<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 22 Jul 2026 10:28:55 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-22-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-22-july-2026#comments</comments><guid isPermaLink="false">07faf4ec-9c5b-4385-ab8c-543b6cbe670b</guid><pubDate>Wed, 22 Jul 2026 04:45:36 +0000</pubDate><atom:updated>2026-07-22T10:10:45.506Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/vymt58ob/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/vymt58ob/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rain-likely-chance-to-chennai-3">சென்னையில் மழைக்கு வாய்ப்பு </a></p><p>* தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/pv-sindhu-advances-to-second-round-at-china-open-badminton">சீனா ஓபன் பேட்மிண்டன்: 2வது சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து</a></p><p>* சீனா ஓபன் பேட்மிண்டன் தொடர் அங்குள்ள சாங்சோவ் நகரில் நடந்து வருகிறது.</p><p>* வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை பி.வி.சிந்து 21-10 என வென்றார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/two-more-days-granted-to-apply-for-mbbs">எம்.பி.பி.எஸ். படிப்புக்கு விண்ணப்பிக்க மேலும் 2 நாட்கள் அவகாசம்</a></p><p>* எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவ படிப்பில் 15 ஆயிரம் இடங்கள் உள்ளன.</p><p>* ஆகஸ்ட் முதல் வாரத்தில் தரவரிசை பட்டியல் வெளியிட வாய்ப்பு உள்ளது. </p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/dont-waste-our-time-supreme-court-refuses-urgent-listing-petiton-against-police-action">எங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் - சுப்ரீம் கோர்ட் சாடல்</a></p><p>* டெல்லியில் மாணவர்கள் மீது தடியடி நடத்தியது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.&nbsp;</p><p>* தாக்குதல் காணொளிகளை எங்களுக்கு பார்க்க ஆர்வமும், நேரமும் இல்லை என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/student-injured-in-delhi-protest-is-stable-say-doctors">டெல்லி போராட்டக்களத்தில் காயமடைந்த மாணவி நலமுடன் உள்ளார்-மருத்துவர்கள் அறிவிப்பு!... </a></p><p>இச்சம்பவத்தில் 100-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களும், 118 காவல் துறையினரும் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/koyambedu-bus-terminus-presents-a-pathetic-sight">பரிதாபமாக காட்சி தரும் கோயம்பேடு பஸ் நிலையம்- சமூக விரோதிகளின் கூடாரமாக மாறுகிறது</a></p><p>* கோயம்பேடு என்பது வெறும் பஸ் நிலையமல்ல, ஒரு தலைமுறையின் பயண நினைவகம்</p><p>* போலீஸ் ரோந்தும் இல்லாததால் பொதுமக்கள் உள்ளே செல்லவே அஞ்சுகிறார்கள். கழிப்பறைகளும் பராமரிக்கப்படாததால் துர்நாற்றம் வீசுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rahul-gandhi-arrested-in-delhi-cm-vijay-condemns">டெல்லியில் ராகுல் காந்தி கைது - முதலமைச்சர் விஜய் கண்டனம்</a></p><p>* வாக்கு அரசியல் செய்வதற்காக, பொய்யான வாக்குறுதிகளை நாம் ஒருபோதும் அளிக்கமாட்டோம்.</p><p>* மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/delhi-security-concerns-students-protest-16-key-metro-stations-closed">தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம் - டெல்லியில் 16 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடல்!</a></p><p>* ராஜீவ் சௌக், மண்டி ஹவுஸ் உட்பட 16 ஸ்டேஷன்கள் தற்காலிகமாக மூடல்.</p><p>* 3 நிலையங்களில் ஒரு பாதையிலிருந்து மற்றொரு பாதைக்கு மாறுவதற்கான இணைப்பு ரெயில் சேவை தொடர்ந்து இயங்கும். </p><p><a href="https://www.maalaimalar.com/sports/china-open-badminton-ayush-shetty-advances-to-second-round">சீனா ஓபன் பேட்மிண்டன்: ஆயுஷ் ஷெட்டி 2வது சுற்றுக்கு முன்னேற்றம்</a></p><p>* சீனா ஓபன் பேட்மிண்டன் தொடர் அங்குள்ள சாங்சோவ் நகரில் நடந்து வருகிறது.</p><p>* இதில் அதிரடியாக ஆடிய ஆயுஷ் ஷெட்டி முதல் செட்டை 21-17 என வென்றார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/west-indies-win-fifth-odi-new-zealand-take-series-3-2">5வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி: ஒருநாள் தொடரை 3-2 என வென்றது நியூசிலாந்து</a></p><p>* ரூதர்போர்ட், ஹெட்மயர் ஜோடி பொறுப்புடன் ஆடி 95 ரன்களை சேர்த்தது. </p><p>* நியூசிலாந்து சார்பில் ஜேக்கப் டபி, ஜெய்டன் லெனாக்ஸ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/sc-allows-cbi-probe-to-armstrong-murder-case">ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு- சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி</a></p><p>* சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை ஆட்சி மாற்றத்துக்கு பிறகு தற்போதைய த.வெ.க. அரசு திரும்பப் பெற்றது. </p><p>* வழக்கு விசாரணை செப்டம்பர் மாதம் 2-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. </p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-government-must-take-measures-to-curb-the-rise-in-rice-prices">அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!- அன்புமணி வலியுறுத்தல்</a></p><p>* அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த இந்தியாவிலிருந்து அரிசி ஏற்றுமதிக்கு  தடை விதிக்க வேண்டும்.</p><p>* மொத்த வணிகர்களின் அரிசி கையிருப்புக்கு உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ips-officers-transferred-in-tamil-nadu-2">தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்</a></p><p><em><strong>* சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவப்பிரசாத், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணியிட மாற்றம்.</strong></em></p><p><em><strong>* திருச்சி ஆயுதப்படை டிஐஜி விஜயலட்சுமி சென்னை ஊர்க்காவல் படை டிஐஜியாக பணியிட மாற்றம்.</strong></em></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/students-arrested-protest-demand-cancellation-of-neet-exam">நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது</a></p><p><em>* அனுமதியின்றி போராட்டம் நடத்திய மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.</em></p><p><em>* ராயப்பேட்டையில் புதுக்கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.</em></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-says-kerala-turning-tamil-nadu-into-a-garbage-bin">தமிழகத்தை குப்பைத் தொட்டியாக்கும் கேரளம்- டிடிவி தினகரன் கண்டனம்</a></p><p>* பெரிய அளவிலான மருத்துவக் கழிவுகள் அதிகாரிகளின் கவனத்திற்குப் படாமல் தமிழக எல்லைக்குள் நுழைந்தது எப்படி?</p><p>* தமிழகத்தை குப்பைத் தொட்டியாகப் பயன்படுத்தும் இத்தகைய செயல்பாடுகளைத் தடுக்கத் தவறியுள்ள தவெக அரசின் அலட்சியமும் மெத்தனமும் கடும் கண்டனத்திற்குரியது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ponni-rice-price-hike">அரிசி விலை கிடுகிடு உயர்வு- பொன்னி அரிசி கிலோ ரூ.80-க்கு விற்பனை</a></p><p>* நாட்டில் பரவலாக ஏற்பட்டுள்ள வறட்சி, நெல் உற்பத்தியை வெகுவாக பாதித்துவிட்டது. </p><p>*கர்நாடக மாநிலத்தில் விளைச்சல் குறைந்ததால் ஏற்பட்டுள்ள இந்த விலையேற்றம் கவலை தருவதாக உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/premalatha-says-people-will-view-him-as-a-hero-only-if-he-does-what-vijay-said">விஜய் சொன்னதை செய்தால் தான் மக்கள் ‘ஹீரோ’வாக பார்ப்பார்கள்- பிரேமலதா</a></p><p>* தே.மு.தி.க. சார்பில் ஆகஸ்ட் 1-ந் தேதி ஒகேனக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.</p><p>* விவசாயிகளை காக்க தமிழக அரசு விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யவேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/spirituality/increase-in-pilgrim-arrivals-at-tirupati-distribution-of-time-slot-darshan-tickets-cancelled">திருப்பதியில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு- நேர ஒதுக்கீடு தரிசன டிக்கெட் விநியோகம் ரத்து</a></p><p>* தரிசன டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டது தெரியாமல் ஏராளமான பக்தர்கள் டிக்கெட் வழங்கும் மையங்களில் நேற்று இரவு முதல் விடிய, விடிய காத்திருந்தனர். </p><p>* நாளை மறுநாள் தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் நாளை வழக்கம்போல் வழங்கப்படும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-temple-land-scam-aiadmk-protest-announcement" rel="nofollow">பழனி கோவில் நிலம் மோசடி விவகாரம்- அ.தி.மு.க ஆர்ப்பாட்டம் அறிவிப்பு</a></p><p>* மடத்திற்குச் சொந்தமான நிலத்தை, தனியாருக்கு பத்திரப் பதிவு செய்து கொடுத்ததன் மர்மம் விளங்கவில்லை.</p><p>* நிலத்தை விற்பதற்கான பத்திரம் தயாரித்து, விற்பனைப் பத்திரத்தில் கையெழுத்திட்ட நபர்கள் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-ongoing-mineral-plunder-in-the-southern-districts-must-be-stopped-a-cbi-inquiry-is-needed">தொடரும் தென் மாவட்ட கனிமக் கொள்ளையை தடுக்க வேண்டும் - சிபிஐ விசாரணை தேவை!- அன்புமணி வலியுறுத்தல்</a></p><p>எந்த அளவுக்கு கனிமக் கொள்ளை நடந்திருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதை கனிமக் கொள்ளையர்களிடம் இருந்து வசூலிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/trump-posts-comparing-with-previous-wars">'ஈரான் போரில் 18 பேர் மட்டுமே பலி': முந்தைய போர்களுடன் ஒப்பிட்டு டிரம்ப் பதிவு!... </a></p><p>டிரம்பின் இந்தப் பதிவுக்கு எதிர்க்கட்சியினரும் மனித உரிமை அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/wildfire-intensifies-in-the-us">அமெரிக்காவில் தீவிரமடையும் காட்டுத் தீ: பிளசண்டன் பகுதியில் 950 ஏக்கர் சாம்பல்; மக்கள் வெளியேற்ற உத்தரவு!... </a></p><p>சுமார் 4,900-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/keeladi-11th-phase-excavation">கீழடி 11-ஆம் கட்ட அகழாய்வு: புதிய தொழிற்கூடம் மற்றும் நீர் மேலாண்மை அமைப்புகள் கண்டுபிடிப்பு!... </a></p><p>நடப்பு அகழாய்வுப் பருவத்தின் முதல் நான்கு மாதங்களிலேயே 1,300-க்கும் மேற்பட்ட அபூர்வத் தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/ben-stokes-century-for-durham">சர்வதேச கிரிக்கெட் ஓய்வுக்குப் பின் புதிய அத்தியாயம்: டர்ஹாம் அணிக்காக அபார சதமடித்து பென் ஸ்டோக்ஸ் சாதனை!... </a></p><p>ஆட்டத்தின் இடையே தசைப்பிடிப்பு ஏற்பட்ட போதிலும், கடைசி வரை களத்தில் நின்றார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-vettri-kazhagam-condemns-rahul-gandhi-arrest-and-neet-issues">டெல்லியில் ராகுல் காந்தி கைது-நீட் தேர்வுப் பிரச்சனை: ஒன்றிய அரசுக்கு எதிராக தவெக கடும் கண்டனம்!... </a></p><p> "நீட் தேர்வால் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் பாதிப்பிற்குள்ளாவது நின்றபாடில்லை."</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/tax-exemption-for-generic-drugs-in-us-for-2-years-donald-trump-announcement">அமெரிக்காவில் ஜெனரிக் மருந்துகளுக்கு 2 ஆண்டுகள் வரிவிலக்கு: டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!...</a> </p><p>"அமெரிக்காவிற்குள்ளேயே ஜெனரிக் மருந்துகளின் உற்பத்தியை மீண்டும் கொண்டுவருவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/nagercoil-sabarivarman-murdered-case-transferred-to-cbcid">நாகர்கோவில் சிறையில் மரணமடைந்த சபரிவர்மன் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்</a></p><p><em>* கைது செய்யப்பட்ட சிறைக் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.</em></p><p><em>* சிறை கைதிகள் 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.</em> </p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-22-07-2026">GOLD PRICE TODAY: ராக்கெட் வேகத்தில் எகிறிய தங்கம் விலை! - எவ்வளவு தெரியுமா?</a></p><p><em>* சர்வதேச பொருளாதார சூழல், போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. </em></p><p><em>* தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. </em></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-only-scrapping-neet-will-provide-a-lasting-solution-to-all-these-problems">நீட் தேர்வை ரத்து செய்வது மட்டுமே அனைத்திற்கும் நிரந்தர தீர்வை அளிக்கும் - மு.க.ஸ்டாலின்</a></p><p><em>* நீட் பெரிய அளவிலான முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.</em></p><p><em>* திமுக ஆரம்பத்திலிருந்தே நீட் தேர்வை எதிர்த்து வருகிறது.</em></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadhav-arjuna-crushing-of-democracy-in-capital-strongly-condemnable">தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது! - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</a></p><p><em>* தமிழகத்தின் எதிர்ப்புக் குரலை இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் எதிரொலிக்கிறது. </em></p><p><em>* மாணவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, ஒன்றிய அரசு உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.</em></p> <p><a href="https://www.maalaimalar.com/sports/the-pain-of-defeat-is-very-intense-messi-melts-on-instagram" rel="nofollow">தோல்வி கொடுத்த வலி மிக கடுமையானது..!- இன்ஸ்டாவில் மெஸ்சி உருக்கம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-arresting-protesters-reveals-ruling-partys-double-standard-regarding-neet">போராடுவோரை கைது செய்வது நீட் விஷயத்தில் ஆளுங்கட்சியின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது  - உதயநிதி</a></p><p><em>*  ‘நீட்’ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றம் நோக்கி செல்ல முயன்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி</em></p><p><em>*  மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்.</em></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rail-one-app-discount-offer-extended-until-march-31">ரெயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: 'ரெயில் ஒன்' செயலி தள்ளுபடி சலுகை மார்ச் 31-ந்தேதி வரை நீட்டிப்பு</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/1635-special-bus-running-across-tamilnadu-for-weekly-holidays">வார விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1,635 சிறப்பு பஸ்கள் இயக்கம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-31">சென்னையில் நாளை (23.07.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்...</a></p>]]></content:encoded></item><item><title>எதிர்க்கட்சிகள் அமளி: இரு அவைகளும் நாள்முழுவதும் ஒத்திவைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/opposition-uproar-both-houses-adjourned-all-day</link><comments>https://www.maalaimalar.com/news/national/opposition-uproar-both-houses-adjourned-all-day#comments</comments><guid isPermaLink="false">214e5b4e-995f-4c1d-bb8a-3d1900c32fa5</guid><pubDate>Wed, 22 Jul 2026 10:17:38 +0000</pubDate><atom:updated>2026-07-22T10:17:38.511Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>winter session,நாடாளுமன்றம்,parliment,adjourned,மழைக்காலக் கூட்டத்தொடர்,ஒத்திவைப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/r2vnzj7e/loksabha.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ loksabha]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/r2vnzj7e/loksabha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. நீட் வினாத்தாள் கசிவு, ராமர் கோவில் நன்கொடை முறைகேடு, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம் ஆகியவை குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் கடந்த 2 தினங்களாக நாடாளுமன்றத்தில் அலுவல் எதுவும் நடைபெறாமல் முடங்கியது.</p><h2>எதிர்க்கட்சிகள் 3-வது நாளாக அமளி</h2><p>நாடாளுமன்றத்தில் இன்றும் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து அமளியில் ஈடுபட்டன. இதனால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. </p><p>மக்களவை காலை 11 மணிக்கு கூடியதும் ராமர் கோவில் நன்கொடை தொடர்பான முறைகேடு மற்றும் நீட் வினாத்தாள் கசிவு குறித்து விவாதிக்க வேண்டும் என்றும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடியடி நடத்தியதற்கும் கண்டனம் தெரிவித்தனர்.</p><h2>சபாநாயகர்</h2><p>இதற்கு சபாநாயகர் ஓம்பிர்லா, இது கேள்வி நேரம். முக்கியமானது. கேள்வி நேரம் முடிந்த பிறகு நீங்கள் கொடுத்த விவகாரங்கள் பற்றி விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். நீங்கள் விரும்பும் வரை விவாதிக்கலாம். ஆனால் திட்டமிட்டு அவையின் நடவடிக்கைக்கு இடையூறு செய்வது நல்லதல்ல என்றார். ஆனால் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகர் அவையை 2 மணி வரை ஒத்திவைத்தார்.</p><h2>விவாதிக்க தயார்</h2><p>12 மணிக்கு சபை கூடியதும் நீட் வினாத்தாள் கசிவு குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கூறியதாவது:</p><p>விவாதம் எவ்வளவு நேரம் நடைபெறும், எந்த விதியின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்த முடிவை அனைத்துக் கட்சி தலைவர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகு சபாநாயகர் முடிவு எடுக்க வேண்டும். </p><p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க அரசு முழுமையாக தயாராக உள்ளது. இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நாம் அனைவரும் இணைந்து அர்த்தமுள்ள விவாதத்தை நடத்தவேண்டும் என்பதே அரசின் விருப்பம் ஆகும் என தெரிவித்தார்.</p><p>ஆனால் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. </p><h2>மேல்சபை</h2><p>மேல்சபையிலும் நீட் விவகாரம் தொடர்பாக மாணவர்கள் மீதான தடியடியைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்தப் பிரச்சனையை பேசினார். இதற்கு ஆளும் கட்சி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.</p><p>கார்கேவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குரல் கொடுத்தனர். இதனால் அவையில் கூச்சல்-அமளி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மீண்டும் ஏற்பட்ட அமளியால் மேல் சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் மழைக்கு வாய்ப்பு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rain-likely-chance-to-chennai-3</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rain-likely-chance-to-chennai-3#comments</comments><guid isPermaLink="false">042dc8d6-2b1e-4f34-b420-27d38f0cc641</guid><pubDate>Wed, 22 Jul 2026 10:09:10 +0000</pubDate><atom:updated>2026-07-22T10:09:10.215Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,சென்னையில் மழை,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/fh0qpx1y/rain005.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/fh0qpx1y/rain005.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</aside><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.</p><h2><strong>மிதமான மழை</strong></h2><p>இன்று முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>25-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>26-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>27 மற்றும் 28ந்தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><h2><strong>வெப்பநிலை</strong></h2><p>இதனிடையே இன்று முதல் 26-ந்தேதி வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p>நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>நாளை தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>சக பெண் எம்.பி.க்களுடன் மோதல் - கல்யாண் பானர்ஜி மக்களவையில் இருந்து நீக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/clash-with-fellow-female-mps-kalyan-banerjee-removed-from-the-lok-sabha</link><comments>https://www.maalaimalar.com/news/national/clash-with-fellow-female-mps-kalyan-banerjee-removed-from-the-lok-sabha#comments</comments><guid isPermaLink="false">e6173b12-af48-408c-a899-55b2e284d308</guid><pubDate>Wed, 22 Jul 2026 09:55:49 +0000</pubDate><atom:updated>2026-07-22T09:55:49.252Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மக்களவை,Lok Sabha,trinamool congress,Kalyan Banerjee,திரிணாமுல் காங்கிரஸ்,கல்யாண் பானர்ஜி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/2had6tig/New-Project-2026-07-22T152147.766.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சக பெண் எம்.பி.க்களுடன் மோதல் - கல்யாண் பானர்ஜி மக்களவையில் இருந்து நீக்கம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/2had6tig/New-Project-2026-07-22T152147.766.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி.க்களுக்கு எதிராக அவதூறான மற்றும் நாடாளுமன்ற மரபுகளுக்கு மாறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்.பி. கல்யாண் பானர்ஜி, மக்களவையில் இருந்து நடப்பு மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>நீட் வினாத்தாள் கசிவு மற்றும் பிற பிரச்சினைகள் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டுக் கொண்டிருந்த வேளையில், குரல் வாக்கெடுப்பு மூலம் இவரது இடைநீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.</p><p>நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளின் போராட்டங்களுக்கு இடையே அவை ஒத்திவைக்கப்பட்டபோது, கல்யாண் பானர்ஜிக்கும், அவரது முன்னாள் கட்சி சகாக்களுக்கும்  (NCPI) இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.</p><p>இந்த மோதலின் போது, கல்யாண் பானர்ஜி தன்னை 'சோர்' (திருடன்) என்று அழைத்ததாகவும், அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும் கூறி, மிட்டாலி பாக், சதாப்தி ராய் மற்றும் ககோலி கோஷ் தஸ்திதார் ஆகிய பெண் எம்பிக்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் முறைப்படி புகார் அளித்தனர்.</p><p>பெண் எம்பிக்களின் புகாரைத் தொடர்ந்து, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், கல்யாண் பானர்ஜியை சஸ்பெண்ட் செய்வதற்கான தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.</p><p>தீர்மானம் நிறைவேறிய நிலையில், கூட்டத்தொடரின் மீதமுள்ள நாட்களுக்கு அவர் அவைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு, உடனடியாக நாடாளுமன்ற வளாகத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டது.</p><p>பருவமழைக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.</p>]]></content:encoded></item><item><title>சீனா ஓபன் பேட்மிண்டன்: 2வது சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து</title><link>https://www.maalaimalar.com/sports/pv-sindhu-advances-to-second-round-at-china-open-badminton</link><comments>https://www.maalaimalar.com/sports/pv-sindhu-advances-to-second-round-at-china-open-badminton#comments</comments><guid isPermaLink="false">83892492-4491-4d12-9f4f-d8bb3207fde4</guid><pubDate>Wed, 22 Jul 2026 09:55:24 +0000</pubDate><atom:updated>2026-07-22T09:55:24.922Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>pv sindhu,பிவி சிந்து,China Open badminton,சீனா ஓபன் பேட்மிண்டன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/01/07/24408100-pvs.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ pv sindhu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/01/07/24408100-pvs.webp?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சீனா ஓபன் பேட்மிண்டன் தொடர் அங்குள்ள சாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.</p><p>இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, சக வீராங்கனையான உன்னதி ஹூடா உடன் மோதினார்.</p><p>இதில் அதிரடியாக ஆடிய பி.வி.சிந்து முதல் செட்டை 21-14 என வென்றார். இதற்கு பதிலடியாக உன்னதி ஹூடா 21-9 என 2வது செட்டை எளிதில் கைப்பற்றினார்.</p><p>வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை பி.வி.சிந்து 21-10 என வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.</p><p>முன்னதாக, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி முதல் சுற்றில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.</p><p>இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், தேவிகா சிஹாக் ஆகியோர் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினர்.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவை நோக்கி வந்த 2 கச்சா எண்ணெய் கப்பல்களை திருப்பி அனுப்பிய  ஹவுதி அமைப்பினர்</title><link>https://www.maalaimalar.com/news/world/two-ships-heading-to-india-turned-back-by-houthis</link><comments>https://www.maalaimalar.com/news/world/two-ships-heading-to-india-turned-back-by-houthis#comments</comments><guid isPermaLink="false">802a7f7a-0a72-49e3-b643-9bf22b3cbe2d</guid><pubDate>Wed, 22 Jul 2026 09:46:41 +0000</pubDate><atom:updated>2026-07-22T09:46:41.183Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சூயஸ் கால்வாய்,Suez Canal,Hormuz,houthis,ஹார்முஸ்  ஜலசந்தி,ஹூதி அமைப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/j4cozukn/Untitled-design-52.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Indian oil tankers turn back after Houthis Threat]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/j4cozukn/Untitled-design-52.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் ஆதரவு பெற்ற  ஹவுதி போராளிகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் சீனாவுக்கான கச்சா எண்ணெயை ஏற்றிச் சென்ற மூன்று சவுதி எண்ணெய் கப்பல்கள், ஏமன் கடற்கரையை எதிர்கொள்ளாமல் திரும்பி சென்றன. </p><p>சூயஸ் கால்வாயை நோக்கிச் சென்று கொண்டிருந்த சின் லாங் யாங், ரோடோஸ் மற்றும் அமேசான் ஆகிய மூன்று எண்ணெய் கப்பல்கள், ஹீதி அமைப்பினர் எச்சரிக்கையை தொடர்ந்து திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் ஏற்கனவே நெருக்கடியில் உள்ள உலகளாவிய எரிசக்தி சந்தைகளில், இந்த நிகழ்வு மேலும் பற்றாக்குறையை அதிகரிக்கக்கூடும் என செய்தி வெளியாகியுள்ளது.</p><p>இந்த வாரத் தொடக்கத்தின் போது, ஈரான் ஆதரவு  ஹவுதி அமைப்பினர், சவூதி அரேபியாவுக்கு எதிராகக் கடற்படை முற்றுகையை அறிவித்தனர். இந்த நடவடிக்கை, வளைகுடாப் பகுதிக்கு வெளியே உள்ள உலகளாவிய எரிசக்தி விநியோகம் மற்றும் வர்த்தகத்திற்கான அச்சுறுத்தலை அதிகரித்துள்ளது.</p><p>ஹீதி கிளர்ச்சிக் குழு, கப்பல் நிறுவனங்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், சவூதி அரேபிய துறைமுகங்களில் சரக்குகளை ஏற்றவோ இறக்கவோ கூடாது என எச்சரித்ததோடு, அத்தகைய செயல்பாடு எந்த இடத்திலும் தாக்குதல் நடத்தப்படுவதற்கு வழிவகுக்கலாம் என்று எச்சரித்தது.</p><p>ஹூதி அமைப்பினர்கள், செங்கடலின் முகத்துவாரத்தில் உள்ள பாப் அல்-மண்டேப் நீரிணையின் கடற்கரை உட்பட வடக்கு ஏமனை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.</p><p>கண்ணீர்க் கதவு என்றும் அழைக்கப்படும் இந்த நீரிணை, செங்கடலை ஏடன் வளைகுடா மற்றும் இந்தியப் பெருங்கடலுடன் இணைக்கிறது.</p><p>சவூதி அரேபிய துறைமுகங்களுக்கு வரும் கப்பல்கள் செங்கடல் வழியாகப் பயணிப்பதை மறுபரிசீலனை செய்யவும், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.</p><p>இந்த எச்சரிக்கையை உணராமல், நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்கள் அதிக ஆபத்தை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும்  ஹவுதி அமைப்பு எச்சரித்துள்ளது.</p><p>இந்நிலையில் புதிதாக ஏற்பட்டுள்ள எச்சரிக்கை காரணமாக, ஆசியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் சரக்குகளுக்கு வாரக்கணக்கில் கூடுதல் தாமதம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்களின் கோபத்தை பார்த்த ‘தீய சக்திகள்’ கூடுதல் நேரம் வேலை செய்ய தொடங்கிவிட்டன: ப்ரீத்தி ஜிந்தா</title><link>https://www.maalaimalar.com/news/national/evil-forces-working-overtime-student-anger-preity-zinta</link><comments>https://www.maalaimalar.com/news/national/evil-forces-working-overtime-student-anger-preity-zinta#comments</comments><guid isPermaLink="false">66017b5b-55f8-4b0a-897f-bb112aa92437</guid><pubDate>Wed, 22 Jul 2026 09:44:55 +0000</pubDate><atom:updated>2026-07-22T09:44:55.670Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நீட் தேர்வு,Preity Zinta,NEET exams,ப்ரீத்தி ஜிந்தா,Cockroach Janata Party,காக்ரோச் ஜனதா கட்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/yd9osn0z/Untitled-design-51.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/yd9osn0z/Untitled-design-51.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காக்ரோச் ஜனதா கட்சி தலைமையிலான போராட்டங்களுக்கு நடிகை ப்ரீத்தி ஜிந்தா ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் இந்த இயக்கம் தேசவிரோத சக்திகளால் கைப்பற்றப்படாமல் இருப்பதை உறுதி செய்வது முக்கியமான ஒன்று என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p>டெல்லியில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக காக்ரோச் ஜனதா கட்சியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>இந்த போராட்டம் தற்போது நாடு முழுவதும் விரிவடைந்து வரும் சூழலில், போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஆதரவாக, நடிகையும் தொழிலபதிருமான ப்ரீத்தி ஜிந்தா எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.</p><h3><strong>நீட் தேர்விற்கு எதிரான போராட்டத்திற்கு ப்ரீத்தி ஜிந்தா ஆதரவு:</strong></h3><p>இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “நமது மாணவர்களுக்கு ஆதரவளிப்பதும், நமது இளைஞர்களின் எதிர்காலத்தில் நேர்ம்றையான தாக்கத்தை ஏற்படுத்தும் கல்வி சீர்திருத்தங்களை கோருவதும் முக்கியம் என்றாலும், </p><p>மாணவர்களின் அமைதியான போராட்டங்கள், குழப்பத்தை ஏற்படுத்துவதற்கும் போராட்டத்தின் தன்மையை மாற்றுவதற்கும் தேசவிரோத சக்திகளால் திசை திருப்பப்படாமல் இருப்பதும் மிகவும் முக்கியம்.</p><p>இணையத்தில் இவ்வளவு வெறுப்பையும் பிளவுகளையும் காணும்போது, நமது நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள தீய சக்திகள், நமது மாணவர்கள் உணரும் கோபத்தையும் விரக்தியையும் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவதற்காகக் கூடுதல் நேரம் வேலை செய்யத் தொடங்கிவிட்டனவோ என்று எண்ணத் தோன்றுகிறது.</p><p>கடின உழைப்பு, சமத்துவம் மற்றும் சிறந்து விளங்குதல் ஆகியவற்றில் நான் எப்போதுமே நம்பிக்கை கொண்டுள்ளேன். </p><p>அதில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளக் கூடாது. நமது ஜனநாயகத்தின் மீதும் மற்றும் சட்டம் ஒழுங்கின் மீதும் எனக்கு நம்பிக்கை உள்ளது.</p><p>எனவே, இரு தரப்பினரும் அர்த்தமுள்ள மற்றும் ஆக்கப்பூர்வமான உரையாடலில் ஈடுபட்டு, இந்தப் போராட்டம் மற்றும் உரையாடலில் இருந்து எந்தவொரு தீய சக்திகளையும் நோக்கங்களையும் களைவார்கள் என்று நான் மனப்பூர்வமாக நம்புகிறேன்.</p><p>அதன் மூலம் நமது இளைஞர்களுக்கும் நமது ஜனநாயகத்திற்கும் எதிர்காலம் பிரகாசமாக அமையும்.</p><p>சோனம் வாங்சுக்கின் உடல்நிலை மேலும் மோசமடையாமல் இருக்க, நமது அரசு சோனம் வாங்சுக் மற்றும் மாணவர் அமைப்புகளுடன் ஒரு அர்த்தமுள்ள உரையாடலைத் தொடங்கும் என்று நம்புகிறேன்.</p><p>தயவுசெய்து உங்கள் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுங்கள் சோனம். இந்தப் போராட்டத்தைப் போலவே உங்கள் உடல்நிலையும் முக்கியமானது.</p><p>நீங்களும் மாணவர்களும் இந்தியாவின் எதிர்காலத்திற்காகவும் நமது இளைஞர்களுக்காகவும் போராடுகிறீர்கள்.</p><p>நமது கல்வி முறையை உயர்த்தி மேம்படுத்துவதற்கான இந்தப் போராட்டத்தில் ஒவ்வொரு மாணவருக்கும் சோனமுக்கும் எனது மனமார்ந்த மற்றும் அசைக்க முடியாத ஆதரவு உண்டு.</p><p>உங்கள் அனைவருக்கும் மேலும் சக்தி கிடைக்கட்டும். ஜெய் ஹிந்த்,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பெண் ஊழியர்களின் ஓய்வறையில் ரகசிய கேமரா.. இந்திய மருத்துவருக்கு சிறைத் தண்டனை </title><link>https://www.maalaimalar.com/health/women/an-indian-origin-doctor-in-ohios-toledo-has-been-sentence</link><comments>https://www.maalaimalar.com/health/women/an-indian-origin-doctor-in-ohios-toledo-has-been-sentence#comments</comments><guid isPermaLink="false">306ac545-4e9e-4232-b616-f0753af88785</guid><pubDate>Wed, 22 Jul 2026 09:44:03 +0000</pubDate><atom:updated>2026-07-22T09:44:03.138Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Ohio,ஓஹியோ,indian doctor arrested,Advait Deshmukh,அத்வைத் தேஷ்முக்,இந்திய மருத்துவர் கைது</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/p1mbftm2/Untitled-design-49.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ An Indian-origin doctor in america has been sentenced]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/p1mbftm2/Untitled-design-49.jpg?w=280" width="280"></media:thumbnail><category>பெண்கள் உலகம் (Women)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவில் உள்ள டோலிடோ மருத்துவமனையில் பெண் ஊழியர்களின் ஓய்வறைகளில் ரகசியமாக கேமரா வைத்து பதிவு செய்த இந்திய வம்சாவளியான மருத்துவர் அத்வைத் தேஸ்முக்கிற்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.</p><p>ஆதாரங்களைத் திருத்த முயன்ற குற்றச்சாட்டு உள்ளிட்ட ஏழு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதை அடுத்து, தேஷ்முக்கிற்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.</p><p>டோலிடோ மருத்துவமனையில் இருபாலர் பயன்படுத்தும் கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைபேசியை மருத்துவமனை ஊழியர் ஒருவர் கண்டுபிடித்தார்.</p><p>இதையடுத்து புரோமெடிகா மற்றும் டோலிடோ காவல்துறை இணைந்து நடத்திய விசாரணையில், 2025 பிப்ரவரியில் அந்தத் தொலைபேசியில் எடுக்கப்பட்ட 82 புகைப்படங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.</p><p>குற்றங்கள் நடந்த நேரத்தில், தேஷ்முக் டோலிடோ பல்கலைக்கழகத்தில் எண்டோயுரோலஜி மற்றும் சிறுநீரகப் புற்றுநோயியல் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற மூன்றாம் ஆண்டு மருத்துவப் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார்.</p><p>அந்த கேமரா கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, தேஸ்முக் நிர்வாக விடுப்பில் வைக்கப்பட்டு, அவரது பயிற்சி மருத்துவ நியமனம் புதுப்பிக்கப்படவில்லை என்று டோலிடோ பல்கலைக்கழகம் தெரிவித்தது.</p><p>தண்டனை அறிவிப்பின் போது தேஷ்முக் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டார்.</p><p>குற்றங்களுக்கு வழிவகுத்த நடத்தையை நன்கு புரிந்துகொள்வதற்காக தேஷ்முக் சிகிச்சை பெற்று வருவதாக வாதிட்ட அவரது வழக்கறிஞர், சிறைத் தண்டனைக்குப் பதிலாக நன்னடத்தை தண்டனை விதிக்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.</p><p>இதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட தேஷ்முக், மூன்று ஆண்டுகள் நன்னடத்தை கண்காணிப்பு, 15 ஆண்டுகளுக்கு பாலியல் குற்றவாளியாகப் பதிவு செய்தல், பாலியல் குற்றவாளி மற்றும் மனநல சிகிச்சையைத் தொடருமாறு நீதிபதி மைக்கேல் கோல்டிங் உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வுபெற்ற பென் ஸ்டோக்ஸ்.. டெர்பை போட்டியில் சதம் விளாசி உணர்ச்சிவசம்</title><link>https://www.maalaimalar.com/sports/ben-stokes-retires-from-international-cricket-scores-century-in-derby</link><comments>https://www.maalaimalar.com/sports/ben-stokes-retires-from-international-cricket-scores-century-in-derby#comments</comments><guid isPermaLink="false">4e2fc2cd-47d5-4947-9e87-7af28ca8c0fd</guid><pubDate>Wed, 22 Jul 2026 09:42:44 +0000</pubDate><atom:updated>2026-07-22T09:42:44.376Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Ben Stokes,பென் ஸ்டோக்ஸ்,retirement,ஓய்வு அறிவிப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/qktt8oz4/Untitled-design-48.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ben Stokes emotional century, after announcing international retirement]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/qktt8oz4/Untitled-design-48.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த நிலையில், டெர்பியில் நடைபெற்ற ஒருநாள் கோப்பை போட்டியில் 108 ரன்கள் குவித்தார்.</p><p>இங்கிலாந்தில் டெர்பிஷயர் மற்றும் டர்ஹாம் உள்ளூர் அணிகளுக்கு இடையே 50 ஓவர் போட்டி நடைபெற்றது. இதில் டர்ஹாம் அணி பிரிவில் பென் ஸ்டோக்ஸ் களமிறங்கினார்.</p><p>அப்போது முதலில் பேட்டிங் செய்த டெர்பி அணி 49.1 ஓவர்களில் 257 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய டர்ஹாம் அணியில், தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.</p><p>பின்னர் மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ், 123 பந்துகளில் 108 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியின் வெற்றிக்கு உதவினார்.</p><p>முன்னதாக நியூசிலாந்துக்கு எதிரான இங்கிலாந்தின் மூன்றாவது டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போவதாக பென் ஸ்டோக்ஸ் அறிவித்திருந்தார்.</p><p>இந்த ஓய்வு குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ஒரு உணர்ச்சிப்பூர்வமான செய்தியைப் பகிர்ந்து, தனது பயணத்தில் பங்கெடுத்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்திருந்தார்.</p><h3><strong>பென் ஸ்டோக்ஸ் ஓய்வு:</strong></h3><p>அவர் அந்த பதிவில், “கடந்த 15 ஆண்டுகள் மிகவும் பரபரப்பானதாக இருந்தன. களத்திலும் களத்திற்கு வெளியேயும், உச்சகட்ட மகிழ்ச்சி அதில் கலந்திருந்தன.</p><p>எனது நேரம் முடிந்துவிட்டது, அந்த முடிவை என்னைத் தவிர வேறு யாராலும் எடுக்க முடியாது. ஆனால் இதற்கிடையில், இத்தனை ஆண்டுகளாக எனக்கு ஆதரவளித்த ஒவ்வொரு இங்கிலாந்து ரசிகர்களையும், ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகர்களையும் நான் நேசிக்கிறேன்.</p><p>இங்கிலாந்துக்காகக் களத்தில் என்னுடன் பயணித்த ஒவ்வொருவரையும் நான் நேசிக்கிறேன். நான் சொல்லிக்கொண்டே போகலாம், ஆனால் 15 ஆண்டுகளாக நான் செய்ததை எவ்வளவு நேசித்தேன் என்பதன் சாராம்சத்தை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.</p><p>ஒரு ரசிகனாக இருந்து அணிக்கு ஆதரவளிப்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். குடும்பத்தினர், நண்பர்கள், சக வீரர்கள், ரசிகர்கள் என உங்கள் அனைவரையும் நான் நேசிக்கிறேன்” என்று அவர் பதிவிட்டுருந்தார்.</p><p>ஸ்டோக்ஸ் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை 122 டெஸ்ட் போட்டிகளுடன் முடித்தார். இதில் 44 போட்டிகளில் கேப்டனாக இருந்து, 7,000-க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்துள்ளார்.</p><p>200-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், இங்கிலாந்து அணிக்காக 114 ஒருநாள் போட்டிகளிலும் 43 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>போராட்டக்காரர்கள் மீதான தடியடி - விசாரணைக்கோரி பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் கடிதம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/lathi-charge-on-protesters-supreme-court-bar-association-president-writes-to-pm-modi-and-amit-shah-seeking-an-inquiry</link><comments>https://www.maalaimalar.com/news/national/lathi-charge-on-protesters-supreme-court-bar-association-president-writes-to-pm-modi-and-amit-shah-seeking-an-inquiry#comments</comments><guid isPermaLink="false">da541e6f-7002-4492-94ba-2fd5121f0be5</guid><pubDate>Wed, 22 Jul 2026 09:32:55 +0000</pubDate><atom:updated>2026-07-22T09:32:55.348Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,பிரதமர் மோடி,CJP Protest,Vikas Singh,விகாஸ் சிங்,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/hixslenq/New-Project-2026-07-22T150238.638.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ போராட்டக்காரர்கள் மீதான தடியடி - விசாரணைக்கோரி பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் கடிதம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/hixslenq/New-Project-2026-07-22T150238.638.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறையில் சமீபத்தில் நடைபெற்ற குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும் என கரப்பான் பூச்சி கட்சி ஜூன்.20 முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திவருகிறது. </p><p>இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான்று (ஜூலை.20), "சலோ சன்சத்" என்ற பெயரில் பேரணியை நாடாளுமன்றம் நோக்கி முன்னெடுத்தனர். போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம் நுழைவதை தடுத்து நிறுத்த எண்ணற்ற காவலர்கள் அதன் வளாகம் மற்றும் வெளிப்பகுதிகளில் குவிக்கப்பட்டிருந்தனர். </p><p>மாணவர்கள் தொடர்ந்து நாடாளுமன்றப் பகுதியை நெருங்கியநிலையில் அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். காவலர் சீருடைகள் அணியாத பலரும் கையில் தடியுடன் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர். மேலும் கண்ணீர் புகைகுண்டு, பெல்லாட் துப்பாக்கி போன்றவையும் பயன்படுத்தப்பட்டுள்ளது.</p><p>இதில் காயமடைந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் விகாஸ் சிங் கடிதம் எழுதியுள்ளார். </p><p>அதில், டெல்லி ஜந்தர் மந்தர் மற்றும் சன்சத் மார்க் பகுதிகளில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது, காவல்துறையினர் எவ்வித தூண்டுதலும் இன்றி நடத்திய தடியடி குறித்து முறையான நீதி விசாரணை நடத்த வேண்டும் என விகாஸ் சிங் கோரியுள்ளார்.</p><p>உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் என்ற முறையிலும், நாட்டின் ஒரு பொறுப்புள்ள குடிமகனாகவும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்கள் மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>எம்.பி.பி.எஸ். படிப்புக்கு விண்ணப்பிக்க மேலும் 2 நாட்கள் அவகாசம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/two-more-days-granted-to-apply-for-mbbs</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/two-more-days-granted-to-apply-for-mbbs#comments</comments><guid isPermaLink="false">c9bfff35-f33f-4fcd-9b89-f99523f35d25</guid><pubDate>Wed, 22 Jul 2026 09:21:28 +0000</pubDate><atom:updated>2026-07-22T09:21:28.811Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MBBS,மருத்துவ படிப்பு,BDS,ஆன்லைன் விண்ணப்ப பதிவு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/1wk3rf8v/medical.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எம்.பி.பி.எஸ். படிப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/1wk3rf8v/medical.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>எம்.பி.பி.எஸ். படிப்புக்கு விண்ணப்பிக்க மேலும் 2 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.</strong></em></p><p>தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு பல் மருத்துவக் கல்லூரிகள், மற்றும் தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மற்றும் பல் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">மருத்துவ படிப்புகளில்</a> சேர்வதற்கு மாணவ,மாணவிகள் விண்ணப்பித்து வருகிறார்கள். </p><p>கடந்த மாதம் 27-ந்தேதி ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடங்கியது. எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவ படிப்பில் 15 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவ, மாணவிகள் சேர்க்கப்படுகிறார்கள். </p> <p>இந்த நிலையில் இன்று வரை 72 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். இதில் 60 ஆயிரம் பேர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்துள்ளனர். மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை (வியாழக்கிழமை) மாலை 5 மணி வரை அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் இன்னும் பல மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய இருப்பதால் இதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. </p><p>அதன் அடிப்படையில் விண்ணப்பிப்பதற்கு மேலும் 2 நாட்கள் அவகாசம் கொடுக்கப்படுகிறது. 25-ந்தேதி (சனிக்கிழமை) மாலை வரை விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் லோகநாயகி தெரிவித்துள்ளார். </p> <p>இந்திய மருத்துவ ஆணையம் அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வை தொடங்கிய பிறகுதான் தமிழகத்தில் கலந்தாய்வு தொடங்கும். </p><p>மாணவர்கள் விண்ணப்பித்துள்ள விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் தரவரிசை பட்டியல் வெளியிட வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என்று அவர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>டெல்லி போராட்டக்களத்தில் காயமடைந்த மாணவி நலமுடன் உள்ளார்-மருத்துவர்கள் அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/student-injured-in-delhi-protest-is-stable-say-doctors</link><comments>https://www.maalaimalar.com/news/national/student-injured-in-delhi-protest-is-stable-say-doctors#comments</comments><guid isPermaLink="false">808a02b9-2f1b-4a69-b27c-5d29106deba9</guid><pubDate>Wed, 22 Jul 2026 09:10:09 +0000</pubDate><atom:updated>2026-07-22T09:10:09.443Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>neet,ஜே.பி. நட்டா,நீட் தேர்வு முறைகேடு,JPNadda,CJP Protest,காக்ரோச் ஜனதா கட்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/87y0dzai/delhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ The female student injured in the Delhi protest ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/87y0dzai/delhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் 'காக்ரோச் ஜனதா கட்சி' சார்பில் நடைபெற்ற 'சான்சத் சலோ' (பாராளுமன்ற முற்றுகை) பேரணியின் போது, காவல்துறையினரின் நடவடிக்கையில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 21 வயது இளம் பெண், தற்போது செயற்கை சுவாசக் கருவியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். </p><p>அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக அவரைப் பராமரித்து வரும் மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.</p><p>இதுகுறித்து, டெல்லியில் உள்ள புகழ்பெற்ற 'ராம் மனோஹர் லோகியா' மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள மருத்துவக் குறிப்பில்  உத்தம் நகர் பகுதியைச் சேர்ந்த சாக்ஷி (21) என்ற அம்மாணவி, தற்போது முழு சுயநினைவுடன் உள்ளார். </p><p>அவர் மருத்துவர்களின் வழிகாட்டுதல்களுக்குச் சரியாகப் பதிலளிப்பதுடன், செயற்கை சுவாசக் கருவியின் உதவியின்றி சுயமாகச் சுவாசித்து வருகிறார். அவரது மூளை மற்றும் தண்டுவடம் சார்ந்த எம்.ஆர்.ஐ பரிசோதனை முடிவுகள் அனைத்தும் இயல்பாகவே வந்துள்ளன.</p><h2><strong>தொடர் கண்காணிப்பு:</strong></h2><p>கடந்த திங்கள்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்தே அவரது உடல்நிலையில் தொடர்ச்சியான முன்னேற்றம் காணப்பட்டு வருகிறது. இருப்பினும், அசம்பாவிதங்களைத் தவிர்க்க அவர் இன்னும் சில நாட்கள் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்படுவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் தேர்வாணையச் சீர்திருத்தங்கள் கோரி CJP அமைப்பினர் நடத்திய பாராளுமன்ற முற்றுகைப் போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. போராட்டத்தைக் கலைக்கக் காவல்துறையினர் நடத்திய அதிரடி நடவடிக்கையின் போது அம்மாணவிக்குத் தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. </p><p>உடனடியாக அவர் RML மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டது. இச்சம்பவத்தில் 100-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களும், 118 காவல் துறையினரும் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.</p><p>முன்னதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் 'ஜே.பி. நட்டா'  RML மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சையில் இருந்த மாணவியைச் சந்தித்து, அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்திருந்தார். தற்போது மாணவி ஆபத்தான கட்டத்தைத் தாண்டி நலமுடன் இருப்பது அவரது குடும்பத்தினருக்கும் சக மாணவர்களுக்கும் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தீவிரமடையும் போராட்டம் - இன்ஸ்டாகிராம் கணக்கை முடக்கிய தர்மேந்திர பிரதான் மகள்!</title><link>https://www.maalaimalar.com/news/national/protest-intensifies-dharmendra-pradhans-daughter-deactivates-instagram-account</link><comments>https://www.maalaimalar.com/news/national/protest-intensifies-dharmendra-pradhans-daughter-deactivates-instagram-account#comments</comments><guid isPermaLink="false">a6159846-e489-461e-b5c5-537ca4d4d0e3</guid><pubDate>Wed, 22 Jul 2026 09:09:45 +0000</pubDate><atom:updated>2026-07-22T09:09:45.610Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,CJP Protest,Naimisha Pradhan,நைமிசா பிரதான்,கரப்பான்பூச்சி கட்சி போராட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/dikoixh5/New-Project-2026-07-22T143922.191.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தீவிரமடையும் போராட்டம் - இன்ஸ்டாகிராம் கணக்கை முடக்கிய தர்மேந்திர பிரதான் மகள்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/dikoixh5/New-Project-2026-07-22T143922.191.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து கரப்பான்பூச்சி கட்சி டெல்லியில் தொடங்கிய போராட்டம் தற்போது நாடு முழுவதும் வெடித்துள்ளது. இந்த போராட்டம் காவல்துறையின் செயல்முறைகளால் கலவராமாக வெடிக்கும் சூழல் உருவாகி வரும் நிலையில், உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்கள் இதில் தலையிட மறுப்பு தெரிவித்துள்ளன.</p><p>இந்நிலையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் மகள் நைமிஷா பிரதான், தனது இன்ஸ்டாகிராம் கணக்கை முடக்கியுள்ளார். கல்வித்துறையில் ஏற்பட்ட குளறுபடிக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை மையமாக கொண்டே போராட்டம் தொடங்கியது.</p><p>ஆனால் தற்போதுவரை அவர் எந்தவொரு பொறுப்புக்கூறலையும் எடுத்துக்கொள்ளாத நிலையில், அவரது மகளின் இணைய கணக்கு முகவரியை டேக் செய்து இணையவாசிகள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர். </p><p>நைமிஷா, அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் உள்ள டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தின் பிளெட்சர் சட்டம் மற்றும் தூதரகப் பள்ளியில் தனது உயர்கல்வி பட்டப்படிப்பை முடித்தார். </p><p>இந்தியாவில் லட்சக்கணக்கான நடுத்தரக் குடும்ப மாணவர்கள் தேர்வு முறைகேடுகளால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கல்வி அமைச்சரின் மகள் வெளிநாட்டில் பயின்றதைச் சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்தனர். </p><p>மேலும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குவிந்த கடுமையான எதிர்ப்பு மற்றும் அவரது தந்தையை பதவி விலகக் கோரிய கமெண்டுகள் காரணமாக, தனது இன்ஸ்டாகிராம் கணக்கை நைமிஷா முடக்கியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>எங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் - சுப்ரீம் கோர்ட் சாடல்</title><link>https://www.maalaimalar.com/news/national/dont-waste-our-time-supreme-court-refuses-urgent-listing-petiton-against-police-action</link><comments>https://www.maalaimalar.com/news/national/dont-waste-our-time-supreme-court-refuses-urgent-listing-petiton-against-police-action#comments</comments><guid isPermaLink="false">29f9d01c-9610-4450-a2be-1012487d3c21</guid><pubDate>Wed, 22 Jul 2026 08:52:36 +0000</pubDate><atom:updated>2026-07-22T08:52:36.942Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,சுப்ரீம் கோர்ட்,நீட் தேர்வு,Neet exam,CJP Protest</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-25/w52xur9e/SC.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ சுப்ரீம் கோர்ட்]]></media:title><media:description type="html"><![CDATA[ supreme court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-25/w52xur9e/SC.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>டெல்லியில் மாணவர்கள் மீது தடியடி நடத்தியது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மறுப்பு தெரிவித்தார்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/delhi-security-concerns-students-protest-16-key-metro-stations-closed">'நீட்' தேர்வில்</a> நடைபெற்ற குளறுபடிகளை கண்டித்தும், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நேற்று முன்தினம் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். </p> <p>இந்நிலையில், டெல்லியில் மாணவர்கள் மீது தடியடி நடத்தியது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரரின் வக்கீல் கேட்டுக் கொண்டார். </p><p>ஆனால் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த் அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டார். எங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். உங்கள் நேரத்தையும் வீணாக்காதீர்கள் என்று அவர் தெரிவித்தார். தாக்குதல் காணொளிகளை எங்களுக்கு பார்க்க ஆர்வமும், நேரமும் இல்லை என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார். </p><p>முன்னதாக நேற்று இதே போன்ற ஒரு விவகாரத்தை அவசரமாக விசாரிக்க டெல்லி ஐகோர்ட்டும் மறுத்து, ‘நீதிமன்றத்தை இதில் இழுக்காதீர்கள்’ என்று கூறி இருந்தது.</p>]]></content:encoded></item><item><title>&apos;மீசைய முறுக்கு 2&apos; படத்தின் ரிலீஸ் தேதி நாளை வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/meesai-murukku-2-film-release-date-announcement-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/meesai-murukku-2-film-release-date-announcement-tomorrow#comments</comments><guid isPermaLink="false">837a05ff-f945-465b-ab31-60f6505b887e</guid><pubDate>Wed, 22 Jul 2026 08:43:54 +0000</pubDate><atom:updated>2026-07-22T08:43:54.115Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Hiphop Tamizha Adhi,HiphopTamizha,MeesayaMurukku2,மீசையமுறுக்கு2,ReleaseDate,ChaitraJAchar</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/i2khadgu/MeesayaMurukku2" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MeesayaMurukku2 ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/i2khadgu/MeesayaMurukku2?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ் திரையுலகில் முன்னணி இசைக்கலைஞராகவும், நடிகராகவும் வலம் வரும் ஹிப்ஹாப் ஆதி அவரே இயக்கி, நடித்த 'மீசைய முறுக்கு' திரைப்படம் கடந்த 2017 ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.</p><p>இந்த திரைப்படம் வெளியாகி 9 ஆண்டுகள் நிறைவடைத்துள்ள நிலையில், இதனை கொண்டாடும் விதமாக, படத்தின் இரண்டாம் பாகமான '<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/hiphop-adhis-meesaya-murukku-2">மீசைய முறுக்கு 2</a>' எப்போது திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்பதை நாளை மாலை 5 மணிக்கு அறிவிப்போம் என்று ஹிப்ஹாப் ஆதி தெரிவித்துள்ளார்.</p><h2>"கனவாக தொடங்கியது... உணர்வாக மாறியது"</h2><p>தன் திரைப்பயணத்தின் மிக முக்கிய மைல்கல்லான 'மீசைய முறுக்கு' படம் குறித்து ஆதியின் பதிவில், "இது வெறும் ஒரு கனவாகத் தொடங்கியது. ஆனால் இன்று கோடிக்கணக்கான மக்களின் உணர்வாக மாறியுள்ளது" என மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.</p><p>2017 ஜூலை 21 அன்று வெளியான இப்படம், இளைஞர்களின் கனவுகள் மற்றும் நட்பைக் கொண்டாடியதால் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது என்று தெரிவித்திருந்தார்.</p><h2>இரண்டாம் பக்கத்தின் சிறப்புகள்</h2><p>முன்னதாக வெளியான இப்படத்தின் 'டைட்டில் டீசர்' ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் 1980-கள் மற்றும் தற்காலம் என இரண்டு வெவ்வேறு காலக்கட்டங்களில் பயணிக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும், இதில் ஆதி இரட்டை வேடங்களில் நடிக்கிறார். குறிப்பாக, இந்திய பாரம்பரிய இசையின் மீதான பழமைவாதக் கருத்துக்களை சவாலாக எதிர்கொள்ளும் ஒரு இளம் இசைக் கலைஞராக ஒரு கதாபாத்திரத்தில் ஆதி மிரட்டவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">What started as a dream became an emotion for millions. Now it’s time to relive the magic✨ <br>Release date announcement of <a href="https://x.com/hashtag/MeesayaMurukku2?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#MeesayaMurukku2</a> drops tomorrow at 5 PM!<a href="https://x.com/hashtag/9YearsOfMeesayaMurukku?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#9YearsOfMeesayaMurukku</a> <a href="https://x.com/hashtag/MeesayaMurukku2?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#MeesayaMurukku2</a> <a href="https://t.co/UIqAEBEnIE">pic.twitter.com/UIqAEBEnIE</a></p>&mdash; Hiphop Tamizha (@hiphoptamizha) <a href="https://x.com/hiphoptamizha/status/2079810806397784357?ref_src=twsrc%5Etfw">July 22, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><p>முந்தைய பாகத்தைப் போலவே, இந்தப் படத்திற்கும் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை மற்றும் பாடல்களை ஹிப்ஹாப் ஆதியே கவனித்துள்ளார். சைத்ரா ஜே ஆச்சார், ரம்யா ரங்கநாதன், கெத்திகா சர்மா ஆகியோர் இப்படத்தில் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.</p><p>நாசர், ஆடுகளம் நரேன், கருணாஸ், ஷா ரா மற்றும் ஹர்ஷத் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.</p><p>இப்படத்தின் பப்பாளி பழமே' மற்றும் 'ஆரா 10/10' போன்ற பாடல்கள் ஏற்கனவே வெளியாகி இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>பரிதாபமாக காட்சி தரும் கோயம்பேடு பஸ் நிலையம்- சமூக விரோதிகளின் கூடாரமாக மாறுகிறது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/koyambedu-bus-terminus-presents-a-pathetic-sight</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/koyambedu-bus-terminus-presents-a-pathetic-sight#comments</comments><guid isPermaLink="false">99fd5e41-0ed7-4b24-afbc-190f926bd5b9</guid><pubDate>Wed, 22 Jul 2026 08:37:16 +0000</pubDate><atom:updated>2026-07-22T08:37:16.278Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>koyambedu bus stand,கோயம்பேடு பஸ் நிலையம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/m4txyi96/koyambedu.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கோயம்பேடு பஸ் நிலையம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கோயம்பேடு பஸ் நிலையம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/m4txyi96/koyambedu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>போலீஸ் ரோந்தும் இல்லாததால் பொதுமக்கள் உள்ளே செல்லவே அஞ்சுகிறார்கள். கழிப்பறைகளும் பராமரிக்கப்படாததால் துர்நாற்றம் வீசுகிறது.</aside><h2><strong>கோயம்பேடு பஸ் நிலையம்</strong></h2><p>வெள்ளி விழா கொண்டாட வேண்டிய <a href="https://www.maalaimalar.com/topic/கோயம்பேடு-பஸ்-நிலையம்">கோயம்பேடு பஸ் நிலையம்</a>...</p><p>பார்க்க சகிக்காமல் வெட்கி தலைகுனியும் அளவுக்கு அலங்கோலமாக காட்சி அளிப்பது பொதுமக்களை ஆதங்கப்பட வைத்து உள்ளது. சென்னைக்கு வந்தாலே முதலில் நினைவுக்கு வருவது கோயம்பேடு என்ற எண்ணம் பலரது மனதில் நிலைத்து இருக்கிறது. ஒரு காலத்தில் நிமிடத்திற்கு ஒரு பஸ் வந்து சென்ற இடம் இன்று கடந்த கால நினைவுகளை சுமந்து நிற்கிறது. </p><p>‘சென்னை தூங்கினாலும், கோயம்பேடு தூங்காது’ என்று சொல்லப்படும் அளவிற்கு 24 மணி நேரமும் இயங்கிய இடமாக இது இருந்தது. கோயம்பேடு பேருந்து நிலையம் என்பது ஒரு கட்டிடம் மட்டுமல்ல. பல லட்சம் மக்களின் வாழ்க்கைப் பயணத்தின் தொடக்கமும் முடிவும் ஆக இருந்தது. ஆனால் இன்று அது பலரையும் கண்கலங்க வைத்து உள்ளது. </p><h2><strong>பிரமாண்டமான பஸ் நிலையம்</strong></h2><p>1990-களில் சென்னை நகரம் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசலை சந்தித்தது. அந்த கால கட்டத்தில் வெளியூர் பஸ்கள், விரைவு பஸ்கள் என எல்லா பஸ்களும் பாரிமுனைக்கு தான் வரும். புதிதாக தனியார் பஸ்களும் அதிக அளவில் வரத் தொடங்கியதால் பாரிமுனையில் சமாளிக்க முடியவில்லை. இதற்காக கோயம்பேட்டில் சுமார் 35 ஏக்கரில் புதிய பஸ் நிலையம் கட்ட தீர்மானித்தார்கள். ரூ.103 கோடி செலவில் பிரமாண்டமான பஸ் நிலையம் அமைக்கப்பட்டு 2002-ம் ஆண்டு  திறக்கப்பட்டது. </p><p>ஒரே நேரத்தில் 300 பஸ்கள் நிறுத்தும் வசதி, தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து சென்றன. தினமும் சராசரியாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் இந்த பஸ் நிலையத்திற்கு வந்தார்கள். பண்டிகை காலங்களில் இந்த எண்ணிக்கை மேலும் ஒரு மடங்காக அதிகரித்தது. </p><p>இந்த பஸ் நிலையம் வெறுமனே பஸ் நிலையமாக தெரியவில்லை. ஆசியாவிலேயே மிகப்பெரிய பஸ் நிலையம் என்று பெயர் பெற்றது. இது மட்டுமல்ல இந்த பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்ட வசதிகள் தமிழகத்திற்கே முன்னோடியாக இருந்தது. விசாலமான காத்திருப்பு மண்டபங்கள், உணவகங்கள், முன்பதிவு மையங்கள், வாகன நிறுத்தும் இடம், போலீஸ் நிலையம், கழிப்பறைகள் என எல்லாமே திட்டமிட்டு வடிவமைத்து நேர்த்தியாக கட்டப்பட்டது. </p><h2><strong>மெட்ரோ ரெயில்</strong></h2><p>2015-ல் மெட்ரோ ரெயில் பாதைகள் அமைக்கப்பட்ட போது கோயம்பேடு பஸ் நிலையமும் அத்துடன் இணைக்கப்பட்டது. மெட்ரோ ரெயில்களில் வரும் பயணிகளும் எளிதாக பஸ் நிலையத்திற்குள் வந்து சென்றார்கள். இது பயணிகளுக்கு கூடுதல் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தது.</p><p>அதுமட்டுமல்ல சுற்றிலும் இருந்த ஓட்டல்கள், உணவகங்கள், லாட்ஜிகள் என்று எல்லாமே பொருளாதார ரீதியாக வளர்ச்சி கண்டன. </p><p>கோயம்பேடு பஸ் நிலையத்தில் நீண்ட வரிசையில் பஸ்கள் நிற்பது, டிக்கெட் வாங்க கூட்டம் அலைமோதுவது என 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கியது. அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பயணிகள் வந்து சென்றனர். ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுவை ஆகிய மாநிலங்களில் இருந்தும் பஸ்கள் வந்தது என எல்லாமே இன்றும் நினைவில் நிற்கும் காட்சிகள்.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/nsxf4td4/koyambedu0.jpg" /></figure><h2><strong>காலத்தின் கொடுமை</strong></h2><p>ஒரு தலைமுறையே பிரம்மிப்புடன் பார்த்தும், ரசித்தும் பயன்படுத்திய பஸ் நிலையம் இன்று மக்கள் செல்லவே அஞ்சும் இடமாக மாறி இருப்பது காலத்தின் கொடுமை. கோயம்பேடு பஸ் நிலையத்தில் நெரிசல் அதிகரித்து வருவதால் கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு என்ற புதிய பஸ் நிலையத்தை அரசு கட்டியது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பஸ்கள் அங்கு மாற்றப்பட்டது. </p><p>வெளிமாநிலங்கள் உள்பட சில இடங்களுக்கு செல்லும் பஸ்கள் மாதவரத்திற்கு மாற்றப்பட்டது. சென்னை அருகில் உள்ள சில வழித்தட பஸ்கள் மட்டுமே கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படுகிறது. இதனால் கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு பயணிகள் வருகை பெருமளவு குறைந்தது. </p><p>தற்போது வார நாட்களில் தினமும் குறைவான பயணிகள் மட்டுமே இங்கிருந்து பஸ்களில் செல்கிறார்கள். முன்பு வார நாட்களில் 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் பேர் வரை முன்பதிவுகள் செய்த நிலையில் தற்போது பெங்களூரு, ஓசூர், சேலம், தர்மபுரி, திருப்பதி உள்ளிட்ட சில வழித்தடங்களுக்கு மட்டும் சுமார் 300 முன்பதிவுகள் நடக்கிறது. </p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/t5er8vwa/koyambedu01.jpg" /></figure><h2><strong>கட்டிடங்கள் சிதிலம்</strong></h2><p>பஸ் நிலையம் வெறிச்சோடி கிடப்பதால் அங்கு வரும் பயணிகளும் பாதுகாப்பற்ற நிலையை உணர்கிறார்கள். முன்பு இரவு நேரங்களில் மின்னொளியில் ஜொலித்த இந்த பஸ் நிலையம் இப்போது பல கடைகள் மூடப்பட்டு விட்டதால் ஆங்காங்கே ஒரு சில மின் விளக்குகள் மட்டுமே எரிவதால் களை இழந்து விட்டது. பஸ் நிலையத்திற்குள் வீடு இல்லாதவர்கள், தெருவோரங்களில் வசிப்பவர்கள், வெளிமாநில கூலி தொழிலாளர்கள் என்று பலரும் தங்குகிறார்கள்.  முன்பெல்லாம் எப்போதும் பயணிகள் கூட்டத்தால் கோயம்பேடு கலகலப்பாக இருந்ததால் சமூக விரோத செயல்களும் நடப்பதில்லை. ஆனால் இப்போது ஒரு சிலர் மட்டும் இரவு நேரங்களில் பஸ்சுக்காக செல்லும் போது வழிப்பறி மற்றும் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். </p><p>போலீஸ் ரோந்தும் இல்லாததால் பொதுமக்கள் உள்ளே செல்லவே அஞ்சுகிறார்கள். கழிப்பறைகளும் பராமரிக்கப்படாததால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் வெளிப்பகுதியில் சிறுநீர், மலம் கழித்து விட்டு செல்வதால் கால் வைத்து நடக்க முடியவில்லை. எந்த பக்கத்தில் திரும்பினாலும் சிகரெட் துண்டுகள்,  மதுபான பாட்டில்கள், குப்பைகள் சிதறி கிடக்கின்றன. கட்டிடங்களும் சிதிலம் அடைய தொடங்கி விட்டது. </p><p>இந்த பகுதியில் இரவு நேரத்தில் செல்போன்கள் பறிப்பது, கையில் கொண்டு செல்லும் பொருட்களை அடித்து பிடுங்கிக் கொண்டு செல்வது போன்ற புகார்கள் அடிக்கடி வருவதாக போலீஸ் தரப்பிலும் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனாலும் டவுண் பஸ்கள் நிற்கும் இடங்களில் மட்டும் ஒரு சில போலீசார் ரோந்து செல்வதால் மற்ற பகுதிகள் பெரும்பாலும் சமூக விரோதிகளின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்கிறது. </p><h2><strong>வாகனம் நிறுத்தும் இடம்</strong></h2><p>வாகனம் நிறுத்தும் இடம் காலையில் மட்டுமே செயல்படுகிறது. தர்மபுரிக்கு செல்லும் பயணியை பஸ் ஏற்றி விடுவதற்கு இரவில் காரில் வந்தவரை கார் நிறுத்துவதற்கு அனுமதிக்கவில்லை. காலை 5 மணிக்கு பிறகுதான் பார்க்கிங் செயல்படத் தொடங்கும். அதுவரை வெளியே காரை நிறுத்தி காத்திருங்கள் என்று சொன்னதாக ஆதங்கத்துடன் கூறினார். </p><p>ஒரு காலத்தில் கூட்டத்தின் அடையாளமாக பார்க்கப்பட்ட இடம் இன்று அமைதி குடிகொண்டுள்ள இடமாக காட்சி அளிக்கிறது. கோயம்பேட்டின் வரலாறு குறையவில்லை. ஆனால் பயணிகளின் காலடி சத்தம் மட்டும் குறைந்துவிட்டது. </p><p>நல்ல திட்டமிடல் இருந்தும் போதிய பயன்பாடு இல்லாமல் போனது துரதிருஷ்டம். பராமரிப்பு இல்லாததால் கோடிக்கணக்கில் கொட்டி கட்டப்பட்ட பிரமாண்டம் இப்போது சிதைந்து கொண்டு இருக்கிறது. சுகாதாரம், கழிவறை பராமரிப்பு இல்லாததால் சுற்றுச்சூழல் சீர்கேடும் அரங்கேறுகிறது. இந்த பகுதியில் உள்ள சிறுவியாபாரிகளின் வருமானம் கடுமையாக பாதித்து உள்ளது. </p><p>‘பஸ்களின் இரைச்சல் குறைந்தாலும், கோயம்பேட்டின் கதைகள் இன்னும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.’</p><p>‘கோயம்பேடு என்பது வெறும் பஸ் நிலையமல்ல, ஒரு தலைமுறையின் பயண நினைவகம்’.</p>]]></content:encoded></item><item><title>டெல்லியில் ராகுல் காந்தி கைது - முதலமைச்சர் விஜய் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rahul-gandhi-arrested-in-delhi-cm-vijay-condemns</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rahul-gandhi-arrested-in-delhi-cm-vijay-condemns#comments</comments><guid isPermaLink="false">f351c86b-3c68-4ac0-a539-5b7f5307e35c</guid><pubDate>Wed, 22 Jul 2026 08:29:32 +0000</pubDate><atom:updated>2026-07-22T08:29:32.880Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,விஜய்,நீட் தேர்வு,cm vijay,CJP Protest</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/mf9a2lsc/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rahul Gandhi - CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/mf9a2lsc/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.</strong></em></p><p>இது தொடர்பாக <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதலமைச்சர் விஜய்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், </p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-only-scrapping-neet-will-provide-a-lasting-solution-to-all-these-problems">நீட் தேர்வு</a> குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிரானது. ஒன்றிய அரசின் இச்செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.</p><p>நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.</p> <p>நீட் தேர்வைப் பொறுத்தவரை நீட் தேர்வுமுறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே த.வெ.க.-வின் சமரசமற்ற நிலைப்பாடு. மாணவர்களை மட்டுமல்லாது அவர்களது குடும்பங்களையும்  வெகுவாகப் பாதிக்கும் நீட் தேர்வு முறையை வைத்து வாக்கு அரசியல் செய்வதற்காக, பொய்யான வாக்குறுதிகளை நாம் ஒருபோதும் அளிக்கமாட்டோம்.</p> <p>நீட் தேர்வு போன்றவை ஒழிக்கப்பட வேண்டுமெனில், முதலில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அது மட்டுமே ஒரே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை, கட்சி தொடங்கியபோதே, நம் கழகத்தின் சார்பாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவிலேயே ஆழமாக வலியுறுத்தி இருக்கிறோம்.</p> <p>நம் மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும். அதன் வெளிப்பாடாக, நீட் தேர்வு அறவே அகற்றப்பட வேண்டும். இந்தச் சிக்கலுக்கு இது மட்டுமே ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>வாரம் 2 நாள் சுண்டைக்காய்: ஏன் தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/health/generalmedicine/benefits-of-eating-sundakkai-twice-a-week</link><comments>https://www.maalaimalar.com/health/generalmedicine/benefits-of-eating-sundakkai-twice-a-week#comments</comments><guid isPermaLink="false">7867f27f-52a8-4ec5-a35c-85431670f249</guid><pubDate>Wed, 22 Jul 2026 08:18:27 +0000</pubDate><atom:updated>2026-07-22T08:18:27.718Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Health,ஆரோக்கியம்,HealthTips,turkey berry,சுண்டைக்காய்,உடல்நலம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/e0l7jdtn/article.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Turkey Berry  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/e0l7jdtn/article.jpg?w=280" width="280"></media:thumbnail><category>பொது மருத்துவம் (General Medicine)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சுண்டைக்காயை  கிராமப்புறங்களில் வயிற்றிலுள்ள பூச்சிகளை ஒழிக்க உபயோகப்படுத்துவார்கள். சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி, முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை. கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன. ஜீரணத் தன்மை கொண்டது.</p><h2><strong>சுண்டைக்காயை வாரம் 2 முறை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்</strong>:</h2><h2><strong>உடல் சோர்வு :</strong></h2><p>சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இதனால் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் உடற்சோர்வு நீங்கும்.</p><h2><strong>சுவாசப் பிரச்சனை :</strong></h2><p>சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு ஆளாகுபவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.</p><h2><strong>வயிற்றுப் புண் :</strong></h2><p>வாரம் மூன்று முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பூச்சிகள் வெளியேறிவிடும். அல்சர் மற்றும் வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.</p><h2><strong>ரத்தத்தை சுத்தகரிக்கும் :</strong></h2><p>முற்றின சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து வற்றல் குழம்பாக்கி சாப்பிடலாம். குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். ரத்தத்தை சுத்தப்படுத்தும்.</p><h2><strong>கபம் மற்றும் காச நோயாளிகளுக்கு :</strong></h2><p>தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும். மேலும் மார்புச்சளி, தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும். ஆஸ்துமா, காசநோயாளிகள் இதனை சாப்பிட்டு வந்தால் பாதிப்பு குறையும்.</p><h2><strong>சர்க்கரை நோய் மற்றும் கொழுப்பு கட்டுப்பாடு:</strong></h2><p>ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க சுண்டைக்காய் பெரிதும் உதவுகிறது. உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்பைக் குறைக்கவும், இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் துணைபுரிகிறது. </p><p>பச்சைச் சுண்டைக்காயை சமையலில் சேர்த்துச் சாப்பிடலாம் அல்லது சுண்டைக்காய் வத்தலாகவும் பயன்படுத்தலாம். எனினும், அதிகப்படியான கசப்புத் தன்மை இருப்பதால் அளவுக்கு அதிகமாக எடுக்காமல், வாரத்திற்கு 2 முறை மிதமான அளவில் எடுத்துக்கொள்வது சிறந்தது.</p>]]></content:encoded></item><item><title>தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம் - டெல்லியில் 16 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-security-concerns-students-protest-16-key-metro-stations-closed</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-security-concerns-students-protest-16-key-metro-stations-closed#comments</comments><guid isPermaLink="false">1aa2f303-9741-43c8-848e-4d497d7c944c</guid><pubDate>Wed, 22 Jul 2026 08:17:53 +0000</pubDate><atom:updated>2026-07-22T08:17:53.656Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டெல்லி,டெல்லிமெட்ரோ,DelhiMetro,MetroClosed,InterchangeFacility,PublicNotice</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/odjnkqqd/DelhiMetroClosed" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DelhiMetroClosed]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/odjnkqqd/DelhiMetroClosed?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேசிய தலைநகர் டெல்லியில் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் மாணவர்கள் மற்றும் சிஜேபி அமைப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்ற முற்றுகைப் பேரணியின் போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கை கலப்பு ஏற்பட்டது. </p><p>இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காகவும், சட்டம் ஒழுங்கு அசம்பாவிதங்களை தவிர்க்கவும் டெல்லி மெட்ரோ ரெயில் நிர்வாகம் மத்திய டெல்லியில் உள்ள 16 முக்கிய மெட்ரோ நிலையங்களை தற்காலிகமாக மூடி உத்தரவிட்டுள்ளது.</p><h2><strong>16 மெட்ரோ நிலையங்கள்</strong></h2><p>டெல்லியில் நிலவி வரும் பாதுகாப்பு காரணங்களுக்காக ராஜீவ் சௌக், மண்டி ஹவுஸ், சென்ட்ரல் செகரட்டரியேட் உள்ளிட்ட 16 முக்கிய மெட்ரோ ரெயில் நிலையங்கள் மறு உத்தரவு வரும் வரை அதிரடியாக மூடப்படுவதாக டெல்லி மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.</p><p>இதன் காரணமாக, ராஜீவ் சௌக், மண்டி ஹவுஸ், சென்ட்ரல் செகரட்டரியேட், படேல் சௌக், ஜன்பத், டெல்லி கேட், ஐ.டி.ஓ, சுப்ரீம் கோர்ட், லோக் கல்யாண் மார்க், ராமகிருஷ்ணா ஆஸ்ரமம் மார்க், பாரகம்பா ரோடு, சேவா தீர்த், இந்திரபிரஸ்தா, கான் மார்க்கெட், ஜோர் பாக் மற்றும் சிவாஜி ஸ்டேடியம் ஆகிய மெட்ரோ நிலையங்களின் செயல்பாடுகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன.</p><h2>பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு:</h2><p>எனினும், பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு ராஜீவ் சௌக், மண்டி ஹவுஸ் மற்றும் சென்ட்ரல் செகரட்டரியேட் ஆகிய சந்திப்பு நிலையங்களில் ஒரு பாதையிலிருந்து மற்றொரு பாதைக்கு மாறுவதற்கான இணைப்பு ரெயில் வசதிகள் மட்டுமே தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என்று டெல்லி மெட்ரோ நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு- சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/sc-allows-cbi-probe-to-armstrong-murder-case</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/sc-allows-cbi-probe-to-armstrong-murder-case#comments</comments><guid isPermaLink="false">c1df5443-f70a-48d9-ba6d-bab5c8c2dc0d</guid><pubDate>Wed, 22 Jul 2026 07:48:52 +0000</pubDate><atom:updated>2026-07-22T07:48:52.177Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சிபிஐ,cbi,Supreme Court,Armstrong murder case,ஆம்ஸ்ட்ராங்,ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு,Armstrong,உச்சநீதிமன்றம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/3vlbb6wu/armstrong.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆம்ஸ்ட்ராங்- உச்சநீதிமன்றம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/3vlbb6wu/armstrong.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து விரைவில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை கையில் எடுத்து தீவிர விசாரணையில் ஈடுபட இருக்கிறார்கள்.</aside><p>பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.</p><h2><strong>அரசியல் பிரபலங்களுக்கு தொடர்பு</strong></h2><p>சென்னை பெரம்பூர் பகுதியில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><p>இது தொடர்பாக செம்பியம் போலீசார் வழக்கு பதிவு செய்து 27 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்த பிரபல வடசென்னை தாதா நாகேந்திரன் உடல் நலக்குறைவால் காலமானார்.</p><p>இதைத் தொடர்ந்து மற்றவர்கள் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலையில் பல்வேறு முக்கிய பிரமுகர்களுக்கும், அரசியல் பிரபலங்களுக்கும் தொடர்பு இருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.</p><p>இதைத்தொடர்ந்து <a href="https://www.maalaimalar.com/topic/ஆம்ஸ்ட்ராங்-கொலை-வழக்கு">ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை</a> சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டுமென சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்து ஐகோர்ட் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. ஆனால் சி.பி.ஐ. விசாரணையை எதிர்த்து கடந்த தி.மு.க. ஆட்சியில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருந்தது. இதனால் சி.பி.ஐ. விசாரணை நடைபெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது.</p><h2><strong>தடை நீங்கியது</strong></h2><p>சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை ஆட்சி மாற்றத்துக்கு பிறகு தற்போதைய த.வெ.க. அரசு திரும்பப் பெற்றது. </p><p>இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு தடை கோரிய வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதி விஸ்வநாதன் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,  ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றுவதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. </p><h2><strong>சிபிஐ விசாரணைக்கு அனுமதி</strong></h2><p>மேலும், முந்தைய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை திரும்ப பெறுவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதி கோரிக்கையை ஏற்று மேல்முறையீட்டு மனுவை திரும்ப பெறுவதற்கும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க அனுமதி அளித்தது. அதேவேளையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் ஜாமின் இருப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது  சி.பி.ஐ. பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை செப்டம்பர் மாதம் 2-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. </p><p>உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து விரைவில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை கையில் எடுத்து தீவிர விசாரணையில் ஈடுபட இருக்கிறார்கள். இது தொடர்பான ஆவணங்களை செம்பியம் போலீசாரிடம் இருந்து பெற்று இந்த வழக்கில் முழு பின்னணி குறித்தும் விசாரிக்க உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!- அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-government-must-take-measures-to-curb-the-rise-in-rice-prices</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-government-must-take-measures-to-curb-the-rise-in-rice-prices#comments</comments><guid isPermaLink="false">ae833238-8002-40f4-ab75-2add832ca391</guid><pubDate>Wed, 22 Jul 2026 07:34:59 +0000</pubDate><atom:updated>2026-07-22T07:34:59.520Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,அரிசி விலை உயர்வு,Rice Price Hike</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/hbvl8yum/rice0.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/hbvl8yum/rice0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த இந்தியாவிலிருந்து அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும்; மொத்த வணிகர்களின் அரிசி கையிருப்புக்கு உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும்.</aside><p>பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>அதிர்ச்சி</strong></h2><p>தமிழ்நாட்டில் கடந்த 15  நாள்களுக்கு முன் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">அரிசி விலை</a> கிலோவுக்கு  ரூ.15 வரை உயர்ந்திருந்த நிலையில், இப்போது மீண்டும் கிலோவுக்கு  ரூ.3 முதல் ரூ.15 வரை உயர்த்தப்பட்டுள்ளது. வெறும் 15 நாள் இடைவெளியில் சாப்பாட்டு அரிசியின் விலை  கிலோவுக்கு ரூ.30 வரை உயர்ந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.</p><p>இரு நாள்களுக்கு முன்பு வரை கிலோ ரூ.52க்கு விற்பனை செய்யப்பட்ட சாதாரண ரக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ponni-rice-price-hike">பொன்னி அரிசி</a> விலை  இப்போது ரூ.8 விலை உயர்ந்து ரூ.60 ஆகியுள்ளது. மைசூர் பொன்னி, ஆந்திரா பொன்னி ஆகிய அரிசி வகைகளின்  விலை 50 ரூபாயிலிருந்து ரூ.65 ஆக உயர்ந்துள்ளது. சன்னரக அரிசி விலை  ரூ.64-லிருந்து ரூ.75 ஆக உயர்ந்திருக்கிறது. இட்லி அரிசி விலை கிலோ ரூ.43-லிருந்து ரூ.50 ஆக அதிகரித்துள்ளது. 26 கிலோ எடை கொண்ட அரிசி மூட்டை லை ரூ.250 முதல் ரூ.400 வரை உயர்ந்திருக்கிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><h2><strong>மக்கள் பாதிக்கப்படக் கூடாது</strong></h2><p>பருவமழை பெய்யாததால் காவிரி பாசன மாவட்டங்களில் கோடை மற்றும் குறுவை பருவ சாகுபடி குறைந்தது தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால், கடந்த ஆண்டில் குறுவை, சம்பா, தாளடி ஆகிய 3 பருவங்களிலும் நெல் அமோகமாக விளைந்ததாலும்,  நடப்பாண்டில் குறுவை பருவம் இன்னும் முடிவடையாததாலும் இந்த காரணத்தை ஏற்க முடியவில்லை.</p><p>அடுத்த சில மாதங்களில் அரிசி வரத்து குறையும் என்பதை  எதிர்பார்த்து வணிகர்கள் செயற்கையாக விலையை உயர்த்தியிருப்பதாகவே உழவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. காரணம் என்னவாக இருந்தாலும் அரிசி விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படக் கூடாது.</p><h2><strong>மத்திய அரசு</strong></h2><p>அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த இந்தியாவிலிருந்து அரிசி ஏற்றுமதிக்கு  தடை விதிக்க வேண்டும்;  மொத்த வணிகர்களின் அரிசி கையிருப்புக்கு உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளின் மூலம் சந்தையில் அரிசியின் புழக்கத்தை அதிகரித்து விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>அதேபோல், மாநில அரசும் அதன் பங்குக்கு  விலைக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அரிசி ஆலைகள், மொத்த வணிகர்கள் ஆகியோரிடம் உள்ள அரிசியில் 20 விழுக்காட்டை அடக்க விலைக்கு அரசே கொள்முதல் செய்து நியாயவிலைக்கடைகள், கூட்டுறவு விற்பனை அங்காடிகள் ஆகியவற்றின் மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முன்வர வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ips-officers-transferred-in-tamil-nadu-2</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ips-officers-transferred-in-tamil-nadu-2#comments</comments><guid isPermaLink="false">397bd551-542b-4713-b656-5e32645c8148</guid><pubDate>Wed, 22 Jul 2026 07:22:18 +0000</pubDate><atom:updated>2026-07-22T07:22:18.916Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,TN Government,ஐபிஎஸ் அதிகாரிகள்,பணியிட மாற்றம்,IPS Officers Transferred</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/07/14/15690241-tn.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN Government]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/07/14/15690241-tn.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.</strong></em></p><p>தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த  நிலையில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். </p><p>இதுகுறித்து <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">தமிழக அரசின்</a> உள்துறை செயலாளர்  மணிவாசன் பிறப்பித்த உத்தரவில்,</p><p>* தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணி செய்து வந்த அபிஷேக் குப்தா, சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணியிட மாற்றம்.</p><p>* சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவப்பிரசாத், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணியிட மாற்றம்.</p><p>* திருச்சி ஆயுதப்படை டிஐஜி விஜயலட்சுமி சென்னை ஊர்க்காவல் படை டிஐஜியாக பணியிட மாற்றம்.</p> <p>* சென்னை குற்றப்பிரிவு  மத்திய மண்டல காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சண்முகப்பிரியா சென்னை மேற்கு மண்டல ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல்துறை கண்காணிப்பாளராக பணியிட மாற்றம்.</p><p>*  ராமேஸ்வரம் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் மீரா சென்னை அலுவலக மற்றும் கணினி மயமாக்கல் உதவி காவல் துறை கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.</p><p> இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தை குப்பைத் தொட்டியாக்கும் கேரளம்- டிடிவி தினகரன் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-says-kerala-turning-tamil-nadu-into-a-garbage-bin</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-says-kerala-turning-tamil-nadu-into-a-garbage-bin#comments</comments><guid isPermaLink="false">ce7f5532-2fda-475b-9dd4-2d6955096f01</guid><pubDate>Wed, 22 Jul 2026 07:07:56 +0000</pubDate><atom:updated>2026-07-22T07:07:56.100Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>AMMK,அமமுக,டிடிவி தினகரன்,TTTV Dhinakaran,மருத்துவ கழிவு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/eagrz31n/TTVDhinakaran001.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/eagrz31n/TTVDhinakaran001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தமிழகத்தை குப்பைத் தொட்டியாகப் பயன்படுத்தும் கேரளத்தின் போக்கை இரும்புக் கரம் கொண்டு தடுக்க வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் வலியுறுத்தி உள்ளார்.</aside><p>அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">டி.டி.வி. தினகரன்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>மருத்துவ கழிவுகள்</strong></h2><p>தென்காசி மாவட்டம், கடையம் அருகே விளைநிலங்களுக்கு அருகே பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் காலாவதியான மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட சுமார் 10 டன் அளவிலான மருத்துவக் கழிவுகள் கேரள மாநிலத்திலிருந்து கொண்டு வந்து கொட்டப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p>கேரள மாநிலத்திலிருந்து கனரக வாகனங்களில் கொண்டு வரப்பட்டு ஜம்பு நதிப் படுகையையொட்டி கொட்டப்பட்டுள்ள காலாவதியான மாத்திரைகள், பயன்படுத்தப்பட்ட கை உறைகள் மற்றும் பிற உயிரி மருத்துவக் கழிவுகள் விவசாய நிலங்களின் வளத்தை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், நிலத்தடி நீர் மாசுபடவும், பொதுமக்களின் சுகாதாரத்திற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.</p><h2><strong>மெத்தனம்</strong></h2><p>அண்டை மாநிலங்களில் இருந்து தமிழக எல்லைப் பகுதிகளில் உயிரி மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும் சட்டத் திருத்தம் ஏற்கனவே அமலில் உள்ள நிலையிலும், தமிழகத்தை குப்பைத் தொட்டியாகப் பயன்படுத்தும் இத்தகைய செயல்பாடுகளைத் தடுக்கத் தவறியுள்ள தவெக அரசின் அலட்சியமும் மெத்தனமும் கடும் கண்டனத்திற்குரியது.</p><h2><strong>தமிழக எல்லைக்குள் நுழைந்தது எப்படி?</strong></h2><p>தமிழக – கேரள எல்லைப் பகுதிகளில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் காவல்துறையினர் கண்காணிப்பு மேற்கொண்டு வருவதாக அவ்வப்போது அரசு தெரிவித்து வரும் நிலையில், இத்தனை பெரிய அளவிலான மருத்துவக் கழிவுகள் அதிகாரிகளின் கவனத்திற்குப் படாமல் தமிழக எல்லைக்குள் நுழைந்தது எப்படி?</p><h2><strong>தீவிர சோதனை</strong></h2><p>எனவே, தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல், விவசாயம் மற்றும் பொதுச் சுகாதாரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டிச் சென்றவர்களை உடனடியாகக் கண்டறிந்து, அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுப்பதோடு இனி இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் தமிழக – கேரள எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை பலப்படுத்தி, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய தீவிர சோதனை முறைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-says-farmers-distressed-that-bribes-are-being-demanded-even-after-declaration-that-this-is-cm-vijays-regime">தவெக</a> அரசை வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/students-arrested-protest-demand-cancellation-of-neet-exam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/students-arrested-protest-demand-cancellation-of-neet-exam#comments</comments><guid isPermaLink="false">b5a70378-db4c-4c99-a115-4d74449b12d4</guid><pubDate>Wed, 22 Jul 2026 07:02:26 +0000</pubDate><atom:updated>2026-07-22T07:02:26.916Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணவர்கள் போராட்டம்,நீட் தேர்வு,Neet exam,Students Arrested,CJP Protest</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/3pclnfqe/students.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Students Protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/3pclnfqe/students.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி எழும்பூரில் போராட்டம் நடத்திய மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.</strong></em></p><p>'நீட்' தேர்வில் நடைபெற்ற குளறுபடிகளை கண்டித்தும், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நேற்று முன்தினம் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். </p> <p>இந்த சம்பவத்தை கண்டித்தும், 'நீட்' தேர்வுக்கு எதிராகவும் சென்னை தியாகராயநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பாலன் இல்ல வளாகத்தில் அமர்ந்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் முழக்க போராட்டம் நடத்தினர்.</p><p>டெல்லியில்<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-only-scrapping-neet-will-provide-a-lasting-solution-to-all-these-problems"> 'நீட்' தேர்வு</a>க்கு எதிராக நாடாளுமன்றம் நோக்கி செல்ல முயன்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து, சென்னை எழும்பூர் எல்.ஜி.கார்டன் சாலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்றிரவு பேரணி நடத்தினார்கள். பேரணி முடிவில் அவர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்தனர். </p> <p>சென்னை தி.நகரில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">நீட் தேர்வை</a> ரத்து செய்யக்கோரி 3-வது நாளாக தொடர்ந்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.</p><p>இந்நிலையில் டெல்லியில் போராடிய மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் சென்னை எழும்பூரில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். உரிய அனுமதியின்றி போராட்டம் நடத்திய மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.</p> <p>இதேபோல், திருவொற்றியூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.  மேலும், சென்னை ராயப்பேட்டையில் புதுக்கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.</p><p>கோவையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்திய மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>&quot;தேசிய விருதை தனுஷ் முழுமையாகத் தகுதிபெற்று வென்றுள்ளார்; அதைச் சந்தேகிப்பது வீண்&quot;-எச்.வினோத்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/dhanush-fully-deserves-his-national-award</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/dhanush-fully-deserves-his-national-award#comments</comments><guid isPermaLink="false">44fd8017-098a-4c75-8fa8-9cdc841f2e2b</guid><pubDate>Wed, 22 Jul 2026 06:49:00 +0000</pubDate><atom:updated>2026-07-22T06:49:00.717Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தேசிய திரைப்பட விருது விழா,Dhanush,நடிகர் தனுஷ்,national film awards,எச்.வினோத்,H.vinoth</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/wjh1dbpk/dhanush.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ H.Vinoth-Dhanush]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/wjh1dbpk/dhanush.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சமீபத்தில் அறிவிக்கப்பட்ட '72-வது தேசிய திரைப்பட விருதுகள்' குறித்த விவாதங்களும் விமர்சனங்களும் சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், முன்னணி இயக்குநர் 'எச்.வினோத்' தனது கருத்தை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். </p><p>நடிகர் தனுஷ் தேசிய விருதை வென்றது முற்றிலும் தகுதியானது என்றும், தேசிய விருதுத் தேர்வு முறைகள் மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><h2><strong>தகுதியானவருக்கு விருது கிடைக்கும் போது கேள்வி தேவையற்றது:</strong></h2><p>சமீபத்தில் எச்.வினோத் தனது பேட்டியில், தனுஷின் வெற்றி குறித்து  கூறியதாவது, "தனுஷ் ஒரு மிகச்சிறந்த நடிக என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் இந்த அங்கீகாரத்திற்கு முற்றிலும் தகுதியானவர். ஒரு தகுதியான நபருக்கு விருது வழங்கப்படும் போது, 'ஏன் வேறு ஒருவருக்கு கிடைக்கவில்லை?' என்று கேள்வி எழுப்புவது முற்றிலும் தேவையற்றது."</p><p>தனுஷ் இயக்கி நடித்த 'ராயன்' திரைப்படம் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதையும், 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்ததற்காக சிறப்புப் நடுவர் விருதையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p>மேலும், விருதுத் தேர்வு குறித்து எழும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த எச்.வினோத், தேசிய விருதுகள் "பணத்தால் வாங்கப்படுகின்றன" என்ற கூற்றை எச்.வினோத் முற்றிலும் மறுத்துள்ளார். விருதுகள் வாங்கப்படுகின்றன அல்லது செல்வாக்கால் பெறப்படுகின்றன என்ற செய்திகளை நான் கேள்விப்பட்டதே இல்லை. தேசிய விருதுகளுக்கான தேர்வுமுறை பெரும்பாலும் நியாயமானதாகவே இருந்துள்ளது. என கூறினார்.</p><h2><strong>தேர்வுக் குழுவின் பங்களிப்பு:</strong></h2><p>நடுவர் குழுவில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினர்களே உள்ளனர். விமர்சனங்கள் இருந்தால், அதைத் தேர்வுமுறையை மேம்படுத்துவதற்கான ஆக்கப்பூர்வமான ஒன்றாக எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, அவர்களின் நோக்கத்தைச் சந்தேகிக்கக் கூடாது.</p><p>ஒரு நல்ல படத்தை உருவாக்குவதுடன் பணி முடிந்துவிடுவதில்லை எனக்கூறிய வினோத், "படத்தை தயாரித்து விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்வதோடு நமது வேலை முடிவதில்லை. வட இந்தியா உட்பட அனைத்துப் பகுதி மக்களையும் அப்படம் எப்படிச் சென்று அடைகிறது என்பதைப் புரிந்து கொண்டு, அதைத் சரியாகக் கொண்டு சேர்ப்பதும் முக்கியம்" எனக் குறிப்பிட்டார்.</p><h2><strong>நடுவர் குழுவின் பாராட்டு:</strong></h2><p>ஏற்கனவே தேசிய விருது நடுவர் குழு உறுப்பினரும் நடன இயக்குநருமான கலா மாஸ்டர், தனுஷின் 'கேப்டன் மில்லர்' மற்றும் 'ராயன்' படங்களின் உழைப்பைப் பாராட்டியிருந்தார். 'கேப்டன் மில்லர்' படத்தில் தனுஷின் நடிப்புத் திறனைக் கண்டு நடுவர் குழு ஒருமனதாக அவருக்கு சிறப்பு விருது வழங்கிப் பாராட்டியதாக அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. </p><p>தற்போது நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தை இயக்கி முடித்துள்ள எச்.வினோத்தின் இந்த கருத்துகள், திரை உலகிலும் சினிமா ரசிகர்களிடையேயும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>அரிசி விலை கிடுகிடு உயர்வு- பொன்னி அரிசி கிலோ ரூ.80-க்கு விற்பனை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ponni-rice-price-hike</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ponni-rice-price-hike#comments</comments><guid isPermaLink="false">440f6e5c-0c51-4177-86a2-34d8bbd159e5</guid><pubDate>Wed, 22 Jul 2026 06:48:53 +0000</pubDate><atom:updated>2026-07-22T06:48:53.694Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>அரிசி,Rice,rice price,அரிசி விலை உயர்வு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/5qsf8on2/rice.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அரிசி]]></media:title><media:description type="html"><![CDATA[ அரிசி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/5qsf8on2/rice.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>நாட்டில் பரவலாக ஏற்பட்டுள்ள வறட்சி, நெல் உற்பத்தியை வெகுவாக பாதித்துவிட்டது. கர்நாடக மாநிலத்தில் விளைச்சல் குறைந்ததால் ஏற்பட்டுள்ள இந்த விலையேற்றம் கவலை தருவதாக உள்ளது.</aside><p>தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இலவச அரிசி வழங்கப்பட்டு வந்தாலும் பெரும்பாலானோர் கடைகளில் விற்கும் பொன்னி அரிசி வகைகளை விரும்பி வாங்குகின்றனர்.</p><h2><strong>விலை உயர்வு</strong></h2><p>இந்த நிலையில் கடந்த 2 வாரமாக <a href="https://www.maalaimalar.com/topic/அரிசி-விலை-உயர்வு">அரிசி விலை</a> கிடுகிடு என உயர்ந்து வருகிறது. கிலோ 55 ரூபாய்க்கு விற்கப்பட்ட கர்நாடக பொன்னி அரிசி கடந்த 15 நாட்களுக்கு முன்பு 10 ரூபாய் விலை ஏறி, ரூ.65 க்கு விற்பனை செய்யப்பட்டது.  இந்த அரிசி விலை மேலும் 15 ரூபாய் உயர்ந்து இப்போது கிலோ ரூ.80-க்கு விற்கப்படுகிறது.</p><p>25 கிலோ கொண்ட ஒரு சிப்பம் அரிசி 350 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. இட்லி அரிசி 35 ரூபாயில் இருந்து 40 ரூபாய்க்கு விலை உயர்ந்து விட்டது. இப்போது இரண்டாவது முறையாக 50 ரூபாயாக இட்லி அரிசி விலை உயர்ந்துள்ளது. இதற்கு கர்நாடகத்தில் நெல் விளைச்சல் குறைந்தது தான் முக்கிய காரணம் என்கிறார்கள்.</p><p>இதன் காரணமாக தமிழ்நாட்டுக்கு அரிசி லோடு வருவது அங்கிருந்து வெகுவாக குறைந்துவிட்டது. இந்த தட்டுப்பாட்டை சமாளிக்க கர்நாடகா மாநில வியாபாரிகள் தமிழகத்தில் விளைவிக்கப்படும் நாட்டு பொன்னி ரகத்தை கொள்முதல் செய்து வருகிறார்கள். இதன் காரணமாக ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நாட்டுப் பொன்னி அரிசி இப்போது ரூ.85-க்கு விற்கப்படுகிறது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், நாட்டில் பரவலாக ஏற்பட்டுள்ள வறட்சி, நெல் உற்பத்தியை வெகுவாக பாதித்துவிட்டது. கர்நாடக மாநிலத்தில் விளைச்சல் குறைந்ததால் ஏற்பட்டுள்ள இந்த விலையேற்றம் கவலை தருவதாக உள்ளது.</p><h2><strong>உற்பத்தி குறைவு</strong></h2><p>இந்த சூழ்நிலையில் தமிழகத்திலும் நெல் உற்பத்தி குறைந்துள்ளது. கடந்த கோடை சாகுபடியில் ஒரு லட்சத்து 88 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 88 ஆயிரம் மெட்ரிக் டன் மட்டுமே கொள்முதல் ஆகி உள்ளது. இது தவிர ஆற்றுப் பாசனத்தில் குறுவை சாகுபடி நடைபெறாத நிலையில் தமிழக அரசு குறுவை தொகுப்பு திட்டம் ஒன்றை அறிவித்திருந்தாலும் அரசு நிர்ணயித்த ஒரு லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடியானது இந்த ஆண்டு 60,000 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே  சாகுபடி செய்யப்பட்டுள்ளது.</p><h2><strong>பொதுமக்கள் பாதிப்பு</strong></h2><p>அதிலும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதால் மகசூல் குறையும் அபாயம் உள்ளது. எனவே வறட்சி காரணமாக நெல் சாகுபடியில் ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த பின்னடைவு அரிசி விலை கடுமையாக உயர்வதற்கான காரணமாகி விட்டது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிப்படையும் சூழல் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>&quot;இளைய தலைமுறையின் கோபமே இந்தப் போராட்டம்&quot;- CJP போராட்டத்திற்கு பா.ரஞ்சித் ஆதரவு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/paranjith-supports-the-cjp-protest</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/paranjith-supports-the-cjp-protest#comments</comments><guid isPermaLink="false">e1cc162b-88e1-406f-a2ef-7847f6cd7fe0</guid><pubDate>Wed, 22 Jul 2026 06:27:21 +0000</pubDate><atom:updated>2026-07-22T06:27:21.218Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பா.ரஞ்சித்,Pa Ranjith,neet,நீட் தேர்வு,காக்ரோச் ஜனதா கட்சி,CJPProtest,பாடகர் அறிவு,rapper Arivu</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/u0384nv8/rapper-arivu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pa.Ranjith-Rapper Arivu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/u0384nv8/rapper-arivu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் மாணவர்கள் மற்றும் 'காக்ரோச் ஜனதா கட்சி'  அமைப்பினர் நடத்திய அமைதியான 'சன்சத் சலோ' (பாராளுமன்ற முற்றுகை) பேரணியின் மீது நடத்தப்பட்ட காவல்துறை தடி அடி அடக்குமுறை தாக்குதலுக்கு எதிராக பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் 'பா.ரஞ்சித்'  தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். </p><p>மேலும், சென்னையில் நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்து கைதான ரேப் பாடகர் 'தெருக்குரல்' அறிவு'-க்கு ஆதரவு தெரிவித்துள்ள அவர், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.</p><h3><strong>இதுகுறித்து, தனது சமூக வலைத்தளத்தில் பா.ரஞ்சித் வெளியிட்டுள்ள பதிவில்,</strong></h3><p>"பொறுப்புக்கூறலை வலியுறுத்தித் தொடங்கிய இந்த இயக்கம், கோடிக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் அரசை ஏற்க மறுக்கும் ஒரு முழு தலைமுறையின் திரண்ட கோபமாகவும் போராட்டமாகவும் மாறியுள்ளது." </p><p>அமைதியான வழியில் போராடும் மாணவர்கள் மீது வன்முறையைப் பிரயோகிப்பது, நியாயமான ஜனநாயகக் கேள்விகளுக்குப் பதிலளிக்க மத்திய அரசுக்கு விருப்பமில்லை என்பதையே வெளிப்படுத்துகிறது. அடக்குமுறைகள் ஒருபோதும் பொறுப்புக்கூறலுக்கு மாற்றாக முடியாது.</p><p>டெல்லி தெருக்கள் முதல் பல்வேறு மாநிலப் போராட்டங்கள் வரை, மற்றும் 'தெருக்குரல்' அறிவு போன்ற கலைஞர்கள் நீட் தேர்வுக்கு எதிராக குரல் எழுப்பி வருவது வரை அனைத்தும் ஒரே கோரிக்கையைத் தான் வலியுறுத்துகின்றன. தொடர்ச்சியாகத் தோற்றுப்போகும் பொதுக் கல்வி முறைக்கும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் செயல்பாடுகளுக்கும் பொறுப்பேற்கக் கோரும் மக்களின் போராட்டமாக இது உருவெடுத்துள்ளது.</p><p>இந்தியாவிற்கு வெளியே வாழும் புலம்பெயர் இந்திய இளைஞர்களும் இந்தப்போராட்டத்திற்கு ஆதரவாக உலகளவில் குரல் கொடுப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இது நாட்டின் ஒவ்வொரு இளைஞனின் எதிர்காலத்திற்கான போராட்டம்.</p><h2><strong>'தெருக்குரல்' அறிவு கைது:</strong></h2><p>டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாகவும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் சென்னை தலைமைச் செயலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட முயன்ற ரேப் பாடகர் அறிவு மற்றும் அவருடன் இருந்தவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.</p><p>கைதைத் தொடர்ந்து, தமிழக அரசின் பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா , பாடகர் அறிவை தனது அலுவலகத்திற்கு அழைத்து அவரது கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். பாடகர் அறிவு, டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறையைக் கண்டித்ததுடன், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தைத் தீவிரப்படுத்த தமிழக அரசு தொடர்ந்து துணைநிற்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.</p><h2><strong>ஒன்றாக இணைந்து குரல் கொடுப்போம்:</strong></h2><p>"கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள், தொழிற்சங்கங்கள், மக்கள் இயக்கங்கள் மற்றும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள ஒவ்வொரு குடிமகனும் நாடு தழுவிய இந்தப்போராட்டத்திற்கு தங்களது முழுமையான ஆதரவை வழங்க வேண்டிய தருணம் இது. </p><p>நீதிக்காகவும், பொறுப்புக்கூறலுக்காகவும், மக்களுக்குச் சேவை செய்யும் பொதுக் கல்வி முறைக்காகவும் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து குரல் எழுப்ப வேண்டும்." என பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>விஜய் சொன்னதை செய்தால் தான் மக்கள் ‘ஹீரோ’வாக பார்ப்பார்கள்- பிரேமலதா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/premalatha-says-people-will-view-him-as-a-hero-only-if-he-does-what-vijay-said</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/premalatha-says-people-will-view-him-as-a-hero-only-if-he-does-what-vijay-said#comments</comments><guid isPermaLink="false">e092bc02-419c-4238-87f2-7214e521bb7a</guid><pubDate>Wed, 22 Jul 2026 06:08:11 +0000</pubDate><atom:updated>2026-07-22T06:08:11.634Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,DMDK,தேமுதிக,பிரேமலதா விஜயகாந்த்,premalatha vijayakanth,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/mas6ylv5/premalatha.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரேமலதா விஜயகாந்த் கையில் வெள்ளி வேலுடன் மலைக்கோவிலை வலம் வந்து வழிபட்டார். ]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரேமலதா விஜயகாந்த் கையில் வெள்ளி வேலுடன் மலைக்கோவிலை வலம் வந்து வழிபட்டார். ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/mas6ylv5/premalatha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் தி.மு.க. எம்.எல்.ஏ. வை இரவோடு இரவாக கைது செய்யாமல் எச்சரித்து அனுப்பி இருக்கலாம் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார்.</aside><h2><strong>காணிக்கை</strong></h2><p>திருத்தணி முருகன் கோவிலில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சாமி தரிசனம் செய்தார். அவர் வெள்ளிவேலை காணிக்கையாக செலுத்தினார். </p><p>முன்னதாக <a href="https://www.maalaimalar.com/topic/பிரேமலதா-விஜயகாந்த்">பிரேமலதா விஜயகாந்த்</a> கையில் வெள்ளி வேலுடன் மலைக்கோவிலை வலம் வந்து வழிபட்டார். தொடர்ந்து அவர் தங்கத்தேர் இழுத்து நேர்த்தி கடன் செலுத்தினார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-</p><h2><strong>தப்ப முடியாது</strong></h2><p>தேர்தலில் வெற்றி பெற்றால் திருத்தணி கோவிலில் வேல் காணிக்கை செலுத்துவதாக வேண்டி இருந்தேன். அதனை நிறைவேற்ற வந்துள்ளேன். தமிழக அரசு கோவில்களில் பக்தர்களுக்கு பாதுகாப்பு, குடி தண்ணீர், உணவு, போக்குவரத்து வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்த வேண்டும். பழனி முருகன் கோவில் நில மோசடி வழக்கில் யார் தவறு செய்தாலும் தண்டனை பெறுவார்கள். முருகரிடம் இருந்து தப்ப முடியாது. </p><h2><strong>ஆர்ப்பாட்டம்</strong></h2><p>முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் தி.மு.க. எம்.எல்.ஏ. வை இரவோடு இரவாக கைது செய்யாமல் எச்சரித்து அனுப்பி இருக்கலாம். இது அரசின் வன்மத்தை காட்டுகிறது. வருகின்ற பட்ஜெட் தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் இருக்க வேண்டும். </p> <p>நீட் தேர்வு விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் மக்களின் எண்ணங்களை புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளது. முதலமைச்சர் விஜய் மின் கட்டண உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தே.மு.தி.க. சார்பில் ஆகஸ்ட் 1-ந் தேதி ஒகேனக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.</p><p>விவசாயிகளை காக்க தமிழக அரசு விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யவேண்டும். விவசாயிகளை காக்க விஜய் சினிமாவில் சொன்னதை ரியல் லைப்பில் நிரூபித்தால் தான் ரியல் ஹீரோவாக மக்கள் பார்ப்பார்கள். இல்லையென்றால் வெறும்  கண்துடைப்பாய் போய்விடும். </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>திருப்பதியில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு- நேர ஒதுக்கீடு தரிசன டிக்கெட் விநியோகம் ரத்து </title><link>https://www.maalaimalar.com/spirituality/increase-in-pilgrim-arrivals-at-tirupati-distribution-of-time-slot-darshan-tickets-cancelled</link><comments>https://www.maalaimalar.com/spirituality/increase-in-pilgrim-arrivals-at-tirupati-distribution-of-time-slot-darshan-tickets-cancelled#comments</comments><guid isPermaLink="false">185e13f8-edb7-46af-8270-ad95aeff3c19</guid><pubDate>Wed, 22 Jul 2026 05:46:48 +0000</pubDate><atom:updated>2026-07-22T05:46:48.795Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>devotees,Tirupati temple,திருப்பதி,Tirupati,திருப்பதி கோவில்,பக்தர்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/9enkhs2q/tirupati.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ திருப்பதி கோவில்]]></media:title><media:description type="html"><![CDATA[ திருப்பதி கோவில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/9enkhs2q/tirupati.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>திருப்பதியில் நேற்று 82,105 பேர் தரிசனம் செய்தனர். 34,484 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.5.18 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.</aside><p><a href="https://www.maalaimalar.com/topic/திருப்பதி-கோவில்">திருப்பதி ஏழுமலையான் கோவிலில்</a> தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அவதி அடையாமல் இருக்க திருப்பதியில் 3 இடங்களில் நேர ஒதுக்கீடு சர்வ தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. </p><h2><strong>தரிசன டோக்கன் ரத்து</strong></h2><p>வார இறுதி விடுமுறை நாட்களில் அதிக அளவு பக்தர்கள் தரிசனத்திற்கு வருவது வழக்கம். ஆனால் தற்போது வழக்கத்திற்கு மாறாக அனைத்து நாட்களிலும் பக்தர்களின் கூட்டம் அலை மோதி வருகிறது.</p> <p>இன்றைய தரிசனத்திற்கான 10 ஆயிரம் சர்வ தரிசன டிக்கெட்டுகள் நேற்று அதிகாலை 5 மணிக்கு வழங்கப்பட்டது. சர்வ தரிசன டிக்கெட் 1 மணி நேரத்தில் தீர்ந்து போனதால் தொலைதூரத்தில் இருந்து அதிக செலவு செய்து தாமதமாக வந்த பக்தர்கள் தரிசன டிக்கெட் கிடைக்காமல் அவதி அடைந்தனர்.</p><p>இதேபோல் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையில் 2 ஆயிரம் தரிசனம் டிக்கெட் வழங்கப்பட்டது. பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் நாளைய தரிசனத்திற்கு வழங்கப்பட இருந்த சர்வ தரிசன டிக்கெட் ரத்து செய்யப்பட்டது. </p><p>தரிசன டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டது தெரியாமல் ஏராளமான பக்தர்கள் டிக்கெட் வழங்கும் மையங்களில் நேற்று இரவு முதல் விடிய, விடிய காத்திருந்தனர். </p><p>பின்னர் தேவஸ்தான அதிகாரிகள் தரிசன டிக்கெட் வாங்குவது ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து பக்தர்கள் நேரடி இலவச தரிசனம் செய்ய திருப்பதி மலைக்கு புறப்பட்டு சென்றனர்.</p><p>நாளை மறுநாள் தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் நாளை வழக்கம்போல் வழங்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். </p><h2><strong>18 மணி நேரம்</strong></h2><p>திருப்பதியில் நேற்று 82,105 பேர் தரிசனம் செய்தனர். 34,484 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.5.18 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.</p><p>4.17 லட்சம் லட்டுக்கள் விற்பனையானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>&apos;காட்ஸில்லா&apos; திரைப்படப் புகழ் இளம் நடிகை கெய்லி ஹாட்டில் கார் விபத்தில் உயிரிழப்பு-திரையுலகம் அதிர்ச்சி!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/godzilla-fame-actress-kaylee-hottle-passes-away</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/godzilla-fame-actress-kaylee-hottle-passes-away#comments</comments><guid isPermaLink="false">bef4ac6e-64ec-444c-83d8-18cce6617456</guid><pubDate>Wed, 22 Jul 2026 05:44:39 +0000</pubDate><atom:updated>2026-07-22T05:44:39.287Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Kaylee Hottle,GodzillavsKong,GodzillaxKong,கெய்லி ஹாட்டில்,காட்ஸில்லா வெர்சஸ் காங்,காட்ஸில்லா x காங்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/aegskcsk/heylee.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kaylee Hottle]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/aegskcsk/heylee.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஹாலிவுட்டின் மெகா பட்ஜெட் திரைப்படங்களான 'காட்ஸில்லா வெர்சஸ் காங்' மற்றும் 'காட்ஸில்லா x காங்: தி நியூ எம்பயர்'ஆகியவற்றில் 'ஜியா'  என்ற கதாபாத்திரத்தில் நடித்து உலகளவில் புகழ்பெற்ற மாற்றுத்திறனாளி (செவித்திறன் அற்ற) இளம் நடிகை கெய்லி ஹாட்டில் (வயது 18) அமெரிக்காவில் நடந்த சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2><strong>விபத்து எவ்வாறு நிகழ்ந்தது?</strong></h2><p>அமெரிக்காவின் மேரிலாண்ட் மாநிலத்தில் உள்ள ஃபிரடெரிக் கவுண்டி பகுதியில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:50 மணியளவில் இந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது. கெய்லி ஹாட்டில் பயணித்த ஹோண்டா அக்கார்ட் கார், எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து வீதியின் ஓரத்தில் இருந்த வடிகால் அமைப்பில் மோதி விபத்துக்குள்ளானது. </p><p>காரை ஓட்டிச்சென்ற 19 வயது இளைஞர் மற்றும் மற்றொரு பயணியும் லேசான காயங்களுடன் தப்பிய நிலையில், தீவிர காயமடைந்த கெய்லி ஹாட்டில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். அதிகப்படியான வேகமே இந்த விபத்திற்குக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணையில் காவல்துறை தெரிவித்துள்ளது.</p><h2><strong>தந்தையின் உருக்கமான வீடியோ பதிவு:</strong></h2><p>கெய்லி ஹாட்டிலின் குடும்பத்தினர் அனைவரும் செவித்திறன் குறைந்தவர்கள் என்பதால், அவரது தந்தை ஜோஷுவா ஹாட்டில் அமெரிக்க சைகை மொழியில் முகநூலில் வெளியிட்ட வீடியோ பதிவில் தன் மகளின் மரணத்தை கண்ணீருடன் உறுதிப்படுத்தினார்.</p><p>"என் மகளின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவரது இதயத்துடிப்பு நின்றுவிட்டது. அவளுடன் கழித்த இந்த 18 ஆண்டுகள் எனக்கு மிகவும் பாக்கியமானது. ஆனால், இன்னும் கொஞ்ச காலம் அவர் எங்களுடன் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. </p><p>மகளின் உடலை வாங்குவதற்காக மேரிலாண்ட் சென்று கொண்டிருக்கிறேன்." மேலும் விபத்தை ஏற்படுத்திய டிரைவரைத் தான் மன்னித்துவிட்டதாகவும், இந்தச் சம்பவத்துக்காக அவரது வாழ்க்கை பாழாகிவிடக்கூடாது என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.</p><h2><strong>திரையுலகில் ஏற்படுத்திய தாக்கம்:</strong></h2><p> 2021-இல் வெளியான 'காட்ஸில்லா வெர்சஸ் காங்' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கெய்லி, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாளமாகத் திகழ்ந்தார். இப்படத்தில் மாபெரும் கிங் காங் மிருகத்துடன் சைகை மொழியில் பேசி நட்பை வெளிப்படுத்தும் 'ஜியா' என்ற பழங்குடிச் சிறுமியின் கதாபாத்திரம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களைக் கவர்ந்தது.</p><h2><strong>சாட்டர்ன் விருதுப் பரிந்துரை:</strong></h2><p>2024-இல் வெளியான இதன் இரண்டாம் பாகத்தில் நடித்ததற்காகச் சிறந்த இளம் நடிகருக்கான 'சாட்டர்ன் விருது' தேர்வுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.</p><h2><strong>ஹாலிவுட் நட்சத்திரங்களின் இரங்கல்:</strong></h2><p>கெய்லியுடன் இணைந்த நடித்த பிரபல நடிகை மில்லி பாபி பிரவுன் , அலெக்சாண்டர் ஸ்கார்ஸ்கார்ட் மற்றும் ரெபெக்கா ஹால் ஆகியோர் சமூக வலைத்தளங்களில் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.</p><p>கெய்லி பயின்று வந்த டெக்சாஸ் செவித்திறன் குறைந்தோருக்கான பள்ளியும் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளது. இளம் வயதிலேயே ஹாலிவுட்டில் தனக்கென தனிமுத்திரை பதித்த ஒரு திறமையாளரின் மறைவு சினிமா உலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்காவிற்கு போரினால் இதுவரை ரூ.3.57 லட்சம் கோடி செலவு: செனட் சபையில் கடும் விவாதம்</title><link>https://www.maalaimalar.com/news/world/war-has-cost-the-us-rs-3700-crore-so-far-heated-debate-in-the-senate</link><comments>https://www.maalaimalar.com/news/world/war-has-cost-the-us-rs-3700-crore-so-far-heated-debate-in-the-senate#comments</comments><guid isPermaLink="false">36c84ed6-eaee-4cdc-aef8-d37f4d010c5f</guid><pubDate>Wed, 22 Jul 2026 05:42:59 +0000</pubDate><atom:updated>2026-07-22T05:42:59.329Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Pete Hegseth,பீட் ஹெக்செத்,US Senate,அமெரிக்க செனட் சபை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/cftki6yt/Untitled-design-50.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Heated debate in the Senate]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/cftki6yt/Untitled-design-50.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஹார்முஸ் நீரிணை தொடர்பாக ஈரானுக்கு எதிரான போரில் இதுவரை சுமார் 3.57 லட்சம் கோடி ரூபாய் செலவாகியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்ஸெத் செனட் சபையில் தெரிவித்தார்.</p><p>வெள்ளை மாளிகையின் ஆதரவுடன் விவசாயிகளுக்கான உதவி மற்றும் வாக்களிப்பு சட்ட மாற்றங்களுடன் ராணுவ நிதியை உள்ளடக்கிய, குடியரசுக் கட்சியின் முன்மொழியப்பட்ட 95 பில்லியன் டாலர் பட்ஜெட் தொகுப்பின் போது, ஹெக்ஸெத் மீது செனட் சபையினர் குற்றம்சாட்டினர்.</p><p>செனட் நிதி ஒதுக்கீட்டுக் குழுவில் பேசிய அவர், ராணுவ நடவடிக்கைகளைத் தொடர இந்தக் கூடுதல் நிதி அவசியம் என்று கூறி, நிர்வாகத்தின் அவசரகாலப் பாதுகாப்புச் செலவினக் கோரிக்கைக்கு ஆதரவளிக்குமாறு வலியுறுத்தினார்.</p><h3><strong>அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்ஸெத்:</strong></h3><p>இதுகுறித்து மேலும் கூறிய ஹெக்ஸெத், “இந்தக் கூடுதல் போர் நிதி என்பது அவசரமான, அவசியமான நிதித்தேவையாகும். டிரம்ப் முன்மொழிந்த 1.5 டிரில்லியன் டாலர் பாதுகாப்பு நிதிநிலை அறிக்கை என்பது, ராணுவத்தில் செய்யப்படும் ஒரு தலைமுறைக்கான முதலீட்டைக் குறிக்கிறது.</p><p>இந்த நிதிகள் இல்லாமல், நாங்கள் கடுமையான நிதிப் பற்றாக்குறையை எதிர்கொள்வோம். </p><p>ஈரானுக்கு எதிரான அமெரிக்க இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து பென்டகனின் வளங்களை மீண்டும் நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்ட, அதிபர் டிரம்பின் 87.6 பில்லியன் டாலர் கூடுதல் நிதிக் கோரிக்கைக்கு ஆதரவளிக்க வேண்டும்” என்று கூறினார்.</p><p>இதையடுத்து, ஜனநாயகக் கட்சியினர் நிதிக் கோரிக்கையின் அளவு மற்றும் நிர்வாகத்தின் பரந்த உத்தி ஆகிய இரண்டின் மீதும் குற்றச்சாட்டை முன்வைத்தனர். </p><h3>செனட் உறுப்பினர்கள் எதிர்ப்பு:</h3><p>இதுகுறித்து மூத்த செனட் உறுப்பினர் பாட்டி முர்ரே கூறும்போது, அமெரிக்கா மற்றொரு முடிவில்லாப் போரில் நுழையும் அபாயத்தில் இருப்பதாக எச்சரித்தார்.</p><p>மேலும், இந்தப் போர் இப்போது மீண்டும் கட்டுப்பாட்டை மீறிச் செல்கிறது. ஒரு உடன்பாடு நெருங்கிவிட்டது என்றும், போர் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் டிரம்ப் 40 முறைக்கு மேல் எங்களிடம் கூறியுள்ளார்.</p><p>ஆனால் இப்போது, அவர் கூடுதலாக 70 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கேட்கிறார். மேலும் எல்லாம் நல்லபடியாக முடிந்துவிடும் என்று அவரை நம்பும்படியும் கூறுகிறார்” என்றார்.</p><p>இந்நிலையில் விசாரணைக்கு முன்னதாக, பட்ஜெட் தீர்மானத்தை எந்த மாற்றமும் இன்றி உடனடியாக அங்கீகரிக்குமாறு சட்டமன்ற உறுப்பினர்களை வலியுறுத்தி வெள்ளை மாளிகை ஒரு அறிக்கையை வெளியிட்டது.</p><p>இந்த வாரத் தொடக்கத்தில் சமூக ஊடகப் பதிவு ஒன்றின் மூலம், வரவுசெலவுத் திட்டத் தீர்மானத்தை ஆதரிக்குமாறு பிரதிநிதிகள் சபையின் குடியரசுக் கட்சியினரை டிரம்ப் வலியுறுத்தினார்.</p><p>செனட் சபை கூட்டத்தின்போது, ஈரானில் உள்ள பள்ளி ஒன்றின் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் குறித்த பென்டகனின் அறிக்கையை வெளியிடுமாறு ஹெக்ஸெத்தை உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.</p><p>மேலும் அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படாவிட்டால், அவரது உத்தியோகப்பூர்வ பயணங்களுக்கான நிதி நிறுத்தி வைக்கப்படும் என்றும் செனட் சபை உறுப்பினர்கள் எச்சரித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>பழனி கோவில் நிலம் மோசடி விவகாரம்- அ.தி.மு.க ஆர்ப்பாட்டம் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-temple-land-scam-aiadmk-protest-announcement</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-temple-land-scam-aiadmk-protest-announcement#comments</comments><guid isPermaLink="false">19b2501a-a558-449a-bea8-117154d02c1a</guid><pubDate>Wed, 22 Jul 2026 05:38:37 +0000</pubDate><atom:updated>2026-07-22T05:38:37.792Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,protest,ஆர்ப்பாட்டம்,பழனி கோவில் நில மோசடி,Pazhani land scam</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/a1tuzubu/EPS5.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Edappadi pazhanisamy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/a1tuzubu/EPS5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பழனி கோவில் நிலம் முறைகேடு வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க கோரி அதிமுக சார்பில் 25ம் தேதி கண்டம் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>பழனி தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான, சுமார் ரூ. 100 கோடி மதிப்புள்ள நிலத்தை தனியாருக்கு பத்திரப் பதிவு செய்து கொடுத்த விவகாரம் பக்தர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மடத்திற்குச் சொந்தமான நிலம் சம்பந்தமாக முந்தைய திமுக ஆட்சியிலிருந்தே பல்வேறு புகார்கள் எழுப்பப்பட்டு வந்தன.</p><p>சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஏற்கெனவே வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளதாகத் தெரியவருகிறது.</p><p>தமிழகத்தில் புதிதாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தூய சக்தி அரசு என்று சொல்லிக் கொள்பவர்களின் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88" rel="nofollow">அறநிலையத் துறை</a>யின் பராமரிப்பில் இருந்த இந்த நிலம், தற்போது இரண்டு தனியாருக்கு கிரயம் செய்து கொடுக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன.</p><p>இந்த பத்திரப் பதிவை செய்வதற்காகவே பழனி சார் பதிவாளர் விடுமுறையில் அனுப்பப்பட்டு, கொடைக்கானலில் இருக்கும் சார் பதிவாளரை ஒருநாள் கூத்தாக பழனி அலுவலகத்திற்கு நியமித்துள்ளார்கள் என்று செய்திகள் வந்துள்ளன.</p><p>அந்த அதிகாரி உயர்நீதிமன்ற வழக்கைப் பற்றியோ, நீதிபதிகளின் அறிவுறுத்தலையோ கருத்தில் கொள்ளாமல் மடத்திற்குச் சொந்தமான நிலத்தை, தனியாருக்கு பத்திரப் பதிவு செய்து கொடுத்ததன் மர்மம் விளங்கவில்லை.</p><p>இந்த நில மோசடி விற்பனை குறித்து பல்வேறு தரப்புகளில் இருந்து புகார்கள் எழுந்ததும், அதிகார வர்க்கம் தங்களை களங்கத்தில் இருந்து காப்பாற்றிக்கொள்ள CBCID மூலம் ஒரு கண்துடைப்பு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. </p><p>விசாரணை செல்லும் கோணத்தைப் பார்த்தால், மோசடி செய்தவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்தவர்களையும், தூண்டியவர்களையும் காப்பாற்றும் நோக்கோடு அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது.</p><p>அறநிலையத் துறைக்கு பாத்தியப்பட்ட நிலத்தை பத்திரப் பதிவு செய்து கொடுத்த அதிகாரி மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலத்தை விற்பதற்கான பத்திரம் தயாரித்து, விற்பனைப் பத்திரத்தில் கையெழுத்திட்ட நபர்கள் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. </p><p>இந்த நிலத்தை ரூ. 2 கோடிக்கு வாங்கிய இருவர் இன்னும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்படவில்லை என்று செய்திகள் வெளிவந்துள்ளன.</p><p>தமிழகத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்களின் சொத்துக்களும் இதுபோல் பறிபோகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடமை.</p><p>இந்தக் கடமையில் எங்களுக்கு உறுதுணையாக அனைத்துத் தரப்பு மக்களும், ஆன்மீகவாதிகளும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். </p><p>இந்த மோசடியில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் மூன்று பேர் தலைமறைவாக இருப்பதாகவும், அவர்களை காவல் துறையினர் தேடி வருவதாகவும் அரசு தரப்பிலேயே கூறப்படுகிறது. </p><p>எனவே, பழனி, தண்டபாணி சுவாமிகள் மடம் நில விவகாரத்தில், இந்த அரசின் செயல்பாடுகள் சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது. இந்த கண்ணாமூச்சி விளையாட்டு நிறுத்தப்பட வேண்டுமென்றால், நடுநிலையான அமைப்பு ஒன்றின் சார்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.</p><p>இந்நிலையில், பழனி தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்த <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/conspiracy-tvk-government-under-for-meghalaya-project">த.வெ.க</a>. அரசைக் கண்டித்தும்; இவ்வழக்கை உடனடியாக CBI வசம் ஒப்படைக்க பொய்க்கால் குதிரை த.வெ.க. அரசை வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தின் சார்பில், 25.7.2026 சனிக் கிழமை காலை 9.30 மணியளவில், பழனியில் - மயில் ரவுண்டானா, மத்திய பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.</p><p>இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழகப் பொருளாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் C. சீனிவாசன் அவர்கள் தலைமையிலும், கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைச் செயலாளரும், திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான டாக்டர் V.P.B. பரமசிவம், Ex. M.L.A., கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர் திரு. K. ரவிமனோகரன், MLA., ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.</p><p>இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த, தலைமைக் கழக நிர்வாகிகள், கழக சட்டமன்ற உறுப்பினர்கள், கழகம் மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகளும், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.</p><p>மக்கள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தொடரும் தென் மாவட்ட கனிமக் கொள்ளையை தடுக்க வேண்டும் - சிபிஐ விசாரணை தேவை!- அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-ongoing-mineral-plunder-in-the-southern-districts-must-be-stopped-a-cbi-inquiry-is-needed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-ongoing-mineral-plunder-in-the-southern-districts-must-be-stopped-a-cbi-inquiry-is-needed#comments</comments><guid isPermaLink="false">630172bd-c140-410f-bbd0-8f4dcb0358f6</guid><pubDate>Wed, 22 Jul 2026 05:35:50 +0000</pubDate><atom:updated>2026-07-22T05:35:50.151Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,கனிமவள கொள்ளை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/m8z09bo9/anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/m8z09bo9/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>எந்த அளவுக்கு கனிமக் கொள்ளை நடந்திருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதை கனிமக் கொள்ளையர்களிடம் இருந்து வசூலிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார். </aside><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>கவலை</strong></h2><p>தமிழ்நாட்டின் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களிலிருந்து கேரளத்திற்கு கனிமவளங்கள் கடத்தப்படுவது தொடர்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தின் வழியாக கனிமங்களைக்  கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ள நிலையில், தமிழ்நாட்டையும், கேரளத்தையும் இணைக்கும்  தேசிய நெடுஞ்சாலை 66-இன் வழியாக கனிமங்கள் கடத்தப்படுவது மட்டும் தான் நிறுத்தப்பட்டிருக்கிறதே தவிர,  தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து கேரளத்திற்கு தொடர்ந்து கனிமம் கடத்தப்படுவது கவலையளிக்கிறது.</p><p>இந்தியாவிற்கு இயற்கை கொடுத்த கொடையான மேற்குத் தொடர்ச்சி மலை குஜராத் மாநிலத்தில் தொடங்கி தமிழ்நாட்டில் 8 மாவட்டங்கள் வழியாக பயணித்து கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பு பகுதி வரை நீள்கிறது. போக்கிஷமாக பாதுகாக்கப்பட வேண்டிய இந்த மலைப்பகுதி தமிழ்நாட்டில் கொலை செய்யப்படுகிறது. குறிப்பாக தென்காசி, நெல்லை மாவட்டங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதிகளில் கல்குவாரிகள் அமைக்கப்பட்டு கனிமக் கொள்ளை எல்லையில்லாமல் நடக்கிறது. கடந்த திமுக ஆட்சியில் தான் இந்தக் கொள்ளை உச்சத்தை அடைந்தது. நெல்லை, தென்காசி, குமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள குவாரிகளில் இருந்து கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு கேரளத்திற்கு கடத்தப்படுவது குறித்தும், திமுகவைச் சேர்ந்தவர் இந்தக் கடத்தலுக்கு காட்பாதராக திகழ்ந்தது குறித்தும் கடந்த காலங்களில் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினேன். திமுக ஆட்சி அகற்றப்படுவதற்கு கனிமவளக்கொள்ளையும் காரணமாக இருந்தது.</p><h2><strong>புதிய அரசு</strong></h2><p>முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையில் புதிய அரசு அமைக்கப்பட்ட பிறகாவது கனிமக் கொள்ளைக்கு முடிவு கட்டப்படும் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள். அவர்களின் நம்பிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் பல மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலோட்டமாகப் பார்க்கும் போது இவை வரவேற்கத்தக்க மாற்றங்களாகத் தோன்றினாலும் களத்தில் இன்று வரை எந்த மாற்றமும் நிகழவில்லை; தென்காசி மாவட்டம் செங்கோட்டை, கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கனிமங்கள்  கேரளத்திற்கு கடத்தப்படுவது இப்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது என புகார்கள் எழுந்துள்ளன.</p><h2><strong>ஆய்வு குறைவு</strong></h2><p>கனிமக் கொள்ளையை கட்டுப்படுத்துவதற்காகாக தமிழக அரசுத் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் எந்த பயனும் விளையவில்லை. அரசு இயந்திரத்தை விட அதிநுட்பமான வலைப்பின்னலைக் கொண்டிருக்கும் கனிமவள மாஃபியா அதிகாரிகள் துணையுடன் அமைச்சரையும், அரசையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை ஆகும். கனிமவளக் கொள்ளை குறித்து ஆய்வு செய்ய அமைச்சர் அல்லது உயரதிகாரிகள் வருவதாக இருந்தால் அது குறித்து கனிமக் கொள்ளையர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படுகின்றன. அவர்களும் சுதாரித்துக் கொண்டு கனிமக் கொள்ளை நடக்கவில்லை என்று அமைச்சரை நம்ப வைப்பதற்கு தேவையான அனைத்தையும் செய்து விடுகின்றனர். அதுமட்டுமின்றி, கல் குவாரிகளில் அமைச்சர் ஆய்வு நடத்துவதும் அண்மைக்காலமாக குறைந்து விட்டது.</p><p>தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு ஏற்பட்டிருக்கும் ஒரே மாற்றம் என்னவென்றால், நெடுஞ்சாலைகள் வழியாக இல்லாமல் குறுக்கு வழிகளில் கனிமங்கள் கடத்தப்படுவது தான். கன்னியாகுமரியை மராட்டிய மாநிலம் பன்வேலியுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 66-இல் களியக்காவிளை சோதனைச்சாவடி வழியாகத் தான் கனிமவளங்கள் பெருமளவில் கடத்தப்பட்டு வந்தன. அதை நானே நேரடியாக பார்த்து பல தருணங்களில் ஆட்சியாளர்களுக்கு தெரிவித்தேன். அதுமட்டுமின்றி அதிக எண்ணிக்கையில் கனிமம் ஏற்றிச் செல்லும் சரக்குந்துகள் சென்றதால் ஏராளமான விபத்துகளும் ஏற்பட்டன. அதனால், களியக்காவிளை சோதனைச்சாவடி வழியாக கனிமங்களைக் கடத்திச் செல்வது குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.</p><h2><strong>தென்காசி மாவட்டங்களில்</strong></h2><p>அதே நேரத்தில் தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச்சாவடி வழியாக வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையில் கனிமங்கள் கடத்திச் செல்லப்படுகின்றன. அதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்தில்  தேசிய நெடுஞ்சாலையின் வழியாகத் தான் கனிமவளங்கள் கடத்தப்படவில்லையே தவிர, அம்மாவட்டத்தின் கொல்லங்கோடு, கோழிப்போர் விளை, ஊரம்பு, களியல் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக குறுக்கு சாலைகளில் புகுந்து கனிமங்களை ஏற்றிச் செல்லும் சரக்குந்துகள் கேரளத்திற்கு பயணிக்கின்றன. இதனால், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து கேரளத்திற்கு கனிமங்கள் கடத்தப்படுவது தடையின்றி தொடர்கிறது. இதனால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனிமக்கொள்ளையும் அளவுக்கு அதிகமாக நடைபெறுகிறது.</p><p>தென் மாவட்டங்களில் கனிமக் கொள்ளையை தடுக்க வேண்டும் என்றால், தமிழ்நாட்டிலிருந்து கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு கருங்கல் ஜல்லி உள்ளிட்ட கனிமங்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட வேண்டும். ஆனால், அத்தகைய தடை இன்று வரை விதிக்கப்படவில்லை. அண்மையில் கூட, தமிழகத்தில் பற்றாக்குறை காலங்களில் கனிமவளங்களை கேரளத்திற்கு கொண்டு செல்லக் கூடாது என்று தான் தடை விதிக்கப்பட்டிருக்கிறதே தவிர, நிரந்தரத் தடை இன்று வரை அரசால் விதிக்கப்படவில்லை.</p><h2><strong>சட்டவிரோத குவாரிகள்</strong></h2><p>தென் மாவட்டங்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் கனிமக் கொள்ளையை தடுத்து நிறுத்துவது முடியாத காரியமல்ல. அதற்குத் தேவை அரசியல் துணிச்சல் தான். கனிமக் கொள்ளை மாஃபியா உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து வரும் அழுத்தங்களைப் பற்றி கவலைப்படாமல் துணிச்சலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதன் முதல் கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து கேரளா உள்ளிட்ட எந்த மாநிலத்திற்கும் கனிமவளங்களைக் கொண்டு செல்ல தமிழக அரசு தடைவிதிக்க வேண்டும்.- இரண்டாம் கட்டமாக, தென் மாவட்டங்களில் இருந்து கேரளம் செல்லும் சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் கண்காணிப்பு காமிரா பொருத்துவதன் மூலம் கனிமவளம் கடத்தப்படுவதை கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் அவரது அலுவலக அறையிலிருந்தே கண்காணிக்க முடியும்; இதன் முலம் கனிமக் கடத்தல் குறையும். அடுத்ததாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் செயல்படும் சட்டவிரோத குவாரிகளை கருணை காட்டாமல் மூட வேண்டும்.</p><h2><strong>தடுத்து நிறுத்த வேண்டும்</strong></h2><p>நான்காவதாக,  சட்டவிரோதமாக கனிமங்களை வெட்டி எடுப்பவர்களுக்கு பெயரளவில் தண்டம் விதிப்பதை  கைவிட வேண்டும்; மாறாக அவர்கள் வெட்டி எடுத்த கனிமத்தின் சந்தை மதிப்பை விட 100 மடங்கு அதிக தண்டம் விதிப்பதுடன், குற்றவாளிகளின் சொத்துகளை முழுமையாக முடக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>இவை அனைத்தையும் விட முக்கியமானது கடந்த காலங்களில் கனிமக் கடத்தலில் ஈடுபட்டவர்களையும், அவர்களை ஊக்குவித்தவர்களையும் தண்டிப்பது தான். முந்தைய திமுக ஆட்சியில் அதிகாரம் பெற்றிருந்த காட்பாதர்களும், மாஃபியாக்களும் தான் கனிமக் கடத்தலுக்கு துணையாக இருந்தன. இது இரு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் இது குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும். எந்த அளவுக்கு கனிமக் கொள்ளை நடந்திருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதை கனிமக் கொள்ளையர்களிடம் இருந்து வசூலிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய துணிச்சலான நடவடிக்கைகள் மூலம் கனிமவளக் கொள்ளையை அரசு முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>தினமும் சாம்பாரா? போலீஸ் நிலையம் வரை சென்ற ‘சாப்பாட்டு சண்டை’ - பதறிப்போன காவலர்கள்!</title><link>https://www.maalaimalar.com/news/national/police-complaint-filed-over-daily-serving-of-sambar-police-left-stunned-by-husband-wife-dispute-over-food</link><comments>https://www.maalaimalar.com/news/national/police-complaint-filed-over-daily-serving-of-sambar-police-left-stunned-by-husband-wife-dispute-over-food#comments</comments><guid isPermaLink="false">8a121e1f-6e74-48a8-81b0-a9d76d3dcc40</guid><pubDate>Wed, 22 Jul 2026 05:22:49 +0000</pubDate><atom:updated>2026-07-22T05:22:49.325Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>dispute,தகராறு,police station,போலீஸ் நிலையம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/bk4z9ujt/sambar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/bk4z9ujt/sambar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>குழம்பு சமைக்கப்பட்ட விதம் குறித்து போலீசாரிடம் புகார் அளிப்பது ஒரு அரிதான சம்பவம் என்பதால், இந்த விஷயம் தற்போது உள்ளூரில் ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது.</aside><h2><strong>தினமும் சாம்பார்</strong></h2><p>உத்தரப் பிரதேச மாநிலம் படௌன் மாவட்டத்தில் வஜீர்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி. இவருக்கு பொறித்த உணவுகள் அதிகம் பிடிக்கும். ஆனால் இவருடைய மனைவி தினமும் சாம்பார் வைத்து உணவு பரிமாறி வந்தார்.</p><p>இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.  </p><h2><strong>தகராறு</strong></h2><p>நேற்று முன்தினம் இரவு சாம்பார் வைத்ததால் தம்பதி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. நள்ளிரவு வரை கடுமையான வாக்குவாதம் செய்தனர்.</p><p>எவ்வளவு சொல்லியும் மனைவி தன் பேச்சைக் கேட்காததால் கோபமடைந்த கணவர், இறுதியாக 112 என்ற அவசர சேவை எண்ணை அழைத்து போலீசாரிடம் புகார் அளித்தார். </p><h2><strong>கணவர் புகார்</strong></h2><p>குடும்பத்தில் சண்டை நடப்பதாகத் தகவல் கிடைத்ததும், போலீசார் பதறியபடி உடனடியாக கிராமத்திற்கு சென்றனர். கிராமத்திற்கு வந்த போலீசார் உண்மையை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். தனக்கு தினமும் பொரித்த குழம்பு வேண்டும் என்றும், ஆனால் தன் மனைவி எப்போதும் சாம்பார் போன்றவற்றை செய்து தன்னைப் புறக்கணிப்பதாகவும் கணவர் கூறினார். </p><p>மறுபுறம், மனைவியும் தனது வாதத்தை விளக்கினார். பின்னர், போலீசார் அவர்கள் இருவரையும் அமர வைத்து அமைதியாகப் பேச வைத்தனர். அவர்கள் குடும்ப உறுப்பினர்களுடனும் இது குறித்து விவாதித்து, ஒரு சிறிய விஷயத்தைப் பெரிய சண்டையாக மாற்ற வேண்டாம். </p> <h2><strong>போலீசார் அறிவுரை</strong></h2><p>இதுபோன்ற பிரச்சனைகளுக்கு நாங்கள் என்ன செய்ய முடியும். நடுராத்திரியில் இப்படி பண்றீங்களேம்மா என்று தலையில் அடித்தபடி அறிவுரை கூறினர். </p><p>கணவன்-மனைவி இருவரும் ஒரு சமரசத்திற்கு வந்த பிறகு, போலீசார் புகாரை முடித்து வைத்தனர். குழம்பு சமைக்கப்பட்ட விதம் குறித்து போலீசாரிடம் புகார் அளிப்பது ஒரு அரிதான சம்பவம் என்பதால், இந்த விஷயம் தற்போது உள்ளூரில் ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&apos;ஈரான் போரில் 18 பேர் மட்டுமே பலி&apos;: முந்தைய போர்களுடன் ஒப்பிட்டு டிரம்ப் பதிவு!</title><link>https://www.maalaimalar.com/news/world/trump-posts-comparing-with-previous-wars</link><comments>https://www.maalaimalar.com/news/world/trump-posts-comparing-with-previous-wars#comments</comments><guid isPermaLink="false">b40cd7aa-7552-4920-933c-404a80531742</guid><pubDate>Wed, 22 Jul 2026 05:16:42 +0000</pubDate><atom:updated>2026-07-22T05:16:42.814Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>trump,அமெரிக்கா,America,டிரம்ப்,Iran-America war,ஈரான்-அமெரிக்கை போர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/aw4ti80v/donald.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Donald Trump]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/aw4ti80v/donald.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான ராணுவ மோதலில் பலியான அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்று தெரிவித்துள்ள செய்தி சர்வதேச அளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. </p><p>ஈரானுடன் நடைபெற்று வரும் ராணுவ மோதலில் பலியான அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை, அமெரிக்கா முன்னெடுத்த முந்தைய வரலாற்றுப் போர்களுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவு என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>சமீபத்தில் ஜோர்டான் எல்லைப் பகுதியில் அமைந்திருந்த அமெரிக்க ராணுவ முகாம்கள் மற்றும் மத்திய கிழக்கில் நடந்த தாக்குதல்களில் மேலும் சில அமெரிக்க வீரர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பலியான அமெரிக்க வீரர்களின் மொத்த எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது. அமெரிக்காவில் இதற்குக் கடும் எதிர்ப்புகளும் விமர்சனங்களும் எழுந்த நிலையில், டிரம்ப் இந்த விளக்கப் பதிவை வெளியிட்டுள்ளார்.</p><p>வரலாற்றில் அமெரிக்கா சந்தித்த நீண்டகாலப் போர்களுடன் தற்போதைய ஈரான் மோதலை ஒப்பிட்டு டிரம்ப் பதிவிட்டுள்ள புள்ளிவிவரங்கள்:</p><p>*ஆப்கானிஸ்தான் போர் 20 ஆண்டுகள் நீடித்து 2,000 உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.</p><p>*ஈராக் போர் 9 ஆண்டுகள் நீடித்து 4,600 உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.</p><p>*வியட்நாம் போர் 19 ஆண்டுகள் 5 மாதங்கள் நீடித்து 58,220 உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.</p><p>*கொரியப் போர் 3 ஆண்டுகள் 1 மாதம் நீடித்து 36,574 உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.</p><p>*வெனிசுலா ராணுவ நடவடிக்கை 1 நாளில் 0 உயிரிழப்புடன் முடிந்தது.</p><p>*தற்போதைய ஈரான் மோதலில் 4 மாதங்களில் 18 பேர் மட்டுமே பலியாகியுள்ளனர்.</p><p>அமெரிக்கா வரலாற்று ரீதியாக எதிர்கொண்ட ரத்த களறியான முந்தைய போர்களுடன் ஒப்பிடுகையில், 4 மாதங்களாக நடைபெற்று வரும் ஈரான் உடனான மோதலில் 18 வீரர்கள் மட்டுமே உயிரிழந்திருப்பது மிகக் குறைவான எண்ணிக்கையே என்று டிரம்ப் வாதாடியுள்ளார்.</p><p>ஆனால், போரில் உயிரிழந்த வீரர்களின் தியாகத்தையும் அவர்களின் குடும்பங்களின் உணர்வுகளையும் வெறும் எண்களாகவும் புள்ளிவிவரங்களாகவும் ஒப்பிட்டுப் பேசுவது கண்டிக்கத்தக்கது என எதிர்க்கட்சியினரும் மனித உரிமை அமைப்புகளும் டிரம்பின் இந்தப் பதிவுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.</p><p> "அமெரிக்க வீரர் ஒருவர் கொல்லப்பட்டாலும் அதற்கு ஈரானிடம் இருந்து பலமடங்கு விலையைப் பெற வைப்போம்" என டிரம்ப் எச்சரித்திருந்த நிலையில், இந்தப் புள்ளிவிவரப் ஒப்பீட்டுப் பதிவு வெளியாகியுள்ளது.  </p>]]></content:encoded></item><item><title>தோல்வி கொடுத்த வலி மிக கடுமையானது..!- இன்ஸ்டாவில் மெஸ்சி உருக்கம்</title><link>https://www.maalaimalar.com/sports/the-pain-of-defeat-is-very-intense-messi-melts-on-instagram</link><comments>https://www.maalaimalar.com/sports/the-pain-of-defeat-is-very-intense-messi-melts-on-instagram#comments</comments><guid isPermaLink="false">fd27e14d-fd79-4490-bbaf-49962afdd232</guid><pubDate>Wed, 22 Jul 2026 05:14:08 +0000</pubDate><atom:updated>2026-07-22T05:14:08.153Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>argentina,அர்ஜென்டினா,மெஸ்சி,Lional Messi,பிபா உலகக்கோப்பை 2018,fifa foodball world cup</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/mp3yvdjy/Messi1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Lionel Messi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/mp3yvdjy/Messi1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 1962-ம் ஆண்டுக்கு பிறகு பட்டத்தை தக்கவைக்கும் முதல் அணி என்ற சாதனையை படைக்கும் உத்வேகத்துடன் இறுதி சுற்றில் களம் புகுந்த அர்ஜென்டினாவின் முயற்சிக்கு ஸ்பெயின் கூடுதல் நேரத்தில் கோல் போட்டு முட்டுக்கட்டை போட்டது.</p><p>தோல்வி அடைந்து 2-வது இடத்தை பிடித்த அர்ஜென்டினா அணியில் மெஸ்சி உள்ளிட்ட ஒரு சில வீரர்களை தவிர்த்து மற்றவர்களும், பயிற்சி குழுவினரும் அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் நேற்று தாயகம் திரும்பினர்.</p><p>வீரர்கள் விமான நிலையத்தில் இருந்து திறந்தவெளி பஸ்சில் அந்த நாட்டு கால்பந்து சம்மேளன அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு நின்று அவர்களுக்கு வரவேற்பு அளித்தனர்.</p><p>இதற்கிடையே அர்ஜென்டினா கேப்டன் லயோனல் மெஸ்சி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட உருக்கமான பதிவு வெளியிட்டார்.</p><p>அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-</p><p>தோல்வி கொடுத்த வலி மிக கடுமையானது. இந்த காயம் ஆறுவதற்கு சில காலமாகும். இந்த நேரத்தில் சில நல்ல விஷயங்களை நினைவில் கொள்கிறேன். முழு அர்ப்பணிப்புடன் விளையாடி சரிவில் இருந்து மீண்டெழுந்த அந்த ஆட்டங்கள் என்றென்றும் நினைவில் நிலைத்து நிற்கும்.</p><p>ஒட்டுமொத்த தேசத்தின் ஆதரவுடன் கடின உழைப்பு, தீவிர முயற்சியால் மீண்டும் ஒரு முறை எங்களை உலகின் சிறந்த அணிகளில் ஒன்றாக வெளிப்படுத்தியுள்ளோம். நாங்கள் படைத்துள்ள சாதனைகளை இப்போது முழுமையாக பாராட்டுவது கடினம் என்றாலும், தொடர்ந்து இரண்டு முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருப்பதை குறிப்பிட வேண்டும்.</p><p>உங்களது ஒவ்வொரு வாழ்த்துக்கும். ஒவ்வொரு செய்திக்கும் இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நாடாக மீண்டும் ஒன்றிணைந்து அர்ஜென்டினராக இருப்பதில் உள்ள அளப்பரிய பெருமையை நாம் அனைவரும் பகிர்ந்து கொண்டோம்.</p><p>சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணிக்கும் எனது வாழ்த்துகள்' என அதில் கூறியுள்ளார்.</p><p>நடப்பு உலகக் கோப்பையில் 8 கோல்கள் அடித்த 39 வயதான லயோனல் மெஸ்சி, சர்வதேச போட்டியில் தனது எதிர்காலம் குறித்து விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>நாகர்கோவில் சிறையில் மரணமடைந்த சபரிவர்மன் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nagercoil-sabarivarman-murdered-case-transferred-to-cbcid</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nagercoil-sabarivarman-murdered-case-transferred-to-cbcid#comments</comments><guid isPermaLink="false">14417e43-f0b3-461d-abde-a0ef69ede072</guid><pubDate>Wed, 22 Jul 2026 05:13:17 +0000</pubDate><atom:updated>2026-07-22T05:13:17.855Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Nagercoil,நாகர்கோவில்,சிபிசிஐடி,cbcid,custodial death,லாக்கப் மரணம்,sabarivarman murder case,சபரிவர்மன் கொலை வழக்கு</media:keywords><media:content height="576" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/4gy2vpbw/sabarivarman.jpg" width="1024"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sabarivarman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/4gy2vpbw/sabarivarman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நாகர்கோவில் சிறையில் கைதி மாற்றுத்திறனாளியான சபரிவர்மன் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.</strong></em></p><p>கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் அருகே ஈத்தங்காடு ஊரை சேர்ந்தவர் சபரிவர்மன் (வயது 34) மாற்று திறனாளியான இவர் தனது வீட்டின் அருகே பெட்டிக்கடை நடத்தி வந்தார். இவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் வைத்திருந்ததாக கடந்த 9-ந்தேதி தென்தாமரைகுளம் போலீசார் கைது செய்து, நாகர்கோவிலில் மாவட்ட சிறையில் விசாரணை கைதியாக அடைத்தனர். கடந்த 13-ந்தேதி வார்டன் மற்றும் சிறை கைதிகள் தாக்கியதில் சபரி வர்மன் இறந்தார்.</p> <p>இந்த சம்பவம் தொடர்பாக நேசமணி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறை வார்டன் ஜெகன், தலைமை வார்டன் சுரேஷ், காவலர் சிவகுமார் ஆகிய மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கைதிகள் விஷ்ணு, சாரதி, ஜெகன், சரத், வெரியபெருமாள், சேதுராம், அஜித், அரவிந்த் ஆகிய 8 கைதிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிறைக் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.</p> <p>இந்த வழக்கு தொடர்பாக தடவியல் நிபுணர்கள் சிறையில் ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் சபரிவர்மனை போலீசார் தாக்கிய அறை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர்.</p><p>சிறைச்சாலையில் உள்ள சிசிடிவி காட்சிகளின் ஆதாரங்களை கொண்டு கைது செய்யப்பட்டு உள்ள சிறை கைதிகள் அரவிந்த், அஜய், ஜெகன் ஆகிய 3 கைதிகளையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர். இதற்காக காவல்துறை சார்பில் நாகர்கோவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. போலீசார் கைதிகள் 3 பேரை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.</p> <p>இந்நிலையில் சபரிவர்மன் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.</p><p>இந்த வழக்கை நேசமணிநகர்  போலீசார் விசாரித்து வந்த நிலையில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்காவில் தீவிரமடையும் காட்டுத் தீ: பிளசண்டன் பகுதியில் 950 ஏக்கர் சாம்பல்; மக்கள் வெளியேற்ற உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/world/wildfire-intensifies-in-the-us</link><comments>https://www.maalaimalar.com/news/world/wildfire-intensifies-in-the-us#comments</comments><guid isPermaLink="false">a0d5a1b8-2b42-48f6-9781-bb0f692b44fa</guid><pubDate>Wed, 22 Jul 2026 04:42:32 +0000</pubDate><atom:updated>2026-07-22T04:42:32.929Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,America,காட்டுத் தீ,wildfire,Pleasanton,Little Fire,பிளசண்டன்,லிட்டில் ஃபயர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/q9btn6op/WILDFIRE.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Wildfire Intensifies in the US]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/q9btn6op/WILDFIRE.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள அலமேடா கவுண்டி பகுதிக்குட்பட்ட பிளசண்டன் மற்றும் சுனோல்  நகர எல்லைப் பகுதிகளில் நேற்று பிற்பகலில் "லிட்டில் ஃபயர்" எனப் பெயரிடப்பட்ட காட்டுத் தீ திடீரெனப் பற்றி எரியத் தொடங்கியது. கடும் வெப்பம், உலர்ந்த புற்பகுதிகள் மற்றும் வீசி வரும் பலத்த காற்றின் காரணமாக தீ மிக வேகமாகப் பரவி, குறுகிய நேரத்திலேயே 950 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பைச் சாம்பலாக்கியுள்ளது.</p><p>லிட்டில் வேலி சாலை மற்றும் ஹப்பார்ட் லேன்  சந்திப்பு பகுதி ஆகியவை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 950 ஏக்கர் எரிந்துள்ள நிலையில், 10% மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார். அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><h2><strong>மக்களுக்கு எச்சரிக்கை:</strong></h2><p>ரூபி ஹில் சொகுசு குடியிருப்பு பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள சுனோல் பகுதி மக்களுக்கு உடனடி வெளியேற்ற உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுமார் 4,900-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><h2><strong>தீயணைப்புப் பணிகள்:</strong></h2><p>தீயணைப்புப் படைகளின் கலிபோர்னியா வனத்துறை, அலமேடா கவுண்டி தீயணைப்புப் படை மற்றும் லிவர்மோர்-பிளசண்டன் தீயணைப்புத் துறையினர் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். </p><p>நிலப்பரப்பில் புல்டோசர்கள் மற்றும் எஞ்சின்கள் மூலமும், வான்வழியாக சிறப்பு ஏர்-டேங்கர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலமும் தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அடர்ந்த புதர் மற்றும் மலைப்பகுதிகள் காரணமாக தீயணைப்பு வாகனங்கள் உள்ளே செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.</p><h2><strong>நிவாரண முகாம்கள்:</strong></h2><p>பாதிக்கப்பட்ட மற்றும் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்ட மக்களுக்காகப் பிளசண்டன் மூத்த குடிமக்கள் மையத்தில் தற்காலிக நிவாரண மற்றும் உதவி முகாம் அமைக்கப்பட்டு, அவசிய தேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. </p><p>இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அவசர தேவைகளின்றி கட்டுப்பாட்டு அறைகளைத் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும், அரசு அறிவிக்கும் அதிகாரப்பூர்வ பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறும் கலிபோர்னியா அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>இண்டர்நெட் இல்லாமல் பணம் அனுப்பலாம்... யு.பி.ஐ.-இல் புது மாற்றம் விரைவில் அறிமுகம்</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/offline-upi-payments-with-nfc-support-could-launch-in-india-soon</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/offline-upi-payments-with-nfc-support-could-launch-in-india-soon#comments</comments><guid isPermaLink="false">02b5ad5d-ed38-4ba3-8202-0e4606c62540</guid><pubDate>Wed, 22 Jul 2026 04:42:00 +0000</pubDate><atom:updated>2026-07-22T04:42:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>UPI,யுபிஐ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/pph9etq7/upi-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ UPI]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/pph9etq7/upi-1.png?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய அரசு ஒரு புதிய யு.பி.ஐ. (UPI) அம்சத்தில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. வரவிருக்கும் இந்த அம்சம், பயனர்கள் இண்டர்நெட் இல்லாமலேயே பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அனுமதிக்கும். </p><p>இந்த வரவிருக்கும் அம்சம், தொலைதூர மற்றும் குறைந்த இணைய இணைப்பு உள்ள பகுதிகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை சாத்தியமாக்கும். </p><p>ஆஃப்லைன் யு.பி.ஐ. பணப்பரிவர்த்தனைகளை ஆதரிப்பதற்கு, வணிகர் விற்பனை முனைய (PoS) நிறுவனங்கள் இந்திய தேசிய பணப்பரிவர்த்தனைக் கழகத்திடம் (NPCI) இருந்து சான்றிதழ் பெற வேண்டும் என்றும் கூறப்படுகிறது.</p><p><strong>ஆஃப்லைன் பணப்பரிவர்த்தனை:</strong></p><p>இந்தியாவில் விரைவில் இணைய இணைப்பு இல்லாமலேயே யு.பி.ஐ. பணம் செலுத்தும் வசதி வரலாம். இந்த விவகாரம் குறித்து அறிந்த மூன்று நபர்களை மேற்கோள் காட்டி , வாடிக்கையாளரின் ஸ்மார்ட்போனிலோ அல்லது வணிகரின் PoS டெர்மினலிலோ இணைய இணைப்பு இல்லாமலேயே பணம் செலுத்தும் வசதியை இந்தியா விரைவில் செயல்படுத்தவுள்ளதாக பிசினஸ் ஸ்டாண்டர்ட் செய்தி வெளியிட்டுள்ளது.</p><p>ஆஃப்லைன் பணப்பரிவர்த்தனைகளை செயல்படுத்துவதற்காக, இணக்கமான PoS டெர்மினல்களுக்கு இந்த ஆண்டின் பிற்பகுதியில் தேசிய பணப்பரிவர்த்தனைக் கழகம் (NPCI) சான்றளிக்க தொடங்கும் என்று கூறப்படுகிறது.</p><p><strong>ஆஃப்லைன் யு.பி.ஐ.:</strong></p><p>ஆஃப்லைன் யு.பி.ஐ. அம்சம் என்.எஃப்.சி. தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படும் என்று கூறப்படுகிறது. இது பயன்பாட்டிற்கு வந்தவுடன், பயனர்கள் தங்களின் என்.எஃப்.சி. வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை ஆதரிக்கப்படும் கட்டண முனையங்களில் தட்டுவதன் மூலம் ஆஃப்லைன் யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்தலாம்.</p><p>ஆரம்பத்தில், ஒரு பரிவர்த்தனைக்கு ரூ. 2,000 என ஆஃப்லைன் பரிவர்த்தனைகள் வரம்பிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொலைதூர பகுதிகள், விமானங்கள் மற்றும் சுரங்கப்பாதை மெட்ரோக்களில் பணம் செலுத்துவதற்கு இது உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>ஆஃப்லைன் யு.பி.ஐ. அம்சம், சாதனத்தில் உள்ள யு.பி.ஐ. லைட் வாலட் மூலம் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயனர்கள் ஆரம்பத்தில், இணைய இணைப்பு இல்லாமலோ அல்லது யு.பி.ஐ. PIN எண்ணை உள்ளிடாமலோ, ஆதரிக்கப்படும் ஆஃப்லைன் PoS டெர்மினல்களில் பணம் செலுத்துவதற்கு, இணையத்துடன் இணைந்திருக்கும்போது வாலட்டில் பணத்தை ஏற்ற வேண்டியிருக்கும். இந்தப் பரிவர்த்தனை யு.பி.ஐ. லைட் இருப்பைப் பயன்படுத்தும்.</p>]]></content:encoded></item><item><title>ரெயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: &apos;ரெயில் ஒன்&apos; செயலி தள்ளுபடி சலுகை மார்ச் 31-ந்தேதி வரை நீட்டிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rail-one-app-discount-offer-extended-until-march-31</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rail-one-app-discount-offer-extended-until-march-31#comments</comments><guid isPermaLink="false">a069eb8b-809a-4d23-95fa-8043462681b1</guid><pubDate>Wed, 22 Jul 2026 04:37:07 +0000</pubDate><atom:updated>2026-07-22T04:37:07.858Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ரெயில் பயணிகள்,Rail One,Rail One App,ரெயில் ஒன் செயலி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/5n3n63dt/railone.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/5n3n63dt/railone.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>'ஆர்-வாலட்' மூலம் பணம் செலுத்தி 3 சதவீத கேஷ்பேக் சலுகையானது 2028-ம் ஆண்டு ஆகஸ்டு 24-ந்தேதி வரையில் வழங்கப்படுவதாக இந்தியன் ரெயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</aside><h2><strong>ரெயில் ஒன்</strong></h2><p>ரெயில்வேயில் முன்பு தனித்தனியாக இருந்த யூ.டி.எஸ், என்.டி.இ.எஸ் போன்ற பல செயலிகளின் சேவைகளை ஒருங்கிணைத்து 'ரெயில் ஒன்' என்ற செயலியை ரெயில்வே அமைச்சகம் அறிமுகம் செய்தது. இந்த செயலியின் மூலம் முன்பதிவு டிக்கெட், முன்பதிவில்லாத டிக்கெட், நடைமேடை டிக்கெட், ரெயில் வரும் நேரம், புறப்படும் நேரம் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம். </p><p>மேலும், ரெயில் நிலையங்கள், ரெயில் பெட்டிகளில் உள்ள குறைகள் குறித்து பயணிகள் புகார் தெரிவிக்க முடியும். சீசன் டிக்கெட்டையும் இந்த செயலி மூலம் பெற முடியும்.</p><h2><strong>சலுகை</strong></h2><p>ரெயில் ஒன் செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் எடுப்பவர்களுக்கு கடந்த ஜனவரி 14-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரையில் 6 மாதத்திற்கு 3 சதவீத கட்டண சலுகையை ரெயில்வே அறிவித்துள்ளது. பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவித்தல் மற்றும் பயணச்சீட்டுக்காக வரிசையில் நிற்பதை தவிர்ப்பதற்கும் செல்போன் செயலி மூலம் டிக்கெட் எடுப்பதை ஊக்குவிக்க இந்த சலுகை வழங்கப்பட்டது.</p><h2><strong>3 சதவீத தள்ளுபடி</strong></h2><p>இந்தநிலையில், இந்த சலுகை 2027-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, ரெயில் ஒன் செயலி மூலம் யு.பி.ஐ, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் போன்ற எந்தவொரு டிஜிட்டல் கட்டண முறையையும் பயன்படுத்தி முன்பதிவில்லாத பயணச்சீட்டு எடுத்தால் மொத்த கட்டணத்தில் 3 சதவீத தள்ளுபடி கிடைக்கும். </p><p>இதேபோல, 'ஆர்-வாலட்' மூலம் பணம் செலுத்தி 3 சதவீத கேஷ்பேக் சலுகையானது 2028-ம் ஆண்டு ஆகஸ்டு 24-ந்தேதி வரையில் வழங்கப்படுவதாக இந்தியன் ரெயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, <a href="https://www.maalaimalar.com/topic/ரெயில்-பயணிகள்">பயணிகள்</a> ரெயில் ஒன் செயலியை ஆண்ட்ராய்டு ப்ளே ஸ்டோர் மற்றும் ஐ.ஓ.எஸ்.ஆப் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து இந்த சலுகையைப் பெறலாம்.</p>]]></content:encoded></item></channel></rss>