<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 13 Sep 2026 08:11:45 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 13 செப். 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-13-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-13-september-2026#comments</comments><guid isPermaLink="false">7d67d6f6-a3ea-4b0e-af90-db4520343c93</guid><pubDate>Sun, 13 Sep 2026 04:34:10 +0000</pubDate><atom:updated>2026-09-13T07:55:42.156Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/cptt0uo4/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ live]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/cptt0uo4/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-london-investments-unknown-edappadi-palaniswami">முதலமைச்சர் விஜய் லண்டனில் முதலீடுகளை ஈர்த்ததாக தெரியவில்லை- எடப்பாடி பழனிசாமி... </a></p><p>*முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணம் குறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, முதலீடுகளை ஈர்ப்பதற்காகவே அவர் லண்டன் சென்றிருக்கிறார் என எந்த தகவலும் வரவில்லை என்றார்.</p><p>*மாநிலம் பல லட்சம் கோடி கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் இந்தச் சூழலில், அவசர கதியில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதை எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார். </p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-metro-rail-schedule-changed-tomorrow-for-vinayagar-chaturthi">விநாயகர் சதுர்த்தி: நாளை சென்னை மெட்ரோ ரெயில் அட்டவணை மாற்றம்</a></p><p>* இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.</p><p>* இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/topnews/a-leader-is-not-someone-who-bolts-at-the-first-sign-of-trouble-did-vijay-sethupathi-criticize-chief-minister-vijay">“பிரச்சனை என்றால் தெறித்து ஓடுபவர் தலைவர் இல்லை” - முதலமைச்சர் விஜய்யை விமர்சித்தாரா விஜய் சேதுபதி?</a></p><p>*பிக்பாஸில் விஜய் சேதுபதி பேசியது, முதலமைச்சர் விஜய்யுடன் தொடர்புப்படுத்தப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/if-you-do-not-mend-your-ways-you-will-be-set-right-a-raja-expresses-regret-over-his-remarks-about-the-minister">“நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்” - அமைச்சர் குறித்த பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் ஆ. ராசா!</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/jersey-color-controversy-hockey-india-director-suspended">ஜெர்சி நிற சர்ச்சை: ஹாக்கி இந்தியா இயக்குநர் பணியிடை நீக்கம்!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/a-raja-controversial-speech-kanimozhi-x-post">ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சு: "யாகாவா ராயினும் நாகாக்க.." கனிமொழி எம்பியின் எக்ஸ் பதிவு!... </a></p><p>*திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்பியுமான ஆ.ராசா தெரிவித்த சில கருத்துகள் அரசியல் அரங்கில் கடும் சர்ச்சையை உருவாக்கியது.</p><p>*ஒருவர் எதை காக்கத் தவறினாலும் தன் நாவை அடக்கிக் காக்க வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/joe-root-breaks-sachin-tendulkar-record-in-test-fifties">சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்த ஜோ ரூட்</a></p><p>* இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார்.</p><p>* அவர் 62 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/rybakina-beat-sabalenka-in-us-open-final">அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சபலென்காவை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ரிபாகினா</a></p><p>* அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.</p><p>* ஆஸ்திரேலிய ஓபன் இறுதிச்சுற்றிலும் எலினா ரிபாகினா சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். </p> ]]></content:encoded></item><item><title>வியட்நாம் ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் இஷாராணி பரூவா அதிர்ச்சி தோல்வி</title><link>https://www.maalaimalar.com/sports/isharani-baruah-lose-final-in-vietnam-open-badminton</link><comments>https://www.maalaimalar.com/sports/isharani-baruah-lose-final-in-vietnam-open-badminton#comments</comments><guid isPermaLink="false">78a4517f-63de-4270-9129-26d913c98bf1</guid><pubDate>Sun, 13 Sep 2026 08:07:41 +0000</pubDate><atom:updated>2026-09-13T08:07:41.647Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>isharani baruah,இஷாராணி பரூவா,vietnam open badminton,வியட்நாம் ஓபன் பேட்மிண்டன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/40rbjd2n/baruah.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ isharani]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/40rbjd2n/baruah.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் இஷாராணி பரூவா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.</strong></em></p><p>வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் தொடர் வியட்நாமில் நடந்து வருகிறது.</p><p>இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் இஷாராணி பரூவா, தாய்லாந்தின் சரன்ரக் விதித்சன் உடன் மோதினார்.</p><p>இதில் சிறப்பாக ஆடிய தாய்லாந்து வீராங்கனை 21-8, 21-15 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.</p><p>இதன்மூலம் இந்தியாவின் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%87%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BE">இஷாராணி பரூவா</a> அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.</p><p>ஆண்கள் ஒற்றையர், பெண்கள் ஒற்றையர், ஆண்கள் இரட்டையர், பெண்கள் இரட்டைய்ர மற்றும் கலப்பு இரட்டையர் என அனைத்துப் பிரிவிலும் இந்திய அணி ஏமாற்றம் அளித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>பாதியில் நின்று மீண்டெழுந்த &apos;தி டார்க் ஹெவன்&apos; திரைப்படம்  - சவால்களை பகிர்ந்த படக்குழுவினர்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/dark-heaven-team-shares-challenges-before-release</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/dark-heaven-team-shares-challenges-before-release#comments</comments><guid isPermaLink="false">2d14d39b-5d20-4122-a526-ed4e546ae971</guid><pubDate>Sun, 13 Sep 2026 08:05:44 +0000</pubDate><atom:updated>2026-09-13T08:05:44.895Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>the dark heaven,தி டார்க் ஹெவன்,Rithvika,crime thriller movie,Balaji Director,Siddhu,Tharshika</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/uoakgsyf/The-Dark-Heaven" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ The Dark Heaven  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/uoakgsyf/The-Dark-Heaven?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் அரங்கில் நடைபெற்ற 'தி டார்க் ஹெவன்' திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழாவில், படம் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் திரையரங்கு அனுபவத்தின் முக்கியத்துவம் குறித்து படக்குழுவினர் தங்களது உணர்வுப்பூர்வமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர். </p><p>இயக்குநர் பாலாஜி இயக்கத்தில், <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">பிக்பாஸ் </a>நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள இந்த நாட்டார் கதை பின்னணி கொண்ட சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் திரைப்படம் வரும் செப்டம்பர் 18 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. </p><h2><strong>நட்சத்திர பட்டாளம்</strong></h2><p>'தி டார்க் ஹெவன்' படத்தில் பிக்பாஸ் புகழ் நட்சத்திரங்கள் சித்து, தர்ஷிகா , <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE">ரித்விகா </a>ஆகியோருடன் , வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால் மற்றும் பலர் நடித்துள்ளனர்.</p><p>இப்படத்திற்கு ஒளிப்பதிவு: மணிகண்டன் பிகே,படத்தொகுப்பு : ராஜா ஆறுமுகம், இசை: சக்தி பாலாஜி, பாடல் வரிகள்: லாவர்தன். கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் ஸ்விஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்துள்ளன.</p><p>கொலையும் கொலை சார்ந்த ஒரு துப்பறியும் கதையாக உருவாகி இருக்கும் இதன் படப்பிடிப்பு திருநெல்வேலி ,ராமநாதபுரம், குற்றாலம் ,முக்கூடல்,தென்காசி போன்ற பகுதிகளில் இதுவரை கேமரா வெளிச்சம் படாத இடங்களில் தேடிப் பிடித்துப் படப்பிடிப்பு செய்துள்ளார்கள்.</p><p>இப்படத்தில் தனது அனுபவங்களை இயக்குனர் மற்றும் படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.</p><figure><img alt="The Dark Heaven  " src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/ex7w3oe4/The-Dark-Heaven" /></figure><h2><strong>இயக்குனர் - பாலாஜி</strong></h2><p>பாதியில் நின்ற படத்தை மீண்டும் எடுத்து முடிப்பது மனரீதியாக பெரும் அழுத்தம் என்றும், அந்த நெருக்கடியில் சரண், கோபால் மற்றும் படக்குழுவினர் உறுதுணையாக இருந்ததாகவும், கடந்த காலத்தை பற்றி கேட்காமல் நடிக்க ஒப்புக்கொண்ட சித்து மீது பெரும் மரியாதை ஏற்பட்டதாகவும் கூறிய இயக்குநர் பாலாஜி, இது நாட்டார் கதையை மையமாக கொண்ட த்ரில்லர் என்றும் ரித்விகாவின் வருகைக்கு பிறகு படத்தின் தரம் உயர்ந்ததாகவும் தெரிவித்தார். </p><p>படத்தைப் பார்த்து விட்டு உங்கள் உங்கள் நேர்மையான விமர்சனங்களைச் சொல்லுங்கள் .நல்லதைக் கேட்டுக்கொள்கிறோம். கேட்டதை மாற்றிக் கொள்கிறோம் என்றும் கூறினார்.</p><h2><strong>நடிகை - ரித்விகா</strong></h2><p>பெரிய படங்களால் தள்ளிப்போன 'தி டார்க் ஹெவன்' செப்.18-ல் உறுதியாக வெளியாகிறது என்றும், ஒரே மாதிரியான த்ரில்லர் படங்களுக்கு மத்தியில் இது வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை தரும் என்றும், ஒரு ஷாட்டுக்காக மணிக்கணக்கில் காத்திருந்து இருமடங்கு உழைப்பை படக்குழு கொடுத்துள்ளதாகவும் நடிகை ரித்விகா தெரிவித்தார்.</p><figure><img alt="The Dark Heaven  " src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/vjx7g5el/The-Dark-Heaven" /></figure><h2><strong>கதை நாயகன் - சித்து</strong></h2><p>சாலிகிராமத்தில் சின்ன வேடங்களுக்காக அலைந்த தனக்கு இதுவே முதல் படம் என்பதே சாதனை என்றும், முதல் படத்திலேயே கிடைத்தற்கரிய காப் ஸ்டோரி - த்ரில்லர் கதாபாத்திரம் கிடைத்தது அதிர்ஷ்டம் என்றும், பழைய கதை பற்றி கவலைப்படாமல் படத்தை மேலே கொண்டு செல்வதில் கவனம் செலுத்தியதாகவும், படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளும் கற்றுக்கொள்ளும் அனுபவமாக இருந்ததாகவும் நாயகன் சித்து தெரிவித்தார்.</p><h2><strong>இசையமைப்பாளர் - சக்தி பாலாஜி</strong></h2><p>நான் ஏற்கெனவே ’உடன்பால்’, ’ஜாக்கி ’ படங்களுக்கு இசையமைத்து இருக்கிறேன். ஆனால் முதல்முறையாக க்ரைம் த்ரில்லர் படத்திற்கு இசையமைத்தது மறக்க முடியாத அனுபவம் என்றும், இப்படம் பெரிய படத்திற்குரிய திரையரங்கு அனுபவத்தை வழங்கும் என்பதால் அனைவரும் திரையரங்கில் வந்து பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.</p><h2><strong>பிக் பாஸ் புகழ் - தர்ஷிகா</strong></h2><p>'தி டார்க் ஹெவன்' தான் தனது முதல் படம் என்றும், த்ரில்லர் படங்கள் மிகவும் பிடிக்கும் என்பதால் இப்படம் அனைவரும் விரும்பும் படமாக இருக்கும் என நம்புவதாகவும், படத்திற்காக அனைவரும் கடினமாக உழைத்துள்ளதால் செப்.18-ல் திரையரங்கில் பார்த்து ஆதரிக்குமாறும் நடிகை தர்ஷிகா கேட்டுக்கொண்டார்.</p><h2><strong>ஒளிப்பதிவாளர் - மணிகண்டன்</strong></h2><p>இயக்குநர் பாலாஜியுடன் 'டி3'க்கு பிறகு இது இரண்டாவது படம் என்றும், க்ரைம் த்ரில்லருக்காக அழகும் மர்மமும் நிறைந்த இடங்களை தேடி கண்டுபிடித்து, வாகனம் செல்ல முடியாத காடு, மலை பகுதிகளுக்கு கருவிகளை சுமந்து சென்று சிரமப்பட்டு படமாக்கியதாகவும், ஆனால் காட்சிகளை பாராட்டும்போது அந்த சிரமம் மறந்து விடுவதாகவும் ஒளிப்பதிவாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தொழில்துறை அமைச்சரின்றி தொழிற்பயணம்: யாரை பார்க்கச் சென்றார் என முதலமைச்சர்தான் கூற வேண்டும் - நயினார் நாகேந்திரன்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/industrial-tour-without-the-industries-minister-only-the-chief-minister-can-say-whom-he-went-to-meet-nainar-nagendran</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/industrial-tour-without-the-industries-minister-only-the-chief-minister-can-say-whom-he-went-to-meet-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">845555ed-e43d-4e56-8205-947402e27db8</guid><pubDate>Sun, 13 Sep 2026 07:58:43 +0000</pubDate><atom:updated>2026-09-13T07:58:43.603Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,Minister Keerthana,அமைச்சர் கீர்த்தனா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/d8b50pn1/New-Project-2026-09-13T132637.629.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தொழில்துறை அமைச்சரின்றி தொழிற்பயணம்: யாரை பார்க்கச் சென்றார் என முதலமைச்சர்தான் கூற வேண்டும் - நயினார் நாகேந்திரன்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/d8b50pn1/New-Project-2026-09-13T132637.629.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலியில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்.,</p><p>“சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து முடிந்துள்ளது. சட்டசபையில் நடந்தவற்றை மக்கள் பார்த்துள்ளனர். பல்வேறு சபாநாயகர்களை இந்த சட்டமன்றம் பார்த்துள்ளது.</p><p>கடந்த காலங்களில் பல இனம், பல மதங்களை சேர்ந்தவர்கள் சபாநாயகர்களாக பணியாற்றிய நிலையில்,  இன்று மதம் சார்ந்த ஒரு சபாநாயகர், மதம் சார்ந்த அமைச்சர்களை சட்டமன்றத்தில் பார்க்க முடிந்தது. இதை நான் சொன்னால் தவறாக முடியும்.</p><p>சட்டமன்ற நிகழ்வை பலர் ரசித்தனர், சிலர் ஆதரித்தனர், நிறைய பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குதிரை பேரத்தால் சட்டமன்ற தேர்தல் முடிந்த 3 மாதத்திலேயே இடைத்தேர்தல்.</p><p>நமது <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-london-investments-unknown-edappadi-palaniswami">முதலமைச்சர் விஜய்</a> லண்டன் சென்றுள்ளார். உடன் யார் யாரோ எல்லாம் சென்றுள்ளதாக கூறுகிறார்கள். உண்மையில் முதலீடுகளை ஈர்க்கத்தான் சென்றுள்ளரா? இந்த 3,4 நாட்களில் எத்தனைப் பேரை சந்திக்க முடியும்? இதெல்லாம் ஒரு கேள்விக்குறி.</p><p>சொந்த வேலைக்காக சென்றுள்ளார் என்றால், நாம் எதுவும் கேட்கமுடியாது. ஆனால் முதலீட்டாளர்களை ஈர்க்க சென்றுள்ளார் என்றால், யார் யாரை சந்தித்தார், எத்தனை கோடி முதலீடு வருகிறது? என்பதை எல்லாம் அவர் அறிவிக்க வேண்டும்.</p><p>இடதுசாரிகள் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கவேண்டும். இல்லையென்றால் அது சந்தர்ப்பவாத அரசியலாக கருதப்படும். ” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய் லண்டனில் முதலீடுகளை ஈர்த்ததாக தெரியவில்லை- எடப்பாடி பழனிசாமி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-london-investments-unknown-edappadi-palaniswami</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-london-investments-unknown-edappadi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">7fa9907e-8373-460a-8eea-1a87138cf85c</guid><pubDate>Sun, 13 Sep 2026 07:51:09 +0000</pubDate><atom:updated>2026-09-13T07:51:09.375Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,Edappadi Palaniswami,எடப்பாடி பழனிசாமி,அதிமுக.,tvk,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/at55x74e/EPS.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chief Minister Vijay-Edappadi Palaniswami ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/at55x74e/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணம் குறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, முதலீடுகளை ஈர்ப்பதற்காகவே அவர் லண்டன் சென்றிருக்கிறார் என எந்த தகவலும் வரவில்லை என்றார்.</p><p>திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாநிலத்தின் தற்போதைய நிதியமைப்பைக் கடுமையாக சாடியுள்ளார். அரசு பெரும் கடனில் இருக்கும்போது புதிய தலைமைச் செயலகம் அமைப்பது போன்ற அவசியமற்ற அறிவிப்புகள் வெளியாவது குறித்து அவர் தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.</p><h2>புதிய தலைமை<strong>ச் செயலகம் தே</strong>வையா?</h2><p>மாநிலம் பல லட்சம் கோடி கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் இந்தச் சூழலில், அவசர கதியில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதை எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார். "தற்போது இருக்கும் தலைமைச் செயலகக் கட்டமைப்பே போதுமானது. தமிழ்நாட்டின் நிதி நிலைமை சீரடைந்த பிறகு இத்தகைய திட்டங்களைக் கையில் எடுக்கலாம்" என்று அவர் கூறினார். மேலும், புதிய தலைமைச் செயலகத்திற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் பொருத்தமான இடமல்ல என்றும் அவர் விமர்சித்துள்ளார்.</p><h2>முதலமை<strong>ச்சரின் லண்ட</strong>ன் பயணம் </h2><p><a href="https://www.maalaimalar.com/news/world/car-race-flagged-off-by-chief-minister-vijay-ajiths-team-impresses-by-securing-3rd-place">முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணம் </a>குறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, முதலீடுகளை ஈர்ப்பதற்காகவே அவர் லண்டன் சென்றிருக்கிறார் என்பதற்கு எவ்விதப் போதிய ஆதாரங்களும் அல்லது அதிகாரப்பூர்வத் தகவல்களும் இல்லை என குறிப்பிட்டார். வெளிநாட்டுப் பயணங்களில் தொழில் முதலீடுகளை ஈர்த்ததற்கான எந்தவிதப் புகைப்படங்களோ விளக்கங்களோ வெளியாகவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><h2>2 தொகுதிகளிலும் <strong>அதிமுக</strong> மகத்தான வெற்றி பெறும்</h2><p>தவெகவில் இணைந்துள்ள முன்னாள் நிர்வாகிகள் மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகியோர் குறித்துப் பேசிய அவர், "கட்சியிலிருந்து ராஜினாமா செய்தவர்களுக்கு அங்கே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் தேர்தல்களில் அவர்களை மக்கள் நிச்சயமாக தோற்கடிப்பார்கள்" என்று தெரிவித்தார். தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அதிமுகவே மகத்தான வெற்றி பெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன்னம்பிக்கையுடன் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>&quot;ரசிகர்கள் இல்லையென்றால் பிரபலங்கள் பூஜ்ஜியம்&quot; - ஆலியா பட்டின் மெய்க்காப்பாளர் செயலால் வெடித்த நெட்டிசன்களின் கோபம்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/fans-are-everything-celebrities-are-nothing-alia-bhatts-makeup-artist-sparks-outrage</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/fans-are-everything-celebrities-are-nothing-alia-bhatts-makeup-artist-sparks-outrage#comments</comments><guid isPermaLink="false">f3855968-8788-4359-90ee-763dff96c6a3</guid><pubDate>Sun, 13 Sep 2026 07:11:49 +0000</pubDate><atom:updated>2026-09-13T07:11:49.889Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>mumbai,மும்பை,alia bhatt,ஆலியாபட்,Alia Bhatt Bodyguard,Bollywood Controversy,Alia Bhatt Fans</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/ka32frqj/Alia-Bhatt" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Alia Bhatt ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/ka32frqj/Alia-Bhatt?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகையான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D">ஆலியா பட்</a>, தனது புதிய திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்க <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88">மும்பையில் </a>உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு வந்திருந்தார்.</p><p>இந்த விழாவிற்கு அவர் தனது சகோதரி ஷாகின் பட் உடன் வருகை தந்திருந்தார். விழா மிகச் சிறப்பாக முடிவடைந்த நிலையில், அவர் அரங்கில் இருந்து வெளியேறி தனது காரை நோக்கிச் சென்றபோது இந்த சர்ச்சை சம்பவம் அரங்கேறியுள்ளது.</p><h2><strong>செல்பி எடுக்க முயன்ற ரசிகருக்கு நேர்ந்த அவமானம்!</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D">ஆலியா பட்டை</a> நேரில் கண்டதும் உற்சாகமடைந்த ஏராளமான ரசிகர்கள், அவரைச் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்க முண்டியடித்தனர். அப்போது அங்கு கூடி நின்ற கூட்டத்தில் இருந்த ஒரு தீவிர ரசிகர், ஆலியா பட்டுடன் மிக அருகில் நின்று ஒரு செல்பி எடுக்க முயன்றார்.</p><p>இதனைக் கண்டு ஆத்திரமடைந்த ஆலியா பட்டின் தனிப்பட்ட மெய்க்காப்பாளர் , அந்த ரசிகரை இரண்டு முறை மிகக் கொடூரமாகப் பிடித்து பின்னோக்கித் தள்ளிவிட்டார். </p><p>இந்தத் தள்ளுமுள்ளு சம்பவத்தின் போது நடிகை ஆலியா பட், மெய்க்காப்பாளரைத் தடுக்காமல் அமைதியாகத் தனது காரை நோக்கி நடந்து சென்று ஏறியதாகக் கூறப்படுகிறது.</p><h2><strong>சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ!</strong></h2><p>ரசிகர் தள்ளிவிடப்படும் இந்த அதிர்ச்சியூட்டும் காட்சி அங்கிருந்த கேமராக்களில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வைரலாகி வருகிறது. </p><p>இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் பலரும் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.</p><h2><strong>நெட்டிசன்களின் காட்டமான விமர்சனங்கள்</strong></h2><p>இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இணையவாசிகள் பிரபலங்களின் பின்னால் ஓடும் ரசிகர்களை நோக்கியும், அந்த மெய்க்காப்பாளரின் அநாகரிகச் செயலைக் கண்டித்தும் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.</p><p>"பிரபலங்களுடன் ஒரு புகைப்படம் எடுப்பதற்காக உங்களை நீங்களே ஏன் இப்படிப் பிறர் முன்னிலையில் அவமானப்படுத்திக் கொள்கிறீர்கள்? உங்கள் சுயமரியாதையை இழக்காதீர்கள்" என ரசிகர்கள் சிலருக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.</p><p>மேலும் "பிரபலங்களின் புகழுக்கு இந்த ரசிகர்கள்தானே காரணம்? ரசிகர்கள் இல்லையென்றால் இந்த பிரபலங்கள் ஒன்றும் கிடையாது என்பதை அவர்கள் உணர வேண்டும்" எனச் சிலர் காட்டமாக விமர்சித்துள்ளனர்.</p><p>தன் கண் முன்னே ஒரு ரசிகர் தள்ளிவிடப்படும் போது, அதைத் தடுத்து நிறுத்தாமல் மௌனம் காத்த ஆலியா பட்டின் மீதும் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.</p><p>பாலிவுட் வட்டாரத்தில் இந்த 'பாடிகார்டு' சர்ச்சை தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி எச்சரிக்கை: சீன அதிபர் முன்னிலையில் முக்கிய கனிமங்கள் குறித்து பேச்சு!</title><link>https://www.maalaimalar.com/news/national/brics-summit-modi-warning-on-critical-minerals-in-front-of-xi</link><comments>https://www.maalaimalar.com/news/national/brics-summit-modi-warning-on-critical-minerals-in-front-of-xi#comments</comments><guid isPermaLink="false">1c7ac538-1773-4517-ab26-85a6720a19df</guid><pubDate>Sun, 13 Sep 2026 07:08:59 +0000</pubDate><atom:updated>2026-09-13T07:08:59.211Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BRICS Summit,pm modi,Chinese president,பிரிக்ஸ் உச்சிமாநாடு,சீன அதிபர்  ஜின்பிங்,பிரதமர் மோடி,Critical Minerals</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/mmuvyclc/mo.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/mmuvyclc/mo.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சமீபகாலமாக நிலவி வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள், தொற்றுநோய்கள் மற்றும் பருவநிலை மாற்றங்கள் உலகளவில் விநியோகச் சங்கிலியை எவ்வாறு சீர்குலைத்துள்ளன.</p><p>டெல்லியில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் உரை நிகழ்த்திய இந்தியப் <a href="https://www.maalaimalar.com/news/national/will-a-brics-currency-be-created-to-rival-the-dollar-here-is-the-answer">பிரதமர் நரேந்திர மோடி</a>, முக்கியக் கனிமங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை ஆயுதமாக்குவது உலகளாவிய பொதுவான பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் முட்டுக்கட்டையாக அமையும் என்று எச்சரித்துள்ளார்.</p><p>சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி இந்த நேரடி எச்சரிக்கையை விடுத்துள்ளார். உலகளவில் முக்கியக் கனிமங்கள் மற்றும் அரிதான மண் வளங்கள் விநியோகத்தில் சீனா பெரும் ஆதிக்கம் செலுத்தி வரும் சூழலில், பிரதமரின் இந்த உரை சர்வதேச அரங்கில் சீனாவுக்கான நேரடிச் செய்தியாகப் பார்க்கப்படுகிறது.</p><h2>வளங்களின் <strong>சமமான ப</strong>யன்பாடு</h2><p>'மீள்தன்மை,  ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மை' (Resilience, Innovation, Cooperation, and Sustainability) என்ற தலைப்பிலான பிரிக்ஸ் அமர்வில் பேசிய பிரதமர் மோடி, தொழில்நுட்பங்கள் மற்றும் அத்தியாவசிய கனிம வளங்கள் அனைவருக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். ஒரு சில நாடுகள் மட்டுமே தங்களது கட்டுப்பாட்டில் உள்ள கனிம வளங்களை மற்ற நாடுகளுக்கு எதிரான அரசியல் அல்லது பொருளாதார ஆயுதமாகப் பயன்படுத்துவது விநியோகச் சங்கிலியைப் பாதிப்பதுடன், அனைத்து நாடுகளின் கூட்டுப் பொருளாதார வளர்ச்சிக்கும் தடையை ஏற்படுத்தும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.</p><p>சமீபகாலமாக நிலவி வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள், தொற்றுநோய்கள் மற்றும் பருவநிலை மாற்றங்கள் உலகளவில் விநியோகச் சங்கிலியை எவ்வாறு சீர்குலைத்துள்ளன என்பதைப் பற்றிப் பிரதமர் மோடி விவரித்தார். இன்றைய உலகில் எந்தவொரு பொருளாதார நெருக்கடியும் ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்துடன் மட்டும் முடிந்துவிடுவதில்லை என்றும், அது உலகளாவிய அளவில் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார். எனவே, விநியோகச் சங்கிலிகளில் வெளிப்படைத்தன்மையையும் சமநிலையையும் பேணுவது அனைத்து நாடுகளின் வளர்ச்சிக்கும் அவசியம் என்பதை இந்தியத் தரப்பு உறுதியாக எடுத்துரைத்துள்ளது.</p><p>மின்னணு சாதனங்கள், பசுமை ஆற்றல் நுட்பங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிப்பிற்கு தேவையான முக்கியக் கனிமச் சந்தையில் சீனாவே பெரும் பங்கு வகிக்கிறது. இத்தகைய சூழலில், பிரிக்ஸ் அமைப்பின் தலைவராக இந்தியா முன்னெடுக்கும் கொள்கைகள் அனைத்து நாடுகளையும் உள்ளடக்கிய வளமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்நுட்ப தழுவலில் வெளிப்படைத்தன்மையும், கூட்டுப் பங்களிப்பும் மட்டுமே உலக நாடுகளுக்கு இடையிலான பொருளாதார இடைவெளியைக் குறைக்கும் என்பதில் இந்தியா தனது உறுதியான நிலைப்பாட்டை பதிவு செய்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விநாயகர் சதுர்த்தி: நாளை சென்னை மெட்ரோ ரெயில் அட்டவணை மாற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-metro-rail-schedule-changed-tomorrow-for-vinayagar-chaturthi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-metro-rail-schedule-changed-tomorrow-for-vinayagar-chaturthi#comments</comments><guid isPermaLink="false">207ff3eb-e8ca-4b4f-a96d-35a34c4d7bf0</guid><pubDate>Sun, 13 Sep 2026 07:03:32 +0000</pubDate><atom:updated>2026-09-13T07:03:32.448Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Metro Rail,விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,மெட்ரோ ரெயில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/2prmt44l/metro.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ metro rail]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/2prmt44l/metro.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>விநாயகர் சதுர்த்தியை அன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.</strong></em></p><p>நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு நாளை அரசு விடுமுறை தினம் என்பதால், மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியையொட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p>இதுதொடர்பாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:</p><p>காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை பின்வரும் நேர இடைவெளிகளில் இயக்கப்படும்.</p><p>காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.</p><p>நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.</p><p>இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.</p><p>இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும என தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&apos;எல்லாம் தெரிஞ்சவன் தலைவன் ஆகுறதெல்லாம் அந்த காலம்: எல்லாருக்கும் தெரிஞ்சவன் தலைவர் ஆகுறதுதான் இந்த காலம்&apos; - ப்ளடி பாலிடிக்ஸ் டீசரின் பரபரப்பு வசனம்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/from-all-knowing-leader-to-known-by-all-leader-viral-bloody-politics-teaser-line</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/from-all-knowing-leader-to-known-by-all-leader-viral-bloody-politics-teaser-line#comments</comments><guid isPermaLink="false">625cd4fc-c8fb-45f7-b2e5-7fa4a28573c9</guid><pubDate>Sun, 13 Sep 2026 06:42:38 +0000</pubDate><atom:updated>2026-09-13T06:42:38.826Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>Gautham Karthik,Sam C.S,கௌதம் கார்த்திக்,Bloody Politics,பிளடி பாலிடிக்ஸ்,Selva Raghavan,Dhina Raghavan</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/fynra9vk/Bloody-Politics" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Bloody Politics ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/fynra9vk/Bloody-Politics?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ் சினிமாவில் தற்போதைய ட்ரெண்டிங்காக அரசியல் கதைக் களங்கள் மாறி வரும் நிலையில், நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%8C%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D">கௌதம் ராம் கார்த்திக்</a> நடிப்பில் முற்றிலும் ஒரு புதிய அரசியல் அதிரடித் திரைப்படமாக உருவாகியுள்ள '<a href="https://www.maalaimalar.com/topic/bloody-politics">ப்ளடி பாலிடிக்ஸ்</a>' படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. </p><p>இந்த மாஸ் டீசரை முன்னணி நடிகர் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நேற்று தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.</p><h2><strong>107 விநாடிகள்... தெறிக்கும் அரசியல் ஆக்ரோஷம்!</strong></h2><p>அறிமுக இயக்குநர் தினா ராகவன் எழுத்து மற்றும் இயக்கத்தில், தென் சென்னையின் அடிமட்ட அரசியல் மற்றும் வார்டு கவுன்சிலர் தேர்தலை மையமாக வைத்து இந்தத் திரைப்படம் மிக யதார்த்தமாக உருவாக்கப்பட்டுள்ளது.</p><p>நேற்று வெளியான 107 விநாடிகள் கொண்ட இந்த டீசர், ஆரம்பம் முதலே விறுவிறுப்பான காட்சிகளால் நிரம்பியுள்ளது. </p><p>எப்போதும் துடிப்பான சாக்லேட் பாயாக வலம் வந்த கௌதம் ராம் கார்த்திக், இதில் '<a href="https://www.maalaimalar.com/topic/bloody-politics">இளையா</a>' என்ற கதாபாத்திரத்தில், அரசியல்வாதியாக துடிக்கும் ஒரு ஆக்ரோஷமான எளிய இளைஞனாக முற்றிலும் மாறுபட்ட புதிய மாஸ் அவதாரத்தில் மிரட்டியுள்ளார்.</p><h2><strong>விவாதப் பொருளாக மாறிய 'ப்ளடி' வசனம்!</strong></h2><p>இந்த டீசரின் ஹைலைட்டாக அமைந்துள்ள ஒரு வசனம் அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது<em>.</em></p><h2><em>"எல்லாம் தெரிஞ்சவன் தலைவன் ஆகுறதெல்லாம் அந்த காலம்... எல்லாருக்கும் தெரிஞ்சவன் தலைவன் ஆகுறதுதான் இந்த காலம்!" </em></h2><p><em>என்ற </em>பன்ச் வசனம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு எகிற வைத்துள்ளது. இப்படத்திற்கு பிரபல இயக்குனர் ராஜு முருகன் கூர்மையான வசனங்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2><strong>கவனம் ஈர்க்கும் செல்வராகவன் - பி. வாசு கூட்டணி!</strong></h2><p>இப்படத்தில் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான <strong><a href="https://www.maalaimalar.com/topic/selva-raghavan">செல்வராகவன் </a>மற்றும் பி. வாசு</strong> ஆகியோர் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். </p><p>குறிப்பாக, செல்வராகவன் ஒரு இரக்கமற்ற மூத்த அரசியல் தலைவராக டீசரில் காட்டியுள்ள லுக் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இவர்களுடன் அஞ்சனா நேத்ருன், ரோபி, ஏ. வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.</p><h2><strong>சாம் சி.எஸ்.-இன் அதிரடி இசை!</strong></h2><p>பிரபல தயாரிப்பாளர் கணேஷ் கே. பாபு தனது 'Draft by GKB' நிறுவனம் மூலம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வழங்குகிறார். படத்திற்கு <a href="https://www.maalaimalar.com/topic/sam-cs">சாம் சி.எஸ்</a>. இசையமைத்துள்ளார். டீசரின் பின்னணி இசை படத்தின் தீவிரத் தன்மையை அப்படியே கடத்துவதாக உள்ளதென சினிமா விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர்.</p><p>தற்போது யூடியூபில் ட்ரெண்டிங்கில் உள்ள இந்த டீசர், 'ப்ளடி பாலிடிக்ஸ்' ஒரு தரமான அரசியல் த்ரில்லராக இருக்கும் என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது. மேலும் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நாளை சதுர்த்தி விழா கொண்டாட்டம்- தமிழகம் முழுவதும் 1 லட்சம் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-vinayagar-chaturthi-worhip</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-vinayagar-chaturthi-worhip#comments</comments><guid isPermaLink="false">a497fa23-4fa6-4e14-b226-322b9d72151b</guid><pubDate>Sun, 13 Sep 2026 06:41:41 +0000</pubDate><atom:updated>2026-09-13T06:41:41.271Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,vinayagar,விநாயகர்,Vinayagar Chaturthi 2026,விநாயகர் சதுர்த்தி 2026</media:keywords><media:content height="720" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/utc6h9ty/Vinayagar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vinayagar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/utc6h9ty/Vinayagar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் நாளை விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. </p><p>தமிழகத்தில் நாளை விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும், குடியிருப்போர் நலச் சங்கத்தினரும் தங்களது பகுதிகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்வார்கள்.</p><p>ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா தமிழகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாகி உள்ளன.</p><h2><strong>ஒரு லட்சம் சிலைகள்</strong></h2><p>சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, சேலம், வேலூர், விழுப்புரம் உள்பட அனைத்து மாவட்டங்களிலுமே விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் முழுவீச்சில் மேற்கொண்டுள்ளனர். மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் விநாயகர் சிலைகள் நாளை பூஜைக்காக பிரதிஷ்டை செய்யப்படுகிறது.</p><h2><strong>போலீஸ் கமிஷனர்</strong></h2><p>சென்னையில் கடந்த ஆண்டு 1,519 சிலைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அதேபோன்று இந்த முறையும் 1,500-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கு போலீசார் அனுமதி அளித்திருக்கிறார்கள். இதேபோன்று ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 700-க்கும் மேற்பட்ட சிலைகளும், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலக பகுதிகளில் 800-க்கும் மேற்பட்ட சிலைகளும் வைக்கப்பட உள்ளன.</p><h2><strong>3 ஆயிரம் சிலைகள்</strong></h2><p>இதன் மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் நாளை பூஜைக்காக நிறுவப்பட உள்ளன. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது. போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சென்னையில் விநாயகர் சிலைகள் நிறுவுவது, வழிபாடு செய்வது குறித்தும், சிலைகளை அமைதியான முறையில் கடலில் கரைப்பது குறித்தும், விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் 29 இந்து அமைப்புகளை சேர்ந்த 200 பேர் கலந்து கொண்டனர்.</p><h2><strong>கட்டுப்பாடுகள்</strong></h2><p>விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கு சென்னை மாநகர போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-</p><p>விநாயகர் சிலைகள் நிறுவுமிடத்தின் நில உரிமையாளர்கள், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைத்துறை அல்லது அரசுத் துறையிடம் இருந்து உரிய அனுமதி பெற்ற பிறகே விழாவை நடத்துபவர்கள் சிலைகளை நிறுவ வேண்டும்.</p><p>தீயணைப்புத்துறை, மின்வாரியம் ஆகியவற்றிடமிருந்து தடையில்லா சான்றுகள் பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரியிடம் விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கான படிவங்களை பூர்த்தி செய்து, அதில் குறிப்பிட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளை கடைபிடிக்க உறுதியளித்து, அனுமதி பெற்றிருக்க வேண்டும்.</p><h2><strong>10 அடிக்கு மேல்</strong></h2><p>* விநாயகர் சிலைகள் சுற்றுச்சுழலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களால் செய்திருக்க கூடாது.</p><p>* நிறுவப்படும் சிலையின் உயரமானது அடித்தளத்தில் இருந்து 10 அடிக்கு மேல் இருக்கக்கூடாது.</p><p>* பிற வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் அருகில் சிலைகள் நிறுவப்படுவதை தவிர்க்க வேண்டும்.</p><p>* மதவாத வெறுப்புணர்ச்சியை தூண்டும் வகையிலோ, பிற மதத்தினர் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலோ முழக்கமிடுவதற்கும், கோஷமிடுவதற்கும் எவ்விதத்திலும் இடம் தரக்கூடாது.</p><h2><strong>24 மணி நேரமும்</strong></h2><p>* சிலைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்த 2 தன்னார்வலர்களை 24 மணி நேரமும் சுழற்சி முறையில் நியமிக்க வேண்டும்.</p><p>* நிகழ்ச்சி நடக்கும் வளாகத்தில் அரசியல் கட்சிகள் அல்லது மதரீதியான தலைவர்கள் ஆகியோருக்கு ஆதரவான விளம்பர பலகைகைள வைக்கக்கூடாது.</p><p>* தீ விபத்தை தடுக்கும் வகையில் பாதுகாப்பு விதிமுறைகளும், விதிகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும், மின்சார சாதனங்கள், பந்தல்கள் அவ்வப்போது கண்காணித்து, விபத்துக்கள் மற்றும் அசம்பாவிதங்கள் நிகழாமல் பாதுகாப்புகளை மேற்கொள்ள வேண்டும்.</p><p>* விநாயகர் சிலைகளை கரைக்க காவல்துறை அனுமதிக்கப்பட்ட நாட்களில், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை அனுமதிக்கப்பட்ட 4 சக்கர வாகனங்களில் எடுத்துச் சென்று அமைதியான முறையில் கடலில் கரைக்க வேண்டும்.</p><h2><strong>பட்டாசு வெடிக்க தடை</strong></h2><p>* விநாயகர் சிலை நிறுவப்பட்ட இடங்கள், ஊர்வல பாதைகள் மற்றும் கரைப்பிடங்களில் பட்டாசுகள் வெடிக்க அனுமதி இல்லை.</p><p>* விநாயகர் சிலைகள் நிறுவப்பட்ட இடத்தில் பாதுகாப்பிற்காக சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த வேண்டும்.</p><p>இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.</p><p>இந்த கட்டுப்பாடுகளை முழுமையாக கடைப்பிடித்து விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியான முறையில் நடத்துவதற்கு விழா ஏற்பாட்டாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று சென்னை மாநகர போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>“பிரச்சனை என்றால் தெறித்து ஓடுபவர் தலைவர் இல்லை” - முதலமைச்சர் விஜய்யை விமர்சித்தாரா விஜய் சேதுபதி? </title><link>https://www.maalaimalar.com/news/topnews/a-leader-is-not-someone-who-bolts-at-the-first-sign-of-trouble-did-vijay-sethupathi-criticize-chief-minister-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/a-leader-is-not-someone-who-bolts-at-the-first-sign-of-trouble-did-vijay-sethupathi-criticize-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">1e7c9140-72e1-48d0-85fe-ac149b5a49d7</guid><pubDate>Sun, 13 Sep 2026 06:39:40 +0000</pubDate><atom:updated>2026-09-13T06:39:40.424Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>நடிகர் விஜய் சேதுபதி,Actor vijay Sethupathi,Bigg Boss Tamil,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,பிக்பாஸ் தமிழ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/y1wwzx97/New-Project-2026-09-13T120557.309.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “பிரச்சனை என்றால் தெறித்து ஓடுபவர் தலைவர் இல்லை” - 
முதலமைச்சர் விஜய்யை விமர்சித்தாரா விஜய் சேதுபதி? ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/y1wwzx97/New-Project-2026-09-13T120557.309.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><content:encoded><![CDATA[ <p>‘பிக்பாஸ் சீசன் 10’ நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் விஜய் சேதுபதியே தொகுத்து வழங்குகிறார்.</p><p>இந்நிலையில் நேற்று (செப்.12) முதல்முறையாக இந்த சீசனில் வந்தவர்களுடன் விஜய் சேதுபதி கலந்துரையாடினார். </p><p>இதுதொடர்பான புரோமோக்கள் வெளியாகி உள்ளன. அந்த புரோமோக்களில் இந்த சீசனின் முதல் கேப்டன் ஷாதிகாவிடம் விஜய் சேதுபதி கேள்வி எழுப்புகிறார். </p><h2>யார் தலைவன்?</h2><p>“தலைவர் என்றால் என்னன்னே தெரியாமல், தலைமைத்துவம்னா என்னன்னு புரியாமல், வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்துவிட்டு, பிரச்சினைகளும், பொறுப்புகளும் வரும்போது எதிரணி மீது பழியைத் தூக்கிப் போட்டுவிட்டு, அங்கிருந்து தெறித்து ஓடுவது ஒரு தலைவருக்கான தரம் இல்லை. </p><p>அது ஏமாற்று வேலை.” என்று ஷாதிகாவை சாடுகிறார்.</p><p>விஜய் சேதுபதியின் இந்தப் பேச்சு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vijays-delayed-arrival-was-the-reason-for-the-loss-of-life-tks-elangovan">முதலமைச்சர் விஜய்</a>யை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. </p>]]></content:encoded></item><item><title>வெறும் பேட்டிங் சாதனை மட்டுமல்ல: விராட் கோலியின் டாட்டூக்கள் சொல்லும் சுவாரஸ்ய கதைகள்!</title><link>https://www.maalaimalar.com/sports/not-just-batting-records-virat-kohlis-tattoos-tell-fascinating-stories</link><comments>https://www.maalaimalar.com/sports/not-just-batting-records-virat-kohlis-tattoos-tell-fascinating-stories#comments</comments><guid isPermaLink="false">02aeafe4-ba51-4865-b802-fe4729c41edd</guid><pubDate>Sun, 13 Sep 2026 06:29:02 +0000</pubDate><atom:updated>2026-09-13T06:29:02.442Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Virat Kohli,விராட் கோலி,Virat Kohli&apos;s tattoos,Tribal Art,விராட் கோலியின் டாட்டூக்கள்,பழங்குடியின கலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/13jt9gyj/kholi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Virat Kohli's tattoos]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/13jt9gyj/kholi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஒரு கிரிக்கெட் வீரராக நாட்டின் அடையாளத்தை சுமப்பதைப் பெருமையாகக் கருதும் கோலி, தனது உடம்பில் இரண்டு சிறப்பு எண்களைப் பொறித்துள்ளார். </p><p>இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, சர்வதேச அரங்கில் தனது பேட்டிங் திறமையால் பல்வேறு சாதனைகளைப் படைத்தவர். மைதானத்தில் அவர் வெளிப்படுத்தும் அக்ரசிவ் ஆட்டம், உணர்ச்சிப்பூர்வமான கொண்டாட்டங்கள் மற்றும் துடிப்பான அணுகுமுறை போன்றவை உலகெங்கிலும் உள்ள ரசிகர்களைக் கவர்ந்தவை. இருப்பினும், விளையாட்டுத் திறனையும் தாண்டி, இந்தியக் விளையாட்டு வீரர்களிடையே டாட்டூ கலாச்சாரத்தை ஒரு புதிய அலையாக மாற்றிய பெருமை கோலியையே சேரும். </p><p>அவரது உடலில் வரையப்பட்டுள்ள ஒவ்வொரு டாட்டூவும் வெறும் அழகுக்காக மட்டும் செய்யப்பட்டவை அல்ல; மாறாக, அவரது வாழ்க்கைப் பயணம், ஆன்மீகக் தேடல் மற்றும் தொழில்முறை வாழ்க்கையின் மிக முக்கியமான தருணங்களின் அடையாளங்களாக விளங்குகின்றன.</p><h2>தொடக்<strong>க கால பா</strong>தை</h2><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/neal-skupski-christian-harrison-pair-won-the-mens-doubls-title-in-us-open-tennis">கோலி </a>தனது ஆரம்ப காலத்தில் வலது முன்கையில் பழங்குடியின கலை வடிவிலான டாட்டூவை முதன்முதலில் வரைந்துகொண்டார். தொடக்கத்தில் இது ஸ்டைலுக்காகத் தொடங்கப்பட்டாலும், பின்னர் தனது இயல்பான ஆக்ரோஷத்தையும் தனித்துவ அடையாளத்தையும் வெளிப்படுத்தும் குறியீடாக இதை அவர் ஏற்றுக்கொண்டார். இதனுடன், தனது பெற்றோர் சரோஜ் மற்றும் பிரேம் ஆகியோரின் பெயர்களை இந்தியில் தனது கையில் வரைந்துள்ளார். கிரிக்கெட் வீரராக தான் உருவெடுக்க அடித்தளமிட்ட பெற்றோரின் தியாகங்களை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளவும், அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் இந்த டாட்டூக்கள் அமைக்கப்பட்டுள்ளன.</p><h2><strong>ஆன்மீக குறியீடுகள்</strong></h2><p>ஒரு கிரிக்கெட் வீரராக நாட்டின் அடையாளத்தை சுமப்பதைப் பெருமையாகக் கருதும் கோலி, தனது உடம்பில் இரண்டு சிறப்பு எண்களைப் பொறித்துள்ளார். 2008-இல் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் 175-வது வீரராக அறிமுகமானதைக் குறிக்கும் '175' என்ற எண்ணும், 2011-இல் டெஸ்ட் போட்டிகளில் 269-வது வீரராகக் களம் கண்டதைக் குறிக்கும் '269' என்ற எண்ணும் அவரது கையில் இடம்பெற்றுள்ளன. மேலும், இடது கையில் கைலாச மலையில் தியானத்தில் இருக்கும் சிவபெருமானின் வடிவம், மன அமைதியையும் அகந்தையை அழித்து சுய முன்னேற்றத்தை அடைவதையும் குறிக்கிறது. இதன் அருகில் உள்ள ஆசிரமம் மற்றும் 'ஓம்' குறியீடு ஆகியவை தொடர் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மன அமைதியைப் பேண அவருக்கு உதவுகின்றன.</p><h2>போ<strong>ராளித் தன்மை</strong></h2><p>ஜப்பானிய சாமுராய் வீரரின் டாட்டூ, சாமுராய்களின் 'புஷிடோ' கொள்கைகளான நேர்மை, ஒழுக்கம், மரியாதை மற்றும் தைரியம் ஆகியவற்றை குறிப்பதாக கோலி தெரிவித்துள்ளார். அதேபோல, தோள்பட்டையில் உள்ள 'கடவுளின் கண்' டாட்டூ, தனக்கு மேலே ஒரு உயர்ந்த சக்தி இருப்பதை உணர்த்தி எப்போதும் பணிவோடு இருக்க நினைவூட்டுகிறது. </p><p>அண்மைக்காலத்தில் வரைந்துகொண்ட தாமரை மலர் மற்றும் புனித வடிவியல் டாட்டூக்கள், சவால்களில் இருந்து மீண்டு வரும் மன உறுதியையும், மறுபிறப்பையும், ஆன்மீக முதிர்ச்சியையும் பிரதிபலிக்கின்றன. இவ்வாறு, விராட் கோலியின் உடலில் இருக்கும் கலைப் படைப்புகள் அவரது விளையாட்டு வாழ்க்கையின் மைல்கற்களையும், ஒரு மனிதனாக அவர் அடைந்துள்ள மனமாற்றத்தையும் வெளிப்படுத்தும் ஒரு சுயசரிதையாகவே அமைந்துள்ளன.</p>]]></content:encoded></item><item><title>ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் &apos;மீசைய முறுக்கு 2&apos;  படத்தின் டிரெய்லர் வெளியானது!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/hiphop-aathi-meesaiya-murukku-2-trailer-released</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/hiphop-aathi-meesaiya-murukku-2-trailer-released#comments</comments><guid isPermaLink="false">1fddbb21-8cba-402f-a777-5cda77628249</guid><pubDate>Sun, 13 Sep 2026 06:10:44 +0000</pubDate><atom:updated>2026-09-13T06:10:44.557Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>ஹிப்ஹாப் தமிழா ஆதி,Hiphop Tamizha Adhi,yogibabu,Meesaya Murukku 2,மீசைய முறுக்கு 2,GaanaVsCarnatic</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/lhphz4hj/Meesaya-Murukku-2-Trailer" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Meesaya Murukku 2  Trailer]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/lhphz4hj/Meesaya-Murukku-2-Trailer?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இளைஞர்களின் ஃபேவரைட் ஸ்டார் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF">ஹிப்ஹாப் தமிழா ஆதி </a>நடிப்பிலும், இயக்கத்திலும் மற்றும் இசையிலும் உருவாகியுள்ள மாஸ் கமர்ஷியல் எண்டர்டெய்னர் திரைப்படமான 'மீசைய முறுக்கு 2' படத்தின் டிரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.</p><h2><strong>துள்ளலான இசை, இளமை ததும்பும் எனர்ஜி!</strong></h2><p>கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான '<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">மீசைய முறுக்கு</a>' திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக இப்படம் உருவாகியுள்ளது. </p><p>தந்தை கனவை மகன் நிறைவேற்றும் எமோஷனல் பின்னணி, இரண்டு வெவ்வேறு காலகட்டங்களின் இசைப் பயணம் மற்றும் இன்றைய தலைமுறை இளைஞர்களை தட்டியெழுப்பும் துள்ளலான மாஸ் வசனங்களுடன் இந்த டிரெய்லர் பேக் செய்யப்பட்டுள்ளது.</p><p>ஆதியின் வழக்கமான எனர்ஜி, மெகா பட்ஜெட் பிரம்மாண்டம் மற்றும் ஹிப்ஹாப் மியூசிக் என தியேட்டர் ரசிகர்களுக்கான அத்தனை அம்சங்களும் இதில் நிறைந்துள்ளதாக சினிமா விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.</p><h2><strong>டிரெய்லர் காட்டும் சுவாரசியக் கதைக்களம்!</strong></h2><p>இந்தத் திரைப்படத்தின் கதையானது வட சென்னைப் பின்னணியில் மூன்று தலைமுறை இசைக்கலைஞர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.</p><p> குறிப்பாக, பாரம்பரியமிக்க கர்நாடக இசைக்கும், அடித்தட்டு மக்களின் வாழ்வியலோடு கலந்த சுயாதீன/கானா இசைக்கும் இடையே நடக்கும் ஒரு இசைப் போராட்டமாக இந்தத் திரைப்படம் இருக்கும் என்பதை டிரெய்லர் உணர்த்துகிறது.</p><p>"மியூசிக்-ன்றது எமோஷன், அதை எப்படி சார் கட்டுப்படுத்த முடியும்?" போன்ற ஆதியின் மாஸ் வசனங்கள் மற்றும் "தோத்தாலும் மீசைய முறுக்கிட்டே தோப்பேன்டா" என்ற எனர்ஜியான குரல் இளைஞர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. </p><p>மேலும், 1980-களின் காலகட்டம் மற்றும் தற்காலம் என இரு வேறு காலக்கட்டங்களில் இந்த கதை நகர்வது கூடுதல் சுவாரசியம்.</p><h2><strong>நட்சத்திரப் பட்டாளம் மற்றும் தொழில்நுட்பக் குழு!</strong></h2><p>இப்படத்தில் ஆதிக்கு ஜோடியாக கிருத்திகா சர்மா, சைத்ரா ஜே. ஆச்சார் மற்றும் ரம்யா ரங்கநாதன் என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர். </p><p>இவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில், யோகி பாபு, கருணாஸ், நாசர், ஆடுகளம் நரேன், ஷா ரா மற்றும் ஹர்ஷத் கான். ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.</p><p>அவனி மூவிஸ் மற்றும் பென்ஸ் மீடியா பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளனர். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவையும், ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பையும் கையாண்டுள்ளனர்.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/lU40CPN7Ww0"></iframe></figure><h2><strong>தியேட்டர் திருவிழா!</strong></h2><p>இப்படத்தின் உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் வரும் செப்டம்பர் 25 அன்று வெளியாக இருக்கிறது. </p><p>தியேட்டர்களிலேயே கச்சேரி பார்ப்பது போன்ற ஒரு பிரம்மாண்ட அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கப் போவதாக படக்குழுவினர் உறுதியளித்துள்ளனர். இப்படம் சினிமா வட்டாரத்தில் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>“தி.மு.க.வின் அட்டூழியங்களை நேர்மையாக எதிர்கொள்வோம்” - அமைச்சர் நிர்மல் குமார்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/we-will-boldly-confront-the-dmks-atrocities-minister-nirmal-kumar</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/we-will-boldly-confront-the-dmks-atrocities-minister-nirmal-kumar#comments</comments><guid isPermaLink="false">ddd3d8b8-cd5d-419d-b7f3-1ebf30623ed8</guid><pubDate>Sun, 13 Sep 2026 06:08:37 +0000</pubDate><atom:updated>2026-09-13T06:08:37.321Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,அமைச்சர் நிர்மல் குமார்,minister nirmal kumar,A. Raja,ஆ. ராசா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/fjrqo0lj/New-Project-2026-09-13T113806.056.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “தி.மு.க.வின் அட்டூழியங்களை நேர்மையாக எதிர்கொள்வோம்” - அமைச்சர் நிர்மல் குமார்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/fjrqo0lj/New-Project-2026-09-13T113806.056.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மிசாவில் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டது தொடர்பாக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/if-you-do-not-mend-your-ways-you-will-be-set-right-a-raja-expresses-regret-over-his-remarks-about-the-minister">அமைச்சர் நிர்மல் குமார் </a>தெரிவித்திருந்த கருத்துகள் சர்ச்சையாகின. </p><p>அமைச்சரின் இந்தப் பேச்சு மற்றும் முதலமைச்சர் விஜய்யின் சட்டமன்ற பேச்சை கண்டித்து திமுகவினர் நேற்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>அந்த வகையில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக எம்.பி. ஆ.ராசா, அமைச்சர் நிர்மல்குமார் குறித்து காட்டமாக விமர்சித்திருந்தார். </p><p>இந்நிலையில் ஆ.ராசாவின் பேச்சைக் குறிப்பிட்டு அமைச்சர் நிர்மல் குமார் சமூக வலைதளப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;</p><p>“மேடைபோட்டு என்னை பற்றியும், எங்கள் தலைவர் குறித்தும் ஆபாசமாக பேச வைப்பதுதான் உங்களின் கடைசி ஆயுதமா மு.க. ஸ்டாலின்?</p><h2>திமுகவின் ஆயுதம்</h2><p>நேற்று ஆர்பாட்டம் என்ற பெயரில் உங்கள் கட்சியினர் நடத்திய ஆபாச நாடகம் தமிழ்நாடு மக்கள், குறிப்பாக பெண்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது என்பதை என்று உணர்வீர்கள்?</p><p>எப்போதெல்லாம் திமுகவை நோக்கி ஊழல், துரோகம், உங்களின் பொய்கள் பற்றி கேள்வி எழுகிறதோ அன்று திமுக எடுக்கும் ஆயுதம் வன்முறை அல்லது ஆபாச பேச்சு.</p><h2>மக்களால் கண்காணிக்கப்படுகிறது</h2><p>தரமற்ற திமுகவினரின் பேச்சுக்களை அவர்களின் இல்லத்தில் உள்ள பெண்கள், குழந்தைகளிடம் காட்ட முடிகிறதா?</p><p>திமுகவால் அரசியலை விட்டு ஒதுங்கிய மக்கள் இன்று தளபதியால் மீண்டும் அரசியலில் அடியெடுத்து வைத்துள்ளனர்.</p><p>அரசியலில் ஒவ்வொரு அசைவும் மக்களால் தணிக்கை செய்யப்படுகிறது என்பதை உணர்கிறீர்களா ?</p><p>குழந்தைகள், பெண்களில் முகமாக இருக்கும் தளபதியின் தவெகவை எதிர்கொள்ள திராணி இல்லாமல் தெருவில் இறங்கி திமுகவினர் செய்யும் அட்டூழியங்களை என்றும் நேர்மையாக மட்டுமே எதிர்கொள்வோம்.</p><p>நீங்கள் திருந்துவதற்கு வாய்பில்லை, அதேநேரம் தமிழ்நாடு அரசியலில் இருந்து திமுகவின் முடிவுரையை விரைவில் மக்கள் எழுதுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.</p><h2>திமுகவால் மட்டுமே...</h2><p>புரட்சி தலைவர் கூறியதை தான் மீண்டும் … மீண்டும் நினைவு படுத்த விரும்புகிறேன். “தீமைகள் எந்த ரூபத்தில் தமிழ்நாட்டிற்கு வந்தாலும் அது தீயசக்தி திமுகவால் மட்டுமே!” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>“நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்” - அமைச்சர் குறித்த பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் ஆ. ராசா! </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/if-you-do-not-mend-your-ways-you-will-be-set-right-a-raja-expresses-regret-over-his-remarks-about-the-minister</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/if-you-do-not-mend-your-ways-you-will-be-set-right-a-raja-expresses-regret-over-his-remarks-about-the-minister#comments</comments><guid isPermaLink="false">e6924869-ee04-49ef-8adb-8a333f164972</guid><pubDate>Sun, 13 Sep 2026 05:51:33 +0000</pubDate><atom:updated>2026-09-13T05:51:33.302Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,அமைச்சர் நிர்மல் குமார்,minister nirmal kumar,A. Raja,ஆ. ராசா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/q3o4kxci/New-Project-2026-09-13T112023.850.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்” - அமைச்சர் குறித்த பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் ஆ. ராசா! ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/q3o4kxci/New-Project-2026-09-13T112023.850.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இக்கூட்டத்தொடரின்போது காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசினார். </p><p>அப்போது திமுகவை கடுமையாடி சாடிய அவர், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேலி செய்யும் வகையில் செய்கை ஒன்றையும் செய்தார்.</p><h2>முதலமைச்சர் விளக்கம்</h2><p>இதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் இடதுசாரிகள் உள்ளிட்ட தவெகவின் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் முதலமைச்சர் விஜய்யின் இந்த செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.</p><p>இதனைத்தொடர்ந்து தன்னுடைய உடல்மொழி எதேச்சையானது என்றும், யாரையும் புண்படுத்தும் நோக்கில் செய்யப்பட்டது இல்லை என்றும் முதலமைச்சர் விஜய் விளக்கம் அளித்திருந்தார். </p><h2>அமைச்சர் நிர்மல்குமார் ஆதாரமின்றி பேச்சு</h2><p>இதனிடையே மு.க.ஸ்டாலின் ஒன்றும் மிசாவில் கைது செய்யப்படவில்லை, அவர் இந்திரா காந்தியை தவறாக பேசியதால் பெண்வழக்கில் கைது செய்யப்பட்டார், இதற்கு ஒன்றும் திமுக ஆர்ப்பாட்டம் செய்யத் தேவையில்லை என்றும் அமைச்சர் நிர்மல் குமார் சட்டமன்றத்தில் பேசியிருந்தார்.</p><p>அமைச்சர் நிர்மல்குமார் வரலாற்றை திரித்துப் பேசுவதாகவும், ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டது உண்மை எனவும் அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால் மீண்டும் மீண்டும் அமைச்சர் நிர்மல்குமார் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தே பேசிவந்தார். </p><h2>திமுக ஆர்ப்பாட்டம்</h2><p>தவெகவின் இந்தப் பேச்சினை கண்டித்து நேற்று (செப்.12) திமுக தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்தது. அந்த வகையில் நேற்று சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எம்.பி. ஆ.ராசா உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசியிருந்தார்.</p><p>இக்கூட்டத்தில் பேசியிருந்த<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/a-raja-controversial-speech-kanimozhi-x-post"> எம்.பி. ஆ.ராசா</a>,  அமைச்சர் நிர்மல் குமாரை காட்டமான மொழியில் விமர்சித்திருந்தார். ஆ.ராசாவின் பேச்சு சர்ச்சையாக தவெக கூட்டணித் தலைவர்கள் மட்டுமின்றி திமுக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். </p><h2>வருத்தம் தெரிவிப்பு</h2><p>இந்நிலையில் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார் ராசா. வருத்தம் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;</p><p>“தியாகத்தில் விளைந்த ஒரு தலைவனின்  ‘அடையாளத்தை’, உண்மை’யை வேண்டுமென்றே திட்டமிட்டு  உள்நோக்கத்தோடு மீண்டும் மீண்டும் ‘பொய்’ என்று கொச்சைப்படுத்தி ‘ஏளனம்’ செய்ததால் ஏற்பட்ட ‘வலியை’ உணர்த்த  ஏளனம் செய்தவரின் ‘அடையாளத்தை’  ‘உண்மையை’  உணர்ச்சி உந்துதலில் கேள்விக்குள்ளாக்கியதில் எனக்கும் வருத்தம்தான்;</p><p>என் வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் எனக்குத் தயக்கமில்லை. நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>அனலாசுரனை வென்ற விநாயகரும் அருகம்புல் வழிபாடும்...</title><link>https://www.maalaimalar.com/spirituality/vinayagar-arugampul-worship</link><comments>https://www.maalaimalar.com/spirituality/vinayagar-arugampul-worship#comments</comments><guid isPermaLink="false">c260ca44-2514-4b60-8ec3-2b4770164490</guid><pubDate>Sun, 13 Sep 2026 05:30:00 +0000</pubDate><atom:updated>2026-09-13T05:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,வழிபாடு,worship,விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,Vinayagar Chaturthi 2026,விநாயகர் சதுர்த்தி 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/2cmq48bp/vinagar6.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vinayagar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/2cmq48bp/vinagar6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஒவ்வொரு கடவுள்களுக்கும் ஒவ்வொரு மலர் விசேஷமாக கருதி படைக்கப்படுகிறது. சிவபெருமானுக்கு வில்வம், பெருமாளுக்கு துளசி, அனுமனுக்கு வெற்றிலை, அம்மனுக்கு வேப்பிலை. அதுபோல விநாயகப் பெருமானுக்கு மிகவும் உகந்ததாக அருகம்புல் கருதப்படுகிறது.</p><h2>அனலாசுரன்</h2><p>முன்னொரு காலத்தில் அனலாசுரன் என்ற அசுரன் இருந்தான். அவன், தன் உடலில் இருந்து நெருப்பை கக்கி, தேவர்களையும், முனிவர்களையும், மக்களையும் துன்புறுத்தினான். இதனால் கவலை அடைந்த தேவர்கள், விநாயகப் பெருமானிடம் சென்று முறையிட்டனர்.</p> <h2>விநாயகப் பெருமான்</h2><p>இதையடுத்து தேவர்களின் வேண்டுகோளை ஏற்று விநாயகர், அனலாசுரனுடன் போரிட்டார். விநாயகர் ஏவிய அனைத்து ஆயுதங்களையும் அனலாசுரன் நெருப்பை பயன்படுத்தி சாம்பலாக்கினான். இதனால் விநாயகப் பெருமான், அனலாசுரனை சிறிய உருவாக மாற்றி அப்படியே விழுங்கிவிட்டார். ஆனால் அனலாசுரனின் வெப்பத்தால் விநாயகரின் வயிறு எரிச்சலடைந்தது. இதனால் விநாயகர் வேதனை அடைந்தார்.</p> <h2>வருண பகவான்</h2><p>இதையடுத்து தேவர்கள் அனைவரும் விநாயகரை குளிர்விக்க முயன்றனர். வருண பகவான், மழை பொழிந்தார். இந்திரன், சந்தனம் பூசினார். அன்னை பார்வதி, பாற்கடலை விநாயகர் பக்கம் திருப்பிவிட்டார். சிவபெருமான் குளிர்ச்சியாக இருக்கும் பாம்பை விநாயகரின் இடுப்பை சுற்றிக் கட்டினார். ஆனால் அவர்கள் அனைவரது முயற்சியும் எந்த பலனும் தரவில்லை.</p> <h2>காஷ்யப முனிவர்</h2><p>இதையடுத்து தேவர்கள், காஷ்யப முனிவரின் உதவியை நாடினர். காஷ்யப முனிவர், 21 அருகம்புல்லை விநாயகரின் தலையில் வைத்தார். உடனேயே விநாயகரின் உடல் வெப்பம் தணிந்தது. விநாயகப் பெருமான் பெரும் மகிழ்ச்சி அடைந்தார். அன்று முதல் விநாயகர் வழிபாட்டில் அருகம்புல் முக்கிய இடம் பிடித்தது.</p> <h2>யாஷினி தேவி</h2><p>மற்றொரு புராணக்கதைபடி, யாஷினி தேவி என்ற தேவலோக மங்கை, விநாயகரை திருமணம் செய்ய விரும்பி, தவம் இருந்தார். ஆனால் இதற்கு விநாயகர் சம்மதம் தெரிவிக்கவில்லை. இருப்பினும், யாஷினி தேவியின் அன்பையும், பக்தியையும் மெச்சிய விநாயகர், தனக்கு விருப்பமான பொருளான அருகம்புல்லாக மாறி தன்னுடனே இருக்கும்படி வரம் அளித்ததாக கூறப்படுகிறது.</p> <h2>நந்தி பகவான்</h2><p>ஒரு சமயம் சிவபெருமானும், பார்வதி தேவியும் தாயம் விளையாடியபோது, நடுவராக நந்தி பகவான் இருந்தார். அப்போது நந்தி பகவான், சிவனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக பார்வதி நந்திக்கு சாபம் இட்டார். பின்னர் விநாயகர் சதுர்த்தியின்போது, விநாயகருக்கு உகந்த பொருளை சமர்ப்பித்து வழிபட்டால் சாப விமோசனம் கிடைக்கும் என்று அருளினார். பின்னர் நந்தி, விநாயகருக்கு அருகம்புல் படைத்து சாப விமோசனம் பெற்றதாக கூறப்படுகிறது.</p> <h2>அருகம்புல்</h2><p>உலகிலேயே முதலில் தோன்றிய மூலிகைகளில் ஒன்றாக அருகம்புல் உள்ளதாக கூறப்படுகிறது. அருகம்புல் எல்லா காலங்களிலும் வளரும் தன்மை கொண்டது. மழை இல்லாவிட்டாலும், கடுமையான கோடை நிலவினாலும் அருகம்புல் காய்ந்து போகுமே தவிர அழிந்து போகாது. சிறிது மழை பெய்தாலும் மீண்டும் துளிர்விடும். பார்ப்பதற்கு சாதாரணமாக தோன்றினாலும், அருகம்புல் அளப்பரிய மருத்துவ குணம் கொண்டது.</p> <p>குளர்ச்சி நிறைந்த அருகம்புல் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, ரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது. வயிற்றுப் புண், செரிமானக் கோளாறுகளை சரிசெய்கிறது. உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இவ்வாறு எண்ணற்ற பலன்களை தரும் அற்புத மூலிகையாக அருகம்புல் திகழ்கிறது.</p> <p>முழுமுதற் கடவுளான விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தி அன்று, அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டால் விநாயகர் அருளையும், பொருளையும் அள்ளித் தருவார். மனக் கவலையை நீக்கி மன மகிழ்ச்சி அருள்வார்.</p>]]></content:encoded></item><item><title>உக்ரைன் மீது ரஷியா நடத்திய டிரோன் தாக்குதலில் 9 பேர் பலி- அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/world/how-russias-new-drones-are-changing-the-air-war</link><comments>https://www.maalaimalar.com/news/world/how-russias-new-drones-are-changing-the-air-war#comments</comments><guid isPermaLink="false">e51e12c6-62c6-4d73-a5c8-4d05d967e24f</guid><pubDate>Sun, 13 Sep 2026 05:19:13 +0000</pubDate><atom:updated>2026-09-13T05:19:13.517Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அதிபர் ஜெலன்ஸ்கி,உக்ரைன் ரஷியா போர்,ukraine russia war,zelensky</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/u666sos4/Zelenskyy.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Zelenskyy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/u666sos4/Zelenskyy.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உக்ரைனில் உள்ள குடியிருப்பு பகுதிகள், துறை முகங்கள், உணவு கிடங்குகள் மற்றும் மின்உற்பத்தி நிலையங்களில் குறிவைத்து ரஷிய படைகள் கண்மூடி தனமாக தாக்குதல் நடத்தி வருகின்றன.</p><p>உக்ரைன்-ரஷியா இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக சண்டை நடந்து வருகிறது. இதில் இரு தரப்பிலும் ஏராளமானோர் உயிரிழந்த நிலையில் போர்  நீடித்து வருகிறது. ரஷியா நடத்தி வரும்  தாக்குதலில் ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்து உள்ளன. உக்ரைன் பொது மக்கள் உயிருக்கு பயந்து அகதிகள் முகாமில் தங்கி உள்ளனர்.</p><h2><strong>விடிய விடிய குண்டுமழை</strong></h2><p>இந்த நிலையில் உக்ரைனில் உள்ள குடியிருப்பு பகுதிகள், துறை முகங்கள், உணவு கிடங்குகள் மற்றும் மின்உற்பத்தி நிலையங்களில் குறிவைத்து ரஷிய படைகள் கண்மூடி தனமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. வான்வழி தாக்குதலை ரஷியா தீவிரப்படுத்தி உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் ரஷியா 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிரோன்கள் மூலம் உக்ரைன் நகரங்கள் மீது கடும் தாக்குதலில் ஈடுபட்டது. விடிய விடிய குண்டுமழை பொழிந்த வண்ணம் இருந்தது. இந்த குண்டுவீச்சில் 9 பேர் பரிதாபமாக இறந்தனர். பச்சிளம் குழந்தைகள் உட்பட 31 பேர் படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து குண்டு சத்தம் கேட்ட வண்ணம் இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.</p><h2><strong>அதிபர் கண்டனம்</strong></h2><p>ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>போர்க்களத்தில் வெற்றி பெற முடியாத ரஷியா தனது போரை உக்ரைனின் பொருளாதாரத்தை நோக்கி திருப்பி உள்ளது. ரெயில்கள், தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசிய கிடங்குகளை அழித்து எங்கள் மக்களின் மன உறுதியை உடைக்கப்பார்க்கிறது. ரஷியாவின் இந்த பயங்கர தாக்குதலுக்கு சர்வதேச நாடுகள் கண்டனமும், பதிலடியும் தர வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் கூறி உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>முதல் டி20 போட்டி: டெல்லியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/india-to-meet-afghanistan-first-odi-in-delhi-today</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/india-to-meet-afghanistan-first-odi-in-delhi-today#comments</comments><guid isPermaLink="false">511324e6-15ce-4428-8e15-048a8d7814e0</guid><pubDate>Sun, 13 Sep 2026 05:12:50 +0000</pubDate><atom:updated>2026-09-13T05:12:50.546Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Shreyas Iyer,ஷ்ரேயஸ் அய்யர்,INDvAFG,இந்தியா ஆப்கானிஸ்தான் தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/3czirzqs/iyer.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ shreyas iyer]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/3czirzqs/iyer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று நடக்கிறது.</strong></em></p><p>இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த 3 போட்டிகளும் டெல்லியிலேயே நடக்கின்றன.</p><p>இந்நிலையில், இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. 2-வது போட்டி 15-ம் தேதியும், 3-வது போட்டி 17-ம் தேதியும் நடக்கின்றன.</p><h2>ஷ்ரேயஸ் அய்யர்</h2><p>ஷ்ரேயஸ் அய்யர் டி20 அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற பிறகு, இந்திய அணி உள்ளூரில் விளையாடும் முதல் தொடர் இதுவாகும்.</p><p>ஷ்ரேயஸ் அய்யர் கேப்டனானதும் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களில் தோல்வியைச் சந்தித்த இந்திய அணி கடைசியாக நடந்த ஜிம்பாப்வே தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றி வெற்றிப்பாதைக்கு திரும்பியது.</p><p>ஆசிய விளையாட்டு போட்டிக்கு ஆயத்தமாவதற்கு இந்த தொடரை சரியாக பயன்படுத்திக் கொள்ள இரு அணிகளும் ஆர்வம் காட்டும்.</p><p>ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இதுவரை தோல்வியை சந்திக்காத இந்திய அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். அத்துடன் உள்ளூர் சூழல் அனுகூலமாக இருக்கும்.</p><h2>18 முறை</h2><p>ஆப்கானிஸ்தான் அணியை பொறுத்தமட்டில், சர்வதேச கிரிக்கெட்டில் 18 முறை இந்தியாவுடன் மோதி இருக்கிறது. அதில் ஒன்றில் கூட வெற்றி பெற்றது கிடையாது. இதுவரை இந்தியாவுக்கு எதிராக 2 டெஸ்டில் ஆடி இரண்டிலும் தோற்றுள்ளது. 7 ஒருநாள் போட்டியில் விளையாடி 6-ல் தோற்று இருக்கிறது. ஒரு ஆட்டம் சமன் ஆனது.</p><p>9 டி20 போட்டிகளில் ஆடி 8-ல் தோல்வி கண்டுள்ளது. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. இந்த மோசமான சாதனையை மாற்றி முதல் வெற்றியைப் பெற அந்த அணியினர் தீவிரம் காட்டுவார்கள். போட்டித் தொடரை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் வரிந்து கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.</p><p>இந்தப் போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதனை சோனி ஸ்போர்ட்ஸ் டென் 5, சோனி மேக்ஸ் ஆகிய சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன.</p><p>இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:</p><h2>இந்தியா</h2><p>அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன் அல்லது வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன், ஷ்ரேயஸ் அய்யர் (கேப்டன்), திலக் வர்மா, அக்ஷர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி.</p><h2>ஆப்கானிஸ்தான்</h2><p>ரமனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரன் (கேப்டன்), குல்பதின் நைப், செடியுல்லா அடல், டார்விஷ் ரசூலி, அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், முகமது நபி, ரஷித் கான், முஜுப் உர் ரஹ்மான், நூர் அகமது, பசல்ஹக் பரூக்கி அல்லது நவீன் உல்-ஹக்.</p>]]></content:encoded></item><item><title>ஜெர்சி நிற சர்ச்சை: ஹாக்கி இந்தியா இயக்குநர் பணியிடை நீக்கம்!</title><link>https://www.maalaimalar.com/sports/jersey-color-controversy-hockey-india-director-suspended</link><comments>https://www.maalaimalar.com/sports/jersey-color-controversy-hockey-india-director-suspended#comments</comments><guid isPermaLink="false">f2f5c86d-133a-4534-adb7-996a2a4711cf</guid><pubDate>Sun, 13 Sep 2026 05:09:18 +0000</pubDate><atom:updated>2026-09-13T05:09:18.446Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Hockey India,ஹாக்கி இந்தியா,Saffron jersey,Srivastava,காவி ஜெர்சி,ஸ்ரீவஸ்தவா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/esltuzrl/New-Project-2026-09-13T102557.303.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காவி நிறத்திற்கு மாற்றப்பட்ட ஜெர்சி - ஹாக்கி இந்தியா இயக்குநர் பணி நீக்கம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/esltuzrl/New-Project-2026-09-13T102557.303.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த ஜூலை மாதம் இந்திய ஹாக்கி அணியின் ஜெர்சி நிறம், நீலத்தில் இருந்து காவிக்கு மாற்றப்பட்டது. </p><p>இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழ, ஹாக்கி மைதானங்களும், வீரர்களின் ஜெர்சியும் ஒரேநிறத்தில் இருப்பதால் பந்தை பாஸ் செய்வது, வீரர்களை அடையாளம் காண்பது கடினமாக இருந்ததாகவும், அதனாலேயே நிறம் மாற்றப்பட்டதாகவும் <a href="https://www.maalaimalar.com/sports/indian-hockey-teams-return-to-traditional-blue-kit-for-asian-games-after-saffron-controversy">ஹாக்கி இந்தியா</a> விளக்கம் அளித்தது. </p><p>இதனைத்தொடர்ந்து கடந்த வாரம் மீண்டும் ஜெர்சி நீல நிறத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் ஹாக்கி இந்தியா அணியின் தலைமை இயக்குநர் ஸ்ரீவஸ்தவா பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவரின் அனைத்து அதிகாரங்களும் பறிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும், ஸ்ரீவஸ்தவாவிடம் விளக்கம் கேட்டு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.</p><p>ஹாக்கி இந்தியா தலைவர் திலீப் திர்கே, வழக்கறிஞர் மூலம் ஸ்ரீவஸ்தவாவிற்கு அனுப்பியுள்ள நோட்டீஸில், அவர் உடனடியாகப் பணிகளில் இருந்து விலகவும், தனது விளக்கத்தை நோட்டீஸ் கிடைத்த 4 வாரங்களுக்குள் சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.</p><p>ஸ்ரீவஸ்தவா மீது 8 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதில் சில முக்கிய காரணங்கள்;</p><h2>உலகக் கோப்பை பயணம் </h2><p>ஹாக்கி இந்தியா லீக் மற்றும் பிற பணிகளில் கவனம் செலுத்துவதற்காக அவரை இந்தியாவில் தங்க ஹாக்கி இந்தியா தலைவர் திலீப் திர்கே அறிவுறுத்தியும், அவரது இ-மெயில் உத்தரவை மீறி ஸ்ரீவஸ்தவா அண்மையில் நடந்த உலகக் கோப்பை தொடருக்குப் பயணம் மேற்கொண்டது முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.</p><h2>ஜெர்சி சர்ச்சை </h2><p>மேலும் உலகக் கோப்பை ஹாக்கி தொடரின்போது, முறையான ஆலோசனை மற்றும் அனுமதி பெறாமல் தேசிய அணியின் ஜெர்சி நிறத்தை காவி நிறத்திற்கு மாற்ற தன்னிச்சையாக முடிவெடுத்தது.</p><p>அணியின் சீருடையில் செய்யப்பட்ட மாற்றம், “குடியரசுத் தலைவர் அல்லது செயற்குழுவுடன் முன் கலந்தாலோசிக்காமல் செயல்படுத்தப்பட்டு, பகிரங்கமாக வெளியிடப்பட்டது” என ஸ்ரீவஸ்வதாவிற்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>ஒழுங்கு நடவடிக்கை எடுக்காமை </h2><p>தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் போது சில வீரர்கள் மற்றும் தலைமை பயிற்சியாளர் கிரெய்க் ஃபுல்டன் ஆகியோர் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக வந்த புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியது உள்ளிட்ட 8 குற்றச்சாட்டுகள் ஸ்ரீவஸ்வதாமீது பட்டியலிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சு: &quot;யாகாவா ராயினும் நாகாக்க..&quot; கனிமொழி எம்பியின் எக்ஸ் பதிவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/a-raja-controversial-speech-kanimozhi-x-post</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/a-raja-controversial-speech-kanimozhi-x-post#comments</comments><guid isPermaLink="false">2d659edc-f023-44bf-9da8-54befb34360a</guid><pubDate>Sun, 13 Sep 2026 04:51:03 +0000</pubDate><atom:updated>2026-09-13T04:51:03.936Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,கனிமொழி எம்பி,ஆ.ராசா,MP Kanimozhi,ஆ.ராசா பேச்சு,a.raja,Guard the tongue,யாகாவா ராயினும் நாகாக்க</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/ycmbeyxs/KANI.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MP Kanimozhi  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/ycmbeyxs/KANI.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்பியுமான ஆ.ராசா தெரிவித்த சில கருத்துகள் அரசியல் அரங்கில் கடும் சர்ச்சையை உருவாக்கியது.</p><p>தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் கூறிய கருத்துகள் மாநில அரசியலில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, தமிழக அரசியலில் மிசா கொடுமைகள் குறித்த கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தியாகத்தை கொச்சைப்படுத்திவிட்டதாக கூறி திமுகவினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர போராட்டங்களை முன்னெடுத்தனர்.</p><h2>ஆ.ராசா சர்<strong>ச்சை பேச்சு</strong></h2><p>சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற கண்டனப் போராட்டத்தில் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றனர். அப்போது கூட்டத்தில் உரையாற்றிய திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்பியுமான ஆ.ராசா தெரிவித்த சில கருத்துகள் அரசியல் அரங்கில் கடும் சர்ச்சையை உருவாக்கியது. மாற்றுக் கட்சியினரையும் அவர்களின் குடும்பத்தினரையும் தரக்குறைவாகச் சாடி<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-leaders-losing-decency-on-political-stages-cpm-state-secretary-p-shanmugam-condemns"> ஆ.ராசா </a>பேசியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்ட தோழமைக்கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.</p><h2>கனிமொ<strong>ழி எம்பி எக்ஸ் தள ப</strong>திவு</h2><p>இந்தச் சர்ச்சை தீவிரமடைந்துள்ள சூழலில், திமுக துணைப் பொதுச்செயலாளரும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள திருக்குறள் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.</p><p><a href="/individual/yagavarayinum-naa-kaakka-shooting-spot" class="entity-link" entity-id="378804" entity-name="யாகாவாராயினும் நாகாக்க படப்பிடிப்பு தளம்" entity-slug="yagavarayinum-naa-kaakka-shooting-spot" entity-type-id="5367" entity-type-slug="individual">"யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு"</a></p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்<br>சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.</p>&mdash; Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) <a href="https://x.com/KanimozhiDMK/status/2098984905552359487?ref_src=twsrc%5Etfw">September 13, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><p>என்ற திருக்குறளை அவர் எவ்விதக் கூடுதல் விளக்கமுமின்றிப் பதிவிட்டுள்ளார். </p><p>ஒருவர் எதைக் காக்கத் தவறினாலும் தன் நாவை அடக்கிக் காக்க வேண்டும், இல்லையெனில் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்பப்படுவர் என்பதே இதன் பொருளாகும். திமுகவைச் சேர்ந்த ஆ.ராசாவின் பேச்சுக்கு எதிராக கூட்டணிக் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அதே திமுகவின் மூத்த பெண் தலைவரும் எம்பியுமான கனிமொழி இந்தத் திருக்குறளைப் பதிவிட்டிருப்பது அரசியல் கட்சிகளின் கவனத்தை பெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>விபீஷணனுக்கு காட்சியளித்த விநாயகர்</title><link>https://www.maalaimalar.com/spirituality/vinayagar-appearing-before-vibhishana</link><comments>https://www.maalaimalar.com/spirituality/vinayagar-appearing-before-vibhishana#comments</comments><guid isPermaLink="false">52397170-05a7-4739-b77e-872830d9920e</guid><pubDate>Sun, 13 Sep 2026 04:30:00 +0000</pubDate><atom:updated>2026-09-13T04:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,வழிபாடு,worship,விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,Vinayagar Chaturthi 2026,விநாயகர் சதுர்த்தி 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/i4y79mtp/vinayagar4.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் - மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோவில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/i4y79mtp/vinayagar4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்து சமயத்தில் உள்ள அனைத்து "கடவுள்களுக்கும், அவர்களுக்கேற்ற ஆலயங்களும், வழிபாட்டு முறைகளும் உள்ளன. ஆனால், எல்லா இடங்களிலும் மிகவும் எளிமையாக இருந்து அருள்பாலிப்பவர், விநாயகப் பெருமான் கோவில்கள் மட்டுமின்றி, ஆற்றங்கரை, குளத்தங்கரை, அரச மரத்தடி, சாலையோரம் என எந்த இடத்திலும் விநாயகர் வீற்றிருப்பார்.</p><h2> மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார்</h2><p>வினைகள் தீர்க்கும் விநாயகப் பெருமானின் கோவில்களில் மலை உச்சியில் அமைந்த கோவில் என்னும் பெருமை பெற்றது உச்சிப்பிள்ளையார் கோவில்.</p><p>திருச்சி என்றதும் நம் நினைவுக்கு வருவது மலைக்கோட்டை தான். இந்தக் கோட்டை 6-ம் நூற்றாண்டில் பல்லவர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. சுமார் 273 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த மலை உச்சியில் உச்சிப் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை அடைய கிட்டத்தட்ட 400 படிகளுக்கு மேல் ஏறிச் செல்ல வேண்டும்.</p> <p>ராமாயணத்தோடு தொடர்புடையதாக இக்கோவில் கருதப்படுகிறது. விபீஷணரிடம் சிறுவனாக தோன்றி, பின் இங்கு பிள்ளையாராக அருட்காட்சி அளித்தார். மேலும், மலை அடிவாரத்தில் மாணிக்க விநாயகர் கோவிலும், மலையின் இடைப்பகுதியில் தாயுமானவர் கோவிலும் அமைந்துள்ளன.</p> <h2>பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் </h2><p>தமிழ்நாட்டில் மிகவும் புகழ்பெற்ற, மிகப் பெரிய குடைவரைக் கோவில், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில். சுமார் 1300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவிலில் அருள்பாலிக்கும் கற்பக விநாயகர், 6 அடி உயரத்தில் காட்சி அளிக்கிறார். இவர் கையில் சிவலிங்கத்தை ஏந்திய நிலையில் வலம்புரி விநாயகராக அருள்பாலிக்கிறார். </p> <p>ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். திருவிழாவின் இறுதி நாளில் விநாயகருக்கு படைக்கப்படும் பிரமாண்ட கொழுக்கட்டை நைவேத்தியம் மிகவும் புகழ் பெற்றது.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஆண்கள் இரட்டையரில் சாம்பியன் பட்டம் வென்ற நீல் ஸ்கப்ஸ்கி ஜோடி</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/neal-skupski-christian-harrison-pair-won-the-mens-doubls-title-in-us-open-tennis</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/neal-skupski-christian-harrison-pair-won-the-mens-doubls-title-in-us-open-tennis#comments</comments><guid isPermaLink="false">a63ee24d-0ecb-480e-b976-4bc47acceb8b</guid><pubDate>Sun, 13 Sep 2026 04:06:09 +0000</pubDate><atom:updated>2026-09-13T04:06:09.399Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>US Open Tennis,அமெரிக்க ஓபன் டென்னிஸ்,neal skupski,christian harrison,நீல் ஸ்கப்ஸ்கி,கிறிஸ்டியன் ஹாரிசன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/7kjzwrgz/skupski.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ mens doubles]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/7kjzwrgz/skupski.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையரில் பிரிட்டிஷின் நீல் ஸ்கப்ஸ்கி-அமெரிக்காவின் கிறிஸ்டியன் ஹாரிசன் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.</strong></em></p><p>கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.</p><p>இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டி நேற்று நடந்தது.</p><p>இதில் பிரிட்டிஷின் நீல் ஸ்கப்ஸ்கி-அமெரிக்காவின் கிறிஸ்டியன் ஹாரிசன் ஜோடி, ஜெர்மனியின் டிம் புட்ஸ்-கெவின் கிராவெய்ட்ஸ் ஜோடி உடன் மோதியது.</p><p>இதில் சிறப்பாக ஆடிய நீல் ஸ்கப்ஸ்கி ஜோடி 6-4, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றது.</p><p>இதேபோல், பெண்கள் இரட்டையரில் நம்பர் 1 ஜோடியான செக் குடியரசின் கடெரினா சினியாகோவா-அமெரிக்காவின் டெய்லர் டவுன்செண்ட் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>டெல்லியில் உலகத் தலைவர்கள் பங்கேற்ற இரவு விருந்து: சீன அதிபர் ஜி ஜின்பிங் புறக்கணிப்பின் உண்மை காரணம் என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/world/state-dinner-snub-in-delhi-why-did-xi-jinping-really-stay-away</link><comments>https://www.maalaimalar.com/news/world/state-dinner-snub-in-delhi-why-did-xi-jinping-really-stay-away#comments</comments><guid isPermaLink="false">4488c299-1ffc-40f0-bc2d-4e6e6140ec06</guid><pubDate>Sun, 13 Sep 2026 03:48:04 +0000</pubDate><atom:updated>2026-09-13T03:48:04.917Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>pmmodi,பிரதமர் நரேந்திர மோடி,BRICS Summit,பிரிக்ஸ் உச்சி மாநாடு,delhi,Chinese President Xi Jinping,டெல்லி,சீன அதிபர் ஜி ஜின்பிங்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/25ugfhl3/modi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PMModi -Xi Jinping  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/25ugfhl3/modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க டெல்லி வந்திருந்த சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், பிரதமர் அளித்த சிறப்பு இரவு விருந்தை புறக்கணித்தது சர்வதேச அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. </p><p>டெல்லியில் நடைபெற்று வரும் <a href="https://www.maalaimalar.com/news/world/brics-delhi-declaration-2026-unanimous-condemnation-us-attack-on-iran">பிரிக்ஸ் உச்சி மாநாட்டின்</a> இடையே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கடந்த 2020-ஆம் ஆண்டு எல்லைப் பகுதியில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, ஏழு ஆண்டுகள் கழித்து சீன அதிபர் இந்தியா வந்துள்ள நிலையில் இச்சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. எனினும், பேச்சுவார்த்தைக்குப் பிறகு இரு நாடுகளும் வெளியிட்டுள்ள அறிக்கைகள், எல்லை பிரச்சனையையும் இருதரப்பு உறவையும் கையாள்வதில் உள்ள அடிப்படை வேறுபாட்டை வெளிப்படுத்தியுள்ளன.</p><h2>எல்லை <strong>அமைதியே உற</strong>வின் அடிப்படை</h2><p>இந்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், எல்லைப் பகுதியில் நிலவும் அமைதியும் இயல்பு நிலையுமே இரு நாடுகளுக்கு இடையிலான ஒட்டுமொத்த உறவும் தடையின்றி தொடர்வதற்கான மிக முக்கியமான அடிப்படை என்று பிரதமர் மோடி தெளிவுபடுத்தியுள்ளார். 2020 கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு, எல்லையில் நிலவும் பதற்றத்தைத் தீர்க்காமல் இருதரப்பு உறவை மீட்டெடுக்க முடியாது என்பதில் இந்தியா தொடர்ந்து உறுதியாக உள்ளது. மேலும், எல்லை விவகாரம் தொடர்பான பழைய ஒப்பந்தங்களையும் புரிந்துகொள்ளல்களையும் இரு நாடுகளும் முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்பதையும் இந்தியத் தரப்பு வலியுறுத்தியுள்ளது.</p><h2>விருந்தை <strong>புறக்கணித்த</strong> சீன அதிபர்</h2><p>பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க டெல்லி வந்திருந்த சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் உயர்மட்ட இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், பிரதமர் அளித்த அதிகாரப்பூர்வ சிறப்பு இரவு விருந்தை புறக்கணித்தது சர்வதேச அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. எல்லைப் பகுதிகளை வரையறை செய்வதிலும், இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஏற்றத்தாழ்வுகளைச் சரிசெய்வதிலும் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை என்பதை இரு தரப்பின் வெவ்வேறான அறிக்கைகள் உணர்த்துகின்றன. </p><p>இரு தலைவர்களும் பரஸ்பர மரியாதையுடன் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண ஒப்புக்கொண்டபோதிலும், விருந்தைப் புறக்கணித்த நிகழ்வு மற்றும் எல்லைக் கொள்கையில் நிலவும் இந்த முரண்பாடு, இந்தியா-சீனா உறவில் முழுமையான இயல்புநிலை திரும்புவதில் உள்ள சிக்கல்களை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.</p><h2>சீனா<strong>வின் மாற்றுப் பா</strong>ர்வை</h2><p>சீனத் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், எல்லைப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான முயற்சிகளையும் இருதரப்பு வர்த்தக மற்றும் தூதரக உறவுகளை மேம்படுத்துவதையும் ஒரே நேரத்தில் இணையாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லைப் பிரச்சனை முழுமையாக முடிவுக்கு வராத நிலையிலும், மற்ற துறைகளில் இரு நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்த சீனா விரும்புகிறது. எல்லைப் பகுதியை அமைதியாக வைத்துக்கொண்டே வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளை மீட்டெடுக்கலாம் என்பது சீனாவின் பார்வையாக உள்ளது.</p><p>2020-ஆம் ஆண்டு லடாக் எல்லையில் நடந்த மோதலுக்குப் பிறகு இரு நாட்டு உறவிலும் கடும் விரிசல் ஏற்பட்டது. சமீபத்திய பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்ட போதிலும், எல்லைக் கோட்டை வரையறை செய்வதிலும் இருதரப்பு வர்த்தக ஏற்றத்தாழ்வுகளைச் சரிசெய்வதிலும் இன்னும் சவால்கள் நீடிக்கின்றன. இரு நாட்டு தலைவர்களும் பரஸ்பர மதிப்பு மற்றும் நீண்டகால பாதுகாப்பு நலன்களை அடிப்படையாகக் கொண்டு பிரச்சனைகளுக்குத் தீர்வு காண ஒப்புக்கொண்ட போதிலும், 'எல்லை அமைதியா அல்லது இணையான பேச்சுவார்த்தையா' என்பதில் ஏற்பட்டுள்ள இந்த நிலைப்பாட்டு வேறுபாடு சர்வதேச அரசியல் அரங்கில் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>லிங்க வடிவில் காட்சி தரும் நெற்குத்தி விநாயகர்</title><link>https://www.maalaimalar.com/spirituality/nerkuthi-vinayagar-and-manakula-vinayagari-worship</link><comments>https://www.maalaimalar.com/spirituality/nerkuthi-vinayagar-and-manakula-vinayagari-worship#comments</comments><guid isPermaLink="false">4ca25e1b-5626-4195-9bc8-59c23044e44d</guid><pubDate>Sun, 13 Sep 2026 03:30:00 +0000</pubDate><atom:updated>2026-09-13T03:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,வழிபாடு,worship,விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,Vinayagar Chaturthi 2026,விநாயகர் சதுர்த்தி 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/1p8w52t9/vinayagar3.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nerkuthi vinayagar - Manakula vinayagar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/1p8w52t9/vinayagar3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விநாயகர் சதுர்த்தி என்பது விநாயகர் அருளை பெறுவதற்குரிய நாளாகும். இந்நாளில் விநாயகப் பெருமானின் புகழ்பெற்ற, சிறப்பு மிக்க தலங்களுக்கு சென்று வழிபட்டால் விநாயகரின் பரிபூரண அருளை பெற முடியும். அத்தகைய சிறப்புமிக்க தலங்களில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.</p> <h2>பொய்யாமொழி விநாயகர்</h2><p>விழுப்புரம் மாவட்டம் தீவனூர் கிராமத்தில் நெற்குத்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இங்கு விநாயகர், லிங்க வடிவத்தை போன்ற திருமேனியில் அருள்பாலிக்கிறார். அபிஷேகம் செய்யும்போது, லிங்கத்தில் படிந்திருக்கும் விநாயகரை தரிசிக்கலாம். இவர் 'பொய்யாமொழி விநாயகர்' என்றும் அழைக்கப்படுகிறார். </p> <p>பிறர் பொருளை ஏமாற்றுபவர்கள், பொய் கூறுபவர்கள் இக்கோவிலுக்கு வந்து விநாயகர் முன் சத்தியம் செய்யும் நடைமுறை உள்ளது. இக்கோவிலின் பின்புறம் ஒன்றோடு ஒன்று இணைந்தவாறு மூன்று விழுதில்லாத ஆலமரங்கள் உள்ளன. அவை சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகியோரை குறிப்பதாக கூறுகின்றனர்.</p><h2>மணக்குள விநாயகர்</h2><p>புதுச்சேரியில் மிகவும் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக மணக்குள விநாயகர் கோவில் உள்ளது. புதுச்சேரியின் அடையாளங்களில் ஒன்றாக கருதப்படும் இக்கோவிலில், 108 விநாயகர்களை தரிசிக்க முடியும். இக்கோவில் விமானம் தங்க தகடால் வேயப்பட்டுள்ளது. இங்கு விநாயகருக்கு தனிப் பள்ளியறை இருப்பது வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும். </p><p>ஒரு காலத்தில் மணல் நிறைந்த குளத்தின் அருகில் இந்த விநாயகர் அருள்பாலித்ததால் மணல் குளத்து விநாயகர் என்று அழைக்கப்பட்டார். பின்னர், அதுவே மருவி 'மணக்குள விநாயகர்' என்றானது.</p> ]]></content:encoded></item><item><title>திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/poet-vaairamuthu-urges-pm-modi-to-declare-thirukkural-as-indias-national-book</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/poet-vaairamuthu-urges-pm-modi-to-declare-thirukkural-as-indias-national-book#comments</comments><guid isPermaLink="false">b5745b82-e75a-4884-90a1-cb1659621e66</guid><pubDate>Sun, 13 Sep 2026 03:20:08 +0000</pubDate><atom:updated>2026-09-13T03:20:08.345Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,கவிஞர் வைரமுத்து,திருக்குறள்,thirukkural,poet vairamuthu,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/dcl494gz/vaira.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Poet Vairamuthu ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/dcl494gz/vaira.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலகளவில் திருக்குறளுக்குக் பெருமை சேர்க்கும் பிரதமரின் நடவடிக்கைகளுக்கு வைரமுத்து வாழ்த்து தெரிவித்தார்.</p><p>தாம்பரத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய கவிஞர் வைரமுத்து, சர்வதேச அரங்கிலும் பிற நாட்டுத் தலைவர்களுடனான சந்திப்புகளின்போதும் திருக்குறளின் சிறப்புகளைப் பிரதமர் மோடி தொடர்ந்து உலகறியச் செய்து வருவதைப் பாராட்டினார்.</p><h2>டெல்லி வந்து <strong>பாராட்டு</strong>வோம்</h2><p>ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடனான சந்திப்பின் போது திருக்குறளின் ரஷிய மொழிபெயர்ப்பு புத்தகத்தைப் பிரதமர் மோடி பரிசளித்த நிகழ்வை வைரமுத்து நினைவு கூர்ந்தார். உலகளவில் திருக்குறளுக்குக் பெருமை சேர்க்கும் பிரதமரின் நடவடிக்கைகளுக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.  இந்த நிகழ்வைக் குறிப்பிட்டுப் பேசிய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-leaders-losing-decency-on-political-stages-cpm-state-secretary-p-shanmugam-condemns">வைரமுத்து</a>, ஒரு மதத்தைச் சார்ந்த குரானையோ அல்லது பகவத் கீதையையோ வழங்காமல் திருக்குறளைப் பிரதமர் வழங்கிய காரணம், அது எந்தவொரு குறிப்பிட்ட சாதி, மதம் அல்லது மொழியைக் கடந்து மனிதகுலம் முழுமைக்கும் பொதுவான தத்துவங்களை எடுத்துரைப்பதே ஆகும் என்று பாராட்டினார்.</p><h2>தேசிய நூலா<strong>க அறிவி</strong>க்க வேண்டும்</h2><p>உலக அரங்கில் திருக்குறளின் பெருமையை உயர்த்திப் பிடிக்கும் பிரதமருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்த வைரமுத்து, திருக்குறளை இந்தியாவின் ‘தேசிய நூல்’ என அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.  அவ்வாறு அறிவிக்கப்படும் பட்சத்தில் மதுரை மல்லிகைப் பூவோடும், சேலத்து மாம்பழக் கூடையோடும் டெல்லிக்கு நேரில் வந்து பிரதமரை வியந்து பாராட்டுவோம் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். </p><h2>தேசிய அ<strong>ந்தஸ்து</strong></h2><p>திருக்குறள் மதச்சார்பற்ற பண்பையும், உலகளாவிய மானுட மதிப்புகளையும் கொண்டுள்ளதால், அதற்குத் தேசிய நூல் அந்தஸ்து வழங்குவது தமிழ் மொழிக்கும், ஒட்டுமொத்த இந்திய கலாச்சாரத்திற்கும் உலகளவில் மிகப்பெரிய பெருமையைச் சேர்க்கும் என அவர் வலியுறுத்தினார்.</p>]]></content:encoded></item><item><title>பெண்கள் ஆசிய கோப்பை: இறுதிப்போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் இன்று மோதல்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/india-to-meet-srilanka-today-in-womens-asia-cup-final</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/india-to-meet-srilanka-today-in-womens-asia-cup-final#comments</comments><guid isPermaLink="false">3433a114-c998-47ee-9452-d41eb525842f</guid><pubDate>Sun, 13 Sep 2026 03:08:21 +0000</pubDate><atom:updated>2026-09-13T03:08:21.143Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,இலங்கை,srilanka,Womens Asia Cup,பெண்கள் ஆசிய கோப்பை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/9m8wj5xw/asia.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ india, srilanka]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/9m8wj5xw/asia.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன.</strong></em></p><h2>பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்</h2><p>10-வது பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடந்து வருகிறது. இத்தொடர் கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கியது.</p><p>இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, ஹாங்காங் மற்றும் குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா என மொத்தம் 8 அணிகள் இடம்பெற்றன.</p><p>குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தானும், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசமும் அரையிறுதிக்கு முன்னேறின.</p><p>இதில் முதல் அரையிறுதி போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதேபோல், 2வது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.</p><h2>இந்தியா - இலங்கை மோதல்</h2><p>இந்நிலையில், பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன.</p><p>துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது.</p><p>நடப்பு சாம்பியன் ஆன இலங்கை பெண்கள் ஆசிய கோப்பையை தக்கவைக்க தீவிரமாகப் போராடும்.</p><p>ஆனால், 7 முறை ஆசிய கோப்பையை வென்றுள்ள இந்திய அணி 8-வது முறையாக கோப்பையை வெல்ல போராடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.</p>]]></content:encoded></item><item><title>அரசியல் மேடைகளில் கண்ணியம் தவறும் திமுகவினர்: சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் கண்டனம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-leaders-losing-decency-on-political-stages-cpm-state-secretary-p-shanmugam-condemns</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-leaders-losing-decency-on-political-stages-cpm-state-secretary-p-shanmugam-condemns#comments</comments><guid isPermaLink="false">a8c5c63c-1dee-41c3-a296-a9347327854f</guid><pubDate>Sun, 13 Sep 2026 03:01:04 +0000</pubDate><atom:updated>2026-09-13T03:01:04.300Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,Shanmugam,CPM,ஆ.ராசா,a.raja,பெ.சண்முகம்,சிபிஎம்,முதலமைச்சர் விஜய்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/4721ilvh/cpm.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Shanmugam- A.Raja]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/4721ilvh/cpm.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமாரின் தாயாரைக் குறிப்பிட்டு திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்பியுமான ஆ.ராசா பேசிய பேச்சு வன்மையான கண்டனத்திற்குரியது.</p><p>சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய்யின் பேச்சுக்கு பலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். தமிழக அரசியலில் மிசா கொடுமைகள் பற்றிய விவாதமும் எழுந்துள்ளது. இந்த நிலையில், விஜய் திமுக தலைவர் ஸ்டாலினின் தியாகத்தைக் கொச்சைப்படுத்திவிட்டதாகக் கூறி, திமுகவினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்தினர்.</p><p>சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர். அப்போது கூட்டத்தில்<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mp-a-raja-remarks-condemned-manikam-thakur-slams-political-indecency"> ஆ.ராசா</a> பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆ.ராசாவின் பேச்சைக் கடுமையாகச் சாடி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்குச் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) தமிழ் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><h2>சிபிஎம் <strong>கடும் கண்</strong>டனம்</h2><p>அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமாரின் தாயாரைக் குறிப்பிட்டு திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்பியுமான ஆ.ராசா பேசிய பேச்சு வன்மையான கண்டனத்திற்குரியது என பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். அரசியல் மேடைகளில் கொள்கை ரீதியான விமர்சனங்களைத் தாண்டி, தனிப்பட்ட நபர்களின் குடும்பத்தினரையும் பெண்களையும் கொச்சைப்படுத்திப் பேசுவது சகித்துக் கொள்ள முடியாதது என்று அவர் சுட்டிக்காட்டினார்.</p><h2>கண்ணியம் தவ<strong>றும் திமுகவினர்</strong></h2><p>திமுகவின் முன்னணி தலைவர்கள் பலர் சமீபகாலமாகக் பொதுவெளியிலும் மேடைகளிலும் பேசும்போது கண்ணியம் தவறி பெண்களை இழிவுபடுத்திப் பேசுவது தொடர்ந்து வாடிக்கையாகி வருகிறது. மாற்றுக் கட்சியினரின் தாயாரைக் குறிவைத்துத் தாக்குவதும், ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதும் தமிழ்நாட்டின் அரசியல் நாகரிகத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.</p><h2><strong>ஸ்டாலி</strong>னுக்கு வேண்டுகோள்</h2><p>மாற்றுக் கட்சியினரின் தாயாரையும் பெண்களையும் இழிவுபடுத்திப் பேசுபவர்கள் மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேடிக்கை பார்க்காமல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். சொந்தக் கட்சியின் மூத்த நிர்வாகிகளின் பேச்சில் கட்டுப்பாட்டை நிலைநிறுத்தும் கடமையை திமுக தலைவர் நிறைவேற்றுவார் என்றும், இத்தகைய அவதூறு பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என்றும் நம்புவதாக பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்த ஜோ ரூட்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/joe-root-breaks-sachin-tendulkar-record-in-test-fifties</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/joe-root-breaks-sachin-tendulkar-record-in-test-fifties#comments</comments><guid isPermaLink="false">e19b8b7c-b855-405a-9024-86a65d240cad</guid><pubDate>Sun, 13 Sep 2026 02:26:59 +0000</pubDate><atom:updated>2026-09-13T02:26:59.733Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sachin Tendulkar,சச்சின் டெண்டுல்கர்,Joe Root,ஜோ ரூட்,ENGvPAK,இங்கிலாந்து பாகிஸ்தான் தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/h1extac1/root.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ joe root, sachin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/h1extac1/root.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்டின் 2வது இன்னிங்சில் இங்கிலாந்தின் ஜோ ரூட் அரை சதமடித்து சச்சின் சாதனையை முறியடித்துள்ளார்.</strong></em></p><p>இங்கிலாந்துக்கு பயணம் செய்த பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் இரு டெஸ்டில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது. இதனால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது.</p><h2>133 ரன்னுக்கு ஆல் அவுட்</h2><p>இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் பெர்மிங்காமில் நடந்தது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 133 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.</p><p>இங்கிலாந்து சார்பில் ஜோஷ் டங் 4 விக்கெட்டும், ஆலி ராபின்​சன், ஜோப்ரா ஆர்ச்சர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்​. </p><h2>ரன் குவித்த இங்கிலாந்து</h2><p>அடுத்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 453 ரன்கள் குவித்தது.</p><p>தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 2வது இன்னிங்சில் 449 ரன் எடுத்தது. </p><h2>பாகிஸ்தான் ஒயிட் வாஷ்</h2><p>அடுத்து ஆடிய இங்கிலாந்து 2 விக்கெட்டுக்கு 130 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஜோர்டான் காக்ஸ், ஜோ ரூட் அரை சதம் கடந்து வெற்றிக்கு வழிவகுத்தனர். இதன்மூலம் பாகிஸ்தான் உடனான டெஸ்ட் தொடரை 3-0 என இங்கிலாந்து முழுமையாக வென்றது.</p><p>இந்நிலையில், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். அவர் 62 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.</p><h2>சச்சின் சாதனை முறியடிப்பு</h2><p>இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக அரைசதங்கள் அடித்த சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை ஜோ ரூட் முறியடித்துள்ளார். ஜோ ரூட் தனது 169-வது டெஸ்ட் போட்டியின் 309-வது இன்னிங்சில் 69-வது அரைசதத்தை எட்டினார்.</p><p>சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் 68 அரை சதங்களை அடித்து 2வது இடத்தில் உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>லண்டன் சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் ரேசிங் உடையில் அசத்திய தமிழக முதலமைச்சர் விஜய்!</title><link>https://www.maalaimalar.com/news/topnews/tamil-nadu-cm-vijay-stuns-in-racing-suit-at-london-silverstone-circuit</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/tamil-nadu-cm-vijay-stuns-in-racing-suit-at-london-silverstone-circuit#comments</comments><guid isPermaLink="false">01e3edf5-9eed-4f41-b4d6-155521193ea2</guid><pubDate>Sun, 13 Sep 2026 02:16:46 +0000</pubDate><atom:updated>2026-09-13T02:16:46.718Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நடிகர் அஜித் குமார்,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,Silverstone Circuit,Michelin Le Mans Cup,சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/udq829pc/dd.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM VIJAY
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/udq829pc/dd.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>உலகம் (World)</category><content:encoded><![CDATA[ <p>லண்டனில் உள்ள புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் பந்தயச் சுற்றில் நடைபெற்ற 'மிச்செலின் லே மான்ஸ் கப்' சர்வதேசக் கார் பந்தயத் தொடரில், தமிழக முதலமைச்சர் விஜய் 'ரேசிங் சூட்' உடையில் பங்கேற்றுச் சிறப்பித்துள்ளார்.</p><p>அரசுமுறைப் பயணமாக பிரிட்டன் சென்றுள்ள முதலமைச்சர் விஜய், சில்வர்ஸ்டோன் பந்தயக் களத்திற்கு வருகை தந்தார். சர்வதேச கார் பந்தய அமைப்பாளர்களின் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற அவர், 44 கார் பந்தய வீரர்கள் அணிவகுத்து நின்ற வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியைப் பச்சைக் கொடியசைத்து முறைப்படி தொடங்கி வைத்தார்.</p><h2>அஜித்தை <strong>நேரில் சந்தித்து</strong> வாழ்த்து</h2><p>இந்தச் சர்வதேசப் போட்டியில் 'அஜித் குமார் ரேசிங்' அணியின் சார்பில் பந்தய வீரராகக் களம் கண்ட நடிகர் அஜித்குமாரை, முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்துக் கட்டித்தழுவித் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். திரையுலகில் நீண்டகாலப் போட்டியாளர்களாகக் கருதப்பட்ட இரு பெரும் நட்சத்திரங்களும் சர்வதேச விளையாட்டு அரங்கில் ரேசிங் உடையில் ஒன்றாகச் சந்தித்த புகைப்படங்களும் காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.</p><h2>மோட்டா<strong>ர் ஸ்போர்ட்ஸ் நகர</strong>ம்</h2><p>தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த 'மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்' அமைக்கப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் உள்கட்டமைப்பு, சர்வதேசப் பாதுகாப்பு முறைகள் மற்றும் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காகவே சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டிற்கு முதலமைச்சர் விஜய் வருகை தந்தார். தமிழகத்தில் சர்வதேச அளவிலான பந்தயங்களை நடத்துவதற்கும், விளையாட்டுத் துறையை சர்வதேச நிலைக்கு உயர்த்துவதற்கும் முதலமைச்சரின் இந்த லண்டன் பயணம் மிக முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.</p><p>இந்நிலையில், லண்டனில் உள்ள புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் பந்தயச் சுற்றில் நடைபெற்ற 'மிச்செலின் லே மான்ஸ் கப்' சர்வதேசக் கார் பந்தயத் தொடரில், தமிழக முதலமைச்சர் விஜய் 'ரேசிங் சூட்' உடையில் பங்கேற்றுச் சிறப்பித்துள்ளது அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 13 செப்டம்பர் 2026: அனுமனுக்கு திருமஞ்சன சேவை
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-13-september-2026-hanuman-thirumanjanam-seva</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-13-september-2026-hanuman-thirumanjanam-seva#comments</comments><guid isPermaLink="false">73a09243-1b51-4c93-987f-aaff82dbafe8</guid><pubDate>Sun, 13 Sep 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-09-13T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/03/07/27244676-jaihanuman.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anjaneyar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/03/07/27244676-jaihanuman.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆவணி-27 (ஞாயிற்றுக்கிழமை)</p><p>பிறை : வளர்பிறை</p><p>திதி :  துவிதியை காலை 8.29 மணி வரை பிறகு திருதியை</p><p>நட்சத்திரம் : அஸ்தம் பிற்பகல் 3.15 மணி வரை பிறகு சித்திரை</p> <p>யோகம் :  அமிர்த / சித்தியோகம்</p><p>ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை</p><p>எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை</p><p>சூலம் : மேற்கு</p><p>நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை</p> <h2>சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு</h2><p>சுபமுகூர்த்த தினம். சோழசிம்மபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருவீதியுலா. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் பால் அபிஷேகம். பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் மாலை திருத்தேரில் திருவீதியுலா, சந்தனக் காப்பு இரவு ஸ்ரீ சுவாமி நாயனாருக்கு அலங்கார திருமஞ்சன சேவை. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர் பெருமாள் கோவில்களில் காலை அலங்கார திருமஞ்சன சேவை. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. </p> <p>சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர், தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர் காலை அபிஷேகம். இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், தஞ்சை புன்னை நல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சன சேவை.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - உயர்வு</p><p>ரிஷபம் - அன்பு</p><p>மிதுனம் - வரவு</p><p>கடகம் - ஜெயம்</p><p>சிம்மம் - நன்மை</p><p>கன்னி - போட்டி</p> <p>துலாம் - இன்பம்</p><p>விருச்சிகம் - திடம்</p><p>தனுசு - பொறுமை</p><p>மகரம் - மகிழ்ச்சி</p><p>கும்பம் - பெருமை</p><p>மீனம் - விவேகம்</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/petrol-diesel-price-in-chennai-today-2</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/petrol-diesel-price-in-chennai-today-2#comments</comments><guid isPermaLink="false">b10b2ac5-bb9d-42ef-b7b2-44a7a386f72d</guid><pubDate>Sun, 13 Sep 2026 01:12:28 +0000</pubDate><atom:updated>2026-09-13T01:12:28.830Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல்,Petrol,diesel,டீசல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/d9lkl9l7/tn-31.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ petrol, diesel]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/d9lkl9l7/tn-31.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் போர் ஓய்ந்து ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டு மத்திய கிழக்கில் இருந்து கச்சா எண்ணெய் வரத்து அதிகரித்த ஒரு சில நாட்களில் மீண்டும் போர் மூண்டுள்ளதால் சர்வதேச கச்சா எண்ணெய் விலைகளில் மீண்டும் தாக்கம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.</p><p>கச்சா எண்ணெய்</p><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.</p><p>பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</p><p>இந்நிலையில், இன்றைய (13.09.2026 - ஞாயிற்றுக்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>Today Rasipalan | இன்றைய ராசிபலன் 13.9.2026: இந்த ராசிக்காரர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும்</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasipalan-1392026-in-tamil</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasipalan-1392026-in-tamil#comments</comments><guid isPermaLink="false">c53c9cab-fb42-4e47-9cde-8607ad9d214a</guid><pubDate>Sun, 13 Sep 2026 01:06:19 +0000</pubDate><atom:updated>2026-09-13T01:06:19.401Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/15/20104079-rasipalan1.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/15/20104079-rasipalan1.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். சுபச்செய்திகள் வீடு தேடி வரும். உடல் நலம் சீராகும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.</p><h2>ரிஷபம்</h2><p>ஆதாயம் தரும் தகவல் வந்து சேரும் நாள். அரைகுறையாக நின்ற பணி தொடரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம்பெறுவீர்கள்.</p><h2>மிதுனம்</h2><p>புதிய திருப்பங்கள் ஏற்படும் நாள். மதிய நேரத்தில் மனதிற்கினிய சம்பவம் ஒன்று நடைபெறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களுக்கு ஆலோசனை வழங்குவர்.</p><h2>கடகம்</h2><p>செல்வாக்கு அதிகரிக்கும் நாள். செயல்பாட்டில் வெற்றி கிடைக்கும். கவுரவம், அந்தஸ்து உயரும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.</p><h2>சிம்மம்</h2><p>ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமையும் நாள். அலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். ஆற்றல் மிக்கவர்கள் காரியங்களை முடித்துக் கொடுப்பர்.</p><h2>கன்னி</h2><p>நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். உத்தியோகத்தில் இலாகா மாற்றங்கள் எதிர்பார்த்தபடியே வந்து சேரும். பயணத்தால் கையிருப்புக் கரையும்.</p><h2>துலாம்</h2><p>தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். உத்தியோகத்தில் இடமாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். வாகனப் பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள்.</p><h2>விருச்சிகம்</h2><p>பக்கத்தில் உள்ளவர்கள் பக்கபலமாக இருப்பர். தொழிலில் கூட்டாளிகளால் நன்மை கிட்டும். சொத்துகள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.</p><h2>தனுசு</h2><p>நல்லது நடக்கும் நாள். மறதியால் விட்டுப்போன பணிகளைத் தொடருவீர்கள். ஆரோக்கியம் சீராகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனை முடிவிற்கு வரும்.</p><h2>மகரம்</h2><p>யோகமான நாள். எடுத்த காரியங்களை முடித்து வெற்றி காண்பீர்கள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.</p><h2>கும்பம்</h2><p>வரவை விடச் செலவு கூடும் நாள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள்மீது குறை கூறுவர். பெரிய மனிதர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம்.</p><h2>மீனம்</h2><p>நினைத்தது நிறைவேறும் நாள். பக்கபலமாக இருப்பவர்கள் சிக்கல் தீர வழிகாட்டுவர். உடல்நலனில் கவனம் தேவை. உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சபலென்காவை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ரிபாகினா</title><link>https://www.maalaimalar.com/sports/tennis/rybakina-beat-sabalenka-in-us-open-final</link><comments>https://www.maalaimalar.com/sports/tennis/rybakina-beat-sabalenka-in-us-open-final#comments</comments><guid isPermaLink="false">6b48e2a1-0a02-45e9-a0e5-b0105064e0cc</guid><pubDate>Sun, 13 Sep 2026 00:53:02 +0000</pubDate><atom:updated>2026-09-13T00:53:02.010Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>எலினா ரிபாகினா,Elena Rybakina,Aryna Sabalenka,அரினா சபலென்கா,US Open Tennis,அமெரிக்க ஓபன் டென்னிஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/toryw7ci/elenaa.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rybakina]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/toryw7ci/elenaa.jpg?w=280" width="280"></media:thumbnail><category>டென்னிஸ் (Tennis)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் பெலாரசின் சபலென்காவை வீழ்த்தி கஜகஸ்தானின் ரிபாகினா சாம்பியன் பட்டம் வென்றார்.</strong></em></p><p>கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.</p><h2>எலினா ரிபாகினா</h2><p>இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த இறுதிப்போட்டியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, பெலாரசின் அரினா சபலென்கா உடன் மோதினார்.</p><p>முதல் செட்டில் சிறப்பாக ஆடிய ரிபாகினா 6-4 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட சபலென்கா இரண்டாவது செட்டை 7-5 என கைப்பற்றினார்.</p><p>வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் அதிரடியாக ஆடிய ரிபாகினா 6-2 என வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.</p><h2>ரிபாகினா சாம்பியன்</h2><p>இதன்மூலம் எலினா ரிபாகினா முதல் முறையாக அமெரிக்க ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.</p><p>நடப்பு ஆண்டு தொடக்கத்தில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் இறுதிச்சுற்றிலும் எலினா ரிபாகினா, சபலென்காவைச் சாய்த்து சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>டாலருக்கு போட்டியாக பிரிக்ஸ் நாணயம் உருவாக்கப்படுமா? - பதில் இதுதான் </title><link>https://www.maalaimalar.com/news/national/will-a-brics-currency-be-created-to-rival-the-dollar-here-is-the-answer</link><comments>https://www.maalaimalar.com/news/national/will-a-brics-currency-be-created-to-rival-the-dollar-here-is-the-answer#comments</comments><guid isPermaLink="false">0fafc7fd-8666-4e04-beb4-d991e5ecc0f9</guid><pubDate>Sun, 13 Sep 2026 00:13:58 +0000</pubDate><atom:updated>2026-09-13T00:13:58.117Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BRICS,பிரிக்ஸ்,BRICS Summit,Dollar,டாலர்,பிரிக்ஸ் உச்சிமாநாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/ipwvw776/tn-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ புதின், மோடி, ஜி ஜின்பிங் பாரத் மண்டபம் வெளியே மரம் நட்ட காட்சி 
]]></media:title><media:description type="html"><![CDATA[ புதின், மோடி, ஜி ஜின்பிங் பாரத் மண்டபம் வெளியே மரம் நட்ட காட்சி 
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/ipwvw776/tn-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டாலருக்கு எதிரான பிரிக்ஸ் நாணயம் உருவாக்கப்படுமா என்ற கேள்விக்கு இந்தியா விளக்கம் அளித்துள்ளது. </p><p>சர்வதேச பொருளாதார பரிவர்த்தனைகள் டாலரின் ஆதிக்கத்தை எதிர்க்க பிரிக்ஸ் நாடுகளுக்கென்று பிரத்யேக நாணயம் உருவாக்கப்படுமா என்ற கேள்வி பல காலமாக உள்ளது. </p><p>ரஷியா, சீனா ஆகியவை அதற்கு மறைமுகமாக ஆர்வம் காட்டினாலும் இந்தியா, பிரேசில் உள்ளிட்ட மற்ற உறுப்பு நாடுகள் அதற்கு தயக்கம் காட்டுகின்றன. </p><p>இந்நிலையில் டெல்லியில் நேற்று தொடங்கிய 18வது<a href="https://www.maalaimalar.com/news/national/brics-summit-xi-jinping-says-middle-east-war-causes-serious-losses"> பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் </a>இதுகுறித்து ஏதேனும் முன்னெடுப்பு செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. </p><p>இந்நிலையில்  பிரிக்ஸ் அமைப்பின் நாணயக் கொள்கைகள் குறித்து  மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் பொருளாதார செயலாளர் சுதாகர் தலேலா விளக்கம் அளித்துள்ளார்.</p> <h2>விளக்கம்</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D">பிரிக்ஸ் </a>கூட்டமைப்பிற்கென பொதுவான தனி நாணயம் உருவாக்கும் திட்டம் எதுவும் தற்போது பரிசீலனையில் இல்லை என்று சுதாகர் தலேலா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும், "உறுப்பு நாடுகள் இடையே வர்த்தகச் செலவைக் குறைப்பதற்காகத் தங்களின் சொந்த (உள்நாட்டு) நாணயங்களிலேயே இருதரப்பு வர்த்தகத்தை மேற்கொள்வது குறித்தே ஆலோசிக்கப்பட்டு வருகிறது.</p><p>உள்நாட்டு நாணயங்களில் வர்த்தகம் செய்வதும், பணம் செலுத்தும் வழிமுறைகளை எளிதாக்குவதும் சர்வதேச பணப்பரிவர்த்தனை கட்டமைப்பை  ஒட்டுமொத்தமாக மாற்றுவதற்காக அன்றி, உலகளாவிய வர்த்தகத்தை எளிதாக்கும் ஒரு துணை நடவடிக்கை மட்டுமே" என தெரிவித்தார்.&nbsp;</p> <figure>
 <blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">#WATCH | BRICS Summit 2026 | Delhi: Sudhakar Dalela, Secretary (Economic Relations), MEA says, &quot;There is no proposal in the BRICS for a BRICS currency, as of now...&quot;

He also says, &quot;Discussion on trade settlement in local currency has been underway for some time in BRICS; it's not a new subject. We believe local currency settlement is a practical mechanism to reduce transaction cost in bilateral trade. This has been encouraged as complementary to global payment and settlement system, improving overall global trade across nations.&quot;</p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2098763252197118288?ref_src=twsrc%5Etfw">September 12, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2>டெல்லி பிரகடனம்</h2><p>நேற்று பிரிக்ஸ் மாநாட்டில் "டெல்லி பிரகடனம்" வெளியிடப்பட்டது. அதில், ஒவ்வொரு நாட்டின் தேசிய முன்னுரிமைகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில், உள்நாட்டு நாணயங்கள் மூலம் வர்த்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரிப்பது குறித்த ஆலோசனைகள் தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>எல்லை கடந்த பணப் பரிவர்த்தனைகளை அதிவேகமாகவும், குறைந்த செலவிலும், பாதுகாப்பாகவும் மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை 'பிரிக்ஸ் பேமெண்ட் டாஸ்க் போர்ஸ்' ஆய்வு செய்து வருகிறது.</p> <p>உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்குப் புறம்பாக விதிக்கப்படும் ஒருதரப்பு வர்த்தகக் கட்டுப்பாடுகளுக்கு டெல்லி பிரகடனம் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.</p><p>அமெரிக்க டாலருக்கு இணையான அல்லது டாலர் சார்ந்த அழுத்தத்தை குறைக்கும் பிரிக்ஸ் நாடுகளின் இந்த முயற்சியை அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சித்திருந்த சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><p>நேற்று மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் ஆகியோர் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளிடையே உள்நாட்டு நாணயப் பயன்பாட்டை மேலும் அதிகரிக்க வேண்டும் என்றும், பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.</p> ]]></content:encoded></item><item><title>ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும் என்றால்?.. ஈரான் அதிபர் விதித்த நிபந்தனைகள் </title><link>https://www.maalaimalar.com/news/national/if-the-strait-of-hormuz-should-be-opened-the-conditions-imposed-by-the-president-of-iran</link><comments>https://www.maalaimalar.com/news/national/if-the-strait-of-hormuz-should-be-opened-the-conditions-imposed-by-the-president-of-iran#comments</comments><guid isPermaLink="false">0c21eef2-68a6-4ff2-96f3-c720700df25e</guid><pubDate>Sat, 12 Sep 2026 23:32:10 +0000</pubDate><atom:updated>2026-09-12T23:32:10.424Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BRICS Summit,பிரிக்ஸ் உச்சிமாநாடு,Iran War,ஈரான் போர்,ஹார்முஸ் ஜலசந்தி,Strait of Hormuz</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/6av7fn17/tn-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மசூத் பெசெஷ்கியான், புதின், மோடி ]]></media:title><media:description type="html"><![CDATA[ மசூத் பெசெஷ்கியான், புதின், மோடி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/6av7fn17/tn-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் போரினால் மூடப்பட்டுள்ள ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது குறித்து ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் பேசியுள்ளார்.</p> <p>மத்திய கிழக்கில் இருந்து உலக நாடுகளுக்கு எண்ணெய், எரிவாயு  ஏற்றுமதிக்கு முக்கிய கடல்வழிப் பாதையான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">ஹார்முஸ் ஜலசந்தி</a>யை அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் தன் கட்டுப்பாட்டில் வைத்து, அதன் வழியே கப்பல்கள் செல்ல கெடுபிடி காட்டி வருகிறது. </p><p>இந்நிலையில் டெல்லியில் நடைபெறும் <a href="https://www.maalaimalar.com/news/national/brics-summit-xi-jinping-says-middle-east-war-causes-serious-losses">பிரிக்ஸ் மாநாட்டில் </a>கலந்துகொள்ள இந்தியா வருகை தந்துள்ள ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் தேசிய ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். </p> <p>அதில் அவர் பேசுகையில், அமெரிக்கா மேற்கொண்டு வரும் ராணுவ மற்றும் பொருளாதாரத் தாக்குதல்களுக்கு பதிலாகவே ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியுள்ளோம்.</p><p>அமெரிக்கா இந்தப் பிராந்தியத்திற்கு ஆயுதங்களைக் கொண்டு வரலாம், கடல் வழிகளை அடைக்கலாம் என்றால், அதற்குப் பதிலடி கொடுக்காமல் ஈரான் அமைதியாக இருக்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?</p><p>அமெரிக்காவின் எந்தவொரு அழுத்தத்திற்கும் ஈரான் பணிந்து போகாது" என தெரிவித்துள்ளார்.</p> <h2>நிபந்தனை</h2><p>தொடர்ந்து பேசிய அவர், "சர்வதேச விதிகள் மற்றும் சட்டங்களுக்கு உட்பட்டு ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க ஈரான் தயாராக உள்ளது.</p><p>ஆனால் அதற்கு முன்பாக, அமெரிக்கா தன் மீதான பொருளாதாரப் தடைகள், கடல்சார் முற்றுகை மற்றும் தொடர் அழுத்தங்களை உடனடியாகக் கைவிட வேண்டும்" என நிபந்தனை விதித்துள்ளார்.</p><p>மேலும் "போரின் மூலம் ஈரானை அடக்க அமெரிக்கா நினைத்த இலக்குகள் தோற்றுவிட்டன. அதனாலேயே தற்போது அமெரிக்கா பொருளாதார மற்றும் கடல்சார் முற்றுகை என்ற மாற்று வழியைக் கையில் எடுத்துள்ளது" என்று அவர் சாடினார்.</p> <h2>மோடி வலியுறுத்தல் </h2><p>பாரசீக வளைகுடாவிலிருந்து இந்தியாவிற்கு வரும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் பெரும்பகுதி ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே பயணிக்கிறது.</p><p>வளைகுடாவில் நிலவும் பதற்றம் மற்றும் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் இந்திய வர்த்தகத்தையும், அப்பகுதியில் பயணிக்கும் பல்லாயிரக்கணக்கான இந்திய மாலுமிகளின் பாதுகாப்பையும் நேரடியாகப் பாதிக்கின்றன.</p><p>இதன் காரணமாகவே, டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு இடையே ஈரான் அதிபருடன் பேசிய பிரதமர் மோடி, ஹார்முஸ் பகுதியில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்தையும் மாலுமிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.</p><p>ஈரான் மீதான போருக்கு எதிராவும் பிரிக்ஸ் மாநாட்டில் நிலைப்பாடு எட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.   </p>]]></content:encoded></item><item><title>கனடாவில் வாடகைக்கு இருப்பவர் மாட்டிறைச்சி சமைப்பதை எதிர்த்த இந்திய வம்சாவளி வீட்டு உரிமையாளர் கைது</title><link>https://www.maalaimalar.com/news/world/indian-origin-landlord-arrested-for-protesting-tenants-cooking-beef-in-canada</link><comments>https://www.maalaimalar.com/news/world/indian-origin-landlord-arrested-for-protesting-tenants-cooking-beef-in-canada#comments</comments><guid isPermaLink="false">b73e9fdf-0610-4e70-bd3c-ec4afd28bb2f</guid><pubDate>Sat, 12 Sep 2026 23:01:51 +0000</pubDate><atom:updated>2026-09-12T23:01:51.290Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய வம்சாவளி,Indian origin,கனடா,canada,beef,மாட்டிறைச்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/8z96n1hd/tn-11.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/8z96n1hd/tn-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கனடாவில் இந்திய வம்சாவளி வீட்டு உரிமையாளர், தன் வீட்டில் வாடகைக்கு இருப்பவர் மாட்டிறைச்சி சமைப்பதை எதிர்த்ததால் கைது செய்யப்பட்டுள்ளார். </p>  <p><a href="https://www.maalaimalar.com/topic/canada">கனடாவில் </a>இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜ் திவானா என்ற பெண்மணி  தனது வீட்டை ஒருவருக்கு வாடைகைக்கு விட்டுள்ளார்.</p> <p>வாடகைக்கு இருப்பவர் அண்மையில் வீட்டுத் தோட்டத்தில் வைத்து பாார்பிக்யூ சமையல் செய்துள்ளார். இது <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">இறைச்சியை </a>ஒரு வகையாக வாட்டும் முறை. அவர்கள் மாட்டிறைச்சியை அவ்வாறு பார்பிக்யூ செய்துகொண்டிருந்தபோது ராஜ் திவானா அங்கு வந்துள்ளார்.</p><p>தனது இடத்தில் மாட்டிறைச்சி சமைக்கக் கூடாது எனக் கூறி அவர்களைத் தடுத்துள்ளார்.</p><h2>வீடியோ</h2><p>இது தொடர்பான வீடியோவில், ராஜ் திவானா பார்பிக்யூவில் வைக்கப்பட்டிருந்த உணவை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்துவதும், தனது இடத்தில் அதை சமைக்க அனுமதிக்க முடியாது என எச்சரிப்பதும் பதிவாகியுள்ளது.</p><p>வாடகைக்கு இருப்பவருக்கும் அவரும் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதை வாடகைக்கு இருப்பவரின் நண்பர் தனது கைபேசியில் படம்பிடித்துள்ளார்.</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/mjxbjshb/tn-12.jpg" /></figure><h2>குற்றச்சாட்டு</h2><p>வீசம்பவத்திற்குப் பிறகு, வாடகைக்கு இருக்கும் அந்த நபர் சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பதிவேற்றி ராஜ் திவானா தனது அனுமதி இன்றி வாடகை வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், கை கலப்பு செய்ததாவும் குறிப்பிட்டார்.</p><p>தான் வீட்டில் இல்லாத நேரத்தில் திவானா வீட்டிற்குள் நுழைந்து கதவின் பூட்டுகளை மாற்றித் தனக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாகவும் வாடகைதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.</p> <h2>கைது</h2><p>வாடகைதாரரின் புகாரை தொடர்ந்து கனடா காவல்துறையினர், ராஜ் திவானாவை அதிரடியாக கைது செய்து அழைத்துச் சென்றனர். அவரை கைவிலங்கிட்டு போலீசார் அழைத்துச் செல்லும் வீடியோ வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>பாலஸ்தீனத்தை தனி நாடாக உருவாக்க பிரிக்ஸ் நாடுகள் ஆதரவு - இஸ்ரேலுக்கு அறிவுரை வழங்கிய  &quot;டெல்லி பிரகடனம்&quot;</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-declaration-advises-israel-to-support-brics-statehood-for-palestine</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-declaration-advises-israel-to-support-brics-statehood-for-palestine#comments</comments><guid isPermaLink="false">4b6d3455-119b-4b70-a2b5-3859fdd3556d</guid><pubDate>Sat, 12 Sep 2026 22:17:21 +0000</pubDate><atom:updated>2026-09-12T22:17:21.024Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>palestine,காசா,இஸ்ரேல்,gaza,Israel,BRICS Summit,பிரிக்ஸ் உச்சிமாநாடு,பாலஸ்தீனம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/wyksrh6s/tn-4.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரிக்ஸ் ]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரிக்ஸ் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/wyksrh6s/tn-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரிக்ஸ் மாநாட்டில் எட்டப்பட்ட "டெல்லி பிரகடன"த்தில் பாலஸ்தீனம் மற்றும் லெபனான் பிரச்சனைகள் குறித்த நிலைப்பாட்டை பிரிக்ஸ் நாடுகள் அறிவித்துள்ளன.</p> <p>டெல்லியில் நடந்து வரும் 18வது<a href="https://www.maalaimalar.com/news/national/brics-summit-xi-jinping-says-middle-east-war-causes-serious-losses"> பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் </a>முதல் நாளான நேற்று"டெல்லி பிரகடனம்" என்ற பெயரில் உறுப்பு நாடுகள் பல நிலைப்பாடுகளுக்கு கூட்டாக ஆதரவளித்துள்ளது. </p><p>சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதின், ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான், பிரதமர் மோடி உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் கையொப்பம் இட்டு இந்த கூட்டுப் பிரகடனத்தை வெளியிட்டனர். </p> <h2>பாலஸ்தீன நாடு</h2><p>அந்த பிரகடனத்தில் குறிப்பாக, இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினைக்கு 'இரு நாடுகள் தீர்வே' ஒரே வழி என்றும் இஸ்ரேலுடன் இணைந்து சுதந்திரமான பாலஸ்தீன நாடு உருவாக்கப்பட வேண்டும் என்றும் பிரிக்ஸ் நாடுகள் கூட்டு நிலைப்பாடு எடுத்துள்ளன.</p><p>1967ஆம் ஆண்டிற்கு முந்தைய எல்லைகளை அடிப்படையாகக் கொண்டு, <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE">காசா முனை</a>, <a href="https://www.maalaimalar.com/news/world/west-bank-violence-israeli-settlers-torch-mosques-kill-palestinians">மேற்குக் கரை</a> மற்றும் கிழக்கு ஜெருசலேம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக பாலஸ்தீன நாடு அமைய வேண்டும். கிழக்கு ஜெருசலேமே அதன் தலைநகராக இருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>பாலஸ்தீனியர்கள் தங்களது எதிர்காலத்தை சுயநிர்ணயம் செய்யும் உரிமையையும், தங்களது தாய்நாட்டிற்கு திரும்பும் உரிமையையும் கொண்டுள்ளனர்; ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனத்திற்கு முழுமையான உறுப்பினர் தகுதி வழங்கப்பட வேண்டும் எனவும் பிரிக்ஸ் வலியுறுத்தியுள்ளது.</p> <h2>இடப்பெயர்வுக்கு தடை</h2><p>பாலஸ்தீனியர்களை தங்களது சொந்த நிலத்திலிருந்து தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ<a href="https://www.maalaimalar.com/news/world/israel-ministers-plan-to-remove-25-lakh-palestinians-from-gaza"> பலவந்தமாக வெளியேற்றும் இஸ்ரேலின் திட்டத்தை</a> பிரிக்ஸ் கூட்டமைப்பு கடுமையாக எதிர்த்துள்ளது.</p><p>போரின் உத்தியாக பொதுமக்களுக்கு உணவை மறுப்பதையோ, மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்கள் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதையோ பிரிக்ஸ் கண்டித்துள்ளது.</p><p>ஜெருசலேமில் உள்ள புனிதச் தலங்களை மக்கள் வழிபடுவதற்கான உரிமை பாதுகாப்பப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.</p> <h2>லெபனான் பிரச்சனை</h2><p><a href="https://www.maalaimalar.com/news/world/israel-launches-barrage-of-attacks-on-lebanon-4-killedincluding-womenand-20-critically-injured">லெபனானில்</a> அமைதியை நிலைநாட்ட ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் 1701 முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என "டெல்லி பிரகடனம்" சொல்கிறது.</p><p>லெபனானின் இறையாண்மை மற்றும் எல்லைகள் மதிக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ள பிரிக்ஸ், தெற்கு லெபனானில் தங்கியுள்ள இஸ்ரேலியப் படைகள் உடனடியாகத் தங்களது வீரர்களை திரும்ப அழைக்க வேண்டும் என கோரியுள்ளது.</p><p>மேலும் ஈரான் மீதான அமெரிக்காவின் போர் உலக நலனுக்கு உகந்ததல்ல என்றும் பிரிக்ஸ் நாடுகள் தெரிவித்துள்ளன. </p> ]]></content:encoded></item><item><title>கோவை அரசுப் பள்ளியில் பழங்குடியின மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்ததாக தலைமை ஆசிரியை மீது விசாரணை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/investigation-against-headmistress-who-made-tribal-students-clean-toilets-in-coimbatore-government-school</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/investigation-against-headmistress-who-made-tribal-students-clean-toilets-in-coimbatore-government-school#comments</comments><guid isPermaLink="false">d3023a89-af9c-40e8-807f-8ceb463a6a4d</guid><pubDate>Sat, 12 Sep 2026 21:03:51 +0000</pubDate><atom:updated>2026-09-12T21:03:51.060Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tribal people,Coimbatore,கோவை,government school,பழங்குடியினர்,அரசுப் பள்ளி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/w619inro/tn-9.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ வைரல் படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ வைரல் படம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/w619inro/tn-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கோயம்புத்தூர் அருகே உள்ள பழமலை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல நடுநிலைப் பள்ளியில் மாணவர்களை கழிப்பறை சுத்தம் செய்ய வைத்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p> <p>குஞ்சூர்பதி கிராமத்தில் அமைந்துள்ள இந்தப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் சுமார் 40 <a href="https://www.maalaimalar.com/news/national/using-caste-words-not-offence-under-sc-st-act-allahabad-high-court">பழங்குடியின </a>மாணவர்கள் விடுதியில் தங்கிப் படித்து வருகின்றனர். </p><p>மாணவர்கள்  சிலர் கழிப்பறையை  சுத்தம் செய்யும் புகைப்படங்கள் கடந்த வியாழக்கிழமை முதல் வைரலாக பரவி வருகிறது.</p><p>பள்ளிக்கு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">தூய்மைபணியாளர்கள் </a>சரியாக வருவதில்லை என்ற காரணத்தை கூறி, தலைமையாசிரியை மாணவிகளை இத்தகைய வேலைகளில் ஈடுபடுத்தியதாகப் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். </p><p>இதனால் குழந்தைகளுக்கு கடுமையான நோய்த்தொற்றுகள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மாணவிகளை தூய்மைப் பணியில் ஈடுபடுத்தியது மட்டுமின்றி, பள்ளி நிர்வாகம் மீது மேலும் பல தீவிர புகார்களைப் பெற்றோர்களும் உள்ளூர் மக்களும் முன்வைத்துள்ளனர். </p> <h2>பிற குற்றச்சாட்டுகள்</h2><p>வீட்டுப்பாடம் செய்யவில்லை எனக் கூறி ஒரு மாணவியை தலைமையாசிரியை பிரம்பால் கடுமையாகத் தாக்கியதில், அந்த சிறுமியின் முதுகில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.</p><p>இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் பள்ளிக்கு வந்து தலைமையாசிரியையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>பள்ளியின் குடிநீர்த் தொட்டிகள் தூய்மைப்படுத்தப்படாமல், அதில் தவளைகள் மிதப்பதாகப் பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் பள்ளியின் சுற்றுச்சுவர் பல இடங்களில் இடிந்து சேதமாகியுள்ளது எனவும் கூறப்படுகிறது.</p><p>ஆசிரியர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குப் பள்ளிக்கு வருவதில்லை என்றும், மாணவர்களுக்கு சரியான உணவும் வழங்கப்படுவதில்லை என்றும் குற்றம் சாட்டு எழுந்துள்ளது.</p> <h2>விசாரணை</h2><p>இச்சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு குழந்தை நலக் குழு (CWC) உறுப்பினர்கள் நேரடியாக பள்ளிக்கு சென்று ஆய்வு நடத்தி, விரிவான அறிக்கையை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு சமர்ப்பித்துள்ளனர்.</p><p>முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட தலைமையாசிரியை மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p>பழங்குடியின சிறுவர்கள் பயிலும் அரசுப் பள்ளியில் நடைபெற்றுள்ள இந்த மனித உரி மீறல் சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுத்து, இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நிகழாமல் இருக்க வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>டெல்லி 5 நட்சத்திர விடுதி அறையில் ஏர் இந்தியா விமானி மர்ம மரணம்</title><link>https://www.maalaimalar.com/news/national/air-india-pilot-dies-in-delhi-5-star-hotel-room</link><comments>https://www.maalaimalar.com/news/national/air-india-pilot-dies-in-delhi-5-star-hotel-room#comments</comments><guid isPermaLink="false">7f571e8d-d902-41b6-bb37-8ff5135641b5</guid><pubDate>Sat, 12 Sep 2026 20:08:41 +0000</pubDate><atom:updated>2026-09-12T20:08:41.209Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஏர் இந்தியா,Air India,delhi,Air India Pilot,டெல்லி,ஏர் இந்தியா விமானி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/o9yzb4fd/tn-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[  ஏர் இந்தியா விமானி மர்ம மரணம்]]></media:title><media:description type="html"><![CDATA[  ஏர் இந்தியா விமானி மர்ம மரணம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/o9yzb4fd/tn-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் ஏர் இந்தியா விமானி ஓட்டல் அறையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். </p><p>ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் பணியாற்றி, பின்னர் <a href="https://www.maalaimalar.com/news/national/phuket-flight-pilot-who-failed-drug-test-sacked-by-air-india">ஏர் இந்தியா</a> நிறுவனத்திற்கு மாறிய அந்த விமானி, போயிங் 787 விமானங்களை இயக்குவதற்கான பயிற்சிக்காகப் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF">டெல்லிக்கு </a>வந்துள்ளார். </p><p>அவர் செப்டம்பர் 10 அன்று தெற்கு டெல்லியில் உள்ள வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள ஒரு 5 நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளார்.</p> <h2>உயிரிழப்பு</h2><p>செப்டம்பர் 11 மாலை நேரத்தில், விமானியின் சகோதரர் தனது சகோதரருக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்ட போது அவர் பதிலளிக்கவில்லை.</p><p>இதனால் சந்தேகமடைந்த அவர் ஓட்டல் மேலாளரை  தொடர்புகொண்டு நிலைமையை கூறியுள்ளார்.</p><p>ஓட்டல் அறை உட்புறமாக பூட்டப்பட்டிருந்ததால், மேலாளர் மாற்றுச் சாவி மூலம் அறையை திறந்து பார்த்தபோது, விமானி சுயநினைவின்றி மயங்கிக் கிடந்தது தெரியவந்தது.</p><p>வசந்த் குஞ்ச் வடக்கு காவல் நிலையத்திற்கு வந்த அவசர அழைப்பைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.</p><p>ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.</p> <h2>பிரேதப் பரிசோதனை</h2><p>அவரது உடலுக்கு இன்று புதுடெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் டற்கூறாய்வு செய்யப்பட்டது. இறுதி மருத்துவ அறிக்கை கிடைத்த பிறகே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியும் எனக் காவல் துறை கூறியுள்ளது.</p><p>இந்தச் சம்பவத்தில் எந்தவிதமான சதிச்செயலும் இருப்பதாகத் தெரியவில்லை எனக்கூறிய காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.</p> <p>அந்த விமானி மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.</p><p>இச்சம்பவம் குறித்து ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டெல்லியில் ஓட்டல் அறையில் எங்களது விமானி சுயநினைவின்றி மீட்கப்பட்டு, மருத்துவமனையில் உயிரிழந்த செய்தி எங்களை அதிர்ச்சியிலும் ஆழ்ந்த துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ஏர் இந்தியா வழங்கி வருகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்த கார் பந்தயம் -  3ஆம் இடம் பிடித்து அஜித்தின் அணி அசத்தல் </title><link>https://www.maalaimalar.com/news/world/car-race-flagged-off-by-chief-minister-vijay-ajiths-team-impresses-by-securing-3rd-place</link><comments>https://www.maalaimalar.com/news/world/car-race-flagged-off-by-chief-minister-vijay-ajiths-team-impresses-by-securing-3rd-place#comments</comments><guid isPermaLink="false">d7d84a61-96cc-4821-8d35-bc1d516f6465</guid><pubDate>Sat, 12 Sep 2026 19:10:05 +0000</pubDate><atom:updated>2026-09-12T19:10:05.197Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Ajith,கார் பந்தயம்,car racing,அஜித்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/k2fpohlc/tn-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விஜய், அஜித்]]></media:title><media:description type="html"><![CDATA[ விஜய், அஜித்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/k2fpohlc/tn-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்த லே மான்ஸ் கார் பந்தய போட்டியில் நடிகர் அஜித்தின் அணி 3ஆம் இடம் பிடித்துள்ளது. </p><p>அரசுமுறைப் பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள<a href="https://www.maalaimalar.com/topic/vijay"> முதலமைச்சர் விஜய்</a>, தமிழ்நாட்டிற்குப் புதிய முதலீடுகளை ஈர்ப்பதோடு சர்வதேச விளையாட்டு உள்கட்டமைப்புகளையும் நேற்று நேரில் பார்வையிட்டார்.</p><h2>அஜித்-விஜய்</h2><p>அதேநேரம் நேற்று இரவு 9 மணியளவில் லண்டனில் நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/ajith-kumar">அஜித் குமாரின்</a> அணி பங்கேற்கும் மிச்செலின் லீ மான்ஸ் தொடரை முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார். </p> <p>அங்கு முதலமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அஜித்தை விஜய் ஓடிச் சென்று ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்தினார். விஜய் வருகைக்கு அஜித் நன்றி தெரிவித்தார்.</p><p>தொடர்ந்து அவர் பார்வையாளர் பகுதியில் நின்று பந்தயத்தை கண்டுகளித்தார். நடிகை திரிஷாவும் பந்தயத்தை கண்டுகளிக்க பார்வையாளர் திடலுக்கு வருகை தந்தார்.</p> <h2>போட்டி</h2><p>லே மான்ஸ் போட்டியில் சர்வதேச பந்தய வீரராகக் நடிகர் அஜித் குமார், LMP3 Pro/Am பிரிவில் 'Ajith RedAnt by Virage' அணியின் சார்பாக 16-ஆம் எண் கொண்ட 'Ligier' பந்தயக் காரை இயக்கினார்.</p><p>இப்போட்டியில் அஜித் குமாருடன் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த முன்னணி பந்தய வீரர் ரோமைன் வோஸ்னியாக் இணை காரோட்டியாக பங்கேற்றார்.</p><p>சுமார் 2 மணி நேரம் கார் பந்தயம் நடைபெற்றது. இதில் அஜித்குமாரின் அணி 3வது இடம் பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>