<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 24 Jul 2026 03:41:40 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-24-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-24-july-2026#comments</comments><guid isPermaLink="false">9e297809-3778-431a-83e7-2d092abe8672</guid><pubDate>Fri, 24 Jul 2026 03:41:33 +0000</pubDate><atom:updated>2026-07-24T03:41:33.608Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/zz39nvcd/TodayLive0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Today Live News]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/zz39nvcd/TodayLive0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/us-military-says-its-launching-new-strikes-on-iran-as-clashes-escalate-over-shipping-routes">ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம்: புதிய தாக்குதல் நடத்திய அமெரிக்கா- ஹவுதிக்கு டிரம்ப் எச்சரிக்கை</a></p><p>* செங்கடலில் இரண்டு எண்ணெய் கப்பல்கள் மீது ஹவுதி தாக்குதல்</p><p>* ஈரான் மற்றும் ஹவுதிகள் ஆகிய இரு தரப்பினர் மீதும் கடுமையான ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்- டிரம்ப்</p>]]></content:encoded></item><item><title>உத்தரகாண்ட் பல்கலைக்கழகத்தில் பி.டெக் தேர்வு வினாத்தாள் கசிவு.. உதவி பேராசிரியர் கைது</title><link>https://www.maalaimalar.com/news/national/uttarakhand-university-btech-exam-paper-leak-assistant-professor-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/national/uttarakhand-university-btech-exam-paper-leak-assistant-professor-arrested#comments</comments><guid isPermaLink="false">96bbc831-8746-4ff3-89da-85ff2e36bf78</guid><pubDate>Fri, 24 Jul 2026 03:40:20 +0000</pubDate><atom:updated>2026-07-24T03:40:20.590Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>paper leak,uttarakhand university,வினாத்தாள் கசிவு,உத்தரகாண்ட் பல்கலைக்கழகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/9a03ohol/Untitled-design-59.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Uttarakhand B.Tech exam cancelled after question paper leak]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/9a03ohol/Untitled-design-59.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h3><strong>உத்தரகாண்ட் பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் கசிவு:</strong></h3><p>தேசிய அளவில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுகள் காரணமாக போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், உத்தரகாண்ட் பல்கலைக்கழகத்தில் பி.டெக் தேர்வுகளுக்கான வினாத்தாள் கசிவை தொடர்ந்து, தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.</p><p>உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் வீர மாதோ சிங் பண்டாரி உத்தரகாண்ட் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது.</p><p>இங்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கான பி.டெக் மின்னணுவியல் பாடப்பிரிவை சேர்ந்த வினாத்தாள்கள் வாட்ஸ்அப்பில் கசிந்தது. இதை தொடர்ந்து, பி.டெக் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.</p><p>இதுகுறித்து தேர்வுக் கட்டுப்பாட்டாளர் வி.கே.படேல் கூறுகையில், “முதற்கட்ட விசாரணையில் உதவி பேராசிரியர் ஆஷிஷ் குமார் குப்தா வாட்ஸ்அப்பில் பகிர்ந்த கேள்விகள், இறுதி தேர்வு வினாத்தாளுடன் 95 சதவீதம் வரை ஒத்துப்போனது கண்டறியப்பட்டுள்ளது” என்று கூறினார்.</p><p>இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பேராசிரியர் பணியாற்றி வந்த இரண்டாம் ஆண்டு மின்காந்த புலக் கோட்பாடு தேர்வையும் அதிகாரிகள் ரத்து செய்தனர்.</p><h3><strong>பல்கலைக்கழகம் சுற்றறிக்கை:</strong></h3><p>இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட சுற்றறிக்கையில், “தேர்வு முறையின் நம்பகத்தன்மை, தூய்மை மற்றும் மாணவர் நலனை காப்பதற்காக, இந்த ரத்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>இரண்டாம் ஆண்டு பயிலும் 355 மாணவர்கள் மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும் 22 மாணவர்களுக்கான ரத்து செய்யப்பட்ட தேர்வுகள், 2026 ஆகஸ்ட் மாதம் மூன்றாவது வாரத்தில் மறுபடியும் நடத்தப்படும்” என தெரிவித்துள்ளது.</p><h3><strong>உதவி பேராசிரியர் கைது:</strong></h3><p>பல்கலைக்கழகத்தின் புகாரை தொடர்ந்து, கல்லூரியின் உதவி பேராசிரியர் குப்தா இடைநீக்கம் செய்யப்பட்டு, நேற்று கைது செய்யப்பட்டார்.</p><p>இதையடுத்து இந்திய தேசிய மாணவர் சங்கம் மற்றும் இளைஞர் குழுக்களின் உறுப்பினர்கள் நிர்வாகத்திடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.</p><p>மேலும் தொடர்ந்து நிகழும் வினாத்தாள் கசிவு சம்பவங்கள், மாணவர்களின் கடின உழைப்பு, நேரம் மற்றும் எதிர்காலத்திற்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும் என்றும் மாணவர்கள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>மோடி அரசு மாணவர்களை நாட்டின் எதிரிகளாக நடத்துகிறது: சோனியா காந்தி குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/national/modi-govt-treating-students-seeking-accountability-as-enemies-of-nation-sonia-gandhi</link><comments>https://www.maalaimalar.com/news/national/modi-govt-treating-students-seeking-accountability-as-enemies-of-nation-sonia-gandhi#comments</comments><guid isPermaLink="false">8a67db5e-897d-494e-9e89-cb8110e39646</guid><pubDate>Fri, 24 Jul 2026 03:31:49 +0000</pubDate><atom:updated>2026-07-24T03:31:49.453Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>sonia gandhi,pm modi,பிரதமர் மோடி,சோனியா காந்தி,CJP Protest,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/ntbi9ljk/SoniaGandhi0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sonia Gandhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/ntbi9ljk/SoniaGandhi0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய அரசிடமிருந்து பொறுப்புக்கூறல் மற்றும் கல்விச் சீர்திருத்தத்தை கேட்டார்கள். நரேந்திர மோடி தலைமையிலான அரசு, அவர்களின் துணிச்சலுக்குக் கோழைத்தனத்துடனும் கொடூரத்துடனும் பதிலளித்துள்ளது. அவர்களை எதிர்காலத்தின் வாரிசுகளாகக் கருதாமல், நாட்டின் எதிரிகளாகவே நடத்தியுள்ளது என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.</p><h2>கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம்</h2><p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் உயர்க்கல்வியில் உள்ளது. இதற்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லை என்றால் மத்திய அரசு அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று <a href="https://www.maalaimalar.com/news/national/removing-pradhan-is-the-strictest-action-cjp-to-pm-modi">கரப்பான்பூச்சி ஜனதா கட்சி</a> வலியுறுத்தி வந்தன. ஆனால், இரண்டு வலியுறுத்தலுக்கும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. இதனால், கடந்த ஜூன் 20-ந்தேதி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டம் ஒரு மாதத்திற்கு மேலாக நீடித்து வந்தது.</p><h2>நாடாளுமன்றம் முற்றுகை போராட்டம் பேரணி</h2><p>கடந்த 20-ந்தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது. அன்றைய தினம் நாடாளுமன்றம் முற்றுகை போராட்டம் பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மற்றும் மாணவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றனர்.</p><p>அப்போது மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகைக்குண்டு வீசி பேரணியை கலைத்தனர். ஜந்தர் மந்தரில் தொடர்ந்து பேராட்டம் நடைபெற்று வருகிறது. மாணவர்கள் மீதான தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மாணவர்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.</p><p>இதனால் மத்திய அரசு, மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது. பிரதமர் மோடி, வினாத்தாள் லீக் தொடர்பாக விரைவாக விசாரணை நடத்தி முடிக்கும் வகையில் விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.</p> <h2>தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்</h2><p>ஆனால், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர், தர்மேந்திர பிரதான் பதவி விலகியே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். டெல்லி போராட்டம் தீவிரம் அடைந்து வருவதால் தேசிய பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு நீடித்துள்ளது. கைது செய்யப்படும் நபர்களை வழக்குப் பதிவு செய்யப்படாமலேயே ஒரு வருடம் சிறையில் அடைக்க முடியும். மாணவர்களின் போராட்டத்தை கட்டுப்படுது்த மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.</p><p>இதற்கிடையே, மாணவர்கள் போராட்டத்தை தூண்டு விடுவதாகவும், அவர்களை தேசவிரோதிகள் என்ற முத்திரை குத்தவும் முயற்சி நடைபெற்ற வருவதாக குற்றமும் சாட்டப்பட்டு வருகிறது.</p><p>இந்த நிலையில் நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்புக்கூறல் வேண்டும் என்று மாணவர்கள் கேட்டு வரும் நிலையில், அவர்களை அவர்களை தேசவிரோதிகள் போன்று நடத்துகிறது என்று சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.</p><h2>இது தொடர்பாக சோனியா காந்தி கூறியதாவது:-</h2><p>மாணவர்கள் போராட்டங்கள் என்பவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய சில காரணிகளின் இயல்பான விளைவுகளாகும். அதாவது, நம்பிக்கையற்ற சூழலை மட்டுமே உருவாக்கும் இன்றைய கல்விச் சூழல் மற்றும் பொறுப்புக்கூறவோ அல்லது ஆக்கபூர்வமாகச் செயல்படவோ விரும்பாத மோடி அரசாங்கத்தின் வழக்கமான ஆணவம் ஆகியவையே அக்காரணிகளாகும்.</p><p>2020-ஆம் ஆண்டு குடியுரிமை (திருத்த) சட்டம்- தேசிய குடிமக்கள் பதிவேடு போராட்டங்களின்போது, ​​ஆயுதமேந்திய காவல்துறையினரும் துணை ராணுவப் படையினரும் பல்கலைக்கழக வளாகங்களை எவ்வாறு சூறையாடினர் என்பது நம் அனைவருக்கும் தெளிவாக நினைவிருக்கிறது. இந்தியாவின் பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு எதிராக இழைக்கப்பட்ட ஏற்றுக்கொள்ள முடியாத அத்துமீறல்களை நம் நினைவுகளிலிருந்து ஒருபோதும் அழிக்க முடியாது.</p><p>மாணவர்களின் கோரிக்கைகள் மிகத் தெளிவானவை மற்றும் நேரடியானவை. இந்திய அரசிடமிருந்து பொறுப்புக்கூறல் மற்றும் கல்விச் சீர்திருத்தத்தை கேட்டார்கள்.<a href="https://www.maalaimalar.com/news/national/neet-exam-paper-leak-issue-key-decision-to-be-taken-at-cabinet-meeting-pm-modi"> நரேந்திர மோடி</a> தலைமையிலான அரசு, அவர்களின் துணிச்சலுக்குக் கோழைத்தனத்துடனும் கொடூரத்துடனும் பதிலளித்துள்ளது. அவர்களை எதிர்காலத்தின் வாரிசுகளாகக் கருதாமல், நாட்டின் எதிரிகளாகவே நடத்தியுள்ளது.</p><p>இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நீடிக்கும் மாணவர்கள் போராட்டம்: இன்று அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் - பிரதமர் மோடி
</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-exam-paper-leak-issue-key-decision-to-be-taken-at-cabinet-meeting-pm-modi</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-exam-paper-leak-issue-key-decision-to-be-taken-at-cabinet-meeting-pm-modi#comments</comments><guid isPermaLink="false">c8880c1e-599b-468e-a18a-93833d8822a7</guid><pubDate>Fri, 24 Jul 2026 02:59:25 +0000</pubDate><atom:updated>2026-07-24T02:59:25.479Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>pm modi,பிரதமர் மோடி,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/hmxn2zlt/modi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/hmxn2zlt/modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் இன்று அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.</p><h2>கரப்பான் பூச்சி ஜனதா கட்சி</h2><p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாட்டில் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">கரப்பான் பூச்சி ஜனதா கட்சி</a>யினர் முதலில் வலியுறுத்தினர்.</p> <h2>இந்தியா கூட்டணி</h2><p>தற்போது 'இந்தியா' கூட்டணியும் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. நாடாளுமன்றத்தில் பதவி விலகலுக்கான வலியுறுத்தல்கள் தினம்தோறும் வைக்கப்பட்டு வருகிறது.</p><p>இந்த நிலையில் பிரதமர் மோடி நேற்று தனது 'எக்ஸ்' தள பக்கத்தில் இதுகுறித்து ஒரு பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-</p> <h2>விரைவு கோர்ட்டுகள்</h2><p>நமது இளைஞர்களின் நலனையும், எதிர்காலத்தையும் விட முக்கியமானது வேறு எதுவும் இல்லை. வினாத்தாள் கசிவில் ஈடுபட்டவர்களுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனையை உறுதி செய்வதற்காக விரைவு கோர்ட்டுகளை அமைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.</p><p>இதுதொடர்பாக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளோம்.</p> <p>மாணவர்களின் நலன்களை பாதுகாப்பதற்காக நாங்கள் எடுத்துவரும் தொடர் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும். நமது இளைஞர்களின் எதிர்காலத்துக்கு தீங்கு விளைவிக்க முயற்சிப்பவர்கள் தப்பிக்க விடப்பட மாட்டார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார்.</p><h2>சிஜேபி போராட்டம்</h2><p>இந்நிலையில்<a href="https://www.maalaimalar.com/news/national/removing-pradhan-is-the-strictest-action-cjp-to-pm-modi"> சிஜேபி </a>போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில்  மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி நள்ளிரவில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்,</p> <h2>அமைச்சரவை கூட்டம்</h2><p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். வினாத்தாள் கசிவு குறித்து விசாரிப்பதற்காக  விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.</p><p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும். தேர்வு முறையை மாற்றியமைப்பது தொடர்பாக அமைச்சரவை  கூட்டத்தில் விவாதிக்கப்படும்.</p> <h2>மசோதா </h2><p>நீட் வினாத்தாள் கசிவைத் தடுப்பதற்கான மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். வினாத்தாள் கசிவைத் தடுப்பதற்கான மசோதாவை விரைந்து நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Promising more strict action against paper leak, Prime Minister Narendra Modi said, &quot;... The departments presented me with the draft late at night. This draft, along with the provision for a fast-track court and harsh punishment, will be discussed in the cabinet tomorrow. After… <a href="https://t.co/1yo90YT0Hz">pic.twitter.com/1yo90YT0Hz</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2080369672109556212?ref_src=twsrc%5Etfw">July 23, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம்: புதிய தாக்குதல் நடத்திய அமெரிக்கா- ஹவுதிக்கு டிரம்ப் எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/world/us-military-says-its-launching-new-strikes-on-iran-as-clashes-escalate-over-shipping-routes</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-military-says-its-launching-new-strikes-on-iran-as-clashes-escalate-over-shipping-routes#comments</comments><guid isPermaLink="false">015ab041-62fb-49ef-9825-634c0506af1f</guid><pubDate>Fri, 24 Jul 2026 02:32:22 +0000</pubDate><atom:updated>2026-07-24T02:32:22.509Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டொனால்டு டிரம்ப்,Donald Trump,Houthi,ஹார்முஸ் ஜலசந்தி,Strait of Hormuz,ஹவுதி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-22/2nh7zk8g/trump-stri.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ Strait of Hormuz - trump]]></media:title><media:description type="html"><![CDATA[ Strait of Hormuz - trump]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-22/2nh7zk8g/trump-stri.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஹார்முஸ் ஜலசந்தி வழியாக மீண்டும் வணிக கப்பல்கள் மற்றும் மாலுமிகளுக்கு எதிரான ஈரானின் மிரட்டல் திறனை மேலும் குறைக்கும் வகையில் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.</p><h2>13-வது நாளாக புதிய தாக்குதல்</h2><p>கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு ஹார்முஸ் ஜலசந்தி முக்கிய கடல்வழியாக திகழ்கிறது. இந்த கடல்வழியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து சுங்க கட்டணம் வசூலிக்க ஈரான் விரும்புகிறது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மசோதாவும் தாக்கல் செய்துள்ளது.</p><p>அதேவேளையில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் போர் தொடங்குவதற்கு முன்னதாக, ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து எவ்வாறு இருந்ததோ, அதேபோன்று இருக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. ஆனால், ஈரான் இதற்கு சம்மதிக்கவில்லை. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.</p><p>இதனால் கடந்த இரண்டு வாரங்களாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களை தாக்குவதற்கு ஈரான் கட்டமைத்துள்ள டிரோன் தளங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. வியாழக்கிழமை இரவு 13-வது நாளாக புதிய தாக்குதலை நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.</p><h2>யாரும் எண்ணெய் விநியோகம் செய்ய முடியாது- ஈரான் எச்சரிக்கை</h2><p>இதற்கிடையே ஈரான் எண்ணெய் விநியோகம் செய்யமுடியவில்லை என்றால், எந்தவொரு நாடும் எண்ணெய் விநியோகம் செய்ய முடியாது என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>இதற்கிடையே ஏமனில் செயல்பட்டு வரும் ஈரான் அதரவு பெற்ற ஹவுதி அமைப்பு, செங்கடலில் இரண்டு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்திக்கு அடுத்தபடியாக செங்கடல் மிகப்பெரிய கடல்வழி போக்குவரத்தாக திகழந்து வருகிறது.</p><p>ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம் தொடர்பாக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்று 100 டாலர்களை தாண்டி விற்பனை ஆகிறது. தற்போது செங்கடலில் ஹவுதி தாக்குதல் நடத்தியுள்ளதால், கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.</p><h2>ஹவுதிக்கு டிரம்ப் எச்சரிக்கை</h2><p>இதற்கிடையே ஹவுதிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மிரட்டல் எச்சரிக்கை விடுத்துள்ளார். "ஹவுதி மீண்டும் தாக்குதல் நடத்தினால், ஹவுதி ஈரானின் பிரதிநிதிகளாகவோ அல்லது பினாமி அமைப்பாகவோ செயல்படுவதால், அதற்கான பொறுப்பை ஈரான் ஏற்க வேண்டியிருக்கும். மேலும் ஈரான் மற்றும் ஹவுதிகள் ஆகிய இரு தரப்பினர் மீதும் கடுமையான ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.</p><p>ஹவுதி அமைப்பினர் செங்கடலில் சென்று கொண்டிருந்து என்செலியா (Encelia) மற்றும் லேய்லா (Layla) ஆகிய இரண்டு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் இரண்டு கப்பல்கள் தீப்பற்றி எரிவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், உயிரிழப்பு ஏற்பட்டதா? என்பது குறித்து தகவல் இல்லை.</p><h2>Bab el-Mandeb ஜலசந்தி</h2><p>Bab el-Mandeb ஜலசந்தி வழியாக செல்லும் சவுதி தொடர்பான கப்பல்களை முற்றுகையிடுவோம் என அறிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. Bab el-Mandeb அரேபிய தீப கற்பத்தில் செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவை இணைக்கும் செக் பாயிண்ட் ஆக உள்ளது. இதன் வழியாக 12 சதவீத உலக வர்த்தகம் நடைபெறுகிறது.</p>]]></content:encoded></item><item><title>புதிய கட்சியின் பெயர், கொடியை அடுத்த மாதம் அறிவிக்கிறார் அண்ணாமலை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/annamalai-announce-new-partys-name-and-flag-next-month</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/annamalai-announce-new-partys-name-and-flag-next-month#comments</comments><guid isPermaLink="false">234de14b-b842-4953-ac48-f4862261c6e7</guid><pubDate>Fri, 24 Jul 2026 02:17:09 +0000</pubDate><atom:updated>2026-07-24T02:17:09.549Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அண்ணாமலை,annamalai,We the Leaders,வீ த லீடர்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/dauzwdpe/annamalai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Annamalai]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/dauzwdpe/annamalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[  <p><em><strong>புதிய கட்சியின் பெயர், கொடியை அண்ணாமலை அடுத்த மாதம் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.</strong></em></p><h2>அண்ணாமலை</h2><p>தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த அண்ணாமலை கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு அந்த பதவியில் இருந்து விலக்கப்பட்டார். சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி தேர்தல் பிரசாரத்தில் பெரிய அளவில் அண்ணாமலை தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. இந்தநிலையில், கடந்த மாதம் பா.ஜ.க.வில் இருந்து அண்ணாமலை விலகினார்.</p><p>தான் ஏற்கனவே நடத்தி வந்த 'வீ த லீடர்ஸ்' என்ற அமைப்பை அரசியல் களத்தில் இறக்கினார். ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கையும் நடத்தினார். முதல் நாளில் 10 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்தனர். தொடர்ந்து முகாம் மூலம் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது.</p>  <h2>புதிய கட்சி பெயர்</h2><p>இதற்கிடையே, பொள்ளாச்சியில் கடந்த 12-ந்தேதி அண்ணாமலை நடத்திய மாநாட்டில் திரளான இளைஞர்கள் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து. தூத்துக்குடியில் 2-வது மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது.</p><p>இதற்கிடையே, உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் புதிய கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவிக்க <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88">அண்ணாமலை</a> திட்டமிட்டு இருக்கிறார். இதற்கான பணிகளில் அவர் முழு வீச்சில் இறங்கியுள்ளார். வரும் ஆகஸ்டு 3-வது வாரத்தில் புதிய கட்சியின் பெயரை அண்ணாமலை அறிவிக்க உள்ளார். புதிய கொடியையும் அவர் அறிமுகம் செய்கிறார்.</p> <h2>செப்டம்பரில் மாநாடு</h2><p>கட்சியின் பெயர், கொடி அறிமுகத்தை தொடர்ந்து செப்டம்பர் 14-ந்தேதி மதுரை அல்லது திருச்சியில் பிரமாண்டமான மாநாட்டை நடத்தவும் அண்ணாமலை திட்டமிட்டு இருக்கிறார். கட்சியின் பெயர் அறிவிப்பு கூட்டத்திற்கான ஆலோசனை கூட்டங்கள் வரும் வாரங்களில் நடத்தப்பட இருக்கிறது.</p><p>இதற்காக தமிழகம் முழுவதும் ‘வீ த லீடர்ஸ்' குழுவினர் தொண்டர்களை சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறார்கள். உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்கும் வகையில் <a href="https://www.maalaimalar.com/news/topnews/annamalai-warns-students-of-delhi-protest-hijack-attempt">அண்ணாமலை</a> புதிய கட்சி தொடக்கம் அமைய இருக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் பெட்ரோல், டீசல் விலை - இன்றைய நிலவரம்
</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-and-diesel-price-in-chennai-24nd-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-and-diesel-price-in-chennai-24nd-july-2026#comments</comments><guid isPermaLink="false">12eff93a-8839-40ae-a739-7e9312a104d3</guid><pubDate>Fri, 24 Jul 2026 01:58:51 +0000</pubDate><atom:updated>2026-07-24T01:58:51.422Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,கச்சா எண்ணெய்,Crude oil,பெட்ரோல் டீசல் விலை,Petrol Diesel Price</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/n15pib15/petrol.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பெட்ரோல் - டீசல் விலை ]]></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல் - டீசல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/n15pib15/petrol.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் போரினால் மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p><h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.</p> <h2>இன்றைய பெட்ரோல், டீசல் விலை</h2><p>அந்த வகையில் இன்றைய (24.07.2026 - வெள்ளிக்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.76-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 24.7.2026- நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள்</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-24-july-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-24-july-2026#comments</comments><guid isPermaLink="false">c78b3598-4a28-4db3-a3ea-2cf3ebf5aeac</guid><pubDate>Fri, 24 Jul 2026 01:35:51 +0000</pubDate><atom:updated>2026-07-24T01:35:51.366Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-07/vygdy4hu/New-Project-2026-05-25T070202.454.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-07/vygdy4hu/New-Project-2026-05-25T070202.454.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள், பிறரை விமர்சிப்பதன் மூலம் பிரச்சினைகள் உருவாகும்.</p><h2>ரிஷபம்</h2><p>புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். சகோதர வழியில் ஏற்பட்ட சச்சரவுகள் அகலும்.</p><h2>மிதுனம்</h2><p>தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். தன்னம்பிக்கையோடு பணிபுரிவீர்கள். வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகுவர்.</p><h2>கடகம்</h2><p>ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். தள்ளிப்போன காரியங்கள் தானாக நடைபெறும் நாள். பிள்ளைகளால் பெருமைகள் வந்துசேரும்.</p><h2>சிம்மம்</h2><p>நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். சுபச்செலவுகள் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை கடைசி நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.</p><h2>கன்னி</h2><p>யோகமான நாள். யோசிக்காது செய்த காரியங்களில் கூடவெற்றி பெறுவீர்கள். வியாபாரம், சம்பந்தமாக நுணுக்கங்களை அறிந்து செயல்படுவீர்கள்.</p><h2>துலாம்</h2><p>வெற்றி செய்திகள் வந்து சேரும் நாள். முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.</p><h2>விருச்சிகம்</h2><p>இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும் நாள். குழந்தைகள் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள், விவாகப் பேச்சுகள் முடிவிற்கு வரும்.</p><h2>தனுசு</h2><p>மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். நினைத்ததை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள்.</p><h2>மகரம்</h2><p>கனிவாகப்பேசி காரியங்களை சாதித்துக் கொள்ளும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.</p><h2>கும்பம்</h2><p>நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். நண்பர்கள் மூலம் நல்ல தகவலை பெறுவீர்கள்.</p><h2>மீனம்</h2><p>அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிட்டும் நாள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளை யோசித்து ஏற்றுக்கொள்வது நல்லது.</p>]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 24 ஜூலை 2026: திருத்தணி முருகனுக்கு பால் அபிஷேகம்</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-24-july-2026-tiruttani-murugan-milk-abhishekam</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-24-july-2026-tiruttani-murugan-milk-abhishekam#comments</comments><guid isPermaLink="false">78b5053c-28ad-4f26-a439-bbe41d37331a</guid><pubDate>Fri, 24 Jul 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-07-24T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/03/12/27314190-muruga3.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Murugan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/03/12/27314190-muruga3.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆடி-8 (வெள்ளிக்கிழமை)</p><p>பிறை : வளர்பிறை</p><p>திதி :   தசமி நண்பகல் 12.05 வரை பிறகு ஏகாதசி</p><p>நட்சத்திரம் : அனுஷம் (முழுவதும்)</p><p>யோகம் :  சித்தயோகம்</p> <p>ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை</p><p>எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை</p><p>சூலம் : மேற்கு</p><p>நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை</p> <h2>கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு</h2><p>சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் கனக தண்டியலில் பவனி. படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் பால் அபிஷேகம், கிளி வாகன சேவை. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு கண்டருளல். மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் சட்ட தேரில் பவனி, இரவு புஷ்பக விமானத்தில் புறப்பாடு. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தர குசாம்பிகை புறப்பாடு. </p> <p>திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர் புறப்பாடு. லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீ பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சன சேவை. தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம்.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - சாதனை</p><p>ரிஷபம் - மேன்மை</p><p>மிதுனம் - ஊக்கம்</p><p>கடகம் - ஆர்வம்</p><p>சிம்மம் - ஈகை</p><p>கன்னி - பரிவு</p> <p>துலாம் - பண்பு</p><p>விருச்சிகம் - உயர்வு</p><p>தனுசு - பாசம்</p><p>மகரம் - உதவி</p><p>கும்பம் - வரவு</p><p>மீனம் - செலவு</p> ]]></content:encoded></item><item><title>இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% வரி விதித்த அமெரிக்கா!</title><link>https://www.maalaimalar.com/news/world/us-slaps-10-per-cent-tariffs-on-goods-imported-from-india-on-issue-forced-labour</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-slaps-10-per-cent-tariffs-on-goods-imported-from-india-on-issue-forced-labour#comments</comments><guid isPermaLink="false">829e9b29-f1d0-458b-b3e7-2ec9e2cddf76</guid><pubDate>Fri, 24 Jul 2026 00:27:14 +0000</pubDate><atom:updated>2026-07-24T00:27:14.208Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,tariff,இறக்குமதி வரி,us</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/wjr22gkr/donald-trump-4.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Donald Trump]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/wjr22gkr/donald-trump-4.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பொருட்கள் உற்பத்தியில் கட்டாய உழைப்பு பயன்படுத்தப்படுவது தொடர்பான விவகாரத்தில், இந்தியாவில் இருந்தும் மற்ற 16 நாடுகளில் இருந்தும் வாங்கப்படும் பொருட்களுக்கு <a href="https://www.maalaimalar.com/topic/US">அமெரிக்கா</a> 10 சதவீத வரிகளை விதித்துள்ளது.</p><p>அனைத்து நாடுகளின் மீதான 10 சதவீத கூடுதல் வரிகள் முடிவுக்கு வருவதற்கு ஒரு நாள் முன்னதாக, இன்று (வெள்ளிக்கிழமை) வர்த்தக சட்டத்தின் 301-வது பிரிவின் கீழ் 60 நாடுகள் மீது புதிய வரிகளை அமெரிக்க வர்த்தக பிரதிநிதி (USTR) ஜேமிசன் கிரீர் அறிவித்தார்.</p><h2>இறக்குமதிக்கு தடை:</h2><p>கட்டாய உழைப்பை கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் இறக்குமதிக்கு தடையை விதிக்கவும் அதை திறம்பட அமல்படுத்தவும் தவறிய 60 பொருளாதார அமைப்புகள் மீது வரிகளை விதிப்பதன் மூலம், அதிபர் <a href="https://www.maalaimalar.com/topic/donald-trump">டொனால்டு டிரம்ப்</a> உத்தரவின் பேரில் 1974-ஆம் ஆண்டின் வர்த்தக சட்டத்தின் 301-வது பிரிவின் கீழ் கிரீர் இந்த இறுதி நடவடிக்கையை எடுத்துள்ளதாக USTR அறிக்கை தெரிவித்துள்ளது.</p><p>"எல்லா இடங்களிலும் உள்ள தொழிலாளர்களின் நலனை மேம்படுத்தும் வகையில், மனித உரிமை மீறல் மற்றும் வர்த்தக சிதைவு நடைமுறை ஆகிய இரண்டையும் சரிசெய்யும் நடவடிக்கையாக இது அமையும்" என்று கிரீர் வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.</p><h2>17 நாடுகள்:</h2><p>இந்த 10 சதவீத வரி விகிதம் இந்தியா, கனடா, இங்கிலாந்து, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட 17 நாடுகளுக்கு பொருந்தும். முன்னதாக, இந்தியா 12.5 சதவீத வரி விதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது. ஜூன் மாதத்தில் முன்மொழியப்பட்ட வரிகள் அறிவிக்கப்பட்ட பிறகு, கட்டாய உழைப்பு மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்களின் இறக்குமதிக்கு இந்தியா தடை விதித்ததை இது தொடர்பான மத்திய அரசின் குறிப்பு கவனத்தில் கொண்டுள்ளது.</p><p>ஜூன் 14 அன்று, கட்டாய உழைப்பை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் இறக்குமதியை தடை செய்யும் வகையில் இந்தியா தனது வெளிநாட்டு வர்த்தக கொள்கையை திருத்தியது.</p><p>அவசரகால அதிகாரங்களை பயன்படுத்தி கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட "பரஸ்பர வரிகள்" சட்டவிரோதமானவை என்று பிப்ரவரி மாதம் அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து, டிரம்ப் நிர்வாகம் இந்த இரண்டு விசாரணைகளையும் தொடங்கியது. அதற்கு பதிலாக, அனைத்து நாடுகளின் மீதும் வெள்ளிக்கிழமையுடன் முடிவடையும் வகையிலான 10 சதவீத வரிகளை அந்த நிர்வாகம் விதித்தது.</p><h2>மிகப்பெரிய சந்தை:</h2><p>USTR தொடங்கிய இரண்டு விசாரணைகளையும் இந்தியா எதிர்த்துள்ளதுடன், விவாதத்தில் உள்ள இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த விவகாரங்கள் குறித்து விவாதிக்கலாம் என்றும் வலியுறுத்தியுள்ளது.</p><p>அமெரிக்கா இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தகப் பங்காளியாகவும், ஏற்றுமதிக்கான மிகப்பெரிய சந்தையாகவும் உள்ளது. வர்த்தகத் துறையின் தரவுகளின்படி, 2025-ஆம் ஆண்டில் இருதரப்பு பொருட்கள் வர்த்தகம் சுமார் 141 பில்லியன் அமெரிக்க டாலராகவும், இந்தியாவின் ஏற்றுமதி 87.3 பில்லியன் அமெரிக்க டாலராகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தர்மேந்திர பிரதான் நீக்கப்படுவதே கடுமையான நடவடிக்கை: பிரதமர் மோடிக்கு CJP வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/national/removing-pradhan-is-the-strictest-action-cjp-to-pm-modi</link><comments>https://www.maalaimalar.com/news/national/removing-pradhan-is-the-strictest-action-cjp-to-pm-modi#comments</comments><guid isPermaLink="false">1eef9a1a-7609-442c-80f3-72ef57f3fa93</guid><pubDate>Thu, 23 Jul 2026 23:49:47 +0000</pubDate><atom:updated>2026-07-23T23:49:47.206Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,pm modi,பிரதமர் மோடி,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/hed6basj/pro-pmo.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CJP Protest Site & PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/hed6basj/pro-pmo.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று பிரதமர் <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">நரேந்திர மோடி</a> அறிவித்ததைத் தொடர்ந்து, 'காக்ரோச் ஜனதா பார்ட்டி' (CJP) ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளது. </p><p>தேர்வு முறைகேடுகள் தொடர்பாக அரசு எடுக்கக்கூடிய "மிகக் கடுமையான நடவடிக்கை" என்பது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவியில் இருந்து நீக்குவதுதான் என்று அக்கட்சி கூறியுள்ளது. </p><h2>கடுமையான நடவடிக்கை:</h2><p>பிரதமரின் கருத்துகளுக்கு பதிலளித்த <a href="https://www.maalaimalar.com/topic/cjp-protest">சி.ஜே.பி.</a>-யின் தேசிய செய்தி தொடர்பாளர் அஷூதோஷ் ரன்கா, "மோடி ஜி, நாளைக்கே தர்மேந்திர பிரதானை நீக்குங்கள். அதுதான் நீங்கள் எடுக்கக்கூடிய மிக கடுமையான நடவடிக்கையாக இருக்கும்" என்று கூறினார்.</p><p>பிரதமரின் அறிவிப்பு குறித்து CJP-யின் நிறுவனர் அபிஜீத் டிப்கேவும் எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்தார். முன்மொழியப்பட்ட சட்டத்தை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில், சுற்றுச்சுவர்கள் இல்லாத ஒரு வளாகத்தின் நுழைவாயிலை ஒருவர் பூட்டுவது போன்ற படத்தை அவர் பகிர்ந்துகொண்டார்.</p><h2>மசோதா:</h2><p>வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வகை செய்யும் மசோதா, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு பிறகு அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று பிரதமர் மோடி நேற்று (வியாழக்கிழமை) அறிவித்தார்.</p><p>நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, விரைவு நீதிமன்றங்களை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு ஏற்கனவே எடுத்துள்ளதாக கூறிய அவர், இதற்கு பொறுப்பானவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும் உறுதியாக தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>வாங்சுக் உண்ணாவிரதத்தை முடித்ததில் நிம்மதி, ஆனாலும் ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடரும்! கரப்பான்பூச்சி ஜனதா கட்சி உறுதி</title><link>https://www.maalaimalar.com/news/national/relieved-wangchuk-ended-fast-jantar-mantar-protest-will-continue-said-cjp</link><comments>https://www.maalaimalar.com/news/national/relieved-wangchuk-ended-fast-jantar-mantar-protest-will-continue-said-cjp#comments</comments><guid isPermaLink="false">31778b79-5f8a-4a6a-9362-7b4194051e87</guid><pubDate>Thu, 23 Jul 2026 23:14:42 +0000</pubDate><atom:updated>2026-07-23T23:14:42.834Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>CJP Protest,Wangchuk,சிஜேபி போராட்டம்,வாங்சுக்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/92dhqdi2/CJP-Protest.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CJP Protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/92dhqdi2/CJP-Protest.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தனது 26 நாள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டதில் "நிம்மதியும் நன்றியும்" அடைந்துள்ளதாக 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' (CJP) தெரிவித்துள்ளது; அதேவேளையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை டெல்லியின் ஜந்தர் மந்தரில் தங்கள் அமைதியான போராட்டம் தொடரும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியது. </p><h2>எக்ஸ் தள பதிவு:</h2><p>இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் டிப்கே, "சோனம் ஐயா 26 நாட்களுக்குப் பிறகு தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டதில் நாங்கள் நிம்மதியும் நன்றியும் கொள்கிறோம். உங்கள் அசாத்தியமான துணிச்சலுக்கும் தியாகத்திற்கும் நன்றி ஐயா. </p><p>உங்கள் உயிரைப் பணயம் வைத்து, ஒட்டுமொத்த தேசத்தின் மனசாட்சியையும் நீங்கள் தட்டி எழுப்பினீர்கள். இந்த நாட்டிற்கு உங்கள் உயிர் மிகவும் விலைமதிப்பற்றது. தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை ஜந்தர் மந்தரில் 'காக்ரோச் ஜனதா பார்ட்டி'யின் அமைதியான போராட்டம் தொடரும்," என்று டிப்கே கூறினார். </p><h2>உண்ணாவிரதம் நிறைவு:</h2><p>அமைதியான போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்றும், தேர்வு சீர்திருத்தங்கள் மற்றும் நீட் (NEET) வினாத்தாள் கசிவு விவகாரத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட அவரது முக்கிய கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்றும் மத்திய அரசு உறுதியளித்ததைத் தொடர்ந்து, வாங்சுக் வியாழக்கிழமை இரவு தனது காலவரையற்ற உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.</p><p>வாங்சுக் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அந்த பதிவில், "சோனம் ஜி மருத்துவர்களின் அறிவுரைப்படி தனது அன்றாட நடைமுறைகளை பின்பற்றி, விரைவில் தனது உடல் எடையை மீட்டெடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். சோனம் ஜி ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நான் இறைவனை வேண்டுகிறேன்," என்றும் பிரதமர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>&quot;கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்&quot; அரசு உறுதியை தொடர்ந்து உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் வாங்சுக்</title><link>https://www.maalaimalar.com/news/national/wangchuk-ends-hunger-strike-after-govt-assures-him-of-meeting-his-demands</link><comments>https://www.maalaimalar.com/news/national/wangchuk-ends-hunger-strike-after-govt-assures-him-of-meeting-his-demands#comments</comments><guid isPermaLink="false">c9d1a9ce-32fd-47ce-a89b-1aef1c0c0d8e</guid><pubDate>Thu, 23 Jul 2026 22:38:19 +0000</pubDate><atom:updated>2026-07-23T22:38:19.275Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>CJP Protest,Wangchuk,சிஜேபி போராட்டம்,வாங்சுக்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/wkbt969u/wangchuck.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Wangchuk ends hunger strike
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/wkbt969u/wangchuck.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அரசு உறுதியளித்ததை தொடர்ந்து, சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தனது காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொண்டார்.</p><h2>உண்ணாவிரதம் நிறைவு:</h2><p>நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு வாக்கில் மேடான்டா மருத்துவமனையில் மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் அவரை சந்தித்து அரசின் உறுதிமொழிகளை தெரிவித்த பிறகு, அவர் தனது உண்ணாவிரதத்தை முடிப்பதாக அறிவித்தார்.</p><p>"மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா, டாக்டர் ஜிதேந்திர சிங் மற்றும் லே-லடாக் 'அபெக்ஸ் பாடி' (Apex Body) அமைப்பின் மூத்த தலைவர்கள் முன்னிலையில், 26 நாட்களுக்குப் பிறகு நான் எனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டேன்," என்று வாங்சுக் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார்.</p><h2>பிரதமர் கோரிக்கை:</h2><p>வாங்சுக் தனது உண்ணாவிரதத்தை முடிப்பதாக அறிவித்த பிறகு, பிரதமர் நரேந்திர மோடி 'எக்ஸ்' தளத்தில், "சோனம் ஜி மருத்துவர்களின் அறிவுரைப்படி தனது அன்றாட நடைமுறைகளை பின்பற்றி, விரைவில் தனது உடல் எடையை மீட்டெடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். சோனம் ஜி ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நான் இறைவனை வேண்டுகிறேன்," என்றும் பிரதமர் கூறினார்.</p><p>மருத்துவமனையில் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஆங்மோ மற்றும் பிறர் முன்னிலையில் அரசு அளித்த உறுதிமொழிகளை வாசித்துக்காட்டிய நட்டா, "டெல்லியின் ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் போராடுபவர்கள் மற்றும் ஜூலை 20, 2026 அன்று நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணியில் பங்கேற்றவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யாதது குறித்து அரசு சாதகமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது," என்று கூறினார்.</p><p>தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கல்வி சீர்திருத்தங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்று அரசு ஏற்கனவே உறுதியளித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.</p><p>"அதுமட்டுமின்றி, சமீபத்திய நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தால் தற்கொலை செய்துகொண்டவர்களின் குடும்பத்தினருக்குப் பொருத்தமான இழப்பீடு வழங்குவது குறித்தும் அரசு சாதகமாக பரிசீலித்து வருகிறது," என்று நட்டா மேலும் கூறினார்.</p><h2>வாங்சுக் பதிவு:</h2><p>பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த மொத்தம் 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னை நேரில் சந்தித்தோ அல்லது கடிதங்கள் மூலமாகவோ உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு வலியுறுத்தியதாக வாங்சுக் தெரிவித்தார்.</p><p>"பல்வேறு நிபந்தனைகள் குறித்த நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகும், நாட்டில் ஏற்படக்கூடிய வன்முறையை கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அந்த நிபந்தனைகள் குறித்த விவரங்களை விரைவில் ஒரு தனி காணொளியில் விளக்குவேன். அதேவேளையில், எங்கும் எந்தவிதமான வன்முறையும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்," என்று அவர் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p>தேர்வு முறைகேடுகள் தொடர்பான பொறுப்புக்கூறல், கல்வி முறையில் சீர்திருத்தங்கள் மற்றும் அமைச்சர் பிரதான் பதவி விலக வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) தலைமையிலான போராட்டம் ஜூன் 20 அன்று தொடங்கியது. </p><p>ஜூன் 28 அன்று போராட்டத்தில் இணைந்த வாங்சுக், அமைதியான முறையில் போராடுபவர்கள் மீது எந்தவிதத் தண்டனை நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று அரசு உறுதியளித்து, போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றினால் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வதாகக் கூறியிருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>மத்திய அமைச்சர்களை சந்திக்கும் சிஜேபி குழு</title><link>https://www.maalaimalar.com/news/national/cjp-delegation-will-meet-with-govt-ministers-on-friday-sources</link><comments>https://www.maalaimalar.com/news/national/cjp-delegation-will-meet-with-govt-ministers-on-friday-sources#comments</comments><guid isPermaLink="false">26aae3fb-1df9-40e8-b1c1-a3405a2a6da8</guid><pubDate>Thu, 23 Jul 2026 20:50:52 +0000</pubDate><atom:updated>2026-07-23T20:50:52.090Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமைச்சர்கள்,CJP protests,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம்,govt ministers</media:keywords><media:content height="3288" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/dectr06l/PTI07232026000377B.jpg" width="4800"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CJP Protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/dectr06l/PTI07232026000377B.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (சி.ஜே.பி.) பிரதிநிதிகள் குழு அரசு அமைச்சர்களை இன்று (வெள்ளிக்கிழமை) சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>இந்த சந்திப்பு மதியம் 12.30 மணிக்கு நடைபெறும், ஆனால் அது நடைபெறும் இடம் வெளியிடப்படவில்லை.</p><h2>பேச்சுவார்த்தை:</h2><p>நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான முட்டுக்கட்டையை முடிவுக்குக் கொண்டுவர நடந்த தீவிர திரைமறைவுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இது நடைபெறுவதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் மற்றும் கல்வி முறையில் முழுமையான சீர்திருத்தம் செய்ய வேண்டும் எனக் கோரி, சி.ஜே.பி. இங்குள்ள ஜந்தர் மந்தரில் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறது.</p><p>இந்த விவகாரத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதையடுத்து 'நீட்' விவகாரம் குறித்து விவாதிக்க தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.</p><h2>ராகுல் காந்தி போராட்டம்: </h2><p>நீட் தேர்வு போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசும் போது, "நம் நாட்டு மாணவர்கள் வீதிகளில் இறங்கி உள்ளனர். எனவே எதிர்கட்சியினரும் வீதிகளில் இறங்க வேண்டும் என நாங்கள் உணர்ந்தோம்.முதலில் எதிர்கட்சி எம்.பி.க்களான நாங்கள் அனைவரும் இந்தியா கேட் செல்ல விரும்பினோம். ஆனால் எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.</p><p>பின்னர் நாங்கள் காந்தி நினைவகத்திற்கு சென்று கொண்டிருந்தோம், ஆனால் எங்கள் பேருந்து நிறுத்தப்பட்டது.</p><p>மாணவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால் நீங்கள் தனியாக இல்லை, நாங்கள் உங்களுக்கு துணையாக இருக்கிறோம். நாம் இழந்த மாணவர்களை நினைவுகூரச் செல்கிறோம். நீட் தேர்வுத்தாள் கசிவுக்கு பிறகு, தற்கொலைக்கு தள்ளப்பட்ட அந்த பிள்ளைகளை நினைவுகூர செல்கிறோம்.</p><p>நீதியை நிலை நாட்டும்படி அமைதியாக போராடிய மாணவர்கள் தாக்கப்பட்டு, இன்று காயங்களுடன் அவதிபட்டு வருகின்றனர். அவர்களுக்கு துணையாக நிற்க செல்கிறோம்.</p><p>இந்திய மாணவர்கள் தனியாக இல்லை, ஒட்டுமொத்த எதிர்கட்சியும் அவர்களுடனும் அவர்களின் கோரிக்கைகளுடனும் துணை நிற்கிறது. நீங்கள் மறக்கப்பட மாட்டீர்கள், நாங்கள் மெளனமாக இருக்கமாட்டோம்," என்றார்.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது விவகாரம்: ஆக. 3-இல் தமிழ்நாடு - கர்நாடக முதலமைச்சர்கள் சந்திப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/karnataka-cm-dk-shivakumar-likely-to-meet-tn-cm-vijay-on-aug-3</link><comments>https://www.maalaimalar.com/news/national/karnataka-cm-dk-shivakumar-likely-to-meet-tn-cm-vijay-on-aug-3#comments</comments><guid isPermaLink="false">4bcfe524-05f2-4611-8205-16c5689dedae</guid><pubDate>Thu, 23 Jul 2026 20:04:19 +0000</pubDate><atom:updated>2026-07-23T20:04:19.252Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DK Shivakumar,டிகே சிவகுமார்,cm vijay,முதலமைச்சர் விஜய்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/8s9pywkz/vj-dk-s.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay & DK Shivakumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/8s9pywkz/vj-dk-s.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டுடன் காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பான சர்ச்சை தீவிரமடைந்துள்ள நிலையில், சந்திப்புக்கான நேரம் கோரி தமிழ்நாடு முதல்வர் <a href="https://www.maalaimalar.com/topic/cm-vijay">ஜோசப் விஜய்</a> விடுத்த வேண்டுகோளை ஏற்று, அவரை ஆகஸ்ட் 3-ஆம் தேதி சந்திக்க கர்நாடக முதல்வர் <a href="https://www.maalaimalar.com/topic/dk-shivakumar">டி.கே. சிவகுமார்</a> முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><h2>கடிதம்:</h2><p>முதல்வருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகையில், விஜய் சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு சந்திப்பு கோரி சிவகுமாருக்குக் கடிதம் எழுதி இருந்ததாகவும், ஆகஸ்ட் 03-ஆம் தேதி வருமாறு சிவகுமார் அனுப்பிய கடிதம் அந்த வேண்டுகோளுக்கான பதில் மட்டுமே என்றும் தெரிவித்தன.</p><p>இந்த சந்திப்புக்கான ஏற்பாடு குறித்து தமிழ்நாடு தரப்பில் இருந்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அவர்கள் மேலும் கூறினர். சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு, தமிழ்நாடு முதல்வர் கர்நாடக முதல்வருக்கு கடிதம் எழுதி, அவரை சந்திக்க விருப்பம் தெரிவித்து அதற்கான நேரம் ஒதுக்குமாறு கோரியிருந்ததாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.</p><h2>உறுதிப்படுத்தவில்லை:</h2><p>"ஜோசப் விஜய் தனது வருகையை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. சிவகுமார் அவரது கடிதத்திற்கு பதில் மட்டுமே அளித்துள்ளார்," என்று சிவகுமாருக்கு நெருக்கமான ஒரு வட்டாரம் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தது.</p><p>காவிரி நதிநீர் பகிர்வு மற்றும் சிவகுமாரின் சட்டமன்ற தொகுதியான கனகபுராவில் அமையவுள்ள மேகதாது சமநிலை நீர்த்தேக்க திட்டம் (தமிழ்நாடு இத்திட்டத்தை வலுவாக எதிர்த்து வருகிறது) உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் இந்த சந்திப்பில் முக்கியமாக விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>தீர்மானம்:</h2><p>முன்னதாக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தமிழக சட்டசபையிலும், அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.</p><p>இதுதவிர மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியை தடுப்பது குறித்து அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா மற்றும் நிர்மல் குமார் ஆகியோருடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தி இருந்தார். இந்த ஆலோசனையில் தலைமைச் செயலர் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>]]></content:encoded></item><item><title>போராடும் மாணவர்களுக்கு அவசர கோரிக்கை விடுத்த வாங்சுக்</title><link>https://www.maalaimalar.com/news/national/wangchuk-urges-protesters-to-remain-peaceful</link><comments>https://www.maalaimalar.com/news/national/wangchuk-urges-protesters-to-remain-peaceful#comments</comments><guid isPermaLink="false">c9a4557f-505d-4c79-a1bf-0ecb3594d3a3</guid><pubDate>Thu, 23 Jul 2026 18:48:38 +0000</pubDate><atom:updated>2026-07-23T18:48:38.609Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>protest,மாணவர்கள் போராட்டம்,Wangchuk,வாங்சுக்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/m7q5ja7e/wnagchuk.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வாங்சுக்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/m7q5ja7e/wnagchuk.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜந்தர் மந்தரில் நடைபெறும் போராட்டம் அமைதியாக நடைபெற்று வரும் நிலையில், வேறு இடங்களில் "சமூக விரோத சக்திகள்" வன்முறையை தூண்ட முயற்சிப்பதாக வரும் செய்திகள் தனக்கு வேதனையளிப்பதாக கூறிய சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், நடைபெற்று வரும் மாணவர் இயக்கத்தின் ஆதரவாளர்கள் அமைதியை கடைப்பிடிக்க வலியுறுத்தினார்.</p><h2><strong>மரபை கைவிடாதீர்கள்:</strong></h2><p>தனது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் 26-வது நாளைக் குறிக்கும் வகையில், 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்ட வாங்சுக், "அமைதி, அமைதி மட்டுமே எனது வழி. </p><p>ஜந்தர் மந்தரில் போராட்டங்கள் அமைதியாக நடைபெற்று வரும் வேளையில், வேறு சில இடங்களில் சமூக விரோத சக்திகள் இந்தப் போராட்டத்தைப் பயன்படுத்தி வன்முறையைத் தூண்ட முயற்சிப்பதாக அறிவது எனக்கு வேதனையளிக்கிறது. </p><p>எதிர் தரப்பினர் என்ன செய்தாலும், நமது பதில் மலர்களை போல மென்மையாகவே இருக்க வேண்டும். தயவுசெய்து எக்காரணம் கொண்டும் இந்த மரபை கைவிடாதீர்கள்," என்று வாங்சுக் கூறினார்.</p><h2><strong>குற்றச்சாட்டு:</strong></h2><p>ஜூலை 20 அன்று நடைபெற்ற 'சன்சத் சலோ' போராட்டத்திற்குப் பிறகு இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அந்த பேரணியின்போது, ​​நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்ல முயன்ற ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களை டெல்லி காவல்துறை கண்ணீர்ப்புகை மற்றும் தடியடி மூலம் தடுத்தது. பெல்லட் துப்பாக்கிகள் மற்றும் டேஸர்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.</p><p>இந்த கடுமையான நடவடிக்கையை தொடர்ந்து, மாணவர் இயக்கத்தை வன்முறை சார்ந்ததாக சித்தரிக்கவும், தலைநகரின் பிற பகுதிகளில் நடந்த சம்பவங்களுடன் அதை தொடர்புபடுத்தவும் முயற்சிகள் நடப்பதாக 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' குற்றம் சாட்டியது. இந்தக் குற்றச்சாட்டுகளை காவல்துறை மறுத்தது.</p><h2><strong>மாணவர்களுக்கு ஆதரவு:</strong></h2><p>முன்னதாக, வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி அங்மோ வெளியிட்ட 'எக்ஸ்' தள பதிவில், "கடந்த சில நாட்களாக இந்தியாவின் 'ஜென்-இசட்' (Gen Z - தற்போதைய இளம் தலைமுறை) இளைஞர்களை பார்ப்பது எனக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. அந்நியர்களை குடும்பத்தினர் போல கவனித்துக்கொண்டனர், உணவு மற்றும் தண்ணீரை பகிர்ந்துகொண்டனர், தங்கள் போராட்ட இடங்களை சுத்தப்படுத்தினர், முதியவர்களை கவனித்துக்கொண்டனர்.</p><p>'ஜன கண மன' மற்றும் நம்பிக்கையூட்டும் பாடல்களை ஒன்றிணைந்து பாடினர், கடும் தூண்டுதல்களுக்கு மத்தியிலும் கட்டுப்பாட்டுடன் இருந்தனர். எண்ணற்ற தன்னலமற்ற சேவைகள்" மூலம் இந்த இயக்கத்தை தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருந்தனர்," என்று கூறினார்.</p><p>இந்த போராட்டத்தில் ஜூன் 28-ஆம் தேதியன்று இணைந்த வாங்சுக், அன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். தற்போது அவர் குருகிராமில் உள்ள மேடான்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>இப்போராட்டத்தில் பங்கேற்ற அமைதியான போராட்டக்காரர்கள் மீது எந்தவிதத் தண்டனை நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று மத்திய அரசு உறுதியளித்தால், தனது உண்ணாவிரதத்தைக் கைவிடத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்களை புரிந்து கொள்ள முடிகிறது - நீட் போராட்டம் குறித்து சச்சின் டெண்டுல்கர் அறிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/national/students-disappointment-understandable-tendulkar-statement-on-neet-agitation</link><comments>https://www.maalaimalar.com/news/national/students-disappointment-understandable-tendulkar-statement-on-neet-agitation#comments</comments><guid isPermaLink="false">9ca30d29-f80c-40c5-870f-6f4a0ea379f0</guid><pubDate>Thu, 23 Jul 2026 17:50:34 +0000</pubDate><atom:updated>2026-07-23T17:50:34.342Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sachin Tendulkar,சச்சின் டெண்டுல்கர்,நீட் எதிர்ப்பு போராட்டம்,NEET agitation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/v20efpw7/S-T.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சச்சின் டெண்டுல்கர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/v20efpw7/S-T.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வு வினாத்தாள்கள் தொடர்ச்சியாக கசிவதற்கு எதிராக போராடும் மாணவர்களுக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஆதரவு தெரிவித்தார். மாணவர்களின் ஏமாற்றம் புரிந்துகொள்ளக்கூடியது என்றும், அவர்கள் "மீண்டும் இத்தகைய உணர்வுக்கு ஆளாகாதவாறு" பார்த்துக்கொள்வது சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு என்றும் அவர் கூறினார். </p><p>இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட டெண்டுல்கர், "என் தந்தை ஒரு பேராசிரியராக இருந்தார். அவர் பல இளம் மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் ஆலோசகராகவும் திகழ்ந்தார். அவர் எனக்கு ஆரம்பத்திலேயே கற்றுக்கொடுத்த ஒரு பாடம் இதுதான்: "தோல்வி அடைவதில் தவறில்லை, ஆனால் ஏமாற்றுவது தவறு. ஒருபோதும் குறுக்கு வழிகளைத் தேர்ந்தெடுக்காதீர்கள்."</p><h2>ஏமாற்றம் இயல்பானது:</h2><p>சமூகத்தில் முதிர்ந்த குடிமக்களாக, கலாச்சாரத்தை வடிவமைக்கும் பொறுப்பு நம்மிடம் உள்ளது. உழைப்பை விட முடிவுகளுக்கே முன்னுரிமை அளிக்கும் ஒரு சமூகம், தகுதியின் அடிப்படையில் முன்னேறுவதை விடுத்து குறுக்கு வழிகளையே நாடும்.</p><p>தங்கள் கடின உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்காதபோது மாணவர்கள் ஏமாற்றமடைவது இயல்பானதே; அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இனிவரும் காலங்களில் அவர்களுக்கு அத்தகைய உணர்வு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.</p><h2>வெற்றி கிடைக்கும்:</h2><p>இன்றைய இளம் இந்தியா கனவுகளாலும் ஆற்றலாலும் நிறைந்துள்ளது. அவர்களே நமது வெற்றியின் உந்துசக்தியாக திகழ்கிறார்கள். பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பள்ளிகள் மற்றும் நிர்வாகத்தினர் என சமூகம் சார்ந்த அனைவரும், நமது இளைஞர்கள் தொடர்ந்து ஊக்கத்துடனும் ஆற்றலுடனும் இருப்பதை உறுதி செய்வதில் பெரும் பொறுப்பையும் வெவ்வேறு பங்குகளையும் கொண்டுள்ளோம்.</p><p>கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும், நேர்மை ஊக்குவிக்கப்படும் மற்றும் தகுதிக்கு வெற்றி கிடைக்கும் ஒரு கலாச்சாரத்தை நாம் உருவாக்க வேண்டும். நமது குழந்தைகளின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் மற்றும் அவர்களின் லட்சியங்களைப் பாதுகாக்கும் தீர்வுகளை நாம் அனைவரும் கண்டறிவோம் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது," என குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அ.தி.மு.க. மாணவர் அணி செயலாளர் சிங்கை ஜி ராமச்சந்திரன் கட்சியில் இருந்து விலகல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/key-aiadmk-functionary-singai-ramachandran-resigns</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/key-aiadmk-functionary-singai-ramachandran-resigns#comments</comments><guid isPermaLink="false">7f1cb025-f9b5-4fd1-9608-942e4c7c38ab</guid><pubDate>Thu, 23 Jul 2026 17:01:05 +0000</pubDate><atom:updated>2026-07-23T17:01:05.697Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அதிமுக,AIADMK,சிங்கை ஜி ராமச்சந்திரன்,Singai Ramachandran</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/620k0cfn/singai.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிங்கை ஜி ராமச்சந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/620k0cfn/singai.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கோயம்புத்தூரைச் சேர்ந்த முக்கிய <a href="https://www.maalaimalar.com/topic/aiadmk">அ.தி.மு.க.</a> நிர்வாகியும், அக்கட்சியின் மாணவர் அணி செயலாளருமான சிங்கை ஜி ராமச்சந்திரன், கடந்த சில மாதங்களாக கட்சியில் நிகழ்ந்த அமைப்பு ரீதியான மாற்றங்களை காரணம் காட்டி கட்சியில் இருந்து விலகினார். </p><p>கட்சியில் வகித்த அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் "மிகுந்த மனப்போராட்டத்திற்குப் பிறகே" விலகுவதாக ராமச்சந்திரன் தெரிவித்தார். தனது மனசாட்சிக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அவர் இந்தக் கடினமான முடிவை எடுத்தார். </p><p><strong>எக்ஸ் தள பதிவு:</strong></p><p>"என்னைப் பொறுத்தவரை, அ.தி.மு.க. என்பது வெறும் அரசியல் கட்சி மட்டுமல்ல; அது எப்போதும் என் குடும்பத்தின் ஒரு பகுதியாகவே இருந்து வருகிறது. இது வெறும் அரசியல் கடிதம் அல்ல; என் வாழ்வின் பயணத்தை அசைபோட்டு நான் இதை எழுதுகிறேன்," என்று தனது விலகல் கடிதத்தை 'எக்ஸ்' தளத்தில் பதிவிடும்போது ராமச்சந்திரன் குறிப்பிட்டார்.</p><p>கட்சியுடனான தனது பிணைப்பை நினைவுகூர்ந்த அவர், "'புரட்சித் தலைவி அம்மா' தான் எனக்கு 'ஜி. ராமச்சந்திரன்' என்ற பெயரை சூட்டினார்; சாதாரண ஆலை தொழிலாளியாக இருந்த என் தந்தையை எம்.எல்.ஏ.வாக உயர்த்தியதும் அம்மாதான். என் தந்தையின் திடீர் மறைவுக்கு பிறகு, என் தாயார் உறுதியுடன் நின்று, அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு, எனக்கு நல்ல கல்வியை அளித்து என்னை வளர்த்தெடுத்தார்," என்று கூறினார்.</p><p><strong>ஏமாற்றம்:</strong></p><p>"கடந்த சில மாதங்களாகக் கட்சிக்குள் நிகழ்ந்த சில மாற்றங்கள் எனக்கு ஆழ்ந்த ஏமாற்றத்தையும் மனவேதனையையும் அளித்துள்ளன. எனது கருத்துகளையும் கவலைகளையும் கட்சித் தலைமையிடம் விரிவாகவும் நேர்மையாகவும் பகிர்ந்துகொண்டேன். </p><p>ஆனால், நான் காணும் நிகழ்வுகளை என் மனசாட்சியுடன் ஒருபோதும் ஒத்துப்போக செய்ய முடியாத சூழல் ஏற்பட்டபோது, ​​இந்தக் கடினமான முடிவை எடுத்தேன்," என்று அவர் தெரிவித்தார்.</p><p>அவர் தகவல் தொழில்நுட்பப் (IT) பிரிவின் மாநிலச் செயலாளர், மண்டலச் செயலாளர், மாநிலத் தலைவர் மற்றும் மாணவர் அணியின் மாநிலச் செயலாளர் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்கள் தங்களுக்கு முன்னேற வழியே இல்லை என்று உணர்வதை அறிந்து இதயம் நொறுங்கியது: மம்மூட்டி மற்றும் துல்கர்</title><link>https://www.maalaimalar.com/news/national/students-feel-no-way-forward-heartbreaking-mammootty-dulquer</link><comments>https://www.maalaimalar.com/news/national/students-feel-no-way-forward-heartbreaking-mammootty-dulquer#comments</comments><guid isPermaLink="false">c6fbf4c1-3b2b-4237-8e8e-72c49934ee24</guid><pubDate>Thu, 23 Jul 2026 16:31:23 +0000</pubDate><atom:updated>2026-07-23T16:31:23.533Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Dulquer Salmaan,Mamootty</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/euy6ynag/Untitled-design-58.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mammootty and Dulquer voice support for NEET protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/euy6ynag/Untitled-design-58.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேசிய அளவில் நடத்தப்பட்ட நீட் தேர்வில் முறைகேடுகள் கண்டறியப்பட்ட நிலையில், அதை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களுக்கு ஆதரவாக மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p>72 வது தேசிய விருதில் பிரம்மயுகம் திரைப்படத்திற்காக தனது நான்காவது தேசிய விருதை வென்ற மம்மூட்டி, தற்போது நாடு முழுவதும் நீட் தேர்விற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும்  மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.</p><h3><strong>மாணவர்களுக்கு ஆதரவாக மம்மூட்டி பதிவு:</strong></h3><p>இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “இளைஞர்கள் நமது தேசத்தின் பொக்கிஷம்; அவர்களின் குரலுக்கு செவி சாயுங்கள்.</p><p>அவர்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள்; அவர்களுக்கு வலுவூட்டுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.</p><p>முன்னதாக நடிகர் மம்மூட்டியின் மகனான துல்கர் சல்மான், ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு ஆதரவாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.</p><h3><strong>மாணவர்களுக்கு ஆதரவாக துல்கர் பதிவு:</strong></h3><p>நடிகர் துல்கர் சல்மான் அந்த பதிவில்:-</p><p>ஜந்தர் மந்தரில் நடப்பது, சற்று நின்று செவிமடுத்து புரிதலை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கான ஒரு நினைவூட்டலாகும்.</p><p>கல்வி என்பது எப்போதுமே நம்பிக்கை, வாய்ப்பு மற்றும் ஒரு சிறந்த எதிர்காலத்திற்கான வாக்குறுதியை பற்றியதாகவே இருந்து வந்துள்ளது.</p><p>இளம் வயதினர் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்வதை காண்பது மனதை பிழிவதாக உள்ளது.</p><p>சில மாணவர்கள் தங்களுக்கு முன்னேற வழியே இல்லை என்று உணர்வதை அறிந்து என் இதயம் நொறுங்கியது.</p><p>மாணவர்களின் தற்கொலை செய்திகளை கேட்பது வேதனை அளிக்கிறது. பெற்றோர்கள் தங்களின் கனவுகள் நனவாவதை உறுதிசெய்ய, வலி மற்றும் கடன் என்ற இரட்டை சுமையை சுமக்க வேண்டியுள்ளது.</p><p>ஒவ்வொரு கருத்திற்கும் அப்பால், இரக்கத்திற்கும் மரியாதைக்கும் தகுதியான கனவுகள், லட்சியங்கள், குடும்பங்கள் மற்றும் நம்பிக்கைகளை கொண்ட தனி நபர்கள் உள்ளனர்.</p><p>அர்த்தமுள்ள உரையாடல்கள், அமைதியான தீர்வுகள் மற்றும் ஞானம் ஆகியவற்றால் வழி நடத்தப்படும் முடிவுகள் ஏற்பட வேண்டும்.</p><p>பிரிவினை மற்றும் வன்முறையின் மீது கட்டப்பட்ட எதிர்காலத்தை விட, புரிதலின் மீது கட்டப்பட்ட எதிர்காலம் எப்போதும் வலிமையானதாக இருக்கும்” என்று பதிவிட்டிருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>“தர்மேந்திர பிரதான் பதவி விலகாவிட்டால் பிரதமர் மோடியும் விலக நேரிடும்” - அபிஜித் தீப்கே எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/if-dharmendra-pradhan-does-not-resign-modi-will-also-have-to-step-down-abhijit-deepke-warns</link><comments>https://www.maalaimalar.com/news/national/if-dharmendra-pradhan-does-not-resign-modi-will-also-have-to-step-down-abhijit-deepke-warns#comments</comments><guid isPermaLink="false">fba49b52-e0ae-4ca4-aa3c-5167c9314db0</guid><pubDate>Thu, 23 Jul 2026 16:18:44 +0000</pubDate><atom:updated>2026-07-23T16:18:44.993Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,pm modi,பிரதமர் மோடி,abhijeet dipke,அபிஜித் தீப்கே</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/vuvf5yt8/New-Project-2026-07-23T214811.973.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “தர்மேந்திர பிரதான் பதவி விலகாவிட்டால் மோடியும் விலக நேரிடும்” - அபிஜித் தீப்கே எச்சரிக்கை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/vuvf5yt8/New-Project-2026-07-23T214811.973.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை அரசு ஏற்கத் தவறினால், பிரதமர் மோடியின் ராஜினாவைக் கோரும் நிலைக்கு போராட்டம் செல்லும் என கரப்பான் பூச்சி கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார். ஜந்தர் மந்தரில் போராட்டக்காரர்கள் நடுவே பேசிய அவர்,.</p><p>“பிரதமர் மோடி அவர்களே, தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளுமாறு நான் மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன். இல்லையெனில், இந்தப் பிரச்சனை தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவுடன் மட்டும் நின்றுவிடாது; அது உங்கள் ராஜினாமாவைக் கோரும் நிலைக்குச் செல்லும். </p><p>திறமையற்ற மற்றும் தோல்வியடைந்த ஒரு அமைச்சரை விட, இந்நாட்டின் கோடிக்கணக்கான மாணவர்கள் முக்கியமானவர்கள் அல்லவா? கோடிக்கணக்கான மாணவர்களை விடத் தோல்வியடைந்த, திறமையற்ற ஒரு அமைச்சருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டால், ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்: இந்தியாவில் யாரும் உங்களுக்குத் தேர்தலில் வாக்களிக்க மாட்டார்கள்.</p><p>அரசு தர்மேந்திர பிரதானை பாதுகாப்பது  வெட்கக்கேடானது.” என தெரிவித்தார். </p><p>டெல்லியில் சிஜேபி தொடங்கிய போராட்டம் தற்போது நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது. இதனைத்தொடர்ந்து மத்திய அரசு தரப்பில் இருந்து, பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் ஜே.பி.நட்டா அழைப்பு விடுத்தார். </p><p>ஆனால் சிஜேபி இந்த பேச்சுவார்த்தை கோரிக்கையை நிராகரித்துள்ளது. அரசு அலுவலங்களிலோ, அதிகாரிகள் இல்லங்களிலோ பேச்சுவார்த்தைக் கூடாது எனவும், பொதுவான ஒரு இடத்திலேயே பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என சிஜேபியினர் தெரிவிக்கின்றனர்.</p><h2>எதற்காக இந்தப் போராட்டம்?</h2><p>நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என கரப்பான் பூச்சி கட்சியினர் ஜூன்.20ம் தேதி முதல் போராட்டம் நடத்திவருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>‘போராட்டம் உங்களுக்கு தேவையில்லாத விஷயம் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார்’ - தெருக்குரல் அறிவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadav-arjuna-said-that-a-protest-is-unnecessary-for-you-therukural-arivu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadav-arjuna-said-that-a-protest-is-unnecessary-for-you-therukural-arivu#comments</comments><guid isPermaLink="false">2d7a7473-0ea7-4191-9426-929ea33f3db6</guid><pubDate>Thu, 23 Jul 2026 15:51:51 +0000</pubDate><atom:updated>2026-07-23T15:51:51.424Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>neet,நீட்,therukural arivu,தெருக்குரல் அறிவு,அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,Minister Aadav Arjuna</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/xqve4hqw/New-Project-2026-07-23T212125.858.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘போராட்டம் உங்களுக்கு தேவையில்லாத விஷயம் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார்’ - தெருக்குரல் அறிவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/xqve4hqw/New-Project-2026-07-23T212125.858.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்யக் கோரியும், டெல்லியில் போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவாகவும் நீலம் பண்பாட்டு மையம் மற்றும் நீலம் மாணவர் இயக்கம் சார்பில் சென்னையில் இன்று (23 ஜூலை ) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p><p>நீலம் பண்பாட்டு மையத்தின் நிறுவனர் மற்றும் திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், இயக்குநர்கள் வெற்றிமாறன், நடிகை ஆண்ட்ரியா, ஜேம்ஸ் வசந்தன், மன்சூர் அலிகான், இயக்குநர் அமீர், நடிகர் கலையரசன், பாடகர் தெருக்குரல் அறிவு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  </p><p>ஆர்ப்பாட்ட மேடையில் பேசிய தெருக்குரல் அறிவு.,</p><p>“நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும், நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும் என நாடு முழுவதும் இளைஞர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இது வெறும் நீட்டுக்கு எதிரானது அல்ல. இங்கு அடிப்படை கல்வியிலேயே பிரச்சனை உள்ளது.</p><p>ஒருவருக்குள் இருக்கும் திறமை வளர்த்தெடுக்கும் கல்வி அமைப்பு இங்கு இல்லை. இதனால்தான் மாணவர்களுக்கு பாடத்தை, ஆசிரியர்களை, தேர்வை பார்த்து பயம், குழப்பம் ஏற்படுகிறது. இந்த குழப்பத்திற்குத்தான் பெற்றோர்கள் கட்டணம் செலுத்துகின்றனர். </p><p>ஒரு பிள்ளைக்கு முள் குத்தினாலே ஒரு தாயால் தாங்கமுடியாது. ஒரு பிள்ளை தற்கொலை செய்துகொள்வதை எவ்வாறு ஒரு தாய் தாங்கிக்கொள்வாள்? எத்தனைக் குழந்தைகளை, எத்தனை மாணவர்களை நாம் நீட்டால் இழந்திருப்போம்? முதல் குழந்தை சாகும்போதே இதில் கவனம் செலுத்தியிருந்தால் இன்று இந்தநிலை வந்திருக்காது.</p><p>சமூகமே சமமாக இல்லை. சமமாக இல்லாத சமூகத்தில் எல்லோருக்கும் எப்படி சமமான தேர்வு இருக்கும்? இந்த அரசு மாணவர்கள்மீது வன்முறையை ஏவி காயப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் போராட்டத்தில் நான் இறங்கினேன்.</p><p>அரியலூரைச் சேர்ந்த அனிதா 10 ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பிய கேள்விக்கு இப்போதுவரை நம்மிடத்தில் பதில் இல்லை. இது அனிதாவிற்கான போராட்டம். இதற்கு தீர்வு காணும் வரை யாரும் இதில் இருந்து பின்வாங்கக்கூடாது. அரசிடம் முறையிடுவதன் மூலம் இது நடைபெறாத ஒன்று என எனக்கு எப்போதோ தெரிந்துவிட்டது. </p><p>இந்தியா முழுவதும் போராடும் கரப்பான் பூச்சி கட்சியினரின் போராட்டத்திற்கு எனது முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன். மாணவர்களின் போராட்டம் வெல்லவேண்டும். இவர்கள்தான் நமது எதிர்காலம். நீட் மட்டுமல்ல புதியக் கல்விக்கொள்கையையும் நாம் ரத்துசெய்ய வேண்டும். </p><p>இன்று சாதிக்கு பதில் தேர்வு என்ற பெயரை வைக்கின்றனர். நான் அன்று தலைமைச் செயலகத்தின் முன்பு போராடியதால் என்னை உள்ளே அழைத்துப் பேசினார்கள். நான் அன்று முதலமைச்சரை சந்திக்கவில்லை, அமைச்சர் ஆதவ்வைத்தான் சந்தித்தேன். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தால்தான் நீட் தேர்வை ரத்து செய்யமுடியும். </p><p>நீங்கள் ஏன் இந்த போராட்டத்தில் இறங்குகிறீர்கள்? இது உங்களுக்கு தேவை இல்லாத விஷயம் என்றுக்கூறி அனுப்பினார்கள். முதலமைச்சரை சந்திப்பால்தான் மட்டும் இந்த பிரச்னை தீர்ந்துவிடாது. இது மக்கள் கையில் எடுக்கவேண்டிய போராட்டம். நாம் அம்பேத்கரின் பேரப்பிள்ளைகள். நமது குரல் மக்கள் பிரச்சனைகளுக்காக ஒலிக்கவேண்டும். எனது குரல் ஒலிக்கும்.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>மாணவர்கள் தனியாக இல்லை, நாங்கள் அவர்களுக்கு துணையாக இருக்கிறோம்: ராகுல் காந்தி</title><link>https://www.maalaimalar.com/news/national/students-are-not-alone-we-stand-with-them-rahul-gandhi</link><comments>https://www.maalaimalar.com/news/national/students-are-not-alone-we-stand-with-them-rahul-gandhi#comments</comments><guid isPermaLink="false">6a358d6d-0acb-453d-a414-e766fd2b0aa7</guid><pubDate>Thu, 23 Jul 2026 15:45:20 +0000</pubDate><atom:updated>2026-07-23T15:45:20.211Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,neet,நீட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/vlzx4qnh/Untitled-design-57.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rahul Gandhi joins NEET Exam Protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/vlzx4qnh/Untitled-design-57.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் பல முக்கிய இடங்களில் நீட் தேர்விற்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், புது டெல்லியில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது இல்லத்தில் இருந்து காந்தி நினைவிடத்திற்கு காங்கிரஸ் கட்சியினருடன் பேரணியாக சென்றார்.</p><p>அப்போது பேரணியாக சென்ற ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினரின் வாகனத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.</p><h3><strong>நீட் தேர்வு போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி:</strong></h3><p>அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-</p><p>நம் நாட்டு மாணவர்கள் வீதிகளில் இறங்கி உள்ளனர். எனவே எதிர்கட்சியினரும்  வீதிகளில் இறங்க வேண்டும் என நாங்கள் உணர்ந்தோம்.</p><p>முதலில் எதிர்கட்சி எம்.பி.க்களான நாங்கள் அனைவரும் இந்தியா கேட் செல்ல விரும்பினோம். ஆனால் எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.</p><p>பின்னர் நாங்கள் காந்தி நினைவகத்திற்கு சென்று கொண்டிருந்தோம், ஆனால் எங்கள் பேருந்து நிறுத்தப்பட்டது.</p><p>மாணவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால் நீங்கள் தனியாக இல்லை, நாங்கள் உங்களுக்கு துணையாக இருக்கிறோம்.</p><p>நாம் இழந்த மாணவர்களை நினைவுகூரச் செல்கிறோம். நீட் தேர்வுத்தாள் கசிவுக்கு பிறகு, தற்கொலைக்கு தள்ளப்பட்ட அந்த பிள்ளைகளை நினைவுகூர செல்கிறோம்.</p><p>மேலும் நீதியை நிலை நாட்டும்படி அமைதியாக போராடிய மாணவர்கள் தாக்கப்பட்டு, இன்று காயங்களுடன் அவதிபட்டு வருகின்றனர். அவர்களுக்கு துணையாக நிற்க செல்கிறோம்.</p><p>இந்திய மாணவர்கள் தனியாக இல்லை, ஒட்டுமொத்த எதிர்கட்சியும் அவர்களுடனும் அவர்களின் கோரிக்கைகளுடனும் துணை நிற்கிறது.</p><p>நீங்கள் மறக்கப்பட மாட்டீர்கள், நாங்கள் மெளனமாக இருக்கமாட்டோம்.</p><p>இவ்வாறு மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>இலங்கை கடற்படையால் நேற்று கைது செய்யப்பட்ட 9 ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஆக.6 வரை சிறை - நீதிமன்றம் உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/court-orders-imprisonment-until-august-6-for-the-nine-rameswaram-fishermen-arrested-by-the-sri-lankan-navy-yesterday</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/court-orders-imprisonment-until-august-6-for-the-nine-rameswaram-fishermen-arrested-by-the-sri-lankan-navy-yesterday#comments</comments><guid isPermaLink="false">d15b99f5-eced-47ad-b61b-6ec6f5eaa441</guid><pubDate>Thu, 23 Jul 2026 15:22:05 +0000</pubDate><atom:updated>2026-07-23T15:22:05.685Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறை,Fishermen,Prison,Sri Lankan navy,இலங்கை கடற்படை,தமிழ்நாடு மீனவர்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/ouk1u21h/New-Project-2026-07-23T205146.551.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இலங்கை கடற்படையால் நேற்று கைது செய்யப்பட்ட 9 ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஆக.6 வரை சிறை - நீதிமன்றம் உத்தரவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/ouk1u21h/New-Project-2026-07-23T205146.551.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மன்னார் கடற்பகுதியின் வடக்குப் பகுதியில் மீன்பிடித்தபோது சர்வதேச கடல் எல்லைக் கோட்டை மீறியதாகக் கூறி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஒன்பது மீனவர்களை இலங்கை கடற்படை நேற்று (ஜூலை.22) கைது செய்தது. </p><p>இந்நிலையில் இந்த 9 பேருக்கும் ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி வரை சிறைதண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>நேற்று காலை ராமேஸ்வரத்திலிருந்து 3,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள், 400-க்கும் மேற்பட்ட இயந்திரப் படகுகளில் கடலுக்குச் சென்றனர். </p><p>இதில், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிரசாந்த் என்பவருக்கு சொந்தமான படகு ஒன்று, மன்னாருக்கு வடக்கே உள்ள கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ​​இலங்கை கடற்படை ரோந்துப் படையினர் படகை வழிமறித்து, அதில் இருந்த 9 மீனவர்களையும் கைது செய்தனர். அந்தப் படகும் பறிமுதல் செய்யப்பட்டது.</p><p>கைது செய்யப்பட்ட மீனவர்கள் மன்னாரில் உள்ள இலங்கை கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கைப்பற்றப்பட்ட படகு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்பிடி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என்று இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.</p><p>இந்நிலையில் இந்த 9 மீனவர்களுக்கு ஆகஸ்ட் வரை சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>‘இந்தியாவை நேபாளமாக மாற்றுவது ஜனநாயகமல்ல’ - போராட்டம் குறித்து சூர்யகுமார் யாதவின் மனைவி கருத்து!</title><link>https://www.maalaimalar.com/news/national/turning-india-into-nepal-is-not-democracy-suryakumar-yadavs-wife-comments-on-the-protests</link><comments>https://www.maalaimalar.com/news/national/turning-india-into-nepal-is-not-democracy-suryakumar-yadavs-wife-comments-on-the-protests#comments</comments><guid isPermaLink="false">3fc186b5-e3a2-4683-85ef-d848d820926a</guid><pubDate>Thu, 23 Jul 2026 14:49:10 +0000</pubDate><atom:updated>2026-07-23T14:49:10.931Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Suryakumar Yadav,சூர்யகுமார் யாதவ்,CJP Protest,Devisha Shetty,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம்,தேவிஷா ஷெட்டி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/wz8ccsse/New-Project-2026-07-23T201843.552.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘இந்தியாவை நேபாளமாக மாற்றுவது ஜனநாயகமல்ல’ - போராட்டம் குறித்து சூர்யகுமார் யாதவின் மனைவி கருத்து!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/wz8ccsse/New-Project-2026-07-23T201843.552.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>போராட்டம் என்ற பெயரில் இந்தியாவை நேபாளமாக மாற்றுவது ஜன நாயகம் அல்ல என தற்போது நாடு முழுவதும் வெடித்துள்ள நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ்வின் மனைவி தேவிஷா ஷெட்டி கருத்து தெரிவித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ள அவர்.,</p><p>“நீட் தேர்வுக்கான போராட்டத்தை நான் ஆதரிக்கிறேன்; கல்வித் துறையில் பெரும் சீர்திருத்தங்கள் தேவை; ஒரு மாணவர் கூட உயிரிழந்திருக்கக் கூடாது. ஆனால், கல்வீச்சுச் சம்பவங்கள் போராட்டத்தை வலுப்படுத்தாது என்றும் நான் கூறுகிறேன்.</p><p>பிரிவு 370-ஐக் கோருவது நீட் தேர்வு விவகாரம் சார்ந்ததல்ல; இந்தியாவை நேபாளமாக மாற்றுவது ஜனநாயகமும் அல்ல; ஒரு மதத்தை மட்டும் இழிவுபடுத்துவது நீட் தேர்வுக்கான போராட்டம் ஆகாது;</p><p>‘அல்லாஹ்வின் பெயர் நிலைத்திருக்கட்டும்’ போன்ற முழக்கங்கள் இதற்குத் தீர்வு காணாது. ஆனால் உங்களால் கண்டிக்க முடியுமா?இதில் எதையாவது... அல்லது மோடி மீதான வெறுப்பு என்ற பெயரில் நாம் நம்முடைய முதுகெலும்பை இழந்துவிட்டோமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கொய்யா இலையில் இவ்வளவு நன்மைகளா..! மிஸ் பண்ணிடாதீங்க..</title><link>https://www.maalaimalar.com/health/generalmedicine/health-benefits-of-guava-leaves-you-shouldnt-miss</link><comments>https://www.maalaimalar.com/health/generalmedicine/health-benefits-of-guava-leaves-you-shouldnt-miss#comments</comments><guid isPermaLink="false">a513ae78-e191-452e-9c7c-a83c7ec7b25e</guid><pubDate>Thu, 23 Jul 2026 14:36:37 +0000</pubDate><atom:updated>2026-07-23T14:36:37.613Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Health,ஆரோக்கியம்,HealthTips,உடல்நலம்,Guava Leaves,கொய்யா இலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/2qa0lsl2/guava.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Guava Leaves]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/2qa0lsl2/guava.jpg?w=280" width="280"></media:thumbnail><category>பொது மருத்துவம் (General Medicine)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கொய்யா இலை (Guava Leaves) என்பது இயற்கை மருத்துவத்தில் மிகவும் முக்கியமான ஒரு மூலிகை ஆகும். பழங்காலத்திலிருந்தே இதன் மருத்துவ பயன்பாடு பல்வேறு நோய்களுக்கு உதவியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தினசரி வாழ்க்கையில் இதனை சரியான முறையில் பயன்படுத்தினால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கலாம். </p><h2><strong>ரத்த சர்க்கரை (Blood Sugar):</strong></h2><p>கொய்யா இலை தேநீர் ரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த உதவலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இது உடலில் சர்க்கரை உறிஞ்சும் வேகத்தை குறைக்க உதவுகிறது. அதனால் diabetes உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் பயன்படுத்தலாம்.</p><h2><strong>இதய ஆரோக்கியம்:</strong></h2><p>கொய்யா இலைகள் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த உதவக்கூடும். இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவுகிறது. </p><h2><strong>சரும அழகு:</strong></h2><p>Guava leaves ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தவை. இது முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள், முதிர்ச்சி அடைதல் ஆகியவற்றை குறைக்க உதவலாம். முகப்பரு குறைக்கவும் உதவுகிறது. இயற்கையான glow கிடைக்க உதவும்.</p><h2><strong>பல் மற்றும் ஈறு ஆரோக்கியம்:</strong></h2><p>கொய்யா இலைக் கஷாயம் வாயில் பயன்படுத்தும்போது ஈறு வீக்கம், பல் வலி மற்றும் பாக்டீரியா வளர்ச்சி குறைய உதவுகிறது. இது mouth hygieneக்கு மிகவும் பயனுள்ளது.</p><h2><strong>மாதவிடாய் வலி:</strong></h2><p>சில பாரம்பரிய மருத்துவ முறைகளில் கொய்யா இலை தேநீர் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலியை குறைக்க உதவுகிறது என்று கூறப்படுகிறது. இது உடலை சாந்தமாக வைத்திருக்க உதவலாம்.</p><h2><strong>நோய் எதிர்ப்பு சக்தி:</strong></h2><p>Guava leaves வைட்டமின் C மற்றும் antioxidants கொண்டதால் உடல் immunity system-ஐ வலுப்படுத்த உதவலாம். இதனால் சாதாரண நோய்கள் வராமல் தடுப்பதில் உதவுகிறது.</p><h2><strong>செரிமானம் &amp; எடை குறைப்பு:</strong></h2><p>இவை digestion system-ஐ மேம்படுத்தி வயிற்று பிரச்சனைகளை குறைக்க உதவலாம். மேலும் metabolism-ஐ சீராக்கி weight management க்கு உதவுகிறது. இவை அனைத்தும் இயற்கை மற்றும் பாரம்பரிய தகவல்கள் மட்டுமே. எந்த ஒரு health issue இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனை அவசியம்.</p>]]></content:encoded></item><item><title>நீட் தேர்விற்கு எதிராக தவெக மற்றும் ஒன்றிய அரசை கண்டித்து நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம்: நாம் தமிழர் கட்சி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/protest-against-state-and-union-governments-by-nam-tamizhar-katchi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/protest-against-state-and-union-governments-by-nam-tamizhar-katchi#comments</comments><guid isPermaLink="false">d96f4b23-3eda-4cb8-88dc-8c157a9319c1</guid><pubDate>Thu, 23 Jul 2026 14:30:27 +0000</pubDate><atom:updated>2026-07-23T14:30:27.391Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Seeman,NTK,நாம் தமிழர்,நீட் தேர்வு போராட்டம்,neet protest,சீமான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/qxwygbmk/Untitled-design-56.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ NEET Protest by Naam Tamilar Katchi in Chennai Rally]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/qxwygbmk/Untitled-design-56.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h3><strong>நீட் தேர்வு குளறுபடி:</strong></h3><p>இந்தியா முழுவதும் மருத்துவ சேர்க்கைக்கான நீட் தேர்வு தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பட்டு வருகிறது.</p><p>இந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில், வினாத்தாள் கசிவு ஏற்பட்டு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு திரும்பவும் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பட்டது.</p><p>இதையடுத்து டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும்படி காக்ரோச் ஜனதா கட்சினர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். </p><p>இந்த போராட்டம் தேசிய அளவில் விரிவடைந்த நிலையில், பல்வேறு அமைப்பினர் நீட் தேர்விற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். </p><h3><strong>நீட் தேர்விற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்:</strong></h3><p>இந்நிலையில் தமிழகத்தில் நீட் தேர்விற்கு எதிராக நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><p>சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு திடல் அருகில், வரும் சனிக்கிழமை காலை 10 மணிக்கு நாம் தழிழர் கட்சி, மாணவர் பாசறை மற்றும் இளைஞர் பாசறை சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும் இந்த அறிவிப்பில், “நீட் முறைகேடுகளுக்கும், குளறுபடிகளுக்கும் எதிராக டெல்லியில் அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் மற்றும் இளைஞர் கூட்டத்தினர் மீது கண்மூடித்தனமாக தடியடி தாக்குதல் நடத்திய ஒன்றிய அரசை கண்டித்தும்,</p><p>டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாட்டிலும் மாணவர்களும், இளைஞர்களும் போராட முனையும்போது, அதனை காவல்துறையினர் மூலம் அடக்கி ஒடுக்கும் தவெக அரசை கண்டித்தும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுறுத்தலின் பேரில் போராட்டம் நடைபெறவுள்ளது.</p><p>இவ்வாறு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சூர்யவன்ஷி அதிரடி: முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது இந்தியா</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/india-beat-zimbabwe-in-first-t20-match</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/india-beat-zimbabwe-in-first-t20-match#comments</comments><guid isPermaLink="false">a78e3fe0-2917-49eb-9439-a34f9dbd6451</guid><pubDate>Thu, 23 Jul 2026 14:23:44 +0000</pubDate><atom:updated>2026-07-23T14:23:44.890Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வைபவ் சூர்யவன்ஷி,ZIMvIND,ஜிம்பாப்வே இந்தியா தொடர்,Vaibhav Sooryavanshi</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/k6punrsf/soorya.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ sooryavanshi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/k6punrsf/soorya.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்பதற்காக ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஹராரேயில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.</p><p>அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 125 ரன்கள் எடுத்தது. மாதேவீர் 34 பந்தில் 39 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். ரியான் பர்ல் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். மருமானி 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.</p><p>இந்தியா சார்பில் மயங்க் யாதவ், பிரின்ஸ் யாதவ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.</p><p>இதையடுத்து, 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கினர்.</p><p>இந்த ஜோடி 23 ரன்கள் சேர்த்த நிலையில் அபிஷேக் சர்மா ஒரு ரன்னில் அவுட்டானார். மறுபுறம் அதிரடியாக ஆடிய சூர்யவன்ஷி 19 பந்தில் 4 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 50 ரன் எடுத்து அவுட்டானார்.</p><p>2வது விக்கெட்டுக்கு சூர்யவன்ஷி, இஷான் கிஷன் ஜோடி 45 ரன்கள் சேர்த்தது.</p><p>அடுத்து இணைந்த ஷ்ரேயஸ் அய்யர், இஷான் கிஷன் ஜோடி 46 ரன்கள் சேர்த்த நிலையில் இஷான் கிஷன் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷ்ரேயஸ் அய்யர் 28 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.</p><p>இறுதியில் இந்திய அணி 13.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>டெல்லியில் சி.ஜே.பி போராட்டம்: கலவரத்தில் ஈடுபட்டால் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய  காவல்துறை நடவடிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/national/cjp-protest-in-delhi-passports-of-rioters-to-be-cancelled</link><comments>https://www.maalaimalar.com/news/national/cjp-protest-in-delhi-passports-of-rioters-to-be-cancelled#comments</comments><guid isPermaLink="false">bedbe312-cb0c-49ea-83ed-aba8d8438ea0</guid><pubDate>Thu, 23 Jul 2026 14:13:16 +0000</pubDate><atom:updated>2026-07-23T14:13:16.700Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>neet,நீட் தேர்வு,CJP Protest,சி.ஜே.பி போராட்டம்,Passport cancellation,பாஸ்போர்ட் ரத்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/y2xb529j/del.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CJP Protest ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/y2xb529j/del.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் நடைபெற்ற 'சலோ சன்சாத்' (பாராளுமன்றத்தை நோக்கி பேரணி) போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது. இதன்படி, கலவரத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்ட நபர்களின் பாஸ்போர்ட்டை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை காவல்துறை விரைவில் தொடங்கவுள்ளது.</p><p>சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் மாணவர் நலன் சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) சார்பாக பாராளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தப்பட்டது. ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பாராளுமன்றத்தை சுற்றியுள்ள பாதுகாப்பு தடுப்புகளை உடைத்து செல்ல முயன்றனர்.</p><p>பேரணி கட்டுப்பாட்டை மீறி வன்முறையாக மாறியதை அடுத்து, நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தைக் கலைத்தனர். இக்கலவரத்தில் பல காவல்துறையினரும், போராட்டக்காரர்களும் காயமடைந்தனர். மேலும், கட்சியின் நிறுவனர் 'அபிஜீத் தீப்கே' உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.</p><h2><strong>டெல்லி காவல்துறை கடும் எச்சரிக்கை:</strong></h2><p>வழக்கமாக பதிவு செய்யப்படும் குற்றவியல் வழக்குகளைத் தவிர்த்து, இந்த முறை கூடுதல் நடவடிக்கையாக கலவரக்காரர்களின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய அல்லது புதிய பாஸ்போர்ட் விண்ணப்பங்களை நிராகரிக்க மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு (RPO) சிபாரிசு செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளது. </p><p>போராட்டம் என்ற பெயரில் பொதுமக்களின் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பது மற்றும் அரசு ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது இத்தகைய கடும் நடவடிக்கைகள் தொடரும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><h2><strong>நாடு தழுவிய போராட்டத்திற்கு சி.ஜே.பி அழைப்பு:</strong></h2><p>மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்து, 'சி.ஜே.பி' கட்சி சார்பாக நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் இச்சம்பவம் குறித்து கலவையான விவாதங்கள் உருவாகியுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>சர்வதேச டி20 போட்டியில் குறைந்த வயதில் முதல் அரைசதம்: சூர்யவன்ஷி சாதனை</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/suryavanshi-youngest-half-century-t20i</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/suryavanshi-youngest-half-century-t20i#comments</comments><guid isPermaLink="false">3a873b52-0437-4c15-bccc-d9e4694a15e4</guid><pubDate>Thu, 23 Jul 2026 14:05:43 +0000</pubDate><atom:updated>2026-07-23T14:05:43.564Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வைபவ் சூர்யவன்ஷி,ZIMvIND,ஜிம்பாப்வே இந்தியா தொடர்,sooryavanshi</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/4cctlndf/vaibhav.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ sooryavanshi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/4cctlndf/vaibhav.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி அரை சதம் அடித்து அவுட்டானார்.</p><h2>முதல் டி20 போட்டி</h2><p>இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்பதற்காக ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஹராரேயில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.</p><p>அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 125 ரன்கள் எடுத்தது. மாதேவீர் 34 பந்தில் 39 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். ரியான் பர்ல் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். மருமானி 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.</p><p>இந்தியா சார்பில் மயங்க் யாதவ், பிரின்ஸ் யாதவ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.</p><p>இதையடுத்து, 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கினர்.</p><p>இந்த ஜோடி 23 ரன்கள் சேர்த்த நிலையில் அபிஷேக் சர்மா ஒரு ரன்னில் அவுட்டானார்.</p><h2>சூர்யவன்ஷி சாதனை</h2><p>மறுபுறம் அதிரடியாக ஆடிய சூர்யவன்ஷி 19 பந்தில் 4 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 50 ரன் எடுத்து அவுட்டானார்.</p><p>இதன்மூலம் குறைந்த வயதில் முதல் அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை சூர்யவன்ஷி படைத்துள்ளார்.</p><p>இவருக்கு முன், சச்சின் டெண்டுல்கர் 16 வயது 213 நாள்களில் அரை சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது - காவிரி விவகாரம்: மெத்தனப்போக்கில் தவெக அரசு - கேள்விகளை அடுக்கிய மு.க.ஸ்டாலின்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-cauvery-issue-tvk-governments-lackadaisical-approach-mk-stalin-raises-a-barrage-of-questions</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-cauvery-issue-tvk-governments-lackadaisical-approach-mk-stalin-raises-a-barrage-of-questions#comments</comments><guid isPermaLink="false">da82a56c-b76e-4f47-94e6-6a28520a0a79</guid><pubDate>Thu, 23 Jul 2026 13:51:16 +0000</pubDate><atom:updated>2026-07-23T13:51:16.895Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மேகதாது விவகாரம்,Cauvery,மு.க.ஸ்டாலின்,Mekedatu issue,M.k. stalin,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,காவிரி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/5ils0gad/New-Project-2026-07-23T192056.056.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மேகதாது - காவிரி விவகாரம்: மெத்தனப்போக்கில் தவெக அரசு - கேள்விகளை அடுக்கிய மு.க.ஸ்டாலின்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/5ils0gad/New-Project-2026-07-23T192056.056.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்காதது, மேகதாது அணை விவகாரம் உள்ளிட்டவை தொடர்பாக முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறு கேள்விகளை முன்வைத்துள்ளார். அவை பின்வருமாறு; </p><p>1) தமிழ்நாட்டின் கோரிக்கையைக் காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்ந்து நிராகரித்து வரும் நிலையில் இதுகுறித்து பிரதமரிடம் பேசாதது ஏன்?</p><p> 2) தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சர் என்ன செய்துகொண்டிருக்கிறார்?</p><p>3) தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை எதிர்த்துப் பேச என்ன பயம்?</p><p>4) அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏன் கூட்டவில்லை?</p><p>5) மேகதாது அணைக்கு எதிரான சட்டமன்றத் தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களுடன் சென்று பிரதமரிடம் நேரில் அளிப்பது எப்போது?</p><p>6) தவிக்கும் டெல்டா விவசாயிகளுக்கான நிவாரணத் தொகுப்பு எங்கே?</p><p>மேலும் காவிரி விவகாரத்தில் தவெக அரசு மௌனம் காப்பது அதிர்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள போஸ்டர் ஒன்றில், </p><p>தமிழ்நாட்டின் கோரிக்கையைக் காவிரி மேலாண்மை ஆணையம் மீண்டும் மீண்டும் நிராகரித்து, காலதாமதம் செய்து கொண்டிருக்கிறது. ஏற்கெனவே முழுக் கடன் தள்ளுபடி செய்யாமல் விவசாயிகளை ஏமாற்றி விட்டது இந்த அரசு. குறுவையும் பாதித்து சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகும்</p><p>பேராபத்தில் காவிரி டெல்டா விவசாயிகள் உள்ளனர். நெருக்கடியான இச்சூழ்நிலையில், முதலமைச்சர்  பிரதமர் அவர்களைச் சந்தித்திருக்க வேண்டும்.</p><p>ஆனால் முதலமைச்சரும் பேசவில்லை. நீர்வளத்துறை அமைச்சரும் பேசவில்லை. மேகதாது அணைக்கு எதிரான சட்டமன்றத் தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளையும் அழைத்துக் கொண்டு பிரதமரிடம் நேரில் கொடுக்க நேரமில்லாமல் இருக்கிறார் முதலமைச்சர்.</p><p>தமிழ்நாட்டிற்குக் காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடக அரசையும் தட்டிக் கேட்க முடியாமல் தவிக்கிறார். அர்த்தமற்ற மவுனத்தைக் கலைத்து மாநில உரிமையை நிலைநாட்ட போர்க்கால நடவடிக்கையில் ஈடுபடுக.</p><p>குறுவை பாதிப்பு மற்றும் சம்பா சாகுபடி ஏமாற்றத்தில்  இருக்கும் விவசாயிகளுக்கு "புதிய நிவாரணத் தொகுப்பினை" அறிவித்திடுக” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>நம்மை கைகட்டி நிற்க வைக்கும் முயற்சியாகதான் நீட் தேர்வு உள்ளது: இயக்குநர் வெற்றிமாறன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/neet-keeps-us-standing-handcuffed-says-director-vetri-maaran</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/neet-keeps-us-standing-handcuffed-says-director-vetri-maaran#comments</comments><guid isPermaLink="false">16032c3d-6046-4125-b307-ca8bf959907d</guid><pubDate>Thu, 23 Jul 2026 13:51:07 +0000</pubDate><atom:updated>2026-07-23T13:51:07.569Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வெற்றிமாறன்,vetrimaaran,neet,நீட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/oinjcqbg/Untitled-design-55.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vetri Maaran Slams NEET Exam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/oinjcqbg/Untitled-design-55.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை எழும்பூரில் நீட் தேர்வுக்கு எதிராக நீலம் மாணவர் அமைப்பின் சார்பாக போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் வெற்றிமாறன், அமீர், பா.ரஞ்சித், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல தமிழ் திரைபிரபலங்கள் கலந்துகொண்டனர்.</p><p>இந்த போராட்டத்தில் இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது:-</p><p>காக்ரோச் ஜனதா கட்சியின் போராட்டத்திற்கு நம்முடைய ஆதரவை தெரிவித்து கொள்கிறோம். ஒரு நாட்டில் மாணவர் போராட்டத்திற்கு வருகிறார்கள் என்றால், அந்த நாட்டில் மற்ற அமைப்புகள் எதுவும் சரியாக செயல்படவில்லை என்று தான் அர்த்தம்.</p><p>அதனால்தான் மாணவர்கள் போராட்டத்திற்கு வந்துள்ளனர். ஒரு மாணவர் போராட்டம் என்பது, அரசினுடைய தோல்வியாக உள்ளது.  நீட்-இன் தாக்கம் என்ன என்பதை என்னால் இப்போது பார்க்க முடிகிறது.</p><p>என்னுடைய நண்பர்களுடைய பிள்ளைகள் இரண்டு பேர், அதில் ஒரு பையன் 1176 மதிபெண்கள் பெற்றார். ஆனால் முதல் வருடம் அந்த மாணவனால் நீட் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை.</p><p>இப்பொழுது இந்த வருடமும் அவன் தந்தையின் சக்திக்கு ஏற்ப, ஒரு கல்லூரியில் சீட் வாங்கும் நிலையில் அவர்கள் இல்லை. அவன் நன்றாக புரிதலோடு படிக்கக்கூடிய மாணவன்.</p><p>அதுபோல் மற்றொரு நண்பருடைய மகளும் படித்துக் கொண்டிருக்கிறாள். அந்த மாணவியும் ஒரு வருடம், வீட்டில் இருந்து படித்து கொண்டிருக்கிறார்கள்.</p><p>இங்கே நீட்-இன் மூலமாக நம்மிடமிருந்து மருத்துவ கல்வியை முழுமையாக எடுப்பதும், மேலும் மருத்துவ அறிவை முழுமையாக எடுப்பதும் தான் அவர்களின் நோக்கமாக உள்ளது.</p><p>இது திரும்பவும் நம்மை அவர்கள் முன்பு கைகட்டி நிற்கும் நிலைக்கு கொண்டு செல்லும் முயற்சியாகதான் உள்ளது. இந்த நீட் தடைக்கு நாம் தொடர்ந்து செயல்பட்டு கொண்டே இருக்க வேண்டும்.</p><p>இதற்கு எதிராக செயல்பாட்டாளர்கள் தொடர்ந்து செயல்படும்போது, அவர்களுக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம். இந்த போராட்டத்தை முன்னெடுத்திருக்கும் நீலம் மாணவர் அமைப்பிற்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அந்த போராட்டத்தில் அவர் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>‘லாக்கப் படுகொலை விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்’ - பிரேமலதா வலியுறுத்தல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-must-intervene-and-take-action-regarding-the-custodial-death-incident-premalatha-urges</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-must-intervene-and-take-action-regarding-the-custodial-death-incident-premalatha-urges#comments</comments><guid isPermaLink="false">d4c4604e-468a-4c9a-bb45-0248f3f4ce59</guid><pubDate>Thu, 23 Jul 2026 13:34:42 +0000</pubDate><atom:updated>2026-07-23T13:34:42.731Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMDK,தேமுதிக,பிரேமலதா விஜயகாந்த்,premalatha vijayakanth,Custodial deaths,லாக்கப் மரணங்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/x5pznl96/New-Project-2026-07-23T190420.473.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘லாக்கப் படுகொலை விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்’ - பிரேமலதா வலியுறுத்தல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/x5pznl96/New-Project-2026-07-23T190420.473.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>லாக்கப் மரணங்களுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். </p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;</p><p>“தூத்துக்குடி மாவட்டம் அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் (வயது 24) என்பவர் காவல்துறை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் லாக்கப் படுகொலை செய்து உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. </p><p>இந்தச் சம்பவம் குறித்து தலையில் மொட்டை அடிக்கப்பட்ட நிலையில் அருணாச்சலம் வாக்குமூலம் அளித்துள்ள வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.  அதேபோல், அண்மையில் நாகர்கோவிலில் காவல் நிலையத்தில் காவலில் இருந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன் லாக்கப் படுகொலை செய்து உயிரிழந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, மீண்டும் இதுபோன்ற லாக்கப் படுகொலை நிகழ்ந்திருப்பது மிகவும் கவலைக்குரியது.</p><p>சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய காவல் அதிகாரிகள், சட்டத்தை தன் கையில் எடுத்து லாக்கப் படுகொலை செய்வது எந்த வகையில் நியாயம்?. எனவே, இந்த வழக்கில் உண்மை நிலையை முழுமையாக வெளிக்கொணரும் வகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். </p><p>மேலும், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு  உரிய நிவாரணத் தொகையை வழங்குவதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுவேலை வழங்கவேண்டும். </p><p>அந்தக் குடும்பத்திற்கு நடந்த அநீதி யாருக்கும் நடக்கக் கூடாது என்பதற்காக, நாங்கள் ஒவ்வொரு முறையும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். ஆனாலும், லாக்கப் படுகொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனவே, “வேலியே பயிரை மேய்ந்தது போல" பாதுகாக்க வேண்டிய காவல்துறையே சட்டத்தை மீறி லாக்கப் படுகொலை செய்வது கடுமையாக கண்டிக்ககூடியது. </p><p>தமிழ்நாடு முதலமைச்சர் இதில் உடனடியாக கவனம் செலுத்தி, இதுபோன்ற லாக்கப் படுகொலைகள் இனி நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் மேலும் 2 இடங்களில் புதிய DNA பரிசோதனை ஆய்வகங்கள்: சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-two-new-dna-test-labs</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-two-new-dna-test-labs#comments</comments><guid isPermaLink="false">fd288cd4-03c0-4b9a-9b3b-d4be536bd9a4</guid><pubDate>Thu, 23 Jul 2026 13:33:00 +0000</pubDate><atom:updated>2026-07-23T13:33:00.921Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,சென்னை உயர் நீதிமன்றம்,Madras High Court,Tamilnadu Government,DNA testing labs,DNA பரிசோதனை ஆய்வகங்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/79vco1t7/dna.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DNA]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/79vco1t7/dna.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள் மற்றும் குற்றவியல் விசாரணைகளை விரைந்து முடிக்கும் வகையில், தமிழகத்தில் மேலும் '2 புதிய DNA' பரிசோதனை ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளதாகத் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது.</p><p>சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றின் விசாரணையின் போது, தலைமை வழக்கறிஞர் வழியே தமிழக அரசு அறிக்கை அளித்தது. அதில்,</p><h2><strong>வழக்குகளின் விரைவு விசாரணை:</strong></h2><p>பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் மற்றும் இதர குற்றவியல் வழக்குகளின் விசாரணைகளிலும், நீதிமன்ற நடவடிக்கைகளிலும் தாமதத்தைத் தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>ஆய்வகங்கள் அதிகரிப்பு:</strong></h2><p>தற்போது மாநிலத்தில் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே தடையவியல் துறை மூலம் DNA பரிசோதனை வசதிகள் உள்ளன. இதனால், ஆய்வக அறிக்கைகள் பெற காலதாமதம் ஏற்படுவதை தவிர்க்க கூடுதல் மையங்கள் நிறுவப்படுகின்றன. குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையை விரைவுபடுத்தவும், தடயவியல் பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் பெறவும் பிரத்யேக நிலையான வழிகாட்டு நடைமுறைகளை அரசு உருவாக்கி வருகிறது.</p><h2><strong>வழக்குகளுக்கு விரைவு தீர்வு:</strong></h2><p>DNA சோதனைகளின் முடிவுகள் விரைவாகக் கிடைக்கும்போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைத் தாமதமின்றி வழங்க முடியும். தடய அறிவியல் துறை மற்றும் பிராந்திய ஆய்வகங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம், நீதிமன்றங்களில் வழக்குகளின் முடிவுகள் விரைந்து வெளிவர வாய்ப்பு ஏற்படும்.</p><p>இதுவரை தமிழ்நாட்டில் உள்ள குற்ற வழக்குகளுக்கான டிஎன்ஏ பரிசோதனைகள் பெரும்பாலும் சென்னையில் உள்ள ஒரே மையத்தை மட்டுமே நம்பி இருந்தன. இந்த புதிய ஆய்வகங்கள் செயல்பாட்டுக்கு வரும்போது முடிவுகள் மிக விரைவாகக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>&quot;நாட்டில் நடப்பது அவசரநிலை&quot;-மாணவர்கள் போராட்டத்திற்கு கொச்சியில் திரண்டு ஆதரவு அளித்த மலையாளத் திரையுலகினர்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/students-protest-emergency-like-situation-malayalam-cinema-supports-in-kochi</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/students-protest-emergency-like-situation-malayalam-cinema-supports-in-kochi#comments</comments><guid isPermaLink="false">8bbf955e-eebd-48fc-bdec-ba07f65c1a5b</guid><pubDate>Thu, 23 Jul 2026 13:12:01 +0000</pubDate><atom:updated>2026-07-23T13:12:01.997Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>NEET-UG,Malayalam Film Industry,நீட் வினாத்தாள் கசிவு,CJP Protest,காக்ரோச் ஜந்தா கட்சி,மலையாளத் திரையுலம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/m6b4z6t9/MALAYALAM.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Malayalam Film Industry  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/m6b4z6t9/MALAYALAM.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜாந்தர் மந்தரில் போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவாக, மலையாளத் திரையுலகைச் சேர்ந்த பிரபல நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் எழுத்தாளர்கள் கொச்சியில் திரண்டு தங்களது பலத்த ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.</p><p>கொச்சி மகாராஜாஸ் கல்லூரியில் மாணவர்கள் யூனியன் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆதரவுப் போராட்டத்தில், பிரபல நடிகர் ஜோஜு ஜார்ஜ், இயக்குநர் ஆஷிக் அபு, மஹேஷ் நாராயணன் மற்றும் எழுத்தாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.</p><p>போராட்டக் களத்தில் பேசிய நடிகர் ஜோஜு ஜார்ஜ், நாட்டில் நிலவும் தற்போதைய சூழலை 'அவசரநிலை' என கடுமையாக விமர்சித்தார். "ஒரு நாட்டின் கல்வி அமைப்பில் வினாத்தாள் கசிவது அல்லது சீர்கேடு ஏற்படுவது என்பது அந்த நாட்டிற்கு அளிக்கப்படும் 'மெதுவான விஷத்திற்கு சமம்."</p><h2><strong>அதிகார வர்க்கத்தின் அத்துமீறல்:</strong></h2><p>நியாயத்திற்காகக் குரல் கொடுக்கும் மாணவர்களைத் தடிகளால் அடித்து நொறுக்குவதும், எதிர்க் கட்சித் தலைவர்களைச் சட்டையை பிடித்து இழுத்துச் செல்வதும் ஒரு கொடூரமான ஜனநாயக விரோத நடவடிக்கை. நாட்டில் இப்போது நடப்பது அப்பட்டமான அவசரநிலைதான்.</p><h2><strong>மாணவர்களுக்குப் பாராட்டு:</strong></h2><p>எந்தவிதப் பயமும் இன்றி, நாட்டின் எதிர்காலத்திற்காகக் களத்தில் நின்று போராடும் இந்த இளைஞர்களுக்கே நமது முதல் பாராட்டு சேர வேண்டும்" என்று அவர் உருக்கமாகப் பேசினார்.</p><h2><strong>இளைஞர்களே இந்தியாவின் நம்பிக்கை:</strong></h2><p>இயக்குநர் 'ஆஷிக் அபு' பேசுகையில், "டெல்லி வீதிகளில் காவல்துறை தாக்குதலுக்கு உள்ளான மாணவர்கள் தான் இந்த நாட்டின் உண்மையான நம்பிக்கை. அரசியலற்றவர்கள் என்று விமர்சிக்கப்படும் இன்றைய தலைமுறை இளைஞர்கள் (Gen Z), நாட்டின் சமூக மற்றும் அரசியல் பிரச்சனைகளில் தங்களுக்கு இருக்கும் அக்கறையை நிரூபித்துள்ளனர் என்று கூறினார்.</p><h2><strong>போராட்டத்தில் பங்கேற்ற முக்கியப் பிரபலங்கள்:</strong></h2><p>இந்தச் சங்கமத்தில் எழுத்தாளர்கள் என்.எஸ். மாதவன், கே.ஆர். மீரா, நடிகை கௌரி கிஷன், நடிகை ரஞ்சினி ஹரிதாஸ், ராப் பாடகர் பேபி ஜீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கைகளில் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி மாணவர்களுக்குத் தங்களின் ஆதரவைப் பதிவு செய்தனர்.</p><p>தென்னிந்திய திரையுலகைச் சேர்ந்த முன்னணி நட்சத்திங்கள் அடுத்தடுத்து மாணவர் போராட்டத்திற்கு ஆதரவுக் குரல் கொடுத்து வருவது தேசிய அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சிஜேபி போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் பாலிவுட் பிரபலங்கள்!</title><link>https://www.maalaimalar.com/news/national/bollywood-celebrities-voice-their-support-for-the-cjp-protest</link><comments>https://www.maalaimalar.com/news/national/bollywood-celebrities-voice-their-support-for-the-cjp-protest#comments</comments><guid isPermaLink="false">93649ed5-07b1-462e-a558-f77c983c3b6b</guid><pubDate>Thu, 23 Jul 2026 13:01:38 +0000</pubDate><atom:updated>2026-07-23T13:01:38.136Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Cockroach Party protest,Bollywood celebrities,கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்,பாலிவுட் பிரபலங்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/3lwtrzdi/New-Project-2026-07-23T183112.978.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிஜேபி போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் பாலிவுட் பிரபலங்கள்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/3lwtrzdi/New-Project-2026-07-23T183112.978.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்திற்கு ஆதரவாக பாலிவுட் பிரபலங்கள் பலரும் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். </p><p>நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும் என டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ஜூன்.20 முதல் போராட்டம் நடத்திவருகிறது. </p><p>தற்போது இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதிலும் பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது. இந்நிலையில் இந்தப் போராட்டத்திற்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். </p><h2>நடிகர் சல்மான்கான்</h2><p>போராட்டம் தொடர்பாக பதிவிட்டுள்ள சல்மான் கான்,  </p><p>“இந்தப் போராட்டம் சரியான அணுகுமுறை; மாணவர்கள் இதை அமைதியான முறையில் முன்னெடுத்துள்ளனர். இது அவர்களின் துணிச்சலையும், வீரத்தையும் வெளிப்படுத்துகிறது. கல்வியின் மீது மிகுந்த ஆர்வமும் உத்வேகமும் கொண்ட இந்தத் தலைமுறை இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கும்.</p><p>அரசு அவர்களுக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் அளித்து, கல்வி முறையை மேலும் வலுப்படுத்தும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.</p><p>கல்வி அடுத்தக்கட்டத்திற்கு செல்லவேண்டும். எந்த அளவுக்கு என்றால் வெளிநாட்டினர் கல்வி பயில இந்தியாவுக்கு வரும் நிலையும், இந்தியா ஒரு முக்கியக் கல்வி மையமாகத் திகழும் நிலையும் உருவாக வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p><h2>நடிகை ஆலியா பட்,</h2><p>“உறுதியுடன் நிலைத்து நிற்கும் ஒவ்வொரு மாணவருக்குப் பின்னாலும் ஒரு கனவு, ஒரு குடும்பத்தின் நம்பிக்கை மற்றும் எண்ணற்ற தியாகங்கள் நிறைந்த ஒரு பயணம் உள்ளது. அவர்கள் தங்களை மட்டுமல்ல, தங்களுக்குத் துணையாக நின்ற அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்; அதேவேளையில், தங்களுக்குப் பின் வருபவர்களுக்காக ஒரு சிறந்த பாதையையும் உருவாக்குகிறார்கள்.</p><p>அவர்களின் துணிச்சல் என்னுள் பணிவை ஏற்படுத்துகிறது. அவர்களின் மன உறுதி நம் அனைவருக்கும் ஒரு கண்ணாடியாகத் திகழ்கிறது; இந்நாட்டின் நாளைய எதிர்காலத்தை வடிவமைக்கவிருக்கும் அந்த மனிதர்களின் குரலை நாம் உண்மையிலேயே செவிமடுக்கிறோமா என்று அது நம்மை வினவுகிறது.</p><p>மாணவர்களுக்காக... மாணவர்களால்... எதிர்காலம் அவர்களுக்கே உரியது.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p><h2>நடிகை அனன்யா பாண்டே,</h2><p>“Gen Z தலைமுறையினர் இப்படித்தான் என எப்போதுமே ஒரு லேபிள் ஒட்டப்படுகிறது. ஆனால், அவர்கள் உண்மையில் யார் என்பதைப் புரிந்துகொள்ள இதுவே சரியான தருணம். எப்போதுமே இப்படித்தான் என்ற வாதத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. அவர்கள் குறுக்கு வழிகளைக் கேட்கவில்லை; நியாயமே அடிப்படையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.</p><p>கேள்வி கேட்பது மரியாதைக் குறைவு அல்ல; குரல் கொடுப்பது கலகமும் அல்ல. மாற்றம் இப்படித்தான் தொடங்கும்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>முதல் டி20 போட்டி: இந்தியா வெற்றிபெற 126 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஜிம்பாப்வே</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/zimbabwe-sets-126-target-india-first-t20</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/zimbabwe-sets-126-target-india-first-t20#comments</comments><guid isPermaLink="false">d2a07f09-9686-4342-a52b-05676c9c7627</guid><pubDate>Thu, 23 Jul 2026 12:56:15 +0000</pubDate><atom:updated>2026-07-23T12:56:15.263Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ZIMvIND,ஜிம்பாப்வே இந்தியா தொடர்,Ashok Sharma,அஷோக் சர்மா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/twsvmuv4/mayank.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ mayank yadav]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/twsvmuv4/mayank.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்பதற்காக ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்துள்ளது.</p><h2>முதல் டி20 போட்டி</h2><p>இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஹராரேயில் இன்று நடைபெறுகிறது.</p><p>இந்திய அணியின் கேப்டனாக ஷ்ரேயஸ் அய்யரும், ஜிம்பாப்வே அணியின் கேப்டனாக சிக்கந்தர் ராசாவும் செயல்படுகின்றனர்.</p><h2>அஷோக் சர்மா அறிமுகம்</h2><p>இந்நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் சூர்யவன்ஷி இடம்பெற்றார். அஷோக் சர்மா அறிமுக வீரராக களமிறங்கினார்.</p><p>அதன்படி, ஜிம்பாப்வே அணி முதலில் களமிறங்கியது. முதல் பந்தில் பிரியன் பென்னட்டை அவுட்டாக்கி அதிர்ச்சி அளித்தார் மயங்க் யாதவ்.</p><p>பென் கர்ரன், டியான் மியர்ஸ், சிக்கந்தர் ராசா ஆகியோரும் விரைவில் வெளியேறினர்.</p><p>5வது விக்கெட்டுக்கு ரியான் பர்ல், வெஸ்லி மாதேவீர் இணைந்து 32 ரன்கள் சேர்த்த நிலையில், ரியான் பர்ல் 26 ரன்னில் ஆட்டமிழந்தார்.</p><h2>போராடிய வெஸ்லி மாதேவீர், மருமானி ஜோடி</h2><p>கடைசி கட்டத்தில் வெஸ்லி மாதேவீர், மருமானி ஜோடி அதிரடியாக ஆடி 57 ரன்கள் சேர்த்ததால் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது.</p><p>மாதேவீர் 34 பந்தில் 39 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார்.</p><p>இறுதியில், ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்தது.</p><p>இந்தியா சார்பில் மயங்க் யாதவ், பிரின்ஸ் யாதவ் 2 விக்கெட்டும், ரவி பிஷ்னோய், ஷிவம் துபே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p>அறிமுக வீரராக களமிறங்கிய அஷோக் சர்மா 4 ஓவரில் 29 ரன்கள் விட்டுக் கொடுத்தார். விக்கெட் எதுவும் எடுக்கவில்லை.</p><p>இதையடுத்து, 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>உடல் சோர்வாக உள்ளதா...? உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்!</title><link>https://www.maalaimalar.com/health/generalmedicine/feeling-tired-these-tips-are-for-you</link><comments>https://www.maalaimalar.com/health/generalmedicine/feeling-tired-these-tips-are-for-you#comments</comments><guid isPermaLink="false">35788678-9948-4645-9035-15266e18a8c6</guid><pubDate>Thu, 23 Jul 2026 12:24:54 +0000</pubDate><atom:updated>2026-07-23T12:24:54.727Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Health,ஆரோக்கியம்,HealthTips,உடல்நலம்,Raisins,உலர்திராட்சை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/141edj1a/raians.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Raisins]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/141edj1a/raians.jpg?w=280" width="280"></media:thumbnail><category>பொது மருத்துவம் (General Medicine)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உடல் சோர்வு நாம் அன்றாட வாழ்வில் அடிக்கடி சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். இது வெறும் தூக்கமின்மையால் மட்டும் வருவதில்லை; உடல் ரீதியான மற்றும் மன ரீதியான பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். இதற்கு நம் வீட்டில் இருக்கும் கிஸ்மிஸ் (உலர்திராட்சை)  வைத்தே தீர்வு காண முடியும்.</p><p>கிஸ்மிஸ் பழத்தைப் பார்த்துவிட்டால், இரண்டு மூன்றையாவது எடுத்து வாயில் போடாமல் நகர மாட்டார்கள். பார்த்தவுடனேயே சாப்பிடத் தூண்டும் ஈர்ப்பு அதற்கு உண்டு. உலர் திராட்சையைத்தான் `கிஸ்மிஸ் பழம்’ என்கிறோம். அபாரமான பல சத்துக்களைக் கொண்டிருக்கும் உலர்திராட்சை, நம் ஆரோக்கியத்துக்கு வழங்கும் பலன்கள் எக்கச்சக்கம்.</p><p>ஃபிரெஷ்ஷான திராட்சைப் பழங்களை நன்கு காயவைத்து, உலர்திராட்சை ஆக்குகிறார்கள். நான்கு டன் திராட்சைப் பழங்களை உலரவைத்தால், ஒரு டன் உலர்திராட்சைகள் கிடைக்கும். தண்ணீர் எல்லாம் வற்றிவிடும் இப்படி உலரவைப்பதன் மூலமாக, இதில் இருந்து நமக்கு ஏராளமான நார்ச்சத்துக்கள் கிடைக்கும்.</p><p>*தினமும் உலர்திராட்சையை சிறிதளவு சாப்பிடுபவர்களின் உடல் எடை வெகு விரைவில் அதிகரிக்கும். வெயில் காலம் தொடங்கிவிட்டால், சிலருக்கு முகத்தில் கொப்புளங்கள் வரும். அவர்கள் இதைச் சாப்பிட்டால், கொப்பளங்கள், கட்டிகள் நீங்கும். தோல் நோய்களில் இருந்தும் நம்மை காத்துக்கொள்ள முடியும், முகமும் பொலிவு பெறும்.</p><p>*இதில் வைட்டமின் ஏ சத்து இருப்பதால், கண்களுக்கு நல்ல பலன்களைத் தரும். கண்ணாடி அணிந்திருப்பவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், பார்வைக் குறைபாடு நீங்கும்; பார்வைத்திறன் மேம்படும். உலர்திராட்சையில் பொட்டாசியம் சத்தும் அதிகமாக இருக்கிறது. உடலில் இருக்கும் தசைகள் சுருங்கி விரிந்து, நரம்புகள் தூண்டப்படுவதற்கும் இதயத் துடிப்பை சீராக வைத்திருப்பதற்கும் பொட்டாசியம் சத்து தேவை.</p><p>* உலர்திராட்சையை சாப்பிடுவதால், நம் உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் பொட்டாசியம் சத்து பரவும்; நல்ல பலன் தரும். சர்க்கரை நோயாளிகளும் உலர்திராட்சையை தாராளமாகச் சாப்பிடலாம். </p><p>இதில் நார்ச்சத்தும் இருப்பதால், உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கவும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும் உதவக்கூடியது. ஏராளமான பலன்களை அள்ளித்தரும் உலர் திராட்சை எல்லோரும் சாப்பிட ஏற்றது.</p> ]]></content:encoded></item><item><title>‘ராகுல் காந்தியின் போராட்டம் நேர்மையற்றது’ - சோனம் வாங்சுக்கின் மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு!</title><link>https://www.maalaimalar.com/news/national/rahul-gandhis-protest-is-dishonest-sonam-wangchuks-wife-makes-sensational-allegation</link><comments>https://www.maalaimalar.com/news/national/rahul-gandhis-protest-is-dishonest-sonam-wangchuks-wife-makes-sensational-allegation#comments</comments><guid isPermaLink="false">17b88a2d-0a42-43c3-8bb9-9d52edb53504</guid><pubDate>Thu, 23 Jul 2026 12:15:27 +0000</pubDate><atom:updated>2026-07-23T12:15:27.321Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Sonam Wangchuk,சோனம் வாங்சுக்,Gitanjali Angmo,கீதாஞ்சலி ஆங்மோ</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/n4l5ll7z/New-Project-2026-07-23T173301.035.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘ராகுல் காந்தியின் போராட்டம் நேர்மையற்றது’ - சோனம் வாங்சுக்கின் மனைவி பரபர குற்றச்சாட்டு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/n4l5ll7z/New-Project-2026-07-23T173301.035.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட கல்வித்துறையில் நடைபெற்ற குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ஜூன்.20 முதல் போராட்டம் நடத்திவருகிறது.</p><p>இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல்நாள் (ஜூலை.20) ‘சலோ சன்சத்’ என்ற பெயரில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியில் ஈடுபட்டனர். இந்தப் பேரணியை களைக்க போலீசார் மாணவர்கள், போராட்டக்காரர்கள்மீது போலீசார் சராமாரி தடியடி நடத்தினர்.</p><p>போலீசாரின் இந்த அராஜகப்போக்கை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி தலைமையில் மறுநாள் (ஜூலை.21) டெல்லி ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமர் இல்லம் முன்பு போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தைத் தொடர்ந்து ராகுல் காந்தி, சோனியா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.</p><p>இந்நிலையில் ராகுல் காந்தியின் இந்தப் போராட்டம் நேர்மையற்றது என சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஆங்மோ விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர், </p><p>“பிரதமரின் இல்லத்திற்கு வெளியே நடந்த போராட்டத்தில் நேர்மை இல்லை. பொதுமக்களை இனி ஏமாற்ற முடியாது. இது விழித்தெழுந்த இந்தியா. நேர்மையற்றவர்கள் இளைஞர்களால் தூக்கி எறியப்படுவார்கள்.</p><p>சொன்னதைச் செய்தாக வேண்டும் என்பதை கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ஒவ்வொரு அரசியல் தலைவருக்கும் காட்டியுள்ளது. அவர்களால் இனிமேலும் பொய் பேசவோ அல்லது நேர்மையற்றவர்களாக இருக்கவோ முடியாது.” என தெரிவித்தார். </p><p>மேலும் அரசியல் கட்சிகள் தங்களை இதனுடன் இணைத்துக் கொள்ள முயன்றபோதிலும், இந்தப் போராட்டம் அரசியல் சார்பற்றதாகவே நீடிக்கிறது என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>‘போராட்டத்தில் பாஜகவினர் கல்லெறிந்துவிட்டு எங்கள்மீது பழிபோடுகிறார்கள்’ - அபிஜீத் தீப்கே!</title><link>https://www.maalaimalar.com/news/national/bjp-members-pelted-stones-during-the-protest-and-are-shifting-the-blame-onto-us-abhijit-deepke</link><comments>https://www.maalaimalar.com/news/national/bjp-members-pelted-stones-during-the-protest-and-are-shifting-the-blame-onto-us-abhijit-deepke#comments</comments><guid isPermaLink="false">0c575166-fee7-4024-b6b9-ed599285e01b</guid><pubDate>Thu, 23 Jul 2026 12:00:44 +0000</pubDate><atom:updated>2026-07-23T12:00:44.074Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,Cockroach Janta Party,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,NEET-UG paper leak,நீட்-யுஜி வினாத்தாள் கசிவு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/6ts1ieh6/New-Project-2026-07-23T172843.724.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘போராட்டத்தில் பாஜகவினர் கல்லெறிந்துவிட்டு எங்கள்மீது பழிபோடுகிறார்கள்’ - அபிஜீத் தீப்கே!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/6ts1ieh6/New-Project-2026-07-23T172843.724.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடந்து வரும் மாணவர் போராட்டத்தை வேண்டுமென்றே சீர்குலைப்பதற்காக வெளியிலிருந்து ஆட்கள் அனுப்பப்படுவதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே குற்றம் சாட்டியுள்ளார். </p><p>மேலும், பாஜகத் தொண்டர்கள் போராட்டக்காரர்கள் மீது கல் எறிந்துவிட்டு, எங்கள் பெயரை கெடுக்க முயற்சிக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக செய்தியாளர்களிடத்தில் பேசிய அபிஜீத்,</p><p>“போராட்டத்தை வேண்டுமென்றே சீர்குலைப்பதற்காக வெளியிலிருந்து ஆட்கள் அனுப்பப்படுகிறார்கள். நாங்கள் ஒரு மாதமாக இங்கே அமர்ந்திருக்கிறோம். ஒரு மாதத்தில் இதுபோன்ற எந்தச் சம்பவமும் நடக்கவில்லை. ஆனால் இப்போது, ​​இந்தப் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், மக்களை வேண்டுமென்றே தூண்டிவிடுவதற்காக பாஜகவால் வெளியிலிருந்து குண்டர்கள் அனுப்பப்படுகிறார்கள்.</p><p>கற்களை வீசுபவர்கள் பாஜகவைச் சேர்ந்தவர்கள். காவல்துறை லாரிகளில் கற்களை இங்கு கொண்டு வருகிறது. பாஜக குண்டர்கள் வந்து, கற்களை வீசி, பின்னர் எங்களின் பெயரை கெடுக்க முயற்சிக்கின்றனர். </p><p>தடியடி பற்றி நான் ஏற்கனவே பேசியுள்ளேன். தடியடி நடத்திய காவல்துறையினரை நீதிமன்றம் முன் நிறுத்துவோம். இன்று எங்கள் போராட்டத்தின் 34வது நாள். சோனம் சாரின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது. இன்று அவரது உண்ணாவிரதப் போராட்டத்தின் 26வது நாள், எனவே எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.</p><p>இருப்பினும், சோனம் வாங்சுக் உயிர் இழப்பதை எங்களால் தாங்க முடியாது என்பதால், அவர் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளவேண்டும்.” என தெரிவித்தார். </p><p>புதன்கிழமை (ஜூலை.22) மாலை நடந்த கல்வீச்சு சம்பவத்தில், உதவி காவல் ஆணையர் ஜெய் பிரகாஷ், கன்னாட் பிளேஸ் உதவி காவல் ஆணையர் விவேக் பகத், ஆய்வாளர் நந்த் கிஷோர் மற்றும் மேலும் நான்கு காவலர்கள் காயமடைந்ததாக டெல்லு காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. </p><p>தொடர்ந்து இந்த கல்வீச்சு தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும்நிலையில் அபிஜீத் இந்த விளக்கத்தை அளித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>டெல்லியில் தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்! காரணம் கூறாமல் 3 மாதங்கள் சிறையில் அடைக்கலாம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/national-security-act-in-delhi-for-three-months-not-linked-to-student-protests</link><comments>https://www.maalaimalar.com/news/national/national-security-act-in-delhi-for-three-months-not-linked-to-student-protests#comments</comments><guid isPermaLink="false">76097f2f-587c-4e3a-935f-cd1c67305fae</guid><pubDate>Thu, 23 Jul 2026 11:46:33 +0000</pubDate><atom:updated>2026-07-23T11:46:33.536Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Delhi Police,டெல்லி காவல்துறை,National Security Act,Cockroach Janata Party,காக்ரோச் ஜனதா கட்சி,தேசிய பாதுகாப்பு சட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/7cazn6pm/Untitled-design-54.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Delhi NSA extension amid NEET protests]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/7cazn6pm/Untitled-design-54.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி காவல்துறை ஆணையருக்கு, 1980 ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் (NSA) கீழ் மூன்று மாத காலத்திற்கு, தடுப்புக் காவல் அதிகாரியின் அதிகாரங்களைப் பயன்படுத்த டெல்லி உள்துறை அரசாங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. </p><p>இந்த அதிகாரம் ஜூலை 19, 2026 முதல் அக்டோபர் 18, 2026 வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சட்டம் ஒழுங்கிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் தனி நபர்களை காரணம் கூறாமல் 3 மாதம் வரை சிறையில் அடைக்க முடியும். </p><p>பொது ஒழுங்கைப் பேணுதல், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பராமரித்தல் ஆகிய நிகழ்வுகளில், நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு தடுப்புக் காவல் சட்டத்தை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.</p><p><strong>டெல்லியில் தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்:</strong></p><p>இதுகுறித்து டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ள செய்தியில், “இந்த அறிவிப்பு என்பது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அதிகாரங்களை, காலாண்டுக்கு ஒருமுறை நீட்டிக்கும் ஒரு வழக்கமான செயல்முறை ஆகும்.</p><p>இது வழக்கமான நிர்வாக நடைமுறையின் ஒரு பகுதியாக ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் புதுப்பிக்கப்படுகிறது. </p><p>தற்போதைய புதுப்பித்தல் உத்தரவு, சிஜேபி போராட்டங்கள் தொடங்குவதற்கு முன்பே, 07.07.2026 அன்று, 19.07.2026 முதல் 18.10.2026 வரையிலான காலத்திற்கு பிறப்பிக்கப்பட்டது. </p><p>இந்த காலகட்டத்தில், டெல்லி காவல்துறை ஆணையர், தேசிய பாதுகாப்பு சட்டம் பிரிவு 3, துணைப் பிரிவு (2)-இன் கீழ் தடுப்புக் காவல் அதிகாரங்களையும் பயன்படுத்தலாம்.</p><p>சமீபத்திய நிகழ்வுகள் தொடர்பாக எந்தவொரு சிறப்பு கோரிக்கையோ அல்லது உத்தரவோ தொடங்கப்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும், “இந்த அறிவிப்பு, தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்களுடன் தொடர்புடையது கிடையாது. சரிபார்க்கப்படாத தகவல்களை நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம்” என்றும் காவல்துறை கூறியுள்ளது.</p><p>நீட் நுழைவுத் தேர்வில் வினாத்தாள் கசிந்தது தொடர்பாக தேசிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றும் வரும் சூழலில், இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, இணையத்தில் பரவலான யூகங்கள் பரவி வரும் நிலையில் இந்த விளக்கத்தை காவல்துறை அளித்துள்ளது.</p><h3><strong>டெல்லி மாணவர்கள் போராட்டம் பின்னணி:</strong></h3><p>காக்ரோச் ஜனதா கட்சியால் வழிநடத்தப்படும் இந்த ஆர்ப்பாட்டங்கள், இந்த வாரத் தொடக்கத்தில் போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல முயன்றபோது தீவிரமடைந்தன, இது காவல்துறையினருடன் மோதல்களுக்கு வழிவகுத்தது.</p><p>தேர்வு சீர்திருத்தங்கள், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா மற்றும் தேர்வுத்தாள் கசிவைத் தொடர்ந்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு ஆகியவற்றை போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.</p><p>தேர்வுத்தாள் கசிவுகள் காரணமாகத் தொடங்கிய இந்தப் போராட்டம், பின்னர் அரசாங்கத்தின் மீதும், வேலையின்மை மற்றும் இளம் இந்தியர்களுக்கான வாய்ப்புகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டும் பிரம்மாண்டமாக உருவெடுத்துள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>