<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 04 Aug 2026 05:42:42 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைது- 04 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-04-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-04-august-2026#comments</comments><guid isPermaLink="false">d97691eb-fde2-4478-81b0-8c01330a1625</guid><pubDate>Tue, 04 Aug 2026 04:17:36 +0000</pubDate><atom:updated>2026-08-04T05:41:51.650Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/l403hg7j/udhayanidhi.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/l403hg7j/udhayanidhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கைதுக்கு பயப்படுபவன் நான் அல்ல... உதயநிதி </p><p>கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் விசாரணைக்காக தஞ்சாவூர் அழைத்துச் செல்லப்படுகிறார். </p><p>விவசாயிகள் பிரச்சனையை திசை திருப்பவே இவ்விவகாரத்தை த.வெ.க. அரசு கையில் எடுத்துள்ளது- உதயநிதி ஸ்டாலின்</p><p>பேசாததை ஒன்றை பேசியதாக என் மீது பொய் பரப்புரையை த.வெ.க. அரசு மேற்கொண்டுள்ளது- உதயநிதி ஸ்டாலின்</p><p>திசை திருப்பும் நடவடிக்கையில் மட்டுமே இந்த அரசு கவனம் செலுத்தி வருகிறது. முக்கிய பிரச்சனை வரும்போது இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிறது- உதயநிதி ஸ்டாலின்</p><p>என் மீதான கைது நடவடிக்கையை காமெடியாக பார்க்கிறேன்- உதயநிதி ஸ்டாலின்</p><p>தஞ்சையில் நடைபெற்ற போராட்டத்தில் நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை தஞ்சை போலீசார் கைது செய்துள்ளனர். </p><p>காவல்துறைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் கைது</p><p>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் செல்கின்றனர். </p><p>உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கைக்கு எதிராக தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்</p><p>காவல்துறையிடம் தெரிவிக்க அரசு வழக்கறிஞர் மூலம் நீதிபதி அறிவுறுத்தல். </p><p>நண்பகல் 12 மணிவரை உதயநிதியை கைது செய்யும் நடவடிக்கையை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தல். </p><p>கைது நடவடிக்கை பற்றி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியுடன் காவல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை</p><p>உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய நடவடிக்கை- சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் வருகை</p><p>தஞ்சாவூர் திமுக ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி பேச்சு அதிர்ச்சியளிக்கிறது - காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி</p><p>இது உச்சக்கட்ட அடக்குமுறை, அராஜகம்- உதயநிதியை கைது செய்ய நீலாங்கரை வீட்டில் குவிக்கப்பட்ட போலீசார்:  கே.என். நேரு </p><p>உதயநிதி கைது நடவடிக்கைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு- இன்று பிற்பகலில் விசாரிப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதி தகவல்</p><p>உதயநிதி ஸ்டாலின் மீது பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. </p><p>உதயநிதி குளித்து முடித்த பிறகு தான் வருவார்- மா.சுப்பிரமணியன்</p><p>காவல்துறைக்கு எதிராக கண்டன தி.மு.க.வினர் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.</p><p>10 நிமிடம், 10 நிமிடம் என எவ்வளவு நேரம் கூறுவீர்கள்? சட்டப்பூர்வ கைது நடவடிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டும்- இணை ஆணையர் விஜயகுமார் அறிவுறுத்தல்</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-released-from-kabini-dam-reached-hogenakkal">கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் ஒகேனக்கல்லுக்கு வந்து சேர்ந்தது</a></p><p>* கேரளம் மற்றும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.&nbsp;</p><p>* &nbsp;திரிவேணி சங்கமத்தில் ஒன்றாக சங்கமித்து அகண்ட காவிரியாக தமிழகம் நோக்கி வந்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-governments-first-budget-to-be-presented-tomorrow">த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் நாளை தாக்கல் - மகளிருக்கு ரூ.2,500 அறிவிப்பு வெளியாகுமா?</a></p><p>* அனல்பறக்கும் விவாதங்கள், இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>* நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறும்.&nbsp;</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thanjavur-police-visit-udhayanidhi-stalin-house-in-nilangarai">உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய தஞ்சை போலீசார் வருகை?- பரபரப்பில் நீலாங்கரை</a></p><p>* சென்னை நீலாங்கரையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வீட்டை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். </p><p>*  உதயநிதி ஸ்டாலின் வீடு அருகே பேரிகார்டு அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-bjp-president-to-be-changed-soon">சட்டசபை தேர்தலில் தோல்வி: தமிழக பா.ஜ.க. தலைவர் விரைவில் மாற்றம்</a></p><p>* புதிய மாநிலத் தலைவரை நியமிப்பதற்கான ஆலோசனை இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. </p><p>* 2029-ம் ஆண்டு நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டே புதிய தலைவரை தேர்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>உதயநிதி கைது நடவடிக்கைக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் அவசர முறையீடு
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/urgent-appeal-in-madras-high-court-against-udhayanidhi-arrest</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/urgent-appeal-in-madras-high-court-against-udhayanidhi-arrest#comments</comments><guid isPermaLink="false">9be2939f-f3cf-460f-bfda-890da3365155</guid><pubDate>Tue, 04 Aug 2026 05:29:09 +0000</pubDate><atom:updated>2026-08-04T05:29:09.198Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/gr5tikpk/udhayanidhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Udhayanidhi Stalin - Madras High Court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/gr5tikpk/udhayanidhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[  <p><em><strong>ஆபாசமாக பேசியதாக உதயநிதி மீது தொடரப்பட்ட வழக்கில் 6 பிரிவில் தஞ்சை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.</strong></em></p><p>தஞ்சையில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நடிகை திரிஷா குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. </p> <h2>உதயநிதி ஸ்டாலின்</h2><p>இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது தேசிய மகளிர் ஆணையத்தில்  புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் உதயநிதிக்கு எதிராக மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த த.வெ.க.வினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>த.வெ.க தொண்டர்களின் முற்றுகை போராட்டம் அல்லது அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் சென்னை நீலாங்கரையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வீட்டை சுற்றி சென்னை தெற்கு இணை ஆணையர் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.</p> <p>உதயநிதி ஸ்டாலின் வீடு அருகே பேரிகார்டு அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்படலாம் என்ற தகவல் பரவியது. இதனால் நீலாங்கரை பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.</p><h2>தஞ்சை போலீசார் வழக்குப்பதிவு</h2><p>இந்நிலையில், ஆபாசமாக பேசியதாக உதயநிதி மீது  6 பிரிவுகளின் கீழ் தஞ்சை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.</p> <h2>சென்னை ஐகோர்ட்</h2><p>தஞ்சை காவல்துறை உதயநிதியை கைது செய்ய முனைப்பு காட்டிவரும் நிலையில், சட்ட நடவடிக்கையில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-ramesh-indictment-udhayanidhi-stalin">உதயநிதி</a> தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>அவசர வழக்காக விசாரிக்க கோரிய முறையீட்டை ஏற்று நண்பகல் 12 மணிக்கு விசாரிப்பதாக சென்னை ஐகோர்ட் நீதிபதி தெரிவித்துள்ளார்.</p><p>மதியம் 12 மணி வரை உதயநிதி விவகாரத்தில் நடவடிக்கை வேண்டாம் என காவல்துறையிடம் தெரிவிக்க நீதிபதி அறிவுறுத்தி உள்ளார். </p>  ]]></content:encoded></item><item><title>&quot;சுயமரியாதை தீ உங்கள் ஆணவத்தை சாம்பலாக்கிவிடும்&quot; - உதயநிதி பேச்சுக்கு அமைச்சர் ரமேஷ் கண்டனம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-ramesh-indictment-udhayanidhi-stalin</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-ramesh-indictment-udhayanidhi-stalin#comments</comments><guid isPermaLink="false">e5edf0c7-d9e9-441e-ae96-6fa2a7296288</guid><pubDate>Tue, 04 Aug 2026 05:19:02 +0000</pubDate><atom:updated>2026-08-04T05:19:02.941Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,அமைச்சர் ரமேஷ்,Minister Ramesh</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/te5drbxm/Udhaynidhi-Stalin-and-TVK-Ramesh.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Udhayanidhi Stalin and Minister Ramesh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/te5drbxm/Udhaynidhi-Stalin-and-TVK-Ramesh.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>சர்ச்சை பேச்சு:</h2><p>தஞ்சையில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. </p><p>மேலும் உதயநிதிக்கு எதிராக மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த த.வெ.க.வினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே உதயநிதி பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். </p><p>பேரறிஞர் அண்ணா உருவாக்கிய இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளான “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” ஆகியவற்றுக்கு முற்றிலும் முரணாக, பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான ஆபாச பேச்சுகளை பொதுவெளியில் பேசி வருவதாக அமைச்சர் ரமேஷ், சேப்பாக்கம் தொகுதி MLA உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார்.</p><h2>எக்ஸ் பதிவு:</h2><p>இது தொடர்பாக அமைச்சர் ரமேஷ் வெளியிட்டுள்ள பதிவில், “உங்கள் ஆபாச கற்பனைகளை இன்ஸ்டாகிராமோடு நிறுத்திக்கொள்வது நல்லது. பெருமைமிகு பெண்களை கேவலமாக நினைத்து பேசினால், சுயமரியாதை எனும் தீ உங்கள் ஆணவத்தை சாம்பலாக்கிவிடும்” என்று தெரிவித்துள்ளார்.</p><p>மேலும், பெண்களை அவமதிக்கும் எந்தவிதமான கருத்துகளும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், பொதுவாழ்வில் இருப்பவர்கள் பொறுப்புடனும் மரியாதையுடனும் பேச வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">பேரறிஞர் பெருந்தகை அண்ணா ஆரம்பித்த இயக்கத்தில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்றும் கடுகளவு கூட இல்லாமல் ஆபாச பேச்சுக்களை மக்கள் மத்தியில் பேசி பெண்களை கீழ்த்தரமாக பார்க்கும் ஆபாசநிதிக்கு வன்மையான கண்டனங்கள்! <br><br>உங்கள் ஆபாச கற்பனைகளை இன்ஸ்டாகிராமோடு நிறுத்திக்கொள்வது நல்லது,…</p>&mdash; TVK Ramesh (@RameshOffcl) <a href="https://x.com/RameshOffcl/status/2084363049625162222?ref_src=twsrc%5Etfw">August 3, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>அரியானாவில் பயங்கரம்: பள்ளி வளாகத்தில் ஆசிரியை 27 முறை குத்திக் கொலை!</title><link>https://www.maalaimalar.com/news/national/horror-in-haryana-teacher-stabbed-27-times-on-school-campus</link><comments>https://www.maalaimalar.com/news/national/horror-in-haryana-teacher-stabbed-27-times-on-school-campus#comments</comments><guid isPermaLink="false">bcc8f0fc-a32a-4d96-ba62-47ee0647eaa9</guid><pubDate>Tue, 04 Aug 2026 05:05:01 +0000</pubDate><atom:updated>2026-08-04T05:05:01.194Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>haryana,Teacher Murder,ஆசிரியை கொலை,ஹரியானா,Sikrona,பரிதாபாத்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/pgf1mfzi/murder.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Haryana Teacher murder ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/pgf1mfzi/murder.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி வளாகத்தில், 29 வயது ஆசிரியை ஒருவர் முகமூடி அணிந்த நபரால் 27 முறை கத்தியால் குத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கொடூரச் சம்பவம் தொடர்பாக 21 வயது இளைஞரை காவல்துறை கைது செய்துள்ளது.</p><p>சந்தியா (29) என்ற இளம்பெண் ஃபரிதாபாத்தின் சிக்ரோனா கிராமத்தில் உள்ள சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். நேற்று காலை வழக்கம்போல் காலை 9:30 மணியளவில் ஆசிரியை சந்தியா பள்ளிக்கு வந்துள்ளார். அப்போது, முகத்தை வெள்ளைத் துணியால் மூடியபடி வந்த ஒரு நபர், அவரைப் பார்க்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.</p><h2><strong>கொலைச் சம்பவம்:</strong></h2><p>பள்ளி ஊழியர்கள் தகவலளித்ததை அடுத்து, ஆசிரியை முதன்மை வாயில் அருகே வந்தபோது, மறைந்திருந்த அந்த நபர் திடீரென அவர் மீது பாய்ந்து, இழுத்துச் சென்று கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார். இக்கொடூரத் தாக்குதல் முழுவதும் அங்கிருந்த CCTV கேமராவில் பதிவாகியுள்ளது. முதற்கட்ட தகவலின்படி, ஆசிரியையின் முகம், கழுத்து, நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் 27 முறை கத்திக் குத்துகள் விழுந்துள்ளதால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p>சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அமித்(21)  என்ற நபரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தியதில் இக்கொலை பழிவாங்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. முன்னதாக, அமித் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் ஆசிரியை சந்தியா காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த அமித், பழிவாங்கும் நோக்கத்துடன் திட்டமிட்டுப் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து இக்கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார்.</p><p>சம்பவம் நடந்த அடுத்த 2 மணி நேரத்திற்குள் குற்றவாளி அமித்தை ஃபரிதாபாத் காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகப் போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்துத் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY: தங்கம் விலையில் சற்று சரிவு! - இன்றைய நிலவரம் 
</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-4-8-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-4-8-2026#comments</comments><guid isPermaLink="false">67866de8-1aee-46d8-a0c5-c6b0b1cb5f0c</guid><pubDate>Tue, 04 Aug 2026 04:51:11 +0000</pubDate><atom:updated>2026-08-04T04:51:11.272Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/05/05/12503919-gold03.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/05/05/12503919-gold03.webp?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கத்துடன் காணப்படுகிறது. ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.1,05,760-க்கும், கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.13,220-க்கும் விற்பனையானது. 2-ந்தேதி ஒரு சவரன் ரூ.1,05,760-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.13,220-க்கும் விற்பனையானது. நேற்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,06,000-க்கும், கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.13,250-க்கும் விற்பனையானது.</p> <h2>தங்கம் விலை சரிவு</h2><p>இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,05,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.13,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><h2>வெள்ளி விலை நிலவரம்</h2><p>வெள்ளி விலை கடந்த 28-ந்தேதி முதல் மாற்றம் இல்லாமல் விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-</h2><p>03-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,000</p><p>02-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,760</p><p>01-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,760</p><p>31-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,040</p><p>30-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,840</p> <h2>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-</h2><p>03-08-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>02-08-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>01-08-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>31-07-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>30-07-2026- ஒரு கிராம் ரூ.235</p> ]]></content:encoded></item><item><title>உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய தஞ்சை போலீசார் வருகை?- பரபரப்பில் நீலாங்கரை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thanjavur-police-visit-udhayanidhi-stalin-house-in-nilangarai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thanjavur-police-visit-udhayanidhi-stalin-house-in-nilangarai#comments</comments><guid isPermaLink="false">5dd87837-ad51-48b3-9ae3-52c1e55e3108</guid><pubDate>Tue, 04 Aug 2026 04:43:46 +0000</pubDate><atom:updated>2026-08-04T04:43:46.228Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/la49wpeg/udhayani.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின் வீட்டின் முன்பு குவிக்கப்பட்டுள்ள போலீசார்]]></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின் வீட்டின் முன்பு குவிக்கப்பட்டுள்ள போலீசார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/la49wpeg/udhayani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>சென்னை நீலாங்கரையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வீட்டை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.</aside><p>தஞ்சையில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து <a href="https://www.maalaimalar.com/topic/உதயநிதி-ஸ்டாலின்">உதயநிதி ஸ்டாலின்</a> பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் உதயநிதிக்கு எதிராக மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த த.வெ.க.வினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். </p><p>இந்த நிலையில், த.வெ.க தொண்டர்களின் முற்றுகை போராட்டம் அல்லது அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் சென்னை நீலாங்கரையில் உள்ள முன்னாள் துணை முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் வீட்டை சுற்றி சென்னை தெற்கு இணை ஆணையர் தலைமையில் காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். </p><p>உதயநிதி ஸ்டாலின் வீடு அருகே பேரிகார்டு அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். </p><p>உதயநிதி ஸ்டாலின் இல்லத்திற்கு காவல் இணை ஆணையர் விஜயகுமார் வருகை தந்தார். அப்போது அவர், உதயநிதி கைது நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கூறினார். அதற்கு  முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன்  உதயநிதி ஒத்துழைப்பு தருவார் என்று கூறியதுடன் அவரது வழக்கறிஞர் வரும் வரை பொறுமை காக்க வேண்டும் என்று தெரிவித்தார். </p><p>இதனால் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்படலாம் என்ற தகவல் பரவியது. இதற்கிடையே, உதயநிதி ஸ்டாலின் இல்லத்திற்கு மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வருகை தந்துள்ளார்.  இதனால் நீலாங்கரை பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>திரிஷா குறித்து விமர்சனம் - உதயநிதியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த தவெகவினருக்கு உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/criticism-of-cm-vijay-tvk-protest-condemning-udhayanidhi-stalin</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/criticism-of-cm-vijay-tvk-protest-condemning-udhayanidhi-stalin#comments</comments><guid isPermaLink="false">458814c5-1fb2-461c-a539-f772a41206e4</guid><pubDate>Tue, 04 Aug 2026 04:36:50 +0000</pubDate><atom:updated>2026-08-04T04:36:50.905Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,தவெக,Udhayanidhi Stalin,புஸ்ஸி ஆனந்த்,Bussy Anand,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/r1m33cry/anand.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bussy Anand - Udhayanidhi Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/r1m33cry/anand.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி முதலமைச்சர் விஜய் குறித்து விமர்சனம் செய்ததற்கு அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.</strong></em> </p><h2>திமுக ஆர்ப்பாட்டம்</h2><p>தஞ்சை மாவட்டம் பனகல் கட்டிடம் முன்பு தி.மு.க. சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார். </p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>அப்போது அவர், நடிகை திரிஷா பற்றி அவதூறாக சில விஷயங்களை பேசினார். இது சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையாகி உள்ளது. அவருடைய இந்த பேச்சுக்கு தவெக பொதுச்செயலாளரும் தமிழக நீர்வளத்துறை அமைச்சரான <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-bussy-anand-inspection-to-saidapet">புஸ்ஸி ஆனந்த்</a> கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>எதிர்க்கட்சித் தலைவர் என்ற மாண்பும் மரபும் மிக்க மிகப்பெரிய பொறுப்பை உணராமல், வாய்க்கு வந்தபடி பேசிய ஒருவரை என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை. தன் தாத்தாவும் தந்தையும் வகித்தும்கூடவா முதல்வர் பதவியின் தகுதியும் தராதரமும் தெரியாமல் ஒருவர் இருக்க முடியும்?.</p> <p>அவை அடக்கமும் நாவடக்கமும் இல்லாத ஒருவரா நம் தமிழகத்தின் துணைமுதல்வராக இருந்திருக்க முடியும்?. மக்கள் மத்தியில் இத்தகையக் கேள்விகள் இமாலய அளவிற்கு எழுந்துள்ளன. எல்லை மீறி இழிவாகப் பேசியவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் ?.</p><p>Decent Approach - Decent Attack கற்றுக்கொடுத்து எங்களைக் கட்டுப்படுத்தி வளர்க்கும் மக்கள் விரும்பும் முதல்வரான நம் வெற்றித் தலைவர் முதலமைச்சர் அவர்களை இப்படி அநாவசியமாகவும் அநாகரிகமாகவும் தொட்டவர்கள் நிலை என்னவாயிற்று என்பதை யாராக இருந்தாலும் உணர்ந்தே ஆக வேண்டும். மக்கள் உணர்த்தியே தீருவர். அதில் மாற்றமும் இல்லை. மாற்றுக் கருத்தும் இல்லை.</p> <p>அமைதி காக்கச் சொல்லி எங்கள் தலைவர் தளபதியின் நாகரிக வளர்ப்பு எங்களைத் தடுக்கிறது. வேறு என்ன சொல்ல?.</p><p>அறிஞர் அண்ணா பாணியில் ‘வசவாளர்கள் வாழ்க’ என்று சொல்லலாம். ஆனால், ஆபாசநிதிகளை?. </p><p>மாண்பும் மரியாதையும் தகுதியும் தராதரமும் மிக்க எங்கள் தலைவர் தளபதி முதலமைச்சர் சொல்வதுபோல மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். யாரும் மறந்துவிட வேண்டாம் என்று எச்சரிக்கிறோம்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> <p>இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடத்த தவெக அழைப்பு விடுத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு பாடங்களை சேர்க்கும் மகாராஷ்டிரா - முதலமைச்சர் பட்னாவிஸ் உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/national/fadnavis-orders-anti-drug-lessons-in-maharashtra-school-curriculum</link><comments>https://www.maalaimalar.com/news/national/fadnavis-orders-anti-drug-lessons-in-maharashtra-school-curriculum#comments</comments><guid isPermaLink="false">c75c96b4-9c89-4632-942d-cfd7e5c00b35</guid><pubDate>Tue, 04 Aug 2026 04:21:39 +0000</pubDate><atom:updated>2026-08-04T04:21:39.920Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,மகாராஷ்டிரா,தேவேந்திர பட்னாவிஸ்,devendra fadnavis,school curriculum,பள்ளி பாடத்திட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/kfksu7w3/devendra-fadnavis.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Devendra Fadnavis]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/kfksu7w3/devendra-fadnavis.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிரா மாநில பள்ளி பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு மற்றும் போதை மீட்பு தொடர்பான பாடங்களை சேர்க்க அம்மாநில முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/devendra-fadnavis">தேவேந்திர பட்னாவிஸ்</a> அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p>பள்ளிக் கல்வியில் நாட்டின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக <a href="https://www.maalaimalar.com/topic/maharashtra">மகாராஷ்டிரா</a> தொடர்ந்து திகழ்கிறது என்றும், கல்வித் தரம், மராத்தி மொழியை ஊக்குவித்தல், வரலாற்றை பாதுகாத்தல் மற்றும் நவீன வசதிகள் ஆகியவற்றுக்கு இடையே சமநிலையை பேணுவதன் மூலம் மாணவர்-மையக் கல்வி முறையை மாநிலம் வலுப்படுத்தி வருகிறது என்றும் பட்னாவிஸ் தெரிவித்தார்.</p><p>பள்ளிக் கல்வித் துறையின் ஆய்வு கூட்டத்திற்கு தலைமை தாங்கிய அவர், போதைப்பொருள் தடுப்பு மற்றும் மீட்பு தொடர்பான பாடங்களை பள்ளி பாடத்திட்டத்தில் இணைக்கும் செயல்முறையை தொடங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.</p><h2>போதை இல்லா பள்ளி:</h2><p>பள்ளிகளில் போதைப்பொருள் தடுப்பு வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைக்கான குழுக்களை அமைக்கவும், "போதைப்பொருள் இல்லாத பள்ளி" (Drug-Free School) என்ற பிரச்சாரத்தை தொடங்கவும் மாநில அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் குறிப்பிட்டார்.</p><p>பள்ளி பாதுகாப்பை வலுப்படுத்தவும், மாணவர்களிடையே இணையவழி மோசடிகள் மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்கவும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.</p><p>மாநில அரசின் முயற்சிகளை தொடர்ந்து, என்.சி.இ.ஆர்.டி. (NCERT) பாடப்புத்தகங்களில் 17-ஆம் நூற்றாண்டின் வீர மன்னரான சத்ரபதி சிவாஜி மகாராஜின் வரலாறுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்று பட்னாவிஸ் சுட்டிக்காட்டினார். புகழ்பெற்ற மராட்டிய மன்னரின் வரலாற்றையும் சாதனைகளையும் பரவலாக உள்ளடக்கும் வகையில் பாடத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.</p><h2>புதுமையான முன்னெடுப்புகள்:</h2><p>மாநிலம் முழுவதும் உள்ள எஸ்.எஸ்.சி. (SSC), சி.பி.எஸ்.இ. (CBSE), ஐ.சி.எஸ்.இ. (ICSE) மற்றும் ஐ.பி. (IB) வாரியங்களின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளிலும் மராத்தி மொழியை கற்பிப்பதும், அம்மொழியிலேயே தேர்வுகள் நடத்துவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூட்டத்தில் தெரிவித்தனர்.</p><p>பள்ளிக் கல்விக்கான தேசிய செயல்திறன் தரவரிசை குறியீட்டில் (PGI 2.0) மகாராஷ்டிராா தொடர்ந்து இரண்டாவது இடத்தை தக்கவைத்துள்ளது என்று கூறிய பட்னாவிஸ், 'பி.எம். ஸ்ரீ' (PM SHRI) பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளிலும் புதுமையான முன்னெடுப்புகளை செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.</p><p>பள்ளி மாணவர்களின் ஆதார் சரிபார்ப்பு, கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் 35 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விச் சலுகைகள், 'பவித்ரா' (Pavitra) ஆசிரியர் பணி நியமன இணையதளம் மற்றும் தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 உள்ளிட்ட முக்கியத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.</p><h2>அதிகாரிகள் விளக்கம்:</h2><p>கூட்டத்தில் அளிக்கப்பட்ட விளக்கக் காட்சியின்படி, நாட்டின் மொத்த பள்ளிகளில் 9.34 சதவீதமும், ஆசிரியர்களில் 8.84 சதவீதமும், மாணவர்களில் 7.69 சதவீதமும் மகாராஷ்டிராவில் உள்ளனர். இம்மாநிலத்தில் 1,08,065 பள்ளிகள் உள்ளன; இவற்றில் 2,20,48,443 மாணவர்கள் பயில்கின்றனர், மேலும் மாணவர்-ஆசிரியர் விகிதம் 28:1 ஆகப் பராமரிக்கப்படுகிறது.</p><p>இப்பள்ளிகளில் 64,341 அரசு பள்ளிகள் மற்றும் 29,486 அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் உள்ளன; மீதமுள்ளவை சுயநிதி நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசு பள்ளிகளாகும்.</p><p>பள்ளி கல்வியை மேம்படுத்துவதற்காக 'நிபுண் மகாராஷ்டிரா இயக்கம்' (Nipun Maharashtra Mission), 'ராஷ்ட்ரிய பிரதம்' (Rashtriya Pratham) பிரச்சாரம், "மாஜி ஷாலா சுந்தர் ஷாலா" (எனது பள்ளி, அழகான பள்ளி) திட்டம் மற்றும் மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு செயல்படுத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் ஒகேனக்கல்லுக்கு வந்து சேர்ந்தது </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-released-from-kabini-dam-reached-hogenakkal</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-released-from-kabini-dam-reached-hogenakkal#comments</comments><guid isPermaLink="false">6690ffa7-7b23-46f1-8eb3-a69986deac37</guid><pubDate>Tue, 04 Aug 2026 03:49:00 +0000</pubDate><atom:updated>2026-08-04T03:49:00.801Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Hogenakkal,Kabini Dam,கபினி அணை,காவிரி நீர்,Cauvery water,ஒகேனக்கல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/yjfvypld/kabinidam.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
கபினி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கொள்ளேகால் வந்தடைந்தது]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/yjfvypld/kabinidam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கபினி அணையில் இருந்து வினாடிக்கு 27 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலையில் ஒகேனக்கல்லுக்கு காவிரி நீர் வந்து சேர்ந்தது.</strong></em></p><h2>காவிரி நீர்</h2><p>கேரளம் மற்றும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">கபினி அணை</a>யும் ஏறக்குறைய நிரம்பி விட்டது என்றே சொல்லலாம். நேற்று காலை நிலவரப்படி அந்த அணையின் நீர்மட்டம் 2,282.59 அடியாக இருந்தது. அதாவது இந்த அணையில் 19.52 டி.எம்.சி. நீர் தேக்கி வைக்க முடியும்.</p> <p>நேற்று காலை நிலவரப்படி அணையில் 18.61 டி.எம்.சி. நீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 31 ஆயிரத்து 746 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 27 ஆயிரம் கனஅடி நீர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-to-reach-tamil-nadu-tonight">காவிரியில்</a> திறக்கப்பட்டு உள்ளது. அதாவது 3-வது நாளாக தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 25 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக நீர் திறக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.</p><h2>கபினி அணை</h2><p>கபினி அணையில் இருந்து வினாடிக்கு 27 ஆயிரம் கனஅடி நீரும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி நீரும் காவிரியில் திறந்து விடப்பட்டு உள்ளது. இந்த நீர் திருமகூடலுவில் உள்ள திரிவேணி சங்கமத்தில் ஒன்றாக சங்கமித்து அகண்ட காவிரியாக தமிழகம் நோக்கி வந்தது.</p> <h2>ஒகேனக்கல்</h2><p>இந்த தண்ணீர் நேற்று கொள்ளேகால் வந்தடைந்தது. அங்கிருந்து கரைபுரண்டு ஓடி வந்த தண்ணீர் இன்று அதிகாலையில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து ஒகேனக்கல்லை வந்தடைந்தது. இந்த தண்ணீர் இன்று மாலை அல்லது இரவுக்குள் மேட்டூர் அணையை வந்தடையும் என்று பொதுப்பணித்துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபை தேர்தலில் தோல்வி: தமிழக பா.ஜ.க. தலைவர் விரைவில் மாற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-bjp-president-to-be-changed-soon</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-bjp-president-to-be-changed-soon#comments</comments><guid isPermaLink="false">e13cd54a-bcfb-4ae3-a1b3-1fd829699eaa</guid><pubDate>Tue, 04 Aug 2026 03:44:46 +0000</pubDate><atom:updated>2026-08-04T03:44:46.932Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,தமிழக சட்டசபை தேர்தல்,TN Assembly election</media:keywords><media:content height="350" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/bgbq325g/NainarNagendran.jpg" width="615"><media:title type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/bgbq325g/NainarNagendran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தமிழக பா.ஜ.க.வுக்கு புதிய தலைவர் விரைவில் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.</aside><h2><strong>பா.ஜ.க. தோல்வி</strong></h2><p>சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட <a href="https://www.maalaimalar.com/topic/பாஜக">பா.ஜ.க.</a> ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது. மற்ற இடங்களில் கடும் தோல்வியை சந்தித்தது. வாக்கு சதவீதமும் 3 சதவீதத்திற்கு கீழ் வந்தது. இது பா.ஜ.க. தலைமையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதைத்தொடர்ந்து தோல்விக்கான காரணத்தை ஆராய குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து, மத்திய பா.ஜ.க. தலைமைக்கு அனுப்பினர். அதன் அடிப்படையில் தமிழக பா.ஜ.க.வுக்கு புதிய தலைவர் நியமிப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.</p><p>இதற்கிடையே, முன்னாள் மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலையும் கட்சியில் இருந்து விலகி, 'வீ த லீடர்ஸ்' என்ற அமைப்பை தொடங்கியுள்ளார். அவருக்கு ஆதரவாக மாநில துணைத்தலைவராக இருந்த கரு.நாகராஜன் உள்பட பா.ஜ.க. நிர்வாகிகள் பலரும் பா.ஜ.க.வில் இருந்து வெளியேறினர்.</p><h2><strong>தலைவர் பட்டியலில் யார், யார்?</strong></h2><p>இந்த நிலையில் தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்தவும், இளைஞர்களை ஈர்க்கவும் கட்சியில் புதிய மாற்றத்தை கொண்டு வரவும் விரைவில் புதிய தலைவரை நியமிக்க பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. தற்போதைய தலைவர் நயினார் நாகேந்திரன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தான் மாநில தலைவராக பதவியேற்றிருந்தார். அவரது தலைமையில் ஒரே ஒரு தேர்தலை மட்டும் சந்தித்த நிலையில் இந்த மாற்றம் நிகழ இருக்கிறது.</p><p>புதிய மாநிலத் தலைவரை நியமிப்பதற்கான ஆலோசனை இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. 2029-ம் ஆண்டு நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டே புதிய தலைவரை தேர்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. புதிய தலைவர் பட்டியலில் மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், மூத்த தலைவர் எச்.ராஜா, சரத்குமார், மாநிலச் செயலாளர்கள் அஸ்வத்தாமன், வினோஜ் பி.செல்வம் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.</p><p>மேலும், மத்திய மந்திரியாக இருக்கும் நிர்மலா சீதாராமனையும் தமிழக அரசியலுக்கு கொண்டு வரலாமா? என்பது குறித்தும் மத்திய பா.ஜ.க. தலைமை யோசித்து வருகிறது. விரைவில் தமிழக பா.ஜ.க. புதிய தலைவர்</p><p>யார்? என்பது தெரிந்து விடும். </p>]]></content:encoded></item><item><title>ஆப் ஸ்டோரில் இருந்து மாயமான டெலிகிராம் ஆப் - பயனர்கள் குமுறல்</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/telegram-removed-from-apples-ios-app-store-worldwide-say-reports</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/telegram-removed-from-apples-ios-app-store-worldwide-say-reports#comments</comments><guid isPermaLink="false">637707b7-cbf6-42ff-8995-27e47b5c3218</guid><pubDate>Tue, 04 Aug 2026 03:14:55 +0000</pubDate><atom:updated>2026-08-04T03:14:55.350Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Apple,ஆப்பிள்,Telegram,App Store,டெலிகிராம்,ஆப் ஸ்டோர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/bt5mwufo/Teleram-App-Logo.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Teleram App Logo]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/bt5mwufo/Teleram-App-Logo.png?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>உலகம் (World)</category><content:encoded><![CDATA[ <p>உலகம் முழுவதும் ஆப்பிளின் ஆப் ஸ்டோர் தேடல் முடிவுகளில் இருந்து <a href="https://www.maalaimalar.com/topic/telegram">டெலிகிராம்</a> மறைந்துவிட்டது. இதனால், பயனர்கள் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் இந்த குறுந்தகவல் செயலியை தேடவோ அல்லது பதிவிறக்கம் செய்யவோ முடியாமல் உள்ளனர். இந்த நீக்கத்தின் விளைவாக, டெலிகிராமின் அதிகாரப்பூர்வ ஆப் ஸ்டோர் பட்டியலில் "பக்கம் காணப்படவில்லை" (Page Not Found) என்ற பிழை ஏற்படுகின்றன.</p><p>தற்போதைய நிலவரப்படி, செயலி காணாமல் போனது குறித்து <a href="https://www.maalaimalar.com/topic/apple">ஆப்பிள்</a> நிறுவனமோ அல்லது டெலிகிராம் தரப்பிலோ அதிகாரப்பூர்வ தகவல் எதையும் வெளியிடவில்லை, மேலும் டெலிகிராம் தலைமை நிர்வாக அதிகாரி பாவெல் துரோவும் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.</p><p>தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவா அல்லது கொள்கை தொடர்பான நடவடிக்கை காரணமாக இந்த செயலி நீக்கப்பட்டதா என்பது குறித்தும் இதுவரை தெளிவாக தெரியவில்லை.</p><h2>மீண்டும் நீக்கம்:</h2><p>ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து டெலிகிராம் நீக்கப்படுவது இது முதல் முறையல்ல. முன்னதாக பிப்ரவரி 2018-இல், பொது சேனல்கள் வழியாக பரவிவரும் பொருத்தமற்ற மற்றும் சட்டவிரோத உள்ளடக்கத்தை கண்டறிந்த பிறகு, ஆப்பிள் நிறுவனம் டெலிகிராம் மற்றும் அதன் சோதனை முயற்சியான டெலிகிராம் எக்ஸ் செயலி ஆகிய இரண்டையும் தற்காலிகமாக நீக்கியது.</p><p>பிட்பினாஸ் வெளியிட்டுள்ள தகவல்படி, 24 மணி நேரத்திற்குள் இரு செயலிகளையும் மீட்டெடுப்பதற்கு முன்பு, டெலிகிராம் தனது உள்ளடக்க கண்காணிப்பு அமைப்புகளை வலுப்படுத்தவும், விதிமீறும் கணக்குகளை நிரந்தரமாக தடை செய்யவும், கொள்கை மீறல்களை சரிசெய்யவும் ஆப்பிள் நிறுவனம் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.</p><h2>பதிவிறக்கம் செய்ய முடியாது:</h2><p>தற்போதைய நீக்கம் ஏற்கனவே உள்ள டெலிகிராம் கணக்குகளை பாதிக்காது, ஆனால் இது ஆப்பிள் பயனர்களுக்கு பல வரம்புகளை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே டெலிகிராம் செயலியை இன்ஸ்டால் செய்துள்ள பயனர்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம், ஆனால் அதை அன்-இன்ஸ்டால் செய்ய வேண்டாம் என்று அவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது, ஏனெனில் பிட்பினாஸ் தகவலின்படி, தற்போது அதை ஆப் ஸ்டோரில் இருந்து மீண்டும் பதிவிறக்கம் செய்ய முடியாது.</p><p>புதிய ஐபோன் அல்லது ஐபேட் செட்-அப் செய்யும் பயனர்களாலும் அதிகாரப்பூர்வ டெலிகிராம் செயலியை இன்ஸ்டால் செய்ய முடியாது. மேலும், இந்த பிரச்சனை மீண்டும் சரிசெய்யப்படும் வரை, ஐ.ஓ.எஸ் அப்டேட்கள், பிழைத் திருத்தங்கள், செயல்திறன் மேம்பாடுகள் மற்றும் செக்யூரிட்டி பேட்ச்கள் தற்காலிகமாக கிடைக்காது.</p><h2>இணைய பதிப்பு:</h2><p>இருப்பினும், டெலிகிராமின் இணைய பதிப்பு, விண்டோஸ் மற்றும் மேக்ஓ.எஸ். டெஸ்க்டாப் செயலிகள் மற்றும் ஆண்ட்ராய்டு செயலி ஆகியவை வழக்கம் போல் இயங்கி வருகின்றன.</p><p>இதற்கிடையில், ஆப் ஸ்டோரில் இருந்து டெலிகிராம் திடீரென மறைந்தது குறித்து பயனர்கள் சமூக ஊடகங்களில் புகார் தெரிவித்து, ஸ்கிரீன்ஷாட்களை பகிர்ந்து, தங்கள் குழப்பத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.</p><p>டெலிகிராம் என்பது அதன் வேகம், பாதுகாப்பு மற்றும் பல சாதனங்களில் ஒரே நேரத்தில் இயங்கும் தன்மைக்காக அறியப்படும் ஒரு கிளவுட் அடிப்படையிலான இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளமாகும். 1 பில்லியனுக்கும் அதிகமான செயலில் உள்ள பயனர்களுடன், இது உலகில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட டாப் 5 குறுந்தகவல் செயலிகளில் ஒன்றாக திகழ்கிறது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து- தெற்கு ரெயில்வே அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/southern-railway-announced-night-time-electric-trains-between-chennai-beach-and-tambaram-cancelled</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/southern-railway-announced-night-time-electric-trains-between-chennai-beach-and-tambaram-cancelled#comments</comments><guid isPermaLink="false">3773c46c-a8d7-4c91-8ccb-ed7f7577efe3</guid><pubDate>Tue, 04 Aug 2026 02:56:09 +0000</pubDate><atom:updated>2026-08-04T02:56:09.340Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Southern Railway,Electric Trains,மின்சார ரெயில்கள்,மின்சார ரெயில்கள் ரத்து,தெற்கு ரெயில்வே</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/iy0spvjw/electrictrain.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மின்சார ரெயில்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ மின்சார ரெயில்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/iy0spvjw/electrictrain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே வருகிற 22-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையில் இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.</aside><h2><strong>நடைமேம்பால பணி</strong></h2><p>சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.842 கோடியில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக, நடைமேடை 1 முதல் 5 வரையில் இரும்பு நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 2-ம் கட்டமாக நடைமேடைகள் 6 முதல் 8 வரையிலான பகுதிகளில் நடைமேம்பாலத்திற்கான தூண்கள் மற்றும் தாங்கு சட்டங்களை அமைப்பதற்கான பணிகள் நடைபெற இருக்கிறது. இந்த பணி காரணமாக, வருகிற 5-ந்தேதி முதல் 20-ந்தேதி வரையில் 9 எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை மாற்றம் செய்யப்பட்டும், 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பகுதி நேர மாற்றம் செய்யப்பட்டும் இயக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு தெற்கு ரெயில்வே சார்பில் கடந்த 30-ந்தேதி அறிவிக்கப்பட்டது. இந்த பணியின்போது மின்சார ரெயில் சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படாது.</p><h2><strong>மின்சார ரெயில் சேவைகள் ரத்து</strong></h2><p>இதனைதொடர்ந்து, 3-ம் கட்டமாக நடைமேடைகள் 9 முதல் 11 வரையில் நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, <a href="https://www.maalaimalar.com/topic/மின்சார-ரெயில்கள்-ரத்து">மின்சார ரெயில் </a>வழித்தடத்தில் இரவு நேரங்களில் ரெயில் சேவை நிறுத்தப்பட உள்ளது. அதன்படி, எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைமேடை 9 முதல் 11 வரையில் நடைமேம்பாலம் அமைக்கும் பணி வருகிற 22-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையில் நடைபெற உள்ளது. இதனால் ரத்து மற்றும் மாற்றம் செய்யப்படும் மின்சார ரெயில் சேவைகளின் விவரங்கள் வருமாறு:-</p><h2><strong>வாரநாட்களில்...</strong></h2><p>*சென்னை கடற்கரையில் இருந்து வருகிற 22, 24, 25, 26, 27, 28, 29 ஆகிய தேதிகளில் (வார நாட்களில்) இரவு 11:20, 11:40, 11.59 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.</p><p>* சென்னை கடற்கரையில் இருந்து மேற்கண்ட தேதிகளில் அதிகாலை 3.50 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில் சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே பகுதிநேர ரத்து செய்யப்படுகிறது. கூடுவாஞ்சேரியில் இருந்து மேற்கண்ட தேதிகளில் இரவு 10.15, 11.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரெயில்களும், செங்கல்பட்டில் இருந்து இரவு 10.20, 11 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரெயில்களும் தாம்பரம்-கடற்கரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.</p><h2><strong>ஞாயிற்றுக்கிழமை</strong></h2><p>இதேபோல, சென்னை கடற்கரையில் இருந்து வருகிற 23, 30 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) இரவு 11.20, 11:40, 11.59 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மேலும், தாம்பரத்தில் இருந்து மேற்கண்ட தேதிகளில் இரவு 11, 11.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.</p><p>* மேலும், சென்னை கடற்கரையில் இருந்து வருகிற 23. 30 ஆகிய தேதிகளில் அதிகாலை 3.50 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில் கடற்கரை-தாம்பரம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டில் இருந்து மேற்கண்ட தேதிகளில் இரவு 10.20, 11 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரெயில் தாம்பரம்-கடற்கரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் நாளை தாக்கல் - மகளிருக்கு ரூ.2,500 அறிவிப்பு வெளியாகுமா?
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-governments-first-budget-to-be-presented-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-governments-first-budget-to-be-presented-tomorrow#comments</comments><guid isPermaLink="false">9308bd0d-1d99-4bfb-82cb-a6ca58413490</guid><pubDate>Tue, 04 Aug 2026 02:51:04 +0000</pubDate><atom:updated>2026-08-04T02:51:04.627Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,TN budget,தமிழக பட்ஜெட்,தவெக அரசு,tvk government</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/dwyogk3f/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vijay -  Marie Wilson]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/dwyogk3f/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்நாடு சட்டசபையில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. </strong></em></p><h2>த.வெ.க. அரசின் பட்ஜெட்</h2><p>கடந்த தி.மு.க. ஆட்சியில் சட்டசபை தேர்தலுக்கு முன்பு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதன் பிறகு நடந்த 17-வது சட்டசபை தேர்தலில் த.வெ.க. கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">த.வெ.க. அரசின்</a> முதல் பட்ஜெட், சட்டசபையில் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. இதற்கான அறிவிப்பை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கடந்த மாதம் 21-ந்தேதி அறிவித்தார்.</p> <h2>நிதி அமைச்சர் மரிய வில்சன்</h2><p>அதன்படி சட்டசபை நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது. அப்போது 2026-2027-ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்கிறார். நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்கிறார்.</p><h2>எத்தனை நாள் நடைபெறும்?</h2><p>நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறும். அப்போது பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது உள்பட முக்கிய முடிவுகள், அந்த கூட்டத்தில் எடுக்கப்படும்.</p> <p>பட்ஜெட் மீதான எம்.எல்.ஏ.க்களின் விவாதங்கள் 10-ந் தேதி தொடங்கும். அதன் நிறைவில் நிதி அமைச்சர் பதிலளித்து பேசுவார். அதன் பின்னர் இடைவெளி இல்லாமல் அரசுத் துறைகளின் மானியக் கோரிக்கைகளும் தாக்கலாகி, விவாதத்துக்கு விடப்படும் என்றும், எனவே இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 2-ம் வாரம் வரை நீடிக்கலாம் என்றும் தெரிகிறது.</p><h2>முதலமைச்சர் விஜய்</h2><p>த.வெ.க. அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இது என்பதால், அனைத்துத்துறை அமைச்சர்கள், செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் துறைவாரியாக முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-decided-4-ministers-change-after-assembly-session">விஜய்</a> ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.</p> <h2>மகளிர் திட்டம்</h2><p>த.வெ.க. சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற வாக்குறுதிகளான ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் 60 வயது வரை ரூ.2,500 என்ற மதிப்புமிகு மகளிர் திட்டம், ஆண்டுக்கு 6 இலவச கியாஸ் சிலிண்டர், வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை, அனைத்து அரசு பஸ்களிலும் பெண்களுக்கு இலவச பயணம் உள்ளிட்டவற்றில் எவையெல்லாம் இந்த பட்ஜெட்டில் திட்டங்களாக அறிவிக்கப்பட உள்ளது? என்ற பலத்த எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.</p> <h2>மேகதாது அணை பிரச்சனை</h2><p>அதே நேரம் காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சனை, மேகதாது அணை பிரச்சனை, மின்வெட்டு, அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் என பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. எனவே அனல்பறக்கும் விவாதங்கள், இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p> <p>மேலும், முக்கிய சட்டத்திருத்த மசோதாக்கள், அரசினர் தீர்மானங்கள், அவை விதி 110-ன் கீழ் முதலமைச்சரின் அறிவிப்புகள் போன்றவற்றையும் இந்த கூட்டத்தொடரில் எதிர்பார்க்கலாம். கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் முதலமைச்சர் விஜய் தனது கையை வீசி செய்கை செய்ததில் எந்த தவறும் இல்லை என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறியுள்ள நிலையில், அதுவும் இந்த தொடரில் எதிரொலிக்கலாம் என்று தெரிகிறது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-and-diesel-price-in-chennai-4-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-and-diesel-price-in-chennai-4-august-2026#comments</comments><guid isPermaLink="false">77788370-d702-43a2-8163-2bca84375cc0</guid><pubDate>Tue, 04 Aug 2026 02:30:37 +0000</pubDate><atom:updated>2026-08-04T02:30:37.090Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,கச்சா எண்ணெய்,Crude oil,பெட்ரோல் டீசல் விலை,Pertrol Diesel Prices</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/n15pib15/petrol.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பெட்ரோல் - டீசல் விலை ]]></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல் - டீசல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/n15pib15/petrol.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[  <p>ஈரான் போரினால் மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p> <h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.</p> <h2>இன்றைய பெட்ரோல், டீசல் விலை</h2><p>அந்த வகையில் இன்றைய (4.8.2026 - (செவ்வாய்க்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.76-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>அமெரிக்க தாக்குதல்கள் தீவிரமடைவதை தவிர்க்க ஈரானுக்கு கடைசி வாய்ப்பு: டிரம்ப் எச்சரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/world/trump-said-new-talks-last-chance-for-iran-to-avoid-escalation-of-us-strikes</link><comments>https://www.maalaimalar.com/news/world/trump-said-new-talks-last-chance-for-iran-to-avoid-escalation-of-us-strikes#comments</comments><guid isPermaLink="false">0fc48103-5c33-4fff-906f-4a18a66f2232</guid><pubDate>Tue, 04 Aug 2026 02:11:10 +0000</pubDate><atom:updated>2026-08-04T02:11:10.812Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டொனால்டு டிரம்ப்,Donald Trump,ஈரான்,Iran</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/rizfrafp/DT.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டொனால்டு டிரம்ப்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/rizfrafp/DT.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஐந்து மாதங்களாக நீடிக்கும் ஈரான் தொடர்பான மோதலில் அமெரிக்க அதிபர் <a href="https://www.maalaimalar.com/topic/donald-trump">டொனால்டு டிரம்ப்</a> இத்தகைய அணுகுமுறையை கையாள்வது இது முதல் முறையல்ல; ஆனால் இம்முறை நிலைமை மாறுபட்டது என்று அவர் வலியுறுத்துகிறார்.</p><p>வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான புதிய பேச்சுவார்த்தைகள், <a href="https://www.maalaimalar.com/topic/Iran">ஈரான்</a> ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ளவும், அந்நாட்டின் மீது அமெரிக்க தாக்குதல்கள் தீவிரமடைவதை தவிர்க்கவும் ஒரு "கடைசி வாய்ப்பு" என்று அதிபர் டிரம்ப் கூறினார். </p><h2>கவலைகளுக்கு தீர்வு:</h2><p>ஓவல் அலுவலகத்தில் பேசிய டிரம்ப், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது மற்றும் ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த அமெரிக்காவின் கவலைகளுக்கு தீர்வு காண்பதற்கான வழியை உருவாக்குவது ஆகியவற்றில் பேச்சுவார்த்தைகள் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்ப்பதாக கூறினார். பேச்சுவார்த்தைகளின் நிலை குறித்த தகவல்கள் "இன்றோ அல்லது நாளையோ" தெரியவரும் என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.</p><p>"முதல் கட்டம் நீரிணையை திறப்பதாகும். இரண்டாவது கட்டம் அணு ஆயுத ஒழிப்பாக இருக்கும். அதற்கு சிறிது காலம் எடுக்கும்," என்று அதிபர் டிரம்ப் கூறினார்.</p><h2>தாக்குதல் ஒத்திவைப்பு:</h2><p>வளைகுடா நாடுகளான கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றின் வேண்டுகோளின் பேரில், ஈரானுக்கு எதிராக புதிய பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்த அமெரிக்க படைகளுக்கு உத்தரவிடுவதை தள்ளிவைக்க முடிவு செய்ததாக டிரம்ப் கூறினார்.</p><p>கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று "இரண்டாம் உலக போருக்கு பிறகு மிகப்பெரிய தாக்குதலை" அமெரிக்கப் படைகள் நடத்துவதற்கான திட்டம் தயாராக இருந்ததாக அவர் கூறினார். ஆனால் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் உள்ளிட்ட முக்கிய வளைகுடா தலைவர்களின் கருத்துக்களை கேட்ட பிறகும், பெயரிடப்படாத ஈரான் அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரிலும், அந்த திட்டத்தை கைவிட்டு, இராஜதந்திர முயற்சிகளுக்கு அதிக நேரம் கொடுக்க முடிவு செய்ததாக தெரிவித்தார். இருப்பினும், ஈரான் மீதான தனது பொறுமை குறைந்து வருவதாக டிரம்ப் மீண்டும் வலியுறுத்தினார்.</p><h2>உண்மையான பேச்சுவார்த்தை:</h2><p>"ஈரான் அதை ஒப்புக்கொள்ள விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதை தடுப்பது குறித்து நாங்கள் உண்மையில் பேசிக்கொண்டிருக்கிறோம்," என்று டிரம்ப் கூறினார்.</p><p>பிப்ரவரி 28 அன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடங்கியதில் இருந்து, ஈரான் மீதான தாக்குதல்களை அதிகரிப்பதாக டிரம்ப் பலமுறை அச்சுறுத்தினார். பின்னர் தனது அச்சுறுத்தல்களில் இருந்து பின்வாங்கியுள்ளார்.</p><p>தெஹ்ரான் மீது மீண்டும் மீண்டும் கடுமையான அச்சுறுத்தல்களை விடுத்துப் பின்னர் பின்வாங்குவதை அமெரிக்கர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்று ஒரு செய்தியாளர் கேட்டதற்கு, ஈரானியர்களின் உயிர்கள் மீதான அக்கறையின் காரணமாகவே தான் பொறுமையை கடைப்பிடிப்பதாக டிரம்ப் பதிலளித்தார்.</p>]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 4 ஆகஸ்ட் 2026: தேய்பிறை சஷ்டி விரதம்
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-4-august-2026-theipirai-sashti-viratham</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-4-august-2026-theipirai-sashti-viratham#comments</comments><guid isPermaLink="false">9676f201-11c3-4d92-8fce-20aca587c31b</guid><pubDate>Tue, 04 Aug 2026 01:59:21 +0000</pubDate><atom:updated>2026-08-04T01:59:21.530Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-16/gsqcg08o/muruga7.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Murugan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-16/gsqcg08o/muruga7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆடி-19 (செவ்வாய்க்கிழமை)</p><p>பிறை : தேய்பிறை</p><p>திதி :  சஷ்டி இரவு 7.52 மணி வரை பிறகு சப்தமி</p><p>நட்சத்திரம் :  ரேவதி இரவு 8.29 வரை பிறகு அசுவினி</p> <p>யோகம் :  சித்தயோகம்</p><p>ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை</p><p>எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை</p><p>சூலம் : வடக்கு</p><p>நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை</p> <h2>ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப்பெருமான் பவனி</h2><p>தேய்பிறை சஷ்டி விரதம். சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் சக்தியழைப்பு விழா, உருள் தாண்டவக் காட்சி. தேவக்கோட்டை ஸ்ரீ அரங்கநாதர் புறப்பாடு. சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம். </p> <p>திருநெல்வேலி சமீபம் 3-ஆம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுத வல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சனம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் திருக்கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப்பெருமான் பவனி. குரங்கனி ஸ்ரீ முத்துமாலையம்மன் புறப்பாடு.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - உயர்வு</p><p>ரிஷபம் - போட்டி</p><p>மிதுனம் - புகழ்</p><p>கடகம் - நட்பு</p><p>சிம்மம் - அனுகூலம்</p><p>கன்னி - சிறப்பு</p> <p>துலாம் - திடம்</p><p>விருச்சிகம் - கடமை</p><p>தனுசு - மகிழ்ச்சி</p><p>மகரம் - லாபம்</p><p>கும்பம் - அமைதி</p><p>மீனம் - பயணம்</p> ]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 4.8.2026 - இந்த ராசிக்காரர்கள் தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-4-august-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-4-august-2026#comments</comments><guid isPermaLink="false">c921710e-728c-4f19-9a1b-b17111fe062a</guid><pubDate>Tue, 04 Aug 2026 01:46:03 +0000</pubDate><atom:updated>2026-08-04T01:46:03.116Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-07/vygdy4hu/New-Project-2026-05-25T070202.454.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-07/vygdy4hu/New-Project-2026-05-25T070202.454.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>ராசிபலன்(Rasipalan)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>தொல்லை தந்தவர்கள் எல்லையை விட்டு விலகும் நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். இல்லத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.</p><h2>ரிஷபம்</h2><p>வரவு திருப்தி தரும் நாள். தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு உண்டு. எதிர்பார்த்த தகவல் அலைபேசி மூலம் வந்து சேரும்.</p> <h2>மிதுனம்</h2><p>எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். நிதி நிலை உயரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் செயல்பாட்டைக் கண்டு வியப்பர்.</p><h2>கடகம்</h2><p>உற்சாகத்துடன் செயல்படும் நாள். பாகப்பிரிவினை சுமூகமாக முடியும். பயணங்கள் பலன்தருவதாக அமையும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.</p> <h2>சிம்மம்</h2><p>வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். காரியத்தடை ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். நட்பு பகையாகும்.</p><h2>கன்னி</h2><p>முயற்சி கைகூடும் நாள். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.</p> <h2>துலாம்</h2><p>ஆரோக்கியம் சீராகும் நாள். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் கேட்ட சலுகைகளை வழங்குவர்.</p><h2>விருச்சிகம்</h2><p>யோகமான நாள். எதிபாராத வரவு உண்டு. நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்பு நடைபெற்று மகிழ்ச்சி தரும். பிள்ளைகளால் உதிரி வருமானம் உண்டு.</p> <h2>தனுசு</h2><p>பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். புதிய முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் சேர வாய்ப்பு உண்டு.</p><h2>மகரம்</h2><p>உறவினர் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். நேற்றைய சேமிப்பு இன்று செலவிற்கு கைகொடுக்கும். உத்தியோகத்தில் பணியைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள்.</p> <h2>கும்பம்</h2><p>சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். தொழில் சம்பந்தமாக அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம்.</p><h2>மீனம்</h2><p>தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். உத்தியோகத்தில் சக பணியாளர்களிடம் ஏற்பட்ட பிரச்சனை முடிவிற்கு வரும்.</p> ]]></content:encoded></item><item><title>வெனிசுலா நிலநடுக்கங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,000-ஐ கடந்தது</title><link>https://www.maalaimalar.com/news/world/more-than-6000-killed-in-june-earthquakes-in-venezuela</link><comments>https://www.maalaimalar.com/news/world/more-than-6000-killed-in-june-earthquakes-in-venezuela#comments</comments><guid isPermaLink="false">e4e65c5d-3c00-4e04-8ff5-7fafbdbb48fe</guid><pubDate>Tue, 04 Aug 2026 01:15:04 +0000</pubDate><atom:updated>2026-08-04T01:15:04.010Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>வெனிசுலா,Earthquake,Venezuela,நிலநடுக்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/t0kzj5ox/venezuela-earthquake.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வெனிசுலா நிலநடுக்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/t0kzj5ox/venezuela-earthquake.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜூன் மாதம் வெனிசுலாவை உலுக்கிய இரட்டை நிலநடுக்கங்களில் இதுவரை 6,125 பேர் உயிரிழந்தனர் என தேசிய சட்டமன்றத் தலைவர் ஜார்ஜ் ரோட்ரிக்ஸ் தெரிவித்தார்.</p><p>கடந்த ஜூன் 24-ஆம் தேதியன்று ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள், பெரும்பாலும் கடுமையாக பாதிக்கப்பட்ட கடலோர மாநிலமான லா குவைராவில், கிட்டத்தட்ட 200 கட்டிடங்களை இடித்து தள்ளிய சில வாரங்களுக்கு பிறகு இந்த புதுப்பிக்கப்பட்ட புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது.</p><h2>1400 பேர் மாயம்:</h2><p>முந்தைய இறப்பு எண்ணிக்கை 5,546 ஆக இருந்தது. நில அதிர்வுகளில் கிட்டத்தட்ட 17,000 பேர் காயமடைந்துள்ள நிலையில், மீட்பு குழுவினரும் குடும்ப உறுப்பினர்களும் பாதிக்கப்பட்டவர்களையும் அன்புக்குரியவர்களையும் தேடி இடிபாடுகளை தொடர்ந்து சலித்து வருகின்றனர்.</p><p>பேரிடருக்கு பிறகு சுமார் 1,400 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாக லா குவைரா ஆளுநர் ஜோஸ் அலெஜான்ட்ரோ டெரான் கூறியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>காணாமல் போனவர்களின் எண்ணிக்கை குறித்து அரசாங்கம் வேறு எந்த விவரத்தையும் வெளியிடவில்லை, ஆனால் நிபுணர்களின் கணிப்புகளின்படி இந்த எண்ணிக்கை 10,000 வரை இருக்கலாம்.</p><p>முற்றிலுமாக சேதமடைந்த 190 கட்டிடங்களுக்கு கூடுதலாக, 16,200-க்கும் மேற்பட்ட கட்டமைப்புகளை அதிகாரிகள் பாதுகாப்பற்றவை என வகைப்படுத்தியதால், பலர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.</p><p>நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, லா குவைரா மற்றும் கராகஸ் பகுதிகளில் கிட்டத்தட்ட 24,000 மக்கள் தற்காலிக முகாம்களில் வசித்து வருகின்றனர்.</p><h2>சட்டம் அங்கீகாரம்:</h2><p>சொத்துக்களை வாடகைக்கு விடுவதை எளிதாக்கும் சட்டத்தை வெனிசுலா நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை ஒருமனதாக அங்கீகரித்தனர். நிலநடுக்கத்தால் இடம்பெயர்ந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதை நோக்கமாக கொண்ட இந்த நடவடிக்கை, முன்னாள் இடதுசாரி சவிஸ்டா நிர்வாகங்களால் நிறைவேற்றப்பட்ட வாடகைக்கு எதிரான சட்டத்தை ரத்து செய்கிறது.</p><p>"இந்தச் சட்டத்தால் சுமார் 400,000 வீடுகள் பயனடையக்கூடும் என நாங்கள் மதிப்பிடுகிறோம்," என்று இடைக்காலத் தலைவர் டெல்சி ரோட்ரிக்ஸ் கூறினார். இது குத்தகைதாரர்களுக்கும் சொத்து உரிமையாளர்களுக்கும் ஒரு வெற்றி நிலை என்பதை அவர் விவரித்தார்.</p><p>இந்த ஆண்டு இறுதிக்குள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4,000 வீடுகளை வழங்குவதாக ரோட்ரிக்ஸ் முன்னதாக உறுதியளித்திருந்தார், மேலும் 2027-ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கையை 10,000-ஐ தாண்டுவதை அரசாங்கம் நோக்கமாக கொண்டுள்ளது.</p><p>ஜனவரியில் அவரது முன்னோடியான நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க படைகள் பதவியில் இருந்து நீக்கியதைத் தொடர்ந்து, இடைக்கால தலைவர் வாஷிங்டனின் கடுமையான கண்காணிப்பின் கீழ் ஆட்சி நடத்தி வருகிறார்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்களை தாக்கும்போது எங்கே போனீர்கள்?.. ஜென் இசட் சந்திப்பு நடத்தும் ஆர்எஸ்எஸ் தலைவரிடம் ஆதித்யா தாக்கரே நறுக்</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-scam-protests-rss-plans-outreach-to-gen-z-and-gen-alpha-students</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-scam-protests-rss-plans-outreach-to-gen-z-and-gen-alpha-students#comments</comments><guid isPermaLink="false">78173dff-0c44-4e49-b4c1-ae816b0a0168</guid><pubDate>Tue, 04 Aug 2026 00:40:44 +0000</pubDate><atom:updated>2026-08-04T00:40:44.245Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>RSS,ஆர்எஸ்எஸ்,ஜென் இசட்,Gen z,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/lyfkmu46/tn-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஆதித்யா தாக்கரே, மோகன் பகவத்  ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆதித்யா தாக்கரே, மோகன் பகவத்  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/lyfkmu46/tn-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் சிஜேபி தலைமையில் <a href="https://www.maalaimalar.com/news/national/modi-apology-row-cjp-founder-demands-pm-apologise-for-police-assault-on-12-year-old-girls">இளைஞர்கள் நடத்திய போராட்டம்</a>, தர்மேந்திர பிரதான், கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலக வழிவகுத்தது. </p><p>இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவு. எனவே இளைஞர்கள், மாணவர்களை கரும் முயற்சியில் பாஜக மற்றும் இந்துத்துவா வலதுசாரிகள் மெனக்கிட்டு வருகின்றனர். பாஜகவினர் இன்ஸ்டாவில் தீவிரமாக செயல்படும்படி கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார். அவரும் தினம் தினம் இன்ஸ்டாவில் செல்பி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். </p><p>இந்நிலையில் பாஜகவின் சித்தாந்த தலைமையாக கருதப்படும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் இளைய தலைமுறையை கவரும் முயற்சியில் இறங்கியுள்ளது. </p> <h2>சந்திப்பு</h2><p>ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகஸ்ட் 6 அன்று நாடு முழுவதும் உள்ள ஜென் இசட் மற்றும் ஜென் ஆல்பா மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளார்.</p><p>மும்பையில் உள்ள நீடா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.</p><p>India's International Movement to Unite Nations என்ற அமைப்பின் 15வது ஆண்டு நிறைவு மாநாட்டின் தொடக்க விழாவில் இது நடைபெறுகிறது</p><p>15 முதல் 19 வயதுக்குட்பட்ட 2,000க்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இதில் நேரடியாகப் பங்கேற்கின்றனர்.</p><p>"உலகை ஒன்றிணைப்பதில் இளைஞர்களின் பங்கு - இந்திய வழி" என்ற பொருண்மையில் இது நடக்கிறது.</p> <h2>எங்கே போனீரகள்?</h2><p>மாணவர் போராட்டங்களுக்கு பிறகு திடீரென தலைவர்கள் ஜென் இசட் இளைஞர்களுடன் கலந்துரையாட ஆர்வம் காட்டுவதை சிவ சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே கிண்டல் செய்துள்ளார்.</p><p>"திடீரென்று அனைவரும் ஜென் இசட் மற்றும் ஜென் ஆல்பா இளைஞர்களுடன் கலந்துரையாட விரும்புகிறார்கள்.</p><p>சமூக வலைதளங்களில் அவர்களுக்கு பண்பாட்டைக் கற்றுக்கொடுக்க வருகிறார்கள். அவர்களுக்கு நான் கேட்கும் எளிய கேள்வி ஒன்றுதான்.</p><p>அமைதியான முறையில் போராட்டம் நடத்திய அந்த மாணவர்கள் மீது தடியடி, கண்ணீர்ப்புகை, கைது நடவடிக்கைகள் பாய்ந்த போதும், பெண்கள் தரக்குறைவாக நடத்தப்பட்ட போதும் நீங்கள் எங்கே போனீர்கள்?</p><p>அவர்களைக் காப்பாற்ற ஏன் அப்போது தலையிடவில்லை?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சூர்பனகையாக நடித்தது ஏன்?.. ரசிகையின் கேள்விக்கு ரகுல் பிரீத் சிங் சுவாரஸ்ய பதில் 

</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ramayana-trailer-rakul-preet-singhs-surpanakha-role-goes-viral-as-she-responds-to-fan-letter</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ramayana-trailer-rakul-preet-singhs-surpanakha-role-goes-viral-as-she-responds-to-fan-letter#comments</comments><guid isPermaLink="false">7b15325b-e46d-4415-8be4-5b87c3a3c412</guid><pubDate>Tue, 04 Aug 2026 00:13:50 +0000</pubDate><atom:updated>2026-08-04T00:13:50.408Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Ramayana,ரன்பீர் கபூர்,Ranbir Kapoor,ராமாயணா,Rakul Preet Singh,ரகுல் பிரீத் சிங்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/1p6ybuwg/tn-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ரகுல் பிரீத் சிங்]]></media:title><media:description type="html"><![CDATA[ ரகுல் பிரீத் சிங்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/1p6ybuwg/tn-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ரமேஷ் திவாரி இயக்கத்தில், ராமராக<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/ranbir-kapoor-as-rama-fans-refuse-to-accept-it"> ரன்பீர் கபூர்</a>, சீதையாக சாய் பல்லவி, மற்றும் இராவணனாக யஷ் நடித்துள்ள வரலாற்றுப் படம் ராமாயணா. அனுமன் கதாபாத்திரத்தில் சன்னி தியோல் நடித்துள்ளார்.</p><p>ஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த இதிகாசத் திரைப்படத்தின் முதல் பாகம், 2026 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘ராமாயணா’ படத்தின் டிரெய்லர் கடந்த ஜூலை.30ம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் வெளியானது. </p><p>இப்படம் அடுத்த தீபாவளிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>இந்த படத்தில் சூர்ப்பனகை பாத்திரத்தில் நடிகை ரகுல் பிரீத் சிங் நடித்துள்ளார். டிரெய்லரில் அவர் இடம்பெற்ற காட்சிகள் வைரலாகி வருகின்றன. </p><p>இதுபோன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க உங்களுக்கு எது உத்வேகம் அளித்தது என ரகுலிடம் ரசிகை ஒருவர் கடிதம் மூலம் கேட்டிருந்தார். </p> <h2>ரகுல் பதில்</h2><p>ரகுல் எக்ஸ் பக்கத்தில் அந்தக் கடிதத்திற்கு பதிலளித்துள்ளார்.</p><p>அதில், சூர்ப்பனகையின் கதாபாத்திரத்தின் சிக்கலான தன்மையே தன்னை மிகவும் கவர்ந்ததாக அவர் கூறினார். வரலாறு அவரை ஒரே ஒரு சம்பவத்திற்காக மட்டுமே நினைவில் வைத்திருக்கிறது, ஆனால் அவரது கதையில் இன்னும் பல அம்சங்கள் உள்ளன என்று அவர் கூறினார்.</p><p>பார்வையாளர்களின் கருத்துக்களுக்கு சவால் விடும் கதாபாத்திரங்களில் நடிப்பது தனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிப்பதாக ரகுல் கூறினார்.</p><p>படம் வெளியான பிறகு, பார்வையாளர்கள் சூர்ப்பனகையின் கதாபாத்திரத்தை ஒரு புதிய கோணத்தில் புரிந்துகொள்வார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>உலகின் இளம் பேராசிரியர்.. 306 ஆண்டுகால உலக சாதனை முறியடிப்பு - யார் இந்த  நேத்தன் தாமஸ்?
</title><link>https://www.maalaimalar.com/news/world/guinness-record-18-year-old-nathan-thomas-becomes-worlds-youngest-male-professor</link><comments>https://www.maalaimalar.com/news/world/guinness-record-18-year-old-nathan-thomas-becomes-worlds-youngest-male-professor#comments</comments><guid isPermaLink="false">5dc11a11-51dc-403f-b8b2-bf355a28daf7</guid><pubDate>Mon, 03 Aug 2026 22:59:00 +0000</pubDate><atom:updated>2026-08-03T22:59:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,USA,Professor,கின்னஸ் சாதனை,Guinness world records,பேராசிரியர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/sx6dkei8/tn-4.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[  நேத்தன் தாமஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[  நேத்தன் தாமஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/sx6dkei8/tn-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பள்ளி முடித்து கல்லூரியில் எந்தப் படிப்பைத் தேர்ந்தெடுப்பது என்றே குழம்பும் இளைஞர்களுக்கு மத்தியில் 18 வயதில் அமெரிக்காவில் ஒரு இளைஞர் கல்லூரி பேராசிரியராக மாறி சாதனை படைத்துள்ளார். </p><p>அமெரிக்காவை சேர்ந்த அந்த வாலிபர் பெயர் நேத்தன் தாமஸ். </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/brazilian-couple-attempt-to-prove-theyre-best-in-the-world-with-kissing-record">கின்னஸ் உலக சாதனை</a> அமைப்பு, உலகின் மிக இளம் வயது ஆண் பேராசிரியர் என்ற பட்டத்தை நேத்தன் தாமஸுக்கு வழங்கியுள்ளது.  </p> <h2>306 ஆண்டு சாதனை முறியடிப்பு</h2><p>1717ஆம் ஆண்டில், ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பிரபல கணிதவியலாளர் காலின் மேக்லரின் தனது 19வது வயதில் பேராசிரியராக பொறுப்பேற்றதே முந்தைய சாதனையாக இருந்தது.</p><p>306 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்த இந்த உலக சாதனையை, நேத்தன் தாமஸ் தனது 18 வயதில், ஆகஸ்ட் 2023இல் மியாமி டேட் கல்லூரியில் பேராசிரியராக இணைந்ததன் மூலம் முறியடித்துள்ளார்.</p><p>2008-ஆம் ஆண்டில் 18 வயதில் உலகின் மிக இளம் வயது பெண் பேராசிரியராக சாதனை படைத்த அலியா சாபூரை விட நேத்தன் 16 நாட்கள் இளையவர் ஆவார். இதன்மூலம் ஆண் பெண் என இருபாலரிலும் உலகின் இளம் பேராசிரியர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் தாமஸ்.</p><p>தற்போது கின்னஸ் அங்கீகாரத்தின் மூலம் அவரின் சாதனை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.</p> <h2>நேத்தன் தாமஸ்</h2><p>நேத்தன் தனது 10 வயதிலேயே மியாமி டேட் கல்லூரியில் பள்ளிப் படிப்புடன் சேர்த்து கல்லூரிப் படிப்பையும் தொடங்கினார்.</p><p>14வது வயதில் புளோரிடா சர்வதேசப் பல்கலைக்கழகத்திற்கு மாறினார். மின் பொறியியல் துறையில் இளங்கலை மற்றும் முதுகலை ஆகிய இரண்டு பட்டங்களையும் 18 வயதிற்குள் நிறைவு செய்தார்.</p><p>2023 ஆகஸ்ட் மாதம், மியாமி டேட் கல்லூரியில் பொறியாளர்களுக்கான சி-ப்ரோக்ராமிங் பாட ஆசிரியராக அவர் இணைந்தார்.</p><p>வகுப்பறையில் இருந்த பெரும்பாலான மாணவர்கள் அவரது வயதை ஒத்தவர்களாகவோ அல்லது அவரை விட மூத்தவர்களாகவோ இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>வாரணாசி.. வெறித்தனமான அப்டேட் கொடுத்த ராஜமௌலி </title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/rajamouli-varanasi-action-adventure-mahesh-babu-film-with-time-travel-and-imax-visuals</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/rajamouli-varanasi-action-adventure-mahesh-babu-film-with-time-travel-and-imax-visuals#comments</comments><guid isPermaLink="false">c7ee2fd6-c272-4a66-9d69-c8420c4fce8f</guid><pubDate>Mon, 03 Aug 2026 22:14:00 +0000</pubDate><atom:updated>2026-08-03T22:14:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rajamouli,வாரணாசி,மகேஷ் பாபு,varanasi,Mahesh Babu,ராஜமௌலி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/idr93hg7/tn-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராஜமௌலி, வாரணாசி]]></media:title><media:description type="html"><![CDATA[ ராஜமௌலி, வாரணாசி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/idr93hg7/tn-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாகுபலி மூலம் உலக சினிமாவை திரும்பிப்பார்க்க வைத்த ராஜமௌலி தனது ஒவ்வொரு படத்திலும் அதிக பிரமாண்டத்தை புகுத்தி வருகிறார். </p><p>கடைசியாக ஆர்ஆர்ஆர் படத்தை அடுத்து, மகேஷ் பாபுவை வைத்து வாரணாசி படத்தை ராஜமௌலி இயக்கி வருகிறார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. </p> <h2>வாரணாசி</h2><p>வாரணாசி திரைப்படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/varanasi-first-look-released">பிரியங்கா சோப்ரா</a> நடிக்கிறார். பிரபல நடிகர் பிருத்விராஜ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.</p><p>துர்கா ஆர்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார்.</p><p>80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் படப்பிடிப்புடன் விஎப்எக்ஸ் பணிகளும் தற்போது நடைபெற்று வரும் சூழலில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது.</p> <h2>ராஜமௌலி</h2><p>இந்நிலையில் இப்படம் குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை ராஜமௌலி அண்மையில் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.</p><p>இது ஒரு பெரிய ஆக்ஷன் சாகசத் திரைப்படம் என்றும், இதில் டைம் டிராவல் அம்சமும் இருக்கும் என்றும் அவர் கூறினார்.</p><p>கதை வாரணாசியில் தொடங்கி, அண்டார்டிகா மற்றும் ஆப்பிரிக்காவிற்குப் பயணித்து, அங்கிருந்து ராமாயண காலத்திற்குச் சென்று மீண்டும் வாரணாசிக்குத் திரும்புவதாகவும் 2022 முதல் கிட்டத்தட்ட நானரை ஆண்டுகளாக இந்தக் கதையை மெருகேற்றி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.</p> <p>தனக்கு இந்தியானா ஜோன்ஸ் போன்ற சாகசக் கதைகள் மிகவும் பிடிக்கும் என்றும், இந்தப் படமும் அதே பாணியில் இருக்கும் என்றும் அவர் கூறினார்.</p><p>படத்தில், அண்டார்டிகாவில் உள்ள 300 அடி உயர பனிமலை மற்றும் இராமாயண காலத்தின் பிரம்மாண்டமான வானரப் படை போன்ற காட்சிகளை எடுக்க ஐமேக்ஸ் கேமராக்கள் பயன்படுத்தப்படுவதாக அவர் கூறினார்.</p><p>ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் தனது படங்களில் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய விதம் தன்னை மிகவும் கவர்ந்ததாக குறிப்பிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவின் அமைதியை சீர்குலைக்க மார்க் ஜூக்கர்பெர்க் சதி.. நேரடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் - நிஷிகாந்த் தூபே</title><link>https://www.maalaimalar.com/news/national/meta-pm-video-removal-row-bjp-mp-demands-direct-apology-from-zuckerberg-warns-it-act-safe-harbour-withdrawal</link><comments>https://www.maalaimalar.com/news/national/meta-pm-video-removal-row-bjp-mp-demands-direct-apology-from-zuckerberg-warns-it-act-safe-harbour-withdrawal#comments</comments><guid isPermaLink="false">962c0455-7dc7-48d7-8aac-610b1a2c4525</guid><pubDate>Mon, 03 Aug 2026 21:27:00 +0000</pubDate><atom:updated>2026-08-03T21:27:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Mark Zuckerberg,Nishikant Dubey,மார்க் ஜுக்கர்பெர்க்,நிஷிகாந்த் தூபே</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/0sywo86a/tn-9.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நிஷிகாந்த் தூபே, மோடி, மார்க் ஜூக்கர்பெர்க் ]]></media:title><media:description type="html"><![CDATA[ நிஷிகாந்த் தூபே, மோடி, மார்க் ஜூக்கர்பெர்க் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/0sywo86a/tn-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">பிரதமர் மோடியின் </a>வீடியோ பேஸ்புக்கில்  தற்காலிகமாக நீக்கப்பட்டது தொடர்பாக மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் நேரடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக எம்.பியும் நாடாளுமன்ற  தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பக் குழுத் தலைவர் நிஷிகாந்த் துபே எச்சரித்துள்ளார்.</p> <h2>பிரதமர் வீடியோ நீக்கம்</h2><p>தேர்வு வினாத்தாள் கசிவு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி பேசிய வீடியோ, பேஸ்புக் பக்கத்தில் இருந்து சுமார் 5 மணி நேரம் நீக்கப்பட்டிருந்தது. தொழில்நுட்பக் கோளாறால் இது நடந்ததாக மெட்டா விளக்கம் அளித்தது.</p><p>நாடாளுமன்றக் குழு நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் மெட்டா, யூடியூப், எக்ஸ், ஸ்னாப்சாட், கூகுள் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளும், மத்திய உள்துறை மற்றும் ஐடி அமைச்சக அதிகாரிகளும் பங்கேற்றனர்.</p><p>இச்சம்பவம் தொடர்பாக 10 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்குமாறு மெட்டா நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.</p> <h2>துபே எச்சரிக்கை</h2><p>இச்சம்பவத்திற்காக மெட்டா பிரதிநிதிகள் மன்னிப்பு கேட்கத் தயாராக இருப்பதாகக் கூறியபோதிலும், இந்த மன்னிப்பை நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க்கே நேரடியாக கேட்க வேண்டும் என நிஷிகாந்த் துபே வலியுறுத்தியுள்ளார்.</p><p>ஜுக்கர்பெர்க் மன்னிப்பு கேட்கத் தவறினால், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 79ன் கீழ் சமூக ஊடகங்களுக்கு அளிக்கப்படும் 'பாதுகாப்பு அந்தஸ்து' திரும்பப் பெறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த அந்தஸ்து இருந்தால் மட்டுமே பயனாளர்களின் பதிவுகளுக்குத் தளம் சட்டப்பூர்வமாகப் பொறுப்பேற்கத் தேவையில்லை எனும் விலக்கு அந்த நிறுவனத்திற்கு கிடைக்கும்.</p> <p>அமைதியை சீர்குலைக்க சதி </p><p>தூபே இதுகுறித்து பேசுகையில், "2024 இந்திய தேர்தல் முடிவுகள் குறித்து கடந்த ஜனவரியில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து பின்னர் மன்னிப்பு கேட்ட ஜுக்கர்பெர்க், தற்போது பிரதமரின் வீடியோவை நீக்கியுள்ளது இந்தியாவின் அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்தையே காட்டுகிறது" என்று சாடியுள்ளார்.</p><p>மேலும், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் மொத்த Viewership, 23 மில்லியனாக மட்டுமே இருக்கும் நிலையில், பதிவு செய்யப்படாத அமைப்புகள் மற்றும் புதிய கணக்குகளின் பார்வைகள் 27 மில்லியனாக செயற்கையாக உயர்த்தப்படுவதாக மெட்டா, யூடியூப் மற்றும் எக்ஸ் தளங்களின் அல்காரிதம் மீது குற்றம் சாட்டினார்.</p> ]]></content:encoded></item><item><title>இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக இருவரை தூக்கிலிட்ட ஈரான் </title><link>https://www.maalaimalar.com/news/world/iran-executes-two-for-spying-for-mossad-and-leaking-military-secrets</link><comments>https://www.maalaimalar.com/news/world/iran-executes-two-for-spying-for-mossad-and-leaking-military-secrets#comments</comments><guid isPermaLink="false">290fbaad-6366-4d7b-a0da-0f67928abe59</guid><pubDate>Mon, 03 Aug 2026 20:36:00 +0000</pubDate><atom:updated>2026-08-03T20:36:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மரண தண்டனை,spy,Death Penalty,Iran War,ஈரான் போர்,உளவாளி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/z5bdzrca/tn-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தூக்கிலிடப்பட்டவர்கள் ]]></media:title><media:description type="html"><![CDATA[ தூக்கிலிடப்பட்டவர்கள் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/z5bdzrca/tn-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக குற்றம்சாட்டி 2 பேருக்கு ஈரான் மரண தண்டனை நிறைவேற்றி உள்ளது </p><h2>தூக்கு </h2><p>இஸ்ரேலின் உளவு அமைப்பான 'மொசாத்' அமைப்பிற்கு நாட்டின் முக்கிய ராணுவ மற்றும் பாதுகாப்பு மையங்கள் குறித்த ரகசிய தகவல்களை வழங்கியதாகக் ஒமித் பெஹ்சாத் மற்றும் பூரியா சப்வாத் ஆகிய இரண்டு ஈரானிய குடிமகன்கள் ஈரான் அரசால் நேற்று தூக்கிலிடப்பட்டனர். </p> <p>கடந்த ஆண்டு நடைபெற்ற போரின் போதும், சமீபத்திய மோதல்களின் போதும் ஈரானிய ராணுவ முகாங்களின் வரைபடங்கள், புகைப்படங்கள் மற்றும் முக்கிய தகவல்களை இஸ்ரேலுக்கு அனுப்பி உதவியதாக அவர்கள் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்தது. </p> <h2>தொடரும் மரண தண்டனைகள்</h2><p>ஈரானில் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் உளவு குற்றச்சாட்டுகளின் கீழ் மரண தண்டனைகள் வழங்கப்படுவது கணிசமாக அதிகரித்துள்ளது.</p><p>மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த நான்கு மாதங்களில் மட்டும் தேசிய பாதுகாப்பு தொடர்பான வழக்குகளில் ஈரானில் 50க்கும் மேற்பட்டோருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.</p> <h2>போர் </h2><p>இதனிடையே <a href="https://www.maalaimalar.com/news/world/iran-us-war-tensions-hormuz-strait-deal-trump-claims-iran-denies">ஈரான் </a>மீது தீவிர ராணுவத் தாக்குதல்களை நடத்த அமெரிக்கப் படைகள் தயார் நிலையில் இருந்தபோதிலும், பிராந்திய நட்பு நாடுகளின் வேண்டுகோள் மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் அந்தத் தாக்குதல்கள் ரத்து செய்யப்பட்டதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.  </p><p>டிரம்பின் இந்த அறிவிப்பை ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் உடனடியாக மறுத்துள்ளார். அமெரிக்காவுடன் எந்தவொரு நேரடிப் பேச்சுவார்த்தையிலும் ஈரான் ஈடுபடவில்லை என்றும், அண்டை நாடான 'ஓமன்' நாட்டின் வழிகாட்டலில் ஹார்முஸ் நீரிணையில் தற்காலிகப் பாதுகாப்பான கடல்வழிப் பாதையை அமைப்பது குறித்து மட்டுமே ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். </p><p>அமெரிக்காவின் கடற்படை முற்றுகை நீங்கும் வரை இந்த நிலைமையில் மாற்றம் இருக்காது என்றும் ஈரான் வலியுறுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதல் முறையாக மோகன் ராஜா இயக்கத்தில் கார்த்தி - வெளியான அசத்தல் அறிவிப்பு </title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/kollywood-update-karthi-teams-up-with-director-mohan-raja-for-his-11th-film</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/kollywood-update-karthi-teams-up-with-director-mohan-raja-for-his-11th-film#comments</comments><guid isPermaLink="false">91a1faab-bdbd-429f-9b4b-fe94e5fbdc91</guid><pubDate>Mon, 03 Aug 2026 19:49:55 +0000</pubDate><atom:updated>2026-08-03T19:49:55.108Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Karthi,கார்த்தி,மோகன் ராஜா,Mohan Raja,Sardar 2,சர்தார் 2</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/fu0gfnpl/tn-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மோகன் ராஜா இயக்கத்தில் கார்த்தி]]></media:title><media:description type="html"><![CDATA[ மோகன் ராஜா இயக்கத்தில் கார்த்தி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/fu0gfnpl/tn-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கார்த்தி தனது அடுத்த படத்திற்கு இயக்குனர் மோகன் ராஜாவுடன் கைகோர்த்துள்ளார். </p><p>நடிகர் ஜெயம் ரவியின் அண்ணனான மோகன் ராஜா, ஜெயம், சம்திங் சம்திங், சந்தோஷ் சுப்ரமணியம் ஆகிய படங்களை இயக்கியவர்.</p><p>குறிப்பாக 2015 இல் இவர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வெளியான தனி ஒருவன் படம், தமிழ் சினிமாவில் கிளாசிக் அந்தஸ்து பட்டியலில் இடம்பெற்ற படம். தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து வேலைக்காரன் படத்தை இயக்கியிருந்தார். </p> <p>இந்நிலையில் தனது மோகன் ராஜாவின் 11வது படத்தில் கார்த்தி முதன்முறையாக அவர் இயக்கத்தில் நடிக்கிறார்.</p><p>இப்படத்தை, தற்போது கார்த்தி நடித்து வரும் <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/karthis-sardar-2-teaser-released">சர்தார் 2</a> படத்தை தயாரிக்கும் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.</p> <h2>திரைத்துறையில் தனது 25வது ஆண்டு</h2><p>திரைத்துறையில் தனது 25வது ஆண்டைக் கொண்டாடும் இயக்குநர் மோகன் ராஜா, தனது எக்ஸ் தளத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.</p><p>மோகன் ராஜா தனது பதிவில் கூறியுள்ளதாவது, "என் பெற்றோரின் ஆசியோடும், குடும்பத்தினரின் அன்போடும், உங்கள் அனைவரின் ஆதரவாலும் எனக்கு எப்போதும் வெற்றி கிட்டியுள்ளது.</p><p>தற்போது எனது திரைப் பயணத்தின் 25வது ஆண்டில், எனது 11வது திரைப்படத்திற்காக என் அன்புச் சகோதரர் கார்த்தியுடன் இணைவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.</p> <p>பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. எப்போதும் என் பக்கம் நிற்கும் ரசிகர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. இந்த புதிய பயணத்திலும் உங்களின் ஆசிகளை வேண்டுகிறேன்." என தெரிவித்துள்ளார்.</p><p>படம் தொடர்பான பிற விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், இது ஒரு குடும்பக் கதையம்சம் கொண்ட திரைப்படமாக உருவாக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.</p><p>இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டின் இறுதிக்குள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்த காதலியின் கல்லறையில் தற்கொலை செய்துகொண்ட இஸ்ரேல் வாலிபர் </title><link>https://www.maalaimalar.com/news/world/hamas-attack-trauma-israeli-youth-dies-by-suicide-at-slain-girlfriends-grave</link><comments>https://www.maalaimalar.com/news/world/hamas-attack-trauma-israeli-youth-dies-by-suicide-at-slain-girlfriends-grave#comments</comments><guid isPermaLink="false">5306832d-81c9-4c1c-9b7e-cf20672290a7</guid><pubDate>Mon, 03 Aug 2026 19:05:01 +0000</pubDate><atom:updated>2026-08-03T19:05:01.693Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தற்கொலை,suicide,இஸ்ரேல்,Israel,Hamas,ஹமாஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/2rlpiybt/tn-5.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ இஸ்ரேல் ]]></media:title><media:description type="html"><![CDATA[ இஸ்ரேல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/2rlpiybt/tn-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த தனது காதலியின் கல்லறையில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D">இஸ்ரேல் </a>இளைஞர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. </p><h2>காதலி கொலை </h2><p>லிரோன் பர்தா என்ற அப்பெண், 2023 அக்டோபர் 7 அன்று நோவா இசைவிழாவில் பார் மேனேஜராக பொறுப்பாளராக பணியாற்றிய போது ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்டார்.</p><p>அவரின் உடல், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள எல்கானா மயானத்தில் புதைக்கப்பட்டது. </p> <h2>காதலன் தற்கொலை</h2><p>லிரோன் பர்தாவின் காதலர் பார் அஸ்ராப் (30 வயது) கடந்த மூன்று ஆண்டுகளாக காதலி மறைவால் வாடியுள்ளார்.</p><p>இந்நிலையில் அஸ்ராப் ஆகஸ்ட் 1 அன்று, தனது சகோதரரின் திருமண நிகழ்வில் பங்கேற்றிருந்த போது திடீரென காணாமல் போனார்.</p><p>அவர் வராததால் தேடிச் சென்ற அவரது சகோதரி, லிரோனின் கல்லறைக்கு அருகே அஸ்ராப் துப்பாக்கிக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.</p><p>அவசர உதவிக் குழுவினர் விரைந்து வந்தபோதிலும், அஸ்ராபைக் காப்பாற்ற முடியவில்லை.</p> <h2>மறைந்தாலும் மாறாத காதல்</h2><p>அக்டோபர் 7 தாக்குதலின் போது லிரோன் பர்தா தப்பிச் செல்ல வாய்ப்பிருந்தும், காயமடைந்த மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக அங்கேயே இருந்ததால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.</p><p>லிரோனின் மறைவுக்குப் பிறகு அஸ்ராப் முற்றிலும் மனமுடைந்து காணப்பட்டதாகவும், சோகத்திலிருந்து அவரால் மீளவே முடியவில்லை என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.</p><p>தற்கொலைக்குச் சில நாட்களுக்கு முன்பு கூட, லிரோனின் நினைவுகள் தன்னைத் தீவிரமாக வாட்டுவதாகவும், அந்த இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது என்றும் அஸ்ராப் தனது தாயாரிடம் கூறியுள்ளார் என கூறப்படுகிறது.</p> <h2>தற்கொலைகள்</h2><p>ஹமாஸ் தாக்குதல் நடந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையிலும், அதிலிருந்து தப்பியவர்கள் மற்றும் தங்களது அன்புக்குரியவர்களை இழந்தவர்கள் சந்தித்து வரும் தீவிர மன உளைச்சலுக்கு சான்றாக இந்தச் சம்பவம் அமைந்துள்ளது.</p><p>நோவா இசைவிழாவில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் தனது காதலியை இழந்து தப்பிய ரோய் ஷாலேவ் (28) என்பவரும், மகனை இழந்த யெலேனா கிலர் என்பவரும் மன உளைச்சல் தாளாமல் கடந்த ஆண்டு தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ்.. EPF ஊதிய உச்சவரம்பை ரூ.25,000 ஆக உயர்த்த  மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல்?</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/epfo-pf-wage-ceiling-hiked-mandatory-pf-for-employees-earning-up-to-rs-25000</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/epfo-pf-wage-ceiling-hiked-mandatory-pf-for-employees-earning-up-to-rs-25000#comments</comments><guid isPermaLink="false">765aefe8-69bd-4898-953e-6cb16c5fa221</guid><pubDate>Mon, 03 Aug 2026 18:12:08 +0000</pubDate><atom:updated>2026-08-03T18:12:08.625Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஊழியர்கள்,ஓய்வூதியம்,வருங்கால வைப்பு நிதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/82kefnc7/tn-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ EPFO]]></media:title><media:description type="html"><![CDATA[ EPFO]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/82kefnc7/tn-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (<a href="https://www.maalaimalar.com/topic/epfo">EPFO</a>)இன் கீழ், ஊழியர்களுக்கு ஓய்வூதியம் (EPF) பணம் பிடித்தத்திற்கான அடிப்படை சம்பள உச்சவரம்பை மாதம் ரூ.15,000 லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்தும் திட்டத்திற்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது</p><p>மத்திய அமைச்சரவையின் இறுதி ஒப்புதல் பெற்ற பிறகு இது அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வர உள்ளது. ஏப்ரல் 1, 2027 முதல் அமலுக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p> <h2>வரம்பு உயர்வு</h2><p>2014இல் இந்த சம்பள வரம்பு ரூ.6,500-லிருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டது.</p><p>இதன்படி, தற்போது மாதம் ரூ.15,000 வரை அடிப்படை சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு மட்டுமே PF பிடித்தம் செய்யும் திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.</p><p>12 ஆண்டுகளுக்குப் பின், இந்த வரம்பை ரூ.30,000 ஆக உயர்த்த ஆலோசிக்கப்பட்டு நிலையில் தற்போது ரூ.25,000 ஆக உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.</p> <h2>நடைமுறை என்ன?</h2><p>தற்போது, ஒரு ஊழியரின் அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படி சேர்த்து ரூ.15,000 மற்றும் அதற்கும் கீழ் இருந்தால் அந்த ஊழியர்கள் கட்டாயமாக EPF திட்டத்தில் சேர வேண்டும்.</p><p>இதன் மூலம் சம்பளத்தில் ஒரு தொகை பிடித்தம் செய்யப்பட்டு பிஎப் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த பணம் பணி ஓய்வின் போது மொத்த தொகையாக கிடைக்கும்.</p><p>இந்த வரம்பை 25,000 ரூபாயாக உயர்த்துவதால், மாத அடிப்படை சம்பளம் 25,000 ரூபாய் வரை கொண்டிருக்கும் அனைத்து ஊழியர்களுக்கு பிஎப் பிடித்தம் கட்டாயம் ஆகும்.</p><h2>பயன் என்ன?</h2><p>தனியார் துறையில் ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை அடிப்படை சம்பளம் வாங்கும் லட்சக்கணக்கான ஊழியர்கள் கட்டாய EPFO மற்றும் ஓய்வூதிய சமூக பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படுவார்கள்.</p><p>ஊழியர்களின் ஓய்வூதியக் கணக்கிற்கு நிறுவனத்தின் 8.33% பங்களிப்புடன் மத்திய அரசும் 1.16% தொகையை வழங்கி வருகிறது.</p><p>இந்த வரம்பு உயர்வால் அரசுக்கு நிதிப் சுமை அதிகரிக்கும். 2026-27 நிதியாண்டில் ஓய்வூதியத் திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.11,144 கோடி ஒதுக்கியுள்ளது.</p><p>20 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு பிஎப் பங்களிப்பு கட்டாயமாகும். 20க்கும் குறைவான ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் விருப்பத்தின்பேரில் EPFO தளத்தில் பதிவு செய்து பிஎப் திட்டத்தில் ஊழியர்களை இணைக்கலாம்</p> ]]></content:encoded></item><item><title>முதல் வெற்றியை சுவைத்த பிரசாந்த் கிஷோருக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/national/prashant-kishor-wins-purnia-bypoll-with-big-margin-as-stalin-hails-jan-suraj-partys-maiden-victory</link><comments>https://www.maalaimalar.com/news/national/prashant-kishor-wins-purnia-bypoll-with-big-margin-as-stalin-hails-jan-suraj-partys-maiden-victory#comments</comments><guid isPermaLink="false">01ddc5f7-addc-41bc-9d3a-ae45216b442e</guid><pubDate>Mon, 03 Aug 2026 17:06:34 +0000</pubDate><atom:updated>2026-08-03T17:06:34.961Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பீகார்,Bihar,மு.க. ஸ்டாலின்,பிரசாந்த் கிஷோர்,ஜன் சுராஜ்,Prashant Kishor,Jan suraaj,M.k. stalin</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/xhe0s5kx/tn.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரசாந்த் கிஷோருக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரசாந்த் கிஷோருக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/xhe0s5kx/tn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பீகார் மாநிலத்தில் பங்கிபூர் தொகுதிக்கு சமீபத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து இன்று வாக்குகள் எண்ணப்பட்டன. அப்போது இத்தொகுதியில் போட்டியிட்ட பிரசாந்த் கிஷோர் 64,151 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.</p><p>இதன் மூலம், பாஜக வேட்பாளர் நீரஜ் குமார் சின்ஹாவை விட 19,324 வாக்குகள் அதிகம் பெற்று மாபெரும் வெற்றியை பெற்றார்.</p> <h2>ஸ்டாலின் வாழ்த்து</h2><p>இந்நிலையில் அவருக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தனது எக்ஸ் தள பதிவில், "பங்கிப்பூர் இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றிபெற்ற ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோருக்கு வாழ்த்துகள். இது ஜன் சுராஜ் கட்சியின் முதல் தேர்தல் வெற்றி.</p><p>பங்கிப்பூர் தொகுதி மக்களுக்கும் பிகார் மாநில மக்களுக்கும் அவர் ஆற்றும் சேவையில் வெற்றிபெற வாழ்த்துகிறேன்" என்று மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.</p> <h2>பிரசாந்த் கிஷோர் பேட்டி</h2><p>இதனிடையே தனது வெற்றி குறித்து<a href="https://www.maalaimalar.com/news/national/purnia-bypoll-prashant-kishor-leads-bjp-candidate-in-early-counting-rounds"> பிரசாந்த் கிஷோர்</a> இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “நான் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்பதால் பங்கிபூர் பெங்களூருவாக மாறிவிடாது, ஆனால் அடுத்த இரண்டு மூன்று மாதங்களில் இங்கு சில முன்னேற்றங்கள் ஏற்படுவதை நீங்கள் காண்பீர்கள்.</p><p>மக்கள் என்மேல் வைத்த நம்பிக்கையை காப்பாற்றி, பங்கிபூரை மேம்படுத்துவதே எனது முதல் பணியாக இருக்கும். அடுத்த இரண்டு மூன்று மாதங்களில் நீங்கள் மாற்றங்களைக் காண்பீர்கள். நான் பெரிய தற்பெருமை பேச விரும்பவில்லை.</p><p>இந்தப் போராட்டம் தனிப்பட்டதல்ல, சாம்ராட் சௌத்ரியின் நடத்தை, குணம் மற்றும் முகம் ஆகியவை பொதுவெளியில் உள்ளன. ஒரு குற்றவாளியை பீகாரின் முதலமைச்சராக ஆக்கினால், பீகார் முன்னேற முடியாது.</p> <p>எங்கள் போராட்டம் எந்தவொரு தனிநபருடனும் கிடையாது. பெரும்பான்மையினர் பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்தவர்கள், எனவே முதலமைச்சர் பதவி அவர்களுக்கே கிடைக்கும்.</p><p>பீகார் முன்னேறவும், மக்கள் பீகாரியாக இருப்பதில் பெருமை கொள்ளவும், திறமையான, நல்ல குணநலன்கள் கொண்ட ஒருவரை முதலமைச்சராக நியமிக்க வேண்டும் என்று நாங்கள் மோடிஜியிடம் கேட்டுக்கொள்கிறோம்.</p><p>இந்த தேர்தல் பங்கிபூரின் தெருக்கள் மற்றும் வடிகால்களுக்காக நடத்தப்படவில்லை. பீகாரை யார் வழிநடத்த வேண்டும் என்பதற்காகவே நடத்தப்பட்டது. பங்கிபூர் மக்கள் பாஜக தலைமைக்கு ஒரு செய்தியை அனுப்பியுள்ளனர். ஒரு நல்ல மனிதரை முதலமைச்சராக்குங்கள்” என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பருவமழைக் காலம்: வாகன ஓட்டிகளுக்கு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு வழிமுறைகள்</title><link>https://www.maalaimalar.com/news/topnews/how-to-prepare-your-car-for-the-approaching-monsoon</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/how-to-prepare-your-car-for-the-approaching-monsoon#comments</comments><guid isPermaLink="false">10655866-29d0-4736-8375-8c1d7d7a9a31</guid><pubDate>Mon, 03 Aug 2026 16:30:15 +0000</pubDate><atom:updated>2026-08-03T16:30:15.645Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Car,மழைக்காலம்,monsoon season,Car Care,கார்,கார் பராமரிப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/p3vxqoko/Untitled-design-16.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Monsoon Driving Precautions: Essential maintenance checks for safe driving on wet roads]]></media:title><media:description type="html"><![CDATA[ car care]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/p3vxqoko/Untitled-design-16.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>கார் (Automobile)</category><content:encoded><![CDATA[ <h3><strong>மழைக்காலத்தில் வாகன ஓட்டிகள் கவனிக்க வேண்டியவை</strong></h3><p>பருவமழை குளிர்ச்சியான காலநிலையை கொண்டுவந்து, வாகனம் ஓட்டுவதற்கு மிகவும் சவாலான சூழ்நிலைகளை உருவாக்குகிறது. ஈரமான சாலைகள் மறைந்திருக்கும் பள்ளங்கள் குறைந்த பார்வைத் தெளிவு மற்றும் நீர் தேக்கம் ஆகியவை விபத்துகள் மற்றும் எதிர்பாராத பழுதுகளின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும். </p><p>வாகன ஓட்டிகள் மழைக்காலத்தில் உங்கள் வாகனத்தை தயார் செய்வதற்கு விலையுயர்ந்த பழுதுபார்ப்புகள் தேவையில்லை. சில முன்னெச்சரிக்கை சோதனைகளை செய்தாலே, பாதுகாப்பை மேம்படுத்தி, இயந்திரக் கோளாறுகளை குறைத்து, அன்றாட ஓட்டுதலை மேலும் நம்பகமானதாக மாற்றவும் முடியும்.</p><p>ஈரமான சாலைகளில் பிடிப்பை நிலைநிறுத்துவதில் டயர்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. டயரின் பட்டனை சரிபார்த்து, தேய்ந்த டயர்களை மாற்ற வேண்டும். ஏனெனில், பட்டனின் தடிமம் தண்ணீரை வெளியேற்றும் திறனைக் குறைத்து, நீர்ச்சறுக்கு அபாயத்தை அதிகரிக்கின்றன. </p><p>உதிரிச் சக்கரம் (ஸ்டெப்னி) உட்பட, டயர்களின் காற்றழுத்தத்தையும் சரிபார்க்க வேண்டும். ஏனெனில், தவறான காற்றழுத்தம் ஏற்பட்டால் பிரேக்கிங் மற்றும் கையாளுதல் பாதிக்கக்கூடும். </p><p>கனமழையின் போது நல்ல பார்வைத் தெளிவு அவசியம். அதற்கு வைப்பர்கள், கோடுகள் படியாமலும் சத்தம் எழுப்பாமலும் விண்ட்ஷீல்டைச் சுத்தம் செய்வதை உறுதிசெய்யவும். அவை கண்ணாடியை சரியாகச் சுத்தம் செய்யத் தவறினாலோ, அவற்றை மாற்ற வேண்டும்.</p><p>மேலும், சாலையில் உள்ள சேற்றை திறம்பட அகற்ற, விண்ட்ஷீல்ட் வாஷர் திரவத்தை நிரப்ப வேண்டும். பருவமழைக் காலத்தில் பார்வைத் தெளிவு குறைவதால், வாகனத்தில் உள்ள விளக்குகள் சீராக இயங்குவது குறித்து கவனிக்க வேண்டும்.</p><p>முகப்பு விளக்குகள், பின்புற விளக்குகள், பிரேக் விளக்குகள், இண்டிகேட்டர்கள், ரிவர்ஸ் விளக்குகள் மற்றும் பனி விளக்குகளைச் சரிபார்க்க வேண்டும். தேவைப்பட்டால், பழுதடைந்த பல்புகளை மாற்றவும் மற்றும் மங்கலான முகப்பு விளக்கு லென்ஸ்களை சுத்தம் செய்யவும் வேண்டும்.</p><p>ஈரமான சாலைகளில் கூட பிரேக்குகள் சீராக செயல்பட வேண்டும். அசாதாரணமான சத்தங்கள், அதிர்வுகள் அல்லது நிறுத்துவதற்கு அதிக தூரம் தேவைப்படுவதை நீங்கள் கவனித்தால், பிரேக் அமைப்பை ஆய்வு செய்ய வேண்டும்.</p><p>தேங்கி நிற்கும் தண்ணீரில் வாகனம் ஓட்டிய பிறகு, பிரேக் பாகங்கள் உலர உதவுவதற்காக சில வினாடிகளுக்கு மெதுவாக பிரேக்குகளை அழுத்தவும். பழைய பேட்டரி மழைக்காலத்தில் பழுதடைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.</p><p>டெர்மினல்களில் அரிப்பு உள்ளதா எனச் சரிபார்க்கவும், அனைத்து இணைப்புகளும் பாதுகாப்பாக உள்ளதா என்பதை உறுதி செய்யவும். மேலும், பேட்டரி பல ஆண்டுகள் பழமையானதாக இருந்தாலோ அல்லது பலவீனத்தின் அறிகுறிகளைக் காட்டினாலோ, அதைச் சோதித்துப் பார்க்கவும்.</p><p>என்ஜின் ஆயில், கூலண்ட், பிரேக் ஃப்ளூயிட், தேவைப்படும் இடங்களில் பவர் ஸ்டீயரிங் ஃப்ளூயிட் மற்றும் விண்ட்ஷீல்ட் வாஷர் ஃப்ளூயிட் ஆகியவற்றை ஆய்வு செய்யவும். சரியான திரவ அளவுகளைப் பராமரிப்பது, பருவமழைக் காலத்தில் தேவையற்ற இயந்திரச் சிக்கல்களைத் தடுக்க உதவுகிறது.</p><p>கேபினைக் குளிர்விப்பது மட்டுமின்றி, ஏர் கண்டிஷனர் காற்றில் உள்ள ஈரப்பதத்தை அகற்றவும், விண்ட்ஷீல்டில் பனி படிவதைத் தடுக்கவும் உதவுகிறது. குளிர்விக்கும் செயல்திறன் குறைந்திருந்தாலோ அல்லது விண்ட்ஷீல்டு தெளிவடைய அதிக நேரம் எடுத்தாலோ, அந்த அமைப்பை ஆய்வு செய்யுங்கள்.</p><p>கதவுகள் மற்றும் ஜன்னல்களைச் சுற்றியுள்ள சேதமடைந்த ரப்பர் பீடிங், மழைநீர் கேபினுக்குள் நுழைய அனுமதிக்கக்கூடும். விரிசல்கள், இடைவெளிகள் அல்லது இறுகிய சீல்கள் உள்ளதா எனச் சரிபார்த்து, ஈரமான உட்புறங்கள் விரும்பத்தகாத துர்நாற்றங்கள் மற்றும் ஏற்படக்கூடிய மின்சாரச் சிக்கல்களைத் தவிர்க்க, தேவைப்பட்டால் அவற்றை மாற்றவும் வேண்டும்.</p><p>மழைக்காலத்தில் காரில் அடிப்படை அவசரக்கால உபகரணங்களை வைத்திருப்பது பயனுள்ளதாக இருக்கும். சாலையில் உங்களுக்குச் சிக்கல் ஏற்பட்டால், கைவிளக்கு, ஜம்பர் கேபிள்கள், டயர் காற்றூதி, பஞ்சர் சரி செய்யும் கருவி, இழுப்புக் கயிறு. முதலுதவிப் பெட்டி, ஒளிரும் எச்சரிக்கை முக்கோணம், தொலைபேசி சார்ஜர், குடை மற்றும் நீர்ப்புகா கையுறைகள் ஆகிய அனைத்தும் கை கொடுக்கும்.</p><p>கனமழையின் போது குறைந்த வேகத்தில் ஓட்டுங்கள் மற்றும் முன்னால் செல்லும் வாகனத்திலிருந்து அதிக தூரத்தை கடைபிடியுங்கள். ஈரமான சாலைகளில் திடீரென ஸ்டீயரிங்கை திருப்புதுவது அல்லது பிரேக் பிடிப்பதை தவிர்க்கவும்.</p><p>வெள்ளம் சூழ்ந்த பகுதியின் ஆழம் குறித்து உங்களுக்குத் தெரியாவிட்டால், அதன் வழியாக வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்கவும். ஏனெனில் தண்ணீர் என்ஜின், டிரான்ஸ்மிஷன் மற்றும் மின் பாகங்களைச் சேதப்படுத்தக்கூடும்.</p><p>மழைக்காலத்தில் வழக்கமான பராமரிப்புப் பணிகளையும் தாமதப்படுத்தக் கூடாது. தேய்ந்த டயர்கள், பலவீனமான பேட்டரிகள் அல்லது திறனற்ற வைப்பர்கள் போன்றவற்றை முன்கூட்டியே சரிசெய்வது, எதிர்பாராத பழுதுகளைத் தவிர்க்க உதவும்.</p><p>பருவமழைக்கு உங்கள் காரைத் தயார் செய்வது என்பது பெரும்பாலும் தடுப்புப் பராமரிப்பைப் பற்றியதே ஆகும். டயர்கள், பிரேக்குகள், பேட்டரி, வைப்பர்கள் மற்றும் விளக்குகளை ஆய்வு செய்வது போன்ற எளிய சோதனைகள் பாதுகாப்பை மேம்படுத்தவும், பழுதுபார்ப்புச் செலவுகளைக் குறைக்கவும் உதவும்.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்- 03 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-03-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-03-august-2026#comments</comments><guid isPermaLink="false">3d51818e-8311-4109-ba52-03a94a3844a8</guid><pubDate>Mon, 03 Aug 2026 04:23:38 +0000</pubDate><atom:updated>2026-08-03T16:29:20.774Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/orsv477b/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/orsv477b/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-today-visit-kancheepuram-district">காஞ்சிபுரம் செல்லும் முதலமைச்சர் விஜய்... தனியார் தொழிற்சாலைகளை பார்வையிடுகிறார்</a></p><p>* ஸ்ரீபெரும்புதூர், ஒரகடத்தில் தனியார் தொழிற்சாலைகளை முதலமைச்சர் விஜய் இன்று நேரில் பார்வையிடுகிறார்.</p><p>* "பாரத்பென்ஸ்' மற்றும் 'மெர்சிடிஸ்-பென்ஸ்' முத்திரையிடப்பட்ட பஸ்களையும், 'பஸ் சேஸ்'களையும் உற்பத்தி செய்கிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/reserve-bank-begins-consultations-today-will-there-be-a-change-in-bank-loan-interest-rates">ரிசர்வ் வங்கி இன்று முதல் ஆலோசனை- வங்கிக்கடன் வட்டியில் மாற்றம் வருமா?</a></p><p>* ரெப்போ ரேட்டை மாற்றியமைப்பது பற்றி முடிவு செய்து, 5-ந் தேதி ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவிப்பார்.</p><p>* ரெப்போ ரேட் மாற்றப்படுமா என்பது குறித்து 10 பொருளாதார நிபுணர்களிடையே கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/indians-spend-most-time-app">இந்தியர்கள் அதிக நேரத்தை செலவிடும் செயலி - ஆய்வில் புதிய தகவல்</a></p><p>* ஆன்லைன் விளையாட்டு செயலிகளுக்கு (பிரீ பயர்) இளைஞர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.</p><p>*&nbsp;வாட்ஸ்-அப் செயலியில் மாதத்துக்கு 18 மணி நேரம் 49 நிமிடம் சராசரியாக இந்தியர்கள் செலவிடுவது் தெரிய வந்துள்ளது</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/aadi-perukku-festival-installation-showers-at-river">ஆடிப்பெருக்கு விழா - மக்கள் வசதிக்காக படித்துறையில் 'ஷவர்கள்' அமைப்பு</a></p><p>* ஆடிப்பெருக்கு நாளில் சுமங்கலி பெண்கள் தங்களது தாலி பாக்கியம் நிலைப்பதற்காக காவிரி தாய்க்கு சிறப்பு பூஜை நடத்தி வழிபாடு செய்வர்.</p><p>* காவிரியில் தண்ணீர் இல்லாததால் புனித நீராடுவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dheeran-chinnamalai-memorial-day-cm-vijay-pay-tribute">தீரன் சின்னமலை வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன் - முதலமைச்சர் விஜய்</a></p><p>* தீரன் சின்னமலையின் வீரம், தன்னம்பிக்கை, தேசப்பற்று மற்றும் தியாக உணர்வு காலம் கடந்தும் நம் தலைமுறைகளை ஊக்குவித்து வருகிறது. </p><p>* சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தன் உயிர் மூச்சைக் கொடையாகக் கொடுத்த மாவீரனின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்!</p> <p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-3-8-2026">GOLD PRICE TODAY: வார தொடக்கத்தில் உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.13,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலை கடந்த 28-ந்தேதி முதல் மாற்றம் இல்லாமல் விற்பனையாகி வருகிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-unresolved-grievances-of-the-police-personnel-must-be-addressed">காவல்துறையினரின் தீர்க்கப்படாத குறைகளை களைய வேண்டும்!- அன்புமணி</a></p><p>* 1994&amp;95ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டு 2000&amp;ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்தவர்களுக்கு உரிய பணிமூப்பும், பதவி உயர்வும் வழங்குவது தான் இந்த சிக்கலுக்குத் தீர்வு ஆகும். </p><p>* தமிழக அரசு நினைத்தால் காவல் துறையினரின் இந்தக் குறைகள் அனைத்தையும் ஒரே நாளில் தீர்க்க முடியும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/kerala-rains-landslide-death-toll-rises-to-9" rel="nofollow">கேரளத்தில் மழை, நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 9-ஆக உயர்வு</a></p><p>* படகு கவிழ்ந்து மாயமான மீனவர் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார்.</p><p>*  விழிஞ்ஞம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக மீன்பிடி படகு கவிழ்ந்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mla-markandayan-conditional-bail-granted-madras-high-court">முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுத்த வழக்கு - திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமின்</a></p><p>* திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும், அவதூறாகவும் பேசினார்.</p><p>* திமுக எம்.எல்.ஏ. தனக்கு ஜாமின் வழங்கக்கோரி எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/sexual-assault-case-court-acquits-brij-bhushan-singh" rel="nofollow">பாலியல் குற்றச்சாட்டு- பிரிஜ் பூஷண் சிங்கை விடுவித்து நீதிமன்றம் உத்தரவு</a></p><p>* நீதிபதி அஷ்வினி பன்வார் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.</p><p>* டெல்லி போலீஸ் எப்.ஐ.ஆர் பதிவு செய்து, பின்னர் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-decided-4-ministers-change-after-assembly-session">சட்டசபை கூட்டத்தொடருக்கு பின் அதிரடி: 4 அமைச்சர்களை மாற்ற முதலமைச்சர் விஜய் முடிவு!</a></p><p>* தனது அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் யாரையும் சகித்துக் கொள்ள மாட்டேன் என்று அமைச்சரவை கூட்டத்தின் போதே அறிவுறுத்தினார். </p><p>* சிபாரிசு கடிதம் பெறுவதற்கு பணம் பெறுகிறார்களா? என்பதையும் கண்காணித்து கொண்டே இருக்கிறார்கள். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-says-cauvery-issue-tvk-government-is-ignorant-of-history">காவிரி பிரச்சனை: தவெக அரசுக்கு வரலாறே தெரியவில்லை - எடப்பாடி பழனிசாமி</a></p><p>* காவிரி விவகாரம் தற்போது இரு மாநிலங்களுக்கு இடையே பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. </p><p>* கர்நாடக அரசாங்கம் அரசியல் கட்சி தலைவர்களை விவசாயிகளை மதித்து அனைத்து கட்சியை கூட்டியது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rajmohan-accuses-false-propaganda-keerthana" rel="nofollow">அமைச்சர் கீர்த்தனா மீது திட்டமிட்டு, வன்மத்தோடு பொய் பரப்புரை..!- அமைச்சர் ராஜ்மோகன் குற்றச்சாட்டு</a></p><p>*  நீட் தேர்வுக்கு எதிராக போராடிய அனைவரின் வழக்குகளை முதல்வர் விஜய் ரத்து செய்திருக்கிறார்.</p><p>* ஒரு இளம் அமைச்சர் அவருடைய சாதனைகளை திட்டமிட்டு சிறுமைப்படுத்த முடியாது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-entire-joker-team-sits-in-cabinet">மொத்த ஜோக்கர் கூட்டமும் அமைச்சரவையில் உள்ளது - உதயநிதி </a></p><p>* கர்நாடகா செல்வதாக நாடகம் ஒன்றை ஆடினார் முதலமைச்சர் விஜய்.</p><p>* ரீல்ஸ் போடும் ஒரு அரசை இந்தியாவே இதுவரை கண்டது இல்லை.</p> <p>​​<a href="https://www.maalaimalar.com/news/national/thiruparankundram-deepam-case-supreme-court-ask-question-tn-govt">திருப்​பரங்​குன்​றம் தீப வழக்​கு: இத்தனை நாட்கள் என்ன செய்தீர்கள்?- தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி</a></p><p>* ஒவ்​வொரு ஆண்​டும் கார்த்​திகை திரு​நாளன்று திருப்பரங்குன்றம் மலை​யில் உள்ள தீபத்​தூணில் தீபம் ஏற்ற வேண்​டும் என்று தனி நீதிபதி பிறப்​பித்த உத்​தரவை உறுதி செய்தது.</p><p>* ராம ரவிக்குமார், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை காவல் ஆணையர், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியன் சுவாமி கோவில் செயல் அதிகாரி உள்ளிட்ட அனைத்து எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க வேண்டும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/monsoon-session-of-parliament-both-houses-adjourned-amid-continued-uproar" rel="nofollow">நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: தொடர் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைப்பு</a></p><p>* எதிர்க்கட்சி உறுப்பினர்ள் முழக்கமிட்டனர்.</p><p>* இன்று முக்கிய மசோதாக்களை நிறைவேற்றும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dheeran-chinnamalai-remembered-as-defender-of-tamil-motherland">மாவீரர் தீரன் சின்னமலை 'அன்னைத்தமிழ் மண் காக்க போராடிய மாவீரர்' என உதயநிதி ஸ்டாலின் புகழாரம்!</a></p><p>* அன்னைத்தமிழ் மண் காத்த மாவீரர் தீரன் சின்னமலை  </p><p>* 221வது நினைவுநாள் தமிழகமெங்கும் மலர்தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/parle-launches-melody-tiramisu-to-celebrate-india-italy-friendship">இந்தியா - இத்தாலி நட்புறவை கொண்டாட பார்லேயின் புதிய 'மெலோடி டிராமிசு' அறிமுகம்!</a></p><p>* பார்லே மெலோடி டிராமிசு இந்தியா-இத்தாலி நட்பை கொண்டாடுகிறது.</p><p>* மோடி+மெலோனி மீம்ஸ் உண்மை சாக்லேட்டாக மாறியது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/purnia-bypoll-prashant-kishor-leads-bjp-candidate-in-early-counting-rounds">பங்கிபூர் இடைத்தேர்தல்: பா.ஜ.க-வை முந்தி பிரசாந்த் கிஷோர் அதிரடி முன்னிலை!</a></p><p>* பங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் 1,145 வாக்குகள் முன்னிலை  </p><p>* 4-வது சுற்றில் ஜன சுராஜ் 6,269 வாக்குகள் பெற்றது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/vinesh-phogat-on-brijbhushan-singh-acquittal-we-will-appeal" rel="nofollow">பிரிஜ்பூஷன் சிங் விடுவிப்பு: மேல்முறையீடு செய்வோம்..!- வினேஷ் போகத்</a></p><p>* வாதங்கள் நிறைவடைந்த நிலையில் ஜூலை 2-ந்தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.</p><p>* மல்யுத்த வீராங்கனைகள் மீதான பாலியல்  துன்புறுத்தல் வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/cauvery-issue-tn-government-files-case-in-supreme-court">காவிரி விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு</a></p><p>* தமிழகத்திற்கு உரிய நேரத்தில் காவிரியில் கர்நாடக அரசு நீரை திறந்து விடவில்லை.</p><p>* காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட பிறகும் பிலிகுண்டுலுவுக்கு விநாடிக்கு அதிகபட்சமாக 550 கனஅடி நீர் தான் வருகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-temple-land-case-sub-registrar-and-assistant-officer-suspended">பழனி கோவில் நில மோசடி - சார்பதிவாளர், பெண் உதவி அலுவலர் பணியிடை நீக்கம்</a></p><p>* திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஜஸ்டின் மணிகண்டனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.</p><p>* முறைகேடாக செய்யப்பட்ட பத்திரப்பதிவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/wi-vs-pak-2nd-tes-port-of-spain-west-indies-1st-day-stumps-239-for-5">பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் முதல் நாளில் 239/5</a></p><p>* ஜஸ்டின் கிரீவ்ஸ் 64 ரன்கள் உடனும், ராஸ்டன் சேஸ் 36 ரன்கள் உடனும் களத்தில் உள்ளனர்.</p><p>* பாகிஸ்தான் அணி சார்பில் முகமது அலி 17 ஓவர்கள் வீசி 49 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/american-education-row-will-you-show-your-degree-certificate-cjp-founder-abhijit-dipke-questions-pm-modi">அமெரிக்க கல்வி சர்ச்சை: உங்கள் டிகிரி சர்டிபிக்கேட்டை காட்டத் தயாரா?-பிரதமர் மோடிக்கு CJP நிறுவனர் அபிஜீத் திப்கே கேள்வி... </a></p><p>*பல்கலைக்கழகம் வழங்கிய உதவித்தொகை மற்றும் நான் பெற்ற கல்விக்கடன் மூலமே எனது கல்வி செலவுகள் பூர்த்தி செய்யப்பட்டன. </p><p>*CJP கட்சியின் எதிர்காலச் செயல்பாடுகள் மற்றும் போராட்டங்களுக்கான நிதியை, முழு வெளிப்படைத்தன்மையுடன் பொதுமக்களிடமிருந்தே திரட்டத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/are-officials-using-inspections-to-crack-down-on-fireworks-industry-asks-thangam-thenarasu" rel="nofollow">ஆய்வு என்ற பெயரில் பட்டாசு தொழில் செய்வோரை முடக்குவதா?- தங்கம் தென்னரசு கேள்வி</a></p><p>* தொழிலாளர்கள் அன்றாட ஊதியமிழக்கும் அவலநிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.</p><p>* விதிமுறைகளைப் பின்பற்றுவதும் எப்போதுமே முதன்மையானவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/karnataka-cabinet-expansion-20-new-ministers-take-oath-today-gs-patil-elected-speaker">கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்: 20 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு-சபாநாயகராக ஜி.எஸ்.பாட்டீல் தேர்வு!... </a></p><p>*தற்போது, ​​கர்நாடகாவில் அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட 34 அமைச்சர்களுக்கு எதிராக, முதலமைச்சர் உட்பட 14 அமைச்சர்களே உள்ளனர்.</p><p>*அமைச்சர் வேட்பாளர்களுக்கான பதவியேற்பு விழா மாலை 4.05 மணிக்கு நடைபெற உள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/lsg-captaincy-buzz-aiden-markram-plays-down">லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் கேப்டன் குறித்த கேள்விக்கு மார்கிராம் அளித்த பதில்..!</a></p><p>* அணி உரிமையாளர்கள் எது சிறந்தது என்று கருதுகிறார்களோ அதை முடிவு செய்யலாம்.</p><p>* அணியில் திறமையான தலைவர்கள் பலர் உள்ளனர். அதனால் நான் அதுபற்றி அதிகம் கவலைப்படவில்லை. </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/students-protest-continues-in-ranchi-swiggy-zomato-orders-show-support">ராஞ்சியில் தொடரும் மாணவர்கள் போராட்டம்: 'ஸ்விகி,சொமேட்டோ' மூலம் உணவளித்து ஆதரவு!... </a></p><p>*ராஞ்சியில் உள்ள ஜெய்பால் சிங் முண்டா மைதானத்தில் கடந்த பல நாட்களாகத் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>*மெக்டொனால்ட்ஸ் உணவு பொட்டலங்கள் முதல் சூடான இந்திய உணவுகள் வரை தினமும் நூற்றுக்கணக்கான டெலிவரி முகவர்கள் மைதானத்தை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-vijay-reviews-industrial-parks-in-kanchipuram">ஸ்ரீபெரும்புதூர், ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் முதலமைச்சர் விஜய் ஆய்வு!</a></p><p>* செயிண்ட் கோபைன், ரெனால்ட்-நிசான், டெய்ம்லர் நிறுவனங்களை பார்வையிட்டார்  </p><p>* ஆயிரக்கணக்கானோர் திரண்டு முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/no-approval-for-bike-taxis-fine-for-violations-tn-govt-to-madras-hc">பைக் டாக்சிக்கு அனுமதி கிடையாது-மீறி ஓட்டினால் அபராதம்: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!... </a></p><p>*தமிழகத்தில் ராபிடோ, ஓலா, உபர் உள்ளிட்ட செயலி அடிப்படையிலான பைக் டாக்சி சேவைகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.</p><p>*இவை சாமானிய மக்கள், மாணவர்கள் மற்றும் வேலை தேடும் இளைஞர்களுக்குப் பகுதிநேர வாழ்வாதாரமாகவும், பயணிகளுக்குக் குறைந்த கட்டணத்தில் இலக்கை அடையும் வசதியாகவும் செயல்படுகின்றன. </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/karntaka-cabinet-congress-mla-yashavantaraya-gouda-patil-resigns">டி.கே. சிவக்குமார் தலைமையிலான அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் எம்.எல்.ஏ. ராஜினாமா</a></p><p>* 2023 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே எனக்கு அமைச்சர் பதவி தருவதாக உறுதியளிக்கப்பட்டது.</p><p>* ஆனால் அரசு அமைக்கப்பட்டபோது, ​​இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு பதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/iran-us-war-tensions-hormuz-strait-deal-trump-claims-iran-denies">ஈரான்-அமெரிக்கா போர் பதற்றம்: ஹார்முஸ் நீரிணை ஒப்பந்தம் எட்டப்பட்டதாக டிரம்ப் அறிவிப்பு; ஈரான் மறுப்பு!... </a></p><p>*டிரம்பின் இந்த அறிவிப்பை ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் உடனடியாக மறுத்துள்ளார். </p><p>*அமெரிக்காவின் கடற்படை முற்றுகை நீங்கும் வரை இந்த நிலைமையில் மாற்றம் இருக்காது என்றும் ஈரான் வலியுறுத்தியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rayalaseema-writes-new-story-under-naidu-leadership-andhra-govt">ராயலசீமா ஒரு காலத்தில் வறட்சியின் அடையாளம்: சந்திரபாபு நாயுடு தலைமையின் கீழ் இன்று வரலாறு- ஆந்திரா அரசு</a></p><p>* அடுத்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் ரூ. 4.5 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. </p><p>* இது மூன்று லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கிலான 200 திட்டங்களை உள்ளடக்கியது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/dk-shivakumar-recalls-losing-minister-post-urges-patience-amid-karnataka-cabinet-expansion-anger">எனக்கும் ஒருமுறை அமைச்சர் பதவி கை நழுவியது!-அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் சமாதானம்!... </a></p><p>*டி.கே.சிவகுமார், "அனைவருக்கும் ஒரே நேரத்தில் வாய்ப்பளிக்க முடியாது, பொறுமை காக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p><p>*அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் கடும் அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 2 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/subhadeep-ghosh-replaces-t-dilip-as-india-men-fielding-coach">இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய பீல்டிங் கோச்: யார் அவர்?</a></p><p>* இந்திய மகளிர் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ளார்.</p><p>* இந்தியா ஏ (India A) அணியுடனும் பணியாற்றியுள்ளார் மற்றும் அசாம் மாநிலத்தின் சீனியர் ஆண்கள் அணிக்கும் பயிற்சியளித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ரெயில்களில் உணவுத் தரம் குறித்த புகாரில் ரூ.5.13 கோடி அபராதம்: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்</title><link>https://www.maalaimalar.com/news/national/rs-5-13-crore-fine-over-poor-food-quality-in-trains-says-minister-ashwini-vaishnaw</link><comments>https://www.maalaimalar.com/news/national/rs-5-13-crore-fine-over-poor-food-quality-in-trains-says-minister-ashwini-vaishnaw#comments</comments><guid isPermaLink="false">1066b5fd-7ec6-46d7-86b2-0380e7f03461</guid><pubDate>Mon, 03 Aug 2026 15:54:56 +0000</pubDate><atom:updated>2026-08-03T15:54:56.259Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ரெயில்வே,Ashwini Vaishnaw,IRCTC,ஐஆர்சிடிசி,அஷ்வினி வைஷ்ணவ்,Railway</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/2eh55leo/Untitled-design-15.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Indian Railways Food Quality Penalty: ₹5.13 crore fine imposed on firms over poor onboard meals]]></media:title><media:description type="html"><![CDATA[ Indian Railways]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/2eh55leo/Untitled-design-15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய ரெயில்வேயில் கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கப்படும் உணவின் தரம் மிகவும் மோசமாக உள்ளதாக புகார்கள் வந்தது கண்டறியப்பட்டதை தொடர்ந்து, ரெயில்களில் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு, இந்திய ரெயில்வே ரூ.5.13 கோடி அபராதம் விதித்துள்ளதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.</p><h3><strong>காங்கிரஸ் எம்.பி. சந்திரகாந்த் ஹண்டோர் கேள்வி</strong></h3><p>மத்திய ரெயில்வே அமைச்சர் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், இந்திய ரெயில்வே ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக சுமார் 58 கோடி எண்ணிக்கை உணவுகளை வழங்குகிறது என்றும், அவற்றில் சராசரியாக 0.0008 சதவீத புகார்கள் மட்டுமே பெறப்படுகின்றன என்றும் கூறினார்.</p><p>கடந்த மூன்று ஆண்டுகளில் பிரீமியம் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் மோசமான உணவுத் தரம், சுகாதாரமற்ற சமையலறைப் பெட்டிகள் மற்றும் உபசரிப்புக் குறைபாடுகள் தொடர்பாகப் பெறப்பட்ட புகார்களின் எண்ணிக்கை குறித்தும்,</p><p>அதிகக் கட்டணம் வசூலித்தல், தரமற்ற உணவு வழங்குதல் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட அளவை விடக் குறைவாக வழங்குதல் போன்ற குற்றங்களில் ஈடுபட்ட ஐ.ஆர்.சி.டி.சி உரிமைதாரர்கள் மீது எடுக்கப்பட்ட சட்டரீதியான நடவடிக்கை குறித்தும் காங்கிரஸ் எம்.பி. சந்திரகாந்த் ஹண்டோர் விவரங்களைக் கோரியிருந்தார்.</p><h3><strong>அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில்</strong></h3><p>பிரீமியம் ரெயில்களில் உணவின் தரம் குறித்துக் கவலை தெரிவித்திருந்த காங்கிரஸ் எம்.பி. ஹண்டோரின் கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்தார்.</p><p>இதுகுறித்து அமைச்சர் வைஷ்ணவ் கூறுகையில், “கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தப் புகார்கள் மீதான விசாரணையின் அடிப்படையில், ரூ. 5.13 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p>நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளின்படி பயணிகளுக்கு நல்ல தரமான மற்றும் சுகாதாரமான உணவுப் பொருட்களை வழங்க ரெயில்வே தொடர்ந்து முயன்று வருகின்றது. அதை உறுதி செய்வதற்காக அவ்வப்போது தேவையான நடவடிக்கைகளை எடுத்து வரப்படுகிறது.</p><p>ரெயில்களில் வழங்கப்படும் உணவின் தரம், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட சமையலறைகளில் இருந்து உணவை வழங்குதல்,</p><p>அடையாளம் காணப்பட்ட இடங்களில் நவீன அடிப்படை புதிய சமையலறைகளை அமைத்தல், மற்றும் உணவுத் தயாரிப்பை நிகழ்நேரத்தில் கண்காணிப்பதற்காக சமையலறைகளில் சிசிடிவி கேமராக்களை நிறுவுதல் ஆகியவை அடங்கும்.</p><p>ரெயில்களில் மின்னணு கட்டண முறை மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நடவடிக்கைகளும் ஊக்குவிக்கப்படும். டிஜிட்டல் கட்டண முறை மற்றும் பணமில்லாப் பரிவர்த்தனைகளை எளிதாக்குவதற்காக,</p><p>சமையலறை பெட்டிகளில் பாயிண்ட் ஆஃப் சேல் (POS) இயந்திரங்களை நிறுவுவது, அத்துடன் UPI, QR குறியீடுகள் மற்றும் ஸ்வைப் இயந்திரங்கள் போன்ற பல விருப்பங்களும் இதில் அடங்கும்” என்று பதிலளித்தார்.</p>]]></content:encoded></item><item><title>மேகதாதுவில் அணைக்கட்ட முற்றிலும் தடைவிதிக்க வேண்டும் -  தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/a-complete-ban-must-be-imposed-on-the-construction-of-a-dam-at-mekedatu-tamil-nadu-government-files-a-new-petition-in-the-supreme-court</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/a-complete-ban-must-be-imposed-on-the-construction-of-a-dam-at-mekedatu-tamil-nadu-government-files-a-new-petition-in-the-supreme-court#comments</comments><guid isPermaLink="false">a8b62a42-1079-4780-99da-9027714eea23</guid><pubDate>Mon, 03 Aug 2026 15:54:01 +0000</pubDate><atom:updated>2026-08-03T15:54:01.227Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,Supreme Court,உச்ச நீதிமன்றம்,mekedatu dam,மேகதாது அணை,Government of Tamil Nadu</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/4aqiab9n/New-Project-2026-08-03T212330.527.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மேகதாதுவில் அணைக்கட்ட முற்றிலும் தடைவிதிக்க வேண்டும் -  தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/4aqiab9n/New-Project-2026-08-03T212330.527.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடகாவிடம் இருந்து தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய உரிய காவிரி நீரைப் பெற்றுத்தரக் கோரி, தமிழ்நாடு அரசு இன்று காலை உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. </p><p>அதன்படி காவிரியின் குறுக்கே கர்நாடகா மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது என்றும், இது தொடர்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணையம் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது, அதற்கு முற்றிலும் தடைவிதிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு தனது புதிய மனுவில் வலியுறுத்தியுள்ளது.</p><p>மேகதாதுவில் புதிய அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய காவிரி நீர் வரத்து கடுமையாகப் பாதிக்கப்படும். இதனால் தமிழ்நாடு விவசாயிகளின் வாழ்வாதாரமும், கோடிக்கணக்கான மக்களின் குடிநீர் தேவையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்.</p><p>இதனை கருத்தில்கொண்டே கர்நாடக அரசின் இந்தத் திட்டத்தை தமிழ்நாடு எதிர்த்து வருகிறது. ஆனால் அணையை கட்டியேத் தீருவோம் என கர்நாடகா முரண்டு பிடித்துவருகிறது. </p><p>சமீபத்தில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்த சில பதில்கள் தமிழ்நாட்டிற்கு சாதகமற்று இருந்ததைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு புதிய மனுக்களை தாக்கல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>LIC-யின் 6.5 சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு</title><link>https://www.maalaimalar.com/news/national/govt-to-sell-up-to-6-point-5-pc-stake-in-life-insurance-corporation-at-floor-price-of-rs-382-share</link><comments>https://www.maalaimalar.com/news/national/govt-to-sell-up-to-6-point-5-pc-stake-in-life-insurance-corporation-at-floor-price-of-rs-382-share#comments</comments><guid isPermaLink="false">48d03b9b-34c5-4aaf-84fb-0cb38422d152</guid><pubDate>Mon, 03 Aug 2026 15:46:39 +0000</pubDate><atom:updated>2026-08-03T15:46:39.980Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,share market,பங்குச் சந்தை,LIC,எல்ஐசி பங்கு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/uyks9gyb/LIC0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ LIC]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/uyks9gyb/LIC0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் மிகப்பெரிய பொது நிறுவனங்களில் ஒன்று லைஃப் இன்சூரன்ஸ் ஆஃப் இந்தியா (LIC). இந்த நிறுவனத்தின் மார்க்கெட் மூலதனத்தின் மதிப்பு சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் ஆகும். எல்.ஐ.சி. நிறுவனத்தின் 96.50 சதவீதம் பங்குகளை இந்திய அரசு வைத்துள்ளது.</p><h2>பொதுமக்களிடம் 2.06 சதவீதம் பங்கு</h2><p>வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் 0.44 சதவீதம் பங்குகளையும், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் 0.99 சதவீதம் பங்குகளையும், பொதுமக்கள் 2.06 பங்குகளையும் வைத்துள்ளனர்.</p><p>இந்த நிலையில் மத்திய அரசு சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதிதிரட்டும் வகையில் 1.5 சதவீதம் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக ஏற்கனவே செய்தி வெளியானது.</p><h2>ஒரு பங்கின் விலை 382 ரூபாய்</h2><p>இந்த நிலையில் 6.5 சதவீதம் வரை பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஒரு பங்கின் விலையை 382 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார். இரண்டு நாட்கள் என்ற அடிப்படையில் பங்குகளை விற்பனை செய்கிறது.</p><p>மார்க்கெட் மூலதனத்தின் மதிப்பு அடிப்படையில் 1 சதவீதம் என்றாலே 6 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். 6.5 சதவீதம் என்றால் சுமார் 40 கோடி ரூபாய் ஆகும்.</p><p>இன்றைய நிலவரப்படி எல்.ஐ.சி.யின் ஒரு பங்கு 424.40 ரூபாயாக உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/third-song-from-the-movie-viswanath-and-sons-released</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/third-song-from-the-movie-viswanath-and-sons-released#comments</comments><guid isPermaLink="false">9227790d-debd-4159-a142-e915d1e2d544</guid><pubDate>Mon, 03 Aug 2026 15:34:32 +0000</pubDate><atom:updated>2026-08-03T15:34:32.146Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சூர்யா,suriya,மமிதா பைஜு,mamitha baiju,vishwanath and sons,விஸ்வநாத் அண்ட் சன்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/wknojp8f/New-Project-2026-08-03T210403.263.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/wknojp8f/New-Project-2026-08-03T210403.263.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ, ராதிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளப் படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். </p><p>சித்தாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் முதல் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றநிலையில், நேற்று முன்தினம் இசை வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது. </p><p>இந்நிலையில் இன்று இப்படத்தின் மூன்றாவது பாடலான ‘தி ஒன் ரூல்’ வெளியாகி உள்ளது. </p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/T_q6nhJc844"></iframe></figure>]]></content:encoded></item><item><title>திரை உலகைத் தாண்டி பந்தயக் களம்: அஜித்தின் &apos;கிளாடியேட்டர்ஸ்&apos; ஆவணப்படத்தின்  போஸ்டர் வெளியானது!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ajith-kumar-gladiators-in-pursuit-of-challenges-documentary-poster-out</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ajith-kumar-gladiators-in-pursuit-of-challenges-documentary-poster-out#comments</comments><guid isPermaLink="false">c4d64ea3-7a86-45eb-adda-b1beaf31b06d</guid><pubDate>Mon, 03 Aug 2026 15:18:53 +0000</pubDate><atom:updated>2026-08-03T15:18:53.212Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அஜித்குமார்,gv prakash,Actor Ajith,ஜி.வி.பிரகாஷ் குமார்,கிளாடியேட்டர்ஸ்,Ajith &apos;Gladiators&apos;</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/vhiedc77/AJITH.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Ajith's documentary film 'Gladiators']]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/vhiedc77/AJITH.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகர் அஜித் குமாரின் சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணத்தையும், பந்தயக் களத்தில் அவர் எதிர்கொண்ட சவால்களையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ஆவணப் படம் "Gladiators - In Pursuit of Challenges". 90 நிமிட ஆவணப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.</p><p>இப்படத்தை  பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்குகிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். அஜித் குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீசஸ் எல்.எல்.சி இப்படத்தை தயாரிக்கிறது.</p><p>துபாய், அபுதாபி மற்றும் ஐரோப்பிய சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரேசிங் சுற்றுகளில் (Asian Le Mans &amp; 24H Series) அஜித் குமார் மற்றும் அவரது அணியினர் பங்கேற்ற தருணங்களை நேரடிப் பதிவுகளாக இந்தப் படம் படம்பிடித்துள்ளது. </p><p>ரேசிங் களத்தில் அஜித் சந்தித்த தடைகள், பின்னடைவுகள், மற்றும் 2025 துபாய் 24H பந்தயத்தில் அவர் வென்ற போடியம் சாதனை வரை முழுமையான சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் அனுபவங்கள் இதில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.</p><p>இந்தியாவின் முன்னணி ஃபார்முலா 1 பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன், ஆதித்யா படேல், ஜூலியன் கெர்பி உள்ளிட்ட சர்வதேச பந்தய வீரர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர். இந்த ஆவணப்படம் 90 நிமிடங்களாக இருந்தாலும், இது உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மீண்டும் ஒரு வேங்கைவயல் சம்பவம் - வேடசந்தூரில் பள்ளி குடிநீர் தொட்டியில் மலக்கழிவு?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/another-vengaivayal-like-incident-human-excreta-found-in-a-school-drinking-water-tank-in-vedasandur</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/another-vengaivayal-like-incident-human-excreta-found-in-a-school-drinking-water-tank-in-vedasandur#comments</comments><guid isPermaLink="false">e60721ba-7eb3-4b31-8fdc-e76dae3e0b8f</guid><pubDate>Mon, 03 Aug 2026 15:13:33 +0000</pubDate><atom:updated>2026-08-03T15:13:33.443Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>வேங்கைவயல் வழக்கு,வேடசந்தூர்,Vedasandur,Vengaivayal case</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/4e8s1389/New-Project-2026-08-03T204311.407.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மீண்டும் ஒரு வேங்கைவயல் சம்பவம் - வேடசந்தூரில் பள்ளி குடிநீர் தொட்டியில் மலக்கழிவு?]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/4e8s1389/New-Project-2026-08-03T204311.407.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வேடசந்தூர் அருகே அய்யலூர் பகுதியில் உள்ள தங்கம்மாபட்டியில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருவதாக கூறப்படுகிறது. </p><p>இந்நிலையில் இன்று மாணவர்கள் தண்ணீர் குடிக்க சென்றபோது, தண்ணீரில் துர்நாற்றம் வீசியதாக தெரிகிறது. இதனையடுத்து தொட்டியின் உள்ளே பார்த்தப்போது தொட்டிக்குள் பிளாஸ்டிக் கவரில் மலக்கழிவுகள் சுற்றப்பட்டு கிடந்துள்ளது. மேலும் அதில் ஒரு எச்சரிக்கை குறிப்பும் இருந்துள்ளது.</p><p>இதனைப் பார்த்த மாணவர்கள் உடனடியாக ஆசியர்களிடத்தில் தெரிவித்துள்ளனர். அவர்கள் காவல்துறையினரிடம் தெரிவிக்க வடமதுரை போலீசார் வந்து சம்பவ இடத்தில் பார்வையிட்டு, விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும் திண்டுக்கல் எஸ்.பி.ஜெயக்குமாரும் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். </p><p>இச்சம்பவம் தற்போது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு வேங்கைவயலில் இதேபோல அரங்கேறிய சம்பவத்திலேயே இன்னும் குற்றவாளிகள் கண்டறியப்படாதநிலையில், மீண்டும் அதேபோன்ற கொடூர நிகழ்வு நிகழ்ந்துள்ளது. </p><h2>வேங்கைவயல் வழக்கு </h2><p>புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட வன்கொடுமை சம்பவம் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பவர் மாதம் வெளிச்சத்திற்கு வந்தது. </p><p>இந்த வழக்கில் முரளி ராஜா, சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய மூன்று பேர் முக்கிய குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்த சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது.</p><p>விசாரணைக்குப் பிறகு, சிபிசிஐடி போலீசார் தமிழ்நாடு அரசிடம் அறிக்கை அளித்து நீதிமன்றத்தில் இறுதி குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர். ஆனால் தற்போதுவரை வரை இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவில்லை. </p>]]></content:encoded></item><item><title>பங்கிபூர் மக்கள் பாஜக தலைமைக்கு ஒரு செய்தியை அனுப்பியுள்ளனர்: இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பிரசாந்த் கிஷோர்</title><link>https://www.maalaimalar.com/news/national/bjp-leadership-gets-message-from-panchipura-people-prashant-kishor</link><comments>https://www.maalaimalar.com/news/national/bjp-leadership-gets-message-from-panchipura-people-prashant-kishor#comments</comments><guid isPermaLink="false">cc1187dd-69d9-488d-baf7-b85cace85a50</guid><pubDate>Mon, 03 Aug 2026 15:12:49 +0000</pubDate><atom:updated>2026-08-03T15:12:49.562Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பிரசாந்த் கிஷோர்,prashanth Kihsore,bihar election,Bankipur</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/530d08r5/Untitled-design-14.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Bihar By-election Message: Prashant Kishor wins Pangaibour, voters urge BJP to appoint a clean CM.]]></media:title><media:description type="html"><![CDATA[ Prashant Kishor]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/530d08r5/Untitled-design-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பீகாரில் பங்கிபூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் தனது முதல் வெற்றியை பெற்ற, ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனரான பிரசாந்த் கிஷோர், பீகார் ஒரே இரவில் பெங்களூராக மாறிவிடாது என்றும் ஆனால் மக்கள் கண்கூடாக பார்க்கும் மாற்றங்கள் வரவிருப்பதாகவும் தெரிவித்தார்.</p><p>பீகார் மாநிலத்தில் பங்கிபூர் தொகுதிக்கு சமீபத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து இன்று வாக்குகள் எண்ணப்பட்டன. அப்போது இத்தொகுதியில் போட்டியிட்ட பிரசாந்த் கிஷோர் 64,151 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். </p><p>இதன் மூலம், பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் நீரஜ் குமார் சின்ஹாவை விட 19,324 வாக்குகள் அதிகம் பெற்று மாபெரும் வெற்றியை பெற்றார்.</p><h3><strong>பிரசாந்த் கிஷோர் பேட்டி</strong></h3><p>இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்பதால் பங்கிபூர் பெங்களூருவாக மாறிவிடாது, ஆனால் அடுத்த இரண்டு மூன்று மாதங்களில் இங்கு சில முன்னேற்றங்கள் ஏற்படுவதை நீங்கள் காண்பீர்கள்.</p><p>மக்கள் என்மேல் வைத்த நம்பிக்கையை காப்பாற்றி, பங்கிபூரை மேம்படுத்துவதே எனது முதல் பணியாக இருக்கும். அடுத்த இரண்டு மூன்று மாதங்களில் நீங்கள் மாற்றங்களைக் காண்பீர்கள். நான் பெரிய தற்பெருமை பேச விரும்பவில்லை.</p><p>இந்தப் போராட்டம் தனிப்பட்டதல்ல, சாம்ராட் சௌத்ரியின் நடத்தை, குணம் மற்றும் முகம் ஆகியவை பொதுவெளியில் உள்ளன. ஒரு குற்றவாளியை பீகாரின் முதலமைச்சராக ஆக்கினால், பீகார் முன்னேற முடியாது.</p><p>எங்கள் போராட்டம் எந்தவொரு தனிநபருடனும் கிடையாது. பெரும்பான்மையினர் பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்தவர்கள், எனவே முதலமைச்சர் பதவி அவர்களுக்கே கிடைக்கும்.</p><p>பீகார் முன்னேறவும், மக்கள் பீகாரியாக இருப்பதில் பெருமை கொள்ளவும், திறமையான, நல்ல குணநலன்கள் கொண்ட ஒருவரை முதலமைச்சராக நியமிக்க வேண்டும் என்று நாங்கள் மோடிஜியிடம் கேட்டுக்கொள்கிறோம்.</p><p>இந்த தேர்தல் பங்கிபூரின் தெருக்கள் மற்றும் வடிகால்களுக்காக நடத்தப்படவில்லை. பீகாரை யார் வழிநடத்த வேண்டும் என்பதற்காகவே நடத்தப்பட்டது. பங்கிபூர் மக்கள் பாஜக தலைமைக்கு ஒரு செய்தியை அனுப்பியுள்ளனர். ஒரு நல்ல மனிதரை முதலமைச்சராக்குங்கள்,” என்று அவர் கூறினார்.</p><h3><strong>பீகார் முதல்வர் வாழ்த்து</strong></h3><p>இதையடுத்து பீகார் முதலமைச்சர் சம்ராட் சௌத்ரி, மக்களின் தீர்ப்பை மதிப்பதாகக் கூறி, கிஷோரின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார்.</p><p>மேலும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “ஜனநாயகத்தின் மாபெரும் திருவிழாவான பாங்கிபூர் சட்டமன்ற இடைத்தேர்தலில், மக்கள் ஜன் சுராஜைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.</p><p>மக்களின் முடிவை மதித்து, பிரசாந்த் கிஷோர் அவர்களின் வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று சௌத்ரி பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய பீல்டிங் கோச்: யார் அவர்?</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/subhadeep-ghosh-replaces-t-dilip-as-india-men-fielding-coach</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/subhadeep-ghosh-replaces-t-dilip-as-india-men-fielding-coach#comments</comments><guid isPermaLink="false">6d725c8f-ac7d-4c1e-a22b-5ee5270b2547</guid><pubDate>Mon, 03 Aug 2026 15:07:16 +0000</pubDate><atom:updated>2026-08-03T15:07:16.164Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>BCCI,Team India,டீம் இந்தியா,பிசிசிஐ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/l56qygjy/SubhadeepGhosh.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Subhadeep Ghosh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/l56qygjy/SubhadeepGhosh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, இந்திய ஆண்கள் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக டி. திலீப்பிற்குப் பதிலாக சுபதீப் கோஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.</p><h2>மகளிர் அணி பயிற்சியாளர்</h2><p>சுபதீப் கோஷ் (வயது 57) இதற்கு முன்பு இந்திய மகளிர் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ளார். 2022 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2023 மகளிர் டி20 உலகக் கோப்பை உள்ளிட்ட போட்டிகளின்போது அவர் அந்த அணியுடன் இருந்தார்.</p><p>அதுமட்டுமின்றி, அவர் இந்தியா ஏ (India A) அணியுடனும் பணியாற்றியுள்ளார் மற்றும் அசாம் மாநிலத்தின் சீனியர் ஆண்கள் அணிக்கும் பயிற்சியளித்துள்ளார். தனது விளையாட்டு வாழ்க்கையில் வலது கை பேட்ஸ்மேனாக இருந்த இவர், அசாம் மற்றும் ரெயில்வேஸ் அணிகளுக்காக தலா 17 முதல்-தர (first-class) மற்றும் லிஸ்ட் ஏ (List A) போட்டிகளில் விளையாடியுள்ளார்.</p><h2>டி. திலிப்</h2><p>முன்னாள் பயிற்சியாளர் திலிப் 2021 முதல் 2024-25 பார்டர்-கவாஸ்கர் கோப்பைத் தொடர் வரை இந்திய ஆண்கள் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக இருந்தார். பின்னர், 2025-ல் இங்கிலாந்தில் நடைபெற்ற இந்திய அணியின் டெஸ்ட் சுற்றுப்பயணத்தின் போது ஓராண்டு காலத்திற்கு மீண்டும் அப்பணியை ஏற்றார். அவரது ஒப்பந்தம் முடிவடைந்த பிறகு அவருக்குப் பணி நீட்டிப்பு வழங்கப்படவில்லை.</p><p>இங்கிலாந்தில் நடைபெற்ற ஒயிட் பால் (white-ball) தொடருக்குப் பிறகு, இந்திய ஆண்கள் அணியின் உதவிப் பயிற்சியாளர் ரியான் டென் டோஷேட் (Ryan ten Doeschate) தனது பதவியிலிருந்து விலகி, கேகேஆர் (KKR) அணியின் கிரிக்கெட் உத்திப் பிரிவுத் தலைவராக (Head of Cricket Strategy) இணைந்தார்.</p><h2>இலங்கை தொடர்</h2><p>இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15 அன்று காலேயிலும் (Galle), இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 23 அன்று கொழும்பில் உள்ள எஸ்எஸ்சி (SSC) மைதானத்திலும் தொடங்குகின்றன.</p><p>இத்தொடருக்கு முன்னதாக, ஆகஸ்ட் 7 அன்று தொடங்கும் மூன்று நாள் பயிற்சி ஆட்டம் ஒன்றில் இந்திய அணி கொழும்பில் விளையாடவுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ராயலசீமா ஒரு காலத்தில் வறட்சியின் அடையாளம்: சந்திரபாபு நாயுடு தலைமையின் கீழ் இன்று வரலாறு- ஆந்திரா அரசு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rayalaseema-writes-new-story-under-naidu-leadership-andhra-govt</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rayalaseema-writes-new-story-under-naidu-leadership-andhra-govt#comments</comments><guid isPermaLink="false">910ded4b-cd01-4b89-b390-4efa095a23eb</guid><pubDate>Mon, 03 Aug 2026 14:43:12 +0000</pubDate><atom:updated>2026-08-03T14:43:12.852Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Andhra Pradesh,ஆந்திர பிரதேசம்,Nara Lokesh,நாரா லோகேஷ்,ChandraBabu Naidu,சந்திரபாபு நாயுடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/vjy0mj3p/Chandrababunaidu0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சந்திரபாபு நாயுடு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/vjy0mj3p/Chandrababunaidu0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஒரு காலத்தில் வறட்சியின் அடையாளமாக அறியப்பட்ட ராயலசீமா பகுதி, முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் தலைமையிலும், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் நாரா லோகேஷ் முதலீட்டாளர்களை ஈர்க்கும் முயற்சிகளின் மூலமும் ஒரு புதிய வரலாற்றை எழுதி வருகிறது என்று ஆந்திரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.</p><p>வறட்சி மற்றும் குறைந்த வாய்ப்புகளின் அடையாளமாகத் திகழ்ந்த ராயலசீமா, இப்போது புதிய வரலாற்றை எழுதி வருகிறது. முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் தலைமை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் நாரா லோகேஷின் முதலீட்டாளர் ஈர்ப்பு முயற்சிகள் இதற்குப் பின்னணியாக உள்ளன.</p><h2>ரூ. 4.5 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள்</h2><p>அடுத்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் ரூ. 4.5 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. இது மூன்று லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கிலான 200 திட்டங்களை உள்ளடக்கியது.</p><p>இருப்பினும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உணவு பதப்படுத்துதல், மின்னணுவியல் மற்றும் மின்சார வாகன (EV) உற்பத்தி, பாதுகாப்பு மற்றும் விண்வெளித்துறை, சிமெண்ட் மற்றும் தோட்டக்கலை ஆகிய துறைகளில் வரவிருக்கும் திட்டங்களால் உண்மையான முதலீட்டு எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும்.</p><h2>சென்னை- பெங்களூரு தொழில் வழித்தடம்</h2><p>சென்னை- பெங்களூரு மற்றும் பெங்களூரு- ஐதராபாத் ஆகிய இரண்டு முக்கிய தொழில் வழித்தடங்களின் சந்திப்பில் ராயலசீமா அமைந்துள்ளதால், அதற்கு ஒரு முக்கிய மூலோபாய அனுகூலம் கிடைத்துள்ளது.</p><p>புவியியல் அமைப்பைப் போலவே கொள்கை முடிவுகள், விரைவான அனுமதி நடைமுறைகள் மற்றும் பெரிய அளவிலான நில இருப்பு ஆகியவையும் இந்த மாற்றத்தை முன்னெடுத்துச் செல்கின்றன. மாநிலத்தின் மொத்த தொழில் பயன்பாட்டு நிலத்தில் 40 சதவீதத்திற்கும் அதிகமானவை ராயலசீமா பகுதியிலேயே அமைந்துள்ளன.</p><p>மின்னணுவியல், விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை உற்பத்தி, பசுமை ஹைட்ரஜன், உணவு பதப்படுத்துதல், ஜவுளி மற்றும் சரக்கு போக்குவரத்து (லாஜிஸ்டிக்ஸ்) ஆகிய துறைகளுக்கான பிரத்யேகக் கொள்கைகளும் இதற்குப் பெரிதும் உதவுகின்றன.</p><p>மூலதன மானியங்கள், முத்திரைத் தாள் கட்டண விலக்குகள், மாநில ஜிஎஸ்டி (SGST) திரும்பப் பெறுதல் மற்றும் மின்சாரக் கட்டணச் சலுகைகள் ஆகியவை இம்மாநிலம் வழங்கும் பிற ஈர்ப்புகளாகும்.</p><p>ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில், மேம்பட்ட நடுத்தர ரக போர் விமானம் (AMCA) திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆகியோரால் அது தொடங்கி வைக்கப்பட்டது. வெறும் 38 நாட்களில், இத்திட்டம் ஒப்புதல் கட்டத்திலிருந்து அடிக்கல் நாட்டு விழா வரை முன்னேறியுள்ளது.</p><h2>சிமெண்ட் நிறுவனங்கள் உற்பத்தித் திறன்</h2><p>அல்ட்ராடெக், இந்தியா சிமெண்ட்ஸ், ராம்கோ மற்றும் ஜே.எஸ்.டபிள்யூ போன்ற சிமெண்ட் நிறுவனங்கள் தங்களது உற்பத்தித் திறனை இரட்டிப்பாக்கியுள்ளன. இப்பகுதியின் அனந்தபுரத்தில் முதன்முறையாக பேரீச்சை போன்ற அரிய பயிர்கள் பயிரிடப்படுகின்றன.</p><p>பாதுகாப்பு, மின்னணுவியல், மின்சார வாகன உற்பத்தி மற்றும் வேளாண் பதப்படுத்துதல் திட்டங்களுடன், ராயலசீமா தென்னிந்தியாவின் அடுத்த முக்கிய தொழில் மையமாக தன்னை நிலைநிறுத்தி வருகிறது.</p><p>வறட்சி பாதிப்புக்குள்ளான பகுதியிலிருந்து முதலீடுகளை ஈர்க்கும் பகுதியாகவும், மறக்கப்பட்ட இடத்திலிருந்து போர் விமானங்கள் வரையும் இடமாகவும் மாறியுள்ள ராயலசீமா, இனி பின்தங்கியிருக்கவில்லை. அதுவே முன்னணியில் உள்ளது.</p><p>இவ்வாறு ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>எனக்கும் ஒருமுறை அமைச்சர் பதவி கை நழுவியது!-அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் சமாதானம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/dk-shivakumar-recalls-losing-minister-post-urges-patience-amid-karnataka-cabinet-expansion-anger</link><comments>https://www.maalaimalar.com/news/national/dk-shivakumar-recalls-losing-minister-post-urges-patience-amid-karnataka-cabinet-expansion-anger#comments</comments><guid isPermaLink="false">c7b009fc-af1f-4c58-955b-5cfb24fb463e</guid><pubDate>Mon, 03 Aug 2026 14:39:11 +0000</pubDate><atom:updated>2026-08-03T14:39:11.821Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,டி.கே.சிவகுமார்,Karnataka Cabinet,D.K.Shivakumar,கர்நாடகா அமைச்சரவை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/hk8la167/karnataka.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ D.K.Shivakumar ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/hk8la167/karnataka.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடகாவில் முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்துள்ளார். இருப்பினும், புதிய அமைச்சரவையில் தங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் காங்கிரஸின் மூத்த சட்டமன்ற உறுப்பினர்கள் பகிரங்கமாக அதிருப்தி தெரிவித்துள்ளனர். நிலைமையைக் கட்டுப்படுத்த முயன்ற முதல்வர் டி.கே.சிவகுமார், "அனைவருக்கும் ஒரே நேரத்தில் வாய்ப்பளிக்க முடியாது, பொறுமை காக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p><h2><strong>டி.கே.சிவகுமார் சமாதானம்:</strong></h2><p>அமைச்சரவை விரிவாக்கத்திற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் டி.கே. சிவகுமார், கட்சியில் பல எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஒரே நேரத்தில் அனைவரும் அமைச்சரவையில் இடம்பெறுவது சாத்தியமற்றது. கடந்த காலத்தில் சித்தராமையாவின் அமைச்சரவையில் எனக்கும் கூட அமைச்சர் பதவி மறுக்கப்பட்டது நினைவிருக்கலாம். </p><p>ஆனால், அதற்குப் பிறகு எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையா? அதேபோலத் தான், இப்போது வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கும் எதிர்காலத்தில் நிச்சயம் உரிய வாய்ப்புகள் வழங்கப்படும். சட்டமன்ற உறுப்பினர்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும் என்றார்.</p><h2><strong>19 புதிய அமைச்சர்கள்:</strong></h2><p>டி.கே. சிவகுமார் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற இரண்டு மாதங்களுக்குப் பிறகு, 19 புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். இதன் மூலம் அமைச்சரவையின் மொத்த எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.</p><h2><strong>காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா:</strong></h2><p>அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் கடும் அதிர்ச்சியடைந்த இண்டி தொகுதி எம்.எல்.ஏ யஷவந்தராயகவுடா பாட்டீல் மற்றும் சாகர் தொகுதி எம்.எல்.ஏ பேலூர் கோபாலகிருஷ்ணா ஆகிய இரு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர்.</p><p>வாய்ப்பு மறுக்கப்பட்ட மூத்த தலைவர்களான டி.பி.ஜெயச்சந்திரா, தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோரின் ஆதரவாளர்கள் பெங்களூருவின் பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டனர். டி.பி. ஜெயச்சந்திராவின் இல்லத்தில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அவசர ஆலோசனையிலும் ஈடுபட்டனர். </p><p>இறுதி நேரத்தில் ஏற்பட்ட குழப்பங்களால் எம்.எல்.சி காயத்ரி சாந்தேகவுடா பதவியேற்காததால், விரிவாக்கம் செய்யப்பட்ட இந்த அமைச்சரவையில் பெண் அமைச்சர்கள் எவரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2><strong>கட்சியின் நிலைப்பாடு:</strong></h2><p>எம்.எல்.ஏ.க்களின் வெளிப்படையான எதிர்ப்பும் ராஜினாமாவும் சிவகுமார் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு அரசியல் அழுத்தத்தை உருவாக்கியுள்ளது. இருப்பினும், அதிருப்தியில் உள்ள தலைவர்களை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவும், வாரியப் பதவிகள் மற்றும் பிற பொறுப்புகளை வழங்கி அவர்களைச் சமாதானப்படுத்தவும் கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>