<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 12 Sep 2026 12:16:57 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 12 செப். 2026...
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-12-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-12-september-2026#comments</comments><guid isPermaLink="false">46d65b0f-475d-4a26-9683-2f1c1d5bcde0</guid><pubDate>Sat, 12 Sep 2026 05:05:09 +0000</pubDate><atom:updated>2026-09-12T10:32:11.959Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/a3cevkbq/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live News]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/a3cevkbq/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் வருகிற 18-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்... </p><p>* புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/we-will-not-spare-anyone-who-touches-our-leader-says-chennai-mayor-priya">என் தலைவரை தொட்டது யாராக இருந்தாலும் விடமாட்டோம்: மேயர் பிரியா எச்சரிக்கை!... </a></p><p>*முதலமைச்சர் சட்டமன்ற பேச்சை கண்டித்து திமுக சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. </p><p>*திரைப்படங்களில் மூன்று மணி நேரம் நடிப்பு காட்டுவது போல, முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்திற்கு வந்து ஒரு மணி நேரம் பேசிவிட்டுச் செல்கிறார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/seeman-says-amil-nadu-government-must-abandon-tughlaq-durbar-style-decision-to-construct-the-new-secretariat-at-pattinapakkam">பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்கும் ‘துக்ளக் தர்பார்’ முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்!- சீமான்</a></p><p>* ஒவ்வொரு நாளும் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் வருகைக்காகப் பல மணி நேரங்கள் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படுகின்ற அவலமும் நடைபெறும்.</p><p>* பொதுமக்கள் குறிப்பாகப் பள்ளி குழந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் நிலை உருவாகும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cpi-m-to-announce-byelection-support-tomorrow-madurantakam-dharapuram">இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு?- சிபிஐ(எம்) மாநிலக் குழு நாளை அறிவிப்பு... </a></p><p>*மதுராந்தகம், தாராபுரம்  இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு தருவது என்பது தொடர்பாக நாளை அறிவிக்கப்படும். </p><p>*நாளை பிற்பகல் 2 மணியளவில் ஆதரவு நிலைப்பாடு குறித்து தெரிவிக்கப்படும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-indictment-tvk-govt-5">'ப்யூஸ் போன' த.வெ.க. அரசு மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும்- உதயநிதி ஸ்டாலின்</a></p><p>* தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்சாரம் இருந்தாலும் voltage பிரச்சனை என மக்கள் வெகுண்டெழுந்து வீதிக்கு வந்து போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.</p><p>* துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரோ, இதைச் சரிசெய்யும் முயற்சிகளைச் செய்யாமல் தேவையில்லாத அவதூறுகளை உளறிக் கொண்டிருக்கிறார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/isharani-baruah-enter-final-in-vietnam-open-badminton">வியட்நாம் ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இஷாராணி பரூவா</a></p><p>* வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் தொடர் வியட்நாமில் நடந்து வருகிறது.</p><p>* மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் தன்வி ஷர்மா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/ai-technology-used-for-missile-production-anthropic-exposes-yemen-group">ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஏவுகணை தயாரிப்பு: ஏமன் குழுவின் முயற்சியை வெளிப்படுத்திய 'ஆந்த்ரோபிக்' நிறுவனம்!... </a></p><p>*வடக்கு ஏமனில் செயல்பட்டு வரும் இந்த அடையாளம் தெரியாத குழு, மூன்று வெவ்வேறு ஆயுத வளர்ச்சித் திட்டங்களில் ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியைப் பெற்றுள்ளது. </p><p>*இக்குழுவினர் ஒரு நேரடி ராக்கெட் சோதனையையும் நடத்தியுள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-says-tvk-government-must-focus-on-improving-the-energy-sector">தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி: எரிசக்தி துறையை மேம்படுத்துவதில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும்- தினகரன்</a></p><p>* தமிழகத்தில் நிலவும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டுகளைத் தடுத்து நிறுத்துவதோடு, பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும்.</p><p>* வீண் விதண்டாவாதப் பேச்சுகளின் மூலம் மக்களை மடைமாற்றுவதை விட்டுவிட்டு, எரிசக்தி துறையை மேம்படுத்துவதில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/spirituality/vinayagar-arupadai-veedu-6">ஆனைமுகனின் அறுபடை வீடும், அதன் சிறப்புகளும்</a></p><p>* சித்தி விநாயகர் நாம் விரும்புகிற காரியங்களை நிறைவேற்றித் தருபவராக உள்ளார்.</p><p>* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை வணங்கினால் தீட்சையும் ஞானமும் கிடைக்கும்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/zverev-enter-the-final-round-in-us-open-tennis">அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஸ்வரேவ்</a></p><p>* அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.</p><p>* ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி சுற்று போட்டிகள் நடந்தன.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/congress-leader-harish-rawat-quits-party-posts-after-cash-jewellery-recovered-from-aide-house">உதவியாளர் வீட்டில் பணம், நகைகளை கைப்பற்றிய ED: கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் விலகிய காங்கிரஸ் தலைவர்</a></p><p>* உதவியாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.</p><p>* சோதனையில் உயர்ரக கைக்கடிகாரங்கள், பணம் கைப்பற்றப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-by-elections-tvk-sets-up-election-task-force">மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்- த.வெ.க.வில் தேர்தல் பணிக்குழு அமைப்பு</a></p><p>*  இடைத்தேர்தல் வரலாற்றிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர் என்கிற புதிய வரலாறு படைக்கும் வகையில் அனைவரும் தேர்தல் பணியாற்றிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>* நம் வெற்றி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நமது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளைத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக விரைவில் முன்னெடுப்போம் என்று தெரிவித்துள்ளார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-urges-government-itself-must-fully-bear-the-cost-of-the-breakfast-scheme-in-government-schools">தலைமை ஆசிரியர்கள் மீது நிதிச் சுமை: அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டச் செலவை அரசே முழுமையாக ஏற்க வேண்டும்- தினகரன்</a></p><p>* தேவையான பெயர்ப்பலகை, மின்விளக்கு, குடிநீர் உள்ளிட்ட தொடக்க நிகழ்வுக்கான ஏற்பாடுகளுக்கான செலவினங்களைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் தலையில் சுமத்துவது ஏற்புடையதல்ல.</p><p>* அரசு நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள நிர்வாகச் சிக்கல்களையும் அதிகாரக் குளறுபடிகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-says-dmk-defeat-in-by-election">இடைத்தேர்தலில் திமுக தோல்வி அடைவது உறுதி - அமைச்சர் நிர்மல்குமார்</a></p><p>* மு.க.ஸ்டாலின் மிகப்பெரிய தியாகி என்று திமுக சித்தரிக்க முயன்றாலும் மக்கள் அதை நம்பமாட்டார்கள்.</p><p>* திமுக நடத்தும் போராட்டத்தை பார்த்து மக்கள் சிரித்தவாறே கடந்து செல்வர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/state-honours-for-the-late-solomon-pappaiah">மறைந்த சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை</a></p><p>* சாலமன் பாப்பையா காலமானார் என்ற செய்தி அறிந்து பலரும் இரங்கல் தெரிவித்தனர். </p><p>* தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என அமைச்சர் நிர்மல்குமார் என அறிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-ministers-and-members-of-the-legislative-assembly-must-also-disclose-their-asset-details">அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களும் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும்!- அன்புமணி ராமதாஸ்</a></p><p>* அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிப்பதற்காக இந்தியாவின் பல மாநிலங்களில் பல்வேறு நடவடிக்கைகள் கடந்த சில பத்தாண்டுகளில் மேற்கொள்ளப்பட்டன. </p><p>* சொத்து விவரங்களை தாக்கல் செய்ய அரசு ஊழியர்கள் தவறினால் அது விதிமீறலாகக் கருதப்படும்;  அது அவர்களின் பதவி உயர்வை பாதிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/saudi-arabia-shuts-down-pipeline-as-houthis-seize-island-opening-new-front-in-iran-war">முக்கியமான பைப்லைனை மூடிய சவுதி அரேபியா: கச்சா எண்ணெய் விலை மேலும் உயரும் அபாயம்..!</a></p><p>* ஈராக்கில் இருந்து டிரோன்கன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக சவுதி அரேபியா குற்றச்சாட்டு</p><p>* முன்னெச்சரிக்கை காரணமாக பைப்லைனை மூடியதாக சொல்கிறது சவுதி அரேபியா</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-12-9-2026">GOLD PRICE TODAY: சற்றே உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.14,170-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madurai-meenakshi-amman-temple-kumbabishekam-special-train-service-between-chennai-central-and-madurai">மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: சென்னை சென்ட்ரல் - மதுரை இடையே சிறப்பு ரெயில் இயக்கம்</a></p><p>&nbsp;* தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 16-ந்தேதி இரவு புறப்பட்டு செல்லும் சிறப்பு ரெயில், மறுநாள் காலை 5 மணிக்கு மதுரை சென்றடையும்.</p><p>* மதுரையில் இருந்து வருகிற 17-ந்தேதி இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், மறுநாள் காலை 3.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tirupati-kudai-rally-traffic-diversions-in-chennai-tomorrow">திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் - சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்</a></p><p>* திருக்குடை ஊர்வலம் வால்டாக்ஸ் சாலையை கடக்கும் வரை, காலை 8 மணி முதல் மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.&nbsp;</p><p>* ஊர்வலம் ஏ.பி. சாலை வரும்போது, பெரம்பூர் பேரக்ஸ் சாலை சந்திப்பில் இருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதி இல்லை.</p> ]]></content:encoded></item><item><title>3-வது போட்டியிலும் படுதோல்வி: பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/eng-vs-pak-pakisan-loss-3rd-test-england-white-wash-pakistan</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/eng-vs-pak-pakisan-loss-3rd-test-england-white-wash-pakistan#comments</comments><guid isPermaLink="false">92976446-d7a9-4b6b-b597-3f45ca119c14</guid><pubDate>Sat, 12 Sep 2026 12:15:57 +0000</pubDate><atom:updated>2026-09-12T12:15:57.871Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Joe Root,ஜோ ரூட்,ENG vs PAK</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/uy8m4fys/England0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இங்கிலாந்து அணி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/uy8m4fys/England0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இங்கிலாந்து- பாகிஸ்தான் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி பர்மிங்காமில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. இங்கிலாந்தின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 133 ரன்களில் சுருண்டது.</p><p>பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 453 ரன்கள் குவித்தது. முதல் இன்னிங்சில் சொதப்பிய பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் சிறப்பாக விளையாடியது. இதனால் 449 ரன்கள் சேர்த்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 130 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது பாகிஸ்தான்.</p><p>4-வது நாளான இன்று இங்கிலாந்து 130 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. முதல் ஓவரில் முபமது அப்பாஸ் டக்கெட், எமிலியோ கே ஆகியோரை டக்அவுட் ஆக்கினார். 3-வது விக்கெட்டுக்கு ஜோர்டான் டாக்ஸ் உடன், ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இலக்கை எளிதாக எட்டியது.</p><p>இதனால் இங்கிலாந்து 3 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது. ஜோடார்ன் காக்ஸ் 59 ரன்களுடனும், ஜோ ரூட் 62 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>பாலக்காடு அருகே விசித்திர தேங்காய் - காண குவிந்த மக்கள்!</title><link>https://www.maalaimalar.com/news/national/rare-four-eyed-coconut-near-palakkad-draws-curious-crowds</link><comments>https://www.maalaimalar.com/news/national/rare-four-eyed-coconut-near-palakkad-draws-curious-crowds#comments</comments><guid isPermaLink="false">3a937759-6329-4ec9-8145-cbb5157836d2</guid><pubDate>Sat, 12 Sep 2026 11:58:51 +0000</pubDate><atom:updated>2026-09-12T11:58:51.490Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>coconut,Palakkad,பாலக்காடு,கேரளா,Keralam,Coconut Wonder,Miracle Coconut,அதிசய தேங்காய்,விசித்திரதேங்காய்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/pqnmp0nx/Miracle-Coconut" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Miracle Coconut ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/pqnmp0nx/Miracle-Coconut?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">கேரள </a>மாநிலம் பாலக்காடு அருகே நான்கு கண்களுடன் கூடிய விசித்திரமான தேங்காய் ஒன்றை பொதுமக்கள் வியப்புடன் பார்த்துச் செல்லும் செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.</p><h2><strong>ராணுவ அதிகாரியின் தோட்டத்தில் கிடைத்த அதிசயம்</strong></h2><p>பாலக்காடு மாவட்டம் மண்ணம்பட்டா பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராம். ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான இவரது வீட்டுத் தோட்டத்தில் பல தென்னை மரங்கள் உள்ளன. வழக்கம்போல, இவரது தோட்டத்தில் இருந்து பறிக்கப்பட்ட <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D">தேங்காய்களை </a>உரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.</p><p>அப்போது, ஒரு குறிப்பிட்ட தேங்காயை உரித்த போது அது மற்ற தேங்காய்களை விட வடிவம் மற்றும் அமைப்பில் முற்றிலும் வித்தியாசமாக இருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.</p><h2><strong>நான்கு கண்கள் மற்றும் உள்ளே 2 குட்டி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D">தேங்காய்கள்</a></strong></h2><p>பொதுவாக ஒரு தேங்காய்க்கு மூன்று கண்கள் மட்டுமே இருப்பது இயற்கை. ஆனால், இந்த விசித்திரமான தேங்காயின் வெளிப்புறத்தில் 4 கண்கள் தெளிவாகக் காணப்பட்டன.</p><p>அதோடு மட்டுமின்றி, அந்தத் தேங்காயை உடைத்துப் பார்த்தபோது மற்றொரு பெரும் ஆச்சரியம் காத்திருந்தது. அந்தத் தேங்காயின் உள்புறத்தில் 2 சிறிய குட்டி தேங்காய்கள் முழுமையாக வளர்ந்த நிலையில் காணப்பட்டன. இந்த அபூர்வ நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2><strong>சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்</strong></h2><p><br>இந்த விசித்திரமான தேங்காய் குறித்த தகவல் காட்டுத்தீ போல பரவியதை அடுத்து, மண்ணம்பட்டா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஜெயராமின் வீட்டிற்குத் திரண்டு வந்து, இந்த அதிசய தேங்காயை ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.</p><p>மேலும், இந்த அபூர்வ தேங்காயின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி நெட்டிசன்களிடையே பெரும் வைரலாகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>மும்பை சொத்து மோசடி: கணவனை இறந்ததாக கூறி ரூ.1.11 கோடி பிளாட்டை விற்ற மனைவி கைது!</title><link>https://www.maalaimalar.com/news/national/mumbai-property-fraud-wife-arrested-for-selling-flat-claiming-husband-dead</link><comments>https://www.maalaimalar.com/news/national/mumbai-property-fraud-wife-arrested-for-selling-flat-claiming-husband-dead#comments</comments><guid isPermaLink="false">333cab89-f622-40cc-b0ab-8a34e1bf06af</guid><pubDate>Sat, 12 Sep 2026 11:58:20 +0000</pubDate><atom:updated>2026-09-12T11:58:20.100Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>mumbai,மும்பை,Crime,borivali,Mumbai Property Fraud,மும்பை சொத்து மோசடி,போரிவலி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/9dmbzh6w/arres.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mumbai Property Fraud]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/9dmbzh6w/arres.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஷாலினி டயானா கிராஸ்டா மற்றும் ரைன் கிராஸ்டா ஆகிய இருவருக்கும் 2007-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.</p><p>மும்பையின் போரிவலி பகுதியில் கூட்டு உரிமையில் இருந்த பிளாட்டை விற்பனை செய்வதற்காக, தனது கணவர் இறந்துவிட்டதாகக் போலி சான்றிதழ் தயாரித்து மோசடி செய்த 49 வயதான ஷாலினி டயானா கிராஸ்டா என்பவரை மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.</p><p>ஷாலினி டயானா கிராஸ்டா மற்றும் ரைன் கிராஸ்டா ஆகிய இருவருக்கும் 2007-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதன்பின்னர் 2016-ஆம் ஆண்டில், போரிவலி எல்.எம் பாதையிலுள்ள ராஜ் வில்லா கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் ஒரு படுக்கையறை கொண்ட பிளாட் ஒன்றை இருவரும் இணைந்து வாங்கினர். இதன் வாங்குவதற்காக சுமார் ரூ.56 லட்சம் கடன் பெறப்பட்டு, இருவரின் பெயரிலும் சொத்து பதிவு செய்யப்பட்டது.</p><h2>பிரிந்து <strong>வாழ்ந்த சூழலில்</strong> அரங்கேறிய சதி</h2><p>காலப்போக்கில் தம்பதியரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் தனித்தனியாக வாழத் தொடங்கினர். இருப்பினும், அந்த வீடு இருவரின் கூட்டு உரிமையிலேயே தொடர்ந்தது. கணவர் ரைன் தொடர்ந்து அதற்கான கடன் தவணைகளை செலுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கணவர் ரைன் உயிருடன் இருக்கும்போதே அவர் இறந்துவிட்டதாகக் கூறி போலி இறப்புச் சான்றிதழை ஷாலினி தயார் செய்துள்ளார். மேலும், வீட்டுவசதி சங்கத்திடமிருந்து போலி ஆட்சேபனை இல்லா சான்றிதழ் மற்றும் ரைனின் ஒரே வாரிசு தாந்தான் எனக் கூறி போலி வாக்குமூலப் பத்திரத்தையும் உருவாக்கியுள்ளார்.</p><h2><strong>ரூ.1.11 கோடிக்கு விற்ப</strong>னை</h2><p>இந்த போலி ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு, 2025 ஏப்ரல் 11 அன்று தர்மேஷ் ஜெகதீஷ் டன்னா மற்றும் தாரா தர்மேஷ் டன்னா ஆகியோருக்கு அந்த பிளாட்டை ஷாலினி விற்பனை செய்தார். வீட்டை வாங்கிய புதிய நபர்கள், அந்தச் சொத்தை அடமானம் வைத்து வங்கியில் சுமார் ரூ.1.11 கோடி கடனாகப் பெற்றுள்ளனர்.</p><h2>ந<strong>ண்பர் மூலம் அம்பலமான உண்</strong>மை</h2><p>2026 மே மாதத்தில் ரைனின் நண்பரான பிரசாத் படாடே, ரைனின் பிளாட் வேறு ஒருவர் பெயரில் அடமானம் வைக்கப்பட்டுள்ளதாக ரைனிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ரைன் மற்றும் அவரது தாயார் உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கியை அணுகி விசாரணை நடத்தியபோது முழு மோசடியும் வெளிச்சத்திற்கு வந்தது. வீட்டுவசதி சங்க அதிகாரிகளிடம் <a href="https://www.maalaimalar.com/news/national/kerala-cm-vt-satheesan-jokes-about-ai-video-showing-him-dancing-better-than-mohanlal-vijay">NOC </a>சான்றிதழைக் காட்டியபோது, அது தங்களால் வழங்கப்படவில்லை என்றும் அதில் உள்ள கையெழுத்துகள் போலியானவை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.</p><h2>போலீஸ் <strong>நடவடிக்கை</strong> </h2><p>இதனைத் தொடர்ந்து ரைன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணைக்குப் பிறகு செப்டம்பர் 9 அன்று ஷாலினியைக் கைது செய்தனர். பின்னர் அவர் போரிவலி நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் அடைக்கப்பட்டார். உயிருடன் இருக்கும் நபரை அரசு மற்றும் சொத்து ஆவணங்களில் இறந்தவராகக் காட்டி நடத்தப்பட்ட இந்த மோசடி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>போலி இறப்புச் சான்றிதழ் மற்றும் NOC தயார் செய்ய ஷாலினிக்கு உதவியவர்கள் யார், மேலும் இந்த விற்பனை மூலம் கிடைத்த ரூ.1.11 கோடி பணம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கட்டுமரக் கதைகளால் இனி மக்களை ஏமாற்ற முடியாது..!- திமுக மீது தவெக கடும் தாக்கு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/people-can-no-longer-be-deceived-by-false-stories-thaveka-attacks-dmk</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/people-can-no-longer-be-deceived-by-false-stories-thaveka-attacks-dmk#comments</comments><guid isPermaLink="false">7d7cb73e-e07a-42d3-93b0-d08d9ea12aa0</guid><pubDate>Sat, 12 Sep 2026 11:53:38 +0000</pubDate><atom:updated>2026-09-12T11:53:38.897Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,DMK,திமுக,தவெக,முதலமைச்சர் விஜய்,தவெக ஐடி விங்,TVK It wing</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/9qmcc9mr/TVK.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DMK vs TVK]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/9qmcc9mr/TVK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பொய் போராளியின் பிம்பம் உடைந்துவிட்டதே என பதறி திமுகவினர் போராட்டம் நடத்துவதாகவும், கத்தினாலும் கதறினாலும் இனி கட்டுமரக்கதைகளால் மக்களை ஏமாற்ற முடியாது என்பதுதான் நிதர்சனம் என தவெக ஐடி விங் பதிவிட்டுள்ளது.</p><p>இதுகுறித்து தவெக ஐடி விங் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>பொய்ப் போராளியின் போலி பிம்பம் உடைந்துவிட்டதே என்று பதறி, போராட்டம் என்ற பெயரில் “யாருமே இல்லாத டீக்கடையில் யாருக்கு டீ ஆற்றி” கதறுகிறார்கள் கொத்து பரோட்டாக்கள்!</p><p>மஞ்சள் துண்டு தந்தை முதல் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF" rel="nofollow">ஆபாசநதி</a> வரை, ஆபாசத்தையே அடிநாதமாகக் கொண்ட திமுக, இன்றும் ஆபாசநதியையும் வன்மநதியையும் வஞ்சனையில்லாமல் போராட்ட நாடகத்தில் ஓடவிட்டிருக்கிறது.</p><p>கட்டமைக்கப்பட்டப் போலி பிம்பம் உடைந்ததற்காகக் கதறும் கொத்து பரோட்டாக்கள், “Detention Copy எங்கே?” என்று கேட்டால், மீண்டும் கட்டுமரக் கதையைக் கட்டவிழ்த்துவிடுகிறார்கள்.</p><p>கத்தினாலும், கதறினாலும், இனி கட்டுமரக் கதைகளால் மக்களை ஏமாற்ற முடியாது என்பதுதான் நிதர்சனம்.</p><p>இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>VIDEO- மோகன்லால், விஜய்யை விட சிறப்பாக நடனமாடுகிறேன்: வைரல் AI வீடியோ குறித்து கேரள முதல்வர் வி.டி.சதீசன் நகைச்சுவை பதில்!</title><link>https://www.maalaimalar.com/news/national/kerala-cm-vt-satheesan-jokes-about-ai-video-showing-him-dancing-better-than-mohanlal-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/national/kerala-cm-vt-satheesan-jokes-about-ai-video-showing-him-dancing-better-than-mohanlal-vijay#comments</comments><guid isPermaLink="false">7b037445-eb11-44ab-ab4a-406be737b533</guid><pubDate>Sat, 12 Sep 2026 11:26:02 +0000</pubDate><atom:updated>2026-09-12T11:26:02.862Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Vijay,மோகன்லால்,mohanlal,Kerala CM V.D.Satheesan,கேரள முதல்வர் வி.டி.சதீசன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/2csr5uvm/AI.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Kerala CM V.D.Satheesan    ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/2csr5uvm/AI.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன், மின்வாரிய ஊழியர்களுடன் இணைந்து குழு நடனம் ஆடுவது போன்று தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது.</p><p>சமீபத்தில் சமூக வலைதளங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்று பெரிய அளவில் வைரலாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் ‘<a href="https://www.maalaimalar.com/news/national/missing-bengaluru-student-rescued-pregnant-aadhaar-otp-leads-cid-to-location">அலா போலே</a>’ பாடலுக்கு, நடிகை ஷம்னா காசிம் மற்றும் குழுவினரின் நடன அசைவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த வீடியோ வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன், மின்வாரிய ஊழியர்களுடன் இணைந்து குழு நடனம் ஆடுவது போன்று தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது.</p><h2>மின்வெட்<strong>டுக்கு எதிரான நகைச்சு</strong>வை போராட்டம்</h2><p>கேரளாவில் நிலவும் கடும் வெயில் மற்றும் மழைப்பொழிவு குறைவு காரணமாக மின் நுகர்வு அதிகரித்துள்ளதால், இரவு நேரங்களில் மின் விநியோகக் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது. </p><figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">WAIT… IS THIS ACTUALLY REAL?! <br><br>Kerala CM casually vibing to “Alabale” from Jailer 2 like this?! <br><br>AI videos are getting WAY TOO REAL now  <a href="https://t.co/PLG7L1NdGt">pic.twitter.com/PLG7L1NdGt</a></p>&mdash;   (@ItsKishoreVJ) <a href="https://x.com/ItsKishoreVJ/status/2098428983323058438?ref_src=twsrc%5Etfw">September 11, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><p>இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பொதுமக்களின் அதிருப்தியையும் கோபத்தையும் வெளிப்படுத்த மின்சார வாரியத்தையும் முதலமைச்சரையும் மையப்படுத்தி இந்த ஏஐ வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவின் பின்னணியில் உள்ள சட்ட அம்சங்கள் மற்றும் பதிப்புரிமை குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், முதலமைச்சர் வி.டி.சதீசன் இது குறித்து தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார்.</p><h2>முதலமை<strong>ச்சர் விஜய்யுட</strong>ன் ஒப்பீடு</h2><p>இந்த வைரல் வீடியோ குறித்து முதலமைச்சர் வி.டி.சதீசன் பேசுகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது இசை, நடனம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார். இன்று சமூக வலைதளங்களில் ஒரு சுவாரஸ்யமான வீடியோவைக் கண்டதாகவும், அதில் தாம் ஒரு குழு நடனத்திற்குத் தலைமை தாங்குவது போல் சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், நடிகர் மோகன்லாலை விடவும், தமது நண்பரும் தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய்யை விடவும் தாம் சிறப்பாக நடனமாடுவதாக அந்த வீடியோவில் உருவாக்கப்பட்டுள்ளதை கண்டு தாம் வியப்படைந்ததாக நகைச்சுவையாகத் தெரிவித்தார்.</p><h2>தொ<strong>ழில்நுட்ப வளர்ச்</strong>சி</h2><p>செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி குறித்துப் பேசிய அவர், எதிர்காலத்தில் இத்தகைய தொழில்நுட்ப உருவாக்கங்களைச் சட்டப்பூர்வமாக எப்படி வரையறை செய்வது என்பது குறித்து விரிவாக ஆராயப்பட வேண்டும் என்றார். தொழில்நுட்பத்தின் தலையீடு அதிகரித்து வருவதால், தற்போதைய சட்டக் கட்டமைப்பில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றும், பதிப்புரிமை, அறிவுசார் சொத்துரிமை மற்றும் பைரசி தொடர்பான சட்டங்கள் காலப்போக்கில் புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மாற வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி மாநகராட்சி சொத்துவரி செலுத்த செப்டம்பர் 30 கடைசி நாள்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thoothukudi-municipal-corporation-property-tax-payment-last-date-september-30</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thoothukudi-municipal-corporation-property-tax-payment-last-date-september-30#comments</comments><guid isPermaLink="false">f245f8ea-8f84-4f10-82d9-292968e1ef65</guid><pubDate>Sat, 12 Sep 2026 11:18:41 +0000</pubDate><atom:updated>2026-09-12T11:18:41.739Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தூத்துக்குடி,Thoothukudi,propertytax,Thoothukudi Corporation,Tax Deadline,TN UrbanEpay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/qk0nn7d7/Thoothukudi-Corporation" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Thoothukudi Corporation ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/qk0nn7d7/Thoothukudi-Corporation?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி </a>மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பொதுமக்கள், நடப்பு 2026-2027-ம் நிதியாண்டின் முதலாம் அரையாண்டிற்கான சொத்து வரியைச் செலுத்துவதற்கு வரும் செப்டம்பர் 30-ம் தேதி கடைசி நாள் என்று மாநகராட்சி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p><p>பொதுமக்கள் தங்களின் கட்டிடங்களுக்கான சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரியினங்களை எவ்வித தாமதமுமின்றி உடனடியாகச் செலுத்த வேண்டும் என்று மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p><h2><strong>வரிகளைச் செலுத்தும் எளிமையான வழிமுறைகள்</strong></h2><p>பொதுமக்கள் நெரிசலின்றி எளிதாக வரி செலுத்துவதற்காக மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு வழிமுறைகளை ஏற்படுத்தியுள்ளது<strong>. </strong>மாநகராட்சியின் கணினி வரி வசூல் மையங்களுக்கு நேரடியாகச் சென்று வரியைச் செலுத்தலாம். வரி வசூல் மையங்களில் உள்ள QR Code மூலமாகவும் நேரடியாகவும், விரைவாகவும் கட்டணத்தைச் செலுத்த முடியும். </p><p>பொதுமக்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலமாக வரி செலுத்த <a href="https://tnurbanepay.tn.gov.in/">www.tnurbanepay.tn.gov.in </a>என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியைப் பயன்படுத்தலாம்.</p><h2><strong>சனிக்கிழமைகளிலும் மையங்கள் செயல்படும்</strong></h2><p>பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி வரி செலுத்துவதற்கு வசதியாக ஒரு முக்கிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு பொது விடுமுறை நாட்களைத் தவிர்த்து, அனைத்து சனிக்கிழமைகளிலும் மாநகராட்சி கணினி வரி வசூல் மையங்கள் வழக்கம் போல் இயங்கும். </p><p>செயல்படும் நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை ஆகும்.</p><h2><strong>மாநகராட்சியின் வேண்டுகோள்</strong></h2><p>கடைசி நேர நெரிசலையும், தாமதக் கட்டணங்களையும் தவிர்க்கும் பொருட்டு, பொதுமக்கள் அனைவரும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் (செப்டம்பர் 30-க்குள்) தங்களது வரிகளைச் செலுத்த வேண்டும். </p><p>பொதுமக்கள் செலுத்தும் வரிப்பணமே மாநகராட்சியின் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுவதால், அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் தனது செய்திக்குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பிரிக்ஸ் கூட்டமைப்பின் உத்வேகம் தொடர வேண்டும்- மாநாட்டில் பிரதமர் மோடி உரை</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-urges-sustained-brics-momentum-at-delhi-summit</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-urges-sustained-brics-momentum-at-delhi-summit#comments</comments><guid isPermaLink="false">812f7318-f95a-4478-9ef5-a9744cad5f2d</guid><pubDate>Sat, 12 Sep 2026 11:11:08 +0000</pubDate><atom:updated>2026-09-12T11:11:08.414Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Conference,பிரிக்ஸ்,pm modi,bricks,பிரதமர் மோடி,பிரிக்ஸ் மாநாடு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/3197if0p/pm-modi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/3197if0p/pm-modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரிக்ஸ் கூட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். பிரிக்ஸ் அமைப்பு புதிய அடையாளத்தை பெற்றுள்ளது. இந்த கூட்டமைப்பின் உத்வேகம் தொடர வேண்டும் என்று பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். </p><p>டெல்லியில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><p>இந்தியாவின் BRICS தலைமைப் பொறுப்பானது,</p><p>மனிதாபிமானத்திற்கு முதலிடம் அளிக்கும் அணுகுமுறையைக் கொண்டுள்ளது. புதுமை, ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மை ஆகியவை எமது முன்னுரிமைகளாகும். </p><p>அதோடு, BRICS ஒத்துழைப்பை சாதாரண பொதுமக்களுடன் இணைப்பதில் நாங்கள் சிறப்பு கவனம் செலுத்திகிறோம். அந்த இலக்கை மையமாகக் கொண்டு, 350-க்கும் மேற்பட்ட கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.</p><h2>சீர்திருத்தங்கள்</h2><p>ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இனிமேலும் தாமதிக்க முடியாது.</p><p>உலகில் வர்த்தகத் தடைகள் அதிகரிக்கும் சூழலில், இந்தியா பிற நாடுகளுடன் பொருளாதார ரீதியான பாலங்களை அமைத்து வருகிறது.</p><p>உலகின் தெற்கு பகுதியில் உள்ள நாடுகள் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. பொதுமக்களை மையமாக கொண்டே பிரிக்ஸ் கூட்டமைப்பு செயல்படுகிறது.</p><h2>மனிதநேயத்திற்கு முன்னுரிமை</h2><p>மக்கள் மற்றும் மனிதநேயம், நிலைத்தன்மை என்பது தான் எங்களுக்கு முன்னுரிமை. பிரிக்ஸ் புதிய அடையாளம் பெற்றுள்ளது. பிரிக்ஸ் கூட்டமைப்பின் உத்வேகம் தொடர வேண்டும்.</p><p>பிரிக்ஸ் அமைப்பில் உள்ள அனைவரும் முன்னேற்ற பாதையை நோக்கி நடைபோடுவோம். அடுத்த 20 ஆண்டுகளுக்கான திட்டத்தை வடிவமைக்க வேண்டும்.</p><p>பிரிக்ஸ் கூட்டமைப்பினர் இணைந்து உலக அளவில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். ஒருங்கிணைந்து உலக நிர்வாகத்தை சீர்திருத்தம் செய்வது பற்றிய வரைபடத்தை தயாரிப்போம்.</p><h2>நாம் பின்தங்கி உள்ளோம்</h2><p>தற்போதைய உலக நிர்வாகக் கட்டமைப்பு ஒரு 'பிரமிடு' போல இயங்குகிறது. அதன் உச்சியில் அதிகாரமும், அதற்கு அடியில் அந்த முடிவுகளால் பாதிக்கப்படும் நாடுகளும் உள்ளன.</p><p>தெற்குலக நாடுகள் உலகளாவிய நெருக்கடிகளை எதிர்கொள்வதில் முன்வரிசையிலும், முடிவெடுக்கும் அதிகாரத்தில் கடைசி வரிசையிலும் தள்ளப்பட்டுள்ளன.</p><p>அந்த பிரமிடு அமைப்பை மாற்றி, அனைவருக்குமான சம தளமாகவும் கூட்டுப் பங்களிப்பாகவும் உருமாற்ற வேண்டும். அதில் ஒவ்வொரு நாட்டின் குரலுக்கு மதிப்பும், உரிமையும் இருக்க வேண்டும்.</p><h2>மாற்றும் நேரம் இது</h2><p>பிரிக்ஸ் உலக அரங்கில் ஒரு தனித்துவமான அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது. நாம் ஒருவருக்கொருவர் கருத்துக்களை மதிக்கிறோம், ஒருமித்த கருத்தின் மூலம் முன்னோக்கிச் செல்கிறோம். </p><p>அனைவரையும் ஒன்றிணைத்துச் செல்வதன் மூலமே நாம் முன்னேறப் பாடுபடுகிறோம். இப்போது நமது ஒற்றுமையையும், ஒருமித்த கருத்தையும், உலக அரங்கில் உறுதியான பலன்களாக மாற்ற வேண்டிய நேரம் இது.</p><h2>பிரதமர் மோடி பரிந்துரை</h2><p>பிரிக்ஸ் தொடர்ச்சி மற்றும் செயலாக்க பொறிமுறையை (continuity and implementation mechanism) உருவாக்க நான் பரிந்துரைக்கிறேன்.</p><p>'ட்ரொய்கா' (Troika) ஏற்பாடு மூலம் அனைத்து முயற்சிகளையும் முடிவுகளையும் தொடர்ந்து கண்காணிக்க இது உதவும்.</p><p>மேலும், ஒவ்வொரு முடிவுடன் தொடர்புடைய மையப்புள்ளி (nodal point), காலக்கெடு மற்றும் செயலாக்க நிலையை பதிவு செய்ய பாதுகாப்பான டிஜிட்டல் களஞ்சியத்தையும் உருவாக்கலாம்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | BRICS Summit: Prime Minister Narendra Modi says, &quot;The draft of the BRICS New Delhi Declaration 2026 is before us. It encapsulates the essence of our discussions and reflects our perspectives on key global and regional issues. It also outlines priorities for further… <a href="https://t.co/qZeAfoqpxy">pic.twitter.com/qZeAfoqpxy</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2098727102321431037?ref_src=twsrc%5Etfw">September 12, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>ஈரான் போர் உலக நலன்களுக்கு உகந்தது அல்ல: பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பேச்சு</title><link>https://www.maalaimalar.com/news/national/brics-summit-xi-jinping-says-middle-east-war-causes-serious-losses</link><comments>https://www.maalaimalar.com/news/national/brics-summit-xi-jinping-says-middle-east-war-causes-serious-losses#comments</comments><guid isPermaLink="false">75f350d4-4fc7-4e51-9ba5-3973a0003e4c</guid><pubDate>Sat, 12 Sep 2026 10:55:16 +0000</pubDate><atom:updated>2026-09-12T10:55:16.805Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Xi Jinping,ஜி ஜின்பிங்,BRICS Summit,US Iran war,அமெரிக்கா ஈரான் போர்,பிரிக்ஸ் மாநாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/mwx1jgcp/XiJinping002.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Xi Jinping]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/mwx1jgcp/XiJinping002.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் தலைவர்கள் தற்போதைய மோதல்கள் மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் சர்வதேச சமூகத்தின் மீது அவை ஏற்படுத்தும் பரந்த விளைவுகள் குறித்து விவாதித்தனர்.</p><h2>அப்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசியதாவது:-</h2><p>* <a href="https://www.maalaimalar.com/news/national/dialogue-and-diplomacy-way-forward-brics-new-delhi-declaration-agreed">பிரிக்ஸ்</a> நாடுகள் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதில் முன்னோடிப் பங்காற்ற வேண்டும்</p><p>* உலக அமைதி மற்றும் பாதுகாப்பைப் பாதிக்கும் விவகாரங்களில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளிடையே அதிக ஒத்துழைப்பு இருக்க வேண்டும்.</p><p>* மத்திய கிழக்கில் நடைபெறும் போர் அப்பகுதி மக்கள் மத்தியில் கடுமையான இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது சர்வதேச சமூகத்தின் பொதுவான நலன்களுக்கு உகந்தது அல்ல.</p><p>* மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிம்மதியை நிலைநாட்டத் தனது பங்கை ஆற்றுவதற்கு பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுடன் இணைந்து சீனா செயல்படும்.</p><p>​​* மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் போர் ஏற்படக்கூடாது</p><p>* பிரிக்ஸ் நாடுகள் வரலாற்றின் சரியான பக்கம் உறுதியாக நிற்க வேண்டும்.</p><p>* 2027 பிரிக்ஸ் மாநாட்டை சீனா நடத்தும்.</p><p>இவ்வாறு ஜி ஜின்பிங் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>காணாமல் போன பெங்களூரு மாணவி கர்ப்பமாக மீட்பு: ஆதார் OTP மூலம் இருப்பிடத்தை கண்டுபிடித்த சிஐடி போலீசார்</title><link>https://www.maalaimalar.com/news/national/missing-bengaluru-student-rescued-pregnant-aadhaar-otp-leads-cid-to-location</link><comments>https://www.maalaimalar.com/news/national/missing-bengaluru-student-rescued-pregnant-aadhaar-otp-leads-cid-to-location#comments</comments><guid isPermaLink="false">cf570480-b6c9-49de-9627-3e5dcac0ce32</guid><pubDate>Sat, 12 Sep 2026 10:54:56 +0000</pubDate><atom:updated>2026-09-12T10:54:56.526Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பெங்களூரு,bengaluru,பெங்களூரு மாணவி,Bengaluru student rescued,AadhaarOTP,CID police,சிஐடி போலீசார்,ஆதார் OTP</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/wcvx6caf/adhaer.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bengaluru student rescued]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/wcvx6caf/adhaer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாணவி மாயமாகி பல மாதங்கள் கடந்தும் எவ்வித தகவலும் கிடைக்காததால், அவரது பெற்றோர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். </p><p>பெங்களூரு வித்யாரண்யபுரா பகுதியைச் சேர்ந்த 18 வயதான இரண்டாம் ஆண்டு பியூசி மாணவி ஒருவர், கடந்த ஜனவரி 31-ஆம் தேதி கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார். அவருடன் அவரது தோழியான மற்றொரு சிறுமியும் மர்மமான முறையில் மாயமானார். இருவரின் குடும்பத்தினரும் பல இடங்களில் தேடியும் எந்தத் தகவலும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.</p><h2><strong>கைபேசி இல்லாமல் திட்டமிட்டுச் சென்ற மாணவிகள்</strong></h2><p>போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மாயமான இரு மாணவிகளும் தங்களின் மொபைல் போன்கள் மற்றும் உடைமைகளை வீட்டில் விட்டுச் சென்றது தெரியவந்தது. அவர்கள் தங்களின் கல்லூரி பைகள் மற்றும் <a href="https://www.maalaimalar.com/news/national/congress-unable-to-digest-indias-progress-spreading-negativity-over-brics-bjp">ஆதார் அட்டைகளை </a>மட்டுமே கையோடு எடுத்துச் சென்றிருந்தனர். பெங்களூரிலிருந்து புறப்பட்ட இருவரும் முதலில் மலை மகதேஸ்வரா மலைப்பகுதிக்குச் சென்று, பின்னர் அங்கிருந்து தனித்தனியாகப் பிரிந்து சென்றுள்ளனர்.</p><h2>ஆட்<strong>கொணர்வு மனு தா</strong>க்கல்</h2><p>மாணவி மாயமாகி பல மாதங்கள் கடந்தும் எவ்வித தகவலும் கிடைக்காததால், அவரது பெற்றோர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கை உடனடியாக மாநில குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. ஏப்ரல் மாதம் முதல் சிஐடி சிறப்புப் படை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.</p><h2>திருப்பத்<strong>தை ஏற்படுத்திய ஆதார் OT</strong>P </h2><p>கடந்த 7 மாதங்களாக எவ்வித தடயமும் இல்லாமல் இருந்த வழக்கில், இந்த வாரம் ஒரு முக்கிய டிஜிட்டல் திருப்பம் ஏற்பட்டது. அந்த 18 வயது மாணவி, ஏதோ ஒரு சேவைக்காகத் தனது ஆதார் எண்களைப் பயன்படுத்தி, அதற்குரிய ஒருமுறை கடவுச்சொல்லைப் பெறத் தனது கணவரின் மொபைல் எண்ணைப் பதிவு செய்துள்ளார். இந்த ஆதார் டிஜிட்டல் தடத்தைக் கண்டறிந்த சிஐடி புலனாய்வுக் குழுவினர், உடனடியாக அந்த மொபைல் எண்ணைக் கண்காணித்தனர்.</p><h2>கனகபுரா <strong>கிராமத்</strong>தில் மீட்பு </h2><p>குறிப்பிட்ட மொபைல் எண்ணின் உரிமையாளரைக் கண்டுபிடித்து விசாரணை நடத்தியதில், அவர் கனகபுரா தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும், அந்த மாணவி அவரைத் திருமணம் செய்து கொண்டு அங்கு வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. மேலும், மீட்கப்பட்ட மாணவி தற்போது கர்ப்பமாக இருப்பதாக மூத்த சிஐடி அதிகாரி தெரிவித்துள்ளார். இதையடுத்து, மாணவியைப் பத்திரமாக மீட்ட சிஐடி போலீசார், அவரை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெற்றோர் வசம் ஒப்படைத்தனர். அதே வேளையில், அவருடன் மாயமான மற்றொரு சிறுமியைத் தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் வருகிற 18-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/districts-in-tamil-nadu-likely-to-receive-rain-until-the-18th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/districts-in-tamil-nadu-likely-to-receive-rain-until-the-18th#comments</comments><guid isPermaLink="false">d702b4d7-2cb4-4303-9bc1-66dd9d0b6831</guid><pubDate>Sat, 12 Sep 2026 10:30:28 +0000</pubDate><atom:updated>2026-09-12T10:30:28.531Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/aw3z7t73/rain.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/aw3z7t73/rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.</strong></em> </p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>சுமார் 1.5 கிமீ உயரம் வரை தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><h2><strong>லேசான மழை</strong></h2><p>இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>14-ந்தேதி மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>15-ந்தேதி நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், அரியலூர், பெரம்பலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>16-ந்தேதி நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>17-ந்தேதி கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>18-ந்தேதி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>இதனிடையே இன்று முதல் 16-ந்தேதி வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p>நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p>]]></content:encoded></item><item><title>சிறையில் பிரஜ்வல் ரேவண்ணாவிடம் கைப்பற்றப்பட்ட செல்போனில் ஆபாச படங்கள்..!</title><link>https://www.maalaimalar.com/news/national/movies-found-on-seized-phone-pen-drive-of-jailed-convict-prajwal-revanna</link><comments>https://www.maalaimalar.com/news/national/movies-found-on-seized-phone-pen-drive-of-jailed-convict-prajwal-revanna#comments</comments><guid isPermaLink="false">69243b4a-476f-4a8a-a99c-ff0651f72680</guid><pubDate>Sat, 12 Sep 2026 10:05:19 +0000</pubDate><atom:updated>2026-09-12T10:05:19.747Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prajwal Revanna,பிரஜ்வல் ரேவண்ணா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/a7u686j3/PrajwalRevanna.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிரஜ்வால் ரேவண்ணா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/a7u686j3/PrajwalRevanna.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வீட்டில் வேலை செய்து வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தேவேகவுடா பேரனும், முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி ஆயுள் தண்டனை வழங்கியது. இவர் மீது மேலும் ஏராளமான பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.</p><h2>பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை</h2><p>இவர் தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சிறைச்சாலையில் அணியும் ஆடையின்றி, வழக்கமான ஆடையுடன் போன் பேசுவது போன்ற வீடியோ வெளியானது. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.</p><h2>செல்போன் மற்றும் பென் டிரைவ் பறிமுதல்</h2><p>அப்போது செல்போன் மற்றும் பென் டிரைவ் ஆகியவை கைப்பற்றப்பட்டன. செல்போனை ஆய்வுக்கு அனுப்பினர். அப்போது, செல்போனில் ஏராளமான ஆபாச படங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதேபோல் பென் டிரைவில் சினிமா படங்கள் மற்றும் வெப் சீரிஸ் போன்றவை டவுன்லோடு செய்யப்பட்டிருந்தது.</p><p>இதுகுறித்து ரேவண்ணாவிடம் போலீசார் விசாரணை நடத்தினார். அப்போது போன் என்னுடையது அல்ல. சக கைதிகளும் பயன்படுத்தினர். சுழற்சி அடிப்படையில் ஒவ்வொருவரிடமும் போன் மாறிமாறி வரும் எனத் தெரிவித்தார். எந்தவொரு ஆபாச படத்தையும் டவுன்லோடு செய்யவில்லை என்றார்.</p><h2>பெண் நண்பருடன் பேச்சு</h2><p>சோதனையின்போது கைப்பற்றப்பட்ட குறிப்பேடு ஒன்றில், ரேவண்ணாவின் குடும்பத்தினர் மற்றும் அவருக்கு அறிமுகமானவர்களின் தொலைபேசி எண்கள் இருந்தன. இடைத்தரகர்கள் மூலமாக குடும்பத்தினருடன் மேற்கொள்ளப்பட்ட அனுமதியற்ற தொடர்புகளும், ஒரு பெண் நண்பருக்கு நேரடியாக மேற்கொள்ளப்பட்ட அழைப்புகளும் அழைப்புப் பதிவுகளில் (call records) தெரிய வந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. விசாரணையின்போது, ​​அந்தப் பெண் நண்பருடனான தொடர்பை ரேவண்ணா ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.</p><p>தொலைபேசியின் அழைப்புப் பதிவுகளில் எண்கள் இடம்பெற்றுள்ள நபர்களுக்குக் காவல்துறை விரைவில் சம்மன் அல்லது அறிவிப்புகளை அனுப்பக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>மொபைல் போன், சிம் கார்டு, சார்ஜர், குறிப்பேடு (Notebook) ஆகியவை ஜெயில் சிறைக்குள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் விசாரணைக் கைதியான பிரதாப் ராய் மற்றும் ரேவண்ணா இருந்த அறையில் இவர் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.</p><h2>வார்டன் மூலம் செல்போன் கடத்தல்</h2><p>வார்டன் மூலம் செல்போனை கடத்தி வந்ததாகவும், விசாரணைக் கைதி மூலம் சிம்கார்டு பெற்றதாகவும், பிரதாப் ராய் மற்றும் ரேவண்ணா ஆகியோர் இதை பயன்படுத்தியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.</p><p>கடந்த 8-ந்தேதி இது தொடர்பாக நீதிமன்றத்தில் ரேவண்ணா ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிமன்றம் 3 நாள் போலீஸ் விசாரணைக்கு அனுமதி அளித்தது. பின்னர் செப்டம்பர் 10-ந்தேதி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.</p>]]></content:encoded></item><item><title>என் தலைவரை தொட்டது யாராக இருந்தாலும் விடமாட்டோம்: மேயர் பிரியா எச்சரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/we-will-not-spare-anyone-who-touches-our-leader-says-chennai-mayor-priya</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/we-will-not-spare-anyone-who-touches-our-leader-says-chennai-mayor-priya#comments</comments><guid isPermaLink="false">8236e690-eeb9-496f-9bf9-d7b1ede7335a</guid><pubDate>Sat, 12 Sep 2026 10:00:07 +0000</pubDate><atom:updated>2026-09-12T10:00:07.031Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,M.K.Stalin,மேயர் பிரியா,மு.க.ஸ்டாலின்,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,Chennai Mayor Priya,MISA Act,மிசா சட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/jrn6a14g/mayor.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chennai Mayor Priya]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/jrn6a14g/mayor.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திரைப்படங்களில் மூன்று மணி நேரம் நடிப்பு காட்டுவது போல, முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்திற்கு வந்து ஒரு மணி நேரம் பேசிவிட்டுச் செல்கிறார்.</p><p>தமிழக சட்டசபையில் முதலமைச்சர் விஜய், மிசா சட்டம் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து தெரிவித்த கருத்துக்கள் அரசியல் களத்தில் பெரும் காரசாரமான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. விஜயின் இந்த பேச்சைக் கண்டித்து திமுக சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, எதிர்தரப்பினரின் விமர்சனங்களுக்குக் காட்டமான பதிலடிகளை வழங்கி ஆவேசமாக உரையாற்றினார்.</p><h2>தகுதி குறி<strong>த்து மேயர் பிரியா</strong> கேள்வி</h2><p>ஆர்ப்பாட்டத்தில் மேயர் பிரியா பேசுகையில், சட்டமன்றத்திற்குள் வந்து எழுத்துக்கூட்டிப் படித்துவிட்டு திமுகவை நோக்கி கேள்வி கேட்கும் தகுதி யாருக்கும் இல்லை என்று சாடினார். "மிசா சட்டத்தைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? திமுகவை பார்த்து கேள்வி கேட்க என்ன தகுதி இருக்கிறது? சட்டமன்றத்தில் எவ்வாறு பேச வேண்டும் என்று அமைச்சர்களுக்கோ, எம்.எல்.ஏ.க்களுக்கோ முறையான பயிற்சிகள் அளிக்கப்படவில்லை. பயிற்சி வகுப்புகள் நடத்தியும் இதுபோன்ற பேச்சுக்கள் தொடர்வது வேடிக்கையானது" எனத் தெரிவித்தார்.</p><p>திரைப்படங்களில் மூன்று மணி நேரம் நடிப்பு காட்டுவது போல, முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்திற்கு வந்து ஒரு மணி நேரம் பேசிவிட்டுச் செல்கிறார் என்று மேயர் பிரியா விமர்சித்தார். தமிழ்நாட்டின் வரலாற்றில் அண்ணா, கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகிய தலைவர்கள் தமிழையும் தமிழ்நாட்டையும் வளர்த்தெடுக்க ஆற்றிய பங்களிப்பை இந்த மாநிலத்து மக்கள் நன்கு அறிவார்கள் என்று அவர் குறிப்பிட்டப் பேசினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cpi-m-to-announce-byelection-support-tomorrow-madurantakam-dharapuram">திமுக </a>எந்தவொரு பிரச்சனைக்கும் தாமாகச் சென்று வழிவகுக்காது எனக் குறிப்பிட்ட மேயர் பிரியா, அதேவேளையில் தங்களைத் தேடி வரும் பிரச்சனைகளை ஒருபோதும் விட்டுவிடாது என்றும் கூறினார். "என் தாயைப் பழித்தவனை யார் தடுத்தாலும் விடமாட்டேன் என்பது பழமொழி. அதேபோல் என் தலைவரை தொட்டது யாராக இருந்தாலும், அவர்கள் எவ்வளவு மாண்புமிகுந்த பதவியில் இருந்தாலும் திமுக தொண்டர்களாகிய நாங்கள் அவர்களை நிச்சயமாக சும்மா விடமாட்டோம்" என்று தனது கண்டனத்தை பதிவு செய்தார்.</p>]]></content:encoded></item><item><title>பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்கும் ‘துக்ளக் தர்பார்’ முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்!- சீமான்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/seeman-says-amil-nadu-government-must-abandon-tughlaq-durbar-style-decision-to-construct-the-new-secretariat-at-pattinapakkam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/seeman-says-amil-nadu-government-must-abandon-tughlaq-durbar-style-decision-to-construct-the-new-secretariat-at-pattinapakkam#comments</comments><guid isPermaLink="false">3bb835e6-59b1-4483-99da-073466a73904</guid><pubDate>Sat, 12 Sep 2026 09:59:28 +0000</pubDate><atom:updated>2026-09-12T09:59:28.506Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Seeman,தவெக,Naam Thamizhar katchi,பட்டினப்பாக்கம்,tvk,புதிய தலைமை செயலகம்,சீமான்,நாம் தமிழர் கட்சி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/1zqnwil2/seeman.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ சீமான்]]></media:title><media:description type="html"><![CDATA[ சீமான்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/1zqnwil2/seeman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>9 மீனவ கிராம மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் பட்டினப்பாக்கத்தில் தலைமைச்செயலகத்தை ஒருபோதும் அமையவிடமாட்டோம். மக்களின் துணையுடன் உறுதியாக தடுத்து நிறுத்துவோம். பட்டினப்பாக்கம் மீனவச்சொந்தங்கள் மிகுந்த நம்பிக்கையோடு இருங்கள்! என்று சீமான் கூறியுள்ளார்.</strong></em> </p><p>நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">சீமான்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>அவசியம் என்ன?</strong></h2><p>சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்கள் அறிவித்திருந்த புதிய தலைமைச்செயலகம் சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. 9 கிராம மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் பட்டினப்பாக்கத்தில் தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச்செயலகம் அமைக்க தவெக அரசு முடிவெடுத்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.</p><p>தமிழ்நாடு அரசின் களஞ்சியம் காலியாக உள்ளது, அரசுக்கு 10 இலட்சம் கோடி கடன் உள்ளது, ஆண்டுக்கு ஒன்றே முக்கால் இலட்சம் கோடி கடன் வாங்கும் நிலை உள்ளது, அதனால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்று தொடர்ந்து கூறிவரும் தவெக அரசு, வட்டி கட்டவே கடன் வாங்க வேண்டிய அளவிற்குக் கடுமையான நிதி நெருக்கடி உள்ள நிலையில், 1200 கோடிகளை வாரி இறைத்து அவசரகதியில் <a href="https://www.maalaimalar.com/topic/புதிய-தலைமை-செயலகம்">புதிய தலைமைச்செயலகம்</a> கட்ட வேண்டிய அவசியம் என்ன?</p><p>தற்போது செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் செயல்படும் தலைமைச் செயலகத்தில் கடும் இடநெருக்கடியும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது என்பதாலேயே புதிய தலைமைச்செயலகம் அமைக்கப்படுகிறது என்றால், அதைவிட அதிக இடநெருக்கடியும், போக்குவரத்து நெரிசலும் உள்ள பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்க வேண்டிய தேவை என்ன? மக்களின் தேவைக்கா? அல்லது முதல்வரின் தனிப்பட்டத் தேவைக்கா? பரந்தூர் கிராம மக்களின் எதிர்ப்பினை ஏற்று, புதிய வானூர்தி நிலையத்தைக் கைவிட்ட நீங்கள், பட்டினப்பாக்கத்தில் 9 மீனவ கிராம மக்களின் எதிர்ப்பினைக் கருத்திற்கொள்ளாதது ஏன்? 9 மீனவ கிராம மக்களின் வாழ்வாதாரத்தைவிடவும் உங்களின் தனிப்பட்ட வசதிதான் முதன்மையானதா? இதுதான் மீனவ மக்களின் நலன் மீதான உங்களின் அக்கறையா முதல்வர் விஜய் அவர்களே?</p><h2><strong>அவலம்</strong></h2><p>உலகப் புகழ்பெற்ற சாந்தோம் தேவாலயம் உள்ளிட்ட வழிபாட்டுத்தலங்கள், பத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள், தொழில் மையங்கள் மற்றும் மீனவ மக்களின் வியாபாரத்தலங்கள் எனப் பட்டினப்பாக்க குறுகிய சாலைகளை ஒவ்வொரு நாளும் பல்லாயிரம் மக்கள் ஒரே நேரத்தில் பயன்படுத்துவதால், இப்போதே அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இந்நிலையில், புதிய தலைமைச்செயலகமும் அங்கு அமைக்கப்பட்டால் பட்டினப்பாக்கம் பகுதியே கடுமையாகத் திணற நேரிடும். ஒவ்வொரு நாளும் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் வருகைக்காகப் பல மணி நேரங்கள் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படுகின்ற அவலமும் நடைபெறும். இதனால் பொதுமக்கள் குறிப்பாகப் பள்ளி குழந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் நிலை உருவாகும்.</p><p>அதுமட்டுமின்றி, பல்வேறு அரசுத் துறைகளின் அலுவலகங்கள், சட்டமன்றம், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தங்கும் விடுதிகள், பொதுமக்கள் காத்திருப்புக்கான இடங்கள், வாகன நிறுத்துமிடங்கள், குடிநீர் மற்றும் கழிப்பிடங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் இத்தனை குறுகிய இடத்திற்குள் எப்படி அமைக்க முடியும்? அப்படியே வலிந்து திணித்து அமைத்தாலும், மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்ததுபோல அடுத்த 100 ஆண்டுகளுக்கு விரிவுப்படுத்துவதற்கு இக்குறுகிய இடம் எப்படிப் போதுமானதாக இருக்க முடியும்? இதுதான் தவெக அரசின் தொலைநோக்கு சிந்தனையா? </p><p>எல்லாவற்றிற்கும் மேலாக, சென்னை பட்டினப்பாக்கம் பகுதியானது கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமி பேரலை தாக்கிய ஆபத்தான பகுதிகளில் ஒன்றாகும். எதிர்காலத்திலும் சுனாமியால் தாக்குதலுக்கு ஆளாகும் வாய்ப்புகளும் உண்டு. மேலும், புவிவெப்பமயமாதலால் பனிப்பாறை உருகி, கடல் மட்டம் தொடர்ந்து உயர்வதால், எதிர்வரும் 2040-2070 வரையிலான காலகட்டத்தில் கடல்மட்டம் 30 செமீ அளவிற்கு உயர்ந்து சென்னை கடற்கரை பரப்பில் 1.6 கிமீ அளவிற்கு (ஏறத்தாழ 71ச.கீ நிலப்பரப்பு) கடல்மட்டத்திற்கு கீழ் சென்று, நிரந்தரமாக வெள்ளம் சூழ் பகுதியாக மாறும் என்று "காலநிலை மாற்றத்திற்கான சென்னை செயல்திட்ட அறிக்கை"குறிப்பிடும் பகுதிக்குள்ளும் பட்டினப்பாக்கம் வருகிறது என்பதால், அடுத்த 100 ஆண்டுக்கான தொலைநோக்கு பார்வையுடன் தலைமைச்செயலகம் அமைக்க பட்டினப்பாக்கம் எப்படி சரியான தேர்வாக இருக்க முடியும்?</p><h2><strong>வெட்கக்கேடானது</strong></h2><p>தான் முதலமைச்சர் ஆவதற்கு முன்பே அனைவரையும் வீட்டிற்கு அழைத்துச் சந்தித்த முதல்வர் விஜய் அவர்கள், தற்போது தலைமைச்செயலகத்தையே தன் வீட்டிற்கு அருகில் அமைத்து அரசு ஊழியர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவருமே அங்கு வாருங்கள் என்று துக்ளக் தர்பார் நடத்த முயல்வது வெட்கக்கேடானது.</p><p>ஆகவே, முதல்வர் விஜய் அவர்களின் தனிப்பட்ட நலனுக்காக, நாட்டு மக்களின் வரிப்பணத்தை வீணடித்து, கடும் இடநெருக்கடியும், போக்குவரத்து நெரிசலும், சுனாமி ஆபத்தும் உள்ள பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.</p><p>இல்லையென்றால், பாதிக்கப்படும் பட்டினப்பாக்கம் 9 கிராம மீனவமக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த 9 மீனவ கிராம மக்களுக்கு நான் சொல்லிக்கொள்வது, நீங்கள் எது குறித்தும் அச்சம் கொள்ள வேண்டாம்; விளைநிலங்களை அழித்து சேலம் எட்டுவழிச்சாலை அமைக்கவிடமாட்டோம் என்று கூறினோம். அமைக்கவில்லை. விளைநிலங்களை அழித்து பரந்தூரில் வானூர்தி நிலையம் அமைக்கவிடமட்டோம் என்றோம். அமைக்க முடியவில்லை; சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வகையில் கடலில் பேனா சிலை வைக்கவிடமாட்டோம் என்றோம்; வைக்க முடியவில்லை. அதுபோல 9 மீனவ கிராம மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் பட்டினப்பாக்கத்தில் தலைமைச்செயலகத்தை ஒருபோதும் அமையவிடமாட்டோம். மக்களின் துணையுடன் உறுதியாக தடுத்து நிறுத்துவோம். பட்டினப்பாக்கம் மீனவச்சொந்தங்கள் மிகுந்த நம்பிக்கையோடு இருங்கள்! என்று கூறியுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 2 நாட்கள் மின்தடை ஏற்பட்டது ஏன்?- அமைச்சர் நிர்மல்குமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-two-day-power-cut-explained-by-minister-nirmalkumar</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-two-day-power-cut-explained-by-minister-nirmalkumar#comments</comments><guid isPermaLink="false">7cf1d334-1d03-4363-ba9f-d5094c76b388</guid><pubDate>Sat, 12 Sep 2026 09:35:42 +0000</pubDate><atom:updated>2026-09-12T09:35:42.082Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>மின்தடை,அமைச்சர் நிர்மல்குமார்,மின் தட்டுப்பாடு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/isvpm9ti/nirmal-kumar.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Nirmal kumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/isvpm9ti/nirmal-kumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் நேற்று மாலை முதல் போதுமான மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறோம் என அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார்.</p><p>தமிழகத்தில் நிலவும் மின்தடை குறித்து அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>காற்றாலை மின்சாரம் தடைபட்டதால் 2 நாட்கள் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது தமிழகத்தில் மட்டுமல்ல பெரும்பாலான மாநிலங்களில் நிலவும் தட்டுப்பாடு.</p><p>நேற்று மாலை தமிழகத்திற்கு தேவையான மின்சாரம் பொது விநியோகத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது.</p><p>நேற்று மாலை முதல் அனைத்து இடங்களிலும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இது தமிழகத்தில் மட்டுமல்ல பெரும்பாலான மாநிலங்களில் நிலவும் தட்டுப்பாடு தமிழகத்தில் நேற்று மாலை முதல் போதுமான மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.</p><p>இவ்வாறு அவர் கூறி உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஆசிய விளையாட்டு போட்டியில் புறக்கணிப்பு: தற்கொலை செய்து கொள்வதாக இந்திய வீராங்கனை வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு</title><link>https://www.maalaimalar.com/sports/harassed-and-bullied-teenage-wushu-athlete-threatens-suicide-after-asian-games-snub</link><comments>https://www.maalaimalar.com/sports/harassed-and-bullied-teenage-wushu-athlete-threatens-suicide-after-asian-games-snub#comments</comments><guid isPermaLink="false">d590bdc3-96ac-4c67-a0ab-ce07af6cfcb6</guid><pubDate>Sat, 12 Sep 2026 09:29:10 +0000</pubDate><atom:updated>2026-09-12T09:29:10.532Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Asian Games,ஆசிய விளையாட்டு போட்டி,wushu</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/sjdig6nr/Divyanshi0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Divyanshi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/sjdig6nr/Divyanshi0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானில் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் இன்று ஜப்பான் புறப்பட்டு செல்கிறார்கள். இந்த நிலையில் வுஷு விளையாட்டின் 18 வயதாக இந்தியாவின் இளம் வீராங்கனையான திவ்யான்ஷி, ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் இருந்து தன்னை நீக்கியதால், தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டல் விடுக்கும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>நியாயமற்ற முறையில் நீக்கம்</h2><p>ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் இருந்து கடைசி நமிடத்தில் நீக்கப்பட்டேன். 60 கிலோ சாண்டா பிரிவில் நியாயமற்ற முறையில் நீக்கப்பட்டேன். மாதக்கணக்கில் மனதளவில் துன்புறுத்தப்பட்டேன். வாழ்வதில் இனி எந்த பயனும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.</p><p>ரோஷிபினா தேவி என்பவர் 2022ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார். இவரை தேர்வுக்கான போட்டியில் திவ்யான்ஷி வீழ்த்தியிருந்தார். இருந்தபோதிலும் இடம் மறுக்கப்பட்டுள்ளது.</p><h2>விஷு பெடரேசன் சொல்வது என்ன?</h2><p>அதேவேளையில் விஷு பெடரேசன், திவன்யான்ஷிக்கு மருத்துவ ஆய்வின்போது ACL காயம் கண்டறியப்பட்டது. போட்டிக்கு தன்னை தயார் படுத்தும் வகையில் முறையான பயிற்சியை மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ளது. அதேவேளையில், திவ்யான்ஷியின் பயிற்சியாளர் அஷோக் கவுதம், ஆசிய போட்டியில் நீக்குவதற்கு ஏற்ப மோசமான நிலையில் காயம் இல்லை. கடைசி நேரத்தில் மாற்று வீராங்கனையை தேர்வு செய்ய காரணம் என்ன? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>ரோஷிபினாவுக்கும் இரண்டு கால்களில் ACL காயம் ஏற்பட்டுள்ளது. அவரை மட்டும் தேர்வு செய்தது எப்படி? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். வீராங்கனை ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தடைகளை நீக்கி வெற்றியை தரும் விநாயகர் மந்திரம்</title><link>https://www.maalaimalar.com/spirituality/vinayagar-mantra-6</link><comments>https://www.maalaimalar.com/spirituality/vinayagar-mantra-6#comments</comments><guid isPermaLink="false">b381deb3-a7dc-4e57-a283-59ac5f032633</guid><pubDate>Sat, 12 Sep 2026 09:25:16 +0000</pubDate><atom:updated>2026-09-12T09:25:16.879Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,வழிபாடு,worship,விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,Vinayagar Chaturthi 2026,விநாயகர் சதுர்த்தி 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/4occi9b7/vinayagar6.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vinayagar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/4occi9b7/vinayagar6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்து சமயத்தில் எந்தவொரு செயலை செய்ய தொடங்கும் முன்பும், முழுமுதற் கடவுளான விநாயகரை வணங்கி தொடங்குவது வழக்கம். காரணம், செய்யும் காரியங்கள் தடைகள் இன்றி வெற்றிகரமாக நடைபெற அருள் புரிபவர், விநாயகப் பெருமான். அவரை போற்றும், பத்ம புராணத்தில் இடம்பெற்ற ஒரு மந்திரத்தை பார்ப்போம்.</p> <p><em>ஓம் நமோ கணபதயே நமஹ</em></p><p><em>கணபதிர் விக்னராஜோ லம்பதுண்டோ கஜானன:</em></p><p><em>த்வைமாதுரஸ்ச ஹேரம்ப ஏகதந்தோ கணாதிப:</em></p><p><em>விநாயகஸ்சாருகர்ண: பஸூபாலோ பவாத்மஜ:</em></p><h2>பொருள்:-</h2><p>'ஓம்' எனும் பிரணவ மந்திரத்தின் அதிபதியான கணபதியை வணங்குகிறேன். பூத கணங்களுக்கு தலைவனாக விளங்குபவரே, இடையூறுகள் இல்லாது செய்பவரே, அழகான நீண்ட துதிக்கையை உடையவரே, யானை முகம் படைத்தவரே, கங்கா, கவுரி என இரண்டு தாய்களை கொண்டவரே, பக்தர்களுக்கு குறைவில்லாமல் அருள்புரிபவரே, ஒரு தந்தத்தை உடையவரே, பெரிய காதுகளை கொண்டவரே, உலக மக்களை காப்பவரே, பரமனின் புத்திரனே, உனக்கு வணக்கம். எங்கள் தடைகளை எல்லாம் விலக்கி, நிம்மதி பெருவாழ்வு வாழ வழிநடத்துவீராக.</p> <h2>விநாயகர் சதுர்த்தி</h2><p>விநாயகர் சதுர்த்தி நாளில், அருகம்புல் மாலை சாற்றி, இந்த மந்திரத்தைக் கூறி விநாயகரை வழிபட்டால் காரிய வெற்றியும், எல்லா வளங்களும் பெறலாம்.</p>]]></content:encoded></item><item><title>டெல்லியில் 18-வது பிரிக்ஸ் மாநாடு தொடங்கியது</title><link>https://www.maalaimalar.com/news/national/18th-brics-summit-begins-in-delhi</link><comments>https://www.maalaimalar.com/news/national/18th-brics-summit-begins-in-delhi#comments</comments><guid isPermaLink="false">86506be4-8006-4737-8ef9-055b19818ee5</guid><pubDate>Sat, 12 Sep 2026 09:04:36 +0000</pubDate><atom:updated>2026-09-12T09:04:36.793Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மாநாடு,Conference,delhi,டெல்லி,பிரிக்ஸ் மாநாடு,Bricks conference</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/06luvrx9/bricks.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bricks conference]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/06luvrx9/bricks.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரிக்ஸ் நாடுகளின் 18வது உச்சி மாநாடு தொடங்கியது.</p><p>பிரிக்ஸ் அமைப்பில் இந்தியா, ரஷியா, சீனா, பிரேசில், தென் ஆப்பி ரிக்கா, ஈரான், எகிப்து, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தோனேசியா, எத்தியோப்பியா ஆகிய 11 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.</p><p>மேலும், பெலாரஸ், பொலிவியா, கஜகஸ்தான், கியூபா, மலேசியா, நைஜீரியா, தாய்லாந்து, உகாண்டா, உஸ்பெகிஸ் தான், வியட்நாம் ஆகியவை நட்பு நாடுகளாக இருக்கின்றன.</p><h2>உச்சி மாநாடு</h2><p>பிரிக்ஸ் அமைப்பின் 18-வது உச்சி மாநாடு இன்று தொடங்கி  2 நாட்கள் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடக்கிறது. இந்த மாநாடு இந்தியாவில் 4-வது முறையாக நடை பெறுகிறது.</p><p>மாநாட்டில் பங்கேற்பதற்காக உலக தலைவர்கள் டெல்லியில் குவிந்து உள்ளனர். நேற்று நடந்த பிரிக்ஸ் வர்த்தக மன்ற கூட்டத்தில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.</p><h2>மாநாடு தொடங்கியது</h2><p>பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று பிற்பகல் 2.35 மணிக்கு அதிகாரபூர்வமாக தொடங்கியது. மாநாட்டில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபி யாண்டோ, எகிப்து அதிபர் அப்தெல் பத்தாக் எல்-சிசி, மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம், அபுதாபி இளவரசர் முகமது பின் சயீத் அல் நஹ்யான், பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் ஆர். மார்கோஸ், எத்தியோப்பிய  பிரதமர் அபி அகமது அலி, வியட்நாம் பிரதமர் லே மின் ஹங், பிரேசில் வெளியுறவுத் துறை மந்திரி மவுரோ வியரா, நைஜீரியா துணை அதிபர் செனட்டர் காஷிம் ஷெட்டிமா, உகாண்டா துணை அதிபர் ஜெசிகா அலுபோ, </p><p>புருண்டி அதிபர் எவரிஸ்ட் ண்டாயிஷிமியே, தாய்லாந்து துணைப் பிரத மர் சிகாசக் புவாங்செட் கியோ, கியூபா வெளி யுறவுத்துறை மந்திரி புருனோ ரோட்ரிக்ஸ் பரில்லா, பெலாரஸ் வெளியுறவுத் துறை மந்திரி மாக்சிம் ரைஷென்கோவ், உருகுவே  வெளியுறவு அமைச்சர் மரியோ லுபெட்கின் மற்றும் ஐ.நா.பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர்  டெட்ரோஸ் அதானோம் உள்ளிட்ேடார் கலந்து கொள்கிறார்கள்.</p><p>மேலும் பல சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கிறார்கள்.</p><h2>வர்த்தகம், நிதி</h2><p>இம்மாநாட்டில் வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் மற்றும் தெற்கு உலக நாடுகளுக்கு இடையிலான மேம்பாடு, வர்த்தகம், நிதி, தொழில்நுட்பம், நிலைத் தன்மை மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது.</p><p>மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக அனைவரையும் உள்ளடக்கிய உலகளாவிய நிர்வாகம் மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பை வலுப்ப டுத்துதல் என்ற தலைப்பில் அமர்வு நடக்கிறது. இதில் பிரிக்ஸ் தலைவர்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்துகின்றனர்.</p><h2>மோடி-சீன அதிபர் பேச்சுவார்த்தை</h2><p>மாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று காலை தலைநகர் பிஜீங்கில் இருந்து புறப்பட்டார். </p><p>அவர் 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வர உள்ளார். கடைசியாக 2019-ம் ஆண்டு இந்தியா வுக்கு வந்த ஜின்பிங், சென்னை மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>ஜின்பிங்குடன், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட அரசியல் குழுவின் நிலைக்குழு உறுப்பினரும், அக்கட்சியின் மத்தியக் குழுவின் பொது அலுவலக இயக்குநருமான காய் கி, வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகியோர் அடங்கிய உயர்மட்ட குழுவினரும் வருகிறார்கள்.</p><p>இதற்கிடையே உச்சி மாநாட்டுக்கு இடையே இன்று மாலை 5.45 மணிக்கு பிரதமர் மோடி- ஜின்பிங் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.</p><p>வர்த்தகம், முதலீடு உள்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோ சனை நடத்துகிறார்கள்.</p><h2>எல்லை பிரச்சினை</h2><p>கடந்த 2020-ம் ஆண்டு கிழக்கு லடாக்கில் ஏற்பட்ட எல்லை மோதலுக்குப் பிறகு இரு நாடுகளும் உறவைச் சீராக்க முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வரும் நிலையில்  இரு தலைவர்களின் சந்திப்பு முக்கி யத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இரு தலைவர்களின் சந்திப்பில் எல்லைப் பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.</p><p>இதற்கிடையே மோடி-ஜின்பிங் இருதரப்பு பேச்சு வார்த்தை தொடர்பாக இந்தியாவில் உள்ள சீன தூதர் எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும்போது, அதிபர் ஜின்பிங்-பிரதமர் மோடி  இடையிலான இரு தரப்புச் சந்திப்புக்கான ஏற்பாடுகளை சீனாவும் இந்தியாவும் செய்து வருகின்றன. </p><h2>3-வது ஆண்டு</h2><p>கசான், தியான்ஜின் ஆகிய இடங்களில் நடை பெற்ற சந்திப்புகளைத் தொடர்ந்து, இரு தலைவர்களும் நேரில் சந்தித்துக் கொள்வது தொடர்ந்து 3-வது ஆண்டாகும்.</p><p>இரு தரப்பு உறவுகளை  நீண்ட கால கண்ணோட்டத்தில் கையாளவும், தகவல் தொடர்பை அதிகரிக்கவும், ஒத்துழைப்பை மேம்படுத்தவும், வேறுபாடுகளைச் சரியாகக் கையாளவும், நல்ல அண்டை நாடுகளாக வும் ஒருவருக்கொருவர் வெற்றிபெற உதவும் கூட்டாளிகளாகவும் இருக்க இந்தியாவுடன் சீனா இணைந்து செயல்படும் என்று தெரிவித்தார்.</p><h2>பிரதமர் மோடியுடன் ஆலோசனை</h2><p>இந்தநிலையில் பிரதமர் மோடி இன்று காலை எத்தியோப்பிய பிரதமர், மலேசிய பிரதமர், அபுதாபி இளவரசர், வியட்நாம் பிரதமர் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினார். </p><p>நேற்று ரஷிய அதிபர் புதின், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் ஆகியோருடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.</p><p>இன்று மாலை 4.25 மணிக்கு பாரத் புத்தாக்க கண்காட்சியை  தலைவா்கள் பாா்வையிடுகின்றனா். பின்னா் பாரத் மண்டபத்தில் தலைவா்கள் ஒன்றாக குழு புகைப்படம் எடுக்க உள்ளனா். மேலும், தலைவா்கள் மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. </p><h2>விருந்து</h2><p>பின்னர் தலைவா்களுக்கு பிரதமா் மோடி  இரவு 7.30 மணிக்கு விருந்து  அளிக்கிறார். அதனுடன் இன்றைய முதல் நாள் மாநாடு நிறைவு பெறுகிறது.</p>]]></content:encoded></item><item><title>“சூப்பர் மேன் இல்ல, ஆனா ஒரு சூப்பர் பவர் இருக்கு” - விரைவில் வெளியாகும் &apos;பீப்&apos; படம் குறித்து நடிகர் ராகவ்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/not-a-superman-but-has-a-superpower-actor-raghav-on-upcoming-beep-film</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/not-a-superman-but-has-a-superpower-actor-raghav-on-upcoming-beep-film#comments</comments><guid isPermaLink="false">6bf5e173-da3a-4599-bc1f-c28275e57b83</guid><pubDate>Sat, 12 Sep 2026 08:51:58 +0000</pubDate><atom:updated>2026-09-12T08:51:58.814Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>Beep Movie,பீப் திரைப்படம்,Actor Raghav,நடிகர் ராகவ்,Crime Thriller,ThaniOruvan Vibe</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/2457x36g/Actor-Raghav" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Actor Raghav]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/2457x36g/Actor-Raghav?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>'எந்திரன்', 'வேலாயுதம்', 'நஞ்சுபுரம்', 'கல்யாண சமையல் சாதம்' போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் நடிகர் <strong>ராகவ்</strong>. </p><p>இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் கிரைம் த்ரில்லர் திரைப்படம் <strong>'பீப்' (Beep)</strong>. அறிமுக இயக்குநர் இல. சண்முகசுந்தர் இயக்கியுள்ள இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் சுவாரசியமான அனுபவங்களை நடிகர் ராகவ் பகிர்ந்துள்ளார்.</p><h2><strong>'பீப்' தலைப்பின் ரகசியம் என்ன?</strong></h2><p>படத்தின் தலைப்பு குறித்துப் பேசிய ராகவ், “நாம் ஒரு விஷயம் கேட்கக் கூடாது என்று நினைக்கும் போது அந்த இடத்தில் 'பீப்' சத்தம் போடுகிறோம். அதாவது, துண்டிக்கப்பட்ட குரல்கள் அல்லது வெளியில் சொல்லப்படாத விஷயங்கள் என்று இதற்கு அர்த்தம் கொள்ளலாம். </p><p>சமூகத்தில் வழக்கமாக வெளியில் சொல்லப்படாத பல அதிர்ச்சியூட்டும் உண்மைகளை இந்த படத்தில் தொட்டிருக்கிறோம். இது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் ஒரு பக்கா <a href="https://www.maalaimalar.com/topic/crime">கிரைம் </a>த்ரில்லராக இருக்கும்” என்றார்.</p><h2><strong>சூப்பர் மேன் இல்ல... ஆனா 'சூப்பர் பவர்' இருக்கு!</strong></h2><p>படத்தின் நாயகன் கதாபாத்திரம் குறித்துப் பேசிய அவர், “படத்தின் ஹீரோவுக்கு ஒரு விதமான 'சூப்பர் பவர்' இருக்கிறது. ஆனால், அவர் வழக்கமான சினிமா சூப்பர் மேன் கிடையாது. </p><p>நிஜ வாழ்க்கையில் சில மனிதர்கள் 4 டிஜிட் பெருக்கல் கணக்குகளை நொடிப் பொழுதில் சொல்வார்களே, அதுபோன்ற ஒரு எதார்த்தமான சூப்பர் பவர் தான் அது. நிஜ வாழ்வில் அப்படி ஒரு பவர் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை இயக்குநர் அழகாகக் காட்டியுள்ளார்.</p><p>எனது கதாபாத்திரத்தின் மேனரிசங்கள் அனைத்தும் இயக்குநரின் கற்பனையே. படத்தை முன்கூட்டியே பார்த்த என் மனைவியே, 'உன்னை இயக்குநர் முற்றிலும் வேறு மாதிரி காட்டியுள்ளார்' என்று ஆச்சரியப்பட்டார்,” எனக் குறிப்பிட்டார்.</p><h2><strong>17-வது மாடியில் இருந்து கயிற்றில் இறங்கி ரிஸ்க்!</strong></h2><p>படத்தில் இடம்பெற்ற சவாலான ஆக்ஷன் காட்சி பற்றிப் பகிர்ந்த ராகவ், “ஒரு முக்கியமான காட்சிக்காக 17-வது மாடியில் இருந்து கயிறு கட்டி 10-வது மாடி வரை தலைகீழாக இறங்குவது போல படமாக்கினார்கள். </p><p>அது எனக்கு மிகப்பெரிய சவாலாகவும் ரிஸ்க்காகவும் இருந்தது. ஒரு நடிகனாக இந்த அளவுக்கு நாம் ரிஸ்க் எடுத்துதான் ஆக வேண்டும்.</p><p>எனக்கு 'தனி ஒருவன்' படத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF">அரவிந்த் சாமி</a> நடித்தது போன்ற ஒரு பவர்புல்லான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. </p><p>இது தவிர நானும் சில கதைகளை எழுதி வைத்துள்ளேன், அதையும் விரைவில் இயக்குவேன் ,” என்றார். இத்திரைப்படம் விரைவில் வெளியாகும் என்றும் மக்களிடம் நல்</p><p>ல வரவேற்பை பெரும் என்ற நம்பிக்கையும் எனக்கு உள்ளது என்றும் கூறியுள்ளார்.</p><h2><strong>படத்தின் ஆன்மாவாக இருக்கும் பின்னணி இசை</strong></h2><p>இயக்குநர் ராஜு முருகனின் உதவி இயக்குநரான தினா ராகவனிடம் இணை இயக்குநராக இருந்த இல. சண்முகசுந்தர் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் இரண்டு பாடல்கள் மட்டுமே உள்ளன. </p><p>ஆனால், இசையமைப்பாளர் பிரசாந்த் விஹாரியின் பின்னணி இசை படத்தின் ஆன்மாவாக அமைந்துள்ளது. </p><p>குறிப்பாக, இடைவேளைக்குப் பிறகு கதையை நகர்த்துவதில் இசை முக்கியப் பங்கு வகிக்கிறது. ரசிகர்கள் தியேட்டரில் அமர்ந்து தாங்களே கதையோடு பயணித்து, சில கணக்குகளைப் போட்டு குற்றவாளியைக் கண்டுபிடிப்பது போன்ற ஒரு சுவாரசியமான திரைக்கதை இதில் உள்ளது என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார்.</p><h2><strong>தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம்</strong></h2><p>நடிகர் ராகவ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் 'பீப்' திரைப்படத்தை இல. சண்முக சுந்தர் இயக்கியுள்ளார். இதற்கு பிரசாந்த் விஹாரி இசையமைக்க, பிரதீப் பத்மகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். </p><p>மேலும், இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை அபிஷேக் மற்றும் விக்னேஷ் கவனிக்க, சண்டைக் காட்சிகளை ராம்குமார் வடிவமைத்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பிரிக்ஸ் உச்சிமாநாடு: 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு வருகை தந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்!</title><link>https://www.maalaimalar.com/news/world/brics-summit-chinese-president-xi-jinping-visits-india-after-7-years</link><comments>https://www.maalaimalar.com/news/world/brics-summit-chinese-president-xi-jinping-visits-india-after-7-years#comments</comments><guid isPermaLink="false">ab5598e2-3004-401f-8689-bb4cbfccdc1b</guid><pubDate>Sat, 12 Sep 2026 08:50:40 +0000</pubDate><atom:updated>2026-09-12T08:50:40.297Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா,BRICS Summit,Prime Minister Narendra Modi,பிரிக்ஸ் உச்சிமாநாடு,Chinese President Xi Jinping,பிரதமர் மோடி,சீன அதிபர் ஜி ஜின்பிங்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/tivtbwm2/brics.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Xi Jinping -Narendra Modi   ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/tivtbwm2/brics.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த 2019-ஆம் ஆண்டு மாமல்லபுரத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முறைசாரா உச்சிமாநாட்டிற்குப் பிறகு, சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவிற்கு வருகை தருவது இதுவே முதன்முறையாகும்.</p><p>18-வது <a href="https://www.maalaimalar.com/news/world/saudi-arabia-shuts-down-pipeline-as-houthis-seize-island-opening-new-front-in-iran-war">பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் </a>பங்கேற்பதற்காகச் சீன அதிபர் ஜி ஜின்பிங் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக டெல்லி வந்தடைந்தார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு இந்திய மத்திய இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கலைக் குழுவினரின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளுடன் சீன அதிபருக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு வழங்கப்பட்டது. </p><p>ஜின்பிங்குடன் சீன கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக் குழு நிலைக்குழு உறுப்பினரும், கட்சியின் மத்திய குழு அலுவலக இயக்குனருமான காய் கி, சீன வெளியுறவு மந்திரியும், கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான வாங் யி உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர். ஜி ஜின்பிங் பிரதமர் மோடியை இன்று மாலை 5.45 மணிக்கு சந்தித்து பேச உள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு மாமல்லபுரத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முறைசாரா உச்சிமாநாட்டிற்குப் பிறகு, சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவிற்கு வருகை தருவது இதுவே முதன்முறையாகும்</p><h2>மோடி-ஜி ஜி<strong>ன்பிங் சந்திப்பு</strong></h2><p>பிரிக்ஸ் மாநாட்டின் ஒருபகுதியாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அதிபர்ஜி ஜின்பிங் சந்தித்துப் பேசுகிறார். 2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட எல்லை மோதலுக்குப் பிறகு, இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் நிலவி வந்த பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியாக இந்தச் சந்திப்பு பார்க்கப்படுகிறது.</p><p>இந்த இருதரப்புப் பேச்சுவார்த்தையின் போது, எல்லைப் பகுதிகளில் அமைதியை உறுதி செய்வது, எல்லைக் எல்லை நிர்ணயம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வது மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஏற்றத்தாழ்வுகளைச் சீரமைப்பது ஆகிய முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன.</p><h2>பிரிக்ஸ் உச்சிமா<strong>நாட்டின் முக்கிய</strong>த்துவம்</h2><p>இந்தியாவின் தலைமையில் டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெறும் இந்த 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உட்படப் பல உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். உலகளாவிய பொருளாதாரச் சவால்கள், உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ப் பதற்றங்கள், ஆற்றல் பாதுகாப்பு மற்றும் விநியோகச் சங்கிலி சீரமைப்பு போன்ற முக்கிய சர்வதேச விவகாரங்கள் குறித்து இம்மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. இரு பெரிய ஆசிய வல்லரசுகளின் தலைவர்கள் சந்தித்துப் பேசுவது சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பிரிக்ஸ் புது டெல்லி பிரகடனம்: இந்தியாவின் முயற்சிக்கு அனைத்து நாடுகளும் ஒப்புதல்</title><link>https://www.maalaimalar.com/news/national/dialogue-and-diplomacy-way-forward-brics-new-delhi-declaration-agreed</link><comments>https://www.maalaimalar.com/news/national/dialogue-and-diplomacy-way-forward-brics-new-delhi-declaration-agreed#comments</comments><guid isPermaLink="false">56046714-85d8-4061-b86a-003e1dbc6bdd</guid><pubDate>Sat, 12 Sep 2026 08:37:29 +0000</pubDate><atom:updated>2026-09-12T08:37:29.532Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>BRICS Summit,பிரிக்ஸ் மாநாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/t2nje2h7/BricsSummit001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிரிக்ஸ் மாநாடு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/t2nje2h7/BricsSummit001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரிக்ஸ் மாநாடு இந்தியாவில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் புதுடெல்லி வந்துள்ளனர். ரஷிய அதிபர் புதின், ஈரான் அதிபர், சீன அதிபர் ஜி ஜின் பிங் உள்ளிட்ட தலைவர்கள் வந்துள்ளனர்.</p><p>பொதுவாக மாநாட்டின் போது உலகளவில் பாதிக்கப்படக்கூடிய ஒரு குறிப்பிட்ட சம்பவம் குறித்து பொது கருத்து ஒற்றுமையுடன் பிரகடனம் வெளியிடப்படும். தற்போது உலகளவில் அமெரிக்கா- ஈரான் போர், உக்ரைன்- ரஷியா போர் சண்டை நடைபெற்று வருகிறது. அதேபோல் ஹவுதி- சவுதி அரேபியா இடையே சண்டை நடைபெறுகிறது.</p><h2>பிரகடனம்</h2><p>இந்த நிலையில் எந்தவொரு நாட்டையும் குறிப்பிடாமல் எந்த வகையான ஆக்கிரமிப்பையும் வன்மையாக கண்டிக்கும் வகையில் ஒருமித்த கருத்துடன் பிரகடனம் வெளியிட இந்தியா முயற்சி மேற்கொண்டது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் அனைத்து நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.</p><p>இதன் அடிப்படையில் மோதலை முடிவுக்கு கொண்டு வர உரையாடலும் ராஜதந்திரமுமே முன்னேற்றத்திற்கான வழி என்பதை மையமாக வைத்து பிரிக்ஸ் புது டெல்லி பிரகடனம் வெளியிடப்பட இருக்கிறது. இதற்கு அனைத்து நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன.</p><p>இதனைத் தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு பிரகடனம் வெளியிடப்பட இருக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>ஔவையார் அருளிய விநாயகர் அகவல் பாமாலை</title><link>https://www.maalaimalar.com/spirituality/vinayagar-chaturthi-avvaiyar-agaval</link><comments>https://www.maalaimalar.com/spirituality/vinayagar-chaturthi-avvaiyar-agaval#comments</comments><guid isPermaLink="false">2b373f81-485a-47c4-8679-fd27311179c1</guid><pubDate>Sat, 12 Sep 2026 08:29:33 +0000</pubDate><atom:updated>2026-09-12T08:29:33.400Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,வழிபாடு,worship,விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,Vinayagar Chaturthi 2026,விநாயகர் சதுர்த்தி 2026,avvaiyar,vinayagar agaval</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/pr9k5ep9/vinayagar5.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vinayagar - Avvaiyar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/pr9k5ep9/vinayagar5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஔவையார் சீதக்களப செந்தாமரைப்பூம் என்று துவங்கும் விநாயகர் அகவல் என்னும் பாமாலையை எழுதியவர். இதை சதுர்த்தியன்று பாடினால், நீங்கள் பிள்ளையாரிடம் ஏதாவது வேண்டினால், அவர் இரட்டிப்பாகத் தருவார்.</p><p>மற்ற கிழமைகளில் மறந்து விட்டாலும் விநாயகரை வெள்ளிக்கிழமை மற்றும் சதுர்த்தி திதிகளில் மறக்காமல் வணங்க வேண்டும். அவ்வாறு, விநாயகரை வணங்கும்போது உங்கள் நினைவிற்கு வரவேண்டிய இன்னொருவர் ஔவையார். அவர் சீதக்களப செந்தாமரைப்பூம் என்று துவங்கும் விநாயகர் அகவல் என்னும் பாமாலையை எழுதியவர்.</p><p>இந்த பாமாலையை சதுர்த்தியன்று பாடினால், நீங்கள் பிள்ளையாரிடம் ஏதாவது வேண்டினால், அவர் இரட்டிப்பாகத் தருவார். விநாயகர் அகவல் படிப்பது வீட்டுக்கும், நாட்டுக்கு மட்டுமல்ல, உலகுக்கே நல்லது. காஞ்சிப்பெரியவர் இது பற்றி கூறும்போது, நமக்கும், நாட்டுக்கும், உலகத்துக்கும் நன்மை உண்டாவதற்கு ஔவையார் மூலம் பிள்ளையாரைப் பிடிப்பதே வழி, என்கிறார்.</p> <p>இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி நாளை மறுநாள் கோலோகமாக கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் அகவலை பாடி அவரது அருள் பெறுவோம்.</p><h2>விநாயகர் அகவல்</h2><p>பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை</p><p>நாலும் கலந்துனக்கு நான் தருவேன் -கோலம்செய்</p><p>துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்</p><p>சங்கத் தமிழ் மூன்றும் தா.</p> <h2>அகவல்</h2><p>சீதக் களபச் செந்தா மரைப்பூம்</p><p>பாதச் சிலம்பு பலவிசை பாடப்</p><p>பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்</p><p>வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்</p><p>பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)</p> <p>வேழ முகமும் விளங்குசிந் தூரமும்</p><p>அஞ்சு கரமும் அங்குச பாசமும்</p><p>நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்</p><p>நான்ற வாயும் நாலிரு புயமும்</p><p>மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)</p> <p>இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்</p><p>திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்</p><p>சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான</p><p>அற்புதம் நின்ற கற்பகக் களிறே!</p><p>முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15)</p> <p>இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்</p><p>தாயா யெனக்குத் தானெழுந் தருளி</p><p>மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்</p><p>திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்</p><p>பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20)</p> <p>குருவடி வாகிக் குவலயந் தன்னில்</p><p>திருவடி வைத்துத் திறமிது பொருளென</p><p>வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்</p><p>கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே</p><p>உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)</p> <p>தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி</p><p>ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்</p><p>இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்</p><p>கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)</p><p>இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30)</p> <p>தலமொரு நான்கும் தந்தெனக் கருளி</p><p>மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே</p><p>ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்</p><p>ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி</p><p>ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35)</p> <p>பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே</p><p>இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்</p><p>கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி</p><p>மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்</p><p>நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)</p><p>குண்டலி யதனிற் கூடிய அசபை</p><p>விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து</p><p>மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்</p><p>காலால் எழுப்பும் கருத்தறி வித்தே</p><p>அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)</p> <p>குமுத சகாயன் குணத்தையும் கூறி</p><p>இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்</p><p>உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்</p><p>சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்</p><p>எண் முகமாக இனிதெனக் கருளிப் (50)</p> <p>புரியட்ட காயம் புலப்பட எனக்குத்</p><p>தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்</p><p>கருத்தினில் கபால வாயில் காட்டி</p><p>இருத்தி முத்தி யினிதெனக் கருளி</p><p>என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)</p> <p>முன்னை வினையின் முதலைக் களைந்து</p><p>வாக்கும் மனமும் இல்லா மனோலயம்</p><p>தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)</p><p>இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன</p><p>அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60)</p> <p>எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)</p><p>அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்</p><p>சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்</p><p>சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி</p><p>அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65)</p> <p>கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி</p><p>வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்</p><p>கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி</p><p>அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை</p><p>நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70)</p> <p>தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட</p><p>வித்தக விநாயக விரைகழல் சரணே! (72)</p><p>ஓம் விக்ன விநாயகா போற்றி!</p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு?- சிபிஐ(எம்) மாநிலக் குழு நாளை அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cpi-m-to-announce-byelection-support-tomorrow-madurantakam-dharapuram</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cpi-m-to-announce-byelection-support-tomorrow-madurantakam-dharapuram#comments</comments><guid isPermaLink="false">0b00c371-3601-40bd-ac17-9dad0bc6f63c</guid><pubDate>Sat, 12 Sep 2026 08:28:19 +0000</pubDate><atom:updated>2026-09-12T08:28:19.522Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>சிபிஐ,Shanmugam,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,CPM,CPI,dharapuram,தாராபுரம்,மதுராந்தகம்,பெ.சண்முகம்,Madhuranthakam</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/tmursbtr/cpi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Shanmugam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/tmursbtr/cpi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுராந்தகம், தாராபுரம்  இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு தருவது என்பது தொடர்பாக நாளை அறிவிக்கப்படும். </p><p>தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இதில் எந்தக் கட்சிக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/the-proposed-secretariat-project-at-pattinapakkam-must-be-immediately-abandoned-cpi-urges-the-government">இந்திய கம்யூனிஸ்ட்</a> (மார்க்சிஸ்ட்) கட்சி தனது அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை நாளை அறிவிக்க உள்ளது. இத்தேர்தல் களம் அரசியல் கட்சிகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.</p><h2>மாநிலக் குழு <strong>கூட்டத்தில் விரிவான</strong> ஆலோசனை</h2><p>சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இடைத்தேர்தல் ஆதரவு நிலப்பாடு குறித்து விளக்கமளித்தார். அப்போது பேசுகையில், இரு தொகுதிகளின் கள நிலவரங்கள் மற்றும் தேர்தல் உத்திகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். கட்சியின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளின் கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னரே இறுதி முடிவு எட்டப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><h2>நாளை பிற்<strong>பகலில் அதிகாரப்பூர்வ</strong> அறிவிப்பு</h2><p>மாநிலக் குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில், நாளை பிற்பகல் 2 மணியளவில் செய்தியாளர்கள் சந்திப்பு வாயிலாக தங்களது ஆதரவு நிலைப்பாடு முறைப்படி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சிபிஐ(எம்) கட்சியின் இந்த அறிவிப்பு தொகுதி மறுசீரமைப்பு மற்றும் கூட்டணி கணக்குகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>&apos;ப்யூஸ் போன&apos; த.வெ.க. அரசு மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும்- உதயநிதி ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-indictment-tvk-govt-5</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-indictment-tvk-govt-5#comments</comments><guid isPermaLink="false">a7313323-3311-497d-ad9b-a4580b6b0c9b</guid><pubDate>Sat, 12 Sep 2026 08:25:32 +0000</pubDate><atom:updated>2026-09-12T08:25:32.866Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,தவெக,Udhayanidhi Stalin,மின் தடை,Power Cut,tvk</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/np6hhi2g/udhayanidhistalin004.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/np6hhi2g/udhayanidhistalin004.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரோ, இதைச் சரிசெய்யும் முயற்சிகளைச் செய்யாமல் தேவையில்லாத அவதூறுகளை உளறிக் கொண்டிருக்கிறார்.</strong></em></p><p>எதிர்க்கட்சி தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/உதயநிதி-ஸ்டாலின்">உதயநிதி ஸ்டாலின்</a> எக்ஸ் தள பக்கத்தில் ஊடகங்களில் வெளியான செய்திகளின் புகைப்படங்களை வெளியிட்டு கூறியிருப்பதாவது:-</p><p>நேற்று முதல் ஊடகங்களில் வெளியாகி வரும் செய்திகள் இவை.</p><h2><strong>பொதுமக்கள் போராட்டம்</strong></h2><p>தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்சாரம் இருந்தாலும் voltage பிரச்சனை என மக்கள் வெகுண்டெழுந்து வீதிக்கு வந்து போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.</p><p>ஆனால், துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரோ, இதைச் சரிசெய்யும் முயற்சிகளைச் செய்யாமல் தேவையில்லாத அவதூறுகளை உளறிக் கொண்டிருக்கிறார்.</p><p>மின்சாரம், ஆவின் பால் விநியோகம் என மக்களின் அன்றாட அடிப்படைத் தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாமல் திண்டாடும் 'ப்யூஸ் போன' த.வெ.க. அரசு திசைதிருப்பும் வேலைகளை நிறுத்திவிட்டு, மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">நேற்று முதல் ஊடகங்களில் வெளியாகி வரும் செய்திகள் இவை.<br><br>தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்சாரம் இருந்தாலும் voltage பிரச்சினை என மக்கள் வெகுண்டெழுந்து வீதிக்கு வந்து போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.<br><br>ஆனால், துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரோ, இதைச்… <a href="https://t.co/Qjpr0BQevV">pic.twitter.com/Qjpr0BQevV</a></p>&mdash; Udhay (@Udhaystalin) <a href="https://x.com/Udhaystalin/status/2098685103711134110?ref_src=twsrc%5Etfw">September 12, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>தியேட்டரை தொடர்ந்து OTT-யிலும் அசுர வேட்டை! &apos;உலகளாவிய டாப் 10&apos; பட்டியலில் இடம்பிடித்து மாதவனின் ‘ஜி.டி.என்’ !</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/from-theatres-to-ott-gtn-continues-its-blockbuster-run</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/from-theatres-to-ott-gtn-continues-its-blockbuster-run#comments</comments><guid isPermaLink="false">d3cd6dfb-beb8-4d38-b60d-801a2510edb3</guid><pubDate>Sat, 12 Sep 2026 08:20:18 +0000</pubDate><atom:updated>2026-09-12T08:20:18.341Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>Madhavan,மாதவன்,நெட்ஃபிளிக்ஸ்,GDN,ஜிடிஎன்,Netflix Global Top10,OTT Success,GDNaidu Biopic</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/utzji4en/GDN-Movie" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ GDN Movie]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/utzji4en/GDN-Movie?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இன்றைய டிஜிட்டல் திரையுலக சூழலில், ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது திரையரங்குகளைத் தாண்டி ஓடிடி தளங்கள் மூலமும் உலகளவில் தீர்மானிக்கப்படுகிறது என்பதற்குச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D">நடிகர் ஆர். மாதவனின்</a> <strong>‘ஜி.டி.என்.’</strong> திரைப்படம்.</p><p>'இந்தியாவின் எடிசன்' என்று போற்றப்படும் பழம்பெரும் இந்திய கண்டுபிடிப்பாளரும் தொழிலதிபருமான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81">ஜி.டி. நாயுடுவின்</a> வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவான இப்படம், தற்போது நெட்ஃபிளிக்ஸ் சர்வதேச தளத்தில் பிரம்மாண்ட சாதனை படைத்து வருகிறது.</p><h2><strong>திரையரங்கில் தொடங்கி டிஜிட்டலில் தொடரும் வெற்றி</strong></h2><p>கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘ஜி.டி.என்.’ திரைப்படம், விமர்சகர்களின் ஒருமித்த பாராட்டுகளாலும், ரசிகர்களின் வாய்மொழிப் பரிந்துரைகளாலும் நான்கு வாரங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. ஜி.டி. நாயுடுவாக நடிகர் ஆர். மாதவனின் அசாத்திய நடிப்பும், காலனித்துவ ஆட்சிக் காலத்தில் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்காக அவர் எதிர்கொண்ட சவால்களும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன.</p><p>இதனைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி இத்திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பல்வேறு பிராந்திய மொழிகளில் வெளியானது. வெளியான ஒரே வாரத்திற்குள், இந்தியாவில் அதிகம் டிரெண்டாகும் திரைப்படங்களின் பட்டியலில் டாப் 2 இடங்களுக்குள் முன்னேறி <a href="https://www.maalaimalar.com/topic/ott">ஓடிடி தளத்தை</a> அதிரவைத்தது.</p><h2><strong>நெட்ஃபிளிக்ஸ் உலகளாவிய டாப் 10 பட்டியலில் ‘ஜி.டி.என்.’</strong></h2><p>இந்திய எல்லையைத் தாண்டி, இத்திரைப்படம் தற்போது <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D">நெட்ஃபிளிக்ஸ் </a>உலகளாவிய டாப் 10 திரைப்படங்களின் பட்டியலில் அதிகாரப்பூர்வமாக இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது. </p><p>வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் மட்டுமின்றி, உலகெங்கிலும் உள்ள சர்வதேச திரைப்பட ரசிகர்களிடமும் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.</p><p>தற்போது ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை, சிங்கப்பூர், பாகிஸ்தான் மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட பல நாடுகளில் 'டாப் 5' தரவரிசைக்குள் இப்படம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.</p><h2><strong>நட்சத்திர பட்டாளம் மற்றும் படக்குழு</strong></h2><p>இப்படத்தில் ஆர். மாதவனுடன் இணைந்து முன்னணி நட்சத்திரங்களான சத்யராஜ், ஜெயராம், பிரியாமணி மற்றும் <a href="https://www.maalaimalar.com/topic/dushara-vijayan">துஷாரா விஜயன்</a> உள்ளிட்ட பலரும் தங்களின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.</p><p>வலுவான கதைக்களத்தைக் கொண்ட இந்தியத் திரைப்படங்கள், ஸ்ட்ரீமிங் தளங்கள் மூலம் உலகளாவிய ரசிகர்களை மிக எளிதாகச் சென்றடைய முடியும் என்பதற்கு 'ஜி.டி.என்' திரைப்படம் மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது என சினிமா வர்த்தக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் வருகிற 15-ந்தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/sep-15th-power-cut-areas-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/sep-15th-power-cut-areas-in-chennai#comments</comments><guid isPermaLink="false">6cc4ec90-f994-4010-b91c-ec39df5b8d14</guid><pubDate>Sat, 12 Sep 2026 08:01:26 +0000</pubDate><atom:updated>2026-09-12T08:01:26.386Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>மின்தடை,TNEB,chennai power cut,Power Cut,தமிழ்நாடு மின்சார வாரியம்,சென்னையில் மின்தடை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/d7jhu7ci/powercut0.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மின்தடை]]></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/d7jhu7ci/powercut0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் <a href="https://www.maalaimalar.com/topic/சென்னையில்-மின்தடை">மின் தடை</a> செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><p>அந்த வகையில், வருகிற செவ்வாய்கிழமை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் வருகிற 15-ந்தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.  அதன்படி, நாளை திருவொற்றியூர் பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-</p><h2><strong>முடிச்சூர்</strong></h2><p>எஸ்.கே. அவென்யூ, பல்லவா நகர், மாருதி நகர், கலைஞர் சாலை, சிவா விஷ்ணு நகர், மதனாபுரம், ஞானபண்டிதர் நகர், சூரஜ் அவென்யூ, பிள்ளையார் கோவில் தெரு, வஞ்சிநாதன் தெரு, ஸ்ரீராம் நகர், நேரு தெரு, மணவாளன் நகர், செந்தில் நகர், இந்திரா காந்தி சாலை, கே.வி.டி. கிரீன் சிட்டி, செல்லியம்மன் கோவில் தெரு, பழைய பெருங்களத்தூர் மெயின் ரோடு, பார்வதி நகர். </p><h2><strong>சேலையூர்</strong></h2><p>புவனேஸ்வரி நகர், மல்லேஸ்வரி நகர், ஆண்டாள் நகர், ஜீவந்தபுரம், ஜல்வாவ் கார்டன், ஜல்வாவுவிகர், குமாரசாமி தெரு, பத்மாவதி நகர் 21 வது தெரு, அலமேலுபுரம். </p><h2><strong>குன்றத்தூர்</strong></h2><p>வழுத்தலம்பேடு கிராமம், விஜயராஜா நகர், நத்தம், வர்ஷ் நகர், சந்தோஷ் அவென்யூ, அருணாசலேஸ்வரர் நகர், சம்பந்தம் நகர், லட்சுமி நகர், ஐஸ்வர்யம் நகர், பத்மாவதி நகர், எம்.எம். அவென்யூ.</p>]]></content:encoded></item><item><title>ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஏவுகணை தயாரிப்பு: ஏமன் குழுவின் முயற்சியை வெளிப்படுத்திய &apos;ஆந்த்ரோபிக்&apos; நிறுவனம்!</title><link>https://www.maalaimalar.com/news/world/ai-technology-used-for-missile-production-anthropic-exposes-yemen-group</link><comments>https://www.maalaimalar.com/news/world/ai-technology-used-for-missile-production-anthropic-exposes-yemen-group#comments</comments><guid isPermaLink="false">091efb75-90cf-4d3f-b6ab-10c46867a975</guid><pubDate>Sat, 12 Sep 2026 07:59:10 +0000</pubDate><atom:updated>2026-09-12T07:59:10.150Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>செயற்கை நுண்ணறிவு,Anthropic,ஆந்த்ரோபிக்,Missile production,Claude AI,ஏவுகணை தயாரிப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/ro7frmq7/Untitled-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Anthropic]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/ro7frmq7/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வடக்கு ஏமனில் செயல்பட்டு வரும் இந்த அடையாளம் தெரியாத குழு, மூன்று வெவ்வேறு ஆயுத வளர்ச்சித் திட்டங்களில் ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியைப் பெற்றுள்ளது. </p><p>செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் உள்ள 'ஆந்த்ரோபிக்' நிறுவனம் தயாரித்துள்ள '<a href="https://www.maalaimalar.com/news/world/european-climate-agency-warns-2027-hottest-year">கிளாட்</a>' ஏஐ மாதிரியைப் பயன்படுத்தி, ஏமனில் உள்ள ஒரு குழு ஏவுகணை மற்றும் ராக்கெட் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஆயுதத் தயாரிப்பில் ஏஐ தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்த தனது புதிய அறிக்கையில் ஆந்த்ரோபிக் இந்த விவரங்களை வெளியிட்டுள்ளது.</p><h2>மூன்று முக்கிய <strong>ஆயுத திட்டங்கள்</strong></h2><p>வடக்கு ஏமனில் செயல்பட்டு வரும் இந்த அடையாளம் தெரியாத குழு, மூன்று வெவ்வேறு ஆயுத வளர்ச்சித் திட்டங்களில் ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியைப் பெற்றுள்ளது. இதில் வழிகாட்டப்பட்ட ராக்கெட், 2,000 கிலோமீட்டருக்கும் (1,243 மைல்) அதிகமான தூரம் சென்று தாக்கக்கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் 'R2000' எனப்படும் ஏவுகணைத் தொடர் தயாரிப்பு ஆகியவை அடங்கும்.</p><p>பொதுவாக மென்பொருள் பொறியாளர்களால் உருவாக்கப்படும் ஏவுகணைகளுக்கான வழிகாட்டுதல், வழிசெலுத்தல் மற்றும் கட்டுப்பாட்டு மென்பொருள்களை உருவாக்க இக்குழு கிளாட் ஏஐ-ஐப் பயன்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் ஏஐ பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தவிர்க்கும் பொருட்டு, தங்களது ஆயுதத் தயாரிப்புப் பணிகளைப் பல கணக்குகள் மூலம் பிரித்து, வழக்கமான மென்பொருள் சோதனைகள் போல காட்டி ஏஐ அமைப்பை ஏமாற்ற முயன்றுள்ளனர்.</p><h2>மீ<strong>ண்டும் ஏஐ உதவி</strong></h2><p>இக்குழுவினர் ஒரு நேரடி ராக்கெட் சோதனையையும் நடத்தியுள்ளனர். ஆனால் அந்தச் சோதனை தோல்வியில் முடிவடைந்ததைத் தொடர்ந்து, தோல்விக்கான காரணத்தைக் கண்டறியவும், தவறுகளைச் சரிசெய்யவும் மீண்டும் கிளாட் ஏஐ-இன் உதவியை நாடியுள்ளனர். மேலும், ஏஐ அமைப்பின் நேரடி இணைப்பு இல்லாதபோதும் பணிகளைத் தொடர வசதியாக, ஆஃப்லைன் உருவகப்படுத்துதல் கருவிகளையும் இவர்கள் உருவாக்கியுள்ளனர்.</p><h2>ஆ<strong>ந்த்ரோபிக் நடவடிக்</strong>கை</h2><p>இந்த முறையற்ற பயன்பாட்டைக் கண்டறிந்த உடனடியாக, அக்குழுவுடன் தொடர்புடைய அனைத்து ஏஐ கணக்குகளையும் ஆந்த்ரோபிக் நிறுவனம் தடை செய்துள்ளது. மேலும், இது தொடர்பான புலனாய்வுத் தகவல்களை சர்வதேசப் பாதுகாப்புப் பங்காளிகளுடன் பகிர்ந்துகொண்டுள்ளது. எதிர்காலத்தில் ஏஐ அமைப்புகள் ராணுவ நோக்கங்களுக்காகவோ அல்லது ஆயுதத் தயாரிப்பிற்காகவோ தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க கூடுதல் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளையும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>இருப்பினும், இந்த ஏஐ உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் முழுமையான செயல்பாட்டுக்கு வந்த ஆயுதமாக மாறவில்லை என்று ஆந்த்ரோபிக் உறுதியளித்துள்ளது. செங்கடல் பகுதியில் ஹூதி அமைப்பினரின் தாக்குதல்கள் அதிகரித்து வரும் சூழலில், ஏஐ தொழில்நுட்பம் ஆயுதக் குழுக்களின் கைக்குச் செல்வது உலகளாவிய பாதுகாப்பிற்கு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கொச்சி விமான நிலையத்தில் பயணிகளுக்கு உதவும் ரோபோ அறிமுகம்..!</title><link>https://www.maalaimalar.com/news/national/cial-introduces-passenger-assistance-robot-at-kochi-airport</link><comments>https://www.maalaimalar.com/news/national/cial-introduces-passenger-assistance-robot-at-kochi-airport#comments</comments><guid isPermaLink="false">e6d4591f-f88c-4734-a8ac-c1b43ce68772</guid><pubDate>Sat, 12 Sep 2026 07:58:01 +0000</pubDate><atom:updated>2026-09-12T07:58:01.722Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ரோபோ,கொச்சி விமான நிலையம்,robot,cochin airport</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/ogqlupp3/Robot0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கொச்சி விமான நிலையம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/ogqlupp3/Robot0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரள மாநிலமை் கொச்சின் விமான நிலையத்தில் முதல் கட்டமாக, உள்நாட்டுப் பிரிவு பாதுகாப்புப் பகுதியில் (Domestic Security Hold Area) அமைந்துள்ள கலங்கன் (Kalangan) எனும் கலை அருங்காட்சியகத்தில் பயணிகளுக்கு உதவும் ரோபோ ஒன்று பணியமர்த்தப்பட்டுள்ளதாக CIAL தெரிவித்துள்ளது. CIAL-ன் நிர்வாக இயக்குநர் எஸ். சுஹாஸ் (IAS) இந்த ரோபோ சேவையைத் தொடங்கி வைத்தார்.</p><h2>பயணிகளை வரவேற்கும் ரோபோ</h2><p>இந்த ரோபா பயணிகளை வரவேற்பது, வழிமுறைகள் வழங்குவது, விமானத்தின் நேரம் குறித்த தகவல்களை வழங்குவது உள்ளிட்ட பணிகளை செய்யும். அத்துடன் பயணிகளை விமானத்தில் ஏறும் வாயில்கள் (boarding gates) மற்றும் பிற விமான நிலைய வசதிகளுக்கு அழைத்துச் செல்கிறது.</p><p>CIAL சேவைகள், விமான அட்டவணைகள் மற்றும் வாயில் எண்கள் உள்ளிட்ட பயணம் தொடர்பான உதவிகளைப் பெற பயணிகள் இந்த ரோபோவுடன் உரையாடலாம்.</p><p>கதகளி மற்றும் ஒட்டன்துள்ளல் போன்ற பாரம்பரிய கலை வடிவங்கள் மற்றும் கலங்கன் பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சிற்பங்கள், கலைப்படைப்புகள் பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் கேரளாவின் கலாச்சார பாரம்பரியத்தையும் இந்த ரோபோ முன்னிலைப்படுத்தும்.</p><h2>செக்-இன் கூடங்களிலும் பணியமர்த்த திட்டம்</h2><p>மேலும், இது பயணிகளை அந்தந்தக் கலைக் கண்காட்சிப் பகுதிகளுக்கு வழிநடத்திச் செல்லும். அடுத்த கட்டமாக, விமான நிலையத்தின் செக்-இன் (check-in) கூடங்களிலும் பயணிகளுக்கு உதவும் ரோபோக்களைப் பணியமர்த்த CIAL திட்டமிட்டுள்ளது.</p><p>அத்துடன், முனையத்திற்குள் பயணிகளுக்கு நேரடியாக உணவு மற்றும் பிற பொருட்களைக் கொண்டு வந்து சேர்க்கக்கூடிய 'டெலிவரி ரோபோக்களை' (delivery robots) அறிமுகப்படுத்துவது குறித்தும் விமான நிலைய நிர்வாகம் பரிசீலித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>புனேவைச் சேர்ந்த கைனடிக்ஸ் ரோபோட்டிக்ஸ் (Kinetics Robotics) நிறுவனம் CIAL-க்காக இந்த ரோபோவை உருவாக்கியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ராணுவ முகாமில் புகுந்து AK-203 துப்பாக்கிகள், 1900 தோட்டாக்களை சுருட்டிய ஓய்வுபெற்ற ஹவில்தார்!</title><link>https://www.maalaimalar.com/news/national/ex-soldier-arrested-for-theft-of-ak-203-rifles-and-1900-rounds</link><comments>https://www.maalaimalar.com/news/national/ex-soldier-arrested-for-theft-of-ak-203-rifles-and-1900-rounds#comments</comments><guid isPermaLink="false">501f3234-047a-43ed-90c2-d8b2a04751d4</guid><pubDate>Sat, 12 Sep 2026 07:54:23 +0000</pubDate><atom:updated>2026-09-12T07:54:23.430Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Hyderabad,ஐதராபாத்,Army Theft,Army Havildar Arrested,துப்பாக்கிகொள்ளை,Army Rescue,Military Security Lapse,Military Rifles</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/zmdmxf07/Military-Rifles" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Military Rifles]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/zmdmxf07/Military-Rifles?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D">ஐதராபாத் </a>செகந்திராபாத் கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள அதீத பாதுகாப்பு நிறைந்த பொல்லாரம் ராணுவ முகாமில் இருந்து, துப்பாக்கிகள் மற்றும் சுமார் 1,900 தோட்டாக்களைத் திருடிய ஓய்வு பெற்ற ராணுவ ஹவில்தார் ஒருவரை ஐதராபாத் போலீசார் கைது செய்துள்ளனர்.</p><h2>பிடிபட்ட நபர் யார்?</h2><p>கைது செய்யப்பட்ட நபர் 20 பட்டாலியன் மெட்ராஸ் ரெஜிமென்ட்டில் ஹவில்தாராகப் பணியாற்றிய உப்புதொல்லா மல்லேஷ் (37) என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். </p><p>2010-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்த இவர், கடந்த ஜூன் 30 அன்று ராணுவப் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். </p><p>தனக்கு வழங்கப்பட்ட முன்கூட்டிய ஓய்வு காரணமாக ஏற்பட்ட அதிருப்தியே இந்தத் திருட்டுக்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><h2>துணிகர திருட்டு மற்றும் கடத்தல்</h2><p>ஓய்வு பெற்று சில மாதங்களே ஆன நிலையில், கடந்த ஆகஸ்ட் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட நள்ளிரவில் மல்லேஷ் இந்தத் திருட்டை அரங்கேற்றியுள்ளார். </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D">ராணுவ முகாமின்</a> ஆயுதக் கிடங்கு மற்றும் பாதுகாப்புப் பெட்டகங்களை உடைத்து ஆயுதங்களை சூறையாடியுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.</p><h2>திருடப்பட்ட ஆயுதங்களின் பட்டியல்</h2><p>4 AK-203 ரக துப்பாக்கிகள்,1 இன்சாஸ் ரக துப்பாக்கி, 7 பிஸ்டல்கள், துப்பாக்கி குண்டுகள் நிரப்பும் மேகசின்கள், 1 இரவு நேரக் கண்காணிப்பு பைனாகுலர் போன்ற சுமார் 1,900 ரவுண்ட் தோட்டாக்கள் திருடப்பட்டுள்ளன.</p><h2>போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற தருணம்</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE">தெலங்கானா </a>டிஜிபி சி.வி. ஆனந்த் இதுகுறித்துத் தெரிவிக்கையில், மல்லேஷ் ஆயுதங்களைத் திருடிவிட்டு அதிகாலை 4:34 மணியளவில் பாலாஜி நகரிலுள்ள தனது வீட்டிற்குச் சென்றது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.</p><p>பின்னர், தனக்குச் சொந்தமான வெள்ளை நிற பிரெஸ்ஸா காரில் ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு அச்சம்பேட்டை நோக்கிப் புறப்பட்டார். </p><p>போலீசாரின் சோதனச் சாவடிகள் மற்றும் சுங்கச்சாவடிகளை தவிர்ப்பதற்காக அவர் ஸ்ரீசைலம் சாலையைப் பயன்படுத்தாமல், வெளிவட்டச் சாலை, சாகர் ரிங் ரோடு மற்றும் பெங்களூரு கேட் சாலை வழியாகப் பயணித்துள்ளார்.</p><h2>காரில் பயணிகளை ஏற்றி நாடகம்</h2><p>ராணுவப் பணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, மல்லேஷ் தனது காரை வாடகைக்கு ஓட்டி பிழைப்பு நடத்தி வந்துள்ளார். </p><p>இந்தத் திருட்டுப் பயணத்தின் போது, போலீசாருக்குத் தன் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காகவும், தான் வேறு வேலைக்காகத் தான் அச்சம்பேட்டை சென்றேன் என்பதைக் காட்டுவதற்காகவும் வழியில் பயணிகளை காரில் ஏற்றியுள்ளார்.</p><p>சாகர் ரிங் ரோடு டாக்ஸி பாயிண்ட் அருகே 4 பயணிகளை ஏற்றி தேவராக்கொண்டாவில் இறக்கிவிட்டு அவர்களிடம் பணத்தைப் பெற்றுள்ளார். தொடர்ந்து திண்டி பகுதியில் மேலும் 2 பயணிகளை ஏற்றி இறக்கியுள்ளார். ஆகஸ்ட் 31 மதியம் 1:15 மணியளவில் அவர் அச்சம்பேட்டையை சென்றடைந்துள்ளார்.</p><h2>சிக்கியது எப்படி? ஆயுதங்கள் மீட்பு!</h2><p>மல்லேஷ் மீது போலீசாருக்குச் சந்தேகம் வலுத்ததை அடுத்து, பயந்துபோன அவர் செப்டம்பர் 6 அன்று ஆயுதங்களை வேறு இடத்திற்கு மாற்றியுள்ளார். எனினும், தீவிர விசாரணையில் செப்டம்பர் 10 அன்று மல்லேஷ் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.</p><p>அவரது ஒப்புதல் வாக்குமூலத்தைத் தொடர்ந்து, ஐதராபாத் டாஸ்க் ஃபோர்ஸ் போலீசார் மற்றும் டிசிபி தலைமையிலான குழுவினர், திருடப்பட்ட அனைத்து AK-203 துப்பாக்கிகள், பிஸ்டல்கள் மற்றும் 1,900 தோட்டாக்கள் அடங்கிய ஒட்டுமொத்த ஆயுதக் குவியலையும் பத்திரமாக மீட்டனர். </p><p>இந்தத் திருட்டின் பின்னணியில் வேறு ஏதேனும் சதித்திட்டம் உள்ளதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>அதிரடி அரசியல் திரில்லர்: கௌதம் கார்த்திக் - செல்வராகவன் நடிக்கும் &apos;பிளடி பாலிடிக்ஸ்&apos; டீசர் வெளியானது!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/goutham-karthik-selvaraghavan-bloody-politics-teaser</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/goutham-karthik-selvaraghavan-bloody-politics-teaser#comments</comments><guid isPermaLink="false">0693c5d4-5527-4292-98f4-c01c49fba342</guid><pubDate>Sat, 12 Sep 2026 07:43:50 +0000</pubDate><atom:updated>2026-09-12T07:43:50.597Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>Sam C.S,Gautham Karthik,Vijay sethupathi,கௌதம் கார்த்திக்,Bloody Politics,பிளடி பாலிடிக்ஸ்,Selva Raghavan,Dhina Raghavan</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/zyaggu9n/Bloody-Politics-Teaser" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bloody Politics Teaser]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/zyaggu9n/Bloody-Politics-Teaser?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D">கௌதம் கார்த்திக்கின்</a> பிறந்தநாளை முன்னிட்டு, அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் 'பிளடி பாலிடிக்ஸ்' திரைப்படத்தின் அதிரடியான டீசர் வெளியாகியுள்ளது. </p><p>இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் கௌதம் கார்த்திக்குிற்கு திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்துகளைக் குவித்து வரும் வேளையில், இந்த டீசர் ரசிகர்களுக்கு ஒரு டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது.</p><p>அறிமுக இயக்குனர் தினா ராகவன் இயக்கிய இத்திரைப்படத்தின் டீசரை மக்கள் செல்வன் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF">விஜய் சேதுபதி </a>இந்த டீசரைத் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு படக்குழுவினருக்கும், பிறந்தநாள் காணும் கௌதம் கார்த்திக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.</p><h2><strong>பிறந்தநாள் பரிசாக அமைந்த டீசர் காட்டும் அரசியல் களம்</strong></h2><p>107 வினாடிகள் (1 நிமிடம் 47 நொடிகள்) ஓடக்கூடிய இந்த டீசர், பிறந்தநாளை கொண்டாடும் கௌதம் கார்த்திக்கை ஒரு ஆக்ரோஷமான மற்றும் லட்சியம் கொண்ட இளம் அரசியல்வாதியாக முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் அறிமுகப்படுத்துகிறது. </p><p>'இளையா' என்று இப்படத்தில் கெளதம் கார்த்திக்கு பெயரிடப்பட்டுள்ளது.</p><p>மக்களிடையே இருக்கும் பிரபலம் எப்படி வாக்குகளாக மாறுகிறது என்பது போன்ற வசனங்கள் டீசரில் இடம்பெற்றுள்ளன. மேலும், இந்தத் திரைப்படம் தமிழக அரசியல் சூழலை தெரிவிக்கின்றன. படத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D">இயக்குனர் செல்வராகவன்</a> இரக்கமற்ற ஒரு மூத்த அரசியல்வாதி கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார்.</p><h2><strong>பின்னணி மற்றும் கதைக்களம்</strong></h2><p>தேசிய விருது பெற்ற இயக்குனர் ராஜு முருகனிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய தினா ராகவன் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.</p><p>தென் சென்னை பகுதியின் அடிமட்ட அரசியல் மற்றும் அங்கு வாழும் மக்களின் எதார்த்தமான வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. </p><p>படத்தின் அழுத்தமான அரசியல் வசனங்களை இயக்குனர் ராஜு முருகன் எழுதியுள்ளார். படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.</p><h2><strong>தயாரிப்பு மற்றும் நட்சத்திர பட்டாளம்</strong></h2><p>இப்படத்தை 'டிராஃப்ட் பை ஜிகேபி' நிறுவனம் சார்பில் கணேஷ் கே. பாபு தயாரித்துள்ளார். சஞ்சய் முத்துக்குமார் இணை தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.</p><p>இப்படத்தில் கௌதம் கார்த்திக், செல்வராகவனுடன் இணைந்து பிரபல இயக்குனர் பி. வாசு, அஞ்சனா நேத்ரன், ராபி, ஏ. வெங்கடேஷ், மாறன், இந்துமதி, வி.ஐ.எஸ் ஜெயபாலன், ஆதித்யா கதிர் மற்றும் பாக்கியம் சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்கள் நடித்துள்ளனர். </p><p>பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவையும், தீபக் எஸ் படத்தொகுப்பையும் கவனித்துள்ளனர்.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/mwdrLGGFT1I"></iframe></figure><p>'பிளடி பாலிடிக்ஸ்' படத்தின் டிரெய்லர், ஆடியோ வெளியீட்டு விழா மற்றும் திரையரங்கு ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புகளைப் படக்குழுவினர் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி: எரிசக்தி துறையை மேம்படுத்துவதில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும்- தினகரன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-says-tvk-government-must-focus-on-improving-the-energy-sector</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-says-tvk-government-must-focus-on-improving-the-energy-sector#comments</comments><guid isPermaLink="false">bc831f30-2f74-4fed-b589-6eea35419037</guid><pubDate>Sat, 12 Sep 2026 07:30:36 +0000</pubDate><atom:updated>2026-09-12T07:30:36.994Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,AMMK,TTV Dhinakaran,அமமுக,டிடிவி தினகரன்,மின் தடை,Power Cut</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/cmtxc5gh/TTVDhinakaran001.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/cmtxc5gh/TTVDhinakaran001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>வீண் விதண்டாவாதப் பேச்சுகளின் மூலம் மக்களை மடைமாற்றுவதை விட்டுவிட்டு, எரிசக்தி துறையை மேம்படுத்துவதில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/டிடிவி-தினகரன்">டி.டி.வி.தினகரன்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>கடும் இன்னல்கள்</strong></h2><p>தலைநகர் சென்னையில் தொடங்கி, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p>குறிப்பாக, இரவு நேரங்களில் அதிகளவில் ஏற்படும் மின்வெட்டால் பச்சிளம் குழந்தைகள் தொடங்கி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினருமே தங்களின் தூக்கத்தைத் தொலைத்து, கடும் இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.</p><p>மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான மின்சாரத்தைத் தடையின்றி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய துறை சார்ந்த அமைச்சர், மக்களை மடைமாற்றும் விதமாக முடிந்து போன கதைகளையும், காலம் கடந்த குற்றச்சாட்டுகளையும் தோண்டி எடுத்து சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதிலேயே முழு கவனத்தையும் செலுத்தி, ஒட்டுமொத்த எரிசக்தி துறையையும் பாழாக்கிக் கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.</p><h2><strong>ஏற்புடையதல்ல</strong></h2><p>மின்சாரத்தை உற்பத்தி செய்து, அதனைத் தடையின்றி விநியோகிக்க வேண்டிய தவெக அரசு, அதற்கு மாறாக அறிவிக்கப்படாத மின்வெட்டுகளையும், கூடுதல் மின்கட்டணச் சுமையையும் ஏற்படுத்தி, தனது திறனற்ற நிர்வாகத்தை மறைக்க ஏழை, எளிய விளிம்புநிலைப் பொதுமக்களை வாட்டி வதைப்பது ஏற்புடையதல்ல.</p><p>எனவே, தமிழகத்தில் நிலவும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டுகளைத் தடுத்து நிறுத்துவதோடு, பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என எரிசக்தி துறையையும், தமிழ்நாடு அரசையும் வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தடைகளை நீக்கும் விநாயகர் சதுர்த்தி: உகந்த வழிபாட்டு நேரமும்... சிறப்பு தகவல்களும்!</title><link>https://www.maalaimalar.com/spirituality/important-points-to-note-on-vinayagar-chaturthi</link><comments>https://www.maalaimalar.com/spirituality/important-points-to-note-on-vinayagar-chaturthi#comments</comments><guid isPermaLink="false">25e2c7ef-a03d-432a-a935-11020175690f</guid><pubDate>Sat, 12 Sep 2026 07:10:38 +0000</pubDate><atom:updated>2026-09-12T07:10:38.923Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,vinayagar,விநாயகர்,Vinayagar Chaturthi 2026,விநாயகர் சதுர்த்தி 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/u88zd3le/vinayagar01.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விநாயகர்]]></media:title><media:description type="html"><![CDATA[ விநாயகர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/u88zd3le/vinayagar01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>விநாயகர் சதுர்த்தி அன்று எந்த நேரத்தில் படையல் போட்டு வழிபடலாம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்வோமா!</strong></em></p><p>முழுமுதற் கடவுள், தடைகளை நீக்குபவர் ஞானத்தின் அதிபதி என்றெல்லாம் போற்றப்படுபவர் விநாயகப் பெருமான். அவர் அவதரித்த திருநாளை <a href="https://www.maalaimalar.com/topic/விநாயகர்-சதுர்த்தி">விநாயகர் சதுர்த்தி</a>. ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி திதியன்று இந்த பண்டிகை இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரலா மாநிலங்களில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. </p><p>அப்படியான விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனால் விநாயகர் சதுர்த்தி அன்று எந்த நேரத்தில் படையல் போட்டு வழிபடலாம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க...</p><h2><strong>* விநாயகரை வழிபட உகந்த நேரம்</strong> </h2><p>திங்கட்கிழமை காலை 6 மணி முதல் 7 மணி வரை, மதியம் 12 மணி முதல் 1 மணிவரையும் மற்றும் 1 மணிமுதல் 2 மணி வரையும் விநாயகரை வழிபடலாம். </p><figure><img alt="மஞ்சளில் விநாயகர்" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/w5gfdgvt/vinaygar02.jpg" /><figcaption>மஞ்சளில் விநாயகர்</figcaption></figure><h2><strong>* மஞ்சளில் விநாயகர் செய்வது எப்படி?</strong> </h2><p>மஞ்சள் பொடி + மைதா ( பிணைப்புப் பொருளாக செயல்படும்) + சிறிது சர்க்கரை + தண்ணீர் சேர்த்து பிசைந்து விநாயகரை உருவாக்கலாம். </p><h2><strong>விநாயகர் சிலை வாங்க நல்ல நேரம்</strong></h2><p>நாளை (செப்டம்பர் 13ந்தேதி) பகல் 3.10 மணி முதல் மாலை 4.20 வரை, அல்லது நாளை மறுநாள் (செப்டம்பர் 14-ந்தேதி) காலை 9.10 மணி முதல் 10.20 வரை.</p><p>விநாயகர் சதுர்த்திக்கு சிலையை வாங்கும்போது எப்படி வாங்குவது என்று தெரியாமல் சில தவறான சிலைகளை வாங்குகிறோம். கடையில் பார்க்கிற எல்லா சிலைகளையும் வாங்கக்கூடாது. விநாயகர் சிலை வாங்குவதற்கு என்று ஒருமுறை உள்ளது. </p><figure><img alt="விநாயகர்" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/xparx29u/vinayagar.jpg" /><figcaption>விநாயகர்</figcaption></figure><h2><strong>விநாயகர் சிலையை வாங்கும் முறை</strong></h2><p>* அமர்ந்திருக்கும் விநாயகரை தான் வாங்க வேண்டும். </p><p>* விநாயகருடைய துதிக்கை இடது பக்கமாக திரும்பி இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும். </p><p>* சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு ஆகிய நிறங்களில் வாங்க வேண்டும். </p><p>* விநாயகர் கையில் பிரசாதம் இருக்கும்மாதிரி சிலையை பார்த்து வாங்குங்கள். </p><p>* மூஷிக வாகனம் விநாயகர் பக்கத்தில் இருக்கும் மாதிரியும் பார்த்து வாங்குகள். </p><p>இந்த மாதிரி சிலையை வாங்குவதால் காரிய தடை நீங்கும், நமது வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும், விநாயகரின் முழு அருளும் அன்று நமக்கு கிடைத்து விடும். </p><h2><strong>* விநாயகர் வழிபாட்டில் ‘தானமும் அதன் பலன்களும்’</strong> </h2><p>பழங்கள் தானம்:  புத்தி கூர்மை, தொழில் லாபம், வம்ச விருத்தி </p><p>ஆடை (வஸ்திர) தானம் : நாள்பட்ட நோய்கள் நீங்கி ஆயுள் பலம் கூட்டும். </p><p>விளக்கு/ நெய் தானம் : கண் திருஷ்டி நீங்கும், பித்ரு ஆசி கிடைக்கும். </p><p>தேங்காய் தானம்:  காரிய வெற்றி. ராகு கேது தோஷ நிவர்த்தி </p><p>மஞ்சள்/ மாங்கல்யப் பொருட்கள்: திருமணத் தடைகள் நீங்கும், சுமங்கலி பாக்கியம். </p><p>அன்னதானம்: வறுமை நீங்கும், தானிய லட்சுமி அருள் கிடைக்கும்</p><h2><strong>*  விநாயகருக்கு எத்தனை சிதறு தேங்காய் உடைக்க வேண்டும்? தேங்காய் உடைப்பதன் பலன்கள் என்ன?</strong></h2><p>11 சிதறு தேங்காய் உடைத்தால் விரைவில் திருமணம் கைக்கூடும்.</p><p>9 சிதறு தேங்காய் உடைத்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.</p><p>7 சிதறு தேங்காய் உடைத்தால் கடன் தொல்லை நீங்கும்.</p><p>5 சிதறு தேங்காய் உடைத்தால் சிறந்த கல்வி பெறலாம். </p><p>3 சிதறு தேங்காய் உடைத்தால் உடல் நலம் பெறலாம். தொழில் உயர்வு, வேலை வாய்ப்பு கிடைக்கும் </p><p>1 சிதறு தேங்காய் உடைத்தால் தடைகள் நீங்கும். </p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கு தடை கோரி ஐகோர்ட்டில் மனு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/petition-filed-in-high-court-seeking-a-stay-on-maduranthakam-and-dharapuram-by-election</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/petition-filed-in-high-court-seeking-a-stay-on-maduranthakam-and-dharapuram-by-election#comments</comments><guid isPermaLink="false">cf93d5cb-0e4f-4604-a1d3-635e2961edaf</guid><pubDate>Sat, 12 Sep 2026 07:08:02 +0000</pubDate><atom:updated>2026-09-12T07:08:02.603Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Madras High Court,சென்னை ஐகோர்ட்,by election,dharapuram,தாராபுரம்,Maduranthakam,மதுராந்தகம்,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/6khbfjl5/highcourt.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Madras High Court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/6khbfjl5/highcourt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p> <p>கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு எம்எல்ஏக்கள், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு ஆளுங்கட்சியில் இணைந்தனர்.</p> <p>இதில் தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ள, அம்பாசமுத்திரம் பெருந்துறை கரூர் விராலிமலை மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளுக்கு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-by-elections-tvk-sets-up-election-task-force">இடைத்தேர்தல்</a> அறிவிக்க ஐகோர்ட்டு தடை விதித்து உள்ளது.</p><p>தேர்தல் வழக்கு நிலுவையில் இல்லாததால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்துள்ளது.</p>  <p>இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான குறுகிய காலத்தில், மக்கள் தீர்ப்பை புறக்கணித்து அரசியல் காரணங்களுக்காக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததால், இடைத்தேர்தலில் அவர்கள் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, தேர்தல் செலவை டெபாசிட் செய்யும் வகையில் உரிய நடைமுறையை வகுக்கும் படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த வக்கீல் சுதன் என்பவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%90%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D">ஐகோர்ட்டில்</a> பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.</p> <p>அந்த மனுவில், சொந்த அரசியல் காரணங்களுக்காக எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்ததால், பொதுமக்களின் வரிப்பணத்தில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய உள்ளது. இந்த செலவுகளுக்கு அவர்களை பொறுப்பாக்கும் வகையில் உரிய நடைமுறைகளை வகுக்க வேண்டும்.</p> <p>மேலும், தேர்தல் முடிவுகள் வெளியான குறுகிய காலத்தில் அரசியல் காரணங்களுக்காக மக்கள் தீர்ப்பை புறக்கணித்து பதவி விலகுபவர்களை குறிப்பிட்ட காலத்துக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.</p> <p>இந்த வழக்கு முடியும் வரை மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும். இந்த தொகுதிகளுக்கு தவெக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமாரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோரின் வேட்பு மனுக்களை ஏற்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும்.</p> <p>அதேபோல, திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த ஆகும் செலவுகளை அறிக்கையாக தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.</p><p>இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>பிரிக்ஸ் மாநாடு: இந்தியா வந்தடைந்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங்</title><link>https://www.maalaimalar.com/news/national/brics-summit-chinese-president-xi-lands-in-delhi</link><comments>https://www.maalaimalar.com/news/national/brics-summit-chinese-president-xi-lands-in-delhi#comments</comments><guid isPermaLink="false">22abc559-c71b-4650-b9cc-ad85c699faf5</guid><pubDate>Sat, 12 Sep 2026 06:59:02 +0000</pubDate><atom:updated>2026-09-12T06:59:02.616Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Xi Jinping,ஜி ஜின்பிங்,BRICS Summit,பிரிக்ஸ் மாநாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/1yhfr7sd/XiJinping001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜி ஜின்பிங்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/1yhfr7sd/XiJinping001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரிக்ஸ் மாநாடு இன்று தொடங்கி நாளை வரை நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக உலக தலைவர்கள் இந்திய வந்த வண்ணம் உள்ளனர். நேற்று ரஷிய அதிபர் புதின், ஈரான் அதிபர் பெசெஸ்கியன் உள்ளிட்ட தலைவர்கள் வந்தனர்.</p><p>இந்த நிலையில் இன்று மதியம் சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வந்தடைந்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஜி ஜின்பிங் இந்தியா வந்துள்ளார்.</p><h2>பிரதமர் மோடி- ஜி ஜின்பிங் சந்திப்பு</h2><p>பிரிக்ஸ் மாநாட்டிற்கு இடையே இந்திய பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர்.</p><p>நேற்று ரஷிய அதிபர் புதின் உடன் இந்திய பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது புதினிடம் உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி முயற்சிகளுக்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.</p><p>மேலும், அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, எரிசக்தி, விண்வெளி மற்றும் திறன் பரிமாற்றம் ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகள் குறித்து பிரதமர் மோடியும் அதிபர் புதினும் விவாதித்தனர். அத்துடன் மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல்கள் மற்றும் கருங்கடல் பிராந்தியத்தின் நிலைமை குறித்து பிரதமர் மோடியும் அதிபர் புதினும் தங்கள் கண்ணோட்டங்களைப் பகிர்ந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>உதவியாளர் வீட்டில் பணம், நகைகளை கைப்பற்றிய ED: கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் விலகிய காங்கிரஸ் தலைவர்</title><link>https://www.maalaimalar.com/news/national/congress-leader-harish-rawat-quits-party-posts-after-cash-jewellery-recovered-from-aide-house</link><comments>https://www.maalaimalar.com/news/national/congress-leader-harish-rawat-quits-party-posts-after-cash-jewellery-recovered-from-aide-house#comments</comments><guid isPermaLink="false">20aa8128-3a8c-4e4a-8580-061e4c28324e</guid><pubDate>Sat, 12 Sep 2026 06:30:51 +0000</pubDate><atom:updated>2026-09-12T06:30:51.209Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,Harish Rawat,ஹரிஷ் ராவத்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/8wtq2lz5/Rawatquits001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஹரிஷ் ராவத்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/8wtq2lz5/Rawatquits001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரகாண்ட் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஹரிஷ் ராவத். இவர் ஏற்கனவே உத்தரகாண்ட் மாநில முதல்வராக இருந்துள்ளார். இவரின் 2014 முதல் 2017-ம் ஆண்டு வரையிலான முதல்வர் பதவி காலத்தில், சிறப்புப்பணி அதிகாரியாக செயல்பட்டவர் சந்தன் சிங் ஜீனா. தற்போது தனிப்பட்ட உதவியாளராக (PA) உள்ளார்.</p><h2>32 லட்சம் ரூபாய் பணம்</h2><p>இவரது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அப்போது 32 லட்சம் ரூபாய் பணம் மற்று 12-க்கும் மேற்பட்ட விலையுயர்ந்த கடிகாரங்களை அதிகாரிகள் கைப்பற்றினார்.</p><p>உதவியாளர் வீட்டில் இருந்து பணம் மற்றும் நகை கைப்பற்றப்பட்ட நிலையில், ஹாரிஷ் ராவத், காங்கிரஸ் கட்சியில் தனது அனைத்து பதவிகளிலும் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தலைமை ஆசிரியர்கள் மீது நிதிச் சுமை: அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டச் செலவை அரசே முழுமையாக ஏற்க வேண்டும்- தினகரன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-urges-government-itself-must-fully-bear-the-cost-of-the-breakfast-scheme-in-government-schools</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-urges-government-itself-must-fully-bear-the-cost-of-the-breakfast-scheme-in-government-schools#comments</comments><guid isPermaLink="false">31bf92c7-ac98-4461-af12-35a2056c644b</guid><pubDate>Sat, 12 Sep 2026 06:01:40 +0000</pubDate><atom:updated>2026-09-12T06:01:40.810Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,AMMK,TTV Dhinakaran,அமமுக,டிடிவி தினகரன்,காலை உணவு திட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/6nb3d7aa/TTVDhinakaran001.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ டி.டி.வி.தினகரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ டி.டி.வி.தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/6nb3d7aa/TTVDhinakaran001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மீது தேவையற்ற பொருளாதாரச் சுமையை ஏற்றும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் எனவும் தவெக அரசை வலியுறுத்துவதாக டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.</strong></em> </p><p>அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>ஏற்புடையதல்ல</strong></h2><p>தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பெருந்தலைவர் காமராஜர் <a href="https://www.maalaimalar.com/topic/காலை-உணவு-திட்டம்">காலை உணவுத் திட்டம்</a> வரும் 17ஆம் தேதி முதல் விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், அந்நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் பள்ளித் தலைமை ஆசிரியர்களே தங்களது சொந்த செலவில் மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p>ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி உட்பட, அரசால் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் நிலையில், அதற்குத் தேவையான பெயர்ப்பலகை, மின்விளக்கு, குடிநீர் உள்ளிட்ட தொடக்க நிகழ்வுக்கான ஏற்பாடுகளுக்கான செலவினங்களைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் தலையில் சுமத்துவது ஏற்புடையதல்ல.</p><p>பல ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பயன்பெறக்கூடிய ஒரு திட்டத்தை விரிவாக்கம் செய்யும்போது, அதற்கான ஏற்பாட்டுச் செலவுகளுக்குத் தேவையான நிதியை ஒதுக்க மறுப்பதும், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மீது பொருளாதாரச் சுமையை ஏற்றுவதும், அரசு நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள நிர்வாகச் சிக்கல்களையும் அதிகாரக் குளறுபடிகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.</p><p>எனவே, செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற உள்ள பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்திற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு நிதியின் மூலமாகவே மேற்கொள்ள வேண்டும் என்பதோடு, பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மீது தேவையற்ற பொருளாதாரச் சுமையை ஏற்றும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் எனவும் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>6 வருடத்திற்குப் பிறகு குவாங்சூ- டெல்லி இடையே விமான சேவையை தொடங்கும் சீன நிறுவனம்</title><link>https://www.maalaimalar.com/news/national/china-southern-airlines-to-resume-guangzhou-to-delhi-flights-after-6-years</link><comments>https://www.maalaimalar.com/news/national/china-southern-airlines-to-resume-guangzhou-to-delhi-flights-after-6-years#comments</comments><guid isPermaLink="false">cd975128-8cb1-4b60-b0b5-157366eba254</guid><pubDate>Sat, 12 Sep 2026 05:51:13 +0000</pubDate><atom:updated>2026-09-12T05:51:13.856Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா சீனா,India China,விமான போக்குவரத்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/7mlzyq5l/ChinaSouther-Airlines.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ China Southern Airlines]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/7mlzyq5l/ChinaSouther-Airlines.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சீனாவின் China Southern Airlines நிறுவனம், இந்தியாவின் தலைநகர் டெல்லிக்கு சீனாவின் குவாங்சூவில் இருந்து விமானப் போக்குவரத்து வருகிற 21-ந்தேதியில் இருந்து தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளது.</p><h2>வாரத்திற்கு 100 விமானங்கள்</h2><p>China Southern Airlines நிறுவனத்தின் தலைமையகம் சீனாவின் தெற்கு குவாங்டோங் பிராந்தியத்தின் குவாங்சூவில் உள்ளது. சீனாவில் உள்ள முக்கியமான விமான சேவை நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இருவழிப் பாதையில் வாரத்திற்கு 100 விமானங்கள் இயக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது.</p><p>இந்தியாவில் இன்று பிரிக்ஸ் மாநாடு தொடங்க இருக்கிறது. இதில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொள்ள இருக்கிறார். இந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><h2>கொரோனாவில் தடைபட்டு விமான சேவை</h2><p>கடந்த 6 வருடத்திற்கு முன்னதாக கொரோனா தொற்று காரணமாக விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன்பின் எல்லையில் மோதல் ஏற்பட்டு பதற்றம் நிலவியதால் விமான சேவை தொடர்ந்து நிறுத்தப்பட்டிருந்தது.</p><h2>மோடி- ஜி ஜின்பிங் சந்திப்பால் மீண்டும் தொடங்கப்பட்ட விமான சேவை</h2><p>இந்திய பிரதமர் மோடி மற்றும் சீனா அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் கடந்த 2024 மற்றும் 2025-ம் ஆண்டு நேரடியாக சந்தித்து பேசினார். அதனடிப்படையில் படிப்படியாக இருநாடுகளுக்கு இடையிலான விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டு வருகிறது.</p><p>கடந்த மார்ச் மாதம் இண்டிகோ நிறுவுனம் ஷாங்காய்- கொல்கத்தா இடையே தினசரி விமான சேவையை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்- த.வெ.க.வில் தேர்தல் பணிக்குழு அமைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-by-elections-tvk-sets-up-election-task-force</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-by-elections-tvk-sets-up-election-task-force#comments</comments><guid isPermaLink="false">136ac976-440a-4ef8-ac06-cdcb999216b5</guid><pubDate>Sat, 12 Sep 2026 05:50:45 +0000</pubDate><atom:updated>2026-09-12T05:50:45.285Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,dharapuram,தாராபுரம்,மதுராந்தகம்,tvk,by elections,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/pxeeeri9/TVK.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தவெக]]></media:title><media:description type="html"><![CDATA[ தவெக]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/pxeeeri9/TVK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இடைத்தேர்தல் வரலாற்றிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர் என்கிற புதிய வரலாறு படைக்கும் வகையில் அனைவரும் தேர்தல் பணியாற்றிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/தவெக">தமிழக வெற்றிக்கழகத்</a> தலைவரும், முதலமைச்சருமான விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>அனைவருக்கும் வணக்கம்,</p><p>வருகின்ற அக்டோபர் 6-ந்தேதி நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகளை மேற்கொள்ள தேர்தல் பணிக்குழுவும், பணிகளைக் கண்காணிக்க தேர்தல் கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்படுகிறார்கள். </p><p>தேர்தல் கண்காணிப்பாளர்கள்:</p><p>1. அமைச்சர் N. ஆனந்த்</p><p>2. அமைச்சர் K.A. செங்கோட்டையன்</p><p>3. அமைச்சர் CTR நிர்மல் குமார்</p><p>தேர்தல் பணிக்குழு</p><p>35-மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதி.</p><p>பொறுப்பாளர்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</p><p>இணைப் பொறுப்பாளர்கள்:</p><p>1. அமைச்சர் ராஜ்குமார்</p><p>2. அமைச்சர் தென்னரசு</p><p>3. அமைச்சர் வினோத்</p><p>துணைப் பொறுப்பாளர்கள்:</p><p>1. சரவணமூர்த்தி MLA, சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி</p><p>2. தியாகராஜன் MLA, செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி</p><p>3. விஜயராஜ் MLA, திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி</p><p>4. காமாட்சி MLA, பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி</p><p>5.பாலாஜி (எ) மணிகண்டன் செங்கல்பட்டு தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்</p><p>101-தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதி:</p><p>பொறுப்பாளர்:  அமைச்சர் அருண்ராஜ்</p><p>இணைப் பொறுப்பாளர்கள்:</p><p>1. அமைச்சர் விஜய் பாலாஜி</p><p>2. அமைச்சர் விஜயலட்சுமி</p><p>3. அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்</p><p>துணைப் பொறுப்பாளர்கள்:</p><p>1. பாலமுருகன் MLA, திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி</p><p>2. சத்தியபாமா MLA, திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி</p><p>3.ராம்குமார் MLA, பல்லடம் சட்டமன்றத் தொகுதி</p><p>4. திலீப் MLA, நாமக்கல் சட்டமன்றத் தொகுதி</p><p>5. சத்யா MLA, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி</p><p>மேற்கண்ட குழுவினர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் பணிகளை மேற்கொள்வார்கள். தேர்தல் கண்காணிப்பாளர்கள், இரண்டு தொகுதிகளின் தேர்தல் பணிகளைக் கண்காணிப்பார்கள்.</p><p>அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட கழகத் தோழர்கள் அனைவரும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். வெற்றிச் சின்னமாம் விசில் சின்னம், மீண்டும் வாகை சூட வேண்டும். இடைத்தேர்தல் வரலாற்றிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர் என்கிற புதிய வரலாறு படைக்கும் வகையில் அனைவரும் தேர்தல் பணியாற்றிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இந்தத் தொகுதிகளில் நம் வெற்றி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நமது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளைத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக விரைவில் முன்னெடுப்போம் என்று தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்ற நம்பர் 1 ஜோடி</title><link>https://www.maalaimalar.com/sports/tennis/katerina-siniakova-taylor-townsend-pair-won-the-womens-doubls-title-in-us-open-tennis</link><comments>https://www.maalaimalar.com/sports/tennis/katerina-siniakova-taylor-townsend-pair-won-the-womens-doubls-title-in-us-open-tennis#comments</comments><guid isPermaLink="false">b6d25fe8-5452-4c19-9af6-b84f939f6a03</guid><pubDate>Sat, 12 Sep 2026 05:45:18 +0000</pubDate><atom:updated>2026-09-12T05:45:18.357Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>US Open Tennis,அமெரிக்க ஓபன் டென்னிஸ்,katerina siniakova,taylor townsend,கடெரினா சினியாகோவா,டெய்லர் டவுன்செண்ட்</media:keywords><media:content height="1000" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/s2tqm301/siniakova.jpg" width="1600"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ siniakova, townsend]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/s2tqm301/siniakova.jpg?w=280" width="280"></media:thumbnail><category>டென்னிஸ் (Tennis)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் இரட்டையரில் கடேரினா சினியாகோவா - டெய்லர் டவுன் செண்ட் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.</strong></em></p><p>கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.</p><p>இந்நிலையில், பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டி நேற்று நடந்தது.</p><p>இதில் செக் குடியரசின் கடெரினா சினியாகோவா - அமெரிக்காவின் டெய்லர் டவுன்செண்ட் ஜோடி, அமெரிக்காவின் மோண்ட்கோமேரி-ஆஷ்லின் குருகர் ஜோடி உடன் மோதியது.</p><p>இதில் சிறப்பாக ஆடிய அமெரிக்க ஜோடி முதல் செட்டை 7-5 என வென்றது.</p><p>இதில் சுதாரித்துக் கொண்டு அதிரடியாக ஆடிய சினியாகோவா-டவுன்செண்ட் ஜோடி அடுத்த இரு செட்களை 6-0, 6-2 என வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தியது.</p><p>செக் குடியரசின் கடெரினா சினியாகோவா-அமெரிக்காவின் டெய்லர் டவுன்செண்ட் ஜோடி இரட்டையரில் நம்பர் 1 ஜோடி என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களும் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும்!- அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-ministers-and-members-of-the-legislative-assembly-must-also-disclose-their-asset-details</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-ministers-and-members-of-the-legislative-assembly-must-also-disclose-their-asset-details#comments</comments><guid isPermaLink="false">ff85be4d-9e9c-4bf5-a779-d82ba54da25b</guid><pubDate>Sat, 12 Sep 2026 05:28:42 +0000</pubDate><atom:updated>2026-09-12T05:28:42.539Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,Govt employees,அரசு ஊழியர்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/5slhh0sl/Anbumaniramadoss01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/5slhh0sl/Anbumaniramadoss01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சித்  தலைவர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் நாளில் அவர்களின் அனைத்து வகையான சொத்துகளையும் பொதுவெளியில் வெளியிடுவதை கட்டாயமாக்கி சமூகத் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.</strong></em></p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>ஊழலை ஒழிக்க உதவாது</strong></h2><p>தமிழ்நாட்டில் ஆசிரியர்கள், நீதிமன்றப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியர்களும் அடுத்த மாதத்திற்குள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிப்பதற்கான சிறந்த முயற்சி என்ற வகையில் இந்த நடவடிக்கை  வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளை விடுத்து, அரசு ஊழியர்களுக்கு மட்டும் இக்கட்டுப்பாட்டை விதிப்பது நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்க உதவாது.</p><p>தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளின் 7(3) பிரிவில் முந்தைய திமுக அரசால் கடந்த ஜனவரி மாதம் செய்யப்பட்ட திருத்தத்தின்படி அனைத்து நிலை அரசு ஊழியர்களும் ஒவ்வொரு ஆண்டும் திசம்பர் 31-ஆம் தேதியன்று அவர்களின் பெயரிலும், அவர்களால் மற்ற குடும்ப உறுப்பினர்களின் பெயர்களிலும் உள்ள நிலங்கள், கட்டிடங்கள் உள்ளிட்ட அசையா சொத்துகள், வாகனங்கள், நகைகள், வங்கி வைப்பீடுகள் உள்ளிட்ட அசையும் சொத்துகள், கடன்கள் உள்ளிட்ட விவரங்களை அடுத்த ஆண்டின் மார்ச் 31ஆம் தேதிக்கு முன்பாக தமிழக அரசின் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்புக்கான தளத்தில்  தனித்தனி படிவத்தில் தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2025-ஆம் ஆண்டு திசம்பர் 31-ஆம்  நாள் நிலவரப்படியான அரசு ஊழியர்களின் சொத்து விவரங்கள் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் இதுவரை தாக்கல் செய்யப்படாத நிலையில், அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது.</p><h2><strong>ஊழலை ஒழிக்க முடியும்</strong></h2><p>சொத்து விவரங்களை தாக்கல் செய்ய அரசு ஊழியர்கள் தவறினால் அது விதிமீறலாகக் கருதப்படும்;  அது அவர்களின் பதவி உயர்வை பாதிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால், அனைவரும் இந்த விதியை மதித்து சொத்துக் கணக்குகளைத் தாக்கல் செய்வது கட்டாயமாகிவிடும். அரசு ஊழியர்கள் சொத்துக் கணக்குகளை தாக்கல் செய்வது புதிய நடைமுறை அல்ல. கடந்த காலங்களில் பணியில் சேர்ந்த முதல் ஆண்டிலும், அதன்பின் ஐந்தாண்டுக்கு ஒருமுறையும் சொத்துக்கணக்கை தாக்கல் செய்ய வேண்டியிருந்தது. இப்போது இந்த நடைமுறை ஆண்டுக்கு ஒருமுறை என மாற்றப்பட்டிருப்பதால் அரசு ஊழியர்கள் ஊழல் செய்து சொத்து வாங்குவது குறையும்; இதன் மூலம் அரசு நிர்வாகம் படிப்படியாக தூய்மையடையக் கூடும்.</p><p>ஆனால், ஊழல் ஒழிப்புக்கான இந்த நடைமுறைகள் அரசு ஊழியர்களுடன் மட்டும் நின்று விடக்கூடாது. முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சித்  தலைவர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் இந்த  கட்டுப்பாடு நீட்டிக்கப்பட வேண்டும். அப்போது தான் தமிழக அரசு நிர்வாகத்திலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் பல பத்தாண்டுகளாக மலிந்து கிடக்கும் ஊழலை முழுமையாக ஒழிக்க முடியும்.</p><p>அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிப்பதற்காக இந்தியாவின் பல மாநிலங்களில் பல்வேறு நடவடிக்கைகள் கடந்த சில பத்தாண்டுகளில் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் முதன்மையானது லோக் அயுக்தா அமைப்பை  ஏற்படுத்துவது ஆகும். எந்தெந்த மாநிலங்களில் எல்லாம் லோக் அயுக்தாவின் அதிகார வரம்புக்குள் மாநில முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொண்டுவரப்பட்டிருக்கிறார்களோ, அந்த மாநிலங்களில் எல்லாம் அரசு நிர்வாகத்தில் ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை என்றாலும் கூட, கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் லோக் அயுக்தாவின் அதிகார வரம்புக்குள்ளும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கொண்டு வரப்படவில்லை, சொத்துக்கணக்குகளைக் காட்ட வேண்டிய கட்டாயத்திற்குள்ளும் கொண்டு வரப்படவில்லை என்றால் ஊழல் ஒழிப்பு என்பது நகைச்சுவையாகவே இருக்கும்.</p><p>ஊழல் ஒழிப்பில் அரசு ஊழியர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டியவர்கள் அரசியல்வாதிகள் தான். அவர்கள் நேர்மையாக இருந்தால் அதிகாரிகளால் ஊழல் செய்ய முடியாது. எனவே, தமிழக அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிப்பதற்கான முன்முயற்சிகளை முதலமைச்சரும், அமைச்சர்களும் மேற்கொள்ள வேண்டும்.</p><p>அதற்கான முதல் நடவடிக்கையாக முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சித்  தலைவர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் நாளில் அவர்களின் அனைத்து வகையான சொத்துகளையும் பொதுவெளியில் வெளியிடுவதை கட்டாயமாக்கி சமூகத் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும். மக்கள் பிரதிநிதிகளின் சொத்து மதிப்பு ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டுக்கும் மேல் அதிகரித்திருந்தால், அதுகுறித்து பொதுமக்களுக்கு சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதி விளக்கம் அளிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். பொது வாழ்வில் தூய்மையை உறுதி செய்வதற்காக இந்நடவடிக்கைகளை கட்டாயமாக்கி விதிகளை வகுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item></channel></rss>