<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 10 Aug 2026 23:52:33 +0000</lastBuildDate><item><title>நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-ஐ கடந்தது: கொலம்பியாவில் அவசரநிலை பிரகடனம்!</title><link>https://www.maalaimalar.com/news/world/colombian-president-declares-emergency-after-earthquake-kills-more-than-100</link><comments>https://www.maalaimalar.com/news/world/colombian-president-declares-emergency-after-earthquake-kills-more-than-100#comments</comments><guid isPermaLink="false">06381f84-12c8-4c6d-bd59-b857c209f15e</guid><pubDate>Mon, 10 Aug 2026 23:48:40 +0000</pubDate><atom:updated>2026-08-10T23:48:40.582Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Earthquake,Emergency,கொலம்பியா,Colombia,அவசர நிலை,நிலநடுக்கம்</media:keywords><media:content height="3338" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/9qhge769/COLOMBIA-QUAKE" width="5000"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ COLOMBIA-QUAKE-RESCUE]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/9qhge769/COLOMBIA-QUAKE?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கொலம்பியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த <a href="https://www.maalaimalar.com/topic/earthquake">நிலநடுக்கம்</a> காரணமாக இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 111-ஆக உயர்ந்துள்ளது. பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கியிருப்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. </p><p>இந்த நிலையில், சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு மற்றும் பொருட்சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, <a href="https://www.maalaimalar.com/news/world">கொலம்பியா</a> அவசரநிலையை அறிவித்தது.</p><h2>மீட்பு பணிகள்:</h2><p>மேற்கு கொலம்பியாவில் உள்ளூர் நேரப்படி காலை 7:34 மணிக்கு 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பல நகரங்களில் உயிர் பிழைத்தவர்களை தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.</p><p>"உயிர்களை பாதுகாக்கவும், பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவவும், தேவைப்படும் ஒவ்வொரு பகுதிக்கும் நிவாரண உதவிகளை வழங்கவும் அரசாங்கம் தனது அனைத்து திறன்களையும் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது," என்று ஜனாதிபதி அபெலார்டோ டி லா எஸ்பிரியெல்லா பொகோட்டாவில் இருந்து தெரிவித்தார்.</p><p>சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 111 பேர் உயிரிழந்ததாகவும், 87 பேர் காயமடைந்ததாகவும், 1,000-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><h2>நிலநடுக்கத்தின் மையப்புள்ளி:</h2><p>நிலநடுக்கத்தின் மையப்புள்ளி, கொலம்பியாவின் கடலோர சோகோ பிராந்தியத்தில் 100 கிலோமீட்டர் (60 மைல்) ஆழத்தில் அமைந்திருந்தது. வறுமை நிறைந்த அந்தப் பகுதியில் 12 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>அருகிலுள்ள பெரேரா நகரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகும். அந்நகரம் மாகாணத் தலைநகராக உள்ள ரிசரால்டா பிராந்தியத்தில் குறைந்தது 40 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் முன்னதாக அறிவித்திருந்தனர். மனிசாலெஸ் நகரில் உள்ள மிகவும் விரும்பப்படும் பேராலயத்தின் கோபுரம் நிலநடுக்கத்தால் நொறுங்கியதாக ஏஎஃப்பி செய்தியாளர் ஒருவர் கவனித்தார்.</p><h2>ஆழந்த துயரம்:</h2><p>கொலம்பியாவின் மூன்றாவது பெரிய நகரமான காலியில் குறைந்தது 20 கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில், மக்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிக்கொண்டனர் என்று மேயர் அலெஜான்ட்ரோ எடர் கூறினார்.</p><p>"நாங்கள் அனைவரும் மிகுந்த துயரத்தில் ஆழ்ந்துள்ளோம். தற்போதைய நிலையில், உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன, டஜன் கணக்கானோர் காயமடைந்துள்ளனர், ஆனால் காணாமல் போனவர்களே பெரும்பான்மையாக உள்ளனர்," என குயிப்டோ சமூகத் தலைவர் லூயிஸ் கிரிகோரியோ மோரேனோ ஏ.எஃப்.‌பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்: அமலாக்கத்துறை விசாரணை தொடக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/jharkhand-exam-row-student-protests-escalate-ed-launches-probe</link><comments>https://www.maalaimalar.com/news/national/jharkhand-exam-row-student-protests-escalate-ed-launches-probe#comments</comments><guid isPermaLink="false">6e22e6c6-c0bd-499c-b339-d470fecf8e9e</guid><pubDate>Mon, 10 Aug 2026 23:14:21 +0000</pubDate><atom:updated>2026-08-10T23:14:21.987Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>protest,Jharkhand,போராட்டம்,ஜார்க்கண்ட்,ED,அமலாக்கத்துறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/mthxawa2/Jharkhand-Protest-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jharkhand Protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/mthxawa2/Jharkhand-Protest-1.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national">ஜார்க்கண்ட்</a> தேர்வுகளில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் நேற்று (திங்கள்கிழமை) தீவிரமடைந்தது.</p><p>மாணவர்கள் சட்டமன்றத்தை நோக்கி பேரணி செல்வதை தடுக்க, காவல்துறையினர் நீரை பீய்த்து அடித்தும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை தடுத்தனர். அதேவேளையில், இந்த "முறைகேடுகள்" தொடர்பாக <a href="https://www.maalaimalar.com/topic/ed">அமலாக்கத்துறை</a> பணமோசடி விசாரணையையும் தொடங்கியுள்ளது.</p><p>ஆட்சேர்ப்பு தேர்வுகளில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக, முன்னாள் ஜே.பி.எஸ்.சி. தலைவர் எல். கியாங்டேவை ஜார்க்கண்ட் சி.ஐ.டி. கைது செய்துள்ளதாக மாநில புலனாய்வு அமைப்பின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.</p><h2>மோதல்:</h2><p>மாநிலத் தலைநகர் ராஞ்சியில், மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வந்த சட்டமன்றத்தை நோக்கி ஆயிரக்கணக்கான வேலை தேடுபவர்கள் பேரணியாக சென்றபோது, ​​பல தடுப்புகளை மீறிச் சென்றதால், போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>காவல்துறை நடவடிக்கையில் பெண்கள் உட்பட பல மாணவர்கள் காயமடைந்ததாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர். அதே நேரத்தில், கல் வீச்சில் 14 அதிகாரிகள் காயமடைந்ததாகவும், "அமைதியான" போராட்டங்களை கலைத்த சமூக விரோதிகளை அடையாளம் காண சி.சி.டி.வி. காட்சிகள் ஆய்வு செய்யப்படும் என்றும் ராஞ்சி எஸ்எஸ்பி கூறினார்.</p><h2>முதல்வர் வேண்டுகோள்:</h2><p>ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தங்கள் குறைகளை "பேச்சுவார்த்தை மற்றும் நம்பிக்கையின்" மூலம் தீர்க்க வேண்டும் என நேற்று (திங்கள் கிழமை) மீண்டும் வேண்டுகோள் விடுத்தார். மேலும், அரசியல் ஆதாயங்களுக்காக போராட்டக்காரர்களை தவறாக வழிநடத்த எதிர்க்கட்சியான பா.ஜ.க. முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.</p><p>சட்டமன்றத்தை நோக்கிய பேரணி தொடங்குவதற்கு முன்பு சோரனின் வீட்டை முற்றுகையிட்ட பா.ஜ.க., மாணவர்களுக்கு எதிரான "வன்முறை பிரயோகத்தைக்" கண்டித்து இன்று (செவ்வாய் கிழமை) மாநிலம் தழுவிய பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளது.</p><p>அமைதியான போராட்டங்கள் வன்முறையால் எதிர்கொள்ளப்படக்கூடாது என்று கூறிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காவல்துறையின் நடவடிக்கையைக் கண்டித்தார். ஜார்க்கண்டில் ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணியின் கூட்டாளியாக காங்கிரஸ் உள்ளது.</p><p>"அமைதியான முறையில் போராட்டம் நடத்த மாணவர்களுக்கு உரிமை உண்டு, பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வுகளைக் கொண்டுவரும்" என்று கூறிய காங்கிரஸ் தலைவர், மாணவர்களின் குறைகளை விரைவில் தீர்க்குமாறு ஜார்க்கண்ட் அரசை வலியுறுத்தினார்.</p>]]></content:encoded></item><item><title>அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்பே எபோலா பரவல் தொடங்கிவிட்டது: உலக சுகாதார மையம்</title><link>https://www.maalaimalar.com/news/world/who-says-congos-fast-moving-ebola-outbreak-started-months-before-it-was-declared</link><comments>https://www.maalaimalar.com/news/world/who-says-congos-fast-moving-ebola-outbreak-started-months-before-it-was-declared#comments</comments><guid isPermaLink="false">993f60e3-87b6-41ee-9b25-361847a4904c</guid><pubDate>Mon, 10 Aug 2026 22:47:37 +0000</pubDate><atom:updated>2026-08-10T22:47:37.834Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>WHO,காங்கோ,Congo,உலக சுகாதார மையம்,Ebola,எபோலா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/k0ha7g7m/Ebola-Virus.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ebola Virus]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/k0ha7g7m/Ebola-Virus.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காங்கோவில் வேகமாக பரவி வரும் <a href="https://www.maalaimalar.com/topic/ebola">எபோலா</a> பாதிப்பு, அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு மாதங்களுக்கு முன்பே தொடங்கி விட்டதாக <a href="https://www.maalaimalar.com/topic/who">உலக சுகாதார அமைப்பு</a> (WHO) தெரிவித்துள்ளது.</p><p>கிழக்கு காங்கோவில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர சுகாதார பணியாளர்கள் போராடி வரும் நிலையில், இதுவரை பதிவானவற்றிலேயே மிக வேகமாக பரவும் எபோலா பாதிப்பு, மே மாத மத்தியில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு மாதங்களுக்கு முன்பே, அதாவது பிப்ரவரி மாதத்திலேயே தொடங்கியதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.</p><p>ஆப்பிரிக்காவுக்கான உலக சுகாதார அமைப்பின் பிராந்திய இயக்குனர் டாக்டர் முகமது யாகூப் ஜனபி செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது, மரபணு வரிசைமுறை ஆய்வு மூலம் இந்த பாதிப்பு தொடங்கிய காலம் கண்டறியப்பட்டதாக கூறினார். ஆரம்பக்கட்ட பாதிப்புகளில் சில, மலேரியா மற்றும் டைபாய்டு போன்ற பிற நோய்களால் ஏற்பட்டவை என்று தவறாக கருதப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><h2>மரபணு வரிசைமுறை ஆய்வு:</h2><p>"நாங்கள் வைரஸ்-ஐ துரத்தி கொண்டிருக்கிறோம், ஆனால் வைரஸ் நம்மை விட முன்னால் சென்று கொண்டிருக்கிறது," என்று ஜனபி கூறினார்.</p><p>எபோலா தடுப்பு நடவடிக்கைகளுக்கான உலக சுகாதார அமைப்பின் பொறுப்பாளர் டாக்டர் தியர்னோ பால்டே கூறும் போது, காங்கோவின் தேசிய உயிரி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் ஆய்வு துறை தலைவர் டாக்டர் ஸ்டீவ் அஹுகா தலைமையில் இந்த மரபணு வரிசைமுறை ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.</p><p>அரசின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, இந்தப் பாதிப்பில் உறுதிப்படுத்தப்பட்ட எபோலா நோயாளிகளின் எண்ணிக்கை 4,200-ஐ எட்டியுள்ளது; இதில் 1,900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.</p><h2>பரவும் அபாயம் குறைவு:</h2><p>எபோலா வைரஸ் காற்று வழியாக பரவாது என்பதால், சுவாச மண்டலத்தை தாக்கும் வைரஸ்களை விட இது பரவுவது மிகவும் கடினம். எனவே, இதன் உலகளாவிய பரவல் அபாயம் குறைவு என்று உலக சுகாதார அமைப்பு மதிப்பிடுகிறது. </p><p>பாதிக்கப்பட்ட பகுதிக்கு வெளியே கண்டறியப்பட்ட நோயாளிகள் உடனடியாக அடையாளம் காணப்பட்டு, நோய் மேலும் பரவாமல் தடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.</p><p>மே 15-ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்ட இந்த பாதிப்பு, முந்தைய எபோலா பாதிப்புகளில் இருந்து மாறுபட்டது. ஏனெனில், இதற்கு காரணமான அரிதான 'புண்டிபுக்யோ' (Bundibugyo) வைரஸ்-க்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது சிகிச்சைகளோ இல்லை. </p><p>ஆரம்பக்கட்ட சோதனைகள் மிகவும் பொதுவான வகை எபோலா வைரஸ்க்காக மேற்கொள்ளப்பட்டதே தாமதத்திற்கு ஒரு காரணமாக அமைந்தது.</p>]]></content:encoded></item><item><title>2027 உலகக் கோப்பைக்கு நேரடித் தகுதி பெற்றது ஆப்கானிஸ்தான்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/afghanistan-earn-direct-qualification-for-2027-odi-world-cup</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/afghanistan-earn-direct-qualification-for-2027-odi-world-cup#comments</comments><guid isPermaLink="false">bb0e9ef9-60f5-4d13-b28a-3ff4c7702e31</guid><pubDate>Mon, 10 Aug 2026 22:16:09 +0000</pubDate><atom:updated>2026-08-10T22:16:09.318Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Afghanistan,ஆப்கானிஸ்தான்,2027 ODI World Cup,2027 உலகக் கோப்பை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/t04y3qwe/Afghanistan-Win.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Afghanistan Win]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/t04y3qwe/Afghanistan-Win.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், 2027-ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் ஒருநாள் <a href="https://www.maalaimalar.com/topic/world-cup">உலகக் கோப்பை</a> தொடருக்கு ஆப்கானிஸ்தான் அணி நேரடித் தகுதியை உறுதி செய்தது. </p><p>அயர்லாந்து நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் <a href="https://www.maalaimalar.com/sports/cricket">கிரிக்கெட்</a> தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்தது. </p><p>இந்த நிலையில் இரு அணிகள் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி பெல்ஃபாஸ்ட்-இல் நடந்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து பேட்டிங் ஆடிய அயர்லாந்து அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.</p><h2>ஆப்கானிஸ்தான் வெற்றி:</h2><p>அந்த அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கிய ஆன்டி பால்பிர்னி 7 ரன்களுக்கும், கேப்டன் பால் ஸ்டிர்லிங் 23 ரன்களுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து வந்த கேட் கார்மைக்கேல் 32 ரன்களை எடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்தவர்களில் கவின் ஹூயி அதிகபட்சமாக 36 ரன்களும், ஜெய் மூந்த்ரா 31 ரன்களையும் அடித்தனர்.</p><p>இறுதியில் 46.3 ஓவர்கள் முடிவில் 206 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது. ஆப்கானிஸ்தான் சார்பில் சிறப்பாக பந்துவீசிய கசன்ஃபர் மற்றும் ரஷித் கான் தலா 3 விக்கெட்டுகளையும், யாமின் அகமதுசாய் 2 விக்கெட்டுகளையும், ஃபசல்ஹக் பரூக்கி மற்றும் அசமதுல்லா ஓமர்சாய் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.</p><p>எளிய இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்க வீரர்களான ரஹ்மதுல்லா குர்பாஸ் சிறப்பாக ஆடி 71 ரன்களை எடுத்தார். அடுத்து வந்தவர்களில் செய்திகுல்லா அடல் 27 ரன்களும், ஹஷ்மதுல்லா ஷாஹிதி 22 ரன்களும், ரஷித் கான் 37 ரன்களும் அடித்தனர். முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 44.5 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் வித்தியாசத்தில் 207 ரன்களை எடுத்து மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.</p><h2>நேரடி தகுதி:</h2><p>தற்போது தரவரிசையில் 8-ஆவது இடத்தில் உள்ள ஆப்கானிஸ்தான், இதன் மூலம் அடுத்த ஆண்டு தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு நேரடி தகுதியை பெற்றது.</p><p>உலகக் கோப்பை தகுதிக்கு ஒரு வெற்றி மட்டுமே தேவை என்ற நிலையில் இந்தப் போட்டிக்கு வந்த ஆப்கானிஸ்தான் அணி, ஏற்கனவே இரண்டாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்தை 92 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் ஆப்கானிஸ்தான் பங்கேற்பது இது நான்காவது முறையாகும்.</p>]]></content:encoded></item><item><title>சௌரவ் கங்குலி மற்றும் அவரது மனைவிக்கு கொலை மிரட்டல்; காவல்துறை விசாரணை தொடங்கியது</title><link>https://www.maalaimalar.com/news/national/sourav-ganguly-wife-receive-death-threats-police-begin-probe</link><comments>https://www.maalaimalar.com/news/national/sourav-ganguly-wife-receive-death-threats-police-begin-probe#comments</comments><guid isPermaLink="false">b9f57aa1-c472-455c-bce2-ff51b50abb63</guid><pubDate>Mon, 10 Aug 2026 20:01:27 +0000</pubDate><atom:updated>2026-08-10T20:01:27.079Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>police,கொலை மிரட்டல்,Death threat,Sourav Ganguly,காவல் துறை,சௌரவ் கங்குலி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/0e37vq0d/sourav-ganguly.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ sourav ganguly]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/0e37vq0d/sourav-ganguly.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் <a href="https://www.maalaimalar.com/topic/sourav-ganguly">சௌரவ் கங்குலி</a> மற்றும் அவரது மனைவிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>சௌரவ் கங்குலிக்கு கடந்த சில மாதங்களாக பல மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன என்றும், அவற்றில் ஒன்று தன்னையும் தனது மனைவி டோனா கங்குலியையும் கொன்றுவிடுவதாக எச்சரித்திருந்தது என்றும் அவர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார். இந்த கடிதங்களை அனுப்பியது யார் என்பதை கண்டறிய <a href="https://www.maalaimalar.com/topic/police">காவல்துறை</a> விசாரணையை தொடங்கியுள்ளது.</p><h2>மிரட்டல் கடிதம்:</h2><p>தற்போது வங்காள கிரிக்கெட் சங்கத்தின் (CAB) தலைவராக இருக்கும் கங்குலி, திங்கள்கிழமை தனது அலுவலகத்திற்கு வந்த சமீபத்திய கடிதத்தை தொடர்ந்து, தெற்கு கொல்கத்தாவில் உள்ள தாக்கூர் புகுர் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமான புகாரை அளித்துள்ளார் என்று காவல் துறை அதிகாரி கூறினார்.</p><p>முன்னாள் பி.சி.சி.ஐ. (BCCI) தலைவரான சௌரவ் கங்குலி பெயருக்கு கடந்த ஆறு மாதங்களாகவே இத்தகைய கடிதங்கள் வந்து கொண்டிருந்ததாகவும், ஆனால் ஆரம்பத்தில் அவை பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.</p><p>திங்கள்கிழமை அவரது அலுவலகத்திற்கு வந்த இரண்டு கடிதங்களில், கங்குலி மற்றும் அவரது மனைவியை கொல்லவும், அவருக்கு நெருக்கமானவர்களுக்கு தீங்கு விளைவிக்கவும் வெளிப்படையான மிரட்டல்கள் இருந்ததாக முன்னாள் கிரிக்கெட் வீரரின் மேலாளர் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>தீவிர விசாரணை:</h2><p>கடிதங்களின் உள்ளடக்கத்தை ஆய்வு செய்து வருவதாகவும், அவற்றை அனுப்பியவரின் அடையாளம் மற்றும் நோக்கத்தை கண்டறிய முயற்சிப்பதாகவும் காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.</p><p>"நாங்கள் இந்த புகாரை தீவிரமாக எடுத்துக்கொண்டு விசாரணையை தொடங்கியுள்ளோம். இந்த கடிதங்கள், அவற்றின் மூலம் மற்றும் கூரியர் சேவை விவரங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து, இதற்கு பொறுப்பான நபரை கண்டறிய முயற்சிக்கிறோம்," என்று அந்த அதிகாரி கூறினார்.</p><p>வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பெல்காரியாவை சேர்ந்த ஒரு நபர், கூரியர் சேவை மூலம் இந்த கடிதங்களை அனுப்பியிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.</p><h2>காவல் துறை விளக்கம்:</h2><p>அனுப்பியவர் பயன்படுத்தியதாக கூறப்படும் சிம் கார்டின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய தொடங்கியுள்ளதாகவும், பார்சல் விவரங்களை சேகரிக்க சம்பந்தப்பட்ட கூரியர் நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>"நாங்கள் கூரியர் சேவையை சேர்ந்தவர்களிடம் பேசியுள்ளோம் மற்றும் ஒரு மொபைல் எண்ணை கண்டறிந்துள்ளோம். அந்த எண்ணின் இருப்பிடத்தை கண்டறிய முயற்சிக்கிறோம்," என்று அவர் கூறினார்.</p><p>அனைத்து கடிதங்களும் ஒரே நபரால்தான் அனுப்பப்பட்டனவா என்பதையும், இந்த மிரட்டல்களுக்கான காரணம் என்ன என்பதையும் கொல்கத்தா காவல்துறையினர் ஆய்வு செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஜார்க்கண்ட்: போராடும் மாணவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதைக் கண்டித்து பாஜக பந்த்-க்கு அழைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/jharkhand-exam-row-bjp-calls-for-bandh-on-aug-11-over-police-lathi-charge-on-protesting-students</link><comments>https://www.maalaimalar.com/news/national/jharkhand-exam-row-bjp-calls-for-bandh-on-aug-11-over-police-lathi-charge-on-protesting-students#comments</comments><guid isPermaLink="false">8db2aba4-7c4d-4a22-b98a-1a77748a5c7e</guid><pubDate>Mon, 10 Aug 2026 19:11:41 +0000</pubDate><atom:updated>2026-08-10T19:11:41.363Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,protest,Jharkhand,போராட்டம்,ஜார்க்கண்ட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/5tjuaqkg/BJP-Aditya-Sahu.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ BJP Aditya Sahu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/5tjuaqkg/BJP-Aditya-Sahu.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாநிலத்தில் பணி நியமனத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக கூறி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி மற்றும் "காவல்துறையின் அத்துமீறல்களை" கண்டித்து, எதிர்க்கட்சியான பா.ஜ.க. <a href="https://www.maalaimalar.com/news/national">ஜார்க்கண்ட்</a> பந்த்-க்கு அழைப்பு விடுத்துள்ளது. காலை 8 மணி முதல் நள்ளிரவு வரை இந்த பந்த் அமலில் இருக்கும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் ஆதித்யா சாஹு தெரிவித்தார். </p><p>"இது மாநிலம் தழுவிய பந்த் ஆகும். இருப்பினும், அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் இந்த அடைப்பு நடவடிக்கையில் இருந்து விலக்கப்பட்டுள்ளன," என்று <a href="https://www.maalaimalar.com/topic/bjp">பா.ஜ.க.</a> தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் சாஹு கூறினார்.</p><h2>கடும் தாக்குதல்:</h2><p>சட்டமன்றத்தை நோக்கி மாணவர்கள் பேரணியாக சென்றபோது அவர்கள் குற்றவாளிகளை போல நடத்தப்பட்டதாக பாஜக தலைவர் குற்றம் சாட்டினார்.</p><p>"காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர், நீர்ப்பீச்சிகளை பயன்படுத்தினர் மற்றும் தடியடி நடத்தினர். மாலை வேளையிலும் கூட போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இது ஒரு சர்வாதிகார அரசு," என்று சாஹு கூறினார்.</p><p>மாணவர்களை ஏமாற்றியதாக ஜே.எம்.எம். (JMM) தலைமையிலான கூட்டணி அரசை அவர் குற்றம் சாட்டியதுடன், "மாணவர்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை" நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.</p><h2>மோதல்:</h2><p>பணி நியமனத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக கூறி போராடிய வேலை தேடுபவர்கள் மீது காவல்துறையினர் நீர்ப்பீச்சிகள், கண்ணீர்ப்புகை மற்றும் தடியடியை பயன்படுத்தியதால், நேற்று (திங்கள் கிழமை) ஜார்க்கண்ட் சட்டமன்றத்திற்கு அருகே ஏற்பட்ட மோதலில் பல போராட்டக்காரர்களும் நான்கு காவலர்களும் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>ஜார்க்கண்ட் சட்டமன்றத்திற்கு அருகே அமைக்கப்பட்டிருந்த பல தடுப்புகளை போராட்டக்காரர்கள் மீறியதை தொடர்ந்து இந்த மோதல் ஏற்பட்டது.</p><p>காவல்துறையின் நடவடிக்கையில் பெண்கள் உட்பட பலர் காயமடைந்ததாகப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டிய நிலையில், போராட்டக்காரர்கள் நடத்திய கல்வீச்சு தாக்குதலில் நான்கு காவலர்கள் காயமடைந்ததாக ராஞ்சி நகர காவல் கண்காணிப்பாளர் (SP) பரஸ் ரானா தெரிவித்தார்.</p><p>ஜே.எஸ்.எஸ்.சி. (JSSC) அல்லது ஜே.பி.எஸ்.சி. (JPSC) என எந்த அமைப்பாக இருந்தாலும், கடந்த ஆறு ஆண்டுகளாக வேலைகளை விற்பனை செய்வதிலேயே அவை ஈடுபட்டுள்ளன என்றும், அதே வேளையில் மாணவர்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் பாபுலால் மராண்டி குற்றம் சாட்டினார்.</p>]]></content:encoded></item><item><title>கொலம்பியா நிலநடுக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 69-ஆக உயர்வு</title><link>https://www.maalaimalar.com/news/world/69-dead-after-74-magnitude-earthquake-shakes-western-colombia</link><comments>https://www.maalaimalar.com/news/world/69-dead-after-74-magnitude-earthquake-shakes-western-colombia#comments</comments><guid isPermaLink="false">70429eec-3711-4afe-b9d2-753cadb6b77d</guid><pubDate>Mon, 10 Aug 2026 18:24:13 +0000</pubDate><atom:updated>2026-08-10T18:24:13.854Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உயிரிழப்பு,Earthquake,கொலம்பியா,Colombia,Death toll,நிலநடுக்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/gtwsnur9/Colombia-earthquake-rescue.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Colombia earthquake rescue]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/gtwsnur9/Colombia-earthquake-rescue.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் மேற்குப் பகுதிகளில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 69 பேர் உயிரிழந்தனர், மேலும் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. </p><p>இந்த நிலநடுக்கத்தால் மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்; பலர் காயமடைந்தனர். தலைநகர் பொகோட்டா வரை உள்ள பகுதிகளில் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.</p><h2>107 கிலோமீட்டர் ஆழம்:</h2><p>நிலநடுக்கத்தின் மையம், பொகோட்டாவில் இருந்து மேற்கே சுமார் 250 மைல் தொலைவில் உள்ள சோகோ பிராந்தியத்தின் சான் ஜோஸ் டெல் பால்மர் என்ற பகுதியில் அமைந்திருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) மற்றும் கொலம்பியா தொடர்புடைய அமைப்புகள் தெரிவித்தன.</p><p>இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் 66 மைல் (107 கி.மீ) ஆழத்தில் ஏற்பட்டதாக USGS கூறியது. மேலும், அண்டை நாடுகளான ஈக்வடார் மற்றும் பனாமாவிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது, ஆனால் அங்கு மிகக் குறைந்த அளவிலான சேதங்களே பதிவாகின.</p><h2>உயிரிழப்புகள்:</h2><p>கடுமையாகப் பாதிக்கப்பட்ட பெரேரா நகரம் அமைந்துள்ள ரிசாரால்டா மாகாணத்தில் குறைந்தது 40 பேரும், கொலம்பியாவின் மூன்றாவது பெரிய நகரமான காலி அமைந்துள்ள வாலே டெல் கௌகா மாகாணத்தில் 27 பேரும் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். மனிசலேஸ் நகரிலும் இருவர் உயிரிழந்தனர்.</p><p>வாலே டெல் கௌகாவில் உயிரிழந்தவர்களில் குறைந்தது மூவர் குழந்தைகள் என்று ஆளுநர் தெரிவித்தார். இந்த நிலநடுக்கம் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள பெரேரா, குவிப்டோ, காலி மற்றும் மனிசலேஸ் ஆகிய நகரங்களைச் சிதைத்தது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய அதிர்வுகள் குறித்த அதிகாரிகளின் அச்சங்களுக்கு மத்தியிலும், இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளிடையே குடியிருப்பாளர்களும் தேடுதல் குழுவினரும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.</p><h2>மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம்:</h2><p>நாடு முழுவதும் 20-க்கும் மேற்பட்ட நகராட்சிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கொலம்பியாவின் உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.</p><p>நிலநடுக்கத்தின் மையப்பகுதியை சுற்றியுள்ள கொலம்பியாவின் பசிபிக் பிராந்தியமானது, உலகின் பெரும்பாலான நிலநடுக்கங்கள் நிகழும் இடமான பசிபிக் பெருங்கடலை சுற்றியுள்ள நில அதிர்வு பிளவுகளின் மண்டலமான "ரிங் ஆஃப் ஃபயர்" (Ring of Fire) பகுதியில் அமைந்துள்ளது.</p><p>கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் இது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>டி.என்.பி.எல்.: சேலம் அணிக்கு எதிரான போட்டியில் மதுரை பேந்தர்ஸ் அபார வெற்றி!</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-mdp-beat-sal-by-36-runs</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-mdp-beat-sal-by-36-runs#comments</comments><guid isPermaLink="false">7608f499-7d5b-4f99-8707-7fad710e0fc4</guid><pubDate>Mon, 10 Aug 2026 17:33:53 +0000</pubDate><atom:updated>2026-08-10T17:33:53.104Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,Salem Spartans,madurai panthers,சேலம் ஸ்பார்ட்டன்ஸ்,மதுரை பேந்தர்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/iq3g3c61/MDP.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MDP Celebration]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/iq3g3c61/MDP.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>10-ஆவது <a href="https://www.maalaimalar.com/topic/tnpl">டி.என்.பி.எல்.</a> டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முறை தொடரின் அனைத்து போட்டிகளும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.</p><p>இத்தொடரில் இன்று நடைபெற்ற 11-ஆவது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, மதுரை பாந்தர்ஸ் முதலில் பேட்டிங் செய்தது.</p><h2>நல்ல தொடக்கம்:</h2><p>மதுரை அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய ராம் குமார் - சித்தார்த் மகாதேவன் சிறப்பாக ஆடி அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். தொடக்க வீரரான ராம் குமார் 19 பந்துகளில் 36 ரன்களை (4 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) எடுத்தனர். இவருடன் களமிறங்கிய சித்தார்த் மகாதேவன் 42 பந்துகளில் 60 ரன்களை (5 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) எடுத்தார்.</p><p>தொடர்ந்து களமிறங்கிய சதுர்வேத் 5 ரன்களும், கேப்டன் பால்சந்தர் அனிருத் 7 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இது தவிர அதிகபட்சமாக அதீக் அர் ரகுமான் 39 ரன்களும், சரவணன் 19 ரன்களும் எடுத்தனர். இறுதியில் மதுரை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது.</p><p>இதையடுத்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேலம் அணிக்கு சுமாரான தொடக்கமே கிடைத்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய ஆர் கவின் 22 ரன்களிலும், ஹரி நிஷாந்த் 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய சன்னி சந்து ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.</p><h2>மதுரை வெற்றி:</h2><p>அடுத்து களமிறங்கிய நிதிஷ் ராஜகோபால் 20 ரன்களிலும், கேப்டன் எஸ் அபிஷேக் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து களமிறங்கியவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் சேலம் அணி ஸ்பார்ட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 159 ரன்களை எடுத்தது.</p><p>இதனால் மதுரை பேந்தர்ஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. சேலம் அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய தீபேஷ் தேவந்திரன் 3 விக்கெட்டுகளையும், ரோஹன் புத்ரா மற்றும் விக்னேஷ் தலா 2 விக்கெட்டுகளையும், சரவணன் மற்றும் ஷோயப் கான் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.</p>]]></content:encoded></item><item><title>பக்தர்கள் கோரிக்கை ஏற்பு: திருச்செந்தூர் கோவிலில் தரிசனத்திற்கு நேர கட்டுப்பாட்டில் தளர்வு..!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/devotees-request-accepted-tiruchendur-temple-darshan-time-relaxed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/devotees-request-accepted-tiruchendur-temple-darshan-time-relaxed#comments</comments><guid isPermaLink="false">fd8db5c1-5d27-4013-8525-cf707e61747a</guid><pubDate>Mon, 10 Aug 2026 16:37:30 +0000</pubDate><atom:updated>2026-08-10T16:37:30.685Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruchendur Temple,திருச்செந்தூர் கோவில்,நேரக்கட்டுப்பாடு,தரிசனம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/529exynk/Tiruchendur.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருச்செந்தூர் கோவில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/529exynk/Tiruchendur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பொது தரிசனம், ரூ.100 கட்டண தரிசனம், மூத்த குடிமக்கள் வரிசை மூலம் தினமும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் பல மடங்கு அதிகரித்து வருகிறது.</p><p>பக்தர்கள் எளிதாக சாமி தரிசனம் செய்யும் சண்முக விலாசம் மண்டபத்தை இரும்பு கிரில் கேட் கொண்டு அடைத்து உள்ளதாலும், பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் நிலை உள்ளது.</p><p>இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னதாக திடீரென தரிசனத்திற்கு நேர கட்டுப்பாடு வைத்து அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. அந்த அறிவிப்பு பலகையில் கட்டண தரிசன வழியில் பக்தர்கள் மாலை 6.30 மணி வரைக்கும், பொது தரிசன வரிசையில் இரவு 7 மணி வரைக்கும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். விசேஷ மற்றும் விடுமுறை நாட்களில் தரிசன நேரம் மாறுதலுக்குட்பட்டது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.</p><p>பொதுவாக சாதாரண நாட்களில் பக்தர்கள் காலை 5 மணிமுதல் இரவு 9 மணி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த திடீர் அறிவிப்பு பக்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</p><p>இதனால் ஏற்கனவே இருந்து முறைப்படி சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கைவிடுத்தனர். இந்த நிலையில் பழைய அறிவிப்பு பலகை மாற்றப்பட்டு புதிய பலகை வைக்கப்பட்டுள்ளது.</p><p>அதில்,</p><p>* தினமும் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.</p><p>* இரவு 8 மணி வரை தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.</p><p>* ஞாயிறு காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவுார்கள்.</p><p>* விசேஷ நா்களில தரிசன நேரங்கள் மாறுதலுக்குட்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மொழியின் ஆளுமையுடன் மதத்தை ஒப்பிட்டு பேசுவது சரியா? - அமைச்சர் மரிய வில்சனுக்கு நயினார் கேள்வி! </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/is-it-right-to-compare-religion-with-the-stature-of-a-language-nainar-questions-minister-maria-wilson</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/is-it-right-to-compare-religion-with-the-stature-of-a-language-nainar-questions-minister-maria-wilson#comments</comments><guid isPermaLink="false">f36a38db-27e0-43ab-a243-0f214c930689</guid><pubDate>Mon, 10 Aug 2026 16:17:51 +0000</pubDate><atom:updated>2026-08-10T16:17:51.398Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்,tamil,நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,கிறிஸ்தவம்,அமைச்சர் மரிய வில்சன்,Minister Mary Wilson,Christianity</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/czp1r1iz/New-Project-2026-08-10T214717.083.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மொழியின் ஆளுமையுடன் மதத்தை ஒப்பிட்டு பேசுவது சரியா? - அமைச்சர் மரிய வில்சனுக்கு நயினார் கேள்வி! ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/czp1r1iz/New-Project-2026-08-10T214717.083.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கி பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், அமைச்சர் மரியவில்சனிடம் அவரது தமிழ் உச்சரிப்புத்திறனை மேம்படுத்திக் கொள்ளுமாறு ஒரு அறிவுரையாக கூறினார். </p><p>இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் மரியவில்சன் தான் ஒரு கிறிஸ்தவர் என்றும், தனக்கு எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் எனத் தெரியும் என்றும் ஆவேசமாகப் பேசியிருந்தார். </p><p>இந்நிலையில் அமைச்சர் மரிய வில்சனின் இந்தப் பேச்சுக்கு அவர் மன்னிப்புக்கோர வேண்டும் என பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்.,</p><p>“இன்றைய சட்டமன்றத்தில் உங்கள் மொழியாற்றல் மீதான விவாதத்தின் போது, “எனது மதம் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது” என்பதோடு நீங்கள் நிறுத்தியிருந்தால் அது உங்களின் தனிப்பட்ட அனுபவம். </p><p>ஆனால், “எனது மதம் எனக்கு கற்று கொடுத்ததை, எத்தனை தமிழ் படித்தாலும் தெரிந்து கொள்ள முடியாது” என்று நீங்கள் கூறுவது, தமிழின் மீதான தாக்குதலாகத் தான் தெரிகிறது. </p><p>“அன்பு” என்ற வார்த்தைக்கு பல மதங்கள் கற்பித்த பல அர்த்தங்களை, "அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்” என்ற ஒற்றை வரியில் தூக்கி சாப்பிட்ட மொழி தான் நம் தாய் மொழி தமிழ். “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளலாரின் ஜீவகாருண்ய ஒழுக்கத்தை விட, இரக்கத்தைப் பற்றி இவ்வுலகில் வேறு யாரால் நுட்பமாக எடுத்துரைக்க முடியும்? </p><p>“தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்ற புறநானூற்றுப் பாடலை நீங்கள் சரியாக படித்து புரிந்திருந்தாலே, “அமைதி” என்ற வார்த்தைக்கு தமிழ் மொழியில் உள்ள ஆழமான அர்த்தம் உங்களுக்கு தெரிந்திருக்கும். </p><p>பிறப்பால் நீங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால், உணர்வால் நாம் அனைவரும் தமிழர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய சட்ட மன்றத்தில் கூட உங்கள் கட்சி தலைமையும் அதைத் தானே சுட்டிக்காட்டினார்? </p><p>அப்படியிருக்கையில் உங்கள் மதத்தை நீங்கள் உயர்த்திப் பிடிப்பதில் தவறில்லை. ஆனால், தமிழ் மொழியை நீங்கள் தாழ்த்துவதை ஒரு போதும் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, இன்று உணர்ச்சி மிகுதியில் தமிழ் மொழி மீது வைத்த தவறான விமர்சனத்திற்கு நீங்கள் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>109 ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து அரசுக்கு ரூ.35,000 கடன் வழங்கிய இந்தியர்: திருப்பி கேட்கும் பேரன்கள்..!</title><link>https://www.maalaimalar.com/news/national/indian-businessman-loan-to-british-government-109-years-ago</link><comments>https://www.maalaimalar.com/news/national/indian-businessman-loan-to-british-government-109-years-ago#comments</comments><guid isPermaLink="false">bd2766d1-b23c-4420-bb3a-9d5f165cf05f</guid><pubDate>Mon, 10 Aug 2026 16:14:40 +0000</pubDate><atom:updated>2026-08-10T16:14:40.006Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>England,Madhyapradesh,மத்தியப் பிரதேசம்,கடன்,இங்கிலாந்து,war loan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/8k57k5vl/Untitled-design-34.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ இந்திய தொழிலதிபர் கொடுத்த 35,000 ரூபாய் கடனுக்கு 109 ஆண்டுகள் கழித்து பேரன்கள் கோரிக்கை]]></media:title><media:description type="html"><![CDATA[ British Loan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/8k57k5vl/Untitled-design-34.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் முதலாம் உலகப் போரின்போது, செலவுகளுக்காக பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு ரூ.35,000 கடனாக வழங்கி ஒரு நூற்றாண்டுக்கும் மேலான நிலையில், அக்கடனைத் திருப்பிச் செலுத்திமாறு தொழிலதிபரின் பேரன்கள் இங்கிலாந்து அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.</p><p>மேலும் தங்களது கோரிக்கையை பரிசீலிக்க, இங்கிலாந்து அதிகாரிகள் பதிலளித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.</p><h3><strong>1937இல் இங்கிலாந்து வாங்கிய கடன்</strong></h3><p>செஹோர் நகரில் தொழிலதிபரின் வம்சாவளியினரான வினய் மற்றும் விவேக் ருத்தியா செய்தியார்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், “1937-ல் காலமான எங்கள் தாத்தா சேத் ஜும்மா லால் ருத்தியா விட்டுச்சென்ற ஆவணங்கள் மற்றும் கடிதப் பரிமாற்றங்களின் அடிப்படையில், எங்களது சட்ட ஆலோசகர் பிப்ரவரி மாதம் இங்கிலாந்து கடன் மேலாண்மை அலுவலகத்திற்கு ஒரு அறிவிப்பை அனுப்பினார். </p><p>நாங்கள் அனுப்பிய கோரிக்கையை பரிசீலிக்க இங்கிலாந்து அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. முதலாம் உலகப் போரின்போது, ஏராளமான இந்திய வீரர்கள் பிரிட்டிஷ் ராணுவத்தில் இணைந்தனர்.</p><p>அப்போது உணவு, தண்ணீர் மற்றும் இதர போர் செலவுகளுக்கு நிதியளிப்பதற்காக அரசாங்கம் இந்தியாவிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாயைத் திரட்டியது.</p><p>அந்த நேரத்தில், பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு 35,000 ரூபாயை எங்கள் தாத்தா கடனாக வழங்கினார். 109 ஆண்டுகள் பழமையான அந்த கடனுக்கான ஆவணங்கள் பதிவேடுகளில் கண்டெடுக்கப்பட்டு எங்களிடம் உள்ளது.</p><p>அந்த ஆவணத்தில், சேத் ஜும்மா லால் ருத்தியா, இந்திய போர் கடனுக்காக 35,000 ரூபாய் செலுத்தி, அதன் மூலம் அரசாங்கத்திற்கும் பேரரசிற்கும் தனது விசுவாசத்தை வெளிப்படுத்தினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>ஜூன் 4, 1917 தேதியிட்ட அந்த ஆவணத்தில், போபாலில் உள்ள ஒரு அரசியல் முகவரின் கையொப்பம் இடம்பெற்றுள்ளது.</p><h3><strong>இங்கிலாந்திற்கு கடிதம்</strong></h3><p>இதையடுத்து எனது வழக்கறிஞர் ஸ்ரீயான்ஷ் ரணிவால் மூலம், இங்கிலாந்து அரசாங்கத்தின் கடன் மேலாண்மை அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மற்றும் அச்சுப் பிரதி வழியாக ஒரு சட்டப்பூர்வ அறிவிப்பை அனுப்பினோம்.</p><p>சமீபத்தில், எனது வழக்கறிஞருக்கு இங்கிலாந்து கடன் மேலாண்மை அலுவலகத்திடமிருந்து ஒரு பதில் கிடைத்தது. அதில், உங்கள் கட்சிக்காரருக்கு உரிமை கோரப்படாத பணம் கிடைக்க உரிமை உண்டு என்று நீங்கள் நம்பினால், சம்பந்தப்பட்ட சொத்துப் பங்கீடு தொடர்பான உங்களிடம் உள்ள தகவல்களை அளித்து, அரசுப் பத்திரப் பதிவாளரான கம்ப்யூட்டர்ஷேர் இன்வெஸ்டர் சர்வீசஸ் பிஎல்சி-யைத் தொடர்பு கொள்ளும்படி பதில் அனுப்பியது.</p><p>மேலும் இந்த ஆவணங்களுடன் வேறு ஏதேனும் சான்றிதழ்கள் மற்றும் கடிதப் போக்குவரத்துகள் உள்ளிட்ட வேறு ஏதேனும் ஆவண சான்றுகளின் நகல்களை நீங்கள் வழங்கினால் அது உதவியாக இருக்கும்,” என்று இங்கிலாந்து அரசு எங்களுக்கு கடிதம் அனுப்பியது.</p><p>மேலும், “ஒரு நூற்றாண்டுக்கும் மேலான இதன் மதிப்பு, வட்டியையும் சேர்த்து, இன்று பல கோடிகளாக இருக்கும். பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு அந்த தொகையைக் கடனாக கொடுத்த 20 ஆண்டுகளுக்குப் பிறகு, 1937-ல் எனது தாத்தா சேத் ஜும்மா லால் இறந்துவிட்டார்.</p><h3><strong>கடனை திருப்பித் தர கோரிக்கை</strong></h3><p>போபால் மாநிலத்தின் நிர்வாகத்தை சீரமைப்பதற்காக பிரிட்டிஷ் அரசாங்கம் இந்த பணத்தை எங்கள் தாத்தாவிடம் இருந்து கடனாகப் பெற்றது.</p><p>மேலும், சர்வதேச சட்டத்தின்படி, ஒரு இறையாண்மை கொண்ட நாடு கொள்கையளவில் தனது பழைய கடன்களை திருப்பி செலுத்த சட்டப்பூர்வமாக கடமைப்பட்டுள்ளது” என்று விவேக் ருத்தியா கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ராகுல் காந்தி பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறார்: ஜே.பி. நட்டா குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-behaving-irresponsibly-deliberately-disrupting-parliament-nadda</link><comments>https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-behaving-irresponsibly-deliberately-disrupting-parliament-nadda#comments</comments><guid isPermaLink="false">63be20a5-9aec-41dc-becf-640066cf5838</guid><pubDate>Mon, 10 Aug 2026 15:42:32 +0000</pubDate><atom:updated>2026-08-10T15:42:32.882Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,நாடாளுமன்றம்,ஜேபி நட்டா,JP Nadda,parliament</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/3ta5crrm/RahulGandhiJPNadda.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல் காந்தி- ஜே.பி. நட்டா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/3ta5crrm/RahulGandhiJPNadda.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராகுல் காந்தியின் கோரிக்கையை ஏற்று, நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு ஒப்புக்கொண்ட போதிலும், காங்கிரஸ் தலைவர் தொடர்ந்து தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டே இருந்ததாக மத்திய அமைச்சர் நட்டா குற்றம்சாட்டியுள்ளார்.</p><h2>இது தொடர்பாக ஜே.பி. நட்டா கூறியதாவது:-</h2><p>ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிக்கை அளிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கோரிக்கை விடுத்தார். உள்துறை அமைச்சர் அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டபோது, ​​காங்கிரஸ் தலைவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, ராமர் கோயில் நன்கொடை தொடர்பான முறைகேடு புகார்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரத் தொடங்கினார்.</p><h2>விவாதிக்க நாங்கள் தயார்</h2><p>அவர்கள் ஏன் விவாதத்திலிருந்து ஓடுகிறார்கள்? நான் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன் ராகுல் காந்தி அவர்களே, விவாதத்திலிருந்து ஓடாதீர்கள். நாங்கள் தயாராக இருக்கிறோம். அவைக்குள் எந்தவொரு விவகாரம் குறித்தும் விவாதிக்க நாங்கள் தயாராக உள்ளோம். ஓடாதீர்கள்.</p><p>அவையின் செயல்பாட்டைத் தடுப்பதே அவரது நோக்கம் போலத் தெரிகிறது. அவை செயல்படுவதை அவர் விரும்பவில்லை. அதனால்தான் கடந்த 15 நாட்களாக அவர் நடவடிக்கைகளைச் சீர்குலைத்து வருகிறார்.</p><h2>பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறார் ராகுல் காந்தி</h2><p>ராகுல் காந்தி பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்கிறார். எதிர்மறையான அரசியலில் ஈடுபடுகிறார். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். நான் ராகுல் காந்திக்குச் சவால் விடுகிறேன். அவைக்கு வாருங்கள், நாங்கள் விவாதத்திற்குத் தயாராக இருக்கிறோம். மேலும் சொல்கிறேன், உங்களுக்குத் தகுந்த பதில் கிடைக்கும்.</p><p>தவறான தகவல்களைப் பரப்பாதீர்கள். ஜந்தர் மந்தரில் துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை, அங்கு துப்பாக்கிச் சூடு நடத்த எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.</p><p>இவ்வாறு ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சரிவை நோக்கி செல்லும் ரூபாய் மதிப்பு - இந்திய ரிசர்வ் வங்கியின் அடுத்தகட்ட நடவடிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/rupee-sliding-value-rbi-next-steps</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/rupee-sliding-value-rbi-next-steps#comments</comments><guid isPermaLink="false">589217a3-78ed-413c-ae1b-037fca704312</guid><pubDate>Mon, 10 Aug 2026 15:30:26 +0000</pubDate><atom:updated>2026-08-10T15:30:26.037Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>RBI,அமெரிக்க டாலர்,ரூபாய்,rupee,US dollar,ரிசர்வ் வங்கி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/j9vzlzhz/Untitled-design-33.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ RBI அந்நிய செலாவணி தலையீடு மூலம் மதிப்பு வீழ்ச்சியை கட்டுப்படுத்த முயற்சி]]></media:title><media:description type="html"><![CDATA[ Rupee Value]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/j9vzlzhz/Untitled-design-33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்படும் அதீத ஏற்ற இறக்கங்களை கட்டுப்படுத்த, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அந்நிய செலாவணி சந்தையில் சில மாற்றங்களை செய்ய வாய்ப்புள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>மத்திய வங்கி ஒரு குறிப்பிட்ட நாணயமாற்று விகிதத்தை இலக்காகக் கொள்ளாவிட்டாலும், சந்தையில் திடீரென்று ஏற்படும் ஏற்ற இறக்கங்களை தடுக்க அது முயற்சி எடுத்து வருகிறது.</p><p>இன்றைய நிலவரப்படி ஒரு அமெரிக்க டாலர், இந்திய மதிப்பில் ரூ.95.37-ஆக உள்ளது.</p><p>இதையடுத்து ரிசர்வ் வங்கி சில மாற்றங்களை செய்வதற்கு எதிர்பார்க்கப்படும் ஐந்து காரணிகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h3><strong>அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்கள்</strong></h3><p>அதில் முதலாவதாக மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதட்டங்கள் காரணமாக பாதுகாப்பான முதலீடான அமெரிக்க டாலருக்கான தேவை அதிகரித்துள்ளது. </p><p>முதலீடு செய்பவர்கள் அதிக அபாயமுள்ள வளரும் சந்தை சொத்துக்களிலிருந்து விலகிச் செல்வதால், ரூபாய் போன்ற நாணயங்கள் பொதுவாக அழுத்தத்திற்கு உள்ளாகின்றன.</p><h3><strong>வலுவான அமெரிக்க டாலர்</strong></h3><p>அமெரிக்காவின் பணவியல் கொள்கை குறித்த எதிர்பார்ப்புகளால் மீள்திறன் கொண்ட அமெரிக்க டாலர், பெரும்பாலான வளரும் சந்தை நாணயங்களின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. </p><p>மேலும் வலுவான அமெரிக்க டாலர், மத்திய வங்கியின் ஆதரவின்றி ரூபாய் தனது நிலையை தக்கவைத்து கொள்வதை மேலும் கடினமாக்குகிறது.</p><h3><strong>ரூபாய் வரலாறு காணாத சரிவை நெருங்குகிறது</strong></h3><p>ஜூலை மாத இறுதியில் இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்து காணப்பட்டது. இந்த சரிவு இந்திய ரிசர்வ் வங்கியால் சரியான நேரத்தில் தலையிடப்பட்டு, அதன் மதிப்பு நிலைநிறுத்தப்படும் என வர்த்தகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><strong>இறக்குமதி செய்யப்பட்ட பணவீக்கத்தை கட்டுப்படுத்துதல்</strong></p><p>ரூபாயின் மதிப்பு குறைவது, இறக்குமதிகளின், குறிப்பாக கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, மின்னணுப் பொருட்கள் மற்றும் தொழில்துறை உள்ளீடுகளின் விலையை அதிகரிக்கிறது.</p><p>இந்த அதிக இறக்குமதி செலவுகள் பணவீக்கமாக மாறக்கூடும் என்பதால், இந்திய ரிசர்வ் வங்கி அதிகப்படியான ரூபாய் மதிப்பு வீழ்ச்சியைச் சீர்செய்வது அவசியமாகிறது.</p><p><strong>ஒழுங்கான சந்தை நிலைமைகளை பராமரித்தல்</strong></p><p>நிலையான நாணய மாற்று விகிதத்தை பாதுகாப்பதை விட, அதீத ஏற்ற இறக்கங்களை கட்டுப்படுத்துவதே இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிக்கப்பட்ட அணுகுமுறையாகும்.</p><p>அரசுக்கு சொந்தமான வங்கிகள் மூலம் டாலர்களை விற்பனை செய்து ரூபாயை வாங்குவதன் மூலம், நாணய பரிமாற்றங்கள் ஊக நடவடிக்கைகளை சார்ந்திராமல், பொருளாதார அடிப்படைகளின் அடிப்படையில் சீராக நடைபெறுவதை மத்திய வங்கி உறுதி செய்ய முயல்கிறது.</p><h3><strong>RBI தலையீட்டில் என்னென்ன அடங்கும்?</strong></h3><p>இந்திய ரிசர்வ் வங்கி வழக்கமாக ரூபாயை வாங்கும் அதே வேளையில், தனது அந்நிய செலாவணி கையிருப்பிலிருந்து அமெரிக்க டாலர்களை விற்கிறது.</p><p>இது சந்தையில் டாலர்களின் விநியோகத்தை அதிகரித்து, உள்நாட்டு நாணயத்திற்கு ஆதரவளித்து, நாணய மாற்று விகிதத்தில் ஏற்படும் கடுமையான ஏற்ற இறக்கங்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது.</p><p>வரும் காலங்களில் ரூபாயின் போக்கானது உலகளாவிய புவிசார் அரசியல் நிகழ்வுகள், கச்சா எண்ணெய் விலைகள், அமெரிக்க டாலரின் வலிமை, வெளிநாட்டு மூலதன வரவு மற்றும் அந்நிய செலவாணி சந்தையில் இந்திய ரிசர்வ் வங்கியின் மேலதிக தலையீடுகள் ஆகியவற்றை பொறுத்து அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கியச் செய்திகள் - 10 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-10-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-10-august-2026#comments</comments><guid isPermaLink="false">1bbee6de-4ec6-459e-bfff-1b842e60b35a</guid><pubDate>Mon, 10 Aug 2026 04:09:30 +0000</pubDate><atom:updated>2026-08-10T15:20:09.777Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/803u20uo/vinoth.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/803u20uo/vinoth.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-m-ed-admissions-online-registration-from-august-11">M.Ed. மாணவர்கள் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நாளை தொடக்கம்</a></p><p>* தரவரிசைப் பட்டியல் 25.08.2026 அன்று வெளியிடப்படும்.</p><p>* மாணாக்கர் சேர்க்கை 27.08.2026 முதல் 31.08.2026 வரை நடைபெறும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-speaks-onjharkhand-protest-crackdown-use-of-force-against-students-is-wrong">ஜார்க்கண்டில் சட்டசபையை நோக்கி பேரணி சென்ற மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது தவறானது: ராகுல் காந்தி</a></p><p>* ஜார்க்கண்ட்டில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>* சட்டசபை நோக்கி பேரணி சென்றபோது மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/child-among-13-killed-in-one-of-deadliest-ukraine-drone-strikes-in-russia">ரஷியா மீது சரமாரி டிரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன்: 13  பொதுமக்கள் உயிரிழப்பு- பலர் காயம்</a></p><p>* உக்ரைனில் எல்லையில் இருந்து சுமார் 1000 கி.மீ. தொலைவில் உள்ள தொழில் நகரமான நிஸ்னேகாம்ஸ்க்கில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குறிவைத்து தாக்குதல்.</p><p>* உக்ரைன் மீதும் ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது. கார்கீவ் பிராந்தியத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள கிராமத்தில் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-mbbs-bds-admissions-2026-27-rank-list-72633-applicants">MBBS, BDS தரவரிசைப் பட்டியல் வெளியீடு: 2026-27 மருத்துவப் படிப்புகளுக்கு 72,633 பேர் விண்ணப்பம்!... </a></p><p>*மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை விண்ணப்ப விவரங்கள், அரசு ஒதுக்கீட்டு இடங்கள், 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டன.</p><p>*இதில் 26,956 விண்ணப்பங்கள் தகுதியானவை என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இவர்களில் 9,105 மாணவர்களும், 17,851 மாணவிகளும் உள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-thai-vazhthu-issue-tamil-nadu-govt-give-private-law-former-minister-regupathy">தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: ஒன்றிய அரசு என உச்சரிக்கவே பயப்படுகிற இந்த அரசு சட்டம் கொண்டு வருமா? முன்னாள் அமைச்சர் ரகுபதி</a></p><p>* தமிழ்நாட்டிலே தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலே பாடப்பட வேண்டும் என்கின்ற சட்டபூர்வ அங்கீகாரத்தை அரசு பெற்று தந்தால்தான் அது நிலைத்து நிற்க முடியும்.</p><p>* ஒன்றிய அரசு என்று சொல்லவே அவர்கள் பயப்படுகிறார்கள். எனவே ஒன்றிய அரசு என்று உச்சரிக்கவே பயப்படுகிற இந்த அரசு சட்டம் கொண்டு வருமா என்பது சந்தேகம்.</p><p>மேட்டூர் அணை திறப்பு எப்போது? விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்வீர்களா? மாட்டீர்களா? என எம்எல்ஏ ராமச்சந்திரன் கேள்வி எழுப்பினார். </p><p>சட்டமன்ற விவாதத்தில் நிதியமைச்சர் இவ்வளவு கோபப்படக்கூடாது என முன்னாள் அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் அவர்,"நிதியமைச்சர் சட்டமன்றத்தில் பேசுவதை பர்சனலாக எடுத்துக்கொள்கிறார். கடையநல்லூர் எம்எல்ஏ தமிழ் மீதுள்ள ஆர்வத்தால் அப்படிக்கூறினார், அவர் அவைக்கு புதியவர்" என விளக்கம் அளித்தார்.</p> <p>சட்டமன்றத்தின் அலுவல் மொழி தமிழோ, ஆங்கிலத்திலோ.. இரு மொழியிலும் பேசலாம் என விதி உள்ளது. தனக்கு எதிரே இருந்தவர் தெலுங்கில் பேசியபோது அனுமதித்து தெலுங்கிலேயே பதில் தந்தவர் ஜெயலலிதா- சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்</p><p>அந்தந்த மாவட்ட பழக்க வழக்கத்திற்கு ஏற்றார்போல் தமிழ் மொழி பேசும் விதம் மாறும்- திமுக எம்எல்ஏ எ.வ.வேலு </p><p>அமெரிக்காவில் இருந்து வந்த பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தபோதும் இந்த நிலைதான் இருந்தது- அமைச்சர் ஆதவ் அர்ஜூனா.</p><p>நிதியமைச்சர் வரும் காலத்தில் பிழையின்றி தமிழில் பட்ஜெட் வாசிக்க வேண்டும் என்று ராஜேந்திரன் கூறியதற்கு அமைச்சர் ராஜ்மோகன் கூறுகையில்,"எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சங்கத்தமிழிலா பேசுகிறார்?" என்றார்.</p><p>தமிழில் நன்றாக பேச அமைச்சர் ராஜ்மோகனிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என ராஜேந்திரன் கூறியதால் அமைச்சர் மரிய வில்சன் ஆவேசமடைந்தார்.</p><p>தனது தமிழ் குறித்து திமுக எம்எல்ஏ பேசியதால் ஆத்திரடைந்த நிதியமைச்சர்,"சாதி ரீதியாக கேலி செய்வது அதிகரித்துள்ளது, தற்போது மொழி ரீதியாக கேலி செய்வதும் அதிகரித்துவிட்டது. என்னால் இப்படிதான் பேச முடியும், வேண்டும் என்றால் ஏற்று கொள்ளுங்கள் யாருக்காகவும் மாற்றிக்கொள்ள மாட்டேன்உங்களுக்காக என் ஸ்டைலை மாற்ற முடியாது" என பதில் அளித்தார்.</p><p>நிதி அமைச்சரின் நிதி நிலை அறிக்கை மிக தெளிவாக இருந்தது  - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</p><p>கடந்த திமுக ஆட்சியில் நீர்வளத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</p><p>பால் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னிலையில் இருக்க காரணம் திமுக, 90 நாட்களில் தவெக எப்படி கொண்டுவர முடியும்.</p><p>விவசாயிகளுக்கு எவ்வளவு இலவச மின் இணைப்புகள் என்ற அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லை - ராஜேந்திரன்</p><p>கைது செய்யப்பட்ட நாளை தனது நாளாக்கியவர் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி.</p><p>கொரோனா பாதித்த நோயாளிகளை நேரில் பார்த்த ஒரே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - ராஜேந்திரன்</p><p>கடையநல்லூர் எம்எல்ஏ ராஜேந்திரன் உரையாற்றினார்.</p><p>மதிமுகவை சேர்ந்த ராஜேந்திரன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டவர். நான் சார்ந்திருக்கும் திமுக சார்பில் நன்றி. மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு நன்றி.</p><p>வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்ய கூடாது என முடிவெடுத்தவன் நான்.</p><p>தமிழுக்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்த பாரதியார் கோட் சூட் அணிந்து தான் வாழ்ந்தார். தமிழ் எங்கள் உயிர் என்பது எங்களது சொல்லில் அல்ல செயலில் இருக்கும், முதல்வர் அத்தகையவர் - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் - பாஜக எம்எல்ஏ</p><p>பட்ஜெட் மீதான விவாதத்தில் பாஜக உறுப்பினர் போஜராஜன் உரையாற்றினார்.</p><p>பேரவைக்கு முதல்வர் வேஷ்டி சட்டையுடன் வருவது பொங்கல், தீபாவளியை போல் ஒரு மகிழ்ச்சி வருகிறது.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானம் நிறைவேற்றி இன்றும் முதல்வர் உள்ளிட்ட அனைவரும் வேட்டி, சட்டையில் வந்திருக்கலாம்.</p><p>இடைவெளி இல்லாமல் சட்டசபை நடப்பதால் உறுப்பினர்களுக்கு உடல்சோர்வு ஏற்பட்டுள்ளது. உடல் சோர்வால் உறுப்பினர்கள் பாதி பேர் வெளியே சென்று விட்டார்கள் - தமிமுன் அன்சாரி</p><p>தேவைப்பட்டால் சட்டசபை மாலை நேரத்திலும் நடத்த முடிவு - சபாநாயகர்</p><p>கடலில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த ஆய்வு நடைபெற்று வருகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தவெக அரசு தடை விதிக்க வேண்டும் - தமிமுன் அன்சாரி </p> <p>காமராஜர் திட்டமிட்ட ராசிமணல் அணை கட்டும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.</p><p>ராசிமணலில் அணை கட்டும் திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்க வேண்டும். ராசிமணலில் அணை கட்டினால் இரு மாநிலத்துக்கு பிரச்சனை ஏற்படாது  - தமிமுன் அன்சாரி </p><p>நீட் தேர்வு  வேண்டாம் என்பது தான் தவெக அரசின் நிலைப்பாடு. அப்படியிருக்கும்போது திக பரப்புரைக்கு அனுமதி மறுத்தது ஏன்?</p><p>புதிய முஸ்லீம்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் சான்று  கிடைக்கும் வகையில் சட்டம் இயற்ற நடவடிக்கை தேவை.</p><p>ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்க வேண்டும் - தமிமுன் அன்சாரி கோரிக்கை</p><h2>தமிமுன் அன்சாரி</h2><p>புதிய சட்டமன்றத்தை கட்டுவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்.</p><p>திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் பயங்கரவாதிகளா?</p><p>நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்களை ஒடுக்கியது நியாயமா?</p><p>சிஏஏ சட்டத்தில் ஈழ தமிழர்களுக்கு குடியுரிமை கொடுக்க வலியுறுத்த வேண்டும்.</p><p>ஈழ தமிழர்கள் தாங்கள் விரும்பும் நாடுகளுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும்.</p><p>காவிரி விவகாரத்தில் மாற்று நடவடிக்கை குறித்து ஏன் பேச கூடாது.</p> <p>பட்ஜெட் மீதான விவாதத்தில் சட்டசபை உறுப்பினர் தமிமுன் அன்சாரி உரையாற்றினார்.</p><p>சட்டசபை விவாதங்களால் அழகுப்படுத்த வேண்டும்.</p><p>விவாதங்களின் முடிவில் வெற்றி பெறுவது மக்களின் கோரிக்கைகளாக இருக்க வேண்டும்.</p><p>சட்டசபை நிகழ்வுகள் நேரடியாக உடனுக்குடன் ஒளிபரப்பப்படுவதால் உறுப்பினர்கள் நேர்த்தியாக பேச வேண்டும்.</p><p>முன்பு பேரவையில் நடந்தது மறுநாள் காலை செய்தி தாளில் வரும். ஆனால் தற்போது நேரலையில் மக்கள் பார்க்கின்றனர்.</p><p>ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியினர் விவாதத்தில் ஈடுபட்டாலும் வெல்வது மக்களாக இருக்க வேண்டும்.</p> <p>சட்டசபை உறுப்பினர்கள் கொடுக்கப்பட்ட நேரத்தில் மட்டும் பேசினால் இப்படி நேரம் இழுக்காது.  உறுப்பினர்கள் தங்கள் புகார்களை ஆதாரத்துடன் வைத்தால் சரியான நேரத்தில் பேசி, அதற்கு பதிலும் சரியாக கிடைக்கும் - சபாநாயகர்</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/2lsd8hib/ministerkeerthana.jpg" /></figure><h2>அமைச்சர் கீர்த்தனா</h2><p>சிப்காட்டிற்கான அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலை உள்ளது. பெருந்துறை சிப்காட்டில் எந்த விதமான பெரிய மாற்றங்களையும் நான் பார்க்கவில்லை.</p><p>நேரு சொன்னதை போல் எவ்வித மாற்றத்தையும் திருச்சி சிப்காட்டில் நான் பார்க்கவில்லை.</p><p>திருச்சி சிப்காட் நன்றாக நடைபெறுவதாக நேரு கூறினார். நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்.</p><p>திமுக அல்வா கொடுத்ததாக பேசிய தவெகவினருக்கு கே.என்.நேரு பதில் அளித்தார்.</p><p>திருச்சியின் பெரிய தொகுதியான மணப்பாறைக்கு கூட்டுக்குடிநீர் திட்டம், தலைமை மருத்துவமனை திமுக ஆட்சியில் கிடைத்தவை.</p><p>புதிய கல்லூரி திறப்பு, கிராமங்களுக்கு புதிய சாலை, சிப்காட்டில் வேலை ஏற்படுத்தியது திமுக ஆட்சியில் தான்.</p><p>புதிதாக வந்த தம்பி... முதல்வர் விஜயிடம் கேட்டு இன்னும் நிறைய செய்யுங்கள். அல்வா என்றெல்லாம் சொல்லாதீர்கள்.</p><h2>மணப்பாறை தவெக எம்எல்ஏ கதிரவன்</h2><p>மணப்பாறை முறுக்கு பிரபலம் என்றாலும் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் மணப்பாறை மக்களுக்கு அல்வாவே அதிகம் கிடைத்தது.</p><p>திமுக ஆட்சியில் மணப்பாறை மக்களுக்கு எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.</p><p>பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.44,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு அனைவரும் வரவேற்பு - மணப்பாறை எம்எல்ஏ கதிரவன்</p><p>நெய்யாறு பிரச்சனை குறித்து முதலமைச்சருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ஆனந்த்</p><p>தமிழக முதலமைச்சரும், கேரள முதலமைச்சரும் பேசி நெய்யாறு பிரச்சனையை தீர்க்க வேண்டும் - பிரவீன்</p><p>விளவங்கோடு தொகுதி மக்களின் பிரச்சனை தீர்க்கப்படும் - அமைச்சர் ஆனந்த்</p><h2>அமைச்சர் ரஞ்சித் குமார்</h2><p>யானை தாக்கி உயிரிழந்த பழங்குடியின நபருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. மனித - விலங்கு மோதலை தடுக்க ஏஐ தொழில்நுட்பம்.</p><p>யானைகள் 3000 கி.மீ. நடந்து செல்லும், அது செல்லும் பாதை காடுகளை வளப்படுத்தும் - அமைச்சர் ரஞ்சித்</p><p>தமிழ்நாடு பட்ஜெட் மீதான விவாதத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ பிரவீன் உரையாற்றினார்.</p><p>மனிதர் - வனவிலங்கு மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>நீலகிரியில் இருந்த புல்லட் ராஜா யானை தற்போது குமரியில் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிப்பு.</p><p>யானை புல்லட் ராஜா குமரிக்கு வந்ததில் இருந்து பொதுமக்கள் மீது அதிகளவில் தாக்குதல்.</p><h2>காங்கிரஸ் எம்எல்ஏ ஜமால் யூனுஸ் உரை</h2><p>காவிரி நீர் விவகாரத்தில் தமிழக உரிமையை மீட்க தவெக அரசுக்கு காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும்.</p><p>65 ஆண்டுகளுக்குப்பின் காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு கிடைத்துள்ளது. நிச்சயம் உறுதுணையாக இருந்து செயல்படுவோம்.</p> <p>காங்கிரஸ் அல்லாத ஆட்சி என கூறிய காமராஜூக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.</p><p>பட்ஜெட் மீதான விவாதத்தில் அமமுக எம்எல்ஏ காமராஜ் உரையாற்றினார்.</p><p>தவெக அரசின் முதல் பட்ஜெட் நல்ல தொடக்கம். வருவாயை பெருக்க அலுவாலியா தலைமையில் குழுவுக்கு வரவேற்பு</p><p>தமிழ்நாடு மீண்டும் மின்மிகை மாநிலமாக மாறும். விவசாயிகள் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யுங்கள். மேலும் ரூ.8,000 கோடி மட்டுமே விவசாய கடன்  உள்ளது. ரூ.8000 கோடி கடனை தவெக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்காக கடன் வாங்கியாவது திட்டங்களை நிறைவேற்றுங்கள்.</p><p>நீங்கள் இருக்கும் வரை நீங்கள் தான் முதலமைச்சர். பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத ஆட்சி மத்தியில் அமைக்க வேண்டும்.</p> <p>முதலமைச்சர் கர்நாடகா செல்ல நினைத்தது தவறானது. உபரி நீரை மட்டும் திறந்து விட தமிழகம் கர்நாடகாவின் வடிகாலா?</p><p>மேகதாது விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என காமராஜ் வேண்டுகோள் விடுத்தார்.</p><p>அதிமுக எம்எல்ஏ காமராஜ் கூறுகையில்,</p><p>தமிழக அரசின் பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு முக்கியத்துவமில்லை. விவசாயம் என்பது வெறும் தொழில் அல்ல, விவசாயிகளின் வாழ்க்கை முறை. மேட்டூர் அணை திறக்கப்படாததால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>கர்நாடகத்திடம் உரிய நீரை கேட்கிறோம், உபரி நீரை அல்ல. தண்ணீர் இல்லை என கூறி 2 நாட்கிில் அணை நிரம்பி விட்டதாக கூறுகின்றனர்.</p> <h2>அமைச்சர் மரிய வில்சன்</h2><p>திமுக அரசு முதல் காலாண்டில் வாங்கிய கடனை விட குறைவாகவே தவெக ஆட்சியில் ரூ.29,881 கோடி கடன்.</p><p>முதல் காலாண்டில் கடன் வாங்கும் தொகையை தவெக அரசு சற்று குறைத்துள்ளது. மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் கடன் அளவை 0.54-ல் இருந்து 0.51 ஆக குறைத்துள்ளோம்.</p><p>கடனை நாங்கள் குறைத்துக்கொண்டே தான் வருகிறோமே தவிர அதிகரிக்கவில்லை.</p><h2>அமைச்சர் மரிய வில்சன்</h2><p>தேர்தல் அறிக்கையில் கூறிய 125 அறிவிப்புகள் தவெக அரசின் முதல் பட்ஜெட்டிலேயே அறிவித்துள்ளோம். துறை ரீதியான மாற்றங்களை முதலமைச்சர் விஜய் கொண்டு வந்துள்ளார். கடனை நாங்கள் குறைத்துக்கொண்டே தான் வருகிறோமே தவிர அதிகரிக்கவில்லை.</p><h2> அதிமுக எம்எல்ஏ காமராஜ்</h2><p>பட்ஜெட் தாக்கல் என்ற பெயரில் வெற்றி என்ற பெயரை ஒவ்வொரு திட்டத்திற்கு சூட்டும் விழா தான் நடைபெற்றது.</p><p>தவெக அரசின் முதல் பட்ஜெட் மீது மக்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் எந்த புதிய திட்டமும் இல்லை.</p><p>மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை, ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர், உதவித்தொகை போன்ற அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம்.</p><p>நிதி நிலையை சரி செய்ய 2 ஆண்டு தேவை என தவெக அரசு சொல்கிறது. ஆனால் 50 ஆண்டு தேவை என நிதித்துறை செயலாளர் கூறுகிறார்.</p><p>நன்னிலம் அதிமுக எம்எல்ஏ காமராஜ் பட்ஜெட் மீதான விவாதத்தில் உரையாற்றினார். </p><p>அதிமுக ஆட்சிக்காலத்தில் விலைவாசி, கடன் கட்டுக்குள் இருந்தன.</p><p>தவெகவின் முதல் பட்ஜெட் என்பதால் எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.</p><p>தவெகவின் வாக்குறுதிகள் பட்ஜெட்டில் அறிவிப்பாக வரவில்லை.</p> <p>கரும்புக்கு என கூட்டுறவு சங்கத்தை உருவாக்கியது மராட்டிய மாநிலம். விரைவில் கரும்பு உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணிக்கு வரும் - அமைச்சர் ஆதவ்</p><h2>சைதாப்பேட்டை எம்எல்ஏ அருள்பிரகாசம்</h2><p>தவெக ஆட்சியில் தமிழ்நாடு மின்னல் வேகத்தில் முன்னேறுகிறது. சட்டமன்ற தேர்தலில் சைதாப்பேட்டையில் மாசுவை நீக்கி தூய்மை கிடைத்துள்ளது.</p><p>நமது மண்ணில் விளையும் கரும்புக்கு சர்க்கரைத்தன்மை குறைவு - முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு</p><p>தவெக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் பழைய கள்ளு. புதிய மொந்தை.</p><p>திமுக அரசின் பட்ஜெட்டை தான் தவெக அரசு அப்படியே வாசிக்கிறது என கிராமத்தில் பேசுகிறார்கள் -  எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</p><p>ரேஷன் கடைகளில் தரமான அரிசி கொடுத்தால் மீண்டும் ஆட்சியை பிடித்து விடலாம் என எம்ஜிஆர் கூறினார்.</p><p>ரேஷன் கடைகளில் தரப்படும் அரிசியை வைத்து ஆட்சியை மதிப்பிடலாம் என எம்ஜிஆர் கூறினார் - சபாநாயகர்</p><p>திறந்த வெளியில் உள்ள 10 லட்சம் நெல் மூட்டைகளை அப்புறப்படுத்த வேண்டும். வறட்சி நிவாரண நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</p><p>கரும்பு உற்பத்தி கடந்த 5 வருடத்தில் 70% குறைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச விலையின்றி தவித்ததால் தவெக அரசு நடவடிக்கை.</p><p>விவசாயிகளுக்கான பொற்கால ஆட்சியாக இந்த 5 ஆண்டு கால ஆட்சியை முதல்வர் விஜய் மாற்றுவார் என அமைச்சர் ஆதவ் திட்டவட்டம்.</p> <h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</h2><p>திமுக ஆட்சியில் இதுவரை ரேஷன் கடைகளில் அரிசி வாங்கி அதை நாம் சமைத்து சாப்பிட்டோமா?</p><p>இலவசமாக தரும் அரிசி சாப்பிட முடியாத நிலையில் உள்ளதால் தான் சன்னரக நெல்லுக்கான ஊக்கத்தொகை உயர்வு. </p><p>திமுகவிற்கு பயிர் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற எண்ணமே கிடையாது.</p><p>கடந்த 5 ஆண்டுகளில் கரும்பு சாகுபடியின் பரப்பளவு குறைந்துள்ளது.</p><h2>சொன்னால் செய்பவர் முதலமைச்சர் விஜய்</h2><p>பிரசாரத்தின்போது விவசாயியாக பிறக்க வேண்டும் என 3 முறை சொன்னார் முதல்வர் விஜய். அதை அடிக்கடி குறிப்பிடுகிறீர்கள்.</p><p>சொன்னால் செய்பவர் முதல்வர். நெல்லுக்கான ஊக்கத்தொகை உயர்த்தி உள்ளார் முதலமைச்சர் விஜய்.</p><p>பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட விவசா சங்கங்களுடன் பேச்சு நடத்திய நிலையில் கரும்பு ஊக்கத்தொகை அறிவித்தார் முதல்வர் - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</p> <h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</h2><p>நீங்கள் 5 வருடங்கள் ஆட்சியில் இருந்தீர்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்து 3 மாதங்கள் தான் ஆகிறது.</p><p>5 வருடங்கள் ஆட்சியில் இருந்த திமுக 3 மாதத்தில் மட்டுமே ஆட்சியில் உள்ள தவெகவுடன் ஒப்பீடு செய்வது நியாயமா?</p><p>200 தொகுதிகளில் வெல்வோம் என அடிக்கடி சொன்ன திமுக, விவசாயக்கடன் தள்ளுபடி பற்றி தேர்தல் அறிக்கையில் பேசவே இல்லை.</p> <p>திமுக ஆட்சியில் தரமான அரிசிகள் வழங்கப்பட்டது. ஆட்சியர் தலைமையிலான குழு தான் நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க அனுமதி அளித்தது - சக்கரபாணி</p><h2>அமைச்சர் வெங்கட்ரமணன்</h2><p>நெல் கொள்முதலுக்கு விவசாயிகளிடம் திமுக ஆட்சியில் கையூட்டு பெறப்பட்டது. திமுக ஆட்சியில் ரேஷனில் தரப்பட்ட அரிசியை பயன்படுத்த முடியவில்லை என மக்களே கூறினர்.</p><p>ரேஷன் அரிசி தொடர்பாக புகார் வரும் நிலையில் அதனை சரிசெய்ய தொடர் நடவடிக்கை எடுக்கிறோம்.</p> <h2>எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</h2><p>வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்களுக்கு பெயர் மாற்றம் நடந்துள்ளது. திமுக 2 லட்சம் மின் இணைப்பு கொடுத்தது விவசாயிகளுக்கு மிகப்பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது. இலவச மின்சாரம் தொடர்பாக அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லை. தவெக ஆட்சியில் மின்சாரமே வரமேட்டேங்குது.</p><p>நுண்ணீர் பாசனத்திட்டம், மும்முனை மின்சாரத்திற்கு திமுக ஆட்சியைவிட கூடுதலாக ரூ.8 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><p>விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் குறித்து மானிய கோரிக்கையில் அறிவிப்பு - நிர்மல்குமார்</p><h2>எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</h2><p>விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை நிறுத்த போகிறதா அரசு? நுண்ணீர் பாசனத்திட்டம், மும்முனை மின்சாரம் திட்டத்திற்கு கடந்த ஆட்சியை விட குறைவான நிதி ஒதுக்கீடு ஏன்?</p><p>வேளாண் துறைக்கு திமுக ஆட்சியை விட ரூ.279 கோடி குறைத்து நிதி ஒதுக்கி உள்ளது தவெக அரசு.</p><p>திமுக ஆட்சியில் வேளாண் துறைக்கான செலவை விட கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.</p><p>அந்த டெக்னிக்கை 10 நிமிடங்கள் முன்பு தான் அண்ணன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் கற்றுக்கொண்டதாக அமைச்சர் ரமேஷ் பதில் அளித்தார்.</p><h2>எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</h2><p>தவெகவினர் படத்தை பார்த்து வந்தவர்கள், திமுகவினர் முரசொலி படித்து வந்தவர்கள். வேளாண்மை துறைக்கு திமுக ஆட்சியை விட குறைவாக ஒதுக்கி உள்ளது தவெக.</p><p>திமுக ஆட்சியில் ஆக்டிங் கிடையாது. ஆக்ஷன் மட்டுமே இருந்தது தவெக எப்படி ஆட்சிக்கு வந்தது என்பது அமைச்சர் பேசும்போது டெக்னிக்  தெரிகிறது.</p> <p>திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட நெல் சேமிப்பு கிடங்குகள் உள்ளிட்டவற்றை பட்டியலிட்டு முன்னாள் அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்தார்.</p><p>நெல் கிடங்குகள் கட்டவில்லை என அமைச்சர் ரமேஷ் தவறாக கூறினார். திமுக ஆட்சியில் 18 மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டன.</p><p>மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்வதற்காக கரும்பு தோட்டத்தில் கான்கிரீட் போடப்பட்டதை சுட்டிக்காட்டி அமைச்சர் ரமேஷ் பேசினார்.</p><h2>அமைச்சர் ரமேஷ்</h2><p>திமுக ஆட்சியில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்ததாக சிறந்த திரைக்கடை எழுதி உள்ளார்  எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.</p><p>ரூ.309 கோடிக்கு நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும் என்ற திமுக வாக்குறுதி என்னாச்சு?</p><p>நெல்லுக்கும் கரும்புக்கும் அரசு ஒரு விலை நிர்ணயித்தால் அதிகாரிகள் ஒரு விலை நிர்ணயித்தார்களே அது தெரியாதா?</p><p>திமுக ஆட்சியில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தார்களா? துன்பப்பட்டார்களா? என்பது அவர்களுக்கே நன்றாக தெரியும்.</p><p>திரைக்கதையை தயார் செய்கிறார் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.</p><p>கிடங்குகள் வேண்டும் என பல ஆண்டுகளாக விவசாயிகள் போராடி வருகின்றனர் -  அமைச்சர் ரமேஷ்</p> <p>திமுக ஆட்சியின் 5 ஆண்டு காலத்தில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.</p><p>பாமகவின் நிழல் பட்ஜெட்டில் இருந்து கருத்துக்களை பெற்றோம் -  எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</p><h2>எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</h2><p>விவசாயிகள் வாங்கிய ரூ.21,000 கோடி கடனை தவெக அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.</p><p>விவசாயக்கடன் முழு தள்ளுபடி என நாங்கள் சொல்லவில்லை. நீங்கள் தான் சொன்னீர்கள்.</p><p>ரூ.21,000  கோடி கடனை தள்ளுபடி செய்கிறோம் எனக்கூறிவிட்டு வெறும் ரூ.6,000 கோடி மட்டுமே தள்ளுபடி செய்துள்ளீர்கள்.</p><p>தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி 1.30 கோடி பெண்களுக் திமுக அரசு உரிமைத்தொகை கொடுத்தது.</p><p>நான் முதல்வன் திட்டத்தால் ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆக அதிகம் பேர் பயிற்சி பெறுகின்றனர்.</p><p>திமுக ஆட்சியில் திடீர் திடீரென மழை பெய்தது. தவெக ஆட்சியில் மழையே பெய்யவில்லை.</p><p>நெல், கரும்பிற்கான ஊக்கத்தொகை தொடர்பாக தவெக - திமுக காரசார விவாதம் நடைபெற்றது.</p><h2>எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</h2><p>எவ்வளவு கடன் தள்ளுபடி செய்ய முடியும் என்பது தெரிந்து தான் வாக்குறுதி அளிக்க வேண்டும்.</p><p>திமுக இடைக்கால பட்ஜெட்டில் கரும்புக்கு ரூ.4000 கொடுப்போம் என கூறி இருந்தோம்.</p><p>திமுக ஆட்சியில் ரூ.19,500 கோடி கடன் தள்ளுபடி செய்தோம். </p> <h2>அமைச்சர் வினோத்</h2><p>விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை படிப்படியாகவே திமுக அரசு உயர்த்தியது.</p><p>திமுக ஆட்சியில் தேர்தல் அறிக்கையில் சொன்னது போல் நெல்லுக்கு ரூ.2500, கரும்பிற்கு ரூ.3500 உயர்த்தி தரவில்லை.</p><p>புதிய ஆட்சி அள்ளி தருவார்கள் என எதிர்பார்த்தனர் விவசாயிகள். ஆனால் கிள்ளி தருகிறீர்கள் - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</p><h2>அமைச்சர் ஆனந்த்</h2><p>வாய்க்கால் தகராறுக்கு கூட சரிசெய்து விட்டீர்களா என இரவு பகல் பாராது போன் செய்கிறார் முதல்வர் விஜய்.</p><p>நாங்களும் தினந்தோறும் டென்ஷனாகத்தான் இருக்கிறோம்.</p><p>கரும்பு டன்னுக்கு ரூ.4,500 கொடுப்போம் என தவெக வாக்குறுதி அளித்தது.</p><p>எங்கள் ஆட்சிக்காலத்தில் அமைச்சர்கள் டென்ஷனாகத்தான் இருப்போம். நீங்கள் ரிலா்்ஸாக இருக்கிறீர்கள் - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</p> <p>கரும்பு டன்னுக்கு ரூ.4000 கொடுத்தது வரலாற்றில் முதல்முறை. விவசாயிகள் நலனுக்காக வரலாறு படைத்துள்ளார்  முதலமைச்சர் விஜய் - செங்கோட்டையன்</p><p>விவசாயிகள் மீது குண்டாஸ் போட்ட ஆட்சி திமுக ஆட்சி - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பிஸியாகவே இருக்கிறார் -எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</p> <p>திமுக உறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உரையாற்றினார்.</p><p>கொள்கையை பேசி பேசி மக்கள் மனதை பிடித்தவர்கள் திராவிட இயக்கத்தினர்.</p><p>பட்ஜெட்டில் மாற்றத்தை காணவில்லை. ஏமாற்றம் தான் மிஞ்சியது.</p><p>கடந்த 5 ஆண்டுகாலம் தமிழகத்தில் விவசாயிகள் போராட்டம் இன்றி வாழ்ந்தார்கள்.</p><p>தமிழக பட்ஜெட் மீதான 2-ம் நாள் விவாதம் தொடங்கியது.</p><h2>முதலமைச்சர் விஜய்</h2><p>தமிழ்நாட்டின் நிதிநிலை சரியாக இல்லை என விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் உரையாற்றினார்.</p><p>நெல், கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். </p><p>நெல் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் சன்னரக நெல்லுக்கு ரூ.2,750 வழங்கப்படும்.</p><p>பொது நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2.600 வழங்கப்படும்.</p><p>கரும்புக்கான ஊக்கத்தொகை ஒரு டன்னுக்கு ரூ.709.50 உயர்த்தி வழங்கப்படும்.</p><p>வரலாற்றிலேயே முதல்முறையாக நெல்லுக்கு ஊக்கத்தொகை ரூ.156 வரை உயர்த்தப்பட்டுள்ளது.</p> <p>முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.</p><p>முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வரவேற்பு</p><p>தனித் தீர்மானத்தை மத்திய அரசு ஏற்காது என்பதால் சட்டமாக இயற்ற வேண்டும் என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ கோரிக்கை.</p><h2>அமைச்சர் ராஜ்மோகன்</h2><p>முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது அமைச்சர் ராஜ்மோகன் உரையாற்றினார்.</p><p>மொழியின் பெயரை தங்கள் பிள்ளைகளுக்கு வைத்து அழகு பார்க்கும் கூட்டம் இது.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்து என்பது உலகத்தாய் வாழ்த்து.</p><p>இனி பொது நிகழ்ச்சிகள், கல்வி நிலையங்கள், எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ  அங்கெல்லாம் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே முதலில் ஒலிக்கும் அதற்காக தீர்மானம் நிறைவேற்றியவர் என்ற சரித்திரத்தில் முதல்வரின் பெயரே நிலைக்கும் அவரை வாழ்த்தும் இந்த தீர்மானத்தை வரவேற்கிறேன்.</p><p>தனித்தீர்மானத்தின் மீது ஐயூஎம்எல் எம்எல்ஏவும் அமைச்சருமான ஷாஜகான் ஆதரவு அளித்து உரையாற்றினார்.</p><p>மொழி உணர்வை சீண்டி பார்க்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது.</p> <p>முதலமைச்சர் கொண்டு வந்துள்ள தனித்தீர்மானத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு அளித்தது.</p><p>மாநில அரசுகள் பின்பற்றும் தனித்துவ விவகாரங்களில் மத்திய அரசின் தலையீடு இருக்கக்கூடாது.</p> <p>தமிழ்த்தாய் வாழ்த்து தனித்தீர்மானத்தின் மீது பாமக எம்எல்ஏ சிவகுமார் உரையாற்றினார்.</p><p>பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதலமைச்சர் இருக்க வேண்டும்.</p><p>பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்களை தமிழக அரசு நியமிக்க வேண்டும்.</p><h2>வன்னி அரசு</h2><p>ஒரே நாடு, ஒரே மொழி என்பதற்காக தேசிய இனங்களின் அடையாளங்களை அழிக்க முயற்சி.</p><p>தமிழர் அடையாளத்தை உலகுக்கு பறைசாற்றும் தீர்மானம் இது.</p><p>தமிழ் தேசியமும் திராவிடமும் வேறு வேறு என பேசும் அபாயகரமான அரசியல்.</p><p>முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானத்தின் மீது அமைச்சர் வன்னிஅரசு உரையாற்றினார். </p><p>முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு விசிக ஆதரவு.</p><p>தமிழ்நாடு, தமிழர் என்ற அரசியல் தான் இன்றும் தொடர்கிறது.</p>   <p>தமிழ்த்தாய் வாழ்த்து தனித்தீர்மானத்தின் மீது காங்கிரஸ் எம்எல்ஏவும் அமைச்சருமான விஸ்வநாதன் உரையாற்றினார்.</p><p>முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் 8.5 கோடி தமிழ் மக்களால் ஏற்கப்பட்டுள்ளது.</p><p>மனேன்மணியம் சுந்தரனார் பல்கலையில் தமிழுக்கு ஏற்பட்ட அவமானம்.</p> <h2>முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்தின் மீது எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.</h2><p>1981-ல் மதுரையில் 5-வது தமிழ்நாட்டை நடத்தியவர் எம்.ஜி.ஆர்.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது யாருக்கும் எதிரான நடவடிக்கை அல்ல.</p><p>தமிழ் என்ற வரும்போது இந்த பேரவை ஒரே குரலில் ஒலிக்க வேண்டும்.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தமிழ்மொழியின் தொன்மை, பண்பாட்டின் அடையாளம்.</p><p>தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனம், அரசு நிறுவனங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்படுவது தமிழர்களின் உணர்வு.</p><p>முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது திமுக எம்எல்ஏ கோவி செழியன் உரையாற்றினார். </p><p>தமிழ்த்தாய் வாழ்த்திற்கு 3-ம் இடம் என்று சொல்லும்போது அவமானமாக இருக்கிறது.</p><p>தமிழ்மொழியை தேசிய மொழியாக்கி செம்மொழியாக்கியவர் கலைஞர் கருணாநிதி.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அரசு அலுவலகங்களில் பாட அரசாணை வெளியிட்டவர் கலைஞர்.</p><p>முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு திமுக ஆதரவு அளித்தது.</p><p>தமிழ்நாட்டில் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடும் வகையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர்</p> <p>1891-ம் ஆண்டு சுந்தரனாரால் இயற்றப்பட்ட மனோன்மணீயம் நாடக நூலின் பாயிரம்.</p><p>1970 நவம்பர் 23-ல் அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என அரசாணை கொண்டுவரப்பட்டது.</p><p>2021 டிச.12-ல் தமிழ்நாட்டின் பாடலாக தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் அளிக்கப்பட்டது.</p><p>பொது நிகழ்ச்சிகளின் தொடக்கத்தின் முதலாக தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும்.</p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>தமிழின் பெருமையை சொல்ல திருக்குறள் ஒன்று போதாதா?</p><p>தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முதலிடம் கொடுப்பது தானே மாநில உரிமை.</p><p>தமிழ் என்று சொன்னாலே ஒட்டுமொத்த தமிழ்நாடே ஒன்றாக வந்து நிற்கும்.</p><p>தமிழ் மொழியின் பெருமைய பாதுகாப்பதில் தவெக அரசு சமரசம் செய்யாது.</p> <h2>முதலமைச்சர் விஜய்  உரை</h2><p>தாய் எப்படி புனிதமோ, அதை போன்றே தாய் மொழியும்.</p><p>தாய் நமக்கு மிகப்பெரிய புனிதம் எனில் நாம் எல்லோரும் போற்றும் தமிழ்த்தாய் பற்றி சொல்லவா வேண்டும்.</p><p>தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் பவர்.</p><p>இந்தியாவின் நெற்றில் இருக்கும் பொட்டு தான தமிழ் மொழி.</p><p>தமிழும், தமிழனும் இல்லாத நாடு ஏது?</p> <p>தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமல்ல, அது நமது உயிர், உணர்வு - முதலமைச்சர் விஜய்</p><p>தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என சட்டசபை ஏகமனதாக தீர்மானிக்கிறது.</p><p>சட்டசபை முன்னாள் உறுப்பினர் சுப்பிரமணியன் என்சிற கோமுகி மணியனுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவதை உறுதி செய்ய தனித்தீர்மானம் கொண்டு வரப்பட இருக்கிறது.</p><p>தமிழ்நாடு சட்டப்பேரவை நிதிநிலை கூட்டத்தொடர் அமர்வு தொடங்கியது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-resolution-priority-tamizh-thai-vazhthu">தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: சட்டசபையில் இன்று தனித்தீர்மானம்</a></p> ]]></content:encoded></item><item><title>‘அருகே அருகே அவளும் வந்தாலே’ - ‘ஐ எம் கேம்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/aruge-aruge-avalum-vandhale-first-song-from-the-movie-i-am-game-released</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/aruge-aruge-avalum-vandhale-first-song-from-the-movie-i-am-game-released#comments</comments><guid isPermaLink="false">d11e016b-0155-4e39-9c40-b6f76309928c</guid><pubDate>Mon, 10 Aug 2026 15:16:17 +0000</pubDate><atom:updated>2026-08-10T15:16:17.199Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Kayadu Lohar,கயாடு லோஹர்,Dulquer Salmaan,துல்கர் சல்மான்,I&apos;m Game,ஐ எம் கேம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/mm81gy8j/New-Project-2026-08-10T204041.298.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘அருகே அருகே அவளும் வந்தாலே’ - ‘ஐ எம் கேம்’ படத்தின் 2வது பாடல் வெளியீடு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/mm81gy8j/New-Project-2026-08-10T204041.298.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆர்டிஎக்ஸ் இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் துல்கர் சல்மான், கயாடு லோஹர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளப் படம் ‘ஐ எம் கேம்’. இவர்களோடு மிஸ்கின், கதிர், வினய், சம்யுக்தா விஸ்வநாதன் மற்றும் சாண்டி மாஸ்டர் ஆகியோரும் நடித்துள்ளனர். </p><p>அதிர்ஷ்டத்தை அதிகம் நம்பும் ஒருவன் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களை அடிப்படையாக கொண்டு படம் உருவாகியுள்ளது. படத்தை துல்கர் சல்மான், ஜாம் வர்கீஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். </p><p>ஜேக்ஸ் பெஜாய் படத்திற்கு இசையமைத்துள்ளார். படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆக.20ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான அருகே அருகே வெளியாகி உள்ளது.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/ubEBotsVatU"></iframe></figure>]]></content:encoded></item><item><title>M.Ed. மாணவர்கள் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நாளை தொடக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-m-ed-admissions-online-registration-from-august-11</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-m-ed-admissions-online-registration-from-august-11#comments</comments><guid isPermaLink="false">6a3b4443-9827-4d72-ae24-57a0ad07cae7</guid><pubDate>Mon, 10 Aug 2026 15:16:14 +0000</pubDate><atom:updated>2026-08-10T15:16:14.550Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணவர்கள் சேர்க்கை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/xjccxkvk/Vishwanathan001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் விஸ்வநாதன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/xjccxkvk/Vishwanathan001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>2026-27-ஆம் கல்வியாண்டிற்கான அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். (M.Ed.) மாணாக்கர் சேர்க்கைகான இணையதள விண்ணப்பப் பதிவு 11.08.2026 முதல் 20.08.2026 வரை நடைபெறவுள்ளது.</p><p>தமிழ்நாட்டில் எம்.எட். பாடப்பிரிவுகள் கொண்டுள்ள 6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 300 இடங்கள் உள்ளன. இவ்விடங்களுக்கு 2026-27-ஆம் கல்வியாண்டில் மாணாக்கர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 11.08.2026 அன்று முதல் இணையவழியில் தொடங்கும்.</p><p>மாணாக்கர்கள் <a href="https://www.tngasa.in">www.tngasa.in</a> என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பப் பதிவினை மேற்கொள்ளலாம். மேற்படி இணையதள முகவரியில் 20.08.2026 வரை பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.</p><h2>தரவரிசை பட்டியல்</h2><p>பின்னர், இதற்கான தரவரிசைப் பட்டியல் 25.08.2026 அன்று வெளியிடப்படும். மாணாக்கர் சேர்க்கை 27.08.2026 முதல் 31.08.2026 வரை நடைபெறும். மேலும், முதலாம் ஆண்டு வகுப்புகள் 01.09.2026 அன்று முதல் துவங்கும்.</p><p>இவ்வாறு உயர் கல்வித்துறை பெ. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பல் ஈறுகளை பாதுகாப்பது ஏன் முக்கியம்?-மருத்துவர்கள் அறிவுரை!</title><link>https://www.maalaimalar.com/health/generalmedicine/why-protecting-gums-is-important-dentists-advice</link><comments>https://www.maalaimalar.com/health/generalmedicine/why-protecting-gums-is-important-dentists-advice#comments</comments><guid isPermaLink="false">e353004e-7b06-415a-893a-0019dedf4ea0</guid><pubDate>Mon, 10 Aug 2026 15:10:36 +0000</pubDate><atom:updated>2026-08-10T15:10:36.445Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Health,ஆரோக்கியம்,health care tips,உடல்நலம்,Bleeding gums,Toothgums,பல் ஈறுகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/9a9fkxmw/teeth.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Bleeding gums]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/9a9fkxmw/teeth.jpg?w=280" width="280"></media:thumbnail><category>பொது மருத்துவம் (General Medicine)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பற்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் பற்களைப் போலவே பல் ஈறுகளுக்கும் முக்கியப் பங்கு உள்ளது. பற்களைச் சுற்றி அவற்றைத் தாங்கி நிற்கும் திசுக்களாக ஈறுகள் செயல்படுகின்றன. ஈறுகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படும்போது, அது பற்களின் உறுதியையும் பாதிக்கக்கூடும். எனவே பல் துலக்குவதுடன் ஈறுகளின் ஆரோக்கியத்தையும் முறையாகப் பராமரிப்பது அவசியம்.</p><h2>ஈறுகளில் <strong>ஏற்படும் பிரச்</strong>சனைகள்</h2><p>ஈறுகளில் ஏற்படும் பொதுவான பிரச்சனைகளில் ஈறு அழற்சி முக்கியமானது. பற்களின் இடுக்குகளில் உணவுத் துகள்கள் மற்றும் பாக்டீரியாக்கள் சேர்ந்து பிளாக் எனப்படும் படலத்தை உருவாக்குகின்றன. இதை முறையாக அகற்றாமல் விட்டால் ஈறுகளில் வீக்கம், சிவத்தல் மற்றும் ரத்தக்கசிவு ஏற்படலாம். </p><p>ஆரம்ப நிலையில் ஏற்படும் ஈறு அழற்சியை முறையான பல் சுத்தம் மற்றும் வாய்ச் சுகாதாரத்தின் மூலம் கட்டுப்படுத்த முடியும். ஆனால் அது நீண்ட காலம் கவனிக்கப்படாமல் இருந்தால் பற்களைத் தாங்கி நிற்கும் எலும்பு மற்றும் திசுக்களையும் பாதிக்கும் ஈறு நோயாக மாறக்கூடும்.</p><h2>ஈறுகளில் ரத்த<strong>ம் வருவது எதைக்</strong> குறிக்கிறது?</h2><p>பல் துலக்கும்போது அல்லது உணவை கடிக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது சாதாரணமானது அல்ல. பெரும்பாலும் இது ஈறுகளில் ஏற்பட்டுள்ள அழற்சியின் அறிகுறியாக இருக்கலாம். </p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/k9j2ocw7/gums.jpg" /></figure><p>கடினமாக பல் துலக்குவது, பிளாக் மற்றும் டார்டர் படிதல் போன்றவையும் காரணமாக இருக்கலாம். தொடர்ந்து ஈறுகளில் ரத்தம் வந்தால் அதை அலட்சியப்படுத்தாமல் பல் மருத்துவரிடம் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.</p><h2>ஈறுகள் வீக்க<strong>ம் மற்றும் வ</strong>லி</h2><p>ஈறுகள் சிவந்து வீங்குவது, தொடும்போது வலி ஏற்படுவது, வாய் துர்நாற்றம் மற்றும் ஈறுகள் மெதுவாகப் பற்களில் இருந்து விலகுவது போன்றவை ஈறு நோயின் அறிகுறிகளாக இருக்கலாம். சிலருக்கு பற்கள் ஆடுவது அல்லது பற்களுக்கு இடையில் இடைவெளி அதிகரிப்பது போன்ற மாற்றங்களும் ஏற்படலாம்.</p><h2>ஈறுகளை எவ்<strong>வாறு பாதுகாப்ப</strong>து?</h2><p>தினமும் குறைந்தது இரண்டு முறை மென்மையான பிரஷ் பயன்படுத்தி பற்களையும் ஈறுகளின் விளிம்பையும் மெதுவாகச் சுத்தம் செய்ய வேண்டும். பற்களுக்கு இடையில் சிக்கியுள்ள உணவுத் துகள்கள் மற்றும் பிளாக்கை அகற்ற ஃப்ளாஸ் அல்லது பல் இடை சுத்தம் செய்யும் கருவிகளைப் பயன்படுத்தலாம். </p><p>அதிகப்படியான சர்க்கரை உணவுகள் மற்றும் சர்க்கரை நிறைந்த பானங்களை அடிக்கடி உட்கொள்வதைத் தவிர்ப்பதும் பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்திற்கு உதவும். புகையிலைப் பொருட்களைத் தவிர்ப்பது மிகவும் முக்கியம். புகைபிடித்தல் மற்றும் புகையிலைப் பயன்பாடு ஈறு நோய்களின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.</p><h2>பல் மருத்து<strong>வர் பரிசோதனை அவசி</strong>யம்</h2><p>வலி வந்த பிறகு மட்டுமே பல் மருத்துவரை அணுகுவது சரியான அணுகுமுறை அல்ல. அவ்வப்போது பல் பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் பிளாக் மற்றும் டார்டர் படிதல், ஈறு நோய் மற்றும் பிற பல் பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற முடியும்.</p><h2>ஆரோக்<strong>கியமான ஈறுகள்-ஆரோக்கியமா</strong>ன புன்னகை</h2><p>ஈறுகள் ஆரோக்கியமாக இருந்தால் பற்களும் வலுவாக இருக்க உதவும். ஈறுகளில் ரத்தக்கசிவு, வீக்கம், தொடர்ந்து வலி, வாய் துர்நாற்றம் அல்லது பற்கள் ஆடுவது போன்ற அறிகுறிகள் இருந்தால் சுயமாக சிகிச்சை செய்வதை விட பல் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது பாதுகாப்பானது. </p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/2nofjp5m/tee.jpg" /></figure><p>தினசரி வாய்ச் சுகாதாரத்தை முறையாகப் பின்பற்றுவதும், தேவையான நேரத்தில் பல் பரிசோதனை செய்துகொள்வதும் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமான புன்னகையைப் பாதுகாக்க உதவும்.</p>]]></content:encoded></item><item><title>மழை பெய்தும் மாறாத நிலை... இந்தியாவில் தொடரும் பருவமழை பற்றாக்குறை!</title><link>https://www.maalaimalar.com/news/national/monsoon-deficit-continues-in-india-despite-recent-rains</link><comments>https://www.maalaimalar.com/news/national/monsoon-deficit-continues-in-india-despite-recent-rains#comments</comments><guid isPermaLink="false">3360cdb2-c29f-4102-be80-1485895cb988</guid><pubDate>Mon, 10 Aug 2026 14:50:26 +0000</pubDate><atom:updated>2026-08-10T14:50:26.797Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,பருவமழை,monsoon,Monsoon deficit,பருவமழை பற்றாக்குறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/2xgrdkq7/monsoon.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Monsoon deficit  India]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/2xgrdkq7/monsoon.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி, ஹரியானா மற்றும் கிழக்கு ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் கடந்த வாரத்தில் பெய்த நல்ல மழை, அப்பகுதிகளில் நிலவி வந்த மழைப் பற்றாக்குறையைச் போக்க உதவிய போதிலும், நாட்டின் ஒட்டுமொத்த பருவமழைப் பற்றாக்குறையில் இது பெரிய அளவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) தகவல்களின் அடிப்படையில் நாட்டின் முக்கிய விவரங்கள் பின்வருமாறு:</p><h2>மழை ப<strong>ற்றாக்கு</strong>றை நிலவரம்</h2><p>கடந்த 2-ஆம் தேதி நிலவரப்படி '12%' ஆக இருந்த நாட்டின் ஒட்டுமொத்த பருவமழை பற்றாக்குறை, நேற்று (ஆகஸ்ட் 9) '11%' ஆக மட்டுமே குறைந்துள்ளது. கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் அதிகபட்சமாக '25%' மழை பற்றாக்குறை பதிவாகியுள்ளது. தெற்கு தீபகற்ப இந்தியாவில் '17%' மற்றும் வடமேற்கு இந்தியாவில் '11%' பற்றாக்குறை பதிவாகியுள்ளது. பீகார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் 20% மற்றும் அதற்கு மேற்பட்ட கடுமையான மழை பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளன.</p><h2>விவசாய<strong>த்தில் இதன்</strong> தாக்கம்</h2><p>* நாட்டின் மொத்த விவசாயப் பரப்பளவில் சுமார் '88%' பகுதிகளில் கரீஃப் பருவச் சாகுபடி/விதைப்பு ஏற்கனவே முடிவடைந்துவிட்டது.</p><p>* இதனால், கடந்த வார மழை விதைப்பு பரப்பளவில் நிலவிய பற்றாக்குறையை 1% மட்டுமே குறைக்க உதவியுள்ளது.</p><p>* நாட்டின் முக்கிய கரீஃப் பயிரான 'நெல் சாகுபடி பரப்பு', கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இன்னமும் 4% குறைவாகவே உள்ளது. பீகார் மற்றும் ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் நெல் மற்றும் சோளம் சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.</p><h2>அணை <strong>நீர்மட்டம் &amp; மின் உ</strong>ற்பத்தி</h2><p>இம்மாதத்தில் பெய்து வரும் இந்த மழை, நாட்டின் முக்கிய அணைகள் மற்றும் நீர்நிலைகளின் நீர் இருப்பை உயர்த்த உதவும். இது நீர்மின் உற்பத்திக்கும் மற்றும் அடுத்த சாகுபடி பருவத்திற்கும் சாதகமான சூழலை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>வானிலை <strong>முன்னறிவிப்பு</strong></h2><p>வங்காளதேசம் மற்றும் வட வங்கக்கடலோரப் பகுதிகளில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, ஆகஸ்ட் 13 முதல் மேற்கு வங்காளம், ஒடிசா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் மழை மீண்டும் தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஜார்க்கண்டில் சட்டசபையை நோக்கி பேரணி சென்ற மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது தவறானது: ராகுல் காந்தி</title><link>https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-speaks-onjharkhand-protest-crackdown-use-of-force-against-students-is-wrong</link><comments>https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-speaks-onjharkhand-protest-crackdown-use-of-force-against-students-is-wrong#comments</comments><guid isPermaLink="false">4d879c93-f0c4-4557-a397-3f5ff9d92837</guid><pubDate>Mon, 10 Aug 2026 14:46:19 +0000</pubDate><atom:updated>2026-08-10T14:46:19.587Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Jharkhand,மாணவர்கள் போராட்டம்,ஜார்க்கண்ட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/o6htc9yw/RahulGandhi0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல் காந்தி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/o6htc9yw/RahulGandhi0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜார்க்கண்ட் மாநிலத்தில் வேலை வாய்ப்புக்கான அம்மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக குற்றஞ்சாட்டி, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாநிலம் முழுவதும் பரவியது. இதனால் ஜார்க்கண்ட் மாநில அரசு பல்வேறு கட்டங்களாக மாணவர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை.</p><p>இதற்கிடையே பல அதிகாரிகளை அரசு நீக்கியது. இருந்தபோதிலும் போராட்டத்தை மாணவர்கள் கைவிடவில்லை. இன்று ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தொடங்கியது. மாணவர்கள் சட்டமன்றத்தை நோக்கி பேரணி மேற்கொண்டனர்.</p><h2>போலீசார் தடியடி</h2><p>காவல்துறையினர் அமைத்திருந்த தடுப்புகளை மீறி மாணவர்கள் முன்னேறிச் சென்றனர். இதனால் மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் பல மாணவர்கள் காயம் அடைந்தனர். இந்த நிலையில் மாணவர்களுக்கு எதிராக அடக்குமுறையை ஏவியது தவறானது என்று ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்க பதிவில் "ஜார்க்கண்ட் அரசு தொடர்ந்து மாணவர்களின் குறைகளை கேட்டு, அதை உடனடியாக தீர்க்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>பாஜக மீது அமைச்சர் குற்றச்சாட்டு</h2><p>இன்று காலை ஜார்க்கண்ட் சட்டசபை கூட்டம் தொடங்கியது. போராட்டம் குறித்து அமளி ஏற்பட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி அமைச்சர் சுதிவ்யா குமார், மாணவர்களின் போராட்டத்தை எதிர்க்கட்சியான பாஜக கைப்பற்றிக் கொண்டதாக குறு்றம்சாட்டினார்.</p><p>மேலும், மாணவர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக எல்லா முயற்சிகளையும் அரசு எடுத்துக் கொண்டு வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், மாணவர்களின் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். எனினும், போராட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டுக் கொண்டு வந்து பாஜக, அவர்களை தவறாக வழி நடத்துகிறார்கள் சட்டசபையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்தார்.</p><h2>எதிர்க்கட்சித் தலைவர் கைது</h2><p>இதனிடையே தேர்வு முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி, பாஜகவை சேர்ந்த ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான பாபுலால் மராண்டி ஆகியோர் தலைமையில் பாஜக தொண்டர்கள் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் இல்லத்தின் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, முதல்வர் இல்லத்தின் வெளியே போராட்டம் நடத்திய பாபுலால் மராண்டி உள்ளிட்ட பாஜக தலைவர்களை மாநிலக் காவல்துறை கைது செய்து அப்புறப்படுத்தியது.</p><h2>பாபுலால் குற்றச்சாட்டு</h2><p>மாணவர்கள் இரண்டு வாரங்களுக்கும் மேலாகத் தீவிரப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், ஜார்க்கண்ட் அரசு அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் தேவையின்றி காலந்தாழ்த்தி வருவதாக பாபுலால் மராண்டி சாடினார்.</p><p>JPSC, JSSC மற்றும் CGL தேர்வுகளில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற மாணவர்களின் முதன்மைக் கோரிக்கையை நிறைவேற்றாமல், மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே மாநில அரசு முயல்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.</p>]]></content:encoded></item><item><title>கொலம்பியாவில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/world/powerful-74-magnitude-earthquake-in-colombia</link><comments>https://www.maalaimalar.com/news/world/powerful-74-magnitude-earthquake-in-colombia#comments</comments><guid isPermaLink="false">35a3d556-d7d3-4af2-9c24-3e8933b35042</guid><pubDate>Mon, 10 Aug 2026 14:44:39 +0000</pubDate><atom:updated>2026-08-10T14:44:39.148Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Earthquake,Ecuador,ஈக்வடார்,கொலம்பியா,Colombia,நிலநடுக்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/3y1p7yel/New-Project-2026-08-10T200410.659.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கொலம்பியாவில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/3y1p7yel/New-Project-2026-08-10T200410.659.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு கொலம்பியாவில் உள்ளூர் நேரப்படி காலை  7:34 மணிக்கு, 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்  பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. </p><p>கொலம்பியாவின் பசிபிக் கடலோரப் பகுதியான சோகோ மாகாணத்தில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் சான் ஜோஸ் டெல் பால்மார் என்ற கிராமத்திற்கு அருகில், சுமார் 107 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகக் கொலம்பியா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p>நிலநடுக்கம் ஏற்பட்ட சோகோ மாகாணத்தின் தலைநகரான கிப்டோ மற்றும் பிற பகுதிகளில் உள்ள கட்டடங்கள் பலத்த சேதமடைந்துள்ளன. பலர் காயமடைந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>சாண்டியாகோ டி கலி நகரில் குறைந்தது 20 கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் அந்நகர மேயர் தெரிவித்துள்ளார். </p><p>இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் நாட்டின் தலைநகரான பொகோட்டா மட்டுமன்றி, அண்டை நாடுகளான ஈக்வடார் மற்றும் வெனிசுலா வரையிலும் உணரப்பட்டுள்ளது. பொகோட்டாவில் உள்ள உயரமான கட்டடங்களில் இருந்து மக்கள் அலறியடித்துக்கொண்டு தெருக்களில் தஞ்சமடைந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>இரு பிரிவினருக்கு இடையேயான மோதலால் பாதிரியார்கள் மீது தாக்குதல்: தேவாலயத்தை பூட்டிய காவல்துறை</title><link>https://www.maalaimalar.com/news/national/clash-between-two-factions-in-church-police-lock-church-after-attack-on-priests</link><comments>https://www.maalaimalar.com/news/national/clash-between-two-factions-in-church-police-lock-church-after-attack-on-priests#comments</comments><guid isPermaLink="false">511bc5d3-78f4-4856-9ac9-a343ee9ec7a3</guid><pubDate>Mon, 10 Aug 2026 14:28:27 +0000</pubDate><atom:updated>2026-08-10T14:28:27.032Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>kerala,church attack,கேரளா,malankara church,ஆலயம் தாக்குதல்,மலங்காரா ஆலயம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/en5ppc4n/Untitled-design-32.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ இரு பிரிவினரின் வாக்குவாதம் வன்முறையாக மாறி பாதிரியார்கள் தாக்கப்பட்டதால் ஆலயத்தை பூட்டிய காவல்துறை ]]></media:title><media:description type="html"><![CDATA[ Kerala Church]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/en5ppc4n/Untitled-design-32.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரளாவில் மூவாற்றுப்புழா அருகே உள்ள பிரமடத்தில் அமைந்துள்ள மலங்கரா ஆலயத்தில் ஆர்த்தடாக்ஸ் மற்றும் ஜேக்கபைட் பிரிவுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஆலயத்திற்குள் மோதிக்கொண்டனர்.</p><p><strong>கேரளாவில் ஆலயத்தில் மோதல்</strong></p><p>கொச்சியில் அமைந்துள்ள புனித யோவான் பெத்லகேம் ஆலயம் ஜேக்கபைட் என்ற பிரிவினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் பாதிரியார்கள் தலைமையிலான ஆர்த்தடாக்ஸ் என்ற பிரிவினர், நீதிமன்ற உத்தரவு தங்களுக்குச் சாதகமாக இருப்பதாக கூறி ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தில் கூட்டம் நடத்த வந்தனர்.</p><p>அப்போது மற்றொரு ஜேக்கபைட் பிரிவினர் ஆலயத்திற்குள் பிரார்த்தனை நடத்திக் கொண்டிருந்தனர். அங்கு வந்த ஆர்த்தடாக்ஸ் பிரிவினர்களிடம் முன்சிப் நீதிமன்றம் தங்களுக்குச் சாதகமாக தீர்ப்பளித்துள்ளதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.</p><p>வாய்மொழி வாக்குவாதம் வன்முறையாக மாறியதை தொடர்ந்து, இரு தரப்பு பாதிரியார்களும் ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு தாக்குதலில் ஈடுபட்டனர். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள், பிரச்சனையை சுமூகமாக தீர்க்கும்படி கூறினர்.</p><p><strong>ஆலயத்தை பூட்டிய காவல்துறை</strong></p><p>ஆனால் பதற்றம் தொடர்ந்து அதிகரித்ததால், காவல்துறை அதிகாரிகள் ஆலயத்தை தற்காலிகமாக பூட்டு போட்டு பூட்டினர். இதைத்தொடர்ந்து திங்கட்கிழமை மாலை இருதரப்பை சேர்ந்தவர்களும் மாவட்ட நிர்வாகத்தில்டம் பேச்சுவார்த்தை நடத்தும்படி காவல்துறை கூறியது.</p><p>ஆலயத்தில் நடந்த தாக்குதலில் பாதிரியார்கள் காயமடைந்ததாக இரு தரப்பினரும் குற்றம்சாட்டி தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.</p><p><strong>பாதிரியார்கள் குற்றச்சாட்டு</strong></p><p>இதுகுறித்து ஜேக்கபைட் சிரியன் ஆலயத்தின் ஊடகப் பிரிவுத் தலைவர் குரியகோஸ் மோர் கூறுகையில், “தேவாலயத் தகராறு தொடர்பான பிரச்சினைகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதால், ஒரு சுமுகமான தீர்வைக் காண்பதற்காக மாநில அரசு இரு தரப்பினருடனும் மத்தியஸ்தப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.</p><p>இந்தச் சூழ்நிலையில், ஜேக்கபைட் பிரிவினரின் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயங்களில் வேண்டுமென்றே பிரச்சனையை உருவாக்குவதும் பதற்றத்தைத் தூண்டுவதும் அமைதி முயற்சிகளைப் பாதிக்கும்” என்று அவர் கூறினார்.</p><p>இதையடுத்து ஆர்த்தடாக்ஸ் பிரிவர் சேர்ந்த ஊடகப் பிரிவின் தலைவரான யுஹானோன் மோர் கூறுகையில், “புனித குர்பானாவைக் கொண்டாட வந்த பாதிரியார் மற்றும் பக்தர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் நாங்கள் கண்டிக்கிறோம்.</p><p>சட்டப்படி நியமிக்கப்பட்ட பிரிவினருக்கு இடையூறு செய்யக்கூடாது என்று மூவாற்றுப்புழா துணை நீதிமன்றம் தெளிவாகத் தீர்ப்பளித்துள்ளது” என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ஓடும் ரெயிலில் செல்போன் பறிப்பு: தவறி விழுந்து வாலிபர் பரிதாப பலி-குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/mobile-snatching-on-moving-train-youth-dies-after-fall-in-gujarat</link><comments>https://www.maalaimalar.com/news/national/mobile-snatching-on-moving-train-youth-dies-after-fall-in-gujarat#comments</comments><guid isPermaLink="false">9cf7afff-09e9-47a2-8f68-c4c895a0c461</guid><pubDate>Mon, 10 Aug 2026 14:13:48 +0000</pubDate><atom:updated>2026-08-10T14:13:48.086Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>train accident,gujarat,குஜராத் மாநிலம்,ராஜஸ்தான்,Panoli,பாணோலி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/luqbecxg/train.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gujarat Train accident  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/luqbecxg/train.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குஜராத் மாநிலம் பாணோலி ரெயில் நிலையத்தில், இயங்கிக்கொண்டிருந்த ரெயிலில் இருந்து மர்ம நபர் ஒருவன் செல்போனைப் பறித்ததால், ரெயிலில் இருந்து தவறி விழுந்த 32 வயது இளைஞர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். நெஞ்சை நடுங்க வைக்கும் இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.</p><p> உயிரிழந்தவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அசோக் குர்ஜார் (32) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் தனது குடும்பப் வாழ்வாதாரத்திற்காக ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். கடந்த 6 ஆம் தேதி அன்று, அசோக் குர்ஜார் ராஜஸ்தானின் சவாய் மாதோபூரிலிருந்து சூரத் நோக்கி ஜெய்ப்பூர் - பாந்த்ரா சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பொதுப் பெட்டியில் பயணித்துக் கொண்டிருந்தார்.</p><h2>திடீர் <strong>தாக்கு</strong>தல்</h2><p>ரெயில் பாணோலி ரெயில் நிலையத்தைக் கடந்து மெதுவாகச் சென்று கொண்டிருந்தபோது, அசோக் ரெயிலின் வாசலுக்கு அருகே அமர்ந்திருந்தார். அப்போது பிளாட்பாரத்தில் இருந்த பெஞ்சில் தூங்குவது போல் நடித்த நபர் ஒருவன், ரெயில் நெருங்கியதும் திடீரென எழுந்து ஓடிவந்து அசோக்கின் கையில் இருந்த செல்போனைப் பறித்துக் கொண்டு தப்பினான். எதிர்பாராத இந்தத் தாக்குதலால் நிலைதடுமாறிய அசோக், ரெயிலைப் பிடித்துத் தொங்க முயன்றார். ஆனால் வேகம் காரணமாக சில நொடிகளில் பிடிநழுவி பிளாட்பாரத்தில் பலமாக விழுந்து படுகாயமடைந்தார்.</p><h2>காவ<strong>ல்துறை நடவடிக்கை</strong></h2><p>விபத்துக்குப் பிறகு உடனடியாக மீட்கப்பட்ட அசோக், அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள ரெயில்வே காவல்துறை, ரெயில் நிலைய சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறது. பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் துணிச்சலாகச் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு, ஒருவரின் உயிரிழப்புக்குக் காரணமான அந்த மர்ம நபரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>குஜராத்தில் அரங்கேறியுள்ள இச்சம்பவம், ரெயில் பயணிகளிடையே பாதுகாப்பு குறித்த பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எந்த வரியும் விதிக்கப்படாது - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்</title><link>https://www.maalaimalar.com/news/national/no-tax-will-be-levied-on-upi-transactions-union-minister-nirmala-sitharaman</link><comments>https://www.maalaimalar.com/news/national/no-tax-will-be-levied-on-upi-transactions-union-minister-nirmala-sitharaman#comments</comments><guid isPermaLink="false">8db06255-8e77-4c5d-9a6e-adf71badc4e7</guid><pubDate>Mon, 10 Aug 2026 13:58:35 +0000</pubDate><atom:updated>2026-08-10T13:58:35.521Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>நாடாளுமன்றம்,நிர்மலா சீதாராமன்,nirmala Sitharaman,UPI transactions,parliament,யுபிஐ பரிவர்த்தனைகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/p9xh5wgr/New-Project-2026-08-10T191606.820.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எந்த வரியும் விதிக்கப்படாது - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/p9xh5wgr/New-Project-2026-08-10T191606.820.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும்நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் வரிவிதிப்பு மற்றும் இதர சட்டங்கள் (திருத்த) மசோதா நிறைவேறியது. </p><p>கடந்த வாரம் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, இன்று மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. </p><p>மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த மசோதா எந்த வரியையும் அல்லது பரிவர்த்தனை கட்டணத்தையும் புதிதாக முன்மொழியவில்லை என தெளிவுப்படுத்தினார். </p><p>“நுகர்வோர் யுபிஐ கட்டணம் ஏதேனும் செலுத்துவார்களா என்றால் இல்லை. யுபிஐ தொடங்கப்பட்டதிலிருந்தே நுகர்வோருக்கு இலவசமாகவே இருந்து வருகிறது. மேலும், ஒவ்வொரு இந்தியரும் எந்தவித பரிவர்த்தனைக் கட்டணமும் செலுத்தாமல் இந்த உடனடி டிஜிட்டல் சேவையைத் தொடர்ந்து பயன்படுத்துவார்கள்” என தெரிவித்தார்.</p><p>வரிவிதிப்பு மற்றும் இதர சட்டங்கள் (திருத்த) மசோதா, 2026 மூன்று முக்கிய சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்கிறது. பணம் செலுத்துதல் மற்றும் தீர்வுமுறைகள் சட்டம், 2007, வருமான வரிச் சட்டம், 2025, நிதிச் சட்டம், 2026  ஆகிய மூன்று பிரிவுகளில் திருத்தத்தை மேற்கொண்டுள்ளது.</p><p>பணம் செலுத்துதல் சட்டத்தில் திருத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுமோ என பயனர்களிடையே அச்சம் எழுந்துவந்தது. இந்நிலையில் அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார் அமைச்சர் நிர்மலா சீதாராமன். </p><p>எதிர்காலத்தில் யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிக்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டாலும், அந்த சுமை பொதுமக்கள் மீது விழாது. அது பெரிய வணிகர்களிடம் மட்டுமே வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>SPIDER-MAN: BRAND NEW DAY- இந்தியாவில் வசூல் எவ்வளவு தெரியுமா..? </title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/spider-man-brand-new-day-box-office-record-india</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/spider-man-brand-new-day-box-office-record-india#comments</comments><guid isPermaLink="false">674557be-c822-49a2-9886-7b5f10eaa090</guid><pubDate>Mon, 10 Aug 2026 13:29:55 +0000</pubDate><atom:updated>2026-08-10T13:29:55.402Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tom Holland,Zendaya,ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே,டாம் ஹாலண்ட்,Spider-Man: Brand New Day,ஜெண்டாயா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/at37uij2/SPIDER.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Spider-Man: Brand New Day]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/at37uij2/SPIDER.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஹாலிவுட்டின் நட்சத்திர நாயகன் டாம் ஹாலண்ட் நடிப்பில் ஜூலை 30 அன்று வெளியான 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' திரைப்படம், இந்தியாவில் வெளியான 12 நாட்களிலேயே ரூ.500 கோடி Gross வசூல் மைல்கல்லைக் கடந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இந்திய பாக்ஸ் ஆபிஸ் வரலாற்றில் ரூ.500 கோடி வசூலை எட்டிய முதல் ஹாலிவுட் திரைப்படம் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.</p><h2>இந்தி<strong>ய பாக்ஸ் ஆபீஸ் சாதனைகள்</strong> </h2><p>ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' (ரூ.477.50 கோடி gross) மற்றும் 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' (ரூ.445 கோடி gross) ஆகிய முன்னணி ஹாலிவுட் படங்களின் சாதனைகளை முறியடித்து இந்தியாவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.</p><p>2 நாட்களில் - ரூ.100 கோடி</p><p>3 நாட்களில் - ரூ.200 கோடி</p><p>8 நாட்களில் - ரூ.400 கோடி</p><p>12 நாட்களில் - ரூ.500+ கோடி</p><h2>நிக<strong>ர வசூல்</strong> </h2><p>இந்தியாவில் இதன் நிகர வசூல் மட்டும் ரூ.415 கோடியைத் தாண்டியுள்ளது. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகி, குறிப்பாக தமிழ் மற்றும் தெலுங்கு மாநிலங்களில் 50%-க்கும் அதிகமான திரையரங்க ஆக்கிரமிப்புடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.</p><h2>உலக<strong>ளாவிய வசூல் மழை</strong> </h2><p>உலகளவில் வெளியான 10-12 நாட்களுக்குள் இத்திரைப்படம் $1.67 பில்லியன் (சுமார் ரூ.14,000 கோடிக்கு மேல்) வசூலித்து உலக பாக்ஸ் ஆபீஸை அதிரவைத்துள்ளது. வட அமெரிக்காவில்  மட்டும் $655.1 மில்லியன் வசூலித்துள்ளது. வட அமெரிக்காவைத் தவிர்த்து சர்வதேச சந்தைகளில் $1 பில்லியனுக்கும் மேல் வசூலித்துள்ளது. தற்போதைய வேகத்தைப் பார்த்தால், உலகளவில் விரைவில் $2 பில்லியன் வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>திரை<strong>ப்படத்தின் சி</strong>றப்பம்சங்கள்</h2><p>மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் (MCU) 38-வது படமான இதனை டெஸ்டின் டேனியல் க்ரெட்டன் இயக்கியுள்ளார். கெவின் ஃபெய்கி மற்றும் ஏமி பாஸ்கல் இணைந்து தயாரித்துள்ளனர். டாம் ஹாலண்ட் உடன் எம்.ஜே ஆக ஜெண்டாயா, நெட் ஆக ஜேக்கப் பேட்டலான், சாடி சிங்க், ஜான் பெர்ந்தல் (பனிஷர்) மற்றும் மார்க் ரஃப்பாலோ (ஹல்க்) ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். </p><p>தொடர்ந்து அனைத்து தரப்பு மக்களிடையேயும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருவதால், இத்திரைப்படத்தின் வசூல் வேட்டை வரும் வாரங்களிலும் நீடிக்கும் என்று வர்த்தக பகுப்பாய்வாளர்கள் கணித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பெங்களூருவில் பப் மற்றும் ஹோட்டல்களில் அழுகிய, பூஞ்சைகள் சூழ்ந்த இறைச்சிகளால் அதிர்ந்து போன அதிகாரிகள்: பாய்ந்தது நடவடிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/45-kg-of-rotten-beef-seized-in-bengaluru-after-star-hotel-raids</link><comments>https://www.maalaimalar.com/news/national/45-kg-of-rotten-beef-seized-in-bengaluru-after-star-hotel-raids#comments</comments><guid isPermaLink="false">9b4f1c03-792a-416b-8a16-b116c8602a85</guid><pubDate>Mon, 10 Aug 2026 13:20:13 +0000</pubDate><atom:updated>2026-08-10T13:20:13.737Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>FSSAI,Food Safety Officer,உணவு பாதுகாப்புத் துறை,உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்,rotten meat,அழுகிய இறைச்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/wuqkn19g/Untitled-design-31.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பெங்களூரு மதுபான விடுதியில் 45 கிலோ அழுகிய இறைச்சி பறிமுதல்]]></media:title><media:description type="html"><![CDATA[ Bengaluru Food Safety ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/wuqkn19g/Untitled-design-31.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடகாவில் உள்ள பகிர் நகரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, அழுகிய மற்றும் பூஞ்சை பாதித்த இறைச்சிகள், காலாவதியான பால் பொருட்கள் மற்றும் முறையற்ற முறையில் சேமிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் கண்டறியப்பட்டது. </p><p>இதைத் தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள ஒரு மதுபான விடுதி மூடப்பட்டு, மேலும் பல உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. </p><p>பெங்களுரில் யுபி சிட்டி ஆடம்பர வணிக வளாகத்தில் உள்ள மதுபான விடுதியில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டபோது, சமையலறை சுகாதாரமற்ற நிலையில் பராமரிக்கப்படுவது கண்டறியப்பட்டது.</p><p>மேலும் சமையலறையில் அழுகிய நிலையில் இருந்த கோழி மற்றும் மாட்டிறைச்சி கண்டெடுக்கப்பட்டு, அந்த இறைச்சியில் பூஞ்சை வளர்ந்திருந்தது கண்டறியப்பட்டது.</p><h3><strong>காலாவதியான உணவு பொருட்கள்</strong></h3><p>அப்போது சுமார் 10 நாட்கள் காலாவதி தேதி கடந்த பால் மற்றும் தயிர் பொருட்கள், 45 கிலோ அழுகிய கோழி மற்றும் மாட்டிறைச்சி, 6 கிலோ காய்கறிகள், கட்லெட்டுகள் உட்பட மொத்தம் 51 கிலோ உணவுப் பொருட்கள் உண்ணத் தகுதியற்றவை எனக் கண்டறியப்பட்டது. </p><p>மேலும் 15 லிட்டர் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்யும் கண்டறியப்பட்டு, அப்புறப்படுத்தப்பட்டது.</p><h3><strong>உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை</strong></h3><p>முன்னதாக ராயல் செயின் ஹோட்டலில் அதிகாரிகள் 50 கிலோ வாத்துக்கறியையும் 5 கிலோ மீன்களையும் பறிமுதல் செய்தனர். மெட்ராஸ் கிச்சனில் 5 கிலோ பச்சை பட்டாணியும், டெஸ்கான் ஹோட்டலில் இருந்து 5 கிலோ காளான்களும் பறிமுதல் செய்யப்பட்டன.</p><p>சென்செஸ் ஹோட்டலில் அதிகாரிகள் 3 கிலோ மீன்களைப் பறிமுதல் செய்ததோடு, கேக், உருளைக்கிழங்கு மற்றும் டாக்கோஸ் அடங்கிய மேலும் 7 கிலோ உணவுப் பொருட்களை அப்புறப்படுத்தினர்.</p><p>பெங்களூருவில் உள்ள பல புகழ்பெற்ற ஹோட்டல்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கும் கோல்ட்மேன் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் ராதாகிருஷ்ணா ஃபுட்லேண்ட் நிறுவனங்களால் இயக்கப்படும் உணவு சேமிப்பு மற்றும் விநியோக மையங்களும் ஆய்வு செய்யப்பட்டன.</p><p>இந்த ஆலைகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்போது, காலாவதி தேதி நெருங்கிய சுமார் 70 கிலோ சோயா சாஸ் மற்றும் பல்வேறு இதர சாஸ்கள் கண்டெடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டதாக உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.</p><p>உணவு பாதுகாப்புத் துறை ஐந்து இறைச்சி மாதிரிகளையும், 13 இதர உணவு மாதிரிகளையும் சேகரித்து, அவற்றை ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.</p><p>ஸ்ட்ராபெர்ரி சுவையுடைய பானங்கள் மற்றும் காலாவதி தேதி நெருங்கிய பிற பானங்கள் உட்பட, சுமார் 10 லிட்டர் குளிர்பானங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.</p><p>இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை கூறுகையில், “சேமிப்பு நிலைமைகள், உணவு பொருட்களின் தரம் மற்றும் வளாகங்களில் பின்பற்றப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது.</p><p>உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின் கீழ் உள்ள உணவு பாதுகாப்பு மற்றும் தர தேவைகளை மீறுவதாக கண்டறியப்பட்ட உணவு வணிக நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை தொடங்கப்படும்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘நான் கிறிஸ்தவன்... தாக்குதல், தற்காப்பு இரண்டும் தெரியும்’ - சட்டப்பேரவையில் ஆவேசமான அமைச்சர் மரியவில்சன்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/i-am-a-christian-i-know-both-how-to-attack-and-how-to-defend-minister-maria-wilson-speaks-passionately-in-the-legislative-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/i-am-a-christian-i-know-both-how-to-attack-and-how-to-defend-minister-maria-wilson-speaks-passionately-in-the-legislative-assembly#comments</comments><guid isPermaLink="false">a1008beb-bbd5-43ab-91b0-af3bc9b81510</guid><pubDate>Mon, 10 Aug 2026 13:19:02 +0000</pubDate><atom:updated>2026-08-10T13:19:02.088Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்,tamil,Minister Maria Wilson,அமைச்சர் மரியவில்சன்,MLA Rajendran,எம்எல்ஏ ராஜேந்திரன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/2deowv9h/New-Project-2026-08-10T183204.163.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘நான் கிறிஸ்தவன்... தாக்குதல், தற்காப்பு இரண்டும் தெரியும்’ - சட்டப்பேரவையில் ஆவேசமான அமைச்சர் மரியவில்சன்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/2deowv9h/New-Project-2026-08-10T183204.163.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் தொடர்பான விவாத கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்றைய விவாதத்தின்போது பேசிய கடையநல்லூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன்.,</p><p>“நிதியமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது, நான் ஒரு சொற்பொழிவாளன், தமிழ் ஆர்வலன் என்ற முறையில் உன்னிப்பாக கவனித்தேன். அவர் ஆங்கிலத்தில் பெரும்புலமை பெற்றவராக இருப்பார் என்று நினைக்கிறேன். ஆங்கில உச்சரிப்பு நேர்த்தியாக இருந்தது.</p><p>தமிழில் சில சொற்றொடர்களை பேசாமல் விட்டுவிட்டார். சில தொடர்கள் இலக்கண பிழையுடன் அமைந்தன. இதை குறையாகவோ, குற்றச்சாட்டாகவோ அவையில் வைக்க விரும்பவில்லை. </p><p>பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தனது கட்சிக்காக வெகுவாக வாதாடி, பலம் சேர்க்கிறார் என்பதை நாம் காண்கிறோம். வருங்காலத்தில் நிதியமைச்சர் நிதிநிலை அறிக்கையை வாசிக்கும் நிலை இருக்குமானால், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர் பிழையின்றி பேச முயற்சிகள் எடுக்கவேண்டும்.” என தெரிவித்தார்.</p><p>அதற்கு சபாநாயகர்,  “எம்.எல்.ஏ ராஜேந்திரன் பேசும்போது பட்ஜெட் என்று சொல்கிறார். தமிழில் நிதிநிலை அறிக்கை என்று சொன்னால் நன்றாக இருக்கும்” என்றார்.</p><p>தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் கருத்துக்கு பதில் கொடுக்கும் வகையில் பேசிய நிதியமைச்சர் மரிய வில்சன்.,</p><p>நான் ஒரு கூடைப்பந்து விளையாட்டாளர். தாக்குதல், தற்காப்பு இரண்டும் எனக்குத் தெரியும். எப்போது தாக்கவேண்டும், எப்போது தடுக்கவேண்டும் என எனக்குத் தெரியும். நீங்கள் கத்தினால் நானும் கத்துவேன். நான் 25 முதல் 30 ஆண்டுகளாக கல்வித்துறையில் இருந்திருக்கிறேன். என்னுடைய தொடர்புமுறை எல்லாம் ஆங்கிலத்தில்தான் இருந்திருக்கின்றன.</p><p>இந்த மாமன்றத்தில் அவர் கூறியவாறு கொஞ்ச நாளாகவே உருவ கேலி, சாதி மற்றும் பெண்களைக் கேலி செய்தவர்கள், இப்போது மொழி கேலிக்கு வந்துவிட்டார்கள். எனக்கு ஒரு மொழியை எங்கள் கிறிஸ்தவம் கற்றுக் கொடுத்துள்ளது. அன்பு மொழி, அமைதி மொழி, இரக்கத்தின் மொழி. எவ்வளவு தமிழ் படித்தாலும், பாதி பேருக்கு இது தெரியாது.</p><p>நான் பைபிள் படித்திருக்கிறேன். கிறிஸ்தவனாக பிறந்துள்ளேன். உங்களுக்கு அந்த மொழிதான் வேண்டும் என்றால், உங்கள் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஐந்து வருடமாக மக்களவையில் இருந்துள்ளார். அவர் பேசியதே கிடையாது. நான் முயற்சி செய்கிறேன். </p><p>நான் உங்களுக்காக எதையும் மாற்றிக்கொள்ள முடியாது. நான் இப்படித்தான் பேசுவேன். என்னுடைய ஸ்டைல் இதுதான். ராஜேந்திரனுக்காக என்னை மாற்றிக்கொள்ள முடியாது. கேலி செய்கிறீர்களா? என  கோவமாக பதிலளித்தார். </p>]]></content:encoded></item><item><title>ஆந்திராவில் கால்பதித்தது அல்லு அர்ஜுனின் &apos;AAA சினிமாஸ்&apos;: விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்ட மல்டிபிளக்ஸ் திறப்பு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/allu-arjun-aaa-cinemas-grand-opening-in-visakhapatnam</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/allu-arjun-aaa-cinemas-grand-opening-in-visakhapatnam#comments</comments><guid isPermaLink="false">042a0525-c2a4-42f7-a99d-0e72c44f550e</guid><pubDate>Mon, 10 Aug 2026 12:33:34 +0000</pubDate><atom:updated>2026-08-10T12:33:34.749Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அல்லு அர்ஜுன்,allu arjun,Visakhapatnam,ஆந்திரா,விசாகப்பட்டினம்,AAA Cinemas</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/2bcr6nmk/allu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Allu Arjun ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/2bcr6nmk/allu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான 'ஐகான் ஸ்டார்' அல்லு அர்ஜுன், ஐதராபாத்தைத் தொடர்ந்து தனது 'AAA Cinemas' (Asian Allu Arjun Cinemas) திரையரங்கத்தை ஆந்திரப் பிரதேசத்திற்கும் விரிவுபடுத்தியுள்ளார். விசாகப்பட்டினம் சாலக்ராமபுரத்தில் உள்ள புதிய 'இனார்பிட் மாலில்' அமைந்துள்ள இந்த அதிநவீன மல்டிபிளக்ஸ் வளாகத்தை நேற்று திறந்து வைத்தார்.</p><h2>அ<strong>திநவீன திரை</strong>கள்</h2><p>மொத்தம் 8 திரைகள் மற்றும் 1,556 இருக்கை வசதிகளைக் கொண்டுள்ள இந்த வளாகத்தில், இந்தியாவின் முதல் 'LED Projection Q-Luxon' திரை நிறுவப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்திலேயே மிகப்பெரிய அளவிலான (70 அடி × 30 அடி) பிரம்மாண்ட LED சினிமா திரை இங்கு அமைக்கப்பட்டுள்ளது. </p><p>விஐபி பார்வையாளர்களுக்காகப் பிரத்யேகமாக 'ஐகான் ஸ்டார் லவுஞ்ச்' மற்றும் ரீக்லைனர் இருக்கைகளுக்கான தனி நுழைவாயில் வசதி செய்யப்பட்டுள்ளது. சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் தனிநபர் காட்சிகளுக்காக '82 Lounge' எனும் பிரத்யேக வசதியும் இதில் இடம் பெற்றுள்ளது.</p><h2>பிசின<strong>ஸ் கூட்டாண்மை</strong></h2><p>ஐதராபாத் அமீர்பேட்டையில் அமைந்த முதல் 'AAA சினிமாஸ்' திரையரங்கின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, தெலுங்கு திரையுலகின் பிரபல விநியோக நிறுவனமான 'ஏசியன் சினிமாஸ்' உடன் இணைந்த கூட்டு முயற்சியாக அல்லு அர்ஜுன் இத்திட்டத்தை ஆந்திராவில் விரிவுபடுத்தியுள்ளார்.</p><h2>நெகிழ்ச்சி<strong>யுடன்</strong> பேசிய அல்லு அர்ஜுன்</h2><p>திரையரங்கைத் திறந்து வைத்துப் பேசிய அல்லு அர்ஜுன், "எனது முதல் திரைப்படமான 'கங்கோத்ரி' காலத்திலிருந்தே விசாகப்பட்டினத்துடன் எனக்கு ஆழமான உணர்வுப்பூர்வமான பிணைப்பு உண்டு. இந்த அழகான நகரத்தில் AAA சினிமாஸைக் கொண்டு வருவது எனது நீண்ட நாள் கனவு. ரசிகர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த சினிமா அனுபவத்தை வழங்குவதற்காகவே இது அதிநவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>ரஷியா மீது சரமாரி டிரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன்: 13  பொதுமக்கள் உயிரிழப்பு- பலர் காயம்</title><link>https://www.maalaimalar.com/news/world/child-among-13-killed-in-one-of-deadliest-ukraine-drone-strikes-in-russia</link><comments>https://www.maalaimalar.com/news/world/child-among-13-killed-in-one-of-deadliest-ukraine-drone-strikes-in-russia#comments</comments><guid isPermaLink="false">0a4ac9f3-ac99-43f8-8655-56dcf48ea7be</guid><pubDate>Mon, 10 Aug 2026 12:30:24 +0000</pubDate><atom:updated>2026-08-10T12:30:24.482Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிரோன் தாக்குதல்,உக்ரைன் ரஷியா போர்,Drone Attacks,ukraine russia war</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/qox20d81/RussiaDroneAttacks001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரஷியா மீது உக்ரைன் தாக்குதல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/qox20d81/RussiaDroneAttacks001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய ரஷியாவில் உள்ள நிஸ்னேகாம்ஸ்க் நகரில் உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதல் 13 பேர் உயிரிழந்தனர். </p><h2>எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் குறிவைத்து தாக்குதல்</h2><p>உக்ரைனில் எல்லையில் இருந்து சுமார் 1000 கி.மீ. தொலைவில் உள்ள தொழில் நகரமான நிஸ்னேகாம்ஸ்க்கில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.</p><p>அதேவேளையில் இந்த தாக்குதலில் 13 பொதுமக்கள் உயிரிழந்ததாக ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 75 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் 21 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.</p><p>ரஷியாவின் டாடர்ஸ்டான் எண்ணெய் வளங்களுக்கான மிகப்பெரிய பிராந்தியம் ஆகும். இங்கு ஏராளமான மிகப்பெரிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளன. ரஷியாவின் பதிலடி தாக்குதலுக்கான இந்த பகுதியை இலக்காக கொண்டு உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது.</p><h2>வெளிநாட்டினரும் உயிரிழப்பு</h2><p>உக்ரைன் ராணுவம் சார்பில் டெனேகோ எண்ணெய் சுத்திகரிப்பு அலை மீது தாக்குதல் நடத்திய தெரிவித்துள்ளது. இதன்மூலம் ரஷிய ராணுவத்திற்கான எரிபொருள் சப்ளையை குறைக்க முடியும் என்று உக்ரைன் தெரிவித்துள்ளது.</p><p>இதில் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களும் கொல்லப்பட்டதாக ரஷியா குற்றம்சாட்டியுள்ளது.</p><h2>உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்</h2><p>இதற்கிடையே உக்ரைன் மீதும் ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது. கார்கீவ் பிராந்தியத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள கிராமத்தில் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.</p><p>இந்திய நேரப்படி நேற்றிரவில் இருந்து இன்று காலை 456 உக்ரைன் டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம தெரிவித்துள்ளது. இதில் எத்தனை டிரோன்கள் இலக்குகளை அடைந்து சேதம் விளைவித்தது என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. அதேவேளையில், ரஷியா 126 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விசாரணைக்கு அழைத்துச் செல்பவர்களை துன்புறுத்தக் கூடாது - காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/do-not-mistreat-those-taken-in-for-questioning-madras-high-court-orders-police</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/do-not-mistreat-those-taken-in-for-questioning-madras-high-court-orders-police#comments</comments><guid isPermaLink="false">2811056b-8722-47c1-9097-cfdf413ef38b</guid><pubDate>Mon, 10 Aug 2026 12:20:27 +0000</pubDate><atom:updated>2026-08-10T12:20:27.619Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>காவல்துறை,சென்னை உயர் நீதிமன்றம்,Madras High Court,police,விசாரணை,investigation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/67d47jtz/New-Project-2026-08-10T174958.091.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விசாரணைக்கு அழைத்துச் செல்பவர்களை துன்புறுத்தக் கூடாது - காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/67d47jtz/New-Project-2026-08-10T174958.091.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விசாரணைக்கு அழைத்துச் செல்பவர்களை துன்புறுத்தக்கூடாது என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>விசாரணைக்கு முறையான சம்மன் அனுப்பப்பட்டு, அதில் விசாரணை தேதி, நேரம் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும் என்றும், விசாரணை குறித்த விவரங்கள் காவல் நிலையப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.</p><p>விசாரணை என்ற பெயரில் காவல் துறையினர் துன்புறுத்த கூடாது என உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த ராஜா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.</p><p>இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன்,  “விசாரணை என்ற பெயரில் மக்களை துன்புறுத்தக் கூடாது என காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. </p><p>காவல் துறையின் விசாரணையில் வழக்கமாக நீதிமன்றம் தலையிடுவதில்லை; அதேநேரம் துன்புறுத்தல்களை பார்த்து கண்மூடி கொண்டிருப்பதும் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சவப்பெட்டியில் பாய்ந்த மின்சாரம்: துக்கம் விசாரிக்க சென்ற மூதாட்டி உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/puducherry/puducherry-funeral-electric-leak-claims-elderly-life</link><comments>https://www.maalaimalar.com/news/puducherry/puducherry-funeral-electric-leak-claims-elderly-life#comments</comments><guid isPermaLink="false">597c3fa1-1f9f-4ebf-bd20-01866be80e6b</guid><pubDate>Mon, 10 Aug 2026 12:16:41 +0000</pubDate><atom:updated>2026-08-10T12:16:41.280Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>புதுச்சேரி,dead,மூதாட்டி பலி,Pondycherry,சவப்பெட்டி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/c5ikpcdv/freezer-box.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Freezer box]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/c5ikpcdv/freezer-box.jpg?w=280" width="280"></media:thumbnail><category>புதுச்சேரி (Puducherry)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>புதுவை அரியாங்குப்பம் அருகே காக்கையன் தோப்பு பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது49). இவர் உடல் நலக்குறைவால் இறந்து போனார்.</p><p>இவரது உடலுக்கு உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் சவபெட்டியில் (பிரீசர் பாக்ஸ்) வைக்கபட்டு இருந்தது.</p><p>இன்று காலை அதே பகுதியை சேர்ந்த ராஜாத்தி (75) மற்றும் ஒருவர் துக்கம் விசாரிக்க சென்றனர். அங்கு சவபெட்டியில் கை வைத்து அஞ்சலி செலுத்தினர்.</p><p>அப்போது திடீரென அவர்கள்  இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் உஷாராகி மற்றவர்கள் சவபெட்டியை தொடாத வண்ணம்   தடுத்துவிட்டனர்.</p><p>மேலும், சவபெட்டிக்கு கொடுக்கப்பட்ட மின் இணைப்பை துண்டித்தனர். தொடர்ந்து மின்சாரம் தாக்கி காயமடைந்தவர்களை மீட்டு புதுவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.</p><p>அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ராஜாத்தி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து மின்சாரம் தாக்கி காயமடைந்த மற்றொருவர் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருவதால் மின்சார கசிவு ஏற்பட்டு இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்த்தாய் வாழ்த்தை கடைசியாக பாட வேண்டும் என எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை - மத்திய அரசு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-order-has-been-issued-mandating-that-the-tamil-thai-vazhthu-be-sung-last-central-government</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-order-has-been-issued-mandating-that-the-tamil-thai-vazhthu-be-sung-last-central-government#comments</comments><guid isPermaLink="false">0e2f7477-1049-4ddb-979c-611c6e7c302f</guid><pubDate>Mon, 10 Aug 2026 12:00:43 +0000</pubDate><atom:updated>2026-08-10T12:00:43.911Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,சென்னை உயர் நீதிமன்றம்,Madras HC,Centre,தமிழ்த்தாய் வாழ்த்து,Tamil Thai Vaazthu</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/rzg4xpuy/New-Project-2026-08-10T172703.811.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்த்தாய் வாழ்த்தை கடைசியாக பாட வேண்டும் என எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை - மத்திய அரசு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/rzg4xpuy/New-Project-2026-08-10T172703.811.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அரசு நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது தொடர்பாக தமிழ்நாட்டிற்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. </p><p>அதாவது அரசு நிகழ்ச்சிகளில் மாநிலப்பாடல் எப்போது பாடப்பட வேண்டும் என எந்த உத்தரவும் மாநில அரசுகளுக்கு பிறப்பிக்கப்படவில்லை எனவும், தேசியப் பாடலும் தேசிய கீதமும் பாடப்படும் பட்சத்தில், முதலில் தேசியப் பாடலையும், அதைத் தொடர்ந்து தேசிய கீதத்தையும் பாட வேண்டும் என்பதே வழிகாட்டுதல் என மத்திய அரசு தெளிவுப்படுத்தியுள்ளது. </p><p>மாநிலத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடக்கோரி, சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த அனன்யா ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்திருந்த பொதுநலமனு இன்று தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.</p><p>அப்போது, “தேசியப் பாடலும், தேசிய கீதமும் பாடப்படும் பட்சத்தில், முதலில் தேசியப் பாடலையும், அதைத் தொடர்ந்து தேசிய கீதத்தையும் பாட வேண்டும் என்பதே வழிகாட்டுதல் என, 2026 ஆகஸ்ட் 9 அன்று மத்திய அரசு ஒரு விளக்கத்தை வெளியிட்டது," என மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர். எல். சுந்தரேசன் தெரிவித்தார்.</p><p>இதன்மூலம் நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதால் எந்தப் பிரச்னையும் இல்லை என்பது தெளிவாகியுள்ளது. </p><h2>தொடங்கிய சர்ச்சை</h2><p>முதலமைச்சர் விஜய் பதவி ஏற்பு விழாவிலேயே தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் சர்ச்சை தொடங்கியது. ஆனால் அது ஆளுநர் நிகழ்ச்சி என்பதால் வந்தே மாதரம் முதலில் பாடப்பட்டதாக தவெக அமைச்சர்கள், கூட்டணி தலைவர்கள் விளக்கம் அளித்தனர். </p><p>இச்சூழலில் கடந்த 2026 ஜூலை 28 அன்று திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.</p><p>இந்த விழாவில் முதலில் வந்தே மாதரமும், இரண்டாவது தேசிய கீதமும், மூன்றாவது தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. தமிழ்நாட்டின் மாநிலப்பாடலும், அப்பாடலை எழுதியவருமான மனோன்மணியம் பெயரைக் கொண்ட பல்கலைக்கழகத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது பலதரப்பிலிருந்தும் கண்டனங்களை பெற்றது.</p><p>இதனிடையே விழாவிற்கு முன்னரே பல்கலைக்கழக வேந்தர் இதுதொடர்பாக பேசியிருந்தார். இதனால் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதனும் இந்த பட்டமளிப்பு விழாவை புறக்கணித்திருந்தார். </p><h2>தீர்மானம்</h2><p>இவ்வாறு இவ்விவகாரம் பெரும் பேசுபொருளாக தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தார். அதன்படி இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படும் என்று தவெக தலைமையிலான அரசு தீர்மானமும் நிறைவேற்றியுள்ளது.</p><p>ஆனால் இதற்கு முன்னரே, 2021-ம் ஆண்டே திமுக அரசு மாநில நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி அரசாணை வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>ஆகஸ்ட் 14-ல் வெளியாகிறது சூர்யாவின் &apos;விஸ்வநாத் &amp; சன்ஸ்&apos; : ஆகஸ்ட் 11 முதல் முன்பதிவு துவக்கம்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/surya-s-viswanath-and-sons-releases-august-14-pre-booking-from-august-11</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/surya-s-viswanath-and-sons-releases-august-14-pre-booking-from-august-11#comments</comments><guid isPermaLink="false">1e0eb014-2f48-47c6-be73-a60bc5f044d1</guid><pubDate>Mon, 10 Aug 2026 12:00:27 +0000</pubDate><atom:updated>2026-08-10T12:00:27.234Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Mamitha Baiju,சூர்யா,suriya,மமிதா பைஜூ,Gvprakash kumar,VenkyAtluri,Vishwanath&amp;Sons,விஸ்வநாத்&amp;சன்ஸ்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/4d5wlqru/Vishwanath-Sons" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vishwanath & Sons ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/4d5wlqru/Vishwanath-Sons?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE">சூர்யா </a>நடிப்பில், இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள '<a href="https://www.maalaimalar.com/topic/vishwanath-and-sons">விஸ்வநாத் &amp; சன்ஸ்</a>' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14, 2026 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.</p><p>இத்திரைப்படத்திற்கான முன்பதிவுகள் நாளை, ஆகஸ்ட் 11-ம் தேதி மாலை 6:00 மணி முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கவுள்ளது எனப் படக்குழு புதிய போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.</p><h2>புதிய போஸ்டர் வெளியீடு:</h2><p>இன்று படக்குழு வெளியிட்டுள்ள புதிய போஸ்டரில், நடிகர் சூர்யா ஒரு பச்சிளம் குழந்தையைத் தனது கைகளில் ஏந்தியபடி மிகவும் பாசமான தந்தை தோற்றத்தில் காட்சியளிக்கிறார். </p><p>சூர்யாவின் முந்தைய ஆக்ஷன் மற்றும் மாஸ் படங்களிலிருந்து மாறுபட்டு, ஒரு எமோஷனல் மற்றும் ஃபீல்-குட் குடும்பத் திரைப்படமாக இது இருக்கும் என்பதை இப்போஸ்டர் உறுதிப்படுத்தியுள்ளது.</p><h2>கதைக்களம் என்ன?</h2><p>இத்திரைப்படத்தில் நடிகர் சூர்யா, 40 வயதுகளில் இருக்கும் சர்வதேச அளவிலான ஒரு துப்பாக்கி சுடுதல் விளையாட்டு வீரராக 'சஞ்சய் விஸ்வநாத்' என்ற முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். </p><p>ஒரு நடுத்தரக் குடும்பத்து மனிதன், தனது விளையாட்டு லட்சியம் மற்றும் குடும்பப் பொறுப்புகளுக்கு இடையே சந்திக்கும் சவால்களையும், தந்தை-மகன் பாசத்தையும் மையமாகக் கொண்டு இப்படம் இருக்கும் என்று ட்ரைலர் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் இப்படத்தை கணித்து வருகின்றனர்.</p><h2>வாத்தி', 'லக்கி பாஸ்கர்' இயக்குநருடன் முதல் கூட்டணி:</h2><p>தமிழில் தனுஷ் நடித்த 'வாத்தி' மற்றும் துல்கர் சல்மான் நடித்த 'லக்கி பாஸ்கர்' ஆகிய வெற்றித் திரைப்படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி, முதன்முறையாக நடிகர் சூர்யாவுடன் இணைந்துள்ளார். </p><p>சூர்யாவின் 'விண்டேஜ்' எமோஷனல் நடிப்பை மீண்டும் திரையில் கொண்டு வரும் வகையில் இதன் திரைக்கதையை அவர் அமைத்துள்ளார்.</p><h2>பிரம்மாண்ட நட்சத்திரப் பட்டாளம்:</h2><p>'பிரேமலு' திரைப்படம் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமான நடிகை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9C%E0%AF%81">மமிதா பைஜூ</a> இப்படத்தில் சூர்யாவுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். </p><p>இவர்களுடன் ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D">ஜி. வி. பிரகாஷ்</a> இசையமைத்துள்ளார்.</p><h2>சுதந்திர தின விடுமுறை கொண்டாட்டம்:</h2><p>சுதந்திர தினத்தை முன்னிட்டும், வார இறுதி விடுமுறையை முன்னிட்டும் இப்படம் ஆகஸ்ட் 14 அன்று உலகெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸாகிறது. </p><p>சித்தாரா என்டர்டெய்ன்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் தயாரித்துள்ள இப்படத்தின் திரையரங்கு டிஜிட்டல் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">THE FAMILY IS COMING HOME ❤️<br><br>And Tamil Nadu is getting ready to welcome <a href="https://x.com/hashtag/VishwanathAndSons?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#VishwanathAndSons</a> to the big screens <br><br>Bookings open tomorrow at 6PM <a href="https://x.com/hashtag/VASonAUG14th?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#VASonAUG14th</a> <a href="https://x.com/Suriya_offl?ref_src=twsrc%5Etfw">@Suriya_offl</a> <a href="https://x.com/hashtag/VenkyAtluri?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#VenkyAtluri</a> <a href="https://x.com/_mamithabaiju?ref_src=twsrc%5Etfw">@_mamithabaiju</a> <a href="https://x.com/realradikaa?ref_src=twsrc%5Etfw">@realradikaa</a> <a href="https://x.com/TandonRaveena?ref_src=twsrc%5Etfw">@TandonRaveena</a> <a href="https://x.com/gvprakash?ref_src=twsrc%5Etfw">@gvprakash</a> <a href="https://x.com/vamsi84?ref_src=twsrc%5Etfw">@vamsi84</a> <a href="https://x.com/NavinNooli?ref_src=twsrc%5Etfw">@NavinNooli</a> <a href="https://x.com/NimishRavi?ref_src=twsrc%5Etfw">@NimishRavi</a>… <a href="https://t.co/RteIh6hUiF">pic.twitter.com/RteIh6hUiF</a></p>&mdash; Primark Productions (@PrimarkProd) <a href="https://x.com/PrimarkProd/status/2086723939469033672?ref_src=twsrc%5Etfw">August 10, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>MBBS, BDS தரவரிசைப் பட்டியல் வெளியீடு: 2026-27 மருத்துவப் படிப்புகளுக்கு 72,633 பேர் விண்ணப்பம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-mbbs-bds-admissions-2026-27-rank-list-72633-applicants</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-mbbs-bds-admissions-2026-27-rank-list-72633-applicants#comments</comments><guid isPermaLink="false">edf6cf5d-de74-4c88-a1e3-e1521802950e</guid><pubDate>Mon, 10 Aug 2026 11:58:18 +0000</pubDate><atom:updated>2026-08-10T11:58:18.281Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MBBS,பல் மருத்துவம்,MBBS, BDS Rank List Released,Minister Dr. Arunraj,MBBS, BDS தரவரிசைப் பட்டியல்,அமைச்சர் டாக்டர் அருண்ராஜ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/xg3i98uz/mbbs.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MBBS, BDS Rank List Released]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/xg3i98uz/mbbs.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2026-27 கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவம் (MBBS), பல் மருத்துவம் (BDS) மற்றும் மருத்துவம் சார்ந்த (Allied &amp; Health Care Courses) பட்டப்படிப்புகளுக்கான மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்.</p><p>தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 2026-27ஆம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை விண்ணப்ப விவரங்கள், அரசு ஒதுக்கீட்டு இடங்கள், 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டன.</p><h2>72,633 பேர் <strong>விண்ணப்</strong>பம்</h2><p>MBBS மற்றும் BDS படிப்புகளுக்கான அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மொத்தம் 72,633 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதில் 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீட்டின் கீழ் 4,860 விண்ணப்பங்களும், விளையாட்டுப் பிரிவில் 468 விண்ணப்பங்களும், முன்னாள் படைவீரர் பிரிவில் 524 விண்ணப்பங்களும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 212 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.</p><h2>அரசு <strong>ஒதுக்கீட்டில் 35,926 விண்ணப்பங்கள் ஏற்</strong>பு</h2><p>2026-27ஆம் ஆண்டுக்கான MBBS மற்றும் BDS அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 41,726 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அதில் 35,926 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இவர்களில் 12,551 பேர் மாணவர்கள்; 23,375 பேர் மாணவிகள். 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீட்டில் 4,860 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 3,625 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 981 மாணவர்களும், 2,644 மாணவிகளும் இடம்பெற்றுள்ளனர். </p><p>சுயநிதி மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 30,907 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 26,956 விண்ணப்பங்கள் தகுதியானவை என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இவர்களில் 9,105 மாணவர்களும், 17,851 மாணவிகளும் உள்ளனர்.</p><h2>MBBS-க்<strong>கு 7,157 அரசு ஒதுக்கீட்டு இடங்கள்</strong></h2><p>2026-27ஆம் ஆண்டில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் MBBS படிப்புக்கு மொத்தம் 7,157 இடங்கள் உள்ளன. இதில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டின் கீழ் 4,473 இடங்களும், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 2,684 இடங்களும் உள்ளன.</p><p>BDS படிப்புக்கு அரசு ஒதுக்கீட்டின் கீழ் மொத்தம் 1,383 இடங்கள் உள்ளன. இதில் அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 213 இடங்களும், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 1,170 இடங்களும் உள்ளன.</p><h2><strong>7.5% அரசு பள்ளி மாணவர்களுக்கு 641 மருத்துவம் மற்றும் பல் மருத்துவ இடங்கள்</strong></h2><p>7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீட்டின் கீழ் MBBS படிப்பில் மொத்தம் 537 இடங்கள் உள்ளன. இதில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 335 இடங்களும், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 202 இடங்களும் உள்ளன. BDS படிப்பில் இந்த உள்ஒதுக்கீட்டின் கீழ் மொத்தம் 104 இடங்கள் உள்ளன. இதில் அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 16 இடங்களும், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் 88 இடங்களும் உள்ளன.</p><h2>நிர்வா<strong>க ஒதுக்கீட்</strong>டில் MBBS-க்கு 1,966 இடங்கள்</h2><p>சுயநிதி மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் 1,966 MBBS இடங்களும், 580 BDS இடங்களும் உள்ளன.</p><h2>Allied <strong>Health Care படி</strong>ப்புகளுக்கும் தரவரிசைப் பட்டியல்</h2><p>மருத்துவம் சார்ந்த Allied &amp; Health Care படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலும் இன்று வெளியிடப்பட்டது. B.Sc. Nursing, B.Pharm, இணை மருத்துவப் படிப்புகள், Pharm-D, DGNM மற்றும் Diploma in Pharmacy உள்ளிட்ட படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் ஜூன் 21 முதல் ஜூலை 12, 2026 வரை பெறப்பட்டன.</p><p>Allied and Healthcare Degree Courses-க்கு 66,525 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில் 65,475 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. Pharm-D 6 ஆண்டு படிப்புக்கு 12,657 விண்ணப்பங்களில் 12,263 விண்ணப்பங்களும், Pharm-D 3 ஆண்டு படிப்புக்கு 32 விண்ணப்பங்களில் 29 விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. DGNM படிப்புக்கு 18,308 விண்ணப்பங்களில் 17,676 விண்ணப்பங்களும், Diploma in Pharmacy படிப்புக்கு 13,018 விண்ணப்பங்களில் 12,718 விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.</p><h2>மருத்துவ<strong>ம் சார்ந்த படிப்</strong>புகளில் ஆயிரக்கணக்கான இடங்கள்</h2><p>Allied and Healthcare Degree Courses-ல் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 2,786 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 3,969 இடங்களும் உள்ளன. B.Sc. Nursing-ல் அரசு ஒதுக்கீட்டில் 400 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 11,807 இடங்களும் உள்ளன. B.Pharm படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் 120 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 7,234 இடங்களும் உள்ளன. Pharm-D 6 ஆண்டு படிப்பில் 1,011 இடங்களும், 3 ஆண்டு படிப்பில் 72 இடங்களும் சுயநிதி கல்லூரிகளில் உள்ளன. DGNM படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் 2,080 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 5,455 இடங்களும் உள்ளன. Diploma in Pharmacy படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் 240 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 6,540 இடங்களும் உள்ளன.</p><h2>MBBS இடங்கள் <strong>அதிகரிப்பு</strong></h2><p>2021ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் MBBS சேர்க்கை இடங்கள் அதிகரித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். திருப்பூர், திருவள்ளூர் மற்றும் நாமக்கல் ஆகிய 3 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 50 இடங்கள் வீதம் மொத்தம் 150 கூடுதல் MBBS இடங்கள் கிடைத்துள்ளன. மேலும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 700 கூடுதல் MBBS இடங்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த MBBS இடங்களின் எண்ணிக்கை 9,999 ஆகவும், BDS இடங்களின் எண்ணிக்கை 2,000 ஆகவும் உயர்ந்துள்ளதாக அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் தெரிவித்தார்.</p><h2>தமிழக அளவி<strong>ல் விழு</strong>ப்புரம் முதலிடம் </h2><p>நீட் நுழைவுத்தேர்வில் தமிழக அளவில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவன் வெங்கடபதி வேலாயுதம் 705 மதிப்பெண்களுடன் முதலிடம் பெற்றுள்ளார், புதுக்கோட்டை ஸ்ரீனிகா 700 மதிப்பெண்களுடன் 2 ஆம் இடத்தையும், விருதுநகர் சுடர் 696 மதிப்பெண்ணுடன் 3ஆம் இடத்தையும் பிடித்தனர். 7.5 சதவீத ஒதுக்கீட்டில் நாகையை சேர்ந்த தினேஷ் 599 மார்க்குடன் முதலிடம், சேலம் தரணீஷ் 595 மதிப்பெண்ணுடன் 2ஆம் இடம் பிடித்தார். </p><p>இந்த நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு செயலாளர் டாக்டர் தாரேஸ் அகமது, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் (பொறுப்பு) டாக்டர் வா. லோகநாயகி மற்றும் தேர்வுக்குழு துணை இயக்குநர்கள் டாக்டர் கராமத், டாக்டர் பாலநாக நந்தினி, டாக்டர் சாந்தினி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். </p> ]]></content:encoded></item><item><title>தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: ஒன்றிய அரசு என உச்சரிக்கவே பயப்படுகிற இந்த அரசு சட்டம் கொண்டு வருமா? முன்னாள் அமைச்சர் ரகுபதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-thai-vazhthu-issue-tamil-nadu-govt-give-private-law-former-minister-regupathy</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-thai-vazhthu-issue-tamil-nadu-govt-give-private-law-former-minister-regupathy#comments</comments><guid isPermaLink="false">d84c5dfe-a89f-48cf-b4a7-caf049c50e02</guid><pubDate>Mon, 10 Aug 2026 11:31:07 +0000</pubDate><atom:updated>2026-08-10T11:31:07.229Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,தமிழ்த்தாய் வாழ்த்து,ரகுபதி எம்.எல்.ஏ.,தவெக அரசு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/qej1nkiw/Regupathy0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முன்னாள் அமைச்சர் ரகுபதி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/qej1nkiw/Regupathy0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு அரசு இன்று தமிழ்த்தாய் வாழ்த்தினை முதலில் பாட வேண்டும் என்ற ஒரு தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறது.</p><h2>தனித் தீர்மானம்</h2><p>இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>தமிழ்நாடு அரசு இன்று தமிழ்த்தாய் வாழ்த்தினை முதலில் பாட வேண்டும் என்ற ஒரு தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறது. கடந்த திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து நிகழ்ச்சிகளிலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும். அதை சொந்த குரலிலே பாட வேண்டும் என்கின்ற உத்தரவு மூலம் அமல்படுத்தப்பட்டது.</p><p>ஆனால் இன்றைக்கு தமிழ்நாட்டின் ஆளுனர் அர்லேகர் தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவது இடத்திற்கு தள்ளிவிட்டார். திமுக ஆட்சியிலே தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலே பாடப்பட வேண்டும் என்பதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டு எல்லா நிகழ்ச்சிகளிலேயும் அது அமல்படுத்தப்பட்டது.</p><h2>ஆளுநரை கட்டுப்படுத்துமா என்பது சந்தேகம்</h2><p>எனவே இன்றைக்கு கொண்டு வந்திருக்கிற அந்த தீர்மானம் என்பது நிச்சயமாக ஆளுநரையோ மற்றவர்களையோ கட்டுப்படுத்துமா என்பது சந்தேகம்.</p><p>எனவே திமுக-வை பொறுத்தவரையில் ஒரு மசோதா கொண்டுவந்து அதன் மூலமாக இதற்கு சட்டபூர்வமான அங்கீகாரம் அளிக்க வேண்டும்.</p><p>தமிழ்நாட்டிலே தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலே பாடப்பட வேண்டும் என்கின்ற சட்டபூர்வ அங்கீகாரத்தை அரசு பெற்று தந்தால்தான் அது நிலைத்து நிற்க முடியும். ஆனால் சட்டபூர்வ அங்கீகாரத்தை அளிப்பதற்கு இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை.</p><h2>சட்டம் கொண்டு வர வேண்டும்</h2><p>ஒன்றிய அரசு என்று சொல்லவே அவர்கள் பயப்படுகிறார்கள். எனவே ஒன்றிய அரசு என்று உச்சரிக்கவே பயப்படுகிற இந்த அரசு சட்டம் கொண்டு வருமா என்பது சந்தேகம். கொண்டு வர வேண்டும் என்பது எங்களுடைய விருப்பம். கொண்டு வர வேண்டும். கொண்டு வந்தால்தான் அது நிலைத்து நிற்கும்.</p><p>இவ்வாறு முன்னாள் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>போதை பொருளை ஒழிக்க 65 சிறப்பு படைகள்- ரூ.264.14 கோடி நிதி ஒதுக்கீடு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-allocates-rs-264-14-crore-forms-65-special-forces-to-fight-drugs</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-allocates-rs-264-14-crore-forms-65-special-forces-to-fight-drugs#comments</comments><guid isPermaLink="false">ea68d024-163d-410c-a822-5e808d3609fd</guid><pubDate>Mon, 10 Aug 2026 11:30:45 +0000</pubDate><atom:updated>2026-08-10T11:30:45.217Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,போதைப்பொருள்,சிறப்பு படை,Anti drugs,Tamil Nadu Anti-Drugs Force</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/2y49i088/VJ.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/2y49i088/VJ.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் போதைப்பொருள் தடுப்புக்கு ரூ.264.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.</p><p>முதலமைச்சர் ஜோசப் விஜயின் உத்தரவின்பேரில் போதைப்பொருளை ஒழிக்க 65 சிறப்பு படைகளை உருவாக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>சிறப்பு படைகளில் 65 காவல் ஆய்வாளர்கள், 130 உதவி ஆய்வாளர்கள், 325 காவலர்கள் பணியாற்றுவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.</p><p>37 மாவட்டங்களில் தலா ஒரு சிறப்பு படையும், சென்னையில் மட்டும் 12 சிறப்பு படைகளும் உருவாக்கப்படும்.</p><p>ஆவடி, தாம்பரம், சேலம், கோவை, திருப்பூர், திருச்சி, மதுரை மற்றும் நெல்லை ஆகிய முக்கிய மாநகரங்களில் தலா 2 படைகள் வீதம் உருவாக்கப்பட உள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணைய முன்னாள் தலைவர் கைது!</title><link>https://www.maalaimalar.com/news/national/former-chairman-of-the-jharkhand-public-service-commission-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/national/former-chairman-of-the-jharkhand-public-service-commission-arrested#comments</comments><guid isPermaLink="false">5c79da20-56b4-4fb8-89d1-036569892946</guid><pubDate>Mon, 10 Aug 2026 11:25:01 +0000</pubDate><atom:updated>2026-08-10T11:25:01.257Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Jharkhand,JPSC chairperson,Khiangte,ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம்,கியாங்டே</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/6bl11m4t/New-Project-2026-08-10T155637.464.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணைய முன்னாள் தலைவர் கைது!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/6bl11m4t/New-Project-2026-08-10T155637.464.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேர்வு முறைகேடு புகாரில், ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர் எல். கியாங்டே, குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>மாநிலத்தின் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், கடந்த ஆண்டு பிப்ரவரியில் தேர்வாணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ஜூலை.22ம் தேதி இப்பதவியை ராஜினாமா செய்தார். </p><p>இவ்விவகாரத்தில் நியாயமான விசாரணை நடைபெறுவதை உறுதி செய்வதே தனது ராஜினாமாவின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.</p><h2>பிரச்னை என்ன? </h2><p>14-வது ஜார்க்கண்ட் சிவில் சர்வீசஸ் ஆரம்பத் தேர்வு மற்றும் பிற அரசு வேலைவாய்ப்பு தேர்வுகளில் வினாத்தாள் கசிவு மற்றும் பெரும் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. </p><p>அரசுத் தேர்வு முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி ஆயிரக்கணக்கான மாணவர்கள் தலைநகர் ராஞ்சியில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.</p><p>போராட்டத்தின் ஒருபகுதியாக மாணவர்கள் சட்டமன்றத்தை முற்றுகையிட முயன்றபோது, போலீஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் அவர்களைக் கலைத்தனர். </p><p>மாணவர் அமைப்பினர் அரசுடன் பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தினாலும் சிஜிஎல் தேர்வை ரத்து செய்ய அரசு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் இவ்விவகாரம் போராட்டமாக வெடித்து பெரும் பதற்றம் நிலவி வருகிறது. </p>]]></content:encoded></item><item><title>நரேந்திரா பெயரை வெறுக்கிறேன்: பாகிஸ்தான் வீரர் கூறியதை பிரதமர் மோடியிடம் நினைவு கூர்ந்த இந்திய வீரர்..!</title><link>https://www.maalaimalar.com/news/national/i-hate-the-name-narendra-pakistan-boxer-remark-recalled-to-modi</link><comments>https://www.maalaimalar.com/news/national/i-hate-the-name-narendra-pakistan-boxer-remark-recalled-to-modi#comments</comments><guid isPermaLink="false">22486426-e5e3-450b-a67f-bd0ff6717c9f</guid><pubDate>Mon, 10 Aug 2026 11:18:42 +0000</pubDate><atom:updated>2026-08-10T11:18:42.445Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>narendra modi,நரேந்திர மோடி,Jadumani Singh,Narendar berwal,நரேந்திர பெர்வால்,ஜடுமணி சிங்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/vulgzri5/Untitled-design-28.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பாகிஸ்தான் வீரர் குறித்து குத்துச்சண்டை வீரர் நரேந்தர் பெர்வால் கூறியது, மோடியை நீண்ட நேரம் சிரிக்க வைத்தது.]]></media:title><media:description type="html"><![CDATA[ Narendra Modi - Narendra berwal]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/vulgzri5/Untitled-design-28.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஸ்காட்லாந்தில் சமீபத்தில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில், இந்தியா சார்பாக கலந்துகொண்டு பதக்கம் வென்றவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். </p><p>அப்போது, இந்திய குத்துச்சண்டை வீரர், தன்னிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான் வீரர் குறித்து ஒரு நகைச்சுவையான சம்பவத்தை பகிர்ந்துகொண்டார்.</p><p>கிளாஸ்கோவில் நடைபெற்ற ஆண்களுக்கான 90+ கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற நரேந்தர் பெர்வால், 2015 உலக ராணுவ விளையாட்டுப் போட்டிகளில் (world military games) ஒரு பாகிஸ்தானிய வீரரை தோற்கடித்தபோது நடந்த ஒரு சம்பவத்தை, பிரதமர் மோடியிடம் கூறினார்.</p><h3><strong>குத்துச்சண்டை வீரர் நரேந்தர் பெர்வால்</strong></h3><p>அப்போது தோல்வியடைந்த பாகிஸ்தான் குத்துச்சண்டை வீரர் என்னிடம் கூறுகையில், “உங்கள் பெயர் நரேந்தர், உங்கள் பயிற்சியாளரின் பெயர் நரேந்தர், உங்களின் பிரதமரின் பெயர் நரேந்திரா. நான் நரேந்திரா என்ற பெயரை வெறுக்க ஆரம்பித்துவிட்டேன்” என்று அவர் கூறியதாக பகிர்ந்துகொண்டார்.</p><p>இதை பிரதமர் மோடி கேட்டதும், தனது சிரிப்பை அடக்க முடியாமல் நீண்ட நேரத்திற்கு சிரித்துக் கொண்டே இருந்தார்.</p><h3><strong>கார்கில் வீரர்களுக்கு சமர்ப்பணம்</strong></h3><p>இதையடுத்து 55 கிலோ ஆடவர் எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜதுமணி, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பாகிஸ்தானின் சுமாமா ரஹ்மானை 5-0 என்ற கணக்கில் தோற்கடித்தார்.</p><p>அப்போது அவர் பிரதமர் மோடியிடம் கூறுகையில், “அது கார்கில் தினம், அன்றுதான் நான் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடினேன். இந்திய ராணுவத்தைச் சேர்ந்தவன் என்பதால், நான் பாகிஸ்தானை வீழ்த்த வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தேன்.</p><p>நான் அவர்களை 5-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து, அந்த வெற்றியை நமது இந்திய ராணுவ வீரர்களுக்கு அர்ப்பணித்தேன்,” என்று கூறினார்.</p><h3><strong>பிரதமர் மோடி</strong> பெருமிதம்</h3><p>இதைத்தொடர்ந்து பேசிய மோடி, இந்த வெற்றியின் முக்கியத்துவத்தையும், அது கார்கில் வீரர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டதையும் பாராட்டினார்.</p><p>மேலும் அவர், “அதை நினைவுகூர்கையில், குறிப்பாக நீங்களே படைகளைச் சேர்ந்தவர் என்பதால், உங்கள் பதக்கத்தை கார்கில் வெற்றியாளர்களுக்கு அர்ப்பணித்து நீங்கள் வெளிப்படுத்திய உணர்வு, அந்த வெற்றிக்குக் கூடுதல் பெருமையைச் சேர்த்தது என்று நான் உண்மையாகவே நம்புகிறேன்.</p><p>மேலும், நீங்கள் யாரைத் தோற்கடித்தீர்களோ, அவர்களைத்தான் தோற்கடித்தீர்கள்!” என்று மோடி கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>போலி அடையாளத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. மகளை ஏமாற்றிய வாலிபர் - 25 பெண்கள் மோசடி அம்பலமாகி கைது!</title><link>https://www.maalaimalar.com/news/national/fake-identity-marriage-scam-youth-who-wed-bjp-mla-daughter-cheated-25-women</link><comments>https://www.maalaimalar.com/news/national/fake-identity-marriage-scam-youth-who-wed-bjp-mla-daughter-cheated-25-women#comments</comments><guid isPermaLink="false">ee02c5e1-4997-4e29-9d24-a2084d3ad24a</guid><pubDate>Mon, 10 Aug 2026 11:18:08 +0000</pubDate><atom:updated>2026-08-10T11:18:08.820Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,உத்தரபிரதேசம்,uttarpradesh,BJPMLA,PrakharTrivedi,GyanTiwari,CheatingWomen,CroreScam</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/692ibcdo/BJP-MLA-Daughter-Cheated" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  BJP MLA Daughter Cheated]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/692ibcdo/BJP-MLA-Daughter-Cheated?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரபிரதேசம் சேவதா தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. கியான் திவாரியின் மகளை திருமணம் செய்த வாலிபர், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் 25-க்கும் மேற்பட்ட வசதியான பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கோடிக்கணக்கில் பணம் பறித்தது அம்பலமாகியுள்ளது. </p><p>ரியல் எஸ்டேட் தொழிலதிபர் என பொய் கூறி நடத்திய இந்த மோசடியில் தற்போது மருமகன் பிரகர் திரிவேதி மற்றும் அவரது தந்தை அனுஜ் திரிவேதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>போலி அறிமுகத்தில் திருமணம்:</h2><p>உத்தரப் பிரதேசம் மாநிலம்,சேவதா தொகுதி பா.ஜ.கஎம்.எல்.ஏ.வாக இருப்பவர் கியான் திவாரி. இவரது மகள் பிரக்யா. இவர் சீதாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அனுஜ் திரிவேதியின் மகன் பிரகர் திரிவேதியை கடந்த 2024-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். </p><p>திருமணத்திற்கு முன்பு மும்பையில் பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபர் அதிபர் என மனைவியிடம் அறிமுகம் செய்து கொண்டுள்ளார். மேலும் இவரது குடும்பத்தினருக்கு உள்ளூரில் நல்ல மரியாதை இருப்பதால் கியான் திவாரி திருமணத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளார்.</p><h2>25 பெண்கள் மோசடி அம்பலம்:</h2><p>சமீபத்தில் தனது மருமகனின் நடவடிக்கைகள் மற்றும் மோசடி தொடர்பான வழக்குகள் வெளிவந்தது. இதனை அறிந்த கியான் திவாரி தனது மருமகனின் கடந்த காலத்தை பற்றி விசாரணை நடத்தினார். </p><p>அதில் மஹாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 25-க்கும் மேற்பட்ட வசதி படைத்த பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தது தெரிய வந்தது. </p><p>திருமணத்திற்கு பிறகு அந்தப் பெண்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணத்தை பறித்துள்ளார்.</p><h2>எம்.எல்.ஏ. கியான் திவாரியின் வீடியோ பதிவு:</h2><p>இது குறித்து சமூக வலைத்தளங்களில் மருமகனின் நடத்தை குறித்து வீடியோ பதிவு செய்துள்ளார். அதில் போலி அட்டைகளை தயார் செய்து தனது மகளை திருமணம் செய்வதற்கு முன்பு பல மாநிலங்களில் 25 பெண்களை திருமணம் செய்துள்ளார். அவர்களிடமிருந்து கோடிக்கணக்கில் பணத்தை பறித்து இருக்கிறார்.</p><p>தற்போது அவர்களது குடும்ப உறவை துண்டித்து விட்டு மகளை வீட்டுக்கு அழைத்து வந்து இருக்கிறேன். பிரகர் திரிவேதி தனது குற்ற பின்னணி மற்றும் வழக்கு களை மறைத்து தனது மகளை திருமணம் செய்து கொண்டுள்ளார். </p><p>இதனால் மக்கள் பிரதிநிதிதியாக உள்ள தனது நற்பெயரும் பாதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து போலீசில் புகார் செய்து இருக்கிறேன் என வீடியோவில் தெரி வித்துள்ளார்.</p><h2>மோசடி வாலிபர் கைது:</h2><p>இது சம்பந்தமாக உத்தரபிரதேச போலீசார் வழக்கு பதிவு செய்து அனுஜ் திரிவேதி மற்றும் பிரகர் திரிவேதி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். </p><p>மகாராஷ்டிராவிலும் பல பெண்கள் புகார் செய்ததால் அந்த மாநில போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். </p><p>பா.ஜ.க எம்.எல்.ஏ.வின் மகளை ஏமாற்றி வாலிபர் ஒருவர் திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சிறப்பாகவும், நீண்ட காலமாகவும் விளையாடுவார்: குர்னூர் பிரார் மீது நம்பிக்கை வைத்த ஜாகீர் கான்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/zaheer-khan-i-believe-gurnoor-brar-is-the-one-who-has-the-ability-to-have-a-good-and-lengthy-career</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/zaheer-khan-i-believe-gurnoor-brar-is-the-one-who-has-the-ability-to-have-a-good-and-lengthy-career#comments</comments><guid isPermaLink="false">7597db16-a066-4729-8990-58a68730af61</guid><pubDate>Mon, 10 Aug 2026 11:14:54 +0000</pubDate><atom:updated>2026-08-10T11:14:54.125Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Zaheer Khan,SLvsIND,Gurnoor Brar,குர்னூர் பிரார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/ybpzwsj2/GurnoorBrabZaheerKhan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ குர்னூர் பிரார்- ஜாகீர் கான்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/ybpzwsj2/GurnoorBrabZaheerKhan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் 26 வயதான பஞ்சாப் வீரர் குர்னூர் பிரார் இடம் பிடித்திருந்தார். இவர் 6 அடி 5 அங்குலம் உயரம் கொண்ட வேகப்பந்து வீச்சாளர். இலங்கை லெவன் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசி 2 இன்னிங்சிலும் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.</p><h2>குர்னூர் பிரார் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அறிமுகம்</h2><p>ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கடந்த ஜூன் மாதம் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார். பும்ரா காயம் காரணமாக விலகியுள்ளதால், இவருக்கு அணியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.</p><p>இந்த நிலையில் குர்னூர் பிரார், இந்திய அணிக்காக நீண்ட காலம் விளையாடும் திறன் உள்ளதாக ஜாகீர் கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.</p> <h2>இது தொடர்பாக ஜாகீர் கான் கூறியதாவது:-</h2><p>அதிவேகத்தில் (140 கி.மீ.) பந்து வீசும் இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் உருவாகி வருவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு நல்ல மற்றும் நீண்ட கால கிரிக்கெட் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் திறன் குர்னூர் பிராரிடம் இருப்பதாக நான் நம்புகிறேன். அவருக்கு விரைவான முன்னேற்றம் கிடைத்தது நல்லது. நான் அவருடன் சிறிது காலம் செலவிட்டபோதே, அவரின் அபாரமான திறனை என்னால் காண முடிந்தது. இறுதியில் அவரது கிரிக்கெட் வாழ்க்கை எப்படி அமைகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும், ஆனால் திறனைப் பொறுத்தவரை, அவர்தான் என்னை மிகவும் கவர்ந்துள்ளார்.</p><p>இவ்வாறு ஜாகீர் கான் தெரிவித்தார்.</p><h2>ஐபிஎல் கிரிக்கெட்டில் குர்னூர் பிரார்</h2><p>2019-ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியன் நெட் பவுரலாக செயல்பாட்டார். 2023-ல் பஞ்சாப் கிங்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுத்தது. 2025-ல் குஜராத் டைட்டன்ஸ் அணி அவரை 1.3 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.</p>]]></content:encoded></item><item><title>வாட்ஸ்அப்பில் மீடியா ஃபைல்கள் அனுப்ப உலகளவில் சிக்கல்: புகைப்படங்கள், வீடியோக்கள் பகிர்வதில் தாமதம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/whatsapp-users-worldwide-face-problems-sending-media-files</link><comments>https://www.maalaimalar.com/news/national/whatsapp-users-worldwide-face-problems-sending-media-files#comments</comments><guid isPermaLink="false">d3d9ef40-1b57-4f5f-b518-82f90b85e30c</guid><pubDate>Mon, 10 Aug 2026 11:14:23 +0000</pubDate><atom:updated>2026-08-10T11:14:23.285Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,WhatsApp,Meta,மெட்டா,வாட்ஸ்அப்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/5so7as66/whatsapp.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ WhatsApp ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/5so7as66/whatsapp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மெட்டா நிறுவனத்தின் முன்னணி குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ்அப்பில் புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் ஜிஃப் உள்ளிட்ட ஊடகக் கோப்புகளைப் (Media Files) பகிர்வதில் உலகளவில் பெரும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இன்று காலை முதலே, பயனர்கள் தங்களது வாட்ஸ்அப் கணக்குகள் மூலம் மீடியா ஃபைல்களை அனுப்ப இயலாமல் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.</p><p>பயனர்களுக்கு சாதாரண உரைச் செய்திகள் தடையின்றிச் சென்று சேர்கின்றன. ஆனால், படங்கள், வீடியோக்கள் அல்லது ஸ்டிக்கர்களை அனுப்பும்போது அவை 'அப்லோட்' ஆகாமல் நீண்ட நேரம் நின்றுவிடுகின்றன. இணைய சேவை தடைகளைக் கண்காணிக்கும் டவுன்டெடெக்டர் தளத்தின் தரவுகளின்படி, பதிவான புகார்களில் 41% செய்திகள் அனுப்புவதிலும், 40% செயலியின் இயக்கத்திலும், 13% நோட்டிபிகேஷன் பிரிவிலும் சிக்கல்கள் உள்ளதாகக் காட்டுகின்றன.</p><h2>பாதிக்கப்<strong>பட்ட நாடு</strong>கள்</h2><p>இந்தத் தொழில்நுட்பக் கோளாறு இந்தியா மட்டுமன்றி பிரிட்டன், பிரான்ஸ், பிரேசில், கனடா, மெக்சிகோ, ஸ்பெயின் மற்றும் கொலம்பியா உள்ளிட்ட பல நாடுகளில் பரவலாக எதிரொலித்துள்ளது.</p><h2>பயனர்க<strong>ளின் புலம்பல்</strong> </h2><p>பயனர்கள் பலர் தங்களது போன்களை ரீஸ்டார்ட் செய்தல், வைஃபை (Wi-Fi) மற்றும் மொபைல் டேட்டாவை மாற்றி அமைத்தல், செயலியை மீண்டும் இன்ஸ்டால் செய்தல் போன்ற நடைமுறைகளைச் செய்தபோதிலும் இந்த மீடியா பகிர்வு சிக்கல் தீரவில்லை. இதனால், பலரும் எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மீம்களுடனும் புகார்களுடனும் தங்களது அதிருப்தியைப் பதிவிட்டு வருகின்றனர்.</p><p>இந்தத் திடீர் சேவைத் தடை குறித்து வாட்ஸ்அப் அல்லது மெட்டா நிறுவனம் தரப்பில் இருந்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ விளக்கமோ அல்லது அறிக்கை தகவலோ வெளியடப்படவில்லை. இருப்பினும், தொழில்நுட்பக் குழுவினர் இந்தச் சிக்கலைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item></channel></rss>