<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 28 Jul 2026 13:26:55 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-28-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-28-july-2026#comments</comments><guid isPermaLink="false">1e79a0a3-1015-4103-952c-60d74fc8dee8</guid><pubDate>Tue, 28 Jul 2026 04:26:26 +0000</pubDate><atom:updated>2026-07-28T13:26:27.087Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/wjfprp8x/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/wjfprp8x/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/sports/d-gukesh-and-javokhir-sindarov-fide-world-championship-tie-geneva-nov-25-to-dec-15">உலக சாம்பியன்ஷிப் செஸ்: இந்திய வீரர் டி. குகேஷ் உஸ்பெகிஸ்தான் வீரருடன் மோதல்- தேதி அறிவிப்பு</a></p><p>* இந்தியா, அமெரிக்கா மற்றும் சைப்ரஸ் உள்ளிட்ட பல நாடுகள் FIDE உலக சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டின.</p><p>* அனைத்து முன்மொழிவுகளையும் கவனமாகப் பரிசீலித்த பிறகு, நடுநிலையான ஒரு இடத்தில் போட்டியை நடத்த FIDE முடிவு செய்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-cancelled-bihar-tour-realising-bjp-will-lose-bankipur-bypoll-tejashwi">பங்கிபூர் இடைத்தேர்தலில் தோல்வி உறுதி என்பதால் பிரதமர் பயணம் ரத்து: சாடிய தேஜஸ்வி</a></p><p>* 3 மாநில சட்டசபை தொகுதிகளுக்கு ஜூலை 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.</p><p>* பிரதமரின் பயணம் குறித்து மாநிலத்தில் உள்ள பா.ஜ.க. அரசிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/priyanka-gandhi-why-are-you-scared-of-youths-of-this-country-who-gave-you-right-to-suppress-students">பொதுத் தேர்வுகள் முறைகேடுகள் தடுப்பு திருத்த மசோதா: மக்களவையில் பட்டாசாக வெடித்த பிரியங்கா காந்தி</a></p><p>* நாட்டின் இளைஞர்களைக் கண்டு ஏன் பயப்படுகிறீர்கள். மாணவர்களை அடக்குவதற்கு உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது?</p><p>* தேர்வு முறை தோல்வியடைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 152 வினாத்தாள் கசிவுகள் நடந்துள்ளன. ஆனால் ஒரு மாஃபியா கும்பல் கூட தண்டிக்கப்படவில்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/atp-singles-world-rankings-novak-djokovic-fits-in-at-fifth-spot">டென்னிஸ் தரவரிசை: இரு இடம் முன்னேறி டாப் 5 பட்டியலில் இடம்பிடித்த ஜோகோவிச்</a></p><p>* ஆண்கள் ஒற்றையரில் இத்தாலியின் ஜானிக் சின்னர் முதலிடத்தை தக்கவைத்தார்.</p><p>* ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் ஒரு இடம் சரிந்து ஆறாவது இடம் பிடித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/delhi-cabinet-approves-lakshmi-yojana-to-provide-monthly-rs-2500-to-women">பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 2500: டெல்லி அமைச்சரவையில் ஒப்புதல்</a></p><p>* விண்ணப்பிக்க 21 வயது முதல் 60 வயதுடைய பெண்கள் மட்டுமே தகுதியுடைவர்கள் ஆவார்கள். ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது.</p><p>*ஒரு வீட்டில் ஒரு பெண் மட்டுமே இந்த பயனை அடைய முடியும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-president-mk-stalin-wishes-artist-trotsky-marudhu-iyal-award">இயல் விருது அறிவிக்கப்பட்ட ஓவியர் டிராட்ஸ்கி மருதுவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து</a></p><p>* தமிழ் மரபை உலகின் நவீனச் சிந்தனைப் போக்குகளோடு இணைக்கின்ற பாலமாக விளங்கி வருகிறார் டிராட்ஸ்கி மருது.</p><p>* 2023-ல் நமது அரசின் செய்தித்துறை வெளியிட்ட இலக்கிய மலரிலும் டிராட்ஸ்கி மருது பங்களித்திருந்தார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/powder-lawsuit-nears-resolution-johnson-johnson-agrees-to-pay-53000-crore-in-compensation-to-settle-cancer-related-cases">புற்றுநோய் வழக்குகளை முடிக்க ரூ.53,000 கோடி இழப்பீடு வழங்க ஜான்சன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம்!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/vijayan-urges-kerala-govt-to-withdraw-cases-against-neet-protest-supporters">மாணவர்களுக்கு எதிரான வழக்குகளை திரும்பப் பெறுக: கேரள மாநில முதல்வர் சதீசனுக்கு பினராயி விஜய் கடிதம்</a></p><p>* ஒற்றுமையை தெரிவிக்கும் வகையிலும், டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் இணைந்தீர்கள்.</p><p>* அதேவேளையில் கேரளாவில் மாணவர்களுக்கு ஆதரவாக போராடியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளீர்கள். இது என்ன நியாயம்?.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/china-j20-stealth-jets-massed-at-border-sparking-fresh-ladakh-tensions">எல்லையில் சீனா 'ஸ்டெல்த்' போர் விமானங்கள் குவிப்பு: லடாக்கில் மீண்டும் பதற்றம்!... </a></p><p>*சீனா ஆண்டிற்கு சுமார் 100 முதல் 120 J-20 விமானங்களை உற்பத்தி செய்து வருவதாகக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. </p><p>*தற்போதைய நிலவரப்படி, சீனாவிடம் சுமார் 300 முதல் 500 வரையிலான J-20 விமானங்கள் பயன்பாட்டில் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/supreme-court-orders-free-probe-no-harsh-action-against-minors-in-neet-protest-cases">போராட்டத்தில் கைதான 18 வயதுக்கு உட்பட்டோரை விடுவிக்க வேண்டும்.. போலீஸ் அடக்குமுறை மீது விசாரணை உண்டு - உச்சநீதிமன்றம்</a></p><p>*பாஜக ஆளும் மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.</p><p>*குற்றப்பின்னணி உடையவர்கள் மீதான நடவடிக்கைக்கு எந்த தடையும் இல்லை </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-dam-issue-cm-vijay-letter-to-pm-modi">மேகதாது அணை விவகாரம்: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்</a></p><p>* காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கர்நாடகா மாநில அரசு தெரிவித்து வருகிறது. இதற்கு தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. </p><p>* நீதி, கூட்டாட்சி நல்லிணக்கம் மற்றும் நீதித்துறைத் தீர்ப்புகளை உண்மையுடன் செயல்படுத்துதல் ஆகிய பரந்த நலன் கருதி மத்திய அரசு தலையிட வேண்டும். </p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/jadeja-returns-saransh-jain-earns-callup-for-sri-lanka-tests">இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஜடேஜா ரிடர்ன்ஸ்</a></p><p>* இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>* ம.பி.யைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் சரன்ஷ் ஜெயின் முதல் முறை இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/west-indies-126-for-7-wickets-in-third-day-against-pakistan-first-test">பாகிஸ்தான் அசத்தல் பந்துவீச்சு: 2வது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் திணறல்</a></p><p>* பொறுப்புடன் ஆடிய ஷான் மசூத் சதமடித்து அசத்தினார்.</p><p>* வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜஸ்டின் கிரீவ்ஸ் 5 விக்கெட் வீழ்த்தினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/annamalai-says-central-government-backed-down-on-cauvery-issue-for-karnataka-election-politics">காவிரி விவகாரத்தில் மத்திய அரசு பின்வாங்கியிருப்பது கர்நாடக தேர்தல் அரசியலுக்காகவா? - அண்ணாமலை</a></p><p>* மாநிலங்களவையில், காவிரி நதி தொடர்பாக, மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அளித்துள்ள பதில் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. </p><p>* தமிழ்நாட்டு மக்களை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். </p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-indictment-cm-vijay-2">தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்துள்ளார் முதலமைச்சர்- உதயநிதி சாடல்</a></p><p>* இனியும் காலம் தாழ்த்தினால் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோகும்.</p><p>* மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை முறியடிக்க முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/man-living-on-engine-oil-for-22-years">22 ஆண்டுகளாக எஞ்சின் ஆயிலை குடித்து வாழும் விசித்திர மனிதர்!</a></p><p>* சாதாரண உணவு செரிக்கவில்லை ஆயில் மட்டுமே உணவு</p><p>* 22 ஆண்டுகளாக பழைய இன்ஜின் ஆயிலை குடிக்கும் குமார்</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/prime-ministers-selfie-video-blocked-meta-apologises-over-technical-glitch">பிரதமரின் செல்ஃபி வீடியோ முடக்கம்: தொழில்நுட்பக் கோளாறு எனக் கூறி மன்னிப்பு கேட்ட மெட்டா நிறுவனம் !... </a></p><p>*தற்போது அந்த தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு, வீடியோ மீண்டும் பேஸ்புக்கில் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p>*இது குறித்து நேரில் ஆஜராகி விரிவான விளக்கம் அளிக்குமாறு மெட்டா நிறுவனத்தின் உலகளாவிய கொள்கைத் தலைவர்களுக்கு  மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/parliament-chaos-house-adjourned-amid-demand-to-debate-exam-scams-and-student-protest-assault">மாணவர்கள் மீது தாக்குதல் விவகாரம்.. அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 2 மணி வரைஒத்திவைப்பு</a><br></p><p>*உங்களுக்கு வெட்கமாக இல்லையா? அவர் எதன் பின்னணியில் பதவி விலகினார் என்பதை யோசித்து பாருங்கள்.</p><p>*அந்த செய்தி நாடு முழுவதும் சென்று சேரும் எனக் குறிப்பிட்டார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-says-priority-must-be-given-to-tamil-thai-vazhthu-in-tamil-nadu">தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தான் முதலிடம் கொடுக்க வேண்டும் - அமைச்சர் நிர்மல்குமார்</a></p><p>* தமிழ்த்தாய் வாழ்த்தை 3-வதாக பாடுவதை அனுமதிக்க முடியாது.</p><p>* பாஜக ஆளும் மாநிலங்களில் அந்தந்த மாநில பாடல்களே முதலில் பாடப்படுகிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-governor-conduct-which-hurts-sentiments-of-tamils">தமிழர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் ஆளுநரின் போக்கு தொடர்கிறது! - மாணிக்கம் தாகூர்</a></p><p>* பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்து அமைச்சர் விஸ்வநாதன், ராபர்ட் புரூஸ் எம்பி சரியான சாட்டையடி கொடுத்துள்ளனர்.</p><p>* ஆளுநர் தனது அவமரியாதையான நடைமுறையை உடனடியாகத் திருத்திக் கொள்ள வேண்டும்!</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/nda-meet-under-modi-20-dissident-tmc-mps-join-ncpi-and-attend-alliance-meeting">என்.டி.ஏ எம்.பி.க்கள் கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகிய 20 அதிருப்தி எம்.பிக்கள் பங்கேற்பு<br></a></p><p>*கட்சித் தாவல் தடைச் சட்ட சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக பிராந்திய கட்சியில் இணைந்தனர்.</p><p>*சுவேந்து அதிகாரி தலைமையில் மேற்கு வங்கத்தில் முதல் முறையாக பாஜக அரசு அமைந்தது.<br></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dgp-mahesh-kumar-agarwal-clarifies-not-boycott-governor-event">ஆளுநர் விழாவை புறக்கணிக்கவில்லை - டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் விளக்கம்</a></p><p>* தமிழக ஆளுநர் அர்லேக்கர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார்.</p><p>* தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாவது இடம் வழங்கப்பட்டதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்.</p>  <p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-celebration-row-viral-cjap-dance-videos-after-pradhan-resignation-draw-criticism-wangchuk-urges-humble-victory">வெற்றி எப்போதும் அடக்கத்துடன் சேர்ந்தே வர வேண்டும் - CJP கொண்டாட்டங்களை கண்டித்த சோனம் வாங்சுக்?</a></p><p>*இதுவே ஜென் இசட் தலைமுறையின் குணம்</p><p>*26 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-surpasses-rahul-187-million-followers-on-instagram">ராகுலை பின்னுக்கு தள்ளிய முதலமைச்சர் விஜய்... இன்ஸ்டாகிராமில் 1.87 கோடி பேர் பின் தொடர்கிறார்கள்</a></p><p>* பிரதமர் மோடி உலக அளவில் இன்ஸ்டாகிராமில் முன்னிலையில் இருந்து வருகிறார். அவரை 10.2 கோடி பேர் பின் தொடர்கிறார்கள். </p><p>* தமிழக முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை 23 லட்சம் பேரும் பின் தொடர்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/delhi-violence-report-ai-identifies-2873-attackers-989-with-serious-criminal-records-in-student-march">கொலை, கொள்ளை.. ஜூலை 20 பேரணியில் வன்முறையில் ஈடுபட்டவர்களில் 989 பேருக்கு குற்றப் பின்னணி - டெல்லி காவல்துறை</a></p><p>*101 பேர் மீது கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன.</p><p>*டெல்லி காவல்துறை ஆணையர் அனுராக் குமார் அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-3month-ban-on-transporting-minerals-to-other-states-is-welcome">கனிமங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டுசெல்ல 3 மாதத் தடை வரவேற்கத்தக்கது: அன்புமணி ராமதாஸ்</a></p><p>* இப்போது 3  மாதங்களுக்கு மட்டும் விதிக்கப்பட்டுள்ள கனிமவளக் கடத்தலுக்கானத் தடையை நிரந்தரத் தடையாக  மாற்ற வேண்டும்.</p><p>* கனிமக் கொள்ளை மற்றும் கடத்தல் குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/attention-travellers-no-sound-in-government-buses">பயணிகளே கவனம்..! அரசுப் பேருந்துகளில் இனி 'நோ சவுண்ட்'!... </a></p><p>*அரசு பேருந்துகளில் செல்போனில் சத்தமாக பேசவோ, வீடியோ ரீல்ஸ் பார்க்கவோ தடை விதித்து போக்குவரத்துத் துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.</p><p>•கட்டாயம் இயர்போன் (Earphones) ஹெட்போன் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rameswaram-mechanized-and-traditional-boat-fishermen-are-barred-from-venturing-out-to-sea-today">ராமேசுவரம் விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல தடை</a></p><p>* ஒரு படகு மற்றொரு படகுடன் மோதி சேதமடையாமல் இருப்பதற்காக நாட்டுப்படகுகள் கரைக்கு இழுத்து வரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.</p><p>* பாம்பன், மண்டபம் பகுதிகளை சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதித்து ராமேசுவரம் மீன்வளத்துறை அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. </p><p><strong><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rb-udhayakumar-indictment-tvk-govt">சட்டத்தின் பாதையில் தான் ஆட்சி சக்கரம் சுழல வேண்டும்- ஆர்.பி.உதயகுமார்</a></strong></p><p>* டெல்டா மாவட்ட விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள். இதற்கு என்ன போர்க்கால நடவடிக்கையை த.வெ.க. அரசு எடுத்திருக்கிறது.</p><p>* கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்கிய த.வெ.க. அரசின் உத்தரவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் மதுரை கிளை அதிரடியாக உத்தரவை பிறப்பித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/sc-status-cancelled-on-conversion-supreme-court-upholds-ap-hc-ruling-on-reservation-and-certificates">மதம் மாறிய மறு கணமே பட்டியலின அந்தஸ்து முடிவுக்கு வந்துவிடும் - உச்சநீதிமன்றம்</a></p><p>*பட்டியலின வகுப்பை சேர்ந்த ஒரு நபர் மதம் மாறிய மறு கணமே, அவரின் எஸ்சி அந்தஸ்து முடிவுக்கு வந்துவிடும்</p><p>* இந்து, சீக்கியர் மற்றும் பௌத்த மதங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே எஸ்சி அந்தஸ்திற்குத் தகுதியானவர்கள் என்று தெரிவித்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-cases-withdrawn-assam-bihar-and-rajasthan-grant-amnesty-to-demonstrators">மீண்டும் போராடுவோம் என எச்சரித்த CJP.. பீகார், அசாம், ராஜஸ்தானில் போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்!</a></p><p>*எந்தவொரு இளைஞரையும் தனித்து விடமாட்டோம்</p><p>*பீகாரில் ஜூலை 25 அன்று நடந்த போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 694 பேர் உட்பட அனைவர் மீதான வழக்கு ரத்து </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/over-1000-attacks-in-6-months-surge-in-violence-by-israeli-settlers-in-the-west-bank-un">6 மாதத்தில் 1,000-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள்.. மேற்கு கரையில் இஸ்ரேலிய குடியேறிகளின் வன்முறை அதிகரிப்பு - ஐநா</a></p><p>*மேற்குக் கரை முழுவதும் உள்ள 230க்கும் மேற்பட்ட பாலஸ்தீன சமூகங்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p>*இஸ்ரேலிய குடியேறிகள் மற்றும் ராணுவத்தினர் இணைந்து தாக்குதல் நடத்தினர்.</p><p><a href="https://alaimalar.com/news/world/greta-thunberg-hails-indian-students-protest-victory-over-neet-exam-scam">இந்திய மாணவர்களின் வீரமிக்க போராட்டம் உலகம் முழுமைக்கும் நம்பிக்கை அளித்துள்ளது - கிரேட்டா துன்பெர்க்</a></p><p>*நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தால் உயிரிழந்த 21 மாணவர்களுக்கு அஞ்சலி.</p><p>* பிரபல இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/pok-election-boycott-empty-polling-stations-protests-and-violence-rock-pok">POK: தேர்தலை புறக்கணித்து மக்கள் போராட்டத்தில் வன்முறை - பலர் காயம்</a></p><p>*பல பகுதிகளில் மொபைல் மற்றும் இணைய சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.</p><p>*பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) நேற்று முதற்கட்ட சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது.</p> <p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/veteran-telugu-character-actress-dies-pavala-shyamala-passes-away-in-hyderabad-after-health-issues-and-viral-kokku-scene-fame">வைரல் தெலுங்கு நடிகை ஸ்யாமலா மறைவு</a></p><p>*போதிய பணம் இல்லாததால் மருத்துவமனை ஊழியர்கள் அவரை சாலையில் நிர்கதியாய் விட்டுச் சென்றனர்.</p><p>*நள்ளிரவில் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/nellai-manonmaniam-sundaranar-university-convocation-minister-viswanathan-skips-event">நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழா - அமைச்சர் விஸ்வநாதன் புறக்கணிப்பு</a></p><p>* பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்படும் என துணைவேந்தர் அறிவித்துள்ளார். </p><p>*  முனைவர் பட்டம் வாங்க இருந்த டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் பட்டம் வாங்க வரவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/tatkal-booking-new-rules-process-coming-august-1st">ஆகஸ்ட் 1 முதல் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய டோக்கன்- நெரிசலை குறைக்க ரெயில்வே நடவடிக்கை</a></p><p>* ரெயில் நிலைய முன்பதிவு மையங்களில் கடுமையான கூட்ட நெரிசலும் தள்ளுமுள்ளும் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது.</p><p>* ஆதார் அட்டை அல்லது பிற செல்லுபடியாகும் புகைப்பட அடையாள அட்டையை வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-urges-regularize-the-services-of-consolidated-pay-employees-at-manonmaniam-sundaranar-university">மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை தொகுப்பூதிய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்க!- அன்புமணி வலியுறுத்தல்</a></p><p>* தொகுப்பூதிய பணியாளர்களாக பணியாற்றும்  53  பேரும்  50 வயதைக் கடந்தவர்கள். இந்த வயதில் அவர்களால் வேறு எங்கும்  சென்று வேலை தேட முடியாது.</p><p>* தொகுப்பூதிய பணியாளராக 10 ஆண்டுகளை எப்போது அவர்கள் நிறைவு செய்தார்களோ, அப்போது முதல் அவர்கள் நிரந்தரப் பணியாளர்களாக கருதப்பட்டு பணி மூப்பு வழங்கப்பட வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/cjp-protest-famous-model-files-complaint-mumbai-police">CJP PROTEST: போலீஸ் வேனை மறித்த புகழ்பெற்ற மாடல் அழகி மும்பை போலீசில் புகார்!... </a></p><p>*சமூக வலைத்தளங்களில் ஒரு தரப்பினர் அவருக்கு எதிராகத் தொடர் அவதூறுகளையும் மனரீதியான தாக்குதல்களையும் தொடுக்கத் தொடங்கினர்.</p><p>*"இந்த அநீதிக்கு எதிராக நிற்க வேண்டும் என்பதற்காக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளேன்" </p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-28-07-2026">GOLD PRICE TODAY: தங்கம் வாங்குவோருக்கு குட் நியூஸ் - அதிரடியாக சரிந்த தங்கம் விலை</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.155 குறைந்து ரூ.13,215-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/upi-linked-pf-claim-roll-out-now-in-august">வைப்பு நிதியில் இருந்து யு.பி.ஐ. மூலம் பணம் எடுக்கும் வசதி- அடுத்த மாதம் அறிமுகப்படுத்த திட்டம்</a></p><p>*&nbsp;பழைய வைப்பு நிதி கணக்குகளில் இருந்த தரவுகள் புதிய தளத்தில் விடுபட்டுள்ளதாக உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்</p><p>* அனைத்து முக்கிய தொழில்நுட்ப கோளாறுகளும் முன்னுரிமை அடிப்படையில் சரிசெய்யப்பட்டு வருகின்றன. அதன் பின்னரே தற்போதைய நிலைமை சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/come-only-with-petitions-entry-is-not-permitted-if-you-bring-money">மனுக்களுடன் மட்டுமே வாருங்கள்; பணத்துடன் வந்தால் அனுமதி இல்லை- தாலுகா அலுவலகத்தில் ஒட்டப்பட்ட நோட்டீஸ்</a></p><p>* லஞ்சத்திற்கு எதிராக தாசில்தார் எடுத்துள்ள இந்த துணிச்சலான நடவடிக்கை பாராட்டுக்குரியது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.</p><p>* தாலுகா அலுவலகத்துக்கு வருபவர்கள் பணத்துடன் வருவதை தவிர்த்து, கோரிக்கை மனுக்களை மட்டுமே கொண்டுவர வேண்டும் என்று அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>உலக சாம்பியன்ஷிப் செஸ்: இந்திய வீரர் டி. குகேஷ் உஸ்பெகிஸ்தான் வீரருடன் மோதல்- தேதி அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/sports/d-gukesh-and-javokhir-sindarov-fide-world-championship-tie-geneva-nov-25-to-dec-15</link><comments>https://www.maalaimalar.com/sports/d-gukesh-and-javokhir-sindarov-fide-world-championship-tie-geneva-nov-25-to-dec-15#comments</comments><guid isPermaLink="false">8e0f6dd9-fe2a-4749-a5df-d7b94ff2b658</guid><pubDate>Tue, 28 Jul 2026 13:17:50 +0000</pubDate><atom:updated>2026-07-28T13:17:50.516Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Chess,செஸ்,D Gukesh,டி குகேஷ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/dvb84scr/DGukesh0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ D Gukesh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/dvb84scr/DGukesh0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலக சதுரங்க கூட்டமைப்பு நடத்தும் 2026 உலக சாம்பியன்ஷிப் செஸ் போட்டி சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டி நவம்பர் 25-ந்தேதி தொடங்கி, டிசம்பர் 15-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.</p><h2>டி. குகேஷ்</h2><p>இதில் இந்தியாவைச் சேர்ந்த இளம் வீரரான டி. குகேஷ், உஸ்பெகஸ்தானைச் சேர்ந்த ஜவோகிர் சிண்டரோவ்-ஐ எதிர்கொள்கிறார். இதில் இருவரும் 20 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் ஆவார்கள். 20 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் இருவர் உலக சாம்பியன்ஷிப்பில் மோதுவது இதுவே முதல் முறையாகும்.</p><p>இந்த போட்டி 14 கிளாசிக்கல் கேம்ஸ்களை கொண்டதாகும். முதல் 7.5 புள்ளிகளை பெறும் வீரர் வெற்றி பெற்றவராக கருதப்படுவார். ஒருவேளை 7-7 என சமநிலை பெற்றால், டை-பிரேக்கர் நடத்தப்படும்.</p><p>20 வயதான இந்திய வீரரான டி. குகேஷ் சென்னையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2>விஸ்வநாதன் ஆனந்த்</h2><p>உலக சதுரங்க கூட்டமைப்பின் இடைக்காலத் தலைவர் விஸ்வநாதன் ஆனந்த் இந்த அறிவிப்பு குறித்து கூறியதாவது:-</p><p>இந்தியா, அமெரிக்கா மற்றும் சைப்ரஸ் உள்ளிட்ட பல நாடுகள் FIDE உலக சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டின. அனைத்து முன்மொழிவுகளையும் கவனமாகப் பரிசீலித்த பிறகு, நடுநிலையான ஒரு இடத்தில் போட்டியை நடத்த FIDE முடிவு செய்துள்ளது.</p><h2>ஜெனீவா</h2><p>அதன்படி, நாடுகளையும் கலாச்சாரங்களையும் ஒன்றிணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க பாரம்பரியத்தைக் கொண்ட ஜெனீவா நகரில் இப்போட்டி நடைபெறவுள்ளது. சுவிட்சர்லாந்திற்கு உலகெங்கிலும் உள்ள சதுரங்கச் சமூகத்தை வரவேற்பதை நாங்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம்.</p><p>உள்ளூர் சதுரங்க ரசிகர்கள் உலகத் தரம் வாய்ந்த ஆட்டத்தை நேரில் காணும் வாய்ப்பைப் பெறுவார்கள். அதேவேளையில், சதுரங்க உலகின் மிக உயரிய பட்டத்திற்கான இந்த போட்டி நடைபெறும்போது, ​​உலகம் முழுவதிலும் உள்ள லட்சக்கணக்கான ரசிகர்கள் இணையம் வழியாக இதைக்காண முடியும்.</p><p>இப்போட்டி 14 கிளாசிக்கல் ஆட்டங்களைக் கொண்டிருக்கும். 7½ புள்ளிகளை முதலில் பெறும் வீரர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். அந்தப் புள்ளியை எட்டியவுடன் மேற்கொண்டு ஆட்டங்கள் எதுவும் நடத்தப்படாது. 14 கிளாசிக்கல் ஆட்டங்களுக்குப் பிறகும் சமநிலை நீடித்தால், டை-பிரேக்கர் (tie-break) முறையின் மூலம் உலக சாம்பியன் தீர்மானிக்கப்படுவார்.</p><p>நடப்பு சாம்பியனான டி. குகேஷ் பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்ள முயற்சிப்பார். இவர் 2024-ல் சிங்கப்பூரில் நடைபெற்ற போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார்.</p>]]></content:encoded></item><item><title>‘பிரதானை நீக்கி பிரதான் மந்திரியை காப்பாற்றியுள்ளீர்கள்’ - நாடாளுமன்றத்தில் அகிலேஷ் யாதவ் கிண்டல் பேச்சு!</title><link>https://www.maalaimalar.com/news/national/by-removing-the-pradhan-you-have-saved-the-prime-minister-akhilesh-yadavs-sarcastic-remark-in-parliament</link><comments>https://www.maalaimalar.com/news/national/by-removing-the-pradhan-you-have-saved-the-prime-minister-akhilesh-yadavs-sarcastic-remark-in-parliament#comments</comments><guid isPermaLink="false">f4e3b7cd-e775-4395-ae29-45f70a8b9482</guid><pubDate>Tue, 28 Jul 2026 13:13:39 +0000</pubDate><atom:updated>2026-07-28T13:13:39.692Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,அகிலேஷ் யாதவ்,Akhilesh Yadav,தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,பிரதமர் மோடி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/lq1qu852/New-Project-2026-07-28T182813.527.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘பிரதானை நீக்கியதன் மூலம் பிரதான மந்திரியை காப்பாற்றியுள்ளீர்கள்’ - நாடாளுமன்றத்தில் அகிலேஷ் யாதவ் கிண்டல் பேச்சு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/lq1qu852/New-Project-2026-07-28T182813.527.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடாளுமன்ற மக்களவையில் இன்று வினாத்தாள் கசிவு தடுப்பு திருத்த மசோதாமீதான விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான அகிலேஷ் யாதவ்,</p><p>“முன்னாள் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்திற்கு வந்தபோது அவருக்கு வெளியே சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் எங்களுக்கு எந்தப் புகாரும் இல்லை. ஆனால், இதன் மூலம் ஆளும்கட்சி உறுப்பினர்கள் எவ்வளவு பெரிய நெருக்கடியிலிருந்து தப்பித்தோம் என்று நிம்மதி அடைந்திருப்பதை கற்பனை செய்து பாருங்கள்.</p><p>பிரதானை பதவியிலிருந்து நீக்கியதன் மூலம், நீங்கள் உங்களுடைய 'பிரதான் மந்திரி'யை சாமர்த்தியமாகக் காப்பாற்றிவிட்டீர்கள். </p><p>அரசைப் பணிய வைத்த இளைஞர்களின் மன உறுதிக்கும், ஒற்றுமைக்கும் நான் தலைவணங்குகிறேன். அரசு தன்னை வெல்ல முடியாதது என்று நினைத்தது. ஆனால், பணிய வைக்க ஆள் இருந்தால் அரசாங்கமும் பணியும் என்பதை புதிய தலைமுறை இளைஞர்கள் தங்களின் போராட்டத்தின் மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளனர்.</p><p>பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, கல்வி, தேர்வுகள் மற்றும் பல்கலைக்கழகங்களை ஒரே நிறத்தில் வர்ணம் பூசி அழிக்க முயன்று வருகிறது. இது மாணவர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாகவே, உலகின் மிகப்பெரிய கட்சியான பாஜக பின்வாங்க வேண்டிய அளவுக்குப் போராட்டங்கள் மாபெரும் அளவில் வெடித்தன. இந்த அணுகுமுறை மாற வேண்டும்.</p><p>இளைஞர்கள் எழுப்பிய கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நம்புகிறேன். கேலிக்கூத்தாகத் தொடங்கும் ஒரு கட்சி கூட ஒரு பெரிய சக்தியாக மாற முடியும் என்பதை அரசாங்கம் உணர்ந்திருக்க வேண்டும். </p><p>சட்டம் இயற்றுவது மட்டும் முக்கியமல்ல; அரசின் நோக்கம் நேர்மையாக இருக்க வேண்டும். உங்கள் நோக்கம் நேர்மையாகும் போது மட்டுமே தேர்வு முறைகள் சுத்தமாகும்.” என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>“எம் தாய்மொழியை 3ம் இடத்திற்குத் தள்ளுவதை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம்” - தவெக!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/we-will-never-tolerate-our-mother-tongue-being-pushed-to-third-place-tvk</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/we-will-never-tolerate-our-mother-tongue-being-pushed-to-third-place-tvk#comments</comments><guid isPermaLink="false">fefb5ed2-f6dc-4254-bae7-719d5aa1afa3</guid><pubDate>Tue, 28 Jul 2026 12:55:17 +0000</pubDate><atom:updated>2026-07-28T12:55:17.250Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,தமிழ்த்தாய் வாழ்த்து,Tamil Thai Vazhthu,tvk</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/9ibca7jt/New-Project-2026-07-28T182456.536.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “எம் தாய்மொழியை 3ம் இடத்திற்குத் தள்ளுவதை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம்” - தவெக!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/9ibca7jt/New-Project-2026-07-28T182456.536.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதிய மனோன்மணியம் சுந்தரனாரின் பெயரையேக் கொண்ட திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று 33வது பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது. இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><p>இதற்கு அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்து வரும்நிலையில், தற்போது தவெக தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தவெக தலைமை வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்.,</p><p>“நமது மனசாட்சி உள்ள மக்களாட்சியில் யார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கு முதலிடமே இருக்கும். எம் தாய்மொழியை மூன்றாம் இடத்திற்குத் தள்ளுவதை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம்.</p><p>அதற்குக் காரணமாக ஒன்றிய பா.ஜ.க. அரசாக இருந்தாலும் சரி அல்லது ஆளுநராக இருந்தாலும் சரி கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்கிறோம்.  </p><p>எங்கள் நிலத்தில் எங்கள் மொழிக்கே முன்னுரிமை. இதை உறுதியாக நாம் நிலைநாட்டுவோம். சட்ட முன்னெடுப்புத் தேவை எனில், அதற்கும் தயாராகவே இருக்கிறோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>‘சாக்கடை தலைமுறையினர்... குடும்பம் நடத்துவதற்கும் லாய்க்கில்லதவர்கள்’ - போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் குறித்து கங்கனா சர்ச்சை பேச்சு!</title><link>https://www.maalaimalar.com/news/national/a-gutter-generation-unfit-to-run-a-family-kanganas-controversial-remarks-about-the-women-involved-in-the-protest</link><comments>https://www.maalaimalar.com/news/national/a-gutter-generation-unfit-to-run-a-family-kanganas-controversial-remarks-about-the-women-involved-in-the-protest#comments</comments><guid isPermaLink="false">e1ececab-fc18-41f7-93d5-d6b968e9c154</guid><pubDate>Tue, 28 Jul 2026 12:39:28 +0000</pubDate><atom:updated>2026-07-28T12:39:28.168Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Kangana Ranaut,கங்கனா ரனாவத்,Gen Z protesters,ஜென் இசட் தலைமுறையினர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/wm4itw9v/New-Project-2026-07-28T172449.637.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘சாக்கடை தலைமுறையினர்... குடும்பம் நடத்துவதற்கும் லாய்க்கில்லதாவர்கள்’ - போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், குறித்து கங்கனா சர்ச்சை பேச்சு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/wm4itw9v/New-Project-2026-07-28T172449.637.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பா.ஜ.க. எம்பியும், நடிகையுமான கங்கனா ரணாவத், டெல்லியில் நடைபெற்ற மாணவர் போராட்ட வீடியோக்களைக் குறிப்பிட்டு, தற்போதைய ஜென் இசட் இளம் தலைமுறையினரை “சாக்கடைத் தலைமுறை” என்று கடுமையாக விமர்சித்துள்ளது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. </p><p>மேலும் போராட்டங்களின் போது, இளைஞர்கள் பயன்படுத்திய மொழி மற்றும் அவர்களின் செயல்பாடுகள் தனக்கு வாந்தி வருவது போல் இருந்ததாகவும், இளைய தலைமுறையினர் வளர்ப்பு முறை பற்றியும் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். </p><p>ஜந்தர் மந்தரில் நடைபெற்ற நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டம் தொடர்பான வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து, அதில் கீழ்வரும் கருத்துகளை குறிப்பிட்டுள்ளார். </p><p>“என் வாழ்நாளில் ஒரே இடத்தில் இவ்வளவு அசிங்கத்தை நான் கண்டதில்லை. ஜென் Z தலைமுறையின் போராட்டக் காட்சிகள் வாந்தி வரவைப்பவையாக உள்ளன. அவர்கள் பேசும் விதமும், பயன்படுத்தும் மொழியும்... என் வாழ்நாளில், ஒவ்வொரு காட்சியிலும் உள்ள அனைத்தும் ஒரே நேரத்தில் இவ்வளவு உறுத்தலாகவும், இவ்வளவு அநாகரிகமாகவும் இருப்பதை நான் கண்டதில்லை.</p><p>இந்தியா என்பது நேர்த்தியால் போர்த்தப்பட்ட, பண்பாட்டு நுட்பத்தில் வேரூன்றிய, பலதரப்பட்ட அழகான மக்கள் வாழும் ஒரு நாடு. நீங்கள் உங்களைக் கரப்பான் பூச்சிகள் என்று அழைத்துக்கொள்கிறீர்கள், மேலும் அவற்றைப் போலவே தோற்றமளித்து, நடந்து கொள்கிறீர்கள். இதில் எந்த முரண்பாடோ அல்லது எதிர்நிலையோ இல்லை; வெறுமனே உங்கள் அழுக்கு, குப்பை மற்றும் அசிங்கத்தை இந்த உலகின் மீது திணிக்கிறீர்கள்.</p><p>இந்த வீடியோக்களை பார்த்தாலே பயமாக இருக்கிறது. எனக்குச் சிறிது ஆறுதல் தேவை, டிஜிட்டல் டிடாக்ஸ்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p><p>மேலும் பெண்கள் குறித்துப் பேசியுள்ள அவர்,</p><p>“இங்கே மேற்கத்தியமயமாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு புதிய தலைமுறை இந்தியப் பெண்கள் இருக்கிறார்கள். நான் அவர்களை 'சாக்கடைத் தலைமுறை' என்று அழைக்கிறேன். </p><p>இவர்களில் சிலருக்கு இந்த சமூகத்திற்கு வழங்குவதற்கு எதுவுமில்லை, படிப்பிலும் சிறந்து விளங்குவதில்லை. ஆனால் அவர்கள் மிகவும் மோசமானவர்களாகவும், ஒழுக்கக்கேடானவர்களாகவும் இருப்பதால் அவர்களால் இல்லத்தரசிகளாகவும் இருக்க முடியாது.</p><p>ஆனால், போதைப்பொருள் பயன்படுத்துவதற்கும், மது அருந்துவதற்கும் அல்லது எல்லையற்ற உடலுறவுத் துணைகளைக் கொண்டிருப்பதற்கும் தங்களுக்கு இருக்கும் சுதந்திரத்தை பெருமையாக கூறிக்கொள்கிறார்கள்.</p><p>மேலும் வெட்கமில்லாமல் தங்கள் பெற்றோரின் வருமானத்தில் வாழ்கிறார்கள். உண்மையில் சுயசார்பு இல்லாமல், சுதந்திரமான வாழ்க்கை வாழ்வதற்காகத் தொடர்ந்து போராடுகிறார்கள்.</p><p>ஒரு கனிவான நினைவூட்டல்: சுதந்திரமான வாழ்க்கை என்பது உழைப்பால் சம்பாதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். பொறுப்புக்கூறல் (பொறுப்புணர்வு) இல்லாமல் நீங்கள் சுதந்திரமாக வாழ முயன்றால், நீங்கள் வெறும் சீரழிந்த வடிவமே. சாக்கடை நபர்.”எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>பங்கிபூர் இடைத்தேர்தலில் தோல்வி உறுதி என்பதால் பிரதமர் பயணம் ரத்து: சாடிய தேஜஸ்வி</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-cancelled-bihar-tour-realising-bjp-will-lose-bankipur-bypoll-tejashwi</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-cancelled-bihar-tour-realising-bjp-will-lose-bankipur-bypoll-tejashwi#comments</comments><guid isPermaLink="false">6c37fa4b-10f9-4f75-bfb0-d0a4fdb7061a</guid><pubDate>Tue, 28 Jul 2026 12:28:25 +0000</pubDate><atom:updated>2026-07-28T12:28:25.354Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தேஜஸ்வி யாதவ்,Tejaswi Yadav,pm modi,பீகார் இடைத்தேர்தல்,பிரதமர் மோடி,bihar bypoll</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/608u2xfb/yadav.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ tejaswi yadav]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/608u2xfb/yadav.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பீகார் மாநிலத்தின் பங்கிபூர் எம்.எல்.ஏ.வான நிதின் நபின் சமீபத்தில் பா.ஜ.க. தேசிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.</p><p>மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த தாடியா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. மோசடி வழக்கில் தண்டனை பெற்றதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.</p><p>குஜராத்தின் மன்சல்பூர் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. யோகேஷ்பாய் நரந்தாஸ் படேல் காலமானதால் அவரது தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.</p><h2>ஜூலை 30-ம் தேதி இடைத்தேர்தல்</h2><p>இதற்கிடையே, காலியாக உள்ள இந்த 3 மாநில சட்டசபை தொகுதிகளுக்கு ஜூலை 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனவும், அன்று பதிவாகும் வாக்குகள் ஆகஸ்ட் 3-ம் தேதி எண்ணப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.</p><p>தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் அந்தத் தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.</p><p>இந்நிலையில், பீகார் மாநில எதிர்க்கட்சி தலைவரும், ராஷ்டிரீய ஜனதா தளகட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p><h2>பிரதமர் பயணம் ரத்து</h2><p>ஒரு பாலத்தைத் திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி மாநிலத்திற்கு வரத் திட்டமிட்டிருந்தார்.</p><p>பிரதமரின் பயணம் குறித்து மாநிலத்தில் உள்ள பா.ஜ.க. அரசிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை.</p><p>மாணவர் போராட்டங்களும், தனது அரசின் 'பெருகிவரும் மக்கள் செல்வாக்கு இழப்பும்' பா.ஜ.க.வின் தோல்விக்கு வழிவகுக்கும் என்பதை உணர்ந்ததால், பிரதமர் நரேந்திர மோடி தனது பீகார் பயணத்தை ரத்து செய்துள்ளார் என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>பொதுத் தேர்வுகள் முறைகேடுகள் தடுப்பு திருத்த மசோதா: மக்களவையில் பட்டாசாக வெடித்த பிரியங்கா காந்தி</title><link>https://www.maalaimalar.com/news/national/priyanka-gandhi-why-are-you-scared-of-youths-of-this-country-who-gave-you-right-to-suppress-students</link><comments>https://www.maalaimalar.com/news/national/priyanka-gandhi-why-are-you-scared-of-youths-of-this-country-who-gave-you-right-to-suppress-students#comments</comments><guid isPermaLink="false">979ee58d-6cf1-4f9a-a1a7-a2e11b0deed5</guid><pubDate>Tue, 28 Jul 2026 12:25:21 +0000</pubDate><atom:updated>2026-07-28T12:25:21.019Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>parliament,Priyanka gandhi,பாராளுமன்றம்,பிரியங்கா காந்தி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/695xqn6c/PriyankaGandhi0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Priyanka Gandhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/695xqn6c/PriyankaGandhi0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் லீக் விவகாரத்தில் மத்திய அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பாக போராட்டம் வெடிக்க தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.</p><p>வினாத்தாள் லீக்கை தடுக்கும் வகையில் மத்திய அரசு பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்த மசோதா 2026-ஐ மக்களவையில் தாக்கல் செய்துள்ளது. வினாத்தாள் கசிவுகள், தேர்வு முறைகேடுகளுக்கு தண்டனையை அதிகரிக்கும் விதமாக சட்ட விதிமுறைகளை கடுமையாகும் வகையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><h2>மசோதாவின் அம்சங்கள்</h2><p>முறைகேட்டின் தீவிரத்தை பொறுத்து 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் திருத்தம் செய்யப்படும். திட்டமிட்டு குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டு சிறை மற்றும ரூ.10 கோடி வரை அபராதம் விதிக்கப்படும். மேல் முறையீடு வழக்குகள் மூன்று மாதத்திற்குள் முடிக்க வேண்டும். தவறு செய்யும் நிறுவனங்கள் பொதுத்தேர்வுகளை நடத்த விதிக்கப்படும் தடைக்காலம் 8 ஆண்டுகளாக உயர்த்தப்படும் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளிட்ட மசோதாவில் இடம் பெற்றுள்ளன.</p><h2>இந்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் கட்சி எம்.பி. பிரியங்கா காந்தி பேசியதாவது:-</h2><p>* பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ஷா ஆகியோரிடம் நான் கேட்க விரும்புகிறேன், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசவும், மாணவர்கள் மீது தடியடி நடத்தவும், பெல்லட் துப்பாக்கிகள், ஏகே-47 பயன்படுத்தவும் என்ன தேவை இருந்தது?</p><p>* பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரிடம் நான் கேட்க விரும்புகிறேன், மாணவர்கள் பயங்கரவாதிகளா?</p><h2>இளைஞர்களைக் கண்டு ஏன் பயம்</h2><p>* போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது பெல்லட் பயன்படுத்த யார் அதிகாரம் அளித்தது என்பதற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளிக்க வேண்டும்.</p><p>* மாணவர்கள் போராட்டங்கள் மூலம் தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர். கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், தங்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரினர்.</p><p>* நாட்டின் இளைஞர்களைக் கண்டு ஏன் பயப்படுகிறீர்கள். மாணவர்களை அடக்குவதற்கு உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது?</p><p>* தேர்வு முறை தோல்வியடைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 152 வினாத்தாள் கசிவுகள் நடந்துள்ளன. ஆனால் ஒரு மாஃபியா கும்பல் கூட தண்டிக்கப்படவில்லை.</p><h2>பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும்</h2><p>* 2024 வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டதிலிருந்து, ஒரு தண்டனை கூட வழங்கப்படவில்லை</p><p>* விரைவு நீதிமன்றங்களின் செயல்பாடு மோசமாக உள்ளது. முதல் விசாரணையின்போது சிபிஐ வழக்கறிஞர் ஆஜராகவில்லை</p><p>* Gen Z தலைமுறையினரின் நம்பிக்கையை மீண்டும் பெற விரும்பினால், வெவ்வேறு கேமரா கோணங்களில் இருந்து வீடியோக்களை எடுப்பது பலனளிக்காது (மறைமுகமாக பிரதமரை சாடினார்).</p><p>* உங்கள் அரசின் கீழ் இளைஞர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. உண்மையை ஏற்றுக் கொள்ளுங்கள். பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்க வேண்டும்.</p><p>* மாணவர்களை வீதிகளிலிருந்து அகற்றலாம், ஆனால் அவர்களின் கேள்விகளை அகற்ற முடியாது.</p><p>இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>பாடலை எழுதியவர் பல்கலை. விழாவிலேயே தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3வது இடம்: தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? - பெ.சண்முகம் கேள்வி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-person-who-wrote-the-song-secured-third-place-in-the-university-level-tamil-thai-vazhthu-competitionwhat-is-the-tamil-nadu-governments-stance-on-this-p-shanmugam-asks</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-person-who-wrote-the-song-secured-third-place-in-the-university-level-tamil-thai-vazhthu-competitionwhat-is-the-tamil-nadu-governments-stance-on-this-p-shanmugam-asks#comments</comments><guid isPermaLink="false">de76134d-4fbb-4b4f-9bca-df538a699bcf</guid><pubDate>Tue, 28 Jul 2026 11:50:27 +0000</pubDate><atom:updated>2026-07-28T11:50:27.394Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Manonmaniam Sundaranar University,தமிழ்த்தாய் வாழ்த்து,Tamil Thai Vazhthu,P. Shanmugam,பெ சண்முகம்,மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/iybaa5r7/New-Project-2026-07-28T171758.030.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பாடலை எழுதியவர் பல்கலை. விழாவிலேயே தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3வது இடம்: தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? - பெ.சண்முகம் கேள்வி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/iybaa5r7/New-Project-2026-07-28T171758.030.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற 33-வது பட்டமளிப்பு விழாவில் மாநிலப் பாடலான 'தமிழ்த்தாய் வாழ்த்து' மூன்றாவதாகப் பாடப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய மனோன்மணியம் சுந்தரனாரின் பெயரிலேயே அமைந்த பல்கலைக்கழகத்திலேயே, அப்பாடலுக்கு முன்னுரிமை தராமல் 3-வது இடத்திற்குத் தள்ளியது தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் கடும் கண்டனங்களை பெற்றுள்ளது. </p><p>இந்நிலையில் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். 21</p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில், </p><p>“மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடம். தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? </p><p>தமிழ்நாட்டில் இனிமேல் அரசின் சார்பில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும், அது பல்கலைக்கழக நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே ஒரு புதிய சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>மேலும் இதுதொடர்பாக பேசி வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 2500: டெல்லி அமைச்சரவையில் ஒப்புதல்</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-cabinet-approves-lakshmi-yojana-to-provide-monthly-rs-2500-to-women</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-cabinet-approves-lakshmi-yojana-to-provide-monthly-rs-2500-to-women#comments</comments><guid isPermaLink="false">a8655f95-dc74-4381-856c-3fb2a92fb0e1</guid><pubDate>Tue, 28 Jul 2026 11:44:48 +0000</pubDate><atom:updated>2026-07-28T11:44:48.779Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ரேகா குப்தா,Rekha Gupta,Lakshmi Yojana,லட்சுமி யோஜனா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/uipjb4wa/RekhaGupta2807.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rekha Gupta]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/uipjb4wa/RekhaGupta2807.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் வசிக்கும் பெண்களுக்கு மாதந்தோறும் 2500 ரூபாய் வழங்கும் லட்சுமி திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.</p><h2>பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி</h2><p>டெல்லி சட்டசபை தேர்தலின்போது பா.ஜ.க. தனது பரப்புரையின்போது, ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் பெண்களுக்கு 2500 ரூபாய் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. ஆம் ஆத்மி ஆட்சியை விழ்த்தி பா.ஜ.க. ஆட்சியை பிடித்தது. ரேகா குப்தா முதல்வராக பதவி ஏற்றார்.</p><p>இந்த நிலையில், லட்சுமி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கு டெல்லி மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. விண்ணப்பங்கள் அனுப்புவதற்கான இணையதளம் வருகிற 1-ந்தேதி (ஆகஸ்ட்) வெளியிடப்படும் என்று டெல்லி மாநில முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.</p><p>ஆகஸ்ட் 28-ந்தேதி ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இத்திட்டத்திற்காக பட்ஜெட்டில் 5100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.</p><h2>17 லட்சம் பெண்கள் பயனடைவர்</h2><p>டெல்லி மாநிலம் முழுவதும் சுமார் 17 லட்சம் பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன் அடைவார்கள் எனத் தெரிகிறது.</p><h2>தகுதி வரையறை</h2><p>இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க 21 வயது முதல் 60 வயதுடைய பெண்கள் மட்டுமே தகுதியுடைவர்கள் ஆவார்கள். ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது.</p><h2>ஒரு வீட்டில் ஒரு பெண் மட்டுமே இந்த பயனை அடைய முடியும்.</h2><p>பயன்பெறும் நபர் அல்லது குடும்பத்தினர் மீது கிரிமினல் ரெக்கார்டு இருக்கக் கூடாது. அரசு ஊழியர்கள் இருக்கக் கூடாது. வருமான வரி செலுத்துபவர்கள் இருக்கக்கூடாது. பென்சன் பெறுபவர்கள் இருக்கக் கூடாது. நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கக் கூடாது.</p><p>பயனாளி அல்லது அவரது குடும்பத்தினர் டெல்லியில் 10 வருடம் வசித்திருக்க வேண்டும்.</p><h2>பா.ஜ.க. வாக்குறுதியின் முக்கியமானவை</h2><p>கர்ப்பிணி பெண்களுக்கு உதவித் தொகையாக 21 ஆயிரம் ரூபாய், ஊட்டச்சத்து அடங்கிய 6 பெட்டகங்கள், ஏழைக்குடும்ப பெண்களுக்கு 500 ரூபாயில் சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும். அத்துடன் வருடத்திற்கு 2 இலவசமாக வழங்கப்படும். </p><p>ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 5 லட்சம் வரையில் இலவசமாக மருத்துவம் வழங்கப்படும். வயது மூத்தோருக்கான பென்சனை (60 வயது முதல் 70 வயது) 2 ஆயிரம் ரூபாயில் இருந்து 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். 70 வயதிற்கு மேல் உடையவர்களுகு்கு 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>இயல் விருது அறிவிக்கப்பட்ட ஓவியர் டிராட்ஸ்கி மருதுவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-president-mk-stalin-wishes-artist-trotsky-marudhu-iyal-award</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-president-mk-stalin-wishes-artist-trotsky-marudhu-iyal-award#comments</comments><guid isPermaLink="false">8ff87ffa-6d0a-4e48-948e-3d2e10d3308a</guid><pubDate>Tue, 28 Jul 2026 11:21:06 +0000</pubDate><atom:updated>2026-07-28T11:21:06.026Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,முக ஸ்டாலின்,trotsky marudhu,டிராட்ஸ்கி மருது</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/7orsts2r/maruthu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ trotsky marudhu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/7orsts2r/maruthu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கனடாவில் இயங்கி வரும் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2025-ம் ஆண்டிற்கான ‘அ.முத்துலிங்கம் இயல் விருது’ ஓவியர் டிராட்ஸ்கி மருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள செய்தியில் கூறியதாவது:</p><p>கனடாவில் இயங்கி வரும் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2025-ம் ஆண்டிற்கான  ‘அ.முத்துலிங்கம் இயல் விருது’ ஓவியர் டிராட்ஸ்கி மருது அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருப்பதற்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்.</p><p>நேர்த்தியான கோட்டோவியர் என்பதோடு அனிமேஷன் எனப்படும் இயங்குபடக் கலை, கணினி வரைகலை ஆகியவற்றிலும் தொடர்ந்து இயங்கி வந்த அவரது ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் தமிழ்நாடு அரசு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத் தலைவராக நமது திராவிட மாடல் அரசில் அவரை நியமித்தோம். 2023-ம் ஆண்டு நமது அரசின் செய்தித்துறை வெளியிட்ட இலக்கிய மலரிலும் டிராட்ஸ்கி மருது அவர்கள் பங்களித்திருந்தார். </p><p>தமிழ் மன்னர்கள் உண்மையில் எப்படி இருந்திருப்பார்கள் என்பதை வெளிப்படுத்தும் ஆர்வத்துடனும், அதுவரை இருந்து வந்த தவறான மனச்சித்திரங்களைக் கலைத்துப் போடும் வகையிலும் அவர் கொண்டு வந்த வாளோர் ஆடும் அமலை போன்ற பங்களிப்புகளால் தமிழர் வரலாற்றுக்கும் அவர் பெரும் பங்காற்றியுள்ளார்.</p><p>தமிழ் மரபை உலகின் நவீனச் சிந்தனைப் போக்குகளோடு இணைக்கின்ற பாலமாக விளங்கி வரும் ஓவியர் டிராட்ஸ்கி மருது அவர்களின் வாழ்நாள் சாதனைகளுக்கான தக்க அங்கீகாரமாக இவ்விருது அமைவதில் மகிழ்ச்சி கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>காதில் சீழ் வடிகிறதா? அலட்சியம் செய்யாதீர்கள்..!</title><link>https://www.maalaimalar.com/health/generalmedicine/ear-discharge-dont-ignore-it</link><comments>https://www.maalaimalar.com/health/generalmedicine/ear-discharge-dont-ignore-it#comments</comments><guid isPermaLink="false">7412379f-2e3c-473d-866f-8b9e8d836b40</guid><pubDate>Tue, 28 Jul 2026 11:17:25 +0000</pubDate><atom:updated>2026-07-28T11:17:25.709Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Health,ஆரோக்கியம்,HealthTips,Ear Problem,உடல்நலம்,காதில் சீழ் வடிதல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/7xt2j2zx/ear.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ear problem]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/7xt2j2zx/ear.jpg?w=280" width="280"></media:thumbnail><category>பொது மருத்துவம் (General Medicine)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காதில் சீழ் வடிதல் என்பது பலரும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் ஒரு பிரச்சனையாக இருந்தாலும், அதை அலட்சியப்படுத்தக் கூடாது. இது பொதுவாக காதில் ஏற்பட்ட தொற்று, காது திரை சேதம் அல்லது நடுக்காதில் ஏற்படும் அழற்சியின் அறிகுறியாக இருக்கலாம்.</p><p>குறிப்பாக குழந்தைகளிடம் இந்தப் பிரச்சனை அதிகமாகக் காணப்படுகிறது. சரியான நேரத்தில் சிகிச்சை பெறாவிட்டால் கேட்கும் திறன் பாதிக்கப்படுவதோடு, தொற்று மேலும் தீவிரமடையும் அபாயமும் உள்ளது.</p><h2><strong>காதில் சீழ் வடிதல் என்றால் என்ன?</strong></h2><p>காதின் உள்ளே ஏற்படும் தொற்றினால் அல்லது காது திரையில் ஏற்பட்ட ஓட்டையால் காதிலிருந்து மஞ்சள், வெள்ளை அல்லது சில நேரங்களில் துர்நாற்றத்துடன் கூடிய திரவம் வெளியேறுவதை காதில் சீழ் வடிதல் என்று அழைக்கப்படுகிறது. இது சில நாட்கள் மட்டுமே நீடிக்கலாம் அல்லது நீண்டகால பிரச்சனையாகவும் மாறலாம்.</p><h2><strong>காதில் சீழ் வடிவதற்கான காரணங்கள்:</strong></h2><p>நடுக்காதில் ஏற்படும் பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றுகள் இதற்கான முக்கிய காரணமாகும். காது திரை கிழிவதால் சீழ் வெளியேறலாம். காதுக்குள் நீர் தேங்குவது, காதை சுத்தம் செய்வதற்காக கூர்மையான பொருட்களை பயன்படுத்துவது, நீச்சல் குளங்களில் அசுத்தமான நீர் காதுக்குள் செல்வது மற்றும் நீண்டகால காது நோய்கள் போன்றவையும் இந்தப் பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும்.</p><h2><strong>அறிகுறிகள்:</strong></h2><p>காதிலிருந்து சீழ் வெளியேறுவதுடன் காது வலி, கேட்கும் திறன் குறைதல், காதில் அரிப்பு, துர்நாற்றம், காதில் அழுத்தம் இருப்பது போன்ற உணர்வு மற்றும் சிலருக்கு காய்ச்சலும் ஏற்படலாம். குழந்தைகளுக்கு அதிக எரிச்சல், தொடர்ந்து காதைத் தொடுவது மற்றும் தூக்கமின்மை போன்ற அறிகுறிகளும் காணப்படலாம்.</p><h2><strong>சிகிச்சை:</strong></h2><p>காதில் சீழ் வடிந்தால் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தொற்றின் காரணத்தைப் பொறுத்து ஆன்டிபயாட்டிக் மருந்துகள் அல்லது காது சொட்டு மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம். காது திரையில் ஓட்டை இருந்தால் அதற்கேற்ற சிகிச்சை அளிக்கப்படும். சிலருக்கு அறுவை சிகிச்சையும் தேவைப்படலாம். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் பயன்படுத்தக் கூடாது.</p><h2><strong>தடுப்பு முறைகள்:</strong></h2><p>காதை சுத்தம் செய்வதற்காக குச்சி, ஹேர்பின் போன்ற பொருட்களை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். குளிக்கும் போது அல்லது நீச்சல் அடிக்கும் போது காதுக்குள் அசுத்தமான நீர் செல்லாமல் பாதுகாக்க வேண்டும். சளி, காய்ச்சல் அல்லது காது வலி ஏற்பட்டால் தாமதிக்காமல் சிகிச்சை பெற வேண்டும். குழந்தைகளுக்கு தேவையான தடுப்பூசிகளை சரியான நேரத்தில் செலுத்துவதும் காது தொற்றுகளின் அபாயத்தை குறைக்க உதவும்.</p><p>காதில் சீழ் வடிதல் என்பது அலட்சியப்படுத்தக் கூடாத உடல்நலப் பிரச்சனையாகும். ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை அணுகி சரியான சிகிச்சை பெற்றால் பெரும்பாலானவர்கள் முழுமையாக குணமடையலாம். காது ஆரோக்கியத்தைப் பாதுகாக்க சுத்தம், முன்னெச்சரிக்கை மற்றும் சரியான மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றுவது மிகவும் அவசியம். </p>]]></content:encoded></item><item><title>புற்றுநோய் வழக்குகளை முடிக்க ரூ.53,000 கோடி இழப்பீடு வழங்க ஜான்சன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம்!</title><link>https://www.maalaimalar.com/news/world/powder-lawsuit-nears-resolution-johnson-johnson-agrees-to-pay-53000-crore-in-compensation-to-settle-cancer-related-cases</link><comments>https://www.maalaimalar.com/news/world/powder-lawsuit-nears-resolution-johnson-johnson-agrees-to-pay-53000-crore-in-compensation-to-settle-cancer-related-cases#comments</comments><guid isPermaLink="false">74b2aed8-97ae-48d3-b353-d85c1899c3dc</guid><pubDate>Tue, 28 Jul 2026 11:05:54 +0000</pubDate><atom:updated>2026-07-28T11:05:54.571Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>compensation,ஜான்சன் அண்ட் ஜான்சன்,Johnson &amp; Johnson,talc-based products,டால்க் அடிப்படையிலான தயாரிப்புகள்,இழப்பீடு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/461zge4u/New-Project-2026-07-28T162830.888.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முடிவுக்கு வரும் பவுடர் வழக்கு: புற்றுநோய் வழக்குகளை முடிக்க ரூ.53,000 கோடி இழப்பீடு வழங்க ஜான்சன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/461zge4u/New-Project-2026-07-28T162830.888.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜான்சன்&amp;ஜான்சன் உள்ளிட்ட கென்வியூ இன்க் நிறுவனங்களின் குழந்தை பவுடர் உள்ளிட்ட பிற டால்க் தயாரிப்புகள் கருப்பை புற்றுநோயை ஏற்படுத்துவதாக, அமெரிக்காவில் தொடரப்பட்ட பல்லாயிரக்கணக்கான வழக்குகளை முடித்துக்கொள்ள சுமார் 5.5 மில்லியன் டாலர் (இந்தி மதிப்பில் ரூ.52,668 கோடி) செலுத்த நிறுவனம் முன்வந்துள்ளது. </p><p>தனது டால்க் அடிப்படையிலான தயாரிப்புகள் புற்றுநோயை ஏற்படுத்தாது என்றும், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பேபி பவுடரை முறையாகச் சந்தைப்படுத்தி வருவதாகவும் ஜான்சன்  தெரிவித்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதரமற்றவை என்றும், இருப்பினும் சமரசமாக செல்லவே இந்த முடிவு என்றும் தெரிவித்துள்ளது. </p><p>இதுவரை நீதிமன்றத்தில் நடந்த பெரும்பாலான வழக்குகளில் தாங்கள் வெற்றிப் பெற்றுள்ளதாகவும், மேற்கொண்டு சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்தால் இந்த வழக்கிலும் இறுதியில் வெற்றி பெற்றிருப்போம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><h2>வழக்கின் பின்னணி என்ன?</h2><p>ஜான்சன்ஸ் பேபி பவுடரில் உள்ள டால்கம் துகள்களில் புற்றுநோயை உண்டாக்கும் ஆஸ்பெஸ்டாஸ் கலந்திருப்பதாகவும், இதனால் தங்களுக்குக் கருப்பை புற்றுநோய் ஏற்பட்டதாகவும் அமெரிக்காவில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் வழக்கு தொடர்ந்தனர்.</p><p>இந்நிலையில் அமெரிக்க நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த சுமார் 76,000 வழக்குகளை இந்த ஒரே ஒப்பந்தத்தின் மூலம் முடிவுக்குக் கொண்டு வர நிறுவனம் திட்டமிட்டுள்ளது.</p><p>இந்த ஒப்பந்தத்தின்படி, முதற்கட்டமாக 2027-ஆம் ஆண்டில் சுமார் ரூ.29,000 கோடியும் ($3 பில்லியன்), எஞ்சிய தொகையை 2028-ஆம் ஆண்டிலும் வழங்க நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.</p><p>இருப்பினும் இந்த இழப்பீட்டு ஒப்பந்தம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வர, வழக்கு தொடுத்தவர்களில் குறைந்தது 95 சதவீதத்தினர் இதற்குச் சம்மதம் தெரிவிக்க வேண்டும்.</p><h2>டால்க் என்றால் என்ன?</h2><p>டால்க் என்பது மெக்னீசியம், சிலிக்கான், ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜன் ஆகியவற்றால் ஆன, இயற்கையாகக் கிடைக்கும் ஒரு கனிமம் ஆகும். அதன் மென்மையான, சோப்பு போன்ற தன்மைக்காக அறியப்படும் இது, நீண்ட காலமாக குழந்தைப் பவுடரில் ஒரு முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. </p><p>டால்க் பெரும்பாலும் கல்நார் படிவுகளுக்கு அருகிலுள்ள பாறை அமைப்புகளில் காணப்படுகிறது. கல்நார் ஒரு அங்கீகரிக்கப்பட்ட புற்றுநோய்க்காரணியாகும், இது பல வகையான புற்றுநோய்களுக்கு வழிவகுக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. </p><p>சர்வதேச அளவில் எழுந்துள்ள இந்த விவாதம் காரணமாக, நிறுவனம் ஏற்கனவே 2020-ல் அமெரிக்காவிலும், பின்னர் 2023-ஆம் ஆண்டிற்குள் உலகளவிலும் டால்கம் அடிப்படையிலான பேபி பவுடர் விற்பனையை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக சோளமாவு அடிப்படையிலான பவுடர்களை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்களுக்கு எதிரான வழக்குகளை திரும்பப் பெறுக: கேரள மாநில முதல்வர் சதீசனுக்கு பினராயி விஜய் கடிதம்</title><link>https://www.maalaimalar.com/news/national/vijayan-urges-kerala-govt-to-withdraw-cases-against-neet-protest-supporters</link><comments>https://www.maalaimalar.com/news/national/vijayan-urges-kerala-govt-to-withdraw-cases-against-neet-protest-supporters#comments</comments><guid isPermaLink="false">04406cd5-b3c2-42d6-8522-8b55e390081a</guid><pubDate>Tue, 28 Jul 2026 10:51:20 +0000</pubDate><atom:updated>2026-07-28T10:51:20.060Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பினராயி விஜயன்,Pinarayi Vijayan,VD Satheesan,விடி சதீசன்,CJP Protest,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/z3q84swr/PinarayiVijayan001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ VD Satheesan- Pinarayi Vijayan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/z3q84swr/PinarayiVijayan001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு ஆதரவாக போராடியவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று பினராயி விஜயன் கேரள மாநிலம் முதல்வர் சதீசனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.</p><h2>கேரளாவில் 5 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு</h2><p>கேரள மாநில முதல்வர் வி.டி. சதீசனுக்கு பினராயி விஜயன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இளைஞர்கள், மாணவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், எம்.பி.க்கள் அமைதியான வழியில் போராட்டம் நடத்தினர். மாநிலம் முழுவதும் நடைபெற்ற இந்த போராட்டம் தொடர்பாக போலீசார் சுமார் 5 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>வழக்குகளை வாபஸ் பெற மத்திய அரசு சம்மதம்</h2><p>கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கும் மத்திய அரசுக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தம் காரணமாக மத்திய அரசு மாணவர்களுக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்வதாக உறுதி அளித்துள்ளது. ஆனால், கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான UDF அரசு இதுபோன்ற நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை.</p><p>அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை, தண்ணீர் பீய்ச்சி அடித்தல், தடியடி மேற்கொள்ளப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஜனநாயகத்திற்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.</p><p>ஒற்றுமையை தெரிவிக்கும் வகையிலும், டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் இணைந்தீர்கள். அதேவேளையில் கேரளாவில் மாணவர்களுக்கு ஆதரவாக போராடியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளீர்கள். இது என்ன நியாயம்?.</p><h2>வேடன் மீது வழக்குப்பதிவு</h2><p>எர்ணாகுளத்தில் பாடகர் வேடன் மற்றும் அவரது உதவியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்ய மத்திய அரசு ஒப்புக் கொண்ட நிலையில், கேரளாவில் நிபந்தனையற்ற வகையில் அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்.</p><p>இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.</p><p>18 வயதிற்கு உட்பட்டோரை கிரிமினல் ரெக்கார்டு இல்லாமல் விடுவிக்க வேண்டும். போராட்டம் தொடர்பான வீடியோக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று <a href="https://www.maalaimalar.com/news/national/supreme-court-orders-free-probe-no-harsh-action-against-minors-in-neet-protest-cases">உச்சநீதிமன்றம்</a> உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p>மத்திய அரசிடம் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் டெல்லி மட்டுமல்லாமல் பாஜக ஆளும் பீகார், மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் மாணவர்களுக்கு எதிரான வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை வைத்தது. அந்த கோரிக்கையை மத்திய ஏற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவுடன் கைகோர்க்கும் தனுஷ்: ‘D56’ படத்தின் மாஸ் அப்டேட் வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/director-tamilarasan-teams-up-with-dhanush-d56-mass-update</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/director-tamilarasan-teams-up-with-dhanush-d56-mass-update#comments</comments><guid isPermaLink="false">740565b6-1fe1-4719-8646-e358edb0dd6d</guid><pubDate>Tue, 28 Jul 2026 10:39:37 +0000</pubDate><atom:updated>2026-07-28T10:39:37.900Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Dhanush,தமிழரசன் பச்சமுத்து,தனுஷ்,தமிழ் முருகன்,Tamilarasan Pachamuthu,D56,TamilMurugan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/7quhstj8/ddd.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dhanush -Tamilarasan Pachamuthu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/7quhstj8/ddd.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷின் 43வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர்களுக்கு அடுத்தடுத்து பல சுவாரஸ்யமான திரைப்பட அறிவிப்புகளும் அப்டேட்களும் வெளியாகியுள்ளன.</p><h2><strong>'லப்பர் பந்து' இயக்குநருடன் தனுஷ் 'D56':</strong> </h2><p>'லப்பர் பந்து' திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து, தனது அடுத்த திரைப்படத்தில் தனுஷுடன் இணையவுள்ளார். தனுஷின் 56வது திரைப்படமாக உருவாகும் இந்தப் படம் குறித்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து ஒரு முக்கிய தகவலைப் பகிர்ந்துள்ளார்.</p><p>தனுஷுக்கு ஒரு மிகப்பெரிய 'மாஸ் கமர்ஷியல் பிளாக்பஸ்டர்' திரைப்படத்தைக் கொடுக்க உறுதியளித்துள்ளதாகக் குறிப்பிட்ட இயக்குநர், வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் இதற்கான படப்பிடிப்பு பணிகள் பூசையுடன் தொடங்கும் என்பதைத் தெரிவித்துள்ளார். இப்படத்தில் 'உரியடி' புகழ் விஜய் குமார் இணையவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பிரபல நடிகை ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடிக்கக்கூடும் என்றும் சினிமா வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2><strong>Om:Chapter 1-Udhiram:</strong></h2><p>ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் தற்போது நடித்துவரும் திரைப்படம் 'ஓம்'. மலேசியாவில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் இருக்கும் இத்திரைப்படம், வரும் 'அக்டோபர் 16' அன்று திரைக்கு வரத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தில் மம்மூட்டி, நசீருதீன் ஷா, சாய் பல்லவி, ஸ்ரீலீலா மற்றும் இந்திரன்ஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.</p><h2><strong>மாரி செல்வராஜ்-ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி:</strong></h2><p>'கர்ணன்' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, தனுஷ் மீண்டும் இயக்குநர் மாரி செல்வராஜுடன் இணையவுள்ளார். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனுடன் இணைந்து பிரபல எழுத்தாளர் அறிவுமதியின் எழுத்தில் உருவாகும் 'தமிழ் முருகன்' என்ற புதிய திரைப்படத்திலும் தனுஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.</p><p>தனுஷ் தற்போது கைவசம் பல முக்கியப் படங்களை வைத்திருப்பதால், அவரது ரசிகர்கள் மத்தியில் இந்த அறிவிப்புகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது அணை விவகாரம்: பெரும் சதி வலை பின்னப்படுகிறது! அரசுக்கு எச்சரிக்கைத் தேவை!- அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-mekedatu-dam-issue-a-big-conspiracy-web-is-being-woven-the-government-needs-a-warning</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-mekedatu-dam-issue-a-big-conspiracy-web-is-being-woven-the-government-needs-a-warning#comments</comments><guid isPermaLink="false">e6711096-4b52-41cb-9a21-650a419621c8</guid><pubDate>Tue, 28 Jul 2026 10:32:44 +0000</pubDate><atom:updated>2026-07-28T10:32:44.282Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,mekedatu dam,மேகதாது அணை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/jm972awy/Anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/jm972awy/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்; இந்த விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக கூட்ட வேண்டும்.</aside><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>காவிரி ஆற்றின் குறுக்கே  எந்த அணையையும் கட்டுவதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட எந்த பாசன மாநிலங்களின் ஒப்புதலையும் கர்நாடக அரசு பெறத் தேவையில்லை என்றும், இது தொடர்பாக உச்சநீதிமன்றத் தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றும் மத்திய அரசு தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கர்நாடக அரசுக்கு ஆதரவான மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் இந்த நிலைப்பாடு கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.</p><p>நாடாளுமன்ற மாநிலங்களவையில் இது தொடர்பான எனது வினாவுக்கு எழுத்து மூலம் விடையளித்த மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் இராஜ் பூஷன் சவுத்ரி, ‘‘காவிரி சிக்கல் தொடர்பாக 16.02.2026-ஆம் நாள் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பில், காவிரியின் குறுக்கே எந்தவொரு கட்டுமானத்தையும் மேற்கொள்ள  தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி உள்ளிட்ட பிற பாசன மாநிலங்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று  எங்கும் கூறப்படவில்லை’’ என்று தெரிவித்துள்ளார். இதற்கு சான்றாக உச்சநீதிமன்றத் தீர்ப்பில் இடம்பெற்றுள்ள  காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் ஒரு பத்தியையும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். உச்சநீதிமன்றத் தீர்ப்பில்  ஏதோ ஒரு பகுதியை மட்டும் காட்டி, காவிரியில் தமிழகத்துக்கு எந்த உரிமையும் கிடையாது என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த மத்திய அரசு முயல்கிறது. மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு எதிராக மத்திய அரசின் ஆதரவுடன் மிகப்பெரிய சதிவலை பின்னப்படுவதைத் தான் இந்த நடவடிக்கைகள் காட்டுகின்றன.</p><p>தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே கடைமடை பாசனப் பகுதிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் எந்த திட்டங்களையும் முதல் மடை பாசனப் பகுதிகள் செயல்படுத்தக் கூடாது என்பது தான் நடைமுறையாகும். உலக அளவிலான ஒப்பந்தங்களிலும் இந்த நிலைப்பாடு வலியுறுத்தப் பட்டுள்ளது. காவிரி நீர்ப்பகிர்வு தொடர்பாக அப்போதைய சென்னை மாகாணத்திற்கும், மைசூர் மாகாணத்திற்கும் இடையே 1892, 1924 ஆகிய ஆண்டுகளில் கையெழுத்தான ஒப்பந்தங்களில் இது தெளிவாக கூறப்பட்டுள்ளது.</p><p>‘‘புதிய பாசன அணை அல்லது சிறிய அணைக்கட்டுகளை கட்ட வேண்டும் என்று மைசூர் அரசு விரும்பும் போது, அதற்கு பொருத்தமான விதிகளின்படி மெட்ராஸ் மாகாண அரசிடமிருந்து முன்கூட்டியே ஒப்புதல்  பெற வேண்டும். புதிய அணை தொடர்பான அனைத்து விவரங்களும் மெட்ராஸ் மாகாண அரசுக்கு முன்கூட்டியே  அனுப்பப்பட்டு, பணிகள் தொடங்கப்படுவதற்கு முன்பாக ஒப்புதல் பெறப்பட வேண்டும்’’ "When the Mysore Government desires to construct any "New irrigation Reservoir" or any new anicut requiring the previous consent of the Madras Government under the last preceding Rule, the full information regarding the proposed work shall be forwarded to the Madras Government and the consent of that Government shall be obtained previous to the actual commencement of work’’ என்று ஒப்பந்தங்களில் மிகத் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.</p><p>மாநிலங்களவையில் மத்திய அமைச்சரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள 16.02.2026-ஆம் நாளிட்ட தீர்ப்பின் முதல் அம்சமாக, இந்த ஒப்பந்தங்களின் கூறுகள் இப்போதும் செல்லும் என்று கூறப்பட்டிருக்கிறது.‘‘After coming into force of the 1947 Act, the doctrine of paramountcy has no room for application as the Government of India became the full sovereign authority. The two agreements of 1892 and 1924 had neither any political arrangement nor touched any facet of sovereignty of India. Per contra, the agreements cover the areas of larger public interest which do not have any political element and in this backdrop, the agreements are neither inoperative nor completely extinct’’  (1947 ஆம் ஆண்டின் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, இந்திய அரசு முழுமையான இறையாண்மை பெற்ற அதிகார அமைப்பாக மாறியதால், மேலாதிக்கக் கோட்பாடு செயல்படுவதற்கு இனி இடமில்லை. 1892 மற்றும் 1924 ஆம் ஆண்டுகளின் இரு ஒப்பந்தங்களும் எந்தவொரு அரசியல் ஏற்பாட்டையும் கொண்டிருக்கவில்லை; மேலும் அவை இந்தியாவின் இறையாண்மையின் எந்தவொரு அம்சத்தையும் பாதிக்கவுமில்லை. மாறாக, இந்த ஒப்பந்தங்கள் எந்தவொரு அரசியல் கூறுகளும் இல்லாத, பரந்த பொது நலன் சார்ந்த விஷயங்களை மட்டுமே உள்ளடக்கியுள்ளன. இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, இந்த ஒப்பந்தங்கள் செயலற்றவை என்றோ அல்லது முற்றிலும் காலாவதியானவை என்றோ ஆகிவிடாது) என்று கூறப்பட்டுள்ளது. கடைமடை பாசன மாநிலமான தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல், எந்த அணையையும் கர்நாடகம் கட்ட முடியாது என்பது தான் இதன் பொருள் ஆகும். இந்த உண்மையை மறைத்து விட்டு, மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையில்லை என மத்திய அரசு கூறுவது திசை திருப்பும் செயல்.</p><p>அதுமட்டுமின்றி, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பிலும் கர்நாடகத்தில் நடைமுறையில் உள்ள பாசனத் திட்டங்கள் பட்டியலிடப்பட்டு, வேறு எந்த புதிய பாசனத் திட்டமும் செயல்படுத்தப்படக் கூடாது என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. அவ்வாறு இருக்கும் போது மேகதாது அணையை கட்ட தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையில்லை என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் இராஜ் பூஷன் சவுத்ரி எப்படி கூற முடியும்?</p><p>இந்த அடிப்படையில் தான் சிவசமுத்திரம் அணை திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை மத்திய நீர்வள ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்ட போது, அது திருப்பி அனுப்பப்பட்டதாக 2015-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9&amp;ஆம் தேதி அப்போதைய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி அவர்கள் எனக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு முன் மத்திய நீர்வளத்துறை அமைச்சராக இருந்த கஜேந்திர ஷெகாவத் அவர்களை, கடந்த 16.07.2021-ஆம் ஆண்டு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழுவினர் சந்தித்து மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்று வலியுறுத்தியது. அதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஷெகாவத், தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடக அரசால் மேகதாது அணையை கட்ட முடியாது என்று உறுதியளித்தார். இவற்றுக்கெல்லாம் மாறான நிலைப்பாட்டை இப்போது நீர்வளத்துறை அமைச்சர் சவுத்ரி மேற்கொள்ள வேண்டிய தேவை என்ன?</p><p>காவிரி பிரச்சினையில் மத்தியில் ஆட்சி செய்யும் பாரதிய ஜனதாவாக இருந்தாலும், காங்கிரசாக இருந்தாலும்  தமிழக நலனுக்கு எதிராக செயல்படுவதையே  வழக்கமாகக் கொண்டுள்ளன. மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கடந்த 2018-ஆம் ஆண்டு மத்திய பாரதிய ஜனதா அரசு அனுமதி அளித்ததே தவறு ஆகும். தமிழகத்திற்கு எதிரான இந்த துரோகத்தை காங்கிரஸ் தலைமை கண்டிக்கவில்லை. அதன்  தொடர்ச்சியாக இப்போது தமிழ்நாட்டுக்கு எதிராக இன்னொரு சதிவலையை மத்திய பாரதிய ஜனதா அரசும், கர்நாடக காங்கிரஸ் அரசும் இணைந்து பின்னுகின்றன. இந்த சதிவலை கிழித்தெறியப்பட வேண்டும். இந்த விஷயத்தில் தமிழக அரசு கூடுதல் விழிப்புணர்வுடனும், எச்சரிக்கை உணர்வுடனும் செயல்பட வேண்டும்.</p><p>மாநிலங்களவையில் நான் எழுப்பிய இன்னொரு வினாவுக்கு விடையளித்த மத்திய அமைச்சர் இராஜ் பூஷன்,  கடந்த ஜூலை 16-ஆம் தேதி வரை தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய 25.31 டி.எம்.சி நீரில் 3.37 டி.எம்.சி நீரை மட்டுமே கர்நாடகம் வழங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளார். காவிரி பிரச்சினையில் நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை கர்நாடக அரசு எந்த அளவுக்கு மதிக்கிறது என்பதற்கு இதுவே சான்றாகும்.</p><p>கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில் இன்று பிற்பகல் நிலவரப்படி  64  டி.எம்.சி தண்ணீர் உள்ளது. 4 அணைகளுக்கும் சேர்த்து வினாடிக்கு 13 ஆயிரம் கன அடி நீர் வருகிறது. ஆனாலும் கூட தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுக்கிறது என்றால் அங்குள்ள ஆட்சியாளர்கள் எந்த அளவுக்கு சட்டத்தை மதிக்காதவர்கள்; மனிதநேயமற்றவர்கள் என்பதை புரிந்து கொள்ளலாம். இப்போதே அரை டி.எம்.சி தண்ணீர் கூட கொடுக்காதவர்கள், மேகதாது அணையை கட்ட அனுமதித்தால் காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக மாற்றாமல் ஓயமாட்டார்கள் என்பதை எவராலும் மறுக்க முடியாது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/மேகதாது-அணை">மேகதாது அணை</a> விவகாரத்தில் மத்திய அரசு எடுத்துள்ள புதிய நிலைப்பாடு நமக்கு சொல்லும் செய்தி என்னவென்றால், காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு வழங்காமல் இருப்பதற்காக பெரும் சதி நடக்கிறது என்பதும்,  இதில் மத்திய அரசும் பங்குதாரராக உள்ளது என்பதும் தான். எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்; இந்த விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக கூட்ட வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>கட்டுமானப் பொருட்கள் மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்யவேண்டும் - விஜய்க்கு கேரள முதலமைச்சர் கடிதம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kerala-chief-minister-writes-to-vijay-urging-a-review-of-export-restrictions-on-construction-materials</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kerala-chief-minister-writes-to-vijay-urging-a-review-of-export-restrictions-on-construction-materials#comments</comments><guid isPermaLink="false">836a4f48-f32e-411f-9f77-4c02a86ddbed</guid><pubDate>Tue, 28 Jul 2026 10:27:49 +0000</pubDate><atom:updated>2026-07-28T10:27:49.312Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>vijay,Construction materials,முதலமைச்சர் விஜய்,Satheesan,கட்டுமானப் பொருட்கள்,கேரள முதலமைச்சர் சதீசன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/soqvx8iu/New-Project-2026-07-28T155126.274.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கட்டுமானப் பொருட்கள் மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்யவேண்டும் - விஜய்க்கு கேரள முதலமைச்சர் கடிதம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/soqvx8iu/New-Project-2026-07-28T155126.274.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலோகம் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள்மீதான தமிழ்நாடு அரசின் ஏற்றுமதி கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய்க்கு, கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன் கடிதம் எழுதியுள்ளார். </p><p>தமிழ்நாடு அரசு விதித்துள்ள இந்தக் கட்டுப்பாடுகள், தங்களின் நெடுஞ்சாலைப் பணிகளை கடுமையாக பாதித்துள்ளதாக சுதீசன் சுட்டிக் காட்டியுள்ளார். </p><p>தமிழ்நாடு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால், அது ஒட்டுமொத்த தென்னிந்தியாவுக்கும் நன்மை பயக்கும் என்றும் அந்தக் கடிதத்தில் சதீசன் குறிப்பிட்டுள்ளார். </p><h2>எதற்காக இந்தக் கடிதம்? </h2><p>அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்களைக் கொண்டு செல்ல தமிழ்நாடு அரசு சமீபத்தில் தடை விதித்தது. தமிழ்நாடு அரசின் இந்த திடீர் தடையால், கேரளாவில் நடைபெற்று வரும் முக்கிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் பெரும் பாதிப்பைச் சந்திக்கும்.</p><p>இதனைத்தொடர்ந்து இந்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. </p><h2>தமிழ்நாடு மக்கள் கூறுவது என்ன?</h2><p>கேரளாவில் ஏராளமான கனிமவளங்கள் இருக்கும்நிலையில், அங்கு வெட்டி எடுக்காமல், தமிழ்நாட்டின் வளங்களை கேட்பது ஏன் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவில் விரைவில் அறிமுகமாகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்: ரிசர்வ் வங்கி பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/plastic-rupee-notes-to-be-introduced-soon-in-india-union-government-approves-rbi-proposal</link><comments>https://www.maalaimalar.com/news/national/plastic-rupee-notes-to-be-introduced-soon-in-india-union-government-approves-rbi-proposal#comments</comments><guid isPermaLink="false">0f49bd8f-83fa-4ef2-98d1-65273144bcbc</guid><pubDate>Tue, 28 Jul 2026 10:14:01 +0000</pubDate><atom:updated>2026-07-28T10:14:01.349Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>reserve bank of india,ரிசர்வ் வங்கி,plastic currency,polymer currency,பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்,பாலிமர் ரூபாய் நோட்டுகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/z3i9li6v/plastic-currecy.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Plastic currency  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/z3i9li6v/plastic-currecy.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் காகித ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக, நீண்ட காலம் உழைக்கக்கூடிய 'பாலிமர்' எனப்படும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளைச் புழக்கத்தில் விடுவதற்கான ரிசர்வ் வங்கியின் (RBI) பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முதற்கட்டமாக ரூ.10 மற்றும் ரூ.20 மதிப்பிலான பாலிமர் நோட்டுகளைச் சோதனை முறையில் அச்சடித்து வெளியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><h2><strong>ரூ.100 கோடிக்கு பிளாஸ்டிக் நோட்டுகள் அச்சடிப்பு:</strong></h2><p>சோதனை முயற்சியாக ரூ.10 மற்றும் ரூ.20 மதிப்பிலான பிளாஸ்டிக் நோட்டுகள் தலா '100 கோடி' வரை அச்சடிக்கப்பட உள்ளன. இந்தச் சோதனை முயற்சி வெற்றிபெறும் பட்சத்தில், பாலிமர் நோட்டுகள் வழக்கமான பயன்பாட்டிற்கு முழுமையாகக் கொண்டுவரப்படும் என நாடாளுமன்ற மக்களவையில் நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.</p><h2><strong>பழைய காகித நோட்டுகள் செல்லாதா?</strong></h2><p>பழைய காகித ரூபாய் நோட்டுகள் உடனடியாகத் தடை செய்யப்பட மாட்டாது. காகித நோட்டுகளுடன் சேர்ந்து பிளாஸ்டிக் நோட்டுகளும் இணையாகப் புழக்கத்தில் இருக்கும். காகித நோட்டுகளை முழுமையாகத் திரும்பப் பெறும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்றும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.</p><h2><strong>பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளின் நன்மைகள்:</strong></h2><p>•காகித நோட்டுகளை விட பாலிமர் நோட்டுகள் பல மடங்கு கூடுதல் ஆயுட்காலம் கொண்டவை.</p><p>• தண்ணீரில் நனையாது, எளிதில் கிழியாது மற்றும் அழுக்கடையாது.</p><p>•இவற்றில் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை எளிதாகச் சேர்க்க முடியும் என்பதால், போலி நோட்டுகளை அச்சடிப்பது மிகவும் கடினம்.</p><p>ரூ.10, ரூ.20 போன்ற குறைந்த மதிப்பு கொண்ட காகித நோட்டுகள் மக்களிடையே அதிகளவில் கைமாறுவதால் விரைவில் சேதமடைந்து பயன்பாட்டிற்கு ஒவ்வாமல் போகின்றன. இதனால் ரிசர்வ் வங்கிக்கு இவற்றை அடிக்கடி புதிதாக அச்சடிக்கும் செலவு அதிகரிக்கிறது. </p><p>இதைக் கட்டுப்படுத்தவே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா போன்ற உலகின் பல நாடுகளில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் பிளாஸ்டிக் பண முறையை இந்தியாவிலும் அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி நீண்ட நாட்களாகத் திட்டமிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா - ஆளுநர் பட்டம் வழங்கினார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-governor-provided-nellai-manonmaniam-sundaranar-university-convocation-ceremony</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-governor-provided-nellai-manonmaniam-sundaranar-university-convocation-ceremony#comments</comments><guid isPermaLink="false">8149677f-0f95-477e-8137-8e5c4f9a9cee</guid><pubDate>Tue, 28 Jul 2026 09:02:42 +0000</pubDate><atom:updated>2026-07-28T09:02:42.268Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Governor,பட்டமளிப்பு விழா,தமிழ்நாடு ஆளுநர்,Convocation Ceremony,nellai manonmaniam sundaranar university</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/x4cngl4g/governor.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Convocation ceremony]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/x4cngl4g/governor.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 33-வது <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-dam-issue-cm-vijay-letter-to-pm-modi">பட்டமளிப்பு விழா</a> இன்று பல்கலைக்கழகம் வளாகத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் கலையரங்கில் நடைபெற்றது. </p><p>விழாவுக்கு ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார். </p> <h2>பட்டமளிப்பு விழா</h2><p>நிகழ்ச்சியில் கொச்சியில் உள்ள கேரளா மீன்வளம் மற்றும் கடல் ஆய்வு பல்கலைக்கழகத்தின் நிறுவன துணைவேந்தர் மதுசூதன குரூப் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார்.</p><p>பட்டமளிப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை துணைவேந்தர் சந்திரசேகர், பதிவாளர் (பொறுப்பு) அண்ணாதுரை ஆகியோர் செய்து இருந்தனர்.</p> <p>விழாவில் 37 ஆயிரத்து 877 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் 12 ஆயிரத்து 932 மாணவர்களும், 24 ஆயிரத்து 945 மாணவிகளும் அடங்குவர். முன்னதாக அந்த மாணவ-மாணவிகளுடன் ஆளுநர் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.</p><p>பட்டமளிப்பு விழாவில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், நெல்லை ஆர்.டி.ஓ. பிரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.</p> <h2>2 பதக்கங்கள் வென்ற 2 மாணவிகள் </h2><p>இந்த ஆண்டு 2 மாணவிகள் தலா 2 பதக்கங்களை வென்று சிறப்பிடம் பெற்றுள்ளனர். வாசுதேவநல்லூர் வியாசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மாணவி லலிதா குமாரி இளநிலை பட்டப்படிப்பில் சிறப்பிடம் பெற்றதற்காக தினத்தந்தி பொன்விழா பதக்கம், டாக்டர் எஸ். ராமச்சந்திரன் பதக்கம் உள்ளிட்ட 2 பதக்கங்களை பெற்றார். </p> <h2>தமிழ்த்தாய் வாழ்த்து</h2><p>அதேபோல், பல்கலைக்கழக மாணவி நந்தினி இளநிலை பட்டப்படிப்பில் 2 பல்கலைக்கழகப் பதக்கங்களை பெற்றார்.</p><p>பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்பதால் ஏற்கனவே அறிவித்தபடி <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-condemns-singing-tamil-thai-vazhthu-third-at-convocation-ceremony">தமிழ்த்தாய் வாழ்த்து</a> 3-வதாக தான் பாடப்படும் என்று பல்கலைக்கழக நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். </p> <p>இந்த நிலையில் தமிழக அரசும் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்த நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டதை கண்டிக்கும் விதமாக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்தார். அதன் தொடர்ச்சியாக ராபர்ட் புரூஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆர்.எஸ்.முருகன், தி.மு.ராஜேந்திரன் உள்ளிட்டவர்களும் விழாவை புறக்கணித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>எல்லையில் சீனா &apos;ஸ்டெல்த்&apos; போர் விமானங்கள் குவிப்பு: லடாக்கில் மீண்டும் பதற்றம்!</title><link>https://www.maalaimalar.com/news/world/china-j20-stealth-jets-massed-at-border-sparking-fresh-ladakh-tensions</link><comments>https://www.maalaimalar.com/news/world/china-j20-stealth-jets-massed-at-border-sparking-fresh-ladakh-tensions#comments</comments><guid isPermaLink="false">12a549e7-eb68-4c62-b84d-b569e304b4ed</guid><pubDate>Tue, 28 Jul 2026 08:52:27 +0000</pubDate><atom:updated>2026-07-28T08:52:27.985Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ladakh,லடாக்,J-20 Mighty Dragon,Damxung,J-20 மைட்டி டிராகன்,தம்ஷுங் விமானத்தளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/zessja8s/china.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ J-20 Mighty Dragon  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/zessja8s/china.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய-சீன எல்லைக் கோட்டுப் பகுதியில் சீனா தனது ஐந்தாம் தலைமுறை 'J-20 மைட்டி டிராகன்' ரக ஸ்டெல்த் போர் விமானங்களை அதிக அளவில் நிலைநிறுத்தியுள்ளதாக செயற்கைக்கோள் படத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>சமீபத்திய வணிகரீதியான செயற்கைக்கோள் படங்களின் ஆய்வின்படி, லடாக் எல்லைக்கு அருகிலுள்ள 'ஹோட்டான்' விமானப் படையில் 7 J-20 விமானங்களும், அருணாச்சலப் பிரதேச எல்லைக்கு அருகிலுள்ள தம்ஷுங் விமானப் படையில் 4 J-20 விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><h2><strong>ஹோட்டான் விமானத்தளம்:</strong></h2><p>இது இந்தியாவின் தவுலத் பெக் ஓல்டி தளத்திலிருந்து சுமார் 245 கி.மீ தொலைவிலும், லே பகுதியிலிருந்து 389 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.</p><h2><strong>தம்ஷுங் விமானத்தளம்:</strong></h2><p>அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதிக்கு வடமேற்கே சுமார் 344 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.</p><h2><strong>வான் பாதுகாப்பு் சவால்:</strong></h2><p>இந்தியாவிடம் தற்போது 5th Gen ஸ்டெல்த் ரக போர் விமானங்கள் எதுவும் இல்லை. இந்திய விமானப்படை ரஃபேல், சுகோய் (Su-30MKI), 'மிராஜ் 2000' மற்றும் 'மிஹ்-29' ஆகிய 4.5 தலைமுறை போர் விமானங்களையே முதன்மையாகச் நம்பியுள்ளது. ரேடாரில் எளிதில் சிக்காத சீனாவின் J-20 விமானங்கள் எல்லைக்கு அருகே நிலைநிறுத்தப்பட்டிருப்பது இந்திய வான் பாதுகாப்பு உத்திகளில் பெரிய மாற்றத்தைக் கோருகிறது.</p><h2><strong>தொழில்நுட்ப  சவால்கள்:</strong></h2><p>அதிக உயரமான திபெத் மற்றும் சிஞ்சியாங் பகுதிகளில் காற்று அடர்த்தி குறைவாக இருப்பதால், விமான இன்ஜின்களின் உந்துவிசை குறைய வாய்ப்புள்ளது. எனினும், சீனா இரு வேறு உயர்ந்த தளங்களில் ஒரே நேரத்தில் J-20 விமானங்களை இயக்கிப் பார்ப்பது, அதன் தளவாட மேலாண்மை மற்றும் பராமரிப்புத் திறனைச் சோதித்துப் பார்க்கும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.</p><h2><strong>தொழில்துறை வளர்ச்சி:</strong></h2><p>சீனா ஆண்டிற்கு சுமார் 100 முதல் 120 J-20 விமானங்களை உற்பத்தி செய்து வருவதாகக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. தற்போதைய நிலவரப்படி, சீனாவிடம் சுமார் 300 முதல் 500 வரையிலான J-20 விமானங்கள் பயன்பாட்டில் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.</p><h2><strong>ஏவுகணைப் பாதுகாப்பு:</strong></h2><p>எல்லையில் சீனாவின் வான்வழி அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா S-400 ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளை மற்றும் பிற மேம்படுத்தப்பட்ட ரேடார் வலையமைப்புகளை எல்லைப் பகுதிகளில் தீவிரமாகப் பயன்படுத்தி வருகிறது. இந்தியா தனது சொந்த 5th Gen ஸ்டெல்த் விமானத் திட்டமான 'AMCA (Advanced Medium Combat Aircraft' தயாரிப்பை விரைவுபடுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான முன்மாதிரி தயாரிப்புகள் வரும் ஆண்டுகளில் எதிர்பார்க்கப்படுகின்றன.</p><p>சீனாவின் இந்த நடவடிக்கை உடனடிப் போருக்கான அறிகுறி அல்ல என்றாலும், எல்லைப் பகுதியில் தொடர்ச்சியான கண்காணிப்பையும், வான்வழிப் பாதுகாப்பு ஆயத்தங்களையும் இந்தியா பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பட்டமளிப்பு விழாவில் 3-வதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து - கனிமொழி கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-condemns-singing-tamil-thai-vazhthu-third-at-convocation-ceremony</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-condemns-singing-tamil-thai-vazhthu-third-at-convocation-ceremony#comments</comments><guid isPermaLink="false">18de5582-9e55-4796-8a5f-71d3eb88daaf</guid><pubDate>Tue, 28 Jul 2026 08:47:49 +0000</pubDate><atom:updated>2026-07-28T08:47:49.228Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Kanimozhi,கனிமொழி,பட்டமளிப்பு விழா,Convocation Ceremony,தமிழ்த்தாய் வாழ்த்து,Tamil Thai Vazhthu</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/sqqxp475/kanimozhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Convocation Ceremony - Kanimozhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/sqqxp475/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-வதாக பாடப்பட்டதற்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><h2>பட்டமளிப்பு விழா</h2><p>நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்பதால் ஏற்கனவே அறிவித்தபடி தமிழ்த்தாய் வாழ்த்து 3-வதாக தான் பாடப்படும் என்று பல்கலைக்கழக நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். </p> <h2>உயர்கல்வித்துறை அமைச்சர் புறக்கணிப்பு</h2><p>இந்த நிலையில் தமிழக அரசும் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்த நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டதை கண்டிக்கும் விதமாக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்தார். அதன் தொடர்ச்சியாக ராபர்ட் புரூஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆர்.எஸ்.முருகன், தி.மு.ராஜேந்திரன் உள்ளிட்டவர்களும் விழாவை புறக்கணித்தனர்.</p> <h2>கனிமொழி கண்டனம்</h2><p>இந்நிலையில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 3-வதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதற்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம்  தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p> <p>முதன்முறையாக தமிழ்நாடு பல்கலைக்கழகம் ஒன்றில், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு, வந்தே மாதரம் பாடலுடன் பட்டமளிப்பு விழா தொடங்கியுள்ளது. </p><p>வாய் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா என்று கேட்டவர், இப்போது இதைக் கண்டித்து எதாவது பேசுவாரா?</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>போராட்டத்தில் கைதான 18 வயதுக்கு உட்பட்டோரை விடுவிக்க வேண்டும்.. போலீஸ் அடக்குமுறை மீது விசாரணை உண்டு - உச்சநீதிமன்றம்</title><link>https://www.maalaimalar.com/news/national/supreme-court-orders-free-probe-no-harsh-action-against-minors-in-neet-protest-cases</link><comments>https://www.maalaimalar.com/news/national/supreme-court-orders-free-probe-no-harsh-action-against-minors-in-neet-protest-cases#comments</comments><guid isPermaLink="false">4353eac1-ddfe-40ad-ab94-e056bf359036</guid><pubDate>Tue, 28 Jul 2026 08:23:57 +0000</pubDate><atom:updated>2026-07-28T08:23:57.015Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,சூர்யகாந்த்,உச்சநீதிமன்றம்,Surya Kant,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/m1zp1pa7/tn-18.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ போராட்டம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ போராட்டம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/m1zp1pa7/tn-18.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக நாடு முழுவதும் நடந்த <a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-cases-withdrawn-assam-bihar-and-rajasthan-grant-amnesty-to-demonstrators">போராட்டத்தின்</a>போது கைது செய்யப்பட்ட 18 வயதுக்கு உட்பட சிறுவர்களை விடுவிக்க  வேண்டும் என மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. </p><h2>விசாரணை </h2><p>ஜூலை 20 அன்று நாடாளுமன்றம் நோக்கி சென்ற இளைஞர்கள் மீதான தாக்குதல் உட்பட பல்வேறு மாநிலங்களில் நடந்த போராட்டங்களில் இளைஞர்கள் மீதான போலீஸ் அடக்குமுறை குறித்த மனுக்கள் , பீகாரில் ஏகே 47 துப்பாக்கியால் போராட்டக்காரர்களை சுட்ட காவல் அதிகாரி மீதான ஆர்ஜேடி எம்.பி மனோஜ் ஜா உடைய மனு ஆகியவற்றை இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அடங்கிய 3 நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. </p> <h2>நடவடிக்கை கூடாது</h2><p>இதன்போது, டெல்லியின் ஜந்தர் மந்தர் மற்றும் பிற மாநிலங்களில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைமையில் நடந்த போராட்டங்களில் பங்கெடுத்த மாணவர்கள் மீது பதியப்பட்ட எப்ஐஆர்களை வைத்து எந்த கடுமையான நடவடிக்கையும் மேற்கொள்ள கூடாது. கைது செய்யப்பட்ட 18 வயதுக்கு உட்பட சிறுவர்களை விடுவிக்க வேண்டும். </p><p>அதேநேரம் குற்றப்பின்னணி உடையவர்கள் மீதான நடவடிக்கைக்கு எந்த தடையும் இல்லை என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.</p> <h2>போலீஸ் அடக்குமுறை</h2><p>மேலும்,டெல்லியில் மாணவர்கள் மீதான போலீசாரின் மிதமிஞ்சிய பலப்பிரயோகம் குறித்து விசாரிக்க உயர்மட்ட குழு அமைக்கப்படலாம் என்ற வகையிலும் உச்சநீதிமன்றம் மறைமுகமாக தெரிவித்துள்ளது. </p><p>தாக்குதலை ஈடுபட்டதாக காவல் அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதுதொடர்பாக போராட்டங்கள் அதிகம் ஒடுக்கப்பட்ட, மகாராஷ்டிரா, பீகார், அசாம், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், டெல்லி ஆகிய பாஜக ஆளும் மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.</p> <p>தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறுகையில், " இதில் நிச்சயமாக முற்றிலும் சுதந்திரமான ஒரு விசாரணை நடத்தப்பட வேண்டும். யாரெல்லாம் சட்டத்தை கையில் எடுத்து அத்துமீறி செயல்பட்டார்களோ அவர்கள் பணியில் இருந்து நீக்கப்பட வேண்டும். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால் விசாரணை வீண்" என தெரிவித்தார்.</p><p>இதற்காக, சிசிடிவி காட்சிகள், டிரோன் காட்சிகள், பாடி கேமராவில் பதிவான காட்சிகள், தொலைத்தொடர்பு கருவிகள், போராட்டத்துடன் தொடர்புடைய பிசிஆர் பதிவுகள் உள்ளிட்டவை பாதுகாப்பட வேண்டும் என்றும், காவல்துறை தன்வசம் வைத்துள்ள போராட்டம் நடத்தியவர்கள் குறித்த அடையாளத்தை பொதுவெளியில் வெளியிடக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>43-வது பிறந்தநாள்: போயஸ் கார்டன் இல்லத்தில் ரசிகர்களை சந்தித்த நடிகர் தனுஷ்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-dhanush-43rd-birthday-celebration-with-fans-chennai</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-dhanush-43rd-birthday-celebration-with-fans-chennai#comments</comments><guid isPermaLink="false">158cd36e-785f-400a-ac74-1131e5f4e542</guid><pubDate>Tue, 28 Jul 2026 08:23:37 +0000</pubDate><atom:updated>2026-07-28T08:23:37.390Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நடிகர் தனுஷ்,actor Dhanush,போயஸ் கார்டன்,Poes Garden,Actor Dhanush Birthday,நடிகர் தனுஷ் பிறந்தநாள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/eewg1a1e/dhanush.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Actor Dhanush birthday]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/eewg1a1e/dhanush.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான <a href="https://www.maalaimalar.com/topic/தனுஷ்">தனுஷ்</a>, தனது 43-வது பிறந்தநாளையொட்டி, சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தின் முன்பாக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அதிகாலை முதலே திரண்டனர்.</p><h2><strong>ரசிகர்களுக்கு நேரில் நன்றி தெரிவித்த தனுஷ்:</strong></h2><p>தனது வீட்டின் முன் திரண்டிருந்த ரசிகர்களைச் சந்திக்க நடிகர் தனுஷ் நேரில் வெளியே வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த ரசிகர்கள் களிப்புடனும் உற்சாகக் கூச்சலுடனும் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். ரசிகர்களின் அன்பை ஏற்றுக் கொண்ட தனுஷ், கையசைத்துத் தனது நெகிழ்ச்சியான நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.</p><h2><strong>நற்பணிகளில் தீவிரம் காட்டும் தனுஷ் ரசிகர் மன்றங்கள்:</strong></h2><p>திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட மஞ்சங்கரணையில் உள்ள வேல்ஸ் மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடிகர் தனுஷ் பிறந்த நாளையொட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை ரத்ததான முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.</p><p>இதில் நடிகர் தனுஷ் கலந்துகொண்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.</p><p>சமீபத்தில் நடைபெற்ற ரசிகர் மன்ற விழாவில்  தனது ரசிகர் மன்றத்திற்கு வெள்ளை - சிகப்பு நிறத்தின் நடுவில் நட்சத்திரம் குறிக்கப்பட்டு, அதன் நடுவே தனது உருவப்படம் இருப்பது போன்று கொடியினை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து பேசிய தனுஷ், "நமக்கு இருக்கும் இந்த ஒற்றுமையையும் பலத்தையும் சமூகத்திற்குப் பயன்படும் வகையில் மாற்ற வேண்டும்; </p><p>உங்களைச் சுற்றியுள்ள மக்களின் சிரமங்களைப் புரிந்துகொண்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து அவர்களில் ஒருவராக இருங்கள்" என்று ரசிகர்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படியே தற்போது தனுஷ் ரசிகர்கள் நற்பணிகளில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.</p><p>தமிழகம் முழுவதும் விரைவில் மாவட்டம் வாரியாக சென்று ரசிகர்களை சந்தித்து, தனது மன்றங்கள் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்தி, அதன் மூலம் மக்களை சந்திப்பதற்கான திட்டத்தை வகுத்து வருகிறார் நடிகர் தனுஷ். எனவே 2031-ம் ஆண்டுக்குள் நடிகர் தனுஷ் அரசியல் கட்சி தொடங்குவார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p>தேசிய விருதுகளை வென்று சாதனை படைத்துள்ள தனுஷிற்கு, இந்த 43-வது பிறந்தநாள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. நடிப்பு, இயக்கம், தயாரிப்பு எனப் பன்முகத்தன்மையுடன் வலம் வரும் தனுஷிற்குத் திரையுலகப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து தங்களது வாழ்த்துகளைப் பொழிந்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது அணை விவகாரம்: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-dam-issue-cm-vijay-letter-to-pm-modi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-dam-issue-cm-vijay-letter-to-pm-modi#comments</comments><guid isPermaLink="false">db7e2cf8-dfbd-408b-a665-cc2fa024de9d</guid><pubDate>Tue, 28 Jul 2026 08:18:26 +0000</pubDate><atom:updated>2026-07-28T08:18:26.818Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,mekedatu dam,மேகதாது அணை,pm modi,tvk,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/jfxoptsc/Vijay07.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/jfxoptsc/Vijay07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரியின் குறுக்கே <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">மேகதாதுவில் அணை</a> கட்டுவோம் என்று கர்நாடகா மாநில அரசு தெரிவித்து வருகிறது. இதற்கு தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. </p><h2><strong>மேகதாது அணை</strong></h2><p>ஆனால் மேகதாது அணை தொடர்பாக திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயாரித்து உள்ளது. அதை விரைவில் மத்திய அரசிடம் வழங்க உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவகுமாரை தமிழக முதலமைச்சர் விஜய் சந்தித்து பேச உள்ளார்.</p><p>இதற்கிடையே மேகதாது அணை விவகாரம் குறித்து பாராளுமன்ற மேல்-சபையில் பா.ம.க எம்.பி அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து மத்திய ஜல்சக்தி துறையின் இணை மந்திரி ராஜ் பூஷண் சவுத்ரி கூறும்போது, காவிரி பிரச்சனை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2018-ம் ஆண்டு அளித்த தீர்ப்பில், காவிரியின் குறுக்கே எந்தவொரு கட்டுமானத்தையும் கட்ட <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/karnataka-does-not-need-to-obtain-tamil-nadus-permission-to-build-the-mekedatu-dam-central-government">தமிழகம்</a>, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஒப்புதலை கர்நாடகா பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. </p><h2><strong>அதிகாரம் உள்ளது</strong></h2><p>அதேபோல் கடந்த 2007-ம் ஆண்டு காவிரி தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பின் 18-வது பிரிவு சரியானது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. அதன்படி எந்தவொரு மாநிலமும் தனது எல்லைக்குட்பட்ட காவிரி நீர் பயன்பாட்டை முறையாக அனுபவிக்க உரிமை, அதிகாரம் உள்ளது என கூறப்பட்டுள்ளது என்றார்.</p><p>மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதற்கு தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையில்லை என்று பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி தெரிவித்த கருத்துக்கு தமிழக அரசு பதில் அளித்து உள்ளது.</p><p>இந்த நிலையில் முதலமைச்சர் விஜய், பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-</p><p>மேகதாது அணை தொடர்பாக மாநிலங்களவையில் ஜல்சக்தி இணை மந்திரி அளித்த பதில்  ஏமாற்றம் அளிக்கிறது. கீழ்நிலை ஆற்று மாநிலங்களின் ஒப்புதல் தொடர்பான தற்போதைய சட்ட நிலை மற்றும் நிலைபெற்ற சட்டத்தைக் கருத்தில் கொள்ளாமல் அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது. </p><h2><strong>மத்திய அரசு தலையிட வேண்டும்</strong></h2><p>கர்நாடகா - ஆந்திரா  இடையிலான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு தெளிவாக உள்ளது. அதில் கீழ்நிலை ஆற்று மாநிலத்தின் ஒப்புதல் முற்றிலும் அவசியம் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.  காவேரி நதி வெறும் நீர் ஆதாரம் மட்டுமல்ல, அது தென்னிந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகள் மற்றும் குடிமக்களின் உயிர்நாடியாகவும் விளங்குகிறது. </p><p>மாநிலங்களுக்கு இடையேயான நதிகளை நிர்வகிக்கும் அரசியலமைப்புச் சட்ட அமைப்பின் மீது நம்பிக்கையை நிலை நிறுத்துவதற்கு, தீர்ப்பாயத்தின் தீர்ப்பையும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பையும் பாதுகாப்பது இன்றியமையாதது.</p><p>நீதி, கூட்டாட்சி நல்லிணக்கம் மற்றும் நீதித்துறைத் தீர்ப்புகளை உண்மையுடன் செயல்படுத்துதல் ஆகிய பரந்த நலன் கருதி மத்திய அரசு தலையிட வேண்டும். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்துள்ளார் முதலமைச்சர்- உதயநிதி சாடல் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-indictment-cm-vijay-2</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-indictment-cm-vijay-2#comments</comments><guid isPermaLink="false">3ee397c1-aea0-4967-9690-60c6a9c9dd5a</guid><pubDate>Tue, 28 Jul 2026 08:02:20 +0000</pubDate><atom:updated>2026-07-28T08:02:20.537Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,தவெக,கர்நாடகா,Karnataka,Udhayanidhi Stalin,mekedatu dam,மேகதாது அணை,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/hgbq3qq9/udhayanidhi.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்- எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்- எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/hgbq3qq9/udhayanidhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை முறியடிக்க முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.</aside><p>காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதற்கு, தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையில்லை என <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/karnataka-does-not-need-to-obtain-tamil-nadus-permission-to-build-the-mekedatu-dam-central-government">மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் பூஷன் சௌத்ரி</a> கூறியிருப்பதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். </p><p>அந்த வகையில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><h2><strong>கேள்விக்குறி</strong></h2><p>மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி கர்நாடகாவிற்குத் தேவை இல்லை என்ற ஒன்றிய இணை அமைச்சரின் பதில் காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.</p><p>டெல்லி எஜமானர்களை பகைத்துக் கொள்ளாமலும் - ஆட்சிக்கட்டிலைக் காப்பாற்ற  காங்கிரஸுக்கு எதிராக பேசாமலும், தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்துள்ளார் முதலமைச்சர்.</p><p>இந்த பிரச்சனையில், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் ஓரணியில் சென்று ஒன்றிய அரசிடம் மேகதாதுவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமென சட்டப்பேரவையில் பேசி இருந்தேன்.</p><h2><strong>வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோகும்...</strong></h2><p>கர்நாடகாவில் பட வசூல் பாதிக்கும் என்ற பயத்தில், இந்த #SofaModel முதலமைச்சர், எதிர்க்கட்சிகள் சொன்னதையும் கேட்கவில்லை - விவசாயிகளின் கோரிக்கையையும் ஏற்கவில்லை. </p><p>இனியும் காலம் தாழ்த்தினால் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோகும்.</p><p>எனவே, <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">மேகதாதுவில் அணை</a> கட்டும் முயற்சியை முறியடிக்க முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி கர்நாடகாவிற்குத் தேவை இல்லை என்ற ஒன்றிய இணை அமைச்சரின் பதில் காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.<br><br>டெல்லி எஜமானர்களை பகைத்துக் கொள்ளாமலும் - ஆட்சிக்கட்டிலைக் காப்பாற்ற  காங்கிரஸுக்கு எதிராக பேசாமலும்,…</p>&mdash; Udhay (@Udhaystalin) <a href="https://x.com/Udhaystalin/status/2082005391068852234?ref_src=twsrc%5Etfw">July 28, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>எதை விற்க வேண்டும் என்று யாரும் எனக்கு சொல்ல முடியாது - துருக்கிக்கு எப்-35 விற்பதை எதிர்த்த நேதன்யாவுக்கு டிரம்ப் குட்டு </title><link>https://www.maalaimalar.com/news/world/turkey-f-35-deal-netanyahu-warns-advanced-jets-to-ankara-may-upset-middle-east-power-balance</link><comments>https://www.maalaimalar.com/news/world/turkey-f-35-deal-netanyahu-warns-advanced-jets-to-ankara-may-upset-middle-east-power-balance#comments</comments><guid isPermaLink="false">85f9c197-d826-4d43-adc8-58651a7850b5</guid><pubDate>Tue, 28 Jul 2026 08:00:26 +0000</pubDate><atom:updated>2026-07-28T08:00:26.044Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிரம்ப்,நேதன்யாகு,துருக்கி,போர் விமானம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/eg37qt4c/tn-17.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நேதன்யாவுகு, எப்-35, டிரம்ப் ]]></media:title><media:description type="html"><![CDATA[ நேதன்யாவுகு, எப்-35, டிரம்ப் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/eg37qt4c/tn-17.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவின் அதிநவீன ஐந்தாம் தலைமுறை சூப்பர் சோனிக் ஸ்டெல்த் போர் விமானம் எப்-35. லாக்ஹீட் மார்ட்டின் என்ற அமெரிக்க நிறுவனம் இதை தயாரிக்கிறது.</p><p>எப்-35 போர் விமானங்களை பிரிட்டன் உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா விற்பனை செய்து வருகிறது. </p><h2>நேதன்யாகு எதிர்ப்பு</h2><p>அந்த வகையில் துருகிக்கு எப்-35 விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. ஆனால் இஸ்ரேல் அதிபர் நேதன்யாகு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். </p><p>சிஎன்என் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் நேதன்யாகு, துருக்கி ஆக்கிரமிப்பு எண்ணங்களைக் கொண்டுள்ளது. துருக்கிக்கு அதிநவீன எப்-35 போர் விமானங்களை வழங்குவது மத்திய கிழக்கின் அதிகாரச் சமநிலையை சீர்குலைக்கும்  என எச்சரித்தார். </p><p>தற்போது அவர் அமெரிக்காவில் அதிபர் டிரம்ப்-ஐ சந்திக்க புறப்பட்டு சென்றுள்ளார்.  ஈரான் விவகாரம் தொடர்பாக அவர் டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். </p> <h2>டிரம்ப் கருத்து</h2><p>இதனிடையே ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் பேட்டி அளித்த <a href="https://www.maalaimalar.com/topic/donald-trump">டிரம்ப் </a>இடம், "துருகிக்கு எப்-35 விமானங்களை விற்க நேதன்யாகு எதிர்ப்பு தெரிவிக்கிறாரே?" என செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.</p><p>இதற்கு பதிலளித்த டிரம்ப், "நாங்கள் எதை விற்க வேண்டும் என்று யாரும் எனக்குச் சொல்ல முடியாது" என்றார்.</p><p>மேலும், "துருக்கி எனக்கு ஒரு மிகச்சிறந்த நட்பு நாடாக இருந்து வருகிறது. பல துறைகளில் அவர்கள் மிகச் சிறந்த பணியைச் செய்துள்ளனர்" என்று பாராட்டிய அவர், சிரியா விவகாரம் உட்பட பிராந்திய பிரச்சினைகளில் துருக்கியின் பங்களிப்பை புகழ்ந்தார்.</p><p>துருக்கி நாடு, இஸ்ரேலையோ அல்லது நேதன்யாகுவையோ பெரிதாக விரும்புவதில்லை என்பதை ஒப்புக்கொண்ட டிரம்ப், இருப்பினும் அமெரிக்கா - துருக்கி இடையேயான உறவு வலுவாக உள்ளது என்று கூறினார்.</p> <h2>துருக்கி - ரஷியா - அமெரிக்கா</h2><p>ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணைத் தடுப்பு அமைப்பை துருக்கி வாங்கியதைத் தொடர்ந்து, டிரம்பின் முதல் ஆட்சிக்காலத்தின் போது 2019ஆம் ஆண்டில் எப்-35 திட்டத்தில் இருந்து துருக்கி நீக்கப்பட்டது.</p><p>இருப்பினும், இந்த மாத தொடக்கத்தில் துருக்கியில் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டின் போது, எஸ்-400 கொள்முதல் காரணமாக அமெரிக்கா விதித்த தடைகளை நீக்கத் தயாராக இருப்பதாக டிரம்ப் சூசகமாகத் தெரிவித்தார். மேலும் துருக்கிக்கு எப்-35 போர் விமானங்கள் வழங்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>22 ஆண்டுகளாக எஞ்சின் ஆயிலை குடித்து வாழும் விசித்திர மனிதர்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/man-living-on-engine-oil-for-22-years</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/man-living-on-engine-oil-for-22-years#comments</comments><guid isPermaLink="false">dcfa47f3-6f71-49a4-b5fa-dabdada0b5e2</guid><pubDate>Tue, 28 Jul 2026 07:52:25 +0000</pubDate><atom:updated>2026-07-28T07:52:25.373Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sabarimala,Hosur,ஓசூர்,OilKumar,ஆயில்குமார்,StrangeIncidents,Drinksengineoil</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/rb80s6b8/Drinksengineoil" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Drinksengineoil ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/rb80s6b8/Drinksengineoil?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஓசூரில் பொதுமக்கள் முன்னிலையில் சபரிமலை பக்தர் ஒருவர், வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படும் பழைய இன்ஜின் ஆயிலை மளமளவெனக் குடித்த விசித்திர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p><h2><strong>டீக்கடையில் நடந்த விபரீதம்</strong></h2><p>கர்நாடக மாநிலம், ஷிவமொக்கா பகுதியைச் சேர்ந்தவர் குமார் (48). கூலித் தொழிலாளியான இவர், ஆண்டுதோறும் சபரிமலைக்கு மாலை அணிந்து, ஓசூர் வழியாகச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். </p><p>நேற்று மாலை ஓசூர் சப்-கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள ஒரு கடையில் அவர் டீ குடித்தார். அதன் பின், யாரும் எதிர்பாராத விதமாகத் தனது பாக்கெட்டில் இருந்த ஒரு பாட்டில் பழைய இன்ஜின் ஆயிலை எடுத்து, பொதுமக்கள் முன்னிலையிலேயே வேகமாக குடித்தார். </p><p>இதைப் பார்த்த அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.</p><h2><strong>யார் இந்த "ஆயில் குமார்"?</strong></h2><p>அங்கே இருந்த பொதுமக்கள் அவரிடம் விசாரித்தபோது, "நான் கடந்த 22 ஆண்டுகளாகத் தினமும் இந்த பழைய இன்ஜின் ஆயிலைக் குடித்து வருகிறேன். இதனால் அனைவரும் என்னை 'ஆயில் குமார்' என்றே அழைக்கிறார்கள். </p><p>மெக்கானிக் கடைகளுக்குச் சென்று இந்த ஆயிலை வாங்கிக் கொள்வேன். எனக்குச் சாதாரண உணவுகள் எதுவும் செரிப்பதில்லை, உடல் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. </p><p>அதனால் உணவுகளைத் தவிர்த்துவிட்டு, எப்போதாவது ஒருமுறை டீ குடிப்பேன், மற்றபடி இந்த ஆயில் தான் என் உணவு" என்று கூறினார்.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/gh2M2rVLwJA"></iframe></figure><h2><strong>மருத்துவர்களின் எச்சரிக்கை</strong></h2><p>குமார் 22 ஆண்டுகளாக இப்படிச் செய்வதாகக் கூறினாலும், இது அரியவகை உளவியல் அல்லது உடல்நிலை மாற்றமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. </p><p>வாகன இன்ஜின் ஆயிலில் காரீயம் போன்ற ஆபத்தான நச்சு இரசாயனங்கள் நிறைந்துள்ளதால், இதைப் பின்தொடர்ந்து பொதுமக்கள் யாரும் இத்தகைய உயிருக்கே ஆபத்தான செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று மருத்துவர்கள் கடுமையாக எச்சரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>காவிரி விவகாரத்தில் மத்திய அரசு பின்வாங்கியிருப்பது கர்நாடக தேர்தல் அரசியலுக்காகவா? - அண்ணாமலை
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/annamalai-says-central-government-backed-down-on-cauvery-issue-for-karnataka-election-politics</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/annamalai-says-central-government-backed-down-on-cauvery-issue-for-karnataka-election-politics#comments</comments><guid isPermaLink="false">aacebb18-cb12-4acd-b27d-fd2c122a911c</guid><pubDate>Tue, 28 Jul 2026 07:41:35 +0000</pubDate><atom:updated>2026-07-28T07:41:35.731Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அண்ணாமலை,mekedatu dam,மேகதாது அணை,annamalai,வீ த லீடர்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/t0qx0y09/annamalai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Annamalai]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/t0qx0y09/annamalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரி விவகாரத்தில் சட்டத்திற்கும் நீதிக்கும் உட்பட்டு செயல்படுமாறு, மத்திய அரசை வலியுறுத்துகிறேன் என்று  வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.</p><p>வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88">அண்ணாமலை</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p> <p>கடந்த 16.02.2018 அன்று, உச்சநீதிமன்றம் வழங்கிய காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான தீர்ப்பில், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே எந்தவொரு கட்டமைப்பையும் புதிதாக ஏற்படுத்த, காவிரி நதி பாயும் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என நேற்றைய தினம், மாநிலங்களவையில், காவிரி நதி தொடர்பாக, மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அளித்துள்ள பதில் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. </p> <p>கடந்த 05.08.2021 அன்று அன்றைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், அணைக் கட்டுமானத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க, கர்நாடக மாநிலத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி நிபந்தனைக்குட்பட்டது என்றும், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு சட்டத்தின்படி, காவிரி கடைமட்டத்தில் பாயும் மாநிலங்களின், (குறிப்பாக தமிழ்நாட்டின்) ஒப்புதல் இன்றி, நதியின் குறுக்கே அணை உள்ளிட்ட கட்டமைப்புகளை அமைக்க முடியாது என்றும் நாடாளுமன்றத்திலேயே தெளிவாக தெரிவித்திருந்தார். </p> <p>இந்த நிலையில், தமிழ்நாட்டு விவசாயிகளின் உரிமைகளையும், நலன்களையும் புறக்கணித்து, <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/karnataka-does-not-need-to-obtain-tamil-nadus-permission-to-build-the-mekedatu-dam-central-government">மத்திய அரசு</a> தனது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து திடீரென பின்வாங்கியிருப்பது, கர்நாடகத் தேர்தல் அரசியலுக்காகவா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.  </p><p>விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இத்தகைய முக்கியமான விவகாரங்களில், மத்திய அரசு, நேர்மையாகவும், வெளிப்படையாகவும், ஒரே நிலைப்பாட்டிலும் செயல்பட வேண்டும் என எதிர்பார்ப்பது தவறா?</p> <p>தமிழ்நாட்டு மக்களை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு சகோதர மாநிலங்களுக்கிடையேயான நல்லுறவை பாதிக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவிரி விவகாரத்தில் சட்டத்திற்கும் நீதிக்கும் உட்பட்டு செயல்படுமாறு, மத்திய அரசை வலியுறுத்துகிறேன்</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அஷ்டலட்சுமி அருள் கிடைக்க செய்யும் வெற்றிலை விளக்கு </title><link>https://www.maalaimalar.com/spirituality/vetrilai-vilakku-that-bestows-the-grace-of-ashtalakshmi</link><comments>https://www.maalaimalar.com/spirituality/vetrilai-vilakku-that-bestows-the-grace-of-ashtalakshmi#comments</comments><guid isPermaLink="false">e8e6162b-0b0b-4ce5-97ac-1293588ff635</guid><pubDate>Tue, 28 Jul 2026 07:27:55 +0000</pubDate><atom:updated>2026-07-28T07:27:55.715Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>pournami,ஆடி பவுர்ணமி,Aadi Pournami,பவுர்ணமி,வெற்றிலை விளக்கு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/48njhncy/vetrilaivilakku.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ வெற்றிலை விளக்கு ]]></media:title><media:description type="html"><![CDATA[ வெற்றிலை விளக்கு ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/48njhncy/vetrilaivilakku.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>பவுர்ணமி நாளில் சந்திர வழிபாட்டுடன் வெற்றிலை விளக்கு ஏற்றி வழிபடுவது அஷ்டலட்சுமியின் அருளைப் பெற உதவும் என்கின்றனர் பக்தர்கள்.</aside><h2><strong>வெற்றிலை விளக்கு</strong> </h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BF">ஆடி மாத பவுர்ணமியில்</a> சந்திர பகவானை வழிபடுவதோடு, வீட்டின் வாசற்படியில் வெற்றிலை வைத்து விளக்கு ஏற்றி வழிபடுவது சிறந்தது.  இந்த வழிபாட்டை மேற்கொள்ள, பூஜைக்குப் பயன்படுத்தப்படும் பித்தளைத் தட்டில் 2 வெற்றிலைகளை வைத்து, அதன் மீது சிறிதளவு பச்சைக் கற்பூரம் தடவ வேண்டும். பின்னர், விளக்கில் 2 திரிகளை ஒன்றாகச் சேர்த்து வைத்து ஏற்ற வேண்டும்.</p><p>இன்று இரவே <a href="https://www.maalaimalar.com/spirituality/aadi-pournami-worship-in-tomorrow">பவுர்ணமி</a> தொடங்குவதால் இன்று இரவு முதல் விளக்கை ஏற்றி வழிபடலாம். இந்த வழிபாட்டை முறையாக மேற்கொண்டால் குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்து வரும் பிரச்சனைகள் நீங்கி, மன அமைதி, குடும்ப ஒற்றுமை, செல்வ வளம் மற்றும் அஷ்டலட்சுமியின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சொத்து தொடர்பான சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும், கணவன்-மனைவி இடையே நிலவும் மனக்கசப்புகள் விலகி, நல்ல புரிதலும் குடும்ப ஒற்றுமையும் ஏற்படும் என நம்பப்படுகிறது.</p><p>வீடு, வாசல், வாகனம், தாயார் உள்ளிட்டவற்றைக் குறிக்கும் 4-ம் பாவத்துடன் சந்திரன் தொடர்புடையவர் என்பதால், பவுர்ணமி நாளில் சந்திர வழிபாட்டுடன் வெற்றிலை விளக்கு ஏற்றி வழிபடுவது அஷ்டலட்சுமியின் அருளைப் பெற உதவும் என்கின்றனர் பக்தர்கள்.</p>]]></content:encoded></item><item><title>பிரதமரின் செல்ஃபி வீடியோ முடக்கம்: தொழில்நுட்பக் கோளாறு எனக் கூறி மன்னிப்பு கேட்ட மெட்டா நிறுவனம் !</title><link>https://www.maalaimalar.com/news/national/prime-ministers-selfie-video-blocked-meta-apologises-over-technical-glitch</link><comments>https://www.maalaimalar.com/news/national/prime-ministers-selfie-video-blocked-meta-apologises-over-technical-glitch#comments</comments><guid isPermaLink="false">a0f37744-603d-4612-be72-a99866a37ba2</guid><pubDate>Tue, 28 Jul 2026 07:27:12 +0000</pubDate><atom:updated>2026-07-28T07:27:12.735Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>narendra modi,Meta,மெட்டா நிறுவனம்,இந்திய பிரதமர் நரேந்திர மோடி,Modi selfie video,மோடி செல்ஃபி வீடியோ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/a1wxjryw/modi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Modi selfie video]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/a1wxjryw/modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரதமர் நரேந்திர மோடி தனது பேஸ்புக் (Facebook) பக்கத்தில் வெளியிட்ட செல்ஃபி வீடியோ ஒன்று, தளத்தில் திடீரெனத் தடை செய்யப்பட்டு முடக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து உடனடியாக விளக்கம் அளித்துள்ள மெட்டா நிறுவனம், "தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே தவறுதலாக வீடியோ நீக்கப்பட்டது" எனக் கூறி மன்னிப்பு கேட்டுள்ளதுடன், அந்த வீடியோவை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வந்துள்ளது.</p><h2><strong>என்ன நடந்தது?</strong></h2><p>தேர்வுத் தாள் கசிவு விவகாரம் மற்றும் மாணவர்களின் எதிர்காலம் குறித்து, நாட்டின் இளைஞர்கள் மற்றும் Gen-Z தலைமுறையினரை நோக்கி பிரதமர் நரேந்திர மோடி செல்ஃபி வடிவில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ குறுகிய நேரத்திலேயே மில்லியன் கணக்கில் பார்வைகளைப் பெற்று வைரலானது. </p><p>ஆனால், திடீரென அந்த வீடியோ பேஸ்புக் பக்கத்தில் முடக்கப்பட்டு, "சட்டப்பூர்வ கோரிக்கையின் அடிப்படையில் இந்த பதிவு இந்தியாவில் இடைநிறுத்தப்பட்டுள்ளது" என்ற அறிவிப்புத் திரையில் தோன்றி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</p><h2><strong>மெட்டா அளித்துள்ள விளக்கம்:</strong></h2><p>இதுகுறித்து மெட்டா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், "இந்த வீடியோ தவறுதலாக நீக்கப்பட்டது. தற்போது அந்த தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு, வீடியோ மீண்டும் பேஸ்புக்கில் மீட்டெடுக்கப்பட்டுள்ளது" என்று கூறி அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளார்.</p><h2><strong>ஒன்றிய அரசின் அதிரடி உத்தரவு:</strong></h2><p>ஜனநாயக நாட்டின் பிரதமரின் அதிகாரப்பூர்வ வீடியோவே தவறுதலாக முடக்கப்பட்ட விவகாரத்தை இந்திய அரசு மிகக் கடுமையான விஷயமாக எடுத்துக்கொண்டுள்ளது. இது குறித்து நேரில் ஆஜராகி விரிவான விளக்கம் அளிக்குமாறு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், மெட்டா நிறுவனத்தின் உலகளாவிய கொள்கைத் தலைவர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><h2><strong>வீடியோவில் பிரதமர் கூறியது என்ன?</strong></h2><p>பேப்பர் லீக் முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் பேசிய பிரதமர், "தேர்வுத் தாள் கசிவு என்பது மிகக் கடுமையானப் பிரச்சனை. இதில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கத் தனிச் சட்டமும், விரைவு நீதிமன்றங்களும் அமைக்கப்படும்" என உறுதியளித்திருந்தார்.</p><p>பிரதமரின் இந்த வீடியோ சட்டப்பூர்வக் கோரிக்கை காரணமாக முடக்கப்பட்டதாகத் திரையில் காட்டியது, சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பிய நிலையில், மெட்டாவின் விளக்கம் மற்றும் அரசின் சம்மன் நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்கள் மீது தாக்குதல் விவகாரம்.. அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு 
</title><link>https://www.maalaimalar.com/news/national/parliament-chaos-house-adjourned-amid-demand-to-debate-exam-scams-and-student-protest-assault</link><comments>https://www.maalaimalar.com/news/national/parliament-chaos-house-adjourned-amid-demand-to-debate-exam-scams-and-student-protest-assault#comments</comments><guid isPermaLink="false">dba27ef7-78fa-4bc7-b482-2c512c940650</guid><pubDate>Tue, 28 Jul 2026 07:24:47 +0000</pubDate><atom:updated>2026-07-28T07:24:47.903Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மக்களவை,மழைக்கால கூட்டத்தொடர்,பிரியங்கா காந்தி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/3s32l87o/tn-16.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மக்களவை ]]></media:title><media:description type="html"><![CDATA[ மக்களவை ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/3s32l87o/tn-16.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இரண்டாம் கட்ட நாடாளுமன்ற <a href="https://www.maalaimalar.com/news/national/nda-meet-under-modi-20-dissident-tmc-mps-join-ncpi-and-attend-alliance-meeting">மழைக்கால கூட்டத்தொடர் </a>நேற்று தொடங்கியது. நேற்றைய தினமே, பொதுத்தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்த மசோதா 2026-ஐ மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் தாக்கல் செய்தார். </p><p>இன்று அதன் மீதான விவாதம் நடைபெற உள்ளது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்றை போலவே இன்றும் இரு அவைகளிலும்,  தேர்வு முறைகேடுகள், ஜூலை 20 அன்று நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்திய மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து விவாதிக்க கோரி கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். </p><h2>ஒத்திவைப்பு </h2><p>இதனால் காலை 11 மணிக்கு தொடங்கிய சொற்ப நேரத்திலேயே இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.</p><p>மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா கூறுகையில், "சபை நடந்தால் தான் விவாதமும் கலந்துரையாடலும் நடைபெறும், அனைவரின் கருத்துக்களையும் வெளிப்படுத்த முடியும். அப்போது தான் அந்த செய்தி நாடு முழுவதும் சென்று சேரும் எனக் குறிப்பிட்டார். </p>  <h2>அவை நடவடிக்கைகள்</h2><p>தொடர் தொடங்கியதில் இருந்து தினமும் ஒத்திவைப்புகள் நடந்து வருவதால் அவை நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.</p><p>முதற்கட்டத்தில் தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற அமளி நீடித்தது. சிஜேபி தலைமையில் இளைஞர்களின் 1 மாத போராட்டத்தின் பின் அவர் பதவி விலகிய நிலையில், தற்போது மாணவர்கள் மீதான தாக்குதல் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளனர்.</p> <h2>வெட்கமாக இல்லையா?</h2><p>இதனிடையே காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி பேசுகையில், நேற்று தர்மேந்திர பிரதானுக்கு தலைப்பாகை, சால்வை அணிவித்து என்டிஏ எம்.பிக்கள் வரவேற்றத்தை விமர்சித்தார். </p><p>அவர் கூறியதாவது, " உங்களுக்கு வெட்கமாக இல்லையா? அவர் எதன் பின்னணியில் பதவி விலகினார் என்பதை யோசித்து பாருங்கள். ஆனாலும் அவர் சூப்பர்ஸ்டாரை போல வரவேற்கபடுகிறார். </p><p>இன்றைக்கும் கூட மாணவர்கள் துன்புறுத்தப்பட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இன்ஸ்ட்டாகிராமில் பெண்களின் புகைப்படங்களை பதிவிட்டு, அவர்கள் இதைச்  செய்தார்கள், அதைச் செய்தார்கள் என தரக்குறைவாக பேசி வருகிறார்கள். நீங்கள் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைக்கும் முன்வரவில்லை, இந்த பிரச்னையை சுமூகமாக தீர்க்கமும் விரும்பவில்லை.  நீங்கள் மாணவர்களை இப்போதும் கூட அடக்கி ஒடுக்க முயல்கிறீர்கள்" என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>நாளை ஆடிப்பவுர்ணமி: விரதம் இருந்து அம்மன், பெருமாளை வணங்கினால் செல்வ வளம் சேரும்</title><link>https://www.maalaimalar.com/spirituality/aadi-pournami-worship-in-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/spirituality/aadi-pournami-worship-in-tomorrow#comments</comments><guid isPermaLink="false">b0768ff8-f687-4385-a67a-6f6cfc2a8e30</guid><pubDate>Tue, 28 Jul 2026 07:21:16 +0000</pubDate><atom:updated>2026-07-28T07:21:16.331Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>pournami,ஆடி பவுர்ணமி,Aadi Pournami,பவுர்ணமி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/sq4xfbdg/aadi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/sq4xfbdg/aadi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>ஆடிப் பவுர்ணமி தினத்தன்று அம்பிகைக்கு பாலாபிஷேகம் செய்து, வாழைப்பழம் கலந்த சாதத்தை நைவேத்தியம் செய்து வழிபாடு செய்வது மிக அற்புதமான பலன்களை கொடுக்கவல்லது.</aside><h2><strong>ஆடிப் பவுர்ணமி</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BF">ஆடிப் பவுர்ணமி</a> எனப்படும் குரு பூர்ணிமா அம்மன் வழிபாட்டிற்கும், குருவை வணங்குவதற்கும் மிகச்சிறப்பு வாய்ந்த ஆன்மீக நாளாகும். இந்நாளில் கல்வி, ஞானம் மற்றும் குடும்ப வளம் பெருக சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. குரு பூர்ணிமா ஞானக் கடவுளாம் ஸ்ரீ ஹயக்ரீவர் மற்றும் முதன்மைக் குருவான வியாசர் அவதரித்த நாளாகவும் கருதப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/spirituality/aanmiga-kalanjiyam/hayakreevar-avatharitha-aadi-pournami-730474">ஹயக்ரீவரையும்</a> குருவையும் வணங்கினால் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர். ஆடிப் பவுர்ணமியில் அம்பாளுக்கு அபிஷேகங்கள் செய்து, புடவை சாற்றி, பொங்கல் படையலிட்டு வழிபட்டால் குடும்பத்தில் வளம் பெருகும். நிம்மதி குடி கொள்ளும். தம்பதி ஒற்றுமை மேலோங்கும்.</p><p>பவுர்ணமி அன்று பக்தர்கள் உணவு உண்ணாமல் விரதம் மேற்கொள்கின்றனர். மாலையில் கோவில்களில் அல்லது  வீட்டில் வழிபாடு மேற்கொண்டு உணவு உண்டு விரதத்தை நிறைவு செய்கின்றனர். வழிபாட்டின்போது அம்மன் குறித்த பாடல்கள் பாராயணம் செய்யப்படுகிறது.</p><h2><strong>பெருமாளுக்கு உகந்த புதன்...</strong></h2><p>ஆடி மாதத்தில் பவுர்ணமியானது பொதுவாக உத்திராட நட்சத்திரத்தில் வருகிறது. ஆடி பவுர்ணமி அன்று பெருமாளை விளக்கேற்றி வழிபட பதவி கிடைக்கும். குடும்பத்தில் வளர்ச்சியும், அமைதியும் கிடைக்கும். புண்ணியம் கிட்டும். அதுவும் ஆடி பவுர்ணமி பெருமாளுக்கு உகந்த புதன்கிழமையில் வருவதால் அவரை வணங்கினால் தன்னம்பிக்கையும், அறிவாற்றலும் பெருகும்.  </p><p>ஆடிப் பவுர்ணமியில் பெண்கள், அம்மன் கோவில்களில் காலையும், மாலையும் விளக்கேற்றி வழிபட்டால் குடும்பத்தில் நிம்மதி தவழும். தரித்திரம் விலகும் என்பது ஐதீகம். அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்துவிட்டு உண வேதும் அருந்தாமல் விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். வீட்டின் பூஜையறையில் அம்பாள் படத்திற்கு விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். மேலும், அருகிலுள்ள அம்மன் கோவிலுக்கு சென்று பூக்களால் அர்ச்சனை செய்து சிவப்பு மற்றும் மஞ்சள் கலந்த வஸ்திரம் சாற்றி, சிவப்புக்கல் ஆபரணம் அணிவித்து வழிபாடு செய்வது சிறந்தது.</p><p>ஆடிப் பவுர்ணமி தினத்தன்று அம்பிகைக்கு பாலாபிஷேகம் செய்து, வாழைப்பழம் கலந்த சாதத்தை நைவேத்தியம் செய்து வழிபாடு செய்வது மிக அற்புதமான பலன்களை கொடுக்கவல்லது. பின்பு நைவேத்தியப் பிரசாதத்தை கோவிலில் உள்ள பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க வேண்டும். இவ்வாறு வழிபடுவதால் குழந்தைப்பேறு கிடைக்காமல் தவிப்பவர்களுக்கு குழந்தை பாக்கியங்கள் உண்டாகும். வியாபாரங்களில் எதிர்ப்புகள் நீங்கி லாபங்கள் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். மாலை நேரத்தில் முழு நிலவு நிறைவு பெறும் நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதால் சுபிட்சம் ஏற்படும். மாலையில் அம்பாளுக்கு பூஜை செய்து பால் நைவேத்தியமாக படைத்து, அர்ச்சனை செய்து வழிபடுவது சிறப்பானது. சிவ வழிபாடு செய்வது பல மடங்கு புண்ணியத்தை தரும். மாலையில் சந்திர வழிபாடு செய்வதும் மனதில் இருக்கும் குழப்பங்கள் நீங்கி, நிம்மதி அடைய செய்யும். பகை, நோய்கள் நீங்கும். கடன் தொல்லை விலகும். வாழ்க்கையில் மாற்றம், ஏற்றம் ஏற்படும்.</p><p>குடும்ப ஒற்றுமை வேண்டுபவர்கள் ஆடி பவுர்ணமியில் சிவன் கோவிலுக்கு சென்று வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். </p><p>ஆடி பவுர்ணமி அன்று முன்னோர்களை நினைத்து ஆற்றங்கரை, குளக்கரைக்களில் வழிபடுவது சிறப்பு. புனித நதிகளுக்கு சென்று நீராடி, விளக்கு விடுவது, கரையில் விளக்கேற்றி வழிபடுவது குடும்பத்தில் சுபிட்சத்தையும், மன அமைதியையும் தரும். இன்று ஒரு விளக்கு சிவன் கோவிலுக்கு சென்று ஏற்றி வழிபட்டால் லட்சம் தீபம் ஏற்றி வழிபட்ட பலன் கிடைக்கும்.</p><p>ஆடிப் பவுர்ணமி நாளில் சிவன் கோவிலுக்கு சென்று திரட்டு பால் அபிஷேகம் செய்து, கருப்பு பட்டை சாற்றி, ஊமத்தம் பூ மாலை சாற்றி, மூங்கில் அரிசி பாயாசம் படைத்து வழிபட்டால் கடன், பகை தீரும். வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்கிறவர்கள் இந்த நாளை தவற விடக்கூடாது.  திரட்டுப்பால் (திரட்டுப் பாயசம் அல்லது திரட்டிப்பால்) என்பது பசும்பாலுடன் வெல்லம் அல்லது சர்க்கரை மற்றும் நெய் சேர்த்து சுண்டக் காய்ச்சி கெட்டியாகத் தயாரிக்கப்படும் ஒரு பாரம்பரிய இனிப்புப் பிரசாதமாகும்.  கோடை காலத்தின் வெப்பத்தைத் தணித்து, விக்கிரகங்களின் தெய்வீக ஆற்றலைத் தூண்டுவதற்காக இந்த இனிப்பு கலந்த அபிஷேகம் செய்யப்படுகிறது.</p><p>பாலபிஷேகம் மற்றும் சர்க்கரை அபிஷேகத்தின் கூட்டுப் பலன் திரட்டுப்பால் அபிஷேகத்தால் கிடைக்கிறது. சர்க்கரை மற்றும் வெல்லம் கலந்த இந்தத் திரவியத்தால் இறைவனை அபிஷேகம் செய்யும் போது, நம் வாழ்வில் உள்ள கவலைகள் மற்றும் கண்ணுக்குத் தெரியாத எதிர்ப்புகள் விலகும். பால் சார்ந்த அபிஷேகங்கள் வம்ச விருத்தி, நீண்ட ஆயுள் மற்றும் குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தரும். வாழ்வில் வறுமை நீங்கி, செல்வம் மற்றும் தன தானியங்கள் பெருக இந்த அபிஷேகம் வழிவகுக்கும். மன சஞ்சலங்கள் நீங்கி, தெளிவான சிந்தனையும், ஆன்ம தூய்மையும் உண்டாகும். </p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தான் முதலிடம் கொடுக்க வேண்டும் - அமைச்சர் நிர்மல்குமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-says-priority-must-be-given-to-tamil-thai-vazhthu-in-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-says-priority-must-be-given-to-tamil-thai-vazhthu-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">39d1dd9f-6c4b-4e22-87fc-ea4f11c05acc</guid><pubDate>Tue, 28 Jul 2026 07:14:12 +0000</pubDate><atom:updated>2026-07-28T07:14:12.570Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பட்டமளிப்பு விழா,Convocation Ceremony,தமிழ்த்தாய் வாழ்த்து,Tamil Thai Vazhthu,அமைச்சர் நிர்மல்குமார்,minister nirmal kumar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-01/qc3dsbz7/nirmalkumar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் நிர்மல்குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-01/qc3dsbz7/nirmalkumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-வதாக பாடப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.</p><h2>பட்டமளிப்பு விழா</h2><p>திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா இன்று பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் கலையரங்கில் நடைபெறுகிறது. </p> <p>இந்த விழாவில் பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-governor-conduct-which-hurts-sentiments-of-tamils">அர்லேக்கர்</a> பங்கேற்று, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களையும் தங்கப் பதக்கங்களையும் வழங்குகிறார். </p><h2>அமைச்சர் விஸ்வநாதன் புறக்கணிப்பு</h2><p>நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் புறக்கணித்துள்ளார். அதேபோல இன்று முனைவர் பட்டம் பெற இருந்த மகேஷ்குமார் அகர்வாலும் விழாவில் பங்கேற்கவில்லை.</p> <h2>அமைச்சர் நிர்மல் குமார்</h2><p>இந்நிலையில் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-வதாக பாடப்படுவது குறித்து அமைச்சர் நிர்மல் குமார் கூறியதாவது:</p><p>* தமிழ்த்தாய் வாழ்த்தை 3-வதாக பாடுவதை அனுமதிக்க முடியாது.</p><p>* தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஆளுநர் தரப்பில் பல வழிகாட்டுதல்களை கொடுத்து வருகிறார்கள். அது ஏற்புடையதல்ல.</p> <h2>தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்</h2><p>* தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தான் முதலிடம் கொடுக்க வேண்டும்.</p><p>* பாஜக ஆளும் மாநிலங்களில் அந்தந்த மாநில பாடல்களே முதலில் பாடப்படுகிறது.</p><p>* தமிழ்த்தாய் வாழ்த்தை 3-வதாக பாடுவது தவறான விஷயம்.</p><p>* தமிழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-வதாக பாடப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>VIDEO: அடி அண்ணாமலை லிங்கமும், சிலிர்க்க வைத்த வைப்ரேஷனும்: கிரிவலம் குறித்து இளையராஜா பகிர்ந்த ரகசியம்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ilaiyaraaja-share-secret-of-girivalam</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ilaiyaraaja-share-secret-of-girivalam#comments</comments><guid isPermaLink="false">6e22f7f2-d313-49e6-ac0e-5d573b3f656c</guid><pubDate>Tue, 28 Jul 2026 07:04:20 +0000</pubDate><atom:updated>2026-07-28T07:04:20.160Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இளையராஜா,திருவண்ணாமலை கோவில்,கிரிவலம்,girivalam,ilaiyaraaja,Tiruvannamalai temple</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/nn69300n/ilaiyaraaja.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ இளையராஜா]]></media:title><media:description type="html"><![CDATA[ இளையராஜா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/nn69300n/ilaiyaraaja.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இளையராஜா எழுதி இசை அமைத்த பள்ளியெழுச்சி பாவை பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் இசை அமைப்பாளர் இளையராஜா பேசியதாவது:-</p><h2><strong>1980 முதல் கிரிவலம்</strong></h2><p>நான் 1980-ல் இருந்து பவுர்ணமி அன்று மலை சுற்றுவதை வழக்கமாக கொண்டிருந்தேன்.</p><p>நான் மலை சுற்றுவதை பார்த்துதான் அந்த மலை சுற்றலே மக்களால் அதிகமாக பின்பற்றப்பட்டது என்று அண்ணாமலையில் இருக்கக் கூடிய அடியார்கள் சொல்வார்கள். ஏனென்றால் நாங்கள் நடக்கும் போது பகவான் ரமணருக்கு சேவை செய்த குஞ்சு சுவாமிகளும், நானும் மட்டும் தான் நடந்து போவோம். அவர்தான் முதல் முதலில் என்னை கிரிவலம் அழைத்து சென்றார்.</p><p>1980-ல் தான் போனேன். காரணம் என்னவென்றால் 1974-ல் நான் மூகாம்பிகை கோவிலுக்கு போகும் போது அந்த மூகாம்பிகை முற்றிலுமாக என்னை ஏற்றுக் கொண்டார். அவர் காட்டிய வழியில் நான் போய் கொண்டிருந்தேன். எல்லாமே அவ கொடுத்ததுதான். கூப்பிட்டாள் உடனே வந்து நிற்பாள்.</p><h2><strong>வருண பகவான்</strong></h2><p>இப்ப நான் கூப்பிட்டேன்னா இங்கே வந்து நிற்பாள். அது சும்மா வெறும் வார்த்தை இல்லை. உங்களுக்கு நிரூபித்து காட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஏன்னா நான் உண்மையைதான் சொல்வேன். பகவான் பார்க்கறதுக்காக 1980 ஆசிரமத்துக்காக போறேன். போற நேரத்தில் குஞ்சு சுவாமிகள் இருக்காரு. அவரும் நானும் சேர்ந்து வாங்க கிரிபரதசனம் போய்ட்டு வரலாம் என்றார். கூடவே போயிட்டு இருந்தேன். போய் சுத்தி முடிச்சிட்டு வரோம் அந்த முடிக்கிற நேரத்துல மழை.. வருண பகவான் அப்படியே ஷவர் போடுறார். மழை இல்ல.. என்ன நீங்க பெரிய சித்தர் போல இருக்கே அப்படின்னாரு குஞ்சு சுவாமிகள். இல்ல... என்ன சாமி இப்படி சொல்றீங்க என்றேன். ஆமா நீ கிரிப்பிரதட்சணம் வந்த உடனே வருண பகவான் ஆசீர்வாதம் கொடுக்கறார் இல்லையா, நீங்க சித்தர்தான் அப்படின்னார். ஐயயோ அப்படி இல்ல நான். அந்த நேரத்துக்கு மழை வந்துருக்கு அவ்வளவுதான் என்றேன். அதன்பிறகு அடுத்த பவுர்ணமிக்கு போறோம் அப்பவும் மழை வருது.. அதே இடத்துல வருது.. பாத்தீங்களா நான் சொன்னேன் நீங்க சித்தர்தான்னு... இப்படி போய்ட்டே இருக்கற நேரத்துல பவுர்ணமிக்கு போறதை நான் வழக்கமாக கொண்டு விட்டேன். </p><p>நான் திருவண்ணாமலையில் காலடி எடுத்து வைத்து விட்டால் செருப்பு போடுவதில்லை. நான் போற பாதை நார்மலானது கிடையாது. குஞ்சு சுவாமிகளோடு போன இரண்டு முறை மட்டும்தான் நார்மலான வழியில போனேன் 14 கிலோ மீட்டர் அது. அதன்பிறகு பகவான் எந்த வழி போவாங்க இல்ல காட்டு பாதையில நடப்பாங்க  அப்படின்னா பகவான் மூணு வழியில போவாங்க என்றார். சரி பகவான் போகும் நடுப்பாதையை தேர்ந்தெடுத்தேன். நான் நடக்கிற பாதை கண்ணாடி உடைந்தது போல் கற்கள் இருக்கும். காலடி எடுத்து வைத்தால் குத்தும். 80-ல் இருந்து 20 வருடங்கள் நான் விடாமல் கிரிவலம் சென்று வருகிறேன். </p><p>வைப்ரேஷன்</p><p>அடி அண்ணாமலையில போய் உட்கார சுத்தும் போது அடி அண்ணாமலையில் உட்காருவது வழக்கம். அங்கே அந்த நேரத்தில் நான்கு மணிக்கு நாங்கள் கிளம்பினால் நாலரை மணி ஐந்து மணிக்கு அங்க போவோம். அப்ப அந்த கோவில் திறந்திருக்காது. நாங்க போய் உள்ள போனா அந்த குருக்களை கூப்பிட்டுவிட்டு அப்புறம் கோவிலை திறக்க சொல்லி உள்ளே போய் உட்காருவோம். உள்ள போய் உட்கார்ந்தா லிங்கம் இருக்கும். நான் இருப்பேன். என் கூட வந்த ஆட்கள் இருப்பாங்க. அந்த ஆட்கள் வந்து வெளிய போயிடுவாங்க. நானும் இந்த வழியா இதே போல போய்க்கொண்டிருக்கும் போது ஒருநாள் நானும் அந்த லிங்கம் மட்டும் தனியாக இருக்கிறோம். அந்த இடத்துல பயங்கர வைப்ரேஷன் இருக்கும். நீங்க வேணா போய் பாருங்க உங்களுக்கே நல்லா ரொம்ப ஈசியா புலப்படும். </p> <p>அந்த லிங்கத்தை பார்த்துக்கிட்டே இருக்கேன், பார்த்துக்கிட்டே இருக்கேன்,அந்த லிங்கம் ஞானசம்பந்தர் பாடுனத கேட்டிருக்கோம்ல அப்படின்ன உடனே உடம்பெல்லாம் புல்லரிக்குது. அப்போ இந்த கல்லு இந்த தூணு, இந்த பாதைகள், சம்பந்தர் பாடுனத கேட்டு இருக்கோம். அப்பர் பாடுனத கேட்டு இருக்கோம். சுந்தரர் பாடுனத கேட்டு இருக்கோம். மாணிக்க வாசகர் பாடுனத கேட்டு இருக்கோம். அப்ப மாணிக்கவாசகர் அங்க உட்கார்ந்துதான் திருப்பாவையும், திருவம்பாவையும் எழுதினாரு. அப்படின்னு அந்த நந்தியை கும்பிட்டு அப்புறம் குருக்கள் வந்தாரு கற்பூரம் காட்டினாரு கும்பிட்டு வெளியில நடந்து வந்தா நடக்கும்பொழுது என்னுடைய காலடிகள் எடுத்து வைப்பதற்கு அந்த வைப்ரேஷன் வந்து என்னை போட்டு அமுக்குது. அதன்பிறகு மூன்று மாதம் கழித்து திடீர்னு ஒரு நாள் எழுந்து உட்காரும் பொழுதுதான் இந்த பாட கிடைத்த பரம்பொருளை பாடுதற்கு ஒருபரப்பு கிட்டியும் பாடி பயன் காண பல்மொழியால் ஏத்தாது பண்டை வினைதூற்று மூட கிடப்பயோ முத்தே முகில்  மூடா மோன முழுநிலவே மூட மனமுடம் நீக்குவானே முன்மொழியால் பாடேலோர் என்பாவா என்கிற ஒரு வார்த்தை வருது. நான் எழுதுற தமிழா இது. எனக்கு நான் எழுதினதுங்குறீங்களா, நான் யோசிச்சதுங்கறீங்களா... நான் யோசிக்கல. அதுவா வந்தது. அவன் கொடுத்தது. அதை இங்கே வந்து சஞ்சய் சுப்பிரமணியன் பாட கிடைத்த பரம்பொருளை பாடி இங்க ரொம்ப அற்புதமாக அவங்க நடனத்தில வெளிக்கொண்டு வந்தாங்க. நம்ம பார்க்கறதுக்கே ரொம்ப தெய்வீகமா இருந்தது. ரொம்ப தெய்வீக கலை. இசை என்பது தெய்வீக கலை. </p><p>ஏன் என்னை பொறுத்தவரைக்கும்னு ஆன்மிகம்னு கேக்குறீங்க? உங்களுக்கும் சேர்த்துதான். ஏன் என்னை பொறுத்தவரையில் நான் ஒரு ஆளே இல்ல.  ஆன்மீகம் என்று ஒன்னு தனியாக இல்லை. வாழ்க்கையே ஆன்மீகம் தான். நீங்க வாழ்றதும் ஆன்மீகம்தான்.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/v4Mm7vYO4V0"></iframe></figure>]]></content:encoded></item><item><title>VIDEO- அவருடன் பிறந்ததே பெருமை! - இளையராஜா பற்றி தம்பி கங்கை அமரன் உருக்கம்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ilaiyaraaja-brother-gangai-amaran-emotional-what-he-still-has-unknown</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ilaiyaraaja-brother-gangai-amaran-emotional-what-he-still-has-unknown#comments</comments><guid isPermaLink="false">2d3e46ff-28c6-4eab-8923-6a26f8d44aa5</guid><pubDate>Tue, 28 Jul 2026 07:02:38 +0000</pubDate><atom:updated>2026-07-28T07:02:38.266Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Ilaiyaraaja,இளையராஜா,கங்கை அமரன்,Gangai Amaran,Palliyezhuchi Paavai Paadalgal,பள்ளியெழுச்சி பாவைப் பாடல்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/y9mj7ejw/ilayaraja.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ilaiyaraaja-Gangai Amaran]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/y9mj7ejw/ilayaraja.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இசைஞானி இளையராஜா இசையமைத்து எழுதிய "பள்ளியெழுச்சி பாவைப் பாடல்கள்" ஆல்பத்தை, பாடகர் சஞ்சய் சுப்பிரமணியன் பாடியுள்ளார். இந்த ஆல்பத்தின் வெளியீட்டு விழா சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்றது.</p><h2><strong>பாடிக்கிடைத்த பரம்பொருளே:</strong></h2><p>இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய இசையமைப்பாளர் இளையராஜா, “நான் 1980-களில் திருவண்ணாமலையில் மலை சுற்றுவதை வழக்கமாக வைத்திருந்தேன். அங்கு நான் தனியாக அமர்ந்திருக்கும் போது மாணிக்கவாசகர் பாடிய பாடலை நினைத்து பார்ப்பேன். </p><p>திருவண்ணாமலையில் இருந்து இங்கு வந்து 3 மாதங்களுக்கு பிறகு ஒருநாள் வீட்டில் எழுந்து உட்கார்ந்த போது தான், ’பாடிக்கிடைத்த பரம்பொருளே’ என்ற பாடல் எனக்குள் வந்தது. இந்த பாடல் நான் எழுதிய தமிழா என எனக்கே தோன்றியது. அது இறைவன் கொடுத்தது. இசை என்பதே தெய்வீக கலை” என்றார்.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/davaDvfDLz0"></iframe></figure><h2><strong>தூய்மையான தமிழ் இசை:</strong></h2><p>இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட, இளையராஜாவின் சகோதரரும், தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியரான கங்கை அமரன், தனது சகோதரர் குறித்த பல நெகிழ்ச்சி தகவல்களை செய்தியாளர்களிடம்  கூறியுள்ளார். அவர் அளித்த பேட்டியில்,ரசிகர்களாகிய நீங்கள் அவரை பார்த்து எப்படி வியந்தீர்களோ, அதேபோல்தான் நானும் அவருடன் இருப்பதால் இன்னும் பெருமையாக உணர்கிறேன்.</p><p> தன்னுடைய இசை வெளிப்பாட்டை இவ்வாறு பக்தி வழியில் கொண்டுவந்து அனைவரும் பாடும் நிலைக்கு உயர்த்தியுள்ளார். தூய்மையான தமிழில், தமிழ் இசையால், எதிர்காலத் தலைமுறையினருக்கு இந்தப் பாடல்கள் சென்று சேர வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் உருவாக்கியிருப்பது மிகப்பெரிய விஷயமாகும். </p><h2><strong>அவருடன் பிறந்தது பெருமை:</strong></h2><p>எனக்கு அவர் அண்ணனாக, நான் அவருக்குத் தம்பியாக இருந்தபோதிலும், அருகில் இருந்து பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. 'இவருடனா நாம் பிறந்திருக்கிறோம்?' என்று வியக்கும் அளவுக்கு எண்ணத்திலும் இசையிலும் உயர்ந்து நிற்கிறார். அவரைப் பாராட்டுவதற்கு வார்த்தைகள் இல்லை. வணங்கிக்கொண்டேதான் இருக்க வேண்டும். அவர் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இது போன்ற ஒரு படைப்பு பிரமிக்க வைக்கிறது என்றார்.</p><h2><strong>பிறவியிலேயே அமைந்த இசை:</strong></h2><p>மேலும், அவருக்கு இசை என்பது பிறவியிலேயே அமைந்தது. சாதாரணமாகப் பேசும்போது பாடச் சொன்னால் கூடப் புதிய பாடலைப் பாடுவார். புதிய வரிகளைக் கூறினால் உடனே மெட்டமைப்பார். அப்படிப்பட்ட ஒரு அரிதான மாணிக்கம் நமக்குக் கிடைத்திருக்கிறது. அவ்வளவுதான் நான் உணர்ந்தது.</p><p>ஏனெனில், செவ்வியல் இசை எதிர்காலத்திற்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர் இதைச் செய்திருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதேவேளையில், சொற்களின் பொருள் மாறாமல், அந்த காலத்தில் எவ்வாறு இருந்ததோ அதே சொற்றொடர்களையே அவர் பயன்படுத்தியிருப்பது பெரிய விஷயம். </p><p>அதை ஆழமாக உணர்ந்து பார்த்தால்தான் தெரியும். பலர் திருப்புகழ் பாடுகிறார்கள். அந்த மரபிலும் பண்பாட்டிலும் இருந்து விலகாமல் கொண்டு செல்வதற்கான வழியை அவர் அமைத்துள்ளார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.</p><h2><strong>திருவண்ணாமலைக்கும் அவருக்குமான பிணைப்பு:</strong></h2><p>திருவண்ணாமலைக்கும் அவருக்குமான பிணைப்பு பற்றிப் பலமுறை பேசியிருக்கிறார்.  இது போன்ற விஷயங்கள் குறித்து எதுவும் கூற மாட்டார். அவருக்குள் இன்னும் என்ன இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியாது. காட்டிக்கொள்ளவும் மாட்டார். படைப்பாக வெளியே வரும்போதுதான் தெரியவரும். எழுதி முடித்ததும் படித்துக் காட்டுவார், அப்போது நாங்களும் படித்து ரசிப்போம். இலக்கணத் தூய்மையோடு இருப்பதால் படிப்பதற்குச் சற்று கடினமாக இருக்கும்.</p><p>பின்னர் அதைச் சீர்பிரித்துப் பாடிக் காட்டும்போது நமக்கு எளிதாகப் புரியும். முன்னோர்கள் எழுதிய இலக்கியங்கள் அனைத்துமே அப்படித்தானே இருக்கும். அந்தச் சொற்றொடர்களை எந்த இடத்தில் பிரித்துப் பார்த்தால் பொருள் விளங்குமோ, அப்படித்தான் புரிந்து கொள்ள முடியும். </p><p>அதுபோல உயர்ந்த தன்மையில், பழங்கால நயத்தோடு இலக்கணப் பிழையின்றிப் பாடல்களை எழுதியுள்ளார். அதற்கு ஏற்றார்போல் இசையமைத்தும் இருக்கிறார். பிற்கால இளைஞர்களும் ரசிக்கும் வகையில் பின்னணி இசையையும் அவரே அமைத்துள்ளார். இதைத்தான் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.</p><p>நீங்கள் என்ன உணர்ந்தீர்களோ, அதேபோல்தான் நானும் ஒரு ரசிகனாகவே இங்கு வந்திருக்கிறேன். நான் தம்பியாக யோசிக்கவே இல்லை; 'ஐயோ, எங்கள் அண்ணனா இவர்!' என்று பெருமிதம் கொள்ளும் வகையில் இருக்கிறது என நெகிழ்ச்சியுடன் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பிரதமர் மோடி தலைமையிலான என்.டி.ஏ கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகிய 20 அதிருப்தி எம்.பிக்கள் பங்கேற்பு </title><link>https://www.maalaimalar.com/news/national/nda-meet-under-modi-20-dissident-tmc-mps-join-ncpi-and-attend-alliance-meeting</link><comments>https://www.maalaimalar.com/news/national/nda-meet-under-modi-20-dissident-tmc-mps-join-ncpi-and-attend-alliance-meeting#comments</comments><guid isPermaLink="false">02594e5b-7dbb-49ae-a8bc-f15e8d32fb24</guid><pubDate>Tue, 28 Jul 2026 06:46:19 +0000</pubDate><atom:updated>2026-07-28T06:46:19.454Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>trinamool congress,என்டிஏ கூட்டணி,NDA Alliance,monsoon session,மழைக்கால கூட்டத்தொடர்,திரிணாமுல் காங்கிரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/2wc1kero/tn-15.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ என்டிஏ எம்பிக்கள் கூட்டம் 
]]></media:title><media:description type="html"><![CDATA[ என்டிஏ எம்பிக்கள் கூட்டம் 
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/2wc1kero/tn-15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>என்டிஏ கூட்டம் </h2><p>இன்று நாடாளுமன்ற <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D">மழைக்கால கூட்டத்தொடர்</a> கூட்டத்தை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி  மற்றும் மூத்த மத்திய அமைச்சர்கள் தலைமையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.  </p><p>இக்கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி, தேசியவாதக் குடிமக்கள் கட்சியில் இணைந்த 20 எம்பிக்களும் முதன்முறையாக அதிகாரப்பூர்வ அழைப்பாளராகப் பங்கேற்றனர்.  </p> <h2>சயோனி கோஷ்</h2><p>கூட்டத்தில் பங்கேற்ற பின் பேசிய அதிருப்தி எம்.பி. சயோனி கோஷ், "பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டம் மிகவும் பயனுள்ளதாகவும், புதிய தகவல்களைத் தருவதாகவும் இருந்தது. சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து இதில் விரிவாகவும் நேர்மறையாகவும் விவாதிக்கப்பட்டது" என்று தெரிவித்தார்.</p><p>மேலும், அன்று பிற்பகலில் விவாதத்திற்கு வரவுள்ள <a href="https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-government-introduces-strict-exam-malpractice-prevention-bill-in-parliament">பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்த மசோதா 2026</a>க்கு அனைவரும் கட்சி வேறுபாடின்றி ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.</p><p>என்டிஏ கூட்டத்தில் பங்கேற்றது குறித்துப் பேசிய NCPI தலைவர் காகோலி கோஷ் தஸ்திதார், "வரலாற்றிலேயே முதன்முறையாக NCPI எம்பிக்களான எங்களுக்கு என்டிஏ-வின் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது.</p> <h2>திரிணாமுல் காங்கிரஸ் அதிருப்தி பின்னணி</h2><p>மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. சுவேந்து அதிகாரி தலைமையில் மேற்கு வங்கத்தில் முதல் முறையாக பாஜக அரசு அமைந்தது.</p><p>இதனிடையே தோல்வியால் திரிணாமுல் காங்கிரசில் பலர் அதிருப்தி அடைந்தனர். நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற 80 பேரில் 50க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் தனி அணியாக பிரிந்து ரிதர்ப்பா பானர்ஜி தலைமையில் செயல்பட்டு வருகின்றனர். ரிதர்பாவையே அம்மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான சபாநாயகர் அங்கீகரித்தார்.</p><p>இதனிடையே எம்எல்ஏ மட்டத்தில் இருந்த அதிருப்தி திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்களையும் பீடித்தது. அடுத்தடுத்து பலர் விலகிய நிலையில் 20 திரிணாமுல் காங்கிரஸ் அதிருப்தி எம்.பிக்கள் கட்சித் தாவல் தடைச் சட்ட சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக தேசியவாத குடிமக்கள் கட்சியில் (NCPI) என்ற பிராந்திய கட்சி ஒன்றில் சேர்ந்து பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கு ஆத்ராவளித்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>தமிழர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் ஆளுநரின் போக்கு தொடர்கிறது! - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-governor-conduct-which-hurts-sentiments-of-tamils</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-governor-conduct-which-hurts-sentiments-of-tamils#comments</comments><guid isPermaLink="false">0e3a6dbd-fb23-4ff6-854c-1a988ff15ac7</guid><pubDate>Tue, 28 Jul 2026 06:38:31 +0000</pubDate><atom:updated>2026-07-28T06:38:31.264Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பட்டமளிப்பு விழா,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore,Convocation Ceremony,தமிழ்த்தாய் வாழ்த்து,Tamil Thai Vazhthu</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-29/lb4n43zv/manickamtagore.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-29/lb4n43zv/manickamtagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. இதில் தமிழக ஆளுநர் அர்லேக்கர் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார். </p><p>இந்த விழாவில், முதலில், வந்தே மாதரம், அடுத்து தேசிய கீதம், மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என்று, ஆளுநர் மாளிகையில் இருந்து சுற்றறிக்கை வந்திருப்பதாகவும், அதன்படியே <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/nellai-manonmaniam-sundaranar-university-convocation-minister-viswanathan-skips-event">பட்டமளிப்பு விழா</a> நடைபெறும் என்றும், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவித்து இருந்தார். </p> <p>இந்நிலையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-வதாக பாடப்பட்டது.</p><p>இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய மரியாதை தராமல் தமிழர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் ஆளுநரின் போக்கு தொடர்கிறது!</p> <p>மனுநீதி சோழன் மண்ணில் தமிழ் மரபை மீறும் ஆளுநருக்கு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. விழாவைப் புறக்கணித்து அமைச்சர் விஸ்வநாதன், ராபர்ட் புரூஸ் எம்பி சரியான சாட்டையடி கொடுத்துள்ளனர். ஆளுநர் தனது அவமரியாதையான நடைமுறையை உடனடியாகத் திருத்திக் கொள்ள வேண்டும்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வெற்றி எப்போதும் அடக்கத்துடன் சேர்ந்தே வர வேண்டும் - CJP கொண்டாட்டங்களை கண்டித்த சோனம் வாங்சுக்?</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-protest-celebration-row-viral-cjap-dance-videos-after-pradhan-resignation-draw-criticism-wangchuk-urges-humble-victory</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-protest-celebration-row-viral-cjap-dance-videos-after-pradhan-resignation-draw-criticism-wangchuk-urges-humble-victory#comments</comments><guid isPermaLink="false">b305073f-96be-473a-ba0b-ef748a46d4b8</guid><pubDate>Tue, 28 Jul 2026 06:21:34 +0000</pubDate><atom:updated>2026-07-28T06:21:34.928Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வைரல் வீடியோ,Sonam Wangchuk,viral video,சோனம் வாங்சுக்,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/uccayyid/tn-14.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சிஜேபி கொண்டாட்டம், சோனம் வாங்சுக் 
]]></media:title><media:description type="html"><![CDATA[ சிஜேபி கொண்டாட்டம், சோனம் வாங்சுக் 
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/uccayyid/tn-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து போராட்டத்தை முடித்துக்கொண்ட <a href="https://www.maalaimalar.com/news/national/delhi-violence-report-ai-identifies-2873-attackers-989-with-serious-criminal-records-in-student-march">கரப்பான்பூச்சி ஜனதா கட்சி</a> (CJP) முக்கிய நிர்வாகிகள் நடனமாடி கொண்டாட்டங்களில் ஈடுபட்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.</p><p>இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு 26 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். </p><h2>வாங்சுக் போராட்டம்</h2><p>டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்திற்குத் தலைமை தாங்கி, 26 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்த சோனம் வாங்சுக், மாணவர் போராட்டக்காரர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது மற்றும் உயிரிழந்த நீட் தேர்வர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என அரசு உறுதியளித்ததைத் தொடர்ந்து ஜூலை 23 அன்று தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.</p><p>நேற்று மருத்துவமனையில் இருந்து டிசார்ச்ஜ் ஆன வாங்சுக், காந்தி நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.</p> <h2>வாங்சுக் கருத்து </h2><p>இந்நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாங்சுக், "வெற்றி எப்போதும் அடக்கத்துடன் சேர்ந்தே வர வேண்டும்," எனத் தெரிவித்தார்.  </p><p>மேலும் தனது ஆதரவாளர்கள் அனைவரும் "கண்ணியம், கட்டுப்பாடு மற்றும் பொறுப்புணர்வுடன்" தங்களின் வெற்றியைக் கொண்டாட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.  </p><p>வெற்றி பெறுவதைப் போலவே, மரியாதையையும் அடக்கத்தையும் பேணிப் பாதுகாப்பதும் முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார். </p><h2> </h2><h2>விமர்சனம்</h2><p>நீட் வினாத்தாள் கசிவால் பல மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட சோகமும், பல மாநிலங்களில் போராட்டக்காரர்கள் கைது நடவடிக்கைகளைச் சந்தித்து வரும் வேளையில், தலைவர்கள் இவ்வாறு கொண்டாடுவது சரியல்ல என இணையத்தில் விமர்சனம் எழுந்தது. </p><p>மூத்த வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி போன்றோர், போராட்டக் குழுவினர் 5 நட்சத்திர ஹோட்டலில் வெற்றி விழா கொண்டாடுவதாகக் குற்றம் சாட்டினர். </p> <h2>சிஜேபி விளக்கம்</h2><p>விமர்சனங்களுக்குப் பதிலளித்த சிஜேபி செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ், "நாங்கள் சாலையில் அமர்ந்தும் போராடுவோம்; நடனமாடிக்கொண்டே எதிர்ப்பையும் பதிவு செய்வோம். இதுவே ஜென் இசட் தலைமுறையின் குணம்" என்று தெரிவித்தார். </p><p>மேலும், அது 5 நட்சத்திர ஹோட்டல் அல்ல, சாதாரண 2 அல்லது 3 நட்சத்திர ஹோட்டலின் அடித்தளக்கூடம் மட்டுமே என்றும், நாடு முழுவதும் சென்று போராட்டங்களை நடத்திவிட்டு டெல்லி திரும்பியுள்ள 200-300 தன்னார்வலர்களைக் கௌரவிப்பதற்காகவே அந்தச் சந்திப்பு நடத்தப்பட்டது என்றும் விளக்கம் அளித்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஆளுநர் விழாவை புறக்கணிக்கவில்லை - டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dgp-mahesh-kumar-agarwal-clarifies-not-boycott-governor-event</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dgp-mahesh-kumar-agarwal-clarifies-not-boycott-governor-event#comments</comments><guid isPermaLink="false">8ef67113-a6bf-46e1-bed8-121cb5a8f6be</guid><pubDate>Tue, 28 Jul 2026 06:07:45 +0000</pubDate><atom:updated>2026-07-28T06:07:45.715Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பட்டமளிப்பு விழா,Convocation Ceremony,Tamil Thai Vazhthu,DGP Mahesh Kumar Agarwal,ஆளுநர் விழா,டிஜிபி மகேஷ்குமார் அகர்வால்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/fna1kru8/dgp.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DGP Mahesh Kumar Agarwal]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/fna1kru8/dgp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆளுநர் விழாவை புறக்கணிக்கவில்லை என்று டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் விளக்கம் அளித்துள்ளார்.</p><h2>பட்டமளிப்பு விழா</h2><p>திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. இதில் தமிழக ஆளுநர் அர்லேகர் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க இருக்கிறார்.</p> <h2>தமிழ்த்தாய் வாழ்த்து</h2><p>இந்த விழாவில், முதலில், வந்தே மாதரம், அடுத்து தேசிய கீதம், மூன்றாவதாக தமிழ் தாய்க்கான வாழ்த்துப் பாடல் பாட வேண்டும் என்று, ஆளுநர் மாளிகையில் இருந்து சுற்றறிக்கை வந்திருப்பதாகவும், அதன்படியே பட்டமளிப்பு விழா நடைபெறும் என்றும், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவித்து இருந்தார். </p><p>தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாவது இடம் வழங்கப்பட்டதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர்.</p> <h2>அமைச்சர் விஸ்வநாதன் புறக்கணிப்பு</h2><p>தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்ததற்கு கண்டனம் தெரிவித்து பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/nellai-manonmaniam-sundaranar-university-convocation-minister-viswanathan-skips-event">அமைச்சர் விஸ்வநாதன்</a> அறிவித்துள்ளார். </p><p>இதேபோல் இன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் வாங்க இருந்த டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் பட்டம் வாங்க வரவில்லை என தகவல் வெளியாகி இருந்தது.</p> <h2>டிஜிபி மகேஷ்குமார் அகர்வால்</h2><p>இந்நிலையில், காவல்துறை ஆலோசனைக்கூட்டம் மற்றும் அலுவலக பணி காரணமாக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க முடியவில்லை என்றும் ஆளுநர் விழாவை புறக்கணிக்கவில்லை என்றும் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>ராகுலை பின்னுக்கு தள்ளிய முதலமைச்சர் விஜய்... இன்ஸ்டாகிராமில் 1.87 கோடி பேர் பின் தொடர்கிறார்கள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-surpasses-rahul-187-million-followers-on-instagram</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-surpasses-rahul-187-million-followers-on-instagram#comments</comments><guid isPermaLink="false">601be04c-23e7-46af-ab93-fbca9fbc4a4e</guid><pubDate>Tue, 28 Jul 2026 06:01:36 +0000</pubDate><atom:updated>2026-07-28T06:01:36.519Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,விஜய்,vijay,Instagram,இன்ஸ்டாகிராம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/nsmlifw7/vijay.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராகுல் காந்தி- முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல் காந்தி- முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/nsmlifw7/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>டெல்லியில் சமீபத்தில் இளைஞர்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளம் மூலமாகவே மிகப்பெரிய கூட்டத்தை கூட்டினார்கள்.</aside><p>தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆன பிறகு இன்ஸ்டாகிராமில் விஜய்யை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.</p><p>இன்றைய இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் மத்தியில் இன்ஸ்டாகிராம் மோகம் அதிகமாகவே இருந்து வருகிறது. அதில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பலர் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.</p><p>இதன் மூலமாக பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி பலர் வருவாயும் ஈட்டி வருகிறார்கள். இதுபோன்று இன்ஸ்டாகிராம் அதிகம் பயன்படுத்தும் இளம் தலைமுறையினர் தங்களுக்கு பிடித்தமான தலைவர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்களையும் பின் தொடர்கிறார்கள். </p><p>அந்த வகையில் பிரதமர் மோடி உலக அளவில் இன்ஸ்டாகிராமில் முன்னிலையில் இருந்து வருகிறார். அவரை 10.2 கோடி பேர் பின் தொடர்கிறார்கள். மத்திய மந்திரிகளில் அமித்ஷாவை 3.22 கோடி பேரும், நிதின் கட்கரியை 66 லட்சம் பேரும் பின் தொடர்கிறார்கள். </p><h2><strong>எண்ணிக்கை உயர்வு</strong></h2><p>எதிர்கட்சி தலைவரான ராகுல்காந்தியை 1.47 கோடி பேர் பின் தொடர்ந்து வரும் நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவரை பின்னுக்கு தள்ளி முன்னிலை பெற்றுள்ளார். முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்யை</a> பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 1.87 கோடியாக உயர்ந்துள்ளது. </p><p>மஜ்லீஸ் கட்சி தலைவர் ஓவைசியை 1.25 கோடி பேரும், டெல்லி முன்னாள் முதல்-மந்திரி கெஜ்ரிவால் மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை 40 லட்சம் பேரும் பின் தொடரும் நிலையில் தமிழக முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை 23 லட்சம் பேரும் பின் தொடர்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.</p><h2><strong>பிரசார களம்</strong></h2><p>இன்ஸ்டாகிராமை பொறுத்தவரையில் இன்று அது மிகப்பெரிய பிரசார களமாகவே மாறியுள்ளது என்று கூறலாம். டெல்லியில் சமீபத்தில் இளைஞர்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளம் மூலமாகவே மிகப்பெரிய கூட்டத்தை கூட்டினார்கள்.</p><p>த.வெ.க.வினர் பலரும் இன்ஸ்டாகிராம் மூலமாக கட்சியின் செயல்பாடுகள் மற்றும் தமிழக அரசின் திட்டங்கள் ஆகியவற்றையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார்கள். இளைஞர்களின் ஆதரவு சட்டமன்ற தேர்தலில் அதிக அளவு கிடைத்ததால் தான் விஜய் முதலமைச்சராக முடிந்தது. அந்த வரிசையில் தான் இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக உயர்ந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>Spider-Man: Brand New Day: ஹாலிவுட்டில் கோலாகலமாகத் தொடங்கிய சிவப்பு கம்பள வரவேற்பு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/spider-man-brand-new-day-red-carpet-premiere-hollywood</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/spider-man-brand-new-day-red-carpet-premiere-hollywood#comments</comments><guid isPermaLink="false">b110fbbe-a091-43b9-b029-a9671c48a48f</guid><pubDate>Tue, 28 Jul 2026 05:49:52 +0000</pubDate><atom:updated>2026-07-28T05:49:52.338Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spider man,Tom Holland,Zendaya,Sadie Sink,ஸ்பைடர் மேன்,டாம் ஹாலண்ட்,சாடி சிங்க்,ஜென்டாயா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/bsb1jvzv/spider-man.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Spider-Man: Brand New Day]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/bsb1jvzv/spider-man.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலக அளவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் (MCU) பிரம்மாண்ட தயாரிப்பான ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படத்தின் உலகளாவிய முதல்காட்சி, லாஸ் ஏஞ்சலஸில் உள்ள புகழ்பெற்ற எல் காபிடன் திரையரங்கில் வெகு விமரிசையாக நடைபெற்றது.</p><h2><strong>கோலாகலமான சிவப்பு கம்பள நிகழ்வு:</strong></h2><p>ஹாலிவுட் பாலேவார்டு பகுதியில் அமைக்கப்பட்ட சிவப்பு கம்பள வரவேற்பு நிகழ்ச்சியில் படத்தின் கதாநாயகன் டாம் ஹாலண்ட் மற்றும் நாயகி ஜென்டாயா ஆகியோர் சிறப்பு ஆடைகளில் வருகை தந்து ரசிகர்களின் பலத்த வரவேற்பைப் பெற்றனர். இவர்களுடன் படத்தில் இணைந்து நடித்துள்ள சாடி சிங்க், ஜேக்கப் பாட்டலான், ஜான் பெர்ன்தால் மற்றும் மார்க் ரஃப்பாலோ உள்ளிட்ட பல நட்சத்திரங்களும், இயக்குநர் டெஸ்டின் டேனியல் க்ரெட்டனும் கலந்துகொண்டனர்.</p><h2><strong>கதைக்களம்:</strong></h2><p>Spider-Man: No Way Home படத்தின் சம்பவங்களுக்குப் பிறகு, நான்கு ஆண்டுகள் கழித்து நடப்பதாக இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது. உலகமே பீட்டர் பார்க்கரை மறந்த நிலையில், அவர் தனியாக வாழ்ந்துகொண்டு நியூயார்க் நகரத்தைக் காக்கும் முழுநேர ஸ்பைடர் மேனாகச் செயல்படுகிறார். இந்த சூழ்நிலையில், பீட்டர் சந்திக்க நேரிடும் புதிய இயற்பியல் மாற்றங்களும், கண்ணுக்குத் தெரியாத ஒரு மர்மமான புதிய வில்லனின் அச்சுறுத்தலுமே இப்படத்தின் முக்கியக் கதையாகும்.</p><h2><strong>ரெட் கார்பெட்டில் வெளிவந்த சீக்ரெட்:</strong></h2><p>லாஸ் ஏஞ்சலஸில் நடைபெற்ற இப்படத்தின் பிரீமியர் ரெட் கார்பெட் நிகழ்வில், படத்திற்குப் பங்களித்த பாடகர் 'ஸ்டீவ் லேசி' அளித்த பேட்டி ஒன்றில் தவறுதலாகப் படத்தின் மிகப்பெரிய ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார். நிகழ்ச்சியாளர் அவரிடம், "எந்தக் கதாபாத்திரத்தைப் பார்க்க நீங்கள் ஆவலாக இருக்கிறீர்கள்?" என்று கேட்டபோது, "எனக்கு ஜீன் கதாபாத்திரத்தைப் பிடிக்கும். அவர்தான் படத்தில் வில்லன். ஆனால் அவர் செய்யும் காரியங்களுக்குப் பின்னால் ஒரு நியாயமான காரணம் இருக்கும்' என்று ஸ்டீவ் லேசி வெளிப்படையாகக் கூறிவிட்டார்.</p><h2><strong>ரசிகர்களின் கணிப்பு உண்மைதானா?</strong></h2><p>கடந்த சில மாதங்களாகவே, 'Stranger Things' தொடரின் மூலம் பிரபலமான நடிகை 'சாடி சிங்க்' (Sadie Sink) இப்படத்தில் எக்ஸ்-மென் தொடரின் புகழ்பெற்ற 'ஜீன் கிரே' கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று பல தகவல்கள் பரவி வந்தன. மார்வெல் நிறுவனம் இவரைப் பற்றிய தகவல்களை மிகவும் ரகசியமாக வைத்திருந்த போதிலும், ஸ்டீவ் லேசியின் இந்தத் தற்செயலான பேச்சு ரசிகர்களின் நீண்ட நாள் சந்தேகத்தை உறுதி செய்துள்ளது.</p><p>இத்திரைப்படம் வரும் 31ம் தேதி அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தியாவில் ஆங்கிலம் தவிர்த்து தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் பிரம்மாண்டமாகத் திரைக்கு வரவுள்ளது. எல்.ஏ பிரீமியர் திரையிடலைத் தொடர்ந்து, படத்திற்கு உலகளாவிய சினிமா விமர்சகர்களிடையேயும் ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பும் நேர்மறையான வரவேற்பும் உருவாகியுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>