<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 17 Sep 2026 04:16:38 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 17 செப். 2026...
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-17-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-17-september-2026#comments</comments><guid isPermaLink="false">188cc8f4-2e10-453b-a877-d080750f3dbf</guid><pubDate>Thu, 17 Sep 2026 03:55:51 +0000</pubDate><atom:updated>2026-09-17T03:55:51.305Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/wgeqodsr/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live News]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/wgeqodsr/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thanthai-periyar-birthday-mk-stalin-says-revolutionary-salutations-to-sun-of-rationalism-thanthai-periyar">பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருக்குப் புரட்சி வணக்கம்! - மு.க.ஸ்டாலின்</a></p><p>* ஒரு தலைமுறை பெரியார் நிகழ்த்திய புரட்சியைக் கண்டது.</p><p>* “ஏன்? எதற்கு? எப்படி?” என்ற கேள்விகள் உயிரோடு இருக்கும் வரை, இருள் நம்மை அண்டாது.</p> ]]></content:encoded></item><item><title>பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-birthday-wishes-to-pm-modi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-birthday-wishes-to-pm-modi#comments</comments><guid isPermaLink="false">8d09d422-0fe9-41e3-892d-60af232f7892</guid><pubDate>Thu, 17 Sep 2026 04:15:54 +0000</pubDate><atom:updated>2026-09-17T04:15:54.319Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,தவெக,விஜய்,vijay,pm modi,tvk,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/ld1qpol9/vijay1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay - PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/ld1qpol9/vijay1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.</p><p>இந்தியப் <a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-birthday-bjp-seva-sankalp-abhiyan-launch-president-murmu-greetings">பிரதமர் நரேந்திர மோடி</a> இன்று தனது 76-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, துணைக்குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜே.பி.நட்டா, மற்றும் பல மாநில முதல் மந்திரிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.</p> <p>இந்நிலையில் பிரதமர் மோடிக்கு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-honour-to-periyar">முதலமைச்சர் விஜய்</a> பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,</p><p>வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p> <p>தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் நீடுழி வாழ உளமார வாழ்த்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>VIDEO- பெரியார் பிறந்தநாள்: &apos;Fashion Statement-இல் மட்டும்தான் பெரியார் இருக்காரா?&apos;- டிரெண்டாகும் கனிமொழி எம்பியின் வீடியோ!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-mp-video-periyar-fashion-statement-trend</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-mp-video-periyar-fashion-statement-trend#comments</comments><guid isPermaLink="false">c3b9a2d9-8b32-4198-8864-e590be0efa60</guid><pubDate>Thu, 17 Sep 2026 04:13:16 +0000</pubDate><atom:updated>2026-09-17T04:13:16.793Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>கனிமொழி எம்பி,MP Kanimozhi,பெரியார்,பெரியார் பிறந்தநாள்,Periyars Birthday,fashion statements</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/er2bdftq/kani.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Periyars Birthday ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/er2bdftq/kani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வெறும் தோற்றத்திலும், ஆடை வடிவமைப்பு ஸ்டைல்களிலும் மட்டுமே பெரியாரை வெளிப்படுத்துவது போதாது.</p><p>தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு (செப்டம்பர் 17), திமுக நாடாளுமன்ற குழுத் தலைவரும் எம்பியுமான கனிமொழி கருணாநிதி வெளியிட்டுள்ள சிறப்புச் செய்தி மற்றும் வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.</p><p>தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள கனிமொழி எம்பி, தற்காலத்தில் பெரியாரின் உருவம் மற்றும் அடையாளங்கள் ஆடை வடிவமைப்புகள் மற்றும் ஃபேஷன் கலாச்சாரத்தில் மட்டுமே சுருக்கப்பட்டு வருகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">பெரியாரைப் படிப்போம்; அவர் விதைத்த சிந்தனைகளை உலகெங்கும் விதைப்போம்; நாளைய உலகை பகுத்தறிவும் சமத்துவமும் நிறைந்த உலகாகப் படைப்போம்!<a href="https://x.com/hashtag/SocialJusticeDay?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#SocialJusticeDay</a> <a href="https://x.com/hashtag/PeriyarForever?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#PeriyarForever</a> <a href="https://t.co/xe6vKHsCxl">pic.twitter.com/xe6vKHsCxl</a></p>&mdash; Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) <a href="https://x.com/KanimozhiDMK/status/2100400617344942407?ref_src=twsrc%5Etfw">September 17, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><p>வெறும் தோற்றத்திலும், ஆடை வடிவமைப்பு ஸ்டைல்களிலும் மட்டுமே பெரியாரை வெளிப்படுத்துவது போதாது; அவரது ஆழமான கொள்கைகளையும் சிந்தனைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை அவர் இதில் வலியுறுத்தியுள்ளார்.</p><h2>சிந்தனை<strong>களை உ</strong>லகெங்கும் விதைப்போம்</h2><p>பெரியாரின் கோட்பாடுகளைப் பற்றி குறிப்பிட்ட அவர், "<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-honour-to-periyar">பெரியாரை படிப்போம்</a>; அவர் விதைத்த முற்போக்குச் சிந்தனைகளை உலகெங்கும் விதைப்போம்! நாளைய உலகை வெறும் சடங்குகளால் அல்லாமல், பகுத்தறிவும் சமூகச் சமத்துவமும் நிறைந்த ஆரோக்கியமான உலகாகப் படைப்போம்" என்று அழைப்பு விடுத்துள்ளார்.</p><h2>பகுத்தறிவு<strong>ப் பாதை</strong></h2><p>சாதியக் கட்டமைப்பு, பெண் அடிமைத்தனம் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகத் தந்தை பெரியார் மேற்கொண்ட போராட்டங்களை நினைவு கூர்ந்த கனிமொழி எம்பி, இன்றைய இளைய தலைமுறை பெரியாரின் புத்தகங்களையும் எண்ணங்களையும் ஆழமாகக் கற்றுத் தேர வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார். சமத்துவ சமுதாயத்தைக் கட்டமைக்க பெரியாரிய சிந்தனைகளே அடித்தளம் என்பதை இந்த வீடியோ பதிவு மூலம் அவர் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜயின் இங்கிலாந்து பயணம் வெற்றிப் பயணமாக அமைந்துள்ளது- தமிழ்நாடு அரசு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijays-visit-to-england-has-proven-to-be-a-successful-one</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijays-visit-to-england-has-proven-to-be-a-successful-one#comments</comments><guid isPermaLink="false">d32de2bb-74ea-486c-9f66-3eb64c2519b2</guid><pubDate>Thu, 17 Sep 2026 04:03:38 +0000</pubDate><atom:updated>2026-09-17T04:03:38.412Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,TN Govt,தமிழக அரசு,லண்டன் பயணம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/rzg1nd4o/vijay0.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/rzg1nd4o/vijay0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்நாட்டை உலக முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்குரிய தொழில் முதலீட்டு மையமாக நிலைநிறுத்தும் நமது வெற்றிப் பயணம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</strong></em> </p><p>தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்</a> அவர்களின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர், தமிழ்நாட்டில் நேர்மையான, வெளிப்படைத்தன்மையுடன் கூடிய நிர்வாகம், அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையிலான நலத்திட்டங்கள் என மக்கள் போற்றும் சிறப்பான ஆட்சியை வழங்கி வருவதுடன், 2036-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை 1.5டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையோடு திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி வருகிறது.</p><p>அதன்படி, தமிழ்நாட்டை முதலீட்டுக்கு உகந்த முதன்மை மையமாக உருவாக்கிடும் வகையில், எண்ணற்ற தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு வருகின்றன. வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026-ன் வாயிலாக 67,452 கோடி ரூபாய் முதலீடுகள் மற்றும் 1,06,998 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதோடு, இந்த அரசு பொறுப்பேற்ற 100 நாட்களில் ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.</p><p>இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டிற்கு மேலும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகக் கடந்த 10.9.2026 அன்று இங்கிலாந்து நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டார். </p><h2><strong>இங்கிலாந்து நாட்டிற்கான இந்தியத் தூதர் சந்திப்பு</strong></h2><p>இலண்டனில் 12.9.2026 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை இங்கிலாந்து நாட்டிற்கான இந்தியத் தூதர் குமரன் பெரியசாமி, I.F.S. அவர்கள் சந்தித்து, இந்தியா–பிரிட்டன் விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின் (CETA) பின்னணியில், தமிழ்நாடு மற்றும் பிரிட்டனுக்கு இடையே உருவாகக்கூடிய வாய்ப்புகள் மற்றும் கூட்டாண்மைகள் குறித்துக் கலந்துரையாடினர்.</p><h2><strong>சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டைப் பார்வையிட்டு, 2026 மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தைத் தொடங்கி வைத்தல்</strong></h2><p>தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த 3.9.2026 அன்று விதி எண் 110-ன் கீழ், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், “உலகத்தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் (Motor Sports City) தமிழ்நாட்டில் அமைக்கப்படும்” என்று அறிவித்தார். அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டிற்கு நேரில் சென்று, அங்குள்ள Race Control மற்றும் Race circuit பகுதிகளைப் பார்வையிட்டார். மேலும், சர்வதேச அளவிலான நீண்டதூர கார் பந்தயத்தை நடத்துவதற்குத் தேவையான நவீன தொழில்நுட்பங்கள், செயல்பாட்டு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் குறித்துக் கேட்டறிந்ததோடு, சில்வர்ஸ்டோன் ரேஸ் மியூசியத்தையும் பார்வையிட்டார்.</p><p>அதனைத் தொடர்ந்து, சில்வர்ஸ்டோன் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத் திடலில், முன்னணி நடிகரும், மோட்டார் கார் பந்தய வீரருமான அஜித் குமார் அவர்கள் கலந்துகொண்ட 2026 மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.</p><h2><strong>தொழில் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்</strong></h2><p>தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில், இலண்டனில் 14.09.2026 அன்று, வாகன உதிரிபாக உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் மின்கட்டமைப்பு உபகரணங்கள் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் (Global Capability Centres) ஆகியவற்றை உள்ளடக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், புதிய தொழில் முதலீட்டிற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட நோக்கக் கடிதம் என மொத்தம் 15,300 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து, 10,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.</p><p>❖ சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் (Samvardhana Motherson International Ltd.,) நிறுவனம், அதன் ஐரோப்பா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் சுமார் 11,000 கோடி ரூபாய் முதலீட்டில், வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி,  ஒருங்கிணைப்பு மற்றும் தளவாடங்கள் சார்ந்த வசதிகளை நிறுவுவதன் மூலம் சுமார் 7,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.</p><p>❖ தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை (Global Capability Centres-GCCs) விரிவுபடுத்துவதற்கும், நிறுவுவதற்கும் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.</p><p>ஸ்வீடனைச் சேர்ந்த சிக்மா டெக்னாலஜி குழுமம், தமிழ்நாட்டில் எம்பெடட் சிஸ்டம்ஸ், மின்மயமாக்கல் மற்றும் தொழில்துறை டிஜிட்டல்மயமாக்கல் ஆகிய துறைகளில் 600 உயர் மதிப்பு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், திருச்சிராப்பள்ளி மற்றும் சென்னையில் உள்ள தனது உலகளாவிய திறன் மையங்களை, தனது இந்திய நிறுவனமான ஸ்ரியா சொல்யூஷன்ஸ் மூலம் விரிவாக்குவதற்கு உறுதியளித்து, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.</p><p>ஏர்ன்ஸ்ட் &amp; யங் நிறுவனம் (Ernst &amp;amp; Young) ஒரு சர்வதேச நிறுவனத்திற்காக, தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையத்தை (Global Capability Centre) அமைக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. ‘கட்டு – இயக்கு – மாற்றியமை - மாற்று’ (Build-Operate-Transform-Transfer -BOTT) ஏற்பாட்டின் கீழ், இந்த மையத்தை நிறுவுவதற்கும், அதன் ஆரம்பகட்ட செயல்பாடுகளுக்கும் ஏர்ன்ஸ்ட் &amp; யங் (Ernst &amp; Young) நிறுவனம் ஆதரவளிக்கும். பின்னர், அம்மையம் அச்சர்வதேச நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். இந்த உலகளாவிய திறன் மையம் (GCC) சுமார் 1,000 கோடி ரூபாய் முதலீட்டுடன், 2,000-க்கும் மேற்பட்ட உயர் மதிப்புள்ள புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்மையம், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சென்னையில் உள்ள மவுண்ட்- பூந்தமல்லி சாலைப் பகுதியிலுள்ள GCC வழித்தடத்தில் அமையும்.</p><p>❖ திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.300 கோடி முதலீட்டில் 400 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் பிரிட்டனைத் தலைமையிடமாகக் கொண்ட திறன்மிக்க மின்மாற்றிகளை தயாரிக்கும் ‘வில்சன் பவர் சொல்யூஷன்ஸ்’ (Wilson Power Solutions) நிறுவனம், தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.</p><p>❖ ஐரோப்பாவின் முன்னணி வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம் ஒன்று, இந்தியாவில் தான் மேற்கொள்ளவிருக்கும் ரூ.3,000 கோடி முதலீட்டிற்கு தமிழ்நாட்டையே விரும்பத்தக்க இடமாகக் கருதுவதாகத் தனது விருப்பத்தைத் தெரிவித்து, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அவர்களிடம் தனது விருப்பக் கடிதத்தைச் சமர்ப்பித்தது.</p><h2><strong>ஹிந்துஜா குழுமத்தின் தலைமை நிர்வாகிகள் சந்திப்பு</strong></h2><p>அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் தீரஜ் ஹிந்துஜா, ஃபினோலெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Finolex Industries Limited) நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் பிரகாஷ் பி. சாப்ரியா, இயக்குநர் ரீட்டா ஹிந்துஜா சாப்ரியா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைச் சந்தித்து, ஆகஸ்ட் 2026-ல் நடைபெற்ற ‘வெற்றி’ (VETTRI) தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது மேற்கொள்ளப்பட்ட 2,500 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள், தமிழ்நாட்டில் ஹிந்துஜா குழும முதலீடுகளின் முன்னேற்றம் குறித்து விளக்கினர்.</p><p>தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில், குறிப்பாக, காற்றாலை மின்சக்தித் துறையில் முதலீடுகளை மேலும் அதிகரிப்பதில் இக்குழுவினர் விருப்பம் தெரிவித்ததோடு, தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் வணிக வாகனங்களின் ஏற்றுமதியை அதிகரிப்பது குறித்தும், வாகன உற்பத்தித்துறைக்கான ஏற்றுமதி மையமாகத் தமிழ்நாட்டின் பங்கை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கலந்தாலோசித்தனர்.</p><h2><strong>முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுடன் சந்திப்பு</strong></h2><p>தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சந்திப்புகளுடன், விண்வெளி மற்றும் பாதுகாப்பு, இரசாயனங்கள், தளவாடங்கள், கட்டுமானம், நிதிச் சேவைகள், சில்லறை வர்த்தகம் மற்றும் சட்ட சேவைகள் ஆகிய துறைகளைச் சேர்ந்த 10 முன்னணி நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்களுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் நடத்தினர்.</p><p>பிரிட்டன் வர்த்தக நிறுவனங்களுக்கும், தமிழ்நாட்டின் ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தியாளர்களுக்கும் இடையேயான மூலப்பொருட்கள் கொள்முதல் ஒப்பந்தங்கள், ஓசூருக்கு இங்கிலாந்து விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை பிரதிநிதிகள் குழு வருகை புரிவதற்கான வாய்ப்பு, அக்டோபர் மாதம் சென்னைக்கு இங்கிலாந்து மேயர் ஆணையத்தின் (NEMSA) பிரதிநிதிகள் குழு வருகை, நிதிச் சேவைத் துறைக்கான திறன் மேம்பாட்டுக் கூட்டாண்மைகள், இந்த ஆண்டின் பிற்பகுதியில் பிரிட்டனுடன் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதிப் பயிலரங்கம், பிரிட்டன் - இந்தியா விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு உருவாகும் வாய்ப்புகளை அடையாளம் காட்டும் அறிக்கை தயாரித்தல் போன்றவை குறித்து விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.</p><p>தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டை நோக்கி வரும் மேற்கண்ட தொழில் முதலீடுகளை சாத்தியமாக்கவும், தமிழ்நாட்டில் அதன் செயல்பாடுகளை வெற்றிகரமாக நிறுவவும் தேவையான அனைத்து உதவிகளையும், நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.</p><p>தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இலண்டன் சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட் மற்றும் தான் தங்கியிருந்த ஹோட்டலில் சிறப்பான வரவேற்பு வழங்கிய தமிழ்ச் சொந்தங்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். மேலும், அங்கு தமிழ்ச் சொந்தங்களைச் சந்திக்க இருந்தபோது இலண்டன் காவல் துறையினரால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சந்திக்க இயலாமல் போனதற்காகத் தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டதோடு, பேராதரவு வழங்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.</p><p>தமிழ்நாட்டிற்குத் தொழில் முதலீடுகளை ஈர்த்திட மேற்கொண்ட இப்பயணத்தில் இலண்டனில் அனைத்து ஏற்பாடுகளையும் ஒருங்கிணைந்து மேற்கொள்வதற்குப் பேருதவியாக இருந்த இங்கிலாந்து நாட்டிற்கான இந்தியத் தூதர் அவர்களுக்கும், தூதரக உயர் அலுவலர்களுக்கும், தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்வதற்குப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்ட மற்றும் விருப்பக் கடிதம் வழங்கிய தொழில் நிறுவனங்கள், அதன் கூட்டு நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கும், உயர் அலுவலர்களுக்கும், தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைப்பதற்கு ஏதுவாக சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டின் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து எடுத்துக்கூறிய முன்னணி நடிகரும், மோட்டார் கார் பந்தய வீரருமான அஜித் குமார் அவர்களுக்கும் சிறப்பு நன்றியைத் தெரிவித்துக் கொண்டதோடு, சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட் மற்றும் மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை நிர்வாகிகள் மற்றும் அலுவலர்களுக்கும் இங்கிலாந்து பயணத்தின்போது நல்லாதரவு அளித்த அந்நாட்டில் வாழும் தமிழ்ச் சொந்தங்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.</p><p>தமிழ்நாட்டின் திறன்மிக்க மனிதவளம், வலுவான தொழில்துறை அடித்தளம், சிறந்த உட்கட்டமைப்பு வசதிகள், தொழில் தொடங்குவதற்கான அமைதியான சூழல் மற்றும் எளிய நடைமுறைகள் ஆகியவற்றை உலகிற்கு எடுத்துரைத்து, புதிய முதலீடுகளுக்கான வாய்ப்புகளை உருவாக்கியுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் இங்கிலாந்து வெற்றிப் பயணம் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும், முதலீட்டு ஈர்ப்புக்கும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் மேலும் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது.</p><p>தமிழ்நாட்டை உலக முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்குரிய தொழில் முதலீட்டு மையமாக நிலைநிறுத்தும் நமது வெற்றிப் பயணம் தொடரும்.</p><p>இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>6,000mAh பேட்டரியுடன் அறிமுகமான சாம்சங் ஸ்மர்ட்போன்</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/samsung-galaxy-a08-launched-with-6000mah-battery</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/samsung-galaxy-a08-launched-with-6000mah-battery#comments</comments><guid isPermaLink="false">90ac2c9d-98fa-4b60-8c1f-28c09a3d269d</guid><pubDate>Thu, 17 Sep 2026 03:43:00 +0000</pubDate><atom:updated>2026-09-17T03:43:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Samsung,சாம்சங்,smartphone,ஸ்மார்ட்போன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/yw7iureg/Samsung-Galaxy-A08.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Samsung Galaxy A08]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/yw7iureg/Samsung-Galaxy-A08.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான <a href="https://www.maalaimalar.com/topic/samsung">சாம்சங்</a> தனது புதிய என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன், சாம்சங் கேலக்ஸி A08 மாடலை தேர்ந்தெடுக்கப்பட்ட உலக சந்தைகளில் அறிமுகம் செய்துள்ளது. </p><p>இந்த புதிய ஸ்மார்ட்போன் தற்போது நிறுவனத்தின் இணையதளம் வழியாக விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் இந்த <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மார்ட்போன்</a> ஒற்றை ரேம் மற்றும் மெமரி ஆப்ஷனில் வழங்கப்படுகிறது.</p><p>இந்த ஸ்மார்ட்போன் மூன்று தனித்துவமான வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி A08 மாடல் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 50MP பிரைமரி கேமராவுடன் டூயல் லென்ஸ் செட்டப் உள்ளது. இது 6,000mAh பேட்டரியுடன் வருகிறது.</p><h2>சாம்சங் கேலக்ஸி A08 சிறப்பு அம்சங்கள்:</h2><p>சாம்சங் கேலக்ஸி A08 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ஒன் யுஐ 8 ஓ.எஸ். உடன் வருகிறது. டூயல் சிம் ஸ்லாட் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனிற்கு 2032 வரை அப்டேட்கள் வழங்குவதாக சாம்சங் நிறுவனம் உறுதியளிக்கிறது. புதிய கேலக்ஸி A08 ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் HD+ 720x1,600 பிக்சல் PLS LCD டச் ஸ்கிரீன் கொண்டுள்ளது.</p><p>சாம்சங் கேலக்ஸி A08 மாடலில் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ G99 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 6nm செயல்முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போனில் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி ஆப்ஷனில் கிடைக்கிறது. இத்துடன் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 2 டிபி வரை விரிவாக்க முடியும்.</p><p>கேமராக்களைப் பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி A08 இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 50MP பிரைமரி கேமரா, 2MP சென்சார், 8MP செல்ஃபி கேமரா உள்ளது.</p><p>சாம்சங் கேலக்ஸி A08, 6,000mAh பேட்டரி கொண்டுள்ளது. கனெக்டிவிட்டிக்கு இந்த மாடலில் 4ஜி எலடிஇLTE, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.3, யுஎஸ்பி டைப்-சி போர்ட், GPS, BeiDou, Galileo மற்றும் OZSS ஆகியவற்றை ஆதரிக்கிறது. இதில் உள்ள சென்சார்களின் பட்டியலில், பாதுகாப்பிற்கான கைரேகை ஸ்கேனர், ஆம்பியன்ட் லைட் சென்சார் மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார் ஆகியவை அடங்கும்.</p><h2>சாம்சங் கேலக்ஸி A08 விலை விவரங்கள்:</h2><p>4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒற்றை வேரியண்ட் சாம்சங் கேலக்ஸி A08 ஸ்மார்ட்போன் UAH 10,699 (இந்திய மதிப்பில் ரூ. 23,000) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் தற்போது சாம்சங் உக்ரைன் ஆன்லைன் ஸ்டோரில் விற்பனைக்கு கிடைக்கிறது.</p><p>புதிய சாம்சங் கேலக்ஸி A08 ஸ்மார்ட்போன் டார்க் புளூ, கிரீன் மற்றும் சில்வர் என மூன்று வண்ண விருப்பங்களில் வழங்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஜம்மு காஷ்மீர் உதம்பூரில் இரவு முழுவதும் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை</title><link>https://www.maalaimalar.com/news/national/two-terrorists-killed-in-overnight-gunfight-in-udhampur-jammu-and-kashmir</link><comments>https://www.maalaimalar.com/news/national/two-terrorists-killed-in-overnight-gunfight-in-udhampur-jammu-and-kashmir#comments</comments><guid isPermaLink="false">0129d010-da1b-4029-bbcb-2f80de419547</guid><pubDate>Thu, 17 Sep 2026 03:42:49 +0000</pubDate><atom:updated>2026-09-17T03:42:49.906Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>terrorists,ஜம்மு காஷ்மீர்,jammu kashmir,பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை,crpf,Udhampur,உதம்பூர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/xgogpnhi/hg.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ gun battle in Udhampur]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/xgogpnhi/hg.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இன்று அதிகாலை வரை நீடித்த இந்த கடுமையான துப்பாக்கிச்சூட்டின் முடிவில், இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். </p><p>ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நேற்று இரவு நடந்த கடுமையான மோதலில், ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.</p><h2>நள்<strong>ளிரவு மோத</strong>ல்</h2><p>உதம்பூர் மாவட்டத்தின் மஜால்தா எல்லைக்குட்பட்ட சோஹன் மற்றும் அதனை சுற்றியுள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில், இந்திய ராணுவம், <a href="https://www.maalaimalar.com/news/national/pakistan-vessel-collides-with-indian-navy-ship-india-summons-diplomat-and-lodges-protest">ஜம்மு காஷ்மீர் </a>காவல்துறை மற்றும் சி.ஆர்.பி.எஃப் ஆகிய படைகள் இணைந்து அந்தப் பகுதியை முழுமையாக வளைத்து தேடுதல் வேட்டையைத் தொடங்கின.</p><p>வளைத்து பிடிக்க முயன்றபோது, மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். உடனடியாகப் பதில் தாக்குதலில் ஈடுபட்ட வீரர்கள், தீவிரவாதிகளின் தப்பிச் செல்லும் முயற்சியை முறியடித்து நள்ளிரவு முழுவதும் தீவிர எதிர்தாக்குதலைத் தொடர்ந்தனர்.</p><h2>தீவிர தே<strong>டுதல் வே</strong>ட்டை</h2><p>இன்று அதிகாலை வரை நீடித்த இந்த கடுமையான துப்பாக்கிச்சூட்டின் முடிவில், இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். உயிரிழந்த பயங்கரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திலிருந்து பயங்கரவாதிகள் பயன்படுத்திய நவீன ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கொல்லப்பட்டவர்களின் துல்லியமான அடையாளங்களைக் கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.</p><p>மேலும் அப்பகுதியில் வேறு ஏதேனும் பயங்கரவாதிகள் ஒளிந்திருக்கின்றனரா என்பதை உறுதி செய்ய பாதுகாப்புப் படையினர் கூடுதல் வீரர்களை வரவழைத்து, பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தொடர்ந்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>பெரியாரின் கொள்கைத் தடத்தில் பயணிப்போம்- முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-honour-to-periyar</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-honour-to-periyar#comments</comments><guid isPermaLink="false">74da4564-2372-448d-a910-85eb48cc2c4b</guid><pubDate>Thu, 17 Sep 2026 03:37:58 +0000</pubDate><atom:updated>2026-09-17T03:37:58.725Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Periyar birthday,பெரியார் பிறந்தநாள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/n49t6sko/vijay08.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/n49t6sko/vijay08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளில், அவரது புரட்சிகரமான சிந்தனைகளையும், கொள்கைகளையும் பெருமையுடன் நினைவுகூர்ந்து வணங்குவதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/பெரியார்-பிறந்தநாள்">தந்தை பெரியாரின்</a> 147-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தந்தை பெரியாரின் சிலைக்கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர். </p><p>இந்த நிலையில், தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளில், அவரது புரட்சிகரமான சிந்தனைகளையும், கொள்கைகளையும் பெருமையுடன் நினைவுகூர்ந்து வணங்குவதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக முதலமைச்சர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து வெளியிட்டுள்ள பதிவில், </p><h2><strong>நினைவுகூர்ந்து வணங்குகிறேன்</strong></h2><p>சுயமரியாதையும், சமூகநீதியும், பகுத்தறிவும் நிறைந்த முற்போக்குச் சிந்தனைகளை மக்கள் மனங்களில் விதைத்து, சாதி, மத வேறுபாடுகளைக் களைந்திடவும், மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும் தம் வாழ்நாள் முழுவதும் போராடிய தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளில், அவரது புரட்சிகரமான சிந்தனைகளையும், கொள்கைகளையும் பெருமையுடன் நினைவுகூர்ந்து வணங்குகிறேன்.</p><p>தந்தை பெரியாரின் கொள்கைத் தடத்தில் பயணித்து, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற முழக்கத்தின்படி, சம வாய்ப்புகளால் அனைவரும் வளம்பெற்று, சுயமரியாதை மிளிரும் தமிழ்நாட்டை உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்!</p><p>தந்தை பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தலைமுறைதோறும் தழைத்தோங்கட்டும்! </p><p>வெற்றித் தமிழகத்தை உருவாக்கும் பயணத்தில் அவரது கொள்கைகள் நமக்கு வழிகாட்டட்டும்! என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">சுயமரியாதையும், சமூகநீதியும், பகுத்தறிவும் நிறைந்த முற்போக்குச் சிந்தனைகளை மக்கள் மனங்களில் விதைத்து, சாதி, மத வேறுபாடுகளைக் களைந்திடவும்,  மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும் தம் வாழ்நாள் முழுவதும் போராடிய தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளில், அவரது புரட்சிகரமான சிந்தனைகளையும்,… <a href="https://t.co/jsUQk2H0ib">pic.twitter.com/jsUQk2H0ib</a></p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2100421656414126507?ref_src=twsrc%5Etfw">September 17, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருக்குப் புரட்சி வணக்கம்! - மு.க.ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thanthai-periyar-birthday-mk-stalin-says-revolutionary-salutations-to-sun-of-rationalism-thanthai-periyar</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thanthai-periyar-birthday-mk-stalin-says-revolutionary-salutations-to-sun-of-rationalism-thanthai-periyar#comments</comments><guid isPermaLink="false">4b83f53b-2be7-4a13-833b-9c6652fa6835</guid><pubDate>Thu, 17 Sep 2026 03:26:14 +0000</pubDate><atom:updated>2026-09-17T03:26:14.047Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,Periyar birthday,முக ஸ்டாலின்,பெரியார் பிறந்தநாள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/86adn68r/periyar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Periyar - MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/86adn68r/periyar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடர், தலைமுறைகள் கடந்து ஒளிரட்டும்! என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.</p><h2>தந்தை பெரியார் பிறந்தநாள்</h2><p>தந்தை பெரியாரின் பிறந்தநாள் செப்டம்பர் 17-ந்தேதியான இன்று கொண்டாடப்படுகிறது.</p><h2>சமூக நீதி நாள்</h2><p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">பெரியாரின்</a> பிறந்தநாளை தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் 'சமூக நீதி' நாளாக கடைபிடித்து வருகிறது. </p><h2>சுயமரியாதை இயக்கம்</h2><p>சமூகத்தில் நிலவிய மூடநம்பிக்கைகள், சாதி வெறி மற்றும் சமத்துவமின்மையை எதிர்த்து 1925-ம் ஆண்டு 'சுயமரியாதை இயக்கத்தைத்' தொடங்கினார்.  </p> <h2>வைக்கம் வீரர்</h2><p>கேரளாவில் உள்ள வைக்கம் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலை ஒட்டிய வீதிகளில் நடக்க தடை விதிக்கப்பட்டதை எதிர்த்துப் போராடி வெற்றி கண்டதால் 'வைக்கம் வீரர்' எனப் போற்றப்பட்டார்.  </p><h2>பெண்கள் கல்வி உரிமை</h2><p>பெண்களின் கல்வி உரிமை, கைம்பெண் மறுமணம், சொத்துரிமை மற்றும் சுயமரியாதைத் திருமணங்களுக்காக வாழ்நாள் முழுவதும் பெரியார் குரல் கொடுத்தார்.  </p> <h2>மு.க.ஸ்டாலின்</h2><p>தந்தை பெரியாரின் 147-வது பிறந்தநாளையொட்டி திமுக தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-condemned-anbil-mahesh-house-raid">மு.க.ஸ்டாலின்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>தமிழர் தலைமுறை தலைநிமிரப் பாடுபட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருக்குப் புரட்சி வணக்கம்!</p><p>பல தலைமுறைகள் ஆதிக்கத்துக்குப் பணிந்தன.</p><p>ஒரு தலைமுறை பெரியார் நிகழ்த்திய புரட்சியைக் கண்டது.</p> <p>பல தலைமுறைகள் அதன் மாற்றத்தைக் காண்கின்றன.</p><p>ஆனாலும், ஆதிக்கம் இன்னும் முற்றாக அகலவில்லை. அதனை அடையாளம் காண வேண்டியது வரும் தலைமுறைகளின் பொறுப்பும்கூட!</p><p>வெளிச்சமற்ற இடம் இருள்; கேள்விகளற்ற சமூகம் அதைவிடப் பேரிருள்.</p> <p>“ஏன்? எதற்கு? எப்படி?” என்ற கேள்விகள் உயிரோடு இருக்கும் வரை, இருள் நம்மை அண்டாது.</p><p>பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடர், தலைமுறைகள் கடந்து ஒளிரட்டும்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பிரதமர் மோடி பிறந்தநாள்: பாஜகவின் &apos;சேவா சங்கல்ப் அபியான்&apos; தொடக்கம்- குடியரசுத் தலைவர் முர்மு வாழ்த்து!</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-birthday-bjp-seva-sankalp-abhiyan-launch-president-murmu-greetings</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-birthday-bjp-seva-sankalp-abhiyan-launch-president-murmu-greetings#comments</comments><guid isPermaLink="false">6c57fc06-55a8-4ace-8c79-684c483d928c</guid><pubDate>Thu, 17 Sep 2026 03:25:24 +0000</pubDate><atom:updated>2026-09-17T03:25:24.729Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,President Murmu,பிரதமர் மோடி பிறந்தநாள்,குடியரசுத் தலைவர் முர்மு,PM Modi&apos;s Birthday,Seva Sankalp Abhiyan,சேவா சங்கல்ப் அபியான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/hhm5v7da/modi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi's Birthday  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/hhm5v7da/modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரதமர் மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ் இந்தியா உலகளவில் முன்னணி பொருளாதார சக்தியாகத் திகழ்கிறது.</p><p>பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு நாட்டின் உயர் பதவிகளில் உள்ள தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், அவரது 25 ஆண்டுகால பொதுச்சேவையை கொண்டாடும் வகையில் நாடு தழுவிய ஒரு மாத சேவை பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது.</p><h2>தலை<strong>வர்கள் வாழ்</strong>த்து</h2><p>இந்தியப் <a href="https://www.maalaimalar.com/news/national/more-than-88-lakh-lamps-to-be-lit-on-modis-birthday-in-gujarat">பிரதமர் நரேந்திர மோடி</a> இன்று தனது 76-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், குஜராத்தின் முதலமைச்சராகவும் பின்னர் நாட்டின் பிரதமராகவும் கடந்த 25 ஆண்டுகளாகப் பிரதமர் மோடி ஆற்றிவரும் இணையற்ற பொதுச்சேவையையும், தேசக் கட்டுமானப் பணிகளையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார். நல்ஆளுமைக்கு அவர் பல புதிய இலக்கணங்களை உருவாக்கியுள்ளதோடு, நாட்டின் பாரம்பரியத்தையும் நவீன வளர்ச்சியையும் சமநிலையில் கொண்டு செல்லும் அவருக்கு நல்ல ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் கிடைக்க இறைவனை பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.</p><p>அதேபோல், துணைக் குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள வாழ்த்தில், பிரதமர் மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ் இந்தியா உலகளவில் முன்னணி பொருளாதார சக்தியாகத் திகழ்கிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார். கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திய டிஜிட்டல் புரட்சி, உள்கட்டமைப்பு மற்றும் விண்வெளித் துறையில் இந்தியா அடைந்துள்ள அபார வளர்ச்சியை அவர் பட்டியலிட்டுப் பாராட்டியுள்ளார்.</p><h2>'சேவா சங்கல்<strong>ப் அபியான்' பி</strong>ரசாரம்</h2><p>பிரதமரின் பிறந்தநாளான செப்டம்பர் 17 முதல் அவர் முதன்முதலில் குஜராத் முதலமைச்சராக பொறுப்பேற்ற அக்டோபர் 7-ஐத் தாண்டி, அக்டோபர் 17 வரை ஒரு மாத காலத்திற்கு 'சேவா சங்கல்ப் அபியான்' (சேவை உறுதிமொழிப் பிரசாரம்) என்ற சிறப்பு இயக்கத்தை பாரதிய ஜனதா கட்சி தொடங்கியுள்ளது. இதில், நாடு முழுவதும் இலவச மருத்துவ முகாம்கள், ரத்ததான முகாம்கள் மற்றும் தூய்மைப் பணிகள் நடத்தப்படும். இன்று மாலை பொதுமக்கள் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற்ற பயனாளிகள் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவிக்கும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. </p><p>ஏழை எளிய மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் நேரடியாக சென்றடைவதை உறுதி செய்ய 'சேவை சேது' முகாம்களும், இளைஞர்களை ஒருங்கிணைக்கும் 'சேவை யாத்திரைகளும்' நடத்தப்படவுள்ளன. மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜே.பி.நட்டா மற்றும் பல மாநில முதலமைச்சர்கள் இந்த சேவை இயக்கத்தை நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடங்கி வைத்துள்ளனர். மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள் மற்றும் பல முக்கியத் தலைவர்களும் பிரதமருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>லண்டன் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-returned-to-chennai-after-concluding-his-london-tour</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-returned-to-chennai-after-concluding-his-london-tour#comments</comments><guid isPermaLink="false">e3305903-288e-4fc6-a93b-723912f74164</guid><pubDate>Thu, 17 Sep 2026 03:21:07 +0000</pubDate><atom:updated>2026-09-17T03:21:07.372Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,TN Govt,தமிழக அரசு,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/su1vxde8/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த முதலமைச்சர் விஜய்யின் கார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/su1vxde8/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதலமைச்சர் விஜய், தனது அரசு முறை சுற்றுப்பயணத்தை முடித்து லண்டனில் இருந்து சென்னை புறப்பட்டார். அவர் இன்று காலை 8.30 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். சென்னை வந்த முதலமைச்சர் விஜய்க்கு த.வெ.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.</strong></em> </p><h2><strong>லண்டன் பயணம்</strong></h2><p>முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்</a>, அரசு முறை பயணமாக கடந்த 10-ந்தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு லண்டன் சென்றார். அங்கு அவருக்கு தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.</p><p>அதனைத்தொடர்ந்து 12-ந்தேதி முதலமைச்சர் விஜய், தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைப்பதற்காக புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயத் திடலுக்கு உலகப் புகழ் பெற்ற சில்வர் ஸ்டோன் பந்தயக் களத்தில் உள்ள உள்கட்டமைப்பு, பந்தயச் சுற்றுப்பாதை, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போட்டிகளை வணிக ரீதியாக நடத்தும் முறைகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டார். பின்னர் அங்கு நடிகர் அஜித் பங்கேற்ற கார் ரேசையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.</p><h2><strong>தொழில் முதலீடு</strong></h2><p>அதன் தொடர்ச்சியாக 2 நாட்கள் முதலமைச்சர் விஜய், பல்வேறு தொழில் அதிபர்களை சந்தித்து தமிழ்நாட்டுக்கு பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்த்தார். சுமார் ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன் மூலம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தமிழக அரசு அறிவித்தது.</p><h2><strong>நிகழ்ச்சி ரத்து</strong></h2><p>லண்டன் பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று முதலமைச்சர் விஜய் தான் தங்கியுள்ள ஓட்டலின் கீழே லண்டன் வாழ் தமிழர்களை சந்தித்து பேசுவதாக தகவல் பரவியது. ஆனால் அங்குள்ள போலீசார் தரப்பில் இது போன்ற எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி தரவில்லை என்று தெரிகிறது. இருந்தாலும் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். இதனால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. ஒரு கட்டத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அங்கிருந்தவர்கள் 'த.வெ.க. வளர்க விஜய் வாழ்க' என்று கோஷமிட்டனர். கூட்டமும் சாலையின் இருபுறமும் ஆண்கள், பெண்கள் மட்டுமின்றி குழந்தைகளும் திரண்டு இருந்தனர். </p><p>எனவே முதலமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி தர்மராஜ் மைக் மூலம் பேசினார். அப்போது அவர், 'பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதால், அனைவரும் கலைந்து செல்ல வேண்டும்' என்றார். இதனையடுத்து கலைந்து சென்றனர்.</p><h2><strong>வரவேற்பு</strong></h2><p>இதற்கிடையே நேற்று இரவு விஜய், தனது அரசு முறை சுற்றுப்பயணத்தை முடித்து லண்டனில் இருந்து சென்னை புறப்பட்டார். அவர் இன்று காலை 8.30 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு த.வெ.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். </p>]]></content:encoded></item><item><title>மஹுவா மொய்த்ரா மீது பாஜகவினர் முட்டை வீச்சு.. பாதுகாப்பு வழங்க மறுத்த உச்சநீதிமன்ற நீதிபதிக்கு  வீடியோ மெசேஜ் </title><link>https://www.maalaimalar.com/news/national/bjp-members-hurl-eggs-at-mahua-moitra-video-message-sent-to-supreme-court-judge-who-refused-to-grant-security</link><comments>https://www.maalaimalar.com/news/national/bjp-members-hurl-eggs-at-mahua-moitra-video-message-sent-to-supreme-court-judge-who-refused-to-grant-security#comments</comments><guid isPermaLink="false">0fe2916e-3d38-4bf0-99f2-80c47943dfab</guid><pubDate>Thu, 17 Sep 2026 03:07:31 +0000</pubDate><atom:updated>2026-09-17T03:07:31.334Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மேற்கு வங்கம்,trinamool congress,மஹுவா மொய்த்ரா,Mahua Moitra,west bengal,திரிணாமுல் காங்கிரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/t4c49oyr/tn-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மஹுவா மொய்த்ரா]]></media:title><media:description type="html"><![CDATA[ மஹுவா மொய்த்ரா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/t4c49oyr/tn-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மக்களை எம்பி மஹுவா மொய்த்ரா மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.</p><h2></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">மேற்கு வங்கத்தின்</a> நாடியா மாவட்டத்தில் உள்ள தனது தொகுதியான கிரிஷ்ணராஜ சகாரில் நேற்று நடந்த அரசியல் கூட்டத்திற்கு மஹுவா சென்றுள்ளார். கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்த மஹுவாவை அங்கு கூடிய பாஜக தொண்டர்கள் கருப்பு கொடி காட்டி  "திரும்பிப் போ" என கோஷம் எழுப்பி அமளி செய்துள்ளனர். </p> <p>அவர்களுடன் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட கைகலப்பு மூண்டது. இந்த பரபரப்பில் தனது காருக்கே திரும்பிச் சென்று ஏற முயன்ற மஹுவா மொய்த்ரா மீது முட்டை வீசப்பட்டுள்ளது.</p> <h2>வீடியோ</h2><p>இந்த சம்பவத்தை தொடர்ந்து காரில் அமர்ந்தபடியே முட்டை வீசப்பட்ட கோலத்தில் வீடியோ ஒன்றை எடுத்து வெளியிட்ட மொய்த்ரா, இந்த தாக்குதல் நடக்கும் என தனக்கு முன்னரே போலீசார் தகவல் தந்ததாகவும், இந்த தாக்குதலே போலீஸ் உதவியுடன் தான் நடந்துள்ளது என்றும் குற்றம்சாட்டினார்.</p><p>முன்னதாக ஏற்கனவே ஒரு முறை அவரது தொகுதியில் வைத்தே அவர் மீது முட்டை வீசப்பட்டது. இதனை தொடர்ந்து தனக்கு பாதுகாப்பு வேண்டி அவர் கல்கத்தா உயர்நீதிமன்றத்தை அணுகினார். ஆனால் அங்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்காததால் உச்சநீதிமன்றத்தை அணுகிறார்.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Big shout out to Hon’ble Justice Dipankar Datta ! MiLord - I came to my constituency for a mtng informing <a href="https://x.com/WBPolice?ref_src=twsrc%5Etfw">@WBPolice</a> &amp; BJP workers with their help pelted eggs on me. True to your advice I faced them as a freedom fighter faced bullets. <a href="https://t.co/CxO3ApzjPL">pic.twitter.com/CxO3ApzjPL</a></p>&mdash; Mahua Moitra (@MahuaMoitra) <a href="https://x.com/MahuaMoitra/status/2100176610045640808?ref_src=twsrc%5Etfw">September 16, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>உச்சநீதிமன்ற நீதிபதி</h2><p>அவர் மனு மீதான விசாரணையில் பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி தீபங்கர் தத்தா, மஹுவாவின் பாதுகாப்பு குறித்து கிண்டலாக, "இந்தியாவின் சுதந்திர போராட்ட வீரர்கள் நாட்டுக்காக துப்பாக்கி குண்டுகளை எதிர்கொண்டனர், இந்த சின்ன தாக்குதலுக்கு பயந்து பாதுகாப்பு வேண்டி உச்சநீதிமன்றத்தை அணுகுவது சரியல்ல" என கூறினார்.</p><p>இதனை குறிப்பிட்டு தற்போதைய முட்டை வீச்சுக்கு பின் பேசிய வீடியோவில் மஹுவா, "நீதிபதி அவர்களே, உங்கள் அறிவுரைப்படி நான் ஒரு சுதந்திர போராட்ட வீரர் துப்பாக்கி குண்டுகளை எதிர்கொண்டது போல நான் என் மீதான தாக்குதலை எதிர்கொண்டேன்" என பகடியாக தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>இந்தியா மீது 100% வரிவிதிக்க டிரம்புக்கு முழு அதிகாரம் வழங்கும் மசோதா அமெரிக்காவில் நிறைவேற்றம் </title><link>https://www.maalaimalar.com/news/world/us-passes-bill-granting-trump-full-authority-to-impose-100-tariffs-on-india</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-passes-bill-granting-trump-full-authority-to-impose-100-tariffs-on-india#comments</comments><guid isPermaLink="false">a891c758-c52f-4d13-a2ba-5440833beaa6</guid><pubDate>Thu, 17 Sep 2026 02:45:53 +0000</pubDate><atom:updated>2026-09-17T02:45:53.588Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உக்ரைன் போர்,trump,டிரம்ப்,tariffs,Russia-Ukraine war,Iran War,ஈரான் போர்,ரஷியா,வரிவிதிப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/c0vvjao1/tn-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டிரம்ப்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிரம்ப்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/c0vvjao1/tn-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியா உட்பட ரஷியா மற்றும் ஈரானுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகள் மீது வரிவிதிக்கும் அதிகாரத்தை அதிபர் டிரம்ப்புக்கு வழங்கும் மசோதா அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியுள்ளது.</p> <p>டிரம்ப்பின் குடியரசு கட்சியை சேர்ந்த மறைந்த செனட்டர் லின்ட்சே கிரஹாமின் பெயரிடப்பட்ட 'லின்ட்சே கிரஹாம் ரஷியா மற்றும் ஈரான் தடைவிதிப்புச் சட்டம் 2026' சபையில் கொண்டுவரப்பட்டு  வாக்கெடுப்பில் 262-159 என்ற கணக்கில் நிறைவேறியது. இதில் <a href="https://www.maalaimalar.com/topic/donald-trump">டிரம்ப் </a>கையெழுத்திட்டால் மசோதா சட்டமாக மாறும். </p><h2>மசோதா </h2><p>இந்த மசோதா <a href="https://www.maalaimalar.com/topic/russia">ரஷிய </a>வங்கிகள், ரஷிய அதிகாரிகள் மற்றும் ரஷிய எரிசக்தி வர்த்தகம் மீது பல தடைகளை விதிக்கிறது. அதேநேரம் இந்தியா உட்பட ரஷியாவுடன் எண்ணெய், எரிவாயு வாங்குகின்ற பிரதான நாடுகள் மீது 100 சதவீதம் வரை வரி விதிப்பதற்காக ஏகபோக அதிகாரத்தை அதிபர் டிரம்ப்புக்கு வழங்குகிறது. </p><p>ரஷிய எண்ணெய் வாங்குகின்ற பிரதான இரு நாடுகள் இந்தியாவும், சீனாவும். நிறைவேற்றப்பட்ட மசோதா ரஷியாவிடம் எண்ணெய், எரிவாயு வாங்கும் 5 முதன்மை நாடுகள் இவற்றின் மீது அழுத்தத்தை அதிகரிக்க, இந்த மசோதாவில் புதிய சட்டபூர்வ வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.  </p> <p>அதேநேரம் ரஷியாவிடம் இருந்து 15 சதவீதத்திற்கும் குறைவான அளவில் இயற்கை எரிவாயு இராக்கிமதி செய்யும் நாடுகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ரஷியாவின் வர்த்தகத்தை மட்டுப்படுத்தும் பல அம்சங்கள் மசோதாவில் உள்ளன.</p><h2>உக்ரைன் போர்</h2><p>உக்ரைன் நேட்டோ நாடுகளில் இணைவதை எதிர்த்து ரஷியா 2022 இல் தொடுத்த போர் முடிவின்றி நீண்டு வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் அமெரிக்கர் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், ரஷியா மீது பல பொருளாதார தடைகளை விதித்தன. </p><p>இருப்பினும் ஆசியாவில் சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு தனது எண்ணெய், எரிவாயுவை ஏற்றுமதி செய்வதன் மூலம் ரஷியா தனது ஏற்றுமதி பொருளாதரத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. </p><p>இதனை கட்டுப்படுத்த அமெரிக்கா பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த மசோதா பார்க்கப்படுகிறது.</p> <h2>டெல்லி</h2><p>டெல்லியில் நடந்த பிரிக்ஸ் நாடுகள் மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதின், ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் கலந்துகொண்டு பல விஷயங்களை பேசிய நிலையில் மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான நிலைபாட்டை இந்தியா எடுத்துள்ளதா என்ற கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவின் நோக்கங்கள் குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன.</p><p>இந்த மசோதா நேரடியாக இந்திய பொருட்கள் மீது 100 சதவீதம் வரிவிதிக்கவில்லை. மாறான அவ்வாறு வரிவிதிக்கும் அதிகாரத்தை அமெரிக்க அதிபருக்கு வழங்கியுள்ளது. </p><p>முன்னதாக அதிபர் டிரம்ப் விதித்த பல வரிகள் அமெரிக்க நீதிமன்றங்களால் இடைக்கால தடைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் இந்த மசோதா ஒரு மாற்றுப் பாதையாக பார்க்கப்படுகிறது.</p> <h2>ஈரான் மீது தடை நீட்டிப்பு</h2><p>ரஷியாவுடன் வர்த்தக உறவு கொண்டுள்ள நாடுகள் தவிர்த்து இந்த மசோதா ஈரான் மீது ஏற்கனவே உள்ள தடைகளை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கிறது.</p><p>ஈரான் உடன் கடந்த 6 மாதத்திற்கும் மேலாக போரிட்டு வரும் அமெரிக்கா, ராணுவ ரீதியாக பல இழப்புகளை சந்தித்து போரை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. </p><p>ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்க கூடாது என்று தொடங்கிய போர், தற்போது ஹார்முஸ் ஜலசந்தியை யார் கட்டுப்படுத்துவது என்பதோடு சுருங்கியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 17.9.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு பிள்ளைகளால் பெருமை ஏற்படும்
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-17-september-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-17-september-2026#comments</comments><guid isPermaLink="false">bd5acde8-b9df-42b2-b1ed-68ee220b5083</guid><pubDate>Thu, 17 Sep 2026 02:32:52 +0000</pubDate><atom:updated>2026-09-17T02:32:52.732Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/03/09/27268095-rasi-1.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/03/09/27268095-rasi-1.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். ஆதாயம் எதிர்பார்த்தபடி கிடைக்காது. சில நல்ல வாய்ப்புகள் கைநழுவிச் செல்லலாம்.</p><h2>ரிஷபம்</h2><p>அதிகாலையிலேயே நல்ல தகவல் வந்து சேரும் நாள். வருங்கால நலன் கருதி புதிய முடிவெடுப்பீர்கள். இடம், பூமி சேர்க்கை உண்டு கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும்.</p> <h2>மிதுனம்</h2><p>தொகை எதிர்பார்த்தபடி வந்து தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். சேரும். தொழில் முயற்சிக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு உண்டு.</p><h2>கடகம்</h2><p>தடைகள் அகலும் நாள். ஆரோக்கியப் பாதிப்புகளைத் தவிர்க்க ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. தொழிலில் பங்குதாரர்களால் நன்மை ஏற்படும்.</p> <h2>சிம்மம்</h2><p>நினைத்தது நிறைவேறும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். உத்தியோகத்தில் சம்பள உயர்வின் காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரிந்து பணிபுரிய நேரிடும்.</p><h2>கன்னி</h2><p>போன் மூலம் பொன்னான செய்தி வந்து சேரும் நாள். உங்கள் ஆலோசனைகளைக் கேட்டு நடந்தவர்கள் பாராட்டுவர். வருமானம் திருப்தி தரும்.</p> <h2>துலாம்</h2><p>சுபச் செய்திகள் வந்து சேரும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். திருமணப் பேச்சுகள் முடிவாகும்.</p><h2>விருச்சிகம்</h2><p>வெற்றிக்கனியை எட்டிப் பிடிக்கும் நாள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு பற்றிய தகவல் உண்டு.</p> <h2>தனுசு</h2><p>மகிழ்ச்சி கூடும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். வீட்டைச் சீரமைப்பதில் அக்கறை காட்டுவீர்கள்.</p><h2>மகரம்</h2><p>நன்மைகள் நடைபெறும் நாள். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். வாகன மாற்றம் செய்யலாமா என்று சிந்திப்பீர்கள். சுபச்செய்திகள் வந்து சேரும்.</p> <h2>கும்பம்</h2><p>யோகமான நாள். வரவு திருப்தி தரும். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் ரீதியாகப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.</p><h2>மீனம்</h2><p>காலை நேரத்திலேயே காதினிக்கும் செய்தி வந்து சேரும் நாள். நண்பர்களின் ஆதரவு உண்டு. உத்தி யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உண்டு.</p> ]]></content:encoded></item><item><title>கோலாகலமாக நடைபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் - பக்தர்கள் மீது புனித நீர் தெளிப்பு</title><link>https://www.maalaimalar.com/spirituality/madurai-meenakshi-amman-temple-kumbhabhishekam-2</link><comments>https://www.maalaimalar.com/spirituality/madurai-meenakshi-amman-temple-kumbhabhishekam-2#comments</comments><guid isPermaLink="false">c3c5dadb-5a27-42ba-a176-68ab9b09b518</guid><pubDate>Thu, 17 Sep 2026 02:18:49 +0000</pubDate><atom:updated>2026-09-17T02:18:49.456Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,வழிபாடு,worship,கும்பாபிஷேகம்,Kumbhabhishekam,meenakshi amman temple,மதுரை மீனாட்சி அம்மன் கோவில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/fs8f9ps3/madurai4.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/fs8f9ps3/madurai4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று காலையில் கோலாகலமாக நடைபெற்றது.</p> <p>17 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டது.</p><h2>யாகசாலை பூஜைகள்</h2><p>இதை முன்னிட்டு கோவிலில் பல மாதங்களாக திருப்பணிகள் ரூ.25 கோடி மதிப்பில் நடந்தன. யாகசாலை பூஜைக்காக வடக்கு ஆடி வீதியில் 184 குண்டங்களுடன் பிரமாண்ட யாகசாலை அமைக்கப்பட்டது. கங்கை, யமுனை, காவிரி, வைகை உள்ளிட்ட பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீரை கலசங்களில் நிரப்பி யாகசாலையில் வைத்து தினமும் பூஜைகள் நடந்தது.</p> <h2>பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம்</h2><p>நேற்று அதிகாலை 3.45 மணி அளவில் 10-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. அந்த வழிபாடு நிறைவு பெற்ற பிறகு பரிவார தெய்வங்களுக்கான கும்பாபிஷேகம் தொடங்கியது.</p><p>மேளதாளங்கள் முழங்க யானை, டங்கா மாடு அணிவகுத்து செல்ல யாகசாலையில் இருந்து புனிதநீர் கலசங்கள் புறப்பாடாகி கோவிலுக்குள் உள்ள பரிவார தெய்வங்கள் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டன. காலை 5 மணி முதல் 6 மணிக்குள் சித்தி விநாயகர், கூடல்குமாரர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, மகாலட்சுமி, பத்திரகாளி, அக்னி வீரபத்திரர், 63 நாயன்மார்கள், நவகிரகங்கள் உள்பட 414 பரிவார தெய்வங்களுக்கு நேற்று புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/ngskdris/ParivaraMoorthy1.jpg" /></figure><p>மூலவர் மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர், தங்க விமானங்கள், சன்னதி விமானங்கள், 12 கோபுரங்கள் உள்ளிட்டவற்றுக்கான கும்ப கலசங்களுக்கு நேற்று மாலை 11-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.</p><h2>மகா கும்பாபிஷேகம்</h2><p>விழாவின் சிகரமாக மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் மகா கும்பாபிஷேக விழா இன்று காலையில் கோலாகலமாக நடைபெற்றது. இதனால் மதுரை மாநகர் விழாக்கோலம் பூண்டு காணும் இடமெல்லாம் மின்னொளி அலங்காரத்தில் ஜொலித்தது.</p><p>திருப்பரங்குன்றம் கோவிலில் அருள்பாலிக்கும் சுப்பிரமணியசுவாமி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை காண எழுந்தருளினார்.</p> <p>முன்னதாக இன்று அதிகாலை 3.45 மணிக்கு 12-ம் கால யாக பூஜை நடைபெற்றது. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கடங்கள் புறப்பாடு 5.45 மணிக்கு நடைபெற்றது. அதனை சிவாச்சாரியார்கள் 4 ராஜ கோபுரங்கள் உள்பட 12 கோபுரங்கள், தங்க விமானங்களுக்கு கொண்டு சென்றபிறகு சரியாக 7.40 மணிக்கு கோபுரங்களுக்கு பக்தி கோஷங்கள் விண்ணதிர முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது.  கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது. </p><p>கோலாகலமாக நடைபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகத்தை பக்தர்கள் கண்டு பரவசமடைந்தனர். பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/t8747ykq/madurai3.jpg" /></figure><p>பின்பு மூலவர் மீனாட்சி அம்மனுக்கு காலை 8.10 மணிக்கும், சுந்தரேசுவரருக்கு 8.50 மணிக்கும் புனித நீரால் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதன்பின்னர் அலங்காரம், சிறப்பு தீபாராதனைகள் நடைபெறும்.</p><p>காலை 10 மணி முதல் இரவு வரை நடைசாத்தப்படாமல் மூலவர் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இன்றிரவு 7 மணிக்கு நான்கு மாசி வீதிகளிலும் மீனாட்சி, சுந்தரேசுவரர் வீதி உலா வந்து காட்சி அளிக்கிறார்கள்.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/lei9u4q2/madurai5.jpg" /></figure>]]></content:encoded></item><item><title>மண்ணோடு மண்ணான F15.. ஏமனில் சவுதி போர் விமானத்தை ஏவுகணையால் துளைத்த ஹவுதிக்கள்- வீடியோ 
</title><link>https://www.maalaimalar.com/news/world/f-15-brought-down-houthis-shoot-down-saudi-warplane-with-a-missile-in-yemen-video</link><comments>https://www.maalaimalar.com/news/world/f-15-brought-down-houthis-shoot-down-saudi-warplane-with-a-missile-in-yemen-video#comments</comments><guid isPermaLink="false">e0e9b735-1d01-40c3-9056-e861a339fc69</guid><pubDate>Thu, 17 Sep 2026 02:01:17 +0000</pubDate><atom:updated>2026-09-17T02:01:17.396Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Fighter Jet,போர் விமானம்,Yemen,ஏமன்,Houthi rebels,ஹவுதி கிளர்ச்சியாளர்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/8zrr4syu/tn-1.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ F15]]></media:title><media:description type="html"><![CDATA[ F15]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/8zrr4syu/tn-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஏமன் வான்பரப்பில் சவுதி ராணுவத்தின் எப்15 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.</p> <p>ஏமனில் <a href="https://www.maalaimalar.com/news/world/tension-in-the-red-sea-houthi-rebels-capture-port-city-bab-el-mandeb-strait-at-extreme-risk">ஹவுதி </a>கிளர்ச்சியாளர்களுக்கும் சவுதி ஆதரவு பெற்ற ஏமன் அரச படைகளுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது. ஹவுதிக்களுக்கு எதிராக சவுதி கூட்டுப்படைகள் களமிறங்கியுள்ளது. </p> <h2>எப்15</h2><p>இந்நிலையில் ஏமனின் மாரிப் மாகாணத்தில் சவுதியின் எப்15 போர் விமானத்தை ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியதாக ஹவுதிக்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>சுட்டு வீழ்த்தப்பட்ட சவதி விமானம் மாரிப் பகுதியில் ராணுவ நடவ்டிக்கையில் ஈடுபட்டிருந்ததாக ஹவுதிக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.</p><p>ஹவுதி ராணுவ பிரிவு செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மாரிப் மாகாணத்தின் வான்வெளியில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த சவுதி F15 ரக போர் விமானம் ஒன்றை, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வான்விட்டு வான் ஏவுகணையைப் பயன்படுத்தி வெற்றிகரமாகச் சுட்டு வீழ்த்தின." என தெரிவித்துள்ளார்.</p> <p>சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பாலைவனத்தில் விழுந்த கிடந்த போர் விமானம் முற்றிலும் உருக்குலைந்துள்ளது காணப்படுகிறது.</p><p>மேலும் சவுதியின் டிஓர்ன் ஒன்றையும் மாரிபில் சுட்டு வீழ்த்தியதாக ஹவுதிக்கள் தெரிவித்துள்ளனர்.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">The wreckage of a Saudi F-15 fighter jet in Marib, Yemen, after the Houthis claimed they shot down the aircraft on September 16.<br><br>The Houthi claim remains unverified, and Saudi authorities have not confirmed the loss. <a href="https://t.co/nkphzdmM54">pic.twitter.com/nkphzdmM54</a></p>&mdash; Ebrahim Zolfaghari (@IranTimes72) <a href="https://x.com/IranTimes72/status/2100271070813323537?ref_src=twsrc%5Etfw">September 16, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>தாக்குதல்</h2><p>ஏற்கனவே சவுதி விமானங்கள் ஏமனில் தங்கள் ஆளுகைக்கு உட்பட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களை தாக்கியதாக ஹவுதிக்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.</p><p>ஒரே வாரத்தில் சவுதி 450 வானவழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஏமன் குற்றம்சாட்டியுள்ளது. </p><p>தைஸ், லாஜ், அல் ஜாவப், மாரிப், சதா, அல் பைடா மாகாணங்களில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர் என்றும் பலர் காயம்பட்டனர் என்றும் ஹவுதி தரப்பு தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/chennai-fuel-price-update-iran-conflict-pushes-crude-oil-up-todays-petrol-and-diesel-rates-announced-7</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/chennai-fuel-price-update-iran-conflict-pushes-crude-oil-up-todays-petrol-and-diesel-rates-announced-7#comments</comments><guid isPermaLink="false">6f7a3c61-ea0a-4361-a91d-e838b238bda1</guid><pubDate>Thu, 17 Sep 2026 01:46:59 +0000</pubDate><atom:updated>2026-09-17T01:46:59.883Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டீசல் விலை,Diesel price,Petrol Price,பெட்ரோல் விலை,இன்றைய பெட்ரோல் விலை,Todays petrol price</media:keywords><media:content height="576" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/1xkldom8/maalai-malar2026-08-14alj4ing3maalai-malar2026-07-28zqvhuwkktn-2.avif" width="1024"><media:title type="html"><![CDATA[ பெட்ரோல், டீசல் விலை நிலவரம்]]></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல், டீசல் விலை நிலவரம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/1xkldom8/maalai-malar2026-08-14alj4ing3maalai-malar2026-07-28zqvhuwkktn-2.avif?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பெட்ரோல், டீசல் விலை</h2><p>இன்றைய (17.09.2026 - வியாழக்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/us-military-says-it-destroyed-2-small-iranian-boats-trying-to-steal-a-sea-drone">ஈரான் போரினால்</a> மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p><h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது.</p><p>அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.</p><h2>கச்சா எண்ணெய் விலை</h2><p>இன்று சர்வதேச சந்தையில் பிரனட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 105.75 டாலர் என விற்பனை ஆகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள் - 17 செப்டம்பர் 2026: ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம்</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-17-september-2026-raghavendra-swamy-guruvara-thirumanjanam</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-17-september-2026-raghavendra-swamy-guruvara-thirumanjanam#comments</comments><guid isPermaLink="false">d7d0b227-a710-420b-b842-b882e2283a06</guid><pubDate>Thu, 17 Sep 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-09-17T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/18/26670527-ragavendrar.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Raaghavendar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/18/26670527-ragavendrar.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆவணி-31 (வியாழக்கிழமை)</p><p>பிறை : வளர்பிறை</p><p>திதி :    சஷ்டி நண்பகல் 12.06 மணி வரை பிறகு சப்தமி</p><p>நட்சத்திரம் : அனுஷம் இரவு 9.51 மணி வரை பிறகு கேட்டை</p> <p>யோகம் :  சித்தயோகம்</p><p>ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை</p><p>எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை</p><p>சூலம் : தெற்கு</p><p>நல்ல நேரம் : காலை  9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை</p> <h2>ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு</h2><p>வளர்பிறை சஷ்டி விரதம். சுபமுகூர்த்த தினம். சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோயிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை, மைசூர் மண்டபம் எழுந்தருளல். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். </p> <p>திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சனம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஸ்ரீ உடையவர் கூட புறப்பாடு.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - அனுகூலம்</p><p>ரிஷபம் - நன்மை</p><p>மிதுனம் - புகழ்</p><p>கடகம் - நட்பு</p><p>சிம்மம் - பாராட்டு</p><p>கன்னி - பொறுமை</p> <p>துலாம் - பெருமை</p><p>விருச்சிகம் - அன்பு</p><p>தனுசு - திறமை</p><p>மகரம் - தனம்</p><p>கும்பம் - தாமதழ்</p><p>மீனம் - நற்செய்தி</p> ]]></content:encoded></item><item><title>இந்திய கடற்படை கப்பல் மீது மோதிய பாகிஸ்தான் கப்பல் - தூதரக அதிகாரியை நேரில் அழைத்து இந்தியா கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/national/pakistan-vessel-collides-with-indian-navy-ship-india-summons-diplomat-and-lodges-protest</link><comments>https://www.maalaimalar.com/news/national/pakistan-vessel-collides-with-indian-navy-ship-india-summons-diplomat-and-lodges-protest#comments</comments><guid isPermaLink="false">2ad3c9f4-c055-4a42-8399-7802cca714c8</guid><pubDate>Thu, 17 Sep 2026 00:50:31 +0000</pubDate><atom:updated>2026-09-17T00:50:31.286Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Pakistan,Ministry of External Affairs,INDIAN ARMY,இந்திய ராணுவம்,வெளியுறவு அமைச்சகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/mj65gtur/tn.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கப்பல் ]]></media:title><media:description type="html"><![CDATA[ கப்பல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/mj65gtur/tn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாகிஸ்தான் கடற்படையை சேர்ந்த கப்பல் இந்திய கடற்படை கப்பலை மோதிய சம்பவத்தில் இந்திய வெளியுறவு அமைச்சகம் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.</p> <p>கடந்த செப்டம்பர் 15, அரபிக் கடலின் வடக்கே <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88">இந்​தி​ய கடற்​படை​யின்</a> போர்க் கப்​பல்  கண்​காணிப்​புப் பணி​யில் ஈடு​பட்​டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. </p><p>சா்வதேச நீா்பரப்பில் இந்​தி​ய கடற்​படை​ போர்க் கப்​பலை நோக்கி பாகிஸ்​தான் கடற்​படைக் கப்​பல் அதிக வேகத்​தில் மோதி​யது. இதில் பெரிய சேதம் ஏற்படவில்லை என மத்திய வெளியுறவு அமைச்சகம் முன்னதாக தெரிவித்திருந்தது. </p> <h2>கண்டனம்</h2><p>ஆயினும் பாகிஸ்​தான் கடற்​படைக் கப்​பல் மோதி​யது தொடர்​பாக, இந்​தி​யா​வுக்​கான பாகிஸ்​தான் தூதரக பொறுப்பு அதி​காரி சாத் வார்​ரைச்-ஐ, வெளி​யுறவுத்​துறை அமைச்​சகதுக்கு நேரில் வரவழைத்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>கடலில் பாகிஸ்​தான் கடற்​படை செய்தது ஏற்​றுக்​கொள்ள முடி​யாத ​ தொழில்​முறையற்ற நடவடிக்கை ஆகும்.</p> <p>இது, 1991 ஏப்​ரல் மாதம் இந்​தி​யா-​பாகிஸ்​தான் இடையே போடப்பட்ட ராணுவ நடவடிக்​கைகள் மற்​றும் படை நகர்​வு​கள் குறித்த முன்​கூட்​டிய தகவல் அளிக்​கும் ஒப்​பந்​தத்​தின் 10வது பிரிவுக்கு முரணானது என்று வெளி​யுறவு அமைச்​சகம் அவரிடம் தெரி​வித்​தது.</p><p>இது​போன்ற சம்​பவங்​கள் மீண்​டும் நடை​பெறாமல் தடுக்​கும் வகை​யில், இருநாட்டு ஒப்​பந்​த விதி​களை மதித்து, உரிய கவனத்​துடன் செயல்பட ​​பாகிஸ்​தான் அதி​காரி​களிடம் தெரிவிக்​கு​மாறு அந்​நாட்டு பொறுப்பு அதி​காரி​யிடம் இந்​தியா அறி​வுறுத்​தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&apos;என்னை அச்சுறுத்தும் நோக்கில் ரஷ்யா எனது விமானத்தை இருமுறை தாக்க முயன்றது&apos; - அதிபர் ஜெலென்ஸ்கி பரபரப்பு தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/world/zelensky-says-russia-tried-to-attack-his-plane-twice-to-intimidate-him</link><comments>https://www.maalaimalar.com/news/world/zelensky-says-russia-tried-to-attack-his-plane-twice-to-intimidate-him#comments</comments><guid isPermaLink="false">7567c504-6177-4b66-a2fb-4985d80aacc1</guid><pubDate>Thu, 17 Sep 2026 00:28:43 +0000</pubDate><atom:updated>2026-09-17T00:28:43.125Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Russia,ரஷ்யா,வோலோடிமிர் ஜெலன்ஸ்கி,Volodymr Zelensky</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/acurlaqu/volodymyr-zelensky.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ volodymyr zelensky]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/acurlaqu/volodymyr-zelensky.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தன்னையும் மற்ற வெளிநாட்டு தலைவர்களையும் அச்சுறுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த சம்பவங்கள் நடந்தன என்றும், கடந்த சில வாரங்களில் <a href="https://www.maalaimalar.com/news/world">ரஷ்யா</a> தனது விமானத்தை இரண்டு முறை குறிவைத்ததாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>செவ்வாயன்று சி.பி.எஸ். நியூஸிடம் பேசிய <a href="https://www.maalaimalar.com/topic/volodymr-zelensky">ஜெலன்ஸ்கி</a>, முதல் சம்பவம் நடந்தபோது தனது விமானம் மால்டோவாவில் இருந்ததாக கூறினார். அவர் அந்த நாடு வழியாக திரும்பி பயணித்தபோதும் இதேபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்ததாக கூறினார்.</p><h2>அடுத்தடுத்து தாக்குதல்கள்:</h2><p>"மால்டோவாவில் எனது விமானம் இருந்தது, அதனால்தான் அவர்கள் மால்டோவாவை தாக்கினார்கள். நாங்கள் மீண்டும் சிசினாவ் வழியாக தாயகம் திரும்பியபோதும், அவர்கள் அதையே செய்தார்கள்," என்று அவர் கூறினார்.</p><p>சில நாட்களுக்குப் பிறகு உக்ரைனுக்குத் திரும்பும் பயணத்தின்போது, ​​ஒன்று அல்லது இரண்டு டிரோன்கள் மால்டோவாவின் வான்வெளிக்குள் நுழைந்ததாகவும் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.</p><p>அதிபர் தூதுக்குழுவினருடன் பயணம் செய்த அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக உக்ரேனிய அதிகாரிகள் பின்னர் தெரிவித்தனர். அந்த நேரத்தில், டிரோன் செயல்பாடு வேண்டுமென்றே செய்யப்பட்டதா என்பது தெளிவாக தெரியவில்லை.</p><h2>எச்சரிக்கை விடுப்பதே நோக்கம்:</h2><p>இருப்பினும், தனக்கும் மற்ற சர்வதேச தலைவர்களுக்கும் எச்சரிக்கை விடுப்பதை நோக்கமாக கொண்ட ஒரு பரந்த ரஷ்ய உத்தியின் ஒரு பகுதியே இந்த சம்பவங்கள் என தாம் நம்புவதாக ஜெலன்ஸ்கி கூறினார். உக்ரைனுக்கு வருகை தந்த வெளிநாட்டுப் பயணிகள் சம்பந்தப்பட்ட மற்றொரு டிரோன் சம்பவத்திற்கு மத்தியில், உக்ரைன் அதிபரின் இந்த குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன.</p><p>ஞாயிற்றுக்கிழமையன்று, உக்ரைனில் பயணம் செய்துகொண்டிருந்த வெளிநாட்டு பிரமுகர்கள் அடங்கிய தூதுக்குழுவை ஏற்றிச் சென்ற பயணிகள் ரயில் மீது ரஷ்ய ஆளில்லா விமானம் ஒன்று தாக்குதல் நடத்தியது. அக்குழுவில் மூத்த ஐரோப்பிய அதிகாரிகளும், சி.ஐ.ஏ.-வின் முன்னாள் இயக்குநர் டேவிட் பெட்ரேயஸும் இடம்பெற்றிருந்தனர்.</p><p>வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து, போலந்து எல்லைக்கு அருகே பயணிகள் வெளியேற்றப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.</p><p>அந்த ரயிலில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அதிகாரிகள் இருந்தனர் என்பது ரஷ்யத் தரப்புக்குத் தெரிந்திருந்ததா என்பது தனக்கு உறுதியாகத் தெரியவில்லை என்றும், ஆனால் அது தற்செயலாக நடந்ததாகத் தாம் நம்பவில்லை என்றும் ஜெலன்ஸ்கி கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>செஸ் ஒலிம்பியாட்: வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி</title><link>https://www.maalaimalar.com/sports/chess-olympiad-indian-men-beat-thailand-3-1</link><comments>https://www.maalaimalar.com/sports/chess-olympiad-indian-men-beat-thailand-3-1#comments</comments><guid isPermaLink="false">5c068c50-8d98-44f6-9752-9ebb67eca20e</guid><pubDate>Wed, 16 Sep 2026 23:52:20 +0000</pubDate><atom:updated>2026-09-16T23:52:20.726Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஒலிவியர் மெகாடன்,Chess Olympiad</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/kguko7zt/Chess-Olympiad.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chess Olympiad]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/kguko7zt/Chess-Olympiad.png?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>செஸ் விளையாட்டில் மிகப்பெரிய போட்டியான செஸ் ஒலிம்பியாட் 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. அதன்படி 46-ஆவது செஸ் ஒலிம்பியாட் உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் இன்று தொடங்கி 27-ந்தேதி வரை நடக்கிறது. </p><p>இதில் சாதனை எண்ணிக்கையாக ஓபன் பிரிவில் 208 அணிகளும், பெண்கள் பிரிவில் 192 அணிகளும் கலந்து கொள்கின்றன. அதாவது ஏறக்குறைய 2 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் களம் காண்கிறார்கள்.</p><h2>வெற்றியுடன் தொடங்கிய இந்தியா:</h2><p>உலக சாம்பியன் டி. குகேஷ், நிஹால் சரின் மற்றும் விதித் குஜ்ராத்தி ஆகியோர் உறுதியான வெற்றிகளைப் பதிவுசெய்தபோதிலும், அர்ஜுன் எரிகைசியின் கடைசி நேர சரிவு, இந்தியா முழு வெற்றி பெறும் வாய்ப்பை இழக்க செய்தது. இதன்மூலம், 46-ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய ஆண்கள் அணி, தாய்லாந்தை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி தனது பயணத்தைத் தொடங்கியது.</p><p>தனடோன் குல்ப்ருதானோனை வீழ்த்தி, நிஹால் வெற்றி பெற்ற முதல் இந்திய வீரர் ஆனார். அதனைத் தொடர்ந்து, குகேஷ் தனது சிறப்பான தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தி ஃபாரிஸ் ரஷீத் அல்ரியாமியை வீழ்த்தினார்.</p><p>பின்னர், விதித், துப்ஃபா கும்நோர்கேவை எளிதாக வீழ்த்தி வெற்றியை உறுதி செய்தார். இருப்பினும், ஆட்டத்தின் பெரும்பகுதி நேரம் வலுவான நிலையில் இருந்த அர்ஜுன், பிரின் லோஹாவிரபாப்பிடம் தோல்வியடைந்தார்.</p><h2>இந்திய மகளிர் அணி அபாரம்:</h2><p>இதற்கிடையில், இந்திய மகளிர் அணி, டொமினிகன் குடியரசு அணிக்கு எதிராக 4-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று தனது பயணத்தை தொடங்கியது.</p><p>தரவரிசையில் முன்னணியில் உள்ள இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி, வெள்ளை காய்களுடன் பிரான்செஸ்கா ரமிரெஸ் லூசோனை வீழ்த்தி வெற்றியுடன் தனது பயணத்தை தொடங்கினார். அதே சமயம், ஆர். வைஷாலி, மிகுலினா டி லா ரோசா மார்டினெஸுக்கு எதிராக எளிதாக வெற்றி பெற்றார்.</p><p>மேரி லோலி கொன்சாலஸ் பெகுவேரோவுக்கு எதிரான தனது வெற்றிக்காக வந்திகா அகர்வால் கடுமையாக போராட வேண்டியிருந்தது. இந்திய வீராங்கனை ஆட்டத்தை சமன் செய்யும் நிலையை நோக்கி செல்வது போல் தோன்றியபோது, ​​அவரது எதிராளி செய்த ஒரு தவறால், கோட்டை மற்றும் சிறு காய்களைக் கொண்ட இறுதி ஆட்டம் ஏற்பட்டது. அதில் வந்திகாவின் முன்னேறிய சிப்பாய் தீர்க்கமானதாக அமைந்தது.</p>]]></content:encoded></item><item><title>சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்த விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 82-ஆக உயர்வு</title><link>https://www.maalaimalar.com/news/world/sudan-gold-mine-collapse-kills-at-least-82-people-with-many-more-missing</link><comments>https://www.maalaimalar.com/news/world/sudan-gold-mine-collapse-kills-at-least-82-people-with-many-more-missing#comments</comments><guid isPermaLink="false">e8c90807-c41a-4957-b63d-9f9f0093c68f</guid><pubDate>Wed, 16 Sep 2026 20:50:51 +0000</pubDate><atom:updated>2026-09-16T20:50:51.168Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sudan,சூடான்,gold mine collapse,தங்க சுரங்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/6cacgzmy/sudan-gold-mine-collapse.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sudan gold mine collapse]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/6cacgzmy/sudan-gold-mine-collapse.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சூடானின் தொலைதூர பகுதியில் உள்ள <a href="https://www.maalaimalar.com/topic/gold-mine">தங்க சுரங்கம்</a> ஒன்று இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82-ஆக உயர்ந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகளும் ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர். </p><p>அதேவேளையில், மீட்பு குழுவினர் போதிய உபகரணங்கள் இல்லாத நிலையில் காணாமல் போனவர்களை தேடும் பணியில் சிரமங்களை எதிர்கொண்டனர். கடுமையான போரில் சிக்கி தவிக்கும் ஒரு நாட்டில் நிகழ்ந்துள்ள மிக சமீபத்திய துயர சம்பவம் இதுவாகும்.</p><p>மேற்கு கோர்டோஃபான் மாகாணத்தில் உள்ள நுஹுத் நகரில் அமைந்துள்ள 'அல்-சாரா' தங்க சுரங்கத்தில் இந்த விபத்து நிகழ்ந்ததாக உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்தனர். இப்பகுதி, சூடான் ராணுவத்திற்கு எதிராக மூன்றாண்டுகளுக்கும் மேலாக போரிட்டு வரும் துணை ராணுவ படையான 'ரேபிட் சப்போர்ட் ஃபோர்சஸ்' (RSF) கட்டுப்பாட்டில் உள்ளது.</p><h2>82 உடல்கள் மீட்பு:</h2><p>'எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் ரூம்ஸ்' அமைப்பின் உறுப்பினரான சுலைமான் அபு ஹமீதா, புதன்கிழமை மதியத்திற்குள் மீட்பு குழுவினர் 82 உடல்களை மீட்டதாக கூறினார். "ஆனால் இன்னும் பலரைப்பற்றிய தகவல் இல்லை," என்று அபு ஹமீதா 'அசோசியேட்டட் பிரஸ்' செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.</p><p>'எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் ரூம்ஸ்' என்பது மோதல்களை கண்காணிக்கவும், போரினால் பாதிக்கப்பட்ட சூடான் முழுவதும் உள்ள சமூகங்களுக்கு ஆதரவளிக்கவும் செயல்படும் ஒரு அடித்தள அளவிலான அமைப்பாகும். உள்ளூர் நிர்வாக அதிகாரி ஒருவரும் 82 உடல்கள் மீட்கப்பட்டதை உறுதிப்படுத்தினார்.</p><p>ஞாயிற்றுக்கிழமையன்று சுரங்கத்தின் ஒரு பகுதியில் சரிவு தொடங்கி, அதனுடன் இணைக்கப்பட்ட மற்ற பகுதிகளுக்கும் பரவியதாக அந்த அதிகாரி தெரிவித்தார். மீட்புப் பணிகளுக்கு தனியார் உரிமையிலுள்ள ஒரே ஒரு ஃபோர்க்லிஃப்ட் (forklift) மட்டுமே கிடைத்துள்ளதாகவும், இது உயிர் பிழைத்தவர்களை தேடும் பணியை சிக்கலாக்குவதாகவும் அவர் கூறினார்.</p><h2>தேடுவதற்கான இயந்திரங்கள் இல்லை:</h2><p>"இந்த சரிவு மிகப்பெரியது மற்றும் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. 30 மீட்டருக்கும் (98 அடி) அதிகமான ஆழத்தில் மண் மற்றும் கற்களை அகற்றி, உயிர் பிழைத்தவர்களை தேடுவதற்கான இயந்திரங்கள் எங்களிடம் இல்லை," என்று உயிர் பிழைத்தவர்களில் ஒருவரான கைரல்-சையத் கபாரா தொலைபேசி வாயிலாக ஏ.பி.-இடம் கூறினார்.</p><p>'அல்-சாரா' தங்கச் சுரங்கமானது சூடான் முழுவதும் பரவியுள்ள ஆயிரக்கணக்கான சிறிய அளவிலான மற்றும் முறைசாரா சுரங்கங்களில் ஒன்றாகும். சூடான் நாடு போரினால் சூழப்பட்டுள்ளது; இந்த மோதல்கள் நாட்டின் சில பகுதிகளை பஞ்சத்தின் விளிம்புக்கே தள்ளியுள்ளன. சூடான் ஒரு முக்கிய தங்க உற்பத்தி நாடாக இருந்தாலும், அங்கு பாதுகாப்பு விதிமுறைகள் பரவலாகப் பின்பற்றப்படாததால், சுரங்கங்கள் இடிந்து விழுந்து உயிரிழப்புகள் ஏற்படுவது அரிதான நிகழ்வு அல்ல. 2023-இல் நிகழ்ந்த விபத்தில் 14 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்; 2021-இல் நடந்த விபத்தில் 38 பேர் பலியாகினர்.</p><p>விபத்தில் இருந்து உயிர் பிழைத்த மற்றொருவரான அல்-அமின் சுலைமான், புதன்கிழமை காலை நிலவரப்படி 60 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். "இன்னும் சிலர் உள்ளே சிக்கியுள்ளனர்," என்றும் அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>113 சலான்கள், ரூ. 10.68 லட்சம் அபராதம் நிலுவையில் இருந்த இருசக்கர வாகனம் பறிமுதல்</title><link>https://www.maalaimalar.com/news/national/gurugram-traffic-police-impounds-bike-with-113-pending-challans-worth-rs-1068-lakh</link><comments>https://www.maalaimalar.com/news/national/gurugram-traffic-police-impounds-bike-with-113-pending-challans-worth-rs-1068-lakh#comments</comments><guid isPermaLink="false">87ceb66d-ecf7-40f4-8e32-60e762835230</guid><pubDate>Wed, 16 Sep 2026 20:04:14 +0000</pubDate><atom:updated>2026-09-16T20:04:14.639Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Traffic Police,போக்குவரத்து காவல் துறை,gurugram,குருகிராம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/96fnvd39/gurugram-traffic-police.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ File Pic: குருகிராம்போக்குவரத்து காவல் துறை

]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/96fnvd39/gurugram-traffic-police.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/gurugram">குருகிராம்</a> போக்குவரத்து காவல்  துறையினர் எம்.டி.ஐ. சௌக் (MDI Chowk) பகுதியில் நடத்திய வாகன சோதனையின்போது, ​​மொத்தம் ரூ. 10.68 லட்சம் மதிப்பிலான 113 நிலுவை சலான்களை (போக்குவரத்து விதிமீறல் அபராதங்கள்) கொண்ட ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.</p><p>90 நாட்களுக்கு மேலாக நிலுவையில் உள்ள அபராத தொகையை செலுத்தாத வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மூத்த போக்குவரத்து காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். </p><h2>ஆவணங்கள் இல்லை:</h2><p>எம்.டி.ஐ. சௌக் பகுதியில் பணியில் இருந்த மண்டல அதிகாரியான ASI பிரவீன் குமார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ​​அவரது குழுவினர் ஒரு இருசக்கர வாகனத்தை நிறுத்தி ஆய்வு செய்தனர். அப்போது வாகன ஓட்டி அதற்கான எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்க தவறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>"சரிபார்த்ததில், அந்த இருசக்கர வாகனத்தின் மீது 1988-ஆம் ஆண்டின் மோட்டார் வாகன சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் 113 சலான்கள் நிலுவையில் இருப்பதும், அதற்கான மொத்த அபராத தொகை சுமார் ரூ. 10.68 லட்சம் இருப்பதும் தெரியவந்தது.</p><h2>இருசக்கர வாகனம் பறிமுதல்:</h2><p>"தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியது, மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் மற்றும் காப்பீடு இல்லாமை உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களுக்காக இந்த சலான்கள் பெரும்பாலும் விதிக்கப்பட்டிருந்தன. போலீஸார் அந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்," என்று மூத்த போக்குவரத்து காவல் அதிகாரி ஒருவர் கூறினார்.</p><p>போக்குவரத்து விதிகளை பின்பற்றவும், வாகனத்திற்கான அத்தியாவசிய ஆவணங்களை புதுப்பித்து வைத்திருக்கவும், நிலுவையில் உள்ள அபராத தொகையை உரிய நேரத்தில் செலுத்தவும் அனைத்து வாகன ஓட்டிகளையும் குருகிராம் போக்குவரத்து காவல் துறை செய்தி தொடர்பாளர் கேட்டுக்கொண்டார்.</p>]]></content:encoded></item><item><title>வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர்: இந்திய அணியில் நமன் திர், ஆகிப் நபிக்கு முதல்முறையாக வாய்ப்பு</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/hardik-pant-ignored-as-dhir-nabi-get-maiden-call-ups</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/hardik-pant-ignored-as-dhir-nabi-get-maiden-call-ups#comments</comments><guid isPermaLink="false">2174d022-7761-4307-8256-f4853b28224f</guid><pubDate>Wed, 16 Sep 2026 19:02:31 +0000</pubDate><atom:updated>2026-09-16T19:02:31.432Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Hardik Pandya,ஹர்திக் பாண்டியா,Rishabh Pant,இந்தியா வெஸ்ட் இண்டீஸ் தொடர்,INDvsWI,ரிஷப் பண்ட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/cimmjwoo/bcci.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ BCCI Poster]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/cimmjwoo/bcci.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் (ODI) தொடருக்கான <a href="https://www.maalaimalar.com/sports/cricket">இந்திய அணியில்</a>, பஞ்சாப் அணியின் இளம் ஆல்-ரவுண்டர் நமன் திர் மற்றும் ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி ஆகியோர் முதல்முறையாக அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேவேளையில், அனுபவ வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் <a href="https://www.maalaimalar.com/topic/rishabh-pant">ரிஷப் பண்ட்</a> ஆகியோர் வெவ்வேறு காரணங்களுக்காக அணியில் சேர்க்கப்படவில்லை.</p><p>திருவனந்தபுரத்தில் செப்டம்பர் 27-ஆம் தேதி தொடங்கும் இத்தொடரில், இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. டி20 அணியானது பெரும்பாலும் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான அணியையே கொண்டிருக்கும்; எனினும், யாஷ் தாக்கூர் மற்றும் விப்ராஜ் நிகம் ஆகியோருக்கு பதிலாக மயங்க் யாதவ் மற்றும் பிரின்ஸ் யாதவ் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.</p><h2>தேசிய தேர்வு குழு திட்டம்:</h2><p>பாண்டியா செப்டம்பர் 20-ஆம் தே<em>தி</em> உடல் தகுதி பெற்றவராக அறிவிக்கப்பட இருந்தாலும், 'இந்தியா ஏ' அணிக்காக 10 ஓவர்கள் வீசும் அளவுக்கு தகுதியுடையவர் என்பதை நிரூபித்தால் மட்டுமே தேசிய தேர்வு குழு அவரை தேர்ந்தெடுக்கும்.</p><p>வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான ஒருநாள் அணியில் சேர்ப்பதற்காக, நிதிஷ் குமார் ரெட்டியை ஆசிய விளையாட்டு போட்டிக்கான அணியில் இருந்து தேசிய தேர்வு குழு விடுவித்துள்ளது. அனுபவம் வாய்ந்த ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மீண்டும் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.</p><h2>ஒருநாள் அணியில் முதல்முறையாக வாய்ப்பு:</h2><p>பஞ்சாப் அணிக்காக உள்நாட்டு கிரிக்கெட்டிலும், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐ.பி.எல். (IPL) தொடரிலும் நமன் திர் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டத்தின் காரணமாக அவர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேவேளையில், இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் சர்ரே (Surrey) அணிக்காக சிறப்பாக செயல்பட்டதற்காக ஆகிப் நபிக்கு தேசிய ஒருநாள் அணியில் முதல்முறையாக வாய்ப்பு கிடைத்துள்ளது.</p><p>ஜடேஜாவின் வருகையுடன், அனுபவ வீரர்களுடன் புதிய வீரர்களின் திறனையும் மதிப்பிடுவதற்கான வாய்ப்பை இத்தொடர் தேர்வாளர்களுக்கு வழங்கும்.</p><h2>இந்திய ஒருநாள் அணி:</h2><p>ஷுப்மன் கில் (கேப்டன்), ரோகித் சர்மா, விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட், கே.எல். ராகுல் (துணை கேப்டன்), துருவ் ஜூரல், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார், முகமது சிராஜ், ஆகிப் நபி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், நமன் திர்</p><h2>இந்திய டி20 அணி:</h2><p>ஷ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), அபிஷேக் சர்மா, வைபவ் சூரியவன்ஷி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா [துணை கேப்டன்], ஷிவம் துபே, குல்தீப் யாதவ், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், பிரின்ஸ் யாதவ், நிதிஷ் குமார், நிதீஷ் குமார் ரெட்டி.</p>]]></content:encoded></item><item><title>பிரதமர் மோடி பிறந்தநாள்: குஜராத்தில் 88 லட்சத்திற்கும் அதிகமான விளக்குகள் ஏற்ற சிறப்பு ஏற்பாடு</title><link>https://www.maalaimalar.com/news/national/more-than-88-lakh-lamps-to-be-lit-on-modis-birthday-in-gujarat</link><comments>https://www.maalaimalar.com/news/national/more-than-88-lakh-lamps-to-be-lit-on-modis-birthday-in-gujarat#comments</comments><guid isPermaLink="false">c3a1a907-457e-40ba-8c8e-6db25dcbc5f9</guid><pubDate>Wed, 16 Sep 2026 18:05:04 +0000</pubDate><atom:updated>2026-09-16T18:05:04.389Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/39vszacu/PM-Modi.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/39vszacu/PM-Modi.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குஜராத் மாநிலம் முழுவதும் 18,500 இடங்களில் 88 லட்சத்திற்கும் அதிகமான மண் அகல் விளக்குகளை ஏற்றுதல், வத் நகரில் இருந்து வாரணாசிக்கு இருசக்கர வாகன பேரணி, கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் ஆரத்திகள் என பல்வேறு நிகழ்ச்சிகளுடன், நாளை (செப்டம்பர் 17) பிரதமர் <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">நரேந்திர மோடி</a> பிறந்தநாளும், அவரது 25 ஆண்டுகால பொதுவாழ்வு பணியும் கொண்டாடப்பட உள்ளன.</p><p>மாலை 7 மணிக்கு மாவட்டங்கள், மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் என மாநிலம் முழுவதும் 'ஆசீர்வாத் நோ திவ்டோ' (ஆசீர்வாதத்தின் விளக்கு) நிகழ்ச்சி நடைபெறும். <a href="https://www.maalaimalar.com/news/national">குஜராத்</a> அரசு மற்றும் பா.ஜ.க. வெளியிட்ட தகவல்களின்படி, மாலை 6 மணி முதல் பக்தி இசை, சத்சங்கம் (ஆன்மீகச் சொற்பொழிவுகள்) மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் தொடங்கும். </p><h2>88 லட்சம் அகல் விளக்குகள்:</h2><p>"பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நீண்ட ஆயுளுடனும் நாட்டிற்கு தொடர்ந்து சேவையாற்றவும் வேண்டி, 18,500-க்கும் மேற்பட்ட இடங்களில் 88 லட்சத்திற்கும் அதிகமான மண் அகல் விளக்குகள் ஏற்றப்படும்," என்று மாநில அரசு செய்தித் தொடர்பாளரும் அமைச்சருமான ஜிது வகானி தெரிவித்தார்.</p><p>மோடி பொதுவாழ்வில் 25 ஆண்டுகளை நிறைவு செய்வதையொட்டி, செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 7 வரை மாநிலம் தழுவிய 'சேவா சங்கல்ப் அபியான்' (சேவை உறுதிமொழி இயக்கம்) என்ற நிகழ்ச்சியை பா.ஜ.க. முன்னெடுக்கவுள்ளது.</p><h2>இருசக்கர வாகன பேரணி:</h2><p>பா.ஜ.க.வின் 'சேவா சங்கல்ப் அபியான்' இயக்கத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி பிறந்த ஊரான வத் நகரில் இருந்து வாரணாசிக்கு இருசக்கர வாகன பேரணி வியாழக்கிழமை காலை தொடங்கவுள்ளது; இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கிறார்.</p><p>மோடி 2001 அக்டோபர் 7 முதல் 2014 மே 22 வரை குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக பணியாற்றினார். அவர் தற்போது வாரணாசி மக்களவை தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.</p><p>இந்நிகழ்ச்சிகளில் குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், மாநில பா.ஜ.க. தலைவர் ஜெகதீஷ் விஸ்வகர்மா, மகாராஷ்டிர துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் மத்திய அமைச்சர் அனுப்ரியா படேல் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் போட்டியிட 60 வேட்பாளர்கள் மனு தாக்கல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/60-candidates-file-nominations-for-madurantakam-dharapuram-bypolls</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/60-candidates-file-nominations-for-madurantakam-dharapuram-bypolls#comments</comments><guid isPermaLink="false">58cc1820-2b39-4a6c-8da5-8bb3e71c4a65</guid><pubDate>Wed, 16 Sep 2026 17:15:48 +0000</pubDate><atom:updated>2026-09-16T17:15:48.131Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>dharapuram,தாராபுரம்,மதுராந்தகம்,bypolls,Madurantakam,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/53cu51d1/petition.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/53cu51d1/petition.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தனி தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் (புதன்கிழமை) நிறைவடைந்தது. இதில் ஆளும் த.வெ.க. (TVK) மற்றும் எதிர்க்கட்சியான <a href="https://www.maalaimalar.com/topic/dmk">தி.மு.க.</a> உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த மொத்தம் 60 வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்தனர். </p><p>இடதுசாரி கட்சிகள் இத்தொகுதிகளுக்கான தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu">தமிழகத்தில்</a> நடைபெறவுள்ள இந்த இடைத்தேர்தல்கள் சுவாரஸ்யமான ஐந்து முனை போட்டிக்கு களமாக அமையவுள்ளன.</p><h2>60 பேர் வேட்புமனு தாக்கல்:</h2><p>தலைமைத் தேர்தல் அதிகாரியின் இணையதள தகவலின்படி, மதுராந்தகத்தில் 40 பேரும் (28 ஆண்கள், 12 பெண்கள்), தாராபுரத்தில் 20 பேரும் (10 ஆண்கள், 10 பெண்கள்) வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.</p><p>இருப்பினும், நாளை (வியாழக்கிழமை) வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கும் என்றும், அதன்பிறகே களத்தில் உள்ள வேட்பாளர்களின் இறுதி எண்ணிக்கை தெரியவரும் என்றும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.</p><p>ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளின் உதவியுடன் ஜோசப் விஜய் தலைமையிலான த.வெ.க. (TVK) தனது முதல் அரசை அமைத்த பிறகு மாநிலத்தில் நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும்.</p><p>த.வெ.க. நிறுவனரும் முதலமைச்சருமான விஜய், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு முறையே முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான கே. மரகதம் குமரவேல் மற்றும் பி. சத்தியபாமா ஆகியோரை வேட்பாளர்களாக அறிவித்துள்ளார்.</p><p>குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகிய இருவரும் ஏப்ரல் 23 தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களாக அந்தந்த தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள்; பின்னர் அவர்கள் தங்கள் எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு ஆளும் த.வெ.க. கட்சியில் இணைந்தனர்.</p><h2>தி.மு.க., த.வெ.க. கட்சிகளுக்கு எதிரணி:</h2><p>மதுராந்தகத்திற்கு ஐ. பரந்தாமனையும், தாராபுரத்திற்கு எஸ். சுகன்யாவையும் தி.மு.க. வேட்பாளர்களாக அறிவித்துள்ளது.</p><p>தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (NDA) தலைமை தாங்கும் அ.தி.மு.க., மதுராந்தகத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கனிதா சம்பத் மற்றும் தாராபுரத்தில் கே. பானுமதி ஆகியோரை நிறுத்தி, முழுக்க முழுக்க பெண்களைக் கொண்ட வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே அறிவித்துள்ளது.</p><p>பாரம்பரியத் தேர்தல் கூட்டணிகளில் இருந்து விலகி தனி இடதுசாரி அணியாக போட்டியிட போவதாக சி.பி.ஐ. (எம்) மற்றும் சி.பி.ஐ. ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன; இதன் மூலம் அவை தி.மு.க. மற்றும் த.வெ.க. ஆகிய இரு கட்சிகளுக்கும் நேரடி எதிரணியாக களமிறங்குகின்றன.</p>]]></content:encoded></item><item><title>“தேர்தலில் போட்டியென இடதுசாரிகள் முன்பே அறிவித்திருந்தால் அவர்களை ஆதரித்திருப்போம்” - சீமான்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/if-the-left-parties-had-announced-earlier-that-they-were-contesting-the-election-we-would-have-supported-them-seeman</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/if-the-left-parties-had-announced-earlier-that-they-were-contesting-the-election-we-would-have-supported-them-seeman#comments</comments><guid isPermaLink="false">a4543cd0-2362-4dbf-919c-f4692bf7a108</guid><pubDate>Wed, 16 Sep 2026 16:28:03 +0000</pubDate><atom:updated>2026-09-16T16:28:03.353Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Seeman,by election,communists,சீமான்,இடைத்தேர்தல்,கம்யூனிஸ்டுகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/6kjvb5t4/New-Project-2026-09-16T215708.113.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “தேர்தலில் போட்டியென இடதுசாரிகள் முன்பே அறிவித்திருந்தால் அவர்களை ஆதரித்திருப்போம்” - சீமான்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/6kjvb5t4/New-Project-2026-09-16T215708.113.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் எதிர்பாராத ராஜிநாமாவால் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்துள்ளது. அக்.6ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்களுக்கு இன்றுதான் கடைசி நாள். முடிவுகள் அக்.9ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.</p><h2>ஐந்துமுனைப் போட்டி</h2><p>இந்த இடைத்தேர்தலில் ஆளும் தரப்பான தவெக, பிரதான எதிர்க்கட்சியான திமுக, அதிமுக, நாதக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடுகின்றன. தவெக ஆட்சியமைக்க கம்யூனிஸ்ட் வெளியிலிருந்து ஆதரவு தந்தநிலையில் இத்தேர்தலிலும் தவெகவிற்கு ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.</p><p>ஆனால் தவெக ஆட்சியின்மீதான அதிருப்தியாலும், தங்களின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கிலும் தனித்து களம் காண்கிறது. </p><p>ஆறு கட்சிகளுக்குமான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. </p><p>இந்நிலையில் இன்று தேர்தல் குறித்து செய்தியாளர்களிடையே பேசியுள்ள நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இடதுசாரிகள் முன்னரே போட்டி என அறிவித்திருந்தால் இந்த இடைத்தேர்தலில் இருந்து நாங்கள் விலகி இருப்போம் என தெரிவித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக செய்தியாளர்களிடத்தில் பேசிய அவர் கூறியதாவது;</p><p>“இடைத்தேர்தலில் போட்டியிடும் இடதுசாரிகளின் இந்த முடிவை பாராட்டுகிறேன். எனினும், இந்த முடிவை இடதுசாரிகள் காலம் தாழ்த்தி எடுத்துவிட்டனர் என்பதில் எனக்கு வருத்தம். நாட்டில் நிலவிய தீய ஆட்சிக்கு இடதுசாரிகள் நெடுங்காலம் துணை நின்று விட்டார்கள். இது வருந்தத்தக்கது.</p><p>எங்களுக்கு புரட்சிக்கர சிந்தனை, போராட்டக் குணத்தை விதைத்து வளர்த்ததே கம்யூனிஸ்ட் இயக்கங்கள்தான். </p><p>இந்த முடிவை முன்னரே அறிவித்திருந்தால் நாங்கள் போட்டியிடாமல், அவர்கள் நிறுத்தும் வேட்பாளர்களை ஆதரித்திருப்போம். அவர்கள் கொஞ்சம் காலம் தாழ்த்திவிட்டனர். எங்கள் அரசியலில் நாங்கள் உறுதியாக இருப்பதால் தனித்து போட்டியிடுகிறோம்.” என தெரிவித்தார்.  </p>]]></content:encoded></item><item><title>‘டேர் டெவில்’ படப்பிடிப்பு நவம்பரில் தொடக்கம்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/daredevil-filming-begins-in-november</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/daredevil-filming-begins-in-november#comments</comments><guid isPermaLink="false">ffbf26e6-41a1-4417-b5f5-bce1327c95ea</guid><pubDate>Wed, 16 Sep 2026 16:12:00 +0000</pubDate><atom:updated>2026-09-16T16:12:00.678Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Ajith Kumar,ஆதிக் ரவிச்சந்திரன்,adhik ravichandran,நடிகர் அஜித்குமார்,Dare Devil,டேர் டெவில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/hn6s2jth/New-Project-2026-09-16T205817.914.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘டேர் டெவில்’ படப்பிடிப்பு நவம்பரில் தொடக்கம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/hn6s2jth/New-Project-2026-09-16T205817.914.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/motorsports-city-actor-ajith-kumar-thanked-chief-minister-vijay">நடிகர் அஜித்குமார்</a> - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் மீண்டும் உருவாக உள்ள ‘டேர் டெவில்’ படத்தின் படப்பிடிப்பு நவ.2ம் தேதி தொடங்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. </p><p>பிரேவ்ஹார்ட்ஸ் புரொடக்ஷன்ஸ் பதாகையின்கீழ் இப்படத்தை நடிகை ஷாலினி அஜித்குமார் தயாரிக்கிறார். இதுவே ஷாலினி தயாரிக்கும் முதல் படமாகும். விடாமுயற்சி படத்திற்கு பிறகு அனிருத் ரவிச்சந்தர் அஜித்தின் படத்திற்கு இசையமைக்கிறார்.</p><p>கடந்த ஒரு வருடமாக கார் ரேஸில் கவனம் செலுத்தி வரும் நடிகர் அஜித்குமார், இதன்மூலம் மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்புகிறார்.</p><h2>குட் பேட் அக்லி</h2><p>ஆதிக் ரவிச்சந்தர் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான படம் குட் பேட் அக்லி. இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், அஜித்குமார் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்தது. வசூல்ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. </p><p>இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். இந்நிலையில் டேர் டெவில் படத்தில் ஆதிக் - அஜித் கூட்டணி மீண்டும் இணைகிறது. </p>]]></content:encoded></item><item><title>தமிழர் பண்பாட்டின் உன்னத அடையாளம் - மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா குறித்து முதலமைச்சர் விஜய் நெகிழ்ச்சி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-expresses-deep-emotion-regarding-the-consecration-ceremony-of-the-madurai-meenakshi-amman-templea-magnificent-symbol-of-tamil-culture</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-expresses-deep-emotion-regarding-the-consecration-ceremony-of-the-madurai-meenakshi-amman-templea-magnificent-symbol-of-tamil-culture#comments</comments><guid isPermaLink="false">db10ce7d-bb92-4b98-9916-352904db8a27</guid><pubDate>Wed, 16 Sep 2026 15:17:25 +0000</pubDate><atom:updated>2026-09-16T15:17:25.683Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai Meenakshi Amman temple,Consecration Ceremony,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/l63p5g3e/New-Project-2026-09-16T204642.559.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழர் பண்பாட்டின் உன்னத அடையாளம் - மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா குறித்து முதலமைச்சர் விஜய் நெகிழ்ச்சி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/l63p5g3e/New-Project-2026-09-16T204642.559.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை<a href="https://www.maalaimalar.com/spirituality/madurai-meenakshi-amman-temple-specials"> மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா </a>நாளை கோலாகலமாக நடைபெற உள்ளது. இவ்விழாவால் இறைவனின் திருவருள் அனைவரது வாழ்விலும் நிறைந்து, நலமும், வளமும், மகிழ்ச்சியும் பெருகட்டும் என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது;</p><p>“தமிழர்களின் ஆன்மிகம், கலை, பண்பாடு, கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலையின் பெருமைகளை நூற்றாண்டுகளைக் கடந்து பறைசாற்றி நிற்கும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்புடன் நடைபெறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். </p><p>தமிழர் பண்பாட்டின் உன்னத அடையாளத்தை உலகிற்கு உணர்த்தும் வகையிலும், நம் மண்ணின் ஆன்மிக மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தின் பெருமையை எடுத்துரைக்கும் வகையிலும் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெறும் இந்நன்னாளில், இறைவனின் திருவருள் அனைவரது வாழ்விலும் நிறைந்து, நலமும், வளமும், மகிழ்ச்சியும் பெருகட்டும்! </p><p>நமது தொன்மையான திருக்கோயில்களையும் அவற்றின் வரலாற்றுச் சிறப்பையும் பாதுகாத்து, ஆன்மிக மற்றும் பண்பாட்டுப் பெருமையை வருங்காலத் தலைமுறைகளுக்கும் எடுத்துச் செல்வோம்!” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>ஆசிய கோப்பை சாம்பியன்ஸ் டிராபி: இந்தியாவில் விளையாட பாகிஸ்தான் மறுப்பு- முன்வைக்கும் இரண்டு கோரிக்கைகள்..!</title><link>https://www.maalaimalar.com/sports/asian-champions-trophy-pakistan-hockey-refuses-to-play-in-india-seeks-neutral-venue</link><comments>https://www.maalaimalar.com/sports/asian-champions-trophy-pakistan-hockey-refuses-to-play-in-india-seeks-neutral-venue#comments</comments><guid isPermaLink="false">f3f842b6-b03b-49b8-942c-b8df97ee6684</guid><pubDate>Wed, 16 Sep 2026 15:11:27 +0000</pubDate><atom:updated>2026-09-16T15:11:27.516Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Hockey India,ஹாக்கி இந்தியா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/1h9dz2hp/PakistanHockey001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பாகிஸ்தான் ஹாக்கி பெடரேசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/1h9dz2hp/PakistanHockey001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் மொகாலியில் வருகிற அக்டோபர் 27-ந்தேதி முதல் நடைபெற இருக்கிறது. இதில் பாகிஸ்தான் பங்கேற்க மறுத்துள்ளது. இது தொடர்பாக ஆசிய ஹாக்கி பெடரேசனிடம் சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்தியாவில் இருந்து மாற்ற வேண்டும். அல்லது தாங்கள் விளையாடும் போட்டிகளை பொதுவான ஒரு இடத்தில் (இந்தியாவுக்கு வெளியில்) நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.</p><h2>பாகிஸ்தான் ஹாக்கி பெடரேசன் வேண்டுகோள்</h2><p>இது தொடர்பாக பாகிஸ்தான் ஹாக்கி பெடரேசன் தலைவர் மொகியுதீன் அகமது வானி கூறுகையில் "ஆசிய ஹாக்கி பெடரேசனை பாகிஸ்தான் ஹாக்கி பெட்ரேசன் அணுகியது. அப்போது தொடரை இந்தியாவில் இருந்து மாற்ற வேண்டும். இல்லையெனில் பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளை பொதுவான இடத்தில் நடத்த வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையிலான உணர்ச்சிபூர்வமாக தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு வீரர்கள் மற்றும் ஸ்டாஃப்களின் பாதுகாப்பு சூழ்நிலைக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும், "பாகிஸ்தானின் தடையற்ற மற்றும் முழுமையான பங்கேற்பை உறுதிசெய்யும் வகையில், நடுநிலையான ஒரு மைதானத்தைத் தேர்வு செய்வது குறித்த எங்களின் கண்ணியமான முன்மொழிவை ஆசிய ஹாக்கி சம்மேளனம் சாதகமாகப் பரிசீலிக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்றார்.</p><p>பாகிஸ்தான் அணி அக்டோபர் 27-ந்தேதி முதல் நவம்பர் 5-ந்தேதி வரை நடைபெறும் ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் ஜலந்தர் மற்றும் மொகாலியில் விளையாடும் என்று பஞ்சாப் மாநில முதல்வர் பகவத் மான் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பாகிஸ்தான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தாதா சாகேப் பால்கே விருது பெறும் ஆனந்த் நாக்: பிரதமர் மோடி வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-congratulates-anant-nag-ji-on-being-conferred-dadasaheb-phalke-award</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-congratulates-anant-nag-ji-on-being-conferred-dadasaheb-phalke-award#comments</comments><guid isPermaLink="false">24e736fe-22ce-4eed-ab5f-28589662eacb</guid><pubDate>Wed, 16 Sep 2026 14:58:02 +0000</pubDate><atom:updated>2026-09-16T14:58:02.433Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆனந்த் நாக்,தாதா சாகேப் பால்கே விருது,Dadasaheb Phalke Award,pm modi,பிரதமர் மோடி,anant nag</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/fpnwj100/pm-modi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ pm modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/fpnwj100/pm-modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தாதாசாகேப் பால்கே விருது பெறவுள்ள நடிகர் அனந்த் நாக்-க்கு பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளப் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</strong></em></p><p>இந்தியத் திரைத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு வழங்கி வருகிறது.</p><h2>தாதா சாகேப் பால்கே விருது</h2><p>2024-ம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது கன்னட நடிகர் ஆனந்த் நாக்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாவிற்கு அவர் அளித்த பங்களிப்புக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>குஜராத் மாநிலம் கெவாடியாவில் வரும் 22-ம் தேதி நடைபெறவிருக்கும் 72-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் இந்த உயரிய விருது நடிகர் அனந்த் நாக்கிற்கு வழங்கப்படவுள்ளது.</p><p>கடந்த ஆண்டு கேரளாவின் மோகன்லால் தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>இந்நிலையில், தாதாசாகேப் பால்கே விருது பெறவுள்ள நடிகர் ஆனந்த் நாக்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><h2>பிரதமர் மோடி வாழ்த்து</h2><p>இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:</p><p>தாதா சாகேப் பால்கே விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற கலைஞர் ஆனந்த் நாக் அவர்களுக்கு வாழ்த்துகள்.</p><p>அவரது இயல்பான நடிப்பு, பன்முகத்தன்மை மற்றும் அபாரத் திறமை ஆகியவை இந்தியத் திரையுலகிலும், கன்னடத் திரையுலகிலும் ஆழமான முத்திரையைப் பதித்துள்ளன.</p><p>அவரைப் போன்ற மிகச் சிறந்த கலைஞருக்கு இது மிகவும் தகுதியான ஒரு கவுரவமாகும் என பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>“குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை கதை... அமைச்சர் பதவிக்காக சென்றுவிட்டு” - திருமாவளவனுக்கு பிரேமலதா பதிலடி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/like-the-story-of-falling-flat-on-ones-face-yet-getting-no-dirt-on-the-moustache-having-gone-seeking-a-ministerial-post-premalathas-retort-to-thirumavalavan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/like-the-story-of-falling-flat-on-ones-face-yet-getting-no-dirt-on-the-moustache-having-gone-seeking-a-ministerial-post-premalathas-retort-to-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">87dcc5b3-2f1e-4038-8e5d-74a2e82d3e8c</guid><pubDate>Wed, 16 Sep 2026 14:33:14 +0000</pubDate><atom:updated>2026-09-16T14:33:14.295Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,thirumavalavan,திருமாவளவன்,பிரேமலதா விஜயகாந்த்,premalatha vijayakanth</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/opicu6oi/New-Project-2026-09-16T200243.748.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை கதை... அமைச்சர் பதவிக்காக சென்றுவிட்டு” - திருமாவளவனுக்கு பிரேமலதா பதிலடி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/opicu6oi/New-Project-2026-09-16T200243.748.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சமீபத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்த விசிக தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/why-did-the-dmk-bring-the-dmdk-into-the-alliance-against-the-wishes-of-its-coalition-partners-thirumavalavan">திருமாவளவன்</a>, திமுகவை விட்டு கூட்டணிக் கட்சிகள் வெளியேற ஒரு முக்கிய காரணம் தேமுதிக என, அக்கட்சிமீது சில விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.</p><p>இந்நிலையில் திருமாவளவனின் விமர்சனங்கள் குறித்து இன்று பதிலளித்து பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.,</p><h2>மரியாதை உள்ளது...</h2><p>“திருமாவளவன்மீது தேமுதிக மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளது. 2015-ல் இவரும் சேர்ந்ததுதான் மக்கள் நலக்கூட்டணியை அமைத்தார். முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்தை ஏற்றவர். ஒரே வார்த்தையில் பதில் கூறுவேன். யாரையும் காயப்படுத்தக் கூடாது என பார்க்கிறேன்.</p><p>அவர் எனக்காக பிரசாரம் செய்ததை மறக்கமாட்டேன். அவர் வேண்டுமானால் மாற்றிப் பேசலாம். அதற்கான நன்றியுணர்வு என்னுள் இருக்கிறது.</p><h2>அமைச்சர் பதவிக்காக வெளியேறல்</h2><p>இன்று அமைச்சர் பதவி கிடைத்ததால், அவர் வேறு கூட்டணிக்கு சென்றுள்ளார். கம்யூனிஸ்டுகளைப் போல் விசிகவும் வெளியிலிருந்து ஆதரவு தந்திருக்கலாமே? நீங்கள் விரும்பியது அமைச்சர் பதவி. </p><p>நீங்கள் வென்றது இரண்டு இடங்கள். அதில் ஒருவருக்கு அமைச்சர் பதவி என்பதால் போயிருக்கிறீர்கள். இதற்காக நீங்கள் எதற்கு தேமுதிகவை இழுக்கிறீர்கள். மாற்றி மாற்றிப் பேசாதீர்கள்.</p><p>முடிவெடுக்க வேண்டியது திமுகவும், அதன் தலைமையும்தான். அப்படிப் பார்த்தால் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட 2 தொகுதிகளை  ஸ்டாலின் கூடுதலாக கொடுத்திருக்கிறார்; அதை நாங்கள் கேட்க முடியுமா? நாங்கள் ஏன் அதைப் பற்றிப் பேசவில்லை?</p><p>அதனால், நாம் வேறு ஒரு நிலைப்பாட்டை எடுத்துவிட்டு, அடுத்தவர் மீது குற்றம் சொல்வது மிக மிகத் தவறான செயல். அதை அண்ணன் திருமாவளவன் செய்ய மாட்டார் என்று நம்புகிறேன்.</p><h2>மீசையில் மண் ஒட்டவில்லை</h2><p>இனிமேலும் அதுபற்றி அவர் பேச மாட்டார் என்று நினைக்கிறேன். மீண்டும் அவர் அதைப் பற்றிப் பேசினால், ‘குப்புற விழுந்தும் என் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்ற கதையாகிவிடும். உங்களுக்கு அமைச்சர் பதவி கிடைத்தது சென்றீர்கள். </p><p>இதுதான் உண்மை. எதற்காக தேமுதிகமீது இவ்வளவு காழ்ப்புணர்ச்சி? கூட்டணி தலைமை எடுக்கும் முடிவை கேட்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது.</p><p>இதனால்தான் கூட்டணியை விட்டு வெளியேறினோம் என அவர் கூறினால், இது உண்மைக்கு புறம்பான பதில் என அனைவருக்கும் தெரியும். ” என தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>சூர்யா ஜோதிகா-வின்  20 வருட காதல்!</title><link>https://www.maalaimalar.com/ampstories/web-stories/surya-jyothika-love-celebrating-20-years-of-marriage-and-togetherness</link><comments>https://www.maalaimalar.com/ampstories/web-stories/surya-jyothika-love-celebrating-20-years-of-marriage-and-togetherness#comments</comments><guid isPermaLink="false">e15acc77-16ed-434c-8fcd-b14ac86d216f</guid><pubDate>Wed, 16 Sep 2026 14:27:38 +0000</pubDate><atom:updated>2026-09-16T14:27:38.827Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜோதிகா,சூர்யா,Suriya,Jyothika,Suriya Jyotika,Suriya Jyotika Wedding,20YearsOf Suriya Jyotika</media:keywords><media:content height="1080" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/j28zfydg/Untitled-design-2026-09-16T193326.215.png" width="1080"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/j28zfydg/Untitled-design-2026-09-16T193326.215.png?w=280" width="280"></media:thumbnail><category>வெப் ஸ்டோரீஸ் (Web stories)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/vs4mps49/Untitled-design-2026-09-16T191133.786.png" /></figure><p>சினிமா பந்தம் நிஜத்திலும் அழகான தருணம்!</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/9mc8rtxj/Untitled-design-2026-09-16T191033.814.png" /></figure><p>இருபது ஆண்டுகளாய் தொடரும் காதல் பயணம்</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/8yf4fi27/Untitled-design-2026-09-16T190829.174.png" /></figure><p>பூவெல்லாம் கேட்டுப்பார் இவர்களின் காதல் கதையை!</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/a39xvpun/Untitled-design-2026-09-16T191110.737.png" /></figure><p>"உயிரின் உயிரே..." உருக வைக்கும் காதல்!</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/prtgy83k/Untitled-design-2026-09-16T191432.714.png" /></figure><p>விழி மூடி யோசித்தால்..." உந்தன் முகமே!</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/74j6efvz/Untitled-design-2026-09-16T191529.775.png" /></figure><p>காதலின் உச்சமாய் வாழ்ந்து காட்டும் தம்பதி!</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/d5ljkaf0/Untitled-design-2026-09-16T191456.708.png" /></figure><p>"உனக்கென நான்..." என வாழும் ஜோடி!</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/4v45kor5/Untitled-design-2026-09-16T192249.865.png" /></figure><p>அன்பே அன்பே... நீ என் வானம்!</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/q5m7grkg/Untitled-design-2026-09-16T192029.733.png" /></figure><p>உயிர் ஆசை...உன்னோடு மட்டுமே என்றும்!</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/fy8hj1eg/Untitled-design-2026-09-16T191830.785.png" /></figure><p>திரையிலும் நிஜத்திலும் என்றும் ஜோடிப் புறாக்கள்!</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/ncxd43eo/Untitled-design-2026-09-16T191732.740.png" /></figure><p>சில்லுனு ஒரு காதல் நிஜமான அற்புதம்!</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/8djl5hte/Untitled-design-2026-09-16T193023.748.png" /></figure><p>சினிமா பந்தம் நிஜத்திலும் அழகான தருணம்!</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/pes41rsl/Untitled-design-2026-09-16T191912.701.png" /></figure><p>காலம் கடந்தும் மாறாத பேரன்பின் அடையாளம்!</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/7pl58skq/Untitled-design-2026-09-16T193121.691.png" /></figure><p>மாயாவி போல மனதை கவர்ந்த ஜோடி!</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/vnr2f1rt/Untitled-design-2026-09-16T193505.691.png" /></figure><p>காக்க காக்க என்றே இணைந்த இதயங்கள்!</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/uv19fy89/Untitled-design-2026-09-16T193601.723.png" /></figure><p>அன்றும்..இன்றும்..என்றும்..நம் காதல் மாறாதே!</p>]]></content:encoded></item><item><title>‘நேரம் தவறாமைதான் அப்பாவிடம் பிடிக்கும்’ - தந்தை குறித்து ஜேசன் சஞ்சய் நெகிழ்ச்சி!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/punctuality-is-what-i-like-about-dad-jason-sanjay-speaks-movingly-about-his-father</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/punctuality-is-what-i-like-about-dad-jason-sanjay-speaks-movingly-about-his-father#comments</comments><guid isPermaLink="false">51810f9b-d067-485b-bfd5-98b723de316d</guid><pubDate>Wed, 16 Sep 2026 13:49:23 +0000</pubDate><atom:updated>2026-09-16T13:49:23.052Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>jason sanjay,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,ஜேசன் சஞ்சய்,சிக்மா,sigma</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/8e9p5ul3/New-Project-2026-09-16T191850.521.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘நேரம் தவறாமைதான் அப்பாவிடம் பிடிக்கும்’ - தந்தை குறித்து ஜேசன் சஞ்சய் நெகிழ்ச்சி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/8e9p5ul3/New-Project-2026-09-16T191850.521.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டின் முதலமைச்சரும், நடிகருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள திரைப்படம் ‘<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-second-song-from-the-movie-sigma-has-been-released">சிக்மா</a>’. இப்படத்தின் சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.</p><p>இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் பதாகையின் கீழ் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். படம் அக்.2ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. </p><p>இதையொட்டி, படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா செப்.18ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் பட புரமோஷன் விழா ஒன்றில் ஜேசன் சஞ்சய் பேசிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.</p><p>அந்த வீடியோக்களில் முதலமைச்சர் விஜய் இப்படத்தை பார்க்க ஆவலாக இருப்பதாகவும், தனது தந்தை முதலமைச்சரானதில் தனக்கு மிகவும் மகிழ்ச்சி எனவும், மேலும் தனக்காக அவர் ரசிகர்களை கொடுத்துள்ளார் எனவும் தந்தை குறித்துப் பேசியுள்ளார்.</p><p>மேலும் தந்தையிடம் நீங்கள் கற்றுக்கொண்ட விஷயம் என்ன? என்ற கேள்விக்கு ‘நேரம் தவறாமை’ என பதிலளித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தாதா சாகேப் பால்கே விருது பெறுகிறார் கன்னட நடிகர் ஆனந்த் நாக்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-anant-nag-to-be-honoured-with-dadasaheb-phalke-award</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-anant-nag-to-be-honoured-with-dadasaheb-phalke-award#comments</comments><guid isPermaLink="false">c68e2598-3476-482b-9004-bd0b7c6188bb</guid><pubDate>Wed, 16 Sep 2026 13:28:27 +0000</pubDate><atom:updated>2026-09-16T13:28:27.891Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆனந்த் நாக்,தாதா சாகேப் பால்கே விருது,Dada Saheb Phalke,anant nag</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/ex4dq697/anant-nag.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ anant nag]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/ex4dq697/anant-nag.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கன்னட நடிகரான ஆனந்த் நாக்கிற்கு நாட்டின் உயரிய திரைப்பட விருதான 'தாதா சாகேப் பால்கே' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.</strong></em></p><p>இந்தியத் திரைத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு வழங்கி வருகிறது.</p><p>இந்நிலையில், 2024-ம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது கன்னட நடிகர் ஆனந்த் நாக்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாவிற்கு அவர் அளித்த பங்களிப்புக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>குஜராத் மாநிலம் கெவாடியாவில் வரும் 22-ம் தேதி நடைபெறவிருக்கும் 72-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் இந்த உயரிய விருது நடிகர் அனந்த் நாக்கிற்கு வழங்கப்படவுள்ளது.</p><p>தாதா சாகேப் பால்கே விருதுடன் தங்கத் தாமரை பதக்கம், பொன்னாடை மற்றும் 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு ஆகியவை அடங்கும்.</p><p>ஏற்கனவே, கடந்த 2025-ம் ஆண்டில் ஆனந்த் நாக் இந்தியாவின் 'பத்ம பூஷன்' விருதை பெற்றுள்ளார்.</p><p>கடந்த ஆண்டு கேரளாவின் மோகன்லால் தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் மசோதா நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/world/new-zealand-parliament-passes-trade-deal-with-india</link><comments>https://www.maalaimalar.com/news/world/new-zealand-parliament-passes-trade-deal-with-india#comments</comments><guid isPermaLink="false">d1dea483-85e7-4d57-a877-0c9a782d55f9</guid><pubDate>Wed, 16 Sep 2026 13:18:24 +0000</pubDate><atom:updated>2026-09-16T13:18:24.883Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Trade Agreement,வர்த்தக ஒப்பந்தம்,கிறிஸ்டோபர் லக்சன்,christopher luxon</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/bheucmjr/NZPM001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இந்தியா மற்றும் நியூசிலாந்து பிரதமர்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/bheucmjr/NZPM001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியா- நியூசிலாந்து இடையில் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் கடந்த ஏப்ரல் மாதம் 27-ந்தேதி கையெழுத்து ஆனது. இந்த ஒப்பந்தத்திற்கு நியூசிலாந்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருந்தபோதிலும் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் இதில் உறுதியாக இருந்தார்.</p><p>இது தொடர்பான மசோதா நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த இந்திய உடனான வர்த்தக ஒப்பந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாக கிறிஸ்டோபர் லக்சன் தெரிவித்துள்ளார்.</p><h2>இது தொடர்பாக கிறிஸ்டோபர் லக்சன் கூறியதாவது:-</h2><p>இந்தியா உடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் சாத்தியம் இல்லை என்று மக்கள் என்னிடம் சொன்னார்கள். நன்று, இன்று நாடாளுமன்ற இறுதி வாக்கெடுப்பில் இந்த ஒப்பந்தம் மசோதா நிறைவேறியது. இது நிகழ்ந்திருக்கிறது. இந்த சிறப்பு வாய்ந்த ஒப்பந்தம் மூலம், அதிக வேலை வாய்ப்புகள் மற்றும் வருமானம் நியூசிலாந்துக்கு கிடைக்கும். 140 கோடி இந்திய நுகர்வோர் நியூசிலாந்து பொருட்களை விற்பனை செய்வதற்கான கதவு திறக்கப்பட்டுள்ளது.</p><p>இவ்வாறு நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் தெரிவித்தார்.</p><p>அடுத்த மாதத்தில் இருந்து இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>இந்திய பொருட்களுக்கு வரி இல்லை</h2><p>டெக்ஸ்டைல்ஸ், தோல், காலணி, ஜூவல்லரி, பதப்படுத்தப்பட்ட பொருட்கள் போன்றவை வரியில்லாமல் நியூசிலாந்திற்கு இந்தியா ஏற்றுமதி செய்ய முடியும். </p><p>மறுபுறம், இருதரப்பு வர்த்தக மதிப்பில் 95 சதவீதத்தை உள்ளடக்கிய நியூசிலாந்தின் 70 சதவீத கட்டணப் பிரிவுகளுக்கு (tariff lines) இந்தியா கட்டண தளர்வை வழங்கியுள்ளது. அதேவேளையில், 29.97 சதவீத தயாரிப்பு வகைகளை இந்த ஒப்பந்தத்தின் வரம்பிற்கு வெளியே வைத்துள்ளது.</p><h2>பால் பொருட்களுக்கு இந்தியா விலக்கு அளிக்கவில்லை</h2><p>ஒப்பந்தத்தின் வரம்பிற்கு வெளியே உள்ள தயாரிப்புகளில் பால் பொருட்கள் (பால், க்ரீம், வே (whey), தயிர், சீஸ்), விலங்கு சார்ந்த பொருட்கள் (செம்மறி ஆட்டு இறைச்சி தவிர), விவசாயப் பொருட்கள் (வெங்காயம், கொண்டைக்கடலை, பட்டாணி, சோளம், பாதாம்), சர்க்கரை, செயற்கைத் தேன், விலங்கு/தாவர/நுண்ணுயிர் கொழுப்புகள் மற்றும் எண்ணெய்கள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள், ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், தாமிரம் மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் (கேத்தோடுகள், கார்ட்ரிட்ஜ்கள், தண்டுகள், கம்பிகள், சுருள்கள்), அலுமினியம் மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் (இங்காட்கள், பில்லட்டுகள், கம்பித் தண்டுகள்) ஆகியவை அடங்கும். </p><p>நியூசிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கு இந்தியா வரி இல்லாத அனுமதியை வழங்கும். இதில் மரக்கட்டைகள், coking coal, உலோகக் கழிவுகள் மற்றும் ஸ்கிராப், மரம், செம்மறி ஆட்டு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்படாத தோல் ஆகியவை அடங்கும்.</p><h2>ஒயினுக்கு படிப்படியாக வரிகள் குறைக்கப்படும்</h2><p>அதேபோல பெட்ரோலிய எண்ணெய், மால்ட் சாறு (malt extract), தாவர எண்ணெய்கள், குறிப்பிட்ட சில மின் மற்றும் இயந்திர உபகரணங்கள் மற்றும் பெப்டோன்கள் (peptones) போன்ற பொருட்களுக்கு இந்தியா 3, 5, 7 மற்றும் 10 ஆண்டுகளில் படிப்படியாக வரிகளைக் குறைக்கும். </p><p>கட்டணக் குறைப்புப் பலனைப் பெறும் நியூசிலாந்து தயாரிப்புகளில் ஒயின், மருந்துகள், பாலிமர்கள், அலுமினியம் மற்றும் இரும்பு/எஃகு பொருட்கள் ஆகியவை அடங்கும்.</p>]]></content:encoded></item><item><title>‘உழைக்காமல் கிடைத்த பதவியை அனுபவிப்பது எளிது’ - பிரவீன் சக்கரவர்த்திக்கு செல்வப்பெருந்தகை பதிலடி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/it-is-easy-to-enjoy-a-position-obtained-without-hard-work-selvaperunthagai-hits-back-at-praveen-chakravarty</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/it-is-easy-to-enjoy-a-position-obtained-without-hard-work-selvaperunthagai-hits-back-at-praveen-chakravarty#comments</comments><guid isPermaLink="false">1a97e850-4932-4638-81c9-07bef566cf0c</guid><pubDate>Wed, 16 Sep 2026 12:59:37 +0000</pubDate><atom:updated>2026-09-16T12:59:37.322Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,selvaperunthagai,tvk,Praveen Chakravarty,Prime Ministerial candidate</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/n7tiytc2/New-Project-2026-09-16T182626.956.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘உழைக்காமல் கிடைத்த பதவியை அனுபவிப்பது எளிது’ - பிரவீன் சக்கரவர்த்திக்கு செல்வப்பெருந்தகை பதிலடி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/n7tiytc2/New-Project-2026-09-16T182626.956.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த சில நாட்களாகவே ‘பிரதமர் வேட்பாளர்’ விவகாரத்தில் தமிழ்நாட்டின் கூட்டணிக் கட்சிகளான தவெக மற்றும் காங்கிரஸ் இடையே வார்த்தை மோதல் தொடர்ந்து வருகிறது. காங்கிரஸ்,  பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் என்பதில் உறுதியாக உள்ளது. இருப்பினும் இந்த விவகாரத்தால் காங்கிரஸ் உள்ளேயும் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. </p><p>ஆனால் தவெகவினர் முதலமைச்சர் விஜய்யை முன்னிறுத்தி பேசிவருகின்றனர். </p><p>இந்நிலையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் முன்னாள் மாநிலத்தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijays-act-in-house-a-disgrace-slams-tncc-chief">செல்வப்பெருந்தகை</a>.,</p><p>“ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காதவர்களுடன் கூட்டணிக்கான வாய்ப்பு என்ன இருக்கிறது?” என கருத்து தெரிவித்திருந்தார். </p><p>இதனைத்தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தியிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், கூட்டணி பற்றி கருத்து சொல்ல செல்வப்பெருந்தகை யார் என கேள்வி எழுப்பினார்.</p><p>இந்நிலையில் பிரவீன் சக்கரவர்த்தியின் இந்த கருத்துக்கு பதில்கூறும் வகையில் செல்வப்பெருந்தகை சமூக வலைதளப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது;</p><p>“கூட்டணி பற்றி பேச செல்வப்பெருந்தகை யார் எனக் கேட்கிறார் அறிவு ஜீவி என்று கூறிக்கொள்ளும் ஒருவர்.</p><p>வடமாநிலத்தில் எங்கள் தலைவர் சென்ற பின் அவர் இருந்த மேடையை தண்ணீர் உற்றி கழுவிய அழுக்கேறிய மதவாத மேட்டுக்குடி மனநிலையின் நீட்சியே இது.</p><h2>சிரித்தால் போதுமா?</h2><p>நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காத எவரோடும் கூட்டணி எதற்கு என்பதே என் கேள்வி?</p><p>அதற்கு நீண்ட நேரம் முதலமைச்சர் சிரித்துப் பேசினார் என்கிறார் அந்த அறிவு ஜீவி.</p><p>உங்களுடன் நீண்ட நேரம் சிரித்து பேசுவதுதான் கூட்டணியில் தொடருவதற்கான ஒப்பந்தமா? சரி முதலமைச்சராவது ஒரே ஒரு முறை ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று சொல்லிவிட்டால் போதுமே. பிரச்சினை தீர்ந்ததே.</p><h2>பாஜக குறித்துப் பேசினாலே..</h2><p>முதலமைச்சர் கூட சொல்ல வேண்டாம். அந்தக் கட்சியில் உள்ள முன்னனிப் பொறுப்பில் உள்ளவர்கள் யாராவது சொல்லட்டுமே, அது கூட வேண்டாம், நீண்ட நேரம் உங்களிடம் சிரித்துப் பேசிய முதலமைச்சரிடம் நமது அணியின் பிரதமர் வேட்பாளர் தலைவர் ராகுல் காந்திதான் என்று நீங்கள் அழுத்தமாகச் சொல்லி அதை அவர் ஏற்றுக்கொண்டு உங்களிடமாவது உத்தரவாதம் தந்தாரா? தந்திருந்தால் அதையாவது சொல்லுங்களேன். </p><p>பிரதமர் மோடி குறித்தோ, உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்தோ, பாஜக குறித்தோ சட்டப்பேரவையில் விமர்சித்தால் அது சட்டப்பேரவைக் குறிப்பில் இருந்து வேகமாக நீக்கப்படுகிறதே அது ஏன் என்று அடுத்த முறை சிரித்துப் பேசும் போது முதலமைச்சரிடம் கேட்டுச் சொல்லுங்கள்.</p><h2>காலம் பலரை முன்னிறுத்தும்... ஆனால்</h2><p>உழைக்காமல் கிடைத்த பதவியை அனுபவிப்பது எளிது; உழைத்து இயக்கத்தை வளர்ப்பதுதான் கடினம். பதவியின் உயரம் ஒருவரின் அரசியல் உயரத்தைத் தீர்மானிப்பதில்லை; அவர் இயக்கத்திற்காகச் செய்த உழைப்பும் அர்ப்பணிப்புமே அதைத் தீர்மானிக்கும்.</p><p>காலம் பலரை முன்னிறுத்தும்; அதே காலம் பலரை மறந்து போகும். ஆனால் ஒரு பேரியக்கத்திற்காக நேர்மையாக உழைத்தவர்களின் பங்களிப்பை வரலாறு பதிவு செய்கிறது. காங்கிரஸ் பேரியக்கம் தனிநபர்களைவிடப் பெரியது. பதவிகளைவிட அதன் கொள்கை பெரியது.</p><p>தற்போதைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் தான் பிரதமர் வேட்பாளர் என்போர் பக்கம் நின்று கொண்டு என் தலைவர் ராகுல் காந்தி தான் பிரதமர் எனச் சொல்லும் என் மீது கல்லெறிபவர் என்னை யார் என்று கேட்கிறார். </p><p>உரக்கச் சொல்கிறேன்.</p><p>நான் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என விரும்பும் காங்கிரஸ் தொண்டன். சுயமரியாதையுடன் இந்த மண்ணின் மைந்தன், பூர்வகுடி.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>132 ஆண்டுகள் கழித்து அமெரிக்க நூலகத்திற்குத் திருப்பிக் கொடுக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வார இதழ்!</title><link>https://www.maalaimalar.com/news/world/historic-weekly-returned-to-us-library-after-132-years</link><comments>https://www.maalaimalar.com/news/world/historic-weekly-returned-to-us-library-after-132-years#comments</comments><guid isPermaLink="false">567a9d91-0f0b-4e86-b055-2f0fb0c9e50f</guid><pubDate>Wed, 16 Sep 2026 12:53:55 +0000</pubDate><atom:updated>2026-09-16T12:53:55.035Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,America,library,நூலகம்,132YearsLater,132 ஆண்டுகள்,Rare Magazine,Fine Waived,Concord Library</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/hvw0zqlc/Rare-Magazine" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rare Magazine  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/hvw0zqlc/Rare-Magazine?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE">அமெரிக்காவின் </a>நியூ ஹாம்ப்ஷயர் மாகாணத்தில் உள்ள கான்கார்ட் பொது நூலகத்தில் இருந்து 132 ஆண்டுகளுக்கு முன்பு இரவல் வாங்கப்பட்ட 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பழைய மாத இதழ், தற்போது நூலகத்திடமே பத்திரமாகத் திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது.</p><h2>அபராதம் தள்ளுபடி</h2><p>செப்டம்பர் 1894-ஆம் ஆண்டு வெளியான "தி செஞ்சுரி இல்லஸ்ட்ரேட்டட் மன்த்லி மேகசின்". இந்த இதழை மொத்தம் 48,220 நாட்கள் தாமதமாகத் திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது. </p><p>நூலக விதிகளின்படி இதற்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.10 லட்சத்திற்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நூலகத்தின் புதிய சலுகையால் இந்த அபராதம் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.</p><h2>இதழ் திரும்பியது எப்படி?</h2><p>ஜான் என்ற வாசகர் இந்த இதழை நூலகத்தில் ஒப்படைத்தார். இது குறித்து அவர் கூறும்போது, இந்த இதழ் பல தசாப்தங்களாகத் தனது வீட்டில்தான் கிடந்ததாகவும், ஆனால் இது எப்படித் தன் வீட்டிற்கு வந்தது என்பது தனக்கே தெரியாது என்றும் கூறியுள்ளார். </p><p>சமீபத்தில் உள்ளூர் செய்தித்தாள் ஒன்றில், நூலகம் அபராதங்களை ரத்து செய்துள்ள செய்தியைப் படித்த பிறகே, இதைத் திரும்பக் கொடுக்க அவர் முடிவு செய்துள்ளார்.</p><h2>நூலகத்தின் புதிய திட்டம்</h2><p>கான்கார்ட் பொது நூலகம் கடந்த செப்டம்பர் 1 முதல் ஒரு வருட காலத்திற்கு அபராதக் கட்டணங்களுக்கு முழு விலக்கு அளிப்பதாக அறிவித்துள்ளது. "அபராதமில்லா நூலகம்" என்ற இந்தத் திட்டத்தின் மூலம் பல பழைய புத்தகங்கள் திரும்ப வரும் என்று எதிர்பார்த்ததாகவும், ஆனால் 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு இதழ் திரும்ப வரும் என்று தாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றும் நூலக நிர்வாகம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.</p><h2>அடுத்த கட்ட நடவடிக்கை</h2><p>132 ஆண்டுகள் பழமையான இந்த இதழ் இனி பொதுமக்களின் புழக்கத்திற்கு விடப்படாது. அதற்குப் பதிலாக, இந்த நூலகத்தில் உள்ள உள்ளூர் வரலாற்றைப் பாதுகாக்கும் பிரத்யேகப் பகுதியான "கான்கார்ட் அறையில்" காட்சிக்கு வைக்கப்படலாம் என்று நூலக நிர்வாகம் அதன் சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மெஸ்சி நிகழ்ச்சி சர்ச்சை: கேரளம் செய்தி சேனல் அலுவலகத்தில் போலீசார் அதிரடி சோதனை- எதிர்க்கட்சிகள் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/national/messi-event-row-police-raid-reporter-tv-office-promoters-homes-cm-defends-action</link><comments>https://www.maalaimalar.com/news/national/messi-event-row-police-raid-reporter-tv-office-promoters-homes-cm-defends-action#comments</comments><guid isPermaLink="false">4257d383-2132-4bc6-a458-aeaa89e97adc</guid><pubDate>Wed, 16 Sep 2026 12:36:29 +0000</pubDate><atom:updated>2026-09-16T12:36:29.103Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Messi,மெஸ்சி,VD Satheesan,கேரளம்,Keralam</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/imf7gv0p/PoliceRaid.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ போலீஸ் சோதனை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/imf7gv0p/PoliceRaid.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அர்ஜென்டினா அணியும், மெஸ்சியும் கேரளம் மாநிலம் வருகை தந்து விளையாடுவதாக இருந்தது. இது தொடர்பாக அர்ஜென்டினா அணியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. பின்னர், அர்ஜென்டினா அணி கேரளா வரவில்லை. இது தொடர்பாக பண முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது.</p><p>இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். முதல் தகவல் அறிக்கையின்படி (FIR), RBC பிரைவேட் லிமிடெட், அதன் நிர்வாக இயக்குநர் ஆண்டோ அகஸ்டின் மற்றும் பிற குற்றம் சாட்டப்பட்டவர்கள் கேரள அரசு மற்றும் பொதுமக்களை ஏமாற்றி தங்களுக்கு முறையற்ற ஆதாயத்தை அடையும் நோக்கத்துடன் அர்ஜென்டினா கால்பந்து சங்கத்துடனான (டிசம்பர் 20, 2024 தேதியிட்ட) ஒப்பந்தத்தில் சட்ட விரோதமான மற்றும் பொய்யான அம்சங்களை சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p>கிரேட்டர் கொச்சி மேம்பாட்டு ஆணையத்தின் (Greater Cochin Development Authority) கட்டுப்பாட்டில் உள்ள, கலூரில் அமைந்துள்ள அரசுக்குச் சொந்தமான ஜவஹர்லால் நேரு சர்வதேச விளையாட்டு அரங்கத்தை RBC-யிடம் ஒப்படைப்பதற்கும், 5 கோடி ரூபாய் பிணைத் தொகையை (security deposit) தள்ளுபடி செய்வதற்கும் செப்டம்பர் 26, 2025 அன்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன எனவும் FIR-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>RBC நிறுவனம் மெஸ்சி மற்றும் அர்ஜென்டினா அணி விளையாட வருவதற்கு ஸ்பான்சராக செயல்பட முன்வந்துள்ளது. இந்த நிறுவனம் ரிப்போர்ட்டர் டி.வி. என்ற செய்தி சேனலை நடத்தி வருகிறது. இந்த நிலையில் ரிப்போர்ட்டர் டி.வி. அலுவலகம் மற்றும் அகஸ்டின் சகோதரர்களுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவர்களுடைய பூர்வீக வீடு ஆகியவற்றில் SIT போலீசார் இன்று சோதனை நடத்தினர். கொச்சி மற்றும் வயநாடுகளில் உள்ள 5 இடங்களில் சோதனை நடத்தப்பட்து.</p><p>செய்திப் பிரிவு செயல்பட்டு வரும் ஆர்.பி.சி. அலுவலகத்தில் சோதனை நடத்திய போலீசார், செய்திப் பிரிவு இடத்திற்கு சென்று செய்தியாளர்களின் செல்போன்கள் மற்றும் பணிபுரிபவர்களின் செல்போன்களை பறிமுதல் செய்ததாகவும், செய்தி வெளியிடுவதற்கு இடையூறாக இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.</p><h2>சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி விளக்கம்</h2><p>இது தொடர்பாக SIT தலைவரும், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியுமான பி. விஜயன் கூறுகையில் "எந்த இடத்தில் சோதனை நடத்த சென்றாலும், அங்குள்ளவர்களிடம் போனை பயன்படுத்தக்கூடாது என சொல்லி வாங்கி வைத்து விடுவோம். நாங்கள் ஒரு போனைக் கூட பறிமுதல் செய்யவில்லை. செய்தி ரூமுக்குள் இடையூறு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் செல்லவில்லை. ஆவணங்களை சேகரிப்பதே எங்களுடைய நோக்கம். டிஜிட்டல் லாக்கர்களில் ஏற்பட்ட அணுகல் சிக்கல் காரணமாக, தேடுதலுக்கு அதிக நேரம் பிடித்தது. இந்த நடவடிக்கைகள் வீடியோவும் பதிவு செய்யப்பட்டன. </p><p>சோதனைப் பதிவேட்டின் ஒரு பகுதியாக, சம்பந்தப்பட்ட நபர்களின் கையொப்பங்களைப் பெறுகிறோம். அந்தப் பதிவேட்டைப் பார்த்து, ஏதேனும் பத்திரிகையாளர்களின் அலைபேசிகளை நாங்கள் பறிமுதல் செய்துள்ளோமா என்று பாருங்கள்" என்றார்.</p><h2>முதல்வர் வி.டி. சதீசன்</h2><p>இந்த சோதனையை கேரளம் மாநில முதல்வர் வி.டி. சதீசன் நியாயப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக வி.டி. சதீசன் கூறுகையில் "இந்தச் சோதனை, சட்டப்பூர்வமாக மேற்கொள்ளப்படும் காவல்துறை விசாரணையின் ஒரு பகுதியாகும். இதில் அரசு தலையிடாது. SIT முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. வாரண்ட் உடன் தேடுதல் வேட்டையை நடத்தியுள்ளது. இது தொடர்பாக ஜிஎஸ்டி துறை விசாரணை நடத்தியுள்ளது. விசாரணை தொடக்கத்தில் ஜி.எஸ்.டி. மோசடி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது" என்றார்.</p><h2>விளையாட்டுத்துறை அமைச்சர்</h2><p>அதன் ஸ்பான்சர் யார்? RBC-தான் அந்த ஸ்பான்சர். எனவே, அந்த ஆதரவாளர் தொடர்பான ஒரு விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும்போது, ​​அது வேறு எங்கே நடத்தப்பட முடியும்? அது இயல்பான ஒன்றுதானே?. செய்தி வெளியிட்டதற்காக எந்தவொரு ஊடக நிறுவனம் அல்லது பத்திரிகையாளர் மீதும் அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுத்ததில்லை; இனிமேலும் அவ்வாறு செய்யாது" என்றார்.</p><h2>பினராயி விஜயன் கண்டனம்</h2><p>முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான பினராயி விஜயன், செய்தி நிறுவனத்திற்குள் சென்ற பத்திரிகையாளர்களின் போன்களை பறிமுதல் செய்தது தொடர்பாக விமர்சனம் செய்திருந்திருந்தார். இதுபோன்ற சோதனை கேரளம் மாநிலத்தில் இதுவரை இல்லாதது. முதலமைச்சரின் நேர வற்புறுத்தலின் போரில் இந்த சோதனை நடத்தப்பட்டது என்று குற்றம்சாட்டியிருந்தார்.</p><h2>RBC நிர்வாக இயக்குநர் சொன்னது என்ன?</h2><p>ஆண்டோ அகஸ்டின் டி.வி.யின் நிர்வாக இயக்குநர் இது தொடர்பாக கூறுகையில் "போலீசார் மெஸ்சி நிகழ்ச்சி தொர்பாக எந்த கேள்வியும் கேட்கவில்லை" என்றார்.</p>]]></content:encoded></item><item><title>VIDEO- வேறு பெண்ணுடன் இருந்ததை தட்டிக் கேட்ட காதலியை காரால் மோதி இழுத்துச் சென்ற காதலன்- லக்னோவில் பரபரப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/video-lucknow-anamika-car-attack-shanawaz</link><comments>https://www.maalaimalar.com/news/national/video-lucknow-anamika-car-attack-shanawaz#comments</comments><guid isPermaLink="false">8cc9ca0f-aa3b-4a5c-87f5-a60aaa4f86d5</guid><pubDate>Wed, 16 Sep 2026 12:29:01 +0000</pubDate><atom:updated>2026-09-16T12:29:01.463Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Uttar Pradesh,உத்தரபிரதேச மாநிலம்,லக்னோ,lucknow,LucknowCrime,லக்னோசம்பவம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/66x3x413/gfd.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ drags girlfriend with his car]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/66x3x413/gfd.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஷாநவாஸ் தனது உண்மையான பெயர் மற்றும் அடையாளத்தை மறைத்து ஏமாற்றியதை அனாமிகா கண்டறிந்துள்ளார். </p><p>உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில், தனது உண்மையான அடையாளத்தை மறைத்து காதலித்து வந்த நபர் ஒருவர், தட்டிக் கேட்ட காதலியை காரால் மோதி, காரின் முன்பகுதியில் (போனட்) வைத்து இழுத்துச் சென்று ஏற்றி இறக்கிய கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="hi" dir="ltr">लखनऊ में अपने प्रेमी को नई गर्लफ्रेंड के साथ देख भड़की युवती. कार के सामने आई तो युवक ने किया हिट एंड रन का प्रयास...! <a href="https://t.co/a8qU6egytR">pic.twitter.com/a8qU6egytR</a></p>&mdash; Rupesh Mishra (@rupeshmishramp) <a href="https://x.com/rupeshmishramp/status/2100194257479053318?ref_src=twsrc%5Etfw">September 16, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2>உண்மை<strong>யை கண்டுபிடித்த காத</strong>லி</h2><p>லக்னோவைச் சேர்ந்த அனாமிகா என்ற பெண், 'யஷ் தாகூர்' என்ற பெயரில் அறிமுகமான ஷாநவாஸ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், ஷாநவாஸ் தனது உண்மையான பெயர் மற்றும் அடையாளத்தை மறைத்து ஏமாற்றியதை அனாமிகா கண்டறிந்துள்ளார். மேலும், இன்று காலை பூங்கா ஒன்றின் அருகே ஷாநவாஸ் வேறு ஒரு பெண்ணுடன் டீ கடையில் நின்று கொண்டிருந்தபோது அனாமிகா அவரை நேரில் பார்த்துப் பிடித்துள்ளார்.</p><h2>காரால் மோதி <strong>கொடூரத் தாக்குதல்</strong></h2><p>தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அனாமிகா, ஷாநவாஸிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை அங்கிருந்து செல்லவிடாமல் தடுக்க முயன்றார். அப்போது ஆத்திரமடைந்த ஷாநவாஸ், காரை வேகமாக இயக்கி அனாமிகா மீது மோதியுள்ளார். இதனால் அனாமிகா காரின் போனட் மீது விழுந்தநிலையிலும், காரை நிறுத்தாமல் ஷாநவாஸ் முன்னோக்கிச் சென்றுள்ளார். சற்று தூரத்தில் அனாமிகா காரில் இருந்து கீழே விழுந்தபோது, இரக்கமின்றி கார் சக்கரத்தை அவர் மீது ஏற்றிவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதில் அனாமிகாவிற்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.</p><h2>வைரல் வீ<strong>டியோ</strong></h2><p>இந்த கொடூர சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. வீடியோவில் அனாமிகா "காரை நிறுத்து" என்று கதறியும் ஷாநவாஸ் காரை நிறுத்தாமல் ஏற்றிச் செல்வது பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட அனாமிகா அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த லக்னோ காவல்துறையினர், தலைமறைவாக இருந்த ஷாநவாஸை தீவிரமாகத் தேடி கைது செய்துள்ளனர். பெயர் மற்றும் மத அடையாளத்தை மறைத்து காதலித்த விவகாரம் மற்றும் கொலை முயற்சி கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மகளிர் ப்ரீமியர் லீக் 2027: போட்டி தேதி, ஏலம் அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/sports/womens-premier-league-2027-tournament-dates-and-auction-announcement</link><comments>https://www.maalaimalar.com/sports/womens-premier-league-2027-tournament-dates-and-auction-announcement#comments</comments><guid isPermaLink="false">b0e4688f-2162-4e59-bcee-c74ae15b5320</guid><pubDate>Wed, 16 Sep 2026 12:26:51 +0000</pubDate><atom:updated>2026-09-16T12:26:51.432Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>BCCI,மகளிர் பிரீமியர் லீக்,பிசிசிஐ,WPL 2027</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/f6xwyl4h/New-Project-2026-09-16T171040.853.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Women's Premier League 2027: Tournament dates and auction announcement!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/f6xwyl4h/New-Project-2026-09-16T171040.853.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகளிர் ப்ரீமியர் லீக் தொடரின் ஐந்தாவது சீசன், அடுத்தாண்டு ஜனவரி 14 முதல் பிப்ரவரி 7 வரை நடைபெற உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. </p><p>வீராங்கனைகளை தேர்வு செய்வதற்கான ஏலம் அக்டோபர் 28ம் தேதி கொச்சியில் நடைபெறும் என்றும், வீராங்கனைகளை தக்கவைத்து கொள்வதற்கான இறுதிநாள் செப்.28 என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது. </p><p>நடப்பாண்டு சாம்பியனாக<a href="https://www.maalaimalar.com/sports/cricket/ipl-news-in-tamil/womens-premier-league-final-bengaluru-wins-the-toss-against-delhi-and-opts-to-bowl-808141"> ராயல் சேலஞ்சர்ஸ்</a> அணி உள்ளது. டெல்லியும், பெங்களூரு அணியும் இறுதிப்போட்டியில் மோதிய நிலையில், ஆர்சிபி த்ரில் வெற்றிப் பெற்றது. </p><p>ஐந்தாவது சீசனிலும் பெங்களூரு, டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் ஆகிய ஐந்து அணிகளும் தொடர்ந்து இடம்பெற்றுள்ளன. </p><p>இந்தியாவில் நடைபெறவுள்ள மகளிர் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக இத்தொடர் நடத்தப்படுகிறது.</p>]]></content:encoded></item></channel></rss>