<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 23 Jul 2026 12:35:36 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-23-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-23-july-2026#comments</comments><guid isPermaLink="false">e797383a-6bd9-4d05-9425-4f0d2f466313</guid><pubDate>Thu, 23 Jul 2026 04:50:50 +0000</pubDate><atom:updated>2026-07-23T11:58:50.516Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/ewiqj4ir/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/ewiqj4ir/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/pakistan-team-to-tour-england-next-year-for-odi-series">ஒருநாள் தொடரில் பங்கேற்க அடுத்த ஆண்டு இங்கிலாந்து செல்லும் பாகிஸ்தான் அணி</a></p><p>* முதல் ஒருநாள் போட்டி அடுத்த ஆண்டு மே 15-ம் தேதி சவுத்தாம்ப்டனில் தொடங்குகிறது.</p><p>* பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/police-deaths-under-dmk-rule-why-is-cm-silent-asks-nainar-nagendran" rel="nofollow">தவெக ஆட்சியில் தொடர்கதையாகும் காவல் மரணங்கள்.. முதலமைச்சர் மவுனம் காப்பது ஏன்..?- நயினார் நாகேந்திரன் கேள்வி</a></p><p>* தூத்துக்குடியில் மீண்டும் காவல் மரணம்(Custodial Death) நிகழ்ந்துள்ளது</p><p>* கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/sports/china-open-badminton-ayush-shetty-loses-in-second-round">சீனா ஓபன் பேட்மிண்டன்: 2வது சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி தோல்வி</a></p><p>* சீனா ஓபன் பேட்மிண்டன் தொடர் அங்குள்ள சாங்சோவ் நகரில் நடந்து வருகிறது.</p><p>* பி.வி.சிந்து 2வது சுற்றில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/first-t20-match-india-opts-to-bowl-after-winning-toss">முதல் டி20 போட்டி: டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு</a></p><p>* முதல் டி20 போட்டி ஹராரேயில் இன்று நடைபெறுகிறது.</p><p>* இந்திய அணியில் சூர்யவன்ஷி இடம்பெற்றுள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/connaught-place-shops-close-630pm-amid-neet-protest">தீவிரமடையும் நீட் எதிர்ப்பு போராட்டம்: டெல்லி கனாட் பிளேஸில் அனைத்துக் கடைகளையும் மூட உத்தரவு!... </a></p><p> பேரணியாக வர முயன்ற கூட்டத்தைக் கலைக்க ஆங்காங்கே கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்பட்டு தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.<a href="https://www.maalaimalar.com/news/national/connaught-place-shops-close-630pm-amid-neet-protest"> </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/imd-inform-temperatures-to-rise-in-7-districts">7 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்- வானிலை ஆய்வு மையம்</a></p><p>* ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/anna-hazare-silent-protest-supporting-students">மாணவர்களுக்கு ஆதரவாக மவுன போராட்டம் நடத்திய அன்னா ஹசாரே</a></p><p>* பிரபலங்கள் உள்பட பலரும் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.</p><p>* பிரதமரின் அறிவிப்பை கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிராகரித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-slams-custodial-death-of-tuticorin-liquor-shop-worker" rel="nofollow">நெஞ்சம் கலங்குகிறது..!- தூத்துக்குடி வாலிபர் மரண சம்பவத்திற்கு உதயநிதி கண்டனம்</a></p><p>* தூத்துக்குடி லெவஞ்சிபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.</p><p>* அருணாச்சலத்தை தாக்கிய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-indictment-tvk-govt-4">காவல் மரணங்களுக்கான காரணங்களை கண்டறிய தனி விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன்</a></p><p>*  வீடியோ காட்சிகளைப் பார்க்கும் போது தமிழகத்தில் இருப்பது காவல்துறையா? அல்லது காட்டுமிராண்டித்துறையா? என்ற கேள்வியை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.</p><p>* காவல் மரணங்களுக்கான காரணங்களை கண்டறிய தனி விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும் எனவும் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/illegal-recreation-clubs-madurai-high-court-order">விதிமீறும் மனமகிழ் மன்றங்கள்: ஆய்வு செய்து கூட்டு அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/delhi-metro-stations-closure-supreme-court-warns-of-direct-intervention">டெல்லி மெட்ரோ நிலையங்கள் மூடல்: தீர்வு காணாவிட்டால் உச்ச நீதிமன்றமே நேரடியாகத் தலையிடும் என எச்சரிக்கை!</a></p><p>* அதிகாரிகள் உடனே தீர்வு காணாவிட்டால் உச்சநீதிமன்றம் தலையிடும்</p><p>* போக்குவரத்து காரணமாக வழக்கு தாமதமானால் பாதக உத்தரவு பிறப்பிக்க வேண்டாம்</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-new-management-board-with-the-authority-to-manage-the-cauvery-dams-must-be-constituted">காவிரி அணைகளை கையாளும் அதிகாரத்துடன் புதிய மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும்!- அன்புமணி</a></p><p>* பெங்களூரு மாநகரத்தின் குடிநீர் தேவைக்காக 5 டிஎம்சி நீரை வைத்துக் கொண்டாலும் மீதமுள்ள 32 டி.எம்.சி நீரை தமிழ்நாட்டுக்கு திறக்க முடியும். </p><p>* ஜூன் ஒன்றாம் தேதி முதல் இன்று வரை கர்நாடகம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரில் 26 டி.எம்.சி நீரை பாக்கி வைத்துள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/instagram-server-down-again-second-outage-in-a-week-users-unable-to-send-messages">ஒரே வாரத்தில் 2வது முறையாக முடங்கிய இன்ஸ்டாகிராம் - என்ன காரணம்?</a></p><p>* இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், மெசஞ்சரில் மெசேஜ் அனுப்ப, பெற முடியாமல் லட்சக்கணக்கான பயனர்கள் பாதிப்பு.</p><p>* தொடர் முடக்கத்திற்கு மெட்டா இன்னும் விளக்கம் தரவில்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-says-government-must-order-a-cbi-inquiry-death-of-prisoner-arunachalam">கைதி அருணாச்சலத்தின் உயிரிழப்பு குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும் - அன்புமணி</a></p><p>* காவலர்கள் மூவர் சேர்ந்து கொண்டு தம்மை கொடூரமாகத் தாக்கியதாக இளைஞர் வாக்குமூலம்.</p><p>* அருணாச்சலம் மயங்கி விழுந்ததில் தான் அவருக்கு காயம் ஏற்பட்டதாக காவல்துறை சார்பில் விளக்கம்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-it-is-doubtful-whether-a-government-even-exists-in-tamil-nadu-today">இன்று தமிழ்நாட்டில் ‘அரசு’ என்ற ஒன்று உள்ளதா என்பதே சந்தேகம் தான்! - கனிமொழி</a></p><p>* காவல்துறையின் சித்திரவதைக்கு உள்ளாகி இளைஞர் ஒருவர் உயிரிழந்திருக்கும் செய்தி வேதனையளிக்கிறது.</p><p>* நாளை பணிக்கு திரும்பிய பின்னாவது, இந்த காவல் மரணம் குறித்து வாய் திறக்கிறார்களா என்று பார்ப்போம்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/young-man-mysterious-death-in-thoothukudi">தூத்துக்குடியில் போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் மர்ம மரணம் - உறவினர்கள் மறியல்</a></p><p>* ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு 5 நாட்களில் அருணாச்சலம் இறந்ததால் அவரது உறவினர்கள், நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். </p><p>* போலீசார் தாக்கியதால் தான் அருணாச்சலம் இறந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/coastal-security-drill-in-mamallapuram-and-pulicat">மாமல்லபுரம்- பழவேற்காட்டில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை: 2 நாட்கள் நடக்கிறது</a></p><p>* இன்று காலை 8 மணிக்கு துவங்கிய இந்த சாகர் கவாச் ஒத்திகையானது நாளை இரவு 8மணி வரை நடைபெறுகிறது. </p><p>* பழவேற்காடு கடற்கரைப் பகுதியில் இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் கடலோர பாதுகாப்பு படையினர் ஒத்திகையில் ஈடுபட்டனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/director-mari-selvaraj-stands-with-indian-students-against-neet" rel="nofollow">என் கலையின் நேர்மை அதுதான்..!- மாணவர்களின் போராட்டத்திற்கு மாரி செல்வராஜ் ஆதரவு</a></p><p>* நாடு முழுவதும் மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>* அத்தனை இந்திய மாணவர்களின் கைகளோடு கைகோர்த்து  நிற்கிறேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/nainar-nagendran-vows-student-welfare-priority" rel="nofollow">மாணவர்கள் நலனில் என்றுமே சமரசம் கிடையாது!- நயினார் நாகேந்திரன்</a></p><p>* தேசத்தின் இளைஞர் சக்தியை தவறான வழியில் காங்கிரஸ் கட்சி வழிநடத்தக் கூடாது!</p><p>* அரசியல் கட்சிகளும் மத்திய அரசுடன் கைகோர்த்து செயல்பட வேண்டும்!</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/time-has-come-for-nation-to-do-its-duty-kamal-haasan-backs-students-protest" rel="nofollow">"நாடு தன் கடமையைச் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது"– மாணவர்களின் போராட்டத்திற்கு கமல்ஹாசன் எம்.பி ஆதரவு</a></p><p>* சோனம் வாங்சுக் தயவுசெய்து உங்கள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளுங்கள்.</p><p>* எங்கள் தோல்விகளை விட உங்கள் கனவுகள் என்றென்றும் பெரிதாக இருக்கட்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/puducherry/amit-shah-puducherry-visit-cancelled">மத்திய மந்திரி அமித்ஷா புதுச்சேரி வருகை ரத்து</a></p><p>* புதுச்சேரி காவல் துறைக்கு ஜனாதிபதியின் உயரிய வண்ண விருது அறிவிக்கப்பட்டது. </p><p>* மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு விருதை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/heavy-security-at-marina-beach">மெரினா கடற்கரையில் போலீசார் குவிப்பு - சோதனைக்கு பின்னரே மக்கள் அனுமதி</a></p><p>* மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த இருப்பதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவியது. </p><p>* மெரினா செல்லும் மக்கள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/parks-and-car-parking-facilities-under-flyovers-in-chennai-city">சென்னை மாநகரில் உள்ள மேம்பாலங்களின் கீழ் பகுதிகளில் பூங்காக்கள்- கார் பார்க்கிங் வசதி: மாநகராட்சி திட்டம்</a></p><p>* சிவானந்தா சாலையில் உள்ள பறக்கும் ரெயில் பாலத்தின் கீழே விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய சிறுவர் பூங்கா அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.</p><p>* வடக்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் 20 மின்சார வாகன சார்ஜிங் மையங்களும், பொதுக் கழிப்பறைகளும் கட்டப்பட உள்ளன.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/express-trains-will-be-operated-from-tambaram-starting-in-august">எழும்பூரில் 3-வது கட்ட மறுசீரமைப்பு பணி: எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆகஸ்டு முதல் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகிறது</a></p><p>* மறுசீரமைப்பு பணிகள் தொடங்கும்போது புறநகர் மின்சார ரெயில் சேவை பாதிக்காமல் வேறு நடைமேடைக்கு மாற்ற வேண்டி உள்ளது. </p><p>* புறநகர் மின்சார ரெயில்  சேவையில் பாதிப்பு ஏற்படாமல் ரெயில்களை இயக்குவது குறித்து ஏற்கனவே ஆலோசிக்கப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/rising-covid-19-infections-in-andhra-pradesh">ஆந்திராவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று - 32 பேர் பாதிப்பு</a></p><p>* கொரோனா தொற்று பாதித்து சிகிச்சையில் இருந்த 4 பேர் இறந்தனர். </p><p>* விசாகப்பட்டினம், ராஜ முந்திரியில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. </p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-announced-condemnation-protest-in-parangipettai-on-29th">பரங்கிப்பேட்டையில் 29-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு</a></p><p>* கடலூர் மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது.</p><p>* கடலில் கிணறுகள் அமைக்க இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் அனுமதி கோரியுள்ளது.&nbsp;</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/hyderabad-conjoined-twins-face-hurdles-in-taking-bank-exam">ஐதராபாத்தில் தலை ஒட்டி பிறந்த சகோதரிகள் வங்கி தேர்வு எழுதுவதில் சிக்கல்</a></p><p>* ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் வீணா, வாணி. தலை ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள். </p><p>* இரட்டையர்கள் பாரத ஸ்டேட் வங்கியின் பயிற்சி அதிகாரி பணிகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். </p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/us-iran-conflict-trump-warns-of-strikes-on-iran-bridges-and-power-plants-over-hormuz-attacks">ஹார்முஸில் கப்பல்களை தாக்கினால் ஈரானின் பாலங்கள், மின் நிலையங்கள் தகர்க்கப்படும் - டிரம்ப் புது எச்சரிக்கை</a></p><p>*கடந்த 11 நாட்களில் அமெரிக்க தாக்குதல்களால் 53 பேர் உயிரிழந்துள்ளனர்</p><p>*ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் தொடர்ச்சியாக 12வது இரவாக நேற்றிரவு நீடித்தது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protests-anna-hazare-urges-pm-modi-seeks-ministerial-accountability">அமைச்சர் ராஜினாமா செய்வதால் அரசு பலவீனமடையாது - பிரதமர் மோடிக்கு அண்ணா ஹசாரே கடிதம்</a></p><p>*இதுவரை 22 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர் என்பது மிகுந்த வேதனையளிக்கிறது.</p><p>*இதனை வெறும் சட்டஒழுங்கு பிரச்சனையாக அரசு அணுகக் கூடாது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-delhi-violence-raf-woman-officers-cockroach-remark-sparks-outrage">போராடும் இளைஞர்களை கிண்டலடித்த அதிரடிப்படை பெண் அதிகாரிக்கு குவியும் கண்டனம்.. பெண்கள் மீதான தாக்குதலை எப்படி நியாப்படுத்தலாம்? என கேள்வி</a></p><p>*ஒரு பெண்ணாக இருந்துகொண்டு, பெண் போராட்டக்காரர்கள் மீது ஆண்கள் நடத்தும் கொடூரத் தாக்குதலை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?</p><p>* தங்களைத்தானே திருத்திக்கொள்ள முடியாது; அவர்கள் நாட்டைத் திருத்த வருகிறார்களாம்</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-fast-track-court-plan-opposed-by-cockroach-janata-party" rel="nofollow">பிரதமர் மோடியின் அறிவிப்பை நிராகரித்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி</a></p><p>* இளைஞர் நலன் மற்றும் எதிர்காலத்தைவிட முக்கியமானது எதுவும் இல்லை.</p><p>* வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றமிழைத்த அனைவரும் தண்டிக்கப்படுவர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-dmk-is-poised-to-take-up-the-fight-against-neet">நீட்டுக்கு எதிராக தி.மு.க. வாள் தூக்கி நிற்கும்- உதயநிதி ஸ்டாலின்</a></p><p>* அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக் கனவைச் சிதைப்பதே நீட் போன்ற நுழைவுத்தேர்வுகளின் உண்மையான நோக்கம்! </p><p>* தடையை உடைப்பதற்கான படையாக திமுக என்றைக்கும் முன் வரிசையில் வாள் தூக்கி நிற்கும் என்று கூறியுள்ளார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-slams-pm-modi-for-ruining-youths-future" rel="nofollow">இளைஞர்களின் எதிர்காலத்தை மிக அதிகமாக சீர்குலைத்தவர் பிரதமர் மோடி..!- ராகுல் காந்தி</a></p><p>* கல்வி முறையை அழிப்பவர்களை பாதுகாத்து அவர்களை ஊக்குவித்தவர் பிரதமர் மோடி.</p><p>*மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-23-07-2026">GOLD PRICE TODAY: தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.13,500-க்கு விற்பனையாகிறது.</p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-its-time-to-abolish-neet">நீட் தேர்வை ஒழிக்க வேண்டிய நேரம் இது - மு.க.ஸ்டாலின் </a></p><p>* நீட் தேர்வு கற்றலின் மையத்தை பள்ளிகளில் இருந்து பயிற்சி மையங்களுக்கு மாற்றி உள்ளது.</p><p>* நீட் தேர்வின் பிரச்சனை எப்போதுமே நடைமுறை சார்ந்தது மட்டுமல்ல, அது கட்டமைப்பு ரீதியானது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-says-fast-track-courts-to-ensure-swift-and-stringent-punishment-for-those-involved-in-paper-leaks">வினாத்தாள் கசிவு விவகாரம்: விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்படும் - பிரதமர் மோடி</a></p><p>* இளைஞர் நலன் மற்றும் எதிர்காலத்தைவிட முக்கியமானது எதுவும் இல்லை.</p><p>* வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றமிழைத்த அனைவரும் தண்டிக்கப்படுவர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/japan-selling-human-refrigerator-for-heat-relief">அப்பாடா... வந்துவிட்டது... மனிதர்களுக்கான 'பிரிட்ஜ்' -  உடல் வெப்பநிலையை 10 நிமிடங்களில் குறைக்கும்</a></p><p>* உடல் அளவுக்கு அதிகமாக குளிருவதை தடுக்க 20 நிமிடங்களில் இது தானாகவே இயங்குவதை நிறுத்திவிடும். </p><p>* சாதாரண ஏ.சி.க்களை விட பாதியளவு மட்டுமே மின்சாரத்தை பயன்படுத்துகிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tenders-for-perunthalaivar-kamarajar-breakfast-scheme">பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்திற்கு டெண்டர் கோரியது நகராட்சி நிர்வாக துறை</a></p><p>* த.வெ.க. அரசு, முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்துள்ளது.</p><p>* முதலமைச்சரின் காலை உணவு திட்டத்துக்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/after-mgr-an-actors-film-releasing-after-becoming-chief-minister-history-created-by-vijay">எம்ஜிஆருக்கு பிறகு... முதலமைச்சரான பின் வெளியாகும் நடிகரின் படம் - விஜய் படைத்த வரலாறு</a></p><p>* தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் இன்றைய வெளியீட்டை திருவிழாவாக கொண்டாடினர். </p><p>* இன்று வெளியாகி உள்ள திரைப்படத்தை நேற்று இரவே கொண்டாடத் தொடங்கிய விஜய் ரசிகர்கள், சென்னை நகரின் முக்கிய திரையரங்குகளை உற்சாகத்தின் உச்சத்துக்கு கொண்டு சென்றனர். </p><p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/jana-nayagan-movie-release-across-tamilnadu">வெளியானது ‘ஜன நாயகன்’... ஆரவாரத்தில் ரசிகர்கள்</a></p><p>* ‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்’ என்ற டைட்டில் காடுடன் படம் வெளியானது.</p><p>* திரைப்பிரபலங்கள் பலரும் ‘ஜன நாயகன்’ படத்தை காண திரையரங்கிற்கு வருகை தந்தனர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-indictment-congress">நீட்டுக்கு எதிராக காங்கிரஸ் போராடுவது கேலிக்கூத்து- டிடிவி தினகரன்</a></p><p>* பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் போராட்டம் நடத்திய ராகுல்காந்தியை கைது செய்திருப்பது ஜனநாயகப் படுகொலை என கூறுவது முன்பின் முரணாக தெரியவில்லையா ?</p><p>* மாணவ, மாணவியர்களின் நலனை காக்கும் போராட்டம் அல்ல என்பதை நாட்டு மக்கள் அனைவரும் நன்கு அறிவர் என்பதை இந்நேரத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.</p> ]]></content:encoded></item><item><title>உடல் சோர்வாக உள்ளதா...? உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்!</title><link>https://www.maalaimalar.com/health/generalmedicine/feeling-tired-these-tips-are-for-you</link><comments>https://www.maalaimalar.com/health/generalmedicine/feeling-tired-these-tips-are-for-you#comments</comments><guid isPermaLink="false">35788678-9948-4645-9035-15266e18a8c6</guid><pubDate>Thu, 23 Jul 2026 12:24:54 +0000</pubDate><atom:updated>2026-07-23T12:24:54.727Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Health,ஆரோக்கியம்,HealthTips,உடல்நலம்,Raisins,உலர்திராட்சை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/141edj1a/raians.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Raisins]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/141edj1a/raians.jpg?w=280" width="280"></media:thumbnail><category>பொது மருத்துவம் (General Medicine)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உடல் சோர்வு நாம் அன்றாட வாழ்வில் அடிக்கடி சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். இது வெறும் தூக்கமின்மையால் மட்டும் வருவதில்லை; உடல் ரீதியான மற்றும் மன ரீதியான பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். இதற்கு நம் வீட்டில் இருக்கும் கிஸ்மிஸ் (உலர்திராட்சை)  வைத்தே தீர்வு காண முடியும்.</p><p>கிஸ்மிஸ் பழத்தைப் பார்த்துவிட்டால், இரண்டு மூன்றையாவது எடுத்து வாயில் போடாமல் நகர மாட்டார்கள். பார்த்தவுடனேயே சாப்பிடத் தூண்டும் ஈர்ப்பு அதற்கு உண்டு. உலர் திராட்சையைத்தான் `கிஸ்மிஸ் பழம்’ என்கிறோம். அபாரமான பல சத்துக்களைக் கொண்டிருக்கும் உலர்திராட்சை, நம் ஆரோக்கியத்துக்கு வழங்கும் பலன்கள் எக்கச்சக்கம்.</p><p>ஃபிரெஷ்ஷான திராட்சைப் பழங்களை நன்கு காயவைத்து, உலர்திராட்சை ஆக்குகிறார்கள். நான்கு டன் திராட்சைப் பழங்களை உலரவைத்தால், ஒரு டன் உலர்திராட்சைகள் கிடைக்கும். தண்ணீர் எல்லாம் வற்றிவிடும் இப்படி உலரவைப்பதன் மூலமாக, இதில் இருந்து நமக்கு ஏராளமான நார்ச்சத்துக்கள் கிடைக்கும்.</p><p>*தினமும் உலர்திராட்சையை சிறிதளவு சாப்பிடுபவர்களின் உடல் எடை வெகு விரைவில் அதிகரிக்கும். வெயில் காலம் தொடங்கிவிட்டால், சிலருக்கு முகத்தில் கொப்புளங்கள் வரும். அவர்கள் இதைச் சாப்பிட்டால், கொப்பளங்கள், கட்டிகள் நீங்கும். தோல் நோய்களில் இருந்தும் நம்மை காத்துக்கொள்ள முடியும், முகமும் பொலிவு பெறும்.</p><p>*இதில் வைட்டமின் ஏ சத்து இருப்பதால், கண்களுக்கு நல்ல பலன்களைத் தரும். கண்ணாடி அணிந்திருப்பவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், பார்வைக் குறைபாடு நீங்கும்; பார்வைத்திறன் மேம்படும். உலர்திராட்சையில் பொட்டாசியம் சத்தும் அதிகமாக இருக்கிறது. உடலில் இருக்கும் தசைகள் சுருங்கி விரிந்து, நரம்புகள் தூண்டப்படுவதற்கும் இதயத் துடிப்பை சீராக வைத்திருப்பதற்கும் பொட்டாசியம் சத்து தேவை.</p><p>* உலர்திராட்சையை சாப்பிடுவதால், நம் உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் பொட்டாசியம் சத்து பரவும்; நல்ல பலன் தரும். சர்க்கரை நோயாளிகளும் உலர்திராட்சையை தாராளமாகச் சாப்பிடலாம். </p><p>இதில் நார்ச்சத்தும் இருப்பதால், உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கவும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும் உதவக்கூடியது. ஏராளமான பலன்களை அள்ளித்தரும் உலர் திராட்சை எல்லோரும் சாப்பிட ஏற்றது.</p> ]]></content:encoded></item><item><title>‘ராகுல் காந்தியின் போராட்டம் நேர்மையற்றது’ - சோனம் வாங்சுக்கின் மனைவி பரபர குற்றச்சாட்டு!</title><link>https://www.maalaimalar.com/news/national/rahul-gandhis-protest-is-dishonest-sonam-wangchuks-wife-makes-sensational-allegation</link><comments>https://www.maalaimalar.com/news/national/rahul-gandhis-protest-is-dishonest-sonam-wangchuks-wife-makes-sensational-allegation#comments</comments><guid isPermaLink="false">17b88a2d-0a42-43c3-8bb9-9d52edb53504</guid><pubDate>Thu, 23 Jul 2026 12:15:27 +0000</pubDate><atom:updated>2026-07-23T12:15:27.321Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Sonam Wangchuk,சோனம் வாங்சுக்,Gitanjali Angmo,கீதாஞ்சலி ஆங்மோ</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/n4l5ll7z/New-Project-2026-07-23T173301.035.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘ராகுல் காந்தியின் போராட்டம் நேர்மையற்றது’ - சோனம் வாங்சுக்கின் மனைவி பரபர குற்றச்சாட்டு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/n4l5ll7z/New-Project-2026-07-23T173301.035.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட கல்வித்துறையில் நடைபெற்ற குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ஜூன்.20 முதல் போராட்டம் நடத்திவருகிறது.</p><p>இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல்நாள் (ஜூலை.20) ‘சலோ சன்சத்’ என்ற பெயரில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியில் ஈடுபட்டனர். இந்தப் பேரணியை களைக்க போலீசார் மாணவர்கள், போராட்டக்காரர்கள்மீது போலீசார் சராமாரி தடியடி நடத்தினர்.</p><p>போலீசாரின் இந்த அராஜகப்போக்கை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி தலைமையில் மறுநாள் (ஜூலை.21) டெல்லி ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமர் இல்லம் முன்பு போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தைத் தொடர்ந்து ராகுல் காந்தி, சோனியா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.</p><p>இந்நிலையில் ராகுல் காந்தியின் இந்தப் போராட்டம் நேர்மையற்றது என சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஆங்மோ விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர், </p><p>“பிரதமரின் இல்லத்திற்கு வெளியே நடந்த போராட்டத்தில் நேர்மை இல்லை. பொதுமக்களை இனி ஏமாற்ற முடியாது. இது விழித்தெழுந்த இந்தியா. நேர்மையற்றவர்கள் இளைஞர்களால் தூக்கி எறியப்படுவார்கள்.</p><p>சொன்னதைச் செய்தாக வேண்டும் என்பதை கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ஒவ்வொரு அரசியல் தலைவருக்கும் காட்டியுள்ளது. அவர்களால் இனிமேலும் பொய் பேசவோ அல்லது நேர்மையற்றவர்களாக இருக்கவோ முடியாது.” என தெரிவித்தார். </p><p>மேலும் அரசியல் கட்சிகள் தங்களை இதனுடன் இணைத்துக் கொள்ள முயன்றபோதிலும், இந்தப் போராட்டம் அரசியல் சார்பற்றதாகவே நீடிக்கிறது என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>‘போராட்டத்தில் பாஜகவினர் கல்லெறிந்துவிட்டு எங்கள்மீது பழிபோடுகிறார்கள்’ - அபிஜீத் தீப்கே!</title><link>https://www.maalaimalar.com/news/national/bjp-members-pelted-stones-during-the-protest-and-are-shifting-the-blame-onto-us-abhijit-deepke</link><comments>https://www.maalaimalar.com/news/national/bjp-members-pelted-stones-during-the-protest-and-are-shifting-the-blame-onto-us-abhijit-deepke#comments</comments><guid isPermaLink="false">0c575166-fee7-4024-b6b9-ed599285e01b</guid><pubDate>Thu, 23 Jul 2026 12:00:44 +0000</pubDate><atom:updated>2026-07-23T12:00:44.074Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,Cockroach Janta Party,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,NEET-UG paper leak,நீட்-யுஜி வினாத்தாள் கசிவு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/6ts1ieh6/New-Project-2026-07-23T172843.724.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘போராட்டத்தில் பாஜகவினர் கல்லெறிந்துவிட்டு எங்கள்மீது பழிபோடுகிறார்கள்’ - அபிஜீத் தீப்கே!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/6ts1ieh6/New-Project-2026-07-23T172843.724.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடந்து வரும் மாணவர் போராட்டத்தை வேண்டுமென்றே சீர்குலைப்பதற்காக வெளியிலிருந்து ஆட்கள் அனுப்பப்படுவதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே குற்றம் சாட்டியுள்ளார். </p><p>மேலும், பாஜகத் தொண்டர்கள் போராட்டக்காரர்கள் மீது கல் எறிந்துவிட்டு, எங்கள் பெயரை கெடுக்க முயற்சிக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக செய்தியாளர்களிடத்தில் பேசிய அபிஜீத்,</p><p>“போராட்டத்தை வேண்டுமென்றே சீர்குலைப்பதற்காக வெளியிலிருந்து ஆட்கள் அனுப்பப்படுகிறார்கள். நாங்கள் ஒரு மாதமாக இங்கே அமர்ந்திருக்கிறோம். ஒரு மாதத்தில் இதுபோன்ற எந்தச் சம்பவமும் நடக்கவில்லை. ஆனால் இப்போது, ​​இந்தப் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், மக்களை வேண்டுமென்றே தூண்டிவிடுவதற்காக பாஜகவால் வெளியிலிருந்து குண்டர்கள் அனுப்பப்படுகிறார்கள்.</p><p>கற்களை வீசுபவர்கள் பாஜகவைச் சேர்ந்தவர்கள். காவல்துறை லாரிகளில் கற்களை இங்கு கொண்டு வருகிறது. பாஜக குண்டர்கள் வந்து, கற்களை வீசி, பின்னர் எங்களின் பெயரை கெடுக்க முயற்சிக்கின்றனர். </p><p>தடியடி பற்றி நான் ஏற்கனவே பேசியுள்ளேன். தடியடி நடத்திய காவல்துறையினரை நீதிமன்றம் முன் நிறுத்துவோம். இன்று எங்கள் போராட்டத்தின் 34வது நாள். சோனம் சாரின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது. இன்று அவரது உண்ணாவிரதப் போராட்டத்தின் 26வது நாள், எனவே எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.</p><p>இருப்பினும், சோனம் வாங்சுக் உயிர் இழப்பதை எங்களால் தாங்க முடியாது என்பதால், அவர் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளவேண்டும்.” என தெரிவித்தார். </p><p>புதன்கிழமை (ஜூலை.22) மாலை நடந்த கல்வீச்சு சம்பவத்தில், உதவி காவல் ஆணையர் ஜெய் பிரகாஷ், கன்னாட் பிளேஸ் உதவி காவல் ஆணையர் விவேக் பகத், ஆய்வாளர் நந்த் கிஷோர் மற்றும் மேலும் நான்கு காவலர்கள் காயமடைந்ததாக டெல்லு காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. </p><p>தொடர்ந்து இந்த கல்வீச்சு தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும்நிலையில் அபிஜீத் இந்த விளக்கத்தை அளித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>டெல்லியில் தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்! காரணம் கூறாமல் 3 மாதங்கள் சிறையில் அடைக்கலாம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/national-security-act-in-delhi-for-three-months-not-linked-to-student-protests</link><comments>https://www.maalaimalar.com/news/national/national-security-act-in-delhi-for-three-months-not-linked-to-student-protests#comments</comments><guid isPermaLink="false">76097f2f-587c-4e3a-935f-cd1c67305fae</guid><pubDate>Thu, 23 Jul 2026 11:46:33 +0000</pubDate><atom:updated>2026-07-23T11:46:33.536Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Delhi Police,டெல்லி காவல்துறை,National Security Act,Cockroach Janata Party,காக்ரோச் ஜனதா கட்சி,தேசிய பாதுகாப்பு சட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/7cazn6pm/Untitled-design-54.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Delhi NSA extension amid NEET protests]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/7cazn6pm/Untitled-design-54.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி காவல்துறை ஆணையருக்கு, 1980 ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் (NSA) கீழ் மூன்று மாத காலத்திற்கு, தடுப்புக் காவல் அதிகாரியின் அதிகாரங்களைப் பயன்படுத்த டெல்லி உள்துறை அரசாங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. </p><p>இந்த அதிகாரம் ஜூலை 19, 2026 முதல் அக்டோபர் 18, 2026 வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சட்டம் ஒழுங்கிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் தனி நபர்களை காரணம் கூறாமல் 3 மாதம் வரை சிறையில் அடைக்க முடியும். </p><p>பொது ஒழுங்கைப் பேணுதல், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பராமரித்தல் ஆகிய நிகழ்வுகளில், நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு தடுப்புக் காவல் சட்டத்தை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.</p><p><strong>டெல்லியில் தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்:</strong></p><p>இதுகுறித்து டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ள செய்தியில், “இந்த அறிவிப்பு என்பது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அதிகாரங்களை, காலாண்டுக்கு ஒருமுறை நீட்டிக்கும் ஒரு வழக்கமான செயல்முறை ஆகும்.</p><p>இது வழக்கமான நிர்வாக நடைமுறையின் ஒரு பகுதியாக ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் புதுப்பிக்கப்படுகிறது. </p><p>தற்போதைய புதுப்பித்தல் உத்தரவு, சிஜேபி போராட்டங்கள் தொடங்குவதற்கு முன்பே, 07.07.2026 அன்று, 19.07.2026 முதல் 18.10.2026 வரையிலான காலத்திற்கு பிறப்பிக்கப்பட்டது. </p><p>இந்த காலகட்டத்தில், டெல்லி காவல்துறை ஆணையர், தேசிய பாதுகாப்பு சட்டம் பிரிவு 3, துணைப் பிரிவு (2)-இன் கீழ் தடுப்புக் காவல் அதிகாரங்களையும் பயன்படுத்தலாம்.</p><p>சமீபத்திய நிகழ்வுகள் தொடர்பாக எந்தவொரு சிறப்பு கோரிக்கையோ அல்லது உத்தரவோ தொடங்கப்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும், “இந்த அறிவிப்பு, தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்களுடன் தொடர்புடையது கிடையாது. சரிபார்க்கப்படாத தகவல்களை நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம்” என்றும் காவல்துறை கூறியுள்ளது.</p><p>நீட் நுழைவுத் தேர்வில் வினாத்தாள் கசிந்தது தொடர்பாக தேசிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றும் வரும் சூழலில், இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, இணையத்தில் பரவலான யூகங்கள் பரவி வரும் நிலையில் இந்த விளக்கத்தை காவல்துறை அளித்துள்ளது.</p><h3><strong>டெல்லி மாணவர்கள் போராட்டம் பின்னணி:</strong></h3><p>காக்ரோச் ஜனதா கட்சியால் வழிநடத்தப்படும் இந்த ஆர்ப்பாட்டங்கள், இந்த வாரத் தொடக்கத்தில் போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல முயன்றபோது தீவிரமடைந்தன, இது காவல்துறையினருடன் மோதல்களுக்கு வழிவகுத்தது.</p><p>தேர்வு சீர்திருத்தங்கள், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா மற்றும் தேர்வுத்தாள் கசிவைத் தொடர்ந்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு ஆகியவற்றை போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.</p><p>தேர்வுத்தாள் கசிவுகள் காரணமாகத் தொடங்கிய இந்தப் போராட்டம், பின்னர் அரசாங்கத்தின் மீதும், வேலையின்மை மற்றும் இளம் இந்தியர்களுக்கான வாய்ப்புகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டும் பிரம்மாண்டமாக உருவெடுத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தவெக ஆட்சியில் தொடர்கதையாகும் காவல் மரணங்கள்.. முதலமைச்சர் மவுனம் காப்பது ஏன்..?- நயினார் நாகேந்திரன் கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/police-deaths-under-dmk-rule-why-is-cm-silent-asks-nainar-nagendran</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/police-deaths-under-dmk-rule-why-is-cm-silent-asks-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">99b30fb0-bb4b-44d4-a5d9-f69c4e7317a0</guid><pubDate>Thu, 23 Jul 2026 11:34:17 +0000</pubDate><atom:updated>2026-07-23T11:34:17.895Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,Thoothukudi,custodial death,காவல் மரணம்,தூத்துக்குடி வாலிபர் மரணம்,Thoothukudi youth death</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/syxzx2pz/Nainar1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay- Nainar nagendran]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/syxzx2pz/Nainar1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>தவெக ஆட்சியில் தொடர்கதையாகும் காவல் மரணங்கள் - மௌனம் காக்கும் முதல்வர் ஜோசப் விஜய்!</p><p>தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த வாலிபர் அருணாச்சலம், தென்பாகம் காவல் நிலையப் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>"போலீசார் தன்னைத் தலையில் தாக்கினர்" என உயிரிழப்பதற்கு முன் அருணாச்சலம் அளித்துள்ள மரண வாக்குமூல வீடியோ, இக்கொடூரத்தை அப்பட்டமாக அம்பலப்படுத்தியுள்ளது.</p><p>சமீபத்தில் நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன் சிறை ஊழியர்களின் கொடூரத் தாக்குதலால் பலியான அதிர்ச்சி அடங்குவதற்குள், தற்போது தூத்துக்குடியில் மீண்டும் காவல் மரணம்(Custodial Death) நிகழ்ந்துள்ளது. இன்னும் எத்தனை காவல் மரணங்கள் நிகழும் என முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் விளக்க வேண்டும். </p><p>ஆட்சி அமைந்த குறுகிய காலத்திலேயே அடுத்தடுத்து நிகழும் இத்தகைய சம்பவங்கள், தமிழகத்தில் காவல் மரணங்கள் தொடர்கதையாக மாறியுள்ளதை நிரூபிக்கின்றன.</p><p>எனவே, பாதிக்கப்பட்ட அருணாச்சலத்தின் மரணத்திற்குப் பொறுப்பான தென்பாகம் காவல் நிலைய அதிகாரிகள் மீது உடனடியாகக் கொலை வழக்குப் பதிவு செய்து அவர்களைக் கைது செய்வதோடு, பாதிக்கப்பட்ட அவரது குடும்பத்தினருக்குத் தகுந்த நீதியையும், இழப்பீட்டையும் விரைந்து வழங்க வேண்டும் என தவெக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>EITHER ALL OR NONE: ‘எங்களால் எண்ணெய் விற்க முடியாவிட்டால், யாராலும் விற்க முடியாது’ - ஈரான் எச்சரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/world/its-all-or-nothing-if-we-cannot-sell-oil-no-one-can-iran-warns</link><comments>https://www.maalaimalar.com/news/world/its-all-or-nothing-if-we-cannot-sell-oil-no-one-can-iran-warns#comments</comments><guid isPermaLink="false">47874cfc-bd96-43e0-bb81-f017a0bece13</guid><pubDate>Thu, 23 Jul 2026 10:55:06 +0000</pubDate><atom:updated>2026-07-23T10:55:06.907Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,USA,ஈரான்,Iran,ஹார்முஸ் ஜலசந்தி,Strait of Hormuz</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/qeaise09/New-Project-2026-07-23T160618.688.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ EITHER ALL OR NONE: ‘எங்களால் எண்ணெய் விற்க முடியாவிட்டால், யாராலும் விற்க முடியாது’ - ஈரான் எச்சரிக்கை!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/qeaise09/New-Project-2026-07-23T160618.688.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவுடனான் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ‘தங்களால் கச்சா எண்ணெய் விற்க முடியாவிட்டால், பிராந்தியத்தில் உள்ள எந்த நாடும் விற்க முடியாது’ என ஈரான் எச்சரித்துள்ளது. </p><p>ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகரும், அந்நாட்டின் தலைமை பேச்சுவார்த்தையாளருமான முகமது பாகர் காலிபாஃப், இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்., </p><p>“இந்த போரின் நிலைப்பாடு மிகத் தெளிவானது: ஒன்று அனைத்தும் அல்லது எதுவுமே இல்லை. நாங்கள் எண்ணெய் விற்க முடியாத ஒரு பிராந்தியத்தில், வேறு யாரும் எண்ணெய் விற்க முடியாது. ஈரானின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படாவிட்டால், எந்தவொரு உள்கட்டமைப்பும் பாதுகாப்பாக இருக்காது. </p><p>அதேவேளையில், அமெரிக்கப் படைகள் இல்லாத சூழலில்தான் அந்த ஹார்மூஸ் நீரிணை பாதுகாப்பானதாக இருக்கும். அந்த நீரிணையின் நிலைமை மீண்டும் போருக்கு முந்தைய நிலைக்குத் திரும்பாது என்பதை நாங்கள் பலமுறை கூறியுள்ளோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்கும் வர்த்தக கப்பல்களை தெஹ்ரான் தாக்கும் ஒவ்வொரு நேரமும், ஈரானியப் பாலம் அல்லது மின் உற்பத்தி நிலையத்தின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என ட்ரம்ப் எச்சரித்த சில மணிநேரங்களில் ஈரானின் இந்த எச்சரிக்கை வந்தது.</p>]]></content:encoded></item><item><title>சிவசேனாவில் இருந்து கட்சித் தாவிய 6 எம்.பி.க்கள் - மக்களவை சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்</title><link>https://www.maalaimalar.com/news/national/supreme-court-notice-to-lok-sabha-speaker-over-defection-of-6-mps</link><comments>https://www.maalaimalar.com/news/national/supreme-court-notice-to-lok-sabha-speaker-over-defection-of-6-mps#comments</comments><guid isPermaLink="false">0b917d1c-b7f9-43ce-a113-41ac8de5265d</guid><pubDate>Thu, 23 Jul 2026 10:51:50 +0000</pubDate><atom:updated>2026-07-23T10:51:50.981Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உத்தவ் தாக்கரே,Om Birla,ஓம் பிர்லா,Shiv Sena,Uddhav Thackery,சிவ சேனா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/53adfyne/Untitled-design-53.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ SC notice to Lok Sabha Speaker over approval of 6 MPs]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/53adfyne/Untitled-design-53.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஸ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியுடன் ஆறு எம்.பி.க்கள் இணைந்ததை அங்கீகரித்த மக்களவை சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.</p><p>மகாராஸ்டிராவில் சமீபத்தில் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் எம்.பி.க்களான சஞ்சய் தேஷ்முக், சஞ்சய் ஜாதவ், சஞ்சய் தினா பாட்டீல், நாகேஷ் பாட்டீல், ஓம்பிரகாஷ் ராஜேனிம்பல்கர் மற்றும் பெளசாஹேப் வக்செளரே ஆகிய ஆறு பேர் இணைந்தனர்.</p><h3><strong>கட்சித் தாவிய சிவசேனா எம்பிக்கள்:</strong> </h3><p>இந்த இணைப்பிற்கு பிறகு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவின் மக்களவை பலம், மூன்று எம்.பி.க்களாக குறைந்தது. </p><p>அதேவேளையில் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் பலம் 13 எம்.பி.க்களாக அதிகரித்தது. </p><p>இதன்மூலம், பாஜக மற்றும் தெலுங்கு தேசம் கட்சிக்கு அடுத்தபடியாக, தேசிய ஜனநாயக கூட்டணியின் மூன்றாவது பெரிய அங்கமாக சிவசேனா மாறியது. </p><p>இதுகுறித்து மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், “ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது தொகுதிகளின் வளர்ச்சியை பாதுகாப்பதற்காகவே எனது கட்சியில் இணைந்துள்ளனர். மற்றபடி தனிப்பட்ட ஆதாயங்களுக்காக அல்ல” என்று கூறினார்.</p><h3><strong>சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்:</strong></h3><p>இந்நிலையில் எம்.பி.க்களின் இணைவிற்கு ஒப்புதல் அளித்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் முடிவை எதிர்த்து, உத்தவ் தாக்கரே சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.</p><p>நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்னதாக அங்கீகரிக்கப்பட்ட சபாநாயகரின் முடிவுக்கு எதிராக, நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த கண்பத் சாவந்த் மனு தாக்கல் செய்தார்.</p><p>இதை அவசர வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்துமாறும், நீதிமன்றத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டது.</p><p>இதையடுத்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மக்களவை செயலாளர் மற்றும் ஆறு எம்.பி.க்களுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று நோட்டீஸ் அனுப்பியது.</p><p>மேலும் சபாநாயகரின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்ததோடு, எதிர் மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு, நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் அலோக் அரதே அமர்வு உத்தரவிட்டது.</p>]]></content:encoded></item><item><title>தீவிரமடையும் நீட் எதிர்ப்பு போராட்டம்: டெல்லி கனாட் பிளேஸில் அனைத்துக் கடைகளையும் மூட உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/national/connaught-place-shops-close-630pm-amid-neet-protest</link><comments>https://www.maalaimalar.com/news/national/connaught-place-shops-close-630pm-amid-neet-protest#comments</comments><guid isPermaLink="false">2b7dbfc8-d8ba-49f6-a719-9eed4350e0d6</guid><pubDate>Thu, 23 Jul 2026 10:50:14 +0000</pubDate><atom:updated>2026-07-23T10:50:14.262Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>delhi,டெல்லி ஜந்தர் மந்தர்,neet protest,நீட் எதிர்ப்பு போராட்டம்,Connaught Place,கனாட் பிளேஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/xi1s9nfz/DELHI.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Connaught Place]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/xi1s9nfz/DELHI.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு எதிராக மாணவர்கள் மற்றும் இளைஞர் அமைப்புகள் டெல்லியில் நடத்தி வரும் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.</p><p>டெல்லி ஜந்தர் மந்தர் மற்றும் பாராளுமன்ற வீதிப் பகுதிகளில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், தலைநகரின் இதயப் பகுதியாகவும் முக்கிய வர்த்தக மையமாகவும் விளங்கும் 'கனாட் பிளேஸ்' பகுதியில் நிலவும் சிக்கலான சூழல் காரணமாக, அங்குள்ள அனைத்துக் கடைகள், உணவகங்கள் மற்றும் அலுவலகங்களை இன்று மாலை 6:30 மணிக்குள் மூடுமாறு அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>அவசர உத்தரவு:</strong></h2><p>கனாட் பிளேஸில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள், உணவகங்கள் அனைத்தும் இன்று மாலை 6:30 மணிக்குள் முழுமையாக அடைக்கப்பட வேண்டும். புதுடெல்லி நகராட்சி மன்ற தலைவரின் நேரடித் தொலைபேசி அறிவுறுத்தலின் பேரில், ‘புதுடெல்லி வர்த்தகர்கள் சங்கம்’ தனது உறுப்பினர்களுக்கு இந்த அவசர எச்சரிக்கை அறிக்கையை அனுப்பியுள்ளது.</p><h2><strong>சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு:</strong></h2><p>அசம்பாவிதங்கள், சொத்து சேதங்கள் மற்றும் பொதுமக்கள் காயமடைவதைத் தவிர்க்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வர்த்தகர்கள் அனைவரும் நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.</p><h2><strong>கண்ணீர்ப்புகைக் குண்டு வீச்சு:</strong></h2><p>ஜந்தர் மந்தர், ஜனபத் மற்றும் கனாட் பிளேஸை இணைக்கும் முக்கியச் சாலைகளில் டெல்லி காவல் துறை மற்றும் துணைப் ராணுவப் படையினர் (CRPF, RAF) ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ளனர். பேரணியாக வர முயன்ற கூட்டத்தைக் கலைக்க ஆங்காங்கே கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்பட்டு தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.</p><h2><strong>மெட்ரோ போக்குவரத்து பாதிப்பு:</strong></h2><p>பாதுகாப்பு கருதி கனாட் பிளேஸ் பகுதியில் உள்ள ராஜீவ் சவுக் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மெட்ரோ ரயில் நிலையங்களின் சில நுழைவு வாயில்கள் அடைக்கப்பட்டு, போக்குவரத்து பலத்த கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.</p><p>டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் நடத்தி வரும் பேரணி மற்றும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளதால், சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்க முன்னெச்சரிக்கையாகக் கனாட் பிளேஸ் பகுதியில் உள்ள அனைத்துக் கடைகள், உணவகங்கள் மற்றும் வணிக வளாகங்களை இன்று மாலை 6:30 மணிக்குள் மூடுமாறு NDMC மற்றும் வர்த்தகர் சங்கம் உத்தரவிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சிறைக்கம்பிக்குள் மயங்கி விழுந்த விசாரணைக் கைதி அருணாச்சலம்- வீடியோ வெளியானது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/arunachalam-a-prisoner-under-investigation-faints-inside-the-prison-bars-video-released</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/arunachalam-a-prisoner-under-investigation-faints-inside-the-prison-bars-video-released#comments</comments><guid isPermaLink="false">5497f367-3b02-4221-89f6-a52c02b8c76b</guid><pubDate>Thu, 23 Jul 2026 10:48:20 +0000</pubDate><atom:updated>2026-07-23T10:48:20.767Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,வீடியோ,youth death,மர்ம மரணம்,custodial death,காவல் மரணம்,தூத்துகு்குடி வாலிபர் மரணம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/xt6uslos/video.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Thoothukudi youth dead]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/xt6uslos/video.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி அருணாச்சலம் மயங்கி விழும் வீடியோ வெளியாகியுள்ளது.</p><h2>விசாரணை கைதி அருணாச்சலம்</h2><p>தூத்துக்குடி அமுதா நகரை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகன் அருணாச்சலம் (வயது29). இவர் தூத்துக்குடி லெவஞ்சிபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.</p><p>இவர் கடந்த 18-ந்தேதி சட்ட விரோதமாக மது விற்றதாக கூறப்பட்ட புகாரின் பேரில், தூத்துக்குடி தென்பாகம் போலீசார் பிடித்தனர். பின்னர் அவரை விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில் அருணாச்சலம் திடீரென மயங்கி விழுந்தார். அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.</p><p>சிகிச்சையில் இருந்தபோது அருணாச்சலத்தை அவரது நண்பர்கள் சந்தித்தனர். அப்போது அவர்களிடம் 3 போலீசார் தன்னை தாக்கியதாக அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.</p><p>இதனை அருணாசலத்தின் நண்பர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் இன்று காலை அருணாச்சலம் திடீரென இறந்தார்.</p><h2>உறவினர்கள் மறியல்</h2><p>மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 5 நாட்களில் அவர் இறந்ததால் அவரது உறவினர்கள், நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் தாக்கியதால் தான் அருணாச்சலம் இறந்ததாக அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும் அரசு ஆஸ்பத்திரி முன்பு அவர்கள் திரண்டனர்.</p><p>அருணாச்சலத்தை தாக்கிய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என அவர்கள் தெரிவித்தனர். இதனால் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு நிலவி வருகிறது.</p><h2>வீடியோ வெளியானது</h2><p>இந்நிலையில், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி அருணாச்சலம் மயங்கி விழும் வீடியோ வெளியாகியுள்ளது.</p><p>கடந்த 17ம் தேதி காவல் நிலைய சிசிடிவியில் பதிவான வீடியோ வெளியாகி உள்ளது.</p><p>அந்த வீடியோவில், அருணாச்சலம் சிறைக்கம்பிகளுக்கு பின்னால் நிற்க முடியாமல் நின்று கொண்டிருந்தபோது மயங்கி விழும் காட்சி இடம்பெற்றுள்ளது.</p><p>கம்பிகளை பிடித்தபடி பாதி கால்கள் மடங்கிய நிலையில் அருணாச்சலம் மயங்கி விழுவதும் போலீசார் உள்ளே ஓடுவதும் பதிவாகி உள்ளது.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/qhICr70wNZk"></iframe></figure>]]></content:encoded></item><item><title>முதல் டி20 போட்டி: டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/first-t20-match-india-opts-to-bowl-after-winning-toss</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/first-t20-match-india-opts-to-bowl-after-winning-toss#comments</comments><guid isPermaLink="false">75118e06-cefc-4d60-a793-5ec34f6a4859</guid><pubDate>Thu, 23 Jul 2026 10:47:55 +0000</pubDate><atom:updated>2026-07-23T10:47:55.445Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Shreyas Iyer,ஷ்ரேயஸ் அய்யர்,ZIMvIND,ஜிம்பாப்வே இந்தியா தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/8pfj9qqd/toss.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ toss]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/8pfj9qqd/toss.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்பதற்காக ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்துள்ளது.</p><p>இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஹராரேயில் இன்று நடைபெறுகிறது.</p><p>இந்திய அணியின் கேப்டனாக ஷ்ரேயஸ் அய்யரும், ஜிம்பாப்வே அணியின் கேப்டனாக சிக்கந்தர் ராசாவும் செயல்படுகின்றனர்.</p><p>இந்நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்கிறது. அதன்படி, ஜிம்பாப்வே அணி முதலில் களமிறங்குகிறது.</p><p>இந்திய அணியில் சூர்யவன்ஷி இடம்பெற்றுள்ளார். இந்திய அணியில் அசோக் சர்மா அறிமுக வீரராக களமிறங்குகிறார்.</p><p>இந்திய அணியின் விவரம் வருமாறு:</p><p>வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), திலக் வர்மா, ரிங்கு சிங், ஷிவம் துபே, பிரின்ஸ் யாதவ், ரவி பிஷ்னோய், அசோக் ஷர்மா, மயங்க் யாதவ்.</p><p>முன்னதாக, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்தியா ஒரு வெற்றி கூட பெறாமல் இழந்தது.</p>]]></content:encoded></item><item><title>7 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்- வானிலை ஆய்வு மையம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/imd-inform-temperatures-to-rise-in-7-districts</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/imd-inform-temperatures-to-rise-in-7-districts#comments</comments><guid isPermaLink="false">efb702e8-a229-40a6-bffe-e741f8598ee4</guid><pubDate>Thu, 23 Jul 2026 10:25:36 +0000</pubDate><atom:updated>2026-07-23T10:25:36.383Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/1abnxqia/heat.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/1abnxqia/heat.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</aside><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>மிதமான மழை</strong></h2><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.</p><p>இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>நாளை மற்றும் நாளை மறுநாள் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>26-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகம், வட உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>27-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><h2><strong>வெப்பநிலை</strong></h2><p>இதனிடையே இன்று முதல் 27-ந்தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஈரோடு, கரூர், மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p>நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>27-ந்தேதி தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>‘நீட் விவகாரத்தில் அரசு பதிலளித்தது... குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்’ - நிர்மலா சீதாராமன்</title><link>https://www.maalaimalar.com/news/national/government-has-responded-to-the-neet-irregularities-the-culprits-have-been-arrested-nirmala-sitharaman</link><comments>https://www.maalaimalar.com/news/national/government-has-responded-to-the-neet-irregularities-the-culprits-have-been-arrested-nirmala-sitharaman#comments</comments><guid isPermaLink="false">3a96aa62-ce50-41dc-8286-7a3900a2a717</guid><pubDate>Thu, 23 Jul 2026 10:19:43 +0000</pubDate><atom:updated>2026-07-23T10:19:43.306Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>நிர்மலா சீதாராமன்,nirmala Sitharaman,நீட் வினாத்தாள் கசிவு,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,Cockraoch Janta Party protest,NEET leak</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/fz0n1w7t/New-Project-2026-07-23T154911.353.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘நீட் குளறுபடிகளுக்கு அரசு பதிலளித்தது... குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்’ - நிர்மலா சீதாராமன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/fz0n1w7t/New-Project-2026-07-23T154911.353.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடப்பாண்டு நீட் -யுஜி தேர்வில் நடைபெற்ற குளறுபடிகளால் நாடு முழுவதும் வெடித்துள்ளப் போராட்டங்கள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் தெரிவித்த கருத்துகளாவது;</p><p>“அனுமதியின்றி போராட்டம் நடத்தியவர்களிடத்திலும் சென்று அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த தயார் எனவும் தெரிவித்துள்ளனர். அரசு முழுமையான விவாதத்தை நடத்தத் தயாராக இருக்கும் நிலையில், மேலும் பல நிபந்தனைகளை விதித்து அவையின் நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்வது சரியல்ல. நீட் விவகாரத்தையும், இளம் மாணவர்களையும் முன்னிறுத்தி, காங்கிரஸ் கட்சி தனது வழக்கமான பாணியில் அவையை முடக்கப் பார்க்கிறது.</p><p>விவாதம் நடந்தால் உண்மை வெளிவந்துவிடும், அரசு எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் தெரியவந்துவிடும் என்பதால் விவாதத்தைத் தவிர்க்கிறார்கள். எனவே, அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துவதற்கு எந்த நியாயமான காரணமும் இல்லை. அவர்கள் விவாதத்தை விரும்புவதில்லை, அதனால்தான் இடையூறு செய்கிறார்கள். </p><p>காங்கிரஸ் நியாயமான விவாதத்தை விரும்பவில்லை; ஏனெனில் உண்மை வெளிவந்தால், நாட்டின் இளைஞர்கள் சார்ந்த இந்த உணர்வுபூர்வமான விவகாரத்தை அரசியல் ஆக்குவது அவர்கள்தான் என்பது தெரியவந்துவிடும்.</p><p>இப்போதும் கூட, எதிர்க்கட்சிகளிடமும், குறிப்பாக காங்கிரஸ் கட்சியிடமும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்: வாருங்கள், விரிவான விவாதத்தில் ஈடுபடுங்கள், பிரச்சினைகளை இங்கே விவாதியுங்கள். கூடுதல் நடவடிக்கைகள் தேவைப்பட்டால் அரசு அதற்கான பதில்களை இங்கே அளிக்கும், ஆனால் முதலில் விவாதியுங்கள். </p><p>பதிலளிக்கத் தயாராக இருக்கும் அமைச்சர்களைக் கூச்சலிட்டுப் பேசவிடாமல் செய்வதில் எந்தப் பயனும் இல்லை. அவையின் தலைவர் பேசத் தயாராக இருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் நோக்கம் இடையூறு செய்வது மட்டுமே; அவர்களுக்குத் தீர்வுகள் தேவையில்லை. </p><p>வினாத்தாள் கசிவு என்பது ஒரு உணர்வுப்பூர்வமான விஷயம். அரசு இதில் அக்கறை காட்டாமலோ அல்லது பதில் தெரிவிக்காமலோ இருந்திருந்தால், எதிர்க்கட்சிகள் இத்தகைய கடுமையான விமர்சனங்களை முன்வைப்பதை என்னால் புரிந்துகொள்ள முடியும். ஆனால் வினாத்தாள்களை வெளியே விட்டவர்கள், வாங்கியவர்கள், விற்றவர்கள் என இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை நோக்கியிருந்த பெற்றோருக்கு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற நம்பிக்கையை பிரதமரின் அறிவிப்பு அளித்துள்ளது. நாட்டின் இளம் தலைமுறைக்கு எதிராக குற்றம் செய்தவர்கள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள் என்றும், இதற்கான விரைவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதமர் இன்று அறிவித்துள்ளார்.</p><p>சரியான நேரத்தில் கைது நடவடிக்கைகள், மறுதேர்வு மற்றும் முடிவுகள் அறிவிப்பு ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்கு அரசு செவிசாய்த்து வருகிறது. அதேவேளையில், உயர்கல்விக்கான நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்கும் கட்டத்தில் உள்ள இளைஞர்களும் இச்சூழலை எதிர்கொண்டு வருகின்றனர்.</p><p>வினாத்தாள் கசிவு முதலில் மனவேதனையை அளித்தாலும், அதைப் பயன்படுத்தி இன்னும் சிறப்பாகத் தயாராகி, சிறந்த தேர்ச்சி பெற்ற இளைஞர்களும் உள்ளனர்; சவால்களை ஏற்றுக்கொண்டு வெற்றிகண்டவர்களும் இருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் அரசும், பிரதமரும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.” என தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நெஞ்சம் கலங்குகிறது..!- தூத்துக்குடி வாலிபர் மரண சம்பவத்திற்கு உதயநிதி கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-slams-custodial-death-of-tuticorin-liquor-shop-worker</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-slams-custodial-death-of-tuticorin-liquor-shop-worker#comments</comments><guid isPermaLink="false">8edc9819-b134-4531-9591-33a7096fd6a6</guid><pubDate>Thu, 23 Jul 2026 10:14:00 +0000</pubDate><atom:updated>2026-07-23T10:14:00.303Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>udhayanithi stalin,உதயநிதி ஸ்டாலின்,மர்ம மரணம்,custodial death,தூத்துக்குடி வாலிபர் மரணம்,Thoothukudi youth dead</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/ttzy25v2/udhayanithi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Udhayanithi stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/ttzy25v2/udhayanithi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடியில் சட்ட விரோதமாக மது விற்றதாக கூறப்பட்ட புகாரின் பேரில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அருணாச்சலம் திடீரென உயிரிழந்தார்.</p><p>இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><h2>உதயநிதி ஸ்டாலின்</h2><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்னும் இளைஞர், காவலர்களின் தாக்குதலுக்கு ஆளாகி மரணமடைந்து இருப்பது வேதனை அளிக்கிறது.</p><p>போலீஸ் தனக்கு இழைத்த அநீதியை தனது இறுதி நிமிடங்களில் அருணாச்சலமே எடுத்துச் சொன்னதைப் பார்க்கும் போது நெஞ்சம் கலங்குகிறது.</p><p>காவல் மரணங்களின் போது துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல் அமைச்சர், கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் மவுனம் காப்பதால், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.</p><p>மகனை இழந்து கண்ணீர் வடிக்கும் அருணாச்சலத்தின் குடும்பத்துக்கு, திரைப்படத்தைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் இந்த ஆட்சியாளர்கள் என்ன பதில் வைத்து இருக்கிறார்கள்? </p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>விசாரணை கைதி அருணாச்சலம்</h2><p>தூத்துக்குடி அமுதா நகரை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகன் அருணாச்சலம் (வயது29). இவர் தூத்துக்குடி லெவஞ்சிபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.</p><p>இவர் கடந்த 18-ந்தேதி சட்ட விரோதமாக மது விற்றதாக கூறப்பட்ட புகாரின் பேரில், தூத்துக்குடி தென்பாகம் போலீசார் பிடித்தனர். பின்னர் அவரை விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில் அருணாச்சலம் திடீரென மயங்கி விழுந்தார். அவரை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.</p><p>சிகிச்சையில் இருந்தபோது அருணாச்சலத்தை அவரது நண்பர்கள் சந்தித்தனர். அப்போது அவர்களிடம் 3 போலீசார் தன்னை தாக்கியதாக அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.</p><p>இதனை அருணாசலத்தின் நண்பர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் இன்று காலை அருணாச்சலம் திடீரென இறந்தார்.</p><h2>உறவினர்கள் மறியல்</h2><p>மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 5 நாட்களில் அவர் இறந்ததால் அவரது உறவினர்கள், நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் தாக்கியதால் தான் அருணாச்சலம் இறந்ததாக அவர்கள் குற்றம் சாட்டினர். மேலும் அரசு ஆஸ்பத்திரி முன்பு அவர்கள் திரண்டனர்.</p><p>அருணாச்சலத்தை தாக்கிய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என அவர்கள் தெரிவித்தனர். இதனால் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு நிலவி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>விதிமீறும் மனமகிழ் மன்றங்கள்: ஆய்வு செய்து கூட்டு அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/illegal-recreation-clubs-madurai-high-court-order</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/illegal-recreation-clubs-madurai-high-court-order#comments</comments><guid isPermaLink="false">b3042254-d9fa-4b6b-91fd-df3faea6df17</guid><pubDate>Thu, 23 Jul 2026 09:52:34 +0000</pubDate><atom:updated>2026-07-23T09:52:34.929Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Madras High Court,Tasmac,டாஸ்மாக்,Recreation Clubs,மனமகிழ் மன்றங்கள்,உயர் நீதிமன்ற மதுரைக் கிளை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/k2c8abm2/madurai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ High court madurai bench]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/k2c8abm2/madurai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் மனமகிழ் மன்றங்கள் (Recreation Clubs) குறித்து விரிவாக ஆய்வு செய்து, வருவாய்த் துறை, காவல் துறை மற்றும் மதுவிலக்குத் துறை ஆகிய மூன்று துறைகளும் இணைந்து கூட்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது.</p><h2><strong>நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள்:</strong></h2><p>விசாரணையின் போது, மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் நடைபெறும் விதிமீறல்கள் குறித்து நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர்.</p><h2><strong>உறுப்பினர் அல்லாதவருக்கு மது விற்பனையா?:</strong></h2><p>மனமகிழ் மன்றங்களின் விதிகளின்படி, அங்குப் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு மட்டுமே சேவைகள் வழங்கப்பட வேண்டும். ஆனால், "உறுப்பினர் அல்லாத பொதுமக்களுக்கு எவ்வாறு சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுகிறது?" என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.</p><h2><strong>மதுவுக்கு மட்டுமே முன்னுரிமை:</strong></h2><p>மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் உரிமம் பெற்றுவிட்டு, அங்குச் சட்டம் குறிப்பிடும் எவ்வித விளையாட்டு அல்லது பொழுதுபோக்கு அம்சங்களும் இன்றி, அவை வெறும் "நாள் முழுதும் செயல்படும் மதுக்கடைகளாகவே" நடத்தப்பட்டு வருவதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.</p><h2><strong>உயர் நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவுகள்:</strong></h2><h2><strong>கூட்டு ஆய்வு மற்றும் அறிக்கை:</strong></h2><p>வருவாய்த் துறை, காவல் துறை, மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை ஆகிய மூன்று துறைகளின் அதிகாரிகளும் இணைந்து, மாநிலம் முழுவதும் செயல்படும் மனமகிழ் மன்றங்களில் நேரடி ஆய்வு நடத்த வேண்டும். ஆய்வு அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் கூட்டு அறிக்கையாக உடனடியாகத் தாக்கல் செய்ய வேண்டும்.</p><h2><strong>உரிமம் ரத்து நடவடிக்கை:</strong></h2><p>விதிமுறைகளை மீறி, உறுப்பினர் அல்லாத வெளிநபர்களுக்கு மது விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட மனமகிழ் மன்றங்களின் எஃப்.எல்-2 உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>டாஸ்மாக் கடைகளுக்கு மாற்றாகவும், சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் உரிமம் பெற்றும் இயங்கும் பல மனமகிழ் மன்றங்கள், தங்களது வரம்பை மீறி இரவு நேரங்களிலும், பொதுமக்களுக்குக் கட்டுப்பாடின்றியும் மது விநியோகம் செய்து வருவதாகப் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு வந்தன.\</p><p>நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவு, சட்டவிரோதமாகச் செயல்படும் மதுக் கூடங்கள் மற்றும் மனமகிழ் மன்றங்கள் மீது கடுமையான நடவடிக்கையைத் முடக்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்களுக்கு ஆதரவாக மவுன போராட்டம் நடத்திய அன்னா ஹசாரே</title><link>https://www.maalaimalar.com/news/national/anna-hazare-silent-protest-supporting-students</link><comments>https://www.maalaimalar.com/news/national/anna-hazare-silent-protest-supporting-students#comments</comments><guid isPermaLink="false">76845079-8df8-4efb-a2ec-45d6d8e1562f</guid><pubDate>Thu, 23 Jul 2026 09:48:33 +0000</pubDate><atom:updated>2026-07-23T09:48:33.502Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணவர்கள் போராட்டம்,students protest,அன்னா ஹசாரே,Anna Hazare,CJP Protest</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/by9lbn4t/hazare.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ anna hazare]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/by9lbn4t/hazare.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த மாதம் 20-ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்திரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.</p><h2>மாணவர்கள் பேரணி</h2><p>இதற்கிடையே, தலைநகர் டெல்லியில் ஜூலை 20 அன்று கரப்பான்பூச்சி கட்சி சார்பில் நாடாளுமன்றம் நோக்கி இளைஞர்கள் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் போலீசார் தடியடி தாக்குதல் நடத்தினர். கண்ணீர் புகைகுண்டுகளை வீசி இளைஞர்களை கலைக்க முயன்றனர். அப்போது, 60 போராட்டக்காரர்கள் காயமடைந்தனர். 116 போலீசார் காயமுற்றனர். 70 பேர் கைது செய்யப்பட்டனர்.</p><p>மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்த பல அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள் புகைப்படங்கள் வெளியாகி, அமைதியான முறையில் பேரணி நடத்திய இளைஞர்கள் மீதான அரசின் அடக்குமுறை குறித்த விமர்சனங்களை எழுப்பியது.</p><h2>பிரபலங்கள் ஆதரவு</h2><p>இதையடுத்து, பிரபலங்கள் உள்பட பலரும் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.</p><p>இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில், இளைஞர் நலன் மற்றும் எதிர்காலத்தைவிட முக்கியமானது எதுவும் இல்லை. மாணவர்களின் நலனைப் பாதுகாக்க தொடர் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், விரைவு நீதிமன்றம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றமிழைத்த அனைவரும் தண்டிக்கப்படுவர் என பதிவிட்டுள்ளார்.</p><p>வினாத்தாள் கசிவு விவகாரத்தை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பை கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிராகரித்துள்ளது.</p><p>மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கண்டிப்பாக பதவி விலக வேண்டும் என பிரதமரின் எக்ஸ் தள பதிவை குறிப்பிட்டு காக்ரோச் ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.</p><h2>மவுன போராட்டம்</h2><p>இந்நிலையில், சமூக ஆர்வலரான அன்னா ஹசாரே மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மகாராஷ்டிராவின் அஹில்யா நகரில் இன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மவுன போராட்டத்தில் ஈடுபட்டார் என அவரது உதவியாளர் தத்தா அவாரி தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>மக்கள் திண்டாடிக் கொண்டிருக்க ‘பிளாஸ்ட் பிளாஸ்ட்’ கொண்டாட்டத்தில் இருக்கும் ‘நீரோ’ அரசுக்கு கண்டனம் - இபிஎஸ்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/condemnation-from-eps-for-the-nero-like-government-that-is-busy-celebrating-with-great-fanfare-while-the-people-are-struggling</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/condemnation-from-eps-for-the-nero-like-government-that-is-busy-celebrating-with-great-fanfare-while-the-people-are-struggling#comments</comments><guid isPermaLink="false">b12fc86a-a557-40a2-9ed0-7a4162842a34</guid><pubDate>Thu, 23 Jul 2026 09:47:38 +0000</pubDate><atom:updated>2026-07-23T09:47:38.737Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Jana Nayagan,ஜன நாயகன்,Edappadi Palaniswami,எடப்பாடி பழனிசாமி,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/uiqlthj1/New-Project-2026-07-23T151708.355.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மக்கள் திண்டாடிக் கொண்டிருக்க ‘பிளாஸ்ட் பிளாஸ்ட்’ கொண்டாட்டத்தில் இருக்கும் ‘நீரோ’ அரசுக்கு கண்டனம் - இபிஎஸ்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/uiqlthj1/New-Project-2026-07-23T151708.355.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ரோமானியப் பேரரசின் ஐந்தாவது மற்றும் ஜூலியோ-கிளாடியன் வம்சத்தின் கடைசிப் பேரரசர் நீரோவின் ஆட்சிப்போல திகழும் தவெக ஆட்சிக்கு எனது கண்டனங்கள் என, திருச்சி மருத்துவமனை சம்பவம் ஒன்றை குறிப்பிட்டு இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில்,.</p><p>திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது பெண்ணின் கால் விரலை எலிகள் கடித்துக் குதறியதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.</p><p>தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளை இன்றைய ஆட்சி எப்படி வைத்திருக்கிறது என்பதற்கு இந்த செய்தியே சாட்சி.</p><p>அரசை நம்பி சிகிச்சை பெற வந்து, எலி கடித்து கால் விரல் இழந்துள்ள அந்த பெண்ணிற்கு என்ன பதில் வைத்துள்ளது இன்றைய தவெக பொய்க்கால் குதிரை அரசு?</p><p>இப்படி மக்கள் திண்டாடிக் கொண்டிருக்க, இத்துறையின் அமைச்சரோ, ஜனநாயகன் படத்தின் முதல் காட்சி பார்த்து கொண்டாடி செல்ஃபி பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்.</p><p>அவர் மட்டுமல்ல, இன்றைய தினம் முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் படம் பார்க்க “விடுமுறை” போட்டிருப்பதாக வேறு செய்திகள் வருகின்றன.</p><p>நாடும் நாட்டு மக்களும் எக்கேடாய்ப் போனால் என்ன? என்று “Blastu Blastu” கொண்டாடத்தில் திளைக்கும் புதிய Nero அரசுக்கு எனது கடும் கண்டனம்.</p><p>உடனடியாக பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பதுடன், அவருக்கான இழப்பீடும் வழங்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>டெல்லி மெட்ரோ நிலையங்கள் மூடல்: தீர்வு காணாவிட்டால் உச்ச நீதிமன்றமே நேரடியாகத் தலையிடும் என எச்சரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-metro-stations-closure-supreme-court-warns-of-direct-intervention</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-metro-stations-closure-supreme-court-warns-of-direct-intervention#comments</comments><guid isPermaLink="false">3dd9f69a-541c-4487-b733-f8895c3703ca</guid><pubDate>Thu, 23 Jul 2026 09:43:57 +0000</pubDate><atom:updated>2026-07-23T09:43:57.081Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>SupremeCourt,Suryakant,தலைமை நீதிபதி சூர்யகாந்த்,டெல்லிமெட்ரோ,DelhiMetro,CJIProtest,MetroStationClosed</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/8mpboo18/SuryaKant" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ SuryaKant ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/8mpboo18/SuryaKant?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டதால் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் எதிர்கொள்ளும் கடுமையான போக்குவரத்துச் சிக்கல்களுக்கு அதிகாரிகள் உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்றும், தவறினால் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் நேரடியாகத் தலையிட்டு உத்தரவு பிறப்பிக்கும் என்றும் இந்தியத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் எச்சரித்துள்ளார்.</p><h2>வழக்கறிஞர்கள் சங்கம் முறையீடு:</h2><p>தலைநகர் டெல்லியில் நிலவி வரும் அரசியல் போராட்டத்தின் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக, உச்ச நீதிமன்றம், ராஜீவ் சவுக், மண்டி ஹவுஸ் உள்ளிட்ட 16 முக்கிய மெட்ரோ நிலையங்களை டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனம் தற்காலிகமாக மூடியுள்ளது.</p><p>இதனால் உச்ச நீதிமன்ற வளாகத்திற்கு வர முடியாமல் வழக்கறிஞர்களும், பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகினர்.</p><p>இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் விகாஸ் சிங், தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வின் முன் அவசர வழக்காக கொண்டு சென்றார்.</p><p>அப்போது பேசிய அவர், "மெட்ரோ நிலையங்களை ஒட்டுமொத்தமாக மூடுவதற்குப் பதிலாக, உச்ச நீதிமன்ற அடையாள அட்டைகளைச் சரிபார்த்து வழக்கறிஞர்களையும், ஊழியர்களையும் மட்டும் மெட்ரோ நிலையத்திற்குள் அனுமதிக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.</p><h2>தலைமை நீதிபதியின் அதிரடி உத்தரவுகள்:</h2><p>வழக்கறிஞர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி சூர்யகாந்த் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.</p><p>அதில், இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண அதிகாரிகளுக்கு ஏற்கனவே நிர்வாக ரீதியான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. </p><p>அதிகாரிகள் இதற்குச் சரியான தீர்வைக் கொண்டு வராவிட்டால், உச்ச நீதிமன்றமே நேரடியாக தலையிட்டு, இந்த வழக்கை சட்ட ரீதியாகக் கையில் எடுத்து உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்கும் என்று தெரிவித்தார்.</p><p>போக்குவரத்து நெரிசல் மற்றும் மெட்ரோ முடக்கம் காரணமாக வழக்கறிஞர்கள் குறித்த நேரத்திற்கு நீதிமன்றத்திற்கு வர முடியாமல் போனால், அவர்களின் வழக்குகளுக்கு எதிராக எந்தவொரு பாதகமான உத்தரவுகளையும் பிறப்பிக்கக் கூடாது என அனைத்து நீதிமன்றங்களுக்கும் நிர்வாகச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார்.</p><p>மேலும், உச்ச நீதிமன்ற மெட்ரோ நிலையத்தை மட்டும் முதலில் திறக்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தலைமை நீதிபதி வலியுறுத்தினார்</p><h2>பின்னணி</h2><p>டெல்லியில் தற்போது நடந்து வரும் போராட்டங்கள் காரணமாகப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>முன்னதாக, போராட்டத்தில் போலீசாரின் அத்துமீறல் நடந்ததாகக் கூறி தொடரப்பட்ட அவசரக் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்திருந்த நிலையில், டெல்லி உயர் நீதிமன்றம் இது தொடர்பான பொதுநல வழக்குகளை விசாரிக்க ஒப்புக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>காவிரி அணைகளை கையாளும் அதிகாரத்துடன் புதிய மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும்!- அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-new-management-board-with-the-authority-to-manage-the-cauvery-dams-must-be-constituted</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-new-management-board-with-the-authority-to-manage-the-cauvery-dams-must-be-constituted#comments</comments><guid isPermaLink="false">0668a8b2-4030-4ac5-93cf-431510b2cf5e</guid><pubDate>Thu, 23 Jul 2026 09:38:43 +0000</pubDate><atom:updated>2026-07-23T09:38:43.994Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,காவிரி நீர்,Cauvery water</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/4s00ek0e/Anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/4s00ek0e/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>பெங்களூரு மாநகரத்தின் குடிநீர் தேவைக்காக 5 டிஎம்சி நீரை வைத்துக் கொண்டாலும் மீதமுள்ள 32 டி.எம்.சி நீரை தமிழ்நாட்டுக்கு திறக்க முடியும்.</aside><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2> <strong>துரோகம்</strong></h2><p>காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் குறுவைப் பயிர்களைக் காப்பாற்ற காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு ஆணையிட வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க காவிரி மேலாண்மை ஆணையம் மறுத்து விட்டது. கர்நாடக அணைகளில் பெங்களூரு மாநகரின் குடிநீர் தேவைக்காக மட்டும் தான் தண்ணீர் இருப்பதாக கர்நாடக அரசு கூறியதை அப்படியே மேலாண்மை ஆணையம் ஏற்றுக்கொண்டிருப்பது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட துரோகம் ஆகும். இந்த பொம்மை ஆணையத்தில் தமிழகத்திற்கு நீதி கிடைக்காது.</p><p>தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது குறித்து முடிவெடுப்பதற்காக காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் தில்லியில் நடைபெற்றது. கடந்த ஜூன் மாதத்தில் தொடங்கி, நேற்று வரை தமிழகத்திற்கு திறக்க வேண்டிய 28.30 டி.எம்.சி நீரில் 3.44 டி.எம்.சி நீரை மட்டுமே கர்நாடகம் வழங்கியிருப்பதை சுட்டிக்காட்டிய தமிழக அதிகாரிகள், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தண்ணீர் திறந்து விட ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால், தங்களிடம் பெங்களூரு மாநகர குடிநீர் தேவைக்காக மட்டுமே தண்ணீர் இருப்பதாக கர்நாடக அரசு தெரிவித்தது. அதை ஏற்றுக் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையம், காவிரியில் தண்ணீர் திறப்பதில் இப்போதுள்ள நிலையே தொடரும் எனக் கூறி விட்டது. அதனால் தமிழகத்திறகு தண்ணீர் கிடைக்காது.</p><p>கர்நாடக அணைகளின் நீர் இருப்பு தொடர்பாக அம்மாநில அரசு தெரிவித்த தகவல்கள் அப்பட்டமான பொய் ஆகும். கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஹேமாவதி அணையில் 22.77 டி.எம்.சி, கே.ஆர்.எஸ் அணையில் 17.21 டி.எம்.சி, கபினி அணையில் 13.02 டி.எம்.சி, ஹாரங்கி அணையில் 7.20 டி.எம்.சி என 60.21 டி.எம்.சி நீர் இன்று மதியம் 12.00 மணி நிலவரப்படி உள்ளது. ஹாரங்கி அணையில் 85% அளவுக்கும், கபினியில் 67% அளவுக்கும், ஹேமாவதி அணையில் 61 டி.எம்.சி அளவுக்கு நீர் உள்ளது. அணைகளின் குறைந்தபட்ச நீர் இருப்பான 23 டிஎம்சி போக மீதமுள்ள 37 டி.எம்.சி நீரை தமிழகத்திற்கு திறந்து விட முடியும்.</p><h2><strong>தமிழகத்திற்கு பயனில்லை</strong></h2><p>பெங்களூரு மாநகரத்தின் குடிநீர் தேவைக்காக 5 டிஎம்சி நீரை வைத்துக் கொண்டாலும் மீதமுள்ள 32 டி.எம்.சி நீரை தமிழ்நாட்டுக்கு திறக்க முடியும். இந்த உண்மைகள் அனைத்தும் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும் நன்றாகத் தெரியும். ஆனாலும், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடகத்திற்கு ஆணையிட காவிரி மேலாண்மை ஆணையம் கடுமையாக உத்தரவிடாததற்கு காரணம் அம்மாநிலத்திற்கு ஆதரவான நிலைப்பாடும்,  அப்படியே ஆணையிட்டாலும் அதை செயல்படுத்த வைக்கும் அதிகாரம் ஆணையத்திற்கு இல்லாததும் தான்.</p> <p>ஜூன் ஒன்றாம் தேதி முதல் இன்று வரை கர்நாடகம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரில் 26 டி.எம்.சி நீரை பாக்கி வைத்துள்ளது. இதற்காக கர்நாடக அரசின் மீது நடவடிக்கை எடுப்பதற்கான எந்த அதிகாரமும் மேலாண்மை ஆணையத்திற்கு கிடையாது. அதிகபட்சமாக கர்நாடகம் தண்ணீர் திறக்காதது குறித்து மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்து, மத்திய நீர்வளத்துறை வாயிலாக கர்நாடக அரசுக்கு கோரிக்கை வைக்க முடியும். இப்படிப்பட்ட பொம்மை ஆணையத்தை வைத்துக் கொண்டு தமிழகத்திற்கு காவிரி நீரில் உரிய பங்கை வாங்கி விட முடியும் என நினைப்பது அறியாமையாகத் தான் இருக்கும். இந்த ஆணையத்தால் தமிழகத்திற்கு பயனில்லை.</p><p>காவிரியில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறப்பது குறித்த தங்களின் தீர்ப்பை கர்நாடகம் செயல்படுத்தாது என்ற உண்மை நடுவர் மன்ற நீதிபதிகளுக்கும் நன்றாகவே தெரிந்திருக்கிறது. அதனால் தான், 2007&amp;ஆம் ஆண்யில் வழங்கிய இறுதித் தீர்ப்பில் ‘‘கடந்த கால பதிவுகளில் இருந்து பார்க்கும் போது காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட வில்லை என பெரும்பாலான ஆண்டுகளில் தமிழகம் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது. அப்போதெல்லாம் போதிய அளவு மழை பெய்யாததால் தண்ணீர் திறக்க முடியவில்லை என கர்நாடகம் கூறியுள்ளது. இதை வைத்துப் பார்க்கும்போது, எத்தகைய மேலாண்மை அமைப்பு அமைக்கப்பட்டாலும் அதற்கு காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்துவதற்கு தேவையான அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்பட வேண்டும்’’ என்று நடுவர் மன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>அதுஅதுமட்டுமின்றி, கர்நாடகத்தின் தலையீடின்றி தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதற்கான தீர்வையும் நடுவர்மன்றம் வழங்கியுள்ளது.‘‘காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்காக பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் போன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும்’’, ‘‘காவிரியின் குறுக்கே உள்ள அனைத்து அணைகளின் இயக்கத்தையும் மேற்பார்வையிடும் அதிகாரம், அணைகளின் நீர் திறப்பை ஒழுங்குமுறை குழுவின் உதவியுடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரம் ஆகியவை காவிரி மேலாண்மை வாரியத்திற்கு வழங்கப்பட வேண்டும்’’ என்று நடுவர் மன்ற இறுதித்  தீர்ப்பின் ஐந்தாவது தொகுப்பில், எட்டாவது அத்தியாயத்தில் முறையே 14, 16 ஆகிய பத்திகளில் கூறப்பட்டிருக்கிறது. நடுவர் மன்றத்தின் இந்தத் தீர்ப்பை செயல்படுத்துவதில் மத்திய அரசுத் தரப்பில் தயக்கம் காட்டப்பட்டதால் தான் அணைகளை கையாளும் அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக எந்த அதிகாரமும் இல்லாத காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து 2018&amp;ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது தான் தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய துரோகமாகும்.</p><p>எந்த அதிகாரமும் இல்லாத காவிரி மேலாண்மை ஆணையம் நடைமுறையில் இருக்கும் வரை தமிழ்நாட்டிற்கு காவிரியில் உரிய நீர் கிடைக்காது. மழைக்காலங்களில் நிரம்பி வழியும் வெள்ள நீர் மட்டும் தான் கிடைக்கும். காவிரியில் தமிழ்நாட்டிற்கான உரிமைகளைப் பெற வேண்டுமானால், நடுவர் மன்றத் தீர்ப்பின்படி, காவிரியின் குறுக்கே கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களிலும் கட்டப்பட்டுள்ள அணைகளை கையாளும் அதிகாரம் கொண்டபக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் போன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தான்  ஒரே தீர்வு ஆகும். இத்தகைய ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்கும்படி மத்திய அரசிடம் வலியுறுத்துவது மட்டுமின்றி,  இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>சோனம் ரகுவன்ஷியின் ஜாமினை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/national/supreme-court-orders-cancellation-of-sonam-raghuvanshis-bail</link><comments>https://www.maalaimalar.com/news/national/supreme-court-orders-cancellation-of-sonam-raghuvanshis-bail#comments</comments><guid isPermaLink="false">219cc9f0-fdff-4c48-9458-ae0f847664e7</guid><pubDate>Thu, 23 Jul 2026 09:31:01 +0000</pubDate><atom:updated>2026-07-23T09:31:01.877Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,உச்ச நீதிமன்றம்,ஜாமின்,bail,Sonam Raghuvanshi,சோனம் ரகுவன்ஷி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/zr184z9f/New-Project-2026-07-23T150015.563.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சோனம் ரகுவன்ஷியின் ஜாமினை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/zr184z9f/New-Project-2026-07-23T150015.563.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த ஆண்டு இந்தியாவையே உலுக்கிய, மேகாலயா தேனிலவு கொலைவழக்கின் முக்கிய குற்றவாளியான சோனம் ரகுவன்ஷிக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் பி.பி. வரலே ஆகியோர் அடங்கிய அமர்வு, சோனம் மீதான குற்றச்சாட்டுகள் “மிகவும் தீவிரமானவை” என்று குறிப்பிட்டு, விசாரணை நடவடிக்கைகள் முடிவடையவில்லை என்றால், ஆறு மாதங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் ஜாமினுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்து ஜாமினை ரத்து செய்தனர். </p><p>ஜாமின் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சோனம் காவல்துறையிடம் சரணடைவதற்கு 3 வார கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. </p><h2>மேகாலயா தேனிலவு கொலை வழக்கு</h2><p>மத்தியப் பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த சோனம் ரகுவன்ஷி மற்றும் ராஜா ரகுவன்ஷிக்கு கடந்த ஆண்டு மே.11ம் தேதி திருமணம் நடைப்பெற்றது. </p><p>இதனைத்தொடர்ந்து மே 20ம் தேதி மேகாலயாவின் சோஹ்ராவிற்கு இருவரும் தேனிலவுக்கு சென்றனர்.</p><p>தேனிலவுக்கு சென்றவர்கள் மே.23அன்று தாங்கள் தங்கியிருந்த விடுதியில் இருந்து வெளியேறினர். </p><p>ஆனால் வீடு திரும்பாததால் உறவினர்கள், இருவரும் காணவில்லை என போலீசில் புகார் அளித்தனர்.</p><p>புகாரின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கிய போலீசார், ஜூன் 2ம் தேதி 200 அடி பள்ளத்தில் இருந்து ராஜா ரகுவன்ஷியை பிணமாக கண்டறிந்தனர்.</p><p>இதனையடுத்து அவரது மனைவி சோனம் என்ன ஆனார் என கேள்வி எழு, போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பின்னர் தொலைபேசி சிக்னலை வைத்து சோனத்தை உ.பி.யின் காசிபூரில் கண்டறிந்தனர். அங்கு அவரிடம் போலீசார் விசாரிக்க முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.</p><p>தொடர் விசாரணையில் தனது காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை அமைத்து ராஜா ரகுவன்ஷியை சோனம் போட்டு தள்ளியது தெரியவந்தது. இதனையடுத்து சோனமும், அவளது காதலர் ராஜ் சிங் குஷ்வாஹாவும் கைது செய்யப்பட்டனர். சுமார் 10 மாதங்கள் நீதிமன்றக் காவலுக்கு பிறகு, கடந்த ஏப்ரல் 27ம் தேதி சோனத்திற்கு ஷில்லாங் மாவட்ட நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.</p><p>சோனத்தின் கைதுக்கான காரணங்களை புலனாய்வு அமைப்பு சரியாகத் தெரிவிக்கத் தவறிவிட்டது என்று, நடைமுறை குறைபாட்டை சுட்டிக்காட்டி நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.</p><p>காவல்துறையின் கைது ஆவணங்களில் கொலைக்கான சட்டப்பிரிவான 103(1)-க்கு பதிலாக 403(1) எனத் தட்டச்சுப் பிழையாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் மேகாலயா அரசு இந்த ஜாமினை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.</p><p>ஆனால் உயர் நீதிமன்றம் அந்த மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்து, ஜாமினை உறுதி செய்தது. இதை எதிர்த்து மேகாலயா அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் அவசர மேல்முறையீடு செய்தார்.</p><p>இம்மாத தொடக்கத்தில் இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஜாமினை ரத்து செய்ய மறுத்து விசாரணையை ஒத்திவைத்தது.</p><p>அதனைத்தொடர்ந்து இந்த வாரத் தொடக்கத்தில் மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது சரணடைவது அல்லது ஜாமினை ரத்து செய்வது என்ற இரண்டு வாய்ப்புகள் சோனத்திற்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய விசாரணையில் ஜாமின் ரத்து செய்யப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>கைதி அருணாச்சலத்தின் உயிரிழப்பு குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும் - அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-says-government-must-order-a-cbi-inquiry-death-of-prisoner-arunachalam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-says-government-must-order-a-cbi-inquiry-death-of-prisoner-arunachalam#comments</comments><guid isPermaLink="false">8000ab34-05a3-48fd-b99e-c632b25cccb2</guid><pubDate>Thu, 23 Jul 2026 09:20:30 +0000</pubDate><atom:updated>2026-07-23T09:20:30.539Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தூத்துக்குடி,Thoothukudi,youth death,வாலிபர் மர்ம மரணம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-29/ai948qgo/anbumani.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-29/ai948qgo/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி</a> வெளியிட்டுள்ள அறிக்கையில்,</p><h2>இளைஞர் உயிரிழப்பு</h2><p>தூத்துக்குடி நகரம் தென்பாகம் காவல்நிலையக் காவலர்களால், சட்டவிரோதமாக மது வணிகம் செய்ததாக கைது செய்யப்பட்ட தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-it-is-doubtful-whether-a-government-even-exists-in-tamil-nadu-today"> அருணாச்சலம்</a> என்ற இளைஞர் தலை உள்ளிட்ட காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அருணாச்சலத்தை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p> <p>மது வணிகம் செய்ததாக கடந்த 17-ந்தேதி கைது செய்யப்பட்ட அருணாச்சலம் அன்று மாலையே தலை உள்ளிட்ட இடங்களில் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். காவலர்கள் மூவர் சேர்ந்து கொண்டு தம்மை கொடூரமாகத் தாக்கியதாக அவர்கள் அளித்த காணொலி வாக்குமூலத்தையும் அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர். இவற்றை வைத்துப் பார்க்கும்போது அருணாச்சலம் குடும்பத்தினரின் குற்றச்சாட்டு உறுதியாவதாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.</p> <p>தூத்துக்குடி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டபோது நன்றாக இருந்த அருணாச்சலம் மயங்கி விழுந்ததில் தான் அவருக்கு காயம் ஏற்பட்டதாக காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை.</p> <h2>சிபிஐ விசாரணை</h2><p>ஏற்கனவே நாகர்கோயில் கிளைச் சிறையில் சபரிநாதன் என்ற விசாரணைக் கைதி சிறைத்துறையினரால் தாக்கி கொல்லப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் பதட்டம் தீரும் முன்பே இன்னொரு விசாரணைக் கைதி மர்மமான முறையில் உயிரிழந்ததை தாங்கிக் கொள்ள முடியவில்லை. கைதி அருணாச்சலத்தின் உயிரிழப்பு குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் சட்டப்படி தண்டிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>தாய்லாந்தில் சோகம்: பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 வீரர்கள் பலி </title><link>https://www.maalaimalar.com/news/world/thailand-sadness-terrorist-shooting-5-soldiers-killed</link><comments>https://www.maalaimalar.com/news/world/thailand-sadness-terrorist-shooting-5-soldiers-killed#comments</comments><guid isPermaLink="false">a112a441-5ab6-46d2-8466-0212e6c68c46</guid><pubDate>Thu, 23 Jul 2026 08:52:25 +0000</pubDate><atom:updated>2026-07-23T08:52:25.881Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தாய்லாந்து,thailand,துப்பாக்கிச்சூடு,firing</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/mdt3zie1/car.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ car]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/mdt3zie1/car.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தாய்லாந்தின் தெற்கு நரதிவாத் மாகாணத்தில் உள்ள சோதனைச்சாவடி ஒன்றில் அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். மேலும் பைப் வெடிகுண்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தினர்.</p><p>இந்தத் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 5 பாதுகாப்புப் படை வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒரு 10 வயது சிறுவன் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.</p><p>முதல் கட்ட விசாரணையில், சுமார் 10 பேர் கொண்ட கும்பல் பிக்கப் வாகனத்தில் வந்து துப்பாக்கியால் சுட்டும், பைப் குண்டுகளை வீசியும் தாக்குதலை நடத்தியது தெரியவந்தது.</p><p>இதுதொடர்பாக வழக்குப் பதிந்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்டவர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>இன்று தமிழ்நாட்டில் ‘அரசு’ என்ற ஒன்று உள்ளதா என்பதே சந்தேகம் தான்! - கனிமொழி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-it-is-doubtful-whether-a-government-even-exists-in-tamil-nadu-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-it-is-doubtful-whether-a-government-even-exists-in-tamil-nadu-today#comments</comments><guid isPermaLink="false">69962c3d-e73b-4155-9b14-99c164bc4738</guid><pubDate>Thu, 23 Jul 2026 08:51:38 +0000</pubDate><atom:updated>2026-07-23T08:51:38.366Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,Kanimozhi,கனிமொழி,தூத்துக்குடி,Thoothukudi,youth death,வாலிபர் மர்ம மரணம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/gmwdar8x/kanimozhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Arunachalam - Kanimozhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/gmwdar8x/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி அமுதா நகரை சேர்ந்தவர் நாகராஜன் என்பவரின் மகன் அருணாச்சலம் (29). இவர் தூத்துக்குடி லெவஞ்சிபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 18-ந்தேதி சட்ட விரோதமாக மது விற்றதாக கூறப்பட்ட புகாரின் பேரில், தூத்துக்குடி தென்பாகம் போலீசார் பிடித்தனர். பின்னர் அவரை விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில் அருணாச்சலம் திடீரென மயங்கி விழுந்தார். அவரை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. </p> <p>சிகிச்சை பெற்று வந்த அருணாச்சலம் இன்று காலை திடீரென இறந்தார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு 5 நாட்களில் அவர் இறந்ததால் அவரது உறவினர்கள், நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் தாக்கியதால் தான் அருணாச்சலம் இறந்ததாக அவர்கள் குற்றம் சாட்டினர்.</p><p>மேலும் அரசு ஆஸ்பத்திரி முன்பு உறவினர்கள் திரண்டனர். அருணாச்சலத்தை தாக்கிய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என அவர்கள் தெரிவித்தனர். </p> <p>இந்நிலையில் தூத்துக்குடியில் காவல்துறையின் சித்திரவதைக்கு உள்ளாகி இளைஞர் ஒருவர் உயிரிழந்திருக்கும் செய்தி வேதனையளிப்பதாக திமுக எம்.பி. <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF">கனிமொழி</a> தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>நாகர்கோவிலைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் காவல்துறையின் சித்திரவதைக்கு உள்ளாகி இளைஞர் ஒருவர் உயிரிழந்திருக்கும் செய்தி வேதனையளிக்கிறது.</p> <p>காவல்துறைக்குப் பொறுப்பு(?) வகிக்கும் முதலமைச்சர் விஜய் அவர்கள் உட்படப் பல அமைச்சர்களும் அதிகாரிகளும் திரைப்படம் பார்க்க விடுப்பில் சென்றுள்ளதால், இன்றைய நாள் தமிழ்நாட்டில் ‘அரசு’ என்ற ஒன்று உள்ளதா என்பதே சந்தேகம் தான்!</p><p>நாளை பணிக்குத் திரும்பிய பின்னாவது, இந்த காவல் மரணம் குறித்து வாய் திறக்கிறார்களா என்று பார்ப்போம்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>நீட் தேர்வுக்கு எதிராக களமிறங்கும் திரை நட்சத்திரங்கள்: சென்னை எழும்பூரில் இன்று மாலை பிரம்மாண்ட போராட்டம்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/film-stars-join-anti-neet-protest-chennai</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/film-stars-join-anti-neet-protest-chennai#comments</comments><guid isPermaLink="false">09cb10a0-2d63-47ef-a9af-d29f7668cd66</guid><pubDate>Thu, 23 Jul 2026 08:37:12 +0000</pubDate><atom:updated>2026-07-23T08:37:12.055Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமீர்,பா.ரஞ்சித்,நீட் தேர்வு,Neet exam,வெற்றி மாறன்,vetri maran,ameer,PARanjith</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/h8l3ftrm/neet.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vetri maran-Ameer-PA.Ranjith ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/h8l3ftrm/neet.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள், இளைஞர் அமைப்புகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. டெல்லி ஜந்தர் மந்தர் முதல் தமிழகத்தின் பல மாவட்டங்கள் வரை போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், மாணவர்களின் இந்த நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் நேரடியாகக் களம் இறங்குகின்றனர். </p><p>நீட் முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் CJP, SFI, DYFI உள்ளிட்ட மாணவர் அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. சென்னை தலைமைச் செயலகம் மற்றும் எழும்பூர் பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இசைக்கலைஞர் அறிவு போன்றோர் கைது செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.</p><p>இதனைத் தொடர்ந்து, இன்று மாலை  3:00 மணியளவில், சென்னை எழும்பூரில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரபல இயக்குநர்கள் அமீர், வெற்றி மாறன், பா.ரஞ்சித், நடிகர் சத்யராஜ், நடிகை ரேவதி  மற்றும் பல திரை நட்சத்திரங்கள், கலைஞர்கள் நேரடியாக களம் இறங்குகின்றனர்.</p><p>வடமாநிலத்தில் ஆலியா பட், சல்மான் கான் போன்ற பிரபலங்கள் குரல் கொடுத்துள்ள நிலையில், தென்னிந்திய திரையுலகம் சென்னை மண்ணில் நேரடியாக வீதியில் இறங்கி போராடத் துணிந்துள்ளது.</p><h2><strong>திரையுலகினரின் முக்கியக் கோரிக்கைகள்:</strong></h2><h2><strong>நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்:</strong></h2><p>மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட் முறையை முழுமையாக ரத்து செய்து, மாநில பாடத்திட்ட மதிப்பெண் அடிப்படையிலான சேர்க்கையை மீட்டெடுக்க வேண்டும்.</p><h2><strong>மாணவர்கள் மீதான அடக்குமுறைக்கு கண்டனம்:</strong></h2><p>அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது காவல்துறை மேற்கொள்ளும் கைது நடவடிக்கைகளைக் கண்டிப்பது.</p><h2><strong>கல்வி உரிமை மீட்பு:</strong></h2><p>கல்வித் துறையில் தொடரும் முறைகேடுகளுக்கு ஒன்றிய அரசு முழு பொறுப்பேற்க வேண்டும் மற்றும் கல்வி உரிமையை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும். இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘நீலம் பண்பாட்டு மையம்’ மற்றும் தமிழ் திரையுலக அமைப்புகள் ஒருங்கிணைந்து நடத்தும் இப்போராட்டத்தில் பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>திரையுலகின் குரல்:</strong></h2><p>"இது ஏதோ சில மாணவர்களின் பிரச்சனை அல்ல; நமது அடுத்த தலைமுறையின் கல்வி உரிமை மற்றும் வாழ்வாதாரப் போராட்டம். நீதிக்காக வீதியில் போராடும் இளைஞர்களின் குரலை உரக்க ஒலிக்கச் செய்ய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரும் மாலை 3 மணிக்கு எழும்பூரில் ஒன்று கூடுவோம்!" என்று திரைப்பிரபலங்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் மர்ம மரணம் - உறவினர்கள் மறியல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/young-man-mysterious-death-in-thoothukudi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/young-man-mysterious-death-in-thoothukudi#comments</comments><guid isPermaLink="false">6659dd0a-ebda-4c5d-a2cb-03913818bdf6</guid><pubDate>Thu, 23 Jul 2026 08:33:50 +0000</pubDate><atom:updated>2026-07-23T08:33:50.411Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தூத்துக்குடி,Thoothukudi,youth death,உறவினர்கள் மறியல்,வாலிபர் மர்ம மரணம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/jwud77xe/youth.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Arunachalam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/jwud77xe/youth.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em>தூத்துக்குடியில் சட்ட விரோதமாக மது விற்றதாக கூறப்பட்ட புகாரின் பேரில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அருணாச்சலம் திடீரென உயிரிழந்தார்.</em></p><p>தூத்துக்குடி அமுதா நகரை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகன் அருணாச்சலம் (வயது29). இவர் தூத்துக்குடி லெவஞ்சிபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.</p><p>இவர் கடந்த 18-ந்தேதி சட்ட விரோதமாக மது விற்றதாக கூறப்பட்ட புகாரின் பேரில், தூத்துக்குடி தென்பாகம் போலீசார் பிடித்தனர். பின்னர் அவரை விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில் அருணாச்சலம் திடீரென மயங்கி விழுந்தார். அவரை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. </p> <p>சிகிச்சையில் இருந்தபோது அருணாச்சலத்தை அவரது நண்பர்கள் சந்தித்தனர். அப்போது அவர்களிடம் 3 போலீசார் தன்னை தாக்கியதாக அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. </p><p>இதனை அருணாசலத்தின் நண்பர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் இன்று காலை அருணாச்சலம் திடீரென இறந்தார். </p> <h2>உறவினர்கள் மறியல்</h2><p>ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு 5 நாட்களில் அவர் இறந்ததால் அவரது உறவினர்கள், நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் தாக்கியதால் தான் அருணாச்சலம் இறந்ததாக அவர்கள் குற்றம் சாட்டினர். மேலும் அரசு ஆஸ்பத்திரி முன்பு அவர்கள் திரண்டனர். அருணாச்சலத்தை தாக்கிய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என அவர்கள் தெரிவித்தனர். இதனால் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு நிலவி வருகிறது. </p> <h2>போக்குவரத்து பாதிப்பு</h2><p>இந்த நிலையில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் தூத்துக்குடி- நெல்லை சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். </p><p>அவர்கள் அருணாச்சலத்தின் மரணத்திற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தூத்துக்குடி-நெல்லை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். </p> <p>கடந்த சில வருடங்களுக்கு முன்பு சாத்தான்குளத்தில் போலீசார் தந்தை- மகனை தாக்கியதில் அவர்கள் உயிரிழந்த சம்பவம் நடைபெற்றது. </p><p>குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது தூத்துக்குடியில் போலீசார் தாக்கியதில் வாலிபர் இறந்ததாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பெல்லட் துப்பாக்கிகள்.. சீருடையற்ற நபர்கள்.. காலாவதியான கண்ணீர் புகைகுண்டுகள் - இளைஞர்கள் மீதான தாக்குதலில் தொடர் சர்ச்சை 
</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-protest-pellet-gun-allegations-youth-march-faces-harsh-police-crackdown-and-expired-tear-gas</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-protest-pellet-gun-allegations-youth-march-faces-harsh-police-crackdown-and-expired-tear-gas#comments</comments><guid isPermaLink="false">a5440d6d-6dbf-4200-a803-04ba0d415258</guid><pubDate>Thu, 23 Jul 2026 08:31:03 +0000</pubDate><atom:updated>2026-07-23T08:31:03.200Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>delhi,டெல்லி,சிஜேபி,CJP Protest,CJP,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/2guwfaxp/tn-29.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ CJP]]></media:title><media:description type="html"><![CDATA[ CJP]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/2guwfaxp/tn-29.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் ஜூலை 20 அன்று கரப்பான்பூச்சி கட்சியின் முன்னெடுப்பில் நாடாளுமன்றம் நோக்கி இளைஞர்கள் நடத்திய பேரணியில் போலீசார் தடியடி தாக்குதல் நடத்தினர். </p><p>கண்ணீர் புகைகுண்டுகளை வீசி இளைஞர்களை கலைக்க முயன்றனர். இதன்போது 60 போராட்டக்காரர்கள் காயமுற்றனர். 116 போலீசாரும் காயமுற்றனர்.  70 பேர் கைது செய்யப்பட்டனர். </p><p>காயமுற்ற இளைஞர்களில் ஒரு இளம்பெண் வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவரது உடல்நிலை சீரடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். </p><p>ஜூலை 20 தாக்குதல் குறித்த பல அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள் புகைப்படங்கள் வெளியாகி அமைதியான முறையில் பேரணி நடத்திய இளைஞர்கள் மீதான அரசின் அடக்குமுறை குறித்த விமர்சனங்களை எழுப்பியது. </p><p>பலர் களத்தில், தாங்களும் உங்கள் மகன் - மகள்களின் வயதுடையவர்கள்தான், எங்களை எப்படி உங்களால் மனசாட்சியின்றி தாக்க முடிகிறது என போலீசாரையும் மத்திய படையினரையும் பார்த்து இளைஞர்கள் கேள்வி எழுப்பிய வீடியோக்களும் வைரலாகின. </p><h2>சீருடையற்ற நபர்கள்</h2><p>சீருடையில் இல்லாதவர்களும் கையில் தடிகளுடன் இளைஞர்களை தாக்கியது சர்ச்சையாகி வருகிறது. அவர்கள் மத்திய பாஜக அரசு மற்றும் ஆர்எஸ்எஸ்-ஆல் ஏவிவிடப்பட்ட குண்டர்களா என எதிர்க்கட்சி தரப்பினர் பலர் சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.</p><p>சீருடை இன்றி வந்த ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவை சேர்ந்த நபர்களே மாணவிகள் உட்படப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கொடூரமாகத் தாக்கியதாக சிஜேபி தலைவர் அபிஜீத் திப்கேவும் குற்றம் சாட்டியுள்ளார்.</p><h2>பெல்லட் துப்பாக்கிகள் </h2><p>ஜூலை 20 போராட்டத்தின்போது இளைஞர்களை Pellet guns எனப்படும் துப்பாக்கிகளை கொண்டு போலீசார் மற்றும் ஆர்ஏஎப் உள்ளிட்ட மத்திய படையினர் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.</p><p>தொடக்கத்தில் டெல்லி காவல்துறை இக்குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்திருந்த போதிலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காயமடைந்த போராட்டக்காரர்களை உடலிலிருந்து பெல்லட் குண்டுகள் அகற்றப்பட்டதாக மருத்துவ அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.</p><p>டெல்லி லேடி ஹார்டிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் படுகாயமடைந்த ஷேக் இர்ஷாத் மன்சூரி என்ற போராட்டக்காரரின் உடலில் இருந்து பெல்லட் குண்டுகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதை அமைச்சர் ஜே.பி. நட்டா நேரில் பார்த்ததாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>ஏர் கன் எனப்படும் விசைத் துப்பாக்கி மூலம் ஒருமுறை சுட்டால் நூற்றுக்கணக்கான Lead pellets குண்டுகள் உடலில் பாயும்.</p><p>இதனால் சுடப்பட்ட நபர் உடலில் புள்ளி புள்ளிகளாக காயங்கள் ஏற்படும். இதுபோன்று அன்றைய பேரணியில் காயமுற்றவர்கள் புகைப்படங்கள் பலவும் வெளியாகியுள்ளன.</p><p>பெல்லட் குண்டுகளால் பார்வை மற்றும் கேட்கும் திறனை பறிபோகும் அபாயமும் உண்டு.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/dn0iom5v/tn-28.jpg" /></figure><h2>காலாவதியான கண்ணீர்ப்புகை குண்டுகள்</h2><p>போராட்டக்காரர்களை கலைக்க, கடந்த டிசம்பர் மாதமே காலாவதியான நச்சுத் தன்மை கொண்ட கண்ணீர்ப்புகை குண்டுகளைக் காவல்துறையினர் பயன்படுத்தியுள்ளனர் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.</p><p>காலாவதியான கண்ணீர்ப்புகைக் குண்டுகளின் உடைந்த பாகங்களைச் ஆதாரமாக காட்டிய சிஜேபி அமைப்பினர், மாணவர்களுக்கு கடுமையான சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தவே இத்தகைய குண்டுகள் திட்டமிட்டு வீசப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.</p><h2>ஆணிகள் பொருத்தப்பட்ட லத்திகள்</h2><p>ஆணிகள் பொருத்தப்பட்ட லத்திகளைப் பயன்படுத்தியதை போலீஸ் மறுத்த நிலையில், விஷால் தோமர் என்ற காவலர் ஆணி பொறிக்கப்பட்ட லத்தியுடன் நிற்பதை மாணவர்களே மடக்கிப் பிடித்துக் கேள்வி கேட்கும் வீடியோவை சிஜேபி வெளியிட்டது.</p><p>மற்றும் Shock batons எனப்படும் உடலில் மின்சார அதிர்வை ஏற்படுத்தும் லத்திகளும் அன்றை தினம் இளைஞர்கள் மீது பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.</p><h2>பெண்கள் மீது தாக்குதல்</h2><p>ஜூலை 20 சம்பவத்தில் இளம் பெண் போராட்டக்காரர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன.</p><p>போராட்டம் நடந்த இடத்திலிருந்து வெளியேற முயன்ற ஒரு பெண்ணின் பின்புறத்தில் காவலர் ஒருவர் லத்தியால் குத்தும் வீடியோ வைரலானது.</p><p>"பெண்களின் உணர்வுப்பூர்வமான உடற்பகுதிகளில் தாக்குதல் நடத்த இவர்களுக்கு எப்படித் தைரியம் வந்தது?" என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட் கேள்வி எழுப்பியிருந்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-delhi-violence-raf-woman-officers-cockroach-remark-sparks-outrage">போராட்டத்தில்12 வயது சிறுமி</a> ஒருவரும் போலீஸ் தாக்குதலில் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  </p><h2>போலி வீடியோக்கள்</h2><p>டெல்லி போராட்டத்தில் இளைஞர்கள் வன்முறையில் ஈடுப்பட்டு பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தது போல சித்தரிக்கும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகின. </p><p>இவை நாட்டின் பிற பகுதிகளில் முன்பு நடந்த வன்முறைகளின் பழைய வீடியோக்கள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.</p><p>வெகு மக்களின் கோபத்தை போராட்டக்காரர்கள் மீது திருப்ப, பாஜக செய்யும் தந்திரம் இதுவென, ஜந்தர் மந்தர் போராட்டக்காரர்களும் எதிர்கட்சியினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.</p><p>மற்றொரு வீடியோவில், காவல்துறையினரே தங்களது சொந்த வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்துச் சேதப்படுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் அவற்றின் உண்மைத்தன்மை சரிபார்க்கப்படவில்லை.</p>]]></content:encoded></item><item><title>என் கலையின் நேர்மை அதுதான்..!- மாணவர்களின் போராட்டத்திற்கு மாரி செல்வராஜ் ஆதரவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/director-mari-selvaraj-stands-with-indian-students-against-neet</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/director-mari-selvaraj-stands-with-indian-students-against-neet#comments</comments><guid isPermaLink="false">cb520269-d41e-4340-adb1-abbc12440c69</guid><pubDate>Thu, 23 Jul 2026 08:26:47 +0000</pubDate><atom:updated>2026-07-23T08:26:47.344Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மாரி செல்வராஜ்,mari selvaraj,DELHI PROTEST,neet protest,டெல்லி போராட்டம்,நீட் போராட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/qqibb2gg/Mari.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mari selvaraj]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/qqibb2gg/Mari.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராக போராடும் மாணவர்களுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>அதிகார அடக்குமுறைக்கு எதிரான குரல் எத்திசையில் இருந்து ஒலித்தாலும் அத்திசைக்கு பெரும் நம்பிக்கையையும்  வலிமையையும் சேர்ப்பதே என் கலையின் நேர்மை என்பதை உறுதியாக நம்புகிறேன்.</p><p>நீட் எனும் ஆணவபோக்கிற்கு எதிராக ஆவேசமாக களமாடும் அத்தனை இந்திய மாணவர்களின் கைகளோடு கைகோர்த்து  நிற்கிறேன்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>நீட் போராட்டம்</h2><p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த மாதம் 20-ந் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்திரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.</p><p>இவர்களது போராட்டம் நேற்று 33-வது நாளை எட்டியது. இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களிடம் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது.</p><p>கடந்த 20-ந் தேதி இந்த போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம் நோக்கி நடத்திய பேரணி பெரிய வன்முறையில் முடிந்தது. இந்த விவகாரத்தை முன்னெடுத்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரசார் நடத்திய போராட்டம் பா.ஜ.க.வுக்கு பெரிய சவாலாக அமைந்தது.</p><p>போலீஸ் தடியடியில் பல இளைஞர்கள் காயம் அடைந்த பிறகும் ஜந்தர் மந்தரில் இன்னும் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">அதிகார அடக்குமுறைக்கு எதிரான குரல் <br>எத்திசையில் இருந்து ஒலித்தாலும் அத்திசைக்கு பெரும் நம்பிக்கையையும்  வலிமையையும் சேர்ப்பதே என் கலையின் நேர்மை என்பதை உறுதியாக நம்புகிறேன்.<br>நீட் எனும் ஆணவபோக்கிற்கு எதிராக ஆவேசமாக களமாடும் அத்தனை இந்திய மாணவர்களின் கைகளோடு கைகோர்த்து…</p>&mdash; Mari Selvaraj (@mari_selvaraj) <a href="https://x.com/mari_selvaraj/status/2080156422223093787?ref_src=twsrc%5Etfw">July 23, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை- சென்னை நீதிமன்றம் தீர்ப்பு </title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/one-year-jail-sentence-for-actor-vimal</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/one-year-jail-sentence-for-actor-vimal#comments</comments><guid isPermaLink="false">ccfd1081-23ea-4db7-898e-eedff322a4ea</guid><pubDate>Thu, 23 Jul 2026 08:17:40 +0000</pubDate><atom:updated>2026-07-23T08:17:40.079Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறை தண்டனை,Vimal,விமல்,மன்னர் வகையறா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/fyt063fh/vimal.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நடிகர் விமல்]]></media:title><media:description type="html"><![CDATA[ நடிகர் விமல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/fyt063fh/vimal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>நடிகர் விமல் தரப்பில், மேல்முறையீட்டு செய்ய உள்ளதாகவும், அதுவரை தண்டனையை நிறுத்தி வைக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.</aside><h2><strong>மன்னர் வகையறா</strong></h2><p>நடிகர் விமல் நடித்த திரைப்படம் ‘<a href="https://www.maalaimalar.com/topic/மன்னர்-வகையறா">மன்னர் வகையறா</a>’. இந்தப் படத்தை தயாரிக்க நடிகர் விமல், பைனாஸ்சியர் கோபி என்பவரிடமிருந்து ரூ.4.5 கோடி கடனாக பெற்றுள்ளார். படம் வெளியான பின்னரும் அந்தத் தொகையை அவர் வழங்கவில்லை. </p><p>பின்னர், அந்த தொகையை விமல் காசோலையாக வழங்கியுள்ளார். இந்த காசோலையை கோபி வங்கியில் செலுத்திய போது, கணக்கில் பணம் இல்லை என்று திரும்பி வந்தது. இதையடுத்து ரூ.4.5 கோடி செக் மோசடி வழக்கை நடிகர் விமல் மீது பைனாஸ்சியர் கோபி சென்னையில் உள்ள 11-வது சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.</p><h2><strong>விசாரணை</strong></h2><p>இந்த வழக்கு விசாரணைக்காக நடிகர் விமல் ஏற்கெனவே நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. </p><p>பைனான்ஸ்சியர் தரப்பில் வக்கீல் ஆர். வெங்கடேஷ் ஆஜராகி வாதிட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இன்று தீர்ப்பு அளித்தார்.</p><h2><strong>ஓராண்டு சிறை தண்டனை</strong></h2><p>அதில், விமலுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு உள்ளது. எனவே, அவருக்கு ஓர் ஆண்டு சிறைத் தண்டனையை விதிக்கிறேன். வாங்கிய (செக்) தொகையை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த தீர்ப்பு வழங்கும்போது நடிகர் விமல் கோர்ட்டில் ஆஜராகி இருந்தார். அவர் தரப்பில், மேல்முறையீட்டு செய்ய உள்ளதாகவும், அதுவரை தண்டனையை நிறுத்தி வைக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்கள் நலனில் என்றுமே சமரசம் கிடையாது!-  நயினார் நாகேந்திரன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-vows-student-welfare-priority</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-vows-student-welfare-priority#comments</comments><guid isPermaLink="false">cdeb689e-bd77-4fc8-a2ed-d1cc965afbff</guid><pubDate>Thu, 23 Jul 2026 08:00:38 +0000</pubDate><atom:updated>2026-07-23T08:00:38.916Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,pm modi,neet protest,பிரதமர் மோடி,நீட் போராட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/617z3u66/Nainar-nagendran.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nainar Nagendran]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/617z3u66/Nainar-nagendran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>நீட் போராட்டம்</h2><p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த மாதம் 20-ந் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்திரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.</p><p>இவர்களது போராட்டம் நேற்று 33-வது நாளை எட்டியது. இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களிடம் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது.</p><p>கடந்த 20-ந் தேதி இந்த போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம் நோக்கி நடத்திய பேரணி பெரிய வன்முறையில் முடிந்தது. இந்த விவகாரத்தை முன்னெடுத்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரசார் நடத்திய போராட்டம் பா.ஜ.க.வுக்கு பெரிய சவாலாக அமைந்தது.</p><p>போலீஸ் தடியடியில் பல இளைஞர்கள் காயம் அடைந்த பிறகும் ஜந்தர் மந்தரில் இன்னும் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><h2>பிரதமர் மோடி</h2><p>டெல்லியில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டார்.</p><p>அந்த பதவில் அவர்,</p><p>* இளைஞர் நலன் மற்றும் எதிர்காலத்தைவிட முக்கியமானது எதுவும் இல்லை.</p><p>* மாணவர்களின் நலனை பாதுகாக்க தொடர் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் விரைவு நீதிமன்றம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>* தேர்வுத்தாள் கசிவில் தொடர்புடையோருக்கு கடும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும்.</p><p>* வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேவையான அனைத்து நடவடிக்கை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>* வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றமிழைத்த அனைவரும் தண்டிக்கப்படுவர்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p><h2>நயினார் நாகேந்திரன்</h2><p>பிரதமர் மோடியின் இந்த பதிவை குறிப்பிட்டு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- </p><p>மாணவர்கள் நலனில் என்றுமே சமரசம் கிடையாது!</p><p>வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தொடர்புடையவர்களில் ஒருவர் கூட, சட்டத்தின் பார்வையில் இருந்து தப்ப முடியாது என நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உறுதியளித்துவிட்டார்.</p><p>எதிர்காலத்தில் இதுபோன்ற குளறுபடிகளைத் தடுக்க, அடுத்த ஆண்டு முதல் நடைபெறும் தேர்வுகள் அனைத்தும், முழுக்க முழுக்க “Computer-Based Test” முறையில் நடக்கும் என நமது மாண்புமிகு மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் தெரிவித்துள்ளார். </p><p>ஆனால், கரப்பான் பூச்சி கூட்டத்துடன் இணைந்து இந்த விவகாரத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கலவரமாக்க முயல்வது கடும் கண்டனத்திற்குரியது. தேசப் பாதுகாப்பிற்கு ஆபத்தானது.</p><p>எனவே, தங்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக, தேசத்தின் இளைஞர் சக்தியை தவறான வழியில் காங்கிரஸ் கட்சி வழிநடத்தக் கூடாது!</p><p>இளைஞர்களுக்கான வளமான எதிர்காலத்தை உருவாக்க, அரசியல் நிலைப்பாடுகளை தாண்டி அனைத்து அரசியல் கட்சிகளும் மத்திய அரசுடன் கைகோர்த்து செயல்பட வேண்டும்!</p><p>இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நீட் தேர்வு எதிர்ப்பு: மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த நடிகை ஆலியா பட்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/alia-bhatt-backs-students-against-neet-irregularities</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/alia-bhatt-backs-students-against-neet-irregularities#comments</comments><guid isPermaLink="false">b70eeb5e-1e8d-49ed-8434-c6857cf3dfa6</guid><pubDate>Thu, 23 Jul 2026 07:45:32 +0000</pubDate><atom:updated>2026-07-23T07:45:32.261Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Neet exam,ஆலியா பட்,CJP Protest,காக்ரோச் ஜந்தா கட்சி,Actress Alia Bhatt,நீட் தேர்வு எதிர்ப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/m1hl5dxo/aliabhatt.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Actress Alia Bhatt  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/m1hl5dxo/aliabhatt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பிரபல பாலிவுட் நடிகை 'ஆலியா பட்' மாணவர்களின் போராட்டத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.</p><p>நீட் தேர்வு குளறுபடிகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தர் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு இடங்களில் மாணவர்கள் மற்றும் இளைஞர் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நடிகை ஆலியா பட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், </p><h2><strong>மனவேதனையும் நம்பிக்கையும்:</strong></h2><p>"கடந்த சில நாட்களாக நடக்கும் சம்பவங்கள் என் இதயத்தை உடைத்து நொறுக்கியுள்ளன. ஆனால் அதே வேளையில், மாணவர்களின் மனஉறுதியைப் பார்க்கும்போது மீண்டும் ஒரு புதிய நம்பிக்கை பிறக்கிறது." தனக்கான உரிமைகளுக்காகக் களத்தில் போராடும் ஒவ்வொரு மாணவனுக்குப் பின்னாலும் ஒரு கனவு, ஒரு குடும்பத்தின் பெரிய நம்பிக்கை மற்றும் எண்ணற்ற தியாகங்களின் பயணம் அடங்கியுள்ளது."</p><h2><strong>எதிர்கால தலைமுறைக்கான குரல்:</strong></h2><p>"அவர்கள் தங்களுக்காக மட்டும் போராடவில்லை; தங்களை ஆதரிக்கும் அனைவருக்காகவும், எதிர்காலத்தில் வரவிருக்கும் தலைமுறைக்கு ஒரு நல்ல பாதையை உருவாக்குவதற்காகவும் போராடுகிறார்கள். அவர்களின் துணிச்சலும் உறுதியும் நமக்கு ஒரு சவாலை முன்வைக்கின்றன. </p><p>நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கப் போகும் இந்த இளைஞர்களின் குரலுக்கு நாம் உண்மையிலேயே செவிசாய்க்கிறோமா?" என கேள்வி எழுப்பியுள்ளார். இறுதியாக "மாணவர்களுக்காக... மாணவர்களால்... எதிர்காலம் அவர்களுக்குரியது! ஜெய் ஹிந்த்!" என நெகிழ்ச்யியுடன் பதிவிட்டுள்ளார்.</p><p>நீட் வினாத்தாள் கசிவு சர்ச்சையைத் தொடர்ந்து டெல்லி மற்றும் மாநிலத்தின் பல பகுதிகளில் மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சல்மான் கான் உள்ளிட்ட திரை பிரபலங்கள் ஏற்கெனவே மாணவர்களின் அமைதியான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், தற்போது ஆலியா பட்டின் இந்த அறிக்கை சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தைப் பெற்று வைரலாகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>&quot;நாடு தன் கடமையைச் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது&quot;– மாணவர்களின் போராட்டத்திற்கு கமல்ஹாசன் எம்.பி ஆதரவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/time-has-come-for-nation-to-do-its-duty-kamal-haasan-backs-students-protest</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/time-has-come-for-nation-to-do-its-duty-kamal-haasan-backs-students-protest#comments</comments><guid isPermaLink="false">2618feb4-481f-4bcf-9e13-1bc3e037ec4f</guid><pubDate>Thu, 23 Jul 2026 07:36:41 +0000</pubDate><atom:updated>2026-07-23T07:36:41.014Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>kamalhassan,Delhi Students Protest,neet protest,கமல்ஹாசன் எம்பி,டெல்லி போராட்டம்,நீட் போராட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/jyqvq4qn/kamal.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kamalhassan MP]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/jyqvq4qn/kamal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் நடைபெற்று வரும் மாணவர்களின் போராட்டத்திற்கு நடிகரும் ராஜ்யசபா எம்.பி.யான கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.</p><h2>போராட்டம்</h2><p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த மாதம் 20-ந் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்திரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.</p><p>இவர்களது போராட்டம் நேற்று 33-வது நாளை எட்டியது. இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களிடம் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது.</p><p>கமல்ஹாசன் எம்.பி ஆதரவு</p><p>இந்நிலையில், டெல்லியில் நடைபெற்று வரும் மாணவர்களின் போராட்டத்திற்கு நடிகரும் ராஜ்யசபா எம்.பி.யான கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>ஒரு குழந்தை அழுதபோதே நாம் செவிகொடுத்திருக்க வேண்டும்.</p><p>அதற்குப் பதிலாக, நம் பிள்ளைகளில் எண்ணற்றோர் இறக்கும் வரை நாம் காத்திருந்தோம்.</p><p>கற்றலுக்குப் பதிலாகப் பயிற்சியும், ஆர்வத்திற்குப் பதிலாகப் பதட்டமும், தகுதிக்குப் பதிலாகக் குற்றச்செயல்களும் இடம்பெறும் ஓர் அமைப்பு அழுகிப்போனது.</p><p>ஒரு தேசத்தின் பிள்ளைகள் பதில்களுக்குப் பதிலாகத் தடைகளையும் தடியடிகளையும் எதிர்கொள்ளும்போது, ​​அந்த தேசம் தோல்வியடைகிறது.</p><p>சோனம் வாங்சுக், இனிவரும் பயணத்திற்கு தேசத்திற்கு உங்கள் மனசாட்சி தேவைப்படும். தயவுசெய்து உங்கள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளுங்கள்.</p><p>இந்தியப் பிள்ளைகளுக்கு: நீங்கள் சிறந்தவர்கள். உங்கள் கடமையை நீங்கள் செய்துவிட்டீர்கள். இப்போது நாடு உங்களுக்காகத் தன் கடமையைச் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. எங்கள் தோல்விகளை விட உங்கள் கனவுகள் என்றென்றும் பெரிதாக இருக்கட்டும்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மத்திய மந்திரி அமித்ஷா புதுச்சேரி வருகை ரத்து
</title><link>https://www.maalaimalar.com/news/puducherry/amit-shah-puducherry-visit-cancelled</link><comments>https://www.maalaimalar.com/news/puducherry/amit-shah-puducherry-visit-cancelled#comments</comments><guid isPermaLink="false">2ee4f8f5-85da-4086-a069-f2143a0acce4</guid><pubDate>Thu, 23 Jul 2026 07:36:32 +0000</pubDate><atom:updated>2026-07-23T07:36:32.807Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Amit Shah,அமித்ஷா,நீட் தேர்வு,Neet exam,நீட் வினாத்தாள் கசிவு,CJP Protest</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/qib8b64d/amitshah.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Amit Shah]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/qib8b64d/amitshah.jpg?w=280" width="280"></media:thumbnail><category>புதுச்சேரி (Puducherry)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய மந்திரி அமித்ஷா புதுச்சேரி வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. </p><p>புதுச்சேரி காவல் துறைக்கு ஜனாதிபதியின் உயரிய வண்ண விருது அறிவிக்கப்பட்டது. காவல் துறையின் நீண்ட கால சிறப்பான சேவை, ஒழுக்கம் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பில் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த உயரிய விருது வழங்கப்படுகிறது. இந்த விருது வழங்கும் விழா புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள காவலர் மைதானத்தில் வருகிற (சனிக்கிழமை) மாலை நடைபெற இருந்தது. இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு விருதை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.</p> <p>இந்த நிலையில் மத்திய மந்திரி அமித்ஷா புதுச்சேரி வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, மத்திய மந்திரி அமித்ஷா புதுச்சேரி வருகை திடீரென ரத்தாகியுள்ளது. மாற்று தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றனர். </p><p>முன்னதாக, நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி <a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-fast-track-court-plan-opposed-by-cockroach-janata-party">கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர்</a> கடந்த மாதம் 20-ந்தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்திரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களிடம் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது.</p> <p>கடந்த 20-ந்தேதி போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம் நோக்கி நடத்திய பேரணி பெரிய வன்முறையில் முடிந்தது. இந்த விவகாரத்தை முன்னெடுத்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரசார் நடத்திய போராட்டம் பா.ஜ.க.வுக்கு பெரிய சவாலாக அமைந்தது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>டெல்லியில் நடைபெற்று வரும் நீட் தேர்வு வினாத்தாள் வெளியான பிரச்சனை தொடர்பான போராட்டம் காரணமாக மத்திய மந்திரி அமித்ஷாவின் புதுச்சேரி வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. </p> ]]></content:encoded></item><item><title>மெரினா கடற்கரையில் போலீசார் குவிப்பு - சோதனைக்கு பின்னரே மக்கள் அனுமதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/heavy-security-at-marina-beach</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/heavy-security-at-marina-beach#comments</comments><guid isPermaLink="false">1a104067-af83-4991-865e-3d6346655e05</guid><pubDate>Thu, 23 Jul 2026 07:23:21 +0000</pubDate><atom:updated>2026-07-23T07:23:21.053Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Marina Beach,மெரினா கடற்கரை,நீட் தேர்வு,Neet exam,CJP Protest,நீட் தேர்வு வினாத்தாள் கசிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/xafj5noq/marina.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மெரினா கடற்கரை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/xafj5noq/marina.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நீட் முறைகேடு விவகாரத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரினா கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.</strong></em></p><h2>நீட் வினாத்தாள் கசிவு</h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-dmk-is-poised-to-take-up-the-fight-against-neet">நீட்</a> வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த மாதம் 20-ந் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்திரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களிடம் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது.</p> <h2>மாணவர்கள் போராட்டம்</h2><p>கடந்த 20-ந்தேதி போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம் நோக்கி நடத்திய பேரணி பெரிய வன்முறையில் முடிந்தது. இந்த விவகாரத்தை முன்னெடுத்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரசார் நடத்திய போராட்டம் பா.ஜ.க.வுக்கு பெரிய சவாலாக அமைந்தது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>இந்நிலையில் மெரினா கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.</p><p>சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த இருப்பதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவியது. </p> <h2>போலீசார் குவிப்பு</h2><p>இதையடுத்து மெரினா கடற்கரை பகுதியில் 2 துணை ஆணையர் தலைமையில் 300 காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.</p><p>மெரினா செல்லும் மக்கள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். பீக் ஹவர்ஸில் மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. </p><p>மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் தவிர்த்து வேறு யாரும் செல்கிறார்களா? என்று போலீசார் கண்காணித்து வருகின்றனர். போராட்டக்காரர்கள் மெரினாவிற்குள் சென்று விடக்கூடாது என்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சான் டியேகோ காமிக்-கானில் &apos;ராமாயணம்&apos; டிரெய்லர் வெளியீடு: இந்தியாவில்  ரிலீஸ் எப்போது?</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ramayanam-trailer-unveiled-at-san-diego-comic-con-india-release-date</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ramayanam-trailer-unveiled-at-san-diego-comic-con-india-release-date#comments</comments><guid isPermaLink="false">bf806a15-cb43-4532-a3e6-30147fca9ec8</guid><pubDate>Thu, 23 Jul 2026 07:20:10 +0000</pubDate><atom:updated>2026-07-23T07:20:10.201Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sai Pallavi,சாய் பல்லவி,Ramayana,ரன்பீர் கபூர்,Ranbir Kapoor,ராமாயணம்,San Diego Comic-Con,சான் டியேகோ காமிக்-கான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/ydgq3vvq/ranbeer.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ranbir Kapoor  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/ydgq3vvq/ranbeer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் மிகப்பிரம்மாண்ட காவியத் திரைப்படமான 'ராமாயணம்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டிற்கான அதிகாரப்பூர்வ விவரங்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படத்தின் டிரெய்லர், அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் புகழ்பெற்ற 'சான் டியேகோ காமிக்-கான்'நிகழ்ச்சியில் முதலில் திரையிடப்படவுள்ளது.</p><h2><strong>சான் டியேகோ காமிக்-கானில் சிறப்புத் திரையிடல்:</strong></h2><p>அமெரிக்காவின் சான் டியேகோ நகரில் நடைபெறும் இந்த சர்வதேசப் பாப் கலாச்சார விழாவில், 4,800 பேர் அமரக்கூடிய 'பால்ரூம் 20' அரங்கில் 'ராமாயணம்' குழுவின் சிறப்புப் பேனல் நடைபெறவுள்ளது.</p><p>இந்த நிகழ்ச்சியில், நடிகர்கள் ரன்பீர் கபூர், யாஷ், இயக்குநர் நிதேஷ் திவாரி, தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா ஆகியோர் நேரடியாகப் பங்கேற்கின்றனர். உலகளாவிய பார்வையாளர்களுக்கு இந்திய இதிகாசத்தை எடுத்துரைப்பது, படத்தின் பிரம்மாண்ட உருவாக்க முறை மற்றும் கதாபாத்திர வடிவமைப்பு குறித்து இக்குழுவினர் கலந்துரையாடவுள்ளனர்.</p><h2><strong>இந்தியாவில் டிரெய்லர் வெளியாகும் தேதி மற்றும் நேரம்:</strong></h2><p>காமிக்-கான் நிகழ்வில் சிறப்புப் பதிப்பு திரையிடப்பட்ட பிறகு, நாளை (ஜூலை 24) அன்று உலகளவில் இத்திரைப்படத்தின் டிரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியாகும். நாளை காலை 8:00 மணி முதல் 10:00 மணிக்குள்ளாக அனைத்து டிஜிட்டல் தளங்கள் மற்றும் திரையரங்குகளில் டிரெய்லர் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.</p><h2><strong>AI தொழில்நுட்பத்துடன் ஆங்கில பதிப்பு:</strong></h2><p>உலகளாவிய சந்தையைக் கவரும் வகையில், காமிக்-கான் நிகழ்வில் இத்திரைப்படத்தின் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்ட டிரெய்லர் திரையிடப்படுகிறது. இதில் சர்வதேச பார்வையாளர்களுக்கு ஏற்றவாறு, நடிகர்களின் உதட்டசைவை சரியாகப் பொருத்துவதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><h2><strong>பிரம்மாண்ட நட்சத்திரப் பட்டாளம்:</strong></h2><p>இந்திய சினிமா வரலாற்றிலேயே மிகப்பிரம்மாண்டமான நட்சத்திரப் பட்டாளம் இத்திரைப்படத்தில் இணைந்துள்ளது. இப்படத்தில் ஸ்ரீ ராமராக ரன்பீர் கபூர், சீதா தேவியாக சாய் பல்லவி, இராவணனாக யாஷ், அனுமனாக சன்னி தியோல், லக்ஷ்மணனாக  ரவி துபே, மண்டோதரியாக காஜல் அகர்வால் என பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இப்படத்தில் இணைந்துள்ளது ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை  ஏற்படுத்தியுள்ளது. இவர்களுடன் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து படத்திற்கு இசையமைக்கின்றனர்.</p><h2><strong>படத்தின் கதைக்களம் &amp; ரிலீஸ் தேதி:</strong></h2><p>தர்மம், தியாகம் மற்றும் கடமையை மையமாகக் கொண்ட ஸ்ரீ ராமருக்கும், பேரரசும் பேராற்றலும் கொண்ட இராவணனுக்கும் இடையேயான பிரம்மாண்ட மோதலை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படம்  தீபாவளி பண்டிகையை ஒட்டி (நவம்பர் 8, 2026)உலகமெங்கும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை மாநகரில் உள்ள மேம்பாலங்களின் கீழ் பகுதிகளில் பூங்காக்கள்- கார் பார்க்கிங் வசதி: மாநகராட்சி திட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/parks-and-car-parking-facilities-under-flyovers-in-chennai-city</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/parks-and-car-parking-facilities-under-flyovers-in-chennai-city#comments</comments><guid isPermaLink="false">ac5fd1c2-a9bc-4dca-97ce-24c2962eb5cf</guid><pubDate>Thu, 23 Jul 2026 07:20:06 +0000</pubDate><atom:updated>2026-07-23T07:20:06.860Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Corporation,சென்னை மாநகராட்சி,பூங்காக்கள்,வாகன நிறுத்துமிடம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/zrvku9q7/chennaicorporation.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ சென்னை மாநகராட்சி]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை மாநகராட்சி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/zrvku9q7/chennaicorporation.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>ஒவ்வொரு இடத்திற்கும் வெவ்வேறு தேவைகள் இருப்பதால் அதற்கேற்ப வடிவமைப்புகள் திட்டமிடப்பட்டு வருவதாகவும் இந்த பணிகள் விரைவில் செய்து முடிக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.</aside><p>சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள மேம்பாலங்கள் போக்குவரத்தை எளிதாக்கினாலும் மேம்பாலத்தின் கீழ் பகுதி சரிவர பராமரிக்கப்படாமல் குப்பை கிடங்குகளாக காட்சி அளிக்கின்றன.</p><p>இவற்றை சுத்தமாக வைத்திருக்கவும், பூங்காக்கள் அமைக்கவும் <a href="https://www.maalaimalar.com/topic/சென்னை-மாநகராட்சி">மாநகராட்சி</a> திட்டமிட்டு வருகிறது.</p><h2><strong>வாகன நிறுத்துமிடம்</strong></h2><p>தியாகராய நகரில் ஜி.என்.ஷெட்டி சாலையில் உள்ள கலைவாணர் மேம்பாலம் மற்றும் வடக்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தின் கீழ் பகுதிகளில் தலா 10 கார்கள் மற்றும் 40 இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகள் கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>இதில் கலைவாணர் மேம்பாலத்தின் கீழே, நடைபாதையுடன் சிறுவர் விளையாட்டு பகுதி உருவாக்கப்பட உள்ளது. வடக்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் 20 மின்சார வாகன சார்ஜிங் மையங்களும், பொதுக் கழிப்பறைகளும் கட்டப்பட உள்ளன.</p><p>ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் வாகன நிறுத்துமிடங்கள், புரசைவாக்கம் டவுட்டன் மேம்பாலத்தில் வாகன நிறுத்துமிடங்கள் அமைய உள்ளது. இந்த வாகன நிறுத்துமிடம் இலவசமாக இருக்கும்.</p><h2><strong>மாநகராட்சி திட்டம்</strong></h2><p>சிவானந்தா சாலையில் உள்ள பறக்கும் ரெயில் பாலத்தின் கீழே விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய சிறுவர் பூங்கா அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.</p><p>மியூசிக் அகாடமி மேம்பாலம், பீட்டர்ஸ் சாலை, ரங்கராஜபுரம் மேம்பாலம், ஜி.கே.மூப்பனார் சாலை, பாந்தியன் ரோடு மேம்பால பகுதியில் அலங்கார விளக்கு வசதியுடன் இருக்கைகளும் அமைக்கப்பட உள்ளது.</p><p>இது பற்றி மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ஒவ்வொரு இடத்திற்கும் வெவ்வேறு தேவைகள் இருப்பதால் அதற்கேற்ப வடிவமைப்புகள் திட்டமிடப்பட்டு வருவதாகவும் இந்த பணிகள் விரைவில் செய்து முடிக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>எழும்பூரில் 3-வது கட்ட மறுசீரமைப்பு பணி: எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆகஸ்டு முதல் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகிறது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/express-trains-will-be-operated-from-tambaram-starting-in-august</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/express-trains-will-be-operated-from-tambaram-starting-in-august#comments</comments><guid isPermaLink="false">7fc352b6-b21a-4e4a-98ad-2cced5bc1b22</guid><pubDate>Thu, 23 Jul 2026 07:02:27 +0000</pubDate><atom:updated>2026-07-23T07:02:27.858Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Egmore railway station,எழும்பூர் ரெயில் நிலையம்,Express trains,தாம்பரம் ரெயில் நிலையம்,எக்ஸ்பிரஸ் ரெயில்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/n4ddlpy9/tambaram.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தாம்பரம் ரெயில் நிலையம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/n4ddlpy9/tambaram.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பெரும்பாலான ரெயில்கள் எழும்பூரில் இருந்து இயக்கப்படுகிறது. அவற்றில் சில ரெயில்களை மட்டும் தாம்பரத்தில் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.</aside><h2><strong>எழும்பூர் ரெயில் நிலையம்</strong></h2><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/எழும்பூர்-ரெயில்-நிலையம்">எழும்பூர் ரெயில் நிலையத்தில்</a> மறு சீரமைப்பு பணிகள் ரூ.840 கோடியில் நடைபெற்று வருகின்றன.  விமான நிலையம் போல ரெயில் நிலையத்தை மாற்றவும் பயணிகளுக்கு கூடுதலான வசதிகள் அளிக்கவும் திட்டமிடப்பட்டு 5 கட்டங்களாக இப்பணிகள் நடந்து வருகிறது. </p><p>நடைமேடைகள், பிரமாண்ட நடை மேம்பாலங்கள், பயணிகள் காத்திருக்கும் பகுதி, ஓய்வுஅறைகள், ஓட்டல்கள், வணிகப் பகுதிகள்,  எஸ்கலேட்டர், லிப்ட் வசதி உள்ளிட்ட  பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்படுகிறது. </p><p>இந்த சீரமைப்பு பணிகளுக்காக அவ்வப்போது ரெயில் இயக்கத்தில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. தாம்பரத்தில் இருந்து ஒரு சில ரெயில்கள் இயக்கப்பட்டன. </p><h2><strong>இரும்பு பாலம்</strong></h2><p>இந்த நிலையில் 3-வது கட்டமாக இரும்பு நடை மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.  500 மெட்ரிக் டன் எடைக்கும் அதிகமான கிரேன்கள் பயன்படுத்தப்பட்டு இரும்பு ராடர்கள் பாலமாக நிறுவப்படுகிறது. தற்போது காந்தி இர்வின் சாலையில் எழும்பூர் ரெயில் நிலைய தாம்பரம் வழித்தட தொடக்கத்தில் இருந்து முதல் 5 நடைமேடைகளில் இரும்பு பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. </p><p>அந்தப் பாலம் 18 மீட்டர் அகலத்துடனும் 120 மீட்டர் நீளத்துடனும் அமைய உள்ளது. அதன்படி எழும்பூர் ரெயில் நிலைய 6-வது நடைமேடையில் இருந்து இரும்பு பாலம் புறநகர் மின்சார ரெயில்கள் செல்லும் 10 மற்றும் 11-வது நடைமேடை  வரையிலான பணிகள் ஓரிரு வாரங்களில் தொடங்க இருக்கிறது. </p><h2><strong>புறநகர் மின்சார ரெயில் சேவை</strong></h2><p>இந்தப் பணிகள் தொடங்கும்போது புறநகர் மின்சார ரெயில் சேவை பாதிக்காமல் வேறு நடைமேடைக்கு மாற்ற வேண்டி உள்ளது. புறநகர் மின்சார ரெயில்  சேவையில் பாதிப்பு ஏற்படாமல் ரெயில்களை இயக்குவது குறித்து ஏற்கனவே ஆலோசிக்கப்பட்டது.</p><p>அதன்படி ஆகஸ்ட் மாதம் முதல் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் சிலவற்றை தாம்பரத்தில் இருந்து தென் மாவட்டத்திற்கு இயக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பெரும்பாலான ரெயில்கள் எழும்பூரில் இருந்து இயக்கப்படுகிறது. அவற்றில் சில ரெயில்களை மட்டும் தாம்பரத்தில் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. </p><p>இந்த நிலையில் இரும்பு நடைமேம்பால பணியை சென்னை ரெயில்வே கோட்ட மேலாளர் சைலேந்திர சிங் நேற்று ஆய்வு செய்தார். அவரிடம் பணிகள் நடைபெறும் நிலை குறித்தும் அதற்காக 5 மற்றும் 6 ஆகிய நடைமேடைகளுக்கு புறநகர் மின்சார ரெயில்களை மாற்றி இயக்குவது குறித்தும் ரெயில்வே பொறியாளர்கள் விளக்கிக் கூறினார்கள்.</p><p>இந்த ஆய்வின்போது தெற்கு ரெயில்வே கூடுதல் மேலாளர் செந்தில்குமார், எழும்பூர் ரெயில் நிலைய இயக்குனர் ஜெயகாந்தன், பொறியாளர் லோகநாயகி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>&apos;ஜன நாயகன்&apos; ஓடும் திரையரங்கில் திரைக்கு முன் முள்வேலி - ரசிகர்கள் அதிர்ச்சி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/fans-shocked-by-barbed-wire-fence-in-front-of-screen-at-arantangi-theatre</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/fans-shocked-by-barbed-wire-fence-in-front-of-screen-at-arantangi-theatre#comments</comments><guid isPermaLink="false">abeba1b9-6f65-4f7e-bc2f-986fc912429c</guid><pubDate>Thu, 23 Jul 2026 06:47:58 +0000</pubDate><atom:updated>2026-07-23T06:47:58.477Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தியேட்டர்,Theatre,aranthangi,அறந்தாங்கி,JanaNayagan,ஜனநாயகன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/uorsjjo2/Theatre.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Theatre in Aranthangi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/uorsjjo2/Theatre.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா தியேட்டரில் இன்று வெளியான '<a href="https://www.maalaimalar.com/cinema/movie-review/jana-nayagan-movie-review" rel="nofollow">ஜன நாயகன்</a>' திரைப்படம் திரையிடப்பட்டது. முதல் நாள் காட்சியை காண ஏராளமான ரசிகர்கள் திரையரங்கிற்கு வருகை தந்தனர்.</p><p>இந்நிலையில், வழக்கமாக இல்லாத வகையில் திரைக்கு முன்பகுதியில் முள் வேலி (பேரிகேட்) அமைக்கப்பட்டிருந்தது. இதனால் திரைக்கு அருகில் சென்று கொண்டாட்டங்களில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.</p><p>திரைக்கு முன் முள் வேலி அமைக்கப்பட்டிருப்பதை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். </p><p>ரசிகர்களின் பாதுகாப்பு மற்றும் திரையரங்கின் சொத்துகளை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது</p><p>இந்த விவகாரம் அறந்தாங்கி திரைப்பட ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆந்திராவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று - 32 பேர் பாதிப்பு </title><link>https://www.maalaimalar.com/news/national/rising-covid-19-infections-in-andhra-pradesh</link><comments>https://www.maalaimalar.com/news/national/rising-covid-19-infections-in-andhra-pradesh#comments</comments><guid isPermaLink="false">1404eebb-5d42-4839-9a80-89c7c19e4385</guid><pubDate>Thu, 23 Jul 2026 06:41:43 +0000</pubDate><atom:updated>2026-07-23T06:41:43.079Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Andhra Pradesh,ஆந்திர பிரதேசம்,கொரோனா வைரஸ்,Covid 19</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/2fxfe3k7/covid19.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Covid-19]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/2fxfe3k7/covid19.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஆந்திரா மாநிலம் முழுவதும் இதுவரை 32 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</strong></em> </p><h2>கொரோனா தொற்று</h2><p>ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலர் கடும் காய்ச்சல், சளி, இருமல் தொற்று பாதிப்புக்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வந்தனர். சிகிச்சைக்கு வந்தவர்களின் சளி மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனத்தின் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைத்தனர். ஆய்வில் அவர்களுக்கு ஓமிக்கிரான் ஆர்.எப் 5 வைரஸ் தொற்று இருப்பது தெரிய வந்தது.</p> <h2>மக்கள் அச்சம்</h2><p>இதேபோல் சிகிச்சைக்கு வந்த 19 பேருக்கு <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81">கொரோனா தொற்று</a> இருப்பது தெரிய வந்தது. மத்திய சுகாதாரத்துறை மாநில அரசுக்கு கொரோனா வார்டுகளை தயார் செய்ய வேண்டும். முக கவசம், சானிடைசர் சிகிச்சைக்கு தேவையான மருந்துகளை தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிட்டது. கொரோனா தொற்று பாதித்து சிகிச்சையில் இருந்த 4 பேர் இறந்தனர். </p> <h2>கொரோனா பாதிப்பு உயர்வு</h2><p>இந்த நிலையில் விசாகப்பட்டினம் மற்றும் ராஜ முந்திரியில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஆந்திரா மாநிலம் முழுவதும் இதுவரை 32 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திராவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>ஜன நாயகன்- திரை விமர்சனம்</title><link>https://www.maalaimalar.com/cinema/movie-review/jana-nayagan-movie-review</link><comments>https://www.maalaimalar.com/cinema/movie-review/jana-nayagan-movie-review#comments</comments><guid isPermaLink="false">568b1423-53ee-4e9a-8858-5c751a278acd</guid><pubDate>Thu, 23 Jul 2026 06:40:10 +0000</pubDate><atom:updated>2026-07-23T06:40:10.629Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Jana Nayagan,ஜன நாயகன்,விஜய்,vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/m2hijmo1/jananayagan001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/m2hijmo1/jananayagan001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தரவரிசை (Movie Review)</category><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2><strong>கதை</strong></h2><p>ஒரு கொலை வழக்கில் சிறை தண்டனை கைதியாக இருக்கிறார் நாயகன் <a href="https://www.maalaimalar.com/topic/ஜன-நாயகன்">விஜய்</a>. அந்த சிறையில் உள்ள ஒரு பெரும்புள்ளியைத் தப்பிக்க வைக்க போலியான ஜெயில் கலவரத்தை நடத்த திட்டம் தீட்டுகிறார்கள். நாயகன் அதை முறியடிப்பதால் போலீஸ் அதிகாரியான கௌதம் வாசுதேவ் மேனனுக்கு நாயகன் மேல் நல் அபிப்ராயம் ஏற்படுகிறது. இதனால் நாயகனக்கு உதவி செய்யும் போலீஸ் அதிகாரி கௌதம் வாசுதேவ் மேனன் உயர் அதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாகிறார். ஒரு விபத்திலும் இறந்து போகிறார்.</p><p>கௌதம் மேனனின் விருப்பப்படி அவரது மகளான மமிதா பைஜூவை ராணுவத்தில் சேர்த்து விட துடிக்கிறார் விஜய். அவருக்கு தொடர் பயிற்சிகள் அளித்து அவரை ராணுவத்தில் சேர்த்து விட முயற்சிகளை மேற்கொள்கிறார்.</p><p>இன்னொரு புறம் ஆப்பிரிக்காவில் பல கொலைகளை அரங்கேற்றி அந்த நாட்டையே சுடுகாடாக மாற்றிவிடும் பாபி தியோல் ஒரு பெரிய சதி திட்டத்தை இந்தியாவில் செயல்படுத்த முயற்சிக்கிறார். இந்திய கடற்படையை தாக்கி இந்தியாவுக்குள் நுழைகிறார்.</p><p>இந்த சூழலில் பாபி தியோலுக்கு எதிராக தெரிந்தும் தெரியாமலும் ஒரு விஷயத்தில் மாட்டிக்கொள்ளும் மமிதா பைஜூவை, கொலை செய்ய பாபி தியோல் முடிவு செய்கிறார். அவரை காப்பாற்றுவதற்காக மீண்டும் ஆயுதத்தை கையில் எடுக்கிறார் விஜய்.</p><p>மமிதா பைஜூவுக்கு பாதுகாவலராக இருக்கும் விஜய் பற்றி தெரிந்து பாபி தியோல் அதிர்கிறார். விஜய்யை பழி தீர்க்கத் துடிக்கிறார்.</p><p>பாபி தியோல் யார்? அவரது பின்னணி என்ன? விஜய்க்கும், அவருக்கும் உண்டான மோதல் என்ன? இந்தியாவில் அவர் செய்யத் துடிக்கும் சதி திட்டம் என்ன? இதை விஜய் முறியடித்தாரா, இல்லையா? என்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை சொல்கிறது பரபரப்பான மீதி கதை.</p><h2><strong>நடிகர்கள்</strong></h2><p>ஒன் மேன் ஆர்மியாக கதையை தாங்கி பிடித்துள்ளார் விஜய். ஆக்ரோஷமாகட்டும் மகளிடம் பாசம் காட்டுவதாகட்டும் இரு வேறு பரிமாணங்களில் மிரட்டியுள்ளார். நடனத்திலும் தான் மாஸ் என்பதை காட்டியுள்ளார். விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் உறுதி.</p><p>ஜெயில் அதிகாரியாக கவுதம் வாசுதேவ் மேனன் காட்டும் கம்பீரம் கனகச்சிதம். ஆங்கிலம் அதிகம் பேசாமல் நார்மல் தமிழ் பேசுவது சிறப்பு.</p><p>அழகான கதாநாயகியாக வந்து போகிறார் பூஜா ஹெக்டே. காதல் காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார். துறுதுறு நடிப்பால் கவர்கிறார் மமிதா பைஜூ.</p><p>வில்லத்தனத்தில் பாபி தியோல் மிரட்டுகிறார். பிரியாமணி, சுனில் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். பிரகாஷ் ராஜ், கஜராஜ் என அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.</p><p>இயக்குநர் எச்.வினோத், முழுக்க முழுக்க ரசிகர்களை மனதில் வைத்து ஒரு கமர்ஷியல் விருந்தை படைத்திருக்கிறார். ஆக்‌ஷன், குடும்ப பாசம், தேசப்பற்று, சமூக கருத்து ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார். சில இடங்களில் திரைக்கதை வழக்கமான கமர்ஷியல் பாதையில் சென்றாலும், மாஸ் தருணங்கள் அதை மறக்கச் செய்கின்றன.</p><p>ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன், ஒவ்வொரு ஆக்‌ஷன் காட்சியையும் பிரம்மாண்டமாக பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகள் காட்சியமைப்பில் மிகப்பெரிய பலமாக அமைகின்றன.</p><h2><strong>இசை</strong></h2><p>அனிருத் இசை ஆட்டம் போட வைக்கிறது. பாடல்கள் அனைத்தும் இனிமை. குறிப்பாக, தளபதி கச்சேரி, ராவண மவண்டா பாடல்கள் சிலிர்ப்பூட்டுகிறது.</p><p>விறுவிறுப்பான காட்சிகள் படத்துக்கு பலம் சேர்க்கிறது.</p><h2><strong>பலம்</strong></h2><p>விஜய்யின் மாஸ் மற்றும் உணர்வுப்பூர்வமான நடிப்பு பாபி தியோலின் வில்லத்தனம், அனிருத் பின்னணி இசை, ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் ஒளிப்பதிவு, குடும்ப பாசம் கலந்த திரைக்கதை.</p><h2><strong>பலவீனம்</strong></h2><p>சில காட்சிகளில் யூகிக்கக்கூடிய திரைக்கதை, வழக்கமான கமர்ஷியல் சினிமா அம்சங்கள் அதிகம். </p><p>மொத்தத்தில்...</p><p>‘ஜனநாயகன்’ விஜய் ரசிகர்களுக்கு முழுமையான மாஸ் விருந்தாகவும், குடும்ப ரசிகர்களுக்கு உணர்வுப்பூர்வமான கமர்ஷியல் படமாகவும் அமைந்துள்ளது. ஆக்‌ஷன், உணர்வு, தேசப்பற்று, அனிருத் இசை, விஜய்யின் திரை ஆளுமை ஆகியவை சேர்ந்து கொண்டாட்டம் மிகுந்த படமாக உருவாகியுள்ளது.</p><p>தளபதி பட்டைய கிளப்பிவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>செங்கடலில் சவுதி எண்ணெய் டேங்கர் கப்பல்கள் மீது ஹவுதிக்கள் தாக்குதல்  </title><link>https://www.maalaimalar.com/news/world/red-sea-tensions-houthi-strike-on-saudi-oil-tankers-disrupts-key-shipping-lanes</link><comments>https://www.maalaimalar.com/news/world/red-sea-tensions-houthi-strike-on-saudi-oil-tankers-disrupts-key-shipping-lanes#comments</comments><guid isPermaLink="false">3d190ec6-02f1-4052-8909-a25aae455eff</guid><pubDate>Thu, 23 Jul 2026 06:37:57 +0000</pubDate><atom:updated>2026-07-23T06:37:57.517Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Saudi Arabia,சவுதி அரேபியா,Houthi rebels,வணிக கப்பல்,ஹவுதி கிளர்ச்சியாளர்கள்,commercial ship</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/aaujkeul/tn-27.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கோப்புப் படம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ கோப்புப் படம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/aaujkeul/tn-27.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/trump-posts-comparing-with-previous-wars">ஈரான் </a>மீதான தாக்குதலை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ள நிலையில் மத்திய கிழக்கில் மீண்டும் முழு அளவிலான போர் மூண்டுள்ளது. </p><p>இந்த சூழலில் ஏமனில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். </p><p>சவுதி அரேபியாவின் அல் சுகைக் பகுதிக்கு தென்மேற்கே  சுமார் 70 நாட்டிக்கல் மைல் தொலைவில் செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த 2 எண்ணெய் டேங்கர் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  </p><p>இது சவுதியில் இருந்து எண்ணெய் ஏற்றிச் சென்றுகொண்டிருந்த கப்பல்கள் என்று கூறப்படுகிறது. </p><p>இந்த தாக்குதலை ரிட்டன் கடல்சார் வர்த்தக அமைப்பு  உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>ஹார்முஸ்க்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்த பாப் எல் மண்டேப் ஜலசந்திக்கு அருகே இந்த  தாக்குதல் நடந்துள்ளது </p><p>அதிர்ஷ்டவசமாக இந்தத் தாக்குதலில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p> <h2>ஹவுதிக்கள் முற்றுகை</h2><p>சவூதி அரசு தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை முற்றுகையிட்டுள்ளதாகக் குற்றம் சாட்டிய ஹவுதிகள், சவுதிக்கு சொந்தமான கப்பல்களுக்கு கடல்சார் தடையை விதிப்பதாக இரு நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தனர். அதன் தொடர்ச்சியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.</p> <h2>கப்பல் போக்குவரத்து பாதிப்பு</h2><p>கப்பல் போக்குவரத்து கண்காணிப்பகமான Kpler வெளியிட்ட அறிக்கையின்படி,</p><p>பாதுகாப்பு சூழல் வேகமாகச் சீர்குலைந்து வருவதால், ஹோர்முஸ் ஜலசந்தி மற்றும் பாப் எல் மண்டேப் ஜலசந்தி ஆகிய இரு முக்கிய பாதைகள் வழியிலான கப்பல் போக்குவரத்து கணிசமாகக் குறைந்துள்ளது.</p><p>ஹவுதிகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து ஏடன் வளைகுடா அருகே பயணித்துக் கொண்டிருந்த பல வணிகக் கப்பல்கள் தங்களது பயணத்தை நிறுத்திவிட்டுத் திரும்பியுள்ளன.</p><h2>பொருளாதாரப் பாதிப்பு</h2><p>இந்த முக்கிய கடல்சார் பாதைகளில் தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்களால், உலகளாவிய சரக்குக் கப்பல்களின் பாதைகள் மாற்றப்பட்டு வருகின்றன.</p><p>இதன் காரணமாகச் சரக்குக் கட்டணம் கடுமையாக உயர்ந்து, சர்வதேச எரிபொருள் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.</p><h2>ஹார்முஸ் எச்சரிக்கை</h2><p>இதனிடையே ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களை தாகினால், ஈரானின் பாலங்கள், மின் நிலையங்கள் தரைமட்டமாக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். </p><p>கண்ணுக்கு கண் என்று தங்கள் கொள்கை மூலம் தாங்களும் பதிலடி தருவோம் என ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>