<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 14 Aug 2026 11:27:00 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 14 ஆகஸ்ட் 2026...
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-14-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-14-august-2026#comments</comments><guid isPermaLink="false">af13e0d5-379a-4bc4-aa06-6d0f8775e507</guid><pubDate>Fri, 14 Aug 2026 04:11:55 +0000</pubDate><atom:updated>2026-08-14T10:10:33.595Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/qowhh7gn/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live news]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/qowhh7gn/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/bangladesh-351-for-6-in-day-2-against-australia-first-test">டார்வின் டெஸ்டில் ஹசன் தமிம் சதம்: 2ம் நாள் முடிவில் வங்கதேசம் 351 ரன்கள் குவிப்பு</a></p><p>* வங்கதேச அணியின் கேப்டன் ஷாண்டோ 84 ரன்னில் அவுட்டானார்.</p><p>* வங்கதேசம் அணி ஆஸ்திரேலியாவை விட 153 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/iran-president-to-come-to-delhi-for-brics-summit">பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருகிறார் ஈரான் அதிபர்</a></p><p>* பிரிக்ஸ் அமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லியில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.</p><p>* பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/stalin-led-dmk-executive-session-on-22nd-after-election-defeat" rel="nofollow">தேர்தல் தோல்விக்குப் பின் முதல்முறையாக..  வரும் 22-ல் திமுக செயற்குழு கூட்டம்!</a></p><p>* கட்சியின் செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்து, கட்சியை மறுசீரமைப்பு செய்ய முடிவு செய்துள்ளனர்.</p><p>* சரியாக செயல்படாத 10 மாவட்ட செயலாளர்கள் வரை பதவி பறிக்கப்படலாம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ireland-engineer-adopted-a-boy-from-mamallapuram-for-his-education-while-visiting-as-a-tourist">சுற்றுலா வந்தபோது படிப்புக்காக மாமல்லபுரம் சிறுவனை தத்தெடுத்த அயர்லாந்து என்ஜினீயர் </a></p><p>அயர்லாந்து நாட்டை சேர்ந்தவர் மைக்கேல். சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.</p><p>சி.பி.எஸ்.இ. தன் சொந்த செலவில் சிறுவன் சர்வேசை மைக்கேலை சேர்த்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-says-eliminating-alcohol-which-destroys-human-lives-should-be-the-governments-duty">மனிதர்களை ஒழிக்கும் மதுவை ஒழிப்பதே அரசின் கடமையாக இருக்க வேண்டும் - அன்புமணி</a></p><p>* அரசு பள்ளிகளில் மாணவர்களும், மாணவிகளும் மது அருந்துவது இப்போது தான் புதிதாக நடக்கும் ஒன்றல்ல.</p><p>* ஒரு காலத்தில் மதுக்கடைகள் ஊருக்கு வெளியிலும், சுடுகாடுகளுக்கு அருகிலும் தான் விற்பனை செய்யப்படும்.&nbsp;</p><p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/ben-shetton-won-the-title-in-canada-open">கனடா ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் பென் ஷெல்டன்</a></p><p>* கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோவில் நடந்தது</p><p>* பெண்கள் ஒற்றையர் பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/gold-medals-and-cash-awards-for-15-police-officers" rel="nofollow">80-வது சுதந்திர தினம்: 15 காவல் துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் சிறப்புப் பதக்கங்கள் அறிவிப்பு!</a></p><p>* விருதுகள், முதலமைச்சர் விஜய்யால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும்.</p><p>*  தமிழக முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப் பணிப் பதக்கங்கள் வழங்க தேர்வு.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/mitchell-starc-surpasses-kapil-dev-in-test-wickets-key-stats">டெஸ்டில் 435 விக்கெட்: கபில்தேவ் சாதனையை முறியடித்தார் ஸ்டார்க்</a></p><p>* மிட்செல் ஸ்டார்க் 106 டெஸ்டுகளில் விளையாடி 435 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.</p><p>* கபில்தேவ் 131 டெஸ்டில் விளையாடி 434 விக்கெட் எடுத்து 12-வது இடத்தில் உள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/iga-swiatek-won-the-canada-open-title">கனடா ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்வியாடெக்</a></p><p>* கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோவில் நடந்தது.</p><p>* ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் பென் ஷெல்டன் சாம்பியன் பட்டம் வென்றார்.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/6b62221a-9257-4791-9768-a6df9df77d5f">தேசப் பிரிவினை எனும் கருப்பு சரித்திரம்.. நினைவு தினத்தில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்</a></p><p>*மத வன்முறைகளில் தோராயமாக 2 லட்சம் முதல் 20 லட்சம் மக்கள் உயிரிழந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது.</p><p>* சுமார் 1.5 கோடி மக்கள் தங்களது சொந்த வீடுகளை விட்டு வலுக்கட்டாயமாக இடம்பெயர நேரிட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/karur-government-job-cancellation-interim-stay">கரூர் அரசு பணி: மதுரை ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம்!</a></p><p>* கரூர் உயிரிழப்பு: அரசு வேலை ரத்துக்கு மதுரை ஐகோர்ட் உத்தரவு இடைக்கால தடை</p><p>* "அரசு முடிவில் நீதிமன்றம் தலையிடலாமா?" என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/d433f424-d7c6-4cae-b9dd-54826286d05d">ஜப்பானில் வரலாறு காணாத கனமழை - 4 பேர் பலி - ஐவர் படுகாயம்</a></p><p>*20,000க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.</p><p>*ஜப்பான் வரலாற்றிலேயே பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-bjp-secret-alliance-to-escape-cases-says-minister-nirmal-kumar" rel="nofollow">வழக்குகளில் இருந்து தப்பிக்க பாஜகவுடன் திமுக மறைமுக கூட்டணி- அமைச்சர் நிர்மல் குமார்</a></p><p>* தவெக அரசு யாருடன் பேசினாலும் வெளிப்படையாகதான் இருக்கும்.</p><p>* திருச்சி சிவா மத்திய அமைச்சர் ஆக உள்ளதாக கூறப்படுவதை திமுக தற்போது வரை மறுக்கவில்லை. </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/uk-train-derailment-11-injured-as-passenger-train-overturns-near-lewes">இங்கிலாந்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான பயணிகள் ரெயில்</a></p><p>*தெற்கு இங்கிலாந்தின் லூயிஸ் நகருக்கு அருகே நடந்த இந்த விபத்தில் ரெயிலின் 3 பெட்டிகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.</p> <p>*ரெயிலில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/independence-day-cm-vijay-to-hoisting-national-flag-at-fort-tomorrow">சுதந்திர தின விழா - கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் விஜய் நாளை தேசியக்கொடி ஏற்றுகிறார்</a></p><p>* சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. </p><p>* தகைசால் தமிழர் விருதுக்கான பரிசுத் தொகை ரூ. 10 லட்சமாகும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-14-8-2026">GOLD PRICE TODAY: தங்கம் விலை அதிரடி குறைவு - சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.180 குறைந்து ரூ.14,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/us-belgium-diamond-ring-row-senators-probe-if-trump-gift-linked-to-eu-diamond-tariff-waiver">321 வைரங்கள் பதித்த மோதிரம்.. பெல்ஜியத்தில் இருந்து டிரம்புக்கு வந்த பரிசு - உடனே ரத்தான வைர இறக்குமதி வரி - சர்ச்சை</a></p><p>*321 வைரங்கள், மரகதம், மாணிக்கக் கற்கள் மற்றும் 18 கேரட் தங்கத்தால் செய்யப்பட்ட சிறப்பு வாய்ந்த மோதிரம்.</p> <p>*வைரங்களுக்கு வழங்கப்பட்ட வரி விலக்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/nalsar-graduation-row-students-oppose-cji-suryakant-invite-over-remarks-and-protest-case-handling">U Turn அடித்த பார் கவுன்சில்.. தலைமை நீதிபதி வருகையை எதிர்த்த சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தடை நீக்கம்</a></p><p>*மாநில பார் கவுன்சில்களுக்கு இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா உத்தரவிட்டார்.</p><p>* துணைவேந்தர் மற்றும் நிர்வாகத்திற்கு மனு அனுப்பினர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/maharashtra-earthquake-34-magnitude-quake-jolts-nashik-at-dawn-no-major-damage-reported">மகாராஷ்டிரா, இமாச்சல பிரதேசத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்</a></p><p>*மகாராஷ்டிராவில் இன்று அதிகாலை 3.4 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.</p><p>*ஆப்கானிஸ்தானிலும் இன்று அதிகாலை 4:29 மணியளவில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/modis-hug-based-foreign-policy-rahul-hugging-the-congress-leader-what-was-said-about-meloni">மோடியின் கட்டிப்பிடி வெளியுறவு கொள்கை.. காங்கிரஸ் தலைவரை கட்டிப்பிடித்த ராகுல் - மெலோனி குறித்து சொன்ன விஷயம்!</a></p><p>*"என்னை மெலோனி என்று நினைத்து கட்டிப்பிடிக்கவில்லையே?" என்று கேட்டார்</p><p>*மேலும் ஒரு படி மேலே சென்று மேடையிலிருந்த காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீட்சித்தைக் கட்டிப்பிடித்தார்</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/jharkhand-gen-alpha-student-protest-headmaster-transfer-order-cancelled">ஜென் ஆல்பா போராட்டம் வெற்றி.. பள்ளித் தலைமை ஆசிரியர் இடமாற்றம் ரத்து | Jharkhand</a></p><p>*காவல் நிலையத்தின் மீதும் மாணவர்கள் கல்வீச்சு நடத்தினர். இதில் ஒரு காவலர் காயமடைந்தார்</p><p>*வாக்குவாதம் முற்றி அவர் ஒரு மாணவனை அறைந்ததாக கூறப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/praggnanandhaa-suffers-first-loss-vincent-keymer-checkmates-in-sinquefield-cup-round-three">Sinquefield Cup: மூன்றாம் சுற்றில் பிரக்யானந்தா அதிர்ச்சி தோல்வி</a></p><p>*இரண்டாம் சுற்றில் உலக சாம்பியன் ஜெவோகிர் சின்டாரோவை வீழ்த்தினார்.</p><p>*மூன்றாவது சுற்றில் செக்மேட் ஆனார்.<br><br></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/sureshkumar-realizes-his-dream-of-studying-medical-at-51">வயது ஒரு தடையல்ல: 51 வயதில் மருத்துவ கனவை நனவாக்கி சாதித்த மாற்றுத்திறனாளி</a></p><p>* 2022-ம் ஆண்டு மருத்துவப் படிப்பு ஆசை மீண்டும் பொறித்தட்ட நீட் தேர்வை தமிழ் வழியில் எழுதினார்.</p><p>*  2026-ம் ஆண்டு நீட் தேர்வை எழுதி 192 மதிப்பெண் எடுத்திருந்த சுரேஷ்குமார்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/parliament-monsoon-session-rs-175-crore-has-been-lost-so-far">இது முதல் முறை அல்ல... நாடாளுமன்ற முடக்கத்தால் ரூ.175 கோடி வீணடிப்பு</a></p><p>* மக்கள் செலுத்தும் வரிப்பணத்திலேயே சட்டசபைகள் மற்றும் நாடாளுமன்றம் இயங்குகின்றன.</p><p>* நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் செயல்பட ஒரு நிமிடத்துக்கு ரூ.26 லட்சம் செலவு ஆகும். </p> ]]></content:encoded></item><item><title>சைதை வாக்காளர்களுக்கு நல்ல சாவே வராது -  ஆர்.எஸ்.பாரதி சாபம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-bharathi-curse-voters-of-saidai-will-not-have-a-good-death</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-bharathi-curse-voters-of-saidai-will-not-have-a-good-death#comments</comments><guid isPermaLink="false">39106f1f-89f8-4111-9617-b38e740a1108</guid><pubDate>Fri, 14 Aug 2026 09:37:11 +0000</pubDate><atom:updated>2026-08-14T09:37:11.522Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,RS Bharathi,ஆர்எஸ் பாரதி,Ma Subramanian,மா சுப்பிரமணியன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/tldsjv7h/rsbharathi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ RS Bharathi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/tldsjv7h/rsbharathi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மா.சுப்பிரமணியனை தோற்கடித்த சைதாப்பேட்டை தொகுதி மக்களுக்கு நல்ல சாவே வராது என்று திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சாபமிட்டுள்ளார்.</strong></em></p><p>சென்னை காரம்பாக்கத்தில் நடந்த <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/75-percent-of-mous-finalised-under-dmk-rule-says-former-minister-trp-raja">திமுக</a> விழாவில் பேசிய அக்கட்சியின் அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது: </p><h2>தவெக ஆட்சி</h2><p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95">தவெக</a> ஆட்சிப் பொறுப்பேற்றதும் வீட்டு வரி எல்லாம் உயர்ந்து விட்டதாம். அதுபற்றி நமக்கு என்ன கவலை. </p><p>இனிமேல் நாம் அனைவரும் வாயை மூடிக்கொண்டு தான் இருக்க வேண்டும். இதற்குக் காரணம் வாக்களித்தவர்கள் தான். அவர்களே தங்களது தலையில் மண்ணை அள்ளிப்போட்டுக் கொண்ட பிறகு தான் புத்தி வரும். </p> <h2>மா.சுப்பிரமணியன்</h2><p>மா.சுப்பிரமணியனை தோற்கடித்த சைதாப்பேட்டை தொகுதி மக்களுக்கு நல்ல சாவே வராது.</p><p>மா.சுப்பிரமணியன் கொண்டுவந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களின் உறவினர்கள் ஓட்டுபோட்டே தவெக வெற்றி பெற்றுள்ளது.</p><h2>போதைப்பொருள் பயன்பாடு</h2><p>இனி மக்களுக்காக எதுவும் செய்ய வேண்டாம். கட்சிக்காரர்களுக்காக செய்யுங்கள். 5 ஆண்டுகள் ஓய்வெடுப்போம்.</p><p>பேருந்து நிலையங்களில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருகிறார் ஈரான் அதிபர்</title><link>https://www.maalaimalar.com/news/national/iran-president-to-come-to-delhi-for-brics-summit</link><comments>https://www.maalaimalar.com/news/national/iran-president-to-come-to-delhi-for-brics-summit#comments</comments><guid isPermaLink="false">6887b041-7e2d-4af9-8148-b91678ba13fd</guid><pubDate>Fri, 14 Aug 2026 10:03:45 +0000</pubDate><atom:updated>2026-08-14T10:03:45.880Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BRICS Summit,பிரிக்ஸ் உச்சி மாநாடு,Iran President,ஈரான் அதிபர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/xhtvk69l/iran.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Masoud Pezeshkian]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/xhtvk69l/iran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியான் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளதாக தகவல் வெளியானது.</p><h2>பிரிக்ஸ் உச்சி மாநாடு</h2><p>பிரிக்ஸ் அமைப்பில் ஈரான், எகிப்து, எத்தியோப்பியா, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் கடந்த 2024-ம் ஆண்டில் முழு உறுப்பினர்களாக இணைந்தன. இதனைத் தொடர்ந்து, 2025-ம் ஆண்டில் இந்தோனேசியாவும் இணைந்ததால் முழு உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.</p><p>இந்த ஆண்டு பிரிக்ஸ் அமைப்பின் 18-வது உச்சி மாநாடு, 'மீள்தன்மை, புதுமை, ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான கட்டமைப்பு' என்ற கருப்பொருளின் கீழ் டெல்லியில் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது.</p><h2>ஈரான் அதிபர் இந்தியா வருகை</h2><p>இந்நிலையில், பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியான் இந்தியாவுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியது. இந்த வருகையின்போது இரு நாடுகளின் உறவு மற்றும் போர்நிறுத்தம் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>கடந்த ஜூன் மாதம் நடந்த வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி இந்தியா வருகை தந்தார். அப்போது, அமெரிக்காவுடனான போர்நிறுத்த விவகாரத்தில் இந்தியாவின் பங்கு முக்கியமானது என கூறி அவர், ஹார்முஸ் ஜலசந்தி போக்குவரத்து தொடர்பாக உறுதியும் வழங்கினார்.</p><p>அமெரிக்கா உடனான போர் தொடர்ந்து வரும் நிலையில், ஈரான் அதிபரின் இந்தியா வருகை உலக நாடுகளை உற்றுநோக்க வைத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>TNPSC - டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2ஏ தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி - ஆகஸ்ட் 17-ந்தேதி தொடங்குகிறது!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/online-coaching-for-group-2-and-2a-exams-starts-on-august-17</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/online-coaching-for-group-2-and-2a-exams-starts-on-august-17#comments</comments><guid isPermaLink="false">be8e6818-f869-426c-a348-57a4f6e76169</guid><pubDate>Wed, 12 Aug 2026 14:28:38 +0000</pubDate><atom:updated>2026-08-12T14:28:38.382Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>குரூப் 2 தேர்வு,Group 2 Exam,Aatchi Tamil IAS Academy,ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/er06ikfd/New-Project-2026-08-12T200821.586.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/er06ikfd/New-Project-2026-08-12T200821.586.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமி சார்பில், டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2ஏ தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 17-ந்தேதி முதல் தொடங்குகின்றன. </p><h2>குரூப்-2, 2ஏ தேர்வு</h2><p>சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமி, கடந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. </p><p>இங்கு பயிற்சி பெற்ற பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் டி.என்.பி.எஸ்.சி. நடத்திய பல்வேறு தேர்வுகளில் வெற்றி பெற்று அரசுப் பணிகளில் சேர்ந்துள்ளனர்.</p><p>இந்த நிலையில், 2026-ம் ஆண்டுக்கான குரூப்-2, 2ஏ தேர்வுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. இதன் மூலம் உதவி ஆய்வாளர், முதுநிலை ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், இளநிலைக் கண்காணிப்பாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார்பதிவாளர் நிலை-II, சிறை அலுவலர் உள்ளிட்ட மொத்தம் 821 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.</p><figure><img alt="குரூப்-2, 2ஏ தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி - ஆகஸ்ட் 17-ந்தேதி தொடங்குகிறது!" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/03034yk4/New-Project-2026-08-12T195542.631.jpg" /></figure><h2>ஆன்லைன் பயிற்சி</h2><p>நவம்பர் 1-ந்தேதி நடைபெற உள்ள குரூப்-2, 2ஏ முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெறுவதற்குத் தேவையான திட்டமிட்ட பயிற்சியை வழங்கும் வகையில், ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமியில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 17-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்குகின்றன.</p><p>மொத்தம் 75 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்புகள், தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். பயிற்சியின் ஒரு பகுதியாக தொடர் மாதிரித் தேர்வுகள் மற்றும் தேர்வு நோக்கிலான பயிற்சிகள் நடத்தப்படும்.</p><p>மேலும், தேர்வுக்குத் தேவையான ஆதார நூல்கள் மற்றும் இ-புத்தகங்கள் மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் வழங்கப்படும்.</p><p>வெற்றியை இலக்காகக் கொண்டு திட்டமிடப்பட்டுள்ள இந்த பயிற்சி வகுப்பில் சேருவதற்கான பயிற்சிக் கட்டணம் ரூ.12,500 ஆகும்.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/zkg6l6zc/New-Project-2026-08-12T200718.052.jpg" /></figure><h2>முன்பதிவு செய்யலாம்</h2><p>இந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர், ‘TNPSC GROUP II, IIA ONLINE COACHING-2026’ என்று டைப் செய்து, தங்களது பெயர் மற்றும் தொடர்பு விவரங்களை 7550151584 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பி முன்பதிவு செய்யலாம்.</p><p>இந்த தகவலை ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமி இயக்குநர் ச. வீரபாபு தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஜாம்ஷெட்பூர் கால்பந்து கிளப்பை வெறும் 100 ரூபாய்க்கு விற்பனை செய்த டாடா ஸ்டீல்ஸ்</title><link>https://www.maalaimalar.com/sports/football/tata-steel-sells-jamshedpur-football-club-for-just-rs-100-behind-company-exit-from-isl</link><comments>https://www.maalaimalar.com/sports/football/tata-steel-sells-jamshedpur-football-club-for-just-rs-100-behind-company-exit-from-isl#comments</comments><guid isPermaLink="false">7220b254-d56a-4ed9-a8e7-2a4530eec647</guid><pubDate>Fri, 14 Aug 2026 11:22:23 +0000</pubDate><atom:updated>2026-08-14T11:22:23.087Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Indian Super League</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/quvtxkrr/TataSteel0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜாம்ஷெட்பூர் கால்பந்து கிளப்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/quvtxkrr/TataSteel0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கால்பந்து (Football)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜாம்ஷெட்பூரில் 1987-ம் ஆண்டு கால்பந்து அகாடமியை டாடா தொடங்கியது. இந்த நிறுவனம் 300-க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது. இந்தியாவில் நடைபெறும் ஐ.எஸ்.எல். என்ற கால்பந்து லீக்கில் விளையாடும் அணிகளில் ஒன்றாக ஜாம்ஷெட்பூர் கால்பந்து கிளப் உள்ளது. இந்த அணியின் உரிமையாளராக டாடா ஸ்டீல் இருந்து வந்தது.</p><h2>டாடா ஸ்டீல்</h2><p>இந்த நிலையில் டாடா ஸ்டீல் ஜாம்ஷெட்பூர் கால்பந்து கிளப்பின் மொத்த பங்குகளையும் சர்ச்சில் பிரதமர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் (Churchill Brothers Sports club) என்ற கிளப்பிற்கு விற்பனை செய்துள்ளது. ஒவ்வொரு கிளப்பும் கோடிக்கணக்கான ரூபாள் அளவில் கைமாறும். ஆனால், டாடா இந்த கிளப்பை வெறும் 100 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் டாடா ஸ்டீல்ஸ் இந்தியன் சூப்பர் லீக் (ISL) கிளப் உரிமையாளர்கள் என்பதில் இருந்து வெளியேறுகிறது.</p><p>ஜெம்ஷெட்பூர் கால்பந்து மற்றும் ஸ்போர்ட்டிங் பிரைவேட் லிமிடெட் (JFSPL) கால்பந்து அணியின் 100 சதவீதம் பங்குகளை மாற்ற டாடா ஸ்டீல் இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. டாடா ஸ்டீல் அந்த கிளப்பின் மொத்த பங்குகளான 4.08 கோடி பங்குகளை வைத்திருந்தது.</p><h2>ஆல் இந்தியா கால்பந்து பெடரேசன்</h2><p>பரிமாற்றத்திற்கான ஒப்பந்தத்தில் டாடா ஸ்டீல்- சர்ச்சில் பிரதர்ஸ் கையெழுத்திட்டனர். சர்ச்சில் பிரதமர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் பிரைவேட் லிமிடெட் கோவாவை மையமாக கொண்டு நிறுவனம் ஆகும்.</p><p>இந்த ஒப்பந்தத்திற்கு ஆல் இந்தியா கால்பந்து பெடரேசன் (AIFF) ஒப்புதல் தேவை. பிற வழக்கமான ஒப்புதல்களுடன், இந்த ஒப்பந்தம் ஆகஸ்ட் 31-க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இந்த ஒப்பந்தத்தில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி-யின் (Jamshedpur FC) ISL விளையாட்டு உரிமம் மற்றும் 12 வீரர்கள் மற்றும் இரண்டு பயிற்சியாளர்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் ஆகியவை அடங்கும். செப்டம்பர் 2026 முதல் சர்ச்சில் பிரதர்ஸ் (Churchill Brothers) அந்த ஒப்பந்தங்களை ஏற்றுக்கொண்டு செயல்படுத்தும்.</p><h2>எதனால் 100 ரூபாய் பரிமாற்றம்?</h2><p>2026 நிதியாண்டில் JFSPL நிறுவனம் 32.23 கோடி ரூபாய் வருவாயைப் பதிவு செய்தது. இருப்பினும், மார்ச் 2026 நிலவரப்படி அதன் நிகர மதிப்பு (net worth) எதிர்மறையாக, அதாவது மைனஸ் 5.8 கோடி ரூபாயாக இருந்தது.</p><p>எனவே, ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிக்கு நன்கு அறியப்பட்ட பெயர், விளையாட்டுக்கான உரிமம் மற்றும் ISL கட்டமைப்பில் ஓர் இடம் ஆகியவை இருந்தாலும், அதை நிர்வகிக்கும் நிறுவனத்திடம் பெரிய அளவில் பணப்புழக்கம் ஏதும் இருக்கவில்லை. எனவே, இந்த 100 ரூபாய் என்பது லாபம் ஈட்டும் ஒரு விளையாட்டு அணியின் வழக்கமான மதிப்பீடாகக் கருதப்படாமல், ஒரு குறியீட்டு ரீதியிலான உரிமை மாற்றமாகவே பார்க்கப்பட வேண்டும்.</p><p>இந்தியக் கால்பந்துக்கு இது ஒரு சவாலான காலகட்டமாகும். ISL தனது வணிக மாதிரி மற்றும் நிதி ரீதியான சாத்தியக்கூறுகள் குறித்து பல்வேறு கேள்விகளை எதிர்கொண்டு வருகிறது. தகவல்களின்படி, இந்த லீக்கின் ஊடக ஒளிபரப்பு உரிமத்தின் மதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. அதாவது, JioStar நிறுவனம் ஆண்டுக்கு 275 கோடி ரூபாய் செலுத்தி வந்த நிலையில், 2025-26 சீசனுக்காக FanCode நிறுவனம் வெறும் 8.6 கோடி ரூபாய் மட்டுமே வழங்க முன்வந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இந்தியா-இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/india-srilanka-first-test-starts-tomorrow-in-galle</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/india-srilanka-first-test-starts-tomorrow-in-galle#comments</comments><guid isPermaLink="false">e9f6fa2f-5cdf-43e1-a6ba-f469750ede42</guid><pubDate>Fri, 14 Aug 2026 11:08:42 +0000</pubDate><atom:updated>2026-08-14T11:08:42.390Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சுப்மன் கில்,Shubman Gill,Galle Test,காலே டெஸ்ட்,SLvIND,இலங்கை இந்தியா தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/txasq5wy/lanka.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ shubman gill, de silva]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/txasq5wy/lanka.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியா-இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி காலேயில் நாளை தொடங்குகிறது.  </p><p>சுப்மன்  கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கைக்குச் சென்றுள்ளது.</p><h2>முதல் டெஸ்ட் </h2><p>இரு அணிகள் இடையே 4 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. கடைசியாக 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் பெங்களூருவில் நடந்த போட்டியில் இந்தியா 238 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை மண்ணில் கடைசியாக 2017-ல்  நடந்த பல்லேகலே டெஸ்டிலும் இன்னிங்ஸ் மற்றும் 171 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது.</p><p>இந்திய அணி கடைசியாக சொந்த மண்ணில்  கடந்த ஜூன் மாதம் ஆப்கானிஸ்தானை இன்னிங்ஸ் மற்றும் 300 ரன் வித்தியாசத்தில்  வென்றது. கொழும்பில் இலங்கை லெவனுக்கு எதிரான 3 நாள் பயிற்சி ஆட்டத்தில்  6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்ததால் நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும்.</p><p>இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் தொடங்கும் என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>தேவ்தத் படிக்கல்</h2><p>சாய் சுதர்சன் காயத்தால் தொடரில் இருந்து விலகியதால் அவரது இடமான 3-வது வரிசையில் தேவ்தத் படிக்கல் ஆடுகிறார். அவர் பயிற்சி ஆட்டத்தில் 142 ரன் குவித்து இருந்தார். கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வால் தொடக்க வீரர்களாகவும், கேப்டன் சுப்மன் கில் 4-வது வரிசையிலும் இடம்பெறுவார்கள். </p><p>முதன்மை விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் தேர்வு பெறுவார். துருவ் ஜூரல் இடத்தில் சர்பிராஸ் கானுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.</p><p>சுழற்பந்தில் ஆல்ரவுண்டர் ஜடேஜா, குல்தீப் யாதவ், மானவ் சுதார், வேகப்பந்தில் பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படும். குர்னூர் இடம் பெற்றால் மானவ் சுதார் கழற்றி விடப்படலாம். 11 பேர் கொண்ட அணியை தேர்வு செய்வது கேப்டன் சுப்மன் கில்லுக்கு சவாலாக இருக்கும்.</p><h2>இலங்கை அணி</h2><p>தனஞ்செய டி சில்வா தலைமையிலான இலங்கை அணி சொந்த மண்ணில் வெற்றியுடன் கணக்கை தொடங்கும் வேட்கையில் உள்ளது. அந்த அணி கடைசியாக கடந்த மாதம் வெஸ்ட் இண்டீசில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 0-1 என்ற கணக்கில் இழந்தது. சொந்த மண்ணில் கடைசியாக 2025-ல் வங்காளதேத்தை வீழ்த்தி (1-0) இருந்தது.</p><p>நாளைய டெஸ்ட் இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. சோனி ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.</p><h2>47-வது மோதல்</h2><p>இரு அணிகளும் நாளை மோதுவது 47-வது டெஸ்ட் ஆகும்.  இதுவரை நடைபெற்ற 46 போட்டியில் இந்தியா 22-ல், இலங்கை 7-ல் வெற்றி பெற்றுள்ளன. 17 டெஸ்ட் டிரா ஆனது. இலங்கையில் இந்திய அணி 8 டெஸ்ட் தொடரில் விளையாடி உள்ளது. இதில் இரு அணிகளும் தலா 3 தொடரை கைப்பற்றி உள்ளன. 2 தொடர் சமனில் முடிந்தது. கடைசியாக இலங்கையில் 2017-ல் ஆடிய 3 டெஸ்டிலும் இந்திய அணி வென்று ஒயிட்வாஷ் (3-0) செய்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>துபாயில் மூளைச்சாவு அடைந்த 29 வயது இந்திய பெண்ணின் உறுப்பு தானத்தால் 3 பேருக்குக் கிடைத்த மறுவாழ்வு!</title><link>https://www.maalaimalar.com/news/world/organ-donation-of-brain-dead-29-year-old-indian-woman-in-dubai-gives-new-life-to-three</link><comments>https://www.maalaimalar.com/news/world/organ-donation-of-brain-dead-29-year-old-indian-woman-in-dubai-gives-new-life-to-three#comments</comments><guid isPermaLink="false">162c2f41-7e90-4379-9320-a84db2ce1848</guid><pubDate>Fri, 14 Aug 2026 10:49:40 +0000</pubDate><atom:updated>2026-08-14T10:49:40.777Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>துபாய்,dubai,OrganDonation,உறுப்புதானம்,JovitaDesouza,ஜோவிட்டாடிசோசா,AlJalilaFoundation,HayatUAE,HumanitarianAct</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/9tsnvwjp/Organ-Donation" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Organ Donation ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/9tsnvwjp/Organ-Donation?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிறருக்கு உதவுவதையே தனது வாழ்நாள் நோக்கமாக கொண்டு வாழ்ந்த ஜோவிட்டா டிசோசா என்ற இளம்பெண், தனது மரணத்திற்குப் பின்னும் மூன்று பேரின் உயிரைக் காத்துத் தனது மனிதநேயத்தை நிலைநிறுத்தியுள்ளார்.</p><h2>அறக்கட்டளைப் பணியும் எதிர்பாராத மரணமும்:</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D">துபாயில் </a>உள்ள புகழ்பெற்ற 'அல் ஜலிலா அறக்கட்டளையின்' முக்கியப் பணியாளராக ஜோவிட்டா பணியாற்றி வந்தார். </p><p>பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் மனிதநேயப் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வந்த இவருக்கு, அண்மையில் கடுமையான மூளை ரத்தக்கசிவு ஏற்பட்டது. தீவிர மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதிலும், மருத்துவர்கள் அவர் 'மூளைச்சாவு' அடைந்ததாக அறிவித்தனர்.</p><h2>குடும்பத்தினரின் உன்னத முடிவு:</h2><p>தன் வாழ்நாள் முழுவதும் மற்றவர்களுக்கு உதவுவதையே குறிக்கோளாகக் கொண்டிருந்த ஜோவிட்டாவின் எண்ணத்திற்கு மதிப்பளிக்கும் வகையில், அவரது குடும்பத்தினர் ஒரு உன்னதமான முடிவை எடுத்தனர். </p><p>ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய உறுப்புதானத் திட்டமான 'ஹயாத்' மூலம் அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்ய முன்வந்தனர். </p><p>இவர்களின் இந்த உன்னத முடிவால், மரணப் படுக்கையில் இருந்த மூன்று நபர்களுக்குப் புதிய உயிர் கிடைத்துள்ளது.</p><h2>அறக்கட்டளை சி.இ.ஓ மற்றும் குடும்பத்தினர் உருக்கம்:</h2><p>உலக உறுப்புதான தினத்தை முன்னிட்டு ஜோவிட்டாவின் இந்தச் தியாகத்தைப் பாராட்டி அல் ஜலிலா அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஆமிர் அல் ஜாரூனி கூறுகையில், "ஜோவிட்டாவின் வாழ்க்கை, கொடுப்பதன் உன்னதத்தை உணர்த்துகிறது. அவரது குடும்பத்தின் இந்த முடிவு மூன்று உயிர்களைக் காப்பாற்றியுள்ளது" என நெகிழ்ச்சியுடன் கூறினார்.</p><p>ஜோவிட்டாவின் குடும்பத்தினர் பேசுகையில், "அவளது அன்பான மற்றும் உதவும் குணம்தான் இந்தத் துயரமான நேரத்தில் எங்களுக்குப் பெரிய தைரியத்தைக் கொடுத்தது. </p><p>அவள் எப்போதும் மற்றவர்களின் மகிழ்ச்சியையே முதலில் நினைப்பாள், அவளது புன்னகை எங்கள் குடும்பத்தின் மிகப்பெரிய மகிழ்ச்சி" என உருக்கமாகத் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>இந்தியா, இஸ்ரேல் இணைந்து முதல் ஹேக்கத்தான் நிகழ்ச்சி - மின்சாரமில்லாமல் இயங்கும் சக்கர நாற்காலி அறிமுகம் </title><link>https://www.maalaimalar.com/news/world/india-israel-launch-first-hackathon-electricity-free-wheelchair</link><comments>https://www.maalaimalar.com/news/world/india-israel-launch-first-hackathon-electricity-free-wheelchair#comments</comments><guid isPermaLink="false">354a4561-6900-415c-9423-c3d299dfc469</guid><pubDate>Fri, 14 Aug 2026 10:46:56 +0000</pubDate><atom:updated>2026-08-14T10:46:56.998Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Indian Embassy,India-Israel hackathon,இந்தியா இஸ்ரேல் ஹேக்கத்தான்,இந்திய தூதரகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/tr0fuh92/%D7%99%D7%A6%D7%99%D7%90%D7%AA.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ இந்தியா-இஸ்ரேல் ஹேக்கத்தான்: மின்சாரமில்லா புதுமை சக்கர நாற்காலி அறிமுகம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ India Israel Hackathon]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/tr0fuh92/%D7%99%D7%A6%D7%99%D7%90%D7%AA.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஒன்றாக இணைந்து முதல் ஹேக்கத்தான் நிகழ்வில் கலந்துகொண்டன. இந்த நிகழ்வின் மூலம் விபத்தில் காயமடைந்து கை மற்றும் கால்கள் அசைவின்றி இருக்கும் நபர்கள் இயங்கும் வகையில் மின்சாரம் இல்லாமல் இயங்கும் எளிதாக இயங்கும் சக்கர நாற்காலி முன்மாதிரியை அறிமுகம் செய்துள்ளது. </p><h3><strong>ஹேக்கத்தான் நிகழ்வு</strong></h3><p>ஹேக்கத்தான்கள் என்பது பங்கேற்பாளர்கள் குறிப்பிட்ட சிக்கல்களுக்கான முன்மாதிரிகளை அல்லது தீர்வுகளை உருவாக்கும், காலவரையறைக்குட்பட்ட புத்தாக்க நிகழ்வுகளில் ஒன்றாகும்.</p><p>புனர்வாழ்வுத் தொழில்நுட்பம் என்பது காயம், அறுவை சிகிச்சை அல்லது நோய்க்குப் பிறகு உடல் குணமடைவதற்காக பயன்படுத்தப்படும் சாதனங்கள் மற்றும் அமைப்புகளை உள்ளடக்கியது.</p><p>நடமாடுவதற்கு உதவும் சாதனங்களில் சக்கர நாற்காலிகள், கை, கால் ஆதரவு அமைப்புகள் மற்றும் இயக்கத்திற்கு உதவும் கருவிகள் ஆகியவை அடங்கும்.</p><h3><strong>இந்தியா இஸ்ரேல் ஹேக்கத்தான் பங்கேற்பு</strong></h3><p>மீட்பு சுகாதாரப் பராமரிப்பு என்ற கருப்பொருளுடன், முதல் இந்தியா-இஸ்ரேல் ஹேக்கத்தான் இன்றுடன் நிறைவடைந்தது.</p><p>இந்த நிகழ்வில் புனர்வாழ்வு மற்றும் நோயாளிகள் நடமாட்டம் தொடர்பான 14 சிக்கல் கூற்றுகளில் பணியாற்றுவதற்காக, இந்தியா மற்றும் இஸ்ரேலைச் சேர்ந்த 1,300 இளம் கண்டுபிடிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.</p><p>இந்த ஹேக்கத்தான், இரண்டு நாடுகளில் குழு அடிப்படையிலான சிக்கல் தீர்க்கும் முறையை பயன்படுத்தியது. பங்கேற்பாளர்கள், மறுவாழ்வு, குணமடைதலைக் கண்காணித்தல் மற்றும் உதவி சாதனங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய சுகாதாரத் தொழில்நுட்ப யோசனைகளில் பணியாற்றினர்.</p><p>இஸ்ரேலில் உள்ள இந்திய யூத சமூகத்தைச் சேர்ந்த ஓரி காட்வில், மற்ற சமூக உறுப்பினர்களுடன் இணைந்து இந்த ஹேக்கத்தானை ஏற்பாடு செய்தார்.</p><p>தாப்பர் பல்கலைக்கழகம் முதன்மை கல்வி பங்காளராக செயல்பட்டதுடன், ஆரம்பகட்ட புத்தாக்கம் மற்றும் சுகாதாரத் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான ஒரு மையமாகவும் விளங்கியது. மேலும் தாப்பர் பல்கலைக்கழகம் இந்நிகழ்ச்சிக்கான கல்விசார் கூட்டாளியாகச் செயல்பட்டது.</p><p>இஸ்ரேலுக்கான இந்தியத் தூதர் ஜே.பி. சிங், 2026 ஆகஸ்ட் 14 அன்று வெற்றியாளர்களைப் பாராட்டினார்.</p><p>இந்த நிகழ்வில் கால்களை இழந்தவர்களுக்கு மறுவாழ்விற்காக சக்கர நாற்காலியின் முன் சக்கரத்தின் இயந்திர சுழற்சியைப் பயன்படுத்தும், குறைந்த செலவிலான, மின்சாரமில்லாத , சக்கர நாற்காலி முன்மாதிரியை இஸ்ரேல் அறிமுகம் செய்தது.</p><p>இந்தியா சார்பில், காயமடைந்த நோயாளிகளின் கை, கால் அசைவுகளை ஆரோக்கியமான நபர்களின் அசைவுகளுடன் ஒப்பிடுவதற்கு, நிகழ்நேர காணொளி செயலாக்கம் மற்றும் தானியங்கி இயக்கப் பகுப்பாய்வு முன்மாதிரி அறிமுகம் செய்யப்பட்டது.</p><p>இஸ்ரேலில் வெற்றி பெற்ற தீர்வுகளில், சக்கர நாற்காலியின் முன்பக்கச் சக்கரம் இயற்கையாகச் சுழலும் தன்மையைப் பயன்படுத்தி, மின்சாரத் தேவையின்றி கால்களைக் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் அசைக்க உதவும் ஒரு அமைப்பும் அடங்கும்.</p><p>உறுப்பு அசைவு மற்றும் மறுவாழ்வு சிகிச்சைக்குத் துணையளிக்கும் வகையில், எளிமையான மற்றும் பரவலாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு அணுகுமுறையை இத்தீர்வு வழங்க முற்படுகிறது.</p><h3><strong>இந்திய தூதரகம்</strong></h3><p>இந்த முன்னெடுப்பு குறித்து இந்திய தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில், “இஸ்ரேலில் உள்ள இந்திய யூத சமூகத்தை சேர்ந்த ஓரி காட்வில், இந்த ஹேக்கத்தான் நிகழ்வை ஒரு முன்னெடுப்பாக நடத்த திட்டமிட்டார்.</p><p>இந்த முன்னெடுப்பு, இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மக்கள் உறவுகளை வலுப்படுத்தவும், பரந்த சமூகத் தாக்கத்தை ஏற்படுத்தும் தீர்வுகளுக்காக இளம் மாணவர்களின் படைப்பாற்றலையும் தொழில்நுட்பத் திறன்களையும் பயன்படுத்தவும் சமூகத்திற்கு ஒரு தளத்தை வழங்கியது.</p><p>சமூக ஈடுபாடு மற்றும் புத்தாக்கத்திற்கான ஒரு தளமாக உருவாக்கப்பட்ட முதல் இந்தியா-இஸ்ரேல் ஹேக்கத்தான், இந்தியா-இஸ்ரேல் நட்புறவு, இளைஞர்கள் தலைமையிலான புத்தாக்கம் மற்றும் சமூக நன்மைக்கான தொழில்நுட்பம் ஆகியவற்றின் அர்த்தமுள்ள கொண்டாட்டமாக உருவெடுத்தது.</p><p>இரு நாடுகளிலும் உள்ள இளைஞர்கள் மற்றும் சமூகங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு, சமூக நலனுக்கும் உலகளாவிய நன்மைக்கும் பங்களிக்கக்கூடிய தீர்வுகளை எவ்வாறு உருவாக்க முடியும் என்பதை இந்த முயற்சி நிரூபித்தது.</p><p>இந்தியத் தூதரகம் இதுபோன்ற முயற்சிகளை ஆதரிப்பதற்கும் வலுப்படுத்துவதற்கும், இந்தியா-இஸ்ரேல் ஹேக்கத்தானின் அடுத்த பதிப்பை எதிர்நோக்குகிறது” என்று தெரிவித்தது.</p>]]></content:encoded></item><item><title>நிச்சயம் முடிந்த சில வாரங்களில் வங்கி பெண் ஊழியர் தற்கொலை! ஆணும் சடலமாக மீட்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/engaged-bank-couple-die-hours-apart-in-kerala-karnataka</link><comments>https://www.maalaimalar.com/news/national/engaged-bank-couple-die-hours-apart-in-kerala-karnataka#comments</comments><guid isPermaLink="false">1f6e9abe-fde3-4d15-a78d-eeab3bec7d46</guid><pubDate>Fri, 14 Aug 2026 10:42:21 +0000</pubDate><atom:updated>2026-08-14T10:42:21.220Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Karnataka,Police Investigation,கொச்சி,KeralaTragedy,BankEmployees,Engaged Couple,TragicDeath</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/zlii2asz/Kerala-Tragedy" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kerala Tragedy ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/zlii2asz/Kerala-Tragedy?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணியாற்றி வந்த இளம் ஜோடிகள் <a href="https://www.maalaimalar.com/topic/kerala">கேரளா </a>மற்றும் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE">கர்நாடகா</a>வில் அடுத்தடுத்து சில மணிநேர இடைவெளியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>பின்னணி விவரங்கள்</h2><p>கேரளாவின் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த பி. அனுஸ்ரீ (25) மற்றும் கண்ணூர் பகுதியைச் சேர்ந்த வி. அமல் என்ற ஜோடி ஒரே வங்கியில் பணியாற்றி வந்தனர். </p><p>இவர்கள் இருவருக்கும் சமீபத்தில் தான் நிச்சயதார்த்தம் முடிவடைந்தது. வரும் டிசம்பர் மாதம் திருமணம் நடக்கவிருந்தது.</p><h2>நடந்த மரணங்கள்</h2><p>கர்நாடகாவின் ஹன்சூர் பகுதியில் உள்ள வங்கிக் கிளையில் பணியாற்றி வந்த அனுஸ்ரீ, அங்குள்ள தனது தங்குமிடத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவரது உடல் காசர்கோட்டிற்கு கொண்டு வரப்பட்டு புதன்கிழமை மாலை தகனம் செய்யப்பட்டது.</p><p>கொச்சியின் எர்ணாகுளம் கிளையில் பணியாற்றி வந்த அமல், தனது காதலி அனுஸ்ரீயின் மரணச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார். </p><p>இதனால் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்துத் தங்கிய அவர், அங்குத் தற்கொலை செய்து கொண்டதாகப் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.</p><h2>போலீஸ் விசாரணை</h2><p>சம்பவ இடத்தில் தற்கொலைக் கடிதம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என எர்ணாகுளம் வடக்கு போலீசார் தெரிவித்துள்ளனர். </p><p>இவர்களின் மரணத்திற்கான துல்லியமான காரணம் மற்றும் பின்னணி குறித்து அறிய அமலின் மொபைல் போன் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அமலின் உடலுக்கான பிரேதப் பரிசோதனை இன்று நடைபெற உள்ளதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>66 ஆண்டுகள் நகம் வளர்த்து உலக சாதனை: 29 அடி நீள நகங்களுடன் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த இந்தியர்!</title><link>https://www.maalaimalar.com/news/national/indian-man-sets-world-record-with-29-foot-long-fingernails</link><comments>https://www.maalaimalar.com/news/national/indian-man-sets-world-record-with-29-foot-long-fingernails#comments</comments><guid isPermaLink="false">8b61eb91-cb3d-4498-8263-4ff2f43ebf79</guid><pubDate>Fri, 14 Aug 2026 10:36:19 +0000</pubDate><atom:updated>2026-08-14T10:36:19.343Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>புனே,Pune,Guinness WorldRecord,கின்னஸ்சாதனை,Shridhar Chillal,ஸ்ரீதர்சில்லால்,Longest Fingernails,66YearsChallenge</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/88i1st7t/Longest-Fingernails" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Longest Fingernails ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/88i1st7t/Longest-Fingernails?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவை சேர்ந்த ஸ்ரீதர் சில்லால் என்ற முதியவர், தனது ஒரே கையில் மிகவும் நீளமான நகங்களை வளர்த்து கின்னஸ் உலக சாதனை படைத்து வரலாற்றுப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். </p><p>மஹாராஷ்டிர மாநிலம் புனே நகரைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவரின் இடது கை 5 நகங்களின் மொத்த நீளம் 909.6 சென்டிமீட்டர், அதாவது கிட்டத்தட்ட 29 அடி 10 அங்குலம் ஆகும்.</p><h2>நகங்களின் தனித்தனி நீள விவரங்கள்:</h2><p>ஸ்ரீதரின் இடது கை நகங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக அளவிடப்பட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுண்டுவிரல் நகத்தின் நீளம் 179.1 செ.மீ, மோதிர விரல் 181.6 செ.மீ, நடுவிரல் 186.6 செ.மீ, ஆள்காட்டி விரல் 164.5 செ.மீ பெருவிரல் 197.8 செ.மீ ஆகும்.</p><h2>66 ஆண்டு காலப் பயணமும் பின்னணியும்:</h2><p>கடந்த 1952 ஆம் ஆண்டு, ஸ்ரீதருக்கு 16 வயதாக இருந்தபோது பள்ளியில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. இவரது நண்பர் ஒருவர் எதிர்பாராதவிதமாகத் தங்களது ஆசிரியரின் நீண்ட நகம் ஒன்றை உடைத்துவிட்டார். </p><p>இதனால் கோபமடைந்த ஆசிரியர், "நீங்களாக நகம் வளர்த்துப் பார்த்தால் தான், அதை உடைக்காமல் பராமரிப்பது எவ்வளவு கடினம் என்று உங்களுக்குப் புரியும்" எனச் சவால் விடுத்தார்.</p><p>ஆசிரியரின் அந்த வார்த்தைகளை ஒரு சவாலாக எடுத்துக் கொண்ட ஸ்ரீதர், அன்றிலிருந்து தனது நகங்களை வெட்டுவதை நிறுத்தினார்.</p><h2>தினசரி வாழ்க்கையில் சந்தித்த சவால்கள்:</h2><p>நகங்கள் வளர வளர அவரது அன்றாட வாழ்க்கையில் பல கடுமையான சிரமங்கள் ஏற்பட்டன. தூங்கும் போதும், நடக்கும் போதும் நகங்கள் உடைந்துவிடக் கூடாது என்பதில் தீவிர கவனம் செலுத்தினார். </p><p>இருந்தபோதிலும், அவர் ஒரு வெற்றிகரமான புகைப்படக் கலைஞராக மாறினார். தனது நீண்ட நகங்களுக்கு இடையூறு இல்லாதவாறு, கேமராவில் ஒரு சிறப்புப் பிடியை வடிவமைத்துப் பயன்படுத்தி புகைப்படம் எடுத்து வந்தார்.</p><p>இவரது பெருவிரல் நகம் மட்டுமே ஒரு சாதாரண வீட்டு வாசலின் உயரத்திற்கு இணையாகச் சுருண்டு வளர்ந்து, உலகிலேயே "மிக நீளமான ஒற்றை நகம்" என்ற தனிப் பட்டத்தை இவருக்குப் பெற்றுத் தந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஈரானுக்கு எதிரான போரில் ஆப்ரகாம் லிங்கன் போர்க் கப்பலுக்குப் பதில் யு.எஸ்.எஸ். வாஷிங்டன்?</title><link>https://www.maalaimalar.com/news/world/us-has-a-bigger-problem-in-hormuz-than-iran-resistance</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-has-a-bigger-problem-in-hormuz-than-iran-resistance#comments</comments><guid isPermaLink="false">8f18ef1e-17c0-48c6-a86d-8e6d80f31076</guid><pubDate>Fri, 14 Aug 2026 10:16:35 +0000</pubDate><atom:updated>2026-08-14T10:16:35.972Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Abraham Lincoln,ஹார்முஸ் ஜலசந்தி,Strait of Hormuz,US Iran war,அமெரிக்கா ஈரான் போர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/hrsdatvi/USSAbrahamLincoln001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ USS Abraham Lincoln]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/hrsdatvi/USSAbrahamLincoln001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி தொடங்கியது. இந்த போரில் அமெரிக்காவின் மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பலான ஆப்ரகாம் லிங்கன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கப்பலில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் உள்ளனர்.</p><h2>ஜனவரியில் மத்திய கிழக்குப் பகுதிக்கு வந்த ஆப்ரகாம் லிங்கன்</h2><p>ஆப்ரகாம் லிங்கன் கப்பல் சான் டியாகோவில் கடந்த ஆண்டு நவம்பர் 21-ம் தேதி அன்று தனது பயணத்தை தொடங்கியது. இந்த வருடம் ஜனவரி மாதம் மத்திய கிழக்குப் பகுதியை வந்தடைந்தது. பிப்ரவரி 28-ந்தேதி போரில் ஈடுபட்டது.</p><p>ஈரானுக்கு எதிரான போரில் இந்த கப்பல் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்த வாரத்துடன் ஆப்ரகாம் லிங்கன் புறப்பட்டு 260 நாட்கள் நிறைவடைகிறது. பொதுவாக அமெரிக்காவின் போர்க்கப்பல் ஒரு முறை புறப்பட்டால் 6 முதல் 7 வாரங்களில் திரும்ப சென்றடைந்து விடும். அல்லது வீரர்கள் 7 மாதத்திற்குள் வீடு திரும்பி விடுவார்கள்.</p><h2>மனஉறுதியை இழந்த வீரர்கள்?</h2><p>ஆனால் இந்த முறை இன்னும் வீடு திரும்பவில்லை. இதனால் வீரர்கள் மனஉறுதி இழந்து மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் இரண்டு முக்கிய நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சில வீரர்கள் கடலில் குதிக்க முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது.</p><p>இதற்கு முக்கிய காரணம், வீர்ரகள் போர்க்கப்பலில் ஏறும்போது உணவு, சுத்தமான பொருட்கள் அதன்பின் மெயில் (குடும்பத்தினரை தொடர்பு கொள்வது உள்பட) ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆனால் ஆப்ரகாம் லிங்கன் கப்பலில் மோசமான நிலை நிலவி வருவதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. போார்க் காரணமாக வீரர்கள் மெயில் தொடர்பு இல்லாமல் தவிப்பதாக தெரிகிறது. அதோடு தூய்மையான பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் ஹெக்சேத்</h2><p>ஆனால், இந்த செய்திகள் முற்றிலும் தவறாக சித்தரிக்கப்பட்டவை என்று அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்சேத் தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக அவர் கூறுகையில் "ஒவ்வொரு கப்பலுக்கும், ஒவ்வொரு குழுவினருக்கும், ஒவ்வொரு கப்பல் தலைவருக்கும், எந்தவொரு தருணத்திலும் எங்களால் முடிந்த அனைத்தையும் வழங்குவதை நாங்கள் உறுதிசெய்கிறோம். சில பணி நியமனங்கள் மற்றவற்றை விட நீண்ட காலத்தைக் கொண்டவை. அத்தகைய சூழலில் பணியாற்றும் மாலுமிகள் மீது எனக்கு மற்ற யாரையும் விட அதிக மரியாதையும் நன்றியுணர்வும் உண்டு. கரையை அல்லது துறைமுகத்தை அடையும் வாய்ப்புகள் மிகக் குறைவாக உள்ள நிலையில், கொந்தளிப்பான கடற்பரப்பில், மிகவும் கடினமான சூழலில் அவர்கள் ஆற்றும் பணிகள் உண்மையிலேயே வியக்கத்தக்கவை" என்று குறிப்பிட்டுள்ளார்.</p><h2>USS ஜார்ஜ் வாஷிங்டன்</h2><p>இந்த நிலையில் USS ஜார்ஜ் வாஷிங்டன் போர்க்கப்பல் வியட்நாமில் உள்ள டா நாங் (Da Nang) துறைமுகத்தில் இருந்து கடந்த வாரம் மத்திய கிழக்குப் பகுதியை நோக்கி புறப்பட்டுள்ளது. பிசிபிக் மற்றும் இந்திய பெருங்கடலை இணைக்கும் மலாக்கா ஜலசந்தியில் காணப்படுவதாகும், இந்திய பெருங்கடல் நோக்கி கப்பல் பயணிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.</p><p>இதனால் ஆப்ரகாம் லிங்கன் கப்பலுக்குப் பதிலாக USS வாஷிங்டன் பாதுகாப்பிற்காக நிறுத்தப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தேர்தல் தோல்விக்குப் பின் முதல்முறையாக..  வரும் 22-ல் திமுக செயற்குழு கூட்டம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/stalin-led-dmk-executive-session-on-22nd-after-election-defeat</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/stalin-led-dmk-executive-session-on-22nd-after-election-defeat#comments</comments><guid isPermaLink="false">bd638139-f808-48d9-92c5-d1137465199b</guid><pubDate>Fri, 14 Aug 2026 09:41:41 +0000</pubDate><atom:updated>2026-08-14T09:41:41.878Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,திமுக செயற்குழு கூட்டம்,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/vh19gehg/DMK.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anna Arivalayam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/vh19gehg/DMK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது.</p><p>சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தோல்விக்கான காரணங்கள், மாவட்ட வாரியாக கட்சியின் செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்து, கட்சியை மறுசீரமைப்பு செய்ய முடிவு செய்துள்ளனர்.</p><p>அமைப்பு ரீதியாக தி.மு.க.வுக்கு 78 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். அவர்களில் சரியாக செயல்படாத 10 மாவட்ட செயலாளர்கள் வரை பதவி பறிக்கப்படலாம்.</p><p>தற்போது இருக்கும் மாவட்டங்களின் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்தி புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் கூட்டப்படும் செயற்குழுவில் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்று கூறப்படுகிறது.</p><p>செயற்குழு கூட்டம் பற்றி தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-</p><p>தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 22-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி அளவில் தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம் சென்னை கலைஞர் அரங்கில் நடைபெறும். அப்போது தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>விமான நிலையத்தில் இலவச புத்தக சேவை- ஃப்ளைபிரரி திட்டம் குறித்து அமைச்சர் விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/national/free-book-service-at-airports-flybrary-scheme-explained-by-minister</link><comments>https://www.maalaimalar.com/news/national/free-book-service-at-airports-flybrary-scheme-explained-by-minister#comments</comments><guid isPermaLink="false">aba5f99a-fb7c-4e8d-b8b1-eaca2a4b8521</guid><pubDate>Fri, 14 Aug 2026 09:32:54 +0000</pubDate><atom:updated>2026-08-14T09:32:54.331Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Indian airports,விமான நிலையங்கள்,Flybrary,Airport library,ஃப்ளைபிரரி,இலவச புத்தக சேவை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/wdd3dyxa/Untitled-design-50.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஃப்ளைபிரரி திட்டம் மூலம் 68 இந்திய விமான நிலையங்களில் இலவச நூலகம் திறப்பு]]></media:title><media:description type="html"><![CDATA[ Flybrary service]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/wdd3dyxa/Untitled-design-50.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விமான நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள் தங்களின் காத்திருப்பு நேரத்தை பயனுள்ளதாக செலவிடும் வகையில் ‘ஃப்ளைபிரரி’ என்ற திட்டத்தை மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் இந்திய விமான நிலைய ஆணையம் தொடங்கியுள்ளது.</p><p>இந்த திட்டத்தின்படி விமான நிலையத்தில் தங்கள் விமானத்திற்காக காத்திருக்கும் பயணிகள், ஒரு புத்தகத்தை இலவசமாக பெற்று, பின் அதை திருப்பி கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><strong>ஃப்ளைபிரரி திட்டம்</strong></p><p>ஃப்ளைபிரரி திட்டம் என்பது விமான நிலையத்திற்குள் இருக்கும் ஒரு இலவச நூலக சேவையாகும். விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் அங்குள்ள அலமாரிகளில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்களில், தங்களுக்கு பிடித்தமான ஒன்றை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.  </p><p>அந்த புத்தகத்தை விமான நிலையத்தில் காத்திருக்கும் போதும் அல்லது பயணிகள் தாங்கள் பயணம் செய்யும் விமானத்திலும் எடுத்து சென்று படிக்கலாம்.</p><p>புத்தகத்தை எடுத்து கொண்டு விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள், தாங்கள் சென்று சேரும் இடத்தை அடைந்தவுடன், அங்குள்ள ஃப்ளைபிரரி புத்தக நிலையத்தில் புத்தகத்தை திருப்பி கொடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>மேலும் சில விமான நிலையங்களில் பயணிகள் தாங்கள் எடுத்த புத்தகத்தை வீட்டிற்கு எடுத்து சென்று, பின்னர் தாங்கள் அடுத்ததாக விமான நிலையத்திற்கு வரும்போது திருப்பி கொடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>ஃப்ளைபிரரி திட்டத்திற்கு, பயணிகள் தங்களின் சொந்த புத்தகங்களையும் நன்கொடையாக வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><strong>ஃப்ளைபிரரி திட்டம் அறிமுகம்</strong></p><p>பக்குல் அறக்கட்டளையின் நிறுவனர் சுஜித் மகாபாத்ரா, இந்திய விமான நிலையத்துடன் இணைந்து ஃப்ளைபிரரி திட்டத்தை, 2025ஆம் ஆண்டு புவனேஷ்வரில் உள்ள பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்தில் அறிமுகம் செய்தார்.</p><p>இதையடுத்து இந்த திட்டம் தற்போது இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்களில் விரிவடைந்து, புவனேஷ்வர், ராஞ்சி, புஜ், தர்பங்கா, கஜுராஹோ, குலு-மனாலி, மங்களூரு, டையூ மற்றும் அமிர்தசரஸ் உள்ளிட்ட 68 விமான நிலையங்களில் பயன்பாட்டில் உள்ளது.</p><p><strong>போக்குவரத்துத் துறை அமைச்சர்</strong></p><p>இந்த ஃப்ளைபிரரி திட்டம் குறித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகம் நாயுடு கிஞ்சரபு கூறுகையில், பயணிகள் ஃப்ளைபிரரி திட்டத்தை வரவேற்பதை கண்டு தான் மகிழ்ச்சி அடைவதாக கூறினார்.</p><p>மேலும் குழந்தைகள் விளையாட்டு அம்சங்கள், இலவச வைஃபை மற்றும் சுய உதவிக் குழு விற்பனை நிலையங்கள் ஆகியவற்றுடன், ஃப்ளைபிரரி திட்டமும் பயணிகளின் நலன்களை கருத்தில் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>பி.சி.சி.ஐ. கிரிக்கெட் இயக்குநர் ஆகிறார் விவிஎஸ் லக்ஷ்மண்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/vvs-laxman-set-to-be-named-bcci-director-of-cricket</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/vvs-laxman-set-to-be-named-bcci-director-of-cricket#comments</comments><guid isPermaLink="false">6421d675-7132-4e91-a014-90736f968843</guid><pubDate>Fri, 14 Aug 2026 09:23:02 +0000</pubDate><atom:updated>2026-08-14T09:23:02.177Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Team India,டீம் இந்தியா,vvs laxman,BBCI,விவிஎஸ் லக்ஷ்மண்,பிசிசிஐ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/bj3zrwmd/VVSLaxman001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விவிஎஸ் லக்ஷ்மண்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/bj3zrwmd/VVSLaxman001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்ந்தவர் வி.வி.எஸ். லக்ஷ்மண். இவர் தற்போது பெங்களூருவில் உள்ள பிசிசிஐ-யின் சிறப்பு மையத்தின் தலைவராக உள்ளார். இளம் வீரர்களை கண்டறிந்து இந்த மையத்தில் சிறப்பான பயிற்சி அளிப்பது, இந்திய கிரிக்கெட் அணியில் காயம் அடைந்து சிகிச்சைப் பின் இங்கு வந்து விளையாட்டுக்கான தகுதி பெறுவதற்கான பயிற்சி மேற்கொள்வது (Rehabilitation-உடல் மீட்பு பயிற்சி) போன்ற பணிகளை வி.வி.எஸ். லக்ஷ்மண் மேற்பார்வையிடும் தலைவராக உள்ளார்.</p><h2>பிசிசிஐ கிரிக்கெட் இயக்குநர்</h2><p>இவருடைய பதவிக்காலம் முடிவடைய இருக்கும் நிலையில், பி.சி.சி.ஐ. இரண்டு வருடம் லக்ஷ்மண் பதவிக்காலத்தை நீட்டிக்க முடிவு செய்துள்ளது. இந்த முறை பி.சி.சி.ஐ. கிரிக்கெட் இயக்குநர் என்ற பதவி வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பதவியின் கீழ், இவர் ஏற்கனவே செய்து கொண்டு வரும் பணி அப்படியே தொடருவார். மேலும், ஸ்டாஃப் நியமனம் போன்ற பணிகளையும் மேற்கொள்வார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>அஜித் அகர்கர்</h2><p>அதேவேளையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளராக அஜித் அகர்கர் உள்ளார். இவரது பதவிக்காலமும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், 2027-ம் ஆண்டு ஆப்பிரிக்கா கண்டத்தில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலக கோப்பை தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி இடம் பெறுவது தொடர்பான விவகாரத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். இதனால அகர்கர் பதவிக்காலம் நீடிக்கப்படுமா? என்பது தெரியவில்லை.</p><h2>கவுதம் கம்பீர்</h2><p>கவுதம் கம்பீர் மூன்ற வகை சீனியர் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா, விராட் கோலி விலகிய பிறகு இந்திய அணி மோசமாக விளையாடி வருகிறது. இதனால் டெஸ்ட் அணிக்கு பயிற்சியாளராக தொடர்ந்து நீடிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், இலங்கை தொடரில் இந்திய அணி தோல்வியடைந்தாலும் கவுதம் கம்பீர் தொடர்ந்து தலைமை பயிற்சியாளராக தொடர்வார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.</p><p>இலங்கை தொடருக்கு முன்னதாக பும்ரா, சாய் சுதர்சன், சுப்மன் கில் போன்ற வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதில் பும்ரா, சாய் சுதர்சன் இலங்கை தொடரில் இருந்து வெளியேறினர். இதனால் சிறப்பு மையம், வீரர்களுக்கு காயம் குணம் அடைவதற்கு முன்னதாக விளையாட தகுதி என சான்றிதழ் வழங்கப்படுவதாக விமர்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>ஆடிப்பூரம் விழா: திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் </title><link>https://www.maalaimalar.com/spirituality/aadi-pooram-festival-devotees-darshan-thiruttani-murugan-temple</link><comments>https://www.maalaimalar.com/spirituality/aadi-pooram-festival-devotees-darshan-thiruttani-murugan-temple#comments</comments><guid isPermaLink="false">d7d65646-abb0-40a3-8001-129a3b81b6eb</guid><pubDate>Fri, 14 Aug 2026 09:15:46 +0000</pubDate><atom:updated>2026-08-14T09:15:46.645Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruttani temple,ஆடிப்பூரம்,aadi pooram,திருத்தணி கோவில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/nqzij34b/tiruttani.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ tiruttani temple]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/nqzij34b/tiruttani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>திருத்தணி முருகன்கோவிலில் ஆடிப்பூரம் விழாவை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.</strong></em></p> <h2>திருத்தணி முருகன் கோவில்</h2><p>சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து உடலில் அலகு குத்தி, காவடிகள் சுமந்து வந்து <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">திருத்தணி முருகன் கோவிலில்</a> நேர்த்தி கடன் செலுத்தினர்.</p><h2>ஆடிப்பூர விழா</h2><p>சுமார் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் பால் குடங்கள் சுமந்து வந்து முருகப்பெருமானை வழிபட்டனர். <a href="https://www.maalaimalar.com/spirituality/aadi-pooram-srivilliputhur-andal-temple-therottam">ஆடிப்பூர விழாவை </a>முன்னிட்டு அதிகாலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தங்க கவசம், வைர கிரீடம், பச்சைக்கல் மரகத மாலை அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.</p><h2>பால் குடங்கள், மயில் காவடி</h2><p>ம.பொ.சி. சாலை சன்னதி தெரு, மலையடி வாரத்தில் உள்ள சரவண பொய்கை திருக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வரிசையாக நின்று பம்பை உடுக்கை முழங்க கிராமிய கலை நிகழ்ச்சிகளோடு பக்தர்கள் விரதம் இருந்து பால் குடங்கள், மயில் காவடி, புஷ்பக் காவடிகள், சுமந்தும் உடலில் வேல் அம்பு குத்தியும் பக்தி பெருக்கோடு படிக்கட்டின் வழியாக நடந்து சென்றனர்.</p> <p>பக்தர்கள் கூட்டம் காரணமாக சுமார் 5 மணி நேரம் மலைக்கோவில் தேர் வீதியில் வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசித்தனர்.  விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>டார்வின் டெஸ்டில் ஹசன் தமிம் சதம்: 2ம் நாள் முடிவில் வங்கதேசம் 351 ரன்கள் குவிப்பு</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/bangladesh-351-for-6-in-day-2-against-australia-first-test</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/bangladesh-351-for-6-in-day-2-against-australia-first-test#comments</comments><guid isPermaLink="false">96711855-e42e-4cb2-933b-33d373e8572c</guid><pubDate>Fri, 14 Aug 2026 09:01:22 +0000</pubDate><atom:updated>2026-08-14T09:01:22.506Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Najmul Hossain Shanto,AUSvBAN,நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ,ஆஸ்திரேலியா வங்கதேசம் தொடர்,hasan Tamim,ஹசன் தமிம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/s4szys90/tamim.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ hasan tamim]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/s4szys90/tamim.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டின் 2வது நாள் முடிவில் வங்கதேசம் முதல் இன்னிங்சில் 351 ரன்களைக் குவித்துள்ளது.</p><p>ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நஜ்முல் ஹூசைன் ஷான்டோ தலைமையிலான வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது.</p><h2>டார்வின் டெஸ்ட்</h2><p>ஆஸ்திரேலியா-வங்கதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டார்வினில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.</p><p>அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்கியது. வங்கதேச வீரர்கள் ஆரம்பம் முதலே சிறப்பாக பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.</p><h2>ஸ்மித் அரை சதம்</h2><p>ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து அரை சதம் கடந்தார். அவர் 71 ரன்னில் அவுட்டானார். ஜேக் வெதரால்டு 23 ரன்னும், டிராவிஸ் ஹெட் 22 ரன்னும் எடுத்தனர். 5-வது விக்கெட்டுக்கு இணைந்த ஸ்மித்-கேரி ஜோடி 56 ரன்கள் சேர்த்தது.</p><p>இறுதியில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 198 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.</p><p>வங்கதேசம் சார்பில் ஹசன் மகமுது 6 விக்கெட்டும், தஸ்கின் அகமது, எபாடட் ஹொசைன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p>தொடர்ந்து ஆடிய வங்கதேசம் முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 96 ரன்கள் எடுத்துள்ளது.</p><p>இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. 2வது விக்கெட்டுக்கு இணைந்த ஹசன் தமிம்-மொமினுல் ஹக் ஜோடி102 ரன்களை சேர்த்த நிலையில் மொமினுல் ஹக் 49 ரன்னில் அவுட்டானார்.</p><h2>ஹசன் தமிம் சதம்</h2><p>சிறப்பாக ஆடிய ஹசன் தமிம் சதமடித்து அசத்தினார். அவர் 101 ரன்னில் ஆட்டமிழந்தார்.</p><p>அடுத்து இறங்கிய கேப்டன் ஷாண்டோ பொறுப்புடன் ஆடி அரை சதம்ம் கடந்து 84 ரன்னில் வெளியேறினார்.</p><p>இறுதியில், இரண்டாம் நாள் முடிவில் வங்கதேச அணி 6 விக்கெட்டுக்கு 351 ரன்கள் குவித்துள்ளது. மெஹிதி ஹசன் 32 ரன்னும், ஹசன் மகமுது 13 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.</p><p>வங்கதேசம் அணி ஆஸ்திரேலியாவை விட 153 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.</p><p>ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.</p>]]></content:encoded></item><item><title>ஏடிஎம் வாகன கொள்ளை.. பீகாரில் பக்தர்கள் போல வேடமிட்டு குற்றவாளிகளை பிடித்த கர்நாடக போலீஸ் </title><link>https://www.maalaimalar.com/news/national/karnataka-bank-heist-arrest-guard-killing-robbers-who-stole-98-lakh-nabbed-in-bihar</link><comments>https://www.maalaimalar.com/news/national/karnataka-bank-heist-arrest-guard-killing-robbers-who-stole-98-lakh-nabbed-in-bihar#comments</comments><guid isPermaLink="false">176ebed4-e856-44f7-a0fe-c2b04a8edd58</guid><pubDate>Fri, 14 Aug 2026 08:33:39 +0000</pubDate><atom:updated>2026-08-14T08:33:39.749Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,பீகார்,Bihar,ஏடிஎம் வாகன கொள்ளை,ATM cash van robbery</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/osgdh365/tn-29.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஏடிஎம் வாகன கொள்ளை]]></media:title><media:description type="html"><![CDATA[ ஏடிஎம் வாகன கொள்ளை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/osgdh365/tn-29.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடகாவில் கடந்த ஆண்டு காவலரை கொன்றுவிட்டு வங்கி ஏடிஎம் பணம் ஏற்றிச் சென்ற வாகனத்தை <a href="https://www.maalaimalar.com/news/national/rs711-crore-bengaluru-atm-vehicle-robbery-constable-who-masterminded-it-three-arrested-how-was-it-caught-798755">கொள்ளையடித்த </a>குற்றவாளிகள் பீகாரில் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><h2>கொள்ளை </h2><p>2025, ஜனவரி 16 அன்று கர்நாடக மாநிலம் பிடாரில் உள்ள சிவாஜி சௌக் பகுதியில் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம்மில் பணம் நிரப்ப வந்த வாகனத்தை இலக்கு வைத்து துப்பாக்கியுடன் மோட்டார் சைக்கிளில் முகமூடியுடன் வந்த இருவர் தாக்குதல் நடத்தினர்.</p><p>மிளகாய் பொடியை பொடியைத் தூவி, துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டுச் சுமார் ரூ.98 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.</p><p>இந்தத் தாக்குதலில் கிரி வெங்கடேஷ் என்ற பாதுகாப்பு காவலர் உயிரிழந்தார். சிவகுமார்  என்ற மற்றொரு காவலர் காயமடைந்தார். </p><p>கொள்ளைச் சம்பவம் நடந்த அதே நாளில் மாலையில், ஐதராபாத்தில் பேருந்து ஏற முயன்றபோது சந்தேகமடைந்த டிராவல்ஸ் மேனேஜர் ஜஹாங்கீர் என்பவரையும் இவர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பியுள்ளனர்.</p><p>கர்நாடக போலீசார் சிறப்பு படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். </p> <h2>கைது</h2><p>இந்த கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பீகாரின் வைஷாலி மாவட்டத்தைச் சேர்ந்த அமன் குமார் மற்றும் அவரது கூட்டாளி அலோக் குமார் என போலீசார் கண்டறிந்தனர்.</p><p>கர்நாடகா தவிரத் தெலங்கானா, பீகார் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களிலும் இவர்கள் மீது கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன.</p> <p>இதைத்தொடர்ந்து கர்நாடகக் காவல் துறையைச் சேர்ந்த சிறப்புக் குழுவினர் பீகாரில் உள்ள வைஷாலி மாவட்டத்தில் முகாமமிட்டனர்.</p><p>சந்தேக நபர்களைக் கண்டுபிடிக்க சில அதிகாரிகள் யாத்திரை செல்லும் பக்தர்கள் வேடத்தில் அப்பகுதியில் 20 நாட்களுக்கும் மேலாக உலா வந்து தீவிரமாகக் கண்காணித்தனர்.</p><p>நேற்று முன் தினம் (புதன்கிழமை) அன்று தாமோதர்பூர் கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவரையும் காவல் துறையினர் வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>80-வது சுதந்திர தினம்: 15 காவல் துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் சிறப்புப் பதக்கங்கள் அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/gold-medals-and-cash-awards-for-15-police-officers</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/gold-medals-and-cash-awards-for-15-police-officers#comments</comments><guid isPermaLink="false">bd2384a6-b8b5-424b-b3d8-f17e72062fd9</guid><pubDate>Fri, 14 Aug 2026 08:31:15 +0000</pubDate><atom:updated>2026-08-14T08:31:15.871Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Independence Day,சுதந்திர தினம்,Police department,காவல் துறை அதிகாரிகள்,சிறப்பு பதக்கம்,Special awards</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/l5l2chnl/TN-CM-Vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/l5l2chnl/TN-CM-Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-</p><h2>சிறப்பு பதக்கம்</h2><p>2026-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகள், சார்நிலை அலுவலர்களுக்கு  சிறப்புப் பதக்கங்கள் வழங்கப்படுகிறது.</p><p>புலன் விசாரணைப் பணியில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் கீழ்கண்ட 10 காவல்துறை அதிகாரிகள், சார்நிலை அலுவலர்களுக்கு 2026-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப் பணிப் பதக்கங்கள் வழங்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். </p><p>அவர்கள் விவரம் வருமாறு:-</p><h2>திருவள்ளூர்</h2><p>1. சி.ஜெயஸ்ரீ,  காவல் துணை கண்காணிப்பாளர்,  கும்மிடிபூண்டி  உட்கோட்டம்,   திருவள்ளுர் மாவட்டம்.</p><p>2.  நா.தமிழரசி, காவல் துணை கண்காணிப்பாளர்,  திருவள்ளுர் உட்கோட்டம், திருவள்ளுர்  மாவட்டம்.</p><p>3. கொ.அழகுராஜ், காவல் ஆய்வாளர், சைபர் கிரைம் காவல் நிலையம்,  கோவை மாநகரம்.</p><p>4. ந.தனுசியா, காவல் துணை கண்காணிப்பாளர், ஒருங்கிணைந்த குற்றப் பிரிவு,  குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வு துறை,  திருச்சி மாநகரம்.</p><h2>கோவை-சென்னை</h2><p>5. சே.லதா, காவல் ஆய்வாளர், தனி சிறுவர் காவல் உதவி பிரிவு,  கோவை மாநகரம்.</p><p>6. வி.கோமதி, காவல்துறை உதவி தலை வர், நிர்வாகம்,   காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம், சென்னை.</p><p>7. மா.சித்ரா, காவல் ஆய்வாளர், கைகளத்தூர் காவல் நிலையம்,  பெரம்ப லூர் மாவட்டம்.</p><p>8. ரா.வினதா, காவல் ஆய்வாளர், மேல்மலைய னூர் காவல் நிலையம்,   விழுப்புரம் மாவட்டம்.</p><p>9.கோ.மகாலெட்சுமி, காவல் ஆய்வாளர், மாவட்ட குற்ற பதிவேட்டு கூடம்,   சிவகங்கை மாவட்டம்.</p><p>10. ச.விஜயகுமார், காவல் துணை ஆணையர், மேற்கு, திருநெல்வேலி  மாநகரம்.</p><h2>காவல் பதக்கம்</h2><p>இதே போன்று பொது மக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய கீழ்கண்ட 5 காவல் துறை அதிகாரிகள், சார் நிலை அலுவலர்களுக்கு  2026-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு  அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் வழங்க தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்கள். அவர்கள் விவரம் வருமாறு:-</p><p>1. டாக்டர் வி.சசி மோகன்,  காவல்துறை துணைத் தலைவர், திண்டுக்கல் சரகம்.</p><h2>சென்னை-கரூர்</h2><p>2.தெ.சண்முக பிரியா,  காவல் கண்காணிப்பாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம், மேற்கு சரகம்,  சென்னை. </p><p>3. சி.எம்.ஆர்.மணிமொழியன், துணை காவல் கண்காணிப்பாளர், தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, சென்னை.</p><p>4. க.மதன் மோகன், காவல் ஆய்வாளர் (தொழில் நுட்பம்), மாநில காவல் தலைமை கட்டுப்பாட்டு அறை, சென்னை.</p><p>5. மு.ரவிக்குமார், தலைமை காவலர்-1618, கரூர் நகர காவல் நிலையம்,  கரூர் மாவட்டம்.</p><h2>தங்கப் பதக்கம்</h2><p>விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா 8 கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், ரூ.25 ஆயிரம் ரொக்க வெகுமதியும் வழங்கப்படும்.</p><p>மேற்கண்ட விருதுகள், முதலமைச்சர் விஜய்யால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கனடா ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் பென் ஷெல்டன்</title><link>https://www.maalaimalar.com/sports/tennis/ben-shetton-won-the-title-in-canada-open</link><comments>https://www.maalaimalar.com/sports/tennis/ben-shetton-won-the-title-in-canada-open#comments</comments><guid isPermaLink="false">6739d518-6a13-4ab5-bfbe-8e266a9c24d2</guid><pubDate>Fri, 14 Aug 2026 08:27:30 +0000</pubDate><atom:updated>2026-08-14T08:27:30.259Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Canada Open Tennis,கனடா ஓபன் டென்னிஸ்,ben shelton,பென் ஷெல்டன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/go32n53j/shelton.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ben shelton]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/go32n53j/shelton.jpg?w=280" width="280"></media:thumbnail><category>டென்னிஸ் (Tennis)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கனடா ஓபன் டென்னிஸ் தொடரில் அமெரிக்காவின் பென் ஷெல்டன் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.</p><p>முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொரண்டோ நகரில் நடைபெற்றது.</p><p>இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்று போட்டியில் அமெரிக்காவின் பென் ஷெல்டன், சக நாட்டு வீரரான பிராண்டன் நகஷிமா உடன் மோதினார். </p><p>இதில் சிறப்பாக ஆடிய பென் ஷெல்டன் 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்று அசத்தினார்.</p><p>ஆண்கள் இரட்டையர் பிரிவில் பிரேசிலின் ரபேல் மேடோஸ்-ஆர்லண்டோ லஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.</p><p>இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக் கஜகஸ்தானின் எலினா ரிபாகினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.</p>]]></content:encoded></item><item><title>திருப்பதியில் சாமி தரிசனத்திற்கு 18 மணி நேரம் ஆகிறது</title><link>https://www.maalaimalar.com/news/national/18-hours-for-darshan-tirupati-temple</link><comments>https://www.maalaimalar.com/news/national/18-hours-for-darshan-tirupati-temple#comments</comments><guid isPermaLink="false">e91a49fa-e63e-4f92-8252-0ff37371fd3e</guid><pubDate>Fri, 14 Aug 2026 08:20:56 +0000</pubDate><atom:updated>2026-08-14T08:20:56.191Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirupati temple,Free Darshan,திருப்பதி கோவில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/s911b42e/tirupati.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tirupati temple]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/s911b42e/tirupati.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>திருப்பதியில் சாமி தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.</strong></em></p><h2>திருப்பதி ஏழுமலையான் கோவில்</h2><p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">திருப்பதி ஏழுமலையான் கோவிலில்</a> கடந்த சில நாட்களாக கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. நேற்று காலை முதல் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது.</p><p>ரூ.300 சிறப்பு தரிசனத்தில் வந்த பக்தர்கள் 3 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர். நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்களை வைகுந்தம் அறைகளில் தங்க வைத்து தரிசனத்திற்கு அனுப்பி வைத்தனர். </p> <h2>இலவச தரிசனம்</h2><p>திருப்பதியில் நேற்று 69,082 பேர் தரிசனம் செய்தனர். 26,671 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.09 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது 4.05 லட்சம் லட்டுக்கள் விற்பனையானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>டெஸ்டில் 435 விக்கெட்: கபில்தேவ் சாதனையை முறியடித்தார் ஸ்டார்க்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/mitchell-starc-surpasses-kapil-dev-in-test-wickets-key-stats</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/mitchell-starc-surpasses-kapil-dev-in-test-wickets-key-stats#comments</comments><guid isPermaLink="false">41d11729-5904-4fde-95ee-1bbebb5ce74b</guid><pubDate>Fri, 14 Aug 2026 08:15:16 +0000</pubDate><atom:updated>2026-08-14T08:15:16.898Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மிட்செல் ஸ்டார்க்,Kapil Dev,Mitchell Starc,கபில் தேவ்,AUSvBAN,ஆஸ்திரேலியா வங்கதேசம் தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/45qjspp7/starc.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ mitchell starc]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/45qjspp7/starc.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வங்கதேச அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.</p><p>இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டார்வின் நகரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 198 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.</p><h2>ஹசன் மகமுது 6 விக்கெட்</h2><p>வங்கதேசம் சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஹசன் மகமுது 6 விக்கெட் வீழ்த்தினார்.</p><p>தொடர்ந்து ஆடிய வங்கதேசம் இரண்டாம் நாளில் 6 விக்கெட்டுக்கு 300 ரன்களைக் கடந்து ஆடி வருகிறது.</p><h2>ஸ்டார்க் 435 விக்கெட்</h2><p>ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட் வீழ்த்தினார். அவர் 106 டெஸ்டுகளில் விளையாடி 435 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்</p><p>கபில்தேவ் 131 டெஸ்டில் விளையாடி 434 விக்கெட் எடுத்து 12-வது இடத்தில் உள்ளார்.</p><p>வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். இதன்மூலம் மிட்செல் ஸ்டார்க், கபில் தேவின் சாதனையை முறியடித்துள்ளார்.</p><p>ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் வார்னே 708 விக்கெட்டுடன் முதல் இடத்திலும், நாதன் லயன் 567 விக்கெட்டுடன் 2வது இடத்திலும், மெக்ராத் 563 விக்கெட்டுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.</p><p>இந்த வரிசையில் 435 விக்கெட்டுகளுடன் மிட்செல் ஸ்டார்க் 4-வது இடத்தில் உள்ளார்.</p><p>உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களில் மிட்செல் ஸ்டார்க் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் 9 டெஸ்ட்களில் 48 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் மதுக்கடைகளில் 11 வகை மதுபானங்கள் விற்பனைக்கு தடை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/11-liquor-brands-banned-in-tasmac</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/11-liquor-brands-banned-in-tasmac#comments</comments><guid isPermaLink="false">02299041-60df-454d-8b69-83354c2a55dd</guid><pubDate>Fri, 14 Aug 2026 08:09:44 +0000</pubDate><atom:updated>2026-08-14T08:09:44.911Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>alcohol,மதுபான விற்பனை,liquor sale,Tasmac,டாஸ்மாக்,மதுக்கடை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/w93lfsb1/TASMAC.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TASMAC]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/w93lfsb1/TASMAC.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் மதுபான உற்பத்தி நிறுவனத்தில் உணவு பாதுகாப்புத்துறை தெற்கு மண்டல அலுவலக அதிகாரிகள் கடந்த 11ம் தேதி ஆய்வு செய்தனர்.</p><p>அப்போது செயற்கை சுவையூட்டும் பொருட்கள் சேர்க்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து அந்த நிறுவனத்தின் 11 வகை மதுபானங்களின் விற்பனையை உடனடியாக நிறுத்த டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.</p><p>இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் கே.நந்தகுமார் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்," டாஸ்மாக் மண்டல மற்றும் மாவட்ட மேலாளர்கள் மற்றும் கிடங்கு மேலாளர்கள், மறு அறிவிப்பு வரும் வரை, சில்லறை விற்பனைக் கடைகளில் 11 வகைகளின் விற்பனையை நிறுத்தவும், மேலும் எப்.எல். 2 மற்றும் எப்.எல். 3 உரிமதாரர்களுக்கு அவற்றின் விற்பனையை நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p>இந்த உத்தரவின் கீழ் வி.எஸ்.ஓ.பி. எக்சா கோல்ட் பிராந்தி, லூயிஸ் வெர்னன்ட் எக்ஸ்ஓ பிளெண்டட் பிரீமியம் பிராந்தி, மெக்டொவல்ஸ் வி.எஸ்.ஓ.பி. பிராந்தி, நம்பர் 1 மெக்டொவல்ஸ் பைன் பிராந்தி, மென்ஸ்கிளப் டீலக்ஸ் பிராந்தி, ஹனி பீ பைன் பிராந்தி, என்ரிகா வி.எஸ்.ஓ.பி. செலக்ட் பிராந்தி, என்ரிகா பிளாட்டினம் ரிசர்வ் எக்ஸ்.ஓ. பிராந்தி, என்ரிகா பிரீமியம் பிரெஞ்ச் பிராந்தி, வீரன் ஸ்பெஷல் பிராந்தி மற்றும் என்ரிகா ஓல்ட் இண்டி கிளாசிக் டார்க் ரம் ஆகிய 11 ரகங்கள் வருகின்றன.</p><p>இவற்றின் விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், விநியோகஸ்தர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் அடையாளம்  நுகர்வோருக்கு விற்கக் கூடாது எனவும் உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டது.</p><p>இது தொடர்பான வழிகாட்டுதல்களை மதுவிலக்கு மற்றும் கலால் ஆணையர்  டாஸ்மாக் நிறுவனத்திற்கு கடிதம் மூலம் அனுப்பி வைத்தார். அதனைத் தொடர்ந்து டாஸ்மாக் நிர்வாகம் இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கனடா ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்வியாடெக்</title><link>https://www.maalaimalar.com/sports/tennis/iga-swiatek-won-the-canada-open-title</link><comments>https://www.maalaimalar.com/sports/tennis/iga-swiatek-won-the-canada-open-title#comments</comments><guid isPermaLink="false">4846626b-987c-4da3-a2bf-7a6804181162</guid><pubDate>Fri, 14 Aug 2026 07:54:27 +0000</pubDate><atom:updated>2026-08-14T07:54:27.053Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Iga Swiatek,இகா ஸ்வியாடெக்,Canada Open Tennis,கனடா ஓபன் டென்னிஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/3fvngutb/swiatek.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ iga swiatek]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/3fvngutb/swiatek.jpg?w=280" width="280"></media:thumbnail><category>டென்னிஸ் (Tennis)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொரண்டோ நகரில் நடைபெற்றது.</p><p>மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று இறுதி ஆட்டம் நடைபெற்றது.</p><p>இன்று நடந்த இறுதிச்சுற்று போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக், கஜகஸ்தானின் எலினா ரிபாகினா உடன் மோதினார்.</p><p>இதில் சிறப்பாக ஆடிய இகா ஸ்வியாடெக் 6-2, 6-3 என வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.</p><p>இதேபோல, ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் பென் ஷெல்டன் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.</p><p>ஆண்கள் இரட்டையர் பிரிவில் பிரேசிலின் ரபேல் மேடோஸ்-ஆர்லண்டோ லஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.</p>]]></content:encoded></item><item><title>ஆடிப்பூரம் முன்னிட்டு தோரணமலையில் பெண்கள் மணி அடித்து வேல்பூஜை</title><link>https://www.maalaimalar.com/spirituality/aadipooram-thoranamalai-women-bell-vel-pooja</link><comments>https://www.maalaimalar.com/spirituality/aadipooram-thoranamalai-women-bell-vel-pooja#comments</comments><guid isPermaLink="false">23b44816-1aa4-465d-aab6-72eaab9ebf5f</guid><pubDate>Fri, 14 Aug 2026 07:45:53 +0000</pubDate><atom:updated>2026-08-14T07:45:53.190Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆடி மாதம்,ஆடிப்பூரம்,வேல் பூஜை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/8l08k4ow/Adi-pooram.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Adipooram]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/8l08k4ow/Adi-pooram.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தோரணமலை முருகன் கோவிலில் கடைசி வெள்ளி மற்றும் ஆடிப்பூரத்தையொட்டி பெண்கள் மணி அடித்து வேல்பூஜை செய்தனர்.</p><h2>தோரணமலை</h2><p>தென்காசி மாவட்டம் தோரணமலை முருகன் கோவிலில் தமிழ்மாத கடைசி வெள்ளி அன்று சிறப்பு அபிஷேகம் மற்றும் வருணகலச பூஜை நடைபெறும். இந்த மாதம் கடைசி வெள்ளி மற்றும் ஆடிப்பூரமும் இணைந்து வந்ததால் பூஜையை சிறப்பாக நடத்தினார்கள். ஆடிப்பூரம் என்பதால் இந்த பூஜையில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருந்தது.</p><p>அதிகாலையில் அடிவார வல்லப விநாயகருக்கும், மலைமீதுள்ள முருகப்பெருமானுக்கும் அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. மலையில் உள்ள பத்திரகாளி அம்மனுக்கும், அடிவாரத்தில் உள்ள கன்னிமாரம்மனுக்கும் பூஜை நடந்தது. இதனை அடுத்து முருக பக்தர்கள் 21 பேர் மலைமீதுள்ள சுனையில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்தனர்.</p><p>உற்சவர்கள் முருகன்-வள்ளி, தெய்வானைக்கு பால், சந்தனம், மஞ்சள் உள்பட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன. அதன்பின் மூலவர்கள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மேடையில் எழுந்தருளார்கள்.</p><h2>வருணகலச பூஜை</h2><p>மேடையை சுற்றி வேல்கள் வரிசையாக வைக்கப்பட்டன. அதேபோல் மணிகளும் கட்டி தொங்கவிடப்பட்டு இருந்தன. உற்சவர்களுக்கு பூஜை நடந்தபோது போது பெண்கள் மணிகளை அடித்தபடி வேல்களுக்கும் பூஜை செய்தனர். விவசாயம் செழிக்க வருணகலச பூஜையும் நடந்தது.</p><p>கடையம் பரம வித்யாலயா குருகுலம் மாணவர்கள் 16 பேர் வட இந்திய ஆசான் தலைமையில் தோரணமலைக்கு வந்திருந்தனர். அவர்கள் குழுவாக வேத மந்திரம் சொன்னார்கள். அதன்பின் குருகுல மாணவர்களுக்கு கராத்தே, யோகாக ஆசிரியர் வேல்முருகன் யோகா கற்றுக்கொடுத்தார்.</p><p>தோரணமலையில் அமைக்கப்பட்டு உள்ள நூலகத்தில் 5,576 புத்தகங்கள் உள்ளன. மேலும் தினசரி பத்திரிகைகளும் உள்ளன. கோவிலுக்கு வந்தவர்கள் பலர் நூலகத்திற்கு சென்று படித்தனர். </p><p>விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் காலையில் சிற்றுண்டியும் மதியம் சாப்பாடும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன் செய்திருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>2 வாரத்தில் 3 பெரும் விபத்துகள் தவிப்பு..  சர்ச்சையில் சிக்கிய சிட்னி விமான நிலையம் - விசாரணைக்கு உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/world/sydney-airport-safety-scare-three-near-miss-incidents-trigger-probe-into-air-traffic-control-failures</link><comments>https://www.maalaimalar.com/news/world/sydney-airport-safety-scare-three-near-miss-incidents-trigger-probe-into-air-traffic-control-failures#comments</comments><guid isPermaLink="false">1ce1eb5b-a314-46f4-b9d1-242bb4d1148d</guid><pubDate>Fri, 14 Aug 2026 07:41:51 +0000</pubDate><atom:updated>2026-08-14T07:41:51.504Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Australia,ஆஸ்திரேலியா,plane crash,விமான விபத்து,சிட்னி விமான நிலையம்,Sydney Airport</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/e6092u9e/tn-28.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சிட்னி விமான நிலையம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ சிட்னி விமான நிலையம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/e6092u9e/tn-28.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆஸ்திரேலியாவின் சிட்னி  சர்வதேச <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">விமான நிலையத்தில் </a>கடந்த இரண்டு வாரங்களில் மொத்தம் 3 முறை பெரும் விபத்து தவரிக்கப்பட்டுள்ளது. </p><p>இதுகுறித்து அந்நாட்டின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு  வாரியம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.</p> <h2>சம்பவங்கள்</h2><p>ஆகஸ்ட் 9, ஞாயிறு காலை, வர்ஜின் ஆஸ்திரேலியா என்ற விமானம் ஓடுதளத்தில் புறப்படத் தயாராக இருந்தபோது, விமானக் கட்டுப்பாடு மையம் (ஏர் டிராபிக் கண்ட்ரோல்) தவறான அனுமதி அளித்ததால் குவாண்டாஸ் என்ற மற்றொரு விமானம் குறுக்கே கடக்க முயன்றது.</p><p>வர்ஜின் விமானத்தின் விமானி உடனடி பிரேக் போட்டதால் 1 கி.மீ இடைவெளியில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.</p><p>அதே ஞாயிறு காலை, ஜெட்ஸ்டார் என்ற விமானம் ஓடுதளத்தில் செல்லும் போது, கத்தார் ஏர்வேஸ் விமானத்தின் மீது மோதுவது போல சென்றது. கத்தார் ஏர்வேஸ் விமானி பிரேக் போட்டதால் இந்த விபத்து தவிர்க்கப்பட்டது.</p><p>முன்னதாக ஜூலை 27 அன்று இரண்டு குவாண்டாஸ் விமானங்கள் ஒரே நேரத்தில் புறப்பட அனுமதி அளிக்கப்பட்டதால் மோதும் நிலைக்குச் சென்றன.</p><p>இரண்டு வார இடைவெளிகள் தொடந்து நடந்த இந்த மூன்று பாதுகாப்பு குறைபாடு சம்பவங்கள் சிட்னி விமான நிலையம் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியது.</p> <h2>விசாரணை</h2><p>இதுகுறித்து பேசிய ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் தலைமை ஆணையர் ஆங்கஸ் மிட்செல், "நடக்கக்கூடாத 3 சம்பவங்கள் நடந்துள்ளன. </p><p>சிட்னி விமான நிலையத்தில் அப்போது நிலவிய பணிச்சுமை, கட்டுப்பாட்டு அறையில் இருந்த ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் பயிற்சி முறைகள் குறித்து விரிவாக விசாரிக்கப்படும்" என்றார்.</p><p>ஏர் டிராபிக் கண்ட்ரோலர்களை புதிதாக வேலைக்கு சேர்த்து பயிற்சி அளிக்கும் பணி நடந்து வரும் சூழலில் இந்தத் தவறுகள் நடந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.</p><p>இச்சம்பவங்கள் தொடர்பாக உடனடியாக முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உத்தரவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சுற்றுலா வந்தபோது படிப்புக்காக 5 வயது சிறுவனை தத்தெடுத்த அயர்லாந்து என்ஜினீயர் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ireland-engineer-adopted-a-boy-from-mamallapuram-for-his-education-while-visiting-as-a-tourist</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ireland-engineer-adopted-a-boy-from-mamallapuram-for-his-education-while-visiting-as-a-tourist#comments</comments><guid isPermaLink="false">ffe373a5-cedc-4935-9484-23cfbc87bcfa</guid><pubDate>Fri, 14 Aug 2026 07:39:09 +0000</pubDate><atom:updated>2026-08-14T07:39:09.787Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ireland,அயர்லாந்து,Education,Engineer,என்ஜினீயர்,boy adopted,சிறுவன் தத்தெடுப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/c63c90ia/sudent.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Boy - Michael]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/c63c90ia/sudent.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மாமல்லபுரம் சுற்றுலா வந்தபோது படிப்புக்காக 5 வயது சிறுவனை தத்தெடுத்த அயர்லாந்து என்ஜினீயர்  அவனை ஆரம்ப கல்வி முதல் கல்லூரி வரை படிக்க வைப்பதாக கூறி உறுதி அளித்து அதற்கான உதவிகளை செய்தார்.</strong></em></p> <h2>மைக்கேல் சாப்ட்வேர் என்ஜினீயர்</h2><p>அயர்லாந்து நாட்டை சேர்ந்தவர் மைக்கேல். சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவர் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா செல்லும்போது அங்குள்ள ஏழை குழந்தைகளுக்கு கல்விக்கு உதவுவதை மனிதநேய சேவையாக செய்து வருகிறார். </p> <h2>மாமல்லபுரம் சுற்றுலா </h2><p>கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் மாமல்லபுரம் சுற்றுலா வந்தபோது பூஞ்சேரியை சேர்ந்த ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த சர்வேஸ் (வயது 5) என்ற சிறுவன் ஒருவன் கல்வி கற்க முடியாமல் வறுமையிலும், பொருளாதாரம் இல்லாமலும் சிரமப்படுவதை அறிந்தார். </p><p>இதையடுத்து சிறுவன் சர்வேசை கல்விக்காக மைக்கேல் தத்தெடுத்தார். சிறுவனை ஆரம்ப கல்வி முதல் கல்லூரி வரை படிக்க வைப்பதாக கூறி உறுதி அளித்து அதற்கான உதவிகளை செய்தார்.</p> <h2>சிபிஎஸ்இ </h2><p>இதைத்தொடர்ந்து மாமல்லபுரம் அடுத்த வட கடம்பாடியில் உள்ள தனியார் சி.பி.எஸ்.இ. மேல்நிலைப் பள்ளியில் தன் சொந்த செலவில் சிறுவன் சர்வேசை சேர்த்தார். தொடர்ந்து படிப்பிற்கு தேவையான உபகரணங்கள் அனுப்புவது, போனில் தன்னம்பிக்கை ஊட்டுவது, ஆங்கிலம் சரளமாக பேச ஆன்லைன் பயிற்சி கொடுப்பது என மாணவனை ஊக்கப்படுத்தி வந்தார். </p> <h2>மழலையர் பட்டமளிப்பு விழா</h2><p>இந்த நிலையில் அந்த பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் நன்னடத்தை, எழுத்தழகு, விடுப்பு எடுக்காமை, ஆங்கில உச்சரிப்பு உள்ளிட்ட நற்குணங்களுக்காக சிறுவன் சர்வேசுக்கு மழலையர் பட்டம் வழங்கப்பட்டது. </p> <h2>பட்டமளிப்பு நிகழ்ச்சி</h2><p>இதை நேரில் பார்பதற்காக மைக்கேல் அயர்லாந்து நாட்டில் இருந்து மாமல்லபுரம் வந்தார். பள்ளியில் நடைபெற்ற பட்டமளிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவரை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர். </p><p>மேலும் மைக்கேல், தான் தத்தெடுத்து படிக்க வைக்கும் சிறுவன் சர்வேசை மேடையில் பாராட்டி மகிழ்ந்தார். இந்த சம்பவம் அங்கிருந்த மற்ற மாணவர்களின் பெற்றோர்களை வியக்க வைத்தது.</p>]]></content:encoded></item><item><title>தேசப் பிரிவினை எனும் கருப்பு சரித்திரம்.. நினைவு தினத்தில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்  </title><link>https://www.maalaimalar.com/news/national/partition-horrors-remembrance-day-india-pakistan-division-victims-honoured-and-national-unity-stressed</link><comments>https://www.maalaimalar.com/news/national/partition-horrors-remembrance-day-india-pakistan-division-victims-honoured-and-national-unity-stressed#comments</comments><guid isPermaLink="false">6b62221a-9257-4791-9768-a6df9df77d5f</guid><pubDate>Fri, 14 Aug 2026 07:16:45 +0000</pubDate><atom:updated>2026-08-14T07:16:45.124Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,Independence Day,சுதந்திர தினம்,பிரதமர் மோடி,இந்திய பிரிவினை,Partition of India</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/jq35m68k/tn-27.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரதமர் மோடி ]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர் மோடி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/jq35m68k/tn-27.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஒருங்கிணைந்த இந்தியா சுதந்திரத்தின் போது, இந்தியா - பாகிஸ்தான் என இரு நாடுகளாக பிரிந்தது. </p><p>இந்த பிரிவினையின் போது துயருற்று  தங்களது வாழ்வையும் உயிரையும் இழந்த மக்களின்  நினைவாக ஆண்டுதோறும் ஆகஸ்ட் 14 (இன்று) பிரிவினை கொடுமைகள் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.</p> <h2>பிரிவினை</h2><p>வரலாற்று ஆய்வுகளின்படி, இந்தியா - பாகிஸ்தான் எல்லை வகுக்கப்பட்டபோது சுமார் 1.5 கோடி மக்கள் தங்களது சொந்த வீடுகளை விட்டு வலுக்கட்டாயமாக இடம்பெயர நேரிட்டது.</p><p>மேற்கு பாகிஸ்தான் (தற்போதைய பாகிஸ்தான்) எல்லையான பஞ்சாபிலும், கிழக்கு பாகிஸ்தான் (தற்போதைய வங்கதேசம்) எல்லையான மேற்கு வங்கத்திலும் மதக்கலவரங்கள் மூண்டன.</p><p>கொலை, பாலியல் வன்கொடுமை என பல்வேறு சொல்லொணா துயரங்கள் அரங்கேறின. இதன்போது ஏற்பட்ட மத வன்முறைகளில் தோராயமாக 2 லட்சம் முதல் 20 லட்சம் மக்கள் உயிரிழந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது.</p> <h2>பிரிவினை தினம்</h2><p>ஆகஸ்ட் 14 இத்தினம் அனுசகரிக்கப்படும் என 2021 பிரதமர் மோடி அறிவித்திருந்தார். எதிர்கால சந்ததியினருக்கு நாட்டின் பிரிவினையின் பின்னால் இருக்கும் துயரங்களை அரியச் செய்வதே இத்தினத்தின் நோக்கம்.</p><p>ஆகஸ்ட் 15 நாடு <a href="https://www.maalaimalar.com/topic/independence-day">சுதந்திர தினத்தை </a>கொண்டாடுவதற்கு பின்னால் இப்படியோரு கருப்பு சரித்திரமும் இருப்பதை நினைவுக்கூற இந்நாள் அவசியமாகிறது.</p> <h2>மோடி</h2><p>இவ்வாண்டு பிரிவினை கொடுமைகள் நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பிரிவினையில் இன்னுயிரை இழந்தவர்களுக்கும் அத்தகு கொடூரமான காலகட்டத்தில் இருந்து மீண்டு வந்து நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்டோருக்கும் அஞ்சலி செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.</p><p>மேலும், "மக்களின் துணிச்சலும் பலமும், எப்பேர்ப்பட்ட சவால்களுக்கு மத்தியிலும் இலக்குகளை அடைய முடியும் என்பதை நிருபித்துள்ளது. தேசிய ஒருமைப்பாட்டையும் நல்லிணக்கத்தையும் நாம் மேலும் வலுப்படுத்துவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மனிதர்களை ஒழிக்கும் மதுவை ஒழிப்பதே அரசின் கடமையாக இருக்க வேண்டும் - அன்புமணி
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-says-eliminating-alcohol-which-destroys-human-lives-should-be-the-governments-duty</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-says-eliminating-alcohol-which-destroys-human-lives-should-be-the-governments-duty#comments</comments><guid isPermaLink="false">6e7ec2bf-ff8a-49d7-9303-33794cb6711a</guid><pubDate>Fri, 14 Aug 2026 07:14:31 +0000</pubDate><atom:updated>2026-08-14T07:14:31.689Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,alcohol,டாஸ்மாக் கடைகள்,Tasmac,மதுக்கடைகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/w6ezbdmz/anbumaniramadoss.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anbumani ramadoss]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/w6ezbdmz/anbumaniramadoss.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பா.ம.க. தலைவர் மருத்துவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில்,</p><h2>மது அருந்தும் மாணவிகள்</h2><p>கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நீட், ஜே.இ.இ., கியூட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்கச் சென்ற மாணவிகள் சிலர் வகுப்பறையில் அமர்ந்து துணை உணவுகளுடன் மது அருந்தும் காணொலி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டிய வகுப்பறைகள் மதுக்கூடங்களாக மாறி வருவது மிகவும் கவலையளிக்கிறது.</p> <h2>இளைய சமுதாயம் எங்கே செல்கிறது?</h2><p>அரசு பள்ளிகளில் மாணவர்களும், மாணவிகளும் மது அருந்துவது இப்போது தான் புதிதாக நடக்கும் ஒன்றல்ல. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகவே இத்தகைய நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெறும் நிகழ்வுகள் ஒவ்வொருமுறையும் வெளிவரும் போதெல்லாம் இளைய சமுதாயம் எங்கே செல்கிறது? என்ற கவலையும், அதை விட அதிகமாக, எதிர்காலத் தூண்களாக வளர்த்தெடுக்கப்பட வேண்டிய குழந்தைகளை அரசும், சமூகமும் சீரழிக்கின்றனவே? என்ற ஆத்திரமும் தான் ஏற்படுகின்றன.</p> <h2>என்ன தண்டனை?</h2><p>இத்தகைய நிகழ்வுகளை முற்றிலுமாக தடுக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை. இளைய தலைமுறையினருக்கான பிரதிநிதிகளாக தங்களைக் காட்டிக் கொள்ளும் தவெக ஆட்சியிலும் இத்தகையக் கொடுமைகள் தொடர்கின்றன. அரசு பள்ளியில் மாணவிகள் மது அருந்தியதைத் தடுக்கத் தவறியதற்காக அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், மிகவும் எளிதாக மது கிடைக்கும் சூழலை உருவாக்கிய ஆட்சியாளர்களையும், வகுப்பறையில் அமர்ந்து மது அருந்துவதை ஒரு சாகசமாகக் கருதும் மனநிலையை மாணவர்களிடம் ஏற்படுத்தியவர்களுக்கும் என்ன தண்டனை?</p> <h2>மதுக்கடைகள்</h2><p>ஒரு காலத்தில் மதுக்கடைகள் ஊருக்கு வெளியிலும், சுடுகாடுகளுக்கு அருகிலும் தான் விற்பனை செய்யப்படும். அங்கு மது அருந்துவதற்காக செல்பவர்கள், யார் கண்களிலும் படாமல் பதுங்கி, பதுங்கி தான் செல்வார்கள். அந்த நிலையை மாற்றி பள்ளிகளுக்கும் மக்கள் கூடும் இடங்களுக்கும் அருகில் மதுக்கடைகளை அமைத்து அவற்றுக்கு வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யும் நிலையை உருவாக்கியது யார்? பள்ளிகளுக்கு அருகில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டு விட்டதாக ஆட்சியாளர்கள் அறிவித்த பிறகும் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் குறைந்தது இரு மதுக்கடைகளையாவது கடந்து செல்ல வேண்டிய சூழல் இப்போதும் நிலவுவது யாருடைய தவறு?</p> <h2>ஆன்லைனில் முன்பதிவு</h2><p>ஒழிக்கப்பட வேண்டிய விஷயங்கள் இவ்வளவு இருக்கும்போது, ஆன்லைனில் முன்பதிவு செய்து, வரிசையில் நிற்காமல் எளிதாக மது வாங்குவதற்கான இணையதளத்தை ஆட்சியாளர்கள் உருவாக்கியது தான் சீர்திருத்தமா? என்பன உள்ளிட்ட வினாக்களுக்கு எல்லாம் ஆட்சியாளர்கள் விடையளித்து தீர்வு காண வேண்டும். மனிதர்களை ஒழிக்கும் மதுவை ஒழிப்பதே அரசின் கடமையாக இருக்க வேண்டும்.</p> <h2>மதுவிலக்கு</h2><p>எனவே, மக்களுக்கும், மாணவர்களுக்கு மது எளிதாகக் கிடைப்பதை உடனடியாகத் தடை செய்ய வேண்டும். குறைந்தது ஆண்டுக்கு 1000 மதுக்கடைகளை மூடி, அடுத்த மூன்றாண்டுகளில் தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/independence-day-cm-vijay-to-hoisting-national-flag-at-fort-tomorrow">முதலமைச்சர் விஜய்</a> அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>8 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை- மர்ம நபர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-police-teams-hunt-8-year-old-assault-suspects</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-police-teams-hunt-8-year-old-assault-suspects#comments</comments><guid isPermaLink="false">49ccc8dd-008e-442f-add3-bb4ebd3e84d1</guid><pubDate>Fri, 14 Aug 2026 07:04:32 +0000</pubDate><atom:updated>2026-08-14T07:04:32.894Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாலியல் வன்கொடுமை,கிருஷ்ணகிரி,Krishnagiri,தனிப்படைகள் அமைப்பு,Sexual Harassment,Special team</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/e1tiz4tv/Krishnagiri.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Krishnagiri Sexual Harassment]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/e1tiz4tv/Krishnagiri.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் பள்ளியிலிருந்து வீடு திரும்பிய 8 வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபர்களைப் பிடிக்கக் போலீசார் சார்பில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.</p><h2>கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை</h2><p>கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த மலை கிராமத்தைச் சேர்ந்த 4-ஆம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமி, கடந்த புதன்கிழமை மாலையில் பள்ளி வகுப்பு முடிந்து மற்ற குழந்தைகளுடன் நடந்து வீடு திரும்பினார். </p><p>மற்ற குழந்தைகள் முன்னதாகவே தங்கள் வீடுகளுக்குச் சென்றுவிட, அந்தச் சிறுமி மட்டும் தனியாக வந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அச்சிறுமியை அருகில் உள்ள புதர் மற்றும் வனப்பகுதிக்குத் தூக்கிச் சென்று கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்தனர்.</p><h2>சிறுமிக்கு தீவிரச் சிகிச்சை</h2><p>வீடு திரும்பிய சிறுமி நடந்த கொடூரத்தை அழுதுகொண்டே தன் பெற்றோரிடம் தெரிவித்தார். இதனையடுத்து உறவினர்கள் குழந்தைகளுக்கான உதவி எண் 1098-க்குத் தகவல் தெரிவித்தனர். </p><p>உடனடியாக அன்று இரவில் 108 அவசர ஊர்தி மூலம் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிறுமி கொண்டு செல்லப்பட்டு, மேல் சிகிச்சைக்காக வியாழக்கிழமை காலையில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிறுமிக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><h2>3 தனிப்படை அமைப்பு</h2><p>இச்சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போக்சோ சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சேலம் சரக டி.ஐ.ஜி சந்தோஷ் ஹதிமானி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜி.எஸ். அனிதா மற்றும் மாவட்ட ஆட்சியர் சி. தினேஷ் குமார் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.</p><p>தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை விரைந்து கைது செய்து சிறையில் அடைக்க, 3 தனிப்படை போலீஸ் அதிகாரிகள் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சர்ச்சைக்குரிய பாடகர் கிறிஸ் பிரவுனுடன் சந்திப்பு: BTS உறுப்பினர்கள் RM, J-Hope மீது நெட்டிசன்கள் கோபம்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/bts-rm-j-hope-face-backlash-over-chris-brown-concert-photo</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/bts-rm-j-hope-face-backlash-over-chris-brown-concert-photo#comments</comments><guid isPermaLink="false">662b88fb-c7ff-41e3-a34c-86d9f3e4d321</guid><pubDate>Fri, 14 Aug 2026 07:01:33 +0000</pubDate><atom:updated>2026-08-14T07:01:33.459Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BTS,bts army,RMBTS,JHOPE,ChrisBrown,கிறிஸ்பிரவுன்,BoycottBTS,ArirangTour</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/i59ztiy3/RM-JHope-ChrisBrown" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  RM - JHope - ChrisBrown]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/i59ztiy3/RM-JHope-ChrisBrown?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலகப் புகழ்பெற்ற கொரிய இசைக்குழுவான <a href="https://www.maalaimalar.com/topic/bts">BTS</a>-ன் முன்னணி உறுப்பினர்கள் ஆர்.எம் மற்றும் ஜே-ஹோப், சர்சைக்குரிய அமெரிக்கப் பாடகர் கிறிஸ் பிரவுனின் கச்சேரியில் கலந்து கொண்டு அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட விவகாரம் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. </p><p>சமூக வலைதளங்களில் இவர்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்கள் தற்போது பெரிதும் கவனிக்க பட்டு வருகிறது</p><figure><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/Db-EHmXllYo/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:658px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/Db-EHmXllYo/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a></div></blockquote>
<script async src="//platform.instagram.com/en_US/embeds.js"></script></figure><h2>சர்ச்சை வெடித்த பின்னணி</h2><p>அமெரிக்க பிரபல பாடகர் கிறிஸ் பிரவுன் மீது கடந்த காலங்களில் கடுமையான பாலியல் குற்றச்சாட்டுகளும், பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகளும் பதிவாகி பெரும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளார். </p><p>தற்போது, கனடாவில் கிறிஸ் பிரவுன் நடத்திய கச்சேரி ஒன்றிற்கு சென்ற ஜே-ஹோப், அங்கு எடுத்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். </p><p>மேலும், ஆர்.எம் மற்றும் ஜே-ஹோப் இருவரும் கிறிஸ் பிரவுனுடன் இணைந்து நெருக்கமாகப் புகைப்படம் எடுத்துக்கொண்டது அவர்களது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.</p><h2>பெண் ரசிகர்களின் ஏமாற்றமும் கொந்தளிப்பும்:</h2><p>BTS குழுவிற்கு உலகம் முழுவதும் 90 சதவீதத்திற்கும் மேல் பெண் ரசிகைகளே உள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்றப் பின்னணி கொண்ட ஒருவரை BTS உறுப்பினர்கள் சந்தித்துக் கொண்டாடுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது எனப் பெண் ரசிகர்கள் குமுறுகின்றனர்.</p><p>"நான் BTS-ஐ மனதார நேசிக்கிறேன், ஆனால் இதுபோன்ற தவறான செயல்களுக்கு அவர்களைக் கண்டித்தே தீருவேன், எனக்கு இந்தச் சம்பவம் பெரும் மன உளைச்சலைத் தருகிறது" என ரசிகர்கள் தங்களின் எக்ஸ் தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். </p><p>சிலர் இவர்களின் பாடல்களைக் கேட்பதையே நிறுத்தப்போவதாகப் புறக்கணிப்புப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Everyone who follows me knows I get called a “HYBE ass-licker,” “BPD defender,” and whatever else because I ALWAYS defend BTS and even HYBE.<br>And I do. I’ll keep defending them in the future when the criticism is ridiculous. But in 9 years of being in this fandom, this is the… <a href="https://t.co/IEUDn6aUwU">pic.twitter.com/IEUDn6aUwU</a></p>&mdash; Yoong⟬⟭na⊙⊝⊜⁷ (@Yoonginapuppy2) <a href="https://x.com/Yoonginapuppy2/status/2087728591907811477?ref_src=twsrc%5Etfw">August 13, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2>ஆதரவாகவும் பேச்சு:</h2><p>மறுபுறம், சில ரசிகர்கள் இவர்களுக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர். "அவர்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரிலேயே கச்சேரிக்குச் சென்றுள்ளனர். </p><p>ஒரு பாடகரின் இசையை ரசிப்பதோ, அவரது கச்சேரிக்குச் செல்வதோ, அவரது கடந்த காலக் குற்றங்களை ஆதரிப்பதாக அர்த்தமாகாது" என்று அவர்கள் வாதிடுகின்றனர்.</p><figure><img alt="BTS" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/g59gcb9p/BTS" /></figure><h2>சுற்றுப்பயணத்தில் பரபரப்பு:</h2><p>தற்போது BTS குழுவினர் தங்களின் 'அரிராங்' ஆல்பத்திற்கான உலகளாவிய இசைப் பயணத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். </p><p>இந்த மாதத்தில் ஆர்லிங்டன், டொராண்டோ, சிகாகோ ஆகிய நகரங்களில் இவர்களின் பிரம்மாண்ட கச்சேரிகள் நடக்கவிருக்கும் சூழலில், இந்தச் சர்ச்சை, BTS குழுவின் பிம்பத்திற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.</p><p>இந்தக் கடுமையான விமர்சனங்கள் குறித்தோ, ரசிகர்களின் பாய்காட் கோரிக்கைகள் குறித்தோ ஆர்.எம் அல்லது ஜே-ஹோப் தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை.</p>]]></content:encoded></item><item><title>ஆடிப்பூர திருவிழா - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்</title><link>https://www.maalaimalar.com/spirituality/aadi-pooram-srivilliputhur-andal-temple-therottam</link><comments>https://www.maalaimalar.com/spirituality/aadi-pooram-srivilliputhur-andal-temple-therottam#comments</comments><guid isPermaLink="false">106d1766-40c7-41ed-a0d9-10de3bb49d51</guid><pubDate>Fri, 14 Aug 2026 06:53:43 +0000</pubDate><atom:updated>2026-08-14T06:53:43.735Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Srivilliputhur Andal temple,ஆடிப்பூரம்,aadi pooram,therottam,தேரோட்டம்,ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/6ql56lvj/andal.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Therottam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/6ql56lvj/andal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>ஆடிப்பூரம்</h2><p>108 வைணவ திருத்தலங்களில் 48-வது ஸ்தலமாக திகழும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டாளின் அவதார தினமான ஆடிப்பூரத்தை கொண்டாடும் வகையில் 10 நாட்கள் இந்த திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. </p> <h2>சயன சேவை</h2><p>விழாவையொட்டி தினமும் ஆண்டாள், ரெங்கமன்னார் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. 5-ம் திருநாளான 10-ந்தேதி 5 கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.</p> <h2>கருட வாகனம்</h2><p>இதில் ஆண்டாள் பெரிய அன்னவாகனம், ரெங்கமன்னார், பெரிய பெருமாள், சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீனிவாச பெருமாள், திருத்தங்கல் அப்பன் ஆகியோர் கருட வாகனங்களிலும், பெரியாழ்வார் சிறிய அன்ன வாகனத்திலும் எழுந்தருளி காட்சி அளித்தனர். 7-ம் திருநாளான நேற்று முன்தினம் இரவு சயனசேவை நிகழ்ச்சி நடைபெற்றது.</p> <h2>ஆடிப்பூர தேரோட்டம்</h2><p><a href="https://www.maalaimalar.com/spirituality/aadi-pooram-3">ஆடிப்பூர திருவிழா</a>வின் சிகர நிகழ்ச்சியாக 9-ம் திருநாளான இன்று (14-ந் தேதி, வெள்ளிக்கிழமை) அதிகாலை 4.35 மணிக்கு மேல் 5.00 மணிக்குள் மேளதாளங்கள் முழங்க கடக லக்னத்தில் ஆண்டாள்-ரெங்கமன்னார் திருத்தேரில் எழுந்தருளினர். </p> <h2>லட்சக்கணக்கான பக்தர்கள்</h2><p>காலை 8.45 மணிக்கு தேரோட்டத்தை அமைச்சர்கள் ஜெகதீஸ்வரி, கீர்த்தனா, கலெக்டர் சுகபுத்ரா வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். இதில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா... கோபாலா... என்ற பக்தி கோஷம் விண்ணை முட்ட தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது கருடன் வானில் வட்டமடித்தது பக்தர்களை பரவசம் அடையச் செய்தது.</p> <h2>அசைந்தாடி வந்து தேர்</h2><p>தேரோட்டத்தை முன்னிட்டு தேர் செல்லும் 4 ரத வீதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தேர் சக்கரங்கள் பதியாத வகையில் இரும்பு பிளேட்டுகள் போடப்பட்டு இருந்தன. அத்துடன் புதியதாக 7 வடங்கள் தேருடன் இணைக்கப்பட்டு இருந்தது. பெண்களுக்கு 2 வடங்கள் ஒதுக்கப்பட்டன. மேலும் வேளாண்மைத்துறை சார்பில் பொக்லைன் எந்திரங்கள் தேரை பின்னால் இருந்து தள்ளியதால் தேரானது பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி வந்தது.</p> <p>அதேபோல் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நகராட்சி நிர்வாகம் சார்பில் செய்து தரப்பட்டிருந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>கரூர் அரசு பணி: மதுரை ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/karur-government-job-cancellation-interim-stay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/karur-government-job-cancellation-interim-stay#comments</comments><guid isPermaLink="false">1f6b3a46-0c4a-4c05-a9ee-bdebef648ac8</guid><pubDate>Fri, 14 Aug 2026 06:48:20 +0000</pubDate><atom:updated>2026-08-14T06:48:20.896Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>SupremeCourt,கரூர்,Highcourt,Karur,Tamilnadu Government,madurai bench,tvk,உச்சநீதிமன்றம்,InterimStay,இடைக்காலதடை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/esw925us/TamilNadu-Government" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TamilNaduGovernment  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/esw925us/TamilNadu-Government?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த செப்டெம்பர் மாதம் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D">கரூரில் நடைபெற்ற</a> தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் 41 பேர் உயிரிழந்தனர். அவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அரசு வேலையை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதலமைச்சர் விஜய்</a> வழங்கினார்.</p><h2>உச்ச நீதிமன்றத்தில் மனு</h2><p>இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இந்த வழக்குகளை விசாரித்த மதுரைக்கிளை, வேலை வழங்கப்பட்ட உத்தரவை ரத்து செய்தது. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்வதற்கும் உத்தரவிட்டது. </p><p>இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் சிலரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.</p><h2>நீதிபதிகள் கேள்வி</h2><p>இந்த வழக்கு இன்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த அரசு வேலையினை ரத்து செய்ய மதுரை கிளையினுடைய உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். </p><p>மேலும், எதிர் மனுதாரர்களான சீனி மற்றும் அகமது ஆகியோரும் பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>இந்த முடிவு அரசு எடுத்த கொள்கை முடிவு, இதை எப்படி நீதிமன்றம் தலையிட முடியும்? பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு ஆணை வழங்கக்கூடாது என்று நீங்கள் எப்படி கூற முடியும்? நீங்கள் யார்? என்று தமிழ்நாடு அரசு சார்பில் நீதிபதிகள் மதுரை கிளை உயர்நீதிமன்றத்தை கேள்வி எழுப்பினர்.</p><h2>விசாரணை ஒத்திவைப்பு</h2><p>தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு குறித்தும், பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் குறித்தும், எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க உத்திரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>ஜப்பானில் வரலாறு காணாத கனமழை - 4 பேர் பலி - ஐவர் படுகாயம் </title><link>https://www.maalaimalar.com/news/world/japan-flood-disaster-triple-typhoons-trigger-record-rains-in-chiba-killing-four-and-disrupting-transport</link><comments>https://www.maalaimalar.com/news/world/japan-flood-disaster-triple-typhoons-trigger-record-rains-in-chiba-killing-four-and-disrupting-transport#comments</comments><guid isPermaLink="false">d433f424-d7c6-4cae-b9dd-54826286d05d</guid><pubDate>Fri, 14 Aug 2026 06:47:29 +0000</pubDate><atom:updated>2026-08-14T06:47:29.996Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>japan,ஜப்பான்,வெள்ளம்,Heavy Rain,floods,கனமழை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/1l8j80ww/tn-26.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஜப்பானில் கனமழை ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஜப்பானில் கனமழை ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/1l8j80ww/tn-26.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/japan">ஜப்பான்</a>, பிலிப்பைன்ஸ் மற்றும் சீனா ஆகிய ஆசிய நாடுகளை ஒரே நேரத்தில் டால்பின், சான் ஹோம், பேய்லூ ஆகிய மூன்று புயல்கள் அடுத்தடுத்துத் தாக்கியுள்ளன.</p><p>இதனால் ஜப்பானில் பெய்த வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். மேலும் ஐவர் பலத்த காயமடைந்தனர். </p> <h2>கனமழை</h2><p>ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகில் உள்ள சிபா மாகாணத்தில் நேற்று மதியம் முதல் மணிக்கு 100 மி.மீ-க்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது.</p><p>இது அங்கு ஆகஸ்ட் மாதம் பொழியும் சராசரி மழையளவை விட 3 மடங்கு அதிகம் என்றும், ஜப்பான் வரலாற்றிலேயே பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p> <h2>வெள்ளம்</h2><p>சிபா மாகாணத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் மூழ்கிய காரில் சிக்கி ஒரு பெண், தெருக்களில் மயங்கி விழுந்த இருவர் உட்பட மொத்தம் 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஐவர் பலத்த காயங்களுடம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.</p> <h2>முடக்கம்</h2><p>1,00,000க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p>20,000க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ரெயில் சேவைகள் மற்றும் முக்கிய நெடுஞ்சாலைகள் முடங்கியுள்ளன.</p><p>விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் சுமார் 7,000 பயணிகள் இரவு முழுவதும் விமான நிலையத்திலேயே முடங்கினர்.</p> <p>மேலும் 1,000க்கும் மேற்பட்டோர் மெட்ரோ ரயில் நிலையங்களில் தஞ்சம் புகுந்தனர்.</p><p>நேற்று விடுக்கப்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ள அபாயம் இன்றும் நீடிப்பதாக உள்ளூர் நிர்வானம் அறிவிய்த்துள்ளது.</p><p>இதனிடையே  இன்று முதல் விமானங்கள் வழக்கம் போல் இயங்கும் என்றும், ரத்து செய்யப்பட வாய்ப்பில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் வார்னிங் - மே 2025-ஐ விட பலமாக பதிலடி கொடுப்போம் என மிரட்டல்</title><link>https://www.maalaimalar.com/news/national/india-pakistan-tensions-shehbaz-sharif-warns-of-stronger-response-over-security-sovereignty-and-water-rights</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-pakistan-tensions-shehbaz-sharif-warns-of-stronger-response-over-security-sovereignty-and-water-rights#comments</comments><guid isPermaLink="false">6b99899f-0be5-4a66-895b-b4ef66674100</guid><pubDate>Fri, 14 Aug 2026 06:22:40 +0000</pubDate><atom:updated>2026-08-14T06:22:40.473Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Pakistan,ஆபரேஷன் சிந்தூர்,shehbaz sharif,Independence Day,ஷெபாஸ் ஷெரீப்,Operation Sindhur,pakistan independence</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/34lachie/tn-25.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஷெபாஸ் ஷெரீப்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஷெபாஸ் ஷெரீப்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/34lachie/tn-25.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாகிஸ்தானின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் நீர் உரிமைகளுக்கு ஆபத்து நேர்ந்தால், மே 2025 இல் கொடுத்ததை விட பலமான பதிலடியை கொடுப்போம் என இந்தியாவிற்கு பாகிஸ்தான் பிரதமர் <a href="https://www.maalaimalar.com/news/world/pakistan-court-grants-bail-to-pm-shehbazs-daughter-and-her-husband-in-graft-case-2">ஷெபாஸ் ஷெரீப்</a> எச்சரிக்கை விடுத்துள்ளார். </p><p>இந்தியா ஆகஸ்ட் 15 (நாளை) சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது போல, பாகிஸ்தான் இன்று (ஆகஸ்ட் 14) தனது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. </p> <h2>நினைவிடம்</h2><p>கடந்த ஆண்டு ஏப்ரலில் பஹல்காமில் 26 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பதிலடியாக இந்தியா மே 7 அன்று ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது. 2 நாட்கள் நீடித்த இந்த மோதல் மே 9 அன்று முடிவுக்கு வந்தது.</p><p>இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 13) தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த ஆண்டு இந்தியாவுடன் நிகழ்ந்த மோதல் மற்றும் அதில் சண்டையிட்ட பாகிஸ்தான் வீரர்களுக்கான யாதிர் ஐ பதா (வெற்றி நினைவிடத்தை) திறந்து வைக்கும் நிகழ்வில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி, பீல்டுக்கு மார்ஷல் அசிம் முனீர் மற்றும் முப்படை தளபதிகள் கலந்துகொண்டனர்.</p> <h2>புகழாரம்</h2><p>இங்கு கடந்த ஆண்டு தாக்குதலின் புகைப்படங்கள் காட்சியப்படுத்தப்பட்டுள்ளன. மோதலில் பாகிஸ்தானே வென்றதாக அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>இந்த நிகழ்வில் பேசிய பிரதமர் ஷெரீப், "யாதிர் ஐ பதா என்பது நமது உறுதிப்பாடு, விடாமுயற்சி மற்றும் எதிரிகள் மீதான நமது ஆயுத படைகளின் ஆதிக்கத்தை பிரதிபலிக்கிறது. நாட்டை காக்கும் சண்டையில் உயிரிழந்த நமது வீரர்களுக்கும், நமது பெருமித்திதிற்குமான நினைவுச்ச்சின்னம் இது " என்றார்.</p> <h2>இந்தியாவுக்கு வார்னிங்</h2><p>"பாகிஸ்தான் அமைதியை விரும்புகிறது. ஆனால் அமைதியை விரும்புவதை பலவீனமாக எடுத்துக்கொள்ள கூடாது. </p><p>கண்ணியத்துடனும் உறுதியுடனும் நாம் அமைதியை நாடுகிறோம். இந்த பிராந்தியத்தில் பாகிஸ்தான் அமைதிக்கான உத்தரவாதமாக விளங்குகிறது.</p><p>ஆனால் பாகிஸ்தானின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் நீர் உரிமைகளுக்கு ஆபத்து நேர்ந்தால், மே 2025 இல் கொடுத்ததை விட பலமான பதிலடியை கொடுப்போம்" என எச்சரித்துள்ளார்.</p><p>பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திய இந்தியா, ஜம்மு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் செல்லும் நீரை கணிசமாக குறைத்துள்ளது. </p><p>இந்த நீரை விவசாயத்துக்கும், குடிநீர் தேவைக்கும் பாகிஸ்தான் பெருமளவில் நம்பியுள்ளதால், நீரை திறந்துவிடும்படி இந்தியாவுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>வந்தே மாதரம் பாடலுக்கு பிறகு தேசியக்கொடி ஏற்றப்படும் - உயர்நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/national-flag-to-be-hoisted-after-vande-mataram-song-high-court-registrar-circular</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/national-flag-to-be-hoisted-after-vande-mataram-song-high-court-registrar-circular#comments</comments><guid isPermaLink="false">485efbe3-49bd-4ac7-aa3a-f6578b394d67</guid><pubDate>Fri, 14 Aug 2026 06:16:42 +0000</pubDate><atom:updated>2026-08-14T06:16:42.367Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வந்தே மாதரம்,Vande Mataram,Madras High Court,சென்னை ஐகோர்ட்,national flag,Independence Day,சுதந்திர தினவிழா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/mwlpae3p/highcourt.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Madras high court - National Flag]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/mwlpae3p/highcourt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><strong>உயர்நீதிமன்றத்தின் சுதந்திர தின கொண்டாட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது குறித்த அறிவிப்பு இல்லை.</strong></p><h2>உயர்நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கை</h2><p>வந்தே மாதரம் பாடல் பாடப்பட்ட பிறகு தேசியக்கொடி ஏற்றப்படும் என உயர்நீதிமன்ற கிளை மற்றும் கீழமை நீதிமன்றங்களுக்கு உயர்நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.</p><p>முதலில் வந்தே மாதரம் பாடலும், தேசியக்கொடி ஏற்றப்பட்டு விழா நிறைவடையும்போது தேசிய கீதமும் பாடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <h2>சுதந்திர தின கொண்டாட்டம்</h2><p>உயர்நீதிமன்றத்தின் சுதந்திர தின கொண்டாட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது குறித்த அறிவிப்பு இல்லை.</p><p>தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்வுகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்தான் முதலில் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஆகஸ்ட் 10-ந்தேதி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.</p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>இந்தியாவின் சுதந்திர தின விழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. </p><p>சென்னை கோட்டை கொத்தளத்தில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/independence-day-cm-vijay-to-hoisting-national-flag-at-fort-tomorrow">முதலமைச்சர் விஜய்</a> நாளை கொடி கம்பத்தில் மூவர்ண தேசியக் கொடியை முதல்முறையாக ஏற்றி வைக்கிறார். </p> <h2>தமிழ்த்தாய் வாழ்த்து</h2><p>சட்டசபையில் தீர்மானம் நிறைவேறிய நிலையில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%90%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D">உயர்நீதிமன்றத்தில்</a> நாளை தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுமா? என்ற தெளிவான அறிவிப்பு எதுவும் இல்லை.</p><p>உயர்நீதிமன்ற பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் வந்தே மாதரம், தேசிய கீதம் குறித்து மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விவசாயிகளின் துயரத்தை பார்க்காமல் அறை மாற்றத்தில் கவனம் செலுத்துகிறார் முதலமைச்சர் விஜய்!- இபிஎஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-prioritises-office-room-change-over-farmers-eps</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-prioritises-office-room-change-over-farmers-eps#comments</comments><guid isPermaLink="false">df79a00e-f168-454f-941a-b85e2a9bd1a9</guid><pubDate>Fri, 14 Aug 2026 06:15:53 +0000</pubDate><atom:updated>2026-08-14T06:15:53.484Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,எடப்பாடி பழனிசாமி,Edappadi pazhanisamy,முதலமைச்சர் விஜய்,tn cm vijay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/asd7as3o/EPS.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Edappadi Pazhanisamy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/asd7as3o/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரி விவகாரத்தை கண்டித்து தஞ்சாவூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p><p>பயிர்க்கடன் தள்ளுபடி, மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்து.</p><p>அப்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-</p><p>காவிரியில் நமக்குரிய நீரை பெற்றுத் தராத தவெக அரசு ரீல்ஸ் போடுவதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறது.</p><p>ரீல்ஸ் மட்டும் போட்டு வரும் தவெக அரசானது விவசாயிகள் மற்றும் மக்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை.</p><p>ரீல்ஸ் போடுவதும் ரீல் விடுவதும் தமிழக வெற்றிக்கழக அரசின் வேலையாக உள்ளது. </p><p>விவசாயிகளுக்கான மும்முனை மின்சாரத்தை முறையாக வழங்காததால் ஒரு லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் வறண்டு கிடக்கின்றன.</p><p>தலைமைச் செயலகத்தில் தனக்கான அறை மாற்றம் தான் முதலமைச்சர் விஜய்க்கு முக்கியம். மக்கள் முக்கியமில்லை.</p><p>நானும் அங்கு இருந்தேன், முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினும் அங்குதான் இருந்தார். ஆனால் தற்போதைய முதல்வர் அறை மாற்றுகிறார்.</p><p>நடிகர் என்பதால் அறை நவீனமயமாக இருக்க வேண்டும் என எதிர்பார்த்து முதலமைச்சர் விஜய் அறையை மாற்றுகிறார்கள்.</p><p>விவசாயிகள் உணவுக்கே வழியின்றி உள்ள நேரத்தில் முதலமைச்சர் விஜய்க்கு அறை மாற்றம்தான் முக்கியமா?</p><p>நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்படும் கர்நாடக அரசு, முதலமைச்சர் விஜய் சென்று பேசினால் நீர் திறக்கும் என்பது நகைச்சுவை. 50 ஆண்டுகாலமாக காவிரி விவகாரத்தில் போராடிக் கொண்டிருக்கிறோம். அந்த வரலாறு தெரியாமல் தவெக அரசு செயல்படுகிறது.</p><p>போராடி, வாதாடி பெற்ற உச்சநீதிமன்ற தீர்ப்பையே கர்நாடகா மதிப்பதில்லை. பேச்சுவார்த்தை நடத்தினால் நீர் திறப்பார்களா?</p><p>வேண்டுமென்று காலம் தாழ்த்துவதற்காகவே கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்த முதலமைச்சர் விஜய் முயற்சிக்கிறார்.</p><p>விவசாயக் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாவிட்டால் தவெக அரசுக்கு விவசாயிகள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.</p><p>கட்சி தொடங்கி மூன்று ஆண்டுகளே ஆகும் நிலையில் தவெகவுக்கு காவிரி போராட்ட வரலாறு எல்லாம் தெரிய வாய்ப்பில்லை. கூட்டணியில் கட்சிகள் கூட அனைத்து கட்சி கூட்டம் கூட்டுமாறு வலியுறுத்தியும் தவெக அரசு கேட்கவில்லை.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவின் 2வது சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்.. நாட்டு மக்களுக்கு சோனம் வாங்சுக் அழைப்பு </title><link>https://www.maalaimalar.com/news/national/india-second-freedom-struggle-sonam-wangchuk-calls-for-peaceful-political-reform</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-second-freedom-struggle-sonam-wangchuk-calls-for-peaceful-political-reform#comments</comments><guid isPermaLink="false">8249749b-bd8a-4007-935a-8a91705d4f03</guid><pubDate>Fri, 14 Aug 2026 05:44:03 +0000</pubDate><atom:updated>2026-08-14T05:44:03.217Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sonam Wangchuk,Independence Day,சுதந்திர தினம்,சோனம் வாங்சுக்,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/b9u5ecgb/tn-24.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சோனம் வாங்சுக்]]></media:title><media:description type="html"><![CDATA[ சோனம் வாங்சுக்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/b9u5ecgb/tn-24.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாளை நாட்டின் 80வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி கல்வியாளர் மற்றும் சமூக செயல்பாட்டாளர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/i-will-end-the-hunger-strike-if-this-single-promise-is-made-sonam-wangchuk">சோனம் வாங்சுக்</a> லடாக்கில் இருந்தபடி வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். </p><p>எக்ஸ் பக்கத்தில் வெளியான அவ்வீடியோவில் பேசும் அவர், அரசியல் சீர்திருத்தத்தித்தை மேற்கொள்ள இந்தியாவின் இரண்டாம் சுதந்திர போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.  </p><p>சுயநலமற்ற, பயமில்லாத நற்பண்புகளுடையவர்களை தலைவர்களாக மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். </p> <h2>புரட்சி</h2><p>"இந்த சுதந்திர தினத்தில், எனக்கு உங்களின் உதவி வேண்டும். இந்தியாவுக்கு ஒரு அமைதியான புரட்சி தேவை. 2047 ஆம் ஆண்டுக்குள் ஒரு மதிப்புமிக்க நாடாக மாறுவதற்கு நாட்டின் தலைவர்கள் எவ்வாறு தேர்ந்தெடுப்படுகிறார்கள் என்பதில் அந்த புரட்சி நிகழ வேண்டும்" என அவர் பேசியுள்ளார்.</p> <h2>குற்ற வழக்குகள்</h2><p>தொடர்ந்து பேசிய அவர், "குற்ற வழக்குகளை கொண்ட அரசியல்வாதிகள் நாட்டின் நம்பகத்தன்மையை இழந்துவருகிறார்கள். நமது நாடாளுமன்ற உறுப்பினர்களில் பாதி பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. அதில் கால் வாசி பேர் மீது கொலை, பாலியல் வன்கொடுமை, ஆள் கடத்தல் வழக்குகள் உள்ளன. நம்பிக்கை பற்றாக்குறை தான் நாட்டின் மிகப்பெரிய பற்றாக்குறையாக மாறியுள்ளதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.</p> <h2>அழைப்பு</h2><p>நாடு நெடுகிலும் உள்ள மக்களுடன் இதுகுறித்து ஆலோசிக்க விரும்புகிறேன். நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கக்கூடியவர்களாக யார் யாரை அவர்கள் கருதுவதாகவும் நான் கேட்டறிய விரும்புகிறேன்.</p><p>இங்கே லடாக்கின் தொலைதூரத்தில் அமர்ந்துகொண்டு நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட தகுதியானவர்கள் யார், அவர்களை எப்படி கண்டறிவது என்பது எனக்கு தெரியவில்லை.</p><p>எனவே மக்கள் தங்கள் பகுதிகளில் அவ்வாறு யாரை மக்கள் பணிக்கு தகுந்தவர்கள் என கருதுகிறீர்களா அவர்களின் பெயர்களை பரிந்துரைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். </p><p>நாம் ஒன்றுசேர்ந்த்து, இந்தியாவின் 2வது சுதந்திர போராட்டத்தை (விடுதலை இயக்கத்தை) தொடங்குவோம். இந்த செய்தியை முடிந்த அளவு மக்கள் தத்தமது மொழிகளில் பெயர்த்து கூடியமட்டும் பரவச் செய்ய வேண்டும்" என கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் சிஜேபி தலைமையில் போராடிய மாணவர்கள் - இளைஞர்களுக்கு ஆதரவாக சோனம் வாங்சுக் 26 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தவர் ஆவார். அவரின் உடல் எடை 10 கிலோவுக்கு மேல் குறைந்தது.</p> <h2>டெல்லி போராட்டம்</h2><p>டெல்லி போலீசாரால் வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். </p><p>ஜூலை 20 நாடாளுமன்றம் பேரணி சென்ற மாணவர்கள் மீது வழக்குப்பதிய மாட்டோம் என மத்திய அமைச்சர் ஜேபி நட்டா அவரை மருத்துவமனையில் சென்று சந்தித்து வாக்குறுதி அளித்த பிறகே அவர் உண்ணாவிரதத்தை கைவிட்டார்.</p><p>தொடர்ந்து சிஜேபி போராட்டத்தின் அழுத்தத்தால் தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.</p> ]]></content:encoded></item><item><title>24 மணி நேரத்தில் ரூ. 2 கோடிக்கு மேல் வசூல் - முன்பதிவிலேயே மாஸ் காட்டிய 
விஸ்வநாத் &amp; சன்ஸ்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/viswanath-and-sons-over-2-crore-tickets-in-24-hours</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/viswanath-and-sons-over-2-crore-tickets-in-24-hours#comments</comments><guid isPermaLink="false">2ffc5918-9527-4de3-ac99-3316d3feedb4</guid><pubDate>Fri, 14 Aug 2026 05:36:55 +0000</pubDate><atom:updated>2026-08-14T05:36:55.403Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சூர்யா,suriya,mamitha baiju,மமிதா பைஜூ,Vishwanath &amp; Sons,GvPrakashkumar,VishwanathAndSons,VenkyAtluri,BookMyShow,BMSCollection,விஸ்வநாதன் &amp; சன்ஸ்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/x66br8kw/VishwanathSons" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vishwanath&Sons]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/x66br8kw/VishwanathSons?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள <a href="https://www.maalaimalar.com/topic/vishwanath-and-sons">விஸ்வநாதன் &amp; சன்ஸ்</a> திரைப்படத்திற்கு, ஆன்லைன் முன்பதிவில் மிகத் தீவிரமாக டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது. </p><p> இன்று ரிலீஸாகியுள்ள நிலையில், தியேட்டர்களில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.</p><h2>டிக்கெட் முன்பதிவு</h2><p>பிரபல நடிகர் சூர்யா நடிக்கும் , இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'விஸ்வநாதன் &amp; சன்ஸ்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. </p><p>தயாரிப்பு நிறுவனமான 'ரவிந்தர் சந்திரசேகரன் - லிப்ரா புரொடக்ஷன்ஸ்' தயாரிப்பில் உருவாகி, ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள <strong>"</strong>விஸ்வநாதன் &amp; சன்ஸ்<strong>"</strong> திரைப்படத்திற்கு, ஆன்லைன் முன்பதிவில் தீவிரமான டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது.</p><h2><strong>வசூல் நிலவரம்:</strong></h2><p>விஸ்வநாதன் &amp; சன்ஸ் படம் இன்று திரைக்கு வந்துள்ள சூழலில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 1,72,230 (172.23K) டிக்கெட்டுகள் ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. </p><p>ஒரு டிக்கெட்டின் சராசரி விலையாக ₹150 கணக்கிடப்பட்டுள்ளது. இதன் ஆன்லைன் தளத்தில் மட்டுமே கடந்த 24 மணி நேரத்தில் தோராயமாக ₹2.5 கோடி வசூலாகி சாதனை படைத்துள்ளது.</p><p>திரையரங்குகளில் இன்று காலை முதலே பாசிட்டிவ் விமர்சனங்கள் வரத் தொடங்கியுள்ளதாலும், வார இறுதி நாட்கள் ஆரம்பமாக உள்ளதாலும், அடுத்தடுத்த காட்சிகளுக்கான டிக்கெட் முன்பதிவு தற்பொழுது மின்னல் வேகத்தில் தீர்ந்து வருகிறது. </p><p>இதனால் வரும் நாட்களில் இந்த வசூல் வேட்டை மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content:encoded></item><item><title>வழக்குகளில் இருந்து தப்பிக்க பாஜகவுடன் திமுக மறைமுக கூட்டணி- அமைச்சர் நிர்மல் குமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-bjp-secret-alliance-to-escape-cases-says-minister-nirmal-kumar</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-bjp-secret-alliance-to-escape-cases-says-minister-nirmal-kumar#comments</comments><guid isPermaLink="false">703c5aed-0189-44d3-ba30-5c83a3e9f34d</guid><pubDate>Fri, 14 Aug 2026 05:20:22 +0000</pubDate><atom:updated>2026-08-14T05:20:22.862Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,DMK,திமுக,அமைச்சர் நிர்மல் குமார்,minister nirmal kumar</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/lusrdzel/Minister-Nirmal-Kumar.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Nirmal Kumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/lusrdzel/Minister-Nirmal-Kumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரச்சனை வரும்போதெல்லாம் திமுகவினர் கூச்சமே இல்லாமல் டெல்லியில் சென்று காலில் விழுவார்கள் என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.</p><p>அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-</p><p>வழக்குகளில் இருந்து வெளிவருவதற்காக பாஜகவுடன் நேரடியாக கூட்டணி வைக்க திமுக முயற்சி செய்தது.</p><p>சொத்துக்களை குடும்பத்தை காப்பதற்காக நேரடியாக கூட்டணி வைக்க திமுக முயன்றது.</p><p>தொகுதி மறுவரையறை குறித்த வாக்கெடுப்பின்போது, அதற்கு எதிராக வாக்களிப்பார்களா இல்லையா என திமுக இப்போதுவரைா சொல்லவில்லை.</p><p>அனைத்திற்கும் ஆதாரம் உள்ளதால், கொஞ்ச நாள் காலம் தள்ளிபோகலாம் ஆனால் வழக்குகளில் இருந்து தப்பிக்க முடியாது.</p><p>கட்சி நிதி எல்லாமே அரசுக்கான நிதியாக மாறியுள்ளதால் ரூ.15,000 கோடி வருவாய்.</p><p>தேநீர் விருந்துக்கு செல்லவில்லை என கனிமொழி கூறுவது நம்பும்படியாக இல்லை. தேநீர் விருந்து நடைபெறும் என கனிமொழிக்கு தெரியாமலா அங்கு சொன்றார்? சீட் மாற்றம் குறித்து அந்த நாளில் தான் பேசவேண்டுமா?</p><p>பிரச்சனை வரும்போதெல்லாம் திமுகவினர் கூச்சமே இல்லாமல் டெல்லியில் சென்று காலில் விழுவார்கள்.</p><p>கடந்த ஆட்சியில் அரசுடன் புிரந்துணர்வு ஒப்பந்தம் நடந்தாலும் அதற்கு பின் குடும்பத்தினருடன் ஒர ஒப்பந்தம்.</p><p>நாளை நடைபெற உள்ள தேநீர் விருந்தில் கலந்து கொள்வது குறித்த தற்போது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.</p><p>கோவையில் மாணவன் கொலை வழக்கில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் தான் கொல்லப்பட்டுள்ளார். கோவை மாணவர், கைது நடவடிக்கை தொடர்கிறது. தவறு எங்கு நடந்தாலும் அதற்கு யார் காரணமாக இருந்தாலும் தவெக ஆட்சியில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>தமிழகத்தில் எங்குமே சொத்து வரி உயர்த்தப்படவில்லை, சொத்து வரியை முறைப்படுத்தி உள்ளோம். திமுக ஆட்சியில் சென்னையில் பெரிய குடியிருப்புகளிலும் சொத்துவரி முறைப்படுத்தப்படாமல் முறைகேடு நடந்துள்ளது.</p><p>மதுரையில் சொத்த வரி முறைகேடு செய்யப்பட்டது. திமுக மேயர் கணவர் கைது செய்யப்பட்டார்.</p><p>தவெக அரசு யாருடன் பேசினாலும் வெளிப்படையாகதான் இருக்கும். மக்கள் நலனுக்காக மட்டுமே மத்திய அரசுடன் பேசுவோம்.</p><p>திருச்சி சிவா மத்திய அமைச்சர் ஆக உள்ளதாக கூறப்படுவதை திமுக தற்போது வரை மறுக்கவில்லை. </p><p>தன்னுடன் எத்தனை பேர் நிற்கிறார்கள் என காண்பிக்கவே எடப்பாடி பழனிசாமி போராட்டம் நடத்துகிறார். </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சுதந்திர தின விழா - கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் விஜய் நாளை தேசியக்கொடி ஏற்றுகிறார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/independence-day-cm-vijay-to-hoisting-national-flag-at-fort-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/independence-day-cm-vijay-to-hoisting-national-flag-at-fort-tomorrow#comments</comments><guid isPermaLink="false">8f0254f4-4302-4a1b-baa2-99c8945e5d4f</guid><pubDate>Fri, 14 Aug 2026 05:11:01 +0000</pubDate><atom:updated>2026-08-14T05:11:01.512Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,national flag,Independence Day,தேசியக்கொடி,சுதந்திர தினவிழா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/2e50uf9z/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ National flag - CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/2e50uf9z/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சுதந்திர தின விழாவையொட்டி தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் விஜய் நாளை தேசியக் கொடியேற்றி உரையாற்றுகிறார்.</strong></em></p> <h2>சுதந்திர தின விழா</h2><p>இந்தியாவின் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE">சுதந்திர தின விழா</a> நாளை (சனிக்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள சென்னை நீலாங்கரை வீட்டில் இருந்து நாளை காலை 8.20 மணிக்கு முதலமைச்சர் விஜய் புறப்படுவார்.</p><p>மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே வரும்போது அவரது காரின் முன்பும், பின்பும் சென்னை காவல்துறையினரின் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அவர் அழைத்து வரப்படுவார்.</p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>சென்னை கோட்டை கொத்தளத்தின் முன்பாக அணிவகுப்பு மரியாதை ஏற்கும் மேடை அருகே <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-vijay-urges-release-of-49-indian-fishermen-held-in-sri-lanka">முதலமைச்சர்</a> காலை 8.35 மணிக்கு வந்திறங்குவார். அங்கு அவரை தலைமைச் செயலாளர் சாய் குமார் வரவேற்பார்.</p><p>பின்னர் அங்கு தென்னிந்திய பகுதிகளின் ராணுவத் தலைமையக படைத்தலைவர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி, தாம்பரம் விமானப்படைத் தள அதிகாரி, கிழக்கு மண்டல கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் ஜெனரல், தமிழக டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம் ஒழுங்கு) ஆகியோரை மரபுப்படி முதலமைச்சருக்கு தலைமைச் செயலாளர் அறிமுகம் செய்து வைப்பார்.</p> <h2>அணிவகுப்பு மரியாதை</h2><p>பின்னர் அணிவகுப்பு மரியாதையை ஏற்கும் மேடைக்கு முதலமைச்சரை தலை மைச் செயலாளர் அழைத்து வருவார். அங்கிருந்தபடி போலீசாரின் அணிவகுப்பு மரி யாதையை முதலமைச்சர் ஏற்பார். அதைத்தொடர்ந்து முதலமைச்சர் விஜய், திறந்த ஜீப்பில் ஏறிச்சென்று போலீஸ் அணிவகுப்பை பார்வையிடுவார்.</p><p>இந்த அணிவகுப்பில் சிறப்பு காவல் படைகள், கேரள சிறப்பு காவல்படை, காவல் பெண் கமாண்டோக்கள், சென்னை பெண்கள் காவல் பிரிவு, கடலோர பாதுகாப்பு குழுமம், நீலகிரி படைப்பிரிவு, குதிரைப்படை போலீசார் பங்கேற்பார்கள்.</p><h2>தேசியக்கொடி ஏற்றுகிறார்</h2><p>பின்னர் கோட்டை கொத்தளத்துக்கு முதலமைச்சர் விஜய் செல்வார். காலை 8.45 மணிக்கு அங்கிருக்கும் கொடி கம்பத்தில் மூவர்ண தேசியக் கொடியை முதல்முறையாக அவர் ஏற்றி வைக்கிறார். அப்போது மூவர்ணத்தில் பலூன்கள் பறக்கவிடப்படும். தேசியக் கொடி ஏற்றப்படும்போது போலீஸ் பேண்டு வாத்தியக் குழுவினர் தேசிய கீதத்தை இசைப்பார்கள்.</p> <p>அதைத்தொடர்ந்து சுதந்திர தின உரையை முதலமைச்சர் விஜய் அங்கிருந்தபடி நிகழ்த்துவார். அப்போது சில புதிய அறிவிப்புகளை அவர் வெளியிடுவார். சுதந்திர போராட்ட தியாகிகள், அவர்களின் வாரிசுகளுக்கான மாதாந்திர ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் ஆகியவற்றை உயர்த்தி அறிவிப்பு வெளியிடுவார்.</p><h2>விருதுகள்</h2><p>அதன் பின்னர் தகைசால் தமிழர் விருது, டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பெயரிலான விருது, துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின் நல் ஆளுமை விருது போன்ற பல விருதுகள் வழங்கப்படும். அவற்றை உரியவர்களுக்கு கோட்டை கொத்தளத்தில் வைத்து முதலமைச்சர் விஜய் வழங்குவார்.</p><p>மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றியோர். அவர்களுக்கு அதிக வேலை வாய்ப்பை வழங்கிய நிறுவனங்கள், மருத்துவர் ஆகியோருக்கான விருதுகளையும் முதலமைச்சர் வழங்குவார். அதைத் தொடர்ந்து சமூகப் பணியாளர்கள் விருது, சிறந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான விருதுகளும் வழங்கப்படும்.</p> <h2>தகைசால் தமிழர்</h2><p>தகைசால் தமிழர் விருதுக்கான பரிசுத் தொகை ரூ. 10 லட்சமாகும். பின்னர் விருது பெற்றவர்களுடன் முதலமைச்சர் விஜய் குழுப் புகைப்படம் எடுத்துக் கொள்வார். அதைத் தொடர்ந்து கோட்டை கொத்தளத்திற்கு அருகே மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு முதலமைச்சர் இனிப்புகளை வழங்குவார்.</p> <h2>சுதந்திர தின விழா</h2><p>சென்னை கோட்டையில் நடக்கும் சுதந்திர தின விழாவை காண மூத்த குடிமக்கள், பொதுமக்கள், மாணவர்கள், பள்ளிக் குழந்தைகள் என பல தரப்பினரும் கோட்டைக்கு வருவார்கள். அவர்களுக்காக அங்குள்ள சாலையின் ஓரத்தில் தடுப்புகள் போடப்பட்டுள்ளன. காலை 9.30 மணியளவில் விழா நிறைவு பெறும். பின்னர் அங்கிருக்கும் பொதுமக்களுக்கு முதலமைச்சர் விஜய், சுதந்திர தின வாழ்த்துகளை கையசைத்து தெரிவித்தபடி காரில் புறப்பட்டுச் செல்வார்.</p> <p>இந்த விழாவுக்கு அழைக்கப்பட்டவர்கள் அமர்வதற்காக கோட்டை கொத்தளத்துக்கு எதிரே அலங்கரிக்கப்பட்ட தனித்தனியான பந்தல்களில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. சபாநாயகர், அமைச்சர்கள், நீதிபதிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சிறப்பு அழைப்பாளர்கள், தியாகிகளின் குடும்பத்தினர். அரசு உயர் அதிகாரிகள் இந்த விழாவில் பங்கேற்பார்கள்.</p> <h2>உளவுத்துறை எச்சரிக்கை</h2><p>இதற்காக கோட்டையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இப்பகுதி இன்று (வெள்ளிக்கிழமை) இரவு முதல் 5 அடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்படுகிறது. அங்கு பாதுகாப்பு மற்றும் அணிவகுப்பு ஒத்திகையும் நேற்று நடைபெற்றது.</p><p>சுதந்திரதின விழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தும்படி மத்திய உளவுத்துறை அனைத்து மாநிலங்களுக்கும் எச்சரிக்கை செய்தி அனுப்பி உள்ளது.</p> <h2>ஒரு லட்சம் போலீசார்</h2><p>அதையொட்டி தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item></channel></rss>