<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 15 Sep 2026 08:12:23 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 15 செப். 2026...
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-15-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-15-september-2026#comments</comments><guid isPermaLink="false">f4009f82-0bcd-4c6f-adcc-cb203382a7f8</guid><pubDate>Tue, 15 Sep 2026 04:08:57 +0000</pubDate><atom:updated>2026-09-15T08:02:43.411Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/xuyvvatv/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live News]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/xuyvvatv/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kolathur-mla-vs-babus-health-stable-hospital">கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவின் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை நிர்வாகம் தகவல்!... </a></p><p>*சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரான வி.எஸ்.பாபுவுக்கு கடந்த 9-ம் தேதி அதிகாலை திடீரென கடுமையான மூச்சுத்திணறல் மற்றும் சுவாசக் கோளாறு ஏற்பட்டது. </p><p>*அவருக்கு தேவையான சுவாச உதவிகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதால், அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பிலேயே வைக்கப்பட்டுள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/drug-trade-using-children-asami-who-hid-in-the-closet-after-seeing-the-police-interesting-caught-by-wifi">சிறுவர்களை வைத்து போதை வியாபாரம்.. அலமாரிக்குள் ஒளிந்த ஆசாமி - இலவச Wifi மூலம் சிக்கிய சுவாரஸ்யம்<br></a></p><p>* கோகைன், ஹெராயின் உள்ளிட்டவற்றை அவர் சப்ளை செய்து வந்துள்ளார்.</p><p>*அவர் இருக்கும் இடத்தில் இலவச பப்ளிக் WIFI உடன் கனெக்ட் ஆகி இருந்துள்ளது.<br><br></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/shocking-video-of-a-car-hitting-a-female-biker-young-man-arrested-for-attempted-murder">பெண் Biker மீது கார் மோதிய பரபரப்பு வீடியோ.. கொலை முயற்சி வழக்கில் இளைஞர் கைது<br></a></p><p>*சக பைக்கர்களுடன் தனது Aprilia RS 457 பைக்கில் சென்றுகொண்டிருந்தார்.</p> <p>*திட்டமிட்ட கொலை வழக்கு பதிவு செய்த குருகிராம் போலீசார் அவரை தேடி வந்தனர்.<br></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-is-meeting-london-based-tamils-this-evening">லண்டன் வாழ் தமிழர்களை இன்று மாலை சந்திக்கிறார் முதலமைச்சர் விஜய்</a></p><p>* தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் விஜய் லண்டன் சென்றுள்ளார்.</p><p>* நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை அவர் தொடங்கி வைத்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/international-democracy-day-2026-democracy-thrives-when-every-voice-is-heard-un-appeal">சர்வதேச ஜனநாயக தினம் 2026: அனைத்து குரல்களும் கேட்கும்போது ஜனநாயகம் சிறக்கும்- ஐ.நா முக்கிய அழைப்பு!... </a></p><p>*சர்வதேச ஜனநாயக தின கொண்டாட்டங்களின் பின்னணியில் பல தசாப்தகால சர்வதேச முயற்சிகள் உள்ளன. </p><p>*தனிநபர்களின் முடிவெடுக்கும் உரிமைகளைப் பாதுகாத்தல், மனித உரிமைகளுக்கு முன்னுரிமை அளித்தல் மற்றும் சமூகத்தில் அனைத்துத் தரப்பு மக்களின் பங்களிப்பை உறுதி செய்வதை இக்கருப்பொருள் வலியுறுத்துகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-high-court-dismisses-election-case-against-minister-sengottaiyan">அமைச்சர் செங்கோட்டையனுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்தது சென்னை ஐகோர்ட்</a></p><p>* தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய மனு மீது அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிமுக வேட்பாளர் பிரபு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.  </p><p>* இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அமைச்சர் செங்கோட்டையன் மனுவை தீர்ப்புக்காக தள்ளிவைத்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-says-it-is-true-there-are-power-cuts-tn">தமிழகத்தில் மின்வெட்டு இருப்பது உண்மைதான் - திருமாவளவன்</a></p><p>* திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் மக்கள் முகம் சுழிக்கும் வகையில் அவதூறாக பேசுவது தவறு.</p><p>* பேருந்துகளுக்கு தவெக கொடி நிறத்தில் வண்ணம் பூசுவது ஏற்புடையதல்ல.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-says-let-us-pledge-to-restore-anna-rule">அண்ணா ஆட்சியை மீண்டும் நிறுவிட உறுதியேற்போம்! - எடப்பாடி பழனிசாமி</a></p><p>* அண்ணாவின் அரசியல் வாழ்வு, தலைமுறைகள் கடந்து வழிகாட்டும் கலங்கரை விளக்கம்.</p><p>* தமிழினத்தின் தன்மானக் குரலான நம் கொடியாகவும் கொள்கையாகவும் என்றும் வீற்றிருக்கும் பேரறிஞர் பெருந்தகை அண்ணா.</p> <p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-oscars-of-television-list-of-winners-at-the-78th-emmy-awards-ceremony">தொலைக்காட்சியின் ஆஸ்கார்.. 78வது எம்மி விருதுகள் விழா வெற்றியாளர்கள் பட்டியல்<br></a><br>*விடோஸ் பே (Widow's Bay) சிறந்த காமெடி சீரீஸ் உட்பட 14 பிரிவுகளில் விருது வென்றுள்ளது.</p><p>*அடுத்ததாக தி பிட் (The Pitt) தொடர் சிறந்த டிராமா சீரீஸ் விருதை வென்றது. <br></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-wishes-national-engineers-day">தேசிய பொறியாளர்கள் தினம்- முதலமைச்சர் விஜய் வாழ்த்து</a></p><p>* பொறியாளர்களின் அறிவாற்றலும் புதுமையான சிந்தனையும் வளமான, வலிமையான, முன்னேற்றம் மிக்க நாட்டினை உருவாக்கத் தொடர்ந்து துணை நிற்கட்டும்! </p><p>* தேசத்தின் உள்கட்டமைப்பை நாளும் செதுக்கிவரும் பொறியியல் வல்லுநர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்! </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-praise-perarignar-anna">அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் பேரறிஞர் அண்ணா- முதலமைச்சர் விஜய்</a></p><p>* முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில், அவரது தொலைநோக்குப் பார்வையையும், மக்கள் சேவையையும் நெஞ்சார நினைவுகூர்ந்து போற்றுகிறேன். </p><p>* சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட அங்கீகாரம் வழங்கி தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/please-help-taliban-arrests-indian-female-vlogger-traveling-alone-in-afghanistan">தயவுசெஞ்சு உதவுங்க.. ஆப்கானிஸ்தானில் தனியாக பயணம் செய்த கேரள பெண் Vlogger-ஐ கைது செய்த தாலிபான்கள்<br></a></p><p>*'பேக்பேக்கர் அருணிமா' என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். </p><p>*ஆப்கானிஸ்தானில் பெண்கள் தனியாகப் பயணம் செய்ய சட்டப்படி அனுமதியில்லை</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/durai-murugan-announced-dmk-mupperum-vizha-adjourn">மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு</a></p><p>* 2026-ம் ஆண்டுக்கான தி.மு.க. முப்பெரும் விழா இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. </p><p>* இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட தி.மு.க. முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/police-case-filed-against-a-rasa-and-sekhar-babu">அவதூறு பேச்சு: ஆ.ராசா, சேகர்பாபு மீது வழக்கு பதிவு</a></p><p>*  சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை தாங்கினார். </p><p>*  தி.மு.க. எம்.பி.ராசா மற்றும் சேகர்பாபு ஆகியோர் முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் நிர்மல்குமார் குறித்து பேசியது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/perarignar-anna-birthday-vairamuthu-tribute">அண்ணாவின் பொன்னடிகளுக்குப் புகழ் வணக்கம் - வைரமுத்து</a></p><p>* நீ செய்த சாதனை புரிய 300 ஆண்டு வாழ்ந்தவனாலும் முடியாது</p><p>* உன் பெயர் சொல்லாமல் அரசாள இயலாது உன் கொள்கை இல்லாமல் அரசியல் கிடையாது</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/today-gold-price-in-chennai-15-9-2026">GOLD PRICE TODAY: தொடர் சரிவில் தங்கம் விலை - எவ்வளவு குறைந்தது தெரியுமா?</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.14,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-perarignar-anna-who-rules-tamil-nadu-yesterday-today-and-forever">பேரறிஞர் அண்ணா தான் அன்றைக்கும் - இன்றைக்கும் - என்றைக்கும் தமிழ்நாட்டை ஆள்கிறார் - உதயநிதி</a></p><p>* பேரறிஞர் அண்ணா எனவும் ஜனநாயக பெருவெளிச்சம் பிறந்த நாள் இன்று!</p><p>* இருமொழி கொள்கையை உறுதி செய்த பேரறிஞர் அண்ணா தான்</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/ai-companies-gather-to-call-for-curbing-the-pace-of-ai-technology-trump-posts-in-a-panic">ஏஐ தொழில்நுட்பத்தின் வேகத்தை கட்டுப்படுத்தனும் - ஒன்றுகூடிய ஏஐ நிறுவனங்கள் - பதறியடித்து டிரம்ப் போட்ட பதிவு</a></p><p>*ஏஐ இல் யார் வெல்கிறார்களோ, அவர்களே உலகை வெல்வார்கள்</p><p>*ஒரு வலுவான, அறிவார்ந்த - High IQ கொண்ட அதிபர் மட்டுமே தேவை, அது அமெரிக்காவிடம் உள்ளது</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/the-curious-case-of-maharashtras-richest-bjp-mla-turning-into-a-beggar-what-happened">மகாராஷ்டிராவின் மிகப் பணக்கார பாஜக எம்எல்ஏ பிச்சைக்கரராக மாறிய வினோதம்.. என்ன ஆனது?</a></p><p>*ஒரு நபர் அவரிடம் ரூ.20 கொடுத்து "போய் சாப்பிடு பாபா" என்று கூறியுள்ளார்.</p><p>*ஒரு ஏழை சமோசா வியாபாரி இன்முகத்துடன் இலவசமாக சமோசா வழங்கியுள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/india-has-decided-to-supply-654-mw-of-electricity-to-flood-affected-nepal-for-18-hours-a-day-until-december">வெள்ளத்தால் பாதித்த நேபாளத்திற்கு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வீதம் டிசம்பர் வரை  654 மெகாவாட் மின்சாரம் வழங்க இந்தியா முடிவு</a></p><p>*2 வாரங்கள் கடந்தும் மீட்பு பணிகள் தொடந்து வருகின்றன. செப்டம்பர்</p><p>*சுமார் 130 டன்னுக்கும் அதிகமான நிவாரணப் பொருட்கள் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளன.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/security-lapse-three-italians-boarded-a-flight-without-immigration-checks-central-ministry-calls-urgent-meeting">பாதுகாப்பு குளறுபடி.. குடிவரவு சோதனையின்றி டெல்லியில்  விமானம் ஏறிச் சென்ற 3 இத்தாலியர்கள் - மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அவசர கூட்டம்</a></p><p>*சோதனைக்கு செல்லாமலேயே அவர்கள் முனிச் விமானத்தில் ஏறிச் சென்றுள்ளனர்.</p> <p>*அவர்களை குடியேற்ற சோதனைக்கு அனுப்பியிருக்க வேண்டும்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/absolutely-not-bihar-raises-the-banner-of-revolt-against-the-implementation-of-the-uniform-civil-code">முடியவே முடியாது.. பொது சிவில் சட்டம் அமலுக்கு பீகாரில் போர்க்கொடி!</a></p><p>*21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார்.</p> <p>*ஷா பேசியிருந்த நிலையில் பீகார் அதற்கு போர்க்கொடி தூக்கியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/technology/techfacts/the-bitter-truth-behind-creating-retro-style-ai-images">ரெட்ரோ ஸ்டைல்‌ ஏஐ படங்களை உருவாக்குவதற்கு பின்னால் இருக்கும் கசப்பான உண்மை!</a></p><p>*ஒரே நபர்‌ ஏராளமான புகைப்படங்களை உருவாக்கி சமூக வலைத்தளங்களில்‌ உலவ விட்டு வருகின்றனர்‌.</p><p>*புகைப்படத்தை உருவாக்குவதற்கான முக்கிய கம்ப்யூட்டிங்‌ செயல்முறை தொடங்குகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/perarignar-anna-birthday-kanimozhi-says-dmk-must-endure-and-serve-the-people-for-many-generations">அண்ணா விதைத்து பெருமரமாக்கிய தி.மு.க. பல தலைமுறைகளுக்கு நின்று பயன் தர வேண்டும்! - கனிமொழி</a></p><p>* ஆதாயத்திற்காக அண்ணாவின் பெயரை உச்சரிப்பவர்கள் அதிகரித்துவிட்டனர்.</p><p>* திராவிடத்தையும், பெரியாரியத்தையும், தமிழறத்தையும் ஆழ்மனதில் ஏந்திப் பயணிப்பவர்கள் அதிகம் வர வேண்டும்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/perarignar-anna-birthday-mk-stalin-tribute">தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ் வணக்கம்! - மு.க.ஸ்டாலின்</a></p><p>* தலைநிமிர்ந்த தமிழர்! தலைநிமிர்ந்த தமிழ்நாடு! </p><p>* தமிழன்னையின் தனயனாகப் பிறந்து தாய்க்குப் பெயரிட்ட மாபெரும் தமிழ்க் கனவு அவர்!</p>]]></content:encoded></item><item><title>லேசர், அலங்கார ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும் மீனாட்சி அம்மன் கோவில் ராஜகோபுரங்கள்</title><link>https://www.maalaimalar.com/spirituality/rajagopurams-of-the-meenakshi-amman-temple-glowing-amidst-a-flood-of-laser-and-decorative-lights</link><comments>https://www.maalaimalar.com/spirituality/rajagopurams-of-the-meenakshi-amman-temple-glowing-amidst-a-flood-of-laser-and-decorative-lights#comments</comments><guid isPermaLink="false">7bfbc60d-9267-4683-a985-70b3f41253c1</guid><pubDate>Tue, 15 Sep 2026 08:11:11 +0000</pubDate><atom:updated>2026-09-15T08:11:11.082Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Kumbabishekam,கும்பாபிஷேகம்,மீனாட்சி அம்மன் கோவில்,meenakshi amman temple,அமைச்சர் ரமேஷ்,Minister Ramesh</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/rc0l4tmx/madurai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ லேசர், அலங்கார ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும் மீனாட்சி அம்மன் கோவில் ராஜகோபுரங்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/rc0l4tmx/madurai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்கள் ஏற்கனவே பல வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. வானுயர்ந்த கோபுரங்கள், அதில் இருக்கும் ஆயிரக்கணக்கான சுதை சிற்பங்களை பக்தர்கள் வியப்புடன் கண்டு களித்து வருகின்றனர்.</strong></em></p><p>அமைச்சர் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>முதலமைச்சர் ஜோசப் விஜய் சீர்மிகு நல்லாட்சியில், தொன்மையான கோவில்களைப் பழமை மாறாமல் புனரமைத்து திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குட முழுக்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு <a href="https://www.maalaimalar.com/topic/மீனாட்சி-அம்மன்-கோவில்">மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்</a> குடமுழுக்கு நாளை மறுநாள் 17-ந்தேதி அன்று வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.</p><p>திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழாவினை முன்னிட்டு அனைத்து துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து செயல்படக் கூடிய வகையில் கட்டுப்பாட்டு அறை கோவிலின் கிழக்கு ராஜகோபுரத்தின் எதிர்புறம் அமைந்துள்ள புதுமண்டபத்தில் செயல்பட்டு வருகிறது. பக்தர்களுக்கு நுழைவு வாயிலில் தண்ணீர், பிஸ்கெட் உடன் கூடிய பிரசாதப்பை வழங்கப்பட உள்ளது. அனைத்து பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. </p><p>திருக்குடமுழுக்கினை காண வரும் பக்தர்களுக்கு அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் கூடிய  மருத்துவ உதவி மையங்கள் மற்றும் முகாம்கள் கோவில் வளாகம் மற்றும் சுற்றியுள்ள வீதிகளில் தயார் நிலையில் அமைக்கப்பட்டுள்ளன. அவசர சிகிச்சை தேவைப்படும் பக்தர்களுக்கு 108 அவசர ஊர்திகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கியமான இடங்களில் எல்.இ.டி.வண்ணத்திரைகள் பக்தர்கள் திருக்குட முழுக்கினைக் காண்பதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளன. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலின் பரிவாரமூர்த்திகளுக்கான திருக்குடமுழுக்கு நாளை (16 -ந்தேதி) காலை 5 மணி முதல் 6 மணி வரை நடைபெற உள்ளது. </p><p>அதனைத் தொடர்ந்து 17 -ந்தேதி அன்று காலை 7.40 மணி முதல் 8.10 மணி வரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தங்க விமானங்கள் மற்றும் ராஜகோபுரங்கள் சமகாலக் குடமுழுக்கும், மூலவர் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் சுவாமிக்கும் கலசாபிஷேகமும் நடைபெறவுள்ளது. </p><p>இக்குடமுழுக்கு பெருவிழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள்., எம்.எல்.ஏக்கள், தவத்திரு ஆதீன பெருமக்கள், கோவில் அறங்காவலர்கள், ஆன்மிகப் பெரியோர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்களின் பங்கேற்புடன் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.   </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p><h2><strong>ராஜகோபுரங்கள்</strong> </h2><p>கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்கள் ஏற்கனவே பல வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. வானுயர்ந்த கோபுரங்கள், அதில் இருக்கும் ஆயிரக்கணக்கான சுதை சிற்பங்களை பக்தர்கள் வியப்புடன் கண்டு களித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி கோவிலுக்குள் பொற்றாமரை குளம், ஆயிரங்கால் மண்டபம், நூறு கால் மண்டபம், அம்மன் பிரகாரம், சுவாமி பிரகாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளும் புது பொலிவுடன் காட்சியளிக்கிறது. </p><p>இதனை காண காலை மற்றும் மாலை நேரங்களில் உள்ளூர் பக்தர்கள் ஏராளமானோர் கோவிலுக்கு படையெடுத்து வருகின்றனர். இரவு நேரங்களில் நகரில் எந்த பகுதிகளில் இருந்தும் வானுயர கோபுரங்களை பார்க்கும் வகையில் பல வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது. அது மட்டுமின்றி கோபுரத்தில் இருந்து பொதுமக்களை கவரும் வகையில் லேசர் விளக்குகளும் அமைக்கப்பட்டு ஒளி பாய்ச்சப்படுவது கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது. </p><p>அதேபோல் கோவில் உள்ளேயும் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு உள்ளன. இரவு நேரங்களில் இதற்காக குழந்தைகளுடன் பக்தர்கள் குடும்பத்துடன் அதிக அளவில் வருகை தருகின்றனர். </p><p>கடந்த 2 நாட்கள் விடுமுறை என்பதால் மாலையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வழக்கத்தை விட அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கும்பாபிஷேகத்திற்கு இன்னும் ஒரு நாளே இருப்பதால் மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. கும்பாபிஷேகத்திற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவின் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை நிர்வாகம் தகவல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kolathur-mla-vs-babus-health-stable-hospital</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kolathur-mla-vs-babus-health-stable-hospital#comments</comments><guid isPermaLink="false">0a05444f-5000-4994-a86f-47af8552b63c</guid><pubDate>Tue, 15 Sep 2026 07:58:59 +0000</pubDate><atom:updated>2026-09-15T07:58:59.056Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Kolathur,கொளத்தூர்,tvk,MLA V.S.Babu,எம்எல்ஏ வி.எஸ்.பாபு,கொளத்தூர் சட்டமன்ற தொகுதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/oyw5ux3f/vs.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MLA V.S.Babu  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/oyw5ux3f/vs.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>எம்எல்ஏ வி.எஸ்.பாபுக்கு தேவையான சுவாச உதவிகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதால், அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பிலேயே வைக்கப்பட்டுள்ளார்.</p><p>சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரான <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vs-babu-mla-hospitalized">வி.எஸ்.பாபுவுக்கு</a> கடந்த 9-ம் தேதி அதிகாலை திடீரென கடுமையான மூச்சுத்திணறல் மற்றும் சுவாசக் கோளாறு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். </p><p>மருத்துவமனையில் அவரை பரிசோதித்த தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர்கள், உடனடியாக அவரை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அவருக்கு தேவையான அவசர மருத்துவ மேலாண்மை மற்றும் சுவாச ஆதரவு சிகிச்சைகள் உடனுக்குடன் தொடங்கப்பட்டன.</p><h2>சீராக உள்ளதா<strong>க மருத்துவம</strong>னை அறிக்கை</h2><p>தற்போது பல்துறை நிபுணர்கள் அடங்கிய சிறப்பு மருத்துவக் குழுவின் தீவிர கண்காணிப்பில் வி.எஸ்.பாபு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகள் திருப்திகரமாக இருப்பதாகவும், அவரது உடல்நிலை தற்போது தொடர்ந்து சீராக இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவருக்கு தேவையான சுவாச உதவிகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதால், அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பிலேயே வைக்கப்பட்டுள்ளார்.</p><p>தமிழக அரசியலில் நீண்ட அனுபவம் கொண்ட மூத்த தலைவரான வி.எஸ்.பாபு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து த.வெ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் தனது குடும்பத்துடன் கொளத்தூரில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார். அவரது உடல்நிலை சீரடைந்து வருவது குறித்த தகவல் அறிந்ததும், அவரது ஆதரவாளர்களும், த.வெ.க. தொண்டர்களும், தொகுதி மக்களும் அவர் விரைவில் முழு உடல்நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் - வேட்பு மனுதாக்கல் செய்ய  நாளை கடைசி நாள்!</title><link>https://www.maalaimalar.com/news/puducherry/tattanchavadi-bypoll-nomination-deadline-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/puducherry/tattanchavadi-bypoll-nomination-deadline-tomorrow#comments</comments><guid isPermaLink="false">963d2d83-2168-4156-add3-923760c79dfa</guid><pubDate>Tue, 15 Sep 2026 07:55:03 +0000</pubDate><atom:updated>2026-09-15T07:55:03.032Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>by election,Nomination Filing,Thattanchavady,தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்,PuducherryByPoll,Five Cornered Contest,ஐந்துமுனை போட்டி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/5uvoqbev/Thattanchavady-By-election" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Thattanchavady By election]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/5uvoqbev/Thattanchavady-By-election?w=280" width="280"></media:thumbnail><category>புதுச்சேரி (Puducherry)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>புதுச்சேரி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF">தட்டாஞ்சாவடி </a><a href="https://www.maalaimalar.com/topic/by-election">இடைத்தேர்தல் </a>வேட்புமனு தாக்கல் நாளை கடைசி நாள், ஐந்துமுனை போட்டி நிலவுகிறது, போலீஸ் பாதுகாப்புடன் வேட்பாளர்கள் நல்ல நேரம் பார்த்து தாக்கல் செய்ய தயாராகின்றனர்.</p><h2>5 முனை போட்டி</h2><p>தேர்தலுக்கான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D">வேட்பு மனு தாக்கல்</a> கடந்த 9-ந் தேதி தொடங்கியது. தி.மு.க. வேட்பாளராக சேது செல்வம், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த், இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளராக சலீம், நாம் தமிழர் கட்சி வேட்பாளரக கார்த்திக் குமாரி ஆகியோர் அறிவிக்கப்பட் டுள்ளனர்.</p><p>காங்கிரஸ் வேட்பாளராக விநாயகம் அதிகாரபூர்வமாக இன்று அறிவிக்கப்பட உள்ளார். இதனால் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.</p><h2>மனுதாக்கல் செய்யவில்லை</h2><p>ஆனால் தொடக்க நாட்களான 9,10 மற்றும் 11 ஆகிய 3 நாட்களில் பிரதான அரசியல் கட்சிகளோ அல்லது சுயேட்சை வேட்பாளர்களோ யாரும் மனு தாக்கல் செய்ய ஆர்வம் காட்டவில்லை. </p><p>கடந்த 12, 13 மற்றும் 14-ந் தேதிகளில் தொடர்ச்சியாக அரசு விடுமுறை நாட்கள் வந்ததால் வேட்பு மனுக்கள் பெறப்படவில்லை. இருப்பினும் வேட்புமனு படிவங்களை வேட்பாளர்கள் பெற்று, தேவையான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை சரிபார்த்து தயார் நிலையில் வைத்துள்ளனர்.</p><h2>குலதெய்வ கோவிலில் வழிபாடு</h2><p>விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துடன் பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை தங்களின் குலதெய்வ கோவில்களில் வைத்து வழிபாடு செய்துள்ளனர். இன்றும் அரசியல் கட்சிகள் மனு தாக்கல் செய்வதற்கு ஆர்வம் காட்டவில்லை.</p><h2>நாளை மனு தாக்கல்</h2><p>நாளை நல்ல நாள் என்பதால் நட்சத்திரம், நேரம் பார்த்து ஜோதிடர்கள் குறித்து கொடுத்த நேரத்தில் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் புடைசூழ ஊர்வலமாக சென்று மனுதாக்கல் செய்ய வேட்பாளர்கள் ஆயத்தமாகியுள்ளனர்.</p><p>வேட்புமனு பெறப்படும் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலக வளாகத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வண்ணம் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே மனுதாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவர்.</p><p>தேர்தலில் போட்டியிடும் பொது பிரிவு வேட்பாளர்கள் ரூ.10 ஆயிரம், எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவு வேட்பாளர்கள் ரூ.5 ஆயிரம் வைப்பு தொகையாக செலுத்த வேண்டும்.</p><p>தேர்தல் விதிமுறைகளின் படி, செல்லு படியாகும் ஓட்டுகளில் 6-ல் ஒரு பங்கை பெற தவறினால் வேட்பாளர்கள் செலுத்திய இந்த வைப்புத் தொகை (டெபாசிட்) திருப்பித் தரப்படாது. மனு தாக்கல் நாளை மாலை 3 மணி யுடன் நிறைவு பெறுகிறது.</p><h2>வேட்புமனு பரிசீலனை</h2><p>வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வருகிற 17-ந் தேதி காலை 11 மணிக்கு தட்டாஞ்சாவடி வி.வி.பி. நகரில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தின் 2-ம் தளத்தில் நடக்கிறது.</p><p>தேர்தல் விதிகளின்படி வேட்பாளர்களும், அவர்களின் தகுதியுடைய பிரதிநிதிகளும் மட்டுமே இந்த நிகழ்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.</p><p>ஏற்கப்பட்ட வேட்பாளர்களில், போட்டியிட விரும்பாமல் மனுவை திரும்பப் பெற விரும்புபவர்களை வருகிற 19-ந் தேதி மாலை 3 மணிக்குள் அதற்கான அறிவிப்பை சமர்ப்பிக்க வேண்டும்.</p><h2>வேட்பாளர்கள் சின்னம்</h2><p>தட்டாஞ்சாவடி ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலகத்தின் முதல் தளத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரி அர்ஜுன் ராமகிருஷ்ணன் அல்லது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி ஞானவேலுவிடம் இதற்கான கடிதத்தை வழங்க வேண்டும்.</p><p>மனுக்கள் திரும்ப பெறப்பட்ட பிறகு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கப்படும்.</p><p>இதைத் தொடர்ந்து, தட்டாஞ்சாவடி தொகுதிக்கான ஓட்டுப்பதிவு அக்டோபர் 6-ந் தேதி நடைபெறும். தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் அக்டோபர் 9-ந் தேதி எண்ணப்பட்டு அதிகாரப்பூர்வ முடிவுகள் அறிவிக்கப்படும்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை (16.09.2026) மின்தடை ஏற்படும் பகுதிகள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-42</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-42#comments</comments><guid isPermaLink="false">2db5a3fa-8ef7-4c13-9f4f-4e47c59c7194</guid><pubDate>Tue, 15 Sep 2026 07:46:06 +0000</pubDate><atom:updated>2026-09-15T07:46:06.885Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TNEB,மின்சார வாரியம்,chennai power cut,தமிழ்நாடு மின்சார வாரியம்,சென்னையில் மின்தடை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/wjl8v1wo/powercut0.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/wjl8v1wo/powercut0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் <a href="https://www.maalaimalar.com/topic/சென்னையில்-மின்தடை">மின் தடை</a> செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><p>அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (16.09.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.  அதன்படி, நாளை திருவொற்றியூர் பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-</p><h2><strong>பரங்கிமலை</strong></h2><p>ராமர் கோவில் தெரு, மவுண்ட் பூந்தமல்லி ரோடு, நசரதபுரம், கணபதி காலனி, வசந்தம் நகர், கலைஞர் நகர், தண்டுமா நகர், போலீஸ் குவார்ட்டர்ஸ், செவன் ஹில்ஸ் தெரு, மீனம்பாக்கம், பாண்டியன் தெரு, மாரீசன் 1 முதல் 6வது தெரு, திருவள்ளுவர் நகர், குமரன் நகர், குமரன் தெரு காலனி, பர்மா காலனி, காரையார் கோவில் தெரு, வடக்கு அணிவகுப்பு சாலை, இந்திரா நகர், அதிகாரி பயிற்சி அகாடமி, கடற்படை குடியிருப்பு பகுதி, துளசிங்கபுரம், மரியாபுரம், மதியாஸ் நகர், ஐரோப்பிய லைன், பஜார் சாலை, மேட்டுத் தெரு, ஆற்காடு பேட்டை, மர்பிமான் தெரு, 1வது மற்றும் ஜி.பி. காலனி, டீச்சர்ஸ் காலனி, எம்ஜிஆர் நகர்.</p><h2><strong>தாம்பரம்</strong></h2><p>பெருங்களத்தூர்-காமராஜர் ஹைரோடு, கணேஷ் நகர், லிங்கம் நகர், ஷர்மிளா நகர், பாரதி அவென்யூ, பாலாஜி நகர், காகபுஞ்சந்தர் நகர், புதிய பெருங்களத்தூர், மாடம்பாக்கம், சுதர்சன் நகர், அம்பிகா நகர், ஞானந்தா நகர், கணபதி நகர், ஜெயின் சுதர்சன், தேனுகாம்பாள் நகர், ராகவேந்திரா நகர், ராகவேந்திரா கார்டன்.</p><h2><strong>கொரட்டூர்</strong></h2><p>ஆர்எஸ் சாலை, எம்டிஎச் சாலை, தில்லை நகர் மற்றும் விரிவாக்கம், சாவடி தெரு, மேனாம்பேடு சாலை, திருமுல்லைவாயில் சாலை, பிராமண தெரு, கங்கையம்மன் கோவில் தெரு, சென்ட்ரல் அவென்யூ தெரு 17-24 மற்றும் 35-41, வன்னியர், கிராமினி தெரு, ரெட்டி தெரு, கஸ்தூரி நகர் 1-3வது தெரு, சிவஸ்தாக்தி நகர் 1-3வது தெரு, TNHB 3வது-8வது தெருக்கள், கிழக்கு அவென்யூ, மொகப்பையர் சாலை, கிரீன் வியூ காலனி, சீயோன் தெரு, நேரு நகர்.</p><h2><strong>ராயபுரம்</strong></h2><p>விஓசி நகர், ஆர்.கே.நகர், திலகர் நகர், எல்லையமுதலி தெரு, சேனியம்மன் கோவில் தெரு, டி.எச்.ரோடு, டோல்கேட், ஸ்டான்லி, பழைய வண்ணாரப்பேட்டை, கன்னிகோவில், கல்மண்டபம், கும்மாளம்மன் கோவில் தெரு, ஜி.ஏ.ரோடு, தாண்டவராய கிராமணி தெரு, சோலையப்பன் தெரு, ஸ்ரீரங்கம்மாள் தெரு, முதலி தெரு, ஜேவி கோவில் தெரு, ராமானுஜப்பர் தெரு, பால அருணாச்சல தெரு, வழக்கறிஞர் சின்னதம்பி I &amp; II தெரு, நமச்சிவாய செட்டி தெரு, ஜஸ்டிஸ் பந்தலை காலனி தெரு, வெங்கடாசலம் தெரு, தாண்டவராய முதலி தெரு.</p>]]></content:encoded></item><item><title>விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: மகாராஷ்டிராவில் ஒரு கிலோ ரூ.27 ஆயிரத்துக்கு விற்பனையாகும் &apos;தங்க கொழுக்கட்டை&apos;!</title><link>https://www.maalaimalar.com/news/national/vinayagar-chaturthi-special-golden-modak-worth-rs-27000-per-kg-in-maharashtra</link><comments>https://www.maalaimalar.com/news/national/vinayagar-chaturthi-special-golden-modak-worth-rs-27000-per-kg-in-maharashtra#comments</comments><guid isPermaLink="false">d54ab6db-b8aa-47ab-81bd-adeb19766183</guid><pubDate>Tue, 15 Sep 2026 07:32:57 +0000</pubDate><atom:updated>2026-09-15T07:32:57.773Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,மகாராஷ்டிரா,விநாயகர் சதுர்த்தி,Vinayaka Chaturthi,Gold Modak,Silver Kozhukkattai,Edible Gold Leaf,தங்க கொழுக்கட்டை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/5suizf66/kkk.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold Modak]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/5suizf66/kkk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாரம்பரிய சுவையுடன் கூடிய இந்த கொழுக்கட்டை முந்திரி, பாதாம், பிஸ்தா, பாலாடைக்கட்டி (கவா), குங்குமப்பூ மற்றும் தூய்மையான நெய் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. </p><p>நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் விற்பனை செய்யப்படும் 24 காரட் 'தங்க கொழுக்கட்டை' (கோல்டன் மோதக்) பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.</p><h2>ஆடம்ப<strong>ர நெய்வேத்திய</strong>ம்</h2><p>நாசிக்கின் வித்யா விகாஸ் சர்க்கிள் பகுதியில் அமைந்திருக்கும் '<a href="https://www.maalaimalar.com/news/topnews/education-is-god-go-study-bro-quirky-ganesha-statue">சாகர் ஸ்வீட்ஸ்</a>' எனும் பிரபல இனிப்பகம் விநாயக பெருமானின் நைவேத்தியத்திற்காக இந்த தங்க முலாம் பூசப்பட்ட சிறப்பு கொழுக்கட்டையைத் தயாரித்துள்ளது. சந்தையில் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ள நிலையிலும், இந்த கொழுக்கட்டை ஒரு கிலோ ரூ.27,000 என நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு தனி கொழுக்கட்டையின் விலை ரூ.540 ஆக உள்ளது.</p><h2>2<strong>4 காரட் தங்க</strong>ம்</h2><p>பாரம்பரிய சுவையுடன் கூடிய இந்த கொழுக்கட்டை முந்திரி, பாதாம், பிஸ்தா, பாலாடைக்கட்டி (கவா), குங்குமப்பூ மற்றும் தூய்மையான நெய் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதன் வெளிப்புற அலங்காரத்திற்காக 24 காரட் தூய்மையான, சாப்பிடக்கூடிய தங்க தகடு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த கடை உரிமையாளர் தீபக் சவுத்ரி தெரிவிக்கையில், விநாயகர் சதுர்த்தியின் முதல் நாளிலேயே சுமார் 10 கிலோ தங்க கொழுக்கட்டைகள் விற்பனையாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p>பொதுமக்களின் பல்வேறு சுவை விருப்பங்களை பூர்த்தி செய்யும் வகையில், இந்த இனிப்பகத்தில் 25-க்கும் மேற்பட்ட கொழுக்கட்டை வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் சாதாரண காஜு (முந்திரி) கொழுக்கட்டை ஒரு கிலோ ரூ. 2,000-க்கும், உலர் பழங்கள் (டிரை ஃப்ரூட்ஸ்) மற்றும் அத்திப்பழக் கொழுக்கட்டைகள் கிலோ ரூ. 1,400 முதல் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் வெள்ளி முலாம் பூசப்பட்ட 'சில்வர் கொழுக்கட்டை' கிலோ ரூ. 2,000-க்கு விற்பனையாகிறது.</p><h2>சாப்பிட<strong>க்கூடிய தங்கம்</strong></h2><p>உணவில் பயன்படுத்தப்படும் இந்த தங்கம் 'E-175' எனும் குறியீட்டின் கீழ் உலகளாவிய உணவுப் பாதுகாப்பு அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும். 23 முதல் 24 காரட் வரையிலான தூய்மையான தங்கம் மனித உடலின் செரிமான அமிலங்களுடன் எந்த வேதியியல் வினையும் புரியாது என்பதால், செரிமான மண்டலத்தின் வழியாக அப்படியே வெளியேறிவிடும். இதனால் இதை உட்கொள்வது பாதுகாப்பானது என கருதப்பட்டாலும், இதில் உடலுக்குத் தேவையான எந்த ஊட்டச்சத்துக்களோ மருத்துவ நன்மைகளோ இல்லை என்பதும், இது வெறும் ஆடம்பர அழகிற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>அம்பாசமுத்திரத்தில் திடீர் கனமழையால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்து சேதம் - விவசாயிகள் கவலை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ambasamudram-paddy-bags-soaked-and-damaged-by-unexpected-heavy-rain</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ambasamudram-paddy-bags-soaked-and-damaged-by-unexpected-heavy-rain#comments</comments><guid isPermaLink="false">b02b17ea-d49a-4b54-a3f9-5a076e2e4997</guid><pubDate>Tue, 15 Sep 2026 07:27:36 +0000</pubDate><atom:updated>2026-09-15T07:27:36.937Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விவசாயிகள்,Paddy Procurement,Ambasamudram,அம்பாசமுத்திரம்,Paddy Damaged,Farmers Distress,நெல்மூட்டைகள் சேதம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/4ipjky0u/Paddy-Damaged" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Paddy Damaged ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/4ipjky0u/Paddy-Damaged?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை மாவட்டம் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">அம்பாசமுத்திரம் </a>மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலையில் பெய்த திடீர் கனமழை காரணமாக, விவசாயிகள் அறுவடை செய்து விற்பனைக்காகக் குவித்து வைத்திருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மற்றும் நெல்மணிகள் மழைநீரில் நனைந்து சேதமடைந்துள்ளன.</p><p>இதனால் தங்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.</p><h2><strong>திடீர் மழையால் வந்த சோதனை</strong></h2><p>நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சுற்றுவட்டார பகுதிகளான அயன் சிங்கம்பட்டி, ஜமீன் சிங்கம்பட்டி, வைராவி குளம், தெற்கு பாப்பாங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்போது நெல் அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p><p>விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் அறுவடை செய்த <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">நெல்மணிகளை </a>வீடுகளின் முன்பும், சாலைகளிலும் குவித்து வைத்திருந்தனர்.</p><p>இந்த நிலையில், நேற்று மாலை நேரத்தில் இப்பகுதிகளில் திடீரென இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த எதிர்பாராத மழையினால், சாலைகளிலும் வீடுகளின் முன்பும் திறந்தவெளியில் கொட்டி வைக்கப்பட்டிருந்த நெல்மணிகள் அனைத்தும் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டும், நனைந்தும் சேதமடைந்தன.</p><h2><strong>கொள்முதல் நிலையங்களில் தேங்கிய நெல் மூட்டைகள்</strong></h2><p>அதேபோல், அரசு நெல்கொள்முதல் நிலையங்களில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF">விவசாயிகளால் </a>விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்டு, அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளும் இந்த திடீர் மழையில் சிக்கி நனைந்துள்ளன. முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் நெல் மூட்டைகள் அனைத்தும் மழைநீரில் ஊறியுள்ளன.</p><p>கடினமாக உழைத்து, அறுவடை செய்து விற்பனைக்குக் கொண்டு வந்த நெல்மணிகள் அனைத்தும் இப்படி மழைநீரில் நனைந்து பாழாகிக் கொண்டிருப்பதைப் பார்த்து விவசாயிகள் மிகுந்த கவலையும் வேதனையும் அடைந்துள்ளனர்.</p><h2><strong>முளைக்கும் நெல்மணிகள் : விவசாயிகள் கோரிக்கை</strong></h2><p>ஏற்கனவே நனைந்துள்ள நெல்மணிகள், தொடர்ந்து <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88">மழை பெய்தால் </a>காற்றில் உள்ள ஈரப்பதம் காரணமாக முளைத்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நெல்மணிகள் முளைத்துவிட்டால் அவற்றை அரசு கொள்முதல் செய்யாது என்பதால் விவசாயிகளுக்குப் பலத்த பொருளாதார இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.</p><p>எனவே, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு நெல் கொள்முதல் நிலையங்களை விரைவாகத் திறந்து, நெல் மூட்டைகளைத் தாமதமின்றி கொள்முதல் செய்ய வேண்டும் எனப் பாதிப்படைந்த விவசாயிகள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சிறுவர்களை வைத்து போதை வியாபாரம்.. அலமாரிக்குள் ஒளிந்த ஆசாமி - இலவச Wifi மூலம் சிக்கிய சுவாரஸ்யம்</title><link>https://www.maalaimalar.com/news/world/drug-trade-using-children-asami-who-hid-in-the-closet-after-seeing-the-police-interesting-caught-by-wifi</link><comments>https://www.maalaimalar.com/news/world/drug-trade-using-children-asami-who-hid-in-the-closet-after-seeing-the-police-interesting-caught-by-wifi#comments</comments><guid isPermaLink="false">5fb1698e-f867-42f9-83fa-bd4a3321cd8f</guid><pubDate>Tue, 15 Sep 2026 07:20:25 +0000</pubDate><atom:updated>2026-09-15T07:20:25.154Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>லண்டன்,britain,wifi,Drug smuggling,போதொப்பொருள் கடத்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/hogct28x/tn-13.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Wifi ]]></media:title><media:description type="html"><![CDATA[ Wifi ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/hogct28x/tn-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இங்கிலாந்தில் போலீசுக்கு பயந்து தலைமறைவான போதைப்பொருள் வியாபாரி ஒருவன் Wifi மூலம் சிக்கிய சுவாரஸ்ய பின்னணி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.</p><p>வடமேற்கு லண்டனில் ஜோயல் லூயிஸ் என்ற 34 வயது நபர் 'பாபி டிரக் லைன்' என்ற <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D">போதைப்பொருள் </a>நெட்வொர்க்கின் கீழ்   போதொப்பொருள் வியாபாரம் செய்து வந்துள்ளார். </p><p>வடக்கு கில்பர்ன் உள்ளிட்ட பகுதிகளுக்கு கோகைன், ஹெராயின் உள்ளிட்டவற்றை அவர் சப்ளை செய்து வந்துள்ளார். </p><p>போதைப்பொருள் கடத்துவதாக சந்தேகத்தின் பேரில் சில சிறுவர்களை பிடித்து அவர்களின் செல்போன்களை ஆய்வு செய்த்தில் லூயிஸ் உடைய செயல்பாடுகள் குறித்து போலீசுக்கு தெரியவந்துள்ளது.</p> <h2>தலைமறைவு</h2><p>இதை அறிந்த லூயிஸ் முன்னெச்சரிக்கையாக போலீசிடம் இருந்து தப்பிக்க தலைமறைவாகி உள்ளார்.தான் இருக்கும் இடத்தை கண்டுபிடித்துவிடக்கூடாது என்பதற்காக தனது மொபைல், லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களில் லொகேஷனை ஹைட் செய்யும் VPN நெட்வொர்க்கை அவர் பயனப்டுத்தியுள்ளளார். ஆனால் அவர்களின் சாதனங்களில் ஒன்று அவர் இருக்கும் இடத்தில் இலவச பப்ளிக் WIFI உடன் கனெக்ட் ஆகி இருந்துள்ளது.</p><p>அதை வைத்து போலீசார் அவரின் இருப்பிடத்தை கண்டுபிடித்துள்ளனர். இதன் பின் அதிகாரிகள் கைது வாரண்ட் உடன் அவர் இருந்த இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது அவர் கைதில் இருந்து தப்பிக்க அலமாரிக்குள் ஒளிந்துகொண்டிருந்திருக்கிறார். ஆனால் போலீசார் அவர் ஒளிந்திருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர்.</p> <h2>கைது</h2><p>கைது செய்யப்படும்போது அவர், "என்னை எப்படி கண்டுபிடித்தீர்கள்" என திரும்ப திரும்ப கேட்டிருக்கிறார். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போனில் ஒரு நாளைக்கு 100க்கும் மேற்பட்ட அழைப்புகள் செய்யப்பட்டு வந்திருப்பதும் சுமார் 250 டிரக் டீலர்களின் எண்கள் கான்டாக்ட்டில் இருப்பதும் தெரியவந்துள்ளது, மேலும் அவரிடம் இருந்து 8,800 பவுண்ட்கள் மதிப்புள்ள போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டது. 6 செல்போன்கள், 8000 பவுண்ட் பணம், ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது.</p> <p>சிறார்களையும், இளைஞர்களையும் வைத்து லூயிஸ் இந்த போதைப்பொருட்களை எளிதில் பல இடங்களுக்கு எடுத்துச் சென்றுள்ளதும் தெரியவந்துள்ளது. அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்களில் ஒன்று பாபி நெட்வொர்க் உடன் தொடர்புடையது. அதை வைத்து போலீசார் மொத்த நெட்வொர்க்கையும் பிடிக்கும் முயற்சியில் உள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிக்கு ரூ.1.28 கோடி &apos;டிஜிட்டல் கைது&apos; மோசடி: புனேவில் அதிர்ச்சி சம்பவம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/digital-arrest-scam-shocks-pune-retired-army-officer-cheated</link><comments>https://www.maalaimalar.com/news/national/digital-arrest-scam-shocks-pune-retired-army-officer-cheated#comments</comments><guid isPermaLink="false">8a4885bb-647c-432c-a6e7-c8bab0ced860</guid><pubDate>Tue, 15 Sep 2026 07:15:55 +0000</pubDate><atom:updated>2026-09-15T07:15:55.353Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஜிட்டல் கைது,Digital Arrest,புனே,Pune,மகாராஷ்டிரா மாநிலம்,cyber scam,Telecom Headquarters</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/9h403wnp/puu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Digital Arrest   ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/9h403wnp/puu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அடுத்தடுத்த வீடியோ அழைப்புகளில், காவல் சீருடையில் தோன்றிய மோசடி கும்பல், சி.பி.ஐ அதிகாரிகள் போல நடித்து அதிகாரியை மேலும் அச்சுறுத்தியது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/mass-scream-event-at-ocean-beach-san-francisco-stress-relief-gathering">மகாராஷ்டிரா மாநிலம்</a> புனேவைச் சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவர், 'டிஜிட்டல் கைது' எனப்படும் அதிநவீன ஆன்லைன் சைபர் மோசடியில் சிக்கி தனது வாழ்நாள் சேமிப்பான ரூ.1.28 கோடியை இழந்துள்ளார்.</p><h2><strong>போலி அழைப்பு</strong></h2><p>கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி, தொலைத்தொடர்பு தலைமையகத்தில் இருந்து பேசுவதாக கூறி பெண் ஒருவர் ராணுவ அதிகாரியை தொடர்பு கொண்டார். அதிகாரியின் பெயரில் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிலிருந்து மும்பையில் சட்டவிரோத அழைப்புகளும், ஆபாச வீடியோக்களும் அனுப்பப்படுவதாக அச்ச மூட்டினார். பின்னர், இந்த வழக்கு மும்பை குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறி, போலி காவல் அதிகாரியிடம் இணைப்பை வழங்கினார்.</p><p>சந்தேக நபர்கள் அதிகாரியின் வாட்ஸ்அப் எண்ணிற்குப் போலி எஃப்.ஐ.ஆர் நகல் மற்றும் சில ஆபாச படங்களை அனுப்பி பயமுறுத்தினர். மேலும், விசாரணை என்ற பெயரில் அவரது குடும்ப பின்னணி, வங்கி கணக்குகள், நிலையான வைப்புத் தொகைகள் மற்றும் தங்கம் கையிருப்பு குறித்து விரிவான விவரங்களை சேகரித்தனர். மூத்த குடிமகன் என்பதால் நேரில் கைது செய்யாமல் 'டிஜிட்டல் கைது' முறையில் கண்காணிப்பில் வைப்பதாக கூறி மிரட்டினர்.</p><h2>போலி சி.பி.ஐ <strong>அதிகாரிகள்</strong> </h2><p>அடுத்தடுத்த வீடியோ அழைப்புகளில், காவல் சீருடையில் தோன்றிய மோசடி கும்பல், சி.பி.ஐ அதிகாரிகள் போல நடித்து அதிகாரியை மேலும் அச்சுறுத்தியது. கணக்கு சரிபார்ப்பு என்ற பெயரில், அவரது நிலையான வைப்புத் தொகைகளை உடைத்து, அவர்கள் குறிப்பிட்ட பல்வேறு வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்புமாறு பணிக்கப்பட்டார். சட்ட நடவடிக்கைக்கும் கைதுக்கும் பயந்த அதிகாரி, ஆகஸ்ட் இறுதி வாரம் முதல் செப்டம்பர் முதல் வாரம் வரை பல தவணைகளில் மொத்தம் ரூ.1.28 கோடியை போலி கணக்குகளுக்கு மாற்றினார்.</p><h2>உண்மை<strong>யை அம்பலப்படுத்திய</strong> மகள்</h2><p>அடிக்கடி வெவ்வேறு கணக்குகளுக்கு பணம் அனுப்ப கோரியதால் ராணுவ அதிகாரியின் மனைவியாருக்கு சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து அவர் வெளிநாட்டில் வசிக்கும் தனது மகளுக்குத் தகவல் தெரிவித்தார். நிலைமையை உணர்ந்த மகள், பெற்றோரிடம் இது மோசடி என்பதை சுட்டிக்காட்டி உடனடியாகப் பணப்பரிவர்த்தனைகளை நிறுத்துமாறு அறிவுறுத்தினார்.</p><h2>கா<strong>வல்துறையில் புகா</strong>ர்</h2><p>பாதிக்கப்பட்ட அதிகாரி உடனடியாக புனே சைபர் குற்றப்பிரிவு காவல்துறையையும் உதவி எண்ணையும் தொடர்பு கொண்டு புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பணம் அனுப்பப்பட்ட போலி கணக்குகளை பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையோ அல்லது பிற அரசு அமைப்புகளோ ஒருபோதும் தொலைபேசி அல்லது வீடியோ அழைப்புகள் மூலம் 'டிஜிட்டல் கைது' செய்ய மாட்டார்கள் என்றும், பணமாற்றம் கேட்க மாட்டார்கள் என்றும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு சைபர் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>இந்தி பேசும் வடமாநிலங்களில் கூட முதலமைச்சர் விஜயின் தாக்கம் - அமைச்சர் செங்கோட்டையன்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sengottaiyan-says-cm-vijay-impact-extends-even-to-hindi-speaking-north-indian-states</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sengottaiyan-says-cm-vijay-impact-extends-even-to-hindi-speaking-north-indian-states#comments</comments><guid isPermaLink="false">fed31280-1eb7-457a-a2c2-faa6bffaa680</guid><pubDate>Tue, 15 Sep 2026 07:13:15 +0000</pubDate><atom:updated>2026-09-15T07:13:15.324Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,tvk,minister Sengottaiyan,அமைச்சர் செங்கோட்டையன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/vyqg9sos/sengottaiyan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Sengottaiyan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/vyqg9sos/sengottaiyan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மக்கள் பிரச்சனை குறித்து சட்டசபையில் பேசவில்லை என்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்தார்.</p> <p>ஈரோட்டு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D">செங்கோட்டையன்</a> கூறியதாவது:</p><p>* சட்டம்-ஒழுங்கு காக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் மக்கள் விருப்பங்களை பிரதிபலிக்கும் முதல்வராக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-is-meeting-london-based-tamils-this-evening">விஜய்</a> உள்ளார்.</p> <p>* இடைத்தேர்தலில் தவெக வெற்றி உறுதி, வாக்கு வித்தியாசம் எந்தளவுக்கு போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.</p><p>* பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டால் தமிழகத்தில் மின்வெட்டு குறைவு, மற்ற மாநிலங்களில் 20 நாட்களாக கூடுதல் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.</p> <p>* சோலார் மூலம் பெறும் மின்சாரத்தை இரவிலும் பயன்படும் வகையில் சேமித்தால் தமிழகம் மின்மிகை மாநிலமாகும்.</p><p>* பேரவையில் எம்எல்ஏக்கள் என்ன பேசினார்கள் என்பதை அனைவரும் கண்கூடாக பார்த்தனர்.</p> <p>* இந்தி பேசும் வடமாநிலங்களில் கூட முதலமைச்சர் விஜயின் தாக்கம் அதிகமாக உள்ளது.</p><p>* முதலமைச்சர் விஜய் வெளிநாடுகளுக்கு சென்று ரூ.11,000 கோடி அளவுக்கு தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்த்துள்ளார்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>&quot;செயற்கை நுண்ணறிவு மனித இனத்தையே அழிக்கலாம்&quot; – கூகுள் டீப்மைண்ட் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் அதிரடி ராஜினாமா!</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/google-deepmind-agi-safety-experts-warn-of-human-extinction-risk</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/google-deepmind-agi-safety-experts-warn-of-human-extinction-risk#comments</comments><guid isPermaLink="false">72b84de4-bdeb-4a83-a9c2-7a661b43d484</guid><pubDate>Tue, 15 Sep 2026 07:01:24 +0000</pubDate><atom:updated>2026-09-15T07:01:24.543Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Artificial Intelligence,Resignation,OpenAI,செயற்கை நுண்ணறிவு,Google DeepMind,AI Safety,Extinction Risk</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/a77fasvv/Google" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Google]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/a77fasvv/Google?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தொழில்நுட்பம் (Technology)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனித இனத்தையே ஒட்டுமொத்தமாக அழிக்கும் ஆற்றல் கொண்டது என்ற கடுமையான எச்சரிக்கையுடன், <a href="https://www.maalaimalar.com/topic/google">கூகுள் </a>டீப்மைண்ட் நிறுவனத்தின் முன்னணி AGI பாதுகாப்பு மற்றும் அலைன்மென்ட் ஆராய்ச்சியாளர்களான பிலால் சுஹ்தாய் மற்றும் ஜோஷ் எங்கெல்ஸ் ஆகியோர் தங்களது பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளனர். AI-இன் தற்போதைய வளர்ச்சி மனிதக் கட்டுப்பாட்டை மீறிப் போய்க்கொண்டிருப்பதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.</p><h2><strong>பிலால் சுஹ்தாயின் பகிரங்க எச்சரிக்கை</strong></h2><p>தனது ராஜினாமா குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிலால் சுஹ்தாய், "கூகுள் நிறுவனத்தில் AI-இன் வளர்ச்சியை நான் மிக அருகில் இருந்து பார்த்துள்ளேன். இந்த தொழில்நுட்பத்தின் தற்போதைய போக்கு எனக்கு மிகுந்த கவலையளிக்கிறது. AI மனித இனம் முழுவதையும் அழிக்கும் சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது என்றும், இந்த பேரழிவைத் தடுக்க நமக்கு இருக்கும் நேரம் மிக வேகமாக குறைந்து வருகிறது என்றும் நான் மனப்பூர்வமாக நம்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p>மேலும், 2022-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சாதாரண நிலையில் இருந்த <a href="https://www.maalaimalar.com/topic/ai-technology">AI தொழில்நுட்பம்</a>, வெறும் நான்கு ஆண்டுகளில் நினைத்துப் பார்க்க முடியாத வேகத்தில் வளர்ந்துள்ளதாகக் கூறியுள்ளார். குறிப்பாக, மனிதக் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படும் அளவுக்கு அதன் திறன் இப்போது அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">I recently resigned from Google DeepMind, where I worked on AGI safety and alignment research. At Google, I witnessed AI development first hand. I too am extremely concerned by the default trajectory of this technology. I earnestly believe that AI has the potential to kill us…</p>&mdash; bilal  (@bilalchughtai_) <a href="https://x.com/bilalchughtai_/status/2099592489023734085?ref_src=twsrc%5Etfw">September 14, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2><strong>ஜோஷ் எங்கெல்ஸ் விலகலும் புதிய பொறுப்பும்</strong></h2><p>கூகுள் டீப்மைண்டின் AGI பாதுகாப்பு குழுவில் பணியாற்றிய மற்றொரு முக்கிய ஆராய்ச்சியாளரான ஜோஷ் எங்கெல்ஸும் தனது பதவியை துறந்துள்ளார். "அடுத்த ஐந்து ஆண்டுகளில் AI அமைப்புகளால் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய மிகப்பெரிய ஆபத்து இருப்பதாக நான் கருதுகிறேன். இதன் துல்லியமான சதவிகிதம் எனக்குத் தெரியவில்லை என்றாலும், உலகிலேயே இப்போது கவனிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான அச்சுறுத்தல் இதுதான்" என்று அவர் தெரிவித்துள்ளார்.</p><p>டீப்மைண்டில் இருந்து விலகிய ஜோஷ் எங்கெல்ஸ், தற்போது AI நிறுவனங்களைக் கண்காணிக்கும் Model Evaluation and Threat Research என்ற லாப நோக்கமற்ற சுயாதீன ஆராய்ச்சி நிறுவனத்தில் இணைந்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">I left Google DeepMind&#39;s AGI safety team three weeks ago to join <a href="https://x.com/METR_Evals?ref_src=twsrc%5Etfw">@METR_Evals</a>. To some of my friends and family this seemed like a strange decision: I enjoyed the work I did at GDM and turned down offers from Anthropic and OpenAI. But I made the decision because of how high I…</p>&mdash; Josh Engels (@JoshAEngels) <a href="https://x.com/JoshAEngels/status/2098890712830169115?ref_src=twsrc%5Etfw">September 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2>கட்டுப்பாட்டை மீறிய AI சம்பவங்கள்</h2><p>ஆராய்ச்சியாளர்களின் இந்த அச்சத்திற்கு வலுசேர்க்கும் வகையில் அண்மையில் சில அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடந்துள்ளன.</p><p>ஓபன் ஏஐ நிறுவனத்தின் சோதனை கட்டத்தில் இருந்த சுமார் 700-க்கும் மேற்பட்ட ரகசிய AI ஏஜென்ட்டுகள், மனிதர்களின் அனுமதியின்றி தானாகவே இணையத்தைப் பயன்படுத்தி 'ஹக்கிங் ஃபேஸ்' என்ற மூன்றாம் தரப்பு நிறுவனத்தின் கணினிகளை ஹேக் செய்ய முயன்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/openai">ஓபன் ஏஐ</a>-இன் மேம்பட்ட AI ஏஜென்ட்டுகள், 90 ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற 'நேவியர்-ஸ்டோக்ஸ் மில்லினியம் சேலஞ்ச்' கணிதப் புதிருக்குத் தீர்வுகண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.</p><h2>அலைன்மென்ட் சிக்கல்</h2><p>AI அமைப்புகள் மனிதர்களின் நலனுக்கு விரோதமாக மாறாமல், மனித விருப்பப்படியே செயல்பட வைக்கும் தொழில்நுட்பத்திற்கு 'அலைன்மென்ட்' என்று பெயர். </p><p>தற்போதைய நிலையில், இந்த பாதுகாப்பு தொழில்நுட்பம் மிகவும் ஆரம்பக் கட்டத்திலேயே இருப்பதாகவும், ஆனால் AI-இன் செயல்திறன் அதைவிடப் பல மடங்கு வேகமாக வளர்ந்து வருவதாகவும் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.</p><h2>AI பாதுகாப்பு</h2><p>சூப்பர் இன்டெலிஜென்ட் எனப்படும் மனிதர்களை விடப் பல மடங்கு புத்திசாலித்தனமான AI அமைப்புகள் இன்னும் சில ஆண்டுகளில் உருவாக்கப்படலாம் என்பதால், மனித குலத்தின் பாதுகாப்பை உறுதிசெய்ய உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதே பணியிலிருந்து விலகிய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்களின் ஒருமித்த குரலாக உள்ளது.B</p>]]></content:encoded></item><item><title>தேசிய பொறியாளர்கள் தினம்: விஸ்வேஸ்வரய்யாவிற்கும் பொறியாளர் தினத்திற்கு என்ன சம்பந்தம்? </title><link>https://www.maalaimalar.com/news/topnews/why-is-visvesvaraya-linked-to-national-engineers-day</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/why-is-visvesvaraya-linked-to-national-engineers-day#comments</comments><guid isPermaLink="false">d3df7cc1-86aa-4c40-8c0c-907cdf192154</guid><pubDate>Tue, 15 Sep 2026 06:54:15 +0000</pubDate><atom:updated>2026-09-15T06:54:15.777Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>IIT,Digital India,Indian engineers,National Engineers Day,தேசிய பொறியாளர்கள் தினம்,Engineers Day 2026,Mokshagundam Visvesvaraya</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/6m8orumw/Engineers-Day-2026" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Engineers Day 2026 ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/6m8orumw/Engineers-Day-2026?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் ஆண்டுதோறும் செப்டம்பர் 15 அன்று <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">தேசிய பொறியாளர்கள் தினம் </a>மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்திய வரலாற்றின் மிகச்சிறந்த பொறியாளர், பொருளாதார மேதை, சிறந்த எழுத்தாளர் மற்றும் ராஜதந்திரி எனப் பன்முகத்தன்மை கொண்ட மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த நாளைப் போற்றும் வகையிலும், நாட்டின் வளர்ச்சிக்கு பொறியாளர்கள் ஆற்றி வரும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையிலும் இந்தத் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.</p><h2>நவீன மைசூரின் தந்தை</h2><p>விஸ்வேஸ்வரய்யா 1861 ஆம் ஆண்டு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE">கர்நாடகாவில் </a>உள்ள முட்டெனஹள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார். தனது உயர்கல்விக்காக சென்னைக்கு இடம்பெயர்ந்த அவர், <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">சென்னை பல்கலைக்கழகத்தில்</a> பி.ஏ. பட்டம் பெற்றார். பின்னர், அறிவியல் துறைக்கு மாறிய அவர், புனேயில் உள்ள அறிவியல் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் படித்துத் தேர்ந்தார்.</p><p>1912 முதல் 1918 வரை மைசூரின் திவானாகப் பொறுப்பு வகித்த அவர், பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்தார். இதன் காரணமாக "நவீன மைசூரின் தந்தை" என்று அவர் போற்றப்படுகிறார்.</p><h2>பொறியியல் சாதனைகள் மற்றும் பாரத ரத்னா</h2><p>விஸ்வேஸ்வரய்யா வெள்ள மேலாண்மை, நீர்ப்பாசனம் மற்றும் பொறியியல் துறையில் செய்த சாதனைகள் இன்றும் போற்றத்தக்கவை.</p><p>1908 ஆம் ஆண்டு மூசி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கிற்குப் பிறகு, உஸ்மான் சாகர் மற்றும் ஹிமாயத் சாகர் ஆகிய நீர்த்தேக்கங்களை வடிவமைத்து வெள்ளக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தினார்.</p><p>விசாகப்பட்டினம் துறைமுகத்தைக் கடல் அரிப்பிலிருந்து பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றினார்.</p><p>மைசூரின் தலைமைப் பொறியாளராக இருந்தபோது, அந்தப் பிராந்தியத்தின் நீர்ப்பாசனம் மற்றும் விவசாயத்திற்கு வாழ்வாதாரமாக விளங்கும் கிருஷ்ண ராஜ சாகர் அணையைக் கட்டுவதில் முக்கியப் பங்காற்றினார். தண்ணீரைச் சீராக ஒழுங்குபடுத்த தானியங்கி மதகுகளை அறிமுகப்படுத்தினார்.</p><p>"Planned Economy for India", "Reconstructing India" மற்றும் "Memoirs of My Working Life" உள்ளிட்ட பல முக்கிய புத்தகங்களையும் அவர் எழுதியுள்ளார்.</p><p>தொழில் மற்றும் பொதுப்பணித் துறையில் அவர் ஆற்றிய அசாத்திய பங்களிப்பைப் பாராட்டி, இந்திய அரசு 1955 ஆம் ஆண்டு நாட்டின் மிக உயரிய குடிமை விருதான<a href="https://www.maalaimalar.com/topic/bharat-ratna-award"> பாரத ரத்னா விருதை </a>அவருக்கு வழங்கி கௌரவித்தது.</p><h2><strong>தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளால் இயங்கும் பொறியாளர்களின் தசாப்தம்</strong></h2><p>இந்தியா ஆண்டுதோறும் சுமார் 15 லட்சம் பொறியியல் பட்டதாரிகளை உருவாக்குகிறது. நாட்டின் உள்கட்டமைப்பு, உத்திசார் தொழில்நுட்பங்கள் மற்றும் டிஜிட்டல் அமைப்புகளின் வளர்ச்சியில் பொறியாளர்கள் முக்கியப் பங்காற்றுகின்றனர்.</p><p>நெடுஞ்சாலைகள், பாலங்கள், மெட்ரோ நெட்வொர்க்குகள், அணைகள் மற்றும் மின் அமைப்புகளில் இவர்களின் பங்களிப்பு அளப்பரியது. ஆதார் , யுபிஐ மற்றும் டிஜிலாக்கர் போன்ற டிஜிட்டல் தளங்கள் பொறியாளர்களின் பெரும் உழைப்பால் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.</p><p>பாதுகாப்பு, விண்வெளி, அணுசக்தி, செயற்கை நுண்ணறிவு, ரோபாட்டிக்ஸ் ஆகிய துறைகளிலும் பொறியாளர்கள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.</p><p>2026 ஆம் ஆண்டின் நிலவரப்படி, நாட்டின் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி முறையின் முக்கிய அங்கமாக 23 இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், 31 தேசிய தொழில்நுட்பக் கழகங்கள் மற்றும் 26 இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகங்கள் விளங்குகின்றன.</p><p>உலகளாவிய தொழில்நுட்பம் தற்போது AI, செமிகண்டக்டர்கள், குவாண்டம் கம்ப்யூட்டிங், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் டீப் டெக் ஆகியவற்றை நோக்கி நகர்ந்து வரும் வேளையில், 2047 ஆம் ஆண்டிற்குள் 'விக்சித் பாரத்' (வளர்ந்த இந்தியா) என்ற நாட்டின் நீண்டகால இலக்கை அடைவதில் இந்தியப் பொறியாளர்கள் மிக முக்கியப் பங்காற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>கடலில் அலறித் தீர்த்த சான் பிரான்சிஸ்கோ மக்கள்: வினோத நிகழ்வின் பின்னணி என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/world/mass-scream-event-at-ocean-beach-san-francisco-stress-relief-gathering</link><comments>https://www.maalaimalar.com/news/world/mass-scream-event-at-ocean-beach-san-francisco-stress-relief-gathering#comments</comments><guid isPermaLink="false">21913bdb-375a-43db-bb70-7bde4fd6a00b</guid><pubDate>Tue, 15 Sep 2026 06:53:29 +0000</pubDate><atom:updated>2026-09-15T06:53:29.459Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,AI,San Francisco,modern lifestyle,Vocal Warm-ups,சான் பிரான்சிஸ்கோ,விஸ்டா டெல் மார்,ஓஷன் பீச்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/pcg6ipaa/sea.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ San Francisco]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/pcg6ipaa/sea.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தக் கூட்டு அலறல் நிகழ்வுக்கு முன்பாக, குரலின் அளவு, ஒலிக்கும் காலம் மற்றும் பாணி ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு கத்துதல் போட்டியும் நடத்தப்பட்டது. </p><p>அமெரிக்காவின் <a href="https://www.maalaimalar.com/news/national/shocking-video-of-a-car-hitting-a-female-biker-young-man-arrested-for-attempted-murder">சான் பிரான்சிஸ்கோ</a> நகரில் உள்ள 'ஓஷன் பீச்' கடற்கரையை ஒட்டிய 'விஸ்டா டெல் மார்' பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு, ஒரே நேரத்தில் கடலை நோக்கி உரக்க கத்தித் தங்களின் மன அழுத்தத்தை வெளிப்படுத்திய வினோத நிகழ்வு நடைபெற்றுள்ளது. "கடலை நோக்கி அடிவயிற்றிலிருந்து அலறும் நிகழ்வு" என்ற பெயரில் சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த டேனியல் ஈகன் என்பவரால் இந்த வித்தியாசமான கூட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது.</p><p>இன்றைய நவீன வாழ்க்கை முறையில் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு அழுத்தங்களே இந்த நிகழ்வுக்கான பிரதானக் காரணம். வாழ்க்கை செலவு அதிகரிப்பு, வீட்டின் வாடகை உயர்வு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சியால் ஏற்படும் வேலைவாய்ப்பு பயம், தனிமை, குடும்பப் பிரச்சனைகள் மற்றும் பொருளாதாரச் சவால்கள் என பலதரப்பட்ட மன அழுத்தங்களால் அவதியுறும் மக்கள், தங்களின் கோபத்தையும் விரக்தியையும் வெளிப்படுத்தவே இந்த மேடடைப் பயன்படுத்திக் கொண்டனர்.</p><h2>வெற்<strong>றி பெற்ற</strong> குரல்</h2><p>இந்தக் கூட்டு அலறல் நிகழ்வுக்கு முன்பாக, குரலின் அளவு, ஒலிக்கும் காலம் மற்றும் பாணி ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு கத்துதல் போட்டியும் நடத்தப்பட்டது. இதில் ஒலிம்பியா குக்லியெமோட்டோ என்ற பெண்மணி 121.9 டெசிபல் ஒலியில் அலறி முதல் பரிசை தட்டினார். இது உலக சாதனையான 129 டெசிபலுக்கு மிக நெருக்கமான அளவாகும். முதல் பரிசு பெற்ற அவருக்கு வெகுமதியாக ஒரு சிறிய மெகா போன் வழங்கப்பட்டது.</p><p>இந்த நிகழ்வு வெறும் கத்துதலோடு மட்டும் முடிந்துவிடவில்லை. நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு குரல் தசைப் பயிற்சிகள் அளிக்கப்பட்ட பின்னரே அலறல் போட்டிகள் தொடங்கின. இறுதியாக மாலை வேளையில் அனைவரும் இணைந்து ஒரே நேரத்தில் மிகப்பெரிய ஒலியில் அலறித் தங்கள் மன பாரத்தை குறைத்துக் கொண்டனர். நிகழ்வின் நிறைவாக, பங்கேற்பாளர்கள் கொண்டு வந்த நறுக்கிய பழங்களை பகிர்ந்து உண்டு தங்களின் மன அழுத்தத்தை குறைக்கும் ஒரு ஆரோக்கியமான சமூக கூட்டமாக இதை முடித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>பெண் Biker மீது கார் மோதிய பரபரப்பு வீடியோ.. கொலை முயற்சி வழக்கில் இளைஞர் கைது </title><link>https://www.maalaimalar.com/news/national/shocking-video-of-a-car-hitting-a-female-biker-young-man-arrested-for-attempted-murder</link><comments>https://www.maalaimalar.com/news/national/shocking-video-of-a-car-hitting-a-female-biker-young-man-arrested-for-attempted-murder#comments</comments><guid isPermaLink="false">a1ace204-113d-4438-8e76-50a9fe848ae9</guid><pubDate>Tue, 15 Sep 2026 06:48:55 +0000</pubDate><atom:updated>2026-09-15T06:48:55.728Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>haryana,அரியானா,வைரல் வீடியோ,சாலை விபத்து,road accident,viral video,பைக்கர்,Biker</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/br384pg4/tn-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ வீடியோ]]></media:title><media:description type="html"><![CDATA[ வீடியோ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/br384pg4/tn-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அரியானா மாநிலம் குருகிராமில் பைக்கில் சென்ற பெண்ணை காரால் இடித்துவிட்டுச் சென்ற நபர் ராஜஸ்தானில் வைத்து கைது செய்யப்பட்டார்.</p> <p>நேற்று காலை நடந்த இந்த சம்பவத்தில் குருகிராமின் கோல்ப் கோர்ஸ் சாலையில், சியா என்று அறியப்படும் ஷிவானி சவுகான் என்ற பெண் பைக்கர் சக பைக்கர்களுடன் தனது Aprilia RS 457 பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது கல்யான் பைன்ஸ்லா என்பவர் அவ்வழியே காரில் வந்துள்ளார். </p> <h2>ஹிட் அண்ட் ரன்</h2><p>அவர் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. காரை ஓட்டி வந்த பைன்ஸ்லா, சியாவின் பைக்கை பாலோ செய்துள்ளார். சியா பைக்கில் இருந்தவாறு, விலகிச் செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பைன்ஸ்லா, பின்னர் அவரது பைக்கை வேகமாக மோதிவிட்டுச் சென்றுள்ளார்.</p><p>இதில் சியா நிலைதடுமாறி பைக்குடன் நடுரோட்டில் கீழே விழுந்தார். இருப்பினும் பைக்கர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்திருந்ததால் அவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.</p> <h2>வைரல் வீடியோ</h2><p>மறுபுறம் பைன்ஸ்லாவின் கார் சக்கரம் தீப்பொறி பறக்க அங்கிருந்து சிட்டாக பறந்துவிட்டுட்டது. இந்த சம்பவத்தின் <a href="https://www.maalaimalar.com/collection/video-voxpop">வீடியோ </a>இணையத்தில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.</p><p>வைரல் வீடியோக்களை தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் அளித்த புகாரை தொடர்ந்தும் பைன்ஸ்லா மீது திட்டமிட்ட கொலை வழக்கு பதிவு செய்த குருகிராம் போலீசார் அவரை தேடி வந்தனர்.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">You got to book this car driver under “hit and run” case <a href="https://x.com/gurgaonpolice?ref_src=twsrc%5Etfw">@gurgaonpolice</a>. Bring them to justice. <br><br>Car No: HR 30Y 4949<br><br>: IG/rebelwheels_sia_ <a href="https://t.co/KngHxTZ5ke">pic.twitter.com/KngHxTZ5ke</a></p>&mdash; Yo Yo Funny Singh (@moronhumor) <a href="https://x.com/moronhumor/status/2099303842688926058?ref_src=twsrc%5Etfw">September 14, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>கைது</h2><p>இந்நிலையில் இன்று அவர் ராஜஸ்தானின் தவுசா பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கும் பைன்ஸ்லா, தான் வேண்டுமென்றே பைக் மீது மோதவில்லை என்றும் பைக்கில் இருந்தது பெண் என்று தனக்கு தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.</p><p>யு டர்ன் எடுக்கும்போது பைக் மீது தன் கார் மோதிவிட்டதாகவும், அதன்பிறகு பயம் காரணமாக நிற்காமல் சென்றுவிட்டதாகவும் அவர் தன் தரப்பு நியாயத்தை தெரிவித்துள்ளார்.</p><p>சிசிடிவி காட்சிகள் மற்றும் வாக்குமூலத்தின்படி போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் சூர்யவன்ஷி நீக்கம் - கம்பீரை சாடிய ஸ்ரீகாந்த்!</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/suryavanshi-dropped-from-first-match-against-afghanistan</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/suryavanshi-dropped-from-first-match-against-afghanistan#comments</comments><guid isPermaLink="false">ccb98d3a-3bfe-4f92-a8d3-2038517171c0</guid><pubDate>Tue, 15 Sep 2026 06:33:02 +0000</pubDate><atom:updated>2026-09-15T06:33:02.840Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Srikanth,Sanju samson,gautam gambhir,சஞ்சுசாம்சன்,சூர்யவன்ஷி,INDvsAFG,TeamIndia,Suryavanshi</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/yrhc42fo/Suryavanshi" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Suryavanshi  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/yrhc42fo/Suryavanshi?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆப்கானிஸ்தான் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D">கிரிக்கெட் </a>அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரில் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.</p><h2>சூர்யவன்ஷி</h2><p>இந்த ஆட்டத்தில் இளம் வீரரான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF">சூர்யவன்ஷி </a>நீக்கப்பட்டார். அபிஷேக் சர்மாவுடன், சஞ்சு சாம்சன் தொடக்க வீரராக களம் இறங்கினார். சாம்சன் 10 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதனால் இன்று நடைபெறும் 2-வது ஆட்டத்தில் அவர் இடத்தில் சூர்யவன்ஷி இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இதற்கிடையே 15 வயதான சூர்யவன்ஷியை முதல் போட்டியில் நீக்கியது தொடர்பாக பயிற்சியாளர் கம்பீர், அணி நிர்வாகத்தை இந்திய அணி முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான <a href="https://www.maalaimalar.com/topic/srikanth">கே.ஸ்ரீகாந்த்</a> கடுமையாக சாடியுள்ளார்.</p><h2>நியாயமற்ற முறை</h2><p>இது தொடர்பாக அவர் கூறியதாவது, இந்திய அணி நிர்வாகம் சூர்யவன்ஷியை சரியாக நடத்தவில்லை. நியாயமற்ற முறையில் அவர் நடத்தப்பட்டார். முதல் ஆட்டத்தில் அவர் விளையாடாததை எனது மனைவியே கேள்வி எழுப்பினார். </p><p>கடந்த ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருதை வென்ற ஒரு வீரர் ஏன் விளையாடவில்லை என்று வாதிட்டார். சூர்யவன்ஷி ஆடாததால் நாங்கள் ஒரு திரைப்படத்தை பார்க்க தொடங்கினோம்.</p><p>நீங்கள் சூர்யவன்ஷியை சரியாக கையாளவில்லை. இனி அவர் அடுத்த ஆட்டத்தில் விளையாடி ரன் ஏதும் எடுக்காவிட்டால் மீண்டும் அணியில் இருந்து நீக்கப்படுவோமோ என்று அவர் யோசிக்க நேரிடும்.</p><h2>நிச்சயமற்ற தன்மை</h2><p>இந்திய அணி நிர்வாகம் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D">சஞ்சு சாம்சனை</a> வைத்து விளையாடியது. அவர் மீது எனக்கு பரிதாபம் ஏற்படுகிறது. ஒன்று அவருக்கு தொடர்ந்து விளையாட வாய்ப்பு அளித்து விட்டு பிறகு நீக்க வேண்டும். அல்லது சூர்யவன்ஷியை நீக்காமல் தொடர்ச்சியாக போட்டியில் விளையாட வாய்ப்பு அளிக்க வேண்டும்.</p><p>இந்திய அணி நிர்வாகம் செய்யும் தவறு என்ன வென்றால் இருவருக்கும் தலா 2 போட்டிகள் மட்டுமே கிடைக்கின்றன. இது அந்த வீரர்களுக்கு நல்லதல்ல. தொடக்க வீரர்களை அடிக்கடி மாற்றுவது அணியில் தங்கள் இடம் குறித்த நிச்சயமற்ற தன்மை வீரர்களிடம் ஏற்படுத்தும். இவ்வாறு ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஆப்பிளின் புதிய iOS 27 அதிகாரப்பூர்வமாக வெளியீடு: ஐபோன் பயனர்களுக்கு காத்திருக்கும் அசத்தல் அம்சங்கள்!</title><link>https://www.maalaimalar.com/news/topnews/apple-new-ios-27-official-release-stunning-features-await-iphone-users</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/apple-new-ios-27-official-release-stunning-features-await-iphone-users#comments</comments><guid isPermaLink="false">b4c49de3-807f-47d5-ba90-cd55548dabf8</guid><pubDate>Tue, 15 Sep 2026 06:31:36 +0000</pubDate><atom:updated>2026-09-15T06:31:36.711Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Apple,Iphone,ஜெமினி,gemini,Siri,ஆப்பிள் நிறுவனம்,ஐபோன்,iOS 27,சீரி செயலி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/rc1n2j3q/apple.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ iOS 27 ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/rc1n2j3q/apple.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தொழில்நுட்பம் (Technology)</category><content:encoded><![CDATA[ <p>ஐபோனின் விஷுவல் இண்டலிஜென்ஸ் அம்சம் இந்த அப்டேட்டில் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. </p><p>ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் பயனர்களுக்கான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புதிய இயங்குதளமான iOS 27-ஐ உலகம் முழுவதும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. உலகளாவிய தொழில்நுட்ப மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, பல கட்டச் சோதனைகளுக்கு பிறகு இந்த அப்டேட் தற்போது பயனர்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப்பம் மற்றும் புதிய வடிவமைப்பு மாற்றங்களுடன் வெளிவந்துள்ள இந்த இயங்குதளம், ஐபோன் பயன்பாட்டு அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.</p><h2>புதிய சீ<strong>ரி ஏஐ</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/technology/techfacts/cheapest-countries-to-buy-iphone-duo">iOS 27</a> அப்டேட்டின் மிக முக்கியமான அம்சமாக மாற்றியமைக்கப்பட்ட புதிய சீரி செயலி பார்க்கப்படுகிறது. ஆப்பிளின் சொந்த ஏஐ மாடல்கள் மற்றும் கூகுளின் 'ஜெமினி' மாடல்களின் கூட்டுத் தொழில்நுட்பத்தில் இது உருவாக்கப்பட்டுள்ளது. பயனரின் தனிப்பட்ட சூழலைப் புரிந்து கொண்டு செயலிகளுக்கு இடையே தகவல்களைத் திரட்டுதல், கோப்புகளை மாற்றி அமைத்தல் மற்றும் சிக்கலான கேள்விகளுக்கு உடனடிப் பதிலளித்தல் போன்ற பணிகளை இந்த புதிய சீரி மிக எளிதாக செய்கிறது.</p><h2>விஷுவ<strong>ல் இண்டலிஜெ</strong>ன்ஸ்</h2><p>ஐபோனின் விஷுவல் இண்டலிஜென்ஸ் அம்சம் இந்த அப்டேட்டில் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கேமரா செயலி மூலம் பொருட்களை நேரடியாகப் பார்த்து அவற்றை அடையாளம் காண்பது, அது தொடர்பான கேள்விகளை சீரியிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது மற்றும் உடனுக்குடன் நடவடிக்கைகளை எடுப்பது சாத்தியமாகியுள்ளது. அதுமட்டுமன்றி, ஐபோன் திரையில் தெரியும் தகவல்களையும் படித்து புரிந்துகொண்டு பயனருக்கு உதவக்கூடிய திறன் இதன் சிறப்பு அம்சமாகும்.</p><h2>லிக்விட் கி<strong>ளாஸ் வடிவமைப்</strong>பு </h2><p>முந்தைய பதிப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட 'லிக்விட் கிளாஸ்' இடைமுக வடிவமைப்பு தற்போது கூடுதல் மாற்றங்களைப் பெற்றுள்ளது. திரையில் உள்ள ஐகான்கள் மற்றும் கட்டுப்பாடுகளின் ஒளிபுகும் தன்மையை பயனர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளக்கூடிய புதிய ஸ்லைடர் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இதனுடன் முகப்புத் திரையில் வைக்கப்படும் விட்ஜெட்களின் அளவை மிக பெரியதாக மாற்றும் வசதியும், லாக் ஸ்கிரீன் கடிகாரத்தின் அளவைச் சிறியதாக்கும் விருப்பமும் வழங்கப்பட்டுள்ளன.</p><h2>பாதுகா<strong>ப்பு கட்டுப்பா</strong>டுகள் </h2><p>குடும்பப் பயனர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, குழந்தைகளுக்கான பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் புதிய வசதிகள் இதில் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. 'ஆஸ்க் டூ பை' மற்றும் 'ஆஸ்க் டூ பிரவுஸ்' மூலமாக குழந்தைகள் பார்க்கும் உள்ளடக்கங்களை கண்காணிப்பதுடன், பயன்பாட்டு நேர வரம்புகளையும் அமைக்க முடியும். மேலும், அழைப்புகள், அலாரம், டைமர் மற்றும் அறிவிப்புகளுக்குத் தனித்தனியாக ஒலி அளவைக் கட்டுப்படுத்தும் வசதி, புதிய போன் செயலி வடிவமைப்பு மற்றும் சபாரி உலாவியில் தலைப்புகளின் அடிப்படையில் டேப்களைப் பிரிக்கும் அம்சம் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.</p><h2>ஆதரவு அளி<strong>க்கும் ஐபோ</strong>ன் மாடல்கள் </h2><p>புதிதாக அறிமுகமான ஐபோன் 18 தொடர் மற்றும் ஐபோன் டியூ ஆகிய மாடல்களில் இந்த iOS 27 இயங்குதளம் முன்னதாகவே நிறுவப்பட்டு வருகிறது. இது தவிர, ஐபோன் 11 தொடர் முதல் அதற்குப் பிந்தைய அனைத்து மாடல்கள் மற்றும் இரண்டாம், மூன்றாம் தலைமுறை ஐபோன் SE மாடல்களுக்கும் இந்த அப்டேட் கிடைக்கிறது. பயனர்கள் தங்கள் ஐபோனின் 'Settings' பகுதிக்குச் சென்று, 'General' என்பதைத் தேர்ந்தெடுத்து 'Software Update' என்பதைக் கிளிக் செய்து இந்த புதிய iOS 27 பதிப்பைத் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.</p>]]></content:encoded></item><item><title>லண்டன் வாழ் தமிழர்களை இன்று மாலை சந்திக்கிறார் முதலமைச்சர் விஜய் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-is-meeting-london-based-tamils-this-evening</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-is-meeting-london-based-tamils-this-evening#comments</comments><guid isPermaLink="false">0109e3e8-83d8-4c64-900c-0a86bdd86b8d</guid><pubDate>Tue, 15 Sep 2026 06:30:30 +0000</pubDate><atom:updated>2026-09-15T06:30:30.618Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/w5i8rrr6/vijay08.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய் ]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/w5i8rrr6/vijay08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதலீட்டாளர்களுடனான சந்திப்பை தொடர்ந்து இன்று மாலை லண்டன் வாழ் தமிழர்களை முதலமைச்சர் விஜய் சந்திக்க உள்ளார்.</strong></em></p><p>தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்</a> லண்டன் சென்றுள்ளார்.  அங்கு நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை அவர் தொடங்கி வைத்தார்.</p><h2><strong>புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்</strong> </h2><p>இந்த நிகழ்ச்சியை முடித்த பிறகு லண்டனில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்யவும், தொழிலை விரிவாக்கம் செய்யவும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அங்கு சுமார் ரூ.12ஆயிரத்து 300 கோடி அளவுக்கு தொழில் முதலீடுகள், முதலமைச்சர் விஜய் முன்னிலையில்  ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு  கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2><strong>சந்திப்பு</strong> </h2><p>இந்த முதலீட்டாளர்களுடனான சந்திப்பை தொடர்ந்து இன்று மாலை லண்டன் வாழ் தமிழர்களை முதலமைச்சர் விஜய் சந்திக்க உள்ளார்.</p><p>முறையான சந்திப்பு 15ஆம் தேதி இருக்கும் என தெரிவித்திருந்த நிலையில் நேற்று லண்டனில் உள்ள ரசிகர்களை அவர் தங்கியுள்ள தி ஷார்ட் நட்சத்திர விடுதியில் சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார்.</p><p>அதனைத் தொடர்ந்து இன்று லண்டன் வாழ் தமிழர்களை அவர் சந்திக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் அங்கு விரிவாக செய்யப்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>அமைச்சர் செங்கோட்டையனுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்தது சென்னை ஐகோர்ட்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-high-court-dismisses-election-case-against-minister-sengottaiyan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-high-court-dismisses-election-case-against-minister-sengottaiyan#comments</comments><guid isPermaLink="false">2fb9bf68-bb6b-4b02-838d-ee6f83041cfc</guid><pubDate>Tue, 15 Sep 2026 06:17:53 +0000</pubDate><atom:updated>2026-09-15T06:17:53.102Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,சென்னை ஐகோர்ட்,Madras HC,tvk,அமைச்சர் செங்கோட்டையன்,minister sengottaiyann</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/k6d3j3et/MadrasHC.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/k6d3j3et/MadrasHC.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இந்தநிலையில், இந்த தேர்தல் வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய மனு மீது அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிமுக வேட்பாளர் பிரபு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.  செங்கோட்டையனின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை ஐகோர்ட் நீதிபதி உத்தரவிட்டார்.</strong></em></p><p>தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கோபி செட்டிப்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட <a href="https://www.maalaimalar.com/topic/அமைச்சர்-செங்கோட்டையன்">செங்கோட்டையன்</a> வெற்றி பெற்றார். வருவாய்த்துறை அமைச்சரான செங்கோட்டையனின் வெற்றிக்கு எதிராக அதிமுக வேட்பாளர் பிரபு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். </p><p>அந்த மனுவில், செங்கோட்டையனின் வேட்புமனுவில் சான்றளித்துள்ள நோட்டரி வக்கீலின் உரிமம் காலாவதியாகிவிட்டதால், அந்த வேட்புமனுவை ஏற்றதே தவறு எனக் கூறியிருந்தார். இதேபோல், தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி அமைச்சர் செங்கோட்டையன் தரப்பிலும் <a href="https://www.maalaimalar.com/topic/சென்னை-ஐகோர்ட்">சென்னை ஐகோர்ட்டில்</a> மனு தாக்கல் செய்யப்பட்டது. </p><p>இந்தநிலையில், இந்த தேர்தல் வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய மனு மீது அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிமுக வேட்பாளர் பிரபு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.  </p><p>இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அமைச்சர் செங்கோட்டையன் மனுவை தீர்ப்புக்காக தள்ளிவைத்தார். இந்தநிலையில் இந்த மனு மீது நீதிபதி தீர்ப்பளித்தார். அதில், அமைச்சர் செங்கோட்டையனின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் மின்வெட்டு இருப்பது உண்மைதான் - திருமாவளவன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-says-it-is-true-there-are-power-cuts-tn</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-says-it-is-true-there-are-power-cuts-tn#comments</comments><guid isPermaLink="false">5b45e763-00af-48b7-ac81-d849155f6672</guid><pubDate>Tue, 15 Sep 2026 06:15:52 +0000</pubDate><atom:updated>2026-09-15T06:15:52.843Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தவெக,thirumavalavan,திருமாவளவன்,விசிக,vck,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/2l19wbxt/thirumavalavan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Thirumavalavan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/2l19wbxt/thirumavalavan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விசிக துரோகம் செய்துவிட்டதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்த திமுகவினர் முயற்சி செய்வதாக திருமாவளவன் கூறினார்.</p> <p>திருச்சியில் விசிக தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-says-communist-parties-have-right-to-stand-alone-in-elections">திருமாவளவன்</a> செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p><p>* தமிழகத்தில் மின்வெட்டு இருப்பது உண்மைதான்.</p><p>* மின்வெட்டு பிரச்சனையை சீர்செய்ய தவெக அரசு கூடுதல் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p> <p>* அதிகாரிகள் கூறுவதை கேட்டு தான் அமைச்சர்கள் பதிலளித்து கொண்டிருக்கின்றனர். அதிகாரிகள் உண்மை தகவலை கூற வேண்டும்.</p><p>* <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/police-case-filed-against-a-rasa-and-sekhar-babu">திமுகவினர் </a>ஆர்ப்பாட்டத்தில் மக்கள் முகம் சுழிக்கும் வகையில் அவதூறாக பேசுவது தவறு.</p><p>* விசிக துரோகம் செய்துவிட்டதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்த திமுகவினர் முயற்சி செய்கின்றனர்.</p> <p>* பதவிக்காக விசிக கூட்டணி மாறியதாக திமுக ஆதரவாளர்கள் பேசுகின்றனர்.</p><p>* திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை சரியாக வேண்டும்.</p><p>* பேருந்துகளுக்கு தவெக கொடி நிறத்தில் வண்ணம் பூசுவது ஏற்புடையதல்ல.</p><p>இவ்வாறு அவர் கூறினார்</p>]]></content:encoded></item><item><title>சர்வதேச ஜனநாயக தினம் 2026: அனைத்து குரல்களும் கேட்கும்போது ஜனநாயகம்  சிறக்கும்- ஐ.நா முக்கிய அழைப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/world/international-democracy-day-2026-democracy-thrives-when-every-voice-is-heard-un-appeal</link><comments>https://www.maalaimalar.com/news/world/international-democracy-day-2026-democracy-thrives-when-every-voice-is-heard-un-appeal#comments</comments><guid isPermaLink="false">20687075-4c52-4a33-8a40-63deaf57e1a2</guid><pubDate>Tue, 15 Sep 2026 06:13:09 +0000</pubDate><atom:updated>2026-09-15T06:13:09.815Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஐ.நா,Mother of Democracy,International Day of Democracy,Democracy  Day 2026,சர்வதேச ஜனநாயக தினம்,ஜனநாயக தினம் 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/22vg3kso/ff.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ International Day of Democracy ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/22vg3kso/ff.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தனிநபர்களின் முடிவெடுக்கும் உரிமைகளைப் பாதுகாத்தல், மனித உரிமைகளுக்கு முன்னுரிமை அளித்தல் மற்றும் சமூகத்தில் அனைத்துத் தரப்பு மக்களின் பங்களிப்பை உறுதி செய்வதை இக்கருப்பொருள் வலியுறுத்துகிறது.</p><p>உலகம் முழுவதும் ஜனநாயகத்தின் அடிப்படை கோட்பாடுகள், மனித உரிமைகள் மற்றும் மக்களின் நேரடிப் பங்கேற்பை வலியுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 15-ஆம் தேதி இன்று சர்வதேச ஜனநாயக தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 2026-ஆம் ஆண்டிற்கான ஜனநாயக தின கொண்டாட்டங்கள், உலகின் பல்வேறு நாடுகளின் மக்களிடையேயான கருத்து சுதந்திரத்தையும் வெளிப்படையான நிர்வாகத்தையும் மையமாகக் கொண்டு விரிவாக முன்னெடுக்கப்படுகின்றன.</p><h2>2026-ஆம் <strong>ஆண்டின் மையப்பொ</strong>ருள்</h2><p>இந்த ஆண்டின் சர்வதேச ஜனநாயக தினத்திற்கான ஐக்கிய நாடுகள் சபையின் முக்கியக் கருப்பொருள் "அனைத்து குரல்களும் மதிப்பைப் பெறும்போது, ஜனநாயகம் தனது பலனைத் தரும்" (When every voice counts, democracy delivers) என்பதாகும். தனிநபர்களின் முடிவெடுக்கும் உரிமைகளைப் பாதுகாத்தல், மனித உரிமைகளுக்கு முன்னுரிமை அளித்தல் மற்றும் சமூகத்தில் அனைத்துத் தரப்பு மக்களின் பங்களிப்பை உறுதி செய்வதை இக்கருப்பொருள் வலியுறுத்துகிறது. </p><p>ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் வெளியிட்டுள்ள செய்தியில், ஜனநாயகம் என்பது வெறும் தேர்தல்கள் மற்றும் வாக்களிப்புடன் முடிந்துவிடுவதில்லை என்றும், அது சமூகத்தில் அனைவரையும் உள்ளடக்கிய அமைதி, நம்பிக்கை மற்றும் வெளிப்படையான சட்டத்தின் ஆட்சியை உருவாக்குவதில்தான் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>சர்வதேச ஜனநாயக தின கொண்டாட்டங்களின் பின்னணியில் பல தசாப்தகால சர்வதேச முயற்சிகள் உள்ளன. 1997-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், சர்வதேச நாடாளுமன்றங்களின் ஒன்றியம் ஜனநாயகத்தின் உலகளாவிய பிரகடனத்தை ஏற்றுக்கொண்டது.</p><p>அதனைத் தொடர்ந்து 2006-ஆம் ஆண்டு கத்தாரின் தோஹாவில் நடைபெற்ற புதிய மற்றும் மீட்டெடுக்கப்பட்ட ஜனநாயக நாடுகளின் சர்வதேச மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், கத்தார் நாடு முன்மொழிந்த வரைவுத் தீர்மானத்தை 2007 நவம்பர் 8 அன்று <a href="https://www.maalaimalar.com/news/world/tragedy-in-new-york-indian-origin-woman-nepali-american-friend-killed-on-subway-tracks">ஐக்கிய நாடுகள் </a>பொதுச்சபை ஒருமனதாக நிறைவேற்றியது. இதன் தொடர்ச்சியாக, 2008-ஆம் ஆண்டு முதல் முதன்முறையாக உலகளாவிய அளவில் செப்டம்பர் 15 அன்று சர்வதேச ஜனநாயக தினம் முறையாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.</p><h2>ஐ.நா அமைப்பின் 2<strong>0-ஆவது ஆண்டு</strong> மைல்கல்</h2><p>இந்த ஆண்டின் ஜனநாயக தினத்தை முன்னிட்டு, நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் 'ஐக்கிய நாடுகள் ஜனநாயக நிதியம்' மற்றும் 'கூட்டாண்மைக்கான ஐ.நா அலுவலகம்' இணைந்து சிறப்பு மாநாடுகளை நடத்துகின்றன. குறிப்பாக, ஐக்கிய நாடுகள் ஜனநாயக நிதியம் உருவாக்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடையும் தருணத்தில் இந்த நிகழ்வு நடைபெறுவது கூடுதல் சிறப்பு சேர்க்கிறது. இந்த 20 ஆண்டுகளில், உலகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிவில் சமூகத் திட்டங்கள், பாலின சமத்துவ முயற்சிகள் மற்றும் ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு இந்த நிதி உதவி வழங்கி உள்ளது.</p><p>சர்வதேச ஜனநாயக தின கொண்டாட்டங்களில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பங்களிப்பு முக்கியமானது. இந்தியா "ஜனநாயகத்தின் தாய்" என்ற கருத்தாக்கத்தை உலக அளவில் முன்வைத்து வருகிறது. கிராம பஞ்சாயத்துகள் முதல் நாடாளுமன்றம் வரை பல அடுக்குத் தேர்தல் முறைகளைக் கொண்டுள்ள இந்தியாவில், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களின் பங்களிப்பும் மக்கள் பங்கேற்கும் 'கிராம சபா' கூட்டங்களும் ஜனநாயகத்தின் அடிமட்ட வலிமையைப் பிரதிபலிப்பதாக சர்வதேச அரங்கில் சுட்டிக்காட்டப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>தொலைக்காட்சியின் ஆஸ்கார்.. 78வது எம்மி விருது விழாவில் வெற்றி பெற்ற தொடர்கள், நடிகர்கள் பட்டியல்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-oscars-of-television-list-of-winners-at-the-78th-emmy-awards-ceremony</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-oscars-of-television-list-of-winners-at-the-78th-emmy-awards-ceremony#comments</comments><guid isPermaLink="false">041ca8b4-95f3-405d-b7bf-77c7c08a50d0</guid><pubDate>Tue, 15 Sep 2026 06:08:16 +0000</pubDate><atom:updated>2026-09-15T06:08:16.346Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Hollywood,தொலைக்காட்சி தொடர்,ஹாலிவுட்,எம்மி விருதுகள்,Emmy Awards,television series</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/2pcbp9t3/tn-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ காமெடி தொடர் விடோஸ் பே - சிறந்த துணை நடிகை விருது வென்ற கேட் ஓ பிளின் ]]></media:title><media:description type="html"><![CDATA[ காமெடி தொடர் விடோஸ் பே - சிறந்த துணை நடிகை விருது வென்ற கேட் ஓ பிளின் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/2pcbp9t3/tn-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p> 78வது எம்மி விருதுகள் விழாவில் வெற்றி பெற்றவர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. </p><p>திரைப்படங்களுக்கு <a href="https://www.maalaimalar.com/topic/oscars">ஆஸ்கார் </a>போல அமெரிக்காவில் தொலைக்காட்சி தொடர் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு ஆண்டுதோறும் <a href="https://www.maalaimalar.com/topic/emmy-award">எம்மி விருதுகள்</a> வழங்கப்படுகின்றன. </p><p>அந்த வகையில் இவ்வாண்டு 78வது எம்மி விருதுகள் விழா லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பீகாக் திரையரங்கில் இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு தொடங்கி நடைபெற்றது. </p><p>இவ்வாண்டு விருது விழாவை பிரபல நடிகை மரிஸ்கா ஹார்கிடா தொகுத்து வழங்கினார். </p><p>இவ்வாண்டு அதிகபட்சமாக விடோஸ் பே (Widow's Bay) தொலைக்காட்சி தொடர் சிறந்த காமெடி சீரீஸ் உட்பட 14 பிரிவுகளில் விருது வென்றுள்ளது. </p><p>அடுத்ததாக தி பிட் (The Pitt) தொடர் சிறந்த டிராமா சீரீஸ் விருதை வென்றது. டிராமா சீரீஸில் சிறந்த முதன்மை கதாபாத்திர விருதை நோவா வைல் வென்றார். </p><p>ஆப்பிள் டிவி,  2026 ஆம் ஆண்டிற்கான எம்மி விருதுகளில் மொத்தம் 28 பிரிவுகளில் விருதுகளை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.</p><h2>விருது பட்டியல்</h2><p>சிறந்த நாடக தொடர் விருதை தி பிட் (The Pitt) வென்றது. தி டிப்லோமேட், பாரடைஸ், பல்ரிப்ஸ் ஆகியவை போட்டியில் இருந்தபோதும் வெற்றி பெறவில்லை.</p><p>சிறந்த நகைச்சுவை தொடர் விருதை விடோஸ் பே (Widow's Bay) வென்றுள்ளது.</p><p>நாடக தொடரில் சிறந்த நாயகன் விருதை 'தி பிட்' தொடரில் நடித்த நோவா வைல் வென்றார்.</p><p>நாடக தொடரில் சிறந்த துணை நடிகர் விருதை 'டாஸ்க்' தொடரில் நடித்த டாம் பெல்ப்ரே வென்றார்.</p><p>நாடக தொடரில் சிறந்த துணை நடிகை விருதை 'தி டிப்லோமேட்' தொடரில் நடித்த அலிசன் ஜனே வென்றார்.</p> <p>காமெடி தொடரில் சிறந்த நாயகன் விருதை 'விடோஸ் பே' வில் நடித்த மேத்யூவ் ரைஸ் வென்றார்.</p><p>காமெடி தொடரில் சிறந்த கதாநாயகி விருதை 'ஹேக்ஸ்' (Hacks) தொடரில் நடித்த ஜீன் ஸ்மார்ட் வென்றார்.</p><p>காமெடி தொடரில் சிறந்த துணை நடிகர் விருதை 'விடோஸ் பே' வில் நடித்த ஸ்டீபன் ரூட் வென்றார். </p><p>காமெடி தொடரில் சிறந்த றந்த துணை நடிகை விருதை விடோஸ் பே தொடரில் நடித்த கேட் ஓ பிளின் வென்றார். </p><p>Limited or Anthology Series or Movie பிரிவில் சிறந்த துணை நடிகர் விருதை DTF St Louis இல் நடித்த டேவிட் ஹார்பர் வென்றார். </p><p>அதே பிரிவில் சிறந்த துணை நடிகை விருதை அதே DTF St Louis இல் நடித்த லிண்டா கார்டெனெல்லி வென்றார்.</p> <p>நாடக தொடரில் சிறந்த கெஸ்ட் ரோல் நடிகை விருதை பாரடைஸ் தொடரில் தோன்றிய சைலேன் உட்லி பெற்றார்.</p><p>நாடக தொடரில் சிறந்த கெஸ்ட் ரோல் நடிகர் விருதை தி பிட் தொடரில் தோன்றிய எர்னஸ்ட் ஹார்டென் பெற்றார்.</p><p>Limited or Anthology Series or Movie சிறந்த இயக்கம் விருது DTF St Louis க்கு சென்றது. அதே பிரிவில் சிறந்த திரைக்கதை விருதும் அதே தொடருக்கு சென்றது.</p> <p>சிறந்த தொலைக்காட்சி பட விருது 'ரிமார்க்கப்லி பிரைட் கிரியேச்சர்ஸ்' -க்கு வழங்கப்பட்டது.</p><p>சிறந்த லைவ் ஷோ விருது The Apple Music Super Bowl LX Halftime Show Starring Bad Bunnக்கு வழங்கப்பட்டது.</p><p>சிறந்த TV ஷோ விருது The Muppet Showக்கு வழங்கப்பட்டது.</p><p>சிறந்த அனிமேஷன் நிகழ்ச்சி விருது சவுத் பார்க் நிகழ்ச்சிக்கு வழங்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>தேசிய பொறியாளர்கள் தினம்- முதலமைச்சர் விஜய் வாழ்த்து </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-wishes-national-engineers-day</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-wishes-national-engineers-day#comments</comments><guid isPermaLink="false">a2e8692f-1cb1-4a9f-b5e9-87d835ee453c</guid><pubDate>Tue, 15 Sep 2026 06:02:49 +0000</pubDate><atom:updated>2026-09-15T06:02:49.919Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,National Engineers Day,தேசிய பொறியாளர்கள் தினம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/g5m402pj/Vijay07.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/g5m402pj/Vijay07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தேசத்தின் உள்கட்டமைப்பை நாளும் செதுக்கிவரும் பொறியியல் வல்லுநர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்! என முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார்.</strong></em> </p><p>முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்</a> எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><p>இந்தியப் பொறியியலின் தந்தை எனப் போற்றப்படும் சர் எம். விஸ்வேஸ்வரய்யா அவர்களின் பிறந்தநாளை தேசிய பொறியாளர் நாளாகக் கொண்டாடும் இந்நாளில், தேசத்தின் உள்கட்டமைப்பை நாளும் செதுக்கிவரும் பொறியியல் வல்லுநர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்! </p><p>அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமையின் துணையுடன் நவீன இந்தியாவைக் கட்டமைப்பதில் பொறியாளர்களின் பங்கு மகத்தானது. சாலைகள், பாலங்கள், அணைகள், விண்வெளி ஆய்வுகள், டிஜிட்டல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, பசுமை ஆற்றல் என நாட்டின் அனைத்துத் துறைகளின் வளர்ச்சியிலும் நமது பொறியாளர்களின் திறனும், உழைப்பும் மிளிர்கின்றன.</p><p>பொறியாளர்களின் அறிவாற்றலும் புதுமையான சிந்தனையும் வளமான, வலிமையான, முன்னேற்றம் மிக்க நாட்டினை உருவாக்கத் தொடர்ந்து துணை நிற்கட்டும்! என கூறியுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">இந்தியப் பொறியியலின் தந்தை எனப் போற்றப்படும் சர் எம். விஸ்வேஸ்வரய்யா அவர்களின் பிறந்தநாளை தேசிய பொறியாளர் நாளாகக் கொண்டாடும் இந்நாளில், தேசத்தின் உள்கட்டமைப்பை நாளும் செதுக்கிவரும் பொறியியல் வல்லுநர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்! <br><br>அறிவியல், தொழில்நுட்பம்…</p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2099735682273210573?ref_src=twsrc%5Etfw">September 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>நியூயார்க்கில் சோகம்: ரெயில் பாதையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த இந்திய வம்சாவளி பெண்,  நண்பர் ரெயில் மோதி பலி</title><link>https://www.maalaimalar.com/news/world/tragedy-in-new-york-indian-origin-woman-nepali-american-friend-killed-on-subway-tracks</link><comments>https://www.maalaimalar.com/news/world/tragedy-in-new-york-indian-origin-woman-nepali-american-friend-killed-on-subway-tracks#comments</comments><guid isPermaLink="false">c2151fbb-d0b1-4d54-b340-5904ae4f9aaf</guid><pubDate>Tue, 15 Sep 2026 05:38:36 +0000</pubDate><atom:updated>2026-09-15T05:38:36.694Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,New York,நியூயார்க்,indian origin woman,Rutgers University,லோயர் மேன்ஹாட்டன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/z0en3vsy/dd.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tragedy in New York]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/z0en3vsy/dd.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ரெயில் மோதிய சில வினாடிகளுக்கு முன்பாக இருவரும் தண்டவாளத்தில் மிகவும் அமைதியாக அமர்ந்திருப்பது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>அமெரிக்காவின்<a href="https://www.maalaimalar.com/news/world/please-help-taliban-arrests-indian-female-vlogger-traveling-alone-in-afghanistan"> நியூயார்க்</a> நகரில் உள்ள சப்வே ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் அமர்ந்திருந்த இந்திய வம்சாவளி பெண் மற்றும் அவரது நேபாள-அமெரிக்க நண்பர் ஓடும் ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><p>நியூயார்க் நகரின் லோயர் மேன்ஹாட்டன் பகுதியில் அமைந்துள்ள ஸ்ப்ரிங் ஸ்ட்ரீட் சப்வே ரெயில் நிலையத்தில் நள்ளிரவு சுமார் 3:15 மணியளவில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. நியூஜெர்சி மாநிலத்தைச் சேர்ந்த மாளவிகா சித்ரே(24) மற்றும் அவரது நண்பரான நவம் கவுல் (24) ஆகிய இருவரும் சப்வே ரெயில் பாதையில் அமர்ந்திருந்துள்ளனர். அந்த நேரத்தில் வந்த தெற்கு நோக்கிய 'நம்பர் 4' ரயில் தண்டவாளத்தில் அமர்ந்திருந்தவர்கள் மீது மோதியது. ஓட்டுநர் உடனடியாக அவசர பிரேக்கை பயன்படுத்திய போதிலும், ரெயிலை நிறுத்த முடியாமல் இருவர் மீதும் மோதியதாக நியூயார்க் காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>ரெயில் மோதிய சில வினாடிகளுக்கு முன்பாக இருவரும் தண்டவாளத்தில் மிகவும் அமைதியாக அமர்ந்திருப்பது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாளவிகா சித்ரே சிரித்துக் கொண்டே நவம் கவுலை தன் பக்கம் இழுப்பது போல் இருந்ததாக ரெயில் ஓட்டுநர் தனது உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். ரெயில் மோதிய வேகத்தில் இருவரும் ரெயிலின் கீழ் பகுதியிலேயே சிக்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த அவசர உதவிக்குழுவினர் இருவரின் உடல்களையும் மீட்டனர். ரெயிலில் பயணம் செய்த சுமார் 100 பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.</p><h2>காவல்து<strong>றை விசாரணை</strong></h2><p>பலியான இருவருமே நியூஜெர்சியில் உள்ள ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் 2024-ஆம் ஆண்டு ஒன்றாகப் படித்து பட்டம் பெற்ற நண்பர்கள் ஆவர். மாளவிகா சித்ரே மருந்து நிறுவனப் பணியிலும், நவம் கவுல் நிதித் துறை நிறுவனத்திலும் பணியாற்றி வந்தனர். இருவரும் தவறி தண்டவாளத்தில் விழுந்தனரா அல்லது திட்டமிட்டு இறங்கினரா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரும் போதைப்பொருளின் தாக்கத்தில் ஆபத்தை உணராமல் தண்டவாளத்தில் அமர்ந்திருந்தனரா என்ற கோணத்திலும் நியூயார்க் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். தற்கொலைக்கான கடிதங்கள் எதுவும் மீட்கப்படவில்லை.</p>]]></content:encoded></item><item><title>ரூ.2,000 வரையிலான UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க மத்திய அரசு தடை</title><link>https://www.maalaimalar.com/news/national/central-government-bans-charges-on-upi-transactions-up-to-rs-2000</link><comments>https://www.maalaimalar.com/news/national/central-government-bans-charges-on-upi-transactions-up-to-rs-2000#comments</comments><guid isPermaLink="false">68bf4cb0-90a4-455f-9f20-28ff745860aa</guid><pubDate>Tue, 15 Sep 2026 05:30:13 +0000</pubDate><atom:updated>2026-09-15T05:30:13.438Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>UPI,யுபிஐ,மத்திய நிதி அமைச்சகம்,digital money transactions,Union Ministry of Finance,டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/evj7yq31/tn-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[  UPI பரிவர்த்தனை]]></media:title><media:description type="html"><![CDATA[  UPI பரிவர்த்தனை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/evj7yq31/tn-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ரூ.2,000 வரையிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.</p> <p>ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்படும் <a href="https://www.maalaimalar.com/topic/upi">யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு</a> எந்தக் கட்டணமும் வசூலிக்க வேண்டாம் என வங்கிகள் மற்றும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சேவை வழங்குநர்களுக்கு மத்திய அரசு  உத்தரவிட்டுள்ளது.</p> <h2>உத்தரவு</h2><p>மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள இன்று வெளியிட்டுள்ள உத்தரவில், "ரூ.2,000 வரையிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கும், ரூபே டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் வசூலிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.</p><p>குறிப்பிட்ட முறைகள் மூலம் பணம் செலுத்தும் அல்லது பெறும் ஒரு நபரிடம், எந்தவொரு வங்கியும் அல்லது பணம் செலுத்தும் முறைமை வழங்குநரும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தக் கட்டணத்தையும் வசூலிக்கக் கூடாது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>2007ன் பிரிவு 10 ஏவில் திருத்தும் செய்து கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 'வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2026'வின் கீழ் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. </p> <h2>ரூ.2000-க்கு மேல் உள்ள பரிவர்த்தனைகள்</h2><p>புதிய விதியின்படி, ரூ. 2,000 வரையிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கும், ரூபே பற்று அட்டைகளைப் பயன்படுத்தி செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படாது.</p><p>இருப்பினும், வணிகர் தள்ளுபடி விகிதம் செயல்படுத்தப்படாவிட்டாலும், ரூ. 2,000 ஐ தாண்டிய யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படலாம்.</p><p>2025-26 ஆம் ஆண்டில், நடந்த யு.பி.ஐ பரிவர்த்தனைகளில் ரூ. 2,000-க்கும் அதிகமான தொகைக்கு வெறும் 4% மட்டுமே பரிவர்த்தனைகள் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. </p><p>அதவாது ஒப்பீட்டளவில் ரூ.2000க்கு கீழ் பரிவர்த்தனை செய்வோரே அதிகம். எனவே இந்த வரி விலக்கு சாமானிய மக்களுக்கு நிம்மதியை தந்துள்ளது. </p><p>டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துதல் வேகமாக அதிகரித்து வருவதால், நாட்டின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறையை நிதி ரீதியாக மேலும் வலுப்படுத்த<a href="https://www.maalaimalar.com/news/national/upi-mdr-charges-lok-sabha-passes-bill-empowering-centre-to-levy-fees-on-digital-payments"> கட்டணங்களை அறிமுகப்படுத்துவது </a>குறித்து பரிசீலித்து வருவதாக மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>இந்த வார விசேஷங்கள்: 15-9-2026 முதல் 21-9-2026 வரை</title><link>https://www.maalaimalar.com/spirituality/this-week-specials-15-9-2026-to-21-9-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/this-week-specials-15-9-2026-to-21-9-2026#comments</comments><guid isPermaLink="false">1bc216f7-8fe7-4777-8be8-76a848ba2a3b</guid><pubDate>Tue, 15 Sep 2026 05:16:43 +0000</pubDate><atom:updated>2026-09-15T05:16:43.296Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,வழிபாடு,Astrology,this week special,இந்த வார விசேஷங்கள்,worship</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/twz6ncdy/hanuman1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Hanuman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/twz6ncdy/hanuman1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இந்த வார விசேஷங்கள்</h2><h2>15-ந் தேதி (செவ்வாய்)</h2><p>* ரிஷி பஞ்சமி.</p><p>* திருப்பதி, நாட்டரசன் கோட்டை உற்சவம் ஆரம்பம்.</p><p>* மதுரை நவநீத கிருஷ்ணர், ருக்மணி-சத்தியபாமா சமேத கிருஷ்ணர் அலங்காரம்.</p><p>* சமநோக்கு நாள்.</p> <h2>16-ந் தேதி (புதன்)</h2><p>* சஷ்டி விரதம்.</p><p>* மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசர், கிருஷ்ணர் அவதாரம், சிம்ம வாகனத்தில் உலா.</p><p>* திருவில்லிபுத்தூர் பெரியபெருமாள் சந்திர பிரபையில் பவனி.</p><p>* குணசீலம், ஆழ்வார் திருநகரி, திருப்பரங்குன்றம், நாட்டரசன் கோட்டை தலங்களில் எம்பெருமான் புறப்பாடு.</p><p>* கீழ்நோக்கு நாள்.</p> <h2>17-ந் தேதி (வியாழன்)</h2><p>* முகூர்த்த நாள்.</p><p>* திருவில்லிபுத்தூர் பெரியபெருமாள் அனுமன் வாகனத்தில் பவனி.</p><p>* திருப்பதி ஏழுமலையான் காலை சிம்ம வாகனத்தில் பவனி, இரவு முத்துப்பந்தல் அருளிய லீலை.</p><p>* சமநோக்கு நாள்.</p> <h2>18-ந் தேதி (வெள்ளி)</h2><p>* உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் வெள்ளி பல்லக்கில் பவனி.</p><p>* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.</p><p>* சமநோக்கு நாள்.</p> <h2>19-ந் தேதி (சனி)</h2><p>* நெல்லை கெட்வெல் ஆஞ்சநேயருக்கு 5008 வடை அலங்காரம்.</p><p>* கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசர் வெள்ளி சேஷ வாகனத்தில் பவனி.</p><p>* திருப்பதி ஏழுமலையான் மோகினி அலங்காரம்.</p><p>* திருபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு.</p><p>* கீழ்நோக்கு நாள்.</p> <h2>20-ந்தேதி (ஞாயிறு)</h2><p>* உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் வெள்ளி பல்லக்கில் திருவீதி உலா.</p><p>* மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசர் ராஜாங்க சேவை.</p><p>* திருவில்லிபுத்தூர் பெரியபெருமாள் யானை வாகனத்தில் பவனி.</p><p>* கீழ்நோக்கு நாள்.</p> <h2>21-ந் தேதி (திங்கள்)</h2><p>* கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள் திருக்கல்யாணம்.</p><p>* திருப்பதி ஏழுமலையான் காலை சூரிய பிரபையிலும், இரவு சந்திர பிரபையிலும் புறப்பாடு.</p><p>* உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் சூர்ணாபிஷேகம்.</p><p>* மேல்நோக்கு நாள்.</p>]]></content:encoded></item><item><title>அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் பேரறிஞர் அண்ணா- முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-praise-perarignar-anna</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-praise-perarignar-anna#comments</comments><guid isPermaLink="false">a35eaaf7-8ab4-4d94-b6f8-291d5c9b34b3</guid><pubDate>Tue, 15 Sep 2026 05:14:52 +0000</pubDate><atom:updated>2026-09-15T05:14:52.245Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,Perarignar Anna,tvk,பேரறிஞர் அண்ணா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/3kdq2bog/Vijay06.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/3kdq2bog/Vijay06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில், அவரது தொலைநோக்குப் பார்வையையும், மக்கள் சேவையையும் நெஞ்சார நினைவுகூர்ந்து போற்றுகிறேன் என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/பேரறிஞர்-அண்ணா">பேரறிஞர் அண்ணாவின்</a> 118-வது பிறந்தநாளையொட்டி அண்ணாசாலையில் உள்ள அண்ணாவின் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். மேலும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர். மேலும் அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அதிமுக உள்ளிட்ட பிற கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.  இதனிடையே, அரசியல் தலைவர்கள் அண்ணாவை நினைவு கூர்ந்து வருகின்றனர். </p><p>இந்த நிலையில், அண்ணாவின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து வெளியிட்டுள்ள பதிவில், </p><h2><strong>தனி முத்திரை பதித்தவர்</strong></h2><p>தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கி, ஏழை எளிய மக்களின் உரிமைகளுக்காகக்  குரல் கொடுத்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில், அவரது தொலைநோக்குப் பார்வையையும், மக்கள் சேவையையும் நெஞ்சார நினைவுகூர்ந்து போற்றுகிறேன். </p><p>எழுச்சியூட்டும் மேடைப் பேச்சாலும், கூர்மையான எழுத்தாற்றலாலும் மக்கள் மனங்களைக் கவர்ந்து, அவர்களின் பேராதரவோடு ஆட்சிப்பொறுப்பேற்று, தமிழ் மொழி மீது கொண்ட அளவற்ற பற்றால் நம் மாநிலத்திற்கு “தமிழ்நாடு” எனப் பெயர் சூட்டி, மாநில சுயாட்சிக்கு வித்திட்டு, சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட அங்கீகாரம் வழங்கி தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.</p><p>“கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு”, "ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்"  போன்ற அவரது உயரிய முழக்கங்களை நெஞ்சில் ஏந்தி, சமூகநீதியும், சமத்துவமும், சகோதரத்துவமும் எங்கும் தழைத்தோங்கிடவும், தமிழின் பெருமையைக் காத்திடவும் இந்நாளில் உறுதியேற்போம்! என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கி, ஏழை எளிய மக்களின் உரிமைகளுக்காகக்  குரல் கொடுத்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில், அவரது தொலைநோக்குப் பார்வையையும், மக்கள் சேவையையும் நெஞ்சார நினைவுகூர்ந்து போற்றுகிறேன். <br><br>எழுச்சியூட்டும்… <a href="https://t.co/ii2pkrkIxm">pic.twitter.com/ii2pkrkIxm</a></p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2099723590484815955?ref_src=twsrc%5Etfw">September 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>தயவுசெஞ்சு உதவுங்க.. ஆப்கானிஸ்தானில் தனியாக பயணம் செய்த கேரள பெண் Vlogger-ஐ கைது செய்த தாலிபான்கள்</title><link>https://www.maalaimalar.com/news/world/please-help-taliban-arrests-indian-female-vlogger-traveling-alone-in-afghanistan</link><comments>https://www.maalaimalar.com/news/world/please-help-taliban-arrests-indian-female-vlogger-traveling-alone-in-afghanistan#comments</comments><guid isPermaLink="false">98a937ed-a37d-4ecb-b51a-b21d4e819ed3</guid><pubDate>Tue, 15 Sep 2026 05:01:42 +0000</pubDate><atom:updated>2026-09-15T05:01:42.312Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Arrest,கைது,Afghanistan,Taliban,ஆப்கானிஸ்தான்,தாலிபான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/v2ikrtc3/tn-5.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அருணிமா]]></media:title><media:description type="html"><![CDATA[ அருணிமா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/v2ikrtc3/tn-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆப்கானிஸ்தானில் தாலிபான்களால் இந்திய பெண் சிறைபிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p> <p>கேரளாவை சேர்ந்த Travel Vlogger ஆன அருணிமா, 'பேக்பேக்கர் அருணிமா' என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். உலகின் பல இடங்களுக்கு பயணப்பட்டு அங்குள்ள அனுபவங்களை விவரித்து வருகிறார். </p> <h2>ஆப்கானிஸ்தானில் கைது</h2><p>அந்த வகையில் தாலிபான்கள் ஆளும் <a href="https://www.maalaimalar.com/topic/afghanistan">ஆப்கானிஸ்தானுக்கு </a>பயணம் சென்றுள்ள அவர் அங்கு பாமியான் பகுதியில் தாலிபான் அதிகாரிகளால் சிறைபிடிபட்டுள்ளார்.</p><p>தனது பேஸ்புக் பக்கத்தில் அருணிமா, முறையான ஆவணங்கள் மற்றும் அனுமதிப் கடிதம் கையில் இல்லாமல் தனியாக பயணித்ததால் தாலிபான்கள் தன்னை கைது செய்துள்ளதாகவும் இந்திய தூதரகத்தை தொடர்புகொள்ள உதவி செய்யுமாறும் கோரியிருந்தார்.</p><p>அவர் அந்த பதவியை வெளியிட்ட சுமார் 3 மணி நேரத்திற்குள், தாலிபான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தான் விடுவிக்கப்பட்டதாக அவர் மீண்டும் மற்றொரு பதிவை வெளியிட்டுள்ளார்.</p> <h2>விடுதலை</h2><p>பாமியான் வருவதற்கு முன்பாகத் தனக்கு உதவிய ஒரு நபரைத் தொடர்புகொண்டு, அவர் மூலமாக தாலிபான் அதிகாரிகளுடன் அருணிமா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.</p><p>இனி ஆப்கானிஸ்தானில் பயணம் செய்யும்போது முறையான அனுமதி பெற வேண்டும் என்றும், வழிகாட்டி ஒருவருடன் மட்டுமே பயணிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்து அவரை தாலிபான் அதிகாரிகள் விடுத்துள்ளனர். மேலும் அவருக்கு அபராதமும் விதித்துள்ளனர்.</p><h2>பெண்கள் தனியாக பயணிக்க தடை</h2><p>கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை விளக்கிய அருணிமா, <a href="https://www.maalaimalar.com/news/world/afghanistan-girls-denied-secondary-and-higher-education-under-taliban-rule">ஆப்கானிஸ்தானில் பெண்கள்</a> தனியாகப் பயணம் செய்ய சட்டப்படி அனுமதியில்லை என்றும், விதியை மீறியதால் கைது செய்வதாக அதிகாரிகள் தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்தார்.</p><p>அங்குள்ள ஒவ்வொரு மாகாணத்திற்கும் செல்ல தனித்தனியாக அனுமதி பெற வேண்டும். இவர் தனியாகப் பயணிக்கும் பெண் என்பதால் பாமியானிலும், அதற்கு முன்னதாக ஜலாலாபாத்திலும் இவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.</p> <p>ஆப்கானிஸ்தான் பயணத்தின் போது தாலிபான்கள் பலமுறை தன்னை வழிமறித்துச் சோதனையிட்டதாகவும், கேள்வி எழுப்பியதாகவும் அருணிமா குறிப்பிட்டுள்ளார்.</p><p>ஆண் பயணிகளுக்கு இல்லாத பல கடுமையான கட்டுப்பாடுகள் தான் ஒரு பெண் என்பதால் தன் மீது திணிக்கப்பட்டதாகவும், பயணத்தின் பெரும் பகுதி பாதுகாப்பிற்காக 'பர்தா' அணிந்தே பயணித்ததாகவும் அவர் வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அண்ணா ஆட்சியை மீண்டும் நிறுவிட உறுதியேற்போம்! - எடப்பாடி பழனிசாமி
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-says-let-us-pledge-to-restore-anna-rule</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-says-let-us-pledge-to-restore-anna-rule#comments</comments><guid isPermaLink="false">7d0cdbb8-0fb1-4493-9e5e-c629cfa13ce6</guid><pubDate>Tue, 15 Sep 2026 04:53:51 +0000</pubDate><atom:updated>2026-09-15T04:53:51.562Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,Edappadi Palaniswami,அதிமுக,எடப்பாடி பழனிசாமி,Perarignar Anna,பேரறிஞர் அண்ணா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/nacryiul/eps.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/nacryiul/eps.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அண்ணாவின் அரசியல் வாழ்வு, தலைமுறைகள் கடந்து வழிகாட்டும் கலங்கரை விளக்கம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/perarignar-anna-birthday-vairamuthu-tribute">பேரறிஞர் அண்ணாவின்</a> 118-வது பிறந்தநாளை ஒட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF">எடப்பாடி பழனிசாமி</a> மலர்தூவி மரியாதை செலுத்தினார். </p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>தமிழக மக்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் தன்மான உணர்வை விதைத்து, சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மாநில உரிமைகள் என திராவிட இயக்கத்தின் கொள்கைகளை மக்கள் இயக்கமாக வளர்த்தெடுத்த ஒப்பற்ற தலைவர் நம் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள். </p> <p>அதிகாரத்தை விட கொள்கையையும், பதவியை விட மக்களையும், தனிமனிதப் புகழை விட சமூகத்தின் முன்னேற்றத்தையும் முன்னிறுத்திய அண்ணாவின் அரசியல் வாழ்வு, தலைமுறைகள் கடந்து வழிகாட்டும் கலங்கரை விளக்கம்.</p><p>தமிழினத்தின் தன்மானக் குரலான நம் கொடியாகவும் கொள்கையாகவும் என்றும் வீற்றிருக்கும் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களை, அவர்தம் பிறந்தநாளில் போற்றி வணங்குகிறேன்.</p> <p>மக்கள் நலனுக்கு முற்றிலும் எதிரான ரீல்ஸ் அரசியல் மோகத்தில் இருந்து தமிழகத்தை விடுவித்து, தமிழகத்தின் வளர்ச்சியை கட்டமைக்கும் நம் அண்ணா ஆட்சியை மீண்டும் நிறுவிட இந்நாளில் உறுதியேற்போம்!</p><p>வாழ்க அண்ணா நாமம்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/durai-murugan-announced-dmk-mupperum-vizha-adjourn</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/durai-murugan-announced-dmk-mupperum-vizha-adjourn#comments</comments><guid isPermaLink="false">cd103674-104e-44cf-9076-cae5ede779ea</guid><pubDate>Tue, 15 Sep 2026 04:43:27 +0000</pubDate><atom:updated>2026-09-15T04:43:27.668Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,Durai Murugan,துரைமுருகன்,முக ஸ்டாலின்,திமுக முப்பெரும் விழா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/bc0hbr5q/mkstalin.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/bc0hbr5q/mkstalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தி.மு.க. முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.</strong></em> </p><h2><strong>தி.மு.க. முப்பெரும் விழா</strong></h2><p>தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் <a href="https://www.maalaimalar.com/topic/திமுக-முப்பெரும்-விழா">முப்பெரும் விழா</a> கொண்டாடப்பட்டு வருகிறது. பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்தநாள்கள், தி.மு.க. தொடங்கப்பட்ட நாள் ஆகிய மூன்றையும் இணைத்து முப்பெரும் விழா நடத்தப்படுகிறது. </p><p>அந்த வகையில், 2026-ம் ஆண்டுக்கான தி.மு.க. முப்பெரும் விழா இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. </p><h2><strong>ஒத்திவைப்பு</strong></h2><p>இந்த நிலையில், இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட தி.மு.க. முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். </p><p>தி.மு.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/முக-ஸ்டாலின்">மு.க.ஸ்டாலினுக்கு</a> ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக தி.மு.க. முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுவதாகவும் முப்பெரும் விழாவுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில்  நடந்த அண்ணா பிறந்தநாள் விழாவிலும் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை. </p><p>அதுகுறித்து துரைமுருகன் கூறுகையில், மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் அண்ணா சிலைக்கு மாலை போடவில்லை என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY: தொடர் சரிவில் தங்கம் விலை - எவ்வளவு குறைந்தது தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-15-9-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-15-9-2026#comments</comments><guid isPermaLink="false">5a8ef608-1724-4269-8ca4-6f9725f20593</guid><pubDate>Tue, 15 Sep 2026 04:35:40 +0000</pubDate><atom:updated>2026-09-15T04:35:40.655Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/bxvt918k/gold.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/bxvt918k/gold.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. </p><p>சென்னையில் கடந்த 12-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு  ரூ.120 உயர்ந்து ரூ.1,13,360-க்கும், கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.14,170-க்கும் விற்பனையானது. 13-ந்தேதி சவரன் ரூ.1,13,360-க்கும், ஒரு கிராம் ரூ.14,170-க்கும் விற்பனையானது.</p> <p>நேற்று சவரனுக்கு  ரூ.360 குறைந்து ரூ.1,13,000-க்கும், கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.14,125-க்கும் விற்பனையானது.</p><p>இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு  ரூ.680 குறைந்து ரூ.1,12,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.14,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>  <h2>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்</h2><p>14-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,000</p><p>13-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,360</p><p>12-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,360</p><p>11-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,240</p><p>10-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.114,040</p> <h2>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்</h2><p>14-09-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>13-09-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>12-09-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>11-09-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>10-09-2026- ஒரு கிராம் ரூ.255</p> ]]></content:encoded></item><item><title>ஏஐ தொழில்நுட்பத்தின் வேகத்தை கட்டுப்படுத்தணும் - ஒன்றுகூடிய ஏஐ நிறுவனங்கள் - பதறியடித்து டிரம்ப் போட்ட பதிவு</title><link>https://www.maalaimalar.com/news/world/ai-companies-gather-to-call-for-curbing-the-pace-of-ai-technology-trump-posts-in-a-panic</link><comments>https://www.maalaimalar.com/news/world/ai-companies-gather-to-call-for-curbing-the-pace-of-ai-technology-trump-posts-in-a-panic#comments</comments><guid isPermaLink="false">69a03f74-843e-425f-a260-b9d789902cf4</guid><pubDate>Tue, 15 Sep 2026 04:29:27 +0000</pubDate><atom:updated>2026-09-15T04:29:27.367Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Artificial Intelligence,AI technology,trump,டிரம்ப்,ஏஐ தொழில்நுட்பம்,செயற்கை நுண்ணறிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/4a4stkxj/tn-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டிரம்ப் ]]></media:title><media:description type="html"><![CDATA[ டிரம்ப் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/4a4stkxj/tn-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தொழில்நுட்பம் (Technology)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியை கட்டுப்படுத்தினால் அது சீனாவுக்கு சாதகமாகிவிடும் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-warns-against-weaponisation-of-critical-minerals">செயற்கை நுண்ணறிவு </a>தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் நிலையில் அதன் அதிவேக வளர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும் என்ற விவாதம் உருவாகியுள்ளது. </p> <p>அமெரிக்காவின் ஆந்திரபிக் ஏஐ நிறுவன சிஇஓ டேரியோ அமோடி, <a href="https://www.maalaimalar.com/news/world/ai-technology-used-for-missile-production-anthropic-exposes-yemen-group">ஏஐ தொழில்நுட்பத்தின்</a> வேகத்தைக் குறைக்க வேண்டும் என்றும், கூடுதல் பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் தேவை என்றும் வலியுறுத்தியிருந்தார். இந்த கருத்துக்கு எக்ஸ் ஏஐ தலைவர் எலான் மஸ்க், ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன் ஆகியோர் உடன்பட்டுள்ளனர்.</p><p>ஆனால் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியை Slow செய்தால் அது சீனாவுக்கு சாதகமாகிவிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.</p> <h2>டிரம்ப் கருத்து</h2><p>தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள டொனால்ட் டிரம்ப், "ஏஐக்கு கூடுதல் விதிகளோ கட்டுப்பாடுகளோ தேவையில்லை; ஒரு வலுவான, அறிவார்ந்த - High IQ கொண்ட அதிபர் மட்டுமே தேவை, அது அமெரிக்காவிடம் உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.</p><p>மேலும் தனது பதிவில் சீனா பற்றி எச்சரித்த டிரம்ப் , "ஏஐ மற்றும் டேட்டா சென்டர்களுக்கு எதிராக ஒரு சதி நடக்கிறது. இதனால் மகிழ்ச்சியடையும் ஒரே நாடு சீனா மட்டுமே. ஏஐ இல் யார் வெல்கிறார்களோ, அவர்களே உலகை வெல்வார்கள்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.</p> <p>அதுமட்டுமின்றி ஏஐ வளர்ச்சி வேகத்தை குறைக்க அழைப்பு விடுத்த ஆந்திரோபிக் சிஇஓ டேரியோ அமோடி பற்றி விமர்சித்த டிரம்ப், அவர் உலகை காக்க வந்த "perfect little angel" போல நடிக்கிறார் என்று சாடியுள்ளார்.</p><p>தனது நிர்வாகத்திற்கு ஏஐ நிறுவனங்கள் மீது ஏற்கனவே குற்றவியல் மற்றும் சட்டரீதியான முழு அதிகாரம் உள்ளது என்றும், தவறான விஷயங்கள் நடப்பதைத் தடுத்து நிறுத்தியுள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>வளர்ச்சி மற்றும் தரவு மையங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் ஒரு சதித்திட்டத்தின் பகுதியாக செயல்படுவதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஏ.பி.எஸ்., க்ரூயிஸ் கண்ட்ரோல் வசதியுடன் புதிய ஹீரோ பைக் அறிமுகம் - ஹைலைட்டே அதன் விலை தான்</title><link>https://www.maalaimalar.com/automobilenews/bike/hero-glamour-x-125-launched-with-integrated-abs</link><comments>https://www.maalaimalar.com/automobilenews/bike/hero-glamour-x-125-launched-with-integrated-abs#comments</comments><guid isPermaLink="false">1364b906-df61-495e-a142-4398b64bfb18</guid><pubDate>Tue, 15 Sep 2026 04:23:00 +0000</pubDate><atom:updated>2026-09-15T04:23:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>bike,பைக்,Hero MotoCorp,ஹீரோ மோட்டோகார்ப்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/is6zbind/Hero-Glamour-X-125.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Hero Glamour X 125]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/is6zbind/Hero-Glamour-X-125.png?w=280" width="280"></media:thumbnail><category>பைக் (Automobile)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/hero-motocorp">ஹீரோ மோட்டோகார்ப்</a> நிறுவனம் , சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் மற்றும் இன்டகிரேட்டட் பிரேக்கிங் சிஸ்டம் (ஐபிஎஸ்) ஆகியவற்றை இணைக்கும் புதிய பிரேக்கிங் சிஸ்டத்துடன் கிளாமர் எக்ஸ் 125 பைக்கை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. </p><p>125சிசி பிரிவில், சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் மற்றும் ஐபிஎஸ் உடன் வரும் முதல் <a href="https://www.maalaimalar.com/topic/bike">மோட்டார்சைக்கிள்</a> கிளாமர் எக்ஸ் 125 தான் என ஹீரோ நிறுவனம் கூறுகிறது. இந்த புதிய பிரேக்கிங் அமைப்பு, கடுமையாக பிரேக் செய்யும்போது முன் சக்கரங்கள் லாக் ஆவதைத் தடுக்கிறது.</p><h2>என்ஜின் மற்றும் பவர்:</h2><p>அதே சமயம், ஐபிஎஸ் ஆனது முன் மற்றும் பின் பிரேக்குகளை இணைப்பதன் மூலம் பிரேக்கிங் செயல்திறனை மேம்படுத்துகிறது. மேலும், கிளாமர் எக்ஸ் மாடலில் பேனிக் பிரேக் அலர்ட் மற்றும் ஹசார்ட் லேம்ப்கள் போன்ற அம்சங்களும் தொடர்ந்து இடம்பெற்றுள்ளன.</p><p>ஹீரோ கிளாமர் எக்ஸ் பைக்கில் 124.7சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 11.4 பிஎச்பி பவரையு மற்றும் 10.5 நியூட்டன் மீட்டர் டார்க் உற்பத்தி செய்கிறது. இந்த பைக்கில் ஈகோ, ரோடு மற்றும் பவர் என மூன்று ரைடிங் மோட்கள் உள்ளன. மேலும், இந்த செக்மென்ட் பைக்கிற்கு முதல் முறையாக க்ரூயிஸ் கண்ட்ரோல் வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது.</p><p>ஹீரோ கிளாமர் எக்ஸ் 125, ப்ளூடூத் இணைப்பு, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், மற்றும் அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ். அலெர்ட்களுடன் கூடிய வண்ண டி.எஃப்.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் வழங்கப்படுகிறது. ஃபுல்-எல்.இ.டி. லைட்கள், யு.எஸ்.பி. டைப்-சி சார்ஜிங் போர்ட் மற்றும் இருக்கைக்கு அடியில் இரட்டை மொபைல் ஸ்டோரேஜ் ஆகியவை மற்ற அம்சங்களில் அடங்கும்.</p><h2>இந்திய விலை:</h2><p>ஒருங்கிணைந்த ஏபிஎஸ் உடன் கூடிய கிளாமர் எக்ஸ், கன் மெட்டல் கிரே, மேட் ஆக்சிஸ் கிரே, பிளாக் பேர்ல் ரெட் மற்றும் பிளாக் டீல் ப்ளூ ஆகிய நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது. புதிய ஹீரோ பைக்கின் விலை ரூ. 1.01 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அவதூறு பேச்சு: ஆ.ராசா, சேகர்பாபு மீது வழக்கு பதிவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/police-case-filed-against-a-rasa-and-sekhar-babu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/police-case-filed-against-a-rasa-and-sekhar-babu#comments</comments><guid isPermaLink="false">92268d81-3b27-407d-aba5-9d9eaaa9698c</guid><pubDate>Tue, 15 Sep 2026 04:00:18 +0000</pubDate><atom:updated>2026-09-15T04:00:18.582Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,ஆ ராசா,A Rasa,அவதூறு பேச்சு,சேகர்பாபு,Sekhar Babu</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/iybitfe9/dmk.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஆ.ராசா- சேகர்பாபு]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆ.ராசா- சேகர்பாபு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/iybitfe9/dmk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசா மற்றும் சேகர்பாபு ஆகியோர் முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் நிர்மல்குமார் குறித்து அவதூறு பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.</strong></em> </p><h2><strong>ஆர்ப்பாட்டம்</strong></h2><p>முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில், முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் பற்றி பேசியதை கண்டித்து தமிழகம் முழுவதும் <a href="https://www.maalaimalar.com/topic/திமுக">தி.மு.க.</a> சார்பில் கடந்த 12-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. </p><p>அந்த வகையில், சென்னை தெற்கு, தென்மேற்கு, மேற்கு மாவட்ட தி.மு.க.சார்பில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். </p><h2><strong>விமர்சனம்</strong></h2><p>இதே போல, சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் சேகர்பாபு முன்னிலை வகித்தார். </p><p>ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. எம்.பி.ராசா மற்றும் சேகர்பாபு ஆகியோர் முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் நிர்மல்குமார் குறித்து பேசியது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. </p><h2><strong>வழக்கு பதிவு</strong></h2><p>இந்த நிலையில், தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசா மற்றும் சேகர்பாபு ஆகியோர் முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் நிர்மல்குமார் குறித்து அவதூறு பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. த.வெ.க நிர்வாகி ஜெகதீஸ்வரி என்பவர் அளித்த புகாரின் பேரில் வடக்கு கடற்கரை போலீசார் சேகர்பாபு மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். </p><p>இதேபோல், தி.மு.க. எம்.பி.ஆ.ராசா மீதும் சைதாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆ.ராசா மீது ஆபாசமாக பேசுதல், பொது அமைதியை குலைக்க முயற்சி உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>அண்ணாவின் பொன்னடிகளுக்குப் புகழ் வணக்கம் - வைரமுத்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/perarignar-anna-birthday-vairamuthu-tribute</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/perarignar-anna-birthday-vairamuthu-tribute#comments</comments><guid isPermaLink="false">53ce6900-a2e0-45d7-9086-e1b35d0bf1d0</guid><pubDate>Tue, 15 Sep 2026 03:49:16 +0000</pubDate><atom:updated>2026-09-15T03:49:16.780Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,Vairamuthu,Perarignar Anna,வைரமுத்து,பேரறிஞர் அண்ணா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/ehh2djos/vairamuthu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Perarignar Anna - Vairamuthu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/ehh2djos/vairamuthu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீ செய்த சாதனை புரிய 300 ஆண்டு வாழ்ந்தவனாலும் முடியாது என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-perarignar-anna-who-rules-tamil-nadu-yesterday-today-and-forever">பேரறிஞர் அண்ணாவின்</a> 118-வது பிறந்தநாளையொட்டி கவிஞர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">வைரமுத்து</a> வெளிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>அண்ணா! </p><p>காலவெளியில்</p><p>உன் இருப்பு சிறிதுதான்</p><p>நீ வாழ்ந்தது</p><p>59.4 ஆண்டுகள்</p> <p>உன் பொதுவாழ்வு</p><p>35 ஆண்டுகள்</p><p>கட்டியெழுப்பிய கட்சியோடு </p><p>19.5 ஆண்டுகள்</p><p>ஆட்சிப் பொறுப்பில்</p><p>வெறும் 22 மாதங்கள்</p> <p>ஆனால்,</p><p>நீ செய்த சாதனை புரிய</p><p>300 ஆண்டு</p><p>வாழ்ந்தவனாலும் முடியாது</p><p>உன் பெயர் சொல்லாமல்</p><p>அரசாள இயலாது</p><p>உன் கொள்கை இல்லாமல்</p><p>அரசியல் கிடையாது</p> <p>நீ</p><p>சாமானியர்க்காகவே வாழ்ந்தவன்;</p><p>சாமானியனாகவே மரித்தவன்</p><p>பூமியின் மீது</p><p>அதிகச் சிலைகள் புத்தருக்கு;</p><p>இந்தியாவில் அம்பேத்கருக்கு;</p><p>தமிழ்நாட்டில் உனக்கு</p> <p>பொன்னடிகளுக்குப் </p><p>புகழ் வணக்கம்</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பேரறிஞர் அண்ணா தான் அன்றைக்கும் - இன்றைக்கும் - என்றைக்கும் தமிழ்நாட்டை ஆள்கிறார் - உதயநிதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-perarignar-anna-who-rules-tamil-nadu-yesterday-today-and-forever</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-perarignar-anna-who-rules-tamil-nadu-yesterday-today-and-forever#comments</comments><guid isPermaLink="false">1a3df343-9dba-453e-9171-a1ab64d8cc8e</guid><pubDate>Tue, 15 Sep 2026 03:36:10 +0000</pubDate><atom:updated>2026-09-15T03:36:10.848Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,Perarignar Anna,பேரறிஞர் அண்ணா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/zaiszeiw/udhayanidhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Perarignar Anna -  Udhayanidhi Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/zaiszeiw/udhayanidhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் - தமிழ்மொழியின் ஏற்றத்துக்கும் -  மாநில சுயாட்சிக்காகவும் குரல் கொடுத்த அண்ணா என்றும் நம்மை வழிநடத்துவார் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/perarignar-anna-birthday-kanimozhi-says-dmk-must-endure-and-serve-the-people-for-many-generations">பேரறிஞர் அண்ணாவின்</a> 118-வது பிறந்தநாளையொட்டி எதிர்க்கட்சி தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">உதயநிதி ஸ்டாலின்</a> வெளிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>பேரறிஞர் அண்ணா எனவும் ஜனநாயக பெருவெளிச்சம் பிறந்த நாள் இன்று!</p> <p>கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு என்ற முழக்கத்தோடு தி.மு.கழகத்தை தொடங்கி, தமிழ்நாட்டிற்கு பாதுகாப்பு வளையமிட்டவர் - அண்ணா!</p><p>தமிழ்நாடு என்று பெயர் சூட்டி - சுயமரியாதை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் தந்து - இருமொழி கொள்கையை உறுதி செய்த பேரறிஞர் அண்ணா தான், அன்றைக்கும் - இன்றைக்கும் - என்றைக்கும் தமிழ்நாட்டை ஆள்கிறார்.</p> <p>தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் - தமிழ்மொழியின் ஏற்றத்துக்கும் -  மாநில சுயாட்சிக்காகவும் குரல் கொடுத்த அண்ணா என்றும் நம்மை வழிநடத்துவார்.</p><p>வாழ்க அண்ணாவின் புகழ்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>Exynos Chip கொண்ட புதிய ஃபேன் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த சாம்சங்</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/samsung-galaxy-s26-fe-launched-in-india</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/samsung-galaxy-s26-fe-launched-in-india#comments</comments><guid isPermaLink="false">85411858-8e69-491c-a7ec-221fab857724</guid><pubDate>Tue, 15 Sep 2026 03:32:00 +0000</pubDate><atom:updated>2026-09-15T03:32:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Samsung,சாம்சங்,smartphone,ஸ்மார்ட்போன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/r43606rc/Samsung-Galaxy-S26-FE.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Samsung Galaxy S26 FE]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/r43606rc/Samsung-Galaxy-S26-FE.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/samsung">சாம்சங்</a> நிறுவனத்தின் சமீபத்திய 'ஃபேன் எடிஷன்' மாடலாக கேலக்ஸி S26 FE இந்திய சந்தையிவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டு வெளியான கேலக்ஸி S26 FE மாடலின் அடுத்த தலைமுறை மாடலாக வருகிறது. </p><p>புதிய கேலக்ஸி S26 FE மாடலில் 120Hz ரிப்ரெஷ் ரேட் உடன் 6.7-இன்ச் டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த <a href="https://www.maalaimalar.com/topic/samsung">ஸ்மார்ட்போன்</a> எக்சைனோஸ் 2500 பிராசசரால் இயக்கப்படுகிறது. மேலும், இதில் 50-மெகாபிக்சல் பிரைமரி கேமரா மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது. </p><h2>சாம்சங் கேலக்ஸி S26 FE சிறப்பு அம்சங்கள்:</h2><p>டூயல் சிம் (நானோ + நானோ) வசதி கொண்ட சாம்சங் கேலக்ஸி S26 FE, ஆண்ட்ராய்டு 17-ஐ அடிப்படையாகக் கொண்ட ஒன் யுஐ 9 மூலம் இயங்குகிறது. இதற்கு ஏழு ஆண்டுகளுக்கு மென்பொருள் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படும் என சாம்சங் தெரிவித்துள்ளது.</p><p>இந்த ஸ்மார்ட்போனில் 120Hz ரிப்ரெஷ் ரேட் மற்றும் 1,900 நிட்ஸ் வரையிலான பிரைட்னஸ் கூடிய 6.7-இன்ச் FHD+ டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே உள்ளது. மேலும் இந்த மாடலில், 3nm தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட எக்சைனோஸ் 2500 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இது 8GB ரேம் மற்றும் 256GB என ஒற்றை மெமரி வேரியண்டில் கிடைக்கிறது.</p><p>கேமராக்களைப் பொறுத்தவரை, கேலக்ஸி S26 FE-ல் மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இதில் OIS வசதியுடன் கூடிய 50MP வைட் கேமரா, 12MP அல்ட்ரா-வைட் கேமரா, மற்றும் OIS மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் வசதியுடன் கூடிய 8MP டெலிஃபோட்டோ கேமரா ஆகியவை அடங்கும். மேலும், செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 12MP செல்ஃபி கேமராவும் உள்ளது.</p><p>இந்த ஸ்மார்ட்போன் ஜெமினி ஓம்னி சப்போர்ட் உடன் வருகிறது, இதன் மூலம் கேலரியில் சேமிக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பயன்படுத்தி வீடியோக்களை உருவாக்கவும் எடிட் செய்யவும் முடியும். கனெக்டிவிட்டிக்கு 5G, 4G LTE, Wi-Fi 6E, Wi-Fi Direct மற்றும் ப்ளூடூத் 5.4 ஆகியவை அடங்கும்.</p><p>சாம்சங் கேலக்ஸி, 45W வயர்டு சார்ஜிங் உடன் 4,900mAh பேட்டரி கொண்டுள்ளது. இத்துடன் 15W ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் பவர்ஷேர் சப்போர்ட் உடன் வருகிறது. மேலும், இது IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.</p><h2>சாம்சங் கேலக்ஸி S26 FE விலை விவரங்கள்:</h2><p>சாம்சங் கேலக்ஸி S26 FE ஸ்மார்ட்போனின் 8GB ரேம் மற்றும் 256GB மெமரி மாடல் விலை இந்தியாவில் ரூ. 79,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மெமரி அடிப்படையில் ஒற்றை வேரியண்டிலேயே கிடைக்கிறது. மேலும், இந்த மாடல் பிஸ்தா, புளூபெர்ரி மற்றும் கிராஃபைட் ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது.</p><p>அறிமுகச் சலுகைகளின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்சேஞ் செய்யும்போது ரூ. 8,000 வரையிலான போனஸ் பெற முடியும். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி சாரா நிதி நிறுவன (NBFC) சேவைகள் மூலம் 30 மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதியையும், அதனுடன் கூடுதலாக ரூ. 3,000 வரை போனஸ் பெற முடியும்.</p><p>இத்துடன் வாடிக்கையாளர்கள் முக்கிய வங்கி கார்டுகள் மூலம் ரூ. 7,000 கேஷ்பேக் அல்லது 12 மாத வட்டியில்லா வங்கி மாத தவணை முறையை தேர்வு செய்யலாம். சாம்சங்கின் இ-ஸ்டோர் மூலம் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் 18 மாத வங்கி மாத தவணை முறையையும் தேர்வு செய்யலாம்.</p>]]></content:encoded></item><item><title>கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-inspection-kilambakkam-bus-stand</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-inspection-kilambakkam-bus-stand#comments</comments><guid isPermaLink="false">19bf33ce-fb4a-410f-8e13-5110265c3977</guid><pubDate>Tue, 15 Sep 2026 03:23:55 +0000</pubDate><atom:updated>2026-09-15T03:23:55.157Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்,Kilambakkam Bus Terminus,விஜய் தமிழன் பார்த்திபன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/cchell3v/minister.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர்]]></media:title><media:description type="html"><![CDATA[ கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/cchell3v/minister.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் இன்று காலை 6 மணி முதல் கிளாம்பாக்கம் மாநகர பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் மற்றும் பயணிகளின் வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.</strong></em> </p><h2><strong>அமைச்சர் ஆய்வு</strong></h2><p>தொடர் விடுமுறை மற்றும் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்ற பயணிகள் இன்று சென்னை நோக்கி படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர். அப்படியாக வரக்கூடிய பொதுமக்களின் போக்குவரத்து பாதுகாப்பாக இருக்கிறதா மேலும் பேருந்துகள் குறித்து ஏதேனும் புகார் வருகிறதா என்று இன்று காலை 6 மணி முதல் அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் ஆய்வில் ஈடுபட்டிருந்தார். </p><p>போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் உடன் போக்குவரத்து துறை செயலாளர் நிர்மல்ராஜ் தமிழ்நாடு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் மாநகரப் பேருந்து அதிகாரிகள் உட்பட பலர் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர்.</p><h2><strong>ஆய்வு கூட்டம்</strong></h2><p>நேற்றைய தினம் இதே <a href="https://www.maalaimalar.com/topic/கிளாம்பாக்கம்-பேருந்து-நிலையம்">கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில்</a> வரப்போகிற ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை ஒட்டி பொதுமக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் பேருந்துகள் மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் குறித்து விரிவான ஆய்வு கூட்டம் அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தலைமையில் நடைபெற்றது.</p><p>இக்கூட்டத்திற்கு போக்குவரத்துச் செயலாளர் நிர்மல்ராஜ் தாம்பரம் மாநகர துணை ஆணையர் கார்த்திகேயன் தாம்பரம் மாநகர போக்குவரத்து துணை ஆணையர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அதிகாரிகள் மற்றும் போலீசார் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பயணிகளுக்கு எந்தவித சிரமமும் இல்லாமல் போதிய பேருந்துகள் ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் அன்றைய தினத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்வதை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. </p>]]></content:encoded></item><item><title>பாதுகாப்பு குளறுபடி.. குடிவரவு சோதனையின்றி டெல்லியில்  விமானம் ஏறிச் சென்ற 3 இத்தாலியர்கள் - மத்திய அமைச்சகம் அவசர கூட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/national/security-lapse-three-italians-boarded-a-flight-without-immigration-checks-central-ministry-calls-urgent-meeting</link><comments>https://www.maalaimalar.com/news/national/security-lapse-three-italians-boarded-a-flight-without-immigration-checks-central-ministry-calls-urgent-meeting#comments</comments><guid isPermaLink="false">67606c23-7f22-445f-9847-d4b2bcb18f8b</guid><pubDate>Tue, 15 Sep 2026 03:12:06 +0000</pubDate><atom:updated>2026-09-15T03:12:06.095Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords></media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/m58i81dc/tn-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டெல்லி]]></media:title><media:description type="html"><![CDATA[ டெல்லி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/m58i81dc/tn-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி விமான நிலையத்தில் குடியேற்ற சோதனைக்கு செல்லாமலேயே 3 இத்தாலியர்கள் ஜெர்மனியின் முனிச் நகருக்கு விமானத்தில் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p> <p>கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி அதிகாலை இத்தாலியை சேர்ந்த 3 பேர் அமிர்தசரசில் இருந்து<a href="https://www.maalaimalar.com/news/national/air-india-pilot-dies-in-delhi-5-star-hotel-room"> ஏர் இந்தியா</a> விமானம் மூலம் டெல்லி வந்தனர். </p><p>அந்த விமானம் அதிகாலை 12.50 மணியளவில் டெல்லி வந்தடைந்தது. அதன்பின்னர் அதிகாலை 1.45 மணியளவில் டெல்லியில் இருந்து லுப்தான்சா விமானத்தில் முனிச் நகருக்கு அவர்கள் புறப்பட்டுச் சென்றனர். </p><p>ஆனால், இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு முன்பு அவர்கள் கட்டாய குடிவரவு சோதனைக்கு செல்லவில்லை என்பது தெரியவந்துள்ளது.</p> <p>3 இத்தாலியர்களுக்கும் அமிர்தசரசிலேயே டெல்லியில் இருந்து முனிச் செல்லும் லுப்தான்சா விமானத்துக்கான பயணச்சீட்டும் வழங்கப்பட்டுள்ளது.</p><p>டெல்லி வந்தபோது சர்வதேச பயணிகள் என்று அடையாளம் கண்டு, அவர்களை குடிவரவு சோதனைக்கு அனுப்பியிருக்க வேண்டும்.</p><p>ஆனால் அவர்கள் சர்வதேச பயணிகள் செல்லும் மாற்றுப்பாதைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதன் மூலம் குடிவரவு சோதனைக்கு செல்லாமலேயே அவர்கள் சர்வதேச புறப்பாடு பகுதிக்கு சென்று முனிச் விமானத்தில் ஏறிச் சென்றுள்ளனர். பதிவேடு சரிபார்ப்பின்போது இந்த குளறுபடி தெரியவந்துள்ளது.</p> <h2>அரசு நடவடிக்கை</h2><p>இச்சம்பவத்தில் ஏர் இந்தியாவின் அலட்சியத்தைக் சுட்டிக்காட்டி, மத்திய உள்துறை அமைச்சகம் செப்டம்பர் 12 அன்று அந்நிறுவனத்திடம் நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. 7 நாட்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>மேலும் உள்துறைச் செயலாளர் கோவிந்த் மோகன் தலைமையில் அவசர கூட்டமும் இதுதொடர்பாக நாளை மாலை கூட்டப்பட்டுள்ளது. </p><p>இக்கூட்டத்தில், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகச் செயலாளர், உளவுத்துறை இயக்குநர், குடிவரவுப் பணியகக் ஆணையர், ஏர் இந்தியா தலைவர் மற்றும் டெல்லி விமான நிலைய சி.இ.ஓ ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>அண்ணா விதைத்து பெருமரமாக்கிய தி.மு.க. பல தலைமுறைகளுக்கு நின்று பயன் தர வேண்டும்! - கனிமொழி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/perarignar-anna-birthday-kanimozhi-says-dmk-must-endure-and-serve-the-people-for-many-generations</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/perarignar-anna-birthday-kanimozhi-says-dmk-must-endure-and-serve-the-people-for-many-generations#comments</comments><guid isPermaLink="false">9cb8f4d9-bd41-4d5f-8a0a-34fc565d826e</guid><pubDate>Tue, 15 Sep 2026 03:03:23 +0000</pubDate><atom:updated>2026-09-15T03:03:23.545Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,Kanimozhi,கனிமொழி,Perarignar Anna,பேரறிஞர் அண்ணா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/r76n71ha/kanimozhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Perarignar Anna - Kanimozhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/r76n71ha/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கொள்கைகளாலும், செயல்களாலும் அன்று அண்ணா விதைத்து பெருமரமாக்கிய நம் தி.மு.கழகம், இன்னும் பல தலைமுறைகளுக்கு நின்று பயன் தர வேண்டும்! என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/perarignar-anna-birthday-mk-stalin-tribute">பேரறிஞர் அண்ணாவின்</a> 118-வது பிறந்தநாளையொட்டி அவர் குறித்த வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">திமுக</a> எம்பி கனிமொழி வெளியிட்டுள்ள பதிவில், </p><p>ஆதாயத்திற்காக அண்ணாவின் பெயரை உச்சரிப்பவர்கள் அதிகரித்துவிட்ட இக்காலத்தில், அவர் உள் ஒளியாக ஏற்றுக்கொண்ட திராவிடத்தையும், பெரியாரியத்தையும், தமிழறத்தையும் ஆழ்மனதில் ஏந்திப் பயணிப்பவர்கள் அதிகம் வர வேண்டும்.</p> <p>கொள்கைகளாலும், செயல்களாலும் அன்று அண்ணா விதைத்து பெருமரமாக்கிய நம் தி.மு.கழகம், இன்னும் பல தலைமுறைகளுக்கு நின்று பயன் தர வேண்டும்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">ஆதாயத்திற்காக அண்ணாவின் பெயரை உச்சரிப்பவர்கள் அதிகரித்துவிட்ட இக்காலத்தில், அவர் உள் ஒளியாக ஏற்றுக்கொண்ட திராவிடத்தையும், பெரியாரியத்தையும், தமிழறத்தையும் ஆழ்மனதில் ஏந்திப் பயணிப்பவர்கள் அதிகம் வர வேண்டும்.<br><br>கொள்கைகளாலும், செயல்களாலும் அன்று அண்ணா விதைத்து பெருமரமாக்கிய நம்… <a href="https://t.co/NGE7IDb6lU">pic.twitter.com/NGE7IDb6lU</a></p>&mdash; Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) <a href="https://x.com/KanimozhiDMK/status/2099683993079943306?ref_src=twsrc%5Etfw">September 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>வெள்ளத்தால் பாதித்த நேபாளத்திற்கு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வீதம் டிசம்பர் வரை  654 மெகாவாட் மின்சாரம் வழங்க இந்தியா முடிவு</title><link>https://www.maalaimalar.com/news/world/india-has-decided-to-supply-654-mw-of-electricity-to-flood-affected-nepal-for-18-hours-a-day-until-december</link><comments>https://www.maalaimalar.com/news/world/india-has-decided-to-supply-654-mw-of-electricity-to-flood-affected-nepal-for-18-hours-a-day-until-december#comments</comments><guid isPermaLink="false">3d4e26e4-b28f-42cd-8395-18cae48e47b0</guid><pubDate>Tue, 15 Sep 2026 02:51:16 +0000</pubDate><atom:updated>2026-09-15T02:51:16.336Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாளம்,nepal,வெள்ளம்,flood,Electricity,மின்சாரம்,Nepal Floods,நேபாள வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/jsxfn986/tn-1.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நேபாளம்  வெள்ளம், இந்தியா மின்சார விநியோகம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ நேபாளம்  வெள்ளம், இந்தியா மின்சார விநியோகம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/jsxfn986/tn-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள நேபாளத்திற்கு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வீதம் வரும் டிசம்பர் மாதம் வரை 654 மெகாவாட் மின்சாரம் வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/topic/nepal">நேபாளத்தில் </a>கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி கோஷி நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் ரசுவா மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் <a href="https://www.maalaimalar.com/news/world/disaster-flood-in-nepal-60-year-old-woman-rescued-alive-after-11-days">கடும் பாதிப்பு </a>ஏற்பட்டது. </p> <h2>பாதிப்பு</h2><p>2 வாரங்கள் கடந்தும் மீட்பு பணிகள் தொடந்து வருகின்றன. செப்டம்பர் 13 நிலவரப்படி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,388 ஆக உயர்ந்துள்ளது. 13,728 பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மாயமான 5,130 பேரை தேடும் பணி நடந்து வருகிறது.</p><p>வெள்ளத்தால் ஏற்பட்ட பொருட் சேதம் மற்றும் உள்கட்டமைப்பு சேதத்தால் நேபாளம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது.</p><p>குறிப்பாக வெள்ளபெருக்கு ஏற்பட்ட பகுதிகளில் நீர்மின் திட்ட கட்டுமானங்கள் சேதமடைந்து நாட்டின் மின் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த சூழலில், அண்டை நாடு எனும் முறையில் கூடுதல் மின்சாரத்தை நேபாளத்திற்கு வழங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.</p> <h2>மின்சாரம்</h2><p>இதன்படி, செப்டம்பர் 13 முதல் டிசம்பர் 31 வரை நேபாளத்திற்கு அதிகபட்சமாக 654 மெகாவாட் மின்சாரத்தை வழங்க செய்ய இந்திய மின்சார அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.</p><p>இந்த மின் விநியோகம் தினமும் நள்ளிரவு 12 மணி முதல் மாலை 6 மணி வரை, அதாவது 18 மணி நேரத்திற்கு வழங்கப்படும்.</p><p>இந்தியா மற்றும் நேபாளம் இடையே மின்சாரத்தை பரிமாறிக்கொள்வதற்காக ஏற்கனவே கிராஸ் பார்டர் பவர் டிரான்ஸ்மிஷன் லைன் வழியாக கூடுதல் மின்சாரம் அனுப்பப்படும்.</p> <p>இதில் 600 மெகாவாட் மின்சாரம் முசாபர்பூர் - டல்கேபார் 400 கேவி டபுள் சர்க்யூட் லைன் வழியாகவும், மீதமுள்ள 54 மெகாவாட் மின்சாரம் தனக்பூர் - மகேந்திரநகர் 132 கேவி சிங்கிள் சர்க்யூட் லைன் வழியாகவும் அனுப்பப்படவுள்ளது.</p><p>தற்போதைக்கு இந்த ஏற்பாடு டிசம்பர் 31 வரை நடைமுறையில் இருக்கும். ஜனவரி 2027 முதல் எந்த அளவில் மின்சாரம் வழங்கப்படும் என்பது குறித்து டிசம்பரில் ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <h2>உதவி</h2><p>நேபாள மின் உற்பத்தியில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டு, நாட்டின் மின் தேவைக்கும் விநியோகத்திற்குமான இடைவெளி அதிகரித்துள்ள சூழலில் நேபாளம் தனது மின் கட்டமைப்பைச் சீரமைக்கும் வரை இந்த அவசரகால மின் விநியோகம் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>மின்சாரம் தவிர, இந்தியா மனிதநேய உதவிகளையும் நேபாளத்திற்குச் செய்து வருகிறது. </p><p>ஆகஸ்ட் 26 முதல் இந்திய விமானப்படையின் 8 சிறப்பு விமானங்கள் மூலம் நிவாரணப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் மீட்புக் குழுக்கள் காத்மாண்டுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. </p><p>செப்டம்பர் 9 வரை சுமார் 130 டன்னுக்கும் அதிகமான நிவாரணப் பொருட்கள் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item></channel></rss>