<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 07 Sep 2026 17:02:49 +0000</lastBuildDate><item><title>கடந்த 6 மாதத்தில் 60,000 சிறார் பிரசவங்கள்: அரசு நலத்திட்டம் ரத்து செய்யப்படும் என சுவேந்து அதிகாரி எச்சரிக்கை </title><link>https://www.maalaimalar.com/news/national/west-bengal-records-60000-minor-deliveries-in-six-months-government-warns-action</link><comments>https://www.maalaimalar.com/news/national/west-bengal-records-60000-minor-deliveries-in-six-months-government-warns-action#comments</comments><guid isPermaLink="false">bf08fc95-6807-47b9-9121-7e95b5e8b494</guid><pubDate>Mon, 07 Sep 2026 16:40:31 +0000</pubDate><atom:updated>2026-09-07T16:40:31.741Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மேற்கு வங்கம்,சுவேந்து அதிகாரி,child marriage,குழந்தை திருமணம்,west bengal,suvendhu adhikari</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/rttacz94/Untitled-design-37.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bihar child marriage]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/rttacz94/Untitled-design-37.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பீகாரில் குழந்தை திருமணம் செய்து கொள்பவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு, அவருக்கு வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகள் திரும்ப பெறப்படும் என அம்மாநில முதலமைச்சர் சுவேந்து அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">பீகார்</a> மாநிலத்தில் இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரை, 18 வயது குறைந்த சிறுமிகளுக்கு சுமார் 60,000 பிரசவங்கள் மருத்துவமனையில் நடைபெற்றதாக மாநில சுகாதார துறை ஒரு அறிக்கை வெளியிட்டது. </p><p>இந்த நிலையில் நபான்னாவில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு மேற்கு வங்கத்தின் முதல்வர் சுவேந்து அதிகாரி செய்தியாளர்களை சந்தித்தார்.  </p><h3><strong>குழந்தை திருமணத்தில் முதலிடம்</strong></h3><p>அப்போது அவர் கூறுகையில், “ஆறு மாத காலப்பகுதியில், முர்ஷிதாபாத்தில் 12,847 சிறுமிகள் மருத்துவமனைகளில் பிரசவித்ததன் மூலம் அதிகபட்ச எண்ணிக்கை பதிவாகியுள்ளது.</p><p>தெற்கு பர்கானாஸ் பகுதி 4,178 வழக்குகளுடன் அடுத்த இடத்தில் உள்ளது. 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளின் குழந்தை திருமணங்கள் மற்றும் பிரசவங்களில் மேற்கு வங்கம் நாட்டிலேயே முதலிடம் வகிக்கிறது.</p><p>18 வயதுக்குட்பட்ட சிறுமி சம்பந்தப்பட்ட ஒவ்வொரு கர்ப்பம் மற்றும் பிரசவ வழக்கும் பதிவு செய்யப்பட வேண்டும்.</p><p>சந்தேகத்திற்கிடமான குழந்தை திருமணங்களைக் கண்டறியவும், அதற்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் சுகாதாரப் பதிவேடுகளைப் பயன்படுத்துவார்கள்.</p><h3><strong>வயது சரிபார்க்கப்படும்</strong></h3><p>சிறுவயதில் திருமணம் செய்து வைக்கப்பட்ட பெண்கள் கண்டறியப்பட்டால், அவர்களின் கணவர்களுக்கு விளக்கம் கோரும் அறிவிப்புகள் வழங்கப்பட்டு, மனைவியின் வயதுக்கான சரியான ஆதாரத்தை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.</p><p>வயதுக்கான சரியான ஆதாரத்தை அவர்கள் வழங்கத் தவறினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>இந்த அதிரடி நடவடிக்கையின் போது கண்டறியப்படும் வழக்குகளில், காவல்துறை குற்றவியல் நடவடிக்கையைத் தொடங்கி, கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளும்.</p><p>குழந்தை திருமணங்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டவர்களிடம் இருந்து நலத்திட்டங்கள் மற்றும் இதர திட்டங்களின் பலன்கள் திரும்பப் பெறப்படும்.</p><p>சிறுவர் திருமணங்களை நடத்தி வைக்கும் அல்லது அதற்கு வழிவகுக்கும் மதகுருக்கள் மற்றும் இதில் ஈடுபடுபவர்களுக்கு சட்டப்படி சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்” என்று அவர் கூறினார்.</p><h3><strong>கடுமையான போக்சோ சட்டம்</strong></h3><p>மேலும், 18 வயதுக்குட்பட்ட பெண்ணுடன், அவர் திருமணமானவரா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் பாலியல் உறவு கொள்வது குற்றமாகும் என்று சுட்டிக்காட்டிய சுவேந்து அதிகாரி, போக்சோ சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் என்று கூறினார்.</p><p>18 வயதுக்குட்பட்ட சிறுமியுடன் உடல் உறவு கொள்வது போக்சோ சட்டத்தின் பிரிவுகளுக்கு உட்பட்டது என்றும், அதற்கான சிறைத் தண்டனை 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையிலும், சில சூழ்நிலைகளில் மரண தண்டனையும் விதிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.</p><p>சிறார் கர்ப்பம் தொடர்பான வழக்குகள் குறிப்பாகக் கடுமையான விசாரணைக்கும் நடவடிக்கைக்கும் உள்ளாகும் என்று மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: முதலமைச்சர் பேசியது எதற்கும் ஆதாரம் கிடையாது..!- உதயநிதி- 07 செப். 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-07-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-07-september-2026#comments</comments><guid isPermaLink="false">8c774a06-0db5-4dde-8aa8-7f7fb7910b2b</guid><pubDate>Mon, 07 Sep 2026 03:57:28 +0000</pubDate><atom:updated>2026-09-07T16:13:52.036Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly,tvk</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/bazo2c3e/Udhay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay- Udhayanithi stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/bazo2c3e/Udhay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது. </p><p>காவல்துறை மானியக்கோரிக்கை மீது முதலமைச்சர் விஜய் பதிலுரை அளிக்க உள்ளார். </p><p>சட்டசபைக்கு உறுப்பினர்கள் வருகை.</p><p>தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து கேள்வி எழுப்புவோம் - திமுக கொறடா எ.வ.வேலு திட்டவட்டம்</p><p>3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டசபை இன்று மீண்டும் கூடியது.</p><p>2026-ம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் அரசினர் சட்ட முன்வடிவு அறிமுகம் செய்தார் அமைச்சர் செங்கோட்டையன்- இதனை தொடர்ந்து சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார். </p><p>எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு கோரி முழக்கம் எழுப்பி வருகின்றனர். </p><p>2026-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் இரண்டாம் திருத்த சட்டமுன்வடிவை அறிமுகம் செய்தார் அமைச்சர் ஆனந்த்</p><p>காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்சர் விஜய் பதிலுரை தொடங்கியது.</p><p>சாலைகள், ஆலைகள் அமைப்பதால் மாநிலத்தின் வளர்ச்சி தீர்மானிக்கப்படுவதில்லை- முதலமைச்சர் விஜய்</p><p>சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருந்தால் தொழில் முதலீடு வரும், தொழில்கள் முறையாக நடைபெறும்- முதலமைச்சர் விஜய்</p><p>சட்டத்தை மதித்து நடப்பவர்களுக்கு காவல்துறை உற்ற நண்பராக இருக்க வேண்டும்- முதலமைச்சர் விஜய்</p><p>குற்றவாளி எந்த கட்சியை சேர்ந்தவராயினும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதே த.வெ.க. அரசின் நிலைப்பாடு- முதலமைச்சர் விஜய்</p><p>யாரிடமும் சார்பின்றி நடுநிலை தவறாது நீதி வழங்குவதே சரியான ஆட்சி என திருவள்ளுவர் கூறியுள்ளார்- முதலமைச்சர் விஜய்</p><p>எதிர்க்கட்சியினர் கூறிய கருத்தாக இருந்தாலும் அதில் உண்மை உள்ளதா என ஆராய்ந்து சரி செய்வதில் பாகுபாடில்லை- முதலமைச்சர் விஜய்</p><p>ஒவ்வொரு குற்றத்திற்கு பின்னும் குடும்ப பிரச்சனை, போதைப்பொருள் பயன்பாடு இருக்கலாம்- முதலமைச்சர் விஜய்</p><p>அனைத்து குற்றங்களும் கடந்த 100 நாட்களில் தோன்றியதல்ல- முதலமைச்சர் விஜய்</p><p>சொத்து தகராறு, பழிவாங்கும் மனப்பான்மை கூட குற்றத்திற்கான காரணமாக இருக்கலாம்- முதலமைச்சர் விஜய்</p><p>ஒவ்வொரு காவல் நிலையங்களும் தங்களுக்கு எல்லைக்குட்பட்ட மக்களின் நெருக்கமான தொடர்பாக ஏற்படுத்த வேண்டும்- முதலமைச்சர் விஜய்</p><p>பள்ளி மாணவர்கள் தொடங்கி அனைவருக்கும் டிஜிட்டல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்- முதலமைச்சர் விஜய்</p><p>2021 முதல் 2025 வரை நடைபெற்ற குற்றச் சம்பவங்களை கூறி ஒதுங்கிச் செல்ல எனது மனம் இடம் தரவில்லை- முதலமைச்சர் விஜய்</p><p>குற்றத்திற்கு போதை கலாச்சாரம் காரணம் என ஒற்றை வார்த்தை கூறி தப்பிப்பது நல்ல பண்பு அல்ல- முதலமைச்சர்</p><p>கோவை அமுதன் கொலை, சென்னை தனுஷ்குமார் கொலை சம்பவத்தில் 36 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்- முதலமைச்சர் விஜய்</p><p>குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் வலுவான சைபர் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கப்பட வேண்டும்- முதலமைச்சர் விஜய்</p><p>ஊழலற்ற நேர்மையான ஆட்சி செய்வதே தவெக அரசின் நோக்கம், அரசு ஊழியர்கள் ஊழல் செய்வதை ஏற்க முடியாது- முதலமைச்சர் விஜய்</p><p>போதைப்பொருள் கலாச்சாரம் கடந்த ஆட்சியாளர்கள் கவனிக்காமல் இருந்ததால் தற்போது ஆழமாக வேரூன்றி நிற்கிறது- முதலமைச்சர் </p><p>பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக எந்த ஒரு குற்றம் நடைபெற்றாலும் நடவடிக்கை அறிவுறுத்தப்பட்டுள்ளது- முதலமைச்சர் விஜய்</p><p>காவலில் எந்த மரணம் நடைபெற்றாலும் எந்த ஒரு பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்- முதலமைச்சர் விஜய்</p><p>போதைப்பொருள் தடுப்புப்படை நடவடிக்கைகளால் போதை என்கிற மரத்தின் ஒரு சில கிளைகளை அகற்றி இருக்கிறோம்- முதலமைச்சர் விஜய்</p><p>காவல்நிலையத்தில் உயிரிழப்பு என்பது சாதாரணமான நிகழ்வு அல்ல, காவல்துறை மீதான நம்பிக்கையை பாதிக்கும் பிரச்சனை- முதலமைச்சர்</p><p>குற்றம் தெருவில் மட்டுமல்ல இணையத்திலும் நடைபெறுவதால் குற்றம் நடக்கும் முன்பே கண்டறிந்து தடுப்பது அவசியம்- முதலமைச்சர்</p><p>காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை துறை வாரியாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்- முதலமைச்சர் விஜய்</p><p>அரசியலுக்காக தனிப்பட்ட முறையில் பெண்களை தரம் தாழ்ந்து பேச வேண்டாம் என முதலமைச்சர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். </p><p>கருத்துரிமை, பேச்சுரிமையை எந்த அளவுக்கு பயன்படுத்துகிறார்கள் என்பதை யோசிக்க வேண்டும்- முதலமைச்சர் விஜய்</p><p>பெண்கள் உட்பட அனைவரையும் தரம் தாழ்ந்து பேசுவதை தவிர்க்க வேண்டும்- முதலமைச்சர் விஜய்</p><p>ஒரு எம்எல்ஏ ஆர்தோ சர்ஜன் போல் பேசுகிறார், சட்டமன்றத்தில் எலும்பை உடைப்பாராம்- முதலமைச்சர் விஜய்</p><p>பெண்கள் குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசுவதை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்- முதலமைச்சர் விஜய்</p><p>பழிவாங்கும் எண்ணத்தில் நான் அரசியலுக்கு வரவில்லை, அப்படி நினைத்தால் அதற்கு நான் பொறுப்பில்லை- முதலமைச்சர் விஜய்</p><p>சட்டசபையில் ஜெயலலிதா பட்ட அவமானங்கள் நமக்கு தெரியும்- முதலமைச்சர் விஜய்</p><p>எதற்கெடுத்தாலும் மிசாவை பார்த்தவங்க என்று பேசி வருகின்றனர், மிசா வரலாறு நமக்கு தெரியும்- முதலமைச்சர் விஜய்</p><p>தமிழ்நாடு தான் என் வீடு, 8 கோடி மக்கள் தான் நமக்கு சொந்தங்கள்- முதலமைச்சர் விஜய்</p><p>திமுக ஆட்சிக்காலத்தில் அமலாக்கத்துறை அனுப்பிய ஆவணத்தை காட்டி முதலமைச்சர் விஜய் சட்டசபையில் ஆவேசமாக பேசி வருகிறார். </p><p>1970 களில் திமுக ஆட்சியில் வீராணம் திட்டத்திற்கு சத்யநாராயண பிரதர்ஸ் டெண்டருக்கு கமிஷன் கேட்டது தொடர்பாக ED அறிக்கை வைத்து முதலமைச்சர் விஜய் பேச்சு</p><p>25 ஆண்டுகளுக்கு முன்பே கலைஞரின் மருமகன் டெண்ருக்கு ரூ.29 லட்சம் தவணை முறையில் லஞ்சம். கலைஞர் கருணாநிதி மேல் எனக்கு மதிப்பும் மரியாதையும் உள்ளது, நான் அமலாக்கத்துறை அறிக்கை தான் பேசுகிறேன். முதலமைச்சர் பதவியை கலைஞர் கருணாநிதி தவறாக பயன்படுத்தியதாக அமலாக்கத்துறை அறிக்கை அளித்துள்ளது- முதலமைச்சர் விஜய்</p><p>அரசியல் பாரம்பரியம் தெரியுமா சீனியாரிட்டி தெரியுமா என பேசுவோர் குறித்து தான் மக்களுக்கு எடுத்து சொல்கிறேன். சர்க்காரியா கமிஷன் எழுதிய புத்தகம் சட்டமன்ற நூலகத்தில் உள்ளது, அதை எடுத்து படியுங்கள் - முதலமைச்சர் விஜய்</p><p>ஆதாரத்தை பக்கத்திலேயே வைத்துக்கொண்டு தேடுவது தான் திமுகவின் பழக்கம் - முதலமைச்சர் விஜய்</p><p>7.5 முதல் 10 சதவீதம் வரை கட்சி நிதி திமுக பெற்றதாக அமலாக்கத்துறையை கூறியுள்ளது- முதலமைச்சர் விஜய்</p><p>கட்சி நிதியில் நேரடி பயனாளியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி இருந்ததாக ED அறிக்கையில் உள்ளது- முதலமைச்சர் விஜய்</p><p>திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது பதவியை தவறாக பயன்படுத்தினார் என்றும் அறிக்கையில் உள்ளது- முதலமைச்சர் விஜய்</p><p>முன்னாள் அமைச்சருடன் பல ஐஏஎஸ் அதிகாரிகளும் ஊழலில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை அறிக்கை- முதலமைச்சர் விஜய்</p><p>குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரி ரத்தீஷ் துபாயில் ஒளிந்து கொண்டிருப்பது ஏன்?- முதலமைச்சர் கேள்வி</p><p>திமுகவினர் எப்போது எதை செய்தாலும் குடும்பமாக தான் செய்வார்கள்- முதலமைச்சர் விஜய்</p><p>செய்யும் தவறையே முறையாக செய்யும் வகையில் விஞ்ஞான ஊழலில் ஈடுபட்டுள்ளனர்- முதலமைச்சர் விஜய்</p><p>மதுபாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.100 வரை கூடுதலாக ஊழல் வசூலித்ததை முறையாக செய்துள்ளனர்- முதலமைச்சர் விஜய்</p><p>ஆதாரம் வேணும் ஆதாரம் வேணும் என சொல்வோர்களுக்கு தற்போது ஆதாரம் போதுமா? முதலமைச்சர் விஜய் கேள்வி</p><p>திமுக இருக்கும் இடத்தில் தான் தவறு நடக்கும், தவறு நடக்கும் இடத்தில் தான் திமுக இருக்கும்- முதலமைச்சர் விஜய்</p><p>ஊழல் செய்வோர் தான் ஆதாரம் கேட்பர், ஊழலே செய்யாதோர் அமைதியாக இருப்பார்கள்- முதலமைச்சர் விஜய்</p><p>மக்களை ஏமாற்றிய போலி பிம்பம், திமுகவின் பிராண்ட் உடைக்கப்படும். அண்ணா, எம்ஜிஆர், என்டிஆருக்கு பின் விஜய் தான். இறைவனும், இயற்கையும் என்றுமே நம் பக்கம் தான் இருப்பார்கள்- முதலமைச்சர் விஜய். </p><p>கரூர் கேங்க் என்று என்னவொரு சூப்பர் பெயர் பாருங்களேன், கரூர் கேங்க் தலைவர் யார் என்று தெரிந்துக்கொள்ள மக்கள் ஆவலாக உள்ளனர்- முதலமைச்சர் விஜய்.</p><p>செய்யும் தவரையே முறையாக செய்யும் வகையில் விஞ்ஞான ஊழலில் ஈடுபட்டுள்ளனர். </p><p>மதுபாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.100 வரை கூடுதலாக ஊழல் வசூலித்ததை முறையாக செய்துள்ளனர்- முதலமைச்சர் விஜய்.</p><p>திமுக இருக்கும் இடத்தில் தான் தவறு நடக்கும், தவறு நடக்கும் இடத்தில் தான் திமுக இருக்கும்- முதலமைச்சர் விஜய்.</p><p>ஊழல் செய்வோர் தான் ஆதாரம் கேட்பர், ஊழலே செய்யாதோர் அமைதியாக இருப்பார்கள்.</p><p>திமுக அரசு பொறுப்பேற்றதும் அதிமுக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் எதற்கு ரத்து செய்யப்பட்டது ஏன்?- முதலமைச்சர் விஜய்.</p><p>திமுக ஆட்சியில் மூடுவிழா கண்ட திட்டங்களுக்கு பட்டியலிட்டால் ஒரு நாளே போதாது.</p><p>திமுக செய்த தவறுகளை மக்கள் நினைவில் வைத்திருப்பதால் தான் தேர்தலில் தகுந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர்- முதலமைச்சர் விஜய்</p><p>திமுக ஆட்சிக்காலத்தில் 4 ஆண்டுகள் மடிக்கணினி கொடுக்கவில்லை; ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் மூடப்பட்டது.</p><p>அம்மா மினி கிளினிக், தாலிக்கு தங்கம், அம்மா பைக், ஆடு மாடு வழங்கும் திட்டம் திமுக ஆட்சியில் நிறுத்தம்- முதலமைச்சர் விஜய்.</p><p>மக்கள் நலனில் கண்ணும் கருத்துமாக உள்ள தவெக அரசு இனியும் அப்படி தான் இருக்கும்- முதலமைச்சர் விஜய்.</p><p>திமுக ஆட்சியில் குற்றங்கள் நடைபெற்றபோது அரசியல் தலையீட்டால் எப்ஐஆர் பதிவதில் கால தாமதம் அனைவரும் அறிந்ததே.</p><p>கடலூர் எம்.பி சுரேஷ் முந்திரி ஆலையில் பணியாற்றியவர் மரணம், தற்கொலை என சித்தரிப்பு- முதலமைச்சர் விஜய்.</p><p>தவெக ஆட்சியில் ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் உடனடி சட்ட நடவடிக்கை.</p><p>திமுக ஆட்சிக்காலத்தில் பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லை என்று முதலமைச்சர் விஜய் குற்றச்சாட்டு.</p><p>சென்னை விருகம்பாக்கத்தில் 2022ல் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த பெண் காவலரிடம் அத்துமீறல்.</p><p>பெண் காவலரின் புகாரை வாபஸ் பெற பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. 2023-ல் தான் வழக்கு பதிவு செய்யப்பட்டது- முதலமைச்சர் விஜய்.</p><p>திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினர் தரன் மனைவி சிவசங்கரி காவல் ஆய்வாளரை கன்னத்தில் அறைந்தார்.</p><p>கோவில் ஊழியர் மட்டும் கைது செய்யப்பட்டார். ஆய்வாளரை அறைந்த குற்றவாளி ஜாமின் பெற திமுக உதவியாக இருந்தது- முதலமைச்சர் விஜய்.</p><p>ஆளுங்கட்சியினர் தொடர்புடைய வழக்கில் காலதாமதம், திமுக நிர்வாகிகள் காப்பாற்றப்பட்டது என பெரிய பட்டியல் உள்ளது- முதலமைச்சர் விஜய்.</p><p>பல்லாவரம் முன்னாள் எம்எல்ஏ மகன் வீட்டில் வேலைபார்த்த பெண் பாதிக்கப்பட்டபோது உடனடி நடவடிக்கை இல்லை.</p><p>தவெக ஆட்சியில் குற்றம் செய்வோர் மீது கட்சி பாகுபாடின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது- முதலமைச்சர் விஜய்.</p><p>எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பு குரலை பார்த்து சிரித்தவாறே பதிலுரையை முதலமைச்சர் விஜய் முடித்தார்.</p><p>முதலமைச்சர் விஜய் பதிலுரை அளித்தபோது அமைதியாக இருந்து கேட்டிருக்க வேண்டும் என எதிர்க்கட்சியினருக்கு சபாநாயகர் கண்டிப்பு.</p><p>எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனுமதியின்றி போஸ்டர் காட்டுவது குரல் கொடுப்பதை ஏற்க முடியாது- சபாநாயகர்.</p><p>பேச அனுமதி மறுப்பதாக குற்றம்சாட்டி திமுக எம்எல்ஏக்கள் இருக்கையில் இருந்து எழுந்து நின்று குரல் கொடுத்து தொடர் அமளி.</p><p>சட்டசபையில் பேச அனுமதி கோரி அமளியில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏக்கள சபாநாயகர் இருக்கை முன்பாக அமர்ந்து தர்ணா.</p> <p>முதலமைச்சர் பதிலுரையின்போது அமைதியாக இருந்திருந்தால் பேச அனுமதித்து இருப்பேன்- சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்.</p><p>சட்டமன்ற நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் திமுக உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அவை முன்னவர் பரிந்துரை.</p><p>திமுக உறுப்பினர்கள் பேசுவதற்கு அனுமதிக்குமாறு முதலமைச்சர் விஜய் சொல்லியுள்ளார்- சபாநாயகர்.</p><p>திமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட நிலையில் எதிர்கட்சியினர் பேச அனுமதியுங்கள் என முதலமைச்சர் விஜய் கோரிக்கை.</p><p>திமுக உறுப்பினர்கள் பேசுவதற்கு அனுமதிக்குமாறு முதலமைச்சர் விஜய் சொல்லியுள்ளார். அமைதியாக இருக்கையில் அமருங்கள்- சபாநாயகர்.</p><p>தொடர்ந்து திமுக அமளியில் ஈடுபட்டிருந்த நிலையில், திமுக உறுப்பினர்கள் பேச மீண்டும் அனுமதி மறுத்தார் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்.</p><p>சட்டசபையில் பேச அனுமதி மறுக்கப்படுவதை கண்டித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு.</p><p>எதிர்கட்சித் தலைவர் உதயநிதி பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததை அடுத்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.</p><p>என்னை நிர்பந்தம் செய்வதுபோல் திமுகவினர் நடந்து கொள்வதால் சபையில் பேச அனுமதிக்க முடியாது- சபாநாயகர்.</p><p>தொடர்ந்து பேசிய தமிழ்நாடு வனப்படை ரூ.100.72 கோடியில் மறுசீரமைப்பு செய்து வலுப்படுத்தப்படும் என அமைச்சர் ரஞ்சித்குமார் அறிவிப்பு.</p><p>வன உயிரினங்களால் ஏற்படும் பல்வேறு வகையான சேதங்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையானது சேதத்தின் தன்மைக்கேற்ப, அந்த இழப்பிற்கு உரிய நிவாரணமாக அமையும் வகையில் உயர்த்தி நிர்ணயிக்கப்படும்- அமைச்சர் ரஞ்சித் குமார்</p><p>தமிழ்நாட்டின் மாநில மரமான பனைமரத்தின் மரபணு பண்புகளை வகைப்படுத்துதல் மற்றும் மரபணு மேம்பாடு ஆகியவற்றை மேற்கொள்ளும் நோக்கில், "தமிழ்நாடு பனைமர மரபணு பாதுகாப்பு மற்றும் மரபணு மேம்பாட்டுத் திட்டம்" ரூ.50 லட்சத்தில் செயல்படுத்தப்படும்- அமைச்சர் ரஞ்சித் குமார்</p><p>வன விலங்குகளுக்கு ஏற்படும் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து நோய்பரவலைத் தடுக்க, வனவிலங்குகளைப் பாதுகாக்க, வனவிலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்களை (Zoonotic Diseases) தடுக்க, நடமாடும் வனவிலங்கு தடயவியல் மற்றும் நோய்கண்டறியும் ພໍ (Mobile Wildlife Forensic and Disease Diagnostic Laboratory) ரூ.1 கோடி செலவில் தென் தமிழ்நாட்டில் தயார் நிலையில் வைக்கப்படும்-அமைச்சர் ரஞ்சித் குமார்.</p><p>தமிழ்நாடு முழுவதும் கிராமப்புற, நகர்ப்புற மற்றும் நகரை ஒட்டிய புறநகர்ப் பகுதிகளில், அரசு, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பிற நிறுவனங்களுக்குச் சொந்தமான நிலங்களில் தலா ஒரு ஹெக்டேர் பரப்பளவில் 25 இயற்கைப் பூங்காக்கள் (Nature Parks) உருவாக்கப்படும். இத்திட்டத்திற்காக ரூ.10 கோடி செலவிடப்படும்-  வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார்</p><p>5 ஆண்டுகளில் தமிழ்நாடு வனத்தீ மேலாண்மைத் திட்டம் ரூ.60.58 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்- அமைச்சர் ரஞ்சித்குமார்.</p><p>சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அறையில், அவர் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை.</p><p>கவிஞர் கண்ணதாசன் திமுகவை பற்றி Short &amp; Sweetஆ ஒன்னு சொன்னாரு 'பேசிப்பழகிய பொய், வாங்கிப் பழகிய கை, போட்டுப் பழகிய பை' இதுதான் திமுக.. இவ்ளோதான் திமுக- பதிலுரையின்போது முதல்வர் விஜய் பேச்சு.</p><p>சட்டசபைக்கு நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த திமுக உறுப்பினர்களை சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்த அதிமுக சட்டமன்ற குழு தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.</p><p>சட்டசபையில் பேச அனுமதி மறுப்பதாக குற்றம்சாட்டி வெளிநடப்பு செய்த நிலையில் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.</p><p>சட்டசபையில், முதலமைச்சர் விஜய் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை வைத்து பேசினார். </p><p>தற்போது திமுக ஆட்சி நடைபெறவில்லை, தவெக ஆட்சி நடைபெறுவதை நீங்கள் நம்புங்கள் என நான் ஏற்கனவே சொல்லியிருந்தேன்.</p><p>முதலமைச்சருக்கு 15 கேள்விகளை முன்வைத்திருந்தேன். ஒரு கேள்விக்கு கூட பதில் அளிக்கவில்லை- உதயநிதி ஸ்டாலின்.</p><p>முதலமைச்சர் பேசி முடித்ததும் விளக்கம் அளிக்க அனுமதிக்குமாறு நாங்கள் கோரிக்கை வைத்தோம். </p><p>பேச அனுமதிப்பேன் என கூறிய சபாநாயகர் மீண்டும் யாருடைய அழுத்தத்தினாலோ என்னமோ அனுமதியை மறுத்துவிட்டார்.</p><p>திங்கள்கிழமை பதிலளிப்பதாக சொல்லி கடந்த வியாழக்கிழமை ஓடிவிட்டார் முதலமைச்சர் விஜய்- உதயநிதி ஸ்டாலின்</p><p>மனப்பாடம் செய்து ஒப்பிவித்தல் போட்டியைபோல் தவறான கருத்துக்களை ஒப்புவித்துள்ளார் முதலமைச்சர் விஜய்.</p><p>பஞ்ச் டயலாக் என ரீல்ஸ்க்காக மட்டுமே இன்றும் முதலமைச்சர் விஜய் பேசியுள்ளார்.</p><p>பஞ்ச் டயலாக் மற்றும் டைவர்ஷன் டேக்டிக்ஸ் மட்டுமே பயன்படுத்துகிறார் முதலமைச்சர் விஜய்- உதயநிதி ஸ்டாலின்</p><p>திமுகவினர் மீது வழக்கு இருந்தால் நடவடிக்கை எடுங்கள் என்ற தான் நாங்களும் கூறுகிறோம்.</p><p>நேற்று நடந்த கொலை பற்றி பேசும்போது 1970-களுக்கு செல்கிறார், சர்காரியா கமிஷனுக்கு செல்கிறார் முதலமைச்சர்.</p><p>முதலமைச்சர் விஜய் அரசியலுக்கு வந்து ஆட்சியை பிடித்தது ஒரு பெரிய விபத்து, அவருக்கு மிசாவை பற்றி பேச தகுதியில்லை- உதயநிதி ஸ்டாலின்.</p><p>திரைப்பட ரிலீஸ்க்காக கொடநாடு சென்று வாட்ச்மேன் வேலை பார்த்தவர் முதலமைச்சர் விஜய்.</p><p>ரூ.15 கோடி வருமானத்தை மறைத்ததாக முதலமைச்சர் விஜய் மீது வழக்கு உள்ளது.</p><p>பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் மீதும் வழக்கு உள்ளது-  உதயநிதி ஸ்டாலின்.</p><p>வழக்கு நிலுவையில் உள்ள விஜயபாஸ்கர், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்டோரை உடன் சேர்த்து வைத்துள்ளார் முதலமைச்சர் விஜய்.</p><p>எங்களை மிரட்டுவதற்காக லஞ்ச ஒழிப்புத்துறை வைத்து கே.என்.நேரு வீட்டில் ரெய்டு நடத்தினார்கள்.</p><p>முதல்வரின் நண்பர்கள், அவர்களுடைய ஆலோசகர் விஷ்ணு ரெட்டி, அவரது உறுப்பினர்கள் கனிமவளத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்- உதயநிதி ஸ்டாலின்</p><p>கனிமவளத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள விஷ்ணு ரெட்டி உள்ளிட்டோர் என்ன பொறுப்பில் உள்ளனர்?</p><p>ஒருதலை பட்சமாக செயல்பட்ட சட்டசபை தலைவருக்கு திமுக சார்பில் கண்டனம் தெரிவிக்கிறோம். சினிமா சூட்டிங் டயலாக் போல முதலமைச்சர் பேசிக் கொண்டிருந்தார். அதனால் தான் தொடர்ந்து கோஷம் போட்டோம்.</p><p>முதலமைச்சர் விஜய் பேசும்போது சபாநாயகர் எங்கள் பக்கம் திரும்பக்கூடவில்லை. தவெக அரசுக்கும் முதலமைச்சர் விஜய்க்கும் சபாநாயகர் ஜால்ரா அடித்துக் கொண்டே இருந்தார்- உதயநிதி ஸ்டாலின்.</p><p>முதலமைச்சர் பேசியது ஆதாரம் கிடையாது, அமலாக்கத்துறை, சர்காரியா ஆவணம் அனைத்தும் குற்றச்சாட்டு தான்.</p><p>கோடி கோடியாக பணத்துடன் வந்து எந்த அமைச்சர் பதவி வேண்டும் எனக் கேட்டதாக ஐயுஎம்எல் எம்எல்ஏ பேசியுள்ளார்.</p><p>திமுக மீதான ஊழல் புகார் நிரூபிக்கப்பட்டதா? ஊழல் புகாரில் தண்டிக்கப்பட்டவர் யார் என்று உங்களுக்கே தெரியும்- உதயநிதி ஸ்டாலின்.</p><p>திமுகவினர் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடக்கலாம். அவற்றை சட்டரீதியாக சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்- உதயநிதி ஸ்டாலின்</p><p>பஞ்சமி நிலங்களை கண்டறிய ஏற்கனவே இருந்த ஆணையத்தைவிட சிறப்பான ஆணையம் அமைக்கப்படும்- அமைச்சர் வன்னிஅரசு.</p><p>"சட்டம் ஒழுங்கு பிரச்சினையில், ஜாதி மறுப்பு திருமணமும் காரணமாக இருப்பதாக முதல்வர் பேசினார். சமூக பிரச்சினையான கலப்பு திருமணம் தொடர்பான முக்கிய கருத்தை தெரிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்"- முதல்வர் விஜய்யின் பதிலுரைக்கு அமைச்சர் வன்னிஅரசு நன்றி</p><p>முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி என்று சொல்வது போல் அம்மா ஜெயலலிதா எனச் சொல்ல வேண்டும் என வேலுமணி கோரிக்கை வைத்தார்.</p><p>முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என்று சொல்வதனால் அவர்களை குறைத்து மதிப்பிடுவதாக எண்ண வேண்டாம்- வன்னி அரசு.</p><p>சமூக ஊடகங்களில் பெண்கள் குறித்து விமர்சிக்கும் தவெகவினரும் உள்ளனர், அவர்களையும் கண்டிக்க வேண்டும்- தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா.</p><p>பெண்களை விமர்சித்து பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய முதலமைச்சருக்கு வரவேற்பு- பிரேமலதா.</p><p>திமுகவினர் போலி கணக்கு மூலம் தவெக பெயரில் சமூக ஊடக கணக்குகள் தொடங்கி அவதூறு பரப்புகின்றனர்.</p><p>தவெகவினர் உள்ளிட்ட யாராக இருந்தாலும் பெண்களை அவதூறாக பேசினால் நடவடிக்கை என்றுதான் முதலமைச்சர் கூறியுள்ளார்- அமைச்சர் நிர்மல் குமார்.</p><p>கேப்டன் விஜயகாந்தை எப்படியெல்லாம் சங்கடத்திற்கு உள்ளாக்கினரோ அதே வேலையை தான் இப்போதும் செய்கின்றனர். </p><p>கேப்டன் குறித்து தவறான தகவல் பரப்பியோர்போல் இப்போதும் திமுகவினர் ஃபேக் ஐடி உருவாக்கி செயல்படுகின்றனர்- அமைச்சர் நிர்மல் குமார்.</p><p>“திருவண்ணாமலை பொதுக்குழுவில் நான் தவறாக பேசியதாக சித்தரிக்கிறார்கள். எங்கள் தலைவர் சொன்னதை தான், நான் பேசினேன். திமுகவும் அதிமுகவும் இணைந்து முதல்வரை தேர்வு செய்ய முயன்றார்கள் என்று கூறியதை தான் நான் சொன்னேன். தரகர்கள் பலரும் சுயநலத்திற்காக பேரம் பேசியிருப்பார்கள்”- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ சையது பரூக்.</p><p>ஐயுஎம்எல் கட்சியின் 2 சட்டமன்ற உறுப்பினர்களை அடைத்து வைத்து மிரட்டி உள்ளனர்.</p><p>மே 8ம் தேதி இரவு உணவகத்தில் அடைத்து வைத்து மிரட்டல் விடுத்தவர் யார் என்பதை சொல்ல வேண்டிய நிலை வரும்.</p><p>முதலமைச்சர் விஜய் ஆட்சி அமைந்துவிடக்கூடாது என்று திமுக ஒரு முடிவு சொன்னது, பின்பு மற்றொரு முடிவு சொன்னது.</p><p>2 எம்எல்ஏக்களை ஓட்டலில் அடைத்தது யார் என்று உடைத்து பேசினால், அது தமிழக அரசியலுக்கு நல்லதல்ல- அமைச்சர் ஷாஜகான்.</p><p>தமிழக வெற்றிக் கழகம் மீது எதிர்க்கட்சியினர் பொய்யான குற்றச்சாட்டை வைத்து சென்றுள்ளனர்.</p><p>ஐயுஎம்எல் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சபையின் வெளியே பொய்யான குற்றச்சாட்டை வைக்கிறார்.</p><p>மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்கி காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி ஒத்துழைப்புடன் தவெகவுக்கு கடிதம் வந்தது.</p><p>எந்த கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களிடமும் தவெக அமைச்சர்கள் யாரும் பேசவில்லை- அமைச்சர் ஆதவ் திட்டவட்டம்.</p><p>திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் அக்காட் ஓட்டலில் எம்எல்ஏக்களை தங்க வைத்தவர் யார் என மக்கள் அறிவர்.</p><p>திராவிட முன்னேற்றக் கழகம் தான் குதிரை பேரம் நடத்தியது என விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா குற்றச்சாட்டு.</p><p>ஐயுஎம்எல் கட்சியின் மீது தவறான குற்றச்சாட்டை பரப்பி வருகின்றனர். இது மிகவும் தவறு என்று அமைச்சர் ராஜ்மோகன் பேசினார்.</p><p>திமுகவினரை போல் கோடிகளை கொட்டி அமைக்கப்பட்ட அரசு இல்லை, கோடிக்கணக்கான மக்களின் விஜய் சர்கார்- ராஜ்மோகன்.</p><p>திமுக, அதிமுக இணைந்து ஆட்சியமைக்க முயற்சி என தவறான தகவல் சொல்கின்றனர். நாங்கள் திமுகவுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை.</p><p>திமுக தீயசக்தி என்று சொன்ன எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார்- அக்ரி கிருஷ்ணமூர்த்தி</p><p>“வரிவிதிப்பு, தணிக்கை மற்றும் திருப்புத்தொகை உள்ளடக்கிய வரி செலுத்துவோருக்கான சேவைகளின் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டு வரி நிர்வாகத்தில் 'முகம் அறியாத' நடைமுறை விரிவுபடுத்தப்படும்”- வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன்.</p><p>மாற்று சபாநாயகராக தஞ்சாவூர் தவெக சட்டமன்ற உறுப்பினர் விஜய் சரவணன் அமர்ந்த போது, எதிரில் அமர்ந்திருந்த முதல்வர் விஜய்க்கு வணக்கம் தெரிவிக்க, பதிலுக்கு முதல்வர் விஜய்யும் புன்னகைத்தபடி அவருக்கு பதில் வணக்கம் வைத்து, 'எப்படி..' என கண் அசைவில் கேட்க, சபை முழுக்க மேஜையை தட்டி தவெகவினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.</p><p>"மாநிலத்தில் முதலாம் விற்பனை நிலையில் மதிப்புக் கூட்டு வரி செலுத்திய பின்னர் பெட்ரோல் மற்றும் டீசல் மறுவிற்பனை செய்யும் சில்லறை விற்பனை நிலையங்கள் சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் கீழ் பதிவு பெற்று இருப்பின், தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரிச் சட்டத்தின் கீழ் பதிவு பெறுவதிலிருந்து விலக்களிக்கப்படும்"- வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் அறிவிப்பு.</p><p>"போலி இறப்பு மற்றும் வாரிசுரிமைச் சான்றிதழ்கள் மூலம் நடைபெறும் மோசடி பதிவுகளைத் தடுக்க, சான்றிதழ் எண்கள் API மூலம் நிகழ்நேரத்தில் சரிபார்க்கப்படும். இதனால் பதிவு சேவைகள் விரைவுபடுத்தப்பட்டு, போலி ஆவணப் பதிவுகள் தடுக்கப்படும்"- அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன்</p><p>நாளைய தீர்ப்பை கேட்டவர் அல்ல, இன்றைய தீர்ப்பை எழுதியவர். கில்லியாக களம் கண்டவர், இன்று மக்கள் மனதில் தடம் பதித்தவர். துப்பாக்கி சத்தம் தேவையில்லை, அவர் சொல் ஒன்று போதும் தீப்பொறி பறக்க. மாஸ்டராய் திரையில், நம் வாத்தியார் வழியில் வந்த நம் அன்பு வாத்தியார்- தவெக அண்ணாநகர் எம்எல்ஏ ராம்குமார்</p><p>ஆவணங்களை நேரில் தாக்கல் செய்ய தேவையில்லை. இணையவழியில் ஆவணங்களை பதிவேற்றம் செய்த பிறகு, சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் சென்று புகைப்படம் மற்றும் கைரேகை மட்டும் வழங்கினால் போதும்.</p><p>பதிவு முடிந்ததும் ஆவணம் இணையவழியில் . Settlement, Release, Partition, Revocation Settlement உள்ளிட்ட குடும்ப ஏற்பாடு ஆவணங்கள் 15.10.2026 முதல் காகிதமில்லா முறையில் மட்டுமே பதிவு செய்யப்படும்- அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன்</p><p>ஊழலுக்கு எதிரான, ஊழலில் ஊறித் திளைத்தவர்களைத் தோலுரித்துக் காட்டியதுமான அற்புதமான உரையாக முதலமைச்சர் விஜய்யின் உரை அமைந்தது- சட்டசபையில் காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன்.</p><p>வனத்துறையின் பல்வேறு நிலையில் பணியாற்றி வரும் சுமார் 6,260 சீருடை பணியாளர்கள் (Frontline Staff), பணியில் இருக்கும் போது சீருடை அணிந்த நிலையில் பேருந்துகளில் பயணிக்க, ஒரு பணியாளருக்கு மாதத்திற்கு ரூ.200 என்ற சலுகைக் கட்டணத்தில் ரூ.1.50 கோடி செலவில் பேருந்து பயண அட்டை, ஸ்மார்ட் அடையாள அட்டையாக (Smart Identity Card) வழங்கப்படும்- அமைச்சர் ரஞ்சித் குமார் </p><p>"இந்து சமய அறநிலையத் துறை மற்றும் வக்ஃபு வாரியம் தெரிவிக்கும் தடைசெய்யப்பட்ட நில விவரங்கள் STAR-ல் பதிவேற்றம் செய்யப்படும்.</p><p>மோசடி பதிவுகளைத் தடுக்கவும், பதிவுகளைப் பாதுகாக்கவும் API இணைப்பு வழங்கப்படும். மேலும், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் மற்றும் வக்ஃபு வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆகியோர் STAR இணையதளத்தில் நேரடியாக நிலப் பதிவுகளை உள்ளீடு செய்யும் வசதி ஏற்படுத்தப்படும்"-அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன்</p><p>சார்பதிவாளர் அலுவலகங்கள் இனி வார நாட்களில் மட்டும் செயல்படும் வருகையில்லா ஆவணப்பதிவு விரிவாக்கம் செய்யப்படவுள்ளதால், சார்பதிவாளர்களின் வேலைப்பளுவைக் குறைக்கும் நோக்கில், சனிக்கிழமைகளில் செயல்படும் 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் இனி வார நாட்களில் மட்டும் செயல்படும்.</p><p>சனிக்கிழமை கட்டாயப்பணி முறை கைவிடப்படும்- அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன்.</p><p>தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் காற்று தர கண்காணிப்பை வலுப்படுத்தும் நோக்கில், மாநிலம் முழுவதும் 80 இடங்களில் உணரிகை (சென்சார்) அடிப்படையிலான தொடர் சுற்றுப்புற காற்று தர கண்காணிப்பு நிலையங்கள் ரூ.8 கோடியில் நிறுவப்படும்- தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் டாக்டர் வே.க. ராஜீவ்.</p><p>காற்று, நீர், ஒலி சார்ந்த சுற்றுச்சூழல் அளவுருக்களை நிகழ்நேரத்தில் கண்காணிக்க, தொழிற்சாலை ஆய்வுகள், மாசுபாடு தொடர்பான நிகழ்வுகள், பொதுமக்கள் புகார்களின் போது விரைவான அறிவியல் அடிப்படையிலான மதிப்பீடு செய்து நடவடிக்கை மேற்கொள்ள, நவீன சுற்றுச்சூழல் பகுப்பாய்வுக் கருவிகள் பொருத்தப்பட்ட 5 நடமாடும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு வாகனங்கள் ரூ.7.50 கோடி மதிப்பீட்டில் இயக்கப்படும்- சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் ராஜீவ்.</p><p>குழந்தைக்குக் கொடுக்கும் தாய்ப்பாலில் டையாக்சின் உள்ளது என பள்ளிக்கரணையில் கூறுகிறார்கள். கடலூரில் இளநீரில் டையாக்சின் இருப்பதாகக் கூறுகிறார்கள். இதையெல்லாம் ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.</p><p>'வளர்ச்சி, வளர்ச்சி' என்று கூறி புற்றுநோயை வளர்த்து வைத்துள்ளோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் புற்றுநோய்க்கு தனி மருத்துவமனை வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறோம். இதற்கு காரணம் இப்படிப்பட்ட வளர்ச்சிதான்- பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் சவுமியா அன்புமணி.</p><p>தொழிற்சாலைகளில் வேலை கொடுக்கிறார்கள். மாதம் ரூ.2 லட்சம் சம்பளம் கொடுப்பார்களா? ஏனென்றால், புற்றுநோய் சிகிச்சைக்கு ரூ.2 லட்சத்துக்கும் மேல் செலவாகலாம். இதுதான் வளர்ச்சியா? மக்களின் உயிரைப் பணயம் வைத்து தொழிற்சாலைகளும் வளர்ச்சியும் தேவையா?-  சவுமியா அன்புமணி</p><p>திருவண்ணாமலை மாவட்டம் மதுரா கிருஷ்ணாவரம் கிராமத்தில், வழியில் கிணறு உள்ளதால், சுடுகாடு வழியாகவே மக்கள் சென்று வருகின்றனர். இதனால், அந்த ஊரில் பெண் கொடுப்பதற்கும், பெண் எடுப்பதற்கும் மக்கள் தயங்குகின்றனர்- ஆரணி அதிமுக MLA ஜெயசுதா பேசியதும் மேஜையை தட்டி சிரித்த பாமக MLA கணேஷ்குமார்.</p><p>பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி பேசும்போது, மானியக் கோரிக்கைகள் மீது விரிவாகப் பேசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடுகிறார். அதனால், காலம் போவதே தெரியவில்லை. வாழ்த்துகள் என மாற்று சபாநாயகரும், தஞ்சை சட்டமன்ற உறுப்பினருமான விஜய் சரவணன் புகழாரம் சூட்டினார்.</p><p>சாலை ஓரங்களில் நடைபாதை இல்லை. ஆனால், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 10 அடி அகலத்திற்கு கான்கிரீட் போட்டு நடைபாதை அமைத்துள்ளார்கள். தண்ணீர் செல்லும் பாதையை அடைத்து, 10 அடி உயரத்திற்கு கான்கிரீட் சுவர் அமைத்துள்ளார்கள்- சவுமியா அன்புமணி</p><p>பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை காப்பாற்றி, ராம்சார் குறியீடு பெற்றதை அங்கீகரித்தாலே, அங்குள்ள மக்களின் வீடுகள் காப்பாற்றப்படும். பள்ளிக்கரணையில் நடைபாதை அமைத்துள்ளனர். அதற்கு என்ன அவசியம் இருக்கிறது? தண்ணீர் செல்லும் பாதையை அடைத்து, சிமெண்ட் பைப் போட்டுள்ளனர்-  சவுமியா அன்புமணி</p><p>"பழனி ஆண்டவர் எனக்கு அள்ளி தந்தார், தமிழக முதல்வரும் எனக்கு அள்ளித்தந்தார், இங்கு அமர வைத்தார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்"- பழனி முருகன் தனக்கு அள்ளித்தந்ததாக அதிமுக எம்எல்ஏ ரவிமனோகரன் பேசியதற்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில்.</p><p>மாற்றுத் தலைவராக சட்டப்பேரவையை வழி நடத்திய தஞ்சை சரவணன், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு பதிலாக, சட்டப்பேரவையில் இல்லாத முன்னாள் அதிமுக அமைச்சரும், தவெகவில் இணைந்து செயல்பட்டு வரும் வெல்லமண்டி நடராஜன் பெயரை குறிப்பிட்டு அழைக்க, பின்னர் சுதாரித்துக் கொண்ட தஞ்சை சரவணன், மன்னிக்கவும் கே.பி அன்பழகன் என கூறி அவரை பேச அழைத்தார்.</p><p>சென்னையில் நல்ல காற்றே இல்லை.  இந்தியாவில் இருக்கக்கூடிய நகரங்களில் கடைசி இடத்தில் சென்னை உள்ளது சுவாசிக்க தகுதி இல்லாத காற்றை சென்னை மக்கள் சுவாசித்து வருகிறார்கள்- சவுமியா அன்புமணி</p><p>மாசு அடைந்த காற்றால் பொருளாதார இழப்பு ரூ.11,000 கோடியாக உள்ளது நல்ல காற்று இருந்தால் சென்னையில் இருப்பவர்கள் ஆயுட் காலம் 4 ஆண்டுகள் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது: சென்னையில் ஏன் காற்று மாசுபடுகிறது என ஐ.ஐ.டி செய்த ஆய்வறிக்கையை வெளியிட வேண்டும்- சவுமியா அன்புமணி</p><p>ஒரு பெண்ணாக, இந்த சமுதாயத்தில் எவ்வளவு கஷ்டம், துயரம் என்பதை பகிர விரும்புகிறேன். பத்திரிக்கையாளராக என்னை ட்ரோல் செய்தால், தாங்கிக் கொள்வேன்.</p><p>ஆனால் எங்கள் அண்ணனை சேர்த்து என்னை பேசும் போது, அதன் பிரதிபலிப்பு வேறுவிதமாக இருக்கும். படிக்கும் போது ஏற்படும் தடுமாற்றத்தை கேலி செய்யும் ஆண்களுக்கு சொல்கிறேன், அடுத்த சட்டமன்றத்தில் எங்கள் பேச்சு இதை விட சிறப்பாக இருக்கும்.</p><p>நீங்கள் ட்ரோல் செய்வதால், எங்களுக்கு எதுவும் தெரியாது என்று அர்த்தமில்லை- அமைச்சர் ஜெகதீஸ்வரி உருக்கம்</p><p>சட்டப்பேரவையில் துணை சபாநாயகர் ரவி சங்கர் பேசிக்கொண்டிருந்தபோது, நேரத்தின் அருமை உங்களுக்கு தெரியும்... பலர் பேச வேண்டியுள்ளது. பலரிடம் நீங்கள் சாட்டையை சுழற்றியவர்!" என மாற்று சபாநாயகர் விஜய் சரவணன் கூறினார்.</p><p>அதற்கு, “10 நிமிடத்தைத் தாண்ட மாட்டேன்... எப்படி முடிக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும்!" என துணை சபாநாயகர் ரவி சங்கர் பதிலளித்தார். இருவரின் பேச்சால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.</p>]]></content:encoded></item><item><title>அபிஷன் ஜீவிந்த், சிவராஜ்குமார் நடிக்கும் &apos;பிக்காசோ&apos;!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/picasso-starring-abishan-jeevindh-and-shivarajkumar</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/picasso-starring-abishan-jeevindh-and-shivarajkumar#comments</comments><guid isPermaLink="false">298ebe82-a3a2-4a84-a96d-c3412e754ce1</guid><pubDate>Mon, 07 Sep 2026 16:09:57 +0000</pubDate><atom:updated>2026-09-07T16:09:57.088Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Abishan Jeevinth,shivarajkumar,Picasso,அபிஷன் ஜீவிந்த்,சிவராஜ்குமார்,பிக்காசோ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/norbijvh/New-Project-2026-09-07T212001.200.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அபிஷன் ஜீவிந்த், சிவராஜ்குமார் நடிக்கும் 'பிக்காசோ'!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/norbijvh/New-Project-2026-09-07T212001.200.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அறிமுக இயக்குநர் கௌதம் சிவராமன் இயக்கத்தில் <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/shiva-rajkumar-and-abishan-jeevinth-new-movie-update-out-now">அபிஷன் ஜீவிந்த், சிவராஜ்குமார்</a> முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் படத்திற்கு ‘பிக்காசோ’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. </p><p>இப்படத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் நடித்துள்ள யோகலட்சுமி, சிவானி நாகராம், கானா வினோத் ஆகியோரும் நடிக்கின்றனர். </p><p>டிராமா கம்பெனி பேனரின் கீழ் ஏ. பாலமுருகன் இப்படத்தைத் தயாரிக்கிறார். படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். படம் குறித்த பிற அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>டூரிஸ்ட் ஃபேமிலி, வித் லவ்</h2><p>‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமான அபிஷன் ஜீவிந்த், வித் லவ் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். </p>]]></content:encoded></item><item><title>கே.எல். ராகுல் வெளியேறுகிறாரா? டெல்லி கேப்பிட்டல்ஸ் உரிமையாளர் அளித்த பதில்..!</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/kl-rahul-is-klutch-for-delhi-capitals-parth-jindal</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/kl-rahul-is-klutch-for-delhi-capitals-parth-jindal#comments</comments><guid isPermaLink="false">9e3f8734-b14c-476f-a43b-326196051378</guid><pubDate>Mon, 07 Sep 2026 16:06:17 +0000</pubDate><atom:updated>2026-09-07T16:06:17.030Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>KL Rahul,கேஎல் ராகுல்,Delhi Capitals,டெல்லி கேப்பிட்டல்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/0mkc2okw/KLRahul001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ KL Rahul]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/0mkc2okw/KLRahul001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான கே.எல். ராகுல் விளையாடி வருகிறார். இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு Trade செய்யப்பட இருப்பதாக செய்தி வெளியானது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரகானே தலைமையில் 2026-ல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அடுத்த சீசனில் ரகனே விளையாடுவாரா? என்பது சந்தேகம்தான்.</p><h2>கொல்கத்தா நைட் ரைடர்ஸ்</h2><p>இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் திறமையுடன் சிறந்த பேட்ஸ்மேனை Trade செய்ய ஆர்வமாக உள்ளது. ஹர்திக் பாண்ட்யாவை Trade செய்ய விருப்பம் தெரிவித்தது. இதற்கிடையே கே.எல். ராகுலை Trade செய்ய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முயற்சி செய்து வருவதாக செய்தி வெளியானது.</p><p>இந்த நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான பார்த் ஜிண்டால் இந்த செய்தியை மறுத்துள்ளார். இது தொடர்பாக பார்த் ஜிண்டால எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவியில் கூறியிருப்பதாவது:-</p><p>டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு கே.எல். ராகுல் ஒரு மிக முக்கியமான மற்றும் நம்பிக்கைக்குரிய வீரர். எனக்குத் தெரிந்த மிகச் சிறந்த மனிதர்களில் ஒருவரான இவர், எப்போதும் தன்னைவிட அணிக்குத்தான் முன்னுரிமை அளிப்பார். நாங்கள் இன்னும் சாதிக்க வேண்டியவை நிறைய உள்ளன. டெல்லிக்கு பெருமை சேர்க்கும் வகையில் நாங்கள் இணைந்து கடுமையாக உழைப்போம்.</p><p>இவ்வாறு பார்த் ஜிண்டால் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஈரான் சண்டை &quot;போர் அல்ல&quot; எனக்கூறி உயிரிழந்த விமானிக்கு இழப்பீடு வழங்க மறுத்த அமெரிக்கா</title><link>https://www.maalaimalar.com/news/world/us-pilot-killed-in-iran-war-compensation-dispute</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-pilot-killed-in-iran-war-compensation-dispute#comments</comments><guid isPermaLink="false">a53d8a0e-8120-406c-8ec2-4b72b0e5ac30</guid><pubDate>Mon, 07 Sep 2026 16:04:19 +0000</pubDate><atom:updated>2026-09-07T16:04:19.349Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விமானி,Pilot,அமெரிக்கா,America,ஈரான்,Iran</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/tpsa2b6r/Untitled-design-36.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ US Pilot Compensation Row]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/tpsa2b6r/Untitled-design-36.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரானுக்கு எதிராக நடந்த போரின்போது, அமெரிக்க விமானத்திற்கு எரிபொருள் நிரப்ப சென்ற விமானம் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழந்த அமெரிக்க விமானிக்கு போரில் இறந்ததற்கான ஊதியம் வழங்கப்பட மாட்டாது என அமெரிக்கா தெரிவித்தது. </p><p>இதையடுத்து தனது குடும்பத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக விமானியின் மனைவி தெரிவித்ததையடுத்து, இறுதியில் அமெரிக்க அதிகாரிகள் அவருக்கு பதில் அளித்துள்ளனர்.</p><p>ஈரானுக்கு எதிரான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE">அமெரிக்கா</a> நடத்திய தாக்குதல்களுக்கு ஆதரவாக மேற்கு ஈராக்கில் எரிபொருள் நிரப்புவதற்காக கேசி-135 என்ற விமானம் மார்ச் 12-ல் சென்றது. </p><p>இந்த விமானத்தில் அமெரிக்க விமானி மேஜர் அலெக்ஸ் கிளின்னர் பயணம் செய்தார். அப்போது எரிபொருள் நிரப்பி கொண்டிருந்தபோது, அமெரிக்க விமானம் வெடித்து விபத்துக்குள்ளானது.</p><p>இந்த விபத்தில் 33 வயதான அலெக்ஸ் கிளின்னர் உயிரிழந்தார். இதையடுத்து முறையான போர் பிரகடனம் அறிவிக்காததால், விபத்தில் உயிரிழந்த அமெரிக்க விமானிக்கு உரிய இழப்பீடு தர அமெரிக்கா மறுத்தது.</p><p>இதனால் விரக்தியடைந்த அமெரிக்க விமானியின் மனைவியான கிளின்னர், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “என் கணவர் போரில் உயிரிழந்தார். ஆனால் சட்டப்படி இது போர் இல்லை என என்னிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>துயரத்தில் இருக்கும் ஒரு குடும்பம் அரசாங்க செயல்முறைகளை சமாளிக்க தயாராக இல்லாத ஒரு தருணத்தில், அவற்றை சமாளிப்பது எவ்வளவு கடினமாக இருக்கும் என்பதை இந்த அனுபவம் எனக்கு தெளிவுபடுத்தியது.</p><p>நினைத்துப் பார்க்க முடியாத இழப்பை சந்திக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆரம்பத்திலிருந்தே அதே தெளிவு கிடைப்பதை உறுதி செய்வதில் இந்த உரையாடல் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.</p><p>பின்தங்கியிருக்கும் குடும்பங்களுக்கு இதை சரியாகச் செய்வது ஒரு சிறு குறிப்பு அல்ல. நாம் இழந்தவர்களின் சேவையையும் தியாகத்தையும் கௌரவிக்கும் முறையின் ஒரு பகுதி இது” என்று கூறினார்.</p><p>அவர் தெரிவித்த கருத்து இணையத்தில் பரவியதை அடுத்து, அமெரிக்க விமானப்படை அதிகாரிகள் கிளின்னரை தொடர்பு கொண்டு, போர் தொடர்பான ஆபத்துக்கால ஊதியம் மற்றும் வரிச் சலுகைகள் ஆகியவை இதில் அடங்கி இருந்தன என கூறியனர்.</p><p>மேலும் உயிரிழந்த அமெரிக்க விமானியின் இறுதி சம்பள பட்டியலில், போர்க்கால ஊதியமாக மாதத்திற்கு 225 டாலர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அது தவறாக பட்டியிலிடப் பட்டிருந்ததாகவும் தெளிவுபடுத்தினர்.</p><p>இதையடுத்து வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கிளின்னர் குறித்து, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ்-இடம் கேட்கப்பட்டது. </p><p>அப்போது அவர், “நாங்கள் எங்களால் முடிந்தவரை அவருக்கு உதவவும், அவருக்கு உரிமையான அனைத்தையும் அவர் பெறுவதை உறுதி செய்யவும் விரும்புகிறோம்.</p><p>நாங்கள் உயிரிழந்த விமானி கிளின்னரை நேசிக்கிறோம். அவர் செய்த தியாகத்திற்கு நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம். மேலும் அவருக்கு தேவையானதை பெற்று தரும், எங்கள் கடமையை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்கிறோம்” என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.260 கோடி வசூலித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ்... ஓடிடி வெளியீடு எப்போது?</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/viswanath-and-sons-grosses-260-crore-when-is-the-ott-release</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/viswanath-and-sons-grosses-260-crore-when-is-the-ott-release#comments</comments><guid isPermaLink="false">0d23902c-8bd4-48e6-8884-d1ed75ac96d2</guid><pubDate>Mon, 07 Sep 2026 15:45:09 +0000</pubDate><atom:updated>2026-09-07T15:45:09.142Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சூர்யா,suriya,mamitha baiju,மமிதா பைஜூ,விஸ்வநாத் அண்ட் சன்ஸ்,Viswanath And Sons</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/f3ug3ue9/New-Project-2026-09-07T211435.545.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரூ.260 கோடி வசூலித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ்... ஓடிடி வெளியீடு எப்போது?]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/f3ug3ue9/New-Project-2026-09-07T211435.545.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ, ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ஆக.14ம் தேதி திரையரங்குகளில் வெளியானப் படம் <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/trailer-for-suriyas-viswanath-and-sons-released">விஸ்வநாத் அண்ட் சன்ஸ்</a>.</p><p>சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார்.</p><p>இந்நிலையில் வெளியான 25 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ.260 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது. </p><p>மேலும் படம் செப்.14ம் தேதி நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால் படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. </p>]]></content:encoded></item><item><title>செல்வாக்குமிக்க  நபர்கள் மீதுள்ள ஊழல்  வழக்குகளை விசாரிப்பது கடினம்- சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/selvaakkum-mikka-napargal-meethulla-oozhal-vazhakkugalai-visaarippathu-kadinam-chennai-uyarneethimandram-karuthu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/selvaakkum-mikka-napargal-meethulla-oozhal-vazhakkugalai-visaarippathu-kadinam-chennai-uyarneethimandram-karuthu#comments</comments><guid isPermaLink="false">849fd3f5-3876-4f24-ad1a-4baa5510872f</guid><pubDate>Mon, 07 Sep 2026 15:30:13 +0000</pubDate><atom:updated>2026-09-07T15:30:13.267Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஊழல் வழக்கு,Madras High Court,சென்னை உயர்நீதிமன்றம்,நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்</media:keywords><media:content height="363" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/r2ao8zf6/750x450406735-justice-n-anand-venkatesh-and-madras-hc.jpg" width="735"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Madras High Court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/r2ao8zf6/750x450406735-justice-n-anand-venkatesh-and-madras-hc.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>சாத்தியமற்றது </h2><p>இந்த நாட்டில் செல்வாக்கு மிக்க நபர்கள் மீதுள்ள வழக்குகளை  விசாரிப்பது என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்று <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/no-bar-on-singing-tamil-anthem-before-vande-mataram-madras-high-court">சென்னை உயர்நீதிமன்றம் </a>அதிருப்தி கருத்தை தெரிவித்துள்ளது. </p><h2>விசாரணை </h2><p>முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் வழக்கில் வேலுமணியுடன் சேர்த்து தொடர்புடைய மூன்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீதான நடவடிக்கைகளில் ஏற்பட்ட தாமதத்தைக் கண்டித்து அறப்போர் இயக்கம் என்ற தன்னார்வ அமைப்பு தாக்கல் செய்த நீதிமன்ற <a href="https://www.maalaimalar.com/news/national/bill-on-disrespect-to-vande-mataram-passed-in-the-rajya-sabha">அவமதிப்பு</a> மனுவானது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது.</p><h2>மத்திய அரசு</h2><p>இது தொடர்பாக மத்திய அரசு சார்பில்  தெரிவிக்கப்பட்டதில், வழக்கு தொடர அனுமதி கோரி  தமிழக அரசு அனுப்பிய விளக்கம் கடிதம் ஜூலை 28-ம் தேதி கிடைக்கப் பெற்று அதன்மீது பரிசீலனை நடந்து வருகிறது என்று விளக்கம் அளித்திருந்தது.</p><h2>தமிழக அரசு </h2><p>இதற்கு தமிழக அரசின் பதிலாக இது தொடர்பாக ஆகஸ்ட் 27-ம் தேதி நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.</p><h2>அதிருப்தி </h2><p>இந்த நிலையில் இந்த  வழக்கானது விசாரணைக்கு வந்தபோது, இந்தியாவில் செல்வாக்கு மிகுந்த நபர்கள் மீதான<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-indictment-dmk-4"> ஊழல் </a>வழக்கை விசாரிப்பது சிரமமாக உள்ளது. அனுமதி பெறுவதற்கே இவ்வளவு அதிகமான சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது இதற்குபின் இந்த வழக்கில் என்ன நடக்கும் என கடவுளுக்குத்தான் தெரியும் என அதிருப்தி தெரிவித்தார்.</p><p>மேலும் வழக்கில் தற்போதையை நிலை என்னவென்று காணொலி வாயிலாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டின் மாஸ்டர்கள்: நியூசிலாந்து கேப்டன் புகழாரம்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/nz-v-ind-2026-masters-of-odi-game-santner-hails-virat-kohli-and-rohit</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/nz-v-ind-2026-masters-of-odi-game-santner-hails-virat-kohli-and-rohit#comments</comments><guid isPermaLink="false">9eb515f4-ec57-4af9-9258-8ffa42d573ea</guid><pubDate>Mon, 07 Sep 2026 15:20:58 +0000</pubDate><atom:updated>2026-09-07T15:20:58.182Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rohit sharma,ரோகித் சர்மா,Virat Kohli,விராட் கோலி,Mitchell Santner,மிட்செல் சான்ட்னர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/isbjj5l1/Rohit0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரோகித் சர்மா- விராட் கோலி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/isbjj5l1/Rohit0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய அணி இந்த வருடம் இறுதியில் நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் ஐந்து ஒருநாள், ஐந்து டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.</p><p>விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகிறார்கள். ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி 2027 உலகக் கோப்பையில் விளையாடுவார்களா? என்ற கேள்வி ஒரு பக்கம் இருந்து கொண்டே வருகிறது.</p><p>இந்த நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் மாஸ்டர்கள் என்று நியூசிலாந்து அணி கேப்டன் மிட்செல் சான்ட்னர் புகழாரம் சூட்டியுள்ளார்.</p><h2>இது தொடர்பாக மிட்செல் சான்ட்னர் கூறியதாவது:-</h2><p>இந்தியாவுக்கு எதிரான தொடர் ஒரு சவாலாக இருக்கப்போகிறது. நீண்ட காலமாக நாம் பார்த்து வருவது போல, விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவரும் இப்போதும் மிகச் சிறந்த வீரர்கள். ஒருநாள் போட்டிகளில் வல்லவர்கள். கடந்த காலங்களில் நியூசிலாந்தின் சில ஆடுகளங்கள் அவர்களுக்குப் பிடித்தமானவையாக இருந்திருக்கின்றன. இம்முறை அப்படி அமையாது என்று நம்புவோம்.</p><h2>சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்துவதுதான் இலக்கு</h2><p>நாங்கள் இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 5 போட்டிகளில் விளையாட இருக்கிறோம். இலங்கைக்கு எதிராக 3 போட்டிகளில் விளையாட இருக்கிறோம். அதன்பின் இங்கிலாந்துக்கு எதிராக அடுத்த வருடம் விளையாட இருக்கிறோம். இந்த போட்டிகள் 2027 உலகக் கோப்பை தொடருக்கான சரியான வகையில் தயாராகுதலாக இருக்கும்.</p><p>இந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்துவதை நீங்கள் விரும்புவீர்கள். அது ஒரு மிகச்சிறந்த விஷயமாக இருக்கும். அதன்பிறகு, அடுத்த ஆண்டு அக்டோபரில் அணியின் கட்டமைப்பு எப்படி இருக்கக்கூடும் என்பதைக் கண்டறிய முயற்சிக்க வேண்டும்.</p><p>இவ்வாறு சான்ட்னெர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஒரே ஆண்டில் 4 முறை இடமாற்றம்: தவறுகளை சுட்டிக்காட்டினால் இப்படித்தானா?- ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவேசம்</title><link>https://www.maalaimalar.com/news/national/i-was-removed-for-pointing-out-mistakes-ias-officer-transferred-fourth-time-in-a-year</link><comments>https://www.maalaimalar.com/news/national/i-was-removed-for-pointing-out-mistakes-ias-officer-transferred-fourth-time-in-a-year#comments</comments><guid isPermaLink="false">2de29b0b-a2fa-4e10-923a-5aefd78ced98</guid><pubDate>Mon, 07 Sep 2026 15:05:38 +0000</pubDate><atom:updated>2026-09-07T15:05:38.034Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஐஏஎஸ் அதிகாரி,IAS,Madhyapradesh,Transfer,பணியிட மாற்றம்,மத்தியப் பிரதேசம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/rswgmn60/Untitled-design-34.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ IAS officer Neha Marwya]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/rswgmn60/Untitled-design-34.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய பிரேதசத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அரசு அதிகாரி ஒருவர், கடந்த ஓராண்டில் தொடர்ந்து நான்காவது முறையாக இடமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, தன்னுடைய உயர் அதிகாரிகள் தன்னை ஒரு கிள்ளுக்கு இரையாக பார்ப்பதாக ஐ.ஏ.எஸ் சங்கத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.</p><p>2011 பேட்ச் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%90%E0%AE%8F%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D">ஐ.ஏ.எஸ் அதிகாரியான</a> நேஹா மார்வ்யா கடந்த 2017-இல் சிவ்புரி மாவட்ட பஞ்சாயத்து தலைமை அதிகாரியாக பணி அமர்த்தப்பட்டார். </p><p>அப்போது இவருக்கு வாகன கட்டணங்கள் தொடர்பாக அப்போதைய ஆட்சியர் ஓ.பி. ஸ்ரீவஸ்தவா உடன் மோதல் போக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவரை உயர் அதிகாரிகள் அந்த பணியில் இருந்து வேறு இடத்திற்கு மாறுதல் செய்தனர்.</p><p>இதையடுத்து 2022-ல் வருவாய் துறையில் பணியாற்றிய அவர், தனது பதவியை பொறுப்பேற்க முதன்மை செயலாளர் மனிஷ் ரஸ்தோகி தன்னை உள்ளே அனுமதிக்க மறுத்ததாக குற்றம்சாட்டினார்.</p><p>இதைத்தொடர்ந்து நேஹா கடந்த ஜனவரி 2025-ல் திண்டோரி பகுதியில் ஆட்சியராக நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்ற எட்டு மாதங்களுக்கு பிறகு உயர் அதிகாரிகள் அவரை ஆட்சியர் பதவியில் இருந்து நீக்கினர்.</p><p>நேஹா மத்தியப் பிரதேச பட்டியல் பழங்குடியினர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார்.</p><p>இந்த நிலையில் நேஹா, பழங்குடியினர் பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குநராக பொறுப்பேற்று இரண்டு மாதங்கள்தான் ஆகிறது. ஆனால் அவர் வெளியிட்ட அரசு அறிவிப்புகளை தொடர்ந்து, ஊழியர்கள் அவருக்கு எதிராக போராட்டம் ஒன்றை நடத்தினர்.</p><p>இதன் காரணமாக தொடர்ந்து ஓராண்டில் நான்காவது முறையாக அதிகாரிகள் அவரை பணியிட மாறுதல் செய்து உத்தரவிட்டுள்ளனர்.</p><p><strong>ஐஏஎஸ் சங்கத்திற்கு கடிதம்</strong></p><p>இந்த நிலையில் தான் பணியில் சேர்ந்த 50 நாட்களுக்குள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஐஏஎஸ் சங்கத்திற்கு நேஹா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில், “நான் எப்போதும் உத்தரவுகளை மரியாதையுடன் ஏற்றுக்கொள்வேன். ஆனால் இந்த முறை நான் ஊக்கம் இழந்துவிட்டேன்.</p><p>கீழ்ப்படியாமை மற்றும் கோப்புகளை பதுக்கி வைத்திருப்பது குறித்து நான் புகார் அளித்தேன். ஆனால் நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக நான் நீக்கப்பட்டேன்.</p><p>கீழ்நிலை அதிகாரிகள் இடமாற்றங்களை தீர்மானிக்கும் அளவுக்கு, ஒரு ஐஏஎஸ் அதிகாரி பலவீனமாக இருக்க முடியுமா? என்று எனக்கு தெரியவில்லை.</p><p>இந்த பணியிட மாறுதலை அனுபவிக்க ஒரு மாதத்திற்குள் தான் என்ன செய்துவிட்டேன் என்று எனக்கு தெரியவில்லை.</p><p>ஒரு அதிகாரியால் ஒரு மாதத்தில் வேலையை புரிந்துகொள்வது என்பது அரிது. ஆனாலும், இந்த இடமாற்றத்தால் நான் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறேன்.</p><h3><strong>கீழ்நிலை அதிகாரிகள் மிரட்டுகிறார்கள்</strong></h3><p>தொடர்ச்சியான குறுகிய கால பதவிக் காலங்கள் தன்னை மனச்சோர்வடையச் செய்துவிட்டது. </p><p>நிலைமை மேம்படும் என்ற நம்பிக்கையில் பல ஆண்டுகளாக நான் பொறுமையாக இருந்தேன், ஆனால் இப்போது கீழ்நிலை அதிகாரிகள் என்னை மிரட்டத் தொடங்கியுள்ளனர்.</p><p>எப்போதும் சதிகாரர்களே வெற்றி பெறுகிறார்கள், நான் தோற்கிறேன்.</p><p>இந்த அமைப்பு என்னை கைவிட்டுவிட்டது. இன்று நான், நாளை மற்றொரு ஐஏஎஸ் அதிகாரி இலக்காக இருப்பார்,” என்று அவர் ஐஏஎஸ் சங்கத்திற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தொடர் கொலையாளிகள் அதிகம் உள்ள நாடுகள் - 6வது இடத்தில் இந்தியா!</title><link>https://www.maalaimalar.com/news/national/countries-with-the-highest-number-of-serial-killers-india-ranks-6th</link><comments>https://www.maalaimalar.com/news/national/countries-with-the-highest-number-of-serial-killers-india-ranks-6th#comments</comments><guid isPermaLink="false">2b759265-d5a5-4180-ad49-019724b5b955</guid><pubDate>Mon, 07 Sep 2026 14:59:31 +0000</pubDate><atom:updated>2026-09-07T14:59:31.029Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,அமெரிக்கா,United States,Serial Killers,தொடர் கொலையாளிகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/xmgamguc/New-Project-2026-09-07T202250.138.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தொடர் கொலையாளிகள் அதிகம் உள்ள நாடுகள் - 6வது இடத்தில் இந்தியா!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/xmgamguc/New-Project-2026-09-07T202250.138.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p> உலகம் முழுவதும் 1900 ஆண்டுமுதல் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில்,  அதிக அளவிலான தொடர் கொலையாளிகள் ஆவணப்படுத்தப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது.</p><p>சமீபத்திய 2026 ராட்ஃபோர்ட்/எஃப்.ஜி.சி.யு (Radford/FGCU) அறிக்கையின்படி, 1900 ஆம் ஆண்டு முதல் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட தொடர் கொலையாளிகளின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இந்தத் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.</p><h2>விசாரணை முறை</h2><p>இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், இந்த எண்கள் அந்தந்த நாடுகளின் ஒட்டுமொத்த பாதுகாப்பு குறைபாட்டை மட்டும் குறிப்பதில்லை; மாறாக, அங்குள்ள குற்றவியல் விசாரணை முறைகள், ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்றுப் பதிவுகளின் வெளிப்படைத்தன்மையையும் காட்டுகின்றன.</p><h2>அமெரிக்கா முதலிடம்</h2><p>இந்த பட்டியலில் அமெரிக்கா 3,803 கொலையாளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இது இரண்டாம் இடத்தில் இருக்கும் இங்கிலாந்தின் மொத்த எண்ணிக்கையான 188-ஐ விட 20 மடங்குக்கும் அதிகமாகும்.</p><p>ரஷ்யா 172 பேருடன் மூன்றாம் இடத்திலும், அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா (153) மற்றும் ஜப்பான் (145) ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. 135 கொலையாளிகளுடன் <a href="https://www.maalaimalar.com/news/national/india-said-no-to-the-press-conference-trump-initially-agreed-but-later-changed-his-tune-an-incident-at-the-g7-summit">இந்தியா</a> 6வது இடத்தில் உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>புதிய காரை திருடர்களிடம் இருந்து பாதுகாக்க, வீட்டின் மொட்டை மாடியில் பார்க்கிங் செய்த நபர்</title><link>https://www.maalaimalar.com/news/national/man-parks-new-car-on-rooftop-to-prevent-theft</link><comments>https://www.maalaimalar.com/news/national/man-parks-new-car-on-rooftop-to-prevent-theft#comments</comments><guid isPermaLink="false">c2e7723a-e72c-4aec-96ef-28c9521c1363</guid><pubDate>Mon, 07 Sep 2026 14:48:51 +0000</pubDate><atom:updated>2026-09-07T14:48:51.888Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பீகார்,Bihar,மஹிந்திரா கார்,Mahindra Scorpio</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/1e491dtb/Untitled-design-35.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rooftop Parking to Prevent Car Theft]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/1e491dtb/Untitled-design-35.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பீகாரை சேர்ந்த நபர் ஒருவர், தான் புதிதாக வாங்கிய மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரை, இரவு நேரத்தில் திருடர்களிடம் இருந்து பாதுகாப்பதற்காக வீட்டின் மொட்டை மாடிக்கு, கிரேன் மூலம் கொண்டு சென்று பார்க்கிங் செய்த காணொளி இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">பீகார்</a> மாநிலம் கோபால்கஞ்ச் பகுதியை சேர்ந்த மனோஜ் யாதவ் என்பவர் சமீபத்தில் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரை வாங்கி உள்ளார்.</p><h3><strong>வெளிநாட்டிற்கு சென்ற கார் உரிமையாளர்</strong></h3><p>இதையடுத்து இவருக்கு இஸ்ரேல் நாட்டில் வேலை கிடைத்து விட்டதால், தனது வாகனத்தை பீகாரில் ஒரு ஓட்டுநரிடம் கொடுத்துவிட்டு, அவர் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார்.</p><p>இதற்கிடையில் சிறிது காலம் கழித்து, அந்த ஓட்டுநர் பணியில் இருந்து சென்று விட்ட நிலையில், தனது கார் திருடப்பட்டு விடுமோ என்று யாதவுக்கு கவலை எழுந்துள்ளது.</p><p>இதைத்தொடர்ந்து திருட்டில் இருந்து காரை பாதுகாப்பதற்காக, யாதவ் குடும்பத்தினர் மஹிந்திரா வாகனத்தை வீட்டின் மொட்டை மாடிக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர்.</p><h3><strong>மொட்டை மாடியில் பார்க்கிங்</strong></h3><p>பின்னர் அவர்கள், அந்த வாகனத்தை ஒரு கிரேன் மூலம் வீட்டின் இரண்டாவது தளத்தில் உள்ள மாடிக்கு தூக்கி சென்று பார்க்கிங் செய்தனர்.</p><figure><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1072908068927705%2F&show_text=false&width=560&t=0" width="560" height="314" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></figure><p>இந்த காட்சியை பார்த்த உள்ளூர் கிராம மக்கள், அதனை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டனர்.</p><p>கார் திருடப்படுவதில் இருந்து பாதுகாப்பதற்காக, கார் உரிமையாளர் வீட்டின் மொட்டை பார்க்கிங் செய்த காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சபாநாயகர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-speaker-must-act-impartially-communist-party-of-india-insists</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-speaker-must-act-impartially-communist-party-of-india-insists#comments</comments><guid isPermaLink="false">bb47b4f7-6e8c-41ab-8c49-c97c7c20c6a1</guid><pubDate>Mon, 07 Sep 2026 14:48:04 +0000</pubDate><atom:updated>2026-09-07T14:48:04.839Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சிபிஐ,CPI,ஜேசிடி பிரபாகர்,M. Veerapandian,மு. வீரபாண்டியன்,JCT Prabhakar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/1emd1zzl/New-Project-2026-09-07T201642.419.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சபாநாயகர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/1emd1zzl/New-Project-2026-09-07T201642.419.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டமன்றத்தின் மரபையும், ஜன நாயகத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;</p><p>சட்டமன்ற பதிலுரையில் தமிழ்நாடு முதலமைச்சர் பெண்களை இழிவுப்படுத்தும் விதத்தில் யார் பேசினாலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார். இது வரவேற்கத்தக்கது.</p><p>அத்துடன் சமூக வலைதளங்களில் பெண்கள் இழிவுப்படுத்தப்படுவதையும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.</p><p>உயிர்புள்ள ஜனநாயகத்திற்கு சட்டமன்ற நடவடிக்கைகள் மக்களின் கோரிக்கைகளுக்கான பிரச்சனைகளை பேசவும், தீர்வு காணவும் கவனம் செலுத்திட வேண்டும்.</p><p>எதிர்கட்சிகளின் குரலுக்கு செவி சாய்க்கவும், அதற்கு உரிய முறையில் பதிலளிப்பதற்கும் மாறாக சட்டமன்ற நடவடிக்கைகளில் வெறும் கூச்சல் மிகும் வாதமுறையால் சட்டமன்றத்தின் நேரம் வீணடிக்கப்படுகிறது. </p><p>சட்டமன்ற மரபையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதில் ஆளுங்கட்சிக்கு அதிக பொறுப்பு உள்ளது. அத்துடன் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/give-due-respect-to-mlas-speaker">சபாநாயகர் </a>நடுநிலையோடு செயல்பட வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சுறாப் பட காட்சி - கவனம் ஈர்க்கும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் இன்ஸ்டா ஸ்டோரி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/a-scene-from-the-movie-sura-opposition-leader-udhayanidhi-stalins-instagram-story-grabs-attention</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/a-scene-from-the-movie-sura-opposition-leader-udhayanidhi-stalins-instagram-story-grabs-attention#comments</comments><guid isPermaLink="false">51e5edb9-0863-4029-aa05-ba455999dcfd</guid><pubDate>Mon, 07 Sep 2026 13:35:40 +0000</pubDate><atom:updated>2026-09-07T13:35:40.080Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,சுறா,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,Sura</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/4h7n5rdt/New-Project-2026-09-07T185908.339.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சுறாப் பட காட்சி - கவனம் ஈர்க்கும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் இன்ஸ்டா ஸ்டோரி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/4h7n5rdt/New-Project-2026-09-07T185908.339.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடைபெற்று வரும் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நாளை உடன் முடிகிறது. இந்நிலையில் இன்றைய அவை நடவடிக்கையில், காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்கினார்.</p><p>அப்போது திமுகமீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும் அமலாக்கத்துறை வழக்குகள், மிசா, சர்க்காரியா ஆணையம் உள்ளிட்ட பலவற்றை குறிப்பிட்டு பேசினார்.</p><h2>திமுக வெளிநடப்பு</h2><p>இதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. முதலமைச்சர் விஜய் உரையாற்றும்போதே திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் எழுந்து அமளியில் ஈடுபட்டனர். மேலும் அவை நடுவே தர்ணாவிலும் ஈடுபட்டனர். </p><p>தொடர்ந்து எதிர்க்கட்சிகள் பதிலளிக்க சட்டப்பேரவைத் தலைவர் நேரம் தரவில்லை என வெளிநடப்பு செய்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-indictment-tvk-govt-4">உதயநிதி ஸ்டாலின்</a>.,</p><p>தவெகவின் நூறு நாள் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளதை ஆதாரத்துடன் தாங்கள் சுட்டிக்காட்டியதாகவும், அதற்குப் பதிலளிக்க முடியாமல் முதலமைச்சர் விஜய் எந்தவித ஆதாரமும் இல்லாத பொய்க் குற்றச்சாட்டுகளைத் தங்கள் மீது சுமத்தியுள்ளார் என்றும் கூறினார். </p><p>மேலும் அவை அனைத்தும் வழக்குகள்தான் என்றும், முதலமைச்சர் விஜய், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மீதும் வழக்குகள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.</p><h2>இன்ஸ்டாகிராம் ஸ்டோரி</h2><p>இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஸ்டோரி இணையத்தில் வைரலாகி வருகிறது. </p><p>அதில் முதலமைச்சர் விஜய் நடித்த சுறா படத்தின் காட்சி ஒன்றை பகிர்ந்துள்ளார். </p><figure><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DIDg05DutpY/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:658px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DIDg05DutpY/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a></div></blockquote>
<script async src="//platform.instagram.com/en_US/embeds.js"></script></figure>]]></content:encoded></item><item><title>‘எத்தனை அழுத்தங்கள் இருந்தாலும், அதை எளிதாக கையாளும் முதலமைச்சர்’ - விஜய் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் பெருமிதம்! </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/a-chief-minister-who-handles-pressures-with-ease-no-matter-how-many-there-are-vijays-father-sa-chandrashekhar-speaks-with-pride</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/a-chief-minister-who-handles-pressures-with-ease-no-matter-how-many-there-are-vijays-father-sa-chandrashekhar-speaks-with-pride#comments</comments><guid isPermaLink="false">6f35b203-b2bf-4da2-9890-bcd31618e662</guid><pubDate>Mon, 07 Sep 2026 13:15:19 +0000</pubDate><atom:updated>2026-09-07T13:15:19.798Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>எஸ்.ஏ.சந்திரசேகர்,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,S.A. Chandrasekar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/9od8e0ih/New-Project-2026-09-07T184450.589.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘எத்தனை அழுத்தங்கள் இருந்தாலும், அதை எளிதாக கையாளும் முதலமைச்சர்’ - விஜய் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் பெருமிதம்! ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/9od8e0ih/New-Project-2026-09-07T184450.589.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பதவி, தனிப்பட்ட வாழ்க்கை என பலவகையிலிருந்து வரும் அழுத்தங்களையும், இக்கட்டான சூழல்களையும் முதலமைச்சர் விஜய் மிகவும் நிதானத்துடனும், எளிதாகவும் கையாள்வது ஒரு தந்தையாக தனக்குப் பெருமையளிப்பதாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில்.,</p><p>“எத்தனை அழுத்தங்கள் இருந்தாலும், அதை எளிதாகக் கையாளும் முதல்வரை சந்தித்தது, ஒரு தந்தையாகப் பெருமை பெற்ற நேரம்” எனக் குறிப்பிட்டுள்ளார். </p><h2>சட்டமன்ற பேச்சு</h2><p>சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் பதிலுரையின் போது திமுகவின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-cm-vijay-to-answer-opposition-questions">முதலமைச்சர் விஜய்</a> பேசினார். </p><p>முதலமைச்சர் விஜய் உரையாற்றும்போது திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரின் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பியதோடு, அவையின் மையப் பகுதிக்குச் சென்று தர்ணாவிலும் ஈடுபட்டனர்.</p><p>இந்நிலையில் இன்றைய அவை நடவடிக்கைகளுக்கு பிறகு முதலமைச்சர் விஜய்யை அவரது பெற்றோர்கள் ஷோபா மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் சந்தித்துள்ளனர்.</p><p>அதனைத்தொடர்ந்து இந்தப் பதிவை அவர் வெளியிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>பந்தயத்தின்போது திடீரென தீப்பிடித்து எரிந்த கார்: உயிர் பிழைத்த வீரர்- வீடியோ</title><link>https://www.maalaimalar.com/sports/ollie-millroy-ferrari-i-am-only-alive-thanks-to-one-man-driver-rescued-from-car-fire</link><comments>https://www.maalaimalar.com/sports/ollie-millroy-ferrari-i-am-only-alive-thanks-to-one-man-driver-rescued-from-car-fire#comments</comments><guid isPermaLink="false">9c0a133c-bd14-4384-97db-0ca65dfffb1f</guid><pubDate>Mon, 07 Sep 2026 13:13:05 +0000</pubDate><atom:updated>2026-09-07T13:13:05.365Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Car race,கார் பந்தயம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/4azzae27/CatFire001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தீப்பிடித்து எரியும் கார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/4azzae27/CatFire001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சீனாவில் நடைபெற்ற கார் பந்தயத்தின்போது, திடீரென கார் தீப்பிடித்து எரிந்ததில் வீரர் ஒருவர் தப்பித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>சீனாவின் ஷாங்காய் நகரில் GT சாம்பியன்ஷிப் ரேஸ் என்ற பெயரில் கார் பந்தயம் நடைபெற்றது. இதில் பெர்ராரி நிறுவனம் சார்பில் ஒல்லி மில்ராய் கலந்து கொண்டார். இவருடன் பலர் கலந்து கொண்டனர். கார் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தன. அப்போது சில கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன.</p><h2>தீப்பிடித்து எரிந்த கார்</h2><p>அப்போது மில்ராய் ஓட்டிய பெர்ராரி கார் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. மில்ராயால் காரில் இருந்து வெளியேற முடியவில்லை. இதை கவனித்த நெதர்லாந்தைச் சேர்ந்த லோக் ஹார்டோக், தனது காரை நிறுத்தி விட்டு, மில்ரோய் இருந்து கார் நோக்கி ஓடினார்.</p><p>காரின் பின்பக்கமாக இருந்த சில பாகங்களை கழற்றி மில்ராயை வெளியே இழுத்து கொண்டு வந்தார். பின்னர், தீயணைக்கும் கருவியை கொண்டு தீயை அணைக்க முயன்றார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Ollie Millroy delivers an emotional message to thank Loek Hartog for saving his life yesterday in Shanghai, China.<br><br>&quot;I am still alive tonight, entirely thanks to one man; Loek Hartog stopped instantly with no flag marshalls or fire crews in sight, and risked his own life to get… <a href="https://t.co/tWACBXQcXO">pic.twitter.com/tWACBXQcXO</a></p>&mdash; MV33Racing (@MV33Racing) <a href="https://x.com/MV33Racing/status/2096540731607240915?ref_src=twsrc%5Etfw">September 6, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure> <p>ஹார்டோக்கின் துணிச்சலான இந்த செயலால், மில்ரோய் பிழைத்துக் கொண்டார். இது தொடர்பான மில்ராய் கூறுகையில் "இன்று இரவு வரை (சமூக வலைத்தளத்தில் செய்தி பதிவிடும் நேரம்) நான் உயிரோடு இருக்கிறேன் என்றால், அது ஒட்டுமொத்தமாக நன்றி ஒருவருக்குத்தான்.</p><h2>உயிரை பணயம் வைத்த சக வீரர்</h2><p>போட்டியின்போது கொடி காட்டும் பணியாளர்களோ அல்லது தீயணைப்புக் குழுவினரோ கண்ணில் தென்படாத நிலையில், லோக் ஹார்டோக் (Loek Hartog) உடனடியாக வண்டியை நிறுத்தினார். மேலும், என்னைக் காரிலிருந்து வெளியேற்றுவதற்காகத் தனது சொந்த உயிரையும் பணயம் வைத்தார்" என்றார்.</p>]]></content:encoded></item><item><title>நாடு முழுவதும் 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/by-elections-announced-for-6-constituencies-in-india</link><comments>https://www.maalaimalar.com/news/national/by-elections-announced-for-6-constituencies-in-india#comments</comments><guid isPermaLink="false">f76319b6-f433-4cb4-8ba6-0d809d7a0069</guid><pubDate>Mon, 07 Sep 2026 12:42:18 +0000</pubDate><atom:updated>2026-09-07T12:42:18.827Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,சென்னை உயர் நீதிமன்றம்,Madras High Court,Election Commission of India,bypolls,இந்திய தேர்தல் ஆணையம்,இடைத்தேர்தல்,தமிழ்நாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/dkwns9f5/New-Project-2026-09-07T181151.361.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இந்தியாவில் 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/dkwns9f5/New-Project-2026-09-07T181151.361.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் மொத்தம் 6 தொகுதிகளுக்கு அக்.6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.</p><h2>தமிழ்நாடு</h2><p>தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.</p><p>மதுராந்தகம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சத்தியபாமா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததை அடுத்து இந்தத் தொகுதிகள் காலியாகின.</p><h2>7 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு</h2><p>தமிழ்நாட்டில் மொத்தம் 7 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், 2 தொகுதிகளுக்கு மட்டும் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 9 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>தேர்தல் வழக்குகள்</h2><p>திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/no-plan-to-announce-by-elections-for-the-five-vacant-constituencies-in-tamil-nadu-election-commission">தேர்தல் வழக்குகள் </a>நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அந்த வழக்குகளின் இறுதி தீர்ப்பு வரும் வரை அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படாது எனத் தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><h2>அசாம், புதுச்சேரி, மேற்குவங்கம்</h2><p>தமிழ்நாட்டைத் தொடர்ந்து அசாம், புதுச்சேரி, மேற்குவங்கம் மாநிலங்களில் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி, மேற்குவங்கத்தின் நந்திகிராம், ரெஜிநகர், அசாமின் நாகோன் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இந்த ஆறு தொகுதிகளுக்கும் வேட்புமனுத்தாக்கல் செப்.9 தொடங்கும் எனவும், வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் செப்.16 எனவும், வேட்புமனுக்களை பரிசீலனை செய்வதற்கான கடைசி நாள் செப்.17 என்றும், வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி செப்.19 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>வாக்குப்பதிவு அக்.6ம் தேதி நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை அக்.9 நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. பிரமுகர் கொலையில் கைதான கல்லூரி மாணவர் பரபரப்பு தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/topnews/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D#comments</comments><guid isPermaLink="false">cc5a13de-9af1-4763-97dd-48701ababb0e</guid><pubDate>Mon, 07 Sep 2026 12:24:23 +0000</pubDate><atom:updated>2026-09-07T12:24:23.538Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கொலை வழக்கு,Murder case,சென்னை,தவெக பிரமுகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/0x5k59yl/murderr.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/0x5k59yl/murderr.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை பெசன்ட்நகர் வண்ணான்துறை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (45). இவர் அ.தி.மு.க.வில் வட்டச் செயலாளராகப் பணியாற்றிவிட்டு, சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். </p><h2><strong>கண்ணன் கொலை</strong></h2><p>ஐ.டி. நிறுவனங்களுக்கு கார் வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்த கண்ணன், நேற்று முன்தினம் இரவு 9. மணியளவில் தனது வீட்டின் அருகே உள்ள எல்லையம்மன் கோவில் தெருவில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.</p><p>அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், கண்ணனை விடாமல் விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டியது. கண்ணனின் நண்பர்கள் கற்களை வீசி தடுக்க முயன்ற போதும், கொலையாளிகள் அவர்களை மிரட்டிவிட்டு கண்ணனை வெட்டி கொன்றனர். இந்தக் கொலை தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பதை பதைப்பை ஏற்படுத்தியது.</p><h2><strong>கைது</strong></h2><p>இதனை ஆய்வு செய்த போலீசார், அடையாறு ருக்மணி நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பரணி (20) மற்றும் அவரது நண்பர்களான ராகேஷ், நரேஷ், ஹரிஹரன், மணிகண்டன் ஆகியோரைக் கைது செய்தனர்.</p><h2><strong>போலீசார் விசாரணை</strong></h2><p>விசாரணையில், இந்தக் கொலைக்கு 17 ஆண்டு கால பகையே காரணம் என்பது தெரியவந்தது. கடந்த 2009-ம் ஆண்டு பரணியின் பெரியப்பா சிவாவை, கண்ணன் மற்றும் அவரது கூட்டாளிகள் கொலை செய்துள்ளனர். அதேபோல், 2016-ல் பரணியின் தந்தை வேலுவும் படுகொலை செய்யப்பட்டார். தனது தந்தை மற்றும் பெரியப்பாவின் மரணத்திற்கு கண்ணன் தான் முக்கிய காரணம் என்று கருதிய பரணி, நேரம் பார்த்து காத்திருந்து பழி தீர்த்துள்ளார்.</p><h2><strong>வாக்குமூலம்</strong></h2><p>கைதான பரணி போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் “கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கண்ணன் எங்களைச் சந்தித்து பேசினார். தனக்கு 2 பெண் குழந்தைகள் இருப்பதாகவும், பழைய பகையை மறந்து சமாதானமாகப் போகலாம் என்றும் கூறினார்.</p><p>அப்போது நான் படிப்பில் கவனம் செலுத்துவதாகக் கூறி அவரை நம்ப வைத்தேன். ஆனால், என் தந்தை மற்றும் பெரியப்பாவைக் கொன்ற அவர், சமீபத்தில் ஒரு கட்சியில் சேர்ந்து கொண்டு அந்தப் பகுதியில் பெரிய ஆள் போல வலம் வந்தது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவரை உயிரோடு விட்டால் மீண்டும் எங்களுக்கு ஆபத்து என்று கருதினேன்.</p><h2><strong>ஆன்மா சாந்தி அடைந்துள்ளது</strong></h2><p>அதனால்தான் எனது நண்பர்களுடன் சேர்ந்து அவரைத் தீர்த்துக்கட்டினேன். இப்போதுதான் என் தந்தை மற்றும் பெரியப்பாவின் ஆன்மா சாந்தி அடைந்துள்ளது.” என கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.</p><h2><strong>கொலையான கண்ணன் சரித்திரப் பதிவேடு குற்றவாளி</strong></h2><p>இதற்கிடையே கொலையான கண்ணன் சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பதால், அவரது நடவடிக்கைகளைக் கண்காணிக்கத் தவறியதாக அடையாறு துணை கமிஷனர் கார்த்திகேயன் மற்றும் சாஸ்திரி நகர் சட்டம்- ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ரோகிணி ஆகியோரை காத்திருப்போர்பட்டியலுக்கு மாற்றி போலீஸ் கமிஷனர் அமல் ராஜ் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-to-hold-by-elections-in-two-assembly-seats-on-october-6</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-to-hold-by-elections-in-two-assembly-seats-on-october-6#comments</comments><guid isPermaLink="false">bd000964-0d2b-4cdb-b9d1-797ee2f8b640</guid><pubDate>Mon, 07 Sep 2026 12:23:51 +0000</pubDate><atom:updated>2026-09-07T12:23:51.916Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Election Commission,தேர்தல் ஆணையம்,by election,இடைத்தேர்தல்,தமிழக தொகுதிகள்,TN Constitution</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/gn3omoav/EC.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vote]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/gn3omoav/EC.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அக்டோபர் 6ம் தேதி 2 தொகுதிகளில் இடைதே்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.</p><p>அக்டோபர் 6ம் தேதி தாராபுரம், <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-car-accident-4-college-students-death" rel="nofollow">மதுராந்தகம்</a> தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9ம் தேதி நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தாராபுரம் தொகுதியில் அதிமுக எம்எல்ஏ சத்தியபாமா ராஜினாமா செய்திருந்தார்.</p><p>மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல் ராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2>முக்கிய தேதிகள்</h2><p>வரும் செப்டம்பர் 9ம் தேதி அன்று வேட்புமனு தொடக்கம்.</p><p>செப்டம்பர் 16ம் தேதி அன்று- வேட்புமனு கடைசி நாள்.</p><p>செப்டம்பர் 17ம் தேதி- வேட்புமனு பரிசீலனை</p><p>அக்டோபர் 6ம் தேதி- வாக்குப்பதிவு</p><p>அக்டோபர் 9ம் தேதி- வாக்கு எண்ணிக்கை</p>]]></content:encoded></item><item><title>‘நீ இஞ்சி... நா வெல்லம்’ - விஜய் சேதுபதி, சாய்பல்லவி நடிக்கும் படத்தின் தலைப்பு வெளியீடு! </title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/nee-inji-naa-vellam-title-revealed-for-the-film-starring-vijay-sethupathi-and-sai-pallavi</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/nee-inji-naa-vellam-title-revealed-for-the-film-starring-vijay-sethupathi-and-sai-pallavi#comments</comments><guid isPermaLink="false">a4b91a29-ab03-4e12-b0cf-cd410dfb7832</guid><pubDate>Mon, 07 Sep 2026 12:17:59 +0000</pubDate><atom:updated>2026-09-07T12:17:59.177Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Sai Pallavi,Mani Ratnam,மணிரத்னம்,விஜய் சேதுபதி,Vijay sethupathi,சாய்பல்லவி,Inji Vellam,இஞ்சி வெல்லம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/73djevcl/New-Project-2026-09-07T174211.293.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘நீ இஞ்சி நா வெல்லம்’ - விஜய் சேதுபதி, சாய்பல்லவி நடிக்கும் படத்தின் தலைப்பு வெளியீடு! ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/73djevcl/New-Project-2026-09-07T174211.293.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய்பல்லவி நடிக்கும் புதிய படத்திற்கு ‘இஞ்சி வெல்லம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் அடுத்தாண்டு ஜனவரியில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>லைகா புரொடக்ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். </p><p>அண்மையில் இப்படத்தின் காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வந்தன. இந்நிலையில் இன்று படத்தின் முதல் பார்வை போஸ்டரும், தலைப்பிற்கான அறிவிப்பு வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. </p><p>மணிரத்னம் இயக்கம் என்பதால் இது காதல் கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படத்தின் மற்ற கலைஞர்கள் குறித்த அறிவிப்புகளும், படம் குறித்த பிற அறிவிப்புகளும் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="qme" dir="ltr"><a href="https://x.com/hashtag/InjiVellam?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#InjiVellam</a> <a href="https://x.com/hashtag/ManiRatnam?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ManiRatnam</a> <a href="https://x.com/arrahman?ref_src=twsrc%5Etfw">@arrahman</a> <a href="https://x.com/hashtag/Subaskaran?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Subaskaran</a> <a href="https://x.com/LycaProductions?ref_src=twsrc%5Etfw">@LycaProductions</a> <a href="https://x.com/VijaySethuOffl?ref_src=twsrc%5Etfw">@VijaySethuOffl</a> <a href="https://x.com/Sai_Pallavi92?ref_src=twsrc%5Etfw">@Sai_Pallavi92</a> <a href="https://x.com/sreekar_prasad?ref_src=twsrc%5Etfw">@sreekar_prasad</a> <a href="https://x.com/hashtag/AvikMukhopadhayay?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#AvikMukhopadhayay</a> <a href="https://x.com/ekalakhani?ref_src=twsrc%5Etfw">@ekalakhani</a> <a href="https://x.com/hashtag/SharmishtaRoy?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#SharmishtaRoy</a> <a href="https://x.com/BrindhaGopal1?ref_src=twsrc%5Etfw">@BrindhaGopal1</a> <a href="https://x.com/dhilipaction?ref_src=twsrc%5Etfw">@dhilipaction</a> <a href="https://x.com/AmbadyRanjith?ref_src=twsrc%5Etfw">@AmbadyRanjith</a> <a href="https://x.com/bagapath?ref_src=twsrc%5Etfw">@bagapath</a> <a href="https://x.com/gkmtamilkumaran?ref_src=twsrc%5Etfw">@gkmtamilkumaran</a> <a href="https://x.com/SonyMusicSouth?ref_src=twsrc%5Etfw">@sonymusicsouth</a> <a href="https://x.com/NetflixIndia?ref_src=twsrc%5Etfw">@NetflixIndia</a> <a href="https://x.com/homescreenent?ref_src=twsrc%5Etfw">@homescreenent</a>… <a href="https://t.co/QGOTEyKMRb">pic.twitter.com/QGOTEyKMRb</a></p>&mdash; Madras Talkies (@MadrasTalkies_) <a href="https://x.com/MadrasTalkies_/status/2096924473048134014?ref_src=twsrc%5Etfw">September 7, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>கொல்கத்தாவில் பிறந்த பெண் குழந்தைக்கு கொரோனா தொற்று: சாவின் விழிம்பில் இருந்து காப்பாற்றிய மருத்துவர்</title><link>https://www.maalaimalar.com/news/national/baby-girl-born-with-covid-in-kolkata-saved-by-doctors</link><comments>https://www.maalaimalar.com/news/national/baby-girl-born-with-covid-in-kolkata-saved-by-doctors#comments</comments><guid isPermaLink="false">6f2c5659-e114-44b2-a902-fb279849562c</guid><pubDate>Mon, 07 Sep 2026 11:58:27 +0000</pubDate><atom:updated>2026-09-07T11:58:27.457Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கொல்கத்தா,Kolkata,covid,Corona,கோவிட்,கொரோனா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/2sce0ex7/Untitled-design-33.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kolkata newborn Covid case]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/2sce0ex7/Untitled-design-33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் புதிதாக பிறந்த ஒரு பச்சிளம் குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பதை மருத்துவர்கள் கண்டு பிடித்தனர்.</p><p>இதையடுத்து சீரற்ற இதய துடிப்பு மற்றும் சுவாச கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகளால் உயிருக்கு போராடிய குழந்தைக்கு உரிய சிகிச்சை அளித்து மருத்துவர்கள் காப்பாற்றினர்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">மேற்குவங்க மாநிலம்</a> கொல்கத்தாவில் உள்ள பெல்லி வியூ மருத்துவமனையில், அர்பிதா சாந்த்ரா என்ற கர்ப்பிணி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். </p><p>அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரின் கருப்பையில் உள்ள குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்ததை கண்டறிந்தனர். </p><h3><strong>பிறந்த குழந்தைக்கு கொரோனா தொற்று</strong></h3><p>இதையடுத்து கொரோனா தொற்றுடன் பிறந்த அந்த பெண் குழந்தை, சுவாசக் கோளாறு பிரச்சனையால் அவதிப்பட்டது. </p><p>இதற்கிடையில் குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அந்த பெண் குழந்தைக்கு செப்சிஸ் நோய் இருப்பதையும் கண்டறிந்தனர்.</p><p>செப்சிஸ் நோய் காரணமாக பிறந்த குழந்தைக்கு மூச்சுத் திணறலும் அதிகப்படியான இதயத் துடிப்பும் ஏற்பட்டது. </p><p>இதைத்தொடர்ந்து அந்த பச்சிளம் குழந்தைக்கு மருத்துவர்கள் முதலில் தேவையான ஆக்சிஜனை வழங்கினர்.</p><p>குழந்தையின் நிலைமை மேலும் மோசமடைந்ததால், செயற்கை சுவாச உதவியுடன் நுரையீரலுக்குள் காற்றை செலுத்தினர்.</p><p>இதையடுத்து பிறந்த குழந்தைக்கு புரோ-பி.என்.பி மருத்துவ பரிசோதனையை மருத்துவர்கள் செய்தனர். இதன்மூலம் கொரோனா மற்றும் செப்சிஸ் நோய் இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டது.</p><h3><strong>மோசமான குழந்தையின் உடல்நிலை</strong></h3><p>அடுத்த ஒவ்வொரு மணி நேரத்திலும் குழந்தையின் உடல் நிலை மிகவும் மோசமாகி காணப்பட்டது. </p><p>மேலும் கொரோனா பரிசோதனை முடிவை பெற ஐந்து நாட்கள் ஆகும் என்பதால், மருத்துவர்கள் குழந்தைக்கு சிகிச்சையை தொடர்ந்து அளித்தனர்.</p><p>இதையடுத்து ஐந்து நாட்களாக அளிக்கப்பட்ட சிகிச்சையை தொடர்ந்து, குழந்தையின் உடல் நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது.</p><p>இருந்தாலும் குழந்தையின் உடல்நிலை முழுமையாக குணமடையும் வரை, அந்த பெண் குழந்தையை மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் வைத்திருந்தனர்.</p><h3><strong>மருத்துவர் சாந்தனு ரே</strong></h3><p>இதுகுறித்து பச்சிளம் குழந்தைக்கு சிகிச்சை அளித்த குழந்தை நல மருத்துவர் சாந்தனு ரே கூறுகையில், “செப்சிஸ் மற்றும் கொரோனா ஆகிய இரண்டு நோய் தொற்றுகளும், உயிருக்கு ஆபத்தானவை என்பதால், நாங்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தோம்.</p><p>எம்.ஐ.எஸ்-என் நோயால் ஏற்படும் இறப்பு விகிதம் 50 சதவீதமாக உள்ளது. குழந்தையின் உடல்நிலை வேகமாக மோசமடைந்து வந்ததால், நாங்கள் விரைவாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம்.</p><p>இதன் காரணமாக வைரஸ் மற்றும் பாக்டீரியா ஆகியவற்றிற்கு எதிராக ஆண்டிபாடிகளாக செயல்படும் காமா குளோபுலின் என்ற ரத்த புரதத்தை குழந்தைக்கு செலுத்த முடிவு செய்தோம். ஐந்தாவது நாளில் குழந்தையின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.</p><p>இருந்தாலும் பூரண குணமடையும் வரையில், நாங்கள் அந்த பச்சிளம் குழந்தையை தொடர் மருத்துவ கண்காணிப்பில் வைத்திருந்தோம்” என மருத்துவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.90 லட்சம் சம்பளத்தை உதறி தள்ளிய இளைஞர் - ரூ.30,000 முதலீட்டில் மாதம் ரூ.12 லட்சம் சம்பாதித்து அசத்தல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/from-30k-investment-to-1-2-million-a-month-after-quitting-9-million-rupee-job</link><comments>https://www.maalaimalar.com/news/national/from-30k-investment-to-1-2-million-a-month-after-quitting-9-million-rupee-job#comments</comments><guid isPermaLink="false">b2df8a10-063e-48df-8ad4-c47a29ac68ae</guid><pubDate>Mon, 07 Sep 2026 11:50:16 +0000</pubDate><atom:updated>2026-09-07T11:50:16.663Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Chandigarh,சண்டிகர்,Mohit Nijhawan,மோஹித் நிஜவான்,Micro greens,மைக்ரோ கிரீன்ஸ்,Vertical Farming,Indoor Farming</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/fm6h9ewr/Micro-greens" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Micro greens ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/fm6h9ewr/Micro-greens?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நம்மில் பலருக்கும் கார்ப்பரேட் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.90 லட்சம் சம்பளம் என்பது ஒரு கனவாகவே இருக்கும். ஆனால், <a href="https://www.maalaimalar.com/topic/chandigarh">சண்டிகரைச் </a>சேர்ந்த மோஹித் நிஜவான் என்று இளைஞருக்கு, அது வெறும் ஆரம்ப புள்ளியாகவே இருந்துள்ளது.</p><p>கணினி அறிவியலில் பி.டெக் பட்டம் பெற்ற மோஹித், தனது கைநிறைய சம்பளம் தரும் கார்ப்பரேட் வேலையை கடந்த 2020 ஆண்டு டிசம்பரில் விட்டுவிட்டு, முற்றிலும் மாறுபட்ட துறையான உள் அரங்கு விவசாயத்தில் கால் பதித்து இன்று கோடீஸ்வரராக உயர்ந்துள்ளார்.</p><h2>ரூ.30,000 முதலீட்டில் தொடங்கிய சோதனை முயற்சி</h2><p>ஆரம்பத்தில் பெரிய அளவில் முதலீடு செய்ய விரும்பாத மோஹித், வெறும் ரூ.30,000 முதலீட்டில் தனது வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள 100 சதுர அடி சிறிய அறையில் <a href="https://www.greenu.in/mohit-nijhwan-microgreens/">மைக்ரோகிரீன்ஸ் </a>(முளைக்கீரை/இளம் ஊட்டச்சத்து தாவரங்கள்) வளர்க்கத் தொடங்கினார்.</p><p>ஆரம்பக் கட்டத்தில் விவசாயத்தின் நுணுக்கங்கள், உற்பத்தி முறைகள், வாடிக்கையாளர்களைக் கண்டறிதல் மற்றும் ஒரு நிலையான வணிக மாதிரியை உருவாக்குதல் என அனைத்தையும் அவரே சுயமாகக் கற்றுக் கொண்டார். </p><p>இந்த சிறிய சோதனை முயற்சிதான் இன்று ‘கிரீனு மைக்ரோகிரீன்ஸ்’ என்ற மிகப்பெரிய பிராண்டாக உருவெடுத்துள்ளது.</p><h2>அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய செங்குத்து விவசாயம்</h2><p>ஆரம்பத்தில் வெறும் மூன்று ரேக்குகள், தட்டுகள், வளர்ப்பு விளக்குகள் மற்றும் விதைகளைக் கொண்டு செங்குத்து உள்ளரங்கு விவசாயத்தை மோஹித் தொடங்கினார். </p><p>முற்றிலும் மரபணு மாற்றப்படாத மற்றும் பூச்சிக்கொல்லிகள் இல்லாத இயற்கை முறையில் 21 வகையான ஆர்கானிக் மைக்ரோகிரீன்ஸ் வகைகளை வளர்ப்பதில் அவர் தீவிர கவனம் செலுத்தினார்.</p><p>தற்போது இந்த வணிகம் பல மடங்கு விரிவடைந்துள்ளது. இப்போது 500 சதுர அடி பரப்பளவிலான அதிநவீன வசதிகள் கொண்ட பண்ணையாக இது மாறியுள்ளது. </p><p>இங்கு சுமார் 60 ரேக்குகள் அமைக்கப்பட்டு, மாதத்திற்கு 12,000 தட்டுகள் மைக்ரோகிரீன்ஸ் உற்பத்தி செய்யும் அளவிற்குத் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது.</p><h2>மாதம் ரூ.12 லட்சம்... ஆண்டுக்கு ரூ.1.44 கோடி வருவாய்</h2><p>தற்போது 'கிரீனு மைக்ரோகிரீன்ஸ்' நிறுவனம் மூலம் மோஹித் நிஜவனுக்கு மாதத்திற்கு சுமார் ரூ.12 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. இதன் மூலம் ஆண்டு வருமானமாக தோராயமாக ரூ.1.44 கோடியை பெற்று வருகிறார். </p><p>இது குறித்து சமூக வலைத்தளப் பக்கத்தில் இவரது வீடியோ காட்டுத்தீயாய் பரவி வைரலாகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>ரவிமோகன் படத்திற்கு இசையமைக்கும் பாடகி கெனிஷா!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/singer-kenisha-composing-music-for-ravi-mohans-film</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/singer-kenisha-composing-music-for-ravi-mohans-film#comments</comments><guid isPermaLink="false">d9f19410-e2ea-43fc-8692-b2c32ec0c17b</guid><pubDate>Mon, 07 Sep 2026 11:45:40 +0000</pubDate><atom:updated>2026-09-07T11:45:40.057Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Actor ravi mohan,An Ordinary Man,ஆன் ஆர்டினரி மேன்,நடிகர் ரவிமோகன்,singer Keneeshaa,பாடகி கெனிஷா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/1ndaxilo/New-Project-2026-09-07T164926.850.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரவிமோகன் படத்திற்கு இசையமைக்கும் பாடகி கெனிஷா!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/1ndaxilo/New-Project-2026-09-07T164926.850.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகர் ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனமான ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஆன் ஆர்டினரி மேன்’. ரவிமோகனே இயக்கி, தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகனாக யோகிபாபு நடிக்கிறார். </p><p>இந்நிலையில் இப்படத்திற்கு ரவிமோகனின் தோழி <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/did-i-ruin-ravi-mohans-life-singer-kenisha-pours-out-her-anguish-in-a-video">கெனிஷா </a>இசையமைக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. </p><p>இருவரும் காதலித்து வந்ததாக தகவல்கள் வெளியாகி, பின்னர் பிரிந்துவிட்டதாகப் பகிரங்கமாக அறிவித்த சில மாதங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><p>இதன்மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் பாடகி கெனிஷா. </p>]]></content:encoded></item><item><title>ஷபாலி வர்மாவுக்கு எதிராக சைகை: பாகிஸ்தான் கேப்டனுக்கு அபராதம் விதிப்பு!</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/fatima-sana-fined-10-percent-of-match-fees-sanctioned-for-giving-a-send-off-to-shafali-varma-in-women-asia-cup-2026-game</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/fatima-sana-fined-10-percent-of-match-fees-sanctioned-for-giving-a-send-off-to-shafali-varma-in-women-asia-cup-2026-game#comments</comments><guid isPermaLink="false">f69a52fe-a98f-409c-b9ae-4b856384b596</guid><pubDate>Mon, 07 Sep 2026 11:44:08 +0000</pubDate><atom:updated>2026-09-07T11:44:08.220Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ஷபாலி வர்மா,Womens Asia Cup,Shafali Varma,பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/hzctfri5/PakistanCaptain001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Paksitan Captain Fathima Sana]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/hzctfri5/PakistanCaptain001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய வீராங்கனை ஷபாலி வர்மாவை வெளியே போ என்ற வகையில் சைகை காண்பித்ததால் பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனாவுக்கு 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p>பெண்களுக்கான ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. குரூப் ஏ-யில் இடம் பிடித்துள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேற்று முன்தினம் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 55 ரன்களில் சுருண்டது. 18.1 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்தாலும் அதிக ரன்கள் குவிக்க இயலவில்லை. தொடக்க வீராங்கனைகள் முனீபா அலி (13), ஷவால் சல்பிகுர் (14) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை கடந்தனர்.</p><h2>ஷபாலி வர்மாவை வீழ்த்தியபோது ஆவேசம்</h2><p>இந்திய வீராங்கனை ஸ்ரீ சரணி, பிரேமா ராவத் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். பின்னர் இந்தியா 8.4 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் பெற்றது. இந்திய தொடக்க வீராங்கனை <a href="https://www.maalaimalar.com/sports/cricket/womens-asia-cup-team-india-secures-a-magnificent-victory-over-pakistan">ஷபாலி வர்மா</a> ஆட்டத்தின் முதல் பந்தை சிக்சருக்கு தூக்கினார். 2-வது ஓவரை பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா வீசினார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Fatima Sana turning up the heat despite the scoreline.  <br><br>Watch India vs Pakistan LIVE NOW on Sony Sports Network TV channels &amp; Sony LIV.<a href="https://x.com/hashtag/SonySportsNetwork?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#SonySportsNetwork</a> <a href="https://x.com/hashtag/SonyLIV?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#SonyLIV</a> <a href="https://x.com/hashtag/DPWorldWomensAsiaCup2026?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#DPWorldWomensAsiaCup2026</a> <a href="https://x.com/hashtag/NotAGentlemansGame?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#NotAGentlemansGame</a> <a href="https://t.co/j2ohXqlZSV">pic.twitter.com/j2ohXqlZSV</a></p>&mdash; Sony Sports Network (@SonySportsNetwk) <a href="https://x.com/SonySportsNetwk/status/2096277639266992409?ref_src=twsrc%5Etfw">September 5, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>இந்த ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஷபாலி வர்மா, பவுன்சராக வந்த 3-வது பந்தை எதிர்கொண்டபோது, பாத்திமா சனாவிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.</p><h2>10 சதவீதம் அபராதம்</h2><p>கேட்ச் பிடித்ததும் வெளியே போ என்ற வகையில் சைகை காட்டினார். இது ஐசிசி வீரர்களின் நன்னடத்தை விதியை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டது. நடுவர்களும் ஐசிசி விதிமுறையை மீறியதாக பாத்திமா சனாவுக்கு போட்டிக்கான சம்பளத்தில் 10 சதவீதம் அபாரதம் விதிக்கப்பட்டது. தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதால், பாத்திமா சனா மீது மேற்கொண்டு நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.</p>]]></content:encoded></item><item><title>102 வயதில் வாழ்நாள் ஆசையை நிறைவேற்றிய மூதாட்டி - சர்வதேச பாலத்தை நடந்து கடந்து சாதனை!</title><link>https://www.maalaimalar.com/news/world/canadian-102-year-old-woman-walks-new-international-bridge</link><comments>https://www.maalaimalar.com/news/world/canadian-102-year-old-woman-walks-new-international-bridge#comments</comments><guid isPermaLink="false">c7bf88e0-d36c-4b8b-be04-79e636a0e2d4</guid><pubDate>Mon, 07 Sep 2026 11:42:02 +0000</pubDate><atom:updated>2026-09-07T11:42:02.322Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கனடா,canada,102 Years Old,Rita Georgeff,Gordie Howe Bridge,கோர்டி ஹோவ் சர்வதேச பாலம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/7gvwlv06/Gordie-Howe-Bridge" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gordie Howe Bridge]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/7gvwlv06/Gordie-Howe-Bridge?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE">கனடாவைச் </a>சேர்ந்த 102 வயது மூதாட்டி ஒருவர், தனது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாகப் புதிதாகக் கட்டப்பட்ட பிரம்மாண்டமான சர்வதேச பாலத்தை நடந்து கடந்து தனது வாழ்நாள் ஆசையை நிறைவேற்றியுள்ளார். </p><p>இந்த நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.</p><h2>102 -வது மைல்கல்லும் நீண்ட நாள் ஆசையும்</h2><p>கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள வின்ட்சர் நகரின் சாண்ட்விச் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் ரீட்டா ஜார்ஜெஃப். இவர் கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதியன்று தனது 102-வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE">அமெரிக்காவின் </a>மிச்சிகன் மாகாணத்தில் உள்ள டெட்ராய்ட் நகரையும், கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள வின்ட்சர் நகரையும் இணைக்கும் வகையில் டெட்ராய்ட் ஆற்றின் குறுக்கே பல ஆண்டுகளாக ‘கோர்டி ஹோவ் சர்வதேச பாலம் ’கட்டப்பட்டு வந்தது.</p><p>ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இந்தத் பகுதியில் வாழ்ந்து வரும் ரீட்டா, இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணிகளை ஆரம்பத்திலிருந்தே உன்னிப்பாகக் கவனித்து வந்தார்.</p><p>தனது 100-வது பிறந்தநாளிலேயே இந்தப் பாலத்தின் மீது நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அவர், பாலம் கட்டி முடிக்கப்படும் வரை மேலும் 2 ஆண்டுகள் காத்திருந்து, தற்போது தனது 102-வது பிறந்தநாளில் அந்த ஆசையை நிறைவேற்றியுள்ளார்.</p><h2>பாலத்தைக் கடந்த வரலாற்றுத் தருணம்</h2><p>தனது பிறந்தநாளை முன்னிட்டு, ரீட்டா ஜார்ஜெஃப் வாக்கர் உதவியுடன், தனது குடும்பத்தினர் மற்றும் பாலத்தின் கட்டுமானப் பணியாளர்களின் உற்சாகமான ஆதரவோடு பாலத்தின் மீது நடக்கத் தொடங்கினார். </p><p>ஆற்றின் அழகிய காட்சியையும், இருபுறமும் உள்ள நகரங்களின் அழகையும் ரசித்தபடி அவர் பாலத்தை வெற்றிகரமாகக் கடந்து சாதனை படைத்தார்.</p><p>இதுகுறித்து அவர் பேசுகையில், "ஆச்சரியமாக இருக்கிறது, நான் இதைச் செய்துவிட்டேன்! எனது 7 வயதில் பீட்டர் மற்றும் இண்டியன் ரோடு சந்திப்பில் வசித்தபோது, பாலத்தில் மக்கள் கூட்டமாக இருந்ததை பார்த்த நினைவிருக்கிறது.</p><p>ஆனால் அப்போது என்ன நடக்கிறது என்று புரியும் வயது இல்லை. இப்போது இந்த வயதில் சாண்ட்விச் பகுதிக்குச் செல்வதே கடினம், இருந்தாலும் இந்த கோர்டி ஹோவ் பாலம் நமது நகரத்திற்குச் செய்துள்ள நன்மைகளை நான் பாராட்டுகிறேன். இது மிகவும் அற்புதம்" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.</p><h2>103-வது பிறந்தநாளுக்கான ஆசை</h2><p>பாலத்தைக் கடந்து முடித்த ரீட்டாவிடம், செய்தியாளர்கள் உங்களது அடுத்த (103-வது) பிறந்தநாளுக்கான ஆசை என்னவென்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், "நான் எனது அடுத்த பிறந்தநாளை சென்றடைய வேண்டும், அதுவே எனது ஆசை" என்று மிகவும் எதார்த்தமாகவும் நெகிழ்ச்சியாகவும் பதிலளித்தார்.</p><p>ரீட்டா ஜார்ஜெஃப் பாலத்தைக் கடக்கும் இந்த நெகிழ்ச்சியான வீடியோ, முதியவர்களின் மனவலிமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்து சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>இன்று சர்க்கஸ் கூடாரமாக மாறிய சட்டசபை..!- கனிமொழி எம்.பி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-assembly-has-become-circus-tent</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-assembly-has-become-circus-tent#comments</comments><guid isPermaLink="false">282c2737-3e2f-4036-b36c-5af42819cdf0</guid><pubDate>Mon, 07 Sep 2026 11:35:33 +0000</pubDate><atom:updated>2026-09-07T11:35:33.265Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,கனிமொழி எம்பி,தமிழக சட்டசபை,Kanimozhi MP,TN assembly</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/3cfw7kr5/kanimozhi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kanimozhi MP]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/3cfw7kr5/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மக்கள் பிரச்சனைகள் குறித்து பேச வேண்டிய சபை, இன்று சர்க்கஸ் கூடாரமாக மாறியிருக்கிறது என திமுக எம்பி கனிமொழி விமர்சித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>வரலாறு பேச வேண்டுமென்றால், நீதிக்கட்சி காலத்திலிருந்து தொடங்க வேண்டும். இந்தத் தமிழ்ச் சமூகத்துக்காக நாங்கள் என்ன செய்தோம் என்பதிலிருந்து தொடங்க வேண்டும். ஆனால், தவெகவிற்கும், அதன் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கும் அந்த வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.</p><p>தலைவர் கலைஞரைப் பற்றியோ, தி.மு.க.வைப் பற்றியோ அவதூறாகப் பேசுவதையே அரசியல் தகுதியாக இன்னும் எத்தனை காலத்திற்கு நினைத்துக்  கொள்ளப்போகிறார்கள் என்று தெரியவில்லை. எல்லாவற்றையும் நம்புவதற்கு ஒரு கூட்டம் இருக்கும் வரை, எதை வேண்டுமானாலும் பேசுவதற்கு ஒரு கூட்டமும் இருந்துகொண்டுதான் இருக்கும்.</p><p>காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதிலுரை அளிக்க வேண்டிய<a href="https://www.maalaimalar.com/search?q=%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D" rel="nofollow"> முதலமைச்சர்</a>, எழுதிக் கொடுத்ததைப் படிப்பதைத் தவிர, கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் சொல்ல முடியாமல், நீண்ட சொற்பொழிவை நிகழ்த்திவிட்டு, எதிர்வினை வந்துவிடுமோ என்ற பயத்தில் விவாதத்தையே சபாநாயகர் தவிர்த்திருக்கிறார்.</p><p>கடந்த மூன்று நாட்களாக காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிக்க ஒத்திகை பார்த்தும், அந்த மானியக் கோரிக்கை தொடர்பாக முதலமைச்சர் பேசியது சொற்பமே. மற்றவை எல்லாம் காலம் காலமாகப் பரப்பப்பட்ட வதந்திகளையும், சமீபத்திய WhatsApp factory பொய்களையும் கலந்து, முதலமைச்சருக்கு ஒரு பிரதியைக் கொடுத்துவிட்டார்கள் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.</p><p>சட்டம்-ஒழுங்கு குறித்தும், குழந்தைகள் &amp; பெண்களின் பாதுகாப்பு குறித்தும், பிற மக்கள் பிரச்சனைகள் குறித்தும் பேச வேண்டிய சபை, இன்று சர்க்கஸ் கூடாரமாக மாறியிருக்கிறது. </p><p>ஒன்று மட்டும் சொல்லத் தோன்றுகிறது...</p><p>Not everything loud is true</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>இஸ்ரோ தனியார்மயமாக்கப்படாது: ஊழியர்களின் அச்சத்தைப் போக்கி இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் திட்டவட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/national/isro-not-to-be-privatised-isro-chief-v-narayanan-assures-employees</link><comments>https://www.maalaimalar.com/news/national/isro-not-to-be-privatised-isro-chief-v-narayanan-assures-employees#comments</comments><guid isPermaLink="false">ee0b6c5c-37d8-4716-be64-56226eb6cb96</guid><pubDate>Mon, 07 Sep 2026 11:28:02 +0000</pubDate><atom:updated>2026-09-07T11:28:02.901Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ISRO,இஸ்ரோ,V.Narayanan,Bengaluru Space Expo,வி.நாராயணன்,இன்ஸ்பேஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/cvj1lfb8/FFD.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  V.Narayanan  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/cvj1lfb8/FFD.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p> "எதிர்காலத்தில் ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள் தயாரிப்புப் பணிகளைத் தனியார் நிறுவனங்களே மேற்கொள்ளும்" என்று ‘இன்ஸ்பேஸ்’ தலைவர் பவன் கோயங்கா பேசியதாகச் செய்திகள் வெளியாயின. </p><p>இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’ தனியார்மயமாக்கப்பட உள்ளதாக வெளியான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இஸ்ரோ தலைவர் டாக்டர் வி.நாராயணன் விரிவான விளக்கம் அளித்துள்ளார். இந்திய விண்வெளித் துறை ஒருபோதும் தனியார்மயமாக்கப்படாது என்றும், அங்கு பணிபுரியும் ஊழியர்களின் நலன்களும் கவலைகளும் முழுமையாக கேட்டறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.</p><p>பெங்களூருவில் நடைபெற்று வரும் ‘பெங்களூரு ஸ்பேஸ் எக்ஸ்போ’ நிகழ்வின் போது செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் டாக்டர் வி.நாராயணன், "கடந்த 2020-ஆம் ஆண்டே விண்வெளித் துறையில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. தனியார் துறையினருக்கு வாய்ப்பளித்து, இந்தியாவின் ஒட்டுமொத்த விண்வெளித் தொழில்நுட்பக் கட்டமைப்பை விரிவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும். இதற்காக இஸ்ரோ தனியார்மயமாக்கப்பட்டு வருகிறது என்பது முற்றிலும் தவறான செய்தி" என்று தெளிவுபடுத்தினார்.</p><p>மேலும், விண்கலன்கள் மற்றும் செயற்கைக்கோள்களை தயாரிக்கும் பணியில் பல நூற்றுக்கணக்கான இந்தியத் தனியார் நிறுவனங்கள் ஏற்கனவே இஸ்ரோவுக்குப் பெரும் உதவிகளை வழங்கி வருகின்றன என்பதையும், இது பல தசாப்தங்களாகத் தொடரும் நடைமுறைதான் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p>சமீபத்தில் விண்வெளித் துறை கட்டுப்பாட்டு அமைப்பான ‘இன்ஸ்பேஸ்’ தலைவர் பவன் கோயங்கா, "எதிர்காலத்தில் ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள் தயாரிப்புப் பணிகளைத் தனியார் நிறுவனங்களே மேற்கொள்ளும்" என்று பேசியதாகச் செய்திகள் வெளியாயின. இதைத் தொடர்ந்து, இஸ்ரோ அமைப்பைச் சேர்ந்த 9 ஊழியர் சங்கங்கள் இணைந்து தலைவர் வி.நாராயணனுக்கு செப்டம்பர் 4 அன்று 5 பக்கங்கள் கொண்ட கடிதம் ஒன்றை எழுதின.</p><p>அந்தக் கடிதத்தில், இஸ்ரோவின் உற்பத்திப் பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டால் அமைப்பின் முக்கியத்துவம் குறையுமா, பணி நியமனங்கள் பாதிக்கப்படுமா மற்றும் ஊழியர்களின் எதிர்காலம் என்னவாகும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் கோரியிருந்தனர். இந்தச் சூழலில்தான் இஸ்ரோ தலைவர் இதற்கான பதிலை அளித்துள்ளார்.</p><p>இஸ்ரோ வெளியிட்ட தகவல்களின்படி, வழக்கமான ராக்கெட் தயாரிப்பு மற்றும் செயற்கைக்கோள் உற்பத்திப் பணிகளைத் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மேற்கொள்ள ஊக்குவிக்கப்படும். இதனால் இஸ்ரோ தனது கவனத்தை அதிநவீன ஆராய்ச்சி மற்றும் தொலைநோக்குத் திட்டங்களில் முழுமையாகச் செலுத்த முடியும்.</p><p>குறிப்பாக, 2035-க்குள் இந்திய விண்வெளி மையம் அமைத்தல், 2040-க்குள் நிலவுக்கு இந்தியர்களை அனுப்பும் திட்டம், மீண்டும் பயன்படுத்தக்கூடிய நவீன ராக்கெட்டுகளை உருவாக்குதல் மற்றும் ஆழமான விண்வெளி ஆராய்ச்சிகள் போன்ற முக்கிய தொலைநோக்கு இலக்குகளை நோக்கி இஸ்ரோ மிக தீவிரமாகச் செயல்பட உள்ளது.</p><p>எனவே, தேசிய பாதுகாப்பு சார்ந்த முக்கிய உள்கட்டமைப்புகளும் முதன்மை விண்வெளி ஆராய்ச்சி உரிமைகளும் எப்போதும் இந்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்றும், இஸ்ரோவின் முக்கியத்துவம் எக்காலத்திலும் குறையாது என்றும் தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கத்தி கூப்பாடு போடுவது அநாகரிகமான அரசியல்..!- சட்டசபையில் முதலமைச்சர் விஜயின் பேச்சுக்கு நயினார் விமர்சனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/shouting-slogans-is-indecent-politics-nainar-slams-cm-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/shouting-slogans-is-indecent-politics-nainar-slams-cm-vijay#comments</comments><guid isPermaLink="false">76000a8d-330f-4ce2-b26c-6c6d54832c3e</guid><pubDate>Mon, 07 Sep 2026 11:00:31 +0000</pubDate><atom:updated>2026-09-07T11:00:31.628Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,தமிழக சட்டசபை,TN assembly,முதலமைச்சர் விஜய்,TN CM Viijay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/cibr4z7x/Vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay- Nainar Nagendran]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/cibr4z7x/Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கத்தி கூப்பாடு போடுவது அநாகரிகமான அரசியல் என சட்டசபையில் முதலமைச்சர் விஜயின் குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>சட்டமன்றம் உங்கள் சினிமா ஸ்டுடியோ அல்ல <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D" rel="nofollow">முதலமைச்சர் விஜய்</a> அவர்களே! </p><p>உங்கள் அடுக்கடுக்கான வசனங்களை கேட்டு ஆர்ப்பரிப்பதற்கு தமிழக மக்கள் ஒன்றும் உங்கள் கட்சியின் ஆச்சரியக்குறிகள் அல்ல. </p><p>உங்கள் கட்சிக்கு இரண்டு அமைச்சர்களை வழங்கிய கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10 கொலைகள் நடந்துள்ளன, உங்கள் அலுவலகம் அமைந்துள்ள சென்னை மாநகரில் நேற்று ஒரே நாளில் மட்டும் இரண்டு படுகொலைகள் நடந்துள்ளன, நீங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து 6 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன, பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவலர்களில் சிலர் பொதுமக்களை தரக்குறைவாக நடத்துகின்றனர், உங்கள் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். </p><p>அப்படியிருக்கையில் இன்று சட்டமன்றத்தில் நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது, இந்த அவலங்களுக்கெல்லாம் நீங்கள் முறையாக பதில் அளித்திருக்க வேண்டும்.</p><p>சீரழிந்து கொண்டிருக்கும் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கிற்கு முழுப் பொறுப்பேற்று, மக்கள் பாதுகாப்பிற்கென புதிய திட்டங்களை நீங்கள் முன்மொழிந்திருக்க வேண்டும். மக்களின் உயிருக்கும் உடமைக்கும் உத்தரவாதம் அளித்திருக்க வேண்டும். </p><p>ஆனால், நீங்களோ “எனக்கும் சட்டம் ஒழுங்கிற்கும் எந்த தொடர்புமில்லை” என்ற ரீதியில், அதிரடி திரைப்படத்தில் அடுக்கடுக்கான வசனங்கள் பேசுவது போல கத்தி கூப்பாடு போடுவது, அநாகரிகமான அரசியல். எனவே, மக்கள் மன்றத்தில் மக்கள் நலன் சார்ந்த விஷயங்களை மட்டும் பேசுங்கள் முதல்வரே,"தந்தை, மகன்" கதையெல்லாம் தமிழக மக்களுக்கு தேவையில்லை.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>இங்கிலாந்து அணியில் கெவின் பீட்டர்சனுக்கு முக்கிய பொறுப்பு..!</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/kevin-pietersen-ends-12-year-england-exile-joins-white-ball-coaching-setup-for-world-cup-push</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/kevin-pietersen-ends-12-year-england-exile-joins-white-ball-coaching-setup-for-world-cup-push#comments</comments><guid isPermaLink="false">d3c65210-ec2b-4f72-90d1-d9aabf9e8310</guid><pubDate>Mon, 07 Sep 2026 10:56:21 +0000</pubDate><atom:updated>2026-09-07T10:56:21.599Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Kevin Pietersen,கெவின் பீட்டர்சன்,ECB</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/wmhwws7y/KevinPieterson.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kevin Pieterson]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/wmhwws7y/KevinPieterson.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பையை வெல்வதற்கான பயணத்தில் இங்கிலாந்து அணிக்கு உதவ அழைக்கப்பட்டதில் நான் மிகுந்த பெருமை கொள்கிறேன் என்று கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.</p><p>தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய மூன்று நாடுகளில அடுத்த ஆண்டு அக்டோபர் முதல் நவம்பர் வரை 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது.</p><p>இதற்கு தயாராகும் வகையில் ஒவ்வொரு அணியும் தங்களை தயார் படுத்தும் பணியில் ஈடுபடுத்தி வருகின்றன. இரு நாடுகளுக்கு இடையிலான 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் ஆர்வம் காட்டி வருகின்றன.</p><h2>சிறப்பு ஆலோசகர்</h2><p>இங்கிலாந்து ஒயிட்-பால் அணியை பலப்படுத்த இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக கெவின் பீட்டர்சனை சிறப்பு ஆலோசகராக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. இவர் அடுத்த 15 மாதங்களுக்கு அணியுடன் சேர்ந்து செயல்படுவார்.</p><p>ஒயிட்-பால் அணியின் தலைமை பயிற்சியாளராக மெக்கல்லம் இருந்து வருகிறார். இந்த நிலையில் சிறப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>கெவின் பீட்டர்சன் கடந்த 12 வருடத்திற்கு முன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் தற்போது மீண்டும் அணியுடன் இணைய இருக்கிறார்.</p><p>ஏற்கனவே மார்கஸ் த்ரெஸ்கோதிக், டிம் சவுத்தி, ஜீத்தன் படேல், சாரா டெய்லர் ஆகியோர் சப்போர்ட் ஸ்டாஃப் ஆக உள்ளனர். அவர்களுடன் இவரும் இணைவார்.</p><p>இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா மற்றும் தென்ஆப்பிரிக்கா சென்று விளையாட இருக்கிறது. அதன்பின் சொந்த மண்ணில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக விளையாட உள்ளது. இந்தத் தொடர்களில் கெவின் பீட்டர்சன் சிறப்பு ஆலோசகராக அணியுடன் இணைந்து செல்வார்.</p><h2>கவுரவம் என்கிறார் பீட்டர்சன்</h2><p>தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பையை வெல்வதற்கான பயணத்தில் இங்கிலாந்து அணிக்கு உதவ அழைக்கப்பட்டதில் நான் மிகுந்த பெருமை கொள்கிறேன். 2014-க்குப் பிறகு மீண்டும் இங்கிலாந்து அணியின் சீருடையை அணிவது எனக்குக் கிடைத்த பெரும் கௌரவம் மற்றும் மிகவும் சிறப்பான தருணமாகும்.</p><p>தங்களிடம் அபாரத் திறமை கொண்ட 'ஒயிட்-பால்' (white-ball) கிரிக்கெட் அணி உள்ளது. இந்த வீரர்களின் முழுத் திறனையும் வெளிக்கொண்டு வர, அவர்களுடன் இணைந்து அயராது உழைக்க நான் ஆவலாக உள்ளேன். அடுத்த 12 மாதங்களுக்குப் மெக்கல்லத்தின் ஆலோசனைக் குழுவில் ஒரு அங்கமாக இருப்பது ஒரு அற்புதமான வாய்ப்பு. பணியைத் தொடங்க நான் மிகவும் ஆவலாகக் காத்திருக்கிறேன் என கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தடுமாறிய தி.மு.க. எம்.எல்.ஏ.- கை கொடுத்து உதவிய முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-tn-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-tn-assembly#comments</comments><guid isPermaLink="false">ba45ccd4-d222-4b47-902f-bf00e0b44ad2</guid><pubDate>Mon, 07 Sep 2026 10:44:17 +0000</pubDate><atom:updated>2026-09-07T10:44:17.114Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Vijay,DMK,திமுக,தவெக,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/anpzzui1/tnassembly.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/anpzzui1/tnassembly.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு இடையூறாக இருந்ததால், முதலமைச்சர் விஜய் எழுந்து தன்னுடைய இருக்கையை நகர்த்தி அவர்களுக்கு உதவினார்.</p><h2><strong>தமிழ்நாடு சட்டசபை</strong></h2><p>தமிழ்நாடு சட்டசபையில் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் இன்று பதில் அளித்தார். இதனை தொடர்ந்து, முதலமைச்சர் பதிலுரை மீது பேச அனுமதிக்குமாறு கூறி தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயர் இருக்கையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><h2><strong>சபாநாயகர்</strong></h2><p>இதற்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், முதலமைச்சர் விஜய் பதிலுரை அளித்த போது அமைதியாக இருந்து கேட்டிருக்க வேண்டும். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனுமதியின்றி போஸ்டர் காட்டுவது குரல் கொடுப்பதை ஏற்க முடியாது என கண்டிப்புடன தெரிவித்தார். மேலும் முதலமைச்சர் பதிலுரையின் போது அமைதியாக இருந்திருந்தால் பேச அனுமதித்து இருப்பேன் என சபாநாயகர் தெரிவித்தார்.</p><h2><strong>தி.மு.க. எம்.எல்.ஏ.</strong></h2><p>இதனை தொடர்ந்து சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு இடையூறாக இருந்ததால், முதலமைச்சர் விஜய் எழுந்து தன்னுடைய இருக்கையை நகர்த்தி அவர்களுக்கு உதவினார். திடீரென தி.மு.க. எம்.எல்.ஏ. துரை சந்திரசேகரன் எழுந்திரிக்க தடுமாறினார். உடனே முதலமைச்சர் விஜய் எழுந்து அவரை கைகொடுத்து தூக்கி விட்டார். இந்த காட்சிகளை நேரலையாக மக்கள் பார்த்ததோடு சிலர் அதை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டனர். அது வைரலாகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>‘நான் பாஜக அடிமை என்று தன்னைத்தானே அம்பலப்படுத்திக் கொள்கிறார்’ - முதலமைச்சர் விஜய்யின் பேச்சுக்கு திமுக பதில்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/he-is-exposing-himself-as-a-bjp-slave-dmk-responds-to-chief-minister-vijays-remarks</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/he-is-exposing-himself-as-a-bjp-slave-dmk-responds-to-chief-minister-vijays-remarks#comments</comments><guid isPermaLink="false">17fa7207-f2f0-4b45-a0d6-fe6077617a23</guid><pubDate>Mon, 07 Sep 2026 10:41:52 +0000</pubDate><atom:updated>2026-09-07T10:41:52.078Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,டிகேஎஸ் இளங்கோவன்,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,T.K.S. Elangovan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/4hc74aos/New-Project-2026-09-07T160508.160.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘பாஜக அடிமை என்று தன்னைத்தானே அம்பலப்படுத்திக் கொள்கிறார்’ - முதலமைச்சர் விஜய்யின் பேச்சுக்கு திமுக பதில்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/4hc74aos/New-Project-2026-09-07T160508.160.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பேசிய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-indictment-dmk-4">முதலமைச்சர் ஜோசப் விஜய்</a>, முந்தைய திமுக ஆட்சியில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து மத்திய அரசின் அமலாக்கத்துறை ஆவணங்களை மேற்கோள் காட்டிப் பேசினார்.</p><p>இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது;</p><p>“என்ன அமலாக்கத்துறை அறிக்கை? அவரால் எப்படி அமலாக்கத்துறையின் அறிக்கையை மேற்கோள் காட்ட முடியும்? அமலாக்கத்துறை ஒன்றும் தமிழ்நாடு அரசின் முகமை அல்ல. அது ஒரு மத்திய அரசின் முகமை. ‘நான் பா.ஜ.க-வின் அடிமை’ என்று அவரே தன்னைத் தானே அம்பலப்படுத்துகிறார்.</p><p>மிசா சட்டத்தின் கீழ் திமுகவைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தான் கைது செய்யப்பட்டனர், அதிமுக உறுப்பினர்கள் அல்ல. </p><p>இந்தியா முழுவதும் இருந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர், ஆனால் அவர்கள் இறுதியில் விடுதலை செய்யப்பட்டனர். </p><p>மேலும், இந்த மிசா சட்டத்தைக் கொண்டு வந்ததற்காக இந்திரா காந்தி பின்னர் வருத்தம் தெரிவித்தார்.” என தெரிவித்தார்.</p><h2>உதயநிதியின் விமர்சனம்</h2><p>முதலமைச்சரின் சட்டப்பேரவை பேச்சுத் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.,</p><p>“அமலாக்கத்துறை சொன்ன விஷயங்கள் எல்லாம் முதலமைச்சர் படித்துக் காட்டினார். அதெல்லாம் வெறும் குற்றச்சாட்டுகள். எதுவுமே நிரூபிக்கப்படவில்லை. விசாரணை போய்க்கொண்டிருக்கிறது. மூன்று கோப்புகளை திறக்க சொன்னார்கள் என சொல்லிவிட்டு, அதைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை. </p><p>அமலாக்கத்துறை சொல்லி இருக்கிற குற்றச்சாட்டுகளைத்தான் இவர் வந்து சட்டசபையில் படித்துக் காட்டுகிறார். இன்னும் சொல்லப்போனால், சர்க்காரியா கமிஷனுக்குப் பிறகு மக்களுடைய ஆதரவைப் பெற்று மூன்று முறை திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. உங்கள் அத்தனை பேருக்கும் தெரியும். தமிழ்நாட்டு மக்களுக்கும் தெரியும்.</p><p>ஆட்சியில் இருக்கும்போது ஊழல் செய்துவிட்டார்கள் என்று நிரூபிக்கப்பட்டு, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒரே முதலமைச்சர் யார், ஒரே தலைவர் யார் என்பது இங்கு இருக்கக்கூடிய அத்தனை பேருக்கும் தெரியும். </p><p>திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த எங்களுடைய தலைவர்களோ, எங்களுடைய முன்னாள் அமைச்சர்களோ, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களோ இதுவரைக்கும் யாரும் அதுபோல் தண்டிக்கப்படவில்லை.</p><p>முதலமைச்சர் மீது கூடத்தான் வருமான வரித்துறை வழக்கு இருக்கிறது. 15 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதை மறைத்ததாக அவர் மீது ஒரு வழக்கு இருக்கிறது. </p><p>வருமான வரித்துறை வழக்கு இருக்கிறது. வருமானத்தை மறைத்ததற்கு வழக்கு போட்டால், ரொம்ப லேட்டாக வழக்கு போட்டிருக்கிறீர்கள் என்று நீதிமன்றத்தில் ஓப்பனாக ஒத்துக்கொண்டவர்தான் இன்று இருக்கக்கூடிய இந்த டம்மி முதலமைச்சர்.</p><p>அதுமட்டுமல்ல, இங்கு இருக்கக்கூடிய பொதுப்பணித்துறை அமைச்சர் மீது அமலாக்கத்துறை வழக்கு இருக்கிறது. நடந்துகொண்டிருக்கிறது. இப்படி அவர்களுடைய கட்சியில் ஊழல் செய்துகொண்டு இருக்கிறார்.</p><p>விஜயபாஸ்கர், கு.பா கிருஷ்ணன் இப்படி பல்வேறு தலைவர்கள் மீது, முன்னாள் அமைச்சர்கள் மீது எல்லாம் அமலாக்கத்துறை வழக்குகள் இருக்கின்றன.” என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>பாண்டா கரடியின் மலத்தில் புதுவகையான பூஞ்சை: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/new-fungus-mucor-melanoleucus-found-in-panda-feces</link><comments>https://www.maalaimalar.com/news/world/new-fungus-mucor-melanoleucus-found-in-panda-feces#comments</comments><guid isPermaLink="false">7df176c8-dc09-4640-b07c-a277cb77dcae</guid><pubDate>Mon, 07 Sep 2026 10:31:56 +0000</pubDate><atom:updated>2026-09-07T10:31:56.296Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>fungus,Panda Bears,பாண்டா கரடிகள்,பூஞ்சை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/48iesxrt/Untitled-design-32.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Panda feces fungus discovery]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/48iesxrt/Untitled-design-32.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காட்டில் உயிர் வாழ்ந்து வரும் பாண்டா கரடியின் மலத்தில் இருந்து, புதுவிதமான பூஞ்சை ஒன்று வளர்ந்திருந்ததை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர்.</p><p>‘மியூகோர் மெலனோலூகாஸ்’ என்று பெயரிடப்பட்ட அந்த பூஞ்சை, பொதுவாக மண் மற்றும் மக்கும் கரிம பொருட்களில் காணப்படும் பூஞ்சை இனத்தை சேர்ந்தது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF">பாண்டா கரடியின்</a> மலத்தில் வளரப்பட்ட பூஞ்சை குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்த பகுப்பாய்வு "கரண்ட் மைக்ரோபயலாஜி" என்ற இதழில் வெளியிடப்பட்டது. </p><p>அந்த ஆய்வின்படி, ஆராய்ச்சியாளர்கள் பாண்டா கரடியின் மலத்தில் இருந்து, புதுவிதமான உயிரினத்தை பிரித்தெடுத்து அதற்கு ‘மியூகோர் மெலனோலூகஸ்’ என்று பெயரிட்டனர்.</p><p>இந்த மியூகோர் என்ற பூஞ்சை, பொதுவாக இறந்த கரிம பொருட்களான சாணம் மற்றும் மண் ஆகியவற்றில் காணப்படுவதாக உள்ளது.</p><p>மேலும் ஆராய்ச்சியாளர்கள் அதன் மரபணுவை ஆய்வு செய்தபோது, அந்த பூஞ்சை எந்த இனத்திற்கும் தொடர்பில்லாமல் ஒரு புதுவகையான இனமாக இருந்தது கண்டறியப்பட்டது.</p><h3><strong>டி.என்.ஏ பகுப்பாய்வு</strong></h3><p>இந்த பகுப்பாய்வில், ஆராய்ச்சியாளர்கள் ரைபோசோமில் உள்ள டி.என்.ஏ-வின் இரண்டு பகுதிகளை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் பூஞ்சையானது, ‘மியூகோர் சாட்டர்னினஸ்’ என்ற இனத்துடன் நெருங்கிய தொடர்புடையது கண்டறியப்பட்டது.</p><p>இருந்தபோதிலும் இந்த இரண்டு பூஞ்சைகளுக்கும் பல முக்கியமான உடல் வேறுபாடுகள் இருந்தது கண்டறியப்பட்டது. அதன்படி, வித்துக்களை உருவாக்கும் உடல் பாகங்களுக்குள் காணப்படும் கொலுமெல்லாக்கள் சிறியதாக இருந்தது.</p><p>மறுபுறம், அதன் ஸ்போராஞ்சியோஸ்போர்கள், எம். சாட்டர்னினஸின் ஸ்போராஞ்சியோஸ்போர்களை விட பெரியதாக இருந்தன.</p><p>மேலும் சில பூஞ்சைகளில் காணப்படும் சிறப்பு இனப்பெருக்க அமைப்புகளான சைகோஸ்போர்கள் காணப்படவில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.</p><h3><strong>மரபணு ஆய்வு</strong></h3><p>இந்த மரபணு ஆய்வின் முடிவில், புறத்தோற்ற வேறுபாடுகள் இந்த புதிய பூஞ்சையை ஒரு தனி இனமாக வகைப்படுத்தின.</p><p>இந்த பூஞ்சைகள் எந்தவொரு நன்மை அல்லது தீங்கு விளைவிக்கும் தன்மையையோ பெற்றிருக்கவில்லை என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் வருகிற 13-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-moderate-rain-in-tamil-nadu-until-the-13th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-moderate-rain-in-tamil-nadu-until-the-13th#comments</comments><guid isPermaLink="false">638bd9e7-b6c8-4f23-8c1b-73a737505ed3</guid><pubDate>Mon, 07 Sep 2026 10:29:24 +0000</pubDate><atom:updated>2026-09-07T10:29:24.086Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/4fky32ml/rain007.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மழை]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/4fky32ml/rain007.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.</strong></em> </p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>சுமார் 0.9 கிமீ உயரத்தில் தெற்கு தெலுங்கானா முதல் மன்னார் வளைகுடா வரை ராயலசீமா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><h2><strong>மிதமான மழை</strong></h2><p>இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>8-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>9-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>10-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>11-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>12 மற்றும் 13-ந்தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>இதனிடையே இன்று முதல் 11-ந்தேதி வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>9-ந்தேதி குமரிக்கடல் பகுதிகளில், அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் மற்றும் தென் தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறத்தப்படுகிறார்கள். </p> ]]></content:encoded></item><item><title>முதலீடு செய்யும் பணத்திற்கு தினமும் 1% வட்டி: நூதன முறையில் ரூ.7 கோடி மோசடி</title><link>https://www.maalaimalar.com/news/national/daily-1-percent-return-investment-7-crore-fraud</link><comments>https://www.maalaimalar.com/news/national/daily-1-percent-return-investment-7-crore-fraud#comments</comments><guid isPermaLink="false">5c060fa5-ee8e-40d1-9404-3cd4657dc9b5</guid><pubDate>Mon, 07 Sep 2026 10:26:20 +0000</pubDate><atom:updated>2026-09-07T10:26:20.062Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,மகாராஷ்டிரா,மோசடி,scam</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/pfyd1hp0/Untitled-design-31.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Maharashtra investment fraud]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/pfyd1hp0/Untitled-design-31.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிராவில் பொதுமக்களிடம் தாங்கள் கொடுக்கும் பணத்திற்கு தினமும் 1% திருப்பி தருவதாக கூறி, 67 முதலீட்டாளர்களிடம் இருந்து சுமார் 7 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்ட பிரசாந்த் அங்னே என்பவர் மீது டோம்பிவ்லி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE">மகராஷ்டிராவில்</a> உள்ள டோம்பிவ்லி பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டு, பிரசாந்த் அங்னே மற்றும் அவரது மனைவி பல்லவி ஆகியோர் இணைந்து ‘கன்கன்ஸ்மார்ட் ஷேர்ஸ் அண்ட் ஸ்டாக் புரோக்கர் பிரைவேட் லிமிடெட்’ என்ற முதலீட்டு நிறுவனத்தை ஆரம்பித்தனர்.</p><p>இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களிடம் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து 52 முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ. 2.77 கோடிக்கும் அதிகமாக ஏமாற்றியதாக, மும்பை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் நிறுவனர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.  </p><p>இதையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.</p><h3><strong>தினமும் 1 சதவீதம் தருவதாக மோசடி</strong></h3><p>இந்த நிலையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பிரசாந்த் தற்போது மீண்டும் பொதுமக்களிடம், தாங்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு தினமும் 1 சதவீதம் வழங்குவதாக ஆசைவார்த்தை கூறி பணத்தை ஏமாற்றிவிட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><h3><strong>உதவி காவல் ஆணையர்</strong></h3><p>இதுகுறித்து டோம்பிவ்லி உதவி காவல் ஆணையர் விஜய் மராத்தே கூறுகையில், மகராஷ்டிராவில் உள்ள மராத்தே, பாண்டுப், டோம்பிவ்லி மற்றும் தானே ஆகிய பகுதிகளில் பிரசாந்த் மீது மூன்று வழக்குகள் உள்ளதாக தெரிவித்தார்.</p><p>மேலும் அவர் கூறுகையில், “நாங்கள் அவர் மீது மோசடி வழக்குப் பதிவு செய்து, இந்த வழக்கில் உயர்மட்ட அளவிலான விசாரணையை தொடங்கியுள்ளோம்.</p><p>தற்போது வரையில் 67 முதலீட்டாளர்கள் தாங்கள் ரூ.7 கோடி வரை இழந்துள்ளதாக புகார் அளித்துள்ளனர். இருப்பினும், முதலீட்டாளர்கள் இதைவிட அதிமான அளவில் பணத்தை இழந்திருக்க வாய்ப்புள்ளது” என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>டெல்லி விடுதி கட்டிட விபத்து: 7 பேரை பலி கொண்ட கட்டட உரிமையாளர் ராஜஸ்தானில் கைது</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-lodge-building-accident-owner-arrested-in-rajasthan</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-lodge-building-accident-owner-arrested-in-rajasthan#comments</comments><guid isPermaLink="false">83411828-23a0-4fc3-a57b-822261597904</guid><pubDate>Mon, 07 Sep 2026 09:58:09 +0000</pubDate><atom:updated>2026-09-07T09:58:09.614Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rajasthan,delhi,Delhi Building Collapse,ராஜஸ்தான்,Satya Niketan,சத்ய நிகேதன்,டெல்லி விடுதி கட்டிட விபத்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/h5ig7yro/nn.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Delhi building collapse ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/h5ig7yro/nn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தென்மேற்கு டெல்லியின் சத்ய நிகேதன் பகுதியில் அமைந்துள்ள இந்த 5 அடுக்குக் கட்டிடம், மாணவர்களுக்கான தனியார் விடுதியாகச் செயல்பட்டு வந்தது. </p><p>டெல்லி <a href="https://www.maalaimalar.com/news/national/six-killed-five-storey-building-collapses-in-delhi">சத்ய நிகேதன் </a>பகுதியில் செயல்பட்டு வந்த 5 அடுக்குகள் கொண்ட மாணவர்கள் தங்கும் விடுதி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த கட்டட உரிமையாளர் ஹரிராம் குப்தாவை டெல்லி காவல்துறையினர் ராஜஸ்தான் மாநிலத்தில் வைத்து அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.</p><h2>24 மணி நே<strong>ர தீவிர தேடு</strong>தல் வேட்டை</h2><p>விபத்து நடந்ததைத் தொடர்ந்து, கட்டட உரிமையாளர் ஹரிராம் குப்தா சம்பவ இடத்திலிருந்து தலைமறைவானார். இதையடுத்து, டெல்லி காவல்துறை அவர் வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் லுக்-அவுட் சுற்றறிக்கை செய்ததுடன், அவரது பாஸ்போர்ட் விவரங்களையும் கைப்பற்றித் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியது. சுமார் 10 சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டு நடத்தப்பட்ட தீவிரத் தேடுதல் வேட்டையின் முடிவில், ராஜஸ்தான் மாநிலம் பிவாடி பகுதிக்கு அருகில் பதுங்கியிருந்த ஹரிராம் குப்தாவை டெல்லி காவல்துறையினர் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.</p><p>தென்மேற்கு டெல்லியின் சத்ய நிகேதன் பகுதியில் அமைந்துள்ள இந்த 5 அடுக்குக் கட்டிடம், மாணவர்களுக்கான தனியார் விடுதியாகச் செயல்பட்டு வந்தது. பழமையான இந்தக் கட்டிடத்தில் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், எதிர்பாராதவிதமாக முழு கட்டிடமும் இடிந்து விழுந்து தரைமட்டமானது.</p><p>இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், தீயணைப்புத் துறையினரும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை இடிபாடுகளிலிருந்து 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்தக் கொடூர விபத்தைத் தொடர்ந்து, கட்டிடத்தின் பாதுகாப்பு விதிமீறல்கள் மற்றும் அலட்சியப் போக்கு தொடர்பாக டெல்லி மாநகராட்சி கடுமையான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய தென் மண்டலத் துணை ஆணையர், நிர்வாகப் பொறியாளர், உதவிப் பொறியாளர் மற்றும் இளநிலைப் பொறியாளர் உள்ளிட்ட பல மாநகராட்சி அதிகாரிகளைப் பணியிடை நீக்கம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள உரிமையாளர் ஹரிராம் குப்தாவிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>“காவல்துறையில் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்” - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/police-vacancies-will-be-filled-soon-chief-minister-vijay-announces</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/police-vacancies-will-be-filled-soon-chief-minister-vijay-announces#comments</comments><guid isPermaLink="false">2d8ff55d-7de4-4890-91fb-396d63f182f6</guid><pubDate>Mon, 07 Sep 2026 09:57:02 +0000</pubDate><atom:updated>2026-09-07T09:57:02.607Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு காவல்துறை,Tamil Nadu Police,vacancies,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,காலிப்பணியிடங்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/82a3y5lj/New-Project-2026-09-07T152632.557.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “காவல்துறையில் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்” - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/82a3y5lj/New-Project-2026-09-07T152632.557.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பேசிய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-indictment-dmk-4">முதலமைச்சர் விஜய்</a>.,</p><p>“காவல்துறையில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால் போலீசாருக்கு பணிச்சுமை அதிகரிக்கிறது; விரைவில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.</p><p>மாணவர்கள் குற்றத்தில் ஈடுபடாத வகையில் வழிநடத்துவதும்  பொறுப்பாகும். சமூக சூழல், குடும்ப பிரச்சனை, போதைப்பொருள் பயன்பாடு உள்ளிட்ட காரணங்களால் குற்றச்செயலில் ஈடுபடும் இளம் வயதினர்;</p><p>இதற்கெல்லாம் யார் மீது பழிப்போடலாம் என நினைக்கும் எதிர்க்கட்சியினர் அவர்களுக்கு இணையாக நாமும் 2021-25 வரை நடந்த குற்றச்சம்பவங்களை குறிப்பிட மனம் இடம் தரவில்லை.</p><p>கடந்த ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு பெண்ணாக இதே சட்டசபையில் பல அவமானங்களை சந்தித்தார். இனி பெண்கள் எந்த பிரச்சனையையும் சந்திக்க கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்.</p><p>தனிப்பட்ட முறையில் யாரையும் அவதூறாக பேச வேண்டாம். காவல் நிலையத்தில் உயிரிழப்பு என்பது சாதாரணமான நிகழ்வு அல்ல, காவல்துறை மீதான நம்பிக்கையை பாதிக்கும் பிரச்சனை.</p><p>மக்கள் பாதுகாப்பிற்காக தங்களது உயிரையும், குடும்ப நலனையும் பொருட்படுத்தாமல் காவலதுறையினர் பணியாற்றுகின்றனர்.</p><p>குற்றம் தெருவில் மட்டுமல்ல இணையத்திலும் நடைபெறுவதால், குற்றம் நடக்கும் முன்பே கண்டறிந்து தடுப்பதும் போலீசாரின் கடமை.”</p><p>இவ்வாறு அவர் பேசினார். </p>]]></content:encoded></item><item><title>தி.மு.க.வினரின் அமளி, தர்ணாவை சிரித்தபடி பார்த்த எடப்பாடி பழனிசாமி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-enjoying-to-dmk-darna-in-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-enjoying-to-dmk-darna-in-assembly#comments</comments><guid isPermaLink="false">d9f72bca-a909-4370-af20-ad8021e7a6ae</guid><pubDate>Mon, 07 Sep 2026 09:32:32 +0000</pubDate><atom:updated>2026-09-07T09:32:32.727Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,Edappadi Palaniswami,எடப்பாடி பழனிசாமி,தமிழக சட்டசபை,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/4qqslow5/EPS.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தர்ணாவை சிரித்தபடி பார்த்த எடப்பாடி பழனிசாமி]]></media:title><media:description type="html"><![CDATA[ தர்ணாவை சிரித்தபடி பார்த்த எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/4qqslow5/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமைதியாக சிரித்தபடி பார்த்துக்கொண்டிருந்தார். இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் இன்று பதில் அளித்தார். இதனை தொடர்ந்து, முதலமைச்சர் பதிலுரை மீது பேச அனுமதிக்குமாறு கூறி தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயர் இருக்கையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். </p><p>இதற்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், முதலமைச்சர் விஜய் பதிலுரை அளித்த போது அமைதியாக இருந்து கேட்டிருக்க வேண்டும். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனுமதியின்றி போஸ்டர் காட்டுவது குரல் கொடுப்பதை ஏற்க முடியாது என கண்டிப்புடன தெரிவித்தார்.  மேலும் முதலமைச்சர் பதிலுரையின் போது அமைதியாக இருந்திருந்தால் பேச அனுமதித்து இருப்பேன் என சபாநாயகர் தெரிவித்தார். </p><p>இதனை தொடர்ந்து, பதிலளித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டம் செய்து அமளியில் ஈடுபட்டனர். இதனை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF">எடப்பாடி பழனிசாமி</a> அமைதியாக சிரித்தபடி பார்த்துக்கொண்டிருந்தார். இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. </p>]]></content:encoded></item><item><title>துலீப் டிராபி பைனல்: 250 ரன்கள் குவித்த இஷான் கிஷன்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/duleep-trophy-final-ishan-kisahn-250-runs-retired-hurt</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/duleep-trophy-final-ishan-kisahn-250-runs-retired-hurt#comments</comments><guid isPermaLink="false">55b92303-e120-4777-8592-0e054e789408</guid><pubDate>Mon, 07 Sep 2026 09:23:46 +0000</pubDate><atom:updated>2026-09-07T09:23:46.301Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Ishan Kishan,இஷான் கிஷன்,துலீப் டிராபி,Duleep Trophy</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/671kb5e0/IshanKishan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ishan Kishan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/671kb5e0/IshanKishan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>துலீப் டிராபி இறுதிப் போட்டியில் இஷான் கிஷன் மற்றும் குஷக்ராவின் அபார ஆட்டத்தால் கிழக்கு மண்டலம் 600 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது.</p><p>சென்னையில் நடைபெற்று வரும் துலீப் டிராபி இறுதிப் போட்டியில் கிழக்கு மண்டலம்- தெற்கு மண்டலம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.</p><h2>முதல் நாளில் 385 ரன்கள்</h2><p>நேற்று தொடங்கிய இந்த போட்டியில் கிழக்கு மண்டலம் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய கிழக்கு மண்டல அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினர். தொடக்க வீரர் அபிமன்யூ ஈஸ்வரன் 72 ரன்களும், மற்றொரு வீரர் வைபவ் சூர்யவன்ஷி 44 ரன்களும் சேர்த்தனர்.</p><p>ஷிகர் மோகன் சிறப்பாக விளையாடி 120 பந்துகளில் 85 ரன்கள் சேர்த்தார். கேப்டன் இஷான் கிஷன் சிறப்பாக விளையாடினார். அவர் 122 பந்துகளில் சதம் விளாசினார். நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் கிழக்கு மண்டலம் 4 விக்கெட் இழப்பிற்கு 385 ரன்கள் குவித்திருந்தது. <a href="https://www.maalaimalar.com/sports/cricket/captain-kishan-crossed-the-century-east-zone-accumulated-385-runs-at-the-end-of-the-first-day-of-the-duleep-cup-final">இஷான் கிஷன்</a> 111 ரன்களுடனும், குஷக்ரா 63 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.</p> <h2>இஷான் கிஷன் 250 ரன்கள் குவிப்பு</h2><p>இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இஷான் கிஷன் தொடர்ந்து சிறப்பாக விளையாடினார். மறுமுனையில் குமார் குஷக்ரா 128 பந்தில் சதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 101 ரன்களில் ஆட்டமிழந்தார்.</p><p>இஷான் கிஷன் 204 பந்துகளில் 150 ரன்களையும், 270 பந்துகளில் 200 ரன்களையும் கடந்்்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 300 பந்துகளில் 250 ரன்கள் குவித்தார். அவர் 301 பந்துகளில் 250 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறினார்.</p><p>கிழக்கு மண்டலம் 134.1 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 626 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>விடுதலை அடைந்து 80 ஆண்டுகள்: தொடரும் தீண்டாமைப் பேரவலம்! - அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-80-years-since-independence-the-continuing-tragedy-of-untouchability</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-80-years-since-independence-the-continuing-tragedy-of-untouchability#comments</comments><guid isPermaLink="false">c471d204-ac2d-4842-87b8-59a558450115</guid><pubDate>Mon, 07 Sep 2026 09:10:14 +0000</pubDate><atom:updated>2026-09-07T09:10:14.946Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தற்கொலை முயற்சி,தீண்டாமை கொடுமை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/2w31muu6/anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/2w31muu6/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வரையிலும் புகார் அளிக்கப்பட்ட பிறகும் கூட, அதன் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததை ஏற்க முடியாது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க.தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>அநீதிகள்</strong></h2><p>மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கம்பூர் ஊராட்சி மன்றத்தில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வரும் பட்டியலினத்தைச் சேர்ந்த சசிகலா என்பவர் பணியிடத்தில் தமக்கு இழைக்கப்பட்ட தீண்டாமை மற்றும் சாதியக் கொடுமைகள் காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவத்திற்காக மேலூர் அரசு மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், கவலையும் அடைந்தேன். பட்டியலினப் பணியாளருக்கு சாதியின் அடிப்படையில் இழைக்கப்பட்ட அநீதிகள் கண்டிக்கத்தக்கவை.</p><p>தூய்மைப் பணியாளராக பணியாற்றி வரும்  சசிகலா உள்ளிட்ட சில பணியாளர்களுக்கு எதிராக தீண்டாமைக் கட்டவிழ்த்து விடப்பட்டதாகவும்,  ஊராட்சி மன்றத்தில் பயன்படுத்தப்படும் பொதுவான  தேநீர்க் குவளைகளை பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டு, காகிதக் குவளைகளைப் பயன்படுத்தும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. அதுமட்டுமின்றி, கம்பூர் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வரும் பெண்மணியின் காலணியை தூக்கி வரும்படி சசிகலா கட்டாயப்படுத்தப்பட்டதாகவும்  அவரது கணவர் டி.பிரகாஷ்  குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><h2><strong>தற்கொலை முயற்சி</strong></h2><p>கம்பூர் ஊராட்சி மன்றத்தில் தமக்கு  இழைக்கப்படும் தீண்டாமை மற்றும் சாதியக் கொடுமைகள் குறித்து சில மாதங்களுக்கு முன்பே  ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடமும், காவல்துறையிடமும் புகார் அளித்துள்ளார். அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா அவர்களிடமும் சசிகலா புகார் செய்துள்ளார். ஆனால், மாவட்ட ஆட்சியரும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தான் சசிகலா இந்த முடிவுக்கு தள்ளப்பட்டதாக அவரது கணவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p>இந்தியா விடுதலை அடைந்து 80 ஆண்டுகள் ஆகின்றன. பட்டியலின மக்களின் சமூக, பொருளாதார  முன்னேற்றத்திற்காக ஏராளமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  அவர்களின் முன்னேற்றத்திற்காகவும்,  சமூக நல்லிணக்கத்திற்காகவும் அரசு பதவிகளில் இருப்பவர்கள் துணை நிற்க வேண்டும். ஆனால், அவர்களே தீண்டாமை மற்றும் சாதியக் கொடுமைகளை முன்னெடுப்பவர்களாக இருப்பதை அனுமதிக்க முடியாது.</p><p>தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வரையிலும் புகார் அளிக்கப்பட்ட பிறகும் கூட, அதன் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததை ஏற்க முடியாது. தீண்டாமையை அரசே ஊக்குவிக்கிறதோ  என்ற ஐயத்தைத் தான் இந்த நடவடிக்கைகள் ஏற்படுத்துகின்றன.  இது தொடர்பாக தமிழக அரசு விசாரணை நடத்தி,  உண்மை நிலையை  வெளிக்கொண்டு வருவதுடன், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை  எடுக்க வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>தமிழக வனத்துறையை  மேம்படுத்த ரூ.100.72 கோடியில்  திட்டம் - அமைச்சர் ரஞ்சித் குமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-forest-development-scheme-worth-rs-100-72-crore-announced</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-forest-development-scheme-worth-rs-100-72-crore-announced#comments</comments><guid isPermaLink="false">1cd4fa5b-9b31-45a3-98b6-d2f17845614d</guid><pubDate>Mon, 07 Sep 2026 08:45:28 +0000</pubDate><atom:updated>2026-09-07T08:45:28.038Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,வனத்துறை,Forest Department,TN assembly,minister ranjith kumar,அமைச்சர் ரஞ்சித் குமார்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/f5e4b57i/Ranjith-kumar.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Ranjith kumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/f5e4b57i/Ranjith-kumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் வனத்துறை மானிய கோரிக்கை மீதான புதிய அறிவிப்புகளை அமைச்சர் ஆர். வீ.ரஞ்சித் குமார் வெளியிட்டார். </p><p>அந்த அறிவிப்புகள் வருமாறு:-</p><p>வனப்பாதுகாப்பு வன உயிரின மேலாண்மை மனித வனவிலங்கு மோதல் தணித்தல் மற்றும் கள அளவிலான அமலாக்க பணிகளில் அதிகரித்து வரும் சவால்களை எதிர்கொள்ள வனத்துறையை மேம்படுத்தும் நோக்கில் 2026 முதல் 2031 வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாடு வனப் பணி படை ரூ.100.72 கோடி மதிப்பீட்டில் மறு சீரமைக்கப்பட்டு வலுப்படுத்தப்படும்.</p><p>தமிழ்நாடு வனத் தீ மேலாண்மை திட்டம் ரூ 60.58 கோடி மதிப்பீட்டில் 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்.</p><p>வனத்துறையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 1947 சீருடை பணியாளர்களுக்கு 12 கோடி ரூபாய் செலவில் அறிமுக பயிற்சி அளிக்கப்படும்.</p><p>அரசு உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு சொந்தமான நிலங்களில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 25 இயற்கை பூங்காக்கள் அமைக்கப்படும்.</p><p>மாநில வன ஆராய்ச்சி நிறுவனத்தில் மர தடயவியல் மற்றும் மரப்பொருள் பகுப்பாய்வு மையம் மற்றும் ஆராய்ச்சி வசதிகளை 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்படும்.</p><p>நடமாடும் வன உயிரின தடயவியல் மற்றும் நோயை கண்டறியும் ஆய்வகம் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் தென் மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.</p><p>மனித வனவிலங்கு மோதல் மற்றும் வன விலங்குகளால் ஏற்படும் பல்வேறு வகையான சேதங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை உயர்த்தப்படும்.</p><p>பிச்சாவரத்தில் படகு சவாரி செய்வதற்கு இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 சூரிய ஆற்றல் மின்னாற்றலில் இயங்கும் படகுகள் வாங்கப்படும்.</p><p>வனத்துறையில் பணிபுரியும் சுமார் 6260 சீருடை பணியாளர்களுக்கு 1 கோடியே 50 லட்சம் செலவில் இலவச பேருந்து பயண அட்டை, ஸ்மார்ட் அட்டையாக வழங்கப்படும்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தி.மு.க. மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்: முதலமைச்சர் விஜய் பரபரப்பு குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-indictment-dmk-4</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-indictment-dmk-4#comments</comments><guid isPermaLink="false">e1846cb6-eb34-4b3a-b5db-73ce35fb37a1</guid><pubDate>Mon, 07 Sep 2026 08:25:38 +0000</pubDate><atom:updated>2026-09-07T08:25:38.298Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/1lr9t5md/vijay04.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/1lr9t5md/vijay04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நம் அரசு யாருக்கும் தனிப்பட்ட அடையாளமாக இருக்காது. 8 கோடி மக்கள் என் சொந்தங்கள். அவர்களுக்கு அடையாளமாகவே அரசு இருக்கும் என முதலமைச்சர் விஜய் பேசினார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபை</a> கூட்டம் 3 நாட்கள் விடுமுறைக்கு பின்னர்  இன்று காலை கூடியது. சட்டசபையில் கடந்த 3-ந்தேதி காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது.</p><h2><strong>முதலமைச்சர் விஜய் பதில் உரை</strong></h2><p>இதில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சிகளின் சட்ட மன்ற குழு தலைவர்கள் விவாதத்தில் பங்கேற்று பேசினர். இன்று சட்டசபை கூடியதும் அவை முன்னவர் செங்கோட்டையன் எழுந்து பேச தொடங்கினார். அப்போது தி.மு.க.வினர் எழுந்து நின்று கோஷம் போட்டனர். முதலமைச்சர் விஜய்யின் இன்றைய பதில் உரை மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் சட்டசபையில் இன்று ஆவேசமாக பதில் அளித்தார்.</p><p>அப்போது கடந்த கால தி.மு.க. ஆட்சிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக ஆதாரப்பூர்வமாக முன் வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-</p><h2><strong>பெண்களை பற்றி....</strong></h2><p>அரசியலுக்காக தனிப்பட்ட முறையில் பெண்களை தரம் தாழ்ந்து பேச வேண்டாம். இங்கு வன்ம நதி ஓடுகிறது. பெண்களை பற்றி இரட்டை அர்த்தங்கள், 3 அர்த்தங்களை எல்லாம் பேசுவதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் உள்ளார்கள்.</p><p>இதற்கு முன்பு நான் இருந்த இடமும், இப்போது எனக்கு கொடுக்கப்பட்ட இடமும் பெண்கள் கொடுத்ததுதான். பெண்களை பற்றி தேவையில்லாமல் பேசினால் சட்டம் தன் கடமையை செய்யும்.</p><p>கடந்த காலத்தில் இதே சட்டமன்றத்தில் மேடம் ஜெயலலிதா இன்றைய எதிர்க்கட்சியால் எவ்வளவு அவமானங்களை சந்தித்தார் என்பதை கேள்விப்பட்டு உள்ளோம்.</p><h2><strong>வன்மம் வேண்டாம்</strong></h2><p>அரசியல் ரீதியாக என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியால் வன்மம் வேண்டாம்.சட்டசபைக்குள்ளேயே ஒரு உறுப்பினர் எலும்பை உடைப்பேன் என்கிறார். இதுதான் அரசியலா? இது எதற்கு? இதையெல்லாம் மக்கள் பார்த்துதான்... பார்த்து தான்... இன்றைக்கு அந்த பக்கத்தில் (எதிர்க்கட்சி வரிசையில்) அமர்ந்து இருக்கிறார்கள். நான் இதை  அறிவுரையாக சொல்லவில்லை. இதுதான் ரியாலிட்டி.</p><p>தி.மு.க. மூத்த உறுப்பினர் ஒருவர் தங்களுக்கு ஓட்டு போடாதவர்களுக்கு நல்ல சாவே வராது என்று கூறுகிறார். இதே மக்கள் தானே கடந்த 50, 60 ஆண்டு களாக உங்களுக்கும் வாக்களித்தார்கள்.</p><h2><strong>நல்ல பண்பு அல்ல</strong></h2><p>2021 முதல் 2025 வரை நடைபெற்ற குற்றச்சம்பவங்களை ஒப்பிட்டு கூற மனம் இடம் தரவில்லை. போதைக் கலாச்சாரம் என்ற ஒற்றை வார்த்தையை கூறி தப்பிப்பது அரசின் நல்ல பண்பு அல்ல.</p><p>மாணவர்களுக்கு சரியான பாதை இதுவரை வகுத்துத் தரவில்லை என்பது தான் உண்மை. இத்தகைய நிகழ்வுகளை மேம்போக்காக எதிர்கொள்ளாமல் அனைத்து குடும்பங்களில் ஒருவனாக பொறுப்புடன் சிந்தித்து மாணவர் சமுதாயத்தை பொறுப்பானவர்களாக உருவாக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். ஊழலற்ற நேர்மையான அரசை வழங்குவதே இந்த அரசின் நோக்கம்.</p><h2><strong>என் சொந்தங்கள்</strong></h2><p>அரசு ஊழியர்கள் ஊழல் செய்வதை ஏற்க முடியாது. அரசு ஊழியர்கள் தங்களின் பணியில் நேர்மையாக இருக்க வேண்டும். அவப்பெயர் ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும்.</p><p>மிசாவை பற்றிய வரலாறு அனைவருக்கும் தெரியும். நடந்தது, நடக்க போறது எல்லாத்தையும் மக்கள் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள்.</p><p>நம் அரசு யாருக்கும் தனிப்பட்ட அடையாளமாக இருக்காது. 8 கோடி மக்கள் என் சொந்தங்கள். அவர்களுக்கு அடையாளமாகவே அரசு இருக்கும்.</p><h2><strong>எம்.ஜி.ஆர். பாட்டு</strong></h2><p>மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்வோம். தமிழக மக்கள் நலன் ஒன்றே தான் கருத்தில் கொள்வோம் என அன்றே பாடினார் எம்.ஜி.ஆர். அது இவர்களுக்காகதான்.</p><p>என் டேபிளில்  3 பைல் இருக்கு என்றேன். அதை ஓபன் பண்றதுக்கு முன்பு ஒரு சாம்பிள் பார்ப்போம். சர்க்காரியா கமிஷனில் உள்ளதை பார்க்கலாம். வீராணம் திட்டத்திற்கு தனி சேப்டர் உள்ளது.</p><p>அந்த கால கட்டத்தில் வீராணம் டெண்டர் வேணும் என்றால் 2 சதவீதம் கமிஷன் கருணாநிதியின் மருமகன் மாறன் கேட்டதாக கூறியுள்ளனர்.</p><p>பொன் விழா கண்ட கட்சியின் பவள விழா கண்டது தான்சர்க்காரியா கமிஷன் அறிக்கை.</p><h2><strong>மக்களுக்கு தெரியும்</strong></h2><p>கலைஞர் மீது எனக்கு பெரிய மதிப்பும் மரியாதையும் உள்ளது. எங்கள் அமைச்சர் கருணாநிதி எனக்கூறியதற்கு நான் மன்னிப்பு கேட்டேன். இது எல்லாம் நாங்கள் சொல்லும் குற்றச்சாட்டு இல்லை. </p><p>சர்க்காரியா கமிஷனில் அந்த அறிக்கை கொடுத்து இருக்கும் குற்றச்சாட்டு. </p><p>இன்று எங்கள் அரசியல் பாரம்பரியம் பற்றி தெரியுமா என்று கூறுபவர்களுக்கு அவர்களை பற்றி மக்களுக்கு தெரிய வைக்க வேண்டாமா?</p><h2><strong>பக்கத்திலே ஆதாரம்</strong></h2><p>மிஸ்டர் கிளீன் என சொல்லிக்கொள்கிறார்களே அப்போதே அப்படினா, இப்போ யோசித்து பாருங்கள். பார்ட்டி பண்ட் என்று சொல்லும் போது ஆதாரம் கேட்டார்கள். ஆதாரம் அவர்கள் பக்கத்தில் தான் உள்ளது. (முன்னாள் அமைச்சர் நேருவை நோக்கி கையை காட்டினார்.)</p><p>அமலாக்கத்துறை பார்ட்டி பண்டு குறித்து ஆதாரம் கொடுத்து இருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் இருந்த போது 7.5 முதல் 10 சதவீதம் வரை வாங்கியதாக அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.</p><h2><strong>யார் இந்த ரத்தீஷ்?</strong></h2><p>டாஸ்மாக்  துறைக்கு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தவறாக அதை பயன்படுத்தினார். அவரது சகோதரர் தலையீடும் இருந்தது. அதுமட்டுமல்ல ரத்தீஷ் என்பவரும் தலையிட்டுள்ளார். அவர் டி.ஆர்.ஒ. உடன் இணைந்து டிரான்ஸ்பர் போன்றவற்றையும் செய்திருக்கிறார். யார் இந்த ரத்தீஷ்? இவர் யாருக்கு நெருக்கமானவர். த.வெ.க ஆட்சி அமைந்த பின் ஏன் துபாய் சென்று ஓடி ஒளிந்துள்ளார்.</p><p>போன ஆட்சியில் டாஸ்மாக்கை கையில் வைத்திருந்த அமைச்சருடன் சில அதிகாரிகளும்  உள்ளனர். இந்த  ரத்தீஷ் உத்தரவு படி தான் டி.ஆர்.ஒ. மாற்றப்பட்டுள்ளார்.</p><h2><strong>கேங்க் தலைவர்கள் யாரு?</strong></h2><p>நம்ம ஆட்சி வந்தவுடன் அவர் வெளிநாட்டில் போய் ஒளிந்துகொண்டார். தி.மு.க. எதை எப்போது செய்தாலும் குடும்பமாக தான் செய்வார்கள் போல. கரூர் கேங். அந்த கேங் தலை வர்கள் யாரு?</p><p>விஞ்ஞான ஊழல் குறித்து தெரியுமா? இது தான் அது. ஆதாரம் வேணும் ஆதாரம் வேணும் என்று கேட்டீர்களே? இது போதுமா? இந்த 2 துறையின் ஆதாரத்தை ஓபன் பண்ணதுக்கே இப்படி இருக்கே? ஆதாரம் போதுமா?</p><h2><strong>போலி பிம்பமும்</strong></h2><p>தி.மு.க. இருக்கும் இடத்தில் தான் தப்பு நடக்கும்... தி.மு.க. தான் தப்பே செய்யும். ஊழல் என்று சொன்னால் எல்லோரும் எழுந்து கொள்வார்கள்... உடனே ஆதாரம் கேட்பார்கள். இவர்களின் போலி பிம்பமும் போலி பிராண்டும் உடைக்கப்படும்.</p><p>நம்ம நண்பர்கள் பேசும் போது ஊழல்  என்று பேசினாலே சொன்னாலே உடனே இங்கு எழுந்துடுவாங்க. ஆனால் ஊழல் பண்ணவில்லை என  சொல்லமாட்டார்கள்.  மக்கள் எங்கள் பக்கம் உள்ளனர்.</p><h2><strong>மக்கள் அன்பு</strong></h2><p>மக்கள் அன்புக்கு முன் நீங்கள் தோற்பது உறுதி.  மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்த மட்டுமே அரசியலுக்கு வந்துள்ளேன். இறைவனும் இயற்கையும் மக்களும் நம்மபக்கம் தான் இருப்பாங்க. இங்கே அமைச்சர் ராஜ்மோகன் சொன்னது தான் நியாபகம் வருது. நான் சும்மாவே காட்டு காட்டு காட்டுவேன்.</p><p>கூட்டு பொறுப்பை உணர்ந்து அமைச்சர்கள் பதில் சொல்வது இயல்பு தான். மக்கள் அனைவரும் பார்த்து கொண்டு இருப்பதால் 3-ந்தேதி நான் பேசவில்லை. விவரங்கள் எடுத்து வைத்து கொண்டு பேசவேண்டும் என்று தான்  அன்று பேசவில்லை.</p><p>இந்த ஆட்சியில் திட்டங்களின் பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக கூறினார்.</p><h2><strong>திட்டங்கள் ரத்து</strong></h2><p>ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் பல  தி.மு.க. ஆட்சியில் ரத்து செய்யப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட திட்டங்களை  ரத்து செய்துள்ளனர்.</p><p>உதாரணம் அம்மா மினி கிளீனிக். அதே போல் 4 வருடம் கழித்து தான் லேப்டாப் கொடுத்தார்கள்.</p><h2><strong>அரசு முனைப்பு</strong></h2><p>மக்களை சீரழித்தது போதாது என்று கனிம வளங்களை சீரழித்து இருக்கிறது. தி.மு.க. பல ஆண்டுகளாக தேங்கியுள்ள நிர்வாக சீர்கேடுகளை சரிசெய்ய இந்த அரசு முனைப்பு காட்டி வருகிறது.</p><p>கடந்த தி.மு.க. ஆட்சியில் சட்டம்- ஒழுங்கில் எழுந்த சர்ச்சை என்னவென்றால்  எப்.ஐ.ஆர். பதியாமலிருந்தது தான். தி.மு.க. ஆட்சியில் கட்சி நிர்வாகிகள் மீது குற்றம் பதிவு செய்யாமல் தடுத்து இருக்கிறார்கள். அதில் சில சாம்பிள் மட்டும் படிக்கிறேன்.</p><h2><strong>நடவடிக்கை</strong></h2><p>ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காலந்தாழ்த்தி அறிக்கையை சமர்பித்ததற்காக உயர்நீதிமன்றம் விமர்சனம் செய்தது. எங்களது ஆட்சியில் ஆளும் கட்சியாக இருந்தாலும் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிலவற்றில் விசாரணை நடைபெற்று வருகிறது.</p><p>இவ்வாறு முதலமைச்சர் விஜய் பேசினார்.</p><h2><strong>ஆக்ரோஷம்</strong></h2><p>முதலமைச்சர் விஜய் பேசும்போது அவரது முகம் கோபத்தில் கொந்தளித்தது. பேச்சும் ஆக்ரோஷமாக இருந்தது.</p>]]></content:encoded></item></channel></rss>