டார்.</p><p>மேலும் அவர், “பொதுத்துறை வங்கிகள் இந்த விஷயத்தை நிலுவையில் வைத்திருப்பது முறையானது கிடையாது. ஆரம்பத்தில் கோரப்பட்ட ரூ.6,203.35 கோடி நிலுவைத் தொகை மற்றும் வட்டிக்கு எதிராக, வங்கிகள் ஏற்கனவே மல்லையாவிடமிருந்து சுமார் ரூ.15,000 கோடியை வசூலித்துவிட்டது.</p><p>ரிசர்வ் வங்கியின் தணிக்கை அறிக்கை, இது ஒரு விமான நிறுவனத்தின் வணிகத் தோல்வி மட்டுமே என்று கூறுகிறது. வங்கிகள் ரூ. 15,000 கோடியை எடுத்துக்கொண்டன, இப்போது மன்னிப்பு கேட்கின்றன. இது போதாது,” என்று மல்லையாவின் வழக்கறிஞர் வாதாடினார்.</p><h3>நீதிமன்ற உத்தரவு</h3><p>இந்த நிலையில் வழக்கு நீதிபதி ஜாதவ் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “உண்மையில், இந்தப் பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.</p><p>சமரசப் பேச்சுவார்த்தை முடிவடைந்துவிட்டதா என்பதைத் தெளிவுபடுத்தும் பிரமாணப் பத்திரத்தைத் அமலாக்கத்துறை தாக்கல் செய்ய வேண்டும்.</p><p>அதேவேளையில், இது மல்லையா மீதான குற்றவியல் வழக்கைப் பாதிக்காமல், தர்க்கரீதியான முடிவுக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும்” என்றும் நீதிபதி கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>புதுச்சேரி காவல்துறையினர் குண்டர்கள் போல் நடந்து கொள்கிறார்கள் -  செளரவ் தாஸ் குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/national/puducheri-police-act-like-thugs-saurav-das-accusation</link><comments>https://www.maalaimalar.com/news/national/puducheri-police-act-like-thugs-saurav-das-accusation#comments</comments><guid isPermaLink="false">8c3fd852-e54a-44bb-9c34-a82b08c3a58a</guid><pubDate>Wed, 12 Aug 2026 16:47:38 +0000</pubDate><atom:updated>2026-08-12T16:47:38.797Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Cockroach Janata Party,abhijeet dipke,அபிஜீத் தீப்கே,காக்ரோச் ஜனதா கட்சி,Saurav Das,செளரவ் தாஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/v4d571ko/Untitled-design-41.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ புதுச்சேரி காவல்துறை குண்டர்கள் போல நடந்து கொள்கிறார்கள்.]]></media:title><media:description type="html"><![CDATA[ Saurav das - Abhijeet dhipke]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/v4d571ko/Untitled-design-41.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>புதுச்சேரி காவல்துறை தனது குடும்பத்தின் வீட்டுக்கு வந்து, குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தியதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் தெரிவித்தார்.</p><p>பாஜக அரசின் உத்தரவின் பேரில் இந்த தொந்தரவு மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.</p><h3><strong>செளரவ் தாஸ் பேட்டி</strong></h3><p>இதுகுறித்து தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், “இரண்டு மணி நேரத்திற்கு முன்பு, புதுச்சேரி காவல்துறையினர் என் குடும்ப வீட்டிற்கு வந்து, அவர்களிடம் பலவிதமான விசாரணைகளை மேற்கொண்டனர்.</p><p>இவ்வாறு தொந்தரவு செய்வதற்கு யார் உத்தரவிட்டது, என்ன நோக்கத்திற்காக இது நடத்தப்பட்டது. இது தான் சட்ட நடைமுறையா? </p><p>புதுச்சேரியில் உள்ள பாஜக அரசு ஏன் என் குடும்பத்தை அச்சுறுத்துகிறது? இது புதுச்சேரி அரசின் குணம் அல்ல. இது மத்திய அரசின் தூண்டுதலின் பேரில் செய்யப்படுகிறது.</p><p>என்னை மிரட்டி அமைதியாக்குவதே நோக்கம் என்றால், அது பலிக்காது. இது என்னை அச்சுறுத்தி பணிய வைக்காது. காவல்துறையினர் குண்டர்களைப் போல செயல்படாமல், சட்டத்தை நிலைநாட்டும் வகையில் செயல்பட வேண்டும்.</p><p>தலைமை நீதிபதியின் இரண்டு நாள் கூட்டத்திற்காக மகாராஷ்டிராவில் இருந்தபோது, ​​சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு, 15 முதல் 20 யூடியூபர்கள் மற்றும் ஊடக சேனல்கள் எனது தனியுரிமையை மீறி டெல்லியில் உள்ள எனது வீட்டிற்குள் நுழைந்தனர்.</p><p>அவர்கள் உள்ளிருந்து காட்சிகளைப் பதிவுசெய்து காண்பித்துக் கொண்டிருந்தனர். இது தனது குடும்பத்திற்கு ஒரு கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தலாக உள்ளது"என்று அவர் கூறினார்.</p><h3><strong>அபிஜீத் தீப்கே பேட்டி</strong></h3><p>முன்னதாக சிஜேபி நிறுவனர் அபிஜீத் திப்கே, ஜந்தர் மந்தரரின் அடுத்த கட்ட போராட்டம் விரைவில் தொடங்கும் என்று அறிவித்தார்.</p><p>கடந்த மாதம் டெல்லியின் ஜந்தர் மந்தரில் மாணவர்கள் தலைமையில் நடந்த போராட்டங்களைக் குறித்து கருத்து தெரிவித்த அவர், “ஜந்தர்-மந்தரில் அடுத்த அளவிலான போராட்டம் மிக விரைவில் தொடங்கவிருக்கிறது என்பதை நான் அவர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.</p><p>இன்று டெல்லியில் எங்கள் தன்னார்வலர்கள் கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டிருந்தோம். நாங்கள் ஒரு மண்டபத்தைத் தேடிக்கொண்டிருந்தோம், ஆனால் யாரும் எங்களுக்கு வாடகைக்கு இடம் தரவில்லை. மேல் இடத்திலிருந்து அழுத்தம் இருப்பதாக எல்லோரும் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.</p><p>இவை அனைத்தையும் பாஜக செய்து வருகிறது. அவர்களுடைய செயல்களும் வார்த்தைகளும், அவர்கள் நாட்டின் இளைஞர்களுக்கு பயப்படுகிறார்கள் என்பதை தெளிவாகக் காட்டுகின்றன.</p><p>இதுபோன்ற அற்பமான செயல்கள் எங்களைப் பயமுறுத்திவிடும் என்று அவர்கள் நினைத்தால், அவர்கள் மிகவும் தவறாக நினைக்கிறார்கள்.</p><p>ஆரம்பத்தில் எங்களுக்கு தேசிய கவனத்தை ஈர்த்த போராட்டங்களைத் தாண்டியும், தற்போது சிஜேபி தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறது.</p><p>கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதை மையமாகக் கொண்டு, ஆகஸ்ட் 15 அன்று தங்களின் 'பள்ளியைச் சீராக்குங்கள்' பிரச்சாரத்தை சிஜேபி அமைப்பு தொடங்கும்.</p><p>சுதந்திரம் அடைந்து 80 ஆண்டுகளுக்குப் பிறகும், கிராமப்புறக் குழந்தைகள் பள்ளிகளில் அடிப்படை வசதிகளுக்காகக் கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை,” என்று தீப்கே கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>முத்தையா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ‘இருளன்’!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/irulan-starring-arun-vijay-directed-by-muthaiah</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/irulan-starring-arun-vijay-directed-by-muthaiah#comments</comments><guid isPermaLink="false">652b3bdc-a2db-43a5-9098-91ecddd0a1a1</guid><pubDate>Wed, 12 Aug 2026 16:37:59 +0000</pubDate><atom:updated>2026-08-12T16:37:59.188Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Arun vijay,Muthaiah,முத்தையா,அருண் விஜய்,Irulan,இருளன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/8ym7hq8e/New-Project-2026-08-12T220451.813.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முத்தையா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ‘இருளன்’!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/8ym7hq8e/New-Project-2026-08-12T220451.813.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முத்தையா எழுத்து மற்றும் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் புதிய படத்திற்கு 'இருளன்' என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் அறிவிப்பு வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. </p><p>நேதாஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் சண்முகவேல் பாண்டியன் படத்தை தயாரிக்கிறார். ஜிப்ரான் படத்திற்கு இசையமைக்கிறார். </p><p>படத்தில் நடிகை மிர்ணா, சமுத்திரக்கனி, ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படம் குறித்த பிற அறிவிப்புகள் அடுத்தடுத்த வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Presenting the first look motion poster of  &#39;IRULAN&#39; for you&#39;ll!! <br><br> <a href="https://x.com/dir_muthaiya?ref_src=twsrc%5Etfw">@dir_muthaiya</a> <a href="https://x.com/s_v_pandian?ref_src=twsrc%5Etfw">@s_v_pandian</a> <a href="https://x.com/Nethajifilm1032?ref_src=twsrc%5Etfw">@nethajifilm1032</a> <a href="https://x.com/thondankani?ref_src=twsrc%5Etfw">@thondankani</a> <a href="https://x.com/mirnaaofficial?ref_src=twsrc%5Etfw">@mirnaaofficial</a> <a href="https://x.com/highonkokken?ref_src=twsrc%5Etfw">@highonkokken</a> <a href="https://x.com/GhibranVaibodha?ref_src=twsrc%5Etfw">@GhibranVaibodha</a> <a href="https://x.com/hashtag/Gopinath_DOP?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Gopinath_DOP</a> <a href="https://x.com/kalaivananoffl?ref_src=twsrc%5Etfw">@kalaivananoffl</a>  <a href="https://x.com/hashtag/Balachander_Art?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Balachander_Art</a> <a href="https://x.com/hashtag/SakthiSaravanan_Stunt?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#SakthiSaravanan_Stunt</a> <a href="https://x.com/Pavan_Reddot?ref_src=twsrc%5Etfw">@Pavan_Reddot</a> <a href="https://x.com/Udaykumar_Mix?ref_src=twsrc%5Etfw">@Udaykumar_mix</a>… <a href="https://t.co/vWaw14Mehi">pic.twitter.com/vWaw14Mehi</a></p>&mdash; ArunVijay (@arunvijayno1) <a href="https://x.com/arunvijayno1/status/2087528524357972364?ref_src=twsrc%5Etfw">August 12, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>வைபவ்வின் ‘மாறு வேஷம்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/release-date-announced-for-vaibhavs-maaru-vesham</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/release-date-announced-for-vaibhavs-maaru-vesham#comments</comments><guid isPermaLink="false">99aee25b-5ee6-4928-a6c3-e1449fc2cc31</guid><pubDate>Wed, 12 Aug 2026 16:18:30 +0000</pubDate><atom:updated>2026-08-12T16:18:30.869Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Vaibhav,வைபவ்,Maaruvesham,மாறுவேஷம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/fkuijukf/New-Project-2026-08-12T214145.165.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வைபவ்வின் ‘மாறு வேஷம்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/fkuijukf/New-Project-2026-08-12T214145.165.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகர் வைபவ்வின் ‘மாறு வேஷம்’ திரைப்படம் அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. </p><p>இயக்குநர் ஸ்ரீனி எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகி உள்ள மாறுவேஷம் திரைப்படத்தில் வைபவ், வியானா, ராம்கி, முனிஸ்காந்த், விவேக் பிரசன்னா, லிவிங்ஸ்டன், ஜார்ஜ் மரியம், இந்துமதி, மு. ராமசாமி, செல் முருகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். </p><p>படத்திற்கு ராஜ்குமார் அமல் இசையமைத்திருக்கிறார்.&nbsp; படத்தை ஒனிரோமான்சி பிக்சர்ஸ் மற்றும் மங்கி மேன் கம்பனி ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் விஜய் ஆனந்த் மற்றும் வைபவ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.</p><p>சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானநிலையில், ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>10 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-government-orders-the-transfer-of-10-ips-officers</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-government-orders-the-transfer-of-10-ips-officers#comments</comments><guid isPermaLink="false">46d5636d-973b-4adc-95cd-2de9a779ad14</guid><pubDate>Wed, 12 Aug 2026 15:52:44 +0000</pubDate><atom:updated>2026-08-12T15:52:44.932Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,Tamil Nadu government,IPS officers,ஐபிஎஸ் அதிகாரிகள்,பணியிட மாற்றம்,transfers</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/pzkntppc/New-Project-2026-08-12T212222.632.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 10 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/pzkntppc/New-Project-2026-08-12T212222.632.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் 10 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி.,</p><p>அபின் தினேஷ் மொடக்கிற்கு பதிலாக சிபிசிஐடி டிஜிபியாக பால நாகதேவி நியமனம் செய்யப்பட்டுள்ளார். </p><p>பால நாகதேவி வகித்த சைபர் கிரைம் ஏடிஜிபி பொறுப்பிற்கு அபின் தினேஷ் மொடக் நியமிக்கப்பட்டுள்ளார். பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபியாக வித்யா ஜெயந்த் குல்கர்னி நியமனம் செய்யப்பட்டுள்ளார். </p><p>சிஐடியின் க்யூ பிராஞ்ச் எஸ்.பி.யாக ராமமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை சிஐடி சிறப்புப் பிரிவு எஸ்பியாக அரவிந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அண்ணா நகர் காவல்நிலைய துணை ஆணையராக அர்பிதா ராஜ்புட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். </p><p>தமிழ்நாடு கமாண்டோ எஸ்.பி.யாக ஈஸ்வரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாகை கடலோர பாதுகாப்புப் பிரிவு எஸ்பியாக செந்தில் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>தீவிரவாத தடுப்புப் பிரிவு எஸ்பியாக சரவணகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையராக ரமேஷ் பாபு நியமனம் செய்யப்பட்டுள்ளார். </p>]]></content:encoded></item></channel></rss>