<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 24 Aug 2026 07:51:50 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: ஆண்டுக்கு 3 இலவச கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும்: முதலமைச்சர் விஜய் - 24 ஆகஸ்ட் 2026
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-24-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-24-august-2026#comments</comments><guid isPermaLink="false">bc88f166-bbf3-4480-890b-158b4edebe4c</guid><pubDate>Mon, 24 Aug 2026 03:52:26 +0000</pubDate><atom:updated>2026-08-24T07:34:11.938Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/j8itlasu/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/j8itlasu/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>அமைச்சர் ராஜ்மோகன் உரை</h2><p>துப்புரவு தூய்மை தொழிலாளர்கள் போராட்டம் நடந்து கொண்டு வருகிறது. தொழிலாளர்களிடம் யாரும் பேசவில்லை என்று உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.</p><p>இந்த போராட்டத்தை முன்னெடுத்து கொண்டிருக்கும் பாரதி அவர்களோடு நானும், ஆதவ் அர்ஜூனாவும் பேசினோம். </p><p>இன்று மாலை தூய்மை பணியாளர்களை நேரில் சந்தித்து அவர்களை பல வகையான கோரிக்கை, நீண்ட நெடு நாட்களாக இருக்கும் கோரிக்கைகள் பேசி தீர்த்து வைக்கப்படும்.</p> <p>எந்த கட்சி, எந்த ஆட்சியை பற்றியும் நான் பேசவில்லை, மக்கள் எதை எதிர்பார்க்கின்றனரோ அதை தான் சொல்கிறேன்.</p><p>அரசு கல்வி என்பது கருணை அடிப்படையிலான ஒன்று அல்ல, அது உரிமை அடிப்படையிலான ஒன்று.</p><p>காமராஜர் காலத்தில் படித்ததால் தான் எதிர்தரப்பினர் படித்தபோது அரசு பள்ளி நல்ல நிலையில் இருந்தது - ஆதவ்</p><p>அரசு பள்ளிகளில் கழிப்பறை இல்லாததை போல் தோற்றத்தை உருவாக்க முயற்சி.</p><p>கழிப்பறையே கட்டவில்லை என்ற தோற்றத்தை உருவாக்க அமைச்சர்கள் முயற்சிக்கின்றனர், அது தவறு - திமுக எம்எல்ஏ எம்ஆர்கே.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு</p><p>மாணவிகளுக்கு கழிப்பறை என்பது தான் முதல் சேவை. ஏற்கனவே அமைச்சர் ஆதவுடன் ஆலோசனை நடத்தி உள்ளேன்.</p><p>பள்ளிக்கட்டிடங்கள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு பொதுப்பணித்துறை அமைச்சருக்கு  அமைச்சர் ராஜ்மோகன் கோரிக்கை.</p><p>அரசு பள்ளி, கல்லூரி கட்டிடங்களை பராமரிப்பதில் எந்த ஊழலும் இருக்க கூடாது. </p><p>பொதுப்பணித்துறையில் கடந்த 30 ஆண்டுக்களுக்கான தகவலை எடுத்துக்கொண்டிருக்கிறோம்.</p><p>சர்வே 40% நிறைவடைந்த நிலையில் முழு பணியும் நிறைவடைய மேலும் 2 மாதங்கள் ஆகும். எம்எல்ஏக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.</p><p>கல்வி நிறுவன கட்டிடங்கள் 3 ஆக பிரிப்பு. சிவப்பு நிறம் பயன்படுத்த முடியாத கட்டிடம், மஞ்சள் நிறம் சீரமைக்க வேண்டிய கட்டிடம்.</p><p>அடுத்த 5 ஆண்டுகளுக்கு பராமரிப்பு தேவைப்படாத பள்ளி, கல்லூரி கட்டிடங்களில் பச்சை ஸ்டிக்கர் ஒட்டப்படும் - அமைச்சர் ஆதவ்</p><p>பள்ளிக்கல்வித்துறை, பொதுப்பணித்துறை இணைந்து 234 தொகுதியிலும் பள்ளி, கல்லூரி கட்டிடங்களை சீரமைக்க நடவடிக்கை.</p><p>எம்எல்ஏக்கள் அவரவர் தொகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.</p><p>பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் உண்மை நிலை குறித்து அறிக்கை அளித்து தேவையான நிதி குறித்தும் தெரிவிக்கலாம்.</p><p>ஓராண்டிற்குள் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளி, கல்லூரிகளை தரம் உயர்த்த வேண்டும்.</p><p>அரசு பள்ளி, கல்லூரிகளை தரம் உயர்த்துவதில் அந்தந்த தொகுதி எம்எல்ஏக்கள் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும் - ஆதவ் அர்ஜூனா</p><p>பெண்கள் படிக்கும் பல பள்ளிகளில் கழிவறை வசதிகள் இல்லை.</p><p> பள்ளிகளின் பராமரிப்பு பணி பொதுப்பணித்துறையின் கீழ் வருகிறது.</p><p>நான் பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தே பள்ளி, கல்லூரி கட்டிடங்கள் சீரமைக்கப்படவில்லை.</p><p>நான் 10-ம் வகுப்பு படித்தபோது இடிந்து விழுந்த பள்ளிக்கட்டிடம் 12-ம் வகுப்பு முடிக்கும் வரையிலும் கூட கட்டப்படவில்லை - ஆதவ் அர்ஜூனா</p><h2>சட்டசபையில் பொதுப்பணித்துறை ஆதவ் அர்ஜூனா உரை</h2><p>பொதுப்பணித்துறையில் பராமரிப்பு பணியில் அதிக நிதிக் கசிவு.</p><p>நிதிக் கசிவு தொடர்பாக 30 நாட்களாக தகவல்களை திரட்டி வருகிறோம்.</p> <p>பல திட்டங்கள், மேம்பாலங்கள், பூங்காக்கள் உருவாக்கியது அதிமுக ஆட்சியில் தான் - எடப்பாடி பழனிசாமி உரை</p><p>கோவைக்கான சிப்காட் திட்டத்தை திமுக கைவிட்டு விட்டது.</p><p>கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டம் தொடர்பாக மத்திய அரசிடம் முதலமைச்சர் விஜய் பேச வேண்டும் - எஸ்.பி.வேலுமணி</p><p>மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் என குறிப்பிட்டு சட்டசபையில் உரையை தொடங்கினார் அதிமுக எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி</p><p>கோவை மாவட்டத்தையே மாற்றி அமைத்தது அதிமுக.</p><p>கோவை மெட்ரோ ரெயில் திட்டம் முக்கியமான திட்டம்.</p><p>அத்திக்கடவு - அவிநாசி குடிநீர் திட்டத்தை கிடப்பில் போட்டது திமுக.</p><p>அதிமுக ஆட்சியில் கட்டிய பாலத்திற்கு ஜிடி நாயுடு பெயரை வைத்தது திமுக.</p><p>திமுக ஆட்சியில் கோவைக்கு எதுவும் செய்யவில்லை.</p> <p>வியாழக்கிழமையில் இருந்து கேள்வி நேரம் உண்டு - சபாநாயகர் அறிவிப்பு</p><p>பேச அனுமதி கேட்டபோது பல முறை முகத்தை கூட திருப்ப மாட்டார், தற்போதைய சபாநாயகர் போல் கூடுதல் வாய்ப்பு தரமாட்டார் - எஸ்.பி.வேலுமணி</p><p>கடந்த முறை எதிர்க்கட்சியான அதிமுக கொறடாவாக இருந்தபோது அவரும் பேசினார், மற்றவருக்கும் அனுமதி பெற்று தந்தார் - கே.என்.நேரு</p><p>மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் எஸ்.பி.வேலுமணி உரை</p><p>கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சியினர் பேச அனுமதிக்கவில்லை என்று எஸ்.பி.வேலுமணி கூறியதற்கு திமுக தரப்பில் எதிர்ப்பு</p><p>கன்னி பேச்சு என்பதை அறிமுக உரை என்று மாற்றும் வகையில் நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு அமைச்சர் ராஜ்மோகன் வேண்டுகோள்</p><p>எம்எல்ஏக்கள் முதன்முறையாக சட்டசபையில் பேசுவதை கன்னிப்பேச்சு எனக்குறிப்பிட வேண்டாம் - சவுமியா வேண்டுகோள்</p><p>கன்னிப்பேச்சு என்ற வார்த்தைக்கு பதிலாக அறிமுக உரை என்ற வார்த்தை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என சவுமியா கோரிக்கை</p><p>கற்றலில் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு என தனி பாடத்திட்டம் கொண்டுவர வேண்டும் - எம்எல்ஏ சிந்து</p><h2>மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் குடியாத்தம் தவெக எம்எல்ஏ சிந்து உரை</h2><p>என் வெற்றிக்கு பின்னால் இருப்பது என் கணவர்.</p><p>சீரியலில் மூழ்கி இருந்த குடும்பங்களை சட்டசபையை பார்க்க வைத்தவர் முதலமைச்சர்.</p><p>நியமன தேர்வுகள் இன்றி சீனியாரிட்டி, தகுதி அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்.</p><p>அரசு பள்ளிகளில் மீண்டும் நன்னடத்தை வகுப்புகளை தொடங்க வேண்டும், பள்ளிகளில் RO குடிநீர் வழங்க வேண்டும்.</p><p>தண்ணீர் பிரச்சனை என்பது இயற்கையாக வருவது தான் - எ.வ.வேலு</p><p>தொகுதி மக்களின் கருத்தைதான் உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய் கூறினார் - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>58-ம் கால்வாய்க்கு திமுக ஆட்சியில் தண்ணீர் கொண்டுவரவில்லை - உசிலம்பட்டி தவெக எம்எல்ஏ விஜய்</p><p>மதுரை மாவட்டத்தில் செழிப்பாக இருக்கும் தொகுதிகள் சோழவந்தான், உசிலம்பட்டி - திமுக</p><p>கன்னிப்பேச்சாக இருக்கலாம்... ஆனால் குற்றம்சாட்டிக்கொண்டே இருந்தால் எப்படி? - எ.வ.வேலு</p><p>தவெக ஆட்சிக்கு வரவில்லை என்றால் உசிலம்பட்டி காணாமல் போய் இருக்கும் - தவெக எம்எல்ஏ விஜய்</p><p>மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் - தவெக எம்எல்ஏ விஜய்  உரையாற்றினார்</p><p>நகர்ப்புற வசதிகளை கிராமங்களுக்கு மேம்படுத்த மத்திய அரசு ரூ.1000 கோடி நிதி தந்தது.</p><p>உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் ஜனவரியுடன் முடிகிறது - கே.என்.நேரு</p> <p>எங்களுடன் இருந்த அதிகாரிகள் தான் முழுமையாக இன்றும் நகராட்சி துறையில் பணியாற்றுகின்றனர் - கே.என்.நேரு</p><p>தொடர முடியாத நிலையில் உள்ள குடிநீர் திட்டங்களை மீண்டும் தொடர வேண்டும்.</p><p>சென்னையில் 540 இடங்களில் கழிவுநீர் கலக்கிறது. 540 இடங்களிலும் குழாய்கள் அமைத்து சாலைகளை தோண்டி பணி செய்ய வேண்டும் - கே.என்.நேரு</p><p>பாமக சட்டமன்ற குழு தலைவர் சவுமியா அன்புமணி எழுப்பிய கேள்விக்கு கே.என்.நேரு விளக்கம்</p><p>கடந்த 5 ஆண்டுகளில் நகராட்சி நிர்வாகத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.</p><h2>கே.என்.நேரு உரை</h2><p>தேர்தல் வந்ததால் இறுதி அறிக்கையை அவையில் வைக்க முடியவில்லை.</p><p>தற்போதைய அரசு திருப்புகழ் கமிட்டி அறிக்கையை அவையில் சமர்ப்பிக்கலாம்.</p><p>உள்ளாட்சித்துறையில் எங்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கியவர் மு.க.ஸ்டாலின்.</p><p>சென்னை உள்ளிட்ட நகரங்களில் நாளொன்றுக்கு 5,000 மில்லியன் லிட்டர் குடிநீர் கொடுத்தோம்.</p> <p>கோப்புகளை எப்படி பார்க்க வேண்டும் என சொல்லி கொடுத்தவர் கலைஞர் - கே.என்.நேரு</p> <p>வெள்ளத்தடுப்பு குறித்த திருப்புகழ் கமிட்டி அறிக்கை குறித்து கே.என்.நேரு விளக்கம்</p><p>உள்ளாட்சி துறையில் எங்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கியவர் மு.க.ஸ்டாலின் - கே.என்.நேரு</p><p>நகராட்சி நிர்வாகத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் கே.என்.நேரு உரை</p> <p>24 மணி நேரத்திற்கு முன்பாகவே புத்தகங்களை கொடுக்க வேண்டும் - சபாநாயகர் உத்தரவு</p><p>நேற்று இரவு 8 மணிக்கு தான் கொள்கை விளக்க புத்தகம் கிடைத்தது - இபிஎஸ்</p><p>மானியக்கோரிக்கை புத்தகங்கள் ஒருநாளுக்கு முன்பாகவே கிடைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி</p><p>உயர்கல்வித்துறை மானியக்கோரிக்கை - அமைச்சர் விஸ்வநாதன் பதில் உரை</p><p>பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கை - அமைச்சர் ராஜ்மோகன் பதில் உரை</p><p>சட்டசபையில் வனவிலங்குகள் தாக்குதல் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. </p><p>எதிர்ப்பு குரல் கொடுப்பதாக இருந்தால் வெளியே சென்று குரல் கொடுங்கள் என சபாநாயகர் கூறியதை அடுத்து திமுகவினர் வெளிநடப்பு</p><p>பரந்தூர் ஏர்போர்ட் விவகாரம் தொடர்பாக பேரவையில் எழுந்து நின்று முழக்கமிட்ட திமுகவினரை கண்டித்த சபாநாயகர்</p><p>பரந்தூர் விமான நிலையம் குறித்து பேச அனுமதிக்க கோரி திமுக எம்எல்ஏக்கள் அமளி</p><p>திமுக எம்எல்ஏ மீதான அமைச்சரின் புகாருக்க திமுக எம்எல்ஏக்கள் எழுந்து நின்று சட்டசபையில் எதிர்ப்பு.</p><p>பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக சட்டசபை உறுப்பினர் முதலமைச்சர், அமைச்சர்களை மரியாதை இன்றி பேசி இருக்கிறார். இது மிகவும் கண்டனத்திற்குரியது என்று பால்வளத்துறை அமைச்சர் கூறினார்.</p><p>திருநர், திருநங்கைகளும் வெற்றி பயணம் திட்டத்தில் கட்டணமின்றி பயணிக்கலாம் - முதலமைச்சர் விஜய்</p><p>மகளிருக்கான  பேருந்து பயணத்திற்கு வருமான உச்சவரம்போ, மேற்கொள்ளும் பயணங்களில் எண்ணிக்கை கட்டுப்பாடோ இல்லை - முதலமைச்சர் விஜய்</p><p>மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கும் திட்டம் அக்டோபர் 2-ந்தேதி தொடக்கம்.</p><p>டீலக்ஸ் பேருந்து உள்பட அனைத்து பேருந்துகளிலும் மகளிர் இனி கட்டணமின்றி பயணிக்கலாம் - முதலமைச்சர் விஜய்</p><p>புதிய விமான நிலையத்திற்கான இடம் விரைவில் இறுதி செய்யப்படும்.</p><p>சென்னை விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும் - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு</p><p>பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைச்ச மேற்கொண்ட நடவடிக்கைகள் கைவிடப்படும் - முதலமைச்சர் விஜய்</p><p>3 எரிவாயு சிலிண்டருக்கான தொகையை அரசே நேரடியாக பயனாளர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கும் - முதலமைச்சர் விஜய்</p><p>ஆண்டுக்கு 3 கியாஸ் சிலிண்டர்கள் வழங்கும் திட்டம் வரும் பொங்கல் தினத்தில் இருந்து தொடங்கும்.</p><p>அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்திற்க ஆண்டுதோறும் தோராயமாக ரூ.4000 ஒதுக்கப்படும் - முதலமைச்சர் விஜய்</p><p>அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தில் ஆண்டுக்கு 3 இலவச கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் - முதலமைச்சர் விஜய்</p><p>பெண்கள் பயன்பெறும் வகையில் அவர்களை முன்னேற்றும் வகையிலும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது - முதலமைச்சர் விஜய்</p><p>சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் உரையாற்றினார்.</p><p>சட்டசபையில் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதையடுத்து உறுப்பினர்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.</p> <p>2 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் தமிழ்நாடு சட்டசபை  இன்று கூடியது.</p><p>தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது. காலை கூட்டம் கூடியதும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, பள்ளிக் கல்வித்துறை, தமிழ் வளர்ச்சித் துறை, உயர் கல்வித்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.</p><p>இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>3 இலவச சிலிண்டர், அனைத்து பேருந்துகளிலும் இலவச பயணம்... மகளிருக்கு முத்தான அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-3-free-cylinder-and-vetri-payanam-thittam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-3-free-cylinder-and-vetri-payanam-thittam#comments</comments><guid isPermaLink="false">8d7d9428-8def-46d4-9ca7-5640b645aa82</guid><pubDate>Mon, 24 Aug 2026 04:24:47 +0000</pubDate><atom:updated>2026-08-24T04:24:47.688Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/ge8h4t76/vijay.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/ge8h4t76/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கும் வெற்றி பயண திட்டம் அக்டோபர் 2-ந்தேதி முதல் தொடங்கப்படும்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழக சட்டசபை</a> கடந்த 2 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் இன்று மீண்டும் கூடியது. கூட்டம் தொடங்கியதும் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-</p><p>* அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தில் ஆண்டுக்கு 3 இலவச கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். ஆண்டுக்கு 3 கியாஸ் சிலிண்டர்கள் வழங்கும் திட்டம் வரும் பொங்கல் தினத்தில் இருந்து தொடங்கப்படும். </p><p>* 3 எரிவாயு சிலிண்டருக்கான தொகையை அரசே நேரடியாக பயனாளர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கும். </p><p>* ஆண்டு வருவாய் ரூ.2.50 லட்சத்திற்கு குறைவாக உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம் வழங்கப்படும். </p><p>* மகளிர் கட்டணமில்லா பேருந்து திட்டத்தை விரிவுப்படுத்தப்படுகிறது. </p><p>* மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கும் வெற்றி பயண திட்டம் அக்டோபர் 2-ந்தேதி முதல் தொடங்கப்படும். </p><p>* மகளிருக்கான வெற்றிப் பயணத் திட்டத்திற்கு வருமான உச்ச வரம்போ, மேற்கொள்ளும் பயணங்களில் எண்ணிக்கை கட்டுப்பாடோ இல்லை. </p><p>* திருநர், திருநங்கைகளும் வெற்றி பயணம் திட்டத்தில் கட்டணமின்றி பயணிக்கலாம். </p><p>* மாவட்டங்களுக்கு இடையில் பயணம் மேற்கொள்ள சாதாரண பேருந்துகளிலும் இலவசம்.</p><p>* மாநகரம், நகரங்களில் இயங்கும் அரசு பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளலாம்.</p><p>* வெற்றி பயணம் திட்டம் டீலக்ஸ் பேருந்து உள்பட அனைத்து பேருந்துகளிலும் மகளிர் இனி கட்டணமின்றி பயணிக்கலாம். இத்திட்டம் செயல்படுத்துவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடி செலவாகும்.</p>]]></content:encoded></item><item><title>மகளிருக்கு நற்செய்தி!- எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் பேருந்துகளிலும் இனி இலவசப் பயணம்: முழு விவரம் இதோ... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/good-news-for-women-free-travel-now-available-on-express-and-deluxe-buses-toohere-are-the-full-details</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/good-news-for-women-free-travel-now-available-on-express-and-deluxe-buses-toohere-are-the-full-details#comments</comments><guid isPermaLink="false">277e857a-0acd-48f5-b3e0-3e6702585840</guid><pubDate>Mon, 24 Aug 2026 06:25:11 +0000</pubDate><atom:updated>2026-08-24T06:25:11.608Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly,பெண்களுக்கு இலவச பயணம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/mympttwi/freebus.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மகளிருக்கு இலவசப் பயணம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மகளிருக்கு இலவசப் பயணம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/mympttwi/freebus.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மாணவிகள் தொலை தூரத்தில் உள்ள கல்லூரிகளுக்கு செல்லவும், பணியிடங்களுக்கு செல்லவும், மருத்துவம் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கும் கட்டணமின்றி பேருந்துகளில் பயணிக்க இயலும்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழக சட்டசபையில்</a> இன்று பேரவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அவர் பேசியதாவது:-</p><p>தமிழகம் முழுவதும் பெண்களுக்கு இலவச பஸ் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் கட்டணமில்லா பயண திட்டத்தில் மாநகரம், நகர்ப்புறங்களில் சாதாரண மற்றும் மலைப்பகுதி பேருந்துகளில் 40 கி.மீ. வரை மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது. </p><p>எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் பேருந்துகள் மற்றும் புறநகர் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படுவதில்லை. தமிழ்நாட்டின் எந்தப் பகுதிகளிலும் வசிக்கும் ஒரு மகளிரும் போக்குவரத்து கட்டணத்தால் தமது வாய்ப்புகளை இழக்கக் கூடாது என்ற சமூக நீதி சிந்தனையை இவ்வரசு முதன்மையாக கொண்டு உள்ளது.</p><h2><strong>அக்டோபர் 2-ந்தேதி வெற்றிப் பயணம்</strong></h2><p>இதனை கருத்தில் கொண்டு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-3-free-cylinder-and-vetri-payanam-thittam">மகளிர் கட்டணமில்லா</a> பயண திட்டத்தை விரிவுபடுத்தி பெருமளவில் பயனளித்திடும் விதமாக வெற்றிப் பயணம் என்ற பெயரில் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2-ந்தேதி முதல் செயல்படுத்த அரசு முடிவு செய்து உள்ளதை இந்த மாமன்றத்தில் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.</p><p>அதன்படி முதல் கட்டமாக மாநகரம், நகரங்களில் சாதாரண பேருந்துகள் மட்டுமின்றி மாநகரம், நகர்ப்பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் அரசு பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம்.</p><p>மேலும் கூடுதலாக மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில் சாதாரண கட்டண பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம்.</p><h2><strong>படிப்படியாக விரிவு</strong></h2><p>இத்திட்டத்தில் பயன்பெற வருமான உச்சவரம்போ மற்றும் மேற்கொள்ள விரும்பும் பயண  எண்ணிக்கையிலோ கட்டுப்பாடுகள் இல்லை. வெற்றிப் பயண திட்டம் இதர சேவைகளும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.</p><p>இதன் மூலம் மாநிலம் முழுவதும் மகளிருக்கான எளிதில் அணுகக் கூடிய பொதுப் போக்குவரத்து வசதி பெருமளவில்  கிடைக்கும். இதன் மூலம் மாணவிகள் தொலை தூரத்தில் உள்ள கல்லூரிகளுக்கு செல்லவும், பணியிடங்களுக்கு செல்லவும், மருத்துவம் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கும் கட்டணமின்றி பேருந்துகளில் பயணிக்க இயலும்.</p><h2><strong>பொருளாதார முன்னேற்றம்</strong></h2><p>வெற்றிப் பயணம் என்பது கட்டணமில்லா ஒரு பேருந்து பயணம் மட்டுமல்ல, ஒரு மாணவியின் கல்வி, ஒரு தொழிலாளியின்  வேலை வாய்ப்பு, ஒரு தாயின் குடும்ப பொறுப்பு, ஒரு தொழில் முனைவோரின் முன்னேற்றம் போன்றவற்றை உறுதி செய்யும் சமூக முதலீடாகும்.</p><p>தமிழ்நாட்டின் எந்த பகுதியில் வாழ்ந்தாலும் மகளிரின் இயக்க சுதந்திரத்துக்கும், பொருளாதார முன்னேற்றத்துக்கும் அரசு உறுதுணையாக இருக்கும்.</p><p>இத்திட்டத்தின் கீழ் திருநரும் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம். வெற்றிப் பயணம் வழியாக மகளிரின் வாய்ப்புகள் விரிவடைந்து  குடும்பங்கள்  முன்னேறி சமூக நீதியும், சமத்துவமும் நிலை பெற்று வளமாக வெற்றி தமிழ்நாட்டை உருவாக்கும். நமது பயணம் மேலும் வலுப்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2><strong>ரூ.6 ஆயிரம் கோடி</strong></h2><p>இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் ஆண்டு தோறும் தோராயமாக ரூ.6 ஆயிரம் கோடி செலவினம் ஏற்படும் என்றார். </p>]]></content:encoded></item><item><title>ஓராண்டிற்குள் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளி தரம் உயர்த்தப்படும்- ஆதவ் அர்ஜூனா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/aadhav-arjuna-promises-upgrade-of-government-schools-in-a-year</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/aadhav-arjuna-promises-upgrade-of-government-schools-in-a-year#comments</comments><guid isPermaLink="false">a0a7bf89-3217-46f0-bc5d-cd222555d2d4</guid><pubDate>Mon, 24 Aug 2026 07:36:52 +0000</pubDate><atom:updated>2026-08-24T07:36:52.746Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆதவ் அர்ஜூனா,Aadhav Arjuna,govt schools,தமிழக அரசு பள்ளிகள்,TN assembly,தமிழக சட்டசபை |</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/hvplvu71/Adhav.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Aadhav arjuna]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/hvplvu71/Adhav.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் பொதுப்பணித்துறை ஆதவ் அர்ஜூனா உரையாற்றினார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><p>பொதுப்பணித்துறையில் பராமரிப்பு பணியில் அதிக நிதிக் கசிவு ஏற்பட்டுள்ளது.</p><p>நிதிக் கசிவு தொடர்பாக 30 நாட்களாக தகவல்களை திரட்டி வருகிறோம்.</p><p>பெண்கள் படிக்கும் பல பள்ளிகளில் கழிவறை வசதிகள் இல்லை. பள்ளிகளின் பராமரிப்பு பணி பொதுப்பணித்துறையின் கீழ் வருகிறது.</p><p>பெண்கள் படிக்கும் பள்ளிகளில் கழிவறைகள் முறையாக பராமரிக்கப்படவில்லை.</p><p>நான் பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தே பள்ளி, கல்லூரி கட்டிடங்கள் சீரமைக்கப்படவில்லை.</p><p>நான் 10-ம் வகுப்பு படித்தபோது இடிந்து விழுந்த பள்ளிக்கட்டிடம் 12-ம் வகுப்பு முடிக்கும் வரையிலும் கூட கட்டப்படவில்லை.</p><p>பள்ளிக்கல்வித்துறை, பொதுப்பணித்துறை இணைந்து 234 தொகுதியிலும் பள்ளி, கல்லூரி கட்டிடங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>எம்எல்ஏக்கள் அவரவர் தொகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.</p><p>பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் உண்மை நிலை குறித்து அறிக்கை அளித்து தேவையான நிதி குறித்தும் தெரிவிக்கலாம்.</p><p>ஓராண்டிற்குள் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளி, கல்லூரிகளை தரம் உயர்த்த வேண்டும்.</p><p>அரசு பள்ளி, கல்லூரிகளை தரம் உயர்த்துவதில் அந்தந்த தொகுதி எம்எல்ஏக்கள் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும்.</p><p>அரசு பள்ளி, கல்லூரி கட்டிடங்களை பராமரிப்பதில் எந்த ஊழலும் இருக்க கூடாது. </p><p>பொதுப்பணித்துறையில் கடந்த 30 ஆண்டுக்களுக்கான தகவலை எடுத்துக்கொண்டிருக்கிறோம்.</p><p>சர்வே 40% நிறைவடைந்த நிலையில் முழு பணியும் நிறைவடைய மேலும் 2 மாதங்கள் ஆகும். எம்எல்ஏக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.</p><p>கல்வி நிறுவன கட்டிடங்கள் 3 ஆக பிரிப்பு. சிவப்பு நிறம் பயன்படுத்த முடியாத கட்டிடம், மஞ்சள் நிறம் சீரமைக்க வேண்டிய கட்டிடம்.</p><p>அடுத்த 5 ஆண்டுகளுக்கு பராமரிப்பு தேவைப்படாத பள்ளி, கல்லூரி கட்டிடங்களில் பச்சை ஸ்டிக்கர் ஒட்டப்படும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><h2>அமைச்சர் ராஜ்மோகன்</h2><p>பள்ளிகளில் பூட்டப்பட்ட கதவுகள் உடைய கழிப்பறை கட்டுவதற்கு தான் முதல் கையெழுத்து போட்டேன்.</p><p>முறையான கழிவறை இல்லாததால் 8 மணி நேரம் வரை பள்ளி மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர். </p><p>மாணவிகளுக்கு கழிப்பறை என்பது தான் முதல் சேவை. ஏற்கனவே அமைச்சர் ஆதவுடன் ஆலோசனை நடத்தி உள்ளேன்.</p><p>குற்றம் நடப்பதை தடுக்கும் வகையில் பள்ளிகளில் சிசிடிவி பொறுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.</p><p>பள்ளிக்கட்டிடங்கள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு பொதுப்பணித்துறை அமைச்சருக்கு  அமைச்சர் ராஜ்மோகன் கோரிக்கை வைத்துள்ளார்.</p><h2>திமுக எம்எல்ஏ எம்ஆர்கே.பன்னீர்செல்வம்</h2><p>அரசு பள்ளிகளில் கழிப்பறை இல்லாததை போல் தோற்றத்தை உருவாக்க முயற்சி.</p><p>கழிப்பறையே கட்டவில்லை என்ற தோற்றத்தை உருவாக்க அமைச்சர்கள் முயற்சிக்கின்றனர், அது தவறு.</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</h2><p>எந்த கட்சி, எந்த ஆட்சியை பற்றியும் நான் பேசவில்லை, மக்கள் எதை எதிர்பார்க்கின்றனரோ அதை தான் சொல்கிறேன்.</p><p>அரசு கல்வி என்பது கருணை அடிப்படையிலான ஒன்று அல்ல, அது உரிமை அடிப்படையிலான ஒன்று.</p><p>காமராஜர் காலத்தில் படித்ததால் தான் எதிர்தரப்பினர் படித்தபோது அரசு பள்ளி நல்ல நிலையில் இருந்தது.</p><p>இவ்வாறு கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சரை பற்றி தரக்குறைவு பேச்சு... திமுக எம்எல்ஏவை சாடிய பெண் அமைச்சர் - சபாநாயகர் சொன்னது என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/is-it-appropriate-for-a-dmk-mla-to-make-derogatory-remarks-about-the-chief-minister-what-did-the-minister-and-the-speaker-say-in-condemnation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/is-it-appropriate-for-a-dmk-mla-to-make-derogatory-remarks-about-the-chief-minister-what-did-the-minister-and-the-speaker-say-in-condemnation#comments</comments><guid isPermaLink="false">88ef3458-9fdb-4488-95cd-c9ad149be9a5</guid><pubDate>Mon, 24 Aug 2026 07:33:49 +0000</pubDate><atom:updated>2026-08-24T07:33:49.024Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தவெக,தமிழக சட்டசபை,TN assembly,tvk,JCD Prabhakar,ஜேசிடி பிரபாகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/w8ctjy99/JCDPrabhakar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்]]></media:title><media:description type="html"><![CDATA[ சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/w8ctjy99/JCDPrabhakar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நீர்வளத்துறை அமைச்சர் இன்று காலையில் எனது அலுவலகத்துக்கு வந்து இது சம்பந்தமாக கவனத்திற்கு கொண்டு வந்து இது உரிமை மீறலில் வருமா? என்று கேட்டார்.</strong></em> </p><p>தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில்  நேற்று நடைபெற்ற திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் எதிர்க்கட்சி தலைவரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துக்கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். விழா மேடையில் உதயநிதி இருக்கும் போது, மணமக்களை வாழ்த்தி, திருவையாறு தொகுதி திமுக எம்.எல்.ஏ துரை சந்திரசேகரன் பேசும் போது, "முதலமைச்சர் விஜய் பற்றியும் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பற்றியும் ஒருமையில்  பேசினார்.</p><p>இந்த பேச்சுக்கு வில்லங்கம் வரும் என்று மேடையிலேயே உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார். நான் பேச விட்டாலும் என்னை வம்பில் இழுத்து விடுகிறீர்கள் என்றார்.</p><p>இது சம்பந்தமாக  <a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">சட்டசபையில்</a> இன்று பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வந்து பேசியதாவது,</p><p>திமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் நேற்று பொது வெளியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் குறித்து மரியாதை இன்றியும் தரக்குறைவாகவும் பேசி உள்ளார். இது மிகவும் கண்டனத்துக்குரியது. தொழில்துறை அமைச்சரையும் பெண் என்றும் பாராமல் மரியாதை இல்லாமல் பேசியது கண்டனத்துக்குரியது; திமுகவினர் தேர்தல் தோல்வி மற்றும் ஆற்றாமையால் இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதாக குறிப்பிட்டார்.</p><p>அப்போது சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறியதாவது:- </p><p>நீர்வளத்துறை அமைச்சர் இன்று காலையில் எனது அலுவலகத்துக்கு வந்து இது சம்பந்தமாக கவனத்திற்கு கொண்டு வந்து இது உரிமை மீறலில் வருமா? என்று கேட்டார் . </p><p>அவர்கள் வெளியில் பேசி இருந்தாலும் அது நம்முடைய மாண்பை குலைப்பதாக இருந்தாலும், முதலமைச்சரின் மாண்பை குலைப்பதாக இருந்தாலும், அமைச்சரின் மாண்பை குலைப்பதாக இருந்தாலும் அதை படித்து பார்த்து, ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பது பற்றி நல்ல முடிவு எடுப்பேன் என்றார். </p>]]></content:encoded></item><item><title>இம்ரான் கானுக்கு ஆதரவாக களமிறங்கிய முன்னாள் கிரிக்கெட் கேப்டன்கள் - பாகிஸ்தான் பிரதமருக்கு கடிதம்</title><link>https://www.maalaimalar.com/news/world/former-cricket-captains-rally-in-support-of-imran-khan-letter-to-the-pakistan-prime-minister</link><comments>https://www.maalaimalar.com/news/world/former-cricket-captains-rally-in-support-of-imran-khan-letter-to-the-pakistan-prime-minister#comments</comments><guid isPermaLink="false">cedb37c6-359d-44db-a2dd-cf886b8c4d48</guid><pubDate>Mon, 24 Aug 2026 07:33:39 +0000</pubDate><atom:updated>2026-08-24T07:33:39.362Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Imran Khan,இம்ரான் கான்,Kapil Dev,shehbaz sharif,கபில் தேவ்,ஷெபாஸ் ஷெரீப்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/qlzlymtg/tn-1.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கபில் தேவ், இம்ரான் கான், கவாஸ்கர் ]]></media:title><media:description type="html"><![CDATA[ கபில் தேவ், இம்ரான் கான், கவாஸ்கர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/qlzlymtg/tn-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/imran-khan">இம்ரான் கானுக்கு</a> முறையான மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யக் கோரி பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்க்கு 21 சர்வதேச கிரிக்கெட் அணிகளின் முன்னாள் கேப்டன்கள் இணைந்து கடிதம் எழுதியுள்ளனர்.</p><p>சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கானுக்கு மனிதநேய அடிப்படையில் முறையான மருத்துவ சிகிச்சையும், பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும் என அதில் வலியுறுத்தியுள்ளனர்.</p> <h2>இம்ரான் கான்</h2><p>73 வயதான பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்று 2023 முதல் சிறையில் உள்ளார். </p><p>அவருக்கு சிறையில் போதிய வசதிகள் இல்லை என்றும் அவரின் உடல்நிலை குறித்தும் ஆதரவாளர்கள் மற்றும் குடும்பத்தினர் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றனர்.</p><p>கடந்த வாரம் உச்சநீதிமன்ற உத்தரவின்படி, இம்ரான் கான் அவர் அடைக்கப்பட்டுள்ள அடியாலா சிறையில் இருந்து இஸ்லாமாபாத் சர்வதேச மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். சில மணி நேரங்களுக்கு பின் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.</p><p>அவரின் உடல்நிலை மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு மோசமில்லை என அவரை பரிசோதித்த சிறப்பு மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.</p><p>இருப்பினும் அவரின் குடும்பத்தினர் அவரை சந்திக்கவும், மருத்துவ சிகிச்சைக்கும் இம்ரான் கானுக்கு உரிமை மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.</p><p>இந்த சூழலில் தான் இம்ரான் கானுக்கு ஆதரவாக அவர் கிரிக்கெட் கேப்டனாக இருந்த சர்வதேச கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன்கள் பாகிஸ்தான் பிரதமருக்கு கூட்டதாக கடிதம் எழுதியுள்ளனர்.</p> <h2>கடிதம்</h2><p>அந்த கடிதத்தில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட மருத்துவக் குழுவில், இம்ரான் கானின் தனிப்பட்ட மருத்துவர்களையும் சேர்த்து முழுமையான மருத்துவப் பரிசோதனை செய்ய அனுமதிக்க வேண்டும்.</p><p>குறிப்பாக, அவரது வலது கண்ணில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் பார்வைக் குறைபாடு குறித்து விரிவாக ஆய்வு செய்ய வேண்டும்.</p> <p>இம்ரான் கானைச் சந்திக்க அவரது குடும்பத்தினருக்கு வாரந்தோறும் அனுமதி அளிக்கும் உச்ச நீதிமன்ற உத்தரவை, எந்தவித நிர்வாகத் தாமதமுமின்றி பாகிஸ்தான் அரசு பின்பற்ற வேண்டும்.</p><p>மருத்துவக் குழுப் பரிந்துரைக்கும் சிகிச்சைகளை எந்தவிதத் தாமதமுமின்றி உடனடியாக இம்ரான் கானுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.</p> <h2>கையெழுத்து</h2><p>இந்த கடிதத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்கள் சுனில் கவாஸ்கர், கபில் தேவ், திலீப் வெங்சர்க்கார் ஆகியோரையும் சேர்த்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளின் உள்ளிட்டவற்றின் முன்னாள் கேப்டன்களும் கையெழுத்திட்டுள்ளனர்.</p><p>பாகிஸ்தானின் உள்நாட்டு சட்டப் நடைமுறைகளில் தலையிட விரும்பவில்லை என்றும் நீதிமன்ற உத்தரவுப்படி மருத்துவ உதவி வழங்குவது அடிப்படை மனிதநேயம் என்றும் முன்னாள் கேப்டன்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>கொடுத்த வாக்கை காப்பாற்றி எங்கள் கண்ணீரை முதலமைச்சர் விஜய் துடைத்துவிட்டார் - பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழு தலைவர் பேட்டி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-has-kept-his-promise-and-wiped-away-our-tears-interview-with-the-leader-of-the-parandur-airport-opposition-committee</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-has-kept-his-promise-and-wiped-away-our-tears-interview-with-the-leader-of-the-parandur-airport-opposition-committee#comments</comments><guid isPermaLink="false">56211c9d-d0c0-46b2-bf62-2f40ca67c812</guid><pubDate>Mon, 24 Aug 2026 07:05:58 +0000</pubDate><atom:updated>2026-08-24T07:05:58.362Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Parandur Airport,பரந்தூர் விமான நிலையம்,தமிழக சட்டசபை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/lhgr1owp/cmparandur.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/lhgr1owp/cmparandur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து ஏகனாபுரத்தில் உள்ள அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.</strong></em></p><p>பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழு தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது:-</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">பரந்தூர் விமான நிலைய திட்டம்</a> கைவிடப்படுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்து இருப்பது எல்லையில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதலமைச்சர் விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளார். அவருக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்.</p><p>அவர் எங்களது கண்ணீரையும், துன்பத்தையும் துடைத்துள்ளார். அவர் எங்களை சந்தித்த போது என்ன கூறினாரோ அதனை முழுவதுமாக நிறைவேற்றி இருக்கிறார். எங்கள் பகுதியில் விவசாயம், கிராம மக்களின் குடியிருப்புகள் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை இருந்து வந்த எங்களது மனக்குழப்பம், துன்பங்கள் நீங்கி உள்ளன. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-makes-a-surprise-announcement-in-the-assembly-abandoning-the-parandur-airport-project">பரந்தூரைச்</a> சுற்றி உள்ள  கிராம மக்கள் அனைவரும் மகிழ்ச்சி வெள்ள கொண்டாட்டத்தில் உள்ளனர். முதலமைச்சர் விஜய்யை சந்தித்து நன்றி கூற முடிவு செய்துள்ளோம்.</p><p>2019-ம் ஆண்டு பரந்தூர் விமான நிலைய திட்டம் அறிவிக்கப்பட்டது முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்தோம். கடந்த 3 ஆண்டுகளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டோம். 1,100 நாட்கள் தாண்டியும்  எங்களது போராட்டம் நீடித்தது. தற்போது முதலமைச்சர் விஜய்யின் அறிவிப்பால் பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டு உள்ளது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><p>பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து ஏகனாபுரத்தில் உள்ள அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஏகானபுரம் ஊராட்சியில் சுதந்திரத்தினத்தன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தின்போது அப்பகுதியில் உள்ள சாலைக்கு “தளபதி விஜய் சாலை” என்று பெயர் சூட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>இமாச்சல பிரதேசம், லடாக்கில் அடுத்தடுத்து நிலநடுக்கம் </title><link>https://www.maalaimalar.com/news/national/successive-earthquakes-in-ladakh-and-himachal-pradesh</link><comments>https://www.maalaimalar.com/news/national/successive-earthquakes-in-ladakh-and-himachal-pradesh#comments</comments><guid isPermaLink="false">2c168b2e-d3da-4440-a7e4-bee964652214</guid><pubDate>Mon, 24 Aug 2026 06:54:37 +0000</pubDate><atom:updated>2026-08-24T06:54:37.899Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Earthquake,ladakh,இமாச்சல பிரதேசம்,Himachal Pradesh,லடாக்,நிலநடுக்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/yl11vnlt/tn.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நிலநடுக்கம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ நிலநடுக்கம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/yl11vnlt/tn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>லடாக் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் இன்று (திங்கள்கிழமை) காலை அடுத்தடுத்து <a href="https://www.maalaimalar.com/topic/earthquake">நிலநடுக்கம் </a>ஏற்பட்டுள்ளது. </p><h2>லடாக் </h2><p>தேசிய நில அதிர்வு மையம் தகவல்படி,  இன்று காலை 8:25 மணியளவில் லடாக்கின் லே பகுதியில் ரிக்டர் அளவில் 3.5 ஆக நிலநடுக்கம் பதிவானது. </p><p>இது  பூமிக்கு அடியில் 120 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.  இதனால் லே பகுதியில் லேசான அதிர்வுகள் உணரப்பட்டன. </p><h2>இமாச்சலப் பிரதேசம்</h2><p>இன்று, லடாக் நிலநடுக்கத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அதிகாலை 3:40 மணியளவில், இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.0 ஆக பதிவானது.</p><p>பூமிக்கு அடியில் 8 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.</p><h2>முந்தைய நிலநடுக்கம்</h2><p>முன்னதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் பிற்பகல் 3:34 மணியளவில் லடாக்கில் லே பகுதியில் இதைவிடச் சற்று வலுவான நிலநடுக்கம் பதிவானது. </p><p>இது ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 150 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.</p><p>இந்த நிலநடுக்கங்களால் உயிர்ச்சேதமோ அல்லது பெரிய அளவிலான பொருள் சேதங்களோ ஏற்பட்டதாக உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை.</p><h2>ஜப்பான் நிலைநடுக்கம்</h2><p>முன்னதாக நேற்று <a href="https://www.maalaimalar.com/news/world/japan-earthquake-59-magnitude-quake-hits-ibaraki-region-near-tokyo-injuring-37-and-disrupting-water-supply-and-traffic">ஜப்பானில் இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் </a>ஏற்பட்டன. முதல் நிலநடுக்கம் அதிகாலையில் 5.9 ரிக்டர் அளவில் பதிவானது. தொடர்ந்து பிற்பகலில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.</p><p>இரண்டு நிலநடுக்கங்களையும் சேர்ந்து 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து முடங்கியது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>மாடர்ன் உடை அணிந்து பெண் சென்ற விவகாரம்: ஆணாதிக்க அரசியலை கடந்து பெண்கள் வெற்றி பெற வேண்டும்!- கனிமொழி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-women-must-triumph-over-patriarchal-politics</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-women-must-triumph-over-patriarchal-politics#comments</comments><guid isPermaLink="false">0f200107-facd-4311-b533-832215ad2f98</guid><pubDate>Mon, 24 Aug 2026 06:53:12 +0000</pubDate><atom:updated>2026-08-24T06:53:12.711Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தவெக,Kanimozhi,கனிமொழி,tvk,Minister Keerthana,அமைச்சர் கீர்த்தனா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/j6lyz7ew/kanimozhi.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கனிமொழி]]></media:title><media:description type="html"><![CDATA[ கனிமொழி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/j6lyz7ew/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>உடை, தோற்றம், தனிப்பட்ட வாழ்க்கை போன்றவற்றை வைத்து விமர்சிப்பது மலினமான அரசியலின் வெளிப்பாடாகும் என கனிமொழி கூறியுள்ளார்.</strong></em> </p><p>காரில் இருந்து இறங்கும் ஒரு பெண் கருப்பு உடை அணிந்து, செல்வது  போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அது தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா என விமர்சித்து சிலர் பதிவு போட்டுள்ளனர். இதுதொடர்பாக, அமைச்சர் கீர்த்தனா விளக்கம் அளித்துள்ளார். ஒரு பெண், தன் அன்றாட வாழ்க்கையை வாழும், வீடியோ ஒன்று, அரசியல் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்துகிறது. </p><p>இது பிற்போக்குத்தனமான, மனநிலையை காட்டுகிறது. ஆனால், எனக்கு இதில் ஆச்சரியமில்லை. பெண்கள் குறித்து, மிகவும் இழிவான கருத்துகளைப் பேசிய, வரலாற்றை கொண்ட, ஒரு தலைவரின் ஆதரவாளர்களிடமிருந்து, வேறு என்ன எதிர்பார்க்க முடியும். ஒன்றை தெளிவுப்படுத்துகிறேன். அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என்றார்.</p><p>இதுகுறித்து, திமுக துணைப் பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/கனிமொழி">கனிமொழி</a> எம்.பி., தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது:-</p><h2><strong>பிற்போக்குத்தனமான மனநிலை</strong></h2><p>காலம் காலமாக, கட்சி வேறுபாடின்றி பொதுவாழ்வில் இருக்கும் பெண்கள் மீது அநாகரிகமான தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.</p><p>ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் களத்தில் துணிச்சலுடன் செயலாற்றும் பெண்களை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல், அவர்களின் உடை, தோற்றம், தனிப்பட்ட வாழ்க்கை போன்றவற்றை வைத்து விமர்சிப்பது மலினமான அரசியலின் வெளிப்பாடாகும். இத்தகைய தாக்குதல்களில் ஈடுபடுபவர்களின் பிற்போக்குத்தனமான மனநிலையே இதன் மூலம் வெளிப்படுகிறது.</p><p>பெண்கள் இதையெல்லாம் கடந்தே வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">காலம் காலமாக, கட்சி வேறுபாடின்றி பொதுவாழ்வில் இருக்கும் பெண்கள் மீது அநாகரிகமான தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.<br><br>ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் களத்தில் துணிச்சலுடன் செயலாற்றும் பெண்களை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல், அவர்களின் உடை, தோற்றம், தனிப்பட்ட வாழ்க்கை போன்றவற்றை…</p>&mdash; Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) <a href="https://x.com/KanimozhiDMK/status/2091751746834194664?ref_src=twsrc%5Etfw">August 24, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>ஜெயலலிதா அறிமுகப்படுத்திய திட்டங்களை தொடரும் முதலமைச்சர் விஜய்க்கு நன்றி- எஸ்.பி.வேலுமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/sp-velumani-thanks-cm-vijay-for-jayalalithaa-scheme-continuation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/sp-velumani-thanks-cm-vijay-for-jayalalithaa-scheme-continuation#comments</comments><guid isPermaLink="false">5033f1e5-d957-40fc-a6a7-a683bd6ae8d0</guid><pubDate>Mon, 24 Aug 2026 06:49:20 +0000</pubDate><atom:updated>2026-08-24T06:49:20.551Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,தமிழக சட்டசபை,sp velumani,TNAssembly,எஸ்பி வேலுமணி,முதலமைச்சர் விஜய்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/azv4315u/SP-Velumani.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay- SP Velumani]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/azv4315u/SP-Velumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் என குறிப்பிட்டு சட்டசபையில் அதிமுக எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி தனது உரையை தொடங்கினார்.</p><p>அப்போது, அதிருப்தியில் உள்ளதாக கூறப்படும் எஸ்.பி.வேலுமணி இபிஎஸ் கொண்டு வந்த திட்டங்களை குறிப்பிட்டு நன்றி கூறினார்.</p><p>மேற்கொண்டு அவர் கூறியதாவது:-</p><p>ஜெயலலிதா அறிமுகப்படுத்திய திட்டங்களை தொடரும் முதலமைச்சர் விஜய்க்கு நன்றி. </p><p>அதிமுக ஆட்சியில் கோவையின் முக்கிய சாலைகள், மேம்பாலங்கள் அமைக்கப்பட்டது. </p><p>கோவை மாவட்டத்தையே மாற்றி அமைத்தது அதிமுக. திமுக ஆட்சியில் கோவைக்கன திட்டங்கள் இல்லை. சிட்காட், சாலை, மேம்பாலம் என அதிமுக செய்து நிலுவையில் இருந்த திட்டங்களை திமுக தொடரவில்லை.</p><p>அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் வைத்தது திமுக.</p><p>கோவை மெட்ரோ ரெயில் திட்டம் முக்கியமான திட்டம். கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டம் தொடர்பாக மத்திய அரசிடம் முதலமைச்சர் விஜய் பேச வேண்டும் </p><p>அத்திக்கடவு - அவிநாசி குடிநீர் திட்டத்தை கிடப்பில் போட்டது திமுக.</p><p>ஊருக்குள் நுழையும் காட்டுப்பன்றியை சுடுவதற்கு மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற்றுத்தர வேண்டும்.</p><p>இவ்வாறு கூறினார்.</p><p>கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சியினர் பேச அனுமதிக்கவில்லை என்று எஸ்.பி.வேலுமணி கூறியதற்கு திமுக தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.</p><p>பேச அனுமதி கேட்டபோது பலமுறை முகத்தை கூட திருப்பமாட்டார், தற்போதைய சபாநாயகர் போல் கூடுதல் வாய்ப்பு தரமாட்டார் என எஸ்.பி.வேலுமணி கூறினார்.</p><p>கடந்த முறை எதிர்க்கட்சியான அதிமுக கொறடாவாக இருந்தபோது அவரும் பேசினார், மற்றவருக்கும் அனுமதி பெற்று தந்தார் என்று முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.</p><p>வியாழக்கிழமையில் இருந்து கேள்வி நேரம் உண்டு என சபாநாயகர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து என அறிவித்த முதலமைச்சர்- மகிழ்ச்சி வெள்ளத்தில் கிராம மக்கள் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/parandur-village-peoples-welcome-to-cm-vijay-announcement</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/parandur-village-peoples-welcome-to-cm-vijay-announcement#comments</comments><guid isPermaLink="false">0b3975de-d024-49f8-8eee-d19f5038abe6</guid><pubDate>Mon, 24 Aug 2026 06:40:46 +0000</pubDate><atom:updated>2026-08-24T06:40:46.372Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Parandur Airport,பரந்தூர் விமான நிலையம்,தமிழக சட்டசபை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/zo4b2twb/parandur.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பரந்தூர் ]]></media:title><media:description type="html"><![CDATA[ பரந்தூர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/zo4b2twb/parandur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி உள்ளனர். முதலமைச்சர் விஜய்யின் அறிவிப்புக்கு பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினர் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.</strong></em></p><p>சென்னையின் 2-வது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">பரந்தூரில்</a> அமைய இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. </p><p>இதற்காக சுமார் 5,300 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்றன. இதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றியுள்ள 13 கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். </p><p>அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வந்தனர். பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் திட்டம் அறிவிக்கப்பட்ட நாள் முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.</p><p>தமிழக வெற்றிக் கழகம் அரசியலில் களம் இறங்கிய பிறகு முதலமைச்சர் விஜய் முதல்முறையாக பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் தான் நேரடியாக களம் இறங்கி மக்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.</p><h2><strong>மகிழ்ச்சி வெள்ளம்</strong></h2><p>இந்த நிலையில் சட்டசபையில் இன்று முதலமைச்சர் விஜய் பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுவதாக அறிவித்து இருப்பது <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-makes-a-surprise-announcement-in-the-assembly-abandoning-the-parandur-airport-project">பரந்தூர்</a> மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதலமைச்சர் விஜய்யின் இந்த அறிவிப்புக்கு கிராம மக்கள் நன்றியும், வாழ்த்துக்களும் தெரிவித்து வருகிறார்கள்.</p><p>இதற்கான கொண்டாட்டங்களில் கிராம மக்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி உள்ளனர். முதலமைச்சர் விஜய்யின் அறிவிப்புக்கு பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினர் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>ஒரே வீட்டில் கணவருடனும், காதலனுடனும் வாழ்வேன் என அடம்பிடித்த இளம்பெண்</title><link>https://www.maalaimalar.com/news/national/uttar-pradesh-affair</link><comments>https://www.maalaimalar.com/news/national/uttar-pradesh-affair#comments</comments><guid isPermaLink="false">a04bad1e-7822-43a3-9fa8-25f44f1e50c7</guid><pubDate>Mon, 24 Aug 2026 06:38:57 +0000</pubDate><atom:updated>2026-08-24T06:38:57.794Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>police,கள்ளக்காதல்,போலீசார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/kf41xp01/Tirupathi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/kf41xp01/Tirupathi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரப்பிரதேச மாநிலம், சீதாபூர் மாவட்டம், மஹ்மூதாபாத்தை சேர்ந்தவர் சுபம் வர்மா, இவரது மனைவி அஞ்சு. தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த நிதின் என்பவருடன் அஞ்சுவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இது கள்ளக்காதலாக மாறியது. கணவன் இல்லாத நேரத்தில் அஞ்சுவின் வீட்டிற்கு நிதின் அடிக்கடி வந்து சென்றார். </p><h2><strong>கள்ளக்காதல்</strong></h2><p>இந்த விவகாரம் கணவருக்கு தெரிந்ததால் அவர் கண்டித்தார். ஆனால் அஞ்சு கள்ளக்காதலை கைவிடவில்லை. கணவர் எதிர்ப்பை மீறி தனது வீட்டிற்கு கள்ளக்காதலன் நிதினை அழைத்து வந்தார்.</p><h2><strong>தகராறு</strong></h2><p>இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இந்த விவகாரம் தெரிந்த உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சுபம் அங்குள்ள போலீசில் புகார் அளித்தார்.</p><h2><strong>பேச்சுவார்த்தை</strong></h2><p>போலீசார் கணவன்-மனைவி, கள்ளக்காதலன் ஆகியோரை போலீஸ் நிலையம் வரவழைத்தனர். அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது சுபம் தனது மனைவி என்னுடன் அல்லது அவரது காதலனுடன் இருக்க வேண்டும். இருவருடன் சேர்ந்து இருக்க முடியாது. வேண்டுமென்றால் நான் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறேன் என கூறினார். ஆனால் அஞ்சு தனது கணவரும் வேண்டும், காதலனும் வேண்டும். இருவருடன் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன் என்றார். இதனை கேட்டதும் போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.</p><h2><strong>போலீசார்</strong></h2><p>போலீசார் 3 பேரிடமும் தனித்தனியாக பேசினர். இந்த விவகாரத்தில் ஒரு பரஸ்பர உடன்பாட்டிற்கு வர முயன்றனர். ஆனால் நீண்ட விவாதத்திற்குப் பிறகும் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. அஞ்சு தன் கணவர் சுபம் மற்றும் காதலன் நிதின் ஆகிய இருவருடனும் தொடர்ந்து வாழ வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.</p><h2><strong>உடன்பாடு எட்டப்படவில்லை</strong></h2><p>பல மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகும் இதில் உடன்பாடு எட்டப்படவில்லை. தொடர்ந்து அஞ்சு இருவரும் வேண்டும் என அடம் பிடித்ததால் போலீசார் அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பேசு பொருளாக மாறியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>10 ஆண்டுகள் நிறைவடையும் முன் முழு PF பணத்தையும் எடுத்தால் ஓய்வூதியம் வராது - செக் வைத்த EPFO </title><link>https://www.maalaimalar.com/news/national/withdrawing-the-entire-pf-amount-before-completing-10-years-means-no-pension-epfos-new-rule</link><comments>https://www.maalaimalar.com/news/national/withdrawing-the-entire-pf-amount-before-completing-10-years-means-no-pension-epfos-new-rule#comments</comments><guid isPermaLink="false">3423c53a-6b27-47b3-85d8-e5a008b48a31</guid><pubDate>Mon, 24 Aug 2026 06:26:11 +0000</pubDate><atom:updated>2026-08-24T06:26:11.036Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,Central govt,Pension,ஓய்வூதியம்,EPFO,வருங்கால வைப்புநிதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/g500j19f/tn-41.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ EPFO]]></media:title><media:description type="html"><![CDATA[ EPFO]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/g500j19f/tn-41.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஓய்வுக்குப் பிறகு மாதாந்திர ஓய்வூதியம் பெற தகுதி பெற வேண்டும் என்றால், ஊழியகர்கள் கட்டாயமாக 10 ஆண்டுகள் வரை PF நிதியில் பங்களிப்பு செய்திருக்க வேண்டும் என்றும் இடையில் முழு பணத்தை எடுக்க கூடாது என்றும் தொழிலாளர் வைப்பு நிதி அமைப்பு (EPFO) அறிவுறுத்தியுள்ளது. </p><h2>வைப்பு நிதி</h2><p>தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் குறிப்பிட்ட தொகை, அவர்களின் எதிர்கால தேவைக்காக தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதியில் சேமிக்கப்படுகிறது. அதற்கு ஆண்டுதோறும் வட்டி வழங்கப்படுகிறது.</p><h2>இடைவெளி </h2><p>இந்நிலையில் 10 ஆண்டுகள் நிறைவடையும் முன்பே வைப்பு நிதி பணத்தை முழுமையாக எடுப்பது, ஊழியரின் மொத்த பணிக்காலத்தின் தொடர்ச்சியை பாதிக்கும்.</p><p>இதனால் இடைவெளி ஏற்பட்டு, 10 ஆண்டுகள் கணக்கில் வராமல் போகலாம். </p><p>இறுதியில் ஓய்வுக்குப் பின் மாதாந்திர ஓய்வூதியம் பெறும் தகுதியை உறுப்பினர்கள் இழக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><h2>மொத்த பணமும் எடுக்கக்கூடாது</h2><p>எனவே அவசர தேவைகளுக்காக PF நிதியை எடுப்பதற்கு முன், அது எதிர்கால ஓய்வூதியத் தகுதியைப் பாதிக்குமா என்பதை உணர்ந்து உறுப்பினர்கள் முடிவெடுக்க வேண்டும்.</p><p>தங்களின் EPF கணக்கு பதிவுகள் மற்றும் Service recordஐ அவ்வப்போது சரிபார்த்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>வட்டி விகிதம் உயர்வு </h2><p>தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதி அமைப்பின் உயரிய அமைப்பான மத்திய அறங்காவலர்கள் வாரியம், ஆண்டுதோறும் வட்டி விகிதத்தை முடிவு செய்கிறது.</p><p>2025-2026 நிதியாண்டுக்கு <a href="https://www.maalaimalar.com/news/national/central-government-approves-epf-8-25-percent-interest-rate">8.25 சதவீத வட்டிவிகிதம்</a> வழங்க மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் இந்த மாதம் அளித்தது.</p><p>இதையடுத்து, மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் உத்தரவுப்படி, 7 கோடிக்கு மேற்பட்ட தொழிலாளர் வருங்கால வைப்புநிதி சந்தாதாரர்களின் கணக்குகளுக்கு 8.25 சதவீத வட்டி விகிதம் இம்மாதம் வரவு வைக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.</p><p>இதன்மூலம், தொழிலாளர் வருங்கால வைப்புநிதிக்கு 2023-2024 நிதியாண்டில் இருந்து தொடர்ந்து 3-வது ஆண்டாக 8.25 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் ஏற்பட்ட மாற்றம் ஏமாற்றமாகி விட்டது- மு.க.ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/change-that-happened-in-tamil-nadu-has-become-a-disappointment-mk-stalin</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/change-that-happened-in-tamil-nadu-has-become-a-disappointment-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">6183491e-debb-4c13-a618-6f227147e479</guid><pubDate>Mon, 24 Aug 2026 06:20:32 +0000</pubDate><atom:updated>2026-08-24T06:20:32.891Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,முக ஸ்டாலின்,திராவிட இயக்கம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/tzmp3hfl/mk-stalin.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DMK leader MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/tzmp3hfl/mk-stalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை திருவான்மியூரில்  நடந்த திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.</p><p>அப்போது அவர் பேசியதாவது:</p><p>தமிழ்நாட்டில் வீட்டில் ஒரு பட்டதாரி இருப்பதற்கு திராவிட இயக்கங்களே காரணம்.</p><p>திராவிட இயக்கங்களின் செயல்பாடுகள் இன்றைய இளைஞர்களுக்கு தெரியவில்லை.</p><p>சில லட்சம் பேர் செய்த தவறால் கோடிக்கணக்கானர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>தமிழ்நாட்டில் ஏற்பட்ட மாற்றம் ஏமாற்றமாகி விட்டது.</p><p>இவ்வாறு அவ்வாறு கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ஜி.வி.பிரகாஷ்  நடிக்கும் புதிய படம் ‘நிஞ்சா’ - இன்று முதல் படப்பிடிப்பு தொடக்கம்! </title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/gv-prakash-new-film-ninja-shoot-begins-today</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/gv-prakash-new-film-ninja-shoot-begins-today#comments</comments><guid isPermaLink="false">5861d387-4173-41f2-bc52-a111ec3669fd</guid><pubDate>Mon, 24 Aug 2026 06:03:48 +0000</pubDate><atom:updated>2026-08-24T06:03:48.086Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>GV Prakash Kumar,ஜி வி பிரகாஷ்குமார்,Ninja,நிஞ்சா,Prarthana Nathan,DirectorMurugu,NinjaMoviePooja,Thanja ShreepathyC inemas,NinjaFirstLook</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/pdky3uwt/G-V-PrakashKumar-Prarthana-Nathan" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ G V PrakashKumar - Prarthana Nathan ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/pdky3uwt/G-V-PrakashKumar-Prarthana-Nathan?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகரும் இசையமைப்பாளருமான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D">ஜி.வி.பிரகாஷ் குமார்</a> கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படமான ‘நிஞ்சா’-வின் (NINJA) அதிகாரப்பூர்வ தொடக்க விழா மற்றும் பிரம்மாண்ட பூஜை இன்று காலை தஞ்சாவூரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீபதி சினிமாஸ் வளாகத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. </p><p>இந்த விழாவைத் தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பும் இன்று முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.</p><h2>புதிய முயற்சி</h2><p>தமிழ் திரையுல வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு புதிய திரைப்படத்தின் தொடக்கப் பூஜை மற்றும் விளம்பர நிகழ்ச்சி ஒரு சினிமா தியேட்டருக்குள் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.</p><p>பொதுவாக படப்பிடிப்பு தளங்கள், ஸ்டூடியோக்கள் அல்லது கோயில்களில் மட்டுமே நடத்தப்படும் பூஜை விழா, இந்த முறை தஞ்சை மக்களின் நேரடிப் பங்கேற்புடன் ஸ்ரீபதி தியேட்டர் இருக்கைகளில் படக்குழுவினர் அமர்ந்திருக்க, ரசிகர்களின் ஆரவாரத்துடன் வித்தியாசமான முறையில் கொண்டாடப்பட்டது.</p><h2>படக்குழு</h2><p>இயக்குநர் முருகு இயக்கத்தில், <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D">ஜி.வி.பிரகாஷ் குமார்</a> நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு 'நிஞ்சா' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜி.வி. பிரகாஷிற்கு ஜோடியாக 'பார்க்கிங்' மற்றும் 'டிடிடி' பட புகழ் பிராத்தனா நாதன் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தை சினிஷ் மற்றும் Learn &amp; Teach Production தயாரிக்கவுள்ளது.</p><p>தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான குரலாலும், ஆன்மாவைத் தொடும் மெல்லிசைகளாலும் முத்திரை பதித்தவர் இசையமைப்பாளர் மற்றும் பாடகர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D">ஷான் ரோல்டன்</a>. </p><p>பாரம்பரிய கர்நாடக இசைப் பின்னணியைக் கொண்ட இவர், தற்போது, ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகும் 'நிஞ்ஜா' திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக உள்ளார்.</p><h2>படப்பிடிப்பு நிலவரம்</h2><p>இன்று காலை தஞ்சை ஸ்ரீபதி தியேட்டரில் நடைபெற்ற விசேஷ பூஜை விழாவில் ஜி.வி.பிரகாஷ் குமார், பிராத்தனா நாதன், ஷான் ரோல்டன், இயக்குநர் முருகு மற்றும் தயாரிப்பாளர் சினிஷ் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினரும் தியேட்டர் இருக்கைகளில் அமர்ந்து விழாவை சிறப்பித்தனர்.</p><p>இந்த மங்களகரமான நிகழ்வைத் தொடர்ந்து, படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இன்று முதல் தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முழுவீச்சில் தொடங்கப்பட்டுள்ளது.</p><p>வித்தியாசமான முறையில் தொடங்கியுள்ள இந்த ‘நிஞ்சா’ திரைப்படம், அடுத்த ஆண்டு (2027) திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">The <a href="https://x.com/hashtag/Ninja?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Ninja</a> - Pooja day is officially in motion ✨ <br><br>K.S. Sinish presents Ninja <br> <a href="https://x.com/gvprakash?ref_src=twsrc%5Etfw">@gvprakash</a> <a href="https://x.com/sinish_s?ref_src=twsrc%5Etfw">@sinish_s</a> <a href="https://x.com/Saidevanand3?ref_src=twsrc%5Etfw">@Saidevanand3</a> <a href="https://x.com/murugufilmmaker?ref_src=twsrc%5Etfw">@murugufilmmaker</a> <a href="https://x.com/RSeanRoldan?ref_src=twsrc%5Etfw">@RSeanRoldan</a> <a href="https://x.com/Nathanprathana?ref_src=twsrc%5Etfw">@Nathanprathana</a> <a href="https://x.com/SoldiersFactory?ref_src=twsrc%5Etfw">@SoldiersFactory</a> <a href="https://x.com/LearnNteachProd?ref_src=twsrc%5Etfw">@LearnNteachProd</a> <a href="https://x.com/dop_harish?ref_src=twsrc%5Etfw">@dop_harish</a> <a href="https://x.com/thecutsmaker?ref_src=twsrc%5Etfw">@thecutsmaker</a> <a href="https://x.com/mr_saivenkat?ref_src=twsrc%5Etfw">@mr_saivenkat</a> <a href="https://x.com/hashtag/Vinish?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Vinish</a> <a href="https://x.com/artdirectorgopi?ref_src=twsrc%5Etfw">@artdirectorgopi</a> <a href="https://x.com/Dineshkasi1?ref_src=twsrc%5Etfw">@Dineshkasi1</a>… <a href="https://t.co/EpQjADNWtP">pic.twitter.com/EpQjADNWtP</a></p>&mdash; Soldiers Factory (@SoldiersFactory) <a href="https://x.com/SoldiersFactory/status/2091744970483060833?ref_src=twsrc%5Etfw">August 24, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2>கதையின் பின்னணி</h2><p>தஞ்சாவூர் ஸ்ரீபதி தியேட்டரில் நடைபெற்ற பிரம்மாண்ட பூஜை விழாவைத் தொடர்ந்து, ‘நிஞ்சா’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ <a href="https://www.maalaimalar.com/search?q=first%20look">ஃபர்ஸ்ட் லுக் </a>போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. </p><p>இந்த போஸ்டரில், கதையின் முக்கிய அங்கமான ஒரு நாய்க்குட்டி, சிவப்பு நிற லெதர் ஜாக்கெட் மற்றும் கூலிங் கிளாஸ் அணிந்து செங்கற்களுக்கு நடுவே செம மாஸாகவும் கெத்தாகவும் அமர்ந்திருப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.</p><p>சுற்றிலும் தேங்காய், மாலைகள் மற்றும் பூக்கள் தூவப்பட்டு ஒரு பூஜைக்கான சூழலில் இந்த நாய் குட்டியின் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கூவத்தை சீரமைக்க வேண்டும் என்றால் 540 இடங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்- கே.என்.நேரு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kn-nehrus-remark-stop-sewage-mixing-at-540-points-to-restore-cooum</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kn-nehrus-remark-stop-sewage-mixing-at-540-points-to-restore-cooum#comments</comments><guid isPermaLink="false">ce5cc9ae-e709-4893-b01d-ca866cc226f1</guid><pubDate>Mon, 24 Aug 2026 05:56:27 +0000</pubDate><atom:updated>2026-08-24T05:56:27.002Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>kn nehru,தமிழக சட்டசபை,sewage,TN assembly,கே.என்.நேரு,கழிவுநீர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/b948cptd/KN-Nehru.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ex Minister KN Nehru]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/b948cptd/KN-Nehru.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நகராட்சி நிர்வாகத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் கே.என்.நேரு உரையாற்றினார்.</p><p>அப்போது, பாமக சட்டமன்றக் குழு தலைவர் சவுமியா அன்புமணி எழுப்பிய திருப்புகழ் கமிட்டி அறிக்கை குறித்த கேள்விக்கு முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்தார்.</p><h2>கே.என்.நேரு உரை</h2><p>உள்ளாட்சி துறையில் எங்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கியவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95.%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D" rel="nofollow">மு.க.ஸ்டாலின்</a>. </p><p>கோப்புகளை எப்படி பார்க்க வேண்டும் என சொல்லி கொடுத்தவர் கலைஞர். தேர்தல் வந்ததால் இறுதி அறிக்கையை அவையில் வைக்க முடியவில்லை.</p><p>தற்போதைய அரசு திருப்புகழ் கமிட்டி அறிக்கையை அவையில் சமர்ப்பிக்கலாம்.</p><p>உள்ளாட்சித்துறையில் எங்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கியவர் மு.க.ஸ்டாலின்.</p><p>சென்னை உள்ளிட்ட நகரங்களில் நாளொன்றுக்கு 5,000 மில்லியன் லிட்டர் குடிநீர் கொடுத்தோம்.</p><p>கடந்த 5 ஆண்டுகளில் நகராட்சி நிர்வாகத்துறைக்கு அதிக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-allocates-rs-264-14-crore-forms-65-special-forces-to-fight-drugs" rel="nofollow">நிதி ஒதுக்கீடு</a> செய்யப்பட்டது.</p><p>தொடர முடியாத நிலையில் உள்ள குடிநீர் திட்டங்களை மீண்டும் தொடர வேண்டும்.</p><p>சென்னையில் 540 இடங்களில் கழிவுநீர் கலக்கிறது. கூவத்தை சீரமைக்க வேண்டும் என்றால் 540 இடங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.</p><p>எங்களுடன் இருந்த அதிகாரிகள் தான் முழுமையாக இன்றும் நகராட்சி துறையில் பணியாற்றுகின்றனர்.</p><p>நகர்ப்புற வசதிகளை கிராமங்களுக்கு மேம்படுத்த <a href="https://www.maalaimalar.com/news/national/removal-of-tv-ad-duration-cap-central-government" rel="nofollow">மத்திய அரசு</a> ரூ.1000 கோடி நிதி தந்தது.</p><p>உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் ஜனவரியுடன் முடிகிறது.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY :  மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய தங்கம் விலை: சவரன் ரூ.1,20,240-க்கு விற்பனை!</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-24-08-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-24-08-2026#comments</comments><guid isPermaLink="false">676ed5f2-a6a6-44cd-9d36-b5f8bbcf541b</guid><pubDate>Mon, 24 Aug 2026 05:51:43 +0000</pubDate><atom:updated>2026-08-24T05:51:43.667Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="350" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/dwvetvrf/gold04.jpg" width="615"><media:title type="html"><![CDATA[ தங்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/dwvetvrf/gold04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கடந்த 15-ந்தேதியில் இருந்து இன்று வரை தங்கம் விலை சவரனுக்கு ரூ.6,480 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தங்கம்">தங்கத்தின்</a> விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. கடந்த சனிக்கிழமை தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100-ம். சவரனுக்கு ரூ.800-ம் உயர்ந்தது. சென்னையில் வெள்ளிக்கிழமை ஒரு கிராம் தங்கம் ரூ.14 ஆயிரத்து 850-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 800-க்கும் விற்பனையானது.</p><p>இதனை தொடர்ந்து சனிக்கிழமை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.14 ஆயிரத்து 950-க்கும், சவரனுக்கு ரூ.800 அதிகரித்து ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. </p><h2><strong>தங்கம் விலை உயர்வு</strong> </h2><p>இந்த நிலையில், வார தொடக்கநாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 30-க்கும் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கம் தொடர்ந்து உயர்ந்து வருவது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த 15-ந்தேதியில் இருந்து இன்று வரை தங்கம் விலை சவரனுக்கு ரூ.6,480 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. </p><h2><strong>வெள்ளி விலை நிலவரம்</strong> </h2><p>தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் உயர்ந்து வருகிறது. அந்த வகையில், இன்று வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 275 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கடந்த 15-ந்தேதியில் இருந்து இன்று வரை வெள்ளி விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. </p><h2><strong>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்</strong></h2><p>23-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,600</p><p>22-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,600</p><p>21-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,800</p><p>20-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,800</p><p>19-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,200</p><h2><strong>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>23-08-2026- ஒரு கிராம் ரூ.270</p><p>22-08-2026- ஒரு கிராம் ரூ.270</p><p>21-08-2026- ஒரு கிராம் ரூ.270</p><p>20-08-2026- ஒரு கிராம் ரூ.260</p><p>19-08-2026- ஒரு கிராம் ரூ.250</p>]]></content:encoded></item><item><title>சென்னை-செங்கல்பட்டு வழித்தடத்தில் மின்சார ரெயில்களின் சேவையில் நாளை முதல் மாற்றம் </title><link>https://www.maalaimalar.com/news/topnews/changes-to-electric-train-services-starting-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/changes-to-electric-train-services-starting-tomorrow#comments</comments><guid isPermaLink="false">24d7b276-5125-4d82-a401-b019c4fd3038</guid><pubDate>Mon, 24 Aug 2026 05:48:43 +0000</pubDate><atom:updated>2026-08-24T05:48:43.166Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>electric train,மின்சார ரெயில்,Train,ரெயில்,மின்சார ரெயில்கள் ரத்து,electric train cancelled</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-01/0u6nxpab/train.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மின்சார ரெயில்]]></media:title><media:description type="html"><![CDATA[ electric train]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-01/0u6nxpab/train.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>உள்ளூர் செய்திகள் (District News)</category><content:encoded><![CDATA[ <p>எழும்பூர் ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக நாளை (25-ந்தேதி) முதல் செப்டம்பர் 7-ந்தேதி வரை 25 மின்சார ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளன.</p><h2><strong>மின்சார ரெயில்கள்</strong></h2><p>சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே நாளை முதல் செப்டம்பர் 5-ந்தேதி வரை இரவு 10.20, 11.20, 11.40, 11.59 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் வார நாட்களில் மட்டும் ரத்து செய்யப்பட உள்ளன.</p><h2><strong>திருமால்பூர் - சென்னை கடற்கரை</strong></h2><p>திருமால்பூர் - சென்னை கடற்கரை இடையே அதே தேதிகளில் இரவு 8 மணிக்கு புறப்படும் மின்சார ெரயில், தாம்பரம்-கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட உள்ளது.</p><h2><strong>கூடுவாஞ்சேரி - சென்னை கடற்கரை</strong></h2><p>கூடுவாஞ்சேரி - சென்னை கடற்கரை இடையே இரவு 10.15, 11.20 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள், தாம்பரம் - கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட உள்ளன. செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே அதே தேதிகளில் இரவு 10.20, 11 ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரெயில்கள், தாம்பரம் - கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட உள்ளன.</p><h2><strong>சென்னை கடற்கரை - கூடுவாஞ்சேரி</strong></h2><p>சென்னை கடற்கரை - கூடுவாஞ்சேரி இடையே இயக்கப்படும் மின்சார ரெயில்கள் அதே தேதிகளில் இரவு 9.45 மணிக்கு பதிலாக, 5 நிமிடம் தாமதமாக இரவு 9.50 மணிக்கு புறப்படும். சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரெயில்கள் அதே தேதிகளில் இரவு 10.20 மணிக்கு பதிலாக, 5 நிமிடம் முன்னதாக, இரவு 10.15 மணிக்கு புறப்படும்.</p><h2><strong>சென்னை கடற்கரை - செங்கல்பட்டு</strong></h2><p>சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே நாளை மறுநாள் (புதன் கிழமை) முதல் செப்டம்பர் 7-ந்தேதி வரை இயக்கப்பட வேண்டிய மின்சார ரெயில், வார நாட்களில் கடற்கரை - தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.</p><p>வருகிற 30-ந்தேதி முதல் செப்டம்பர் 6-ந்தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில், சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 4 மின்சார ரெயில்களும், தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே 2 மின்சார ரெயில்களும், திருமால்பூர் - சென்னை கடற்கரை இடையே ஒரு மின்சார ரெயிலும் ரத்து செய்யப்பட உள்ளன. இது தவிர, 6 மின்சார ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளன. இந்த தகவலை சென்னை ெரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>குளித்துவிட்டு பேரீச்சம்பழம் சாப்பிட்ட கொலையாளிகள்.. வங்கதேசத்தில் இந்து குடும்பம் கொல்லப்பட்டதன் திடுக்கிடும் பின்னணி</title><link>https://www.maalaimalar.com/news/world/killers-who-bathed-and-ate-dates-the-shocking-backstory-behind-the-killing-of-a-hindu-family-in-bangladesh</link><comments>https://www.maalaimalar.com/news/world/killers-who-bathed-and-ate-dates-the-shocking-backstory-behind-the-killing-of-a-hindu-family-in-bangladesh#comments</comments><guid isPermaLink="false">95ae3d3f-a40d-4cf7-b55d-03d80be959ef</guid><pubDate>Mon, 24 Aug 2026 05:34:35 +0000</pubDate><atom:updated>2026-08-24T05:34:35.918Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Bangladesh,வங்கதேசம்,Murder,கொலை,Hindus,இந்துக்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/v5uztvst/tn-39.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கொல்லப்பட்டவர்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ கொல்லப்பட்டவர்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/v5uztvst/tn-39.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/bangaladesh">வங்கதேசத்தின் </a>ரங்பூர் நகரில் உள்ள தாஸ்பாறா பகுதியில் ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் கணபதி சக்ரவர்த்தி (65), அவரின் மனைவி பிரிதிலதா சக்ரவர்த்தி (50), மகள் அகாமி சக்ரவர்த்தி (23), மகன் பிரியம் சக்ரவர்த்தி (12) ஆகியோர் கடந்த வாரம் அவர்களின் பூட்டிய வீட்டில் சடலமாக கிடந்தனர். </p><h2>கண்டெடுப்பு </h2><p>கடந்த வியாழக்கிழமை முதல் குடும்பத்தினரின் போன்கள் அனைத்தும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால், சனிக்கிழமை இரவு உறவினர்கள் வந்து பார்த்தபோது வீடு பூட்டப்பட்டிருந்தது.</p><p>காவல்துறையினர் வந்து பூட்டை உடைத்து உள்ளே சென்றபோது தாயும் மகளும் படிக்கட்டுகளிலும், தந்தை கணபதியின் சடலம் மொட்டை மாடியிலும், 12 வயது சிறுவனின் சடலம் கட்டிலுக்கு அடியிலும் கண்டெடுக்கப்பட்டன.</p><p>அவர்கள் அனைவரும் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டது.</p><p>உடல்களை கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்த வங்கதேச போலீசார் விசாரித்த நிலையில் இது கொலை என தெரியவந்துள்ளது.</p><h2>கொலை</h2><p>முக்தா மற்றும் சித்தார்த்தா என அடையாளங் காணப்பட்ட குற்றவாளிகள் வியாழன் நள்ளிரவுக்கும் வெள்ளி அதிகாலைக்கும் இடையே இந்த படுகொலைகளைச் செய்துள்ளனர்.</p><p>கொலையை செய்த பிறகு, குற்றவாளிகள் அங்கேயே குளித்துவிட்டு, பிரிட்ஜில் இருந்த பேரீச்சம்பழம் மற்றும் வெள்ளரிக்காய்களை சாப்பிட்டுள்ளனர். பின்னர் 'யாபா' என்ற போதைப்பொருளையும் உட்கொண்டுள்ளனர்.</p><p>அலமாரிகளைத் திறந்து ஆடைகளை களைத்து நாலாபுறமும் வீசிவிட்டு தங்க நகைகளை திருடியுள்ளனர்.</p><p>வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை நேரத்தில் வீதிகள் காலியாக இருந்தபோது இவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.</p><h2>அதிரவைக்கும் காரணம்</h2><p>சம்பவத்தன்று இரவு, சந்தேக நபர்களான முக்தா தாஸ் மற்றும் சித்தார்த்தா தாஸ் ஆகிய இருவரும் கணபதி சக்ரவர்த்தியின் வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து 'யாபா' போதை பொருளை உட்கொண்டதாக கூறப்படுகிறது.</p><p>இதை கவனித்த கணபதி சக்ரவர்த்தி மொட்டை மாடிக்கு சென்று, தனது வீட்டின் மாடியில் போதைப்பொருள் பயன்படுத்துவதை தடுத்து கண்டித்துள்ளார்.</p><p>இதனால் ஆத்திரமடைந்த குற்றவாளிகள், முதலில் கணபதி சக்ரவர்த்தியின் கழுத்தை துண்டால் இறுக்கிக் கொன்றுள்ளனர்.</p><p>கணபதியின் முனகல் சத்தம் கேட்டு அவரைப் பார்க்க படிக்கட்டு வழியே மேலே வந்த மனைவி பிரிதிலதாவையும் அதேபோல் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளனர்.</p> <p>தொடர்ந்து தாயின் சத்தம் கேட்டு வந்த மகள் அகாமி சக்ரவர்த்தியையும் அவர்கள் படிக்கட்டிலேயே கொன்றனர்.</p><p>இறுதியில், தங்கள் குற்றம் வெளியே தெரிந்துவிடும் என்ற பயத்தில், கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த 12 வயது சிறுவன் பிரியத்தையும் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர்.</p><p>கொலைக்குப் பிறகு, வழக்கை திசைதிருப்பி கொள்ளை சம்பவமாக காட்டவே குற்றவாளிகள் அலமாரிகளை கலைத்து நாடகமாடியதும், தங்க நகைகளைக் கொள்ளையடித்து சென்றதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. </p><p>கைது செய்யப்பட்ட இருவரும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு இவற்றை வாக்குமூலமாக அளித்துள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>அன்னபூரணி சூப்பர் 6 திட்டம்: ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர் பெறப்போகும் குடும்பங்கள் எவை?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/annapoorani-super-6-scheme-which-families-will-receive-3-free-cylinders-annually</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/annapoorani-super-6-scheme-which-families-will-receive-3-free-cylinders-annually#comments</comments><guid isPermaLink="false">9fee30cb-deea-4bad-b04c-2bfaa0a9ce13</guid><pubDate>Mon, 24 Aug 2026 05:27:27 +0000</pubDate><atom:updated>2026-08-24T05:27:27.599Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,Gas cylinder,கியாஸ் சிலிண்டர்,TN assembly,Annapoorani Super 6 Scheme,அன்னபூரணி சூப்பர் 6 திட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/dwtmqj0y/gas.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கியாஸ் சிலிண்டர்]]></media:title><media:description type="html"><![CDATA[ கியாஸ் சிலிண்டர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/dwtmqj0y/gas.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பயனாளிகள் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்து சிலிண்டர் பெற்றவுடன், எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து பட்டியல் பெற்று சிலிண்டருக்கான விலை பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">சட்டசபையில்</a> இன்று பேரவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அவர் பேசியதாவது:-</p><h2><strong>பெண் முன்னேற்றத்திற்கு</strong></h2><p>நமது அரசின் பெண்கள் பயன்பெறும் வகையில் அவர்களின் முன்னேற்றத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு இதுவரை சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம், தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம், வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டம், அண்ணனின் சீர் திட்டம் போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p>மேலும் நமது அரசு மக்களின்  வாழ்வாதார முன்னேற்றத்தினை முதன்மை நோக்கமாக கொண்டு வெற்றி தொலை நோக்கு திட்ட ஆவணத்தினை வெளியிட்டுள்ளது. அந்த திட்ட ஆவணத்தின் அடிப்படையில் இலக்கு நிர்ணயம் செய்து பல்வேறு திட்டங்கள், அடுத்து வருகின்ற முதலாம், மூன்றாம், ஐந்தாம் ஆண்டிற்குள் நிறைவேற்றத்தக்க திட்டங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>இருப்பினும் பெண்கள் பயன்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுத்து இவ்வரசு நிறைவேற்றும்.</p><h2><strong>வங்கி கணக்கில்</strong></h2><p>கடந்த 4 மாதங்களாக வளைகுடா பகுதியில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக எரிவாயு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-3-free-cylinder-and-vetri-payanam-thittam">சிலிண்டர்</a> கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் மாற்று எரிபொருளை பயன்படுத்தி வருவதாலும் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வினாலும் பொது மக்கள் தங்களது வருவாயில் இருந்து கூடுதலாக தொகையினை செலவிட்டு இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.</p><p>இதனை கருத்தில் கொண்டு நிதி நெருக்கடியான சூழலிலும் பொது மக்களிடம் நிதிச் சுமையினை குறைக்கும் வகையிலும், பொதுமக்களின் நலனை பாதுகாக்கவும், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் நோக்கிலும் எரிவாயு சிலிண்டருக்காக செலவழிக்கப்பட்டு வரும் தொகையினை அவர்களுக்கு வழங்க இவ்வரசு முடிவு செய்துள்ளது.</p><h2><strong>3 சிலிண்டர்</strong></h2><p>எனவே குடும்ப தலைவிகள் பயன்பெறும் வகையில்  முதல் கட்டமாக அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தில் ஆண்டிற்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும்.</p><p>எரிவாயு சிலிண்டருக்கான விலை பயானிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இத்திட்ட பயனாளிகள் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்து சிலிண்டர் பெற்றவுடன், எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து பட்டியல் பெற்று சிலிண்டருக்கான விலை பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.</p><h2><strong>1 கோடியே 30 லட்சம் பேர்</strong></h2><p>இத்திட்டத்தினால் சுமார் 1 கோடியே 30 லட்சத்து 16 ஆயிரத்து 104 குடும்பங்கள் பயனடைவார்கள். அதாவது ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மிகாமல் உள்ள பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள குடும்பத்தினர், சிறு குறு விவசாய குடும்பத்தினர், மாற்றுத்திறனாளி குடும்பத்தினர் போன்ற சமூகத்தில் உள்ள நலிந்த குடும்பத்தினர் பயன் அடைவார்கள்.</p><h2><strong>ஜனவரி மாதம் முதல்</strong></h2><p>இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இத்திட்டம் வரும் பொங்கல் பண்டிகை ஜனவரி மாதம் முதல் செயலாக்கத்துக்கு கொண்டு வரப்படும். இத்திட்டத்துக்காக ஆண்டு தோறும் தோராயமாக ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.</p><p>இவ்வாறு முதலமைச்சர் விஜய் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>D-day: பொருளாதார போர் தொடங்கிவிட்டது.. ஈரானுக்கு எதிரான போரில் Endgame - அமெரிக்கா அறிவிப்பு </title><link>https://www.maalaimalar.com/news/world/us-economic-d-day-trump-admin-moves-to-cut-off-irans-financial-lifelines</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-economic-d-day-trump-admin-moves-to-cut-off-irans-financial-lifelines#comments</comments><guid isPermaLink="false">4e198613-f555-45e0-9f35-39981c2d4322</guid><pubDate>Mon, 24 Aug 2026 05:14:02 +0000</pubDate><atom:updated>2026-08-24T05:14:02.747Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>trump,டிரம்ப்,Iran War,ஈரான் போர்,Scott Bessent,ஸ்காட் பெசன்ட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/09frkz1z/tn-38.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டிரம்ப்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிரம்ப்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/09frkz1z/tn-38.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D">ஈரானின்</a> அனைத்து  நிதி மற்றும் பொருளாதார வழிகளையும் ஒட்டுமொத்தமாக துண்டிக்கும் கட்டத்தை அமெரிக்கா எட்டியுள்ளதாக அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.  </p><p>ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் முடியும் தருவாய்க்கு வந்துள்ளது என்றும் இனி அதன் மீது பொருளாதார போர் தொடக்கப்படும் என்ற அதிபர் டிரம்ப் அறிவித்திருந்த நிலையில் ஸ்காட் பெசென்ட்டின் அறிவிப்பு வந்துள்ளது. </p> <h2>ஸ்காட் பெசென்ட் பதிவு</h2><p>ஈரான் மற்றும் ஈரானுக்கு உதவும் நாடுகள் மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என டிரம்ப் கூறியிருந்த நிலையில் இன்று அதிகாலை ஸ்காட் பெசென்ட் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,</p><p>"அதிபர் டிரம்ப், ஈரானின் ராணுவத் திறன்களை சிதைத்து, அதன் ராணுவ ஆயுத தொழிற்சாலைகளில் கிட்டத்தட்ட 100 சதவீதத்தை அழித்து, அதன் அணுசக்தித் திட்டத்தையும் புதைத்துவிட்டார்.</p><p>நாம் இப்போது இறுதிக்கட்டத்தை (Endgame-ஐ) நெருங்கிக்கொண்டிருக்கிறோம். விடியற்காலையில் ஒரு பொருளாதாரப் பேரழிவு நாள் (Economic D day) தொடங்குகிறது.</p> <p>இது ஒரு எதிரிக்கு எதிராக இதுவரை தொடுக்கப்படத்திலேயே மிகப்பெரிய பொருளாதார தாக்குதலாகும்.</p><p>மிரட்டிப் பணம் பறிப்பதைப் பாதுகாப்பு உத்தரவாதங்களாக காட்டி ஈரான் தப்பி பிழைத்து வந்தது. அமெரிக்கா வெறும் பேச்சுவார்த்தை தான் நடத்தும் என்று கணக்கிட்டதால் அவர்கள் இந்த தைரியத்தை பெற்றனர்.</p><p>அதிபர் டிரம்பின் கீழ், அந்த சகாப்தம் முடிந்துவிட்டது. தெஹ்ரானை எதிர்ப்பதால் ஏற்படும் ஆபத்துக்கு அஞ்சுபவர்கள், வாஷிங்டனை சோதிப்பதனால் பெரிய விலை கொடுக்க நேரிடும்.</p><p>நாம் ஒருபோதும் பயன்படுத்த மாட்டோம் என்று பலர் கருதிய ஒவ்வொரு முகமையையும், ஒவ்வொரு அதிகாரத்தையும்  பயன்படுத்திக்கொள்ளும் நிலைமைகளை அதிபர் உருவாக்கியுள்ளார்.</p><p>தெஹ்ரான் தனித்து நிற்கும் வரை, அந்த கொடுங்கோல் ஆட்சியைத் தாங்கி நிற்கும் ஒவ்வொரு பொருளாதார உயிர்நாடியையும் துண்டிப்பதே நமது நோக்கம்." என தெரிவித்துள்ளார்.</p> <h2>ஈரானின் பதிலடி</h2><p>அமெரிக்காவின் இந்தப் பொருளாதார முற்றுகைக்கு ஆதரவளிக்கும் அல்லது பங்கெடுக்கும் எந்தவொரு நாட்டையும் ஈரான் எதிரி நாடாகவும், அது ஈரானுக்கு எதிரான நேரடிப் போராகவும் கருதப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>குறிப்பாக வளைகுடா நாடுகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும் ஈரானின் தேசிய பாதுகாப்புச் சபையின் செயலாளர் மொஹ்சென் ரெசாய், ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் பாரசீக வளைகுடா வழியாக ஒரு சொட்டு எண்ணெய் கூட ஏற்றுமதி செய்யப்படாது என எச்சரித்துள்ளார்.</p> <p>ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபப், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் இறுதியில் அமெரிக்காவையே பூமரங் போல திருப்பித் தாக்கும் என தெரிவித்துள்ளார்.</p><p>ஈரான் வெளியுறவு செய்தி தொடர்பாளர் இஸ்மாயில் பாஹே, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கத் தடைகளை சந்தித்து வரும் ஈரானுக்கு இது புதியதல்ல என்றும், இந்த நடவடிக்கை தோல்வியடையும் என்றும் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பரந்தூர் விமான நிலைய திட்டத்தை ரத்து செய்தால் பொருளாதாரம் பாதிக்கும்- தங்கம் தென்னரசு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/parandur-airport-cancellation-will-impact-economy-says-thenarasu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/parandur-airport-cancellation-will-impact-economy-says-thenarasu#comments</comments><guid isPermaLink="false">581b78ad-5d1b-4d2f-9f45-b1ce547d3993</guid><pubDate>Mon, 24 Aug 2026 05:13:03 +0000</pubDate><atom:updated>2026-08-24T05:13:03.231Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பரந்தூர் விமான நிலையம்,தங்கம் தென்னரசு,தமிழக சட்டசபை,Thangam Thennarasu,Parandhur Airport,TN assembly</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/mmurvxhg/Thangam.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay- Thangam thennarasu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/mmurvxhg/Thangam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்து பேசுவதற்கு திமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால் வெளிநடப்பில் ஈடுபட்டனர்.</p><h2>திட்டம் ரத்து</h2><p>பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டம் தவெக அரசால் கைவிடப்படுகிறது என சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.</p><p>புதிய விமான நிலையத்திற்கான இடம் விரைவில் இறுதி செய்யப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.</p><h2>திமுக வெளிநடப்பு</h2><p>பரந்தூர் ஏர்போர்ட்டுக்கு ஏற்கெனவே நிலம் கையகப்படுத்தும் பணி தொடக்கம், இப்போது கைவிட்டால் எப்படி? என்று முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கேள்வி எழுப்பினார்.</p><p>பரந்தூர் ஏர்போர்ட் திட்டம் ரத்து குறித்து முதல்வர் அறிவிப்பு வெளியிட்ட நிலையில் திமுகவினர் அனைவரும் எழுந்துநின்று கோஷம் எழுப்பினர்.</p><p>பரந்தூர் ஏர்போர்ட் விவகாரம் தொடர்பாக பேரவையில் எழுந்துநின்று முழக்கமிட்டு எழுப்பிய திமுகவினரை சபாநாயகர் கண்டித்தனர்.</p><p>எதிர்ப்பு குரல் கொடுப்பதாக இருந்தால் வெளியே சென்று குரல் கொடுங்கல் என சபாநாயகர் கூறியதை அடுத்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.</p><h2>முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு</h2><p>பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திமுக முன்னாள் அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81" rel="nofollow">தங்கம் தென்னரசு</a> கூறியதாவது:-</p><p>பரந்தூர் ஏர்போர்ட் திட்டம் குறித்து விவாதிக்க ஏற்கனவே 55 விதியின் கீழ் திமுக தீர்மானம் கொண்டு வந்தது.</p><p>பரந்தூர் ஏர்போர்ட் கவன ஈர்ப்பு தீர்மானம் இன்று ஏற்கப்படும் என ஏற்கெனவே கூறியிருந்தனர்.</p><p>முதல்வர் 110 விதியின் கீழ் அறிவித்ததால் கவனஈர்ப்பு தீர்மானத்தில் விவாதிக்க மறுத்துவிட்டனர்.</p><p>பரந்தூர் ஏர்போர்ட்டு மறுக்கப்பட்டால் எத்தகைய பொருளாதார விளைவு ஏற்படும் என விளக்கமறிக்க வாய்ப்பு தரவில்லை.</p><p>பல நாட்களாக கவனஈர்ப்பு தீர்மானத்தில் எடுக்காது இன்று 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார்.</p><p>பரந்தூர் ஏர்போர்ட்டை நம்பித்தான் எலக்ட்ரானிக் நிறுவனங்கள் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-vijay-reviews-industrial-parks-in-kanchipuram" rel="nofollow">ஸ்ரீபெரும்புதூர்</a> பகுதிகளில் வந்தன.</p><p>ஸ்ரீபெரும்புதூரில் அதிகளவில் தொழிற்சாலைகள் உற்றதால் பரந்தூரில் விமான நிலையம் அமைவது அவசியம்.</p><p>பல இடங்களில் ஆய்வு செய்த பின்னர் தான் பரந்தூரை விமான நிலையத்திற்காக தேர்வு செய்தோம்.</p><p>பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்தால் பொருளாதாரத்தை பாதிக்கும், அரசியல் நோக்கம் தாண்டி செயல்படுவது அவசியம்.</p><p>தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு சென்னைக்கு 2-வது விமான நிலையம் அமைப்பது அவசியம்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக்கோரி கவன ஈர்ப்பு தீர்மானம்- அமைச்சர் விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/attention-drawing-motion-seeking-an-increase-in-milk-procurement-prices-ministers-explanation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/attention-drawing-motion-seeking-an-increase-in-milk-procurement-prices-ministers-explanation#comments</comments><guid isPermaLink="false">5994736a-cd71-4d59-9853-934b1c594a14</guid><pubDate>Mon, 24 Aug 2026 05:12:43 +0000</pubDate><atom:updated>2026-08-24T05:12:43.834Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,பால் கொள்முதல் விலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/o94eji9x/vijayalakshmi.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி]]></media:title><media:description type="html"><![CDATA[ பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/o94eji9x/vijayalakshmi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பால் கொள்முதல் விலையை ரூ.44 ஆக உயர்த்த முதலமைச்சருடன் ஆலோசித்து பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபையில்</a> இன்று 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை முதலமைச்சர் விஜய் அறிவித்தார். அதனை தொடர்ந்து பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக்கோரி தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ.வேலு, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு:-</p><p>தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ.வேலு கூறுகையில், </p><p>பால் உற்பத்தியாளர்களுக்கு இந்த அரசாங்கம் கூடுதலாக 45 ரூபாய் கொடுத்தால் தான் ஆவின் நிறுவனத்திற்கு பால் வரும். தனியாருக்கு பால் செல்லாமல் தடுக்க முடியும். எனவே அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் என்றார். </p><p>அ.தி.மு.க. எம்.எல்.ஏ. எடப்பாடி பழனிசாமி பேசுகையில், </p><p>அரசு அறிவித்த விலை போதாது என தமிழ்நாடு முழுவதும் பால் முகவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். ஒரு லிட்டருக்கு பசும்பால் 50 ரூபாயும், எருமை பால் 60 ரூபாயும் உயர்த்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஆகையால் அரசு பரிசீலித்து உயர்த்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்றார். </p><h2><strong>தளி ராமச்சந்திரன் எம்.எல்.ஏ.</strong></h2><p>பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று போராடிக் கொண்டு இருக்கின்றனர். இன்றைக்கு கால்நடைகள் பராமரிப்பு, தீவனம் போன்றவற்றின் விலை உயர்ந்துள்ளதால் லிட்டருக்கு 46 ரூபாயில் இருந்து 48 ரூபாய் வரை வழங்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கையை ஏற்று விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார். </p><h2><strong>பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி</strong></h2><p>கடந்த ஆட்சியின் நிர்வாக குளறுபடிகளால் ஆவின் நிர்வாகம் நிதி நெருக்கடியில் உள்ளது. பால் பொருட்கள் விற்பனை குறைந்து ஆவின் நிறுவனத்துக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது.  நிதி நெருக்கடி உள்ளபோதும் பால் கொள்முதல் விலையை முதலமைச்சர் உயர்த்தி வழங்கியுள்ளார். பால் லிட்டர் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு தற்போது உற்பத்தியாளர்களுக்கு ரூ.41 வழங்கப்படுகிறது. பால் கொள்முதல் விலையை ரூ.44 ஆக உயர்த்த முதலமைச்சருடன் ஆலோசித்து பரிசீலிக்கப்படும் என்றார். </p>]]></content:encoded></item><item><title>ரூ. 39-க்கு 20 ஜிபி டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். புது ஆஃபர் - முழு விவரம்!</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/bsnl-data-voucher-which-offers-20gb-under-rs-40</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/bsnl-data-voucher-which-offers-20gb-under-rs-40#comments</comments><guid isPermaLink="false">8b84c9d0-3ac5-4972-974c-090849245e6b</guid><pubDate>Mon, 24 Aug 2026 04:41:00 +0000</pubDate><atom:updated>2026-08-24T04:41:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பிஎஸ்என்எல்,recharge,BSNL,சலுகை,Offers,ரீசார்ஜ்</media:keywords><media:content height="350" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2022/08/05/1741327-bsnl-logo.jpg" width="615"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ BSNL Logo]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2022/08/05/1741327-bsnl-logo.jpg?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான <a href="https://www.maalaimalar.com/topic/bsnl">பி.எஸ்.என்.எல்.</a> (BSNL), நுகர்வோருக்கு ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது. இதன் மூலம் பயனர்கள் ரூ.40-க்கும் குறைவான விலையில் 20 ஜிபி டேட்டாவை பெற முடியும். பொதுவாக இது ஒரு டேட்டா வவுச்சர் ஆகும். </p><p>ஒரே நாளில் அதிக பயன்பாட்டிற்கான டேட்டா வவுச்சரை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், இது ஒரு சிறந்த திட்டமாக இருக்கும். இந்தத் திட்டத்தின் மூலம் நீங்கள் ஒரு டேட்டா வவுச்சருக்கு மேல் ரீசார்ஜ் செய்ய வேண்டும். இந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூ.39 ஆகும்.</p><h2>டேட்டா வவுச்சர் பலன்கள்:</h2><p>பி.எஸ்.என்.எல். ரூ.39 திட்டத்தில் 20 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் வேலிடிட்டி காலம் ஒரு நாள் மட்டுமே. எனவே, இது போதுமான டேட்டாவை வழங்கினாலும், இதில் ஒரு கூடுதல் செலவும் அடங்கியுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட டேட்டாவை பயன்படுத்திய பிறகு, டேட்டா வேகம் 40 Kbps ஆக குறைந்துவிடும்.</p><p>இது ஒரு டேட்டா வவுச்சர் என்பதால், சேவை செல்லுபடியாகும் காலத்துடன் கூடிய ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தின் மீது மட்டுமே இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்ய முடியும் .</p><p>இதேபோல் ரூ.19 ரீசார்ஜ் திட்டமும் உள்ளது, இதன் மூலம் நீங்கள் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். பயனர்களுக்கு கிடைக்கும் டேட்டா வவுச்சர்களிலேயே இதுதான் மிகவும் மலிவானது. ரூ.19 திட்டம் 1 நாள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த ரீசார்ஜ் திட்டத்தில் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.</p><h2>டேட்டா ஒப்பீடு:</h2><p>இரண்டு திட்டங்களும் 1 நாள் வேலிடிட்டி காலத்தை கொண்டிருந்தாலும், ரூ.39 திட்டம் 20 ஜிபி டேட்டாவையும், ரூ.19 திட்டம் 2 ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது.</p><p>இந்த இரண்டு டேட்டா வவுச்சர்களும் நாட்டின் அனைத்து டெலிகாம் வட்டாரங்களிலும் கிடைக்கின்றன. மேலும், ரூ.58 திட்டமும் உள்ளது, இதன் மூலம் பயனர்கள் 7 நாட்கள் வேலிடிட்டி பெற முடியும். இந்தத் திட்டத்தில் 8 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.</p><p>நீண்ட காலத்திற்கு உங்களுக்கு கூடுதல் டேட்டா தேவை எனில், இந்தத் திட்டம் சிறந்தது. நிர்ணயிக்கப்பட்ட டேட்டா தீர்ந்த பிறகு, டேட்டா வேகம் 40 kbps ஆக குறைந்துவிடும்.</p>]]></content:encoded></item><item><title>பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் சட்டசபையில் அதிரடி அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-makes-a-surprise-announcement-in-the-assembly-abandoning-the-parandur-airport-project</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-makes-a-surprise-announcement-in-the-assembly-abandoning-the-parandur-airport-project#comments</comments><guid isPermaLink="false">bbd5e00f-5ed4-45de-8bfd-cc88efd103ab</guid><pubDate>Mon, 24 Aug 2026 04:38:14 +0000</pubDate><atom:updated>2026-08-24T04:38:14.891Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Parandur Airport,பரந்தூர் விமான நிலையம்,மீனம்பாக்கம் விமான நிலையம்,Meenambakkam Airport</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/xyv9dwml/tn-37.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விஜய், பரந்தூர் விமான நிலையம் 
]]></media:title><media:description type="html"><![CDATA[ விஜய், பரந்தூர் விமான நிலையம் 
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/xyv9dwml/tn-37.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இன்று தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடர் கூட்டத்தில், <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">பரந்தூரில் விமான நிலையம்</a> கட்டும் முயற்சியை தனது அரசு கைவிடுவதாக<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-3-free-cylinder-and-vetri-payanam-thittam"> முதலமைச்சர் விஜய்</a> அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். </p><p>சட்டசபையில் பேசிய முதலமைச்சர் விஜய், </p><p>"சென்னையிலுள்ள மீனம்பாக்கம் விமான நிலையம் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தால் இயக்கப்படுகிறது. தற்போது இந்த விமான நிலையம் ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகளை கையாளும் திறன் கொண்டதாக உள்ளது. வளர்ந்து வரும் சென்னை மாநகரத்தின் தேவைகளை கருத்தில் கொண்டும் பயணிகளின் வசதிகளை கருத்தில் கொண்டும், சரக்கு போக்குவரத்தை அதிகரித்தும் நோக்கத்திலும் புதிய விமான நிலயத்திற்கான தேவை ஏற்பட்டுள்ளது. </p> <p>புதிய விமான நிலையம் அமைப்பதற்கு தேர்வு செய்யப்படும் இடம் பெரிய அளவில் விவசாயிகளை பாதிக்காத வகையிலும் அதிக அளவில் குடியிருப்புகளை அகற்றாத வகையிலும் அமைய வேண்டும். </p><p>ஆனால் முந்தைய அரசு விவசாயிகளை பெரிய அளவில் பாதிக்கும் வகையிலும் குடியிருப்புகளை அதிக அளவில் அகற்றும் வகையிலும் புதிய விமான நிலையம் அமைக்க முயற்சிகளை மேற்கொண்டது.</p><h2>பரந்தூர் விமான நிலையம் கைவிடல்</h2><p>ஏகனாபுரம் மற்றும் இதர கிராம மக்கள் இந்த விமான நிலையம் அமைப்பதை எதிர்த்து நடத்திய போராட்டங்களை அறிந்து நான் 20.1.2025 அன்று அப்பகுதிக்கு சென்று அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்து பின்வரும் அறிவிப்புகளை வெளியிட்டேன்.</p><p>சென்னை பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 12 கிராமங்களில் அமைய இருக்கும் விமான நிலையத்தை எதிர்த்து போராடும் மக்களுடன் நான் உறுதியாக நிற்கிறேன்.</p><p>நீண்ட நாட்களுக்கு இந்த திட்டத்திற்கு எதிராக போராடிவரும் விவசாயிகளை எனது ஆதரவை தெரிவித்து கொள்கிறேன்.</p> <p>விவசாயிகளே நாட்டின் முதுகெலும்பு. இந்த விவசாய நிலையங்களை பாதுகாக்க இந்த மக்கள் போராடி வருகிறார்கள்.</p><p>விக்கிரவாண்டியில் அக்டோபர் 2024 நடந்த பொதுக்கூட்டத்திலேயே பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறேன். தொழில் வளர்ச்சி மற்றும் அதற்கு விமான நிலையங்களின் பங்களிப்பு பற்றி நான் நன்கு அறிவேன். அதற்கு என் முழு ஆதரவும் உண்டு.</p><p>ஆனால் பரந்தூரில் இந்த திட்டம் அமைய கூடாது. இந்த திட்டம் குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். மக்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்காத வகையில் இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என்று அப்போது நான் வலியுறுத்தியிருந்தேன்.</p> <p>மக்கள் மத்தியிலே நான் அன்றே அறிவித்ததை நிறைவேற்றும்பொருட்டு, புதிய விமான நிலையம் அமைப்பது குறித்து உயர் அதிகாரிகளிடமும் துறை வல்லுனர்களிடமும் விரிவாக ஆலோசனை நடத்தினேன்.</p><p>ஏற்கனவே நான் உறுதி அளித்தவாறு பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் இந்த அரசால் கைவிடப்படும்.</p><p>துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோரிடம் கலந்தாலோசித்து விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாதவாறு புதிய விமான நிலையம் அமைக்க பொருத்தமான சில மாற்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.</p><p>அவ்விடங்களின் தொழில்நுட்ப ரீதியான சாத்தியக்கூறுகளை சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் விரிவான ஆய்வு மேற்கொண்டு புதிய விமான நிலயத்திற்கான இடம் விரைவில் இறுதி செய்யப்படும்.</p> <h2>மீனம்பாக்கம் விமான நிலையம் விரிவாக்கம்</h2><p>இதற்கிடையில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை மேலும் விரிவாக்கம் செய்து அதன் வடமேற்கு பகுதியில் ஆண்டுக்கு கூடுதலாக 20 மில்லியன் பயணிகளை கையாளக்கூடிய டெர்மினல் 5 என்ற புதிய முனையம் அமைக்க ஏர்போர்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியாவுடன் இணைந்து சாலை மற்றும் மேம்பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.</p> <p>சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தற்போது நடைபெற்று வரும் டெர்மினல் 3 கட்டுமான பணிகள் முடிவுற்ற பின் ஆண்டுக்கு 35 மில்லியன் பயணிகளை கையாள கூடியதாக இருக்கும்.</p><p>மேலும் புதிய டெர்மினல் 5 செயலாக்கத்திற்கு பிறகு ஆண்டுக்கு மொத்தம் 55 மில்லியன் பயணிகளை கையாள கூடியதாக விமான நிலையம் இருக்கும். இதன் மூலம் சென்னை விமான நிலையம் மேம்படுத்தப்படுவதோடு புதிய விமான நிலையம் அமைக்கப்படும்வரை பயணிகளின் தேவை பூர்த்தி செய்யப்படும்." எனத் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>180 கோவில்களில், ஒரே நாளில் 1,200 திருமணம்- உறவினர்கள் திரண்டதால் பக்தர்கள் திணறல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/1200-weddings-in-180-temples-on-a-single-day</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/1200-weddings-in-180-temples-on-a-single-day#comments</comments><guid isPermaLink="false">e6612f4f-f56a-4c12-b11c-195457eb5359</guid><pubDate>Mon, 24 Aug 2026 03:53:59 +0000</pubDate><atom:updated>2026-08-24T03:53:59.122Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமணம்,marriage,ஆவணி மாதம்,Avani Month,சுபமுகூர்த்த நாள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/anfczlxi/marriage.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கோவிலில் நடைபெற்ற திருமணம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கோவிலில் நடைபெற்ற திருமணம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/anfczlxi/marriage.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஆவணி மாத முதல் முகூர்த்த நாளான நேற்று 180 கோவில்களில் ஒரே நாளில் 1,200 திருமணங்கள் நடந்தன. உறவினர்கள் ஏராளமானோர் திரண்டதால் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் திணறினர்.</strong></em></p><h2><strong>ஆவணி மாத முதல் முகூர்த்தம்</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/ஆவணி-மாதம்">ஆவணி மாதம்</a> பிறந்து முதல் முகூர்த்த நாள் நேற்று வந்தது. இதனையொட்டி தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையில் திருமணங்கள் நடந்தன.</p><p>இதனால் கோவில்களில் மணமக்கள், அவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் குவிந்ததால் கோவில்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.</p><h2><strong>வடபழனி முருகன்</strong></h2><p>சென்னை வடபழனி முருகன் கோவிலில் காலை முதலே மணமக்கள் வருகையும், திருமண சடங்குகளும் நடந்தன. மணமக்களுக்கு ஒதுக்கப்பட்ட மண்டபங்களில் திருமணம் முடிந்ததும், மூலவர் தரிசனமும் செய்தனர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் மணமக்களின் பெற்றோர். உறவினர்கள், நண்பர்கள் என கூட்டம் நிரம்பி காணப்பட்டது.</p><h2><strong>திருத்தணி-திருப்பரங்குன்றம்</strong></h2><p>முருகனின் 5-வது படை வீடான திருத்தணி கோவிலில் 30 திருமணங்கள் நடந்தன. இதேபோல் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் நேற்று 101 திருமணங்கள் நடந்தது.</p><p>கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் ஒரே நாளில் 136 திருமணங்கள் நடந்தன.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/qy8jn7gf/marriage0.jpg" /></figure><h2><strong>திருச்செந்தூர்</strong></h2><p>திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 50 திருமணங்களும், பழனி திருஆவினன்குடி கோவிலில் 64 ஜோடிகளுக்கும் திருமணம் நடைபெற்றது.</p><p>திருச்சி வயலூர் முருகன் கோவிலில் 60 திருமணங்களும், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சுமார் 50 திருமணங்களும் நடைபெற்றுள்ளன. சுவாமிமலை முருகன் கோவிலில் நேற்று 35 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.</p><p>திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 51 ஜோடிகளுக்கும் திருமணம் நடந்தது. சேலம் சுகவனேசுவரர் கோவிலில் 100 ஜோடிகளுக்கும், வாழப்பாடி பேளூர் தானதோன்றஸ்வரர் கோவிலில் 64 ஜோடிகளுக்கும், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் 61 ஜோடிகளுக்கும் என சேலம் மாவட்டம் முழுவதும் நேற்று ஒரேநாளில் 279 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் 108 திருமணங்களும் நடந்துள்ளன.</p><h2><strong>விடுமுறை நாள்</strong></h2><p>இதேபோல் வடபழனி மற்றும் குன்றத்தூர் போன்ற பிரபல முருகன் கோவில்களில் முகூர்த்த நாட்களில் அதிக அளவிலான திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் வடபழனி கோவிலில் 61 திருமணங்களும், குன்றத்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் 60 திருமணங்கள், திருப்போரூர் கந்தசாமி கோவிலில் 75 திருமணங்கள் நடந்தன.</p><h2><strong>1,200 திருமணங்கள்</strong></h2><p>இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தமிழகத்தில் உள்ள 11 மண்டலங்களுக்கு உட்பட்ட 180 முக்கிய கோவில்களில் நேற்று 1,200 திருமணங்கள் நடந்துள்ளன. இதன்மூலம், ரூ.13 லட்சத்து 98 ஆயிரத்து 527 வருவாயாக பெறப்பட்டது' என்றார்.</p><p>கோவில்களில் திருமணம் முடிந்ததும் புதுமண தம்பதிகள் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இதனால் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான திருமண மண்டபங்கள் களைகட்டின.</p><h2><strong>குருவாயூர் கோவிலில்...</strong></h2><p>கேரளம் மாநிலம் குருவாயூரில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் ஆவணி மாதத்தில் அதிக ஜோடிகளுக்கு திருமணம் நடப்பது வழக்கம்.</p><p>கடந்த 8.9.2024-ந்தேதி 334 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. ஆவணி மாத முகூர்த்த நாளான நேற்று 437 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. </p>]]></content:encoded></item><item><title>10,000mAh பேட்டரியுடன் வெளியீட்டுக்கு ரெடியாகும் விவோ ஸ்மார்ட்போன்</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/10000mah-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8B-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/10000mah-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8B-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D#comments</comments><guid isPermaLink="false">50a21976-fb43-4682-9e50-575fa5d9bfe9</guid><pubDate>Mon, 24 Aug 2026 03:32:00 +0000</pubDate><atom:updated>2026-08-24T03:32:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vivo,smartphone,ஸ்மார்ட்போன்,விவோ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/rv22of0x/c.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vivo V80 Lite 5G]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/rv22of0x/c.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/vivo">விவோ</a> நிறுவனம் தனது V சீரிஸ் ஸ்மார்ட்போனின் பேட்டரி திறனை பலமடங்கு உயர்த்துகிறது. அந்த வரிசையில் விவோ வருகிற செப்டம்பரில் அறிமுகம் செய்ய இருக்கும் விவோ V80 லைட் ஸ்மார்ட்போன் 10,000mAh பேட்டரியுடன் வரும் என்று உறுதிப்படுத்தியுள்ளது. </p><p>இந்த <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மார்ட்போன்</a> முதற்கட்டமாக மலேசிய சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதுதவிர சர்வதேச சந்தையில் (சீனா தவிர்த்து) 10,000mAh பேட்டரியுடன் அறிமுகமாகும் முதல் விவோ பிரான்டு ஸ்மார்ட்போன் என்ற பெருமையை இந்த மாடல் பெறுகிறது.</p><h2>சிறப்பு அம்சங்கள்:</h2><p>தற்போது வரை வெளியாகி இருக்கும் தகவல்களில் மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் விவோ  V80 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஃபிளாட் ஃபிரேம், ஃபிளாட் ரியர் பேனல் கொண்டிருக்கும் என்றும் இந்த ஸ்மார்ட்போன் பிளாக், கிரீன் மற்றும் பின்க் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கும் என்று தெரிகிறது.</p><p>இத்துடன் 50MP பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. முன்னதாக விவோ நிறுவனம் சீன சந்தையில் அறிமுகம் செய்த விவோ Y600 ப்ரோ ஸ்மார்ட்போன் 10,000mAh பேட்டரி கொண்டிருந்தது. எனினும், உலக அளவில் இத்தகைய பேட்டரியுடன் அறிமுகமாகும் முதல் விவோ ஸ்மார்ட்போனாக இந்த மாடல் இருக்கும்.</p><p>இவைதவிர விவோ V80 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் 6.83 இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரேஷ் டிஸ்ப்ளே, 50MP சோனி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. </p><p>மேலும், ஆரா லைட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், IP68/IP69 தர டஸ்ட், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்படும் என்று தெரிகிறது.</p>]]></content:encoded></item><item><title>பல விதமான வடிவமைப்புகளுடன் சென்னைக்கு வந்த விநாயகர் சிலைகள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vinayagar-idols-in-various-designs-arrived-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vinayagar-idols-in-various-designs-arrived-in-chennai#comments</comments><guid isPermaLink="false">cf0b0209-712d-4575-beb2-7954590a6e4a</guid><pubDate>Mon, 24 Aug 2026 03:30:23 +0000</pubDate><atom:updated>2026-08-24T03:30:23.525Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,விநாயகர் சிலைகள்,Vinayagar statue,Kosapet,கொசப்பேட்டை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/hocpf2jk/vinayagar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ vinayagar statue]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/hocpf2jk/vinayagar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>விநாயகர் சதுர்த்தியையொட்டி வித விதமான விநாயகர் சிலைகள் சென்னைக்கு விற்பனைக்கு வந்துள்ளன.</strong></em></p><h2>விநாயகர் சதுர்த்தி</h2><p>இந்துக்கள் கொண்டாடும் முக்கிய விழாக்களில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">விநாயகர் சதுர்த்திக்கு</a> முக்கிய இடம் உண்டு. அத்தகைய சிறப்பு வாய்ந்த விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் (செப்டம்பர் 14-ந்தேதி) கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது.</p> <h2>கொசப்பேட்டை</h2><p>கர்நாடகா, ஆந்திராவில் இருந்தும் தமிழ்நாட்டில் இருந்தும் விநாயகர் சிலைகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் தற்போது சென்னைக்கு வர தொடங்கியுள்ளன. சென்னை புரசைவாக்கம் கொசப்பேட்டை பகுதியில் இப்போதே விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.</p><h2>விநாயகர் சிலைகள்</h2><p>3 முதல் 5 அடி வரையிலான விநாயகர் சிலைகள் அந்தப் பகுதி சாலையோரத்தில் தற்போது கம்பீரமாக வீற்றிருக்கின்றன. குழந்தை வடிவ விநாயகர், லட்டுடன் கூடிய விநாயகர் சிலைகள் கண் கவரும் வகையில் இருக்கின்றன.</p> <h2>மாசு கட்டுப்பாட்டு வாரியம்</h2><p>மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுறுத்தலின்படி சிலைகள் தயாராகி வந்துள்ளன என்று வியாபாரிகள் தெரிவித்தனர். இன்னும் சில நாட்களில் மேலும் பல விநாயகர் சிலைகள் சென்னைக்கு வர இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.</p>  <p>அணிவகுத்து நிற்கும் விநாயகர் சிலைகளை அந்தப் பகுதிகள் பார்த்து, ரசித்து சென்று வருகின்றனர். இன்னும் ஒரு வாரத்தில் விநாயகர் சிலைகள் விற்பனை தொடங்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். மழையில் நனைந்து விடாமல் இருக்க விநாயகர் சிலைகள் பிளாஸ்டிக் கவரால் மூடி வைக்கப்பட்டுள்ளன.</p><p>கோயம்பேடு, மயிலாப்பூர், தியாகராயநகர் உள்பட பல்வேறு பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. ரூ.5 ஆயிரத்தில் ரூ.25 ஆயிரம் வரை விநாயகர் சிலைகள் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்னும் 10 பேர் த.வெ.க.வில் இணைய உள்ளனர்- அமைச்சர் செங்கோட்டையன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sengottaiyan-says-10-more-admk-mlas-are-set-to-join-tvk</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sengottaiyan-says-10-more-admk-mlas-are-set-to-join-tvk#comments</comments><guid isPermaLink="false">4350f5e2-89b5-4dba-9888-f056839ecae4</guid><pubDate>Mon, 24 Aug 2026 03:27:50 +0000</pubDate><atom:updated>2026-08-24T03:27:50.493Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,ADMK,அதிமுக,tvk,அமைச்சர்   செங்கோட்டையன்,ministers sengottaiyan</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/n7srqe4t/sengottaiyan.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் செங்கோட்டையன்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் செங்கோட்டையன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/n7srqe4t/sengottaiyan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இன்னும் 10 பேர் எங்கள் த.வெ.க. கட்சியில் இணைய உள்ளனர். மீதி உள்ளவர்களும் இன்னும் 6 மாதங்களில் வந்து விடுவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் பேசியுள்ளார்.</strong></em> </p><p>ஈரோடு மாவட்டம் கோபியில் த.வெ.க. சார்பில் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு வருவாய்த்துறை <a href="https://www.maalaimalar.com/topic/அமைச்சர்-செங்கோட்டையன்">அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்</a> பேசினார். அவர் கூறியதாவது:-</p><h2><strong>சிறப்பான ஆட்சி</strong></h2><p>தமிழக முதலமைச்சர் விஜய் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். இதே இடத்தில் தேர்தலின் போது செங்கோட்டையன் நடமாட முடியுமா? என்று ஒருவர் கேட்டார். தற்போது அவர் சட்டமன்றத்தில் எனக்கு எதிர் திசையில் அமர்ந்துள்ளார். தமிழகத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை என்னால் கணிக்க முடியும். அதனால் தான் த.வெ.க.வில் முதலமைச்சர் விஜய் முன்பு இணைந்தேன். அப்போது என்னை பலர் இவர் இந்த கட்சியில் சேர்ந்துவிட்டாரே என பேசினார்கள், 11 முறை தேர்தலில் தோல்வி கண்டவருக்கு என்ன தெரியும்? விஜய் இருக்கும் வரை அவர்தான் தமிழகத்தில் நிரந்தர முதலமைச்சர்.</p><p>அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கார் கொடுப்பதாக முதலமைச்சர் கூறியுள்ளார். அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வேண்டாம் என கூறியுள்ளார். அரசு கொடுக்கின்ற காரில் சென்றால்தான் பொதுமக்களிடம் மதிப்பு அதிகரிக்கும். அ.தி.மு.க.வில் 47 எம்.எல்.ஏ.க்கள் தான் உள்ளனர். அதில் இன்னும் 10 பேர் எங்கள் த.வெ.க. கட்சியில் இணைய உள்ளனர். மீதி உள்ளவர்களும் இன்னும் 6 மாதங்களில் வந்து விடுவார்கள். அதன் பின்னர் அ.தி.மு.க. பூஜ்ஜியமாகிவிடும். இதை நான் சொல்லவில்லை. கட்சியில் இருப்பவர்கள் என்னிடம் கூறி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை அ.தி.மு.க. வெற்றி பெறாது.</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு</title><link>https://www.maalaimalar.com/spirituality/sabarimala-temple-opens-today-for-onam-festival</link><comments>https://www.maalaimalar.com/spirituality/sabarimala-temple-opens-today-for-onam-festival#comments</comments><guid isPermaLink="false">0fa23a67-b122-4a5a-800d-14bbf41abd14</guid><pubDate>Mon, 24 Aug 2026 03:17:14 +0000</pubDate><atom:updated>2026-08-24T03:17:14.527Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சபரிமலை கோவில்,Sabarimala temple,ஓணம் பண்டிகை,onam festival,onam sadhya,ஓணம் சத்யா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/dudujljo/sabarimala.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ sabarimala temple]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/dudujljo/sabarimala.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/onam-festival-flight-fares-from-chennai-to-kerala-surge-multiple-times">ஓணம் பண்டிகையை</a> முன்னிட்டு <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">சபரிமலை ஐயப்பன் கோவில்</a> நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு பிரம்ம தத்தன் முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார் தொடர்ந்து கற்பூர ஆழியில் தீ மூட்டப்படும்.</p> <p>நாளை (செவ்வாய்கிழமை) முதல் 28-ந் தேதி வரை சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். அன்று இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். </p><p>26-ந் தேதி திருவோண தினத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் ஐயப்ப பக்தர்களுக்கு ஓண சத்யா (விருந்து) வழங்கப்படும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>12 ஆண்டுகளில் ரூ.547 கோடி.. 2025-26இல் மட்டும் ரூ.92 கோடி - மத்திய அமைச்சர்களின் பங்களாக்கள் பராமரிப்பு செலவு!</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-lutyens-ministers-bungalows-maintenance-cost-rti-reveals-rs-92-crore-spent-in-2025-26</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-lutyens-ministers-bungalows-maintenance-cost-rti-reveals-rs-92-crore-spent-in-2025-26#comments</comments><guid isPermaLink="false">bc5ccff5-0228-465e-87bf-d37685881ee8</guid><pubDate>Mon, 24 Aug 2026 03:09:59 +0000</pubDate><atom:updated>2026-08-24T03:09:59.534Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,Union Minister,ஆர்டிஐ,central government,rti,மத்திய அமைச்சர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/fphp8i08/tn-36.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மத்திய அமைச்சர் பங்களா]]></media:title><media:description type="html"><![CDATA[ மத்திய அமைச்சர் பங்களா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/fphp8i08/tn-36.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி  லுட்யன்ஸ் பகுதியில் <a href="https://www.maalaimalar.com/news/national/modi-govt-campus-outreach-ministers-to-visit-universities-daily-under-one-day-one-university-campaign-to-engage-gen-z-students">மத்திய அமைச்சர்களின் </a>அதிகாரப்பூர்வ பங்களாக்கள் அமைந்துள்ளன. இவ்வாற்றை பராமரிக்கவும், புதுப்பிக்கவும் 2025-26 ஆம் நிதியாண்டில் மட்டும் ரூ.92.35 கோடி செலவிடப்பட்டுள்ளது ஆர்டிஐ மூலம் தெரிய வந்துள்ளது. </p><h2>ஆடிஐ</h2><p>தகவல் அறியும் உரிமைச் சட்டமான <a href="https://www.maalaimalar.com/news/national/central-government-vacancies-over-823-lakh-posts-lying-vacant-across-ministries-revealed-by-rti-data">ஆடிஐயின் கீழ் எழுப்பப்பட்ட கேள்வி</a>க்கு மத்திய பொதுப்பணித் துறை அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் இதற்கான தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.</p><p>அதன்படி, பராமரிப்பு, புதுப்பிப்பு, பழுதுபார்க்கும் பணிக்காக 2025-26 ஆம் நிதியாண்டில் மட்டும் ரூ.92.35 கோடி செலவிடப்பட்டுள்ளது.</p><p>கடந்த 2014-15 ஆம் நிதியாண்டில் இந்தச் செலவு ரூ.27.47 கோடியாக இருந்த நிலையில், தற்போது அது 3 மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளது.</p> <h2>ஒப்பீடு</h2><p>மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்த 2014-15 முதல் 2025-26 வரையிலான 12 நிதியாண்டுகளில் இந்த பங்களாக்களின் பராமரிப்பிற்காக மொத்தம் ரூ.547.68 கோடி செலவிடப்பட்டுள்ளது. </p><p>2014 - 2019 நிதியாண்டில் ரூ.26.78 கோடி, 2019 - 2024 நிதியாண்டில் ரூ.50 கோடி, 2024 - 2025 நிதியாண்டில் ரூ. 71.98 கோடி செலவிடப்பட்டுள்ளது.</p><p>மத்திய அமைச்சரவையில் இணை அமைச்சர்களுடன் சேர்த்து சுமார் 70 முதல் 72 அமைச்சர்கள் உள்ளனர்.</p><p>இதன் அடிப்படையில் கணக்கிட்டால், 2025-26 இல் ஒரு அமைச்சரின் பங்களாவிற்குச் சராசரியாக ரூ.1.2 கோடி செலவிடப்பட்டுள்ளது என கணக்கிடலாம்.</p><p>2004 முதல் 2009 வரையிலான 5 ஆண்டுகள் முழுவதும் எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களின் பங்களாக்களுக்கு சேர்த்து மொத்தம் ரூ.93.50 கோடி செலவிடப்பட்டது.</p><p>ஆனால், தற்போது ஒரே ஆண்டில் அமைச்சர்களின் பங்களாக்களுக்கு மட்டும் அந்த அளவிற்கு செலவாகியுள்ளது கவனிக்கத்தக்கது.</p><h2>செலவு அதிகரிக்கக் காரணம் என்ன?</h2><p>லுட்யன்ஸ் பகுதியில் உள்ள இந்த கட்டிடங்கள் பலவும் ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்தை சேர்ந்ததாகும்.</p><p>1912 முதல் 1930 காலகட்டத்தில் கட்டப்பட்ட இந்த பங்களாக்கள் தற்போது 80 முதல் 100 ஆண்டுகள் பழமை நிலைமையை எட்டியுள்ளன.</p><p>நீர் கசிவு, கரையான் அரிப்பு போன்றவை அதிகம் ஏற்படுகின்றன. பழமையான மின்சார அமைப்புகள் மற்றும் குழாய் அமைப்புகளை பராமக்க வேண்டிய தேவை அடிக்கடி எழுகிறது.</p> <p>சில கட்டிடங்கள் பலவீனமடைந்துள்ளதால் பெரிய அளவிலான மாற்றங்கள் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.</p><p>மின்விசிறிகள், எல்.இ.டி விளக்குகள், குழாய் அமைப்புகளை மாற்றுவது மற்றும் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை தரையில் பாதிக்கப்பட்டுள்ள டைல்ஸ் மாற்றுவது போன்றவற்றிற்கும் தொடர் செலவுகள் ஏற்படுகின்றன.</p><p>தற்போது வழங்கப்பட்டுள்ள ஆர்டிஐ தரவுகளில் அமைச்சர்களாக இல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்களா பராமரிப்புச் செலவுகள் சேர்க்கப்படவில்லை.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் 2-ம் கட்ட மின்சார பஸ்கள்: முதலமைச்சர் விஜய் நாளை தொடங்கி வைக்கிறார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/phase-2-electric-buses-in-chennai-cm-vijay-to-launch-them-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/phase-2-electric-buses-in-chennai-cm-vijay-to-launch-them-tomorrow#comments</comments><guid isPermaLink="false">cdd1bbe2-68db-439b-8a0c-5cedae606335</guid><pubDate>Mon, 24 Aug 2026 03:06:14 +0000</pubDate><atom:updated>2026-08-24T03:06:14.126Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,TN Govt,தமிழக அரசு,electric bus,மின்சார பஸ்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/jk21mauf/Vijay07.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/jk21mauf/Vijay07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் 2-ம் கட்ட மின்சார பஸ்கள் இயக்கத்தை முதலமைச்சர் விஜய் நாளை தொடங்கி வைக்கிறார்.</p><h2><strong>2-ம் கட்டமாக 750 மின்சார பஸ்கள்</strong></h2><p>சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், முதற்கட்டமாக ரூ.697 கோடி மதிப்பீட்டில், 625 தாழ்தள மின்சாரப் பஸ்கள் (மொத்த விலை ஒப்பந்தத்தின் அடிப்படையில்) வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, சென்ட்ரல் பணிமனை மற்றும் தண்டையார்பேட்டை-1 உள்ளிட்ட 5 பணிமனைகளில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.</p><p>இதனைத் தொடர்ந்து, 2-ம் கட்டமாக 750 புதிய தாழ்தள குளிர்சாதன மின்சாரப் பஸ்கள் ஆலந்தூர், சென்டிரல் பணிமனை-2, பெரம்பூர், பாடியநல்லூர், ஆவடி, கே.கே. நகர் மற்றும் ஐயப்பன்தாங்கல் உள்ளிட்ட 7 பணிமனைகளில் இருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><h2><strong>முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்</strong></h2><p>இதில் முதன் முதலாக ஆலந்தூர் பணிமனையில் இருந்து 130 ஏ.சி. மின்சார பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த மின்சார பஸ்கள் இயக்கத்தை முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்</a> சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி நாளை தொடங்கி வைக்கிறார். அதன்படி, சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் 5 மின்சார பஸ்களை முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைப்பார். அதைத் தொடர்ந்து இதர மின்சார பஸ்கள் ஆலந்தூர் பணிமனையில் இருந்து இயக்கப்படும்.</p><p>இந்த நிலையில், ஆலந்தூர் மின்சாரப் பஸ் பணிமனைக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் நேற்று நேரில் சென்று மின்சார உள்கட்டமைப்பு பணிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அப்போது, மின்னேற்றிகளின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.</p><p>இந்த ஆய்வின்போது, சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் த.மோகன், இணை மேலாண் இயக்குனர் ராம.சுந்தரப்பாண்டியன் மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>டிபன் பாக்ஸில் வெடிகுண்டு.. சண்டிகரில் பயங்கரவாத தாக்குதல் சதித்திட்டம் முறியடிப்பு - 3 பேர் கைது</title><link>https://www.maalaimalar.com/news/national/chandigarh-terror-plot-foiled-3-bki-linked-youths-held-with-tiffin-box-ied-near-bus-stand</link><comments>https://www.maalaimalar.com/news/national/chandigarh-terror-plot-foiled-3-bki-linked-youths-held-with-tiffin-box-ied-near-bus-stand#comments</comments><guid isPermaLink="false">77fbd4bb-032b-47c6-8ef7-12b1736f4083</guid><pubDate>Mon, 24 Aug 2026 02:39:08 +0000</pubDate><atom:updated>2026-08-24T02:39:08.478Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>terrorists,காலிஸ்தான்,Khalistan,Conspiracy,சதித்திட்டம்,பயங்கரவாதிகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/xf8bd2vp/tn-34.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டிபன் பாக்ஸில் வெடிகுண்டு]]></media:title><media:description type="html"><![CDATA[ டிபன் பாக்ஸில் வெடிகுண்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/xf8bd2vp/tn-34.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சண்டிகரில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டதன் மூலம் <a href="https://www.maalaimalar.com/news/world/pakistan-ranks-first-on-global-terrorism-index-as-deaths-surge-to-highest-since-2013">பயங்கரவாத </a>சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. </p><p>பஞ்சாப் மாநிலம் <a href="https://www.maalaimalar.com/news/national/separate-governor-for-chandigarh-punjab-chief-minister-bhagwant-mann-opposes-the-central-governments-plan-798705">சண்டிகரில் </a>செக்டார் 43 பகுதியில் வெளி மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து முனையத்திற்கு அருகே 3 இளைஞர்களை சண்டிகர் காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர்.</p><p>அவர்களிடமிருந்து பையில்  டிபன் பாக்ஸில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஇடி வெடிகுண்டு தயாரிப்பதற்கான பொருட்கள் மற்றும் துப்பாக்கி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.</p> <h2>யார் இவர்கள்?</h2><p>கைது செய்யப்பட்டவர்கள் தார்ன் தரான் பகுதியைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் (19), ஜஷன்பிரீத் சிங் (21) மற்றும் அமிர்தசரஸை சேர்ந்த பிரக்பிரீத் சிங் என்ற பிரப் (19) ஆகிய மூவர் ஆவர்.</p><p>இவர்கள் 'பப்பர் கல்சா இன்டர்நேஷனல்' (BKI) என்ற தனி நாடு கோரும் காலிஸ்தானி பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது.</p><p>அவர்களிடமிருந்து 5 கிலோ ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர், வெடிபொருளை இயக்குவதற்கான பவர் சோர்ஸ் மற்றும் ரிமோட் கண்ட்ரோல் சிஸ்டம் 1 துப்பாக்கி, 1 மேகசின் மற்றும் 5 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.</p><h2>சதித்திட்டம்</h2><p>காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பப்பர் கல்சா அமைப்பின் முக்கியச் செயல்பாட்டாளரான சத்னம் என்ற சத்தா நௌஷேரா என்பவருடன் இந்த இளைஞர்களுக்கு தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது.</p><p>அவரது வழிகாட்டுதலின் பேரில், சண்டிகரில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்தி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் நோக்கில் அவர்கள் இந்த ஐஇடி வெடிகுண்டை வெடிக்கச் செய்ய திட்டமிட்டிருந்தது அம்பலமாகியுள்ளது.</p><p>இந்த வெடிபொருட்கள் எங்கிருந்து வாங்கப்பட்டன, வேறு யாரெல்லாம் இந்தச் சதியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்து  காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 24 ஆகஸ்ட் 2026: சிவன் கோவில்களில் சோமவார அபிஷேகம்
</title><link>https://www.maalaimalar.com/spirituality/sivan-temple-somavara-abhishekam</link><comments>https://www.maalaimalar.com/spirituality/sivan-temple-somavara-abhishekam#comments</comments><guid isPermaLink="false">990e3e93-73c9-4dfa-b3dd-d3ef195f56af</guid><pubDate>Mon, 24 Aug 2026 02:05:21 +0000</pubDate><atom:updated>2026-08-24T02:05:21.649Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/08/24/17610549-sivan4.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sivan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/08/24/17610549-sivan4.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆவணி-7 (திங்கள்கிழமை)</p><p>பிறை : வளர்பிறை</p><p>திதி :   துவாதசி (முழுவதும்) </p><p>நட்சத்திரம் : பூராடம் இரவு 10.16 வரை பிறகு உத்திராடம்</p> <p>யோகம் :  சித்த / மரணயோகம்</p><p>ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை</p><p>எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை</p><p>சூலம் : கிழக்கு</p><p>நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை</p> <h2>திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி</h2><p>மதுரை ஸ்ரீ சோமசுந்தரப் பெருமான் புட்டுத் திருவிழா சுவாமி அம்பாள் விருஷபாரூட தரிசனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சனம். குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமான் திருவீதியுலா. கீழ்த் திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சனம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் திருமஞ்சனம். கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீபூவண்ணநாதர் பால் அபிஷேகம்.</p> <p>திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மஹாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீகற்பகாம்பாள் சமேத ஸ்ரீகபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ அராளகேசி அம்பாள் சமேத ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் தலங்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - களிப்பு</p><p>ரிஷபம் - ஆக்கம்</p><p>மிதுனம் - கீர்த்தி</p><p>கடகம் - தாமதம்</p><p>சிம்மம் - அனுகூலம்</p><p>கன்னி - மகிழ்ச்சி</p> <p>துலாம் - முயற்சி</p><p>விருச்சிகம் - பயணம்</p><p>தனுசு - நிதானம்</p><p>மகரம் - திறமை</p><p>கும்பம் - நன்மை</p><p>மீனம் - அனுகூலம்</p> ]]></content:encoded></item><item><title>இந்திய ஆண்களுடன் திருமணம்.. ஓராண்டு காத்திருப்புக்கு பின் இந்தியா வந்து சேர்ந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள் 
</title><link>https://www.maalaimalar.com/news/national/india-pakistan-visa-150-pakistani-sindhi-brides-reach-india-via-third-countries-after-year-long-wait-to-marry-indian-grooms</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-pakistan-visa-150-pakistani-sindhi-brides-reach-india-via-third-countries-after-year-long-wait-to-marry-indian-grooms#comments</comments><guid isPermaLink="false">46f62306-6003-461d-9678-0e6e2f6e33f2</guid><pubDate>Mon, 24 Aug 2026 01:56:27 +0000</pubDate><atom:updated>2026-08-24T01:56:27.228Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,திருமணம்,Pakistan,பஹல்காம் தாக்குதல்,Pahalgam attack,wedding</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/fjichuwu/tn-33.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மணப்பெண்கள் ]]></media:title><media:description type="html"><![CDATA[ மணப்பெண்கள் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/fjichuwu/tn-33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய ஆண்களுடன் திருமணம் நிச்சயயிக்கப்பட்ட பாகிஸ்தானை சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட சிந்தி சமூகத்தை சேர்ந்த மணப்பெண்கள் ஓராண்டு காத்திருப்புக்கு பிறகு இந்தியாவுக்கு வந்து சேர்ந்துள்ளனர்.</p><h2>பின்னணி</h2><p>பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தை சேர்ந்த சிந்தி சமூகக் குடும்பங்கள், இந்தியாவில் உள்ள தங்களது உறவினர்கள் அல்லது சமூகத்தினருக்கு தங்கள் மகள்களைத் திருமணம் செய்து கொடுப்பது வழக்கமான ஒன்று.</p><p>கடந்த 2025 ஏப்ரல் 22 அன்று <a href="https://www.maalaimalar.com/special/recap-2025/26-killed-militants-attack-in-pahalgam-801054">பஹல்காமில் </a>நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் பலியானதை அடுத்து, இந்தியப் படைகள் '<a href="https://www.maalaimalar.com/topic/operation-sindoor">ஆபரேஷன் சிந்தூர்</a>' மூலம் பதிலடித் தாக்குதல் நடத்தின.</p><p>இதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தானுடனான தூதரக உறவுகளை நிறுத்திய இந்தியா, பஞ்சாபில் உள்ள வாகா-அட்டாரி எல்லைப் பாதையை மூடியதுடன், பாகிஸ்தானியர்களுக்கான விசாக்களையும் நிறுத்தி வைத்தது.</p><p>இதனால், நாக்பூர், ராய்ப்பூர், ஜோத்பூர், புனே உள்ளிட்ட இந்திய நகரங்களில் உள்ள ஆண்களுடன் நிச்சயிக்கப்பட்ட 150க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் பெண்களின் திருமணங்கள் முடங்கின.</p> <h2>விசா கிடைத்தது எப்படி?</h2><p>மணப்பெண்களின் எதிர்காலம் கேள்விக் குறியான நிலையில், சிந்தி சமூக அமைப்புகள் பாகிஸ்தானின் கோட்கியில் உள்ள 'ஷடானி தர்பார்' சிந்தி புனித அமைப்பின் ஆன்மீகத் தலைவர் சாந்த் யுதிஷ்டிர்லால் ஷடானியை அணுகின.</p><p>இந்தியாவில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பாகிஸ்தான் பெண்களின் விவரப் பட்டியல் தயார் செய்யப்பட்டது.</p><p>இந்தப் பட்டியலை இந்திய உள்துறை அமைச்சகத்திடம் வழங்கி, விசா கோரிக்கை விடுக்கப்பட்டது.</p> <p>கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு, "இந்தியாவிற்குள் நுழைபவர்கள் தரைவழியாக வராமல், கட்டாயம் வான்வழியாக மட்டுமே பயணிக்க வேண்டும்" என்ற நிபந்தனையுடன் விசா வழங்க ஒப்புக்கொண்டது.</p><p>ஆனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே வான் சேவைகளும் முடங்கியுள்ள நிலையில் அவர்கள் நேரடியாக இந்தியா வர முடியாத சூழல் எழுந்தது.</p><p>மூன்றாம் நாடுகள் வழியாக பயணம்</p><p>எனவே மணப்பெண்களும் அவர்களது குடும்பத்தினரும் துபாய், மஸ்கட், இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய மூன்றாம் நாடுகளின் வழியாக விமானப் பயணம் மேற்கொண்டு இந்தியாவை வந்தடைந்துள்ளனர்.</p><p>நாக்பூரைச் சேர்ந்த சிந்தி சமூகத் தலைவர் ராஜேஷ் ஜாம்பியா கூறுகையில், "நீண்ட நாட்களாக நீடித்த காத்திருப்பு இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது.</p><p>திருமணம்</p><p>கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரை 150 மணப்பெண்கள் இந்தியா வந்து சேர்ந்துள்ளனர். நாக்பூரில் மட்டும் 15 திருமணங்கள் நடந்துள்ளன" எனத் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும், பாகிஸ்தானில் இதுபோன்று இன்னும் சுமார் 300 பெண்கள் காத்திருப்பதாகவும், அவர்களுக்கும் விசா வழங்கி உதவுமாறு இந்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 24.8.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும்</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-24-august-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-24-august-2026#comments</comments><guid isPermaLink="false">f2078dd7-f944-4db4-847d-8554b71809ad</guid><pubDate>Mon, 24 Aug 2026 01:52:40 +0000</pubDate><atom:updated>2026-08-24T01:52:40.973Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-25/vb2s2e0p/rasi-6.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-25/vb2s2e0p/rasi-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும் நாள். புதிய தொழில் தொடங்கும் திட்டத்தை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.</p><h2>ரிஷபம்</h2><p>மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் ஒற்றுமை குறையும். நேற்றைய பிரச்சனை இன்று மீண்டும் தலைதூக்கும். உத்தியோகத்தில் கவனம் தேவை.</p> <h2>மிதுனம்</h2><p>மகிழ்ச்சி கூடும் நாள். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவர். உத்தியோகத்தில் புதுமைகளைச் செய்து மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பீர்கள்.</p><h2>கடகம்</h2><p>மறக்க முடியாத சம்பவம் நடைபெறும் நாள். தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும்.</p> <h2>சிம்மம்</h2><p>சந்தோஷம் அதிகரிக்கும் நாள். தொழில் ரீதியாக பயணமொன்றை மேற்கொள்வீர்கள். புதிய வேலைக்கு செய்த முயற்சி கைகூடும். வரன்கள் முடிவாகும்.</p><h2>கன்னி</h2><p>அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். வரவு திருப்தி தரும். பிள்ளைகள் வழியில் சுபச்செய்திகள் வந்து சேரும்.</p> <h2>துலாம்</h2><p>முன்னேற்றப்பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். பணம் பலவழிகளிலும் வந்து பையை நிரப்பும். ஆற்றல்மிக்கவர்களின் ஆதரவு கிடைக்கும்.</p><h2>விருச்சிகம்</h2><p>பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.</p> <h2>தனுசு</h2><p>வரவும் செலவும் சமமாகும் நாள். வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் பிரச்சனைகள் ஏற்படலாம்.</p><h2>மகரம்</h2><p>எடுத்த முயற்சி வெற்றி பெறும் நாள். எந்தக் காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். கூட்டுத் தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.</p> <h2>கும்பம்</h2><p>சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். தொழிலில் முன்னேற்றம் உண்டு. கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். உத்தியோகத்தில் மறைமுகச் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.</p><h2>மீனம்</h2><p>வளர்ச்சி கூடும் நாள். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் நன்மை உண்டு.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம் </title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/todays-petrol-and-diesel-price-status-in-chennai-3</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/todays-petrol-and-diesel-price-status-in-chennai-3#comments</comments><guid isPermaLink="false">ae130877-1a99-4fab-bad1-e26ae1dc7789</guid><pubDate>Mon, 24 Aug 2026 01:37:24 +0000</pubDate><atom:updated>2026-08-24T01:37:24.138Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,கச்சா எண்ணெய்,Crude oil,பெட்ரோல் டீசல் விலை,Petrol and Diesel Prices</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/b0k0t00l/tn-32.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பெட்ரோல் டீசல் விலை]]></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல் டீசல் விலை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/b0k0t00l/tn-32.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/iran-warns-gulf-countries-against-aiding-america">ஈரான் போரினால்</a> மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p> <h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.</p> <h2>இன்றைய பெட்ரோல், டீசல் விலை</h2><p>அந்த வகையில் இன்றைய (24.08.2026 - திங்கள்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><h2>கச்சா எண்ணெய் விலை</h2><p>இன்று சர்வதேச சந்தையில் பிரனட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 92.57 டாலர் என விற்பனை ஆகி வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>இந்த வாரம் வானில் நிகழும் அதிசய சந்திர கிரகணம்.. எங்கு பார்க்கலாம்? என்ன சிறப்பு?</title><link>https://www.maalaimalar.com/news/world/rare-blood-moon-96-partial-lunar-eclipse-not-visible-from-india-on-august-28</link><comments>https://www.maalaimalar.com/news/world/rare-blood-moon-96-partial-lunar-eclipse-not-visible-from-india-on-august-28#comments</comments><guid isPermaLink="false">14c1564b-46c7-4eca-a467-c83a7b943202</guid><pubDate>Mon, 24 Aug 2026 00:57:13 +0000</pubDate><atom:updated>2026-08-24T00:57:13.639Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சந்திர கிரகணம்,lunar eclipse,ரத்த நிலவு,blood moon,வானியல் நிகழ்வு,astronomical event</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/mmqugcko/tn-31.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சந்திர கிரகணம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சந்திர கிரகணம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/mmqugcko/tn-31.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை), ரக்ஷா பந்தன் பண்டிகை தினத்தன்று ஓர் அரிய பகுதியளவு <a href="https://www.maalaimalar.com/topic/lunar-eclipse">சந்திர கிரகணம்  </a>நிகழவுள்ளது. </p><p>இந்நிகழ்வில் நிலவின் பெரும் பகுதி மறைக்கப்பட்டு, கிட்டத்தட்ட முழு சந்திரகிரகணம் போலக் காட்சியளிக்கும். எனினும் இந்த நிகழ்வை இந்தியாவில் காண முடியாது.</p> <h2>ரத்த நிலவு</h2><p>சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது, பூமியின் நிழல் சந்திரனை மறைக்கிறது.</p><p>அப்போது சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தைக் கடந்து சந்திரனின் மீது படுகிறது. </p><p>இதனால் சந்திரன் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. எனவே இதை ரத்த நிலவு (Blood Moon) என்கின்றனர்.</p><h2>பகுதி சந்திரகிரகணம்</h2><p>சாதாரண பகுதி சந்திரகிரகணங்களில் நிலவின் ஒரு சிறிய பகுதி மட்டுமே பூமியின் நிழலால் மூடி மறைக்கப்படும்.</p><p>ஆனால், வெள்ளிக்கிழமை நடக்க உள்ள இந்த கிரகணத்தின் போது நிலவின் மேற்பரப்பில் 96 சதவீத பகுதி பூமியின் நிழலால் மூடப்படுகிறது. வெறும் 4% மட்டுமே விளிம்பில் வெளிச்சமாக இருக்கும்.</p><p>வழக்கமாக முழு சந்திரகிரகணத்தின் போது மட்டுமே நிலவு 'பிளட் மூன்' எனப்படும் சிவப்பு நிறத்தில் பிரகாசிக்கும்.</p><p>ஆனால், இந்த கிரகணத்தில் 96% நிலவு மறைக்கப்படுவதால், இது பகுதி கிரகணமாக இருந்தாலும் முழு சந்திரகிரகணத்தை போலவே  ரத்தச் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் என்பதால் இது சிறப்பு வாய்ந்தது. </p><h2>எங்கு தெரியும்?</h2><p>வட மற்றும் தென் அமெரிக்கக் கண்டங்களில் இந்த கிரகணம் மிகவும் தெளிவாகப் புலப்படும்.</p><p>சுமார் 100 கோடி மக்கள் இதனை நேரடியாக காண வாய்ப்புள்ளதாக வானியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.</p><p>ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவின் சில பகுதிகளில் இது பகுதி அளவாகத் தெரியும்.</p><p>இந்தியா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா மற்றும் பசிபிக் பெருங்கடல் நாடுகளில் இந்த கிரகணம் தெரியாது.</p> <p>இந்திய நேரப்படிஆகஸ்ட் 28 காலையில் இந்த கிரகணம் நிகழ்கிறது. காலை 8:04 மணிக்கு தொடங்கி, உச்சக்கட்டம் காலை 9:43 மணிக்கு உச்சகட்டத்தை எட்டி காலை 11:22 மணிக்கு முடிவடையும்.</p><p>இந்தியாவில் இக்காலகட்டத்தில் பகல் நேரமாக இருப்பதால், இந்த கிரகணத்தை நம்மால் பார்க்க முடியாது.</p>]]></content:encoded></item><item><title>மொத ராத்திரி திரைப்படத்தை பாராட்டி தள்ளிய இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/karthik-subbaraj-praise-modha-rathiri-movie</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/karthik-subbaraj-praise-modha-rathiri-movie#comments</comments><guid isPermaLink="false">f51d5b66-463a-402b-a913-909ba14ad54f</guid><pubDate>Mon, 24 Aug 2026 00:22:07 +0000</pubDate><atom:updated>2026-08-24T00:22:07.729Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Karthik Subbaraj,கார்த்திக் சுப்பராஜ்,Modha Rathiri,மொத ராத்திரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/42ve396d/Modha-Rathiri-Poster-karthik-Subbaraj.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Modha Rathiri Poster - karthik Subbaraj]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/42ve396d/Modha-Rathiri-Poster-karthik-Subbaraj.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் அனிஷ்மா அனில்குமார், ரிஷிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் <a href="https://www.maalaimalar.com/cinema">திரைப்படம்</a> 'மொத ராத்திரி'. </p><p>இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில், மொத ராத்திரி திரைப்படத்திற்கு இயக்குநர் <a href="https://www.maalaimalar.com/topic/karthik-subbaraj">கார்த்திக் சுப்பராஜ்</a> பாராட்டு தெரிவித்துள்ளார். </p><h2>நகைச்சுவை விருந்து:</h2><p>மேலும், இந்தப் திரைப்படம் "நகைச்சுவை விருந்து" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>ஒரே இரவில் நடக்கும் கதையாக எழுதப்பட்டு இருந்தாலும் பலரிடமும் பாராட்டுகளை பெற்றதுடன் இயக்குநரின் முதல் திரைப்படம் போன்றே தெரியவில்லை என்கிற விமர்சனத்தை இந்தப் படம் பெற்றுள்ளது.</p><h2>எக்ஸ் தள பதிவு:</h2><p>இதுகுறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "திரையரங்குகளில் அரங்கேறும் இந்த நகைச்சுவை விருந்தை தவறவிடாதீர்கள். நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகள் சரியான அளவில் நிறைந்து, சிறப்பாக எழுதப்பட்டு இயக்கப்பட்ட ஒரு குடும்ப நாடகம் இது.</p><p>அறிமுக இயக்குநர் ராஜாகருப்பசாமி மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். புதிய நடிகர்கள் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர். ரிஷிகாந்த் ஒரு அற்புதமான திறமையாளர். நான் பணியாற்றிய நடிகர்களில் எனக்கு மிகவும் பிடித்தமானவர்களில் ஒருவர்.</p><p>அவரது 'ஹீரோ' பயணம் ஒரு சிறப்பான தொடக்கத்துடன் தொடங்கி இருப்பதை பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி. இன்னும் பல வெற்றிகள் வரவிருக்கின்றன," என்று குறிப்பிட்டுள்ளார்.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Don&#39;t miss this laughter riot in theatres... <a href="https://x.com/hashtag/ModhaRathiri?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ModhaRathiri</a> is a well written and directed family drama that&#39;s filled with comedy and emotions in right mix... Well done debutant director  <a href="https://x.com/hashtag/RajaKaruppasamy?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#RajaKaruppasamy</a> and whole new crew<br><br>Superbly performed by whole new cast … <a href="https://t.co/OxUanjVjMl">pic.twitter.com/OxUanjVjMl</a></p>&mdash; karthik subbaraj (@karthiksubbaraj) <a href="https://x.com/karthiksubbaraj/status/2091440375613595939?ref_src=twsrc%5Etfw">August 23, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>கினியா தலைநகரில் குப்பை கிடங்கில் ஏற்பட்ட நிலச்சரிவில் 30 பேர் பலி</title><link>https://www.maalaimalar.com/news/world/landslide-at-landfill-in-capital-of-guinea-kills-30-people-officials-say</link><comments>https://www.maalaimalar.com/news/world/landslide-at-landfill-in-capital-of-guinea-kills-30-people-officials-say#comments</comments><guid isPermaLink="false">3acf4eda-8545-4d18-b1b3-ca05e2474331</guid><pubDate>Sun, 23 Aug 2026 23:14:42 +0000</pubDate><atom:updated>2026-08-23T23:14:42.867Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உயிரிழப்பு,landslide,Guinea,கினியா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/y1l5bhqk/collapsed-landfill.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ collapsed landfill]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/y1l5bhqk/collapsed-landfill.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கினியாவின் தலைநகரான கோனாக்ரியில் உள்ள மிகப்பெரிய குப்பை கிடங்கில், மலைபோல் குவிந்திருந்த குப்பைகள் சரிந்து விழுந்ததில் 30 பேர் உயிரிழந்ததாக மத்திய அரசு வெளியிட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>அதிகாலை 2 மணி அளவில் பெய்த பலத்த மழையால் 'தார் எஸ் சலாம்' (Dar Es Salam) பகுதியில் உள்ள குப்பைகள் அடித்து செல்லப்பட்டதாகவும், அதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் அருகில் இருந்த குடிசைகள் புதையுண்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><h2>மீட்பு பணிகள்:</h2><p>உயிர் பிழைத்தவர்களைக் கண்டறியும் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆறு பேர் பலத்த காயமடைந்தனர்; பல வீடுகள் சேதமடைந்தன.</p><p>நகரின் மிகப்பெரிய திறந்தவெளி குப்பை கிடங்கான இந்த இடத்தை ஞாயிற்றுக்கிழமையன்று மூடுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்ததாக, ராணுவ பொறியியல் பிரிவின் சுகாதார அதிகாரி லெப்டினன்ட் கர்னல் பால்டே மாமடூ பைலோ தெரிவித்தார்.</p><h2>வெளியேற அறிவிப்பு:</h2><p>குப்பை கிடங்கைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அங்கிருந்து வெளியேறுமாறு அறிவிப்புகள் வழங்கப்பட்டிருந்தன; இதனால் பலர் அப்பகுதியை விட்டு வெளியேறியிருந்தாலும், விபத்து நடந்த நேரத்தில் இன்னும் பலர் அங்கேயே இருந்ததாக அதிகாரிகள் கூறினர்.</p><p>"மீதமுள்ள குடும்பங்கள் வேறு இடத்திற்கு மாற்றப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம்," என்று அப்பகுதியை நேரில் பார்வையிட்ட பிராந்திய நிர்வாகம் மற்றும் அதிகாரப் பரவலாக்கத் துறை அமைச்சர் டியெனாபூ டூரே தெரிவித்தார்.</p>]]></content:encoded></item></channel></rss>