<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 28 Jul 2026 04:17:41 +0000</lastBuildDate><item><title>மீண்டும் போராடுவோம் என எச்சரித்த CJP.. பீகார், அசாம், ராஜஸ்தானில் போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்! </title><link>https://www.maalaimalar.com/news/national/neet-protest-cases-withdrawn-assam-bihar-and-rajasthan-grant-amnesty-to-demonstrators</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-protest-cases-withdrawn-assam-bihar-and-rajasthan-grant-amnesty-to-demonstrators#comments</comments><guid isPermaLink="false">63342384-47df-4c51-8348-953a93f15516</guid><pubDate>Tue, 28 Jul 2026 04:17:35 +0000</pubDate><atom:updated>2026-07-28T04:17:35.704Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணவர்கள் போராட்டம்,student protest,வழக்கு,Case,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/uj30euq1/tn-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ CJP]]></media:title><media:description type="html"><![CDATA[ CJP]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/uj30euq1/tn-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்றவர்கள் மீதான வழக்குகளை பெறப்போவதாக அசாம் அரசு அறிவித்துள்ளது.</p><h2>அசாம் </h2><p>அசாம் அரசின் உள்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின் படி, </p><p>ஜூலை 26 மாலை 6 மணிக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட 5 வழக்குகள் மற்றும் கைது செய்யப்பட்ட 13 பேர் மீதான சட்ட நடவடிக்கைகள் திரும்பப் பெறப்படும். </p><p>இந்த விவகாரம் தொடர்பான எந்தவொரு எதிர்கால சட்ட நடவடிக்கையும் இல்லாமல் வழக்குகள் முடித்து வைக்கப்படும்.</p><p>கைது செய்யப்பட்டவர்களை விரைவாக விடுதலை செய்யும் பணிகளும், வழக்குகளைத் திரும்பப் பெறும் சட்ட நடைமுறைகளும் உடனடியாகத் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> <h2>பீகார் - ராஜஸ்தான்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/national/bihar-govt-to-withdraw-cases-lodged-against-protesters-over-neet-paper-leak">பீகாரில் </a>ஜூலை 25 அன்று நடந்த போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 694 பேர் உட்பட அனைவர் மீதான வழக்குகளையும் ரத்து செய்து பீகார் அரசு ஏற்கனவே முழுமையான பொதுமன்னிப்பு அறிவித்திருந்தது.</p><p>ராஜஸ்தானிலும் போராட்டக்காரர்களுக்கு எதிராக எந்தவொரு எப்ஐஆரும்பதிவு செய்யப்படாது என்றும், போராட்டக்காரர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளதாக சிஜேபி தலைமை செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் தெரிவித்துள்ளார்.</p> <h2>சௌரவ் தாஸ்</h2><p>அரசுப் பிரதிநிதிகளுடனான சந்திப்பிற்குப் பிறகு சௌரவ் தாஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,</p><p>"மத்திய அரசு மற்றும் பிற என்டிஏ ஆளும் மாநிலங்கள் சார்பிலும் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்வது மற்றும் வழக்குகளைத் திரும்பப் பெறுவது குறித்த உத்தரவுகள் விரைவில் வெளியிடப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு இளைஞரையும் தனித்து விடமாட்டோம்."</p><p>முன்னதாக, தர்மேந்திர பிரதான் மத்திய கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஜூலை 25 அன்று போராட்டங்கள் முடிவுக்கு வந்தன.</p><h2>சிஜேபி நிபந்தனை</h2><p>சிஜேபி மற்றும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் ஆகியோருடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில், வழக்குகளைத் திரும்பப் பெறவும், வினாத்தாள் கசிவு எதிர்ப்புச் சட்டத்தைக் கொண்டுவரவும் மத்திய அரசு ஒப்புக்கொண்டது.</p><p>போராடிய மாணவர்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெறுவது உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் மீண்டும் போராட்டத்தை தொடங்குவோம் என சிஜேபி எச்சரித்திருந்த நிலையில் பீகார், அசாம், ராஜஸ்தான் அரசின் முடிவுகள் வந்துள்ளன.</p> ]]></content:encoded></item><item><title>மதம் மாறிய மறு கணமே பட்டியலின அந்தஸ்து முடிவுக்கு வந்துவிடும் - உச்சநீதிமன்றம் </title><link>https://www.maalaimalar.com/news/national/sc-status-cancelled-on-conversion-supreme-court-upholds-ap-hc-ruling-on-reservation-and-certificates</link><comments>https://www.maalaimalar.com/news/national/sc-status-cancelled-on-conversion-supreme-court-upholds-ap-hc-ruling-on-reservation-and-certificates#comments</comments><guid isPermaLink="false">00e3847c-73f6-40b6-bf30-ee48c4248a1f</guid><pubDate>Tue, 28 Jul 2026 04:00:38 +0000</pubDate><atom:updated>2026-07-28T04:00:38.401Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,மதமாற்றம்,Religious Conversion,உச்சநீதிமன்றம்,பட்டியலின அந்தஸ்து,Scheduled Caste status</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/rn4p3zwe/tn-5.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ உச்சநீதிமன்றம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ உச்சநீதிமன்றம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/rn4p3zwe/tn-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பட்டியலின  வகுப்பைச் சேர்ந்த ஒருவர் வேறு மதத்திற்கு மாறினால், அவரின் பட்டியலின  (SC) அந்தஸ்து உடனடியாக ரத்து செய்யப்படும் என்று <a href="https://www.maalaimalar.com/topic/supreme-court">உச்ச நீதிமன்றம்</a> தெரிவித்துள்ளது.</p><p>இந்து, சீக்கியம் மற்றும் பௌத்த மதங்களை தவிர்த்து, கிறித்தவம் அல்லது பிற மதங்களைத் தழுவிய நபர்களுக்கு எஸ்சி இடஒதுக்கீடு மற்றும் சான்றிதழ்கள் செல்லாது என்று ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் முன்பு அளித்த தீர்ப்பை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை விசாரித்தபோது உச்ச நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்தது. </p>  <h2>விசாரணை</h2><p>நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு தனது விசாரணையில்,</p><p>பட்டியலின வகுப்பினர் குறித்த 1950ஆம் ஆண்டின் அரசியலமைப்புஉத்தரவின்படி, இந்து, சீக்கியர் மற்றும் பௌத்த மதங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே எஸ்சி அந்தஸ்திற்குத் தகுதியானவர்கள் என்று தெரிவித்தது.</p><p>பட்டியலின வகுப்பை சேர்ந்த ஒரு நபர் மதம் மாறிய மறு கணமே, அவரின் எஸ்சி அந்தஸ்தும் அதன் அடிப்படையிலான சலுகைகளும் முடிவுக்கு வந்துவிடும். உயர் நீதிமன்றத்தின் உத்தரவில் எந்தத் தவறும் இல்லை.</p> <h2>3 நிபந்தனைகள்</h2><p>மதம் மாறிய ஒருவர் மீண்டும் தனது பழைய எஸ்சி அந்தஸ்தைப் பெற வேண்டுமென்றால், பிறப்பால் அவர் எஸ்சி சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். </p><p>சுயவிருப்பத்தின் பேரில் மீண்டும் தனது சொந்த மதத்திற்கு (இந்து, சீக்கியம் அல்லது பௌத்தம்) திரும்ப வேண்டும். அவரது மூல சாதி சமூகம் அவரை மீண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.</p><p>அரசியலமைப்பு நிர்ணயித்துள்ள இந்த 3 முக்கிய நிபந்தனைகளுக்கு உட்பட்டால் மட்டுமே அவருக்கு மீண்டும் எஸ்சி அந்தஸ்து கிடைக்கும்" என தெரிவித்த அமர்வு, மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது.</p>]]></content:encoded></item><item><title>இந்த வார விசேஷங்கள்:  28-7-2026 முதல் 3-8-2026 வரை
</title><link>https://www.maalaimalar.com/spirituality/this-week-specials-28-7-2026-to-3-8-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/this-week-specials-28-7-2026-to-3-8-2026#comments</comments><guid isPermaLink="false">c6689fcf-939e-49d4-84e5-fe53a523a624</guid><pubDate>Tue, 28 Jul 2026 03:49:30 +0000</pubDate><atom:updated>2026-07-28T03:49:30.005Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,வழிபாடு,Astrology,this week special,இந்த வார விசேஷங்கள்,worship</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/uq97f43q/amman2.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Amman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/uq97f43q/amman2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>28-ந் தேதி (செவ்வாய்)</h2><p>* சங்கரன்கோவில் கோமதியம்மன் ஆடித்தபசு உற்சவம்.</p><p>* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி.</p><p>* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் வெண்ணெய்த்தாழி சேவை.</p><p>* வடமதுரை சவுந்திர ராஜப்பெருமாள் குதிரை வாகனத்தில் பவனி.</p><p>* கீழ்நோக்கு நாள்.</p>  <h2>29-ந் தேதி (புதன்)</h2><p>* பவுர்ணமி.</p><p>* திருமாலிருஞ்சோலை கள்ளழகர், வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் தலங்களில் ரத உற்சவம்.</p><p>* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் காமதேனு வாகனத்தில் பவனி.</p> <h2>30-ந் தேதி (வியாழன்)</h2><p>* சிரவண விரதம்.</p><p>* சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி.</p><p>* உப்பிலியப்பன் சீனிவாசப் பெருமாள், திருவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் புறப்பாடு.</p><p>* மேல்நோக்கு நாள்.</p> <h2>31-ந் தேதி (வெள்ளி)</h2><p>* வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் வசந்த உற்சவம்.</p><p>* படைவீடு ரேணுகாம்பாள் புறப்பாடு.</p><p>* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.</p><p>* திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு.</p><p>* மேல்நோக்கு நாள்.</p> <h2>1-ந் தேதி (சனி)</h2><p>* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் மின்விளக்கு அலங்கார புஷ்பக விமானத்தில் பவனி.</p><p>* திருவரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், மதுரை கூடலழகர் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.</p><p>* வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் கருட வாகனத்தில் பவனி.</p><p>* மேல்நோக்கு நாள்.</p> <h2>2-ந் தேதி (ஞாயிறு)</h2><p>* சங்கடகர சதுர்த்தி.</p><p>* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் நூதன மின்விளக்கு அலங்கார விருட்சப வாகனத்தில் பவனி.</p><p>* வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் விடையாற்று உற்சவம்.</p><p>* கீழ்நோக்கு நாள்.</p> <h2>3-ந் தேதி (திங்கள்)</h2><p>* ஆடிப் பெருக்கு.</p><p>* திருப்பதி ஏழுமலையான் மைசூரு மண்டபம் எழுந்தருளல்.</p><p>* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.</p><p>* மேல்நோக்கு நாள்.</p> ]]></content:encoded></item><item><title>மனுக்களுடன் மட்டுமே வாருங்கள்; பணத்துடன் வந்தால் அனுமதி இல்லை- தாலுகா அலுவலகத்தில் ஒட்டப்பட்ட நோட்டீஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/come-only-with-petitions-entry-is-not-permitted-if-you-bring-money</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/come-only-with-petitions-entry-is-not-permitted-if-you-bring-money#comments</comments><guid isPermaLink="false">759c7085-57f0-4762-b6cc-7e8540acf0b5</guid><pubDate>Tue, 28 Jul 2026 03:44:37 +0000</pubDate><atom:updated>2026-07-28T03:44:37.710Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>லஞ்சம்,bribery,petitions,taluk office,தாலுகா அலுவலகம்,மனுக்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/jg6w6sra/manamadurai.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தாலுகா அலுவலகத்தில் ஒட்டப்பட்ட நோட்டீசை படத்தில் காணலாம்.]]></media:title><media:description type="html"><![CDATA[ தாலுகா அலுவலகத்தில் ஒட்டப்பட்ட நோட்டீசை படத்தில் காணலாம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/jg6w6sra/manamadurai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>மனுக்களுடன் மட்டுமே வாருங்கள்: பணத்துடன் வந்தால் அனுமதி இல்லை என மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் ஓட்டிய நோட்டீசால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.</aside><h2><strong>தாலுகா அலுவலகம்</strong></h2><p>சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் அறிவித்ததாக கூறி நோட்டீஸ் ஒன்று ஒட்டப்பட்டது. அதில் "தாலுகா அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களுடன் மட்டுமே வரவேண்டும். பணம் வைத்திருப்பவர்களுக்கு உள்ளே அனுமதி இல்லை" என்று கூறப்பட்டிருந்தது.</p><p>பொதுவாக அரசு அலுவலகங்களில் பட்டாமாறுதல், சான்றிதழ்கள் பெறுதல், நிலஅளவை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வரும் பொதுமக்களிடம் சிலர் லஞ்சம் எதிர்பார்ப்பதாகவும், இடைத்தரகர்களின் நடமாட்டம் அதிகம் இருப்பதாகவும் தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இதனை தடுக்கும் விதமாகவும், அரசு பணிகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்ய இந்த வினோத கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.</p><h2><strong>வலைதளங்களில் வைரல்</strong></h2><p>தாலுகா அலுவலகத்துக்கு வருபவர்கள் பணத்துடன் வருவதை தவிர்த்து, கோரிக்கை மனுக்களை மட்டுமே கொண்டுவர வேண்டும் என்று அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. மானாமதுரை தாசில்தாரின் இந்த அறிவிப்பு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. லஞ்சத்திற்கு எதிராக தாசில்தார் எடுத்துள்ள இந்த துணிச்சலான நடவடிக்கை பாராட்டுக்குரியது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.</p><p>சாமானிய மக்களுக்கு அரசு நிர்வாகத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகள் ஒருபுறம் நடந்து வந்தாலும், தாலுகா அலுவலகத்தில் இப்படி ஒரு விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>10,000mAh பேட்டரியுடன் புது ஒப்போ ஸ்மார்ட்போன் - அசத்தல் டீசர் வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/oppo-a7-pro-max-officially-teased-with-massive-10000mah-battery</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/oppo-a7-pro-max-officially-teased-with-massive-10000mah-battery#comments</comments><guid isPermaLink="false">8caca3ff-46da-403b-b68e-991c14fdfaa8</guid><pubDate>Tue, 28 Jul 2026 03:34:00 +0000</pubDate><atom:updated>2026-07-28T03:34:00.000Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>OPPO,ஒப்போ,smartphone,ஸ்மார்ட்போன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/f6405ars/Oppo-A7-Pro-Max.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Oppo A7 Pro Max]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/f6405ars/Oppo-A7-Pro-Max.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சீனாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாகவே <a href="https://www.maalaimalar.com/topic/oppo">ஒப்போ</a> A7 ப்ரோ மேக்ஸ் மாடலை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளது; மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 10,000mAh பேட்டரி இடம்பெறும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. </p><p>இந்நிறுவனம் ஸ்மார்ட்போனின் முதல் அதிகாரப்பூர்வ படத்தையும் பகிர்ந்துள்ளது, இதன் மூலம் அதன் பின்புற வடிவமைப்பை காண முடிகிறது. அறிமுக தேதி அல்லது விரிவான அம்சங்களை ஒப்போ இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும், முந்தைய தகவல்கள் மற்றும் கசிவுகளின் படி இந்த <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மார்ட்போன்</a> ஸ்னாப்டிராகன் 4 ஜென் 5 சிப்செட், 120Hz OLED டிஸ்ப்ளே, 80 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் இரட்டை பின்புற கேமராக்களுடன் வரக்கூடும் என்று தெரிவித்தன.</p><h2>10,000mAh பேட்டரி:</h2><p>ஒப்போ நிறுவனம் வெய்போ தளத்தில் ஒப்போ A7 ப்ரோ மேக்ஸ் மாடலுக்கான முதல் டீசரை பகிர்ந்துள்ளது, இதன் மூலம் அறிமுகத்திற்கு முன்பே இதில் 10,000mAh பேட்டரி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டீசர் படத்துடன் உள்ள குறிப்பில், ஒப்போ A7 ப்ரோ மேக்ஸ் மாடலில் 10,000mAh வழக்கமான திறன் மற்றும் 9,700mAh மதிப்பிடப்பட்ட திறன் கொண்ட சிங்கிள்-செல் பேட்டரியைப் பயன்படுத்துவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>டீசரின் படி, ஒப்போ A7 ப்ரோ மேக்ஸ் வெளிர் நீல நிறத்திலும், சற்று உயர்த்தப்பட்ட செவ்வக வடிவ கேமரா மாட்யூல் கொண்டிருக்கிறது. கேமரா மாட்யூலின் இடது பக்கத்தில் செங்குத்தாக இரண்டு பெரிய கேமரா வளையங்களும், அவற்றின் அருகே இரண்டு சிறிய வட்ட வடிவ அமைப்புகளும் உள்ளன.</p><h2>முன்பதிவு:</h2><p>வலதுபுறத்தில் "Power Flash" என்ற குறியீட்டுடன் கூடிய LED பிளாஷ் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது. தொலைபேசியின் வலதுபுற ஓரத்தில் பவர் பட்டன் மற்றும் வால்யூம் பட்டன்கள் உள்ளன.</p><p>ஒப்போ நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் அறிமுக தேதியை இன்னும் அறிவிக்கவில்லை; இருப்பினும், சீனாவில் ஒப்போ A7 ப்ரோ மேக்ஸ் மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.</p><h2>லீக் ஆன அம்சங்கள்:</h2><p>முந்தைய தகவல்களின்படி, ஒப்போ A7 ப்ரோ மேக்ஸ் மாமடலில் 1.5K ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட் மற்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட 6.78 இன்ச் ஃபிளாட் OLED டிஸ்ப்ளே கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16-ஐ சார்ந்த கலர்ஓ.எஸ். 16 உடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>ஒப்போ A7 ப்ரோ மேகஸ் சமீபத்தில் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 5 சிப்செட் விவரங்களுடன் Geekbench தளத்தில் காணப்பட்டது. பெஞ்ச்மார்க் தளத்தில் 12 ஜிபி ரேம் கொண்ட ஒரு வகையைக் குறிப்பிடுகிறது; அதேவேளையில், இந்தத் தொலைபேசி அதிகபட்சமாக 12GB ரேம் மற்றும் 512GB சேமிப்புத் திறனுடன் கிடைக்கக்கூடும் என்று முந்தைய தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content:encoded></item><item><title>ஆனந்த வாழ்வளிக்கும் ஆடித்தபசு </title><link>https://www.maalaimalar.com/spirituality/aadi-thabasu</link><comments>https://www.maalaimalar.com/spirituality/aadi-thabasu#comments</comments><guid isPermaLink="false">d099c040-ccae-4375-ae95-f077ab81d31e</guid><pubDate>Tue, 28 Jul 2026 03:19:58 +0000</pubDate><atom:updated>2026-07-28T03:19:58.583Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,வழிபாடு,worship,Aadi Thabasu,ஆடித்தபசு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/yddj9e4u/sivan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிவன் - பெருமாள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/yddj9e4u/sivan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>ஆடித்தபசு</h2><p>ஆடி மாதம் என்பது அம்மன்  மாதமாகவே கருதப்படுகிறது. காரணம், அம்பிகையை வழிபடுவதற்கு மிகவும் உகந்த மாதம் ஆடி மாதமாகும். இந்த மாதத்தில் முக்கியமான பல விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அந்த வகையில், மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் உன்னத விழாதான், ஆடித் தபசு. இது, அம்பிகையை வழிபடுவதற்கு உரிய நாள் மட்டுமின்றி, சைவ-வைணவ ஒற்றுமையை உணர்த்தும் நாளாகவும் உள்ளது.</p>  <h2>சங்கன், பதுமன் வாக்குவாதம்</h2><p>முன்னொரு காலத்தில் சங்கன், பதுமன் என்ற இரண்டு நாக அரசர்கள் வாழ்ந்து வந்தனர். அதில் சங்கன் என்பவர் சிவ பெருமான் மீது அளவு கடந்த பக்தி கொண்டவர். பதுமன், மகாவிஷ்ணுவின் மீது அதிக பக்தி கொண்டவர். ஒரு சமயம் இருவருக்கும் 'சிவன் பெரியவரா அல்லது மகாவிஷ்ணு பெரியவரா' என்ற வாதம் எழுந்தது. இருவரும் மாறிமாறி 'நான் வணங்கும் இறைவன்தான் மேலானவர்' என்று வாக்குவாதம் செய்தனர்.</p><h2>சிவன் - விஷ்ணு</h2><p>இறுதியில், இதற்கு சரியான பதில் வேண்டி இருவரும் பார்வதி தேவியிடம் முறையிட்டனர். பார்வதி தேவி, சிவன் - விஷ்ணு இருவரும் ஒன்றுதான் என்றார். ஆனால், நாக அரசர்கள் இருவரும் அதை ஏற்க மறுத்தனர். இதையடுத்து பார்வதி தேவி, “உரிய காலம் வரும்போது அறிந்து கொள்வீர்கள்” என்று கூறிவிட்டு சென்றார்.</p> <h2>பார்வதி தேவி தவம்</h2><p>பின்னர், நடந்தவற்றை சிவபெருமானிடம் கூறிய பார்வதி தேவி, “நாக அரசர்கள் மட்டுமின்றி உலக உயிர்கள் அனைத்திற்கும் சிவனும், அரியும் ஒன்றுதான் என்பதை உணர்த்த வேண்டும்" என கேட்டுக் கொண்டார். அதற்கு சிவபெருமான், “அது அவ்வளவு எளிதானதல்ல. இதற்காக கடுமையான தவம் இருக்க வேண்டும்” என்றார். உலக நன்மைக்காக, தான் தவம் இருப்பதாக பார்வதி தேவி கூறினார். </p><p>சிவபெருமான், “பொதிகை மலை பகுதியில் புன்னை மரங்கள் நிறைந்த வனத்தில் முனிவர்கள் பலர் என்னை நோக்கி தவம் இயற்றி கொண்டிருப்பார்கள். அவர்களுடன் நீயும் தவம் இயற்று. உரிய காலத்தில் நாங்கள் உனக்கு காட்சி அளிப்போம்" என்றார்.</p> <p>அதன்படி, அன்னை தவக்கோலத்தில் பூலோகம் புறப்பட்டார். அப்போது தேவலோக பெண்கள் அனைவரும் பசு வடிவில் அன்னையுடன் புன்னை மர வனத்திற்கு வந்தனர். பார்வதி தேவி, ஊசி முனையின் மீது ஒற்றைக் காலில் நின்று கடும் தவம் புரிந்தார்.</p><h2>சங்கர நாராயணராக காட்சி</h2><p>பார்வதியின் தவத்தில் மகிழ்ந்து சிவனும், மகாவிஷ்ணுவும் ஒரே ரூபமாக காட்சி தந்தனர். சிவன் ஒரு பாதியாகவும், மகாவிஷ்ணு மறு பாதியாகவும் தோன்றினர். இவ்வாறு அரியும், சிவனும் ஒன்றாக இணைந்து சங்கர நாராயணராக (சங்கரன் - சிவன், நாராயணன் - மகாவிஷ்ணு) காட்சி தந்த நன்னாள்தான் 'ஆடித் தபசு' திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.</p> <h2>கோமதி அம்மன்</h2><p>'கோ' அல்லது 'ஆ' என்றால் பசு என்றும், 'மதி' என்றால் 'நிலா' என்றும் பொருள். பசுக் கூட்டத்துடன், மதி போன்ற அழகான முகத்துடன் தவம் இயற்றியதால் அன்னை 'கோமதி அம்மன்' என்றும், 'ஆவுடை நாயகி' என்றும் அழைக்கப்படுகிறார். அன்னை தவம் இயற்றிய இடம் தான், தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் தலம்.</p> <h2>சங்கரன்கோவில் திருத்தலம்</h2><p>ஆடித் தபசு உருவாக காரணமாக இருந்த தலம் என்பதால் சங்கரன்கோவில் திருத்தலத்தில் ஆண்டுதோறும் ஆடித் தபசு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டு செல்வார்கள். </p><p>சங்கரன்கோவில் சிவ தலமாக இருந்தாலும், இங்கு கோமதியம்மனே பிரதானம். ஆடித் தபசு அன்று, தவக்கோலத்தில் இருக்கும் கோமதியம்மனையும், சங்கரநாராயணரையும் தரிசித்தால் அனைத்துவிதமான நலன்களும் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.</p>  <p>ஆடித் தபசு திருநாளான இன்றைய தினம் சங்கரன்கோவில் சென்று வழிபடுவது மிகவும் விசேஷம். முடியாதவர்கள் அருகில் உள்ள அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபடலாம். இன்றைய தினம் அம்பிகையை வழிபட்டால் விரைவில் திருமண பாக்கியம் கைகூடும், வேண்டிய வரங்கள் கிடைக்கும், கணவன் - மனைவி ஒற்றுமை பலப்படும், மங்கலகரமான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.</p>]]></content:encoded></item><item><title>வைப்பு நிதியில் இருந்து யு.பி.ஐ. மூலம் பணம் எடுக்கும் வசதி- அடுத்த மாதம் அறிமுகப்படுத்த திட்டம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/upi-linked-pf-claim-roll-out-now-in-august</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/upi-linked-pf-claim-roll-out-now-in-august#comments</comments><guid isPermaLink="false">8d6a229e-c132-444e-b854-6ab8084e9a65</guid><pubDate>Tue, 28 Jul 2026 03:19:30 +0000</pubDate><atom:updated>2026-07-28T03:19:30.606Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>UPI,யுபிஐ,EPFO,வருங்கால வைப்பு நிதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/re530xwl/UPI.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/re530xwl/UPI.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதமான வைப்பு நிதியில் இருந்து யு.பி.ஐ. மூலம் பணம் எடுக்கும் வசதி அடுத்த மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.</aside><h2><strong>கோளாறு</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF">தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி</a> நிறுவனம் (இ.பி.எப்.ஓ.) தனது சேவைகளில் யு.பி.ஐ. மூலம் பணத்தை எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை (சைட்ஸ் 2.01) நடைமுறைப்படுத்தியது. இந்த தளத்தை அறிமுகப்படுத்திய பிறகு, அதில் பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டுள்தாக உறுப்பினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.</p><p>குறிப்பாக, பழைய வைப்பு நிதி கணக்குகளில் இருந்த தரவுகள் புதிய தளத்தில் விடுபட்டுள்ளதாக உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், இணையதளத்தில் உள்ளே நுழைவதில் சிக்கல், வருங்கால் வைப்பு நிதி இணையதளம் மெதுவாக இயங்குகிறது. கோரிக்கைகளை பரிசீலிப்பதில் தாமதம் போன்ற புகார்களும் எழுந்துள்ளன.</p><h2><strong>குற்றச்சாட்டு</strong></h2><p>வழக்கமாக விண்ணப்பித்த 3 நாட்களில் (குறைந்தபட்சம்) <a href="https://www.maalaimalar.com/news/national/labour-ministry-makes-epf-contributions-beyond-rs-1800-voluntary">சந்தாதாரர்களுக்கு</a> பணம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுவிடும். இது அவர்களுடைய அவசர தேவையை பூர்த்தி செய்ய உதவிக்கரமாக இருந்தது. ஆனால் சமீப நாட்களில் விண்ணப்பித்து 1% மாதம் ஆகியும் சந்தாதாரர்களுக்கு பணம் செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. இந்தநிலையில், தொழில்நுட்ப சிக்கல்களை சரிசெய்யும் பணியில் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.</p><p>அனைத்து முக்கிய தொழில்நுட்ப கோளாறுகளும் முன்னுரிமை அடிப்படையில் சரிசெய்யப்பட்டு வருகின்றன. அதன் பின்னரே தற்போதைய நிலைமை சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் வாரத்திற்குள் வருங்கால வைப்பு நிதியில் இருந்து யு.பி.ஐ. மூலம் பணம் எடுக்கும் வசதி நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் இந்த திட்டத்தை அமல்படுத்த திட்டமிடப்பட்டு இருந்தது.</p><h2><strong>நோக்கம்</strong></h2><p>வருங்கால வைப்பு நிதியில் இருந்து யு.பி.ஐ. மூலம் பணம் எடுக்கும் வசதி 'பீம்' செயலி மூலம் இணைக்கப்பட உள்ளது. இதன்மூலம் வைப்பு நிதி சந்தாதாரர்கள் தங்கள் கணக்குகளை, வங்கி கணக்குகளுடன் இணைத்து, தகுதியான கோரிக்கைகளுக்கான பணத்தை உடனடியாக பெறமுடியும். பாரத ஸ்டேட் வங்கி மற்றும் இந்திய தேசிய பண பரிவர்த்தனை கழகத்துடன் இணைந்து இதற்கான ஏ.பி.ஐ. கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. டிஜிட்டல் சேவைகளை நவீனப்படுத்தி, சந்தாதாரர்களின் கோரிக்கைகளை விரைவாக தீர்ப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>6 மாதத்தில் 1,000-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள்.. மேற்கு கரையில்  இஸ்ரேலிய குடியேறிகளின் வன்முறை அதிகரிப்பு - ஐநா</title><link>https://www.maalaimalar.com/news/world/over-1000-attacks-in-6-months-surge-in-violence-by-israeli-settlers-in-the-west-bank-un</link><comments>https://www.maalaimalar.com/news/world/over-1000-attacks-in-6-months-surge-in-violence-by-israeli-settlers-in-the-west-bank-un#comments</comments><guid isPermaLink="false">0e56ca17-a819-41e9-a099-8fe08cae9691</guid><pubDate>Tue, 28 Jul 2026 02:51:03 +0000</pubDate><atom:updated>2026-07-28T02:51:03.589Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>palestine,காசா,இஸ்ரேல்,gaza,Israel,மேற்கு கரை,West Bank,பாலஸ்தீனம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/udpdsoaz/tn-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[  மேற்கு கரை]]></media:title><media:description type="html"><![CDATA[  மேற்கு கரை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/udpdsoaz/tn-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேற்கு கரை</h2><p>பாலஸ்தீனத்தின் <a href="https://www.maalaimalar.com/news/world/west-bank-violence-israeli-settlers-torch-mosques-kill-palestinians">மேற்கு கரையில் </a>கடந்த ஜூலை 24ஆம் தேதி நப்லஸ் நகருக்கு அருகே பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலிய குடியேறிகள் மற்றும் ராணுவத்தினர் இணைந்து தாக்குதல் நடத்தினர்.</p><p>கிராம மக்கள் எதிர்த்துப் போராடியபோது குடியேற்றவாசிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாலஸ்தீனர்கள் திருப்பித் தாக்கிய நிலையில், இஸ்ரேலிய ராணுவம் நுழைந்து நடத்திய தாக்குதலில் 4 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். 4 பேர் காயமடைந்தனர். மோதலில் 2 இஸ்ரேல் வீரர்களும் கொல்லப்பட்டனர். </p><p>இந்த சம்பவத்திற்கு பழிவாங்க, நேற்றுமுன் தினம் அதிகாலைஇஸ்ரேலியர்கள் ஆயுதங்களுடன் பாலஸ்தீன கிராமங்களுக்குள் புகுந்தனர்.</p><p>அங்கு வெறித்தனமாக தாக்குதல் நடத்திய அவர்கள், குஸ்ரா மற்றும் கூர் ஆகிய கிராமங்களில் உள்ள 2 மசூதிகளுக்கு தீ வைத்தனர். அங்கிருந்த பாலஸ்தீனியர்களின் கார்கள் மற்றும் விவசாய நிலங்களையும் தீயிட்டுக் கொளுத்தினர்.</p><p>சுவர்களில் ஹீப்ரு மொழியில் "பழிவாங்குதல்" என்று எழுதி வைத்துவிட்டு தப்பியோடினர்.</p> <h2>ஐநா</h2><p>இந்நிலையில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைப் பகுதியில் பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேலிய குடியேறிகள் நடத்தும் வன்முறை தாக்குதல்கள் பெருமளவில் அதிகரித்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.</p><p>முந்தைய ஆண்டுகளை விட நடப்பாண்டில் வன்முறை தாக்குதல்கள் பெருமளவில் அதிகரித்துள்ளதற்கான தரவுகளை ஐநாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் (OCHA) வெளியிட்டுள்ளது.</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/uoxq5rfe/tn-4.jpg" /></figure><h2>தரவுகள்</h2><p>2026 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில், இஸ்ரேலிய குடியேறிகள் 1,000க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதனால் உயிரிழப்புகளும், உடைமைகளுக்குக் கடுமையான சேதங்களும் ஏற்பட்டுள்ளன.</p><p>இந்த வன்முறைகளால் மேற்குக் கரை முழுவதும் உள்ள 230க்கும் மேற்பட்ட பாலஸ்தீன சமூகங்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p>குடியேறிகளின் வன்முறை மற்றும் அச்சுறுத்தல்கள் காரணமாக நடப்பாண்டில் மட்டும் 2,200க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி இடம்பெயரும் கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.</p> <h2>இஸ்ரேல் அரசு</h2><p>கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற மோதலில் 4 பாலஸ்தீனர்களும், 2 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் நேதன்யாகு, மேற்கு கரை முழுவதும் ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த உத்தரவிட்டார்.</p><p>மேற்குக் கரைப் பகுதிகளில் கூடுதல் இஸ்ரேலியப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டுப் பல பாலஸ்தீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>பாலஸ்தீனர்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த அப்பகுதியில் பல புதிய சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.</p><p>2023இல் காசாவில் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை மேற்கு கரையில் 1,182 பாலஸ்தீனர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 13,000 பேர் காயமடைந்துள்ளனர்.</p><p>24,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களை இஸ்ரேல் கைது செய்து சிறையிலடைத்துள்ளது என பாலஸ்தீன அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.</p>]]></content:encoded></item><item><title>காதலை கைவிட மறுத்த மகளை கழுத்தை நெரித்து கொன்ற தாய்</title><link>https://www.maalaimalar.com/news/national/mother-killed-daughter-for-refusing-to-give-up-her-love</link><comments>https://www.maalaimalar.com/news/national/mother-killed-daughter-for-refusing-to-give-up-her-love#comments</comments><guid isPermaLink="false">aa5f9dd9-33e2-40e5-8dd2-107bf048d6ca</guid><pubDate>Tue, 28 Jul 2026 02:46:20 +0000</pubDate><atom:updated>2026-07-28T02:46:20.973Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மகாராஷ்டிரா,Maharastra,தாய் கைது,காதல் விவகாரம்,Mother arrested,மகள் கொலை,Daughter Murder,Love issue</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/fblrc1i2/death.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/fblrc1i2/death.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உல்லாஸ்நகரில் காதலை கைவிட மறுத்த மகளை கழுத்தை நெரித்து கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர்.</p><h2>காதலுக்கு எதிர்ப்பு</h2><p>மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் உல்லாஸ்நகர் பையாசாகேப் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் தத்தா காவத். இவருடைய மனைவி ஆஷா (வயது40). இவர்களது மகள் அம்ருதா (19). அம்ருதா அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.</p><p>இந்த காதலுக்கு அவரது தாய் ஆஷா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். </p> <h2>தாய் - மகள் வாக்குவாதம்</h2><p>இந்தநிலையில், நேற்று முன்தினம் அதிகாலை 2 மணியளவில் வீட்டில் இருந்த அம்ருதாவிடம், அவரது தாய் ஆஷா காதலை மீண்டும் கண்டித்துள்ளார். அந்த வாலிபருடனான தொடர்பை உடனடியாக துண்டித்து கொள்ளுமாறு மகளை வற்புறுத்தினார். ஆனால், அம்ருதா தனது காதலை கைவிட மறுத்து தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.</p><h2>மகள் உயிரிழப்பு</h2><p>இதனால் ஆத்திரமடைந்த ஆஷா, மகளின் கழுத்தில் கிடந்த துப்பட்டாவை எடுத்து அவரது கழுத்தை இறுக்கினார். இதில் மூச்சுத்திணறி அம்ருதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். </p> <h2>தந்தை புகார்</h2><p>இதுகுறித்து அம்ருதாவின் தந்தை அளித்த புகாரின் பேரில், உல்லாஸ்நகர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, தாய் ஆஷாவை அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். </p><p>மகள் என்றும் பாராமல் பெற்ற தாயே அவளை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இந்திய மாணவர்களின் வீரமிக்க போராட்டம் உலகம் முழுமைக்கும் நம்பிக்கை அளித்துள்ளது - கிரேட்டா துன்பெர்க் </title><link>https://www.maalaimalar.com/news/world/greta-thunberg-hails-indian-students-protest-victory-over-neet-exam-scam</link><comments>https://www.maalaimalar.com/news/world/greta-thunberg-hails-indian-students-protest-victory-over-neet-exam-scam#comments</comments><guid isPermaLink="false">876ff886-0f53-4ea0-9bc1-b7c277a74479</guid><pubDate>Tue, 28 Jul 2026 02:30:01 +0000</pubDate><atom:updated>2026-07-28T02:30:01.835Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,Greta Thunberg,CJP Protest,சிஜேபி போராட்டம்,கிரேட்டா துன்பெர்க்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/a5i6rlfw/tn-1.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கிரேட்டா துன்பெர்க் ]]></media:title><media:description type="html"><![CDATA[ கிரேட்டா துன்பெர்க் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/a5i6rlfw/tn-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான மாணவர்கள் போராட்டம் பெற்ற வெற்றிக்கு பிரபல இளம்  சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் வாழ்த்து தெரிவித்துள்ளார். </p><h2>போராட்டம் வெற்றி </h2><p><a href="https://www.maalaimalar.com/news/national/karappanpoochi-protest-victory-youth-led-cjp-movement-forces-education-minister-to-resign-over-neet-scandal">சிஜேபி </a>தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூன் 20 முதல் போராட்டம் நடந்து வந்த நிலையில் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை கடந்த வாரம் நிறைவேறியது. </p><p>மேலும் போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்து மௌனம் களைத்த பிரதமர் மோடி, தேர்வு முறைகேடுகளை தடுக்கும் மசோதா, விரைவு நீதிமன்றங்கள், உயர்மட்ட குழு அமைப்பு உள்ளிட்ட அறிவிப்புகளை அடுத்தடுத்து வெளியிட்டார். தேர்வு முறைகேடுகளை தடுக்கும் மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. </p> <h2>லண்டன்</h2><p>போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இங்கிலாந்தின் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் முன் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கிரெட்டா துன்பெர்க் பங்கேற்றார்.</p><p>இடதுசாரி மாணவர் அமைப்பான எஸ்எப்ஐ யுகே அமைப்பு இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.</p><p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தால் உயிரிழந்த 21 மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்திய எஸ்எப்ஐ, போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நடத்திய வன்முறையைக் கடுமையாகக் கண்டித்தது.</p> <h2>துன்பெர்க்</h2><p>ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய கிரெட்டா துன்பெர்க்,</p><p>"இந்திய மாணவர்களின் இந்த வீரமிக்க போராட்டம் உலகம் முழுவதிலும் உள்ள செயல்பாட்டாளர்களுக்குப் பெரும் நம்பிக்கையையும் பெருமையையும் அளித்துள்ளது.</p><p>மக்கள் அனைவரும் ஒன்றாக திரண்டு நின்றால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை என்பதை இந்தப் போராட்டம் நிரூபித்துள்ளது.</p><p>ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்திற்காக இந்திய மாணவர்கள் நடத்திய இந்தப் போராட்டம் உலகளாவிய தேவையாக இருந்தது." என தெரிவித்தார்.</p><p>எஸ்எப்ஐ அகில இந்தியத் தலைவர் வி.பி. சானு உட்படப் பல தலைவர்கள், கிரெட்டா துன்பெர்க் பங்கேற்ற புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து தங்கள் நன்றியைத் தெரிவித்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம் </title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/crude-oil-impact-hormuz-tensions-push-brent-to-8754-chennai-petrol-and-diesel-rates-updated</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/crude-oil-impact-hormuz-tensions-push-brent-to-8754-chennai-petrol-and-diesel-rates-updated#comments</comments><guid isPermaLink="false">c31ba4a1-239b-4892-9268-5250214f9b65</guid><pubDate>Tue, 28 Jul 2026 01:42:56 +0000</pubDate><atom:updated>2026-07-28T01:42:56.608Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,கச்சா எண்ணெய்,Crude oil,பெட்ரோல் டீசல் விலை,Petrol and Diesel Prices</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/zqvhuwkk/tn-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்]]></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/zqvhuwkk/tn-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் போரினால் மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.</p><p>அண்மை நாட்களாக பரஸ்பர தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டபோதோலும் ஹார்முஸ் பதற்றம் தொடர்ந்து வருகிறது.</p> <h2>எண்ணெய் நிறுவனங்கள்</h2><p>இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது. கச்சா எண்ணெய்யை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது.</p><p>அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.</p> <h2>பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்</h2><p>அந்த வகையில் இன்று (28.07.2026 - செவ்வாய்க்கிழமை)க்கான பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல்ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p>அதேவேளை, இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கச்சா எண்ணெய்</h2><p>இன்று சர்வதேச சந்தையில் பிரனட் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 87.54 டாலர் என விற்பனை ஆகி வருகிறது.</p><p>ஈரான் விஷயத்தில் நல்லது நடக்க வாய்ப்பு உள்ளது என அமெரிக்க <a href="https://www.maalaimalar.com/news/world/trump-says-good-chance-of-progress-in-iran-talks-as-both-hold-fire">அதிபர் டிரம்ப் </a>நேற்று பேசியது நம்பிக்கை அளிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.</p><p>மத்திய அரசு உலக சந்தை நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 28.7.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு பணத்தேவைகள் பூர்த்தியாகும்
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-28-july-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-28-july-2026#comments</comments><guid isPermaLink="false">94cbfc18-4b33-4899-9d38-21c771299a93</guid><pubDate>Tue, 28 Jul 2026 01:42:03 +0000</pubDate><atom:updated>2026-07-28T01:42:03.197Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/03/10/27281868-rasipalan4.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/03/10/27281868-rasipalan4.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>ராசிபலன்(Rasipalan)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள்.</p><h2>ரிஷபம்</h2><p>பிறருக்கு பொறுப்பு சொல்வதால் பிரச்சனைகள் ஏற்படும் நாள். வீண் வம்பு வீடு தேடி வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்காது.</p> <h2>மிதுனம்</h2><p>துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். முக்கியப் புள்ளிகள் இல்லம் தேடி வருவர்.</p><h2>கடகம்</h2><p>நன்மைகள் நடைபெறும் நாள். நாடாளும் நபர்களின் நட்பால் நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். தொழில் ரீதியாக பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.</p> <h2>சிம்மம்</h2><p>பற்றாக்குறை அகலும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்ய முன்வருவீர்கள்.</p><h2>கன்னி</h2><p>வருமானம் திருப்தி தரும் நாள். நண்பர்கள் பாராட்டும் வகையிலான காரியமொன்று செய்வீர்கள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் மேலோங்கும்.</p> <h2>துலாம்</h2><p>வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். வளர்ச்சிப் பாதைக்கு நண்பர்கள் வழிகாட்டுவர். தொழில் ரீதியாகச் செய்த முயற்சி வெற்றி பெறும்.</p><h2>விருச்சிகம்</h2><p>யோகமான நாள். வருமானம் திருப்தி தரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். தொழில் முயற்சியில் வெற்றி கிட்டும்.</p> <h2>தனுசு</h2><p>செய்தொழிலில் சீரான லாபம் கிடைக்கும் நாள். திருமண முயற்சி கைகூடும். திட்டமிட்ட பயணம் வெற்றிகரமாக அமையும். சொத்துகள் வாங்குவதில் ஆர்வம் கூடும்.</p><h2>மகரம்</h2><p>எதிரிகள் விலகும் நாள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை ஏற்றுக் கொள்வர்.</p> <h2>கும்பம்</h2><p>விரக்தி நிலை மாறி விடிவு காலம் பிறக்கும் நாள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். புதிய பங்குதாரர்களால் பொருளாதாரநிலை உயரும்.</p><h2>மீனம்</h2><p>விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். வீடு மாற்றங்கள் பற்றிய சிந்தனைகள் உருவாகும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும்.</p> ]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 28 ஜூலை 2026: முருகன் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-28-july-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-28-july-2026#comments</comments><guid isPermaLink="false">c5771f3f-151b-45c1-b346-b69709c6a792</guid><pubDate>Tue, 28 Jul 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-07-28T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/10/26211445-muruga5.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Murugan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/10/26211445-muruga5.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆடி-12 (செவ்வாய்க்கிழமை)</p><p>பிறை : வளர்பிறை</p><p>திதி :   சதுர்த்தசி இரவு 7.32 வரை பிறகு பவுர்ணமி </p><p>நட்சத்திரம் : பூராடம் பிற்பகல் 3 வரை பிறகு உத்திராடம்</p><p>யோகம் :  சித்தயோகம்</p><p>ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை</p><p>எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை</p><p>சூலம் : வடக்கு</p><p>நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை</p> <h2>பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை</h2><p>சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் சிம்ம வாகனத்தில் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் பால் அபிஷேகம். சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் விருஷப சேவை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், முருகர் கோவில்களில் அபிஷேகம், கந்தகோட்டம், வல்லக்கோட்டை அலங்காரம். </p> <p>திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் திருக்கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமான் பவனி. ராமநாதபுரம் ஸ்ரீ கோதண்டராம சுவாமி புறப்பாடு. குரங்கனி ஸ்ரீ முத்துமாலையப்பன் புறப்பாடு. தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர் ஆறுகைமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் கோவில்களில் ஸ்ரீ விநாயகர் காலை சிறப்பு அபிஷேகம்.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - உயர்வு</p><p>ரிஷபம் - போட்டி</p><p>மிதுனம் - புகழ்</p><p>கடகம் - நட்பு</p><p>சிம்மம் - அனுகூலம்</p><p>கன்னி - சிறப்பு</p> <p>துலாம் - திடம்</p><p>விருச்சிகம் - கடமை</p><p>தனுசு - மகிழ்ச்சி</p><p>மகரம் - லாபம்</p><p>கும்பம் - அமைதி</p><p>மீனம் - பயணம்</p> ]]></content:encoded></item><item><title>POK: தேர்தலை புறக்கணித்து மக்கள் போராட்டத்தில் வன்முறை - பலர் காயம்  </title><link>https://www.maalaimalar.com/news/world/pok-election-boycott-empty-polling-stations-protests-and-violence-rock-pok</link><comments>https://www.maalaimalar.com/news/world/pok-election-boycott-empty-polling-stations-protests-and-violence-rock-pok#comments</comments><guid isPermaLink="false">23a8a950-1ad1-4224-81cb-c081139b0150</guid><pubDate>Tue, 28 Jul 2026 01:16:10 +0000</pubDate><atom:updated>2026-07-28T01:16:10.605Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Pakistan,PoK,பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்,Violence,வன்முறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/7qbr8von/tn.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ POK]]></media:title><media:description type="html"><![CDATA[ POK]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/7qbr8von/tn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/no-talks-with-pakistan-except-on-pok-rajnath-singh-on-kargil-vijay-diwas">பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்</a> (PoK) நேற்று முதற்கட்ட சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது.</p><h2>பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்</h2><p>ஜம்மு காஷ்மீரின் 35 சதவீத நிலம் பாகிஸ்தான் வசம் உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (POK) என அழைக்கப்படும் இந்த பகுதிக்கு தனி ஜனாதிபதி, பிரதமர், சட்டசபை உள்ளது.</p><p>இங்கு மக்களுக்கு எதிராக பாகிஸ்தான் அரசின் அடக்குமுறை, உரிமைகள் மறுப்பு, விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றால் மக்கள் பெருமளவில் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.</p><h2>தேர்தல் </h2><p>பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) நேற்று முதற்கட்ட சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. பல பகுதிகளில் பொதுமக்கள் தேர்தலை முற்றிலுமாகப் புறக்கணித்துள்ளனர்.   </p><p>வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களோ அல்லது பாதுகாப்புப் பணியாளர்களோ இல்லாத வெறிச்சோடிய காட்சிகளே காணப்படுகின்றன.</p><p>மிகக் குறைந்த அளவே வாக்குகள் பதிவாகியுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.</p><p>பாக்கிஸ்தான் அரசு இதுவரை வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடவில்லை.</p> <h2>முசாபராபாத் பேரணி</h2><p>இதற்கிடையில், பாக்கிஸ்தான் அரசின் கொள்கைகளுக்கும் தேர்தல் நடைமுறைக்கும் எதிராக ஆயிரக்கணக்கான மக்கள், பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைநகர் முசாபராபாத்தை நோக்கிப் பேரணியாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>வன்முறை</p><p>ராவ்லாகோட் பகுதியில் பேரணியாக சென்ற போராட்டக்காரர்களுக்கும் பாக்கிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கும் ஏற்பட்ட மோதலில் பலர் படுகாயமடைந்தனர்.</p><p>ராவ்லாகோட்டின் ஈத்கா மைதானத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பாக்கிஸ்தான் அரசுக்கு எதிராகத் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p>  <h2>பின்னணி</h2><p>தேர்தல் முறையில் சீர்திருத்தங்கள் கோரி இந்தப் போராட்டங்களை ஜம்மு காஷ்மீர் கூட்டு அவாமி ஆக்சன் கமிட்டி (JAAC) என்ற அமைப்பு முன்னெடுத்து வருகிறது.</p><p>அரசு ஜூன் 5 அன்று இந்த அமைப்பிற்கு தடை விதித்ததுடன், அதன் முக்கியத் தலைவர்களையும் கைது செய்தது.</p><h2>பாதிப்பு</h2><p>இதுவரை பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதல்களில் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>பல பகுதிகளில் மொபைல் மற்றும் இணைய சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. வங்கிகள் தொடர்ந்து இரண்டு வாரங்களாக மூடப்பட்டுள்ளன.</p><p>இந்திய எல்லைக்கு அருகிலுள்ள பூஞ்ச் பகுதி முழுமையாக மூடி சீல் வைக்கப்பட்டதால், உணவு தானியங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.</p> <h2>தேர்தல்</h2><p>பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மொத்தமுள்ள 45 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் முதலில் ஜூலை 27 அன்று ஒரே கட்டமாக நடக்கவிருந்தது.</p><p>ஆனால், நிலவும் பதற்றமான சூழல் காரணமாக 3 கட்டங்களாக மாற்றப்பட்டது. அதன்படி நேற்று (ஜூலை 27) மீர்பூர் பகுதியில் முதற்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது.</p><p>ஆகஸ்ட் 2 அன்று இரண்டாம் கட்டமாக முசாபராபாத் பகுதி மற்றும் அகதிகளுக்கான 12 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். கடும் பதற்றம் நிலவும் பூஞ்ச் பகுதியில் கடைசி கட்டமாக ஆகஸ்ட் 10 அன்று வாக்குப்பதிவு நடைபெறும்.</p> <h2>அரசியல் களம்</h2><p>PoK சட்டசபையில் உள்ள 45 தொகுதிகளில், 12 தொகுதிகள் இந்தியப் நிர்வாகத்திலுள்ள ஜம்மு காஷ்மீரிலிருந்து பாகிஸ்தானிற்கு இடம்பெயர்ந்த அகதிகளுக்காக ஒதுக்கப்பட்டவை ஆகும். அங்குள்ள மக்களுக்கு வாக்குரிமை வழங்குவதில் தொடர்ந்து அரசியல் சர்ச்சை நீடித்து வருகிறது.</p><p>தற்போது போராட்டத்தை ஒருங்கிணைத்து வரும் ஜம்மு காஷ்மீர் கூட்டு அவாமி ஆக்சன் கமிட்டி (JAAC)யின் பிரதான கோரிக்கை, இந்த 12 தொகுதிகளில் உள்ள அகதிகளுக்கு வாக்குரிமை வழங்கக்கூடாது என்பதே. ஆனால் அரசு அதை ஏற்க தொடர்ந்து மறுத்து வருகிறது.</p> <h2>அரசு</h2><p>2021இல் இம்ரான் கானின் பி.டி.ஐ கட்சி 25 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது.</p><p>ஆனால், அடுத்தடுத்த அரசியல் மாற்றங்கள் மற்றும் நம்பிக்கையில்லா தீர்மானங்கள் காரணமாகத் தற்போது PPP கட்சியின் பைசல் மும்தாஜ் ரத்தோர் பிரதமராகப் பொறுப்பில் உள்ளார்.</p><p>நவாஸ் ஷெரீப்பின் PML-N மற்றும் பிலாவல் பூட்டோவின் PPP ஆகிய இரு கட்சிகளும் நடப்பு தேர்தலில் வெற்றி பெற தீவிரம் காட்டி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.</p><p>நேற்றைய கலவரத்தின்போது பாகிஸ்தான் PML-N ஆதரவாளர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தங்களது தொண்டர் முக்தார் யூனுஸ் கொல்லப்பட்டதாகவும், மேலும் இரண்டு தொண்டர்கள் காயமடைந்ததாகவும் PPP கூறியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஈரான் விஷயத்தில் நல்லது நடக்க வாய்ப்பு: டிரம்ப் நம்பிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/world/trump-says-good-chance-of-progress-in-iran-talks-as-both-hold-fire</link><comments>https://www.maalaimalar.com/news/world/trump-says-good-chance-of-progress-in-iran-talks-as-both-hold-fire#comments</comments><guid isPermaLink="false">9f9a9f5f-2797-42d2-8afc-5feb5379a679</guid><pubDate>Tue, 28 Jul 2026 00:28:54 +0000</pubDate><atom:updated>2026-07-28T00:28:54.173Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டொனால்டு டிரம்ப்,Donald Trump,ஈரான்,Iran</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/emhqfugn/trump-7.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Donald Trump]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/emhqfugn/trump-7.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தொடர்ந்து மூன்றாவது நாளாக இரு தரப்பினரும் போர் நிறுத்தத்தில் இருந்த நிலையில், ஈரானுடனான பேச்சுவார்த்தை மூலம் அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து அமெரிக்க அதிபர் <a href="https://www.maalaimalar.com/topic/donald-trump">டொனல்டு டிரம்ப்</a> நம்பிக்கை தெரிவித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/Iran">ஈரான்</a> ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிட்டது தொடர்பாக ஏற்பட்ட ராஜதந்திர முறிவு காரணமாக, இஸ்லாமிய குடியரசு மீது 13 இரவுகளாக அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, நீண்டகால பகைவர்களுக்கிடையேயான சண்டை கடந்த சனிக்கிழமை அதிகாலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது.</p><h2>டிரம்ப் நம்பிக்கை:</h2><p>ஆனால், பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்க-இஸ்ரேலிய தொடர் தாக்குதல்களுடன் தொடங்கி, பிராந்தியத்தையும் உலக பொருளாதாரத்தையும் உலுக்கிய இந்த போரை, புதுப்பிக்கப்பட்ட ராஜதந்திர முயற்சிகள் முடிவுக்கு கொண்டுவரக்கூடும் என்று அமெரிக்க தலைவர் நம்பிக்கை தெரிவித்தார்.</p><p>"ஏதாவது நடப்பதற்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன். எனக்கு மிகுந்த பொறுமை இருக்கிறது... என்ன நடக்கிறது என்று பார்ப்போம்," என்று அவர் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் டிரம்ப் கூறினார்.</p><h2>ஈரான் மறுப்பு:</h2><p>மோதலை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்காவுடன் எந்த நேரடி பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று தெஹ்ரான் முன்னதாக மறுத்திருந்தது.</p><p>"பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய நிகழ்வுகள் குறித்து அமெரிக்க தரப்பில் இருந்து மத்தியஸ்தர்கள் எங்களுக்கு தகவல்களை தெரிவிக்கலாம். ஆனால், தற்சமயம் நாங்கள் அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை," என்று ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி கூறினார்.</p><p>ராஜதந்திரத்திற்கு ஒரு வாய்ப்பு அளிப்பதற்காக, மத்தியஸ்த நாடுகள் தன்னை நிலைமையை சற்று நிறுத்தி வைக்குமாறு கேட்டுக்கொண்டதாக டிரம்ப், அமெரிக்க செய்தி நிறுவனமான ஆக்சியோஸிடம் கூறினார். மேலும், "நாங்கள் ஈரானுடன் மிக ஆழமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்" என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><h2>மீண்டும் செய்வோம்:</h2><p>ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் இருந்த அவர், புதிய முயற்சிகள் தோல்வியுற்றால், சண்டை இடைநிறுத்தப்படுவதற்கு முன்பு "நாம் என்ன செய்து கொண்டிருந்தோமோ அதையே மீண்டும் செய்வோம்" என்று கூறினார்.</p><p>அந்த விஷயம் தொடர்பாக, போர் தொடங்கி கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கு பிறகு அமெரிக்காவின் வெடிமருந்து கையிருப்பு குறைந்து வருகிறது என்ற கவலைகளை அவர் நிராகரித்தார்.</p><p>"எங்களிடம் ஏராளமான வெடிமருந்துகள் உள்ளன. நடுத்தர ரக ஆயுதங்களும் எங்களிடம் ஏராளமாக உள்ளன; என்ன நடந்தாலும் எங்களால் பயன்படுத்தக்கூடியதை விட அதிகமாகவே அவை இருக்கின்றன," என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் போட்டிகள்: பளுதூக்குதல் பிரவில் வெள்ளி வென்றார் அஜய பாபு</title><link>https://www.maalaimalar.com/sports/ajaya-babu-wins-silver-medal-in-mens-79kg-weightlifting</link><comments>https://www.maalaimalar.com/sports/ajaya-babu-wins-silver-medal-in-mens-79kg-weightlifting#comments</comments><guid isPermaLink="false">428b56df-a3f2-4304-aedc-da2b50b4eaff</guid><pubDate>Mon, 27 Jul 2026 23:48:00 +0000</pubDate><atom:updated>2026-07-27T23:48:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காமன்வெல்த் போட்டிகள்,CWG 2026,Ajaya Babu,அஜய பாாபு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/yg6gkrpl/Ajaya-Babu.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அஜய பாபு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/yg6gkrpl/Ajaya-Babu.png?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/cwg-2026">காமன்வெல்த் விளையாட்டு</a> போட்டிகளில், வேகமாக முன்னேறி வரும் இந்திய பளுதூக்குதல் வீரரான வல்லூரி அஜய பாபு, ஆண்களுக்கான 79 கிலோ பிரிவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெள்ளிப் பதக்கம் வென்றார்; இதன் மூலம் இப்போட்டியில் இந்தியாவின் வெற்றிகரமான பயணத்தை அவர் தொடர்ந்தார்.</p><p> ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் விஜயநகரம் மாவட்டத்தை சேர்ந்த 21 வயதான இவர், 'ஸ்னாட்ச்' (snatch) பிரிவில் 149 கிலோவையும் (இது ஒரு போட்டி சாதனையாகும்), 'கிளீன் அண்ட் ஜெர்க்' (clean and jerk) பிரிவில் 181 கிலோவையும் தூக்கி, மொத்தம் 330 கிலோ எடையுடன் இரண்டாவது இடத்தை பிடித்தார். </p><h2>விறுவிறுப்பான போட்டி:</h2><p>நேற்று (திங்கள்கிழமை) இரவு நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில், மலேசியாவின் எரி ஹிதாயத் முகமது மொத்தம் 331 கிலோ (147 + 184 - இதுவும் ஒரு போட்டி சாதனையாகும்) எடையை தூக்கி தங்க பதக்கத்தை வென்ற நிலையில், அஜய பாபு மிகக் குறைந்த வித்தியாசத்தில் தங்கத்தை நழுவவிட்டார்.</p><p>நடப்பு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பளுதூக்குதலில் இந்தியா வென்ற ஆறாவது பதக்கம் இதுவாகும்.</p><p>இங்கிலாந்தின் கிறிஸ் முர்ரே மொத்தம் 325 கிலோ எடையுடன் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.</p><p>முதலில், ஹிதாயத் 181 கிலோ எடையைத் தூக்கி போட்டி சாதனையை முறியடித்தார்; ஆனால் சில நொடிகளிலேயே இந்திய வீரரான அஜய பாபு தனது கடைசி முயற்சியில் அதே 181 கிலோ எடையைத் தூக்கி, மொத்த எடையில் 330 கிலோ என்ற புதிய சாதனையை படைத்து முந்தினார்.</p><p>எனினும், ஹிதாயத் தனது கடைசி முயற்சியில் 184 கிலோ எடையை தூக்கி மீண்டும் சாதனையை முறியடித்து தங்க பதக்கத்தை வென்றார்.</p><h2>கடைசி முயற்சி:</h2><p>முன்னதாக, 'ஸ்னாட்ச்' பிரிவில் 149 கிலோ எடையைத் தூக்கும் இரண்டாவது முயற்சியில் தோல்வியடைந்த அஜய பாபு, தனது கடைசி முயற்சியில் அந்த எடையைத் தூக்கி சிறப்பான ரீ-என்ட்ரியை வெளிப்படுத்தினார். இதன் மூலம் புதிய போட்டி சாதனையை படைத்த அவர், இங்கிலாந்தின் கிறிஸ் முர்ரே (148 கிலோ) மற்றும் மலேசியாவின் எரி ஹிதாயத் முகமது (147 கிலோ) ஆகியோரை முந்தி அப்பிரிவில் முதலிடம் பிடித்தார்.</p><p>தனது முதல் முயற்சியாக 145 கிலோ எடையைத் தேர்ந்தெடுத்த அவர், அதை மிக எளிதாக வெற்றிகரமாக தூக்கினார்.</p><p>மிகுந்த நம்பிக்கையுடன் 'கிளீன் அண்ட் ஜெர்க்' பிரிவில் நுழைந்த அஜய பாபு தங்க பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மலேசிய வீரர் இறுதியில் அவரை முந்தி சென்றார்.</p><p>இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் பளுதூக்கும் வீரர்களில் ஒருவராக கருதப்படும் அஜய் பாபு, அகமதாபாத்தில் நடைபெற்ற 2025 காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில், ஆண்கள் 79 கிலோ எடைப்பிரிவில் மொத்தம் 335 கிலோ (ஸ்னாட்ச் பிரிவில் 152 கிலோ + கிளீன் &amp; ஜெர்க் பிரிவில் 183 கிலோ) எடையை தூக்கி தனது தனிப்பட்ட சிறந்த சாதனையை பதிவு செய்ததோடு, சாம்பியன்ஷிப் சாதனைகளையும் முறியடித்து தங்கப்பதக்கம் வென்றார்.</p>]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் போட்டிகள்: பாரா தடகள பிரிவில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்றார் ஷர்மிளா தன்கர்</title><link>https://www.maalaimalar.com/sports/sharmila-dhankar-clinches-indias-para-athletics-gold-in-cwg</link><comments>https://www.maalaimalar.com/sports/sharmila-dhankar-clinches-indias-para-athletics-gold-in-cwg#comments</comments><guid isPermaLink="false">16b21a1a-bcba-41c3-98d9-21dab86e54e7</guid><pubDate>Mon, 27 Jul 2026 23:11:39 +0000</pubDate><atom:updated>2026-07-27T23:11:39.803Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காமன்வெல்த் போட்டிகள்,CWG 2026,Sharmila Dhankar,ஷர்மிளா தன்கர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/yrqwl47p/Sharmila-Dhankar.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஷர்மிளா தன்கர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/yrqwl47p/Sharmila-Dhankar.png?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2026 <a href="https://www.maalaimalar.com/topic/cwg-2026">காமன்வெல்த் விளையாட்டு</a> போட்டிகளில் பாரா தடகள பிரிவில் இந்தியாவுக்கான முதல் தங்க பதக்கத்தை வென்று ஷர்மிளா தன்கர் வரலாறு படைத்தார்; அவர் இங்கு நடைபெற்ற பெண்களுக்கான 'ஷாட் புட்' (குண்டு எறிதல்) F57 பிரிவில் முதலிடத்தை பிடித்தார். </p><p>40 வயதான இவர், 9.81 மீட்டர் தூரத்திற்கு குண்டு எறிந்து இந்த சீசனிலேயே தனது சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தினார்; இதன் மூலம் காமன்வெல்த் போட்டிகளில் பாரா தடகள பிரிவில் பதக்கம் வெல்ல இந்தியாவின்  20 ஆண்டுகால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.</p><h2>அதிகாரப்பூர்வ மறுஆய்வு:</h2><p>சர்ச்சைக்குரிய சூழலில் இந்தியா தரப்பில் அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து, மற்றொரு இந்திய வீராங்கனையான ஷில்பா ஷைலாவுக்கு வெண்கல பதக்கம் வழங்கப்பட்டது. ஷைலா 7.26 மீட்டர் தூரம் எறிந்து தனது தனிப்பட்ட சிறந்த சாதனையை பதிவு செய்திருந்தார்.</p><p>தொடக்கத்தில் நைஜீரியாவின் யூச்சாரியா ஐயாசி வெண்கல பதக்கம் வென்றிருந்தார்; ஆனால், இந்திய தரப்பு புகாரளித்து அதிகாரப்பூர்வ மறுஆய்வு செய்யப்பட்ட பிறகு, அவரது ஒரே செல்லுபடியாகும் முயற்சி 'ஃபவுல்' (விதிமீறல்) என அறிவிக்கப்பட்டது. </p><p>இதனால், நான்காவது இடத்தில் இருந்த ஷைலாவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது. இருப்பினும், நைஜீரியா தரப்பில் இருந்தும் இதற்கு எதிராகப் புகார் அளிக்கப்பட வாய்ப்புள்ளது.</p><h2>இரண்டு பதக்கங்கள்:</h2><p>வெண்கல பதக்கம் கிடைத்த அந்த திருப்பமான தருணத்திற்கு பிறகு, கண்ணீர் மல்க ஷைலா, ஷர்மிளாவுடன் இணைந்து கொண்டாடினார்; இதன் மூலம் இப்பிரிவில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள் கிடைத்தன.</p><p>F57 வகைப்பாடு என்பது கீழ் உடல் உறுப்பு குறைபாடுகள், உறுப்பு இழப்புகள் அல்லது தசை வலிமை குறைவு உள்ள விளையாட்டு வீரர்களுக்கான பிரிவாகும்.</p><p>இரண்டு வயதில் இடது காலில் போலியோ பாதிப்புக்குள்ளான ஷர்மிளா, இந்த ஆண்டு நடைபெற்ற 'ஃபாஸ்ஸா' (Fazza) சர்வதேச பாரா தடகள சாம்பியன்ஷி போட்டியில் தங்க பதக்கம் வென்றார். அவர் 2022 பர்மிங்காம் காமன்வெல்த் போட்டிகளிலும் பங்கேற்று நான்காவது இடத்தை பிடித்திருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் போட்டிகள்: ஆடவர் உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்ற முதல் இந்தியரானார் சர்வேஷ் குஷாரே</title><link>https://www.maalaimalar.com/sports/kushare-becomes-first-indian-to-win-silver-in-mens-high-jump-in-commonwealth-games</link><comments>https://www.maalaimalar.com/sports/kushare-becomes-first-indian-to-win-silver-in-mens-high-jump-in-commonwealth-games#comments</comments><guid isPermaLink="false">99f6e2bc-9296-4791-8648-8f003bb06f36</guid><pubDate>Mon, 27 Jul 2026 22:44:41 +0000</pubDate><atom:updated>2026-07-27T22:44:41.322Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சர்வேஷ் குஷாரே,காமன்வெல்த் போட்டிகள்,CWG 2026,Sarvesh Kushare</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/nwjx2nfq/SARVESH-KUSHARE.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சர்வேஷ் குஷாரே]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/nwjx2nfq/SARVESH-KUSHARE.png?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேசிய சாதனையாளரான சர்வேஷ் குஷாரே, <a href="https://www.maalaimalar.com/topic/cwg-2026">காமன்வெல்த் விளையாட்டு</a> போட்டிகளின் ஆடவர் உயரத் தாண்டுதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.</p><p>31 வயது இந்தியரான இவர் 2.25 மீட்டர் உயரத்தை தாண்டி வெள்ளி பதக்கத்தை வென்றார்; ஜமைக்காவின் ரோமைன் பெக்ஃபோர்ட் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். 2.25 மீட்டர் உயரத்தைத் தாண்டிய பிறகு, குஷாரே மற்றும் பெக்ஃபோர்ட் ஆகிய இருவராலும் 2.28 மீட்டர் உயரத்தைத் தாண்ட முடியவில்லை. </p><h2>வெற்றியாளர்கள்:</h2><p>ஆனால், 'கவுண்ட்பேக்' (countback) விதிமுறைப்படி ஜமைக்கா வீரர் தங்க பதக்கம் வென்றவராக அறிவிக்கப்பட்டார்; குஷாரே வெள்ளி பதக்கத்துடன் திருப்தியடைய வேண்டியிருந்தது. இங்கிலாந்தின் ஜாக் கிமானி (2.20 மீட்டர்) வெண்கலப் பதக்கத்தை வென்றார்.</p><p>இப்போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்தியரான ஆதர்ஷ் ராம், 2.15 மீட்டர் உயரத்தை கடந்து ஐந்தாவது இடத்தை பிடித்தார்.</p><p>திங்கள்கிழமைக்கு முன்பு வரை, தேஜஸ்வின் சங்கர் மட்டுமே உயரம் தாண்டுதலில் பதக்கம் வென்ற (2022 பர்மிங்காம் போட்டிகளில் வெண்கலம்) ஒரே இந்தியராக இருந்தார். ஆனால் குஷாரே தனது வெள்ளி பதக்கத்தின் மூலம் அந்த சாதனையை முறியடித்தார்.</p><h2>தேஜஸ்வின் விலகல்:</h2><p>தேஜஸ்வினும் திங்கள்கிழமை போட்டியிட்டார்; ஆனால் தனது முதல் முயற்சியில் 2.05 மீட்டர் உயரத்தை தாண்டத் தவறிய பிறகு போட்டியில் இருந்து விலகினார். வியாழக்கிழமை தொடங்கவுள்ள ஆடவர் டெகாத்லான் (பத்து வகையான தடகளப் போட்டிகள் கொண்ட தொடர்) போட்டியில் பங்கேற்க இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் இந்த முடிவை எடுத்தார்.</p><p>2.29 மீட்டர் என்ற தனது சிறந்த தனிப்பட்ட சாதனையை (personal best) கொண்டுள்ள 27 வயதான இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக டெகாத்லான் போட்டியில் கவனம் செலுத்தி வருவதால், தனிப்பட்ட உயரம் தாண்டுதல் போட்டிகளில் அதிகம் பங்கேற்கவில்லை.</p><h2>விவசாயி மகன்:</h2><p>மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள தேவர்காவ் கிராமத்தைச் சேர்ந்த வெங்காய விவசாயியின் மகனான குஷாரே, தனது தந்தை மற்றும் சிறுவயது பயிற்சியாளர் அமைத்துக்கொடுத்த சோளத் தாள்கள், பருத்தி மற்றும் விவசாயக் கழிவுகளைக் கொண்ட தற்காலிகத் தரையிறங்கும் குழிகளை பயன்படுத்தி உயரம் தாண்டுதலுக்கு பயிற்சி செய்து வந்தார்.</p><p>இந்த மாத தொடக்கத்தில், மொனாக்கோவில் நடைபெற்ற டைமண்ட் லீக் போட்டியில் அறிமுகமான குஷாரே, மூன்றாம் இடத்தை பிடித்து பதக்க மேடை ஏறிய முதல் இந்திய உயரம் தாண்டுதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார்; இதன் மூலம் சாதனை படைத்த நான்கு இந்தியர்கள் கொண்ட பிரத்யேக குழுவிலும் இணைந்தார்.</p>]]></content:encoded></item><item><title>இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-soundararaja-awards-to-organic-farmers</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-soundararaja-awards-to-organic-farmers#comments</comments><guid isPermaLink="false">3da9ce8b-b426-4909-a246-11a2037f1980</guid><pubDate>Mon, 27 Jul 2026 22:07:16 +0000</pubDate><atom:updated>2026-07-27T22:07:16.830Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>soundararaja,சௌந்தரராஜா</media:keywords><media:content height="853" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/r74dkixh/2c0d4ff1-8c85-40b0-ad32-a1a287ee0add.jpg" width="1280"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Actor Soundararaja giving cheque]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/r74dkixh/2c0d4ff1-8c85-40b0-ad32-a1a287ee0add.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகரும் சமூக ஆர்வலருமான <a href="https://www.maalaimalar.com/topic/soundararaja">சௌந்தரராஜா</a>, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு நேர்மையாக இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு விருதுகளையும் ரொக்க பரிசுகளையும் வழங்கி வருகிறார். </p><p>அந்த வகையில் இந்த ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் 11 இயற்கை விவசாயிகளுக்கு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">நம்மாழ்வார்</a> விருதும், தலா ரூ.5,000 ரொக்கப் பரிசும் வழங்கி கவுரவித்தார்.</p><h2>ரொக்கப் பரிசு:</h2><p>இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் "நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சாவூரைச் சேர்ந்த 11 இயற்கை விவசாயிகளுக்கு எனது மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை மூலம் விருதும் ரொக்கப் பரிசும் வழங்கி, அவர்களுக்கான எனது நன்றியை வெளிப்படுத்தியுள்ளேன். இதை எனது வாழ்க்கையின் மிகப்பெரிய அர்த்தமுள்ள தருணங்களில் ஒன்றாக கருதுகிறேன்.</p><p>கடந்த ஆண்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 11 விவசாயிகளுக்கு விருதுகளும் ரொக்கப் பரிசுகளும் வழங்கினோம். அப்போது கிடைத்த வரவேற்பும், விவசாயிகளின் மகிழ்ச்சியும் இந்த ஆண்டும் இந்நிகழ்வை நடத்துவதற்கு ஊக்கமாக அமைந்தது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.</p><p>இன்றைய இளைஞர்கள் விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். உணவை உருவாக்கும் விவசாயிகளை மதிக்கும் மனப்பான்மை சமூகத்தில் வளர வேண்டும். இயற்கை விவசாயம் என்பது வெறும் விவசாய முறை மட்டுமல்ல; அது மண்ணையும், மனிதர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் வாழ்க்கை முறையாகும்.</p><h2>மிகப்பெரிய நம்பிக்கை:</h2><p>தற்போதைய "முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் அடுத்த ஜென்மம் என்று இருந்தால் நான் விவசாய மகனாக பிறப்பேன்" என்று கூறியிருந்தார். அதனால் கண்டிப்பான முறையில் விவசாயிகளுக்கு அவர் நல்லது செய்வார் என்று எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது.</p><p>விவசாயிகளைப் பாதுகாப்பதும், இயற்கை விவசாயத்தை மீட்டெடுப்பதும் நமது கடமையாகும். அதிகளவில் மரங்களை நட வேண்டும், நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும், நடப்பட்ட மரங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும். சுற்றுச்சூழலை காக்கும் பணிகளில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.</p><p>எனது மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை மூலம் வருங்காலங்களிலும் விவசாயிகள், மாணவர்கள் மற்றும் சமூக நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்" என்றார்.</p>]]></content:encoded></item><item><title>அசாம் வெள்ளம்: 6 மாவட்டங்களில் 4.4 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/assam-flood-over-44-lakh-people-affected-in-6-districts-toll-remains-at-68</link><comments>https://www.maalaimalar.com/news/national/assam-flood-over-44-lakh-people-affected-in-6-districts-toll-remains-at-68#comments</comments><guid isPermaLink="false">4746f381-0b0b-4f24-8d66-1a6778a01cd9</guid><pubDate>Mon, 27 Jul 2026 19:49:27 +0000</pubDate><atom:updated>2026-07-27T19:49:27.666Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உயிரிழப்பு,Death toll,Assam Flood,அசாம் வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/vn7eovdp/Assam-Floods.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Assam Floods]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/vn7eovdp/Assam-Floods.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அசாம் மாநிலத்தில் வெள்ள சூழல் சற்று சீரடைந்தது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றாலும், ஆறு மாவட்டங்களில் 4.45 லட்சம் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது. </p><p>அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (ASDMA) தகவலின்படி, சிவசாகர், கோலாகாட், சாரைடியோ, ஜோர்ஹாட், நாகான் மற்றும் காம்ரூப் (பெருநகரம்) ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 4,45,495 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  ஞாயிற்றுக்கிழமை வரை மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களில் 5.24 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்.</p><h2>வெள்ள பாதிப்பு:</h2><p>கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை; இதனால் இந்த ஆண்டு வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68-ஆகவே நீடிக்கிறது என்று ASDMA அறிக்கை கூறியது. சாரைடியோ மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது; அங்கு 1,88,404 பேர் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அதைத் தொடர்ந்து சிவசாகர் (1,44,461) மற்றும் ஜோர்ஹாட் (74,458) மாவட்டங்கள் உள்ளன.</p><p>மொத்தம் 90 நிவாரண முகாம்கள் செயல்பட்டு வருகின்றன; அவற்றில் இடம்பெயர்ந்த 28,695 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், 94 நிவாரணப் பொருட்கள் விநியோக மையங்களும் செயல்படுகின்றன.</p><h2>நிவாரண பணிகள்:</h2><p>கோலாகாட் மாவட்டத்தின் நுமாலிகர் பகுதியில் தன்சிரி (தெற்கு) ஆறு அபாயக் குறியீட்டிற்கு மேல் பாய்ந்து வருவதாக ASDMA தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் 67 படகுகள் பயன்படுத்தப்பட்டு, NDRF, SDRF மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.</p><p>37,139.52 ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் இன்னும் நீரில் மூழ்கியுள்ளன; அதேவேளையில் 26,679 கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வீடுகள், சாலைகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அது மேலும் கூறியது.</p>]]></content:encoded></item><item><title> தடை செய்யப்பட்ட குர்திஷ் குழுவை சேர்ந்த 4 பேர் கொன்றுகுவித்த ஈரான்</title><link>https://www.maalaimalar.com/news/world/iranian-forces-kill-4-members-of-banned-kurdish-group</link><comments>https://www.maalaimalar.com/news/world/iranian-forces-kill-4-members-of-banned-kurdish-group#comments</comments><guid isPermaLink="false">2d07e344-b0eb-40e4-b229-39843e413d0f</guid><pubDate>Mon, 27 Jul 2026 18:52:01 +0000</pubDate><atom:updated>2026-07-27T18:52:01.983Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஈரான்,Iran,Kurdish Group,குர்திஷ் குழு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/urviagm3/iran-flg.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Iran Flag]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/urviagm3/iran-flg.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/iraq">ஈராக்</a> அருகிலுள்ள நாட்டின் மேற்கு பகுதியில், தடைசெய்யப்பட்ட குர்திஷ் குழுவை சேர்ந்த நான்கு பேரை ஈரானிய பாதுகாப்பு படைகள் கொன்றதாக அரசு தொலைக்காட்சி தெரிவித்தது.</p><p>"துணிச்சலான எல்லை காவலர்களுக்கும் இந்த ஆக்கிரமிப்பு சக்திகளுக்கும் இடையே நடந்த ஆயுத மோதலை தொடர்ந்து, பி.ஜே.ஏ.கே. குழுவை சேர்ந்த நான்கு பேர் கொல்லப்பட்டனர்," என அரசு தொலைக்காட்சியில் வெளியான ஒரு அறிக்கையில் <a href="https://www.maalaimalar.com/topic/police">காவல்துறை</a> தெரிவித்துள்ளது.</p><h2>தடை செய்யப்பட்ட அமைப்பு:</h2><p>குர்திஸ்தான் சுதந்திர வாழ்வு கட்சி (PJAK) ஈரான், துருக்கி மற்றும் அமெரிக்காவால் ஒரு பயங்கரவாத அமைப்பாக தடை செய்யப்பட்டுள்ளது.</p><p>குர்திஸ்தான் மாகாணத்தின் மேற்கு பகுதியில் உள்ள பனே நகருக்கு அருகே, அவர்களுடைய வாகனத்தில் இருந்து பல கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கூடுகள், தோட்டாக்கள் மற்றும் கையெறி குண்டுகள் உள்ளிட்ட கணிசமான அளவு ஆயுதங்களும் வெடிமருந்துகளும் கண்டெடுக்கப்பட்டதாக அந்த அறிக்கை மேலும் தெரிவித்தது.</p><h2>கைது நடவடிக்கை:</h2><p>குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியின் (PKK) ஒரு கிளை அமைப்பான PJAK, 2004-இல் நிறுவப்பட்டதில் இருந்து ஈரானிய இராணுவத்திற்கு எதிராக நடவடிக்கைகளை நடத்தி வருகிறது.</p><p>பிப்ரவரி மாதம், நாசவேலைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் அக்குழுவை சேர்ந்த 11 உறுப்பினர்களை ஈரான் அதிகாரிகள் கைது செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>நீட் எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்ப பெற பீகார் அரசு முடிவு</title><link>https://www.maalaimalar.com/news/national/bihar-govt-to-withdraw-cases-lodged-against-protesters-over-neet-paper-leak</link><comments>https://www.maalaimalar.com/news/national/bihar-govt-to-withdraw-cases-lodged-against-protesters-over-neet-paper-leak#comments</comments><guid isPermaLink="false">92a5f44f-9a49-4f2e-a2ca-2066218e3127</guid><pubDate>Mon, 27 Jul 2026 18:06:59 +0000</pubDate><atom:updated>2026-07-27T18:06:59.978Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>பீகார்,Bihar,neet protest,வினாத்தாள் கசிவு,NEET Paper Leak,நீட் போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/a60opxu8/bihar-neet-protest.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bihar Neet Protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/a60opxu8/bihar-neet-protest.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் (NEET) <a href="https://www.maalaimalar.com/topic/paper-leaks">வினாத்தாள் கசிவு</a> விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறவும், சிறையில் உள்ளவர்களை விடுவிக்கவும் பீகார் அரசு முடிவு செய்துள்ளது.</p><p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறவும், பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுவிக்கவும் <a href="https://www.maalaimalar.com/topic/bihar">பீகார் அரசு</a> முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.</p><h2>அதிகாரப்பூர்வ அறிவிப்பு:</h2><p>மாநில உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், "ஜூலை 26-ஆம் தேதியன்று காலை 6 மணிக்கு முன்னதாக நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட அனைத்து முதல் தகவல் அறிக்கைகள் (FIR), புகார்கள் மற்றும் விளக்கம் கோரும் அறிவிப்புகள் (show-cause notices) ஆகியவை திரும்பப் பெறப்படுகிறது," என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும், இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுவிக்கப்படுவார்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.</p><h2>சி.ஜே.பி. போராட்டம்:</h2><p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை எதிர்த்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சி.ஜே.பி.) சார்பில் மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலகலை வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்தது. இந்த போராட்டம் நாடு முழுக்க பல மாநிலங்கள் வரை மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது.</p><p>அந்த வரிசையில் பீகார் மாநிலத்திலும் மாணவர்கள், மாணவர் அமைப்புகள் சார்பில் போரட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. மாநிலம் முழுக்க நடைபெற்ற போராட்டங்களில் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு, பலர் கைது செய்யப்பட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் போட்டிகள்: பளுதூக்கும் போட்டியில் பிந்த்யாராணி தேவி வெண்கலப் பதக்கம் வென்றார்!</title><link>https://www.maalaimalar.com/sports/weightlifter-bindyarani-devi-wins-bronze-medal-in-women-58kg-category</link><comments>https://www.maalaimalar.com/sports/weightlifter-bindyarani-devi-wins-bronze-medal-in-women-58kg-category#comments</comments><guid isPermaLink="false">c7beed00-d76c-4ea2-af36-1ea88e956c71</guid><pubDate>Mon, 27 Jul 2026 17:09:14 +0000</pubDate><atom:updated>2026-07-27T17:09:14.912Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காமன்வெல்த் போட்டிகள்,CWG 2026,Bindyarani Devi,பிந்த்யாராணி தேவி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/r7knna3i/Bindyarani-Devi.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bindyarani Devi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/r7knna3i/Bindyarani-Devi.png?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 <a href="https://www.maalaimalar.com/topic/cwg-2026">காமன்வெல்த் விளையாட்டு</a> போட்டிகளில், இந்தியா தனது ஆறாவது பதக்கத்தை வென்றது. </p><p>இன்று (திங்கள்கிழமை) நடைபெற்ற மகளிர் 58 கிலோ எடைப்பிரிவுப் போட்டியில் அனுபவம் வாய்ந்த இந்திய பளுதூக்கும் வீராங்கனை பிந்த்யாராணி தேவி வெண்கல பதக்கம் வென்று அசத்தினார்.</p><h2>மூன்றாவது இடம்:</h2><p>பிந்த்யாராணி 'ஸ்னாட்ச்' (snatch) பிரிவில் 87 கிலோவையும், 'கிளீன் அண்ட் ஜெர்க்' (clean and jerk) பிரிவில் 112 கிலோவையும் தூக்கி, மொத்தம் 199 கிலோ எடையை உயர்த்தினார்.</p><p>ஸ்னாட்ச் பிரிவில் 83 கிலோவுடன் தனது முயற்சியை தொடங்கிய பிந்த்யாராணி, இரண்டாவது முயற்சியில் 85 கிலோவையும், மூன்றாவது முயற்சியில் 87 கிலோவையும் வெற்றிகரமாக உயர்த்தினார்.</p><p>நைஜீரியாவின் ரஃபியாத்து ஃபோலாஷாடே மொத்தம் 229 கிலோ எடையை உயர்த்தி (இது ஒரு போட்டி சாதனையாகும்) தங்க பதக்கத்தை வென்றார். கனடாவின் ஆன் சோஃபி டாஷெரோ மொத்தம் 215 கிலோ எடையை உயர்த்தி வெள்ளி பதக்கத்தை கைப்பற்றினார்.</p><h2>ஆறாவது பதக்கம்:</h2><p>பிந்த்யாராணி ஏற்கனவே 2022-இல் பர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் வெள்ளி பதக்கம் வென்றிருந்தார். மேலும் கடந்த ஆண்டு அகமதாபாத்தில் நடைபெற்ற காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாமிடம் பிடித்திருந்தார்.</p><p>நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில், பளுதூக்குதலில் இந்தியா வென்ற ஐந்தாவது பதக்கமும், ஒட்டுமொத்தமாக ஆறாவது பதக்கமும் இதுவாகும்.</p>]]></content:encoded></item><item><title>Honda | QC3 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - 2 மணி நேரம் சார்ஜ் செய்தால் 145 கிலோமீட்டர் பயணம் செய்யலாம்</title><link>https://www.maalaimalar.com/automobilenews/bike/honda-qc3-electric-scooter-145km-range-2-hour-charge</link><comments>https://www.maalaimalar.com/automobilenews/bike/honda-qc3-electric-scooter-145km-range-2-hour-charge#comments</comments><guid isPermaLink="false">f4e6be4d-832a-4948-84f8-e0ea310c70aa</guid><pubDate>Mon, 27 Jul 2026 16:32:41 +0000</pubDate><atom:updated>2026-07-27T16:32:41.688Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Electric Scooter,Honda Scooter,Honda QC3,ஹோண்டா QC3,மின்சார ஸ்கூட்டர்,ஹோண்டா ஸ்கூட்டர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/7nbpfguu/Untitled-design-6.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Honda QC3 Electric Scooter]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/7nbpfguu/Untitled-design-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>பைக் (Automobile)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h3><strong>ஹோண்டா ஸ்கூட்டர் QC3:</strong></h3><p>ஹோண்டா ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது புதிய QC3 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. </p><p>இந்த புதிய மாடல், ஆக்டிவா இ மற்றும் QC1 ஆகியவற்றுக்குப் பிறகு இந்திய சந்தையில் மூன்றாவது எலக்ட்ரிக் ஸ்கூட்டராக அறிமுகமாகியுள்ளது.</p><h3><strong>மைலேஜ்:</strong></h3><p>ஹோண்டா QC3 ஹப்-இல் பொருத்தப்பட்ட மின்சார மோட்டாருடன் இணைக்கப்பட்ட 3 kWh பேட்டரி பேக் மூலம் இயக்கப்படுகிறது. </p><p>ஒரு முழு சார்ஜில் அதிகபட்சமாக 145 கி.மீ. தூரம் வரை பயணிக்க முடியும் என அந்நிறுவனம் கூறுகிறது.</p><p>பேட்டரியை 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 2 மணி 40 நிமிடங்கள் ஆகும். அதே சமயம் முழுமையாக சார்ஜ் செய்ய சுமார் நான்கு மணி நேரம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதன் முன்பக்க ஏப்ரனில் ஹெட்லைட் மற்றும் டர்ன் இண்டிகேட்டர்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் இதில் LED DRL-களும் உள்ளன. இது ஒரு தட்டையான ஃப்ளோர் போர்டு மற்றும் நீளமான ஒற்றை இருக்கையையும் கொண்டுள்ளது.</p><p>இந்த ஸ்கூட்டரில், ஹோண்டா ரோட்சின்க் இணைப்பு மற்றும் படிப்படியான வழிசெலுத்தலை ஆதரிக்கும் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது.</p><p>இந்த QC3 ஸ்கூட்டர் அலாய் வீல்களில் இயங்குகிறது. மேலும் இதில் டெலஸ்கோபிக் முன்பக்க ஃபோர்க்குகள், இரட்டைப் பின்பக்க ஷாக் அப்சார்பர்கள் மற்றும் முன்பக்க டிஸ்க் பிரேக் ஆகியவை இடம்பெற்றுள்ளன.</p><h3><strong>விலை மற்றும் விற்பனை:</strong></h3><p>ஹோண்டா நிறுவனம் தனது சந்தை அறிமுகத்திற்கு நெருங்கிய நேரத்தில், வெளியீட்டு கால அட்டவணை மற்றும் விலை நிர்ணயம் ஆகியவற்றை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதலமைச்சர் அறை - அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-ministers-office-shifting-to-namakkal-kavignar-maligai-official-government-announcement</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-ministers-office-shifting-to-namakkal-kavignar-maligai-official-government-announcement#comments</comments><guid isPermaLink="false">ac67d8d3-82b5-4b9e-b829-ec119b8621f3</guid><pubDate>Mon, 27 Jul 2026 16:16:03 +0000</pubDate><atom:updated>2026-07-27T16:16:03.271Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>vijay,முதலமைச்சர் விஜய்,St George building,Namakkal Kavignar Maligai,நாமக்கல் கவிஞர் மாளிகை,புனித ஜார்ஜ் கோட்டை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/6kuaiels/New-Project-2026-07-27T214533.749.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதலமைச்சர் அறை - அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/6kuaiels/New-Project-2026-07-27T214533.749.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்திற்கு மாற உள்ளதாக தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. </p><p>முதலமைச்சர், முதலமைச்சரின் செயலாளர்கள், ஆலோசகர்களின் அறை 10வது மாடிக்கு மாறுகிறது என்றும், 10வது மாடியில் உள்ள செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையின் பல்வேறு பிரிவுகள் கலைவாணர் அரங்கிற்கு மாற்றப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தற்போதைய பிரதான கட்டிடத்தில் நிலவும் கடுமையான இடப் பற்றாக்குறை காரணமாக இந்த மாறுதல் நடைபெறுகிறது. </p><p>ஆனால் அரசியல் வட்டாரத்தில், தற்போதைய அறை வாஸ்துபடி இல்லை என்றும், ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க உயரமான இடத்தில் அமர வேண்டும் என்ற ஜோதிடரின் ஆலோசனையும் இதற்குக் காரணம் எனப் பரவலாகப் பேசப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>வருவாயை பெருக்க தமிழக அரசு குழு அமைப்பு: 3 மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/montek-singh-led-committee-to-identify-new-revenue-sources-for-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/montek-singh-led-committee-to-identify-new-revenue-sources-for-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">7964c801-77f7-432c-8b4e-30b00670d610</guid><pubDate>Mon, 27 Jul 2026 16:10:18 +0000</pubDate><atom:updated>2026-07-27T16:10:18.875Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திட்டக்குழு,montek singh ahluwalia,தமிழ்நாடு வருவாய்,Planning commission,tamilnadu income,மான்டேக் சிங் அலுவாலியா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/oghofcx9/Untitled-design-5.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tamil Nadu Govt forms Montague Singh Ahluwalia panel to identify new income sources]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/oghofcx9/Untitled-design-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டின் மாநில வருவாயை பெருக்குவதற்காக, மான்டேக் சிங் அலுவாலியா தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.</p><p>பொருளாதார நிபுணரான மான்டேக் சிங் அலுவாலியா, மத்திய திட்டக்குழுவின் முன்னாள் தலைவராக செயல்பட்டு வந்தார். </p><p>தமிழ்நாடு பட்ஜெட்டின் நிதி நிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5 அன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.</p><p>இதையடுத்து தமிழ்நாடு அரசின் வருவாயை பெருக்கும் குழுவின் தலைவராக மான்டேக் சிங் நியமிக்கட்டுள்ளார். </p><p>இவர் தலைமையிலான குழுவினர்கள், மாநிலத்தில் வருவாய் ஆதாரங்களை பெருக்க, வழிமுறைகளை ஆராய்ந்து தமிழக அரசுக்கு பரிந்துரைகளை வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>மான்டேக் சிங் தலைமையிலான குழு, வரி மற்றும் வரியில்லா வருவாயை அதிகரிக்க கொள்கை மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களை அரசுக்கு வழங்க உள்ளது.</p><p>மேலும் மாநிலத்திற்கு தேவையான புதிய வருவாய் ஆதாரங்களை அடையாளம் காணுதல் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ள உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இந்த குழு, தமிழ்நாடு அரசிடம் மூன்று மாத காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-27-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-27-july-2026#comments</comments><guid isPermaLink="false">8b4780d9-1157-4420-b1d3-5493e3a0aec3</guid><pubDate>Mon, 27 Jul 2026 04:28:11 +0000</pubDate><atom:updated>2026-07-27T16:06:26.523Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/po8rkawb/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/po8rkawb/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-mariya-wilson-says-a-list-of-dmks-acts-of-corruption-will-be-released-during-the-upcoming-budget-session">நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் தி.மு.க. ஊழல் பட்டியல் வெளியாகும்- அமைச்சர் மரிய வில்சன்</a></p><p>* முதலமைச்சராக விஜய் பதவியேற்ற போதே, ஊழல் இல்லாத வெளிப்படைத்தன்மையுடன் கூடிய அரசாக இருக்கும் என்று உறுதியளித்தார்.</p><p>* '100 சதவீதம் மக்களுக்கு நன்மை அளிக்க கூடிய பட்ஜெட்டாக த.வெ.க. அரசின் பட்ஜெட் இருக்கும்' என்று தெரிவித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/plans-for-womens-premier-league-cricket-in-tamil-nadu" rel="nofollow">தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு முதல் 'பெண்கள் பிரீமியர் லீக்' போட்டி?</a></p><p>* தமிழ்நாட்டிற்கு மேலும் ஒரு சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கும் திட்டம் நீண்ட காலமாக உள்ளது.</p><p>* போட்டியுடன் பெண்களுக்கான இரண்டு கண்காட்சி போட்டி நடத்தப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/seattle-food-festival-shooting-two-killed-five-injured-at-space-needle-event">அமெரிக்கா: உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச்சூடு - 2 பேர் பலி - ஐவர் காயம்</a></p><p>*தப்பிக்கும் முயற்சியில், மக்கள் ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டபடி சென்றதால் பலர் கீழே விழுந்தது பதிவாகியுள்ளது.</p><p>*இருவர் கைது என சியாட்டில் நகர மேயர் கேட்டி வில்சன் தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-ban-student-assault-row-dmk-congress-push-for-heated-debate-in-parliament">நீட் தேர்வு தடை, மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து விவாதிக்க தி.மு.க நோட்டீஸ்</a></p><p>*தொடர்ச்சியான தற்கொலைகள் குறித்து விவாதிக்க வேண்டும்</p><p>* கூட்டத்தொடரின் இரண்டாம் கட்டம் இன்று தொடங்கி வரும் ஆகஸ்ட் 2 வரை நடைபெற உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-27-07-2026">GOLD PRICE TODAY: வார தொடக்கத்திலேயே தங்கப் பிரியர்களுக்கு அதிர்ச்சி: அதிரடியாக உயர்ந்த விலை!</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.13,370-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kavin-first-death-anniversary-minister-vanni-arasu-meets-family">கவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் - குடும்பத்தினரை சந்தித்து  அமைச்சர் வன்னி அரசு ஆறுதல்</a></p><p>* காதல் விவகாரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 27-ந்தேதி நெல்லையில் படுகொலை செய்யப்பட்டார். </p><p>* கவினின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.</p>  <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/abdul-kalam-memorial-day-11th-death-anniversary-collector-and-annamalai-pay-tribute">11-ம் ஆண்டு நினைவு நாள் - அப்துல் கலாம் நினைவிடத்தில் கலெக்டர், அண்ணாமலை மரியாதை</a></p><p>* ஏபிஜே அப்துல் கலாம் நினைவை போற்றும் வகையில், மத்திய அரசு பல கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம் அமைத்தது. </p><p>* பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் திரண்டு வந்து  அப்துல்கலாம் சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். </p> <p><a href="https://www.maalaimalar.com/sports/hattrick-gold-for-india-brings-immense-joy-mirabai-chanu" rel="nofollow">இந்தியாவுக்காக ‘ஹாட்ரிக்’ தங்கம் வென்றது மிகுந்த மகிழ்ச்சி- மீராபாய் சானு</a></p><p>* நான் 48 கிலோ எடை பிரிவில் போட்டியிடும் போது அதில் கடினமாக இருக்கிறது. </p><p>* நான் 3 நாட்களாக தண்ணீர் கூட குடிக்கவில்லை. </p><p><a href="https://www.maalaimalar.com/sports/what-events-will-india-participate-in-at-the-commonwealth-games-today" rel="nofollow">காமன்வெல்த் விளையாட்டில் இன்று இந்தியா பங்கேற்கும் போட்டிகள் எவை?</a></p><p>* ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டம் முதல் சுற்று - குரிந்தர்விர் சிங். </p><p>* ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் தகுதிச் சுற்று, (பி பிரிவு)-லோகேஷ் சத்யநாதன். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/parliament-disruption-both-houses-adjourned-as-opposition-demands-debate-on-neet-leak-and-student-assault">தர்மேந்திர பிரதானுக்கு ராஜ வரவேற்பு.. மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளி - அவைகள் ஒத்திவைப்பு</a></p><p>*கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகிய தர்மேந்திர பிரதான், மக்களவை எம்.பி.யாக இன்று அவைக்கு வருகை புரிந்தார்.</p><p>*அவையின் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளை ஒத்திவைத்து இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/11th-death-anniversary-of-peoples-president-dr-apj-abdul-kalam">"மக்கள் ஜனாதிபதி" டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 11-ம் ஆண்டு நினைவு அஞ்சலி!</a></p><p>* இராமேஸ்வரத்தில் பிறந்த எளிய செய்தித்தாள் விற்பனையாளர் மகன்</p><p>* மக்களின் ஜனாதிபதி, மாணவர்களுக்கு கனவு காண கற்றுக்கொடுத்தவர்</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-congratulates-raja-muthupandi-on-commonwealth-games-silver-medal" rel="nofollow">காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம்: தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து</a></p><p>* தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக 30 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.</p><p>* ராஜா முத்துப்பாண்டியின் வெற்றி, இளைஞர்களுக்கு புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கட்டும்.  </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/supreme-court-slams-excessive-police-force-on-peaceful-delhi-student-march">போராட்டம் நடத்தினாலே தடியடியா? மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்</a><br><br>*போராட்டம் என்பது வன்முறை என்று அர்த்தமாகாது.</p><p>*தாக்குதல் குறித்த மனுக்கள் மீதான விசாரணையில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/tamil-nadu-weightlifter-raja-muthupandi-brings-pride-to-india" rel="nofollow">இந்தியாவிற்கு பெருமை சேர்த்த தமிழக வீரர்..!- யார் இந்த ராஜா முத்துப்பாண்டி?</a></p><p>* ராஜா தனது பள்ளி காலத்தில் இருந்தே பளுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்று வந்துள்ளார்.</p><p>* 2018-ம் ஆண்டில் முதல் முறையாக காமன்வெல்த் போட்டியில் பங்கேற்று 6-வது இடம் பிடித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anticipatory-bail-for-person-who-watched-jana-nayagan-online">இணையத்தில் 'ஜன நாயகன்' பார்த்தவருக்கு முன்ஜாமின்</a></p><p>* படம் கசிந்த விவகாரத்தில் மூளையாக செயல்பட்ட 8 முதல் 21 வரையிலான குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்</p><p>* வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் சிலர் ஏற்கனவே சட்டப்படியான ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/desilting-of-water-bodies-minister-anand-conducts-field-inspection-after-arriving-on-a-motorcycle">நீர்நிலைகள் தூர்வாரும் பணி - மோட்டார் சைக்கிளில் வந்து கள ஆய்வு செய்த அமைச்சர் ஆனந்த் </a></p><p>* கோயம்பேடு பகுதியில் ஆய்வு செய்வதற்காக அமைச்சர் ஆனந்த் தனது காரில் சென்றார்.</p><p>* கோயம்பேடு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-modi-government-must-withdraw-highway-toll-robbery"> சுங்கக் கட்டண கொள்ளையை மோடி அரசு திரும்பப் பெற வேண்டும் - மாணிக்கம் தாகூர்</a></p><p>* கடந்த நான்கு மாதங்களில் மூன்றாவது முறையாக கட்டணம் சுங்கக் கட்டணம் உயர்ந்துள்ளது.</p><p>* தமிழ்நாட்டில் இருந்து ஆண்டுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் சுங்கக் கட்டணம் வசூலிக்கிறது மோடி அரசு. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-says-law-against-honor-killing-soon">ஆணவக்கொலைக்கு எதிராக விரைவில் சட்டம் - அமைச்சர் வன்னி அரசு</a></p><p>* சாதிய ஆணவப்படுகொலைக்கு எதிரான சட்டம் தொடர்பாக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.</p><p>* பிரதமர் மோடி அமைத்துள்ள உயர்மட்ட குழுவே ஒரு ஏமாற்ற வேலைதான். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-government-introduces-strict-exam-malpractice-prevention-bill-in-parliament">கடும் அமளிக்கு மத்தியில் 'தேர்வு முறைகேடுகளை தடுக்கும் மசோதா' மக்களவையில் தாக்கல்.. அம்சங்கள் என்ன? </a></p><p>பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்த மசோதா 2026' அவையில் தாக்கல் செய்யப்பட்டது.</p><p>*சட்ட விதிமுறைகளை கடுமையாகும் வகையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/dr-apj-abdul-kalam-11th-death-anniversary-leaders-pay-tribute">"ஏவுகணை நாயகனின் கனவுகள் இன்றும் இளைஞர்களுக்கு வழிகாட்டுகின்றன" - கலாமுக்கு தலைவர்கள் புகழஞ்சலி!</a></p><p>* தலைவர்கள் கலாமின் எளிமை, தேசபக்தி, அறிவியல் பங்களிப்பை புகழ்ந்தனர்</p><p>* இளைஞர்களுக்கு கனவு, புதுமை வழிகாட்டியாக கலாம் இன்றும் வாழ்கிறார்</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/e20-ethanol-row-nitin-gadkari-moves-bombay-high-court">E20 எத்தனால் விவகாரம்: பொய் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில் நிதின் கட்கரி வழக்கு!... </a></p><p>*சமீபகாலமாக யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் E20 பெட்ரோல் பயன்பாட்டினால் வாகனங்களின் என்ஜின் பழுதடைவதாகவும், மைலேஜ் குறைவதாகவும் வீடியோக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. </p><p>*தனது குடும்பத்தினரின் வணிக வருவாயில் எத்தனால் உற்பத்தி மூலம் கிடைக்கும் பங்கு 10 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/case-against-mk-stalin-for-allegedly-concealing-information-in-election-nomination-papers-hearing-adjourned">தேர்தல் வேட்புமனுவில் தகவல்களை மறைத்ததாக மு.க.ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு - விசாரணை ஒத்திவைப்பு</a></p><p>* வேட்புமனுவில் அறக்கட்டளை குறித்த விவரங்களை சமர்ப்பிக்க அவசியமில்லை என மு.க.ஸ்டாலின் தரப்பில் வாதிடப்பட்டது.</p><p>* ஆவணங்களை மொழிபெயர்த்து தாக்கல் செய்ய மனுதாரருக்கு  ஐகோர்ட் உத்தரவு.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-shooting-bihar-cop-suspended-for-firing-ak-47-at-students">VIDEO: பீகாரில் போராடிய மாணவர்களை ஏகே 47 துப்பாக்கியால் சுட்ட காவலர் சஸ்பெண்டு!</a></p><p>*குறைந்தபட்சம் 4 முதல் 5 சுற்றுகள் வரை சுடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>*15 வயது சிறுவன் முகமது ஆரிப் கழுத்தில் குண்டடிபட்ட நிலையில், அறுவை சிகிச்சை மூலம் தோட்டா அகற்றப்பட்டு தற்போது நலமாக உள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/agriculture-budget-to-feature-key-announcements-minister-vinod" rel="nofollow">வேளாண் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இடம்பெறும்- அமைச்சர் வினோத்</a></p><p>* விவசாயிகள்   கருத்துகளின்  அடிப்படையில்  வேளாண் பட்ஜெட்  தயாரிக்கப்பட உள்ளது.</p><p>* குளிர்சாதன கிடங்குகள், நெல் சேகரிப்பு கிடங்குகள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbil-mahesh-poyyamozhi-comfort-young-woman-sobs-and-wails-against-reels-culture">‘ரீல்ஸ்’ கலாச்சாரத்திற்கு எதிராக கண்ணீர் விட்டு கதறி அழுத இளம்பெண்- அன்பில்மகேஷ் பொய்யாமொழி ஆறுதல்</a></p><p>* தமிழ் சங்கங்கள் தாங்கிப்பிடித்த நமது பாரம்பரிய தமிழ் சமூகம், வெறும் 'ரீல்ஸ்' மோகத்திற்காக இப்படி தரம் தாழ்ந்து போகலாமா?" என  உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார். </p><p>* சமூக ஊடக மோகத்தால் தடம் மாறும் அந்த இளைஞர்களும் நமது பிள்ளைகள் தான் என்றார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-visit-to-karnataka-duraimurugan-comments">முதலமைச்சர் கர்நாடகா பயணம்: உச்சநீதிமன்ற உத்தரவு நம்மிடம் இருக்கும்போது நாம் ஏன் கெஞ்ச வேண்டும் - துரைமுருகன்</a></p><p>* எம்ஜிஆர் கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்திய காலம் என்பது நீதிமன்ற உத்தரவு இல்லாத காலம்.</p><p>* மேகதாது, காவிரி நீர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை கூட்டி ஆலோசனை நடத்தி இருக்க வேண்டும்.</p>  <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-moderate-rain-in-tamil-nadu-until-the-2nd">தமிழகத்தில் வருகிற 2-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு</a></p><p>* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். </p><p>* மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-stalin-says-dmk-never-fears-sofa-government-arrests" rel="nofollow">சோஃபா அரசின் கைது நடவடிக்கைகளுக்கு திமுக ஒருபோதும் அஞ்சாது..!- உதயநிதி ஸ்டாலின்</a></p><p>* சட்ட நடவடிக்கைகளை எடுத்துக்கூறி ஆறுதல் தெரிவித்தோம்.</p><p>* ஆட்சியாளர்கள், மக்கள் மன்றத்திலும் சரிவைச் சந்திப்பது உறுதி.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/case-on-fetal-gender-reveal-health-officials-to-requestion-youtuber-irfan">கருவின் பாலினம் அறிவித்த வழக்கு: யூடியூபர் இர்ஃபானை மீண்டும் விசாரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு!...</a></p><p>*கடந்த திமுக ஆட்சியில் வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்டதால் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. </p><p>*மருத்துவப் பயிற்சி பெறாத ஒருவர் அறுவை சிகிச்சை அரங்கிற்குள் நுழைந்து மருத்துவ நடைமுறையைச் செய்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/government-jobs-granted-to-the-families-of-those-who-died-in-the-karur-stampede-have-been-cancelled">கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசுப்பணி ரத்து!</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/vvs-laxman-urges-vaibhav-sooryavanshi-to-improve-fitness-after-first-player-of-the-series-win">வைபவ் சூர்யவன்ஷி இதை கண்டிப்பாக செய்யனும்: லக்ஷ்மண் அட்வைஸ்</a></p><p>* வைபவ் சூர்யவன்ஷி மிகவும் இளம் வயதுடையவர். விளையாட்டின் அனைத்து அம்சங்களிலும் தன்னை மேம்படுத்திக்கொள்ள அவரே விரும்புகிறார்.</p><p>* டீப் ஸ்கொயர் லெக் (deep square leg) பகுதியிலிருந்து ஓடிவந்து டைவிங் கேட்ச் (diving catch) பிடிக்க முயன்றபோது அவருக்கு காயம் ஏற்பட்ட நிலையிலும், அவர் தொடர்ந்து களத்தில் இருக்கவே விரும்பினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cpi-urges-immediate-approval-for-coimbatore-madurai-metro-projects">கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு CPI வலியுறுத்தல்!...</a> </p><p>*தமிழகத்தில் உள்ள இரண்டு முக்கிய நகரங்களுக்கு இந்த அனுமதி மறுத்திருப்பது என்பது ஒன்றிய அரசின் பாரபட்ச போக்காகும்.</p><p>*தமிழ்நாட்டுக்கு எதிரான இத்தகைய போக்கை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/devotee-death-issue-key-guidelines-for-thiruvannamalai-idukku-temple-visit">பக்தர் உயிரிழந்த விவகாரம்: திருவண்ணாமலை இடுக்கு கோயிலுக்கு செல்ல முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!... </a></p><p>*பெரும்பாலான கிரிவல பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று இடுக்கு பிள்ளையார் கோவில் குகையில் நுழைந்து வெளியே வழிபட்டு செல்கின்றனர்.</p><p>*பக்தர்கள் அனைவரும் கோயில் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பிற்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/if-cases-not-withdrawn-protests-will-return-cockroach-janata-party-deadline-to-centre">வழக்குகள் வாபஸ் பெறப்படாவிட்டால் மீண்டும் போராட்டம்: மத்திய அரசுக்கு 'காக்ரோச் ஜனதா கட்சி' கெடு!... </a></p><p>*டெல்லி ஜந்தர் மந்தரில் 37 நாட்களாக நடைபெற்று வந்த மாணவர்கள் போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்</p><p>*போராட்டத்தைக் கைவிட்ட போதிலும், மத்திய அரசு மற்றும் காவல்துறை அளித்த வாக்குறுதிகளை மீறி வருவதாக CJP குற்றம் சாட்டியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/karnataka-does-not-need-to-obtain-tamil-nadus-permission-to-build-the-mekedatu-dam-central-government">மேகதாது அணைகட்ட கர்நாடகா தமிழ்நாட்டின் அனுமதியை பெறவேண்டிய அவசியமில்லை - மத்திய அரசு!</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/gyaneshwari-yadav-won-silver-weightlifting-women-53-kg-commonwealth-games">காமன்வெல்த் போட்டி: இந்திய வீராங்கனை ஞானேஷ்வரி யாதவ் வெள்ளிப் பதக்கம் வென்றார்</a></p><p>* நைஜீரியா வீராங்கனை Snatch முறையில் 93 கிலோவும், Clean and Jerk முறையில் 113 கிலோவும் என மொத்தமாக 206 கிலோ பளு தூக்கி முதல் இடம் பிடித்தார்.</p><p>* கனடா வீராங்கனை 178 (83+95) கிலோ தூக்கி வெண்கல பதக்கம் வென்றார்.</p> ]]></content:encoded></item><item><title>விருதுநகர் பட்டாசு வெடிவிபத்து - உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/virudhunagar-firecracker-accident-rs-4-lakh-relief-announced-for-the-families-of-the-deceased</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/virudhunagar-firecracker-accident-rs-4-lakh-relief-announced-for-the-families-of-the-deceased#comments</comments><guid isPermaLink="false">68164548-be22-457c-aad8-5c8120a51d23</guid><pubDate>Mon, 27 Jul 2026 15:42:16 +0000</pubDate><atom:updated>2026-07-27T15:42:16.989Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>relief,நிவாரணம்,Virudhunagar Firecracker Accident,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,விருதுநகர் பட்டாசு வெடிவிபத்து</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/utj3z9rb/New-Project-2026-07-27T211151.390.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விருதுநகர் பட்டாசு வெடிவிபத்து - உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/utj3z9rb/New-Project-2026-07-27T211151.390.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர் மாவட்டம் செங்கமலப்பட்டி பகுதியில் இயங்கிவந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் விஜய் ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;</p><p>”விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம் செங்கமலப்பட்டி பகுதியில் நேற்று (26.07.2026) காலை தனியாருக்குச் சொந்தமான இடத்தில் முறையான அனுமதி பெறாமல் இயங்கிவந்த பட்டாசு ஆலையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ராம்பிரகாஷ்(வயது 32) த/பெ ரவீந்திரன், </p><p>ராமச்சந்திரன் (வயது 40). த/பெ. ரவீந்திரன். இன்னாசிமுத்து (வயது 44) த/பெ. சிங்கராஜ் மற்றும் நாராணாப்புரத்தைச் சேர்ந்த  பாண்டித்துரை (35) த/பெ. மாரியப்பன் ஆகியோர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகவும் வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.</p><p>இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் நான்கு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.</p><p>மேலும், முறையான அனுமதி பெறாமல் சட்டத்திற்குப் புறம்பாக பட்டாசு ஆலைகள் நடத்தப்படுகின்றனவா என்பதனை ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>மேகதாது அணை விவகாரம்: மத்திய அமைச்சர் உள்ளிட்ட கர்நாடக எம்.பி.க்களுடன் டி.கே. சிவகுமார் ஆலோசனை</title><link>https://www.maalaimalar.com/news/national/union-education-minister-pralhad-joshi-joins-dk-shivakumar-for-delhi-talks-on-mekedatu-dam</link><comments>https://www.maalaimalar.com/news/national/union-education-minister-pralhad-joshi-joins-dk-shivakumar-for-delhi-talks-on-mekedatu-dam#comments</comments><guid isPermaLink="false">0bc05179-1710-4433-bf39-057f9e08f309</guid><pubDate>Mon, 27 Jul 2026 15:28:36 +0000</pubDate><atom:updated>2026-07-27T15:28:36.729Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>mekedatu dam,மேகதாது அணை,டிகே சிவக்குமார்,TK Sivakumar,kaveri,காவேரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/jgqd8lmk/Untitled-design-3.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DK Shivakumar and Pralhad Joshi Talks about Mekedatu Dam ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/jgqd8lmk/Untitled-design-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேகதாது அணை விவகாரம் தொடர்பாக டெல்லியில் மத்திய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷியுடன், கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார்.</p><h3><strong>மேகதாது அணை விவகாரம்:</strong></h3><p>கர்நாடகா மாநிலத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்ட அம்மாநில அரசு தீவிரமாக முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.</p><p>கர்நாடகா மாநிலத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்டுவதற்கு, அம்மாநில அரசு தீவிரமாக முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.</p><p>தமிழகத்திற்கு திறக்க வேண்டிய காவிரி நீரை, கர்நாடக அரசு திறந்துவிடாமல் இருந்து வருகிறது. கர்நாடகவில் போதுமான மழை பெய்யாமல் வறட்சி நிலவி வருவதால், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.</p><p>இதையடுத்து பெங்களூருவில் டி.கே. சிவக்குமாரை தமிழக முதல்வர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் கலந்துகொள்ள கூடாது என தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த அணை கட்டுவதற்கு தமிழ்நாடு அரசும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.</p><p>இந்நிலையில் டெல்லியில் கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தலைமையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக மாநில அனைத்து கட்சிகளின் எம்.பி.க்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.</p><p><strong>டெல்லியில் ஆலோசனை கூட்டம்:</strong></p><p>இந்த ஆலோசனை கூட்டத்தில் கர்நாடக துணை முதலமைச்சர் பரமேஸ்வர், அமைச்சர்கள் ஜார்ஜ், ஈஸ்வர் காந்த்ரே, சரண் பிரகாஷ், கிருஷ்ண பைரே கவுடாம், சதீஷ் ஜார்கிஹோலி, ராம லிங்கரெட்டி ஆகியோர்களும் பங்கேற்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.</p><p>இவர்களுடன் கர்நாடகவை சேர்ந்த மத்திய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி மற்றும் மத்திய இணை அமைச்சர் ஷோபா உள்ளிட்டோரும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>பெண்களே...ஒவ்வொரு மாதமும் உங்கள் உடலில் என்ன நடக்கிறது தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/health/generalmedicine/do-you-know-what-happens-in-your-body-every-month</link><comments>https://www.maalaimalar.com/health/generalmedicine/do-you-know-what-happens-in-your-body-every-month#comments</comments><guid isPermaLink="false">99169102-c568-44a5-8a70-d5f19f72ec52</guid><pubDate>Mon, 27 Jul 2026 15:16:11 +0000</pubDate><atom:updated>2026-07-27T15:16:11.366Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Health,ஆரோக்கியம்,HealthTips,மாதவிடாய் சுழற்சி,உடல்நலம்,மாதவிடாய் சுழற்சி மாற்றம்,Cycle Syncing,Menstrual Phase</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/hiwi7xbo/fff.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Cycle Syncing ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/hiwi7xbo/fff.jpg?w=280" width="280"></media:thumbnail><category>பொது மருத்துவம் (General Medicine)</category><category>பெண்கள் உலகம் (Women)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெண்களின் உடல் ஒவ்வொரு மாதமும் இயற்கையாகவே ஒரு அற்புதமான ஹார்மோன் சுழற்சியை கடந்து செல்கிறது. இந்தச் சுழற்சி வெறும் மாதவிடாய் நிகழ்வாக மட்டும் இல்லாமல், உடலின் சக்தி, மனநிலை, உணர்வுகள், பசி, தூக்கம், கவனம், இனப்பெருக்க ஆரோக்கியம் என பல அம்சங்களை நிர்ணயிக்கிறது.</p><p>இந்த இயற்கையான மாற்றங்களை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்வதே Cycle Syncing எனப்படுகிறது. இது பெண்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு இயற்கையான அணுகுமுறையாகக் கருதப்படுகிறது.</p><h2><strong>Cycle Syncing என்றால் என்ன?</strong></h2><p>Cycle Syncing என்பது மாதவிடாய் சுழற்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களுக்கு ஏற்ப உணவுமுறை, உடற்பயிற்சி, வேலைத் திட்டம், ஓய்வு மற்றும் தூக்கப் பழக்கங்களை மாற்றிக் கொள்வதாகும். ஒவ்வொரு நாளும் உடல் ஒரே அளவு சக்தியுடன் இயங்காது. அந்த மாற்றங்களை மதித்து வாழ்வதே இந்த முறையின் அடிப்படை நோக்கமாகும்.</p><h2><strong>Menstrual Phase-உடலுக்கு ஓய்வு தேவைப்படும் நாட்கள்:</strong></h2><p>மாதவிடாயின் முதல் நாளிலிருந்து பொதுவாக ஐந்து நாட்கள் வரை நீடிக்கும் இந்தக் கட்டத்தில், ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரோன் ஹார்மோன்களின் அளவு குறைவாக இருக்கும். இதனால் சோர்வு, வயிற்றுவலி, முதுகுவலி, உணர்ச்சி மாற்றங்கள் போன்றவை ஏற்படலாம். இந்த நாட்களில் உடலுக்கு அதிக ஓய்வு அளிப்பது மிகவும் அவசியம். </p><figure><img alt="Menstrual Phase" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/xrxgznzx/aa.jpg" /></figure><p>சூடான சூப், கீரை வகைகள், இரும்புச்சத்து நிறைந்த உணவுகள், பழங்கள் மற்றும் புரதம் நிறைந்த உணவுகள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்கும். அதிக தண்ணீர் குடிப்பது உடல் நீர்ச்சத்தை சீராக வைத்திருக்க உதவும். கடுமையான உடற்பயிற்சிகளைத் தவிர்த்து, மெதுவான நடைப்பயிற்சி, யோகா மற்றும் தியானம் போன்றவை உடலையும் மனதையும் அமைதிப்படுத்தும்.</p><h2><strong>Follicular Phase-புதிய தொடக்கங்களுக்கான நேரம்:</strong></h2><p>மாதவிடாய் முடிந்த பிறகு தொடங்கும் இந்தக் கட்டத்தில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் அளவு மெதுவாக உயரத் தொடங்குகிறது. இதனால் உடலில் புத்துணர்ச்சி அதிகரிக்கும். மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும், வேலைகளில் கவனம் அதிகரிக்கும், கற்றுக்கொள்ளும் திறனும் மேம்படும்.</p><p>இந்த காலத்தில் காய்கறிகள், முழுத் தானியங்கள், பழங்கள், விதைகள், பருப்பு வகைகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்வது நல்லது. உடற்பயிற்சியில் ஓட்டம், சைக்கிள், நடனம் அல்லது வலிமையை அதிகரிக்கும் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய திட்டங்களை தொடங்கவும், முக்கிய முடிவுகளை எடுக்கவும் இந்தக் காலம் ஏற்றதாகக் கருதப்படுகிறது.</p><h2><strong>Ovulation Phase-உடல் மற்றும் மனம் உச்சத்தில் இருக்கும் நேரம்:</strong></h2><p>பொதுவாக மாதவிடாய் சுழற்சியின் நடுப்பகுதியில் ஏற்படும் Ovulation கட்டத்தில், ஈஸ்ட்ரோஜன் அதிகபட்ச அளவை அடைகிறது. இந்த நேரத்தில் உடலின் சக்தி, தன்னம்பிக்கை, சமூக தொடர்பு மற்றும் கவனத்திறன் அதிகமாக இருக்கும். இந்தக் கட்டத்தில் புரதம் நிறைந்த உணவுகள், முட்டை, மீன், பச்சை இலைக்காய்கறிகள், பழங்கள் மற்றும் போதுமான தண்ணீர் ஆகியவற்றை உணவில் சேர்ப்பது நல்லது.</p><p>அதிக ஆற்றல் இருப்பதால் தீவிர உடற்பயிற்சி, விளையாட்டு மற்றும் முக்கியமான வேலைகளை மேற்கொள்ளலாம். சமூக நிகழ்வுகள் மற்றும் குழு செயல்பாடுகளில் ஆர்வத்துடன் பங்கேற்கவும் இந்தக் காலம் மிகவும் பொருத்தமானது.</p><figure><img alt="Luteal Phase" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/55m97kp2/tt.jpg" /></figure><h2><strong>Luteal Phase-உடலை மெதுவாக அமைதிப்படுத்தும் கட்டம்:</strong></h2><p>Ovulation முடிந்த பிறகு தொடங்கும் இந்தக் கட்டத்தில் புரோஜெஸ்டிரோன் ஹார்மோனின் அளவு அதிகரிக்கும். சில பெண்களுக்கு இந்த நேரத்தில் சோர்வு, வீக்கம், இனிப்பு உணவுகளின் மீது ஆர்வம், மனநிலை மாற்றங்கள் மற்றும் PMS அறிகுறிகள் தோன்றக்கூடும்.</p><p>இந்த நாட்களில் ஆரோக்கியமான கொழுப்புச் சத்து கொண்ட உணவுகள், நட்ஸ், விதைகள், வாழைப்பழம், தயிர், முழுத் தானியங்கள் மற்றும் மெக்னீசியம் நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்வது உடலுக்கு உதவும். போதுமான தூக்கம், மன அழுத்தத்தைக் குறைக்கும் தியானம், மெதுவான யோகா மற்றும் ஓய்வு ஆகியவை இந்தக் கட்டத்தில் மிகவும் முக்கியமானவை.</p><p>ஹார்மோன் சுழற்சிக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வது உடலின் இயற்கையான செயல்பாடுகளை மதிப்பதாகும். இதன் மூலம் உடல் சோர்வு குறையலாம், மனநிலை சீராக இருக்கலாம், வேலைத்திறன் மேம்படலாம், நல்ல தூக்கம் கிடைக்கலாம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் நேர்மறையான மாற்றங்களை உணர முடியும். </p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/ls41kvgn/menstu.jpg" /></figure><p>இருப்பினும், ஒவ்வொரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சியும் வேறுபட்டதாக இருக்கும். எனவே, தங்களுடைய உடலின் தேவைகளை கவனித்து அதற்கேற்ற வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது சிறந்தது.</p><p>ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியான சக்தி அல்லது மனநிலை இருக்க வேண்டிய அவசியமில்லை. அது உங்கள் உடலின் இயற்கையான ஹார்மோன் மாற்றங்களின் ஒரு பகுதியாகும். அந்த மாற்றங்களை ஏற்றுக்கொண்டு, உடலுக்கு தேவையான உணவு, ஓய்வு, உடற்பயிற்சி மற்றும் பராமரிப்பை வழங்குவதுதான் உண்மையான Self-Care. உங்கள் உடலை புரிந்து கொண்டு அதனுடன் இணைந்து வாழும்போது, ஆரோக்கியமான வாழ்க்கையும் மனநிறைவும் இயல்பாகவே உங்களைத் தேடி வரும்.</p>]]></content:encoded></item><item><title>பரோடா வங்கி தரவுகள் டார்க் நெட்டில் கசிவு- பயனர்களின் ஏடிஎம், நெட்பேக்கிங், ஆதார் பதிவேற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/national/bank-of-baroda-data-leak-darknet-atm-netbanking-aadhaar</link><comments>https://www.maalaimalar.com/news/national/bank-of-baroda-data-leak-darknet-atm-netbanking-aadhaar#comments</comments><guid isPermaLink="false">0a8c805a-f9b4-4644-a1fd-76451dd2fec4</guid><pubDate>Mon, 27 Jul 2026 15:03:34 +0000</pubDate><atom:updated>2026-07-27T15:03:34.978Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>RBI,Bank of Baroda,இந்திய ரிசர்வ் வங்கி,பேங்க் ஆஃப் பரோடா,darknet,டார்க் நெட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/928904ln/Untitled-design-2.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bank of Baroda Data Leak: Customer ATM, netbanking and Aadhaar details on dark net]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/928904ln/Untitled-design-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h3><strong>பேங்க் ஆஃப் பரோடா தரவுகள் கசிவு:</strong></h3><p>பேங்க் ஆஃப் பரோடா தேசிய வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களின் சுமார் 1,000 ஜிபி டேடா கொண்ட தரவுகள், டார்க் நெட்டில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதாக டார்க் வெப் இன்டெலிஜென்ஸ் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.  </p><p>குஜராத்தை தலைமையிடமாக கொண்டு கடந்த 1908-ஆம் ஆண்டு, இந்தியாவின் இரண்டாவது பெரிய தேசிய வங்கியான பேங்க் ஆஃப் பரோடா ஆரம்பிக்கப்பட்டது.</p><p>இந்த வங்கி நாடு முழுவதும் எட்டாயிரத்திற்கும் அதிகமான கிளைகளை கொண்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தங்களது பணத்தை வசதியாக எடுத்துக்கொள்ளும் வகையில், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஏடிஎம்-களையும் கொண்டுள்ளது.</p><p>கொரோனா பெருந்தொற்றிற்கு பிறகு, பணப்பரிவர்த்தனைகள் பெரும்பாலும் இணையத்தின் மூலமாகவே நடைபெற்று வருகிறது.</p><p>இந்நிலையில் பேங்க் ஆஃப் பரோடா மற்றும் கார்ப்பரேட் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள பயனர்களின் தொலைபேசி எண்கள், ஆதார் எண்கள், நெட்பேங்கிங் பயனர் ஐடிகள், கடன் விண்ணப்பங்கள், ஏடிஎம் தொடர்பான பதிவு விவரங்கள் டார்க்நெட்டில் கசிந்துள்ளன.</p><h3><strong>கேஷ்லெஸ் நிறுவனர் குற்றச்சாட்டு:</strong></h3><p>இதுகுறித்து மென்பொருள் பொறியாளரும், கேஷ்லெஸ் நிறுவனத்தின் நிறுவனருமான ஸ்ரீகாந்த் லட்சுமணன் கூறுகையில், பரோடா வங்கி வாடிக்கையாளர்களின் உண்மையான தகவல்கள் கசிந்துள்ளதாக ஆய்வு செய்து கூறினார்.</p><p>இதுதான் வங்கி கிளை தணிக்கையின் தரம் என்றும் செயற்கை நுண்ணறிவு சைபர் இணையத்தில் உள்ள குறைபாடுகளை சரிசெய்யுமாறும், எக்ஸ் தளத்தில் இந்திய ரிசர்வ் வங்கியை குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>மேலும், இந்திய ரிசர்வ் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் இந்த பிரச்சனையை எக்ஸ் தளத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>இந்த தரவுகள் வெளியான பின்னணியில், தரவு மிரட்டல் மற்றும் ரான்சம்வேர் அச்சுறுத்தல் குழுவான ‘டிரிபிள் எக்ஸ்’ இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>இந்த குறிப்பிட்ட குழு, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தோனேசியாவின் அரசுக்கு சொந்தமான வங்கி ஒன்றின் மீது இணையவழி தாக்குதலில் ஈடுபட்டிருந்தது தெரியவந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>துல்கர் - பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ படத்தின் முதல் பாடல் வெளியானது!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-first-song-from-the-movie-sri-sri-starring-dulquer-and-pooja-hegde-has-been-released</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-first-song-from-the-movie-sri-sri-starring-dulquer-and-pooja-hegde-has-been-released#comments</comments><guid isPermaLink="false">40e66e83-a395-4633-82e5-5d6b2f8c8c2e</guid><pubDate>Mon, 27 Jul 2026 15:02:41 +0000</pubDate><atom:updated>2026-07-27T15:02:41.689Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Pooja Hegde,பூஜா ஹெக்டே,Dulquer Salmaan,துல்கர் சல்மான்,Sri Sri,ஸ்ரீ ஸ்ரீ</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/br5uqjoa/New-Project-2026-07-27T200638.699.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ துல்கர் - பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ படத்தின் முதல் பாடல் வெளியானது!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/br5uqjoa/New-Project-2026-07-27T200638.699.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அறிமுக இயக்குநர் ரவி நேலகுதிடி இயக்கத்தில், துல்கர் நடிக்கும் பான் இந்திய திரைப்படம் ‘ஸ்ரீ ஸ்ரீ’. எஸ்.எல்.வி. சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக, முதல்முறையாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.</p><p>காதல், நகைச்சுவை மற்றும் உணர்வுபூர்வமான தருணங்களை இணைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. குறிப்பாக துல்கர் – பூஜா இருவரின் இயல்பான கெமிஸ்ட்ரி அனைவரையும் கவர்ந்தது.</p><p>காதல் கதையாக உருவாகி உள்ளப் படம், தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான ‘வானே வானே’ பாடல் வெளியாகி உள்ளது.</p><p>படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில், தரன் வரிகளில் உருவாகியுள்ளப் பாடலை நகுல் அபயங்கர் பாடியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>காதல் மெலடியில் ஜி.வி.பிரகாஷ்-கயாடு லோஹர்! &apos;இம்மார்டல்&apos; படத்தின் &apos;She Is My&apos; பாடல் வெளியானது!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/gv-prakash-kayadu-lohar-in-love-melody-immortal-she-is-my-song-released</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/gv-prakash-kayadu-lohar-in-love-melody-immortal-she-is-my-song-released#comments</comments><guid isPermaLink="false">24d34fe8-60c4-4653-add4-7d7d706652b7</guid><pubDate>Mon, 27 Jul 2026 14:45:00 +0000</pubDate><atom:updated>2026-07-27T14:45:00.879Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Kayadu Lohar,கயாடு லோஹர்,gv prakash,ஜி.வி.பிரகாஷ்குமார்,Immortal,இம்மார்டல்,She Is My</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/jk412alb/immmo.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/jk412alb/immmo.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் கயாடு லோஹர் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'இம்மார்டல்' திரைப்படத்தின் 'She Is My' எனும் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/k3T5qoquCso?list=RDk3T5qoquCso"></iframe></figure><h2><strong>இதமான ரொமான்டிக் மெலடி:</strong></h2><p>முன்னதாக வெளியான 'லவ்வு லவ்வு காட்டேரி' என்ற குத்துப் பாடலைத் தொடர்ந்து, தற்போது வெளியாகியுள்ள 'She Is My' பாடல் முற்றிலும் காதலைக் மையமாகக் கொண்ட இதமான லவ் மெலடி பாடலாக உருவாகியுள்ளது. சாம் சி.எஸ்-இன் மெல்லிசையான இசையும், ஜி.வி.பிரகாஷ் கயாடு லோஹரின் கெமிஸ்ட்ரியும் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.</p><h2><strong>பான்-இந்தியா ரிலீஸ்:</strong></h2><p>அருண்குமார் தனசேகரன் பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் இத்திரைப்படம், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பான்-இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது. இப்படத்தின் ஆடியோ உரிமையைத் பிரபல நிறுவனமான 'திங்க் மியூசிக்' கைப்பற்றியுள்ளது.</p><p>ஒரு நவீன அப்பார்ட்மெண்ட்டில் நடக்கும் வித்தியாசமான ஹாரர்-த்ரில்லர் மற்றும் ரொமான்ஸ் பாணியிலான கதைக் களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் ஏற்கெனவே வெளியாகி மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. </p><p>இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவடைந்து, தற்போது இறுதிக்கட்டப் பின் தயாரிப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 'இம்மார்டல்' திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>சாம் சி.எஸ் இசையில் உருவாகியுள்ள இந்த ரொமான்டிக் பாடல், தற்போது யூடியூப் மற்றும் இசைத்தளங்களில் இளைஞர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு ட்ரெண்டாகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் போட்டி: இந்திய வீராங்கனை ஞானேஷ்வரி யாதவ் வெள்ளிப் பதக்கம் வென்றார்</title><link>https://www.maalaimalar.com/sports/gyaneshwari-yadav-won-silver-weightlifting-women-53-kg-commonwealth-games</link><comments>https://www.maalaimalar.com/sports/gyaneshwari-yadav-won-silver-weightlifting-women-53-kg-commonwealth-games#comments</comments><guid isPermaLink="false">41f9fefe-e941-47e6-b00e-4fea09afdde0</guid><pubDate>Mon, 27 Jul 2026 14:38:08 +0000</pubDate><atom:updated>2026-07-27T14:38:08.483Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>காமன்வெல்த் போட்டி,Glasgow,commonwealth game,கிளாஸ்கோ,Gyaneshwari Yadav,ஞானேஷ்வரி யாதவ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/37ud024j/Gyaneshwariyadav.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gyaneshwari Yadav]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/37ud024j/Gyaneshwariyadav.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காமன்வெல்த் போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரவு நடைபெற்ற பளுதூக்குதல் இறுதிச் சுற்றில் பெண்களுக்கான 53 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ஞானேஷ்வரி யாதவ் போட்டியிட்டார்.</p><h2>Snatch முறையில் 88 கிலோ</h2><p>மொத்தம் 10 பேர் கலந்து கொண்டதில் இருவர் முழுமையாக போட்டியை நிறைவு செய்யவில்லை. இந்திய வீராங்கனை ஞானேஷ்வரி யாதவ் Snatch முறையில் 88 கிலோ தூக்கினார். மொத்தம் 3 முறை முயற்சி செய்ய வேண்டும். அதில் எந்த முறை அதிக பளு தூக்குகிறாரோ? அது குறித்துக் கொள்ளப்படும். இவர் முதல் முயற்சியில் 82, 2-வது முயற்சியில் 85, 3-வது முயற்சியில் 88 கிலோ தூக்கினார்.</p><h2>Clean and Jerk முறையில் 111 கிலோ</h2><p>அதன்பின் நடைபெற்ற Clean and Jerk முறையில் 111 கிலோ தூக்கினார். முதல் முயற்சியில் 103, 2-வது முயற்சியில் 107, 3-வது முயற்சியில் 111 என தூக்கினார். இறுதியாக இரண்டையும் சேர்த்து 199 (88+111) கிலோ தூக்கி 2-வது இடம் பிடித்தார்.</p><p>நைஜீரியா வீராங்கனை Snatch முறையில் 93 கிலோவும், Clean and Jerk முறையில் 113 கிலோவும் என மொத்தமாக 206 கிலோ பளு தூக்கி முதல் இடம் பிடித்தார். கனடா வீராங்கனை 178 (83+95) கிலோ தூக்கி வெண்கல பதக்கம் வென்றார்.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது அணைகட்ட கர்நாடகா தமிழ்நாட்டின் அனுமதியை பெறவேண்டிய கட்டாயமில்லை - மத்திய அரசு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/karnataka-does-not-need-to-obtain-tamil-nadus-permission-to-build-the-mekedatu-dam-central-government</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/karnataka-does-not-need-to-obtain-tamil-nadus-permission-to-build-the-mekedatu-dam-central-government#comments</comments><guid isPermaLink="false">c3007898-f7f7-4fca-aa1b-7f8306f31e5e</guid><pubDate>Mon, 27 Jul 2026 14:25:47 +0000</pubDate><atom:updated>2026-07-27T14:25:47.582Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,கர்நாடகா,Karnataka,mekedatu dam,மேகதாது அணை,mekedatu,தமிழ்நாடு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/p23aj9cl/New-Project-2026-07-27T195526.653.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மேகதாது அணைகட்ட கர்நாடகா தமிழ்நாட்டின் அனுமதியை பெறவேண்டிய அவசியமில்லை - மத்திய அரசு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/p23aj9cl/New-Project-2026-07-27T195526.653.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதற்கு, தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையில்லை என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. </p><p>மாநிலங்களவையில் அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் பூஷன் சௌத்ரி, </p><p>“காவிரியின் குறுக்கே எந்தவொரு கட்டுமானப் பணியையும் மேற்கொள்வதற்கு முன்பு தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி போன்ற எந்த மாநில அரசின் ஒப்புதலையும் கர்நாடகா பெறவேண்டும் என்ற அவசியமில்லை என 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளார். </p><p>இதுபோன்ற திட்டங்களுக்கு கீழ்நிலை ஆற்று மாநிலங்களிடமிருந்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற எந்த விதியும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். </p><p>மேகதாது அணைக்கு தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி அரசுகளின் ஒப்புதலை கர்நாடகா பெற்றுள்ளதா? மத்திய அரசின் பரிசீலனையில் உள்ள அந்தத் திட்டத்தின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து அன்புமணி கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் மத்திய அமைச்சர் தான் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் இந்த விளக்கத்தை அளித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>வழக்குகள் வாபஸ் பெறப்படாவிட்டால் மீண்டும் போராட்டம்: மத்திய அரசுக்கு &apos;காக்ரோச் ஜனதா கட்சி&apos; கெடு!</title><link>https://www.maalaimalar.com/news/national/if-cases-not-withdrawn-protests-will-return-cockroach-janata-party-deadline-to-centre</link><comments>https://www.maalaimalar.com/news/national/if-cases-not-withdrawn-protests-will-return-cockroach-janata-party-deadline-to-centre#comments</comments><guid isPermaLink="false">80310ffe-be56-456c-b01d-62c50bdfc371</guid><pubDate>Mon, 27 Jul 2026 13:58:22 +0000</pubDate><atom:updated>2026-07-27T13:58:22.080Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டெல்லி ஜந்தர் மந்தர்,Cockroach Janta Party,abhijeet dipke,அபிஜீத் திப்கே,காக்ரோச் ஜனதா கட்சி,CJPProtest</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/aorc3803/cjp.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Cockroach Janta Party  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/aorc3803/cjp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி ஜந்தர் மந்தரில் 37 நாட்களாக நடைபெற்று வந்த மாணவர்கள் போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெற்ற நிலையில், கைது செய்யப்பட்ட மாணவர்கள் மீதான வழக்குகளை உடனடியாகத் திரும்பப் பெறாவிட்டால் மீண்டும் போராட்டம் தொடங்கும் என 'காக்ரோச் ஜனதா கட்சி (CJP)' மத்திய அரசுக்குக் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு புகார்களைத் தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அபிஜீத் திப்கே தலைமையிலான காக்ரோச் ஜனதா கட்சி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வந்தது. </p><p>கடந்த வார இறுதியில் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, மத்திய அரசுடன் நடைபெற்ற மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் போராட்டம் நல்லெண்ண அடிப்படையில் தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.</p><h2><strong>CJP அமைப்பின் குற்றச்சாட்டுகள்:</strong></h2><p>போராட்டத்தைக் கைவிட்ட போதிலும், மத்திய அரசு மற்றும் காவல்துறை அளித்த வாக்குறுதிகளை மீறி வருவதாக CJP குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து, CJP செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, "போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது எவ்வித காவல் துறை நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்ற ஒப்பந்தத்தை அரசு மீறியுள்ளது. </p><p>பீகார் மற்றும் மேற்கு வங்கத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லி மற்றும் பிற மாநிலங்களில் மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்களுக்கு உணவு, தங்குமிடம் உள்ளிட்ட உதவிகளைச் செய்த தன்னார்வலர்கள் காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.</p><h2><strong>வழக்குகளை வாபஸ் பெற கோரிக்கை:</strong></h2><p>போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட அனைத்து எஃப்.ஐ.ஆர் வழக்குகளையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். கைது செய்யப்பட்ட மாணவர்களை எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.</p><p>மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பாஜக தலைவர்களான ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோரை Tag செய்து வெளியிடப்பட்டுள்ள அந்தப் பதிவில், "நாளைக்குள் இது தொடர்பான எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தை வழங்கி, வழக்குகளைத் திரும்பப் பெறாவிட்டால், நாங்கள் மீண்டும் போராட்டக்களத்தில் இறங்க வேண்டியிருக்கும்" எனத் தெள்ளத் தெளிவாக எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>உச்ச நீதிமன்றத்தின் கருத்து:</strong></h2><p>இதனிடையே, டெல்லியில் ஜூலை 20 அன்று நடைபெற்ற 'சலோ சன்சாத்' பேரணியின் போது காவல்துறை நடத்திய கண்ணீர்ப்புகை தாக்குதல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் முக்கிய கருத்து தெரிவித்துள்ளது. "அமைதியான வழியில் போராட்டம் நடத்துவது என்பது அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமை. வெறும் போராட்டம் நடக்கிறது என்பதற்காகக் காவல்துறையின் வரம்பு மீறிய தடியடியை நியாயப்படுத்த முடியாது"* என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><h2><strong>பாராளுமன்றத்தில் எதிரொலி:</strong></h2><p>மாணவர்கள் மீதான காவல்துறை நடவடிக்கை மற்றும் வழக்குகள் தொடரப்படும் விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் புயலைக் கிளப்பியுள்ளது. எதிர்க்கட்சிகள் இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வலியுறுத்திச் முழக்கங்களை எழுப்பியதால் அவைகள் ஒத்திவைக்கப்பட்டன. </p><p>மத்திய அரசு மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் காவல்துறையினர் நாளைக்குள் வழக்கு திரும்பப் பெறுதல் குறித்த தெளிவான முடிவை அறிவிக்காத பட்சத்தில், நாடு தழுவிய அளவில் மீண்டும் மாணவர் போராட்டம் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>பக்தர் உயிரிழந்த விவகாரம்: திருவண்ணாமலை இடுக்கு கோயிலுக்கு செல்ல முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/devotee-death-issue-key-guidelines-for-thiruvannamalai-idukku-temple-visit</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/devotee-death-issue-key-guidelines-for-thiruvannamalai-idukku-temple-visit#comments</comments><guid isPermaLink="false">6f1b30b3-e90f-451f-b720-0a0bfeb871aa</guid><pubDate>Mon, 27 Jul 2026 13:29:18 +0000</pubDate><atom:updated>2026-07-27T13:29:18.427Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruvannamalai,திருவண்ணாமலை,Tiruvannamalai temple,Idukku Temple,திருவண்ணாமலை கிரிவலப்பாதை,இடுக்கு பிள்ளையார் கோயில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/hp5vze6p/thiruvannamalai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tiruvannamalai Idukku Temple]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/hp5vze6p/thiruvannamalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலின் உட்கோயிலாக அமைந்துள்ளது அருள்மிகு அருணகிரி இடுக்கு பிள்ளையார் கோயில்.  இந்த கோவிலில் சிறிய குகை போன்ற அமைப்பில் 3 வாசல்கள் உள்ளன. பின் வாசல் வழியாக ஒருக்களித்து படுத்தவாறு உள்ளே நுழைந்து, மெல்லமாக கைகளை ஊன்றியவாறு நகர்ந்து முன் வாசல் வழியாக வெளியே வரவேண்டும்.</p><p>குகை போன்ற பகுதியில் இருந்து வெளியே வந்த உடன் நந்தி இருக்கும். பக்தர்கள் நந்தி பகவானையும், இடுக்கு பிள்ளையாரையும் வணங்கி செல்கின்றனர். பெரும்பாலான கிரிவல பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று இடுக்கு பிள்ளையார் கோவில் குகையில் நுழைந்து வெளியே வழிபட்டு செல்கின்றனர்.</p><h2><strong>பக்தர் உயிரிழப்பு:</strong></h2><p>இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு ஆந்திராவை சேர்ந்த மணிக்குமார் (வயது 36) என்பவர் தனது குடும்பத்துடன் கிரிவலம் சென்றார். சுமார் 11 மணியளவில் இடுக்கு பிள்ளையார் கோவிலுக்கு மணிக்குமார் வந்தார். குகை வடிவத்தில் உள்ள கோவில் பகுதியில் படுத்தபடி நுழைந்தார். உடல் பருமன் அதிகம் என்பதால் குகையில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தார்.</p><p>பின்னர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினார். இதனை கண்ட சக பக்தர்கள் மயங்கி கிடந்தவரை போராடி வெளியே கொண்டு வந்தனர்.108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மணிக்குமார் வரும் வழியிலே இறந்துவிட்டதாக கூறினர். இதை கேட்ட மணிக்குமார் குடும்பத்தினர் கதறி அழுதனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.</p><h2><strong>கோயில் நிர்வாகம் அறிவிப்பு:</strong></h2><p>இந்நிலையில், திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலின் உட்கோயிலாக அமைந்துள்ள அருள்மிகு அருணகிரி இடுக்கு பிள்ளையார் (அரைஇடுக்கு முக்கூர்ணி பிள்ளையார்) கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு, கோயில் நிர்வாகம் சார்பில் முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.</p><p>பிரசித்தி பெற்ற இந்த இடுக்கு பிள்ளையார் கோயிலுக்குச் செல்லும் வழிப்பாதை மிகவும் குறுகிய அமைப்பைக் கொண்டதாகும். இதனால், அங்கு செல்லும் பக்தர்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கும் வகையிலும், அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, உடல்பருமன் உள்ளவர்கள், கடுமையான உடல்நலக்குறைவு உள்ளவர்கள், முதியவர்கள் மற்றும் சிறு குழந்தைகள் ஆகியோர் இடுக்கு பிள்ளையார் கோயிலின் குறுகலான வழிப்பாதைக்குள் சென்று வர அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>பக்தர்களின் பாதுகாப்பை மட்டுமே முதன்மையாகக் கொண்டு இந்த நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதால், சுவாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அனைவரும் கோயில் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பிற்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\</p>]]></content:encoded></item><item><title>கரூர் விவகாரத்திற்கு முதலமைச்சர் விஜய் வழங்கிய அரசுப்பணி ரத்து - உச்ச நீதிமன்றத்தை நாடும் தமிழ்நாடு அரசு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/government-job-granted-by-chief-minister-to-vijay-in-the-karur-case-cancelled-tamil-nadu-government-to-move-the-supreme-court</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/government-job-granted-by-chief-minister-to-vijay-in-the-karur-case-cancelled-tamil-nadu-government-to-move-the-supreme-court#comments</comments><guid isPermaLink="false">96b2f9f7-d2e6-43e5-9a40-4d3873361de1</guid><pubDate>Mon, 27 Jul 2026 13:10:35 +0000</pubDate><atom:updated>2026-07-27T13:10:35.929Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,Supreme Court,உச்ச நீதிமன்றம்,Government of Tamil Nadu,government jobs,அரசுப்பணி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/n666w22f/New-Project-2026-07-27T183729.488.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கரூர் விவகாரத்திற்கு முதலமைச்சர் விஜய் வழங்கிய அரசுப்பணி ரத்து - உச்ச நீதிமன்றத்தை நாடும் தமிழ்நாடு அரசு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/n666w22f/New-Project-2026-07-27T183729.488.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசுப்பணி ஆணையை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இன்று உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யவுள்ளது. </p><p>பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் வாதங்களை கேட்காமலேயே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும், இதனால் நாளையே மேல்முறையீடு செய்யப்போவதாகவும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். </p><h2>நீதிமன்றம் கூறியது என்ன?</h2><p>“உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கி ஏன் சுய தொழில் முனைவோராக மாற்றக்கூடாது. அரசு பணி வழங்குவதற்கு பதில் அது பயனுள்ளதாக இருக்கும். தமிழ்நாடு அரசு தரப்பில் சாதாரண பணி வழங்குவதாக கூறுவதை ஏற்க முடியாது. எந்த பணியும் சாதரண பணியல்ல. அது ஒவ்வொருவரின் குடும்பத்துக்கு உதவும் பணியே.</p><p>கருணை அடிப்படையில் வேலை கிடைக்க பலர் காத்திருக்க கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது ஏன்? சிவகாசி வெடிவிபத்தில், பேருந்து விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு அரசுப்பணி வழங்குவீர்களா? தினமும் சாலை விபத்தில் பலர் உயிரிழக்கின்றனர். அவர்களது குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படுமா? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-inspection-at-koyambedu-industrial-water-treatment-plant</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-inspection-at-koyambedu-industrial-water-treatment-plant#comments</comments><guid isPermaLink="false">6d629442-691c-4e87-abab-975642cda654</guid><pubDate>Mon, 27 Jul 2026 12:37:03 +0000</pubDate><atom:updated>2026-07-27T12:37:03.494Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Koyambedu,சுத்திகரிப்பு நிலையம்,cm vijay,முதலமைச்சர் விஜய்,tn cm vijay,கோயம்பேடு,RO plant</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/j0g4iqeh/Untitled-design-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay inspects reviews Chennai Sewage Plant]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/j0g4iqeh/Untitled-design-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கோயம்பேட்டில் செயல்பட்டு வரும் மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு செய்தார்.</p><p>தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்ற பின்பு சென்னை எழும்பூர் மகப்பேறு அரசு மருத்துவமனை, சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா சமூக நீதி மாணவர் விடுதி, சேத்துப்பட்டு எரிவாயு உற்பத்தி மையம் ஆகிய இடங்களில் திடீரென் ஆய்வு மேற்கொண்டார்.</p><p>நெம்மேலியில் உள்ள கடல்நீர் குடிநீராக்கும் பணி குறித்து முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டிந்தார்.</p><p>ஏற்கனவே நான்கு இடங்களில் ஆய்வு செய்த நிலையில், தற்போது தொழில்துறை தேவைக்கு வழங்கப்படும் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை நேரடியாக ஆய்வு செய்தார்.</p><p>இந்நிலையில் கோயம்பேட்டில் உள்ள சுத்திகரிப்பு ஆலையில், ஆய்வு பணியில் ஈடுபட்டபோது, நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.</p><p>இந்த சுத்திகரிப்பு ஆலையில் 45 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கொள்ளளவு செயல்பாட்டில் உள்ளது.</p><p>இங்கு சுத்திகரிக்கப்படும் நீரின் தரம் சரியான அளவில் இருப்பதால், அந்த நீரை கொண்டு வாகனங்கள் மற்றும் ரெயில் பெட்டிகள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள், திரையரங்குகள், உணவகங்கள் உள்ளிட்ட பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது உண்மையா, புரளியா?- தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-questions-claim-of-717-closed-tasmac-shops</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-questions-claim-of-717-closed-tasmac-shops#comments</comments><guid isPermaLink="false">69ebd9f7-8f47-4cc6-90b6-657091cf5527</guid><pubDate>Mon, 27 Jul 2026 12:34:31 +0000</pubDate><atom:updated>2026-07-27T12:34:31.366Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,டாஸ்மாக் கடைகள்,Tasmac,தவெக அரசு,TVK Govt</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/hkg4jg5n/Nainar.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nainar Nagendran]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/hkg4jg5n/Nainar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>“மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் முகவரிகள், RTI சட்டத்தின் கீழ் வெளியிடப்படவில்லை. உண்மையிலேயே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா? அல்லது எதையாவது செய்து மக்களிடம் நற்பெயர் வாங்க வேண்டுமென தவெக அரசே இந்த புரளியைக் கிளப்பியதா?” என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். </p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>"மூடப்பட்ட” டாஸ்மாக் கடைகளில் தொடரும் மர்மங்கள், வெள்ளையறிக்கை வெளியிடுமா தவெக அரசு?</p><p>"நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு 717 டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டோம்" என தம்பட்டம் அடித்துக் கொள்கிறது ஜோசப் விஜய் தலைமையிலான அரசு. ஆனால், மூடப்பட்ட கடைகளின் முகவரிகள், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இதுவரை வெளியிடப்படவில்லை.</p><p>“மூடப்பட்டதாக” கூறப்படும் கடைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனவா என்ற கேள்விக்கும், RTI- இடம் பதிலில்லை. விஜய் அவர்கள் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு புதிய டாஸ்மாக் கடைகள் ஏதேனும் திறக்கப்பட்டுள்ளனவா என்ற கேள்விக்கான பதிலையும் மென்று முழுங்குகிறது தற்போதைய அரசு. </p><p>மொத்தத்தில் மூடப்பட்டதாக கூறிய 717 டாஸ்மாக் கடைகள் பற்றி எது கேட்டாலும்,"அந்தந்த மாவட்ட மேலாளர் அலுவலகத்திற்கு அணுகவும்" என்றே ஒரே பதில் மட்டும் தான் RTI இடமிருந்து கிடைக்கிறது.</p><p>அந்தந்த மாவட்ட மேலாளரிடம் தரவுகள் இருக்குமாயின், அவற்றை சேகரித்து RTI மூலம் எளிதாக மக்கள் பார்வைக்கு வெளிப்படுத்துவதில் அரசுக்கு என்ன சிக்கல்? தவெக ஆட்சியில் இதுவரை மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் முழு விவரங்களையும், முகவரிகளையும், அங்கு பணிபுரிந்த ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட மாற்றுப் பணிகள் குறித்தும் வெள்ளையறிக்கை வெளியிட ஆளும் அரசு எதற்கு தயங்குகிறது?</p><p>உண்மையிலேயே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளனவா அல்லது ஆட்சிக்கு வந்த புதிதில் எதையாவது செய்து மக்களிடம் நற்பெயர் வாங்க வேண்டுமென தவெக அரசே இந்த புரளியைக் கிளப்பியதா? உள்ளிட்ட மக்களின் கேள்விகளுக்கு முதல்வர் உடனடியாக பதிலளிக்க வேண்டும்! வெட்டி வசனமும், வீண் விளம்பரமும் இனி கதைக்காகாது.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item></channel></rss>