<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 14 Aug 2026 04:32:43 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 14 ஆகஸ்ட் 2026...
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-14-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-14-august-2026#comments</comments><guid isPermaLink="false">af13e0d5-379a-4bc4-aa06-6d0f8775e507</guid><pubDate>Fri, 14 Aug 2026 04:11:55 +0000</pubDate><atom:updated>2026-08-14T04:32:00.683Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/qowhh7gn/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live news]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/qowhh7gn/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/sports/praggnanandhaa-suffers-first-loss-vincent-keymer-checkmates-in-sinquefield-cup-round-three">Sinquefield Cup: மூன்றாம் சுற்றில் பிரக்யானந்தா அதிர்ச்சி தோல்வி</a></p><p>*இரண்டாம் சுற்றில் உலக சாம்பியன் ஜெவோகிர் சின்டாரோவை வீழ்த்தினார்.</p><p>*மூன்றாவது சுற்றில் செக்மேட் ஆனார்.<br><br></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/sureshkumar-realizes-his-dream-of-studying-medicine-at-51">வயது ஒரு தடையல்ல: 51 வயதில் மருத்துவ கனவை நனவாக்கி சாதித்த மாற்றுத்திறனாளி</a></p><p>* 2022-ம் ஆண்டு மருத்துவப் படிப்பு ஆசை மீண்டும் பொறித்தட்ட நீட் தேர்வை தமிழ் வழியில் எழுதினார்.</p><p>*  2026-ம் ஆண்டு நீட் தேர்வை எழுதி 192 மதிப்பெண் எடுத்திருந்த சுரேஷ்குமார்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/parliament-monsoon-session-rs-175-crore-has-been-lost-so-far">இது முதல் முறை அல்ல... நாடாளுமன்ற முடக்கத்தால் ரூ.175 கோடி வீணடிப்பு</a></p><p>* மக்கள் செலுத்தும் வரிப்பணத்திலேயே சட்டசபைகள் மற்றும் நாடாளுமன்றம் இயங்குகின்றன.</p><p>* நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் செயல்பட ஒரு நிமிடத்துக்கு ரூ.26 லட்சம் செலவு ஆகும். </p> ]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY: தங்கம் விலை அதிரடி குறைவு - சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-14-8-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-14-8-2026#comments</comments><guid isPermaLink="false">53cdaf71-d605-4855-b1e2-1aa880c85956</guid><pubDate>Fri, 14 Aug 2026 04:30:07 +0000</pubDate><atom:updated>2026-08-14T04:30:07.059Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/03/11/10254423-gold.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/03/11/10254423-gold.webp?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றம்-இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த 3-ந்தேதி தங்கம் ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 500 ஆக இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து 11-ந்தேதி தங்கம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 150-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 200-க்கும் விற்பனையானது.</p> <p>12-ந்தேதி ரூ.50 அதிகரித்து கிராம் ரூ.14 ஆயிரத்து 200-க்கும், ரூ.400 அதிகரித்து சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 600-க்கும் விற்பனையானது.  நேற்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1,13,760-க்கும், கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.14,220-க்கும் விற்பனையானது.</p> <h2>தங்கம் விலை குறைவு</h2><p>இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,440 குறைந்து ரூ.1,12,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.180 குறைந்து ரூ.14,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p> <h2>வெள்ளி விலை நிலவரம்</h2><p>தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-</h2><p>13-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,760</p><p>12-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,600</p><p>11-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,200</p><p>10-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,600</p><p>09-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,720</p> <h2>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-</h2><p>13-08-2026- ஒரு கிராம் ரூ.260</p><p>12-08-2026- ஒரு கிராம் ரூ.260</p><p>11-08-2026- ஒரு கிராம் ரூ.260</p><p>10-08-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>09-08-2026- ஒரு கிராம் ரூ.250</p> ]]></content:encoded></item><item><title>Sinquefield Cup: மூன்றாம் சுற்றில் பிரக்யானந்தா அதிர்ச்சி தோல்வி 
</title><link>https://www.maalaimalar.com/sports/praggnanandhaa-suffers-first-loss-vincent-keymer-checkmates-in-sinquefield-cup-round-three</link><comments>https://www.maalaimalar.com/sports/praggnanandhaa-suffers-first-loss-vincent-keymer-checkmates-in-sinquefield-cup-round-three#comments</comments><guid isPermaLink="false">3adc59c4-6998-4937-ba77-ebb1bcbbcd9c</guid><pubDate>Fri, 14 Aug 2026 04:29:48 +0000</pubDate><atom:updated>2026-08-14T04:29:48.245Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PragGnanandhaa,பிரக்யானந்தா,செஸ் தொடர்,Chess series</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/ns9uwa7s/tn-22.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரக்யானந்தா ]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரக்யானந்தா ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/ns9uwa7s/tn-22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் இளம் செஸ் கிராண்ட்மாஸ்டர் <a href="https://www.maalaimalar.com/topic/praggnanadhaa">பிரக்யானந்தா</a>, 2026 சிங்பீல்ட் கோப்பை போட்டியில் தனது முதல் தோல்வியை சந்தித்துள்ளார். </p><p>கோப்பை தொடரின் மூன்றாவது சுற்றில் ஜெர்மனியின் கிராண்ட்மாஸ்டர் வின்சன்ட் கீமர் உடன் விளையாடிய பிரக்யானந்தா, மூன்றாவது சுற்றில் செக்மேட் ஆனார்.</p><h2>தொடர்   </h2><p>இதன் மூலம் மூன்று சுற்றுகளையும் சேர்த்து பிரக்யானந்தா 1.5 புள்ளிகளை தன்வசம் வைத்துள்ளார். இன்னும் 6 சுற்றுகள் மிச்சம் உள்ளன.   தற்போது தொடரில் 4ஆம் இடத்தில் அவர் உள்ளார். </p><p>கீமர், பாபியானோ கரவ்னா, சாம் சீவன் ஆகியோரும் அவருடன் நான்காம் இடத்தில் உள்ளனர்.   </p><p>இதே மூன்றாம் சுற்றில் வீஸ்லி சோ, பாபியானோ கரவ்னாவை தோற்கடித்தன் மூலம் மொத்தம் 2.5 புள்ளிகளுடன் தொடரில் முதலிடத்தில் உள்ளார்.  </p><p>அவரை தொடர்ந்து தலா இரண்டு புள்ளிகளுடன் லெவான் அரோனியன் மற்றும் வாசியர் லாக்ரேவ் அடுத்த இடத்தில் உள்ளனர்.   </p><h2>வெற்றி   </h2><p>முன்னதாக கடந்த ஆகஸ்ட் 7 அன்று செயின்ட் லூயிஸ் ராபிட் - பிளிட்ஸ் தொடரை பிரக்யானந்தா வென்ற நிலையில் தற்போதைய தோல்வி வந்துள்ளது. </p><p>சிங்பீல்டு கோப்பையை நேர்மறையாக தொடங்கிய பிரக்யானந்தா, முதல் சுற்றில் அமெரிக்க கிராண்மாஸ்டர் சாமுவேல் சீவன் உடனான போட்டியை டிரா செய்தார்.  </p><p>இரண்டாம் சுற்றில் உலக சாம்பியன் ஜெவோகிர் சின்டாரோவை வீழ்த்தினார்  பிரக்யானந்தா. </p><p>மூன்றாம் சுற்றில் அவர் தோல்வியுற்ற நிலையில் மீதமுள்ள 6 சுற்றுகளில் அவர் தன் புள்ளிகளை உயர்த்தி சிங்பீல்டு கோப்பையில் முதலிடம் பிடித்தால், அவருக்கு 475,000 அமெரிக்க டாலர் பரிசுத்தொகை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>321 வைரங்கள் பதித்த மோதிரம்.. பெல்ஜியத்தில் இருந்து டிரம்புக்கு வந்த பரிசு - உடனே ரத்தான வைர இறக்குமதி வரி - சர்ச்சை</title><link>https://www.maalaimalar.com/news/world/us-belgium-diamond-ring-row-senators-probe-if-trump-gift-linked-to-eu-diamond-tariff-waiver</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-belgium-diamond-ring-row-senators-probe-if-trump-gift-linked-to-eu-diamond-tariff-waiver#comments</comments><guid isPermaLink="false">21515fea-2101-4b48-bd57-dd1e6eb85fca</guid><pubDate>Fri, 14 Aug 2026 04:03:55 +0000</pubDate><atom:updated>2026-08-14T04:03:55.918Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிரம்ப்,வரிவிலக்கு,வைரம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/hs6tg7e5/tn-21.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டிரம்புக்கு வைர மோதிரம்  பரிசு]]></media:title><media:description type="html"><![CDATA[ டிரம்புக்கு வைர மோதிரம்  பரிசு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/hs6tg7e5/tn-21.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த வைர வர்த்தக அமைப்பான ஆண்ட்வெர்ப் வேர்ல்ட் டைமண்ட் சென்டர் (AWDC) மற்றும் நகை வடிவமைப்பாளர் டேவிட் காட்லிப் ஆகியோரால் அமெரிக்க அதிபர் <a href="https://www.maalaimalar.com/topic/donald-trump">டிரம்பிற்கு </a>பரிசளிக்கப்பட்ட வைர மோதிரம் மற்றும் அதைத் தொடர்ந்து ஐரோப்பிய வைரங்களுக்கு வழங்கப்பட்ட வரி விலக்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. </p><h2>பரிசு </h2><p>AWDC செய்தி குறிப்பின்படி, அமெரிக்காவின் 250வது சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் வகையில், 321 வைரங்கள், மரகதம், மாணிக்கக் கற்கள் மற்றும் 18 கேரட் தங்கத்தால் செய்யப்பட்ட சிறப்பு வாய்ந்த மோதிரம் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு வழங்கப்பட்டது. </p><p>இதன் மதிப்பு 25,000 முதல் 35,000 டாலர் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.  </p><h2>வரிவிலக்கு</h2><p>இந்த பரிசு வழங்கப்பட்ட சில வாரங்களிலேயே, ஜூலை 24 அன்று, ஐரோப்பிய இயற்கை வைரங்களை இறக்குமதி செய்ய அமெரிக்க அரசு முழு வரி விலக்கு அளித்தது.</p><p>இந்த வரிவிலக்கு மூலம் பெல்ஜியம் வைர வணிகர்கள் ஆண்டுக்கு சுமார் 200 மில்லியன் வரியை சேமிக்க முடியும்.</p> <h2>அரசியல் சர்ச்சை</h2><p>அமெரிக்க ஜனநாயகக் கட்சி செனட்டர்கள் எலிசபெத் வாரன் மற்றும் ரிச்சர்ட் புளூமெந்தால் ஆகியோர், இந்த விலையுயர்ந்த பரிசு வரி விலக்கு பெறுவதற்காக அளிக்கப்பட்ட லஞ்சமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.</p><p>வெளிநாட்டு அரசு அல்லது அரசு சார்ந்த அமைப்புகளிடமிருந்து அனுமதியின்றி பரிசுகளைப் பெறுவது அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.</p><p>இதனை சுட்டிக்காட்டி இதுகுறித்த விசாரணையில் இறங்கியுள்ளனர். இருவரும், பெல்ஜியம் வைர வர்த்தக அமைப்பான AWDC ற்றும் நகை வடிவமைப்பாளர் டேவிட் காட்லிப் ஆகியோருக்குக் கடிதம் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளனர்.</p><h2>விளக்கம்</h2><p>ராய்ட்டர்ஸ் செய்தி அறிக்கையின்படி, இந்த குற்றச்சாட்டுகளை AWDC முற்றிலும் மறுத்துள்ளது. </p><p>இந்த மோதிரம் அமெரிக்க சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டது என்றும், வரி விலக்கு பற்றிய பேச்சுவார்த்தைக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் விளக்கமளித்துள்ளது.</p><p>வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர், இந்த வரி விலக்கு அமெரிக்கா ஐரோப்பிய யூனியன் இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே செய்யப்பட்டது என்றும், எந்தப் பரிசும் இந்த முடிவை பாதிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வயது ஒரு தடையல்ல: 51 வயதில் மருத்துவ கனவை நனவாக்கி சாதித்த மாற்றுத்திறனாளி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/sureshkumar-realizes-his-dream-of-studying-medicine-at-51</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/sureshkumar-realizes-his-dream-of-studying-medicine-at-51#comments</comments><guid isPermaLink="false">62a6f917-03f8-4e39-875d-bea1dabc0b04</guid><pubDate>Fri, 14 Aug 2026 03:46:27 +0000</pubDate><atom:updated>2026-08-14T03:46:27.148Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நீட் தேர்வு,Nagapattinam,நாகப்பட்டினம்,Neet exam,மருத்துவ படிப்பு,medical course</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/y885b0c5/medical.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Suresh kumar - Medical Education]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/y885b0c5/medical.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக நேற்று நடைபெற்ற சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் கலந்துகொண்ட ஒருவர் வியப்பை ஏற்படுத்தினார்.</strong></em></p><h2>எம்.பி.பி.எஸ். சீட்</h2><p>நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 51 வயது பூர்த்தி செய்திருக்கும் சுரேஷ்குமார் என்பவர் எம்.பி.பி.எஸ். சீட்டை தட்டிப்பறித்து இளைஞர் பட்டாளத்துடன் படிப்பில் போட்டி போட தயாராகியிருக்கிறார்.</p> <h2>மருத்துவ படிப்பு ஆசை</h2><p>"சாதிக்க வயது ஒரு தடையில்லை" என்பதற்கு சுரேஷ்குமார் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக மாறியுள்ளார். பள்ளிப்படிப்பை முடித்து <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%20%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">மருத்துவ படிப்பை</a> படிக்க ஆசைப்பட்ட சுரேஷ்குமாருக்கு அப்போது அது சாத்தியப்படவில்லை.</p> <h2>மருத்துவ கலந்தாய்வு</h2><p>இந்த நிலையில் 2022-ம் ஆண்டு மருத்துவப் படிப்பு ஆசை மீண்டும் பொறித்தட்ட நீட் தேர்வை தமிழ் வழியில் எழுதினார். ஆனால் அதில் அவரால் சாதிக்க முடியவில்லை. இதையடுத்து கடந்த ஆண்டு மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் தாயும், மகளும் சேர்ந்து மருத்துவ இடங்களை தேர்வு செய்த செய்தி அவருக்கு மேலும் உந்துதலை கொடுத்தது.</p> <h2>நீட் தேர்வு</h2><p>அதன் அடிப்படையில் 2026-ம் ஆண்டு <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">நீட் தேர்வை </a>எழுதி 192 மதிப்பெண் எடுத்திருந்த சுரேஷ்குமார். 2019-ல் நடந்த விபத்தில் அவருக்கு ஏற்பட்ட காயத்தை சுட்டிக்காட்டி மாற்றுத்திறனாளிகள் பிரிவில், நேற்று நடந்த கலந்தாய்வில் பங்கேற்று நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பை தேர்வு செய்திருக்கிறார்.</p><h2>சுரேஷ்குமார்</h2><p>இதுகுறித்து சுரேஷ்குமார் கூறுகையில், 'ரத்த பரிசோதனை மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றி வந்தேன். இப்போது என்னுடைய வேலையை உதறிவிட்டு, படிப்பை தொடர போகிறேன். சொந்த ஊரில் உள்ள கல்லூரியிலேயே படிக்க போகிறேன். நிச்சயம் மருத்துவப் படிப்பை நிறைவு செய்து டாக்டராக வலம் வருவேன்' என்றார்.</p> ]]></content:encoded></item><item><title>மாதம் 100 கோடி பயனர்கள்... மாஸ் காட்டும் கூகுள் Gemini</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/google-celebrates-as-gemini-crosses-1-billion-monthly-users</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/google-celebrates-as-gemini-crosses-1-billion-monthly-users#comments</comments><guid isPermaLink="false">8a34f0af-5164-4671-97c1-b77b05349176</guid><pubDate>Fri, 14 Aug 2026 03:42:00 +0000</pubDate><atom:updated>2026-08-14T03:42:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Google,ஜெமினி,gemini,கூகுள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/tdedf7cq/Google-Gemini.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Google Gemini]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/tdedf7cq/Google-Gemini.png?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/google">கூகுள்</a> நிறுவனத்தின் பிரபல ஏ.ஐ. சேவையான ஜெமினி (Gemini) முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. ஒவ்வொரு மாதமும் 100 கோடிக்கும் (1 பில்லியன்) அதிகமானோர் கூகுள் <a href="https://www.maalaimalar.com/topic/gemini">ஜெமினி</a> சேவையை பயன்படுத்துகின்றனர். </p><p>கூகுள் நிறுவனத்திற்கும், அதன் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த திட்டங்களுக்கும் இது ஒரு மிக முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.</p><p>கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை சமீபத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். ஜெமினி ஏஐ (AI) என்பது நிறுவனத்தின் வளர்ந்து வரும் ஒரு தயாரிப்பு என்று அவர் குறிப்பிட்டார். </p><p>இதன் மூலம், 100 கோடிக்கும் அதிகமான பயனர்களை கொண்ட கூகுளின் தயாரிப்புகளில் ஒன்றாக ஜெமினி இணைந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் 100 கோடி மக்கள் ஜெமினியை பயன்படுத்தி வருவதாக நிறுவனம் கூறுகிறது.</p><h2>வேகமான வளர்ச்சி:</h2><p>ஜெமினி அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, மக்கள் இத்தகைய நுண்ணறிவு உதவியாளர்களை (intelligent assistants) எவ்வளவு விரைவாக ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பதை இது காட்டுகிறது. கூகுளின் பிற தயாரிப்புகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால் ஜெமினி வேகமாக வளர்ந்து வருகிறது.</p><p>கேள்விகளுக்கு பதிலளித்தல், உள்ளடக்கத்தை உருவாக்குதல், படங்களை உருவாக்குதல், கோடிங் (coding) செய்தல் மற்றும் ஆராய்ச்சி செய்தல் போன்ற பணிகளுக்கு மக்கள் ஜெமினியை பயன்படுத்த முடியும்.</p><p>கூகுள் ஜெமினியை மேலும் சக்திவாய்ந்ததாக மாற்றி வருகிறது; இது ஒரு சாதாரண 'சாட்பாட்' மட்டுமல்ல. சிக்கலான பணிகளை கையாளவும், பிற கூகுள் சேவைகளுடன் இணைந்து செயல்பட கூடியதாக ஜெமினியை உருவாக்க நிறுவனம் விரும்புகிறது.</p><h2>கடும் போட்டி:</h2><p>தினமும் 15 கோடிக்கும் (150 மில்லியன்) அதிகமான படங்களை ஜெமினி உருவாக்குவதாக கூகுள் கூறுகிறது. மேலும், ஜெமினியைப் பயன்படுத்துபவர்களில் 63% பேர் குரல் வழி (voice) மூலமாகவே அதனுடன் உரையாடுகிறார்கள். 'ஜெமினி 3.5 ஃப்ளாஷ்' (Gemini 3.5 Flash) போன்ற அம்சங்களை உருவாக்கும் பணியிலும் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இது கோடிங் மற்றும் பிற பணிகளை எளிதாக்கும்.</p><p>ஜெமினி 100 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டிருப்பது ஒரு குறிப்பிடத்தக்க விஷயமாகும். நுண்ணறிவு உதவியாளர்களை உருவாக்கும் நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது; இதில் ஓபன்ஏஐ, கூகுள் மற்றும் ஆந்த்ரோபிக் ஆகியவை அடங்கும்.</p><p>சர்ச், ஆண்ட்ராய்டு, க்ரோம், ஜிமெயில் மற்றும் மேப்ஸ் போன்ற பிரபலமான சேவைகளுடன் ஜெமினி ஒருங்கிணைக்கப்பட்டு இருப்பதால் கூகுள் நிறுவனத்திற்கு ஒரு சாதகமான சூழல் உள்ளது. மக்கள் ஏற்கனவே பயன்படுத்தும் சேவைகளில் நுண்ணறிவுத் திறனை சேர்ப்பதை இது எளிதாக்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஜென் ஆல்பா போராட்டம் வெற்றி.. பள்ளித் தலைமை ஆசிரியர் இடமாற்றம் ரத்து | Jharkhand</title><link>https://www.maalaimalar.com/news/national/jharkhand-gen-alpha-student-protest-headmaster-transfer-order-cancelled</link><comments>https://www.maalaimalar.com/news/national/jharkhand-gen-alpha-student-protest-headmaster-transfer-order-cancelled#comments</comments><guid isPermaLink="false">bd08f826-3f1e-4ce9-94e3-7272ef18aa88</guid><pubDate>Fri, 14 Aug 2026 03:13:58 +0000</pubDate><atom:updated>2026-08-14T03:13:58.437Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜார்க்கண்ட்,ஜென் இசட் போராட்டம்,ஜென் ஆல்பா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/4l90o45c/tn-18.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஜென் ஆல்பா போராட்டம்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஜென் ஆல்பா போராட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/4l90o45c/tn-18.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜார்க்கண்டில் மாணவர்கள் போராட்டம் வெற்றி: தலைமை ஆசிரியர் இடமாற்றம் ரத்து!</p><p>2010 முதல் 2024 இடையில் பிறந்தவர்கள் ஜென் ஆல்பா தலைமுறை ஆவர். தற்போது ஜென் இசட் போராட்டங்கள் கவனம் பெற்று வரும் வேளையில் ஜார்க்கண்ட்டில் நடைபெற்ற ஜென் ஆல்பா போராட்டம் கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p>ஜார்க்கண்ட் மாநிலம் கர்வா  மாவட்டம் கண்டி பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியரான மலய் சிங் பணிக்கு வந்த இரண்டே மாதங்களில் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார்.</p><p>சாதி பாகுபாடு மற்றும் உள்ளூர் அரசியல் காரணமாகவே தங்களின் தலைமை ஆசிரியர் மாற்றப்பட்டதாகக் குற்றம் சாட்டிய ஜென் ஆல்பா பள்ளி மாணவர்கள் அவரை மீண்டும் அதே பள்ளியில் நியமிக்கக் கோரி 3 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p> <h2>வன்முறை</h2><p>நேற்றைய தினம், கொளுத்தும் வெயிலில் மாணவர்கள் வீதியில் இறங்கி சாலை மறியல் செய்ததோடு, இரண்டு பேருந்துகளில் சென்று துணை ஆணையர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர்.</p><p>உள்ளூர் தலைவர் பிங்கு பாண்டே என்பவர் மாணவர்களை அமைதிப்படுத்த முயன்றபோது வாக்குவாதம் முற்றி அவர் ஒரு மாணவனை அறைந்ததாக கூறப்படுகிறது.</p><p>இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் அவரது வாகனத்தை அடித்து நொறுக்கினர். அவர் பாதுகாப்பு கோரி கண்டி காவல் நிலையத்திற்கு தப்பியோடிய நிலையில், காவல் நிலையத்தின் மீதும் மாணவர்கள் கல்வீச்சு நடத்தினர். இதில் ஒரு காவலர் காயமடைந்தார்.</p> <h2>வெற்றி </h2><p>மாணவர்களின் போராட்டம் தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து, கண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ராகேஷ் சகாய் பேச்சுவார்த்தை நடத்தினார்.</p><p>மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, தலைமை ஆசிரியர் மலய் சிங்கின் இடமாற்ற உத்தரவை அரசு ரத்து செய்து, அவரை மீண்டும் அதே பள்ளியில் பணி அமர்த்தியது.</p><p>ஏற்கனவே ஜார்க்கண்ட் மாநில தேர்வாணைய தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளை கண்டித்து தலைநகர் ராஞ்சியில் ஜென் இசட் <a href="https://www.maalaimalar.com/news/national/jharkhand-protest-cases-registered-against-600-people-including-500-unidentified-students">மாணவர்கள் போராட்டம்</a> நடத்தி வருகிறது.</p><p>கடந்த ஆகஸ்ட் 8 அன்று சட்டமன்றம் நோக்கி பேரணி சென்ற அவர்கள் மீது காவல்துறை மற்றும் மத்திய படை தாக்குதல் நடத்தியது கண்டனத்துக்கு உள்ளாகியது. </p>]]></content:encoded></item><item><title>இது முதல் முறை அல்ல... நாடாளுமன்ற முடக்கத்தால் ரூ.175 கோடி வீணடிப்பு
</title><link>https://www.maalaimalar.com/news/national/parliament-monsoon-session-rs-175-crore-has-been-lost-so-far</link><comments>https://www.maalaimalar.com/news/national/parliament-monsoon-session-rs-175-crore-has-been-lost-so-far#comments</comments><guid isPermaLink="false">6c3a3b73-3943-411c-9364-8448cfc2d37c</guid><pubDate>Fri, 14 Aug 2026 03:13:44 +0000</pubDate><atom:updated>2026-08-14T03:13:44.723Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நாடாளுமன்றம்,monsoon session,மழைக்கால கூட்டத்தொடர்,parliament,எதிர்க்கட்சிகள் அமளி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/wez6ftrv/parliamentnew.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Parliament]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/wez6ftrv/parliamentnew.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் அமளியால் 7 ஆயிரம் நிமிடங்களுக்கு மேல் அவைகள் முடங்கின. இதன் காரணமாக ரூ.175 கோடி மக்கள் பணம் வீணாகி இருப்பதாக மதிப்பிடப்பட்டு உள்ளது.</strong></em></p> <h2>நாடாளுமன்றம்</h2><p>மக்கள் செலுத்தும் வரிப்பணத்திலேயே சட்டசபைகள் மற்றும் <a href="https://www.maalaimalar.com/news/national/rajya-sabha-uproar-kharge-demands-case-over-purification-ritual-after-his-speech">நாடாளுமன்றம்</a> இயங்குகின்றன. இவை, சராசரி ஆண்டுக்கு 2 முறை கூட்டப்பட வேண்டும். ஆனால் நாடாளுமன்றம் பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தொடர் மற்றும் குளிர்கால கூட்டத்தொடர் என ஆண்டுக்கு 3 முறை கூட்டப்பட்டு வருகிறது.</p><p>இந்த கூட்டத்தொடர்கள் முழுமையாக நடைபெற்றால் மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். இடை இடையே முடங்குவதால் பயன் இல்லாமல் போவது மட்டுமின்றி, மக்களின் வரிப்பணமும் வீணாகும்.</p> <h2>19 அமர்வுகள்</h2><p>அந்த வகையில் தற்போது நடந்து முடிந்த மழைக்கால கூட்டத்தொடர், மக்களின் பணம் வீணான வகையில் அமைந்தது. இந்த கூட்டத்தொடர் கடந்த மாதம் 20-ந் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் மொத்தம் 19 அமர்வுகள் நடைபெற்றன.</p><h2>டெல்லி போராட்டம்</h2><p>ஆனால் கூட்டத்தொடர் தொடங்கிய நாளில் இருந்தே நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வந்தன. கூட்டத்தொடரின் தொடக்க நாளில் டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.</p><h2>அமித்ஷா</h2><p>அத்துடன் அயோத்தி ராமர் கோவில் நன்கொடை கையாடல் விவகாரமும் சேர்ந்தது. இதுபோன்ற எல்லா பிரச்சனைகளுக்கும் உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் எதிர்க்கட்சிகள் பொறுப்புக்கூறலை கேட்டன.</p><h2>நாடாளுமன்றம் முடக்கம்</h2><p>இந்த வகையில் நாள்தோறும் போராட்டமாக இருந்தது. ஒருநாள் கூட நாடாளுமன்றம் முழுமையாக நடைபெறவில்லை. ஒத்திவைப்புகளால் அடிக்கடி முடங்கியது. இதனால் கோடிக்கணக்கில் மக்களின் வரிப்பணம் வீணாகி விட்டதாக பலரும் பேசினர்.</p><p>இதுபற்றி ஒரு கணக்கீடு வந்துள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் செயல்பட ஒரு நிமிடத்துக்கு ரூ.26 லட்சம் செலவு ஆகும். இதன்படி ஒரு மணி நேரத்துக்கு ரூ.10 கோடி செலவிடப்படுகிறது. 6 மணிநேரம் கொண்ட ஒருநாள் அமர்வுக்கு ரூ.9 கோடி செலவாகும்.</p> <h2>ரூ.175 கோடி விரயம்</h2><p>தற்போதைய மழைக்கால கூட்டத்தொடரில் நாடாளுமன்ற அவைகள் 7 ஆயிரம் நிமிடங்களுக்கு மேல் முடங்கியிருப்பதாக தெரிகிறது. இதன் காரணமாக ரூ.175.6 கோடி மக்கள் பணம் விரயம் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது.</p><h2>எதிர்க்கட்சிகள் அமளி</h2><p>எதிர்க்கட்சிகளின் அமளியால் முழு கூட்டத்தொடரும் பாதிக்கப்பட்டு இருப்பது இது தான் முதல் முறை அல்ல. இதற்கு முந்தைய ஆட்சிகளிலும் இதுபோன்ற பாதிப்புகள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p> ]]></content:encoded></item><item><title>மகாராஷ்டிரா, இமாச்சல பிரதேசத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம் </title><link>https://www.maalaimalar.com/news/national/maharashtra-earthquake-34-magnitude-quake-jolts-nashik-at-dawn-no-major-damage-reported</link><comments>https://www.maalaimalar.com/news/national/maharashtra-earthquake-34-magnitude-quake-jolts-nashik-at-dawn-no-major-damage-reported#comments</comments><guid isPermaLink="false">ffe33d07-02a1-460d-834c-446195c82c8e</guid><pubDate>Fri, 14 Aug 2026 02:47:41 +0000</pubDate><atom:updated>2026-08-14T02:47:41.956Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,மகாராஷ்டிரா,Earthquake,Afghanistan,ஆப்கானிஸ்தான்,நிலநடுக்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/ciozzxxr/tn-19.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நிலநடுக்கம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ நிலநடுக்கம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/ciozzxxr/tn-19.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிராவில் இன்று அதிகாலை  3.4 ரிக்டர் அளவில் மிதமான <a href="https://www.maalaimalar.com/topic/earthquake">நிலநடுக்கம் </a>ஏற்பட்டுள்ளது. </p><p>மகாராஷ்டிர மாநிலம் நாசிக் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.</p><p>அதிகாலை 5:32 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவானது. </p><p>பூமிக்கு அடியில் சுமார் 3 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p>அதிகாலையில் திடீரென நில அதிர்வு உணரப்பட்டதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.</p><p>இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ அல்லது சொத்துக்களுக்கு பெரிய அளவிலான சேதங்களோ ஏற்பட்டதாக இதுவரை எந்தத் தகவலும் இல்லை.</p><p>முன்னதாக 3 நாட்களுக்கு முன்பாக மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் 1 மணி நேர இடைவெளியில் இரண்டு முறை 3.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது குறிப்பிடத்தக்கது.</p><h2>இமாச்சல பிரதேசம்</h2><p>இதனிடையே இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா பகுதியில் இன்று காலை 6.36 மணியளவில் பூமிக்கு 5 கிலோமீட்டர் ஆழத்தில் 3.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.</p> <h2>ஆப்கானிஸ்தான்</h2><p>இந்தியாவை தவிர்த்து ஆப்கானிஸ்தானிலும் இன்று அதிகாலை 4.29 மணியளவில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. அதைத்தொடர்ந்து அதிகாலை 4.41 மணியளவில் 4.4 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.</p><p>இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ அல்லது சொத்துக்களுக்கு பெரிய அளவிலான சேதங்களோ ஏற்பட்டதாக இதுவரை எந்தத் தகவலும் இல்லை.</p>]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 14.8.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும்
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-14-august-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-14-august-2026#comments</comments><guid isPermaLink="false">83d06c15-d064-4492-9412-2bade3496d84</guid><pubDate>Fri, 14 Aug 2026 02:04:38 +0000</pubDate><atom:updated>2026-08-14T02:04:38.724Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/07/19711867-rasipalan2.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/07/19711867-rasipalan2.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>வெற்றிச் செய்திகள் வீடு தேடி வரும் நாள். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்ட நாளைய பிரச்சனையொன்று நல்ல முடிவிற்கு வரும்.</p><h2>ரிஷபம்</h2><p>புதிய பாதை புலப்படும் நாள். பெற்றோர் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வாகனப் பழுதுகளை சரி செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.</p> <h2>மிதுனம்</h2><p>மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி பெறும்.</p><h2>கடகம்</h2><p>நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிட்டும்.</p> <h2>சிம்மம்</h2><p>யோகமான நாள். நீங்கள் சந்திக்க நினைத்த நபர் உங்கள் இல்லம் தேடிவரலாம். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். வழிபாடுகளில் நம்பிக்கை கூடும்.</p><h2>கன்னி</h2><p>வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். பிரியமான சிலரிடம் மனம் விட்டுப் பேசுவீர்கள். நீண்ட தூரப் பயணம் கைகூடும். எதிர்பாராத தனலாபம் உண்டு.</p> <h2>துலாம்</h2><p>திறமை பளிச்சிடும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளொன்றை வாங்கி மகிழ்வீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும்.</p><h2>விருச்சிகம்</h2><p>நினைத்தது நிறைவேறும் நாள். வருங்கால நலன் கருதி சேமிக்கும் எண்ணம் மேலோங்கும். முயற்சிக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவுவர்.</p> <h2>தனுசு</h2><p>கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். நீண்ட நாளைய பிரச்சனை முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களின் ஆதரவு கிட்டும்.</p><h2>மகரம்</h2><p>உடல் ரீதியான உபாதைகளால் உற்சாகம் குறையலாம். மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசுவதால் சிலரின் அதிருப்திக்கு ஆட்படலாம்.</p> <h2>கும்பம்</h2><p>தடைகள் அதிகரிக்கும் நாள். எந்தவொரு காரியத்தையும் யோசித்து செய்வது உத்தமம். பணத்தைக் கையாளுபவர்களுக்கு கவனம் தேவை.</p><h2>மீனம்</h2><p>சந்தோஷம் அதிகரிக்கும் நாள். அடுத்தவர் நலனில் அக்கறை காட்டுவீர்கள். இடம் வாங்கும் முயற்சி வெற்றி பெறும். மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.</p> ]]></content:encoded></item><item><title>மோடியின் கட்டிப்பிடி வெளியுறவு கொள்கை.. காங்கிரஸ் தலைவரை கட்டிப்பிடித்த ராகுல் - மெலோனி குறித்து சொன்ன விஷயம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/modis-hug-based-foreign-policy-rahul-hugging-the-congress-leader-what-was-said-about-meloni</link><comments>https://www.maalaimalar.com/news/national/modis-hug-based-foreign-policy-rahul-hugging-the-congress-leader-what-was-said-about-meloni#comments</comments><guid isPermaLink="false">841c4e70-6591-4ce0-9ecd-2b152eace46e</guid><pubDate>Fri, 14 Aug 2026 02:01:09 +0000</pubDate><atom:updated>2026-08-14T02:01:09.631Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Prime Minister Modi,மெலோனி,Meloni,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/k1x7nqba/tn-17.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராகுல் ]]></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/k1x7nqba/tn-17.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p> டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் தேசிய மாநாட்டில் உரையாற்றிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியை குறித்து செய்த விமர்சனம் சர்ச்சையாகி உள்ளது.  </p><h2>மேடையில் நடந்தது என்ன?</h2><p>பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு செல்லும்போது அந்நாட்டு தலைவர்களை அடிக்கடி கட்டிப்பிடிப்பதை விமர்சித்த ராகுல் காந்தி, "பிரதமர் மோடிக்கு இந்த யோசனை எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. மனிதர்களின் மண்டைக்குள் விசித்திரமான எண்ணங்கள் வருகின்றன. இதையே அவர் 'வெளியுறவுக் கொள்கை' என்று நினைக்கிறார்" என்கிறார். </p><p>மேலும் ஒரு படி மேலே சென்று மேடையிலிருந்த காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீட்சித்தைக் கட்டிப்பிடித்தார்.</p><p>உடனே சந்தீப் தீட்சித் நகைக்சுவையாக, "என்னை <a href="https://www.maalaimalar.com/news/world/modi-meloni-meet-melody-chocolate-gift-exchange-highlights-rome-visit">மெலோனி </a>(இத்தாலி பிரதமர்) என்று நினைத்து கட்டிப்பிடிக்கவில்லையே?" என்று கேட்க, ராகுல் காந்தி சிரித்தபடியே "நான் இன்னும் அந்த அளவுக்குப் போகவில்லை" என்று பதிலளித்தார்.</p><p>அதே கூட்டத்தில் ராகுல் காந்தி, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரை கோமாளிகள் கூட்டம் என்றும் அவர்கள் அதானி மற்றும் அம்பானி போன்ற பெரிய முதலாளிகளின் கர சேவகர்களாக மாறிவிட்டதாகவும் விமர்சித்தார்.</p><p>ராகுல் காந்தி தனது உரையின் முடிவில், "பிரதமர் மோடியும் மத்திய அமைச்சர் அமித் ஷாவும் ராஜினாமா செய்யும் வரை நாங்கள் அவர்களைத் தூங்க விடமாட்டோம்.</p><p>வெறுப்போ வன்முறையோ இன்றி, அன்பினாலும் அகிம்சையினாலும் இந்த போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்போம்" என தெரிவித்தார்.</p><h2>பாஜகவின் கண்டனம்</h2><p>ராகுல் காந்தியின் இந்தக் கருத்துக்கள் மிகவும் அருவருப்பான, தரமற்ற ஒன்று என்றும் ஒரு எதிர்க்கட்சித் தலைவருக்கு இது அழகல்ல என்று பாஜக செய்தித் தொடர்பாளர் சஞ்சு வர்மா சாடியுள்ளார்.</p>  <h2>காங்கிரஸ் விளக்கம்</h2><p>இதற்கு விளக்கம் அளித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷமா முகமது பேசுகையில், "ராகுல் காந்தி மெலோனியின் பெயரைப் பயன்படுத்தவே இல்லை. அவர் தனது கட்சியின் தலைவர் சந்தீப் தீட்சித்தைக் கட்டியணைத்தார், இதில் எந்தத் தவறும் இல்லை" என்று தெரிவித்தார்.</p><p>மேலும் பேசிய அவர், "நான் ஒரு வெளிநாட்டவரைத் திருமணம் செய்துகொண்டவள். பொதுவாக வெளிநாட்டவர்கள் கை குலுக்குவதையே விரும்புவர். எடுத்தவுடனே கட்டிப்பிடிப்பதை விரும்புவதில்லை" என்று பிரதமர் மோடியின் செய்கையை விமர்சித்தார்.</p>]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 14 ஆகஸ்ட் 2026: ஆடிப்பூரம்
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-14-august-2026-aadi-pooram</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-14-august-2026-aadi-pooram#comments</comments><guid isPermaLink="false">4032be00-5c39-4442-8a3c-8efa3dd22e2e</guid><pubDate>Fri, 14 Aug 2026 01:54:18 +0000</pubDate><atom:updated>2026-08-14T01:54:18.622Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,worship,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/3o1jrhhe/aadipooram.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆடிப்பூரம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/3o1jrhhe/aadipooram.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இன்றைய பஞ்சாங்கம்</p><p>பராபவ ஆண்டு, ஆடி-29 (வெள்ளிக்கிழமை)</p><p>பிறை : வளர்பிறை</p><p>திதி :  துவிதியை இரவு 9.24 மணி வரை பிறகு திருதியை</p><p>நட்சத்திரம் :  மகம் காலை 7.21 வரை பிறகு பூரம்</p> <p>யோகம் :  மரண / சித்தயோகம்</p><p>ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை</p><p>எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை</p><p>சூலம் : மேற்கு</p><p>நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை</p> <h2> ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னார் பெருந்தேரில் பவனி</h2><p>சந்திர தரிசனம். திருவாடிப்பூரம். ஸ்ரீ ஆண்டாள் திருநட்சத்திர வைபவம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னார் பெருந்தேரில் பவனி. இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் பெருந்திருவிழா. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கோவை கந்தே கவுண்டர்சாவடி மாகாளியம்மன் தேரோட்டம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தர குசாம்பிகை புறப்பாடு. </p> <p>திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. லால்குடி ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சனம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சனம். தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம்.</p> <p>இன்றைய ராசிபலன்</p><p>மேஷம் - மாற்றம்</p><p>ரிஷபம் - நிம்மதி</p><p>மிதுனம் - உயர்வு</p><p>கடகம் - உயர்வு</p><p>சிம்மம் - சிறப்பு</p><p>கன்னி - புகழ்</p> <p>துலாம் - ஊக்கம்</p><p>விருச்சிகம் - உதவி</p><p>தனுசு - நட்பு</p><p>மகரம் - பெருமை</p><p>கும்பம் - ஆக்கம்</p><p>மீனம் - போட்டி</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம் </title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/fuel-price-update-chennai-petrol-diesel-rates</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/fuel-price-update-chennai-petrol-diesel-rates#comments</comments><guid isPermaLink="false">d88ab2bf-b7c2-4460-b42e-170ccac7df1f</guid><pubDate>Fri, 14 Aug 2026 01:32:01 +0000</pubDate><atom:updated>2026-08-14T01:32:01.222Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கச்சா எண்ணெய்,Crude oil,பெட்ரோல் டீசல் விலை,Petrol and Diesel Prices</media:keywords><media:content height="576" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/alj4ing3/maalai-malar2026-07-28zqvhuwkktn-2.avif" width="1024"><media:title type="html"><![CDATA[ பெட்ரோல் டீசல் விலை]]></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல் டீசல் விலை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/alj4ing3/maalai-malar2026-07-28zqvhuwkktn-2.avif?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/iran-us-war-to-continue-until-trumps-term-ends-warns-irgc-adviser">ஈரான் போரினால் </a>மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p> <h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.</p> <h2>இன்றைய பெட்ரோல், டீசல் விலை</h2><p>அந்த வகையில் இன்றைய (13.08.2026 - வியாழக்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கச்சா எண்ணெய்</h2><p>இன்று சர்வதேச சந்தையில் பிரனட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 87.08 டாலர் என விற்பனை ஆகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>U Turn அடித்த பார் கவுன்சில்.. தலைமை நீதிபதி வருகையை எதிர்த்த சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தடை நீக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/national/nalsar-graduation-row-students-oppose-cji-suryakant-invite-over-remarks-and-protest-case-handling</link><comments>https://www.maalaimalar.com/news/national/nalsar-graduation-row-students-oppose-cji-suryakant-invite-over-remarks-and-protest-case-handling#comments</comments><guid isPermaLink="false">03bce81d-6b6e-4a25-ae4d-218939811e50</guid><pubDate>Fri, 14 Aug 2026 01:08:49 +0000</pubDate><atom:updated>2026-08-14T01:08:49.830Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சூர்யகாந்த்,Chief Justice,தலைமை நீதிபதி,Bar Council,பார் கவுன்சில்,Suryakant</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/udi94ppj/tn-14.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தலைமை நீதிபதி]]></media:title><media:description type="html"><![CDATA[ தலைமை நீதிபதி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/udi94ppj/tn-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற NALSAR சட்டப் பல்கலைக்கழகத்தின் 2026 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவிற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரிய காந்த்தை விருந்தினராக அழைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 450க்கும் மேற்பட்ட மாணவர்கள் துணைவேந்தர் மற்றும் நிர்வாகத்திற்கு மனு அனுப்பினர்.</p> <h2>காரணம்</h2><p>இளைஞர்களை கரப்பான்பூச்சிகள் என அழைத்து, ஜூலை 20 அன்று டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின் மீதான <a href="https://www.maalaimalar.com/news/national/delhi-protest-pellet-gun-row-youth-allege-brutal-police-action-as-government-denies-use">காவல்துறை தாக்குதல் </a>குறித்த வழக்கு விசாரணையின்போது, வீடியோ ஆதாரங்களை பார்க்க நேரமில்லை என மறுத்தது ஆகியவற்றை சுட்டிக்காட்டி அவரை அழைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.</p> <h2>தடை</h2><p>இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் அப்பல்கலைக்கழகத்தில் 2026ல் பட்டம் பெறும் மாணவர்கள் எவரையும் மாநில பார் கவுன்சில்களில் வழக்கறிஞராகப் பதிவு செய்யக் கூடாது என மாநில பார் கவுன்சில்களுக்கு இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா உத்தரவிட்டார்.</p><p>இத்தடை உத்தரவு மாணவர்களின் தொழில்முறை எதிர்காலத்தைப் பாதிக்கும் என சமூக வலைதளங்களிலும் சட்டத் துறையிலும் கடும் எதிர்ப்பும் விமர்சனங்களும் கிளம்பின.</p> <h2>தடை நீக்கம்</h2><p>இதையடுத்து மனன் குமார் மிஸ்ரா தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்திய இந்திய பார் கவுன்சில், தனது உத்தரவை திரும்பப்பெற்றது.</p><p>பெரும்பான்மையான மாணவர்கள் அப்பாவிகள் என்பதால், "தவறு செய்யாமல் எந்தவொரு மாணவரும் பாதிக்கப்படக் கூடாது" எனக் கூறி, மாணவர்கள் தாங்கள் விரும்பும் மாநில பார் கவுன்சிலில் பதிவு செய்துகொள்ள இந்திய பார் கவுன்சில் அனுமதி அளித்தது.</p><p>மாணவர்களைத் தூண்டிவிட்டதில் சில பேராசிரியர்கள் மற்றும் வெளிநபர்களுக்குத் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கும் இந்திய பார் கவுன்சில், இது குறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.</p> <h2>சிஜேபி</h2><p>முன்னதாக மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்வினையாற்றிய <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">கரப்பான்பூச்சி ஜனதா கட்சி</a> நிறுவனர் அபிஜித் தீப்கே, சிஜேபியை தொடங்கியபோது சமூக வலைத்தளத்தில் தான் இட்ட முதல் பதிவை நினைவுகூர்ந்தார்.</p><p>அப்போது இளைஞர்களை கரப்பான்பூச்சிகள் என தலைமை நீதிபதி சூரியகாந்தி விமர்சித்ததற்கு ஏதிவினையாக, "சட்டத் துறையில் உள்ள கரப்பான்பூச்சிகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்தால் என்ன நடக்கும்" என பதிவிட்டிருந்தார் அவர்.</p><p>தலைமை நீதிபதியின் கருத்தை தொடர்ந்து சிஜேபி இயக்கம் தொடங்கப்பட்டு மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று நாட்டின் கல்வி அமைச்சரையே ராஜினாமா செய்ய வைக்கும் அளவு வலிமை பெற்றது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>ஹார்முஸ் நீரிணையில் இரு வணிக கப்பல்களை தாக்கிய ஈரான் - ஐக்கிய அரபு அமீரகம் குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/world/uae-says-2-oil-vessels-hit-by-iran-in-strait-of-hormuz</link><comments>https://www.maalaimalar.com/news/world/uae-says-2-oil-vessels-hit-by-iran-in-strait-of-hormuz#comments</comments><guid isPermaLink="false">4b746e9f-ec01-4f96-a10e-b7cb136535da</guid><pubDate>Fri, 14 Aug 2026 00:26:22 +0000</pubDate><atom:updated>2026-08-14T00:26:22.201Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஐக்கிய அரபு அமீரகம்,UAE,ஈரான்,Iran,Strait of Hormuz,ஹார்முஸ் நீரிணை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/mokcuvh8/uae-flag.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ uae flag]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/mokcuvh8/uae-flag.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஹார்முஸ் நீரிணையை கடந்து சென்றுகொண்டிருந்த தங்களது இரண்டு கப்பல்கள் தாக்கப்பட்டதாகவும், இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் (ADNOC) தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலை ஈரான் நடத்தியதாக <a href="https://www.maalaimalar.com/topic/uae">ஐக்கிய அரபு அமீரகம்</a> குற்றம் சாட்டியுள்ளது.</p><p>ஒரு வாரத்திற்கும் குறைவான காலத்தில் ADNOC கப்பல்கள் சம்பந்தப்பட்ட இரண்டாவது சம்பவம் இதுவாகும். சனிக்கிழமையன்று, அரசு எண்ணெய் நிறுவனத்துடன் தொடர்புடைய ஒரு கப்பல் <a href="https://www.maalaimalar.com/topic/strait-of-hormuz">நீரிணை</a> வழியாக சென்றபோது, ​​அதன் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக கூறி ஐக்கிய அரபு அமீரகம் அதனைக் கண்டித்தது.</p><p>ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசு செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுவிட்டதாக ADNOC தெரிவித்துள்ளது.</p><h2>நேரடி அச்சுறுத்தல்:</h2><p>இரண்டு ADNOC கப்பல்கள் மீதான "பகைமையான ஈரானியத் தாக்குதல்" என குறிப்பிட்டதை ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சகம் கண்டித்தது. ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படையினர், வர்த்தக கப்பல்களை குறிவைத்தும், பொருளாதார அழுத்தம் அல்லது மிரட்டலுக்கான ஒரு கருவியாக அந்த நீர்வழியை பயன்படுத்தியும் "கடற்கொள்ளை நடவடிக்கைகளில்" ஈடுபட்டுள்ளனர் என்றும், இது பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் உலகளாவிய எரிசக்தி பாதுகாப்புக்கும் நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்றும் கூறியது.</p><p>ஐக்கிய அரபு அமீரகத்தின் செய்தி நிறுவனமான WAM அல்லது வெளியுறவு அமைச்சகமோ கப்பல்கள், அவற்றின் சரக்குகள் அல்லது ஏற்படக்கூடிய சேதம் குறித்த விவரங்களை வெளியிடவில்லை. யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படவில்லை.</p><p>ஈரானின் வெளியுறவு அமைச்சகத்திடம் இருந்தோ அல்லது ஐ.ஆர்.ஜி.சி.-இடம் இருந்தோ உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.</p><h2>ஈரான் எச்சரிக்கை:</h2><p>மோதலுக்கு முன்பு, உலகின் எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு ஓமானுக்கும் ஈரானுக்கும் இடையிலான குறுகிய நீர்வழிப்பாதை வழியாக சென்றுகொண்டிருந்தது. </p><p>பிப்ரவரி 28-ஆம் தேதியன்று ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேலிய போர் வெடித்ததில் இருந்து, கப்பல் போக்குவரத்து மீண்டும் மீண்டும் தடைபட்டு, சரக்கு கட்டணங்கள் உயர்ந்து, பாதுகாப்பு குறித்த கவலைகளையும் உருவாக்கியுள்ளது.</p><p>தெஹ்ரானின் எதிரிகளுடன் தொடர்பு கொண்டாலோ அல்லது ஈரானிய உத்தரவுகளுக்கு இணங்க தவறினாலோ, நீர்வழிப்பாதையை கடக்கும் கப்பல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையினர் முன்னதாக அச்சுறுத்தியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>31 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபு-சுகன்யா ஜோடி மீண்டும் இணையும் படம் - வெளியான சூப்பர் அப்டேட்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/prabhu-and-suganya-joins-on-screen-after-31-years-for-new-movie</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/prabhu-and-suganya-joins-on-screen-after-31-years-for-new-movie#comments</comments><guid isPermaLink="false">978693be-0201-4326-8780-092c5ca4ba26</guid><pubDate>Thu, 13 Aug 2026 23:41:44 +0000</pubDate><atom:updated>2026-08-13T23:41:44.914Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பிரபு,prabhu,Suganya,mariegold,மேரிகோல்ட்,சுகன்யா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/qfj6uvq3/mariegold-movie.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ mariegold movie team]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/qfj6uvq3/mariegold-movie.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தனது 21-வது படைப்பாக 'மேரிகோல்ட்' திரைப்படத்தை அறிவித்துள்ளது. ஆர். ரவீந்திரன் தயாரிக்கும் இப்படத்தை பிரியன் ராஜேந்திரன் இயக்குகிறார். இந்தப் படத்தை சுதர்சன் இணைந்து தயாரித்துள்ளார்.</p><p>திருநெல்வேலி, தூத்துக்குடி பின்னணியில் நடைபெறும் விறுவிறுப்பான கதையான இதில் 'செந்தமிழ்ப் பாட்டு', 'சின்ன மாப்ளே', 'மிஸ்டர் மெட்ராஸ்' ஆகிய படங்களில் இணைந்து நடித்த பிரபு மற்றும் சுகன்யா ஜோடி 31 ஆண்டுகளுக்கு பிறகு இணைகிறார்கள். ரக்ஷன் மற்றும் நம்ரிதாவும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.</p><h2>உணர்வுப்பூர்வ குடும்ப கதை:</h2><p>தென் தமிழகத்தின் பின்னணியில், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி நகரங்களை சேர்ந்த கதை மாந்தர்களுக்கு இடையே நடைபெறும் சுவாரஸ்யமான போட்டியையும் அலாதியான வாழ்வியலையும் மையமாக கொண்டு ஒரு உணர்வுப்பூர்வமான குடும்ப கதையாக இத்திரைப்படம் உருவாகிறது.</p><p>இந்தப் படத்தில் சிங்கம்புலி, வடிவுக்கரசி, இமான் அண்ணாச்சி, விவேக் பிரசன்னா, ஸ்டாலின் மற்றும் வடிவேல் முருகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மல்லிகார்ஜுன் ஒளிப்பதிவு செய்ய, சித்து குமார் இசையமைக்கும் இந்தப்படத்தின் படத்தொகுப்பை ஆர். நிர்மல் கையாளுகிறார்.</p><p>டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் பிரியன் ராஜேந்திரன் இயக்கத்தில் பிரபு, சுகன்யா, ரக்ஷன், நம்ரிதா முக்கிய வேடங்களில் நடிக்கும் 'மேரிகோல்ட் திரைப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.</p>]]></content:encoded></item><item><title>&apos;அன்பில் அவன்&apos; என் இதயத்திற்கு நெருக்கமான படைப்பு - நடிகை ப்ரீத்தி முகுந்தன்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actress-preity-mukhundhan-said-anbil-avan-is-close-to-her-heart-movie</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actress-preity-mukhundhan-said-anbil-avan-is-close-to-her-heart-movie#comments</comments><guid isPermaLink="false">8977a043-8cd0-464d-89cd-0eaf84befa41</guid><pubDate>Thu, 13 Aug 2026 23:06:49 +0000</pubDate><atom:updated>2026-08-13T23:06:49.341Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Preity Mukhundhan,ப்ரீத்தி முகுந்தன்,Anbil Avan,அன்பில் அவன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/9sr0jvbi/Preity-Mukhundhan.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Preity Mukhundhan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/9sr0jvbi/Preity-Mukhundhan.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அசோக் செல்வன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வரும் புதிய திரைப்படத்திற்கு, 'அன்பில் அவன்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.</p><p>ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகி வரும் 'அன்பில் அவன்' திரைப்படத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/ashok-selvan">அசோக் செல்வன்</a>, பிரீத்தி முகுந்தன், சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.</p><h2>காதல் கதை:</h2><p>இப்படத்தின் கதையை இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுத, கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.‌ படத்தொகுப்பு பணிகளை ஆர்.கே. செல்வா மேற்கொள்ள, மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார்.</p><p>பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அழகான காதல் கதையாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கே. கருணா மூர்த்தி- அசோக் செல்வன் - அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.</p><p>இத்திரைப்படத்தை வருகிற செப்டம்பர் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அன்பில் அவன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி இருக்கிறது.</p><h2>நெருக்கமான படைப்பு:</h2><p>இது தொடர்பான விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகை ப்ரீத்தி முகுந்தன், "அன்பில் அவன்' என் இதயத்திற்கு நெருக்கமான படைப்பு. இந்த படத்திற்காக நான் நீண்ட நாட்களாக காத்திருக்கிறேன். இந்த கதாபாத்திரத்திற்காக என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி.</p><p>இந்தப் படம் திருமணம் ஆகாத பெண்களுக்கும், திருமணமான பெண்களுக்கும் பிடிக்கும். இந்தப் படத்தில் என்னுடன் நடித்த சக நடிகரான அசோக் செல்வனுக்கு நன்றி. சக நடிகைக்கு அதிக அளவில் திரை பங்களிப்பை அளித்து, இப்படத்தை உருவாக்கியதற்காக அவருக்கும் நன்றி'' என்றார்.</p>]]></content:encoded></item><item><title>உத்தரகாண்ட் சுரங்க விபத்து: 6 பேர் உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/6-killed-2-trapped-as-water-debris-enter-tunnel-in-uttarakhand</link><comments>https://www.maalaimalar.com/news/national/6-killed-2-trapped-as-water-debris-enter-tunnel-in-uttarakhand#comments</comments><guid isPermaLink="false">053e75ae-1e00-4774-a301-fa5d215c3c61</guid><pubDate>Thu, 13 Aug 2026 20:58:42 +0000</pubDate><atom:updated>2026-08-13T20:58:42.510Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Uttarakhand,உத்தரகாண்ட்,Tunnel,சுரங்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/yzevmn5p/Uttarakhand-Tunnel.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Uttarakhand Tunnel]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/yzevmn5p/Uttarakhand-Tunnel.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national">உத்தரகாண்ட்</a> மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் சுரங்கப்பாதைக்குள் தண்ணீரும் இடிபாடுகளும் புகுந்ததில் ஆறு பேர் உயிரிழந்தனர். இரண்டு தொழிலாளர்கள் இன்னும் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்க மீட்பு குழுவினர் முயன்று வருவதாகவும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. </p><p>மேலும், சமோலியின் பிப்பல்கோட்டியில் உள்ள தெஹ்ரி நீர்மின் மேம்பாட்டு கழகத்தின் (THDC) திட்ட பகுதியில் மொத்தம் 22 பேர் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, ​​திடீரென தண்ணீர் உள்ளே பாய்ந்ததாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. </p><p>பலத்த நீரோட்டம் அவர்களில் பலரை சுரங்கப்பாதையின் வெளியேறும் வழியை நோக்கி அடித்து சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தில் 14 தொழிலாளர்கள் காயமடைந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>மீட்பு பணிகள்:</h2><p>"இது மிகவும் துயரமான சம்பவம்... முழு நிர்வாகக் குழுவும் எனது சக ஊழியர்கள் அனைவரும் வந்துவிட்டனர், மேலும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்குத் தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதே எங்களின் முன்னுரிமையாகும்," என்று உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் லாக்பத் புடோலா கூறினார்.</p><p>மாலை 6.30 மணியளவில், கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த சுரங்கப்பாதைக்குள் கணிசமான அளவு இடிபாடுகளும் தண்ணீரும் புகுந்ததாக மாவட்ட ஆட்சியர் கௌரவ் குமார் தெரிவித்தார்.</p><p>மீட்பு மற்றும் நிவாரண பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார். மூத்த அதிகாரிகளிடம் இருந்து நிகழ்நேர தகவல்களை பெற்று வருவதாகவும் தாமி கூறினார்.</p><h2>தேடுதல் வேட்டை:</h2><p>மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்த தொழிலாளர்களிடம் பேசினேன்; அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது. மேலும், ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களை சேர்ந்த, இந்த சம்பவத்தில் காயமடைந்த அல்லது சம்பந்தப்பட்டவர்கள் இங்கு சிகிச்சை பெற்று வருவதாக அந்த மாநில முதலமைச்சர்களுக்கும் தெரிவித்துள்ளேன். தலைமை மருத்துவ கண்காணிப்பாளரிடமும் பேசியுள்ளேன்," என்று முதலமைச்சர் கூறினார்.</p><p>தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) குழுக்கள், இடிபாடுகளில் சிக்கியுள்ள தொழிலாளர்களைத் தேடுவதற்காக அவற்றைச் சல்லடை போட்டுத் தேடி வருகின்றனர்.</p><p>கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் கனமழை பெய்து வந்தது. திங்களன்று, ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்ததால் ஏற்பட்ட பலத்த நீரோட்டம், மாவட்டத்தின் நிதி பள்ளத்தாக்கு பகுதியில் இருந்த ஒரு பாலத்தை அடித்து சென்றது. </p><p>இந்த சம்பவத்தின் காணொளியில், சேறு கலந்த பெருமளவு நீர் கீழ்நோக்கி பாய்ந்து உலோக பாலத்தின் மீது மோதியது. சில நொடிகளில், நீரின் பெரும் சக்தியால் பாலம் வேரோடு பிடுங்கப்பட்டு ஆற்றங்கரையை நோக்கி தள்ளப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>சுதந்திர தினத்தை முன்னிட்டு லடாக்கில் 100 அடி உயர தேசியக் கொடியை ஏற்றிய ராணுவம்</title><link>https://www.maalaimalar.com/news/national/100-feet-national-flag-installed-in-ladakhs-padum-belt-by-army-ahead-of-i-day</link><comments>https://www.maalaimalar.com/news/national/100-feet-national-flag-installed-in-ladakhs-padum-belt-by-army-ahead-of-i-day#comments</comments><guid isPermaLink="false">2e0094ae-30cc-49e7-bf01-7e59097dc7f5</guid><pubDate>Thu, 13 Aug 2026 20:07:57 +0000</pubDate><atom:updated>2026-08-13T20:07:57.963Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ladakh,national flag,தேசிய கொடி,Independence Day,சுதந்திர தினம்,லடாக்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/vya5jn3c/National-Flag.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ National Flag - File Pic]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/vya5jn3c/National-Flag.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>லடாக்கின் ஜன்ஸ்கார் மாவட்டத்தின் தலைமையகமான பதும் பகுதியில், அப்பகுதி மக்களிடையே தேசபக்தி, தேசிய ஒருமைப்பாடு மற்றும் குடிமை பெருமிதம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கில், <a href="https://www.maalaimalar.com/news/national">இந்திய</a> ராணுவம் 100 அடி உயர தேசிய கொடியை நிறுவியது.</p><p>ஜன்ஸ்கார் நிலப்பரப்பிற்கு மத்தியில் நிறுவப்பட்டுள்ள இந்த உயரமான <a href="https://www.maalaimalar.com/topic/national-flag">மூவர்ண கொடி</a>, வெகு தொலைவில் இருந்தே தெரியும் வகையிலும், அப்பகுதி மக்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் ஒரு முக்கிய அடையாளமாக திகழும் வகையிலும் அமைந்துள்ளது என்று லே பாதுகாப்பு துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.</p><h2>தேசிய ஒருமைப்பாடு:</h2><p>ஜன்ஸ்கார் மாவட்டத்தின் சிவில் நிர்வாகத்துடன் இணைந்து ராணுவத்தின் 'ஃபாரெவர் இன் ஆபரேஷன்ஸ்' (Forever in Operations) பிரிவு இந்த முயற்சியை மேற்கொண்டது.</p><p>கொடியை நிறுவியதுடன், அப்பகுதியின் ஒட்டுமொத்த தோற்றத்தையும் பொது சூழலையும் மேம்படுத்தும் வகையில் அந்த இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அழகுபடுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன என்று அவர் கூறினார்.</p><p>தேசத்தின் மீதான ஒற்றுமை, தியாகம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகிய உணர்வுகளை வலுப்படுத்துவதன் மூலம் இளம் தலைமுறையினரை ஊக்குவிப்பதையும், அதே வேளையில் ஜன்ஸ்கார் பள்ளத்தாக்கு மக்களிடையே தேசிய ஒருமைப்பாட்டு உணர்வை வலுப்படுத்துவதையும் இந்த முயற்சி நோக்கமாக கொண்டுள்ளது என்று செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.</p><h2>பரஸ்பர மரியாதை:</h2><p>சுமார் 3,670 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பதும் பகுதி, அதன் செழுமையான பௌத்த பாரம்பரியம், மடாலயங்கள் மற்றும் தனித்துவமான ஜன்ஸ்கார் கலாச்சாரத்திற்குப் பெயர் பெற்றது. மேலும் இது பள்ளத்தாக்கின் பல தொலைதூர கிராமங்கள் மற்றும் நிலப்பரப்புகளுக்கான நுழைவாயிலாகவும் விளங்குகிறது என்று அவர் மேலும் கூறினார்.</p><p>எல்லை பகுதிகளின் நலன் மற்றும் மேம்பாட்டிற்கான தனது உறுதிப்பாட்டை ராணுவம் மீண்டும் வலியுறுத்தியதுடன், வளர்ச்சி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிப்பதில் சிவில்-ராணுவ ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டியது. இந்த முயற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்வதில் ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு நல்கிய ஜன்ஸ்கார் சிவில் நிர்வாகம் மற்றும் மக்களுக்கு அது நன்றியையும் தெரிவித்துக்கொண்டது.</p><p>இந்த மூவர்ணக் கொடியை நிறுவிய நிகழ்வானது, ராணுவத்திற்கும் லடாக் மக்களுக்கும் இடையிலான நீடித்த நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>கர்நாடகாவில் சேவையை வழங்க உரிமம் பெற்றது ராபிடோ!</title><link>https://www.maalaimalar.com/news/national/rapido-gets-licence-to-operate-cab-services-in-karnataka</link><comments>https://www.maalaimalar.com/news/national/rapido-gets-licence-to-operate-cab-services-in-karnataka#comments</comments><guid isPermaLink="false">625ecc0a-a310-4906-8873-3474cf750b45</guid><pubDate>Thu, 13 Aug 2026 19:25:41 +0000</pubDate><atom:updated>2026-08-13T19:25:41.008Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,ராபிடோ,Rapido</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/plp3cu99/Rapido.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rapido]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/plp3cu99/Rapido.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national">கர்நாடக</a> மாநிலத்தில் கேப் (cab) சேவைகளை இயக்குவதற்கான உரிமத்தை 'ராபிடோ' நிறுவனம் கர்நாடக மாநிலப் போக்குவரத்து ஆணையத்திடம் இருந்து பெற்றுள்ளதாக அந்நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.</p><p>'கர்நாடக தேவைக்கேற்ற போக்குவரத்து தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர்கள் விதிகள், 2016'-இன் கீழ் இந்த உரிமம் வழங்கப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு (ஆகஸ்ட் 2031 வரை) செல்லுபடியாகும் இந்த உரிமம், மாநிலத்தின் ஒழுங்குமுறை கட்டமைப்பிற்குள் <a href="https://www.maalaimalar.com/topic/rapido">ராபிடோ</a> தனது கேப் சேவைகளை தொடர்ந்து இயக்க அனுமதிக்கிறது.</p><p>இந்நிறுவனம் கர்நாடகாவின் 21 நகரங்களில் தனது சேவையை வழங்கி வருகிறது. இதில் 3.14 லட்சத்திற்கும் அதிகமான 'கேப்டன்கள்' (ஓட்டுநர்கள்) மற்றும் 2.04 கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர்.</p><h2>பாதுகாப்பான சேவை:</h2><p>உரிமம் பெற்றது குறித்து ராபிடோ இணை நிறுவனர் வெளியிட்ட அறிக்கையில், கர்நாடக மாநிலத்தில் சேவையை வழங்க உரிமம் பெற்றதைத் தொடர்ந்து மாநில அரசு மற்றும் போக்குவரத்து துறையுடன் இணைந்து பணியாற்ற தங்களுக்கு வாய்ப்பு அளிக்கும் என தெரிவித்தார்.</p><p>இதுகுறித்த அறிக்கையில், "கர்நாடகா எங்கள் சொந்த மாநிலம் மற்றும் மிக முக்கியமான சந்தைகளில் ஒன்றாகும். இந்த முன்னேற்றம், முறையான ஒழுங்குமுறை கட்டமைப்பிற்குள் எங்கள் கேப் சேவைகளை வலுப்படுத்தும்.</p><p>இதுதவிர பயணிகளுக்கு பாதுகாப்பான, நம்பகமான மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய போக்குவரத்து வசதியை வழங்க கர்நாடக அரசு மற்றும் போக்குவரத்து துறையுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றவும் எங்களுக்கு வாய்ப்பளிக்கிறது," என்று ராபிடோவின் இணை நிறுவனர் பவன் குண்டுபள்ளி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.</p><p>கர்நாடகாவில் 69 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் தங்கள் தளத்தின் மூலம் கேப் பயணங்களை மேற்கொண்டுள்ளதாக ராபிடோ தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஜார்க்கண்ட் போராட்டம்: ஆகஸ்ட் 10 வன்முறை தொடர்பாக 300 பேர் மீது வழக்குப்பதிவு</title><link>https://www.maalaimalar.com/news/national/jharkhand-protesters-fir-filed-against-300-people-for-aug-10-violence</link><comments>https://www.maalaimalar.com/news/national/jharkhand-protesters-fir-filed-against-300-people-for-aug-10-violence#comments</comments><guid isPermaLink="false">4eb97bf9-465e-41d0-bafa-603ba83c0d35</guid><pubDate>Thu, 13 Aug 2026 18:42:35 +0000</pubDate><atom:updated>2026-08-13T18:42:35.808Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>FIR,Violence,வன்முறை,Jharkhand protest,ஜார்க்கண்ட் போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/b6diqpsp/Jharkhand-Protest-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jharkhand-Protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/b6diqpsp/Jharkhand-Protest-1.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/jharkhand">ஜார்க்கண்ட்</a> ஆட்சேர்ப்பு தேர்வுகளில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் இன்று (வியாழக்கிழமை) 20-ஆவது நாளை எட்டியது. போராட்டக்காரர்கள் ஆகஸ்ட் 15-ஆம் தேதியன்று 'மூவர்ண யாத்திரை' நடத்துவதாக அறிவித்துள்ளது. </p><p>இந்த நிலையில், சட்டமன்றத்தை நோக்கி ஆகஸ்ட் 10 அன்று நடைபெற்ற பேரணி தொடர்பாக, பெயர் குறிப்பிடப்படாத 300 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பேரணியின்போது போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படையினருடன் மோதலில் ஈடுபட்டனர்.</p><h2>மாணவர்கள் கோரிக்கை:</h2><p>ஜார்க்கண்ட் பொது சேவை ஆணையம் (JPSC) நடத்திய போட்டி தேர்வுகளில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேருக்கு எதிரான கைது வாரண்டுகளை நிறைவேற்றுவதற்காக, மாநில குற்ற புலனாய்வு துறையும் பல இடங்களில் சோதனைகளை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>ஜெய்பால் சிங் முண்டா மைதானத்தில், JPSC-JSSC சீர்திருத்த குழுவின் பதாகையின் கீழ் நடைபெற்ற போராட்டம் தொடர்ந்தது. ஆட்சேர்ப்பு தேர்வுகளில் அதிக வெளிப்படைத்தன்மை, பல தேர்வுகளை ரத்து செய்தல் மற்றும் சி.பி.ஐ. அல்லது ஜார்க்கண்டிற்கு வெளியே உள்ள ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழுவின் மூலம் ஒரு சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.</p><h2>மூவர்ண யாத்திரை:</h2><p>தங்கள் போராட்டத்தை வலுப்படுத்த ஆகஸ்ட் 15 அன்று 'மூவர்ண யாத்திரை' நடத்தப்போவதாக மாணவர்கள் தெரிவித்தனர். மேலும், உண்மையான போராட்டக்காரர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டாம் என மாநில அரசை அவர்கள் எச்சரித்தனர்.</p><p>ஆகஸ்ட் 10-ஆம் தேதியன்று ஜார்க்கண்ட் சட்டமன்றத்தை நோக்கி நடைபெற்ற பேரணி தொடர்பாக, பெயர் குறிப்பிடப்படாத 300 பேர் மீது காவல்துறை முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளது. இந்த பேரணியால் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன.</p><p>காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு, தடை உத்தரவுகளை மீறியது, அரசு சொத்துக்களை சேதப்படுத்தியது மற்றும் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பானது என ராஞ்சி காவல் கண்காணிப்பாளர் பராஸ் ராணா தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>டி.என்.பி.எல்.: திருப்பூர் அணிக்கு எதிரான போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி வெற்றி</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-trichy-won-by-17-runs</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-trichy-won-by-17-runs#comments</comments><guid isPermaLink="false">613f4fed-107a-4df3-a2dc-38d9734b4ba8</guid><pubDate>Thu, 13 Aug 2026 17:57:56 +0000</pubDate><atom:updated>2026-08-13T17:57:56.169Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,திருப்பூர் தமிழன்ஸ்,Trichy Grand Cholas,Tiruppur Tamilans,திருச்சி கிராண்ட் சோலாஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/ryse902y/Trichy-Grand-Cholas-Win.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Trichy Grand Cholas Win]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/ryse902y/Trichy-Grand-Cholas-Win.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>10-ஆவது <a href="https://www.maalaimalar.com/topic/tnpl">டி.என்.பி.எல்.</a> டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முறை தொடரின் அனைத்து போட்டிகளும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.</p><p>இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற 17-ஆவது லீக் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோலாஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் <a href="https://www.maalaimalar.com/sports/cricket">டாஸ்</a> வென்ற திருப்பூர் தமிழன்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து, திருச்சி அணி முதலில் பேட்டிங் செய்தது.</p><h2>ஷியாம் சுந்தர் சதம்:</h2><p>திருச்சி அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கிய ராஜ்குமார் 33 பந்துகளில் 37 ரன்கள் (3 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) எடுத்து ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய கேப்டன் சுரேஷ் குமார் வெறும் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் களமிறங்கிய ஷியாம் சுந்தர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.</p><p>57 பந்துகளை எதிர்கொண்ட ஷியாம் சுந்தர் 57 பந்துகளில் 104 ரன்கள் (8 பவுண்டரிகள், 7 சிக்சர்கள்) விளாசினார். இவரது சதம் மூலம் திருச்சி அணியின் ஸ்கோர் வேகமாக அதிகரித்தது. மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். 20 ஓவர்கள் முடிவில் திருச்சி அணி 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன்களை எடுத்தது.</p><p>திருப்பூர் தமிழன்ஸ் சார்பில் நடராஜன் 2 விக்கெட்டுகளையும், எசக்கி முத்து, முகமது அலி, சாய் கிஷோர் மற்றும் மதிவாணன் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.</p><h2>திருப்பூர் சொதப்பல்:</h2><p>சற்றே கடின இலக்கை துரத்திய திருப்பூர் அணிக்கு சுமாரான துவக்கமே கிடைத்தது. திருப்பூர் அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கிய அமித் சாத்விக் வெறும் 6 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் சாய் கிஷோர் வெறும் 1 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.</p><p>மற்றொரு தொடக்க வீரரான துஷார் ரஹேஜாவுடன் ஜோடி சேர்ந்த பிரதோஷ் ரஞ்சன் பால் சிறப்பாக ஆடினார். இந்த ஜோடி ரன் குவிப்பில் கவனம் செலுத்தியது. அதிரடியாக ஆடிய ரஹேஜா 43 பந்துகளில் 87 ரன்கள் (2 பவுண்டரிகள், 8 சிக்சர்கள்) எடுத்த போது தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். ரஞ்சன் பால் 36 பந்துகளில் 44 ரன்கள் (3 பவுண்டரிகள், 1 சிக்சர்) எடுத்து பெவிலியன் திரும்பினார்.</p><p>இவர்களை தொடர்ந்து களமிறங்கியவர்களில் உதிரசாமி சத்யதேவ் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை (22) எடுத்தார். இவரும் சீராக ரன் குவிக்க தவற, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆட்டத்தின் இறுதியில் திருப்பூர் தமிழன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களை மட்டுமே எடுத்தது.</p><p>இதனால் திருச்சி அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. திருச்சி சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஈஸ்வரன் 3 விக்கெட்டுகளையும், அதிசயராஜ் டேவிட்சன், சஞ்சய் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும், சரவண குமார் 1 விககெட் கைப்பற்றினார்.</p>]]></content:encoded></item><item><title>செங்கோட்டையில் நடக்கும் 80-ஆவது சுதந்திர தின விழாவில் இசைக்கப்படும் வந்தே மாதரம்</title><link>https://www.maalaimalar.com/news/national/vande-mataram-to-be-rendered-during-80th-independence-day-celebrations-at-red-fort</link><comments>https://www.maalaimalar.com/news/national/vande-mataram-to-be-rendered-during-80th-independence-day-celebrations-at-red-fort#comments</comments><guid isPermaLink="false">27101f38-2e0a-4503-8ebf-fac72b3c7f91</guid><pubDate>Thu, 13 Aug 2026 17:08:27 +0000</pubDate><atom:updated>2026-08-13T17:08:27.158Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வந்தே மாதரம்,Vande Mataram,Independence Day,சுதந்திர தின விழா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/ml39gxyu/independence-day.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ independence day]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/ml39gxyu/independence-day.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சுதந்திர தின கொண்டாட்டங்களின் வரலாற்றில் முதன்முறையாக, ஆகஸ்ட் 15-ஆம் தேதியன்று செங்கோட்டை வளாகத்தில் நடைபெறவுள்ள 80-ஆவது ஆண்டு விழாவின்போது '<a href="https://www.maalaimalar.com/topic/vande-mataram">வந்தே மாதரம்</a>' பாடல் இசைக்கப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்படும்.</p><p>'வந்தே மாதரம்' பாடலின் நீடித்த பாரம்பரியத்தின் 150-வது ஆண்டை கொண்டாடுவதற்காகவும், "2047-க்குள் 'விக்சித் பாரத்' என்ற இலக்கை நோக்கி <a href="https://www.maalaimalar.com/news/national">இந்தியாவின்</a> பயணத்தை முன்னெடுப்பதில் 'யுவ சக்தி'யின் (இளைஞர் சக்தியின்) ஆற்றல், லட்சியங்கள் மற்றும் முக்கிய பங்களிப்பை கொண்டாடுவதற்காகவும்" இந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.</p><h2>பிரதமர் தலைமை:</h2><p>செங்கோட்டையில் நடைபெறவுள்ள 80-வது சுதந்திர தின விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குவார். செங்கோட்டைக்கு வருகை தரும் பிரதமரை, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அவரது துணை அமைச்சர் சஞ்சய் சேத் மற்றும் பாதுகாப்பு துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங் ஆகியோர் வரவேற்கவுள்ளனர்.</p><p>வரவேற்பை தொடர்ந்து காவல் மரியாதை அணிவகுப்பை பார்வையிட்ட பிறகு, பிரதமர் மோடி செங்கோட்டையின் முகப்பு பகுதிக்கு செல்வார். டெல்லி மண்டலத்தின் பொது அதிகாரி, தேசிய கொடியை ஏற்றுவதற்காக பிரதமரை கோட்டையின் மதில் சுவரில் உள்ள மேடைக்கு அழைத்துச் செல்வார்.</p><p>"ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் டெல்லி காவல்துறை ஆகியவற்றில் இருந்து தலா ஒரு அதிகாரி மற்றும் 32 வீரர்களை கொண்ட 'தேசியக் கொடி பாதுகாப்புப் படை', பிரதமர் தேசிய கொடியை ஏற்றும்போது 'ராஷ்ட்ரிய சல்யூட்' அளிக்கும். முப்படைகள் மற்றும் காவல்துறையைச் சேர்ந்த இந்த கூட்டு பாதுகாப்பு படை மேஜர் லோகேந்திர சிங் ஷெகாவத் வழிநடத்துவார்," என்று அமைச்சகம் தெரிவித்தது.</p><h2>வந்தே மாதரம்:</h2><p>கொடி ஏற்றப்பட்ட பிறகு, மூவர்ணக் கொடிக்கு 'ராஷ்ட்ரிய சல்யூட்' மரியாதை அளிக்கப்படும்.</p><p>"ஒரு ஜூனியர் கமிஷன்ட் அதிகாரி மற்றும் 25 வீரர்களை கொண்ட ராணுவ இசைக்குழு 'வந்தே மாதரம்' பாடலின் இசையை வாசிக்கும். அதை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்படும். இந்த இசைக்குழுவை சுபேதார் ஈஸ்வர் சிங் வழிநடத்துவார்," என்று அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 75% திமுக ஆட்சியில் முடிக்கப்பட்டவை தான்: முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/75-percent-of-mous-finalised-under-dmk-rule-says-former-minister-trp-raja</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/75-percent-of-mous-finalised-under-dmk-rule-says-former-minister-trp-raja#comments</comments><guid isPermaLink="false">167608f3-be1f-4010-bbeb-8277a4f8260b</guid><pubDate>Thu, 13 Aug 2026 16:29:18 +0000</pubDate><atom:updated>2026-08-13T16:29:18.233Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,TRB Raja,டிஆர்பி ராஜா,tvk,MoU,முதல்வர் விஜய்,CMVIJAY,புரிந்துணர்வு ஒப்பந்தம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/3dkr8c4h/Untitled-design-49.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ 75% ஒப்பந்தங்கள் DMK ஆட்சியில் பேசி முடிக்கப்பட்டவை என டி.ஆர்.பி.ராஜா குற்றச்சாட்டு]]></media:title><media:description type="html"><![CDATA[ Tamil Nadu Investment]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/3dkr8c4h/Untitled-design-49.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை கிண்டியில் நடைபெற்ற "வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026" நிகழ்வில் முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில் ரூ.67,452 கோடி மதிப்பிலான 97 புதிய தொழில் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகியுள்ளன.</p><p>மேலும் தமிழக வெற்றி கழக அரசு பொறுப்பேற்ற 100 நாட்களுக்குள், 104 ஒப்பந்தங்கள் மூலம் ஒட்டுமொத்த முதலீடுகள் ரூ.1,02,514 கோடியைக் கடந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளதாக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார். </p><h3><strong>முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா</strong></h3><p>இந்நிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 75% திமுக ஆட்சியில் பேசி முடிக்கப்பட்டவையே என முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில்.,</p><p>“எனது தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி, குறிப்பாக அதன் தொழில் வளர்ச்சி ஆகியவற்றை விட முக்கியமானது எனக்கு வேறொன்றும் இல்லை. </p><p>எங்கள் மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு முதலீடும், அமைக்கப்படும் ஒவ்வொரு தொழிற்சாலையும், உருவாக்கப்படும் ஒவ்வொரு வேலைவாய்ப்பும் எங்களுக்கு மகிழ்ச்சியையே தருகின்றன. ஆட்சியில் எந்த அரசு இருந்தாலும். </p><p>அதனால்தான், இன்று அறிவிக்கப்பட்ட 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்த தகவல்களில் கூடுதல் வெளிப்படைத்தன்மை தேவைப்படுகிறது. இன்றைய தொழில்முனைவோர் மாநாட்டில் செய்தியாளர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை என்பதே தீவிரமான சந்தேகங்களை எழுப்புகிறது.</p><p>பல தசாப்தங்களாகத் தமிழ்நாட்டின் முதலீட்டுச் சூழலை முன்னிறுத்துவதில், சென்னையைச் சேர்ந்த வணிகச் செய்தியாளர்கள் மிக வலுவான பங்களிப்பை அளித்து வந்துள்ளனர்.</p><p>அப்படிப்பட்டவர்களை ஏன் இந்த மாநாட்டிலிருந்து விலக்கி வைத்தார்கள்? மேலும், அந்த 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்த அதிகாரப்பூர்வப் பட்டியல் ஏன் இன்னும் வெளியிடப்படவில்லை?</p><p>கிடைத்த தகவல்களைத் தொகுத்துப் பார்க்கையில் பின்வரும் உண்மைகள் தெரியவருகின்றன:</p><p>சுமார் 70 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (மொத்த முதலீட்டு மதிப்பில் 75% மற்றும் வேலைவாய்ப்புகளில் 83%-ஐக் கொண்டவை) ஏற்கனவே இயங்கி வரும் நிறுவனங்களின் விரிவாக்கத் திட்டங்களாகவோ அல்லது முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 'திராவிட மாடல்' அரசால் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட முதலீட்டு முயற்சிகளாகவோ உள்ளன.</p><p>'டைட்டன்' நிறுவனத்துக்கான ரூ.1,000 கோடி மதிப்பிலான முதலீடு என்பது, TIDCO மூலமாக அந்த நிறுவனத்துடன் மாநில அரசுக்கு ஏற்கனவே உள்ள உறவின் அடிப்படையில் அமைந்ததாகும்.</p><p>புதிய அல்லது புதிதாக அமையக்கூடிய முதலீடுகள் அனைத்தையும் தாராளமாக கணக்கில் கொண்டாலும், அவை மொத்தம் 24 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மட்டுமே; இது மொத்த முதலீட்டு மதிப்பில் சுமார் 23% மற்றும் வேலைவாய்ப்புகளில் 15% மட்டுமே ஆகும்.</p><p>நான் மிகத் தெளிவாக ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன், தொழில் விரிவாக்கம் வரவேற்கத்தக்கது.</p><p>முதலீட்டு முயற்சியை இறுதி முதலீடாக மாற்றுவது வரவேற்கத்தக்கது. ஒவ்வொரு வேலைவாய்ப்பும் வரவேற்கத்தக்கது.</p><p>ஆனால், முந்தைய ஆட்சியின்போது உருவாக்கப்பட்ட, பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட அல்லது அறிவிக்கப்பட்ட ஒரு முதலீட்டை, வெறும் புதிய மாநாடு ஒன்றில் முன்வைக்கப்பட்டதற்காக மட்டும் 'புதிய சாதனை' என்று கூறிவிட முடியாது.</p><p>திமுக ஆட்சியில் இருந்தபோதெல்லாம் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி புதிய உச்சங்களைத் தொட்டிருந்தாலும், தமிழ்நாட்டின் தொழில் வெற்றி என்பது எந்தவொரு தனிப்பட்ட அரசியல் கட்சியின் சொத்தும் அல்ல; திமுகவும் இதை மதித்து வந்துள்ளது.</p><p>அதனால்தான், பன்முகத் திறமை கொண்ட எங்கள் தொழில் சூழலமைப்பின் வலிமையையும், எங்கள் தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் சிறப்புகளையும் நாங்கள் முன்னிலைப்படுத்திப் பெருமை கொண்டோம்.</p><p>முந்தைய அரசு ஒரு தொழில் சூழலமைப்பை உருவாக்கியது, முதலீட்டாளர்களை ஈர்த்தது, புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது, முதலீட்டு முயற்சிகளை வளர்த்தெடுத்தது மற்றும் நிறுவனங்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்துவதற்கான சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்தது.</p><p>தற்போதைய அரசு புதிதாகக் கொண்டுவரும் விஷயங்களை நியாயமான கண்ணோட்டத்துடன் அணுகுவதோடு, அது உண்மையில் செய்து முடித்தவற்றுக்கான அங்கீகாரத்தையும் வழங்க வேண்டும்.</p><p>இதன் காரணமாகவே, 'இந்தியத் தொழில்முனைவோர் சங்கம்' இன்று முன்வைத்த கருத்து கவனத்திற்குரியதாகிறது.</p><p>புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், முதலீடுகள், உற்பத்திகள், வேலைவாய்ப்புகள், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் வாய்ப்புகள், வேலைவாய்ப்புகள், ஆகிய இன்று ஒப்பந்தம் செய்துகொண்ட நிறுவனங்களின் பட்டியலை ஊடகங்களுக்கு வெளியிட வேண்டும்.</p><p>அவர்கள் அதை ஆய்வு செய்யட்டும். எது உண்மையாகவே புதியது, எது விரிவாக்கம் சார்ந்தது, எது ஏற்கனவே செயல்பாட்டில் இருந்தது என்பதை மக்கள் தெரிந்துகொள்ளட்டும்.</p><p>விளம்பரங்களில் கூறப்படுவது போல அந்த எண்கள் ஈர்க்கக்கூடியதாக இருந்தால், வெளிப்படைத்தன்மை அந்தச் சாதனையை மேலும் வலுப்படுத்தும். தமிழ்நாடு இதற்குச் சற்றும் குறைவானதை ஏற்காது.</p><p>தமிழ்நாட்டின் வளர்ச்சி மீது நம்பிக்கை கொள்வோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை மசோதா குறித்து பரிசீலிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-urges-pm-modi-to-review-constituency-delimitation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-urges-pm-modi-to-review-constituency-delimitation#comments</comments><guid isPermaLink="false">d564e1ef-e139-4e40-ac7f-3e1498b700ca</guid><pubDate>Thu, 13 Aug 2026 16:13:55 +0000</pubDate><atom:updated>2026-08-13T16:13:55.914Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Modi,பிரதமர் மோடி,தொகுதி மறுவரையறை,Delimitation Bill,முதல்வர் விஜய்,CMVIJAY</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/g1i2hwzb/Untitled-design-48.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை நிலைநிறுத்தம் மற்றும் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு கோரி முதல்வர் விஜய், மோடிக்கு கடிதம்]]></media:title><media:description type="html"><![CDATA[ Tamil Nadu Delimitation ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/g1i2hwzb/Untitled-design-48.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஒன்றிய அரசால் உத்தேசிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதி மறுவரையறை மசோதா குறித்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தைப் பரிசீலித்து, அதற்கேற்ப உரிய அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.</p><p>இதுகுறித்து பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எழுதிய கடிதத்தில்:-</p><p>ஒன்றிய அரசால் உத்தேசிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதி மறுவரையறை குறித்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை பரிசீலிக்க வேண்டும்.</p><p>மேலும் அதற்கேற்ப உரிய அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும்.</p><p>நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டமன்ற தொகுதிகளை மறுவரையறை செய்தல்; பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குதல் ஆகிய பொருண்மைகள் மீது தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நடைபெற்ற விவாதங்கள், இதன்மூலம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவரப்படுகிறது.</p><p>இது தொடர்பாக, தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 12.8.2026 அன்று தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.</p><p>அந்த தீர்மானத்தில், மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் தற்போதைய எண்ணிக்கையை மாற்றாமல் அதே நிலையில் நிரந்தரமாகத் தொடரவும்,</p><p>மாநிலங்களின் தற்போதைய நாடாளுமன்ற பிரதிநிதித்துவ அளவைப் பாதுகாப்பதற்கு (மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு இடையேயான தற்போதைய விகிதாச்சாரப் பகிர்வை ஏற்கெனவே உள்ளவாறே தொடர்வதற்கும்),</p><p>மக்களவைக்கும் மாநிலங்களவைக்கும் இடையேயான விகிதத்தை 2.2:1 என்ற நிலையில் பேணுவதற்கும்,</p><p>தற்போதைய 543 உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையின் அடிப்படையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலிலிருந்தே பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கும்,</p><p>தேவையான உரிய அரசியலமைப்பு சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.</p><p>மேலும், மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் பகிர்வை, ’மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில்’ நிர்ணயம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் பின்னணியில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.</p><p>மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்குப் பின்னர், அரசியலமைப்பின் 81(2)(a)-ஆம் சட்டப்பிரிவைப் பின்பற்றி தொகுதி மேற்கொள்ளப்பட்டால், 1967-தமிழ்நாட்டின் மறுவரையறை நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 41-லிருந்து 39-ஆகக் குறைக்கப்பட்டது போன்று, தென்னிந்திய மாநிலங்கள் தங்களின் கணிசமான நாடாளுமன்றத் தொகுதிகளை இழக்க நேரிடும் என்று சட்டமன்றப் பேரவையில் விவாதிக்கப்பட்டது.</p><p>மேலும், மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு திட்டங்களை திறம்பட செயல்படுத்தி, நல்ல பொருளாதார வளர்ச்சியை எய்தி, சிறப்பான சுகாதார மற்றும் பொதுநலத் திட்டங்களை செயல்படுத்தியுள்ள தென்னிந்திய மாநிலங்களுக்கு, 1971-ஆம் ஆண்டிற்கு பிந்தைய மக்கள்தொகையின் அடிப்படையில் தொகுதி மறை மேற்கொள்ளப்பட்டு, தற்போதைய மாற்றியமைக்கும் மறுறை நடவடிக்கையும் பெரும் அநீதி இழைப்பதாக உள்ளது.</p><p>தீர்மானத்தில் பின்வருன வலியுறுத்தப்பட்டுள்ளன:</p><p>1) மக்களலையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 ஆக நிரந்தரமாக்கப்பட வேண்டும்.</p><p>2) மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தற்போதைய மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை தற்போதைய அளவிவேயே நிரந்தரமாக்கப்பட வேண்டும். அதாவது மாநிலங்களுக்கு தற்போதைய இடப் பகிர்வு முறை தொடர வேண்டும்.</p><p>3) எதிர்வரும் மக்களவைப் பொதுத் தேர்தல்களிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்களிலும் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு (1/3) ஒதுக்கீட்டின் பலன் கிடைப்பதை ஒன்றிய அரசு உறுதிசெய்ய வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவை றுத்துகிறது.</p><p>மேலும், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீர்மனைத்தின் நகலை இதனுடன் இணைத்திருக்கிறேன்.</p><p>தமிழ்நாடு சட்டமன்ற பேரவையால் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்தை பரிசிலித்து, இது தொடர்பான உரிய அரசியலமைப்பு சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு பிரதமரை கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்படுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இலங்கையில் உள்ள 49 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-vijay-urges-release-of-49-indian-fishermen-held-in-sri-lanka</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-vijay-urges-release-of-49-indian-fishermen-held-in-sri-lanka#comments</comments><guid isPermaLink="false">922c421c-3636-4e4c-82f0-e65dd42e5413</guid><pubDate>Thu, 13 Aug 2026 15:44:59 +0000</pubDate><atom:updated>2026-08-13T15:44:59.100Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக மீனவர்கள்,இலங்கை கடற்படை,அமைச்சர் ஜெய்சங்கர்,Jaisankar,tamilnadu fisherman,SriLanka Jail</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/od8k3ryq/Untitled-design-47.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ 49 மீனவர்களை விடுவிக்க வெளியுறவுத்துறைக்கு முதல்வர் விஜய் கோரிக்கை]]></media:title><media:description type="html"><![CDATA[ Tamil Nadu Fishermen]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/od8k3ryq/Untitled-design-47.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 9 மீனவர்களை விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.</p><p>மேலும் மீனவர்களின் மீன்பிடி படகை மீட்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறும் முதலமைச்சர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.</p><h3><strong>வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம்</strong></h3><p>இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் எழுதிய கடிதத்தில், “12.08.2026 அன்று இரவு IND-TN-10-MM-329 என்ற பதிவு எண்ணைக் கொண்ட மீன்பிடி இயந்திரப் படகில் மீன்பிடிக்க சென்ற தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்பது இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.</p><p>இந்த சம்பவம் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரின் தனிப்பட்ட கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.</p><p>இந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இதேபோன்று இரண்டு சம்பவங்கள் ஏற்பட்டு மிருந்த கவலையையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.</p><p>இந்த நாள் வரையில் 49 இந்திய மீனவர்கள் இலங்கை அரசால் சிறைக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p><p>எனவே, தகுந்த தூதரக நடவடிக்கைகள் வாயிலாக இலங்கை அரசிடம் இந்த கோரிக்கையை முன்வைத்து சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகையும் விரைாக விடுவித்து, அவர்கள் பாதுகாப்பாக தாய்நாடு திரும்புவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.</p><h3><strong>விரைந்து நடவடிக்கை</strong></h3><p>மேலும், இதுபோன்ற சம்பங்கள் தொடர்ந்து நிகழ்வதால் தாங்கள் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்வது, பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கும், தமிழ்நாட்டு மீனவ சமூகத்தினருக்கும் இந்த விவகாரத்தில் பெரும் நம்பிக்கையையும் நிர்மதியையும் அளிக்கும்.</p><p>இந்த கடிதம் குறித்து ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சரின், உடனடித் தலையீட்டைத் தான் எதிர்நோக்குகிறேன்” என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய இடதுகை பந்துவீச்சாளர்: மிட்செல் ஸ்டார்க் சாதனை</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/starc-is-now-the-leading-wicket-taker-by-a-left-arm-bowler-in-test-history</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/starc-is-now-the-leading-wicket-taker-by-a-left-arm-bowler-in-test-history#comments</comments><guid isPermaLink="false">72118284-61d1-4d69-bd11-ab727baf441b</guid><pubDate>Thu, 13 Aug 2026 15:09:36 +0000</pubDate><atom:updated>2026-08-13T15:09:36.151Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மிட்செல் ஸ்டார்க்,Mitchell Starc,AUSvBAN,ஆஸ்திரேலிய வங்கதேசம் தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/uersgnpg/starc.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ starc]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/uersgnpg/starc.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வங்கதேச அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.</p><h2>ஆஸ்திரேலியா 198 ரன்னுக்கு ஆல் அவுட்</h2><p>இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டார்வின் நகரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 198 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.</p><h2>ஹசன் மகமுது 6 விக்கெட்</h2><p>வங்கதேசம் சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஹசன் மகமுது 6 விக்கெட் வீழ்த்தினார்.</p><p>தொடர்ந்து ஆடிய வங்கதேசம் முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 96 ரன்கள் எடுத்துள்ளது.</p><p>ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.</p><h2>சாதனை படைத்த ஸ்டார்க்</h2><p>இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஸ்டார்க் ஒரு விக்கெட் வீழ்த்தியதன் மூலம் புதிய சாதனையை படைத்துள்ளார்.</p><p>சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய இடதுகை பந்துவீச்சாளர் என்ற சாதனையை மிட்செல் ஸ்டார்க் படைத்துள்ளார்.</p><p>இந்தப் பட்டியலில் இலங்கையின் ரங்கனா ஹெராத் 433 விக்கெட்டுடன் 2வது இடத்திலும், பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் 414 விக்கெட்டுடன் 3வது இடத்திலும் உள்ளனர். </p><p>ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் வார்னே 708 விக்கெட்டுடன் முதல் இடத்திலும், நாதன் லயன் 567 விக்கெட்டுடன் 2வது இடத்திலும், மெக்ராத் 563 விக்கெட்டுடன் 3வது இடத்திலும் உள்ளனர். அந்த வரிசையில் 434 விக்கெட்டுகளுடன் மிட்செல் ஸ்டார்க் 4-வது இடத்தில் உள்ளார். </p><p>உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களில் மிட்செல் ஸ்டார்க் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் 8 டெஸ்ட்களில் 46 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>விபத்து பகுதிக்கு 10 நிமிடத்துக்குள் வராத ஆம்புலன்ஸ்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்: NHAI  அதிரடி</title><link>https://www.maalaimalar.com/news/national/ambulances-fined-rs-10000-if-not-at-crash-site-within-10-minutes-nhai</link><comments>https://www.maalaimalar.com/news/national/ambulances-fined-rs-10000-if-not-at-crash-site-within-10-minutes-nhai#comments</comments><guid isPermaLink="false">f9575540-7ad7-4037-b136-7eb245a9e558</guid><pubDate>Thu, 13 Aug 2026 15:01:29 +0000</pubDate><atom:updated>2026-08-13T15:01:29.361Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Ambulance,தேசிய நெடுஞ்சாலை ஆணையம்,National Highways,ஆம்புலன்ஸ்,NHAI</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/l880b5a7/Untitled-design-45.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ NHAI Ambulance Penalty Rules]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/l880b5a7/Untitled-design-45.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேசிய நெடுஞ்சாலைகளில் பணியில் ஈடுபடுத்தப்படும் ஆம்புலன்ஸ்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு 10 நிமிடங்களுக்குள் சென்றடைய தவறினால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தெரிவித்துள்ளது.</p><p>அதேபோல், பாதிக்கப்பட்டவரை முக்கியமான ‘ஒரு மணி நேரத்திற்குள்’ மருத்துவமனைக்கு கொண்டு செல்ல தவறினாலும் இதேபோன்ற அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h3><strong>இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்</strong></h3><p>இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தேசிய நெடுஞ்சாலையில் பயன்படுத்தப்படும் ஆம்புலன்ஸ்கள், கிரேன்கள் மற்றும் ரோந்து வாகனங்களுக்கான சேவை நிலை ஒப்பந்தங்களை கடுமையாக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.</p><p>தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ், ஏறத்தாழ 3,000 ஆம்புலன்ஸ்களும், தலா 1,000 ரோந்து வாகனங்கள் மற்றும் கிரேன்களும் உள்ளன. இவை ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட 50,000 கி.மீ. நெடுஞ்சாலைகளை உள்ளடக்கிய பகுதிகளில் சேவையில் ஈடுபட்டு வருகின்றன.</p><p>இந்த வாகனங்கள் அனைத்தும் ஜிபிஎஸ் மற்றும் NHAI கேர் செயலியை இயக்கும் பிரத்யேக மொபைல் சாதனங்களையும் கொண்டுள்ளன.</p><p>இந்த கருவிகள் விபத்து நடந்த இடத்தின் தகவல்களை, மீட்பு வாகனங்களுக்கு அனுப்புவதோடு, அவசர காலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் பிற தரவுகளையும் பதிவு செய்கின்றன.</p><p>திருத்தப்பட்ட விதிமுறைகளின்படி, ஒரு நாளில் 1% நேரத்திற்கும் மேலாக வாகனத்தில் NHAI Care செயலி கிடைக்கவில்லை என்றால், ரூ. 2,500 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும் வாகனத்தின் ஜிபிஎஸ் இயங்கவில்லை என்றாலும் இதேபோன்ற அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சபாநாயகர் அளித்த தேநீர் விருந்து: திமுக எம்.பி. கனிமொழி பங்கேற்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/kanimozhi-attends-om-birlas-tea-meeting-as-india-bloc-parties-boycott-event</link><comments>https://www.maalaimalar.com/news/national/kanimozhi-attends-om-birlas-tea-meeting-as-india-bloc-parties-boycott-event#comments</comments><guid isPermaLink="false">22a5815f-90f6-4405-b393-b44b27ddcf49</guid><pubDate>Thu, 13 Aug 2026 14:51:13 +0000</pubDate><atom:updated>2026-08-13T14:51:13.435Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,tea party,தேநீர் விருந்து,கனிமொழி எம்பி,Om Birla,ஓம் பிர்லா,MP Kanimozhi</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/23yw5ixd/kani.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ kanimozhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/23yw5ixd/kani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா வழங்கிய தேநீர் விருந்தில் திமுக சார்பில் கனிமொழி எம்.பி. பங்கேற்றார்.</p><h2>மழைக்கால கூட்டத்தொடர்</h2><p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 20-ம் தேதி தொடங்கியது.</p><p>நீட் தேர்வு முறைகேடு விவகாரம், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் நடத்திய நடவடிக்கை, ராமர் கோவில் நன்கொடை பணம் திருட்டு குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன.</p><p>இதனால் எதிர்க்கட்சிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நீடித்தது. ஆனாலும், எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளிக்கு இடையே முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.</p><p>மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்றும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால் மக்களவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. அமளி தொடர்ந்து நீடித்ததால் மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் ஓம் பிர்லா. அதனை தொடர்ந்து மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது.</p><p>ஜூலை 20-ம் தேதி தொடங்கிய மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது.</p><h2>சபாநாயகர் தேநீர் விருந்து</h2><p>இந்நிலையில், மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடைந்ததை அடுத்து அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கும் வழக்கம்போல் சபாநாயகர் ஓம் பிர்லா தேநீர் விருந்து அளித்தார். இதில் பங்கேற்க அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. </p><p>சபாநாயகரின் தேநீர் விருந்தை காங்கிரஸ், சமாஜவாதி உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் புறக்கணித்தனர். ஆனால், தேநீர் விருந்தில் தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி. பங்கேற்றார்.</p><p>பா.ஜ.க.வுடன் திமுக நெருக்கம் காட்டி வருவதாகவும், தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மசோதாக்களை திமுக உதவியுடன் பாஜக நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாகவும் தவெக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், தேநீர் விருந்தில் கனிமொழி எம்.பி. பங்கேற்றது அரசியல் களத்தில் பரபரப்பையும் விவாதத்தையும் எற்படுத்தியுள்ளது.</p><p>இதுகுறித்து திமுக எம்.பி. கனிமொழி கூறுகையில், காங்கிரசிடம் இருந்து மட்டுமே விலகி இருக்கிறோம். இந்தியா கூட்டணியில்தான் இருக்கிறோம் என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>தாய்லாந்து விமான சம்பவ எதிரொலி: அனைத்து விமானிகளுக்கும் போதைப் பொருள் பரிசோதனையை கட்டாயமாக்கிய ஏர் இந்தியா!</title><link>https://www.maalaimalar.com/news/national/aftermath-of-the-thailand-flight-incident-air-india-makes-drug-testing-mandatory-for-all-pilots</link><comments>https://www.maalaimalar.com/news/national/aftermath-of-the-thailand-flight-incident-air-india-makes-drug-testing-mandatory-for-all-pilots#comments</comments><guid isPermaLink="false">87a460f3-d6a9-4906-92ff-eeed4f3726ea</guid><pubDate>Thu, 13 Aug 2026 14:26:30 +0000</pubDate><atom:updated>2026-08-13T14:26:30.692Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ஏர் இந்தியா,Air India,விமானிகள்,pilots,drug test,போதைப்பொருள் பயன்பாடு சோதனை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/4rimlsie/New-Project-2026-08-13T195605.832.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தாய்லாந்து விமானச் சம்பவத்தின் எதிரொலி: அனைத்து விமானிகளுக்கும் போதைப் பொருள் பரிசோதனையை கட்டாயமாக்கிய ஏர் இந்தியா!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/4rimlsie/New-Project-2026-08-13T195605.832.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தாய்லாந்தில் இருந்து டெல்லி வந்த விமானத்தின் விமானி போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவனம் தனது குழுமத்தின் அனைத்து விமானிகளுக்கும் போதைப்பொருள் பரிசோதனையைக் கட்டாயமாக்கியுள்ளது.</p><p>இந்த சோதனை விதிமுறை இன்றுமுதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது. </p><h2>ஏர் இந்தியாவின் இந்த திடீர் நடவடிக்கை ஏன்?</h2><p>ஆக.4ம் தேதியன்று தாய்லாந்தின் புக்கெட் நகரிலிருந்து டெல்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானம் நடுவானில் திடீரென 300 அடி கீழே சரிந்தது. இந்த திடீர் குலுங்கலால் விமான ஊழியர்கள் உட்பட பயணிகள் பலர் காயமடைந்தனர். </p><p>விமானம் தரையிறங்கியதும் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், அந்த விமானத்தின் முதன்மை கேப்டன் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது உறுதியானது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட இரு விமானிகளும் உடனடியாகப் பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.</p><p>இந்நிலையில் ஏர் இந்தியா தனது ஊழியர்களுக்கு பல்வேறு புதிய நடவடிக்கைகளை கொண்டுவந்துள்ளது. அதுதொடர்பாக ஊழியர்களுக்கும் சுற்றறிக்கை விடுத்துள்ளது. </p><h2>புதிய விதிமுறை என்ன?</h2><p>அந்த சுற்றறிக்கையின்படி, ஏர் இந்தியா மற்றும் அதன் குறைந்த கட்டணச் சேவையான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களின் அனைத்து விமானிகளுக்கும் இந்த சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.</p><p>குருகிராமில் உள்ள ஏர் இந்தியா பயிற்சி மையம் அல்லது விமானப் பயணம் முடிந்து விமானிகள் கலந்துகொள்ளும் சந்திப்புக் கூட்டங்கள் அல்லது ஏர் இந்தியா தலைமை அலுவலகங்கள் மற்றும் விமானிகள் தங்கியிருக்கும் தளங்களில் எங்காவது இந்த சோதனை போதைப்பொருள் பயன்பாடு சோதனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>Digital Arrest: ஓய்வுபெற்ற நீதிபதியிடமே சைபர் மோசடி - ரூ.2.50 கோடி பறிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/judge-cheated-via-whatsapp-for-2-5-crore-posing-as-cbi-officer</link><comments>https://www.maalaimalar.com/news/national/judge-cheated-via-whatsapp-for-2-5-crore-posing-as-cbi-officer#comments</comments><guid isPermaLink="false">b0238d59-dd36-44bf-8cc0-d904637f9902</guid><pubDate>Thu, 13 Aug 2026 14:26:22 +0000</pubDate><atom:updated>2026-08-13T14:26:22.394Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Digital Arrest,judge,சைபர் கிரைம்,நீதிபதி,cyber scam,இணைய மோசடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/q85o3jjf/Untitled-design-46.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Cyber scam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/q85o3jjf/Untitled-design-46.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராஜஸ்தானில் சிபிஐ அதிகாரிகள் மற்றும் ரிசர்வ் வங்கி மேலாளர் போல் இணையவழியில் நடித்து, 90 வயதான முன்னாள் மாவட்ட நீதிபதியிடம் இருந்து ரூ.2.50 கோடியை மோசடி செய்த நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.</p><h3><strong>முன்னாள் நீதிபதி</strong></h3><p>ஜெய்ப்பூர் மாவட்டத்தில் கண்பத் சிங் பண்டாரி என்பவர் முன்னாள் மாவட்ட நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவர் தனது வீட்டில் தனியாக வசித்து வந்தபோது, கடந்த ஜூலை 28ஆம் தேதி வாட்ஸ்அப் அழைப்பு மூலம் மோசடி நபர்கள் தொடர்பு கொண்டுள்ளனர்.</p><h3><strong>போலி சிபிஐ அதிகாரி</strong></h3><p>அப்போது அவர்களில் ஒருவர் காவல் சீருடை அணிந்துகொண்டு தன்னை மும்பையை சேர்ந்த சிபிஐ அதிகாரி என கூறியுள்ளார். </p><p>இதையடுத்து வாட்ஸ்அப் அழைப்பு மூலம் தொடர்பு கொண்ட அந்த நபர், முன்னாள் நீதிபதியிடம், தங்களிடம் ரூ.50 கோடி மதிப்பிலான ஹவாலா பரிவர்த்தனை கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதில் ரூ.40 லட்சம் அவரது எஸ்பிஐ கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.</p><p>பின்னர் இந்த புகார் குறித்து உங்களை கைது செய்ய உள்ளதாக கூறியுள்ளார். இந்த புகாரில் தங்களை கைது செய்யாமல் இருக்க, எங்களது வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்புமாறு மோசடி நபர் மிரட்டல் விடுத்துள்ளார்.</p><p>இதைத் தொடர்ந்து, முன்னாள் நீதிபதி தனது கணக்கில் இருந்து சுமார் ரூ.2.5 கோடி ரூபாயை மோசடி நபரின் வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளார். இந்த சம்பவம் குறித்து உங்கள் குடும்பத்தினரிடம் தகவல் தெரிவிக்க வேண்டாம் எனவும், அந்த மோசடி நபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><h3><strong>போலி ரிசர்வ் வங்கி மேலாளர்</strong></h3><p>பின்னர், சிறிது நாள் கழித்து மற்றொரு நபர் நீதிபதியை வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டு, தன்னை ஒரு ரிசர்வ் வங்கி மேலாளர் என்று கூறியுள்ளார்.</p><p>இதையடுத்து அந்த மோசடி நபர் நீதிபதியிடம், ஹவாலா பரிவர்த்தனை தொடர்பான பணத்தை தாங்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் அந்த நிதி முதலீடுகள் குறித்த விவரங்களை தன்னிடம் தெரிவிக்குமாறும் மோசடி நபர் கூறியுள்ளார்.</p><p>இதற்கிடையே நீதிபதி, பயம் மற்றும் கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். பின்னர் தனது மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் பிற நிதி ஆவணங்களின் விவரங்களை மோசடி நபருடன் வாட்ஸ் அப்பில் பகிர்ந்துள்ளார்.</p><p>பின்னர் மோசடிக்காரர்கள் நீதிபதியிடம், அவரது பென்சன் கணக்கிலிருந்து பணத்தை மாற்றுமாறு கேட்டுள்ளனர். ஒவ்வொரு உரையாடலுக்கு பிறகும், மோசடி நபர்கள் வாட்ஸ்அப் தகவல்களை அழிக்குமாறு கூறியுள்ளனர்.</p><p>நீதிபதி பென்சன் பணத்தை பறிமாற்றம் செய்வதற்காக எஸ்.பி.ஐ வங்கியின் ஜோஹரி பஜார் கிளையை அணுகியுள்ளார். அப்போது வங்கி மேலாளருக்கு சந்தேகம் ஏற்பட்டு அந்த பண பரிவர்த்தனையை நிறுத்தியுள்ளார்.</p><h3><strong>முதல் தகவல் அறிக்கை</strong></h3><p>இதையடுத்து நீதிபதியிடம் விசாரித்த வங்கி மேலாளர், அவர் இணையவழி மோசடிக்கு ஆளாகியிப்பதை கண்டறிந்தார். இதைத்தொடர்ந்து நீதிபதியின் மருமகன் ரவீந்திர சிங் மோனோட் அளித்த புகாரின் பேரில், ஜோதி நகர் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர்.</p><p>இதுகுறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், "நீதிபதிக்கு ஜூலை 28 அன்று அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு வந்துள்ளது.</p><p>முன்னாள் நீதிபதியை மோசடி நபர்கள் சுமார் 15 நாட்கள் 'டிஜிட்டல் காவலில்' வைத்துள்ளனர்.</p><p>மோசடி நபர்கள் நீதிபதியிடம் வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தை மாற்றுமாறும் கூறியுள்ளனர்.</p><h3><strong>வாட்ஸ்அப் மூலம் மோசடி</strong></h3><p>முன்னாள் நீதிபதி ஆகஸ்ட் 3 முதல் 10 ஆம் தேதிக்குள் காந்தி நகரில் உள்ள எஸ்பிஐ கணக்கிலிருந்து ரூ. 2,50,51,000 (ரூ. 2.5 கோடி) பணத்தை மாற்றியுள்ளார்" என்று தெரிவித்தனர்.</p><p>இந்த நிலையில் ஜெய்ப்பூரில் உள்ள ஜோதி நகர் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து, ஆன்லைன் இணைய வழியில் மோசடியில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>டிஎன்பிஎல்: ரித்திக் ஈஸ்வரன் அதிரடியில் கோவையை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது நெல்லை</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/nellai-royal-kings-beat-kovai-kings-in-tnpl-2026</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/nellai-royal-kings-beat-kovai-kings-in-tnpl-2026#comments</comments><guid isPermaLink="false">b59c9227-cb5d-4f6b-abe4-3e27cf23e6c1</guid><pubDate>Thu, 13 Aug 2026 13:56:53 +0000</pubDate><atom:updated>2026-08-13T13:56:53.910Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,Nellai Royal Kings,நெல்லை ராயல் கிங்ஸ்,rithik easwaran,ரித்திக் ஈஸ்வரன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/709edit8/nellai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ nellai kings]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/709edit8/nellai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கோவை அணிக்கு எதிரான போட்டியில் நெல்லை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.</p><p>10-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் அடுத்த நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி  மைதானத்தில் நடந்து வருகிறது.</p><h2>நெல்லை ராயல் கிங்ஸ்</h2><p>இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெற்ற 16-வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.</p><p>அதன்படி, முதலில் பேட் செய்த கோவை கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை எடுத்தது.</p><p>அதிரடியாக ஆடிய பாலசுப்பிரமணியன் 42 ரன்னிலும், கேப்டன் ஷாருக் கான் 29 ரன்னிலும் அவுட்டாகினர். சுரேஷ் லோகேஷ்வர் 26 ரன்னில் ஆட்டமிழந்தார்.</p><p>2-வது விக்கெட்டுக்கு இணைந்த சுரேஷ் லோகேஷ்வர்-பாலசுப்ரமணியன் சச்சின் ஜோடி 59 ரன்கள் சேர்த்தது.</p><p>நெல்லை அணி சார்பில் யுதீஸ்வரன் 3 விக்கெட்டும், இம்மானுவல் செரியன், சச்சின் ராதி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p>இதையடுத்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை கிங்ஸ் அணி களமிறங்கியது. கோவை வீரர்கள் துல்லியமாக பந்து வீசினர். இதனால் நெல்லை அணியினர் ரன் எடுப்பதில் சிரமப்பட்டனர். சீரான இடைவெளியில் விக்கெட்களும் விழுந்தன.</p><h2>ரித்திக் ஈஸ்வரன் அதிரடி</h2><p>ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் ரித்திக் ஈஸ்வரன் அதிரடியாக ஆடினார். அவர் கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அரை சதம் கடந்த அவர் 31 பந்தில் 6 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 69 ரன்களைக் குவித்து கடைசி ஓவரில் அவுட்டானார்.</p><h2>திரில் வெற்றி</h2><p>இறுதியில், நெல்லை ராயல் கிங்ஸ் அணி 19.5 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது. </p><p>கோவை அணி சார்பில் தீபன் லிங்கேஷ், கிஷோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.</p><p>நடப்பு தொடரில் நெல்லை அணி பெறும் 3வது வெற்றி இதுவாகும். நெல்லை அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 3 வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 3வது இடம் பிடித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சங்கீத நாடக அகாடமி விருதைப் பெற்றார் நடிகர் வாகை சந்திரசேகர்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-vaagai-chandrasekhar-received-the-sangeet-natak-akademi-award</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-vaagai-chandrasekhar-received-the-sangeet-natak-akademi-award#comments</comments><guid isPermaLink="false">02ba52a6-5c75-47fb-a8fd-c36cffb63457</guid><pubDate>Thu, 13 Aug 2026 13:53:59 +0000</pubDate><atom:updated>2026-08-13T13:53:59.939Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>President Droupadi Murmu,Vaagai Chandrasekhar,Sangeet Natak Akademi Puraskar award,வாகை சந்திரசேகர்,குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு,சங்கீத நாடக அகாடமி விருது</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/ghjh20el/New-Project-2026-08-13T192117.663.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சங்கீத நாடக அகாடமி விருதைப் பெற்றார் நடிகர் வாகை சந்திரசேகர்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/ghjh20el/New-Project-2026-08-13T192117.663.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான சங்கீத புரஸ்கர் விருது மற்றும் அகாடமி விருதுகளை 115 கலைஞர்களுக்கு, டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று வழங்கி சிறப்பித்தார். </p><p>அந்த வரிசையில் தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகர் வாகை சந்திரசேகருக்கு சங்கீத நாடக அகாடமி விருதை வழங்கி கௌரவித்தார். நாடகம் மற்றும் கலைத்துறைக்கு இவர் ஆற்றிய ஒட்டுமொத்த பங்களிப்பைப் பாராட்டி இந்த உயரிய விருது அவருக்கு வழங்கப்படுகிறது. </p><p>விருது பெற்ற பின் பேசிய வாகை சந்திரசேகர், இந்த விருதை தமிழ்நாட்டில் வாழும் அனைத்து நாடகக் கலைஞர்களுக்கும் சமர்ப்பிப்பதாக நெகிழ்ச்சியுடன் கூறினார்.</p><h2>வாகை சந்திரசேகர்</h2><p>1980களில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தனது யதார்த்தமான மற்றும் தனித்துவமான நடிப்புத் திறமையால், குணச்சித்திர கதாபாத்திரங்கள் முதல் வில்லன்கள் வரை பலதரப்பட்ட வேடங்களில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, ஒரு அழியாத முத்திரையைப் பதித்தார்.</p><p>கலைத்துறைக்கு இவர் ஆற்றிய சிறந்த சேவையைப் பாராட்டி, 1991ம் ஆண்டு தமிழ்நாடு அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கி சிறப்பித்தது. 2002 ஆம் ஆண்டு வெளியான 'நண்பா நண்பா' திரைப்படத்திற்காக சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தேசிய விருதை வென்றுள்ளார்.</p><h2>அரசியல் </h2><p>கலைத்துறை மட்டுமல்லாமல் அரசியலில் கால்பதித்தார் வாகை சந்திரசேகர். திமுக சார்பில் வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராகத் திறம்படப் பணியாற்றினார். தற்போது தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.</p>]]></content:encoded></item><item><title>தந்தையின் பாசத்திற்காக 6,000 கி.மீ பயணம்: ஜெர்மன் பெண்ணை பஞ்சாபி முறைப்படி கரம்பிடித்த வாலிபர்!</title><link>https://www.maalaimalar.com/news/national/german-bride-travels-6000-km-for-punjabi-wedding-honouring-fathers-roots</link><comments>https://www.maalaimalar.com/news/national/german-bride-travels-6000-km-for-punjabi-wedding-honouring-fathers-roots#comments</comments><guid isPermaLink="false">2675db18-3d72-41a0-8262-a562b12dea89</guid><pubDate>Thu, 13 Aug 2026 13:41:23 +0000</pubDate><atom:updated>2026-08-13T13:41:23.187Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பஞ்சாப்,Punjab,GermanBride,FathersLove,Intercultural Marriage,IndoGermanWedding</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/ahbpcds9/IndoGermanWedding" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ IndoGermanWedding]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/ahbpcds9/IndoGermanWedding?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>"காதல் என்பது எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் துணையின் உணர்வுகளை மதிப்பதாகும்" என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF">ஜெர்மனி</a>யில் பிறந்த 30 வயதான பியா பிளாங்கர்மேன். </p><p>கைகளில் மருதாணி, மணிக்கட்டில் 'பாரம்பரிய வளையல்கள்' அணிந்து <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D">பஞ்சாபி</a> மணப்பெண்ணாக மாறிய அவர், தனது கணவரின் தந்தைக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார்.</p><p>ஜெர்மனியில் வசிக்கும் 42 வயதான ராபின் சிங் (பாதி பஞ்சாபி, பாதி ஜெர்மனியர்), ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பியா பிளாங்கர்மேனை ஆகஸ்ட் 8-ஆம் தேதி அன்று பஞ்சாபின் மொஹாலியில் உள்ள ஒரு குருத்வாராவில் சீக்கிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார். </p><p>தனது மறைந்த தந்தையின் பஞ்சாபி வேர்களைக் கௌரவிப்பதற்காக, ஜெர்மனியிலிருந்து 6,000 கிலோமீட்டர் பயணம் செய்து ராபின் இந்த திருமணத்தை நடத்தியுள்ளார்.</p><h2><strong>பின்னணி மற்றும் தந்தையின் நிறைவேறாத ஆசை</strong></h2><p>1980களின் தொடக்கத்தில், ராபினின் தந்தை ஜகதார் சிங் டூர் வேலை தேடி ஜெர்மனிக்கு குடியேறினார். 1983 இல், அவர் அனெக்ரெட் என்ற ஜெர்மன் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். </p><p>அப்போது நிலவிய சூழ்நிலை காரணமாக அவர்களால் இந்தியா வர முடியாமல், ஜெர்மனியிலேயே பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ராபின், ஜென்னி என இரு குழந்தைகள் பிறந்தனர்.</p><p>கடந்த 2017 ஆம் ஆண்டு ஜகதார் சிங் மாரடைப்பால் காலமானார். அவரது திருமணமும், இறுதிச் சடங்குகளும் ஜெர்மனியிலேயே நடந்ததால், பஞ்சாபில் உள்ள அவரது பெற்றோரால் குடும்பத்தில் ஒரு திருமணத்தைக் கூட நேரில் பார்க்க முடியாமல் போனது. </p><p>தனது தந்தையின் ஆசையையும், தாத்தா பாட்டியின் ஏக்கத்தையும் உணர்ந்த ராபின், தனது திருமணத்தை நிச்சயம் பஞ்சாபில் தான் நடத்துவேன் என்று தனது அத்தைகளுக்கு வாக்குறுதி அளித்திருந்தார்.</p><h2><strong>இரு நாட்டு கலாச்சார சங்கமம்</strong></h2><p>இந்த திருமணத்திற்காக ராபினின் ஜெர்மன் தாய் அனெக்ரெட் (69), அவரது சகோதரி மற்றும் ஜெர்மன் நண்பர்கள் இந்தியா வந்திருந்தனர். அதேபோல், மணப்பெண் பியாவின் தாய் ரெஜினா மற்றும் அவரது நண்பர்களும் பஞ்சாப் வந்தனர்.</p><p>மணமகள் பியாவிற்கு பஞ்சாபி மொழி தெரியாது என்றாலும், திருமண சடங்குகளின் போது அனைவரும் நடனமாடி மகிழ்ந்த போது அவரும் இணைந்து மகிழ்ந்தார். ஜெர்மனி குடும்பத்தினர் வசதியாக உணர்வதற்காக திருமணத்தில் ஜெர்மன் இசையும் இசைக்கப்பட்டது. </p><p>மணமகளின் தாய், சகோதரி மற்றும் நண்பர்கள் பாரம்பரிய பஞ்சாபி உடைகளை அணிந்தும், பஞ்சாபி நாட்டுப்புற பாடல்களுக்கு நடனமாடி மகிழ்ந்தனர்.</p><h2><strong>தயாரான மணமகள்:</strong></h2><p>கூடைப்பந்து பயிற்சியாளரான ராபின், சமூகப் பணியாளரான பியாவிடம் பஞ்சாப் திருமணத்தைப் பற்றிக் கூறியபோது, அவர் மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். எனினும், இந்தியத் திருமணங்கள் பிரமாண்டமாக இருக்கும் என்பதால், சடங்குகளைத் தவறாகச் செய்து யாருடைய மனதையும் புண்படுத்தக் கூடாது என்பதில் பியா மிகவும் கவனமாக இருந்தார். </p><p>இதற்காக, ஒர்க் வைத்த உடைகள், உரத்த இசை மற்றும் நடனங்களுக்கு மனதளவில் தயாராகி யூடியூப் விடியோக்களைப் பார்த்து பியா தன்னை தயார் படுத்திக்கொண்டதாக ராபின் கூறினார்.</p><p>மறைந்த தந்தையின் மீதான பாசத்திற்காக, எல்லைகளையும் கலாச்சாரங்களையும் கடந்து நடந்து முடிந்த இந்த சர்வதேசத் திருமணம் அங்கிருந்த அனைவரையும் நெகிழச் செய்தது. </p><p>இந்த ஜோடி ஜெர்மனி திரும்பியதும் அங்கு அவர்களின் முறைப்படி மற்றுமொரு கொண்டாட்டத்தை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தனர். இவர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் பரவி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>அமித்ஷா தலைமையில் தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாடு!</title><link>https://www.maalaimalar.com/news/topnews/conference-of-south-indian-chief-ministers-chaired-by-amit-shah</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/conference-of-south-indian-chief-ministers-chaired-by-amit-shah#comments</comments><guid isPermaLink="false">360d0446-386e-463a-8f4d-9499404f1419</guid><pubDate>Thu, 13 Aug 2026 13:19:04 +0000</pubDate><atom:updated>2026-08-13T13:19:04.944Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Amit Shah,அமித்ஷா,southern CMs conference,தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/lla1xtxg/New-Project-2026-08-13T174447.143.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமித்ஷா தலைமையில் தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாடு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/lla1xtxg/New-Project-2026-08-13T174447.143.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், 31-வது தென் மண்டல முதலமைச்சர்கள் மாநாடு வரும் ஆகஸ்ட் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. </p><p>செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் இந்த முக்கிய ஆலோசனைக்கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.</p><p>இந்த மாநாட்டில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்களும், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மற்றும் முதலமைச்சர், அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவு ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் பங்கேற்பார்கள்.</p><p>மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த தென் மண்டல கவுன்சில் கூட்டம் நடத்தப்படுகிறது. தற்போது தமிழ்நாட்டிற்கும், கர்நாடகாவிற்கும் இடையே காவிரி விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அதுதொடர்பாக பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>அதேவேளையில் மற்ற மாநிலங்களுக்குள்ளான ஒருங்கிணைப்புகள், வளர்ச்சித் திட்டங்கள், பாதுகாப்பு குறித்தும் ஆலோசிக்கப்படும். மேலும் தற்போது பேசுபொருளாக உள்ள நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பான விவகாரங்களும் இதில் பேசப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>மின்சார நெருக்கடியில் வங்கதேசம்: உதவிக் கரம் நீட்ட இந்தியாவிடம் கோரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/world/bangladesh-electricity-crisis-india-aid-request</link><comments>https://www.maalaimalar.com/news/world/bangladesh-electricity-crisis-india-aid-request#comments</comments><guid isPermaLink="false">9a83d0a5-41ce-4225-8f36-44f2cfa56125</guid><pubDate>Thu, 13 Aug 2026 12:23:59 +0000</pubDate><atom:updated>2026-08-13T12:23:59.487Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,Bangladesh,வங்கதேசம்,power crisis,மின்சார நெருக்கடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/9o9f1ux3/bangaladesh.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bangladesh faces power crisis]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/9o9f1ux3/bangaladesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வங்கதேசம், தற்போது வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு மிக மோசமான மின்சார தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருகிறது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தினமும் 9 முதல் 10 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. </p><p>இந்த மின்சார நெருக்கடியைச் சமாளிக்கவும் எரிபொருள் இருப்பை உயர்த்தவும் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச அரசு, இந்தியாவிடம் கூடுதல் டீசல் வழங்கி உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.</p><h2>இருளில் மூ<strong>ழ்கிய கிரா</strong>மப்புறங்கள்</h2><p>வங்கதேசத்தில் மின்சாரத் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய தரவுகளின்படி நாட்டின் மின்சாரத் தேவை சுமார் 18,000 மெகாவாட்டாக உள்ள நிலையில், மின் உற்பத்தி வெறும் 13,000 மெகாவாட் அளவிலேயே உள்ளது. இதனால் சுமார் 5,000 மெகாவாட் அளவிற்கு கடுமையான மின் பற்றாக்குறை நிலவுகிறது. தலைநகர் டாக்காவைத் தவிர்த்து, வெளி மாவட்டங்களிலும் கிராமப்புறங்களிலும் இதன் தாக்கம் மிக மோசமாக உள்ளது. </p><p>ஒரு நாளைக்கு 8 முதல் 10 மணி நேரம் வரை தொடர் மின்வெட்டு ஏற்படுவதால் வணிகங்கள், சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் விவசாயப் பணிகள் ஸ்தம்பித்துப் போயுள்ளன. தீவிர வெப்ப அலை வீசி வரும் சூழலில், இந்த நீண்ட நேர மின்வெட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையை மேலும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது.</p><h2>அவ<strong>சர நடவடிக்கை</strong>கள்</h2><p>மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் நாட்டின் அரசு பல்வேறு அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வர்த்தக வளாகங்கள், கடைகள் மற்றும் சந்தைகள் அனைத்தும் இரவு 8 மணிக்குள் கட்டாயமாக மூடப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மின்சார சேமிப்பை உறுதி செய்ய பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு முன்னதாகவே விடுமுறை அறிவிப்பது உள்ளிட்ட பல்வேறு அவசரகால நடவடிக்கைகளையும் வங்கதேச அரசு மேற்கொண்டு வருகிறது.</p><h2>டீ<strong>சல் விநியோகத்திற்காக</strong> இந்தியாவை நாடும் வங்கதேசம்</h2><p>மின் பற்றாக்குறைக்கு எரிபொருள் தட்டுப்பாடே முதன்மையான காரணியாக இருப்பதால், இந்தியாவிடம் இருந்து கூடுதல் டீசல் இறக்குமதி செய்ய வங்கதேச அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. அசாமின் நுமாலிகர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து எல்லை தாண்டிய 'இந்தியா-வங்கதேச நட்புறவு குழாய் பாதை' வழியாக டீசல் விநியோகத்தை அதிகரிக்குமாறு வங்கதேசத்தின் மின் மற்றும் எரிசக்தி அமைச்சகம் இந்திய தூதரக அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. வங்கதேசத்தில் நிலவும் இந்த கடுமையான எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க இந்தியா கூடுதல் டீசல் வழங்கி உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>ரூ.36.53 கோடி இ-சலான் மோசடி: 3 ஆண்டுகளாக இழுத்தடிக்கும் போலீஸ் விசாரணை - ஆந்திர உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி!</title><link>https://www.maalaimalar.com/news/national/36-53-crore-e-challan-fraud-andhra-high-court-anger</link><comments>https://www.maalaimalar.com/news/national/36-53-crore-e-challan-fraud-andhra-high-court-anger#comments</comments><guid isPermaLink="false">537b215b-7ad7-44d1-8c30-86a2aeb695d0</guid><pubDate>Thu, 13 Aug 2026 12:18:45 +0000</pubDate><atom:updated>2026-08-13T12:18:45.328Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உயர்நீதிமன்றம்,ஆந்திர பிரதேசம்,Highcourt,AndraPradesh,PoliceInvestigation,OnlineFraud,EChallanScam,இ-சலான்,DataEvolveSolutions,TrafficChallanScam</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/x8x00fwa/AndraPradesh-HighCourt" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ AP HighCourt]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/x8x00fwa/AndraPradesh-HighCourt?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/andhra-pradesh">ஆந்திரா</a>வில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான இ-சாலன் வசூலில் ரூ.36.53 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில், 3 ஆண்டுகள் ஆகியும் போலீசார் விசாரணையை முடிக்காதது குறித்து ஆந்திர உயர்நீதிமன்றம் தனது கடுமையான அதிருப்தியைத் தெரிவித்துள்ளது. </p><p>இந்த விவகாரத்தில் டிஜிபி உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விசாரணையின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>குண்டூரைச் சேர்ந்த ஷிபி சக்ரவர்த்தி என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கின் அடிப்படையில், தலைமை நீதிபதி லிசா கில் மற்றும் நீதிபதி சல்லா குணரஞ்சன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த அதிருப்தியை வெளியிட்டுள்ளது.</p><h2><strong>வழக்கின் பின்னணி என்ன?</strong></h2><h2><strong>குளோனிங் ஆப் மூலம் மோசடி</strong></h2><p>காவல்துறைக்குத் தொழில்நுட்ப சேவைகளை வழங்கி வந்த 'டேட்டா எவால்வ் சொல்யூஷன்ஸ்' என்ற நிறுவனம், தங்களுடைய ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் சட்டவிரோதமாக ஒரு 'குளோனிங் ஆப்' மூலம் வாகன ஓட்டிகளிடம் இருந்து இ-சலான் பணத்தைத் தொடர்ந்து வசூலித்துள்ளது.</p><h2><strong>கோடிக்கணக்கில் பணம் திசைதிருப்பல்</strong></h2><p>இவ்வாறு போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட ரூ.36.53 கோடி அரசு கணக்கிற்குச் செல்லாமல், அந்த நிறுவனத்தின் இயக்குநர் அவினாஷ் என்பவரின் தனிப்பட்ட கணக்குகளுக்குத் திசைதிருப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவினாஷ், அக்ஷிதா, ரவிகிரண் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.</p><h2><strong>நீதிமன்றம் காட்டிய அதிருப்தி</strong></h2><p>இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஏ. ஜெயந்தி ஆஜராகி, "வழக்கின் விசாரணை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கூடுதல் சாட்சிகளை விசாரிக்க வேண்டியுள்ளது மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன" என்று விளக்கம் அளித்தார்.</p><p>ஆனால், இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஒரு மோசடி வழக்கில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை நிலுவையில் இருப்பதை ஏற்க முடியாது என்றனர். </p><p>இந்த மந்தமான விசாரணை குறித்து டிஜிபியின் கவனத்திற்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கவும், வழக்கின் இறுதி அறிக்கை அல்லது குற்றப்பத்திரிகையை விரைந்து தாக்கல் செய்யவும் போலீசாருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பிறப்புச் சுற்றுலாவுக்கு முற்றுப்புள்ளி: 600-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரின் விசாக்களை ரத்து செய்தது அமெரிக்கா!</title><link>https://www.maalaimalar.com/news/world/us-crackdown-on-birth-tourism-600-plus-visas-revoked</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-crackdown-on-birth-tourism-600-plus-visas-revoked#comments</comments><guid isPermaLink="false">b10fe2d0-18d1-462e-8767-64728b81df0e</guid><pubDate>Thu, 13 Aug 2026 12:11:34 +0000</pubDate><atom:updated>2026-08-13T12:11:34.576Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,America,விசா ரத்து,பிறப்புச் சுற்றுலா,Birth tourism,visa cancel</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/lpp2rxls/visa.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Trump]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/lpp2rxls/visa.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவில் பிறக்கும் வெளிநாட்டினரின் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கும் பிறப்புரிமை குடியுரிமை சட்டத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தடை விதித்து உத்தரவிட்டார்.</p><p>இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பிறப்புரிமை குடியுரிமையை முடிவுக்குக் கொண்டுவரும் டிரம்பின் நிர்வாக உத்தரவை அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஜூன் 30-ந்தேதி ரத்து செய்தது.</p><p>இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு பிறப்புரிமை குடியுரிமையைக் கட்டுப்படுத்த டிரம்ப் 2 புதிய நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டார். இதில் அமெரிக்காவிற்கு வந்து குழந்தையைப் பெற்றெடுக்கும் நோக்கத்துடன் விசா கோருபவர்களை கட்டுப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.</p><p>இந்த நிலையில் பிறப்புச் சுற்றுலாவுக்கு எதிரான தீவிர நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கடந்த ஒரு மாதத்தில் வெளிநாட்டினரின் 600-க்கும் மேற்பட்ட விசாக்களை ரத்து செய்து உள்ளதாக வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.</p><p>வெளியுறவுத்துறையால் சமீபத்தில் உருவாக்கப்பட்ட ‘பிறப்புச் சுற்றுலா தடுப்புப் பணிக்குழு’வின் ஆய்வைத் தொடர்ந்து இந்த விசா ரத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.</p><p>இதுதொடர்பாக மார்கோ ரூபியோ தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:-</p><p>வெறும் ஒரு மாதத்தில், பிறப்புச் சுற்றுலா தடுப்புப் பணிக்குழு உலகம் முழுவதும் உள்ள வெளிநாட்டினரின் 600-க்கும் மேற்பட்ட விசாக்களை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்தத் துஷ்பிரயோகத்திலிருந்து நமது நாட்டைப் பாதுகாக்கும் பணியைத் தொடர்ந்து மேற்கொள்ளும். அமெரிக்கக் குடியுரிமை விற்பனைக்குரியது அல்ல என்றார்.</p><p>மேலும் அமெரிக்கச் சட்டங்களைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு பிறப்புச் சுற்றுலா மூலம் பெரும் லாபம் ஈட்ட சில கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன.</p><p>வெளிநாட்டினர் தங்கள் குழந்தைகளுக்கு அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றுத்தரும் நோக்கில், அமெரிக்க விசா நடைமுறையை ஏமாற்ற அவர்களுக்குப் பயிற்சி அளிப்பது, பயணம் மற்றும் தங்குமிட ஏற்பாடுகளைச் செய்வது, ஏன் போலி ஆவணங்களைத் தயாரிப்பது போன்ற செயல்களில் இக்கும்பல்கள் ஈடுபடுகின்றன என்று மார்கோ ரூபியோ குற்றம்சாட்டி உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பாஜக-விடம் பணம் மட்டுமே மிச்சம் உள்ளது: அகிலேஷ் யாதவ்</title><link>https://www.maalaimalar.com/news/national/only-money-left-for-bjp-to-win-elections-akhilesh-yadav</link><comments>https://www.maalaimalar.com/news/national/only-money-left-for-bjp-to-win-elections-akhilesh-yadav#comments</comments><guid isPermaLink="false">2d9f6fd8-7d5e-4cf3-afb8-05bcda01be18</guid><pubDate>Thu, 13 Aug 2026 12:10:44 +0000</pubDate><atom:updated>2026-08-13T12:10:44.900Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,அகிலேஷ் யாதவ்,Akhilesh Yadav,Samajwadi party,சமாஜ்வாடி கட்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/cnec5bd2/Untitled-design-43.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Akhilesh Yadav]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/cnec5bd2/Untitled-design-43.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரப் பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், பெண்களுக்கு ரூ. 20,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படலாம் என்று செய்தி வெளியான நிலையில், தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பாரதிய ஜனதா கட்சியிடம் பணத்தை தவிர வேறு எதுவும் இல்லை என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். </p><p>உத்தரப் பிரதேசத்தில் 403 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இதற்கிடையில் தேர்தல் வாக்குறுதியாக உத்தரப் பிரதேசத்தில் உள்ள பெண்களுக்கு பாஜக ஊக்கத்தொகையாக ரூ.20,000 வழங்கப்பட உள்ளதாக இணையத்தில் தகவல் வெளியானது.</p><h3><strong>அகிலேஷ் யாதவ் பதிவு</strong></h3><p>இந்நிலையில் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பாஜக-விடம் பணத்தை தவிர வேறு எதுவும் மிச்சமில்லை.</p><p>அதுவும் பாஜக முறைகேடாக சம்பாதித்த பணம் தான்; அந்த பணத்தை உத்தரப் பிரதேசத்தின் மதப்பற்றுள்ள பெண்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.</p><p>பெண்களுக்கு பணம் வழங்கப்படும் என அறிவித்து தேர்தலில் வெற்றி பெற்ற மற்ற மாநிலங்களில், ஒருபுறம் அதை கொடுக்க தயங்கும் அதே வேளையில், மறுபுறம் பாஜக கொடுத்த பணத்தை மக்களிடம் திரும்ப கேட்கிறார்கள்.</p><p>அந்த பணத்தை திருப்பி கொடுக்க முடியாத பெண்களுக்கு எதிராக, பாஜக காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள் மற்றும் வழக்குகள் போன்ற கண்டிக்கத்தக்க வழிகளை கையாள்கிறது என்று உத்தரப் பிரதேசத்தின் பெண்கள் கேள்வி எழுப்புகின்றனர்.</p><p>இன்று பாஜக அரசு ஆண்டுக்கு ரூ.50,000 வழங்குவது பற்றி பேசுகிறது, ஆனால் கடந்த 10 ஆண்டுகளிலேயே இந்த பணத்தை அவர்களால் கொடுத்திருக்க முடியும், இருந்தும் அவர்கள் அதை கொடுக்கவில்லை.</p><p>பாஜகவின் ஊழல் நிறைந்த அரசு கடந்த 10 ஆண்டுகளில் பெண்களுக்குச் சொந்தமான 5 லட்சம் ரூபாயை விழுங்கிவிட்டது. இப்போது வெறும் 20,000 ரூபாய் மட்டுமே தருவதாக வெற்றுப் பேச்சு பேசுகிறது.</p><p>5 லட்சம் ரூபாயில் 20,000 ரூபாய் என்பது வெறும் நான்கு சதவீதம் மட்டுமே. அதாவது, இந்த பாஜகவினர் பெண்களின் பங்கில் 96 சதவீதத்தை விழுங்கிவிட்டனர்.</p><p>கோயிலில் நடந்த திருட்டு மற்றும் குழந்தைகள் மீதான தாக்குதல்களுக்குப் பிறகு, பாஜகவிடம் அறநெறியும் இல்லை, தைரியமும் இல்லை.</p><p>பாஜக தனது திட்டங்களின் கீழ் தகுதியுள்ளவர்களுக்கு பலன்களை வழங்கும்போதெல்லாம், அந்தப் பணம் அதற்கு உரிமையுள்ளவர்களை சென்றடைவதுதான் முக்கியமான விஷயம்,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஜார்க்கண்ட் போராட்டம்: அடையாளம் தெரியாத 500 மாணவர்கள் உட்பட 600 பேர்மீது வழக்குப்பதிவு!</title><link>https://www.maalaimalar.com/news/national/jharkhand-protest-cases-registered-against-600-people-including-500-unidentified-students</link><comments>https://www.maalaimalar.com/news/national/jharkhand-protest-cases-registered-against-600-people-including-500-unidentified-students#comments</comments><guid isPermaLink="false">91cb4245-9dc4-4af2-8ba6-01e0f829b156</guid><pubDate>Thu, 13 Aug 2026 12:06:24 +0000</pubDate><atom:updated>2026-08-13T12:06:24.600Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Jharkhand,மாணவர்கள் போராட்டம்,ஜார்க்கண்ட்,students protest</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/rfeubmev/New-Project-2026-08-13T173559.455.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜார்க்கண்ட் போராட்டம்: அடையாளம் தெரியாத 500 மாணவர்கள் உட்பட 600 பேர்மீது வழக்குப்பதிவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/rfeubmev/New-Project-2026-08-13T173559.455.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜார்க்கண்டில் அரசுப் பணி தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக போராடிய 500 அடையாளம் தெரியாத மாணவர்கள் உட்பட மொத்தம் 600 பேர் மீது அம்மாநில காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.  </p><p>ராஞ்சியில் உள்ள சட்டமன்றத்தை நோக்கி மாணவர்கள் நடத்திய பேரணியில் தடை உத்தரவுகளை மீறியது மற்றும் தடுப்புகளை உடைத்தது போன்ற காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>போராட்டம்</h2><p>ஜார்க்கண்ட் மாநில அரசால் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளில் நடைபெற்ற குளறுபடிகளை கண்டித்தும், குளறுபடி நடந்த தேர்வுகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்; இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தவேண்டும் என மாணவர்கள் கடந்த 20 நாட்களாக தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ரகுபர் தாஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் மாணவர்களின் CBI விசாரணை கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். </p><p>மாணவர்களின் தொடர் போராட்டத்தை அடுத்து, முறைகேடு புகார் எழுந்த 3 அரசுத் தேர்வுகளை ரத்து செய்ய ஜார்க்கண்ட் அரசு ஒப்புக்கொண்டுள்ளது. எனினும், அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறும் வரை தங்களது உண்ணாவிரதம் மற்றும் போராட்டங்கள் தொடரும் என மாணவர் அமைப்புகள் அறிவித்துள்ளன.</p><p>இந்நிலையில் இப்போராட்டதின் ஒருபகுதியாக திங்கள்கிழமையன்று ஜார்க்கண்ட் சட்டமன்றத்தை முற்றுகையிட முயன்ற சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். </p><p>600 போராட்டக்காரர்கள் மீது காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் 100 போராட்டக்காரர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அடையாளம் தெரியாத 500 மாணவர்கள் மற்றும் பிற போராட்டக்காரர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>