<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 09 Aug 2026 16:42:47 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்- 9 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-9-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-9-august-2026#comments</comments><guid isPermaLink="false">76352f68-a6e0-4f69-bc17-bafdc013c0fd</guid><pubDate>Sun, 09 Aug 2026 03:12:36 +0000</pubDate><atom:updated>2026-08-09T15:07:11.323Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/omtx1at6/TodayNews0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Today News Live]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/omtx1at6/TodayNews0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/if-iran-opens-hormuz-strait-trump-may-drop-nuclear-deal-plan">ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் திறந்தால் அணுசக்தி ஒப்பந்த திட்டத்தைக் கைவிட டிரம்ப் பரிசீலனை!... </a></p><p>*ஈரானுடன் விரிவான அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொள்வதை விட, உலகளாவிய கச்சா எண்ணெய் வர்த்தகத்திற்கு மிகவும் முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதையே தனது முதன்மை இலக்காக டிரம்ப் கருதுவதாகக் கூறப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-meets-medal-winning-boxers-prime-minister-interacts-with-indian-commonwealth-champions-in-delhi">காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களை நேரில் அழைத்து பாராட்டிய பிரதமர் மோடி - இன்ஸ்டாவில் செல்பி வீடியோ</a><br><br>*39 பதக்கங்களில் 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் அடங்கும்.</p><p>*Always Cheer For Bharat, பாரத மாதா கி ஜே! என்று கூறுவது இடம்பெற்றுள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-tn-govt-on-cauvery-delta-paddy-crisis">காவிரி டெல்டா கொள்முதல் நிலையங்களில் ரூ.10 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்: உடனடி கொள்முதல் அவசியம் - அன்புமணி வலியுறுத்தல்!</a></p><p>* மழைக்கு முன் நெல்லை கொள்முதல் செய்ய அரசு உடனடி நடவடிக்கை வேண்டும்</p><p>* அரிசி விலை ₹10-15 உயர்வு விவசாயிகள் நெல் வீணாகாமல் பாதுகாக்க வேண்டும்</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/2baa2ab1-aecf-417a-8fb7-db9d11f2fb15">சென்னை: கனமழையால் தரையிறங்க முடியாமல் வட்டமடித்த அமித் ஷாவின் ஹெலிகாப்டர்.. தாம்பரத்தில் தரையிறக்கம்</a></p><p>*தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.</p> <p>* இன்று காலை புதுக்சேரி வந்தார்.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/a2f56612-4c22-429f-bad4-eac4a1479e70">என் தலையே பிளந்திருக்கும்.. மம்தா பானர்ஜியின் கார் மீது தாக்குதல் - மேற்கு வங்கத்தில் பரபரப்பு</a></p><p>*போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த கட்சித் ஊழியரின் குடும்பத்தினரை மம்தா சந்திக்க சென்றபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது.</p><p>*திருடி என்றும் கொள்ளையர்களின் தலைவி என்றும் முழக்கமிட்டதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.</p> <p><a href="https://maalai-malar.quintype.com/story/7204c776-3f5f-47f3-a66a-e1c9aded98c8">சீனாவை சுத்துப் போட்ட 'டால்பின்' புயல்.. 10 லட்சம் மக்கள் முகாம்களுக்கு மாற்றம் - 1,400 விமானங்கள் ரத்து</a></p><p>*சீனாவுக்கு வருவதற்கு முன், ஜப்பானின் ஒகினாவா தீவுகளை டால்பின் புயல் தாக்கியது.</p><p>*ஆகஸ்ட் 12 வரை தொடர்ந்து மிகக் கனமழை மற்றும் நிலச்சரிவு அபாயம் இருக்கும் என சீன வானிலை மையம் எச்சரித்துள்ளது.</p><h3> </h3><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rank-list-for-mbbs-and-bds-courses-in-tamil-nadu-to-be-released-tomorrow">தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு-அமைச்சர் அருண்ராஜ்... </a></p><p>*நாளை மதியம் 3 மணியளவில் அமைச்சர் தரவரிசை வெளியிட்ட பின்னர், மாணவர்கள் தங்களது தரவரிசையை tnmedicalselection.net மற்றும் tnhealth.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் விண்ணப்ப எண் மற்றும் விவரங்களை உள்ளிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/698d0cc7-b3f4-4343-b134-726625ea4077">ஏர் இந்தியா விமான பயணிகள் காயமடைந்த சம்பவத்தில் திருப்பம் - போதைப்பொருள் பயன்படுத்தினாரா விமானி? - சோதனையில் ஷாக்</a></p><p>*விமானி மருத்துவக் காரணங்களுக்கான உட்கொண்ட வழக்கமான மருந்துகள் இந்த முடிவுக்குக் காரணமா?</p><p>*விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்ட விமானிகள் பணி செய்ய இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/suresh-gopi-travels-by-auto-as-official-car-delayed-in-alappuzha-event">கார் வர தாமதமானதால் ஆட்டோவில் பயணித்த மத்திய மந்திரி சுரேஷ்கோபி!</a></p><p>* கார் தாமதமானதால் மந்திரி சுரேஷ்கோபி ஆட்டோவில் பயணம் செய்தார்</p><p>* கூட்டம் காரணமாக கார் தொலைவில் நிறுத்தப்பட்டதாக போலீசார் விளக்கம் அளித்தனர்</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/spain-to-replace-ambassador-to-india">இந்தியாவுக்கான தூதரை மாற்ற ஸ்பெயின் முடிவு!</a></p><p>* நிதி முறைகேடு புகாரால் ஜுவான் அன்டோனியோவை மாற்ற ஸ்பெயின் முடிவு</p><p>* கனடா தூதர் ஆல்பிரடோவை இந்தியாவுக்கு நியமிக்க ஸ்பெயின் இந்தியாவிடம் ஒப்புதல் கேட்டது</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/iran-supreme-leader-mojtaba-khamenei-alive-new-video-ends-health-rumours">வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.. ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனியின் வீடியோ வெளியீடு!</a></p><p>*"மொஜ்தபா காமெனியின் மரணம் குறித்து விரைவில் செய்தி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை" - தி ஜெருசலேம் போஸ்ட்</p><p>*ரகசிய இடத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/fifteen-new-judges-take-oath-at-madras-high-court">சென்னை உயர் நீதிமன்றத்தின் 15 புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்றனர்!... </a></p><p>*சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 15 நீதிபதிகளின் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது.  </p><p>*15 நீதிபதிகள் பதவியேற்ற நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 66-ஆக உயர்ந்துள்ளது. காலியிடங்கள் 9-ஆக குறைந்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/rajasthan-village-celebrates-first-government-bus-like-festival" rel="nofollow">சுதந்திரம் அடைந்து 79 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த அரசு பேருந்து வசதி..! திருவிழா போல் கொண்டாடிய கிராம மக்கள்!</a></p><p>* சுதந்திரம் கிடைத்து 79 ஆண்டுகள் ஆகியும் இதுவரை அரசு பஸ் வசதி கிடைக்கவில்லை.</p><p>*  மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமென்றால் சுமார் 10 கி.மீ. தூரத்திற்கு நடந்தே பயணித்துள்ளார்கள்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/puducherry/amit-shah-says-modis-goal-is-stronger-union-territories" rel="nofollow">யூனியன் பிரதேசங்களை பலப்படுத்துவதே பிரதமர் மோடியின் இலக்கு- அமித்ஷா</a></p><p>* மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக புதுச்சேரி வந்தார்.</p><p>* மத்திய அமைச்சர் அமித்ஷா இரவு கவர்னர் மாளிகையிலேயே தங்கி  ஓய்வு எடுத்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/sarathkumar-urges-supporters-nattamai-family-tattoos">'நாட்டாமை குடும்பம்' என பச்சை குத்திக் கொள்ள ஆதரவாளர்களுக்கு நடிகர் சரத்குமார் வேண்டுகோள்!... </a></p><p>*தனது ஆதரவாளர்களை ஒருங்கிணைக்கவும் அவர்களுக்குள் ஒரு பிணைப்பை உருவாக்கவும் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.</p><p>*எனது சிந்தனையில் திடீரென தோன்றியதுதான் இந்த பச்சை குத்தும் எண்ணம். 'நாட்டாமை குடும்பம் என கையில் பச்சை குத்தினால் நன்றாக இருக்கும் என தோன்றியது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/houthi-group-attacks-saudi-arabia-israeli-media-report">சவுதி அரேபியாவின் மிகப்பெரிய எரிவாயு நிலையம் மீது தாக்குதல் நடத்திய ஹவுதி</a></p><p>* சவுதி அராம்கோவில் ஏற்பட்ட தீ விபத்தை தொழில்துறை பாதுகாப்பு தீயணைப்புக் குழுக்கள் பாதிப்பின்றி அணைத்தனர்.</p><p>* சம்பவம் தொடர்பாக உரிய அதிகாரிகள் தேவையான நடைமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/bcci-secretary-to-meet-vvs-laxman-over-player-injuries">முன்னணி வீரர்களின் காயத்தால் திணறி வரும் இந்திய அணி</a></p><p>* இந்திய அணி இலங்கையில் பயணம்செய்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.</p><p>* வீரர்களின் காயம் இந்திய கிரிக்கெட் வாரியத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/ns-chaturved-says-this-is-my-best-game-in-my-life">எனது கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த போட்டி: சதமடித்த மதுரை வீரர் சதுர்வேத் பேட்டி</a></p><p>* மதுரை பாந்தர்ஸ் அணி கோவை அணிக்கு எதிராக 240 ரன் இலக்கை எடுத்து சாதனை வெற்றி பெற்றது.</p><p>* ஆட்ட  நாயகன் விருதை குடும்பத்தினருக்கும், முக்கியமாக எனது  தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/brett-lee-admits-vaibhav-sooryavanshis-age-still-doubted-outside-india-is-he-15">எங்களுக்கு இன்னும் சந்தேகம் இருக்கு: சூர்யவன்ஷி வயது குறித்து பிரெட் லீ</a></p><p>* நடப்பு ஐபிஎல் தொடரில் 776 ரன்களை குவித்த சூர்யவன்ஷி 4 முக்கிய விருதுகளை கைப்பற்றினார்.</p><p>* வைபவ் சூர்யவன்ஷியின் வயது குறித்து வெளிநாடுகளில் பலரும் கேள்வி எழுப்புகிறார்கள்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-bjp-tries-to-bring-back-delimitation-bill-with-50-percent-hike">50% உயர்வு என ஆசை காட்டி மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டுவர முயற்சி: மாணிக்கம் தாகூர்</a></p><p>* மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்ட தமிழ்நாட்டிற்குத் தண்டனையும், கட்டுப்படுத்தத் தவறிய வட மாநிலங்களுக்குப் பரிசும் அளிப்பது அப்பட்டமான அநீதி.</p><p>* சாதிவாரி கணக்கெடுப்பை முடிக்கும் முன்பே இதைச் செய்தால், பட்டியலின, பழங்குடியின மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு தொகுதிகளைச் சரியாகத் தீர்மானிக்க முடியாது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-slams-8-month-delay-in-power-connections-for-60000-farmers" rel="nofollow">தட்கல் திட்டத்தில் விண்ணப்பித்த 60 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்காமல் ஏமாற்றுவதா?- அன்புமணி </a></p><p>*  தவெக அரசு பதவியேற்ற நிலையில், இலவச மின் இணைப்பு வழங்குவதற்கான பணிகளை தீவிரப்படுத்தியிருக்க வேண்டும்.</p><p>* 60,120 உழவர்களுக்கும் உடனடியாக வேளாண் இலவச மின் இணைபை வழங்க வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/puducherry/10-police-officers-faint-at-amit-shah-event-in-puducherry" rel="nofollow">அமித்ஷா பங்கேற்ற நிகழ்ச்சியில் காவலர்கள் அடுத்தடுத்து மயக்கம்- 10 பேர் மருத்துவமனையில் அனுமதி</a></p><p>* அமைச்சர் அமித்ஷாவுக்கு காவல் துறையின் சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.</p><p>* வெளியால் மயக்கமடைந்த காவலர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதி.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-high-court-15-new-judges-sworn-in-today" rel="nofollow">சென்னை உயர்நீதிமன்றத்தில் 15 புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு </a></p><p>*  15 நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.</p><p>* 15 நீதிபதிகள் பதவியேற்கும் நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 66-ஆக உயர்வு.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-mobile-phones-inside-temples-from-september-1-minister-ramesh">செப்டம்பர் 1 முதல் கோவில்களுக்குள் செல்போன் எடுத்து செல்ல தடை: அமைச்சர் ரமேஷ்</a></p><p>* திமுக ஆட்சியில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தை தனி நபர்கள் பெயர் மாற்றம் செய்தனர்.</p><p>* செப்டம்பர் 1-க்குள் முதல் நிலை கோவில்கள் அனைத்திலும், மொபைல் கவுண்டர்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-pays-tribute-to-quit-india-movement-heroes">வெள்ளையனே வெளியேறு இயக்க தினம்: போராட்டத்தில் பங்கேற்றவர்களை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி</a></p><p>* ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற செய் அல்லது செத்து மடி என்ற உறுதியை இந்தியர்களுக்கு வழங்கியது.</p><p>* 'வெள்ளையனே வெளியேறு' எனும் இயக்கம் 1942-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/savarkar-question-in-kerala-school-quiz-sparks-big-political-row">பள்ளி வினாடி வினாவில் சாவர்க்கர் குறித்த கேள்வி: கேரளாவில் வெடித்தது அரசியல் சர்ச்சை</a></p><p>* பொதுக் கல்வித்துறை அமைச்சர் என். சம்சுதீன் இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p>* சாவர்க்கரின் "உண்மையான வரலாற்றை" மறைத்து அவரைப் பெருமைப்படுத்தும் முயற்சிகள் நடைபெறுவதாக பினராயி விஜயன் விமர்சனம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/puducherry/amit-shah-receives-warm-reception-in-puducherry" rel="nofollow">பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை.. புதுச்சேரியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு உற்சாக வரவேற்பு!</a></p><p>* புதுச்சேரியில் குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி விருது வழங்கும் விழா நடைபெறுகிறது.</p><p>* விழாவில் குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி விருதை அமித்ஷா வழங்கி கவுரவிக்கிறார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/iran-makes-new-strait-demands-uae-says-ship-was-targeted">ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம்: அமெரிக்காவுக்கு ஈரான் புதிய நிபந்தனை..!</a></p><p>* அமெரிக்கா இனி ஒருபோதும் ஈரானை அச்சுறுத்தக்கூடாது.</p><p>* போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு ஈரானுக்கு முழுமையான இழப்பீடு" வழங்க வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/ashmita-chaliha-won-the-title-in-korea-mastesr-badminton">கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் அஷ்மிதா சலிஹா</a></p><p>* கொரியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் தொடர் கொரியாவில் நடந்து வருகிறது.</p><p>* இந்திய வீராங்கனைகள் பேட்மிண்டன் தொடரில் சிறந்து விளங்குவது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/turkiye-says-defence-pact-with-saudi-arabia-and-pak-is-not-aimed-at-iran-or-any-other-country">சவுதி அரேபியா, பாகிஸ்தான் உடனான பாதுகாப்பு ஒப்பந்தம் ஈரானை குறிவைத்தது அல்ல: துருக்கி சொல்கிறது</a></p><p>* பொதுவான அச்சுறுத்தல் என்று வரையறுக்கும் வகையில் நாங்கள் எதையும் எழுதவோ அல்லது அதில் கையெழுத்திடவோ இல்லை. </p><p>* எங்களைத் தாக்காத எந்தவொரு நாடும் எங்களுக்கு இலக்கு அல்ல.</p>]]></content:encoded></item><item><title>‘நடப்பு கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்பில்லை’ - திருச்சி சிவா எம்.பி.!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/unlikely-that-the-constituency-delimitation-bill-will-be-tabled-during-the-current-session-trichy-siva-mp</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/unlikely-that-the-constituency-delimitation-bill-will-be-tabled-during-the-current-session-trichy-siva-mp#comments</comments><guid isPermaLink="false">344e7243-6424-45b0-959c-443d174ad8d6</guid><pubDate>Sun, 09 Aug 2026 16:24:40 +0000</pubDate><atom:updated>2026-08-09T16:24:40.940Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>FCRA Bill,Tiruchi Siva,தொகுதி மறுவரையறை,Delimitation,திருச்சி சிவா,எஃப்சிஆர்ஏ மசோதா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/25vfo9og/New-Project-2026-08-09T214957.222.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘நடப்பு கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்பில்லை’ - திருச்சி சிவா எம்.பி.!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/25vfo9og/New-Project-2026-08-09T214957.222.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு மீண்டும் கொண்டுவர வாய்ப்பு இல்லை என திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார். </p><p>மேலும் ஏற்கனவே இதில் திமுகவின் நிலைப்பாடு என்னவென தெரிவித்துவிட்டதாகவும், மசோதாவே தாக்கலாகாதபோது ஏன் அனைத்துக் கட்சிக் கூட்டம் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>எஃப்சிஆர்ஏ மசோதா தொடர்பாக ஏஎன்ஐ நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர்.,</p><p>“நாங்கள் எஃப்சிஆர்ஏ-வை எதிர்க்கிறோம். ஏனெனில், அதில் உள்ள பெரும்பாலான விதிகள் சிறுபான்மை கிறிஸ்தவ சமூகத்திற்கு எதிரானவை. இதுதொடர்பாக உள்துறை அமைச்சரிடம் பேசப்பட்டுள்ளது. திமுக இந்த மசோதாவை எதிர்ப்பதுடன், இதனை நாடாளுமன்றக் கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்துவோம்.” என்றார்.</p><p>தொடர்ந்து தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக தவெக அரசு கூட்டிய அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் கூட்டம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர்.,</p><p>“திமுக அக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ஏனெனில், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் ஏற்கனவே உரிய நடவடிக்கைகளை திமுக மேற்கொண்டுள்ளது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தபோது, ​​தென்னிந்திய மாநிலங்களின் முதலமைச்சர்களை கூட்டி எதிர்ப்பை தெரிவித்தார். ஏனெனில், தொகுதி மறுவரையறையால் தென்னிந்திய மாநிலங்களே அதிகம் பாதிக்கப்படக்கூடிய சூழல் இருந்தது.</p><p>நாடாளுமன்றத்தில் தென்னிந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கும் வகையிலான எந்தவொரு நடவடிக்கையையும் அரசு மேற்கொண்டால் அதை எதிர்ப்போம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. </p><p>நாங்கள் எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக நின்றோம். அந்த மசோதா வந்தபோது அதற்கு எதிராக வாக்களித்தோம், அது தோல்வியடைந்தது. பாஜக சந்தித்த முதல் தோல்வி அதுதான் என்று நான் கருதுகிறேன். தற்போதைய நிலையில், வரவிருக்கும் கூட்டத்தொடர் நாட்களில் அரசு இந்த மசோதாவை நிகழ்ச்சி நிரலில் சேர்க்கவில்லை; அதைக் கொண்டுவருவதற்கான வாய்ப்பும் இல்லை.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>அமலாக்கத்துறை இயக்குநர் ராகுல் நவீன்  பதவிக் காலம் ஓராண்டு நீட்டிப்பு.. யார் இவர்? </title><link>https://www.maalaimalar.com/news/national/ed-director-tenure-extended-rahul-navin-to-head-enforcement-directorate-till-august-2027</link><comments>https://www.maalaimalar.com/news/national/ed-director-tenure-extended-rahul-navin-to-head-enforcement-directorate-till-august-2027#comments</comments><guid isPermaLink="false">4a1fa83d-df49-4f0b-85c0-f346c2fc14ca</guid><pubDate>Sun, 09 Aug 2026 16:15:11 +0000</pubDate><atom:updated>2026-08-09T16:15:11.265Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,Enforcement Directorate,central government,அமலாக்கத்துறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/gwcoq563/tn-71.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராகுல் நவீன்  ]]></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல் நவீன்  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/gwcoq563/tn-71.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">அமலாக்கத்துறையின் </a>இயக்குநர் ராகுல் நவீனின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டிற்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. </p><p>இதன் மூலம் அவர் 2027 ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை இப்பதவியில் தொடர்வார்.  </p><p>மத்திய பணியாளர், மக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவின்படி, அமைச்சரவையின் நியமனக் குழு  இந்த நீட்டிப்பிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. </p><p>இதன்படி ராகுல் நவீனின் ஓய்வுபெறும் தேதி 2026 ஜூலை 31 ஆக இருந்த அது ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. </p><p>கூடுதல் பணிக்காலத்துடன் சேர்த்து அவர் ஆகஸ்ட் 13, 2027 வரை அந்த பதவியில் நீடிப்பார். </p><h2>ராகுல் நவீன்</h2><p>பீகார் மாநிலத்தை சேர்ந்த 59 வயதான ராகுல் நவீன், 1993ஆம் ஆண்டு பேட்ச் இந்திய வருமானத்துறை (IRS) அதிகாரி ஆவார்.</p><p>ஐஐடி கான்பூரில் பிடெக் மற்றும் எம்டெக் பட்டங்களையும், ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள ஸ்வின்பர்ன் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டமும் பெற்றுள்ளார்.</p><p>வருமான வரித் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் இவர்.</p> <h2>அமலாக்கத்துறை பொறுப்புகள்</h2><p>2019 நவம்பரில் அமலாக்கத்துறையில் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட் இவர் 2020 நவம்பரில் அமலாக்கத்துறையின் சிறப்பு இயக்குநராக பொறுப்பேற்றார்.</p><p>செப்டம்பர் 15, 2023 இல் அமலாக்கத்துறையின் இடைக்கால இயக்குநராக பொறுப்பேற்றார்.</p><p>ஆகஸ்ட் 14, 2024 இல் முழுநேர அமலாக்கத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டார்.</p><p>விதிகளின்படி, அமலாக்கத்துறை இயக்குநர் பதவிக்கு ஆரம்பத்தில் 2 ஆண்டுகள் நியமனமும், அதைத் தொடர்ந்து 3 முறை தலா ஓராண்டு பணி நீட்டிப்பும் வழங்கப்படலாம்.</p><p>இதன் அடிப்படையில் தற்போது ஓராண்டு நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள் - அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/paddy-bags-lying-unprocured-in-delta-districts-ttv-dhinakaran-condemns-the-government</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/paddy-bags-lying-unprocured-in-delta-districts-ttv-dhinakaran-condemns-the-government#comments</comments><guid isPermaLink="false">17108896-44df-4f5a-b33a-c927aa354a07</guid><pubDate>Sun, 09 Aug 2026 15:57:27 +0000</pubDate><atom:updated>2026-08-09T15:57:27.083Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,நெல் மூட்டைகள்,தவெக அரசு,tvk government,sacks of paddy</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/5onek0ip/New-Project-2026-08-09T212707.122.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள் - அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/5onek0ip/New-Project-2026-08-09T212707.122.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்டா மாவட்டங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக அரசு கொள்முதல் செய்யவேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்.,</p><p>“தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் கிடப்பில் போட்டு வைத்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையை அளிக்கின்றன.</p><p>இயற்கையின் சவால்களையும், இடர்பாடுகளையும் எதிர்கொண்டு, மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் மகத்தான பணியில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், அரும்பாடுபட்டு விளைவித்த நெல்லை உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாமல் காலம் தாழ்த்திக் கொண்டிருப்பதே, அவ்வப்போது பெய்யும் மழையில் நெல் மூட்டைகள் நனைந்து வீணாவதற்கு அடிப்படை காரணமாக அமைந்துள்ளது.</p><p>விவசாயப் பெருமக்களின் உழைப்பை மதித்து அவர்களின் நெல்லை உரிய நேரத்தில் கொள்முதல் செய்ய வேண்டிய அரசு நிர்வாகம், நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கு ஏற்றிச் செல்ல வாகனங்கள் இல்லை எனக்கூறி விவசாயிகளை அலைக்கழித்து, நெல் கொள்முதல் செய்வதில் காட்டும் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது.</p><p>காவிரி நீர் பற்றாக்குறை, கடுமையான வறட்சி, பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்றம், பொய்த்து போன குறுவை சாகுபடி ஆகியவற்றால் உணவு உற்பத்தி குறைந்து அரிசி விலையும் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், விவசாயிகள் விளைவித்த நெல்லை கூட உடனடியாக கொள்முதல் செய்ய முடியாதது தவெக அரசின் நிர்வாகத் திறமையின்மையை வெளிப்படுத்துகிறது.</p><p>எனவே, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள் அனைத்தையும் உடனடியாக கொள்முதல் செய்திடுவதோடு, அவற்றை முறைப்படி கிடங்குகளுக்கும், அரவை ஆலைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன். ” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா வெற்றி!</title><link>https://www.maalaimalar.com/sports/india-wins-warm-up-match-against-sri-lanka</link><comments>https://www.maalaimalar.com/sports/india-wins-warm-up-match-against-sri-lanka#comments</comments><guid isPermaLink="false">b52465be-e957-4e6b-84d6-42d2012b0bea</guid><pubDate>Sun, 09 Aug 2026 15:44:42 +0000</pubDate><atom:updated>2026-08-09T15:44:42.901Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா,இலங்கை,பயிற்சி ஆட்டம்,warmup match,india vs sri lanka</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/2802wtp2/New-Project-2026-08-09T211246.694.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா வெற்றி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/2802wtp2/New-Project-2026-08-09T211246.694.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இலங்கை XI அணிக்கு எதிரான 3 நாட்கள் கொண்ட பயிற்சி கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. </p><p>கொழும்பில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் மூலம், ஆகஸ்ட் 15 ஆம் தேதி தொடங்கவுள்ள டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்திய அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.</p><p>இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதல் போட்டி ஆக.15ம், இரண்டாவது போட்டி ஆக.23ம் நடைபெற உள்ளன. இதற்கு முன்னதாக பயிற்சிப் போட்டிகள் கடந்த 7ம் தேதி தொடங்கின.</p><p>இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 363 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ய, இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 357 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.</p><p>இந்திய அணியைக் காட்டிலும் 6 ரன்கள் என்ற முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இலங்கை அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்திருக்கையில் டிக்ளேர் செய்தது.</p><p>இதனைத்தொடர்ந்து 207 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>மெட்ரோவில் பெண் பயணிகளை ரகசிய படம் பிடித்து வசமாக சிக்கிய ஆசாமி - வைரல் வீடியோ </title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-metro-outrage-man-secretly-records-women-passengers-video-sparks-public-anger</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-metro-outrage-man-secretly-records-women-passengers-video-sparks-public-anger#comments</comments><guid isPermaLink="false">35be2591-5df7-4568-a011-d4915a7b167e</guid><pubDate>Sun, 09 Aug 2026 15:40:53 +0000</pubDate><atom:updated>2026-08-09T15:40:53.893Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வைரல் வீடியோ,Metro Rail,delhi,viral video,டெல்லி,மெட்ரோ ரெயில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/aohl8201/tn-70.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டெல்லி மெட்ரோ]]></media:title><media:description type="html"><![CDATA[ டெல்லி மெட்ரோ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/aohl8201/tn-70.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்த பெண் பயணிகளை நபர் ஒருவர் ரகசியமாக வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>மாலையில் லோக் நாயக் பவன் மெட்ரோ நிலையத்திலிருந்து கிரீன் பார் நோக்கிச் செல்லும் ரெயிலில் இரு பெண்கள் பயணம் செய்துள்ளனர்.</p><p>அப்போது அருகில் அமர்ந்திருந்த நடுத்தர வயது நபர் ஒருவர், தங்களை ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதாக அந்தப் பெண்களுக்குச் சந்தேகம் எழுந்துள்ளது.</p><p>தன்னை பெண்கள் கவனிப்பதை உணர்ந்த பிறகும், அந்த நபர் தொடர்ந்து அவர்களை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.</p><p>சந்தேகமடைந்த பெண்கள் அந்த நபருடன் வாக்குவாதம் செய்து, அவரது மொபைல் போனை காட்டுமாறு வற்புறுத்தியுள்ளனர்.</p> <h2>வாக்குவாதம்</h2><p>தான் வீடியோ எதுவும் எடுக்கவில்லை என மறுத்த அந்த நபர், அவர்களுக்கு முன்னாலேயே அவசர அவசரமாகத் தனது போனில் இருந்த சில புகைப்படங்களையும் வீடியோக்களையும் டெலிட் செய்துள்ளார்.</p><p>டெலிட் செய்த பிறகு, போனில் எதுவும் இல்லை எனக் கூறி அவர்களிடம் போனைக் காட்டியுள்ளார்.</p><p>ஆனால், சாதுரியமாகச் செயல்பட்ட அந்தப் பெண்கள், போனின் ரீசைக்கிள் பின்-ஐ சோதித்தபோது, தங்களை ரகசியமாக எடுத்த வீடியோ அங்கு இருந்ததைக் கண்டு பிடித்துள்ளனர்.</p> <h2>வைரல்</h2><p>அந்த நபரை அந்த இரு பெண்கள் தட்டிக் கேட்கும் வீடியோ காட்சி உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B"> வைரலாகி </a>வருகிறது.</p><p>ரெயிலில் சக பயணிகள் யாரும் அந்த நபரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருந்ததையும் பலரும் விமர்சித்து வருகின்றனர்.</p><p>இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதா என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.</p> <figure><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DbxwM-XTCDE/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:658px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DbxwM-XTCDE/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a></div></blockquote>
<script async src="//platform.instagram.com/en_US/embeds.js"></script></figure>]]></content:encoded></item><item><title>இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் - சாய் சுதர்சனுக்கு பதில் களமிறங்கும் சர்ஃப்ராஸ் கான்!</title><link>https://www.maalaimalar.com/sports/test-series-against-sri-lanka-sarfaraz-khan-to-step-in-for-sai-sudharsan</link><comments>https://www.maalaimalar.com/sports/test-series-against-sri-lanka-sarfaraz-khan-to-step-in-for-sai-sudharsan#comments</comments><guid isPermaLink="false">04bf0796-db62-43f6-a765-89be24f5f91a</guid><pubDate>Sun, 09 Aug 2026 15:28:05 +0000</pubDate><atom:updated>2026-08-09T15:28:05.715Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Sarfaraz Khan,சாய் சுதர்சன்,sai sudharsan,டெஸ்ட் தொடர்,Sri Lanka Test series,சர்ஃப்ராஸ் கான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/p6uqhju3/New-Project-2026-08-09T204356.006.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் - சாய் சுதர்சனுக்கு பதில் களமிறங்கும் சர்ஃப்ராஸ் கான்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/p6uqhju3/New-Project-2026-08-09T204356.006.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதல் போட்டி ஆக.15ம் தேதி காலேயில் தொடங்கவுள்ளது. இரண்டாவது போட்டி ஆக.23ம் தேதி கொழும்பில் நடைபெற உள்ளது.</p><p>இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து காயமடைந்து தொடரில் இருந்து வெளியேறி வருகின்றனர். முதலில் நிதிஷ் குமார் ரெட்டி, ராணா, பும்ரா என பந்துவீச்சாளர்கள் வெளியேறிய நிலையில், தற்போது தொடக்க ஆட்டக்காரரான சாய் சுதர்சன் கால் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார்.</p><p>இந்நிலையில் சாய் சுதர்சனுக்கு பதில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக சர்ஃப்ராஸ் கான் சேர்க்கப்பட்டுள்ளார்.</p><p>இலங்கைக்கு எதிரான இந்திய அணி: </p><p>ஷுப்மன் கில் (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மானவ் சுதர்,  முகமது சிராஜ், குர்னூர் ப்ரார், தேவ்தத் படிக்கல், சரன்ஸ் ஜெயின், ஆகிப் நபி, சர்ஃப்ராஸ் கான். </p>]]></content:encoded></item><item><title>
பீகாரில் போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி கைது.. மக்களை ஏமாற்றி ரூ.100 கோடி சொத்து சேர்த்து சொகுசாக வாழ்ந்தது அம்பலம்</title><link>https://www.maalaimalar.com/news/national/fake-ias-officer-arrested-bihar-man-held-for-100-crore-fraud-luxury-cars-and-assets-seized</link><comments>https://www.maalaimalar.com/news/national/fake-ias-officer-arrested-bihar-man-held-for-100-crore-fraud-luxury-cars-and-assets-seized#comments</comments><guid isPermaLink="false">ee77dbc2-e1d7-4f17-85b6-94bf17d7014a</guid><pubDate>Sun, 09 Aug 2026 15:24:01 +0000</pubDate><atom:updated>2026-08-09T15:24:01.282Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பீகார்,Bihar,ஐஏஎஸ் அதிகாரி,IAS officer,மோசடி,Fraud</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/y1xk3frc/tn-68.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மணீஷ் குமார் குப்தா]]></media:title><media:description type="html"><![CDATA[ மணீஷ் குமார் குப்தா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/y1xk3frc/tn-68.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">பீகாரில் </a>மக்களை ஏமாற்றி பணம் பறித்து வந்த போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>கைது செய்யப்பட்ட நபர் பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தின் கோக்ரி பகுதியைச் சேர்ந்த மணீஷ் குமார் குப்தா என்கிற சிக்கு ஆவார். </p> <h2>கைது</h2><p>நேற்று இரவு கோக்ரி காவல் எல்லைக்குட்பட்ட ஜமால்பூர் சந்தைப் பகுதியில், இந்திய அரசு என பெயர் பலகை பொருத்திய வாகனத்தில் வளம் வந்த மணீஷ் குப்தாவை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் பிடித்தனர்.</p><p>போலீசார் விசாரித்தபோது, பதற்றமடையாமல் தனது மொபைல் போனில் இருந்த ஒரு போலி ஐஏஎஸ் ஐடி கார்டைக் காட்டியிருக்கிறார்.</p><p>மேலும், தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் ரகசிய ஏஜென்ட் என்று காவல்துறையினரிடமே வாதிட்டுள்ளார்.</p><p>அவர் பொய் சொல்வது உறுதி செய்யப்பட்டதும், ககாரியா எஸ்பி பானு பிரதாப் சிங் உத்தரவின் பேரில், அவரது வீட்டை போலீசார் சோதனையிட்டனர்.</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/t7g11w6j/tn-69.jpg" /></figure><h2>ஆடம்பரம்</h2><p>அவரது வீட்டின் வெளியே இந்திய அரசு என்ற பலகை பொருத்தப்பட்ட இரண்டு ஆடம்பர கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன.</p><p>மேலும், மணீஷ் குப்தாவின் வீட்டிலிருந்து டெஸ்லா உள்ளிட்ட சொகுசு கார்கள், பல்வேறு வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் 23 கிரெடிட் கார்டுகள் மற்றும் 8 டெபிட் கார்டுகள், 4 வங்கிகளின் செக் புக்குகள், 5 ஐபோன்கள், விலையுயர்ந்த வெளிநாட்டு மதுபானங்கள், 2 கலைமான் கொம்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.</p><p>மக்களை மிரட்டியும் ஏமாற்றியும் மணீஷ் குப்தா சட்டவிரோத சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்களை சேர்த்துள்ளதாக ககாரியா எஸ்பி பானு பிரதாப் சிங் தெரிவித்துள்ளார். அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>மணி மியூல் மோசடி - 48 மணிநேரத்தில் தமிழ்நாடு முழுவதும் 837 சைபர் குற்றவாளிகள் கைது!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/money-mule-scam-837-cyber-criminals-arrested-across-tamil-nadu-within-48-hours</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/money-mule-scam-837-cyber-criminals-arrested-across-tamil-nadu-within-48-hours#comments</comments><guid isPermaLink="false">2923d7a2-a6ea-4214-aa62-5827427c92a1</guid><pubDate>Sun, 09 Aug 2026 15:09:55 +0000</pubDate><atom:updated>2026-08-09T15:09:55.629Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Cybercrime,Money Mule Scam,மணி மியூல் மோசடி,இணையக் குற்றம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/94bif579/New-Project-2026-08-09T203932.943.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மணி மியூல் மோசடி - 48 மணிநேரத்தில் தமிழ்நாடு முழுவதும் 837 சைபர் குற்றவாளிகள் கைது!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/94bif579/New-Project-2026-08-09T203932.943.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு முழுவதும் ரூ. 545.27 கோடி அளவிலான “மணி மியூல்” ஆன்லைன் வங்கி கணக்கு மோசடி தொடர்பாக, 48 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில் 837 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். </p><p>ஆக.6 மற்றும் 7 என இருநாட்களில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p>இணையக் குற்றப் புகாரளிப்பு இணையதளத்தில் பதிவான 9,804 புகார்களின் அடிப்படையில் இந்த மாபெரும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p>இந்த மோசடி தொடர்பாக ஏற்கனவே பதியப்பட்ட 601 வழக்குகளுடன் மேலும் 157 புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். </p><p>குற்றவாளிகளிடமிருந்து 204 மொபைல் போன்கள், 185 சிம் கார்டுகள், 114 வங்கி கணக்கு புத்தகங்கள், 29 காசோலை புத்தகங்கள், 73 ஏடிஎம் கார்டுகள், 4 லேப்டாப்கள் மற்றும் ரூ.1.02 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.</p><p>மேலும் விசாரணைக்காக 155 மொபைல் எண்கள் மற்றும் 58 வங்கி கணக்கு விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.</p><h2>"மணி மியூல்" மோசடி என்றால் என்ன?</h2><p>சைபர் குற்றவாளிகள் ஆன்லைன் மூலம் பொதுமக்களை ஏமாற்றிப் பெறும் சட்டவிரோதப் பணத்தை, நேரடியாகத் தங்களின் சொந்தக் கணக்கிற்கு மாற்ற மாட்டார்கள். அதற்குப் பதிலாக, மற்ற நபர்களின் வங்கி கணக்குகளை வாடகைக்கோ அல்லது கமிஷன் தொகை கொடுத்தோ பெற்று, அதன் மூலம் பணப் பரிவர்த்தனைகளைச் செய்து பணத்தை முறைகேடாகப் பிரித்து எடுப்பார்கள். </p><p>இவ்வாறு பயன்படுத்தப்படும் கணக்குகளே 'மியூல் கணக்குகள்' எனப்படுகின்றன.</p><p>கமிஷன் பணத்திற்கு ஆசைப்பட்டு உங்களது வங்கி கணக்கு விவரங்கள், ஏடிஎம் கார்டுகள் அல்லது செக் புத்தகங்களை மற்றவர்களிடம் பகிரவோ, விற்கவோ வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் திறந்தால் அணுசக்தி ஒப்பந்த திட்டத்தைக் கைவிட டிரம்ப் பரிசீலனை!</title><link>https://www.maalaimalar.com/news/world/if-iran-opens-hormuz-strait-trump-may-drop-nuclear-deal-plan</link><comments>https://www.maalaimalar.com/news/world/if-iran-opens-hormuz-strait-trump-may-drop-nuclear-deal-plan#comments</comments><guid isPermaLink="false">c73c5bc6-d4b7-479f-90df-d438beb55e68</guid><pubDate>Sun, 09 Aug 2026 15:04:50 +0000</pubDate><atom:updated>2026-08-09T15:04:50.835Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>trump,டிரம்ப்,ஈரான்,Iran,ஹார்முஸ் ஜலசந்தி,Strait of Hormuz</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/sg1q5bp3/us.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Trump]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/sg1q5bp3/us.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய கிழக்கில் அமெரிக்கா-ஈரான் இடையிலான போர் பதற்றமும் மோதலும் நீடித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் தொடர்பான தனது மூலோபாயத்தில் முக்கிய மாற்றம் செய்ய ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>ஈரானுடன் விரிவான அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொள்வதை விட, உலகளாவிய கச்சா எண்ணெய் வர்த்தகத்திற்கு மிகவும் முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதையே தனது முதன்மை இலக்காக டிரம்ப் கருதுவதாகக் கூறப்படுகிறது.</p><h2>வெற்றி <strong>அறிவிப்புத்</strong> திட்டம்</h2><p>சர்வதேச கப்பல் போக்குவரத்துக்காக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முழுமையாக மீண்டும் திறந்தால், அணுசக்தி ஒப்பந்தம் எதுவும் இல்லாமலேயே ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா வெற்றி பெற்றதாக அறிவித்து, போரை முடிவுக்குக் கொண்டுவர டிரம்ப் தனது அதிகாரிகளுடன் ஆலோசித்துள்ளார்.</p><h2>அணுசக்தி <strong>மையங்கள்</strong> அழிவு</h2><p>கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி தளங்கள் அழிக்கப்பட்டதால், ஈரான் மீண்டும் அணுஆயுதத் திட்டத்தைத் தொடங்குவது கடினம் என்றும், அமெரிக்காவின் ராணுவ அச்சுறுத்தல் காரணமாக ஈரான் பின்வாங்கியுள்ளதாகவும் டிரம்ப் கருதுகிறார்.</p><h2>உடன்பா<strong>டு எட்டப்பட்டால் வில</strong>க்கு</h2><p>ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து சீரானால், அமெரிக்கா ஈரானுக்கு எதிராக விதித்துள்ள கடற்படை முற்றுகையை நீக்கி, தற்போதைய போர் நிறுத்தத்தை நீட்டிக்க டிரம்ப் தயாராக இருப்பதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாகத் திறந்துவிட ஈரான் விதித்துள்ள புதிய நிபந்தனைகள் இந்த ஒப்பந்தச் செயல்பாட்டை முடக்கியுள்ளன. </p><h2>பொருளா<strong>தாரத் தடை</strong>கள் நீக்கம்</h2><p>அமெரிக்காவின் தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களுக்குப் பில்லியன் கணக்கான டாலர்களை அமெரிக்கா இழப்பீடாக வழங்க வேண்டும். ஈரான் மீதான அனைத்துப் பொருளாதாரத் தடைகளையும் முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள அமெரிக்க ராணுவப் படைகளை உடனடியாக வெளியேற்ற வேண்டும். ஈரானிய கடற்பரப்பில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் கடற்படை முற்றுகையை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.</p><h2>எண்ணெய் வி<strong>லை</strong> தாக்கம்</h2><p>உலகளவில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவில் ஐந்தில் ஒரு பங்கு (20%) ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. இந்த வழித்தடம் மூடப்பட்டதால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து பணவீக்கம் அதிகரித்துள்ளது.</p><h2>சவூதி அ<strong>ரேபியாவி</strong>ன் தலையீடு</h2><p>போரை மேலும் விரிவுபடுத்துவது உலகப் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதிக்கும் என்பதால், நிலைமையைச் சீராக்கச் சவூதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் உள்ளிட்ட பிராந்திய தலைவர்கள் டிரம்புடன் தீவிரப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களை வீட்டுக்கு அழைத்து பாராட்டிய பிரதமர் மோடி - இன்ஸ்டாவில் செல்பி வீடியோ</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-meets-medal-winning-boxers-prime-minister-interacts-with-indian-commonwealth-champions-in-delhi</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-meets-medal-winning-boxers-prime-minister-interacts-with-indian-commonwealth-champions-in-delhi#comments</comments><guid isPermaLink="false">d8328c4a-224b-4a08-8608-9f8c0ee4d884</guid><pubDate>Sun, 09 Aug 2026 14:47:33 +0000</pubDate><atom:updated>2026-08-09T14:47:33.512Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,வீடியோ,Video,பிரதமர் மோடி,2026 காமன்வெல்த் போட்டி,2026 Commonwealth Games</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/1vi3yn5k/tn-66.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மோடி ]]></media:title><media:description type="html"><![CDATA[ மோடி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/1vi3yn5k/tn-66.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/sports/2026-commonwealth-games-conclude-notable-achievements">2026 காமன்வெல்த் போட்டிகளில்</a> வென்று நாடு திரும்பிய இந்திய வீரர், வீராங்கனைகளை பிரதமர் மோடி சந்தித்துள்ளார். </p><h2>சந்திப்பு </h2><p>இன்று (ஆகஸ்ட் 9) டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் வீரர் வீராங்கனைகளை நேரில் வரவேற்ற பிரதமர் மோடி, அவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் அனுபவங்களைக் கேட்டறிந்தார். </p><p>இந்தச் சந்திப்பின் வீடியோ ஒன்றை  தனது எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில்  மோடி பகிர்ந்துள்ளார்.  </p><h2>வீடியோ</h2><p>வீடியோவில், செல்பி கேமராவைப் பிடித்திருக்கும், தங்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை சாக்ஷி சவுத்ரி, பிரதமரை சில வார்த்தைகள் பேசுமாறு கோருகிறார்.</p><p>அதற்குப் புன்னகையுடன் பதிலளித்த பிரதமர் மோடி, "Jo Khelega, Wo Khilega" (விளையாடுபவர் எவரோ, அவரே பிரகாசிப்பார்). Always Cheer For Bharat, பாரத மாதா கி ஜே! என்று கூறுவது இடம்பெற்றுள்ளது.</p> <h2>2026 காமன்வெல்த் போட்டிகள்</h2><p>காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெற்ற2026 காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா மொத்தம் 39 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 4வது இடத்தைப் பிடித்தது.</p><p>39 பதக்கங்களில் 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் அடங்கும்.</p><p>இம்முறை இந்தியாவின் வெற்றியில் குத்துச்சண்டை மிக முக்கியப் பங்கு வகித்தது.</p><p>குத்துச்சண்டையில் மட்டும் இந்தியா 7 தங்கம், 3 வெள்ளி உட்பட 10 பதக்கங்களை ள்ளிக் குவித்து வரலாற்று சாதனை படைத்தது.</p><p>சாக்ஷி சவுத்ரி, பிரீதி பவார், ஜாஸ்மின் லம்போரியா உள்ளிட்டோர் தங்கன் வெல்ல, லவ்லினா போர்கோஹெய்ன் உள்ளிட்டோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.</p><p>காமன்வெல்த் வரலாற்றில் ஒரே தொடரில் ஒரு நாடு குத்துச்சண்டையில் வென்ற அதிகபட்ச தங்கப் பதக்கம் இதுவே ஆகும்.</p>]]></content:encoded></item><item><title>கூகுள் செயற்கை நுண்ணறிவு பிரிவில் அதிரடி மாற்றம்: சுந்தர் பிச்சை அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/world/google-ai-division-dramatic-reshuffle-sundar-pichai-announces</link><comments>https://www.maalaimalar.com/news/world/google-ai-division-dramatic-reshuffle-sundar-pichai-announces#comments</comments><guid isPermaLink="false">3771eb0e-93df-4c1a-b611-2b4387f28caa</guid><pubDate>Sun, 09 Aug 2026 14:46:36 +0000</pubDate><atom:updated>2026-08-09T14:46:36.762Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சுந்தர் பிச்சை,Sundar Pichai,Google AI,Jeff Dean,கூகுள் செயற்கை நுண்ணறிவு,ஜெஃப் டீன் விலகல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/03xgrt46/google.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sundar Pichai  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/03xgrt46/google.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் முன்னணி இடத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும், அதிநவீன தொழில்நுட்பங்களை விரைவுபடுத்தவும் கூகுள் நிறுவனம் தனது உயர் தலைமைப் பொறுப்புகளில் பெரும் மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக கூகுள் தலைமைச் செயல் அதிகாரி (CEO) சுந்தர் பிச்சை ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.</p><h2>ஜெஃப் <strong>டீன் விலக</strong>ல்</h2><p>கூகுள் நிறுவனத்தின் 30-வது ஊழியராக இணைந்து, கடந்த 27 ஆண்டுகளாக தேடுபொறி, கூகுள் மேப்ஸ் மற்றும் கூகுள் பிரைன் உள்ளிட்ட முக்கியத் திட்டங்களின் கட்டமைப்புக்கு வித்திட்ட ஜெஃப் டீன் நிறுவனத்திலிருந்து விலகுகிறார். அவர் கூகுளின் மூத்த ஆராய்ச்சியாளர் சஞ்சய் கெமாவாத் உடன் இணைந்து புதிய சுதந்திரமான தொண்டு நிறுவனத்தைத் தொடங்கவுள்ளார்.</p><h2>டெமிஸ் ஹசாபிஸு<strong>க்கு புதிய</strong> பதவி</h2><p>கூகுள் டீப்மைண்ட் அமைப்பின் இணை நிறுவனரான டெமிஸ் ஹசாபிஸ், Alphabet நிறுவனத்தின் முதன்மை அறிவியலாளராகவும், DeepMind அமைப்பின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் AGI மற்றும் அறிவியல் ஆராய்ச்சிகளில் முழு கவனம் செலுத்துவார்.</p><h2>கொரே <strong>கவுக்சியோக்லு</strong>வுக்கு பதவி உயர்வு</h2><p>கூகுள் டீப்மைண்டின் தற்போதைய தலைமைத் தொழில்நுட்ப அதிகாரியான கொரே கவுக்சியோக்லு, சீனியர் வைஸ் பிரசிடென்டாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இவர் ஜெமினி மாடல்கள், AI ஆராய்ச்சிகள் மற்றும் செயலிகளின் அன்றாட செயல்பாடுகளை நேரடியாகத் தலைமையேற்று வழி நடத்துவார்.</p><h2>சுந்தர் பிச்<strong>சை சுட்</strong>டிக்காட்டிய முன்னேற்றங்கள்</h2><p>* கூகுள் உருவாக்கியுள்ள Gemini AI செயலியைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மாதத்திற்கு 95 கோடியைத் தாண்டியுள்ளது.</p><p>* திறந்த மூலக் குறியீடு கொண்ட Gemma மாடல்கள் 90 கோடிக்கும் அதிகமான பதிவிறக்கங்களைப் பெற்றுள்ளன.</p><h2>சுந்தர் <strong>பிச்சையின்</strong> கருத்து</h2><p>"செயற்கை நுண்ணறிவுத் துறையில் நாங்கள் அடைந்துள்ள வேகம் மிக முக்கியமானது. இந்த மாற்றங்களின் மூலம் எங்களது AI பயணத்தையும் AGI மற்றும் அறிவியல் ஆராய்ச்சிகளையும் அடுத்தகட்டத்திற்கு விரைவாகக் கொண்டு செல்ல முடியும்" என்று தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>‘பியார் பிரேமா கல்யாணம்’ படத்தின் 2வது பாடல் வெளியானது!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-second-song-from-the-movie-pyaar-prema-kaadhal-has-been-released</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-second-song-from-the-movie-pyaar-prema-kaadhal-has-been-released#comments</comments><guid isPermaLink="false">95897d6d-9868-4026-9c6a-0ec51eb49f1a</guid><pubDate>Sun, 09 Aug 2026 14:30:35 +0000</pubDate><atom:updated>2026-08-09T14:30:35.137Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Yuvan Shankar Raja,யுவன் சங்கர் ராஜா,இளன்,elan,Pyaar Prema Kalyanam,பியார் பிரேமா கல்யாணம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/n9ic357e/New-Project-2026-08-09T195001.903.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘பியார் பிரேமா கல்யாணம்’ படத்தின் 2வது பாடல் வெளியானது!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/n9ic357e/New-Project-2026-08-09T195001.903.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பியார் பிரேமா காதல், ஸ்டார் உள்ளிட்ட படங்களை இயக்கிய இளன், புதிதாக இயக்கி, கதாநாயகனாக அறிமுகமாகும் படம் பியார் பிரேமா கல்யாணம். இப்படத்தில் இயக்குநர் எலனுக்கு ஜோடியாக சான்வி மேகனா நடித்துள்ளார்.</p><p>இப்படத்தில் ராதிகா சரத்குமார் , யோகி பாபு , எம்.எஸ். பாஸ்கர் , கீதா கைலாசம் , இளங்கோ குமரவேல் , செந்தில் மற்றும் மாறன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். </p><p>யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம், ஆக.21ம் தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. </p><p>இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடலான மாப்பிள்ளை சிங்கம் இன்று வெளியாகி உள்ளது. முதல் பாடலான அட்ராசிட்டி சில தினங்களுக்கு முன்பு வெளியான நிலையில், இன்று 2வது பாடல் வெளியாகி உள்ளது. </p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/AzuImbY2Hk4"></iframe></figure>]]></content:encoded></item><item><title>லஷ்கர் இ தொய்பா முக்கிய தளபதி உணவகத்தில் சாப்பிட்ட பின் மயங்கி விழுந்து மர்ம மரணம்</title><link>https://www.maalaimalar.com/news/world/lashkar-commander-qari-saeed-abdul-aziz-dies-mysteriously-in-pakistan-amid-poisoning-suspicions</link><comments>https://www.maalaimalar.com/news/world/lashkar-commander-qari-saeed-abdul-aziz-dies-mysteriously-in-pakistan-amid-poisoning-suspicions#comments</comments><guid isPermaLink="false">23146837-fefa-4c0a-8775-32fb05cf61e3</guid><pubDate>Sun, 09 Aug 2026 14:13:28 +0000</pubDate><atom:updated>2026-08-09T14:13:28.362Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Pakistan,Terrorist,பயங்கரவாதி,Lashkar-e-Taiba,லஷ்கர் இ தொய்பா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/2icdlqon/tn-65.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அப்துல் அஜிஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அப்துல் அஜிஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/2icdlqon/tn-65.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாகிஸ்தானில் <a href="https://www.maalaimalar.com/topic/lashkar-e-taiba">லஷ்கர் இ தொய்பா</a> பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி காரி சயீத் அப்துல் அஜிஸ் மர்ம மரணம் அடைந்துள்ளான். </p><p> அப்துல் அஜிஸ், நேற்று, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள குபா மசூதிக்கு தொழுகைக்காகச் செல்லும் வழியில்,  உணவகம் ஒன்றில் உணவு அருந்தியுள்ளான்.</p><p>மசூதியின் நுழைவாயிலை அடைந்த சில நிமிடங்களிலேயே அவன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தான். </p><p>அவனது மரணத்திற்கான துல்லியமான காரணம் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், உணவில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.</p> <h2>லஷ்கர் தளபதி</h2><p>கொல்லப்பட்ட காரி சயீத் அப்துல் அஜிஸ், லஷ்கர் இ தொய்பா அமைப்பின் முக்கியமான பிரிவுக்குத் தலைமையாக செயல்பட்டு வந்தார்:</p><p>ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நடக்கும் துப்பாக்கிச்சூடு மற்றும் மோதல்களில் கொல்லப்படும் பயங்கரவாதிகளின் குடும்பங்களுக்கு நிதி மற்றும் இதர உதவிகளை வழங்கும் பிரிவை இவனே நிர்வகித்து வந்தான்.</p> <h2>தொடரும் மர்ம மரணங்கள்</h2><p>இந்தச் சம்பவம் நடப்பதற்குச் சில நாட்களுக்கு முன்புதான், லஷ்கர் அமைப்பின் முக்கியச் செயல்பாட்டாளரான ரிஸ்வான் ஹனிப் ஒரு வீடியோவைப் பகிர்ந்திருந்தான்.</p><p>அதில் அவன், கடந்த 3 முதல் 4 ஆண்டுகளில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் அடையாளம் தெரியாத நபர்களால் தங்களது அமைப்பைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட முக்கிய உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பேசியிருந்தான்.</p><p>பெஷாவர், கராச்சி, ராவல்பிண்டி, ராவலாகோட் மற்றும் முசாபராபாத் ஆகிய நகரங்களில் இந்தத் தொடர் படுகொலைகள் நடந்துள்ளன.</p><p>இந்த ரிஸ்வான் ஹனிப் 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடையவன். அவனே பாகிஸ்தானுக்குள் தங்களது உறுப்பினர்கள் தெரியாத நபர்களால் வேட்டையாடப்படுவதை பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளான்.</p>]]></content:encoded></item><item><title>“பாஜகவின் விரக்திக்கு இதுவே சாட்சி”: மம்தா கார் மீதான தாக்குதலுக்கு கெஜ்ரிவால் கண்டனம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/this-is-proof-of-the-bjps-desperation-kejriwal-condemns-attack-on-mamatas-car</link><comments>https://www.maalaimalar.com/news/national/this-is-proof-of-the-bjps-desperation-kejriwal-condemns-attack-on-mamatas-car#comments</comments><guid isPermaLink="false">5e0d5c83-03e0-4bca-b935-60a742915a0e</guid><pubDate>Sun, 09 Aug 2026 14:11:20 +0000</pubDate><atom:updated>2026-08-09T14:11:20.838Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,மம்தா பானர்ஜி,Mamata Banerjee,Arvind Kejriwal,அரவிந்த் கெஜ்ரிவால்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/xofknukq/New-Project-2026-08-09T194059.368.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “பாஜகவின் விரக்திக்கு இதுவே சாட்சி”: மம்தா கார் மீதான தாக்குதலுக்கு கெஜ்ரிவால் கண்டனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/xofknukq/New-Project-2026-08-09T194059.368.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் கார் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பாஜகவை விமர்சித்துள்ள அவர், மம்தா பானர்ஜியுடன் உறுதியாக நிற்பதாகவும் தெரிவித்துள்ளார். </p><h2>மம்தா கார்மீது தாக்குதல்</h2><p>போலீஸ் காவலில் உயிரிழந்த திரிணாமுல் காங்கிரஸ் தொண்டரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க வட 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஹல்சிஹாஹர் எனும் கிராமத்திற்கு சென்றுள்ளார் மம்தா பானர்ஜி. அப்போது வழியில் திரண்டிருந்த கும்பல், அவரது வாகனத்தின் மீது கற்கள், தண்ணீர்ப் பாட்டில்கள் மற்றும் காலணிகளை வீசி எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். </p><p>சம்பவம் தொடர்பாக, காரின் ஜன்னல்கள் மூடப்பட்டிருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இல்லையெனில் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கும் என மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார். </p><p>இந்நிலையில் தோல்வி பயத்தின் காரணமாகவே எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது பாஜக இத்தகைய வன்முறைகளையும், தாக்குதல்களையும் ஏவி விடுவதாக கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்.,</p><p>இந்தச் சம்பவம் முற்றிலும் அதிர்ச்சியளிக்கிறது. மம்தா அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர். அவரது காரைத் தாக்கும் இந்த குண்டர்களின் துணிச்சலைப் பாருங்கள். நாங்கள் உங்களுடன் உறுதியாக நிற்கிறோம். </p><p>மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களை அச்சுறுத்தவும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தவும் ஆளும் பாஜக திட்டமிட்டே சட்டம்-ஒழுங்கு நிலையைச் சீர்குலைத்துள்ளது. மோடி அரசின் செல்வாக்கு சரிந்து வருவதால், பாஜகவின் பதற்றமும், விரக்தியும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஜார்க்கண்ட் JPSC தேர்வு ரத்து-மாணவர்கள் CBI விசாரணைக்கு தீவிர கோரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/national/jharkhand-jpsc-exam-cancelled-students-demand-cbi-probe</link><comments>https://www.maalaimalar.com/news/national/jharkhand-jpsc-exam-cancelled-students-demand-cbi-probe#comments</comments><guid isPermaLink="false">20856042-e794-4010-9cc2-584a0928f80b</guid><pubDate>Sun, 09 Aug 2026 13:55:28 +0000</pubDate><atom:updated>2026-08-09T13:55:28.591Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Jharkhand,ஜார்க்கண்ட்,Jharkhand JPSC exam,JPSC exam cancelled,JPSC தேர்வு ரத்து,JPSC தேர்வு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/wrjtwvse/jarkand.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jharkhand JPSC exam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/wrjtwvse/jarkand.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜார்க்கண்ட் அரசு தேர்வாணையம் (JPSC) மற்றும் பணியாளர் தேர்வாணையம் (JSSC) நடத்திய அரசுத் தேர்வுகளில் பெரும் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, அம்மாநில மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மாணவர் பிரதிநிதிகளுடன் ஜார்க்கண்ட் அரசு நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, அரசு பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டது.</p><h2>14-வது JPSC தே<strong>ர்வு ரத்து</strong></h2><p>சர்ச்சைக்குரிய 14-வது JPSC சிவில் சர்வீஸ் தேர்வை ரத்து செய்ய அரசு அதிகாரப்பூர்வமாக சம்மதித்துள்ளது. முறைகேட்டின் குற்றவியல் அம்சங்களை மாநில குற்றப்புலனாய்வுத் துறையும், சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தொடர்புகளை அமலாக்கத்துறையும் விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டது. </p><p>குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விரைவு நீதிமன்றம் மூலம் விசாரணை நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. எதிர்காலத் தேர்வுகளை வெளிப்படைத்தன்மையுடன் நடத்த IIT-ISM, IIM ராஞ்சி மற்றும் XLRI அமைப்புகளின் நிபுணர்களைக் கொண்ட சீர்திருத்தக் குழு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>மாணவர்கள் <strong>போராட்டத்தை கை</strong>விட மறுப்பது ஏன்?</h2><p>அரசு தங்கள் கோரிக்கைகளில் 98 சதவீதத்தை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்த போதிலும், மாணவர்கள் போராட்டத்தை திரும்பப் பெற மறுத்துவிட்டனர். மாநில அமைப்புகளின் விசாரணை மீது நம்பிக்கையில்லை என்றும், மத்திய புலனாய்வு அமைப்பு மூலமே சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் மாணவர்கள் உறுதியாக உள்ளனர். JSSC-CGL தேர்வில் நடந்த முறைகேடுகளையும் கண்டித்து, அந்தத் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.</p><h2>அரசின் <strong>விளக்க</strong>ம்</h2><p>CGL தேர்வு உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியாகிப் பணியமர்த்தலும் முடிந்துவிட்டதால், அதைத் தன்னிச்சையாக ரத்து செய்ய முடியாது என அரசு தெரிவித்துள்ளது. இதற்கு மாற்றாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் கண்காணிப்புக் குழு அமைக்க அரசு முன்வந்ததை மாணவர்கள் நிராகரித்தனர்.</p><h2>சட்டமன்<strong>ற முற்று</strong>கை</h2><p>தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் ஓயாது என அறிவித்துள்ள மாணவர்கள், நாளை ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளனர். இத்தேர்வு முறைகேடுகள் தொடர்பாக CBI விசாரணை நடத்தக் கோரியும், தேர்வை ரத்து செய்யக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காவிரி டெல்டா கொள்முதல் நிலையங்களில் ரூ.10 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்: உடனடி கொள்முதல் அவசியம் - அன்புமணி வலியுறுத்தல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-tn-govt-on-cauvery-delta-paddy-crisis</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-tn-govt-on-cauvery-delta-paddy-crisis#comments</comments><guid isPermaLink="false">8c3d3d5b-9418-4dd8-85f7-c4ae17c13563</guid><pubDate>Sun, 09 Aug 2026 13:15:11 +0000</pubDate><atom:updated>2026-08-09T13:15:11.378Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,டெல்டா விவசாயிகள்,நெல்கொள்முதல்,DeltaFarmers,CauveryDelta,DPCIssues,PaddyProcurement</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/lbe7wodg/Anbumani-Ramadoss" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காவிரி டெல்டா கொள்முதல் நிலையங்களில் ரூ.10 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்: உடனடி கொள்முதல் அவசியம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/lbe7wodg/Anbumani-Ramadoss?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் &nbsp;நெல் கொள்முதல் செய்யப்பட்டாமல், மூட்டை மூட்டைகளாக மழைக்காலத்தில் தேங்கி கிடப்பதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்.,</p><h2>டெல்டா மாவட்ட விவசாயிகள் பாதிப்பு</h2><p>தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டிருப்பதால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 10 லட்சத்திற்கும் கூடுதலான நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. </p><p>உழவர்கள் அரும்பாடுபட்டு அறுவடை செய்த நெல்லை குறித்த காலத்தில் கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடுகளை அரசு செய்யாதது கண்டிக்கத்தக்கது. </p><p>தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம், அம்மாப்பேட்டை, திருவையாறு உள்ளிட்ட பகுதிகளிலும், திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, குடவாசல், நன்னிலம், வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளிலும் அமைந்துள்ள கொள்முதல் நிலையங்களில் தான் இந்த அவல நிலை நிலவுகிறது. </p><p>ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கு கொண்டு செல்ல சரக்குந்துகள் வராததால் ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கு அனுப்ப முடியாதது தான் புதிதாக வரும் மூட்டைகளை கொள்முதல் செய்ய முடியாததற்கு காரணம் என்று கூறப்படுகிறது. </p><p>நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை அங்கிருந்து கிடங்குகளுக்கும், கிடங்குகளில் இருந்து அரவை ஆலைகளுக்கும் அனுப்பும் பணி சங்கிலித் தொடர் போல நடைபெற வேண்டும். </p><p>ஆனால், இந்த சங்கிலித் தொடர் அறுபட்டு கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அங்கேயே அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. </p><p>இதற்கு காரணம் அரசின் அலட்சியமும். திட்டமிடல் இல்லாமையும் தான். காவிரி பாசன மாவட்டங்களில் அடுத்த சில நாள்களுக்கு மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள் உடனடியாக கொள்முதல் செய்யப்பட்டு கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படாவிட்டால் அவை முழுமையாக வீணாகி விடும். </p><p>வறட்சி காரணமாக குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் நடப்பாண்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை உயர்ந்துள்ளன. </p><p>இத்தகைய சூழலில் அரும்பாடு பட்டு விளைவிக்கப்பட்ட நெல் மூட்டைகள் வீணாவதை அரசு அனுமதிக்கக் கூடாது.கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கும், கிடங்குகளில் உள்ள மூட்டைகளை அரவை ஆலைகளுக்கும் போர்க்கால அடிப்படையில் அரசு அனுப்பி வைக்க வேண்டும். அதன் மூலம் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதலை விரைவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இந்திய பாக்ஸ் ஆபீஸில் வரலாற்றுச் சாதனை: ரூ.400 கோடியைக் கடந்தது &apos;SPIDER-MAN: BRAND NEW DAY&apos;</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/spider-man-brand-new-day-sets-historic-rs-400-crore-record-in-india</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/spider-man-brand-new-day-sets-historic-rs-400-crore-record-in-india#comments</comments><guid isPermaLink="false">cfeb9af1-7d17-4a7f-a44c-cf3749064b7a</guid><pubDate>Sun, 09 Aug 2026 13:11:45 +0000</pubDate><atom:updated>2026-08-09T13:11:45.345Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tom Holland,Zendaya,டாம் ஹாலண்ட்,Spider-Man: Brand New Day,ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே,ஜெண்டாயா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/cfwofy1z/spider.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ SPIDER-MAN: BRAND NEW DAY]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/cfwofy1z/spider.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டாம் ஹாலண்ட் மற்றும் ஜெண்டாயா நடிப்பில் வெளியான ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’  திரைப்படம், இந்திய பாக்ஸ் ஆபீஸில்  ரூ.400 கோடி வசூல் சாதனையை அதிகாரப்பூர்வமாகக் கடந்துள்ளது. இதன் மூலம், இந்திய வரலாற்றிலேயே மிக அதிக வசூல் செய்த ஹாலிவுட் திரைப்படம் என்ற புதிய மைல்கல்லை இத்திரைப்படம் எட்டியுள்ளது. &nbsp; </p><h2>இந்தி<strong>யாவில் வசூல்</strong> மழை </h2><p>முன்னதாக ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்'  மற்றும் 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' ஆகிய படங்கள் வைத்திருந்த அனைத்து கால சாதனைகளையும் 'ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே' தகர்த்தெறிந்துள்ளது. வெளியான வெறும் 8-9 நாட்களுக்குள் இந்திய பாக்ஸ் ஆபீஸில் ரூ.400 கோடி மொத்த வசூலையும், ரூ.330 கோடியை விட அதிகமான நிகர வசூலையும் ஈட்டி சாதனை படைத்துள்ளது. </p><p>ஆங்கிலத்தில் ரூ.182 கோடிக்கு மேல் வசூலித்துள்ள நிலையில், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மாநில மொழிகளின் டப்பிங் பதிப்புகளும் தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடி மாபெரும் வசூலை ஈட்டித் தந்துள்ளன. &nbsp;</p><h2>இந்தியாவில் அதிக வசூல் <strong>செய்த டாப் ஹா</strong>லிவுட் திரைப்படங்கள்</h2><p>ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே-ரூ.400+ கோடி</p><p>அவதார்: தி வே ஆஃப் வாட்டர்-ரூ.378.22 கோடி</p><p>3. அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்-ரூ.373.22 கோடி</p><p>4. அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்-ரூ.227.43 கோடி</p><h2>உலகளா<strong>விய சாதனை</strong>கள் </h2><p>இந்தியாவில் மட்டுமல்லாது உலகளவிலும் இத்திரைப்படம் $1.188 பில்லியன் (சுமார் ₹10,000 கோடிக்கும் மேல்) வசூலித்து 2026-ஆம் ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமாக உருவெடுத்துள்ளது. அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்திற்குப் பிறகு உலகளவில் அதிவேகமாக 1 பில்லியன் டாலர் வசூலை எட்டிய 2-வது படம் என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது. &nbsp; </p><p>டெஸ்டின் டேனியல் க்ரெட்டன் இயக்கத்தில், மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் 38-வது திரைப்படமாக உருவாகியுள்ள இத்திரைப்படம், இரண்டாம் வாரத்திலும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால் இந்தியாவில் ரூ.500 கோடி வசூல் என்ற புதிய இலக்கை நோக்கிப் பயணித்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்த்தாய் வாழ்த்தை கட்டாயமாக்கி தனித்தீர்மானம் - நாளை சட்டப்பேரவையில் முன்மொழிகிறார் முதலமைச்சர் விஜய்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-resolution-to-make-the-tamil-thai-vazhthu-mandatory-chief-minister-vijay-to-move-the-motion-in-the-legislative-assembly-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-resolution-to-make-the-tamil-thai-vazhthu-mandatory-chief-minister-vijay-to-move-the-motion-in-the-legislative-assembly-tomorrow#comments</comments><guid isPermaLink="false">2605e40f-db5d-4958-b68b-477f2637dfbb</guid><pubDate>Sun, 09 Aug 2026 13:08:39 +0000</pubDate><atom:updated>2026-08-09T13:08:39.918Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்த்தாய் வாழ்த்து,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,தவெக அரசு,TVK Govt,Tamizh Thai Vazhthu</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/6bn864oa/New-Project-2026-08-09T183817.665.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்த்தாய் வாழ்த்தை கட்டாயமாக்கி தனித்தீர்மானம் - நாளை சட்டப்பேரவையில் முன்மொழிகிறார் முதலமைச்சர் விஜய்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/6bn864oa/New-Project-2026-08-09T183817.665.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும்நிலையில், நாளை (ஆக.10) தமிழ்த்தாய் வாழ்த்திற்கென தனித்தீர்மானம் கொண்டுவருகிறார் முதலமைச்சர் விஜய். </p><p>அதாவது மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் என அனைத்துப் பொது நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடவேண்டும் என சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. </p><p>முதலமைச்சர் விஜய் பதவியேற்பு விழாவில் தொடங்கி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவரை மாநிலத்தின் பாடல் முதலில் பாடப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. </p><p>இதனையொட்டி சமீபத்தில் பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகருக்கும் தமிழ்நாடு எம்.பி.க்கள் 21 பேர் கூட்டாக இதுதொடர்பாக கடிதம் எழுதியிருந்தனர். இந்நிலையில் தவெக தலைமையிலான தமிழ்நாடு அரசு இந்த தனித்தீர்மானத்தை முன்மொழிய உள்ளது. தீர்மானம் முன்மொழியப்பட்ட பின் அனைத்துக் கட்சிகளும் தீர்மானம் குறித்து பேசுவர். </p><p>பின்னர் ஒருமனதாக தீர்மானம் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>இதனிடையே கடந்த 2021ம் ஆண்டிலேயே தமிழ்த்தாய் வாழ்த்து மாநிலப் பாடலாக அங்கீகரிக்கப்பட்டு, பொது நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>சென்னை: கனமழையால் தரையிறங்க முடியாமல் வட்டமடித்த அமித் ஷாவின் ஹெலிகாப்டர்.. தாம்பரத்தில் தரையிறக்கம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/amit-shah-helicopter-diverted-heavy-rain-forces-landing-at-tambaram-air-force-station-instead-of-chennai-airport</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/amit-shah-helicopter-diverted-heavy-rain-forces-landing-at-tambaram-air-force-station-instead-of-chennai-airport#comments</comments><guid isPermaLink="false">2baa2ab1-aecf-417a-8fb7-db9d11f2fb15</guid><pubDate>Sun, 09 Aug 2026 13:04:48 +0000</pubDate><atom:updated>2026-08-09T13:04:48.400Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை விமான நிலையம்,அமித் ஷா,கனமழை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/5fu4ow17/tn-64.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமித் ஷா]]></media:title><media:description type="html"><![CDATA[ அமித் ஷா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/5fu4ow17/tn-64.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய உள்துறை அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/puducherry/amit-shah-says-modis-goal-is-stronger-union-territories">அமித் ஷா</a> பயணித்த ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக தாம்பரம் விமானப்படை தளத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.</p><p>புதுச்சேரி காவல் துறையின் சேவையை பாராட்டும் குடியரசுத் தலைவரின் வண்ணக் கொடி வழங்கும் விழாவில் கலந்துகொள்ள இன்று காலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுக்சேரி வந்தார். </p> <h2>விழா</h2><p>புதுச்சேரி கோரிமேடு பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட அவர், திறந்த ஜீப்பில் சென்று காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.</p><p>விழாவில், இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் சீக்கிய முறைப்படி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்ட பின்னர், குடியரசுத் தலைவரின் வண்ணக் கொடியினை காவல் துறை இயக்குநர் ஷாலினி சிங்கிடம் அமித் ஷா வழங்கி கவுரவித்தார்.</p> <h2>சென்னை வருகை</h2><p>இதையடுத்து புதுக்சேரியில் இருந்து தனி ஹெலிகாப்டரில் இன்று மதியம் 3 மணியளவில் சென்னை வந்துகொண்டிருந்தார் அமித் ஷா. ஆனால் சென்னையில் திடீரென கனமழை பெய்ததால் அவரின் ஹெலிகாப்டர் திட்டமிட்டபடி சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வந்து தரையிறங்க முடியாத சூழல் ஏற்பட்டது.</p><p>இதனால் சில நேரம் வானிலேயே வட்டமடித்த அமித் ஷாவின் ஹெலிகாப்டர்,தாம்பரம் விமானப் படைத் தளத்தில் தரையிறக்கப்பட்டது.</p><p>அங்கிருந்து கார் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு வந்து, அங்கிருந்து தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.</p> <h2>மழை</h2><p>அமித் ஷாவின் ஹெலிகாப்ட்டர் மட்டுமின்றி ல்வேறு நகரங்களில் இருந்து வந்த பயணிகள் விமானங்கள் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் தவித்தது குறிப்பிடத்தக்கது.</p><p>கடந்த சில தினங்களாகவே சென்னையில் கனமழை பெய்து வருகிறது. </p><p>நேற்று மாலை துவங்கிய மழை, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், சைதாப்பேட்டை, சேப்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, பூந்தமல்லி உள்பட சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>என் தலையே பிளந்திருக்கும்.. மம்தா பானர்ஜியின் கார் மீது தாக்குதல் - மேற்கு வங்கத்தில் பரபரப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/west-bengal-violence-mamata-banerjee-convoy-attacked-with-mud-and-stones</link><comments>https://www.maalaimalar.com/news/national/west-bengal-violence-mamata-banerjee-convoy-attacked-with-mud-and-stones#comments</comments><guid isPermaLink="false">a2f56612-4c22-429f-bad4-eac4a1479e70</guid><pubDate>Sun, 09 Aug 2026 12:35:28 +0000</pubDate><atom:updated>2026-08-09T12:35:28.521Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மம்தா பானர்ஜி,Mamata Banerjee,மேற்கு வங்கம்,trinamool congress,west bengal,திரிணாமுல் காங்கிரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/ie8n1yue/tn-63.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மம்தா பானர்ஜி]]></media:title><media:description type="html"><![CDATA[ மம்தா பானர்ஜி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/ie8n1yue/tn-63.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்க முன்னாள் முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF">மம்தா பானர்ஜி</a>யின் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் ஹல்சிஹாஹர் என்ற ஊரில் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த பிர்ஜு கியோட் என்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஊழியரின் குடும்பத்தினரை மம்தா இன்று சந்திக்க சென்றபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது.  </p><p>தகவலின்படி, மம்தா வருகையை எதிர்த்து போராட்டம் நடத்திய சிலர், அவரின் கான்வாய் காரை மறித்துள்ளனர். காரின் மீது சேற்றை வாரி இறைத்தும், கற்கள், தண்ணீர் பாட்டில்கள், காலணிகளை வீசியும் தாக்கியுள்ளனர். </p><p>மேலும் மம்தாவை வசைபாடி கோஷமிட்ட கும்பல், அவரை, திருடி என்றும் கொள்ளையர்களின் தலைவி என்றும் முழக்கமிட்டதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. </p> <h2>திரிணாமுல் ஊழியர் கஸ்டடி மரணம்</h2><p>திரிணாமுல் கட்சி ஊழியர் பிர்ஜு கியோட், முறைகேடு, பணம் பறிப்பு ஆகிய குற்றசாட்டுகளில் கைதாகி கஸ்டடியில் இருந்தார்.</p><p>அப்போது அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழநதார்.</p><p>அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக போலீஸ் தரப்பு தெரிவித்தபோதும் கஸ்டடியில் போலீசாரால் தாக்கப்பட்டு பிர்ஜு கியோட் கொல்லப்பட்டதாக அவரின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் அப்பகுதியில் போராட்டங்கள் வெடித்துள்ளன.</p> <h2>தலை பிளந்திருக்கும்</h2><p>இந்த சூழலில்தான் மம்தா இன்று ஹாலிஸ்ஹாஹருக்கு, உயிரிழந்த தொண்டரின் குடும்பத்தை சந்திக்க வருகை தந்துள்ளார்.</p><p>ஆனால் தொண்டரின் வீட்டை அடையும் முன் கும்பலால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். அவரின் வாகனம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.</p><p>போலீசார் நிலமையை கட்டுக்குள் கொண்டுவந்து மம்தாவை பத்திரமாக அவ்விடத்தில் இருந்து வெளியே அழைத்து வந்தனர்.</p><p>இதுகுறித்து குற்றம்சாட்டியுள்ள மம்தா, " போலீஸ் கஸ்டடியில் கொல்லப்பட்ட கட்சித் தொண்டரை சந்திக்க சென்றபோது என் வாகனம் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.</p><p>ஒரு வேளை கார் கண்ணாடி திறந்திருந்தால், என் தலையே பிளந்திருக்கும். காவல்துறையினர் கண் முன்னே இது நடந்தது. அவர்கள் தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்தனர். பாஜகவினருக்கு அவர்கள் பாதுகாப்பு வழங்குகின்றனர்" என தெரிவித்தார்.</p> <h2>பாஜக விளக்கம்</h2><p>இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மேற்கு வங்க பாஜக மாநில தலைவர் சமிக் பட்டாச்சார்யா, தங்கள் கட்சித் தொண்டர்கள் இதில் ஈடுபடவில்லை என மறுத்துள்ளார். பாஜக கல்வீச்சு, சேறு, செருப்பு வீச்சை ஊக்குவிக்காது என்றும் அது மேற்கு வங்கத்தின் இமேஜுக்கு களங்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>பாஜக பெயரை சொல்லி அப்படி யாராவது செய்திருந்தால் அது தவறு என்று தெரிவித்தார்.</p><p>மம்தா பானர்ஜியின் ஆட்சி காலத்தின்தான் அரசியல் எதிரிகள் மீது அரசு ஆதரவுடன் இதுபோன்ற சேறு, மை, செருப்பு வீச்சுகள் அரங்கேறியதாக அவர் விமர்சித்தார்.</p>]]></content:encoded></item><item><title>காசா அமைதித் திட்டம்: &apos;நான் பிரதமராக இருக்கும் வரை பாலஸ்தீன நாடு அமையாது&apos;-இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிரடி!</title><link>https://www.maalaimalar.com/news/world/gaza-peace-plan-no-palestinian-state-under-my-rule-netanyahu</link><comments>https://www.maalaimalar.com/news/world/gaza-peace-plan-no-palestinian-state-under-my-rule-netanyahu#comments</comments><guid isPermaLink="false">15d23bc1-cccd-4dac-9bfe-ba15be2e1cad</guid><pubDate>Sun, 09 Aug 2026 12:33:13 +0000</pubDate><atom:updated>2026-08-09T12:33:13.929Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>trump,டிரம்ப்,காசா,இஸ்ரேல்,gaza,Israel,Benjamin Netanyahu,பெஞ்சமின் நெதன்யாகு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/143r15bt/NETHAYAGU.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Benjamin Netanyahu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/143r15bt/NETHAYAGU.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தால் முன்மொழியப்பட்ட 15 அம்ச காசா அமைதித் திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளார். அத்துடன், காசாவிலோ அல்லது மேற்குக் கரையிலோ பாலஸ்தீன தனி நாடு அமைக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். </p><p>நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய நெதன்யாகு, "நான் இஸ்ரேலின் பிரதமராகப் பதவி வகிக்கும் வரை, காசாவிலோ அல்லது மேற்குக் கரையிலோ பாலஸ்தீன தனி நாடு என்ற பேச்சுக்கே இடமில்லை" எனத் தெரிவித்துள்ளார்.</p><h2>15 அம்<strong>சத் திட்டம் நிராகரிப்பு</strong></h2><p>டிரம்ப் நிர்வாகத்தின் 'அமைதி வாரியம்' தயாரித்த 15 அம்ச வரைவுத் திட்டத்தை இஸ்ரேல் ஏற்காது என நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஹமாஸ் அமைப்பு தங்களின் ஆயுதங்களை முழுமையாகவும் உண்மையாகவும் கைவிடும் வரை, காசாவில் நிலைகொண்டுள்ள இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் அங்குள்ள தங்களின் தற்போதைய நிலைகளில் இருந்து பின்வாங்காது. இஸ்ரேலியப் படைகளுக்கும் குடிமக்களுக்கும் எதிராக வரும் அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து முறியடிக்கும் பணிகளில் ராணுவம் ஈடுபடும் என உறுதியளித்துள்ளார்.</p><h2>டிரம்பின் 1<strong>5 அம்ச</strong> அமைதித் திட்டம்-ஒரு பார்வை</h2><p>அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பால் முன்வைக்கப்பட்ட இந்த வரைவுத் திட்டம், காசா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான கட்டமைப்புப் பாதையை வழங்குகிறது:</p><p>*ஹமாஸ் அமைப்பு காசாவின் சிவில் நிர்வாகப் பொறுப்புகளைப் பாலஸ்தீனத் தொழில்முறைப் பிரதிநிதிகள் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்.</p><p>*ஹமாஸ் அமைப்பின் சுரங்கப் பாதைகள், கனரக ஆயுதங்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகள் கண்டறியப்பட்டு, அந்த நிர்வாகக் குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.</p><p>*இஸ்ரேலியப் படைகளுக்கும் பாலஸ்தீனப் பகுதிகளுக்கும் இடையே கண்காணிப்புப் பணிகளைச் செய்ய சர்வதேச அமைதிப் படை நிறுத்தப்படும்.</p><p>*ஹமாஸ் ஆயுதங்களை ஒப்படைத்த பிறகு, இஸ்ரேலியப் படைகள் படிப்படியாகக் காசாவில் இருந்து வெளியேற வேண்டும்.</p><h2>ஹமாஸ் அ<strong>மைப்பின் நிபந்த</strong>னை</h2><p>அமெரிக்காவின் இந்த வரைவுத் திட்டத்திற்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்திருந்த போதிலும், ஆயுதங்களை உடனடியாக ஒப்படைக்க மறுத்துள்ளது.</p><p>* இஸ்ரேல் முதலில் தன் தாக்குதல்களை நிறுத்த வேண்டும்.</p><p>* ஷார்ம் எல்-ஷேக்கில் எட்டப்பட்ட முந்தைய ஒப்பந்தத்தின்படி இஸ்ரேல் படைகளை பின்வாங்கி, காசாவிற்குள் நிவாரணப் பொருட்களை அனுமதிக்க வேண்டும்.</p><p>* இதன் பின்னரே ஆயுதங்களைக் ஒப்படைப்பது குறித்துப் பரிசீலிக்கப்படும் என ஹமாஸ் மூத்த அதிகாரி காசி ஹமாத் தெரிவித்துள்ளார்.</p><h2>8 முஸ்<strong>லிம் நாடுகளின் கூ</strong>ட்டு எச்சரிக்கை</h2><p>அமெரிக்காவின் அமைதி முயற்சியை சீர்குலைக்கும் வகையில் இஸ்ரேல் செயல்படுவதாகக் கூறி சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, ஜோர்டான், துருக்கி, இந்தோனேசியா, பாகிஸ்தான் மற்றும் கத்தார் ஆகிய 8 முஸ்லிம் நாடுகள் கூட்டாகக் கண்டனம் தெரிவித்துள்ளன. இஸ்ரேலின் தொடர் ராணுவத் தாக்குதல்கள் மத்திய கிழக்கில் மீண்டும் போர்ச் சூழலைத் தீவிரப்படுத்தும் என்றும் அவை எச்சரித்துள்ளன.</p><p>அமெரிக்க அதிபர் டிரம்ப் இத்திட்டத்தைப் பெரிய திருப்புமுனை என வர்ணித்த போதிலும், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆகிய இரண்டு தரப்புகளும் முன்வைக்கும் முரண்பாடான நிபந்தனைகளால் அமைதித் திட்டம் பெரும் முட்டுக்கட்டையைச் சந்தித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மகேஷ் பாபு பிறந்தநாள் ஸ்பெஷல்: &apos;வாரணாசி&apos; படத்தின் &apos;ருத்ரா&apos; லுக் வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/mahesh-babu-birthday-special-varanasi-film-rudra-look-release</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/mahesh-babu-birthday-special-varanasi-film-rudra-look-release#comments</comments><guid isPermaLink="false">db9246db-6da8-450b-828f-fa4c6e9c921e</guid><pubDate>Sun, 09 Aug 2026 12:25:08 +0000</pubDate><atom:updated>2026-08-09T12:25:08.446Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பிரித்விராஜ்,வாரணாசி,varanasi,Priyanka Chopra,MaheshBabu,SSRajamouli,ராஜமௌலி,மகேஷ்பாபு,Varanasi Movie</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/2p1e2tws/MaheshBabu" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mahesh Babu ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/2p1e2tws/MaheshBabu?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் 51-வது பிறந்தநாளை முன்னிட்டு, இயக்குநர் எஸ்.எஸ். <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF">ராஜமௌலி</a> இயக்கத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81">மகேஷ் பாபு</a> நடித்து வரும் பிரம்மாண்ட  திரைப்படத்தின் மிரட்டலான 'பர்ஸ்ட் லுக்' புகைப்படங்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.</p><p>இத்திரைப்படத்தில், இதுவரை இல்லாத அளவிற்கு நீண்ட தலைமுடி மற்றும் அடர்ந்த தாடியுடன் முற்றிலும் மாறுபட்ட முரட்டுத் தோற்றத்தில் காட்சியளிக்கும் மகேஷ் பாபு, இதில் 'ருத்ரா' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2><strong>ராஜமௌலி - மகேஷ் பாபு பிரம்மாண்ட கூட்டணி</strong></h2><p>'பாகுபலி', 'ஆர்ஆர்ஆர்' போன்ற உலகத்தரம் வாய்ந்த திரைப்படங்களைக் கொடுத்த இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி, அடுத்ததாக மகேஷ் பாபுவை வைத்து இயக்கி வரும் இந்த திரைப்படத்திற்கு ‘<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF">வாரணாசி</a>’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. </p><p>சர்வதேசத் தரத்தில் ஆக்‌ஷன் அட்வென்ச்சர் பாணியில் இப்படம் உருவாகி வருக்கிறது.</p><h2><strong>அடர்ந்த காடுகளில் ‘ருத்ரா’</strong></h2><p>தற்போது வெளியாகியுள்ள புகைப்படத்தில் ஆப்பிரிக்காவின் அடர்ந்த காட்டுப் பகுதியில், பின்னணியில் ஒட்டகச்சிவிங்கிகள் நிற்க, மகேஷ் பாபு மிகவும் கம்பீரமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். </p><p>காடுகளுக்குள் சாகசப் பயணம் மேற்கொள்ளும் ஒரு ஆராய்ச்சியாளராக அவர் இப்படத்தில் வலம் வரவுள்ளார் என்பதையும் இந்தத் தோற்றம் உறுதிப்படுத்துகிறது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Fierce isn’t his only shade…<br><br>RUDHRA in <a href="https://x.com/hashtag/Varanasi?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Varanasi</a>. <a href="https://x.com/urstrulyMahesh?ref_src=twsrc%5Etfw">@urstrulyMahesh</a> <a href="https://t.co/j6SdSKBrEJ">pic.twitter.com/j6SdSKBrEJ</a></p>&mdash; rajamouli ss (@ssrajamouli) <a href="https://x.com/ssrajamouli/status/2086262300328218742?ref_src=twsrc%5Etfw">August 9, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2><strong>நட்சத்திரப் பட்டாளம் மற்றும் ரிலீஸ் தேதி</strong></h2><p>இத்திரைப்படத்தில் மகேஷ் பாபுவுடன் இணைந்து முன்னணி பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். </p><p>ஆஸ்கார் விருது வென்ற எம்.எம். கீரவாணி இப்படத்திற்கு இசையமைக்கிறார்.</p><p>இப்படத்தை புகழ்பெற்ற ஸ்ரீ துர்கா ஆர்ட்ஸ் மற்றும் ஷோயிங் பிசினஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் கே.எல். நாராயணா மற்றும் எஸ்.எஸ். கார்த்திகேயா ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றனர்.</p><p>முழுக்க முழுக்க ஐமாக்ஸ் தொழில்நுட்பத்தில் 3D வடிவில் உருவாகி வரும் இத்திரைப்படம், வரும் 2027 ஏப்ரல் 7 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சீனாவை சுத்துப் போட்ட &apos;டால்பின்&apos; புயல்.. 10 லட்சம் மக்கள் முகாம்களுக்கு மாற்றம்  -  1,400 விமானங்கள் ரத்து</title><link>https://www.maalaimalar.com/news/world/china-typhoon-alert-typhoon-dolphin-hits-zhejiang-cancels-flights-and-displaces-over-a-million</link><comments>https://www.maalaimalar.com/news/world/china-typhoon-alert-typhoon-dolphin-hits-zhejiang-cancels-flights-and-displaces-over-a-million#comments</comments><guid isPermaLink="false">7204c776-3f5f-47f3-a66a-e1c9aded98c8</guid><pubDate>Sun, 09 Aug 2026 12:09:30 +0000</pubDate><atom:updated>2026-08-09T12:09:30.766Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சீனா,ஜப்பான்,புயல்,தைவான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/dem6hygy/tn-61.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ 'டால்பின்' புயல்]]></media:title><media:description type="html"><![CDATA[ 'டால்பின்' புயல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/dem6hygy/tn-61.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>'டால்பின்' புயலால் சீனாவில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. </p><p>இன்று மாலை சீனாவின் கிழக்கே ஜெஜியாங் மாகாணத்தின் யுஹுவான் அருகே மணிக்கு 151 கி.மீ வேகத்தில் இந்த <a href="https://www.maalaimalar.com/topic/cyclone">புயல் </a>கரையை கடந்தது.</p><h2>தாக்கம் </h2><p>புயலின் தீவிரத்தால் ஷாங்காய் நகரிலுள்ள முக்கிய விமான நிலையங்களில் 1,400க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. </p><p>ஹாங்சோ விமான நிலையத்திலும் 270க்கும் மேற்பட்ட விமானங்கள்  ரத்து செய்யப்பட்டுள்ளன.</p><p>கடலோரப் பகுதிகள் மற்றும் மலைப்பாங்கான இடங்களில் இருந்து 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.</p><p>ஷாங்காய், ஜெஜியாங் மற்றும் புஜியான் மாகாணங்களில் 200க்கும் மேற்பட்ட படகு போக்குவரத்து பாதைகள் முடக்கப்பட்டுள்ளன. பல ரெயில் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.</p><p>இரண்டு வாரங்களுக்கு முன் சீனாவின் தெற்கே குவாங்டாங் மாகாணத்தைத்   'நௌல்'  என்ற புயல் தாக்கி சேதகங்களை ஏற்படுத்திய நிலையில் தற்போது 'டால்பின்' புயல் தாக்கியுள்ளது. </p><p>மத்திய மற்றும் கிழக்கு ஜெஜியாங், ஷாங்காய், அன்ஹுய் மற்றும் ஜியாங்சு ஆகிய பகுதிகளில் ஆகஸ்ட் 12 வரை தொடர்ந்து மிகக் கனமழை மற்றும் நிலச்சரிவு அபாயம் இருக்கும் என சீன வானிலை மையம் எச்சரித்துள்ளது.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/d2t8o1ap/tn-62.jpg" /></figure><h2>ஜப்பான், தைவானில் பாதிப்பு</h2><p>சீனாவுக்கு வருவதற்கு முன், ஜப்பானின் ஒகினாவா தீவுகளை டால்பின் புயல் தாக்கியது.</p><p>அங்கு மணிக்கு 216 கி.மீ வேகத்தில் வீசிய பலத்த காற்றினால் 6க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் 50,000க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.</p><p>இந்த புயலால் தைவானின் வடக்குப் பகுதியில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசியதால் 180க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் படகு சேவைகள் ரத்து செய்யப்பட்டன.</p>]]></content:encoded></item><item><title>“இ.பி.எஸ்.க்கும், எங்களுக்கும் இருப்பது ஆரோக்கியமான மோதல்தான்” - எஸ்.பி.வேலுமணி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-conflict-between-eps-and-us-is-a-healthy-one-sp-velumani</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-conflict-between-eps-and-us-is-a-healthy-one-sp-velumani#comments</comments><guid isPermaLink="false">e289da25-74c9-435a-a7fe-f792ae61a336</guid><pubDate>Sun, 09 Aug 2026 11:58:36 +0000</pubDate><atom:updated>2026-08-09T11:58:36.823Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>அதிமுக,EPS,இபிஎஸ்,AIADMK,எஸ்.பி.வேலுமணி,S.P. Velumani</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/xm2wpzg8/New-Project-2026-08-09T172817.730.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “இ.பி.எஸ்.க்கும், எங்களுக்கும் இருப்பது ஆரோக்கியமான மோதல்தான்” - எஸ்.பி.வேலுமணி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/xm2wpzg8/New-Project-2026-08-09T172817.730.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கோவை தொண்டாமுத்தூரில் இன்று அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைப்பெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி.,</p><p>“எங்களைப் பொறுத்தவரையில் அதிமுக நன்றாக இருக்க வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஜெயலலிதா இருந்தவரை ஒரு ஐந்து வருடம் அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தால், அடுத்து ஆளும் கட்சியாக வரும். ஆனால், தற்போது ஏன் ஆளுங்கட்சியாக வரவில்லை என விவாதிக்க வேண்டும் என்பதற்காகவே பொதுக்குழு கூட்டச் சொல்லி கேட்டோம். </p><p>எடப்பாடி பழனிசாமியும் கூட்டுவதாகத்தான் சொன்னார். அதேபோல தற்போது பிரச்னை வருவது ஏன்? திமுகவுடன் அதிமுக செல்லப்போகிறது என்றபோதுதான் பிரச்னை வந்தது. தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்ததற்கு எங்களை துரோகிகள் என்கிறார்கள். ஆனால், திமுக எதிர்ப்பின் காரணமாகவே தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தோம்.</p><p>அதன்பிறகு அதிமுக பொதுச் செயலாளருடன் சமாதானமாகிவிட்டோம். அதன்பிறகு கட்சி பொறுப்புகள் வழங்கியதில்தான் முரண்பட்டு இருக்கிறோம். மற்றப்படி எங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை. உரிமையோடு தலைமையுடன் போராடிக் கொண்டிருக்கிறோம். பொள்ளாச்சி ஜெயராமன் சில தவறான வேலைகளை செய்துவருகிறார். </p><p>பொள்ளாச்சி ஜெயராமன் மகனுக்கு பிரச்சனை வரும்போது நான் தான் 25 ஆயிரம் பெண்களை அழைத்துச் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினேன். நாங்கள் இப்போது திமுக எதிர்ப்பில் வலுவாக இருக்கிறோம். தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த எங்கள் மீது நடவடிக்கை எடுத்தால், திமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என்றவர்கள் மீது யார் நடவடிக்கை எடுப்பது? </p><p>நாங்கள் நியாயமாக இருக்கிறோம். வயது முதிர்வு இல்லாமல் தேவை இல்லாமல் செய்துக் கொண்டிருக்கிறார் பொள்ளாட்சி ஜெயராமன். அவர் தொடர்பான யாரும் எந்தப்பதிவும் போடாதீர்கள். இபிஎஸ்க்கும், எங்களுக்கும் ஆரோக்கியமான மோதல்தான் இருந்துவருகிறது. எல்லோருமே அவருக்கு உறுதுணையாக இருந்தவர்கள்தான்.</p><p>எடப்பாடி முதலமைச்சராக வேண்டும் என நாங்கள் பணியாற்றினோம். இப்போதும் அவர்தான் பொதுச்செயலாளர்தான்.” என தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு-அமைச்சர் அருண்ராஜ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rank-list-for-mbbs-and-bds-courses-in-tamil-nadu-to-be-released-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rank-list-for-mbbs-and-bds-courses-in-tamil-nadu-to-be-released-tomorrow#comments</comments><guid isPermaLink="false">c82d5205-55f7-477e-8024-1e7960c77764</guid><pubDate>Sun, 09 Aug 2026 11:26:12 +0000</pubDate><atom:updated>2026-08-09T11:26:12.986Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MBBS,பிடிஎஸ்,MEdical Counselling,அமைச்சர் அருண்ராஜ்,Minister Arunraj,எம்பிபிஎஸ் கலந்தாய்வு,MBBS  BDS course</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/eld52l2b/medico.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MBBS-BDS course ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/eld52l2b/medico.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் ஆகிய இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் நாளை (ஆகஸ்ட் 10) வெளியாகும் என சுகாதாரம், மருத்துவக்கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ் அறிவித்துள்ளார். இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் வழங்கப்படும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் ஆகிய மருத்துவப் படிப்புகளின் சேர்க்கை இளநிலை நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறுகிறது.</p><p>அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அரசின் ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 2026-2027ஆம் கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூலை 23ஆம் தேதி வரை பெறப்பட்டது. மாணவர்களின் கோரிக்கையை ஏற்று ஜூலை 26 முதல் 27 வரை ஒரு நாள் மட்டும் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி, இந்த கல்வியாண்டில் மருத்துவப் படிப்பில் சேர்க்கை பெற 16,199 இடங்களுக்கு 72,627 பேர் விண்ணப்பித்துள்ளனர்.</p><h2><strong>நாளை வெளியாகிறது</strong></h2><p>மாணவர்கள் விண்ணப்பித்தபோது பதிவேற்றம் செய்த சான்றிதழ்கள் தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கை குழுவின் மூலம் சரிபார்க்கப்பட்டது. மேலும், சரியான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாதவர்களுக்கு ஆகஸ்ட் 7 வரை மீண்டும் ஒரு அவகாசம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, தரவரிசை பட்டியல் எப்போது வெளியாகும் என மாணவர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். </p><p>இந்நிலையில், எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பில் சேர்க்கை பெற விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் நாளை வெளியாகும் என சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ் அறிவித்துள்ளார்.</p><h2>சரிபார்க்கு<strong>ம் முறைக</strong>ள்:</h2><p>நாளை மதியம் 3 மணியளவில் அமைச்சர் தரவரிசை வெளியிட்ட பின்னர், மாணவர்கள் தங்களது தரவரிசையை tnmedicalselection.net மற்றும் tnhealth.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் விண்ணப்ப எண் மற்றும் விவரங்களை உள்ளிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.</p><h2>கலந்தாய்வு ந<strong>டைபெ</strong>றும் நாட்கள் </h2><p>தேசிய மருத்துவ மாணவர் சேர்க்கை குழு (எம்.சி.சி) வெளியிட்டுள்ள கால அட்டவணைப்படி, வரும் 13ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை முதல் சுற்றுக் கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது. அதில் ஒதுக்கீடு பெற்றவர்கள் வரும் 28ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும். அதனைத் தொடர்ந்து, இரண்டாம் சுற்று கலந்தாய்வு இம்மாதம் 31 முதல் செப்டம்பர் 8 வரையும், மூன்றாம் சுற்றுக் கலந்தாய்வு செப்டம்பர் 16 முதல் 26 வரையும் நடைபெறும்.</p><h2>வகுப்புகள் தொடக்கம் <strong>எப்போது</strong>?</h2><p>தொடர்ந்து, நிரப்பப்படாமல் இருக்கும் இடங்களுக்கு அக்டோபர் 3 முதல் 5 வரை மேலும் ஒரு சுற்று கலந்தாய்வு நடத்தப்பட்டு நிரப்பப்படவுள்ளது. இதனையடுத்து, இந்தாண்டு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் 8ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கான முதல் சுற்றுக் கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 4 முதல் தொடங்கி நடைபெற்று வரும் சூழலில், மாநிலங்கள் அளவில் உள்ள 80 சதவீத அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 13-ஆம் தேதி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>ஏர் இந்தியா விமான பயணிகள் காயமடைந்த சம்பவத்தில் திருப்பம்  - போதைப்பொருள் பயன்படுத்தினாரா  விமானி? - சோதனையில் ஷாக்</title><link>https://www.maalaimalar.com/news/national/air-india-turbulence-phuket-delhi-flight-drops-300-feet-17-injured-and-captain-faces-psychoactive-substance-test-row</link><comments>https://www.maalaimalar.com/news/national/air-india-turbulence-phuket-delhi-flight-drops-300-feet-17-injured-and-captain-faces-psychoactive-substance-test-row#comments</comments><guid isPermaLink="false">698d0cc7-b3f4-4343-b134-726625ea4077</guid><pubDate>Sun, 09 Aug 2026 11:22:56 +0000</pubDate><atom:updated>2026-08-09T11:22:56.025Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஏர் இந்தியா,விமானி,Air India,Pilot,போதைப்பொருள்,Drugs</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/2rum5ne1/tn-60.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஏர் இந்தியா ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஏர் இந்தியா ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/2rum5ne1/tn-60.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆகஸ்ட் 4 அன்று தாய்லாந்தின் பூக்கெட்டில் இருந்து டெல்லி நோக்கி வந்த <a href="https://www.maalaimalar.com/news/national/air-india-flight-ai2379-turbulence-incident-15-injured">ஏர் இந்தியா விமானம்</a>, வந்துகொண்டிருந்தபோது நடுவானில் திடீரென டர்புலன்ஸ் காரணமாக சுமார் 300 அடி கீழே இறங்கியது. </p><h2>காயம்</h2><p>விமானம் குலுங்கியதில் அதிலிருந்த  137 பயணிகள் மற்றும் 8 பணியாளர்களில் பலருக்கு காயம் ஏற்பட்டது. </p><p>தகவலின்படி, 13 பயணிகள் மற்றும் 4 கேபின் க்ரூ உறுப்பினர்கள் உட்பட 17 பேர் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்பட்டனர். சீட் பெல்ட் அணியாததே அவர்களுக்கு காயம் ஏற்பட காரணம். </p><p>டெல்லி விமான நிலையம் வந்தடைந்த பிறகு, விமானத்தை இயக்கிய விமானிகளுக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. பிரீத் அனலைசர் பரிசோதனையில் மது அருந்தவில்லை என முடிவு வந்தது.</p><h2>போதைப்பொருள் பரிசோதனை</h2><p>இருப்பினும் சந்தேகம் தீராத நிலையில் விமான விபத்து புலனாய்வு அமைப்பு 'சைக்கோஆக்டிவ் சப்ஸ்டன்ஸ்' எனும் போதைப்பொருள் பயன்பாடு பரிசோதனை நடத்த உத்தரவிட்டது.</p><p>இந்நிலையில் விமானத்தை ஓட்டிய 30 வயதுடைய கேப்டனுக்கு நடத்தப்பட்ட இந்த போதைப்பொருள் பரிசோதனையில் பாசிட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளதாக தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>இருப்பினும் Confirmatory Test எனும் இறுதி பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே கேப்டன் மீதான குற்றச்சாட்டுகள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படும்.</p><p>விமானி மருத்துவக் காரணங்களுக்கான உட்கொண்ட வழக்கமான மருந்துகள் இந்த முடிவுக்குக் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.</p><h2>ஏர் இந்தியா விளக்கம்</h2><p>இந்த விவகாரம் குறித்துப் பேசிய ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர், "விமானிகளுக்கு வழக்கமான போதைப்பொருள் பரிசோதனை நடத்தப்பட்டது உண்மைதான்.</p><p>ஆனால், அந்தப் பரிசோதனையின் அதிகாரப்பூர்வ முடிவுகள் இன்னும் ஏர் இந்தியாவிடம் பகிரப்படவில்லை. எனவே, இது குறித்து இப்போது கருத்து தெரிவிக்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.</p><p>மேலும், விசாரணை நிலுவையில் உள்ளதால், விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்ட விமானிகள் பணி செய்ய இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் பலத்த மழை </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-heavy-rain</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-heavy-rain#comments</comments><guid isPermaLink="false">1e15d250-efca-414a-99ad-4b23ee1043f6</guid><pubDate>Sun, 09 Aug 2026 10:23:39 +0000</pubDate><atom:updated>2026-08-09T10:23:39.302Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,மழை,Chennai Rain,சென்னையில் மழை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/ry25lrui/rain.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rain]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/ry25lrui/rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>உள்ளூர் செய்திகள் (District News)</category><content:encoded><![CDATA[ <h2><strong>வானிலை ஆய்வு மையம்</strong></h2><p>சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சுமார் 5.8 கிமீ முதல் 7.6 கிமீ உயரம் வரை வட கடலோர தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.</p><h2><strong>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டம்</strong></h2><p>இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது, முதல் மிதமான மழை பெய்யக்கூடும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும், ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டது.</p><h2><strong>மழை</strong></h2><p>இந்நிலையில் எழும்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கிண்டி, வேப்பேரி, அசோக் நகர், பெரியமேடு, கோயம்பேடு, பூந்தமல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.</p><h2><strong>மக்கள் மகிழ்ச்சி</strong></h2><p>கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், திடீரென பெய்த இந்த மழையால் நகரில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>ஐதராபாத் நால்சார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: தலைமை நீதிபதி வருகைக்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/hyderabad-nalsar-convocation-students-protest-chief-justice</link><comments>https://www.maalaimalar.com/news/national/hyderabad-nalsar-convocation-students-protest-chief-justice#comments</comments><guid isPermaLink="false">a5d84e88-39b8-407c-8930-705323b2cef5</guid><pubDate>Sun, 09 Aug 2026 10:22:49 +0000</pubDate><atom:updated>2026-08-09T10:22:49.858Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Hyderabad University,ஐதராபாத்,NALSAR University,Surya Kanth,நால்சார் பல்கலைக்கழகம்,சூர்யா காந்த்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/9t8kphcq/naalsar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ NALSAR University -Surya Kanth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/9t8kphcq/naalsar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஐதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற தேசிய சட்டக் கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகத்தின் (NALSAR) 2026-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவிற்கு, இந்தியத் தலைமை நீதிபதி சூர்யா காந்தை முதன்மை விருந்தினராக அழைத்துள்ளதற்கு 450-க்கும் மேற்பட்ட இறுதி ஆண்டு மாணவர்கள் அதிகாரப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பதிவாளர் மற்றும் பேராசிரியர்களுக்கு மாணவர்கள் எழுதியுள்ள கூட்டு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விவரங்கள்,</p><h2>ஜந்தர் மந்தர் <strong>போராட்டம் மீதான</strong> விசாரணை</h2><p>ஜூலை 20, 2026 அன்று டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது மாணவர்கள் மீது நடத்தப்பட்ட காவல்துறை தாக்குதல் தொடர்பான வழக்கை தலைமை நீதிபதி சூர்யா காந்த் கையாண்ட விதம் தங்களுக்கு ஏமாற்றமளிப்பதாக மாணவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><h2>நீதிமன்றத்தி<strong>ன் அணுகுமு</strong>றை</h2><p>விசாரணையின் போது காவல்துறை வன்முறை தொடர்பான வீடியோ ஆதாரங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ள மறுத்தது மற்றும் அமைதியான வழியில் போராடிய மாணவர்கள் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் தார்மீக ரீதியாக ஏற்புடையதல்ல என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>பட்டங்களைப் <strong>பெற மறுப்பு</strong></h2><p>அரசமைப்புச் சட்ட மதிப்புகள் மற்றும் மனித உரிமைகளுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட நீதிபதியிடமிருந்து பட்டங்களைப் பெறத் தங்களுக்கு விருப்பமில்லை என்றும், விருந்தினர் முடிவை நிர்வாகம் உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p><h2>தற்போதைய <strong>நிலை</strong></h2><p>சட்டக் கல்வியில் முதன்மை நிறுவனமாக விளங்கும் நால்சார் பல்கலைக்கழக மாணவர்களின் இந்த எதிர்ப்பு நடவடிக்கை, கல்வி மற்றும் சட்ட வட்டாரங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இருப்பினும், இக்கோரிக்கை குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ முடிவையும் அறிவிக்கவில்லை.</p>]]></content:encoded></item><item><title>தனியாரிடம் ஒப்படைக்கப்படும் இந்தியாவின் 2வது ராக்கெட் ஏவுதளம் - கிளம்பும் எதிர்ப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/indias-second-rocket-launch-site-to-be-handed-over-to-the-private-sector-opposition-mounts</link><comments>https://www.maalaimalar.com/news/national/indias-second-rocket-launch-site-to-be-handed-over-to-the-private-sector-opposition-mounts#comments</comments><guid isPermaLink="false">6fcdec84-8801-4e25-8981-2ed883500973</guid><pubDate>Sun, 09 Aug 2026 10:18:26 +0000</pubDate><atom:updated>2026-08-09T10:18:26.203Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ISRO,இஸ்ரோ,குலசேகரப்பட்டினம்,SLC,IN-SPACe,இன்-ஸ்பேஸ்,சிறிய செயற்கைக்கோள் ஏவுதளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/djfrs2qy/New-Project-2026-08-09T154424.565.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தனியாரிடம் ஒப்படைக்கப்படும் இந்தியாவின் 2வது ராக்கெட் ஏவுதளம் - கிளம்பும் எதிர்ப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/djfrs2qy/New-Project-2026-08-09T154424.565.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவால் கட்டமைக்கப்பட்டு வரும், இந்தியாவின் இரண்டாவது விண்வெளி ஏவுதளத்தை தனியாரிடம் ஒப்படைப்பதற்கான நடைமுறைகளை இன்-ஸ்பேஸ் தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.</p><p>சிறிய ஏவுகணைகளை, ராக்கெட்டுகளை ஏவுவதற்கென அமைக்கப்பட்டு வரும் இந்த புதிய ஏவுதளத்தை இயக்கவும், நிர்வகிக்கவும் தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><p>சுமார் 2,233 ஏக்கர் பரப்பளவில், ரூ.986 கோடியில் உருவாகி வரும் இந்த ஏவுதளம் செயல்பாட்டுக்கு வந்தப்பிறகு, ராக்கெட்டுகளை ஏவுதல் உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் தனியார் நிறுவனங்களே மேற்கொள்ளவுள்ளன. </p><p>இதற்காக தனியார் நிறுவனங்களுக்கு தேவையான ஆரம்பகால தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு ஆதரவை இஸ்ரோ வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>2027-ல் செயல்பாட்டுக்கு வரும் ஏவுதளம்</h2><p>தற்போதுவரை இஸ்ரோ அலுவலகம், ராக்கெட் ஏவுதளக் கட்டிடம், பராமரிப்புப் பணிமனை மற்றும் ஒரே நேரத்தில் 3 ஹெலிகாப்டர்கள் தரையிறங்கக்கூடிய ஹெலிபேட் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. வரும் 2027 மார்ச் மாதத்திற்குள் இந்த ஏவுதளம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>தூத்துக்குடியிலிருந்து சுமார் 55 கி.மீ தொலைவில், கடற்கரையில் அமைந்துள்ள குலசேகரப்பட்டினம் தளம், நிலநடுக்கோட்டிற்கு அருகில் அமைந்துள்ளதால், இங்கிருந்து ஏவப்படும் சிறிய ராக்கெட்டுகள் இலங்கை வான்பரப்பைச் சுற்றி வளைக்காமல், நேரடியாகத் தெற்கு நோக்கி இந்தியப் பெருங்கடல் மேல் பாய முடியும். </p><p>இதனால் ராக்கெட்டுகளின் எரிபொருள் பெருமளவு சேமிக்கப்பட்டு, கூடுதல் எடையைச் சுமந்து செல்ல முடியும்.</p><h2>எதிர்ப்பு </h2><p>முழுக்க முழுக்க நாட்டின் பொதுத்துறை நிதியிலும், இஸ்ரோவின் தொழில்நுட்பத்திலும் உருவாக்கப்பட்டு வரும் இந்த விண்வெளி உள்கட்டமைப்பைத் தனியார் வசம் ஒப்படைக்கும் மத்திய அரசின் இந்த திடீர் முடிவிற்கு, இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் விண்வெளி ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியும், பலத்த எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>கனடாவில் இந்திய வம்சாவளி பெண் கொலை: 7 மாதங்களாக தலைமறைவாக இருந்த காதலன் கைது!</title><link>https://www.maalaimalar.com/news/world/indian-origin-woman-murdered-in-canada-boyfriend-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/world/indian-origin-woman-murdered-in-canada-boyfriend-arrested#comments</comments><guid isPermaLink="false">ceb03a0d-647e-43fc-8bb1-5412026eae1d</guid><pubDate>Sun, 09 Aug 2026 10:12:36 +0000</pubDate><atom:updated>2026-08-09T10:12:36.576Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime,கனடா,canada,டொராண்டோ,HimanshiKhurana,இந்தியபெண்கொலை,TorontoPolice,AbdulGafuri</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/nwrto5up/Canada-Crime" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Canada Crime ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/nwrto5up/Canada-Crime?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/canada">கனடா</a>வில் இந்திய வம்சாவளி பெண் ஹிமான்ஷி குரானா கொலை செய்யப்பட்ட வழக்கில், 7 மாதங்களாக சர்வதேச அளவில் தலைமறைவாக இருந்த அவரது காதலன் அப்துல் கபூரியை டொராண்டோ போலீசார் அதிரடியாகக் கைது செய்து கனடாவுக்குக் கொண்டு வந்துள்ளனர்.</p><h2>இந்தியப் பெண் பிணமாக மீட்பு:</h2><p>கனடா டொராண்டோ நகரில் வசித்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹிமான்ஷி குரானா (வயது 30) கடந்த ஆண்டு டிசம்பர் 19-ந்தேதி தனது வீட்டில் பிணமாகக் கிடந்தார். </p><p>போலீசாரின் தீவிர விசாரணையில் அவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்தை நெருங்கிய இணையரால் நிகழ்த்தப்பட்ட வன்முறை என்று போலீசார் குறிப்பிட்டிருந்தனர்.</p><h2><strong>காதலன் மீது கொலைக் குற்றச்சாட்டு:</strong></h2><p>இந்தக் கொலை வழக்கில் ஹிமான்ஷி குரானாவின் காதலனான டொராண்டோவைச் சேர்ந்த அப்துல் கபூரி மீது முதன்மைக் குற்றவாளியாக முதல் நிலை கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. </p><p>ஆனால், கொலை நடந்த உடனே அவர் போலீசில் சிக்காமல் தப்பி ஓடி தலைமறைவானார்.</p><h2><strong>புகைப்படம் வெளியீடு மற்றும் தேடுதல் வேட்டை:</strong></h2><p>தலைமறைவான அப்துல் கபூரியை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். </p><p>அவசரமாக அவரது புகைப்படத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட டொராண்டோ போலீசார், குற்றவாளி பற்றிய தகவல்களை உடனடியாக வழங்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.</p><h2><strong>7 மாதங்களுக்குப் பின் கைது:</strong></h2><p>இந்த நிலையில் தலை மறைவான 7 மாதங்களுக்கு பிறகு அப்துல் கபூரியை போலீசார் கைது செய்தனர். வேறு நாட்டுக்கு தப்பி சென்ற அவரை போலீசார் கைது செய்து கனடாவுக்கு அழைத்து வந்தனர். </p><p>அவர் எந்த நாட்டில் இருந்தார் என்பதைத் குறிப்பிடாமல், டொராண்டோ காவல்துறையின் தலைமறைவுக் குற்றவாளிகளைப் பிடிக்கும் பிரிவு மற்றும் கொலை வழக்குகளை விசாரிக்கும் பிரிவு அதிகாரிகள், அவரை கனடாவுக்குக் கொண்டுவர தேசிய, சர்வதேச காவல் அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டதாக போலீசார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. </p><p>மேலும் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>இளம் கிரிக்கெட் வீரருடன் காதலா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை மிருணாள் தாகூர்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/mrunal-thakur-slams-rumours-of-romance-with-young-cricketer-yashasvi-jaiswal</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/mrunal-thakur-slams-rumours-of-romance-with-young-cricketer-yashasvi-jaiswal#comments</comments><guid isPermaLink="false">ba785ba6-a637-41be-ad64-b881d283393a</guid><pubDate>Sun, 09 Aug 2026 09:57:10 +0000</pubDate><atom:updated>2026-08-09T09:57:10.792Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Yashasvi Jaiswal,யஷஸ்வி ஜெய்ஸ்வால்,ராக்கா,Actress Mrunal Thakur,Rakka,நடிகை மிருணாள் தாகூர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/vygk1yft/mrunal.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Actress Mrunal Thakur-Yashasvi Jaiswal ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/vygk1yft/mrunal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>'சீதா ராமம்' மற்றும் 'ஹாய் நானா' போன்ற வெற்றிப் படங்கள் மூலம் இந்திய அளவில் பிரபலமான பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர், இந்திய இளம் கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் காதலில் இருப்பதாகச் பரவிய வதந்திகளுக்கு காட்டமாகப் பதிலளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.</p><p>சமீபத்தில் மும்பை பாந்த்ராவில் உள்ள பிரபல உணவகம் ஒன்றிற்கு மிருணாள் தாகூர் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (24) ஆகிய இருவரும் தனித்தனியாக வந்து சென்றனர். இருவரின் வீடியோக்களும் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, 34 வயதான மிருணாள் தாகூரும், அவரை விட 10 வயது குறைந்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் காதலித்து வருவதாகச் சமூக வலைதளங்களில் தகவல்கள் தீயாகப் பரவின.</p><h2>மிருணாள் <strong>தாகூரின் காட்டமான</strong> விளக்கம்</h2><p>இந்த வதந்தி தொடர்பாக இணையத்தில் பதிவிடப்பட்ட வீடியோ ஒன்றின் கமெண்ட் பகுதியில் நேரடியாகப் பதிலளித்த நடிகை மிருணாள் தாகூர், தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளார். அதில், </p><p>"ப்ரோ.. கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்கள்! நாங்கள் எங்கே ஒன்றாக இருக்கிறோம் என்று காட்டுங்கள்? படித்தவர்கள் கூட இதுபோன்ற அடிப்படை ஆதாரமற்ற வதந்திகளை எப்படி உண்மையென நம்புகிறீர்கள்? நாட்டில் பேச வேண்டிய எவ்வளவோ முக்கிய விஷயங்கள் இருக்கின்றன. Gen Z தலைமுறையினரிடம் இருந்து கற்றுக் கொண்டு, பயனுள்ள நல்ல விஷயங்களில் கவனம் செலுத்தி வீடியோக்களை உருவாக்குங்கள், அப்போது தான் நிறைய வியூஸ் கிடைக்கும்" என்று பதிலடி கொடுத்துள்ளார்.</p><h2>திரைத்து<strong>றைப் பய</strong>ணம்</h2><p>தென்னிந்திய மற்றும் ஹிந்தி சினிமாக்களில் பரபரப்பாக நடித்து வரும் மிருணாள் தாகூர், அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் 'ராக்கா' படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே கடந்த காலங்களில் நடிகர் தனுஷுடன் இவரை இணைத்து பரப்பப்பட்ட வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட நிலையில், தற்போது கிரிக்கெட் வீரருடனான இந்த வதந்தியையும் அவர் நேரடியாக மறுத்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மீண்டும் திரையில் த்ரிஷா - விஜய் ஜோடி: திருப்பாச்சி மறுவெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/trisha-vijay-pairing-back-on-screen-thirupaachi-re-release</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/trisha-vijay-pairing-back-on-screen-thirupaachi-re-release#comments</comments><guid isPermaLink="false">236a3e15-9756-4661-8769-4299530ec7bc</guid><pubDate>Sun, 09 Aug 2026 09:47:04 +0000</pubDate><atom:updated>2026-08-09T09:47:04.536Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,trisha,த்ரிஷா,Thirupaachi,திருப்பாச்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/vyf3ww3q/New-Project-2026-08-09T151457.469.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மீண்டும் திரையில் த்ரிஷா - விஜய் ஜோடி - திருப்பாச்சி மறுவெளியீடு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/vyf3ww3q/New-Project-2026-08-09T151457.469.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இயக்குநர் பேரரசு இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பசுபதி, மல்லிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 2005ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றப் படம் திருப்பாச்சி. தனது முதல் படத்திலேயே ஹிட் கொடுத்தார் இயக்குநர் பேரரசு.</p><p>விஜய் மற்றும் நடிகை த்ரிஷா கெரியரிலும் இது முக்கிய வெற்றிப் படமாக அமைந்தது. இந்நிலையில் இப்படம் அக்.1ம் தேதி மறுவெளியீடு செய்யப்பட்ட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. முன்னரே இதன் மறுவெளியீடு தொடர்பான தகவல்கள் வெளியான நிலையில், தற்போது வெளியீட்டு தேதி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதன்மூலம் நடிகர்கள் விஜய் மற்றும் த்ரிஷாவின் ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>மானிய விலை அரிசியில் ரூ.22,000 கோடி ஊழல்.. டெல்லி பாஜக அரசு மீது ஆம் ஆத்மி பரபரப்பு குற்றசாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-bjp-govt-accused-of-diverting-subsidised-rice-to-private-firm-in-22000-crore-scam</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-bjp-govt-accused-of-diverting-subsidised-rice-to-private-firm-in-22000-crore-scam#comments</comments><guid isPermaLink="false">a6308916-fed0-4250-a671-bebd8e8ed15a</guid><pubDate>Sun, 09 Aug 2026 09:40:17 +0000</pubDate><atom:updated>2026-08-09T09:40:17.759Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆம் ஆத்மி,Saurabh Bharadwaj,delhi,Aam Aadmi,Corruption,டெல்லி,ஊழல்,சௌரப் பரத்வாஜ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/ey0o1gpb/tn-59.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ரேகா குப்தா, சௌரப் பரத்வாஜ்  ]]></media:title><media:description type="html"><![CDATA[ ரேகா குப்தா, சௌரப் பரத்வாஜ்  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/ey0o1gpb/tn-59.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஏழைகளுக்கு வழங்க வேண்டிய மானிய விலையிலான அரிசியை தனியார் நிறுவனத்திற்கு விற்று ரூ.22,000 கோடி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D">ஊழல் </a>செய்ய ரேகா குப்தா தலைமையிலான டெல்லி பாஜக அரசு திட்டமிட்டதாக ஆம் ஆத்மி டெல்லி மாநிலத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான சௌரப் பரத்வாஜ்  குற்றச்சாட்டியுள்ளார். </p><p>எக்ஸ் பக்கத்தில் வீடியோ மூலம் பேசிய சௌரப், </p> <h2>மானிய விலை அரிசி</h2><p>டெல்லி அமைச்சர் மன்ஜிந்தர் சிங் சிர்சா தலைமையிலான உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை மற்றும் பாஜக ஆளும் அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு கார்ப்பரேஷன் இணைந்து இந்திய உணவுக் கழகத்திடம் மானிய விலையிலான அரிசியைக் கோரியுள்ளன.</p><p>டெல்லியில் உள்ள ரேஷன் கார்டு இல்லாத ஏழை மக்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்களுக்கு விநியோகிப்பதற்காக வாரத்திற்கு 31,000 மெட்ரிக் டன் அரிசி வேண்டும் என்ற கோரிக்கையின் பேரில் இந்திய உணவுக் கழகம் மூலம் பல வாரங்களாக அரிசி அனுப்பப்பட்டுள்ளது.</p><p>இருப்பினும், இந்த மானிய விலை அரிசி டெல்லியில் உள்ள எந்தவொரு ஏழை மக்களுக்கும் சென்றடையவில்லை.</p> <h2>ரூ.22,000 கோடி ஊழல்</h2><p>இந்திய உணவுக் கழகத்திடம் இருந்து பெறப்பட்ட அரிசி முழுவதும் அசாமுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து அரியானாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு அதிக லாபத்திற்கு சட்டவிரோதமாக விற்கப்பட்டுள்ளது.</p><p>இதன் மூலம் அந்த அசாம் கார்ப்பரேஷன் வாரத்திற்கு ரூ.70 கோடி கமிஷன் ஈட்டியுள்ளது.</p><p>வாரத்திற்கு ரூ.143 கோடி வீதம், 3 ஆண்டுகளில் மொத்தம் ரூ.22,000 கோடிக்கு லாபம் ஈட்ட திட்டமிடப்பட்டு இந்த ஊழல் நடத்தப்பட்டு வந்துள்ளது.</p> <h2>அம்பலம் </h2><p>மத்திய லஞ்ச ஒழிப்புத் துறை இதை கண்டறிந்து பிடித்த பின்னரே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்றும், இதன் பேரில் சில அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சௌரப் பரத்வாஜ் தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.</p><p>எனினும் அசாமை சேர்ந்த அந்த கார்ப்பரேஷன் என்னவென்று அவர் விளக்கவில்லை.</p><p>இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சர் மன்ஜிந்தர் சிங் சிர்சா அல்லது டெல்லி அரசிடமிருந்து பதில்கள் எதுவும் இன்னும் வரவில்லை.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்கா துணை இல்லாமல் Q9 ஆடி காரை உற்பத்தி செய்திருக்க முடியாது: Audi CEO</title><link>https://www.maalaimalar.com/automobilenews/car/audi-plans-gradual-electrification-and-india-ev-push</link><comments>https://www.maalaimalar.com/automobilenews/car/audi-plans-gradual-electrification-and-india-ev-push#comments</comments><guid isPermaLink="false">154d92db-de49-432d-92b4-ffb8356f61b4</guid><pubDate>Sun, 09 Aug 2026 09:39:23 +0000</pubDate><atom:updated>2026-08-09T09:39:23.044Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Car,Audi,ஆடி கார்,ஆட்டோமொபைல்,Automobile</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/f2ss9cki/Untitled-design-26.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Bigger bet on battery cars with balanced mix of hybrids and combustion engines]]></media:title><media:description type="html"><![CDATA[ Audi Q9]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/f2ss9cki/Untitled-design-26.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கார் (Automobile)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஆடி நிறுவனம், தற்போது பேட்டரி-மின்சார வாகனங்கள், பிளக்-இன் ஹைப்ரிட்கள் மற்றும் எரிபொருள் என்ஜின்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு விரிவான பவர்டிரெய்ன் அம்சங்களுடன் கூடிய ஒரு வாகன உற்பத்தியில் கவனம் செலுத்தி வருகிறது.</p><h3><strong>ஆடி தலைமை செயல் அதிகாரி</strong></h3><p>இதுகுறித்து அதன் தலைமைச் செயல் அதிகாரி ஜெர்னோட் டோல்னர் கூறுகையில், “சந்தைகள் முழுவதும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டு வேகம் மாறுபடுவதால், நிறுவனத்திற்கு மிகவும் சமநிலையான தயாரிப்பு மற்றும் பவர்டிரெய்ன் கலவை தேவைப்படுகிறது.</p><p>நான் ஆடியில் சேர்ந்தபோது முற்றிலும் மின்சார வாகனங்களுக்கான ஒரு திட்டம் நடைமுறையில் இருந்தது. நான் முதலில் ஆய்வு செய்த விஷயங்களில் அதுவும் ஒன்று.</p><p>குறிப்பாக ஐரோப்பாவிற்கு முக்கியமான பிளக்-இன் ஹைப்ரிட்கள், எரிபொருள் எஞ்சின் மற்றும் மின்சார வாகனங்கள் ஆகியவற்றுக்கு இடையே மிகவும் சமநிலையான ஒரு திட்டத்தை நாங்கள் கண்டறிந்தோம்.</p><p>நிச்சயமாக, எங்கள் முதலீட்டின் பெரும்பகுதி பேட்டரி மின்சாரத்தில்தான் இருக்கும், அது உறுதியானது.</p><p>எரிபொருள் இயந்திரம் ஓரளவு முதிர்ச்சியடைந்துள்ளது. அது 100 ஆண்டு கால புத்தாக்கச் சுழற்சியின் இறுதிக் கட்டத்தில் உள்ளது. ஆனால், உண்மையைச் சொல்லப்போனால், பேட்டரி மின்சாரத் துறை இன்னும் அதன் தொடக்க நிலையில்தான் உள்ளது.</p><p>எங்களின் முதலீட்டின் பெரும்பகுதி நிச்சயமாக பேட்டரி மின்சாரத் துறையிலேயே இருக்கும்.</p><p>ஆடியைப் பொறுத்தவரை முன்னணித் தொழில்நுட்பமாக உள்ளது. படிப்படியாக மேலும் மின்சாரமயமாக்குவதே எங்களின் முன்னுரிமையாக இருக்கும்.</p><p>எனக்குத் தெரிந்தவரை நாங்களும் இந்தியாவில் மின்சார வாகனப் பிரிவில் புதிய தயாரிப்புகளுடன் நுழைய முடிவு செய்துள்ளோம்.</p><p>ஆடி நிறுவனம் இன்னும் பிராந்திய அளவில் செயல்பட வேண்டும். முன்பு அனைவருக்கும் பொருந்தும் ஒரே மாதிரியான காரை உருவாக்கி, அதை சீனாவிற்குக் கொண்டு வந்து, வீல்பேஸை மட்டும் நீட்டித்து அதே காரைத் தயாரித்தோம்.</p><p>அது இப்போது எடுபடாது. நாம் சந்தைகளின் தேவைகளைக் கவனமாகக் கேட்க வேண்டும்.</p><h3><strong>Q9 கார்</strong></h3><p>Q9 ஒரு காரின் மிகச்சிறந்த சான்றாகும். நாங்கள் இதுவரை உருவாக்கிய ஆடி கார்களிலேயே இதுதான் மிகப்பெரியது. அமெரிக்க சந்தை இல்லாமல் அந்தக் கார் இருந்திருக்காது.</p><h3><strong>கார் உற்பத்தியில் இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது</strong></h3><p>இந்தியாவும் ஒரு சிறந்த சான்றாக விளங்குகிறது. இந்தியாவில் கார் தொழில் அடைந்துள்ள வளர்ச்சியும், வழங்கப்படும் தயாரிப்புகளின் நேர்த்தியும் தொழில்நுட்பமும் உண்மையிலேயே நம்ப முடியாதவை.</p><p>நாம் போதுமான வேகத்தில் மாற்றங்களைச் செய்ய முடியுமா என்பதுதான் என் தூக்கத்தைக் கெடுக்கிறது; நாம் வேகத்தை அதிகரிக்க வேண்டும்" என்று டோல்னர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் நாளை மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-moderate-rain-in-tamil-nadu-tomorrow-says-chennai-weather-centre</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-moderate-rain-in-tamil-nadu-tomorrow-says-chennai-weather-centre#comments</comments><guid isPermaLink="false">ab9f22ed-569e-4f90-bb5c-27819abd00d3</guid><pubDate>Sun, 09 Aug 2026 09:35:58 +0000</pubDate><atom:updated>2026-08-09T09:35:58.643Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>புதுச்சேரி,தமிழகம்,சென்னை வானிலை ஆய்வு மையம்,Meteorological Department,rain alert,tamilnadu rain</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/lam4d7i0/rain.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tamilnadu rain]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/lam4d7i0/rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தின் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெயில் தாக்கம் காரணங்களால், நாளை (ஆகஸ்ட் 10) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><h2>மழை <strong>வாய்ப்புள்ள</strong> பகுதிகள்</h2><p>மேற்குத் தொடர்ச்சி மலை சார்ந்த மாவட்டங்கள் (கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி) மற்றும் வட கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.</p><h2>சென்<strong>னை ம</strong>ற்றும் புறநகர் வானிலை</h2><p>சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்த 24 முதல் 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மாலையிலோ அல்லது இரவிலோ இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.</p><h2>வெப்<strong>பநிலை நிலவர</strong>ம்</h2><p>மழை காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் நிலவி வந்த உக்கிரமான வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து, இதமான சூழ்நிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>மீனவர்களுக்<strong>கான எச்சரி</strong>க்கை</h2><p>தெற்கு மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், குறிப்பிட்ட ஆழ்கடல் பகுதிகளுக்குச் செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தொடர்ச்சியாக இந்திய வீரர்கள் காயம்: &apos;Blame&apos; என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம்- விவிஎஸ் லக்ஷ்மண்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/vvs-laxman-counters-criticism-of-team-indias-growing-injury-crisis</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/vvs-laxman-counters-criticism-of-team-indias-growing-injury-crisis#comments</comments><guid isPermaLink="false">6dc0bc59-751f-4606-bd6f-a00ec7320d81</guid><pubDate>Sun, 09 Aug 2026 09:31:24 +0000</pubDate><atom:updated>2026-08-09T09:31:24.126Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சாய் சுதர்சன்,Bumrah,பும்ரா,sai sudharsan,vvs laxman,விவிஎஸ் லக்ஷ்மண்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/02lk23hs/VVSLaxman0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விவிஎஸ் லக்ஷ்மண்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/02lk23hs/VVSLaxman0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. இந்திய அணியில் பும்ரா மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர. இருவரும் தற்போது காயத்தால் அணியில் இருந்து விலகியுள்ளனர். மேலும், பயிற்சி ஆட்டத்தில் சுப்மன் கில் விளையாடவில்லை. ஒவ்வொரு வீரராக காயம் அடைந்து வருவதால், பெங்களூருவில் உள்ள பிசிசிஐ-யின் சிறப்பு மையம் மீது குற்றம்சாட்ட தொடங்கியுள்ளனர்.</p><p>பிசிசிஐ-யின் சிறப்பு மையம் எவ்வாறு செயல்படுகிறது. உடற்தகுதி பெறாத வீரர்களை தேசிய அணியில் விளையாட அனுமதி அளிக்கிறது என பழி போடுகின்றனர். இந்த நிலையில் சிறப்பு அமையம் தலைவர் விவிஎஸ் லக்ஷ்மண், இந்திய கிரிக்கெட்டின் மருத்துவ மற்றும் தேர்வு கட்டமைப்பில் பொறுப்பேற்பது குறித்த குறைபாடுகள் இருப்பதாக எழுந்த கருத்துகளை லட்சுமண் நிராகரித்துள்ளார்.</p><h2>இது தொடர்பாக விவிஎஸ் லக்ஷ்மண் கூறியதாவது:-</h2><p>குற்றம் சாட்டுதல்' (blame) என்ற வார்த்தையைப் பயன்படுத்த நாம் விரும்புவதில்லை என்று நினைக்கிறேன். ஏனெனில், அவ்வாறு கூறும்போது யாரையாவது ஒரு பலிக்கடாவாக ஆக்குவது போன்ற சூழல் உருவாகிறது. நீங்கள் எதை உணர்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. ஒருவேளை பல்வேறு காரணங்களுக்காக நீங்கள் மற்றவர்கள் மீது குற்றம் சாட்டத் தொடங்கலாம்.</p><h2>பிசிசிஐ சிறப்பு பயிற்சி மையம்</h2><p>ஆனால், COE (சிறப்புப் பயிற்சி மையம்), அணி நிர்வாகம் ஆகிய இரண்டிற்கும் இடையில் சிறந்த ஒத்துழைப்பு இருந்து வருகிறது. அதேபோல் SSM (விளையாட்டு அறிவியல் மற்றும் மருத்துவம் ஸ்டாஃப் மற்றும் தேர்வுக்குழுவுக்கும் இடையில் சிறந்த ஒத்துழைப்பு நிலவுகிறது.</p><p>உடல் தகுதி குறித்த அறிக்கையை நாங்கள் அனுப்பும்போது, ​​தேர்வு செய்பவர் (selector) அந்த அறிக்கையைக் கேட்டு COE-ஐத் தொடர்புகொள்வார். நாங்கள் தற்போதைய உடல் தகுதி நிலையைச் சேகரித்து, தேர்வுத் குழுத் தலைவரிடம் (ஆண்கள் அல்லது பெண்கள் அணியின் தேர்வுத் குழு) அந்த அறிக்கையைச் சமர்ப்பிப்போம்; அத்துடன் இரு அணிகளின் தலைமைப் பயிற்சியாளர்கள் மற்றும் பிசிசிஐ (BCCI) ஆகியோருக்கும் அதன் நகலை அனுப்புவோம்.</p> <h2>பும்ரா மற்றும் சாய் சுதர்சன்</h2><p>இப்போது, ​​பும்ரா மற்றும் <a href="https://www.maalaimalar.com/sports/cricket/sai-sudharsan-has-been-ruled-out-of-the-test-series-against-sri-lanka">சாய் சுதர்சன்</a> விஷயத்தில் பார்த்தால், எப்போதும் ஒரு 'நட்சத்திரக் குறியீடு' (asterisk) இடம்பெற்றிருக்கும். பிசிசிஐ-யிடமிருந்து ஊடக அறிக்கை வரும்போது, ​​ஒரு வீரரின் தேர்வு விவரத்துடன் அக்குறியீடு இணைக்கப்பட்டிருக்கும். அந்த நட்சத்திரக் குறியீடு எதைக் குறிக்கிறது? அது உடல் தகுதிக்கு உட்பட்டது (subject to fitness) என்பதைக் குறிக்கிறது.</p><p>ஒரு வீரர் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் திரும்பப் பெறப்பட்டார் என்று கூறுவது டெக்னிக்கலாக சரியல்ல என்று ஏனெனில், அந்த வீரர் தனது முழுமையான உடற்தகுதியை இன்னும் நிரூபிக்க வேண்டியுள்ளது என்ற நிபந்தனையுடனேயே அவர் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.</p><p>அதாவது, பும்ரா மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் உடற்தகுதி அனுமதிக்கு உட்பட்டே தேர்ந்தெடுக்கப்படவிருந்தனர். அவர்களைப் பரிசோதித்து, ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு முன்னேறச் செய்வோம். ஒருவேளை முன்னேற்றம் மெதுவாக இருந்தால், அது குறித்துத் தேர்வுக்குழுத் தலைவர் மற்றும் தலைமைப் பயிற்சியாளரிடம் தகவல் தெரிவிக்கப்படும். இந்த நடைமுறை மிகச் சீராக நடைபெற்று வருகிறது. சர்வதேசத் தொடரில் பங்கேற்க அவர்கள் இன்னும் தயாராக இல்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். இச்செயல்முறைகள் எப்போதும் வீரர் மற்றும் அணியின் நலனையே மையமாகக் கொண்டவை.</p><h2>உடற்தகுதிக்கு உட்பட்டது</h2><p>உடற்தகுதிக்கு உட்பட்டது (subject to fitness) என்ற விஷயத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எந்தவொரு பத்திரிகைச் செய்தியிலும் சரி, உடற்தகுதி அறிக்கைகள் மற்றும் வீரர் தேர்வு ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மை உள்ளது. இந்த வீரர்கள் உடற்தகுதிக்கு உட்பட்டே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, அவர்கள் இங்கு உடற்தகுதிச் சோதனையில் தேர்ச்சி பெறாவிட்டால், அவர்களுக்குப் பதிலாக எந்த வீரர்கள் செல்வார்கள் என்பது தேர்வாளர்களுக்குத் தெரியும். இது ஒரு அடிப்படைப் புரிதல்.</p><p>இவ்வாறு விவிஎஸ் லக்ஷ்மண் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவுக்கான தூதரை மாற்ற ஸ்பெயின் முடிவு!</title><link>https://www.maalaimalar.com/news/world/spain-to-replace-ambassador-to-india</link><comments>https://www.maalaimalar.com/news/world/spain-to-replace-ambassador-to-india#comments</comments><guid isPermaLink="false">4f9d1fcd-9f06-44a3-91bc-b024bb27cafd</guid><pubDate>Sun, 09 Aug 2026 08:59:12 +0000</pubDate><atom:updated>2026-08-09T08:59:12.283Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>SpainAmbassador,ஸ்பெயின் தூதர்,JuanAntonioMarch,ஜுவான் அன்டோனியோ,DiplomaticScam,IndiaSpainRelations,இந்தியவெளியுறவுத்துறை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/l4j9drcp/SpainAmbassador-JuanAntonioMarch" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ SpainAmbassador JuanAntonioMarch ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/l4j9drcp/SpainAmbassador-JuanAntonioMarch?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நிதி முறைகேடு மற்றும் அதிகார துஷ்பிரயோகப் புகாரில் சிக்கிய இந்தியாவுக்கான ஸ்பெயின் தூதர் ஜுவான் அன்டோனியோவை மாற்றும் நடவடிக்கையை ஸ்பெயின் அரசாங்கம் தொடங்கியுள்ளது.</p><p>வெளியுறவு அமைச்சகத்தின் அனுமதியின்றி கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்திய குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக கனடாவில் பணியாற்றும் ஆல்பிரடோ மார்டினெஸ் செரானோவை புதிய தூதராக நியமிக்க அந்நாடு முடிவு செய்து, இந்திய அரசிடம் ஒப்புதல் கோரியுள்ளது.</p><h2><strong>ஊழல் புகாரில் விசாரணை:</strong></h2><p>இந்தியாவுக்கான ஸ்பெயின் தூதராக ஜுவான் அன்டோனியோ உள்ளார். இவர் கடந்த 2024-ம் செப்டம்பர் மாதம் இந்தியாவின் தூதராக நியமிக்கப்பட்டார். </p><p>இதற்கிடையே ஜுவான் அன்டோனியோ மீது பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் சந்தேகத்திற்குரிய நிதி நடவடிக்கைகள் தொடர்பாக புகார்கள் எழுந்தன.</p><p>இதுதொடர்பாக ஸ்பெயினின் ஊழல் தடுப்பு அரசு வழக்கறிஞர் அலுவலகத்திடம் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் அறிக்கையை சமர்ப்பித்து இருந்தது.</p><h2><strong>நிதி முறைகேடு புகார்:</strong></h2><p>கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு நிதியுதவி அளிக்குமாறு, இந்தியாவில் செயல்படும் ஸ்பெயின் நிறுவனங்களையும் ராஜஸ்தான் அரசையும் ஜுவான் அன்டோனியோ அணுகியதாக தெரிவிக்கப்பட்டது.</p><p>ஸ்பெயினைச் சாராத கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கிலேயே இந்த நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டிருந்தன என்றும் இது குறித்து அமைச்சகத்திற்குத் தெரிவிக்கப்படவில்லை. </p><p>தூதரகத்தால் அதிகாரப்பூர்வ நிதிப் பதிவுகள் எதுவும் பராமரிக்கப்படவில்லை என்றும் புகார்கள் தெரி விக்கபட்டிருந்தது.</p><h2><strong>இந்திய தூதர் மாற்றம்:</strong></h2><p>இந்த நிலையில் வெளியுறவு அமைச்சகத்தின் அனுமதியின்றி அதிக செலவில் கலாச்சார நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ததாக எழுந்த புகார்களை தொடர்ந்து இந்தியாவில் உள்ள தனது தூதர் ஜுவான் அன்டோனியோயை மாற்றும் செயல் முறையை ஸ்பெயின் அரசாங்கம் தொடங்கியுள்ளது.</p><p>அவர் விரைவில் மாற்றப்பட்டு இந்தியாவுக்கான புதிய தூதர் நியமிக்கப்பட உள்ளார். தற்போது கனடாவில் தூதராகப் பணியாற்றும் ஆல்பிரடோ மார்டினெஸ் செரானோவை இந்தியாவின் புதிய தூதராக நியமிப்பதற்கான முறையான ஒப்புதலைப் இந்தியாவிடம் ஸ்பெயின் அரசாங்கம் கேட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.. ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனியின் வீடியோ வெளியீடு! </title><link>https://www.maalaimalar.com/news/world/iran-supreme-leader-mojtaba-khamenei-alive-new-video-ends-health-rumours</link><comments>https://www.maalaimalar.com/news/world/iran-supreme-leader-mojtaba-khamenei-alive-new-video-ends-health-rumours#comments</comments><guid isPermaLink="false">eba7d847-6e36-4b11-8ca9-0d26cad04a82</guid><pubDate>Sun, 09 Aug 2026 08:59:09 +0000</pubDate><atom:updated>2026-08-09T08:59:09.841Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஈரான்,Iran,Iran War,ஈரான் போர்,Mojtaba Khamenei,மொஜ்தபா காமேனி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/rznyix6q/tn-58.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மொஜ்தபா காமேனியின் வீடியோ]]></media:title><media:description type="html"><![CDATA[ மொஜ்தபா காமேனியின் வீடியோ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/rznyix6q/tn-58.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் உச்ச தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/world/mojtaba-khameneis-health-raises-concerns-in-iran">மொஜ்தபா காமேனி</a>யின் புதிய வீடியோ வெளியிடப்பட்டு அவரின் உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. </p><p>பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடத்திய கூட்டுத் தாக்குதலில் அயதுல்லா அலி காமேனி உயிரிழந்ததை அடுத்து அவரது மகன் மொஜ்தபா காமேனி மார்ச்சில் நாட்டின் உச்ச தலைவராக நியமிக்கப்பட்டார். </p><p>ஆனால் பிப்ரவரி 28 அன்று நடந்த தாக்குதலுக்கு பிறகு அவர் பொதுவெளியில் தோன்றவே இல்லை. அன்றைய தாக்குதலில் அவரும் படுகாயமடைந்ததாவும் ரகசிய இடத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. </p> <h2>வதந்தி</h2><p>அவர் வெளியிட்டதாக நம்பப்படும் ஊடக மற்றும் சமூக வலைதள அறிக்கைகளே பொதுவெளிக்கு வந்தன. மற்றபடி காமேனி இருக்குமிடம் ரகசியமாகவே வைக்கப்பட்டது. பிப்ரவரி 28 தாக்குதலில் மொஜ்தபா முகம் சிதைந்துவிட்டதாகவும் அவர் உயிருடன் இருக்க வாய்ப்பே இல்லை என்றும் மேற்கத்திய ஊடகங்கள் கூறி வந்தன. அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் இதே பாட்டை பாடி வந்தார்.</p><p>கடந்த மாதம் பிரம்மாண்டமாக நடந்த தந்தை அயத்துல்லா இறுதிச்சடங்கிலும் அவர் பங்கேற்காதது இந்த சந்தேகங்களை வலுப்படுத்தியது. ஆனால் பாதுகாப்பு காரணங்களால் அவர் அதில் கலந்துகொள்ளவில்லை என ஈரான் விளக்கம் அளித்தது.</p><p>இதனிடையே மொஜ்தபா உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகச் சில இஸ்ரேலிய ஊடகங்கள் தொடர்ச்சியாகச் செய்திகளை வெளியிட்டு வந்தன.</p><p>குறிப்பாக, தி ஜெருசலேம் போஸ்ட் நாளிதழ் வெளியிட்ட செய்தியில், "மொஜ்தபா காமெனியின் மரணம் குறித்து விரைவில் செய்தி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை" என்று குறிப்பிட்டிருந்தது.</p> <h2>வீடியோ</h2><p>இந்நிலையில் இந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மொஜ்தபா காமேனியின் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.</p><p>ஈரான் அரசு செய்தி நிறுவனமான மெஹர் நியூஸ், இந்த வீடியோவை வெளியிட்டு அவர் முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளது.</p><p>வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், மொஜ்தபா காமெனி ஒரு குழுவினருக்கு முன்னால் அமர்ந்து அவர்களுடன் உரையாடி கொண்டிருக்கிறார். அங்கிருப்பவர்கள் அனைவரும் அவர் பேசுவதை மிகவும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.</p><p>இருப்பினும் இந்த வீடியோவில் அது எடுக்கப்பட்ட தேதி எதுவுமில்லை.</p><p>உச்சத் தலைவரின் இத்தகைய வீடியோ காட்சிகள் வெளியாவது இதுவே முதன்முறை என மெஹர் நியூஸ் தெரிவித்துள்ளது.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Iran’s Mehr RELEASES VIDEO of Supreme Leader Mojtaba Khamenei for ‘FIRST TIME’ <a href="https://t.co/v3Rp81VfLH">pic.twitter.com/v3Rp81VfLH</a></p>&mdash; RT (@RT_com) <a href="https://x.com/RT_com/status/2086198246121042165?ref_src=twsrc%5Etfw">August 8, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>பெண்களை பற்றி யார் தவறாக பேசினாலும் கைது செய்ய வேண்டும்: விஷால்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anyone-who-speaks-wrongly-about-women-should-be-arrested-vishal</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anyone-who-speaks-wrongly-about-women-should-be-arrested-vishal#comments</comments><guid isPermaLink="false">869327c3-5d2c-467c-af12-f669a48d3c2d</guid><pubDate>Sun, 09 Aug 2026 08:58:23 +0000</pubDate><atom:updated>2026-08-09T08:58:23.992Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Udhayanidhi Stalin,Vishal</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/q04yf7gr/Untitled-design-24.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Equal Action for All Who Misbehave with Women: Vishal Backs Udhayanidhi Arrest]]></media:title><media:description type="html"><![CDATA[ Vishal Backs Udhayanidhi Arrest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/q04yf7gr/Untitled-design-24.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விவசாய போராட்டத்தின்போது இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பேசிய குற்றச்சாட்டின் பேரில், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த கைது நடவடிக்கையை நடிகர் விஷால் நியாயப்படுத்தியுள்ளார்.</p><p>திரையுலகில் உள்ள பெண்களைப் பற்றி தகாத கருத்துக்களைத் தெரிவிக்கும் அனைவர் மீதும் இதேபோன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விஷால் வலியுறுத்தியுள்ளார்.</p><h3><strong>நடிகர் விஷால் பேட்டி</strong></h3><p>இதுகுறித்து நடிகர் விஷால் அளித்த பேட்டியில், “அரசியல் சூழல்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. எனவே, உதயநிதிக்கு என்ன நடந்ததோ அதே போன்ற தண்டனை, நமது அரசியல் களத்தில் பெண்களைப் பற்றி தவறாகப் பேசும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.</p><p>யூடியூபில் இன்னும் பலர் இருக்கிறார்கள்; நமது பெண் சமூகத்தைப் பற்றி வெளிப்படையாக பேசி, தரம் தாழ்ந்த முறையில் தாக்கி பேசும் இன்னும் பலரும் இருக்கிறார்கள். எனவே, அவர்களுக்கும் அதே போன்ற அணுகுமுறை இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று அவர் கூறினார்.</p><h3><strong>கைது நடவடிக்கை</strong></h3><p>முன்னதாக தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி ஆற்று உரிமைப் போராட்டத்தின் போது சில இரட்டை அர்த்தங்கள் கொண்ட கருத்தை தெரிவித்ததற்காக கைது செய்யப்பட்டார்.</p><p>இந்த கைது நடவடிக்கைக்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், தனது கருத்துக்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகவும், அவை எந்தவொரு தனிநபரையும் குறிவைக்காமல் அரசின் செயல்பாடுகளை நோக்கியே இருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.</p>]]></content:encoded></item></channel></rss>