<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 30 Jul 2026 05:11:56 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-30-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-30-july-2026#comments</comments><guid isPermaLink="false">bf0c91f5-aaf3-410c-a1d3-867674186d8c</guid><pubDate>Thu, 30 Jul 2026 04:27:27 +0000</pubDate><atom:updated>2026-07-30T05:11:10.848Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/f9fzok5j/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/f9fzok5j/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-praise-to-doctor-muthulakshmi-reddy-birthday">டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாள்- முதலமைச்சர் விஜய் புகழாரம்</a></p><p>* முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.  </p><p>* பெண்களின் சமூக முன்னேற்றத்திற்காகவும் ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும் முத்துலட்சுமி ரெட்டி ஆற்றிய மகத்தான சேவைகளை அவர் நினைவு கூர்ந்துள்ளார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/cjp-new-protest-warning-delhi-jantar-mantar-security">CJP புதிய போராட்டம் எச்சரிக்கை: டெல்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் உச்சகட்ட பாதுகாப்பு!</a></p><p>*தற்போது நிலுவையில் உள்ள வழக்குகளை மையமாக வைத்து மீண்டும் அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.</p><p>*பாஜனதா ஆளும் மாநிலங்களில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கைது செய்யப்பட்டு வருவதாக சிஜேபி குற்றம் சாட்டியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/nasa-to-livestream-total-solar-eclipse-on-august-12">ஆகஸ்ட் 12-ல் முழு சூரிய கிரகணத்தை நேரலையில் ஒளிபரப்பும் நாசா!</a></p><p>*சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு கடந்து செல்லும் போது, நிலவின் நிழல் பூமியின் மீது விழுவதால் இந்த முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது.</p><p>*இந்திய நேரப்படி ஆகஸ்ட் 12 ஆம் தேதி இரவு இந்த நிகழ்வு நடைபெறுவதால், இந்தியாவில் இதனை நேரில் பார்க்க முடியாது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-metro-phase-2-works-cm-vijay-orders-speedy-completion">சென்னை மெட்ரோ 2-ம் கட்டப் பணிகள்: விரைந்து முடிக்க முதலமைச்சர் விஜய் உத்தரவு!... </a></p><p>*கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகள், அவசரகால பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பயணிகளுக்கான வசதிகளை விரிவாகக் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.</p><p>*முதலமைச்சரைக் கண்ட பயணிகள் அவருடன் ஆர்வத்துடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/pok-human-rights-abuses-over-30-civilians-killed-in-pakistan-security-forces-firing">POK பேரணி.. பாகிஸ்தான் பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் 30 பொதுமக்கள் பலி</a></p><p>*இணையம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளை பாகிஸ்தான் அரசு முற்றிலும் முடக்கியுள்ளது.</p><p>* 33க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/us-iran-airstrikes-us-hits-iranian-targets-after-jordan-base-missile-attack">ஜோர்டான் சம்பவத்துக்கு பதிலடி.. ஈரான் மீது மீண்டும் முழுவீச்சில் அமெரிக்கா தாக்குதல்</a></p><p>*டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு இடையேயான சந்திப்பைத் தொடர்ந்து தாக்குதல்கள் மீண்டும் தொடங்கியுள்ளன</p><p>* குடியிருப்புப் பகுதி மீது ஏவுகணை தாக்கியதாகவும் ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-diesel-prices-in-chennai">சென்னையில் இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்</a></p><p>*பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.</p><p>*கடல்வழிப்பாதையில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/telegram-international-warrant-shock-russia-targets-pavel-durov-over-alleged-terror-support">பயங்கரவாதத்திற்கு உதவியதாக டெலிகிராம் நிறுவனருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த ரஷியா</a></p><p>*ரஷியாவில் பிறந்த பாவெல் தற்போது பிரஞ்சு, ஐக்கிய அரபு அமீரக குடியுரிமையைக் கொண்டு வெளிநாட்டில் வாழ்ந்து வருகிறார்.</p><p>*பிரான்சிலும் துரோவ் மீது விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-30-07-2026">GOLD PRICE TODAY : இன்று அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... எவ்வளவு தெரியுமா?</a></p><p>* சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. </p><p>* ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-irregularities-case-senthil-balajis-anticipatory-bail-plea">டாஸ்மாக் முறைகேடு வழக்கு- செந்தில் பாலாஜி முன்ஜாமின் கோரி மனு</a></p><p>* டாஸ்மாக் மதுபான கொள்முதல், டெண்டர் உள்ளிட்டவற்றில் மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி, டாஸ்மாக் முன்னாள் எம்.டி.விசாகன் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. </p><p>* டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தி.மு.க. முன்னால் அமைச்சர் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமின் மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/notice-issued-to-woman-who-worked-for-125-days-demanding-tax-payment-of-rs-2-75-crore">ஊரக வேலை திட்டத்தில் பணியாற்றும் பெண்ணுக்கு ரூ.2.75 கோடி வரி செலுத்தும்படி நோட்டீஸ்</a></p><p>* தனது வங்கி கணக்கு முடக்கப்பட்டதால் அதில் இருந்து கூலி பணத்தை எடுக்க முடியாமல் திரும்பி உள்ளார்.</p><p>* 125 நாள் வேலை செய்யும் பெண்ணுக்கு ரூ.2.75கோடி ஜி.எஸ்.டி. செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாள்- முதலமைச்சர் விஜய் புகழாரம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-praise-to-doctor-muthulakshmi-reddy-birthday</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-praise-to-doctor-muthulakshmi-reddy-birthday#comments</comments><guid isPermaLink="false">32716fed-6e34-446e-93c0-445eb9967389</guid><pubDate>Thu, 30 Jul 2026 05:01:43 +0000</pubDate><atom:updated>2026-07-30T05:01:43.283Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Dr Muthulakshmi Reddy,டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/9inpxa9a/vijay.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி- முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி- முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/9inpxa9a/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்</a>, இந்தியாவின் மிக முக்கிய சமூகப் போராளியும் தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவருமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.  அதில், பெண்களின் சமூக முன்னேற்றத்திற்காகவும் ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும் முத்துலட்சுமி ரெட்டி ஆற்றிய மகத்தான சேவைகளை அவர் நினைவு கூர்ந்துள்ளார். </p><p>முதலமைச்சர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><h2><strong>சமூகப் போராளி</strong></h2><p>தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவரும், மெட்ராஸ் மாகாண சட்டமன்ற மேலவைக்கு 1927ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவரும், பெண்களின் கல்வி, உரிமை மற்றும் சமூக முன்னேற்றத்திற்காகவும், ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவருமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் பிறந்த நாளில் அவரது மகத்தான சேவைகளை நினைவுகூர்ந்து போற்றுகிறேன்!</p><p>டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள், ஆதரவற்ற பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் புகலிடமாக 'அவ்வை இல்லம்', புற்றுநோயாளிகளின் வாழ்வொளியாக 'அடையாறு புற்றுநோய் நிலையம்' போன்ற மகத்தான நிறுவனங்களை உருவாக்கியதோடு, குழந்தைத் திருமண தடைச்சட்டத்துக்கு வித்திட்ட சமூகப் போராளி ஆவார்.</p><p>அவரது உயரிய இலட்சியங்களும், பெண் முன்னேற்ற முன்னெடுப்புகளும், மனிதநேயப் பணிகளும், தன்னலமற்ற அர்ப்பணிப்பும் தலைமுறைகளைக் கடந்து என்றும் தமிழ் மண்ணில் நிலைத்திருக்கும்! என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவரும், மெட்ராஸ் மாகாண சட்டமன்ற மேலவைக்கு 1927ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவரும், பெண்களின் கல்வி, உரிமை மற்றும் சமூக முன்னேற்றத்திற்காகவும், ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவருமான டாக்டர்… <a href="https://t.co/wip3GFieSA">pic.twitter.com/wip3GFieSA</a></p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2082681800778981759?ref_src=twsrc%5Etfw">July 30, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>சென்னை மெட்ரோ 2-ம் கட்டப் பணிகள்: விரைந்து முடிக்க முதலமைச்சர் விஜய் உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-metro-phase-2-works-cm-vijay-orders-speedy-completion</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-metro-phase-2-works-cm-vijay-orders-speedy-completion#comments</comments><guid isPermaLink="false">eb20e855-6883-46b2-8c50-eb948dd67c33</guid><pubDate>Thu, 30 Jul 2026 04:52:06 +0000</pubDate><atom:updated>2026-07-30T04:52:06.805Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை மெட்ரோ,cm vijay,முதலமைச்சர் விஜய்,CM Vijay Inspects,Chennai Metro Phase 2,முதலமைச்சர் விஜய் ஆய்வு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/nn7wv915/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay Inspects Travel by Train]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/nn7wv915/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளைத் தமிழக முதலமைச்சர் விஜய் நேற்று நேரில் ஆய்வு செய்தார். கள ஆய்வின் ஒரு பகுதியாக, பொதுமக்களுடன் சக பயணியாக ரெயிலில் பயணம் செய்து அவர்களுடைய கருத்துகளையும் கேட்டறிந்தார்.</p><h2><strong>அரசினர் தோட்டம் முதல் நந்தனம் வரை பயணம்:</strong></h2><p>தலைமைச் செயலகத்தில் அன்றாடப் பணிகளை முடித்துக் கொண்டு புறப்பட்ட முதலமைச்சர் விஜய், அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்தை வந்தடைந்தார். அங்கு தானே டிக்கெட் பெற்றுக்கொண்டு ரெயிலில் ஏறினார். அரசினர் தோட்டம் முதல் நந்தனம் வரை பயணிகளுடன் சேர்ந்து பயணித்த அவர், மக்களிடம் உரையாடினார். முதலமைச்சரைக் கண்ட பயணிகள் அவருடன் ஆர்வத்துடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.</p><h2><strong>பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வு:</strong></h2><p>நந்தனத்தில் அமைந்துள்ள மெட்ரோ தலைமை அலுவலகத்திற்குச் சென்ற முதலமைச்சரை உயர் அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து, மெட்ரோ ரெயில் பாதுகாப்பு ஏற்பாடுகள், கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகள், அவசரகால பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பயணிகளுக்கான வசதிகளை விரிவாகக் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.</p><h2><strong>101 அடி உயர மேம்பாலத்தில் பிரம்மாண்ட பாதை:</strong></h2><p>கிண்டி கத்திப்பாரா பகுதியில் சுமார் 101 அடி உயரத்தில், 1,354 அடி நீளத்திற்கு அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்ட ரெயில் பாதையின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் நேரில் பார்வையிட்டார். இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்பணிகளின் முன்னேற்றத்தைக் கண்டு மெட்ரோ ரயில் அதிகாரிகளுக்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.</p><h2><strong>ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்:</strong></h2><p>தொடர்ந்து போரூர் மெட்ரோ ரெயில் நிலையம் சென்ற முதலமைச்சர், அங்கிருந்து பூந்தமல்லி வரை இயக்கப்பட்ட ஓட்டுநர் இல்லா  மெட்ரோ ரெயிலின் சோதனை ஓட்டத்தில் பங்கேற்றுப் பார்வையிட்டார்.</p><h2><strong>காலக்கெடுவுக்குள் முடிக்க உத்தரவு:</strong></h2><p>ஆய்வின் நிறைவாக, மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டப் பணிகள் அனைத்தையும் திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>பயங்கரவாதத்திற்கு உதவியதாக டெலிகிராம் நிறுவனருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த ரஷியா </title><link>https://www.maalaimalar.com/news/world/telegram-international-warrant-shock-russia-targets-pavel-durov-over-alleged-terror-support</link><comments>https://www.maalaimalar.com/news/world/telegram-international-warrant-shock-russia-targets-pavel-durov-over-alleged-terror-support#comments</comments><guid isPermaLink="false">24790f60-bb74-486f-93f6-eac5d407c061</guid><pubDate>Thu, 30 Jul 2026 04:37:12 +0000</pubDate><atom:updated>2026-07-30T04:37:12.218Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Pavel Navageethan,Russia,பயங்கரவாதம்,Terrorism,Telegram,பாவெல் துரோவ்,ரஷியா,டெலிகிராம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/84kqeztc/tn-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ புதின், பாவெல்]]></media:title><media:description type="html"><![CDATA[ புதின், பாவெல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/84kqeztc/tn-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தொழில்நுட்பம் (Technology)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெலிகிராம் நிறுவனம், தலைமை நிர்வாக அதிகாரியுமான பாவெல் துரோவ் மீது பயங்கவரத்திற்கு உதவி செய்வதாக  குற்றம்சாட்டி சர்வதேச பிடிவாரண்ட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது ரஷியா. </p><p>ரஷியாவில் பிறந்த பாவெல் தற்போது பிரஞ்சு, ஐக்கிய அரபு அமீரக குடியுரிமையைக் கொண்டு வெளிநாட்டில் வாழ்ந்து வருகிறார். </p><h2>ரஷியா</h2><p>ரஷியாவின் பரவலாக பயன்படுத்தப்படும் ஊடகங்களில் ஒன்றாக டெலிகிராம் உள்ளது. ரஷிய அரசு டெலிகிராமில் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க முயன்று வருகிறது. பயனர்கள் தரவுகளை அரசுடன் பகிர்ந்துகொள்ள துரோவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. </p><p>மேலும் ரஷிய மக்களை அரசு ஆதரவு பெற்ற MAX என்ற தகவல் பரிமாற்ற செயலிக்கு மாறவும் ரஷிய அரசு ஊக்குவித்து வருகிறது.</p><p>இந்த சூழலில் ரஷியாவின் பாதுகாப்பு அமைப்பான பெடரல் செக்யூரிட்டி சர்வீஸ் (FSB) துரோவை கைது செய்ய சர்வதேச பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. </p> <h2>குற்றச்சாட்டு</h2><p>துரோவ், பயங்கரவாத செயல்பாடுகளுக்கு உதவி செய்வதாக FSB குற்றம்சாட்டியுள்ளது. மேலும் உக்ரைனிய உளவு அமைப்புகளும், பயங்கரவாத குழுக்களும் பயன்படுத்தும் வகையில் டெலிகிராமில் உள்ள உள்ளடக்கங்களை அந்நிறுவனம் நீக்கத் தவறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.</p><p>FSBயின்படி, ரஷியாவுக்குள் ஆட்களை பணிக்கு எடுக்கவும், நாசவேலைகளை ஒருங்கிணைக்கவும் , பயங்கரம், படுகொலைகள் மற்றும் சைபர் மோசடிகளை அரங்கேற்றவரும் டெலிகிராம் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தடை செய்யப்பட்ட தகவல்களையும் டெலிகிராமில் இருந்து நீக்க துரோவ் தவறிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்ச்சாட்டுகள் குறித்தும் கைது வாரண்ட் குறித்தும் பாவெல் துரோவ் தரப்பில் இன்னும் எந்த பதிலும் இல்லை. அழுத்தத்திற்கு மத்தியிலும் டெலிகிராம் தொடர்ந்து அதிகம் பயன்படுத்தப்படும் தகவல் பரிமாற்ற ஊடகங்களில் ஒன்றாக நீடித்து வருகிறது.</p> <p>குறிப்பாக 2022 முதல் நடைபெற்று வரும் <a href="https://www.maalaimalar.com/news/world/black-sea-ukraine-port-attack-indian-sailors-trapped">ரஷியா உக்ரைன் போரில் </a>இரு தரப்பிலும் டெலிகிராம் தகவல் பரிமாற்றத்துக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது பல அதிகாரபூர்வ பதிவுகளை தனது டெலிகிராம் கணக்கின் வழியே வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.</p><p>மேலும் டெலிகிராம் செயலி சட்டவிரோத உள்ளக்கடகங்களை கொண்டுள்ளதாக துரோவ் மீது பிரான்சிலும் துரோவ் மீது விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>வாட்ஸ்அப் வெப் வெர்ஷனில் வேற லெவல்அப்டேட்!</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/whatsapp-web-gets-audio-and-video-calling-support-with-call-transfer-and-more</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/whatsapp-web-gets-audio-and-video-calling-support-with-call-transfer-and-more#comments</comments><guid isPermaLink="false">fe4aa2a1-2d33-4d32-84ba-c28be4085a9e</guid><pubDate>Thu, 30 Jul 2026 04:32:00 +0000</pubDate><atom:updated>2026-07-30T04:32:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>WhatsApp,Apps,வாட்ஸ்அப்,ஆப்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/a3r8cb4w/WA-Update.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Whatsapp]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/a3r8cb4w/WA-Update.png?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலகளவில் முன்னணி குறுந்தகவல் செயலி வாட்ஸ்அப், அவ்வப்போது புதுப்துபு அம்சங்களை வழங்கி பயனர் அனுபவத்தை மேம்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், வாட்ஸ்அப் தனது இணைய வெர்ஷனில் அழைப்புகளை மேம்படுத்தும் புதிய அப்டேட் வழங்கியுள்ளது.</p><p>வாட்ஸ்அப் நிறுவனம் நிறுவனம் தனது  வெப் வெர்ஷனில் காலிங் வசதியை வழங்குகிறது. இதன் மூலம் பயனர்கள் டெஸ்க்டாப் ஆப் இன்றி வாட்ஸ்அப் வெப் மூலம் க்ரூப் ஆடியோ மற்றும் வீடியோ கால் மேற்கொள்ளலாம். </p><h2>புது அப்டேட்:</h2><p>புதிய அப்டேட் மூலம் பயனர்கள் க்ரூப் ஆடியோ மற்றும் க்ரூப் வீடியோ கால்களை வெப் பிரவுசரில் இருந்தபடியே மேற்கொள்ள முடியும். இதற்காக டெக்ஸ்டாப் செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இதுதவிர பயனர்கள் ஸ்கிரீன் ஷேரிங், எமோஜி ரியாக்ஷன், பிரத்யேக Calls Tab, கால் ஹிஸ்டரி மற்றும் காண்டாக்ட் உள்ளிட்ட ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.</p><p>இணைய வெர்ஷனில் மேற்கொள்ளப்படும் வாட்ஸ்அப் அழைப்புகளும் முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்படும் என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. இந்த சேவையில் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை என்றும் இது முற்றிலும் இலவசமாகவே வழங்கப்படுவதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.</p><h2>புதிய அம்சங்கள்:</h2><p>வாட்ஸ்அப் அழைப்புகளில் வழங்கப்பட்டுள்ள புதிய அப்டேட் வழக்கமான காலிங் அம்சங்களுடன் கால் டிரான்ஸ்ஃபர், வெயிட்டிங் ரூம், குயிக் ஹெச்.டி., நாய்ஸ் சப்ரெஷன் போன்ற வசதிகளுடன் வருகிறது.</p><p>இதில் கால் டிரான்ஸ்ஃபர் அம்சம் கொண்டு பயனர்கள் அழைப்பை துண்டிக்காமல் நேரடியாக ஆக்டிவ் க்ரூப் கால்-இல் இணைய முடியும். ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட் கொண்டு அழைப்புகளை மேற்கொண்டு அதனை வாட்ஸ்அப் வெப் அல்லது டெக்ஸ்டாப் செயலியில் தொடர முடியும்.</p><p>வெயிட்டிங் ரூம் அம்சம் கொண்டு பயனர்கள் க்ரூப் கால்களில் லின்க் இன்றி இணைய அனுமதிக்கிறது. வாட்ஸ்அப் கால் லின்க் உருவாக்கும் போது, பயனர்கள் “Require approval to join” ஆப்ஷனை செயல்படுத்தலாம். இவ்வாறு செய்யும் போது அழைப்பாளர்கள் அழைப்பிற்கு முன் காத்திருக்க செய்கிறது.</p><p>குயிக் ஹெச்.டி. அம்சம் அழைப்பு தொடங்கிய சில நொடிகளில் ஹெச்.டி. வீடியோ ஆப்ஷனை செயல்படுத்திவிடும். நாய்ஸ் சப்ரெஷன் வசதி அழைப்புகளின் போது பின்னணியில் இருக்கும் இரைச்சல் மற்றும் சத்தத்தை குறைத்து அழைப்பின் தரத்தை மேம்படுத்தும். இந்த அம்சத்தை இன்-கால் செட்டிங்ஸ்-இல் எப்போது வேண்டுமானாலும் செயல்படுத்த முடியும்.</p><p>வாட்ஸ்அப் நிறுவனம் இந்த அம்சங்களை உலகளவில் வரும் வாரங்களில் வெளியிடும் என்று தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆகஸ்ட் 12-ல் முழு சூரிய கிரகணத்தை நேரலையில் ஒளிபரப்பும் நாசா!</title><link>https://www.maalaimalar.com/news/world/nasa-to-livestream-total-solar-eclipse-on-august-12</link><comments>https://www.maalaimalar.com/news/world/nasa-to-livestream-total-solar-eclipse-on-august-12#comments</comments><guid isPermaLink="false">61b5509b-b35f-41eb-952a-5c69bc93f83a</guid><pubDate>Thu, 30 Jul 2026 04:22:46 +0000</pubDate><atom:updated>2026-07-30T04:22:46.128Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நாசா,முழு சூரிய கிரகணம்,Total Solar Eclipse  NASA,Perseid Meteor Shower,பெர்சீட்ஸ் விண்கல் மழை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/n0iqj6vm/nasa.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Total Solar Eclipse  NASA ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/n0iqj6vm/nasa.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வரும் ஆகஸ்ட் 12த் தேதி அன்று வட அரைக்கோளத்தின் பல பகுதிகளில் அரிதான மற்றும் கண்கவர் 'முழு சூரிய கிரகணம்' நிகழவுள்ளது. இந்த அரிய வானியல் நிகழ்வை உலகெங்கிலும் உள்ள மக்கள் பார்க்கும் வகையில் 'நாசா' தனது அதிகாரப்பூர்வ தளம் மற்றும் சமூக வலைத்தள பக்கங்களில் நேரலை செய்ய ஏற்பாடு செய்துள்ளது.</p><h2><strong>கிரகணம் எங்கெல்லாம் தெரியும்?</strong></h2><p>சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு கடந்து செல்லும் போது, நிலவின் நிழல் பூமியின் மீது விழுவதால் இந்த முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது.</p><h2><strong>முழு கிரகணம்:</strong></h2><p>கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யாவின் வட பகுதி, அட்லாண்டிக் பெருங்கடல், ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலின் சில பகுதிகளில் சூரியன் முழுமையாக நிலவால் மறைக்கப்பட்டு 'முழு சூரிய கிரகணம்' தென்படும்.</p><h2><strong>பகுதி கிரகணம்:</strong></h2><p>அமெரிக்காவின் வடகிழக்கு பகுதிகள், கனடா, ஐரோப்பாவின் பெரும்பகுதி மற்றும் வடமேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இது பகுதி கிரகணமாக தெரியும்.</p><h2><strong>முழு மறைப்பு நேரம்:</strong></h2><p>ஐஸ்லாந்தின் மேற்கு பகுதியில் கிரகணத்தின் உச்சக்கட்டத்தில் சூரியன் முழுமையாக மறைக்கப்படும் நிகழ்வு '2 நிமிடங்கள் 18 வினாடிகள்' வரை நீடிக்கும். ஐஸ்லாந்தில் மாலை வேளையிலும், ஸ்பெயினில் சூரிய அஸ்தமனத்திற்கு சற்று முன்பாகவும் முழு கிரகணம் தென்படும்.</p><p>பகுதி கிரகணம் தொடங்குவது முதல் முடிவது வரை இந்த முழு நிகழ்வும் சுமார் '4 மணி நேரமும் 23 நிமிடங்களும்' நீடிக்கும். இந்த கிரகணம் நிகழும் அதே இரவில் ஆண்டின் புகழ்பெற்ற 'பெர்சீட்ஸ் விண்கல் மழை' மற்றும் 'அமாவாசை' இரவும் இணைவது இதன் மற்றொரு சிறப்பு அம்சம்.</p><h2><strong>நாசாவின் அறிவியல் ஆராய்ச்சிகள்:</strong></h2><p>இந்த கிரகணத்தின் போது சூரியனின் வளிமண்டல மேலடுக்கான 'கொரோனா' பகுதியை விரிவாக ஆய்வு செய்ய அறிவியல் குழுக்கள் தீவிரமாக தயாராகி வருகின்றன.</p><h2><strong>WB-57 ஜெட் விமானங்கள்:</strong></h2><p> நாசாவின் அதிவேக ஆராய்ச்சி ஜெட் விமானங்கள் நிலவின் நிழலைத் தொடர்ந்து பறந்து, மேகங்கள் இல்லாத வளிமண்டலத்தின் மேல் பகுதியில் இருந்து சூரியன் கொரோனாவைத் தெளிவான புகைப்படங்கள் மற்றும் தரவுகள் மூலம் ஆய்வு செய்யும்.</p><h2><strong>ஆராய்ச்சி பலூன்கள்:</strong></h2><p>அமெரிக்கப் பல்கலைக்கழக மாணவர்கள் மூலம் ஐஸ்லாந்து மற்றும் ஸ்பெயினில் அறிவியல் பலூன்கள் விண்ணில் செலுத்தப்பட்டு, கிரகணத்தின் போது பூமியின் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள் அளவிடப்படும்.</p><h2><strong>பார்வையாளர்களுக்கான எச்சரிக்கை:</strong></h2><p>ஐரோப்பா மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளில் இந்த கிரகணத்தைப் பார்க்க சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் குவிந்து வருகின்றனர். சூரிய கிரகணத்தைப் வெறும் கண்களாலோ அல்லது சாதாரண கூலிங் கிளாஸ் மூலமாகவோ பார்க்கக்கூடாது. 'ISO 12312-2 'சான்றிதழ் பெற்ற சூரிய கிரகணக் கண்ணாடிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என நாசா எச்சரித்துள்ளது.</p><p>இந்திய நேரப்படி ஆகஸ்ட் 12 ஆம் தேதி இரவு இந்த நிகழ்வு நடைபெறுவதால், இந்தியாவில் இதனை நேரில் பார்க்க முடியாது. இருப்பினும், நாசாவின் நேரலை ஒளிபரப்பு மூலம் விண்வெளி ஆர்வலர்கள் இதனை தங்களது மொபைல் மற்றும் கணினிகளில் நேரடியாகக் கண்டு ரசிக்கலாம்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY : இன்று அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... எவ்வளவு தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-30-07-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-30-07-2026#comments</comments><guid isPermaLink="false">c6636af7-fdb0-4d45-b189-c5a9c6946ff3</guid><pubDate>Thu, 30 Jul 2026 04:18:06 +0000</pubDate><atom:updated>2026-07-30T04:18:06.917Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="350" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/vdfsbd0p/gold04.jpg" width="615"><media:title type="html"><![CDATA[ தங்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/vdfsbd0p/gold04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.</aside><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">தங்கம்</a> விலை கடந்த 27-ந்தேதி வரை குறைந்து வந்து, அதன் தொடர்ச்சியாக நேற்றும் விலை குறைந்திருந்தது. அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 215-க்கும் ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 720-க்கும் விற்பனை ஆனது. <a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-29-07-2026">நேற்றைய</a> நிலவரப்படி, கிராமுக்கு ரூ.60-ம், சவரனுக்கு ரூ.480-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 155-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 240-க்கும் விற்பனை செய்யப்பட்டது. </p><h2><strong>தங்கம் விலை உயர்வு</strong></h2><p>இந்நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு 75 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,230-க்கும் சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 840 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. </p><h2><strong>வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>வெள்ளி விலையில் மூன்றாவது நாளாக மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><h2><strong>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-</strong></h2><p>29-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,240</p><p>28-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,720</p><p>27-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,960</p><p>26-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,400</p><p>25-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,400</p><h2><strong>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-</strong></h2><p>28-07-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>28-07-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>27-07-2026- ஒரு கிராம் ரூ.240</p><p>26-07-2026- ஒரு கிராம் ரூ.240</p><p>25-07-2026- ஒரு கிராம் ரூ.240</p>]]></content:encoded></item><item><title>மோடி பிரதமர் வேலையை விட்டுவிட்டு முழுநேர Influencer ஆக மாறலாம் - தீப்கே காட்டம்
</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-scam-protest-dharmendra-pradhan-quits-as-abhijit-deepke-slams-pm-modi</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-scam-protest-dharmendra-pradhan-quits-as-abhijit-deepke-slams-pm-modi#comments</comments><guid isPermaLink="false">de79404e-bce0-4c70-a012-2098f7a8d12b</guid><pubDate>Thu, 30 Jul 2026 04:09:43 +0000</pubDate><atom:updated>2026-07-30T04:09:43.603Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,பிரதமர் மோடி,CJP,அபிஜித் தீப்கே,சிஜேபி போராட்டம்,Abhijit Deepke</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/2t6rjrkz/tn-5.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தீப்கே, மோடி ]]></media:title><media:description type="html"><![CDATA[ தீப்கே, மோடி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/2t6rjrkz/tn-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் பதவியை தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யவேண்டும் என்ற முழக்கத்துடன் அபிஜித் தீப்கேவின் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்திய 1 மாத கால <a href="https://www.maalaimalar.com/news/national/cjp-new-protest-warning-delhi-jantar-mantar-security">போராட்டம் </a>கடந்த வாரம் வெற்றி பெற்றது. </p><h2>போராட்டம் வெற்றி </h2><p>அழுத்தத்தின் பேரில் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். அதேநேரம், பிரதமர் மோடியும் தனது நீண்ட நெடிய மௌனத்தை களைத்து கடந்த வாரம் இன்ஸ்டாகிராமில் வீடியோ மூலம் இதுபற்றி பேசினார். </p><p>தேர்வு முறைகேடுகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளுக்கு அதிக தண்டனை விதிக்கும் சிறப்பு மசோதா ஆகிய அறிவுப்புகளை அவர் அடுத்தடுத்து வெளியிட்டார். </p><p>இதன்படி நேற்று, பொதுத் தேர்வுகள் (முறைகேடு தடுப்பு) மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. </p><p>போராட்டத்தின் வெற்றியை தொடர்ந்து சிஜேபி தலைவர் அபிஜித் தீப்கே மகாராஷ்டிராவில் உள்ள தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.  </p> <h2>பேட்டி </h2><p>அங்கு ஊடகங்களிடம் பேசிய அவர் மாணவர்களை ஈர்ப்பதற்காக பிரதமர் மோடி வெளியிட்ட சமூக வலைத்தள வீடியோக்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.</p><p>தீப்கே கூறியதாவது, "பிரதமர் மோடி இப்போது ஒரு இன்புளூயன்சராக மாறலாம். அவர் அந்த வேலையை மிகவும் சிறப்பாகச் செய்கிறார். எனவே, அவர் பிரதமர் பதவியை விட்டுவிட்டு முழுநேர இன்புளூயன்சராக மாறட்டும். நாட்டின் ஆட்சியை வேறு ஏதேனும் தலைவர் கவனிக்கட்டும்" என்று கூறினார்.</p> <h2>நடவடிக்கை</h2><p>மேலும், போராட்டம் வாபஸ் பெறப்பட்ட பின்னரும், பல்வேறு மாநில அரசுகள் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் கண்டறிந்து அச்சுறுத்தி வருவதாகக் குற்றம் சாட்டினார்.</p><p>ஜூலை 20 அன்று டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மீது தடியடி நடத்தவும், பெல்லட் துப்பாக்கிகளை பயன்படுத்தவும் உத்தரவிட்ட அமித் ஷா உட்படப் பொறுப்பான அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.</p><p>தொடர்ந்து பேசிய அவர், "மாணவர்கள் ஒன்றும் தீவிரவாதிகள் அல்ல. மத்திய அரசு தனது அடக்குமுறையைக் கைவிடாவிட்டால், தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது போல, அடுத்து ஆட்சியையே மாற்றுவோம்" என்றும், அடுத்தகட்டப் போராட்டம் இதைவிட மிகப்பெரிய அளவில் இருக்கும் என்றும் எச்சரித்தார்.</p><p>தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்த பின் சிஜேபி உறுப்பினர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது குறித்து பேசிய தீப்கே, 36 நாட்கள் வெயிலிலும் மழையிலும் போராடிய தன்னார்வலர்களைக் கௌரவிக்கவே அந்த நிகழ்வு நடத்தப்பட்டது என்றார்.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் முறைகேடு வழக்கு- செந்தில் பாலாஜி முன்ஜாமின் கோரி மனு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-irregularities-case-senthil-balajis-anticipatory-bail-plea</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-irregularities-case-senthil-balajis-anticipatory-bail-plea#comments</comments><guid isPermaLink="false">15df6957-c24e-4c7e-8872-b85da0d8d5dc</guid><pubDate>Thu, 30 Jul 2026 04:05:40 +0000</pubDate><atom:updated>2026-07-30T04:05:40.196Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,senthil balaji,செந்தில் பாலாஜி,Tasmac case,டாஸ்மாக் முறைகேடு வழக்கு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/fjr6d0w7/senthilbalaji.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/fjr6d0w7/senthilbalaji.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமின் மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.</aside><h2><strong>சோதனை</strong></h2><p>தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் த.வெ.க. ஆட்சி அமைந்த பிறகு கடந்த தி.மு.க. ஆட்சியில் எழுப்பப்பட்ட பல்வேறு முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. </p><p>கடந்த தி.மு.க. ஆட்சியில் டாஸ்மாக்கில் பல்வேறு முறைகேடுகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக சட்டமன்றத்திலும் முதலமைச்சர் விஜய் விமர்சனம் செய்து பேசினார். ‘‘பார்ட்டி பண்ட்” என்ற பெயரில் தனியாக பணம் வசூல் செய்யப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியதுடன் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து இருந்தார். </p><p>இதனை தொடர்ந்து டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சென்னை, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 41 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னை தி.நகர் தணிகாசலம் சாலையில் உள்ள மதுபான நிறுவன அலுவலகத்திலும், கரூரில் <a href="https://maalaimalar.com/news/tamilnadu/rs-35-crore-bribery-case-questioning-of-senthil-balaji-completed">செந்தில் பாலாஜியின்</a> வீடு உள்பட 6 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. மேலும் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் இடங்களிலும் சோதனை நடைபெற்றது. </p><h2><strong>வழக்கு பதிவு</strong></h2><p>இதற்கிடையே, டாஸ்மாக் மதுபான கொள்முதல், டெண்டர் உள்ளிட்டவற்றில் மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி, டாஸ்மாக் முன்னாள் எம்.டி.விசாகன் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. </p><h2><strong>முன்ஜாமின் மனு</strong></h2><p>இந்த நிலையில், டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF">செந்தில்பாலாஜி</a> தாக்கல் செய்த முன்ஜாமின் மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. </p><p>முன்ஜாமின் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு 3-வது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>CJP புதிய போராட்டம் எச்சரிக்கை: டெல்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் உச்சகட்ட பாதுகாப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/cjp-new-protest-warning-delhi-jantar-mantar-security</link><comments>https://www.maalaimalar.com/news/national/cjp-new-protest-warning-delhi-jantar-mantar-security#comments</comments><guid isPermaLink="false">8aeda57e-cce2-41dd-96ef-33317819aeea</guid><pubDate>Thu, 30 Jul 2026 03:52:46 +0000</pubDate><atom:updated>2026-07-30T03:52:46.808Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Jantar Mantar,delhi,டெல்லி,காக்ரோச் ஜனதா கட்சி,ஜந்தர் மந்தர்,CJPProtest</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/va7atry1/jantar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jantar Mantar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/va7atry1/jantar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலகியதைத் தொடர்ந்து, 36 நாட்கள் நீடித்த போராட்டத்தை கடந்த 25ஆம் தேதி அன்று தற்காலிகமாக முடித்துக்கொள்வதாக 'காக்ரோச் ஜனதா கட்சி' அறிவித்திருந்தது.</p><p>ஆனால், போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட FIR-ஐ திரும்பப் பெறுவது குறித்த வாக்குறுதியை மத்திய அரசு மீறிவிட்டதாகக் கூறி, CJP கட்சி மீண்டும் போராட்டக் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து புதுடெல்லியிலுள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் டெல்லி காவல்துறையினரும் துணை ராணுவப் படையினரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மிகத் தீவிரப்படுத்தியுள்ளனர்.</p><h2><strong>இரும்புத் தடுப்புகள்:</strong></h2><p>முந்தைய போராட்டங்களின் போது போராட்டக்காரர்கள் தடுப்புகளை அகற்றிவிட்டு நாடாளுமன்றத்தை நோக்கி முன்னேற முயன்றனர். இதைத் தவிர்க்கும் வகையில், தற்போது ஜந்தர் மந்தரின் இரு புறங்களிலும் வைக்கப்பட்டுள்ள இரும்புத் தடுப்புகளை அகற்றிவிட முடியாதபடி, அவற்றை இரும்பு வெல்டிங் செய்து ஒன்றாக இணைத்து பலப்படுத்தி வருகின்றனர்.</p><h2><strong>சிஜேபி விடுத்துள்ள முக்கியக் குற்றச்சாட்டுகள்:</strong></h2><h2><strong>வாக்குறுதி மீறல்:</strong></h2><p>போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது எந்தவித சட்ட நடவடிக்கையோ, வழக்குப்பதிவோ செய்யப்பட மாட்டாது என கடந்த 25 ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது மத்திய அரசு உறுதியளித்ததாக சிஜேபி செய்தி தொடர்பாளர் அசுதோஷ் ரன்கா தெரிவித்துள்ளார். ஆனால், பாஜனதா ஆளும் மாநிலங்களில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கைது செய்யப்பட்டு வருவதாக சிஜேபி குற்றம் சாட்டியுள்ளது.</p><h2><strong>கட்சியின் கோரிக்கைகள்:</strong></h2><p>* அனைத்து FIR வழக்குகளையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.</p><p>* கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்.</p><p>* டெல்லி போலீஸ் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகள் புதிய வழக்குகளைப் பதிவு செய்யக் கூடாது.</p><p>* அரசுடன் எட்டப்பட்ட ஒப்பந்த நகலை உடனடியாகப் பகிரங்கமாக வெளியிட வேண்டும்.</p><h2><strong>சட்ட உதவிகள் மற்றும் நிதியுதவி:</strong></h2><p>போராட்டத்தில் பாதிக்கப்பட்டு சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு உதவ CJP கட்சி "SAAKSHI" என்ற ஆன்லைன் தளத்தையும், தேசிய அளவிலான சட்ட உதவி மையத்தையும் தொடங்கியுள்ளது. மேலும், மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல், பாதிக்கப்பட்ட மாணவர்களின் சட்டப் போராட்டத்திற்கு உதவ ரூ.1 கோடி நிதி ஒதுக்குவதாக அறிவித்துள்ளார்.</p><h2><strong>CJP நிறுவனர் அபிஜீத் திப்கே எச்சரிக்கை:</strong></h2><p>மகாராஷ்டிராவில் செய்தியாளர்களைச் சந்தித்த CJP நிறுவனர் அபிஜீத் திப்கே, "மாணவர்களை மீண்டும் வீதிக்கு வர அரசு வற்புறுத்துகிறது. மாணவர்களின் கோபம் இன்னும் தணியவில்லை. அரசு தனது போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால் மாணவர்கள் அதைச் செய்வார்கள்" என எச்சரித்துள்ளார்.</p><p>NEET தேர்வுத் தாள்கள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ மதிப்பீட்டு குளறுபடிகளைக் கண்டித்து CJP அமைப்பினர் நடத்திய தொடர் போராட்டத்தைத் தொடர்ந்து, முன்னாள் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். தற்போது நிலுவையில் உள்ள வழக்குகளை மையமாக வைத்து மீண்டும் அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஜோர்டான் சம்பவத்துக்கு பதிலடி.. ஈரான் மீது மீண்டும் முழுவீச்சில் அமெரிக்கா தாக்குதல் </title><link>https://www.maalaimalar.com/news/world/us-iran-airstrikes-us-hits-iranian-targets-after-jordan-base-missile-attack</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-iran-airstrikes-us-hits-iranian-targets-after-jordan-base-missile-attack#comments</comments><guid isPermaLink="false">7979ba4d-2320-4f0f-9f7d-cb6c64592447</guid><pubDate>Thu, 30 Jul 2026 03:51:46 +0000</pubDate><atom:updated>2026-07-30T03:51:46.824Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>trump,டிரம்ப்,Iraq,ஈராக்,Iran War,ஈரான் போர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/8qed8afw/tn-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஈரான் மீது தாக்குதல் ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஈரான் மீது தாக்குதல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/8qed8afw/tn-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/trump-netanyahu-explored-all-iran-options-including-attack-israeli-official">ஈரான் </a>மீதான வான்வழித் தாக்குதல்களை அமெரிக்கா இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. </p><p>ஜோர்டானில் உள்ள அமெரிக்கப் படைத்தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்கா ஈரானில் தாக்குதல் நடத்தியுள்ளது .  </p><p> அமெரிக்க மத்திய நேரப்படி இரவு 8 மணி (இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணி) முதல் ஈரான் இலக்குகள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதலைத் தொடங்கியதாக அமெரிக்க மத்தியக் கட்டளையகமான சென்ட்காம் அறிவித்துள்ளது. </p> <h2>தாக்குதல்</h2><p>அமெரிக்கத் தாக்குதல் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, ஈரானின் தெற்குப் பகுதியில் ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள கெஷ்ம் தீவில் 3 சக்திவாய்ந்த குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாகவும், குடியிருப்புப் பகுதி மீது ஏவுகணை தாக்கியதாகவும் ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>புஷெர் உட்பட தெற்கு ஈரானின் பல இடங்களில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல்களால் ஏற்பட்ட சேதம் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.</p> <h2>டிரம்ப் எச்சரிக்கை</h2><p>முன்னதாக, ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தைக் குறிவைத்து ஈரானின் புரட்சிகரப் படை ஏவுகணைகளை வீசியது. அவை அனைத்தையும் அமெரிக்கக் வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்தன.</p><p>இதுகுறித்து நேற்று வெள்ளை மாளிகையில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், "இப்போது எங்கள் முறை, அவர்களுக்குக் கடுமையான பதிலடி கொடுப்போம்" என்று எச்சரித்திருந்தார்.</p><p>டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு இடையேயான சந்திப்பைத் தொடர்ந்து ஈரான் மீது கடந்த வாரம் நிறுத்தப்பட்ட தாக்குதல்களை அமெரிக்கா மீண்டும் தொடங்கியுள்ளது பேசுபொருளாகி உள்ளது.</p><h2>ஈராக்</h2><p>முன்னதாக ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள் மீது அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா நடத்திய கூட்டு வான்வழித் தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர்.</p><p>சவுதி எண்ணெய் நிறுவனங்கள் மீது 30க்கும் மேற்பட்ட டிரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>முன்பதிவில் நல்ல வரவேற்பை பெற்ற கேலக்ஸி Z ஃபோல்டு 8</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/samsung-galaxy-z-fold-8-series-and-z-flip-8-record-271000-pre-orders-in-india-in-72-hours</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/samsung-galaxy-z-fold-8-series-and-z-flip-8-record-271000-pre-orders-in-india-in-72-hours#comments</comments><guid isPermaLink="false">039f06e6-7248-4ef8-a060-3a8ea636ea5a</guid><pubDate>Thu, 30 Jul 2026 03:41:00 +0000</pubDate><atom:updated>2026-07-30T03:41:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஸ்மிதா,Samsung,சாம்சங்,Foldable Smartphone</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/e44s4m70/Z-Fold-8-Ulra.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Galaxy Z Fold 8 ultra]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/e44s4m70/Z-Fold-8-Ulra.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/samsung">சாம்சங் </a>நிறுவனத்தின் கேலக்ஸி Z ஃபோல்டு 8 அல்ட்ரா, கேலக்ஸி Z ஃபோல்டு 8 மற்றும் கேலக்ஸி Z ப்ளிப் 8 மாடல்கள் சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. அறிமுக தினம் தொடங்கி புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு நடைபெற்று வருகிறது.</p><p>இந்த நிலையில், கேலக்ஸி Z ஃபோல்டு 8 அல்ட்ரா, கேலக்ஸி Z ஃபோல்டு 8 மற்றும் கேலக்ஸி Z ஃப்ளிப் 8 மாடல்கள் முன்பதிவு தொடங்கிய 72 மணி நேரத்திலேயே 2,71,000 யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவில் இது சாம்சங் நிறுவனத்தின் முந்தைய தலைமுறை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை விட அதிகம் ஆகும்.</p><h2>அதிகரிக்கும் வரவேற்பு:</h2><p>இதுகுறித்து சாம்சங் வெளியிட்ட தகவல்களின் படி, புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் ஒட்டுமொத்த முன்பதிவில் 45 சதவீத யூனிட்கள் 2-ஆம் கட்ட நகரங்கள் மற்றும் சிறு பிராந்தியங்களில் இருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p><p>அதன்படி புதிய பிரீமியம் பிரிவில் இடம்பெற்றுள்ள மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை வாங்க வழக்கமான மெட்ரோ பகுதிகளை தவிர்த்து பரவலாக பல்வேறு பகுதிகளில் இருப்பவர்கள் வரை ஆர்வம் அதிகரித்து வருவது தெரிகிறது.</p><h2>விலை விவரங்கள்:</h2><p>கேலக்ஸி Z ஃபோல்டு 8 அல்ட்ரா ரூ. 1,99,999</p><p>கேலக்ஸி Z ஃபோல்டு 8 ரூ. 1,79,999</p><p>கேலக்ஸி Z ஃப்ளிப் 8 ரூ. 1,24,999</p><p>கடுமையான விலையை கருத்தில் கொண்டு சாம்சங் நிறுவனம் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை வாங்குவோருக்கு சந்தையிலேயே முதல் முறையாக முன்பணம் இல்லாமலேயே வாங்கும் வசதி, வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் விற்பனை ஆகஸ்ட் 08-ஆம் தேதி தொடங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஊரக வேலை திட்டத்தில் பணியாற்றும் பெண்ணுக்கு ரூ.2.75 கோடி வரி செலுத்தும்படி நோட்டீஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/notice-issued-to-woman-who-worked-for-125-days-demanding-tax-payment-of-rs-2-75-crore</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/notice-issued-to-woman-who-worked-for-125-days-demanding-tax-payment-of-rs-2-75-crore#comments</comments><guid isPermaLink="false">26c9209a-23bf-424f-900b-d027c4101234</guid><pubDate>Thu, 30 Jul 2026 03:20:28 +0000</pubDate><atom:updated>2026-07-30T03:20:28.108Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>GST,ஜிஎஸ்டி வரி,GST Tax,ஜிஎஸ்டி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/eucj7d3u/jolarpet.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வரி செலுத்தும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்ட பெண்மணி ருக்மணி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/eucj7d3u/jolarpet.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>125 நாள் வேலை செய்யும் பெண்ணுக்கு, ரூ.2.75 கோடி ஜி.எஸ்.டி. செலுத்துமாறு நோட்டீஸ் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.</aside><h2><strong>125 நாள் வேலை</strong></h2><p>திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த புதூர் படவேட்டம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி ருக்மணி (வயது 56). இவர் 100 நாள் வேலை திட்டத்தில் ஏரி வேலைக்கு சென்று குடும்பம் நடத்தி வருகிறார்.</p><p>இந்த நிலையில் 125 நாள் வேலை திட்டத்தில் வந்த கூலி பணத்தை எடுப்பதற்காக நேற்று சந்தைக்கோடியூர் பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்றுள்ளார்.</p><h2><strong>ரூ.2.75 கோடி வரி ஏய்ப்பு</strong></h2><p>அங்கு வங்கியில் இருந்த ஊழியர்கள் நீங்கள் ஆர்.எம்.டிரேடர்ஸ் என்ற பெயரில் தொழில் நிறுவனம் நடத்துவதாகவும், அதன் மூலம் ஜி.எஸ்.டி. செலுத்தாமல் ரூ.2 கோடியே 79 லட்சத்து 19 ஆயிரத்து 420 வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் ஆம்பூர் வட்ட வணிகவரித்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் இருந்து கடிதம் வந்துள்ளது.</p><p>அதன்பேரில் உங்களுடைய வங்கி கணக்கு முடக்கம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.</p><h2><strong>பரபரப்பு</strong></h2><p>இதனால் அதிர்ச்சியடைந்த ருக்மணி, தான் அதுபோன்று தொழில் நிறுவனம் எதுவும் நடத்தவில்லை என்றும், 125 நாள் வேலைக்கு சென்று குடும்பம் நடத்தி வருவதாகவும் கூறியிருக்கிறார். மேலும் தனது வங்கி கணக்கு முடக்கப்பட்டதால் அதில் இருந்து கூலி பணத்தை எடுக்க முடியாமல் திரும்பி உள்ளார்.</p><p>125 நாள் வேலை செய்யும் பெண்ணுக்கு ரூ.2.75கோடி ஜி.எஸ்.டி. செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>4.09 நிமிட நீளம்.. ராவணனாக மிரட்டும் யாஷ் - வெளியானது &apos;ராமாயணா&apos; டிரெய்லர் </title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ramayana-trailer-release-epic-film-trailer-drops-at-415-am-featuring-ranbir-kapoor-sai-pallavi-and-yash</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ramayana-trailer-release-epic-film-trailer-drops-at-415-am-featuring-ranbir-kapoor-sai-pallavi-and-yash#comments</comments><guid isPermaLink="false">d71cc0b2-a22b-4fb6-b9a9-8153fbf38c6b</guid><pubDate>Thu, 30 Jul 2026 03:07:46 +0000</pubDate><atom:updated>2026-07-30T03:07:46.785Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிரெய்லர்,ரன்பீர் கபூர்,ராமாயணா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/u9ag129e/tn-4.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராமாயணா]]></media:title><media:description type="html"><![CDATA[ ராமாயணா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/u9ag129e/tn-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BE">ராமாயணா</a>’ படத்தின் டிரெய்லர் இன்று (ஜூலை.30ம் தேதி) அதிகாலை 4.15 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் வெளியாகி உள்ளது. </p><p>முன்னதாக இந்த டிரெய்லர் ஜூலை 24 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டு தற்பொழுது வெளியாகி உள்ளது. </p> <h2>ராமாயணா</h2><p>ரமேஷ் திவாரி இயக்கத்தில், ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, மற்றும் இராவணனாக யஷ் நடித்துள்ள வரலாற்றுப் படம் ராமாயணா. அனுமன் கதாபாத்திரத்தில் சன்னி தியோல் நடித்துள்ளார்.</p><p>ஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த இதிகாசத் திரைப்படத்தின் முதல் பாகம், 2026 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.</p> <h2>டிரெய்லர்</h2><p>4.09 நிமிடங்கள் நீளமுள்ள இந்த டிரெய்லர், ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக உள்ளது.</p><p>மூன்று உலகங்களுக்கும் தானே அரசன் என்று பெருமையுடன் அறிவித்துக்கொள்ளும் ராவணனின் (யாஷ்) உரையாடலுடன் டிரெய்லர் தொடங்குகிறது.</p><p>ராமரின் (ரன்பீர்) குழந்தைப் பருவம், அசுரர்களுடனான போர்கள் மற்றும் சீதையுடனான திருமணம் போன்ற காட்சிகள் இதில் காட்டப்பட்டுள்ளன.</p><p>அதன்பிறகு, 14 வருட வனவாசம், சீதாராமன் லட்சுமணனுடன் வனத்திற்குச் செல்வது, மற்றும் ராவணன் சீதையைக் கடத்துவது போன்ற முக்கியக் காட்சிகளுடன் இந்த டிரெய்லர் கதையின் மீதான ஆர்வத்தை அதிகரித்தது.</p><p>குறிப்பாக, விஷுவல் எபெக்ட்ஸ் மற்றும் பின்னணி இசை ஆகியவை படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/K7zjRJ_0sgk"></iframe></figure>]]></content:encoded></item><item><title>POK பேரணி.. பாகிஸ்தான் பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் 30 பொதுமக்கள் பலி</title><link>https://www.maalaimalar.com/news/world/pok-human-rights-abuses-over-30-civilians-killed-in-pakistan-security-forces-firing</link><comments>https://www.maalaimalar.com/news/world/pok-human-rights-abuses-over-30-civilians-killed-in-pakistan-security-forces-firing#comments</comments><guid isPermaLink="false">31fc64d4-cec9-4770-b460-2365df790a57</guid><pubDate>Thu, 30 Jul 2026 02:40:50 +0000</pubDate><atom:updated>2026-07-30T02:40:50.234Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Pakistan,PoK,பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்,Violence,வன்முறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/clj8ram6/tn-1.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ POK ]]></media:title><media:description type="html"><![CDATA[ POK ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/clj8ram6/tn-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/pok-election-boycott-empty-polling-stations-protests-and-violence-rock-pok">பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்</a> (PoK) கடந்த சில தினங்களில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் நடத்திய தாக்குதலில், 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். 33க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். </p><h2>பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்</h2><p>ஜம்மு காஷ்மீரின் 35 சதவீத நிலம் பாகிஸ்தான் வசம் உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (POK) என அழைக்கப்படும் இந்த பகுதிக்கு தனி ஜனாதிபதி, பிரதமர், சட்டசபை உள்ளது.</p><p>இங்கு மக்களுக்கு எதிராக பாகிஸ்தான் அரசின் அடக்குமுறை, உரிமைகள் மறுப்பு, விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றால் மக்கள் பெருமளவில் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.</p><h2>தேர்தல்</h2><p>பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்  ஜூலை 27 முதற்கட்ட சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. ஜாயிண்ட் அவாமி ஆக்ஷன் கமிட்டி (JAAC) என்ற அமைப்பு மக்களை தேர்தலை புறக்கணிக்கச் செய்து போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.  </p><h2>துப்பாக்கிச்சூடு</h2><p>ஜூலை 27, 28,29 ஆகிய நாட்களில் ராவலாகோட்டில் இருந்து முசாபராபாத் நோக்கி JAAC அமைப்பின் தலைமையில் மக்கள் சென்ற பேரணியில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் துப்பாக்கிச்சூடு மற்றும் பிற வகைகளில் தாக்குதல் நடத்தின. </p><p>இந்த தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதில் JAAC மத்தியக் குழு உறுப்பினர் உமர் நசீரின் சகோதரர் உஸ்மான் நசீர் என்பவரும் உயிரிழந்துள்ளார்.  </p> <h2>மூடி மறைப்பு</h2><p>பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த அத்துமீறல்கள் வெளியுலகிற்குத் தெரியாமல் இருக்க, PoK பகுதி முழுவதும் இணையம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளை பாகிஸ்தான் அரசு முற்றிலும் முடக்கியுள்ளது.</p><p>இந்த கொலைகள் குறித்து உடனடியாகச் சுதந்திரமான விசாரணை நடத்தக் கோரியும், வன்முறையை உடனடியாக நிறுத்தக் கோரியும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளுக்கு JAAC அதிகாரப்பூர்வமாக முறையீடு செய்துள்ளது.</p> <h2>தேர்தல் புறக்கணிப்பு</h2><p>மீர்பூர் பிரிவில் நடைபெற்ற முதல்கட்டத் தேர்தலில், மக்களின் தேர்தல் புறக்கணிப்பு காரணமாக 10 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.</p><p>இருப்பினும், பாகிஸ்தான் அரசு 45% வாக்குப்பதிவு நடந்ததாகக் கணக்கு காட்டியுள்ளது.</p> <h2>இந்தியா காட்டம்</h2><p>பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் அரசு நடத்தும் இந்தத் தேர்தலானது, தனது சட்டவிரோத ஆக்கிரமிப்பையும், அப்பகுதியில் நடத்தும் மனித உரிமை மீறல்களையும் மூடி மறைப்பதற்காக நடத்தப்படும் ஒரு நாடகம் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடுமையாக விமர்சித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 30.7. 2026 - இந்த ராசிக்காரர்கள் தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள் </title><link>https://www.maalaimalar.com/astrology/today-horoscope-30-07-2026-zodiac-signs-to-see-progress-support-and-removal-of-obstacles</link><comments>https://www.maalaimalar.com/astrology/today-horoscope-30-07-2026-zodiac-signs-to-see-progress-support-and-removal-of-obstacles#comments</comments><guid isPermaLink="false">cf4af267-f77e-48e0-8a28-1efc4fb084b3</guid><pubDate>Thu, 30 Jul 2026 02:11:07 +0000</pubDate><atom:updated>2026-07-30T02:11:07.750Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-04-12/8s8oyr31/astrology.jpg.jpeg" width="1500"><media:title type="html"><![CDATA[ Rasipalan]]></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-04-12/8s8oyr31/astrology.jpg.jpeg?w=280" width="280"></media:thumbnail><category>ராசிபலன்(Rasipalan)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h3>மேஷம்</h3><p>யோகமான நாள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வீட்டை விரிவுபடுத்திக் காட்டும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.</p><h3>ரிஷபம்</h3><p>சுபசெய்திகள் வந்துசேரும் நாள். அஸ்திவாரத்தோடு நின்று கட்டடப்பணி தொடரும். உத்தியோகத்தில் தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள்.</p><h3>மிதுனம்</h3><p>யோசித்து செய்த வேண்டிய நாள். உடல்நலத்தில் கவனம் தேவை. உதவி செய்த சிலரே உதாசீனப்படுத்தலாம். உத்தியோகத்தில் கெடுபிடி அதிகரிக்கும்.</p> <h3>கடகம்</h3><p>உற்சாகம் உள்ளத்தில் குடிகொள்ளும் நாள். திட்டமிட்ட காரியங்கள் திடப்பிட்டபடி நடைபெறும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர்.</p><h3>சிம்மம்</h3><p>எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.</p><h3>கன்னி</h3><p>சேமிப்பு உயரும் நாள். நண்பர்கள் நல்ல தகவலவத் தருவர். கொடுக்கல், வாங்கல் ஒழுங்காகும். தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும்.</p><h3>துலாம்</h3><p>நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு இருந்து கைகொடுக்கும். தூரதேசத்திலிருந்து வரும் தகவல் மகிழ்ச்சி தரும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.</p> <h3>விருச்சிகம்</h3><p>பாராட்டும், புகழும் கூடும் நாள். நண்பர்கள் உங்கள் தேவையை பூர்த்தி செய்வார்கள். விஐபிகளின் சந்திப்பும் உண்டுஉண்டு. உத்தியோகத்தில் மதிப்பம், மரியாதையும் உயரும்.</p><h3>தனுசு</h3><p>பாசம் மிக்கவர்களின் நேசம் கிட்டும். பூர்வீக சொத்துக்களில் ஏற்பட்ட வில்லங்கங்கள் அகலும். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும்.</p><h3>மகரம்</h3><p>சந்திக்கும் நண்பர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். அதிகம் பக்கத்து வீட்டார் ஆதரவு கிடைக்கும். பயணங்களால் உடல்நலம் பாதிக்கலாம்.</p><h3>கும்பம்</h3><p>நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நான். சான்றோர்களின் சந்திப்பால் சந்தோஷம் ஏற்படும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சி வெற்றி பெறும்.</p><h3>மீனம்</h3><p>முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். தொழிலில் அனுபவமிக்கவர்களின் ஆலோசனை கைகொடுக்கும். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-diesel-prices-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-diesel-prices-in-chennai#comments</comments><guid isPermaLink="false">b44f5c84-0ca8-4ec6-9977-f05be8be7d85</guid><pubDate>Thu, 30 Jul 2026 01:35:15 +0000</pubDate><atom:updated>2026-07-30T01:35:15.322Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,கச்சா எண்ணெய்,Crude oil,பெட்ரோல் டீசல் விலை,Petrol and Diesel Prices</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/q1r6os09/tn-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பெட்ரோல் - டீசல் விலை ]]></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல் - டீசல் விலை ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/q1r6os09/tn-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/trump-netanyahu-explored-all-iran-options-including-attack-israeli-official"> ஈரான் போரினால் </a>மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.</p><h2>எண்ணெய் நிறுவனங்கள்</h2><p>இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது. கச்சா எண்ணெய்யை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது.</p><p>அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.</p> <h2>பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்</h2><p>அந்த வகையில் இன்று (30.07.2026 - வியாழக்கிழமை)க்கான பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல்ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p>அதேவேளை, இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><h2>கச்சா எண்ணெய்</h2><p>இன்று சர்வதேச சந்தையில் பிரனட் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 89.79 டாலர் என விற்பனை ஆகி வருகிறது.</p><p>மத்திய அரசு உலக சந்தை நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 30 ஜூலை 2026: குருபகவானுக்கு திருமஞ்சனம்</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-30-july-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-30-july-2026#comments</comments><guid isPermaLink="false">4434ec56-72d8-440a-a5fb-63b3318f972a</guid><pubDate>Thu, 30 Jul 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-07-30T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/11/19/21853306-gurubhagavan3.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Guru bhagavan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/11/19/21853306-gurubhagavan3.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆடி-14 (வியாழன்கிழமை)</p><p>பிறை : தேய்பிறை</p><p>திதி :   பிரதமை இரவு 10 மணி வரை பிறகு துவிதியை</p><p>நட்சத்திரம் : திருவோணம் இரவு 6.52 வரை பிறகு அவிட்டம்</p> <p>யோகம் :  சித்தயோகம்</p><p>ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை</p><p>எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை</p><p>சூலம் : தெற்கு</p><p>நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை</p> <h2>திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சன சேவை</h2><p>திருவோண விரதம். சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் பால் அபிஷேகம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள், ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் புறப்பாடு. சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் வெள்ளி விமான புறப்பாடு. சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். </p> <p>திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சன சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெருமான் அபிஷேகம், அலங்காரம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவான மாமுனிகள் ஸ்ரீ உடையவர் கூட புறப்பாடு. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - வரவு</p><p>ரிஷபம் - சாந்தம்</p><p>மிதுனம் - செலவு</p><p>கடகம் - உற்சாகம்</p><p>சிம்மம் - அமைதி</p><p>கன்னி - மகிழ்ச்சி</p> <p>துலாம் - இன்பம்</p><p>விருச்சிகம் - உற்சாகம்</p><p>தனுசு - உவகை</p><p>மகரம் - துணிவு</p><p>கும்பம் - பணிவு</p><p>மீனம் - உயர்வு</p> ]]></content:encoded></item><item><title>காமன்வெல்த்: சாதனை படைத்த முரளி ஸ்ரீசங்கர்..  நீளம் தாண்டுதலில் இரண்டாவது வெள்ளி!</title><link>https://www.maalaimalar.com/sports/commonwealth-long-jump-silver-murali-sreeshankar-wins-809m-becomes-first-indian-man-with-two-cwg-medals</link><comments>https://www.maalaimalar.com/sports/commonwealth-long-jump-silver-murali-sreeshankar-wins-809m-becomes-first-indian-man-with-two-cwg-medals#comments</comments><guid isPermaLink="false">244be191-ece0-49d5-b72a-16beffba249b</guid><pubDate>Thu, 30 Jul 2026 01:06:13 +0000</pubDate><atom:updated>2026-07-30T01:06:13.347Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Commonwealth games,Long Jump,காமன்வெல்த் போட்டிகள்,CWG 2026,நீளம் தாண்டுதல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/dys9p9l9/tn.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முரளி ஸ்ரீசங்கர்]]></media:title><media:description type="html"><![CDATA[ முரளி ஸ்ரீசங்கர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/dys9p9l9/tn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில்  2026 <a href="https://www.maalaimalar.com/sports/india-assures-nine-boxing-medals-at-commonwealth-games">காமன்கவெல்த் விளையாட்டுப் போட்டிகள்</a> நடந்து வருகின்றன. </p><p>இதில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் பிரிவில் இந்திய வீரா் முரளி ஸ்ரீசங்கர் 8.09 மீட்டர் தூரம்  வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.  இது அவர் தொடர்ச்சியாக வெல்லும் இரண்டாவது வெள்ளிப் பதக்கம் ஆகும்.</p><h2>போட்டி</h2><p>போட்டியின் தொடக்கத்தில் 8.09 மீட்டர் தூரம் தாண்டிய ஸ்ரீசங்கர், முதல் மூன்று சுற்றுகளின் முடிவில் முதலிடத்தில் நீடித்தார்.  </p><p>ஆனால் 4வது சுற்றில் ஜமைக்காவின் முன்னாள் உலக சாம்பியன் தாஜே கெயில் 8.15 மீட்டர் தூரம் தாண்டி தங்கப் பதக்கத்தைக் தட்டிச் சென்றார்.  </p><p>ஸ்ரீசங்கர் 8.09 மீட்டருடன் வெள்ளிப் பதக்கத்தையும், ஸ்காட்லாந்தின் ஸ்டீபன் மெக்கன்சி8.08 மீட்டருடன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.  </p><p>இப்போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரரான லோகேஷ் சத்யநாதன் 7.97 மீட்டர் தாண்டி 5வது இடத்தைப் பிடித்தார்.  </p> <h2>ஸ்ரீசங்கர்</h2><p>2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக முழங்காலில் ஏற்பட்ட கடுமையான காயம் மற்றும் அறுவை சிகிச்சை காரணமாக ஸ்ரீசங்கர் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தார்.</p><p>தீவிரப் பயிற்சிகளுக்குப் பின் கம்பேக் கொடுத்த அவர், காமன்கவெல்த் நீளம் தாண்டுதலில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய ஆண் வீரர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார்.</p><p>கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ஸ்ரீசங்கரின் தந்தை முரளி மற்றும் தாய் பிஜிமோல் ஆகிய இருவருமே தடகள வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.</p> <h2>பேட்டி</h2><p>வெளிப்பதக்கம் வென்ற ஸ்ரீசங்கர் பேசுகையில், "எல்லோரும் எப்போதும் தங்கப் பதக்கத்தையே இலக்காகக் கொண்டு களமிறங்குகிறோம். வெள்ளிப் பதக்கம் கிடைத்தது மகிழ்ச்சிதான் என்றாலும், திருப்தியளிக்கவில்லை.</p><p>ஏனெனில், இதைவிடச் சிறந்த செயல்திறனை நான் எதிர்பார்த்தேன். பர்மிங்ஹாம் தொடரில் வென்ற வெள்ளியைத் தங்கமாக மாற்ற வேண்டும் என்றே விரும்பினேன்.</p><p>ஆனாலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் நான் சந்தித்த கடுமையான காயங்கள் மற்றும் சவால்களை தாண்டி, மீண்டும் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி பதக்கம் வென்றதை நினைத்து பெருமைப்படுகிறேன்" என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் போட்டிகள்: பாரா-தடகள பிரிவில் முதல் இரு இடங்களை பிடித்து அசத்திய கவிட், பாசில்</title><link>https://www.maalaimalar.com/sports/gavit-basil-script-historic-1-2-finish-for-india-in-mens-100m-t47-final</link><comments>https://www.maalaimalar.com/sports/gavit-basil-script-historic-1-2-finish-for-india-in-mens-100m-t47-final#comments</comments><guid isPermaLink="false">63caf580-7a12-408c-8877-328d6044c5ed</guid><pubDate>Thu, 30 Jul 2026 00:30:58 +0000</pubDate><atom:updated>2026-07-30T00:30:58.806Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>காமன்வெல்த் போட்டிகள்,CWG 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/gecrfk0g/Dilip-Gavit-and-Mohammed-Basil.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dilip Gavit and Mohammed Basil]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/gecrfk0g/Dilip-Gavit-and-Mohammed-Basil.png?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளின் பாரா-தடகளப் பிரிவில், ஆண்களுக்கான 100 மீட்டர் T47 இறுதி போட்டியில் திலீப் மஹாது காவிட் தங்க பதக்கத்தையும், முகமது பாசில் மொர்சிங்கனகாத் வெள்ளி பதக்கத்தையும் வென்று, இந்தியா வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தது. </p><p>காவிட் 10.71 வினாடிகள் என்ற நேரத்தில் பந்தய தூரத்தை கடந்து, போட்டித் தொடரின் சாதனையையும் தனது இந்த சீசனின் சிறந்த நேரத்தையும் பதிவு செய்து தெளிவான முன்னிலையுடன் முதலிடத்தை பிடித்தார். அதேவேளையில், கடும் போட்டி நிலவிய பந்தயத்தில் பாசில் 10.83 வினாடிகள் என்ற தனது சீசனின் சிறந்த நேரத்துடன் இரண்டாவது இடத்தை பிடித்தார்.</p><p>இங்கிலாந்தின் கெவின் சாண்டோஸ் 10.85 வினாடிகள் என்ற தனது சீசனின் சிறந்த நேரத்தைப் பதிவு செய்து வெண்கல பதக்கத்தை வென்றார். </p><h2>தங்கப்பதக்கம்:</h2><p>மகளிருக்கான 48 கிலோ பளுதூக்குதல் பிரிவில் மீராபாய் சானு மற்றும் மகளிருக்கான F57 பாரா-தடகள குண்டு எறிதல் பிரிவில் ஷர்மிளா தன்கர் ஆகியோர் பெற்ற வெற்றிகளை தொடர்ந்து, கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா வென்ற மூன்றாவது தங்க பதக்கம் இதுவாகும்.</p><p>ஆண்களுக்கான 100 மீட்டர் T47 என்பது ஒரு பக்க கையின் செயல்பாடு அல்லது வலிமை பாதிக்கப்பட்டுள்ள அல்லது கை இல்லாத குறைபாடுள்ள விளையாட்டு வீரர்களுக்கான பாரா-தடகள விரைவோட்ட (sprint) போட்டியாகும்.</p><h2>ஒன்பது பதக்கங்கள்:</h2><p>ஐந்து குத்துச்சண்டை வீரர்கள் அரையிறுதிக்கு முன்னேறியதால், இந்தியாவின் குத்துச்சண்டை அணி மேலும் உத்வேகம் பெற்றுள்ளது. இதன்மூலம், நாடு உறுதிசெய்த பதக்கங்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்தோடு, 2022 பர்மிங்காம் காமன்வெல்த் போட்டிகளில் பெற்ற ஒட்டுமொத்த குத்துச்சண்டை பதக்கங்களின் எண்ணிக்கையையும் இது கடந்துள்ளது.</p><p>தற்போது நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில், சாக்ஷி சௌத்ரி (51 கிலோ), அருந்ததி சௌத்ரி (70 கிலோ), சச்சின் சிவாச் (60 கிலோ), அங்குஷ் பங்கல் (80 கிலோ) மற்றும் நரேந்தர் பெர்வால் (+90 கிலோ) ஆகியோர், லவ்லினா போர்கோஹைன் (75 கிலோ), பிரியா கங்காஸ் (60 கிலோ), பிரீத்தி பவார் (54 கிலோ) மற்றும் ஜதுமணி சிங் (55 கிலோ) ஆகியோருடன் தத்தமது பிரிவுகளில் கடைசி நான்கு இடங்களுக்குள் நுழைந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>ஈரானுக்கு எதிராக மூன்று ஆப்ஷன்கள் - இஸ்ரேல் அதிகாரி சொன்ன பகீர் தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/world/trump-netanyahu-explored-all-iran-options-including-attack-israeli-official</link><comments>https://www.maalaimalar.com/news/world/trump-netanyahu-explored-all-iran-options-including-attack-israeli-official#comments</comments><guid isPermaLink="false">345be175-091d-478b-a615-4c2398b341dd</guid><pubDate>Thu, 30 Jul 2026 00:07:02 +0000</pubDate><atom:updated>2026-07-30T00:07:02.955Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>டொனால்டு டிரம்ப்,Donald Trump,Benjamin Netanyahu,பெஞ்சமின் நெதன்யாகு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/hkc9fnet/Trump-Netanyahu.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Trump & Netanyahu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/hkc9fnet/Trump-Netanyahu.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்க அதிபர் <a href="https://www.maalaimalar.com/topic/donald-trump">டொனால்டு டிரம்ப்</a> மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் தங்களது சந்திப்பில், ஈரானின் அணுசக்தி திட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான ராஜதந்திரம், பொருளாதார அழுத்தம் மற்றும் படைபலம் உள்ளிட்ட அனைத்து வழிகளையும் ஆராய்ந்ததாக ஒரு மூத்த இஸ்ரேலிய அதிகாரி தெரிவித்தார்.</p><p>வெள்ளை மாளிகையில் இருவரும் சந்தித்த பிறகு, செய்தியாளர்களுடனான சந்திப்பில் அந்த அதிகாரி கூறும் போது, ஈரான் மீது தாக்குதல் நடத்துவதே இஸ்ரேலின் விருப்பம் என்பதை <a href="https://www.maalaimalar.com/topic/benjamin-netanyahu">நெதன்யாகு</a> டிரம்ப்பிடம் தெரிவிக்கவில்லை.</p><h2>மூன்று ஆப்ஷன்கள்:</h2><p>"ஒரு உடன்பாடு, முற்றுகை அல்லது பொருளாதார அழுத்தங்களை தொடர்வது, மற்றும் ஒரு மாபெரும் தாக்குதல் என டிரம்புக்கு மூன்று ஆப்ஷன்கள் இருந்தன. இறுதியில், அது அவருடைய முடிவுதான்," என்று டிரம்ப் குறித்து அந்த அதிகாரி கூறினார்.</p><p>அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் பொதுமக்களின் விரக்தியால் ஈரானின் மதகுரு ஆட்சியாளர்கள் கலக்கமடைந்துள்ளதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும், ஆனால் உலக பொருளாதாரம் மற்றும் எண்ணெய் சந்தை மீதான தாக்கமும் கருத்தில் கொள்ளப்படுவதாகவும் அந்த அதிகாரி கூறினார்.</p><p>ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா இணைந்து நடத்திய வான்வழி குண்டுவீச்சு தாக்குதல்களை தொடர்ந்து, பிப்ரவரி 28-ஆம் தேதியன்று போர் தொடங்கியதில் இருந்து ஏற்பட்ட மிகக் கடுமையான உயர்வுகளில் ஒன்றாக, நேற்று (புதன்கிழமை) எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்தன. இதற்கு பதிலடியாக, தெஹ்ரான் இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகள் மீது தாக்குதல்களை நடத்தியது.</p><h2>எச்சரிக்கை:</h2><p>இந்த மாதம் இரண்டு வாரங்களாக அமெரிக்கா நடத்திய குண்டுவீச்சு தாக்குதல்களில் இஸ்ரேல் பங்கேற்கவில்லை. இந்த தாக்குதல்களுக்கு பதிலடியாக அமெரிக்க தளங்கள் மீது தெஹ்ரான் தாக்குதல் நடத்தியது. இருப்பினும், தாக்கப்பட்டால் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் தெஹ்ரானை எச்சரித்துள்ளது.</p><p>நேற்று, அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு துணை ராணுவ குழுக்கள் மீது தாக்குதல் நடத்தின. மேலும், தான் வான்வழி தாக்குதல்களை நிறுத்திய சில நாட்களுக்கு பிறகு அமெரிக்க படைகள் மீது துப்பாக்கி சூடு நடத்திய ஈரானை "நன்றாக அடித்து நொறுக்குவேன்" என்று டிரம்ப் சூளுரைத்தார்.</p><p>ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளங்கள் மீதும், ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாகவும், நீரிணையை கூட்டாக நிர்வகிப்பது குறித்த ஓமானின் முன்மொழிவை நிராகரித்ததாகவும் ஈரான் நேற்றிரவு உறுதிப்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>பாலியல் குற்றச்சாட்டின் பேரில் பயிற்சி ஐ.பி.எஸ். அதிகாரி கைது!</title><link>https://www.maalaimalar.com/news/national/trainee-ips-officer-accused-of-sexual-assault-arrested-in-hyderabad</link><comments>https://www.maalaimalar.com/news/national/trainee-ips-officer-accused-of-sexual-assault-arrested-in-hyderabad#comments</comments><guid isPermaLink="false">0ab2b520-7134-4c5d-a397-df4c247369e0</guid><pubDate>Wed, 29 Jul 2026 23:31:42 +0000</pubDate><atom:updated>2026-07-29T23:31:42.712Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Arrest,கைது,Sexual assault,Trainee IPS,பயிற்சி ஐஏஎஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/r0jswnkx/arrest-4.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ File Pic]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/r0jswnkx/arrest-4.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவலர் பயிற்சி மையத்தில் தன்னுடன் பயிற்சி பெறும் பெண் அதிகாரியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட பயிற்சி <a href="https://www.maalaimalar.com/topic/ips">ஐ.பி.எஸ்.</a> அதிகாரி கைது செய்யப்பட்டார்.</p><p>ஆந்திர பிரதேச மாநிலத்தின் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்த உதய கிருஷ்ண ரெட்டி (33), சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவல் பயிற்சி மையத்தில் சக பெண் பயிற்சியாளரை பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் ஜூலை 18-ஆம் தேதியன்று வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், <a href="https://www.maalaimalar.com/topic/arrest">கைது</a> செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.</p><h2>யு.பி.எஸ்.சி. தேர்ச்சி:</h2><p>அவர் 14 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டதாக ஐதராபாத் காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஐ.பி.எஸ். பயிற்சி அதிகாரி, முன்னதாக காவலராக பணியாற்றி, பின்னர் 2025-இல் யு.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்று ஐ.பி.எஸ்.-இல் சேர்ந்தார். அவர் டிசம்பர் 2025 முதல் பயிற்சி பெற்று வந்தார்.</p><p>ஐ.பி.எஸ். தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான தனது பயணம் குறித்த குற்றஞ்சாட்டியவரின் பதிவிற்கு, சக ஐ.பி.எஸ். அதிகாரி பயிற்சியாளரான பாதிக்கப்பட்ட பெண் பதிலளித்ததை தொடர்ந்து, 2025 ஆம் ஆண்டின் மத்தியில் சமூக வலைதளங்கள் மூலம் அவர் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் தொடர்பு கொண்டார்.</p><p>தொடர்பு விவரங்களை பரிமாறிக்கொண்டு, தனது எளிமையான பின்னணி குறித்து உரையாடி ஒரு நல்லுறவை ஏற்படுத்திக்கொண்ட பிறகு, குற்றம் சாட்டப்பட்டவரும் பாதிக்கப்பட்டவரும் ஓர் உறவில் ஈடுபட்டதாக காவல்துறை தெரிவித்தது.</p><h2>காவல் துறை விளக்கம்:</h2><p>காவல்துறையின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்டவர் மீண்டும் மீண்டும் தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டியதுடன், ஆயுதங்களை காட்டி, அவரை அவமதித்து, "பல உறவுகளை" வைத்துக்கொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தியதுடன், அவரது மடிக்கணினியை தூக்கி எறிந்து சேதப்படுத்துவது, தடுக்கப்பட்ட பிறகும் போலியான சமூக வலைதள கணக்குகளை உருவாக்குவது, தனிப்பட்ட உரையாடல்களை வெளியிடுவதாக மிரட்டுவது, மற்றும் அவரது அனுமதியின்றி குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்களை தொடர்புகொள்வது உள்ளிட்ட துன்புறுத்தல் செயல்களிலும் ஈடுபட்டார்.</p><p>"இந்தத் தாங்க முடியாத மனப்பான்மையால், பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டப்பட்டவருடனான உறவை முறித்துக்கொண்டு வேறொருவரைத் திருமணம் செய்துகொண்டார்," என்று காவல்துறை தெரிவித்தது.</p><p>இதை அறிந்த குற்றவாளி, தனது கணக்கு முடக்கப்பட்ட பிறகு போலி சமூக வலைதள கணக்குகளை உருவாக்கி, தனிப்பட்ட உரையாடல்களை வெளியிடுவதாக மிரட்டி, அவரது அனுமதியின்றி குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்களைத் தொடர்பு கொண்டு, பாதிக்கப்பட்டவர் மற்றும் பிற சாட்சிகளால் கூறப்பட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டார் என்று அவர்கள் தெரிவித்தனர்.</p><h2>பாலியல் புகார்:</h2><p>புகாரைத் தொடர்ந்து, அட்டப்பூர் போலீசார், பெண்ணின் மானபங்கத்திற்கு உள்ளாக்கும் நோக்கத்துடன் அவர் மீது தாக்குதல் அல்லது குற்றவியல் பலத்தை பயன்படுத்துதல், பாலியல் துன்புறுத்தல், மற்றும் அவமதிக்கும் நோக்கம் கொண்ட சொற்கள், சைகைகள் அல்லது செயல்கள் உள்ளிட்ட பாரதிய நியாய சம்ஹிதாவின் தொடர்புடைய பிரிவுகள் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.</p><p>அதன்படி, ஜூலை 28 ஆம் தேதி ஆராம்கர் எக்ஸ் ரோடு அருகே அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது. இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவரிடம் காவல்துறை விசாரணை நடத்தியது. சட்ட விதிகளுக்கு இணங்க இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.</p><p>இந்த வழக்கு தொடர்பான அனைத்து உண்மைகளையும் சூழ்நிலைகளையும் கண்டறிய தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. சட்டப்படி உரிய நடவடிக்கை கடுமையாக எடுக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><h2>கைது நடவடிக்கை:</h2><p>ஐதராபாத் காவல் ஆணையரால் அமைக்கப்பட்ட சிறப்புக்குழு, ஐதராபாத் மகளிர் பாதுகாப்பு பிரிவின் துணை ஆணையர் பி. லாவண்யா நாயக் ஜாதவின் மேற்பார்வையில் இந்த கைது நடவடிக்கையையும் விசாரணையையும் மேற்கொண்டதாக அந்த செய்திக்குறிப்பு தெரிவித்தது.</p><p>வழக்கு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டவர் சமூக ஊடகப் பதிவு ஒன்றில், புகாரும் வதந்திகளும் "ஆதாரமற்றவை" என்று கூறியிருந்தார்.</p><p>அதனை தொடர்ந்து அவர், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய கோரி தெலங்கானா உயர் நீதிமன்றத்தை அணுகியிருந்தார். இவ்வழக்கை நான்கு வாரங்களுக்கு பிறகு மீண்டும் விசாரணைக்கு நீதிமன்றம் புதன்கிழமை ஒத்திவைத்தது.</p>]]></content:encoded></item><item><title>காட்டுத்தீயை அணைக்க சென்று விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் - 7 பேர் உயிரிழந்ததால் சோகம்</title><link>https://www.maalaimalar.com/news/world/7-killed-in-helicopter-crash-in-argentina-officials</link><comments>https://www.maalaimalar.com/news/world/7-killed-in-helicopter-crash-in-argentina-officials#comments</comments><guid isPermaLink="false">13741ec2-e0ee-42f9-9f4b-d05bb69f2b90</guid><pubDate>Wed, 29 Jul 2026 22:57:57 +0000</pubDate><atom:updated>2026-07-29T22:57:57.908Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>argentina,அர்ஜென்டினா,helicopter crash,ஹெலிகாப்டர் விபத்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/rytx49tl/Bell-412.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ File Pic]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/rytx49tl/Bell-412.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அர்ஜென்டினாவின் மேற்கு சான் ஜுவான் மாகாணத்தில் தீயணைப்பு <a href="https://www.maalaimalar.com/topic/helicopter">ஹெலிகாப்டர்</a> ஒன்று விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.</p><p>சான் ஜுவானின் இஷிகுவாலாஸ்டோ இயற்கை பூங்காவில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்க பெல் 412 விமானம் பயன்படுத்தப்பட்டது.</p><p>"நமது மாகாணத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்த செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் பெற்றோம், அதில் ஏழு பேர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தனர்," என்று சான் ஜுவான் ஆளுநர் மார்செலோ ஒர்ரெகோ <a href="https://www.maalaimalar.com/topic/x">எக்ஸ்</a> தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>விபத்து:</h2><p>உயிரிழந்தவர்களில் தீயணைப்பு வீரர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் குடிமை பாதுகாப்புப் பணியாளர்கள் அடங்குவதாக அவர் தெரிவித்தார். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர், நேற்று (புதன்கிழமை) காலை ஹெலிகாப்டர் தளத்துடனான தொடர்பை இழந்ததாக அவசரகால சேவைகள் தெரிவித்தன.</p><p>அருகிலுள்ள லா ரியோஜா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயை கட்டுப்படுத்த உதவுவதற்காக அது சென்று கொண்டிருந்ததாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விபத்துக்கான காரணம் குறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம்:  பாக். படைகளின் கொடூர ஒடுக்குமுறையில் 30-க்கும் மேற்பட்டோர் பலி</title><link>https://www.maalaimalar.com/news/world/pok-unrest-over-30-civilians-killed-in-brutal-crackdown-by-pakistani-forces</link><comments>https://www.maalaimalar.com/news/world/pok-unrest-over-30-civilians-killed-in-brutal-crackdown-by-pakistani-forces#comments</comments><guid isPermaLink="false">81248b56-4445-44b3-b435-9f7641c611ec</guid><pubDate>Wed, 29 Jul 2026 19:29:39 +0000</pubDate><atom:updated>2026-07-29T19:29:39.506Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,ஆக்கிரமிப்பு காஷ்மீர்,PoK unrest,Pakistan force</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/6oebme3i/Pok-Protest.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pok Protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/6oebme3i/Pok-Protest.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/pakistan">பாகிஸ்தான்</a> ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) கடந்த இரண்டு நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்பு படைகள் நடத்திய கொடூரமான ஒடுக்குமுறையில் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்ததாகவும், 33-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.</p><p>PoK-இல் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்று வரும் நிலையில், 'ஜாயிண்ட் அவாமி ஆக்ஷன் கமிட்டி' (JAAC) இந்த போராட்டங்களுக்கு தலைமை தாங்கி வருகிறது.</p><h2>போராட்டம்:</h2><p>அதிகரித்து வரும் வாழ்க்கை செலவு, நிர்வாக அலட்சியம், அரசியல் பாகுபாடு மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான அத்துமீறல்கள் ஆகியவற்றுக்கு எதிராக கடந்த மாதம் முதல் PoK-இல் மிகப்பெரிய <a href="https://www.maalaimalar.com/topic/protest">போராட்டங்கள்</a> நடைபெற்று வருகின்றன.</p><p>PoK-இல் நடைபெறும் தேர்தல்களை, அப்பகுதியில் தாங்கள் மேற்கொண்டுள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்பை மறைப்பதற்கும், அங்கு இழைக்கப்படும் "கடுமையான" மனித உரிமை மீறல்களை மூடிமறைப்பதற்கும் இஸ்லாமாபாத் மேற்கொள்ளும் ஒரு முயற்சி என மத்திய அரசு தெரிவித்தது.</p><h2>கொடிய தாக்குதல்:</h2><p>ரவாலகோட்டில் இருந்து முசாஃபராபாத் வரை JAAC நடத்திய நீண்ட பேரணியின்போது போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் கொடிய தாக்குதல் முறைகளை கையாண்டதாகவும், இந்த ஒடுக்குமுறையில் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்ததாகவும், 33-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.</p><p>உயிரிழந்தவர்களில் JAAC மத்தியக் குழு உறுப்பினர் உமர் நசீரின் சகோதரரான உஸ்மான் நசீரும் அடங்குவார் என்று அவர்கள் கூறினர்.</p><h2>வேண்டுகோள்:</h2><p> சட்டவிரோத கொலைகள் குறித்து உடனடி மற்றும் சுதந்திரமான விசாரணை நடத்தவும், கொடிய தாக்குதல் முறைகளை உடனடியாக நிறுத்தவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில் மற்றும் சர்வதேச உரிமை அமைப்புகளிடம் JAAC அதிகாரப்பூர்வமாக வேண்டுகோள் விடுத்துள்ளது என்று அவர்கள் சுட்டிக்காட்டினர். </p><p>சுயாதீன அறிக்கைகளை மேற்கோள் காட்டி, மிர்பூர் பிரிவில் நடைபெற்ற பிராந்திய தேர்தல்களின் முதல் கட்டத்தில் வாக்காளர் வருகை 10 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்ததாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.</p><p>இது 45 சதவீத வாக்குப்பதிவு என்று கூறப்படும் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களுக்கு முற்றிலும் முரணாக உள்ளது என்றும், JAAC-இன் தேர்தல் புறக்கணிப்பு அழைப்பிற்கு ஆதரவாக முக்கிய நகரங்களில் முழு அடைப்பு கடைபிடிக்கப்பட்டது என்றும் அவர்கள் கூறினர். </p>]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் போட்டிகள்: குத்துச்சண்டையில் 9 பதக்கங்களை உறுதிப்படுத்திய இந்தியா</title><link>https://www.maalaimalar.com/sports/india-assures-nine-boxing-medals-at-commonwealth-games</link><comments>https://www.maalaimalar.com/sports/india-assures-nine-boxing-medals-at-commonwealth-games#comments</comments><guid isPermaLink="false">895878f0-f4f3-4527-9364-2e480303b7f3</guid><pubDate>Wed, 29 Jul 2026 18:37:28 +0000</pubDate><atom:updated>2026-07-29T18:37:28.302Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,காமன்வெல்த் போட்டிகள்,CWG 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/mrzbhe6t/Arundhati-Choudhary.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Arundhati Choudhary]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/mrzbhe6t/Arundhati-Choudhary.png?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஐந்து குத்துச்சண்டை வீரர்கள் அரையிறுதிக்கு முன்னேறியதால், இந்தியாவின் குத்துச்சண்டை அணி மேலும் உத்வேகம் பெற்றுள்ளது. இதன்மூலம், நாடு உறுதிசெய்த பதக்கங்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்தோடு, 2022 பர்மிங்காம் <a href="https://www.maalaimalar.com/topic/cwg-2026">காமன்வெல்த்</a> போட்டிகளில் பெற்ற ஒட்டுமொத்த குத்துச்சண்டை பதக்கங்களின் எண்ணிக்கையையும் இது கடந்துள்ளது.</p><p>தற்போது நடைபெற்று வரும் காமன்வெல்த் <a href="https://www.maalaimalar.com/sports/commonwealth-games-2026-updated-list-of-all-medal-winners-for-india">விளையாட்டு</a> போட்டிகளில், சாக்ஷி சௌத்ரி (51 கிலோ), அருந்ததி சௌத்ரி (70 கிலோ), சச்சின் சிவாச் (60 கிலோ), அங்குஷ் பங்கல் (80 கிலோ) மற்றும் நரேந்தர் பெர்வால் (+90 கிலோ) ஆகியோர், லவ்லினா போர்கோஹைன் (75 கிலோ), பிரியா கங்காஸ் (60 கிலோ), பிரீத்தி பவார் (54 கிலோ) மற்றும் ஜதுமணி சிங் (55 கிலோ) ஆகியோருடன் தத்தமது பிரிவுகளில் கடைசி நான்கு இடங்களுக்குள் நுழைந்தனர்.</p><h2>ஏழு பதக்கங்கள்:</h2><p>பர்மிங்காம் விளையாட்டு போட்டிகளில் குத்துச்சண்டை நிகழ்வுகளில் இந்தியா ஏழு பதக்கங்களை வென்றது. இதில் மூன்று தங்கம், ஒரு வெள்ளி மற்றும் மூன்று வெண்கல பதக்கங்கள் அடங்கும்.</p><p>உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வென்றவரான ஜெய்ஸ்மின் லம்போரியா, இன்று நடைபெறும் மகளிர் 57 கிலோ எடைப் பிரிவுக்கான தனது காலிறுதி போட்டியில் பங்கேற்கிறார்.</p><h2>எளிய வெற்றி:</h2><p>சாக்ஷி ஆதிக்கம் செலுத்தும் வகையில் விளையாடி, வடக்கு அயர்லாந்தின் கெய்ட்லின் ஃப்ரையர்ஸை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தினார். அதே நேரத்தில், உலகத் தரவரிசையில் 5-ஆம் இடத்தில் உள்ள சச்சினும், ட்ரெஷர் மோரேமியை 5-0 என்ற கோல் கணக்கில் எளிதாக வீழ்த்தி வெற்றி பெற்றார். இருப்பினும், அருந்ததி கடுமையான சவாலை எதிர்கொண்டு, நியூசிலாந்தின் மோர்கன் ஹென்டர்சனை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.</p><p>அங்குஷும் அதே அளவு ஆதிக்கம் செலுத்தி, செஷல்ஸின் ஜேட் மைகாக்கை 5-0 என்ற கணக்கில் எளிதாக வீழ்த்தினார். அதே நேரத்தில், ஆசிய விளையாட்டு போட்டிகளின் வெண்கல பதக்க வீரரான நரேந்தர் பெர்வால், கடுமையான போட்டியை சமாளித்து சமோவாவின் மைக்கேல் செக்கோவை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தினார்.</p>]]></content:encoded></item><item><title>கரூர் அரசுப்பணி ரத்து - உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது தமிழ்நாடு அரசு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/karur-incident-govt-job-appointment-cancelled-tn-government-appeals-supreme-court</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/karur-incident-govt-job-appointment-cancelled-tn-government-appeals-supreme-court#comments</comments><guid isPermaLink="false">8a23c22c-3f85-41fc-8aa5-a20adce0c24c</guid><pubDate>Wed, 29 Jul 2026 18:06:00 +0000</pubDate><atom:updated>2026-07-29T18:06:00.984Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>government job,அரசு பணி,Karur incident,உச்சநீதிமன்றம்,கரூர் விவகாரம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/hozfbunj/New-Project-2026-07-27T173947.313.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசுப்பணி ரத்து!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/hozfbunj/New-Project-2026-07-27T173947.313.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கரூர் <a href="https://www.maalaimalar.com/topic/karur-stampede">கூட்ட நெரிசல்</a> சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரசுப்பணி உத்தரவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து <a href="https://www.maalaimalar.com/topic/tamil-nadu">தமிழ்நாடு</a> அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.</p><p>கரூர் வேலுசாமிபுரத்தில், கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதியன்று நடைபெற்ற த.வெ.க. பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.</p><h2>அரசுப்பணி ஆணை:</h2><p>இதையடுத்து, கடந்த ஜூலை 10-ஆம் தேதியன்று கரூர் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சேர்ந்த 31 பேருக்கு அரசுப்பணி ஆணைகளை வழங்கினார்.</p><p>எனினும், இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு, தமிழக அரசால் வழங்கப்பட்ட அரசுப்பணி உத்தரவை ரத்து செய்தது. இந்த விவகாரம் குறித்து விரைவில் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யும் என்று தமிழ்நாடு சட்டத்துறை சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்தார்.</p><h2>உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு:</h2><p>இந்த நிலையில், கரூர் கூட்டநெரிசலில் சிக்கி பலியானோர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரசுப்பணியை ரத்து செய்த உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு இன்று (ஜூலை 29) உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அசாம் வெள்ள பாதிப்பு: ஆய்வு பணிகளை முடித்தது மத்தியக் குழு!</title><link>https://www.maalaimalar.com/news/national/central-team-concludes-visit-to-assess-assam-flood-situation</link><comments>https://www.maalaimalar.com/news/national/central-team-concludes-visit-to-assess-assam-flood-situation#comments</comments><guid isPermaLink="false">0b673865-8b3d-4dc3-a6f2-2c2f4910a0ef</guid><pubDate>Wed, 29 Jul 2026 17:09:45 +0000</pubDate><atom:updated>2026-07-29T17:09:45.600Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Central team,அசாம் வெள்ளம்,Assam Floods,மத்தியக் குழு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/owgad3p8/Minister-Keshab-Mahanta.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Keshab Mahanta]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/owgad3p8/Minister-Keshab-Mahanta.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள சூழலை ஆய்வு செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட நான்கு நாள் பயணத்தை <a href="https://www.maalaimalar.com/topic/central-team">மத்தியக் குழு</a> (IMCT) இன்று (புதன்கிழமை) நிறைவு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். </p><p>இங்கு நடைபெற்ற கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் ராமச்சந்திருடு தலைமையிலான மத்தியக் குழுவிடம் தலைமை செயலாளர் ரவி கோட்டா விரிவான விளக்கங்களை அளித்தார்.</p><h2>விளக்கம்:</h2><p>அசாம் மற்றும் அண்டை மாநிலங்களில், குறிப்பாக நாகாலாந்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் கனமழை மற்றும் குறிப்பிட்ட சில பகுதிகளில் பெய்த அதீத மழையினால் ஏற்பட்ட பெரும் சேதங்கள் குறித்து மத்தியக் குழுவுக்கு தெரிவிக்கப்பட்டது.</p><p>SDRF, NDRF, தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் துறை, இந்திய ராணுவம், இந்திய விமானப்படை மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் இணைந்து மேற்கொண்ட மீட்பு நடவடிக்கைகள் குறித்தும், அத்துடன் கரைகள், பாலங்கள், சாலைகள், வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு ஏற்பட்ட பெரும் சேதங்கள் குறித்தும் இக்குழுவுக்கு விளக்கப்பட்டது.</p><h2>எக்ஸ் தள பதிவு:</h2><p>"அமைச்சகங்களுக்கு இடையிலான மத்தியக் குழு (IMCT), மேல் அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று, வெள்ள சூழல் மற்றும் நடைபெற்று வரும் நிவாரணம், மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தது" என்று முதலமைச்சரின் அலுவலகம் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளது.</p><p>"மாநில முதலமைச்சர் டாக்டர் ஹிமந்த பிஸ்வா அறிவுறுத்தலின்படி, சிவசாகர், சாரைடியோ, ஜோர்ஹாட் மற்றும் கோலாகாட் ஆகிய மாவட்டங்களை கடுமையாக பாதித்த, முன்னெப்போதும் இல்லாத வகையிலான திடீர் வெள்ளம் குறித்த விரிவான கண்ணோட்டத்தை தலைமை செயலாளர் மத்தியக் குழுவிடம் சமர்ப்பித்தார்" என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>"மாவட்ட வாரியான மறுசீரமைப்பு திட்டத்திற்கு மத்திய அரசின் கூடுதல் ஆதரவு தேவைப்படுவது; கடுமையாகப் பாதிக்கப்பட்ட சிவசாகர், சாரைடியோ, ஜோர்ஹாட் மற்றும் கோலாகாட் மாவட்டங்களுக்குச் சிறப்பு உதவிகள் வழங்குவது; உடைந்த கரைகளை சீரமைத்து வலுப்படுத்துவது; மற்றும் உள்கட்டமைப்பை மீட்டெடுத்து நீண்டகால வெள்ள தடுப்பு திறனை மேம்படுத்த 'சிறந்த முறையில் மீண்டும் கட்டமைத்தல்' கொள்கைகளை கடைப்பிடிப்பது ஆகியவை குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது" என்று முதலமைச்சரின் அலுவலகம் மேலும் தெரிவித்தது.</p><p>இந்த ஆண்டு அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தால் குறைந்தது இதுவரை 75 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 3.32 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>‘களப் போராளிகளைவிட, ரீல்ஸ் போராளிகளைத்தான் இந்த சமூகம் அதிகம் கொண்டாடுகிறது’ - உதயநிதி ஸ்டாலின்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/society-celebrates-reels-warriors-more-than-ground-level-activists-udhayanidhi-stalin</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/society-celebrates-reels-warriors-more-than-ground-level-activists-udhayanidhi-stalin#comments</comments><guid isPermaLink="false">6afd8e04-7797-4507-98d8-e21f759e3ffa</guid><pubDate>Wed, 29 Jul 2026 16:26:43 +0000</pubDate><atom:updated>2026-07-29T16:26:43.332Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,Comrade Nallakannu,தோழர் நல்லக்கண்ணு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/13fxw4yk/New-Project-2026-07-29T215619.787.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘களப் போராளிகளைவிட, ரீல்ஸ் போராளிகளைத்தான் இந்த சமூகம் அதிகம் கொண்டாடுகிறது’ - உதயநிதி ஸ்டாலின்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/13fxw4yk/New-Project-2026-07-29T215619.787.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில், தோழர் நல்லகண்ணு அய்யாவின் சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டுச் சிலையை திறந்துவைத்தார். ‘அம்மாச்சி கற்பனையின் முதல் ஆசிரியர்’ எனும் நூலையும் வெளியிட்டார். </p><p>சிலை திறப்புக்கு பின் விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின்.,</p><p>“தோழர் நல்லகண்ணு அவர்களுக்குச் சிலை அமைத்திருப்பது மூலமாக, இந்தச் சமூகம் இன்றைக்கு உண்மையில் யாரையெல்லாம் கொண்டாட வேண்டும் என்பதனை இந்த நிகழ்ச்சியின் மூலமாக, இந்த அமைப்பினர் மிகத்தெளிவாகச் சொல்லியுள்ளார்கள். </p><h2> ரீல்ஸ் போராளிகள்</h2><p>ஏனெனில், இன்றைக்கு மக்களுக்கான களப் போராளிகளைக் கொண்டாடுவதைவிட இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் எடுக்கும் போராளிகளைத்தான் இந்தச் சமூதாயம் அதிகமாகக் கொண்டாடிக்கொண்டு இருக்கிறது.</p><p>“போராடினால் எதுவும் கிடைக்கும்” என்று உறுதியாக நம்பியவர், அய்யா நல்லகண்ணு அவர்கள். அதற்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம், சமீபத்தில் டெல்லியில் நடந்த நீட் விலக்குப் போராட்டம்.  டெல்லியில் நடந்த போராட்டத்தையொட்டி, இந்தியா முழுவதும் இளைஞர்கள் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.  </p><p>ஆனால், நீட் எதிர்ப்புப் போராட்டம் என்பது, தமிழ்நாட்டுக்குப் புதிது கிடையாது.  என்றைக்கு நீட் முதன்முதலாக வந்ததோ, அன்றிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் அதை எதிர்த்துக்கொண்டுதான் இருக்கிறது. </p><p>அய்யா நல்லகண்ணு அவர்கள் எந்த அளவுக்கு எளிமைக்குச் சொந்தக்காரரோ, அதே அளவுக்குப் போராட்டக் குணத்துக்கும் சொந்தக்காரர். அப்படிப்பட்ட அய்யா நல்லகண்ணு அவர்களின் சிலையைத் திறந்துவைப்பதை என்னுடைய வாழ்நாள் பெருமையாகக் கருதுகிறேன்.</p><h2>ஓரணியில் களத்தில் நிற்கும்!</h2><p>நான் இங்கு வந்ததும், குதிரை பேரம் குறித்துப் பலரும் பேசுவதாக கூறினார்கள். உண்மையாகவே குதிரை பேரம் எங்கு நடக்கிறது என்று, என்னைவிட உங்களுக்கு நன்றாகத் தெரியும். தோழர் வீரபாண்டியன் அவர்கள் இங்கு வந்தவுடன் என்னுடன் பேசிக்கொண்டு இருந்தார். </p><p>தலைவர், உங்கள் தந்தையார் எப்படி இருக்கிறார் என்று கேட்டார்.  எப்போதும்போல அதே தோழமை உணர்வோடுதான் அவர் இங்கே அமர்ந்துள்ளார் என்று நம்புகிறேன்.  ஏனெனில், தமிழ் - தமிழர் - தமிழ்நாட்டு உரிமைக்கு எதிராக என்ன நடந்தாலும், திராவிட இயக்கமும் பொதுவுடைமை இயக்கமும் என்றைக்கும் ஓரணியில் கைகோர்த்துக் களத்தில் நிற்கும்.” என தெரிவித்தார். </p><p>இந்த விழாவில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் தலைவர்கள் கலந்துகொண்டனர். </p>]]></content:encoded></item><item><title>செப்டம்பரில் வெளியாகிறது  ‘லெனின் பாண்டியன்’!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/lenin-pandian-to-be-released-in-september</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/lenin-pandian-to-be-released-in-september#comments</comments><guid isPermaLink="false">ce63fe24-ce5c-462c-837a-d897933992f3</guid><pubDate>Wed, 29 Jul 2026 16:04:20 +0000</pubDate><atom:updated>2026-07-29T16:04:20.139Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>இளையராஜா,ilaiyaraaja,Lenin Pandiyan,லெனின் பாண்டியன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/4pmcywjs/New-Project-2026-07-29T212546.067.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘லெனின் பாண்டியன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/4pmcywjs/New-Project-2026-07-29T212546.067.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், ராம்குமாரின் மகனுமான தர்ஷன் கணேசன்  கதாநாயகனாக அறிமுகமாகும் படம் லெனின் பாண்டியன். டிடி பாலச்சந்திரன் எழுதி, இயக்கியுள்ள  இப்படத்தில் கங்கை அமரன் மற்றும் ரோஜா  முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். </p><p>படத்தில் ஷ்ரிதா ராவ், ஜார்ஜ் மரியன், ஆடுகளம் நரேன், யுகேந்திரன், போஸ் வெங்கட் மற்றும் அர்ச்சனா ரவிச்சந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். </p><p>இசைஞானி இளையராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் படத்தை தயாரித்துள்ளது. மணல் கொள்ளையை எதிர்த்து போராடும் காவலரின் கதையை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.</p><p>இப்படத்தின் பாடல்கள், டீசர் எல்லாம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படம் செப்டம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/criminal-cases-involving-crimes-against-women-and-children-must-be-disposed-of-expeditiously-madras-high-court-order</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/criminal-cases-involving-crimes-against-women-and-children-must-be-disposed-of-expeditiously-madras-high-court-order#comments</comments><guid isPermaLink="false">05beaa90-979d-455c-8fdf-7f13905f51f4</guid><pubDate>Wed, 29 Jul 2026 15:42:30 +0000</pubDate><atom:updated>2026-07-29T15:42:30.800Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை உயர் நீதிமன்றம்,Madras High Court,பாலியல் குற்றங்கள்,sexual offences</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/8qm668bj/New-Project-2026-07-29T204306.500.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/8qm668bj/New-Project-2026-07-29T204306.500.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்கும் அனைத்து விசாரணை நீதிமன்றங்களும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தபின், வழக்குகளை 2 மாதங்களில் முடிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களிடம் 30 நாட்களில் வாக்குமூலம் பதிவு செய்து, ஓராண்டுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, காவல்துறையினரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்ற சட்டப்பிரிவை வலியுறுத்தி, மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றங்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை வெளியிடுமாறு உயர் நீதிமன்றம் பதிவாளர் ஜெனரலுக்கு உத்தரவிட்டது.</p><p>வழக்கிற்கு தேவையற்ற வாய்தாக்களை வழங்கக் கூடாது என்றும், மிகவும் விதிவிலக்கான காரணங்களுக்கு மட்டுமே எழுத்துப்பூர்வமாக பதிவு செய்து வாய்தா வழங்கலாம் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.</p><h2>DGP-க்கு அறிவுறுத்தல்: </h2><p>பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறையினரே குற்றங்களில் ஈடுபடும் சம்பவங்கள் இனி நடக்காமல் இருப்பதை தமிழ்நாடு டிஜிபி உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்புக் குழு, ஒவ்வொரு மாவட்டத்திலும் திட்டமிட்ட செயல்திறனுடன் செயல்படுவதை உறுதி செய்யுமாறும், </p><p>போக்சோ வழக்குகளில் காவல்துறை முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், விசாரணை நீதிமன்றங்களில் சாட்சிகளை உரிய நேரத்தில் ஆஜர்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.  </p><h2>அரசுக்கு அறிவுறுத்தல்  </h2><p>தொடர்ந்து கடலூர், திண்டுக்கல், மதுரை மற்றும் தூத்துக்குடியில் உள்ள நான்கு போக்சோ நீதிமன்றங்களுக்கு விரைவில் தலைமை நீதிபதிகளை நியமிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், ஒப்புதல் அளிக்கப்பட்டும் இன்னும் அமைக்கப்படாத மேலும் ஆறு போக்சோ நீதிமன்றங்களை அமைப்பது குறித்தும் மாநில அரசு விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. </p><h2>வழக்கின் பின்னணி</h2><p>திருவண்ணாமலைக்குச் சாமி தரிசனம் செய்ய வந்த ஆந்திராவைச் சேர்ந்த பெண் ஒருவரை, திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் இருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்தாண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.</p><p>இந்த வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரியும், தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள பாலியல் வழக்குகளின் விவரங்களைக் கோரியும் பாதிக்கப்பட்ட பெண் தொடர்ந்த பொதுநல வழக்கில்தான் சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>துலீப் டிராபி: கிழக்கு மண்டல அணி துணை கேப்டனாக வைபவ் சூர்யவன்ஷி நியமனம்</title><link>https://www.maalaimalar.com/sports/duleep-trophy-vaibhav-suryavanshi-appointed-east-zone-vice-captain</link><comments>https://www.maalaimalar.com/sports/duleep-trophy-vaibhav-suryavanshi-appointed-east-zone-vice-captain#comments</comments><guid isPermaLink="false">ee396dd8-3788-474f-9141-6c3795970dec</guid><pubDate>Wed, 29 Jul 2026 15:36:23 +0000</pubDate><atom:updated>2026-07-29T15:36:23.726Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>வைபவ் சூர்யவன்ஷி,துலீப் டிராபி,Duleep Trophy,Vaibhav Sooryavanshi,East Zone,கிழக்கு மண்டலம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/ialnis62/New-Project-2026-07-29T211302.999.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ துலீப் டிராபி: கிழக்கு மண்டல அணி துணை கேப்டனாக வைபவ் சூர்யவன்ஷி நியமனம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/ialnis62/New-Project-2026-07-29T211302.999.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கிழக்கு மண்டலம் அணிக்கு இஷான் கிஷன் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த முகமது ஷமி அணியில் இடம் பிடித்துள்ளார். அபிமன்யு ஈஸ்வரன், முகேஷ் குமார், ஷபாஸ் அகமது, குமார் குஷாக்ரா உள்ளிட்ட பலரும் இடம்பிடித்துள்ளனர்.</p><h2>கிழக்கு மண்டலம் அணியின் விவரம் வருமாறு:</h2><p>அபிமன்யு ஈஸ்வரன், சுதிப் குமார் கராமி, ஷபாஸ் அகமது, சுராஜ் சிந்து ஜெய்ஸ்வால், முகமது ஷமி, முகேஷ் குமார், இஷான் கிஷன் (கேப்டன்), குமார் குஷாக்ரா, ஷிகர் மோகன், அனுகுல் ராய், விராட் சிங், சுப்ரான்ஷு சேனாபதி, வைபவ் சூர்யவன்ஷி (துணை கேப்டன்), டெனிஷ் தாஸ், அபிஜித் சர்க்கார்.</p><p>Standy players: ஆயுஷ் லோஹர்குவா, ஸ்ரீதாம் பாம், சம்பித் எஸ்.பாரல், ஷரண்தீப் சிங், ஸ்வாஸ்டிக் சமல்</p><p>கிழக்கு மண்டலம் அணி முதல் போட்டியில் ஆகஸ்ட் 23-ம் தேதி வட கிழக்கு மண்டலம் அணியை எதிர்கொள்கிறது.</p>]]></content:encoded></item><item><title>கிளாஸ்கோ காமன்வெல்த்தில் ஏற்கனவே 12 தங்கம்: குத்துச் சண்டையில் 5 பதக்கங்களை உறுதி செய்த இந்தியா</title><link>https://www.maalaimalar.com/sports/glasgow-commonwealth-games-india-assured-5-more-medals</link><comments>https://www.maalaimalar.com/sports/glasgow-commonwealth-games-india-assured-5-more-medals#comments</comments><guid isPermaLink="false">7243ed44-0699-4240-a992-6de18fe6ccbb</guid><pubDate>Wed, 29 Jul 2026 14:49:34 +0000</pubDate><atom:updated>2026-07-29T14:49:34.297Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>காமன்வெல்த் போட்டி,Glasgow,commonwealth game,கிளாஸ்கோ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/2sbcsjxn/NarenderBerwal0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Narender Berwal]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/2sbcsjxn/NarenderBerwal0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா இன்று குத்துச் சண்டையில் 5 பதக்கங்களை உறுதி செய்துள்ளது. ஏற்கனவே 12 பதக்கங்கள் வென்றுள்ளது. குத்துச்சண்டையில் பிரிவில் மட்டும் 9 பதக்கம் ஆகும்.</p><h2>குத்துச்சண்டையில் இன்று மட்டும் 5 பேர்</h2><p>சாக்ஷி சவுத்ரி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். அதேபோல் அருந்ததி சவுத்ரி, சச்சின் சிவாச், அங்குஷ், நரேந்தர் பெர்வால் ஆகியோரும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். குத்துச் சண்டையில் அரையிறுதியில் தோல்வயிடைந்தால் வெண்கல பதக்கம் கிடைக்கும். வெற்றி பெற்றால் தங்கம் அல்லது வெள்ளிக்கு போட்டியிட வேண்டும்.</p><p>இதுவரை இந்தியா 2 தங்கம், 7 வெள்ளி, 12 வெண்கல பதக்கங்களுடன் 9-வது இடத்தில் உள்ளது. பளுதுக்குதல் போட்டியில் 1 தங்கம், 5 வெள்ளி, 1 வெண்கலம் என 7 பதக்கங்கள் வென்றுள்ளது. அத்லெடிக்ஸ் மற்றும் பாரா அத்லெடிக்ஸ் பிரிவில் 1 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என 4 பதங்கங்கள் வென்றுள்ளது. பாரா பவர்லஃப்டிங் பிரிவில் வெண்கலம் வென்றுளளது.</p><h2>மீராபாய் சானு தங்கம்</h2><p>பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவு பளுதூக்கல் போட்டியில் மீராபாய் சானு தங்கம் வென்று அசத்தினார். அத்லெடிக்ஸ் மற்றும் பாரா அத்லெடிக்ஸில் ஷர்மிலா தங்கம் வென்றார்.</p><p>200மீ ஓட்டப்பந்தையத்தில் அனிமேஷ் குஜுர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். குண்டு எறிதல் போட்டியில் தஜிந்தர்பால் சிங் மற்றும் சமர்தீப் சிங் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.</p><h2>ஆஸ்திரேலியா முதலிடம்</h2><p>பதக்கப்பட்டியலில் ஆஸ்திரேலியா (80) முதலிடத்திலும், கனடா (13 தங்கம், மொத்தம் 35) 2-வது இடத்திலும், இங்கிலாந்து (10 தங்கம், மொத்தம் 44) 3-வது இடத்திலும் உள்ளன.</p>]]></content:encoded></item><item><title>வங்கதேச ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக லிட்டன் தாஸ் நியமனம்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/litton-das-appointed-bangladesh-odi-captain-until-the-2027-world-cup</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/litton-das-appointed-bangladesh-odi-captain-until-the-2027-world-cup#comments</comments><guid isPermaLink="false">146823b0-4bc1-4a91-a2d3-36d5332b56c2</guid><pubDate>Wed, 29 Jul 2026 14:27:00 +0000</pubDate><atom:updated>2026-07-29T14:27:00.869Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஒருநாள் கிரிக்கெட்,Litton Das,லிட்டன் தாஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/tfviyhrq/LittonDas.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Litton Das]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/tfviyhrq/LittonDas.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வங்கதேச கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் லிட்டன் தாஸ். பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், விக்கெட் கீப்பர் பணியை பெரும்பாலும் மேற்கொள்வதில்லை. வங்கதேச அணியின் நட்சத்திர வீரராகவும், சீனியர் வீரராகவும் உருவெடுத்துள்ளார். இதனால் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்தார்.</p><h2>மெஹிதி ஹசன் நீக்கம்</h2><p>தற்போது ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் வங்கதேச அணியின் ஒயிட் பால் கிரிக்கெட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். வங்கதேச அணியின் கேப்டனாக மெஹிதி ஹசன் இருந்த நிலையில், அவர் நீக்கப்பட்டு தற்போது லிட்டன் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>2027 ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரை கேப்டனாக இருப்பார் என வங்கதேசம் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.</p><p>2027 உலக கோப்பை அடுத்த வருடம் ஆப்பிரிக்க நாடுகளில் நடைபெற இருக்கிறது. தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா நாடுகளில் நடக்கிறது. அக்டோபர் 4-ந்தேதி தொடங்கி நவம்பர் 21-ந்தேதி வரை நடக்கிறது. இதில் 14 அணிகள் பங்கேற்கின்றன.</p><h2>சர்வதேச கிரிக்கெட் வரலாறு</h2><p>31 வயதாகும் லிட்டன் தாஸ் 2015-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். வங்கதேச அணிக்காக 54 டெஸ்ட் போட்டிகளில் 6 சதம், 20 அரைசதங்களுடன் 3356 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 36.47 ஆகும்.</p><p>104 ஒருநாள் போட்டிகளில் 5 சதம், 14 அரைசதங்களுடன் 2869 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 30.84 ஆகும். 122 டி20 போட்டிகளில் விளையாடி 16 அரைசதங்களுடன் 2702 ரன்கள் அடித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பிரகாஷ்ராஜுக்கு கொலை மிரட்டல் விடுத்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.</title><link>https://www.maalaimalar.com/news/national/bjp-mla-issues-threat-to-prakash-raj</link><comments>https://www.maalaimalar.com/news/national/bjp-mla-issues-threat-to-prakash-raj#comments</comments><guid isPermaLink="false">f9ed6e45-0c3a-47ef-9b42-69bfba7abd8a</guid><pubDate>Wed, 29 Jul 2026 14:12:08 +0000</pubDate><atom:updated>2026-07-29T14:12:08.652Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,பிரகாஷ்ராஜ்,Prakshraj,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/a5w6yorg/prakash.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ prakshraj]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/a5w6yorg/prakash.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகர் பிரகாஷ்ராஜுக்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ. கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><p>தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கடந்த வாரம் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் நடந்த மாணவர்கள் போராட்டத்தில் பிரபல நடிகரும், சமூக ஆர்வலருமான பிரகாஷ்ராஜ் பங்கேற்றார். அப்போது பேசிய பிரகாஷ்ராஜ், மத்திய அரசின் கல்விக் கொள்கையை கடுமையாக விமர்சித்து பேசினார்.</p><h2>கண்டன ஆர்ப்பாட்டம்</h2><p>இந்நிலையில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக உடுப்பியில் பா.ஜ.க. சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. </p><p>இதில், இந்தியா கூட்டணி தலைவர்களான ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோரின் முகங்களுடன் கரப்பான்பூச்சி படங்கள் ஒட்டப்பட்ட விளம்பரப் பலகைகள் மீது பா.ஜ.க. தலைவர்கள் பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளித்து தங்களது எதிர்ப்பைப் பதிவிட்டனர்.</p><p>இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பா.ஜ.க. எம்.எல்.ஏ. யஷ்பால் சுவர்ணா பேசியதாவது:</p><h2>அரபிக்கடலில் மீன்களுக்கு இரையாக மாறுவார்</h2><p>நடிகர்களின் மனதில் நஞ்சை விதைப்பதை பிரகாஷ்ராஜ் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அவர் அரபிக்கடலில் மீன்களுக்கு இரையாக மாறுவார்.</p><p>வெளிநாட்டு நிதியுதவியைப் பெற்றுக்கொண்டு நாட்டில் வன்முறையைத் தூண்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சி முயல்கிறது.</p><p>ஜந்தர் மந்தரில் நடந்த நீட் தேர்வு தொடர்பான போராட்டத்தில் பங்கேற்றவர்கள் உண்மையான மாணவர்கள் அல்ல; அவர்களின் பின்னணியைச் சோதித்தால் உண்மை வெளிவரும்.</p><p>இத்தகைய அரசியலைத் தொடர்ந்தால் பா.ஜ.க. தொண்டர்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>7,000க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி - அனைத்து கல்லூரிகளிலும் ஹெச்.ஐ.வி. சோதனை நடத்த கர்நாடக அரசு உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/national/infection-confirmed-in-over-7000-students-karnataka-government-orders-hiv-testing-in-all-colleges</link><comments>https://www.maalaimalar.com/news/national/infection-confirmed-in-over-7000-students-karnataka-government-orders-hiv-testing-in-all-colleges#comments</comments><guid isPermaLink="false">38366375-eed5-44d9-b4e5-a2432c6555bb</guid><pubDate>Wed, 29 Jul 2026 14:08:27 +0000</pubDate><atom:updated>2026-07-29T14:08:27.487Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,HIV,ஹெச்ஐவி,HIV camps,பரிசோதனை முகாம்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/w41lg8mc/New-Project-2026-07-29T193734.470.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 7,000க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி - அனைத்து கல்லூரிகளிலும் ஹெச்.ஐ.வி. சோதனை நடத்த கர்நாடக அரசு உத்தரவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/w41lg8mc/New-Project-2026-07-29T193734.470.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடகாவில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட 7,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஹெச்.ஐ.வி தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, அனைத்து கல்லூரிகளிலும் ஹெ.ஐ.வி. பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம்களை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.</p><p>கர்நாடக அரசு மற்றும் விஸ்வேஷ்வராய தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து இந்த பரிசோதனை முகாம்களை ஏற்பாடு செய்கின்றன.</p><p>கர்நாடகாவில் உள்ள அனைத்து அரசு, உதவிபெறும் மற்றும் தனியார் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளிலும் மருத்துவ முகாம்களை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.</p><h2>ஏன் கர்நாடகாவில் இந்த திடீர் சோதனை?</h2><p>கர்நாடக மாநில எய்ட்ஸ் தடுப்புச் சங்கத்தின் தரவுகளின்படி, அங்கு 18 முதல் 35 வயதுக்குட்பட்ட மக்களிடையே எச்.ஐ.வி தொற்றுகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்த வயதினரிடையே எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2023-24ல் 44,500 ஆக இருந்தநிலையில், 2025-26ல் 66,600 ஆக அதிகரித்துள்ளது.</p><p>மேலும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் அறிக்கையின்படி, இந்தியாவில் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் கர்நாடகா 3-வது இடத்தில் உள்ளது. </p><p>மாநிலத்தில் சுமார் 2.60 லட்சம் பேர் எச்.ஐ.வி பாதிப்புடன் வாழ்ந்து வருகின்றனர் என தரவுகள் தெரிவிக்கின்றன. இதில் 54 ஆயிரம் பேர் பாதிப்பு இருப்பதே தெரியாமல் இருக்கின்றனர்.</p><h2>QR குறியீடு அடிப்படையிலான கருவிகள் பயன்பாடு</h2><p>மாணவர்களின் ரகசியம் மற்றும் தனித்தன்மையை காக்கும் பொருட்டு, க்யூஆர் கோட் அடிப்படையிலான அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் மாணவர்கள் தங்களின் சந்தேகங்களை எளிதாகக் கேட்டுத் தெளிவுபெறலாம்.</p><p>இந்த முகாம்கள் கல்லூரிகளில் நடத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டாலும், தனிநபரின் அல்லது மாணவர்களின் சம்மதம் இல்லாமல் எந்தப் பரிசோதனையும் செய்யப்படாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நிஜ வாழ்விலும் &apos;தேவதை&apos; சிம்ரன்.. மாற்றுத்திறனாளி சிறுமியின் நடனக் கனவை நனவாக்கி அசத்தல்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actress-simran-dances-with-disabled-girl-and-gifts-her-a-bicycle</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actress-simran-dances-with-disabled-girl-and-gifts-her-a-bicycle#comments</comments><guid isPermaLink="false">e7eebdce-e6a6-4147-b2d7-2aedb1c635a4</guid><pubDate>Wed, 29 Jul 2026 13:49:40 +0000</pubDate><atom:updated>2026-07-29T13:49:40.319Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Simran,சிம்ரன்,Nisha,DifferentlyAbledTalent,Mohamed Ashik,முகமது ஆஷிக்,SimranFans,simran gift nisha</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/bi83aztz/Simran-Gift-Nisha" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Simran Gift Nisha]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/bi83aztz/Simran-Gift-Nisha?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ் திரையுலகின் எவர்கிரீன் 'நடனப் புயல்' நடிகை<a href="https://www.maalaimalar.com/topic/simran"> சிம்ரன்</a>, தனது தீவிர ரசிகையான 10 வயது மாற்றுத்திறனாளி சிறுமியின் நீண்ட நாள் கனவை நேரில் சந்தித்து நிறைவேற்றியுள்ளார். </p><p>அந்தச் சிறுமியுடன் இணைந்து நடனமாடியதுடன், அவருக்குப் புதிய மிதிவண்டி ஒன்றையும் பரிசாக வழங்கி ஒட்டுமொத்த சமூக வலைத்தளங்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.</p><h2>குறையை வென்ற நடனத் திறமை</h2><p>சென்னையைச் சேர்ந்த 10 வயது சிறுமி நிஷா, ஒரு கை இல்லாமல் பிறந்த மாற்றுத்திறனாளி ஆவார். பல எமோஷனல் மற்றும் உடல் ரீதியான சவால்களை எதிர்கொண்ட போதிலும், நிஷா தனது புன்னகையையும் நம்பிக்கையையும் கைவிடவில்லை.</p><p>முறையாக நடனம் கற்றுத்தர யாரும் இல்லாத நிலையில், தொலைக்காட்சியில் வரும் நடனங்களை, குறிப்பாக சிறு வயது முதலே தனக்கு பிடித்த நடிகை சிம்ரனின் நடனங்களைப் பார்த்துத் தனியாகவே நடனம் பழகியுள்ளார். </p><p>"சில நேரங்களில் எனக்கு ஒரு கை இல்லை என்று நினைத்து வருத்தப்படுவேன். ஆனால் நான் ஆடும்போது எல்லாவற்றையும் மறந்துவிடுகிறேன். நடனம்தான் என் உலகம்" என்று சிறுமி நிஷா உருக்கமாகக் கூறியுள்ளார்.</p><h2>சமூக ஆர்வலர்</h2><p>சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முகமது ஆஷிக் என்பவர், நிஷாவின் நடனத் திறமையையும் விடாமுயற்சியையும் உலகிற்குக் காட்ட அவரது நடன வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். </p><p>இந்த வீடியோக்கள் பல்லாயிரக்கணக்கான மக்களைச் சென்றடைந்தது மட்டுமில்லாமல், நடிகை சிம்ரனின் பார்வைக்கும் சென்றடைந்தது. </p><p>மேலும், நிஷா தினமும் பள்ளிக்கு நடந்து செல்வதாகவும், அவளுக்கு ஒரு சைக்கிள் வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை என்றும் ஆஷிக் சிம்ரனிடம் தெரிவித்துள்ளார்.</p><h2>'ஆல் தோட்ட பூபதி' பாடலுக்கு சிம்ரனுடன் நடனம்</h2><p>சிறுமியின் கதையைக் கேட்ட சிம்ரன், நிஷாவை நேரில் சந்திக்கத் தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். இந்தச் சந்திப்பின் போது, நடிகர் விஜய் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான 'யூத்' படத்தின் சூப்பர் ஹிட் பாடலான ‘ஆல் தோட்ட பூபதி’ பாடலுக்கு சிம்ரன் முன்னிலையில் நிஷா நடனமாடிக் காட்டியுள்ளார்.</p><p>இதனைக் கண்டு வியந்த சிம்ரன், தானும் நிஷாவுடன் இணைந்து அந்தப் பாடலுக்கு உற்சாகமாக நடனமாடினார். டிவியில் பார்த்து நடனம் பழகிய சிறுமி, இன்று தன் கனவு நாயகியுடன் இணைந்தே ஆடியது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.</p><figure><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DbPlUoAu2C4/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:658px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DbPlUoAu2C4/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a></div></blockquote>
<script async src="//platform.instagram.com/en_US/embeds.js"></script></figure><h2>சைக்கிள் பரிசு</h2><p>பள்ளிக்கு நடந்து செல்லும் நிஷாவின் சிரமத்தைக் குறைக்க, சிம்ரன் அவளுக்கு ஒரு புத்தம் புதிய சைக்கிளை பரிசளித்தார்.</p><p>பரிசை வழங்கியதோடு மட்டுமின்றி, "நடனத்தின் மீதுள்ள ஆர்வம் போலவே படிப்பிலும் முழுக் கவனம் செலுத்த வேண்டும். கல்வியையும் உனது கனவுகளையும் சமமாகப் பாக்க வேண்டும், தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்" என்று சிம்ரன் அந்தச் சிறுமிக்கு அன்போடு அறிவுரை வழங்கினார்.</p><p>இந்த நெகிழ்ச்சியான சந்திப்பு வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி, "சிம்ரன் நிஜ வாழ்விலும் ஒரு பேரன்பு கொண்ட தேவதை" எனப் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறார்.</p><h2>சிம்ரனின் அடுத்தடுத்த திரைப்படங்கள்</h2><p>சினிமாத்துறையில் சிம்ரன் தற்போது அஸ்வத் மரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'தர்மன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். </p><p>ரஜினிகாந்த் ஒரு மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தை, ஆர்.கே.எஃப்.ஐ கமல்ஹாசன் தயாரிக்கிறார். மேலும்&nbsp;, பாலு ஷர்மா இயக்கும் '&nbsp;டீச்சர்' என்ற படத்திலும் அவர் நடிக்கிறார்.</p>]]></content:encoded></item><item><title>&quot;எதிர்பார்ப்புகள் பயத்தை ஏற்படுத்துகின்றன!&quot; – ‘மண்டாடி’ பாடலின் வரவேற்பால் நெகிழ்ந்த நடிகர் சூரி!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/soori-on-mandadi-song-praise-happiness-with-fear-as-expectations-rise</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/soori-on-mandadi-song-praise-happiness-with-fear-as-expectations-rise#comments</comments><guid isPermaLink="false">db025ccc-cd18-49e4-a9a4-be638a4ee0c8</guid><pubDate>Wed, 29 Jul 2026 13:24:52 +0000</pubDate><atom:updated>2026-07-29T13:24:52.707Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜி வி பிரகாஷ்குமார்,GV Prakash Kumar,Soori,Mandaadi,சூரி,MandaadiPromoSong,MathimaranPugazhendhi</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/be2svwk8/Mandaadi" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mandaadi ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/be2svwk8/Mandaadi?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இயக்குநர் வெற்றிமாறனின் 'விடுதலை' திரைப்படத்திற்குப் பிறகு, தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக உருவெடுத்துள்ள நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF">சூரி</a>, தற்போது '<a href="https://www.maalaimalar.com/topic/mandaadi">மண்டாடி</a>' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். </p><p>இத்திரைப்படத்தின் 'மண்டாடி' புரோமோ பாடல் சமீபத்தில் வெளியாகி, சமூக ஊடகங்களில் அவரது நடனம் மற்றும் உடல் மாற்றத்திற்கு மிகப்பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்று வருகிறார் சூரி. </p><p>இந்த நிலையில், பாடலுக்குக் கிடைத்துள்ள அமோக வரவேற்பு மற்றும் தனது திரையுலக மாற்றம் குறித்து நடிகர் சூரி நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.</p><h2>4 மணி நேரம் நடனப் பயிற்சி</h2><p>முதலில் இப்பாடல் திரைப்படத்தின் ஒரு பகுதியாக மட்டுமே திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் படக்குழுவினர் பட்ஜெட் காரணமாகத் தயங்கியபோது, இதனை ஒரு முழுமையான நடனப் பாடலாக மாற்றலாம் என சூரி பரிந்துரைத்துள்ளார்.</p><p>இது குறித்துப் பேசிய சூரி, "படப்பிடிப்பிற்குச் செல்வதற்கு முன்பாகவே நன்றாகப் பயிற்சி செய்ய விரும்பினேன். இதற்காக இரண்டு நாட்கள் நான்கு மணி நேரம் கடுமையாக நடனப் பயிற்சி மேற்கொண்டேன். </p><p>முழு நம்பிக்கை வந்த பிறகே கேமரா முன்னால் நின்றேன். இது எனது சிறந்த நடனம் இல்லை என்றாலும், அடுத்தடுத்த படங்களில் இன்னும் சிறப்பாக ஆட முயற்சிப்பேன்" என்று கூறினார்.</p><h2>"மகிழ்ச்சியாக இருக்கிறது, ஆனால் பயமாகவும் உள்ளது!"</h2><p>பாடல் வெளியானதில் இருந்து தனக்குத் தொடர்ந்து பாராட்டுகள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளதாகச் சூரி தெரிவித்துள்ளார்.</p><p>"ஒரு பாடல் வெளியான பிறகு எனக்கு இந்த அளவிற்குத் தொலைபேசி அழைப்புகள் வருவது இதுவே முதல் முறை. அனைவரும் எனது சினிமா பயணம் மற்றும் உடல் மாற்றத்தைக் கண்டு வியந்து பாராட்டுகிறார்கள். </p><p>இதைக் கேட்கும்போது மனதிற்கு மிகவும் ஆனந்தமாக இருக்கிறது. அதே நேரத்தில், மக்கள் என் மீது வைக்கும் எதிர்பார்ப்புகளும் பொறுப்புகளும் எனக்குள் ஒருவித பயத்தை ஏற்படுத்துகின்றன. </p><p>எனக்குத் தெரியாது என்று கூறிவிட்டு இந்த உழைப்பிலிருந்து நான் இனி விலகிவிட முடியாது" எனத் தனது பொறுப்புணர்வையும் வெளிப்படுத்தியுள்ளார்.</p><h2>மண்டாடி திரைப்படம்</h2><p>இப்படத்தில் தெலுங்கு நடிகர் சுஹாஸ் வில்லனாக நடிக்கிறார். இதில் சூரி ஒரு மீன்பிடிப் பயணக் குழுவின் தலைவராக நடிக்கிறார். </p><p>ஒரு விளையாட்டு அதிரடி நாடகமான இப்படத்தை, 'செல்ஃபி' புகழ் மதிமாறன் புகழேந்தி எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் மஹிமா நம்பியார், சத்யராஜ், பாலா சரவணன் மற்றும் அச்யுத் குமார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.</p><p>தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ள 'மண்டாடி' திரைப்படம் வருகிற செப்டம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-29-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-29-july-2026#comments</comments><guid isPermaLink="false">b15702b0-04b5-4c16-acc1-8fc7df5584b1</guid><pubDate>Wed, 29 Jul 2026 04:49:34 +0000</pubDate><atom:updated>2026-07-29T13:20:01.181Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/g9qg65my/WhatsApp-Image-2026-07-29-at-12.26.56-PM.jpeg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/g9qg65my/WhatsApp-Image-2026-07-29-at-12.26.56-PM.jpeg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/bypoll-campaigning-in-bihar-mp-and-gujarat-ends-with-last-minute-rallies">பீகார், ம.பி., குஜராத்தில் நாளை சட்டசபை இடைத்தேர்தல்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்</a></p><p>* பீகாரின் பங்கிப்பூரில் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் போட்டியிடுகிறார்.</p><p>* 3 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தேர்தல் ஆணையம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.</p> <h2><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-arun-raaj-sharp-reply-to-dmk-leader-mk-stalin-super-speciality-medical-seats">சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்கள்: இனிமேலும் மக்களை ஏமாற்ற முடியாது- மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சர் பதிலடி</a></h2><p>* த.வெ.க. அரசு உச்சநீதிமன்றத்தில் நடத்திய சமரசமற்ற, தீவிரமான சட்டப் போராட்டத்தின் விளைவாகத்தான் நேற்றைய தினம் தமிழ்நாட்டிற்கு ஆதரவான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு கிடைத்துள்ளது.</p><figure><img alt="திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்- அமைச்சர் அருண் ராஜ்" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/f1m52o7k/MKStalinArunraj.jpg" /></figure> <p>* தலைசிறந்த சட்ட வல்லுநர்களின் பங்களிப்பு தமிழ்நாடு அரசின் சார்பில் மாநில உரிமைகளையும் அரசு மருத்துவர்களின் எதிர்காலத்தையும் பாதுகாப்பதற்காக, உச்சநீதிமன்றத்தில் வாதாட மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி உள்ளிட்ட தலைசிறந்த சட்ட வல்லுநர்கள் நியமிக்கப்பட்டனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-cjp-protest-case-bihar-man-claims-he-was-booked-despite-being-in-russia-for-four-months">நீட் போராட்டம் வழக்கு: ரஷியாவில் இருக்கும் என் மீது எப்.ஐ.ஆர்.- பீகாரை சேர்ந்தவரின் வீடியோவால் காவல்துறை அதிர்ச்சி</a></p><p>* பீகார் மாநிலத்தில் 25-ந்தேதி போராட்டம் தொடர்பாக 694 பேரை கைது செய்துள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் மைனர் ஆவார்கள்.</p><p>* போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களும் உடனடியாக விடுவிக்கப்படுவார்கள் என்று காவல்துறை சார்பில் தெரிவித்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/justin-greaves-sets-new-cricket-bowling-record-with-five-wicket-maiden">டெஸ்ட் கிரிக்கெட்டில் இப்படி ஒரு அரிய சாதனை படைத்த வெஸ்ட் ஜஸ்டின் கிரீவ்ஸ்</a></p><p>* 11 ஓவரில் வெறும் 27 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.</p><p>* அந்த 5 விக்கெட்டுகளையும் தொடர்ச்சியாக 5 மெய்டன் ஓவர்கள் வீசி எடுத்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-decided-to-provide-loans-worth-rs-7000-crore">சிங்கப்பெண்கள் மேம்பாட்டு திட்டம்: ரூ.7 ஆயிரம் கோடி கடன் வழங்க முதலமைச்சர் விஜய் முடிவு</a></p><p>* இளம்பெண்கள், நலிவடைந்த சமூகத்தினர் தொழில் தொடங்குவதற்காக, தொழில் முனைவோர் கடன்களை வழங்க, கூட்டுறவு துறை முடிவு செய்து உள்ளது. </p><p>* இளம்பெண்கள், நலிவடைந்த பிரிவினருக்கு ரூ.7 ஆயிரம் கோடி கடன் வழங்கும் அறிவிப்பு வருகிற பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/india-urges-end-to-attacks-on-ships-in-hormuz-strait-at-un-security-council" rel="nofollow">ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும்..!- ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா வலியுறுத்தல்</a></p><p>* சிறிய அமைதிக்கு பிறகு, தாக்குதல்கள் மீண்டும் தொடங்கியது மிகவும் கவலையளிக்கிறது.</p><p>*  ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் மீதான தாக்குதல்களில் பல இந்தியர்கள் காயமடைந்தனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/sooryavanshi-takes-big-strides-in-t20i-rankings">ஐசிசி டி20 தரவரிசை: ஜெட் வேகத்தில் உச்சம் தொட்ட சூர்யவன்ஷி</a></p><p>* ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் சுப்மன் கில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.</p><p>* நியூசிலாந்தின் டேரில் மிட்செல் இரண்டாவது இடத்தை தக்கவைத்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-travelling-metro-train">மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் முதலமைச்சர் விஜய்...</a></p><p>* சென்னை மெட்ரோ ரெயிலின் 2-ம் கட்ட வழித்தடமான போரூர்-பூந்தமல்லி இடையிலான ஆளில்லா மெட்ரோ ரெயிலில் ஏறி பூந்தமல்லி செல்கிறார்.</p><p>* முதலமைச்சர் விஜய் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வதால் பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-handed-over-appointment-orders-to-126-individuals-selected-for-government-jobs">அரசு வேலைக்கு தேர்வான 126 பேருக்கு பணி நியமன ஆணைகள் - முதலமைச்சர் விஜய் வழங்கினார்</a></p><p>* தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பல்வேறு பணி இடங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 48 நபர்களுக்கும் பணிநியமன ஆணைகளை வழங்கினார். </p><p>* முதலமைச்சர் விஜய் பணிநியமன ஆணைகளை வழங்கி, அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். </p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/black-sea-ukraine-port-attack-indian-sailors-trapped" rel="nofollow">உக்ரைன் துறைமுகத்தில் தாக்குதல்- கப்பலில் 13 இந்திய மாலுமிகள் தவிப்பு</a></p><p>*  இந்திய மாலுமிகள் எளிதில் தாக்கப்படக்கூடிய இலக்குகளாக விடப்படக்கூடாது. </p><p>* விரைவாக  நாடு திரும்ப ஏற்பாடு செய்யுமாறு கேட்டு கொள்கிறோம்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/hs-prannoy-enter-second-round-in-taipae-open-badminton">தைபே ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் இந்திய வீரர்கள் வெற்றி</a></p><p>* தைபே ஓபன் பேட்மிண்டன் தொடர் தைவானில் நடந்து வருகிறது.</p><p>* இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், தருண் மன்னேபள்ளி வெற்றி பெற்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/venus-williams-lose-first-round-in-citi-open-tennis">சிட்டி ஓபன் டென்னிஸ்: வீனஸ் வில்லியம்ஸ் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி</a></p><p>* சிட்டி ஓபன் டென்னிஸ் தொடர் வாஷிங்டனில் நடந்து வருகிறது.</p><p>* இரண்டாவது சுற்று போட்டிகள் இன்று நடைபெற உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/west-indies-beat-pakistan-in-90-runs-in-first-test">டிரினிடாட் டெஸ்ட்: 90 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்</a></p><p>* 2வது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜெய்டன் சீல்ஸ் 5 விக்கெட் வீழ்த்தினார்.</p><p>* ஆட்ட நாயகன் விருது ஜஸ்டின் கிரீவ்ஸ்க்கு வழங்கப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-re-elected-as-pmk-president">பா.ம.க. தலைவராக அன்புமணி மீண்டும் தேர்வு</a></p><p>* பாமக நிறுவனர் ராமதாசின் பிறந்தநாளில் அன்புமணி அவரை சந்தித்து வாழ்த்து பெற்றார். </p><p>* மாமல்லபுரத்தில் உள்ள விடுதியில் பாமக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-government-consider-decision-to-hand-tasmac-shops-back-to-private-sector">டாஸ்மாக் கடைகளை மீண்டும் தனியாரிடம் ஒப்படைக்க முடிவு? - தமிழ்நாடு அரசு ஆலோசனை</a></p><p>* தமிழ்நாட்டில் தற்போது டாஸ்மாக் நிறுவனத்தின் கீழ் 4,048 சில்லறை மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. </p><p>* மாநில அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித் தரும் துறைகளில் டாஸ்மாக் முக்கியமான ஒன்றாகும்.</p>  <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-mekedatu-dam-issue-let-us-unite-avoid-politicizing-matter">மேகதாது அணை விவகாரம்: அரசியல் சாயம் பூசுவதை தவிர்த்து ஒன்றிணைவோம்! - மாணிக்கம் தாகூர்</a></p><p>* தமிழகத்திற்கு பாஜ.க. அரசு செய்த மிகப்பெரிய துரோகமாகும்.</p><p>* ஆட்சியை இழந்ததை சகித்துக் கொள்ள முடியாத நிலையிலுள்ள தி.மு.க. மேகதாது பிரச்சனையில் அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-high-court-orders-fir-against-youtubers-over-defamation-of-seeman">சீமான் குறித்து அவதூறு பேச்சு: யூடியூபர்கள் பிஸ்மி, தமிழன் கோகுல் மீது வழக்குப் பதிவு செய்ய உயர் நீதிமன்றம் அதிரடி உத்தர... </a></p><p>*சீமான் குறித்து இவ்வளவு கொச்சையாகப் பேசியும் காவல் துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் பாரபட்சம் காட்டுகிறது.</p><p>* வழக்குத் தொடர்பான முதற்கட்ட அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/respect-the-power-of-youth-rahul-gandhi-speech-in-lok-sabha" rel="nofollow">இளைஞர்களின் சக்திக்கு மரியாதை கொடுங்கள்..!- மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச்சு</a></p><p>* என்னை எதிர்கொள்ள அமித்ஷாவுக்கு துணிச்சல் இல்லை.</p><p>* மக்களவையில் முட்டாள்கள் என்ற வார்த்தையை ராகுல்காந்தி பேசியதற்கு பாஜக எம்பிக்கள் கடும் கண்டனம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/assam-flood-tragedy-75-dead">அசாம் வெள்ளப் பேரழிவு – உயிரிழப்பு 75 ஆக உயர்வு!</a></p><p>* 81 நிவாரண முகாம்களில் 32,477 பேர் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்</p><p>* உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 9 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ஹிமந்தபிஸ்வாசர்மா </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/o-panneer-selvam-likely-chance-join-to-tvk">த.வெ.க.வில் இணையும் ஓபிஎஸ்? தி.மு.க.வில் விழும் முதல் விக்கெட்?</a></p><p>* 2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவுக்கு பிறகு அரசியல் களத்தில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் நடைபெற்று வருகி்னறன. </p><p>* 2029-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் த.வெ.க. சார்பில் களம் இறக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/delhi-student-protest-opposition-uproar-in-parliament-jp-nadda-sharp-response">டெல்லி மாணவர் போராட்டம்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி-ஜே.பி. நட்டா காரசார பதில்!...</a></p><p>*காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, பாஜக ஆட்சியில் நாட்டின் "ஜனநாயகமும் மக்களும் பாதுகாப்பாக இல்லை" என்று குற்றம் சாட்டினார். </p><p>*செயல்பாட்டாளர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் கைது செய்யப்படுவதும் தடுத்து வைக்கப்படுவதும் வழக்கமான ஒன்றுதான்" என்று வாதிட்டார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-questions-vijay-on-army-to-protect-women-from-tvk-officials">தவெக நிர்வாகிகளிடம் இருந்து பெண்களை காக்க எந்தப் படையை அமைக்கப் போகிறார் விஜய்? - நயினார் நாகேந்திரன்</a></p><p>* மேற்கு மாவட்டச் செயலாளர்  விஜய் மோகன் மீது, இளம்பெண் ஒருவர் அளித்துள்ள புகார்கள் கடும் அதிர்ச்சி.</p><p>* சட்டரீதியான மற்றும் கட்சி ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்!</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/case-registered-against-senthil-balaji">டாஸ்மாக் நிதி முறைகேடு - செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு?</a></p><p>* புதிய அரசு டாஸ்மாக் வருவாயில் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய செயல்பாட்டைத் தொடங்குமாறு உத்தரவிட்டுள்ளது. </p><p>* கரூரில் செந்தில் பாலாஜி வீடு, நண்பர்கள் வீடுகள் உள்ளிட்ட 6 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-consult-with-chicken-biryani-with-nutritious-meal-for-government-school-students">அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுடன் சிக்கன் பிரியாணி- முதலமைச்சர் விஜய் பரிசீலனை</a></p><p>* உடற்கல்வி, ஓவியம் கணினி அறிவியல் மற்றும் தையல் உள்ளிட்ட பாடங்களில் மொத்தம் 11,773 பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.</p><p>* சங்கங்கள் முன் வைத்துள்ள கோரிக்கை மனுக்களை பிரத்தியேக சாப்ட்வேர் மூலம் பதிவேற்றம் செய்து டிஜிட்டல் மயமாக்கப்படும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-super-speciality-medical-seats-lost-mk-stalin-questions-dmk-government" rel="nofollow">தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு- மு.க.ஸ்டாலின் கண்டனம்</a></p><p>* எதிர்கால தமிழ்நாட்டில் தொண்டாற்ற இருந்த 151 உயர்சிறப்பு அரசு மருத்துவர்களை இழந்திருக்கிறோம்.</p><p>* லட்சக்கணக்கான தமிழ்நாட்டு மக்களின் உயிர்ப்பிரச்சினை இது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/massive-earthquake-in-japan-death-toll-rises-to-13">ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு-வணிக வளாக இடிபாடுகளில் தீவிர மீட்புப் பணி!... </a></p><p>*நேற்று பிற்பகல் குமாமோட்டோ பகுதியில் ரிக்டர் அளவில் 7.1 ஆகப் பதிவு செய்யப்பட்டது.</p><p>*கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதால், அவர்களை மீட்கும் பணிகள்  தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/commonwealth-games-president-murmu-congratulates-silver-medalists-kulveer-singh-harjinder-kaur">காமன்வெல்த் போட்டி: வெள்ளிப் பதக்கம் வென்ற குல்வீர் சிங், ஹர்ஜிந்தர் கவுருக்கு குடியரசுத் தலைவர் முர்மு வாழ்த்து!</a></p><p>*குல்வீர் சிங்கின் இந்த வெள்ளிப் பதக்கம் காமன்வெல்த் போட்டிகளின் இந்தப் பிரிவில் இந்தியாவின் முதல் பதக்கமாகப் பதிவாகியுள்ளது.</p><p>*குத்துச்சண்டை போட்டிகளில் மூன்று இந்திய வீரர்கள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவிற்கு மேலும் 3 பதக்கங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dvac-raid-at-41-locations-across-tamil-nadu">தமிழ்நாடு முழுவதும் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை</a></p><p>தி.நகர் தணிகாசலம் சாலையில் உள்ள மதுபான நிறுவனம் தொடர்புடைய இடத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.</p><p>திமுக எம்பி டி.ஆர்.பாலுவுக்குச் சொந்தமான மதுபான ஆலையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். </p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/privatizing-liquor-shops-will-only-increase-alcohol-abuse-anbumani" rel="nofollow">மதுக்கடைகளை தனியாருக்கு தாரை வார்ப்பது மதுப் புழக்கத்தை மேலும் அதிகரிக்கவே செய்யும்..!- அன்புமணி</a></p><p>* மீண்டும் பழைய நடைமுறைக்கே செல்வது சீர்திருத்தம் அல்ல... மாறாக சீர்கேடாகத்தான் கருதப்படும்.</p><p>* தனியார் மதுக்கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டால் தமிழ்நாட்டில் மது வெள்ளமாக பாயும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-says-nature-aligned-culture-drives-tiger-protection" rel="nofollow">இயற்கையோடு இயைந்த கலாச்சாரமே புலிகள் பாதுகாப்பிற்கு காரணம்- பிரதமர் மோடி</a></p><p>* உலகப் புலி எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 70% இந்தியாவில்தான் உள்ளது.</p><p>* மனித-வனவிலங்கு மோதலைக் குறைப்பதிலும் இந்தியா தனது உறுதிப்பாட்டைத் தொடர்கிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/verification-of-evm-for-kolathur-constituency-has-begun">கொளத்தூர் தொகுதி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி தொடங்கியது</a></p><p>* மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ள 14 வாக்குச்சாவடிகளில் பதிவான மின்னணு எந்திரங்கள் ஆய்வு செய்யப்படும். </p><p>* ஒவ்வொரு நாளும் 2 வாக்குச்சாவடிகளுடைய எந்திரங்கள் ஆய்வு செய்யப்படும்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-29-07-2026">GOLD PRICE TODAY: தங்கம் விலையில் தொடர் சரிவு: இன்றைய நிலவரம்</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.13,155-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/southwest-monsoon-16-percent-deficit-in-tamil-nadu">தென்மேற்கு பருவமழை - தமிழகத்தில் 16 சதவீதம் குறைவு</a></p><p>* நாடு முழுவதும் மழைப் பற்றாக்குறை 15.5 சதவீதமாக குறைந்துள்ளது.</p><p>* அந்தமான்-நிக்கோபார் தீவுகளில் 6 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது.&nbsp;</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vigilance-raid-senthil-balajis-karur-residence">கரூரில் செந்தில் பாலாஜி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை</a></p><p>* செந்தில் பாலாஜியின் வீட்டில் காலை 7 மணி முதல் சோதனை நடைபெற்று வருகிறது.</p><p>* செந்தில் பாலாஜியின் பெற்றோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/mumbai-popular-clubs-licenses-cancelled-health-violations-food-safety-action">மும்பை பிரபல கிளப்புகளின் உரிமங்கள் ரத்து: சுகாதாரக் குறைபாடு காரணமாக உணவு பாதுகாப்புத்துறை அதிரடி நடவடிக்கை!... </a></p><p>*உணவுகள் தயாரிக்கப்படும் சமையலறைப் பகுதிகளில் கரப்பான் பூச்சிகள், ஈக்கள் மற்றும் பிற பூச்சிகளின் நடமாட்டம் அதிக அளவில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.</p><p>*பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் உறுப்பினர்களாக இருக்கும் முன்னணி கிளப்புகளிலேயே இத்தகைய சுகாதாரச் சீர்கேடுகள் கண்டறியப்பட்டது பொதுமக்கள் மற்றும் உறுப்பினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/us-senate-russia-sanctions-bill-risk-100-percent-tariffs-on-india-china">அமெரிக்க செனட் சபையில் ரஷியா மீதான தடைகள் மசோதா: இந்தியா, சீனாவிற்கு 100% வரி விதிக்கும் அபாயம்!... </a></p><p>*அமெரிக்க செனட் சபையில் (Senate) ரஷியா மற்றும் ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்கும் புதிய சட்ட மசோதா முதற்கட்ட வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது.</p><p>* ரஷிய எண்ணெயைக் கள்ளத்தனமாகக் கடத்தும் கப்பல்கள் மற்றும் அவற்றுக்குத் துணைபுரியும் நிதி நிறுவனங்கள் மீது தடை விதிக்கப்படும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/paid-menstrual-leave-for-women-high-court-orders-interim-report-to-government">பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு: இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!... </a></p><p>*இந்த வழக்கு விசாரணையை வருகிற ஆகஸ்ட் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.</p><p>*கர்நாடகா, பீகார் மற்றும் ஒடிசா போன்ற சில மாநிலங்களில் ஏற்கனவே மாதவிடாய் விடுப்பு குறித்த கொள்கைகள் நடைமுறையில் உள்ளன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/dharmendra-pradhan-quits-over-neet-gets-rousing-odisha-reception">தர்மேந்திர பிரதானுக்கு ஒடிசாவில் பிரம்மாண்ட வரவேற்பு: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு!... </a></p><p>*தொண்டர்கள் அவருக்கு ஆதரவாக பதாகைகளை ஏந்தியும், "தர்மேந்திர பிரதான் ஜிந்தாபாத்" என கோஷமிட்டும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.</p><p>*பாஜகவினர் விழா எடுத்து வரவேற்பு அளிப்பது தவறான முன்மாதிரி என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/police-open-fire-in-pakistan-occupied-kashmir-20-killed-50-injured">பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போலீசார் துப்பாக்கிச் சூடு: 20 பேர் உயிரிழப்பு; 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!... </a></p><p>**காவல்துறையின் இந்த கொடூரத் தாக்குதலால் அப்பகுதியில் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. </p><p>*பல இடங்களில் தொலைத்தொடர்புச் சேவைகள் முடக்கப்பட்டு, ராணுவத்தின் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/postal-charges-to-change-from-the-1st">தபால் கட்டணம் 1-ந் தேதி முதல் மாற்றம்- விரைவு சேவைக்கு புதிய கட்டணங்கள் அறிவிப்பு</a></p><p>* பொதுமக்கள் மற்றும் மொத்த வாடிக்கையாளர்களுக்காக '24 விரைவு தபால்' மூலம் அனுப்பப்படும் பொருட்கள் 24 மணி நேரத்துக்குள் வழங்கப்படும்.</p><p>* சேவைகள் தற்போது டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் ஐதராபாத் ஆகிய 6 நகரங்களில் மட்டுமே கிடைக்கின்றன.</p>]]></content:encoded></item><item><title>சீயான் 63-ன் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு..!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/chiyaan-vikram-upcoming-film-chiyaan-63-first-schedule-wrapped</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/chiyaan-vikram-upcoming-film-chiyaan-63-first-schedule-wrapped#comments</comments><guid isPermaLink="false">5199548e-f899-4fe7-aa74-d1befb278fee</guid><pubDate>Wed, 29 Jul 2026 13:16:49 +0000</pubDate><atom:updated>2026-07-29T13:16:49.750Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விக்ரம்,Chiyaan 63,சியான் 63</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/zsdw6m9h/Chiyaan63.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chiyaan 63]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/zsdw6m9h/Chiyaan63.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சீயான் விக்ரம் நடிப்பில் 2016-ம் ஆண்டு வெளியான படம் இருமுகன். இப்படத்தை ஆனந்த் ஷங்கர் இயக்கியிருந்தார். இந்த ஜோடி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்திற்கு சீயான் 63 எனப் பெயரிடப்பட்டுள்ளது.</p><p>இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வந்த நிலையில், முதற்கட்ட சூட்டிங் நிறைவடைந்துளு்ளது. 2-ம் கட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்காக படக்குழு முழு வீச்சில் தயாராகி வருகிறது.</p><p>இப்படத்தில் விக்ரமுடன் ரியா ஷிபு, ஊர்வசி, எம்.எஸ். பாஸ்கர், ஷாமி திலகன், சம்யுக்தா ஹெக்டே உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சத்ய ஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.</p><h2>இருமுகன் கதை</h2><p>உளவுத்துறை அதிகாரிகளான விக்ரமும், நயன்தாராவும் சேர்ந்து லவ் என்ற மிகப்பெரிய போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவனை கொல்வதற்காக பெரிய திட்டம் தீட்டுகிறார்கள். லவ் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து, மாறுவேடத்தில் அங்கு சென்று குண்டு வைத்து அவனைக் கொல்கின்றனர்.</p><p>இதன்பின்னர் காதலர்களாக இருந்த விக்ரமும், நயன்தாராவும் திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணம் முடிந்த பின் மலைப்பகுதியில் இருவரும் நின்று கொண்டிருக்கும்போது, யாரே ஒருவர் நயன்தாராவை சுட்டு வீழ்த்துகிறார். குண்டடிபட்ட நயன்தாரா மலையில் இருந்து கீழே விழுகிறார்.</p><p>அதன்பின் விக்ரம் உளவுத்துறையில் இருந்து ஓய்வு பெற்று 4 வருடங்கள் கழிந்த நிலையில், மலேசியாவில் இந்திய தூதரகம் மர்ம நபர்களால் தாக்கப்படுகிறது. அந்த தாக்குலை நடத்தியது லவ் என்பது இந்திய உளவு அமைப்புக்கு தெரிய வருகிறது. லவ்வை இதுவரை யாரும் பார்த்தது கிடையாது. நயன்தாராவும், விக்ரமும் மட்டும்தான் பார்த்திருக்கிறார்கள். எனவே, லவ்வை பிடிக்க மறுபடியும் உளவுத்துறைக்கு அழைக்கப்படுகிறார் விக்ரம். முதலில் இதற்கு மறுக்கும் விக்ரம் பிறகு சில நிபந்தனைகளுடன் அந்த பொறுப்பை ஏற்கிறார்.</p><p>உளவுத்துறை அதிகாரியான நித்யாமேனனுக்கு உதவியாளராக செல்லும் விக்ரம் லவ்வை கண்டுபிடித்து எப்படி வீழ்த்தினார்? விக்ரமின் முதல் தாக்குதலில் லவ் உயிர்தப்பியது எப்படி? அவன் எதற்காக இந்திய தூதரகத்தை தாக்கினான்? என்பதே மீதிக்கதை.</p>]]></content:encoded></item><item><title>தாய்லாந்தில் குறைந்த விலை டூர் பேக்கேஜ் - ஆசை காட்டி 3 இந்தியர்கள் கடத்தல்!</title><link>https://www.maalaimalar.com/news/world/powerful-7-1-magnitude-earthquake-strikes-japan</link><comments>https://www.maalaimalar.com/news/world/powerful-7-1-magnitude-earthquake-strikes-japan#comments</comments><guid isPermaLink="false">359b3c97-8ffb-4c59-928c-ae386437674c</guid><pubDate>Wed, 29 Jul 2026 13:14:54 +0000</pubDate><atom:updated>2026-07-29T13:14:54.518Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>japan,சுனாமிஎச்சரிக்கை,NaturalDisaster,JapanEarthquake,ஜப்பான்நிலநடுக்கம்,TsunamiAlert,KyushuJapan</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/q5pa8r17/ThailandKidnapping" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ThailandKidnapping ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/q5pa8r17/ThailandKidnapping?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தாய்லாந்திற்குச் சுற்றுலா சென்ற மூன்று இந்திய இளைஞர்களைக் கடத்தி, ஒரு வாரத்திற்கும் மேலாக அறையில் பூட்டி வைத்து, கொடூரமான முறையில் சித்திரவதை செய்த சர்வதேசக் கடத்தல் கும்பலிடமிருந்து <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">தாய்லாந்து</a> போலீசார் அவர்களைப் பத்திரமாக மீட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 5 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>டூர் பேக்கேஜ் ஆசை காட்டி வலைவீச்சு</h2><p>பாதிக்கப்பட்ட 23 முதல் 26 வயதிற்குட்பட்ட 3 இந்திய இளைஞர்களுக்கு 7 நாட்கள் தங்கிப் பார்க்கும் மலிவான சுற்றுலா பேக்கேஜ் என ஆசை காட்டி ஒரு கும்பல் தாய்லாந்திற்கு வரவழைத்தனர். இதற்காக அந்த இளைஞர்கள் சுமார் 2 லட்சம் செலுத்தியுள்ளனர்.</p><p>ஜூலை 21 அன்று பாங்காங்கின் சுவர்ணபூமி விமான நிலையத்திற்கு வந்திறங்கிய அவர்கள், அங்கிருந்து டாக்ஸி மூலம் பட்டாயாவில் உள்ள சுகும்வித் நெடுஞ்சாலையில் இருக்கும் ஒரு துரித உணவகத்திற்கு வந்துள்ளனர். </p><p>அங்கிருந்த இந்தியர் ஒருவர், அவர்களைத் தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, பட்டயாவின் பாங் லாமுங் பகுதியில் உள்ள ஒரு சிறிய வாடகை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர்களை 4 பாகிஸ்தானியர்களும் மற்றொரு இந்தியரும் சேர்ந்து மடக்கி சிறைபிடித்துள்ளனர்.</p><h2>கொடூர சித்திரவதை</h2><p>கடந்த திங்கட்கிழமை அன்று பட்டாயா போலீசார் அந்த வாடகை வீட்டை அதிரடியாகச் சோதனை செய்தபோது, இரண்டு படுக்கையறைகளில் கைகள், கால்கள் மற்றும் வாய்கள் கட்டப்பட்ட நிலையில் 3 இளைஞர்கள் அடைக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்தனர். </p><p>கடந்த ஒரு வார காலமாக அவர்கள் தினமும் கொடூரமான சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இளைஞர்களைத் தலைகீழாகத் தொங்கவிட்டு, கணுக்கால்களில் கடினமான பொருட்களால் அடித்துள்ளனர். </p><p>அவர்களின் கால்களில் கடுமையான காயம் மற்றும் வீக்கங்கள் இருந்ததை போலீசார் உறுதி செய்துள்ளனர். அவர்களுக்கு உணவோ, தண்ணீரோ அல்லது கழிவறை பயன்படுத்தும் அனுமதியோ வழங்கப்படவில்லை. </p><p>கடத்தல்காரர்கள் ஒரு இளைஞரின் உடல் முழுவதும் சிவப்பு பெயிண்ட்டை ஊற்றி, கடுமையான ரத்தக் காயம் ஏற்பட்டுள்ளது போல வீடியோ கால் மூலம் இந்தியாவில் உள்ள அவர்களது குடும்பத்தினருக்குக் காட்டி மிரட்டியுள்ளனர். </p><p>இதன் மூலம் ஒட்டுமொத்தமாக சுமார் ரூ.70 லட்சம் பணத்தொகை கேட்டுள்ளனர்.</p><h2>துபாயில் இருந்து இயங்கிய சர்வதேச நெட்வொர்க்</h2><p>பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இந்தியாவில் இருந்து தாய்லாந்து போலீசாரை உதவிக்கு அழைத்ததைத் தொடர்ந்து இந்த மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது. </p><p>கடத்தல்காரர்கள் தங்களின் இருப்பிடத்தை மறைப்பதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தின் மொபைல் எண்ணைப் பயன்படுத்தியுள்ளனர். </p><p>இருப்பினும், தாய்லாந்து குடியேற்றத் துறை போலீசார் துல்லியமாகச் செயல்பட்டு அவர்களது இருப்பிடத்தைக் கண்டுபிடித்தனர். </p><p>போலீசார் வீட்டிற்குள் நுழைவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு, கடத்தல்காரர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டனர். எனினும், நேற்று பாங்காக்கின் க்ளோங் டான் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து, தாய்லாந்தை விட்டு விமானம் மூலம் தப்ப முயன்ற அவதார் சிங், ஜக்ஜித் சிங், ராம்பாலக் குமார், சுக்பிர் சிங் மற்றும் குல்ரா சிங் என்ற 5 இந்தியர்களைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.</p><h2>பணம் பறிக்கத் திட்டம்</h2><p>கைது செய்யப்பட்ட இந்தியர்களிடம் நடத்திய விசாரணையில், ஒரு மாதத்திற்கு முன்பு சாட்டிங் ஆப் மூலம் அறிமுகமான ஒரு பாகிஸ்தான் நபர் கொடுத்த கட்டளையின் பெயரிலேயே தாங்கள் இவர்களைத் கடத்தியதாக ஒப்புக் கொண்டுள்ளனர். </p><p>இந்த சம்பவத்தின் கடத்தல்காரர் துபாயில் இருந்து கொண்டு, கிரிப்டோகரன்சி மூலம் பணத்தொகையைப் பெறத் திட்டமிட்டுள்ளார். </p><p>இந்த கடத்தலுக்கு ஈட்டுத்தொகையாக இந்தியர்களுக்குப் பணம், நகைகள் மற்றும் தாய்லாந்தில் இருந்து தப்பிப்பதற்கான விமான டிக்கெட்டுகள் தருவதாக அந்த பாகிஸ்தான் நபர் உறுதியளித்துள்ளார்.</p><h2>போலீசாரின் எச்சரிக்கை</h2><p>இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்குத் தாய்லாந்து அரசு விசா இல்லாத நுழைவு அனுமதியை சமீபத்தில் மீண்டும் வழங்கிய சில நாட்களிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது. </p><p>இது போன்ற சர்வதேசக் குற்றக் கும்பல்கள் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைப் பிடிக்க 'மலிவான டூர் பேக்கேஜ்' என்ற புதிய உத்தியைக் கையாளுவதால், சுற்றுலாப் பயணிகள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. </p><p>மேலும் தப்பியோடிய பாகிஸ்தான் குற்றவாளிகளைப் பிடிக்க போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>