<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 16 Aug 2026 05:47:03 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்- 16 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-16-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-16-august-2026#comments</comments><guid isPermaLink="false">114f1354-2cfc-439f-8ee1-fbc2ae5ae0a8</guid><pubDate>Sun, 16 Aug 2026 03:20:30 +0000</pubDate><atom:updated>2026-08-16T05:02:23.275Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/4rqpglxc/TodayLive001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இன்றைய முக்கிய செய்திகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/4rqpglxc/TodayLive001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/mob-baying-for-her-shashi-tharoor-backs-mahua-moitra-after-late-night-eviction-bid">நடுராத்திரியில் விருந்தினர் மாளிகையில் இருந்து வெளியேற்ற முயற்சி: மஹுவா மொய்த்ரா எம்.பி. குற்றச்சாட்டு</a></p><p>* மாலை 6.15 மணியளவில் நான் சர்க்யூட் ஹவுஸ் அறைக்குச் சென்றேன். ஊழியர்கள் எனக்கு வழக்கமாக ஒதுக்கப்படும் அறைக்கு என்னை அழைத்துச் சென்றனர்.</p><p>* அந்த அறை தங்குவதற்குத் தயாராக வைக்கப்பட்டிருந்தது. மாலை 7 மணிக்கு எனது அறைக்குத் தேநீர் கொண்டு வரப்பட்டது. இரவு 9.20 மணிக்கு இரவு உணவு அங்கேயே பரிமாறப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/president-murmu-pm-modi-pay-tribute-to-vajpayee" rel="nofollow">வாஜ்பாய் நினைவு நாள்: ஜனாதிபதி, பிரதமர் மோடி மலரஞ்சலி</a></p><p>* டெல்லியில் உள்ள நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மலரஞ்சலி செலுத்தினார்.</p><p>* டெல்லியில் உள்ள நினைவிடத்தில் டெல்லி முதலமைச்சர் ரேகா அஞ்சலி.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/8000-cusecs-flow-in-hogenakkal-cauvery" rel="nofollow">ஒகேனக்கல் ஆற்றில் 8,000 கனஅடி நீர் வரத்து..!- பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை</a></p><p>* தமிழகத்திற்கு 800 கனஅடி வீதம் நீர் திறக்கப்படுகிறது.</p><p>* குடிநீர் தேவைக்காக 2000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cannot-fool-the-youth-mr-prime-minister-manickam-thakur-criticism-on-sengottai-speech" rel="nofollow">இளைஞர்களை ஏமாற்ற முடியாது Mr. Prime Minister!- செங்கோட்டையில் பிரதமரின் உரை குறித்து மாணிக்கம் தாகூர் விமர்சனம்</a></p><p>* நேற்றைய மோடியின் பேச்சுக்கும், நிஜமான கள யதார்த்தத்திற்கும் எவ்வளவு பெரிய இடைவெளி!</p><p>* ரூ.63,000 கோடியில் தொடங்கப்பட்ட பிரதமரின் பயிற்சித் திட்டம் (PMIS) முற்றிலும் முடங்கிக் கிடக்கிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/myanmar-approves-return-of-3-lakh-rohingya" rel="nofollow">3 லட்சம் ரோஹிங்கியா அகதிகளை மீண்டும் ஏற்கிறது மியான்மர்</a></p><p>* தாய் நாட்டிற்கு அழைத்து வர வங்காளதேசத்துடன் இணைந்து மியான்மர் அரசு தீவிரமாகப் பணியாற்றி வருகிறது.</p><p>*  3 லட்சத்திற்கும் அதிகமான அகதிகள் மியான்மரின் ராகினே மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/south-railway-revenue-up-8-84-percent-in-2025-26" rel="nofollow">2025-26ம் நிதியாண்டில் தெற்கு ரெயில்வேயில்  ரூ.13,778 கோடி வருவாய்- பொதுமேலாளர் சுப்பாராவ்</a></p><p>* நடப்பு நிதியாண்டில் ஜூலை மாதம் வரை 13.48 மில்லியன் டன்களை எட்டியுள்ளோம்.</p><p>* 2025-26-ம் ஆண்டில் 42.184 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-aiadmk-alliance-not-possible-says-mp-kanimozhi" rel="nofollow">திமுக-அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை..!- திமுக எம்பி கனிமொழி</a></p><p>* பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குக்கூட பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.</p><p>*  தூத்துக்குடியிலேயே தொடர்ந்து இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/asish-banerjee-mamata-banerjee-close-aide-found-dead-at-trinamool-office">முன்னாள் அமைச்சர் கட்சி அலுவலகத்தில் சடலமாக கண்டெடுப்பு: மம்தாவுக்கு நெருக்கமானவர்..!</a></p><p>* கல்வி மற்றும் விவசாயத்துறை அமைச்சராகவும் மம்தா பானர்ஜி அரசின் கீழ் பணியாற்றியுள்ளார்.</p><p>* இந்த வருடம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக-வின் துருபா சஹாவிடம் தோல்வியடைந்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/india-beat-wales-in-hockey-world-cup">உலகக் கோப்பை ஹாக்கி: வேல்ஸ் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது இந்தியா</a></p><p>* இந்திய அணி டி பிரிவில் இடம்பெற்று உள்ளது.</p><p>* கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் இரு கோல்கள் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/chepauk-super-gillies-moves-in-second-place-in-tnpl-points-table">டிஎன்பிஎல்: புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது சேப்பாக்</a></p><p>* முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.</p><p>* மதுரை பாந்தர்ஸ் அணி 4 வெற்றியுடன் 8 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/djokovic-lose-second-round-in-cincinnati-open-tennis">சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி</a></p><p>* சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.</p><p>* முன்னணி வீரர்கள் நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/withdraw-coalition-support-jharkhand-protesters-demand-from-rahul-gandhi">ஜார்க்கண்ட் முதல்வர், ராகுல் காந்தி உருவ பொம்பை எரிப்பு: 20-ந்தேதி சோரன் வீடு முற்றுகை போராட்டம்- மாணவர்கள் அறிவிப்பு</a></p><p>* ராகுல் காந்தி மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார். ஆனால், உறுதியான நடவடிக்கை பின்பற்றப்படவில்லை.</p><p>* அதனால் ஹேமந்த் சோரன் ஆட்சிக்கு வழங்கும் ஆதரவை ராகுல் காந்தி திரும்பப் பெற வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>டார்வின் டெஸ்ட்: ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் நொறுக்கியது வங்கதேசம்-சாதனை வெற்றி</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/bangladesh-beat-australia-in-first-test</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/bangladesh-beat-australia-in-first-test#comments</comments><guid isPermaLink="false">a630d8f9-5d3d-45d1-87dd-53202cd1876f</guid><pubDate>Sun, 16 Aug 2026 05:41:27 +0000</pubDate><atom:updated>2026-08-16T05:41:27.245Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Cameron Green,கேமரூன் கிரீன்,AUSvBAN,Hasan Mahmud,ஆஸ்திரேலியா வங்கதேசம் தொடர்,ஹசன் மகமுது</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/l550ky4z/hasan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ hasan mahmud]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/l550ky4z/hasan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் வங்கதேசம் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.</p><p>ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நஜ்முல் ஹூசைன் ஷான்டோ தலைமையிலான வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது.</p><h2>டார்வின் டெஸ்ட்</h2><p>ஆஸ்திரேலியா-வங்கதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டார்வினில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.</p><h2>ஸ்மித் அரை சதம்</h2><p>அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்கியது. வங்கதேச வீரர்கள் துல்லியமாக பந்துவீசினர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. ஸ்டீவ் ஸ்மித் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து அரை சதம் கடந்து 71 ரன்னில் அவுட்டானார்.</p><p>இறுதியில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 198 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.</p><p>வங்கதேசம் சார்பில் ஹசன் மகமுது 6 விக்கெட்டும், தஸ்கின் அகமது, எபாடட் ஹொசைன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p>தொடர்ந்து ஆடிய வங்கதேசம் முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 426 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக ஆடிய ஹசன் தமிம் சதமடித்து 101 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஷாண்டோ பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 84 ரன்னில் வெளியேறினார்.</p><p>மொமினுல் ஹக் 49 ரன்னில் அவுட்டானார். மெஹிதி ஹசன் அரை சதம் கடந்து 65 ரன்னில் அவுட்டானார். வங்கதேசம் அணி ஆஸ்திரேலியாவை விட 228 ரன்கள் முன்னிலை பெற்றது.</p><h2>ஹேசில்வுட் 6 விக்கெட்</h2><p>ஆஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட் 6 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p>இதையடுத்து, ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சை ஆடியது. மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது. ஸ்டீவ் ஸ்மித் 44 ரன்னில் ஆட்டமிழந்தார். கேமரூன் கிரீன் 43 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். லபுசேன் 31 ரன்னில் வெளியேறினார்.</p><p>இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. கேமரூன் கிரீன் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து சதமடித்து அசத்தினார்.</p><p>அவர் 104 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில், ஆஸ்திரேலியா அணி 2வது இன்னிங்சில் 284 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.</p><p>வங்கதேசம் சார்பில் மெஹிதி ஹசன் 5 விக்கெட்டும், ஹசன் மகமுது 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p>இதையடுத்து, 57 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஹசன் தமிம் டக் அவுட்டானார்.</p><h2>வங்கதேசம் அசத்தல் வெற்றி</h2><p>ஷட்மன் இஸ்லாம் உடன் ஜோடி சேர்ந்த மொமினுல் ஹக் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றது.</p><p>இறுதியில், வங்கதேசம் 2வது இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 57 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.</p><p>ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் முதல் முறையாக வீழ்த்தி வங்கதேசம் சாதனை படைத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காவிரி நீர் விவகாரம்: கர்நாடக பாஜகவினரை நயினார், அன்புமணி தட்டிக் கேட்க வேண்டும்!- மாணிக்கம் தாகூர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-dispute-nainar-and-anbumani-must-question-karnataka-bjp-manickam-thakur</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-dispute-nainar-and-anbumani-must-question-karnataka-bjp-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">04b5bf12-8ff6-4cf5-a171-735058433306</guid><pubDate>Sun, 16 Aug 2026 05:19:58 +0000</pubDate><atom:updated>2026-08-16T05:19:58.193Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,அன்புமணி ராமதாஸ்,மாணிக்கம் தாகூர்,காவிரி நீர்,Manickam Tagore,Cauvery Issue</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/9f0e9ixz/Manic.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nainar Nagendran- Anbumani ramadoss- Manickam Tagore]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/9f0e9ixz/Manic.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டிற்கு நீர் திறந்ததை எதிர்க்கும் கர்நாடக பாஜகவினரை நயினார், அன்புமணி தட்டிக் கேட்க வேண்டும் என காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடக அரசு உரிய தண்ணீரைத் திறக்காததால், முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது.</p><p>ஆணையத்தின் உத்தரவை கர்நாடகா செயல்படுத்தக் கோரிய தமிழக அரசின் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 17-ஆம் தேதி (நாளை) விசாரணைக்கு வரவுள்ள நிலையை உணர்ந்து, தனது நிலையைப் புரிந்துகொண்ட கர்நாடக அரசு தற்போது கபினியிலிருந்து முறைப்படி தண்ணீரைத் திறந்துவிடத் தொடங்கியுள்ளது.</p><p>இந்த மாதத் தொடக்கத்திலேயேபி. எஸ். எடியூரப்பா மற்றும்  பி.ஒய்.விஜயேந்திரா உள்ளிட்ட கர்நாடக பாஜகவினர் தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்கக் கூடாது என்று போராட்டங்களை முன்னெடுத்தனர்.</p><p>தற்போது சட்டப்படி தமிழகத்திற்கு முறைப்படி தண்ணீர் திறந்துவிடப்படும் நிலையிலும், அதைத் தடுத்து நிறுத்த அணை முற்றுகை நாடகங்களை அறிவித்துப் பதற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டிற்குச் சட்டப்படி கிடைக்க வேண்டிய உரிமையைத் தடுத்து நிறுத்தத் துடிக்கும் பாஜகவின் இந்த வன்மமும் தமிழர்களுக்கு எதிரான துரோகமும் மன்னிக்க முடியாதது!</p><p>பாஜகவின் கூட்டணி கட்சிகள் காங்கிரஸ் மீது பழி போடுவதற்கு முன் ஒன்றை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். கர்நாடகத்தில் காங்கிரஸ் முதலமைச்சரே இருந்தாலும் தவறு செய்தால் தமிழகத்தின் உரிமைக்காகத் தட்டிக்கேட்க நாங்கள் ஒருபோதும் தயங்கியதில்லை. </p><p>ஆனால், கர்நாடக பாஜகவினர் தமிழகத்திற்கு எதிராகச் செய்யும் இந்த அப்பட்டமான துரோகத்தைத் தட்டிக்கேட்க முடியாமல் </p><p>நயினார் நாகேந்திரன் அண்ணா எங்கே போனீர்கள்? கூட்டணி கட்சி தலைவர் ராமதாஸ் எங்கே இருக்கிறார்? ஏன் கூனிக் குறுகி மவுனம் காக்கிறீர்கள்?</p><p>தமிழ்நாட்டைப் பற்றியும் நமது விவசாயிகளைப் பற்றியும் இவர்களுக்குக் கவலையே இல்லையா? </p><p>தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் உங்கள் கட்சியினரைக் கண்டிக்க வக்கில்லாமல் இங்கு வந்து அரசியல் நாடகம் நடத்துவதுதான் பாஜகவின் லட்சணமா? </p><p>பாஜகவின் இந்த நயவஞ்சகக் கொல்லைப்புற அரசியலும், இதன் பின்னணியில் உள்ள உண்மைகளும் இப்போது வெளிச்சத்திற்கு வரத் தொடங்கிவிட்டன!</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பான் மசாலா விளம்பரம் விவகாரம்: நடிகர்கள் ஷாருக் கான், அஜய் தேவ்கன் ஆகியோருக்கு FDA நோட்டீஸ்</title><link>https://www.maalaimalar.com/news/national/pan-masala-ad-contract-fda-notice-to-actors-shah-rukh-khan-ajay-devgn</link><comments>https://www.maalaimalar.com/news/national/pan-masala-ad-contract-fda-notice-to-actors-shah-rukh-khan-ajay-devgn#comments</comments><guid isPermaLink="false">d0397a51-2dd7-40f4-bb23-e851a77f7448</guid><pubDate>Sun, 16 Aug 2026 04:58:25 +0000</pubDate><atom:updated>2026-08-16T04:58:25.479Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மகாராஷ்டிரா,Shahrukh Khan,Pan masala,Maharastra,ஷாருக் கான்,உணவு பாதுகாப்புத் துறை,பான் மசாலா,FDA</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/3lntg3sc/Untitled-design-63.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pan Masala Ad Row]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/3lntg3sc/Untitled-design-63.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிரா மாநிலத்தில் தடைசெய்யப்பட்டுள்ள பான் மசாலாவின் விளம்பரத்தில் நடித்து, அதனை மறைமுகமாக பிரபலப்படுத்தியதற்காக, நடிகர்கள் ஷாருக் கான், அஜய் தேவ்கன் மற்றும் டைகர் ஷெராஃப் ஆகியோருக்கு மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.</p><h3><strong>பான் மசாலா தடை</strong></h3><p>மகாராஷ்டிராவில் பான் மசால் மற்றும் குட்கா பயன்பாட்டிற்கு அம்மாநில அரசு முழுவதுமாக தடை விதித்துள்ளது. </p><p>இதையடுத்து கடந்த 2024-ஆம் ஆண்டில் வெளியான, பான் மசாலா நிறுவனத்தின் ஏலக்காய் விளம்பரத்தில் ஷாருக் கான், அஜய் தேவ்கன் மற்றும் டைகஎ ஷெரஃப் ஆகிய மூன்று நடிகர்களும் ஒன்றாக இணைந்து நடித்திருந்தனர்.</p><p>இந்த நிலையில் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்கள் மீதான விளம்பரத்தில் நடித்ததற்காக, மூன்று நடிகர்களுக்கும் விளக்கம் கேட்டு மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.</p><h3><strong>நடிகர்களுக்கு நோட்டீஸ்</strong></h3><p>இந்த மூன்று நடிகர்களுக்கு எதிராகவும் ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதை விவரித்து, 15 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்குமாறும் கூறியுள்ளது.</p><p>மேலும் இந்த மூன்று நடிகர்களும் இந்தவிதமான விளம்பர பிரச்சாரத்தில் பங்கேற்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ளவும், புகையிலை தொடர்பான அனைத்து விளம்பர உள்ளடக்கங்களையும் தங்களது அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்குகளிலிருந்து அகற்றவும் அறிவுறுத்தியுள்ளது.</p><h3><strong>மகராஷ்டிரா உணவு பாதுகாப்புத் துறை</strong></h3><p>இதுகுறித்து மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,</p><p>“குறிப்பிட்ட இந்த விளம்பரத்தை ஆய்வு செய்ததில், மகாராஷ்டிர மாநிலத்தில் உற்பத்தி, சேமிப்பு, போக்குவரத்து, விநியோகம் மற்றும் விற்பனைக்குத் தடைசெய்யப்பட்ட ஒரு பொருளான பான் மசாலாவுடன் முக்கியமாகத் தொடர்புடைய விமல் பிராண்டை அந்த விளம்பரம் ஊக்குவிப்பது முதற்கட்டமாக தெரிகிறது.</p><p>விளம்பரத்தில் ‘விமல் ஏலக்காய்’ என்ற சொற்றொடர், விமல் பான் மசாலா பிராண்டுடன் ஒரு தொடர்பை உருவாக்கும் விதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.</p><p>இது நுகர்வோரைத் தவறாக வழிநடத்தக்கூடும் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருளின் வர்த்தக அடையாளத்தை மறைமுகமாக ஊக்குவிப்பதாக அமையும்,” என்று தெரிவித்துள்ளது.</p><p>மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து பாதுகாப்பு அதிகாரியான துகாராம் முண்டே, நடிகர்களின் விளம்பர ஒப்பந்தங்கள், பிரச்சார சுருக்கங்கள், பணம் செலுத்தும் ஏற்பாடுகள் மற்றும் உரிய கவனம் செலுத்தியதற்கான ஆதாரங்கள் ஆகியவற்றின் முழு நகல்களையும் தங்களுக்கு அனுப்புகுமாறு தெரிவித்துள்ளது.</p><p>மகாராஷ்டிராவில் குட்கா மற்றும் பிற தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.</p><p>பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை காரணம் காட்டி, மகாராஷ்டிராவிற்குள் பான் மசாலா தயாரித்தல், சேமித்தல், விநியோகித்தல் மற்றும் விற்பனை செய்வதை கடுமையாக எதிர்க்கும் வகையில் மாநிலம் முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>மேற்கோள் காட்டப்பட்ட நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களின்படி, தவறான விளம்பரங்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும், மேலும் விளம்பரதாரர்கள் மூன்று ஆண்டுகள் வரை எந்தவொரு விளம்பரத்தையும் தயாரிப்பதற்கு தடை செய்யப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>19-ம் தேதி வரை நீடிக்கும் மழை: சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-weather-heavy-rain-warning-for-chennai-and-neighbouring-districts-till-19</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-weather-heavy-rain-warning-for-chennai-and-neighbouring-districts-till-19#comments</comments><guid isPermaLink="false">37956728-e8e3-40f1-84bf-d6e617e4480f</guid><pubDate>Sun, 16 Aug 2026 04:51:23 +0000</pubDate><atom:updated>2026-08-16T04:51:23.391Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Thiruvallur,சென்னை,Chennai,Heavy Rain,கனமழை எச்சரிக்கை,weather report,திருவள்ளூர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/emb1id6j/rain.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Heavy rain]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/emb1id6j/rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியருப்பதாவது:-</p><p>தமிழக கடலோர பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.</p><p>இதன் காரணமாக தமிழகத்தில் இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழையும், தமிழகத்தின் இதர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.</p><p>நாளை (17-ந்தேதி) செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.</p><p>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருச்சி, புதுக்கோட்டை, சேலம், நாமக்கல், பெரம்பலூர், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் கடலூர் மாவட்டங்க ளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், இதர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.</p><p>வருகிற 18-ந்தேதி செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை யும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக் குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை யும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் உள்ளிட்ட இதர பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.</p><p>வருகிற 19-ந்தேதி நீல கிரி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, சிவகங்கை, புதுக் கோட்டை, திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சீபுரம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.</p><p>இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>நடுராத்திரியில் விருந்தினர் மாளிகையில் இருந்து வெளியேற்ற முயற்சி: மஹுவா மொய்த்ரா எம்.பி. குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/national/mob-baying-for-her-shashi-tharoor-backs-mahua-moitra-after-late-night-eviction-bid</link><comments>https://www.maalaimalar.com/news/national/mob-baying-for-her-shashi-tharoor-backs-mahua-moitra-after-late-night-eviction-bid#comments</comments><guid isPermaLink="false">222e014c-3e53-494f-9e6b-45e71ba0bc6c</guid><pubDate>Sun, 16 Aug 2026 04:51:19 +0000</pubDate><atom:updated>2026-08-16T04:51:19.095Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Shashi Tharoor,சசி தரூர்,மஹுவா மொய்த்ரா,Mahua Moitra,Om Birla,ஓம் பிர்லா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/e8jeh8ki/MahuaMoitra001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mahua Moitra]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/e8jeh8ki/MahuaMoitra001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்.பி.யாக உள்ளவர் மஹுவா மொய்த்ரா. கடந்த 14-ந்தேதி (நேற்று) இரவு மேற் வங்க மாநிலத்தில் உள்ள நாடியா (Nadia) நிர்வாகம், இவர் தங்கியிருந்த அறையை உடனடியாக காலி செய்யும்படி வலியுறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>இது தொடர்பாக நேற்று இரவு மஹுவா மொய்த்ரா இணைய தளத்தில் பதிவிட்டுள்ள செய்தில் "Dear IPU {(Inter-Parliamentary Union- நாடாளுமன்றங்களுக்கு இடையிலான யூனியன்) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உலகளாவிய அமைப்பு}, இந்தியாவில் நான் எம்.பி.யாக உள்ளேன்.</p><p>அதிகாரப்பூர்வ விருந்தினர் மாளிகையில் என்னுடைய அறையில் இருந்து வெளியேறுமாறு இரவு 9.97 மணிக்கு அரசு கேட்டுக்கொண்டது. பின்னர் 10.52 மணிக்கு மீண்டும் வெளியேறுமாறு வலியுறுத்தியது. விருந்தினர் மாளிகை்கு வெளியே பாஜக கூட்டம் என் உயிரை பறிக்க துடித்துக் கொண்டிருந்த வேலையில் இவ்வாறு நான் கட்டாயப்படுத்தப்பட்டேன். இந்தியாவில் ஜனநாயகம் இந்த நிலையில்தான் உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>சசி தரூர் ஆதரவு</h2><p>இந்த நிலையில் மஹுவா மொய்த்ராவுக்கு சசி தரூர் ஆதரவு தெரிவித்து்ளளார். இது தொடர்பாக சசி தரூர் கூறுகையில் "அனைத்து ஜனநாயகக் கட்சியினரும் அவருடன் ஒற்றுமையுடன் நிற்க வேண்டும். ஒரு கும்பல் அவரை தாக்கத் துடித்து கொண்டிருக்கும் நிலையில் அரசு அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.</p><p>ஒரு ஜனநாயகத்தில் இத்தகைய அடிப்படை விஷயங்களை எடுத்துரைக்க வேண்டிய அவசியம் இருக்கக்கூடாது. அதிலும் குறிப்பாக, நமது சுதந்திரப் போராட்டத்தின் உச்சகட்டத்தைக் குறிக்கும் நாளில் இது இன்னும் தேவையற்றது" எனத் தெரிவித்துள்ளார்.</p><h2>மக்களவை சபாநாயகருக்கு கடிதம்</h2><p>இவ்விவகாரத்தில் தலையிடுமாறு கோரி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு மஹுவா மொய்த்ரா கடிதம் எழுதியுள்ளார்.  அந்த கடிதத்தில் "தனக்கு அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்டிருந்த சர்க்யூட் ஹவுஸ் (அரசு விருந்தினர் இல்லம்) அறையை காலி செய்யுமாறு நாடியா மாவட்ட நிர்வாகம் தன்னை வற்புறுத்தியது. இவ்விவகாரத்தை அவசரமாகக் கவனித்து, ஒரு முன்னுதாரணத்தை உருவாக்கி, நாடு முழுவதும் உள்ள பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கண்ணியத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p>அத்துடன், அறையை காலி செய்ய மறுத்ததைத் தொடர்ந்து, சர்க்யூட் ஹவுஸுக்கு வெளியே திரண்டிருந்த பெருந்திரளான மக்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டனர். தனக்கு எதிரான துன்புறுத்தலுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடப்போவதாக கிருஷ்ணாநகர் தொகுதி எம்.பி.யான மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்.</p><p>நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்குப் பிறகு கிருஷ்ணாநகரில் உள்ள சர்க்யூட் ஹவுஸில் இரவு தங்குவதற்காக மொய்த்ரா அங்கு சென்றிருந்தார். ஒரு எம்.பி.யாக அங்கு தங்குவதற்கு தனக்கு உரிமை உண்டு என்று கூறிய அவர், தன்னைத் துன்புறுத்தும் நோக்கத்துடன் நள்ளிரவில் வெளியேறுமாறு மாவட்ட அதிகாரிகள் அழுத்தம் கொடுத்ததாக தெரிவித்தார்.</p> <h2>காலி செய்ய வற்புறுத்தல்</h2><p>"மாலை 6.15 மணியளவில் நான் சர்க்யூட் ஹவுஸ் அறைக்குச் சென்றேன். ஊழியர்கள் எனக்கு வழக்கமாக ஒதுக்கப்படும் அறைக்கு என்னை அழைத்துச் சென்றனர். அந்த அறை தங்குவதற்குத் தயாராக வைக்கப்பட்டிருந்தது. மாலை 7 மணிக்கு எனது அறைக்குத் தேநீர் கொண்டு வரப்பட்டது. இரவு 9.20 மணிக்கு இரவு உணவு அங்கேயே பரிமாறப்பட்டது.</p><p>இரவு 9.47 மணிக்கு, நாடியா மாவட்ட கூடுதல் ஆட்சியரிடமிருந்து (Additional District Magistrate) எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. நான் அந்த இடத்தை காலி செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார். அதற்கான காரணத்தை நான் கேட்டபோது, ​​மேலிடத்திலிருந்து உத்தரவு வந்துள்ளது, தான் அந்தச் செய்தியைத் தெரிவிப்பவர் மட்டுமே என்று அவர் கூறினார்" என்று மஹுவா மொய்த்ரா குற்றம்சாட்டியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வாஜ்பாய் நினைவு நாள்: ஜனாதிபதி, பிரதமர் மோடி மலரஞ்சலி</title><link>https://www.maalaimalar.com/news/national/president-murmu-pm-modi-pay-tribute-to-vajpayee</link><comments>https://www.maalaimalar.com/news/national/president-murmu-pm-modi-pay-tribute-to-vajpayee#comments</comments><guid isPermaLink="false">6b476824-352f-4171-8265-da5858c1ce6d</guid><pubDate>Sun, 16 Aug 2026 04:18:56 +0000</pubDate><atom:updated>2026-08-16T04:18:56.922Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜனாதிபதி,death anniversary,Vajpayee,pm modi,பிரதமர் மோடி,வாஜ்பாய் நினைவு நாள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/85vvemvx/PMO.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/85vvemvx/PMO.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினத்தை ஒட்டி டெல்லியில் உள்ள நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மலரஞ்சலி செலுத்தினார்.</p><p>வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மலர்தூர் அஞ்சலி செலுத்தினர்.</p><p>வாஜ்பாயின் நினைவிடத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லி முதலமைச்சர் ரேகா உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Delhi | Prime Minister Narendra Modi, President Droupadi Murmu, Vice President CP Radhakrishnan, BJP National President Nitin Nabin and other senior leaders attend the prayer meeting at &#39;Sadaiv Atal&#39;, the memorial of former PM Atal Bihari Vajpayee, on his death… <a href="https://t.co/R2bZlJNEgb">pic.twitter.com/R2bZlJNEgb</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2088821241646112935?ref_src=twsrc%5Etfw">August 16, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>2வது இன்னிங்சில் 284 ரன்னுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட்: வங்கதேசம் வெற்றிபெற 57 ரன் தேவை</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/bangladesh-need-57-runs-to-win-against-australia-first-test</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/bangladesh-need-57-runs-to-win-against-australia-first-test#comments</comments><guid isPermaLink="false">50c4d364-c151-4719-a9c5-618801f3c60d</guid><pubDate>Sun, 16 Aug 2026 04:18:49 +0000</pubDate><atom:updated>2026-08-16T04:18:49.388Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Cameron Green,கேமரூன் கிரீன்,Mehidy Hasan Miraz,மெஹிதி ஹசன்,AUSvBAN,Hasan Mahmud,ஆஸ்திரேலியா வங்கதேசம் தொடர்,ஹசன் மகமுது</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/gop939d1/mehidy.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ mehidy hasan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/gop939d1/mehidy.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 298 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.</p><p>ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நஜ்முல் ஹூசைன் ஷான்டோ தலைமையிலான வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது.</p><h2>டார்வின் டெஸ்ட்</h2><p>ஆஸ்திரேலியா-வங்கதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டார்வினில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.</p><h2>ஸ்மித் அரை சதம்</h2><p>அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்கியது. வங்கதேச வீரர்கள் துல்லியமாக பந்துவீசினர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. ஸ்டீவ் ஸ்மித் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து அரை சதம் கடந்து 71 ரன்னில் அவுட்டானார்.</p><p>இறுதியில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 198 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.</p><p>வங்கதேசம் சார்பில் ஹசன் மகமுது 6 விக்கெட்டும், தஸ்கின் அகமது, எபாடட் ஹொசைன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p>தொடர்ந்து ஆடிய வங்கதேசம் முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 426 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக ஆடிய ஹசன் தமிம் சதமடித்து 101 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஷாண்டோ பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 84 ரன்னில் வெளியேறினார்.</p><p>மொமினுல் ஹக் 49 ரன்னில் அவுட்டானார். மெஹிதி ஹசன் அரை சதம் கடந்து 65 ரன்னில் அவுட்டானார். வங்கதேசம் அணி ஆஸ்திரேலியாவை விட 228 ரன்கள் முன்னிலை பெற்றது.</p><h2>ஹேசில்வுட் 6 விக்கெட்</h2><p>ஆஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட் 6 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p>இதையடுத்து, ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சை ஆடியது. மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது. ஸ்டீவ் ஸ்மித் 44 ரன்னில் ஆட்டமிழந்தார். கேமரூன் கிரீன் 43 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். லபுசேன் 31 ரன்னில் வெளியேறினார்.</p><p>இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. கேமரூன் கிரீன் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து சதமடித்து அசத்தினார்.</p><h2>கேமரூன் கிரீன் சதம்</h2><p>அவர் 104 ரன்னில் ஆட்டமிழந்தார்.</p><p>இறுதியில், ஆஸ்திரேலியா அணி 2வது இன்னிங்சில் 284 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.</p><p>வங்கதேசம் சார்பில் மெஹிதி ஹசன் 5 விக்கெட்டும், ஹசன் மகமுது 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p>இதையடுத்து, 57 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஒகேனக்கல் ஆற்றில் 8,000 கனஅடி நீர் வரத்து..!- பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/8000-cusecs-flow-in-hogenakkal-cauvery</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/8000-cusecs-flow-in-hogenakkal-cauvery#comments</comments><guid isPermaLink="false">ce122d1e-24c5-4d47-8398-083e3855f290</guid><pubDate>Sun, 16 Aug 2026 03:45:22 +0000</pubDate><atom:updated>2026-08-16T03:45:22.507Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Cauvery river,நீர் வரத்து அதிகரிப்பு,ஒகேனக்கல் காவிரி ஆறு,parisal,hogenakkal cauvery river,பரிசல் இயக்கத்திற்கு தடை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/54ni1xv5/hogenakkal.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Hogenakkal ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/54ni1xv5/hogenakkal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>ஒகேனக்கல்</h2><p>தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கான நீர் வரத்து 6500 கன அடியிலிருந்து 8000 கன அடியாக உயர்ந்துள்ளது.</p><p>இதன்எதிரொலியால், ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கான நீர்வரத்து 8000 கன அடியாக அதிகரித்ததால் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.</p><h2>மேட்டூர் அணை</h2><p>சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 4385 கன அடியில் இருந்து 6,179 கன அடியாக அதிகரித்துள்ளது.</p><p>மேட்டூர் அணையின் தற்போதைய நீர்மட்டம் 81.31 அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 43.27 மில்லியன் கன அடியாக உள்ளது.</p><p>மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 6,179 கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில் குடிநீர் தேவைக்காக 2000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. </p><p>இதன் எதிரொலியால், ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கான நீர்வரத்து 8000 கன அடியாக அதிகரித்ததால் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.</p><h2>முல்லைப் பெரியாறு அணை</h2><p>முல்லைப் பெரியாறு அணைக்கான நீர்வரத்து 920.30 கன அடியாக உள்ள நிலையில் தமிழகத்திற்கு 800 கனஅடி வீதம் நீர் திறக்கப்படுகிறது.</p><p>முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் 122.95 கனஅடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 3,212.10 மில்லியன் கனஅடியாக உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பனிக்கரடியின் ஆழ்ந்த தூக்கத்தை கெடுத்த நபருக்கு ரூ.5 லட்சம் அபராதம்</title><link>https://www.maalaimalar.com/news/world/tourist-fined-500000-rupees-for-waking-polar-bear-in-svalbard</link><comments>https://www.maalaimalar.com/news/world/tourist-fined-500000-rupees-for-waking-polar-bear-in-svalbard#comments</comments><guid isPermaLink="false">93341fcd-42a1-4533-8130-211f12956328</guid><pubDate>Sun, 16 Aug 2026 03:45:03 +0000</pubDate><atom:updated>2026-08-16T03:45:03.138Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>norway,பனிக்கரடி,PolarBear,நார்வே</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/dxjmtgp0/Untitled-design-62.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நார்வேயில் பனிக்கரடியை தொந்தரவு செய்த சுற்றுலா பயணிக்கு ரூ.5 லட்சம் அபராதம்]]></media:title><media:description type="html"><![CDATA[ Norway Polarbear]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/dxjmtgp0/Untitled-design-62.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நார்வேயின் தீவுக்கூட்டமான ஸ்வால்பார்ட் கடற்கரையில் தூங்கிக் கொண்டிருந்த பனிக்கரடியை படகில் சென்ற நபர் ஒலி எழுப்பி எழுப்பியதற்காக, அவருக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p>வட துருவத்தில் இருந்து சுமார் 620 மைல் தொலைவில் நார்வே நாடு அமைந்துள்ளது. இங்குள்ள தீவுக்கூடமான பனிசூழ்ந்த ஸ்வால்பார்ட் கடற்கரையில் வெள்ளை பனிக்கரடிகள் வாழ்ந்து வருகிறது.</p><p>ஸ்வால்பார்டில் பனிக்கரடிகள் 1972ஆம் ஆண்டு முதல் பாதுகாக்கப்பட்ட இனமாக இருந்து வருகின்றன. மேலும் அவற்றுக்கு இடையூறு விளைவிப்பது கடுமையான சட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h3><strong>நார்வே கடற்கரை</strong></h3><p>இந்த கடற்கரைக்கு உள்ளூர் கப்பலில் சுற்றுலா பயணி ஒருவர் கடந்த வாரத்தில் சென்றுள்ளார். அந்த சமயத்தில் கடற்கரையில் பனிக்கரடி ஒன்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது.</p><p>அப்போது அந்த கரடி நகர்வதை பார்க்க விரும்பிய அந்த நபர், வேண்டுமென்றே கப்பலில் இருந்த ஒலி எழுப்பானை எழுப்பி கரடியை திகிலடைய செய்துள்ளார்.</p><p>இதையடுத்து திடீரென்று எழுப்பப்பட்ட அந்த சத்தத்தால் திகிலடைந்த அந்த கரடி, விழித்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு தப்பி ஓடியுள்ளது.</p><p>இந்த சம்பவத்தை பார்த்த உள்ளூர் காவல்துறை அதிகாரிகள், அவர் மீது வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக ஸ்வால்பார்ட் ஆளுநரான லாரஸ் ஃபெளஸ்-இடம் அழைத்து சென்றனர்.</p><h3><strong>அபராதம் விதிப்பு</strong></h3><p>இந்த வழக்கை விசாரித்த ஆளுநர், “கப்பல் அந்த கரடியை கடந்து சென்றபோது, அதில் பயணம் செய்தவர்கள் உறங்கி கொண்டிருந்த ஒரு பனிக்கரடியை கண்டுள்ளனர்.</p><p>பின்னர் அந்த கப்பலில் இருந்த ஒருவர், அதிகமான ஒலியை எழுப்பி அந்த கரடியை எழுப்பியுள்ளார். இதையடுத்து அந்த கரடி வேறு இடத்திற்கு சென்றுள்ளது.</p><p>ஸ்வால்பார்ட் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின்படி, பனிக்கரடிகளை தேவையின்றி தொந்தரவு செய்வது மற்றும் துரத்துவது அல்லது பிடிக்க முயற்சிப்பது முற்றிலும் சட்டவிரோதமாகும்.</p><p>வனவிலங்குகளின் கடுமையான வாழ்விடத்தில் அவற்றுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துவதையோ அல்லது அவற்றின் இயல்பான நடத்தையை மாற்றுவதையோ சுற்றுலா பயணிகள் தவிர்க்க வேண்டும்.</p><p>மேலும் விலங்குகள் வசிக்கும் இடத்தில் இருந்து பாதுகாப்பான தூரத்தை சுற்றுலா பயணிகள் கடைபிடிக்க வேண்டும் என விதிமுறைகள் வலியுறுத்துகின்றன.</p><p>பனிக்கரடியை தொந்தரவு செய்த நபருக்கு ன் நார்வேஜியன் குரோனர் 50,000 (இந்திய மதிப்பில் ரூ.4.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை) அபராதமாக விதிக்கப்படுகிறது” என்று தீர்ப்பளித்தார்.</p>]]></content:encoded></item><item><title>முன்னாள் அமைச்சர் கட்சி அலுவலகத்தில் சடலமாக கண்டெடுப்பு: மம்தாவுக்கு நெருக்கமானவர்..!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/asish-banerjee-mamata-banerjee-close-aide-found-dead-at-trinamool-office</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/asish-banerjee-mamata-banerjee-close-aide-found-dead-at-trinamool-office#comments</comments><guid isPermaLink="false">c66486f8-c18d-41ba-8df8-20a9201cb771</guid><pubDate>Sun, 16 Aug 2026 03:39:46 +0000</pubDate><atom:updated>2026-08-16T03:39:46.404Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மம்தா பானர்ஜி,Mamata Banerjee,மேற்கு வங்கம்,west bengal,திரிணாமுல் காங்கிரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/rz8uv3cp/AsishBanerjee001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆசிஷ் பானர்ஜி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/rz8uv3cp/AsishBanerjee001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்க மாநிலம் பிர்பம் மாவட்டத்தில் உள்ள ராம்பூர்ஹாட் வசித்து வந்தவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆசிஷ் பானர்ஜி. இவர் தனது வீட்டு அருகில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.</p><p>தூக்கில் தொடங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவரது உடல் உடற்கூறு சோதனைக்கான மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><h3>5 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ஆகிஷ் பானர்ஜி</h3><p>இவர் ராம்பூர்ஹாட்டில் இருந்து ஐந்து முறை எம்.எல்.ஏ.-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். மம்தா பானர்ஜி முதலமைச்சராக இருந்தபோது, துணை சபாநாயகராக பணியாற்றியுள்ளார்.</p><p>இந்த வருடம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக-வின் துருபா சஹாவிடம் தோல்வியடைந்தார். ராம்பூர்ஹாட்டில் உள்ள ஹட்டலபாரா என்ற பகுதியில் வசித்து வந்தார். அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதும், ஏராளமான தொண்டர்கள் அலுவலத்திற்கு வெளியே குவிந்தனர்.</p><h2>முன்னாள் அமைச்சர்</h2><p>அவர் கல்வி மற்றும் விவசாயத்துறை அமைச்சராகவும் மம்தா பானர்ஜி அரசின் கீழ் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>ஆசிஷ் பானர்ஜி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? என போலீசார் தீவிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ஜார்க்கண்ட் முதல்வர், ராகுல் காந்தி உருவ பொம்பை எரிப்பு: 20-ந்தேதி சோரன் வீடு முற்றுகை போராட்டம்- மாணவர்கள் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/withdraw-coalition-support-jharkhand-protesters-demand-from-rahul-gandhi</link><comments>https://www.maalaimalar.com/news/national/withdraw-coalition-support-jharkhand-protesters-demand-from-rahul-gandhi#comments</comments><guid isPermaLink="false">74709515-7901-46f7-b384-7c8d9b0276c9</guid><pubDate>Sun, 16 Aug 2026 03:11:54 +0000</pubDate><atom:updated>2026-08-16T03:11:54.453Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,மாணவர்கள் போராட்டம்,student protest,Hemant Soren,ஹேமந்த் சோரன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/vlsr6so2/StudentProtest0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Student Protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/vlsr6so2/StudentProtest0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/jharkhand-protesters-fir-filed-against-300-people-for-aug-10-violence">ஜார்க்கண்ட்</a> மாநிலத்தில் அரசு நடத்தும் வேலை வாய்ப்புக்கான தேர்வுகளில் முறைகேடு நடைபெற்றதாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுதந்திர தின விழாவான நேற்று தேசியக் கொடியுடன் மிகப்பெரிய பேரணி நடத்தினர்.</p><h2>உருவ பொம்மை எரிப்பு போராட்டம்</h2><p>இன்று ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோரின் உருவ பொம்பை எரிக்கப்படும். வருகிற 20-ந்தேதி ஹேமந்த் சோரன் வீடு முற்றுகை போராட்டம் நடைபெறும் என மாணவர்கள் அறிவித்துள்ளனர். உருவ பொம்மை எரிப்பு மாநிலத்தில் உள்ள 24 மாவட்டங்களிலும் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளது.</p><p>மாணவர்கள் கடந்த 22 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், JPSC-JSSC சீர்திருத்த மஞ்ச் தலைவர் ரவீந்திர பஸ்வான் இது தொடர்பாக கூறியதாவது:-</p><p>நாங்கள் ஆகஸ்ட் 20-ந்தேதி முதலமைச்சரான ஹேமந்த் சோரன் வீட்டை முற்றுகையிடுவோம். எங்களுடன் அரசியல் விளையாட்டு விளையாடும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கேட்கிறோம். ராகுல் காந்தி சொல்வதை ஹேமன் சோரன் கேட்கவில்லை என்றால், ராகுல் காந்தி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற வேண்டும்.</p><p>இவ்வாறு பஸ்வான் தெரிவித்தார்.</p><h2>ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்ய வேண்டும்</h2><p>எங்களுடைய கோரிக்கைகளை அரசு ஏற்கும் வரை நாங்கள் போராட்டத்தை திரும்பப் பெற மாட்டோம். எங்களுடைய கோரிக்கை ரத்து செய்யப்பட்ட தேர்வு உள்பட முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக தேர்வு செயல்முறை குறித்து சுதந்திரமான விசாரணை தேவை.</p><p>இது தொடர்பாக சிபிஐ அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். சந்தேகம் அளிப்பதாக இருக்கும JPSC தேர்வு மற்றும் JSSC-CGL தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்.</p><p>ராகுல் காந்தி மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார். ஆனால், உறுதியான நடவடிக்கை பின்பற்றப்படவில்லை. அதனால் ஹேமந்த் சோரன் ஆட்சிக்கு வழங்கும் ஆதரவை ராகுல் காந்தி திரும்பப் பெற வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>இளைஞர்களை ஏமாற்ற முடியாது Mr. Prime Minister..!- செங்கோட்டையில் பிரதமரின் உரை குறித்து மாணிக்கம் தாகூர் விமர்சனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cannot-fool-the-youth-mr-prime-minister-manickam-thakur-criticism-on-sengottai-speech</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cannot-fool-the-youth-mr-prime-minister-manickam-thakur-criticism-on-sengottai-speech#comments</comments><guid isPermaLink="false">35a37a4f-cfd1-4027-bf5e-64061a8cb7c3</guid><pubDate>Sun, 16 Aug 2026 02:58:24 +0000</pubDate><atom:updated>2026-08-16T02:58:24.277Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணிக்கம் தாகூர்,Independence Day,சுதந்திர தினம்,Manickam Tagore,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/htp16ixw/Manickam-tagore.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Manickam Tagore]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/htp16ixw/Manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>செங்கோட்டையில் வெறும் விளம்பர வெளிச்சத்திற்காக பேசிய பிரதமரே இளைஞர்கள் வாழ்வோடு விளையாடாதீர் எனவும் நிர்வாக சீட்கேட்டை புள்ளிவிவரங்களே அப்பட்டமாக சொல்கின்றன. இளைஞர்களை ஏமாற்ற முடியாது Mr.Prime Minister எனவும் காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>நேற்றைய மோடியின் பேச்சுக்கும், நிஜமான கள யதார்த்தத்திற்கும் எவ்வளவு பெரிய இடைவெளி!</p><p>மோடி அரசின் பிரம்மாண்ட விளம்பரங்களுக்குப் பின்னால் இருக்கும் அவலங்களை, நாடாளுமன்ற நிதிக் குழுவின் 40-வது அறிக்கை தோலுரித்துக் காட்டியுள்ளது.</p><p>5 ஆண்டுகளில் 1 கோடி இளைஞர்களுக்குப் பயிற்சி அளிப்பதாக ரூ.63,000 கோடியில் தொடங்கப்பட்ட பிரதமரின் பயிற்சித் திட்டம் (PMIS) முற்றிலும் முடங்கிக் கிடக்கிறது. </p><p>2024-25 நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட ₹2,000 கோடியில் வெறும் ரூ.29.29 கோடி மட்டுமே செலவழிக்கப்பட்டு, 98.5% நிதி பயன்படுத்தப்படாமல் திருப்பியனுப்பப்பட்டுள்ளது.</p><p>தொழிற்துறையினர் மூலம் 2.45 லட்சம் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாகக் கூறிய நிலையில், சேர்ந்தது வெறும் 16,060 பேர் மட்டுமே. அதிலும் 53.6% பேர் பாதியிலேயே வெளியேறியுள்ளனர். </p><p>சொற்ப உதவித்தொகை, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதிகள் இல்லாததால் கிராமப்புற இளைஞர்களும் பெண் வேட்பாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>செங்கோட்டையில் வெறும் விளம்பர வெளிச்சத்திற்காகப் பேசிவிட்டு, நிதியைப் பயன்படுத்தும் திறனின்றி இளைஞர்களின் வாழ்வோடு விளையாடுவதை மோடி அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். உங்கள் நிர்வாகச் சீர்கேட்டைப் புள்ளிவிவரங்களே அப்பட்டமாகச் சொல்கின்றன. </p><p>இளைஞர்களை ஏமாற்ற முடியாது Mr. Prime Minister!</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பஹல்காம் தாக்குதல் நடைபெற்றதும் பிரதமர் மோடி கேட்ட முதல் கேள்வி: நினைவு கூர்ந்த அஜித் தோவல்</title><link>https://www.maalaimalar.com/news/national/pahalgam-attack-responsible-will-not-be-spared-says-modi-ajit-doval</link><comments>https://www.maalaimalar.com/news/national/pahalgam-attack-responsible-will-not-be-spared-says-modi-ajit-doval#comments</comments><guid isPermaLink="false">019f9d4f-9084-440d-b296-a8d26e514d6c</guid><pubDate>Sun, 16 Aug 2026 02:54:10 +0000</pubDate><atom:updated>2026-08-16T02:54:10.876Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பஹல்காம் தாக்குதல்,ஆபரேஷன் சிந்தூர்,Pahalgam attack,Operation Sindoor,Ajit Doval,அஜித் தோவல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/qrb928xj/Untitled-design-61.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஆபரேஷன் சிந்தூர்]]></media:title><media:description type="html"><![CDATA[ Ajit doval on Operation sindoor]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/qrb928xj/Untitled-design-61.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் கடந்த ஆண்டு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பழிவாங்கும் விதமாக, அதற்கு காரணமானவர்கள் பூமி, வானம் அல்லது நரகம் என எங்கிருந்தாலும் அவர்களை பின்தொடர்ந்து அழிக்குமாறு பிரதமர் மோடி தங்களிடம் கூறியதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்தார்.</p><p>டிஸ்கவரி சேனலில் நேற்று வெளியாகியுள்ள ஆவணத் தொடரான இரண்டு பாகங்கள் கொண்ட “Declassified: Operation Sindoor” நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேட்டி அளித்தார்.</p><p>அப்போது அவர் ஆபரேஷன் சிந்தூரில் நடந்த 88 மணி நேர ராணுவ நடவடிக்கையின் நோக்கம், எதிரி முகாம்களை குறிப்பாக பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய முகாம்களை அழிப்பது தான் என்று கூறினார்.</p><p>கடந்த 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 22 அன்று பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.</p><p>இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து அஜித் தோவல் முதன் முதலாக பேட்டி அளித்தார்.</p><h3><strong>பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்</strong></h3><p>அப்போது அவர் கூறுகையில், “பஹல்காம் தாக்குதல் நடந்த போது, பிரதமர் மோடி சவுதி அரேபியாவில் இருந்தார்.</p><p>பிரதமர் இந்த தாக்குதல் சம்பவம் நடந்தை தொடர்ந்து, சவுதி பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு இந்தியாவிற்கு திரும்பினார். அப்போது இந்திய விமான நிலையத்திலேயே, பிரதமருடன் எங்களுக்கு ஒரு சந்திப்பு நடைபெற்றது.</p><p>முதலில் பிரதமர் மோடி, இந்த தாக்குதலுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்ற அனைத்து உண்மைகளையும் தெரிந்துகொள்ள விரும்பினார்.</p><p>அப்போது அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி இதுதான். ‘இதை செய்தது யார்? இதற்கு பொறுப்பானவர்கள் யார்? குற்றவாளிகள் யார் என்பது நமக்கு மிக தெளிவாக தெரிய வேண்டும். அது உடனடியாக வேண்டும்,’ என்று அவர் கூறினார்.</p><p>மேலும், ‘நாங்கள் அவர்களை துரத்தி செல்வோம். அவர்கள் பூமியில் இருந்தாலும் சரி, வானத்தில் இருந்தாலும் சரி, நரகத்தில் இருந்தாலும் சரி. எங்கிருந்தாலும் அவர்களை மன்னிக்கமாட்டோம்’ என்பதுதான் பிரதமரின் செய்தியாக இருந்தது.</p><p>பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதோ அல்லது பயங்கரவாதிகளுக்கு எதிராக திறம்பட நடவடிக்கை எடுக்க தவறுவதோ எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாத ஒன்று என்பதை பாகிஸ்தான் ராணுவம் உணர வேண்டும் என நாங்கள் விரும்பினோம்.</p><p>ஒருமுறை ஒரு காரியம் தொடங்கிவிட்டால், நமது தேசத்தின் இறையாண்மையை பாதுகாக்க எல்லை வரை செல்ல நாங்கள் தயாராக இருந்தோம்.</p><p>அதற்கு எல்லையே இல்லை, கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை போராடுவோம்.</p><p>ஆபரேஷன் சிந்தூர் உயிர்ப்புடன் இருக்கிறது என்று பிரதமர் கூறும்போது, கடைசி பயங்கரவாதி ஒழிக்கப்படும் போதுதான் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் முடிவடையும் என்பதே பிரதமரின் நோக்கமாக இருந்தது.</p><p>நமது உளவு அமைப்புகளுக்கு நன்றி. அவர்கள் மிகக் குறுகிய நேரத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டதால், எங்களால் ஒரு முடிவுக்கு வர முடிந்தது,” என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>டிஎன்பிஎல்: புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது சேப்பாக்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/chepauk-super-gillies-moves-in-second-place-in-tnpl-points-table</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/chepauk-super-gillies-moves-in-second-place-in-tnpl-points-table#comments</comments><guid isPermaLink="false">6a38040f-9fc7-4dd2-8c72-33b11a0b31e6</guid><pubDate>Sun, 16 Aug 2026 02:43:42 +0000</pubDate><atom:updated>2026-08-16T02:43:42.777Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Points Table,புள்ளிப்பட்டியல்,டிஎன்பிஎல்,tnpl,Chepauk super gillies,சேப்பாக் சூப்பர் கில்லீஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/9kmrf599/CSG.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ chepauk super gillies]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/9kmrf599/CSG.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>8 அணிகள் பங்கேற்கும் 10-வது <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D">டிஎன்பிஎல்</a> டி20 கிரிக்கெட் தொடர் இரு கட்டமாக நடத்தப்படுகிறது.</p><p>முதல் கட்ட ஆட்டங்கள்  திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்திலும், இறுதிப்போட்டி உள்ளிட்ட 2-வது கட்ட ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்திலும் நடக்கிறது.</p><p>நேற்றைய லீக் போட்டியுடன் திண்டுக்கல் ஆட்டங்கள் முடிவடைந்தன. 2வது கட்ட ஆட்டங்கள் சேப்பாக்கத்தில் நாளை மறுதினம் தொடங்க உள்ளது. இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்கள் ஓய்வு நாளாகும்.</p><p>அனைத்து அணிகளும் இதுவரை 5 போட்டிகளில் விளையாடி உள்ளன.</p><h2>புள்ளிப்பட்டியல்</h2><p>இந்நிலையில், டிஎன்பிஎல் தொடரின் புள்ளிப்பட்டியலில் அணிகள் பெற்றுள்ள இடங்களின் விவரம்:</p><p>மதுரை பாந்தர்ஸ் அணி 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளது.</p><p>சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ரன்ரேட் அடிப்படையில் 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடம் பிடித்துள்ளது.</p><p>திருப்பூர் தமிழன்ஸ் 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடமும், நெல்லை ராயல் கிங்ஸ் 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று நான்காவது இடமும் பிடித்துள்ளன.</p><p>நேற்று நடந்த லீக் போட்டியில் திருச்சி அணி 80 ரன்னில் சுருண்டது. இதனால் 2வது இடத்தில் இருந்த அந்த அணி 6 புள்ளியுடன் 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.</p><p>முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>3 லட்சம் ரோஹிங்கியா அகதிகளை மீண்டும் ஏற்கிறது மியான்மர்</title><link>https://www.maalaimalar.com/news/world/myanmar-approves-return-of-3-lakh-rohingya</link><comments>https://www.maalaimalar.com/news/world/myanmar-approves-return-of-3-lakh-rohingya#comments</comments><guid isPermaLink="false">6b93576b-23a2-4b25-baf7-15e812263c74</guid><pubDate>Sun, 16 Aug 2026 02:12:19 +0000</pubDate><atom:updated>2026-08-16T02:12:19.796Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Bangladesh,வங்காளதேசம்,ரோஹிங்கியா அகதிகள்,மியான்மர்,Rohingiya,Myanmmar</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/q6urrj8v/Rohingya.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Refugees]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/q6urrj8v/Rohingya.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மியான்மரில் கடந்த 2017-ம் ஆண்டு ராணுவம் நடத்திய ஒடுக்குமுறை காரணமாக, லட்சக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள் பக்கத்து நாடான வங்காளதேசத்திற்குத் தப்பியோடி முகாம்களில் தஞ்சமடைந்தனர்.</p><p>இந்நிலையில், வங்காளதேசம் வழங்கிய பட்டியலின்படி முதற்கட்டமாக 3 லட்சத்திற்கும் அதிகமான அகதிகள் மியான்மரின் ராகினே மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மியான்மர் அரசு தெரிவித்துள்ளது.</p><p>அங்கு நிலவும் பாதுகாப்புச் சூழல் சீரடைந்தவுடன், இந்த 3 லட்சம் அகதிகளையும் மியான்மர் மீண்டும் தனது நாட்டிற்குள் அனுமதிக்கும் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p><p>பயங்கரவாத பின்னணி கொண்ட சிலர் தவிர, மற்றவர்களைப் படிப்படியாகத் தாய் நாட்டிற்கு அழைத்து வர வங்காளதேசத்துடன் இணைந்து மியான்மர் அரசு தீவிரமாகப் பணியாற்றி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>திமுக-அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை..!- திமுக எம்பி கனிமொழி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-aiadmk-alliance-not-possible-says-mp-kanimozhi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-aiadmk-alliance-not-possible-says-mp-kanimozhi#comments</comments><guid isPermaLink="false">8a8a70a3-2b28-4c92-b725-9de674c09b2f</guid><pubDate>Sun, 16 Aug 2026 01:40:24 +0000</pubDate><atom:updated>2026-08-16T01:40:24.339Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,ADMK,அதிமுக,DMK MP Kanimozhi,திமுக எம்பி கனிமொழி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/o5xfm9qo/kanimozhi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DMK MP Kanimozhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/o5xfm9qo/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>"தமிழகத்தில் தி.மு.க.-அ.தி.மு.க. கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை” என்று கனிமொழி எம்.பி. திட்டவட்டமாக கூறினார்.</p><p>இதுகுறித்து அவர் நேற்று தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><h2>பாலியல் குற்றச்சாட்டு</h2><p>தமிழக வெற்றிக் கழக ஆட்சியில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆளும் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டுகள் எழும்போது, அவர்களை பாதுகாப்பதில் அரசு கவனம் செலுத்துகிறது.</p><p>ஆனால், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நீதி கிடைப்பதில்லை. தூத்துக்குடியிலேயே தொடர்ந்து இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.</p><p>குற்றச்சாட்டுகள் வந்தாலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதோ, கைது செய்வதோ நடை பெறுவதில்லை. பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குக்கூட பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.</p><p>இதுபோன்ற குற்றங்களை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><h2>மத்திய அரசை எதிர்த்து...</h2><p>'எதிர்ப்போம், எதிர்ப்போம்' என்று வாய் வார்த்தையாக கூறுகிறார்களே தவிர, தமிழகத்தை பாதிக்கக்கூடிய பிரச்சினைகளில் மத்திய அரசை எதிர்த்து எதையும் அவர்கள் பேசுவதில்லை என்பதுதான் உண்மை.</p><p>தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரோ, அமைச்சர்களோ இதுவரை மத்திய அரசை எதிர்த்து எந்த கேள்வியையும் எழுப்பியதாக எனக்கு நினைவில்லை.</p><p>2 நாட்களுக்கு முன்பு கனிம வளம் தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தமிழகத்தின் உரிமைகளையும், தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய வருவாயையும் பெரிய அளவில் பாதிக்கக்கூடியது.</p><h2>தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி</h2><p>எந்தவிதமான விவாதமும் இல்லாமல் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து த.வெ.க. அரசு எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.</p><p>தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அந்தத் திட்டங்களை நீட்டித்திருப்பது நிச்சயமாக வாழ்த்துக்குரியது.</p><p>தமிழகத் தில் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி என்பது தமிழக வெற்றிக் கழகத்தின் கனவாக இருக்கலாம். நிச்சயமாக அதற்கு வாய்ப்பு இல்லை.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 16.8.2026 - பிரச்சினைகள் அகலும் நாள்..!</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasipalan-in-tamil-august-16</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasipalan-in-tamil-august-16#comments</comments><guid isPermaLink="false">e934d442-a462-4ddc-a2d7-28d17a62d8c6</guid><pubDate>Sun, 16 Aug 2026 01:39:36 +0000</pubDate><atom:updated>2026-08-16T01:39:36.925Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-19/cju5lvaa/rasi-1.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ ராசிபலன்]]></media:title><media:description type="html"><![CDATA[ Today Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-19/cju5lvaa/rasi-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>செல்போன் வழித்தகவல் சிந்திக்க வைக்கும் நாள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் உண்டு. எதிர்கால நலன் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள்.</p><h2>ரிஷபம்</h2><p>விரயங்கள் கூடும் நாள். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும். உத்தியோகத்தில் உங்கள் பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.</p><h2>மிதுனம்</h2><p>மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தேவையான பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். விவாகப் பேச்சுகள் முடிவாகும்.</p><h2>கடகம்</h2><p>பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். வியாபார முன்னேற்றம் கருதி பயணங்களை மேற்கொள்வீர்கள். உடல்நலம் சீராக ஒரு தொகையைச் செலவிடுவீர்கள்.</p><h2>சிம்மம்</h2><p>நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.</p><h2>கன்னி</h2><p>நண்பர்களால் நன்மை ஏற்படும் நாள். விட்டுப்போன தொடர்புகள் மீண்டும் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் கேட்ட இடத்திற்கு மாறுதல் உண்டு.</p><h2>துலாம்</h2><p>பிரச்சினைகள் அகலும் நாள். பிரபலமானவர்களின் சந்திப்பு உண்டு. சேமிப்பை உயர்த்துவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அன்னிய தேச அழைப்புகள் வரலாம்.</p><h2>விருச்சிகம்</h2><p>விருப்பங்கள் நிறைவேறும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவர்.</p><h2>தனுசு</h2><p>வரன்கள் வாயில் தேடி வந்து சேரும் நாள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள்.</p><h2>மகரம்</h2><p>நண்பர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டு. பொதுவாழ்வில் புகழ் கூடும்.</p><h2>கும்பம்</h2><p>மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.</p><h2>மீனம்</h2><p>உதிரி வருமானங்கள் வந்து சேரும் நாள். தொழில் வளம் சிறப்பாக இருக்கும். புண்ணிய காரியத்திற்கு பொருளுதவி செய்வீர்கள். உத்தியோகத்தில் உயர்வு உண்டு.</p>]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 16 ஆகஸ்ட் 2026: மிலட்டூர் விநாயகப் பெருமான் பவனி</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-16-august-milattur-vinayaga-peruman-bhavani</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-16-august-milattur-vinayaga-peruman-bhavani#comments</comments><guid isPermaLink="false">38d682e7-80f7-423c-9ace-617c30ea9fcf</guid><pubDate>Sun, 16 Aug 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-08-16T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="350" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2023/03/26/1855690-2.webp" width="615"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ vinayaga peruman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2023/03/26/1855690-2.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம் </h2><p>பராபவ ஆண்டு ஆடி-31 (ஞாயிற்றுக்கிழமை) </p><p>பிறை : வளர்பிறை</p><p>திதி : சதுர்த்தி இரவு 8.14 வரை பிறகு பஞ்சமி</p><p>நட்சத்திரம் : உத்திரம் காலை 7.07 வரை பிறகு அஸ்தம்</p> <p>யோகம் : அமிர்தயோகம்</p><p>ராகு காலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை</p><p>எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை</p><p>சூலம் : மேற்கு</p><p>நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை</p> <h2>திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் திருக்கல்யாணம் வைபவம்</h2><p>வளர்பிறை சதுர்த்தி விரதம்.தேரெழுந்தூர் ஸ்ரீ ஞானசம்பந்தர் புறப்பாடு. மிலட்டூர் ஸ்ரீ விநாயகப் பெருமான் பவனி. மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் ஆவணி உற்சவாரம்பம். திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் திருக்கல்யாணம் வைபவம். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் திருவீதியுலா. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் பால் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம். ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. </p> <p>திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமான் பால் அபிஷேகம். வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக் குமார சுவாமிக்கும் அபிஷேகம். காஞ்சி ஸ்ரீ காமாட்சி அம்மன், தஞ்சை புன்னைநல்லூர் ஸ்ரீ மாரியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் அபிஷேகம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - நலம்</p><p>ரிஷபம் - நன்மை</p><p>மிதுனம் - நற்செயல்</p><p>கடகம் - தாமதம்</p><p>சிம்மம் - ஆர்வம்</p><p>கன்னி - உண்மை</p> <p>துலாம் - உழைப்பு</p><p>விருச்சிகம் - இரக்கம்</p><p>தனுசு - விவேகம்</p><p>மகரம் - மகிழ்ச்சி</p><p>கும்பம் - நற்செய்தி</p><p>மீனம் - இன்பம்</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்றைய நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-diesel-price-in-chennai-2</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-diesel-price-in-chennai-2#comments</comments><guid isPermaLink="false">adced6c3-63cf-4e4b-98fc-4b96839cc8be</guid><pubDate>Sun, 16 Aug 2026 01:26:45 +0000</pubDate><atom:updated>2026-08-16T01:26:45.586Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல்,Petrol,diesel,டீசல்</media:keywords><media:content height="576" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/alj4ing3/maalai-malar2026-07-28zqvhuwkktn-2.avif" width="1024"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ petrol, diesel]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/alj4ing3/maalai-malar2026-07-28zqvhuwkktn-2.avif?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் போர் ஓய்ந்து ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டு மத்திய கிழக்கில் இருந்து கச்சா எண்ணெய் வரத்து அதிகரித்த ஒரு சில நாட்களில் மீண்டும் போர் மூண்டுள்ளதால் சர்வதேச கச்சா எண்ணெய் விலைகளில் மீண்டும் தாக்கம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.</p><h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.</p><h2>பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</h2><p>இந்நிலையில், இன்றைய (16.08.2026 - ஞாயிற்றுக்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>2025-26ம் நிதியாண்டில் தெற்கு ரெயில்வேயில்  ரூ.13,778 கோடி வருவாய்- பொதுமேலாளர் சுப்பாராவ்</title><link>https://www.maalaimalar.com/news/national/south-railway-revenue-up-8-84-percent-in-2025-26</link><comments>https://www.maalaimalar.com/news/national/south-railway-revenue-up-8-84-percent-in-2025-26#comments</comments><guid isPermaLink="false">6f12a2ea-2759-43b1-9cdb-fc7004bf0757</guid><pubDate>Sun, 16 Aug 2026 01:21:18 +0000</pubDate><atom:updated>2026-08-16T01:21:18.670Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Southern Railway,General Manager,profit,தெற்கு ரெயில்வே,பொது மேலாளர்,நிதி வருவாய்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/3zyvhzhs/Railway2.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Southern Railway]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/3zyvhzhs/Railway2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தெற்கு ரெயில்வேயில் 2025-26-ம் நிதியாண்டில் ரூ.13,778 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக பொது மேலாளர் சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.</p><h2>கடந்த நிதியாண்டில்...</h2><p>நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தெற்கு ரெயில்வே சார்பில் சென்னை பெரம்பூரில் உள்ள ரெயில்வே மைதானத்தில் தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் சுப்பாராவ் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.</p><p>தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர், ரெயில்வே பாதுகாப்புப் படையினரின் கலாசார நிகழ்ச்சிகள், ரெயில்வே பாதுகாப்புப் படை மோப்ப நாய்கள் சாகசம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. </p><p>இந்த நிகழ்ச்சியில், தெற்கு ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் விபின் குமார், ரெயில்வே பாதுகாப்பு படை ஐ.ஜி.அருள் ஜோதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.</p><p>இதைத்தொடர்ந்து, நிகழ்ச்சியில் பொதுமேலாளர் சுப்பாராவ் பேசியதாவது:-</p><p>தெற்கு ரெயில்வேயில் கடந்த நிதியாண்டில் (2025-26) ரூ.13 ஆயிரத்து 778 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 8.84 சதவீதம் அதிகமாகும். 2025-26-ம் ஆண்டில் 42.184 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டுள்ளது.</p><p>நடப்பு நிதியாண்டில் ஜூலை மாதம் வரை 13.48 மில்லியன் டன்களை எட்டியுள்ளோம்.</p><h2>76.76 கோடி பயணிகள்</h2><p>இதேபோல, கடந்த நிதியாண்டில் 76.76 கோடி பயணிகள் ரெயில் பயணம் மேற்கொண்டுள்ளனர். இது முந்தைய ஆண்டை விட 4.7 சதவீத வளர்ச்சியாகும்.</p><p>39 ஜோடி புதிய ரெயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 7,550 சிறப்பு ரெயில்கள் சேவைகள் இயக்கப்பட்டுள்ளன. 100 ரெயில்களில் நிரந்தரமாக 121 கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.</p><p>31 ஜோடி ரெயில்கள் இலகுரக பெட்டிகளாக (எல்.எச்.பி.) மாற்றப்பட்டுள்ளன. அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 95 ரெயில் நிலையங்களில் 33 ரெயில் நிலையங்கள் பணிகள் முடிந்து பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. 13 முக்கிய நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.</p><h2>3 ஆயிரம் பேருக்கு பணி</h2><p>224 கிலோமீட்டர் வரையில் மின்மயமாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மின்மயமாக்கலை 98 சதவீதமாக உயர்த்தியுள்ளது. கடந்த நிதியாண்டில் ஆர்.ஆர்.பி., ஆர்.ஆர்.சி., சி.ஜி.ஏ., உள்ளிட்ட தேர்வுகள் மூலம் சுமார் 3 ஆயிரம் பேர் ரெயில்வே பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.</p><p>ரெயில்வே பாதுகாப்புப் படையினர் மூலம் கடந்த ஆண்டில் 1,532 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.4.87 கோடி மதிப்பிலான திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. </p><p>ரூ.15.77 கோடி மதிப்பி லான காணாமல் போன உடமைகள் பயணிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ரூ.23.60 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 250 கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>நேருவின் பழைய படங்களை பகிர்ந்து வம்பிழுத்த நிஷிகாந்த் தூபே - பதிலடி கொடுத்த காங்கிரஸ்  </title><link>https://www.maalaimalar.com/news/national/nehru-photo-row-bjp-mp-shares-old-images-congress-slams-misleading-context</link><comments>https://www.maalaimalar.com/news/national/nehru-photo-row-bjp-mp-shares-old-images-congress-slams-misleading-context#comments</comments><guid isPermaLink="false">48e298ba-c74b-4b00-96a3-d2b8b3d70ee0</guid><pubDate>Sun, 16 Aug 2026 00:18:53 +0000</pubDate><atom:updated>2026-08-16T00:18:53.271Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Jawaharlal Nehru,ஜவஹர்லால் நேரு,Nishikant Dubey,நிஷிகாந்த் தூபே</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/3wmwwpzm/tn-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நிஷிகாந்த் தூபே]]></media:title><media:description type="html"><![CDATA[ நிஷிகாந்த் தூபே]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/3wmwwpzm/tn-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கட்டிப்பிடிப்பதே பிரதமர் மோடியின் வெளியுறவுக் கொள்கை என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்திருந்த நிலையில் ஜவஹர்லால் நேருவின் பழைய புகைப்படங்களை பாஜக எம்பி <a href="https://www.maalaimalar.com/news/national/meta-pm-video-removal-row-bjp-mp-demands-direct-apology-from-zuckerberg-warns-it-act-safe-harbour-withdrawal">நிஷிகாந்த் துபே </a>பகிர்ந்துள்ளார். </p><h2>நிஷிகாந்த் துபே</h2><p>நிஷிகாந்த் துபே தனது எக்ஸ் பக்கத்தில், நேரு தனது சகோதரி விஜயலட்சுமி பண்டிட், மருமகள் நயன்தாரா சேகல் மற்றும் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜான் கென்னடி மனைவி ஜாக்குலின் கென்னடி ஆகியோருடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். </p> <p>முன்னதாக இந்திரா காந்தி, பிடல் காஸ்ட்ரோ மற்றும் யாசிர் அராபத் ஆகியோரைக் கட்டியணைக்கும் படங்களையும், நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பிரதமர் மோடியைக் கட்டியணைத்த படத்தையும் துபே பகிர்ந்திருந்தார்.</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/kfgatn7d/tn-12.jpg" /></figure><h2>காங்கிரஸின் பதிலடி</h2><p>நிஷிகாந்த் துபேயின் இந்தப் பதிவிற்குப் பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ், புகைப்படங்கள் அவற்றின் உண்மையான Context இல் இல்லாமல் தவறாக புரிந்துகொள்ளும் வகையில் பகிரப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.</p><p>புகைப்படங்களின் பின்னணியை விளக்கிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட், ஒரு புகைப்படத்தில் நேருவின் சகோதரி விஜயலட்சுமி பண்டிட் அவருடைய கன்னத்தில் அன்புடன் முத்தமிடுகிறார். </p><p>மற்றொரு படத்தில் அவரது மருமகள் நயன்தாரா சேகல் அவர்களுடன் இருக்கிறார்.</p><p>மற்றொன்று, 1962 ஆம் ஆண்டு ஹோலி பண்டிகையின் போது ஜாக்குலின் கென்னடிக்கு நேரு வண்ணம் பூசிய படமே அது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>தலைமை நீதிபதி எச்சரிக்கையை தொடர்ந்து மாணவர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரிய பார் கவுன்சில் தலைவர் -  என்ன நடந்தது?</title><link>https://www.maalaimalar.com/news/national/bci-apology-to-law-students-manan-mishra-withdraws-enrolment-ban-after-nalsar-protest</link><comments>https://www.maalaimalar.com/news/national/bci-apology-to-law-students-manan-mishra-withdraws-enrolment-ban-after-nalsar-protest#comments</comments><guid isPermaLink="false">dc487fd7-5c2c-420f-a26a-bef4a4ff2645</guid><pubDate>Sat, 15 Aug 2026 23:54:00 +0000</pubDate><atom:updated>2026-08-15T23:54:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,சூர்யகாந்த்,Bar Council,பார் கவுன்சில்,உச்சநீதிமன்றம்,Suryakant</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/tspi4019/tn-4.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தலைமை நீதிபதி, பார் கவுன்சில் தலைவர்]]></media:title><media:description type="html"><![CDATA[ தலைமை நீதிபதி, பார் கவுன்சில் தலைவர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/tspi4019/tn-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D"> சூர்யா காந்த் </a>எச்சரித்ததை தொடர்ந்து, ஐதராபாத் சட்டப் பல்கலைக்கழக மாணவர்களிடம்  இந்திய பார் கவுன்சில் தலைவரும் பாஜக எம்.பி.யுமான மனன் குமார் மிஸ்ரா மன்னிப்பு கேட்டுள்ளார்.</p> <h2>பின்னணி</h2><p>தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற NALSAR சட்டப் பல்கலைக்கழகத்தின் 2026 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவிற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரிய காந்த்தை விருந்தினராக அழைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 450க்கும் மேற்பட்ட மாணவர்கள் துணைவேந்தர் மற்றும் நிர்வாகத்திற்கு மனு அனுப்பினர்.</p> <h2>காரணம்</h2><p>இளைஞர்களை கரப்பான்பூச்சிகள் என அழைத்து, ஜூலை 20 அன்று டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின் மீதான காவல்துறை தாக்குதல் குறித்த வழக்கு விசாரணையின்போது, வீடியோ ஆதாரங்களை பார்க்க நேரமில்லை என மறுத்தது ஆகியவற்றை சுட்டிக்காட்டி அவரை அழைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.</p> <h2>தடை</h2><p>இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் அப்பல்கலைக்கழகத்தில் 2026ல் பட்டம் பெறும் மாணவர்கள் எவரையும் மாநில பார் கவுன்சில்களில் வழக்கறிஞராகப் பதிவு செய்யக் கூடாது என மாநில பார் கவுன்சில்களுக்கு <a href="https://www.maalaimalar.com/news/national/nalsar-graduation-row-students-oppose-cji-suryakant-invite-over-remarks-and-protest-case-handling">இந்திய பார் கவுன்சில் </a>தலைவர் மனன் குமார் மிஸ்ரா உத்தரவிட்டார்.</p><p>இத்தடை உத்தரவு மாணவர்களின் தொழில்முறை எதிர்காலத்தைப் பாதிக்கும் என சமூக வலைதளங்களிலும் சட்டத் துறையிலும் கடும் எதிர்ப்பும் விமர்சனங்களும் கிளம்பின.</p>  <h2>எச்சரிக்கை</h2><p>இந்த விவகாரம் குறித்த நீதிமன்ற அமர்வில் பேசிய தலைமை நீதிபதி சூர்யா காந்த், "மாணவர்கள் அமைதியான வழியில் போராட முழு உரிமையுள்ளது. இதில் தலையிட BCIக்கு எந்த உரிமையும் இல்லை. மாணவர்கள் மீது எந்தவொரு ஒழுங்கு நடவடிக்கையோ அல்லது குற்றவியல் நடவடிக்கையோ எடுக்கக் கூடாது" என BCIயை எச்சரித்தார்.</p> <h2>தடை நீக்கம்</h2><p>மனன் குமார் மிஸ்ரா தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்திய இந்திய பார் கவுன்சில், தனது உத்தரவை திரும்பப்பெற்றது.</p><p>பெரும்பான்மையான மாணவர்கள் அப்பாவிகள் என்பதால், "தவறு செய்யாமல் எந்தவொரு மாணவரும் பாதிக்கப்படக் கூடாது" எனக் கூறி, மாணவர்கள் தாங்கள் விரும்பும் மாநில பார் கவுன்சிலில் பதிவு செய்துகொள்ள இந்திய பார் கவுன்சில் அனுமதி அளித்தது.</p> <h2>மன்னிப்பு</h2><p>இந்நிலையில் பார் கவுன்சில் தலைவரும் பாஜக எம்.பி.யுமான மனன் குமார் மிஸ்ரா, சட்ட மாணவர்களுக்கு சுதந்திர தினக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.</p><p>அதில் அவர், ""சமீபத்திய நிகழ்வுகள் மற்றும் எனது வார்த்தைகள்/கடிதம் சட்ட மாணவர்களின் மனதைப் புண்படுத்தியிருந்தால், அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்," எனக் குறிப்பிட்டுள்ளார்.</p> <p>மாணவர்கள் தங்களது சொந்தக் கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்தவும், அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவிக்கவும் அரசியலமைப்புச் சட்டப்படி முழு உரிமை உள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டிள்ளார்.</p><p>பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதும் பங்கேற்காமல் இருப்பதும் மாணவர்களின் தனிப்பட்ட விருப்பம் என்றும், இதில் வெளியாட்களின் அல்லது அரசியல் தலையீடுகள் இருக்கக் கூடாது என்றும் மிஸ்ரா தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>உத்தரப் பிரதேசம்: சுதந்திர தின நிகழ்ச்சியில் பள்ளிச் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் உயிரிழப்பு
</title><link>https://www.maalaimalar.com/news/national/independence-day-tragedy-boy-killed-as-school-roof-collapses-during-flag-event-in-uttar-pradesh</link><comments>https://www.maalaimalar.com/news/national/independence-day-tragedy-boy-killed-as-school-roof-collapses-during-flag-event-in-uttar-pradesh#comments</comments><guid isPermaLink="false">c1bee7e1-73fe-46d2-8cd0-7606e7e7b0bc</guid><pubDate>Sat, 15 Aug 2026 23:19:00 +0000</pubDate><atom:updated>2026-08-15T23:19:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Uttar Pradesh,சுதந்திர தினம்,accident,Independence Day Event,விபத்து,உத்தரப் பிரதேசம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/g5f15rix/tn-9.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ உத்தரப் பிரதேசம்]]></media:title><media:description type="html"><![CDATA[ உத்தரப் பிரதேசம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/g5f15rix/tn-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p> <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">உத்தரப் பிரதேசத்தில்</a> சுதந்திர தின விழாவில் பள்ளிச் சுவர் இடிந்துவிழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. </p><p>நேற்று நாடு முழுவதும் 80வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில், மடலா பதேபூர் கிராமத்தில் உள்ள அல் ஹசன் பள்ளியில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/india-pakistan-border-ceremony-attari-wagah-marks-80th-independence-day-with-grand-flag-lowering-and-cultural-events?utm_source=website&amp;utm_medium=related-stories">கொடியேற்றம் </a>முடிந்து, மாணவர்கள் கலைநிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்தனர்.</p> <h2>விபத்து</h2><p>கலை நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்காக அருகில் இருந்த வீடுகளை சேர்ந்த சிறுவர்கள் சிலர் பள்ளியின் நுழைவு வாயிலின் கான்கிரீட் சுவர்க் கூரை மீது ஏறியுள்ளனர்.</p><p>அப்போது எதிர்பாராதவிதமாக அந்தக் கூரை திடீரென இடிந்து விழுந்தது. கூரை இடிந்து விழுந்ததில் அதன் இடிபாடுகளுக்குள் 3 சிறுவர்கள் சிக்கிக்கொண்டனர்.</p><p>இதில் நயீம் என்பவரின் 8 வயது மகனான நிஜாம் என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.</p> <h2>காயம்</h2><p>மேலும் சேப் அலி மற்றும் ஷைதான் ஆகிய இரு சிறுவர்கள் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><h2>ஆய்வு</h2><p>இச்சம்பவம் குறித்து தகவலறிந்த சம்பல் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கணகாணிப்பாளர் ஆகியோர் நேரில் சென்று விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்தனர். பின்னர் சம்பவம் குறித்த விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டனர்.</p> ]]></content:encoded></item><item><title>Zombies-களை எதிர்கொள்ளும் வடிவேலு - பிரபுதேவா.. &apos;பேங் பேங்&apos; டீசர் வெளியீடு </title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/bang-bang-zombie-comedy-prabhu-deva-vadivelu-reunite-as-cowboys-fighting-zombies-in-new-tamil-film-teaser</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/bang-bang-zombie-comedy-prabhu-deva-vadivelu-reunite-as-cowboys-fighting-zombies-in-new-tamil-film-teaser#comments</comments><guid isPermaLink="false">f4cb71f1-f06b-4063-90bd-d8d6cfea11ba</guid><pubDate>Sat, 15 Aug 2026 22:32:00 +0000</pubDate><atom:updated>2026-08-15T22:32:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vadivelu,Prabhu Deva,வடிவேலு,BANG BANG,பேங் பேங்,பிரபுதேவா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/3d4bs0ut/tn-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பேங் பேங்]]></media:title><media:description type="html"><![CDATA[ பேங் பேங்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/3d4bs0ut/tn-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகர்கள் <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/preethi-sanjiv-says-prabhu-deva-has-committed-an-unforgivable-mistake">பிரபுதேவா</a>, வடிவேலு கூட்டணியில் புதிதாக உருவாகி உள்ள படம் `BANG BANG'. </p><p> படத்தை சாம் ரோட்ரிகஸ் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். </p> <h2>பிரபுதேவா - வடிவேலு கூட்டணி</h2><p>காதலன், மனதை திருடிவிட்டாய், ராசைய்யா, மிஸ்டர் ரோமியோ, லவ் பேர்ட்ஸ் மற்றும் எங்கள் அண்ணா போன்ற படங்களின் மூலம் 90ஸ்களில் ரசிகர்களை மகிழ்வித்த இந்த காமெடி கெமிஸ்ட்ரி கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>இப்படத்தில் பப்லூ பிருத்வீராஜும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ’தலைவர் தம்பி தலைமையில்’ படத்தை தயாரித்த கே.ஆர்.ஜி. கண்ணன் ரவி இப்படத்தை தயாரிக்க, தீபக் ரவி இணைத் தயாரிப்பாளராகப் பணியாற்றி உள்ளார்.</p> <h2>டீசர்</h2><p>‘பேங் பேங்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த மே மாதம் நிறைவடைந்தது. இந்நிலையில் படத்தின் டீசர் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது.</p><p>ஜோம்பி த்ரில்லர் காமெடி வகையில் படம் உருவாகியுள்ளது டீசர் மூலம் ஊர்ஜிதமாகியுள்ளது. COWBOY வேடத்தில் பிரபுதேவா - <a href="https://www.maalaimalar.com/topic/vadivelu">வடிவேலு </a>இருவரும் ஜோம்பிக்களுடன் சண்டையிடும் காட்சி டீசரில் இடம்பெற்றுள்ளது.</p> <p>ஜெயம் ரவியின் மிருதன் படத்திற்கு பிறகு தமிழில் மற்றோரு ஜோம்பி படம் வருவது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை தூண்டியுள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.</p> <figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/bmDDRLXDoiE"></iframe></figure>]]></content:encoded></item><item><title>பெங்களூரு: மனைவியை தலையணையால் அமுக்கி கொன்றுவிட்டு தற்கொலை செய்த சிவில் இன்ஜினீயர் கணவன் </title><link>https://www.maalaimalar.com/news/national/bengaluru-murder-suicide-husband-smothers-wife-with-pillow-then-hangs-himself</link><comments>https://www.maalaimalar.com/news/national/bengaluru-murder-suicide-husband-smothers-wife-with-pillow-then-hangs-himself#comments</comments><guid isPermaLink="false">3b7de40d-d1f7-4a2a-9966-d30d4791fd33</guid><pubDate>Sat, 15 Aug 2026 22:09:00 +0000</pubDate><atom:updated>2026-08-15T22:09:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பெங்களூரு,கொலை,கணவன்-மனைவி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/w2atbwk4/tn-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பத்மாவதி, சுமாந்த் ஜெயின் ]]></media:title><media:description type="html"><![CDATA[ பத்மாவதி ,சுமாந்த் ஜெயின் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/w2atbwk4/tn-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மனைவியை தலையணையால் அமுக்கிக் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-three-people-including-plus-two-student-brutally-killed-two-arrested">கொன்றுவிட்டு </a>கணவன் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">தற்கொலை </a>செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. </p> <h2>பெங்களூரு</h2><p>கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ராஜகோபால் நகர் அருகே சுமாந்த் ஜெயின் எனபவர் சிவில் பொறியாளராக பணியாற்றி வந்தார்.</p><p>அவரது மனைவி பத்மாவதி மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தார்.</p> <h2>கொலை</h2><p>கடந்த புதன்கிழமை இரவு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கணவர் சுமாந்த் ஜெயின், மனைவி பத்மாவதியின் முகத்தில் தாக்கி அவரை தலையணையால் அமுக்கி மூச்சுத் திணரச் செய்துள்ளார்.</p><p>மனைவி மூச்சு பேச்சின்றி இருந்ததை உணர்ந்த சுமாந்த் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.</p> <h2>தற்கொலை</h2><p>தற்கொலை முடிவுக்கு வந்த சுமாந்த், பதற்றத்தில் தனது தாயாருக்கு விவரத்தை கூறி மெசேஜ் அனுப்பியுள்ளார்.</p><p>மெசேஜைப் பார்த்த தாயார் உடனடியாக வீட்டின் உரிமையாளரை தொடர்பு கொண்டுள்ளார்.</p><p>உரிமையாளர் வீட்டைத் திறந்து பார்த்தபோது, ஹாலில் உள்ள மின்விசிறியில் சுமாந்த் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில் இருந்துள்ளார். பத்மாவதி சடலமாக கிடந்துள்ளார்.</p> <h2>விசாரணை</h2><p>இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த ராஜகோபால் நகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடல்களையும் கைப்பற்றினர்.</p><p>இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், இருவரின் உயிரிழப்பிற்கான துல்லியமான காரணம் மற்றும் பின்னணி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>இந்துக்களை பொறுத்துக் கொள்கிறோம்.. இந்தியா செல்வதைவிட அவர்கள் இங்கேயே இருக்க விரும்புகிறார்கள் -  பாகிஸ்தான் அதிபர் </title><link>https://www.maalaimalar.com/news/world/pakistan-hindu-minority-row-zardari-claims-hindus-prefer-staying-in-pakistan-over-moving-to-india</link><comments>https://www.maalaimalar.com/news/world/pakistan-hindu-minority-row-zardari-claims-hindus-prefer-staying-in-pakistan-over-moving-to-india#comments</comments><guid isPermaLink="false">a91848d8-ef0f-47f2-8587-d04321bb6f69</guid><pubDate>Sat, 15 Aug 2026 21:27:06 +0000</pubDate><atom:updated>2026-08-15T21:27:06.347Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,முஸ்லிம்கள்,இந்துக்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/b5v64w6s/tn-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பாகிஸ்தான் பிரதமர்]]></media:title><media:description type="html"><![CDATA[ பாகிஸ்தான் பிரதமர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/b5v64w6s/tn-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/pakistan">பாகிஸ்தானில் </a>வாழும் இந்துக்கள் இந்தியாவிற்கு செல்வதை விடப் பாகிஸ்தானிலேயே தங்கியிருக்க விரும்புகின்றனர் என அந்நாட்டின் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி தெரிவித்துள்ளார்.</p><p>ஆகஸ்ட் 14 அன்று நடைபெற்ற பாகிஸ்தான் சுதந்திர தின விழாவில் உரையாற்றிய அதிபர் ஜர்தாரி, </p> <h2>பேச்சு</h2><p>"பாகிஸ்தானியர்கள் மற்றும் இந்தியர்களின் சிந்தனைகள் முற்றிலும் வேறுபட்டவை. பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் தங்களது மதச் சடங்குகளை பின்பற்றுவதற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.</p><p>பாகிஸ்தான் மக்கள் தொகையில்  4% இந்து மக்கள் உள்ளனர். அவர்கள் வேறு எங்கேயும் இருப்பதை விட இங்குதான் மிகுந்த சுதந்திரத்துடன் இருக்கிறார்கள். அவர்கள் இந்தியாவிற்கு செல்வதை விட எங்களுடனே இருக்க விரும்புகிறார்கள்" எனக் கூறினார்.</p> <h2>சர்ச்சை</h2><p>தொடர்ந்து அவர் பேசிய வார்த்தை சர்ச்சை ஆகியுள்ளது. அவர் கூறியதாவது, "இந்தியர்கள் 'அகண்ட பாரத' தத்துவத்தை நம்புகிறார்கள். ஆனால் பாகிஸ்தானில் உள்ள இந்து சிறுபான்மையினரை முஸ்லிம்கள் 'பொறுத்துக் கொள்கிறார்கள்'" என குறிப்பிட்டுள்ளார். Tolerate என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார்.</p><p>ஜர்தாரியின் இந்த பேச்சுக்கு இந்தியாவில் பலத்த கண்டனங்கள் எழுந்துள்ளன.</p><p>பாகிஸ்தான் அதிபர் 80 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தியாவைக் குறிப்பிட்டுப் பிரிவினைவாத அரசியலைச் செய்ய முயல்கிறார் என்றும், மற்ற நாடுகளைப் பற்றி விமர்சிப்பதை விட்டுவிட்டுத் தங்கள் நாட்டில் உள்ள சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பதில் பாகிஸ்தான் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.</p><h2>மக்கள் தொகை</h2><p>மேலும் பாகிஸ்தான் மக்கள் தொகையில் 4 சதவீதம் இந்துக்கள் இருக்கின்றனர் என்ற அதிபரின் கூற்று முரண்டபாடாக அமைந்துள்ளது. </p><p>பாகிஸ்தானின் 2023ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அங்குள்ள இந்துக்களின் எண்ணிக்கை சுமார் 52 லட்சம், அதாவது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 2.17% மட்டுமே ஆகும்.</p><h2>பாகிஸ்தான் பிரதமர்</h2><p>இதே நிகழ்வில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் <a href="https://www.maalaimalar.com/news/national/india-pakistan-tensions-shehbaz-sharif-warns-of-stronger-response-over-security-sovereignty-and-water-rights">ஷெபாஸ் ஷெரீப்</a>, " "பாகிஸ்தான் அமைதியை விரும்புகிறது. ஆனால் அமைதியை விரும்புவதை பலவீனமாக எடுத்துக்கொள்ள கூடாது.</p><p>கண்ணியத்துடனும் உறுதியுடனும் நாம் அமைதியை நாடுகிறோம். இந்த பிராந்தியத்தில் பாகிஸ்தான் அமைதிக்கான உத்தரவாதமாக விளங்குகிறது.</p> <p>ஆனால் பாகிஸ்தானின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் நீர் உரிமைகளுக்கு ஆபத்து நேர்ந்தால், மே 2025 இல் கொடுத்ததை விட பலமான பதிலடியை கொடுப்போம்" என எச்சரிதது குறிப்பிடத்தக்கது.</p><p>பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திய இந்தியா, ஜம்மு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் செல்லும் நீரை கணிசமாக குறைத்துள்ளது.</p><p>இந்த நீரை விவசாயத்துக்கும், குடிநீர் தேவைக்கும் பாகிஸ்தான் பெருமளவில் நம்பியுள்ளதால், நீரை திறந்துவிடும்படி இந்தியாவுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>தலைகீழாக தேசியக் கொடி.. பேச்சில் தடுமாற்றம் - விமர்சனத்துக்கு உள்ளாகும் பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை</title><link>https://www.maalaimalar.com/news/national/modi-speech-error-and-flag-row-ev-sales-misquote-and-inverted-tricolour-spark-controversy-at-independence-day-event</link><comments>https://www.maalaimalar.com/news/national/modi-speech-error-and-flag-row-ev-sales-misquote-and-inverted-tricolour-spark-controversy-at-independence-day-event#comments</comments><guid isPermaLink="false">f03269a4-4d56-403b-9c2c-220d8f47431f</guid><pubDate>Sat, 15 Aug 2026 20:32:39 +0000</pubDate><atom:updated>2026-08-15T20:32:39.985Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,national flag,Independence Day,சுதந்திர தினம்,பிரதமர் மோடி,தேசியக் கொடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/j2c4n8du/tn-14.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/j2c4n8du/tn-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி செங்கோட்டையில் நேற்று  நடைபெற்ற 80வது சுதந்திர தின விழாவில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF">பிரதமர் மோடி</a>யின் தோற்றமும் உரையில் ஏற்பட்ட தடுமாற்றமும்  விவாதப்பொருளாகி வருகிறது.  </p> <h2>பேச்சில் தடுமாற்றம்</h2><p>இந்தியாவில் 2009-10 ஆம் நிதியாண்டில் 25 லட்சம் மின்சார வாகனங்கள் விற்கப்பட்டதாக முதலில் தவறாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, உடனடியாக தன்னை திருத்திக் கொண்டு, அது 1.5 லட்சம் என்று கூறினார்.</p><p>தொடர்ந்து, 2025-26 ஆம் ஆண்டில் மின்சார வாகனங்களின் விற்பனை 25 லட்சமாக உயர்ந்துள்ளது என்று குறிப்பிட்டார்.</p><p>ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது எக்ஸ் தளப் பதிவில், "நம்பிக்கையற்ற, பதற்றமான மற்றும் நடுங்கும் நிலையில் உள்ள ஒரு பிரதமராக மோடி காட்சியளிக்கிறார்" என குறிப்பிட்டுள்ளார்.</p> <h2>பாக்கெட்டில் தேசியக் கொடி</h2><p>பிரதமரின் பேச்சு மட்டுமின்றி, அவரது சட்டை பாக்கெட் மீது சதுர வடிவ துணியில் தேசிய கொடியானது தலைகீழாக (இதில் இடமிருந்து வலமாக) இடம்பெற்றிருந்தது. முதலில் இருக்க வேண்டிய ஆரஞ்சு வண்ணம் கடைசியிலும், கடைசியில் இருக்க வேண்டிய பச்சை வண்ணம் முதலிலும் உள்ளது. </p><p>இது அயர்லாந்து தேசியக் கொடியை ஒத்ததாக இருப்பதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் விமர்சித்துள்ளது.</p> <p>காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் பவன் கேரா தனது எக்ஸ் பதிவில், " பிரதமர் உருது மொழியில் மூவர்ணக் கொடியை அணிந்திருப்பது போல் தெரிகிறது.</p><p>அல்லது இந்தியாவுக்குப் பதிலாக அயர்லாந்தின் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறாரா எனத் தெரியவில்லை." என கிண்டலாக குறிப்பிட்டுள்ளார். உருது மொழி இடமிருந்து வலமாக எழுதப்படுவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>அயர்லாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றிய ஆப்கானிஸ்தான்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/afghanistan-seals-odi-series-4-0-beats-ireland-by-6-wickets-in-final-match</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/afghanistan-seals-odi-series-4-0-beats-ireland-by-6-wickets-in-final-match#comments</comments><guid isPermaLink="false">e38c8d49-a63a-4d72-a8da-29257e46531b</guid><pubDate>Sat, 15 Aug 2026 19:57:43 +0000</pubDate><atom:updated>2026-08-15T19:57:43.460Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அயர்லாந்து,ஆப்கானிஸ்தான்,ஓடிஐ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/uzatwahf/tn-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ odi]]></media:title><media:description type="html"><![CDATA[ odi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/uzatwahf/tn-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அயர்லாந்திற்கு எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட <a href="https://www.maalaimalar.com/sports/cricket/afghanistan-need-299-runs-to-win-against-ireland-in-5th-odi">ஒருநாள் தொடரின்</a> கடைசிப் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. </p><p>இதன்மூலம் தொடரை 4-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் கைப்பற்றியுள்ளது.</p><p>முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற 3 போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரில் 3-0 என முன்னிலை பெற்றிருந்தது.</p> <h2>நெதர்லாந்து</h2><p>தொடரின் 5வது மற்றும் கடைசி போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது ஆப்கானிஸ்தான்.</p><p>முதலில் பேட்டிங் இறங்கிய அயர்லாந்து அணியின் ஆட்டக்காரர்களான ஆண்ட்ரூ பால்பிர்னி மற்றும் பால் ஸ்டிர்லிங் ஆகிய இருவரையும் அஸ்மத்துல்லா ஒமர்சாய் ஒரே ஓவரில் ஆட்டமிழக்கச் செய்தார்.</p><p>பின்னர் களமிறங்கிய ஹாரி டெக்டர் 53 ரன்கள் எடுக்க, கர்டிஸ் கேம்பர் 96 ரன்கள் எடுத்தார். இதனால் அயர்லாந்து அணி சரிவிலிருந்து மீண்டது.</p><p>கடைசி 10 ஓவர்களில் 101 ரன்களைக் குவித்த அயர்லாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 298 ரன்கள் எடுத்தது.</p> <h2>ஆப்கானிஸ்தான்</h2><p>299 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கிப் பயணித்த ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆரம்பம் சற்று சறுக்கலாக அமைந்தது.</p><p>லியாம் மெக்கார்த்தியின் பந்துவீச்சில் தொடக்க ஆட்டக்காரர்களான இப்ராஹிம் ஜத்ரான் மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆகியோர் 22 ரன்களுக்குள் ஆட்டமிழந்தனர்.</p> <p>அதன் பின்னர் இணைந்த கேப்டன் ரஹ்மத் ஷா மற்றும் செடிகுல்லா அடல் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.</p><p>இருவரும் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 201 ரன்கள் எடுத்து ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிப் பாதையை உறுதி செய்தனர்.</p><p>சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட செடிகுல்லா அடல் 98 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார்.</p><p>ஆனால், மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய கேப்டன் ரஹ்மத் ஷா சதம் கடந்து 143 ரன்களுடன் களத்தில் இருந்தார். அஸ்மத்துல்லா ஒமர்சாய் 14 பந்துகளில் 24 ரன்கள் விளாசினார்.</p> <h2>வெற்றி</h2><p>இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 48.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 302 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் அயர்லாந்தை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.</p><p>இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை ஆப்கானிஸ்தான் அணி 4-0 என்ற கணக்கில் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>TNPL: திருச்சி கிராண்ட் சோழாஸை துவம்சம் செய்த கோவை கிங்ஸ் - 116 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி </title><link>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-cricket-kovai-kings-dominate-trichy-grand-cholas-with-116-run-win</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-cricket-kovai-kings-dominate-trichy-grand-cholas-with-116-run-win#comments</comments><guid isPermaLink="false">02dc4f60-f776-47e2-97e0-ed7ababc86f4</guid><pubDate>Sat, 15 Aug 2026 19:02:33 +0000</pubDate><atom:updated>2026-08-15T19:02:33.787Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,Trichy Grand Cholas,திருச்சி கிராண்ட் சோழாஸ்,கோவை கிங்ஸ்,kovai Kings</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/0iq7qmbt/tn-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ TNPL]]></media:title><media:description type="html"><![CDATA[ TNPL]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/0iq7qmbt/tn-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>10-வது <a href="https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-csg-beat-mp-by-39-runs">டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர்</a> கடந்த 4ஆம் தேதி தொடங்கியது.  </p><p>முதற்கட்ட <a href="https://www.maalaimalar.com/topic/tnpl">போட்டிகள் </a>திண்டுக்கல் அடுத்த நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில்  நடைபெற்று வருகிறது.</p> <h2>டாஸ்</h2><p>நேற்று இரவு 7.30 மணிக்கு தொடங்கிய 20-வது லீக் ஆட்டத்தில் கோவை கிங்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திருச்சி அணி பவுலிங் தேர்வு செய்தது.</p> <h2>கோவை கிங்ஸ்</h2><p>அதன்படி, கோவை கிங்ஸ் அணி முதலில் களமிறங்கியது. ஆரம்பம் முதலே அந்த அணி அதிரடியில் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் அவுட்டாகினர்.</p><p>3வது களமிறங்கிய பாலசுப்ரமணியன் சச்சின் அதிரடியில் மிரட்டினார். அவர் 45 பந்தில் 4 சிக்சர், 6 பவுண்டரிகளை விளாசினார்.</p> <p>6-வது விக்கெட்டுக்கு இணைந்த சச்சின் - மாதவ பிரசாத் ஜோடி சூறாவளியாய் சுழன்றடித்தது. இந்த ஜோடி 43 பந்தில் 75 ரன்கள் குவித்தது.</p><p>இறுதியில், கோவை கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன்களைக் குவித்தது. மாதவ பிரசாத் 38 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார்.</p><p>இதையடுத்து, 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் அணி களமிறங்கியது.</p> <h2>திருச்சி கிராண்ட் சோழாஸ்</h2><p>ஆனால் கோவை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திருச்சி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் திருச்சி அணி 16.1 ஓவர்களில் 85 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.</p> <h2>வெற்றி</h2><p>இதன் மூலம் கோவை கிங்ஸ் அணி 116 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் கோவை கிங்ஸ் அணி நடப்பு டிஎன்பிஎல் தொடரில் தனது 2வது வெற்றியை பதிவு செய்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கரூர்: 4 வயது பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞனை ஓட ஓட அரிவாளால் வெட்டிய பாட்டி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/karur-grandmother-chases-down-and-hacks-with-a-sickle-the-young-man-who-sexually-assaulted-her-4-year-old-granddaughter</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/karur-grandmother-chases-down-and-hacks-with-a-sickle-the-young-man-who-sexually-assaulted-her-4-year-old-granddaughter#comments</comments><guid isPermaLink="false">ebb5148e-5468-45ff-842c-b523da1719b0</guid><pubDate>Sat, 15 Aug 2026 18:15:21 +0000</pubDate><atom:updated>2026-08-15T18:15:21.909Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறுமி பாலியல் வன்கொடுமை,கரூர்,Karur,KULITHALAI,குளித்தலை,sexual assault on a minor girl</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/c612fw7l/tn-5.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பாலியல் வன்கொடுமை ]]></media:title><media:description type="html"><![CDATA[ பாலியல் வன்கொடுமை ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/c612fw7l/tn-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கரூர் மாவட்டம் குளித்தலையில் 4 வயது பேத்தியை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88">பாலியல் வன்கொடுமை </a>செய்த இளைஞனை பாட்டி அரிவாளால் வெட்டிய  சம்பவம் அரங்கேறியுள்ளது. </p> <h2>பாலியல் வன்கொடுமை</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">கரூர் </a>மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கிராமத்தில் தாய் தந்தையுடன் அந்த 4 வயது சிறுமி வசித்து வந்திருக்கிறாள். நேற்று சிறுமியை பக்கத்துக்கு கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு பக்கத்து வீட்டு இளைஞனிடம் கேட்டுள்ளார்.</p><p>சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞன், அவளை தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு பின்னர் சிறுமியை பாட்டியின் வீட்டின் அருகே விட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளான்</p><p>வீட்டிற்கு வந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடூரத்தைப் பாட்டியிடம் கூறியிருக்கிறாள்.</p> <h2>அரிவாள் வெட்டு</h2><p>இதனால் ஆத்திரமடைந்த 55 வயது பாட்டி, உடனடியாக அரிவாளை எடுத்துக்கொண்டு அந்த இளைஞனைத் தேடிச் சென்றுள்ளார்.</p><p>குளித்தலை பகுதியில் உள்ள ஒரு டீக் கடை அருகே நின்றுகொண்டிருந்த அந்த இளைஞனை தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டி, காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்றுள்ளார்.</p><p>10க்கும் மேற்பட்ட இடங்களில் அரிவாளால் வெட்டு விழுந்ததால் மாணிக்கத்தின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.</p> <h2>போலீஸ் விசாரணை</h2><p>பாதி வழியில் செல்லும்போது தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், சிறுமியின் பாட்டியை பிடித்து அவரிடம் இருந்த அரிவாளை பறிமுதல் செய்தனர்.</p><p>சிறுமியின் பாட்டியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.</p><p>படுகாயம் அடைந்த இளைஞன், குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான்.</p> <p>பலத்த காயமடைந்த வாலிபர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.</p><p>தகவலறிந்து வந்த காவல்துறையினர் சம்பவ இடத்திலிருந்து அரிவாளைப் பறிமுதல் செய்து, தாக்குதலில் ஈடுபட்ட 55 வயது பாட்டியைக் கைது செய்தனர்.</p><p>சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், மருத்துவமனையில் உள்ள வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>உள்நோக்கம் இல்லை.. முதல்வர் விஜய் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் சொன்ன விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/bjp-leader-defends-controversial-remarks-on-vijays-assembly-speech-amid-widespread-criticism</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/bjp-leader-defends-controversial-remarks-on-vijays-assembly-speech-amid-widespread-criticism#comments</comments><guid isPermaLink="false">15343f8d-4d2b-43bb-bc84-73f249570674</guid><pubDate>Sat, 15 Aug 2026 17:35:46 +0000</pubDate><atom:updated>2026-08-15T17:35:46.585Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,விஜய்,vijay,நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/fz8d5x9j/tn-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/fz8d5x9j/tn-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் முதலமைச்சர் விஜய் "அப்பாவை காணோம்" என்று கூறியதற்கு, விஜய் மற்றும் அவரது குடும்பம் குறித்து அநாகரிகமாக பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanniarasu-says-nainar-nagendran-must-apologize-for-his-uncivilized-remark">கண்டனங்கள் </a>எழுந்து வரும் நிலையில் அதற்கு அவர் வில்லகம் அளித்துள்ளார். </p><p>பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் 'ஒரே நாடு' மாத இதழின் டிஜிட்டல் பதிப்பின் வெளியிட்டு விழா இன்று நடைபெற்றது. </p> <h2>சர்ச்சை பேச்சு</h2><p>இதில் நயினார் நாகேந்திரன், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.</p><p>நிகழ்ச்சியில் பேசிய நயினார் நாகேந்திரன், சட்டமன்றத்திற்கு சென்று அப்பா எங்கே, அப்பா எங்கே என்று சிலர் தேடுகிறார்கள்.</p><p>வீட்டுக்கு சென்று அம்மாவிடம் கேட்டால் தானே அப்பா யார்? என்று சொல்வார்கள். அதை விட்டுவிட்டு, சட்டமன்றத்திற்கு சென்று அப்பாவை தேடினால் யாருக்கு தெரியும்? இப்படிப்பட்ட நபர்களின் ஆட்சிதான் இன்று தமிழகத்தில் நடைபெற்று வருகிறது" என பேசினார்.</p> <h2>கண்டனம்</h2><p>நயினார் நாகேந்திரனின் பேச்சு அநாகரிகமானது என தவெக தரப்பில் இருந்தும் பிற அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாஜகவை சேர்ந்த நடிகை <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/khushbu-sundar-condemn-nainar-nagendran-against-cm-vijay-speech">குஷ்புவும் </a>நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார்.</p><p>இந்நிலையில் தனது பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.</p> <h2>விளக்கம்</h2><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில்,</p><p>"ஒரே நாடு 2.0 பத்திரிக்கை வெளியீட்டு விழாவின் போது நான் மேடையில் பேசிய பேச்சைத் திரித்து சித்தரித்து, அரசியல் ஆதாயம் தேட நினைப்பவர்களுக்கு நான் தெரிவிப்பது என்னவென்றால், எந்தவிதமான உள்நோக்கத்துடனும் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை. </p><p>தாய் மீதும், தாய் நாட்டின் மீதும், தாய்மொழி மீதும் மிகுந்த அக்கறை கொண்டவன் நான்." எனத் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>VIDEO: அட்டாரி - வாகா எல்லையில் கோலாகலமாக நடந்த கொடியிறக்க நிகழ்ச்சி</title><link>https://www.maalaimalar.com/news/national/india-pakistan-border-ceremony-attari-wagah-marks-80th-independence-day-with-grand-flag-lowering-and-cultural-events</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-pakistan-border-ceremony-attari-wagah-marks-80th-independence-day-with-grand-flag-lowering-and-cultural-events#comments</comments><guid isPermaLink="false">b68bd6c2-e037-46cb-ad2d-fa7fae0f18f3</guid><pubDate>Sat, 15 Aug 2026 16:58:20 +0000</pubDate><atom:updated>2026-08-15T16:58:20.566Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சுதந்திர தினம்,அட்டாரி வாகா எல்லை,பிஎஸ்எப்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/0z3rrskb/tn-1.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கொடியிறக்க நிகழ்ச்சி]]></media:title><media:description type="html"><![CDATA[ கொடியிறக்க நிகழ்ச்சி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/0z3rrskb/tn-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின்  <a href="https://www.maalaimalar.com/news/national/andhara-police-si-unfurls-100-metre-tricolour-atop-mount-elbrus-on-independece-day">80வது சுதந்திர தினம்</a> நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. </p><p>பஞ்சாப்பில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையான அட்டாரி-வாகாவில் இன்று மாலை கொடியிறக்க நிகழ்வு இனிதே நடைபெற்று முடிந்துள்ளது. </p> <h2>கலை நிகழ்ச்சிகள்</h2><p>கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற இந்நிகழ்வை ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்.</p><p>பஞ்சாபி பாரம்பரிய நடனமாடி ஆண் மற்றும் பெண் கலைஞர்கள் அசத்தினர்</p><p>மாணவர்களின் ஜிம்னாஸ்டிக்ஸ் சாகசங்கள், தற்காப்புக் கலைக் அரங்கேற்றம் ஆகியவை பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Punjab: Beating retreat ceremony at the Attari-Wagah border in Amritsar on Independence Day today. <a href="https://t.co/FVTvyM1SGS">pic.twitter.com/FVTvyM1SGS</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2088583262004519394?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><figure><blockquote class="twitter-tweet"><p lang="hi" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> पंजाब: आज स्वतंत्रता दिवस के अवसर पर अमृतसर में अटारी-वाघा बॉर्डर पर बीटिंग रिट्रीट समारोह अत्यंत उत्साह के साथ आयोजित किया गया। <a href="https://t.co/rEQJOBKnvt">pic.twitter.com/rEQJOBKnvt</a></p>&mdash; ANI_HindiNews (@AHindinews) <a href="https://x.com/AHindinews/status/2088596401295126827?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>பிஎஸ்எப்</h2><p>சிறப்பு விருந்தினராக எல்லை பாதுகாப்பு படையான பிஎஸ்எப் டி.ஐ.ஜி எஸ்.எஸ். சண்டேல் கலந்துகொண்டார்.</p><p>எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களின் வழக்கமான கம்பீரமான அணிவகுப்பு விழாவுக்கு அணி சேர்த்தது.</p> <p>வீரர்கள் மிடுக்குடன் அணிவகுத்துச் செல்ல இவ்வாண்டு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">சுதந்திர தின நிறைவை </a>உணர்த்தும் விதமாக தேசியக்கொடி இறக்கும் நிகழ்வு நடைபெற்றது.</p><p>இந்த விழாவின் போது, அட்டாரி சோதனைச் சாவடியில் புதிதாக அமைக்கப்பட்ட டிஜிட்டல் வீடியோ திரைச் சுவர் திறக்கப்பட்டது.</p><p>இதேபோல் நாட்டின் பிற எல்லைகளிலும் கொடியிறக்க நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இந்தோனேசியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 40 ஆக அதிகரிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/buildings-collapse-as-77-earthquake-strikes-indonesia-killing-40</link><comments>https://www.maalaimalar.com/news/world/buildings-collapse-as-77-earthquake-strikes-indonesia-killing-40#comments</comments><guid isPermaLink="false">6bf6b137-aabd-4378-8e3a-af05b79b6e42</guid><pubDate>Sat, 15 Aug 2026 16:06:26 +0000</pubDate><atom:updated>2026-08-15T16:06:26.528Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Earthquake,இந்தோனேசியா,indonesia,நிலநடுக்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/gk7oui9p/quake.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ quake]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/gk7oui9p/quake.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தோனேசியாவில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.</p><p>இந்தோனேசியாவில் இன்று காலை சக்திவாய்ந்த <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">நிலநடுக்கம்</a> ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவானது.</p><p>நாட்டின் கிழக்கு பகுதியில் புளோரஸ் தீவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சுமார் 11 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியானது.</p><p>பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக அப்பகுதியில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டனர். அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் அது திரும்பப் பெறப்பட்டது.</p><p>அந்த தீவின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கத்தின் தாக்கம் ஏற்பட்டது. இந்தத் தீவுக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருவது வழக்கம்.</p><p>நிலநடுக்கத்தால் அங்கு பல்வேறு கட்டிடங்களும் சேதம் அடைந்துள்ளன. நிலநடுக்கம் உணரப்பட்டதும் உயரமான கட்டிடத்தின் மீது மக்கள் ஏறி உள்ளனர்.</p><p>நிலநடுக்கத்தால் பலர் தீவிர காயமடைந்துள்ளனர். மேலும், பலர் இடிபாடுகளுக்கு இடையே சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.</p><p>கடந்த 1992-ம் ஆண்டில் இந்த தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி அலைகள் எழுந்தன. அதில் சிக்கி சுமார் 2,500 பேர் உயிரிழந்தனர் என்பது  குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>டிஎன்பிஎல்: அதிரடியில் மிரட்டிய சச்சின்: 201 ரன்கள் குவித்தது கோவை கிங்ஸ்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/trichy-grand-cholas-needs-202-runs-to-win-against-kovai-kings-in-tnpl-2026</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/trichy-grand-cholas-needs-202-runs-to-win-against-kovai-kings-in-tnpl-2026#comments</comments><guid isPermaLink="false">2f713eb3-7f07-40c3-acb7-e9c904aa72ef</guid><pubDate>Sat, 15 Aug 2026 15:58:19 +0000</pubDate><atom:updated>2026-08-15T15:58:19.935Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,Trichy Grand Cholas,திருச்சி கிராண்ட் சோழாஸ்,கோவை கிங்ஸ்,kovai Kings</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/vmmmmti9/kovai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ kovai kings]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/vmmmmti9/kovai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி அணிக்கு எதிரான போட்டியில் கோவை கிங்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 201 ரன்கள் குவித்துள்ளது.</p><p>10-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் அடுத்த நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி  மைதானத்தில் நடந்து வருகிறது.</p><h2>திருச்சி கிராண்ட் சோழாஸ்</h2><p>இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 20-வது லீக் ஆட்டத்தில் கோவை கிங்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற திருச்சி அணி பவுலிங் தேர்வு செய்தது.</p><p>அதன்படி, கோவை கிங்ஸ் அணி முதலில் களமிறங்கியது. ஆரம்பம் முதலே அந்த அணி அதிரடியில் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் அவுட்டாகினர்.</p><h2>சச்சின் அதிரடி</h2><p>3வது களமிறங்கிய பாலசுப்ரமணியன் சச்சின் அதிரடியில் மிரட்டினார். அவர் 45 பந்தில் 4 சிக்சர், 6 பவுண்டரிகளை விளாசினார்.</p><p>6-வது விக்கெட்டுக்கு இணைந்த சச்சின் - மாதவ பிரசாத் ஜோடி சூறாவளியாய் சுழன்றடித்தது. இந்த ஜோடி 43 பந்தில் 75 ரன்கள் குவித்தது.</p><p>இறுதியில், கோவை கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன்களைக் குவித்தது. மாதவ பிரசாத் 38  ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார்.</p><p>இதையடுத்து, 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் அணி களமிறங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 15 ஆகஸ்ட் 2026...</title><link>https://www.maalaimalar.com/news/topnews/today-news-in-tamil-live-updates-15-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/today-news-in-tamil-live-updates-15-august-2026#comments</comments><guid isPermaLink="false">c6da5784-7244-49ec-aad8-b0af519a1d11</guid><pubDate>Sat, 15 Aug 2026 01:53:31 +0000</pubDate><atom:updated>2026-08-15T15:23:49.053Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/umtv98iy/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live News]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/umtv98iy/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி ராஜ்காட்டில் உள்ள தேசத்தந்தை மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Prime Minister Narendra Modi pays floral tributes to the Father of the Nation, Mahatma Gandhi, at Rajghat on the 80th Independence Day<br><br>(Video source: PM Modi/ YouTube) <a href="https://t.co/xIcfLPeDol">pic.twitter.com/xIcfLPeDol</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2088441067771494821?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>நாட்டின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி.</p><p>டெல்லியில் உள்ள செங்கோட்டைக்கு வந்தடைந்த பிரதமர் மோடியை பாதுகாப்புத்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங் வரவேற்றார்.</p><p>நாட்டின் சுதந்திர தினவிழாவை ஒட்டி டெல்லி கடமைப்பாதையில் பிரதமர் மோடிக்கு முப்படை, காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை </p><p>13-வது முறையாக தேசியக்கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களிடையே உரையாற்ற  உள்ளார் பிரதமர் மோடி.</p><p>சுதந்திர தினவிழா கொண்டாட்ட வரலாற்றில் முதன்முறையாக டெல்லி செங்கோட்டையில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டது.</p><p>டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி.</p><p>நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையில் பிரதமர் மோடி ஏற்றி வைத்த தேசியக்கொடிக்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.</p><p>செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Delhi: Prime Minister Narendra Modi hoists the National Flag at Red Fort on the 80th Independence Day. <br><br>The hoisting of the National Flag was synchronised with the 21-Gun Salute by the gunners of the 1721 Field Battery (Ceremonial). The ceremonial battery, utilising the… <a href="https://t.co/rbaiIKQpPU">pic.twitter.com/rbaiIKQpPU</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2088448119566676389?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி.</p><p>வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த  ஒரு நிகழ்வை இந்தியா கண்டு கொண்டிருக்கிறது.</p><p>நாட்டு மக்கள் அனைவரது இல்லங்களிலும் இன்று மூவர்ண கொடி பறந்து கொண்டிருக்கிறது.</p><p>வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டை அனைவரும் கொண்டாடி கொண்டிருக்கிறோம்.</p><p>நாட்டின் விடுதலைக்காக எண்ணற்றோர் உயிர் தியாகம் செய்துள்ளனர்.</p><p>கனவுகள் உயர்வாக இருக்கும்போது தான் திறன்களும் உயர்ந்ததாக இருக்கும்.</p><p>நாம் கண்ட மிகப்பெரிய கனவுகள் தான் தற்போது நமது எண்ணங்களை விரிவாக்கி உள்ளது.</p><p>உலகம் இன்று நம்மை பார்க்கும் விதம் மாறி உள்ளது - பிரதமர் மோடி</p><p>நாட்டில் எலக்ட்ரானிக் பொருட்களின் உற்பத்தி 7 மடங்கு உயர்ந்துள்ளது.</p><p>தேசத்தின் அனைத்து பிரிவு மக்களும் நாட்டை முன்னேற்றி கொண்டிருக்கின்றனர் - பிரதமர் மோடி</p><p>12 ஆண்டுகளில் இந்தியாவின் டிஜிட்டல் பண பரிவர்த்தனை 100 சதவீதத்தை எட்டி உள்ளது.</p><p>நமது வாழ்வில் பெரிதாக சாதிக்க வேண்டும் எனில் ஒவ்வொரு இந்தியரும் கனவு காண வேண்டும் - பிரதமர் மோடி</p><p>இந்தியா அனைத்து நாடுகளுக்கும் முன்னோடியாக சென்று கொண்டிருக்கிறது - பிரதமர் மோடி</p><p>2047-ல் 100 ஜிகாவாட் அணுசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி</p><p>இந்தியா தற்சார்பு அடைய வேண்டியது காலத்தின் கட்டாயம் - பிரதமர் மோடி</p><p>நமது நாட்டின் டிஜிட்டல் பரிவர்த்தனை கடந்த 12 ஆண்டுகளில் 100 மடங்கு அதிகரித்துள்ளது - பிரதமர் மோடி</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Delhi: From the ramparts of the Red Fort, Prime Minister Narendra Modi says, &quot;... Over the past 12 years, countless citizens—whether Dalits, the downtrodden, the marginalized, or tribals; whether rural or urban dwellers; the poor or the middle class; youth or the… <a href="https://t.co/YT8btWXU6S">pic.twitter.com/YT8btWXU6S</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2088452942542365128?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>அனைவரது மனதிலும் மூவர்ணம் நிறைந்துள்ளது. நாடெங்கிலும் வந்தே மாதரம் பாடல் எதிரொலிக்கிறது - பிரதமர் மோடி</p><p>அனைத்து பிரிவு மக்களும் நாட்டை முன்னேற்றி கொண்டிருக்கின்றனர். நமது கனவுகளை தடுத்து நிறுத்துவது சாத்தியமற்றது - பிரதமர் மோடி</p><p>இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 4 மடங்கு உயர்ந்துள்ளது. </p><p>மிகப்பெரிய செமி கண்டக்டர் ஆலைகள் வர உள்ளன - பிரதமர் மோடி</p><p>ஒவ்வொரு இந்தியரும் இணைந்து இந்தியா வளர்ச்சி அடைந்த நாடு என்ற கனவை 2047-ம் ஆண்டில் நனவாக்குவோம் - பிரதமர் மோடி</p><p>கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா பல்வேறு வரலாற்று சாதனைகளை படைத்துள்ளது  - பிரதமர் மோடி பெருமிதம்</p><p>நாட்டு மக்கள் 25 கோடி பேர் வறுமையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் - பிரதமர் மோடி</p><p>உற்பத்தி துறையில் மேலும் வளர்வது கட்டாயம் - பிரதமர் மோடி</p><p>உலகளவில் ஈர்க்கும் வகையில் பொருட்களை தயாரிக்க வேண்டும் - பிரதமர் மோடி</p><p>நமது தேவைகளுக்காக பிற நாடுகளை எப்போதும் சார்ந்திருக்க முடியாது. நாம் தற்சார்பு அடைய வேண்டியது காலத்தின் கட்டாயம் - பிரதமர் மோடி</p><p>வரும் 2047-ம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் அணுசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி</p><p>40-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம். வர்த்தக ஒப்பந்தத்தால் மீனவர்கள், விவசாயிகள் பயன் - பிரதமர் மோடி</p><p>நாம் கண்ட மிகப்பெரிய கனவுகள் நமது எண்ணங்களை விரிவாக்கி உள்ளது. கனவு உயர்வாக இருந்தால் திறனும் உயரும் - பிரதமர் மோடி</p><p>சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியேற்றுவதற்காக முதலமைச்சர் விஜய் வருகை.</p><p>திறந்தவெளி வாகனத்தில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பினை பார்வையிடுகிறார் முதலமைச்சர் விஜய்</p><p>முதலமைச்சர் விஜய்க்கு முப்படை மற்றும் சிறப்பு காவல் படை உள்ளிட்ட படையினர் அணிவகுப்பு மரியாதை.</p><p>தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய் கோட்டை கொத்தளத்தில் முதன்முறையாக தேசியக்கொடி ஏற்றினார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Tamil Nadu Chief Minister C Joseph Vijay hoists the tricolour at the state Secretariat in Chennai on the occasion of 80th Independence Day. <a href="https://t.co/QFKUtuvUjl">pic.twitter.com/QFKUtuvUjl</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2088466594729214122?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>நாட்டின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்து முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். </p><p>கோட்டையில் கொடியேற்றுவதை பார்க்க வந்துள்ள மக்களுக்கும், என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும் வாழ்த்து - முதலமைச்சர் விஜய்</p><p>லஞ்சம், ஊழலற்ற தமிழகம் என்பதை நோக்கியே நமது தவெக அரசு செயல்பட்டு வருகிறது - முதலமைச்சர் விஜய்</p><p>இந்த விழாவில் என்னை பேச வைத்த உலகம் முழுவதும் உள்ள தமிழக மக்கள், GenZ இளைஞர்களுக்கும் நன்றி - முதலமைச்சர் விஜய்</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/q8bvaih9/vijay3.jpg" /></figure><p>தமிழக மக்கள் நலனுக்காக மட்டுமே நிர்வாக ரீதியாக மத்திய அரசுடன் ஒத்துழைப்பு தருகிறோம்  - முதலமைச்சர் விஜய்</p><p>தமிழக நலனுக்கு எதிராக, மாநில உரிமைக்கு பிரச்சனையாக எது வந்தாலும் தவெக அரசு எதிர்க்கும் - முதலமைச்சர் விஜய்</p> <p>தமிழ்நாட்டை முன்மாதிரி மாநிலமாக்குவதுடன் 2036-ம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவோம் - முதலமைச்சர் விஜய்</p> <p>தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது - முதலமைச்சர் விஜய்</p><p>முன்னாள் படை வீரர்களின் 2 மகள்களுக்கு வழங்கும் திருமண நிதியுதவி ரூ.25,000-ல்  இருந்து ரூ.50,000ஆக உயர்வு - முதலமைச்சர் விஜய்</p> <p>மாற்றுத்திறன் கொண்ட முன்னாள் படைவீரர்களின் குடும்பத்திற்கான மாதாந்திர நிதியுதவி ரூ.5000-ல் இருந்து ரூ.7000 ஆக உயர்வு முதலமைச்சர் விஜய்</p><p>விடுதலை போராட்ட வீரர்கள் ஓய்வூதியம் ரூ.25,000 ஆக உயர்வு - முதலமைச்சர் விஜய்</p><p>எம்.கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருது, நீரிழிவு நோய் நிபுணர் மோகனுக்கு அப்துல் கலாம் விருதை வழங்கினார் முதலமைச்சர் விஜய் </p><p>உலகின் கடினமான மாரத்தானில் ஒன்றான டென்சிங் ஹிலாரி எவரெஸ்ட் மாரத்தானை 2 முறை வென்ற நவ்ஷீனுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கினார் முதலமைச்சர் விஜய்</p><p>முதலமைச்சரின் நல் ஆளுமை விருதை நீலகிரி ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யாவுக்கு வழங்கினார் முதலமைச்சர்</p><p>விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சிருஷ்டி பவுண்டேஷனுக்கு சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான விருதை வழங்கினார் - முதலமைச்சர் விஜய்</p> <p>விருதாளர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார் முதலமைச்சர் விஜய்</p><p>காரில் இருந்து இறங்கி சாலையில் நடந்து சென்றவாறு மக்களை சந்தித்தார் முதலமைச்சர் விஜய்</p><p>சாலையின் இருபுறமும் உள்ள மக்களை பார்த்து கை அசைத்தவாறு நடந்து சென்றார் முதலமைச்சர் விஜய்</p><p>முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள் ஆண்களில் 3 பேருக்கும், பெண்களில் இருவருக்கும் வழங்கப்பட்டது.</p><p>திருப்பூர் இம்மானுவேல் நெல்சன், தூத்துக்குடி சரவண குமார், சேலம் நிர்மல் கதிர்வேலு, மயிலாடுதுறை ராஜேஸ்வரி மகாதேவன், மதுரை சிந்தாவுக்கு முதலமைச்சரின் இளைஞர் விருது வழங்கப்பட்டது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-pledges-to-build-an-india-of-equality-and-social-justice" rel="nofollow">சமத்துவம், சமூகநீதி தழைத்தோங்கும் இந்தியாவை உருவாக்க உறுதி ஏற்போம்- முதலமைச்சர் விஜய்</a></p><p>* சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் விஜய் தேசிய கொடி ஏற்றி வைத்தார். </p><p>* மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/mallikarjun-kharge-rahul-gandhi-skip-independence-day-event-for-2nd-second-consecutive-year">சுதந்திர தின விழாவை 2-வது ஆண்டாக புறக்கணித்த கார்கே, ராகுல் - காரணம் இதுதான்!</a></p><p>* டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.</p><p>* மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி மத்திய மந்திரிக்கு இணையான அந்தஸ்து கொண்டவர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/internet-services-disrupted-in-taiwan">சீன அச்சுறுத்தல்: தைவானில் முடங்கிய இணைய சேவை! போர்க்கால அவசரநிலை சோதனை</a></p><p>*இணையம் மற்றும் 4G/5G நெட்வொர்க் முற்றிலும் முடங்கும் போது, நாட்டின் மக்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு அமைப்புகள் எவ்வாறு தொடர்பில் இருப்பது என்பதைத் தைவான் பரிசோதித்தது. </p><p>*பல பயனர்களுக்கு டிக்டாக் செயலி திறக்கவே இல்லை; இன்ஸ்டாகிராமில் ஒரு மெசேஜ் செல்ல 30 வினாடிகளுக்கு மேல் ஆனதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/equal-opportunity-for-digital-media-centre-removes-12-minute-tv-ad-cap">டிஜிட்டல் ஊடகங்களுக்கு இணையான சமவாய்ப்பு: டிவியின் 12 நிமிட விளம்பரக் கட்டுப்பாட்டை நீக்கியது மத்திய அரசு!... </a></p><p>*தற்போதுள்ள காலகட்டத்தில் டிஜிட்டல் மற்றும் சமூக ஊடக தளங்களில் விளம்பரங்களுக்கு எந்தவித கால வரம்பும் கிடையாது. </p><p>*இதனால் பாரம்பரிய தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு கடும் வருவாய் இழப்பும் சமமற்ற போட்டியும் ஏற்பட்டு வந்தது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/24-hour-turnaround-tasmac-lifts-ban-on-11-enrica-liquor-brands">24 மணி நேரத்திற்குள் மாற்றம்: என்ரிகா நிறுவனத்தின் 11 மதுபான வகைகளுக்கான தடையை நீக்கியது டாஸ்மாக் நிர்வாகம்!... </a></p><p>*11 மதுபான வகைகளையும் சில்லறை விற்பனைக் கடைகளுக்கும், FL-2 மற்றும் FL-3 உரிமம் பெற்ற ஹோட்டல்கள் மற்றும் கிளப்புகளுக்கும் விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.</p><p>*என்ரிகா நிறுவனத்தின் தயாரிப்புகளை மீண்டும் சில்லறை விற்பனை நிலையங்களுக்கு அனுப்பும் பணிகள் தொடங்கியுள்ளன.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/padikkal-century-in-first-innings-against-srilanka-first-test">இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: முதல் சதத்தை பதிவு செய்தார் தேவ்தத் படிக்கல்</a></p><p>* டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.</p><p>* கே.எல்.ராகுல், தேவ்தத் படிக்கல் ஜோடி பொறுப்புடன் ஆடியது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/bangladesh-426-all-out-in-first-innings-against-australia-first-test">டார்வின் டெஸ்டில் வங்கதேசம் 426 ரன்கள் குவிப்பு: 2வது இன்னிங்சிலும் ஆஸ்திரேலியா திணறல்</a></p><p>* வங்கதேசம் முதல் இன்னிங்சில் 426 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.</p><p>* ஆஸ்திரேலிய அணியின் ஜோஷ் ஹேசில்வுட் 6 விக்கெட் வீழ்த்தினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pok-would-have-joined-jammu-and-kashmir-if-omar-abdullah-on-special-status">மாநில அந்தஸ்தை பறிக்காமல் இருந்திருந்தால், PoK மக்கள் ஜம்மு-காஷ்மீருடன் இணைய கிளர்ந்து எழுந்திருப்பார்கள்- உமர் அப்துல்லா</a></p><p>* என்றாவது ஒரு நாள் அந்த இடங்கள் நிரப்பப்படும் என்ற நம்பிக்கையில், சட்டப்பேரவையில் அந்தப் பகுதிக்கான இடங்களை நாங்கள் காலியாக வைத்துள்ளோம்.</p><p>* மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பு ரீதியான உத்தரவாதங்களை மீட்டெடுப்பதற்கும், ஜம்மு-காஷ்மீரை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கும் எங்கள் அரசு உறுதியுடன் உள்ளது. இந்த இலக்குகளை நிறைவேற்ற நாங்கள் பாடுபடுவோம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-change-district-secretary-posts-for-youth-stalin-announcement">இளைஞர்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி - ஸ்டாலின் அறிவிப்பு!</a></p><p>* வயது வரம்பு: 70க்கு மேல் உள்ளவர்கள் நீக்கம், இளைஞர்களுக்கு மாவட்ட பொறுப்பு கிடைக்கும்.</p><p>* புதிய நியமனங்கள்: 78 மாவட்ட செயலாளர்கள் மாற்றம், புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/khushbu-sundar-condemn-nainar-nagendran-against-cm-vijay-speech">அரசியல் விளையாட்டில் பெண்கள் பகடைக்காய்கள் அல்ல: நயினார் நாகேந்திரனுக்கு குஷ்பு கண்டனம்</a></p><p>* எந்த ஒரு தளத்திலும் இத்தகைய கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.</p><p>* ஒரு பெண்ணின் - ஒரு தாயின் - காரணமாகவே நீங்கள் இந்த உலகில் இருக்கிறீர்கள்.</p>]]></content:encoded></item><item><title>அரசியல் விளையாட்டில் பெண்கள் பகடைக்காய் அல்ல: நயினார் நாகேந்திரனுக்கு குஷ்பு கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/khushbu-sundar-condemn-nainar-nagendran-against-cm-vijay-speech</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/khushbu-sundar-condemn-nainar-nagendran-against-cm-vijay-speech#comments</comments><guid isPermaLink="false">1904e4d4-7bc0-4386-93a6-3dff7b9414cf</guid><pubDate>Sat, 15 Aug 2026 14:37:07 +0000</pubDate><atom:updated>2026-08-15T14:37:07.204Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,குஷ்பு,Khushbu,cm vijay,முதல்வர் விஜய்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/syfy9k4n/kushboo.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ khushbu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/syfy9k4n/kushboo.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகையும், பா.ஜ.க. மாநில துணைத் தலைவருமான குஷ்பு பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது தாயார் குறித்து அநாகரிகமாக பேசிய பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.</p><p>'அப்பாவை காணோம்' என்ற முதலமைச்சர் விஜய் பேச்சுக்கு எதிர்வினையாக அவர் அநாகரிகமாகப் பேசியதாக கண்டனங்கள் எழுந்துள்ளன.</p><h2>தரக்குறைவான கருத்து</h2><p>இந்நிலையில் நடிகையும், பா.ஜ.க. மாநில துணைத் தலைவருமான குஷ்பு, பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:</p><p>தமிழக முதலமைச்சரின் தாயார் குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் தெரிவித்த தரக்குறைவான கருத்து அருவருப்பானது. எந்த ஒரு தளத்திலும் இத்தகைய கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.</p><h2>அதிர்ச்சியும், ஏமாற்றமும்</h2><p>எனது தலைவரும் பிரதமருமான நரேந்திர மோடி அவர்கள் எப்போதும் 'நாரி சக்தி' (பெண் சக்தி) குறித்தே பேசி வருகிறார். பெண்களை மிகுந்த மரியாதையுடன் நடத்தி வருகிறார். இத்தகைய கருத்துகள் மிகவும் கீழ்த்தரமானவை.</p><p>பெண்களின் கண்ணியம் மற்றும் நேர்மையை அவமதிப்பதையோ அல்லது கேள்விக்கு உள்ளாக்குவதையோ ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாதவள் நான். எப்போதும் என் கருத்துகளைத் துணிச்சலுடன் வெளிப்படுத்தி வந்துள்ளேன். இதைக் கேட்டு நான் இன்று அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளேன்.</p><h2>பெண்கள் பகடைக்காய் அல்ல</h2><p>கட்சியை விமர்சியுங்கள், மக்களுக்காகக் குரல் கொடுங்கள், அரசு செயல்படத் தவறினால் அதைத் தாக்குங்கள். ஆனால் உங்கள் கருத்தை முன்வைக்க ஒருபோதும் ஒரு பெண்ணைப் பயன்படுத்தாதீர்கள். அரசியல் விளையாட்டில் பெண்கள் பகடைக்காய்கள் அல்ல.</p><p>ஒவ்வொரு கட்சியும், அக்கட்சியின் உறுப்பினர்களும், ஒவ்வொரு ஆணும் ஒரு பெண்ணை அவமதிக்கும் முன் சிந்திக்க வேண்டும். </p><p>நினைவில் கொள்ளுங்கள், ஒரு பெண்ணின் - ஒரு தாயின் - காரணமாகவே நீங்கள் இந்த உலகில் இருக்கிறீர்கள். ஒரு தாய்க்கு இழைக்கப்படும் இத்தகைய அவமரியாதை மிகுந்த வேதனையையும் மனக்காயத்தையும் ஏற்படுத்துகிறது என பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>5 நிமிடம் லேட்: டெலிவரி செய்ய வந்த நபரை சரமாரி தாக்கிய வாலிபர்- வைரலான வீடியோ</title><link>https://www.maalaimalar.com/news/national/delivery-agent-thrashed-by-man-for-arriving-5-minutes-late-assault-caught-on-cctv</link><comments>https://www.maalaimalar.com/news/national/delivery-agent-thrashed-by-man-for-arriving-5-minutes-late-assault-caught-on-cctv#comments</comments><guid isPermaLink="false">587f65d9-f42d-492c-9e88-cee2dfe86814</guid><pubDate>Sat, 15 Aug 2026 14:37:06 +0000</pubDate><atom:updated>2026-08-15T14:37:06.794Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Meerut,மீரட் நகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/wt7a2r1o/Delivery0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தாக்குதல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/wt7a2r1o/Delivery0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராஜஸ்தான் மாநிலம் மீரட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், பிளிங்கிட் நிறுவத்தின் டெலிவரி செய்யும் நபர் (Delivery agent), பொருள் ஒன்றை ஒரு வீட்டில் டெலிவரி செய்வதற்காக கொண்டு செல்கிறார். அவர் பெல்லை அழுத்தியதும், வீட்டில் இருந்து வாலிபர் ஒருவர் வருகிறார். இவர் டெலிவரி நபருடன் சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். பின்னர் திடீரென டெலிவரி செய்ய வந்த நபரின் செல்போனை பறித்துக் கொள்கிறார். அதோடு சரமாரியாக தாக்குகிறார்.</p><h2>வீட்டிற்குள் இழுத்துச் சென்று தாக்குதல்</h2><p>அப்போது, அதேவீட்டில் இருந்து பெண் ஒருவர் வெளியே வருகிறார். அவர் இருவரையும் சமாதானம் செய்யும் எந்த வகையிலான முயற்சியிலும் ஈடுபடவில்லை. பின்னர், அந்த நபரை வாலிபர் அவரை வீட்டிற்குள் இழுத்துச் சென்று அடித்து உதைக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">The couple assaulted the poor delivery guy because of the delay, and is now on the run after the FIR. <br><br>Delivery agents work 12-15 hrs daily for just ₹15-20k in harsh conditions.  Delayed order? There could be traffic, rain, or system issues. Assaulting them shows zero humanity.… <a href="https://t.co/1Yk5FTQbrS">pic.twitter.com/1Yk5FTQbrS</a></p>&mdash; Mr. Rana  (@RanaBharatiye) <a href="https://x.com/RanaBharatiye/status/2088543810745954475?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure> <p>இந்த வீடியோ காவல்துறையின் பார்வைக்கு எட்ட, இது குறித்து விசாரணை நடத்தி டெலிவரி செய்ய வந்த நபர், மற்றும் வாலிபர் யார் என்பதை கண்டுபிடித்தனர். பின்னர், டெலிவரி செய்ய வந்த நபர் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்க, போலீசார் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>டெலிவரி செய்யும் நபர்கள் பல்வேறு இடையூறுகளை எதிர்கொண்டு, சொற்ப வருமானத்திற்காக கஷ்டப்பட்டு வருகின்றனர். 5 நிமிடம், 10 நிமிடம் லேட்டிற்காக தாக்குதல் நடத்தினால் அது மோசமான செயலாகும் என இணையதள வாசிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>இளைஞர்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி - ஸ்டாலின் அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-change-district-secretary-posts-for-youth-stalin-announcement</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-change-district-secretary-posts-for-youth-stalin-announcement#comments</comments><guid isPermaLink="false">7e0e97f5-781c-4b81-8497-b3bc393f1f4c</guid><pubDate>Sat, 15 Aug 2026 14:03:33 +0000</pubDate><atom:updated>2026-08-15T14:03:33.267Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,M.K.Stalin,தமிழக அரசியல்,Secretary,DMK.,மு.க.ஸ்டாலின்,இளைஞர்கள்,youthsDistrict,மாவட்ட செயலாளர்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/3ndomn1f/M.K.-Stalin" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ M.K. Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/3ndomn1f/M.K.-Stalin?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேர்தல் தோல்விக்கு பின்னர் கட்சியில் அதிரடி மாற்றங்களை செய்ய தி.மு.க. தயாராகி வருகிறது. இதுதொடர்பாக வருகிற 22-ந் தேதி நடைபெறும் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக தெரிகிறது.</p><h2><strong>தொண்டர்களின் கருத்துக்கள்</strong></h2><p>நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வி அடைந்தது. இதையடுத்து தேர்தலில் நடந்த தோல்விக்கான காரணங்கள் குறித்தும், கட்சியின் நிர்வாக கட்டமைப்புகளை மாற்றுவது குறித்தும், மாவட்டம் வாரியாக கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் குழு அமைத்து கட்சியில் நிர்வாகிகள், தொண்டர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. </p><p>இவை அனைத்தையும் தொகுக்கப்பட்டு, அறிக்கையாக தயாரித்து திமுக தலைவர் முக ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. அதில் இருக்கும் பல்வேறு பரிந்துரைகள் தெரிவிக்கப்பட்டு இருந்தன. இதன் அடிப்படையில் கட்சியில் நிர்வாக கட்டமைப்புகளை மறுசீரமைப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.</p><h2>புதிய மாவட்ட செயலாளர்கள்</h2><p>தற்போது தி.மு.க.வில் கட்சியில் அமைப்பு ரீதியாக 78 மாவட்ட செயலாளர்கள் இருக்கின்றனர். இதில் சரியான முறையை கடைபிடிக்காதவர்களின் பதவி பறிக்கப்படலாம் என பரபரப்பாக பேசப்படுகிறது.</p><p>தற்போது இருக்கும் மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, புதிய மாவட்ட செயலாளர்களை நியமிப்பது, மாற்று கட்சியில் இருந்து தி.மு.க.வில் இணைந்தவர்களுக்கு பதவி வழங்குவது தொடர்பாக வருகிற 22-ந்தேதி நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு பின் தி.மு.க.வில் அதிரடி மாற்றங்களும், அதிரடி நடவடிக்கையும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2><strong>இளைஞர்களுக்கு வாய்ப்பு</strong></h2><p>இதனிடையே கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்படி, 70 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் இருந்து மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஒரே பதவியில் மூன்று முறைக்கு மேல் இருப்பவர்களும் மாற்றப்படுவர் என்றும், ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளாக 60 வயது வரை இருக்கலாம் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதனால், முன்னாள் அமைச்சர்களின் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.</p><p>தற்போது, எம்.எல்.ஏ.க்களாக உள்ள சீனியர் மாவட்ட செயலாளர்களுக்கு தலைமை நிர்வாகத்தில் முக்கிய பதவிகள் வழங்கப்பட உள்ளன என்றும், துணை பொதுச்செயலாளர்கள், வழிகாட்டுதல் குழு உறுப்பினர்கள், அரசியல் விவகாரக்குழு உறுப்பினர்கள் என நியமிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.</p><p>மேலும் கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் வாயிலாக 40க்கும் மேற்பட்ட புது முகங்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கும் என்றும், இது குறித்து வரும் 22ம் தேதி நடக்கும் தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><h2><strong>தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம்</strong></h2><p>இதனிடையே தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம் வருகிற 22-ந்தேதி காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் நடைபெற உள்ளது. </p><p>கூட்டத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.</p><p>தேர்தல் தோல்விக்கு பின்னர் நடைபெறக்கூடிய முதல் செயற்குழு கூட்டம் இது என்பதாலும், புதிய மாற்றங்கள் ஏற்படலாம் என்பதாலும் கட்சியினர் மத்தியில் இந்த செயற்குழு கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஐரோப்பாவின் உயரமான சிகரத்தில் 100மீ இந்திய தேசியக்கொடியை ஏற்றிய ஆந்திர சப்-இன்ஸ்பெக்டர்</title><link>https://www.maalaimalar.com/news/national/andhara-police-si-unfurls-100-metre-tricolour-atop-mount-elbrus-on-independece-day</link><comments>https://www.maalaimalar.com/news/national/andhara-police-si-unfurls-100-metre-tricolour-atop-mount-elbrus-on-independece-day#comments</comments><guid isPermaLink="false">1d365d54-a233-40f6-984e-c5a90d85e0b7</guid><pubDate>Sat, 15 Aug 2026 13:29:09 +0000</pubDate><atom:updated>2026-08-15T13:29:09.235Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Independence Day,சுதந்திர தினம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/6y83yki2/IndependenceDay001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இந்திய தேசியக் கொடி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/6y83yki2/IndependenceDay001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் 80-வது <a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-hoists-national-flag-red-fort-delhi">சுதந்திர தின விழா</a> கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு இந்தியரும் நாட்டின் மீது வைத்துள்ள தேச பக்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.</p><p>அந்த வகையில் ஆந்திர மாநிலம் எலூரு புறநகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டர் வி. வெங்கடேஸ்வர ராவ் ஐரோப்பியாவின் மிக உயரமான சிகரத்தில் 100மீ தேசியக் கொடியை இன்று காலை ஏற்றியுள்ளார்.</p><p>ஐரோப்பியாவின் மிக உயரமான சிகரம் ரஷியாவில் உள்ள மவுண்ட் எல்ப்ரஸ் ஆகும். இதன் உயரம் 5642 மீட்டர் ஆகும். இந்த சிகரத்தில் வெங்கடேஷ்வர ராவ் பல நாட்களாக ஏறி இன்று காலை உச்சியை அடைத்து தேசியக் கொடியை பறக்கவிட்டுள்ளார்.</p><p>அப்போது தேசிய கீதம் பாடி தனது தேசப்பற்றை வெளிப்படுத்தினார். தனது சாதனையை, பணியின்போது உயிர்த்தியாகம் செய்த காவலர்களுக்கு அவர் அர்ப்பணித்தார்.</p>]]></content:encoded></item></channel></rss>