<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 30 Aug 2026 07:27:06 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்- 30 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-30-august-2026-2</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-30-august-2026-2#comments</comments><guid isPermaLink="false">197709fa-b7be-4f14-952f-71d97d446d53</guid><pubDate>Sun, 30 Aug 2026 04:00:27 +0000</pubDate><atom:updated>2026-08-30T06:44:52.534Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/4knayp7t/30082026LiveUpdates.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tamil News Live]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/4knayp7t/30082026LiveUpdates.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mettur-dam-level-touches-90-feet-after-194-days">நீர்வரத்து அதிகரிப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் 90 அடியை எட்டியது</a></p><p>* நாளைமறுதினம் காவிரி டெல்டா பாசனத்துக்கு முதல்-அமைச்சர் விஜய் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைக்க மேட்டூருக்கு செல்கிறார்.</p><p>* 194 நாட்களுக்கு பிறகு நேற்று மாலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் 90 அடியை எட்டியது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/nepal-floods-100-tamils-still-missing-as-rescue-efforts-intensify">நேபாள பெரு வெள்ளத்தில் சிக்கி மாயமான தமிழர்கள் 100 பேரை தேடும் பணி தீவிரம்</a></p><p>* 219 தமிழர்கள் இருக்கும் இடம் கண்டறியப்பட்டு தமிழகம் அழைத்து வரப்பட இருக்கிறார்கள்.</p><p>* 100 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/nepal-flood-disaster-plan-to-bury-unidentified-bodies">நேபாள வெள்ளப் பேரழிவு: அடையாளம் தெரியாத சடலங்களை அடக்கம் செய்யத் திட்டம்... </a></p><p>*நேபாளத்தில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக நாடு முழுவதும் பெரும் பேரழிவு ஏற்பட்டுள்ளது.</p><p>*உடல்கள் அடக்கம் செய்யப்பட்டாலும், எதிர்காலத்தில் உறவினர்கள் தங்களது குடும்பத்தினரை அடையாளம் கண்டுகொள்ளப் பல நவீன வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. </p><p><a href="https://www.maalaimalar.com/news/topnews/nepal-flash-floods-death-toll-rises-to-734">நேபாளத்தில் பாய்ந்தோடும் வெள்ளப்பெருக்கு: பலி எண்ணிக்கை 734 ஆக உயர்வு; நிவாரணம் கிடைக்காமல் தவிக்கும் மக்கள்... </a></p><p>*இந்த இயற்கை சீற்றத்தால் ரசுவா, நுவாகோட் மற்றும் தாடிங் ஆகிய மாவட்டங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p>*இதுவரை சுமார் 2,500 பேர் காணாமல் போயுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-bharati-challenge-to-tn-cm-vijay-you-open-three-files-i-open-three">3 ஃபைல்களை நீ அவிழு, நானும் அவிழ்க்கிறேன்: நான் மோசமான ஆளு- ஆர்.எஸ். பாரதி</a></p><p>* திமுக-வை பார்த்து சவால் விடுகிறார் விஜய். கோப்புகள் எல்லாம் ரெடியா இருக்கு, டேபிளில் இருக்கிறது. நான் அவிழ்த்தால் என்ன ஆகும் என்று சட்டசபையில் சொல்கிறார்.</p><p>* ஒன்றும் தெரியாதவர்கள்தான் அமைச்சராகவும், எம்.எல்.ஏ.-வாகவும் இருக்கிறார்கள்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pregnant-woman-pleaded-they-will-kill-me-dies-with-baby-after-delivery">என்னை கொன்று விடுவார்கள் என்று கதறிய கர்ப்பிணி - பிரசவத்திற்கு பின்பு தாயும், குழந்தையும் உயிரிழந்த சோகம்... </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pregnant-woman-pleaded-they-will-kill-me-dies-with-baby-after-delivery"> </a>* அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி மற்றும் பச்சிளம் குழந்தை இருவரும் உயிரிழப்பு.</p><p>* அரசு மருத்துவமனை ஊழியர்கள் தன்னை கொன்று விடுவார்கள் என கர்ப்பிணி கத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/no-true-hindu-can-think-muslims-should-not-be-in-india-mohan-bhagwat">இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கக்கூடாது என நினைப்பவர் உண்மையான இந்துவாக இருக்க முடியாது: மோகன் பகவத்... </a></p><p>* இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கக்கூடாது என்று நினைப்பவர் உண்மையான இந்துவாக இருக்க முடியாது.</p><p>* ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளார்ந்த கண்ணியம் உண்டு, நமக்கிடையே எந்த அடிப்படை வேறுபாடும் இல்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/nepal-floods-97-year-old-grandmother-heroic-rescue">நேபாள வெள்ளம்: இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 97 வயது மூதாட்டி- போர் வீரனை போல் காட்சியளித்ததாக பேரன் உருக்கம்...</a></p><p>* நேபாள வெள்ளத்தில் காணாமல் போன 97 வயதான மூதாட்டி ஒருவரை மீட்பு படையினர் மீட்டனர்.</p><p>* அந்த மூதாட்டியை கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்பதற்கு நேபாள ராணுவத்திற்கு சுமார் நான்கு மணி நேரம் ஆனது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kiran-kumar-reddy-likely-appointment-tamil-nadu-governor">தமிழக கவர்னராக கிரண் குமார் ரெட்டி நியமிக்கப்பட வாய்ப்பு</a></p><p>* தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் கவர்னர்கள் புதிதாக நியமிக்கப்பட இருப்பதாக தகவல்</p><p>* கிரண் குமார் ரெட்டி 2010 முதல் 2014 வரை ஆந்திர மாநில முதலமைச்சராக இருந்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பாரத ரத்னா இசைப் பேரரசி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பயோபிக்கில் ராஷ்மிகா மந்தனா</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/bharat-ratna-music-queen-ms-subbulakshmi-biopic-rashmika-mandanna</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/bharat-ratna-music-queen-ms-subbulakshmi-biopic-rashmika-mandanna#comments</comments><guid isPermaLink="false">58004784-c07d-4d72-9662-7be0a8b1e709</guid><pubDate>Sun, 30 Aug 2026 07:09:08 +0000</pubDate><atom:updated>2026-08-30T07:09:08.846Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராஷ்மிகா மந்தனா,rashmika,எம்.எஸ்.சுப்புலட்சுமி,M.S.Subbulakshmi,Gowtam Tinnanuri,அல்லு அரவிந்த்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/ilwk3gu5/rashmika.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rashmika -M.S.Subbulakshmi   ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/ilwk3gu5/rashmika.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய கர்நாடக இசைத்துறையின் முன்னணி ஆளுமையும் பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசைக்கலைஞருமான எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க பயோபிக் திரைப்படத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமியின் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>'ஜெர்சி' திரைப்படத்தின் மூலம் பெரும் புகழ் பெற்ற இயக்குனர் கவுதம் தின்னனுரி இத்திரைப்படத்தை இயக்கவுள்ளார். திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களான அல்லு அரவிந்த், பன்னி வாஸ் மற்றும் ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோர் இணைந்து இத்திரைப்படத்தை பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கின்றனர். <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/what-is-the-babys-name-samanthas-playful-reply">எம்.எஸ்.சுப்புலட்சுமியின்</a> சிறு வயது இசைப் பயணம் தொடங்கி சர்வதேச அளவில் புகழ்பெற்ற பாடகியாக மாறியது வரையிலான அவரது சாதனைகளை இத்திரைப்படம் விரிவாகப் பதிவு செய்யவுள்ளது.</p><h2>நடிகைகள் <strong>தேர்வில் நிலவிய க</strong>டும் போட்டி</h2><p>இந்த வரலாற்று சிறப்புமிக்க கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் சாய் பல்லவி, ருக்மிணி வசந்த், நயன்தாரா மற்றும் திரிஷா ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. குறிப்பாக, சாய் பல்லவி முதன்மைத் தேர்வாக இருந்தபோதிலும், பிற திரைப்படப் படப்பிடிப்புகளின் கால அவகாசம் காரணமாக அவர் இத்திட்டத்தில் இருந்து விலகினார். இறுதியாக, ராஷ்மிகா மந்தனாவின் நடிப்புத்திறன் மற்றும் வரவேற்பைக் கருத்தில் கொண்டு தயாரிப்பாளர்கள் அவரை இக்கதாபாத்திரத்திற்குத் தேர்வு செய்துள்ளனர்.</p><h2>செப்டம்<strong>பர் 16 அன்று அறி</strong>விப்பு</h2><p>எம்.எஸ். சுப்புலட்சுமியின் பிறந்தநாளான செப்டம்பர் 16 அன்று இத்திரைப்படத்தின் பெயர், பிற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்திய இசை பாரம்பரியத்தை மையமாகக் கொண்ட இக்கதாபாத்திரம் ராஷ்மிகா மந்தனாவின் திரைப்பயணத்தில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>&apos;டோரதி&apos; திரைப்படத்தின் &apos;முத்துமணி&apos; பாடல் வெளியானது!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/dorathi-muthumani-song-released</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/dorathi-muthumani-song-released#comments</comments><guid isPermaLink="false">677deb47-9328-4279-8a21-3e4efc7224f7</guid><pubDate>Sun, 30 Aug 2026 07:03:29 +0000</pubDate><atom:updated>2026-08-30T07:03:29.435Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Karthik Subbaraj,Keerthi Suresh,இளைய ராஜா,Ilaiyaraaja,டோரதி,Dorothy,Muthumani,Raaja Trance</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/kldzo80o/Ilaiyaraaja-Keerthy-Suresh" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ilaiyaraaja - Keerthy Suresh  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/kldzo80o/Ilaiyaraaja-Keerthy-Suresh?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இயக்குநர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D">கார்த்திக் சுப்பராஜ்</a> மற்றும் இசைஞானி இளையராஜா கூட்டணியில் உருவாகியுள்ள 'டோரதி' திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான 'முத்துமணி' அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.</p><p>இப்படத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D">கீர்த்தி சுரேஷ்</a>, சனாந்த், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். </p><p>படத்தை தம்மம் ஃபிலிம்ஸ் சார்பில் கார்த்திக் சுப்பராஜும் இயக்கத்தில், சிக்யா என்டர்டெயின்மென்ட் சார்பில் குனீத் மோங்காவும், ஜியோ ஸ்டுடியோஸ் சார்பில் ஜோதி தேஷ்பாண்டேவும் இணைந்து தயாரித்துள்ளனர்.</p><p>இந்நிலையில் இன்று படத்தின் இரண்டாவது பாடலான 'முத்துமணி' படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.</p><h2><strong>டிரான்ஸ் வடிவில் ஒரு புதிய காதல் காவியம்!</strong></h2><p>இசைஞானி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE">இளையராஜாவின்</a> திரையுலகப் பயணத்தில் இது 1540-வது திரைப்படமாகும். தற்போது வெளியாகியுள்ள 'முத்துமணி' பாடல் முற்றிலும் மாறுபட்ட ஒரு 'ராஜா டிரான்ஸ்' ரக காதல் பாடலாகும். </p><p>இப்பாடலை இளையராஜாவே எழுதி, பிரபல பின்னணிப் பாடகி சுவேதா மோகனுடன் இணைந்து பாடியுள்ளார். பாடலோடு சேர்ந்து வெளியாகியுள்ள இதன் பிரத்யேக மியூசிக் வீடியோவை பாரத் முரளிதரன் இயக்கியுள்ளார்.</p><h2><strong>சர்வதேச அரங்கில் தமிழ் சினிமா: டொராண்டோ பிரீமியர்!</strong></h2><p>தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம், உலக அளவில் மிகவும் மதிப்புமிக்க டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் உலகளாவிய முதன்முறைத் திரையிடலுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/rs0gQ-3hbPQ"></iframe></figure><h2><strong>தொழில்நுட்பக் குழு &amp; ரிலீஸ் தேதி</strong></h2><p>இப்படத்திற்கு எஸ். திருநாவுக்கரசு ஒளிப்பதிவையும், கணேஷ் சிவா படத்தொகுப்பையும் கவனித்துள்ளனர். </p><p>டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவின் திரையிடலைத் தொடர்ந்து, '<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF">டோரதி</a>' திரைப்படம் வரும் செப்டம்பர் 25 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நீர்வரத்து அதிகரிப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் 90 அடியை எட்டியது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mettur-dam-level-touches-90-feet-after-194-days</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mettur-dam-level-touches-90-feet-after-194-days#comments</comments><guid isPermaLink="false">c9af8457-f3f1-4f74-b61f-85bb3016a1fa</guid><pubDate>Sun, 30 Aug 2026 06:42:07 +0000</pubDate><atom:updated>2026-08-30T06:42:07.054Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,Mettur Dam,காவிரி நீர்,Cauvery water</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/sno16eke/Mettur0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காவிரி நீர்வரத்து அதிகரிப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/sno16eke/Mettur0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேட்டூர் அணையை திறப்பதற்காக முதலமைச்சர் விஜய் நாளை மறுதினம் சேலம் செல்கிறார். அங்கிருந்து மேட்டூர் அணைக்கு சென்று பாசனத்திற்கான தண்ணீர் திறக்க உள்ளார்.</p><p>கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக நீர் திறப்பு குறைக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு மீண்டும் நீர் திறப்பு அதிகரித்துள்ளது.</p><h2>11 ஆயிரத்து 312 கனஅடி</h2><p>அதன்படி கபினி அணையில் இருந்து விநாடிக்கு 6,600 கனஅடி வீதமும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 4712 கன அடி வீதமும் என மொத்தம் 11 ஆயிரத்து 312 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.</p><h2>ஒகேனக்கல்</h2><p>இந்த தண்ணீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று காலை 9 மணி நிலவரப்படி வினாடிக்கு 7500 கன அடியாக தொடர்ந்து வந்த நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.</p> <h2>பரிசல் இயக்க தடை</h2><p>ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சீராக இல்லாமல் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்றுடன் தடை 15-வது நாளாக நீடிக்கிறது. இன்று வார விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்துள்ளனர். சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p>இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளிலும், காவிரி ஆற்றங்கரை ஓரங்களிலும் குளித்து மகிழ்ந்தனர். பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகா ரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.</p><h2>மேட்டூர் அணை</h2><p>ஒகேனக்கல்லில் இருந்து தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை நீர்வரத்து 6702 கன அடியாக இருந்த நிலையில் மாலையில் 7022 கன அடியாக அதிகரித்தது. இன்று காலை நீர்வரத்து 6,887 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 2,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.</p><p>அணைக்கு வரும் நீரின் அளவைவிட, அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று காலை 89.95 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் மாலையில் 90.07 அடியாக உயர்ந்தது.</p><h2>194 நாட்களுக்கு பிறகு அடி</h2><p>கடந்த பிப்ரவரி மாதம் 16-ந்தேதி நீர்மட்டம்  90.07 அடியாக இருந்த நிலையில் அப்போது அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 27 கன அடி மட்டுமே இருந்தது. இந்த நிலையில் 194 நாட்களுக்கு பிறகு நேற்று மாலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும்  90 அடியை எட்டியது. இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 90.30 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 52.99 டி.எம்.சி. உள்ளது. </p><p>நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அணையின் 16 கண் மதகு பகுதியில் நீரின் பரப்பு அதிகரித்து, பாறை திட்டுகள் படிப்படியாக நீரின் மூழ்கி வருகின்றன.</p><p>அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந்தேதி காவிரி டெல்டா பாசனத்துக்கு முதல்-அமைச்சர் விஜய் மேட்டூர் அணையில் இருந்து    தண்ணீர் திறந்து வைக்க மேட்டூருக்கு வருகை தர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>அம்பேத்கர், பெரியார் பெயர் நீக்கம்: அமைச்சர், அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்- திருமாவளவன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ambedkar-periyar-name-removal-minister-officials-must-give-proper-explanation-thirumavalavan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ambedkar-periyar-name-removal-minister-officials-must-give-proper-explanation-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">59c0c27b-36cc-464c-9629-8be1717007c0</guid><pubDate>Sun, 30 Aug 2026 06:28:57 +0000</pubDate><atom:updated>2026-08-30T06:28:57.694Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக சட்டசபை,TN assembly,அம்பேத்கர்,பெரியார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/iny056ep/Thirumavalavan001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தொல் திருமாவளவன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/iny056ep/Thirumavalavan001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி விமான நிலையத்தில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-</p><h2>உள்நோக்கம்</h2><p>சட்டமன்ற கொள்கை விளக்கக் குறிப்பில் அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதில் உள்நோக்கம் உள்ளதா?  என்கிற கேள்வி எழுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், அமைச்சரும் இதற்கு உரிய விளக்கம் அளிப்பார்கள் என நம்புகிறேன். இனிவரும் காலங்களில் இதுபோன்ற பிழைகள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.</p><p>முன்னாள் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டது ஏற்புடையதல்ல. அவருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பாதுகாப்பை மீண்டும் வழங்க வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினரை அச்சுறுத்த நினைத்து, தன்னிச்சையாகச் செயல்பட்ட அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தி வருகிறார்கள். அவர்களின் அந்த கோரிக்கையை நான் முழு மனதோடு வரவேற்கிறேன்.</p><h2>தனிச்சட்டம்</h2><p>தமிழக அரசு தலித் மக்களுக்கு இன்னும் நிறைய செய்ய வேண்டி இருக்கிறது. தலித் மக்களை பாதுகாக்க தனிச்சட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது. அதனை தற்போதைய அரசு செய்யும் என்று நம்புகிறோம். செய்யச் சொல்லித் தொடர்ந்து வலியுறுத்துவோம்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>குழந்தைக்கு என்ன பேரு?- ரசிகரின் கேள்விக்கு சமந்தா ஜாலியான பதில்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/what-is-the-babys-name-samanthas-playful-reply</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/what-is-the-babys-name-samanthas-playful-reply#comments</comments><guid isPermaLink="false">45287e9a-7a05-451d-8197-b9ecb0042e17</guid><pubDate>Sun, 30 Aug 2026 06:27:59 +0000</pubDate><atom:updated>2026-08-30T06:27:59.593Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Samantha,Raj Nidimoru,சமந்தா,சமந்தா கர்ப்பம்,ராஜ் நிடிமோரு,Samantha baby pump</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/7awkt55v/sam.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Samantha baby pump]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/7awkt55v/sam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரபல தென்னிந்திய நடிகை சமந்தா ரூத் பிரபு, தனது கர்ப்ப கால அனுபவங்களை சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாகப் பகிர்ந்து வருகிறார். திரைப்படங்களில் இருந்து தற்காலிக ஓய்வு பெற்றுள்ள அவர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் நடத்திய கலந்துரையாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.</p><p>இந்தக் கலந்துரையாடலின் போது, பிறக்கப்போகும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப்போகிறீர்கள் என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த சமந்தா, குழந்தைக்குப் பெயர் தேர்ந்தெடுப்பது தான் நினைத்ததை விட மிகவும் கடினமான வேலையாக இருக்கிறது என்று ஜாலியாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், நல்ல பெயர்களைப் பரிந்துரைக்க ரசிகர்களின் உதவியையும் அவர் நகைச்சுவையாகக் கேட்டுள்ளார்.</p><p>கர்ப்ப காலத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்துப் பேசிய அவர், இதுவரை 11 கிலோ வரை எடை அதிகரித்துள்ளதாக வெளிப்படையாகக் கூறினார். தாய்மைப் பயணம் தனக்கு பயத்தை அளிக்கும் என்று எதிர்பார்த்ததாகவும், ஆனால் இந்த அனுபவம் தனக்கு புதிய தன்னம்பிக்கையையும் பலத்தையும் தந்திருப்பதாக உணர்ச்சிப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளார். </p><p>எந்தவொரு வழிகாட்டிப் புத்தகமும் இல்லாத இந்த அழகிய தாய்மைப் பயணத்தை மனதார அனுபவித்து வருவதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். இயக்குநர் ராஜ் நிடிமோருவை மணந்த சமந்தா, விரைவில் தனது முதல் குழந்தையை வரவேற்கத் தயாராகி வருகிறார். இந்த மகிழ்ச்சியான தருணத்தில், அவரது இன்ஸ்டாகிராம் பதில்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.</p> ]]></content:encoded></item><item><title>நேபாள பெரு வெள்ளத்தில் சிக்கி மாயமான தமிழர்கள் 100 பேரை தேடும் பணி தீவிரம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nepal-floods-100-tamils-still-missing-as-rescue-efforts-intensify</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nepal-floods-100-tamils-still-missing-as-rescue-efforts-intensify#comments</comments><guid isPermaLink="false">917c2021-554e-4488-a1c1-199582aee664</guid><pubDate>Sun, 30 Aug 2026 06:02:15 +0000</pubDate><atom:updated>2026-08-30T06:02:15.460Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>nepal flood,நேபாளம் வெள்ளம்,Rasuwa,ரசுவா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/y0p3s5ca/NepalFlood.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நேபாளம் பெரு வெள்ளம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/y0p3s5ca/NepalFlood.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாள பெரு வெள்ளத்தில் சிக்கியவர்களில் 219 தமிழர்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்த நிலையில், 100 பேர் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.</p><p>நேபாளத்தில் கடந்த 26-ந்தேதி ஏற்பட்ட பெரு வெள்ளம் உலகையே கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இமயமலையில் பனிச்சிகரம் உடைந்து போதோகோஷி, திரிசூலி, நாராயணி ஆகிய 3 நதிகளிலும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளை வாரி சுருட்டியது.</p><p>இதில் 2 ஆயிரத்தும் மேற்பட்டவர்கள் காணாமல் போனார்கள். இது தொடர்பாக நேபாள அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் 2,362 பேர் வெள்ளத்தில் சிக்கி மாயமாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p><h2>மீட்பு பணிகள் தீவிரம்</h2><p>வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இன்றுடன் 5 நாட்கள் ஆகும் நிலையில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சேறும் சகதியுமாக காணப்படும் பகுதிகளில் உடல்களை தேடி கண்டு பிடித்து மீட்டு வருகிறார்கள். வெள்ளத்தின் கோரப்பிடியில் சிக்கியதால் பல உடல்கள் உருக்குலைந்து சிதைந்து உள்ளன.</p><h2>பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு</h2><p>பெருவெள்ளத்தால் கடும்பாதிப்பை சந்தித்துள்ள இடங்களில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நேபாள ராணுவத்தினர் 5 ஆயிரம் பேருடன் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீட்பு படையினர் களத்தில் உள்ளனர். அவர்கள் உயிர் இழந்தவர்களின் உடல்களை ஒவ்வொரு நாளும் மீட்டு வருகிறார்கள். இதுவரை 682 உடல்கள்  மீட்கப்பட்டுள்ளன. அதே வேளையில் பாதிக்கப்பட்ட இமயமலை பகுதி முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 691 ஆக உயர்ந்து உள்ளது.</p><p>வெள்ளத்தில் சிக்கிய 3,700 பேர் மீட்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் இந்தியர்கள், சீனர்கள், தென்கொரிய நாட்டினர் உள்பட வெளிநாட்டினரும் அடங்குவார்கள். காயங்ளுடன் மீட்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க துன்சே, திரிசூலி ஆகிய இடங்களில் அவசரகால சுகாதார மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.</p><p>3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மாயமாகி உள்ளனர். இதில் 275 இந்தியர்கள் அடங்குவர். அவர்களை தேடும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.</p><h2>தமிழர்கள்</h2><p>நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழகத்தை சேர்ந்தவர்களை மீட்க முதல்-அமைச்சர் விஜய் உத்தரவின் பேரில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், தென்னரசு, வினோத் அடங்கிய குழு டெல்லி சென்றது. அவர்கள் டெல்லியில் முகாமிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார்கள். இதன் மூலம் நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள் படிப்படியாக மீட்கப்பட்டு சென்னைக்கு அழைத்து வரப்பட உள்ளனர். ஏற்கனவே 21 தமி ழர்கள் மீட்கப்பட்டு சென்னை திரும்பி இருக்கிறார்கள்.</p><h2>சென்னை திரும்பினர்</h2><p>இந்த நிலையில் டெல்லியில் இருந்து மூன்று அமைச்சர்கள் நேற்று இரவு சென்னை திரும்பினார்கள். விமான நிலையத்தில் அமைச்சர் ராஜ்மோகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>கடந்த 3 நாட்களாக முதல்-அமைச்சர் விஜய் ஆணைக்கிணங்க நேபாளத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க டெல்லியில் முகாமிட்டு பல்வேறு பணிகள் மேற்கொண்டோம். தற்போது அயலக தமிழர் துறை அமைச்சர் தென்னரசு டெல்லியில் தங்கி மீட்பு பணிகளை கண்காணித்து கொண்டிருக்கிறார்.</p><p>இந்திய வெளியுறவு துறை செயலாளரை நேரில் சந்தித்து ஆலோசித்தோம். தமிழ்நாட்டில் இருந்து 319 பேர் பல்வேறு குழுக்கள் மூலமாக நேபாளம் சென்று உள்ளனர். இதில் 219 பேர் பாதுகாப்பாக இருக்கிறார்கள். வருகிற 31-ந்தேதி (நாளை) இரவுக்குள் சென்னை வந்து விடுவார்கள்.</p><h2>100 தமிழர்கள்</h2><p>மீதமுள்ள 100 தமிழர்கள் இருக்கும் இடம் தெரியவில்லை. அவர்களை கண்டுபிடிக்க முடியாததால் மாயமானவர்கள் பட்டியலில் இருந்து வருகிறார்கள். ஹெலிகாப்டர் மூலமாக தேடும் பணி நடைபெற்று வருகிறது.</p><h2>சர்வதேச பேரிடர்</h2><p>நேபாள வெள்ளம் சர்வதேச பேரிடராக உள்ளது. பல நூறு கிலோ மீட்டர் தூரத்தில் கூட உடைமைகள் கிடைக்க கூடிய வாய்ப்புகள் உள்ளன. 2 நாடுகளின் ராணுவம் மீட்பு பணியில் ஈடுப்பட்டு உள்ளன.</p><p>கும்பகோணம் ஏஜென்சி முலம் சென்ற 57 பேரில் 21 பேர் பத்திரமாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். இந்த குழுவில் சென்ற 36 பேரை கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது.</p><h2>சீன எல்லை</h2><p>மற்றொரு குழுவாக சென்ற 150 பேர் சீன எல்லை வழியாக காத்மாண்டு வந்து உள்ளனர். இவர்கள் பல்வேறு விமானங்களில் வந்து கொண்டு இருக்கிறார்கள். மேலும் 39 பேர் குழுவாக சென்றவர்கள் பத்திரமாக உள்ளனர். இதில் 33 பேர் 31-ந்தேதி மாலை கோவைக்கு வந்து சேருகிறார்கள். 6 பேர் சென்னைக்கு வந்து சேருவார்கள்.</p><p>மகாதேவி யாத்திராவின் சேர்ந்த 49 பேர் எங்கு இருக்கிறார்கள் என்பது தொடர்பாக தகவல் தெரியவில்லை. 100 பேரை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் துயரத்தில் பங்கேற்கிறோம். இந்த நேரத்தில் நம்பிக்கையுடன் உள்ளோம்.</p><h2>பெங்களூரு</h2><p>சென்னையில் இருந்து பெங்களூரு வழியாகவும் சென்று உள்ளனர். மத்திய அரசின் வார் ரூம் முலமாக விரைவாக நடந்து வருகிறது. </p><p>இந்த சம்பவத்தில் அனைவரும் ஒன்று இணைந்துதான் செயல்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களை மீட்க வேண்டும் என்பது ஒரே நோக்கமாக உள்ளது.</p><p>இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.</p><h2>கலக்கம்</h2><p>நேபாள வெள்ளபாதிப்பு ஏற்பட்டு 5 நாட்கள் ஆகியும் தமிழர்கள் 100 பேரின் நிலை என்ன என்பது தெரியாமல் உள்ளதால் அவர்களது உறவினர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். நேபாளத்திற்கு சென்று மாயமானவர்களை உடனடியாக மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><h2>திண்டுக்கல்</h2><p>திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் மகள் தங்கமதி (வயது 49). தஞ்சாவூரில் வசித்து வரும் இவர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் கேரளத்தில் வசித்து வருகிறார். கும்பகோணத்தை சேர்ந்த தனியார் சுற்றுலா நிறுவனம் மூலம் கடந்த 23-ந்தேதி தங்கமதி நேபாளத்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்றார். 26-ந்தேதி வரை குடும்பத்தினருடன் செல்போனில் பேசி வந்துள்ளார்.</p><p>நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குக்கு பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. மேலும் எந்த தகவலும் இல்லாததால் தங்கமதியை மீட்டுத்தரக் கோரி அவரது குடும்பத்தினர் தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகம், தலைமை செயலகத்தில் மனு அளித்துள்ளனர். மேலும் நேபாள தூதரக உதவி எண்களை தொடர்பு ெகாண்டு கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><h2>தேனி தம்பதி</h2><p>இதேபோல் தேனி அருகே கோடாங்கிபட்டியை சேர்ந்த செல்வம் (48). அவரது மனைவி சித்ரா தேவி (40), தாய் சரஸ்வதி ஆகியோருடன் ெசன்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஏஜென்சி மூலம் நேபாளத்திற்கு கடந்த 14-ந்தேதி ஆன்மீக சுற்றுலா சென்றனர். அவர்களுடன் 49 பேர் சென்றனர். 27-ந்தேதி பயணத்தை நிறைவு செய்து ஊர் திரும்ப திட்டமிட்டிருந்தனர். ஆனால் நேபாளத்தில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்திற்கு பின்னர் சுற்றுலா குழுவினர் மாயமாகினர். அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.</p><p>இதுகுறித்து தேனி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். இருந்தபோதும் ஆன்மீக சுற்றுலா சென்ற 3 பேர் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் உறவினர்கள், கோடாங்கிபட்டி கிராமத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர். அரசு தங்களுக்கு உதவ வேண்டும் என அவர்கள் கோரிக்ைகை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>நேபாள வெள்ளப் பேரழிவு: அடையாளம் தெரியாத சடலங்களை அடக்கம் செய்யத் திட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/world/nepal-flood-disaster-plan-to-bury-unidentified-bodies</link><comments>https://www.maalaimalar.com/news/world/nepal-flood-disaster-plan-to-bury-unidentified-bodies#comments</comments><guid isPermaLink="false">48d3af50-9f6f-4d8e-9e5a-81de585dd5bb</guid><pubDate>Sun, 30 Aug 2026 05:57:19 +0000</pubDate><atom:updated>2026-08-30T05:57:19.091Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாளம்,Nepal Floods,Nepal disaster,நேபாள வெள்ளப்பெருக்கு,Bank vault theft,வஙகி கொள்ளை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/2s72xvhz/army.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nepal flood disaster]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/2s72xvhz/army.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வெள்ளப்பெருக்கில் பலியானவர்களின் சடலங்கள் தொடர்ந்து அழுகும் அபாயத்தில் இருப்பதால், சுகாதாரச் சீர்கேட்டைத் தவிர்க்க அவற்றை உடனடியாக அடக்கம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.</p><p>நேபாளத்தில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக நாடு முழுவதும் பெரும் பேரழிவு ஏற்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் ஏற்பட்ட சுனாமி போன்ற சேறு மற்றும் வெள்ளப் பெருக்கால் கிராமங்களும் நகரங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. </p><p>இதுவரை மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகளில் 734 சடலங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 2,400க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். பலியானவர்களின் சடலங்கள் தொடர்ந்து அழுகும் அபாயத்தில் இருப்பதால், சுகாதாரச் சீர்கேட்டைத் தவிர்க்க அவற்றை உடனடியாக அடக்கம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.</p><p>இந்திய எல்லையோர மாவட்டமான சித்வானில் அதிகபட்சமாக 233 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள மருத்துவமனைகளில் போதிய குளிரூட்டும் வசதிகள் இல்லாததால், தற்காலிக ஏற்பாடாகக் கட்டடங்களில் சடலங்கள் வைக்கப்பட்டன. எனினும், துர்நாற்றம் மற்றும் தொற்றுநோய் பரவும் அபாயம் கருதி, அடையாளம் தெரியாத உடல்களை உடனடியாக அடக்கம் செய்ய சுகாதார வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.</p><h2>டிஎன்ஏ <strong>மாதிரிகள்</strong> </h2><p>உடல்கள் அடக்கம் செய்யப்பட்டாலும், எதிர்காலத்தில் உறவினர்கள் தங்களது குடும்பத்தினரை அடையாளம் கண்டுகொள்ளப் பல நவீன வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. ஒவ்வொரு உடலிலும் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அவற்றுக்குத் தனித்துவமான குறிப்பு எண்கள் வழங்கப்படுகின்றன. சடலங்கள் 1.5 மீட்டர் ஆழமுள்ள குழிகளில் 40 சென்டிமீட்டர் இடைவெளியில் தனித்தனியாகப் புதைக்கப்படுகின்றன.</p><p>அடக்கம் செய்யப்படும் இடத்தை அடையாளப்படுத்த அதன் மேல் கான்கிரீட் தளமும், அதனுடன் கூடிய தகவல் பலகையும் அமைக்கப்படுகிறது. மேலும், இந்தப் புதைக்கும் நிகழ்வு முழுவதும் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்யப்படுவதோடு, அந்த இடத்தின் புவிசார் குறியீடும் பதிவு செய்யப்படுகிறது.</p><h2>உறவின<strong>ர்கள் கண்டறியும் நடைமு</strong>றை</h2><p>காணாமல் போனவர்களைத் தேடும் உறவினர்கள் நேபாளத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் தங்களது டிஎன்ஏ மாதிரிகளை வழங்கலாம். நேபாள சுகாதாரத் துறை, அடக்கம் செய்யப்பட்ட உடல்களிலிருந்து பெறப்பட்ட டிஎன்ஏ தரவுகளுடன் உறவினர்களின் மாதிரிகளை ஒப்பீடு செய்யும். டிஎன்ஏ பொருத்தம் உறுதி செய்யப்பட்டால், காவல்துறை பதிவேடுகளின் உதவியுடன் குறிப்பிட்ட புதைவிடம் கண்டறியப்பட்டு, சடலம் தோண்டி எடுக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.</p><p>பொதுமக்கள் எளிதில் அறியும் வகையில் அடையாளம் தெரியாத உடல்களின் விவரங்கள் மற்றும் புகைப்படங்கள் நேபாள காவல்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற இங்கிலாந்து பயணிகள் - டிக்டாக் வீடியோ மூலம் இருப்பிடத்தை தேடிய மகள்</title><link>https://www.maalaimalar.com/news/world/nepal-flood-missing-uk-tourists-daughter-tracks-location</link><comments>https://www.maalaimalar.com/news/world/nepal-flood-missing-uk-tourists-daughter-tracks-location#comments</comments><guid isPermaLink="false">f1fc7957-69b8-479b-a759-edebab6d584b</guid><pubDate>Sun, 30 Aug 2026 05:50:05 +0000</pubDate><atom:updated>2026-08-30T05:50:05.629Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திபெத்,Tibet,nepal flood,நேபாள வெள்ளம்,england tourists,இங்கிலாந்து பயணிகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/89urykob/Untitled-design-3.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ UK Tourists Missing in Nepal Floods]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/89urykob/Untitled-design-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இங்கிலாந்தில் இருந்து <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D">நேபாளத்திற்கு</a> சுற்றுலா சென்ற தனது தாய் மற்றும் அத்தை பெருவெள்ள பேரிடரில் சிக்கி காணாமல் போனதையடுத்து, அவர்கள் கடைசியாக எடுத்த டிக்டாக் வீடியோ மூலம் அவர்களின் இருப்பிடத்தை கண்டறிந்து, அவர்களை தொடர்ந்து தேடி வருவதாக படேல் என்பவர் தெரிவித்துள்ளார்.</p><p>இங்கிலாந்தில் இருந்து 33 பேர் அடங்கிய குழு ஒன்று, நேபாள் நாட்டிற்கு கடந்த சனிக்கிழமை (22.08.26) சுற்றுப்பயணம் செய்தது. இதையடுத்து கடந்த புதன்கிழமை நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 675க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர்.</p><p>மேலும் 3,000க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது. நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற 13 வயது சிறுவன் உட்பட 33 பிரிட்டிஷ் நாட்டினர், என்.எச்.எஸ் பணியாளர்கள் மற்றும் ஒரு பாதிரியார் ஆகியோர் காணாமல் போயினர்.</p><p>இந்த குழுவினருடன் இணைந்து ஹேமங்கினி ஜிதேந்திர படேலின் தாயார் துளசி படேல் மற்றும் அவரின் அத்தை ஹேமா சுனில் அமீன் ஆகியோர் திபெத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு, கடந்த வாரம் நேபாளத்திற்கு சென்றனர்.</p><p>இதையடுத்து நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில், படேலின் தாயாரும், அத்தையும் காணாமல் போயினர். அவர்களை பல வழிகளில் தொடர்பு கொள்ள முயற்சி செய்தும், படேலால் முடியாமல் போனது.</p><p>இந்த நிகழ்வு குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு படேல் அளித்த பேட்டியில், தனது தாயாரும், அத்தையும் திபெத் செல்வதற்காக ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே, அதற்கான முயற்சிகளை செய்து வந்ததாக கூறினார்.</p><p>மேலும் அவர்கள் காணாமல் போனதை அடுத்து, உள்ளூர் நேபாள சுற்றுலா வழிகாட்டி ஒருவர் எடுத்திருந்த ஒரு டிக்டாக் வீடியோவை தான் கண்டறிந்ததாக கூறினார்.</p><p>அந்த வீடியோவில் தனது அம்மா மற்றும் அத்தையின் புகைப்படங்கள் இருந்ததாகவும் அவர் கூறினார். </p><p>இதையடுத்து நேபாள-சீன எல்லையில் உள்ள நட்பு பாலம் என்ற இடத்தில் சுற்றுலா குழுவிடம் இருந்து கிடைத்த ஜிபிஎஸ் சிக்னல் மூலம், தனது குடும்பத்தினர் கடைசியாக இருந்த இடம் தெரியவந்ததாகவும் அவர் கூறினார்.</p><p>பின்னர் அந்த சுற்றுலா வழிகாட்டியிடம் உள்ளூர் சிம்கார்டு இருக்கும் என்பதால், அவருக்கு வாட்ஸ்அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறினார்.</p><p>காணாமல் போன தனது தாய் மற்றும் அத்தையை தேடுவதற்காக, தனது குடும்பத்தினர் நேபாள் செல்ல இருந்ததாகவும், ஆனால் அந்த பகுதி எந்த இடத்தில் எவ்வாறு உள்ளது என்று தெரியாத காரணத்தால், அந்த முடிவை கைவிட்டதாகவும் அவர் கூறினார்.</p><p>இதையடுத்து காணாமல் போன தனது தாய் மற்றும் அத்தையை மீட்பு குழுவினரின் உதவியுடன் படேல் தொடர்ந்து தேடி வருவதாக தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நேபாளத்தில் பாய்ந்தோடும் வெள்ளப்பெருக்கு: பலி எண்ணிக்கை 734 ஆக உயர்வு; நிவாரணம் கிடைக்காமல் தவிக்கும் மக்கள்</title><link>https://www.maalaimalar.com/news/topnews/nepal-flash-floods-death-toll-rises-to-734</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/nepal-flash-floods-death-toll-rises-to-734#comments</comments><guid isPermaLink="false">9c93690f-bc91-4198-b3db-5ef5e063eaa8</guid><pubDate>Sun, 30 Aug 2026 05:36:21 +0000</pubDate><atom:updated>2026-08-30T05:36:21.913Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாளம்,Nepal Floods,Nepal disaster,நேபாள வெள்ளப்பெருக்கு,Bank vault theft,வஙகி கொள்ளை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/caaa6kom/mm.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Raging floods in Nepal]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/caaa6kom/mm.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>உலகம் (World)</category><content:encoded><![CDATA[ <p>வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 734 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p><p>நேபாள நாட்டின் இமயமலை எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் பனிப்பாறை சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக லெண்டே கோலா மற்றும் திரிசூலி ஆறுகளில் மிகக் கடுமையான <a href="https://www.maalaimalar.com/news/world/nepal-flood-rescue-army-saves-boy-from-rooftop-by-helicopter">வெள்ளப்பெருக்கு </a>ஏற்பட்டுள்ளது. இந்த பெருவெள்ளம் கிராமங்களையும், உட்கட்டமைப்புகளையும் அடியோடு அடித்துச் சென்று பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 734 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p><h2>காணா<strong>மல் போன 2,500 நபர்</strong>களைத் தேடும் பணி</h2><p>இந்த இயற்கை சீற்றத்தால் ரசுவா, நுவாகோட் மற்றும் தாடிங் ஆகிய மாவட்டங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை சுமார் 2,500 பேர் காணாமல் போயுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. காணாமல் போனவர்களில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, அந்நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் முப்படையினரும் காவல் துறையினரும் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.</p><h2>சேறும் சகதியு<strong>மாக மாறிய குடியி</strong>ருப்புப் பகுதிகள்</h2><p>பாதிக்கப்பட்ட பல கிராமங்கள் சேறும் சகதியுமாக மாறியுள்ளதால், மீட்புக் குழுவினர் அங்குச் செல்வதில் பெரும் சிரமம் நிலவுகிறது. பல இடங்களில் பாலம் மற்றும் சாலைகள் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டதால், வெளி உலகத் தொடர்பு துண்டிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைச் சென்றடைய ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.</p><h2>மருத்துவ<strong>மனைகளில் தட்டு</strong>ப்பாடு</h2><p>மீட்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், முக்கிய சாலைகள் சேதமடைந்துள்ளதால் முகாம்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் உணவு, குடிநீர் மற்றும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களைக் கொண்டு சேர்ப்பதில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்க போதிய மருந்துகள் இன்றி மருத்துவப் பணியாளர்கள் திணறி வருகின்றனர்.</p><h2>மீண்டும் உ<strong>யரும் நதிநீர் மட்</strong>டம்</h2><p>சன் கோஷி மற்றும் போடே கோஷி ஆகிய ஆறுகளில் நீர்மட்டம் மீண்டும் திடீரென உயர்ந்து அபாயக் கட்டத்தைத் தாண்டியுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களும், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களும் தீவிர எச்சரிக்கையுடன் இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. தொடரும் மேகமூட்டம் மற்றும் மோசமான வானிலை மீட்பு நடவடிக்கைகளுக்குப் பெரிய சவாலாக மாறியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>VIDEO- மரண விளிம்பில் துணிச்சல்: சிறுவனுக்கு கை கொடுத்த டி-சர்ட்-  உயிரை மீட்ட ராணுவம் !</title><link>https://www.maalaimalar.com/news/world/nepal-flood-rescue-army-saves-boy-from-rooftop-by-helicopter</link><comments>https://www.maalaimalar.com/news/world/nepal-flood-rescue-army-saves-boy-from-rooftop-by-helicopter#comments</comments><guid isPermaLink="false">71954af3-3e4c-44f0-a0ae-a375a8119ec6</guid><pubDate>Sun, 30 Aug 2026 04:41:35 +0000</pubDate><atom:updated>2026-08-30T04:41:35.542Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Nepal Floods,Flash Flood,Rasuwa,ரசுவா,நேபாள வெள்ளப்பெருக்கு,Nuwakot,போதே கோஷி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/3bjxiqvf/flidh.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nepal Floods]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/3bjxiqvf/flidh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாள நாட்டின் வடக்கே அமைந்த ரசுவா மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட கனமழை காரணமாக <a href="https://www.maalaimalar.com/news/world/nepal-flood-swept-bank-safe-29-arrested">போதே கோஷி நதியில் </a>கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பல மாடி கட்டிடம் ஒன்றின் மேல் கூரையில் சிறுவன் ஒருவன் தனியாகச் சிக்கிக் கொண்டான். நாற்புறமும் சீறிப்பாய்ந்த வெள்ள நீரால் சூழப்பட்டு, வேறு எந்த வழியும் இன்றி உயிருக்குப் போராடிய நிலையில், அவன் காப்பாற்றக் கோரி தான் அணிந்திருந்த டி-சர்ட்டை கழற்றி வானத்தை நோக்கித் தொடர்ச்சியாக வீசி சிக்னல் கொடுத்தான்.</p><figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr"> The house was already sitting in the river, then a boy climbed onto the roof and started waving his T-shirt at the sky. <br><br>That was the only signal he had... Then a Nepal Army helicopter dropped in close enough for a soldier to grab his hand and pull him off the roof.<br><br>Hundreds…</p>&mdash; Mario Nawfal (@MarioNawfal) <a href="https://x.com/MarioNawfal/status/2093541653441085758?ref_src=twsrc%5Etfw">August 29, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2>வானில் <strong>பறந்த ஹெலி</strong>காப்டர்</h2><p>சிறுவனின் சிக்னலைக் கண்ட நேபாள ராணுவப் மீட்புக் குழுவினர், ஹெலிகாப்டரை உடனடியாக அக்கட்டிடத்தின் கூரைக்கு மிக நெருக்கமாகத் தாழ்த்திப் பறக்கவிட்டனர். மிகக் கடுமையான காற்றும் வெள்ள இரைச்சலும் இருந்த போதிலும், திறமையுடன் செயல்பட்ட ராணுவ வீரர் ஒருவர், ஹெலிகாப்டரின் கீழ் பகுதியைப் பிடித்துக் கொண்டு நின்ற சிறுவனின் கையைப் பற்றி இழுத்து விமானத்திற்குள் பத்திரமாக ஏற்றினார். இந்தத் விறுவிறுப்பான மீட்புப் பணி தொடர்பான காணொளி தற்போது உலகளவில் இணையத்தில் வைரலாகி அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.</p><h2>தொடரும் <strong>மீட்புப் பணி</strong>கள்</h2><p>இந்த திடீர் வெள்ளத்தால் சீனா-நேபாள எல்லைப் பகுதிகளான நுவாகோட் மற்றும் ரசுவா ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன, சாலைகள் மற்றும் பாலங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. ஆயிரக்கணக்கான மக்களை ராணுவம் ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு மீட்டு வருகிறது. காணாமல் போன நூற்றுக்கணக்கானோரைக் கண்டுபிடிக்கத் தீவிர தேடுதல் நடவடிக்கை தொடர்கிறது.</p>]]></content:encoded></item><item><title>3 ஃபைல்களை நீ அவிழு, நானும் அவிழ்க்கிறேன்: நான் மோசமான ஆளு- ஆர்.எஸ். பாரதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-bharati-challenge-to-tn-cm-vijay-you-open-three-files-i-open-three</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-bharati-challenge-to-tn-cm-vijay-you-open-three-files-i-open-three#comments</comments><guid isPermaLink="false">517d77de-dc63-4ff0-ae2a-40762e8e38e5</guid><pubDate>Sun, 30 Aug 2026 04:32:51 +0000</pubDate><atom:updated>2026-08-30T04:32:51.847Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,RS Bharati,tn cm vijay,TVK Govt</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/ipwqapqe/RSBharati001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்- ஆர்எஸ் பாரதி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/ipwqapqe/RSBharati001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வேலுரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக அமைப்புச் செயலாளர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-political-clash-rs-bharathi-counters-adhav-arjunas-challenge-over-local-body-polls-and-mayor-post">ஆர்.எஸ். பாரதி</a> கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-</p><p>திமுக-வை பார்த்து சவால் விடுகிறார் விஜய். கோப்புகள் எல்லாம் ரெடியா இருக்கு, டேபிளில் இருக்கிறது. நான் அவிழ்த்தால் என்ன ஆகும் என்று சட்டசபையில் சொல்கிறார். அவிழ்ப்பதுதான் உன்னோட வேலை. இந்த பூச்சாண்டி காட்டுவதெல்லாம் வேண்டாம். தணிக்கை செய்யப்பட்டது என்கிறார்.</p><p>ஒன்றும் தெரியாதவர்கள்தான் அமைச்சராகவும், எம்.எல்.ஏ.-வாகவும் இருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் சிஏஜி அறிக்கை வைக்கப்பட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வார்கள். அதேபோல் சட்டசபையில் சிஏஜி ரிப்போர்ட்டை வைப்பார்கள். அந்த சிஏஜி ரிப்போர்ட்தான் இந்த மூன்றும்.</p><p>எந்தவொரு சிஏஜி ரிப்போர்ட்டும் அரசாங்கத்தை பாராட்டி இருக்காது. ஆடிட் என்பது மாநகராட்சி முதல் அரசாங்கம் வரை நடக்கக் கூடியது. உடனே ஊடகங்கள் எல்லாம், பத்திரிகை எல்லாம் மூன்று பைல்கள் இருக்கிறது..,</p><h2>ஜெயலலிதா என்கிட்ட வால் ஆட்டிச்சி</h2><p>நான் கூட திருவொற்றியூர் கூட்டத்தில் தைரியமாக சொன்னேன். நீ அவிழ் மூன்ற, நான் அவிழ்க்கிறேன் மூன்ற. நான் மோசமான ஆளு. இப்படிதான் முதன்முதல் ஜெயலலிதா என்கிட்ட வால் ஆட்டிச்சி. அதன் விளைவு என்ன என்பதை அந்த அம்மா உயிரோடு இருந்தா கேட்டு தெரிஞ்சுக்கோங்க.</p><p>இதேபோல்தான் ஆணவமாக பேசினார். அன்னைக்கு ஜெயலலிதா பெரிய தப்பு எதுவும் செய்யல. டான்சி நிலத்தை வாங்கினாங்க. அரசு நிலத்தை வாங்கக் கூடாது. நான் டான்சி நிலத்தை வாங்கியது தவறு என ஒரு அறிக்கை கொடுத்தது. திமுக-வுக்கு ஒரு எம்.எல்.ஏ. கூட கிடையாது. கண்ணுக்கு எட்டியவரை எதிரிகளை காணவில்லை என்று சொன்னார்.</p><h2>வாய்க்கொழுப்பு</h2><p>மூன்று பேர்தான் திமுக-வில் வெற்றி பெற்றார்கள். கலைஞர் ராஜினாமா செய்துவிட்டார். இருவர் அவைக்கு சென்றார்கள். அந்த தைரியத்தில் அந்த அம்மா, நான் டான்சி நிலத்தை வாங்கினேன். வாங்கினால் என்ன தப்பு என்று சொன்னார்.</p><p>வாம்மா மாட்டினியா நீ என்று சொல்லி., போட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட் வரை சென்று உள்ளே சென்றார்கள். வாய்க்கொழுப்பு மட்டும் இருக்கக் கூடாது. எந்த கொழுப்பும் இருக்கலாம். வாய்க்கொழுப்பு மட்டும் இருக்கக் கூடாது. அந்த அம்மா பெரிய தப்பு ஏதும் செய்துவிடல. எனக்கு வேண்டாம் என்று அந்த நிலத்தை திருப்பி கொடுத்திருந்தாலம் முடிஞ்சி போச்சு.</p><p>இவ்வாறு ஆர்.எஸ். பாரதி பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>என்னை கொன்று விடுவார்கள் என்று கதறிய கர்ப்பிணி - பிரசவத்திற்கு பின்பு தாயும், குழந்தையும் உயிரிழந்த சோகம்</title><link>https://www.maalaimalar.com/news/national/pregnant-woman-pleaded-they-will-kill-me-dies-with-baby-after-delivery</link><comments>https://www.maalaimalar.com/news/national/pregnant-woman-pleaded-they-will-kill-me-dies-with-baby-after-delivery#comments</comments><guid isPermaLink="false">173f9c91-460e-498b-9a8f-4d0e84ab06c3</guid><pubDate>Sun, 30 Aug 2026 04:26:35 +0000</pubDate><atom:updated>2026-08-30T04:26:35.332Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அரசு மருத்துவமனை,Government Hospital,மத்திய பிரதேசம்,Madhyapradesh,கர்ப்பிணி,pegnant women</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/ysgfqynz/Untitled-design-2.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pregnant Woman and Newborn Die]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/ysgfqynz/Untitled-design-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/மத்திய-பிரதேசம்">மத்திய பிரதேசத்தில்</a> உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 25 வயதான கர்ப்பிணி ஒருவர், தனக்கு மருத்துவமனை ஊழியர்கள் சரியாக மருத்துவம் பார்க்காமல் கொன்றுவிடுவார்கள்; </p><p>அதனால் தன்னை மருத்துவமனையில் இருந்து அழைத்து செல்லுமாறு கூறியதை அடுத்து, குழந்தையை பெற்ற சிறிது நேரத்திலேயே அந்த பெண்மணியும் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><h3><strong>அரசு மருத்துவமனை</strong></h3><p>மத்திய பிரதேசத்தை சேர்ந்த ரேவா மாவட்டம் ஹட்வா பகுதியை சேர்ந்த கல்பனா என்ற 25 வயது கர்ப்பிணி ஒருவர், தனது முதல் குழந்தையை பிரசவிப்பதற்காக, அந்த பகுதியில் உள்ள ஒரு சஞ்சய் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ஆகஸ்ட் 25ஆம் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார்.</p><p>அப்போது அவர், “நான் பிழைக்க மாட்டேன், தயவுசெய்து என்னை காப்பாற்றுங்கள், என் உயிருக்கு ஆபத்து” என்று கூறிய வீடியோ ஒன்று வெளியானது.</p><p>மேலும் அவர், “என்னை இப்படி நடத்துவது தொடர்ந்தால், மருத்துவமனை ஊழியர்கள் என்னை கொன்றுவிடுவார்கள்” என்று கூறுவதும் அந்த வீடியோவில் பதிவானது.</p><p>இதையடுத்து சில மணி நேரங்கள் கழித்து பிரசவித்த பச்சிளம் குழந்தையும், அந்த பெண்ணும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.</p><h3><strong>கர்ப்பிணியின் காணொளி</strong></h3><p>இந்த நிலையில் கல்பனா இறப்பதற்கு முன்பு பதிவு செய்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது. அந்த வீடியோவில், அவர் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதும், பிரசவ வார்டுக்குள் அழுதுகொண்டு, அங்கிருந்து வெளியேற முயற்சிப்பதும் பதிவாகியுள்ளது.</p><p>மேலும் அந்த பெண்மணி தனது உறவினர்களை தொடர்பு கொள்ள முயல்வதும், அவரை செவிலியர்கள் கட்டுப்படுத்தி, அங்கேயே இருக்குமாறு சமாதானப்படுத்த முயற்சிப்பதும் பதிவானது.</p><p>ஒரு கட்டத்தில், ஒரு ஊழியர் அந்த பெண்ணிடம், “உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா?" என்று கேட்கும்போது, கர்ப்பிணி தொடர்ந்து தனது குடும்பத்தினரை நோக்கிச் சென்று, தனக்கு முறையான சிகிச்சை கிடைக்கவில்லை என்று அழுதுகொண்டே குற்றம் சாட்டுவது பதிவானது.</p><h3><strong>தந்தை கோரிக்கை</strong></h3><p>கர்ப்பிணி கல்பனா உயிரிழந்தது குறித்து அவருடைய தந்தை ராம்ஷரன் மிஸ்ரா கூறுகையில், “கல்பனா எனது ஒரே மகள்; அவளது திருமணத்திற்காக 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை விற்றிருந்தேன்.</p><p>இன்று அவள் எங்களை விட்டுப் பிரிந்துவிட்டாள். இந்த அலட்சியத்திற்குப் பொறுப்பானவர்கள் மீது காவல்துறை முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ய வேண்டும்.</p><p>பணியில் இருந்த மருத்துவரையும் ஊழியர்களையும் இடைநீக்கம் செய்ய வேண்டும். எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், பிரேதப் பரிசோதனை நடத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம்,” என்று அவர் கூறினார்.</p><p>மேலும் கல்பனாவின் குடும்பத்தினர் கூறுகையில், மயக்க மருந்து கொடுக்கப்பட்ட பிறகு கல்பனாவுக்கு சுயநினைவு திரும்பவில்லை. அதிகப்படியான மருந்தளவு அவரது மரணத்திற்கு காரணமாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தனர்.</p><h3><strong>மருத்துவமனை நிர்வாகம்</strong></h3><p>இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், மருத்துவ நெறிமுறைகளின்படி அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், மருத்துவர்கள் தரப்பில் எந்தவிதமான அலட்சியமும் இல்லை என்றும் தெரிவித்தது.</p><p>இதையடுத்து கர்ப்பிணி மற்றும் அவரது குழந்தை உயிரிழந்தது தொடர்பாக விசாரிக்க, ஒரு உயர்மட்ட விசாரணை குழு அமைக்கப்படும் என்றும், இதற்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிர்வாகம் உறுதியளித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>ஐதராபாத் நில ஏலத்தில் புதிய வரலாறு: ரூ.1,447 கோடிக்கு விற்பனையான பிளாட்!</title><link>https://www.maalaimalar.com/news/topnews/hyderabad-land-auction-sets-new-record-plot-sold-for-rs-1447-crore</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/hyderabad-land-auction-sets-new-record-plot-sold-for-rs-1447-crore#comments</comments><guid isPermaLink="false">206994a2-c711-40f3-8246-81263264765b</guid><pubDate>Sun, 30 Aug 2026 03:55:42 +0000</pubDate><atom:updated>2026-08-30T03:55:42.628Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Hyderabad,Telangana,ஐதராபாத்,தெலுங்கானா,Hyderabad land auction,ஐதராபாத் நில ஏலம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/qnnedfvd/hydra.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Hyderabad land auction]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/qnnedfvd/hydra.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p>தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் முக்கிய வணிக மையமான ராய்துர்க் பகுதியில் நடத்தப்பட்ட மின்னணு நில ஏலத்தில் 5.38 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிளாட் பி2, ரூ.1,447.22 கோடிக்கு விற்பனையாகி மிகப்பெரிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. தெலுங்கானா தொழில்முறை உள்கட்டமைப்பு கழகம் நடத்திய இந்த ஏலத்தில், ஒரு ஏக்கர் நிலத்தின் விலை ரூ.269 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.</p><h2>ஒரே வார<strong>த்தில் உடைந்த</strong> முந்தைய சாதனை</h2><p>ராய்துர்க் நாலேஜ் சிட்டி பகுதியில் கடந்த வாரம் நடத்தப்பட்ட மற்றொரு ஏலத்தில் 5.25 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிளாட் பி1, ஏக்கருக்கு ரூ.264 கோடி வீதம் ரூ.1,386 கோடிக்கு விற்பனையானது. அந்த சாதனை படைக்கப்பட்டு ஒரே வாரத்திற்குள் தற்போது ஏக்கருக்கு ரூ.5 கோடி அதிகரித்து, புதிய வரலாற்று சாதனையை இந்த பிளாட் பி2 ஏலம் ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் ஏக்கருக்கு ரூ.237 கோடியாகவும், ஜூன் மாதம் ரூ.204 கோடியாகவும் இருந்த நிலத்தின் மதிப்பு, தற்போது மிக குறுகிய காலத்தில் ரூ.269 கோடியாக உயர்ந்துள்ளது.</p><p>கடந்த இரு வாரங்களில் நடத்தப்பட்ட இந்த இரு ஏலங்கள் மூலம் 10.63 ஏக்கர் நிலத்திலிருந்து தெலுங்கானா அரசுக்கு மொத்தம் ரூ.2,833.22 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்த மின் ஏலம் எம்.எஸ்.டி.சி தளம் வழியாகவும், ஜே.எல்.எல் நிறுவனத்தின் ஆலோசனையுடனும் வெளிப்படையாக நடத்தப்பட்டது. ஐதராபாத்தின் நவீன உள்கட்டமைப்பு வசதிகள், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் தொழிலாளர் சாதகமான சூழல் ஆகியவை சர்வதேச மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களை பெருமளவில் ஈர்த்து வருவதை இந்த ஏலத்தின் வெற்றி வெளிப்படுத்துகிறது.</p>]]></content:encoded></item><item><title>நேபாள வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட வங்கிப் பெட்டகம்: உடைத்து கொள்ளையடித்த 29 பேர் கைது</title><link>https://www.maalaimalar.com/news/world/nepal-flood-swept-bank-safe-29-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/world/nepal-flood-swept-bank-safe-29-arrested#comments</comments><guid isPermaLink="false">f5e3ab90-7bcc-4ff7-a1a6-35a6d04fc30e</guid><pubDate>Sun, 30 Aug 2026 03:27:02 +0000</pubDate><atom:updated>2026-08-30T03:27:02.031Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாளம்,Nepal Floods,Nepal disaster,நேபாள வெள்ளப்பெருக்கு,Bank vault theft,வஙகி கொள்ளை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/zpswg8q1/oo.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nepal floods  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/zpswg8q1/oo.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாள நாட்டில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஒரு வங்கியின் பாதுகாப்புப் பெட்டகம் ஆற்றின் வழியே பல மைல் தூரம் அடித்துச் செல்லப்பட்டது. கரை ஒதுங்கிய அந்தப் பெட்டகத்தை உடைத்து அதில் இருந்த பெரும் தொகையை அப்பகுதி மக்கள் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. &nbsp; </p><p>நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போட்டேகோஷி பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஒரு வங்கியின் வலுவான பணப் பெட்டகம் மிதந்து சென்றுள்ளது. இது திரிசூலி ஆற்று வழியே பல கிலோமீட்டர் தூரம் அடித்துச் செல்லப்பட்டு, தாதிங் மாவட்டத்தின் கலச்சி கிராம ஊராட்சிக்குட்பட்ட பெல்குகோலா பகுதியில் கரை ஒதுங்கியது. <a href="https://www.maalaimalar.com/news/national/108-indian-nationals-rescued-from-flood-hit-nepal">வெள்ள நிவாரணப் பணிகள்</a> ஒருபுறம் தீவிரமாக நடந்து கொண்டிருந்த வேளையில், ஆற்றின் ஓரம் மிதந்து வந்த இந்த இரும்புப் பெட்டகத்தை அப்பகுதி மக்கள் சிலர் பார்த்துள்ளனர். &nbsp; </p><h2>பெட்டகத்<strong>தை உடைத்து ரூ.92 லட்சம் சுரு</strong>ட்டல்</h2><p>இரும்புப் பெட்டகத்தை கண்டெடுத்த நபர்கள், காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்காமல், கருவிகளைக் கொண்டு அதனை உடைத்துள்ளனர். அதனுள் வைக்கப்பட்டிருந்த பெருந்தொகை பணத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், அதைத் தங்களுக்குள் பிரித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாதிங் மாவட்ட காவல்துறையினர் உடனடி விசாரணை மேற்கொண்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தினர். &nbsp;</p><h2>29 <strong>பேர் கைது</strong></h2><p>காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட சோதனையில், கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய 19 முதல் 49 வயது வரையிலான 29 பேரைப் பிடித்துக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 92,68,505 நேபாள ரூபாயை (இந்திய மதிப்பில் சுமார் 58 லட்சம் ரூபாய்) காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கைதானவர்கள் கலச்சி, சித்தாலேக் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். &nbsp; </p><p>நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 2,400-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். உயிரிழப்புகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் இக்கட்டான சூழலில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணின் சடலத்திலிருந்து தங்கத் தோடுகளைத் திருடிய இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். ஒருபுறம் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில், இதுபோன்ற தொடர் கொள்ளைச் சம்பவங்கள் நேபாள மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>லார்ட்ஸ் டெஸ்ட்: 3-வது நாள் ஆட்ட முடிவில் 357 ரன்கள் முன்னிலைப் பெற்று வலுவான நிலையில் இங்கிலாந்து</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/eng-vs-pak-england-strong-position-357-run-lead-lords-test</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/eng-vs-pak-england-strong-position-357-run-lead-lords-test#comments</comments><guid isPermaLink="false">7e4cc19f-029f-46c9-bc7d-d04029230043</guid><pubDate>Sun, 30 Aug 2026 02:50:11 +0000</pubDate><atom:updated>2026-08-30T02:50:11.122Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Lords Test,லார்ட்ஸ் டெஸ்ட்,ENG vs PAK</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/nbg7l62n/ENGvsPAK001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ லார்ட்ஸ் டெஸ்ட்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/nbg7l62n/ENGvsPAK001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 290 ரன்கள் சேர்த்த நிலையில், பாகிஸ்தான் அணி 110 ரன்களில் சுருண்டது.</p><h2>இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்</h2><p>இங்கிலாந்து- பாகிஸ்தான் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 27-ந்தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது.</p><p>அதன்படி இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 290 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. ஜோர்டன் காக்ஸ் 55 ரன்களும், ஜேமி ஸ்மித் 61 ரன்களும், கஸ் அட்கின்சன் 45 ரன்களும் அடித்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் முகமது அபப்ாஸ் 4 விக்கெட்டும், முகமது அலி 3 விக்கெட்டும் வீழ்த்தினர். குர்ரம் ஷேசாத் மற்றும அலி உஸ்மான் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.</p><h2>பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸ்</h2><p>பின்னர் பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் ஷான் மசூத் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அப்துல்லா ஷபிக் 5 ரன்களிலும், பாபர் அசாம் 8 ரன்களிலும், சாத் ஷகீல் 16 ரன்களிலும், முகமது ரிஸ்வான் 7 ரன்களிலும், அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மற்றொரு தொடக்க வீரர் அசான் அவைஸ் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார். கடைநிலை வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். அலி உஸ்மான், குர்ரம் ஷேசாத் தலா ஒரு ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இமாம்-உல்-ஹக் காயம் காரணமாக களம் இறங்காததால் பாகிஸ்தான் 110 ரன்களில் சுருண்டது. பாகிஸ்தான் அணியால் 37.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடிந்தது. இங்கிலாந்து அணி சார்பில் ஒல்லி ராபின்சன் 4 விக்கெட்டும், ஆர்ச்சர் 3 விக்கெட்டும், ஜோஷ் டாங்க் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><h2>இங்கிலாந்து 2-வது இன்னிங்ஸ்</h2><p>180 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்துள்ளது. முன்னணி வீரர்கள் விரைவாக ஆட்டமிழந்த போதிலும், டான் லாரன்ஸ் சிறப்பாக விளையாடி 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். தற்போது வரை இங்கிலாந்து 357 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் கைவசம் 3 விக்கெட் உள்ளது. இதனால் 400 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்க வாய்ப்புள்ளது.</p><p>400 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டால் அது பாகிஸ்தானுக்கு கடினமான இலக்காகும். இதனால் இங்கிலாந்து இந்த போடடியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற வாய்ப்புள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நேபாள வெள்ளம்: இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 97 வயது மூதாட்டி- போர் வீரனை போல் காட்சியளித்ததாக பேரன் உருக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/world/nepal-floods-97-year-old-grandmother-heroic-rescue</link><comments>https://www.maalaimalar.com/news/world/nepal-floods-97-year-old-grandmother-heroic-rescue#comments</comments><guid isPermaLink="false">6c8c4b58-4c2f-4b63-bcc0-64a8329c8a6e</guid><pubDate>Sun, 30 Aug 2026 02:20:48 +0000</pubDate><atom:updated>2026-08-30T02:20:48.968Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாள்,nepal,nepal flood,nepal army,நேபாள ராணுவம்,நேபாள வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/quhw1g95/Untitled-design.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nepal army rescued 97-year-old Guna Maya Bohara]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/quhw1g95/Untitled-design.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">நேபாள வெள்ளத்தில்</a> மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்  97 வயதான மூதாட்டி ஒருவரை மீட்பு படையினர் ஜேசிபி இயந்திரத்தின் மூலமாக மீட்கும் காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.</p><h3><strong>97 வயது மூதாட்டி</strong></h3><p>நேபாள வெள்ளத்தில் சிக்கி மாயமாகி கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த 97 வயதான மூதாட்டி குணா மாயா போஹரா என்பவரை மீட்பு குழுவினர் ஜேசிபி வாகனத்தின் மூலம் பத்திரமாக மீட்டனர்.</p><p>அந்த மூதாட்டியை கட்டிட இடிபாடுகளில் இருந்து வெளியே எடுப்பதற்கு, நேபாள ராணுவத்திற்கு சுமார் நான்கு மணி நேரம் ஆனது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டி பூரண உடல்நலத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த மீட்பு நடவடிக்கை குறித்து மூதாட்டியின் கொள்ளு பேரன் தீபக் போஹரா கூறுகையில், எனது மகனும், எனது சகோதரரும் கயிறு வழியாக கீழே இறங்கி மூதாட்டி உயிருடன் இருப்பதை உறுதி செய்தனர்.</p><p>மேலும் எனது பாட்டி போரில் வெற்றி பெற்று திரும்பும் ஒரு போர்வீரனை போல காட்சியளித்ததாகவும் அவரின் கொள்ளுப் பேரன் கூறினார்.</p><h3><strong>நேபாள வெள்ளம்</strong></h3><p>நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் இதுவரையில் குறைந்தது 676 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உட்பட, கிட்டத்தட்ட 3,000 பொதுமக்கள் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போயுள்ளனர்.</p><p>குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து வீடுகள் முதல் குடியிருப்புகள் வரை, அனைத்தையும் அடித்து கொண்டு போனது.</p><p>இதையடுத்து நேபாளத்தில் காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மற்றும் நிவாரண மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>நேபாள மீட்பு படையினருடன், இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளை சேர்ந்த மீட்பு மற்றும் நிவாரண குழுவினர்களும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.</p><figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="es" dir="ltr">RESCATAN CON VIDA A MUJER DE 97 AÑOS TRAS CASI 24 HORAS BAJO LOS ESCOMBROS <br><br>Contra todo pronóstico, Guna Maya Bohara, de 97 años, fue rescatada con vida después de permanecer cerca de 24 horas atrapada bajo lodo y escombros tras las devastadoras inundaciones en Nepal.<br><br>… <a href="https://t.co/kxf1pQXjMr">pic.twitter.com/kxf1pQXjMr</a></p>&mdash; EnBoga (@EnBogaMx) <a href="https://x.com/EnBogaMx/status/2093570797763715075?ref_src=twsrc%5Etfw">August 29, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><p>இதற்கிடையில் நேபாளத்தில் புதிதாக மழை மற்றும் இடியுட கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>நேபாள வெள்ளம் குறித்து அந்நாட்டின் நிதி அமைச்சர் ஸ்வர்னிம் வாக்லே கூறுகையில், வெள்ளத்திற்கு பிறகு நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப சுமார் 4 பில்லியன் முதல் 5 பில்லியன் டாலர் வரை தேவைப்படும் என்றும், இது நாட்டின் பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட பத்தில் ஒரு பங்கிற்கு சமம் என்றும் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பணியின்போது அரசு ஊழியர்கள் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்? வழிகாட்டுதல்களை உருவாக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-high-court-directs-guidelines-on-cash-held-by-government-staff</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-high-court-directs-guidelines-on-cash-held-by-government-staff#comments</comments><guid isPermaLink="false">3e1d88df-13be-43f0-bee2-98cef7bf97b4</guid><pubDate>Sun, 30 Aug 2026 02:17:20 +0000</pubDate><atom:updated>2026-08-30T02:17:20.813Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,மதுரை ஐகோர்ட் கிளை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/akmpk2g4/MaduraiHighcourt001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மதுரை ஐகோர்ட்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/akmpk2g4/MaduraiHighcourt001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அரசு ஊழியர்கள் பணியின்போது எவ்வளவு பணம் வைத்திருக்கலாம் என்பது பற்றிய வழிகாட்டுதல்களை நிர்ணயிக்க தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.</p><h2>லஞ்ச வழக்கு</h2><p>நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கலா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-</p><p>நெல்லை மாவட்டம் முக்கூடலில் சார்பதிவாளராக கடந்த 2021-ம் ஆண்டில் பணியாற்றினேன். அப்போது எனது அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதில் ரூ.45 ஆயிரத்தை கைப்பற்றினர். இந்த நடவடிக்கை தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் என் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதனை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.</p><p>இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.</p><p>இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், அந்த தொகை திருமண செலவுக்காக மனுதாரர் வைத்திருந்த பணம்தான். எனவே அவர் மீதான நடவடிக்கையை ரத்து செய்யவேண்டும் என வாதாடினார்.</p><h2>சுற்றறிக்கை</h2><p>இந்த வழக்கை விசாரித்து நீதிபதி புகழேந்தி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-</p><p>லஞ்ச ஒழிப்பு துறையினரால் நடத்தப்பட்ட திடீர் ஆய்வின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியர் ஒருவர் பணியில் இருக்கும்போது வைத்திருக்கக்கூடிய அதிகபட்ச பண அளவு குறித்து எந்தவொரு வழிகாட்டுதலோ அல்லது நிபந்தனையோ இல்லை என்றே தெரிகிறது.</p><p>இதே கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பிற வழக்குகளில், வெறும் 1,500 ரூபாயை வைத்து இருந்ததற்காகக்கூட லஞ்ச ஒழிப் புத்துறையால் வழக்குகள் தொடரப்பட்டு இருப்பது தெரியவருகிறது. இந்த விவகாரத்தில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் உதவுமாறு கோரப்பட்டது. இதையடுத்து பதிவுத்துறை சார்பில் 2009-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை விவரத்தை இந்த கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.</p><p>அதில், பதிவுத்துறையைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும்போது பணம் வைத்திருப்பது தொடர்பான சில வழிகாட்டுதல்களை இந்த சுற்றறிக்கை அறிவுறுத்துகிறது. இதுதொடர்பாக பதிவேடுகளை பராமரிக்க அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் கூடுதல் அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார்.</p><h2>சாத்தியக்கூறுகள்</h2><p>இது பதிவுத்துறைக்கு மட்டுமே அனுப்பப்பட்ட சுற்றறிக்கையாகும். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொருந்தக்கூடிய பொதுவான வழிகாட்டுதலோ அல்லது அரசாணையோ வெளியிடப்படவில்லை என்றே தெரிகிறது.</p><p>எனவே இந்த விவகாரம் குறித்து அரசு மட்டத்தில் பரிசீலிக்கப்பட வேண்டி உள்ளது. இதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, அந்தந்தத் துறைகளில் ஏதேனும் வழிகாட்டுதல்கள் உள்ளதா என்பது குறித்தும், பணியில் இருக்கும்போது அரசு ஊழியர்கள் வைத்திருக்கக்கூடிய பணத்தின் அளவை நிர்ணயிக்கும் வகையில் சீரான வழிகாட்டுதல்கள் அல்லது அரசா ணையை வெளியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அரசின் கருத்துகளை இந்த கோர்ட்டு எதிர்பார்க்கிறது.</p><h2>வழிகாட்டுதல்கள்</h2><p>ஏறக்குறைய அனைத்து கட்டணங்களையும் டிஜிட்டல் மூலம் மக்கள் செலுத்தக்கூடிய இன்றைய காலகட்டத்தில், அலுவலகத்திற்கு செல்லும்போது கணிசமான அளவு ரொக்கப் பணத்தை எடுத்து செல்வது தொடர்பான நடைமுறை குறித்து, அரசு ஒரு பொருத்தமான வழிகாட்டுதலை நிர்ணயிப்பதன் மூலம் தீர்வு காணவேண்டும். இத்தகைய நிபந்தனை விதிக்கப்பட்டால், அது அரசு அலுவலகங்களில் ஊழலை ஓரளவுக்கு கட்டுப்படுத்தக்கூடும். அதேநேரத்தில் அரசு ஊழியர்கள் தேவையற்ற வகையில் துன்புறுத்தப்படாமல் இருப்பதையும் உறுதி செய்யும்.</p><p>ஊழலை ஒழிப்பதை அரசு தனது நோக்கமாக கொண்டுள்ளது. இதுதொடர்பாக வகுக்கப்படும் வழிகாட்டுதல்களானது, ஊழலற்ற நிர்வாகத்தை அடைவதற்கான அரசின் நோக்கத்தை வலுப்படுத்தக்கூடும். அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்வதற்காக இந்த வழக்கு வருகிற வருகிற 3-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.</p><p>இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கக்கூடாது என நினைப்பவர் உண்மையான இந்துவாக இருக்க முடியாது: மோகன் பகவத்</title><link>https://www.maalaimalar.com/news/world/no-true-hindu-can-think-muslims-should-not-be-in-india-mohan-bhagwat</link><comments>https://www.maalaimalar.com/news/world/no-true-hindu-can-think-muslims-should-not-be-in-india-mohan-bhagwat#comments</comments><guid isPermaLink="false">e3a33c32-b423-4492-b3db-06bd8ca91859</guid><pubDate>Sun, 30 Aug 2026 02:14:09 +0000</pubDate><atom:updated>2026-08-30T02:14:09.712Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Mohan Bhagwat,RSS,மோகன் பகவத்,ஆர்.எஸ்.எஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/eewfck3w/Untitled-design-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ RSS Chief Mohan Bhagwat]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/eewfck3w/Untitled-design-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பேசிய ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்) தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/மோகன்-பகவத்">மோகன் பகவத்</a>, இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கக்கூடாது என்று நினைக்கும் இந்து மதத்தை சேர்ந்த ஒருவர், உண்மையான இந்துவாக இருக்க முடியாது என்று கூறினார்.</p><h3><strong>நியூயார்க் கூட்டம்</strong></h3><p>நியூயார்க்கில் புகழ்பெற்ற மேடிசன் ஸ்கொயர் கார்டனில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா உலகளாவிய மக்கள் தொடர்புத் திட்டத்தின் கூட்டம் நடைபெற்றது. ‘ஒரே உலகம் ஒரே மனிதநேயம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார்.</p><h3><strong>மோகன் பகவத் உரை</strong></h3><p>அப்போது அவர், “நீங்கள் உங்களை இந்து என்று அழைத்துக் கொண்டால், எல்லாப் பாதைகளும் ஒரே இலக்கை நோக்கியே செல்கின்றன என்று நீங்கள் நம்ப வேண்டும்.</p><p>ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளார்ந்த கண்ணியம் உண்டு, நமக்கிடையே எந்த அடிப்படை வேறுபாடும் இல்லை.</p><p>உண்மையறிந்தவர்கள், கற்றறிந்த அறிஞராக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி, அனைவரையும் சமமாகவே பார்க்கிறார்கள். இந்த வெளித்தோற்ற வேறுபாடுகள் இயற்கையை மட்டுமே அலங்கரிக்கின்றன, அவ்வளவுதான்.</p><p>அன்றாட வாழ்வில் நாம் அவற்றைக் கடந்து செல்ல வேண்டியிருந்தாலும், நாம் அனைவரும் ஒன்று என்பதே அடிப்படை உண்மை.</p><p>பிரிவினையின் மாயைகள் நீடிக்கலாம், ஒரு குறிப்பிட்ட காலம் வரை செழிக்கவும் கூடும், ஆனால் இறுதியில் அவை மங்கிவிடும்; புதிய மாயைகள் அவற்றின் இடத்தைப் பிடித்துக்கொள்ளும்.</p><p>2018-ல் டெல்லியில் நான் நடத்திய சொற்பொழிவுத் தொடரின்போது, அங்கு கூடியிருந்த பல முஸ்லிம் சகோதரர்கள் என்னிடம், 'நீங்கள் ஒரு இந்து அமைப்பு. </p><p>நீங்கள் இந்து ராஷ்டிரத்தைப் பற்றிப் பேசுகிறீர்கள். எங்களைப் போன்ற முஸ்லிம்களைப் பற்றி என்ன? எங்களை வெளியேற்றிவிடுவீர்களா?' என்று கேட்டார்கள்.</p><p>அதற்கு நான், 'இல்லை, அது இந்துத்துவா அல்ல. பாரதத்தில் முஸ்லிம்கள் இருக்கக்கூடாது என்று எந்த இந்து நினைத்தாலும், அவன் இந்துவாக இருப்பதை நிறுத்திவிடுவான்' என்று கூறினேன்.</p><p>மதங்கள் வேறுபட்டிருக்கலாம், ஆனால் மனிதநேயம் ஒன்றுதான் என்று பாரம்பரியமாகக் கூறும் ஒரு சமூகத்தில் நான் பணியாற்றுகிறேன். நான் உங்களைப் போல ஒரு மத அறிஞரோ, மத அதிகாரியோ அல்ல.</p><p>மதங்கள் வேறுபட்டிருக்கலாம், ஆனால் மனிதநேயம் ஒன்றுதான் என்று பாரம்பரியமாகக் கூறும் ஒரு சமூகத்தில் நான் பணியாற்றுகிறேன். உண்மை ஒன்றுதான், மனிதநேயம் அந்த உண்மையின் விளைபொருள். எனவே மனிதநேயம் ஒன்றுதான்.</p><p>அந்த உண்மை ஒரே உண்மைதான், ஆனால் அதை விவரிப்பவரைப் பொறுத்து அது பல வழிகளில் விவரிக்கப்படுகிறது. ஏனென்றால், மனிதர்களாகிய நாம், நமது தலையில் உருவாக்கப்பட்ட மென்பொருளின் கைதிகளாக இருக்கிறோம்.</p><p>பல மதங்கள் உள்ளன, இன்றைய உலகில் மதங்கள் பெரும்பாலும் சடங்குகளாலேயே வரையறுக்கப்படுகின்றன. ஒரு மத ஒழுக்கத்தைப் பின்பற்றுவதற்கும், தெய்வீகத்திற்கான அந்தப் பாதையைக் கையாள்வதற்கும், இந்த சடங்குகள் எனும் ஒழுக்கமும் அவசியமாகிறது” என்று அவர் கூறினார்.</p><h3><strong>நியூயார்க் மேயர் எதிர்ப்பு</strong></h3><p>முன்னதாக மோகன் பகவத் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானி எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.</p><p>மேலும் அவர், ஆர்.எஸ்.எஸ் தலைவர் கலந்துகொள்ளும் திட்டமிடப்பட்ட நிகழ்வை தான் ஆதரிக்கவில்லை என்றும், அந்த நிகழ்வை ரத்து செய்ய நகரத்திற்கு அதிகார வரம்பு இல்லாமல் இருக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.</p><p>இதையடுத்து நியூயார்க்கில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கூட்டத்திற்கு பல சிவில் உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.</p>]]></content:encoded></item><item><title>தமிழக கவர்னராக கிரண் குமார் ரெட்டி நியமிக்கப்பட வாய்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kiran-kumar-reddy-likely-appointment-tamil-nadu-governor</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kiran-kumar-reddy-likely-appointment-tamil-nadu-governor#comments</comments><guid isPermaLink="false">3136cecd-2cbe-44ec-b5dc-4c6324aa4a42</guid><pubDate>Sun, 30 Aug 2026 01:35:23 +0000</pubDate><atom:updated>2026-08-30T01:35:23.414Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,TN Governor,தமிழக அரசு,kiran kumar reddy,தமிழ்நாடு கவர்னர்,கிரண் குமார் ரெட்டி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/1jzd0ev4/KirenKumarReddy0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கிரண் குமார் ரெட்டி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/1jzd0ev4/KirenKumarReddy0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>கிரண் குமார் ரெட்டி</h2><p>தமிழ்நாட்டின் கவர்னராக இருந்த ஆர்.என்.ரவி கடந்த மார்ச் மாதம் 5-ந்தேதி மேற்கு வங்காள கவர்னராக நியமிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக கேரள மாநிலத்தின் கவர்னர் ஆர்.வி. அர்லேகர் தமிழ்நாட்டின் பொறுப்பு கவர்னராக நியமனம் செய்யப்பட்டார். இவர்தான் முதல்-அமைச்சர் விஜய்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.</p><p>இந்த நிலையில் தமிழகத்தின் புதிய கவர்னராக ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான கிரண் குமார் ரெட்டி நியமிக்கப்பட இருப்பதாக பேச்சுகள் எழுந்து உள்ளன.</p><h2>மத்திய மந்திரி சபையில் மாற்றம்</h2><p>கடந்த 2 நாட்களாக ஆந்திர மாநிலத்தில் இது பரபரப்பாக பேசப்படுகிறது. ஏற்கனவே மத்திய மந்திரி சபையில் மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாகவும், அப்போது தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் கவர்னர்கள் புதிதாக நியமிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருந்தன. இந்த நிலையில் கவர்னர் நியமனம் பற்றிய பேச்சு எழுந்துள்ளது.</p><p>பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளின் பயணத்தை முடித்துக் கொண்டு, நாடு திரும்பிய பிறகு இந்த மாற்றங்கள் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>கிரண் குமார் ரெட்டி 2010 முதல் 2014 வரை ஆந்திர மாநில முதலமைச்சராக இருந்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 30 ஆகஸ்ட் 2026: ஆஞ்சனேயருக்கு திருமஞ்சன சேவை
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-30-august-2026-anjaneyar-thirumanjanam-seva</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-30-august-2026-anjaneyar-thirumanjanam-seva#comments</comments><guid isPermaLink="false">a55329d5-9a34-4be4-a183-3a535c58ec48</guid><pubDate>Sun, 30 Aug 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-08-30T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/03/07/27244676-jaihanuman.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anjaneyar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/03/07/27244676-jaihanuman.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆவணி-13 (ஞாயிற்றுக்கிழமை)</p><p>பிறை : தேய்பிறை</p><p>திதி :  துவிதியை காலை 10.09 மணி வரை பிறகு திருதியை</p><p>நட்சத்திரம் : உத்திரட்டாதி மறுநாள் விடியற்காலை 4.58 மணி வரை பிறகு ரேவதி</p><p>யோகம் :  அமிர்தயோகம்</p> <p>ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை</p><p>எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை</p><p>சூலம் : மேற்கு</p><p>நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை</p> <h2>சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை</h2><p>சுபமுகூர்த்த தினம். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். நாட்டரசன் கோட்டை ஸ்ரீ கண்ணுடைய நாயகி, இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ  பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சன சேவை. </p><p>சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமான் பால் அபிஷேகம். வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக் குமார சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் கோவில்களில் காலை அபிஷேகம்.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - பொறுமை</p><p>ரிஷபம் - ஆக்கம்</p><p>மிதுனம் - ஆதாயம்</p><p>கடகம் - நலம்</p><p>சிம்மம் - மகிழ்ச்சி</p><p>கன்னி - பக்தி</p> <p>துலாம் - தாமதம்</p><p>விருச்சிகம் - போட்டி</p><p>தனுசு - வாழ்வு</p><p>மகரம் - மகிழ்ச்சி</p><p>கும்பம் - வெற்றி</p><p>மீனம் - மாற்றம்</p> ]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 30.8.2026 - தடைப்பட்ட வருமானம் தானாகவே வந்து சேரும்..!</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasipalan-in-tamil-august-30</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasipalan-in-tamil-august-30#comments</comments><guid isPermaLink="false">0c119aa7-2eea-4fa8-a2b3-64e36d51d46f</guid><pubDate>Sun, 30 Aug 2026 01:22:39 +0000</pubDate><atom:updated>2026-08-30T01:22:39.826Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-07/vygdy4hu/New-Project-2026-05-25T070202.454.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-07/vygdy4hu/New-Project-2026-05-25T070202.454.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். சுபச்செலவு உண்டு. தொழில் ரீதியான பயணம் பலன் தரும். உத்தியோகத்தில் இழந்த பதவி மீண்டும் கிடைக்கும்.</p><h2>ரிஷபம்</h2><p>சந்தோஷ வாய்ப்புகளைச் சந்திக்கும் நாள். பிரபலமானவர்களால் பிரச்சினைகள் தீரும். உடன்பிறப்புகள் வழியில் நல்ல தகவலொன்று உண்டு.</p><h2>மிதுனம்</h2><p>நிர்வாகத்திறமை பளிச்சிடும் நாள். நீண்ட நாளைய ஆசையொன்று நிறைவேறும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். திருமணம் கைகூடும்.</p><h2>கடகம்</h2><p>நண்பர்கள் நல்ல தகவலைத் தருகின்ற நாள். நேற்றைய பிரச்சினை இன்று முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் தொல்லை அகலும்.</p><h2>சிம்மம்</h2><p>யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. எடுத்த காரியங்களை பாதியில் விட்டுவிடுவீர்கள்.</p><h2>கன்னி</h2><p>அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் அறிமுகம் கிடைக்கும் நாள். தடைப்பட்ட வருமானம் தானாகவே வந்து சேரும். விலகிச்சென்ற வரன்கள் மீண்டும் வரலாம்.</p><h2>துலாம்</h2><p>பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். போட்டிகளைச் சமாளித்து வெற்றி காண்பீர்கள். சங்கிலித்தொடர்போல வந்த கடன்சுமை குறையும்.</p><h2>விருச்சிகம்</h2><p>அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். அதிகார பதவியில் உள்ளவர்கள் நட்பாவர். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு பாராட்டுக் கிடைக்கும்.</p><h2>தனுசு</h2><p>வளர்ச்சி கூடும் நாள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் ஏற்படும். கடமையில் இருந்த தொய்வு அகலும். உத்தியோக மாற்றம் உறுதியாகும்.</p><h2>மகரம்</h2><p>சகோதர வழியில் சந்தோஷச் செய்தி வந்து சேரும் நாள். இழுபறியான காரியங்கள் இனிதே முடிவடையும். பணிபுரியுமிடத்தில் கோபப்பட வேண்டாம். சேமிப்பு உயரும்.</p><h2>கும்பம்</h2><p>துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். தொலைதூரப் பயணம் உறுதியாகலாம். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கும்.</p><h2>மீனம்</h2><p>வரன்கள் வாயில் தேடி வரும் நாள். வருமானம் உயரும். நீங்கள் எதிர்பார்த்த காரியமொன்று நடைபெறு வதில் தாமதம் ஏற்படலாம். பயணம் பலன் தரும்.</p>]]></content:encoded></item><item><title>நேபாள வெள்ளம்: இதுவரை 108 இந்தியர்கள் மீட்பு - வெளியுறவுத்துறை அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/108-indian-nationals-rescued-from-flood-hit-nepal</link><comments>https://www.maalaimalar.com/news/national/108-indian-nationals-rescued-from-flood-hit-nepal#comments</comments><guid isPermaLink="false">9d498017-e4e8-4fce-a6c3-d44f0810e4c7</guid><pubDate>Sun, 30 Aug 2026 00:26:43 +0000</pubDate><atom:updated>2026-08-30T00:26:43.413Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>indians,மீட்பு பணிகள்,Rescue operations,Nepal Floods,இந்தியர்கள்,நேபாள வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/yg8eogcj/IAF-Plane.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ IAF Plane]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/yg8eogcj/IAF-Plane.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாளத்தில் ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட பேரழிவுகரமான 'போட் கோஷி' ஆற்று வெள்ளத்தை தொடர்ந்து, மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதில் <a href="https://www.maalaimalar.com/news/national">இந்தியா</a> தரைவழி மற்றும் வான்வழி உதவிகளை அதிகரித்துள்ளது.</p><p>தற்போதைய நிவாரண நடவடிக்கைகளில், சிக்கி தவித்த குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதுவரை நேபாளத்தின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 108 இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.</p><h2>108 இந்தியர்கள் மீட்பு:</h2><p>சூழ்நிலை குறித்த தகவலை பகிர்ந்துகொண்ட வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், நேற்று (சனிக்கிழமை) இரவு 10:30 மணி நிலவரப்படி 108 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.</p><p>மேலும், 40 இந்தியர்களுடன் மீண்டும் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதேவேளையில் 598 இந்தியர்கள் சீனாவில் இருந்து நேபாளத்திற்குள் பாதுகாப்பாக வந்து சேர்ந்துள்ளதாக உள்ளூர் அரசு தரப்புகள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>அப்பகுதியில் உள்ள மற்றவர்களின் நிலை குறித்து பேசிய ஜெய்ஸ்வால், சுமார் 900 இந்தியர்கள் தற்போது சீனாவில் இருந்து வெளியேற காத்திருப்பதாக தெரிவித்தார்.</p><h2>275 இந்தியர்கள் மாயம்:</h2><p>அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்றும், பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் அவர் கூறினார். இருப்பினும், காணாமல் போனதாக கருதப்படும் 275 இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 128 நபர்களை கண்டறியும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</p><p>'எக்ஸ்' தளத்தில் மற்றொரு பதிவில், நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண்பது தொடர்பான நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் செய்திக்குறிப்பை அவர் பகிர்ந்துகொண்டார். அதில் உதவி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவை வழங்கப்பட்டிருந்தன.</p><h2>வலுசேர்க்கும் இந்தியா:</h2><p>மீட்பு பணிகளுக்கு வலுசேர்க்கும் வகையில், 11 டன் அவசர உதவிகளை ஏற்றி செல்லும் இந்திய விமானப்படையின் நான்காவது விமானம் காத்மாண்டுவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அறிவித்தார்.</p><p>இந்தியாவின் வலுவான உள்கட்டமைப்பு ஆதரவை சுட்டிக்காட்டிய டாக்டர் ஜெய்சங்கர், 230 அடி நீளமுள்ள ஒற்றை பாதை கொண்ட 'மாடுலர் ஸ்டீல்' பாலத்திற்கான உபகரணங்களை ஏற்றி செல்லும் 16 லாரிகள் ஏற்கனவே நேபாளத்தை சென்றடைந்துள்ளதாக தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>மலையாளத்தில் மெகா வெற்றியை தொடர்ந்து ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ தமிழ் டிரெய்லர் வெளியானது</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/bethlehem-kudumba-unit-tamil-trailer-out-now</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/bethlehem-kudumba-unit-tamil-trailer-out-now#comments</comments><guid isPermaLink="false">44932416-804f-4650-9214-a4df46995037</guid><pubDate>Sat, 29 Aug 2026 23:39:06 +0000</pubDate><atom:updated>2026-08-29T23:39:06.574Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Nivin Pauly,நிவின் பாலி,Bethlehem Kudumba Unit,பெத்லகேம் குடும்ப யூனிட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/mu2mmlq6/Bethlehem-Kudumba-Unit.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bethlehem Kudumba Unit]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/mu2mmlq6/Bethlehem-Kudumba-Unit.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கிரிஷ் ஏடி இயக்கத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/nivin-pauly">நிவின் பாலி</a>, மமிதா பைஜு நடித்துள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியானது.</p><p>‘பிரேமலு’ படத்தின் வெற்றிக்கு பிறகு அதன் இரண்டாம் பாகத்தை இயக்குநர் கிரிஷ் ஏ.டி. இயக்க இருந்தார். ஆனால், கதையில் முழுமையான திருப்தி ஏற்படாததால் அப்படத்தின் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கிரிஷ் ஏ.டி. இயக்கிய புதிய <a href="https://www.maalaimalar.com/cinema">திரைப்படம்</a> தான் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’. </p><p>இந்தப் படத்தில் நிவின் பாலி கதாநாயகனாகவும், மமிதா பைஜு கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் ஷியாம், சங்கீத் பிரதாப், வினய் போர்ட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். </p><h2>தமிழ் டிரெய்லர் வெளியீடு:</h2><p>பகத் பாசில், திலீஷ் போத்தன் மற்றும் ஷியாம் புஷ்கரன் ஆகியோர் ‘பாவனா ஸ்டுடியோஸ்’ சார்பில் இப்படத்தை தயாரித்துள்ளனர். விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார். </p><p>ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.</p><p>இந்தப் படம் வரும்கிற செப்டம்பர் 4-ஆம் தேதி தமிழ் மொழியிலும் வெளியாகவுள்ளதாக படக்குழு ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. இந்த நிலையில், ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியாகியுள்ளது.</p><h2>அதிகரிக்கும் வசூல்:</h2><p>மலையாளத்தில், இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதன்படி இந்தப் படத்தின் 3 நாள் வசூல் விவரம் வெளியிடப்பட்டது. அந்த வகையில் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் உலகளவில் 8 நாட்களில் ரூ.72 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.</p><p>காதல் மற்றும் நகைச்சுவை கலந்த கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருவதால், விரைவில் ரூ.100 கோடி வசூல் கிளப்பில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p> <figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/Fv1FQi6CWe4"></iframe></figure>]]></content:encoded></item><item><title>போக்குவரத்து விதிகளை மீறிய சட்டமன்ற உறுப்பினர் - அபராதம் விதித்து அதிரடி காட்டிய காவல் துறை</title><link>https://www.maalaimalar.com/news/puducherry/trafic-cops-fined-puducherry-mla-for-violation</link><comments>https://www.maalaimalar.com/news/puducherry/trafic-cops-fined-puducherry-mla-for-violation#comments</comments><guid isPermaLink="false">20a63302-8693-4255-b659-6f52cb34c12e</guid><pubDate>Sat, 29 Aug 2026 23:08:33 +0000</pubDate><atom:updated>2026-08-29T23:08:33.244Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Puducherry,NR Congress,புதுச்சேரி,என்ஆர் காங்கிரஸ்,சட்டமன்ற உறுப்பினர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/1kbv37j9/MLA-Vaiyapuri.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MLA Vaiyapuri]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/1kbv37j9/MLA-Vaiyapuri.png?w=280" width="280"></media:thumbnail><category>புதுச்சேரி (Puducherry)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>புதுச்சேரியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி இருசக்கர வாகனம் ஓட்டி வந்த சட்டமன்ற உறுப்பினருக்கு போக்குவரத்து காவல் துறையினர் <a href="https://www.maalaimalar.com/topic/fine">அபராதம்</a> விதித்தனர்.</p><p>சம்பவத்தில் தொடர்புடைய சட்டமன்ற உறுப்பினர் தனது இருசக்கர வாகனத்தில் நம்பர் பிளேட் இல்லாமலும், தலையில் ஹெல்மெட் அணியாமலும் வந்துள்ளார். </p><p>அந்த வகையில் போக்குவரத்து விதிகளை மீறிய ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.-வுக்கு காவல் துறையினர் அபராதம் விதித்துள்ளனர். இந்த சம்பவம் <a href="https://www.maalaimalar.com/topic/puducherry">புதுச்சேரி</a> அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><h2>அதிருப்தியில் சட்டமன்ற உறுப்பினர்:</h2><p>புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் வையாபுரி மணிகண்டன். இவருக்கு அரசு சார்பில் கார் வழங்கப்பட்டிருந்தும், ஓட்டுநர் நியமிக்கப்படாததால் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவர் தனது இருசக்கர வாகனத்தில் சட்டப்பேரவைக்கு புறப்பட்டு வந்தார்.</p><p>தலைக்கவசம் அணியாமலும், நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனத்தில் சட்டப்பேரவை வளாகம் வந்த எம்.எல்.ஏ.-விடம், போக்குவரத்து விதிகளை மீறியதற்காக, காவல் துறையினர் சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டனுக்கு ரூ.1,500 அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.</p><p>சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் ஓட்டுநர் நியமிக்கப்படாததை கண்டித்து சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் இவ்வாறு வந்ததாக கூறப்படுகிறது. எனினும், ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினருக்கு காவல் துறையினர் அபராதம் விதித்த சம்பவம் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>உஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பளித்த இந்திய வம்சாவளியினர்</title><link>https://www.maalaimalar.com/news/world/pm-modi-receives-grand-welcome-in-uzbekistan</link><comments>https://www.maalaimalar.com/news/world/pm-modi-receives-grand-welcome-in-uzbekistan#comments</comments><guid isPermaLink="false">a5b941b1-1059-4e97-99d1-457383c124e7</guid><pubDate>Sat, 29 Aug 2026 22:31:30 +0000</pubDate><atom:updated>2026-08-29T22:31:30.491Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>uzbekistan,pm modi,பிரதமர் மோடி,உஸ்பெகிஸ்தான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/bjf3gjzu/PM-Modi-in-uzbek.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi in uzbek]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/bjf3gjzu/PM-Modi-in-uzbek.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இரண்டு நாள் பயணமாக உஸ்பெகிஸ்தான் சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அங்குள்ள ஹோட்டலில் இந்திய சமூகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.</p><p>தாஷ்கண்டில் உள்ள இந்திய சமூகத்தினரின் அன்பையும் பாசத்தையும் கண்டு நெகிழ்ந்து போனேன். நமது புலம்பெயர் சமூகம், இந்தியாவுக்கும் உஸ்பெகிஸ்தானுக்கும் இடையே ஒரு உயிருள்ள பாலமாக திகழ்ந்து, நமது நாடுகளுக்கு இடையேயான நட்புறவை வலுப்படுத்துகிறது," என்று <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">மோடி</a> சமூக வலைதள பதிவு ஒன்றில் தெரிவித்தார்.</p><h2>உற்சாக வரவேற்பு:</h2><p>பிரதமர், புலம்பெயர்ந்த இந்தியர்களின் துடிப்பான கதக் மற்றும் அண்டிஜன் போல்கா நடன நிகழ்ச்சிகளை கண்டுகளித்ததுடன், உஸ்பெகிஸ்தானை சேர்ந்த சிறு குழந்தைகள் புகழ்பெற்ற இந்திய பாடலான 'உடே ஜப் ஜப் ஜுல்ஃபே தேரி'க்கு ஆடிய உற்சாகமான நடனத்தையும் கண்டார்.</p><p>மேலும் அவர், தப்லாவுடன் பாரம்பரிய உஸ்பெக் இசைக்கருவிகளான டோய்ரா மற்றும் சாங் ஆகியவை இணைந்து வழங்கிய ஒரு வசீகரிக்கும் இசைக் கலவையையும் கண்டுகளித்தார்.</p><h2>முக்கிய பேச்சுவார்த்தை:</h2><p>இந்த பயணத்தின்போது, ​​இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், பிரதமர் மோடி அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவுடன் தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.</p><p>தாஷ்கண்ட் விமான நிலையத்தில் பிரதமர் மோடி வந்திறங்கியபோது, ​​ஜனாதிபதி மிர்சியோயேவ் அவரை வரவேற்றார். இது பிரதமர் மோடியின் உஸ்பெகிஸ்தானுக்கான நான்காவது பயணமாகும்.</p><p>"ஜனாதிபதி ஷவ்கத் மிர்சியோயேவின் உற்சாகமான வரவேற்புடன் தாஷ்கண்டில் தரையிறங்கினேன். இந்தச் சிறப்பு ஏற்பாட்டிற்கு அவருக்கு என் நன்றிகள். இது உஸ்பெகிஸ்தானுக்கு எனது நான்காவது பயணம். இது நமது இருதரப்பு உறவுகளின் ஆழத்தையும், வளர்ந்து வரும் வேகத்தையும் பிரதிபலிக்கிறது," என்று பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.</p><h2>முதற்கட்ட பயணம்:</h2><p>நாட்டின் சுதந்திரத்தின் 30-ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சுதந்திரம் மற்றும் நன்மையின் இலட்சியங்களை சின்னமாக கொண்டு நிறுவப்பட்ட நினைவிடத்திற்கு ஜனாதிபதி மிர்சியோயேவ், மோடியுடன் சென்றார்.</p><p>மத்திய ஆசியாவில் இந்தியாவின் மூலோபாய கூட்டாண்மைகளை வலுப்படுத்தவும், அப்பகுதியுடனான நாகரிகத் தொடர்பை ஆழப்படுத்தவும் நோக்கமாகக் கொண்டு, கிர்கிஸ் குடியரசு உட்பட தனது இரு நாடுகளுக்கான பயணத்தின் முதல் கட்டமாக மோடி தாஷ்கண்டில் உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>&apos;டிஜிட்டல் கைது&apos; போன்ற புது மோசடிகளுக்கு நீதித்துறை முன்கூட்டியே நடவடிக்கை எடுத்துள்ளது: தலைமை நீதிபதி</title><link>https://www.maalaimalar.com/news/national/judiciary-proactively-responded-to-emerging-fraudulent-schemes-like-digital-arrest-cji</link><comments>https://www.maalaimalar.com/news/national/judiciary-proactively-responded-to-emerging-fraudulent-schemes-like-digital-arrest-cji#comments</comments><guid isPermaLink="false">fdba859f-8864-4a78-8b86-66d8f40e6d05</guid><pubDate>Sat, 29 Aug 2026 22:08:05 +0000</pubDate><atom:updated>2026-08-29T22:08:05.261Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஜிட்டல் கைது,Digital Arrest,மோசடி,judiciary,நீதித்துறை,fraudulent scheme</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/vj4sd6kz/cji-surya-kant.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ cji surya kant]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/vj4sd6kz/cji-surya-kant.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்கும் வரை காத்திருக்காமல், 'டிஜிட்டல் கைது' போன்ற புதிய <a href="https://www.maalaimalar.com/topic/digital-arrest">மோசடி</a> முறைகளுக்கு இந்திய நீதித்துறை முன்கூட்டியே மற்றும் தீவிரமாக பதிலளித்து வருவதாக இந்திய தலைமை நீதிபதி சூர்யா காந்த் தெரிவித்தார்.</p><p>லண்டனில் நடைபெற்ற பொருளாதார குற்றங்கள் குறித்த 43-ஆவது சர்வதேச கருத்தரங்கின் நிறைவுரையில் பேசிய அவர், குடிமக்களை ஏமாற்றுவதற்காக காணொளி அழைப்புகள் மூலம் காவல்துறை அதிகாரிகள், நீதித்துறை அதிகாரிகள் அல்லது அரசு அதிகாரிகளை போல மோசடிக்காரர்கள் வேடமணிந்து மேற்கொள்ளும் 'டிஜிட்டல் கைது' மோசடி விவகாரத்தை <a href="https://www.maalaimalar.com/topic/supreme-court">உச்ச நீதிமன்றம்</a> சமீபத்தில் தாமாகவே முன்வந்து கவனத்தில் கொண்டதாக குறிப்பிட்டார்.</p><h2>தனிப்பட்ட குற்றப்பிரிவு:</h2><p>"இதற்குப் பதிலளிக்கும் விதமாக, இந்த பிரச்சினையின் தீவிரத்தை மதிப்பிடுமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், இதனால் ஏற்படும் பாதிப்புக்கு ஏற்ற தண்டனைகளுடன் கூடிய ஒரு தனிப்பட்ட குற்றப்பிரிவை உருவாக்கவும் வலியுறுத்தியுள்ளது," என்று அவர் கூறினார்.</p><p>"நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்கும் வரை காத்திருக்காமல், புதிய மோசடி முறைகளுக்கு இந்திய நீதித்துறை முன்கூட்டியே பதிலளிக்கும் பரந்த செயல்பாட்டு முறைக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்," என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.</p><p>பொருளாதாரக் குற்றங்களுக்கு எதிரான இந்தியாவின் நவீன அணுகுமுறையைப் பார்க்கும்போது, ​​அதை ஒரு தனிச் சட்டமாகப் பார்க்காமல், பல தசாப்தங்களாக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு அடுக்கு கட்டமைப்பாக புரிந்துகொள்வதே சிறந்தது என்று அவர் கூறினார். </p><p>இக்கட்டமைப்பில் சட்டங்கள், நிறுவனங்கள் மற்றும் நீதித்துறை கோட்பாடுகள் ஆகியவை ஒவ்வொன்றும் தனித்தனி பணிகளை செய்கின்றன.</p><h2>நீதித்துறை தலையிட்டுள்ளது:</h2><p>'பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA), 2002' மற்றும் 'தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டம், 2018' ஆகியவற்றைத் தலைமை நீதிபதி சுட்டிக்காட்டினார்.</p><p>"இவை குறைபாடுகள் இல்லாத வழிமுறைகள் அல்ல என்பதையும் நான் குறிப்பிட வேண்டும். புலனாய்வு அமைப்புகள் பணமோசடி தடுப்புச் சட்ட நடைமுறையை தவறாக பயன்படுத்துவதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். </p><p>குறிப்பாக, தெளிவான காரணங்கள் கூறப்படாமல் கைது செய்யப்படுதல் மற்றும் கிடைக்கப்பெற்ற உண்மைகளின் அடிப்படையில் நியாயப்படுத்த முடியாத அளவுக்கு காவல் நீட்டிப்பு செய்யப்படுதல் போன்ற புகார்கள் இதில் அடங்கும். இத்தகைய ஒவ்வொரு நிகழ்விலும், நிலைமையைச் சரிசெய்ய நீதித்துறை தலையிட்டுள்ளது," என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>உ.பி. இலவச பேருந்து பயணம்: இரண்டு நாட்களில் 80 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர்</title><link>https://www.maalaimalar.com/news/national/up-free-bus-ride-80-lakh-benefit-in-two-days</link><comments>https://www.maalaimalar.com/news/national/up-free-bus-ride-80-lakh-benefit-in-two-days#comments</comments><guid isPermaLink="false">6ead0b94-5188-4141-8055-0f6b9918428a</guid><pubDate>Sat, 29 Aug 2026 21:12:53 +0000</pubDate><atom:updated>2026-08-29T21:12:53.818Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>UP,உத்தர பிரதேசம்,raksha bandhan,Free bus,இலவச பேருந்து,ரக்ஷா பந்தன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/fgucthbt/UP-Free-Bus.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ UP Free Bus]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/fgucthbt/UP-Free-Bus.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி வெள்ளிக்கிழமை அன்று ஒரே நாளில் 49.96 லட்சம் பயணிகள் என்ற பெரும் எண்ணிக்கையிலான வருகைக்கு பிறகு, சனிக்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி சுமார் 80 லட்சம் பெண்களும் அவர்களுடன் வந்த ஒரு பயணியும் உத்தர பிரதேச அரசின் இலவச பேருந்து பயண வசதியை பயன்படுத்திக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>யோகி ஆதித்யநாத் அரசால் தொடங்கப்பட்ட இந்த திட்டம், பண்டிகை கால பயணத்தை எளிதாக்கும் வகையில் மாநிலம் முழுவதும் கட்டணமில்லா பயண வசதியை வழங்கியது; நேற்று (சனிக்கிழமை) நள்ளிரவு வரை இதற்கான பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்ததாக அவர்கள் கூறினர்.</p><h2>இரண்டு நாட்களுக்கு இலவசம்:</h2><p>உத்தர பிரதேச மாநில சாலை போக்குவரத்து கழக (UPSRTC) பேருந்துகளில் பெண்கள் தங்கள் துணையுடன் (ஒருவருடன்) இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். இந்தத் திட்டம் ஆகஸ்ட் 27-ஆம் தேதியன்று காலை 6 மணிக்கு தொடங்கி ஆகஸ்ட் 29-ஆம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருந்தது என்று போக்குவரத்துக் கழகம் தெரிவித்தது.</p><p>உ.பி. மாநில சாலை போக்குவரத்து கழகத்தின் தகவல்படி, ஆகஸ்ட் 27-ஆம் தேதியன்று 9.26 லட்சத்திற்கும் அதிகமான பெண்களும் அவர்களுடன் வந்தவர்களும் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்தனர். இதில் 6.03 லட்சத்திற்கும் அதிகமான பெண்களும், 3.22 லட்சத்திற்கும் அதிகமான உடன் வந்த பயணிகளும் அடங்குவர்.</p><h2>59.23 லட்சம் பயணிகள்:</h2><p>ஆகஸ்ட் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளின் தரவுகளை ஒருங்கிணைத்து பார்க்கையில், இரண்டு நாட்களில் 59.23 லட்சத்திற்கும் அதிகமான பயண சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். இந்த எண்ணிக்கையில் 38.51 லட்சத்திற்கும் அதிகமான பெண்களும், 20.71 லட்சத்திற்கும் அதிகமான உடன் வந்த பயணிகளும் அடங்குவர்.</p> <p>பயணிகள் இந்த நடவடிக்கையை வரவேற்றனர்; இலவச பேருந்து பயண திட்டம் பண்டிகை காலத்தில் பல குடும்பங்களுக்கு நிதி ரீதியான நிவாரணம் அளித்தது மட்டுமின்றி, சகோதரிகள் தங்கள் சகோதரர்களுக்கு 'ராக்கி' கட்டுவதற்காக பயணம் செய்வதையும் எளிதாக்கியது என்று அவர்கள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>சிவ ராஜ்குாமர் - அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அசத்தல் அப்டேட்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/shiva-rajkumar-and-abishan-jeevinth-new-movie-update-out-now</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/shiva-rajkumar-and-abishan-jeevinth-new-movie-update-out-now#comments</comments><guid isPermaLink="false">7af666af-b509-445a-846b-c97ed337d287</guid><pubDate>Sat, 29 Aug 2026 20:29:31 +0000</pubDate><atom:updated>2026-08-29T20:29:31.741Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Abishan Jeevinth,Shiva Rajkumar,அபிஷன் ஜீவிந்த்,சிவ ராஜ்குாமர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/eqh1f0mq/Shivarajkumar-X-Abishan-Jeevinth.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Shivarajkumar X Abishan Jeevinth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/eqh1f0mq/Shivarajkumar-X-Abishan-Jeevinth.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/shivarajkumar">சிவ ராஜ்குமார்</a> மற்றும் இயக்குநரும், நடிகருமான அபிஷன் ஜீவிந்த் நடித்து வந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இந்தப் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>"டூரிஸ்ட் ஃபேமலி" திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அபிஷன் ஜீவிந்த். இந்தப் <a href="https://www.maalaimalar.com/cinema">படம்</a> வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் "வித் லவ்" திரைப்படத்தின் மூலம் கதநாயகனாக அறிமுகமானார்.</p><h2>படப்பிடிப்பு நிறைவு:</h2><p>இந்த நிலையில், டிராமா கம்பெனி தயாரிப்பில் உருவாகும் படத்தில் அபிஷன் ஜீவிந்த் நடிக்கிறார். இந்தப் படத்தில் சிவ ராஜ்குமார், அபிஷன் ஜீவிந்த், ஷிவானி நாகராம், யோகலட்சுமி, கானா வினோத் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.</p><p>பிரகதீஷ் பிரபு இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் படத்தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>எக்ஸ் தள பதிவு:</h2><p>இது குறித்து தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்ததை விடியோ வெளியிட்டு, "படப்பிடிப்பு நிறைவு. டாக்டர் சிவராஜ்குமார் X அபிஷன் ஜீவிந்த்- டிராமா கம்பெனி புரொடக்ஷன் நம்பர் 1.</p><p>படப்பிடிப்புத் தளத்தில் நாம் இணைந்து உருவாக்கிய தருணங்களுக்கும், மனிதர்களுக்கும், மாயாஜாலத்திற்கும். மகிழ்ச்சி, நட்பு, அன்பு, சிரிப்பு, அயராத உழைப்பு மற்றும் நாம் என்றென்றும் போற்றும் நினைவுகள் நிறைந்த ஒரு பயணம்</p><p>ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் அறிவிப்பு விரைவில்," என குறிப்பிட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">That’s a wrap. <br><br>To the moments, the people and the magic we created together on the sets of Dr. Shivarajkumar X Abishan Jeevinth | Drama Company Production No. 1.<br><br>A journey filled with joy, friendship, love, laughter and relentless hard work and  memories we’ll cherish… <a href="https://t.co/BXyucH3wOd">pic.twitter.com/BXyucH3wOd</a></p>&mdash; Drama Company (@dramacompany) <a href="https://x.com/dramacompany/status/2093670621678862832?ref_src=twsrc%5Etfw">August 29, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>அமராவதி அணையில் இருந்து இன்று முதல் நீர் திறப்பு: முதலமைச்சர் விஜய் உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-orders-to-open-water-from-amaravati-dam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-orders-to-open-water-from-amaravati-dam#comments</comments><guid isPermaLink="false">de762ffa-31ed-49d1-8928-092d5b14cc45</guid><pubDate>Sat, 29 Aug 2026 19:43:12 +0000</pubDate><atom:updated>2026-08-29T19:43:12.622Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Amaravati dam,அமராவதி அணை,நீர் திறப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/sfxmvtw1/amaravati-dam-and-vijay.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Amaravati Dam and vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/sfxmvtw1/amaravati-dam-and-vijay.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையிலிருந்து, நீர் திறந்து விட அனுமதி அளித்து <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu">தமிழ்நாடு</a> அரசு ஆணையிட்டுள்ளது. எல்.நினோ பாதிப்பினால் மழை பொழிவு இல்லாததால் அமராவதி ஆற்றில் இருந்து தண்ணீர் திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>மேலும், அமராவதி ஆற்றில் செயல்படுத்தப்படும் குடிநீர்  திட்டங்களுக்கு போதுமான நிலத்தடி நீர் உயர்வதற்கும், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட பொதுமக்களின் குடிநீர்த் தேவையினை பூர்த்தி செய்வதற்கும், திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையின் ஆற்று மதகு வழியாக 30.08.2026 முதல் வரை, 07.09.2026 வரை நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை பொறுத்து, அமராவதி அணையிலிருந்து, நீர் திறந்து விட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.</p><h2>தண்ணீர் திறந்துவிட ஆணை:</h2><p>இதுதொடர்பாக அரசு செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிற்கிணங்க, தற்போது, எல்.நினோ பாதிப்பினால் மழைப் பொழிவு இல்லாததால் அமராவதி ஆற்றில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டங்களுக்கு போதுமான நிலத்தடி நீர் உயர்வதற்கும், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட பொதுமக்களின் குடிநீர்த் தேவையினை பூர்த்தி செய்வதற்கும், திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையின் ஆற்று மதகு வழியாக 30.08.2026 முதல் வரை, 07.09.2026 வரை நாளொன்றுக்கு, வினாடிக்கு 1,000 அடி வீதம் 8 நாட்களுக்கும் போதிய மழைப்பொழிவு காரணமாக வரும் நாட்களில் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கும்பட்சத்தில், மேலும் 4 நாட்களுக்கு நாளொன்றுக்கு வினாடிக்கு 1,000 கன அடி வீதம், அமராவதி அணையின் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை பொறுத்து, அமராவதி அணையிலிருந்து, நீர் திறந்து விட அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக உஸ்பெகிஸ்தான் சென்றடைந்தார் பிரதமர் மோடி</title><link>https://www.maalaimalar.com/news/world/pm-modi-arrives-in-uzbekistan-on-two-day-official-visit</link><comments>https://www.maalaimalar.com/news/world/pm-modi-arrives-in-uzbekistan-on-two-day-official-visit#comments</comments><guid isPermaLink="false">966130c8-4ce9-4f8e-bd6e-d4fb5388b631</guid><pubDate>Sat, 29 Aug 2026 18:11:28 +0000</pubDate><atom:updated>2026-08-29T18:11:28.855Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>uzbekistan,pm modi,பிரதமர் மோடி,உஸ்பெகிஸ்தான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/el6qo2ut/PM-Modi-in-Uzbekistan.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi in Uzbekistan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/el6qo2ut/PM-Modi-in-Uzbekistan.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமையன்று <a href="https://www.maalaimalar.com/news/world">உஸ்பெகிஸ்தான்</a> சென்றடைந்தார். அங்கு அவர் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவுடன் தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த அவர் திட்டமிட்டுள்ளார்.</p><p>தாஷ்கண்ட் விமான நிலையத்திற்கு வந்திறங்கிய பிரதமர் மோடியை அதிபர் மிர்சியோயேவ் வரவேற்றார். <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">பிரதமர் மோடி</a> உஸ்பெகிஸ்தானுக்கு மேற்கொள்ளும் நான்காவது பயணம் இதுவாகும்.</p><h2>பிரதமர் எக்ஸ் தள பதிவு:</h2><p>"தாஷ்கண்ட் வந்தடைந்ததும் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் எனக்கு வரவேற்பளித்தார். அவரது இந்த சிறப்பான செயலுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். உஸ்பெகிஸ்தானுக்கான எனது நான்காவது பயணம் இது; இது நமது இருதரப்பு உறவுகளின் ஆழத்தையும் வளர்ந்து வரும் வேகத்தையும் பிரதிபலிக்கிறது," என்று வருகைக்கு பிறகு பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.</p><p>வருகைக்குப் பிறகு, அவர் 'யாங்கி உஸ்பெகிஸ்தான்' பூங்காவிற்கு சென்று சுதந்திர நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நாட்டின் சுதந்திரத்தின் 30-ஆவது ஆண்டு விழாவில் நிறுவப்பட்டதும், சுதந்திரம் மற்றும் நன்மையின் விழுமியங்களை அடையாளப்படுத்துவதுமான இந்த நினைவு சின்னத்திற்கு சென்றபோது அதிபர் மிர்சியோயேவ் அவருடன் சென்றார்.</p><p>"தாஷ்கண்ட் வந்தடைந்ததும், அதிபர் மிர்சியோயேவுடன் இணைந்து 'யாங்கி உஸ்பெகிஸ்தான்' நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைக்க சென்றேன். 'யாங்கி உஸ்பெகிஸ்தான்' நினைவு சின்னம் உஸ்பெக் மக்களின் விருப்பங்களையும் முன்னேற்றத்தையும் பிரதிபலிக்கிறது. இங்கு வருவதன் மூலம் எனது பயணத்தை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்," என்று மோடி 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டார்.</p><h2>இரண்டு நாள் பயணம்:</h2><p>மத்திய ஆசியாவில் இந்தியாவின் உத்திசார் கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதையும், இப்பகுதியுடனான நாகரிகத் தொடர்புகளை ஆழப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டு, கிர்கிஸ் குடியரசு மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு மேற்கொள்ளும் பயணத்தின் முதல் கட்டமாக மோடி தாஷ்கண்டில் உள்ளார்.</p><p>உஸ்பெகிஸ்தானுக்கான தனது இரண்டு நாள் பயணத்தின் போது, ​​வர்த்தகம், முதலீடு, டிஜிட்டல் இணைப்பு, பாதுகாப்பு மற்றும் எரிசக்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு குறித்து அதிபர் மிர்சியோயேவுடன் மோடி விவாதிப்பார்.</p>]]></content:encoded></item><item><title>நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 675-ஆக உயர்வு</title><link>https://www.maalaimalar.com/news/world/death-toll-reaches-675-in-nepal-flash-floods</link><comments>https://www.maalaimalar.com/news/world/death-toll-reaches-675-in-nepal-flash-floods#comments</comments><guid isPermaLink="false">33a25aaf-31dd-452a-969d-37aeec5a12bb</guid><pubDate>Sat, 29 Aug 2026 17:20:47 +0000</pubDate><atom:updated>2026-08-29T17:20:47.292Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உயிரிழப்புகள்,Death toll,Nepal Floods,நேபாள வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/hrf4ja4h/Nepal-Floods.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nepal Floods]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/hrf4ja4h/Nepal-Floods.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் <a href="https://www.maalaimalar.com/topic/nepal-floods">வெள்ளத்தால்</a> உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 675-ஆக உயர்ந்தது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் மேலும் பல உடல்கள் மீட்கப்பட்டுள்ளன; அதேவேளையில், பேரிடரை தொடர்ந்து 2,400-க்கும் மேற்பட்டோர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.</p><p>பாதிக்கப்பட்ட எட்டு மாவட்டங்களில் இருந்தும் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், போர்க்கால அடிப்படையில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் <a href="https://www.maalaimalar.com/news/world">நேபாள</a> காவல்துறை தெரிவித்துள்ளது.</p><h2>2400 பேர் மாயம்:</h2><p>நேபாள-திபெத் எல்லைக்கு அருகே பனிப்பாறை சரிவு மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பனி-பாறை சரிவு காரணமாக, தண்ணீர், சேறு மற்றும் குப்பைகள் பெருக்கெடுத்து ஓடின. இது மத்திய நேபாளம் வழியாக சென்று நகரங்கள் மற்றும் கிராமங்களை அழித்ததுடன், முக்கிய உள்கட்டமைப்புகளை சேதப்படுத்தியது மற்றும் நீர்மின் நிலையங்களையும் அடித்து சென்றது.</p><p>நேபாள காவல்துறையின் அறிக்கையின்படி, 'போட்டே கோஷி' ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எட்டு மாவட்டங்களில் இதுவரை 675 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சித்வான் மாவட்டத்தில் 246 உடல்களும், கிழக்கு நவல்ப்பராசியில் 165 உடல்களும், மேற்கு நவல்ப்பராசியில் 63 உடல்களும், கோர்காவில் 57 உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.</p><p>அதேபோல, தாடிங் மாவட்டத்தில் 45 உடல்களும், நுவாகோட்டில் 51 உடல்களும், தனஹுவில் 35 உடல்களும், ரசுவா மாவட்டத்தில் 13 உடல்களும் மீட்கப்பட்டன. சனிக்கிழமை நிலவரப்படி 2,400-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருந்தனர்.</p><h2>தொடரும் மீட்பு பணிகள்:</h2><p>வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வரும் சூழலிலும், தேசிய பேரிடர் இடர் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையத்தின் (NDRRMA) தலைமையிலான மீட்பு குழுக்கள் காலத்தோடு போட்டியிட்டு பணியாற்றி, 163 வெளிநாட்டினர் உட்பட சுமார் 2,500 பேரை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றின.</p><p>தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்காக 5,000-க்கும் மேற்பட்ட நேபாள ராணுவ வீரர்கள் உட்பட 11,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.</p><p>தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ட்ரோன்களை இயக்க வேண்டாம் என்று NDRRMA பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.</p><p>"மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வரும் வேளையில், உள்ளூர் நிர்வாகத்தின் அனுமதியின்றி சில தனிநபர்களும் அமைப்புகளும் ட்ரோன்களை இயக்குவது குறித்த தகவல்கள் எங்கள் கவனத்திற்கு வந்துள்ளன," என்று அது கூறியது. விதிமுறைகள் மீறப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த ஆணையம் எச்சரித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 29 ஆகஸ்ட் 2026...
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-29-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-29-august-2026#comments</comments><guid isPermaLink="false">18607955-3bbe-49aa-abf1-a6d73cdd86bd</guid><pubDate>Sat, 29 Aug 2026 04:04:14 +0000</pubDate><atom:updated>2026-08-29T16:58:29.549Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/om47bexj/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/om47bexj/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-car-accident-4-college-students-death">மதுராந்தகம் அருகே கார் டயர் வெடித்து விபத்து - 4 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு</a></p><p>* ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது. </p><p>* இந்த விபத்தில் மேலும் 3 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.</p> <p><a href="https://maalai-malar.quintype.com/story/a38d2012-cf1b-4f8b-b29d-45b7bcf362f9">600-ஐ நெருங்கிய பலி எண்ணிக்கை.. U டர்ன் அடித்த நேபாள அரசு - வெளிநாட்டு மீட்பு குழுக்களுக்கு அனுமதி</a></p><p>* சுமார் 1,500 பேர் இன்னும் மாயமாகியுள்ளனர்.</p><p>*சுமார் 400 இந்தியர்கள் சீனப் பகுதியில் மாட்டிக்கொண்டனர்.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/e0806bf7-ac8b-4e79-a62c-a0d782ba38dc">உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம்.. அமெரிக்கா கட்டுப்பாட்டுக்கு வரும் வெனிசுலா எண்ணெய் - டிரம்ப் அறிவிப்பு</a></p><p>*வெனிசுலாவின் 65 பில்லியன் பேரல் கச்சா எண்ணெய் இருப்பை அமெரிக்கா, கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும்</p><p>*, ஈரான் போர் தொடங்கி ஆறு மாதங்களைக் கடந்துள்ளது</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/a6819e51-84ba-49d1-9c0f-574b54b98586">நேபாள வெள்ளம்: அதிர்ச்சியில் உறைந்த பெண்.. அதிசயமாக உயிர்தப்பிய குடும்பம் - அதிரவைக்கும் வீடியோக்கள்</a></p><p>*சீறிப் பாயும் நீரால் சூழப்பட்ட போதிலும் ஒரு பச்சை வீடு எவ்விதச் சேதமும் இன்றி அப்படியே நின்றது.</p><p>*மரணத்தின் விளிம்பு வரை சென்ற அவர், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/38db2f44-0d69-4039-8e5d-b660bab57679">அமெரிக்காவிடம் இருந்து ஜாவலின் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் கையெழுத்து</a></p><p>*அமெரிக்காவுடன் இந்திய ராணுவம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.</p><p>*ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-29-8-2026"> GOLD PRICE TODAY: தங்கம் வாங்குவோருக்கு குட் நியூஸ் - அதிரடியாக குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.295 குறைந்து ரூ.14,505-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* தங்கத்தை போலவே வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/prime-minister-modi-left-for-uzbekistan-and-kyrgyzstan-on-a-4-day-trip">4 நாள் பயணமாக உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் புறப்பட்டார் பிரதமர் மோடி!</a></p><p>* பயணத்தின் போது முதலாவதாக அவர் உஸ்பெகிஸ்தான் செல்கிறார்.</p><p>*உச்சிமாநாட்டில் ரஷிய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்வார்கள்</p>  <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-says-let-us-make-sports-a-part-of-life-and-build-a-strong-india">விளையாட்டை வாழ்வின் ஒரு பகுதியாக்கி வலிமையான இந்தியாவை உருவாக்குவோம்! - நயினார் நாகேந்திரன்</a></p><p>* விளையாட்டு என்பது வெற்றிக்கான பாதை மட்டுமல்ல; ஒழுக்கம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை மற்றும் குழு உணர்வை வளர்க்கும் சிறந்த களம்.</p><p>* ஒவ்வொரு வெற்றியின் பின்னாலும் இருக்கும் கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் போற்றுவோம்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sengottaiyan-says-chief-minister-vijay-sat-next-to-me-in-the-legislative-assembly-and-boosted-everyones-morale">சட்டசபையில் என் அருகில் அமர்ந்து முதலமைச்சர் விஜய் அனைவரையும் உற்சாகப்படுத்தினார்- அமைச்சர் செங்கோட்டையன்</a></p><p>* எதிர்காலத்தில் இதுபோன்ற துயர சம்பவங்களை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.</p><p>*  நேபாளத்தில் உள்ள தமிழர்களின் நிலை குறித்து தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmalkumar-says-members-of-the-public-can-even-stop-us-to-voice-their-issues">எங்களை வழிமறித்து கூட பொதுமக்கள் பிரச்சினைகளை சொல்லலாம்: அமைச்சர் நிர்மல்குமார்</a></p><p>* போதை பொருள் விற்பனை தொடர்பாக எந்த சந்தேகம் இருந்தால், எந்த பயமுமின்றி ஆசிரியர்களிடம் கூறுங்கள்.</p><p>* குழந்தைகளின் பாதுகாப்பு தான் முதலமைச்சர் விஜய்யின் முதல் முன்னுரிமை. </p><p><a href="https://maalai-malar.quintype.com/story/0a2602fc-afa0-4738-abe3-981f6935c2f9">626 பேர் பலி.. நிறம் மாறிய புதிய ஏரி - நேபாளத்திற்கு சீனா எச்சரிக்கை</a></p><p>*2,500 பேர் மாயமாகியுள்ளனர். </p><p>*திபெத்திலும் வெள்ள பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/7-arrested-case-of-murder-vck-functionary-near-pallavaram">பல்லாவரம் அருகே விசிக நிர்வாகி கொலையில் 7 பேர் கைது</a></p><p>* கடந்த 2021-ம் வருடம் பம்மல் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அன்பழகன் மற்றும் வீனஸ் சிறையில் இருந்துள்ளனர்.</p><p>* இருவருக்கும் இடையே அவ்வப்போது தொழில் போட்டிகள் நடந்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-government-information-another-39-tamils-stranded-in-tibet-are-safe">திபெத்தில் சிக்கியுள்ள மேலும் 39 தமிழர்களும் பாதுகாப்பாக உள்ளனர் - தமிழ்நாடு அரசு தகவல்</a></p><p>* 21 தமிழர்கள் தமிழகம் திரும்பிய நிலையில் மீதமுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. </p><p>* திபெத்தில் சிக்கி உள்ள 39 தமிழர்களும் நலமாக உள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/national-sports-day-minister-aadhav-arjuna-wishes">இந்திய நாட்டின் தனித்துவ சிறப்பான விளையாட்டை போற்றுவோம் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</a></p><p>* விளையாட்டு விளையாடுபவர்கள் அனைவருக்கும் மன அமைதியைக் கொடுக்கிறது.</p><p>* விளையாட்டு என்பது ஒவ்வொரு மனிதர்க்கும் அவர்கள் யார் என்கிற சிறப்பை அடையாளம் காட்டுகிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-started-morning-breakfast-extension-in-govt-schools">அரசு பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: 17-ந்தேதி விருதுநகரில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்</a></p><p>* கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் கே.வி.எஸ். பள்ளியில் நேரடி ஆய்வு மேற்கொண்டனர். </p><p>* கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் கே.வி.எஸ். பள்ளியில் நேரடி ஆய்வு மேற்கொண்டனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/7-tn-fishermen-released-from-a-sri-lankan-prison-arrived-in-chennai">இலங்கை சிறையில் இருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் 7 பேர் சென்னை வந்தனர்</a></p><p>* இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி,6 மீனவர்களையும் கைது செய்தனர்.</p><p>* கடந்த 22-ந் தேதி 6 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டு, இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். </p> <p><a href="https://www.maalaimalar.com/news/puducherry/gas-cylinder-subsidy-to-be-increased-by-rs-50-in-puducherry-cm-rangasamy-announces"> புதுச்சேரியில் கியாஸ் சிலிண்டர் மானியம் ரூ.50 உயர்த்தப்படும் - முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு</a></p><p>* புதுவையின் அனைத்து துறைகளுக்கும் தேவையான நிதி ஒதுக்கப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.</p><p>* பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதியில் 93 முதல் 96 சதவீத நிதி செலவிடப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-says-let-us-grow-through-sports-let-us-shine-in-victory">விளையாட்டில் வளர்வோம் ! வெற்றியில் மிளிர்வோம் !- முதலமைச்சர் விஜய்</a></p><p>* இந்நாளில், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.</p><p>* இந்தியாவின் மூவர்ணக் கொடியை மேலும் உயரத்தில் பறக்கச் செய்திட இந்நாளில் வாழ்த்துகிறேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-indictment-govt-govt-for-neet-exam">மோடி அரசும், பிரகலாத் ஜோஷியும் மாணவர் எதிர்காலத்தோடு விளையாடுவதை நிறுத்த வேண்டும்!- மாணிக்கம் தாகூர்</a></p><p>* நீட் தேர்வு என்ற கொடூரமான முறை தமிழ்நாட்டு மாணவர்களின் உயிர்களையும் கனவுகளையும் தொடர்ந்து பறிப்பது எப்போது முடிவுக்கு வரும்?</p><p>* நீட் கொடுமையால் இனி எந்தவொரு மாணவரின் உயிரும் பறிபோகக் கூடாது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-rain-in-tamil-nadu-until-the-4th">தமிழகத்தில் வருகிற 4-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு</a></p><p>* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். </p><p>* புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-government-will-not-complete-five-years-eddappadi-palaniswami">த.வெ.க. ஆட்சி 5 ஆண்டுகள் இருக்கப்போவது இல்லை: எடப்பாடி பழனிசாமி</a></p><p>* சட்டசபையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் சொந்த பிரச்சினையைத்தான் பேசிக் கொண்டிருக்கிறார்களே தவிர, மக்களுடைய பிரச்சனையை பேசுவது கிடையாது.</p><p>* மக்களுடைய பிரச்சினையை பேசும் ஒரே கட்சி அதிமுகதான். வேறு யாரும் பேசுவது இல்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-former-cm-minister-mk-stalin-z-security-withdraw">முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பு வாபஸ்</a></p><p>* இன்று முதல் எஸ்கார்ட் பாதுகாப்பாகக் குறைக்கப்பட்டுள்ளது.</p><p>* எஸ்கார்ட் பாதுகாப்பில் ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 4 காவலர்கள் மட்டுமே இருப்பர்.</p>]]></content:encoded></item><item><title>தி.மு.க. முப்பெரும் விழாவில் 110 மாவட்ட பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கிறார் மு.க. ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-grand-festival-mk-stalin-introduces-110-district-incharges</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-grand-festival-mk-stalin-introduces-110-district-incharges#comments</comments><guid isPermaLink="false">0a006589-7c47-4141-9687-46719b2d9377</guid><pubDate>Sat, 29 Aug 2026 15:58:51 +0000</pubDate><atom:updated>2026-08-29T15:58:51.928Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/j3dmjul0/MKStalin0002.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு.க. ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/j3dmjul0/MKStalin0002.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. அடைந்த தோல்விக்கு காரணங்கள் குறித்து ஆராய குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் அளித்த அறிக்கையின் அடிப்படையில், தி.மு.க.வை வலுப்படுத்த 77 ஆக இருந்த மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை 110 ஆக உயர்த்த கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் முடிவு செய்தார்.</p><p>அதன்படி, நேற்று கட்சி ரீதியாக தி.மு.க.வில் பிரிக்கப்பட்ட 110 மாவட்டங்கள் எவை? என்பதும், அதில் என்னென்ன சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றுள்ளன? என்பதுவும் வெளியானது.</p><h2>மாவட்ட செயற்குழு கூட்டம்</h2><p>தற்போதுள்ள 77 மாவட்ட செயலாளர்கள், புதிதாக உதயமாகும் 110 மாவட்டங்களில், எந்தெந்த ஒன்றியம், நகரம், பேரூர் பகுதிகள் இடம்பெற வேண்டும் என்பது குறித்து மாவட்ட செயற்குழுவை கூட்டி, அதற்கான பரிந்துரைகளை 15 நாட்களுக்குள் கட்சித் தலைமைக்கு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>பொதுவாக, தி.மு.க.வில் மாவட்ட செயலாளர்கள், கட்சி தேர்தல் நடத்தியே நியமிக்கப்பட்டு வருகிறார்கள். அதற்கு முன்பாக குறிப்பிட்ட மாவட்டத்தை கவனிக்க பொறுப்பாளர்கள் தான் நியமிக்கப்படுவார்கள். தேர்தல் மூலம் மாவட்ட செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்படும் வரை பொறுப்பாளர்களே நிர்வகிப்பார்கள்.</p><h2>தி.மு.க. முப்பெரும் விழாவில் அறிமுகம்</h2><p>அந்த வகையில், தி.மு.க.வில் புதிதாக உதயமாகியுள்ள 110 மாவட்டங்களுக்கும் விரைவில் பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அவர்கள் அனைவரையும் செப்டம்பர் 17-ந்தேதி நடைபெறும் தி.மு.க. முப்பெரும் விழாவில் அறிமுகம் செய்து வைக்க, கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். முப்பெரும் விழா நடைபெறும் இடம் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>கார் கதவை திறந்தபோது, பின்னால் வந்து மோதிய பைக்: தூக்கி வீசப்பட்ட நபர் உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/car-door-opened-bike-crash-man-thrown-dies</link><comments>https://www.maalaimalar.com/news/national/car-door-opened-bike-crash-man-thrown-dies#comments</comments><guid isPermaLink="false">24cb971e-a470-4100-94a1-b9a70876c0a3</guid><pubDate>Sat, 29 Aug 2026 15:51:50 +0000</pubDate><atom:updated>2026-08-29T15:51:50.573Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கார் விபத்து,Car accident,குஜராத்,gujarat,bike accident,பைக் விபத்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/mwwmvhvn/25-08-2026-131421.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gujarat road accident news]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/mwwmvhvn/25-08-2026-131421.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D">குஜராத்தில்</a> சாலையோரம் நின்று கொண்டிருந்த காரில், பின் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் கார் கதவை திறந்தபோது, காருக்கு பின்னால் பைக்கில் வந்த நபர் மீது, காரின் கதவு பலமாக மோதியதில், பைக்கில் வந்த நபர் தூக்கி வீசப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.</p><p>குஜராத்தின் சூரத் பகுதியில் 56 வயதான முகமது அமீன் உஸ்மான் கனி என்பவர் அந்த பகுதியில் உள்ள ரிவர் பார்க் அபார்ட்மெண்ட்ஸில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இதையடுத்து சம்பவம் நடந்த அன்று கடைக்கு செல்வதற்காக அந்த நபர் பைக்கில் சாலையில் வந்து கொண்டிருந்தார்.</p><p>அங்கு சாலை ஓரத்தில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த காரில் பின்புறம் அமர்ந்திருந்த ஒரு பெண், திடீரென கார் கதவை திறந்தார்.</p><p>அப்போது பைக்கில் அந்த வழியாக வந்து கொண்டிருந்த முகமது அமீன், கார் கதவின் மீது வேகமாக வந்து மோதினார்.</p><p>இதையடுத்து முகமது அமீன் தனது பைக்கில் இருந்து தூக்கி எறியப்பட்டு சாலையில் விழுந்தார். இதற்கிடையில் காரில் வந்த குடும்பத்தினர் சாலையில் மயங்கி கிடப்பவரை பார்த்துவிட்டு, தாங்கள் வந்த காரில் அந்த இடத்தை விட்டு சென்றனர்.</p><p>பின்னர் அவரது தலையிலிருந்து ரத்தம் வழிந்து, சாலையில் மயங்கி விழுந்தார். சாலையில் மயங்கி விழுந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.</p><p>இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த நபர், நான்கு நாட்கள் சிகிச்சைக்கு பிறகு இன்று உயிரிழந்தார்.</p><p>இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக, காரில் இருந்த நபர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>முத்தரப்பு டி20 கிரிக்கெட்: ஜிம்பாப்வேவை எளிதாக வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/namibia-t20-tri-series-south-africa-beats-zimbabwe-by-7-wickets</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/namibia-t20-tri-series-south-africa-beats-zimbabwe-by-7-wickets#comments</comments><guid isPermaLink="false">6b37ba15-d109-4093-b879-05f75e46118d</guid><pubDate>Sat, 29 Aug 2026 15:44:29 +0000</pubDate><atom:updated>2026-08-29T15:44:29.197Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Dewald Brevis,டெவால்ட் ப்ரீவிஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/9quak1c4/DewalBravis001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டெவால்ட் ப்ரீவிஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/9quak1c4/DewalBravis001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நமீபியா, தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டி20 முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நமீபியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற போட்டியில் தென்ஆப்பிரிக்கா- ஜிம்பாப்வே அணிகள் மோதின.</p><h2>ஜிம்பாப்வே 144</h2><p>ஜிம்பாப்வே டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. பிரையன் பென்னெட், பென் கர்ரன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பிரையன் பென்னெட் 35 பந்தில் 34 ரன்கள் எடுத்தும், பென் கர்ரன் 12 பந்தில் 24 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.</p><p>அடுத்து வந்த டியோன் மையர் 17 ரன்களும், சிகந்தர் ரசா 10 ரன்களும் எடுத்தனர். விக்கெட் கீப்பர் மருமானி 13 பந்தில் 30 ரன்கள் எடுக்க ஜிம்பாப்வே 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் சேர்த்தது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் யான்சன் 3 விக்கெட்டும், சுப்பராயன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><h2>டெவால்ட் ப்ரீவிஸ் அபாரம்</h2><p>பின்னர் 145 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்காவின் பிரிட்டோரியஸ், ஹெர்மான் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பிரிட்டோரியஸ் 22 ரன்களிலும், ஹெர்மான் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.</p><p>அடுத்து வந்த டெவால்ட் ப்ரீவிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 32 பந்தில் 7 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 75 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருகு்க தென்ஆப்பிரிக்கா 13.4 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.</p>]]></content:encoded></item><item><title>மனிதர்களால் விலங்குகளுக்கு ஏற்படும் விளைவு: ஆய்வில் சொல்வது என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/world/how-human-presence-affects-animals-us-scientists-study-4500-animals</link><comments>https://www.maalaimalar.com/news/world/how-human-presence-affects-animals-us-scientists-study-4500-animals#comments</comments><guid isPermaLink="false">86cd1253-7330-465d-999e-a36a5cb3e5a4</guid><pubDate>Sat, 29 Aug 2026 15:39:27 +0000</pubDate><atom:updated>2026-08-29T15:39:27.911Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,America,scientist,விஞ்ஞானிகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/30eau8iw/Untitled-design-11.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Human presence impact on wildlife]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/30eau8iw/Untitled-design-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>4,500 பறவைகள், பாலூட்டிகளை ஆய்வு செய்த அமெரிக்க விஞ்ஞானிகள், 65% இனங்கள் மனித இருப்பால் மட்டுமே தங்கள் இயக்கம் மற்றும் வாழ்விடப் பழக்கங்களை மாற்றியதை கண்டறிந்தனர்.</p><p>பல ஆண்டுகளாக வனவிலங்குப் பாதுகாவலர்கள், சாலைகள், பண்ணைகள், குடியிருப்புப் பகுதிகள், வேலிகள் போன்ற நாம் உருவாக்கும் கட்டுமானங்களைக் கொண்டே வனவிலங்குகள் மீதான நமது தாக்கத்தை மதிப்பிட்டு வந்தனர். ஆராய்ச்சியாளர்கள் 37 இனங்களைச் சேர்ந்த 4,500-க்கும் மேற்பட்ட பறவைகளையும் பாலூட்டிகளையும் பின்தொடர்ந்து, கிட்டத்தட்ட 11.8 மில்லியன் ஜிபிஎஸ் புள்ளிகளைச் சேகரித்தனர். </p><p>இந்த ஆய்வில் 65 சதவீதத்திற்கும் மேற்பட்ட இனங்கள், தாங்கள் மாற்றியமைத்த எந்தவொரு நிலப்பரப்பையும் சாராமல், மனிதர்கள் அருகில் இருந்த காரணத்தால் மட்டுமே தங்கள் நடத்தையை மாற்றிக்கொண்டன. </p><p>பறவைகள் மற்றும் பாலூட்டிகள் மீது மனித இருப்பு மற்றும் நிலப்பரப்பு மாற்றத்தின் ஊடாடும் விளைவுகள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வின்படி, இந்த விளைவு நகரங்களிலோ அல்லது விவசாய நிலங்களிலோ வலுவாக இருக்கவில்லை; மாறாக, மிகவும் அடர்ந்த, வளர்ச்சி குன்றிய இடங்களில்தான் வலுவாக இருந்தது. அங்கு, நெருங்கி வரும் ஒரு பாதசாரி அல்லது வாகனத்தின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது என்று குறிப்பிடப்பட்டது.</p><p>கலிபோர்னியா பல்கலைக்கழகம், சாண்டா பார்பரா மற்றும் ஸ்மித்சோனியனின் தேசிய விலங்கியல் பூங்கா ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்களின் தலைமையில் அமெரிக்கா முழுவதும் உள்ள 37 வகையான பறவைகள் மற்றும் பாலூட்டிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட சுமார் 11.8 மில்லியன் ஜிபிஎஸ் இருப்பிடப் புள்ளிகளை ஒன்றிணைத்தது.</p><p>இந்தப் பட்டியலில் மான்கள் மற்றும் சாம்பல் நிற ஓநாய்கள் முதல் காக்கைகள், பிணந்தின்னிக் கழுகுகள் இடம்பெற்றிருந்தன. இது, காட்டு விலங்குகள் உண்மையில் மனிதர்களுடன் எவ்வாறு இணைந்து வாழ்கின்றன என்பது குறித்த ஒரு அசாதாரணமான பரந்த கண்ணோட்டத்தை அந்த ஆய்வுக் குழுவிற்கு வழங்கியது. </p><p>கண்காணிக்கப்பட்ட உயிரினங்களில் 65%-க்கும் மேற்பட்டவற்றின் நடத்தையை மனிதர்களின் இருப்பு மாற்றியுள்ளது. மேலும், அவற்றுள் ஏறக்குறைய 60%-ஐப் பொறுத்தவரை, அந்த விளைவானது, சுற்றியுள்ள நிலப்பரப்பு ஏற்கனவே எந்த அளவிற்கு மாற்றப்பட்டிருந்தது என்பதை சார்ந்திருந்தது.</p><p>சாம்பல் நிற ஓநாய்கள், மக்களிடமிருந்து விலகி இருப்பதற்காக, தொலைதூரம் செல்ல முற்பட்டன; அதேசமயம் காக்கைகள் இதற்கு நேர்மாறாக, மனித நடவடிக்கைகளுடன் தொடர்புடைய உணவு ஆதாரங்களைப் பயன்படுத்திக்கொள்ள அதிக தூரம் பயணித்தன. </p><p>இந்த ஆய்வின் மிகவும் எதிர்பாராத முடிவுகளில் ஒன்று, விலங்குகள் மிகவும் வளர்ச்சியடைந்த வாழ்விடங்களில் அல்லாமல், மிகக் குறைவாகத் தொந்தரவு செய்யப்பட்ட வாழ்விடங்களில்தான் மனிதர்களின் இருப்பிற்கு வலுவாக எதிர்வினையாற்றியது.</p><p>ஏற்கெனவே கட்டப்பட்ட ஒரு பகுதியில் உள்ள ஒரு நரி, கிராமப்புறத்தில் வாழும் நரியை விட, கூடுதலாக ஒரு வழிப்போக்கரால் குறைவாகவே தொந்தரவுக்கு உள்ளானது. ஏனெனில், அத்தகைய கிராமப்புறங்களில் மனிதர்களின் இருப்பு ஒரு புதுமையாகவும், பெரிய ஆபத்தாகவும் உணரப்பட்டது.</p><p>ஒரு ஓநாயும் ஒரு காக்கையும் ஒரே மனிதப் பாதையை எதிர்விதமாக எதிர்கொள்ள முடியுமென்றால், ஒரு குறிப்பிட்ட பகுதியில் கட்டுமானப் பணிகளைத் தடை செய்வது போன்ற ஒரே மாதிரியான கொள்கை, எல்லா உயிரினங்களுக்கும் சமமாகப் பயனளிக்காது. </p><p>மனிதர்களின் அருகாமையால் சில உயிரினங்கள் தெளிவாகப் பயனடைவதால், மனிதர்களின் இருப்பு எல்லா உயிரினங்களுக்கும் இயல்பாகவே தீங்கு விளைவிப்பதில்லை என்று ஆசிரியர்கள் குறிப்பிட்டனர்.</p> ]]></content:encoded></item><item><title>முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பு வாபஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-former-cm-minister-mk-stalin-z-security-withdraw</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-former-cm-minister-mk-stalin-z-security-withdraw#comments</comments><guid isPermaLink="false">1cd7345a-c277-45be-ad4d-cafe3ad1cf2e</guid><pubDate>Sat, 29 Aug 2026 15:21:16 +0000</pubDate><atom:updated>2026-08-29T15:21:16.649Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/su1v2o3u/MKStalin0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு.க. ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/su1v2o3u/MKStalin0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டிருந்த இசட் பிரிவு பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.</p><p>தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலினுக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில், த.வெ.க. ஆட்சி மாறியதும் இசட் பிரிவு வழங்கப்பட்டது.</p><p>இந்த நிலையில், மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டிருந்த இசட் பிரிவு பாதுகாப்பு, இன்று முதல் எஸ்கார்ட் பாதுகாப்பாகக் குறைக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமிக்கும் இதே எஸ்கார்ட் பாதுகாப்புதான் வழங்கப்பட்டிருக்கிறது.</p><p>இசட் பிளஸ் பிரிவில் ஒரு நாளில் சுழற்சி முறையில் 58 காவலர்களும், இசட் பிரிவில் 33 காவலர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர். ஆனால், எஸ்கார்ட் பாதுகாப்பில் ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 4 காவலர்கள் மட்டுமே இருப்பர்.</p>]]></content:encoded></item><item><title>&quot;மோடிக்கு இணையாக இன்னொரு பிரதமரை யாரும் சிந்திக்கக் கூட முடியாது!&quot; - தமிழிசை சவுந்தரராஜன்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamilisai-soundararajan-says-no-other-prime-minister-can-match-modi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamilisai-soundararajan-says-no-other-prime-minister-can-match-modi#comments</comments><guid isPermaLink="false">e3f9e81b-5262-48c8-b103-1347e6294957</guid><pubDate>Sat, 29 Aug 2026 14:04:17 +0000</pubDate><atom:updated>2026-08-29T14:04:17.073Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilisai Soundararajan,pm modi,தமிழிசை சவுந்தரராஜன்,மோடி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/mne24hqg/Tamilisai-Soundararajan" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tamilisai Soundararajan ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/mne24hqg/Tamilisai-Soundararajan?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>"<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF">பிரதமர் நரேந்திர மோடிக்கு</a> இணையாக நாட்டின் பிரதமர் பதவிக்கு வேறு ஒருவரை தற்போது யாராலும் சிந்தித்துக்கூட பார்க்க முடியாது" என்று தமிழக பாஜக மூத்த தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/tamizhisai-soundararajan">தமிழிசை சவுந்தரராஜன்</a> திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.</p><p>சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பிரதமர் மோடியின் அரசியல் அனுபவம் மற்றும் மாநில வளர்ச்சி குறித்து பல்வேறு முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.</p><h2><strong>25 ஆண்டுகால அரசியல் அனுபவம்</strong></h2><p>இதுகுறித்து <a href="https://www.maalaimalar.com/topic/tamizhisai-soundararajan">தமிழிசை சவுந்தரராஜன்</a> பேசுகையில், "நரேந்திர மோடி தொடர்ந்து மூன்று முறை நாட்டின் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதற்கு முன்பு 12 ஆண்டுகள் மாநில முதல்-மந்திரியாகவும் பணியாற்றியுள்ளார். </p><p>இதன் மூலம் <strong>25 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட அரசியல் அனுபவத்தை</strong> அவர் பெற்றுள்ளார். எனவே, அவரது ஆளுமைக்கும் அனுபவத்துக்கும் இணையாக வேறு யாரையும் ஒப்பிட முடியாது" என்று குறிப்பிட்டார்.</p><h2><strong>பாகுபாடற்ற வளர்ச்சி &amp; தமிழ் மீதான பற்று</strong></h2><p>மேலும், ஜனநாயக நாட்டில் அனைவரும் தங்களது எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க உரிமை இருந்தாலும், பிரதமர் மோடிக்கு இணையாகச் செயல்படுவது எளிதான விஷயம் அல்ல என்று அவர் கூறினார்.</p><p> "<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF">பிரதமர் மோடி</a> தென் மாநிலங்கள், வட மாநிலங்கள் என எந்தவித பாகுபாடும் காட்டுவதில்லை. குறிப்பாகத் <strong>தென் மாநிலங்களின் வளர்ச்சியில் அவர் அதிக அக்கறை</strong> செலுத்தி வருகிறார். </p><p>தமிழர்களின் பெருமையான திருக்குறளை உலக அளவில் பிரதமர் மோடி கொண்டு சென்ற அளவுக்கு வேறு யாரும் செயல்பட்டதில்லை" என்றும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>ரசிகரின் அம்மாவிடம் வீடியோ காலில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-sivakarthikeyan-speaks-to-fans-mother-on-video-call</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-sivakarthikeyan-speaks-to-fans-mother-on-video-call#comments</comments><guid isPermaLink="false">23a826d2-2f10-4753-9514-f9a2e0fe8e9e</guid><pubDate>Sat, 29 Aug 2026 13:48:10 +0000</pubDate><atom:updated>2026-08-29T13:48:10.590Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>sivakarthikeyan,நடிகர்,Actor,சிவகார்த்திகேயன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/j702ergf/Untitled-design-10.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிவகார்த்திகேயன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/j702ergf/Untitled-design-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/சிவகார்த்திகேயன்">சிவகார்த்திகேயன்</a> தனது ரசிகர் மன்றம் கும்பகோணம் நகர தலைவர் இல்ல திருமண விழாவிற்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.</p><p>அப்போது வெளிநாட்டில் இருந்த சிவகார்த்திகேயன் தனது ரசிகர்களின் குடும்பத்தோடு வீடியோ கால் மூலம் பேசினார். மேலும் வீட்டில் இருந்த அவரின் ரசிகரின் அம்மாவிடம் நலம் விசாரித்து நீண்ட நேரமாக அவர் உரையாடினார்.</p><p>நடிகர் சிவகார்த்திகேயனிடம் ரசிகரின் அம்மா கூறுகையில், தங்களை நேரில் சந்தித்து பத்திரிக்கை கொடுப்பதற்கு ஆர்வமாக இருந்தோம் என கூறினார்.</p><p>மேலும் நீங்கள் எங்களை தொடர்பு கொண்டது, மிகவும் சந்தோஷமாக இருப்பதாகவும், நீங்கள் நன்றாக இருக்க வேண்டுமென்றும் அந்த தாயார் கூறினார்.</p><p>இதற்கு சிவகார்த்திக்கேயன் பேசும்போது, தான் அந்த சமயத்தில் சென்னையில் இல்லாத காரணத்தால், உங்கள் அழைப்பிதளை ஏற்க முடியவில்லை என்று கூறினார்.</p><p>மேலும் தான் சென்னை வந்தபிறகு, தங்களை நேரில் சந்திப்பதாகவும் சிவகார்த்திகேயன் கூறினார். என்னுடைய ரசிகர்களாக நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும், தனக்கு பெருமையாக இருப்பதாக அவர் கூறினார். மேலும் என்னுடைய ரசிகர்களாகிய நீங்கள் தான் எனக்கு ஆதரவாக இருப்பதாகவும் சிவகார்த்திக்கேயன் கூறினார்.</p><p>இதையடுத்து சிவாகார்த்திகேயனிடம் அவரின் ரசிகர் பேசுகையில், தங்களது ரசிகராக இருப்பது தனக்கு பெருமையாக உள்ளதாக கூறினார்.</p><figure><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DcnzLkZiE0f/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DcnzLkZiE0f/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DcnzLkZiE0f/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by MaalaiMalar News (@maalaimalar)</a></p></div></blockquote>
<script async src="//www.instagram.com/embed.js"></script></figure>]]></content:encoded></item></channel></rss>