<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 31 Aug 2026 10:34:21 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: சினிமா, டாஸ்மாக் துறையில் ஊழல்- அமைச்சர் ஆதவ் குற்றச்சாட்டு.. திமுகவினர் அமளி- 31 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-31-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-31-august-2026#comments</comments><guid isPermaLink="false">8cbab00b-8cfb-4b49-bbe3-619e9e0b783c</guid><pubDate>Mon, 31 Aug 2026 03:46:20 +0000</pubDate><atom:updated>2026-08-31T10:33:27.971Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/u9t6egb8/AAdhav.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Aadhav arjuna- Ex Minister Senthil balaji]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/u9t6egb8/AAdhav.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு</h2><p>விதி 92-ல் நீதி விசாரணையில் இருக்கும் எப்பொருள் பற்றியும் விவாதிக்கக்கூடாது என்று உள்ளது.</p><p>தகுதி இருந்தால் தான் லைசென்ஸ் கொடுப்பார்கள், கொடுத்தால் ஊழல் என்று சொல்ல முடியுமா?</p><p>பணம் வசதி இருப்பவர் தான் தொழிற்சாலை வைத்து இருப்பார்கள், அது ஊழலாக இருக்க வாய்ப்பில்லை.</p><h2>அமைச்சர் நிர்மல்குமார்</h2><p>ஒரு நபர் 44 முதல் 50 டெண்டர்கள் போட்டு ஊழல் செய்தார்கள் என்று கடந்த வாரம் வந்த ஆர்டர்களில் உள்ளது.</p><p>பாட்டிலுக்கு ரூ.10, டாஸ்மாக்கில் ஆண்டு வருமானம் ரூ.50,000 கோடி என்றால் அதில் 10 சதவீதம் ரூ.5000 கோடி ஊழல்.</p><p>சிண்டிகேட் கரூர் கேங்க் என்று குறிப்பிட்டு அமைச்சர் நிர்மல்குமார் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்எல்ஏ-க்கள் அமளியில் ஈடுபட்டனர்.</p><h2>அமைச்சர் விக்னேஷ்</h2><p>டாஸ்மாக் கடைகளில் ரூ.10 வாங்க சொன்னதே திராவிட முன்னேற்றக் கழகம்தான்.</p><p>டாஸ்மாக் கடைகளில் 20 ஆண்டுகாலமாக ஊழல் வேரூன்றி உள்ளது. சீரமைக்க சில காலம் ஆகும்.</p><h2>முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு</h2><p>பாட்டிலுக்கு ரூ.10 என்று சொன்னீர்கள், தவெக ஆட்சியில் நீங்கள் வாங்காமல் உள்ளீர்களா?</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</h2><p>திமுக ஆட்சியில் டாஸ்மாக் தொழிற்சாலை லைசென்ஸ் வழங்கியதில் இதுவரை வெளிப்படைத்தன்மை இருந்ததே இல்லை. </p><p>அரசியல் இல்லாமல், அதிகாரம் இல்லாமல், டாஸ்மாக் தொழிற்சாலை உரிமம் வாங்க முடியுமா?</p><p>ஒரு சாமானியன் டாஸ்மாக் தொழிற்சாலையின் உரிமம் வாங்க முடியுமா?</p><p>தமிழக வெற்றிக் கழகத்தினர் எப்போதும் டாஸ்மாக் ஆலையை எடுக்க மாட்டோம், மதுபான தொழில் செய்யமாட்டோம்.</p><h2>முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு </h2><p>டாஸ்மாக் விற்பனையை தொடங்கியதும் திமுக தான், மூடியதும் திமுக தான்.</p><h2>முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி</h2><p>603 டாஸ்மாக் கடைகளை திமுக மூடியது, மது விற்பனையை அதிகரிக்க வேண்டும் என செயல்படவில்லை- </p><p>மதுபானங்களின் விலை உயர்த்தியதால் ரூ.35,000 கோடியில் இருந்து ரூ.50,000 கோடியாக வருவாய் அதிகரித்தது.</p><p>ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படுத்தவே வழக்குபோட்டுள்ளீர்கள்.</p><p>கடந்த திமுக ஆட்சியில் தவறு நடந்ததா? இல்லையா? என்பது குறித்து நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு தெரியும்.</p><p>போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து போர்க்கால அடிப்படையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.</p><p>தமிழக வெற்றிக் கழக ஆட்சியை உருவாக்கியது பெண்களும், இளைஞர்களும் தான்- ஆதவ் அர்ஜூனா</p><p>சட்டசபையில் அமைச்சர் ஆதவ் பேச்சுக்கு எதிர்ப்பு - திமுக உறுப்பினர்கள் அமளி </p><p>சினிமா மற்றும் டாஸ்மாக் துறையில் ஊழல் என அமைச்சர் ஆதவ் குற்றச்சாட்டு</p><p>டாஸ்மாக் விற்பனையை தொடங்கியதும் திமுக தான், மூடியதும் திமுக தான் - கே.என்.நேரு</p><p>மதுபானங்களின் விலை உயர்த்தியதால் ரூ.35,000 கோடியில் இருந்து ரூ.50,000 கோடியாக வருவாய் அதிகரித்தது - செந்தில்பாலாஜி</p><p>603 டாஸ்மாக் கடைகளை திமுக மூடியது. மது விற்பனையை அதிகரிக்க வேண்டும் என செயல்படவில்லை - செந்தில் பாலாஜி</p><p>தருமபுரியில் பேருந்து நிலையம் ஊருக்கு வெளியில் இருப்பதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர் - சவுமியா</p><p>பெண்களுக்கான இலவச பேருந்து பயணத்தை கிராமப்புறங்களுக்கும் நீட்டித்த தவெக அரசுக்கு நன்றி - சவுமியா</p><p>கிராமங்களுக்கான மினி பேருந்து சேவையை அதிகரிக்க வேண்டும் - சவுமியா வேண்டுகோள்</p><p>மினி பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணிகளை பெண்களுக்கு வழங்க வேண்டும் - பாமக எம்எல்ஏ சவுமியா வேண்டுகோள்</p><p>நகராட்சியில் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்ற ஆய்வு செய்துவிட்டு அமைச்சர் ரமேஷ் பேச வேண்டும்.</p><p>மல்லாச்சிபுரம் கிராமம் ஊராட்சியில் இருந்த நிலையில் தற்போதுதான் நகராட்சியில் சேர்க்கப்பட்டுள்ளது.</p><p>மல்லாச்சிபுரம் தற்போதுதான் நகராட்சியில் இணைக்கப்பட்டுள்ளது. இன்னும் நடைமுறைக்கு வரவில்லை - கேஎன்.நேரு</p><p>மல்லாச்சிபுரம் ஊராட்சியில் 300 பேர் வசிக்கும் நிலையில் நீர், கழிப்பிடம் சாலை உள்ளிட்ட வசதிகளின்றி அவதி.</p><p>கடந்த ஆட்சியில் திருச்சி மல்லாட்சிபுரத்தில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் இருந்தது.</p><p>தவெக ஆட்சி அமைந்த பிறகு மல்லாச்சிபுரம் மக்களிடம் சென்று கோரிக்கை கேட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன - அமைச்சர் ரமேஷ்</p> <p>கிருதுமால் நதி சாக்கடையாக மாற்றிவிட்டது.</p><p>மதுரையில் கழிவுநீர் அடைப்பு பிரச்சனை அதிகமாக உள்ளது, பாதாள சாக்கடையை மேம்படுத்த வேண்டும் -  எம்எல்ஏ தங்கபாண்டியன்</p><p>திமுக ஆட்சியில் காலத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடிய போதும் வருவாய் அதிகரித்தது எப்படி? என அமைச்சர் வினோத் பதில் கேள்வி</p> <p>717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டும் டாஸ்மாக்கில் அதிக வருவாய் எப்படி என்ற திமுகவினரின் கேள்விக்கு அமைச்சர் வினோத் விளக்கம்</p><p>நிதி ஒதுக்கியதாக கூறுவது தவறு, சென்னை மாநகராட்சிக்கு நிதி ஒதுக்கவில்லை என கறுப்பு உடை அணிந்து வந்தனர் - கே.என்.நேரு</p><p>சென்னை மேயர் அரசுடன் இணைந்து செயல்படுவதில்லை, குற்றச்சாட்டு மட்டும் தான் சொல்கிறார்.</p><p>அனைத்து மாநகராட்சிகளையும் தவெக விரைவில் கைப்பற்றும் - அமைச்சர் ஆதவ்</p><p>இப்போது நடவடிக்கை எடுக்கலாம் என்றால் மேயர்கள், நகராட்சி தலைவர்கள் எங்களுடன் இணைந்து செயல்படுவதில்லை.</p><p>திட்டத்திற்கு நிதி ஒதுக்கினால், அதனை செயல்படுத்தும் இடத்தில் திமுகவை சேர்ந்த பொறுப்பாளர்கள் தான் உள்ளனர் - அமைச்சர் ஆதவ் </p> <p>ஒவ்வொரு நகரிலும் பெண்கள் காலி குடங்களுடன் குடிநீர் லாரியை எதிர்நோக்கி நிற்கின்றனர்.</p><p>ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர் குழாய்கள் மூலம் கொண்டு சேர்க்கப்படவில்லை - அமைச்சர் ஆதவ்</p><p>மக்களின் அடிப்படைத் தேவைகள் ஏதும் முந்தைய ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை - த.வெ.க.</p><p>மத்திய அரசு அறிவுறுத்தலால் கடந்த ஆட்சியில் வரி உயர்த்தப்பட்டது - கே.என்.நேரு</p><p>கடந்த ஆட்சியில் தவறு செய்த யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது. திமுக ஆட்சியில் ஊழல் வெளிவந்தது என்றால் மேலிடத்திற்கு பங்கு சரிவர செல்லாததே காரணம் - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>மதுரையில் மட்டுமல்ல அனைத்து மாநகராட்சிகளிலும் முறைகேடு நடந்துள்ளது - அமைச்சர் ஆதவ்</p><p>கடந்த ஆட்சியில் மாநகராட்சிகளில் ஊழல் நடைபெற்றிருந்தால் நடவடிக்கை எடுங்கள் ரைவில் மாநகராட்சியில் நடந்த முறைகேடுகளை அம்பலப்படுத்துவோம்  - கே.என்.நேரு</p> <p>திமுக ஆட்சியில் குற்றமிழைத்தவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சொத்து வரி முறைகேடு குற்றச்சாட்டில் 5 அதிகாரிகள் நீக்கம் செய்யப்பட்டனர்  - கே.என்.நேரு</p><p>மதுரை மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடு - தவெக எம்எல்ஏ தங்கப்பாண்டி குற்றச்சாட்டு</p><p>பரிமிளகாய், பொய்யூர் கத்தரி, சிதம்பரம் உளுந்து, கருமந்துறை கடுக்காய் உள்ளிட்ட 10 வேளாண் பொருளுக்கு புவிசார் குறியீடு</p><p>அதிக சாகுபடி செய்யும் 40 கரும்பு விவசாயிகள் மகாராஷ்டிரா அழைத்துச் செல்லப்படுவர்.</p><p>பாராமதியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்திற்கு விவசாயிகள் கண்டுணர்வு பயணம் அழைத்துச்செல்லப்படுவர் - அமைச்சர் வினோத்</p> <p>செங்கல்ராயன், திருத்தணி, வேலூர், பெரம்பலூர் சர்க்கரை ஆலைகள் ரூ.6 கோடியில் தானியங்கி மயமாக்கப்படும்.</p><p>285 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு 600 விற்பனை முனையக்கருவிகள் வழங்கப்படும் -  அமைச்சர் வினோத்</p><p>மூங்கில்துறைப்பட்டு, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் ரூ.8.58 கோடியில் மின் மோட்டார்கள் நிறுவப்படும்.</p><p>தேனி வளர்ப்பினை ஊக்கப்படுத்த ரூ.6.84 கோடியில் தேனி வளர்ப்பு பெட்டி விவசாயிகளுக்கு வழங்கப்படும் - அமைச்சர் வினோத்</p> <h2>வேளாண் துறையின் கீழ் அமைச்சர் வினோத் அறிவித்த புதிய அறிவிப்புகள்</h2><p>தஞ்சை, மயிலாடுதுறை, சேலம், திருப்பூர், திருவாரூர் உள்ளிட்ட 9 இடங்களில் புதிய விதை நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும்.</p><p>திருவாரூர், தருமபுரி, ஈரோடு, ராணிப்பேட்டையில் புதிய துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடங்கள் அமைக்கப்படும்.</p> <p>பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான வாசிப்பாளர் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும்.</p><p>வாசிப்பாளருக்கான உதவித்தொகையை 2 மடங்கு உயர்த்தி அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவிப்பு</p><p>செவித்திறன் குறைபாடு உடைய மாணவர்களுக்கு மெய்நிகர் கற்றல் திட்டம் செயல்படுத்தப்படும்.</p><p>6 முதல் 8-ம் வகுப்பு பயிலும் செவித்திறன் குறைபாடு உடைய மாணவர்களுக்கு மெய்நிகர் கற்றல் திட்டம் - அமைச்சர் ஜெகதீஸ்வரி</p> <p>அறிவுசார் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக 3 ஆரம்ப நிலை பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.</p><p>புற உலக சிந்தனையற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு புதிதாக 2 இல்லங்கள் அமைக்கப்படும்.</p><p>அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்காக கடலூர் அரிசிபெரியாங்குப்பம் பகுதியில் ரூ.10 கோடியில் 2 இல்லங்கள் அமைக்கப்படும்  - அமைச்சர் ஜெகதீஸ்வரி</p> <p>மனநலம் பாதிக்கப்பட்டோருக்காக 10 சிறப்பு இல்லங்கள் ரூ.1.82 கோடியில் கட்டப்படும்.</p><p>அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில்பயிற்சி அளிக்க 10 இல்லங்கள் அமைக்கப்படும்.</p><p>முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்காக கூடுதலாக 2 இல்லங்கள் அமைக்கப்படும்  - அமைச்சர் ஜெகதீஸ்வரி</p> <h2>சமூக நலன் மகளிர் உரிமைத்துறை புதிய அறிவிப்புகள்</h2><p>அரசு கட்டடங்களில் குழந்தை மையங்களில் ரூ.12 கோடியில் பாதுகாப்பு அம்சம் மேம்படுத்தப்படும்.</p><p>ஆரம்பகால குழந்தை பராமரிப்பு, ஏஐ கூறுகளுடன் கூடிய கல்விசார் காணொளிகள் உருவாக்கப்படும்.</p><p>உயரக்குறைவு மாற்றுத் திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்படும் - அமைச்சர் ஜெகதீஸ்வரி</p><p>டாஸ்மாக் பணியாளர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.</p><p>கள்ளச்சாராயம் விற்று திருந்தியவர்களுக்கான ரூ.1 லட்சம் நிதி வழங்குவதற்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு.</p><p>போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்திற்கான நிதி ரூ.5 கோடியில் இருந்து ரூ.10 கோடியாக உயர்வு.</p><p>கள்ளாச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க மெத்தனால் பயன்பாட்டு கொள்கை உருவாக்கப்படும் - அமைச்சர் விக்னேஷ்</p><p>மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறையில் அமைச்சர் விக்னேஷ் புதிய அறிவிப்புகள்</p><p>சட்டசபையில் மதுவிலக்கு ஆயத்தீர்வை மானிய கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் விக்னேஷ் 6 புதிய அறிவிப்புகள் வெளியிட்டார்.</p><p>கள்ளச்சாராயம் விற்று திருந்தியவர்களுக்கு தரப்படும் மறுவாழ்வு நிதி ரூ.50,000-லிருந்து ரூ.1 லட்சமாக உயர்வு.</p><p>கள்ளாச்சாராயத்திற்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்த மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு நவீன உபகரணம் வழங்கப்படும்.</p> <p>வார விடுப்பு, ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, முதல்வரை சந்திப்பது தொடர்பாக நல்ல செய்தி வரும்.</p><p>தூய்மைப் பணியாளர்களுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தி மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>காலை சிற்றுண்டிக்கு மாற்றாக பணமாக தருவது பற்றி பரிசீலனை. உணவிற்கு பதில் தூய்மைப் பணியாளர்களுக்கு விரைவில் உணவுப்படி வழங்கப்படும்.</p><p>உடை மாற்றும் அறையுடன் மூடிய பிரத்யேக கழிப்பட வசதி ஏற்படுத்தி தரப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்</p> <p>தூய்மைப் பணியாளர்களுக்காக கழிப்பிடம், உடை மாற்றும் அறைகள் செப்.15-ந்தேதிக்குள் ஏற்படுத்தி தரப்படும்.</p><p>தூய்மைப் பணியாளர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு கையுறை வழங்கப்படும். வரும் காலங்களில் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>பணியின்போது பலியான தூய்மைப் பணியாளர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>பலியான தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தருவது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>அமைச்சர் ராஜ்மோகன் உரை</p><p>தூய்மைப் பணியாளர்கள் உண்மையில் பாவம் தான். அவர்கள் தூய்மை ஊழியர்கள் அல்ல தூய்மை தேவதைகள்.</p><p>போராடும் தூய்மைப் பணியாளர்கள் மீது எந்தவித அடக்குமுறையும் கூடாது என காவல்துறையிடம் கூறப்பட்டுள்ளது. </p><p>தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம்</p><p>தமிழர்களை மீட்பது குறித்து திபெத், சீன அரசுடன் இணைந்து மத்திய அரசு செயல்படுகிறது.</p><p>305 பேர் கைலாஷ் யாத்ரா பயணம் மேற்கொண்டனர். அவர்களில் 220 பேர் பாதுகாப்பாக உள்ளனர் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</p> <p>நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழர்களின் நிலை குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.</p><p>பிற மாநிலம், நாடுகளில் இருந்து சுற்றுலா சென்ற தமிழர்கள் 34 பேர் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன  - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</p><p>கைலாஷ் யாத்திரை சென்றவர்களில் 84 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை.</p><p>வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியை சந்தித்து தமிழர்களை மீட்பது குறித்து ஆலோசித்தோம் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</p><h2>நேபாள பெருவெள்ளம் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உரை</h2><p>நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழர்களை மீட்க ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>கடந்த 28-ந்தேதி 21 தமிழர்கள் டெல்லி அழைத்து வரப்பட்டு சென்னை அனுப்பி வைக்கப்பட்டனர்.</p><h2>அமைச்சர் விஜய் பாலாஜி பதில்</h2><p>மக்களுக்கு பிடித்த பொருளை தரமாக வழங்குவதே எங்களது நோக்கம்.</p><p>பொங்கலுக்கு ஜரிகை வைத்த சேலை வழங்கப்பட உள்ளது.</p><p>பொங்கலுக்கு கொடுக்கும் வேட்டிகளை அமைச்சர்கள் அணிந்து வருவோம்.</p><p>கடந்த ஆட்சியில் கொடுக்கப்பட்ட வேட்டிகளை எதிர்க்கட்சிகள் அணிய வேண்டும்.</p><p>எது தரமான வேட்டி என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.</p> <p>கைத்தறி நெசவாளர்களுக்காக உருவாக்கப்பட்ட திட்டம் தான் விலையில்லா வேட்டி-சேலை திட்டம் - ஆஸ்டின்</p> <p>நெசவாளர் சங்கத்தின்ருக்கு முறையாக அழைப்பு விடுத்து கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தியிருக்க வேண்டும் - ஆஸ்டின் </p><p>8 முழ வேட்டிக்கு மாற்றாக 4 முழ வேட்டி கொடுப்பது குறித்து நெசவாளிகளிடம் கருத்து கேட்கப்படவில்லை - ஆஸ்டின் குற்றச்சாட்டு</p><p>விலையில்லா வேட்டி-சேலை உற்பத்தி குறித்து எம்எல்ஏக்கள் ஆஸ்டின் நித்யானந்தன் பேரவையில் கவனஈர்ப்பு கொண்டு வந்தார்.</p><p>விலையில்லா வேட்டி 8 முழத்திற்கு பதிலாக 4 முழ வேட்டி வழங்கப்படும் என்ற அரசின் ஆணையால் விவசாயிகள் பாதிப்பு - ஆஸ்டின்</p><p>பெஞ்ச் மேல் ஏறி நிற்கும் தண்டனையை நான் வழங்க மாட்டேன்.</p><p>சபாநாயகர் இருக்கையில் முன்னர் அமர்ந்தது போல் அமராமல் இருக்கும் வரை அனைவரையும் அனுமதிக்க தயாராக இருக்கிறேன் - சபாநாயகர்</p><p>பெஞ்ச் மேல் ஏறியும் கவனத்தை ஈர்க்கலாம் என எ.வ.வேலு கூறுகிறார் - தங்கம் தென்னரசு</p><p>பொங்கலுக்கு வழங்கும் இலவச வேட்டி சேலை தொடர்பாக திமுக கவன ஈர்ப்பு தீர்மானம்</p><p>நேரலை வழங்குவது இளைஞர்களுக்கு அரசியல் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. அவைக்குறிப்பில் நீக்கும் அளவுக்கு ஏன் பேச வேண்டும் என எம்எல்ஏக்கள் சிந்திக்கக்கூடாதா? </p><p>நான் கூறிய பின்னும் ஓ.எஸ்.மணியன் நின்றுகொண்டே இருக்கிறார்.</p><p>10 பேர் சேர்ந்து எழுந்து நிற்பதை ஏற்க முடியாது. கொறடா உத்தரவை உறுப்பினர்கள் கேட்க வேண்டும்  சபாநாயகர்</p> <p>உறுப்பினர்கள் என்ன பேசுகிறார்கள் என மக்கள் உன்னிப்பாக கவனிக்கின்றனர். அவை மாண்பை குலைக்கும் எம்எல்ஏக்களை அம்பலப்படுத்துவதில் தவறில்லை என மக்கள் கருத்து. அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது மீம்ஸ் ஆக வருகிறது என புகார் கூறினர் - சபாநாயகர்</p> <p>6 மாதத்தில் ஒலிம்பிக் நகரம் குறித்த நல்ல செய்தி வரும்.</p><p>ஒரு விளையாட்டு நகரத்தை உருவாக்க வேண்டுமெனில் ஒலிம்பிக் தரத்தில் உருவாக்க வேண்டும், அதுதான் அரசின் கொள்கை - அமைச்சர் ஆதவ்</p><p>ஸ்போர்ட்ஸ் சிட்டிக்காக புதிய கட்டமைப்பு கொள்கை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது.</p><p>விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு விடுதிகள் உருவாக்க உள்ளோம் - அமைச்சர் ஆதவ்</p> <p>ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டத்தை ரத்து செய்யவில்லை. அதனை மறுஉருவாக்கம் செய்து வருகிறோம்.</p><p>விளையாட்டு நகரத்தை ஒலிம்பிக் தரத்தில் உருவாக்க வேண்டும்.</p><p>திமுக அரசு அறிவித்த திட்டத் ரத்து செய்யப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கூறிய நிலையில் அமைச்சர் ஆதவ் விளக்கம் அளித்தார்.</p> <p>காஞ்சிபுரம் மதுரமங்கலத்தில் ரூ.175 கோடியில் சிப்காட் மூலம் செமி கண்டெக்டர் நிறுவனம் அமைக்கப்படும்.</p><p>கோவையில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் டிஜிட்டல் நிதி மையம் அமைக்கப்படும் - முதலமைச்சர் விஜய்</p> <p>புதிய அனல் மின், நீர்மின் நிலையங்கள் அமைக்க கடந்த ஆட்சியில் பெரிய அளவிலான நடவடிக்கை முன்னெடுக்கவில்லை.</p><p>தமிழ்நாட்டில் புதிதாக 196 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்.</p><p>தூத்துக்குடியில் ரூ.20,800 கோடியில் தனியார் பங்களிப்புடன் அனல்மின் நிலையம் அமைக்கப்படும்.</p><p>தூத்துக்குடியில் 1,600 மெகாவாட் திறனுடன் அனல்மின் நிலையம் அமைக்கப்படும் - முதலமைச்சர் விஜய்</p> <p>தூத்துக்குடியில் புதிய அனல்மின் நிலையம் அமைக்கப்படும்.</p><p>தூத்துக்குடியில் புதிதாக இரண்டு நியூ தெர்மல் பவர் ஸ்டேஷன் அமைக்கப்படும் - முதலமைச்சர் விஜய்</p><p>பால் கொள்முதல் விலையை உயர்த்தியதால் ஆவினுக்கு ஏற்படும் கூடுதல் செலவை அரசே ஏற்கும் - முதலமைச்சர் விஜய்</p><p>பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று கொள்முதல் விலை ரூ.44 ஆக உயர்த்தி முதலமைச்சர் விஜய் சட்டசபையில் அறிவிப்பு.</p><p>சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்புகளை வெளியிட்டார். </p><p>பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்படும்.</p><p>ஒரு லிட்டர் பால் கொள்முதல் விலை 38 ரூபாயிலிருந்து 41 ரூபாயாக ஏற்கெனவே உயர்த்திய நிலையில் தற்போது ரூ.3 உயர்த்தி அறிவிப்பு.</p><p>எ.வ.வேலு கேட்டுக்கொண்டதன்படி மூத்த உறுப்பினர்களுக்கு முன்வரிசையில் இடம் தருவது குறித்து ஆராய்ந்து முடிவு  எடுக்கப்படும் - சபாநாயகர்</p><p>எந்த கட்சி, சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார்கள் என்ற அடிப்படையில் தான் உறுப்பினர்களுக்கு இடம் ஒதுக்கீடு - சபாநாயகர்</p><p>ஜவாஹிருல்லா, தமிமுன் அன்சாரி போன்ற மூத்த உறுப்பினர்களுக்கு சட்டசபையின் முன்வரிசையில் இடம் வழங்க வேண்டும் - எ.வ.வேலு</p><p>கல்லூரியில் கட்டப்பட்ட படைப்பகம், நூலகம் பயன்பாட்டுக்க கொண்டு வரப்படும் - சேகர்பாபு கேள்விக்கு அமைச்சர் ரமேஷ் பதில்</p><p>புதிய கட்டடம், மாலை நேர வகுப்புகள் தொடங்க முன்னதாகவே நடவடிக்கை தொடங்கப்பட்டு விட்டது - அமைச்சர் ரமேஷ்</p><p>கொளத்தூர் தொகுதி கபாலீஸ்வரர் கல்லூரியில் மாலை நேர வகுப்புகள் தொடங்க வேண்டும், கூடுதல் கட்டடம் தேவை - சேகர் பாபு</p><p>அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தொடக்கப்பள்ளி விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் வன்னி அரசு</p><p>வில்லிவாக்கம் ஒன்றியத்தில் பழங்குடியினர் மட்டும் வசிக்கும் பகுதியில் தொடக்கப்பள்ளி வேண்டும் - எம்எல்ஏ விஜய் பிரபு</p><p>எங்கெல்லாம் சமூக நீதி விடுதிகள் தேவையோ அங்கெல்லாம் கட்டிக்கொடுக்கப்படும்.</p><p>150-க்கும் மேற்பட்ட புதிய சமூக நீதி விடுதிகள் கட்டித்தரப்படும் என அறிவித்துள்ளோம். </p><p>கழிப்பறை வசதியுடன் கூடிய புதிய கட்டடம் விரைந்து கட்டித்தர ஏற்பாடு செய்யப்படும் - ஓ.எஸ்.மணியன் கேள்விக்கு வன்னி அரசு பதில்</p><p>திண்டுக்கல் - குமுளி 4 வழிச்சாலை திட்டம் பரிசீலனையில் உள்ளது. ஆட்சியர், எம்எல்ஏ உடன் கலந்து பேசி கள ஆய்வு மேற்கொண்டு தேவை அறிந்து நிதியை பொறுத்து நடவடிக்கை  எடுக்கப்படும்.</p><p>ஏலகிரியில் வியூ பாயிண்ட் அமைப்பது தொடர்பாக ஆட்சியருடன் கலந்து பேசி நிதிநிலையை பொறுத்து நடவடிக்கை - அமைச்சர் ராஜேஷ்குமார்</p><p>கழிப்பறை வசதியுடன் கூடிய கட்டடம் விரைந்து கட்டித்தர ஏற்பாடு செய்யப்படும் - அமைச்சர் வன்னி அரசு </p><p>ஜெயங்கொண்டம் இளைய பெருமாள் நல்லூரில் உள்ள ஆதிதிராவிட நலத்தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டடம் தேவை - வைத்தியலிங்கம்</p><p>ஜல்லிக்கட்டிற்கு எதிராக எம்எல்ஏ கருப்பையா கூறிய கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் - சபாநாயகர்</p><p>ஜல்லிக்கட்டுக்கு எதிரான கருத்துகளை கூறவில்லை - எம்எல்ஏ கருப்பையா விளக்கம்</p><p>சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக திண்டுக்கல் - குமுளி 4 வழிச்சாலை அமைக்கப்படுமா? - எம்எல்ஏ ஐங்கரன்</p><p>தீர்த்தகிரி மலை அடிவாரத்தில் உள்ள பழைய மடத்தை சுற்றலாத்தலமாக கருதி பாதுகாக்க வேண்டும் - சவுமியா அன்புமணி</p><p>அரூர் தொகுதி தீர்த்தமலையில் உள்ள தீர்த்தகிரீஸ்வரர் கோவில் பகுதியை சுற்றுலாத்தலமாக அறிவிக்க அரசு முன்வருமா? - சம்பத் குமார்</p><p>நினைவிடத்தை தமிழ் பண்பாட்டு மையமாக மாற்றுவது தொடர்பாக அவரது குடும்பத்தாருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>மறைமலை அடிகளார் நினைவிடத்தை புதுப்பித்து தமிழ் பண்பாட்டு மையமாக உருவாக்க அரசு முன்வருமா? - எம்எல்ஏ காமாட்சி கேள்வி</p><p>தஞ்சை தமிழ் பல்கலை. வளாகத்தில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கும் அறிவிப்பு திமுக ஆட்சியில் வெளியிடப்பட்டு நிலுவையில் உள்ளது.</p><p>கடந்த திமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட சோழர் அருங்காட்சியகம் திட்டத்தை கைவிடும் எண்ணம் இல்லை - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>புறவழிச்சாலை தொடர்பான கோரிக்கை முன்பே வந்துள்ளது. திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு விட்டது.</p><p>கிராமப்புற, நகர்ப்புற சாலைகளை நெடுஞ்சாலைகளுடன் முழுமையாக இணைப்பது தொடர்பாக கணக்கு எடுக்கப்படுகிறது - அமைச்சர் ஆதவ்</p><p>ஆலைகள் நிறைந்த தேன்கனிக்கோட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்க புறவழிச்சாலை தேவை - எம்எல்ஏ ராமச்சந்திரன்</p><p>ரூ.139 லட்சத்தில் பொதுப்பணித்துறை மூலம் முதல்கட்ட பணிகள் முடிக்கப்பட்டுள்ளது, விரைவில் திறக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்</p> <p>நாகப்பட்டினம் அரசு அருங்காட்சியகம் புதுப்பிக்கப்பட்டு விரைவில் திறக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்</p> <p>நாகை அருங்காட்சியகத்தை உரிய காலக்கெடு நிர்ணயித்து திறக்க வேண்டும்.</p><p>சோழர்காலத்தை சேர்ந்த ஆனைமங்கலம் செப்பேடுகளை நாகப்பட்டினம் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்த வேண்டும் - ஜவாஹிருல்லா கோரிக்கை</p><p>சாலைப்பணிகள், நெடுஞ்சாலையுடன் பிற சாலைகளை இணைப்பது தொடர்பாக 182 எம்எல்ஏக்கள் கோரிக்கை - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா </p><p>இணைப்பு சாலைகளால் அதிக விபத்துகள் ஏற்படும் நிலையில் உயிரிழப்புகளை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்  - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா </p><p>மதுரை, கம்பம், தேனி, நெல்லை, சென்னை, கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா </p> <p>பாலாற்றின் குறுக்கு உயர்மட்டச்சாலை பரிசீலனையில் உள்ளது - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா </p> <p>பாலாற்றின் குறுக்கு உயர்மட்டச்சாலை அமைக்கப்படுமா? - எம்எல்ஏ தென்றல் குமார்</p> <p>திருப்பூர் வேலாம்பாளையம் வரை 3 கிமீ சாலையில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள வேண்டும் - எம்எல்ஏ சத்தியபாமா கோரிக்கை</p><p>டெல்டா மாவட்டங்கள், தென்மாவட்டங்களில் இன்னும் 2 வழி, ஒரு வழி சாலைகள் அதிகம் உள்ளன.</p><p>சாலை விரிவாக்கத்திற்கு விரைவில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா </p> <p>மூலக்கேள்விக்கு தொடர்புடைய கேள்விகளை மட்டுமே கேளுங்கள் - சபாநாயகர்</p><p>ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி பகுதியில் பைபாஸ் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்தார்.</p><p>சட்டசபையில் வினாக்கள் மற்றும் விடைகள் நேரம் தொடங்கியது.</p><p>தமிழக சட்டசபை 2 நாள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடுகிறது. முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. </p><p>கேள்வி நேரம் முடிந்ததும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது.</p> ]]></content:encoded></item><item><title>பேரழிவுகளும்..., 26-ந்தேதியும்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/catastrophes-and-the-26th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/catastrophes-and-the-26th#comments</comments><guid isPermaLink="false">60b0f2bd-f24c-431e-81d9-bd8ec11c9168</guid><pubDate>Mon, 31 Aug 2026 10:26:52 +0000</pubDate><atom:updated>2026-08-31T10:26:52.500Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Tsunami,சுனாமி,nepal flood,நேபாள வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/igok57md/diaster.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ இயற்கை பேரழிவுகள்]]></media:title><media:description type="html"><![CDATA[ இயற்கை பேரழிவுகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/igok57md/diaster.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெரும்பாலான <a href="https://www.maalaimalar.com/topic/இயற்கை-பேரழிவு">பேரழிவுகள்</a> 26-ந்தேதி–யிலேயே நடந்துள்ளன. அதன் விவரம்-</p><p>2001-ம் ஆண்டு  ஜனவரி 26 : புஜ் / குஜராத் நிலநடுக்கம் (இந்தியா)</p><p>2003 டிசம்பர்26: பாம் நிலநடுக்கம் (ஈரான்)</p><p>2004 டிசம்பர் 26: இந்தியப் பெருங்கடல் சுனாமி (இந்தோனேசியா, இந்தியா, இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள்)</p><p>2005 ஜூலை 26: மும்பை பெருவெள்ளம் (இந்தியா)</p><p>2006 மே 26: ஜாவா/யோக்யகர்த்தா நிலநடுக்கம் (இந்தோனேசியா இந்த நாளிலும் தாக்கம் நீடித்தது)</p><p>2006 டிசம்பர் 26: ஹெங்சுன் நிலநடுக்கம் (தைவான்)</p><p>2006 மே 26: ‘ஐலா’ புயலின் தாக்கம் &amp; கடுமையான வெள்ளப்பெருக்கு (இந்தியா, பங்களாதேஷ்)</p><p>2015 அக்டோபர் 26: இந்து குஷ் நிலநடுக்கம் (ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா)</p><p>2018 ஆகஸ்ட்26: ஈரான்-ஈராக் எல்லை நிலநடுக்கம் (ஈரான்)</p><p>2019 டிசம்பர் 26: ‘பான்போன்’ (உர்சுலா) சூறாவளிப் புயல் (பிலிப்பைன்ஸ்)</p><p>2022 செப்டம்பர் 26: ‘நொரு’ (கார்டிங்) சூறாவளிப் புயல் (பிலிப்பைன்ஸ்)</p><p>2024 மே 26: ‘ரெமால்’ சூறாவளிப் புயல் (இந்தியா &amp; பங்களாதேஷ்)</p><h2><strong>இந்தியாவை உலுக்கிய 3 மிகப்பெரிய பேரழிவுகள்</strong> </h2><p>2001 ஜனவரி 26 குஜராத் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவான இந்த மிகச்சக்திவாய்ந்த நிலநடுக்கம், குஜராத்தின் புஜ் மற்றும் கட்ச் பகுதிகளை ஒட்டுமொத்தமாக உருக்குலைத்தது. சுமார் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாயின; பல லட்சக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமாகின.</p><p>2004 டிசம்பர் 26 இந்தியப் பெருங்கடல் சுனாமி: சுமத்ரா அருகே கடலுக்கு அடியில் ஏற்பட்ட 9.1 முதல் 9.3 வரையிலான அதிதீவிர நிலநடுக்கம், ஆழிப்பேரலையாக உருவெடுத்தது. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மற்றும் அந்தமான்-நிகோபார் கடலோரப் பகுதிகளைச் சூறையாடியதோடு, இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளையும் சீரழித்தது. இந்த கோரத் தாண்டவத்தில் உலகளவில் சுமார் 2,30,000 பேர் உயிரிழந்தனர்.</p><p>2005 ஜூலை 26 மும்பை பெருவெள்ளம்: மும்பையில் பெய்த வரலாறு காணாத மழை, நகரத்தையே ஸ்தம்பிக்க வைத்தது. சாண்டாக்குரூஸ் பகுதியில் ஒரே நாளில் 944 மி.மீ மழை பதிவாகி பேரழிவை ஏற்படுத்தியது. மராட்டிய மாநிலம் முழுவதும் 1,000க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.</p><p>நவீன இந்திய வரலாற்றின் மிகப்பெரிய பேரழிவுகளாகப் பார்க்கப்படும் இந்த மூன்றும் வெறும் 4½ ஆண்டுகளுக்குள்ளேயே, அதுவும் 26-ந் தேதியுடன் தொடர்பு கொண்டுள்ளன. இது ஒரு மர்மத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. எனினும் இது அறிவியல் பூர்வமாக உண்மையல்ல; இது ஒரு தற்செயல் நிகழ்வு என்று அறிஞர்கள் கூறுகின்றனர். </p><p>இது தொடர்பாக விஞ்ஞானிகள் கூறுகையில்,  வரலாற்றில்  மிகப்பெரிய இயற்கை பேரழிவுகள் மாதத்தின் பிற தேதிகளிலும் அதிகமாக நடந்துள்ளன.</p><p>உதாரணத்திற்கு 1960-ம் ஆண்டு மே மாதம் 22-ந்தேதி சிலி நிலநடுக்கம்,  2011-ம் ஆண்டு மார்ச் 11-ந்தேதி ஜப்பான் சுனாமி, 2015-ம் ஆண்டு ஏப்ரல் 25-ல் நேபாள நிலநடுக்கம், 2005-ம் ஆண்டு அக்டோபர் 8-ந்தெடெஹி  காஷ்மீர் நிலநடுக்கம் போன்றவற்றை கூறலாம். </p><p>நிலநடுக்கம், புயல், சுனாமி மற்றும் எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை சீற்றங்கள் பூமியின் புவித்தட்டு நகர்வுகள் மற்றும் வானிலை மாற்றங்களால் ஏற்படுகின்றன. </p><p>நாட்காட்டியின் தேதிகளுக்கும், புவியியல் மாற்றங்களுக்கும் எந்தவித அறிவியல் தொடர்பும் இல்லை. எனவே, 26-ந் தேதிக்கும் இயற்கை சீற்றங்களுக்கும் இடையே எவ்வித அறிவியல் தொடர்பும் இல்லை; இது முற்றிலும் ஒரு தற்செயலான ஒற்றுமையே என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>2026-ம் ஆண்டு இயற்கை பேரிடர்கள், உயிரிழப்பு அதிகரிப்பு: உலகம் அஞ்சி நடுங்கும் 26-ந்தேதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/2026-rise-in-natural-disasters-and-fatalities-the-26th-that-has-the-world-trembling-in-fear</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/2026-rise-in-natural-disasters-and-fatalities-the-26th-that-has-the-world-trembling-in-fear#comments</comments><guid isPermaLink="false">27239df4-48e3-4721-8aca-d2af0a658590</guid><pubDate>Mon, 31 Aug 2026 10:18:37 +0000</pubDate><atom:updated>2026-08-31T10:18:37.588Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>nepal flood,நேபாள வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/94q7jjxj/nepal.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நேபாள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள்]]></media:title><media:description type="html"><![CDATA[ நேபாள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/94q7jjxj/nepal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இனியாவது இயற்கையோடு இணைந்து பயணிப்போம் என்ற உறுதியுடன் இயற்கையை பாதுகாக்க வேண்டிய கட்டாய சூழல் உருவாகி உள்ளது.</strong></em></p><h2><strong>2026-ம் ஆண்டு...</strong></h2><p>வெள்ளம்… புயல்… நிலநடுக்கம்… வெப்பம்… உருகும் பனிப்பாறைகள் என  இந்த ஆண்டு இயற்கை பேரழிவுகள் அதிகம் கொண்ட ஆண்டாகவே அமைந்துள்ளது. இந்த பேரழிவுகள் தனித்தனி சம்பவங்களா? அல்லது வேகமாக மாறிவரும் நமது பூமியின் புதிய முகமா? 2026-ம் ஆண்டின் மீதமுள்ள மாதங்கள் எதைக் கொண்டு வரப்போகின்றன? என்ற அச்ச உணர்வு பலருக்கு ஏற்பட்டு உள்ளது. இது விஞ்ஞானிகளையும் சற்று அதிர்ச்சி அடைய செய்துள்ளது எனலாம். </p><p>அதிலும் 26-ந்தேதி சற்று அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.  ஒரு மாதத்தில் மற்ற தேதிகளைப் போலவே 26-ந் தேதியும் சாதாரணமான நாள் தான்.  ஒவ்வொரு தேதிக்கும் ஒவ்வொரு விதமான தன்மை, ஜோதிட ரீதியாக, எண்ணியல் ரீதியாக கிரகங்களின் ஆளுமை இருக்கும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, உலகையே உலுக்கிய சில, மிகப்பெரிய இயற்கைப் பேரழிவுகளின் தேதிகளைத் பார்க்கும்போது, ‘26’ என்ற எண் மீண்டும் மீண்டும் கவனத்தை ஈர்க்கிறது.</p><p>உலக வரலாற்றில் நிகழ்ந்த பல முக்கிய பேரழிவுகளை உற்றுநோக்கினால், அவற்றின் பின்னணியில் 26 என்ற எண் மீண்டும் மீண்டும் இடம்பெற்றிருக்கிறது.</p><p>2026-ம் ஆண்டின் ஆரம்பமே தென்னாபிரிக்காவுக்கு பெரும் சோகத்துடன் தொடங்கியது. மொசம்பிக், தென்னாபிரிக்கா, ஜிம்பாப்வே  உள்ளிட்ட நாடுகளில் பல வாரங்களாக கொட்டித் தீர்த்த மழையால் ஆறுகள் கரைபுரண்டு பெருவெள்ளம் ஏற்பட்டது. சில பகுதிகளில் ஒரு வருடத்தில் பெய்ய வேண்டிய மழை சில நாட்களுக்குள் பெய்ததாக ஆய்வுகள் தெரிவித்தன. சுமார் 200 பேர் உயிரிழந்ததுடன், நூறாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். காலநிலை மாற்றமும் லா நினா வானிலை மாற்றமும் மழையின் தீவிரத்தை அதிகரித்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.</p><p>அதற்கு அடுத்ததாக மடகாஸ்கர். பிப்ரவரி மாதத்தில் 10 நாட்கள் இடைவெளியில் 2 புயல்கள் அந்தத் தீவைத் தாக்கின. முதலில் பிதியா சூறாவளி; அதைத் தொடர்ந்து மிகவும் சக்திவாய்ந்த ஜிசானி  சூறாவளி. ஜிசானி சூறாவளியால் மட்டும் குறைந்தது 59 பேர் உயிரிழந்தனர்.  800-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். 4 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர்.  பிதியா புயல் மேலும் 14 உயிர்களைப் பறித்திருந்தது.</p><p>மார்ச் மாதம் கொங்கோவின் ருபாயா பகுதியில் உள்ள கோல்டன் சுரங்கத்தில் கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 200-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அவர்களில் சுமார் 70 பேர் குழந்தைகள். மண்ணுக்கடியில் கனிமத்தைத் தேடிச் சென்றவர்கள், சில நொடிகளில் மண்ணுக்குள்ளேயே புதைந்து போனார்கள்.</p><p>2026-ன் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இயற்கைப் பேரழிவாக வெப்பத்தை கூறலாம். இந்த கோடையில் ஐரோப்பா தொடர்ச்சியாக 4 கடுமையான வெப்ப அலைகளை எதிர்கொண்டது. பல இடங்களில் வெப்பநிலை 40 பாகை செல்சியசைக் கடந்தது.  ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் கிடைத்துள்ள தகவல்களின்படி, வெப்ப அலைகள் இடம்பெற்ற காலங்களில் வழக்கமாக நிகழ்வதைவிட 35 ஆயிரம் அதிக மரணங்கள் பதிவாகியுள்ளன. இது நேரடியாக வெப்ப அலையால் ஏற்பட்ட மரணங்கள் அல்ல. கடும் வெப்பமானது இதயம் மற்றும் சுவாச நோய்கள் போன்ற ஏற்கனவே உள்ள உடல்நலப் பிரச்சினைகளை மோசமாக்குவதாலும் நிகழ்கிறது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம்.</p> <p>அடுத்து வெனிசுலாவில்  ஜூன் 24-ந்தேதி சில நொடிகள் இடைவெளியில் 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவு கொண்ட 2 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் நாட்டை உலுக்கின. குறிப்பாக கராகஸ் மற்றும் லா குவைரா பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதில்  6,125 பேர் உயரிழந்தனர். சுமார் 61,000 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். 2026-இல் இதுவரை பதிவான மிகக் கொடிய நிலநடுக்கப் பேரழிவு இதுவாகும்.</p><p>ஆகஸ்ட் 15 அன்று இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்காரா பகுதியை 7.7 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியது. அதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான தொடர் அதிர்வுகள் பதிவாகின. குறைந்தது 100 பேர் உயிரிழந்தனர்; 73,000-க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்தன; சுமார் 180,000 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.</p><p>இந்த பேரழிவுகளின் பட்டியலில் தற்போது புதிதாக இணைந்திருப்பது <a href="https://www.maalaimalar.com/topic/நேபாள-வெள்ளம்">நேபாள</a> – திபெத் எல்லையின் இமயமலைப் பேரழிவு. இதில் இதுவரை 800 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. </p><p>கடந்த 26-ந்தேதி லாங்டாங் லிருங் அருகிலுள்ள பனிப்பாறையின் ஒரு பெரிய பகுதி உடைந்து, நூற்றுக்கணக்கான மீட்டர் கீழே பள்ளத்தாக்கில் சரிந்தது. பனி, பாறை, சேறு ஆகியவை பெரும் பனிப்பாறைச் சரிவாக மாறி ஆற்றுக்குள் பாய்ந்தன. பின்னர் அது பலத்த திடீர் வெள்ளமாக மாறி பொங்கிவந்து கிராமங்கள், வீடுகள், பாலங்கள், மின் திட்டங்களை அடித்துச் சென்றது.</p><p>ஆரம்பத்தில் இது நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவு என்று செய்திகள் வெளியாகின. ஆனால் பின்னர் அமெரிக்க புவியியல் ஆய்வு மையமானது, இது நிலநடுக்கத்தால் உருவானது அல்ல; பனிப்பாறையும் பாறைகளும் பெருமளவில் சரிந்ததால் உருவான அதிர்வே நிலநடுக்கம் போல பதிவானது என்று தெளிவுபடுத்தியது.</p><p>உலகம் எதை நோக்கி செல்கிறது. ஒருகாலத்தில் இயற்கையின் ஓட்டத்தில் பயணித்த ஆறுகள், இன்று மனிதனின் திட்டங்களுக்கேற்ப கட்டுப்படுத்தப்படுகின்றன. மலையைக் குடைந்து சாலைகள் அமைக்கப்படுகின்றன.  சுற்றுலா மற்றும் வணிகத்திற்காக மலைப்பகுதிகளில் கட்டுமானங்கள் பெருகுகின்றன. இயற்கையை வெல்லலாம் என்று நினைத்த மனிதனின் தந்திரம், இயற்கை சீற்றத்தின் முன் தவிடு பொடியாகிறது. இனியாவது இயற்கையோடு இணைந்து பயணிப்போம் என்ற உறுதியுடன் இயற்கையை பாதுகாக்க வேண்டிய கட்டாய சூழல் உருவாகி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பஞ்சாபில் காதலித்து கரம்பிடித்த இளைஞர் ஆணவக்கொலை- பெண் வீட்டார் வெறியாட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/national/honour-killing-in-punjab-young-man-murdered-for-love</link><comments>https://www.maalaimalar.com/news/national/honour-killing-in-punjab-young-man-murdered-for-love#comments</comments><guid isPermaLink="false">7b1bbd71-96e3-4004-94b5-08bff9104a5d</guid><pubDate>Mon, 31 Aug 2026 10:08:28 +0000</pubDate><atom:updated>2026-08-31T10:08:28.847Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Punjab,ஆணவக்கொலை,Honor killing in Punjab,Tarn Taran,Rampage,பஞ்சாப் மாநிலம்,தார்ன் தரான் பகுதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/ms3jgrma/HONOUR.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Honor killing in Punjab]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/ms3jgrma/HONOUR.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தன் தங்கையை அழைத்துச் சென்ற ஆத்திரத்தில் இருந்த பெண் வீட்டார், ஜக்ஜீத் சிங்கை பழிவாங்கத் திட்டம் தீட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/shock-in-delhi-newborn-baby-rescued-from-roadside">பஞ்சாப் மாநிலம்</a> தார்ன் தரான் பகுதியில் 22 வயதான ஜக்ஜீத் சிங் எனும் இளைஞர் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p><h2>காதல் <strong>திருமணம்</strong> </h2><p>கொல்லப்பட்ட ஜக்ஜீத் சிங், சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு தன் காதலியை வீட்டை விட்டு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால், இவர்களது திருமணத்திற்கு அப்பெண்ணின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். தன் தங்கையை அழைத்துச் சென்ற ஆத்திரத்தில் இருந்த பெண் வீட்டார், ஜக்ஜீத் சிங்கை பழிவாங்கத் திட்டம் தீட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.</p><h2>கத்திகளுடன் பா<strong>ய்ந்த அண்ணன்க</strong>ள்</h2><p>நேற்று ஜக்ஜீத் சிங் பேருந்து நிலையம் அருகே நின்றுகொண்டிருந்தபோது, பெண்ணின் சகோதரர்களான ஜஸ்ப்ரீத் சிங் மற்றும் ஹர்ப்ரீத் சிங் ஆகிய இருவரும் திடீரென கத்திகளுடன் பாய்ந்து தாக்குதல் நடத்தினர். சரமாரியாக வெட்டப்பட்டதில் பலத்த காயமடைந்த ஜக்ஜீத் சிங் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>போலீசா<strong>ர் வழக்குப் பதி</strong>வு</h2><p>தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறை அதிகாரி, ஜக்ஜீத் சிங்கின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். இக்கொலை குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பியோடிய சகோதரர்களான ஜஸ்ப்ரீத் சிங் மற்றும் ஹர்ப்ரீத் சிங்கை தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஆணவக்கொலை கோணத்தில் இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>52 கோவில்களில் நாளை முதல் செல்போன்களுக்கு தடை- அமைச்சர் ரமேஷ் பேட்டி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-ramesh-says-ban-on-mobile-phones-in-52-temples-starting-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-ramesh-says-ban-on-mobile-phones-in-52-temples-starting-tomorrow#comments</comments><guid isPermaLink="false">fa9f7287-1ec5-42a7-a095-066dcb9b7767</guid><pubDate>Mon, 31 Aug 2026 09:59:37 +0000</pubDate><atom:updated>2026-08-31T09:59:37.320Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Temples,கோவில்கள்,செல்போன் தடை,cellphone ban,அமைச்சர் ரமேஷ்,Minister Ramesh</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/seghg5eb/cellphoneban.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ செல்போன்களுக்கு தடை]]></media:title><media:description type="html"><![CDATA[ செல்போன்களுக்கு தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/seghg5eb/cellphoneban.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பெரிய கோவில்களில் சுமார் 20 ஆயிரம் செல்போன்கள் வைத்திருக்கும் வகையில் பாதுகாப்பு பெட்டக வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.</strong></em> </p><p>தமிழ்நாட்டில் உள்ள கோவில்களின் புனிதத் தன்மை மற்றும் ஆன்மிக சூழலை பாதுகாக்கும் வகையில், கோவிலுக்குள் செல்போன் பயன்படுத்துவதற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் பல கோவில்களில் பக்தர்கள் செல்போன்கள் மூலம் புகைப்படம், வீடியோ, செல்பி எடுக்கிறார்கள். </p><h2><strong>புகார்கள்</strong></h2><p>மேலும் ரீல்ஸ் உள்ளிட்ட வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்வதாகவும் இந்து சமய அறநிலையத்துறைக்கு புகார்கள் வந்தன.</p><p>இதனால் கோவிலுக்கு வழிபாடு செய்ய வரும் பிற பக்தர்களுக்கு அசவுகரியம் ஏற்படுவதுடன், கோவில்களின் புனிதத்தன்மையும் பாதிக்கப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்தது.</p><h2><strong>தடை செய்யப்படும்</strong></h2><p>இதையடுத்து, தமிழகத்தில் உள்ள கோவில் நிர்வாகங்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருந்தார். அதில், ‘செப்டம்பர் 1-ந்தேதி முதல், முதுநிலை திருக்கோவில்களில் பக்தர்கள் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">செல்போன்</a> கொண்டு செல்வது முழுமையாக தடை செய்யப்படும். </p><p>முக்கிய பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களை கோவிலுக்குள் சென்று வீடியோ அல்லது புகைப்படம் எடுக்க ஊடகங்களுக்கு அனுமதி வழங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சினிமா பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கோவிலுக்கு வந்தால் ஒரு நாளுக்கு முன்பாகவே தகவல் தெரிவிக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார்.</p><p>அதன்படி தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான அனைத்து கோவில்களிலும் நாளை (1-ந்தேதி) முதல் செல்போன்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுகிறது. </p><h2><strong>பாதுகாப்பு பெட்டகம்</strong></h2><p>கோவிலுக்குள் செல்லும் முன்பு பக்தர்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பாக ஒப்படைக்க நுழைவு வாயில் மற்றும் காலணி பாதுகாப்பு மையம் உள்ளிட்ட இடங்களுக்கு அருகில் செல்போன் பாதுகாப்பு பெட்டக வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஒவ்வொரு கோவிலிலும் உள்ள வசதிக்கு ஏற்ப இந்த பாதுகாப்பு பெட்டக வசதி அமைக்கப்பட்டு உள்ளது.</p><p>பக்தர்களிடம் இருந்து செல்போன்களை பெற்று பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு ஒரு செல்போனுக்கு ரூ.5 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதற்கான ரசீதும் வழங்கப்பட உள்ளது. மேலும் கோவில் வளாகத்திற்குள் செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற வாசகம் அடங்கிய அறிவிப்பு பலகைகள் கோவில் நுழைவு வாயில் மற்றும் கோவிலுக்கு வெளியில் வைக்கப்பட்டு உள்ளது.</p><h2><strong>அறிவிப்பு</strong></h2><p>ஒலிபெருக்கி மூலமாகவும் செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை பக்தர்களுக்கு அறிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பக்தர்களிடம் இருந்து செல்போன்களை பெற்று பாதுகாப்பாக வைப்பதற்கும், பக்தர்கள் திரும்பி செல்லும்போது அவற்றை ஒப்படைப்பதற்கும் தேவையான பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவில் வளாகத்திற்குள் செல்போன் பயன்படுத்துவது, புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது உள்ளிட்ட செயல்களை கண்காணிக்க போதிய எண்ணிக்கையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த விதிகளை மீறி புகைப்படம் அல்லது வீடியோ எடுக்கும் பக்தர்கள் மீது போலீசில் புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.</p><h2><strong>நடவடிக்கை</strong></h2><p>கோவில்களில் புகைப்படம், வீடியோ எடுத்து வலைதளங்களில் வெளியிடப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றால் அதற்கு பொறுப்பான அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.</p><p>மேலும் சினிமா பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரும்போது கோவிலுக்குள் வீடியோ அல்லது புகைப்படம் எடுக்க ஊடகங்களுக்கு அனுமதி வழங்குவது முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகள் அனைத்து கோவில்களிலும் முறையாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள், அறங்காவலர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு உரிய அறிவுரைகளை மண்டல இணை ஆணையர்கள் வழங்கி உள்ளனர்.</p><h2><strong>சினிமா பிரபலங்கள்</strong></h2><p>மேலும் பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது பொது பக்தர்களுக்கு எவ்வித அசவுகரியமும் ஏற்படாத வகையிலும், கோவில்களின் புனிதத்தன்மை, மரபு மற்றும் ஒழுங்கு பாதிக்காத வகையிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.</p><p>சினிமா பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கோவிலுக்கு வருகை தருவது தெரியவந்தால், ஒரு நாளுக்கு முன்பாகவோ அல்லது தகவல் கிடைத்த உடனேயோ, அவர்கள் வரவிருக்கும் கோவில், வருகை நேரம், அவர்களுடன் வருபவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட முழுமையான விவரங்களை ஆணையர் அலுவலகத்திற்கு கட்டாயம் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.</p><h2><strong>பெரிய கோவில்</strong></h2><p>முன்கூட்டியே அனுமதி பெற்றவர்கள் அல்லது பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக அவசியமான அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மட்டுமே பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இந்த நடைமுறைகள் அனைத்துமே பெரிய கோவில்களில் நாளை முதல் அமலுக்கு வர உள்ளன.</p><p>சென்னை வடபழனி முருகன் கோவில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில், குன்றத்தூர் முருகன் கோவில், மாங்காடு காமாட்சி அம்மன் கோவில், பெரியபாளையம் பவானி அம்மன் கோவில், வல்லக்கோட்டை முருகன் கோவில், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், ஏகாம்பரநாதர் கோவில், திருவள்ளூர் வீரராகவர் கோவில், திருத்தணி முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நாளை முதல் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுகிறது.</p><h2><strong>திருச்செந்தூர்</strong></h2><p>மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தற்போது இந்த கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளது. மேலும் திருச்செந்தூர் முருகன் கோவில், பழனி முருகன் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், நெல்லையப்பர் கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், மதுரை அழகர் கோவில், கோவை கோணியம்மன் கோவில், சேலம் கோட்டை மாரியம்மன் கோவில், ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் உள்ளிட்ட பெரிய கோவில்களில் நாளை முதல் செல்போன்கள் கொண்டு செய்ய தடை விதிக்கப்படுகிறது.</p><h2><strong>அமைச்சர் ரமேஷ்</strong></h2><p>கோவில்களுக்குள் செல்போன்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுவது குறித்து இந்து சமய அறநிலையத்துறை <a href="https://www.maalaimalar.com/topic/அமைச்சர்-ரமேஷ்">அமைச்சர் ரமேஷ்</a> இன்று, மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-</p><p>தமிழகத்தில் உள்ள பெரிய கோவில்களில் நாளை (1-ந்தேதி) முதல் செல்போன்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுகிறது. முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள 52 கோவில்களில் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது. இதற்காக கோவில்களில் செல்போன் பாதுகாப்பு பெட்டகம் அமைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம்.</p><h2><strong>தங்கும் அறைகள்</strong></h2><p>உள்ளூர் பக்தர்கள் தங்கள் வீடுகளிலும், வெளியூர் பக்தர்கள் தாங்கள் தங்கி இருக்கும் விடுதி அறைகளிலும் செல்போன்களை வைத்து விட்டு தரிசனம் செய்ய செல்லலாம். மேலும் கார்கள் உள்ளிட்ட வாகனங்களிலும் செல்போன்களை வைத்து விட்டு கோவிலுக்கு வரலாம். </p><p>அப்படி முடியாத பட்சத்தில் கோவில்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் செல்போனை கொடுத்து விட்டு செல்லலாம். தரிசனம் முடிந்து வரும்போது அதனை பாதுகாப்பாக பெற்று செல்லலாம்.</p><p>செல்போன்களை தாங்கள் தங்கி இருக்கும் அறைகளில் வைத்து விட்டு வருமாறு கூறுவதற்கு முக்கிய காரணம் உள்ளது. உதாரணமாக பெரிய கோவில்களில் சுமார் 20 ஆயிரம் செல்போன்கள் வைத்திருக்கும் வகையில் பாதுகாப்பு பெட்டக வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். </p><h2><strong>தவிக்க நேரிடும்</strong></h2><p>திருவிழா காலங்கள் மற்றும் முக்கிய நாட்களில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்தால் அவர்கள் செல்போனை வைக்க இடமில்லாமல் தவிக்க நேரிடும். இதனால் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்படும். இதனை தவிர்க்கவே அறைகளிலோ அல்லது கார்களிலோ செல்போன்களை வைக்குமாறு அறிவுறுத்துகிறோம்.</p><p>பக்தர்கள் மூலஸ்தானத்தில் உள்ள சாமி சிலை முன்பு ரீல்ஸ் எடுப்பது மற்றும் அதை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>கோவில்களில் சினிமா பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மூலஸ்தானத்தில் சாமி தரிசனம் செய்யும் போது, ஊடகத்தினர் அங்கு வரை சென்று புகைப்படம் எடுக்கிறார்கள். இனி அதற்கும் அனுமதி இல்லை. </p><p>எனவே பிரபலங்களை கோவிலுக்கு வெளியே கோபுரம் தெரியும்படி புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். கோவில் வளாகத்துக்குள் சென்று புகைப்படம் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>விழா காலங்கள்</strong></h2><p>விழா காலங்கள் மற்றும் கோவில்களில் முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் போது பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்தினர் கோவிலுக்குள் சென்று நிகழ்ச்சிகளை புகைப்படம் எடுக்கவும், வீடியோ எடுக்கவும் விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கப்படும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>டெல்லியில் ஓடும் படுக்கை வசதி கொண்ட பேருந்தில் 16 வயது பள்ளி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை! </title><link>https://www.maalaimalar.com/news/national/16-year-old-schoolgirl-gang-raped-on-a-sleeper-bus-in-delhi</link><comments>https://www.maalaimalar.com/news/national/16-year-old-schoolgirl-gang-raped-on-a-sleeper-bus-in-delhi#comments</comments><guid isPermaLink="false">d2dd2a7f-3fd0-4fce-9c6f-215150470ab9</guid><pubDate>Mon, 31 Aug 2026 09:58:04 +0000</pubDate><atom:updated>2026-08-31T09:58:04.522Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>பள்ளி மாணவி,கூட்டுப் பாலியல் வன்கொடுமை,gang rape,டெல்லி காவல்துறை,Sleeper Bus,minor student,படுக்கை வசதி கொண்ட பேருந்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/8g80mwxf/New-Project-2026-08-31T145042.553.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டெல்லியில் ஓடும் ஸ்லீப்பர் பேருந்தில் 16 வயது பள்ளி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை! ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/8g80mwxf/New-Project-2026-08-31T145042.553.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் ஸ்லீப்பர் பேருந்தில் (படுக்கை வசதி கொண்ட பேருந்து) 16 வயது மாணவி ஓட்டுநர் மற்றும் நடத்துநரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>ஆக.4ம் தேதி உத்தப் பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி கருத்து வேறுபாடு காரணமாக, தனது குடும்பத்தினருக்குத் தெரிவிக்காமல் வீட்டை விட்டு வெளியேறி, நொய்டாவில் உள்ள தனது உறவினரைப் பார்க்கச் சென்றுள்ளார். </p><p>அப்போது கனமழை மற்றும் இருள் காரணமாக கிரேட்டர் நொய்டாவில் பாரி சௌக் என்ற இடத்தில் இறங்கியுள்ளார். அப்போது இந்த படுக்கை வசதிக் கொண்ட பேருந்து காலியாக அப்பகுதி வழியாக சென்றுள்ளது.</p><p>கனமழையில் சிக்கிக்கொண்ட மாணவி உதவிக்காக சைகை காட்டி பேருந்தை நிறுத்தியுள்ளார். பேருந்தும் நிறுத்தப்பட்டு, நொய்டா செக்டர்-63க்குச் செல்வதாகக் கூறி, ஓட்டுநரும் நடத்துநரும் மாணவியை ஏற்றிச் சென்றுள்ளனர். </p><p>பேருந்தில் ஏறிய சிறிதுநேரத்திலேயே நடத்துநர் மாணவியிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். உடனே மாணவி கூச்சலிட அவரை கொலைசெய்து விடுவதாக மிரட்டி இருவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். </p><p>பின்னர் மாணவியை நள்ளிரவில் காஷ்மீர் கேட் பேருந்து முனையத்திற்கு அருகிலுள்ள ரிங் ரோட்டில் இறக்கிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். அச்சமடைந்த மாணவி காஷ்மீர் கேட் காவல் நிலையத்தை தொடர்புகொண்டு புகாரித்துள்ளார். </p><p>மாணவியின் புகாரை வைத்து விசாரணையைத் தொடங்கிய காவல்துறை திமர்பூரில் உள்ள ஒரு பேருந்து நிறுத்துமிடத்தில் இருந்து குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் கைது செய்துள்ளனர். </p><p>மேலும், குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட படுக்கை வசதி கொண்ட பேருந்தையும் பறிமுதல் செய்து, தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.</p><p>அந்தப் பேருந்து பரி சௌக்கிலிருந்து காஷ்மீர் கேட் வரை சுமார் 47 கிலோமீட்டர் தூரம் சென்றுள்ளது. பேருந்தில் ஸ்கீரின் போடப்பட்டிருந்ததால் உள்ளே நடந்தவற்றை அவ்வழியே சென்றவர்களால் பார்க்க முடியவில்லை. இதனால் மாணவி கூச்சலிட்டதும் வெளியே சென்றவர்களுக்கு கேட்கவில்லை.</p><p>தொடர்ந்து போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>இன்ஸ்டாகிராம் பிரபலம் அமலா ஷாஜி வெள்ளித்திரையில் அறிமுகம்: விக்ரம் பிரபு படத்துடன் தமிழ் சினிமாவில் என்ட்ரி!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/instagram-star-amala-shaji-makes-silver-screen-debut</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/instagram-star-amala-shaji-makes-silver-screen-debut#comments</comments><guid isPermaLink="false">f6f13925-afb5-4cb3-8dd9-23bd7d6bee1c</guid><pubDate>Mon, 31 Aug 2026 09:51:27 +0000</pubDate><atom:updated>2026-08-31T09:51:27.708Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>விக்ரம் பிரபு,Yuvan shankar raja,யுவன் சங்கர் ராஜா,Amala Shaji,Vikram Prabhu 26,Director Siddharth,அமலா ஷாஜி,இயக்குநர் சித்தார்த்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/jvoe2hai/amala.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Amala Shaji  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/jvoe2hai/amala.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் 4.2 மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்களைக் கொண்டு, தனது நடனம் மற்றும் எக்ஸ்பிரஷன்கள் மூலம் பிரபலமடைந்த கேரளா மாநிலத்தைச் சேர்ந்த அமலா ஷாஜி, தற்போது தமிழ் திரைப்படத்துறையில் நடிகையாகக் களம் இறங்குகிறார்.</p><p>தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரம் பிரபுவின் 26-வது திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அமலா ஷாஜி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை புதுமுக இயக்குநர் சித்தார்த் இயக்க, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும், இத்திரைப்படத்தில் கதாநாயகியாக சிவாத்மிகா ராஜசேகர் நடிக்கிறார்.</p><h2>அ<strong>மலா ஷாஜி நெகிழ்ச்சி</strong></h2><p>தனது சினிமா நுழைவு குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ள <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/nithya-menen-joins-hands-with-the-producer-of-naduvula-konjam-pakkatha-kaanom">அமலா ஷாஜி</a>, "நீண்ட நாட்களாக நான் கண்ட கனவு இன்று நனவாகியுள்ளது. இது ஒரு சிறிய தொடக்கமாக இருந்தாலும், எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த அரிய வாய்ப்பை வழங்கி எனது முதல் பயணத்தை மறக்க முடியாததாக மாற்றிய இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் விக்ரம் பிரபு மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்" என குறிப்பிட்டுள்ளார்.</p><h2>ரசிகர்க<strong>ள் மத்தியில் பெரு</strong>ம் எதிர்பார்ப்பு</h2><p>சமூக வலைத்தளங்களில் வைரல் ஸ்டாராக வலம் வந்த அமலா ஷாஜி, தற்போது வெள்ளித்திரைக்கு நுழைவது அவரது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும், திரையுலகில் கூடுதல் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கனடா நிறுவனங்கள் அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்தால் சுங்க வரிகள் இல்லை- டிரம்ப்</title><link>https://www.maalaimalar.com/news/world/trump-says-canadian-companies-face-no-tariffs-in-us</link><comments>https://www.maalaimalar.com/news/world/trump-says-canadian-companies-face-no-tariffs-in-us#comments</comments><guid isPermaLink="false">b76fe107-e2fe-461c-bc68-9733390e09ee</guid><pubDate>Mon, 31 Aug 2026 09:37:47 +0000</pubDate><atom:updated>2026-08-31T09:37:47.554Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>trump,அமெரிக்கா,America,டிரம்ப் அறிவிப்பு,கனடா நிறுவனங்கள்,canada firms</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/stvj7exf/trump.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ America president Trump]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/stvj7exf/trump.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்க-கனடா வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து சுமார் 20 பில்லியன் டாலர் மதிப்புள்ள கனடியப் பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்தது. இந்த வரிகள் 2027-ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.</p><p>பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாததால் 2 நாடுகளும் ஒன்றையொன்று குற்றம்சாட்டின. அமெரிக்காவுடன் மோதலுக்குத் தங்கள் நாடு தயாராக இருப்பதாக கனடா அதிகாரிகள் எச்சரித்திருந்தனர்.</p><p>புதிதாக விதிக்கப்பட்டு உள்ள வரிகளைத் தவிர்ப்பதற்காக, கனடிய நிறுவனங்கள் தங்கள் தலைமையகங்களையும் உற்பத்தி வசதிகளையும் அமெரிக்காவுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் சமூகவலைதள பதிவில் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் அனைத்து கனடிய நிறுவனங்களும் உடனடியாக அமெரிக்காவிற்கு இடம் பெயரட்டும்.</p><p>அவற்றுள் பல, அமெரிக்காவின் முட்டாள்தனமான தலைமை காரணமாக பல ஆண்டுகளுக்கு முன்பே வெளியேறிய நிறுவனங்களாகும். </p><p>நீங்கள் திரும்பி வரும்போது, ​​சுங்க வரிகள் எதுவும் இருக்காது என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பதிவில், <a href="https://www.maalaimalar.com/news/world/us-canada-trade-talks-fail-canada-to-impose-retaliatory-tariffs" rel="nofollow">கனடா</a> அமெரிக்காவின் 2-வது பெரிய வர்த்தகப் பங்காளியாக இருந்தபோதிலும், அது அமெரிக்காவின் மிக மோசமான வர்த்தகப் பங்காளிகளில் ஒன்றாகும் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.</p><p>அமெரிக்கப் பொருளாதாரம் கனடாவைவிடப் பல மடங்கு பெரியது. கனடாவின் ஏற்றுமதியில் சுமார் 70 சதவீதம் அமெ ரிக்காவிற்கே செல்கிறது. அதே நேரத்தில் பல அமெரிக்க மாநிலங்களுக்கு மிக முக்கிய வாடிக்கையாள ராகக் கனடா விளங்குறது என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>பிரபஞ்சத்தை ஆய்வு செய்ய விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ரோமன் தொலைநோக்கி: நாசா</title><link>https://www.maalaimalar.com/news/world/roman-telescope-sent-to-space-to-study-universe-nasa</link><comments>https://www.maalaimalar.com/news/world/roman-telescope-sent-to-space-to-study-universe-nasa#comments</comments><guid isPermaLink="false">521017a9-68c7-445f-9909-d63dd8a91397</guid><pubDate>Mon, 31 Aug 2026 09:34:22 +0000</pubDate><atom:updated>2026-08-31T09:34:22.523Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>SpaceX,நாசா,ஸ்பேஸ் எக்ஸ்,nasa,விண்வெளி தொலைநோக்கி,Space Telescope</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/9mf3r821/Untitled-design-13.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ NASA Roman Space Telescope]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/9mf3r821/Untitled-design-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE">நாசா</a> தனது புதிய நான்சி கிரேஸ் ரோமன் விண்வெளி தொலைநோக்கியை, கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தியது. </p><p>ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கன் ஹெவி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட இந்த புதிய தொலைநோக்கி, பிரபஞ்சத்தில் எளிதில் கண்களுக்கு புலப்படாமல், தொலைவில் உள்ள பொருட்களை ஆய்வு செய்யவும், அதன் மூலம் கிடைக்கப்பெற்ற தரவுகளை பூமிக்கு அனுப்பவும் உள்ளது.</p><h3><strong>நான்சி கிரேஸ் ரோமன் விண்வெளி தொலைநோக்கி</strong></h3><p>ரோமன் தொலைநோக்கி ஆரம்பத்தில் ஒரு உளவுத் தொலைநோக்கியாக வடிவமைக்கப்பட்டது, பின்னர் நாசாவிற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.</p><p>புகழ்பெற்ற ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கியை முன்னெடுத்த நாசாவின் முதல் தலைமை வானியலாளரான நான்சி கிரேஸ் ரோமனின் நினைவாக இதற்கு ‘நான்சி கிரேஸ் ரோமன் தொலைநோக்கி’ என பெயரிடப்பட்டது.</p><p>நான்சி கிரேஸ் ரோமன் விண்வெளித் தொலைநோக்கி ஒரு சுற்றுலாப் பேருந்து அளவில் மிகப்பெரியதாக உள்ளது. 8,164 கிலோ எடை கொண்ட இந்த விண்கலம், தற்போது ஒரு மில்லியன் மைல் பயணத்தில் உள்ளது.</p><p>இந்தப் பயணம் விண்வெளியில் உள்ள அதன் புதிய இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்லும்.</p><p>அங்கு, ஹப்பிள் தொலைநோக்கியை விட மிகப் பெரிய பார்வைப் புலத்தைக் கொண்டு, பிரபஞ்சத்தின் பரந்த பகுதிகளை ஆய்வு செய்து, கருப்பு ஆற்றல், கருப்புப் பொருள் மற்றும் புறக்கோள்களைப் பற்றி ஆராய, இந்த தொலைநோக்கி பயன்படுத்தப்பட உள்ளது.</p><p>நான்சி கிரேஸ் ரோமன் விண்வெளித் தொலைநோக்கி, இறுதியாக L2 எனப்படும் இரண்டாவது சூரிய-பூமி லாக்ராஞ்ச் புள்ளியைச் சுற்றி அதன் இறுதி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படவுள்ளது.</p><p>இந்தப் புள்ளியில், பூமி மற்றும் சூரியனின் போட்டி ஈர்ப்பு விசைகள், குறைந்தபட்ச எரிபொருளைப் பயன்படுத்தி அதனை நிலையாக வைத்திருக்கும்.</p><p>இந்த தொலைநோக்கியின் பார்வைப் திறன் 100 மடங்கு பெரியது, இது ஒரே நேரத்தில் வானத்தின் பெரும் பகுதிகளை உள்ளடக்குவதற்கு உதவும்.</p><p>ரோமன் தொலைநோக்கி விண்மீன் திரள்களை ஒன்றாகப் பிணைத்து, பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பை வரையறுப்பதாகத் தோன்றும் கண்ணுக்குப் புலப்படாத பொருட்களை ஆய்வு செய்ய பயன்பட உள்ளது.</p><p>மேலும், ஈர்ப்பு விசையானது நீண்ட தூரங்களுக்கு ஒளியின் பாதையை எவ்வாறு நுட்பமாகப் பாதிக்கிறது என்பதை ஆய்வு செய்யவும், ரோமன் தொலைநோக்கி பயன்படுத்தப்பட உள்ளது.</p><p>ரோமன் தொலஒநோக்கி சூரிய மண்டலத்திற்கு வெளியே உள்ள கோள்களையும் ஆராய உள்ளது. 1990-களில் வானியலாளர்கள் புறக்கோள்களின் இருப்பை உறுதிப்படுத்தியதிலிருந்து, 6,000-க்கும் மேற்பட்ட புறக்கோள்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.</p><p>ஒரு கோள் தனது நட்சத்திரத்தின் முன்னால் கடந்து செல்வதால் ஏற்படும் நட்சத்திர ஒளியின் சரிவுகளை நாசா அடையாளம் காணும் என எதிர்பார்க்கிறது.</p><p>ரோமன் தொலைநோக்கி, மேம்படுத்தப்பட்ட ஆண்டனாவைப் பயன்படுத்தி, ஒவ்வொரு நாளும் 1.4 டெராபைட் அளவிலான மூல அறிவியல் தரவுகளை அனுப்பும். இந்தத் தரவுகள் விஞ்ஞானிகளுக்கும் பொதுமக்களுக்கும் உடனடியாகக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இந்த தரவுகளை நாசா கிளவுட் அடிப்படையிலான அமைப்பு மூலம் யார் வேண்டுமானாலும் அணுகும்படி செய்ய உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>ரோமன் தொலைநோக்கி அனுப்பும் மூலத் தரவுகளைப் பார்த்து அறிவியலாளர்கள் புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கேரளாவில் உம்மன் சாண்டியின் கல்லறையில் மலர் அஞ்சலி செலுத்திய கிறிஸ் கெய்ல்</title><link>https://www.maalaimalar.com/news/national/chris-gayle-pays-floral-tribute-at-oommen-chandys-grave-in-kerala</link><comments>https://www.maalaimalar.com/news/national/chris-gayle-pays-floral-tribute-at-oommen-chandys-grave-in-kerala#comments</comments><guid isPermaLink="false">6a7970c9-78a9-4843-b611-7ecf17283300</guid><pubDate>Mon, 31 Aug 2026 09:34:09 +0000</pubDate><atom:updated>2026-08-31T09:34:09.063Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Chris Gayle,கிறிஸ் கெய்ல்,Oommen Chandy,kottayam,உம்மன் சாண்டி,கோட்டயம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/6ng7vau4/Untitled-design-10.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chris Gayle]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/6ng7vau4/Untitled-design-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரளம் புதுப்பள்ளியில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியின் நினைவிடத்தில், மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் மலர் அஞ்சலி செலுத்தினார். </p><h3><strong>கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி</strong></h3><p>கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி கடந்த 2023-ஆம் ஆண்டு மறைந்ததை அடுத்து, அவரது சொந்த ஊரான கோட்டயம் மாவட்டத்தில் உள்ள புதுப்பள்ளியில் பாதிரியார்களுக்கான பிரத்தியேகமான சாமதியில் அவருக்கு சிறப்பு கல்லறை கட்டப்பட்டது.</p><p>இந்த கல்லறை அனைத்து மதங்கள் மற்றும் அரசியல் சார்புகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களை ஈர்க்கும் வகையில் ஒரு முக்கிய நினைவிடமாக பார்க்கப்படுகிறது.</p><p>மேலும் இந்த நினைவிடத்தில் பொதுமக்கள் தங்களின் தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில், இந்த கல்லறைக்கு வந்து மனுக்களையும், கடிதங்களையும் விட்டு செல்கின்றனர்.</p><h3><strong>கோட்டயம் வருகை</strong></h3><p>இந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கிறிஸ் கெய்ல் ஹெலிகாப்டர் மூலம் கோட்டயம் வந்து மதியம் சுமார் 12:25 மணியளவில் புதுப்பள்ளியில் தரையிரங்கினார்.</p><p>இதையடுத்து கேரள முன்னாள் முதல்வரான உம்மன் சாண்டியின் கல்லறைக்கு வந்த அவர் மலரஞ்சலி செலுத்தினார்.</p>]]></content:encoded></item><item><title>கரப்பான்பூச்சி கட்சியின் டெல்லி பேரணி விவகாரத்தில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/supreme-court-refuses-to-intervene-in-the-cockroach-partys-delhi-rally-issue</link><comments>https://www.maalaimalar.com/news/national/supreme-court-refuses-to-intervene-in-the-cockroach-partys-delhi-rally-issue#comments</comments><guid isPermaLink="false">af577e16-8813-4a74-902f-43ea30635043</guid><pubDate>Mon, 31 Aug 2026 09:17:51 +0000</pubDate><atom:updated>2026-08-31T09:17:51.000Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,உச்ச நீதிமன்றம்,Protest march,Cockroach Janta Party,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,போராட்டப் பேரணி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/iq3txrg4/New-Project-2026-08-31T143941.466.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கரப்பான்பூச்சி கட்சியின் டெல்லி பேரணி விவகாரத்தில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/iq3txrg4/New-Project-2026-08-31T143941.466.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் உள்ள இந்தியா நுழைவாயிலில் இருந்து டெல்லி தலைமை காவல் செயலகம் வரை செப்.5ம் தேதி <a href="https://www.maalaimalar.com/news/national/central-government-fails-to-fulfill-promises-cockroach-janata-party-announces-rally-for-september-5">போராட்டப் பேரணி </a>அறிவித்துள்ளது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி. </p><p>நீட் போராட்டத்தின்போது அரசால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததை கண்டித்து, இந்தப் பேரணியை அந்த அமைப்பு அறிவித்துள்ளது. </p><p>இந்நிலையில் இந்தப் பேரணி விவகாரத்தில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.</p><p>சட்டம்-ஒழுங்கு தொடர்பான ஏற்பாடுகள் குறித்து மத்திய மற்றும் டெல்லி அரசுகள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. </p><p>லூதியன்ஸ் டெல்லி, இந்திய நுழைவாயில், மத்திய அரசு வளாகம் உள்ளிட்ட பாதுகாப்பு உணர்திறன்மிக்க பகுதிகளில் போராட்டங்கள், பெரிய அளவிலான மக்கள் திரள்வு உள்ளிட்டவைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கக்கோரி சிவம் உபாத்யாய் மற்றும் ஓய்வுபெற்ற டெல்லி காவல்துறை அதிகாரி ராஜேந்திர சிங் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம் இதனை தெரிவித்துள்ளது.</p><p> செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெறவிருக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாடு முடியும் வரை, கரப்பான்பூச்சி கட்சியின் இந்த பேரணிக்கு தடைவிதிக்க வேண்டும் அல்லது ஒத்திவைக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது. </p><p>இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் மனு விசாரணைக்கு வந்தநிலையில்.,</p><p>“போராட்டத்தில் ஈடுபடும் அனைவரும் சட்டப்படியும், அமைதியான முறையிலும் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம் எனக் கூறி, பேரணியைத் தடுக்க எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது” எனத் தெரிவித்தது.</p><p>மேலும் இதற்கு மாறாக எதையும் அனுமானிக்கவோ அல்லது ஊகிக்கவோ எங்களுக்கு முன் வலுவான சூழ்நிலைகள் எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டது. </p><p>தொடர்ந்து “இது வேறு ஒரு தரப்பில் பரிசீலிக்கப்பட வேண்டும். இதில் நாங்கள் தலையிட வேண்டியதில்லை. இவை சட்டம் மற்றும் ஒழுங்கு ஆணையத்தால் பரிசீலிக்கப்பட வேண்டிய பிரச்சினைகள். </p><p>எது சட்டப்பூர்வமானது, எது சட்டவிரோதமானது என்று கூறுவது அந்த ஆணையத்தின் பொறுப்பாகும். இரு தரப்பினரும் சட்டக் கட்டமைப்பிற்கு இணங்கவும், சட்டப்பூர்வமாகவும், நியாயமாகவும் செயல்படுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.” என தெரிவித்து, </p><p>இந்த விவகாரத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளே முடிவெடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு விசாரணையை செப்.10ம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>நேபாள பெருவெள்ளம்: மீட்கப்படும் உடல்களை டி.என்.ஏ. மூலம் அடையாளம் காண முயற்சி
</title><link>https://www.maalaimalar.com/news/world/nepal-will-collect-and-preserve-dna-samples-and-other-identifying-information-from-victims</link><comments>https://www.maalaimalar.com/news/world/nepal-will-collect-and-preserve-dna-samples-and-other-identifying-information-from-victims#comments</comments><guid isPermaLink="false">0dba2aea-905a-4f5e-9baf-ea0b8981fe35</guid><pubDate>Mon, 31 Aug 2026 08:58:37 +0000</pubDate><atom:updated>2026-08-31T08:58:37.542Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாளம்,nepal,டிஎன்ஏ,Nepal Floods,DNA samples,நேபாள வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/7dil0t2n/nepal1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nepal]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/7dil0t2n/nepal1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் உடலில் அடையாள அட்டையும் இருப்பிட எண்ணும் இடப்பட்டு, நெகிழிப் பையில் சுற்றப்பட்டு, பின்னர் குழியில் புதைக்கப்படுகிறது. அதற்கு முன்பு, அதில் இருந்து டி.என்.ஏ மாதிரிகள் எடுக்கப்பட்டன.</strong></em></p><h2>நேபாள பெருவெள்ளம்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/world/nepal-flood-rescue-6-year-old-girl-from-building-debris">நேபாள பெருவெள்ளத்தில்</a> உயிரிழப்புகள் அதிகரித்துள்ள சூழலில் மீட்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. மீட்கப்பட்ட உடல்களை பாதுகாப்பது அதிகாரிகளுக்கு சவாலாக அமைந்துள்ளது. </p><p>வெள்ள நீர் வடிந்த பிறகு அனைத்தையும் மூழ்கடித்த, தார் போன்ற அடர்த்தியான சேற்றில் இருந்து நூற்றுக்கணக்கான உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன. </p> <h2>அடையாளம் காணும் பணி</h2><p>அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைக்கப்பட்ட உடல்களுடன், வீடுகளில் இருந்து பல மைல்கள் தொலைவில் கண்டெடுக்கப்படும் உடல்களை அடையாளம் காணும் பணியால் தாங்கள் திணறி வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பாக வைப்பதற்கான இடங்கள் தீர்ந்து வருவதால், பரத்பூர் மாவட்டத்தில் பல உடல்களை ஒரே இடத்தில் புதைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.</p> <h2>டிஎன்ஏ மாதிரிகள்</h2><p>ஒவ்வொரு உடலுக்கும் அடையாள அட்டையும் இருப்பிட எண்ணும் இடப்பட்டு, நெகிழிப் பையில் சுற்றப்பட்டு, பின்னர் குழியில் புதைக்கப்படுகிறது. அதற்கு முன்பு, அதில் இருந்து டி.என்.ஏ மாதிரிகள் எடுக்கப்பட்டன. இந்த உடல்கள் காலப்போக்கில் உறவினர்களால் டி.என்.ஏ மூலம் அடையாளம் காணப்பட்டு, முறையான இறுதிச் சடங்குகளுக்காக மீட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. </p> <h2>இந்திய நிபுணர் குழு</h2><p>இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண்பதற்காக டி.என்.ஏ. பகுப்பாய்வும் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் நேபாள அதிகாரிகளுக்கு உதவுவதற்காக இந்தியாவில் இருந்து 19 பேர் கொண்ட சிறப்பு தடயவியல் குழு காத்மாண்டு சென்றுள்ளது. </p> <h2>நேபாள அதிகாரிகள் அறிவுறுத்தல்</h2><p>அடையாளம் காணும் பணியை விரைவுப்படுத்தும் முயற்சியாக இறந்தவர்களின் படங்களைப் பார்த்து, கழுத்தணி, திருமண மோதிரம், பச்சைக்குத்து, தழும்பு போன்ற அடையாள அம்சங்களைத் தேடுமாறு மக்களை நேபாள அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். </p><p>மீட்கப்பட்ட உடல்களின் புகைப்படங்கள், உறவினர்கள் பொறுமையாகப் பார்ப்பதற்காக பவர்பாயிண்ட் ஸ்லைடு ஷோக்களில் வைக்கப்பட்டு, <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">நேபாள</a> காவல்துறை இணையதளத்திலும் பதிவேற்றப்பட்டு உள்ளன. தலைநகர் காத்மாண்டுவில் உள்ள சவக்கிடங்கிற்கு வெளியே, உள்ளே இருக்கும் இறந்தவர்களின் புகைப்படங்கள் சுவர்களில் ஒட்டப்பட்டுள்ளன.</p> <h2>குளிர்பதன பெட்டிகள்</h2><p>சேறு, நீர் மற்றும் இடிபாடுகளால் முழு கிராமங்களும் அடித்துச் செல்லப்பட்ட, மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பல பகுதிகளை, ராணுவ ஹெலிகாப்டர் மூலமாக மட்டுமே இன்னும் அணுக முடிகிறது. இறந்தவர்களின் உடல்களை வைப்பதற்காக நேபாள அரசாங்கம் “1,000-க்கும் மேற்பட்ட குளிர்பதனப் பெட்டிகளை கோரியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>ஹரியானா பாடகர் அங்கித் பாலியன் கொலை வழக்கு: குற்றவாளிகளை என்கவுண்டர் செய்த உத்தரப்பிரதேச போலீஸ்!</title><link>https://www.maalaimalar.com/news/national/haryana-singer-ankit-balyan-murder-case-uttar-pradesh-police-encountered-accused</link><comments>https://www.maalaimalar.com/news/national/haryana-singer-ankit-balyan-murder-case-uttar-pradesh-police-encountered-accused#comments</comments><guid isPermaLink="false">b59080cb-2218-4b4e-8a0f-622fdde11448</guid><pubDate>Mon, 31 Aug 2026 08:50:45 +0000</pubDate><atom:updated>2026-08-31T08:50:45.769Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>uttarpradesh,உத்தர பிரதேசம்,encounter,Haryanvi Singer,Ankit Balyan,அங்கித் பாலியன்,Sharp shooters Killed</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/pnyobi9u/Ankit-Balyan" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ankit Balyan ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/pnyobi9u/Ankit-Balyan?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஹரியானாவைச் சேர்ந்த பிரபல பாடகரும் யூடியூபருமான அங்கித் பாலியன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த மோஹித் மற்றும் சுமித் ஆகிய இரண்டு பயங்கர ஷார்ப்ஷூட்டர்கள்<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D"> உத்தரப்பிரதேசத்தின்</a> ஷாம்லியில் இன்று போலீசாருடன் நடந்த அதிரடி சண்டையில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.</p><h2>கைரானா சாலையில் நடந்த அதிரடி என்கவுண்டர்</h2><p>ஷாம்லி போலீசார் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலின்படி, கைரானா சாலையில் உள்ள இந்தியன் கேஸ் கிடங்கு அருகே சந்தேகத்திற்குரிய நபர்கள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.</p><p>அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று, ஹரியானாவின் சோனிபட் பகுதியைச் சேர்ந்த மோஹித் (22) மற்றும் சுமித் (24) ஆகியோரை வளைத்துப் பிடித்தனர்.</p><p>அப்போது அவர்கள் தப்பியோட முயன்று போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்குப் பதிலடியாக போலீசார் நடத்திய தற்காப்புத் துப்பாக்கிச் சூட்டில் இருவரும் பலத்த காயமடைந்தனர். </p><p>உடனடியாக அவர்கள் ஷாம்லி மாவட்ட அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.</p><h2>பாடகர் அங்கித் பாலியன் கொலைப் பின்னணி</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/singer-ankit-balyan">பிரபல ஹரியான்வி பாடகரும்</a> யூடியூபருமான அங்கித் பாலியன், கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி மாலை 6:45 மணியளவில் ஷாம்லியின் கோத்வாலி பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் இருந்து வெளியே வந்தார்.</p><p>அப்போது தனது காரை நோக்கி நடந்து சென்றபோது, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு ஆயுதமேந்திய கும்பல் அவர் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியது.</p><p>இதில் படுகாயமடைந்த அவர் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். </p><p>அங்கித் பாலியன் உடலில் ஐந்து துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்ததாகவும், அதில் இரண்டு குண்டுகள் அவரது தலையிலேயே பாய்ந்ததாகவும் பிரேதப் பரிசோதனை அறிக்கை உறுதிப்படுத்தியது.</p><p>இந்தத் தாக்குதலின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், முதன்மைக் குற்றவாளிகள் இருவரை இன்று போலீசார் என்கவுண்டர் செய்துள்ளனர்.</p><p>கொல்லப்பட்ட இருவர் மீதும் தலா 50,000 ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>டெல்லியில் அதிர்ச்சி: வீதியோரம் மீட்கப்பட்ட புதிதாகப் பிறந்த பிஞ்சுக் குழந்தை!</title><link>https://www.maalaimalar.com/news/national/shock-in-delhi-newborn-baby-rescued-from-roadside</link><comments>https://www.maalaimalar.com/news/national/shock-in-delhi-newborn-baby-rescued-from-roadside#comments</comments><guid isPermaLink="false">61706df7-20f1-4c57-bed5-243350238493</guid><pubDate>Mon, 31 Aug 2026 08:48:34 +0000</pubDate><atom:updated>2026-08-31T08:48:34.428Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>எய்ம்ஸ் மருத்துவமனை,Delhi Police,Delhi AIIMS,டெல்லி,Newborn baby rescued,Aali Mode,பிஞ்சு குழந்தை மீட்பு,ஆலி மோட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/77o62f6p/mew-born.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Newborn baby rescued]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/77o62f6p/mew-born.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குழந்தையைக் கண்டெடுத்த உடனடியாக, காவல்துறையினர் தாமதிக்காமல் எய்ம்ஸ் மருத்துவமனையின் குழந்தைகள் அவசரப் பிரிவுக்குக் கொண்டு சென்றனர். </p><p>தென்கிழக்கு டெல்லியின் சரிதா விஹார் பகுதிக்கு உட்பட்ட ஆலி மோட் அருகே வீதியோரத்தில் ஆதரவற்ற நிலையில் அழுகுரலுடன் கிடந்த புதிதாகப் பிறந்த பெண் குழந்தையை <a href="https://www.maalaimalar.com/news/world/mother-tattoos-keyboard-on-arm-for-autistic-son">டெல்லி காவல்துறை</a> ரோந்துப் படையினர் மீட்டுள்ளனர். சுமார் ஆறு முதல் ஏழு நாட்களே ஆன அந்தப் பிஞ்சு குழந்தை, ஆபத்தான சூழ்நிலையில் சாலையோரத்தில் கைவிடப்பட்டுக் கிடந்ததை அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல் துறையினர் மீட்டெடுத்தனர்.</p><h2>அவச<strong>ர மருத்துவச் சிகிச்சை</strong> </h2><p>குழந்தையைக் கண்டெடுத்த உடனடியாக, காவல்துறையினர் தாமதிக்காமல் எய்ம்ஸ் மருத்துவமனையின் குழந்தைகள் அவசரப் பிரிவுக்குக் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவக் குழுவினர் குழந்தைக்குத் தேவையான அவசர முதலுதவி மற்றும் மருத்துவச் சிகிச்சைகளை உடனடியாக வழங்கி கண்காணித்து வருகின்றனர். காவல்துறையினரின் விரைவான தலையீடே குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முக்கியக் காரணமாக அமைந்தது என மருத்துவர்கள் பாராட்டினர். தற்போது குழந்தை மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் பாதுகாப்பாக உள்ளது.</p><h2>காவல்து<strong>றையின் தீவிர விசாரணை</strong></h2><p>இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், குழந்தையைக் கைவிட்டுச் சென்றவர்கள் யார் என்பது குறித்தும், எந்த சூழ்நிலையில் இச்சம்பவம் நடந்தது என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆலி மோட் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தி, குழந்தையின் பெற்றோரையோ அல்லது சம்பந்தப்பட்ட நபர்களையோ அடையாளம் காணும் முயற்சியில் காவல்துறையினர் இறங்கியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>நேபாள பெருவெள்ளம்: 84 தமிழர்களை தொடர்புகொள்ள முடியவில்லை – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா  தகவல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nepal-floods-84-tamils-unreachable-minister-athav-arjuna</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nepal-floods-84-tamils-unreachable-minister-athav-arjuna#comments</comments><guid isPermaLink="false">02add709-3ddd-4145-8f51-bf29426a31ae</guid><pubDate>Mon, 31 Aug 2026 08:38:22 +0000</pubDate><atom:updated>2026-08-31T08:38:22.078Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆதவ் அர்ஜுனா,nepal flood,Minister Adhav Arjuna,நேபாள பெருவெள்ளம்,Tamil Pilgrims</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/4v1mj441/Adhav-Arjuna" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[    Adhav Arjuna]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/4v1mj441/Adhav-Arjuna?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழக சட்டசபையில்</a> பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BE">ஆதவ் அர்ஜுனா</a>, நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க தமிழக அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார்.</p><h2><strong>வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்</strong></h2><p>கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் சிக்கிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, அவர்களை பாதுகாப்பாக மீட்க முதலமைச்சர் உத்தரவிட்டார். </p><p>இதையடுத்து, அயலகத் தமிழர் நலத்துறை மற்றும் புதுடெல்லி இல்லத்தில் உதவி மையங்கள் மற்றும் அவசரகால கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு, உதவி எண்கள் அறிவிக்கப்பட்டன.</p><p>ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. </p><p>இதில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு, புதுடெல்லி சென்று மீட்பு மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.</p><h2><strong>சிறப்பு அதிகாரி நியமனம்</strong></h2><p>இந்திய மற்றும் நேபாள அரசுகளுடன் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கான சிறப்பு அதிகாரியாக ஆஷிஸ் குமார், ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டார்.</p><p>அன்றைய தினமே அமைச்சர்கள் குழு புதுடெல்லி சென்று கட்டுப்பாட்டு அறைகளை ஆய்வு செய்ததுடன், மத்திய அரசு அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்தியது.</p><p>ஆகஸ்ட் 28 ஆம் தேதி நேபாளத்தில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்ட 21 தமிழர்கள் புதுடெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். </p><p>பின்னர் அவர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.</p><h2><strong>தொடர்பு மீட்பு முயற்சி</strong></h2><p>அதேபோல், வழிதவறியவர்கள் அல்லது பல்வேறு காரணங்களால் தொடர்பு கொள்ள முடியாத தமிழர்களை கண்டறிந்து மீட்பதற்கான நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p>மத்திய அரசு மற்றும் நேபாள அரசுடன் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. </p><p>தொடர்பு கொள்ள முடியாத 5 பயணிகளின் உறவினர்களை அமைச்சர்கள் குழுவினர் நேரில் சந்தித்து, அவர்களை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினர்.</p><h2><strong>பாதுகாப்பான மீட்பு</strong></h2><p>இதுவரை கிடைத்த தகவலின்படி, தமிழகத்தைச் சேர்ந்த 305 பேர் கைலாச யாத்திரைக்காக நேபாளம் சென்றுள்ளனர். இவர்களில் 220 பேர் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 84 பேரை தற்போது வரை தொடர்புகொள்ள முடியாத நிலை உள்ளது.</p><p>கும்பகோணத்தைச் சேர்ந்த சூப்பர் யாத்ரா நிறுவனம் மூலம் 57 பேர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">நேபாளம்</a> சென்றுள்ளனர். இவர்களில் 21 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.</p><h2><strong>யாத்திரை பயணம்</strong></h2><p>சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மகாதேவ் யாத்ரா நிறுவனம் மூலம் 49 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்களைத் தொடர்புகொள்ள இந்திய தூதரகம் மூலம் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p>ஆத்ம யோகா மையம் மூலம் 150 பேர் நேபாளம் சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், புதுடெல்லிக்கு அழைத்து வரப்பட்டு பின்னர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.</p><h2><strong>பாதுகாப்பு உறுதி</strong></h2><p>சுற்றுலாவுக்காக நேபாளம் சென்ற 39 பேரும் பாதுகாப்பாக உள்ளனர். இவர்களில் 3 பேர் ஏற்கனவே சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 36 பேர் புதுடெல்லிக்கு அழைத்து வரப்பட உள்ளனர்.</p><p>அரசு உதவி எண்கள் மூலம் பெறப்பட்ட தகவலின்படி, மேலும் 10 பேர் சுற்றுலாவுக்காக நேபாளம் சென்றுள்ளனர். </p><p>இவர்களில் ஒருவர் தமிழகம் திரும்பியுள்ள நிலையில், மீதமுள்ள 9 பேரையும் தமிழகத்திற்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><h2><strong>அரசு உதவி எண்கள்</strong></h2><p>மேலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் வழியாக நேபாளம் சென்ற 34 தமிழர்கள் குறித்த தகவல்களும் கிடைத்துள்ளன. அவர்களின் பாதுகாப்பு குறித்தும் தமிழக அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.</p><p>நேபாளத்தில் சிக்கியுள்ள தங்களது உறவினர்கள் குறித்து தகவல் அறிய விரும்புபவர்கள், அரசு உதவி எண்களைத் தொடர்புகொள்ளலாம். </p><p>அவர்களை மீட்டு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் அரசு செலவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.</p><h2><strong>தமிழர்கள் மீட்பு</strong></h2><p>இதுவரை அரசு உதவி எண்கள் மூலம் 2,161 அழைப்புகள் பெறப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p>நேபாளம் மட்டுமின்றி திபெத் மற்றும் சீனாவுடனும் மத்திய அரசு ஒருங்கிணைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. </p><p>தொடர்பு கொள்ள முடியாத 84 தமிழர்களையும் பாதுகாப்பாக மீட்டு தமிழகத்திற்கு அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன.</p><p>தமிழர்களின் பாதுகாப்பை தமிழக அரசு தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>இணைந்து செயல்பட மறுக்கும் மேயர்கள்- சட்டசபையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பரபரப்பு பேச்சு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadhav-arjuna-indictment-mayors</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadhav-arjuna-indictment-mayors#comments</comments><guid isPermaLink="false">b53ab144-a409-4a14-9e56-b95d70b1cda8</guid><pubDate>Mon, 31 Aug 2026 08:36:27 +0000</pubDate><atom:updated>2026-08-31T08:36:27.422Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>kn nehru,தமிழக சட்டசபை,கேஎன் நேரு,TN assembly,அமைச்சர் ஆதவ் அர்ஜூனா,Minister Aadhav Arjuna</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/69o4ksx2/aadhav.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் ஆதவ் அர்ஜூனா]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ஆதவ் அர்ஜூனா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/69o4ksx2/aadhav.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் 25 மாநகராட்சிகளிலும் நாங்கள் வெற்றி பெறும்போது, மேயர்களும், எல்லா தலைவர்களும் மாறும்போது எல்லா ஆதாரங்களும் வெளிவரும் என்பதை பதிவு செய்கிறோம் என்றார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபையில்</a> இன்று மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், மதுரை மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடு தொடர்பாக தவெக எம்எல்ஏ தங்கப்பாண்டி குற்றச்சாட்டினார். </p><p>இதற்கு திமுக எம்எல்ஏ கே.என் நேரு பதிலளிக்கையில், ஒவ்வொரு ஆட்சியிலும் திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மதுரையில் கூட ரூ.5000 கோடி செலவில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் 30 ஆண்டுகளுக்கு தேவையான தண்ணீர் கொடுக்கப்பட்டுள்ளது. எல்லா பணிகளும் செய்யப்பட்டுள்ளன. உறுப்பினர்கள் எல்லோரும் சொல்கிறார்கள், முந்தைய தி.மு.க. ஆட்சியில் ஊழல்... ஊழல் என்று. ஊழல் இருந்தால் அதிகாரம் உங்க கிட்ட இருக்கு. அதைக் கண்டுபிடிங்க. செய்யுங்க. எடுத்த உடனே ஊழல், ஊழல் என்றால் அது எப்படி? அது சரியாக இருக்காது என்றார். </p><h2><strong>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</strong></h2><p>நமக்கான பிரச்சனையை சொல்றேன். நகராட்சி துறையில் திட்டங்கள் தீட்டி விட்டோம். ரூ.5 ஆயிரம் கோடிக்கான திட்டத்தை போட்டாச்சு.எல்லாம் போட்டுட்டும். ஆனால் இன்றைக்கும் நம்முடைய தாய்குலமான பெண்கள் குடத்தை தூக்கிட்டு லாரிக்காக ஒவ்வொரு ரோட்டிலும் வெய்ட் பண்ணிட்டு தான் இருக்காங்க. ஒவ்வொரு ஊரிலும் தாய்மார்கள் தண்ணீருக்காக வெய்ட் பண்ணிட்டுதான் இருக்காங்க.</p><p>எதிர்க்கட்சி துணை தலைவர் அண்ணா நீங்க பனையூர் சொன்னா, நாங்க கோபாலபுரம்-ன்னு பேச வருவோம். நாங்க அதைப்பற்றி பேச வரலை. மக்கள் பிரச்சனைகளை பற்றி  பேச வந்திருக்கோம். தண்ணீர் இன்றைக்கு ஒவ்வொரு வீட்டிற்கும் குழாயில் கொண்டு சென்று சேர்க்க முடியாத அரசாக இருக்கோம். ஒவ்வொரு பிரச்சனையையும் சட்டமன்ற உறுப்பினர் சொல்லும் போது ஆதாரம் இருக்கா, ஆதாரம் இருக்கா என்று கேட்கிறார். இன்றைக்கு அரசினுடைய பிரச்சனை என்று சொல்கிறேன். </p><p>உள்ளாட்சி துறை இன்றைக்கும் உங்களுடைய கன்ட்ரோலில்தான் இருக்கு. உங்களுடைய மேயர்தான், உங்களுடைய மண்டல பொறுப்பாளர்கள்தான். 25 மாநகராட்சி உங்கக்கிட்ட தான் இருக்கு. நாங்கள் திட்டத்திற்கு நிதி ஒதுக்கினால் அதனை செயல்படுத்தும் இடத்தில் திமுகவைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் தான் உள்ளனர். இந்த அரசு மாறிவிட்டது, அதிகாரம் மாறிவிட்டது, ஆனால் உள்ளாட்சி துறையில் இன்னும் அதிகாரம் மாறாததால் தான் இந்த அரசுடன் மேயர்களுடன், மண்டல பொறுப்பாளர்கள் இணைந்து செயல்படுவதில்லை. சென்னையில் இருக்கிற மேயர் இந்த அரசுடன் இணைந்து செயல்படுவதில்லை. குற்றச்சாட்டை மட்டும் தான் சொல்லிக்கிட்டு இருக்காங்க. எங்களுடைய கோரிக்கை குற்றச்சாட்டை தூக்கி எறிவோம். இன்னும் 6 மாதங்கள் தான் இருக்கு உள்ளாட்சி தேர்தலுக்கு. இந்த தேர்தலில் 90 சதவீதம் இல்ல 100 சதவீதம் நாங்கள்தான் ஜெயிக்கப்போறோம். அதை இங்க பதிவு செய்கிறோம். உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் 25 மாநகராட்சிகளிலும் நாங்கள் வெற்றி பெறும்போது, மேயர்களும், எல்லா தலைவர்களும் மாறும்போது எல்லா ஆதாரங்களும் வெளிவரும் என்பதை பதிவு செய்கிறோம் என்றார். </p><h2><strong>கேஎன் நேரு</strong> </h2><p>கிட்டத்தட்ட 2500 எம்எல்டி கொடுத்த இடத்தில் 4 ஆயிரம் எம்எல்டி புதிய திட்டங்கள் மூலமாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. புதிய ஆட்சி அமைந்த பின் நிதி ஒதுக்கீடு நிறுத்தம், மாநகராட்சிகளில் எந்த பணிகளையும் செய்ய முடியவில்லை. நிதி ஒதுக்கியதாக கூறுவது தவறு, சென்னை மாநகராட்சிக்கு நிதி ஒதுக்கவில்லை என கருப்பு உடை அணிந்து வந்தனர். மாநகராட்சி மேயர்கள் திமுகவினர் என்றாலும் ஒத்துழைக்காமல் இருக்க முடியாது, ஆட்சி அதிகாரம் உங்களிடத்தில் உள்ளது. உங்களுடைய செயலாளரை அழைத்து எந்தெந்த திட்டத்தில் எல்லாம் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது என்பதை கேளுங்கள். கேட்டு உடனே நடத்தச் சொல்லுங்கள். கவுன்சிலரோ, மேயரோ அரசு சொல்கிற ஒரு திட்டத்தை செயல்படுத்தத்தவறினால் ஆணையருக்கு அதிகாரம் உள்ளது. ஆணையரே அத்திட்டத்தை செயல்படுத்த சொல்லலாம் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>நேபாள பெருவெள்ளப் பேரழிவு: பலி எண்ணிக்கை 903 ஆக உயர்வு - 4,250 பேர் மாயம்</title><link>https://www.maalaimalar.com/news/world/nepal-flash-flood-death-toll-rises-903-missing-4250</link><comments>https://www.maalaimalar.com/news/world/nepal-flash-flood-death-toll-rises-903-missing-4250#comments</comments><guid isPermaLink="false">2251b590-5ee3-46ca-aba4-a02b479917d3</guid><pubDate>Mon, 31 Aug 2026 08:32:51 +0000</pubDate><atom:updated>2026-08-31T08:32:51.121Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாளம்,nepal,Death toll rises,Nepal Floods,பலி உயர்வு,நேபாள வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/m6it5k3c/nepal.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nepal]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/m6it5k3c/nepal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>நேபாள பெருவெள்ளம்</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/nepal-flood">நேபாளத்தின்</a> ரசுவா மாவட்டத்தில், பனிப்பாறைகள் உடைந்து போடே கோஷி ஆற்றில் கடந்த 26-ந்தேதி திடீரென பெரு வெள்ளம் ஏற்பட்டது.  இதில் அங்குள்ள சிறு கிராமங்கள், சிறுநகரங்கள் அழிந்தன. பாலங்கள், கட்டிடங்கள் உள்ளிட்டவை அடித்துச் செல்லப்பட்டன.</p> <h2>மீட்பு பணி</h2><p>இந்தியர்கள் உள்பட 30 நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இந்த பெரு வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனார்கள். அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.  மீட்புப் பணியின்போது நாள்தோறும் உடல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களில் மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இன்று 6-வது நாளாக மீட்பு பணி நடைபெற்றது. காணாமல் போனவர்களை தேடும் பணியிலும் சிக்கி தவிப்பவர்களை மீட்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டனர்.</p> <h2>பலி எண்ணிக்கை உயர்வு</h2><p><a href="https://www.maalaimalar.com/news/world/floods-devastate-nepal-teacher-acts-astutely-to-save-1643-lives">நேபாள பெருவெள்ளத்தில்</a> பலியானவர்களின் எண்ணிக்கை 903 ஆக உயர்ந்து உள்ளது. இன்று காலை நிலவரப்படி 903 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. இதை நேபாள அரசு பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்தது.  </p> <p>சித்வான் மாவட்டத்தில் 272 உடல்களும், நவல்பராஷி கிழக்கு மாவட்டத்தில் 207 உடல்களும், நவல்பராஷி மேற்கு மாவட்டத்தில் 151 உடல்களும், கோர்கா மாவட்டத்தில் 62 உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. நுவா கேட்டில் 95, தாடிங்கில் 55, தனஹுவில் 37,  ரசோவாவில் 27 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.</p>  <p>85 பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் 320 வெளிநாட்டினர் உள்பட மொத்தம் 4,247 பேர் காணாமல் போய் இருப்பதாகவும் நேபாள அரசு தெரிவித்துள்ளது. இதுவரை 10,451 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>துலீப் கோப்பையில் வரலாற்று சாதனை: ஈஸ்ட் ஜோன் அணியை வழிநடத்திய 15 வயது வைபவ் சூர்யவன்ஷி</title><link>https://www.maalaimalar.com/sports/historic-feat-in-duleep-trophy-15-year-old-vaibhav-suryavanshi-leads-east-zone</link><comments>https://www.maalaimalar.com/sports/historic-feat-in-duleep-trophy-15-year-old-vaibhav-suryavanshi-leads-east-zone#comments</comments><guid isPermaLink="false">de77d481-996d-4d6e-a2ad-d7d65d3b055e</guid><pubDate>Mon, 31 Aug 2026 08:24:48 +0000</pubDate><atom:updated>2026-08-31T08:24:48.817Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vaibhav Suryavanshi,வைபவ் சூர்யவன்ஷி,இஷான் கிஷன்,கிரிக்கெட்,Duleep Trophy,துலீப் கோப்பை,East Zone team,Captain Suryavanshi</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/ph7u45d5/vaibahv.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Vaibhav Suryavanshi  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/ph7u45d5/vaibahv.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய உள்நாட்டு கிரிக்கெட் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் ஒரு மூத்த முதல் தர அணியை வழிநடத்திய வீரர் என்ற பெருமையை வைபவ் சூர்யவன்ஷி இதன் மூலம் பெற்றார். </p><p>துலீப் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் பெங்களூருவில் சென்ட்ரல் ஜோன் மற்றும் ஈஸ்ட் ஜோன் அணிகள் மோதி வருகின்றன. இப்போட்டியில் ஈஸ்ட் ஜோன் அணியின் கேப்டன் இஷான் கிஷன் விக்கெட் கீப்பிங் செய்தபோது வலது மணிக்கட்டில் பலத்த காயம் அடைந்து மைதானத்தை விட்டு வெளியேறினார். இதையடுத்து, அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி தற்காலிக கேப்டனாகப் பொறுப்பேற்று அணியை வழிநடத்தினார்.</p><h2>மூத்த வீரர்<strong>களை வழிநடத்தி</strong>ய வைபவ்</h2><p>இந்திய உள்நாட்டு<a href="https://www.maalaimalar.com/sports/cricket/deepti-sharma-becomes-leading-womens-t20i-wicket-taker-with-171-scalps"> கிரிக்கெட் வரலாற்றில்</a> மிகக் குறைந்த வயதில் ஒரு மூத்த முதல் தர அணியை வழிநடத்திய வீரர் என்ற பெருமையை வைபவ் சூர்யவன்ஷி இதன் மூலம் பெற்றார். முகமது ஷமி, முகேஷ் குமார், அபிமன்யு ஈஸ்வரன் போன்ற அனுபவம் வாய்ந்த சர்வதேச வீரர்கள் நிறைந்த அணியை 15 வயதில் ஒரு சிறுவன் வழிநடத்தியது மட்டுமன்றி, சரியான முறையில் நடுவரின் முடிவை எதிர்த்துமேல்முறையீடு செய்து விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினார்.</p><h2>57 ஆண்<strong>டுகால சாதனை மு</strong>றியடிப்பு</h2><p>கேப்டன்சி தவிர பேட்டிங்கிலும் வைபவ் சூர்யவன்ஷி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். சென்ட்ரல் ஜோன் அணிக்கு எதிரான இப்போட்டியில் வெறும் 42 பந்துகளில் அரைசதம் அடித்த அவர், 7 சிக்சர்கள் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 81 பந்துகளில் 92 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம், துலீப் கோப்பை வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் (15 ஆண்டுகள் 175 நாட்கள்) அரைசதம் அடித்த வீரர் என்ற 57 ஆண்டுகால சாதனையை (1969-ல் லக்ஷ்மன் சிங் படைத்த சாதனை) முறியடித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது அணை விவகாரம்: கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு 3 வார கால அவகாசம் - உச்ச நீதிமன்றம் உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/national/mekedatu-dam-case-three-weeks-time-for-tamil-nadu-government</link><comments>https://www.maalaimalar.com/news/national/mekedatu-dam-case-three-weeks-time-for-tamil-nadu-government#comments</comments><guid isPermaLink="false">92c7d4f1-cf2b-4649-8e63-df4b8fdcb6ef</guid><pubDate>Mon, 31 Aug 2026 08:19:01 +0000</pubDate><atom:updated>2026-08-31T08:19:01.420Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>mekedatu dam,காவிரி விவகாரம்,Mekedatu issue,மேகதாது அணை திட்டம்,Cauver\WateDispute,TNvsKarnataka</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/qrxq5wcv/Supreme-Court" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Supreme Court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/qrxq5wcv/Supreme-Court?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[  <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">மேகதாது அணை</a> விவகாரத்தில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு மூன்று வார கால அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம்</p><h2>அணை எதிர்ப்பு</h2><p>மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எந்தவித அனுமதியும் வழங்க கூடாது என உத்தரவிடக்கோரியும், காவிரியில் திட்டங்களை செயல்படுத்துவதற்கும், மதிப்பிடுவதற்கும் அனுமதி வழங்கும் வகையில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D">காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு</a> வழங்கப்பட்டுள்ள அதிகாரம் தொடர்பான சுற்றறிக்கை ரத்து செய்யக்கோரியும் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது.</p><h2>தமிழக அரசின் வாதம்</h2><p>இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. </p><p>அப்போது தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் சி.எஸ்.வைத்தியநாதன் மற்றும் உமாபதி ஆஜராகி, காவிரியின் குறுக்கே மேகதாது உள்ளிட்ட எந்த ஒரு திட்டங்களையும் செயல்படுத்துவதற்கு அனுமதி உள்ளிட்டவை வழங்குவதற்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் தொடர்பான விஷயத்தை எதிர்த்து இந்த மனுவை தாக்கல் செய்துள்ளோம்.</p><h2>வழக்கு ஒத்திவைப்பு</h2><p>அதேநேரத்தில் இந்த வழக்கில் கூடுதலாக சில ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டியுள்ளதால் வழக்கை மூன்று வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். </p><p>தமிழக அரசு தரப்பு கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஆவணங்களை தாக்கல் செய்ய மூன்றுக்கு வார கால அவகாசம் வழங்கி வழக்கை ஒத்திவைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>மாற்றுதிறனாளிகள்  நலத்துறையில் 9 புதிய அறிவிப்புகள்- அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்டார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-jegatheswari-unveils-nine-new-measures-for-disabled-welfare</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-jegatheswari-unveils-nine-new-measures-for-disabled-welfare#comments</comments><guid isPermaLink="false">f023259f-69e2-4b15-86ad-af3eb100f533</guid><pubDate>Mon, 31 Aug 2026 08:15:55 +0000</pubDate><atom:updated>2026-08-31T08:15:55.358Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,அமைச்சர் ஜெகதீஸ்வரி,மாற்றுதிறனாளி நலத்துறை,Minister Jagadeeswari,Department of Welfare of the Disabled</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/o85fl5f9/Jagatheeswari.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Jagatheswari]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/o85fl5f9/Jagatheeswari.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் மாற்றுதிறனாளிகள்  நலத்துறையில் 9 புதிய அறிவிப்புகளை அமைச்சர் ஜெகதீஸ்வரி  வெளியிட்டார்.</p><p>அவை வருமாறு: </p><p>1. மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய மின்சார வாகன உதவி</p><p>உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D" rel="nofollow">பெட்ரோல்</a> அல்லது மின்சாரத்தில் இயங்கும் உபகரணம் வழங்கும் திட்டம்</p><p>உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு, அவர்களின் அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் பெட்ரோல் அல்லது மின்சாரத்தில் இயங்கும் உபகரணங்கள் வழங்கப்படும். இதற்காக ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p><p>2. மனநலம் பாதிக்கப்பட்டோருக்காக 10 இல்லங்கள்</p><p>தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் 10 இல்லங்கள் அமைக்க ரூ.1.82 கோடி நிதி</p><p>அரசு நிதியுதவியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான 10 இல்லங்கள் அமைக்கப்படும். இதற்காக ரூ.1.82 கோடி <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81" rel="nofollow">நிதி ஒதுக்கீடு</a> செய்யப்படும்.</p><p>3. அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 தொழிற்பயிற்சி இல்லங்கள்</p><p>அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழிற்பயிற்சியுடன் கூடிய 10 இல்லங்கள் – ரூ.1.77 கோடி ஒதுக்கீடு</p><p>அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழிற்பயிற்சியுடன் கூடிய 10 இல்லங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் அமைக்கப்படும். இதற்காக ரூ.1.77 கோடி நிதி ஒதுக்கப்படும்.</p><p>4. முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கு 2 இல்லங்கள்</p><p>முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக 2 இல்லங்கள் – ரூ.49 லட்சம் நிதி</p><p>முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக, அரசு நிதியுதவியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் 2 இல்லங்கள் அமைக்கப்படும். இதற்காக ரூ.49 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.</p><p>5. மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பயிற்சி மையங்கள்</p><p>மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக 6 ஆண்டு நிலை பயிற்சி மையங்கள் – ரூ.97 லட்சம்</p><p>அறிவுசார் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/sureshkumar-realizes-his-dream-of-studying-medical-at-51" rel="nofollow">மாற்றுத்திறனாளி</a> குழந்தைகளுக்கென 3 ஆண்டு நிலை பயிற்சி மையங்கள், செவித்திறன் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கென 2 ஆண்டு நிலை பயிற்சி மையங்கள், பார்வை மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கென 1 ஆண்டு நிலை பயிற்சி மையம் என மொத்தம் 6 ஆண்டு நிலை பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். இதற்காக ரூ.97 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.</p><p>6. கடலூரில் மாற்றுத்திறனாளிகளுக்காக 2 இல்லங்கள்.</p><p>கடலூரில் 100 பேர் பயன்பெறும் வகையில் 2 இல்லங்கள் – ரூ.10 கோடி நிதி.</p><p>கடலூர் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அறிவுசார் மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 100 பேர் பயன்பெறும் வகையில், 1.5 ஏக்கர் நிலப்பரப்பில் 2 இல்லங்கள் அமைக்கப்படும். இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p><p>7. மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம்</p><p>UDID அட்டை மூலம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் துணையாளருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம்</p><p>தனித்து செல்ல இயலாத மாற்றுத்திறனாளிகள், UDID அட்டையைப் பயன்படுத்தி தங்களுடன் ஒரு துணையாளருடன் மாநகர/நகர தாழ்தள பேருந்துகள், விரைவு பேருந்துகள், டீலக்ஸ், புறநகர் மற்றும் மலைப்பகுதி பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் மேற்கொள்ளும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்படும்.</p><p>8. செவித்திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கு மெய்நிகர் கற்றல்</p><p>செவித்திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கு Virtual Reality Learning திட்டம்</p><p>செவித்திறன் குறைபாடுடைய மாணவர்கள் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் மெய்நிகர் கற்றல் முறையில் கல்வி கற்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.64 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.</p><p>9. பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வாசிப்பாளர் உதவி</p><p>பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வாசிப்பாளர் உதவித்தொகை உயர்வு. பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பாடத்திட்டங்களைப் படிக்க உதவும் வாசிப்பாளருக்கு வழங்கப்படும் உதவித்தொகை உயர்த்தப்படுகிறது.</p><p>2013–14ஆம் ஆண்டிலிருந்து 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.3,000, இளங்கலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ரூ.5,000, தொழில்கல்வி மற்றும் முதுகலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ரூ.6,000 என உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.</p><p>2026–27ஆம் ஆண்டு முதல் இந்த வாசிப்பாளர் உதவித்தொகை மேலும் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஐரோப்பாவின் மிக உயர்ந்த எல்ப்ரஸ் சிகரத்தை அடைந்து சாதனை படைத்த இந்தியப் பெண்: மூவர்ணக் கொடியை ஏற்றி பெருமிதம்!</title><link>https://www.maalaimalar.com/news/world/indian-woman-scales-europes-highest-elbrus-peak-hoists-tricolour</link><comments>https://www.maalaimalar.com/news/world/indian-woman-scales-europes-highest-elbrus-peak-hoists-tricolour#comments</comments><guid isPermaLink="false">a4c1d2bd-11ec-417f-84e7-e972d3a41271</guid><pubDate>Mon, 31 Aug 2026 08:08:20 +0000</pubDate><atom:updated>2026-08-31T08:08:20.042Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மும்பை,europe,Indian Woman,Mountaineering,இமயமலை,ஐரோப்பா,Mount Elbrus,எல்ப்ரஸ் மலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/lcvg1s9y/europe.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mount Elbrus]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/lcvg1s9y/europe.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆகஸ்ட் 15 அதிகாலை 2 மணிக்குத் தொடங்கிய இறுதிப் பயணத்தில், உறைபனி, கடும் புயல் காற்று, இருள் மற்றும் குறைந்த ஆக்சிஜன் அளவு போன்ற கடுமையான சவால்களை ,இவர் எதிர்கொண்டார். </p><p>மலையேறுவதில் தீவிர ஆர்வம் கொண்ட இந்தியாவின் சிவானி மெஹ்ரோத்ரா, ஐரோப்பிய கண்டத்தின் மிக உயர்ந்த சிகரமான எல்ப்ரஸ் மலையை வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்துள்ளார். தெற்கு ரஷியாவில் கடல் மட்டத்திலிருந்து 5,642 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த கரடுமுரடான சிகரத்தின் உச்சியை அடைந்த அவர், ஆகஸ்ட் 15 இந்திய சுதந்திர தினத்தன்று நமது நாட்டின் மூவர்ணக் கொடியை ஏற்றி நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.</p><h2>இமயமலை<strong>ப் பயணம்</strong> </h2><p>உத்தரப் பிரதேசத்தின் சீதாபூர் மாவட்டத்தைப் பூர்விகமாகக் கொண்டு, தற்போது மும்பையில் வசித்து வரும் 43 வயதான சிவானி, 18 வயது மகளின் தாயாராவார். வீட்டுப் பொறுப்புகளை திறம்பட கவனித்துக்கொண்டே மலையேற்றத்தின் மீது கொண்ட தீராத காதலால் இந்த அரிய சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு <a href="https://www.maalaimalar.com/news/national/nepal-flood-crisis-india-sends-685-tonnes-of-relief-materials-via-four-aircraft">எவரெஸ்ட் சிகரத்தின்</a> அடிவாரப் பகுதிக்கு மேற்கொண்ட பயணமே இவருக்கு மலையேற்றத்தில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன் தொடர்ச்சியாக லடாக், காஷ்மீர், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு இமயமலைப் பகுதிகளுக்கும், ஆப்பிரிக்காவின் கிளிமஞ்சாரோ சிகரத்திற்கும் வெற்றிகரமாக மலையேற்றம் சென்றுள்ளார்.</p><h2>தீவி<strong>ரப் பயிற்சி</strong></h2><p>இந்த எல்ப்ரஸ் சிகரப் பயணத்திற்காக ஆகஸ்ட் 8 அன்று மும்பையிலிருந்து புறப்பட்டு, துபாய் வழியாக ரஷ்யாவின் மினரல்னி வோடியைச் சென்றடைந்தார். இறுதி இலக்கை அடைவதற்கு முன்பாக உடலை நிலைநிறுத்திக் கொள்ள 3000, 4000 மற்றும் 4700 மீட்டர் உயரங்களில் சிறப்புப் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆகஸ்ட் 15 அதிகாலை 2 மணிக்குத் தொடங்கிய இறுதிப் பயணத்தில், உறைபனி, கடும் புயல் காற்று, இருள் மற்றும் குறைந்த ஆக்சிஜன் அளவு போன்ற கடுமையான சவால்களை எதிர்கொண்டார். "ருக்னா நஹி ஹாய், சல்தே ரஹ்னா ஹாய்" (நிற்கக் கூடாது, நடந்துகொண்டே இருக்க வேண்டும்) என்ற தாரக மந்திரத்துடன் வெறும் 4.5 மணி நேரத்தில் உச்சியை எட்டினார்.</p><h2>செவன் சமி<strong>ட்ஸ்' உலகச் சாதனை</strong></h2><p>மலையேறுவதற்கு வயது ஒரு தடையல்ல என்றும், முறையான பயிற்சியும் இலக்கை அடையும் உறுதியான எண்ணமுமே முக்கியம் என்றும் சிவானி கூறுகிறார். சொந்தச் சேமிப்பு மற்றும் குடும்பத்தினரின் ஆதரவுடன் இந்தப் பயணங்களை மேற்கொண்டு வரும் இவரது அடுத்த இலக்கு, உலகளவில் புகழ்பெற்ற எவரெஸ்ட் சிகரம் உட்பட அனைத்துக் கண்டங்களின் 7 உயர்ந்த சிகரங்களையும் ('செவன் சமிட்ஸ்') தொட்டு சாதனை படைப்பதாகும்.</p>]]></content:encoded></item><item><title>காவிரி நீர் பங்கீடு: உச்சநீதிமன்றத்தில் தமிழகம் - கர்நாடகா காரசார வாதம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/cauvery-water-sharing-tamil-nadu-karnataka-arguments-supreme-court</link><comments>https://www.maalaimalar.com/news/national/cauvery-water-sharing-tamil-nadu-karnataka-arguments-supreme-court#comments</comments><guid isPermaLink="false">9437a8bc-c15e-42eb-87d7-c3b5b9f08483</guid><pubDate>Mon, 31 Aug 2026 08:04:59 +0000</pubDate><atom:updated>2026-08-31T08:04:59.578Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,mekedatu dam,SupremeCourt,Cauvery,உச்சநீதிமன்றம்,காவிரி,CWMA,Water Dispute</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/mym5361c/Cauvery-WaterDispute" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Cauvery WaterDispute  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/mym5361c/Cauvery-WaterDispute?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்திற்கான நீரை உறுதி செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்திப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் வழக்கு விசாரணை</p><h2><strong>நீர் மறுப்பு</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D">உச்ச நீதிமன்ற </a>அறிவுரை திறன் அடிப்படையில் தமிழகத்திற்கு கூடுதல் நீரை திறந்து விடக் கோரி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் முறையீடு வைத்தோம் ஆனால் அது நிராகரிக்கப்பட்டது.</p><p> தமிழகத்திற்கு வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி வீதம் மட்டுமே 15 நாட்களுக்கு திறக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது அந்த உத்தரவையும் கர்நாடக அரசு முழுமையாக செயல்படுத்துவதில்லை.</p><h2><strong>கர்நாடகா விளக்கம்</strong></h2><p>நீதிபதிகள் ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு செயல்படுத்துகிறதா கர்நாடக அரசு, <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D">காவிரி நீர்</a> மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் காவிரியில் நீர் திறந்து விடப்படுகிறது.</p><p> குறிப்பாக கடந்த சில நாட்களாக காவிரியில் வினாடிக்கு ஒன்பதாயிரம் கன அடிக்கும் அதிகமாகவே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது மேலும் கர்நாடகத்தில் இருக்கும் தண்ணீரின் அளவைப் பொறுத்து கூடுதலாக நீர் திறப்பதற்கும் நாங்கள் முயற்சி எடுப்போம்.</p><p>தற்போது <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE">கர்நாடகாவில் </a>அதிக வறட்சி நிலவு காரணமாக அதிக அளவிலான தண்ணீரை திறந்து விட முடியாத ஒரு சூழல் உள்ளது என்று கர்நாடக அரசு விளக்கமளித்துள்ளது.</p><h2><strong><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">தமிழக அரசின்</a> குற்றச்சாட்டு</strong></h2><p>கர்நாடக அரசு ஆணைய உத்தரவை பின்பற்றவில்லை உச்ச நீதிமன்றம் கொடுத்த உத்தரவின் படியும் தண்ணீர் திறக்க வேண்டிய உத்தரவை அவர்கள் பின்பற்றவில்லை கர்நாடகம் தண்ணீர் திறக்காமல் இருப்பதன் காரணமாக சுமார் 24 லட்சம் ஏக்கருக்கு மேலாக சாகுபடி செய்ய முடியாமல் தமிழகம் பாதிப்படைந்துள்ளது. </p><p>அதே வேளையில் கர்நாடகம் 20 டிஎம்சி நீருக்கு மேலாக மடை மாற்றம் செய்து விவசாயத்திற்கு பயன்படுத்தி உள்ளனர் கர்நாடக அணிகளில் சுமார் 73 டிஎம்சி நீர் இருக்கும் நிலையிலும் தமிழகத்திற்கு உரிய நீரை வழங்க மறுக்கின்றனர்.</p><p> இவ்வாறு தொடர்ச்சியாக நீர் வழங்க மறுப்பதால் தமிழகத்தில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது.</p><h2><strong>உடனடி நிவாரணம்</strong></h2><p>தமிழகத்திற்கு தர வேண்டிய பற்றாக்குறை நீரை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும் 15 நாட்களுக்குப் பிறகுதான் காவிரி மேலாண்மை ஆணையம் மீண்டும் கூட உள்ளது.</p><p> ஆனால் இந்த வாரமே மீண்டும் ஆணையம் ஆலோசனை நடத்தி எங்களது கருத்துக்களை கேட்டு கூடுதல் தண்ணீரை திறக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் இதற்காக உச்சநீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.</p><h2><strong>பாசன முரண்பாடு</strong></h2><p>காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதாக கர்நாடகா சொல்கிறார்கள் ஆனால் அதை அவர்களது பாசன பயன்பாட்டிற்கு தான் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.</p><p>கர்நாடக அரசு அதிகாரிகள் கொடுத்த தகவல்கள் படி பார்த்தாலே அவர்களுடைய விவசாய நிலங்களில் 52 சதவிகித நிலங்களுக்கு தேவையான தண்ணீரை ஏற்கனவே கர்நாடக அரசு திறந்து விட்டுவிட்டது. </p><p>ஆனால் தமிழ்நாடு இன்னமும் ஒரு ஏக்கர் நிலத்திற்கு கூட தண்ணீர் திறக்க முடியாத சூழல் நிலவுகிறது.</p><h2><strong>வழக்கு ஒத்திவைப்பு</strong></h2><p>நீதிபதிகள் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பிறகு இந்த வழக்கை செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கிறோம். செப்டம்பர் 15 ஆம் தேதி என்ற தேதிக்கு முன்பே வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் குறிப்பாக அடுத்த வாரமே மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.</p><p>ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறை காவிரி மேலாண்மை ஆணையம் கூடி முக்கியமான உத்தரவுகளை பிறப்பிக்கிறார்கள் அதில் நாங்கள் ஏன் தலையிட வேண்டும் அடுத்த விசாரணையின் போது தற்போதைய நிலவரம் குறித்து அறிக்கையை தாக்கல் செய்ய கர்நாடகா மற்றும் தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சீனாவில் இரவு விடுதிகள், வங்கிகள் மற்றும் மருத்துவமனைகளில் திருமண பதிவு செய்து கொள்ளலாம்</title><link>https://www.maalaimalar.com/news/world/china-couples-can-register-marriage-in-hotels-banks-hospitals</link><comments>https://www.maalaimalar.com/news/world/china-couples-can-register-marriage-in-hotels-banks-hospitals#comments</comments><guid isPermaLink="false">4831babf-854e-4d21-b2c4-2570d6133d2c</guid><pubDate>Mon, 31 Aug 2026 07:54:58 +0000</pubDate><atom:updated>2026-08-31T07:54:58.412Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>China,சீனா,காதலர் தினம்,Valentine Day,qixi festival,கிஷி திருவிழா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/0jy08knj/Untitled-design-12.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ China marriage registration reform]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/0jy08knj/Untitled-design-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE">சீனாவில்</a> பிறப்பு விகிதம் சரிவை சந்தித்து வரும் நிலையில், புதிதாக திருமணம் செய்யும் தம்பதிகள் தங்களது திருமண செயல்முறையை விரைவாகவும், எளிதாகவும் பதிவு செய்யும் வகையில் மகப்பேறு மருத்துவமனைகள், வங்கிகள் மற்றும் இரவு விடுதிகள் போன்ற வழக்கத்திற்கு மாறான இடங்களில் திருமணத்தை பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  </p><h3><strong>காதலர் தின தம்பதிகள்</strong></h3><p>சீனாவில் சமீபத்தில் நடைபெற்ற கிஷி திருவிழாவில் (காதலர் தின விழா) கலந்துகொண்ட புதுமண தம்பதிகள், ஷாண்டாங் மாகாணத்தில் உள்ள லின்சி மாவட்ட தாய் மற்றும் குழந்தை நல மருத்துவமனையில், சட்டப்பூர்வமாக திருமணம் செய்துகொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>இந்த அறிவிப்பு குறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், இந்த ஏற்பாடு புதுமண தம்பதிகள் தங்கள் திருமணத்தை பதிவு செய்யவும், திருமணத்திற்கு முந்தைய உடல்நல பரிசோதனைகளை மேற்கொள்ளவும், ‘ஒரே இடத்தில் அனைத்து சேவைகளை’ வழங்கும் மையமாகவும் அமைய உள்ளது.</p><p>மேலும், புதுமண தம்பதிகள் கருத்தரிப்பிற்கு முந்தைய ஆலோசனையையும் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.</p><h3><strong>திருமணப் பதிவு மையங்கள்</strong></h3><p>கடந்த மாதம் சீனாவின் தியான்ஜீனில் உள்ள சீன அஞ்சல் சேமிப்பு வங்கியின் ஒரு கிளை, திருமண பதிவு சேவைகளை வழங்கும் நாட்டின் முதல் வங்கியாக மாறியது.</p><p>இதையடுத்து குவாங்சோ பையுன் சர்வதேச விமான நிலையம் திருமண சான்றிதழ்களை வழங்க தொடங்கியது. அதே நேரத்தில், ஷாங்காய்-இல் உள்ள ஒரு இரவு விடுதி சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகளை நடத்தியது.</p><p>மேலும் மெட்ரோ நிலையங்கள், பொது பூங்காக்கள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கோவில்களிலும் திருமணம் செய்துகொள்ளும் நடவடிக்கைகள் அறிமுகம் செய்யப்பட்டன.</p><h3><strong>காரணம்</strong></h3><p>சீனாவில் அதிகரித்து வரும் மக்கள் தொகை காரணமாக, இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>சீனாவில் பிறப்பு விகிதம் சரிவை சந்தித்து வரும் நிலையில், இளைஞர்களை குடும்பமாக ஊக்குவிக்க சீன அதிகாரிகள் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்து வருகின்றனர்.</p><h3><strong>ஆய்வு அறிக்கை</strong></h3><p>சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் ஆவண நடைமுறைகள் எளிதாக்கப்பட்டதைத் தொடர்ந்து, திருமணங்கள் தற்காலிகமாக அதிகரித்த போதிலும், இந்த ஆண்டின் முதல் பாதியில் திருமண பதிவுகள் மேலும் 7.5 சதவீதம் குறைந்துள்ளதாக தரவுகள் தெரிவித்துள்ளன.</p>]]></content:encoded></item><item><title>மீண்டும் இடம் மாறி அமர்ந்த முதலமைச்சர் விஜய் - அன்று செங்கோட்டையன், இன்று ஆதவ் அர்ஜூனா... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-changed-his-seat-again</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-changed-his-seat-again#comments</comments><guid isPermaLink="false">a220595b-54b2-4df9-a289-3df8d207c7a2</guid><pubDate>Mon, 31 Aug 2026 07:44:20 +0000</pubDate><atom:updated>2026-08-31T07:44:20.138Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/3ggcbcdx/vijay02.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மீண்டும் இடம் மாறி அமர்ந்த முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ மீண்டும் இடம் மாறி அமர்ந்த முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/3ggcbcdx/vijay02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதலமைச்சர் விஜய் சக அமைச்சர்களுடன் இருக்கையில் அமர்ந்து சட்டசபை விவாதத்தை கவனிப்பது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழக பட்ஜெட்</a> கூட்டத்தொடர் ஆகஸ்ட் மாதம் 5-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பட்ஜெட் தாக்கல் நிறைவடைந்து மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. ஒரு மாத காலமாக நடைபெறும் கூட்டத்தொடரில் பல்வேறு சுவாரசிய சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. </p><p>வார விடுமுறைக்கு பின் கூடிய இன்றைய கூட்டத்தொடரில் மாற்றுத்திறனாளிகள், நலத்துறை, வேளாண்மை, மதுவிலக்கு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மீதான கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது. மேலும் 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் விலையில்லா வேட்டி சேலை குறித்த கவன ஈர்ப்பு தீர்மானமும் எடுத்துக்கொள்ளப்பட்டது. </p><p>இந்த நிலையில் இன்று சட்டசபையில் விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-important-measures-starting-with-an-increase-in-the-milk-procurement-price">விஜய்</a>, முதலமைச்சருக்கான பிரத்யேக இருக்கையை தவிர்த்து அமைச்சர்களுடன் அமர்ந்து ஆலோசனை நடத்தி விவாதத்தை கவனித்தார். நீர்வளத்துறை அமைச்சர் புஸ்சி ஆனந்த்தின் இருக்கையில் அமர்ந்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுடன் விவாதித்து சபை நடவடிக்கையை கவனித்தார். </p><p>கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தொடரிலும் மானிய கோரிக்கை மீதான விவாத்தில் அமைச்சர் செங்கோட்டையன் அருகே அமர்ந்து முதலமைச்சர் விஜய் விவாதத்தை கவனித்தார். </p><p>முதலமைச்சர் விஜய் சக அமைச்சர்களுடன் இருக்கையில் அமர்ந்து சட்டசபை விவாதத்தை கவனிப்பது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் பணியாளர்களுக்கு செப்டம்பர் 1 முதல் சம்பள உயர்வு- அமைச்சர் வினோத்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vinoth-announces-pay-rise-for-tasmac-staff</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vinoth-announces-pay-rise-for-tasmac-staff#comments</comments><guid isPermaLink="false">2351bd11-8dc2-4aed-84bb-41ddc66f5ba3</guid><pubDate>Mon, 31 Aug 2026 07:41:42 +0000</pubDate><atom:updated>2026-08-31T07:41:42.902Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,Tasmac,அமைச்சர் வினோத்,Minister Vinoth,டாஸ்மாக் பணியாளர்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/sm6ww0ko/minister-Vinoth.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Vinoth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/sm6ww0ko/minister-Vinoth.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>23 ஆண்டுகளாக டாஸ்மாக் கடைகளில் பணியாற்றி வரும் பணியாளர்களை கருத்தில் கொண்டு 4 முறை சங்க பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையின் அடிப்படையில், வரும் செப்.1 முதல் ரூ.33,023 ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் விக்னேஷ் அறிவித்துள்ளார்.</p><p>சட்டசபையில்  அமைச்சர் வினோத் இன்று மானிய கோரிக்கையில்  பேசுகையில் கூறியதாவது:-</p><p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D" rel="nofollow">டாஸ்மாக்</a> நிறுவனத்தின் சில்லறை விற்பனை கடைகளில் 23 ஆண்டுகளாக பணியாற்றி வரும் பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டும் இத்துறையில் எவ்வித முறைகேடுகளும் நடக்காமல் தடுக்கவும் பணியாளர்களின் வாழ்வாதார தேவைகளை கவனத்தில் கொண்டும் இந்த அரசு பொறுப்பேற்ற 100 நாட்களில் நான் நான்கு முறை சங்கப் பிரதிநிதிகள் நேரில் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறேன்.</p><p>அந்த பேச்சு வார்த்தையின் அடிப்படையிலும் டாஸ்மாக் நிர்வாக குழுவின் முடிவின் அடிப்படையிலும் நான் மேலும் சில அறிவிப்புகளை இந்த சட்டமன்ற பேரவையில் வெளியிடுகிறேன்.</p><p>23 ஆண்டுகளாக தொடர்ந்து டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு செப்டம்பர் 1 முதல் ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது 23 ஆண்டுகளாக 2000 ரூபாயில் ஆரம்பித்து கடைசி வரை 14,000 ரூபாய் வரைக்கும் இந்த 23 ஆண்டுகள் அவர்களுக்கு சம்பளம் கொடுத்து இருக்கிறோம் சரியான <a href="https://www.maalaimalar.com/sports/a-first-in-india-mumbai-cricket-association-to-provide-equal-pay-to-male-and-female-players" rel="nofollow">ஊதியம்</a> கொடுக்கணும் என்ற அடிப்படையில் மேற்பார்வையாளர்களுக்கு 33 ஆயிரத்து 23 ரூபாயும் விற்பனையாளர்களுக்கு 30,284 ரூபாயும் உதவி விற்பனையாளர்களுக்கு 28,680 உயர்த்தி வழங்கப்படும்.</p><p>இதன்மூலம் ஆண்டொன்றிற்கு அரசுக்கு ஏற்படும் செலவு ரூ.486.90 கோடி என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். </p><p>டாஸ்மாக் பணியாளர்களுக்கு பண்டிகை முன்பணமாக  புதிய டாஸ்மாக் பணியாளர்களுக்கு பண்டிகை முன்பணமாக ரூ.20000 வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.</p><p>டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஆண்டுக்கு வரும் மூன்று சீருடைகள் துணி மற்றும் தையல் செலவிற்காக ரூ.6000 வழங்கப்படும்</p><p>டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-corporation-sanitation-workers-protest-again-794388" rel="nofollow">தூய்மை பணி</a> மற்றும் அடிப்படை வசதிகளை உறுதி செய்வதற்காக மாதந்தோறும் மாநகரக் கடைகளுக்கு ரூ.5000 நகராட்சி பேரூராட்சி கடைகளுக்கு ரூ.4000 கிராமப்புற கடைகளுக்கு ரூ.3000 சில்லறை செலவினங்களை மேற்கொள்ள வழங்கப்படும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பெட்ரோலில் எத்தனால் கலப்பு விவகாரம்: நிபுணர் குழு அமைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/supreme-court-dismisses-plea-on-ethanol-blend-in-petrol</link><comments>https://www.maalaimalar.com/news/national/supreme-court-dismisses-plea-on-ethanol-blend-in-petrol#comments</comments><guid isPermaLink="false">b1a82377-7966-4ded-ad7e-c11d63b3193b</guid><pubDate>Mon, 31 Aug 2026 07:35:39 +0000</pubDate><atom:updated>2026-08-31T07:35:39.997Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,உச்சநீதிமன்றம் விசாரணை,வாகன பராமரிப்பு,Consumer Rights,EthanolBlending,மனு தள்ளுபடி,Vehicle Maintenance,Petrol Pump Receipts</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/r6lk1gvl/Supreme-Court" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ E20 Petrol]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/r6lk1gvl/Supreme-Court?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெட்ரோல் நிலையங்களில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ரசீதுகளில் எத்தனால் கலவை சதவீதத்தைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் மற்றும் வாகனங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்க வேண்டும் எனக் கோரிய பொதுநல மனுவை <strong><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D">உச்ச நீதிமன்றம்</a> தள்ளுபடி செய்துள்ளது</strong>.</p><p>வழக்கறிஞர் நரேந்திர கோஸ்வாமி தாக்கல் செய்த இந்த மனுவை, நீதிபதிகள் <strong>எம்.எம். சுந்தரேஷ்</strong> மற்றும் <strong>பி.பி. வரலே</strong> ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரணை செய்தது.</p><h2><strong>மனுதாரரின் முக்கியக் கோரிக்கைகள்</strong></h2><p>பெட்ரோல் விநியோகிக்கும் குழாய்கள் மற்றும் வாடிக்கையாளர் ரசீதுகளில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D">எத்தனால் கலவை</a> அளவை தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.</p><p>எத்தனால் கலப்பினால் வாகனங்களின் மைலேஜ், என்ஜின் ஆயுட்காலம் மற்றும் பராமரிப்புச் செலவுகள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யச் சுதந்திரமான நிபுணர் குழுவை அமைக்க வேண்டும்.</p><p>எந்தெந்த வாகன மாடல்களுக்கு இந்த பெட்ரோல் ஏற்றது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தரவுத்தளத்தை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று கோரிக்கைகளை வைத்திருந்தனர்.</p><h2><strong>நீதிமன்றத்தின் உத்தரவு</strong></h2><p>விசாரணையின் போது, நுகர்வோருக்குத் தாங்கள் வாங்கும் எரிபொருளின் கலவையைப் பற்றித் தெரிந்துகொள்ளும் உரிமை உள்ளது என மனுதாரர் வாதிட்டார்.</p><p>இருப்பினும், இந்த விவகாரத்திற்காக நேரடியாக உச்ச நீதிமன்றத்தை அணுகியதை கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தையோ அல்லது உரிய அதிகாரிகளையோ அணுகுமாறு அறிவுறுத்தி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.</p> ]]></content:encoded></item><item><title>கொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கு: மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவின் தீர்ப்பு ஒத்திவைப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kolathur-election-stalin-petition-verdict-postponed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kolathur-election-stalin-petition-verdict-postponed#comments</comments><guid isPermaLink="false">0e8d03ee-930a-4bb3-9e09-7a006c017382</guid><pubDate>Mon, 31 Aug 2026 07:24:09 +0000</pubDate><atom:updated>2026-08-31T07:24:09.616Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,Kolathur,கொளத்தூர்,முக ஸ்டாலின்,தீர்ப்பு ஒத்திவைப்பு,verdict postponed</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/0zb91kfq/MKS.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chennai Highcourt- MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/0zb91kfq/MKS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கொளத்தூர் சட்டசபைத் தேர்தல் தொடர்பாக மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><h2>கொளத்தூர் தொகுதி</h2><p>நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் விஎஸ் பாபு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.</p><p>இந்நிலையில், தொகுதியில் போட்டியிட்டு இரண்டாவது இடத்தை பிடித்த முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த விண்ணப்பத்தை ஏற்று, <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/verification-of-evm-for-kolathur-constituency-has-begun" rel="nofollow">கொளத்தூர் தொகுதி</a>யில், 14 வாக்குப்பதிவு எந்திரங்கள், ஓட்டுக்கு ஒப்புகைச் சீட்டு எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன.</p><h2>மு.க.ஸ்டாலின் மனுத்தாக்கல்</h2><p>அப்போது முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p>அந்த மனுவில், சரிபார்ப்புக்கு எடுக்கப்பட்ட சில வாக்குப்பதிவு எந்திரங்கள், திடீரென கோளாறாகி நின்றுவிட்டன. ஆறு வாக்கு சாவடிகளில்  வாக்குப்பதிவு  எந்திரங்கள் மற்றும் ஓட்டுக்கு ஒப்புகைச் சீட்டு எந்திரங்களான விவிபேடுகளை ஒப்பிட்டுப் பார்த்ததில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டன.</p><p>முறைகேடுகள் நடந்துள்ளதால் அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வி வி பேடுகளை சரி பார்க்க உத்தரவிட வேண்டும்.</p><p>தவெக எம்.எல் ஏ - வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும். என்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.</p><p>இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல், வாக்குப்பதிவு எந்திரங்கள், ஒப்புகைச் சீட்டு எந்திரங்களை சரிபார்க்கக் கோரி, தேர்தல் முடிவுகள் வெளியான மூன்று நாட்களில், அதாவது மே 7-ந்தேதியே விண்ணப்பித்துள்ளதாகவும், ஆனால், தேர்தல் வழக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவான 45 நாட்களுக்கு பிறகே வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டதால், இந்த வழக்கை தாக்கல் செய்வதை தவிர வேறு நிவாரணம் இல்லை என வாதிட்டார்.</p><p>தேர்தல் ஆணையம் தரப்பில், மனுவில் முன் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் விசாரானைக்கு உகந்தவை அல்ல. எம்.எல்.ஏ.வின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/election-case-high-court-warns-chief-minister-vijay-and-aadhav-arjuna">தேர்தல் வழக்கு</a> மட்டுமே தாக்கல் செய்ய முடியும்.</p><p>இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டால் இதே கோரிக்கையுடன் வழக்குகள் தாக்கல் செய்யப்படலாம் என்பதால், இந்த வழக்கை ஏற்கக் கூடாது என வாதிடப்பட்டது.</p><h2>தீர்ப்பு ஒத்திவைப்பு</h2><p>இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஸ்டாலினின் மனு மீதான தீர்ப்பை தள்ளிவைத்தனர்.</p><p>மேலும், வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்ப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்த வழக்கில், 2025-ம்ஆண்டு அதில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டதாக தேர்தல் ஆணையம் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.</p><p>இதையடுத்து, இந்த வழக்கை திரும்பப் பெற்று, புதிய மனு தாக்கல் செய்ய ஸ்டாலின் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. இதை ஏற்று, வழக்கை திரும்பப் பெற நீதிபதிகள் அனுமதியளித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>இலவச வேட்டி திட்டத்தில் 8 முழம் வேட்டிக்கு பதில் 4 முழம் வேட்டி விவகாரம்- ஆஸ்டின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vijay-balaji-repley-to-austin-question</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vijay-balaji-repley-to-austin-question#comments</comments><guid isPermaLink="false">4603eb98-d3df-4c14-9a2b-d5cc524ffde4</guid><pubDate>Mon, 31 Aug 2026 07:23:45 +0000</pubDate><atom:updated>2026-08-31T07:23:45.398Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தவெக,தமிழக சட்டசபை,TN assembly,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/blww1ljq/vijaybalaji.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் விஜய் பாலாஜி]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் விஜய் பாலாஜி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/blww1ljq/vijaybalaji.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மக்கள்  8 முழ  வேஷ்டிக்கு பதிலாக  4 முழ வேஷ்டியை தான் விரும்புகிறார்கள் என்று அமைச்சர் விரிவாக பதில் அளித்தார்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">சட்டசபையில்</a> கவன ஈர்ப்பு தீர்மானத்தில் திமுக எம்.எல்.ஏ.ஆஸ்டின் பேசியதாவது :-</p><p>பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெசவாளர்கள் மூலமாக உற்பத்தி செய்யப்பட்டு இலவசமாக வழங்கப்படும் வேட்டிகளின் அளவை 8 முழத்திலிருந்து 4 முழமாக குறைத்துள்ளது.</p><p>நெசவாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 1983-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் இத்திட்டம் கொண்டுவரப்பட்டு கலைஞர் அந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தினார்  என வரலாற்றைச் சுட்டிக்காட்டினார். </p><p>ஆண்டு முழுவதும் நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போதைய அரசின் புதிய முடிவால் நெசவாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.</p><p>அரசால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நெசவாளர்களின் உண்மை நிலை மற்றும் பாதிப்புகள் மறைக்கப்பட்டுள்ளதாகவும், கைத்தறி நெசவாளர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை எனத் தவறாகச் சித்திரிக்கப்பட்டுள்ளதாகவும் ஆஸ்டின் தெரிவித்தார். பயனாளிகளிடமோ அல்லது நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களிடமோ முறையான அறிவிப்பு கொடுத்துக் கருத்து கேட்புக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை. ஒரு சில அதிகாரிகளால் முறையான நடைமுறைகள் பின்பற்றப்படாமல் 'ஃபார்மாலிட்டி'க்காக மட்டுமே கையெழுத்து பெறப்பட்டுள்ளது.</p><p>நாகர்கோவில், கடலூர், திருச்செங்கோடு, சேலம், காஞ்சிபுரம் ஆகிய 5 சரகப் பகுதிகளில் சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான 8 முழ வேட்டிகள் ஏற்கனவே நெய்யப்பட்டு, இருப்பில் தேங்கியுள்ளன. நாகர்கோவில் சரகத்தில் மட்டும் ரூ.7 கோடி மதிப்பிலான வேட்டிகள் முடங்கியுள்ளன.</p><p>புதிய அரசாணையின்படி 60-ஆம் எண் நூலுக்குப் பதிலாக 40-ஆம் எண் நூலும், 72 இன்ச் அச்சுக்கு பதிலாக 68 இன்ச் அச்சுமாக மாற்றப்பட்டுள்ளதால், நெசவாளர்கள் தங்களது தறிகளை  மாற்றியமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், 7 மாதங்கள் தாமதித்து இத்தகைய புதிய அரசாணையை வெளியிட்டதன் நோக்கம் என்னவென்று கேள்வி எழுப்பிய ஆஸ்டின், பாதிக்கப்பட்ட நெசவாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.</p><p>8 முழ வேட்டிக்கு பதிலாக 4 முழ வேட்டி அறிமுகப்படுத்தப்பட்டதால் தரமும் கூலியும் குறைந்துள்ளதாக நெசவாளர்கள் கவலைப்படுகின்றனர் நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், தேக்கமடைந்துள்ள உற்பத்திப் பொருட்களை அரசு உடனடியாகக் கொள்முதல் செய்து, இந்த அரசாணையைத் தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் என்று ஆஸ்டின் வலியுறுத்தினார்.</p><p>இதற்கு அமைச்சர் விஜய் பாலாஜி பதிலளிக்கையில், மக்களுக்கு பிடித்த பொருளை தரமாக வழங்குவதே எங்களது நோக்கம். பொங்கலுக்கு ஜரிகை வைத்த சேலை வழங்கப்பட உள்ளது. பொங்கலுக்கு கொடுக்கும் வேட்டிகளை அமைச்சர்கள் அணிந்து வருவோம். கடந்த ஆட்சியில் கொடுக்கப்பட்ட வேட்டிகளை எதிர்க்கட்சிகள் அணிய வேண்டும். எது தரமான வேட்டி என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.  மக்கள்  8 முழ  வேஷ்டிக்கு பதிலாக  4 முழ வேஷ்டியை தான் விரும்புகிறார்கள் என்று விரிவாக பதில் அளித்தார்.</p>]]></content:encoded></item><item><title>செம்மஞ்சேரி விளையாட்டு நகரம் திட்டம் ரத்து இல்லை: மறுசீரமைப்பு செய்கிறோம் - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadhav-arjuna-says-chemmancheri-sports-city-project-not-cancelled-we-are-restructuring-it</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadhav-arjuna-says-chemmancheri-sports-city-project-not-cancelled-we-are-restructuring-it#comments</comments><guid isPermaLink="false">4330cd91-b1ee-4588-96e5-fd163705e557</guid><pubDate>Mon, 31 Aug 2026 07:06:38 +0000</pubDate><atom:updated>2026-08-31T07:06:38.717Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,அமைச்சர் ஆதவ் அர்ஜூனா,Minister Aadhav Arjuna</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/7uls85kk/aadhavarjuna.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் ஆதவ் அர்ஜூனா]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ஆதவ் அர்ஜூனா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/7uls85kk/aadhavarjuna.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>புதிய திட்டம் முதலமைச்சரின் ஆய்வில் இருப்பதாகவும், கூடிய விரைவில் தமிழக மக்களுக்கு நல்ல செய்தியை முதலமைச்சர் அறிவிப்பார் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறினார்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபையில்</a> கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக ஆட்சியில் விளையாட்டுத் துறையின் தரத்தை மேம்படுத்தும் வகையில் செம்மஞ்சேரியில் 128 ஏக்கர் பரப்பளவில் ரூ.261 கோடி மதிப்பீட்டில் குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டதாக தெரிவித்தார்.</p><p>மேலும், பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டதைப் போலவே, குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கும் திட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தத் திட்டம் ஏன் கைவிடப்பட்டது என்பது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு வருவதாக உதயநிதி ஸ்டாலின் கூறினார்.</p><p>இதற்கு பதிலளித்த பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, விளையாட்டுத் துறைக்கான மானியக் கோரிக்கையின்போது, விளையாட்டுக்கு அரசு அளித்து வரும் முக்கியத்துவம் குறித்தும், முதலமைச்சர் புதிய விளையாட்டுக் கொள்கையை எவ்வாறு வகுத்து வருகிறார் என்பது குறித்தும் விரிவாக எடுத்துரைத்ததாக தெரிவித்தார்.</p><p>கடந்த 100 ஆண்டுகளில் நாம் ஒலிம்பிக் பதக்கம் பெற்றதே கிடையாது. இதற்காக புதிய திட்டத்தை வகுக்க வேண்டும். அதற்கான அடிப்படை கட்டமைப்பாக 38 மாவட்டங்களிலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான விளையாட்டு விடுதிகள் உருவாக்கப்பட வேண்டும் </p><p>மேலும், உலகத் தரத்தில் 10 ஒலிம்பிக் அகாடமிகள் உருவாக்கப்படும்.</p><p>அதன் தொடர்ச்சியாக, சர்வதேச தரத்தில் ஒலிம்பிக் நகரத்தை உருவாக்கும் நிலையில் அரசு இருப்பதாக தெரிவித்த அமைச்சர், தனக்கு இருந்த விளையாட்டுத் துறை அனுபவத்தின் அடிப்படையில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை  ஆய்வு செய்தபோது, ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் முழுமையாக ரத்து செய்யப்படவில்லை என்றும், மாறாக மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருவதாகவும் விளக்கம் அளித்தார்.</p><p>ஒரு ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்பட்டால் அது ஒலிம்பிக் தரத்தில் இருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் எனக் கூறிய அமைச்சர், 42 வகையான விளையாட்டுகளை சர்வதேச தரத்தில் நடத்தும் வகையில் புதிய டிபிஆர்  தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.</p><p>இந்த புதிய திட்டம் முதலமைச்சரின் ஆய்வில் இருப்பதாகவும், கூடிய விரைவில் தமிழக மக்களுக்கு நல்ல செய்தியை முதலமைச்சர் அறிவிப்பார் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறினார்.</p><p>மேலும், உலகத் தரத்திற்கு ஏற்ற வகையில் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் மறுசீரமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p>தொடர்ந்து, திமுகவின் தேர்தல் அறிக்கையில் ஸ்போர்ட்ஸ் சிட்டி உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான ஒப்பந்தப் பணிகள் 8.1.2026 அன்று கோரப்பட்டதாகவும், கடந்த ஐந்து ஆண்டுகளில் இதற்கான எந்தப் பணியும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அமைச்சர் குற்றம்சாட்டினார். தேர்தலுக்கு முன்புதான் அடிக்கல் நாட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p>முதலமைச்சர் புதிய அறிவிப்பை வெளியிட்டவுடன், அதற்கான பணிகளை ஆறு மாதங்களுக்குள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.</p><p>இதையடுத்து பேசிய உதயநிதி ஸ்டாலின், சென்னைக்கு அருகே 128 ஏக்கர் நிலம் கிடைத்தது சாதாரண விஷயம் அல்ல. பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட பிறகே செம்மஞ்சேரி அருகே ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது” என்றார்.</p><p>இந்தியாவிலேயே முதல்முறையாக பல்வேறு விளையாட்டுகள் இடம்பெறும் வகையில் விளையாட்டு நகரம் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.</p><p>ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் கைவிடப்படவில்லை என்றும், மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில், பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.</p><p>இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, 1994ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்குப் பிறகு சர்வதேச தரத்தில் புதிய விளையாட்டு அரங்கம் உருவாக்கப்படவில்லை எனக் கூறினார்.</p><p>கூடிய விரைவில் பணிகளைத் தொடங்கி, ஐந்து ஆண்டுகளுக்குள் முழுமையாக முடித்து, முதலமைச்சர் அவர்களின் கைகளால் ஒலிம்பிக் தரத்திலான இந்த ஸ்போர்ட்ஸ் சிட்டி திறக்கப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஆண்கள் உலகக் கோப்பை ஹாக்கி  - 4வது முறையாக பட்டத்தை வென்ற ஜெர்மனி</title><link>https://www.maalaimalar.com/sports/mens-hockey-world-cup-germany-win-fourth-title</link><comments>https://www.maalaimalar.com/sports/mens-hockey-world-cup-germany-win-fourth-title#comments</comments><guid isPermaLink="false">6828b3d6-ab6b-4432-9732-6f233c9baeca</guid><pubDate>Mon, 31 Aug 2026 06:55:57 +0000</pubDate><atom:updated>2026-08-31T06:55:57.037Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Germany,hockey,Hockey World Cup,ஹாக்கி உலக கோப்பை,ஹாக்கி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/2vlakvgo/Untitled-design-9.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ German Hockey Team]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/2vlakvgo/Untitled-design-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெல்ஜியத்தில் நடைபெற்று வந்த ஆண்கள் <a href="https://www.maalaimalar.com/topic/உலகக்-கோப்பை-ஹாக்கி">உலகக் கோப்பை ஹாக்கி</a> போட்டியில், ஸ்பெயின் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, ஜெர்மனி அணி தனது நான்காவது பட்டத்தை வென்றது. </p><p>இதன்மூலம் ஆண்கள் உலக கோப்பை ஹாக்கி  போட்டியில் நான்கு முறை பட்டம் வென்ற பாகிஸ்தான் அணியின் சாதனையை ஜெர்மன் அணி சமன் செய்தது.</p><h3><strong>ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை 2026</strong></h3><p>FIH ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை 2026 போட்டி, ஆகஸ்ட் 15 அன்று பெல்ஜியம் நாட்டில் உள்ள வாவ்ரே நகரில் தொடங்கியது.</p><p>இந்த போட்டியில் 16 அணிகள் பங்கேற்ற நிலையில், மொத்தம் 50 போட்டிகள் பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் உள்ள மைதானங்களில் நடத்தப்பட்டன.</p><p>இந்த பதினாறு சர்வதேச அணிகளும் முதல் கட்டமாக நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகளில் விளையாடின. பின்னர் இரண்டாவது சுற்றில் எட்டு அணிகள் வெளியேற்றப்பட்டு முதல் எட்டு இடங்களை பிடித்த அணிகள் மோதின.</p><h3><strong>இந்திய ஹாக்கி அணி</strong></h3><p>இந்திய ஹாக்கி அணி முதல் சுற்றில் நடந்த போட்டியில், ‘டி’ பிரிவில் பங்கேற்று, பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றது.</p><p>இரண்டாவது சுற்றில் விளையாடிய இந்திய அணி, நெதர்லாந்து, அர்ஜெண்டினா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளிடம் தோல்வியுற்று எட்டாவது இடத்தை பிடித்தது.</p><p>இருப்பினும் இந்திய அணியின் கேப்டனான ஹர்மன்பிரீத் சிங், அதிக கோல்களை அடித்த பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தார்.</p><h3><strong>அரை இறுதிப் போட்டி</strong></h3><p>இதையடுத்து நடந்த முதல் அரை இறுதி போட்டியில், ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் ஸ்பெயின் அணி 4-3 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.</p><p>இரண்டாவது அரை இறுதி போட்டியில், ஜெர்மனி மற்றும் அர்ஜெண்டினா அணிகள் மோதின. இந்த போட்டியில் ஜெர்மனி 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.</p><p>மூன்றாவது இடத்திற்கு அர்ஜெண்டினா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் அர்ஜென்டினா 2-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி மூன்றாவது இடத்தை பிடித்தது.</p><h3><strong>இறுதிப் போட்டி</strong></h3><p>இந்த நிலையில் பெல்ஜியத்தின் வாவ்ரே நகரில் உள்ள பெல்ஃபியஸ் மைதானத்தில் நேற்று இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஜெர்மனியை சேர்ந்த மைக்கேல் ஸ்ட்ரூதாஃப் ஆட்டத்தின் 44-வது நிமிடத்தில் ஒரு கோலை அடித்து அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டார்.</p><p>இதையடுத்து இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காத நிலையில், அர்ஜெண்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி, தனது நான்காவது பட்டத்தை வென்றது.</p><p>இதன்மூலம் 2002, 2006, 2023 ஆகிய ஆண்டுகளில் வென்ற பட்டத்தை தொடர்ந்து, இந்த ஆண்டிலும் பட்டத்தை வென்று, உலகக் கோப்பை போட்டியில் நான்கு முறை பட்டம் வென்ற பாகிஸ்தான் அணியின் சாதனையை ஜெர்மனி சமன் செய்தது.</p>]]></content:encoded></item><item><title>கர்நாடகாவில் சைபர் மோசடியில் ரூ.558 கோடியை இழந்த மக்கள் - வெறும் ரூ.1.9 கோடி மட்டுமே மீட்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/karnataka-lost-rs-558-crore-to-cyber-fraud-only-rs-1-9-crore-recovered</link><comments>https://www.maalaimalar.com/news/national/karnataka-lost-rs-558-crore-to-cyber-fraud-only-rs-1-9-crore-recovered#comments</comments><guid isPermaLink="false">51742a19-ab58-44f6-aa3c-d12d7dcb6ea9</guid><pubDate>Mon, 31 Aug 2026 06:55:52 +0000</pubDate><atom:updated>2026-08-31T06:55:52.712Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Karnataka,சைபர் மோசடி,cyber fraud,Priyank Kharge,Cybercrime,online scam,Financial Loss</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/6lcggrkf/Online-Scam" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Online Scam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/6lcggrkf/Online-Scam?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/karnataka">கர்நாடக </a>மாநிலத்தில் நடப்பு 2026-ஆம் ஆண்டில் ஜனவரி முதல் ஜூலை வரையிலான ஏழு மாதங்களில் மட்டும் பொதுமக்கள் சைபர் குற்றவாளிகளிடம் 558 கோடி ரூபாயை பறிகொடுத்துள்ளனர்.</p><p>ஆனால், இதில் அதிர்ச்சியூட்டும் விதமாக வெறும் 1.9 கோடி ரூபாய் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்குத் திரும்பக் கிடைத்துள்ளதாக அம்மாநில உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.</p><h2>மீட்புப் பணியில் தொய்வு: புள்ளிவிவரங்கள்</h2><p>ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/cyber-fraud">சைபர் குற்றங்களால் </a>இழந்த மொத்த தொகை ரூ.558 கோடி ஆகும்.</p><p>இதில் மோசடி நடந்த கணக்குகளில் இருந்து போலீசாரால் முடக்கப்பட்ட தொகை ரூ. 35.9 கோடி என்றாலும், பாதிக்கப்பட்ட மக்களிடம் இதுவரை வெறும் ரூ.1.9 கோடி மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. </p><p>இதன் மூலம் மீட்பு விகிதம் என்பது முடக்கப்பட்ட தொகையில் வெறும் 5% ஆகவும், இழந்த மொத்த தொகையில் மிகக் குறைந்த அளவாக வெறும் 0.4% ஆகவும் மட்டுமே உள்ளதால் மீட்புப் பணியில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது. </p><p>இந்த ஆண்டில் பதிவான வழக்குகளின் அடிப்படையில் மக்கள் ஒரு வழக்கிற்கு சராசரியாக ரூ.11.8 லட்சம் வரை தங்களது பணத்தை இழந்துள்ளனர்.</p><h2>ஆள் பற்றாக்குறை</h2><p>சைபர் குற்றங்கள் பெருமளவில் அதிகரித்து வரும் போதிலும், அதனைக் கையாள்வதில் காவல் துறையில் நிலவும் கடுமையான ஆள் பற்றாக்குறை காரணமாக மாநிலம் முழுவதும் சைபர் கிரைம் பிரிவில் 320 பணியிடங்கள் காலியாக உள்ள சூழலில், குறிப்பாக பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள முதன்மை சைபர் கிரைம் காவல் நிலையத்திலேயே 200 பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளதே பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பணம் திரும்பக் கிடைப்பதில் ஏற்படும் தாமதத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.</p><h2>கடந்த ஆண்டுகளின் ஒப்பீடு (2024 - 2026)</h2><p>கடந்த இரண்டு ஆண்டுகளை விட இந்த ஆண்டு வழக்குகளின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்திருந்தாலும் மக்கள் இழக்கும் சராசரித் தொகை அதிகமாகவே உள்ளது. </p><p>2024-இல் 17,890 வழக்குகளில் ரூ.1,841 கோடி இழக்கப்பட்டு ரூ.183.6 கோடியும், 2025-இல் 10,703 வழக்குகளில் ரூ.1,756.6 கோடி இழக்கப்பட்டு ரூ.76.7 கோடியும் மீட்கப்பட்ட சூழலில், 2026-ஆம் ஆண்டில் இதுவரை ரூ.558 கோடி இழக்கப்பட்டு வெறும் ரூ.1.9 கோடி மட்டுமே மீட்கப்பட்டுள்ளதால், கடந்த மூன்று ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக கர்நாடக மக்கள் ரூ.3,932 கோடியை சைபர் மோசடியில் இழந்துள்ளதும் அதில் இதுவரை வெறும் ரூ.262 கோடி மட்டுமே மீட்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.</p><h2>அரசின் அதிரடி நடவடிக்கை மற்றும் தீர்வு</h2><p>இந்த விவகாரம் குறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/priyank-kharge">பிரியங்க் கார்கே</a> சட்டமன்றத்தில் பேசுகையில், சைபர் குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க அரசு புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகக் கூறியதுடன், சைபர் பிரிவு, வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் அரசு முகமைகளுக்கு இடையே உள்ள ஒருங்கிணைப்பு பலப்படுத்தப்பட்டு விசாரணைக்குத் தேவையான ஆவணங்கள் தாமதமின்றிப் பெறப்படும் என்றும், சட்ட நடைமுறைகளை எளிதாக்கி முடக்கப்பட்ட பணத்தை நீதிமன்ற அனுமதியுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகளை மறுஆய்வு செய்து அவற்றை முன்னுரிமை அடிப்படையில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>மூளை வளர்ச்சி குன்றிய மகனுக்காக கையில் கீபோர்டு வடிவத்தை பச்சைக்குத்திய தாய்</title><link>https://www.maalaimalar.com/news/world/mother-tattoos-keyboard-on-arm-for-autistic-son</link><comments>https://www.maalaimalar.com/news/world/mother-tattoos-keyboard-on-arm-for-autistic-son#comments</comments><guid isPermaLink="false">db6665f7-d9d0-4a94-a114-f96b26f15b50</guid><pubDate>Mon, 31 Aug 2026 06:52:55 +0000</pubDate><atom:updated>2026-08-31T06:52:55.494Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>autism</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/pdx14w0g/Untitled-design-11.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Autism mother’s keyboard tattoo]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/pdx14w0g/Untitled-design-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கனடாவில் <a href="https://www.maalaimalar.com/topic/அமெரிக்கா">மூளை வளர்ச்சி குன்றிய</a> (ஆட்டிசம்) நோயால் பாதிக்கப்பட்ட 11 வயது மகனின் தாயார், தனது கையில் கீபோர்ட் வடிவத்தில் பச்சை ஒன்றை குத்திக் கொண்டார். </p><p>இதன் மூலம் தனது மகன் எந்த சூழ்நிலையிலும் அவன் நினைப்பதை மற்றவர்களிடம் தெரிவிக்க முடியும் என கூறினார்.</p><h3><strong>வேலைசெய்யாமல் போன மின்சாதனம்</strong></h3><p>கனாடாவில் வசித்து வரும் ஜெசிகா என்பவர், மூளை வளர்ச்சி குன்றிய நோயால் பாதிக்கப்பட்ட தனது 11 வயது மகனான ஹண்டர் உடன் சேர்ந்து ஒரு உணவகத்திற்கு உணவருந்த சென்றார்.</p><p>அப்போது ஹண்டர் தனது வார்த்தைகளையும், எண்ணங்களையும் பகிர்ந்து கொள்வதற்காக, அவன் வைத்திருந்த ஒரு எலக்ட்ரிக் கருவியின் பேட்டரி திடீரென தீர்ந்து போனது. இதனால் அவன் என்ன நினைக்கிறான் என்பதை, தனது தாயிடம் வெளிப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது.</p><p>இந்த சூழ்நிலையில் ஹண்டர் ஒரு காகிதத்தை எடுத்து, அதில் ஒரு கீபோர்டை வரைந்து, பிறகு தனக்கு என்ன சாப்பிட வேண்டும் என்பதை தனது தாய்க்கு தெரியப்படுத்தும் வகையில், அந்த வரையப்பட்ட காகிதத்தில் எழுத்துக்களை சுட்டிக்காட்டினான்.</p><p>இந்த காட்சியை பார்த்த ஹண்டரின் தாயார், இதற்கு ஒரு மாற்று தகவல் தொடர்பு சாதனம் தேவை என்பதை உணர்ந்தார்.</p><h3><strong>பச்சை குத்திக்கொண்ட தாய்</strong></h3><p>இதைத்தொடர்ந்து ஜெசிகா தனது கையில் ஒரு கீபோர்டை பச்சை குத்திக் கொள்ள முடிவு செய்தார். மேலும் அந்த கீபோர்டு வடிவிலான டாட்டூவில், ‘மகிழ்ச்சி, சோகம்’ ஆகிய ஸ்மைலி வடிவங்களும், ‘நான் உன்னை விரும்புகிறேன்’ என்ற பொத்தானும் இடம்பெற்றிருந்தன.</p><p>இந்த வடிவத்தை தனது கையில் பச்சை குத்திக்கொண்ட அவரின் தாயார், அதை தனது மகனிடம் முதலில் காண்பித்தார். அப்போது ஹண்டர், தனது தாயின் கையில் வரையப்பட்ட கீபோர்டில், ‘அம்மா’ என்று பதிவுசெய்தான்.</p><p>இதன்மூலம் ஹண்டர் தன்னுடன் எந்தவித சிக்கலும் இல்லாமல் தொடர்பு கொள்ளும் வீடியோவை, ஜெசிகா சமூக வலைதளத்தில் பகிர்ந்தார்.</p><p>இதைத்தொடர்ந்து, ஜெசிகா ஒரு ஆடை நிறுவனத்துடன் இணைந்து, கீபோர்டு வடிவிலான அச்சுகளை தனது சட்டைகளில் அச்சிட்டார்.</p><p>இதன்மூலம், உலகம் முழுவதும் உள்ள ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், தங்களது எண்ணங்களை வீடுகளிலும், மருத்துவமனைகளிலும், பள்ளிகளிலும் வெளிப்படுத்த முடியும் என ஜெசிகா குறிப்பிட்டார்.</p><p>மேலும் தனது உடலில் ஆயிரம் தழும்புகளை பச்சை குத்திக் கொள்வதன் மூலம், தனது மகனுக்கு அவனது எண்ணங்களை வெளிக்காட்ட ஒரு வழி இருக்குமென்றால், தான் உடல் முழுவதும் பச்சை குத்திக்கொள்ள தாயாராக இருப்பதாகவும் ஜெசிகா தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>அவர்கள் தூய்மைப் பணியாளர்கள் அல்ல தூய்மை தேவதைகள்..!- அமைச்சர் ராஜ்மோகன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/they-are-not-cleaners-they-are-cleanliness-angels-minister-rajmohan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/they-are-not-cleaners-they-are-cleanliness-angels-minister-rajmohan#comments</comments><guid isPermaLink="false">97f745b9-55e8-4153-b7cf-3644302d6c51</guid><pubDate>Mon, 31 Aug 2026 06:52:36 +0000</pubDate><atom:updated>2026-08-31T06:52:36.920Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,Sanitary workers,TN assembly,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan,தூய்மை பணியாளர்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/il3s04st/rajmohan1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Rajmohan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/il3s04st/rajmohan1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபை வார விடுமுறைக்குப்பின் இன்று கூடியது. இன்றைய கூட்டத்தொடரில் மாற்றுத்திறனாளிகள், நலத்துறை, வேளாண்மை, மதுவிலக்கு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மீதான கோரிக்கைகளை மீது விவாதம் நடைபெறுகிறது.</p><p>மேலும் 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் விலையில்லா வேட்டி சேலை குறித்த கவன ஈர்ப்பு தீர்மானமும் எடுத்துக்கொள்ளப்படுகிறது.</p><p>முன்னதாக, சட்டசபையில் வினாக்கள் - விடைகள் நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.</p><p>அதன் விவரம் வருமாறு:-</p><p>அமைச்சர் ராஜ்மோகன் உரை:</p><p>தூய்மைப் பணியாளர்கள் உண்மையில் பாவம் தான். அவர்கள் தூய்மை ஊழியர்கள் அல்ல தூய்மை தேவதைகள்.</p><p>போராடும் தூய்மைப் பணியாளர்கள் மீது எந்தவித அடக்குமுறையும் கூடாது என காவல்துறையிடம் கூறப்பட்டுள்ளது. </p><p>பணியின்போது பலியான <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-rajinikanth-praise-to-padma-807774" rel="nofollow">தூய்மைப் பணியாளர்</a> குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>பலியான தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தருவது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>தூய்மைப் பணியாளர்களுக்காக கழிப்பிடம், உடை மாற்றும் அறைகள் செப்.15-ந்தேதிக்குள் ஏற்படுத்தி தரப்படும்.</p><p>தூய்மைப் பணியாளர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு கையுறை வழங்கப்படும். வரும் காலங்களில் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.</p><p>காலை சிற்றுண்டிக்கு மாற்றாக பணமாக தருவது பற்றி பரிசீலனை. உணவிற்கு பதில் தூய்மைப் பணியாளர்களுக்கு விரைவில் உணவுப்படி வழங்கப்படும்.</p><p>உடை மாற்றும் அறையுடன் மூடிய பிரத்யேக கழிப்பட வசதி ஏற்படுத்தி தரப்படும்.</p><p>வார விடுப்பு, ஊதியத்துடன் கூடிய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sarathkumar-speech-in-tn-assembly" rel="nofollow">மகப்பேறு விடுப்பு</a>, முதல்வரை சந்திப்பது தொடர்பாக நல்ல செய்தி வரும்.</p><p>தூய்மைப் பணியாளர்களுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தி மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் .</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பெஞ்ச் மேல் ஏறி கவனத்தை ஈர்க்கலாம்... எ.வ.வேலு- தங்கம் தென்னரசு பேச்சுக்கு புன்னகைத்த முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-smiled-at-the-remarks-made-by-ev-velu-and-thangam-thennarasu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-smiled-at-the-remarks-made-by-ev-velu-and-thangam-thennarasu#comments</comments><guid isPermaLink="false">62c22fd2-cafe-4092-8a97-880c7c20dd05</guid><pubDate>Mon, 31 Aug 2026 06:39:45 +0000</pubDate><atom:updated>2026-08-31T06:39:45.700Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,ev velu,எவ வேலு,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/3qwco2jx/vijay0.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/3qwco2jx/vijay0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சபாநாயகரின் கவனத்தை ஈர்ப்பது தொடர்பாக தி.மு.க. கொறடா எ.வ.வேலு மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் பேசிய போது முதலமைச்சர் விஜய் புன்னகைத்தப்படி இருந்தார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழக சட்டசபை</a> நிகழ்வுகள் நேரலை செய்யப்படும் நிலையில் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டவை ரீல்ஸாக வருகின்றன என கே.என்.நேரு கூறுகையில், சபை நேரலை இளைஞர்கள் உள்ளிட்ட பொதுமக்களை ஈர்த்துள்ளது. அவைக்குறிப்பில் நீக்கும் அளவுக்கு ஏன் பேச வேண்டும் என எம்எல்ஏக்கள் சிந்திக்கக்கூடாதா? உறுப்பினர்கள் என்ன பேசுகிறார்கள் என மக்கள் உன்னிப்பாக கவனிக்கின்றனர். அவை மாண்பை குலைக்கும் எம்எல்ஏக்களை அம்பலப்படுத்துவதில் தவறில்லை என மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த வாரத்தில் உரிமை மீறல் குழு தேர்வு நடைபெறும் என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார். </p><h2><strong>எம்.எல்.ஏ.க்களை கொறடாக்கள் கட்டுப்படுத்த வேண்டும்</strong></h2><p>மேலும் சபாநாயகர் கூறுகையில்,  கூச்சல், குழப்பம் ஏற்படும் போது எம்.எல்.ஏ.க்களை கொடறாக்கள் கட்டுப்படுத்த வேண்டும். உட்காருங்கள் என்று பல முறை நான் கூறிய பின்னும் ஓ.எஸ். மணியன் நின்று கொண்டே இருக்கிறார். சட்டசபை இருக்கையை விட்டு எழுந்து வந்து ஓடி வருவது தவறு என்றார். </p> <p>இதற்கு தி.மு.க. கொறடா எ.வ.வேலு பேசுகையில், நீங்கள் சொன்ன கருத்தை நாங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம். அதில் மாற்றுக்கருத்து இல்லை. பேரவை தலைவரின் கவனத்தை ஈர்ப்பதற்கு நிற்கலாம், கை தூக்கலாம். உறுப்பினர்களின் குரல் சபாநாயகருக்கு கேட்காத போது முன்னால் வந்து சொல்கிறார்கள் என்றார்.</p><p>சபாநாயகர் பேசுகையில், கையை உயர்த்துவதில் தவறில்லை. என் கவனத்தை ஈர்க்க முடியவில்லை என்றால் குரல் கொடுப்பதில் தவறில்லை. நான் சொல்வது ஒரே நேரத்தில் பத்து, பதினைந்து பேர் எழுந்து நின்று குரல் கொடுத்து இவருக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று பரிந்துரைப்பது தேவையில்லை. நானே பார்த்து பார்த்து யாருக்கும் எந்த குறையும் இல்லாமல் வாய்ப்பு தருகிறேன்.  இருக்கையை விட்டு எழுந்து  ஓடி வருவது தவறு என்று தான் சொல்கிறேன் என்றார்.</p><p>திமுக கொறடா எ.வ.வேலு, பேரவைத் தலைவர் சொல்வது எப்போதும் விதிக்குட்பட்டு தான் சொல்கிறீர்கள். நாங்களும் விதிக்கு கட்டுப்பட்டுதான் இருக்கிறோம். சில நேரங்களில் எங்களுடைய பக்கத்தில் இருக்ககூடிய உறுப்பினர்களின் குரல் உங்களுக்கு கேட்கவில்லை என்றால் பக்கத்தில் இருக்கும் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-important-measures-starting-with-an-increase-in-the-milk-procurement-price">உறுப்பினர்கள்</a> உதவியா இருந்து சொல்கிறார்கள். அதுதானே தவிர வேறொன்றும் இல்லை. இதே பேரவையில் பேரவைத் தலைவரின் கவனத்தை ஈர்க்க பெஞ்ச் மேல் ஏறி நின்று இரண்டு கையை தூக்கி கவனத்தை ஈர்த்துள்ளோம் என்றார். </p><p>உடனே  சபாநாயகர் நீங்கள் சொல்லுங்கள் நான் கேட்டுக்கொள்கிறேன். பத்து பேர் சேர்ந்து ஒருவருக்கு பரிந்துரை செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார். </p><p>இதனை தொடர்ந்து பேசிய தங்கம் தென்னரசு, இத்தனை ஆண்டு காலமாக இங்கே இருந்து கையை மட்டும் உயர்த்தினால் உங்கள் கவனத்தை ஈர்க்கலாம் என்று நாங்கள் நம்பிக்கொண்டு இருந்தோம். இன்றைக்குதான் பெஞ்ச் மேல் ஏறியும் கவனத்தை ஈர்க்கலாம் என அண்ணன் எவவேலு மூலம் அறிய கருத்தை புதிய வழிமுறையை எங்களுக்கு காட்டிக்கொடுத்து இருகிறார் என்றார். </p><p>பெஞ்ச் மேல் ஏறி நிற்கும் தண்டனையை நான் வழங்க மாட்டேன். சபாநாயகர் இருக்கையில் முன்பு அமர்ந்தது போல் அமரால் இருந்தால் அனைவரையும் அனுமதிக்க தயாராக இருக்கிறேன் என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கூறினார். </p><p>இவ்வாறு விவாதம் நடைபெற்ற போது முதலமைச்சர் விஜய் புன்னகைத்தப்படி இருந்தார். </p>]]></content:encoded></item><item><title>காஞ்சிபுரம் புதுநகர் வளர்ச்சித் திட்டம் ரத்து!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanchipuram-new-town-development-plan-cancelled</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanchipuram-new-town-development-plan-cancelled#comments</comments><guid isPermaLink="false">9496605b-80e8-4cb9-b1ad-b8e8b671ff80</guid><pubDate>Mon, 31 Aug 2026 06:21:17 +0000</pubDate><atom:updated>2026-08-31T06:21:17.820Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,காஞ்சிபுரம்,Kanchipuram,Development Project,புதுநகர் வளர்ச்சித் திட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/bu7p35vu/VJ.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/bu7p35vu/VJ.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுக ஆட்சியில் வரையறுக்கப்பட்ட காஞ்சிபுரம் புது நகர் வளர்ச்சித் திட்டம் மற்றும் பாரம்பரிய மறுமலர்ச்சித் திட்டத்தை தவெக அரசு ரத்து செய்துள்ளது.</p><p>சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த கடந்த திமுக ஆட்சியில் புதுநகர் வளர்ச்சி திட்டங்களானது செயல்படுத்தப்பட்டது. </p><p>அதன்படி, காஞ்சிபுரம், திருமழிசை, மீஞ்சூர், திருவள்ளூர், மறைமலைநகர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு புதுநகர் வளர்ச்சித் திட்டங்களை அன்றைய திமுக அரசு செயல்படுத்தியது. </p><p>தொடர்ந்து, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் இந்த திட்டங்கள் தொடங்கப்பட்டு, கருத்து கேட்பு கூட்டங்கள் முடிக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இறுதியாக் திட்ட அறிக்கை தயார் செய்யும் நிலைக்கு வந்தது.</p><p>இந்த நிலையில் அதில் ஒரு திட்டத்தை தவெக அரசு ரத்து செய்துள்ளது. அதன்படி கடந்த 2023-ம் ஆண்டு 62.78 சதுர கி.மீ பரப்பளவில் 18 கிராமங்களை உள்ளடக்கி வெளியிடப்பட்ட அந்த அரசிதழை ரத்து செய்து தமிழ்நாடு அரசு மீண்டும் ஒரு அரசிதழை வெளியிட்டுள்ளது.</p><p>இதனால், திருமழிசை, மீஞ்சூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, மறைமலை நகர், திருபெரும்புதூர் ஆகிய புது நகர் வளர்ச்சித் திட்டங்களின் நிலையும் கேள்விக்குறியாகி உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>150-க்கும் மேற்பட்ட புதிய சமூக நீதி விடுதிகள் கட்டித்தரப்படும்- அமைச்சர் வன்னி அரசு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-to-build-over-150-new-social-justice-hostels-vanni-arasu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-to-build-over-150-new-social-justice-hostels-vanni-arasu#comments</comments><guid isPermaLink="false">dbb0f447-400a-4617-9207-a2ed1de20cbe</guid><pubDate>Mon, 31 Aug 2026 06:00:21 +0000</pubDate><atom:updated>2026-08-31T06:00:21.245Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,minister vanni arasu,அமைச்சர் வன்னி அரசு,சமூக நீதி விடுதிகள்,Social justie hostel</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/ztwpw1lh/vanni1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Vanni arasu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/ztwpw1lh/vanni1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபை வார விடுமுறைக்குப்பின் இன்று கூடியது. இன்றைய கூட்டத்தொடரில் மாற்றுத்திறனாளிகள், நலத்துறை, வேளாண்மை, மதுவிலக்கு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மீதான கோரிக்கைகளை மீது விவாதம் நடைபெறுகிறது.</p><p>மேலும் 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் விலையில்லா வேட்டி சேலை குறித்த கவன ஈர்ப்பு தீர்மானமும் எடுத்துக்கொள்ளப்படுகிறது.</p><p>முன்னதாக, சட்டசபையில் வினாக்கள் - விடைகள் நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.</p><p>அதன் விவரம் வருமாறு:-</p><p>ஜல்லிக்கட்டுக்கு எதிரான கருத்துகளை கூறவில்லை - எம்எல்ஏ கருப்பையா விளக்கம்</p><p>ஜல்லிக்கட்டிற்கு எதிராக எம்எல்ஏ கருப்பையா கூறிய கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் - சபாநாயகர்</p> <p>ஜெயங்கொண்டம் இளைய பெருமாள் நல்லூரில் உள்ள ஆதிதிராவிட நலத்தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டடம் தேவை - வைத்தியலிங்கம்</p><p>கழிப்பறை வசதியுடன் கூடிய கட்டடம் விரைந்து கட்டித்தர ஏற்பாடு செய்யப்படும் - அமைச்சர் வன்னி அரசு </p><p>சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக திண்டுக்கல் - குமுளி 4 வழிச்சாலை அமைக்கப்படுமா? - எம்எல்ஏ ஐங்கரன்</p><p>திண்டுக்கல் - குமுளி 4 வழிச்சாலை திட்டம் பரிசீலனையில் உள்ளது. ஆட்சியர், எம்எல்ஏ உடன் கலந்து பேசி கள ஆய்வு மேற்கொண்டு தேவை அறிந்து நிதியை பொறுத்து நடவடிக்கை  எடுக்கப்படும்.</p><p>ஏலகிரியில் வியூ பாயிண்ட் அமைப்பது தொடர்பாக ஆட்சியருடன் கலந்து பேசி நிதிநிலையை பொறுத்து நடவடிக்கை - அமைச்சர் ராஜேஷ்குமார்</p><p>எங்கெல்லாம் சமூக நீதி விடுதிகள் தேவையோ அங்கெல்லாம் கட்டிக்கொடுக்கப்படும். 150-க்கும் மேற்பட்ட புதிய சமூக நீதி விடுதிகள் கட்டித்தரப்படும் என அறிவித்துள்ளோம். </p><p>வில்லிவாக்கம் ஒன்றியத்தில் பழங்குடியினர் மட்டும் வசிக்கும் பகுதியில் தொடக்கப்பள்ளி வேண்டும் - எம்எல்ஏ விஜய் பிரபு</p><p>அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தொடக்கப்பள்ளி விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் வன்னி அரசு</p><p>கொளத்தூர் தொகுதி கபாலீஸ்வரர் கல்லூரியில் மாலை நேர வகுப்புகள் தொடங்க வேண்டும், கூடுதல் கட்டடம் தேவை - சேகர் பாபு</p><p>புதிய கட்டடம், மாலை நேர வகுப்புகள் தொடங்க முன்னதாகவே நடவடிக்கை தொடங்கப்பட்டு விட்டது - அமைச்சர் ரமேஷ்</p><p>கல்லூரியில் கட்டப்பட்ட படைப்பகம், நூலகம் பயன்பாட்டுக்க கொண்டு வரப்படும் - சேகர்பாபு கேள்விக்கு அமைச்சர் ரமேஷ் பதில்</p><p>ஜவாஹிருல்லா, தமிமுன் அன்சாரி போன்ற மூத்த உறுப்பினர்களுக்கு சட்டசபையின் முன்வரிசையில் இடம் வழங்க வேண்டும் - எ.வ.வேலு</p><p>எந்த கட்சி, சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார்கள் என்ற அடிப்படையில் தான் உறுப்பினர்களுக்கு இடம் ஒதுக்கீடு- சபாநாயகர்</p><p>எ.வ.வேலு கேட்டுக்கொண்டதன்படி மூத்த உறுப்பினர்களுக்கு முன்வரிசையில் இடம் தருவது குறித்து ஆராய்ந்து முடிவு  எடுக்கப்படும் - சபாநாயகர்</p><p>இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஒரே வாரத்தில் &apos;டபுள் டமாக்கா&apos;.. அடுத்தடுத்து வெளியாகும் கயாடு லோஹரின் படங்கள்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/kayadu-lohar-box-office-double-dhamaka-i-am-game-immortal</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/kayadu-lohar-box-office-double-dhamaka-i-am-game-immortal#comments</comments><guid isPermaLink="false">87ece8ad-a035-4e12-b532-714d18dd2b4a</guid><pubDate>Mon, 31 Aug 2026 05:55:26 +0000</pubDate><atom:updated>2026-08-31T05:55:26.844Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>துல்கர் சல்மான்,Dulquer salmaan,Kayadu Lohar,I Am Game,Immortal,காயடு லோஹர்,Gvprakash kumar,ஜிவிபிரகாஷ் குமார்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/4nzd2krv/Iam-Game-Immortal" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ I'am Game - Immortal  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/4nzd2krv/Iam-Game-Immortal?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ் திரையுலகில் 'டிராகன்' திரைப்படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D">கயாடு லோஹர்</a>, இந்த வாரம் பாக்ஸ் ஆபீஸில் ஒரு அரிய சாதனையை நிகழ்த்த உள்ளார். </p><p>செப்டம்பர் 3 மற்றும் செப்டம்பர் 4 ஆகிய தேதிகளில், அடுத்தடுத்த நாட்களில் இவரது இரண்டு முக்கியத் திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ளன. </p><p>துல்கர் சல்மான் மற்றும் ஜி.வி. பிரகாஷ் குமார் என தென்னிந்தியாவின் முன்னணி நட்சத்திரங்களுடன் இவர் இணைந்து நடித்துள்ள திரைப்படங்கள் ஒரே வாரத்தில் வெளியாவது சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2><strong>'ஐ ஆம் கேம்' -செப்டம்பர் 3</strong></h2><p>செப்டம்பர் 3-ஆம் தேதி, <a href="https://www.maalaimalar.com/topic/dulquer-salmaan">துல்கர் சல்மான்</a> நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட கேங்ஸ்டர் த்ரில்லர் திரைப்படமான <strong>'<a href="https://www.maalaimalar.com/topic/im-game">ஐ ஆம் கேம்</a>'</strong> உலகளவில் வெளியாகிறது. </p><p>'RDX' திரைப்படப் புகழ் இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் கயாடு லோஹர் மிக முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். </p><p>வேஃபேரர் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கதிர் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர்.</p><h2><strong>'இம்மார்ட்டல்' - செப்டம்பர் 4</strong></h2><p>'ஐ ஆம் கேம்' வெளியான அடுத்த நாளே, அதாவது செப்டம்பர் 4-ஆம் தேதி, <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">ஜி.வி. பிரகாஷ் குமார்</a> - கயாடு லோஹர் கூட்டணியில் உருவாகியுள்ள சூப்பர்நேச்சுரல் ஹாரர் திரைப்படமான <strong>'<a href="https://www.maalaimalar.com/topic/immortal">இம்மார்ட்டல்</a>'</strong> திரைக்கு வருகிறது. </p><p>மாரியப்பன் சின்னா இயக்கத்தில், சாம் சி.எஸ் இசையில் உருவாகியுள்ள இந்த டார்க் ஃபேண்டஸி திரைப்படத்தின் ட்ரைலரை அண்மையில் நடிகர் தனுஷ் வெளியிட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2>எதிர்பார்ப்பு</h2><p>ஒரே வாரத்தில் பேக்-டு-பேக் ரிலீஸாக வெளியாகும் இந்த இரண்டு திரைப்படங்களும் நடிகை கயாடு லோஹரின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான மைல்கல்லாக அமையவுள்ளன.</p><p>கேங்ஸ்டர் ஆக்ஷன் மற்றும் அமானுஷ்ய ஹாரர் என முற்றிலும் மாறுபட்ட இருவேறு பிரம்மாண்ட கதைக் களங்களில், தென்னிந்தியாவின் முன்னணி நட்சத்திரங்களான துல்கர் சல்மான் மற்றும் ஜி.வி. பிரகாஷ் குமார் ஆகியோருடன் இணைந்து அவர் பாக்ஸ் ஆபீஸில் நிகழ்த்தப்போகும் இந்த 'டபுள் டமாக்கா' அதிரடியைக் காண ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் தற்போது மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சட்டம், ஒழுங்கைக் காப்பாற்ற முடியாமல் கைகட்டி வேடிக்கை பார்க்கிறதா தவெக அரசு?- டிடிவி தினகரன் கேள்வி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-indictment-tvk-govt-10</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-indictment-tvk-govt-10#comments</comments><guid isPermaLink="false">d1587066-8929-4534-becf-924f0da34790</guid><pubDate>Mon, 31 Aug 2026 05:49:36 +0000</pubDate><atom:updated>2026-08-31T05:49:36.356Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,AMMK,TTV Dhinakaran,அமமுக,டிடிவி தினகரன்,tvk</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/q1ens4ff/TTVDhinakaran001.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/q1ens4ff/TTVDhinakaran001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு உரிய பதிலளிக்காமல் வேண்டுமென்றே சர்ச்சைகளை உருவாக்கி, அவையின் நேரத்தை வீணடிப்பதிலுமே கவனம் செலுத்தி வருவது வெட்கக்கேடானது.</strong></em></p><p>அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/டிடிவி-தினகரன்">டி.டி.வி.தினகரன்</a> எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><p>பல்லாவரத்தில் விசிக நிர்வாகி வெட்டிக்கொலை, கூடங்குளம் அருகே ரவுடி தலை துண்டித்துக் கொலை, நெல்லை அருகே இளைஞர் படுகொலை, சேலம் அருகே பெண் துண்டு துண்டாக வெட்டிக்கொலை, கள்ளக்குறிச்சியில் தன் வயலுக்கு இரவு காவலுக்குச் சென்ற மூதாட்டி கொலை என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து அரங்கேறியிருக்கும் படுகொலைச் சம்பவங்கள் சட்டம் ஒழுங்கை கேள்விகுறியாக்கியுள்ளதோடு, பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.</p><h2><strong>வெட்கக்கேடானது</strong></h2><p>மக்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு வழங்குவதே அரசு  நிர்வாகத்தின் அடிப்படைக் கடமை என்பதை மறந்து, ஆட்சிக்கு வந்து நூறு நாட்களைக் கடந்த நிலையில் இன்னும் கும்பகர்ணத் தூக்கத்திலேயே இருக்கும் தவெக அரசால், பொதுமக்கள் பொதுவெளியில் சுதந்திரமாக நடமாடவே அச்சப்படும் அவலநிலை உருவாகியுள்ளது.</p><p>தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் குற்றச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தி, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய முதலமைச்சர் விஜய் அவர்கள், சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு உரிய பதிலளிக்காமல் வேண்டுமென்றே சர்ச்சைகளை உருவாக்கி, அவையின் நேரத்தை வீணடிப்பதிலுமே கவனம் செலுத்தி வருவது வெட்கக்கேடானது.</p><p>எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அஞ்சி, தன் வசம் உள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் மானியக் கோரிக்கைகளைக்கூட மற்ற அமைச்சர்களைத் தாக்கல் செய்யச் சொன்ன முதலமைச்சர் விஜய் அவர்கள், தற்போது சீரழிந்திருக்கும் சட்டம்-ஒழுங்கு குறித்து எந்தவிதக் கவலையும் இல்லாமல் இருப்பதைப் பார்க்கும்போது, காவல்துறையையும் மற்றவர்களிடம் ஒப்படைத்துவிட்டாரோ என்ற சந்தேகம் எழுகிறது.</p><p>எனவே, கொலைச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து, சட்டப்படி கடுமையான தண்டனை பெற்றுத்தருவதோடு, தமிழகத்தில் அதலபாதாளத்திற்குச் சென்றிருக்கும் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து கூடுதல் கவனம் செலுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>பால் கொள்முதல் விலை உயர்வு முதல் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-important-measures-starting-with-an-increase-in-the-milk-procurement-price</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-important-measures-starting-with-an-increase-in-the-milk-procurement-price#comments</comments><guid isPermaLink="false">47775e76-9689-42b2-8ab2-814b7e94f4b0</guid><pubDate>Mon, 31 Aug 2026 05:38:46 +0000</pubDate><atom:updated>2026-08-31T05:38:46.474Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/d9khe1ft/vijay.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/d9khe1ft/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கோவையில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் டிஜிட்டல் நிதி மையம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபையில்</a> 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-</p><p>*  பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டார் முதலமைச்சர் விஜய். </p><p>* ஒரு லிட்டர் பால் கொள்முதல் விலை 38 ரூபாயிலிருந்து 41 ரூபாயாக ஏற்கனவே உயர்த்திய நிலையில் தற்போது மேலும் 3ரூபாய் உயர்த்தி அறிவித்துள்ளார். </p><p>* பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று கொள்முதல் விலை ரூ.44 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. </p><p>* பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் 3.15 லட்சத்துக்கம் அதிக பால் உற்பத்தியாளர்கள் பயன் பெறுவர்.</p><p>* பால் கொள்முதல் விலையை உயர்த்தியதால் ஆவினுக்கு ஏற்படும் கூடுதல் செலவை அரசே ஏற்கும் என அறிவிப்பு. </p><p>* தூத்துக்குடியில் புதிய அனல்மின் நிலையம் அமைக்கப்படும். </p><p>* தூத்துக்கடியில் புதிதாக இரண்டு நியூ தெர்மல் பவர் ஸ்டேஷன் அமைக்கப்படும். </p><p>* புதிய அனல் மின், நீர்மின் நிலையங்கள் அமைக்க கடந்த ஆட்சியில் பெரிய அளவிலான நடவடிக்கை முன்னெடுக்கவில்லை. </p><p>* Super Critical Thermal Power Plant ரூ.20,800 கோடியில் நிறுவப்படும். </p><p>* காஞ்சிபுரம் மதுரமங்கலத்தில் ரூ.175 கோடியில் சிப்காட் மூலம் செமி கண்டெக்டர் நிறுவனம் அமைக்கப்படும். </p><p>* புதிய செமி கண்டக்டர் மூலம் புதிதாக 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.</p><p>* தமிழ்நாட்டில் புதிதாக 196 துணை மின்நிலையங்கள் அமைக்கப்படும். </p><p>*  ரூ.1,762 கோடி மதிப்பிட்டில் மின் பகிர்மான மேம்பாடு திட்டம் செயல்படுத்தப்படும். </p><p>* திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் Multi Model Logistics Hub அமைக்கப்படும். </p><p>* கோவையில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் டிஜிட்டல் நிதி மையம் அமைக்கப்படும். </p><p>* திருச்சி மண்டலத்தில் பல்முனை சரக்கு போக்குவரத்து மையம் அமைக்கப்படும். </p><p>இவ்வாறு முதலமைச்சர் விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். </p>]]></content:encoded></item><item><title>தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் திட்டத்தை கைவிடும் எண்ணம் இல்லை- அமைச்சர் ராஜ்மோகன் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajmohan-affirms-chola-museum-project-in-thanjavur-will-not-be-scrapped</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajmohan-affirms-chola-museum-project-in-thanjavur-will-not-be-scrapped#comments</comments><guid isPermaLink="false">d5fc4ee3-bc1d-4c99-865c-87aab0a22182</guid><pubDate>Mon, 31 Aug 2026 05:31:15 +0000</pubDate><atom:updated>2026-08-31T05:31:15.606Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords></media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/y05zvghc/rajmohan.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Rajmohan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/y05zvghc/rajmohan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபை வார விடுமுறைக்குப்பின் இன்று கூடியது. இன்றைய கூட்டத்தொடரில் மாற்றுத்திறனாளிகள், நலத்துறை, வேளாண்மை, மதுவிலக்கு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மீதான கோரிக்கைகளை மீது விவாதம் நடைபெறுகிறது.</p><p>மேலும் 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் விலையில்லா வேட்டி சேலை குறித்த கவன ஈர்ப்பு தீர்மானமும் எடுத்துக்கொள்ளப்படுகிறது.</p><p>முன்னதாக, சட்டசபையில் வினாக்கள் - விடைகள் நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.</p> <p>அதன் விவரம் வருமாறு:-</p><p>ஆலைகள் நிறைந்த தேன்கனிக்கோட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்க புறவழிச்சாலை தேவை என எம்எல்ஏ ராமச்சந்திரன் கேட்டுக்கொண்டார்.</p><p>புறவழிச்சாலை தொடர்பான கோரிக்கை முன்பே வந்துள்ளது. திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டது.</p><p>கிராமப்புற, நகர்ப்புற சாலைகளை நெடுஞ்சாலைகளுடன் முழுமையாக இணைப்பது தொடர்பாக கணக்கு எடுக்கப்படுகிறது என்று <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/national-sports-day-minister-aadhav-arjuna-wishes" rel="nofollow">அமைச்சர் ஆதவ்</a> பதில் அளித்துள்ளார்.</p><p>"தஞ்சை தமிழ் பல்கலை. வளாகத்தில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கும் அறிவிப்பு திமுக ஆட்சியில் வெளியிடப்பட்டு நிலுவையில் உள்ளது.</p><p>கடந்த திமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட சோழர் அருங்காட்சியகம் திட்டத்தை கைவிடும் எண்ணம் இல்லை" என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். </p><p>மறைமலை அடிகளார் நினைவிடத்தை புதுப்பித்து தமிழ் பண்பாட்டு மையமாக உருவாக்க அரசு முன்வருமா? என்று எம்எல்ஏ காமாட்சி கேள்வி எழுப்பினார்.</p><p>இதற்கு பதில் அளித்த <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D" rel="nofollow">அமைச்சர் ராஜ்மோகன்</a>," நினைவிடத்தை தமிழ் பண்பாட்டு மையமாக மாற்றுவது தொடர்பாக அவரது குடும்பத்தாருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். </p>]]></content:encoded></item></channel></rss>