<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 26 Aug 2026 09:01:29 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 26 ஆகஸ்ட் 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-26-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-26-august-2026#comments</comments><guid isPermaLink="false">5f22d212-4fc0-4d16-87e3-92a3bcb84791</guid><pubDate>Wed, 26 Aug 2026 04:27:41 +0000</pubDate><atom:updated>2026-08-26T08:04:27.437Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/dpyw45td/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/dpyw45td/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/opportunities-for-12-newcomers-in-the-union-cabinet">மத்திய மந்திரி சபையில் 12 புதுமுகங்களுக்கு வாய்ப்பு- பிரதமர் மோடி அதிரடி முடிவு</a></p><p>* மந்திரிசபை மாற்றத்தின் போது இளம் மந்திரிகள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.  </p><p>* 2025-ல் மோடி பிரதமராக பதவி ஏற்ற போது 65 சதவீதத்திற்கும் மேற்பட்ட மந்திரிகள் 51 முதல் 70 வயதை கொண்டவர்களாகவும், 24 சதவீதம் பேர் 30 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருந்தனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbil-mahes-criticises-teacher-eligibility-test-exemption-move" rel="nofollow">ஆசிரியர்கள் தகுதித்தேர்வு விலக்கு தீர்மானம் கண்துடைப்பு நாடகமாக இருக்கக் கூடாது!- அன்பில் மகேஸ்</a></p><p>* நீதிமன்றத்தில் வாதாடிய அரசின் முகம்தான் உண்மை முகமா? </p><p>* சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய அரசின் முகம்தான் உண்மை முகமா?</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-26-8-2026">GOLD PRICE TODAY: தங்கம் விலை இன்றைய நிலவரம்!</a></p><p>* தங்கம் விலை ஒரு கிராம் ரூ.15,010-க்கு விற்பனையானது.</p><p>* ஒரு கிராம் வெள்ளி 265 ரூபாய்க்கு விற்பனையானது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-should-return-parandur-acquired-lands-to-farmers-cpi" rel="nofollow">பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும்..!- சிபிஐ </a></p><p>* சட்டத்திற்கு விரோதமாகத் தமிழக அரசு நடந்துகொள்ளக் கூடாது.</p><p>* விவசாயிகளிடம் நிலத்தை ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-cbi-should-investigate-for-3-tamilis-shoot-dead-case">3 தமிழர்கள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது உடற்கூறாய்வில் அம்பலம்: சிபிஐ விசாரணை வேண்டும்! -அன்புமணி</a></p><p>* பாமகவின்  உண்மை கண்டறியும் குழு தருமபுரியில் செய்தியாளர்களிடம் முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை  தான் என்பதை மைசூர் மருத்துவமனை அளித்த உடற்கூறாய்வு அறிக்கை உறுதி செய்துள்ளது.</p><p>*3 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு கர்நாடக அரசு ஆணையிட வேண்டும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/onam-festival-cm-vijay-wishes">ஓணம் திருநாள் அனைவரது வாழ்விலும் நலத்தையும், வளத்தையும் வழங்கட்டும்! - முதலமைச்சர் விஜய்</a></p><p>* ஓணம் திருநாளில், உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும், அன்பும், மகிழ்ச்சியும் என்றும் பொங்கிப் பெருகட்டும்!</p><p>* அழகிய வண்ணப் பூக்கோலம்போல் உங்கள் வாழ்க்கை பொலிவு பெறட்டும்!</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/onam-festival-mk-stalin-wishes">அனைவருக்கும் உளம் நிறைந்த ஓணம் திருநாள் வாழ்த்துகள்! - மு.க.ஸ்டாலின்</a></p><p>* மண்ணும் மக்களும் ஒன்றாக வாழ்ந்த ஒரு காலத்தின் நினைவைப் புதுப்பிப்பதே ஓணம்.</p><p>* மாவேலியை வீழ்த்தப்பட்டவராக அல்லாமல், மக்களின் உள்ளங்களில் வாழும், வளமும் மகிழ்ச்சியும் நிறைந்த மன்னனாகக் கொண்டாடுவோம்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/milad-un-nabi-cm-vijay-wishes">மிலாது நபி நன்னாளில் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், நலமும், வளமும் நிறைந்திடட்டும்! - முதலமைச்சர் விஜய் </a></p><p>* இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த இனிய மிலாது நபி நல்வாழ்த்துகள்!</p><p>* நபிகள் நாயகம் போதித்த உயரிய நெறிகளைப் பின்பற்றி, உலகில் அன்பையும் நல்லிணக்கத்தையும் தழைக்கச் செய்வோம்!</p> ]]></content:encoded></item><item><title>சர்வதேச அரங்கில் புதிய சாதனை: காமன்வெல்த் பளுதூக்கும் வீரர் ராஜா முத்துபாண்டிக்கு நடிகை சிம்ரன் நேரில் வாழ்த்து!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actress-simran-meets-and-felicitates-commonwealth-silver-medallist-raja-muthupandi</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actress-simran-meets-and-felicitates-commonwealth-silver-medallist-raja-muthupandi#comments</comments><guid isPermaLink="false">096f2c42-dca0-476a-b3a5-b1f9d92f45b4</guid><pubDate>Wed, 26 Aug 2026 09:01:12 +0000</pubDate><atom:updated>2026-08-26T09:01:12.538Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காமன்வெல்த்,Commonwealth,Raja Muthupandi,Actress Simran,முத்துபாண்டி,நடிகை சிம்ரன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/01c2v6dz/simran.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Raja Muthupandi-Actress Simran   ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/01c2v6dz/simran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்த பளுதூக்கும் வீரர் ராஜா முத்துபாண்டிக்கு, பிரபல  நடிகை சிம்ரன் நேரில் சந்தித்து தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.</p><p>65 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்று புதிய சாதனைகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துபாண்டியைச் சந்தித்த நடிகை சிம்ரன், அவருக்கு பூங்கொத்து வழங்கி பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். சர்வதேச விளையாட்டு அரங்கில் தமிழ்நாட்டு இளைஞர்கள் படைத்து வரும் சாதனைகள் நாட்டிற்கே பெருமை அளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.</p><h2>சா<strong>தனைப்</strong> பயணம்</h2><p>தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகனான ராஜா முத்துபாண்டி, கடுமையான நிதி நெருக்கடிகளையும் குடும்ப சூழலையும் கடந்து இந்த நிலையை அடைந்துள்ளார். 2019-ஆம் ஆண்டு ஏற்பட்ட தீவிர முழங்கை காயம் மற்றும் அடுத்தடுத்த உடல்நலப் பின்னடைவுகளைத் தொடர்ந்து விளையாட்டிலிருந்து விலக நினைத்த இவர், முறையான பயிற்சி மற்றும் விடாமுயற்சியால் மீண்டும் களம் திரும்பினார். </p><p>சமீபத்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் ‘ஸ்னாட்ச்’ பிரிவில் 126 கிலோவும், ‘க்ளீன் அண்ட் ஜெர்க்’ பிரிவில் 160 கிலோவும் என மொத்தம் 286 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தார்.</p><p>ராஜா முத்துபாண்டியின் இந்த வரலாற்று வெற்றிக்குக் காரணமான அவரது விடாமுயற்சியைப் பாராட்டிய நடிகை சிம்ரன், "இது ஒரு தொடக்கம் மட்டுமே. எதிர்காலத்தில் வரவிருக்கும் ஒலிம்பிக் உள்ளிட்ட உலகளாவிய போட்டிகளில் அவர் மேலும் பல தங்கப் பதக்கங்களை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்க்க வேண்டும்" என தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.</p><p>சாதனைப் படைத்த இந்த வீராங்கனை மற்றும் வீரரின் சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், விளையாட்டுத்துறை பிரபலங்களும் ரசிகர்களும் ராஜா முத்துபாண்டிக்குத் தொடர்ந்து தங்களது வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ஜெய்ஸ்வாலின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது- முன்னாள் வீரர்கள் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/sports/former-india-players-slam-jaiswal-s-unacceptable-conduct</link><comments>https://www.maalaimalar.com/sports/former-india-players-slam-jaiswal-s-unacceptable-conduct#comments</comments><guid isPermaLink="false">b630a963-2d57-42aa-b814-9d99a06efdc9</guid><pubDate>Wed, 26 Aug 2026 08:51:25 +0000</pubDate><atom:updated>2026-08-26T08:51:25.804Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,srilanka,jaiswal,ஜெய்ஸ்வால்,இலங்கை அணி,இந்தியா அணி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/q8bjocdh/jaiswal.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ jaiswal]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/q8bjocdh/jaiswal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 45 ரன்னில் ஆட்டம் இழந்தார். அவரது விக்கெட்டை அசிதா பெர்னாண்டோ கைப்பற்றினார்.</p><h2>ஜெய்ஸ்வால்</h2><p>ஜெய்ஸ்வால் அவுட் ஆன போது அவரை நோக்கி இலங்கை வீரர்கள் ஏதோ வார்த்தையை பயன்படுத்த ஆவேசம் அடைந்த அவர் பெர்னாண்டோவிடம் நெருக்கமாக சென்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஜெய்ஸ்வாலின் ஹெல்மட் பெர்னாண்டோவின் நெற்றியில் லேசாக இடித்தது.</p><p>இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விசாரணை நடத்தி இருவருக்கும் போட்டி கட்டணத்தில் இருந்துபெறும் பணத்தில் 25 சதவீதம் அபராதம் விதித்தது. மேலும் ஒரு தகுதி இழப்பு புள்ளியும் விதிக்கப்பட்டது.</p><h2>ஏற்றுக்கொள்ள முடியாது</h2><p>இந்த நிலையில் தலையால் முட்டிய  விவகாரத்தில் ஜெய்ஸ்வால் செயலை ஏற்றுக் கொள்ள முடியாது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் புஜாரா, சபாகரீம் ஆகியோர் கண்ட னம் தெரிவித்துள்ளனர்.</p><p>இது குறித்து புஜாரா கூறியதாவது:-</p><p>இது பார்ப்பதற்கு சரியான ஒரு காட்சியாக தெரியவில்லை. ஒரு வீரராக உங்கள் (ஜெய்ஸ்வால்) உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். சில சமயங்களில் கோபம் வருவது இயல்புதான்.</p><p>அவர் ஏமாற்றம் அடைந்த நேரத்திலோ அல்லது சகவீரர்களிடம் பேசிக் கொண்டு இருந்தபோதோ வெளிப்பட்ட கோபத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.</p><p>ஆனாலும் நிலைமை முற்றி இருவரும் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ளும் நிலைக்கு சென்றபோது உடல்ரீதியான மோதல் ஏற்பட்டது. இது ஆடுகளத்தில் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p><h2>சபாகரீம்</h2><p>முன்னாள் விக்கெட் கீப்பர் சபாகரீம் கூறியதாவது:-</p><p>இது உடல்ரீதியான மோதல்கள் நிறைந்த விளையாட்டு அல்ல என்பதை அவர்களுக்கு யாராவது நினைவூட்ட வேண்டும். இது கிரிக்கெட்.</p><p>ஒருவருக்கொருவர் தலையால் முட்டிக் கொள்வது போன்ற செயல்கள் இதில் இருக்கக் கூடாது. இது முதிர்ச்சியற்ற செயல் என்று நான் கருதுகிறேன். கிரிக்கெட் மைதானத்தில் இதுபோன்ற செயல்களுக்கு தேவையே இல்லை.</p><p>வேகப்பந்து வீச்சாளரோ அல்லது வேறு எந்த பந்து வீச்சாளரோ உங்களை சீண்டலாம். ஆனால் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமலேயே ஆக்ரோஷத்தை வெளிப்படுத்த முடியும். இது தேவையற்றது. ஏற்றுக் கொள்ள முடியாதது.  </p><p>இத்தகைய வீரர்கள் அனைவரும் இந்த அழகான விளையாட்டில் தூதுவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஏராளமான இளைஞர்கள் இதை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை- சட்ட திருத்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/priority-in-government-jobs-for-those-who-studied-in-the-tamil-medium</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/priority-in-government-jobs-for-those-who-studied-in-the-tamil-medium#comments</comments><guid isPermaLink="false">24ca243c-1caf-4b09-9b81-fb4596e70449</guid><pubDate>Wed, 26 Aug 2026 08:48:20 +0000</pubDate><atom:updated>2026-08-26T08:48:20.197Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Governor,அரசு பணி,தமிழக கவர்னர்,சட்ட திருத்த மசோதா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/nety8miy/governor.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கவர்னர் ஆர்.வி.அர்லேகர்]]></media:title><media:description type="html"><![CDATA[ கவர்னர் ஆர்.வி.அர்லேகர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/nety8miy/governor.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கான முன்னுரிமை இடஒதுக்கீடு சட்டத் திருத்​த மசோதாவுக்கு தற்போது கவர்னர் ஆர்.வி.அர்லேகர் ஒப்புதல் அளித்து உள்ளார்.</strong></em></p><p>தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப் பணிகளில் 20 சதவீதம் முன்னுரிமை வழங்கும் வகையில், கடந்த 2010-ம் ஆண்டு “தமிழ்நாடு தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமைச் சட்டம்”  கொண்டு வரப்பட்டது. இதன் மூலம், தமிழ் வழியில் பயின்ற இளைஞர்களுக்கு, அரசுப் பணிகளில், 20 சதவீதம் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.</p><h2><strong>சட்ட திருத்த மசோதா</strong></h2><p>அரசு ஊழியர்களும், இந்தச் சட்டத்தின்படி டி.என்.பி.எஸ்.சி.மூலம் குரூப்-I போன்ற உயர்பதவிகளுக்கு, இந்த முன்னுரிமையை  பயன்படுத்த முடிகிறது. ஆனால் சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறும் உதவி ஆய்வாளர் பணியிட நியமனங்களுக்கு, காவல்துறையில் ஏற்கனவே 5 ஆண்டுகள் கான்ஸ்டபிளாகப் பணிபுரிந்தவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் 20 சதவீத துறை ஒதுக்கீட்டில், இந்த முன்னுரிமை வழங் கப்படுவதில்லை.</p> <p>இந்தச் சட்ட முரண்பாட்டை நீக்க தமிழ்நாடு அரசுப் பணிகளில் நேரடி பணி நியமனம் வழியே புதிதாக நிரப்பப்படும் பணி நியமனங்களில், முழுமையாக தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் முன்னுரிமை அளிக்க வகை செய்யும் திருத்த மசோதா கடந்த ஆட்சிக் காலத்தில், 23.1.2026 அன்று, தமிழக அரசு  திருத்த மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்தது. அந்த மசோதாவில், தமிழ் வழியில் படித்த அரசு ஊழியர்களுக்கும், உயர்ந்த ஊதியப் பதவிகளுக்கான நேரடி ஆட்சேர்ப்பில் முன்னுரிமை வழங்குவதே அரசின் நோக்கம் என்று பதிவு செய்யப்பட்டது. மேலும், இந்த முன்னுரிமையை ஒருமுறை பெற்றவர்கள், அதைவிட உயர்ந்த ஊதியப் பதவிகளுக்கு அதனை மீண்டும் பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.</p><h2><strong>ஐகோர்ட் விசாரணை</strong></h2><p>ஆனால், அந்த மசோதா இன்னும் சட்டமாகாத காரணத்தால் பாதிக்கப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் பங்கேற்ற தமிழ் வழியில் கல்வி பயின்ற காவலர்கள் தாக்கல் செய்துள்ள வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது.</p><p>தமிழக அரசு சட்ட முன்வடிவு மீது உடனடியாக முடிவெடுத்து, தமிழ் வழியில் கல்வி பயின்று, தமிழகக் காவல்துறையில் உண்மையாகப் பணியாற்றும் காவலர்களுக்குக் கிடைக்க வேண்டிய முன்னுரிமையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வி தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை மற்றும் தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.</p><h2><strong>கவர்னர் ஒப்புதல்</strong></h2><p>இந்த நிலையில்  தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கான முன்னுரிமை இடஒதுக்கீடு சட்டத் திருத்​த மசோதாவுக்கு தற்போது கவர்னர் ஆர்.வி.அர்லேகர் ஒப்புதல் அளித்து உள்ளார். இது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.  இனிமேல் புதிதாக நிரப்பப்படும் பணி நியமனங்களுக்கு மட்டுமே இந்த திருத்தச் சட்டம் செல்லுபடியாகும் என்று சட்டத் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>1-ம் வகுப்பு முதல் அரசு வேலைக்கான வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதி வரையில் முழுவதுமாக தமிழ் வழியில் கல்வி பயின்றவர்கள் மட்டுமே முன்னுரிமை வழங்கப்படத் தகுதியுடையவர்கள்.</p><p>இதர மொழிகளைப் பயிற்று மொழியாக கொண்டு பயின்று, தேர்வுகளை மட்டும் தமிழில் எழுதியவர்கள், இம்முன்னுரிமை ஒதுக்கீட்டிற்கு தகுதியுடையவர்கள் அல்லர்.</p><p>1-ம் வகுப்பில் பள்ளியில் சேராமல், வயதின் அடிப்படையில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2 முதல் 8 வரையிலான வகுப்புகளில் நேரடியாக பள்ளிகளில் சேர்ந்து, தமிழ்மொழியினைப் பயிற்று மொழியாகக் கொண்டு பயின்று தேர்ச்சி பெற்றவர்களும், பிற மாநிலங்களில் தமிழ்மொழியினைப் பயிற்று மொழியாகக் கொண்டு பயின்று, பின்னர் தமிழ்நாட்டில் தங்களது கல்வியினை, சேரும் வகுப்பிலிருந்து தொடர்ந்து தமிழ் வழியில் பயின்றவர்களும் மேற்படி முன்னுரிமை வழங்கப்படத் தகுதியுடையவர்கள் ஆவர். பள்ளிக்குச் செல்லாமல் நேரடியாக தனித்தேர்வர்களாக தமிழ் வழியில் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றவர்கள் மேற்படி முன்னுரிமை வழங்கப்படத் தகுதியுடையவர்கள் அல்லர்.</p><p>பள்ளிக்குச் சென்று பள்ளியில் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு போன்ற பொதுத்தேர்வுகள் எழுதி, அதில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் தேர்ச்சி பெறாமல், தனித்தேர்வராக தேர்வெழுதி அப்பாடங்களில் தேர்ச்சி பெற்று, தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் தமிழ் வழியில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மேற்படி முன்னுரிமை வழங்கப்படத் தகுதியுடையவர்கள் ஆவர்.</p><p>பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி வரை அவர்கள் பயின்ற சம்பந்தப்பட்ட அனைத்து கல்வி நிலையங்களிலிருந்தும் தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்களைப் பெற வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>ஓணம், மிலாடி நபியை முன்னிட்டு இன்று பல மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை!</title><link>https://www.maalaimalar.com/news/national/onam-milad-un-nabi-bank-holiday-today</link><comments>https://www.maalaimalar.com/news/national/onam-milad-un-nabi-bank-holiday-today#comments</comments><guid isPermaLink="false">e8b16d75-eacc-458a-b8e1-713faeecaf49</guid><pubDate>Wed, 26 Aug 2026 08:46:35 +0000</pubDate><atom:updated>2026-08-26T08:46:35.268Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>onam,Bank holiday,மிலாடி நபி,வங்கி விடுமுறை,eid mubarak,ஓணம்2026,Bank Close</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/81742dm0/Bank-Holiday" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bank Holiday  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/81742dm0/Bank-Holiday?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%93%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88">ஓணம் </a>மற்றும் மிலாடி நபி பண்டிகை விடுமுறைகளை முன்னிட்டு, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, புதுடெல்லி உள்ளிட்ட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் இன்று வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>எந்தெந்த மாநிலங்களில் வங்கிகள் மூடல்?</strong></h2><p>இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ விடுமுறைப் பட்டியலின்படி, இன்று தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பீகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர், புதுடெல்லி, மணிப்பூர், ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் செயல்படாது என்றும், அதேசமயம் ஆன்லைன் பேங்கிங் மற்றும் ஏடிஎம் சேவைகள் தடையின்றி வழக்கம் போல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>பாதிக்கப்படும் வங்கிச் சேவைகள்</strong></h2><p>வங்கிகள் மூடப்பட்டிருக்கும் மாநிலங்களில் உள்ள வாடிக்கையாளர்கள், நேரடியாக வங்கி கிளைகளுக்குச் சென்று ரொக்கப் பணம் டெபாசிட் செய்தல் மற்றும் எடுத்தல், காசோலை தொடர்பான பணிகள், புதிய கணக்கு தொடங்குதல் மற்றும் பிற நேரடி வங்கிச் சேவைகளைப் பயன்படுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>டிஜிட்டல் மற்றும் ஏடிஎம் சேவைகள் வழக்கம் போல் செயல்படும்!</strong></h2><p>வங்கி கிளைகள் மூடப்பட்டிருந்தாலும், வாடிக்கையாளர்களின் அவசரத் தேவைகளுக்கான தானியங்கி பணப்பரிவர்த்தனை இயந்திரங்கள், இணைய வங்கி சேவை, மொபைல் பேங்கிங் மற்றும் யுபிஐ கூகுள் பே, ஃபோன்பே போன்ற ஆன்லைன் பணப்பரிமாற்ற டிஜிட்டல் சேவைகள் எவ்வித தடங்கலும் இன்றி வழக்கம் போல் இயங்கும்.</p><p>ஒவ்வொரு மாநிலத்தின் பிராந்திய பண்டிகைகளுக்கு ஏற்ப இந்த விடுமுறைகள் மாறுபடும் என்பதால் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிப் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.52 லட்சம்: எங்கு தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/news/world/singapore-has-announced-a-major-expansion-of-family-support-as-its-fertility-rate-fell-to-a-record-low</link><comments>https://www.maalaimalar.com/news/world/singapore-has-announced-a-major-expansion-of-family-support-as-its-fertility-rate-fell-to-a-record-low#comments</comments><guid isPermaLink="false">305de159-67ec-4292-aaca-8fe44478ff5f</guid><pubDate>Wed, 26 Aug 2026 08:17:54 +0000</pubDate><atom:updated>2026-08-26T08:17:54.954Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பிறப்பு விகிதம்,birth rate,சிங்கப்பூர்,singapore</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/uoyucx80/child.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ child]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/uoyucx80/child.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குறைந்து வரும் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ளும் பெற்றோருக்கு ரூ.52 லட்சம் கொடுக்கப்படும் என சிங்கப்பூர் அரசு அறிவித்தது.</p><p>சிங்கப்பூரில் மக்கள் தொகை எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது. இதையடுத்து, குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.</p><p>குறைந்து வரும் மக்கள் தொகை எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார்.</p><h2>சிங்கப்பூர் அதிரடி</h2><p>இந்நிலையில், குழந்தை பெற்றுக் கொள்ளும் பெற்றோருக்கு ரூ.52 லட்சம் கொடுக்கப்படும் என சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.</p><p>இதுதொடர்பாக, சிங்கப்பூர் அரசின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:</p><p>சிங்கப்பூரில் அழகான குடும்பங்களை உருவாக்குவதற்கான சூழலை ஏற்படுத்த வேறு என்னவெல்லாம் செய்ய முடியும் என கலந்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.</p><p>கல்வி, அடிப்படை வசதிகள் குறித்த கவலைகளால் இளம் தம்பதிகள் குழந்தைப் பேற்றை தள்ளிப் போட்டு வருகின்றனர்.</p><p>சிலர் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்கிறார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தை பெற்றுக்கொள்ள பெரும்பாலானோர் விரும்புவதில்லை.</p><p>ஆகஸ்ட் 23-ம் தேதி தேசிய நாளை முன்னிட்டு பிரதமர் அளித்த பேட்டியில், நாடு குழந்தைப் பேற்றை அதிகரிக்க விரும்புகிறது என்ற தகவலை வெளியிட்டுள்ளார்.</p><p>2023-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமான குழந்தை பிறந்தால் ரொக்கப் பரிசு வழங்குவது தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, தற்போது குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிக்கு ரூ.52 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். இது அவர்களது 17 வயது வரை ஆண்டுதோறும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>திட்ட பலன் யாருக்கு?</h2><p>இந்த ரொக்கப் பரிசு திட்டம் 2023-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதிக்குப் பிறகு பிறந்த குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும்.</p><p>அதுமட்டுமின்றி, குழந்தைகள் பராமரிப்பு செலவு, கல்விச் செலவுகளை குறைக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம் என தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் வடகிழக்கு பருவமழை வரலாறு காணாத பாதிப்பை ஏற்படுத்துமா?- உஷாராக இருக்க வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/will-the-northeast-monsoon-cause-unprecedented-damage-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/will-the-northeast-monsoon-cause-unprecedented-damage-in-chennai#comments</comments><guid isPermaLink="false">fc535fc6-2a72-4941-872e-ffb2ccd945ab</guid><pubDate>Wed, 26 Aug 2026 08:17:45 +0000</pubDate><atom:updated>2026-08-26T08:17:45.251Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Northeast Monsoon,வடகிழக்கு பருவமழை,வானிலை ஆய்வாளர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/00awxloa/northeastmonsoon.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மழை வெள்ளத்தில் மிதந்து செல்லும் வாகனங்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை வெள்ளத்தில் மிதந்து செல்லும் வாகனங்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/00awxloa/northeastmonsoon.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>எப்போதும் நினைவில் நிற்கும் அளவுக்கு மிகவும் தீவிரமான சூப்பர் எல் நினோவின் தாக்கங்களை எதிர்கொள்ள நாம் அனைவரும்  தயாராக வேண்டியது அவசியமாகும்.</strong></em></p><p>சூப்பர் எல்நினோ தாக்கம் காரணமாக தட்ப வெப்ப நிலையில் அதிக மாற்றங்கள் ஏற்படும் என்று <a href="https://www.maalaimalar.com/topic/வடகிழக்கு-பருவமழை">வானிலை ஆய்வாளர்கள்</a> ஏற்கனவே பல்வேறு எச்சரிக்கை தகவல்களை வெளியிட்டு உஷார்படுத்தி உள்ளனர்.</p><p>கடும் வெப்பம், வறட்சி, பெரு வெள்ளம் ஆகியவை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டு இருக்கிறது. </p><p>இந்த நிலையில் தமிழகத்தில் சூப்பர் எல் நினோ இன்னும் 2 மாதங்களில் மழை காலத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று தனியார் வானிலை ஆய்வாளரான ஹேமச்சந்தர் தெரிவித்து உள்ளார்.</p><p>இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><h2><strong>தீவிர தாக்கம்</strong></h2><p>மிகப்பெரிய சூப்பர் எல் நினோ உருவாகி வருகிறது. வரலாறு காணாத  அளவுக்கு அது தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நகர்ந்து வருகிறது.</p><p>வெப்ப நிலை மாறுபாடு 29.6 டிகிரி செல்சியஸ் ஆக உயர்ந்து உள்ளது. இது சராசரி அளவை விட  கூடுதலாக 2.75 டிகிரி செல்சியஸ் அதிகம் எனக் கூறப்படுகிறது. வரலாற்றில் முதல்முறையாக, இந்த மாதத்திலேயே ஒரு சூப்பர் எல் நினோ முழுமையாக உருவாகி உள்ளது. இந்த மாத இறுதிக்குள், 2015 மற்றும் 1997 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட எல் நினோ அளவுக்கு இது இருக்கலாம். அல்லது அதைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம். மத்திய பசிபிக் பெருங்கடல் பகுதியில் மீண்டும் ஒரு சக்திவாய்ந்த மேற்கு நோக்கிய காற்று வெடிப்பு  தொடர் நிகழ்வாக உள்ளது. </p><h2><strong>அலட்சியம் வேண்டாம்</strong></h2><p>இதன் காரணமாக கெல்வின் அலைகள் உருவாகி, கடலுக்குள் இருக்கும் கூடுதல் வெப்பத்தை மேல்நோக்கி கொண்டு சென்று எல் நினோவின் தாக்கத்தை மேலும் அதிகப்படுத்தும்.</p><p>இதன் விளைவாக, மிகப்பெரிய சூப்பர் எல் நினோ நவம்பர் மாதத்திற்குள் உருவாவது உறுதியாகும் எனக் கூறப்படுகிறது. எல் நினோ பூமியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று எண்ணி அலட்சியமாக இருக்க வேண்டாம். நீங்கள் இப்போதே விழிப்புடன் இருந்து தயாராக வேண்டும். இல்லையென்றால், அதன் விளைவுகள் உங்களை கடுமையாக பாதிக்கும்.</p><p>எப்போதும் நினைவில் நிற்கும் அளவுக்கு மிகவும் தீவிரமான சூப்பர் எல் நினோவின் தாக்கங்களை எதிர்கொள்ள நாம் அனைவரும்  தயாராக வேண்டியது அவசியமாகும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p><h2><strong>பெருவெள்ளம்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதியை பொறுத்தவரையில் பருவமழை காலங்களான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வெள்ள பாதிப்பு அதிகமாகவே இருக்கும். இந்த பாதிப்பு வரலாறு காணாத வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது. </p><p>தற்போது சூப்பர் எல் நினோவால் பெரு வெள்ளம் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்து இருப்பது பொதுமக்களிடையே  சற்று பீதியையும் ஏற்படுத்தி இருக்கிறது. அதனை போக்கும் வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை முன் கூட்டியே மேற்கொள்ள வேண்டும் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>யானைக்கவுனியில் விஷவாயு தாக்கி தந்தை-மகன் பலி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/father-and-son-death-death-gas-attack-near-elephant-gate</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/father-and-son-death-death-gas-attack-near-elephant-gate#comments</comments><guid isPermaLink="false">9bcb5b3a-6c4f-4b4d-bf7b-140e7e1a5d0a</guid><pubDate>Wed, 26 Aug 2026 08:17:17 +0000</pubDate><atom:updated>2026-08-26T08:17:17.597Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஷவாயு தாக்குதல்,Elephant Gate,gas attack,தந்தை மகன் உயிரிழப்பு,Father Son Death,யானைக்கவுனி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/7020hwrq/death.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Father - Son]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/7020hwrq/death.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை யானைக்கவுனி ஏலக்கந்தப்பன் தெரு, பொன்னப்பா சந்தில் உள்ள ஒரு வீட்டில் உள்ள கிணற்றில் தூர்வாரும் பணி இன்று காலையில் நடந்தது.</p><h2>தந்தை-மகன்</h2><p>சென்னை கொடுங்கையூர் சின்னாண்டி மடத்தைச் சேர்ந்த அய்யனார் (35), அவரது தந்தை ரவி (65) ஆகியோர் தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். </p> <p>3½ அடி அகலம், 45 அடி ஆழம் உள்ள கிணற்றில் முதலில் அய்யனார் இறங்கினார். அவர் உள்ளே சென்று சிறிது நேரம் ஆகியும் எந்தவித சத்தமும் இல்லாததால் அவரது தந்தை ரவி கிணற்றில் இறங்கினார். இருவரும் கிணற்றில் இறங்கி நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. </p><p>இதனால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு வீரர் ராஜ்குமார் தலைமையில் 5 பேர் அங்கு விரைந்து வந்தனர்.</p> <h2>பிணமாக கிடந்தனர்</h2><p>அவர்கள் இருவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டபோது அய்யனாரும், ரவியும் விஷவாயு தாக்கி கிணற்றில் பிணமாக இருந்தது தெரிய வந்தது.  இதையடுத்து தீயணைப்புப் படை வீரர்கள் அவர்கள் இருவரின் உடலையும் மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி  வைத்தனர். </p><p>வீட்டுக் கிணற்றை தூர்வாரும்போது தந்தையும், மகனும் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. </p><p>இதுகுறித்து யானைக் கவுனி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>தொழில்நுட்ப வல்லுநர்கள் வெற்றி பெற &apos;விற்பனை&apos; வித்தையைக் கற்க வேண்டும்: ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு அறிவுரை!</title><link>https://www.maalaimalar.com/news/national/tech-professionals-must-learn-sales-to-succeed-sridhar-vembu</link><comments>https://www.maalaimalar.com/news/national/tech-professionals-must-learn-sales-to-succeed-sridhar-vembu#comments</comments><guid isPermaLink="false">600ef821-694e-44d1-ac9c-7555513924b8</guid><pubDate>Wed, 26 Aug 2026 08:09:14 +0000</pubDate><atom:updated>2026-08-26T08:09:14.618Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,Sridhar Vembu,ஸ்ரீதர் வேம்பு,Zoho founder,Software Industry,ஸோஹோ நிறுவனம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/p1o9p9gr/sridhar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sridhar Vembu ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/p1o9p9gr/sridhar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனமான ஸோஹோ (Zoho) அமைப்பின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, பொறியாளர்கள், அறிவியலாளர்கள் மற்றும் மருத்துவர்கள் போன்ற தொழில்நுட்ப பின்புலம் கொண்ட தொழில்முனைவோர்கள் தங்கள் தொழிலை வெற்றிகரமாக நடத்த விற்பனைத் துறையில் நேரடியாகக் களம் இறங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தொழிலில் வெற்றி பெற விரும்புபவர்கள் விற்பனை அழைப்புகளை மேற்கொள்வதோடு, வாடிக்கையாளர்களின் நிராகரிப்புகளையும் எதிர்கொள்ளப் பழக வேண்டும் என்று அவர் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.</p><h2>நிராகரிப்புகளை எ<strong>திர்கொள்வதே உ</strong>ண்மையான பாடம்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/national/porsche-tcs-1-4-billion-mega-deal-mhp-acquisition">தொழில்நுட்பத்</a> திறமையோ அல்லது சிறந்த தரமான பொருளை உருவாக்குவதோ மட்டுமே ஒரு நிறுவனத்தை நடத்துவதற்குப் போதாது என்று ஸ்ரீதர் வேம்பு குறிப்பிட்டுள்ளார். வாடிக்கையாளர்களுக்கு அந்தத் தயாரிப்பு ஏன் தேவைப்படுகிறது என்பதைப் புரியவைத்து, அவர்களைப் பணம் செலுத்த வைப்பதே ஒரு நிறுவனத்தின் ஜீவாதாரமாகும்.</p><p>விற்பனை தொடர்பான உரையாடல்களில் ஈடுபடும் போது மட்டுமே தனது எண்ணங்களை மற்றவர்களுக்கு எளிதாகப் புரியவைப்பது எவ்வளவு கடினம் என்பது புலப்படும். இது தொழில்முனைவோரின் தொடர்பாடல் திறனை மேம்படுத்துவதுடன், நிறுவனத்தின் விற்பனைக் குழுவினர் சந்திக்கும் சவால்களையும் புரிந்துகொள்ள உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>விற்பனை இல்<strong>லாத தொழில் உல</strong>கத்தில் இல்லை</h2><p>எந்தவொரு தொழில் நிறுவனமும் தப்பிப் பிழைத்து வெற்றிப் பாதையில் நகர வேண்டுமானால், ஏதேனும் ஒன்றை விற்பனை செய்தே தீர வேண்டும். விற்பனை என்ற அம்சம் இல்லாத வணிகம் என எதுவுமே இல்லை என்பதால், புதிய தொழில்முனைவோர்கள் ஆரம்பக் கட்டத்திலேயே நிராகரிப்புகளைச் சந்திக்கத் தயங்கக் கூடாது என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். இவரது இந்த இணையப் பதிவு சமூக வலைதளங்களில் பல தொழில்முனைவோர்கள் மற்றும் வணிக வல்லுநர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பலரும் தங்களது தொடக்கக் கால அனுபவங்களை இதன் மூலம் பகிர்ந்து வருகின்றனர்.</p><h2>மெ<strong>ன்பொருள் துறை மாற்றங்கள்</strong></h2><p>சமீபகாலமாக வணிக உலகம் சந்தித்து வரும் சவால்கள் குறித்தும் ஸ்ரீதர் வேம்பு பேசியுள்ளார். குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சியால் தரவு மையங்கள் மற்றும் கணினி நினைவகங்களின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன. இதனால் மென்பொருள்களை உருவாக்கும் முறையிலும், நிரலாக்க மொழிகளிலும் பெரிய அளவிலான மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.</p><p>நினைவகம் இலவசமாகக் கிடைக்கும் என்ற எண்ணத்தில் மென்பொருள்கள் உருவாக்கப்பட்ட காலம் முடிந்துவிட்டதாகவும், இனி குறைந்த நினைவகத்தைப் பயன்படுத்தி இயங்கும் சாஃப்ட்வேர் அமைப்புகளை உருவாக்குவதே தற்போதைய அவசியமான ஆராய்ச்சி என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மத்திய மந்திரி சபையில் 12 புதுமுகங்களுக்கு வாய்ப்பு- பிரதமர் மோடி அதிரடி முடிவு</title><link>https://www.maalaimalar.com/news/national/opportunities-for-12-newcomers-in-the-union-cabinet</link><comments>https://www.maalaimalar.com/news/national/opportunities-for-12-newcomers-in-the-union-cabinet#comments</comments><guid isPermaLink="false">a5eb064a-cb4d-44b0-a553-fb7d546398e0</guid><pubDate>Wed, 26 Aug 2026 07:58:01 +0000</pubDate><atom:updated>2026-08-26T07:58:01.644Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,மத்திய அமைச்சரவை,Central Cabinet,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/hqqa6284/modi.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ பிரதமர் மோடி]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர் மோடி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/hqqa6284/modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மந்திரிசபை மாற்றத்தின் போது இளம் மந்திரிகள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.</strong></em>  </p><p>மத்திய மந்திரி சபையில் தற்போது பிரதமர் மோடி உள்ளிட்ட 69 பேர் இடம் பெற்றுள்ளனர். அரசியலமைப்பு சட்டப்படி அதிகபட்சமாக 81 பேர் வரை மந்திரிகளாக பதவி வகிக்க முடியும். அந்த வகையில் 12 பேரை கூடுதலாக நியமிக்க முடியும். </p><h2><strong>மத்திய மந்திரி சபை மாற்றம்</strong></h2><p>பிரதமர் மோடி கடந்த மே மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே, இத்தாலி ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.  அவர் இந்தியா திரும்பியவுடன் மத்திய மந்திரி சபை கூட்டத்தை நடத்தினார். </p><p>அப்போதில் இருந்தே <a href="https://www.maalaimalar.com/topic/மத்திய-அமைச்சரவை">மத்திய மந்திரி சபையில்</a> மாற்றம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் உடனடியாக எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. சமீபத்தில் பா.ஜ.க.வின் கட்சி அமைப்பில் மாற்றம் செய்யப்பட்டது. புதிய தேசிய நிர்வாக குழு அமைக்கப்பட்டது.</p><p>அதன் அடிப்படையிலும், 2029 பாராளுமன்ற தேர்தல் மற்றும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் அடிப்படையில் மத்திய மந்திரி சபையை விரிவாக்கம் செய்ய மத்திய அரசு தீவிரமாக உள்ளது. </p><h2><strong>12 புதுமுகங்கள்</strong></h2><p>அதன்படி மத்திய மந்திரி சபையில் காலியாக இருக்கும் 12 இடங்களுக்கு புதுமுகங்களை நியமிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிதாக சேர்க்கப்படுபவர்கள் வயது அடிப்படையில் இடம்பெறலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. </p><p>2025-ல் மோடி பிரதமராக பதவி ஏற்ற போது 65 சதவீதத்திற்கும் மேற்பட்ட மந்திரிகள் 51 முதல் 70 வயதை கொண்டவர்களாகவும், 24 சதவீதம் பேர் 30 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருந்தனர்.</p><h2><strong>70 வயது</strong></h2><p>தற்போது 12 மத்திய மந்திரிகள் மற்றும் இணை மந்திரிகள் 70 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். பீகார் மாநிலத்தை சேர்ந்த இந்துஸ்தானி அவாம் மோர்சா கட்சியின் ஜிதன்ராவ் மாஞ்சிக்கு 81 வயதாகிறது. மத்திய மந்திரிகளில் இளையவராக தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ராம்மோகன் நாயுடு உள்ளார். </p><p>மந்திரிசபை மாற்றத்தின் போது இளம் மந்திரிகள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.  </p><h2><strong>கூட்டணி கட்சிகள்</strong></h2><p>மேலும் காங்கிரஸ் ஆட்சி செய்யும் இமாச்சல பிரதேசம், கர்நாடகாவை சேர்ந்த எம்.பி.க்கள் மந்திரிகளாக வாய்ப்பு உள்ளது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களும் இந்த பட்டியலில்  உள்ளதாக தெரிகிறது. </p><p>உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலும்  அடுத்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடைபெற உள்ளது. மந்திரி சபை விரிவாக்கத்தின் போது கூட்டணி கட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.</p><h2><strong>ஏக்நாத் ஷிண்டேயின் மகன்</strong> </h2><p>மகாராஷ்டிராவில் துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் 13 எம்.பி.க்கள் உள்ளனர். சமீபத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அணியில் இருந்து சில எம்.பி.க்கள் இணைந்ததை தொடர்ந்து அதன் பலம் அதிகரித்தது. இதனால் ஏக்நாத் ஷிண்டேயின் மகன் ஸ்ரீகாந்துக்கு மத்திய மந்திரியாக வாய்ப்பு உள்ளது. </p><p>விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள பஞ்சாபில் ஷிரோன்மணி அகாலி தளம் கட்சிக்கும் வாய்ப்பு அளிக்கப்படலாம். அந்த கட்சியுடன் மீண்டும் கூட்டணி உருவானால் ஹர்ஷிம்ரத் கவ் பாதல் மீண்டும் மந்திரியாகலாம். </p><h2><strong>ஆம்ஆத்மி</strong></h2><p>ராகவ் சந்தா தலைமையில் 7 மேல்சபை எம்.பி.க்கள் சமீபத்தில் ஆம்ஆத்மியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தனர். இதனால் அவர்களில் சிலருக்கு மந்திரி சபையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படலாம். இந்த குழுவை சேர்ந்த சந்தீப் பதக் ஏற்கனவே பா.ஜ.க.வில் செயலாளர் பொறுப்பை ஏற்றுள்ளார். </p><p>மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதிருப்தி எம்.பி.க்கள் 20 பேர் உள்ளனர். வேறொரு கட்சியில் இணைந்த இவர்களுக்கும் மத்திய மந்திரி சபையில் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்தியா கூட்டணியில் இருந்து விலகிய தி.மு.க.வும் மத்திய மந்திரி சபையில் இடம்பெறக்கூடும் என பேச்சுக்கள் உள்ளன. </p><p>மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தேசியவாத காங்கிரசும், பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து மத்திய மந்திரி சபையில் இடம் பெறலாம் என்று கூறப்படுகிறது.</p><h2><strong>பணிச்சுமை</strong></h2><p>அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட 14 மத்திய மந்திரிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட துறைகளை கவனித்து வருகின்றனர். மத்திய மந்திரி சபை மாற்றத்தின் போது இந்த பணிச்சுமையை பிரித்து சில துறைகளை புதிய மந்திரிகளுக்கு ஒப்படைக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுவும் மத்திய மந்திரி சபை விஸ்தரிப்புக்கு ஒரு காரணமாக இருக்கலாம். </p><p>நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக தர்மேந்திர பிரதான் மத்திய கல்வி மந்திரி பதவியில் இருந்து விலகினார். மேல்சபை பதவி காலம் முடிவடைந்தை தொடர்ந்து சிறுபான்மை விவகாரத்துறை இணை மந்திரி ஜார்ஜ் குரியன் பதவி விலகினார். ரெயில்வே இணை மந்திரி ரவ்நீத் சிங் மேல் சபை பதவி காலமும் முடிவடைந்துள்ளது.</p><h2><strong>நீக்கம்</strong></h2><p>பா.ஜ.க.வில் புதிய பொறுப்புகளை பெற்றுள்ள மத்திய மந்திரிகளும் மந்திரி பதவியில் இருந்து வெளியேறலாம் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் ஹர்ஷ் மல்கோத்ரா, பங்கஜ் சவுத்ரி, புதிய பொறுப்புகளை ஏற்று உள்ளனர். </p><p>பெட்ரோலியத் துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி, சமூக நீதி துறை இணை மந்திரி பி.எல்.வர்மா ஆகியோரின் மேல்சபை எம்.பி. பதவி காலமும் நவம்பர் மாதத்தில் முடிவடைகிறது. செயல்பாடுகள் காரணமாகவும் சில மந்திரிகள் நீக்கப்படலாம் என்றும் அந்த தகவல் தெரிவிக்கிறது. </p><h2><strong>ஒருவருக்கு ஒரு பதவி</strong></h2><p>ஒருவருக்கு ஒரு பதவி என்ற நடைமுறையை பா.ஜ.க. பின்பற்றுகிறது. அதன்படி மத்திய மந்திரி சபையில் இடம் பெறுவார்கள் என்று முன்பு எதிர்பார்க்கப்பட்ட சில தலைவர்களுக்கு அதற்கு பதிலாக கட்சி அமைப்பில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.</p><p>அவர்களில் ஸ்மிருதி இரானி, வினோத் தாவ்டே, சதீஷ் பூனியா, தருண் சுக் ஆகியோர் அடங்குவர். </p><h2><strong>நிதின்கட்கரி</strong></h2><p>மத்திய மந்திரி சபையில் இடம் பெற்றுள்ள மூத்த மந்திரிகளில் ஒருவர் நிதின்கட்கரி. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அவர் இளம் தலைமுறையினரிடம் ஒப்படைக்க வேண்டிய நேரம் இது என்று தெரிவித்து இருந்தார். இதனால் அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறலாம் என்று கருதப்படுகிறது.  </p><p>புதுமுகங்கள், பெண்கள், கூட்டணி கட்சிகள், தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்கள், கட்சி பொறுப்பு பெற்ற மந்திரிகளை விடுவித்தல், மந்திரிகளின் பணிச்சுமைகளை குறைத்தல் ஆகியவை மத்திய மந்திரி சபை மாற்றத்தின் முக்கிய அம்சங்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதன்படி மத்திய மந்திரி சபை விரைவில் விரிவாக்கம் செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஆசிரியர்கள் தகுதித்தேர்வு விலக்கு தீர்மானம்
கண்துடைப்பு நாடகமாக இருக்கக் கூடாது!- அன்பில் மகேஷ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbil-mahes-criticises-teacher-eligibility-test-exemption-move</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbil-mahes-criticises-teacher-eligibility-test-exemption-move#comments</comments><guid isPermaLink="false">946df2f5-80cc-4a8c-8a04-0ba5b9a1caf1</guid><pubDate>Wed, 26 Aug 2026 07:50:59 +0000</pubDate><atom:updated>2026-08-26T07:50:59.846Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பள்ளிக்கல்வித்துறை,anbil mahesh,TET Exam,Directorate of School Education,அன்பில் மகேஷ்,ஆசிரியர்கள் தகுதித்தேர்வு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/5pimw2rq/anbil-mahesh.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ex Minister Anbil Mahesh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/5pimw2rq/anbil-mahesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆசிரியர்கள் தகுதித்தேர்வு விலக்கு தீர்மானம், கண்துடைப்பு நாடகமாக மட்டும் இருக்கக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>‘ஆசிரியர்கள் தகுதித்தேர்வு விலக்கு தீர்மானம்’ தொடர்பாக த.வெ.க. அரசு கொண்டு வந்துள்ள தீர்மானத்திற்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆசிரியர் சங்கங்களிடம் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.</p><p>இந்த அரசு ஆசிரியர்கள் நலனில் இரட்டைவேடம் போடுகிறதா எனும் சந்தேகம் எழுந்துள்ளது. தீர்மானம் நிறைவேற்றியதற்கு முதல்நாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘ஆசிரியர் தகுதித்தேர்விற்கான மதிப்பெண்களை குறைக்க முடியாது!</p><p>அப்படி குறைத்தால் தேர்விற்கான மதிப்பு குறைந்துவிடும்’ என ஆசிரியர்களுக்கு எதிராக வாதாடியுள்ளது த.வெ.க. அரசு. ஆனால் அதற்கு மறுநாள் தீர்மானம் எனும் பெயரில் நாடகம் ஆடியுள்ளதா எனும் கேள்வி ஆசிரியப் பெருமக்களிடம் எழுந்துள்ளது.</p><p>2025 செப்டம்பர் 1 அன்று ‘அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் கட்டாயம் தேர்ச்சிப் பெற வேண்டும்’ என மாண்பமை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. </p><p>உடனடியாக அதே நாளில் செய்தியாளர்களைச் சந்தித்து ‘இத்தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும்’ என திராவிட மாடல் அரசின் அன்றைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க அறிவித்தோம்.</p><p>அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தோம். </p><p>‘மேல்முறையீடு செய்யப்படும்’ என்ற தலைவர் அவர்களின் அறிவிப்பை ஆசிரியர் சங்கங்கள் வரவேற்றார்கள். அதற்காக என்னை நேரில் சந்தித்து நன்றியும் தெரிவித்தார்கள்.</p><p>2025 செம்படம்பர் 11 அன்று தமிழ்நாடு அரசின் சார்பாக சீராய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து கழகமும், திராவிட மாடல் அரசும் ஆசிரியர்களின் மனமறிந்து அவர்களை காக்கும் பணிகளில் இறங்கியது.</p><p>சீராய்வு மனு மீதான தீர்ப்பு வெளியான அடுத்த நாளே ஆசிரியர் சங்க பிரதிநிதிகளை பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் சந்தித்து ஆசிரியர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தோம். </p><p>இரண்டு முறை கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தினோம். அதற்கு அடுத்த நாளே 2025 நவம்பர் 22 அன்று அன்றைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை பாராளுமன்ற உறுப்பினர் மூத்த வழக்கறிஞர் வில்சன் அவர்களோடு இணைந்து சந்தித்து ஆசிரியர்கள் தெரிவித்த கருத்துக்களை எடுத்துக் கூறினோம். </p><p>ஆசிரியர்களின் கருத்துக்களை அடிப்படையாக கொண்டு நவம்பர் 25 அன்று இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதினார் அன்றைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். அக்கடிதத்தில் ‘ஆசிரியர்களை பாதுகாப்பதுடன் குழந்தைகளின் கல்வியும் பாதிக்கப்படக்கூடாது என்றால் சட்டத்தில் தேவையான திருத்தம் செய்ய வேண்டும்’ என்பதை வலியுறுத்தினார்.</p><p>தொடர்ந்து, அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களோடு நானும் பள்ளிக்கல்வித்துறை உயரதிகாரிகளும் உடனடியாக ஆலோசனை நடத்தினோம். </p><p>மூத்த ஆசிரியர்கள் ஒருவர் கூட பாதிக்கப்படாமல் தமிழ்நாடு அரசு தொடர்ந்து பாதுகாக்கும் என்றும், ஆசிரியர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்கத் திராவிட மாடல் அரசு துணை நிற்கும் என்றும் அன்றைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விரிவான அறிக்கையின் மூலம் தெரிவித்தார்கள்.</p><p>நவம்பர் 29 அன்று கழகத் தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ‘பணி நியமனம்  பெற்று தற்போது ஆசிரியர்களாக பணியாற்றுபவர்களின் பணி மற்றும் பதவி உயர்வினை ஒன்றிய அரசு பாதுகாத்திடுக’ என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.</p><p>“இந்தியா முழுவதும் உள்ள ஆசிரியர்களைப் பாதுகாக்கப் பாராளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டுவர வலியுறுத்த வேண்டும்” என்கிற கழகத் தலைவர் அவர்களின் அறிவுரைப்படி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி நேரத்தில் சட்டத்திருத்தம் குறித்து வலியுறுத்தினார்கள். </p><p>கழக மாநிலங்களவை உறுப்பினர் திரு.பி.வில்சன் அவர்கள் 2025 டிசம்பர் 12 அன்று ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த கழகத் தலைவர் அவர்களின் குரலை நாடாளுமன்றத்தில் பதிவு செய்து, ஆசிரியர்களுக்காக சட்டத்திருத்தம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.</p><p>இதற்கிடையில் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்று திராவிட மாடல் அரசின் சிறப்பு முயற்சியால் “ஆசிரியர்களைப் பாதுகாப்பதற்காக சிறப்பு தகுதித் தேர்வு நடத்தப்படும்” என்று அரசாணை: 231, நாள் 25.10.2025 அன்று வெளியிடப்பட்டது.</p><p>தொடர்ந்து வந்த நவம்பர் மாதத்தில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் ஆசிரியர்களின் நலன் கருதி, தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்ணில் 5 சதவீதத் தளர்வும் வழங்கப்பட்டது. இதனால் ஏராளமான ஆசிரியர்கள் பயன்பெற்றுள்ளார்கள்.</p><p>2026 ஜனவரி 28 அன்று ஆசிரியர் தகுதித்தேர்வில் தகுதி மதிப்பெண்களை குறைத்து அரசாணை வெளியிட்டார் அன்றைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். </p><p>ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு 55 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகவும், பிற்படுத்தப்பட்டோர் - மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகிய பிரிவினருக்கு 55 சதவீதத்திலிருந்து, 50 சதவீதமாகவும் மாற்றி அரசாணை வெளியிடப்பட்டது.</p><p>மாற்றுத்திறன் கொண்ட தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று பிப்ரவரி 25 அன்று குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 40 சதவீதம் எனவும் நிர்ணயித்து அரசாணை வெளியிடப்பட்டது.</p><p>மேலும், சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் அனைத்து ஆசிரியர்களுக்கும் உதவிடும் வகையில், அதற்கான பயிற்சிக் கட்டகங்கள்(Training Modules) தயாரிக்கும் பணி மற்றும் இணையவழிப் பயிற்சி வழங்கும் பணியானது, ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திடம்(SCERT) ஒப்படைக்கப்பட்டது.</p><p>இச்சூழலில்தான் 2026 மே 29ஆம் தேதி சீராய்வு மனு மீது தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் ‘தகுதித்தேர்வில் இருந்து விலக்களிக்க மறுத்துவிட்டது’. இதன் பிறகான சட்டப்போராட்டத்தை புதிதாக வந்த த.வெ.க அரசு மேற்கொள்ளவில்லை என்பதே உண்மை!</p><p>முந்தைய நமது திராவிட மாடல் அரசு ஆசிரியர்களுக்காக செய்த சிறப்பு செயல்பாடுகளையும் முடக்கும் வேகத்தில்தான் இந்த அரசு செயலாற்றியது. சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வர்களுக்காக பயிற்சி கையேடுகள் வழங்குவதிலேயே தாமதம் ஏற்படுத்திய அரசுதான் இவ்வரசு.</p><p>அதோடு நில்லாமல் உயர்நீதிமன்றத்தில் ‘தகுதித்தேர்விற்கான மதிப்பெண்களை குறைக்க முடியாது’ என்று ஆணவமாகவும் வாதாடி உள்ளது என்பது மாற்றத்தை அல்லாமல் ஆசிரியர்கள் மத்தியில் ஏமாற்றத்தைதான் கொடுத்துள்ளது.</p><p>இந்த புதிய அரசின் செயல்பாடுகளை என்னவாக விளங்கிக்கொள்ள வேண்டும்? நீதிமன்றத்தில் வாதாடிய அரசின் முகம்தான் உண்மை முகமா? சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய அரசின் முகம்தான் உண்மை முகமா?</p><p>இரட்டை நிலைப்பாட்டை எடுத்துக் கூறுவதுடன் கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி ஆசிரியப் பெருமக்களின் நலனுக்காக என்றும் குரல் கொடுப்போம்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தெலுங்கானாவில் லாரி மீது பஸ் மோதி விபத்து - 6 பேர் பலி </title><link>https://www.maalaimalar.com/news/national/bus-crashes-to-truck-six-killed-near-telangana</link><comments>https://www.maalaimalar.com/news/national/bus-crashes-to-truck-six-killed-near-telangana#comments</comments><guid isPermaLink="false">5b5e6f63-9ef0-44a8-8126-86327a8d82f5</guid><pubDate>Wed, 26 Aug 2026 07:49:29 +0000</pubDate><atom:updated>2026-08-26T07:49:29.347Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உயிரிழப்பு,Death,Telangana,accident,விபத்து,தெலுங்கானா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/4ecn3zyk/bus.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/4ecn3zyk/bus.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் இருந்து 42 பயணிகளுடன் தனியார் பஸ் ஒன்று நேற்று இரவு ஆந்திர மாநிலம் ஏலூருக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.</p><p>இன்று அதிகாலை சூர்யா பேட்டை மாவட்டம், கொடடா அடுத்த தோர குண்டா புறநகர் பகுதியில் வந்தபோது சாலையோரம் நின்ற கண்டெய்னர் லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது. </p><p>இந்த விபத்தில் 5 பெண் பயணிகள் உட்பட 6 பேர் பஸ்சின் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 20 பயணிகள் காயமடைந்தனர். </p><p>விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் உடல்களை மீட்டு கொடடா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>திரையுலகில் சோகம்: பிரபல பாலிவுட் இயக்குநர் குகு கோலி மாரடைப்பால் காலமானார்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/bollywood-mourns-celebrated-director-gugu-kohli-passes-away-after-heart-attack</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/bollywood-mourns-celebrated-director-gugu-kohli-passes-away-after-heart-attack#comments</comments><guid isPermaLink="false">51e3d6d9-3edb-4627-8f44-fa1ce31030b3</guid><pubDate>Wed, 26 Aug 2026 07:47:46 +0000</pubDate><atom:updated>2026-08-26T07:47:46.694Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Kuku Kohli,Phool Aur Kaante,Actress Aruna Irani,குகு கோலி,அருணா இரானி,அவதார் கோலி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/wvf550e2/kholi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kuku Kohli]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/wvf550e2/kholi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரபல பாலிவுட் திரைப்பட இயக்குநரும், மூத்த நடிகை அருணா இரானியின் கணவருமான குகு கோலி (77) மாரடைப்பு காரணமாக மும்பையில் காலமானார். அவரது மறைவு பாலிவுட் திரையுலகினர் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>மார<strong>டைப்பால் திடீர் மறைவு</strong></h2><p>அவதார் கோலி என்ற இயற்பெயர் கொண்ட குகு கோலிக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக மும்பையிலுள்ள கோகிலாபென் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டு உடல்நிலை சீராகி வந்த நிலையில், மீண்டும் ஏற்பட்ட தீவிர மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/kriti-sanon-defends-raksha-bandhan-ad-outfit-amid-cultural-criticism">பாலிவுட்டின் </a>முன்னணி இயக்குநரான ராஜ் கபூரிடம் உதவி இயக்குநராக தனது திரைவாழ்க்கையைத் தொடங்கிய குகு கோலி, 'போபி', 'பேதாப்', 'அர்ஜுன்' போன்ற படங்களில் பணியாற்றினார்.</p><p>1991-ஆம் ஆண்டு வெளியான 'ஃபூல் அவ்ர் காண்டே' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இத்திரைப்படத்தின் மூலமே பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் திரையுலகில் அறிமுகமானார். முதல் படத்திலேயே மாபெரும் வெற்றி கண்ட குகு கோலி, தொடர்ந்து 'சுஹாக்', 'ஹகீகத்', 'கோஹ்ராம்', 'அனாடி நம்பர் 1', 'யே தில் ஆஷிகானா' போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். 2004-ஆம் ஆண்டு வெளியான 'வோ தேரா நாம் தா' என்பதே இவர் இயக்கிய கடைசி திரைப்படமாகும்.</p><p>குகு கோலி 1990-ஆம் ஆண்டு பிரபல மூத்த நடிகை அருணா இரானியை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு முதல் மனைவி ரீட்டா கோலி மூலம் பூஜா, கரிஷ்மா என்ற இரு மகள்கள் உள்ளனர். மும்பை ஓஷிவாரா மயானத்தில் நடைபெறும் இவரது இறுதிச்சடங்கில் ரோஹித் ஷெட்டி, விக்கி கௌஷல், கத்ரீனா கைஃப், ஜாவேத் அக்தர், ஷபானா ஆஸ்மி உள்ளிட்ட பல முன்னணி திரையுலக பிரபலங்கள் நேரில் பங்கேற்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>குருகிராமில் மழை வெள்ளம்: காங்கிரஸ் ஆட்சியைக் குற்றம்சாட்டும் பாஜக எம்பி!</title><link>https://www.maalaimalar.com/news/national/gurugram-rains-floods-bjp-mp-blames-congress-rule</link><comments>https://www.maalaimalar.com/news/national/gurugram-rains-floods-bjp-mp-blames-congress-rule#comments</comments><guid isPermaLink="false">577d9f7a-e8b0-4d83-947b-494c7f3e6a6c</guid><pubDate>Wed, 26 Aug 2026 07:29:47 +0000</pubDate><atom:updated>2026-08-26T07:29:47.304Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,Congress,gurugram,Rao Inderjit Singh,Gurugram flood,குருக்கிராம்,ராவ் இந்தர்ஜித் சிங்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/sumejfee/Untitled-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rao Inderjit Singh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/sumejfee/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஹரியானாவின் முன்னணி தொழில்நகரமான குருகிராமில் அண்மையில் பெய்த கனமழையால் நகரின் முக்கியச் சாலைகளும், குடியிருப்புப் பகுதிகளும் நீரில் மூழ்கிப் பெரும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. இந்த நிலையில், நகரின் தற்போதைய நிலைக்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் தவறான உள்கட்டமைப்பு திட்டமிடலே காரணம் என குருகிராமின் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ராவ் இந்தர்ஜித் சிங் கூறியிருப்பது பெரும் காரசாரமான அரசியல் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.</p><h2><strong>சுரங்கப்பாதை திட்டம்</strong> </h2><p>நகரின் வெள்ளப் பெருக்கு குறித்துப் பேசிய மத்திய இணை அமைச்சரும் <a href="https://www.maalaimalar.com/news/national/flooded-gurugram-again-who-is-to-blame-for-citys-infrastructure-collapse">குருக்கிராமின்</a> எம்பியுமான ராவ் இந்தர்ஜித் சிங், "தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண நடவடிக்கைகள் அனைத்தும் காயத்திற்கு போடப்படும் சாதாரண பிளாஸ்டர் போன்ற தற்காலிகமான தீர்வே ஆகும். ஆரவல்லி மலையிலிருந்து யமுனை நதிக்குத் தண்ணீரை எடுத்துச் சென்ற பழமையான இயற்கை வடிகால்களை அடைத்து, காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கட்டுமானங்களே தற்போதைய வெள்ளப் பெருக்குக்கு முக்கியக் காரணம்." என்று குற்றம்சாட்டினார்.</p><p>இதற்கு நிரந்தரத் தீர்வாக, மெட்ரோ ரெயில் பாதைகளைப் போல பழைய வடிகால் பாதைகளின் வழியே நிலத்தடி சுரங்கப்பாதைகளை (Underground Tunnels) அமைத்து மழைநீரை வெளியேற்ற வேண்டும் என்றும், அதற்கான நிதியைத் திரட்டும் பணிகளில் அரசு ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p>பாஜக எம்பியின் இந்தக் குற்றச்சாட்டிற்கு காங்கிரஸ் கட்சி உடனடி மற்றும் காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளது. குருக்கிராமில் கடந்த சில ஆண்டுகளில் உள்கட்டமைப்பிற்காக ரூ.1,400 கோடிக்கு மேல் செலவழிக்கப்பட்டும் நகரின் கட்டமைப்பு முற்றிலுமாகச் சீர்குலைந்துள்ளதாக காங்கிரஸ் சாடியுள்ளது.</p><p>மேலும், 2009-ஆம் ஆண்டு முதல் குரு்கிராமின் நாடாளுமன்ற உறுப்பினராக ராவ் இந்தர்ஜித் சிங் பொறுப்பில் இருந்து வருகிறார். அதுமட்டுமன்றி, அவர் குற்றம்சாட்டும் அதே காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலும் அவரே எம்பியாகவும், ஹரியானா மற்றும் மத்திய அரசில் அமைச்சராகவும் பதவி வகித்தார். 2014-ல் பாஜகவிற்கு மாறிய அவர், தொடர்ச்சியாக குருகிராம் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வரும் நிலையில், 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பதவியில் இருந்துவிட்டு முந்தைய ஆட்சியைக் குற்றம்சாட்டுவது தனது சொந்தத் தோல்வியை மறைக்கும் செயலாகும் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.</p><h2>முடங்<strong>கிய குருக்கிராம்</strong></h2><p>குருகிராமில் சில நிமிடங்களில் கொட்டித் தீர்த்த 70 மி.மீ முதல் 75 மி.மீ வரையிலான கனமழையால் நகரின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் 2 அடிக்கும் மேலாக மழைநீர் தேங்கியதால் பள்ளிக் குழந்தைகள் சென்ற பேருந்துகள் மற்றும் அவசர ஆம்புலன்ஸ் வாகனங்கள் மணி கணக்கில் போக்குவரத்தில் சிக்கித் தவித்தன. இதனால் பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தனியார் அலுவலகங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தின.</p><p>இதற்கிடையே, டெல்லி-ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலை அருகே இஃப்கோ சவுக்கில் பிரதான கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 10 அடி அகலத்திற்குப் பாதாளப் பிளவு ஏற்பட்டு வீதி உள்வாங்கியது. இதனால் போக்குவரத்தும், சில பகுதிகளில் குடிநீர் விநியோகமும் முற்றிலுமாகத் தடைபட்டுள்ளது. பல நூறு கோடி செலவழிக்கப்பட்டும் ஒவ்வொரு மழைக்காலத்திலும் குருக்கிராம் நகரம் தத்தளிப்பது அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆவணி மாத பவுர்ணமி முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்  </title><link>https://www.maalaimalar.com/spirituality/best-time-for-girivalam-in-tiruvannamalai</link><comments>https://www.maalaimalar.com/spirituality/best-time-for-girivalam-in-tiruvannamalai#comments</comments><guid isPermaLink="false">e47176bc-f4bd-4d3e-807d-e5f8c0296034</guid><pubDate>Wed, 26 Aug 2026 07:28:45 +0000</pubDate><atom:updated>2026-08-26T07:28:45.825Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை கோவில்,pournami,Pournami Girivalam,பவுர்ணமி கிரிவலம்,Tiruvannamalai temple,பவுர்ணமி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/khws4xja/tiruvannamalai.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ திருவண்ணாமலை கோவில்]]></media:title><media:description type="html"><![CDATA[ திருவண்ணாமலை கோவில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/khws4xja/tiruvannamalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மாலை, இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கிரிவலம் செல்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/திருவண்ணாமலை-கோவில்">திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில்</a> ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம் செல்வதற்கான உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கோவில் நிர்வாகத்தின் அறிவிப்பின்படி, ஆவணி மாத பவுர்ணமி திதி நாளை (வியாழக்கிழமை) காலை 9.53 மணிக்குத் தொடங்கி, மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 10.29 மணிக்கு நிறைவடைகிறது. இந்த இடைப்பட்ட காலமே கிரிவலம் வர உகந்த நேரமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>தற்போது பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதால், பக்தர்கள் பகலில் கிரிவலம் செல்வதைத் தவிர்த்து மாலை, இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கிரிவலம் செல்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p>பவுர்ணமியை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பக்தர்கள் வசதிக்காகப் பல்வேறு இடங்களில் குடிநீர் வசதி, சிறப்புப் பேருந்துகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் தீவிரமாகச் செய்து வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>தடையற்ற கப்பல் போக்குவரத்துக்கு
முக்கிய கடல் வழித்தடங்களை பாதுகாக்க வேண்டும்- ஐ.நா. சபையில் இந்தியா வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/un-security-council-india-calls-to-safeguard-major-maritime-routes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/un-security-council-india-calls-to-safeguard-major-maritime-routes#comments</comments><guid isPermaLink="false">825aabb6-112e-41d3-9134-0b69f0fed367</guid><pubDate>Wed, 26 Aug 2026 07:23:23 +0000</pubDate><atom:updated>2026-08-26T07:23:23.303Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,ஐநா சபை,கப்பல் போக்குவரத்து,united nation,ship transport</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/ts5cjj0z/INDIA.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ambassador Harish, Permanent Representative of India to the UN]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/ts5cjj0z/INDIA.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em>தடையற்ற கப்பல் போக்குவரத்துக்கு முக்கிய கடல் வழித்தடங்களை பாதுகாக்க வேண்டும் என ஐ.நா. சபையில் இந்தியா வலியுறுத்தி உள்ளது.</em></p><p>மத்திய கிழக்கில் ஈரான்-அமெரிக்கா இடையே மோதல் காரணமாக ஹோர்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டு கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனால் கச்சா எண்ணை, எரிவாயு விநியோகம் தடைப்பட்டுள்ளது. இந்த நிலையில் முக்கிய கடல் வழித்தடங்களை பாதுகாக்க வேண்டும் என்று ஐ.நா.சபையில் இந்தியா வலியுறுத்தி உள்ளது. </p><p>ஐ.நா. பாதுகாப்பு சபையில் மோதல் சூழலில் உணவு என்ற தலைப்பில் நடந்த விவாதத்தில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி தூதர் ஹரிஷ் பர்வத்தனேனி பேசியதாவது:-</p><p>ஆயுத மோதல்களின் மிகக் கடுமையான மனிதாபிமான விளைவுகளில் ஒன்றாக உணவுப் பாதுகாப்பின்மை இருந்து வருகிறது. மோதல்கள்  நடைபெறும் இடங்களுக்கு அப்பாலும் பரவலான தாக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.</p><p>எரிசக்தி சந்தைகள், உர விநியோகம், கடல்சார் போக்குவரத்து, மனிதாபிமான உதவிகள், விவசாய வர்த்தகம் ஆகியவற்றில் ஏற்படும் இடையூறுகள், உலகெங்கிலும் உள்ள உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைகின்றன. </p><p>இதனால் உணவு இறக்குமதி செய்யும் வளரும் நாடுகளையும் மனிதாபிமான நடவடிக்கைகளையும் கடுமையாகப் பாதிக்கும். எனவே, முறையான வர்த்தகம் மற்றும் மனிதாபிமானப் பொருட்கள் கொண்டு செல்லப்படுதல் ஆகியவை  தடைகள் இன்றி நடைபெறுவதை உறுதி செய்வதோடு, முக்கியமான கடல் வழித்தடங்கள் மற்றும் கடல் சார் உள்கட்டமைப்பைப் பாதுகாக்கவும் சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். </p><p>மோதல்களால் ஏற்படும் மனிதாபிமான விளைவுகளைக் குறைப்பதே ஐ.நா. பாதுகாப்பு சபையின் உடனடி முன்னுரிமையாக இருக்க வேண்டும்.</p><p>உணவு, உரங்கள், எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் தடையற்ற போக்குவரத்திற்குப் பாதுகாப்பான மற்றும் கடல்சார் வர்த்தகப் பாதைகள் இன்றியமையாதவை ஆகும். </p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>குளுகுளு ஏசி வசதியுடன் 1 ரூபாய் வாடகை திருமண மண்டபம்</title><link>https://www.maalaimalar.com/news/national/air-conditioned-wedding-hall-with-a-rental-fee-of-rs-1</link><comments>https://www.maalaimalar.com/news/national/air-conditioned-wedding-hall-with-a-rental-fee-of-rs-1#comments</comments><guid isPermaLink="false">422ec911-c07e-4ed4-94c2-4260ea12d6e8</guid><pubDate>Wed, 26 Aug 2026 07:09:04 +0000</pubDate><atom:updated>2026-08-26T07:09:04.338Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமண மண்டபம்,Marriage hall</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/w4pyq0mm/marriagehall.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ குளுகுளு ஏசி வசதியுடன் 1 ரூபாய் வாடகை திருமண மண்டபம்]]></media:title><media:description type="html"><![CDATA[ குளுகுளு ஏசி வசதியுடன் 1 ரூபாய் வாடகை திருமண மண்டபம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/w4pyq0mm/marriagehall.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சுமார் 2 ஏக்கர் பரப்பளவில், 5 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்டமான திருமண மண்டபத்தை நெல்லூர் மாநகராட்சி சார்பில் ரூ.1.40 கோடி செலவில் கட்டி முடித்துள்ளனர்.</strong></em></p><p>ஆந்திர மாநிலம் நெல்லூர் மாநகராட்சி சார்பில் ஏ.சி. வசதியுடன் கூடிய சொகுசு திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதன் 24 மணி நேர வாடகை ரூ.1-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p>தற்போது திருமண மண்டபங்களின் வாடகை பல லட்சமாக உள்ளது. இடத்திற்குத் தகுந்தாற்போல் வெறும் 24 மணி நேரத்திற்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை வாடகை மட்டுமே கொடுக்க வேண்டியுள்ளது.</p><figure><img alt="குளுகுளு ஏசி வசதியுடன் 1 ரூபாய் வாடகை திருமண மண்டபம்" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/9epbid2j/marriagehaal0.jpg" /><figcaption>குளுகுளு ஏசி வசதியுடன் 1 ரூபாய் வாடகை திருமண மண்டபம்</figcaption></figure><p>இதுதவிர மேடை, முகப்பு அலங்காரம், சமையல் பாத்திரங்களுக்கான தனி வாடகை என லட்சக்கணக்கில் செலவாகிறது. இத்தகைய மண்டபங்களில் திருமணம் செய்ய நடுத்தர வர்க்கத்தினரே அஞ்சும் நிலையில், ஏழைகளால் நினைத்துப் பார்க்கக் கூட முடியாத சூழ்நிலை உள்ளது. </p><p>இதனைக் கருத்தில் கொண்டு, நெல்லூர் மாநகராட்சியினர் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் தங்களின் பிள்ளைகளுக்கான திருமணச் செலவை வெகுவாகக் குறைக்க தீர்மானித்தனர்.</p><p>அதன்படி, நெல்லூரில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில், 5 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்டமான திருமண மண்டபத்தை நெல்லூர் மாநகராட்சி சார்பில் ரூ.1.40 கோடி செலவில் கட்டி முடித்துள்ளனர்.</p><p>திருமண மண்டபத்தில் ஏ.சி. அறைகள், பளிங்குத் தரைகள், பரந்த கார் பார்க்கிங் வசதி, குடிநீர் மற்றும் மின்சார வசதிகள் செய்யப்பட்டுள்ளன.</p><p>இந்த திருமண மண்டபத்திற்கு ஒரு நாள் வாடகையாக வெறும் 1 ரூபாய் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திருமண மண்டபத்தை வருகிற செப்டம்பர் 16-ந்தேதி அமைச்சர் நாராயணா திறந்து வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் விரைவு தரிசனம் செய்ய நடவடிக்கை- அமைச்சர் தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-ramesh-inform-measures-taken-for-express-darshan-at-the-tiruvannamalai-arunachaleswarar-temple</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-ramesh-inform-measures-taken-for-express-darshan-at-the-tiruvannamalai-arunachaleswarar-temple#comments</comments><guid isPermaLink="false">67cf9966-5379-4c7f-a434-b7f059bce6d5</guid><pubDate>Wed, 26 Aug 2026 06:45:49 +0000</pubDate><atom:updated>2026-08-26T06:45:49.897Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை கோவில்,Tiruvannamalai temple,அமைச்சர் ரமேஷ்,Minister Ramesh</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/um6dcgsl/ministerramesh.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் ரமேஷிடம் பக்தர்கள் விரைவு தரிசனம் குறித்து கோரிக்கை வைத்த காட்சி.]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ரமேஷிடம் பக்தர்கள் விரைவு தரிசனம் குறித்து கோரிக்கை வைத்த காட்சி.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/um6dcgsl/ministerramesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முழுமையாக கோவில் நடைமுறைகள், தரிசனம் குறித்து ஆய்வு செய்த பிறகு விரைவு தரிசனத்திற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில்</a> ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம் நாளை முதல் 2 நாட்கள் நடக்கிறது. விடுமுறை தினமான இன்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கிரிவலம் வரும் பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. </p><h2><strong>அமைச்சர் ஆய்வு</strong></h2><p>இந்த நிலையில், தமிழக இந்து சமய அறநிலையத்துறை <a href="https://www.maalaimalar.com/topic/அமைச்சர்-ரமேஷ்">அமைச்சர் ரமேஷ்</a> இன்று காலை அருணாசலேஸ்வரர் கோவிலில்  திடீர் ஆய்வு செய்தார். அப்போது ராஜகோபுரம் முன்பு, கோவிலின் உட்புறம் மற்றும் கோசாலை ஆகிய இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், அங்கிருந்த பக்தர்களிடம் கோவிலில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.  </p><p>அப்போது பக்தர்கள் நாங்கள் கிரிவல நாட்களில் சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து வருகிறோம். அதுபோன்ற நாட்களில் கோவிலில் விரைவு தரிசனம் செய்ய முடியவில்லை. எளிதில் தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.</p><p>அதற்கு பதிலளித்த அமைச்சர் முதல் முறையாக ஆய்வுக்காக வந்திருக்கிறேன். முழுமையாக கோவில் நடைமுறைகள், தரிசனம் குறித்து ஆய்வு செய்த பிறகு விரைவு தரிசனத்திற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆய்வின்போது  இணை ஆணையர் தரணிதரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>&apos;சர்தார் 2&apos; படத்தின் First Single  &apos;மயில்வீரா&apos; பாடல் வெளியானது!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/sardar-2-first-single-mayilveera-song-released</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/sardar-2-first-single-mayilveera-song-released#comments</comments><guid isPermaLink="false">33d8d9f6-9d17-44e5-b1cd-0b215627dc79</guid><pubDate>Wed, 26 Aug 2026 06:41:32 +0000</pubDate><atom:updated>2026-08-26T06:41:32.286Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>P.S Mithran,Karthi,கார்த்தி,Sardar 2,சர்தார் 2,Mayil Veera,மயில் வீரா,Sam CS 100,Sardar 2 First Single</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/mvmesyx5/Sardar-2-First-Single" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sardar 2 First Single]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/mvmesyx5/Sardar-2-First-Single?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">கார்த்தி </a>இரட்டை வேடத்தில் நடித்து பெரும் வரவேற்பைப் பெற்ற 'சர்தார்' திரைப்படத்தின் இரண்டாம் பாகமான '<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2">சர்தார் 2</a>' படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.</p><p>இந்நிலையில் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி இப்படம் உலகமெங்கும் தியேட்டர்களில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.</p><p>இப்படத்தின் முதல் பாடலான 'மயில்வீரா' தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.</p><h2><strong>சாம் சி.எஸ்-இன் 100-வது மியூசிகல் மைல்கல்!</strong></h2><p>இப்படத்திற்கு இசையமைப்பாளர் <a href="https://www.maalaimalar.com/topic/sam-cs">சாம் சி.எஸ் </a>இசையமைத்துள்ளார். </p><p>அவரது இசைப் பயணத்தில் 'சர்தார் 2' 100-வது திரைப்படம் என்ற பிரம்மாண்ட மைல்கல்லை எட்டியிருப்பதால், இப்படத்தின் பாடல்கள் மீது ரசிகர்களுக்கு ஆரம்பத்திலிருந்தே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த முதல் பாடல் அமைந்துள்ளது.</p><h2><strong>'முருகன்' பாடல்!</strong></h2><p>'<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">சர்தார்</a>' முதல் பாகத்தில் இடம்பெற்ற 'ஏறுமயிலேறி' பாடலைப் போல, இந்த இரண்டாம் பாகத்தின் முதல் பாடலும் முருகப் பெருமானை மையமாகக் கொண்ட ஒரு பக்தி மற்றும் ஃபோக் ரக பாடலாக உருவாகியுள்ளது. </p><p>முகேஷ், அஃப்ரோஸ் மற்றும் வஹீசன் ராசையா ஆகியோர் பாடியுள்ள இப்பாடலை, நவீன ஹிப்-ஹாப் பீட்களுடன் கலந்து செம மாஸான ஆன்மீக அலையாக சாம் சி.எஸ் கொடுத்துள்ளார். </p><p>இப்பாடல் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் முருகர் பக்தர்கள் அனைவருக்கும் விரும்பும் பாடலாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2><strong>நட்சத்திர பட்டாளம்</strong></h2><p>பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து <a href="https://www.maalaimalar.com/topic/sj-surya">எஸ்.ஜே.சூர்யா</a> மிரட்டலான வில்லனாக நடிக்கிறார். </p><p>மேலும் மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகி பாபு மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/qWeYnS1EpBE"></iframe></figure><p>மேலும் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">நடிகர் கார்த்தியின்</a> அதிரடித் திரைப்படமான 'சர்தார் 2' வருகிற செப்டம்பர் 10, அன்று விநாயகர் சதுர்த்தி வாரத்தை முன்னிட்டு உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.</p><p>இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் ஒரே நேரத்தில் ரிலீசாக உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>புதிய பொருளாதார தடை: ஈரானுடனான எங்கள் வர்த்தகத்தில் அமெரிக்கா தலையிடக் கூடாது-
சீனா எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/world/china-warns-us-over-iran-trade-new-economic-sanctions-row</link><comments>https://www.maalaimalar.com/news/world/china-warns-us-over-iran-trade-new-economic-sanctions-row#comments</comments><guid isPermaLink="false">054b1706-14df-49ab-9b80-13b4800ccb3d</guid><pubDate>Wed, 26 Aug 2026 06:32:54 +0000</pubDate><atom:updated>2026-08-26T06:32:54.690Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>China,சீனா,அமெரிக்கா,America,ஈரான்,Iran,புதிய பொருளாதார தடை,Economic ban</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/ggzbb8tc/li-jian.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chinese Foreign Ministry Spokesperson Lin Jian]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/ggzbb8tc/li-jian.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>புதிய பொருளாதார தடை விவகாரத்தில் ஈரானுடனான எங்கள் வர்த்தகத்தில் அமெரிக்கா தலையிடக் கூடாது என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்க போர் நடவடிக்கையை மேற்கொண்ட நிலையில் அந்நாட்டை பொருளாதார ரீதியாக முடக்கும் வகையில் புதிய பொருளாதார தடைகளை நேற்று விதித்தது. </p><p>ஈரானின் அனைத்து வருவாய் ஆதாரங்களையும் தடை செய்யும் ஆபரேசன் பொருளாதார புறக்கணிப்பு என்ற நடவடிக்கையை அறிவித்துள்ள அமெரிக்கா, ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள், நிறுவனங்கள் மீது தடை விதிக்கப்படும் என்று தெரிவித்தது. மற்ற நாடுகளிடம் இருந்து ஈரானை தனிமைப்படுத்த இந்த நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டு உள்ளது.</p><p>இந்த நிலையில் ஈரானின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக உள்ள சீனா, அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு  கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. </p><p>இதுதொடர்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் கூறியதாவது:-</p><p>ஈரானுடனான சீனாவின் ஒத்துழைப்பு சர்வதேச சட்டத்திற்கு உட்பட்டது. நாங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். சீனாவின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்தையும் செய்வோம். அமெரிக்காவின் இந்த தடைகள் சட்டவிரோதமான மற்றும் ஒருதலைப்பட்சமானது. </p><p>இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு சர்வதேச சட்டத்தில் எந்த அடிப்படையோ அல்லது ஐ.நா. பாதுகாப்பு சபையின் அங்கீகாரமோ இல்லை. இந்த தடைகளை சீனா உறுதியாக எதிர்க்கிறது. பொருளாதாரப் போர் மற்றும் அதிகபட்ச அழுத்தம் ஆகியவை எந்தத் தீர்வையும் அளிக்காது. </p><p>அவை பதற்றத்தை அதிகரிக்கவும், உலகளாவிய பொருளாதார மற்றும் நிதி ஒழுங்கைச் சீர்குலைக்கவும், மற்ற அனைவரின் நலன்க ளையும் பாதிக்கவுமே பயன்படும். எனவே  பேச்சுவார்த்தை மட்டுமே முன்னேறுவதற்கான ஒரே சரியான வழியாக இருக்கும். சீனா-ஈரான் இடையேயான ஒத்துழைப்பு தடை செய்யப்படவோ அல்லது பலவீனப்படுத்தப்படவோ கூடாது. ஈரானுடனான சீனாவின் வர்த்தகத்தில் அமெரிக்கா தலையிட கூடாது. </p><p>அமெரிக்கா விதித்துள்ள புதிய தடைகளுக்கு எதிராகப் பதிலடி நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம். </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><p>இதற்கிடையே  ஈரானுடன் வர்த்தகம் செய்த நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்தது. இதில் 4 இந்திய நிறுவனங்கள் இடம் பெற்று உள்ளன. மேலும் 3 இந்தியர்களுக்கும் அமெரிக்கா தடை விதித்து இருக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>கோவில் பிரசாதங்களில் &apos;பச்சை கற்பூரம்&apos; சேர்ப்பது ஏன் தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/spirituality/do-you-know-why-green-camphor-is-added-to-temple-prasadam</link><comments>https://www.maalaimalar.com/spirituality/do-you-know-why-green-camphor-is-added-to-temple-prasadam#comments</comments><guid isPermaLink="false">4c9a9ecb-1c39-4467-ad3d-293748a66b83</guid><pubDate>Wed, 26 Aug 2026 06:29:59 +0000</pubDate><atom:updated>2026-08-26T06:29:59.700Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,வழிபாடு,worship,green camphor,பச்சை கற்பூரம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/8ns3o3k4/greencamphor.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ green camphor]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/8ns3o3k4/greencamphor.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>பிரசாதங்கள்</h2><p>ஆலயங்களில் இறைவனுக்கு படைக்கப்படும் பிரசாதங்கள் தனித்துவமான சுவையும், நறுமணமும் கொண்டவை. தீர்த்தம், லட்டு, சர்க்கரைப் பொங்கல், பஞ்சாமிர்தம் போன்ற பிரசாதங்களில் தெய்வீக உணர்வை ஏற்படுத்தும் பச்சை கற்பூரம் சிறிதளவு சேர்க்கப்படுகின்றன. இதற்கு பின்னால் இருக்கும் ஆன்மிக நம்பிக்கையையும், அறிவியலையும் அறிந்து கொள்வோம்.</p> <h2>கற்பூர மரம்</h2><p>கற்பூர மரத்திலிருந்து பெறப்படும் இந்த பச்சை கற்பூரம், பொதுவாக உணவுப் பயன்பாட்டிற்கான நறுமணப் பொருளாகும். பெருமாளுக்கு உகந்ததாகவும், தூய்மை மற்றும் மங்களத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. இது, பண்டைய காலத்திலிருந்தே சில இனிப்பு வகைகள் மற்றும் பானங்களில் பயன்படுத்தப்பட்டு, பிரசாதங்களுக்குத் தனித்துவமான மணத்தையும் சுவையையும் தருகிறது. </p> <h2>பச்சை கற்பூரம்</h2><p>இறை வழிபாட்டின்போது, இதன் நறுமணம் மனதிற்குப் புத்துணர்ச்சியை அளித்து, மனதை ஒருமுகப்படுத்தி நேர்மறை ஆற்றலை உருவாக்குகிறது. பச்சை கற்பூரத்தின் வாசனைக்கு மகாலட்சுமியின் அருளை ஈர்க்கும் சக்தி இருப்பதாக நம்பப்படுகிறது. மேலும், பணத்தை ஈர்க்கும் குணம் கொண்டதால், வீட்டில் நடக்கும் அனைத்து சுப காரியங்களிலும் இது முக்கிய இடம் பெறுகிறது.</p> <h2>செரிமான கோளாறு</h2><p>மருத்துவ ரீதியாக, மிகக் குறைந்த அளவில் சேர்க்கப்படும் பச்சை கற்பூரம் சிறந்த கிருமிநாசினியாகச் செயல்பட்டு பிரசாதம் கெட்டுப்போகாமல் நீண்ட நேரம் பாதுகாக்கிறது. மேலும், இது செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்து பசியைத் தூண்டுவதோடு, நெஞ்சுச்சளி, தொண்டைக்கட்டு மற்றும் சுவாசப் பிரச்சினைகளுக்கும் நல்ல நிவாரணம் அளிக்கிறது.</p> <h2>ஆன்மிக பழக்கம்</h2><p>இயற்கை நமக்கு அளித்த அரிய மூலிகையான பச்சை கற்பூரத்தை பிரசாதத்தில் சேர்ப்பது, வெறுமனே சுவைக்காக மட்டுமல்ல; பக்தர்களின் உடல் ஆரோக்கியத்தையும், மன அமைதியையும் பேணுவதற்காகத் தான். நமது முன்னோர்களின் இந்த ஆன்மிகப் பழக்கம், அறிவியல் பூர்வமான ஆரோக்கிய வாழ்விற்கு வழிவகுக்கும் சிறந்த வழியாகும்.</p> ]]></content:encoded></item><item><title>விலையில்லா வேட்டி, சேலை திட்டத்தையும் வெளிமாநில நிறுவனங்களுக்கு தாரை வார்க்க தவெக அரசு திட்டமா? - தினகரன் கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-indictment-tvk-govt-8</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-indictment-tvk-govt-8#comments</comments><guid isPermaLink="false">30885360-eded-44e2-a432-6a575820ba87</guid><pubDate>Wed, 26 Aug 2026 06:17:07 +0000</pubDate><atom:updated>2026-08-26T06:17:07.948Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,AMMK,அமமுக,டிடிவி தினகரன்,இலவச வேட்டி சேலை,tvk,TTTV Dhinakaran</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/s7le0edi/TTVDhinakaran001.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/s7le0edi/TTVDhinakaran001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சுமார் 3 லட்சம் நெசவாளர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடும் வகையிலும், விலையில்லா வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்வதற்கான அனுமதியை உடனடியாக வழங்கிடுமாறு தவெக அரசை வலியுறுத்துகிறேன்.</strong></em></p><p>அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/டிடிவி-தினகரன்">டி.டி.வி.தினகரன்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில்,</p><h2><strong>கேள்விக்குறி</strong></h2><p>வழக்கமாக ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதத்திலேயே வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்வதற்காக நெசவாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், நடப்பாண்டில் ஆகஸ்ட் மாதம் நிறைவடையும் தருவாயிலும் அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதால், அத்தொழிலையே நம்பியிருக்கும் சுமார் 3 லட்சம் நெசவாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.</p><p>கூடுதல் தரம் கொண்ட புதிய ரக நூலில் வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்யும் வகையில், கடந்த ஜூலை மாதமே முதற்கட்டமாக ரூ.300 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், அதற்கான உற்பத்தியைத் தொடங்குவதற்கு நெசவாளர்களுக்கு அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வருவது கடும் கண்டனத்திற்குரியது.</p><h2><strong>சந்தேகம்</strong></h2><p>உற்பத்தி, நெசவு, தரப் பரிசோதனை, போக்குவரத்து மற்றும் விநியோகம் என குறுகிய காலத்தில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ள நிலையில், வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்வதற்கான அனுமதியை வழங்காமல் அரசு காட்டும் அலட்சியம், பொங்கல் பண்டிகையையொட்டி மக்களுக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத்திலும் பல்வேறு நிபந்தனைகளை விதித்து, பயனாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்க திட்டமிட்டிருக்கிறதா? அல்லது ஏற்கனவே தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை வெளிமாநில நிறுவனங்களுக்கு வழங்கியதைப் போல, இத்திட்டத்தையும் வெளிமாநில நிறுவனங்களுக்கு தாரை வார்க்க தவெக அரசு முடிவு செய்துள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.</p><p>எனவே, பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே அரசின் விலையில்லா வேட்டி, சேலைகள் பயனாளிகளைச் சென்றடையும் வகையிலும், சுமார் 3 லட்சம் நெசவாளர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடும் வகையிலும், விலையில்லா வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்வதற்கான அனுமதியை உடனடியாக வழங்கிடுமாறு தவெக அரசை வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>நாளை 2-வது டெஸ்ட்  தொடக்கம்: இங்கிலாந்து அணிக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்குமா?</title><link>https://www.maalaimalar.com/sports/will-pakistan-strike-back-in-second-test-against-england</link><comments>https://www.maalaimalar.com/sports/will-pakistan-strike-back-in-second-test-against-england#comments</comments><guid isPermaLink="false">dadc1b2f-f9e5-442c-a105-1c69d34f9a0d</guid><pubDate>Wed, 26 Aug 2026 06:00:48 +0000</pubDate><atom:updated>2026-08-26T06:00:48.883Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Pakistan,England Team,இங்கிலாந்து அணி,2nd Test match,2வது டெஸ்ட் போட்டி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/bdufebsl/Eng.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ England Vs Pakistan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/bdufebsl/Eng.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாகிஸ்தான் அணி முதல் டெஸ்டில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்டில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 103 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.</p><h2>2-வது டெஸ்ட்</h2><p>இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நாளை (27-ந்தேதி) தொடங்குகிறது. ஜோரூட் தலைமையிலான <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%20" rel="nofollow">இங்கிலாந்து அணி </a>இந்த டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் வேட்கையில் உள்ளது.</p><p>பாகிஸ்தான் அணி முதல் டெஸ்டில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டெஸ்டில் தோற்றால் அந்த அணி தொடரை இழந்துவிடும். இதனால் பாகிஸ்தான் வீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>பாபர் ஆசம்</h2><p>பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் ஆசம் கைவிரலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக முதல் டெஸ்டில் ஆடவில்லை. 2-வது டெஸ்டிலும் அவர் ஆடுவது சந்தேகமே. </p><p>இன்றைய வலைப் பயிற்சியின்போது அவர் பேட்டிங் செய்யும் விதத்தை பொறுத்து விளையாடுவாரா? என்பது தெரியவரும்.</p>]]></content:encoded></item><item><title>பாகிஸ்தான் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 15 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/world/islamabad-hospital-blaze-claims-15-babies</link><comments>https://www.maalaimalar.com/news/world/islamabad-hospital-blaze-claims-15-babies#comments</comments><guid isPermaLink="false">036d6f4c-3b44-469c-9e9c-f143da8aaee8</guid><pubDate>Wed, 26 Aug 2026 05:59:44 +0000</pubDate><atom:updated>2026-08-26T05:59:44.379Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Pakistan,islamabad,இஸ்லாமாபாத்,Hospital fire,PIMS Medical College,NewbornsKilled,பச்சிளம் குழந்தைகள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/gneq09zf/Hospital-Fire" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Hospital Fire]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/gneq09zf/Hospital-Fire?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">பாகிஸ்தான் </a>தலைநகர் இஸ்லாமாபாத்தில் அரசு பொது மருத்துவமனையான 'பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கழகம்' இயங்கி வருகிறது. </p><p>இந்த மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் உள்ள மகப்பேறு பிரிவில் உள்ள நர்சரியில் 16 பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைக்காக வைக்கப்பட்டிருந்தன.</p><h2><strong>தீ விபத்து</strong></h2><p>இந்த நிலையில், இந்த காலை 7 மணியளவில் மகப்பேறு பிரிவில் திடீரென பயங்கர<a href="https://www.maalaimalar.com/topic/fire-accident"> தீ விபத்து</a> ஏற்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த ஏ.சி -யின் கம்ப்ரசர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்ததே இந்த விபத்துக்குக் கரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p> கம்ப்ரசர் வெடித்த அடுத்த சில நிமிடங்களிலேயே தீ மளமளவென மகப்பேறு பிரிவு முழுவதும் வேகமாகப் பரவியது.</p><h2><strong>15 </strong>குழந்தைகள் <strong>பலி</strong></h2><p>புகையும் நெருப்பும் சூழந்ததால் வார்டில் இருந்த பச்சிளம் குழந்தைகள் மூச்சுத்திணறி அலறின. இந்த கோர விபத்தில் 15 பச்சிளம் குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தன. </p><p>நர்சரியில் இருந்த 16 குழந்தைகளில் ஒரே ஒரு குழந்தை மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டது.</p><h2><strong>விரைந்து வந்த மீட்புக்குழுவினர்</strong></h2><p>தீ விபத்து குறித்து தகவல் அறிந்த உடனே தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக்குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர்.</p><p>6 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 4 ஆம்புலன்ஸ்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு தீ முழுமையாக அணைக்கப்பட்டது. தற்போது அந்தப் பகுதியில் வெப்பத்தைத் தணிக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.</p><h2><strong>விசாரணைக் குழு </strong></h2><p>இந்த கொடூர விபத்து குறித்து விசாரணை நடத்த கூடுதல் துணை ஆணையர் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு ஒன்றை மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ளது. </p><p>மருத்துவமனையின் பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் இந்த <a href="https://www.maalaimalar.com/topic/fire-accident">தீ விபத்து</a> நடந்ததற்கான முழு பின்னணி குறித்து போலீசார் தரப்பில் விசாரணை நடத்தும் என்று மேல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>வெங்காயம் விலை கிலோ ரூ.100 வரை அதிகரிக்கும்- வியாபாரிகள் தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/onion-prices-will-rise-up-to-rs-100-per-kilogram</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/onion-prices-will-rise-up-to-rs-100-per-kilogram#comments</comments><guid isPermaLink="false">c8f01b67-4b19-4f9a-8e76-17598e674fd5</guid><pubDate>Wed, 26 Aug 2026 05:48:37 +0000</pubDate><atom:updated>2026-08-26T05:48:37.231Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Onion,வெங்காயம்,onion price,வெங்காயம் விலை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/10om71eu/onion.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ வெங்காயம்]]></media:title><media:description type="html"><![CDATA[ வெங்காயம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/10om71eu/onion.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தினசரி சமையலுக்கு பயன்படுத்தப்படும் பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது இல்லத்தரசிகளிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.</strong></em></p><p>சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து <a href="https://www.maalaimalar.com/topic/வெங்காயம்-விலை">வெங்காயம்</a> விற்பனைக்கு வருகிறது. தினமும் 55-க்கும் மேற்பட்ட லாரிகளில் விற்பனைக்கு குவிந்து வரும் வெங்காயத்தின் வரத்து கடந்த சில நாட்களாகவே படிப்படியாக குறைந்து வருகிறது.</p><h2><strong>கடும் தட்டுப்பாடு</strong></h2><p>மகாராஷ்டிரா மாநிலத்தில் பெய்த கனமழையால் உற்பத்தி பாதிப்பு மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி அதிகரிப்பு காரணமாக வெங்காயத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.</p><p>வெங்காயம் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு கையிருப்பில் உள்ள வெங்காயத்தை முதல் கட்டமாக சென்னை, மதுரை, டெல்லி, கவுகாத்தி, எர்ணாகுளம் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு ரெயில் மூலம் அனுப்பி வைத்துள்ளது. மேலும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் பொதுமக்களுக்கு மானிய விலையில் வெங்காயம் ஒரு கிலோ ரூ.35-க்கு விற்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று 45 லாரிகளில் மட்டுமே வெங்காயம் விற்பனைக்கு வந்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.35-க்கு விற்கப்பட்ட நாசிக் வெங்காயம், தற்போது கிலோவுக்கு ரூ.20 வரை அதிகரித்து ஒரு கிலோ ரூ55-க்கு விற்கப்படுகிறது. வெளிமார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் வெங்காயத்தின் விலை ஒரு கிலோ ரூ.70 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p><h2><strong>ரூ.100 வரை அதிகரிக்கும்</strong></h2><p>அதேபோல் சின்ன வெங்காயம் விலையும் ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது. மொத்த விற்பனையில் ரகத்தை பொறுத்து ஒரு கிலோ ரூ.80 வரையிலும், வெளிமார்க்கெட்டில் உள்ள கடைகளில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.110 வரையிலும் விற்பனை ஆகி வருகிறது.</p><p>தினசரி சமையலுக்கு பயன்படுத்தப்படும் பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது இல்லத்தரசிகளிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.</p><p>இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-</p><p>சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம் விலை 71 சதவீதம் உயர்ந்துள்ளது. எல் நினோ வானிலை, மகாராஷ்டிராவில் பெய்த பருவம் தவறிய மழை மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து வினியோகத்தில் ஏற்பட்ட பற்றாக்குறை ஆகியவையே இந்த விலை உயர்வுக்கு காரணம்.</p><p>பண்டிகை காலம் நெருங்கி வருவதாலும், பற்றாக்குறை தொடருவதாலும்,  ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.80 முதல் ரூ.100 வரை கூட உயரக் கூடும். வழக்கமாக, பற்றாக்குறை ஏற்படும் போதெல்லாம் மாநில அரசு, தோட்டக்கலை மற்றும் உணவு குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைகள் மூலம் மகாராஷ்டிராவில் இருந்து காய்கறிகளை கொள்முதல் செய்து வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வந்தது. இப்போதும் தமிழக அரசு இதேபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.</p>]]></content:encoded></item><item><title>பிரிவினைவாதத்தை அடிப்படையாக கொண்ட ஆர்.எஸ்.எஸ் இயக்கம் வளர்வது கவலை அளிக்கிறது - நியூயார்க் மேயர்</title><link>https://www.maalaimalar.com/news/world/rss-movement-based-on-separatism-growing-is-worrying-new-york-mayor</link><comments>https://www.maalaimalar.com/news/world/rss-movement-based-on-separatism-growing-is-worrying-new-york-mayor#comments</comments><guid isPermaLink="false">0c3b063c-6be0-44e4-8e17-7af41fd7d9ef</guid><pubDate>Wed, 26 Aug 2026 05:46:26 +0000</pubDate><atom:updated>2026-08-26T05:46:26.848Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Mohan Bhagwat,RSS,மோகன் பகவத்,ஆர்.எஸ்.எஸ்,ஜோஹ்ரான் மம்தானி,Zohran Mamdani</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/nkiing7c/Untitled-design-19.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mamdani - Mohan Bhagwat]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/nkiing7c/Untitled-design-19.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மோகன் பகவத்தின் அமெரிக்க நிகழ்ச்சிக்கு நியூயார்க் மேயர் மம்தானி தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.</p><p>அமெரிக்காவில் உள்ள மேடிசன் ஸ்கொயர் கார்டனில் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D">மோகன் பகவத்</a> கலந்துகொள்ள திட்டமிடப்பட்டுள்ள நிகழ்ச்சிக்கு, தாம் ஆதரவளிக்கவில்லை என்று <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D">நியூயார்க் நகர மேயர்</a> ஜோஹ்ரன் மம்தானி கூறியுள்ளார். </p><p>அதேவேளையில் அந்த தனியார் கூட்டத்தை தடுப்பதற்கு நகர நிர்வாகத்திற்கு சட்டப்பூர்வமான அதிகாரம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><h3><strong>நியூயார்க்கில் கூட்டம்</strong></h3><p>நியூயார்க்கில் வரும் சனிக்கிழமை (ஆகஸ்ட் 29) அன்று, புலம்பெயர்ந்த இந்திய சமூகத்தை சேர்ந்த சுமார் 5,000 உறுப்பினர்கள் மத்தியில் மோகன் பகவத் உரையாற்ற உள்ளார்.</p><p>அவரது அமெரிக்க பயணம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா உலகளாவிய மக்களை தொடர்பு கொள்ளும் திட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற உள்ளது.</p><h3><strong>மம்தானி பூர்வீகம்</strong></h3><p>நியூயார்க் மேயரான ஜோஹ்ரன் மம்தானியின் பெற்றோர் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்களாக உள்ளனர். மம்தானியின் தந்தையான முகமது மம்தானி மும்பையில் பிறந்தவராகவும், அவரின் தாய் மீரா நாயர் ஒடிசாவில் பிறந்தவராகவும் அறியப்படுகிறார்கள்.</p><p>இந்த நிலையில் மோகன் பகவத் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி குறித்து நியூயார்க் மேயர் மம்தானி கூறுகையில், தான் இந்திய-அமெரிக்கராக மட்டுமல்லாமல், நிறம், இனம், மதம், நம்பிக்கை அல்லது பூர்வீகம் என எதுவாக இருந்தாலும் ஒவ்வொரு தனிமனிதனும் தனக்கு சொந்தமானவர்களாக கருதுவதாக குறிப்பிட்டுள்ளார்.</p><h3><strong>எதிர்ப்பு தெரிவித்த மம்தானி</strong></h3><p>இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “நான் பேரணியை ஆதரிக்கவில்லை. ஆனால் ஒரு தனியார் நிகழ்வை ரத்து செய்ய நகருக்கு அதிகாரம் உள்ளதா என்று எனக்குத் தெரியவில்லை.</p><p>நமது நகர வரலாற்றில் முதல் இந்திய-அமெரிக்க மேயராக நான் இங்கு நிற்கிறேன். மேலும் என் தாயாரின் குடும்பத்தினர் அனைவரும் இன்னும் இந்தியாவில்தான் இருக்கிறார்கள்.</p><p>எனது குடும்பத்தினர் எனக்கு கற்பித்த இந்தியாவை பற்றிய தொலைநோக்கு பார்வை, நான் நன்கு அறிந்து வளர்ந்த இந்தியாவின் பிம்பமும், பன்முகத்தன்மை கொண்ட சமூகமாகவும், இந்தியாவைச் சேர்ந்த ஒவ்வொரு தனிமனிதரும் தங்களுக்கு இதில் உரிமையுண்டு என்று உணரும் வகையிலான மதச்சார்பற்ற குடியரசாக திகழும் ஒரு நாடாகவே இருந்தன.</p><p>எந்தவொரு நாட்டையும் விலக்கி வைக்கும் அல்லது பிரிவினைவாத கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு இயக்கம் வளர்ந்து வருவதைக் காண்பது மிகுந்த கவலையளிக்கிறது.</p><p>எனவே, ஒரு இந்திய-அமெரிக்கராக மட்டுமல்லாமல், நிறம், இனம், மதம், நம்பிக்கை அல்லது பூர்வீகம் எதுவாக இருந்தாலும் ஒவ்வொரு தனிமனிதனும் எனக்கு சொந்தமானவர் என்று ஆழமாக நம்பும் மனிதராக, இந்த இயக்கத்தை நான் மிகக் கடுமையாக எதிர்க்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.</p><h3><strong>அமைப்புகள் கோரிக்கை</strong></h3><p>இந்த நிலையில் அமெரிக்காவில் ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்ட இந்த நிகழ்வு, பல்வேறு மத நல்லிணக்க மற்றும் குடிமை உரிமைகள் அமைப்புகளிடமிருந்து எதிர்ப்பைச் சந்தித்துள்ளது.</p><p>மனித உரிமைகளுக்கான இந்துக்கள், இந்திய அமெரிக்க முஸ்லிம் கவுன்சில் மற்றும் நியூயார்க்கின் மத நல்லிணக்க மையம் உள்ளிட்ட குழுக்கள், நியூயார்க் நகர மன்றத்திற்கு வெளியே செய்தியாளர் சந்திப்பை நடத்தி அந்த நிகழ்வை ரத்து செய்ய கோரிக்கை வைத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>புதிய தலைமுறை Q3 எஸ்.யூ.வி. மாடலை அறிமுகம் செய்தது ஆடி</title><link>https://www.maalaimalar.com/automobilenews/car/new-gen-audi-q3-suv-showcased-in-india</link><comments>https://www.maalaimalar.com/automobilenews/car/new-gen-audi-q3-suv-showcased-in-india#comments</comments><guid isPermaLink="false">b9e81bbf-7631-4186-a1ca-750a7053796a</guid><pubDate>Wed, 26 Aug 2026 05:44:00 +0000</pubDate><atom:updated>2026-08-26T05:44:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Car,Audi,ஆடி,கார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/xjx4nscq/New-gen-Audi-Q3-SUV.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ New-gen Audi Q3 SUV]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/xjx4nscq/New-gen-Audi-Q3-SUV.png?w=280" width="280"></media:thumbnail><category>கார் (Automobile)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2026 ஆம் ஆண்டு பண்டிகைக் காலத்தில் சந்தையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக, மூன்றாம் தலைமுறை <a href="https://www.maalaimalar.com/topic/audi">ஆடி</a> Q3 இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. </p><p>அடுத்த 12 மாதங்களுக்கான இந்திய <a href="https://www.maalaimalar.com/automobilenews/car">கார்</a> சந்தையில் ஆடி நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ள பெரிய தயாரிப்புகளில் இது முதல் மாடல் ஆகும். இதைத் தொடர்ந்து A5 செடான் மற்றும் Q9 எஸ்.யூ.வி. ஆகியவை அறிமுகம் செய்யப்படும்.</p><h2>வெளிப்புற அப்டேட்கள்:</h2><p>புதிய Q3 காரில் தாழ்வாகப் பொருத்தப்பட்ட ஹெட்லேம்ப்கள், முழுமையான எல்.இ.டி. டி.ஆர்.எல்.-கள் மற்றும் பம்பரில் மாறுபட்ட வண்ண கூறுகள் கொண்ட ஆடியின் சமீபத்திய கிரில் இடம்பெற்றுள்ளது. </p><p>பக்கவாட்டில், புதிய Q3 கார் 18-இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், பாடி கலரில் அமைந்த கதவு கைப்பிடிகள் மற்றும் ORVM-களுடன் வருகிறது. காரின் பின்புறத்தில் ஒளிரும் ஆடி லோகோ, அதனுடன் கனெக்ட்டெட் எல்.இ.டி. லைட் பார் மற்றும் தனித்தனி எல்.இ.டி. கூறுகளைகொண்ட முற்றிலும் புதிய டெயில் லேம்ப்கள் இடம்பெற்றுள்ளன.</p><h2>இண்டீரியர்:</h2><p>உள்புறம், டாஷ்போர்டில் ஓட்டுநரை நோக்கிய கோணத்தில் அமைக்கப்பட்ட இரட்டை டிஜிட்டல் திரைகள் உள்ளன. அதே நேரத்தில், புதிய ஸ்டீயரிங் வீல், பனோரமிக் சன்ரூஃப், குரோம் பாகங்களை கொண்ட புதிய சென்டர் கன்சோல், பவர் மூலம் இயங்கும் முன் இருக்கைகள், மல்டி-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், லெவல் 2 ADAS, ஆட்டோ பார்க் வசதியுடன் கூடிய 360-டிகிரி கேமரா போன்ற புதிய அம்சங்களும் இதில் அடங்கும்.</p><p>இரண்டாம் தலைமுறை மாடலுடன் ஒப்பிடும்போது, ​​இந்த புதிய Q3 காரின் நீளம் மற்றும் வீல்பேஸ் 100 மிமீ அதிகரித்துள்ளது.</p><p>இந்திய சந்தையில் புதிய Q3, 200bhp பவர் மற்றும் 320Nm டார்க் திறனை உற்பத்தி செய்யும் வகையில் ட்யூன் செய்யப்பட்ட 2.0-லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினுடன் கிடைக்கும். இந்த இன்ஜின் 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ் உடன் வருகிறது.</p><h2>எதிர்பார்க்கப்படும் விலை:</h2><p>இந்திய சந்தையில் இந்த கார் பல வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ. 46 லட்சம் முதல் ரூ. 52 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>புதிய ஆடி Q3 மாடல் மெர்சிடிஸ்-பென்ஸ் GLA, பி.எம்.டபிள்யூ. 2 சீரிஸ் கிரான் கூப், மினி கண்ட்ரிமேன் மற்றும் பி.எம்.டபிள்யூ. X1 LWB ஆகியவை மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.</p><p>அதன் நிலையை கருத்தில் கொண்டு, இது ஃபோக்ஸ்வேகன் டெய்ரான் , ஸ்கோடா கோடியாக் , டொயோட்டா ஃபார்ச்சூனர் , எம்ஜி மஜெஸ்டர் போன்ற கார்களுடனும், ஹோண்டா மற்றும் ஹூண்டாயின் எதிர்கால மாடல்களுடனும் போட்டியிடும்.</p>]]></content:encoded></item><item><title>முதல் இன்னிங்சில் 290 ரன்களில் சுருண்ட இலங்கை அணி - சதத்தை பதிவு செய்த தினுஷா</title><link>https://www.maalaimalar.com/sports/dinusha-scores-century-as-sri-lanka-fold-for-290</link><comments>https://www.maalaimalar.com/sports/dinusha-scores-century-as-sri-lanka-fold-for-290#comments</comments><guid isPermaLink="false">b0fb1d87-bfbc-4a70-80e9-652c1d514f92</guid><pubDate>Wed, 26 Aug 2026 05:27:29 +0000</pubDate><atom:updated>2026-08-26T05:27:29.516Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>test cricket,சுப்மன் கில்,Shubman Gill,டெஸ்ட் போட்டி,இந்தியா இலங்கை டெஸ்ட்,IndiavsSrilanka</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/sw0aw6g1/Untitled-design-20.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dinusha]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/sw0aw6g1/Untitled-design-20.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியா இலங்கை மோதும் இரண்டாவது <a href="https://www.maalaimalar.com/topic/டெஸ்ட்-போட்டி">டெஸ்ட் போட்டி</a>, கொழும்புவில் நடைபெற்று வரும் நிலையில், முதல் இன்னிங்சில் இலங்கை அணி 290 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. </p><h3><strong>இந்தியா இலங்கை டெஸ்ட் தொடர்</strong></h3><p>இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் 165 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.</p><p>இதையடுத்து இரண்டாவது போட்டி இலங்கையில் உள்ள கொழும்பு மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், பேட்டிங்கை தேர்வு செய்தார்.</p><h3><strong>இந்தியா முதல் இன்னிங்ஸ்</strong></h3><p>இதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் பேட்ஸ்மன்களான சுப்மன் கில் மற்றும் டிஷப் பண்ட் தங்களின் அரை சதத்தை பதிவு செய்தனர். பின்னர் தொடர்ந்து ஆடிய தேவ்தத் படிக்கல் மற்றும் துருவ் ஜூரல் தங்களின் சதத்தை பதிவு செய்தனர்.</p><p>இறுதியில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 503 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.</p><h3><strong>இலங்கை முதல் இன்னிங்ஸ்</strong></h3><p>பின்னர் தொடர்ந்து விளையாடிய பசிந்து சூரியபந்தாரா 80 ரன்களும், சோனல் தினுஷா 103 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 290 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.</p><p>இந்திய அணியின் சார்பில் பிரசித் கிருஷ்ணா மற்றும் மனவ் சுதர் தலா 3 விக்கெட்டுகளும், சரன்ஷ் ஜெயின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மேலும் முகமது சிராஜ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.</p><p>இதையடுத்து இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து விளையாடி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>தி.மு.க.வில் 110 புதிய மாவட்டங்கள் பட்டியல்- விரைவில் வெளியிட திட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/list-of-110-new-dmk-districts-plan-to-release-soon</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/list-of-110-new-dmk-districts-plan-to-release-soon#comments</comments><guid isPermaLink="false">0c14ffe1-7377-422f-9f54-52773485bc7a</guid><pubDate>Wed, 26 Aug 2026 05:25:10 +0000</pubDate><atom:updated>2026-08-26T05:25:10.595Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,முக ஸ்டாலின்,110 Districts,110 மாவட்டங்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/p5tnpnzg/DMK.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ திமுக]]></media:title><media:description type="html"><![CDATA[ திமுக]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/p5tnpnzg/DMK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>110 புதிய மாவட்டங்கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இந்த பட்டியலை கட்சி தலைமை விரை​வில் வெளி​யிட உள்ள​தாக தகவல் வெளி​யாகி​ உள்ளது.</strong></em></p><p>தமிழகத்தில் நடந்து முடிந்த சட்​டசபை தேர்​தலில் <a href="https://www.maalaimalar.com/topic/திமுக">தி​.மு.க.</a> தோல்வி அடைந்தது. இதையடுத்து தேர்தல் தோல்விக்கான காரணத்தை ஆராய உண்மை கண்டறி​யும் குழு அமைக்​கப்​பட்டது. அந்த குழுவினர் ஆய்வு செய்து அளித்த அறிக்கையின் அடிப்​படை​யில் சமீபத்​தில் தி.மு.க. செயற்குழு கூட்​டம் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது.</p><h2><strong>பட்டியல் தயார்</strong></h2><p>இந்த கூட்டத்தில் 9 தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன. அதில் ‘தி.மு.க. மாவட்​டங்​களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரிக்கப்படும்’ என்​ற தீர்மானமும் அடங்கும். அதன் தொடர்ச்சியாக தி.மு.க. கட்சி தலைமை 110 மாவட்​டங்​கள் அடங்கிய பட்​டியலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது.</p><p>தற்போது 110 புதிய மாவட்டங்கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இந்த பட்டியலை கட்சி தலைமை விரை​வில் வெளி​யிட உள்ள​தாக தகவல் வெளியாகி​ உள்ளது.</p><p>இதுகுறித்து தி.மு.க. நிர்வாகிகள் சிலர் கூறிய​தாவது:-</p><h2><strong>மூத்த நிர்​வாகி​கள் ஆலோ​சனை</strong></h2><p>தி.மு.க. செயற்​குழு கூட்​டத்​தில் நிறைவேற்​றப்​பட்ட தீர்மானங்களின் அடிப்​படை​யில் 110 மாவட்​டங்​கள் குறித்த பட்டியல் தயாரித்து முடிக்​கப்​பட்​டு​விட்​டது. அந்த மாவட்டங்களுக்கு உட்​கட்​சி தேர்​தல் அடிப்​படை​யில் புதிய நிர்வாகி​கள் நியமனம் செய்​யப்​படு​வார்​கள். இதற்கு வசதி​யாக முதற்​கட்​ட​மாக ஒவ்​வொரு மாவட்​டத்​துக்​கும் ஒரு பொறுப்​பாளர் வீதம் புதிய பட்​டியல் தயாரிக்​கப்​பட்​டுள்ளது.</p><p>இப்​படி பொறுப்​பாளர்​கள் நியமனம் நடந்​தால், அவர்கள் அடுத்து வரும் உட்​கட்சி தேர்​தலில் மீண்​டும் வெற்​றி​ பெறுவதற்​கான பணிகளை முடுக்கி​ விடு​வார்​கள். அப்​போது உட்​கட்சி தேர்​தல் ஜனநாயக ரீதி​யிலும், நியாய​மான முறை​யிலும் நடப்​ப​தில் சிக்கல் ஏற்​படும் என்று கட்​சி தலைமைக்கு மூத்த நிர்​வாகி​கள் ஆலோ​சனை தெரி​வித்​தனர்.</p><p>இதனை ஏற்​றுக்கொண்ட தி.மு.க. தலை​வர் மு.க.ஸ்டா​லின், தற்போது பொறுப்​பாளர்​கள் பட்​டியலை அறிவிக்​கும் முடி​வை தள்ளி வைத்துள்ளார். இதனாலேயே பொறுப்​பாளர்​கள் அறிவிப்பில் தாமதம் ஏற்​பட்​டுள்​ளது. விரை​வில் 110 மாவட்​டங்​கள் குறித்த அதிகாரப்​பூர்வ பட்​டியலை தி.மு.க. தலைமை வெளியிடும்.</p><p>இவ்​வாறு அவர்​கள்​ கூறினார்கள்​.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY: தங்கம் விலை இன்றைய நிலவரம்! </title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-26-8-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-26-8-2026#comments</comments><guid isPermaLink="false">dcc7cff6-cd2f-4831-babb-8db95a16d1bc</guid><pubDate>Wed, 26 Aug 2026 05:10:37 +0000</pubDate><atom:updated>2026-08-26T05:10:37.244Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/01/30/25605865-gold.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/01/30/25605865-gold.webp?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் பிறந்துள்ளதால் தங்கம் விலை ஏறுமுகமாகவே உள்ளது. </p><p>அந்த வகையில், நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 30-க்கும் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனையானது. </p>  <p>நேற்று தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 10-க்கும், சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனையானது.</p><h2>தங்கம் விலை</h2><p>இந்த நிலையில், தங்கம் விலையில் இன்று மாற்றம் இல்லை. தங்கம் விலை ஒரு கிராம் ரூ.15,010-க்கும், ஒரு சவரன் ரூ.1,20,080-க்கு விற்பனையாகிறது.</p> <h2>வெள்ளி விலை நிலவரம்</h2><p>தங்கத்தை போலவே வெள்ளி விலையிலும் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 265 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்</h2><p>25-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,080</p><p>24-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,240</p><p>23-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,600</p><p>22-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,600</p><p>21-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,800</p> <h2>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்</h2><p>25-08-2026- ஒரு கிராம் ரூ.265</p><p>24-08-2026- ஒரு கிராம் ரூ.275</p><p>23-08-2026- ஒரு கிராம் ரூ.270</p><p>22-08-2026- ஒரு கிராம் ரூ.270</p><p>21-08-2026- ஒரு கிராம் ரூ.270</p> ]]></content:encoded></item><item><title>பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும்..!- சிபிஐ</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-should-return-parandur-acquired-lands-to-farmers-cpi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-should-return-parandur-acquired-lands-to-farmers-cpi#comments</comments><guid isPermaLink="false">761c1fdd-c36f-45dc-8fe6-98f634bf07d4</guid><pubDate>Wed, 26 Aug 2026 05:07:53 +0000</pubDate><atom:updated>2026-08-26T05:07:53.888Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சிபிஐ,பெ சண்முகம்,பரந்தூர் விமான நிலைய திட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/m4vgppxt/shanmugam.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ P Shanmugam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/m4vgppxt/shanmugam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சிஎம்எம் மாநிலச் செயலாளர் சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.</p><p>பரந்தூர் நிலத்தை மாற்று தொழில் திட்டங்களுக்கு பயன்படுத்த போகிறோம் என அமைச்சர் கீர்த்தனா பதிலளித்தார்.</p><p>இந்நிலையில், ஒரு திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலம் 5 ஆண்டுக்குள் பயன்படுத்தாவிடில் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும், நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு, மறு குடியேற்ற சட்டப்படி பரந்தூர் நிலத்தை விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் சண்முகம் தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து சிஎம்எம் மாநிலச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>பரந்தூர் விமான நிலையத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அரசு என்ன செய்யப் போகிறது என்று சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்குப் பதிலளித்த தொழில்துறை அமைச்சர், மாற்றுத் தொழில் திட்டங்களுக்குப் பயன்படுத்தப் போகிறோம் என்று பதிலளித்துள்ளார்.</p><p>நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறு குடியேற்ற சட்டம் 2013-ன் அடிப்படையில், குறிப்பிட்ட திட்டத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலம் 5 ஆண்டுகளுக்குள் பயன்படுத்தப்படவில்லை என்றாலோ அல்லது அந்தத் திட்டம் கைவிடப்பட்டாலோ, நிலத்தைச் சம்பந்தப்பட்ட விவசாயிகளிடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டும். வேறு ஒரு திட்டத்திற்கு மாற்ற முடியாது. எனவே, சட்டத்திற்கு விரோதமாகத் தமிழக அரசு நடந்துகொள்ளக் கூடாது.</p><p>விவசாயிகளிடம் நிலத்தை ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>டாக்ஸிக் - விமர்சனம்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/toxic-review</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/toxic-review#comments</comments><guid isPermaLink="false">ff2ffcd9-3ddf-4b8c-92ae-ecdda12fa963</guid><pubDate>Wed, 26 Aug 2026 05:02:59 +0000</pubDate><atom:updated>2026-08-26T05:02:59.094Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Nayanthara,Kiara Advani,Yash,Toxic,டாக்ஸிக்,Rocking StarYash,Toxic FDFS</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/xwydl2yr/Toxic" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Toxic ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/xwydl2yr/Toxic?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரம்மாண்டமான போதைப்பொருள் கடத்தல் உலகத்தை அழுத்தமாக பேசுவதும், உறவுகளுக்குள் இருக்கும் உளவியல் சிக்கல்களை கையாண்டிருப்பதும் படத்தின் பெரும் பலம்.</p><h2>மிரட்டல்!</h2><p>'<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D">ராக்கிங் ஸ்டார்' யஷ்</a> நடிப்பில் இன்று வெளியாகியுள்ள 'டாக்ஸிக்' படத்தின் முதல் பாதியில், யஷ் ( ராயா) அசுரத்தனமான மாஸ் என்ட்ரி, சிறப்பான லுக் மற்றும் அவருக்கான எலிவேஷன் காட்சிகள் திரையரங்கில் அனல் பறக்க வைக்கின்றன.</p><p>ஒரு பழிவாங்கும் கதையாக நகரும் இப்படத்தில், <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D">யஷ் </a>மற்றும் நயன்தாராவுக்கு இடையேயான காட்சிகள் மிக அருமையாக வந்துள்ளதோடு, இடைவேளைக்கு முந்தைய 15 நிமிட காட்சிகள் முற்றிலும் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE">நயன்தாராவின்</a> அதிரடியான மிரட்டல் காட்சிகள் வந்துள்ளன. </p><p><a href="https://www.maalaimalar.com/topic/kiara-advani">கியாரா அத்வானி</a> சர்க்கஸ் காட்சிகளில் மிக அழகாக மிளிர, ரவி பஸ்ரூரின் பின்னணி இசையும், "தபாஹி" பாடல் காட்சியமைப்பும் படத்திற்கு பெரும் பலம் சேர்க்கின்றன.</p><p>படம் தொடங்கியதில் இருந்தே 'சர்க்கஸ் ஃபைட்' மற்றும் 'லேடீஸ் லேடீஸ் ஃபைட்' என அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்திருந்தாலும், சில இடங்களில் வன்முறை அதிகமாகவும், ஓவராகவும் இருப்பது சற்று அசெளகரியத்தை ஏற்படுத்தினாலும், ஒட்டுமொத்தமாக படத்தின் முதல் பாதி ஒரு சுவாரசியமான, சுமாரான வேகத்தில் ரசிகர்களைக் கவர்ந்து நகர்கிறது.</p><p>மொத்தம் 3 மணிநேரம் 14 நிமிடங்கள் கொண்டுள்ள இப்படத்தில் யஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><h2><strong>நடிகர்கள்</strong></h2><p>'கே.ஜி.எஃப்' படங்களுக்குப் பிறகு 4 ஆண்டுகள் கழித்து திரைக்கு வந்திருக்கும் ராக்கிங் ஸ்டார் யஷ், தனது அசாத்திய உடல்மொழி, ஆக்ரோஷமான லுக் மற்றும் சென்டிமெண்ட் காட்சிகளில் அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.</p><p>அவருக்கு ஜோடியாகவும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ள கியாரா அத்வானி மற்றும் நயன்தாரா ஆகியோர் தங்களுக்குக் கொடுத்த கதாபாத்திரங்களுக்கு வலு சேர்த்துள்ளனர்.</p><p>மாஃபியா தலைவியாக வரும் ஹூமா குரேஷி மற்றும் தாரா சுதாரியா, ருக்மிணி வசம்த் ஆகியோரும் துறுதுறுப்பான, மிரட்டலான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்கள்.</p><h2><strong>தொழில்நுட்ப குழு</strong></h2><p>ராஜீவ் ரவியின் ஒளிப்பதிவு கோவாவின் பழங்காலத் தெருக்களையும், அதிரடி சண்டைக் காட்சிகளையும் மிக பிரம்மாண்டமாகப் படம் பிடித்துள்ளது.</p><p>ரவி பஸ்ரூர், விஷால் மிஸ்ரா மற்றும் தனிஷ்க் பாக்சி ஆகியோரின் பாடல்களும், பின்னணி இசையும் படத்தின் உணர்வுகளுக்குத் தேவையான மாஸ் மற்றும் பலத்தைக் கொடுத்துள்ளன.</p><p>ஹாலிவுட் தரத்தில் அனல்பறக்கும் சண்டைக் காட்சிகளை ஜே.ஜே.பெர்ரி மற்றும் அன்பறிவ் மாஸ்டர்கள் வடிவமைத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பாதுகாப்பு விவகாரத்தில் கூடுதல் அம்சங்களை அறிமுகப்படுத்திய வாட்ஸ்அப்</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/whatsapp-gets-multiple-passkeys-enhanced-two-step-verification-and-more</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/whatsapp-gets-multiple-passkeys-enhanced-two-step-verification-and-more#comments</comments><guid isPermaLink="false">98142584-49a7-4e0c-ad2b-d9dbc5f93eed</guid><pubDate>Wed, 26 Aug 2026 04:36:00 +0000</pubDate><atom:updated>2026-08-26T04:36:00.000Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>WhatsApp,Apps,வாட்ஸ்அப்,ஆப்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/015c21nm/WA-new-Update.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ WA new Update]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/015c21nm/WA-new-Update.png?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பயனர் அக்கவுண்ட் பாதுகாப்பை வலுப்படுத்துதல், அங்கீகார முறைகளை விரிவுபடுத்துதல் மற்றும் தேவையற்ற உள்வரும் அழைப்புகளை தடுத்தல் ஆகியவற்றை நோக்கமாக கொண்ட தொடர்ச்சியான புதிய பாதுகாப்பு சார்ந்த அப்டேட்களை <a href="https://www.maalaimalar.com/topic/whatsapp">வாட்ஸ்அப்</a> அறிவித்துள்ளது.</p><p>ஒரு பில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் தற்போது அங்கீகாரத்திற்காக பாஸ்வொர்டு (Password) பயன்படுத்துகின்றனர் என்று வாட்ஸ்அப் உறுதிப்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் புதிய அப்டேட்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p><h2>பல சாதனங்களில் பாஸ்வொர்டு ஆதரவு:</h2><p>கைரேகை, முக அங்கீகாரம் போன்ற பயோமெட்ரிக் அங்கீகாரம் அல்லது சாதனத்தின் லாக் ஸ்கிரீன்ஆகியவற்றை பயன்படுத்தி பயனர்கள் உள்நுழைய அனுமதிக்கும் பாஸ்வொர்டுகள், SMS சரிபார்ப்பு குறியீடுகளின் தேவையை நீக்குகின்றன. சமீபத்திய அப்டேட் மூலம், வாட்ஸ்அப் இப்போது ஒரே கணக்கில் பல பாஸ்வொர்டுகளை சேர்க்க அனுமதிக்கிறது.</p><p>இந்த மாற்றம், ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்கள் போன்ற வெவ்வேறு இயங்குதளங்களில் இயங்கும் பயனர்களுக்கு ஏற்றவாறு, அவர்கள் பயன்படுத்தும் வன்பொருளை பொருட்படுத்தாமல் பாதுகாப்பான பயோமெட்ரிக் அணுகலை அனுமதிக்கிறது. பயனர்கள் இந்த அம்சத்தை செட்டிங்ஸ் &gt; அக்கவுண்ட் &gt; பாஸ்கீஸ் (Settings &gt; Account &gt; Passkeys) மூலம் செயல்படுத்தலாம்.</p><h2>மேம்படுத்தப்பட்ட 2-ஸ்டெப் வெரிஃபிகேஷன்:</h2><p>வாட்ஸ்அப் அதன் 2-ஸ்டெப் வெரிஃபிகேஷன் கட்டமைப்பையும் அப்டேட் செய்துள்ளது. முன்பு ஆறு இலக்க எண் PIN-க்கு மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்த 2-ஸ்டெப் வெரிஃபிகேஷன், இப்போது சிறப்பு எழுத்துக்களுடன் கூடிய முழுமையான எழுத்து-எண் கடவுச்சொற்களையும் ஆதரிக்கிறது.</p><p>மோசடி மற்றும் தேவையற்ற அழைப்புகளைத் தடுக்கும் வகையில், ஆண்ட்ராய்டு சாதனங்களில் சேமிக்கப்படாத தொடர்புகளில் இருந்து வரும் அழைப்புகளுக்கு வாட்ஸ்அப் சூழல் சார்ந்த தகவல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அறியாத எண்ணில் இருந்து அழைக்கும்போது, ​​அழைப்பிற்கு பதிலளிப்பதற்கு முன்பு, பின்வரும் தொடர்புடைய விவரங்களை இடைமுகம் காண்பிக்கிறது:</p><p>தொலைபேசி எண்ணின் நாட்டுக் குறியீடு அல்லது தோற்றம்</p><p>பெறுநருக்கும் அழைப்பவருக்கும் இடையில் பகிரப்படும் எந்தவொரு பொதுவான குழுக்களும்</p><p>பயனர்கள் தாமாக முன்வந்து வரும் அழைப்புகளை, அழைப்பை ஏற்பதற்கு முன்பாகவே அவற்றை மதிப்பிடுவதற்கும், சாத்தியமான மோசடி முயற்சிகளை அடையாளம் காண உதவும் வகையில் இந்தக் கூடுதல் தகவல் வடிவமைக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>3 தமிழர்கள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது உடற்கூறாய்வில் அம்பலம்: சிபிஐ விசாரணை வேண்டும்! -அன்புமணி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-cbi-should-investigate-for-3-tamilis-shoot-dead-case</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-cbi-should-investigate-for-3-tamilis-shoot-dead-case#comments</comments><guid isPermaLink="false">e49b8ca5-6eae-493d-a1ea-cdfffa5c1d1c</guid><pubDate>Wed, 26 Aug 2026 04:33:24 +0000</pubDate><atom:updated>2026-08-26T04:33:24.189Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,தமிழர்கள் சுட்டுக்கொலை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/zs7663xx/Anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/zs7663xx/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>3 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு கர்நாடக அரசு ஆணையிட வேண்டும். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>கர்நாடக மாநிலம் ஹானூர் வனப்பகுதியில் 3 <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது</a> இது தரப்பு மோதலில் அல்ல; அவர்களை கர்நாடக வனத்துறை திட்டமிட்டே கொடூரமாக படுகொலை செய்திருக்கிறது என்பது அவர்களின் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. இவ்வளவுக்கு பிறகும் சுட்டுக்கொல்லப்பட்ட  தமிழர் குடும்பங்களுக்கு நீதி வழங்குவதற்கு கர்நாடக காங்கிரஸ் அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது.</p><p>கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹானூர் வட்டம் காவிரி வனவிலங்கு சரணாலயத்தை ஒட்டிய வனப்பகுதியில் மான்வேட்டையாடியதாக பொய்யான குற்றச்சாட்டில் அப்பகுதியைச் சேர்ந்த அந்தோணிசாமி, ஜான்ரோஸ் பீட்டர், குமார் ஆகிய 3 தமிழர்கள் கடந்த 15-ஆம் தேதி அதிகாலை அப்பகுதியைச் சேர்ந்த வனத் துறையினரால் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் மூவரும் மான்களை வேட்டையாட வந்ததாகவும்,  அப்போது வனத்துறையினருடன்  ஏற்பட்ட மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் கர்நாடக வனத்துறை  கூறிய நிலையில், அது அப்பட்டமான பொய் என்று கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர்.</p><h2><strong>உடற்கூராய்வு அறிக்கை கசியவில்லை</strong></h2><p>ஆனால், அந்தக் குற்றச்சாட்டுகளை செவிமடுக்காத கர்நாடக அரசு, கொல்லப்பட்ட 3 <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-government-must-insist-on-a-cbi-inquiry-for-tamilis-shotdead-case">தமிழர்களும்</a> மான்  வேட்டைக்காரர்கள் என்று அவதூறு பரப்பியது. அதுமட்டுமின்றி, அவர்கள் மூவரும் வனத்துறையினரை  துப்பாக்கிகளால் சுட்டதால் தான் பாதுகாப்புக்காக அவர்களை வனத்துறையினர் சுட்டுக் கொன்றதாகவும்  பொய் கூறியது. இந்த நிலையில் தான் அவர்களின் உடற்கூறாய்வு அறிக்கை கசிந்து, கர்நாடக அரசின் பொய் முகமூடியை கிழித்தெறிந்து, நடந்த உண்மை என்பதை ஒட்டுமொத்த உலகிற்கும் உணர்த்தியுள்ளது.</p><p>கர்நாடக வனத்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட 3 தமிழர்களில் குமாரின் இடது மார்பிலும், இடுப்புக்கு கீழும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன. அந்தோணி சாமியின் வலது மார்பிலும், அடி வயிற்றிலும் குண்டு பாய்ந்த காயங்கள் உள்ளன. அவரது விலா எலும்புகளும் நொறுங்கியுள்ளன. இருவரின் உடல் முழுவதும்  துப்பாக்கி குண்டு பாய்ந்த காயங்கள் காணப்படுகின்றன. அவை அனைத்தும் மிகவும் நெருக்கமாக இருந்து சுடப்பட்டவை என்றும் உடற்கூறாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட மூன்றாமவரான  ஜான்ரோஸ் பீட்டரின் உடற்கூராய்வு அறிக்கை கசியவில்லை என்பதால் அது குறித்த விவரங்கள் தெரியவில்லை.</p><p>கர்நாடக காட்டுப் பகுதியில் வனத்துறைக்கும், தமிழர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்ததாகவும், அதில் தான் மூவரும் கொல்லப்பட்டதாகவும் கர்நாடக அரசு கூறியிருந்தது. அது உண்மை என்றால், தமிழர்கள் மூவரின் உடல்களிலும் வெகு தொலைவில் இருந்து தான் குண்டுகள் பாய்ந்திருக்க வேண்டும். ஆனால்,  மிகவும் நெருக்கமாக இருந்து அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதால், அவர்களை வனத்துறையினர் பிடித்து அருகில் நிற்க வைத்து கொடூரமாக சுட்டுக் கொலை செய்திருக்கலாம் என்று யூகிக்கப் படுகிறது. நடுநிலையான விசாரணை நேர்மையாக நடந்தால் மட்டும் தான் இந்த விஷயத்தில் உண்மைகள் வெளிவரும்.</p><h2><strong>பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்க வேண்டும்</strong></h2><p>கர்நாடகத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு குறித்து அங்கு சென்று விசாரித்த பாட்டாளி மக்கள் கட்சியின் உண்மை கண்டறியும் குழு, ‘‘3 தமிழர்களும் கர்நாடக வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு, மிகவும் அருகில் நிற்க வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்’’ என்று தெரிவித்தது. இது தொடர்பாக பாமகவின்  உண்மை கண்டறியும் குழு தருமபுரியில் செய்தியாளர்களிடம் முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை  தான் என்பதை மைசூர் மருத்துவமனை அளித்த உடற்கூறாய்வு அறிக்கை உறுதி செய்துள்ளது.</p> <p>இவ்வளவுக்குப் பிறகும் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தை மூடி மறைப்பதில் தான் கர்நாடக அரசு தீவிரம் காட்டுகிறதே தவிர, உண்மையை ஒப்புக்கொண்டு கொல்லப்பட்டவர்களின்  குடும்பங்களுக்கு  நீதி வழங்க எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அவர்களின் உடற்கூறாய்வு அறிக்கையைக் கூட கர்நாடக அரசு வெளியிட மறுக்கிறது. இந்த விவகாரம் பற்றி அதிகாரம் இல்லாத மாஜிஸ்திரேட் விசாரணைக்கு ஆணையிட்டிருப்பதன் மூலம் உண்மையை மூடி மறைப்பதற்கு கர்நாடக அரசு துடித்துக் கொண்டிருக்கிறது.</p><p>கர்நாடக அரசின் இந்த சதித்திட்டத்தை அறிந்திருந்ததால் தான் இது குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள், தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நீதியரசர்  வி. இராமசுப்பிரமணியன், கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் ஆகியோருக்கும்  கடிதம் எழுதினேன். இதன் பிறகாவது கர்நாடக அரசு அதன் தவறை உணர்ந்து கொண்டு பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்க வேண்டும்.</p><p>3 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு கர்நாடக அரசு ஆணையிட வேண்டும். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த  விவகாரத்தில் தமிழக அரசு இனியும் விலகி நிற்காமல், 3 தமிழர்கள் படுகொலை குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிடும்படி கர்நாடக அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-and-diesel-price-in-chennai-26-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-and-diesel-price-in-chennai-26-august-2026#comments</comments><guid isPermaLink="false">f2ebd6f3-4ef0-4af6-a717-e05427001bd6</guid><pubDate>Wed, 26 Aug 2026 03:49:32 +0000</pubDate><atom:updated>2026-08-26T03:49:32.582Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,கச்சா எண்ணெய்,Crude oil,பெட்ரோல் டீசல் விலை,Pertrol Diesel Prices</media:keywords><media:content height="576" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/wi7y6inv/maalai-malar2026-07-21zb9pki7q%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88.avif" width="1024"><media:title type="html"><![CDATA[ பெட்ரோல் - டீசல் விலை]]></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல் - டீசல் விலை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/wi7y6inv/maalai-malar2026-07-21zb9pki7q%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88.avif?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் போரினால் மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p> <h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.</p> <h2>இன்றைய பெட்ரோல், டீசல் விலை</h2><p>அந்த வகையில் இன்றைய (26.8.2026 - (புதன்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.117.61-க்கும் டீசல் ரூ.105.30-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>டிரம்பின் மகனை எங்கே கொல்வது? - ரூ.95 கோடி வெகுமதியை அறிவித்த ஈரான் </title><link>https://www.maalaimalar.com/news/world/where-to-kill-trumps-son-iran-announces-rs-95-crore-bounty</link><comments>https://www.maalaimalar.com/news/world/where-to-kill-trumps-son-iran-announces-rs-95-crore-bounty#comments</comments><guid isPermaLink="false">7f62e27e-a7c0-42a7-a0fe-62169d6ff31d</guid><pubDate>Wed, 26 Aug 2026 03:44:01 +0000</pubDate><atom:updated>2026-08-26T03:44:01.320Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டொனால்டு டிரம்ப்,Donald Trump,ஈரான்,Iran,Barron Trump,பேரன் டிரம்ப்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/9oiretos/Untitled-design-15.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Iran video targets Barron Trump]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/9oiretos/Untitled-design-15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE">அமெரிக்க</a> அதிபர் டொனால்ட் டிரம்பின் மகனான பேரன் டிரம்பை எங்கே கொல்வது என்ற இரண்டு நிமிட காணொளியை ஈரான் அரசு தொலைக்காட்சி சேனல் ஒளிபரப்பியுள்ளது. மேலும் அந்த காணொளியில் டிரம்ப் மகனின் அன்றாட வாழ்க்கையின் நடமாட்டங்கள் விவரிக்கப்பட்டு வெகுமதியாக ரூ.95 கோடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h3><strong>டிரம்ப் மகள்</strong></h3><p>ஈரானிய அரசு தொலைக்காட்சி சேனல் கடந்த மாதம், <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D">அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின்</a> மகளான மெலானியாவை குறிவைத்து ஒரு காணொளியை வெளியிட்டிருந்தது.</p><p>மெலானியாவை எங்கே கொல்வது என்ற தலைப்பிடப்பட்ட அந்த காணொளியில், அவர் தனது வாகன அணிவகுப்பில் பயணிப்பதும், நியூயார்க் நகரம் முழுவதும் உள்ள இடங்களுக்கு செல்வதுமான காட்சிகள் இடம்பெற்றிருந்தன.</p><p>மெலானியா தான் வழக்கமாக பொருட்கள் வாங்கும் ஆடம்பர வடிவமைப்பாளர் கடைகளும் அதில் அடையாளம் காட்டப்பட்டது. மேலும் அவர் வாங்கக்கூடிய ஆடைகளில் நரம்பு மண்டல நச்சு பொருளை பயன்படுத்தி விஷத்தை எவ்வாறு செலுத்தலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டது.</p><figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Iran’s Regime Reportedly Places $10 Million Bounty on Barron Trump <br><br>Following the release of an IRGC-linked video appearing to track Melania Trump, Iranian state-affiliated media, including State TV Channel 3, reportedly released purportedly confidential information about… <a href="https://t.co/2gLrPTy5De">pic.twitter.com/2gLrPTy5De</a></p>&mdash; Global Osint (@GlobalOsintNew) <a href="https://x.com/GlobalOsintNew/status/2091516770062315946?ref_src=twsrc%5Etfw">August 23, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure> <h3><strong>டிரம்ப் எச்சரிக்கை</strong></h3><p>கடந்த வாரம் ஈரானுக்கு பொருளாதார பேரழிவு நாள் தொடங்கிவிட்டது என்றும், இஸ்லாமிய குடியரசு நாட்டிற்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் எந்தவொரு நாடும் உலகளாவிய ஒதுக்கப்பட்ட நாடாக மாறிவிடும் எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்த நிலையில் தற்போது ஒரு காணொளி வெளியாகியுள்ளது.</p><h3><strong>டிரம்ப் மகனை குறிவைத்த ஈரான்</strong></h3><p>இந்த நிலையில் டிரம்பின் 20 வயது மகனான பேரன் டிரம்பை குறிவைத்து இஸ்லாமிய புரட்சிகர காவல்படையால் வெளியிடப்பட்ட அந்த காணொளியை ஈரான் அரசு தொலைக்காட்சி சேனல் ஒளிபரப்பியுள்ளது.</p><p>பேரன் டிரம்ப் தனது பாதுகாப்பு வளையத்திற்கு வெளியே வந்து, எக்ஸ்பாக்ஸ் வலைதளம் மூலம் குரல் மற்றும் குறுஞ்செய்தி பயன்படுத்தி வருவதாகவும் அந்த காணொளி குறிப்பிட்டது.</p><p>மேலும், எக்ஸ்பாக்ஸ், ஃபிஃபா வீடியோ கேம்கள் மற்றும் டிஸ்கார்டில் உள்ள அவரது கணக்குகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அந்த வீடியோ கூறியது. இந்த செயலை வெற்றிகரமாக செய்து முடிப்பவர்களுக்கு 95 கோடி ரூபாய் வெகுமதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அந்த காணொளியின் முடிவில், ‘இது வெறும் ஆரம்பம் தான். பேரன் டிரம்ப், எங்களுக்காக காத்திருங்கள்’ என்ற நேரடி எச்சரிக்கையுடன் அது நிறைவடைந்தது.</p><h3><strong>பாதுகாப்பு வளையம்</strong></h3><p>இதையடுத்து மெலானியா மற்றும் பேரன் ஆகிய இருவருக்கும், அமெரிக்க ரகசிய சேவையிடம் இருந்து 24 மணி நேர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.</p><p>வெள்ளை மாளிகை, நியூயார்க்கில் உள்ள டிரம்ப் டவர், நியூ ஜெர்சியில் உள்ள பெட்மின்ஸ்டர் கோல்ஃப் கிளப் மற்றும் பு புளோரிடாவில் உள்ள மார்-அ-லாகோ எஸ்டேட் உள்ளிட்ட டிரம்பின் அனைத்து சொத்துக்களும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>மேக் ஸ்டூடியோ, மேக் மினி மாடல்களை அப்டேட் செய்த ஆப்பிள் - விலை, முழு விவரங்கள்!</title><link>https://www.maalaimalar.com/technology/newgadgets/apple-refreshes-mac-studio-with-m5-max-m5-ultra-chips-mac-mini-gets-m6-upgrade</link><comments>https://www.maalaimalar.com/technology/newgadgets/apple-refreshes-mac-studio-with-m5-max-m5-ultra-chips-mac-mini-gets-m6-upgrade#comments</comments><guid isPermaLink="false">4d3ccdd2-56ea-49a4-8b4c-107722288cf7</guid><pubDate>Wed, 26 Aug 2026 03:42:00 +0000</pubDate><atom:updated>2026-08-26T03:42:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Apple,ஆப்பிள்,மேக் ஸ்டூடியோ,Mac studio,mac mini,மேக் மினி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/xfwg7s9x/mac-mini-and-mac-studio.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ mac mini and mac studio]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/xfwg7s9x/mac-mini-and-mac-studio.png?w=280" width="280"></media:thumbnail><category>புதிய கேஜெட்டுகள் (New gadgets)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/apple">ஆப்பிள்</a> நிறுவனம் இந்திய சந்தையில் தனது மேக் ஸ்டூடியோ (Mac Studio) மற்றும் மேக் மினி (Mac Mini) மாடல்களை அப்டேட் செய்துள்ளது. இந்த முறை ஆப்பிள் தனது டெஸ்க்டாப் மாடல்களில் புதிய தலைமுறை சிலிகான் வழங்கியுள்ளது. </p><p>அதன்படி மேம்பட்ட மேக் ஸ்டூடியோ மாடல் தற்போது M5 மேக்ஸ் மற்றும் முற்றிலும் புதிய M5 அல்ட்ரா சிப்செட் உடன் வருகின்றன. இதேபோல் மேக் மினி மாடல் M5 ப்ரோ மற்றும் M6 சிலிகான் பிராசஸர் உடன் வருகிறது. புதிய மாடல்கள் வைபை 7 மற்றும் ப்ளூடூத் 6 சப்போர்ட் உடன் வருகின்றன.</p><h2>மேக் ஸ்டூடியோ சிறப்பு அம்சங்கள்:</h2><p>ஆப்பிள் வெளியிட்டுள்ள தகவல்களின் படி மேக் ஸ்டூடியோ தற்போது M5 சிலிகான் பிராசஸருடன் வருகிறது. இது முன்பைவிட 4.3 மடங்கு அதிவேக ஏ.ஐ. செயல்திறன் வழங்கும் என்றும் இருமடங்கு வேகத்தில் ஸ்டோரேஜ், 1.8 மடங்கு கிராஃபிக்ஸ் மற்றும் 1.3 மடங்கு அதிவேக சி.பி.யு. செயல்திறன் வழங்குகிறது.</p><p>M5 மேக்ஸ் சிப்செட் கொண்ட மேக் ஸ்டூடியோ மாடலை 18-கோர் சி.பி.யு. மற்றும் அதிகபட்சம் 40-கோர் ஜி.பி.யு. உடன் கான்ஃபிகர் செய்து கொள்ள முடியும். இத்துடன் ஒவ்வொரு ஜி.பி.யு. கோரிலும் நியூரல் அக்செல்லரேட்டர்கள் உள்ளன. </p><p>இந்த மாடல் அதிகபட்சம் 128 ஜிபி யுனிஃபைடு மெமரி, நொடிக்கு 614ஜிபி வரையிலான மெமரி பேண்ட்வித் ஆப்ஷனில் கிடைக்கிறது. இதன் டாப் எண்ட் M5 அல்ட்ரா மாடலில் 36-கோர் சி.பி.யு., 80-கோர் ஜி.பி.யு. மற்றும் 512 ஜிபி யுனிஃபைடு மெமரி, நொடிக்கு 1.2 டி.பி. மெமரி பேண்ட்வித் கொண்டுள்ளது.</p><h2>மேக் மினி சிறப்பு அம்சங்கள்:</h2><p>புதிய மேக் மினி மாடல் M6 சிப் உடன் வருகிறது. இதில் 12-கோர் சி.பி.யு. மற்றும் 12-கோர் ஜி.பி.யு. உள்ளது. இது முன்பை விட நான்கு மடங்கு அதிவேகமான ஏ.ஐ. செயல்திறன் மற்றும் இருமடங்கு வேகமான கிராஃபிக்ஸ் அனுபவம் வழங்குகிறது. M6 சிப்செட்டில் இரட்டை 16-கோர் நியூரல் என்ஜின் மற்றும் 32 ஜிபி வரை யுனிஃபைடு மெமரி உள்ளது.</p><p>மேம்பட்ட மேக் ஸ்டூடியோ மற்றும் மேக் மினி மாடல்கள் வைபை 7, ப்ளூடூத் 6, 2.5ஜிபி ஈத்தர்நெட், ஆப்ஷனல் 10 ஜிபி ஈத்தர்நெட் ஆப்ஷன் கொண்டிருக்கிறது. இவற்றில் யு.எஸ்.பி. சி போர்ட்கள், ஹெட்போன் ஜாக் , ஹெச்.டி.எம்.ஐ., ஈத்தர்நெட் மற்றும் தண்டர்போல்ட் போர்ட்கள் உள்ளன.</p><h2>இந்திய விலை விவரங்கள்:</h2><p>புதிய மேக் ஸ்டூடியோ M5 மேக்ஸ் மாடலின் விலை ரூ. 2,79,900 என தொடங்குகிறது. அதிக சக்திவாய்ந்த M5 அல்ட்ரா சிப் கொண்ட மாடலின் விலை ரூ. 6,29,900 ஆகும். கல்வி சார்ந்த பயன்பாடுகளுக்கு இந்த மாடல்களின் விலை முறையே ரூ. 2,56,900 மற்றும் ரூ. 5,84,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.</p><p>M6 சிப்செட் கொண்ட புதிய மேக் மினி விலை ரூ. 99,900 என்றும், M5 ப்ரோ சிப்செட் கொண்ட மாடலின் விலை ரூ. 2,09,900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கல்வி சார்ந்த பயன்பாடுகளுக்கு இந்த மாடல்களின் விலை முறையே ரூ. 88,900 மற்றும் ரூ. 1,97,900 ஆகும்.</p><p>இந்த மாடல்களின் முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்ட நிலையில், விற்பனை செப்டம்பர் 22-ஆம் தேதி தொடங்குகிறது. வாடிக்கையாளர்கள் இந்த மாடல்களை ஆப்பிள் ஸ்டோர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடம் வாங்கிட முடியும்.</p>]]></content:encoded></item><item><title>நபிகள் நாயகத்தின் உன்னதமான கொள்கைகள் நமக்கு ஊக்கமளிக்கட்டும்: குடியரசு தலைவர் - பிரதமர் மோடி வாழ்த்து </title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-and-president-murmu-extend-milad-un-nabi-greetings</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-and-president-murmu-extend-milad-un-nabi-greetings#comments</comments><guid isPermaLink="false">b8b034f4-d646-4e62-8369-1f6d1cad3948</guid><pubDate>Wed, 26 Aug 2026 03:40:08 +0000</pubDate><atom:updated>2026-08-26T03:40:08.787Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>President Droupadi Murmu,miladi nabi,pm modi,மிலாடி நபி,பிரதமர் மோடி,குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/9pum935b/Untitled-design-18.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Milad-un-Nabi: President and Prime Minister ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/9pum935b/Untitled-design-18.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF">மிலாடி நபி</a> கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி தங்களின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.</p><p><strong>மிலாடி நபி</strong>  </p><p>இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான மிலாடி நபி, நபிகள் நாயகம் முஹம்மதுவின் பிறப்பைக் குறிக்கிறது. </p><p>இஸ்லாமியர்களுக்கு நபிகள் நாயகம் முஹம்மது அவர்களின் பிறந்தநாள் ஒரு புனிதமான நாளாக கொண்டாடப்படுகிறது.</p><p>அவரது போதனைகள், உலகம் முழுவதும் பலரால் பின்பற்றப்பட்டு, தன்னலமற்ற தன்மையையும் மன்னிக்கும் குணத்தையும் கடைபிடிக்குமாறு வலியுறுத்திகிறது.   </p><p>உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களுக்கு, இந்த நாள் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை, போதனைகள் மற்றும் கருணையை போற்றும் ஒரு சிந்தனை மற்றும் நன்றியுணர்வின் தருணமாக அமைகிறது.</p><p>இஸ்லாமிய மக்கள் மிலாடி நபி கொண்டாட்டங்களை காலைத் தொழுகைகள் மற்றும் மசூதிகளில் கூடி கொண்டாடப்படுகின்றனர்.</p><p>இந்த ஆண்டு, மிலாடி நபி இந்தியாவில் இன்று கொண்டாடப்படுகிறது.</p><h3><strong>குடியரசுத் தலைவர்</strong></h3><p>முன்னதாக குடியரசுத் தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81">திரெளபதி முர்மு</a> வெளியிட்ட செய்தி குறிப்பில், “மிலாடி நபி நன்னாளில், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் மக்கள் அனைவருக்கும், குறிப்பாக இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் தீவிரமாக பங்களிக்க, நபிகள் நாயகத்தின் உன்னதமான கொள்கைகள் நமக்கு ஊக்கமளிக்கட்டும்,” என்று தெரிவித்துள்ளார்.</p><p><strong>பிரதமர் மோடி</strong></p><p>இந்த நிலையில், மிலாடி நபி கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF">பிரதமர் மோடி</a> வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “மிலாடி நபி நல்வாழ்த்துகள்.</p><p>இந்த தினமானது நம்மிடையே ஒற்றுமையையும் மகிழ்ச்சியையும் மேலும் வளர்க்கட்டும். மேலும், கருணை மற்றும் சமுதாயத்திற்கு திருப்பிக் கொடுக்கும் மனப்பான்மை எப்போதும் நமக்கு வழிகாட்டட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஓணம் திருநாள் அனைவரது வாழ்விலும் நலத்தையும், வளத்தையும் வழங்கட்டும்! - முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/onam-festival-cm-vijay-wishes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/onam-festival-cm-vijay-wishes#comments</comments><guid isPermaLink="false">1bc7fec1-7dba-43c3-a915-2a640bfc97f0</guid><pubDate>Wed, 26 Aug 2026 03:32:33 +0000</pubDate><atom:updated>2026-08-26T03:32:33.271Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,தவெக,vijay,ஓணம் பண்டிகை,onam festival,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/djl2qd6s/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Onam Festival - CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/djl2qd6s/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>ஓணம் பண்டிகை</h2><p>கேரள மக்கள் அனைவரும் பாகுபாடின்றி, மிகவும் மகிழ்ச்சியோடு எதிர்நோக்கும் ஒரு திருவிழா, <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%93%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88">ஓணம் பண்டிகை</a>. ஆவணி மாதம் வரும் திருவோண நட்சத்திரமான இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. </p> <h2>மகாபலி சக்கரவர்த்தி</h2><p>இந்நாளில் மகாபலி சக்கரவர்த்தி, தன் நாட்டிற்கு விஜயம் செய்வதாக நம்பிக்கை. எனவே, அவரை வரவேற்கும் நாளாக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/onam-festival-mk-stalin-wishes">ஓணம் பண்டிகை</a> கொண்டாடப்படுகிறது.</p> <h2>கேரளம்</h2><p>ஓணம் திருநாளில் கேரளம் முழுவதும், புத்தாடைகள், பூக்கோலங்கள், விளையாட்டுப் போட்டிகள், பலகாரங்கள் என கொண்டாட்டம் களைக்கட்டும். கேரளம் மட்டுமின்றி தென்தமிழக மாவட்டங்களிலும் ஓணம் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது.</p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>ஓணம் திருநாளையொட்டு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>உலகெங்கும் வாழும் மலையாளச் சொந்தங்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள்!</p> <p>கேரளம் மாநிலத்தின் அறுவடைத் திருநாளாம் ஓணம் திருநாளில், உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும், அன்பும், மகிழ்ச்சியும் என்றும் பொங்கிப் பெருகட்டும்! அழகிய வண்ணப் பூக்கோலம்போல் உங்கள் வாழ்க்கை பொலிவு பெறட்டும்!</p><p>அன்பைப் பரிமாறி, மகிழ்ச்சியைக் கொண்டாடி, ஒற்றுமையைப் போற்றும் இத்திருநாள் அனைவரது வாழ்விலும் நலத்தையும், வளத்தையும் வழங்கட்டும்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">உலகெங்கும் வாழும் மலையாளச் சொந்தங்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள்!<br><br>கேரளம் மாநிலத்தின் அறுவடைத் திருநாளாம் ஓணம் திருநாளில், உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும், அன்பும், மகிழ்ச்சியும் என்றும் பொங்கிப் பெருகட்டும்! அழகிய வண்ணப் பூக்கோலம்போல் உங்கள்… <a href="https://t.co/uB2N9vqo9P">pic.twitter.com/uB2N9vqo9P</a></p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2092448413925470496?ref_src=twsrc%5Etfw">August 26, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>ரெயில் பயணிகளின் கவனத்திற்கு... எழும்பூர் ரெயில்கள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/southern-railway-announcement-egmore-trains-to-operate-as-usual</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/southern-railway-announcement-egmore-trains-to-operate-as-usual#comments</comments><guid isPermaLink="false">ee7791d9-458d-49fc-83ee-df7603d6b88e</guid><pubDate>Wed, 26 Aug 2026 03:22:13 +0000</pubDate><atom:updated>2026-08-26T03:22:13.410Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Egmore railway station,எழும்பூர் ரெயில் நிலையம்,Express trains,எக்ஸ்பிரஸ் ரெயில்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/2z4gufgd/train01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ ரெயில்]]></media:title><media:description type="html"><![CDATA[ ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/2z4gufgd/train01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பயணிகள் எவ்வித சிரமமும் இன்றி சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திலிருந்தே தங்களது பயணங்களை வழக்கமான அட்டவணைப்படி தொடரலாம்.</strong></em></p><p>தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p><a href="https://www.maalaimalar.com/topic/எழும்பூர்-ரெயில்-நிலையம்">எழும்பூர் ரெயில் நிலையத்தில்</a> மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்புப் பணி காரணமாக, செப்டம்பர் 1-ந்தேதி முதல் அக்டோபர் 15-ந்தேதி வரையில் எழும்பூரில் இருந்து புறப்படும் சில எக்ஸ்பிரஸ் ரெயில்களும், மற்றப் பகுதியில் இருந்து எழும்பூருக்கு வரும் சில எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டு, ரெயில்கள் வழக்கம்போல இயக்கப்படும்.</p><h2><strong>வழக்கம் போல இயக்கம்</strong></h2><p>குறிப்பாக, மன்னார்குடி-எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (16180) தாம்பரம் வரையிலும், சேலம்-எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (22154) மாம்பலம் வரையிலும், திருச்சி-எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (12654) மற்றும் மும்பை ஜி.எஸ்.டி.-எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (22157) கடற்கரை வரையிலும் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. </p><p>இதேபோல, எழும்பூர்-மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் (16179) தாம்பரத்தில் இருந்தும், எழும்பூர்-தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (22153) சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்புகள் திரும்ப பெறப்பட்டு, ரெயில்கள் வழக்கம்போல இயக்கப்பட உள்ளன.</p><p>இதனால், பயணிகள் எவ்வித சிரமமும் இன்றி சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திலிருந்தே தங்களது பயணங்களை வழக்கமான அட்டவணைப்படி தொடரலாம்.</p>]]></content:encoded></item></channel></rss>