<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 16 Sep 2026 09:16:37 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 16 செப். 2026...
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-16-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-16-september-2026#comments</comments><guid isPermaLink="false">a0811bc2-a555-463b-9aff-906d36ceb0c8</guid><pubDate>Wed, 16 Sep 2026 04:17:56 +0000</pubDate><atom:updated>2026-09-16T07:22:03.843Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/x1wtm4iq/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live news]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/x1wtm4iq/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/tragedy-in-us-news-helicopter-covering-bus-crash-plummets-killing-three">அமெரிக்காவில் கோரம்: பேருந்து விபத்தை நேரலை செய்த செய்தி நிறுவன ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 3 பேர் உயிரிழப்பு... </a></p><p>*அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரில், சாலை விபத்து தொடர்பான செய்தியை நேரலை கவரேஜ் செய்து கொண்டிருந்த NBC4 செய்தி நிறுவனத்தின் ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கியது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-chennai-return-tomorrow-morning">முதலமைச்சர் விஜய் நாளை காலை சென்னை திரும்புகிறார் - விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு</a></p><p>* லண்டனில் தங்கி உள்ள முதலமைச்சர் விஜய் முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசி உள்ளார். </p><p>* தனது ரசிகர்களை தி ஷார்ட் நட்சத்திர விடுதியில் சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/mysuru-dasara-festival-will-tamil-nadu-cm-vijay-attend-collector-lakshmikant-answers">மைசூரு தசரா விழா: தமிழக முதலமைச்சர் விஜய் பங்கேற்பா?- ஆட்சியர் லட்சுமிகாந்த் பதில்</a></p><p>*மைசூரு  தசரா ஊர்வலத்திற்கு தமிழக முதல்வர் விஜய் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகின. </p><p>*'ஜம்பூ சவாரி' எனப்படும் தசரா யானைகள் ஊர்வலம் அடுத்த மாதம் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/hc-says-no-stay-on-madurantakam-dharapuram-byelections" rel="nofollow">மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடையில்லை- சென்னை உயர்நீதிமன்றம்</a></p><p>* நீதிபதிகள், எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முழு உரிமை உள்ளது.</p><p>* மக்களின் உரிமையை தேர்தல் ஆணையம் பாதுகாக்க வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dharapuram-bypoll-tvk-candidate-sathyabama-files-nomination" rel="nofollow">தாராபுரம் இடைத்தேர்தல்: வேட்பு மனு தாக்கல் செய்தார் தவெக வேட்பாளர் சத்யபாமா </a></p><p>* வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் ஆகும்.</p><p>* வேட்பு மனுக்களை திரும்ப பெற நாளை மறுநாள் கடைசி நாள் ஆகும். </p><p><a href="https://www.maalaimalar.com/sports/chess-olympiad-begins-today-in-uzbekistan-india-aims-to-retain-title" rel="nofollow">உஸ்பெகிஸ்தானில் இன்று தொடங்குகிறது செஸ் ஒலிம்பியாட் போட்டி- பட்டத்தை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா!</a></p><p>* முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப்பதக்கம் அளிக்கப்படும்.</p><p>* ஒவ்வொரு சுற்றும் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-hc-dismisses-election-petition-against-ev-velu">எ.வ.வேலுவுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்தது சென்னை ஐகோர்ட்</a></p><p>* எ.வ.வேலு வெற்றியை எதிர்த்து த.வெ.க. வேட்பாளர் அருள் ஆறுமுகம், சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். </p><p>* வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று எ.வ.வேலு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-praise-ramasami-padayatchiyar">ராமசாமி படையாட்சியாரின் மகத்தான மக்கள் பணியை நினைவுகூர்ந்து வணங்குகிறேன்- முதலமைச்சர் விஜய்</a></p><p>*  எஸ்.எஸ். இராமசாமி படையாச்சியார் அவர்களின் பிறந்தநாளில், அவரது மகத்தான மக்கள் பணியை நினைவுகூர்ந்து வணங்குகிறேன்.  </p><p>* எஸ்.எஸ். இராமசாமி படையாச்சியார் அவர்கள் ஆற்றிய தொண்டும், முன்னெடுப்புகளும், தமிழக அரசியல் களத்தில் அழியாத தடம் பதித்துள்ளன. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-financial-assistance-for-tuition-fees-should-also-be-provided-to-students-from-backward-classes-and-most-backward-classes">பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் கல்விக் கட்டண உதவி வழங்க வேண்டும்!- அன்புமணி</a></p><p>* அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இலவசக் கல்வி வழங்கப்பட்டாலும், தரமான கல்வி வழங்கப்படுவதில்லை. </p><p>* அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-condemned-anbil-mahesh-house-raid">அன்பில் மகேஷ் வீட்டில் நடைபெறும் ரெய்டு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை - மு.க.ஸ்டாலின்</a></p><p>* மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது ரெய்டு அஸ்திரத்தை ஏவியுள்ளது எதற்கும் லாயக்கற்ற த.வெ.க. அரசு.</p><p>* பொய்யான குற்றச்சாட்டுகளும் சட்டத்தின் முன் நிலைக்காது என்பதை இந்த அரசு விரைவில் உணரும்!</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/corruption-case-against-former-dmk-minister-anbil-mahesh">தி.மு.க முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது ஊழல் வழக்கு</a></p><p>* அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருவதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். </p><p>* தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது ஊழல் வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசார்  பதிவு செய்துள்ளனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-central-government-should-abandon-the-plan-to-levy-charges-on-upi-transactions">யு.பி.ஐ பரிவர்த்தனைக் கட்டண வசூல் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்!- அன்புமணி வலியுறுத்தல்</a></p><p>* பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்தும், கொரோனா காலத்தில் நேரடித் தொடர்புகளைத் தவிர்க்கவும் யுபிஐ மூலமான பரிவர்த்தனைகள் ஊக்குவிக்கப்பட்டன.</p><p>* ரூ.2000-க்கும் மேற்பட்ட வணிகப் பரிவத்தனைகளுக்கும் பொருள் வாங்கும் மக்கள் இந்தக் கட்டணத்தை செலுத்தத் தேவையில்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-thank-you-to-everyone-who-kindly-inquired-about-my-health">மருத்துவர்கள் அறிவுரைப்படி ஓய்வில் உள்ளேன்- மு.க.ஸ்டாலின்</a></p><p>* பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான நேற்று, கழக உடன்பிறப்புகள் மேற்கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்தேன். </p><p>* கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமின்றி, பிற கட்சிகள் மற்றும் இயக்கங்களின் தலைவர்கள் காட்டிய அன்பிற்கும் அக்கறைக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/perunthalaivar-kamarajar-breakfast-expansion-scheme-cm-vijay-to-launch-it-on-22nd">காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டம் - முதலமைச்சர் விஜய் 22-ந்தேதி தொடங்கி வைக்கிறார்</a></p><p>* முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் என்ற பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டம் என மாற்றியது. </p><p>* இடைத்தேர்தல் நடைபெறும் செங்கல்பட்டு, திருப்பூர் மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/central-crime-branch-police-conduct-raid-at-former-minister-anbil-maheshs-residence">முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை </a></p><p>* சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் திமுக பிரமுகரான பி.டி. அரசகுமாரை கைது செய்தனர். </p><p>* அன்பில் மகேஷின் திருச்சி வீடு மற்றும் அவர் தொடர்புடைய 6 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடையில்லை- சென்னை உயர்நீதிமன்றம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/hc-says-no-stay-on-madurantakam-dharapuram-byelections</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/hc-says-no-stay-on-madurantakam-dharapuram-byelections#comments</comments><guid isPermaLink="false">8edf1aeb-c15e-4e40-96a2-ced85af11e4b</guid><pubDate>Wed, 16 Sep 2026 06:54:23 +0000</pubDate><atom:updated>2026-09-16T06:54:23.126Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை உயர்நீதிமன்றம்,chennai highcourt,byelection poll,மதுராந்தகம்,இடைத்தேர்தல்,Madhurandhagam</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/bhdzes6v/Chennai-HC.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chennai Highcourt]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/bhdzes6v/Chennai-HC.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>மதுராந்தகம், <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dharapuram-bypoll-tvk-candidate-sathyabama-files-nomination" rel="nofollow">தாராபுரம்</a> தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது.</p><p>தேர்தல் முடிவுகள் வெளியான குறுகிய காலத்தில், மக்கள் தீர்ப்பை புறக்கணித்து அரசியல் காரணங்களுக்காக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததால், இடைத்தேர்தலில் அவர்கள் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, தேர்தல் செலவை டெபாசிட் செய்யும் வகையில் உரிய நடைமுறையை வகுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த வக்கீல் சுதன் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.</p><p>அந்த மனுவில், இந்த வழக்கு முடியும் வரை மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்றும் இந்த தொகுதிகளுக்கு தவெக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்எல்ஏக்கள் மரகதம் குமாரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோரின் வேட்பு மனுக்களை ஏற்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த வழக்கு நீதிபதிகள்  எஸ்.எம்.சுப்பிரமணியம், கிருஷ்ணசாமி கோவிந்தராஜன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது,மனுதாரர் தரப்பில், எந்த காரணமும் இல்லாமல் குறுகிய காலத்தில் ராஜினாமா செய்ததால், இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் எழுந்து, மீண்டும் செலவு செய்ய வேண்டிய நிலை வந்துள்ளது. வாக்களித்த மக்களின் விரல் மை காய்வதற்கு முன், ராஜினாமா செய்து இன்னொரு தேர்தலை சந்திக்க வைத்துள்ளனர். மக்களின் நம்பிக்கை வீழ்த்தப்பட்டுள்ளது.</p><p>அரசிய சாசனத்தின்படி, இதுபோன்ற சூழலில் தேர்தல் ஆணையம் முறைபடுத்தலாம், ஐகோர்ட்டும் உத்தரவு பிறப்பிக்கலாம், என்பதால் இந்த வழக்கில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.</p><p>அப்போது நீதிபதிகள், எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முழு உரிமை உள்ளது. மக்கள் வாக்கு செலுத்தி தேர்ந்தெடுக்கப்பட்டவர், உரிய காரணங்கள் இல்லாமல் ராஜினாமா செய்ததன் மூலமாக மக்கள் அவமதிக்கப்பட்டுள்ளனர்.இது கேலிக்கூத்தானது.</p><p>இதுபோன்ற சூழலை எதிர்கொள்ள தேர்தல் ஆணையத்திடம் விதிமுறைகள் ஏதேனும் உள்ளதா? மக்களின் உரிமையை தேர்தல் ஆணையம் பாதுகாக்க வேண்டும். தேர்தல் அறிவிப்பு வெளியிப்பட்டுள்ளதால், இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது என்றனர்.</p><p>தேர்தல் ஆணையம் தரப்பில், தற்போது எழுந்துள்ள சூழல் தொடர்பாக விரிவாக ஆய்வு செய்து பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.</p><p>தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல், தகுதிநீக்கம் செய்யப்பட்டவர்கூட, இடைத்தேர்தலில் போட்டியிட முடியும் என சுட்டிக்காட்டினார். மேலும், ஏற்கெனவே எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்றதை எதிர்த்த வழக்கில் தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பை தள்ளவைத்துள்ளது என்று தெரிவித்தார்.</p><p>இதையடுத்து இந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம் செய்த நீதிபதிகள், விசாரணையை 18-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>விஜய் சேதுபதியின் ‘பத்தா’ டீசர் வெளியானது!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/vijay-sethupathis-paththa-teaser-released</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/vijay-sethupathis-paththa-teaser-released#comments</comments><guid isPermaLink="false">2d028353-1bbd-4e97-a2b1-a8824fee5c8d</guid><pubDate>Wed, 16 Sep 2026 09:13:50 +0000</pubDate><atom:updated>2026-09-16T09:13:50.655Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>லிஜோமோல் ஜோஸ்,lijomol jose,விஜய் சேதுபதி,Vijay sethupathi,Baththa,பத்தா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/l208ut0q/New-Project-2026-09-16T143649.046.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விஜய் சேதுபதியின் ‘பத்தா’ டீசர் வெளியானது!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/l208ut0q/New-Project-2026-09-16T143649.046.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாலாஜி தரணிதரன் எழுத்து மற்றும் இயக்கத்தில் <a href="https://www.maalaimalar.com/news/topnews/a-leader-is-not-someone-who-bolts-at-the-first-sign-of-trouble-did-vijay-sethupathi-criticize-chief-minister-vijay">விஜய் சேதுபதி</a> முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளப் படம் ‘பத்தா’. </p><p>சினி ஒன் ஸ்டூடியோஸ், ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். </p><p>இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து லிஜோ மோல் ஜோஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.</p><p>இந்நிலையில் இன்று படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. </p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/Dt4476TjEo0"></iframe></figure>]]></content:encoded></item><item><title>ரூ.13½ லட்சம் கோடி கடன் இருக்கும்போது புதிதாக தலைமைச் செயலகம் தேவையா? - சீமான் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/seeman-says-is-a-new-secretariat-necessary-when-there-is-a-debt-of-rs-13-5-lakh-crore</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/seeman-says-is-a-new-secretariat-necessary-when-there-is-a-debt-of-rs-13-5-lakh-crore#comments</comments><guid isPermaLink="false">d53e8fdd-3a9d-4794-a523-c4ab150d9452</guid><pubDate>Wed, 16 Sep 2026 08:49:04 +0000</pubDate><atom:updated>2026-09-16T08:49:04.524Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Seeman,naam tamilar katchi,New Secretariat,சீமான்,நாம் தமிழர் கட்சி,புதிய தலைமைச் செயலகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/k7ao2to1/seeman.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Seeman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/k7ao2to1/seeman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>புதிதாக தலைமைச் செயலகத்தை கட்டுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று சீமான் கூறினார்.</p><p>நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">சீமான்</a> இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- </p><p>13½ லட்சம் கோடி கடன் இருப்பதாக தமிழக அரசுதான் நிதிநிலை அறிக்கையில் கூறியிருந்தது. வட்டிக்கு கடன் வாங்கி வாங்கிய கடனுக்கு வட்டிக் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் எதற்கு புதிய தலைமைச் செயலகம்? தற்போதுள்ள தலைமைச் செயலகத்தில் பல மேதைகள் அமர்ந்து ஆகச்சிறந்த சட்டங்களையும் திட்டங்களையும் தீட்டியிருக்கிறார்கள். </p> <p>ஒருவேளை, தலைமைச் செயலகத்துக்கு அவசியம் ஏற்பட்டால் கருணாநிதி கட்டிய ஓமந்தூரார் மருத்துவமனை இருக்கும் கட்டிடத்தை பயன்படுத்தலாம். அதற்காக மருத்துவமனையை வேண்டுமானால் வேறு இடத்திற்கு மாற்றலாம். புதிதாக தலைமைச் செயலகத்தை கட்டுவதற்கு அனுமதிக்க மாட்டோம்.</p> <p>நடிகர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF">விஜய்சேதுபதி </a>தெரிவித்தது, பொதுவான கருத்து. அவர் குறிப்பிட்டது இதற்கு முன்பிருந்த அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும். தலைவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும் என்பதைதான் தம்பி விஜய்சேதுபதி தெரிவித்திருந்தார். அதனை விமர்சிப்பது சரியாக இருக்காது.</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>SIIMA விருதுகள்: டூரிஸ்ட் பேமிலி’ படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை வென்றார் சிம்ரன்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/evergreen-actress-simran-clinches-siima-2026-best-actress</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/evergreen-actress-simran-clinches-siima-2026-best-actress#comments</comments><guid isPermaLink="false">59de693c-aef1-4408-a0b6-0abd89e479ed</guid><pubDate>Wed, 16 Sep 2026 08:38:06 +0000</pubDate><atom:updated>2026-09-16T08:38:06.826Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>Tourist Family,SIIMA விருது வழங்கும் விழா,Simran,சிம்ரன்,Best actress award,SIIMA2026,சிறந்த நடிகை,டூரிஸ்ட் பேமிலி,SIIMA Awards</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/t9ibwfp0/Simran" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Simran]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/t9ibwfp0/Simran?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தென்னிந்திய திரையுலகின் முன்னணி மற்றும் எவர்கிரீன் நடிகைகளில் ஒருவரான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">சிம்ரன்</a>, டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தில் தனது அசாத்திய மற்றும் இயல்பான நடிப்பிற்காக SIIMA 2026-ல் சிறந்த நடிகைக்கான மதிப்புமிக்க விருதைத் தட்டிச் சென்றுள்ளார். </p><p>பெங்களூரில் நடைபெற்ற இந்த விருது விழாவில் ஒட்டுமொத்தப் படக்குழுவினரும் கலந்துகொண்டு தங்களது மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.</p><h2><strong>எவர்கிரீன் நடிகை</strong></h2><p>திரையுலகில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தனக்கான ஒரு வலுவான மற்றும் அழுத்தமான கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்து நடித்திருந்தார் சிம்ரன். </p><p>'<a href="https://www.maalaimalar.com/topic/tourist-family">டூரிஸ்ட் பேமிலி</a>' படத்தில் ஒரு நடுத்தரக் குடும்பத்தின் எதார்த்தமான சூழலையும், உணர்வுகளையும் மிக நேர்த்தியாகத் தனது நடிப்பில் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.</p><p>ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே இந்த கதாபாத்திரம் பெரும் பாராட்டுகளைப் பெற்ற நிலையில், தற்போது அதற்கான மிகச்சிறந்த அங்கீகாரமாக இந்த <strong>சைமா விருது</strong> கிடைத்துள்ளது. </p><p>பல ஆண்டுகளாகத் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாகத் திகழும் சிம்ரனுக்கு, இந்த வெற்றி அவரது திரைப்பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லாகும்.</p><h2><strong>அள்ளிக் குவித்த 6 சைமா விருதுகள்!</strong></h2><p>பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">சசிகுமார்</a> மற்றும் சிம்ரன் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியான 'டூரிஸ்ட் பேமிலி' திரைப்படம் SIIMA 2026 விருது விழாவில் மொத்தம் 6 விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.</p><ul><li><p>சிறந்த படம் (Best Film)</p></li><li><p>சிறந்த இயக்குநர் (Best Director)</p></li><li><p>சிறந்த அறிமுக இயக்குநர் (Best Debut Director) - அபிஷன் ஜீவிந்த்</p></li><li><p>சிறந்த முதன்மை நடிகர் (Best Lead Actor)</p></li><li><p>சிறந்த நடிகை (Best Actress) - சிம்ரன்</p></li><li><p>சிறந்த திரைக்கதை மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகள்</p></li></ul><p>இதன் மூலம் இந்த ஆண்டின் சைமா விழாவில் அதிக விருதுகளைப் பெற்ற தமிழ் திரைப்படம் என்ற பெருமையையும் இத்திரைப்படம் பெற்றுள்ளது.</p><h2><strong>படைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம்</strong></h2><p>ஒரு திரைப்படத்தின் உண்மையான வெற்றி என்பது அதன் வசூலைத் தாண்டி, அதில் உழைத்த திறமைகளுக்குக் கிடைக்கும் அங்கீகாரத்தில்தான் உள்ளது. தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியன் தயாரிப்பில் உருவான இத்திரைப்படம், கோவிட் சூழலுக்குப் பிந்தைய ஒரு புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் குடும்பத்தின் வாழ்வியலை நகைச்சுவை மற்றும் எதார்த்தமான பாணியில் பேசியிருந்தது.</p><p>படக்குழுவினரின் இந்த அசாத்திய கூட்டு உழைப்பிற்கு ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>5 லட்சம் போலி ஜிமெயில் கணக்குகள் மூலம் பரப்பப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்: கூகுளிடம் விளக்கம் கேட்கும் இந்திய காவல்துறை!</title><link>https://www.maalaimalar.com/news/world/500000-fake-gmail-accounts-bomb-threats-indian-police-questions-google</link><comments>https://www.maalaimalar.com/news/world/500000-fake-gmail-accounts-bomb-threats-indian-police-questions-google#comments</comments><guid isPermaLink="false">048d14c9-0742-4b44-9147-15ae009bd94e</guid><pubDate>Wed, 16 Sep 2026 08:37:13 +0000</pubDate><atom:updated>2026-09-16T08:37:13.711Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Google,குஜராத்,gujarat,Bomb threats,Cyber ​​Crime,ஜிமெயில்,சைபர் கிரைம்,fake Gmail accounts</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/q0qycu9l/google.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Google]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/q0qycu9l/google.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பொதுவாக ஒரு ஜிமெயில் கணக்கை உருவாக்கவும், பாதுகாப்பாகப் பயன்படுத்தவும் இருபடி சரிபார்ப்பு முறை அவசியமாகும். </p><p>குஜராத் மாநிலத்தில் அரசு அலுவலகங்களுக்கு அடுத்தடுத்து வந்த போலி வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வந்த சைபர் கிரைம் காவல்துறை, இதன் பின்னணியில் இருந்த மிகப்பெரிய குற்றப் பின்னணி வலையமைப்பை கண்டறிந்து முடக்கியுள்ளது. சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட போலி ஜிமெயில் கணக்குகளை உருவாக்கி, அவற்றின் மூலம் இந்த மிரட்டல்கள் விடுக்கப்பட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p><h2>பிரி<strong>க்ஸ் உச்சிமாநாட்டிற்கு அச்சுறுத்த</strong>ல்</h2><p>கடந்த 10-ஆம் தேதி, டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு சில நாட்களுக்கு முன்பு, <a href="https://www.maalaimalar.com/sports/rinku-singh-priya-saroj-to-tie-the-knot-in-december">குஜராத் அரசு </a>அலுவலகங்களுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அத்துடன் பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியாவுடன் ஒத்துழைக்கும் நாடுகளுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. இந்த மின்னஞ்சல்களைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர சோதனையில், அவை அனைத்தும் போலியானவை என்பது உறுதி செய்யப்பட்டது.</p><h2><strong>5 லட்சம் போலி ஜிமெயில் கணக்குகள்</strong></h2><p>வழக்கை விசாரித்த குஜராத் சைபர் கிரைம் காவல்துறையினர், இந்த விவகாரம் தொடர்பாக இருவரைக் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், 2022-ஆம் ஆண்டு முதல் சுமார் 5,13,847 போலி ஜிமெயில் கணக்குகள் மற்றும் அவற்றின் கடவுச்சொற்களை உருவாக்கி ஒரு சர்வதேச நெட்வொர்க் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த போலி கணக்குகள் வங்காளதேசத்தைச் சேர்ந்த நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு, அதன் மூலம் கிரிப்டோகரன்சி வடிவில் பணம் பெறப்பட்டதும் தெரியவந்துள்ளது.</p><h2><strong>கூகுள் நிறுவனத்தின் குறைபாடுகள்</strong></h2><p>பொதுவாக ஒரு ஜிமெயில் கணக்கை உருவாக்கவும், பாதுகாப்பாகப் பயன்படுத்தவும் இருபடி சரிபார்ப்பு முறை அவசியமாகும். ஆனால், இந்த போலி கணக்குகள் அனைத்திலும் இந்த பாதுகாப்பு முறையை குற்றவாளிகள் எவ்வாறு எளிதாக கடந்து சென்றார்கள் என்பது காவல்துறைக்கு பெரும் கேள்வியாக உருவெடுத்துள்ளது. </p><p>இதனைத் தொடர்ந்து, தங்களது தளத்தில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்யவும், கொள்கை மாற்றங்களைச் செய்யவும் வலியுறுத்தி கூகுள் நிறுவனத்திற்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் எழுத குஜராத் காவல்துறை முடிவு செய்துள்ளது. மேலும், இந்த வழக்கின் விசாரணையில் கூகுள் நிறுவனத்தையும் ஒரு தரப்பாக சேர்க்க திட்டமிட்டுள்ளனர். </p><p>இந்தியாவில் ஆன்லைன் மற்றும் தொழில்நுட்பக் குற்றங்கள் மூலம் ஆண்டுதோறும் பில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பு ஏற்படும் நிலையில், கூகுள் போன்ற சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களின் பாதுகாப்பு நடைமுறைகள் தற்போது கேள்வி குறியாகியுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>ஜப்பானில் வரலாற்றுச் சாதனை: 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியது!</title><link>https://www.maalaimalar.com/news/world/japan-makes-history-with-over-100000-people-aged-100-plus</link><comments>https://www.maalaimalar.com/news/world/japan-makes-history-with-over-100000-people-aged-100-plus#comments</comments><guid isPermaLink="false">99162cbc-ea2e-4bf3-868f-eaf3cd9aae9a</guid><pubDate>Wed, 16 Sep 2026 08:32:04 +0000</pubDate><atom:updated>2026-09-16T08:32:04.178Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>japan,ஜப்பான்,100 வயது,நீண்ட ஆயுள்,100 years,Aged people</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/pjxtovxr/Japan.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Japan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/pjxtovxr/Japan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலகில் நீண்ட ஆயுள் காலம் கொண்ட நாடாக உள்ள ஜப்பானில் முதல் முறையாக 100 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்து உள்ளது. </p><p>இம்மாத நிலவரப்படி, 100 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 56-வது ஆண்டாக அதிகரித்து 1,07,677-யை எட்டியுள்ளது.</p><p>இது கடந்த ஆண்டை விட சுமார் 8 ஆயிரம் அதிகம் என்று சுகாதார, தொழிலாளர் மற்றும் நலத்துறை அமைச்சகம் தெரிவித்தது.</p><p>இவர்களில் 88 சதவீதம் பேர் பெண்கள் ஆவார்கள். இதில், கியோட்டோவைச் சேர்ந்த 114 வயது பூயோ கிஷிமோட்டோ, குமாமோட்டோவைச் சேர்ந்த 112 வயது ஹிகாரு கட்டோ ஆகியோரும் அடங்குவர் என்று அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>ஜப்பானில் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் சரிவு இருந்து வருகிறது. அங்கு பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நிலையில் 100 வயதுப் பிரிவில் மட்டும்  எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>ஆரோக்கியமான உணவு முறைகள், மேம்பட்ட சுகாதார அமைப்பு ஆகியவை ஜப்பான் மக்களின் நீண்ட ஆயுளுக்குக் காரணம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தனிச்சிறப்புகள்!
</title><link>https://www.maalaimalar.com/spirituality/unique-features-of-madurai-meenakshi-amman-temple</link><comments>https://www.maalaimalar.com/spirituality/unique-features-of-madurai-meenakshi-amman-temple#comments</comments><guid isPermaLink="false">b1c20a33-b99f-4e0c-9f80-038ad7167be8</guid><pubDate>Wed, 16 Sep 2026 08:26:31 +0000</pubDate><atom:updated>2026-09-16T08:26:31.319Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,வழிபாடு,worship,கும்பாபிஷேகம்,Kumbhabhishekam,madurai meenakshi amman,மதுரை மீனாட்சி அம்மன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/tn538idn/MeenakshiAmman.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Madurai Meenakshi amman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/tn538idn/MeenakshiAmman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மதுரை மீனாட்சி அம்மன் கோவில்</h2><p>உலக அதிசயங்களில் இடம்பெற்றுள்ள இந்தியாவின் பழங்கால கட்டிடங்களில் ஒன்றாக <a href="https://www.maalaimalar.com/spirituality/madurai-meenakshi-amman-temple-parivara-moorthy-kumbhabhishekam">மதுரை மீனாட்சி அம்மன் கோவில்</a> உள்ளது. இக்கோவில் 13-ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் உருவாக்கப்பட்டது. அப்போது மீனாட்சி அம்மனுக்கு 'திருக்காமக் கோட்டம் உடைய ஆளுடைய நாச்சியார்' என்பதுதான் பெயராக இருந்தது. 1752-ம் ஆண்டிலிருந்துதான் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆனது.</p> <h2>மரகதவல்லி</h2><p>மீனாட்சி அம்மனின் சிலை, சுத்த மரகத கல்லால் ஆனதாகும். இதனால் அன்னைக்கு 'மரகதவல்லி' என்ற பெயரும் உண்டு. சிவபெருமான் நடனமாடியதாக கூறப்படும் ஐம்பெரும் சபைகளில் மீனாட்சியம்மன் கோவிலும் ஒன்று. மற்ற எல்லா இடங்களிலும் இடது காலை தூக்கி நடனமாடும் நடராஜர், இங்கு மட்டுமே வலது காலை தூக்கிவைத்து நடனமாடுகிறார்.</p> <h2>பிரியாவிடை அம்மன்</h2><p>பொதுவாக அனைத்து சிவத்தலங்களிலும் உற்சவ மூர்த்தியாக சோமாஸ்கந்தர் (சிவன், உமை, முருகன்) இருப்பார். ஆனால் மதுரையில் மட்டும் இறைவனுடன் எப்போதும் இணைந்தே இருக்கும் பிரியாவிடை அம்மன் இருக்கிறார்.</p><h2>பூப்புனித நீராட்டு விழா</h2><p>மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தன்று மீனாட்சியம்மனுக்கு பூப்புனித நீராட்டு விழா நடக்கும். இது, கருவறை உள்ளேயே நடத்தப்படுவதால் வெளியே தெரிவதில்லை. மதுரை பகுதியில் எப்படி வீடுகளில் பூப்புனித நீராட்டு விழா நடக்குமோ அப்படியே நடக்கும்.</p> <h2>வைரக் கிரீடம்</h2><p>மீனாட்சி அம்மனுக்குச் சூட்டப்படும் வைரக் கிரீடம் சுமார் 400 காரட் எடையுள்ளது. தங்கக் கவசம் சுமார் 6 கிலோ தங்கத்தால் ஆனது. முத்து விதானம், நீலமேகப் பதக்கம், தங்க அங்காடி, முத்து, நவரத்தினக் கிரீடங்கள், நற்பவளக் கொடி, விலை உயர்ந்த காசுமாலைகள் முதலிய நகைகளும் உள்ளன. நளமகாராஜா, பாண்டிய, நாயக்க மன்னர்கள் மற்றும் கிழக்கிந்தியக் கம்பெனி காலத்து நகைகளும் மதுரை மீனாட்சியம்மனுக்குச் சொந்தமானவை.</p> <h2>பீட்டர் பாதுகம்</h2><p>1812-1828-ம் ஆண்டு வரை மதுரை கலெக்டராக இருந்தவர், ரவுஸ் பீட்டர். ஒரு முறை மீனாட்சி அம்மன் சிறுமி வடிவில் வந்து, இவரின் உயிரை காப்பாற்றியதற்கு நன்றிக் கடனாக அம்மனுக்கு தங்கத்தால் ஆன காலணிகளை பரிசாக அளித்தார். அதில் பீட்டர் என்ற தன் பெயரையும் பொறித்திருந்தார். இன்றும் சித்திரை உற்சவ நாளில் மீனாட்சி அம்மனின் பாதங்களில் இந்த காலணி அணிவிக்கப்படுகிறது. இந்த பாதுகம் 'பீட்டர் பாதுகம்' என்று அழைக்கப்படுகிறது.</p> <p>தீபாவளி அன்று, காலையிலும், மாலையிலும் மீனாட்சி அம்மனுக்கு தங்கப் புடவையும், சொக்கநாதருக்கு வைர நெற்றி பட்டையும் சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சி தருவார்கள். <a href="https://www.maalaimalar.com/spirituality/madurai-meenakshi-amman-temple-specials">மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்</a> ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை, தமிழ்ப் புத்தாண்டு, தீபாவளி ஆகிய 3 நாட்கள் மட்டும் மூலவர் மீனாட்சி அம்மனுக்கு தங்கப் புடவை அணிவிக்கப்படும்.</p> <h2>நகரா முரசு இசைக்கருவி</h2><p>மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கி.பி.1700-ம் ஆண்டு முதல் இன்று வரை தினமும் இரண்டு முறை 'நகரா முரசு' என்ற இசைக் கருவி ஒலிக்கிறது. </p><p>கோவிலின் கிழக்குக் கோபுரம் எதிரில் உள்ள நகரா மண்டபத்தில் தினமும் காலை 4.30 மணி முதல் 5 மணிக்குள்ளும், மாலை 4 மணி முதல் 4.30 மணிக்குள்ளும் இந்த நகரா முரசு ஒலிக்கும். மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாள் ஏற்பாடு செய்த இந்த நகரா முரசு, கோவில் நடை திறக்கப்படுவதை அறிவிக்க ஒலிக்கப்படுகிறது.</p> <h2>சிவலிங்கம்</h2><p>அம்மன் சன்னிதி பிரகாரத்தில் சிதைந்த நிலையில் ஒரு சிவலிங்கம் உள்ளது. கி.பி. 1330-ம் ஆண்டு அன்னிய படையெடுப்பின்போது, இக்கோவிலில் தாக்குதல் நடக்கலாம் என்று எண்ணிய பக்தர்கள், இந்த லிங்கத்தை மண்ணால் மூடி வைத்தனர். அந்த தாக்குதலில் இருந்து தப்பிய லிங்கம் தான் இது.</p>  <h2>அஷ்டமி சப்பரம் விழா</h2><p>உலக ஜீவராசிகள் அனைத்திற்கும் படி அளக்கும் ஈச ஈசனின் லீலையின் அடையாளமாக ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் அஷ்டமி சப்பரம் விழா நடைபெறும். அன்று மீனாட்சி - சுந்தரேஸ்வரர் இருவரும் சப்பரத்தில் மதுரை வெளி வீதிகளில் பவனி வருவர். சிவாச்சாரியார்கள் அரிசியை தூவிக்கொண்டு முன் செல்ல, அந்த சப்பரத்தை பெண்கள் மட்டுமே இழுத்து செல்கின்றனர்.</p><h2>முக்கனி அபிஷேகம்</h2><p>ஆனி பவுர்ணமி அன்று, மீனாட்சியம்மனுக்கு உச்சக் கால பூஜையில் முக்கனி அபிஷேகம் செய்கின்றனர். கோவிலில் அம்மன், சுவாமிக்கென ஏராளமான நகைகள் இருந்தாலும், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்திற்கு என பிரத்யேக ஆபரணங்கள் அணிவித்து வருவது இன்றும் வழக்கத்தில் உள்ளது. திருக்கல்யாணம் அன்று மட்டும் அம்மனுக்கு பிட்டத்தகடு அதாவது அம்மனின் பின் பகுதியில் பொருத்தப்படும் கவசங்கள் அணிவிக்கப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான அரசு பத்திரங்கள் விற்பனை: இந்திய ரிசர்வ் வங்கி</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/rbi-to-sell-rs-1-lakh-crore-government-bonds-to-control-liquidity</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/rbi-to-sell-rs-1-lakh-crore-government-bonds-to-control-liquidity#comments</comments><guid isPermaLink="false">8d99fe29-7b09-497d-9417-2b31d52a851b</guid><pubDate>Wed, 16 Sep 2026 08:22:32 +0000</pubDate><atom:updated>2026-09-16T08:22:32.825Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>reserve bank,பணவீக்கம்,inflation,ரிசர்வ் வங்கி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/ezu6h5uy/Your-paragraph-text-4.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ RBI bond sale of ₹1 lakh crore]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/ezu6h5uy/Your-paragraph-text-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் அதிகரித்து வரும் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக, இந்திய ரிசர்வ் வங்கி தனது அரசு பத்திரங்களை விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து இந்திய பத்திரங்களின் விலை சரிந்து காணப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF">இந்திய ரிசர்வ் வங்கியின்</a> கீழ் செயல்படும் வங்கிகள் அரசு பத்திரங்களை (soverign notes) பொதுமக்களிடம் நேரடியாக விற்பனை செய்கின்றன. </p><p>நாட்டில் தற்போது பணப்புழக்கம் அதிகரித்து (inflation) காணப்படுகிறது; மேலும் எண்ணெய் இறக்குமதி விலைகளும் அதிகரித்து, அடுத்த மாதம் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கான வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது.</p><p>இந்தியாவின் பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 2 முதல் 6 சதவீதம் வரை அதிகரித்து காணப்பட்டது.</p><p>உலகளாவிய விற்பனை சரிவில் உள்நாட்டு பத்திரங்களும் இணைந்ததால், 2036-ஆம் ஆண்டில் முதிர்வடையும் 6.94 சதவீதப் பத்திரத்தின் மீதான வருவாய் 7 அடிப்படைப் புள்ளிகள் உயர்ந்து 7.09 சதவீதமாக காணப்பட்டது.</p><p>மேலும் 2031-ஆம் ஆண்டில் முதிர்வடையும் 6.36 சதவீதப் பத்திரத்தின் மீதான வருவாய் 16 அடிப்படைப் புள்ளிகள் உயர்ந்து 6.78 சதவீதமாக உள்ளது.</p><p>தேசிய அளவில் அடுத்த ஆறு மாதங்களில் கிட்டத்தட்ட சுமார் 8 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன்கள் வாங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.</p><h3><strong>1 லட்சம் கோடி கடன் பத்திரங்கள்</strong></h3><p>இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி, பணவீக்க அபாயங்களை ஏற்படுத்தும், வங்கிகளில் காணப்படும் உபரி பணத்தை திரும்ப பெற முடிவு செய்துள்ளது.</p><p>இதைத்தொடர்ந்து அரசு பத்திரங்களை விற்பனை செய்து, அதன்மூலம் வங்கிகளிடம் இருந்து ரூ.1 லட்சம் கோடி பணத்தை திரும்ப பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.</p><h3><strong>கரூர் வைஸ்யா வங்கி கருவூல தலைவர்</strong></h3><p>இந்திர ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு குறித்து கரூர் வைஸ்யா வங்கி கருவூல தலைவர் வி.ஆர்.சி. ரெட்டி கூறுகையில், “இந்த முடிவு, இந்திய ரிசர்வ் வங்கி இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகளிலேயே மிகவும் கடுமையானதாகும்.</p><p>இதனால், அதிக மதிப்புடையதாக இருந்த ஐந்தாண்டு பத்திரப் பிரிவுதான் தர்க்கரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறுகிய காலப் பத்திரங்களின் வருவாய் அதிகரிக்கும்போது, வருவாய் வளைவு மேலும் அதிகரிக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.</p><p>ஐந்தாண்டு மற்றும் பத்து ஆண்டுப் பத்திரங்களின் வருவாய்க்கு இடையிலான இடைவெளி சுமார் 20-30 அடிப்படைப் புள்ளிகள் அளவில் நிலைபெறக்கூடும்” என்று குறிப்பிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>விஜய் சேதுபதி பேசுவதால் அரசியல் மாறிவிடாது!- ஆனால் பெயரை குறிப்பிட்டு பேசட்டும்:  கனிமொழி எம்.எல்.ஏ. சவால்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-mla-challenge-vijay-sethupathi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-mla-challenge-vijay-sethupathi#comments</comments><guid isPermaLink="false">910dbdda-593b-4840-bba1-673727ba10f8</guid><pubDate>Wed, 16 Sep 2026 08:19:37 +0000</pubDate><atom:updated>2026-09-16T08:19:37.949Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய் சேதுபதி,Vijay sethupathi,tvk,Kanimozhi Santhosh,கனிமொழி சந்தோஷ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/ecu2jf5i/kanimozhisanthosh.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விஜய் சேதுபதி- கனிமொழி சந்தோஷ்]]></media:title><media:description type="html"><![CDATA[ விஜய் சேதுபதி- கனிமொழி சந்தோஷ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/ecu2jf5i/kanimozhisanthosh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>விஜய் சேதுபதி பேசுவதால் மட்டும் அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. இந்த அரசின் செயல்பாடுகளை மக்கள் நேரடியாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களிடம் சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றுக்கு தீர்வு காண்பதே எங்களுடைய முக்கிய நோக்கம் என்று கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார்.</strong></em> </p><p>கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் செரையம்பாளையம் - நீலாம்பூர் இடையே மீண்டும் பேருந்து சேவை தொடங்கப்பட்ட நிகழ்ச்சிக்குப் பின்னர், தொகுதியில் மேல்நிலைப் பள்ளி அமைப்பது மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF">விஜய் சேதுபதி</a> தெரிவித்த கருத்துகள் குறித்து எம்.எல்.ஏ.  கனிமொழி சந்தோஷ் செய்தியாளர்களிடம் பதிலளித்தார். அதன் விவரம் வருமாறு:-</p><figure><img alt="பேருந்து சேவையை தொடங்கி வைத்த கனிமொழி சந்தோஷ்" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/n4k4n1ea/kanimozhi.jpg" /><figcaption>பேருந்து சேவையை தொடங்கி வைத்த கனிமொழி சந்தோஷ்</figcaption></figure><h2><strong>மேல்நிலைப் பள்ளி கொண்டு வர முயற்சி எடுப்போம்</strong></h2><p>செரையம்பாளையம் பகுதியில் மேல்நிலைப் பள்ளி அமைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை குறித்து பேசிய அவர், </p><p>“மாணவர்களின் எண்ணிக்கையை முழுமையாகக் கணக்கில் எடுத்துக்கொண்டு, அதற்கான முக்கியத்துவத்தை வழங்குவோம். அந்தப் பகுதியில் மேல்நிலைப் பள்ளி கொண்டு வருவதற்கான முயற்சிகளை நிச்சயமாக மேற்கொள்வோம்” என்றார்.</p><p>பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி தெரிவித்த தலைமைத்துவம் தொடர்பான கருத்துகள் அரசியல் விவாதமாக மாறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது,</p><p>“பிக் பாஸ் என்பது ஒரு கேளிக்கை நிகழ்ச்சி. ஜனநாயக நாட்டில் அரசியல் விமர்சனம் செய்வதற்கான கருத்துரிமை அனைவருக்கும் இருக்கிறது. யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம்” என்று தெரிவித்தார்.</p><h2><strong>தலைவர் விஜய் பெயரை குறிப்பிட்டு பேசட்டும்; மக்கள் பதில் சொல்வார்கள்!</strong></h2><p>மேலும் பேசிய <a href="https://www.maalaimalar.com/topic/கனிமொழி-சந்தோஷ்">கனிமொழி சந்தோஷ்</a>,</p><p>“குறிப்பிட்ட ஒரு கட்சியின் மீது குற்றச்சாட்டு வைக்க வேண்டும் என்றால், அந்தக் கட்சியின் பெயரை குறிப்பிட்டு பேசலாம். எங்கள் தலைவர் விஜய் அவர்களின் பெயரை குறிப்பிட்டு பேசட்டும். அதற்கு மக்கள் தங்களுடைய பதிலைச் சொல்வார்கள்.”</p><p>“ஒரு நிகழ்ச்சியில் பொதுவாக பேசப்படும் கருத்துகளை அரசியல் ரீதியாக மக்கள் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பது வேறு விஷயம். ஆனால், அரசியல் விமர்சனம் என்றால் அது வெளிப்படையாக இருக்க வேண்டும்” என்றார்.</p><p>மேலும் அவர், “விஜய் சேதுபதி பேசுவதால் மட்டும் அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. இந்த அரசின் செயல்பாடுகளை மக்கள் நேரடியாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களிடம் சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றுக்கு தீர்வு காண்பதே எங்களுடைய முக்கிய நோக்கம்.”</p><h2><strong>இந்த அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறது</strong></h2><p>“இந்த அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. மக்களின் தேவைகள் என்ன என்பதை அறிந்து, அதற்கேற்ப திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். கவுண்டம்பாளையம் தொகுதியிலும் நீண்ட நாட்களாக தீர்வு காணப்படாமல் இருந்த கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன” என்றார்.</p><h2><strong>மக்கள் உண்மைத்தன்மையை ஏற்றுக்கொண்டுள்ளனர்</strong></h2><p>“அரசியலில் யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம். ஆனால் இறுதியில் மக்கள் எதை உண்மை என்று ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம். மக்கள் நேரடியாக காணும் செயல்பாடுகளின் அடிப்படையில்தான் தங்களது முடிவுகளை எடுப்பார்கள்” என்று கனிமொழி சந்தோஷ் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>பாலஸ்தீனத்தை விடுவியுங்கள் என்று கூறிய ராப் பாடகர் - அமெரிக்க இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை </title><link>https://www.maalaimalar.com/news/world/free-palestine-remark-rapper-banned-from-us-shows</link><comments>https://www.maalaimalar.com/news/world/free-palestine-remark-rapper-banned-from-us-shows#comments</comments><guid isPermaLink="false">03ae9a3b-bcbf-43df-8cb2-db3b0d71bd01</guid><pubDate>Wed, 16 Sep 2026 08:17:35 +0000</pubDate><atom:updated>2026-09-16T08:17:35.538Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,America,palestine,Rapper,பாலஸ்தீன்,பாடகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/v5fctvs1/Your-paragraph-text-5.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Palestine Support Rapper Ban]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/v5fctvs1/Your-paragraph-text-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவில் ‘எட் ஷீரன்’ நடத்தும் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராப் பாடகரான மேக்லமோர், பாலஸ்தீன் நாட்டுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததை தொடர்ந்து, அமெரிக்காவில் நடைபெறவுள்ள மற்ற நிகழ்ச்சிகளில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE">அமெரிக்காவில்</a> இசைக் கலைஞரான எட் ஷீரன் மொத்தம் 10 இடங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளார். அதில் இரண்டு இசை நிகழ்ச்சிகள் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், அடுத்த இசை நிகழ்ச்சி பிலடெல்பியாவில் செப்டம்பர் 19 அன்று  மீண்டும் தொடங்க உள்ளது.</p><p>இந்த நிலையில் அமெரிக்காவில் முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில், “பாலஸ்தீனத்தை விடுவி” என்ற கருத்தை ராப் பாடகர் மேக்லமோர் கூறியிருந்தார். அவர் தெரிவித்த இந்த கருத்து இணையத்தில் வெளியாகி சர்ச்சையானது.</p><h3><strong>பாலஸ்தீனத்தை விடுவி</strong></h3><p>மேலும் மேக்லமோர் அந்த இசை நிகழ்ச்சியில், “நான் இந்தச் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள விரும்பியதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, இது போன்ற அரங்கங்களில் எழுந்து நின்று, என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமான இரண்டு வார்த்தைகளைச் சொல்வதற்காகத்தான்.</p><p>'பாலஸ்தீனத்தை விடுவி, பாலஸ்தீனத்தை விடுவி' என்ற வார்த்தைகள் உரக்கத் தெளிவாக ஒலிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அப்போதுதான், காசாவில் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை வரை உள்ள மக்கள், நாங்கள் அவர்களை மறக்கவில்லை என்பதை அறிந்துகொள்வார்கள்” என்று கூறினார்.</p><p>அவர் தெரிவித்த கருத்து இணையத்தில் வெளியாகி சர்ச்சையானதை தொடர்ந்து, அமெரிக்காவில் நடக்க இருக்கும் மற்ற நிகழ்ச்சிகளில் மேக்லமோர் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><h3><strong>எட் ஷீரன் அறிக்கை</strong></h3><p>இந்த நிலையில் மேக்லமோர் தனது இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில், எட் ஷீரன் பதிவு ஒன்றை வெளியிட்டார்.</p><p>அவர் அந்த பதிவில், “நியூஜெர்சியில் நடந்த எனது நிகழ்ச்சிகளில் மேக்லெமோரின் நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, அவர் தொடர்ந்து துணைக்கலைஞராக பங்கேற்றால், எனது வரவிருக்கும் சுற்றுப்பயணத் தேதிகளில் நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிடுவோம் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.</p><p>அவர் கூறிய அனைத்தையும் அடிப்படையாகக் கொண்டிராமல், தனது நிகழ்ச்சியின் போது மேக்லெமோர் தனது செய்தியின் ஒரு பகுதியை வெளிப்படுத்திய விதத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த நிலைப்பாடு எடுக்கப்பட்டது என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது.</p><p>மேக்லெமோர் சுற்றுப் பயணத்திலிருந்து விலகியது நிகழ்ச்சி ஏற்பாட்டாளரின் முடிவு; அது என்னுடையதல்ல. சுற்றுப்பயணத்திற்கான ஒப்பந்தம் மேக்லெமோருடையது, என்னுடையது் அல்ல.</p><p>திட்டமிட்டிருந்த ரசிகர்களை நான் ஒருபோதும் கைவிட மாட்டேன்; அதேபோல், வேலைக்காகவும் வாழ்வாதாரத்திற்காகவும் என்னைச் சார்ந்திருக்கும் சுற்றுப்பயணக் குழுவினரையும், மற்ற துணைக்கலைஞர்களையும், இசைக்கலைஞர்களையும் நான் கைவிட மாட்டேன்," என்று அவர் பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தலில் பாமகவின் ஆதரவு யாருக்கு?- அன்புமணி விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/who-will-pmk-support-in-the-by-election-anbumani-explains</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/who-will-pmk-support-in-the-by-election-anbumani-explains#comments</comments><guid isPermaLink="false">fcef2726-0572-4ee1-ae06-ccf65c25dbd2</guid><pubDate>Wed, 16 Sep 2026 08:15:34 +0000</pubDate><atom:updated>2026-09-16T08:15:34.574Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,anbumani,பாமக,அன்புமணி ராமதாஸ்,ByElection,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/5gqmad67/Anbumani.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anbumani ramadoss]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/5gqmad67/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் வரும் ஆக்போடர் 6ம் தேதி நடைபெறும் 2 தொகுதி இடைத்தேர்தலில், பாமகவின் ஆதரவு கோரி தவெக, திமுக, அதிமுக உங்களை அணுகியதா என்கிற கேள்விக்கு அன்புமணி ராமதாஸ் பதில் அளித்துள்ளார்.  </p><p>சென்னை கிண்டியில் பாமக தலைவர் அன்புமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><h2>முதலமைச்சர் லண்டன் பயணம்</h2><p>லண்டனில் முதலமைச்சர் ஒப்பந்தம் செய்த நிறுவனம் சென்னையில் 30 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.</p><p>லண்டன் சென்று முதலமைச்சர் விஜய் போட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இங்கேயே செய்திருக்கலாம்.</p><h2>புதிய தலைமை செயலகம் </h2><p>பட்டினபாக்கத்தில் தலைமை செயலகம் கட்டும் முடிவு மிக மிக தவறானது. அதனை தமிழக அரசு கைவிட வேண்டும்.</p><p>பட்டினப்பாக்கம் ஒரு குறுகிய பகுதி. சென்னைக்கு வெளியில் ஆயிரம் ஏக்கரில் நிர்வாக நகரம் அமைக்கலாம்.</p><h2>இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு?</h2><p>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் பாமக போட்டியிடாது.</p><p>இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.</p><p>பரந்தூரில் விமான நிலையத்திற்கு பதில் சிப்காட் வந்தால் சுற்றுச்சூழல் பாதிக்காதா?</p><p>பரந்தூரில் எந்த தொழிற்பேட்டையும் அமைக்கக்கூடாது, அப்படி அமைக்க நினைத்தால் நானே போராடுவேன்.</p><p>மக்களுக்கு திமுக, அதிமுகவை பிடிக்கவில்லை, அதனால்தான் முதல்வராக விஜயை மக்கள் தேர்வு செய்துள்ளனர்.</p><p>மீண்டும் மீண்டும் பழைய அரசை பழி சொல்வதை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வ நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.</p><p>நீங்கள் அவர்களை குறை சொல்வது, அவர்கள் உங்களை குறை சொல்வதும் போதும், மக்கள் குறைகளை களைய நடவடிக்கை எடுங்கள்.</p><p>வேலையில்லா திண்டாட்டம், நீர் மேலாண்மை, விவசாயிகளின் துன்பத்தை போக்க நடவடிக்கை எடுங்கள்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>டிசம்பரில் கரம்பிடிக்கிறார்கள் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்-பிரியா சரோஜ்! </title><link>https://www.maalaimalar.com/sports/rinku-singh-priya-saroj-to-tie-the-knot-in-december</link><comments>https://www.maalaimalar.com/sports/rinku-singh-priya-saroj-to-tie-the-knot-in-december#comments</comments><guid isPermaLink="false">b29dc65c-d65b-4344-9c08-dea683f21b19</guid><pubDate>Wed, 16 Sep 2026 08:11:08 +0000</pubDate><atom:updated>2026-09-16T08:11:08.782Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>rinku singh,Priya Saroj,ரிங்கு சிங்,லக்னோ,lucknow,Machhlishahr,பிரியா சரோஜ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/vtfmtcso/rimj.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rinku Singh-Priya Saroj  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/vtfmtcso/rimj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ரிங்கு சிங்-பிரியா சரோஜ் ஜோடியின் திருமணம் வரும் டிசம்பர் 4-ஆம் தேதி உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள பிரபல 'ரமாடா'  நட்சத்திர ஹோட்டலில் நடைபெறுகிறது.</p><p>இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சி எம்பி <a href="https://www.maalaimalar.com/sports/cricket/india-to-meet-srilanka-today-in-womens-asia-cup-final">பிரியா சரோஜ் </a>ஆகியோரின் திருமணம் வரும் டிசம்பர் மாதம் கோலாகலமாக நடைபெறவுள்ளது. நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்தத் திருமணத்தின் அதிகாரப்பூர்வ தேதியும், அது நடைபெறும் இடமும் தற்போது வெளியாகியுள்ளது.</p><h2>டிசம்<strong>பர் 4-ல் லக்னோவில் திருமண</strong> விழா</h2><p>ரிங்கு சிங்-பிரியா சரோஜ் ஜோடியின் திருமணம் வரும் டிசம்பர் 4-ஆம் தேதி உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள பிரபல 'ரமாடா'  நட்சத்திர ஹோட்டலில் நடைபெறுகிறது. இரு குடும்பத்தினரின் முழுச் சம்மதத்துடன் நிச்சயிக்கப்பட்டுள்ள இந்தத் திருமண விழாவில், முக்கிய கிரிக்கெட் வீரர்கள், சமாஜ்வாதி கட்சியின் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.</p><p>கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூன் 8-ஆம் தேதி லக்னோவில் உள்ள 'தி சென்ட்ரம்' ஹோட்டலில் இருவருக்கும் மிகவும் விமரிசையாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சோஷியல் மீடியா வாயிலாக அறிமுகமாகி காதலிக்க தொடங்கிய இந்த ஜோடி, சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்த நிலையில், தற்போது இல்லற வாழ்க்கையில் இணையவுள்ளனர்.</p><h2>யார் இந்த ரி<strong>ங்கு சிங் மற்றும் பி</strong>ரியா சரோஜ்?</h2><p>ரிங்கு சிங் உத்தரப்பிரதேசத்தின் அலிகார் பகுதியைச் சேர்ந்தவர், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள் விளாசி இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். தற்போது இந்திய டி20 அணியின் முக்கிய 'பினிஷராக' திகழ்ந்து வருகிறார். உத்தரப்பிரதேச மாநிலம் மசாலிஷஹர் தொகுதி எம்பியான பிரியா சரோஜ், கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று இந்தியாவின் மிக இளம் வயது எம்பிக்களில் ஒருவராகச் நாடாளுமன்றத்திற்குத் தேர்வானவர். இவர் முன்னாள் எம்பி தூபானி சரோஜின் மகளாவார்.</p><p>நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவீட்டாரும் இணைந்து திருமணத் தேதியை இறுதி செய்துள்ளதை அடுத்து, கிரிக்கெட் ரசிகர்கள்  இத்தம்பதியினருக்குத் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.                             </p>]]></content:encoded></item><item><title>கோவையில் லாட்டரி டிக்கெட் விற்பனை – 3 பெண்கள் உள்பட 6 பேர் கைது!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/whatsapp-banned-kerala-onam-bumper-lottery-sales-six-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/whatsapp-banned-kerala-onam-bumper-lottery-sales-six-arrested#comments</comments><guid isPermaLink="false">6219d919-4095-4687-b100-082087a0906a</guid><pubDate>Wed, 16 Sep 2026 08:00:13 +0000</pubDate><atom:updated>2026-09-16T08:00:13.306Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,Kerala Lottery,லாட்டரி டிக்கெட்,Lottery ticket,fake lottery ticket sale,WhatsApp Scam</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/g27j0me6/Lottery-Ticket-Sale" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Lottery Ticket Sale]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/g27j0me6/Lottery-Ticket-Sale?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள மாநில <a href="https://www.maalaimalar.com/topic/lottery-ticket">லாட்டரி சீட்டுகளை</a> வாட்ஸ்-அப் செயலி மூலம் சட்டவிரோதமாக விற்பனை செய்த வழக்கில், 3 பெண்கள் உட்பட 6 பேரை கோயம்புத்தூர் மாவட்ட ஆனைமலை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். </p><p>அவர்களிடமிருந்து ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 5,900 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.</p><h2><strong>ரகசிய தகவல்</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88">கோவை </a>மாவட்டம் ஆனைமலை பாரதி நகரைச் சேர்ந்த கவுதம் (34) என்பவர், கேரள மாநில எல்லையான மீனாட்சிபுரம் பகுதியில் லாட்டரி சீட்டு கடை நடத்தி வருகிறார். </p><p>இவர் தமிழக எல்லையான ஆனைமலை பகுதியில் உள்ள தனது வீட்டில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகளைப் பதுக்கி வைத்து, வாட்ஸ்-அப் செயலி மூலம் தமிழக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருவதாக கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.</p><h2><strong>5,900 லாட்டரிகள் பறிமுதல்</strong></h2><p>ஆனைமலை போலீசார் தலைமையில், போலீசார் அடங்கிய தனிப்படையினர் கவுதமின் வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.</p><p>அப்போது அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, தமிழகத்தில் தடை செய்யப்பட்ட 5,900 கேரள மாநில லாட்டரி சீட்டுகளை போலீசார் கண்டுபிடித்துப் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளின் மதிப்பு சுமார் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் என்று கண்டறியப்பட்டது.</p><h2><strong><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF">ஆன்லைன் </a>வியாபாரம்</strong></h2><p>போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. </p><p>கைது செய்யப்பட்ட கவுதம் மற்றும் அவரது உறவினர்களான ஜெயசவுந்தராயன் (32), ஜீவானந்தம் (26) ஆகியோர் இணைந்து, கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 'ஓணம் பம்பர்' லாட்டரி சீட்டுகளின் புகைப்படங்களை வாடிக்கையாளர்களின் வாட்ஸ்-அப் எண்களுக்கு அனுப்பி வந்துள்ளனர்.</p><p>பரிசு விழுந்தால் பெரும் தொகை கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி, ஆன்லைன் மூலம் பணத்தைப் பெற்றுக்கொண்டு இந்தச் சட்டவிரோத விற்பனையில் ஈடுபட்டதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.</p><h2><strong>6 பேர் கைது: நீதிமன்றத்தில் ஆஜர்</strong></h2><p>இந்தச் சட்டவிரோத கும்பலைச் சேர்ந்த கவுதம், ஜெயசவுந்தராயன், ஜீவானந்தம் மற்றும் இவர்களுக்குத் துணையாக இருந்த 3 பெண்கள் என <strong>மொத்தம் 6 பேரை</strong> போலீசார் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.</p><p>கைது செய்யப்பட்ட 6 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பதற்கான பணிகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழக-கேரள எல்லைப் பகுதியில் வாட்ஸ்-அப் மூலம் பம்பர் லாட்டரி விற்ற கும்பல் சிக்கிய சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&apos;எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம்&apos;: நீரிழிவு மருந்து உற்பத்தி நிறுவனங்களிடம் பாஜக நன்கொடை- மனோ தங்கராஜ் ஆவேசம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/profit-from-burning-house-bjp-diabetes-drug-donations</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/profit-from-burning-house-bjp-diabetes-drug-donations#comments</comments><guid isPermaLink="false">9898f70b-97c0-4025-8387-c53e7e19755d</guid><pubDate>Wed, 16 Sep 2026 07:45:55 +0000</pubDate><atom:updated>2026-09-16T07:45:55.966Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,மனோ தங்கராஜ்,Mano Thangaraj,Lupin,USV,Sun Pharma,Right to Health,Torrent,நீரிழிவு மருந்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/o14jlv23/MANO.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mano Thangaraj ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/o14jlv23/MANO.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மருந்து நிறுவனங்கள் தங்களது பிராண்ட் மருந்துகளை நோயாளிகளுக்குப் பரிந்துரை செய்ய வைக்க, மருத்துவர்களைக் கவர பல்வேறு வழிமுறைகளைக் கையாள்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>இந்தியாவில் நீரிழிவு (சர்க்கரை) நோய்க்கான மருந்துகளை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் முன்னணி மருந்து நிறுவனங்கள் (Pharma Companies), ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு தேர்தல் பத்திரங்கள் மற்றும் நன்கொடைகள் மூலம் ரூ.400 கோடிக்கும் அதிகமான தொகையை வழங்கியுள்ளதாக திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் தளப் பதிவில் மிகக் கடுமையான குற்றச்சாட்ட முன்வைத்துள்ளார். </p><p>இந்தியாவில் நீரிழிவு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து, வீடுகள்தோறும் சர்க்கரை நோயாளிகள் பெருகிவரும் இந்த வேளையில், மக்களின் உடல்நலப் பிரச்சனையை வைத்து அரசியல் கட்சிகள் நிதி திரட்டுவது மக்கள் நலனுக்கே எதிரானது என்று சாடியுள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-condemned-anbil-mahesh-house-raid">மத்திய பாஜக அரசு</a> Production Linked Incentive (PLI) திட்டத்தின் கீழ், இந்த குறிப்பிட்ட மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ.6,000 கோடிக்கும் அதிகமான தொகையை அரசு மானியமாக வழங்கியுள்ளது. 2024-25ஆம் ஆண்டின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இந்தியாவில் சர்க்கரை நோய்க்கான மருந்துகளின் சந்தை மதிப்பு மட்டும் ரூ.15,000 கோடியை எட்டியுள்ளது. இதில் Sun Pharma, USV, Torrent, Lupin போன்ற முன்னணி பிராண்டுகள் 2025-26 நிதியாண்டில் மட்டும் பல ஆயிரம் கோடி ரூபாயை லாபமாகப் பெற்றுள்ளன.</p><h2>மருத்து<strong>வர்களுக்கா</strong>ன சலுகை</h2><p>இந்த மருந்து நிறுவனங்கள் தங்களது பிராண்ட் மருந்துகளை நோயாளிகளுக்குப் பரிந்துரை செய்ய வைக்க, மருத்துவர்களைக் கவர பல்வேறு வழிமுறைகளைக் கையாள்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதில், விலையுயர்ந்த பரிசுகள் மற்றும் அன்பளிப்புகள்,  வெளிநாட்டுச் சுற்றுலாக்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வரிச்சலுகைகள் மற்றும் இலவச மருந்து சாம்பிள்கள் ஆகியவற்றை சலுகைகளாக வழங்குகின்றன.</p><p>இதன் விளைவாக, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தனிநபரும் தங்கள் வாழ்நாள் முழுவதும் மாதந்தோறும் சராசரியாக ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை மருத்துவச் செலவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். நோயாளிகள் தங்கள் உயிரைக் காப்பாற்றச் செலவிடும் தொகையிலிருந்தே பாஜக தனது கட்சி நிதிக்கான பங்கைப் பெறுகிறது என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><h2>'எரிகிற வீட்<strong>டில் பிடுங்கியது</strong> லாபம்'</h2><p>பாஜக, எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்ற எண்ணத்துடன் கொள்ளையடிக்கிற நோக்கத்தில் குறியாக இருக்கிறது. இந்தியாவில் இப்போது எங்கு பார்த்தாலும் நீரிழிவு நோயாளிகள் இருக்கின்றனர். இந்தியாவில் போலியோ, அம்மை போன்ற பல தீவிர தொற்று நோய்களை வெற்றிகரமாக ஒழித்த வரலாறு உள்ளது. ஆனால், நீரிழிவு நோயை ஒரு பொது சுகாதாரப் பிரச்சனையாக மத்திய அரசு அணுகத் தவறிவிட்டது. </p><p>மாறாக, அதை ஒரு நிதி வசூலிக்கும் வாய்ப்பாகவே ஆளும் பாஜக பார்க்கிறது. சுப்ரீம் கோர்ட்டு தனது முக்கியத் தீர்ப்புகளில், "இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 21-ன் படி வாழ்வுரிமையின் பிரிக்க முடியாத ஒரு பகுதிதான் சுகாதார உரிமை எனத் தெளிவுபடுத்தியுள்ளது. ஆளும் அரசுகள் மக்களுக்கு இந்த சுகாதார உரிமையை இலவசமாகவும் நியாயமான முறையிலும் உறுதி செய்ய வேண்டுமே தவிர, கார்ப்பரேட் லாபத்திற்கும் அரசியல் கட்சி நிதிக்கும் வழியமைக்கக் கூடாது என மனோ தங்கராஜ் தனது வலியுறுத்தியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திருப்பதி கோவிலில் ஒரே நாளில் ரூ.4.70 கோடி உண்டியல் வசூல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/tiruppati-temple-collects-rs-4-70-crore-in-a-day</link><comments>https://www.maalaimalar.com/news/national/tiruppati-temple-collects-rs-4-70-crore-in-a-day#comments</comments><guid isPermaLink="false">c6ca67d5-10e8-4c59-a43f-2fff754bb374</guid><pubDate>Wed, 16 Sep 2026 07:36:44 +0000</pubDate><atom:updated>2026-09-16T07:36:44.330Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திருப்பதி,Tirupati,உண்டியல் காணிக்கை,devotees rush,திருப்பதி கோவில்,Laddu Sales,Donation box collection</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/110lezhu/Tirupati-Temple" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tirupati Temple]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/110lezhu/Tirupati-Temple?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலகப் பிரசித்தி பெற்ற தி<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">ருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு </a>தினந்தோறும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். </p><p>இந்நிலையில், நேற்று திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை, உண்டியல் காணிக்கை மற்றும் லட்டு விற்பனை குறித்த அதிகாரப்பூர்வ விவரங்களைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.</p><h2><strong>61 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்</strong></h2><p>திருப்பதி மலையில் பக்தர்களின் வருகை தொடர்ந்து கணிசமாக அதிகரித்து வருகிறது. தேவஸ்தான புள்ளிவிவரங்களின்படி, நேற்று ஒரே நாளில் மட்டும் 61,000-க்கும் அதிகமான பக்தர்கள் ஏழுமலையானைக் கண்டு தரிசித்துள்ளனர். </p><p>குறிப்பிட்ட தேதி மற்றும் நேரம் அச்சிடப்பட்ட டைம் ஸ்லாட் டோக்கன்கள் இல்லாமல், வழக்கமான இலவச தர்ம தரிசன வரிசையில் சென்ற பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு சுமார் 4 மணி நேரம் வரை காத்திருந்ததாகக் கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><h2><strong>தலைமுடி காணிக்கை மற்றும் உண்டியல் வருவாய்</strong></h2><p>ஏழுமலையானுக்குத் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக நேற்று ஒரே நாளில் 18 ஆயிரத்து 722 பக்தர்கள் தலைமுடி காணிக்கை அளித்துள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">பக்தர்கள் </a>தங்களின் வேண்டுதலாகக் காணிக்கையாகச் செலுத்தியதில், நேற்று ஒரு நாளில் மட்டும் ரூ. 4 கோடியே 70 லட்சம் உண்டியல் வருவாயாக வசூலாகியுள்ளதாகத் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.</p><h2><strong>லட்டு விற்பனை மற்றும் அன்னப்பிரசாதம்</strong></h2><p>திருப்பதிக்கு வரும் பக்தர்களின் முக்கிய அங்கமான பிரசாத விநியோகமும் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது.</p><p>நேற்று ஒரே நாளில் 3 லட்சத்து 20 ஆயிரம் லட்டுகள் பக்தர்களால் வாங்கப்பட்டு விற்பனையாகின.</p><p>திருமலைக்கு வருகை தந்த பக்தர்களில் 1 லட்சத்து 84 ஆயிரம் பேர் தேவஸ்தானம் வழங்கிய இலவச அன்னப்பிரசாதத்தைப் பெற்றுக்கொண்டனர்.</p><p>திருமலையில் உள்ள அஸ்வினி மருத்துவமனையில் நேற்று ஒரே நாளில் 3,189 பக்தர்கள் அவசர மற்றும் பொதுவான மருத்துவச் சிகிச்சைகளைப் பெற்றுப் பயனடைந்துள்ளனர்.</p><p>தற்போது வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ தினங்கள் இல்லாத போதிலும், ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் கூட்டம் சீராகக் காணப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>எனது கேப்டன் பயணம் ஒரு ரோலர் கோஸ்டர் போன்றது..!- ஷ்ரேயஸ் அய்யர்</title><link>https://www.maalaimalar.com/sports/my-captain-journey-like-roller-coaster-shreyas-iyer</link><comments>https://www.maalaimalar.com/sports/my-captain-journey-like-roller-coaster-shreyas-iyer#comments</comments><guid isPermaLink="false">40121a20-889b-47fe-a580-ba001d1bc100</guid><pubDate>Wed, 16 Sep 2026 07:32:45 +0000</pubDate><atom:updated>2026-09-16T07:32:45.335Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா,ஷ்ரேயஸ் அய்யர்,ஆப்கானிஸ்தான்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/3rrwpalj/shreyas-iyer.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Shreyas iyer]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/3rrwpalj/shreyas-iyer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது 20 ஓவர்  போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.</p><h2>160 ரன் இலக்கு </h2><p>டெல்லியில்  நடந்த இந்த ஆட்டத்தில்  முதலில் ஆடிய <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D" rel="nofollow">ஆப்கானிஸ்தான்</a> அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் இந்தியாவுக்கு 160 ரன் இலக்காக இருந்தது.</p><p>கேப்டன்  இப்ராகிம்  ஜத்ரன்  அதிகபட்சமாக   33  பந்தில் 37 ரன்னும் (6 பவுண்டரி),  ரஷீத் கான்  16    பந்தில் 28 ரன்னும் (3  பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.   நிதிஷ் குமார் ரெட்டி  3 விக்கெட்டும், அர்ஷ்தீப்சிங் 2  விக்கெட்டும்,  பும்ரா, அக் ஷர் படேல்,  ரவி பிஷ்னோய் தலா ஒரு விக்கெட்டும்  வீழ்த்தினார்கள்.</p><h2>தொடரை வென்றது </h2><p>பின்னர் விளையாடிய  இந்திய அணி 31 பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் 160 ரன் இலக்கை எடுத்தது. 14.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 163 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.</p><p>சஞ்சு சாம்சன் 22 பந்தில் 57 ரன்னும் (7 பவுண்டரி, 4 சிக்சர்), அபிஷேக் சர்மா 19   பந்தில் 39 ரன்னும் (2 பவுண்டரி, 4 சிக்சர்), இஷான் கிஷன் 23 பந்தில் 38 ரன்னும்  (3  பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். ரஷீத் கான் 3 விக்கெட்டையும் கைப்பற்றினார்.</p><p>இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வென்றது. முதல் ஆட்டத்திலும் இதே மாதிரி 7 விக்கெட்டில் வீழ்த்தி இருந்தது.</p><h2>ஏற்றம்- இறக்கம்</h2><p>தொடரை வென்றது குறித்து இந்திய அணி கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் கூறியதாவது:-</p><p>கடந்த  ஆட்டத்தை  வைத்து இந்த  போட்டியில் ஒரு முழுமையான வெற்றியை  எதிர்பார்த்தோம்.   அதே மாதிரி இந்த ஆட்டம் சிறப்பாக அமைந்தது. </p><p>கேப்டனாக என்னுடைய  பயணத்தில் ஏற்றம் -  இறக்கங்கள் நிறைந்ததாகவே இருந்தது.</p><p>கேப்டனாக என்னுடைய பயணத்தை தொடங்கிய போது கசப்பாக அமைந்தது. அதை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. என்னுடைய பயணம் எப்போதுமே ஒரு ரோலர் கோஸ்டர் போல் தான் மேலே கீழே செல்லும்.</p><h2>சமநிலையான மனநிலை</h2><p>எனவே முடிந்தவரை  சமநிலையான மனநிலையில் இருக்க வேண்டும். சூழ்நிலையை   எவ்வளவு அதிகமாக ஏற்றுக் கொள்கிறீர்களோ அவ்வளவு சிறப்பாக அது அமையும்.</p><p>3-வது  போட்டியில் நிச்சயமாக மாற்றங்கள்  இருக்கும். அணியில் உள்ள அனைவரும் ஆடுகளத்தின் தன்மையைப் புரிந்து கொண்டு பயிற்சி பெற வேண்டும் என்று  விரும்புகிறேன். எனவே இதுவரை விளையாடாத வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமையும்.</p><p>இவ்வாறு ஷ்ரேயஸ் அய்யர் கூறினார்.</p><p>இந்திய அணி கடந்த ஜூன் மாதம் அயர்லாந்தில் 20 ஓவர் தொடரில் ஆடியது. இந்த தொடரில் ஸ்ரேயாஸ் அய்யர் கேப்டனாக அறிமுகம் ஆனார். 2 போட்டியிலும் தோற்று இந்தியா தொடரை இழந்தது. அதைத் தொடர்ந்து இங்கிலாந்து பயணத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் அணி 5 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரை 0-4 என்ற கணக்கில் இழந்தது.</p><p>ஜிம்பாப்வே சுற்றுப் பயணத்தில் 3 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரை கைப்பற்றியது. அவர் தலைமையில் வென்ற முதல் தொடராகும். தற்போது ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் தொடரை சொந்த மண்ணில் கைப்பற்றி உள்ளது.</p><p>ஆப்கானிஸ்தான் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களில் சூர்யவன்ஷி, வாஷிங்டன் சுந்தர், ஹர்சித் ரானா, யாஷ் தாக்கூர் ஆகியோருக்கு இதுவரை வாய்ப்பு வழங்கப்பட வில்லை. நாளைய ஆட்டத்தில் அவர்கள் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>நாளை  கடைசி போட்டி </h2><p>இந்தியா- ஆப்கானிஸ்தான்  அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நாளை (17-ந்தேதி) நடக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்காவில் கோரம்: பேருந்து விபத்தை நேரலை செய்த செய்தி நிறுவன ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 3 பேர் உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/tragedy-in-us-news-helicopter-covering-bus-crash-plummets-killing-three</link><comments>https://www.maalaimalar.com/news/world/tragedy-in-us-news-helicopter-covering-bus-crash-plummets-killing-three#comments</comments><guid isPermaLink="false">17f59d82-b973-4065-8264-84487f2f79f9</guid><pubDate>Wed, 16 Sep 2026 07:19:59 +0000</pubDate><atom:updated>2026-09-16T07:19:59.267Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,America,ஹெலிகாப்டர் விபத்து,Los Angeles,News Chopper crash,News helicopter,லாஸ் ஏஞ்சலஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/6ok3qpbz/los.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ News Chopper crash]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/6ok3qpbz/los.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரில், சாலை விபத்து தொடர்பான செய்தியை நேரலை கவரேஜ் செய்து கொண்டிருந்த NBC4 செய்தி நிறுவனத்தின் ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கியது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/terror-in-iran-plane-shakes-midair-cabin-roof-collapses">லாஸ் ஏஞ்சலஸின்</a> சேட்ஸ்வொர்த் பகுதியில் உள்ள வட மேசன் அவென்யூ அருகில், ஒரு சொகுசு கார் பயணிகள் பயணித்த மெட்ரோ பேருந்து மீது மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் படுகாயமடைந்தனர். இந்தக் கொடூர விபத்து காட்சிகளையும் மீட்புப் பணிகளையும் தொலைக்காட்சி நேரலையாக ஒளிபரப்புவதற்காக ஊடகங்களின் ஹெலிகாப்டர்கள் அப்பகுதியில் பறந்து கொண்டிருந்தன.</p><h2>கட்டுப்பாட்டை இழ<strong>ந்து தீப்பிடித்த ஹெ</strong>லிகாப்டர்</h2><p>அப்போது NBC4 மற்றும் டெலிமுண்டோ 52 தொலைக்காட்சி நிறுவனங்களுக்குச் சொந்தமான 'செய்தி ஹெலிகாப்டர்', வழக்கமான முறையில் மேலிருந்து விபத்துக் காட்சிகளைப் படமாக்கிக் கொண்டிருந்தது. அப்போது திடீரென என்ஜினில் கோளாறு ஏற்பட்டு ஹெலிகாப்டர் தனது கட்டுப்பாட்டை இழந்து வேகமாகத் தரையை நோக்கி சரியத் தொடங்கியது. வர்த்தகக் கட்டடங்களுக்கு இடையே இருந்த கொள்கலன்கள் மற்றும் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது மோதி, ஹெலிகாப்டர் பயங்கர சத்தத்துடன் தீப்பற்றி எரிந்தது.</p><h2><strong>மீட்புப் பணிகள்</strong></h2><p>தகவலறிந்து உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்த லாஸ் ஏஞ்சலஸ் தீயணைப்புப் படையினர், நீண்ட நேரம் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் தரையில் இருந்த ஒருவர் மற்றும் விமானத்தில் பயணித்தவர்கள் உட்பட மொத்தம் 3 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர் முற்றிலும் உருக்குலைந்து போனதால், விபத்துக்குள்ளான நபர்களின் விவரங்களை அடையாளம் காணும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.</p><p>விபத்து ஏற்படுவதற்குச் சில நொடிகளுக்கு முன்பு, ஹெலிகாப்டரின் என்ஜின் சத்தம் மாறியதும், 'மேலே தூக்குங்கள்'  எனக் குரல் எழுப்பிய அதிர்ச்சி தரும் ஆடியோ பதிவும் வெளியாகியுள்ளது. இந்த விபத்து குறித்து அமெரிக்க நாட்டின் தேசியப் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் மற்றும் கூட்டாட்சி விமானப் போக்குவரத்து நிர்வாகம் ஆகியவை இணைந்து விசாரணையைத் தொடங்கியுள்ளன. என்ஜின் கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்ததா அல்லது வேறு ஏதேனும் தொழில்நுட்பக் காரணமா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த இரு பெரும் விபத்துகள் லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய் நாளை காலை சென்னை திரும்புகிறார் - விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-chennai-return-tomorrow-morning</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-chennai-return-tomorrow-morning#comments</comments><guid isPermaLink="false">7400c974-65f8-4bf8-b209-1bfa480c356c</guid><pubDate>Wed, 16 Sep 2026 07:17:43 +0000</pubDate><atom:updated>2026-09-16T07:17:43.797Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,சென்னை விமான நிலையம்,chennai airport</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/4ob1s1as/Vijay05.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய் ]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/4ob1s1as/Vijay05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>லண்டன் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துள்ள முதலமைச்சர் விஜய் நாளை காலை 8 மணிக்கு சென்னை திரும்புகிறார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.</strong></em></p><p>தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்</a>  கடந்த 10-ந்தேதி லண்டன் சென்றார்.  அங்கு நடிகர் அஜித்குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை அவர் தொடங்கி வைத்தார்.</p><p>இந்த நிகழ்ச்சியை முடித்த பிறகு லண்டனில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்யவும், தொழிலை விரிவாக்கம் செய்யவும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அங்கு சுமார் ரூ.12 ஆயிரத்து 300 கோடி அளவுக்கு தொழில் முதலீடுகள், முதலமைச்சர் விஜய் முன்னிலையில்  ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு  கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>லண்டனில் தங்கி உள்ள அவர் முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசி உள்ளார். தனது ரசிகர்களை தி ஷார்ட் நட்சத்திர விடுதியில் சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார்.</p><p>லண்டன் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துள்ள முதலமைச்சர் விஜய் நாளை காலை 8 மணிக்கு சென்னை திரும்புகிறார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>கனடாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை: கோதுமை, கனோலா பயிர்கள் சேதம் - விவசாயிகள் கவலை!</title><link>https://www.maalaimalar.com/news/world/heavy-rains-in-canada-damage-wheat-canola-crops-farmers-worried</link><comments>https://www.maalaimalar.com/news/world/heavy-rains-in-canada-damage-wheat-canola-crops-farmers-worried#comments</comments><guid isPermaLink="false">8778ba58-8c49-42f9-9cc5-3a3867c17827</guid><pubDate>Wed, 16 Sep 2026 07:10:17 +0000</pubDate><atom:updated>2026-09-16T07:10:17.125Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கனடா,canada,crop damage,Canada Rain,கோதுமை உற்பத்தி,Wheat Production,Canola Crops,கனோலா பயிர்கள்,Canada Farmers,Global Grain Market</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/gqy2ft4g/Wheat-CanolaCrops" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Wheat - CanolaCrops ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/gqy2ft4g/Wheat-CanolaCrops?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலகளவில் கோதுமை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி நாடாகத் திகழும் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE">கனடாவில்</a>, பருவம் தவறி பெய்து வரும் கனமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. </p><p>அறுவடைக்குத் தயாராக இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கோதுமை மற்றும் கனோலா பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.</p><h2><strong>கடுமையாகப் பாதிக்கப்பட்ட அறுவடைப் பணிகள்</strong></h2><p>கனடாவில் தற்போது முதல்தர <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88">கோதுமை </a>மற்றும் கடுகு எண்ணெய்க்கான <strong>கனோலா </strong>பயிர்கள் விளைந்து, அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்தன. ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே அங்கு தொடர்ச்சியாகக் கனமழை பெய்து வருகிறது.</p><p>வயல்களில் பல அடி உயரத்திற்குத் தண்ணீர் தேங்கியுள்ளதால், அறுவடைப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் முற்றிலும் திணறி வருகின்றனர். பல வாரங்களாகப் பயிர்கள் நீரிலேயே மூழ்கிக் கிடப்பதால், அவை அழுகி விவசாயிகளுக்குப் பெரும் பொருளாதார நஷ்டத்தை ஏற்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது.</p><h2><strong>பூஞ்சை தொற்று மற்றும் தரக் குறைபாடு அபாயம்</strong></h2><p>தொடர்மழையின் காரணமாக விளைநிலங்களில் தேங்கியுள்ள நீரால் பின்வரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சில பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த கோதுமைப் பயிர்கள் மழைநீரால் தங்களின் இயற்கையான நிறத்தை இழந்து வெளிறிப் போயுள்ளன. </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">வெள்ளப்பெருக்கு</a> அதிகமுள்ள இடங்களில் பயிர்கள் வேரோடு அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பயிர்களில் ஈரப்பதம் அதிகரித்துள்ளதால், பூஞ்சை காளான் தொற்று பரவி ஒட்டுமொத்தப் பயிர்களையும் பாழாக்கிவிடும் என அஞ்சப்படுகிறது.</p><h2><strong>நவம்பர் வரை காத்திருக்கும் விவசாயிகள்</strong></h2><p>மழைப்பொழிவு நீடித்தாலும், <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">கனடா விவசாயிகள் </a>இன்னும் நம்பிக்கையை இழக்கவில்லை. அந்நாட்டில் வழக்கமாக நவம்பர் மாதத்தில்தான் பனி படர்ந்து, மண் உறைந்து போகக் கூடிய குளிர்காலம் தொடங்கும்.</p><p>எனவே, அதற்குள் மழை நின்றுவிட்டால் எஞ்சியிருக்கும் பயிர்களை அறுவடை செய்துவிடலாம் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் காத்துக்கொண்டிருக்கின்றனர். </p><p>எனினும், இந்தத் திடீர் இயற்கைச் சீற்றத்தால் உலகளாவிய கோதுமை மற்றும் கனோலா எண்ணெய் சந்தையில் விலை உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மைசூரு தசரா விழா: தமிழக முதலமைச்சர்  விஜய் பங்கேற்பா?- ஆட்சியர் லட்சுமிகாந்த் பதில்</title><link>https://www.maalaimalar.com/news/national/mysuru-dasara-festival-will-tamil-nadu-cm-vijay-attend-collector-lakshmikant-answers</link><comments>https://www.maalaimalar.com/news/national/mysuru-dasara-festival-will-tamil-nadu-cm-vijay-attend-collector-lakshmikant-answers#comments</comments><guid isPermaLink="false">114cab0e-50e0-44a4-bf69-35097fc5e0c2</guid><pubDate>Wed, 16 Sep 2026 07:03:59 +0000</pubDate><atom:updated>2026-09-16T07:03:59.069Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Chief Minister Vijay,Mysuru Dasara Festival,Jamboo Savari,மைசூரு தசரா விழா,முதலமைச்சர்  விஜய்,ஆட்சியர் லட்சுமிகாந்த்,ஜம்பூ சவாரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/sat86ras/cm.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chief Minister Vijay  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/sat86ras/cm.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மைசூரு  தசரா ஊர்வலத்திற்கு தமிழக முதல்வர் விஜய் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகின. </p><p>உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா திருவிழா தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், கர்நாடக மாநிலம் மைசூருவில் விழா ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விழாவின் முக்கிய அம்சமான 'ஜம்பூ சவாரி' எனப்படும் தசரா யானைகள் ஊர்வலம் அடுத்த மாதம் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது.</p><p>அரண்மனை வளாகத்தில் நடைபெறும் இந்த பிரம்மாண்ட ஊர்வலம் மற்றும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பைக் பொதுமக்கள் நேரில் கண்டு ரசிக்க வசதியாக, சிறப்பு 'தங்க அட்டைகள்' விநியோகிக்கப்பட உள்ளன. இதற்கான கட்டணம் ரூ. 2,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மைசூரு மாவட்ட ஆட்சியர் லட்சுமிகாந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.</p><h2>தென்னி<strong>ந்திய முதல்வர்களுக்கு</strong> அழைப்பு?</h2><p>இந்த தசரா ஊர்வலத்திற்குத் தமிழக முதல்வர் விஜய் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகின. இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஆட்சியர் லட்சுமிகாந்த் ரெட்டி, சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்பது குறித்துக் கர்நாடக அரசுதான் இறுதி முடிவு எடுக்கும் என்றார்.</p><p>"தசரா விழாவில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/breakfast-scheme-expansion-will-chief-minister-vijay-launch-it-in-perambur-on-the-22nd">தமிழக முதல்வர் விஜய்</a> மற்றும் பிற தென்னிந்திய மாநிலங்களின் முதல்வர்கள் கலந்துகொள்வது குறித்து கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் முடிவெடுப்பார். இது தொடர்பான ஆலோசனைகள் உயர்மட்ட அளவில் நடைபெற்று வருகின்றன. தென்னிந்திய முதல்வர்களின் வருகை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தானே வெளியிடுவார்" என்று ஆட்சியர் விளக்கமளித்தார்.</p><h2>விழா <strong>சிறப்புகள்</strong> </h2><p>அடுத்த மாதம் 21-ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறும் ஊர்வலத்தில் ரூ. 2,000 மதிப்பிலான தங்க அட்டையைப் பெறுபவர்கள், அரண்மனை வளாகத்தில் சிறப்பு இருக்கைகளில் அமர்ந்து ஊர்வலத்தைக் காணலாம். ஊர்வலத்தில் கர்நாடகத்தின் கலாசாரம் மற்றும் சாதனைகளை விளக்கும் பல்வேறு வண்ணமயமான ஊர்திகள் அணிவகுப்பில் இடம்பெறும். லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குவிவார்கள் என்பதால், மைசூரு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பரிவார மூர்த்திகளுக்கு விமரிசையாக நடந்த குடமுழுக்கு விழா
</title><link>https://www.maalaimalar.com/spirituality/madurai-meenakshi-amman-temple-parivara-moorthy-kumbhabhishekam</link><comments>https://www.maalaimalar.com/spirituality/madurai-meenakshi-amman-temple-parivara-moorthy-kumbhabhishekam#comments</comments><guid isPermaLink="false">b674fcbe-684c-49b7-b0b9-25b7e21b1445</guid><pubDate>Wed, 16 Sep 2026 06:51:53 +0000</pubDate><atom:updated>2026-09-16T06:51:53.871Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,வழிபாடு,worship,கும்பாபிஷேகம்,Kumbhabhishekam,Madurai Meenakshi Amman temple,மதுரை மீனாட்சி அம்மன் கோவில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/lbvtd1kz/ParivaraMoorthy1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ parivara moorthies]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/lbvtd1kz/ParivaraMoorthy1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுரையின் இளவரசி, கூடல் அழகி என்று பக்தர்களால் போற்றப்படும் மீனாட்சி அம்மன் கோவில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாக பரிந்துரைக்கப்பட்டது. 2,400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில் புராணங்களுடன் வரலாறு மற்றும் இதிகாசங்களையும் உள்ளடக்கி இருக்கிறது.</p> <h2>புனரமைப்பு பணிகள்</h2><p>தமிழ் மொழி, கலாசாரம், பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடைய இந்த கோவிலில் ஆண்டின் அனைத்து தமிழ் மாதங்களையும் முன்னிலைப்படுத்தி திருவிழாக்கள் நடைபெறுகிறது. அதேபோல் கோவிலை சுற்றியுள்ள வீதிகளில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது. </p><h2>மதுரை மீனாட்சி அம்மன் கோவில்</h2><p>வருடத்தின் 12 மாதங்களும் திருவிழா கோலம் பூண்டிருக்கும் <a href="https://www.maalaimalar.com/spirituality/madurai-meenakshi-amman-temple-specials">மதுரை மீனாட்சி அம்மன் கோவில்</a> கும்பாபிஷேகம் கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்றது. அதன் பின் 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு 2023-ம் ஆண்டு முறைப்படி பாலாலயம் செய்யப்பட்டு கோவிலில் புனரமைப்பு பணிகள் நடந்தன.</p><h2>ரூ.35 கோடியில் </h2><p>2018-ம் ஆண்டு கோவிலுக்குள் உள்ள வீரவசந்தராயர் மண்டபம் தீ விபத்தில் சேதமடைந்தது. இந்த மண்டபம் ரூ.35 கோடியில் சீரமைக்கப்பட்டு கடந்த ஆகஸ்டு மாதம் திறந்து வைக்கப்பட்டது.</p><p>கும்பாபிஷேகத்தையொட்டி 2 ஆண்டுகளாக கோவில் புனரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றது. அதன் பணிகள் முடிந்த நிலையில் நாளை (17-ந் தேதி) கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த 6-ந் தேதி வடக்காடி வீதியில் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டன.</p><h2>184 குண்டங்கள்</h2><p>விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழாவில் 11-ந் தேதி முதல் யாக சாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. 184 குண்டங்களில் யாக வேள்விகள் 400-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்களால் நடத்தப்பட்டது. விழாவில் நேற்று காலை 8-ம் கால யாகசாலை பூஜையும், மாலையில் 9-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது. </p> <h2>பரிவார மூர்த்திகள்</h2><p>கும்பாபிஷேகத்தின் முக்கிய நிகழ்வான இன்று கோவிலில் உள்ள பரிவார மூர்த்திகளுக்கு குடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கி பரிவார யாகசாலை பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் பரிவார கலசங்களுடன் புறப்பாடாகினர். பின்னர் 5 மணிக்கு பரிவார மூர்த்திகளின் சன்னதி கோபுரங்களில் உள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/bfz6si2x/ParivaraMoorthy.jpg" /></figure><p><a href="https://www.maalaimalar.com/topic/madurai-meenakshi-amman-temple">மீனாட்சி அம்மன் கோவிலில்</a> பரிவார மூர்த்திகளாக முக்குறுணி விநாயகர், சித்தி விநாயகர், சுப்பிரமணியர், சோமாஸ் கந்தர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை அம்மன், சண்டிகேஸ்வரர், பைரவர், சூரியன் மற்றும் சந்திரன், நவகிரகங்கள், காளி, ஊர்த்தாண்டவ மூர்த்தி,  63 நாயன்மார்கள், சரஸ்வதி மற்றும் லெட்சுமி, வெள்ளியம்பல நடராஜர், சந்திரசேகரர், பிரதோஷ நாயனார் உள்ளிட்ட 4147 தெய்வங்கள் உள்ளனர். இவர்களின் சன்னதியில் இன்று குடமுழுக்கு நடைபெற்றது.</p><p>முன்னதாக கோவிலில் உள்ள தங்க கொடி மரத்திற்கும் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர்.</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/jdgtojke/kodimaram.jpg" /></figure> <h2>நாளை கும்பாபிஷேகம்</h2><p>விழாவின் சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது. அதிகாலை 4 மணி முதல் 5.45 மணி வரை 12-ம் கால யாகவேள்வி நடக்கிறது. பின்பு கலசங்கள் புறப்படாகி 7.40 மணிக்கு மீனாட்சி, சுந்தரேசுவரர் சன்னதிகளில் தங்க விமானங்கள் மற்றும் ராஜகோபுர கலசங்களுக்கு ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 7.55 மணிக்கு மூலவர்கள் மீனாட்சி அம்மனுக்கும், 8.10 மணிக்கு சுந்தரேசுவருக்கும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.  இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.</p> <h2>மதுரை நகர்</h2><p>கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த ஒரு வார காலமாகவே மதுரை நகர் விழாக்கோலம் பூண்டுள்ளது. அழகுக்கு அழகு சேர்க்கும் வகையில் மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, இரவு நேரங்களில் மனதை கவரும் வகையில் ஒளி வெள்ளத்தில் காட்சியளிக்கிறது. மேலும் கோவில் மற்றும் நகரின் பல்வேறு  பகுதிகளில் தோரணங்கள் கட்டப்பட்டு உள்ளன. </p> <h2>லேசர் விளக்குகள்</h2><p>நகரின் எங்கிருந்து பார்க்கும் வகையில் கோவில் கோபுரங்கள் லேசர் விளக்குகளால் ஒளி பாய்ச்சப்படுவதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். கும்பாபிஷேகத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே பொதுமக்களின் வசதிக்காக மாசி வீதிகள், சித்திரை வீதிகள், ஆவணி மூல வீதிகளில் சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகள், நடமாடும் கழிப்பறைகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.</p> <p>மேலும் பக்தர்களின் பாதுகாப்பை கருதி சுழற்சி முறையில் 6 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். </p> <h2>அனுமதிச்சீட்டு</h2><p>கும்பாபிஷேகத்தை காண வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கோவில் சார்பில் பொது மக்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டுள்ளன. இவர்கள் மட்டுமே கும்பாபிஷேகத்தை காண கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மற்றவர்கள் ஆவணி மூல வீதிகளிலும் மற்றும் எல்.இ.டி. திரைகள் மூலமாகவும் கும்பாபிஷேகத்தை காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. </p><p>மதுரையை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து கோவிலுக்கு வர அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசிய கருத்துகள் தமிழக முதல்வர் விஜயை மையப்படுத்தி சர்ச்சையானது ஏன்?</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/why-did-vijay-sethupathis-comments-on-bigg-boss-about-chief-minister-vijay-spark-controversy</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/why-did-vijay-sethupathis-comments-on-bigg-boss-about-chief-minister-vijay-spark-controversy#comments</comments><guid isPermaLink="false">73f12222-90a7-4072-8dcb-a4a60436b157</guid><pubDate>Wed, 16 Sep 2026 06:43:13 +0000</pubDate><atom:updated>2026-09-16T06:43:13.704Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>Bigg Boss,பிக்பாஸ்,விஜய் சேதுபதி,Vijay sethupathi,Leadership,முதல்வர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/t858kh8f/sfgf.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vijay Sethupathi-Chief Minister Vijay   ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/t858kh8f/sfgf.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில், போட்டியாளர் ஷாதிகாவிடம் தலைமைப்பண்பு குறித்து தொகுப்பாளர் விஜய் சேதுபதி பேசிய கருத்துகள், தற்போது சின்னத்திரையை தாண்டி தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.</p><p>பிக்பாஸ் வீட்டின் முதல் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஷாதிகாவிடம் உரையாடிய <a href="https://www.maalaimalar.com/news/topnews/a-leader-is-not-someone-who-bolts-at-the-first-sign-of-trouble-did-vijay-sethupathi-criticize-chief-minister-vijay">விஜய் சேதுபதி</a>, தலைவருக்கான பொறுப்புகள் குறித்துப் பேசினார். "நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கொடுக்கக் கூடாது. பிரச்சனை என்று வரும்போது, அதை எதிர்கொள்ளாமல் எதிர்த்தரப்பினர் மீது பழியைப் போட்டுவிட்டு ஓடிவிடுவதோ அல்லது விலகிக் கொள்வதோ ஒரு சிறந்த தலைவருக்கு அழகல்ல" என்று அவர் குறிப்பிட்டிருந்தார். </p><p>இந்த உரையாடலின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் விஜய் மற்றும் அவரது தமிழக வெற்றி கழக கட்சியின் ஆதரவாளர்கள், இந்த கருத்துகள் மறைமுகமாக தங்களது தலைவரை தாக்குவதற்காகவே பேசப்பட்டவை எனப் பொருள் கொள்ளத் தொடங்கினர்.</p><h2>முதல்வர் விஜய்-<strong>விஜய் சேதுபதி</strong> இடையேயான திரை நட்பு</h2><p>விஜய் சேதுபதி தனது உரையாடலில் முதலமைச்சர் விஜயையோ, அவரது கட்சியையோ அல்லது எந்தவொரு அரசியல் இயக்கத்தையோ பெயர் குறிப்பிடவில்லை. இருந்தபோதிலும், 'மாஸ்டர்' திரைப்படத்தில் முதல்வர் விஜயுடன் இணைந்து நடித்த விஜய் சேதுபதி, பல மேடைகளில் முதல்வர் விஜயை "அண்ணா" என்று அன்போடு அழைத்து வந்தார். இவ்வாறான சூழலில், அவர் பேசியது முதல்வர் விஜயை விமர்சிப்பது போல உள்ளது என கூறித் தமிழக வெற்றி கழகத்தின் சில ஆதரவாளர்கள் இணையத்தில் விஜய் சேதுபதியை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர்.</p><h2>தனியார் தொ<strong>லைக்காட்சி விளக்</strong>கம்</h2><p>சர்ச்சை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பும் தனியார் தொலைக்காட்சி நிர்வாகம் ஒரு தெளிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், "பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடம்பெறும் உரையாடல்கள் மற்றும் நிகழ்வுகள் முற்றிலும் பொழுதுபோக்கு சார்ந்தவை மட்டுமே. நிகழ்ச்சிக்கு வெளியே உள்ள நபர்களையோ, அரசியல் இயக்கங்களையோ அல்லது அமைப்புகளையோ மையப்படுத்தி இந்த கருத்துகள் பேசப்படவில்லை. எனவே, இதைப் புற உலக நிகழ்வுகளோடு தொடர்புபடுத்தி பார்ப்பது தவறானது" என்று விளக்கம் அளித்து முற்றுப்புள்ளி வைக்க முயன்றுள்ளது.</p><p>இருப்பினும், பிக் பாஸ் மேடையில் தான் பேசிய கருத்துகள் குறிப்பிட்ட அந்த அரசியல் தலைவரையோ அல்லது அவரது அரசியல் பயணத்தையோ மையப்படுத்திச் சொல்லப்பட்டவைதான் என்று விஜய் சேதுபதி இதுவரை நேரடியாக எவ்வித அதிகாரப்பூர்வ விளக்கத்தையோ அல்லது அறிக்கையையோ வெளியிடவில்லை. அதேவேளையில், சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த ஊகங்களையும், அரசியல் விமர்சனங்களையும் அவர் நேரடியாக மறுக்கவோ அல்லது மறுப்பு தெரிவிக்கவோ இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது. திரையுலகைச் சார்ந்த பிரபலங்கள் பேசும் சாதாரண உரையாடல்கள் கூட, தமிழக அரசியலின் தற்போதைய சூழலில் எவ்வாறு தீவிரமாகப் பார்க்கப்படுகின்றன என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு மிகச்சிறந்த உதாரணமாக மாறியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காலை உணவு திட்டம் விரிவாக்கம்: முதலமைச்சர் விஜய் 22-ந்தேதி பெரம்பூரில் தொடங்கி வைக்கிறார்?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/breakfast-scheme-expansion-will-chief-minister-vijay-launch-it-in-perambur-on-the-22nd</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/breakfast-scheme-expansion-will-chief-minister-vijay-launch-it-in-perambur-on-the-22nd#comments</comments><guid isPermaLink="false">86069b22-7250-4cea-afd9-6000afd940c5</guid><pubDate>Wed, 16 Sep 2026 06:24:20 +0000</pubDate><atom:updated>2026-09-16T06:24:20.369Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,பெரம்பூர் தொகுதி,Perambur constituency,காலை உணவு திட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/p9sr0dxl/Vijay03.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/p9sr0dxl/Vijay03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>காலை உணவு  திட்டத்தை முதலமைச்சர் விஜய் பெரம்பூரில் தொடங்கி வைப்பார் என தெரிகிறது. இது பற்றி அதிகாரிகள் நாளை  ஆய்வு செய்து முடிவு எடுக்கிறார்கள்.</strong></em></p><p>அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">காலை உணவு திட்டம்</a> ஏற்கனவே அமலில் இருந்து வருகிறது. திமுக ஆட்சியில் இந்த திட்டம் துவங்கப்பட்டது. தற்போதைய த.வெ.க. அரசு இத்திட்டத்தை 8-ம் வகுப்பு வரை நீட்டிப்பு செய்திருக்கிறது.</p><p>இதற்கான துவக்க விழா பெரியார் பிறந்த நாளான 17ஆம் தேதி நடைபெறும் என்றும், காமராஜர் படித்த விருதுநகரில் உள்ள பள்ளியில் இத்திட்டத்தை முதலமைச்சர் துவக்கி வைப்பார் என்றும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் முதலமைச்சர் லண்டன் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 17ஆம் தேதி திட்டத்தின் துவக்க விழா சாத்தியமாகுமா? என்பது சந்தேகமாக இருந்தது. </p><p>இப்போது  17-ம் தேதிக்கு பதிலாக 22-ந் தேதி இந்த  திட்டத்தின் துவக்க விழா நடைபெறும் என அரசு செயலாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது பற்றி அரசு செயலாளர் பல்லவி பல்தேவ், மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-</p><p>பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்க விழா 17ஆம் தேதிக்கு பதிலாக 22-ம் தேதி சென்னையில் நடைபெறும் என்றும், சென்னையில் இத்திட்டத்தை முதலமைச்சர் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு துவக்கி வைப்பார் என்றும், அதே நேரத்தில் அனைத்து மாவட்டங்களிலும் திட்டம் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p>இடைத்தேர்தல் நடைபெறக்கூடிய தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளை தவிர்த்து மற்ற அனைத்து இடங்களிலும் காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்கம் 22 -ம் தேதியிலிருந்து செயல்பாட்டுக்கு வந்து விடும் என்றும் தெரிவித்துள்ள அவர், இதற்கு ஏற்ப அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். </p><h2><strong>பெரம்பூர் பள்ளியில் தொடக்கம்?</strong></h2><p>இந்த திட்டத்தை முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்</a> பெரம்பூரில் தொடங்கி வைப்பார் என தெரிகிறது. இது பற்றி அதிகாரிகள் நாளை  ஆய்வு செய்து முடிவு எடுக்கிறார்கள்.</p><p>15 ஆயிரத்து 454 பள்ளிகளில் 6-8வரையிலான 15லட்சத்து 14 ஆயிரத்து 274 மாணவர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 5-ம்  வகுப்பு வரை கிட்டத்தட்ட 18 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>தாராபுரம் இடைத்தேர்தல்: வேட்பு மனு தாக்கல் செய்தார் தவெக வேட்பாளர் சத்யபாமா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dharapuram-bypoll-tvk-candidate-sathyabama-files-nomination</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dharapuram-bypoll-tvk-candidate-sathyabama-files-nomination#comments</comments><guid isPermaLink="false">b1c80023-25e9-46ba-b36b-c002705a83a9</guid><pubDate>Wed, 16 Sep 2026 06:18:18 +0000</pubDate><atom:updated>2026-09-16T06:18:18.643Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>nomination,தாராபுரம்,வேட்பு மனு தாக்கல்,சத்யபாமா,Tharapuram,sathyabama</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/pwqgmhkm/sathyabama1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TVK Candidate Sathyabama]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/pwqgmhkm/sathyabama1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் சத்யபாமா வேட்புமனு தாக்கல் செய்தார்.</p><h2>இடைத்தேர்தல்</h2><p>செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D" rel="nofollow">இடைத்தேர்தல்</a> அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந்தேதி நடைபெற உள்ளது.</p><p>இந்த தேர்தலில் த.வெ.க., தி.மு.க. அ.தி.மு.க., நாம் தமிழர், கம்யூனிஸ்டு கட்சிகள் என 5 முனைப் போட்டி நிலவுகிறது. இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அந்தந்த கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.) அலுவலகங்களில் கடந்த 9-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.</p><p>12, 13, 14-ந் தேதி தொடர் விடுமுறை முடிந்து நேற்று மீண்டும் வேட்புமனு தாக்கல் நடந்தது. இதில் மதுராந்தகம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 14 பேர் வேட் புமனு தாக்கல் செய்தனர். இதன் மூலம் இதுவரை மொத்தம் 18 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.</p><h2>தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல்</h2><p>தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மரகதம் குமரவேல், த.வெ.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்துடன் சென்று தனது மனுவை தாக்கல் செய்தார்.</p><h2>ஒரே நாளில் 15 பேர் வேட்புமனு தாக்கல் </h2><p>தாராபுரம் தொகுதியில் நேற்று ஒரே நாளில் 15 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் மொத்த வேட்புமனுக்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.</p><p>வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெற நாளை மறுநாள் கடைசி நாள் ஆகும். வாக்குப்பதிவு வரும் அக்டோபர் 6 ஆம் தேதியும் வாக்கு எண்ணிக்கை 9-ம் தேதியும் நடைபெறும்.</p><h2>தவெக நிர்வாகி சத்யபாமா</h2><p>தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் சத்யபாமா வேட்புமனு தாக்கல் செய்தார்.</p><p>அமைச்சர்கள் செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த், அருண்ராஜ் ஆகியோருடன் சென்று சத்யபாமா வேட்பு மனு தாக்கல் செய்தார்.</p><p>அமைச்சர்களுடன் ஊர்வலமாக சென்று கோட்டாட்சியர் அலுவலகத்தில் சத்யபாமா வேட்புமனு தாக்கல் செய்தார்.</p>]]></content:encoded></item><item><title>சந்திரனின் தென்துருவத்தில் 400 கோடி ஆண்டுகள் பழமையான ‘ஆஸ்ட்ரேல் படுகை’ : அகமதாபாத் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/australe-basin-400-crore-years-old-discovery-by-ahmedabad-scientists</link><comments>https://www.maalaimalar.com/news/world/australe-basin-400-crore-years-old-discovery-by-ahmedabad-scientists#comments</comments><guid isPermaLink="false">6659cc06-1770-40d1-935e-2be8a041b49c</guid><pubDate>Wed, 16 Sep 2026 06:07:01 +0000</pubDate><atom:updated>2026-09-16T06:07:01.119Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நாசா,சந்திராயன்,nasa,சந்திரன்,lunar Orbit,Chandraayan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/y9zuh1fa/Your-paragraph-text-2.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Australe basin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/y9zuh1fa/Your-paragraph-text-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அகமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வக விஞ்ஞானிகள், சந்திராயன் 1 விண்கலம் சேகரித்த தரவுகள் மூலம் விண்வெளியில் கண்களுக்கு புலப்படாமல் 400 கோடி ஆண்டுகளாக மறைந்த நிலையில் இருந்த ‘ஆஸ்ட்ரேல் படுகை’ எனப்படும் சந்திர விண்கல் மோதல் படுக்கையை முதன்முதலாக கனிமவியல் ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர்.</p><h3><strong>சந்திராயன் 1</strong></h3><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B">இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்</a> கடந்த 2008-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சந்திரனை சுற்றி (lunar mission) வரும் ‘சந்திராயன் 1’ என்ற விண்கலத்தை வெற்றிகரமாக ஏவி சோதனை செய்தது. </p><p>இந்த விண்கலம் நாசா உள்ளிட்ட சர்வதேச விண்வெளி நிறுவனங்கள் வழங்கிய 6 அறிவியல் கருவிகளை (Payload) சேர்த்து, மொத்தம் 11 அறிவியல் கருவிகளுடன் தரவுகளை சேகரிக்க விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.</p><p>இந்த திட்டத்தின் மூலம் சந்திரனின் மேற்பரப்பில் நீர் மற்றும் ஹட்ராக்சில் மூலக்கூறுகள் இருந்தது கண்டறியப்பட்டது.</p><h3><strong>சந்திராயன் 3</strong></h3><p>இதையடுத்து ஏவப்பட்ட ‘சந்திராயன் 3’ திட்டத்தின் மூலம், சிவ சக்தி முனை என அழைக்கப்படும் தளத்தில் அதிகளவிலான மெக்னீசியம் இருப்பது கண்டறியப்பட்டது.</p><p>சந்திரனில் ஏறத்தாழ 300 விண்கல் மோதல் பள்ளங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால் இதுவரையில் 74 விண்கல் மோதல் பள்ளங்கள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன.</p><h3><strong>ஆஸ்ட்ரேல் படுகை</strong></h3><p>இந்த நிலையில் சந்திராயன் 1 சேகரித்த கனிமவியல் தரவுகளை பயன்படுத்தி, ‘ஆஸ்ட்ரேல் படுகை’ எனப்படும் கண்களுக்கு புலப்படாமல் மறைந்த நிலையில் இருந்த சந்திர விண்கல் மோதல் படுக்கையின் இருப்பை அகமதாபாத் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வக விஞ்ஞானிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.</p><p>இந்த ஆஸ்ட்ரோல் படுகையின் விளிம்புகளில் அடிக்கடி அரிப்பு ஏற்படுவதால், இது விண்வெளியில் பயன்படுத்தப்படும் தொலைநோக்கிகளால் கண்டறியப்படாமல் இருந்தது.</p><h3><strong>400 கோடி ஆண்டுகள் பழமை</strong></h3><p>சந்திரனின் தென்கிழக்கு அரைக்கோளத்தில் ஆஸ்ட்ரோல் படுகை காணப்படுகிறது. இந்த படுகையானது இதுவரையில் அறியப்பட்டதில் 400 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான மிகப்பழமையான ‘தென் துருவ ஐட்கன் படுகையை’ விட முந்தையதாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.</p><p>மேலும் இதுவரை கண்டறியப்பட்ட மென்மையான மற்றும் பரந்த இறுகிய எரிமலை பாறை மேற்பரப்புகளை கொண்ட மற்ற படுகைகளை போலல்லாமல், இது வட்ட வடிவத்தில் அமைந்த 248 சிறிய பசால்ட் குளங்களை கொண்ட இரு இடத்தில் காணப்படுகிறது.</p><p>சந்திரனின் மேற்பரப்பில் கனிமவியல் வரைபடத்தை உருவாக்குவதற்காக வடிவமைக்கப்பட்டதும், 405 முதல் 3000 நானோமீட்டர்களுக்கு இடையில் இயங்குவதுமான நாசாவின் பிம்ப நிறமாலைமானி தரவுகளை கண்டறிய பயன்படுத்தப்பட்டது.</p><h3><strong>விஞ்ஞானிகள் ஆய்வு</strong></h3><p>இந்த ஆய்வில், நிலவின் முக்கிய கனிமங்களான பைராக்சீன்கள், ஆலிவின் மற்றும் பிளாஜியோகிளேஸ் ஆகியவற்றால் வெளிப்படுத்தப்படும் உட்கிரகிப்புப் பட்டைகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.</p><p>இவை, நிலப்பரப்பு எந்த பயனுள்ள சமிக்ஞையையும் அளிக்காத இடங்களில் உள்ள கலவையை அடையாளம் காட்டுகின்றன.</p><p>கால்சியம் தாதுக்கள் அதிகமாக உள்ள பெரும்பாலான சந்திர பசால்ட்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த படுகையில் உள்ள பசால்ட்டுகளில், கால்சியம் ஒப்பீட்டளவில் குறைவாகவும், மெக்னீசியம் அதிகமாகவும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>எ.வ.வேலுவுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்தது சென்னை ஐகோர்ட்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-hc-dismisses-election-petition-against-ev-velu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-hc-dismisses-election-petition-against-ev-velu#comments</comments><guid isPermaLink="false">87d90aa9-b386-4632-a5c2-0f9f75bbad16</guid><pubDate>Wed, 16 Sep 2026 06:03:12 +0000</pubDate><atom:updated>2026-09-16T06:03:12.432Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,சென்னை ஐகோர்ட்,Madras HC,ev velu,எவ வேலு,தேர்தல் வழக்கு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/sxvouhcr/MadrasHC.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/sxvouhcr/MadrasHC.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>திருவண்ணாமலை திமுக எம்எல்ஏ எ.வ.வேலுவுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.</strong></em></p><p>நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/எவ-வேலு">எ.வ.வேலு</a> 2,455 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.</p><h2><strong>மனு தாக்கல்</strong></h2><p>அவரது வெற்றியை எதிர்த்து த.வெ.க. வேட்பாளர் அருள் ஆறுமுகம், சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று எ.வ.வேலு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><p>இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி, தேர்தல் வழக்கை விசாரிப்பதற்கு எந்த காரணமும் இல்லை எனக்கூறி, தவெக வேட்பாளர் அருள் ஆறுமுகத்தின் தேர்தல் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டுள்ளார்.</p><p>இதுவரை த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜா, பெருந்துறை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு ராஜினாமா செய்த ஜெயக்குமார், கோபிசெட்டிப்பாளையம் எம்எல்ஏ செங்கோட்டையன், கோவை தெற்கு தி.மு.க. எம்எல்ஏ செந்தில்பாலாஜி ஆகியோருக்கு எதிரான தேர்தல் வழக்குகளை நிராகரித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>ஹாங்காக்கில் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக புதுவகையான ’பம்பரம்’ விளையாட்டு போட்டி </title><link>https://www.maalaimalar.com/news/world/new-type-sports-competition-to-attract-customers-in-hong-kong</link><comments>https://www.maalaimalar.com/news/world/new-type-sports-competition-to-attract-customers-in-hong-kong#comments</comments><guid isPermaLink="false">7526b1e7-076d-40b6-8152-761239c79bf1</guid><pubDate>Wed, 16 Sep 2026 05:57:30 +0000</pubDate><atom:updated>2026-09-16T05:57:30.895Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஹாங்காங்,HongKong,Mall,வணிக வளாகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/2mqjvmhi/Your-paragraph-text-3.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Hong Kong mall boosts sales with Beyblade games]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/2mqjvmhi/Your-paragraph-text-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஹாங்காக்கில் உள்ள பிரபல வணிக வளாகம் ஒன்று, தனது வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக புதுவகையான யுக்தியை தொடங்கியுள்ளது. இதன்மூலம் வணிக வளாகங்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக கடை உரிமையாளர்களும், பொருளாதார நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D">ஹாங்காங்</a> நகரில் நியூ டெரிட்டரீஸ் என்ற வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வணிக வளாகத்தில் உள்ள கடைகளில் கடந்த காலங்களில் பொருட்கள் போதிய அளவில் விற்பனை செய்யப்படாமல் நஷ்டத்தை சந்தித்தன. </p><p>இதன் காரணமாக வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை நேரடியாக விற்பனை செய்வதற்கு பதிலாக, வாடிக்கையாளர்களின் ஆர்வத்தை தூண்டி எவ்வாறு பொருட்களை வாங்க வைப்பது என்பது குறித்து, தலைமை வர்த்தக அதிகாரி பெல்லா சோவா பெக்லிம் என்பவருக்கு ஒரு யோசனை தோன்றியது.   </p><p>அந்த யோசனையின் அடிப்படையில், வாடிக்கையாளர்களிடம் நேரடியாக விற்பனை செய்வதற்கு பதிலாக, முதலில் அவர்களுடன் உரையாடலை தொடங்கி, கடைக்குள் ஈர்க்கும்படி ஊழியர்களிடம் பெல்லா கூறினார்.</p><h3><strong>பெய் பிளேடு விளையாட்டு போட்டி</strong></h3><p>அதன்பிறகு கடைக்குள் வந்த வாடிக்கையாளர்களிடம், ‘பெய் பிளேடு’ என்ற பம்பர விளையாட்டு போட்டியை குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் விளையாடுவதற்கு ஊக்கப்படுத்தினார்.</p><p>இந்த பெய் பிளேடு விளையாட்டு, சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பிரபலமடைய ஆரம்பித்து, அதிகளவிலான சிறுவர்கள் கூட்டத்தை வணிக வளாகத்திற்கு ஈர்த்தது.</p><p>இந்த விளையாட்டை விளையாடுவதற்காக, மதியம் 2 மணி தொடங்கி இரவு 9 மணி வரை வணிக வளாகத்தில் பல இளைஞர்கள் திரண்டனர். மேலும் அவர்கள் வணிக வளாகத்தில் விற்பனை செய்யப்பட்ட உணவுகளையும், பானங்களையும் வாங்கினர்.</p><p>வணிக வளாகத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட இலவச விளையாட்டு போட்டிகள், குழந்தைகளுடன் பெற்றோர்களை வரவழைக்க தூண்டியது.</p><p>அவ்வாறு குடும்பமாக வரும் நபர்கள், தங்களின் இரவு உணவிற்காக சுமார் 12,000 ரூபாய் வரை செலவழிப்பதாக ஒருவர் தெரிவித்தார்.</p><p>இதையடுத்து நாளடைவில் வணிக வளாகத்தில் உணவகங்கள் மற்றும் பொம்மை விற்பனைகளை தாண்டி, லுக்ஃபுக் ஜூவல்லரி போன்ற உயர்தர ஆடம்பர கடைகளும் விரிவடையத் தொடங்கின.</p><p>இதேபோன்று பிரின்ஸ் எட்வர்டில் உள்ள பயோனியர் செண்டர் வணிக வளாகத்தில் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளை கவர்வதற்காக சில பெய் பிளேட் விளையாட்டு போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டன.</p><p>இதன்மூலம் தங்கள் வணிக வளாகங்களில் 10 முதல் 15 சதவீதம் வரை விற்பனை அதிகரித்ததாக, அந்த மாலின் குத்தகை மேலாளர் எரிக் செங் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக வாதாடிய ராமசாமி படையாட்சியாருக்கு என் புகழ் வணக்கம்! - மு.க.ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-my-respectful-tribute-to-ramasami-padayatchiyar-who-championed-rights-of-working-people</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-my-respectful-tribute-to-ramasami-padayatchiyar-who-championed-rights-of-working-people#comments</comments><guid isPermaLink="false">b0aa4ee8-69a7-475d-927a-2d7c0015609e</guid><pubDate>Wed, 16 Sep 2026 05:48:33 +0000</pubDate><atom:updated>2026-09-16T05:48:33.382Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,SS Ramasami Padayatchiyar birthday,எஸ்எஸ் ராமசாமி படையாட்சியார் பிறந்தநாள்,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/54laxno8/mkstalin.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MK Stalin - Ramasami Padayatchiyar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/54laxno8/mkstalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் பங்களித்த சமூகநீதிப் போராளி ஐயா ராமசாமி படையாட்சி அவர்களின் பிறந்தநாளில் அவரது பணிகளை நன்றியோடு நினைவுகூர்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/corruption-case-against-former-dmk-minister-anbil-mahesh">திமுக</a> தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-condemned-anbil-mahesh-house-raid">மு.க.ஸ்டாலின்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>விடுதலைப் போராட்ட வீரரும் சமூகநீதிப் போராளியுமான இராமசாமி படையாட்சியார் பிறந்தநாள்</p><p>சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் உள்ளிட்ட பொறுப்புகளில் மக்கள் பணியாற்றிய மாபெரும் தலைவரும், பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் பங்களித்த சமூகநீதிப் போராளியுமான ஐயா இராமசாமி படையாட்சி அவர்களின் பிறந்தநாளில் அவரது பணிகளை நன்றியோடு நினைவுகூர்கிறேன்.</p> <p>அவரது கோரிக்கையை ஏற்று ஏ.என். சட்டநாதன் அவர்கள் தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், சென்னை கிண்டியில் திருவுருவச் சிலை என இராமசாமி படையாட்சியாரைப் போற்றி வணங்கியது கழக அரசு.</p><p>உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக வாதாடிய இராமசாமி படையாட்சியாருக்கு என் புகழ் வணக்கம்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>உஸ்பெகிஸ்தானில் இன்று தொடங்குகிறது
செஸ் ஒலிம்பியாட் போட்டி- பட்டத்தை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா!</title><link>https://www.maalaimalar.com/sports/chess-olympiad-begins-today-in-uzbekistan-india-aims-to-retain-title</link><comments>https://www.maalaimalar.com/sports/chess-olympiad-begins-today-in-uzbekistan-india-aims-to-retain-title#comments</comments><guid isPermaLink="false">3e4a502d-72b7-4c58-95cb-0068f29fa8a7</guid><pubDate>Wed, 16 Sep 2026 05:34:30 +0000</pubDate><atom:updated>2026-09-16T05:34:30.687Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>செஸ் போட்டி,Chess,uzbekistan,Chess Olympiad,செஸ் ஒலிம்பியாட்,உஸ்பெகிஸ்தான்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/8ttlydod/chess5.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chess Olympiad]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/8ttlydod/chess5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>செஸ் ஒலிம்பியாட் போட்டி உஸ்பெகிஸ்தானில் இன்று தொடங்குகிறது. பட்டத்தை தக்க வைக்கும் முனைப்புடன் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF" rel="nofollow">இந்திய அணி</a>யினர் யுக்திகளில் கவனம் செலுத்துகிறார்கள்.</p><h2>செஸ் ஒலிம்பியாட்</h2><p>செஸ் விளையாட்டில் மிகப்பெரிய போட்டியான செஸ் ஒலிம்பியாட் 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.</p><p>இதன்படி 46-வது செஸ் ஒலிம்பியாட் உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் இன்று தொடங்கி 27-ந்தேதி வரை நடக்கிறது. இதில் சாதனை எண்ணிக்கையாக ஓபன் பிரிவில் 208 அணிகளும், பெண்கள் பிரிவில் 192 அணிகளும் கலந்து கொள்கின்றன. அதாவது ஏறக்குறைய 2 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் களம் காணுகிறார்கள்.</p><p>மொத்தம் 11 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ரவுண்டிலும் வெற்றி பெறும் அணிக்கு 2 புள்ளியும், டிராவுக்கு தலா ஒரு புள்ளியும் வழங்கப்படும். முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப்பதக்கம் அளிக்கப்படும்.</p><p>ஸ்விஸ் முறையில் நடைபெறும் இந்த செஸ் திருவிழாவில் ஒவ்வொரு ஆட்டத்துக்கும் தலா 1% மணி நேரம் ஒதுக்கப்படும். 40-வது காய் நகர்த்தலுக்கு பிறகு எஞ்சிய ஆட்டத்துக்கு 30 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும்.</p><p>அத்துடன் தொடக்கத்தில் இருந்து ஒவ்வொரு நகர்வுக்கும் 30 வினாடி வீதம் அதிகரித்துக் கொண்டே போகும். ஒரு அணியில் 4 பேர் இருப்பார்கள். அவர்கள் எதிரணியினருடன் மோதுவார்கள்.</p><h2>பிரக்ஞானந்தா- குகேஷ்</h2><p>உலக செஸ் தரவரிசையில் டாப்-10 இடங்களில் உள்ள வீரர்களில் 8 பேர் இந்த போட்டியில் ஆடுகிறார்கள். நம்பர் ஒன் வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்சென் (நார்வே), அமெரிக்காவின் ஹிகரு நகமுரா மட்டும் விலகிவிட்டனர்.</p><p>ஹங்கேரியில் 2024-ம் ஆண்டில் நடந்த செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய ஆண்கள் அணி முதல்முறையாக தங்கப்பதக்கத்தை வென்று வரலாறு படைத்தது.</p><p>இந்த முறையும் உலக சாம்பியனான தமிழகத்தை சேர்ந்த குகேஷ், சமீபத்தில் கிராண்ட் செஸ் டூரில் பட்டம் வென்று சூப்பர் பார்மில் உள்ள பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி, நிஹால் சரின் மற்றும் மாற்று வீரர் விதித் குஜராத்தி ஆகிய நட்சத்திர வீரர்கள் அணியில் இடம் பெற்றிருப்பதால், இந்தியா பட்டத்தை தக்கவைப்பதற்கு வாய்ப்புள்ளது. கேப்டனாக ஸ்ரீநாத் நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>அதே சமயம் ஜவோகிர் சிந்தாரோவ் தலைமையிலான உஸ்பெகிஸ்தான், பேபியானோ கருணா, லெவோன் ஆரோனியன் ஆகியோரை உள்ளடக்கிய அமெரிக்கா மற்றும் சீனா அணிகளும் வலுவாக காணப்படுவதால் இந்தியாவுக்கு கடும் சவால் காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.</p><h2>ஹம்பி- வைஷாலி</h2><p>பெண்கள் பிரிவில் நடப்பு சாம்பியனான இந்தியாவுக்கு போட்டித் தரநிலையில் முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. கோனெரு ஹம்பி, உலக கோப்பையை வென்றவரான திவ்யா தேஷ்முக், வைஷாலி, வந்திகா அகர்வால் மற்றும் மாற்று வீராங்கனை சவிதா ஸ்ரீ ஆகியோர் இந்திய அணியில் அங்கம் வகிக்கிறார்கள். முந்தைய ஒலிம்பியாட்டில் ஆடிய அனுபவம் வாய்ந்த ஹரிகா துரோணவள்ளி இந்த முறை தனிப்பட்ட காரணங்களுக்காக விலகிவிட்டார்.</p><p>பெண்கள் பிரிவை பொறுத்தமட்டில் ஜார்ஜியா, கஜகஸ்தான், சீனா கவனிக்கத் தக்க அணிகளாக இருந்தாலும் இந்தியாவுக்கே வெற்றி வாய்ப்பு அதிகமிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.</p><p>உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ரஷியாவுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பதால், இந்த முறையும் அந்த அணிக்கு அனுமதி இல்லை. ஒவ்வொரு சுற்றும் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.</p><h2>5 மணி நேரம் தவித்த இந்திய வீரர்கள்</h2><p>செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க விமானம் மூலம் உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் சென்ற இந்திய அணியினருக்கு அவர்கள் தங்குவதற்கு உரிய ஓட்டல் அறை ஒதுக்கப்படாததால் ஏறக்குறைய 5 மணிநேரம் பரிதவித்தனர்.</p><p>அறை ஒதுக்குவதற்கு நீண்ட நேரம் ஆனதால் எரிச்சல் அடைந்த இந்திய ஆண்கள் அணியின் கேப்டன் ஸ்ரீநாத் தனது சமூக வலைதள பக்கத்தில் 'செஸ் ஒலிம்பியாட்டில் மிக மோசமான அனுபவத்தை எதிர்கொண்டிருக்கிறோம்.</p><p>5 மணி நேரத்திற்கு முன்பு சமர்கண்ட் விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தும் இன்னும் அறைகள் ஒதுக்கப்படவில்லை என குறிப்பிட்டார்.</p><p>நிலைமை சரியான பிறகு பேசிய அணியின் உறுப்பினர் ஒருவர்,"அனைத்து வீரர்களும் தற்போது அவரவர் அறைக்கு சென்றுவிட்டனர். என்றாலும் இது ஒரு விரும்பகத்தகாத அனுபவமாக இருந்தது" என்றார்.</p> ]]></content:encoded></item><item><title>சொந்த மாவட்டத்திலேயே பின்னடைவு: ராஜஸ்தானில் பாஜகவின் நகர்ப்புற கோட்டை தகர்கிறதா?</title><link>https://www.maalaimalar.com/news/national/setback-in-home-district-is-bjps-urban-fortress-crumbling-in-rajasthan</link><comments>https://www.maalaimalar.com/news/national/setback-in-home-district-is-bjps-urban-fortress-crumbling-in-rajasthan#comments</comments><guid isPermaLink="false">fad7960c-af90-468b-86b0-1d5df8bdef90</guid><pubDate>Wed, 16 Sep 2026 05:30:38 +0000</pubDate><atom:updated>2026-09-16T05:30:38.987Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,Congress,காங்கிரஸ்,Rajasthan,பஜன்லால் சர்மா,Bhajanlal Sharma,ராஜஸ்தான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/lseh3k3q/n-2.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bhajanlal Sharma ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/lseh3k3q/n-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவிற்கும் இடையிலான வாக்கு சதவீத வித்தியாசம் வெறும் ஒரு சதவீதம் மட்டுமே என்பதால், நகர்ப்புற கோட்டைகளில் பாஜகவின் பிடி தளர்ந்து வருவதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.</p><p>ராஜஸ்தான் மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அதிக வார்டுகளை கைப்பற்றி முதலிடத்தை பிடித்துள்ளது. இருப்பினும், காங்கிரஸ் கட்சியுடனான வாக்கு சதவீத இடைவெளி மிகக் குறைவாக இருப்பது மற்றும் <a href="https://www.maalaimalar.com/news/national/india-us-joint-military-exercise-yudh-abhyas-gets-underway">பாஜகவின்</a> பாரம்பரியமான நகர்ப்புற வாக்கு வங்கியில் ஏற்பட்டுள்ள சரிவு ஆகியவை கட்சி தலைமைக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.</p><h2>தேர்<strong>தல் முடிவுக</strong>ள் </h2><p>மொத்தம் அறிவிக்கப்பட்ட 10,235 வார்டுகளில், பாஜக 4,179 வார்டுகளில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் 3,613 வார்டுகளை கைப்பற்றி வலுவான போட்டியை அளித்துள்ளது. கடந்த தேர்தல் சுழற்சியுடன் ஒப்பிடுகையில் பாஜகவின் இடங்கள் 35.7 சதவீதத்தில் இருந்து 40.8 சதவீதமாக உயர்ந்துள்ள போதிலும், காங்கிரஸ் 35.3 சதவீத வாக்குகளை பெற்று மிக நெருக்கமாக பின்தொடர்கிறது.</p><p>இந்த தேர்தலின் மிகப்பெரிய பின்னடைவாக, ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மாவின் சொந்த மாவட்டமான பரத்பூரில் பாஜக பின்னடைவைச் சந்தித்துள்ளது. இங்குள்ள 65 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் 36 வார்டுகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மை பெற்றனர். ஆளும்கட்சியான பாஜகவால் வெறும் 20 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இது முதலமைச்சரின் சொந்த பகுதியிலேயே கட்சிக்கு உள்ள செல்வாக்கு சரிந்து வருவதை சுட்டிக்காட்டுகிறது.</p><h2>நகர்ப்புற <strong>வாக்கு வங்கியில் பிள</strong>வு</h2><p>பாரம்பரியமாக பாஜகவிற்கு ஆதரவாக இருக்கும் நகர்ப்புற வாக்காளர்கள் மத்தியில் இந்த முறை அதிருப்தி நிலவுவது தேர்தல் முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவிற்கும் இடையிலான வாக்கு சதவீத வித்தியாசம் வெறும் ஒரு சதவீதம் மட்டுமே என்பதால், நகர்ப்புற கோட்டைகளில் பாஜகவின் பிடி தளர்ந்து வருவதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.</p><p>பிரதமர் நரேந்திர மோடி இந்த வெற்றியைப் பாராட்டிய போதிலும், கள நிலவரம் பாஜகவிற்கு எச்சரிக்கை மணியாகவே அமைந்துள்ளது. உட்கட்சிப் பூசல், உள்ளூர் வேட்பாளர்கள் மீதான அதிருப்தி மற்றும் சுயேச்சைகளின் ஆதிக்கம் ஆகியவை பாஜகவின் தொடர் வெற்றிகளுக்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளன. வரவிருக்கும் தேர்தல்களில் இந்த தவறுகளைத் திருத்திக் கொள்ளாவிட்டால், பாஜக தனது கோட்டைகளை இழக்க நேரிடும் என்ற விவாதம் தற்போது தீவிரமடைந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் அதன் சிறப்புகளும்</title><link>https://www.maalaimalar.com/spirituality/madurai-meenakshi-amman-temple-specials</link><comments>https://www.maalaimalar.com/spirituality/madurai-meenakshi-amman-temple-specials#comments</comments><guid isPermaLink="false">f7fb7bb9-e3b7-4d9e-aab0-861e06c98f6d</guid><pubDate>Wed, 16 Sep 2026 05:23:34 +0000</pubDate><atom:updated>2026-09-16T05:23:34.816Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,வழிபாடு,worship,கும்பாபிஷேகம்,Kumbhabhishekam,Madurai Meenakshi Amman temple,மதுரை மீனாட்சி அம்மன் கோவில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/2cp4e2e2/Meenakshi-Amman-Temple.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Madurai Meenakshi Amman Temple]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/2cp4e2e2/Meenakshi-Amman-Temple.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் உள்ள எந்த ஒரு இந்துக் கோவிலும், மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஈடானது அல்ல என்று உரக்கச் சொல்லலாம். அந்த அளவுக்கு, மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவில், ஏராளமான தனிச் சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டு, தலைசிறந்து விளங்குகிறது.</p><h2>நாளை மகா கும்பாபிஷேகம்</h2><p>'அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில்' என்ற பெயரைப் பெற்று இருந்தாலும், இந்தக் கோவில், மக்கள் அனைவராலும் 'மீனாட்சி கோவில்' என்றே அழைக்கப்படுவது. மீனாட்சி அம்மனின் அருள் சார்ந்த ஆளுமையைப் பறைசாற்றுகிறது.</p> <p>உலகின் 8-வது அதிசயம் என்ற பெருமைக்குப் போட்டியிட்டபோது, லட்சக்கணக்கானவர்களின் வாக்குகளைப் பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலின் மகாகும்பாபிஷேகம் நாளை (வியாழக்கிழமை) காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் நடைபெற இருக்கிறது.</p> <p>இதற்கு முன்னதாக, 1481-ம் ஆண்டு, இந்தக் கோவிலில் உள்ள மீனாட்சி சந்நிதிக்கு மட்டும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அந்தக் காலகட்டத்தில் மீனாட்சி அம்மன் கோவில், டெல்லியில் இருந்து வந்த சுல்தானியப் படைகளால் சேதப்படுத்தப்பட்டது. </p><p>விஜயநகரப் பேரரசின் மன்னர் குமார கம்பண்ணர், சீரழிந்து கிடந்த கோவிலை சீர்செய்து, மீனாட்சி சந்நிதிக்கு மட்டும் கும்பாபிஷேகம் செய்தார். அதன்பிறகு 1706-ம் ஆண்டு முதல் 1732-ம் ஆண்டு வரை மதுரையை ஆட்சி செய்த விஜயரங்க சொக்கநாதர், சுவாமி சந்நிதிக்கு கும்பாபிஷேகம் நடத்தினார்.</p><h2>திருஞானசம்பந்தரின் வரிகள்</h2><p>மீனாட்சி கோவிலுக்கு, 17 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதால், தமிழகம் முழுவதும் உள்ள பக்தர்கள் இந்நாளை ஆவலுடன் எதிர்நோக்குகிறார்கள். தமிழகம் மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள இந்து ஆன்மிகவாதிகளை மீனாட்சி அம்மன் கோவில் ஈர்த்துக் கொண்டு இருப்பதற்குக் காரணம், இந்தக் கோவிலின் அசாத்தியமான தனிச் சிறப்புகள்தான்.</p> <p>அந்தச் சிறப்புகளின் பட்டியல் மிக நீளமானது. எந்த இந்துக் கோவிலிலும் இல்லாத வழக்கமாக இந்தக் கோவிலில் அன்னை மீனாட்சிக்கே முதல் மரியாதை. 1800 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோவில் உருவாக்கப்பட்டபோது, சொக்கநாதருக்கு மட்டுமே சந்நிதி அமைக்கப்பட்டு இருந்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகே, அங்கு மீனாட்சியின் உருவம் வைக்கப்பட்டது. 6-ம் நூற்றாண்டு அளவில், சொக்கநாதரும், மீனாட்சியும் ஒரே சந்நிதியில் இருந்திருக்கக்கூடும் என்பதை, திருஞானசம்பந்தரின், 'அங்கையற்கண்ணி உடனுறையும் அலவாய் அண்ணலே' என்ற வரிகள் உணர்த்துகின்றன.</p> <h2>அன்னையின் ஆட்சி</h2><p>12-ஆம் நூற்றாண்டில்தான், சொக்கநாதரின் சந்நிதிக்கு வலது புறம் மீனாட்சிக்கு தனிச் சந்நிதி முதல் முறையாக அமைக்கப்பட்டதாகத் தெரிகிறது. அப்போது முதல், கோவிலில் அன்னை மீனாட்சியின் ஆட்சிதான் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. அன்னை மீனாட்சிக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடந்த பிறகே சுந்தரேசுவரருக்கு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்படுகின்றன. </p><p>கோவிலுக்கு வரும் பக்தர்களும், முதலில் வழிபடுவது அன்னை மீனாட்சியைத்தான். மீனாட்சியை வணங்கிய பிறகே சொக்கநாதரை வணங்கும் வழக்கம். பக்தர்களால் பன்னெடுங்காலமாகக் கடைபிடிக்கப்படுகிறது. இது எந்தக் கோவிலிலும் இல்லாத வழிபாட்டு முறை.</p><p>மதுரை நகரின் நடுமையமாக மீனாட்சி அம்மன் கோவில் அமைந்து இருக்கிறது. கோவிலைக் கட்டிய பிறகு. அதனைச் சுற்றிலும் வீதிகளும், குடியிருப்புகளும் ஏற்படுத்தப்பட்டதால், மதுரை நகரும், கோவிலும் தாமரைப்பூ வடிவத்தில் காட்சி அளிக்கின்றன. தாமரைப்பூவின் நடுவில் இருக்கும் பொட்டு போல மீனாட்சி அம்மன் கோவிலும், தாமரையின் விரிந்த இதழ்கள் போல, கோவிலைச் சுற்றி நகரின் வீதிகளும் அமைக்கப்பட்டு இருக்கின்றன.</p> <h2>முடிவில்லா சிறப்பு</h2><p>கோவிலைச் சுற்றியுள்ள வீதிகளுக்கு தமிழ் மாதங்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இத்தகைய கட்டுமான அமைப்பை வேறு எந்த நகரிலும் காணமுடியாது. இப்போது மீனாட்சி அம்மன் கோவிலைப் பார்க்கும்போது, அதன் கட்டுமானங்கள் அனைத்தும் யாரோ ஒருவரால் திட்டமிட்டு ஒரே சமயத்தில் கட்டியது போலத் தோற்றம் அளிக்கும்.</p> <p>ஆனால், 18 நூற்றாண்டுகளுக்கு முன்பு மிகச் சிறிய கோவிலாகக் கட்டப்பட்ட இந்தக் கோவில், பிறகு பல நூறு ஆண்டுகளில் பலரது முயற்சியால் ஒவ்வொரு பகுதியாகக் கட்டப்பட்டு, இப்போதுள்ள அளவுக்கு முழுமை அடைந்துள்ளது என்பது மிகப்பெரிய ஆச்சரியம். 1,800 ஆண்டுகளாக, சிறுகச் சிறுக கட்டப்பட்ட மீனாட்சி அம்மன் கோவில்தான் இப்போது பிரமாண்டமான கோவிலாகக் காட்சி அளிக்கிறது. </p> <p>மீனாட்சி அம்மன் கோவிலின் தனிச் சிறப்புகளைப் பட்டியலிட்டால் அவற்றுக்கு முடிவே இருக்காது. நாள்தோறும், இந்தியாவின் பல பகுதிகளிலும் இருந்து வரும் ஏராளமான பக்தர்களே கோவிலின் சிறப்புகளுக்குச் சாட்சியாக உள்ளனர். பல நூற்றாண்டுகளாக லட்சக்கணக்கான பக்தர்களால் வழிபடப்படும் மீனாட்சி அம்மன் கோவிலில், கும்பாபிஷேகம் நடைபெறும் நன்னாளில் நாமும் அம்மனையும், சொக்க நாதரையும் வழிபட்டு பெருவாழ்வு பெறலாம்.</p><h2>- அமுதன்</h2>]]></content:encoded></item><item><title>ராமசாமி படையாட்சியாரின் மகத்தான மக்கள் பணியை நினைவுகூர்ந்து வணங்குகிறேன்- முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-praise-ramasami-padayatchiyar</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-praise-ramasami-padayatchiyar#comments</comments><guid isPermaLink="false">6ded9a44-efd4-4255-ab2f-567fe1ac2228</guid><pubDate>Wed, 16 Sep 2026 05:21:20 +0000</pubDate><atom:updated>2026-09-16T05:21:20.465Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,TN Govt,தமிழக அரசு,SS Ramasami Padayatchiyar birthday,எஸ்எஸ் ராமசாமி படையாட்சியார் பிறந்தநாள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/i8sakdws/vijay.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராமசாமி படையாட்சியார்- முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ ராமசாமி படையாட்சியார்- முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/i8sakdws/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ். இராமசாமி படையாச்சியார் அவர்களின் பிறந்தநாளில், அவரது மகத்தான மக்கள் பணியை நினைவுகூர்ந்து வணங்குகிறேன் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.</strong></em> </p><p>தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் நிறுவனரும், மறைந்த முன்னாள் அமைச்சருமான  பெரியவர் எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியாரின் 109-வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்</a> எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><h2><strong>மகத்தான மக்கள் பணி</strong></h2><p>சமூக நீதிக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்கும் அயராது பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ். இராமசாமி படையாச்சியார் அவர்களின் பிறந்தநாளில், அவரது மகத்தான மக்கள் பணியை நினைவுகூர்ந்து வணங்குகிறேன்.  </p><p>மக்களின் உரிமைகளுக்காகக் களம்கண்டு, கல்வி, சமூக முன்னேற்றம், சம உரிமை ஆகியவற்றை முன்னிறுத்தி அவர் ஆற்றிய தொண்டும், முன்னெடுப்புகளும், தமிழக அரசியல் களத்தில் அழியாத தடம் பதித்துள்ளன. இந்நாளில் அவரது மக்கள் நலப்பணிகளைப் போற்றிடுவோம் என கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">சமூக நீதிக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்கும் அயராது பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ். இராமசாமி படையாச்சியார் அவர்களின் பிறந்தநாளில், அவரது மகத்தான மக்கள் பணியை நினைவுகூர்ந்து வணங்குகிறேன்.  <br><br>மக்களின் உரிமைகளுக்காகக் களம்கண்டு, கல்வி,… <a href="https://t.co/yo1YPt9ICv">pic.twitter.com/yo1YPt9ICv</a></p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2100081943211843702?ref_src=twsrc%5Etfw">September 16, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் கல்விக் கட்டண உதவி வழங்க வேண்டும்!- அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-financial-assistance-for-tuition-fees-should-also-be-provided-to-students-from-backward-classes-and-most-backward-classes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-financial-assistance-for-tuition-fees-should-also-be-provided-to-students-from-backward-classes-and-most-backward-classes#comments</comments><guid isPermaLink="false">8ca21bf3-ede2-4982-b678-d298e0bdde55</guid><pubDate>Wed, 16 Sep 2026 05:09:02 +0000</pubDate><atom:updated>2026-09-16T05:09:02.875Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/w9ttimyc/Anbumaniramadoss01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/w9ttimyc/Anbumaniramadoss01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்படுவதைப் போலவே, பிற்படுத்தப்பட்ட, மிகவும்  பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் ஆண்டு கல்விக் கட்டண உதவித் தொகையை வழங்க முன்வர வேண்டும். நடப்பு 2026-27ஆம் கல்வியாண்டிலிருந்தே இந்த  உதவித் தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>சமூக அநீதி</strong></h2><p>தமிழ்நாட்டில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் பட்டியலின மற்றும் பழங்குடியின  மாணவர்களுக்கு வழங்கப்படும் ஆண்டு கல்விக் கட்டண (Annual Tution Fees) உதவித் தொகையை 4 மடங்கு முதல் 8 மடங்கு வரை உயர்த்தி தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு வழங்கப்பட்டுள்ள உதவித்தொகை உயர்வு வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்விக்கட்டண உதவி மறுக்கப்படுவது பெரும் சமூக அநீதியாகும்.</p><p>பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்வி நிலையை உயர்த்தும் வகையில், அரசு கலைக் கல்லூரிகளில் பயில இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், அவர்களின் கட்டணச் சுமையை ஏற்றுக் கொள்ளும் நோக்குடன் ஆண்டு கல்விக் கட்டண உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித் தொகை கடந்த 2011-ஆம் ஆண்டுக்கு பிறகு உயர்த்தப்படாத நிலையில், இப்போது பி.எஸ்சி, பி.காம் பயிலும் மாணவர்களுக்கான ஆண்டு கல்விக் கட்டண உதவி ரூ.2850-லிருந்து, 295% உயர்த்தப்பட்டு ரூ.11,250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எம்.ஏ மாணவர்களுக்கான உதவித் தொகை ரூ.1350-லிருந்தும், எம்.எஸ்சி, எம்.காம் மாணவர்களுக்கான உதவித்தொகை ரூ.2850-லிருந்து ரூ.12,000 ஆகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது.</p><p>பி.ஏ. மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1350 உதவித் தொகை 733% உயர்த்தப்பட்டு ரூ.11,250 ஆக வழங்கப்படும். பி.பி.ஏ மாணவர்களுக்கும் இதே தொகை வழங்கப்படும். இதுதவிர மேலும் 11 இளநிலை பட்டப்படிப்பு மானவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.11,250 வீதமும், 10 முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 வீதமும் கல்விக் கட்டண உதவியாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் கல்வி நிறுவனங்களில் கல்விக் கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டிருப்பதையும், பட்டியலின, பழங்குடியின மாணவர்களின் கல்விக் கட்டண உதவித் தொகை கடந்த 15 ஆண்டுகளாக உயர்த்தப்படாததையும் கனக்கில் கொண்டு பார்க்கும் போது இந்த உதவித்தொகை உயர்வு நியாயமானதும், தேவையானதும் ஆகும்.</p><p>அதே நேரத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்கள் ஆகியோருக்கு இத்தகைய கல்விக்கட்டண உதவிகள் வழங்கப்படுவதே இல்லை. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அரசு கல்லூரிகளில்  அனைத்து மாணவர்களுக்கும் இலவசக் கல்வி வழங்கப்படுவதால், அவற்றில் பயிலும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் ஒரு பிரச்சனை இல்லை. ஆனால், தனியார் கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய சமூக மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கும் கல்விக்கட்டண உதவித் தொகை வழங்கப்பட வேண்டும்.</p><p>அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இலவசக் கல்வி வழங்கப்பட்டாலும், தரமான கல்வி வழங்கப்படுவதில்லை. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங்களில் 8,083 கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசுக் கல்லூரிகளில் கல்வித் தரம் சீரழிந்திருப்பதால், பெரும்பான்மையான மாணவர்கள் அவற்றில் இடம் கிடைத்தாலும் தவிர்த்து விட்டு தனியார்  கலைக் கல்லூரிகளில் சேரும் வழக்கம் அதிகரித்து வருகிறது.</p><h2><strong>கல்விக்கட்டண சுமையை அரசு தான் ஏற்க வேண்டும்</strong></h2><p>எடுத்துக்காட்டாக, 2022-23ஆம் ஆண்டில் 170 அரசுக் கல்லூரிகளில் இளநிலை முதலாம் ஆண்டில், ஒரு லட்சத்து 8,748 மாணவர்கள் சேர்ந்தனர். ஆனால், கடந்த ஆண்டில் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் மாணவர் சேர்க்கை 96,000 ஆக குறைந்து விட்டது. அதேநேரத்தில், தனியார் கலை - அறிவியல் கல்லூரிகளில் 2023-24ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 94,306 ஆக இருந்த முதலாமாண்டு மாணவர் சேர்க்கை, 2025-26ஆம் ஆண்டில்  2.60 லட்சத்தைக் கடந்திருக்கிறது. தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகளில் சுமார் 10 லட்சம் மாணவர்கள் பயிலும் நிலையில், அவர்களில் பெரும்பான்மையினர் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் இஸ்லாமிய சமூகங்களைச் சேர்ந்தவர்கள்.</p><p>அவர்களிலும் கணிசமானவர்கள் கல்லூரிக் கல்விக் கட்டணம் செலுத்த வசதியற்றவர்கள். அவர்களில் பெரும்பான்மையினரின் பெற்றோர் கடன் வாங்கித் தான் கட்டணம் செலுத்துகின்றனர். இத்தகைய நிலை  ஏற்பட்டதற்கு மாணவர்களோ, பெற்றோர்களோ காரணமல்ல. தமிழக அரசு தான் இதற்கு காரணம். அரசு கலைக் கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரித்தும்,  அவற்றில் தகுதியான உதவிப் பேராசிரியர்களை நியமித்தும் தரமானக் கல்வியை வழங்கியிருந்தால் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் சேர்ந்து கல்வி கற்க வேண்டிய நிலைமை  ஏற்பட்டிருக்காது. அதனால், தனியார் கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்விக்கட்டண சுமையை அரசு தான் ஏற்க வேண்டும்.</p><p>அந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்படுவதைப் போலவே, பிற்படுத்தப்பட்ட, மிகவும்  பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் ஆண்டு கல்விக் கட்டண உதவித் தொகையை வழங்க முன்வர வேண்டும். நடப்பு 2026-27ஆம் கல்வியாண்டிலிருந்தே இந்த  உதவித் தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.</p>]]></content:encoded></item><item><title>கிராஷ் டெஸ்டில் மாஸ் காட்டிய மஹிந்திரா XUV 7XO</title><link>https://www.maalaimalar.com/automobilenews/mahindra-xuv-7xo-scores-5-stars-in-bharat-ncap-crash-test</link><comments>https://www.maalaimalar.com/automobilenews/mahindra-xuv-7xo-scores-5-stars-in-bharat-ncap-crash-test#comments</comments><guid isPermaLink="false">f0210735-aaa5-4040-a20d-11dc3c200db7</guid><pubDate>Wed, 16 Sep 2026 05:04:00 +0000</pubDate><atom:updated>2026-09-16T05:04:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Car,mahindra,மஹிந்திரா,கார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/bl0zrazr/Mahindra-XUV-7XO-Crash-Test.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mahindra XUV 7XO Crash Test]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/bl0zrazr/Mahindra-XUV-7XO-Crash-Test.png?w=280" width="280"></media:thumbnail><category>ஆட்டோமொபைல் (Automobile)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/mahindra">மஹிந்திரா</a> XUV 7XO, ஜூலை 2026-இல் நடத்தப்பட்ட பாரத் NCAP கிராஷ் டெஸ்டில் ஐந்து நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளது. </p><p>கிராஷ் டெஸ்ட்களில் மஹிந்திரா XUV 7XO <a href="https://www.maalaimalar.com/topic/car">கார்</a> மாடலின், AX7 டீசல் ஏழு இருக்கைகள் கொண்ட ஆட்டோமேட்டிக் மற்றும் AX7L டீசல் 4WD ஏழு இருக்கைகள் கொண்ட ஆட்டோமேட்டிக் வேரியண்ட்கள் சோதனைக்கு உட்படுத்தப்ட்டன. </p><p>இந்த மதிப்பீடு, மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்களில் உள்ள பெட்ரோல் மற்றும் டீசல் டிரிம்கள் என பரந்த அளவிலான வேரியண்ட்களுக்கும் பொருந்தும்.</p><h2>மதிப்பெண்களில் அசத்திய XUV 7XO:</h2><p>வயது வந்தோர் பயணப் பாதுகாப்பில், XUV 7XO 32-க்கு 30.76 மதிப்பெண்களைப் பெற்றது. இதை மேலும் பிரித்து பார்த்தால், இந்த கார் முன்பக்க ஆஃப்செட் நெகிழ்வு தடுப்பு சோதனையில் 16-க்கு 14.76 மதிப்பெண்களையும், பக்கவாட்டு நகரக்கூடிய நெகிழ்வு தடுப்பு சோதனையில் 16-க்கு முழு 16 மதிப்பெண்களையும் பெற்றதுடன், பக்கவாட்டு கம்ப மோதல் சோதனையிலும் தேர்ச்சி பெற்றது.</p><p>குழந்தைகள் பயண பாதுகாப்பை பொறுத்தவரை, XUV 7XO 49-க்கு 44.97 மதிப்பெண்களைப் பெற்றது; இதில் டைனமிக் ஸ்கோர் 24-க்கு 23.97, CRS நிறுவல் ஸ்கோர் 12-க்கு முழு 12, மற்றும் வாகன மதிப்பீட்டு ஸ்கோர் 13-க்கு 9 ஆகும்.</p><h2>XUV 7XO பாதுகாப்பு அம்சங்கள்:</h2><p>அனைத்து வேரியண்ட்களிலும் பொருத்தப்பட்டுள்ள நிலையான பாதுகாப்பு உபகரணங்களில் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், பக்கவாட்டு ஹெட் கர்டன் ஏர்பேக்குகள், பாதசாரிகள் பாதுகாப்பு மற்றும் அனைத்து இருக்கை நிலைகளுக்குமான சீட் பெல்ட் ரிமைன்டர்கள் ஆகியவை அடங்கும்.</p><p>ஓட்டுநர் மற்றும் முன் பயணிக்கு முன் ஏர்பேக்குகள், பெல்ட் ப்ரீடென்ஷனர்கள் மற்றும் லோட்-லிமிட்டர்கள் நிலையான அம்சங்களாக உள்ளன, அதே சமயம் பின்புற இருக்கைகளில் ISOFIX ஆங்கரேஜ்கள் கிடைக்கின்றன. ஓட்டுநருக்கான முழங்கால் ஏர்பேக், நிலையான அம்சமாக இல்லாமல் ஒரு விருப்ப தேர்வாக வழங்கப்படுகிறது.</p><p>அதன் பிரிவை பொறுத்தவரை, XUV 7XO-வின் 30.76 என்ற AOP மதிப்பெண் ஒரு போட்டித்தன்மை வாய்ந்த முடிவாகும். இது மூன்று வரிசை இருக்கைகள் கொண்ட SUV பிரிவில் சிறந்த செயல்திறன் கொண்ட வாகனங்களில் ஒன்றாக திகழ்கிறது.</p><p>என்ட்ரி லெவல் மாடல்கள் முதல் உயர்-ரக AWD டீசல் மாடல் வரை, இந்த மதிப்பீடு பரந்த அளவிலான மாடல்களுக்கு பொருந்தும் என்பதால், வாங்குபவர்கள் எந்த வேரியண்ட்டை தேர்ந்தெடுத்தாலும், அவர்களுக்கு ஓரளவு சீரான பாதுகாப்பு கிடைக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>ஈரானில் பயங்கரம்: நடுவானில் அதிர்ந்த விமானம், சரிந்து விழுந்த கூரை பாகங்கள்- பயணிகள் கதறல்!</title><link>https://www.maalaimalar.com/news/world/terror-in-iran-plane-shakes-midair-cabin-roof-collapses</link><comments>https://www.maalaimalar.com/news/world/terror-in-iran-plane-shakes-midair-cabin-roof-collapses#comments</comments><guid isPermaLink="false">3019d574-20b3-487c-a661-261be23b7a39</guid><pubDate>Wed, 16 Sep 2026 05:02:31 +0000</pubDate><atom:updated>2026-09-16T05:02:31.187Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஈரான்,Iran,Sepehran Airlines,Mashhad Airport,மஷாத் விமான நிலையம்,செபெஹ்ரன் ஏர்லைன்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/hkhwqtv5/air.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sepehran Airlines]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/hkhwqtv5/air.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விமானம் கடும் அதிர்வுகளுக்கு உள்ளானதால், பயணியர் அமர்ந்திருந்த பகுதியின் மேல் கூரை உறை உடைந்து சரிந்தது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/again-and-again-oracle-shocks-employees-with-today-is-your-last-day">ஈரான் </a>நாட்டின் மஷாத் நகரிலிருந்து கெர்மான்ஷா நோக்கிப் புறப்பட்ட செபெஹ்ரன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 விமானம், டேக்-ஆஃப் செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே ஏற்பட்ட தீவிர தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.</p><h2><strong>டயர் கழன்று எஞ்சின் சேதம்</strong></h2><p>மாலை சுமார் 5:39 மணியளவில் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், அதன் லேண்டிங் கியரில் இருந்த சக்கரத்தின் டயர் தடம் கழன்று விழுந்தது. இதனால் விமானத்தின் என்ஜின் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டு, விமானம் முழுவதும் கட்டுக்கடங்காமல் பயங்கரமாக குலுங்கத் தொடங்கியது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த விமானிகள் உடனடியாக அவசரநிலையை பிரகடனப்படுத்தி, விமானத்தை மீண்டும் மஷாத் விமான நிலையத்தை நோக்கித் திருப்பினர்.</p><h2>சரிந்து விழுந்த <strong>கேபின் கூரை பா</strong>கங்கள்</h2><p>விமானம் கடும் அதிர்வுகளுக்கு உள்ளானதால், பயணியர் அமர்ந்திருந்த பகுதியின் மேல் கூரை உறை உடைந்து சரிந்தது. இதன் காரணமாக விமானத்தின் உட்புறக் கட்டமைப்புகள் வெளியே தெரிந்தன. மேலடுக்கு பெட்டிகளில் இருந்த பொருட்களும் கூரை பாகங்களும் பயணிகள் மீது விழுந்ததால், அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறியபடி பிரார்த்தனை செய்யத் தொடங்கினர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.</p><p>விமானிகளின் துரிதமான செயல்பாட்டால், விமானம் மஷாத் விமான நிலையத்தில் பாதுகாப்பாக அவசரத் தரையிறக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவத்தில் பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் யாருக்கும் காயங்களோ பாதிப்போ ஏற்படவில்லை என செபெஹ்ரன் ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் ஹசன் ஜாஃபரி தெரிவித்துள்ளார். பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கப்பட்டு, மாற்று விமானம் மூலம் கெர்மான்ஷாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.</p><p>இச்சம்பவத்தை தொடர்ந்து மஷாத் விமான நிலையத்தின் ஓடுதளம் தற்காலிகமாக மூடப்பட்டு, ஆய்வு செய்யப்பட்ட பின் மீண்டும் திறக்கப்பட்டது. டயர் கழன்றதுதான் என்ஜின் சேதத்திற்கும் கடும் அதிர்வுக்கும் காரணமா, கூரை பாகங்கள் எவ்வாறு தனியாகக் கழன்று விழுந்தன என்பது குறித்து ஈரான் சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு விரிவான விசாரணையை தொடங்கியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தி.மு.க முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது ஊழல் வழக்கு பதிவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/corruption-case-against-former-dmk-minister-anbil-mahesh</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/corruption-case-against-former-dmk-minister-anbil-mahesh#comments</comments><guid isPermaLink="false">2c2e726e-25f1-465e-a82d-805d36729c7d</guid><pubDate>Wed, 16 Sep 2026 04:49:10 +0000</pubDate><atom:updated>2026-09-16T04:49:10.234Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,ஊழல் வழக்கு,anbil mahesh poyyamozhi,அன்பில் மகேஷ் பொய்யாமொழி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/gab61qlr/anbilmaheshpoyyamozhi.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்பில் மகேஷ் பொய்யாமொழி]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்பில் மகேஷ் பொய்யாமொழி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/gab61qlr/anbilmaheshpoyyamozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது ஊழல் வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசார்  பதிவு செய்துள்ளனர்.</strong></em> </p><p>தி.மு.க. ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF">அன்பில் மகேஷ்</a> இருந்தபோது தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம், பள்ளி தர உயர்வு அனுமதி பெற்றுத் தருவதாக பணம் வசூலித்து மோசடி செய்ததாக தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு செயலர் இளங்கோவன் சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்ததின் பேரில் பி.டி.அரசகுமார் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். </p><h2><strong>சோதனை</strong></h2><p>இந்த புகார் தொடர்பாக இன்று திருச்சி தென்னூர் அண்ணா நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அன்பில் மகேஷின் திருச்சி வீடு மற்றும் அவர் தொடர்புடைய 6 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. </p><p>இதனிடையே, தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது ஊழல் வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசார்  பதிவு செய்துள்ளனர். </p><h2><strong>வங்கி கணக்குகள் முடக்கம்</strong></h2><p>இந்த வழக்கு தொடர்பாக மத்திய குற்ற பிரிவு போலீஸ் தரப்பில் கூறியதாவது:- வழக்கு தொடர்பாக இதுவரை 250-க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 177 தனியார் பள்ளிகளிடம் பல கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு நம்பிக்கை மோசடி நடந்துள்ளது. மோசடி தொடர்பாக பி.டி.அரசகுமாரின் 20 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இதற்கிடையே, அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருவதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>அன்பில் மகேஷ் வீட்டில் நடைபெறும் ரெய்டு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை - மு.க.ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-condemned-anbil-mahesh-house-raid</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-condemned-anbil-mahesh-house-raid#comments</comments><guid isPermaLink="false">3dfbf62d-ce8e-49e5-aa3a-9cfec075ed76</guid><pubDate>Wed, 16 Sep 2026 04:47:33 +0000</pubDate><atom:updated>2026-09-16T04:47:33.988Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,anbil mahesh poyyamozhi,முக ஸ்டாலின்,அன்பில் மகேஷ் பொய்யாமொழி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/cia1r52a/mkstalin1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/cia1r52a/mkstalin1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>எதிர்க்கட்சி மீது ரெய்டு நடத்துவதால் மக்கள் கோபத்தைத் தணிக்க முடியாது. பொய்யான குற்றச்சாட்டுகளும் சட்டத்தின் முன் நிலைக்காது என்பதை இந்த அரசு விரைவில் உணரும்! என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.</p> <p>தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் ரூ.100 கோடிக்கு மேல் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/central-crime-branch-police-conduct-raid-at-former-minister-anbil-maheshs-residence">அன்பில் மகேஷ்</a> பொய்யாமொழியின் திருச்சி வீடு மற்றும் அவர் தொடர்புடைய 6 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.</p> <p>இந்நிலையில் மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது ரெய்டு அஸ்திரத்தை ஏவியுள்ளது எதற்கும் லாயக்கற்ற த.வெ.க. அரசு என்று திமுக தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-thank-you-to-everyone-who-kindly-inquired-about-my-health">மு.க.ஸ்டாலின்</a> தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p> <p>அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது ரெய்டு: மற்றுமொரு திசைதிருப்பும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை</p><p>* தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டினால் பாதிக்கப்படும் மக்களின் போராட்டங்கள்</p><p>* பட்டினப்பாக்கம் மீனவர்கள் போராட்டம்</p>  <p>* நேபாளத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் உரிய பதில் கிடைக்காமல் தலைமைச் செயலகம் முன் போராட்டம்</p><p>* ஆவின் பால் தட்டுப்பாட்டால் மக்கள் பரிதவிப்பு</p><p>* ராமநாதபுரம் இரட்டைக் கொலை</p> <p>* சென்னையில் பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் அடித்துக் கொலை </p><p>* அயனாவரத்தில் பெண் காவலரிடம் த.வெ.க. நிர்வாகி சீண்டல்</p><p>என மாநிலத்தை உலுக்கி வரும் எதையும் கண்டுகொள்ளாமல் லண்டனில் ஷூட்டிங் நடத்திக்கொண்டிருக்கிறார் முதலமைச்சர்.</p> <p>இந்தப் பிரச்சனைகளைச் சரிசெய்ய முடியாத விரக்தியில், மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது ரெய்டு அஸ்திரத்தை ஏவியுள்ளது எதற்கும் லாயக்கற்ற த.வெ.க. அரசு.</p> <p>இந்த அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையைச் சட்டரீதியாக நாங்கள் எதிர்கொள்வோம். எதிர்க்கட்சி மீது ரெய்டு நடத்துவதால் மக்கள் கோபத்தைத் தணிக்க முடியாது. பொய்யான குற்றச்சாட்டுகளும் சட்டத்தின் முன் நிலைக்காது என்பதை இந்த அரசு விரைவில் உணரும்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீது ரெய்டு: மற்றுமொரு திசைதிருப்பும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை<br><br>▶️ தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டினால் பாதிக்கப்படும் மக்களின் போராட்டங்கள்<br><br>▶️ பட்டினப்பாக்கம் மீனவர்கள் போராட்டம்<br><br>▶️ நேபாளத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் உரிய பதில் கிடைக்காமல்…</p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2100079595378864300?ref_src=twsrc%5Etfw">September 16, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY: சற்றே உயர்ந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-16-9-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-16-9-2026#comments</comments><guid isPermaLink="false">d0638284-8439-4f64-ab19-d6692f275047</guid><pubDate>Wed, 16 Sep 2026 04:29:13 +0000</pubDate><atom:updated>2026-09-16T04:29:13.305Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/11/26290201-gold-112.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/11/26290201-gold-112.webp?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.14,065-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p> <p>தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. </p><p>சென்னையில் கடந்த 12-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு  ரூ.120 உயர்ந்து ரூ.1,13,360-க்கும், கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.14,170-க்கும் விற்பனையானது. 13-ந்தேதி சவரன் ரூ.1,13,360-க்கும், ஒரு கிராம் ரூ.14,170-க்கும் விற்பனையானது. 14-ந்தேதி சவரனுக்கு  ரூ.360 குறைந்து ரூ.1,13,000-க்கும், கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.14,125-க்கும் விற்பனையானது.</p> <p>நேற்று சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.1,12,320-க்கும், கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.14,040-க்கும் விற்பனையானது.</p><p>இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு  ரூ.200 உயர்ந்து ரூ.1,12,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.14,065-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்</h2><p>15-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.112,320</p><p>14-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,000</p><p>13-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,360</p><p>12-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,360</p><p>11-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,240</p> <h2>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்</h2><p>15-09-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>14-09-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>13-09-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>12-09-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>11-09-2026- ஒரு கிராம் ரூ.250</p> ]]></content:encoded></item><item><title>மேக்னைட் மாடலின் விலையை சத்தமின்றி மாற்றிய நிசான்</title><link>https://www.maalaimalar.com/automobilenews/car/nissan-magnite-prices-hiked</link><comments>https://www.maalaimalar.com/automobilenews/car/nissan-magnite-prices-hiked#comments</comments><guid isPermaLink="false">d23772c7-406f-4f5f-b9b3-964886cb40f2</guid><pubDate>Wed, 16 Sep 2026 04:22:00 +0000</pubDate><atom:updated>2026-09-16T04:22:00.000Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Car,Nissan,விலை உயர்வு,price hike,கார்,நிசான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/ukisd8ob/Nissan-Magnite.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nissan Magnite]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/ukisd8ob/Nissan-Magnite.png?w=280" width="280"></media:thumbnail><category>கார் (Automobile)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய சந்தையில் <a href="https://www.maalaimalar.com/topic/nissan">நிசான்</a> நிறுவனம் தனது மேக்னைட் மாடலின் விலையை உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக நிசான் மேக்னைட் விலைகள் ரூ. 1000 முதல் ரூ. 3000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. </p><p>இந்த விலை உயர்வு, ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் (AT) மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் (MT) ஆகிய இரண்டு என்ஜின் ஆப்ஷன்களிலும் உள்ள அனைத்து மாடல்களுக்கும் பொருந்தும்.</p><p>இருப்பினும், பெரும்பாலான மாடல்களின் விலை ரூ. 3000 வரை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், டெக்னா பெட்ரோல் MT டூயல்-ஒன் என்ற ஒரு குறிப்பிட்ட மாடலுக்கு மட்டும் ரூ. 6500 என்ற மிக அதிகமான விலை உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இது மற்ற மாடல்களை விட மிக அதிகம் என்றும் கூறப்படுகிறது. </p><h2>சில வேரியண்ட்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை:</h2><p>மேலும், இந்த விலை உயர்வில் விசியா, விசியா பிளஸ் மற்றும் அசென்டா CNG மாடல்கள் (MT மற்றும் AMT ஆகிய இரண்டு வகைகளிலும்) சேர்க்கப்படவில்லை.</p><p>மிக நீண்ட காலமாக, வாடிக்கையாளர்களை ஷோரூம்களுக்குக் கொண்டு வருவதில் நிசான நிறுவனத்தின் தனிப்பெரும் சக்தியாக மேக்னைட் விளங்கியது. ஆனால் இப்போது, ​​கிராவைட் எம்.பி.வி., டெக்டான் மற்றும் எக்ஸ்-டிரெயில் எஸ்.யூ.வி. ஆகிய வாகனங்களும் குறைந்த எண்ணிக்கையில் அதனுடன் இணைந்துள்ளன.</p><h2>என்ஜின் ஆப்ஷன் மற்றும் போட்டி மாடல்கள்:</h2><p>இது இரண்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. இரண்டுமே மேனுவல் டிரான்ஸ்மிஷன் (MT) மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் (AT) பவர்டிரெய்ன்களைக் கொண்டுள்ளன. மேலும், நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் (NA) பெட்ரோல் மாடலில் சி.என்.ஜி. ஆப்ஷனும் உள்ளது.</p><p>கைகர் மாடலை போன்றே, நிசான் நிறுவனம் தனது பிரிட்ஜர் சப்-காம்பாக்ட் எஸ்.யூ.வி. மாடலை அறிமுகம் செய்ததும் மேக்னைட் மாடலும் அப்டேட் செய்யப்படும். </p><p>இந்த கார் டாடா பன்ச், ஹூண்டாய் எக்ஸ்டர், மாருதி ஸ்விஃப்ட் , ஹூண்டாய் கிராண்ட் ஐ10 மற்றும் ரெனால்ட் டிரைபர் மற்றும் கிராவைட் எம்.பி.வி. போன்றவற்றுக்கு போட்டியாக மாறும்.</p>]]></content:encoded></item></channel></rss>