<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 11 Aug 2026 05:47:32 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: விவசாயிகளுக்கு மட்டும் பட்ஜெட்டில் குறைவான  நிதி ஏன்? - சவுமியா அன்புமணி - 11 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-11-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-11-august-2026#comments</comments><guid isPermaLink="false">a3c449d5-f099-414e-8242-4ebc0475b347</guid><pubDate>Tue, 11 Aug 2026 03:54:39 +0000</pubDate><atom:updated>2026-08-11T05:47:10.224Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/7sh1uy02/sowmiya.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sowmiya anbumani]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/7sh1uy02/sowmiya.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மக்களுக்கும் விவசாயிகளுக்கும் தேவையான அனைத்தும் செய்து தரப்படும் - கால்நடைத்துறை அமைச்சர் கமலி உறுதி</p><p>நீர்வளத்துறைக்கு கடந்த ஆண்டுகளில் ஒதுக்கப்பட்டதை விட தவெக அரசு கூடுதலாகவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் எங்களுக்கும் தான் மாவட்டம். விவசாயிகளின் கோரிக்கை கண்டிப்பாக நிறைவேற்றுவோம்.</p><p>முதல்வருடன் கலந்தாலோசித்து சவுமியா கேட்ட அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்  - அமைச்சர் ஆனந்த்</p><p>கானல் நீராக அரசு வேலை இருக்கும் நிலையில் அது குறித்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை.</p><p>3000 பணியிடத்திற்கு 30,000 பேர் தேர்வெழுதும் நிலை, அந்தளவுக்கு வேலைவாய்ப்பு இன்றி இளைஞர்கள் தவிக்கின்றனர்.</p><p>அரசு பணிக்கான தேர்வுகளில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தாலும் கூட பணி கிடைப்பதில்லை  - சவுமியா அன்புமணி</p> <p>தமிழ்நாட்டில் உள்ள 27,000 குளங்களை தூர்வாரினால் போதும் 150 டிஎம்சி வரை நீர் சேமிக்க முடியும். 42,000 ஏரிகள் இருந்த தமிழ்நாட்டில் தற்போது 27,000 ஏரிகள் மட்டுமே உள்ளன. அவற்றை 1 மீட்டர் அளவு தூர்வார வேண்டும் - சவுமியா அன்புமணி</p><p>ஆறுகள் இணைப்பு உள்ளிட்ட நீர்ப்பாசன திட்டத்திற்கு இன்னும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். 10 கிமீ ஒரு தடுப்பணைகளை கட்டினால் கேரளா, கர்நாடகாவிடம்  நீர் எதிர்பார்க்க வேண்டிய அவசியமே இல்லை.</p><p>ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரும் திட்டங்கள் தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. நிலத்தடி நீர்மட்டத்தை நம்பியே விவசாயிகள் உள்ள நிலையில் அதை உயர்த்துவதற்கான எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை - சவுமியா அன்புமணி</p> <h2>சவுமியா அன்புமணி உரை</h2><p>வேளாண் பட்ஜெட்டில் மிகமிக குறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>நம்மாழ்வார் பெயரில் வேளாண் கல்லூரி தொடங்குவதற்கு பாமக சார்பில் நன்றி, வாழ்த்துகள்.</p><p>கால்நடை, பால்வளம், நீர்ப்பாசனம் வேளாண்துறைக்கு பட்ஜெட்டில் மிகமிக குறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>வீட்டில் பெண்கள் பட்ஜெட் போடும்போது சாப்பாடுக்கு உரிய நிதி ஒதுக்காமல் இருப்பார்களா?</p><p>பட்ஜெட் மீதான விவாதத்தில் சவுமியா அன்புமணி உரையாற்றினார்.</p><p>பாமகவின் 13 வருட கோரிக்கையான சேவை உரிமை சட்டத்தி அமல்படுத்திய தவெக அரசுக்கு வாழ்த்துகள் - சவுமியா</p><p>பிறப்பு, இறப்பு உள்ளிட்ட சான்றுகளை விரைவாக வழங்கும் சேவை உரிமைச்சட்டத்தை நிறைவேற்ற ஒப்புதலுக்கு நன்றி.</p><p>முன்னர் ஆட்சியில் இருந்தோர் பட்டா வழங்கியதாக கூறினார்கள். பட்டா உள்ளது இடம் எங்கே என கேட்கின்றனர் மக்கள்.</p><p>பட்டாவுடன் இடத்திற்கான நடவடிக்கையை நாங்கள் எடுப்போம் என கூறி உள்ளோம் - கால்நடைத்துறை அமைச்சர்</p><p>முதல்வர் எப்போது அழைப்பார் என்ற நிலை மாறி தற்போது முதல்வரிடம் இருந்து அழைப்பு வந்தாலே பயமாக இருக்கிறது - அமைச்சர் ஆனந்த்</p><p>மக்கள் குறையை சரிசெய்ததன் விளைவு தான் தவெக ஆட்சியில் உள்ளது - சூலூர் எம்எல்ஏ சுகுமார்</p><p>வார்த்தைகள் மற்றவரை புண்படுத்தாத வகையில் இருக்க வேண்டும் என எம்எல்ஏ சுகுமாருக்கு சபாநாயகர் அறிவுறுத்தினார்.</p><p>உங்களுக்கும் சிபிஐ வழக்குகள் உள்ளது என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பதில் அளித்தார்.</p><p>திமுகவினர் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை வந்துவிடுமோ என அஞ்சுகிறார்கள் என தவெக எம்எல்ஏ சுகுமார் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.</p><p>மூலதன செலவு குறைவாக இருக்கும்போது கடன் பெறுவதற்கு என்ன காரணம் என கேள்வி எழுகிறது. திராவிட மாடல் உருவாக்கிய வலுவான அடித்தளத்தில் நிற்கும் தவெக அரசு அதன் பலனை பயன்படுத்தி வருகிறது.</p><p>மத்திய அரசின் மானியங்களும் மூலதன செலவில் குறைப்பும் தான் வருவாய் பற்றாக்குறை அதிகரிக்க காரணம். நிதி, அதிகார பகிர்வுக்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.</p><p>மக்கள் நலனில் ஸ்டாலினை மிஞ்சி யாரும் சிந்திக்க முடியாது என்பதை புலப்படுத்துகிறது தவெகவின் பட்ஜெட் என்று  ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.</p> <h2>ஓ.பன்னீர்செல்வம்</h2><p>மாநில வரி வருவாயை உயர்த்த புதிய திட்டமோ அணுகுமுறையோ இந்த பட்ஜெட்டில் காணப்படவில்லை. வெள்ளை அறிக்கை தயாரிக்க காட்டிய முனைப்பை வருவாய் உயர்த்தும் திட்டத்திற்கு காட்டவில்லை.</p><p>திராவிட மாடல் அரசில் பொறுப்பான நிதி மேலாண்மை செய்த முன்னாள் முதல்வர் ஸ்டாலினை குறை சொல்லக்கூடாது. அரசு கடன் வாங்காமல் இருக்க முடியாது, கடன் வாங்கி எத்தனை திட்டங்களை செயல்படுத்தியது என்பதுதான் முக்கியம்.</p><p>தமிழ்நாடு நிதிநிலை பொறுப்புடைமை சட்டத்தின் அடிப்படையில் எல்லை கோட்டை மீறி எந்த அரசும் கடன் வாங்க முடியாது. வருவாய் மதிப்பீட்டை கணிப்பது தொடர்பான தவெக அரசின் கணக்கீட்டில் நம்பிக்கை இல்லை.</p><p>மின் கட்டணம், நூல் கட்டணம் உயர்வு, நெசவாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.30,000 அறிவிப்புகள் தேர்தல் அறிக்கையில் தூங்குகிறது. மாநிலத்தை திராவிட மாடல் அரசு கடன் கடலில் ஆழ்த்திவிட்டதாக பிரசாரம் செய்கிறது தவெக அரசு.</p><p>அடுத்த 50 ஆண்டுகள் வரை கடன் இன்றி யாரும் ஆட்சி செய்ய முடியாது என நிதித்துறை செயலரே கூறுகிறார். கடன் குறித்த முதலமைச்சர் விஜயின் விமர்சனம் தவறு என்பது தற்போது புரிகிறதா? என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.</p> <h2>ஓ.பன்னீர்செல்வம்</h2><p>திராவிட இயக்கத்தை சுற்றித்தான் என் நிலை இருக்கும், நான் எப்படிப்பட்டவன் என அனைவருக்கும் 200% தெரியும்.</p><p>பயிர்க்கடன் முழு தள்ளுபடி, பழைய ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு வரவில்லை.</p><p>வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையிலேயே தூங்கி கொண்டிருக்கின்றன.</p><p>கடன் வாங்காமல் 50 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்ய முடியாது என்கிறார் நிதித்துறை செயலாளர்.</p><p>தேர்தல் பிரசாரத்தில் பேசியது தவறு என முதலமைச்சருக்கு இப்போது தெரிந்திருக்கும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.</p><p>தற்போது சட்டமன்ற உறுப்பினராக பேரவையில் நான் இருப்பதற்கு காரணம் ஸ்டாலின், எனவே அவர் படத்தை வைத்துள்ளேன் - ஓபிஎஸ்</p><p>5 ஆண்டுகளுக்குள் சொன்னவற்றை நிறைவேற்றுவோம், ஓபிஎஸ் சொல்வதை போல் 3 மாதத்தில் சரித்திரம் படைக்க முடியாது - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>மாநிலம் முழுவதும் அனைத்து அரசு பேருந்திலும் இலவச பயணம் என்ற விடியல் பயண திட்டம் அறிவிக்கப்படவில்லை - ஓபிஎஸ்</p> <p>மாணவர் இடைநிற்றலை தவிர்ப்பதற்கான திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பில்லை -  ஓபிஎஸ்</p><p>அண்ணா, ஜெயலலிதா, கலைஞர் என அனைவரும் இதயத்தில் உள்ளனர். படம் வைத்து ஏமாற்ற வேண்டிய தேவையில்லை - ஓபிஎஸ்</p><p>ஜெயலலிதா இருந்த காலத்திலேயே முதலமைச்சராக பொறுப்பேற்ற ஓபிஎஸ், யார் படத்தை தற்போது வைத்துள்ளார் - ஆதவ்</p><h2>அமைச்சர் ராஜ்மோகன்</h2><p>செங்கோட்டையன் இடம் மாறினாலும் அவரது பாக்கெட்டில் புகைப்படம் மாறவில்லை.</p><p>ஓபிஎஸ் இடத்தை மட்டும் அல்ல இதயத்தையும் மாற்றிவிட்டார் - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>படத்தை காட்டி ஏமாற்றும் எண்ணம் எங்களுக்கு இல்லை - ஓபிஎஸ்</p><p>முதலில் இடம் மாறியது செங்கோட்டையன் என்று முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் பதில்</p><p>இடம் மாறியதால் துதி பாட வேண்டாம் என ஓபிஎஸ்-க்கு அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள்.</p><p>மாணவர் இடைநிற்றலை தவிர்க்க நிதி ஒதுக்கீடு திட்டம் இந்த பட்ஜெட்டில் வெளியாகவில்லை - ஓ.பன்னீர்செல்வம்</p><p>உரிமைத்தொகை உயரவில்லை, 6 சிலிண்டர் என எந்த அறிவிப்பும் வராததால் மகளிர் ஏமாற்றம்  - ஓ.பன்னீர்செல்வம்</p><p>புதிய அரசின் திட்டங்களை தேடுகிறேன், தேடுகிறேன், தேடிக் கொண்டே இருக்கிறேன் - ஓபிஎஸ்</p><p>திருப்புகின்ற பக்கமெல்லாம் திமுக ஆட்சியின் திட்டங்களே பட்ஜெட்டில் உள்ளன - ஓபிஎஸ்</p><p>பெயர் மாற்ற பட்டியல் போல் வெளியாகி உள்ளது தமிழக பட்ஜெட் - ஓபிஎஸ்</p><p>செய்வதை மட்டும் தான் சொல்வோம் என கூறி அள்ளித்தெறித்த வாக்குறுதிகளை தவெக அரசு மறந்துவிட்டது - ஓ.பன்னீர்செல்வம்</p><p>3-வது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.</p><p>சட்டசபையில் இன்று 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.</p><p>சட்டசபையில் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் தொடங்கியது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/special-resolution-against-neet-exam-and-fcra-tn-assembly-toady">நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தனித்தீர்மானம்!</a></p><p>* நீட் தேர்வில் இருந்து தமிழ் நாட்டிற்கு விலக்கு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதாவை கடந்த 2021-இல் தமிழக சட்டப்பேரவை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.</p><p>* நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளால் மருத்துவ கனவு கொண்ட லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.&nbsp;</p>]]></content:encoded></item><item><title>சதுரகிரியில் கட்டுக்கடங்காத காட்டுத்தீ: பக்தர்கள் மலையேற மாவட்ட நிர்வாகம் தடை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/uncontrolled-forest-fire-in-sathuragiri-devotees-barred-from-climbing-hill</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/uncontrolled-forest-fire-in-sathuragiri-devotees-barred-from-climbing-hill#comments</comments><guid isPermaLink="false">e1a08d71-9561-468c-acca-09250e96877e</guid><pubDate>Tue, 11 Aug 2026 05:42:42 +0000</pubDate><atom:updated>2026-08-11T05:42:42.138Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சதுரகிரி,Sathuragiri,காட்டுத்தீ,வத்திராயிருப்பு,Vathirairuppu,Thanipparai forest,தாணிப்பாறை வனப்பகுதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/amulm2us/Sathuragiri.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sathuragiri  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/amulm2us/Sathuragiri.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள தாணிப்பாறை வனப்பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீ பரவி வருவதைத் தொடர்ந்து, சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் மலையேறிச் செல்ல மாவட்ட நிர்வாகமும் வனத்துறையும் தற்காலிகத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளன.</p><h2>திடீரெ<strong>ன பரவிய காட்டு</strong>த்தீ</h2><p>பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதனால் வழக்கத்தை விட ஆயிரக்கணக்கான பக்தர்கள் அடிவாரத்தில் குவிந்தனர்.</p><p>இந்நிலையில், தாணிப்பாறை வனப்பகுதியில் நேற்று இரவில் பரவத் தொடங்கிய காட்டுத்தீ, காற்றின் வேகம் காரணமாக மலையின் கீழ் பகுதியை நோக்கி கட்டுக்கடங்காமல் பரவத் தொடங்கியது.</p><h2>மாவட்ட ஆட்சிய<strong>ரின் பாதுகாப்பு</strong> உத்தரவு</h2><p>தீயின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு பக்தர்களின் உயிருக்கும் பாதுகாப்புக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளதால், சூழல் சீராகும் வரை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சதுரகிரி மலையேறத் தடை விதிக்கப்படுவதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். </p><p>ஏற்கனவே மலையேறிய பக்தர்கள் அனைவரும் வனத்துறை வழிகாட்டுதலின்படி பாதுகாப்பாக அடிவாரம் நோக்கித் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். மேலும், வனத்துறை சிறப்புப் பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தும் பணியிலும், மலையில் வீசும் காற்றின் திசையைக் கண்காணிக்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.</p><h2>ஆடி அமாவாசை <strong>தரிசனம் என்னா</strong>கும்?</h2><p>ஆண்டுதோறும் ஆடி அமாவாசை தினத்தில் சதுரகிரி மகாலிங்கத்தை தரிசிப்பது சிறப்பு என்பதால், இந்தத் திடீர் தடையால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளனர். காட்டுத்தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்ட பிறகே, ஆடி அமாவாசை நாளில் பக்தர்களை மீண்டும் அனுமதிப்பது குறித்து களநிலவரத்தை ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என வனத்துறை அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: சட்டப்பேரவை தீர்மானத்திற்கு கமல்ஹாசன் வரவேற்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-thai-vazhthu-gets-top-billing-at-government-events-kamal-haasan-welcomes-assembly-resolution</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-thai-vazhthu-gets-top-billing-at-government-events-kamal-haasan-welcomes-assembly-resolution#comments</comments><guid isPermaLink="false">f5578667-a029-4e27-9b67-ccfb25526112</guid><pubDate>Tue, 11 Aug 2026 05:17:16 +0000</pubDate><atom:updated>2026-08-11T05:17:16.574Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Thai Vazhthu,kamal haasan,TNAssembly,தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்,கமல்ஹாசன்,சட்டப்பேரவை 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/5eh4s18j/Untitled-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kamal Haasan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/5eh4s18j/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில், ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடல் கட்டாயம் முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் அரசினர் தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் நேற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.</p><h2>கட்<strong>டாய முன்னுரிமை</strong></h2><p>மாநிலத்தின் எந்தவொரு அரசு, கல்வி அல்லது பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளாக இருந்தாலும், நிகழ்வின் தொடக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலே முதலில் பாடப்பட வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மொழி மற்றும் பண்பாட்டு உரிமைகளின் அடிப்படையில், தமிழ்நாட்டின் தன்னாட்சி மற்றும் பண்பாட்டு அடையாளத்தைப் பாதுகாக்கும் வகையில் இத்தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. </p><p>1891-இல் மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய பாடல் வரிகள், 1970 முதல் அரசு விழாக்களின் தொடக்கப் பாடலாகவும், 2021 முதல் மாநிலப் பாடலாகவும் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><h2>கமல்<strong>ஹாசன் எம்.பி. வர</strong>வேற்பு</h2><p>சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இந்தத் தனித்தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து, மக்கள் நீதி மய்யம் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, "அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது மகிழ்ச்சிக்குரியது, வரவேற்கத்தக்கது. மாநில உரிமைகளை விட்டுத்தராத இந்தப் போக்கு தொடர வேண்டும்." என பதிவிட்டுள்ளார்.</p><p>சமீபத்தில் நடைபெற்ற சில பொது நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாகப் பாடப்படாமல் தாமதித்துப் பாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் சட்டப்பூர்வமாக உறுதி செய்யவே இந்தத் தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டு பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>மக்கள் நலனில் ஸ்டாலினை மிஞ்சி யாரும் சிந்திக்க முடியாது என்பதை நிரூபித்துவிட்டது தவெக பட்ஜெட் - ஓபிஎஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/o-panneerselvam-says-tvk-budget-proven-no-one-can-surpass-stalin-in-thinking-about-welfare-of-people</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/o-panneerselvam-says-tvk-budget-proven-no-one-can-surpass-stalin-in-thinking-about-welfare-of-people#comments</comments><guid isPermaLink="false">ebad1ce0-a61f-4140-a76e-03416c8e3f95</guid><pubDate>Tue, 11 Aug 2026 05:12:53 +0000</pubDate><atom:updated>2026-08-11T05:12:53.892Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,தமிழக சட்டசபை,O Panneerselvam,TN budget,தமிழக பட்ஜெட்,TN assembly,tvk,ஓ பன்னீர்செல்வம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/kxiy546f/ops1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ O Panneerselvam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/kxiy546f/ops1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் தொடங்கியது. 3-வது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">சட்டசபை</a> கூட்டம் தொடங்கியதும் முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான ஓ.பன்னீர்செல்வம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>* மாணவர் இடைநிற்றலை தவிர்ப்பதற்கான திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பில்லை.</p><p>* மாநிலம் முழுவதும் அனைத்து அரசு பேருந்திலும் இலவச பயணம் என்ற விடியல் பயண திட்டம் அறிவிக்கப்படவில்லை.</p> <h2>திராவிட இயக்கம்</h2><p>* திராவிட இயக்கத்தை சுற்றித்தான் என் நிலை இருக்கும், நான் எப்படிப்பட்டவன் என அனைவருக்கும் 200% தெரியும்.</p><p>* பயிர்க்கடன் முழு தள்ளுபடி, பழைய ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு வரவில்லை.</p><p>* வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையிலேயே தூங்கி கொண்டிருக்கின்றன.</p><p>* கடன் வாங்காமல் 50 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்ய முடியாது என்கிறார் நிதித்துறை செயலாளர்.</p> <h2>மின் கட்டணம்</h2><p>* தேர்தல் பிரசாரத்தில் பேசியது தவறு என முதலமைச்சருக்கு இப்போது தெரிந்திருக்கும்.</p><p>* மின் கட்டணம், நூல் கட்டணம் உயர்வு, நெசவாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.30,000 அறிவிப்புகள் தேர்தல் அறிக்கையில் தூங்குகிறது. </p><p>* மாநிலத்தை திராவிட மாடல் அரசு கடன் கடலில் ஆழ்த்திவிட்டதாக பிரசாரம் செய்கிறது தவெக அரசு.</p><p>* அடுத்த 50 ஆண்டுகள் வரை கடன் இன்றி யாரும் ஆட்சி செய்ய முடியாது என நிதித்துறை செயலரே கூறுகிறார். </p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>* கடன் குறித்த முதலமைச்சர் விஜயின் விமர்சனம் தவறு என்பது தற்போது புரிகிறதா? </p><p>* மாநில வரி வருவாயை உயர்த்த புதிய திட்டமோ அணுகுமுறையோ இந்த பட்ஜெட்டில் காணப்படவில்லை. </p><p>* வெள்ளை அறிக்கை தயாரிக்க காட்டிய முனைப்பை வருவாய் உயர்த்தும் திட்டத்திற்கு காட்டவில்லை.</p><p>* திராவிட மாடல் அரசில் பொறுப்பான நிதி மேலாண்மை செய்த முன்னாள் முதல்வர் ஸ்டாலினை குறை சொல்லக்கூடாது. </p> <h2>தவெக அரசு</h2><p>* அரசு கடன் வாங்காமல் இருக்க முடியாது, கடன் வாங்கி எத்தனை திட்டங்களை செயல்படுத்தியது என்பதுதான் முக்கியம்.</p><p>* தமிழ்நாடு நிதிநிலை பொறுப்புடைமை சட்டத்தின் அடிப்படையில் எல்லை கோட்டை மீறி எந்த அரசும் கடன் வாங்க முடியாது. </p><p>* வருவாய் மதிப்பீட்டை கணிப்பது தொடர்பான தவெக அரசின் கணக்கீட்டில் நம்பிக்கை இல்லை.</p><p>* மூலதன செலவு குறைவாக இருக்கும்போது கடன் பெறுவதற்கு என்ன காரணம் என கேள்வி எழுகிறது. </p> <h2>மு.க.ஸ்டாலின்</h2><p>* திராவிட மாடல் உருவாக்கிய வலுவான அடித்தளத்தில் நிற்கும் தவெக அரசு அதன் பலனை பயன்படுத்தி வருகிறது.</p><p>* மத்திய அரசின் மானியங்களும் மூலதன செலவில் குறைப்பும் தான் வருவாய் பற்றாக்குறை அதிகரிக்க காரணம். </p><p>* நிதி, அதிகார பகிர்வுக்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.</p><p>* முதலமைச்சராக இருந்த <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க.ஸ்டாலின்</a> பொறுப்பாக நிதி மேலாண்மை செய்தவர்.</p><p>* மக்கள் நலனில் ஸ்டாலினை மிஞ்சி யாரும் சிந்திக்க முடியாது என்பதை புலப்படுத்துகிறது தவெகவின் பட்ஜெட் என்று அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>கொலம்பியாவை நிலைகுலைய செய்த நிலநடுக்கம்.. 132 பேர் பலி - 2000 பேர் மாயம் - அதிரவைக்கும் வீடியோ, புகைப்படங்கள்</title><link>https://www.maalaimalar.com/news/world/colombia-earthquake-74-magnitude-quake-kills-132-thousands-missing</link><comments>https://www.maalaimalar.com/news/world/colombia-earthquake-74-magnitude-quake-kills-132-thousands-missing#comments</comments><guid isPermaLink="false">6a2c170f-0f15-4d0d-9026-aea0c5a00316</guid><pubDate>Tue, 11 Aug 2026 05:05:53 +0000</pubDate><atom:updated>2026-08-11T05:05:53.406Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வெனிசுலா,Earthquake,Venezuela,கொலம்பியா,Colombia,நிலநடுக்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/8owun82n/tn-19.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கொலம்பியா நிலநடுக்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கொலம்பியா நிலநடுக்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/8owun82n/tn-19.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கொலம்பியாவில் நேற்று இரவு ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த <a href="https://www.maalaimalar.com/topic/earthquake">நிலநடுக்கத்தில் </a>உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது. </p><p>மேலும் 570க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், 2,000க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>மேற்கு கொலம்பியாவின் சொகோ (Choco) மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் டெல் பால்மர் நகருக்கு அருகே பூமிக்கு அடியில் சுமார் 100 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.  </p><p>தொடர்ந்து பல நில அதிர்வுகள் பதிவாகின. இந்த அதிர்வுகள் அண்டை நாடுகளான ஈக்வடார், பானமா மற்றும் வெனிசுவேலா வரையிலும் உணரப்பட்டன.  </p> <figure><img alt="கொலம்பியா " src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/5dpqnvtq/tn-21.jpg" /></figure><h2>வெனிசுலாவை தொடர்ந்து..</h2><p>அண்டை நாடான வெனிசுவேலாவில் கடந்த மாதம் ஜூன் 24 அன்று 7.2, 7.5 ரிக்டர் அளவுகளில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கத்தில் மீட்பு பணிகள் இன்னும் தொடர்ந்து வரும் நிலையில் இன்றைய நிலவரப்படி 6,301 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>இந்த சூழலில் தற்போது கொலம்பியாவில் 21ஆம் நூற்றாண்டின் ஏற்பட்ட மிகக் கடுமையான நிலநடுக்கம் இது. வெனிசுலாவில் 3.8 ரிக்டர் அளவு தற்போது நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.</p> <h2>கொலம்பியா நிலநடுக்க பாதிப்பு</h2><p>கொலம்பியாவில் நேற்றிரவு ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தால் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நகரமாகப் பெரேரா உருவெடுத்துள்ளது. இங்கு மட்டும் 60 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது.</p><p>நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 2,000க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை எனத் தரவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாகக் காளி (Cali) மற்றும் பெரேரா (Pereira) நகரங்களில் அதிகமானோர் மாயமாகியுள்ளனர்.</p><p>நாட்டின் 5 முக்கியத் நகரங்களுக்கு இன்னமும் ரெட் அலர்ட் அமலில் உள்ளது.</p> <figure><img alt="கொலம்பியா " src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/rl43ud6v/tn-18.jpg" /></figure><h2>அவசர நிலை</h2><p>நிலநடுக்கம் குறித்து பேசிய கொலம்பியா அதிபர் அபெலார்டோ டி லா எஸ்ப்ரீல்லா கூற்றுப்படி,</p><p>நிலநடுக்கத்தால் 1,577 குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. அதில் 37 கட்டிடங்கள் முற்றிலும் அழிந்துவிட்டன. </p><p>60க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் முழுமையாக இடிந்து தரைமட்டமாகியுள்ளன. 18 மருத்துவ மையங்கள் மற்றும் 52 பள்ளிகள் பலத்த சேதமடைந்துள்ளன. 7 விமான நிலையங்களின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன.</p> <figure><img alt="கொலம்பியா " src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/0fdjv5lm/tn-22.jpg" /></figure><p>நிலநடுக்கத்தின் பேரழிவைக் கருத்தில் கொண்டு கொலம்பியா அரசு தேசிய பேரிடர் அவசரநிலை பிரகடனம் செய்துள்ளது.</p><p>இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை விரைவாக மீட்க ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.</p><p>காளி நகரில் உள்ள ஒரு மருத்துவமனையின் குழந்தைகள் பராமரிப்புப் பிரிவுகள் இடிந்து விழுந்துள்ளதால், அங்குப் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.</p><figure><img alt="கொலம்பியா " src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/m7iw65q2/tn-20.jpg" /></figure><figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">NEW footage is circulating from a magnitude 7.4 earthquake that struck Colombia&#39;s Pacific region today. <br><br>The epicenter was near San José del Palmar in Chocó department, at a depth of around 96 km. <br><br>It was felt strongly across much of Colombia—including Bogotá, Medellín, and… <a href="https://t.co/X03limcIts">pic.twitter.com/X03limcIts</a></p>&mdash; Clash Report (@clashreport) <a href="https://x.com/clashreport/status/2086811623902052811?ref_src=twsrc%5Etfw">August 10, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">A powerful earthquake struck Colombia, and several buildings appeared to be about to collapse due to the powerful tremors. <a href="https://x.com/hashtag/Earthquake?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Earthquake</a> <a href="https://x.com/hashtag/colombia?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#colombia</a> <a href="https://x.com/hashtag/colombiaearthquake?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#colombiaearthquake</a> <a href="https://t.co/Kp2jWEuXlf">https://t.co/Kp2jWEuXlf</a> <a href="https://t.co/10A3kYSs2D">pic.twitter.com/10A3kYSs2D</a></p>&mdash; Bara (@Reueus) <a href="https://x.com/Reueus/status/2087024035591041294?ref_src=twsrc%5Etfw">August 11, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><p>நகரின் பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து தூசிப் படலம் பரவியது. பயத்தில் மக்கள் வீடுகளின் மாடியிலிருந்து குதித்தும் தப்பிக்க முயன்றனர்.</p><p>பெரேரா நகரில் 4 அடுக்கு மாடி கட்டிடம் உள்ளிட்ட பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.</p><p>மேனிசேல்ஸ் நகரின் புகழ்பெற்ற நவதோதிக் கதீட்ரல் தேவாலயத்தின் பக்கவாட்டுக் கோபுரம் இடிந்து விழுந்தது.</p><figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">At least 132 people confirmed dead, 570 injured in the <a href="https://x.com/hashtag/ColombiaEarthquake?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ColombiaEarthquake</a>. <a href="https://t.co/rNPKDi2PA2">pic.twitter.com/rNPKDi2PA2</a></p>&mdash; Upendrra Rai (@UpendrraRai) <a href="https://x.com/UpendrraRai/status/2087019747238183051?ref_src=twsrc%5Etfw">August 11, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2>உதவி</h2><p>அவசரகால நிதியாக கொலம்பியாவுக்கு சுமார் ரூ.130 கோடி வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.</p><p>எல் சால்வடார் அதிபர் நயீப் புக்கேலே, மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் மற்றும் சிலி அதிபர் ஜோஸ் அன்டோனியோ காஸ்ட் ஆகிய லத்தீன் அமெரிக்க நாட்டுத் தலைவர்கள் கொலம்பியாவுக்கு தேவையான மருத்துவக் குழுக்கள், மீட்புப் படைகள் மற்றும் நிவாரணப் பொருட்களை உடனடியாக அனுப்பத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு: முதலமைச்சர் விஜய் தலைமையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anti-drug-pledge-led-by-the-chief-minister</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anti-drug-pledge-led-by-the-chief-minister#comments</comments><guid isPermaLink="false">b720c112-d51c-47f7-a372-6bd95beb288b</guid><pubDate>Tue, 11 Aug 2026 05:00:07 +0000</pubDate><atom:updated>2026-08-11T05:00:07.444Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,போதைப்பொருள்,Drugs</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/516q2uxc/vijay.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/516q2uxc/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>போதைப்பொருள் ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட 15 காவல் துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் காவல் விருது மற்றும் பதக்கங்களை முதலமைச்சர் விஜய் வழங்கினார்.</strong></em> </p><p>சென்னை மாநில கல்லூரியில் இன்று போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் போதை பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு விருது வழங்கும் விழா ஆகியவை நடைபெற்றது. </p><h2><strong>உறுதிமொழி</strong></h2><p>இந்த விழாவில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தமிழக <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">முதலமைச்சர் விஜய்</a> விழாவில் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் முன்னிலையில் போதைப் பொருள் ஒழிப்பு உறுதி மொழியை வாசித்தார்.</p><p>அதனை மாணவ, மாணவிகள் திரும்ப சொல்லி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். விழா மேடையில் முதலமைச்சர் வாசித்த உறுதிமொழி வருமாறு:-</p><h2><strong>அறிவுரை</strong></h2><p>போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதை பழக்கத்துக்கு ஆளாக மாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதை பழக்கத்துக்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரை வழங்குவேன். </p><p>போதை பழக்கத்துக்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன். போதை பொருட்களின் உற்பத்தி நுகர்வு பயன்பாடு ஆகியவற்றுக்கு எதிராக தடுப்பு நடவடிக்கைகள் மூலமாக போதை பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என உளமாற உறுதி கூறுகிறேன்.</p><p>இவ்வாறு முதலமைச்சர் விஜய் உறுதி மொழியை வாசித்தார்.</p><h2><strong>ஆரவாரம்</strong></h2><p>இந்த விழாவுக்கு முதலமைச்சர் விஜய் வந்த போது மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர். பலர் விஜய் மேடை ஏறியதும் தங்களது ஆனந்தத்தை வெளிப்படுத்தும் வகையில் கூச்சலும் போட்டனர். </p><p>உறுதிமொழியை வாசிப்பதற்கு முன்பு முதலமைச்சர் விஜய் ‘குட்மார்னிங்’. அனைவரும் நன்றாக இருக்கிறீர்களா? உங்களை இங்கு சந்திப்பதில் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டார். </p><h2><strong>விருதுகள்</strong></h2><p>அப்போதும்  மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழி எடுக்கப்பட்ட பிறகு சிறப்பாக பணிபுரிந்த போலீஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் விருதுகளை வழங்கினார்.</p><p>இதன் பிறகு விழாவில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் தங்களது பள்ளி நிர்வாகிகளுடன் மேடைக்கு சென்று முதலமைச்சர் விஜய்யுடன் குழு புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.</p><p>முன்னதாக தமிழக அரசின் தலைமை செயலாளர் சாய்குமார், டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால், சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் மற்றும் கூடுதல் டி.ஜி.பி. சங்கர் ஆகியோர் முதலமைச்சர் விஜய்யை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY : ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை! சவரன் ரூ. 2,400 உயர்வு- முழு விவரம்!</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-11-08-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-11-08-2026#comments</comments><guid isPermaLink="false">ebd10d7e-20cc-43d2-b035-231146529038</guid><pubDate>Tue, 11 Aug 2026 04:43:02 +0000</pubDate><atom:updated>2026-08-11T04:43:02.351Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/v29o4453/gold07.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ தங்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/v29o4453/gold07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு 2400 ரூபாய் உயர்ந்துள்ளது தங்கம் வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</strong></em> </p><p>கடந்த சில நாட்களாக <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">தங்கம்</a> விலை ஏற்றத்துடன் காணப்படுகிறது. கடந்த வாரம் 3-ந்தேதி சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,06,000-க்கும், கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.13,250-க்கும் விற்பனையானது. 4-ந்தேதி சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,05,600-க்கும், கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.13,200-க்கு விற்பனையானது.</p><p>5-ந்தேதி காலை சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ரூ.1,06,880-க்கும், கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.13,360-க்கும் விற்பனையான நிலையில் மீண்டும் மாலையில் சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.1,07,840-க்கும் கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.13,480 விற்பனையானது. 6-ந்தேதி சவரனுக்கு ரூ.2,160 உயர்ந்து ரூ.1,10,000-க்கும், கிராமுக்கு ரூ.270 உயர்ந்து ரூ.13,750-க்கும் விற்பனையானது.</p><p>7-ந்தேதி <a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/why-is-the-price-of-gold-suddenly-rising-like-this">தங்கம்</a> விலை கிராமுக்கு ரூ.150 ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 900-க்கும், சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 200-க்கும் விற்பனையானது. 8-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.1,11,720-க்கும், கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.13,965-க்கு விற்பனையானது. 9-ந்தேதி ஒரு சவரன் ரூ.1,11,720-க்கும், ஒரு கிராம் ரூ.13,965-க்கும் விற்பனையானது. இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான நேற்று கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.13,950-க்கும் சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 600-க்கு விற்பனை செய்யப்பட்டது. </p><h2><strong>தங்கம் விலை</strong></h2><p>இந்நிலையில் சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு 300 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,250-க்கும் சவரனுக்கு 2400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு 2400 ரூபாய் உயர்ந்துள்ளது தங்கம் வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><h2><strong>வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>கடந்த சில தினங்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 260 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><h2><strong>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-</strong></h2><p>10-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,620</p><p>09-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,720</p><p>08-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,720</p><p>07-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,200</p><p>06-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,10,000</p><h2><strong>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-</strong></h2><p>10-08-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>09-08-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>08-08-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>07-08-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>06-08-2026- ஒரு கிராம் ரூ.250</p>]]></content:encoded></item><item><title>7,500mAh பேட்டரியுடன் சர்வதேச சந்தையில் அறிமுகமான ரெட்மி ஸ்மார்ட்போன்</title><link>https://www.maalaimalar.com/technology/newgadgets/redmi-17-5g-launched-globally-with-7500mah-battery-price-features</link><comments>https://www.maalaimalar.com/technology/newgadgets/redmi-17-5g-launched-globally-with-7500mah-battery-price-features#comments</comments><guid isPermaLink="false">c04ef986-7f3b-4714-b183-cdb771e1f987</guid><pubDate>Tue, 11 Aug 2026 04:38:00 +0000</pubDate><atom:updated>2026-08-11T04:38:00.000Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Redmi,ரெட்மி,smartphone,ஸ்மார்ட்போன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/loswf5ub/Redmi-17-5G.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Redmi 17 5G]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/loswf5ub/Redmi-17-5G.png?w=280" width="280"></media:thumbnail><category>புதிய கேஜெட்டுகள் (New gadgets)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சியோமி நிறுவனத்தின் <a href="https://www.maalaimalar.com/topic/redmi">ரெட்மி</a> பிரான்டு தனது முற்றிலும் புதிய ரெட்மி 17 ஸ்மார்ட்போனினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. முன்னதாக இதே <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மார்ட்போன்</a> சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது சர்வதேச சந்தையிலும் வெளியாகியுள்ளது.</p><p>இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 4 சீரிஸ் சிப்செட், LPDDR4x ரேம், UFS 2.2 ஸ்டோரேஜ் உடன் வருகிறது. சீன சந்தையில் ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போனுடன் அதன் 4ஜி வெர்ஷனும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடலில் மீடியாடெக் ஹீலியோ ஜி91 அல்ட்ரா சிப்செட் கொண்டிருக்கிறது.</p><h2>அம்சங்கள்:</h2><p>அம்சங்களை பொருத்தவரை ரெட்மி 17 5ஜி மாடலில் 6.9 இன்ச் LCD ஸ்கிரீன், HD+ ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், யுனிசாக் டி8300 பிராசஸர், 4 ஜிபி அல்லது 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு சார்ந்த சியோமியின் சொந்த ஹைப்பர் ஓ.எஸ். 3 வழங்கப்பட்டுள்ளது.</p><p>புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 7500mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 45 வாட் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.</p><p>கனெக்டிவிட்டிக்கு டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத், என்.எப்.சி, யுஎஸ்பி டைப் சி போர்ட், 3.5mm ஹெட்போன் ஜாக் வழங்கப்பட்டுள்ளது.</p><h2>விலை விவரங்கள்:</h2><p>மலேசிய சந்தையில் இந்த ஸ்மார்ட்போனின் விலை 769 ரிக்கெட்ஸ் இந்திய மதிப்பில் ரூ. 18,000 என தொடங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை 869 ரிக்கெட்ஸ் இந்திய மதிப்பில் ரூ. 20,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>படம் வைத்து ஏமாற்ற வேண்டிய அவசியம் இல்லை- செங்கோட்டையனுக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-session-ops-and-sengottaiyan-arguments</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-session-ops-and-sengottaiyan-arguments#comments</comments><guid isPermaLink="false">5eb37cbd-d2b1-4e25-84e2-ead7f22ee1fd</guid><pubDate>Tue, 11 Aug 2026 04:26:05 +0000</pubDate><atom:updated>2026-08-11T04:26:05.529Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>செங்கோட்டையன்,Sengottaiyan,O Panneer Selvam,தமிழக சட்டசபை,TN assembly,ஓ பன்னீர்செல்வம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/18jg5mfs/OPS.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ செங்கோட்டையன்- ஓ.பன்னீர்செல்வம்]]></media:title><media:description type="html"><![CDATA[ செங்கோட்டையன்- ஓ.பன்னீர்செல்வம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/18jg5mfs/OPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>5 ஆண்டுகளுக்குள் சொன்னவற்றை நிறைவேற்றுவோம், ஓ.பன்னீர்செல்வம் சொல்வதை போல் 3 மாதத்தில் செய்து சரித்திரம் படைக்க முடியாது.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழக சட்டசபையில்</a> பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 3-வது நாளாக இன்று தொடங்கியது. சட்டசபை கூட்டம் தொடங்கியதும் முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-</p><h2><strong>பெயர் மாற்றப்பட்டியல்</strong></h2><p>தமிழக வெற்றிக்கழகம் தலைமையிலான அரசின் நிதிநிலை அறிக்கையானது ஏமாற்றின் வடிவமாக ஜொலிக்கும் பட்ஜெட். செய்வதை மட்டும் தான் சொல்வோம் எனக்கூறி அள்ளித்தெளித்த வாக்குறுதிகளை த.வெ.க. அரசு மறந்துவிட்டது. துறை ரீதியான கூட்டம் நடத்தி அமைச்சரவை கூட்டம் நடத்திய பின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தமிழக வெற்றிக்கழக அரசு தாக்கல் செய்துள்ள நிதி நிலை அறிக்கை பெயர் மாற்றப்பட்டியல் போல் உள்ளது.</p><p>உரிமைத் தொகை உயரவில்லை, 6 சிலிண்டர் என எந்த அறிவிப்பும் வராததால் மகளிர் ஏமாற்றம். மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்க நிதி ஒதுக்கீடு திட்டங்கள் பட்ஜெட்டில் இல்லை. மாநிலம் முழுவதும் அனைத்து அரசு பேருந்திலும் இலவச பயணம் என்ற விடியல் பயண திட்டம் அறிவிக்கப்படவில்லை. </p><p>திருப்புகின்ற பக்கமெல்லாம் தி.மு.க. ஆட்சியின் திட்டங்களே பட்ஜெட்டில் உள்ளன. புதிய அரசின் திட்டங்களை தேடுகிறேன், தேடுகிறேன், தேடிக்கொண்டே இருக்கிறேன் என்று கூறினார். </p><p>ஓ.பன்னீர்செல்வம் பேச்சுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் கூறுகையில், 5 ஆண்டுகளுக்குள் சொன்னவற்றை நிறைவேற்றுவோம், ஓ.பன்னீர்செல்வம் சொல்வதை போல் 3 மாதத்தில் செய்து சரித்திரம் படைக்க முடியாது. ஓ.பன்னீர்செல்வம் இடம் மாறியிருப்பதற்காக இவ்வளவு துதி பாட வேண்டும் என்று அவசியம் இல்லை என்றார். </p><p>இதற்கு ஓ.பன்னீர்செல்வம் பதில் கூறுகையில், முதலில் இடம் மாறியது செங்கோட்டையன் தான் என்றார். </p><p>மேலும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறுகையில், இடத்தை மாற்றியபோது அவரின் இதயத்தின் அருகே வைத்துள்ள நிழல் படத்தை மாற்றவேண்டாம் என கூறினார் முதலமைச்சர் விஜய். ஜெயலலிதா இருந்த காலத்திலேயே முதலமைச்சராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம் யார் படத்தை தற்போது வைத்துள்ளார் என்றார். </p><p>ஓ.பன்னீர்செல்வம் இடத்தை மட்டும் அல்ல இதயத்தையும் மாற்றிவிட்டார் என அமைச்சர் ராஜ்மோகன் பேசினார். </p><p>இதற்கு ஓ.பன்னீர்செல்வம் பதில் கூறுகையில், அண்ணா, ஜெயலலிதா, கலைஞர் என அனைவரும் இதயத்தில் உள்ளனர். படம் வைத்து ஏமாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றார். </p><p>இவ்வாறு சட்டசபையில் காரசார விவாதம் நடைபெற்று வருகிறது. </p>]]></content:encoded></item><item><title>ரூ.5 லட்சம் பணத்தை வயலில் புதைத்துவிட்டு, எங்கு புதைத்தோம் என்பதை மறந்த விவசாயி.. அடுத்து காத்திருந்த அதிர்ச்சி</title><link>https://www.maalaimalar.com/news/national/buried-cash-destroyed-by-termites-rajasthan-farmer-loses-5-lakh-as-banks-refuse-to-accept-damaged-notes</link><comments>https://www.maalaimalar.com/news/national/buried-cash-destroyed-by-termites-rajasthan-farmer-loses-5-lakh-as-banks-refuse-to-accept-damaged-notes#comments</comments><guid isPermaLink="false">23b3dc48-12b0-4249-9836-09c97ca8cb6b</guid><pubDate>Tue, 11 Aug 2026 04:12:46 +0000</pubDate><atom:updated>2026-08-11T04:12:46.473Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விவசாயி,Farmer,வைரல்,viral,bank,வங்கி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/dlj04xnt/tn-17.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விவசாயி]]></media:title><media:description type="html"><![CDATA[ விவசாயி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/dlj04xnt/tn-17.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருடர்கள் பயத்தால் பணத்தை வீட்டில் வைக்க முடியாமல் வயலில் புதைத்து வைத்த <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">விவசாயி </a>ஒருவருக்குப் பெரும் ஏமாற்றம் காத்திருந்தது. </p><h2>விவசாயி</h2><p> ராஜஸ்தானை சேர்ந்த ஒரு விவசாயி, ஒரு வருடத்திற்கு முன்பு தனது நிலத்தை விற்றதன் மூலம் ரூ. 5 லட்சம் கிடைத்தது.</p><p>அந்தப் பணத்தைக் கொண்டு வீடு கட்ட நினைத்த அவர், வீட்டில் வைத்தால் திருடு போய்விடும் என்ற பயத்திலும், வீண் செலவு ஆகக் கூடாது என்பதற்காகவும் அப்பணத்தை அப்போதே ஒரு பாலிதீன் பையில் சுற்றி வயலில் குழிதோண்டிப் புதைத்து வைத்தார்.</p><p>ஒரு வருடத்திற்கு பின் பணத்தை  மீண்டும் எடுக்க நினைத்த அவர், மதுப் பழக்கம் மற்றும் ஞாபக மறதி காரணமாக எந்த இடத்தில் பணத்தை புதைத்து வைத்தோம் என்பதை அந்த விவசாயி மறந்துவிட்டார். </p><p>வயலில் பலமுறை தேடியும் பணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.</p><p>இறுதியில் தனது மனைவி மற்றும் மகனிடம் விஷயத்தைக் கூறவே, அவர்களும் வயலின் பல இடங்களில் தோண்டித் தேடிப் பார்த்தனர். இருப்பினும் பணம் கிடைக்கவில்லை.</p> <h2>கிடைத்தது எப்படி?</h2><p>சமீபத்தில் மழைக்கால சாகுபடி பணிகளுக்காக வயலைத் தயார் செய்து, வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, விவசாயியின் மனைவிக்கும் மகனுக்கும் அந்தப் பாலிதீன் பை கிடைத்தது.</p> <h2>அடுத்த அதிர்ச்சி</h2><p>பையைத் திறந்து பார்த்த போது, உள்ளிருந்த ரூபாய் நோட்டுகள் முழுவதையும் கரையான்கள் அரித்துச் சின்னா பின்னமாக்கியிருந்தன.</p><p>சேதமடைந்த நோட்டுகளையாவது மாற்றிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில், உள்ளூரில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளைக்கு சென்றுள்ளார்.</p><p>ஆனால், நோட்டுகளின் நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால், அவற்றைப் பெற்றுக் கொள்ள வங்கி அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.</p><p>அதைத் தொடர்ந்து மாவட்ட முதன்மை வங்கி கிளையை அணுகியும் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.</p>]]></content:encoded></item><item><title>தமிழக சட்டசபை தொடங்கியது... நீட், வெளிநாட்டு பங்களிப்பு மசோதாவுக்கு எதிராக தனித்தீர்மானங்கள் தாக்கல் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-session-started</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-session-started#comments</comments><guid isPermaLink="false">beac5d2a-d690-47cf-99f4-9fe51fff1023</guid><pubDate>Tue, 11 Aug 2026 04:02:52 +0000</pubDate><atom:updated>2026-08-11T04:02:52.812Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,நீட் தேர்வு,Neet exam,TN assembly,தனித்தீர்மானங்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/0brt4tif/JCDPrabhakar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்]]></media:title><media:description type="html"><![CDATA[ சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/0brt4tif/JCDPrabhakar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழக சட்டசபை கூட்டம் தொடங்கியது.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபையில்</a> பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 3-வது நாளாக இன்று நடைபெறுகிறது. இந்தநிலையில், நீட் தேர்வை திரும்பப் பெற்று பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தும் தனித் தீர்மானத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் இன்று சட்டசபையில் தாக்கல் செய்ய உள்ளார். </p><p>நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு கடந்த 2021-ல் தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றிய பின்பும் ஜனாதிபதி அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.</p><h2><strong>அமைச்சர் அருண்ராஜ்</strong></h2><p>நீட் வினாத்தாள் கசிவு, முறைகேடுகளால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிப்பு, நீட் தேர்வால் மாணவர்கள் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதால் நாடு முழுவதும் உள்ள மாணவர்களின் நம்பிக்கையை இந்த தேர்வு இழந்துள்ளது. ஆகையால், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அமைச்சர் அருண்ராஜ் கோர உள்ளார்.</p> <p>மற்றொரு தீர்மானமாக, வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறைப்படுத்தும் திருத்த மசோதாவை தற்போதைய வடிவில் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் தனித் தீர்மானத்தை பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தாக்கல் செய்ய உள்ளார்.</p><p>இந்தத் தீர்மானங்களின் மீது விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அசாம் - அருணாச்சல பிரதேச எல்லைப் பிரச்சனை.. துப்பாக்கிச்சூட்டில் 18 பேர் காயம் - நால்வர் கவலைக்கிடம்</title><link>https://www.maalaimalar.com/news/national/assam-arunachal-border-firing-18-injured-and-4-critical-in-land-dispute-clash</link><comments>https://www.maalaimalar.com/news/national/assam-arunachal-border-firing-18-injured-and-4-critical-in-land-dispute-clash#comments</comments><guid isPermaLink="false">2f50362f-9136-4770-9cc4-e16cc35ce989</guid><pubDate>Tue, 11 Aug 2026 03:57:15 +0000</pubDate><atom:updated>2026-08-11T03:57:15.960Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>துப்பாக்கிச்சூடு,அசாம்,Assam,அருணாச்சல பிரதேசம்,Arunachal Pradesh,shooting incident</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/kuceq0lo/tn-15.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அசாம் - அருணாச்சல பிரதேச எல்லை]]></media:title><media:description type="html"><![CDATA[ அசாம் - அருணாச்சல பிரதேச எல்லை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/kuceq0lo/tn-15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/assam">அசாமின் </a>தேமாஜி மாவட்டம்  அருணாச்சலப் பிரதேச எல்லையில் அமைந்துள்ளது. </p><p>தேமாஜி மாவட்டத்தில் கோகாமுக் வருவாய் வட்டத்திற்குட்பட்ட மின்மாங் படாட்டி என்ற பகுதியில், நில ஆக்கிரமிப்பு தொடர்பாக இரு மாநில எல்லைக் கிராம மக்களுக்கு இடையே நீண்டகாலமாக தகராறு இருந்து வந்தது.</p><h2>துப்பாக்கிச்சூடு </h2><p>இந்நிலையில் நேற்று அருணாச்சலப் பிரதேச பகுதியிலிருந்து வந்த மர்ம நபர்கள், அசாம் கிராம மக்களை நோக்கிக் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.</p><p>இந்த துப்பாக்கிச் சூட்டில் 18 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 18 பேரும் உடனடியாக கோகாமுக் கிராமப்புற மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.  இதில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. </p><p>அவர்கள் மேல் சிகிச்சைக்காக திப்ரூகரில் உள்ள அசாம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.</p> <h2>அசாம் முதல்வர் விளக்கம்</h2><p>இச்சம்பவத்திற்கு பிறகு பேசிய அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, "அசாம் எல்லைப் பகுதியில் கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.</p><p>அசாமின் ஒரு அங்குல நிலத்தைக் கூட இழக்கக் கூடாது என்று காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். இரு மாநிலத் தலைமைச் செயலாளர்களும், டிஜிபிக்களும் பேசிச் சூழலைத் தணித்து வருகின்றனர்" என்றார்.</p><p>அசாம் கல்வி அமைச்சர் ரனோஜ் பெகு அருணாச்சலப் பிரதேச அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுப்பப்பட்டுள்ளார்.</p> <h2>எல்லைப் பிரச்சினை</h2><p>அசாம் - அருணாச்சல பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களுக்கும் இடையே 804 கி.மீ நீளமுள்ள எல்லைப் பகுதி உள்ளது.</p><p>சுதந்திரத்திற்குப் பின் வடகிழக்கு மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்ட போது இந்த எல்லைப் பிரச்சினை தொடங்கியது.</p><p>அருணாச்சலப் பிரதேசம் 1987இல் தனி மாநில அந்தஸ்து பெற்ற பிறகு, முத்தரப்புக் குழு அளித்த பரிந்துரைகளை அசாம் ஏற்க மறுத்ததால், இந்த வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.</p> <p>ஜூலை 29 அன்று அசாம் சட்டப்பேரவையில் அளிக்கப்பட்ட தகவலின்படி, அசாமின் 7 மாவட்டங்களில் உள்ள 16,144 ஹெக்டேர் நிலம் அருணாச்சலப் பிரதேசத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.</p><p>அதேவேளையில் அருணாச்சலப் பிரதேசமும் 858 சதுர கி.மீ நிலத்திற்கு உரிமை கோரி வருகிறது.</p><p>இச்சிக்கலை தீர்க்க ஜூலை 15, 2022 அன்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவும், அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா கண்டும் 'நாம்சாய் பிரகடனத்தில்' கையெழுத்திட்டபோதிலும் சிக்கல் தீரவில்லை.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்த்தாயே! உன்னைச் செயல் மறந்து மட்டுமல்ல செயல் புரிந்தும் வாழ்த்துவோம் - வைரமுத்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vairamuthu-wishes-tamil-thai-vazhthu-always-comes-first-resolution-passes-tn-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vairamuthu-wishes-tamil-thai-vazhthu-always-comes-first-resolution-passes-tn-assembly#comments</comments><guid isPermaLink="false">e95fda52-2c7f-41b0-b13f-d692b97d919d</guid><pubDate>Tue, 11 Aug 2026 03:54:18 +0000</pubDate><atom:updated>2026-08-11T03:54:18.904Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,Vairamuthu,TN assembly,தமிழ்த்தாய் வாழ்த்து,Tamil Thai Vazhthu,வைரமுத்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/yg6yghrj/vairamuthu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vairamuthu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/yg6yghrj/vairamuthu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்த்தாய் வாழ்த்தை கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் பொது அமைப்பு நிகழ்ச்சிகளில் கட்டாயமாக முதலில் பாட வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/priority-for-tamil-thai-vazhthu-special-resolution-passed-unanimously">சட்டசபையில்</a> தனித்தீர்மானம் கொண்டு வந்தார். அது அனைவரின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.</p><p>இதுதொடர்பாக கவிஞர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">வைரமுத்து</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p> <p>சட்டமன்றத்தில்</p><p>தமிழ்த்தாய் வாழ்த்துக்குத்</p><p>தனித் தீர்மானம் இயற்றிய</p><p>தமிழ்நாட்டரசையும்</p><p>ஒருதுளி மறுப்புமின்றி</p><p>ஒருமனதாக</p><p>நிறைவேற்றிக்கொடுத்த</p><p>அனைத்துக் கட்சித்</p><p>தலைவர்களையும்</p><p>பரந்துபட்ட தமிழ் உலகம்</p><p>பாராட்டுகிறது;</p><p>எழுந்துநின்று நன்றி சொல்கிறது</p> <p>தமிழ்த்தாய் வாழ்த்து என்பது</p><p>வெறும் சொற்கூட்டமல்ல;</p><p>அது</p><p>புவியியல், வரலாறு,</p><p>பீடு, பெருமிதம்</p><p>அனைத்தும் கொண்ட</p><p>இனத்தின் குறியீடாகும்</p> <p>தேசிய கீதத்தின் அளவுக்குத்</p><p>தமிழ்த்தாய் வாழ்த்தைத்</p><p>தமிழர்கள் அனைவரும்</p><p>மனப்பாடம் செய்யவில்லை</p><p>பள்ளியிலிருந்தே அது</p><p>மனப்பாடப் பொருளாக</p><p>மாற்றப்பட வேண்டும்</p> <p>மாண்புமிகு உறுப்பினர்கள் சிலர்</p><p>முன்மொழிந்ததைப் போலவே</p><p>அது சட்டமாகவும்</p><p>இயற்றப்பட வேண்டும்</p> <p>தமிழ்த்தாயே!</p><p>உன்னைச்</p><p>செயல் மறந்து மட்டுமல்ல</p><p>செயல் புரிந்தும் வாழ்த்துவோம்</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>ஸ்மார்ட்போன் விலையை மீண்டும் உயர்த்திய விவோ</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/vivo-x300-fe-price-increased-by-rs-3000-new-8gb-256gb-variant-tipped</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/vivo-x300-fe-price-increased-by-rs-3000-new-8gb-256gb-variant-tipped#comments</comments><guid isPermaLink="false">426bf472-54f0-4c63-9013-2b4fbb0742eb</guid><pubDate>Tue, 11 Aug 2026 03:42:00 +0000</pubDate><atom:updated>2026-08-11T03:42:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vivo,smartphone,ஸ்மார்ட்போன்,விவோ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/oz4u20ea/Vivo-X300-FE.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vivo X300 FE]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/oz4u20ea/Vivo-X300-FE.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/vivo">விவோ</a> நிறுவனம் இந்திய சந்தையில் தனது X300 FE ஸ்மார்ட்போன் விலையை திடீரென உயர்த்தியது. அதன்படி தற்போது விவோ X300 FE ஸ்மார்ட்போனின் விலை ரூ. 89,999 என மாறியுள்ளது. இது ஸ்மார்ட்போனின் அறிமுக விலையை விட ரூ. 10,000 அதிகம் ஆகும். </p><p>இந்திய சந்தையில் விவோ X300 FE <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மார்ட்போன்</a> கடந்த மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், உற்பத்தி செலவீனங்கள் மற்றும் உதிரி பாகங்கள் விலை உயர்வு காரணமாக ஸ்மார்ட்போனின் விலை பல முறை மாற்ற்பட்டது. இதுதவிர விவோ நிறுவனம் X300 FE ஸ்மார்ட்போனின் புதிய வெர்ஷனை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. </p><h2>புதிய விலை விவரங்கள்:</h2><p>விலை உயர்வின் படி விவோ X300 FE ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 86,999-இல் இருந்து ரூ. 89,999 என மாறியுள்ளது. இதே போல் இந்த ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 96,999-இல் இருந்து ரூ. 99,999 என மாறியுள்ளது.</p><p>புது வெர்ஷனை பொருத்தவரை டிப்ஸ்டர் சஞ்சு வெளியிட்டுள்ள தகவல்களின் படி, விவோ X300 FE ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி ஆப்ஷனில் விற்பனைக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. புதிய விவோ X300 FE ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 84,999 என நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது.</p><h2>அம்சங்கள்:</h2><p>விவோ X300 FE ஸ்மார்ட்போனில் 6.31 இன்ச் LTPO 1.5K AMOLED டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 பிராசஸர், 6500mAh பேட்டரி, 90 வாட் வயர்டு ஃபிளாஷ் சார்ஜ், 40 வாட் வயர்லெஸ் ஃபிளாஷ் சார்ஜ் வசதியுடன் வருகிறது.</p><p>மேலும், 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு லென்ஸ், 50MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>இந்த வார விசேஷங்கள்: 11-8-2026 முதல் 17-8-2026 வரை
</title><link>https://www.maalaimalar.com/spirituality/this-week-specials-11-8-2026-to-17-8-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/this-week-specials-11-8-2026-to-17-8-2026#comments</comments><guid isPermaLink="false">1c6fdab1-c0a4-4f0c-83a5-b7ffa81eb796</guid><pubDate>Tue, 11 Aug 2026 03:12:32 +0000</pubDate><atom:updated>2026-08-11T03:12:32.103Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,வழிபாடு,Astrology,this week special,இந்த வார விசேஷங்கள்,worship</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/z6te7poi/aadipooram.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Aadi pooram amman valaikappu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/z6te7poi/aadipooram.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>11-ந் தேதி (செவ்வாய்)</h2><p>* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் வசந்த உற்சவம்.</p><p>* திருவாடானை சிநேகவல்லியம்மன் வெண்ணெய்த்தாழி சேவை.</p><p>* குரங்கணி முத்துமாலையம்மன் புறப்பாடு.</p><p>* நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன் விருட்சப சேவை.</p><p>* சமநோக்கு நாள்.</p> <h2>12-ந் தேதி (புதன்)</h2><p>* ஆடி அமாவாசை.</p><p>* திருச்செந்தூர் சுப்பிரமணியர் தீர்த்தாபிஷேகம்.</p><p>* சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் பெருந்திருவிழா.</p><p>* காரையார் சொரிமுத்தையனார் கோவிலில் ஆடி அமாவாசை உற்சவம்.</p><p>* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் தங்க கருட வாகனத்தில் பவனி.</p><p>* கீழ்நோக்கு நாள்.</p> <h2>13-ந் தேதி (வியாழன்)</h2><p>* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆவணி உற்சவம் ஆரம்பம்.</p><p>* திருவில்லிபுத்தூர் ஆண்டாள் புஷ்பப் பல்லக்கிலும், ரெங்கமன்னார் குதிரை வாகனத்திலும் பவனி.</p><p>* திருவாடானை சிநேகவல்லியம்மன், நயினார் கோவில் சவுந்திரநாயகி தலங்களில் ரத உற்சவம்.</p><p>* கீழ்நோக்கு நாள்.</p> <h2>14-ந் தேதி (வெள்ளி)</h2><p>* ஆடிப்பூரம்.</p><p>* அங்கமங்களம் அன்னபூரணி அம்பாள் வளைகாப்பு உற்சவம்.</p><p>* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் தங்கப் பல்லக்கில் பவனி.</p><p>* படைவீடு ரேணுகாம்பாள் புறப்பாடு.</p><p>* கீழ்நோக்கு நாள்.</p> <h2>15-ந் தேதி (சனி)</h2><p>* நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன் ஊஞ்சலில் காட்சி.</p><p>* நயினார்கோவில் சவுந்திரநாயகி தபசுக் காட்சி.</p><p>* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் வெள்ளி கமலத்தில் தவக்கோலம்.</p><p>* மேல்நோக்கு நாள்.</p> <h2>16-ந் தேதி (ஞாயிறு)</h2><p>* நாக சதுர்த்தி.</p><p>* திருநெல்வேலி நெல்லையப்பர் ரிஷப வாகனத்தில் பவனி.</p><p>* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆவணி பெருவிழா தொடக்கம்.</p><p>* மிலட்டூர் விநாயகப்பெருமான் புறப்பாடு.</p><p>* சமநோக்கு நாள்.</p> <h2>17-ந் தேதி (திங்கள்)</h2><p>* கருட பஞ்சமி.</p><p>* திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோவிலில் ஆவணி உற்சவம் ஆரம்பம்.</p><p>* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நாரைக்கு மோட்சம் கொடுத்தல்.</p><p>* சமநோக்கு நாள்.</p> ]]></content:encoded></item><item><title>உயிர் பயம்.. ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் ஏறுவதுபோல நாடகமாடி உணவு டிரக்கில் ஏறி துருக்கியில் இருந்து ரகசியமாக தப்பிய டிரம்ப்?</title><link>https://www.maalaimalar.com/news/world/secret-flight-switch-trump-quietly-moved-from-air-force-one-to-c-32a-via-catering-truck-amid-iran-threat</link><comments>https://www.maalaimalar.com/news/world/secret-flight-switch-trump-quietly-moved-from-air-force-one-to-c-32a-via-catering-truck-amid-iran-threat#comments</comments><guid isPermaLink="false">434a79ba-5c57-49a7-aa71-2b79cd9c46e7</guid><pubDate>Tue, 11 Aug 2026 03:06:25 +0000</pubDate><atom:updated>2026-08-11T03:06:25.016Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிரம்ப்,நேட்டோ,ஈரான் போர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/v1v7t2pb/tn-16.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டிரம்ப்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிரம்ப்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/v1v7t2pb/tn-16.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஐரோப்பாவின் நேட்டோ கூட்டமைப்பில் உள்ள ஓரே இஸ்லாமிய நாடு துருக்கி. துருக்கியில் கடந்த ஜூலை 7 நேட்டோ வருடாந்திர மாநாட்டில் அமெரிக்க அதிபர் <a href="https://www.maalaimalar.com/topic/donald-trump">டிரம்ப் </a>கலந்துகொண்டார். </p><p>இதில் பங்கேற்க, கத்தார் பரிசாக வழங்கிய ஏர் போர்ஸ் ஒன் போயிங் 747-8 விமானத்தில் வருகை புரிந்த டிரம்ப் அன்றைய தினம் திரும்பிச் செல்லும்போது அந்த புதிய விமானத்தில் ஏறாமல் தனது பழைய ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் ஏறினார். </p><p>புதிய விமானத்தில் வந்திறங்கி, புறப்படும் போது திடீரென பழைய விமானத்திற்கு மாறியது சந்தேகங்களை ஏற்படுத்தியிருந்தது.  </p><p>இந்நிலையில் அவர் அன்றைய தினம் அந்த பழைய ஏர் போர்ஸ் ஒன் விமானதில் ஏறுவதுபோல் ஊடகங்களை ஏமாற்றிவிட்டு வேறொரு சிறிய ரக ராணுவ விமானத்தில் துருக்கியில் இருந்து டிரம்ப் வெளியேறியதாக தகவல் வெளியாகி உள்ளது. </p><p>ஈரான் போர் உச்சக்கட்டத்தில் இருந்ததும், தான் படுகொலை செய்யப்படுவோம் என்ற அச்சுறுத்தல் காரணமாகவும் டிரம்ப் இந்த முறையில் ரகசியமாக பயணித்ததாக கூறப்படுகிறது.</p><h2>தி வாஷிங்டன் போஸ்ட்</h2><p>'தி வாஷிங்டன் போஸ்ட்' வெளியிட்டுள்ள செய்தியின்படி, துருக்கி தலைநகர் அங்காராவில் நேட்டோ மாநாட்டை முடித்துக்கொண்டு புறப்பட்ட டிரம்ப், கேமராக்களுக்கு முன் தனது பழைய ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் ஏறுவது போலக் காண்பிக்கப்பட்டது.</p><p>ஆனால், விமானத்திற்குள் சென்ற சில நிமிடங்களில், ஹைட்ராலிக் வசதி கொண்ட விமான நிலைய உணவு டிரக் மூலம் டிரம்ப் மற்றும் அவரது உதவியாளர்கள் ரகசியமாக வெளியேற்றப்பட்டனர்.</p><p>அங்கிருந்து அவர் அமெரிக்க ராணுவத்தின் சிறிய C-32A என்ற மாற்று விமானத்திற்கு மாற்றப்பட்டு, இங்கிலாந்தில் RAF Mildenhall விமானத் தளத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து அமெரிக்கா சென்றடைந்துள்ளார்.</p><p>டிரம்ப்  இன்றி பழைய ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் பயணித்த பத்திரிகையாளர்கள் மற்றும் சில வெள்ளை மாளிகை ஊழியர்களிடம், விமானத்தின் ஜன்னல் திரைகளை மூடி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.</p><h2>விளக்கம்</h2><p>ஈரான் எல்லையை ஒட்டிய துருக்கிக்கு டிரம்ப் சென்றிருந்த சமயத்தில், ஈரானின் படுகொலை அச்சுறுத்தல் குறித்த நம்பகமான தகவல் அமெரிக்க உளவுத்துறைக்கு கிடைத்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>முன்னதாக, 2000ஆம் ஆண்டில்  அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் பாகிஸ்தானுக்கு சென்றபோதும், தனது அதிகாரப்பூர்வ ஏர் போர்ஸ் ஒன் விமானத்தை வைத்து நாடகமாடி பின்னர் அடையாளமற்ற வேறொரு விமானத்தில் பயணித்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>புண்ணியம் சேர்க்கும் ஆடி அமாவாசை</title><link>https://www.maalaimalar.com/spirituality/aadi-amavasai-2</link><comments>https://www.maalaimalar.com/spirituality/aadi-amavasai-2#comments</comments><guid isPermaLink="false">7b364de3-c577-4d1c-a722-992cf9766056</guid><pubDate>Tue, 11 Aug 2026 02:35:00 +0000</pubDate><atom:updated>2026-08-11T02:35:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,வழிபாடு,worship,aadi amavasai,aadi amavasai tharpanam,ஆடி அமாவாசை,தர்ப்பணம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/p0xrvr7c/aadiamavasai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tharpanam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/p0xrvr7c/aadiamavasai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[  <p>அமாவாசை என்பது நம் முன்னோர்களின் ஆசியை பெறுவதற்கு மிகவும் உகந்த நாளாகும். </p><h2>அமாவாசை</h2><p>ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும், ஆடி, தை, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தவை. வருடம் முழுவதும் அமாவாசையில் விரதம் இருந்து, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள், இந்த மூன்று அமாவாசைகளிலாவது தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.</p> <h2>ஆடி அமாவாசை</h2><p>அதிலும் ஆடி அமாவாசை மிகவும் விசேஷம். ஆடி மாதத்தில் தெய்வ சக்திகள் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் எந்த தெய்வத்தை எப்படி வழிபட்டாலும் நம் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் ஆடி அமாவாசையில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், அவர்களின் ஆன்மா மகிழ்ச்சி அடைந்து, மன நிறைவுடன் நமக்கு ஆசீர்வாதம் வழங்கும். மேலும், அவர்களின் ஆன்மாவும் மோட்சம் அடையும்.</p> <h2>அமாவாசை சிறப்பு</h2><p>அமாவாசை அன்று, சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இருப்பார்கள். சூரிய பகவான், நமக்கு ஆற்றல், வீரம் தரவல்லவர். சந்திரன், மனதுக்கு அதிபதியானவர். ஆடி அமாவாசையில், சந்திரனின் சொந்த வீடான கடக ராசியில் சூரியனும், சந்திரனும் இணைந்திருப்பார்கள். இதனால் ஆடி அமாவாசை மேலும் சிறப்பு பெறுகிறது.</p> <h2>மூன்று கடன்கள்</h2><p>சாஸ்திரங்களின்படி, மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் தேவ கடன், பித்ரு கடன், ரிஷி கடன் என மூன்று கடன்கள் உள்ளன. </p><h2>தேவகடன்</h2><p>தேவ கடன் என்பது இயற்கை வளங்களான நீர், காற்று, சூரியன் மற்றும் இறைசக்திக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடனாகும். </p><h2>ரிஷி கடன்</h2><p>ரிஷி கடன் என்பது ஞானம், ஆன்மிக அறம், வேதங்கள், சாஸ்திரங்கள் போன்றவற்றை வழங்கிய முனிவர்கள் மற்றும் குருமார்களுக்கு நாம் வழங்கும் நன்றிக் கடனாகும்.</p>  <h2>பித்ரு கடன்</h2><p>பித்ரு கடன் என்பது நம்மை பெற்றெடுத்து, வளர்த்த பெற்றோர் மற்றும் முன்னோர்களுக்கு செலுத்த வேண்டிய நன்றிக் கடனாகும். இதை, மறைந்த முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பதன் மூலம் தீர்க்க வேண்டும். பித்ரு கடனை அடைக்காவிட்டால் 'பித்ரு தோஷம்' உண்டாகும்.</p><h2>அன்னதானம்</h2><p>நம்மில் பலரும் தர்ப்பணம் செய்ய நேரமில்லை என்று சொல்லி தவிர்க்கிறோம். அதற்கு பதிலாக அன்னதானம் போன்று வேறு ஏதாவது செய்யலாம் என்கிறோம். அன்னதானம் என்பது பெரும் புண்ணியத்தை தரவல்லதுதான். ஆனால் நம் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமையை செய்யாமல், அதற்கு பதிலாக அன்னதானம் செய்கிறேன் என்றால் அதனால் எந்தப் பலனும் இல்லை. எனவே கட்டாயமாக தர்ப்பணம் செய்ய வேண்டும்.</p> <h2>சிவபெருமான் திருவடி</h2><p>ஒரு சமயம் சிவபெருமானின் திருவடியை காண்பதற்காக மகாவிஷ்ணு வராக (பன்றி) அவதாரம் எடுத்தார். வராக தோற்றத்தில் பூமியை குடைந்து சென்றபோது, மகாவிஷ்ணுவின் உடம்பில் இருந்து பூமியில் விழுந்த வியர்வை துளிகள் கருப்பு எள்ளாக மாறியதாக புராணங்கள் கூறுகின்றன. எனவே முன்னோர்களுக்கு அளிக்கும் தர்ப்பணத்தில் கருப்பு எள்ளை சேர்த்துக்கொள்வது மிகவும் புண்ணியம் தரும்.</p><h2>தர்ப்பணம்</h2><p>ஆடி அமாவாசை அன்று, அருகில் உள்ள புனித நீர்நிலைகளுக்கு சென்று நீராடி தர்ப்பணம் கொடுக்கலாம். </p><p>காலையில் சூரிய உதயத்திற்கு பின்னரே தர்ப்பணம் கொடுக்க வேண்டும். தர்ப்பணம் செய்யும்போது, தர்ப்பைப் புல், கருப்பு எள், தண்ணீர் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். முன்னோர்கள் பெயர்களை சொல்லியபடி எள் கலந்த நீரை கீழே விட வேண்டும். குறைந்தது மூன்று தலைமுறை பெயர்களையாவது சொல்வது சிறந்தது.</p> <h2>முன்னோர்களுக்கு படையல்</h2><p>நீர் நிலைகளுக்கு செல்ல முடியாதவர்கள், வீட்டிலேயே தர்ப்பணம் கொடுக்கலாம். அன்றைய தினம் முன்னோர்களுக்கு பிடித்த உணவை படையல் செய்து, பின்னர் காகங்களுக்கு வைக்கலாம். இதன்மூலம் நம் முன்னோர்கள் சாப்பிடுவதாக நம்பப்படுகிறது. அன்றைய தினத்தில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்குவது பல மடங்கு புண்ணியத்தை சேர்க்கும்.</p><p>ஆடி அமாவாசையன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதன் மூலம், அவர்களின் ஆசியை பெறுவதுடன், பித்ரு தோஷம், பித்ரு சாபம் ஆகியவற்றில் இருந்தும் விடுபடலாம். வாழ்வில் துன்பங்கள் மறைந்து சுபிட்சம் உண்டாகும்.</p>]]></content:encoded></item><item><title>ஆகஸ்ட் 15-க்குள் ஆதார் e-KYC முடிக்காதவர்கள் சிலிண்டர் வாங்க முடியாது.. முடிக்கும் நடைமுறை இதுதான் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/lpg-aadhaar-e-kyc-deadline-cylinder-supply-may-be-halted-for-customers-who-miss-august-15-verification</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/lpg-aadhaar-e-kyc-deadline-cylinder-supply-may-be-halted-for-customers-who-miss-august-15-verification#comments</comments><guid isPermaLink="false">5323f4f2-2566-4f78-a0c1-0aea00da25be</guid><pubDate>Tue, 11 Aug 2026 02:12:52 +0000</pubDate><atom:updated>2026-08-11T02:12:52.778Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆதார்,LPG Cylinder,வீட்டு உபயோக சிலிண்டர்,எல்பிஜி சிலிண்டர்,Aadhaar e-KYC,domestic cylinder</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/qcmfp594/tn-14.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சிலிண்டர் ]]></media:title><media:description type="html"><![CDATA[ சிலிண்டர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/qcmfp594/tn-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் <a href="https://www.maalaimalar.com/news/national/govt-explains-reasons-behind-lpg-cylinder-price-hike">எல்பிஜி கேஸ் சிலிண்டர் </a>பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், ஆதார் e-KYC சரிபார்ப்பை ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குகள் முடிக்க இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் எச்பிசிஎல் ஆகிய கேஸ் நிறுவனங்கள் கெடு விதித்துள்ளன.</p><p>e-KYC சரிபார்ப்பை முடிக்காதவர்களுக்கான கேஸ் விநியோகம் ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் நிறுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. அதாவது, அந்த தேதிக்கு பின் புதிய சிலிண்டர்களை வாடிக்கையாளர்களால் வாங்க முடியாது என்ற சூழல் உருவாக வாய்ப்புள்ளது. </p><h2>ஏன்?</h2><p>அமெரிக்கா- ஈரான் இடையே ஏற்பட்ட போர் சூழல் காரணமாக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. மேலும் சிலிண்டர் முன்பதிவு செய்யும் விதிமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது.</p><p>கறுப்புச் சந்தையில் சிலிண்டர் விற்பனை செய்யப்படுவதை தடுக்க KYC விதிகள் கடுமையாக்கப்பட்டன.</p><p>பிரதமரின் உஜ்வாலா யோஜனா பயனாளிகள் மற்றும் இண்டேன், ஹெச்பி, பாரத் கேஸ் உள்ளிட்ட வழக்கமான கேஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தும் நுகர்வோர் என வீட்டு உபயோகத்திற்காக எல்பிஜி கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களின் பயோமெட்ரிக் ஆதார் மூலம் KYC-யை புதுப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டது.</p> <h2>நிறுத்தம்?</h2><p>வரும் ஆகஸ்ட் 15க்குள் இதை செய்து முடிக்காதவர்களுக்கு புதிய கேஸ் சிலிண்டர் வாங்குவதில் சிக்கல் ஏற்படலாம் என கூறப்படுகிறது. அதாவது கேஸ் முன்பதிவு செய்யும் சேவை சரிபார்ப்பு செய்யாதவர்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, அவர்கள் சரிபார்ப்பை முடித்த பின்னர் மீண்டும் வழங்கப்படலாம்.</p><p>மானிய விலையில் அல்லது குறைந்த விலையில் கேஸ் சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் தகுதியையும் வாடிக்கையாளர்கள் இழக்கலாம். உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு கிடைக்கும் சிலிண்டருக்கும் மானிய தொகை வரமால் போக வாய்ப்புள்ளது.</p><p>இருப்பினும் இதுகுறித்து உறுதிப்படுத்தல் ஏதும் இல்லை. தற்போதைக்கு கெடு மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>ஆதார் e-KYC சரிபார்ப்பது எப்படி?</h2><p>கூகுள் பிளே ஸ்டோரில் நீங்கள் பயன்படுத்தும் கேஸ் நிறுவனத்தின் செயலியை ( hp pay, indianoil one, hello bpcl) -ஐ டவுன்லோட் செய்து அதில் மொபைல் எண், நுகர்வோர் எண்-ஐ உள்ளிட்டு லாகின் செய்யவும். </p><p>Update e-KYC என்பதை கிளிக் செய்து, உங்கள் ஆதார் எண்ணை உள்ளிடவும். இதன்பின் மீண்டும் பிளே ஸ்டோருக்கு சென்று AadhaarFaceRD என்ற அதிகாரபூர்வ செயலியை பதிவிறக்கவும். </p><p>அந்த செயலி மூலம் உங்கள் முகத்தை ஸ்கேன் செய்து ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் சரிபார்ப்பை முடிக்கவும்</p><p>ஆன்லைனில் முடிக்க தெரியாதவர்கள் சிலிண்டர் விநியோகம் செய்யும் நபர்கள் மூமோ அல்லது கேஸ் நிறுவனத்திற்கு நேரடியாக சென்றோ  e-KYC முடிக்கலாம்.</p><p>அதேநேரம் ஏற்கனவே, e-KYC சரிபார்ப்பை முடித்தவர்கள் மீண்டும் செய்யத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது</p><p>சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.957.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 11.8.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வந்து சேரும்
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-11-august-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-11-august-2026#comments</comments><guid isPermaLink="false">01b8ad32-e503-4e65-88ff-4808a85107bc</guid><pubDate>Tue, 11 Aug 2026 01:49:17 +0000</pubDate><atom:updated>2026-08-11T01:49:17.193Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/17/26604942-rasipalan4.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/17/26604942-rasipalan4.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>ராசிபலன்(Rasipalan)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். அருகில் உள்ளவர்களின் ஆதரவு உண்டு. கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.</p><h2>ரிஷபம்</h2><p>கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். குடும்ப உறுப்பினர்கள் பாராட்டும் வகையிலான காரியமொன்று செய்வீர்கள். சகோதர வழியில் உதவி கிடைக்கும்.</p> <h2>மிதுனம்</h2><p>நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.</p><h2>கடகம்</h2><p>வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். வழக்கமாகச் செய்யும் பணியை மாற்றியமைப்பீர்கள். உத்தியோக ரீதியாக பயணமொன்றை மேற்கொள்ள நேரிடும்.</p> <h2>சிம்மம்</h2><p>வருமானம் அதிகரிக்கும் நாள். இருப்பினும் செலவு கூடும். தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்யும் எண்ணம் உருவாகும். உடல் நலத்தில் அக்கறை தேவை.</p><h2>கன்னி</h2><p>நூதனப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும் நாள். கல்யாண முயற்சி கைகூடும். தொலைதூரப் பயணங்கள் செல்லப் போட்ட திட்டம் நிறைவேறும்.</p> <h2>துலாம்</h2><p>வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். அன்னிய தேசத்திலிருந்து உத்தியோகம் சம்பந்தமான அழைப்புகள் வந்து சேரும். விரோதங்கள் அகலும்.</p><h2>விருச்சிகம்</h2><p>மகிழ்ச்சியான தகவல் வந்து சேரும் நாள். ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள் முன்னோர் சொத்துகளில் முறையான பங்கீடு கிடைக்கும்.</p> <h2>தனுசு</h2><p>யோசித்துச் செயல்படவேண்டிய நாள். எதிர்காலம் பற்றிய கவலை அதிகரிக்கும். கூட்டுத் தொழில் புரிவோர் பங்குதாரர்களிடம் கவனம் தேவை.</p><h2>மகரம்</h2><p>முன்கோபத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டிய நாள். வேலைகளை உடனடியாக முடிக்க இயலாது. கேட்ட இடத்தில் உதவி கிடைப்பது அரிது.</p> <h2>கும்பம்</h2><p>யோகமான நாள். கடன்களை வசூலிக்க எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்பு வரலாம். பூர்வீக சொத்துப் பிரச்சனை அகலும்.</p><h2>மீனம்</h2><p>பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகும் நாள். புதிய வாய்ப்பு தேடி வரும். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும்.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்று பெட்ரோல் டீசல் விலை நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-fuel-prices-iran-war-tensions-in-hormuz-push-up-chennai-petrol-and-diesel-rates</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-fuel-prices-iran-war-tensions-in-hormuz-push-up-chennai-petrol-and-diesel-rates#comments</comments><guid isPermaLink="false">4eed7444-4a12-4b53-9cb4-c3fd793cb9f3</guid><pubDate>Tue, 11 Aug 2026 01:35:45 +0000</pubDate><atom:updated>2026-08-11T01:35:45.356Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,பெட்ரோல் டீசல் விலை,petrol  diesel prices</media:keywords><media:content height="614" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/blbkipxn/maalai-malar2026-08-08eyp4pp4lpetrol.avif" width="1024"><media:title type="html"><![CDATA[  பெட்ரோல் டீசல் விலை]]></media:title><media:description type="html"><![CDATA[  பெட்ரோல் டீசல் விலை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/blbkipxn/maalai-malar2026-08-08eyp4pp4lpetrol.avif?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/us-iran-war-sends-essential-prices-soaring">ஈரான் போரினால்</a> மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p><h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.</p> <h2>இன்றைய பெட்ரோல், டீசல் விலை</h2><p>அந்த வகையில் இன்றைய (11.08.2026 - செய்வ்வாய்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><h2>கச்சா எண்ணெய்</h2><p>இன்று சர்வதேச சந்தையில் பிரனட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 87.80 டாலர் என விற்பனை ஆகி வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 11 ஆகஸ்ட் 2026: முருகன் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-11-august-2026-murugan-temple-abhishekam-alangaram</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-11-august-2026-murugan-temple-abhishekam-alangaram#comments</comments><guid isPermaLink="false">6458c439-211f-4758-9c55-ff14ce7846db</guid><pubDate>Tue, 11 Aug 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-08-11T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/12/26339678-murugar2.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Murugan Abhishekam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/12/26339678-murugar2.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆடி-26 (செவ்வாய்க்கிழமை)</p><p>பிறை : தேய்பிறை</p><p>திதி :  சதுர்த்தசி பின்னிரவு 2.10 மணி வரை பிறகு அமாவாசை</p><p>நட்சத்திரம் :  புனர்பூசம் காலை 10.30 வரை பிறகு பூசம்</p><p>யோகம் :  சித்தயோகம்</p> <p>ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை</p><p>எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை</p><p>சூலம் : வடக்கு</p><p>நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை</p> <h2>ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமான் பவனி</h2><p>மாத சிவராத்திரி. சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் வசந்த உற்சவம். ஸ்ரீ திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் வெண்ணெய்த் தாழி சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கனக தண்டியலிலும் ஸ்ரீ ரங்கமன்னார் யானை வாகனத்திலும் பவனி. சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை.</p> <p>திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் திருக்கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல், ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமான் பவனி.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - உயர்வு</p><p>ரிஷபம் - நட்பு</p><p>மிதுனம் - வெற்றி</p><p>கடகம் - அமைதி</p><p>சிம்மம் - சிறப்பு</p><p>கன்னி - உண்மை</p> <p>துலாம் - உறுதி</p><p>விருச்சிகம் - பெருமை</p><p>தனுசு - பொறுமை</p><p>மகரம் - நட்பு</p><p>கும்பம் - பயணம்</p><p>மீனம் - உறுதி</p> ]]></content:encoded></item><item><title>9 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த தலைவர் மருத்துவமனையில் அனுமதி - மாணவர்கள் மீது அடக்குமுறை - ஜார்க்கண்டில் போராட்டம் 
தீவிரம்</title><link>https://www.maalaimalar.com/news/national/jharkhand-protest-intensifies-jlkm-chief-hospitalized-after-hunger-strike-over-jpsc-jssc-paper-leak</link><comments>https://www.maalaimalar.com/news/national/jharkhand-protest-intensifies-jlkm-chief-hospitalized-after-hunger-strike-over-jpsc-jssc-paper-leak#comments</comments><guid isPermaLink="false">4a6ade6e-369a-4c9f-8cdf-e5407388c29a</guid><pubDate>Tue, 11 Aug 2026 01:03:40 +0000</pubDate><atom:updated>2026-08-11T01:03:40.283Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜார்கண்ட்,Jharkhand,மாணவர்கள் போராட்டம்,student protest,question paper leak,வினாத்தாள் கசிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/o53dckej/tn-13.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தேவேந்திர நாத் மஹதோ]]></media:title><media:description type="html"><![CDATA[ தேவேந்திர நாத் மஹதோ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/o53dckej/tn-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜார்க்கண்ட் மாநில அரசின் JPSC, JSSC  தேர்வாணைய வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளை  கண்டித்து நடந்து வரும் <a href="https://www.maalaimalar.com/news/national/jharkhand-exam-row-student-protests-escalate-ed-launches-probe">மாணவர் போராட்டம்</a> தீவிரமடைந்துள்ளது. </p><h2>மருத்துவமனையில் அனுமதி </h2><p>இந்நிலையில் ராஞ்சியில் விளையாட்டு மைதானத்தில் நடந்து வரும் போராட்டத்தில் JLKM என்ற அரசியல் கட்சியின் தலைவர் தேவேந்திர நாத் மஹதோ 9 நாட்கள் தொடர் உண்ணாவிரதத்திற்கு  பின் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p> <h2>சட்டமன்றம் நோக்கி பேரணி</h2><p>முன்னதாக நேற்று பழைய சட்டமன்றக் கட்டிடத்திலிருந்து புதிய சட்டமன்றத்தை நோக்கி மாணவர்கள் நடத்திய பேரணியில் பங்கேற்ற போது, தேவேந்திர நாத் மஹதோவின் இரத்த சர்க்கரை அளவு திடீரெனக் கடுமையாகக் குறைந்ததால் அவரது உடல்நிலை மோசமடைந்தது.</p><p>தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பேரணியின் போது காவல்துறையினர் நடத்திய தடிஅடியிலும் அவர் காயமடைந்துள்ளதாக அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார்.</p><p>மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன் பேசிய மஹதோ, "அரசு தடிகள் மற்றும் துப்பாக்கிகள் மூலம் ஆட்சியை நடத்த முடியாது. மாணவர்களின் குரலை ஒடுக்க நினைத்தாலும் இந்த போராட்டம் தொடரும்" எனக் கூறினார்.</p> <h2>தடிஅடி</h2><p>பேரணியாக சென்ற போராட்டக்காரர்கள் பாதுகாப்புத் தடுப்புகளை உடைத்துக் கொண்டு சட்டமன்றத்தின் 1-வது கேட் வரை சென்று அமர்வில் ஈடுபட்டனர்.</p><p>அவர்களை கலைக்கக் காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகள், தண்ணீர் பீரங்கிகள் மற்றும் தடிஅடியைப் பயன்படுத்தினர். இதில் பல பெண் மாணவர்கள் உட்படப் போராட்டக்காரர்கள் சிலர் காயமடைந்தனர்.</p><p>அதேசமயம், போராட்டக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதில் 4 காவலர்களும் காயமடைந்ததாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <h2>கோரிக்கைகள்</h2><p>JPSC மற்றும் JSSC தேர்வு முறைகேடுகள் குறித்து சிபிஐ அல்லது ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும். முறைகேடு நடந்த அனைத்துத் தேர்வுகளையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்துள்ளனர். இதில் பேச்சுவார்த்தைக்கு பின் JPSC நடத்திய தேர்வு ரத்து செய்யப்படுவதாக நேற்று முன் தினம் அறிவிக்கப்பட்ட நிலையில் JSSC-CGL தேர்வும் ரத்து செய்யப்பட வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்துகின்றனர்.</p><h2>கைது</h2><p>இதனிடையே ஆட்சேர்ப்பு தேர்வுகளில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக, முன்னாள் JPSC தலைவர் எல். கியாங்டேவை ஜார்க்கண்ட் சி.ஐ.டி. கைது செய்துள்ளதாக மாநில புலனாய்வு அமைப்பின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.</p>  ]]></content:encoded></item><item><title>நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தனித்தீர்மானம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-resolution-against-neet-exam-and-fcra-tn-assembly-toady</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-resolution-against-neet-exam-and-fcra-tn-assembly-toady#comments</comments><guid isPermaLink="false">8f861ffe-63f4-45a2-b159-f2ae67e5277e</guid><pubDate>Tue, 11 Aug 2026 00:27:52 +0000</pubDate><atom:updated>2026-08-11T00:27:52.405Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழ்நாடு அரசு,நீட் தேர்வு,Neet exam,Assembly Session,சட்டமன்ற கூட்டத்தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/esdd16ov/TN-Assembly-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சட்டப்பேரவை கூட்டத்தொடர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/esdd16ov/TN-Assembly-1.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu">தமிழ்நாடு</a> சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்றைய (ஆகஸ்ட் 11) சட்டமன்ற கூட்டத்தொடரில் <a href="https://www.maalaimalar.com/topic/neet-exam">நீட் தேர்வு</a> மற்றும் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்ட (எஃப்.சி.ஆர்.) திருத்த மசோதா ஆகியவற்றுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தனித்தீர்மானம் கொண்டுவருகிறது.</p><p>2026-27ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 3-ஆவது நாளாக சட்டப்பேரவையில் இன்று (செவ்வாய் கிழமை) தொடர்ந்து நடைபெற இருக்கிறது.</p><h2>தனித்தீர்மானம்:</h2><p>இந்த நிலையில், மத்திய அரசு நடத்தி வரும் நீட் தேர்வை திரும்ப பெற்று மாநில மருத்துவ பாடத்திட்ட மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் தனித் தீர்மானத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் தாக்கல் செய்ய உள்ளார்.</p><p>நீட் தேர்வில் இருந்து தமிழ் நாட்டிற்கு விலக்கு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதாவை கடந்த 2021-இல் தமிழக சட்டப்பேரவை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. எனினும், இந்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் அப்போது ஒப்புதல் அளிக்கவில்லை.</p><p>தொடர்ச்சியாக நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளால் மருத்துவ கனவு கொண்ட லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இது தொடர்பாக உயிரிழப்பு ஏற்பட்டும் நாடு முழுவதும் உள்ள மாணவர்களின் நம்பிக்கையை இந்தத் தேர்வு இழந்துள்ளது. ஆகையால், நீட் தேர்வை அகற்ற வேண்டும் என அமைச்சர் அருண்ராஜ் கோர உள்ளார்.</p><h2>2-ஆவது தீர்மானம்:</h2><p>இதேபோல், வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத் திருத்த மசோதாவை தற்போதைய வடிவில் திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் தனித் தீர்மானத்தை பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தாக்கல் செய்ய உள்ளார்.</p><p>இந்தத் தீர்மானங்களின் மீது விவாதம் இன்றே நடத்தப்பட்டு மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. முன்னதாக நேற்று நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-ஐ கடந்தது: கொலம்பியாவில் அவசரநிலை பிரகடனம்!</title><link>https://www.maalaimalar.com/news/world/colombian-president-declares-emergency-after-earthquake-kills-more-than-100</link><comments>https://www.maalaimalar.com/news/world/colombian-president-declares-emergency-after-earthquake-kills-more-than-100#comments</comments><guid isPermaLink="false">06381f84-12c8-4c6d-bd59-b857c209f15e</guid><pubDate>Mon, 10 Aug 2026 23:48:40 +0000</pubDate><atom:updated>2026-08-10T23:48:40.582Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Earthquake,Emergency,கொலம்பியா,Colombia,அவசர நிலை,நிலநடுக்கம்</media:keywords><media:content height="3338" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/9qhge769/COLOMBIA-QUAKE" width="5000"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ COLOMBIA-QUAKE-RESCUE]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/9qhge769/COLOMBIA-QUAKE?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கொலம்பியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த <a href="https://www.maalaimalar.com/topic/earthquake">நிலநடுக்கம்</a> காரணமாக இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 111-ஆக உயர்ந்துள்ளது. பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கியிருப்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. </p><p>இந்த நிலையில், சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு மற்றும் பொருட்சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, <a href="https://www.maalaimalar.com/news/world">கொலம்பியா</a> அவசரநிலையை அறிவித்தது.</p><h2>மீட்பு பணிகள்:</h2><p>மேற்கு கொலம்பியாவில் உள்ளூர் நேரப்படி காலை 7:34 மணிக்கு 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பல நகரங்களில் உயிர் பிழைத்தவர்களை தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.</p><p>"உயிர்களை பாதுகாக்கவும், பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவவும், தேவைப்படும் ஒவ்வொரு பகுதிக்கும் நிவாரண உதவிகளை வழங்கவும் அரசாங்கம் தனது அனைத்து திறன்களையும் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது," என்று ஜனாதிபதி அபெலார்டோ டி லா எஸ்பிரியெல்லா பொகோட்டாவில் இருந்து தெரிவித்தார்.</p><p>சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 111 பேர் உயிரிழந்ததாகவும், 87 பேர் காயமடைந்ததாகவும், 1,000-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><h2>நிலநடுக்கத்தின் மையப்புள்ளி:</h2><p>நிலநடுக்கத்தின் மையப்புள்ளி, கொலம்பியாவின் கடலோர சோகோ பிராந்தியத்தில் 100 கிலோமீட்டர் (60 மைல்) ஆழத்தில் அமைந்திருந்தது. வறுமை நிறைந்த அந்தப் பகுதியில் 12 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>அருகிலுள்ள பெரேரா நகரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகும். அந்நகரம் மாகாணத் தலைநகராக உள்ள ரிசரால்டா பிராந்தியத்தில் குறைந்தது 40 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் முன்னதாக அறிவித்திருந்தனர். மனிசாலெஸ் நகரில் உள்ள மிகவும் விரும்பப்படும் பேராலயத்தின் கோபுரம் நிலநடுக்கத்தால் நொறுங்கியதாக ஏஎஃப்பி செய்தியாளர் ஒருவர் கவனித்தார்.</p><h2>ஆழந்த துயரம்:</h2><p>கொலம்பியாவின் மூன்றாவது பெரிய நகரமான காலியில் குறைந்தது 20 கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில், மக்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிக்கொண்டனர் என்று மேயர் அலெஜான்ட்ரோ எடர் கூறினார்.</p><p>"நாங்கள் அனைவரும் மிகுந்த துயரத்தில் ஆழ்ந்துள்ளோம். தற்போதைய நிலையில், உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன, டஜன் கணக்கானோர் காயமடைந்துள்ளனர், ஆனால் காணாமல் போனவர்களே பெரும்பான்மையாக உள்ளனர்," என குயிப்டோ சமூகத் தலைவர் லூயிஸ் கிரிகோரியோ மோரேனோ ஏ.எஃப்.‌பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்: அமலாக்கத்துறை விசாரணை தொடக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/jharkhand-exam-row-student-protests-escalate-ed-launches-probe</link><comments>https://www.maalaimalar.com/news/national/jharkhand-exam-row-student-protests-escalate-ed-launches-probe#comments</comments><guid isPermaLink="false">6e22e6c6-c0bd-499c-b339-d470fecf8e9e</guid><pubDate>Mon, 10 Aug 2026 23:14:21 +0000</pubDate><atom:updated>2026-08-10T23:14:21.987Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>protest,Jharkhand,போராட்டம்,ஜார்க்கண்ட்,ED,அமலாக்கத்துறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/mthxawa2/Jharkhand-Protest-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jharkhand Protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/mthxawa2/Jharkhand-Protest-1.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national">ஜார்க்கண்ட்</a> தேர்வுகளில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் நேற்று (திங்கள்கிழமை) தீவிரமடைந்தது.</p><p>மாணவர்கள் சட்டமன்றத்தை நோக்கி பேரணி செல்வதை தடுக்க, காவல்துறையினர் நீரை பீய்த்து அடித்தும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை தடுத்தனர். அதேவேளையில், இந்த "முறைகேடுகள்" தொடர்பாக <a href="https://www.maalaimalar.com/topic/ed">அமலாக்கத்துறை</a> பணமோசடி விசாரணையையும் தொடங்கியுள்ளது.</p><p>ஆட்சேர்ப்பு தேர்வுகளில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக, முன்னாள் ஜே.பி.எஸ்.சி. தலைவர் எல். கியாங்டேவை ஜார்க்கண்ட் சி.ஐ.டி. கைது செய்துள்ளதாக மாநில புலனாய்வு அமைப்பின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.</p><h2>மோதல்:</h2><p>மாநிலத் தலைநகர் ராஞ்சியில், மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வந்த சட்டமன்றத்தை நோக்கி ஆயிரக்கணக்கான வேலை தேடுபவர்கள் பேரணியாக சென்றபோது, ​​பல தடுப்புகளை மீறிச் சென்றதால், போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>காவல்துறை நடவடிக்கையில் பெண்கள் உட்பட பல மாணவர்கள் காயமடைந்ததாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர். அதே நேரத்தில், கல் வீச்சில் 14 அதிகாரிகள் காயமடைந்ததாகவும், "அமைதியான" போராட்டங்களை கலைத்த சமூக விரோதிகளை அடையாளம் காண சி.சி.டி.வி. காட்சிகள் ஆய்வு செய்யப்படும் என்றும் ராஞ்சி எஸ்எஸ்பி கூறினார்.</p><h2>முதல்வர் வேண்டுகோள்:</h2><p>ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தங்கள் குறைகளை "பேச்சுவார்த்தை மற்றும் நம்பிக்கையின்" மூலம் தீர்க்க வேண்டும் என நேற்று (திங்கள் கிழமை) மீண்டும் வேண்டுகோள் விடுத்தார். மேலும், அரசியல் ஆதாயங்களுக்காக போராட்டக்காரர்களை தவறாக வழிநடத்த எதிர்க்கட்சியான பா.ஜ.க. முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.</p><p>சட்டமன்றத்தை நோக்கிய பேரணி தொடங்குவதற்கு முன்பு சோரனின் வீட்டை முற்றுகையிட்ட பா.ஜ.க., மாணவர்களுக்கு எதிரான "வன்முறை பிரயோகத்தைக்" கண்டித்து இன்று (செவ்வாய் கிழமை) மாநிலம் தழுவிய பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளது.</p><p>அமைதியான போராட்டங்கள் வன்முறையால் எதிர்கொள்ளப்படக்கூடாது என்று கூறிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காவல்துறையின் நடவடிக்கையைக் கண்டித்தார். ஜார்க்கண்டில் ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணியின் கூட்டாளியாக காங்கிரஸ் உள்ளது.</p><p>"அமைதியான முறையில் போராட்டம் நடத்த மாணவர்களுக்கு உரிமை உண்டு, பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வுகளைக் கொண்டுவரும்" என்று கூறிய காங்கிரஸ் தலைவர், மாணவர்களின் குறைகளை விரைவில் தீர்க்குமாறு ஜார்க்கண்ட் அரசை வலியுறுத்தினார்.</p>]]></content:encoded></item><item><title>அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்பே எபோலா பரவல் தொடங்கிவிட்டது: உலக சுகாதார மையம்</title><link>https://www.maalaimalar.com/news/world/who-says-congos-fast-moving-ebola-outbreak-started-months-before-it-was-declared</link><comments>https://www.maalaimalar.com/news/world/who-says-congos-fast-moving-ebola-outbreak-started-months-before-it-was-declared#comments</comments><guid isPermaLink="false">993f60e3-87b6-41ee-9b25-361847a4904c</guid><pubDate>Mon, 10 Aug 2026 22:47:37 +0000</pubDate><atom:updated>2026-08-10T22:47:37.834Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>WHO,காங்கோ,Congo,உலக சுகாதார மையம்,Ebola,எபோலா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/k0ha7g7m/Ebola-Virus.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ebola Virus]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/k0ha7g7m/Ebola-Virus.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காங்கோவில் வேகமாக பரவி வரும் <a href="https://www.maalaimalar.com/topic/ebola">எபோலா</a> பாதிப்பு, அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு மாதங்களுக்கு முன்பே தொடங்கி விட்டதாக <a href="https://www.maalaimalar.com/topic/who">உலக சுகாதார அமைப்பு</a> (WHO) தெரிவித்துள்ளது.</p><p>கிழக்கு காங்கோவில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர சுகாதார பணியாளர்கள் போராடி வரும் நிலையில், இதுவரை பதிவானவற்றிலேயே மிக வேகமாக பரவும் எபோலா பாதிப்பு, மே மாத மத்தியில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு மாதங்களுக்கு முன்பே, அதாவது பிப்ரவரி மாதத்திலேயே தொடங்கியதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.</p><p>ஆப்பிரிக்காவுக்கான உலக சுகாதார அமைப்பின் பிராந்திய இயக்குனர் டாக்டர் முகமது யாகூப் ஜனபி செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது, மரபணு வரிசைமுறை ஆய்வு மூலம் இந்த பாதிப்பு தொடங்கிய காலம் கண்டறியப்பட்டதாக கூறினார். ஆரம்பக்கட்ட பாதிப்புகளில் சில, மலேரியா மற்றும் டைபாய்டு போன்ற பிற நோய்களால் ஏற்பட்டவை என்று தவறாக கருதப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><h2>மரபணு வரிசைமுறை ஆய்வு:</h2><p>"நாங்கள் வைரஸ்-ஐ துரத்தி கொண்டிருக்கிறோம், ஆனால் வைரஸ் நம்மை விட முன்னால் சென்று கொண்டிருக்கிறது," என்று ஜனபி கூறினார்.</p><p>எபோலா தடுப்பு நடவடிக்கைகளுக்கான உலக சுகாதார அமைப்பின் பொறுப்பாளர் டாக்டர் தியர்னோ பால்டே கூறும் போது, காங்கோவின் தேசிய உயிரி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் ஆய்வு துறை தலைவர் டாக்டர் ஸ்டீவ் அஹுகா தலைமையில் இந்த மரபணு வரிசைமுறை ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.</p><p>அரசின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, இந்தப் பாதிப்பில் உறுதிப்படுத்தப்பட்ட எபோலா நோயாளிகளின் எண்ணிக்கை 4,200-ஐ எட்டியுள்ளது; இதில் 1,900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.</p><h2>பரவும் அபாயம் குறைவு:</h2><p>எபோலா வைரஸ் காற்று வழியாக பரவாது என்பதால், சுவாச மண்டலத்தை தாக்கும் வைரஸ்களை விட இது பரவுவது மிகவும் கடினம். எனவே, இதன் உலகளாவிய பரவல் அபாயம் குறைவு என்று உலக சுகாதார அமைப்பு மதிப்பிடுகிறது. </p><p>பாதிக்கப்பட்ட பகுதிக்கு வெளியே கண்டறியப்பட்ட நோயாளிகள் உடனடியாக அடையாளம் காணப்பட்டு, நோய் மேலும் பரவாமல் தடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.</p><p>மே 15-ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்ட இந்த பாதிப்பு, முந்தைய எபோலா பாதிப்புகளில் இருந்து மாறுபட்டது. ஏனெனில், இதற்கு காரணமான அரிதான 'புண்டிபுக்யோ' (Bundibugyo) வைரஸ்-க்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது சிகிச்சைகளோ இல்லை. </p><p>ஆரம்பக்கட்ட சோதனைகள் மிகவும் பொதுவான வகை எபோலா வைரஸ்க்காக மேற்கொள்ளப்பட்டதே தாமதத்திற்கு ஒரு காரணமாக அமைந்தது.</p>]]></content:encoded></item><item><title>2027 உலகக் கோப்பைக்கு நேரடித் தகுதி பெற்றது ஆப்கானிஸ்தான்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/afghanistan-earn-direct-qualification-for-2027-odi-world-cup</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/afghanistan-earn-direct-qualification-for-2027-odi-world-cup#comments</comments><guid isPermaLink="false">bb0e9ef9-60f5-4d13-b28a-3ff4c7702e31</guid><pubDate>Mon, 10 Aug 2026 22:16:09 +0000</pubDate><atom:updated>2026-08-10T22:16:09.318Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Afghanistan,ஆப்கானிஸ்தான்,2027 ODI World Cup,2027 உலகக் கோப்பை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/t04y3qwe/Afghanistan-Win.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Afghanistan Win]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/t04y3qwe/Afghanistan-Win.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், 2027-ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் ஒருநாள் <a href="https://www.maalaimalar.com/topic/world-cup">உலகக் கோப்பை</a> தொடருக்கு ஆப்கானிஸ்தான் அணி நேரடித் தகுதியை உறுதி செய்தது. </p><p>அயர்லாந்து நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் <a href="https://www.maalaimalar.com/sports/cricket">கிரிக்கெட்</a> தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்தது. </p><p>இந்த நிலையில் இரு அணிகள் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி பெல்ஃபாஸ்ட்-இல் நடந்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து பேட்டிங் ஆடிய அயர்லாந்து அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.</p><h2>ஆப்கானிஸ்தான் வெற்றி:</h2><p>அந்த அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கிய ஆன்டி பால்பிர்னி 7 ரன்களுக்கும், கேப்டன் பால் ஸ்டிர்லிங் 23 ரன்களுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து வந்த கேட் கார்மைக்கேல் 32 ரன்களை எடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்தவர்களில் கவின் ஹூயி அதிகபட்சமாக 36 ரன்களும், ஜெய் மூந்த்ரா 31 ரன்களையும் அடித்தனர்.</p><p>இறுதியில் 46.3 ஓவர்கள் முடிவில் 206 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது. ஆப்கானிஸ்தான் சார்பில் சிறப்பாக பந்துவீசிய கசன்ஃபர் மற்றும் ரஷித் கான் தலா 3 விக்கெட்டுகளையும், யாமின் அகமதுசாய் 2 விக்கெட்டுகளையும், ஃபசல்ஹக் பரூக்கி மற்றும் அசமதுல்லா ஓமர்சாய் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.</p><p>எளிய இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்க வீரர்களான ரஹ்மதுல்லா குர்பாஸ் சிறப்பாக ஆடி 71 ரன்களை எடுத்தார். அடுத்து வந்தவர்களில் செய்திகுல்லா அடல் 27 ரன்களும், ஹஷ்மதுல்லா ஷாஹிதி 22 ரன்களும், ரஷித் கான் 37 ரன்களும் அடித்தனர். முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 44.5 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் வித்தியாசத்தில் 207 ரன்களை எடுத்து மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.</p><h2>நேரடி தகுதி:</h2><p>தற்போது தரவரிசையில் 8-ஆவது இடத்தில் உள்ள ஆப்கானிஸ்தான், இதன் மூலம் அடுத்த ஆண்டு தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு நேரடி தகுதியை பெற்றது.</p><p>உலகக் கோப்பை தகுதிக்கு ஒரு வெற்றி மட்டுமே தேவை என்ற நிலையில் இந்தப் போட்டிக்கு வந்த ஆப்கானிஸ்தான் அணி, ஏற்கனவே இரண்டாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்தை 92 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் ஆப்கானிஸ்தான் பங்கேற்பது இது நான்காவது முறையாகும்.</p>]]></content:encoded></item><item><title>சௌரவ் கங்குலி மற்றும் அவரது மனைவிக்கு கொலை மிரட்டல்; காவல்துறை விசாரணை தொடங்கியது</title><link>https://www.maalaimalar.com/news/national/sourav-ganguly-wife-receive-death-threats-police-begin-probe</link><comments>https://www.maalaimalar.com/news/national/sourav-ganguly-wife-receive-death-threats-police-begin-probe#comments</comments><guid isPermaLink="false">b9f57aa1-c472-455c-bce2-ff51b50abb63</guid><pubDate>Mon, 10 Aug 2026 20:01:27 +0000</pubDate><atom:updated>2026-08-10T20:01:27.079Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>police,கொலை மிரட்டல்,Death threat,Sourav Ganguly,காவல் துறை,சௌரவ் கங்குலி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/0e37vq0d/sourav-ganguly.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ sourav ganguly]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/0e37vq0d/sourav-ganguly.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் <a href="https://www.maalaimalar.com/topic/sourav-ganguly">சௌரவ் கங்குலி</a> மற்றும் அவரது மனைவிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>சௌரவ் கங்குலிக்கு கடந்த சில மாதங்களாக பல மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன என்றும், அவற்றில் ஒன்று தன்னையும் தனது மனைவி டோனா கங்குலியையும் கொன்றுவிடுவதாக எச்சரித்திருந்தது என்றும் அவர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார். இந்த கடிதங்களை அனுப்பியது யார் என்பதை கண்டறிய <a href="https://www.maalaimalar.com/topic/police">காவல்துறை</a> விசாரணையை தொடங்கியுள்ளது.</p><h2>மிரட்டல் கடிதம்:</h2><p>தற்போது வங்காள கிரிக்கெட் சங்கத்தின் (CAB) தலைவராக இருக்கும் கங்குலி, திங்கள்கிழமை தனது அலுவலகத்திற்கு வந்த சமீபத்திய கடிதத்தை தொடர்ந்து, தெற்கு கொல்கத்தாவில் உள்ள தாக்கூர் புகுர் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமான புகாரை அளித்துள்ளார் என்று காவல் துறை அதிகாரி கூறினார்.</p><p>முன்னாள் பி.சி.சி.ஐ. (BCCI) தலைவரான சௌரவ் கங்குலி பெயருக்கு கடந்த ஆறு மாதங்களாகவே இத்தகைய கடிதங்கள் வந்து கொண்டிருந்ததாகவும், ஆனால் ஆரம்பத்தில் அவை பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.</p><p>திங்கள்கிழமை அவரது அலுவலகத்திற்கு வந்த இரண்டு கடிதங்களில், கங்குலி மற்றும் அவரது மனைவியை கொல்லவும், அவருக்கு நெருக்கமானவர்களுக்கு தீங்கு விளைவிக்கவும் வெளிப்படையான மிரட்டல்கள் இருந்ததாக முன்னாள் கிரிக்கெட் வீரரின் மேலாளர் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>தீவிர விசாரணை:</h2><p>கடிதங்களின் உள்ளடக்கத்தை ஆய்வு செய்து வருவதாகவும், அவற்றை அனுப்பியவரின் அடையாளம் மற்றும் நோக்கத்தை கண்டறிய முயற்சிப்பதாகவும் காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.</p><p>"நாங்கள் இந்த புகாரை தீவிரமாக எடுத்துக்கொண்டு விசாரணையை தொடங்கியுள்ளோம். இந்த கடிதங்கள், அவற்றின் மூலம் மற்றும் கூரியர் சேவை விவரங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து, இதற்கு பொறுப்பான நபரை கண்டறிய முயற்சிக்கிறோம்," என்று அந்த அதிகாரி கூறினார்.</p><p>வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பெல்காரியாவை சேர்ந்த ஒரு நபர், கூரியர் சேவை மூலம் இந்த கடிதங்களை அனுப்பியிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.</p><h2>காவல் துறை விளக்கம்:</h2><p>அனுப்பியவர் பயன்படுத்தியதாக கூறப்படும் சிம் கார்டின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய தொடங்கியுள்ளதாகவும், பார்சல் விவரங்களை சேகரிக்க சம்பந்தப்பட்ட கூரியர் நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>"நாங்கள் கூரியர் சேவையை சேர்ந்தவர்களிடம் பேசியுள்ளோம் மற்றும் ஒரு மொபைல் எண்ணை கண்டறிந்துள்ளோம். அந்த எண்ணின் இருப்பிடத்தை கண்டறிய முயற்சிக்கிறோம்," என்று அவர் கூறினார்.</p><p>அனைத்து கடிதங்களும் ஒரே நபரால்தான் அனுப்பப்பட்டனவா என்பதையும், இந்த மிரட்டல்களுக்கான காரணம் என்ன என்பதையும் கொல்கத்தா காவல்துறையினர் ஆய்வு செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஜார்க்கண்ட்: போராடும் மாணவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதைக் கண்டித்து பாஜக பந்த்-க்கு அழைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/jharkhand-exam-row-bjp-calls-for-bandh-on-aug-11-over-police-lathi-charge-on-protesting-students</link><comments>https://www.maalaimalar.com/news/national/jharkhand-exam-row-bjp-calls-for-bandh-on-aug-11-over-police-lathi-charge-on-protesting-students#comments</comments><guid isPermaLink="false">8db2aba4-7c4d-4a22-b98a-1a77748a5c7e</guid><pubDate>Mon, 10 Aug 2026 19:11:41 +0000</pubDate><atom:updated>2026-08-10T19:11:41.363Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,protest,Jharkhand,போராட்டம்,ஜார்க்கண்ட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/5tjuaqkg/BJP-Aditya-Sahu.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ BJP Aditya Sahu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/5tjuaqkg/BJP-Aditya-Sahu.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாநிலத்தில் பணி நியமனத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக கூறி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி மற்றும் "காவல்துறையின் அத்துமீறல்களை" கண்டித்து, எதிர்க்கட்சியான பா.ஜ.க. <a href="https://www.maalaimalar.com/news/national">ஜார்க்கண்ட்</a> பந்த்-க்கு அழைப்பு விடுத்துள்ளது. காலை 8 மணி முதல் நள்ளிரவு வரை இந்த பந்த் அமலில் இருக்கும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் ஆதித்யா சாஹு தெரிவித்தார். </p><p>"இது மாநிலம் தழுவிய பந்த் ஆகும். இருப்பினும், அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் இந்த அடைப்பு நடவடிக்கையில் இருந்து விலக்கப்பட்டுள்ளன," என்று <a href="https://www.maalaimalar.com/topic/bjp">பா.ஜ.க.</a> தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் சாஹு கூறினார்.</p><h2>கடும் தாக்குதல்:</h2><p>சட்டமன்றத்தை நோக்கி மாணவர்கள் பேரணியாக சென்றபோது அவர்கள் குற்றவாளிகளை போல நடத்தப்பட்டதாக பாஜக தலைவர் குற்றம் சாட்டினார்.</p><p>"காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர், நீர்ப்பீச்சிகளை பயன்படுத்தினர் மற்றும் தடியடி நடத்தினர். மாலை வேளையிலும் கூட போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இது ஒரு சர்வாதிகார அரசு," என்று சாஹு கூறினார்.</p><p>மாணவர்களை ஏமாற்றியதாக ஜே.எம்.எம். (JMM) தலைமையிலான கூட்டணி அரசை அவர் குற்றம் சாட்டியதுடன், "மாணவர்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை" நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.</p><h2>மோதல்:</h2><p>பணி நியமனத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக கூறி போராடிய வேலை தேடுபவர்கள் மீது காவல்துறையினர் நீர்ப்பீச்சிகள், கண்ணீர்ப்புகை மற்றும் தடியடியை பயன்படுத்தியதால், நேற்று (திங்கள் கிழமை) ஜார்க்கண்ட் சட்டமன்றத்திற்கு அருகே ஏற்பட்ட மோதலில் பல போராட்டக்காரர்களும் நான்கு காவலர்களும் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>ஜார்க்கண்ட் சட்டமன்றத்திற்கு அருகே அமைக்கப்பட்டிருந்த பல தடுப்புகளை போராட்டக்காரர்கள் மீறியதை தொடர்ந்து இந்த மோதல் ஏற்பட்டது.</p><p>காவல்துறையின் நடவடிக்கையில் பெண்கள் உட்பட பலர் காயமடைந்ததாகப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டிய நிலையில், போராட்டக்காரர்கள் நடத்திய கல்வீச்சு தாக்குதலில் நான்கு காவலர்கள் காயமடைந்ததாக ராஞ்சி நகர காவல் கண்காணிப்பாளர் (SP) பரஸ் ரானா தெரிவித்தார்.</p><p>ஜே.எஸ்.எஸ்.சி. (JSSC) அல்லது ஜே.பி.எஸ்.சி. (JPSC) என எந்த அமைப்பாக இருந்தாலும், கடந்த ஆறு ஆண்டுகளாக வேலைகளை விற்பனை செய்வதிலேயே அவை ஈடுபட்டுள்ளன என்றும், அதே வேளையில் மாணவர்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் பாபுலால் மராண்டி குற்றம் சாட்டினார்.</p>]]></content:encoded></item><item><title>கொலம்பியா நிலநடுக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 69-ஆக உயர்வு</title><link>https://www.maalaimalar.com/news/world/69-dead-after-74-magnitude-earthquake-shakes-western-colombia</link><comments>https://www.maalaimalar.com/news/world/69-dead-after-74-magnitude-earthquake-shakes-western-colombia#comments</comments><guid isPermaLink="false">70429eec-3711-4afe-b9d2-753cadb6b77d</guid><pubDate>Mon, 10 Aug 2026 18:24:13 +0000</pubDate><atom:updated>2026-08-10T18:24:13.854Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உயிரிழப்பு,Earthquake,கொலம்பியா,Colombia,Death toll,நிலநடுக்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/gtwsnur9/Colombia-earthquake-rescue.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Colombia earthquake rescue]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/gtwsnur9/Colombia-earthquake-rescue.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் மேற்குப் பகுதிகளில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 69 பேர் உயிரிழந்தனர், மேலும் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. </p><p>இந்த நிலநடுக்கத்தால் மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்; பலர் காயமடைந்தனர். தலைநகர் பொகோட்டா வரை உள்ள பகுதிகளில் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.</p><h2>107 கிலோமீட்டர் ஆழம்:</h2><p>நிலநடுக்கத்தின் மையம், பொகோட்டாவில் இருந்து மேற்கே சுமார் 250 மைல் தொலைவில் உள்ள சோகோ பிராந்தியத்தின் சான் ஜோஸ் டெல் பால்மர் என்ற பகுதியில் அமைந்திருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) மற்றும் கொலம்பியா தொடர்புடைய அமைப்புகள் தெரிவித்தன.</p><p>இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் 66 மைல் (107 கி.மீ) ஆழத்தில் ஏற்பட்டதாக USGS கூறியது. மேலும், அண்டை நாடுகளான ஈக்வடார் மற்றும் பனாமாவிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது, ஆனால் அங்கு மிகக் குறைந்த அளவிலான சேதங்களே பதிவாகின.</p><h2>உயிரிழப்புகள்:</h2><p>கடுமையாகப் பாதிக்கப்பட்ட பெரேரா நகரம் அமைந்துள்ள ரிசாரால்டா மாகாணத்தில் குறைந்தது 40 பேரும், கொலம்பியாவின் மூன்றாவது பெரிய நகரமான காலி அமைந்துள்ள வாலே டெல் கௌகா மாகாணத்தில் 27 பேரும் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். மனிசலேஸ் நகரிலும் இருவர் உயிரிழந்தனர்.</p><p>வாலே டெல் கௌகாவில் உயிரிழந்தவர்களில் குறைந்தது மூவர் குழந்தைகள் என்று ஆளுநர் தெரிவித்தார். இந்த நிலநடுக்கம் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள பெரேரா, குவிப்டோ, காலி மற்றும் மனிசலேஸ் ஆகிய நகரங்களைச் சிதைத்தது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய அதிர்வுகள் குறித்த அதிகாரிகளின் அச்சங்களுக்கு மத்தியிலும், இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளிடையே குடியிருப்பாளர்களும் தேடுதல் குழுவினரும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.</p><h2>மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம்:</h2><p>நாடு முழுவதும் 20-க்கும் மேற்பட்ட நகராட்சிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கொலம்பியாவின் உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.</p><p>நிலநடுக்கத்தின் மையப்பகுதியை சுற்றியுள்ள கொலம்பியாவின் பசிபிக் பிராந்தியமானது, உலகின் பெரும்பாலான நிலநடுக்கங்கள் நிகழும் இடமான பசிபிக் பெருங்கடலை சுற்றியுள்ள நில அதிர்வு பிளவுகளின் மண்டலமான "ரிங் ஆஃப் ஃபயர்" (Ring of Fire) பகுதியில் அமைந்துள்ளது.</p><p>கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் இது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>டி.என்.பி.எல்.: சேலம் அணிக்கு எதிரான போட்டியில் மதுரை பேந்தர்ஸ் அபார வெற்றி!</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-mdp-beat-sal-by-36-runs</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-mdp-beat-sal-by-36-runs#comments</comments><guid isPermaLink="false">7608f499-7d5b-4f99-8707-7fad710e0fc4</guid><pubDate>Mon, 10 Aug 2026 17:33:53 +0000</pubDate><atom:updated>2026-08-10T17:33:53.104Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,Salem Spartans,madurai panthers,சேலம் ஸ்பார்ட்டன்ஸ்,மதுரை பேந்தர்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/iq3g3c61/MDP.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MDP Celebration]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/iq3g3c61/MDP.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>10-ஆவது <a href="https://www.maalaimalar.com/topic/tnpl">டி.என்.பி.எல்.</a> டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முறை தொடரின் அனைத்து போட்டிகளும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.</p><p>இத்தொடரில் இன்று நடைபெற்ற 11-ஆவது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, மதுரை பாந்தர்ஸ் முதலில் பேட்டிங் செய்தது.</p><h2>நல்ல தொடக்கம்:</h2><p>மதுரை அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய ராம் குமார் - சித்தார்த் மகாதேவன் சிறப்பாக ஆடி அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். தொடக்க வீரரான ராம் குமார் 19 பந்துகளில் 36 ரன்களை (4 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) எடுத்தனர். இவருடன் களமிறங்கிய சித்தார்த் மகாதேவன் 42 பந்துகளில் 60 ரன்களை (5 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) எடுத்தார்.</p><p>தொடர்ந்து களமிறங்கிய சதுர்வேத் 5 ரன்களும், கேப்டன் பால்சந்தர் அனிருத் 7 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இது தவிர அதிகபட்சமாக அதீக் அர் ரகுமான் 39 ரன்களும், சரவணன் 19 ரன்களும் எடுத்தனர். இறுதியில் மதுரை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது.</p><p>இதையடுத்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேலம் அணிக்கு சுமாரான தொடக்கமே கிடைத்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய ஆர் கவின் 22 ரன்களிலும், ஹரி நிஷாந்த் 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய சன்னி சந்து ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.</p><h2>மதுரை வெற்றி:</h2><p>அடுத்து களமிறங்கிய நிதிஷ் ராஜகோபால் 20 ரன்களிலும், கேப்டன் எஸ் அபிஷேக் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து களமிறங்கியவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் சேலம் அணி ஸ்பார்ட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 159 ரன்களை எடுத்தது.</p><p>இதனால் மதுரை பேந்தர்ஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. சேலம் அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய தீபேஷ் தேவந்திரன் 3 விக்கெட்டுகளையும், ரோஹன் புத்ரா மற்றும் விக்னேஷ் தலா 2 விக்கெட்டுகளையும், சரவணன் மற்றும் ஷோயப் கான் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.</p>]]></content:encoded></item><item><title>பக்தர்கள் கோரிக்கை ஏற்பு: திருச்செந்தூர் கோவிலில் தரிசனத்திற்கு நேர கட்டுப்பாட்டில் தளர்வு..!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/devotees-request-accepted-tiruchendur-temple-darshan-time-relaxed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/devotees-request-accepted-tiruchendur-temple-darshan-time-relaxed#comments</comments><guid isPermaLink="false">fd8db5c1-5d27-4013-8525-cf707e61747a</guid><pubDate>Mon, 10 Aug 2026 16:37:30 +0000</pubDate><atom:updated>2026-08-10T16:37:30.685Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruchendur Temple,திருச்செந்தூர் கோவில்,நேரக்கட்டுப்பாடு,தரிசனம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/529exynk/Tiruchendur.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருச்செந்தூர் கோவில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/529exynk/Tiruchendur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பொது தரிசனம், ரூ.100 கட்டண தரிசனம், மூத்த குடிமக்கள் வரிசை மூலம் தினமும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் பல மடங்கு அதிகரித்து வருகிறது.</p><p>பக்தர்கள் எளிதாக சாமி தரிசனம் செய்யும் சண்முக விலாசம் மண்டபத்தை இரும்பு கிரில் கேட் கொண்டு அடைத்து உள்ளதாலும், பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் நிலை உள்ளது.</p><p>இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னதாக திடீரென தரிசனத்திற்கு நேர கட்டுப்பாடு வைத்து அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. அந்த அறிவிப்பு பலகையில் கட்டண தரிசன வழியில் பக்தர்கள் மாலை 6.30 மணி வரைக்கும், பொது தரிசன வரிசையில் இரவு 7 மணி வரைக்கும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். விசேஷ மற்றும் விடுமுறை நாட்களில் தரிசன நேரம் மாறுதலுக்குட்பட்டது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.</p><p>பொதுவாக சாதாரண நாட்களில் பக்தர்கள் காலை 5 மணிமுதல் இரவு 9 மணி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த திடீர் அறிவிப்பு பக்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</p><p>இதனால் ஏற்கனவே இருந்து முறைப்படி சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கைவிடுத்தனர். இந்த நிலையில் பழைய அறிவிப்பு பலகை மாற்றப்பட்டு புதிய பலகை வைக்கப்பட்டுள்ளது.</p><p>அதில்,</p><p>* தினமும் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.</p><p>* இரவு 8 மணி வரை தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.</p><p>* ஞாயிறு காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவுார்கள்.</p><p>* விசேஷ நா்களில தரிசன நேரங்கள் மாறுதலுக்குட்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மொழியின் ஆளுமையுடன் மதத்தை ஒப்பிட்டு பேசுவது சரியா? - அமைச்சர் மரிய வில்சனுக்கு நயினார் கேள்வி! </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/is-it-right-to-compare-religion-with-the-stature-of-a-language-nainar-questions-minister-maria-wilson</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/is-it-right-to-compare-religion-with-the-stature-of-a-language-nainar-questions-minister-maria-wilson#comments</comments><guid isPermaLink="false">f36a38db-27e0-43ab-a243-0f214c930689</guid><pubDate>Mon, 10 Aug 2026 16:17:51 +0000</pubDate><atom:updated>2026-08-10T16:17:51.398Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்,tamil,நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,கிறிஸ்தவம்,அமைச்சர் மரிய வில்சன்,Minister Mary Wilson,Christianity</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/czp1r1iz/New-Project-2026-08-10T214717.083.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மொழியின் ஆளுமையுடன் மதத்தை ஒப்பிட்டு பேசுவது சரியா? - அமைச்சர் மரிய வில்சனுக்கு நயினார் கேள்வி! ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/czp1r1iz/New-Project-2026-08-10T214717.083.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கி பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், அமைச்சர் மரியவில்சனிடம் அவரது தமிழ் உச்சரிப்புத்திறனை மேம்படுத்திக் கொள்ளுமாறு ஒரு அறிவுரையாக கூறினார். </p><p>இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் மரியவில்சன் தான் ஒரு கிறிஸ்தவர் என்றும், தனக்கு எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் எனத் தெரியும் என்றும் ஆவேசமாகப் பேசியிருந்தார். </p><p>இந்நிலையில் அமைச்சர் மரிய வில்சனின் இந்தப் பேச்சுக்கு அவர் மன்னிப்புக்கோர வேண்டும் என பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்.,</p><p>“இன்றைய சட்டமன்றத்தில் உங்கள் மொழியாற்றல் மீதான விவாதத்தின் போது, “எனது மதம் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது” என்பதோடு நீங்கள் நிறுத்தியிருந்தால் அது உங்களின் தனிப்பட்ட அனுபவம். </p><p>ஆனால், “எனது மதம் எனக்கு கற்று கொடுத்ததை, எத்தனை தமிழ் படித்தாலும் தெரிந்து கொள்ள முடியாது” என்று நீங்கள் கூறுவது, தமிழின் மீதான தாக்குதலாகத் தான் தெரிகிறது. </p><p>“அன்பு” என்ற வார்த்தைக்கு பல மதங்கள் கற்பித்த பல அர்த்தங்களை, "அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்” என்ற ஒற்றை வரியில் தூக்கி சாப்பிட்ட மொழி தான் நம் தாய் மொழி தமிழ். “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளலாரின் ஜீவகாருண்ய ஒழுக்கத்தை விட, இரக்கத்தைப் பற்றி இவ்வுலகில் வேறு யாரால் நுட்பமாக எடுத்துரைக்க முடியும்? </p><p>“தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்ற புறநானூற்றுப் பாடலை நீங்கள் சரியாக படித்து புரிந்திருந்தாலே, “அமைதி” என்ற வார்த்தைக்கு தமிழ் மொழியில் உள்ள ஆழமான அர்த்தம் உங்களுக்கு தெரிந்திருக்கும். </p><p>பிறப்பால் நீங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால், உணர்வால் நாம் அனைவரும் தமிழர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய சட்ட மன்றத்தில் கூட உங்கள் கட்சி தலைமையும் அதைத் தானே சுட்டிக்காட்டினார்? </p><p>அப்படியிருக்கையில் உங்கள் மதத்தை நீங்கள் உயர்த்திப் பிடிப்பதில் தவறில்லை. ஆனால், தமிழ் மொழியை நீங்கள் தாழ்த்துவதை ஒரு போதும் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, இன்று உணர்ச்சி மிகுதியில் தமிழ் மொழி மீது வைத்த தவறான விமர்சனத்திற்கு நீங்கள் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>109 ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து அரசுக்கு ரூ.35,000 கடன் வழங்கிய இந்தியர்: திருப்பி கேட்கும் பேரன்கள்..!</title><link>https://www.maalaimalar.com/news/national/indian-businessman-loan-to-british-government-109-years-ago</link><comments>https://www.maalaimalar.com/news/national/indian-businessman-loan-to-british-government-109-years-ago#comments</comments><guid isPermaLink="false">bd2766d1-b23c-4420-bb3a-9d5f165cf05f</guid><pubDate>Mon, 10 Aug 2026 16:14:40 +0000</pubDate><atom:updated>2026-08-10T16:14:40.006Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>England,Madhyapradesh,மத்தியப் பிரதேசம்,கடன்,இங்கிலாந்து,war loan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/8k57k5vl/Untitled-design-34.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ இந்திய தொழிலதிபர் கொடுத்த 35,000 ரூபாய் கடனுக்கு 109 ஆண்டுகள் கழித்து பேரன்கள் கோரிக்கை]]></media:title><media:description type="html"><![CDATA[ British Loan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/8k57k5vl/Untitled-design-34.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் முதலாம் உலகப் போரின்போது, பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு ரூ.35,000 கடனாக வழங்கி இருந்தார். தற்போது ஓர் நூற்றாண்டுக்கும் மேலான நிலையில், அந்த கடனைத் திருப்பிச் செலுத்திமாறு தொழிலதிபரின் பேரன்கள் இங்கிலாந்து அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.</p><p>மேலும் தங்களது கோரிக்கையை பரிசீலிக்க, இங்கிலாந்து அதிகாரிகள் பதிலளித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.</p><h3><strong>1937இல் இங்கிலாந்து வாங்கிய கடன்</strong></h3><p>செஹோர் நகரில் தொழிலதிபரின் பேரன்கள், வினய் மற்றும் விவேக் ருத்தியா செய்தியார்களுக்கு பேட்டி அளித்தனர். </p><p>அப்போது அவர்கள் கூறுகையில், “1937-ல் இறந்து போன எங்கள் தாத்தா சேத் ஜும்மா லால் ருத்தியா, தான் விட்டுச்சென்ற ஆவணங்கள் மற்றும் கடிதப் பரிமாற்றங்களின் அடிப்படையில், எங்களது சட்ட ஆலோசகர் பிப்ரவரி மாதம் இங்கிலாந்து கடன் மேலாண்மை அலுவலகத்திற்கு ஒரு கடிதம் எழுதினார்.</p><p>இதையடுத்து நாங்கள் அனுப்பிய கோரிக்கையை பரிசீலிக்க இங்கிலாந்து அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. </p><p>முன்னதாக முதலாம் உலகப் போரின்போது, ஏராளமான இந்திய வீரர்கள் பிரிட்டிஷ் ராணுவத்தில் இணைந்தனர்.</p><p>அப்போது உணவு, தண்ணீர் மற்றும் இதர போர் செலவுகளுக்கு நிதியளிப்பதற்காக அரசாங்கம் இந்தியாவிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாயைத் திரட்டியது.</p><p>அந்த நேரத்தில், பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு 35,000 ரூபாயை எங்கள் தாத்தா கடனாக வழங்கினார். 109 ஆண்டுகள் பழமையான அந்த கடனுக்கான ஆவணங்கள் பதிவேடுகளில் கண்டெடுக்கப்பட்டு எங்களிடம் உள்ளது.</p><p>அந்த ஆவணத்தில், சேத் ஜும்மா லால் ருத்தியா, இந்திய போர் கடனுக்காக 35,000 ரூபாய் செலுத்தி, அதன் மூலம் அரசாங்கத்திற்கும் பேரரசிற்கும் தனது விசுவாசத்தை வெளிப்படுத்தினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>ஜூன் 4, 1917 தேதியிட்ட அந்த ஆவணத்தில், போபாலில் உள்ள ஒரு அரசியல் முகவரின் கையொப்பம் இடம்பெற்றுள்ளது.</p><h3><strong>இங்கிலாந்திற்கு கடிதம்</strong></h3><p>இதையடுத்து எனது வழக்கறிஞர் ஸ்ரீயான்ஷ் ரணிவால் மூலம், இங்கிலாந்து அரசாங்கத்தின் கடன் மேலாண்மை அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மற்றும் அச்சுப் பிரதி வழியாக ஒரு சட்டப்பூர்வ அறிவிப்பை அனுப்பினோம்.</p><p>சமீபத்தில், எனது வழக்கறிஞருக்கு இங்கிலாந்து கடன் மேலாண்மை அலுவலகத்திடமிருந்து ஒரு பதில் கிடைத்தது.</p><p>அதில், உங்கள் கட்சிக்காரருக்கு உரிமை கோரப்படாத பணம் கிடைக்க உரிமை உண்டு என்று நீங்கள் நம்பினால், சம்பந்தப்பட்ட சொத்துப் பங்கீடு தொடர்பான உங்களிடம் உள்ள தகவல்களை அளித்து, அரசுப் பத்திரப் பதிவாளரான கம்ப்யூட்டர்ஷேர் இன்வெஸ்டர் சர்வீசஸ் பிஎல்சி-யைத் தொடர்பு கொள்ளும்படி பதில் அனுப்பியது.</p><p>மேலும் இந்த ஆவணங்களுடன் வேறு ஏதேனும் சான்றிதழ்கள் மற்றும் கடிதப் போக்குவரத்துகள் உள்ளிட்ட ஆவண சான்றுகளின் நகல்களை நீங்கள் வழங்கினால் அது உதவியாக இருக்கும்,” என்று இங்கிலாந்து அரசு எங்களுக்கு கடிதம் அனுப்பியது.</p><p>மேலும், “ஒரு நூற்றாண்டுக்கும் மேலான இதன் மதிப்பு, வட்டியையும் சேர்த்து, இன்று பல கோடிகளாக இருக்கும். பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு இந்த தொகையைக் கடனாக கொடுத்த 20 ஆண்டுகளுக்குப் பிறகு, 1937-ல் எனது தாத்தா சேத் ஜும்மா லால் இறந்துவிட்டார்.</p><h3><strong>கடனை திருப்பித் தர கோரிக்கை</strong></h3><p>போபால் மாநிலத்தின் நிர்வாகத்தை சீரமைப்பதற்காக பிரிட்டிஷ் அரசாங்கம் இந்த பணத்தை எங்கள் தாத்தாவிடம் இருந்து கடனாகப் பெற்றது.</p><p>மேலும், சர்வதேச சட்டத்தின்படி, ஒரு இறையாண்மை கொண்ட நாடு கொள்கையளவில் தனது பழைய கடன்களை திருப்பி செலுத்த சட்டப்பூர்வமாக கடமைப்பட்டுள்ளது” என்று விவேக் ருத்தியா கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ராகுல் காந்தி பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறார்: ஜே.பி. நட்டா குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-behaving-irresponsibly-deliberately-disrupting-parliament-nadda</link><comments>https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-behaving-irresponsibly-deliberately-disrupting-parliament-nadda#comments</comments><guid isPermaLink="false">63be20a5-9aec-41dc-becf-640066cf5838</guid><pubDate>Mon, 10 Aug 2026 15:42:32 +0000</pubDate><atom:updated>2026-08-10T15:42:32.882Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,நாடாளுமன்றம்,ஜேபி நட்டா,JP Nadda,parliament</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/3ta5crrm/RahulGandhiJPNadda.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல் காந்தி- ஜே.பி. நட்டா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/3ta5crrm/RahulGandhiJPNadda.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராகுல் காந்தியின் கோரிக்கையை ஏற்று, நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு ஒப்புக்கொண்ட போதிலும், காங்கிரஸ் தலைவர் தொடர்ந்து தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டே இருந்ததாக மத்திய அமைச்சர் நட்டா குற்றம்சாட்டியுள்ளார்.</p><h2>இது தொடர்பாக ஜே.பி. நட்டா கூறியதாவது:-</h2><p>ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிக்கை அளிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கோரிக்கை விடுத்தார். உள்துறை அமைச்சர் அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டபோது, ​​காங்கிரஸ் தலைவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, ராமர் கோயில் நன்கொடை தொடர்பான முறைகேடு புகார்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரத் தொடங்கினார்.</p><h2>விவாதிக்க நாங்கள் தயார்</h2><p>அவர்கள் ஏன் விவாதத்திலிருந்து ஓடுகிறார்கள்? நான் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன் ராகுல் காந்தி அவர்களே, விவாதத்திலிருந்து ஓடாதீர்கள். நாங்கள் தயாராக இருக்கிறோம். அவைக்குள் எந்தவொரு விவகாரம் குறித்தும் விவாதிக்க நாங்கள் தயாராக உள்ளோம். ஓடாதீர்கள்.</p><p>அவையின் செயல்பாட்டைத் தடுப்பதே அவரது நோக்கம் போலத் தெரிகிறது. அவை செயல்படுவதை அவர் விரும்பவில்லை. அதனால்தான் கடந்த 15 நாட்களாக அவர் நடவடிக்கைகளைச் சீர்குலைத்து வருகிறார்.</p><h2>பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறார் ராகுல் காந்தி</h2><p>ராகுல் காந்தி பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்கிறார். எதிர்மறையான அரசியலில் ஈடுபடுகிறார். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். நான் ராகுல் காந்திக்குச் சவால் விடுகிறேன். அவைக்கு வாருங்கள், நாங்கள் விவாதத்திற்குத் தயாராக இருக்கிறோம். மேலும் சொல்கிறேன், உங்களுக்குத் தகுந்த பதில் கிடைக்கும்.</p><p>தவறான தகவல்களைப் பரப்பாதீர்கள். ஜந்தர் மந்தரில் துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை, அங்கு துப்பாக்கிச் சூடு நடத்த எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.</p><p>இவ்வாறு ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சரிவை நோக்கி செல்லும் ரூபாய் மதிப்பு - இந்திய ரிசர்வ் வங்கியின் அடுத்தகட்ட நடவடிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/rupee-sliding-value-rbi-next-steps</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/rupee-sliding-value-rbi-next-steps#comments</comments><guid isPermaLink="false">589217a3-78ed-413c-ae1b-037fca704312</guid><pubDate>Mon, 10 Aug 2026 15:30:26 +0000</pubDate><atom:updated>2026-08-10T15:30:26.037Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>RBI,அமெரிக்க டாலர்,ரூபாய்,rupee,US dollar,ரிசர்வ் வங்கி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/j9vzlzhz/Untitled-design-33.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ RBI அந்நிய செலாவணி தலையீடு மூலம் மதிப்பு வீழ்ச்சியை கட்டுப்படுத்த முயற்சி]]></media:title><media:description type="html"><![CDATA[ Rupee Value]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/j9vzlzhz/Untitled-design-33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்படும் அதீத ஏற்ற இறக்கங்களை கட்டுப்படுத்த, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அந்நிய செலாவணி சந்தையில் சில மாற்றங்களை செய்ய வாய்ப்புள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>மத்திய வங்கி ஒரு குறிப்பிட்ட நாணயமாற்று விகிதத்தை இலக்காகக் கொள்ளாவிட்டாலும், சந்தையில் திடீரென்று ஏற்படும் ஏற்ற இறக்கங்களை தடுக்க அது முயற்சி எடுத்து வருகிறது.</p><p>இன்றைய நிலவரப்படி ஒரு அமெரிக்க டாலர், இந்திய மதிப்பில் ரூ.95.37-ஆக உள்ளது.</p><p>இதையடுத்து ரிசர்வ் வங்கி சில மாற்றங்களை செய்வதற்கு எதிர்பார்க்கப்படும் ஐந்து காரணிகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h3><strong>அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்கள்</strong></h3><p>அதில் முதலாவதாக மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதட்டங்கள் காரணமாக பாதுகாப்பான முதலீடான அமெரிக்க டாலருக்கான தேவை அதிகரித்துள்ளது. </p><p>முதலீடு செய்பவர்கள் அதிக அபாயமுள்ள வளரும் சந்தை சொத்துக்களிலிருந்து விலகிச் செல்வதால், ரூபாய் போன்ற நாணயங்கள் பொதுவாக அழுத்தத்திற்கு உள்ளாகின்றன.</p><h3><strong>வலுவான அமெரிக்க டாலர்</strong></h3><p>அமெரிக்காவின் பணவியல் கொள்கை குறித்த எதிர்பார்ப்புகளால் மீள்திறன் கொண்ட அமெரிக்க டாலர், பெரும்பாலான வளரும் சந்தை நாணயங்களின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. </p><p>மேலும் வலுவான அமெரிக்க டாலர், மத்திய வங்கியின் ஆதரவின்றி ரூபாய் தனது நிலையை தக்கவைத்து கொள்வதை மேலும் கடினமாக்குகிறது.</p><h3><strong>ரூபாய் வரலாறு காணாத சரிவை நெருங்குகிறது</strong></h3><p>ஜூலை மாத இறுதியில் இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்து காணப்பட்டது. இந்த சரிவு இந்திய ரிசர்வ் வங்கியால் சரியான நேரத்தில் தலையிடப்பட்டு, அதன் மதிப்பு நிலைநிறுத்தப்படும் என வர்த்தகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><strong>இறக்குமதி செய்யப்பட்ட பணவீக்கத்தை கட்டுப்படுத்துதல்</strong></p><p>ரூபாயின் மதிப்பு குறைவது, இறக்குமதிகளின், குறிப்பாக கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, மின்னணுப் பொருட்கள் மற்றும் தொழில்துறை உள்ளீடுகளின் விலையை அதிகரிக்கிறது.</p><p>இந்த அதிக இறக்குமதி செலவுகள் பணவீக்கமாக மாறக்கூடும் என்பதால், இந்திய ரிசர்வ் வங்கி அதிகப்படியான ரூபாய் மதிப்பு வீழ்ச்சியைச் சீர்செய்வது அவசியமாகிறது.</p><p><strong>ஒழுங்கான சந்தை நிலைமைகளை பராமரித்தல்</strong></p><p>நிலையான நாணய மாற்று விகிதத்தை பாதுகாப்பதை விட, அதீத ஏற்ற இறக்கங்களை கட்டுப்படுத்துவதே இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிக்கப்பட்ட அணுகுமுறையாகும்.</p><p>அரசுக்கு சொந்தமான வங்கிகள் மூலம் டாலர்களை விற்பனை செய்து ரூபாயை வாங்குவதன் மூலம், நாணய பரிமாற்றங்கள் ஊக நடவடிக்கைகளை சார்ந்திராமல், பொருளாதார அடிப்படைகளின் அடிப்படையில் சீராக நடைபெறுவதை மத்திய வங்கி உறுதி செய்ய முயல்கிறது.</p><h3><strong>RBI தலையீட்டில் என்னென்ன அடங்கும்?</strong></h3><p>இந்திய ரிசர்வ் வங்கி வழக்கமாக ரூபாயை வாங்கும் அதே வேளையில், தனது அந்நிய செலாவணி கையிருப்பிலிருந்து அமெரிக்க டாலர்களை விற்கிறது.</p><p>இது சந்தையில் டாலர்களின் விநியோகத்தை அதிகரித்து, உள்நாட்டு நாணயத்திற்கு ஆதரவளித்து, நாணய மாற்று விகிதத்தில் ஏற்படும் கடுமையான ஏற்ற இறக்கங்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது.</p><p>வரும் காலங்களில் ரூபாயின் போக்கானது உலகளாவிய புவிசார் அரசியல் நிகழ்வுகள், கச்சா எண்ணெய் விலைகள், அமெரிக்க டாலரின் வலிமை, வெளிநாட்டு மூலதன வரவு மற்றும் அந்நிய செலவாணி சந்தையில் இந்திய ரிசர்வ் வங்கியின் மேலதிக தலையீடுகள் ஆகியவற்றை பொறுத்து அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>‘அருகே அருகே அவளும் வந்தாலே’ - ‘ஐ எம் கேம்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/aruge-aruge-avalum-vandhale-first-song-from-the-movie-i-am-game-released</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/aruge-aruge-avalum-vandhale-first-song-from-the-movie-i-am-game-released#comments</comments><guid isPermaLink="false">d11e016b-0155-4e39-9c40-b6f76309928c</guid><pubDate>Mon, 10 Aug 2026 15:16:17 +0000</pubDate><atom:updated>2026-08-10T15:16:17.199Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Kayadu Lohar,கயாடு லோஹர்,Dulquer Salmaan,துல்கர் சல்மான்,I&apos;m Game,ஐ எம் கேம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/mm81gy8j/New-Project-2026-08-10T204041.298.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘அருகே அருகே அவளும் வந்தாலே’ - ‘ஐ எம் கேம்’ படத்தின் 2வது பாடல் வெளியீடு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/mm81gy8j/New-Project-2026-08-10T204041.298.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆர்டிஎக்ஸ் இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் துல்கர் சல்மான், கயாடு லோஹர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளப் படம் ‘ஐ எம் கேம்’. இவர்களோடு மிஸ்கின், கதிர், வினய், சம்யுக்தா விஸ்வநாதன் மற்றும் சாண்டி மாஸ்டர் ஆகியோரும் நடித்துள்ளனர். </p><p>அதிர்ஷ்டத்தை அதிகம் நம்பும் ஒருவன் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களை அடிப்படையாக கொண்டு படம் உருவாகியுள்ளது. படத்தை துல்கர் சல்மான், ஜாம் வர்கீஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். </p><p>ஜேக்ஸ் பெஜாய் படத்திற்கு இசையமைத்துள்ளார். படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆக.20ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான அருகே அருகே வெளியாகி உள்ளது.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/ubEBotsVatU"></iframe></figure>]]></content:encoded></item><item><title>M.Ed. மாணவர்கள் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நாளை தொடக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-m-ed-admissions-online-registration-from-august-11</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-m-ed-admissions-online-registration-from-august-11#comments</comments><guid isPermaLink="false">6a3b4443-9827-4d72-ae24-57a0ad07cae7</guid><pubDate>Mon, 10 Aug 2026 15:16:14 +0000</pubDate><atom:updated>2026-08-10T15:16:14.550Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணவர்கள் சேர்க்கை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/xjccxkvk/Vishwanathan001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் விஸ்வநாதன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/xjccxkvk/Vishwanathan001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>2026-27-ஆம் கல்வியாண்டிற்கான அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். (M.Ed.) மாணாக்கர் சேர்க்கைகான இணையதள விண்ணப்பப் பதிவு 11.08.2026 முதல் 20.08.2026 வரை நடைபெறவுள்ளது.</p><p>தமிழ்நாட்டில் எம்.எட். பாடப்பிரிவுகள் கொண்டுள்ள 6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 300 இடங்கள் உள்ளன. இவ்விடங்களுக்கு 2026-27-ஆம் கல்வியாண்டில் மாணாக்கர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 11.08.2026 அன்று முதல் இணையவழியில் தொடங்கும்.</p><p>மாணாக்கர்கள் <a href="https://www.tngasa.in">www.tngasa.in</a> என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பப் பதிவினை மேற்கொள்ளலாம். மேற்படி இணையதள முகவரியில் 20.08.2026 வரை பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.</p><h2>தரவரிசை பட்டியல்</h2><p>பின்னர், இதற்கான தரவரிசைப் பட்டியல் 25.08.2026 அன்று வெளியிடப்படும். மாணாக்கர் சேர்க்கை 27.08.2026 முதல் 31.08.2026 வரை நடைபெறும். மேலும், முதலாம் ஆண்டு வகுப்புகள் 01.09.2026 அன்று முதல் துவங்கும்.</p><p>இவ்வாறு உயர் கல்வித்துறை பெ. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பல் ஈறுகளை பாதுகாப்பது ஏன் முக்கியம்?-மருத்துவர்கள் அறிவுரை!</title><link>https://www.maalaimalar.com/health/generalmedicine/why-protecting-gums-is-important-dentists-advice</link><comments>https://www.maalaimalar.com/health/generalmedicine/why-protecting-gums-is-important-dentists-advice#comments</comments><guid isPermaLink="false">e353004e-7b06-415a-893a-0019dedf4ea0</guid><pubDate>Mon, 10 Aug 2026 15:10:36 +0000</pubDate><atom:updated>2026-08-10T15:10:36.445Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Health,ஆரோக்கியம்,health care tips,உடல்நலம்,Bleeding gums,Toothgums,பல் ஈறுகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/9a9fkxmw/teeth.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Bleeding gums]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/9a9fkxmw/teeth.jpg?w=280" width="280"></media:thumbnail><category>பொது மருத்துவம் (General Medicine)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பற்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் பற்களைப் போலவே பல் ஈறுகளுக்கும் முக்கியப் பங்கு உள்ளது. பற்களைச் சுற்றி அவற்றைத் தாங்கி நிற்கும் திசுக்களாக ஈறுகள் செயல்படுகின்றன. ஈறுகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படும்போது, அது பற்களின் உறுதியையும் பாதிக்கக்கூடும். எனவே பல் துலக்குவதுடன் ஈறுகளின் ஆரோக்கியத்தையும் முறையாகப் பராமரிப்பது அவசியம்.</p><h2>ஈறுகளில் <strong>ஏற்படும் பிரச்</strong>சனைகள்</h2><p>ஈறுகளில் ஏற்படும் பொதுவான பிரச்சனைகளில் ஈறு அழற்சி முக்கியமானது. பற்களின் இடுக்குகளில் உணவுத் துகள்கள் மற்றும் பாக்டீரியாக்கள் சேர்ந்து பிளாக் எனப்படும் படலத்தை உருவாக்குகின்றன. இதை முறையாக அகற்றாமல் விட்டால் ஈறுகளில் வீக்கம், சிவத்தல் மற்றும் ரத்தக்கசிவு ஏற்படலாம். </p><p>ஆரம்ப நிலையில் ஏற்படும் ஈறு அழற்சியை முறையான பல் சுத்தம் மற்றும் வாய்ச் சுகாதாரத்தின் மூலம் கட்டுப்படுத்த முடியும். ஆனால் அது நீண்ட காலம் கவனிக்கப்படாமல் இருந்தால் பற்களைத் தாங்கி நிற்கும் எலும்பு மற்றும் திசுக்களையும் பாதிக்கும் ஈறு நோயாக மாறக்கூடும்.</p><h2>ஈறுகளில் ரத்த<strong>ம் வருவது எதைக்</strong> குறிக்கிறது?</h2><p>பல் துலக்கும்போது அல்லது உணவை கடிக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது சாதாரணமானது அல்ல. பெரும்பாலும் இது ஈறுகளில் ஏற்பட்டுள்ள அழற்சியின் அறிகுறியாக இருக்கலாம். </p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/k9j2ocw7/gums.jpg" /></figure><p>கடினமாக பல் துலக்குவது, பிளாக் மற்றும் டார்டர் படிதல் போன்றவையும் காரணமாக இருக்கலாம். தொடர்ந்து ஈறுகளில் ரத்தம் வந்தால் அதை அலட்சியப்படுத்தாமல் பல் மருத்துவரிடம் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.</p><h2>ஈறுகள் வீக்க<strong>ம் மற்றும் வ</strong>லி</h2><p>ஈறுகள் சிவந்து வீங்குவது, தொடும்போது வலி ஏற்படுவது, வாய் துர்நாற்றம் மற்றும் ஈறுகள் மெதுவாகப் பற்களில் இருந்து விலகுவது போன்றவை ஈறு நோயின் அறிகுறிகளாக இருக்கலாம். சிலருக்கு பற்கள் ஆடுவது அல்லது பற்களுக்கு இடையில் இடைவெளி அதிகரிப்பது போன்ற மாற்றங்களும் ஏற்படலாம்.</p><h2>ஈறுகளை எவ்<strong>வாறு பாதுகாப்ப</strong>து?</h2><p>தினமும் குறைந்தது இரண்டு முறை மென்மையான பிரஷ் பயன்படுத்தி பற்களையும் ஈறுகளின் விளிம்பையும் மெதுவாகச் சுத்தம் செய்ய வேண்டும். பற்களுக்கு இடையில் சிக்கியுள்ள உணவுத் துகள்கள் மற்றும் பிளாக்கை அகற்ற ஃப்ளாஸ் அல்லது பல் இடை சுத்தம் செய்யும் கருவிகளைப் பயன்படுத்தலாம். </p><p>அதிகப்படியான சர்க்கரை உணவுகள் மற்றும் சர்க்கரை நிறைந்த பானங்களை அடிக்கடி உட்கொள்வதைத் தவிர்ப்பதும் பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்திற்கு உதவும். புகையிலைப் பொருட்களைத் தவிர்ப்பது மிகவும் முக்கியம். புகைபிடித்தல் மற்றும் புகையிலைப் பயன்பாடு ஈறு நோய்களின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.</p><h2>பல் மருத்து<strong>வர் பரிசோதனை அவசி</strong>யம்</h2><p>வலி வந்த பிறகு மட்டுமே பல் மருத்துவரை அணுகுவது சரியான அணுகுமுறை அல்ல. அவ்வப்போது பல் பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் பிளாக் மற்றும் டார்டர் படிதல், ஈறு நோய் மற்றும் பிற பல் பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற முடியும்.</p><h2>ஆரோக்<strong>கியமான ஈறுகள்-ஆரோக்கியமா</strong>ன புன்னகை</h2><p>ஈறுகள் ஆரோக்கியமாக இருந்தால் பற்களும் வலுவாக இருக்க உதவும். ஈறுகளில் ரத்தக்கசிவு, வீக்கம், தொடர்ந்து வலி, வாய் துர்நாற்றம் அல்லது பற்கள் ஆடுவது போன்ற அறிகுறிகள் இருந்தால் சுயமாக சிகிச்சை செய்வதை விட பல் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது பாதுகாப்பானது. </p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/2nofjp5m/tee.jpg" /></figure><p>தினசரி வாய்ச் சுகாதாரத்தை முறையாகப் பின்பற்றுவதும், தேவையான நேரத்தில் பல் பரிசோதனை செய்துகொள்வதும் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமான புன்னகையைப் பாதுகாக்க உதவும்.</p>]]></content:encoded></item><item><title>மழை பெய்தும் மாறாத நிலை... இந்தியாவில் தொடரும் பருவமழை பற்றாக்குறை!</title><link>https://www.maalaimalar.com/news/national/monsoon-deficit-continues-in-india-despite-recent-rains</link><comments>https://www.maalaimalar.com/news/national/monsoon-deficit-continues-in-india-despite-recent-rains#comments</comments><guid isPermaLink="false">3360cdb2-c29f-4102-be80-1485895cb988</guid><pubDate>Mon, 10 Aug 2026 14:50:26 +0000</pubDate><atom:updated>2026-08-10T14:50:26.797Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,பருவமழை,monsoon,Monsoon deficit,பருவமழை பற்றாக்குறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/2xgrdkq7/monsoon.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Monsoon deficit  India]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/2xgrdkq7/monsoon.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி, ஹரியானா மற்றும் கிழக்கு ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் கடந்த வாரத்தில் பெய்த நல்ல மழை, அப்பகுதிகளில் நிலவி வந்த மழைப் பற்றாக்குறையைச் போக்க உதவிய போதிலும், நாட்டின் ஒட்டுமொத்த பருவமழைப் பற்றாக்குறையில் இது பெரிய அளவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) தகவல்களின் அடிப்படையில் நாட்டின் முக்கிய விவரங்கள் பின்வருமாறு:</p><h2>மழை ப<strong>ற்றாக்கு</strong>றை நிலவரம்</h2><p>கடந்த 2-ஆம் தேதி நிலவரப்படி '12%' ஆக இருந்த நாட்டின் ஒட்டுமொத்த பருவமழை பற்றாக்குறை, நேற்று (ஆகஸ்ட் 9) '11%' ஆக மட்டுமே குறைந்துள்ளது. கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் அதிகபட்சமாக '25%' மழை பற்றாக்குறை பதிவாகியுள்ளது. தெற்கு தீபகற்ப இந்தியாவில் '17%' மற்றும் வடமேற்கு இந்தியாவில் '11%' பற்றாக்குறை பதிவாகியுள்ளது. பீகார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் 20% மற்றும் அதற்கு மேற்பட்ட கடுமையான மழை பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளன.</p><h2>விவசாய<strong>த்தில் இதன்</strong> தாக்கம்</h2><p>* நாட்டின் மொத்த விவசாயப் பரப்பளவில் சுமார் '88%' பகுதிகளில் கரீஃப் பருவச் சாகுபடி/விதைப்பு ஏற்கனவே முடிவடைந்துவிட்டது.</p><p>* இதனால், கடந்த வார மழை விதைப்பு பரப்பளவில் நிலவிய பற்றாக்குறையை 1% மட்டுமே குறைக்க உதவியுள்ளது.</p><p>* நாட்டின் முக்கிய கரீஃப் பயிரான 'நெல் சாகுபடி பரப்பு', கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இன்னமும் 4% குறைவாகவே உள்ளது. பீகார் மற்றும் ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் நெல் மற்றும் சோளம் சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.</p><h2>அணை <strong>நீர்மட்டம் &amp; மின் உ</strong>ற்பத்தி</h2><p>இம்மாதத்தில் பெய்து வரும் இந்த மழை, நாட்டின் முக்கிய அணைகள் மற்றும் நீர்நிலைகளின் நீர் இருப்பை உயர்த்த உதவும். இது நீர்மின் உற்பத்திக்கும் மற்றும் அடுத்த சாகுபடி பருவத்திற்கும் சாதகமான சூழலை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>வானிலை <strong>முன்னறிவிப்பு</strong></h2><p>வங்காளதேசம் மற்றும் வட வங்கக்கடலோரப் பகுதிகளில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, ஆகஸ்ட் 13 முதல் மேற்கு வங்காளம், ஒடிசா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் மழை மீண்டும் தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>