<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 25 Jul 2026 03:47:43 +0000</lastBuildDate><item><title>உத்தரபிரதேசத்தில் வினோதம்: ஒரே வாலிபரை திருமணம் செய்த 3 இளம்பெண்கள்</title><link>https://www.maalaimalar.com/news/national/3-sisters-in-up-marry-the-same-man-wedding-goes-viral</link><comments>https://www.maalaimalar.com/news/national/3-sisters-in-up-marry-the-same-man-wedding-goes-viral#comments</comments><guid isPermaLink="false">0b980225-b35b-4970-b72b-215e82626ba2</guid><pubDate>Sat, 25 Jul 2026 03:42:20 +0000</pubDate><atom:updated>2026-07-25T03:42:20.119Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமணம்,marriage,சமூகவலைத்தளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/gw9t3z0n/up.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ உத்தரபிரதேசத்தில் வாலிபரை திருமணம் செய்து கொண்ட 3 பெண்கள்.]]></media:title><media:description type="html"><![CDATA[ உத்தரபிரதேசத்தில் வாலிபரை திருமணம் செய்து கொண்ட 3 பெண்கள்.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/gw9t3z0n/up.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>உத்தரபிரதேசத்தில் 3 இளம்பெண்கள் ஒரே வாலிபரை ஒன்றாக திருமணம் செய்து கொண்ட வினோதம் நடந்துள்ளது. சிறுவயதில் இருந்தே சேர்ந்து வாழ்வதால் பிரிய மனம் இல்லை என்று மணப்பெண்கள் தெரிவித்து உள்ளனர்.</aside><h2><strong>வீடியோ வெளியிடும் பெண்கள்</strong></h2><p>உத்தரபிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தில், 2 உடன் பிறந்த சகோதரிகளும், அவர்களது உறவுப்பெண்ணும் ஒரே வாலிபரை மணந்த சம்பவம் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>சமூக வலைதளங்களில் உள்ளடக்கங்களை உருவாக்குபராக உள்ளவர் சரோஜ் (வயது 20). இவர் சகோதரி சாவித்ரி ராணி (19) மற்றும் உறவுப்பெண் சந்தோஷ் கடக்வன்ஷி (18) ஆகியோருடன் இணைந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இவர்களின் வீடியோக்களை கேமராமேன் விகாஸ் சாமுண்டா (20) என்பவர் படம் பிடித்து வந்தார்.</p><h2><strong>ஒரே ஆணை மணந்தனர்</strong></h2><p>இந்த நிலையில் அந்த 3 இளம்பெண்களும், கேமராமேனை ஒன்றாக திருமணம் செய்து கொண்ட வினோதம் நடந்துள்ளது. அங்குள்ள கோவிலில் சமீபத்தில் அவர்கள் திருமணம் நடந்துள்ளது. அதுபற்றிய வீடியோக்கள், புகைப்படங்களையும் அவர்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளனர். அதில் மணமகன் யாக குண்டத்தில் நெருப்பு வளர்ப்பதையும். 3 மணமகள்களும் அவருடன் சேர்ந்து நெருப்புமூட்டி திருமண பந்தத்தில் இணைவது, மணமகனின் காலை மூவரும் ஒன்றாக தொட்டு வணங்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்று உள்ளன.</p><h2><strong>வாழ்ந்தால் சேர்ந்து வாழ்வோம்</strong></h2><p>வினோதமான இந்த திருமணம் பற்றி சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. அதுகுறித்து மணப்பெண்களில் ஒருவரான சரோஜ் கூறியதாவது:-</p><p>சிறுவயது முதல் நாங்கள் மூவரும் ஒன்றாகவே வளர்ந்தோம். திருமணம் எங்களைப் பிரித்துவிடும் என்று தெரிந்தபோது, பிரிந்து வாழ்வதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. பிரிந்து வாழ்ந்தால் தற்கொலை கூட செய்து கொள்ளலாம் என்று சிந்தித்து உள்ளோம். ஆனால் இறப்பதைவிட ஒரே நபரைத் திருமணம் செய்து ஒன்றாக வாழலாம் என்று முடிவு செய்தோம். எங்கள் விருப்பத்தை விகாசிடம் தெரிவித்தோம். அவரும் அதற்கு சம்மதித்தார். நாங்கள் அனைவரும் வயது வந்தவர்கள். இந்த முடிவை எங்கள் விருப்பப்படி எடுத்தோம்.</p><p>இவ்வாறு சரோஜ் கூறியுள்ளார்.</p><h2><strong>திருமணம் செல்லுமா?</strong></h2><p>மணமகன் விகாசும் அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு ஏற்றுக்கொண்டுள்ளார். அவர் கூறும்போது, "மூவரும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் பாசத்தை நான் அறிந்திருந்தேன். அவர்கள் பிரிய விரும்பவில்லை. அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்தே இந்த முடிவை ஏற்றுக்கொண்டேன். எங்கள் முடிவை அனைவரும் மதிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார் </p><p>எனினும், இந்த திருமணம் இந்து திருமணச் சட்டப்படி செல்லுபடியாகுமா என்பது குறித்து சட்ட ரீதியான விவாதம் எழுந்துள்ளது. சமூக வலைத்தளத்தில் அவர்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. </p>]]></content:encoded></item><item><title>6500mAh பேட்டரியுடன் பட்ஜெட் விலையில் புது ஐகூ ஸ்மார்ட்போன் அறிமுகம்!</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/iqoo-z11-lite-with-6500mah-battery-launched-in-india</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/iqoo-z11-lite-with-6500mah-battery-launched-in-india#comments</comments><guid isPermaLink="false">9052097e-0612-44e8-994f-a8c1e32764f9</guid><pubDate>Sat, 25 Jul 2026 03:36:00 +0000</pubDate><atom:updated>2026-07-25T03:36:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>iQOO,smartphone,ஸ்மார்ட்போன்,ஐகூ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/o5n0pt35/iQOO-Z11-Lite.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ iQOO Z11 Lite]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/o5n0pt35/iQOO-Z11-Lite.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/iqoo">ஐகூ</a> நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய Z11 லைட் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. பட்ஜெட் பிரிவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்த <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மார்ட்போன்</a> டூயல் சிம் ஸ்லாட், மூன்று வித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியுடன் வருகிறது.</p><h2>அம்சங்கள்:</h2><p>இந்த ஸ்மார்ட்போன் 6.74 இன்ச் HD+ LCD ஸ்கிரீன், 120 ஹெர்ச்ஸ் ரிப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் பிரைட்னஸ், மீடியாடெக் டிமென்சிட்டி 6300 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 6 ஜிிபி வரை விர்சசுவல் ரேம், மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி, IP65 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.</p><p>புதிய ஐகூ ஸ்மார்ட்போன் ஏ.ஐ. அம்சங்களுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ஒரிஜின் ஓ.எஸ். கொண்டு இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு 2 ஓ.எஸ். அப்டேட்கள், 4 ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்களை பெறும் என ஐகூ தெரிவித்துள்ளது.</p><p>புகைப்படங்களை எடுக்க இந்த ஸ்மார்ட்போனில் 50MP பிரைமரி கேமரா, 0.08MP லென்ஸ், 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.4, யு.எஸ்.பி. டைப் சி 2.0 வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6500mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.</p><h2>விலை விவரங்கள்:</h2><p>புதிய ஐகூ Z11 லைட் ஸ்மார்ட்போன் மிட்நைட் புளூ மற்றும் சோலார் ஃபிளேம் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 19,499 என்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 21,499 என்றும் டாப் எண்ட் 6 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 24,499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.</p><p>இந்த ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் ஐகூ இந்தியா வலைதளம் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்பட உள்ளது. இதன் விற்பனை ஜூலை 30-ஆம் தேதி தொடங்குகிறது.</p><p>அறிமுக சலுகையாக புதிய ஸ்மார்ட்போன் வாங்குவோர் ஐசிஐசிஐ மற்றும் ஹெச்.டி.எப்.சி. வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1500 வரை உடனடி தள்ளுபடி மற்றும் மூன்று மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் விளையாட்டில் இந்தியா இன்று பங்கேற்கும் போட்டிகள்</title><link>https://www.maalaimalar.com/sports/today-india-games-in-commenwealth</link><comments>https://www.maalaimalar.com/sports/today-india-games-in-commenwealth#comments</comments><guid isPermaLink="false">27c0a602-4aa9-47b1-b5f8-869df38ed22f</guid><pubDate>Sat, 25 Jul 2026 03:33:10 +0000</pubDate><atom:updated>2026-07-25T03:33:10.582Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,காமன்வெல்த்,Commonwealth,Glasgow,கிளாஸ்கோ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/0dadu8yc/india.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ india]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/0dadu8yc/india.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் கோலாகலமாகத் தொடங்கியது.  ஆகஸ்ட் 2-ம் தேதி வரை 11 நாட்கள் இந்தப் போட்டி நடைபெறுகிறது. </p><h2>மொத்தம் 74 நாடுகள்</h2><p>இதில் காமன்வெல்த் கூட்டமைப்பில் இருக்கும் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா உள்பட 74 நாடுகளில் இருந்து 3 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர் .</p><p>தடகளம், பளு தூக்குதல், குத்துச்சண்டை, நீச்சல், கூடைப்பந்து (3x3), ஜிம்னாஸ்டிக் (ஆர்ஸ்டிக்), சைக்கிளிங், ஜூடோ, நெட்  பால், பவுல்ஸ் வலு தூக்குதல் (பாரா பிரிவினருக்கு மட்டும்) ஆகிய 11  விளையாட்டுகள் 215 பிரிவுகளில் நடைபெறுகிறது. இதில்  6 விளையாட்டுகள் பாரா பிரிவினருக்கு நடத்தப்படுகிறது.</p><p>இதில் இந்தியா சார்பில் 126 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது. இதில் 78 பேர் வீரர்கள், 48 வீராங்கனைகள் கலந்துகொள்கிறார்கள். 8 விளையாட்டுகளில் பங்கேற்கிறார்கள். 5 பாரா விளையாட்டுகளில் கலந்துகொள்கிறார்கள்.</p><p>பிரமாண்டமாக நடைபெற்ற தொடக்க விழாவில் தேசிய கொடியை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பளு தூக்கும் வீராங்கனை  மீராபாய் சானு, குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா ஆகியோர் ஏந்திச்சென்றனர்.</p><p>73 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்க இருந்த ஜூடோ வீரர் அருண்குமார் இந்திய தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் பரிசோதனையில் தோல்வி அடைந்ததால் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டு போட்டியிலிருந்து விலக்கப்பட்டார்.</p><p>ஜூடோ வீராங்கனை துலிகா மான், தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டார். கடந்த 12 மாதங்களில் 3 முறை தனது இருப்பிடம் குறித்த தகவலைத் தெரிவிக்கத் தவறியதால் தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.</p><h2>முதல் பதக்கம்</h2><p>காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவின் ஜண்டு குமார் முதல் பதக்கத்தை பெற்று தந்தார். ஆடவர் ஹெவிவெயிட் பாரா பவர்லிஃப்டிங் பிரிவில் வெண்கல பதக்கத்தை வென்று அசத்தினார்.</p><h2>இந்தியா இன்று பங்கேற்கும் போட்டிகள்</h2><p>இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் பிரனதி நாயக், நிஷ்கா அகர்வால், இஷிதா ரேவால், புரோதிஸ்தா சமந்தா, ரித்தி ஷர்மா ஆகியோர் சாகசம் காட்டுகிறார்கள்.</p><p>குத்துச்சண்டையில் (60 கிலோ) மாலை 4 மணிக்கு இந்திய வீரர் சச்சின் சிவாச், கனடாவின் கியாமா அல் அக்மடியாவுடன் கோதாவில் குதிக்கிறார்.</p><p>மாலை 4.19 மணிக்கு ஆண்களுக்கான 400 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சலில் தக்ஷன் ஷஷிகுமார் நீந்துகிறார்.</p><p>மாலை 4.49 மணிக்கு வீல்சேர் கூடைப் பந்து போட்டியில் இந்திய அணி, வேல்சை (பி பிரிவு) எதிர்கொள்கிறது.</p><p>இரவு 7.30 மணிக்கு லான் பவுல்ஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையரில் இந்திய வீரர் புதுல் சோனோவால் மலேசியாவின் இஜாத் ஷமீரை சந்திக்கிறார்.</p><p>போட்டிகளை சோனி ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.</p>]]></content:encoded></item><item><title>தர்மேந்திர பிரதானை உடனடியாக பதவி நீக்கம் செய்யுங்கள்- மாணிக்கம் தாகூர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/congress-leader-manickam-tagore-urges-removal-of-dharmendra-pradhan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/congress-leader-manickam-tagore-urges-removal-of-dharmendra-pradhan#comments</comments><guid isPermaLink="false">c0e11e07-0061-43ed-9aef-71af7293dc5c</guid><pubDate>Sat, 25 Jul 2026 03:19:50 +0000</pubDate><atom:updated>2026-07-25T03:19:50.815Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore,neet protest,நீட் போராட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/2v3obqeg/manickam-tagore.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Manickam Tagore]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/2v3obqeg/manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தர்மேந்திர பிரதானை உடனடியாக பதவி நீக்கம் செய்யுங்கள், நாட்டின் கல்வி, மாணவர்களின் எதிர்காலத்தை காப்பாற்றுங்கள் என காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தி உள்ளார்.</p><h2>மாணிக்கம் தாகூர்</h2><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தர்மேந்திர பிரதானை உடனடியாக பதவி நீக்கம் செய்யுங்கள்.</p><p>NEET-UG 2026 என்பது வெறும் தேர்வு அல்ல. கோடிக்கணக்கான இந்திய மாணவர்களின் கனவு.</p><p>தேர்வுக் கேள்வித்தாள்கள் கசிந்தன. மே 3 மற்றும் மே 7 நடைபெற்ற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. நாடு முழுவதும் மீண்டும் தேர்வு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81" rel="nofollow">கேள்வித்தாள் கசிவு</a> நடந்ததை மத்திய கல்வி அமைச்சரே ஒப்புக்கொண்டார். தற்போது சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.</p><h2>பிரதமர் மோடி மவுனம் ஏன்?</h2><p>ஆனால் இந்த ஊழலின் மிகப் பெரிய விலை என்ன?</p><p>21 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 21 குடும்பங்களின் வாழ்க்கை என்றென்றும் சோகத்தில் மூழ்கியுள்ளது.</p><p>மாணவர்கள் கல்வி அமைப்பின் மீதான நம்பிக்கையை இழக்கும் அளவுக்கு இந்த அரசு தோல்வியடைந்துள்ளது. ஒரு தேர்வை ரத்து செய்ததால் மட்டும் பொறுப்பு முடிவடையாது.</p><p>எதிர்க்கட்சித் தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/national/students-are-not-alone-we-stand-with-them-rahul-gandhi" rel="nofollow">ராகுல் காந்தி</a> தொடர்ந்து வலியுறுத்துவது போல, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும். இந்த மிகப்பெரிய கல்வி ஊழல் குறித்து பிரதமர் மோடியின் மௌனம் ஏற்றுக்கொள்ள முடியாதது.</p><h2>பதவி நீக்கம்</h2><p>இந்திய மாணவர்கள் நியாயமான, வெளிப்படையான, நம்பகமான கல்வி அமைப்பிற்கு தகுதியானவர்கள். தோல்வி, ஊழல், அலட்சியம் ஆகியவற்றிற்கு அல்ல.</p><p>தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்யுங்கள். இந்தியாவின் கல்வியையும், மாணவர்களின் எதிர்காலத்தையும் காப்பாற்றுங்கள்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நீட் தேர்வு போராட்டம் எதிரொலி: டெல்லியில் 4-வது நாளாக மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடல்</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-metro-curbs-enter-4th-day-18-stations-closed-today-as-security-tightens-over-neet-protests</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-metro-curbs-enter-4th-day-18-stations-closed-today-as-security-tightens-over-neet-protests#comments</comments><guid isPermaLink="false">65d2b84b-ee75-4aca-988c-d48ed474f6ab</guid><pubDate>Sat, 25 Jul 2026 02:56:11 +0000</pubDate><atom:updated>2026-07-25T02:56:11.086Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>protest,போராட்டம்,neet,நீட் தேர்வு,Delhi Metro,டெல்லி மெட்ரோ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/28u0kv50/metro.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ delhi metro]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/28u0kv50/metro.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாணவர்களின் போராட்டத்தால் தலைநகர் டெல்லியில் நான்காவது நாளாக இன்றும் 18 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டது.</p><p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வரும் நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.</p><p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், டெல்லியில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் கூடுதலாக பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.</p><h2>4-வது நாளாக</h2><p>தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு மற்றும் போராட்டக்காரர்களின் கல்வீச்சு போன்ற சம்பவங்களால் டெல்லி பதற்றம் நிறைந்த பகுதியாக காணப்படுகிறது. இந்தப் போராட்டத்தை கலைப்பதற்கும், கூட்டம் அதிகரிப்பதை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியில் கடந்த 2 நாளாக 15க்கு மேற்பட்ட மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.</p><p>இந்நிலையில், மாணவர் போராட்டத்தையடுத்து தொடர்ந்து நான்காவது நாளாக டெல்லியில் இன்று 18 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இன்று காலை 7.30 மணி முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை 18 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.</p><h2>18 மெட்ரோ நிலையங்கள்</h2><p>இதன்படி லோக் கல்யாண் மார்க், ராஜீவ் சவுக், படேல் சவுக், ராமகிருஷ்ணா ஆசிரம மார்க், பாரகாம்பா சாலை, சுப்ரீம் கோர்ட், சேவா தீர்த்தம், ஜன்பத், மண்டி ஹவுஸ், மத்திய செயலகம், ஐ.டி.ஓ., டெல்லி கேட், இந்திரபிரஸ்தா, கான் மார்க்கெட், ஜோர் பாக், சிவாஜி ஸ்டேடியம், ஜாண்டேவலன் மற்றும் நியூ டெல்லி ஆகிய மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.</p><p>அதே சமயம் ராஜீவ் சவுக், மண்டி ஹவுஸ் மற்றும் சென்ட்ரல் செக்ரட்டேரியட் மெட்ரோ நிலையங்களில் இன்டர்சேஞ்ச் வசதி மட்டும் வழக்கம்போல் தொடர்ந்து கிடைக்கும் என்று டெல்லி மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>சீரடைந்த வானிலை: 6 நாளுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது அமர்நாத் யாத்திரை</title><link>https://www.maalaimalar.com/news/national/amarnath-yatra-resumes-after-6-day-weather-halt-over-6000-pilgrims-leave-jammu</link><comments>https://www.maalaimalar.com/news/national/amarnath-yatra-resumes-after-6-day-weather-halt-over-6000-pilgrims-leave-jammu#comments</comments><guid isPermaLink="false">58631784-5697-4930-b470-45b0f5d937db</guid><pubDate>Sat, 25 Jul 2026 02:26:44 +0000</pubDate><atom:updated>2026-07-25T02:26:44.684Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Amarnath yatra,அமர்நாத் யாத்திரை,Pilgrims,Ice lingam,பக்தர்கள்,பனிலிங்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/9yctg02s/yatra.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ amarnath yatra]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/9yctg02s/yatra.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காஷ்மீரில் ஆண்டுதோறும் நடைபெறும் அமர்நாத் யாத்திரை கடந்த 3-ம் தேதி தொடங்கியது. இந்த யாத்திரை ஆகஸ்டு 28-ம் தேதி நிறைவடையும்.</p><h2>3.77 லட்சம் பேர் தரிசனம்</h2><p>அமர்நாத் குகைக் கோவிலை 3.77 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><h2>யாத்திரை நிறுத்தம்</h2><p>இதற்கிடையே, மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை கடந்த 19-ம் தேதி நிறுத்தி வைக்கப்பட்டது. </p><p>இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பக்தர்களின் பாதுகாப்பு கருதி யாத்திரை நிறுத்தப்படுகிறது. அடுத்த உத்தரவு வரும் வரை பக்தர்கள் யாத்திரை மேற்கொள்ள வேண்டாம். யாத்திரை எப்போது தொடங்கும் என்பதை வானிலை குறித்த விரிவான மதிப்பீடு, வழித்தடத்தில் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு உரிய காலத்தில் அறிவிக்கப்படும் என தெரிவித்தனர்.</p><p>இதேபோல், ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் மாதா வைஷ்ணவி தேவி கோவிலுக்கான யாத்திரையும் நிறுத்தி வைக்கப்பட்டது.</p><h2>சீரடைந்த வானிலை</h2><p>இந்நிலையில், வானிலை சீரடைந்ததை தொடர்ந்து அமர்நாத் யாத்திரை இன்று மீண்டும் தொடங்கியது.</p><p>பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில், அமர்நாத் யாத்திரைக்கான 18வது குழு 6,269 பக்தர்களைக் கொண்ட புதிய குழு இன்று அதிகாலை பால்டால் முகாமில் இருந்து புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் 25 குழந்தைகள், 1470 பெண்கள், 54 சாதுக்கள் உள்ளிட்டோரும் அடங்குவர். 223 வாகனங்கள் கொண்ட அணிவகுப்பில் 18வது குழு பயணித்துள்ளது.</p><p>முன்னதாக, அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு கடந்த ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கியது. நபர் ஒருவர் ரூ.150 கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். மருத்துவ சான்றிதழ் ஒன்றையும் கட்டாயம் கொண்டு வர வேண்டும்.</p><p>நடப்பு ஆண்டில் 5 நாட்களில் 90 சதவீதம் அளவுக்கு பனிலிங்கம் உருகியது என்றாலும், பக்தர்களின் கூட்டம் குறையாமல் அதிகரித்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 25 ஜூலை 2026: சர்வ ஏகாதசி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-panchangam-and-important-events-25-july-2026-sarva-ekadasi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-panchangam-and-important-events-25-july-2026-sarva-ekadasi#comments</comments><guid isPermaLink="false">45d22806-5f87-46cb-a072-00675a7ce7a0</guid><pubDate>Sat, 25 Jul 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-07-25T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/09/16/18711846-perumal.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Perumal]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/09/16/18711846-perumal.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆடி-9 (சனிக்கிழமை)</p><p>பிறை : வளர்பிறை</p><p>திதி :   ஏகாதசி நண்பகல் 1.55 வரை பிறகு துவாதசி</p><p>நட்சத்திரம் : அனுஷம் காலை 7.29 வரை பிறகு கேட்டை</p> <p>யோகம் :  சித்தயோகம்</p><p>ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை</p><p>எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை</p><p>சூலம் : கிழக்கு</p><p>நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை</p> <h2>மதுரை ஸ்ரீ கூடலழகர் புறப்பாடு</h2><p>சர்வ ஏகாதசி. குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சனம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் பூம்பல்லக்கில் பவனி. மதுரை ஸ்ரீ கூடலழகர் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி திருமஞ்சனம். கலிய நாயனார் குரு பூஜை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் ராஜாங்க சேவை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். நயினார் கோவில் ஸ்ரீ சௌந்தரநாயகி, திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் கோவில்களில் அபிஷேகம், திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.</p><p>உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சனம். திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம் ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - முயற்சி</p><p>ரிஷபம் - இன்பம்</p><p>மிதுனம் - புகழ்</p><p>கடகம் - செலவு</p><p>சிம்மம் - சுகம்</p><p>கன்னி - வெற்றி</p> <p>துலாம் - உறுதி</p><p>விருச்சிகம் - சிறப்பு</p><p>தனுசு - தனம்</p><p>மகரம் - லாபம்</p><p>கும்பம் - சாந்தம்</p><p>மீனம் - அன்பு</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்றைய நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/petrol-diesel-price-status-in-chennai-today</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/petrol-diesel-price-status-in-chennai-today#comments</comments><guid isPermaLink="false">83448dbf-49ec-4136-92da-2db1471a1845</guid><pubDate>Sat, 25 Jul 2026 01:25:08 +0000</pubDate><atom:updated>2026-07-25T01:25:08.067Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல்,Petrol,கச்சா எண்ணெய்,Crude oil,diesel,டீசல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/zb9pki7q/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ petrol, diesel]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/zb9pki7q/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் போர் ஓய்ந்து ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டு மத்திய கிழக்கில் இருந்து கச்சா எண்ணெய் வரத்து அதிகரித்த ஒரு சில நாட்களில் மீண்டும் போர் மூண்டுள்ளதால் சர்வதேச கச்சா எண்ணெய் விலைகளில் மீண்டும் தாக்கம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.</p><h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.</p><h2>பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</h2><p>இந்நிலையில், இன்றைய (25.07.2026 - சனிக்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>Today Rasipalan | இன்றைய ராசிபலன் 25.7.2026: இவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும்</title><link>https://www.maalaimalar.com/astrology/today-rasipalan-2572026-in-tamil</link><comments>https://www.maalaimalar.com/astrology/today-rasipalan-2572026-in-tamil#comments</comments><guid isPermaLink="false">3b6bdd1f-854d-4aaf-9daf-a8a5ac817bd6</guid><pubDate>Sat, 25 Jul 2026 00:48:28 +0000</pubDate><atom:updated>2026-07-25T00:48:28.248Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-25/vb2s2e0p/rasi-6.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-25/vb2s2e0p/rasi-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ராசிபலன்(Rasipalan)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>எதிரிகளின் பலம் கூடும் நாள். எதிர்பார்த்த காரியம் நடைபெறுவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் தொல்லைகள் உண்டு.</p><h2>ரிஷபம்</h2><p>அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். அலைபேசி வழியில் ஆச்சரியப்படத்தக்க தகவல் வந்து சேரும். தொழில் முன்னேற்றம் உண்டு.</p><h2>மிதுனம்</h2><p>நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். புதிய தொழில் தொடங்கும் திட்டத்தை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் கவனம் தேவை.</p><h2>கடகம்</h2><p>தொல்லை தந்தவர்கள் தோள் கொடுத்து உதவும் நாள். தைரியத்தோடும். தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள். வருமானம் திருப்தி தரும்.</p><h2>சிம்மம்</h2><p>தேவைக்கேற்ப பணம் வந்து சேரும். உறவினர்கள் வழியில் உருவான மனக்கசப்பு அகலும். உத்தியோகத்தில் பதவி உயர்வு பற்றி சிந்திப்பீர்கள்.</p><h2>கன்னி</h2><p>அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும். தொழில் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். பிள்ளைகள் வழியில் சுபச்செய்தி வந்துசேரும்.</p><h2>துலாம்</h2><p>புது முயற்சி வெற்றி பெறும் நாள். பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். எந்தக் காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்துமுடிப்பீர்கள்.</p><h2>விருச்சிகம்</h2><p>வளர்ச்சி கூடும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். வரன்கள் வாயிற்கதவைத் தட்டும். தொழில் சீராக நடைபெறும்.</p><h2>தனுசு</h2><p>வசதிகள் பெருகும் நாள். வரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் தலைமை பொறுப்புகள் வந்து சேரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.</p><h2>மகரம்</h2><p>இனிய சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். எந்தக் காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். கூட்டு தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.</p><h2>கும்பம்</h2><p>சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும் நாள். தொலை தூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். தொழில் ரீதியாக பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.</p><h2>மீனம்</h2><p>நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். வாங்கல், கொடுக்கல்களில் கவனம் தேவை. மற்றவர்களுக்கு பொறுப்புகள் சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.</p>]]></content:encoded></item><item><title>உக்ரைன் மீது நடத்தப்பட்ட ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் 10 பேர் உயிரிழப்பு, 100 பேர் படுகாயம்</title><link>https://www.maalaimalar.com/news/world/10-killed-around-100-injured-in-russian-strike-in-ukraines-kyiv</link><comments>https://www.maalaimalar.com/news/world/10-killed-around-100-injured-in-russian-strike-in-ukraines-kyiv#comments</comments><guid isPermaLink="false">53ed1cfd-2677-45d8-8c77-c9d06923dd5a</guid><pubDate>Sat, 25 Jul 2026 00:25:28 +0000</pubDate><atom:updated>2026-07-25T00:25:28.191Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Russia,Ukraine,ரஷ்யா,உக்ரைன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/3pnein12/kyiv-Attacked.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ kyiv Attacked]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/3pnein12/kyiv-Attacked.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உக்ரைனின் கீவ் பிராந்தியத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட்ட ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர், மேலும் சுமார் 100 பேர் காயமடைந்தனர். இத்தாக்குதல் ஒரு பாதுகாப்பு துறை சார்ந்த நிகழ்வு நடைபெற்ற இடத்தில் நிகழ்ந்தது; இந்த நிகழ்வு நடத்தப்பட்டிருக்கவே கூடாது என்று அதிபர் <a href="https://www.maalaimalar.com/topic/zelenskyy">வோலோடிமிர் ஜெலென்ஸ்கி</a> கூறினார்.</p><p>தலைநகருக்கு வடக்கே அமைந்துள்ள அந்த இடத்தில் மீட்பு பணிகள் நிறைவடைந்துவிட்டதாக உக்ரைனின் அவசர சேவைகள் துறை தெரிவித்துள்ளது. அவசர சேவைகள் துறையால் இணையத்தில் வெளியிடப்பட்ட படங்களில், பல வீடுகளுக்கு அருகிலுள்ள அந்த இடத்தில் இடிபாடுகளை மீட்பு குழுவினர் அகற்றுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.</p><h2>ஏற்றுக்கொள்ள முடியாது:</h2><p>"நிச்சயமாக, இந்த தாக்குதலுக்கு காரணம் ரஷ்ய ஏவுகணைகள்தான்; இது ரஷ்யாவின் பயங்கரவாதத்தை தவிர வேறில்லை. எனினும், இத்தகைய போர்க்காலச் சூழலில், இது போன்ற ஒரு எதிரியை எதிர்கொள்ளும்போது, ​​மக்கள் பெருமளவில் கூடும் ஆயுதக் கண்காட்சிகளை - குறிப்பாக குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் - நடத்துவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று நாங்கள் ஆயிரம் முறை கூறியிருக்கிறோம்," என்று ஜெலென்ஸ்கி தனது இரவு நேர காணொளி உரையில் கூறினார்.</p><p>ட்ரோன் (ஆளில்லா விமானம்) தயாரிப்பாளர்கள் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வு, தலைநகரின் புறநகர் பகுதியில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள ஒரு இடத்தில் நடைபெற்றது.</p><h2>அதிகபட்ச பாதுகாப்பு:</h2><p>இராணுவத்தின் பொதுப் பணியாளர் பிரிவின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், இந்த நிகழ்வு தங்கள் அதிகார வரம்பிற்கு உட்படாத இடத்தில் நடைபெற்றதாக குறிப்பிட்டார். அதேவேளையில், இது போன்ற நிகழ்வுகளுக்கு "அதிகபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகள்" தேவை என்றும் அவர் கூறினார்.</p><p>கீவ் பிராந்தியத்தின் பொறுப்பு ஆளுநரான ருஸ்லான் ஒலினிக், அப்பிராந்தியத்தில் இன்று (சனிக்கிழமை) துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்தார்.</p><p>உக்ரைனின் பாதுகாப்பு துறை கவுன்சில் வெளியிட்ட தகவலின்படி, உக்ரைனின் பாதுகாப்பு துறைப் பிரதிநிதிகள் கூடியிருந்த இடத்தில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாங்கள் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்யவில்லை என்றும் அக்குழு கூறியது.</p><h2>ஏவுகணை தாக்குதல்:</h2><p>உக்ரைனின் ட்ரோன் நிறுவனமான 'ஃபர்ஸ்ட் காண்டாக்ட்'-இன் நிறுவனர் வலேரி போரோவிக், உக்ரைனிய ஊடகங்களிடம் பேசுகையில், பாதுகாப்புத் துறை கண்காட்சி நடைபெற்று கொண்டிருந்த பயிற்சி மைதானத்தின் மீது ஏவுகணை தாக்கியதாகத் தெரிவித்தார்.</p><p>உக்ரைனின் தலைமை அரசு வழக்கறிஞர் ருஸ்லான் கிராவ்சென்கோ கூறுகையில், இந்த நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்தியதில் அதிகாரப்பூர்வ கடமைகளைச் சரியாகச் செய்யத் தவறியிருக்கலாம் என்ற அடிப்படையில் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.</p><p>இதற்கிடையில், கிழக்கு உக்ரைனில் உள்ள ஸ்லோவியன்ஸ்க் (Sloviansk) நகரில் ரஷ்யாவின் வான்வழி குண்டுவீச்சுத் தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒன்பது பேர் காயமடைந்தனர் என்று பிராந்திய ஆளுநர் வாடிம் ஃபிலாஷ்கின் வெள்ளிக்கிழமையன்று தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் போட்டிகள்: போலியோ, வறுமையை  தாண்டி இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று அசத்திய ஜண்டு குமார்</title><link>https://www.maalaimalar.com/sports/jhandu-kumar-is-indias-1st-cwg-2026-medallist</link><comments>https://www.maalaimalar.com/sports/jhandu-kumar-is-indias-1st-cwg-2026-medallist#comments</comments><guid isPermaLink="false">3c2aadc9-a935-4f39-8671-0a81d8127a51</guid><pubDate>Fri, 24 Jul 2026 23:39:04 +0000</pubDate><atom:updated>2026-07-24T23:39:04.705Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காமன்வெல்த் போட்டிகள்,Jhandu Kumar,CWG 2026,ஜண்டு குமார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/v2ei1wku/Jhandu-Kumar.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜண்டு குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/v2ei1wku/Jhandu-Kumar.png?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>போலியோ, வறுமை மற்றும் பல வருடங்களாக செய்த பல்வகை வேலைகள் நிறைந்த குழந்தை பருவத்தை கடந்து, இந்தியாவின் ஜண்டு குமார், <a href="https://www.maalaimalar.com/topic/commonwealth-games">காமன்வெல்த் விளையாட்டு</a> போட்டிகளில் ஆடவர் ஹெவிவெயிட் பாரா பவர்லிஃப்டிங் பிரிவில் வெண்கல பதக்கத்தை வென்று அசத்தினார். இதன் மூலம் அவர் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்று தந்தார். </p><p>28 வயதான இவர், 181 கிலோ மற்றும் 190 கிலோ எடைகளை வெற்றிகரமாக தூக்கி, 130.9 புள்ளிகளை பெற்று பதக்க மேடையில் இடம்பிடித்தார். 196 கிலோ எடைப் பிரிவில் தனது இறுதி முயற்சியில் அவர் தோல்வியடைந்தார். இப்போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரரான சுதிர் (114.1), ஆறாவது இடத்தை பிடித்தார். நைஜீரியாவின் இட்ரிஸ் ரிலுவான் 132.8 புள்ளிகளைப் பெற்று தங்கப் பதக்கத்தையும், மேத்யூ ஹார்டிங் (131) வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.</p><h2>வெற்றி மகுடம்:</h2><p>ஐந்து வயதில் போலியோ நோயால் பாதிக்கப்பட்ட குமார், பீகாரின் நாலந்தா மாவட்டத்தில் உள்ள ஹர்னாட் கிராமத்தில், குடும்பத்தை காப்பாற்றுவதற்காக தன் பெற்றோருடன் காய்கறிகள் விற்க உதவினார். அந்த சூழலில் இருந்து அவர் அடைந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு அவரது இந்த வெற்றி மகுடம் சூட்டியது.</p><p>குறைந்த நிதி ஆதரவுடன், குமார் ஆரம்பத்தில் 2010 முதல் 2012 வரை, குண்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதலில் முயற்சி செய்வதற்கு முன்பு, வலிமையை அதிகரிப்பதற்காக மட்டுமே பளு தூக்கும் பயிற்சியை மேற்கொண்டார். இறுதியில், அவர் மாற்றுத்திறனாளிகளுக்கான பளுதூக்குதலில் தனது உண்மையான திறமையைக் கண்டறிந்தார்.</p><h2>காய்கறி வியாபாரம்:</h2><p>இருப்பினும், மிகப்பெரிய தடை உடற்பயிற்சிக் கூடத்திற்கு வெளியேதான் வந்தது. உயர்மட்டப் போட்டிகளுக்குத் தேவையான ஊட்டச்சத்தை வாங்க வசதியில்லாத குமார், சக்கர நாற்காலி சொந்தமாக இல்லாதபோதிலும், உள்ளூர் சந்தைகளுக்குச் செல்ல கிட்டத்தட்ட 20 கிலோமீட்டர் பயணம் செய்து ஒரு சிறிய காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.</p><p>பின்னர், பிழைப்புக்காக நண்பர்களிடம் கடன் வாங்கி ஒரு மின்சார ஆட்டோவை வாங்கினார், ஆனால் கோவிட்-19 பெருந்தொற்று அந்தத் திட்டங்களைச் சீர்குலைத்தது.</p><p>அவரது விடாமுயற்சிக்கு இறுதியில் பலன் கிடைத்தது. அவர் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் பதக்க மேடையில் ஏறி, மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு திட்டத்தில் இந்தியாவிற்கு ஒரு உத்வேகத்தை அளித்தார்.</p><h2>தவறிய வாய்ப்புகள்:</h2><p>முன்னதாக, ஆடவர் இலகு எடைப் பிரிவில் அசோக் மாலிக் 143.8 புள்ளிகளுடன் நான்காவது இடத்தை பிடித்து, பதக்கத்தை நூலிழையில் தவறவிட்டார்.</p><p>இந்தியாவின் பரம்ஜீத் குமார் 135.6 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தை பிடித்தார்.</p><p>மகளிர் ஹெவிவெயிட் இறுதிப் போட்டியில், கஸ்தூரி ராஜாமணி தனது மூன்று முயற்சிகளிலும் தோல்வியடைந்தார்.</p><p>மகளிர் லைட்வெயிட் இறுதிப் போட்டியில், ஜஸ்பிரீத் கவுர் மற்றும் சுமன் தேவி பதக்கங்களை வெல்ல தவறினர்.</p>]]></content:encoded></item><item><title>ஒடுக்குமுறைக்கு அஞ்சியே உண்ணாவிரதம் முடித்துக்கொள்ளப்பட்டது: வாங்சுக்</title><link>https://www.maalaimalar.com/news/national/no-deal-with-centre-ended-fast-fearing-crackdown-like-ladakh-wangchuk</link><comments>https://www.maalaimalar.com/news/national/no-deal-with-centre-ended-fast-fearing-crackdown-like-ladakh-wangchuk#comments</comments><guid isPermaLink="false">8270f9e5-d078-4a4f-9234-5ba6d3453d80</guid><pubDate>Fri, 24 Jul 2026 23:06:31 +0000</pubDate><atom:updated>2026-07-24T23:06:31.067Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>CJP Protest,Wangchuk,சிஜேபி போராட்டம்,வாங்சுக்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/90fgbr1d/Sonam-Wangchuck.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சோனம் வாங்சுக்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/90fgbr1d/Sonam-Wangchuck.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>போராட்டக்காரர்கள் மீது உடனடி ஒடுக்குமுறை ஏவப்படலாம் என்ற அச்சம் மற்றும் வன்முறையை தவிர்க்கும் நோக்கில், மத்திய அரசிடமிருந்து எழுத்துப்பூர்வமான உறுதிமொழிகளை பெற்ற பிறகு தனது 26 நாள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ள முடிவு செய்ததாக சமூக ஆர்வலர் <a href="https://www.maalaimalar.com/topic/wangchuk">சோனம் வாங்சுக்</a> தெரிவித்தார். </p><p>அப்போது, ​​செப்டம்பர் 24, 2025 அன்று லடாக்கில் இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட <a href="https://www.maalaimalar.com/topic/shoot-out">துப்பாக்கிச் சூடு</a> சம்பவத்தையும் அவர் நினைவு கூர்ந்தார்.  வெள்ளிக்கிழமை நள்ளிரவில் வெளியிடப்பட்ட யூடியூப் வீடியோவில், அரசாங்கத்துடன் தான் ஏதேனும் ஒப்பந்தம் செய்துகொண்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை வாங்சுக் மறுத்தார்.</p><h2>முதன்மை நோக்கம்:</h2><p>போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் வன்முறைக்கோ அல்லது சட்டரீதியான விளைவுகளுக்கோ ஆளாகாமல் இருப்பதை உறுதி செய்வதே தனது முதன்மை நோக்கம் என்று அவர் வலியுறுத்தினார்.</p><p>பேச்சுவார்த்தையின் போது கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று தான் கோரவில்லை என்றும், போராட்டக்காரர்கள் மீதான சட்ட நடவடிக்கைகளை தடுப்பதே தனது முன்னுரிமையாக இருந்தது என்றும் அவர் விளக்கினார். பிரதான் இறுதியில் பதவி விலகுவார் என்ற நம்பிக்கையையும் வாங்சுக் வெளிப்படுத்தினார்.</p><h2>ஒடுக்குமுறை மேற்கொள்ளப்படலாம்:</h2><p>இதுகுறித்து பேசிய வாங்சுக், "நேற்று நள்ளிரவு வாக்கில், அமைச்சர்கள் எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி அளிக்க ஒப்புக்கொண்டதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது. டெல்லியில் நிலவிய சூழல் காரணமாக நான் அவசரமாக செயல்பட வேண்டியிருந்தது; ஒரு பெரிய ஒடுக்குமுறை நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சம் இருந்தது.</p><p>செய்திகளைப் பார்த்தபோது, ​​செப்டம்பர் 24, 2025 அன்று லடாக் இளைஞர்கள் மீது காவல் துறையினர் மற்றும் சி.ஆர்.பி.எஃப். (CRPF) வீரர்கள் இரக்கமின்றி துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் நினைவுக்கு வந்தது. இங்கும் அதுபோன்ற ஒன்று நடக்கக்கூடுமோ என்று நான் அஞ்சினேன். உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டு அமைதிக்கு அழைப்பு விடுத்தால், சூழல் தணியக்கூடும் என்று நான் கருதினேன்.</p><p>நான் ஒரு ஒப்பந்தத்தைச் செய்துகொள்ள வேண்டியிருந்திருந்தால், 26 நாட்கள் பட்டினியாக இருந்திருப்பேனா? டெல்லியின் வெப்பத்தில் உண்ணாவிரதம் இருப்பதற்கு பதிலாக, குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்தே ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டிருக்கலாமே?</p><h2>எழுத்துப்பூர்வ உறுதிமொழி:</h2><p>அவர்கள் ஆரம்பத்தில் இழப்பீடு மற்றும் நாடாளுமன்ற விவாதத்திற்கு ஒப்புக்கொண்டனர், ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படாது என்று உறுதியளிக்க தயாராக இல்லை. அவர்கள் வாய்மொழி உறுதிமொழியை மட்டுமே அளித்தனர். நான் எழுத்துப்பூர்வமான உறுதிமொழியை வலியுறுத்தினேன்; அவர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளும் வரை நான் பணியவில்லை.</p><p>மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதிலேயே என் கவனம் இருந்தது. சட்ட நடவடிக்கைகள் மற்றும் எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யப்படுவது குறித்தே நான் அதிகம் கவலைப்பட்டேன். அமைச்சரின் பதவி விலகலை நான் தனிப்பட்ட முறையில் உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்று நான் நினைக்கவில்லை.</p><p>எனக்கு ஆதரவளிக்க வந்திருந்த எனது சகாக்கள், மாணவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நான் உண்ணாவிரதத்தை முடிக்கும்போது அங்கு இருக்க முடியாமல் போனதுதான் என் மனதிற்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது," என்று அவர் கூறினார்.</p><h2>காலவரையற்ற உண்ணாவிரதம்:</h2><p>அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யாதது குறித்தும், தேர்வு சீர்திருத்தங்கள் மற்றும் வினாத்தாள் கசிவுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்துவது குறித்தும், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை தொடர்ந்து தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்தும் சாதகமான நிலைப்பாட்டை மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்ததை தொடர்ந்து, வியாழக்கிழமை நள்ளிரவுக்கு பிறகு வாங்சுக் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.</p><p>போட்டி தேர்வுகளில் முறைகேடுகள், கல்வி முறையில் சீர்திருத்தங்கள் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி 'காக்ரோச் ஜனதா கட்சி' தலைமையிலான போராட்டத்தில் இணைந்த பிறகு, ஜூன் 28-ஆம் தேதி முதல் அவர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் குறித்து நீதித்துறை விசாரணை: ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் குழு கோரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/retired-civil-servants-seek-judicial-probe-into-use-of-pellet-guns-on-student-protesters</link><comments>https://www.maalaimalar.com/news/national/retired-civil-servants-seek-judicial-probe-into-use-of-pellet-guns-on-student-protesters#comments</comments><guid isPermaLink="false">56b995e6-95d1-4823-9a13-8b9a807a0a2b</guid><pubDate>Fri, 24 Jul 2026 22:27:54 +0000</pubDate><atom:updated>2026-07-24T22:27:54.924Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>CJP Protest,சிஜேபி போராட்டம்,ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள்,Retired civil servants</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/jjeprs78/cjp-protestors.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ போராட்டக்காரர்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/jjeprs78/cjp-protestors.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் ஜூலை 20-ஆம் தேதியன்று <a href="https://www.maalaimalar.com/topic/cjp-protest">மாணவர் போராட்டக்காரர்கள்</a> மீது காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கை குறித்து சுதந்திரமான நீதித்துறை விசாரணை நடத்த வேண்டும் என 93 ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் அடங்கிய குழு கோரிக்கை விடுத்துள்ளது.</p><p>ஆயுதமற்ற போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் பெல்லட் துப்பாக்கிகள், மின்சார தடியடிகள் மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகளை சட்டவிரோதமாகவும், வரம்பு மீறியும் பலத்தை பயன்படுத்திய <a href="https://www.maalaimalar.com/topic/police">அதிகாரிகள்</a> மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 'அரசியலமைப்பு நடத்தை குழு' அழைப்பு விடுத்துள்ளது.</p><h2>குழுவினர் விவரம்:</h2><p>பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா மற்றும் டெல்லி காவல்துறை ஆணையர் எஸ்.பி.கே. சிங் ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில், கடந்த திங்களன்று நடைபெற்ற 'சன்சத் சலோ' பேரணியின் போதும் அதற்கு பின்னரும் டெல்லி காவல்துறை மற்றும் விரைவு அதிரடி படையினர் வரம்பு மீறிய பலத்தை பயன்படுத்தியதாகவும், இதனால் பல போராட்டக்காரர்கள் படுகாயம் அடைந்ததாகவும் அந்த அரசு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>கையெழுத்திட்டவர்களில் டெல்லியின் முன்னாள் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங், முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, முன்னாள் வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர் மேனன், பிரதமர் அலுவலகத்தின் முன்னாள் சிறப்பு அதிகாரி ஏ.எஸ். துலத், பஞ்சாபின் முன்னாள் டி.ஜி.பி. ஜூலியோ ரிபேரோ, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஹர்ஷ் மந்தர் மற்றும் பல ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். மற்றும் பிற மூத்த அரசு அதிகாரிகள் அடங்குவர்.</p><h2>அறுவை சிகிச்சை:</h2><p>கண் மற்றும் கழுத்தில் இருந்து பெல்லட்களை அகற்ற ஒரு இளம் போராட்டக்காரருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது என்றும், காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 15 வயது குழந்தையும் அடங்கும் என்றும் அந்த குழு கூறியது.</p><p>"டெல்லி காவல்துறை மற்றும் விரைவு அதிரடிப் படை (RAF) வீரர்கள், போராட்டக்காரர்களுக்கு எதிராக பெல்லட் துப்பாக்கிகள், மின்சார தடியடிகள் மற்றும் கண்ணீர்ப் புகை குண்டுகளை பயன்படுத்தியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. </p><p>இதன் விளைவாக, கண் மற்றும் கழுத்தில் இருந்து பெல்லட்களை அகற்ற அறுவை சிகிச்சை தேவைப்பட்ட ஒரு இளம் போராட்டக்காரர் உட்பட பல இளைஞர்கள் பலத்த காயமடைந்தனர். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 15 வயது குழந்தையும் அடங்கும்," என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.</p><h2>பாலியல் இடையூறு:</h2><p>முன்னாள் அரசு ஊழியர்கள் மேலும் கூறுகையில், பெயர் அடையாள அட்டை இல்லாதவர்கள் மற்றும் சாதாரண உடையில் இருந்தவர்கள் உட்பட பல டெல்லி காவல்துறை மற்றும் RAF வீரர்கள், ஆணிகள் பதிக்கப்பட்ட தடிகளால் போராட்டக்காரர்களை "இரக்கமின்றி" தாக்கியதாக குற்றம் சாட்டினர்.</p><p>மேலும், குறைந்தது ஒரு காவலராவது பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியதுடன், அந்த அதிகாரியை அடையாளம் கண்டு அவருக்கு முன்மாதிரியான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் கோரினர்.</p><p>கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தபோதிலும் போராட்ட இடத்திற்கு அருகில் "கற்கள் நிரம்பிய லாரி" ஒன்று இருந்தது குறித்தும், காவல்துறையினர் கல்வீச்சில் ஈடுபட்டதாக கூறப்படும் விவகாரம் குறித்தும், மேலும் போராட்டக்காரர்கள் வளைத்து பிடிக்கப்பட்டு வழக்கறிஞர்களை சந்திக்க வாய்ப்பளிக்கப்படாமலேயே ஒரு காவல் நிலையத்தில் இருந்து மற்றொரு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டனர் என்பது குறித்தும் அந்த கடிதம் கேள்வி எழுப்பியது.</p>]]></content:encoded></item><item><title>பாலியல் குற்றச்சாட்டு: சர்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்கறிஞர் பதவிநீக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/world/icc-chief-prosecutor-removed-from-post-over-sexual-misconduct-allegations</link><comments>https://www.maalaimalar.com/news/world/icc-chief-prosecutor-removed-from-post-over-sexual-misconduct-allegations#comments</comments><guid isPermaLink="false">7eb7fb09-9647-4c02-8408-c273b48d7909</guid><pubDate>Fri, 24 Jul 2026 21:48:03 +0000</pubDate><atom:updated>2026-07-24T21:48:03.244Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ICC,சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்,தலைமை வழக்கறிஞர்,chief prosecutor</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/q42tilts/Karim-Khan.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கரீம் கான்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/q42tilts/Karim-Khan.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) தலைமை வழக்கறிஞர் மீதான பாலியல் முறைகேடு புகார்கள் எழுந்து ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கு உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் வாக்களித்ததாக இரண்டு தூதர்கள் 'அசோசியேட்டட் பிரஸ்' (AP) செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.</p><p>பிரிட்டிஷ் வழக்கறிஞரான கரீம் கான், ஒரு பெண் உதவியாளரிடம் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டார்; இது குறித்த செய்திகளை AP தொடர்ச்சியாக வெளியிட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டுகளை கான் உறுதியாக மறுத்து வந்துள்ளார். </p><p>ICC-யின் 125 உறுப்பு நாடுகளின் பெரும்பான்மையான ஆதரவுடன் கான் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்; ஒரு தலைமை வழக்கறிஞர் பதவியில் இருந்து நீக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.</p><h2>தற்காலிக பணிநீக்கம்:</h2><p>நீதிமன்றத்தின் மேற்பார்வை அமைப்பின் நிர்வாக குழு வெளியிட்ட அறிக்கையில் கான் "தீவிரமான முறைகேட்டில்" ஈடுபட்டது கண்டறியப்பட்டதை தொடர்ந்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்புக்கு முன்னதாகவே, ஜூன் மாதத்தில் அவர் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தார். </p><p>AP பார்த்த ஆவணங்களின்படி, கான் அந்த பெண்ணுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும், அவர் தனது குற்றச்சாட்டுகளை தொடர்வதை தடுக்க முயன்றதாகவும் தெரியவந்துள்ளது. இந்த கண்டுபிடிப்புகளை கான் மறுக்கிறார்.</p><p>மனிதகுலத்திற்கு எதிரான மிக மோசமான குற்றங்களுக்கு பொறுப்பானவர்களை தண்டிப்பதற்காக நிறுவப்பட்ட ICC-யை "கலைக்க" அமெரிக்கா மேற்கொள்ளும் பிரச்சாரம் உள்ளிட்ட பெரும் சவால்களை நீதிமன்றம் எதிர்கொண்டுள்ள நிலையில், இந்த நீண்ட மற்றும் சிக்கலான செயல்முறை மனித உரிமை ஆர்வலர்கள், ஊழியர்கள் மற்றும் உறுப்பு நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகளை உருவாக்கியுள்ளது.</p><h2>விரிவான பிரச்சாரம்:</h2><p>கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில், "அமெரிக்காவின் இறையாண்மைக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விடுத்துள்ள அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான விரிவான பிரச்சாரத்தை" அமெரிக்கா தொடங்கவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.</p><p>உறுப்பு நாடுகள் இந்த அமைப்பிலிருந்து விலகவும், நீதிமன்றத்துடன் இணைந்து செயல்படும் அமைப்புகள் மீது தடைகளை விதிக்கவும், நீதிமன்ற ஊழியர்கள் அமெரிக்காவிற்குள் பயணம் செய்வதை தடை செய்யவும் அழுத்தம் கொடுக்கப்போவதாக ரூபியோ கூறினார். "அமெரிக்காவின் பாதுகாப்பு குடையின் கீழ் பலன் பெறும்" நாடுகள், அமெரிக்க குடிமக்கள் மீதான நீதிமன்றத்தின் அதிகார வரம்பை நிராகரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படும்.</p>]]></content:encoded></item><item><title>ராமர் உட்பட அனைத்தையும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். வணிகமாக மாற்றுகின்றன: சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/national/cpim-gen-secy-said-sangh-parivar-bjp-rss-turn-everything-into-business</link><comments>https://www.maalaimalar.com/news/national/cpim-gen-secy-said-sangh-parivar-bjp-rss-turn-everything-into-business#comments</comments><guid isPermaLink="false">6c11c8d4-6108-45f4-a872-be7e5d11f768</guid><pubDate>Fri, 24 Jul 2026 21:10:47 +0000</pubDate><atom:updated>2026-07-24T21:10:47.329Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,CPI(M),CJP Protest,சிஜேபி போராட்டம்,சிபிஐ எம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/0wk6ku0v/ma-baby.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ma baby]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/0wk6ku0v/ma-baby.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சங் பரிவார், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. ஆகியவை அனைத்தையும் வணிக அல்லது வர்த்தக நடவடிக்கையாக மாற்றுவதாகவும், இது ஊழலுக்கு வழிவகுப்பதாகவும் <a href="https://www.maalaimalar.com/topic/cpim">சி.பி.ஐ. எம்</a> பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி குற்றம் சாட்டினார்.</p><p>டெல்லியில் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' (CJP) அமைப்புக்கு ஆதரவாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பேபி, ஆர்.எஸ்.எஸ். மற்றும் <a href="https://www.maalaimalar.com/topic/bjp">பா.ஜ.க.</a> ஆகியவை ராமர் விவகாரத்தை கூட வணிகமயமாக்கியுள்ளதாக குறிப்பிட்டார்.</p><h2>குற்றச்சாட்டு:</h2><p>இது குறித்து பேசிய சி.பி.ஐ.(எம்) பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி, "அயோத்தியில் ராமர் கோயில் ஏன் கட்டப்பட்டது என்பது நம் அனைவருக்கும் தெரியும். மத ரீதியான பிளவுகளை உருவாக்கியது மட்டுமின்றி, அது ஊழலுக்கும் வழிவகுத்தது என்பதை நாம் சமீபத்தில் கண்டோம். சங் பரிவார், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. ஆகியவை அனைத்தையும் வணிகமாக மாற்றுகின்றன," என்று கூறினார்.</p><p>கோயிலுக்கு வழங்கப்பட்ட பக்தர்கள் காணிக்கைகள் மற்றும் மதிப்புமிக்க பொருட்களில் பல கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தை அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>டெல்லியில் மாணவர்கள் மற்றும் சி.ஜே.பி. (CJP) ஆர்வலர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு கூட, நுழைவு தேர்வுகளை நடத்துவதில் நிலவும் ஊழலே அடிப்படை காரணம் என்று கூறிய பேபி, அந்த தேர்வுகளும் "வணிகமாக மாற்றப்பட்டுவிட்டன" என்று தெரிவித்தார்.</p><h2>சிஜேபி போராட்டம்:</h2><p>நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுக்க ஒவ்வொரு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கண்டன போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். </p><p>இந்த சம்பவம் காரணமாக நாடு முழுக்க பெரும் பரபரப்பான சூழல் நிலவுகிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அமளிகளால் தினந்தோரும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.</p><p>ஒருபக்கம் ஜந்தர் மந்தர் போராட்டக்களத்தில் மாணவர்கள் மீது காவல் துறை அடக்குமுறை தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகின்றன. மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், நாடு முழுக்க பரபரப்பான சழல் ஏற்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இன்ஸ்டா வீடியோவுக்கு நல்ல வரவேற்பு: பொது மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி!</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-thanks-people-for-responses-positive-suggestions-received-for-midnight-video</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-thanks-people-for-responses-positive-suggestions-received-for-midnight-video#comments</comments><guid isPermaLink="false">d37af75b-70f7-4467-8f51-c043122118e5</guid><pubDate>Fri, 24 Jul 2026 19:24:18 +0000</pubDate><atom:updated>2026-07-24T19:24:18.621Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Inside Out 2,pm modi,பிரதமர் மோடி,இன்ஸ்டாகிராம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/esuf4zvg/pm-modi-15.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/esuf4zvg/pm-modi-15.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஈடுபடுபவர்களை தண்டிக்க கடுமையான சட்டத்தை கொண்டுவருவதற்கான அரசின் முடிவை அறிவித்து பிரதமர் <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">நரேந்திர மோடி</a> வெளியிட்ட காணொளிக்கு கிடைத்த வரவேற்பு மற்றும் ஆக்கபூர்வமான ஆலோசனைகளுக்காக அவர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். </p><p><a href="https://www.maalaimalar.com/topic/paper-leaks">வினாத்தாள் கசிவு</a> விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கான அம்சங்களை உள்ளடக்கிய புதிய மசோதா ஒன்று, அடுத்த வாரம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று அந்த காணொளி செய்தியில் மோடி குறிப்பிட்டார்.</p><h2>இன்ஸ்டா ரீல்:</h2><p>வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைக்கு இடைப்பட்ட இரவில் பிரதமர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த காணொளியில் அறிவித்த மசோதாவின் வரைவுக்கு, வெள்ளிக்கிழமையன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.</p><p>"நண்பர்களே, நன்றி. நள்ளிரவில் உங்களுடன் பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. எனது காணொளிக்கு நீங்கள் அளித்த வரவேற்பு மற்றும் ஆக்கபூர்வமான ஆலோசனைகளுக்கு அனைவருக்கும் நன்றி. உங்கள் அன்பு தொடர்ந்து கிடைக்கட்டும்; நம்மிடையேயான உறவு மேலும் வலுப்பெறட்டும். நன்றி, நன்றி நண்பர்களே," என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் வாயிலாக வெளியிடப்பட்ட புதிய காணொளி செய்தியில் அவர் கூறினார்.</p><h2>புதிய சாதனை:</h2><p>24 மணி நேரத்தில் ஒரு 'ரீல்' காணொளிக்கு அதிகபட்ச பார்வைகளைப் பெற்றதன் மூலம் மோடி புதிய உலக சாதனை படைத்துள்ளார்; இதுவரை இக்காணொளி 303 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. இதற்கு முந்தைய சாதனை 300 மில்லியன் பார்வைகளாக இருந்தது.</p><p>தேர்வு தொடர்பான முறைகேடுகள் புகாரை தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' (CJP) தலைமையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் 'சான்சத் சலோ' (நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணி) போராட்டத்தில் ஈடுபட்ட நான்கு நாட்களுக்கு பிறகு, மோடி இந்த காணொளியை வெளியிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>கருங்கடலில் வர்த்தக கப்பல் மீது தாக்குதல் - இந்தியர் உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/indian-killed-in-attack-on-commercial-vessel-in-black-sea</link><comments>https://www.maalaimalar.com/news/national/indian-killed-in-attack-on-commercial-vessel-in-black-sea#comments</comments><guid isPermaLink="false">de040bdd-216e-4b1e-8a19-ce8e7942f476</guid><pubDate>Fri, 24 Jul 2026 18:06:48 +0000</pubDate><atom:updated>2026-07-24T18:06:48.774Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>black sea,கருங்கடல்,commercial vessel,வர்த்தக கப்பல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/ts1cl02n/mv-omorfi-attatcked.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MV OMORFI Attacked]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/ts1cl02n/mv-omorfi-attatcked.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கருங்கடலில் உள்ள ரஷ்யாவின் கடல் எல்லை பகுதி வழியாக சென்று கொண்டிருந்த வணிக கப்பல் ஒன்றின் மீது ஜூலை 18 அன்று நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்ததாக <a href="https://www.maalaimalar.com/topic/mea">வெளியுறவு அமைச்சகம்</a> தெரிவித்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/ukraine">உக்ரைன்</a> கடற்கரைக்கு அப்பால் ஜூலை 19-ஆம் தேதியன்று வணிக கப்பல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பேர் உயிரிழந்ததாகவும், அதில் நான்கு இந்தியர்கள் அடங்குவர் என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்த சில நாட்களிலேயே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p><h2>இந்தியர் உயிரிழப்பு:</h2><p>"ஜூலை 18 அன்று, 'எம்வி ஓமோர்ஃபி' (MV OMORFI) என்ற வணிக கப்பல் கருங்கடலில் - ரஷ்யாவின் கடல் எல்லைப் பகுதிக்குள் - சென்று கொண்டிருந்தபோது தாக்கப்பட்ட தகவல் எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இந்த சம்பவத்தின்போது, ​​கப்பலில் மூன்று இந்தியர்கள் உட்பட மொத்தம் 10 பணியாளர்கள் இருந்தனர்," என்று வெளியுறவு அமைச்சகம் கூறியது.</p><p>"கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, இத்தாக்குதலில் ஒரு இந்தியர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். கப்பலில் இருந்த மற்ற இரண்டு இந்தியர்களும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது," என்று அது வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகம் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க முயற்சித்து வருவதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.</p><h2>இந்தியா வலியுறுத்தல்:</h2><p>"வணிகக் கப்பல்களைக் குறிவைப்பதையும், அப்பாவி பணியாளர்களின் உயிரை ஆபத்துக்குள்ளாக்குவதையும் இந்தியா உறுதியாக கண்டிக்கிறது. கடல்வழி போக்குவரத்து மற்றும் சர்வதேச வர்த்தகத்தின் சுதந்திரம் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது தீவிர கவலைக்குரிய விஷயமாகும்," என்று அது கூறியது.</p><p>"கடல்வழிப் போக்குவரத்தின் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய வர்த்தகத்தின் தடையற்ற ஓட்டத்தை உறுதி செய்வதற்கான சர்வதேச கடமைகளை நிறைவேற்றுமாறு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் இந்தியா வலியுறுத்துகிறது," என்றும் வெளியுறவு அமைச்சகம் மேலும் தெரிவித்தது.</p><p>ஜூலை 19 அன்று 'எம்வி கோல்டன் லியோ' (MV Golden Leo) கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு இந்தியர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து, மத்திய அரசு ரஷ்யாவின் தூதரகப் பொறுப்பாளரைசெவ்வாய்க்கிழமை அன்று வரவழைத்து விளக்கம் கேட்டிருந்தது.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-24-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-24-july-2026#comments</comments><guid isPermaLink="false">9e297809-3778-431a-83e7-2d092abe8672</guid><pubDate>Fri, 24 Jul 2026 03:41:33 +0000</pubDate><atom:updated>2026-07-24T17:18:26.227Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/zz39nvcd/TodayLive0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Today Live News]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/zz39nvcd/TodayLive0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/us-military-says-its-launching-new-strikes-on-iran-as-clashes-escalate-over-shipping-routes">ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம்: புதிய தாக்குதல் நடத்திய அமெரிக்கா- ஹவுதிக்கு டிரம்ப் எச்சரிக்கை</a></p><p>* செங்கடலில் இரண்டு எண்ணெய் கப்பல்கள் மீது ஹவுதி தாக்குதல்</p><p>* ஈரான் மற்றும் ஹவுதிகள் ஆகிய இரு தரப்பினர் மீதும் கடுமையான ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்- டிரம்ப்</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/modi-govt-treating-students-seeking-accountability-as-enemies-of-nation-sonia-gandhi">மோடி அரசு மாணவர்களை நாட்டின் எதிரிகளாக நடத்துகிறது: சோனியா காந்தி குற்றச்சாட்டு</a></p><p>* மாணவர்களின் கோரிக்கைகள் மிகத் தெளிவானவை மற்றும் நேரடியானவை.</p><p>* இந்திய அரசிடமிருந்து பொறுப்புக்கூறல் மற்றும் கல்விச் சீர்திருத்தத்தை கேட்டார்கள்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/annamalai-announce-new-partys-name-and-flag-next-month">புதிய கட்சியின் பெயர், கொடியை அடுத்த மாதம் அறிவிக்கிறார் அண்ணாமலை</a></p><p>* தூத்துக்குடியில் 2-வது மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது.</p><p>* தமிழகம் முழுவதும் ‘வீ த லீடர்ஸ்' குழுவினர் தொண்டர்களை சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறார்கள்.&nbsp;</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-exam-paper-leak-issue-key-decision-to-be-taken-at-cabinet-meeting-pm-modi">நீடிக்கும் மாணவர்கள் போராட்டம்: இன்று அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் - பிரதமர் மோடி</a></p><p>* நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>* தேர்வு முறையை மாற்றியமைப்பது தொடர்பாக அமைச்சரவை  கூட்டத்தில் விவாதிக்கப்படும்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/rahul-urges-modi-remove-dharmendra-pradhan-first">வீடியோ வெளியிட்டு அவமதிப்பதா? - தர்மேந்திர பிரதானை முதலில் நீக்குங்கள்: மோடிக்கு ராகுல் வலியுறுத்தல்</a></p><p>* பிரதானை பதவியிலிருந்து நீக்குங்கள்.</p><p>* மாணவர்களை தாக்கியவர்களை தண்டியுங்கள்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/cjp-protest-wangchuk-shares-govt-assurance-no-cases-against-peaceful-july-20-protesters">ஜூலை 20-ந்தேதி போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்குகள் கிடையாது: மத்திய அரசின் உத்தரவாதத்தை பகிர்ந்த வாங்சுக்</a></p><p>* ஜூலை 20-ந்தேதி மாணவர்கள், இளைஞர்கள் நாடாளுமன்றம் நோக்கி முற்றுகை போராட்டம் பேரணி நடத்தினர்.</p><p>* நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்றால் போலீசார் தடியடி நடத்தினர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tho-thirumavalavan-vck-protest-august-27-support-students">மாணவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் 27-ந்தேதி விசிக ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் அறிவிப்பு</a></p><p>* போராடிவரும் மாணவர்களின் கோரிக்கைகளான கல்வி மந்திரி தர்மேந்தர பிரதான் பதவி விலக வேண்டும். </p><p>* போராடிய மாணவர்கள் மீது வன்முறைத் தாக்குதலை நடத்தியவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/wtc-final-2027-moved-to-the-oval">உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்: ஓவல் மைதானத்தில் இறுதிப்போட்டி</a></p><p>* கடந்த 2023-25 சீசனில் தென் ஆப்ரிக்கா அணி சாம்பியன் பட்டம் வென்றது.</p><p>* உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி நான்காவது முறையாக இங்கிலாந்தில் நடக்க உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/flood-like-situation-worsens-in-gujarat-22000-relocated-1200-rescued-as">குஜராத்தை துவம்சம் செய்த இடைவிடாத கனமழை: 1200 பேர் மீட்பு, 22 ஆயிரம் பேர் இடம்பெயர்வு</a></p><p>* வால்சாட் மாவட்டத்தில் உள்ள உம்பேர்கான் தாலுகா இந்த கனமழையால் கடுமையாக பாதித்தது. இங்கு 36 மணி நேரத்தில் 1200 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.</p><p>* அகமதாபாத்தில் உள்ள 22 தாலுக்காவில் 12 மணி நேரத்தில் 200 மி.மீ.-க்கு அதிகமான மழை பதிவாகியுள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-appears-in-court-after-one-month">தவெக அரசை கவிழ்க்க முயன்ற வழக்கு - நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி ஆஜர்</a></p><p>* சோதனை, விசாரணை என்ற பெயரில் எங்களை துன்புறுத்தக்கூடாது என்று போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்</p><p>* முன்ஜாமின் வழங்கப்பட்டும் இதுவரை மனுதாரர்கள் கீழ் கோர்ட்டில் சரணடைந்து முன்ஜாமின் பெறவில்லை. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/prisoner-death-at-kilpauk-mental-hospital">கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் கைதி அடித்துக்கொலை</a></p><p>* மனநல காப்பகத்தில் அரவிந்தசாமி கைதிக்கும் ஜாகிருக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.</p><p>* தலை மற்றும் முகத்தில் பலத்த காயமடைந்த ஜாகிர் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். </p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/bengal-border-force-jawan-kills-2-colleagues">மேற்கு வங்காளத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் சுட்டுக்கொலை</a></p><p>* சிவம்குமார் மிஸ்ராவை எல்லை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.</p><p>* காயம் அடைந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் பிகாஸ் பிரம்மா சிகிச்சை பெற்று வருகிறார்.&nbsp;</p> <p><a href="https://www.maalaimalar.com/sports/india-games-in-commenwealth-today">காமன்வெல்த் விளையாட்டு: இந்தியா இன்று பங்கேற்கும் போட்டிகள்</a></p><p>* இந்தியா சார்பில் 126 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது.</p><p>* இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா உள்பட 74 நாடுகளில் இருந்து 3 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர் </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-students-started-discussing-rahul-said-regarding-neet-exam-issue">நீட் தேர்வு பிரச்சனையில் ராகுல் கூறியதை மாணவர்கள் பேச தொடங்கி உள்ளனர் - மாணிக்கம் தாகூர்</a></p><p>* ராகுல் காந்தியை பொருத்தமட்டில், தமிழ்நாட்டுக்கு நீட் கிடையாது என்பதில் தெளிவாக இருக்கிறார். </p><p>* ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவர் ஆன பிறகு, மோடி அரசு வந்ததில் இருந்து 152 முறை பேப்பர் லீக் ஆகி இருக்கிறது.</p>  <p><a href="https://www.maalaimalar.com/news/national/400-year-old-cannon-stolen-at-gunpoint-in-madhya-pradesh">மத்திய பிரதேசத்தில் 400 ஆண்டுகள் பழமையான பீரங்கி துப்பாக்கி முனையில் கொள்ளை</a></p><p>* பீரங்கியை ஏற்றி சென்ற லாரி ராஜஸ்தானுக்கு சென்றது கண்டறியப்பட்டுள்ளது.</p><p>* சந்தேகிக்கப்படும் இடங்களில் தேடுதல் வேட்டை தீவிரமாக நடக்கிறது. </p> <p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/india-to-lead-the-series-tomorrow-second-t20-match">நாளை 2-வது டி20 போட்டி: ஜிம்பாப்வேக்கு எதிராக தொடரை வெல்லுமா இந்தியா?</a></p><p>* ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையில் இந்திய அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.</p><p>* டி20 தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/lok-sabha-adjourned-for-the-day-amid-opposition-protest-on-various-issues">எதிர்க்கட்சிகள் கடும் அமளி: மக்களவை நாள்முழுவதும் ஒத்திவைப்பு</a></p><p>* அவையின் செயல்பாடுக்கு இடையூறு விளைவிக்காதீர்கள் என சபாநாயகர் ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்தார்.</p><p>* சனி, ஞாயிறு என இரு நாள் விடுமுறைக்குப் பிறகு மக்களவை இனி திங்கள்கிழமை கூடுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/space-constraints-proposal-to-relocate-chennai-secretariat"> இட நெருக்கடி - தலைமை செயலகத்தை இடமாற்றம் செய்ய ஆலோசனை</a></p><p>* சட்டசபைக்கு வந்து செல்லும் எம்.எல்.ஏ.க்கள் அமரும் அறைகளும் சிறிய அறைகளாகவே உள்ளன.</p><p>* பட்டினப்பாக்கத்தில் உள்ள காலி இடத்தை தேர்வு செய்யலாமா? என்று ஆலோசிக்கப்பட்டது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/cji-kant-no-plea-filed-on-cjp-protest-police-action">மாணவர்களுக்கு எதிரான போலீசார் நடவடிக்கை தொடர்பாக மனு தாக்கல் செய்யப்படவில்லை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி</a></p><p>* சமீபத்தில் எந்தவொரு ஆவணமும் தாக்கல் செய்யப்படாத நிலையில் இந்த விவகாரம் எங்கள் முன் குறிப்பிடப்பட்டது.</p><p>* நான் பதிவகத்தில் சரிபார்த்தேன். உச்ச நீதிமன்றத்தில் ஒரு பக்கத்தில் கூட மனு தாக்கல் செய்யப்பட்டதாக குறிப்பிடப்படவில்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/students-protest-condemning-irregularities-in-neet-exam">நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து மாணவர்கள் தொடர் போராட்டம்</a></p><p>* மாநிலக் கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். </p><p>* மெரினா கடற்கரையில் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணித்து வருகிறார்கள்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/special-train-to-run-between-tambaram-and-tenkasi">பயணிகள் கவனத்திற்கு... தாம்பரம்-தென்காசி இடையே அதிவிரைவு சிறப்பு ரெயில் இயக்கம்</a></p><p>* வியாழன் மற்றும் சனிக்கிழமையில் வாரத்தில் 2 நாட்கள் இந்த சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. </p><p>* தென்காசியில் இருந்து வருகிற 31-ந்தேதி, ஆகஸ்ட் 2, 7, 9, 14,16 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. </p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/a-bill-proposing-a-three-year-prison-sentence-for-disrespecting-the-vande-mataram-song-has-been-introduced-in-the-rajya-sabha">வந்தே மாதர பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் மசோதா மாநிலங்களவையில் அறிமுகம்!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/central-government-seeks-time-until-tomorrow-to-deliberate-on-dharmendra-pradhans-resignation">தர்மேந்திர பிரதான் ராஜினாமா குறித்து ஆலோசனை செய்ய நாளைவரை அவகாசம் கோரிய மத்திய அரசு!</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/pm-modi-conveys-best-wishes-to-indian-contingent-participating-in-commonwealth-games-in-glasgow">காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து</a></p><p>* காமன்வெல்த் போட்டிகளில் 3 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர் .</p><p>* இந்தியா சார்பில் 126 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது. இதில் 78 பேர் வீரர்கள், 48 வீராங்கனைகள்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/ashes-2027-list-of-venues-announced-southampton-to-host-fourth-test">இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மோதும் ஆஷஸ் தொடர் அட்டவணை அறிவிப்பு</a></p><p>* ஆஷஸ் டெஸ்ட் தொடருக்​கான அட்​ட​வணையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரி​யம் வெளி​யிட்டது. </p><p>* முதல் போட்டி​ அடுத்த ஆண்டு ஜூன் 18 முதல் 22 வரை நடக்கிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/christopher-nolans-the-odyssey-earns-over-rs-100-crore-at-box-office">ஒரே வாரத்தில் இந்தியாவில் 100 கோடி வசூலித்த ‘தி ஒடிசி'</a></p><p>* தமிழகத்தில் நோலனின் படங்களுக்கு எப்போதும் தனி இடமுண்டு. </p><p>* தமிழ்நாட்டில் இத்திரைப்படம் மிரட்டலான வரவேற்பைப் பெற்றுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/bangladesh-politics-shock-president-shahabuddin-resigns-amid-sheikh-hasina-return-row">வங்கதேச ஜனாதிபதி திடீர் ராஜினாமா.. பின்னணியில் ஷேக் ஹசீனா?</a></p><p>*ஏப்ரல் 2023இல் ஷஹாபுதீன் வங்கதேச ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  </p><p>*ஹசீனாவை மீண்டும் தொடர்பு கொள்ள முயற்சி மேற்கொண்டதால் அவர் மீதான அரசின் அதிருப்தி அதிகரித்தது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/sudden-landslide-in-himachal-13-dead-including-a-6-month-old-infant">இமாச்சலில் திடீர் நிலச்சரிவு - 6 மாதக்குழந்தை உட்பட 13 பேர் பரிதாப பலி!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/protest-intensifies-nta-removes-47-officials-en-masse">தீவிரமடைந்த போராட்டம் - 47 அதிகாரிகளை கூண்டோடு தூக்கிய NTA!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/four-custodial-deaths-in-the-last-five-weeks-chief-minister-vijay-remains-silent">கடந்த 5 வாரங்களில் 4 லாக்கப் மரணங்கள்... வாய்திறவாத முதலமைச்சர் விஜய்!</a></p>]]></content:encoded></item><item><title>ஜந்தர் மந்தரில் தலைமை காவலர் உயிரிழக்கவில்லை! வைரல் பதிவுகளுக்கு காவல் துறை விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/national/claim-of-woman-head-constables-death-during-jantar-mantar-protest-fake-delhi-police</link><comments>https://www.maalaimalar.com/news/national/claim-of-woman-head-constables-death-during-jantar-mantar-protest-fake-delhi-police#comments</comments><guid isPermaLink="false">7c6f4a3d-44bc-4351-b9f2-7cb51ef37f76</guid><pubDate>Fri, 24 Jul 2026 17:14:41 +0000</pubDate><atom:updated>2026-07-24T17:14:41.411Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>police,காவல் துறை,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/1en8am6y/cjp-protest-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CJP Protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/1en8am6y/cjp-protest-1.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜந்தர் மந்தர் போராட்டத்தின்போது பெண் தலைமை காவலர் ஒருவர் உயிரிழந்ததாகக் கூறும் சமூக வலைதள பதிவு ஒன்றை டெல்லி <a href="https://www.maalaimalar.com/topic/police">காவல்துறை</a> போலியானது என்று அறிவித்தது.</p><p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுக்க பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியாக <a href="https://www.maalaimalar.com/topic/neet-exam">நீட் தேர்வு</a> வினாத்தாள் கசிந்ததை தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்று வருகிறது. </p><h2>கடும் போராட்டம்:</h2><p>மேலும், நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுக்க ஒவ்வொரு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கண்டன போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக நாடு முழுக்க பெரும் பரபரப்பான சூழல் நிலவுகிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அமளிகளால் தினந்தோரும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.</p><p>ஒருபக்கம் ஜந்தர் மந்தர் போராட்டக்களத்தில் மாணவர்கள் மீது காவல் துறை அடக்குமுறை தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகின்றன. இந்த நிலையில், ஜந்தர் மந்தர் போராட்டக்களத்தில் பெண் தலைமை காவல் உயிரிழந்ததாக கூறும் சமூக வலைதள பதிவு வேகமாக பரவியது.</p><h2>காவல் துறை விளக்கம்:</h2><p>இந்த நிலையில், அத்தகைய சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த பதிவு தீய நோக்கத்துடன் பரப்பப்பட்டது என்றும் தெரிவித்தது.</p><p>இத்தகைய பொய்யான தகவல்களை உருவாக்குவோர், பரப்புவோர் அல்லது மேலும் பகிர்வோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்த காவல்துறை, சரிபார்க்கப்படாத தகவல்களை நம்பவோ அல்லது பகிரவோ வேண்டாம் என்று பொதுமக்களை கேட்டுக்கொண்டது.</p><h2>பணிநீக்கம்:</h2><p>முன்னதாக, "நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக தேசிய தேர்வு முகமை 47 அதிகாரிகளை பணியிலிருந்து நீக்கியது. இவர்களில் சில அதிகாரிகள் மீது சட்ட மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளும் எடுக்கப்படும். </p><p>வினாத்தாள் கசிவு சர்ச்சையில் சிக்கியுள்ள NTA-வின் முழுமையான சீரமைப்பின் ஒரு பகுதியே இது," என ஏ.என்.ஐ. தெரிவித்தது.</p><p>நீட், ஜேஇஇ, க்யூட் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நுழைவுத் தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்துவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>ஆதாரம் இல்லை.. 2024 நீட் வினாத்தாள் கசிவில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டவருக்கு நீதிமன்றத்தில் சிபிஐ நற்சான்று</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-case-cbi-says-no-evidence-against-sanjeev-in-2024-scam</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-case-cbi-says-no-evidence-against-sanjeev-in-2024-scam#comments</comments><guid isPermaLink="false">71900733-e92e-4e19-b5bf-8e6479d0599b</guid><pubDate>Fri, 24 Jul 2026 16:18:15 +0000</pubDate><atom:updated>2026-07-24T16:18:15.491Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சிபிஐ,cbi,நீட் தேர்வு,Neet exam,நீட் வினாத்தாள் கசிவு,NEET Question Paper Leak</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/xl3atp2p/tn-9.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சஞ்சீவ் குமார்]]></media:title><media:description type="html"><![CDATA[ சஞ்சீவ் குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/xl3atp2p/tn-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p> 2024ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் வினாத்தாள் கசிவு வழக்கின் முக்கிய சூத்திரதாரியாக சந்தேகிக்கப்பட்ட சஞ்சீவ் குமாருக்கு எதிராக எனது ஆதாரமும் கிடைக்கவில்லை என  சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது. </p><h2> பின்னணி </h2><p>பீகாரில் 2024 நீட் வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டிகளை விசாரித்த சிபிஐ, பட்னா நீதிமன்றத்தில் 45 பேருக்கு எதிராக பல குற்றப்பத்திரிகைகளை  தாக்கல் செய்தது.</p><p>தொடக்கத்தில் பீகார் மாநில காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் சஞ்சீவின் பெயர் சேர்க்கப்பட்டது.</p><p>வழக்கு விசாரணையை ஏற்றுக்கொண்ட பின் சிபிஐ, பலரை விசாரணை செய்ததோடு, டிஜிட்டல் ஆதாரங்கள் மற்றும் நிதிப் பரிவர்த்தனைகளை தீவிரமாக ஆய்வு செய்தது. </p><p>ஆனால், சஞ்சீவ் இந்தக் குற்றத்துடன் நேரடியாகத் தொடர்புபடுத்தும் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என சிபிஐ தற்போது தெரிவித்துள்ளது.</p><h2>சிபிஐ</h2><p>சிபிஐ கூறியதாவது, "விசாரணையின் முதற்கட்ட கட்டத்தில் சஞ்சீவ் மீது சந்தேகம் இருந்தது உண்மைதான். அவர் வேறு சில வினாத்தாள் கசிவு வழக்குகளில் தொடர்புடையவர் என்பதால், இதிலும் அவருக்குப் பங்கு இருக்கலாம் எனக் கருதப்பட்டு பீகார் போலீஸ் எப்ஐஆரில் பெயர் சேர்க்கப்பட்டது. </p><p>ஆனால், முறையான விசாரணைக்குப் பிறகு அவருக்கும் இந்த 2024 நீட் வினாத்தாள் கசிவுக்கும் நேரடித் தொடர்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளது." எனத் தெரிவித்துள்ளது. </p><p>இருப்பினும் வேறு சில வழக்குகளில் குற்றவாளியாக உள்ளதால் அவர் தொடர்ந்து நீதித்துறை காவலில்  இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது. </p><h2>2026 நீட் வினாத்தாள் கசிவு</h2><p>ஒருபுறம் 2024 வழக்கின் விசாரணைகள் முடிவுக்கு வந்து கொண்டிருக்கும் வேளையில்,<a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-anitha-legacy-tamil-voices-at-jantar-mantar-demand-education-ministers-resignation-and-exam-exemption"> 2026 நீட் வினாத்தாள் கசிவு </a>வழக்கு தொடர்பான விசாரணையைச் சிபிஐ தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது.</p><p>பல்வேறு மாநிலங்களில் இருந்து பல முக்கியக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்வு வினாத்தாள்களைக் கசியவிடும் நெட்வொர்க்கை உடைக்க விசாரணை விரைவாக நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக சிஜேபி கட்சி தலைமையில் டெல்லியில் போராட்டம் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும் நிலையில் 2024 வழக்கில் முக்கிய குற்றவாளி என கருத்தப்பட்டவருக்கு சிபிஐ நற்சான்றிதழ் வழங்கியுள்ளது விவாதப்பொருளாக மாறிவருகிறது.</p>]]></content:encoded></item><item><title>தரமான செய்கை.. அனிருத் இசையில் லோகேஷ் நடித்த &apos;டிசி&apos; படத்தின் மியூசிக் ஆல்பம் வெளியீடு </title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/dc-movie-lokesh-kanagaraj-turns-hero-in-ultra-violent-action-film-releasing-august-7</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/dc-movie-lokesh-kanagaraj-turns-hero-in-ultra-violent-action-film-releasing-august-7#comments</comments><guid isPermaLink="false">03e1bb6a-0222-47bb-a21a-766674932cdb</guid><pubDate>Fri, 24 Jul 2026 16:02:09 +0000</pubDate><atom:updated>2026-07-24T16:02:09.429Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DC,லோகேஷ் கனகராஜ்,Lokesh Kanagaraj,arun matheswaran,டிசி,அருண் மாதேஸ்வரன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/alpv8uir/tn-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ DC]]></media:title><media:description type="html"><![CDATA[ DC]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/alpv8uir/tn-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாநகரம், கைதி, விக்ரம், லியோ, கூலி ஆகிய படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக உயர்ந்தவர் லோகேஷ் கனகராஜ்.</p><p>இவர் தற்போது கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். ராக்கி, சாணி காயிதம், கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஷ்வரன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு '<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/dc-movie-gets-a-certificate-release-date-shifted-to-august-7-worldwide">DC</a>' என பெயரிடப்பட்டுள்ளது.</p><p>சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை வாமிகா கபி நடித்துள்ளார். ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் இசையில் இப்படம் உருவாகியுள்ளது.</p><h2>டிரெய்லர்</h2><p>லோகேஷ் 'தேவதாஸ்' கதாபாத்திரத்திலும், வாமிகா 'சந்திரா' கதாபாத்திரத்திலும் நடித்துள்ள படத்தின் 'பிளடி வாலண்டைன்' ப்ரோமோ காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகியிருந்தது.</p><p>மே 15 அன்று DC படத்தின் ரத்தம் தெறிக்கும் வகையிலான மிரட்டல் டிரெய்லர் வெளியானது.</p><p>அருண் மாதேஸ்வரனின் சாணி காயிதம் போலவே இப்படமும் அதீத வன்முறையான கதைக்களம் மற்றும் காட்சியமைப்பில் நகர்கிறது.</p><h2>ரிலீஸ்</h2><p>மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் இத்திரைப்படத்தை பார்வையிட்டு  'A' சான்றிதழ் வழங்கியது.</p><p>டிசி படம் ஜூலை 31 அன்று வெளியாகும் என முதலில் கூறப்பட்டிருந்த நிலையில் தேதி தள்ளிவைக்கப்பட்டு தற்போது ஆகஸ்ட் 7 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இப்படம் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.</p> <h2>பாடல்கள்</h2><p>‘டிசி’ படத்தின் ‘பூம் பா டிகா டிகா’ பாடல் அண்மையில் வெளியாகிருந்தது. அனிருத், வேடன் இணைந்து பாடிய இப்பாடலை ஹெய்ஸன்பர்க் மற்றும் வேடன் எழுதியுள்ளனர். </p><p>அடுத்ததாக வெளியான 'ராகா ஆப் ரிவெஞ்’ , மற்றும் ‘ஹேங் ஓவர்’ பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது.</p><p>இந்நிலையில், ‘டிசி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. </p><p>இதைத்தொடர்ந்து அனைத்து பாடல்களையும் சன் பிக்ர்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. படத்தின் 15 பாடல்களையும் ஆல்பமாக படக்குழு வெளியிட்டுள்ளது.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">The wait is over! Finally, The <a href="https://x.com/hashtag/DC?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#DC</a> Audio is Out Now! Experience the electrifying album!♥️<br><br> <a href="https://t.co/wNVQP8xXiP">https://t.co/wNVQP8xXiP</a> <a href="https://x.com/hashtag/DC?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#DC</a> releasing worldwide August 7th<a href="https://x.com/Dir_Lokesh?ref_src=twsrc%5Etfw">@Dir_Lokesh</a> <a href="https://x.com/ArunMatheswaran?ref_src=twsrc%5Etfw">@ArunMatheswaran</a> <a href="https://x.com/anirudhofficial?ref_src=twsrc%5Etfw">@anirudhofficial</a> <a href="https://x.com/hashtag/WamiqaGabbi?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WamiqaGabbi</a> <a href="https://x.com/isanjkayy?ref_src=twsrc%5Etfw">@isanjkayy</a> <a href="https://x.com/mukesh_DOP?ref_src=twsrc%5Etfw">@mukesh_DOP</a> <a href="https://x.com/editor_prasanna?ref_src=twsrc%5Etfw">@editor_prasanna</a> <a href="https://x.com/skannanartdir?ref_src=twsrc%5Etfw">@skannanartdir</a>… <a href="https://t.co/CqU5Qhbppx">pic.twitter.com/CqU5Qhbppx</a></p>&mdash; Sun Pictures (@sunpictures) <a href="https://x.com/sunpictures/status/2080638824233783795?ref_src=twsrc%5Etfw">July 24, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>ஜந்தர் மந்தர் போராட்டத்தில் அனிதாவின் அண்ணன்!.. நீட் தேர்வை தடை செய்ய வலியுறுத்தல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-protest-anitha-legacy-tamil-voices-at-jantar-mantar-demand-education-ministers-resignation-and-exam-exemption</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-protest-anitha-legacy-tamil-voices-at-jantar-mantar-demand-education-ministers-resignation-and-exam-exemption#comments</comments><guid isPermaLink="false">48d8aa31-6835-40bf-a1c7-e6f4f7b98a59</guid><pubDate>Fri, 24 Jul 2026 15:48:55 +0000</pubDate><atom:updated>2026-07-24T15:48:55.839Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நீட் தேர்வு,Neet exam,நீட் வினாத்தாள் கசிவு,NEET Question Paper Leak,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/eb230k8x/tn-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ manirathnam, anitha]]></media:title><media:description type="html"><![CDATA[ manirathnam, anitha]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/eb230k8x/tn-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தின் அரியலூர் மாவாட்டத்தில் 2017-இல் அணைந்த ஓர் நெருப்பு இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் வரை கனன்றுகொண்டிருக்கிறது.</p><p>நீட் தேர்வினால் ஏற்பட்ட அழுத்தத்தில் 2017 செப்டம்பர் 1 அன்று தற்கொலை செய்துகொண்ட 17 வயது மாணவி அனிதாவை தமிழகத்தால் மறந்திருக்க முடியாது. அரசியல் கடந்து தமிழர்கள் அனைவரையும் உலுக்கிய அனிதா தற்கொலை நீட் வேண்டாம் என்ற நிலைப்பாட்டின் ஆரம்பப்புள்ளியாக மாறியது. </p><p>12ஆம் வகுப்பில் 1200 க்கு 1,176 மதிப்பெண்கள் பெற்று மருத்துவ படிக்குக்கான கட் ஆப்பில் 200க்கு 196.75 எடுத்திருந்தார் அனிதா. ஆனால் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதால் மருத்துவ கனவை அடையும் மேலும் ஒரு படியாக அத்தேர்வை எழுத வேண்டிய சூழல் ஏற்பட்டது.  ஆனால் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற அனிதாவால், மத்திய அரசின் பாடத்திட்டத்தில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டு நடத்தப்பட்ட தேர்வில் போதிய மதிப்பெண் ஈட்ட முடியாமல் போனது.  </p><p>தமிழகத்தில் நீட் தேர்வு வேண்டாம் என்று உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தவர்களின் அவரும் ஒருவர். ஆனால் நீதிமன்றம் அதற்கு இசையை மறுத்தது. இதனால மனமுடைந்த அவர் உயிரை மாய்த்துக்கொண்டார். நீட் எதிர்ப்பின் முகமாக அனிதா மாறினார்.</p><p>இன்றைய தமிழக முதல்வர் விஜயும் நடிகராக இருந்த அந்த சமயத்தில் அனிதா வீட்டிற்கு சென்று அவரின் பெற்றோருக்கு ஆறுத தெரிவித்திருந்தார்.</p><p>இந்நிலையில் இந்த ஆண்டு மே 3 அன்று நடத்தப்பட்ட நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டு ஜூன் 21 மறுதேர்வு நடத்தப்பட்டது. இதற்கிடையில் கடும் மன அழுத்தத்தில் நாடு முழுவதும் 20 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இவ்வாண்டு மட்டுமின்றி, கட்டாயமாக்கப்பட்டதில் இருந்து பல மாணவ மாணவிகள் நீட் தேர்வினால் தங்கள் இன்னுயிரை மாய்துகொண்டுள்ளனர்.</p> <h2>போராட்டம்</h2><p>இதனிடையே வினாத்தாள் கசிவு மாணவர்களை கோபமும் விரக்தியும் கொள்ளச் செய்தது. அது அதிகாரத்தில் இருப்போர், இந்த முறைகேடுகளுக்கு <a href="https://www.maalaimalar.com/news/national/delhi-protest-pellet-gun-row-youth-allege-brutal-police-action-as-government-denies-use">பொறுப்புக்கூற </a>மறுப்போர் மீதான கோபமாக மாறி இன்று வீதிகளில் வெளிப்பட்டு கொண்டிருக்கிறது. அமைதியான முறையில்.</p><p>நீட் மற்றும் பிற தேர்வு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி சிஜேபி ஜூன் 20 முதல் முன்னெடுத்த போராட்டம் வெற்றியடையும் தருவாயில் உள்ளது.</p><p>இந்த விவகாரத்தில் மௌனம் காத்த பிரதமர் மோடி நேற்று இரவு வீடியோ ஒன்றை வெளியிட்டு, முறைகேடுகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள், வினாத்தாள் கசிவை தடுக்க மசோதா உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார். இருந்தபோதும் மத்திய கல்வி அமைச்சர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என சிஜேபி அறிவித்துள்ளது.</p><p>டெல்லி ஜந்தர் மந்தரில் திரண்டுள்ள இளைஞர்கள் சிரமங்களை புறந்தள்ளி தங்கள் மன உறுதியுடன் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். அங்குள்ள இளைஞர்களில் பல தமிழர்களும் அடங்குவர். அப்படி ஒருவர் தான் மணிரத்தினம். அனிதாவின் அண்ணன். ஆம் அன்று அரியலூரில் தற்கொலை செய்துகொண்ட அதே 17 வயது மாணவியின் அண்ணன்.</p><h2> ஜந்தர் மந்தரில் மணிரத்னம்</h2><p>9 வருடங்கள் முன் தன் தங்கையை இழந்த மணிரத்னம், இன்று லட்சோபலட்சம் தங்கைகளின் எதிர்காலத்திற்காக ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளார்.</p><p>போராட்டக் களத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், " வினாத்தாள் கசிவு தொடங்கி தொலைதூரத்தில் தேர்வு மையம் ஒதுக்குவது போன்ற சின்ன சின்ன தவறுகள் 25 லட்சம் பேரை (இந்தாண்டு மே 3 நீட் தேர்வு எழுதியோர் எண்ணிக்கை 25 லட்சம்- மறுதேர்வில் 20 லட்சம் பேர் மட்டுமே பங்கேற்றனர்) பாதித்துள்ளது. இது ஒரு தோல்வி அடைந்த மாடல்.</p><p>கல்வி அமைச்சரின் ராஜினாமா சிறிய படி தான். அது அவரின் பொறுப்பு. ஆனால் அது மட்டும் போதாது. எங்களுக்கு நீட் தேர்வில் இருந்து முழு விலக்கு வேண்டும். நீட் தேர்வை தடை செய்யுங்கள். நீட் தேர்வு என்பது விளிம்புநிலை மக்களுக்கு எதிரானது. பொருளாதாரத்தில் நலிந்த மற்றும் கிராமப்புற மக்களுக்கு எதிரானது" என்று உறுதிபட தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>மத்திய ரயில்வே இணையமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு திடீர் ராஜினாமா!</title><link>https://www.maalaimalar.com/news/national/union-minister-of-state-for-railways-ravneet-singh-bittu-resigns-suddenly</link><comments>https://www.maalaimalar.com/news/national/union-minister-of-state-for-railways-ravneet-singh-bittu-resigns-suddenly#comments</comments><guid isPermaLink="false">04b3b62d-1b52-4f0c-997b-2e09926173ec</guid><pubDate>Fri, 24 Jul 2026 15:34:17 +0000</pubDate><atom:updated>2026-07-24T15:34:17.138Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>resign,ராஜினாமா,Ravneet Singh Bittu,ரவ்னீத் சிங் பிட்டு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/hwidbgxh/New-Project-2026-07-24T205039.954.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மத்திய ரயில்வே இணையமைச்சர் வ்னீத் சிங் பிட்டு திடீர் ராஜினாமா!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/hwidbgxh/New-Project-2026-07-24T205039.954.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய ரயில்வே மற்றும் உணவு பதப்படுத்துதல் துறை இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு தனது பதவியை இன்று (ஜூலை.24) திடீரென ராஜினாமா செய்துள்ளார்.</p><p>அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும்  உடனடியாக ஏற்றுக்கொண்டுள்ளதாக ராஷ்டிரபதி பவன் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>“இந்திய அரசியலமைப்பின் 75வது பிரிவின் (2) உட்பிரிவின் கீழ், பிரதமரின் ஆலோசனையின்படி, ரவ்னீத் சிங்  ராஜினாமாவை இந்திய குடியரசுத் தலைவர் உடனடியாக ஏற்றுக்கொண்டார்,”  என்று ராஷ்டிரபதி பவன் செய்திக்குறிப்பு தெரிவித்தது.</p><p>பஞ்சாபின் முன்னாள் முதலமைச்சர் பீன்ட் சிங்கின் பேரனான இவர், 2024-ல் பாஜகவில் இணைந்து, மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார். பின்னர் ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  </p><p>ஜூன் 21 ஆம் தேதியுடன் இவரது பதவிக்காலம் முடிவடைந்தது. நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத ஒரு நபர் அதிகபட்சமாக 6 மாதங்கள் மட்டுமே அமைச்சராக நீடிக்க முடியும் என்ற விதி இருந்தாலும், அவர் தனது பதவியை தற்போது ராஜினாமா செய்துள்ளார். </p><p>அடுத்த ஆண்டு பஞ்சாபில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும், அதற்கான பணிகளில் ஈடுபடுவதற்காக தற்போது ராஜினாமா செய்ததாகவும் கூறப்படுகிறது. </p><p>அதேவேளையில் தற்போதைய தேர்தலில் இவருக்கு மீண்டும் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>தீவிரமடைந்த போராட்டம் - 47 அதிகாரிகளை கூண்டோடு தூக்கிய NTA!</title><link>https://www.maalaimalar.com/news/national/protest-intensifies-nta-removes-47-officials-en-masse</link><comments>https://www.maalaimalar.com/news/national/protest-intensifies-nta-removes-47-officials-en-masse#comments</comments><guid isPermaLink="false">295181b8-217c-4283-90ae-2091e7a3e3af</guid><pubDate>Fri, 24 Jul 2026 15:14:23 +0000</pubDate><atom:updated>2026-07-24T15:14:23.387Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>NTA,தேசிய தேர்வு முகமை,paper leaks,வினாத்தாள் கசிவுகள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/xq3i16e8/New-Project-2026-07-24T203316.252.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தீவிரமடைந்த போராட்டம் - 47 அதிகாரிகளை கூண்டோடு தூக்கிய NTA!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/xq3i16e8/New-Project-2026-07-24T203316.252.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு சர்ச்சையைத் தொடர்ந்து, கல்வித்துறையில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ளும் ஒரு பகுதியாக, தேசிய தேர்வு முகமை 47 அதிகாரிகளை கூண்டோடு பணிநீக்கம் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. </p><p>“தேசிய தேர்வு முகமை 47 அதிகாரிகளைப் பணியிலிருந்து நீக்கியுள்ளது. இவர்களில் சில அதிகாரிகள் மீது சட்ட மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளும் எடுக்கப்படும். வினாத்தாள் கசிவு சர்ச்சையில் சிக்கியுள்ள NTA-வின் முழுமையான சீரமைப்பின் ஒரு பகுதியே இது.” என ஏஎன்ஐ தெரிவித்துள்ளது. </p><p>தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைமையில் நாடு தழுவிய மாணவர் போராட்டம் நடைபெற்று வருவதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p>நீட், ஜேஇஇ, க்யூட் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நுழைவுத் தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்துவது குறிப்பிடத்தக்கது. </p><h2>வினாத்தாள் கசிவு வரைவு மசோதா</h2><p>வினாத்தாள் திருட்டில் ஈடுபடுபவர்களுக்கு இனி ரூ.10 கோடி அபராதமும், 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கும் வரைவு மசோதாவிற்கு இன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.</p><p>வரும் திங்கள்கிழமையன்று மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கலாகவும் உள்ளது. </p><p>அனுமதிக்கப்பட்ட 39 பணியிடங்களில் 24 நிரந்தர ஊழியர்கள், 73 ஒப்பந்த ஊழியர்கள், 124 வெளிப்பணியாளர்களை வைத்து தேசிய தேர்வு முகமை இயங்கி வருவதாக நேற்று முன்தினம் மத்திய கல்வி அமைச்சகம் மக்களவையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 12 ராணுவ வீரர்கள் உட்பட 15 பேர் பலி!</title><link>https://www.maalaimalar.com/news/world/suicide-attack-in-pakistan-15-killed-including-12-soldiers</link><comments>https://www.maalaimalar.com/news/world/suicide-attack-in-pakistan-15-killed-including-12-soldiers#comments</comments><guid isPermaLink="false">e51ea3e9-59b7-41e1-b2d0-327bc7b178f6</guid><pubDate>Fri, 24 Jul 2026 14:48:12 +0000</pubDate><atom:updated>2026-07-24T14:48:12.840Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Pakistan,Suicide Bomb,தற்கொலைப் படை தாக்குதல்,தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான்,Tehreek-e-Taliban Pakistan</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/o8j5o42h/New-Project-2026-07-24T201715.628.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 12 ராணுவ வீரர்கள் உட்பட 15 பேர் பலி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/o8j5o42h/New-Project-2026-07-24T201715.628.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வடமேற்கு பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள டாங்க் மாவட்டத்தில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 15 பேர் பலியாகியுள்ளனர். உயிரிழந்த 15 பேரில் 12 ராணுவ வீரர்கள், 2 போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஒரு வனத்துறை அரசு அதிகாரி அடங்குவர். </p><p>தீவிரவாதிகள், வெடிபொருட்கள் நிரம்பிய வாகனத்தை பாதுகாப்பு சோதனைச் சாவடியின் சுவரில் மோதி வெடிக்க செய்ததில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதற்குப் பதிலடியாக 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. </p><p>இந்த கொடூரத் தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் எனப்படும் உள்ளூர் தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. வாகனத்தில் நான்கு தற்கொலை தாக்குதல்வாதிகள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளது.</p><p>பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் சமீபகாலமாக தீவிரவாதத் தாக்குதல்கள் கணிசமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>நீதிமன்ற விசாரணைகளை சமூக வலைதளங்களில் பதிவேற்ற உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை! </title><link>https://www.maalaimalar.com/news/national/supreme-court-imposes-interim-stay-on-uploading-court-proceedings-to-social-media</link><comments>https://www.maalaimalar.com/news/national/supreme-court-imposes-interim-stay-on-uploading-court-proceedings-to-social-media#comments</comments><guid isPermaLink="false">497ae7fe-3965-4fb3-ab34-d19615ea893f</guid><pubDate>Fri, 24 Jul 2026 14:19:20 +0000</pubDate><atom:updated>2026-07-24T14:19:20.954Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,உச்ச நீதிமன்றம்,Court hearing,நீதிமன்ற விசாரணைகள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/hiw32guf/New-Project-2026-07-24T190605.266.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நீதிமன்ற விசாரணைகளை சமூக வலைதளங்களில் பதிவேற்ற உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை! ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/hiw32guf/New-Project-2026-07-24T190605.266.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீதிமன்ற விசாரணைகளின் ஒலி மற்றும் காணொலி பதிவுகளை உரிய அனுமதியின்றி சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதற்கும், பகிர்வதற்கும் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. </p><p>தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்ஷி, மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.</p><p>டிஜிட்டல் தளங்களில் நீதிமன்ற நடவடிக்கைகளின் ஒலி மற்றும் காணொளிப் பதிவுகளைப் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகளை விதிக்கக்கோரி, செய்தியாளர் ஹர்ஷிதா குரோவர் தாக்கல் செய்த பொது நல மனுவின் அடிப்படையில் இந்த உத்தரவு வந்துள்ளது.</p><p>இருப்பினும், செய்தி ஊடகங்கள் மற்றும் அறிக்கையிடல் பணிகளுக்கு இந்த உத்தரவால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளது.</p><h2>24 மணிநேரமும் இயங்கும் பொழுதுபோக்கு ஊடகமல்ல...</h2><p>“ஒரு இடைக்கால நடவடிக்கையாக, இந்த நீதிமன்றத்தின் பொதுச் செயலாளர் அல்லது அதிகார வரம்புக்குட்பட்ட உயர் நீதிமன்றங்களின் பதிவாளர் முன் அனுமதியின்றி, நீதித்துறை நடவடிக்கைகளின் ஒலி-ஒளிப் பதிவுகளை சமூக ஊடகங்கள் அல்லது பிற டிஜிட்டல் தளங்களில் பதிவிடுதல், பகிர்தல், மறுபதிவிடுதல், எடிட் செய்தல், மாற்றியமைப்பது, பணமாக்குதல் ஆகியவை செய்யப்படக்கூடாது என்று உத்தரவிடப்படுகிறது.</p><p>இது நீதிமன்றத்தின் 24 மணி நேர பொழுதுபோக்கு சேனலாக இருக்க முடியாது.” என அமர்வு தெரிவித்துள்ளது. </p><p>மேலும் இதுதொடர்பான வழிகாட்டுதல்கள் கொண்ட அறிக்கையை சமர்பிக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ள நீதிமன்றம்,</p><p>விசாரணை தொடர்பாக இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள், நீதித்துறையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும், நீதிமன்ற நடவடிக்கைகளைத் திரிக்கும் வகையிலும் பயன்படுத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>இமாச்சலில் திடீர் நிலச்சரிவு - 6 மாதக்குழந்தை உட்பட 13 பேர் பரிதாப பலி!</title><link>https://www.maalaimalar.com/news/national/sudden-landslide-in-himachal-13-dead-including-a-6-month-old-infant</link><comments>https://www.maalaimalar.com/news/national/sudden-landslide-in-himachal-13-dead-including-a-6-month-old-infant#comments</comments><guid isPermaLink="false">c618cadf-48d6-4f3e-90f6-8ff861812745</guid><pubDate>Fri, 24 Jul 2026 13:59:52 +0000</pubDate><atom:updated>2026-07-24T13:59:52.568Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>landslide,himachal,நிலச்சரிவு,இமாச்சல் பிரதேசம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/2149eufw/New-Project-2026-07-24T190834.113.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இமாச்சலில் திடீர் நிலச்சரிவு - 6 மாதக்குழந்தை உட்பட 13 பேர் பரிதாப பலி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/2149eufw/New-Project-2026-07-24T190834.113.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இமாச்சலப் பிரதேசத்தின் லாஹவுல்-ஸ்பிடி மாவட்டத்தில், இன்று நிகழ்ந்த பயங்கர நிலச்சரிவில் சிக்கி 6 மாதக்குழந்தை உட்பட 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. </p><p>உதய்பூர்-கில்லர் வழித்தடத்தில் உள்ள கஹு-து நாலா அருகே இந்த விபத்து நடந்துள்ளது.  இமாச்சலில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மலையின் ஒரு பகுதி திடீரெனச் சரிந்து, குலுவிலிருந்து பாங்கிக்குச் சென்று கொண்டிருந்த டாடா சுமோ வாகனம்மீது ராட்சதப் பாறைகள் விழுந்துள்ளன. </p><p>இதில் வாகனம் சம்பவ இடத்திலேயே பாறைகளுக்கு அடியில் புதைந்துள்ளது. தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை, மீட்புக் குழுவினர், காயமடைந்த ஒருவரைப் பத்திரமாக மீட்டனர். இருப்பினும் அவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். </p><p>இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தற்போது பெய்து வரும் கனமழையின் போது, ​​நிலச்சரிவு அபாயம் உள்ள சாலைகளில் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறும், மலைப்பகுதியில் பயணம் மேற்கொள்வதற்கு முன்பு அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் பார்மோர் சட்டமன்ற உறுப்பினர் ஜனக் ராஜ் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். </p><p>உயிரிழந்தவர்களுக்கு அம்மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு இரங்கல் தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குமாறும், காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யுமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அமைதிக்கு குந்தகம்.. இணைய சேவை இல்லாமலே இயங்கும் BitChat தகவல் பரிமாற்ற செயலிக்கு மத்திய அரசு தடை! </title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-protest-bitchat-ban-centre-blocks-bluetooth-app-amid-internet-shutdown-and-neet-row</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-protest-bitchat-ban-centre-blocks-bluetooth-app-amid-internet-shutdown-and-neet-row#comments</comments><guid isPermaLink="false">dcabe09b-fa94-4abd-b9f9-f0bc44ccd8c8</guid><pubDate>Fri, 24 Jul 2026 13:45:34 +0000</pubDate><atom:updated>2026-07-24T13:45:34.977Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Internet service shutdown,இணைய சேவை முடக்கம்,CJP Protest,சிஜேபி போராட்டம்,பிட்சாட்,bitchat</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/5zq7pgbb/tn-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ BitChat ]]></media:title><media:description type="html"><![CDATA[ BitChat ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/5zq7pgbb/tn-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தொழில்நுட்பம் (Technology)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் ஜூன் 20 முதல் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகிறது. நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதே அவர்களின் <a href="https://www.maalaimalar.com/news/national/delhi-protest-pellet-gun-allegations-youth-march-faces-harsh-police-crackdown-and-expired-tear-gas">பிரதான கோரிக்கை. </a></p><p>அவர்களுக்கு ஆதரவாக கடந்த ஜூன் 28 முதல் உண்ணாவிரதம் இருந்து வந்தார் கல்வியாளர் சோனம் வாங்சுக். </p><p>அவரின் உண்ணாவிரதத்தை 20வது நாளில் டெல்லி போலீசாரால் வலுக்கட்டாயமாக தூக்கிச்செல்லப்பட்டு மருத்துவமமனையில் அனுமதிக்கப்பட்டார்.  </p><p>அவருக்கு ஆதரவாகவும் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையிலும் நாடு முழுவதும் இருந்து பலர் குரல் கொடுத்தனர். </p><p>கடந்த ஜூலை 20 அன்று நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடரின் முதல் நாளில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்ற இளைஞர்களை காவல்துறை மற்றும் ஆர்ஏஎப் படையினர் கொடூரமான முறையில் லத்திகளால் தாக்கினர். </p><p>கண்ணீர் புகைகுண்டுகளை பிரயோகித்து மாணவர்களை கலைக்க முயன்றனர். மேலும் பெல்லட் துப்பாக்கிகள், ஆணிகள் பொருத்திய லத்திகள் பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. </p><p>சீருடையற்ற நபர்களும் கையில் லத்திகளுடன் மாணவர்களை தாக்கிய வீடியோக்களும் வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியது. </p><p>இளைஞர்கள் மீதான தாக்குதலுக்கு நாடு முழுவதிலும் பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்த தாக்குதலை அடுத்து போராட்டம் மேலும் வலுப்பெற்றது. நாடு முழுதும் டெல்லியில் போராடும் இளைஞர்களுக்காக போராட்டங்கள் நடத்தப்படுகிறது. அழுத்தம் அதிகரித்த நிலையில் மௌனம் கலைத்த பிரதமர் மோடி, நேற்று இரவு வீடியோ ஒன்றை வெளியிட்டார். </p> <p>அதில் நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும் வினாத்தாள் கசிவை தடுக்க சிறப்பு மசோதா இயற்றப்படும் என்றும் வாக்குறுதியளித்தார். </p><p>இதனைதொடர்ந்து மருத்துவமனையில் ஜேபி நட்டா, ஜிதேந்திர சிங் உள்ளிட்ட அமைச்சர்கள் சோனம் வாங்சுக்கை சென்று சந்தித்ததை அடுத்து அவர் தனது 26 நாட்கள் போராட்டத்தை நேற்றிரவு முடித்துக்கொண்டார்.</p><p>ஜூலை 20 அன்று பேரணி சென்ற மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படாது என மத்திய அரசு தனக்கு உறுதியளித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>இதனிடையே, தர்மேந்திர பிராதான் கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகும் வரை ஜந்தர் மந்தரில் தங்கள் போராட்டம் தொடரும் என சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே அறிவித்துள்ளார். இன்று ஜேபி நட்டாவை சந்தித்த சிஜேபி பிரதிநிதிகள் அதேயே வலுயுறுத்தினர்.</p> <h2>இணைய சேவை முடக்கம்</h2><p>மறுபுறம் போராட்டம் தீவிரமடைவதை தடுக்க, மத்திய அரசு இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. ஜந்தர் மந்தர் பகுதியை சுற்றிலும் இணைய சேவை முடிக்கப்பட்டுள்ளது. இதனால் சமூக ஊடங்களின் மூலம் போராட்டத்திற்கு விடுக்கப்படும் அழைப்புகள் மூலம் அங்கு மேலும் பலர் வருவதை தடுக்கும் நோக்கத்தில் இணைய சேவைகள் முடக்கப்பட்டது.</p><p>ஆனால் இளைஞர்கள் இந்த இணைய சேவை முடக்கத்தை சாமர்த்தியமாக பைபாஸ் செய்து இணையம் தேவைப்படாத செயலிகள் மூலமும் பிற வகையிலும் வெளியுலக தொடர்பை தக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p>அதிலும் குறிப்பாக கிட்ஹப் நிறுவனத்தின் பிட்சாட் செயலி இணைய தேவை இன்று முற்றிலும் புளூடூத் மூலம் இயங்கக்கூடுய ஒரு தகவல் பரிமாற்ற ஊடகம் ஆகும்.</p><p>இணையம் முற்றிலும் துண்டிக்கப்பட்ட சூழலிலும், புளூடூத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அருகிலுள்ள மொபைல் போன்களுக்கு இடையே நேரடியாக செய்திகளை பரிமாறிக் கொள்ள இது உதவுகிறது.</p><p>இந்த லூப் ஹோலை பலரும் பயன்படுத்தத்தொடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் நிலையில் விழித்துக்கொண்ட மத்திய அரசு அச்செயலிக்கு தடை விதித்துள்ளது.</p><p>பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலும், சட்டவிரோதக் கூட்டங்களை ஒருங்கிணைக்கவும் இச்செயலி பயன்படுத்தப்படும் ஆபத்து அதிகம் உள்ளதாக அந்த செயலியை வரையறுத்துள்ள மத்திய அரசு பிட் சாட்டை முடக்கக்கோரி கிட் ஹப் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.</p> <h2>பிட் சாட் - ஜாக் டோர்சி</h2><p>எக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான ஜாக் டோர்சியால் உருவாக்கப்பட்டதே இந்த 'பிட்சாட்' செயலியாகும்.</p><p>மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் 'இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம்'நேற்று இது தொடர்பான நோட்டீஸை அனுப்பியுள்ளது.</p><p>தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 மற்றும் ஐ.டி விதிகள் 2021ன் கீழ் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>பிட்சாட்டின் பிரதான Repository மற்றும் ஆண்ட்ராய்டு பதிப்புகளை 3 மணி நேரத்திற்குள் தடையுறுத்துமாறு அனுப்பப்பட்ட அந்த நோட்டீசின் ஸ்க்ரீன் ஷாட்களை ஜாக் டோர்சி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.</p><p>டெல்லியில் இணையம் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் பிட்சாட் செயலியைப் பயன்படுத்தினார்களா என்பது குறித்து டெல்லி காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.</p><p>இருப்பினும், போராட்டக்காரர்கள் இச்செயலியைத் தான் பயன்படுத்தினார்களா என்பதை அதிகாரிகள் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.</p>]]></content:encoded></item><item><title>‘மேகதாது விவகாரத்தில் மேலும் மேலும் தவறுகளை செய்கிறது தவெக அரசு’ - அன்புமணி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-government-is-making-repeated-errors-regarding-the-mekedatu-issue-anbumani</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-government-is-making-repeated-errors-regarding-the-mekedatu-issue-anbumani#comments</comments><guid isPermaLink="false">57dbfa34-b9e6-4abb-9fc0-897bda63166d</guid><pubDate>Fri, 24 Jul 2026 13:07:34 +0000</pubDate><atom:updated>2026-07-24T13:07:34.050Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,mekedatu dam,மேகதாது அணை,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,தவெக அரசு,tvk government</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/1pic2x9n/New-Project-2026-07-24T183532.644.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘மேகதாது விவகாரத்தில் மேலும் மேலும் தவறுகளை செய்கிறது தவெக அரசு’ - அன்புமணி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/1pic2x9n/New-Project-2026-07-24T183532.644.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் நடக்கவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பங்கேற்பது மிகவும் தவறான ஒரு நிலைப்பாடு என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;</p><p>“மேகதாது அணை குறித்து விவாதிக்க கர்நாடகத்தில் வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படவுள்ளதாகவும், அந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் கர்நாடகம் செல்லவிருப்பதாகவும்  வேளாண் துறை அமைச்சர் வினோத் தெரிவித்திருக்கிறார். மேகதாது சிக்கல் குறித்து பேச்சு நடத்த தமிழ்நாடு அரசு ஒப்புக்கொண்டிருப்பது  அதிர்ச்சியளிக்கிறது; இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.</p><p>கும்பகோணத்தில் இன்று மதியம் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,‘‘கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக் கட்ட தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது. காவிரி நமது உரிமை. அதை விட்டுக் கொடுக்க மாட்டோம், கர்நாடகாவில் ஆகஸ்ட் 3-ம் தேதி மேகேதாட்டு அணை தொடர்பாக நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில், முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு அம்மாநில முதலமைச்சர் டி.கே.சிவகுமாரிடம் பேசவுள்ளார்’’ என்று தெரிவித்தார்.</p><p>கர்நாடகத்தில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தை ஏற்பாடு செய்வது யார்? மத்திய அரசா, கர்நாடக அரசா? என்பது குறித்து எந்த விவரமும் தெரியவில்லை. </p><p>ஆனால், மேகதாது குறித்து பேச்சு நடத்த முதலமைச்சர் விஜய்க்கு  கர்நாடக அதிகாரிகள் மின்னஞ்சல் வாயிலாக அழைப்பு விடுத்திருக்கிறார்கள் என்று நேற்று ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் பார்த்தால் கர்நாடக அரசின் அழைப்பை ஏற்றுத் தான்  முதலமைச்சர் விஜய் அம்மாநிலத்திற்கு பேச்சு நடத்த செல்வதாகத் தோன்றுகிறது. இது மிகவும் தவறு.</p><p>பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும், மீண்டும் கூறி வருவது என்னவென்றால், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது என்பது தமிழ்நாட்டிற்கும், கர்நாடகத்திற்கும் இடையிலான பிரச்சினை அல்ல.... அது கர்நாடக அரசின் ஒரு சார்பான கோரிக்கை மட்டும் தான்.  அது குறித்து அந்த மாநில அரசுடன் நாம் எந்த பேச்சுக்களையும் நடத்தத் தேவையில்லை என்பது தான்.</p><p>மேகதாது அணை குறித்து கர்நாடக அரசுடன் நாம் பேச்சு நடத்தினால் அதை இரு தரப்பு பிரச்சினையாக ஏற்றுக்கொண்டு விட்டோம் என்று பொருளாகி விடும். அதன் பின்னர் மேகதாது அணையை கட்டக்கூடாது என்பது தீர்வாக இருக்காது. மாறாக, மேகதாது அணையின் கொள்ளளவு எவ்வளவு டி.எம்.சியாக இருக்க வேண்டும்?  </p><p>அந்த அணையிலிருந்து தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதற்கான நடைமுறைகள் என்னென்ன? என்பது தான் தீர்வாக இருக்கும். இது காவிரியில் தமிழ்நாட்டுக்கு  உரிய  உரிமைகளை மொத்தமாக கர்நாடகத்திடம் தாரைவார்ப்பதற்கு ஒப்பானது ஆகும்.</p><p>மேகதாது அணை குறித்து சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், இந்த சிக்கலுக்கு தீர்வு காண்பதற்காக புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற வாசகம் சேர்க்கப்பட்ட போதே  அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. </p><p>மேகதாது அணை விவகாரத்திற்கு தீர்வு காண  நடுவர் மன்றம் அமைக்கப் பட்டால் அது தமிழ்நாட்டிற்கு எந்த அளவுக்கு பின்னடைவை ஏற்படுத்துமோ, அதை விட மோசமான பின்னடைவை  மேகதாது விவகாரம் குறித்து கர்நாடக அரசுடன் முதலமைச்சர் விஜய் பேச்சு நடத்துவது ஏற்படுத்தி விடும்.</p><p>மேகதாது போன்ற சர்ச்சைக்குரிய விவகாரங்களில் தமிழ்நாடு அரசு தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. அதில் சம்பந்தப்பட்ட உழவர் அமைப்புகள், அரசியல் கட்சிகள்  போன்றவற்றுடன்  ஆலோசனை நடத்திய பிறகு தான் நிலைப்பாட்டை  தீர்மானிக்க வேண்டும். </p><p>மேகதாது சிக்கல் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று பாமக பல வாரங்களாக வலியுறுத்தி வரும் நிலையில், அதை ஏற்காத அரசு, கர்நாடக அரசுடன் பேசும் முடிவை தன்னிச்சையாக எடுத்திருப்பது இவ்விவகாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.</p><p>எனவே, மேகதாது அணை குறித்து பேச்சு நடத்துவதற்காக கர்நாடகத்திற்கு செல்லும் முடிவை முதலமைச்சர் விஜய் கைவிட வேண்டும். மாறாக, சட்டப் போராட்டங்களின் மூலம் மேகதாது அணை கட்டுவதற்கான சதித் திட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இதுவரை, கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்காதது குறித்தும், மேகதாது விவகாரம் தொடர்பாகவும் முதலமைச்சர் விஜய் வாய் திறவாதது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>VIDEO: ஜூலை 20 தாக்குதல்.. பெல்லட் துப்பாக்கியால் கண் பார்வை இழந்த இளைஞரை அழைத்துவந்து ராகுல் பேட்டி  </title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-protest-pellet-gun-row-youth-allege-brutal-police-action-as-government-denies-use</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-protest-pellet-gun-row-youth-allege-brutal-police-action-as-government-denies-use#comments</comments><guid isPermaLink="false">5e76b6b3-d507-456d-beba-23976ecdc029</guid><pubDate>Fri, 24 Jul 2026 13:01:23 +0000</pubDate><atom:updated>2026-07-24T13:01:23.095Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,question paper leak,வினாத்தாள் கசிவு,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/0mv4303j/tn-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராகுல், சாஹில் ]]></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல், சாஹில் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/0mv4303j/tn-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜூலை 20 அன்று சிஜேபி தலமையில் இளைஞர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்றபோது டெல்லி காவல்துறை மற்றும் ரேபிட் ஆக்ஷன் போர்ஸ் உள்ளிட்ட மத்திய படையினர் கொடூராமான முறையில் தாக்குதல் நடத்தினர். </p><p>அமைதியான முறையில் முன்னேறிச் சென்ற இளைஞர்களை தடிகளால் தாக்கியும், கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும் கலைக்க முயன்றனர். சீருடையற்ற நபர்களும் கைகளில் லத்தியுடன் இளைஞர்கள் மற்றும் பெண்களை தாக்கிய காணொளிகளும் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. </p><p>காலாவதியான கண்ணீர் புகைகுண்டுகள், ஆணிகள் பொருத்திய லத்திகள், மின்சார அதிர்ச்சி தரும் லத்திகள், பெல்லட் துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றை இளைஞர்கள் மீது பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. </p><p>இவற்றில் குறிப்பாக சர்ச்சைக்குரிய <a href="https://www.maalaimalar.com/news/national/delhi-protest-pellet-gun-allegations-youth-march-faces-harsh-police-crackdown-and-expired-tear-gas">பெல்லட் துப்பாக்கிகள் </a>பயன்படுத்தப்பட்டதற்காக ஆதாரமாக சிகிச்சை பெற்று வரும் காயமடைந்தவர்களின் மருத்துவ அறிக்கைகளும் புகைப்படங்களும் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>ஊடகவியலாளர் ஒருவரும் பெல்லட் துப்பாக்கியால் சுடப்படும்போது உடலில் ஏற்படும் புள்ளி புள்ளியான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற புகைடபடங்களுடன் ஊடக அறிக்கைகள் வெளியாகின. </p><p>ஆனால் பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்படவில்லை என டெல்லி காவல்துறையும், அரசின் அதிகாரப்பூர்வ உண்மைச் சரிபார்ப்பகமான PIB-யும் மறுத்துள்ளன.</p> <h2>பெல்லட் துப்பாக்கிகள்</h2><p>உலோகம், ரப்பர் அல்லது ஈயத்தால் செய்ப்பட்ட சிறிய குண்டுகள் Pellets எனப்படுகின்றன. ஒருமுறை சுட்டால் பல சிறிய குண்டுகள் ஒரே நேரத்தில் பாயும்.</p><p>இது உடலில் புள்ளி புள்ளியான காயங்களை ஏற்படுத்தும்.</p><p>கூட்டத்தைக் கலைக்கவும், கலவரங்களைக் கட்டுப்படுத்தவும் இவை குறைந்த ஆபத்துள்ள ஆயுதங்களாக பயன்படுத்தப்படுகின்றன.</p><p>ஆனால் சில நேரங்களில் இந்த குண்டுகள் கண் பார்வை மற்றும் கேட்கும் திறனை பறிக்கக்கூடியவை. பெல்லட் குண்டுகள் உடலின் முக்கிய பாகங்களில் பட்டால் கடுமையான காயங்கள் மற்றும் சில சமயங்களில் உயிரிழப்பும் கூட ஏற்படக்கூடும்.</p><p>இதன் காரணமாகவே பெல்லட் துப்பாக்கிகளின் பயன்பாட்டிற்கு மனித உரிமைகள் அமைப்புகள் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.</p><figure><img alt="ராகுல், சாஹில் " src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/pixk3pqi/tn-4.jpg" /><figcaption>ராகுல், சாஹில் </figcaption></figure><h2>ராகுல் காந்தி பேட்டி</h2><p>இந்த சூழலில் பெல்லட் துப்பாக்கியால் காயமுற்று சிகிச்சை பெற்ற சாஹில் என்ற 19 வயது மாணவரை உடன்வைத்துக்கொண்டு மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.</p><p>முன்னதாக இளைஞர்கள் மீதான தாக்குதல், தேர்வு முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை நாள் முழுவதும் முடங்கிய நிலையில் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து புதிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.</p><p>முகத்தில் உடலிலும் முகத்தில் கண்களின் அருகேயும் பெல்லெட் குண்டு தழும்புகள் கொண்ட அம்மாணவரை அருகில் வைத்துக்கொண்டு ராகுல் காந்தி செய்தியளர்களிடம் பேசுகையில், இந்த சகோதரர் (மாணவர்) கையில் தேசியக்கொடியை ஏந்தி அமைதியான முறையில் போராடிக்கொண்டிருந்தபோது பெல்லட் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | LoP, Lok Sabha, Rahul Gandhi brings before the media a man he claims suffered pellet gun injuries during students&#39; protest<br><br>He says, &quot;I want to explain that my brother standing here was injured by a pellet gun while he was peacefully protesting, holding the Tricolour.… <a href="https://t.co/TCQJ4OZJcu">pic.twitter.com/TCQJ4OZJcu</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2080591144971297051?ref_src=twsrc%5Etfw">July 24, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><p>இதனால் அவரின் ஒருபக்க கண் பார்வை பறிபோயுள்ளது. அரசு பெல்லட் துப்பாக்கிகளை பயன்படுத்தவே இல்லை என கூறுகிறது. அப்படி சொன்னார்கள் தானே, அப்போது இங்கே பாருங்கள், இது என்ன, இவரின் கண் பாதிக்கப்பட்டுள்ளது. தனது பார்வையை இழந்துள்ளார்" என மாணவரின் முகத்தை சுட்டிக்காட்டி தெரிவித்தார்.</p><p>மேலும், "அரசாங்கம், தேசத்தின் எதிர்காலத்தின் மீது தாக்குதல் நடத்துகிறது. இவர் (மாணவர்), கடினமாக படித்து போலீஸ் பணி தேர்வு எழுதியுள்ளார். ஆனால் ஒரு நாள் அவரிடம், அதன் வினாத்தாள் கசிந்துவிட்டதாக சொல்லப்பட்டது. நாட்டின் லட்சக்கணக்கான மாணவர்களுக்கும் இதே நிலைமை தான். அவர்களின் பெற்றோரின் கடின உழைப்பு அனைத்தும் வீணடிக்கப்பட்டுள்ளது.</p><p>அவர்களிடம் மூன்றே மூன்று கோரிக்கைகள் தான் உள்ளன. ஒன்று, யாரால் இவையெல்லாம் நிகழ்ந்ததோ அந்த கல்வி அமைச்சர் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும். இரண்டாவது, நமது எதிர்காலத்தின் மீது லத்திகளையும், பெல்லட் துப்பாக்கிகளையும் பயன்படுத்திவர்கள் நீதியின்முன் நிறுத்தப்பட வேண்டும், மூன்றாவது, இதற்கெல்லாம் மூலகர்த்தாவான நரேந்திர மோடி, இளைஞர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்." என வலியுறுத்தியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஜந்தர் மந்தர் போராட்டம்: டெல்லி காவல்துறை தடியடிக்கு எதிரான மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/jantar-mantar-protest-supreme-court-agrees-to-hear-plea-against-delhi-police-lathi-charge</link><comments>https://www.maalaimalar.com/news/national/jantar-mantar-protest-supreme-court-agrees-to-hear-plea-against-delhi-police-lathi-charge#comments</comments><guid isPermaLink="false">dc07442f-ddc2-461a-b650-32bafad6faa6</guid><pubDate>Fri, 24 Jul 2026 12:51:56 +0000</pubDate><atom:updated>2026-07-24T12:51:56.804Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,உச்ச நீதிமன்றம்,Jantar Mantar,டெல்லி காவல்துறை,ஜந்தர் மந்தர்,police excesses</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/si3yk8sf/New-Project-2026-07-24T182055.533.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜந்தர் மந்தர் போராட்டம்: டெல்லி காவல்துறை தடியடிக்கு எதிரான மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/si3yk8sf/New-Project-2026-07-24T182055.533.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி போராட்டத்தில் மாணவர்கள்மீது கண்மூடித்தனமான தடியடி தாக்குதல் நடத்திய காவல்துறைக்கு எதிரான மனுவை திங்கள்கிழமையன்று (ஜூலை.27) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. </p><p>நீதிமன்றத்தில், “மாணவர்கள் போராட்டங்கள் தொடர்பாக நாங்கள் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளோம். அதற்கான டைரி எண் (தற்காலிக பதிவு எண். அதாவது மனு பெறப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ சான்று) உருவாக்கப்பட்டுவிட்டது. </p><p>இதில் அவசரம் உள்ளது. மாணவர்களுக்கு எதிராகக் காவல்துறையினர் அளவுக்கு அதிகமாகத் தடியடி நடத்தி அத்துமீறி வருகிறார்கள். </p><p>இதற்கு ஏதாவது செய்தாக வேண்டும். நீதிமன்றம்தான் இதற்கு இடையில் நின்றுகொண்டிருக்கிறது.” என மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் தெரிவித்தார். </p><p>இதனைத்தொடர்ந்து தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜெயமால்ய பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள சம்மதித்துள்ளது.</p><h2>போராட்டமும், போலீசாரின் அராஜகப் போக்கும்</h2><p>நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூன்.20 முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது. </p><p>போராட்டத்தின் ஒருபகுதியாக ஜூலை 20 அன்று நாடாளுமன்றத்தை நோக்கி "சன்சத் சலோ" பேரணி செல்ல திட்டமிடப்பட்டது. பேரணிக்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்று டெல்லி காவல்துறை எச்சரித்தது. இதனைத் தொடர்ந்தும் போராட்டக்காரர்கள் பேரணியில் ஈடுபட்டனர். </p><p>இதனால் போராட்டக்காரர்கள்மீது போலீசார் தடியடி நடத்தினர். மேலும் அவர்களை தடுக்க கண்ணீர் புகைக் குண்டுகள், பெல்லட் துப்பாக்கிகள் போன்றவற்றை பயன்படுத்தியுள்ளனர். இதனால் 20க்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>குறிப்பாக பெல்லட் துப்பாக்கியால் இளைஞர் ஒருவருக்கு கண்பார்வையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே போலீசார் தாக்குதல் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சீற்றத்தை தூண்டின.</p><p>பெண்கள்மீதும் சராமாரி தாக்குதல், அவர்களை தவறான இடங்களில் அடித்தல், நேம் பேட்ச் அணியாத காவலர்கள், குறிப்பாக சீருடை அணியாத காவலர்கள் என பல்வேறு சர்ச்சைகள் டெல்லி காவல்துறையை சூழ்ந்தது.</p><h2>நீதிமன்றத்தின் முந்தைய நிலைப்பாடு</h2><p>இச்சம்பவம் தொடர்பாக முதலில் அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் கோரப்பட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் தலையிட தங்களுக்கு விருப்பம் இல்லை, நேரம் இல்லை என உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவிற்கு நாடு முழுவதும் பெரும் கண்டனங்கள் எழு, தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் ராஜேஷ்  லக்கானி, சிவஞானத்திற்கு புதிய பொறுப்பு வழங்கியது தமிழ்நாடு அரசு !</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-tamil-nadu-government-has-assigned-new-responsibilities-to-senior-ias-officers-rajesh-lakhoni-and-sivagnanam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-tamil-nadu-government-has-assigned-new-responsibilities-to-senior-ias-officers-rajesh-lakhoni-and-sivagnanam#comments</comments><guid isPermaLink="false">695046cb-70e3-4bfc-9142-079d657e0d79</guid><pubDate>Fri, 24 Jul 2026 12:23:30 +0000</pubDate><atom:updated>2026-07-24T12:23:30.611Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,Government of Tamil Nadu,IAS officers,ஐஏஎஸ் அதிகாரிகள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/nqeydifq/New-Project-2026-07-24T175312.615.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் ராஜேஷ்  லக்கானி, சிவஞானத்திற்கு புதிய பொறுப்பு வழங்கியது தமிழ்நாடு அரசு !]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/nqeydifq/New-Project-2026-07-24T175312.615.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் தலைமை தேர்தல் அதிகாரிகளாக பணியாற்றி வந்த ராஜேஷ் லக்கானி மற்றும் சிவஞானம் ஆகியோருக்கு புதிய பொறுப்புகளை வழங்க தலைமைச் செயலாளர் சாய்குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். </p><p>அதன்படி தமிழ்நாடு நில நிர்வாக ஆணையராக கஜலக்ஷ்மிக்கு பதிலாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராஜேஷ் லக்கானி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசுப் பணியில் இருந்து திரும்பிய நிலையில் அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. </p><p>மேலும் இப்பணி தலைமைச் செயலாளர் பணிக்கு ஈடான பொறுப்பும், அந்தஸ்தும் உடையது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையராக சிவஞானம் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>வங்கதேச ஜனாதிபதி திடீர் ராஜினாமா.. பின்னணியில் ஷேக் ஹசீனா? </title><link>https://www.maalaimalar.com/news/world/bangladesh-politics-shock-president-shahabuddin-resigns-amid-sheikh-hasina-return-row</link><comments>https://www.maalaimalar.com/news/world/bangladesh-politics-shock-president-shahabuddin-resigns-amid-sheikh-hasina-return-row#comments</comments><guid isPermaLink="false">29852e66-6057-4ead-9800-15d0c1f89126</guid><pubDate>Fri, 24 Jul 2026 12:05:27 +0000</pubDate><atom:updated>2026-07-24T12:05:27.933Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Bangladesh,வங்கதேசம்,ஜனாதிபதி,Sheikh Hasina,President,ஷேக் ஹசீனா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/xycq5nj8/bangladesh.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முகமது ஷஹாபுதின் ]]></media:title><media:description type="html"><![CDATA[ முகமது ஷஹாபுதின் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/xycq5nj8/bangladesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வங்கதேச ஜனாதிபதி முகமது ஷஹாபுதின் தனது பதவியை இன்று அத்திரைடியாக ராஜினாமா செய்துள்ளார்.  </p><p>ஏப்ரல் 2023இல் ஷஹாபுதீன் வங்கதேச ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அங்கு ஷேக் ஹசீனாவின் ஆட்சி நடந்து வந்தது. </p><h2>மாணவர்கள் போராட்டம்  </h2><p>ஆகஸ்ட் 2024 இல் மாணவர்கள் போராட்டத்தால் ஆட்சிக் கட்டிலில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட ஷேக் ஹசீனாவுடன் ஷஹாபுதீனுக்கு இருந்த நெருக்கம் காரணமாக அதன் பின் வந்த தற்காலிக பிரதமர் முகமது யூனுஸ் அரசுக்கும், கடந்த ஆண்டு தேர்தலில் வென்று ஆட்சி அமைத்த தாரிக் ரஹ்மான் அரசுக்கும் பிணக்கு இருந்து வந்தது. </p><p>இந்நிலையில் தனது 5 ஆண்டு பதவிக்காலம் முடிவடையும் முன்னரே ஷஹாபுதின் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளது விவாதப்பொருளாகி வருகிறது. தாரிக் ரஹ்மான் அரசின் அழுத்தத்தின் பேரிலேயே அவர் ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. </p><p>குறிப்பாக 2024 போராட்டங்களின்போது மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்ட விவகாரத்தில் ஷேக் ஹசீனாவுக்கு அந்நாட்டு  போர் குற்ற தீர்பாயம் மரண தண்டனை விதித்திருந்தது. </p><p>2024 ஆகஸ்டில் இந்தியா தப்பி வந்த ஷேக் ஹசீனா தற்போதுவரை மோடி அரசின் அடைக்கலத்தில் இருந்து வருகிறார். </p> <h2>ஷேக் ஹசீனா மீள்வருகை</h2><p>அவரை நாடுகடத்த வங்கதேச அரசு தொடர்ந்து இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. அவருக்கு பிடிவாரண்ட்டும் போர் குற்ற தீர்பாயத்தால் பிறப்பிக்கப்பட்டது.</p><p>ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின்படி, அண்மையில்<a href="https://www.maalaimalar.com/news/world/may-arrest-or-kill-me-sheikh-hasina-says-she-will-return-to-bangladesh-by-december"> ஷேக் ஹசீனா</a> அளித்த பேட்டியில், வரும் டிசம்பரில் தான் வங்கதேசம் திரும்பி சரணடைய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார் என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஷஹாபுத்தீனின் ராஜினாமா வந்துள்ளது.</p> <h2>ஷஹாபுதின் சர்ச்சை</h2><p>அண்மையில் அவர் ஹசீனாவை மீண்டும் தொடர்பு கொள்ள முயற்சி மேற்கொண்டதால் அவர் மீதான அரசின் அதிருப்தி அதிகரித்துள்ளதாக வங்கதேச ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன.</p><p>அவருக்கு பதிலாக இடைக்கால ஜனாதிபதியாக பாராளுமன்ற சபாநாயகர் ஹபீஸ் உத்தின் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>ஷஹாபுதின், 1971 வங்கதேச சுதந்திர போரில் பங்கேற்றவர் ஆவார். முன்னதாக நீதிபதியவனும் இருந்துள்ளார். முகமது யூனுஸ் அரசால் ஓரங்கட்டப்பட்ட ஷஹாபுதின் கடந்த ஆண்டு தேர்தல் நடைபெற்றபோதே ராஜினாமா செய்ய திட்டமிட்டுருந்ததாக கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>ரூ.1 கோடி அபராதம், 10 ஆண்டுகள் சிறை: வினாத்தாள் கசிவுகளுக்கு தண்டனையை கடுமையாக்கும் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/rs-1-crore-fine-10-years-in-prison-union-cabinet-approves-bill-to-toughen-penalties-for-question-paper-leaks</link><comments>https://www.maalaimalar.com/news/national/rs-1-crore-fine-10-years-in-prison-union-cabinet-approves-bill-to-toughen-penalties-for-question-paper-leaks#comments</comments><guid isPermaLink="false">da93b70b-4f95-43ba-a5c6-d2473e7196a1</guid><pubDate>Fri, 24 Jul 2026 11:59:06 +0000</pubDate><atom:updated>2026-07-24T11:59:06.821Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Union Cabinet,மத்திய அமைச்சரவை,paper leak cases,வினாத்தாள் கசிவுகள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/p3bweqr4/New-Project-2026-07-24T172632.601.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரூ.1 கோடி அபராதம், 10 ஆண்டுகள் சிறை: வினாத்தாள் கசிவுகளுக்கு தண்டனையை கடுமையாக்கும் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/p3bweqr4/New-Project-2026-07-24T172632.601.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வினாத்தாள் கசிவுகளுக்கு கடுமையான தண்டனைகளை உறுதிசெய்யும் வரைவு மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. </p><p>மத்திய கல்வி அமைச்சர் பிரதானின் பதவி விலகல், தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்றல், கல்வித்துறையில் சீர்திருத்தங்கள், நீட்-யுஜி தேர்வால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>வினாத்தாள் கசிவு உள்ளிட்ட திட்டமிட்ட தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைதண்டனை, ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்க மசோதா வழிவகை செய்கிறது. </p><p>வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்குகளை மிக விரைவாக விசாரித்து, குற்றவாளிகளுக்கு உடனுக்குடன் தண்டனை வழங்குவதை உறுதி செய்ய பிரத்யேக விரைவு நீதிமன்றங்கள் அமைக்கவும் மசோதாவில் விதிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. </p><p>மசோதா திங்கள்கிழமை (ஜூலை.27) நாடாளுமன்ற இரு அவைகளிலும் தாக்கலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>அதிகரிக்கும் சாலை விபத்துகள்: தமிழ்நாடு முதலிடம்</title><link>https://www.maalaimalar.com/news/national/india-saw-513-lakh-road-accidents-in-2025-with-21-deaths-every-hour-nitin-gadkari-tells-parliament</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-saw-513-lakh-road-accidents-in-2025-with-21-deaths-every-hour-nitin-gadkari-tells-parliament#comments</comments><guid isPermaLink="false">f34b9ea1-e71d-4fbe-946a-436b8e58a4a2</guid><pubDate>Fri, 24 Jul 2026 11:53:51 +0000</pubDate><atom:updated>2026-07-24T11:53:51.415Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நாடாளுமன்றம்,road accident,parliment,சாலை விபத்துகள்,Nitin gadkari,நிதின் கட்கரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/s7c86dxj/accident.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ accident]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/s7c86dxj/accident.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடாளுமன்றத்தின் மக்களவையில் சாலை விபத்துகள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்கரி எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில் அவர் கூறியதாவது:</p><p>இந்தியாவில் 2025-ம் ஆண்டு நிகழ்ந்த 5,13,563 சாலை விபத்துகளில் 1,83,382 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>இது 2024-ம் ஆண்டில் பதிவான 1,77,175 மரணங்களுடன் ஒப்பிடுகையில் 3.5 சதவீதம் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது. </p><p>மொத்த விபத்துகளின் எண்ணிக்கை 5.3 சதவீதம் உயர்ந்து 5,13,563 ஆக பதிவாகியுள்ளது.</p><p>நாட்டில் சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு 59 சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. அதில் 21 பேர் உயிரிழக்கின்றனர்.</p><p>தினமும் 502 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர்.</p><p>சாலை விபத்து மரணங்களில் உத்தர பிரதேசம் முதலிடத்திலும், தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும் உள்ளன.</p><p>உத்தர பிரதேசத்தில் சாலை விபத்து மரணங்கள் கடுமையாக உயர்ந்துள்ளன. அங்கு கடந்த ஆண்டு 27,550 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்தனர். 2024-ம் ஆண்டு 24,118-ல் இருந்து 27,550 ஆக அதிகரித்துள்ளது.</p><p>தமிழ்நாட்டில் சாலை விபத்துகளில் 18,505 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டிலேயே அதிக சாலை விபத்துகள் நடைபெறும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. 2025-ல் தமிழ்நாட்டில் 71,387 சாலை விபத்துகள் பதிவாகி உள்ளன.</p><p>பஞ்சாபில் குறைந்தபட்சமாக 3,062 பேர் சாலை விபத்துகளில் இறந்துள்ளனர். பஞ்சாபில் சாலை விபத்து மரணங்கள் 4,759-லிருந்து 3,062 ஆக கணிசமாகக் குறைந்துள்ளன.</p><p>பீகார், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களிலும் சாலை விபத்து மரணங்கள் உயர்ந்துள்ளன. அதேவேளையில், சத்தீஸ்கர், கர்நாடகா, தெலுங்கானா, டெல்லி ஆகிய மாநிலங்களிலும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை சரிவைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என எச்சரித்த டெல்லி பல்கலைக்கழகம் - பொங்கிய ராகுல் 
</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-protest-crackdown-delhi-university-warns-students-against-joining-jantar-mantar-agitation</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-protest-crackdown-delhi-university-warns-students-against-joining-jantar-mantar-agitation#comments</comments><guid isPermaLink="false">f5858d41-dc18-4ca6-b85a-4636a420e763</guid><pubDate>Fri, 24 Jul 2026 11:22:22 +0000</pubDate><atom:updated>2026-07-24T11:22:22.886Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,டெல்லி பல்கலைக்கழகம்,delhi university,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/h8pnsylw/tn.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராகுல் ]]></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/h8pnsylw/tn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூன் 20 முதல் <a href="https://www.maalaimalar.com/news/national/central-government-seeks-time-until-tomorrow-to-deliberate-on-dharmendra-pradhans-resignation">சிஜேபி </a>தலைமையில் போராட்டம் நடந்து வருகிறது. கடந்த ஜூலை 20 அன்று நாடாளுமன்றம் நோக்கி போராட்டக்காரர்கள் நடத்திய பேரணியை போலீசார் மற்றும் மத்திய படையினர் தடியடி நடத்தினர்.</p><p>கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர். மேலும் பெல்லட் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆபத்தான ஆயுதங்களையும் பயன்படுத்தியதற்கான ஆதாரமாக காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களின் மருத்துவ அறிக்கைகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. சுமார் 60 பேர் இதில் காயமடைந்தனர். </p><p>இதனிடையே சோனம் வாங்சுக் தனது 26 உண்ணாவிரதத்தை நேற்று இரவு முடித்துக்கொண்டபோதும், முறைகேடுகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும், சிறப்பு மசோதா நிறைவேற்றப்படும் என <a href="https://www.maalaimalar.com/news/national/change-of-higher-and-school-education-secretaries-central-government-action-after-student-protests">பிரதமர் மோடி</a> வீடியோ மூலம் அறிவித்தும், தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என சிஜேபி தலைவர் அபிஜித் தீப்கே அறிவித்துள்ளார். </p> <h2>டெல்லி பல்கலைக்கழகம் சுற்றறிக்கை</h2><p>இந்த சூழலில் டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்து வரும் போராட்டத்தில் பங்கேற்பதைத் தவிர்க்குமாறு டெல்லி பல்கலைக்கழகம் தனது மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>அந்த சுற்றறிக்கையில், "உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களின்படி ஜந்தர் மந்தர் போராட்டங்களில் பங்கேற்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மீறி சட்டவிரோதக் கூட்டங்களில் பங்கேற்கும் மாணவர்கள் மீது நேரடியாக சட்ட நடவடிக்கை பாயும்.</p><p>அப்படி நடந்தால் மாணவர்களின் கல்வி, மற்றும் எதிர்கால வேலைவாய்ப்பு பாதிக்கப்படும்" என நிர்வாகம் எச்சரித்துள்ளது.</p><p>மேலும், "மாணவர்களை உணர்ச்சிவசப்படுத்தவும் பதற்றத்தை அதிகரிக்கவும் இணையத்தில் போலியான வீடியோக்களும் செய்திகளும் பரப்பப்படுகின்றன. அவற்றை நம்பவோ அல்லது பகிரவோ வேண்டாம்" என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>ஜனநாயக ரீதியில் போராடும் மாணவர்களின் குரலை ஒடுக்க நினைப்பதாக டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்தச் சுற்றறிக்கைக்கு மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடையே பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.</p> <h2>ராகுல் காந்தி ஆவேசம்</h2><p>டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்தச் சுற்றறிக்கைக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>அவரது பதிவில், "தங்களின் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தும் மாணவர்களை அச்சுறுத்தவும் மிரட்டவும் உங்களுக்கு எவ்வளவு தைரியம்?</p><p>காலம் வரும்போது இதற்கெல்லாம் நீங்கள் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!" என்று சாடியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஒரே வாரத்தில் இந்தியாவில் 100 கோடி வசூலித்த ‘தி ஒடிசி&apos;</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/christopher-nolans-the-odyssey-earns-over-rs-100-crore-at-box-office</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/christopher-nolans-the-odyssey-earns-over-rs-100-crore-at-box-office#comments</comments><guid isPermaLink="false">38decaad-67f5-47d4-9a9a-a49b2bb2c663</guid><pubDate>Fri, 24 Jul 2026 10:37:20 +0000</pubDate><atom:updated>2026-07-24T10:37:20.822Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கிறிஸ்டோபர் நோலன்,christopher nolan,The Odyssey,தி ஒடிசி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/uao6gf6k/nolan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ the odyessy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/uao6gf6k/nolan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>புகழ்பெற்ற இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ' தி ஒடிசி' திரைப்படம், இந்திய பாக்ஸ் ஆபீஸில் முதல் நாளிலேயே வரலாறு காணாத வசூல் சாதனை படைத்தது.</p><p>மேட் டாமன் மற்றும் டாம் ஹாலண்ட் இருவரும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள இத்திரைப்படம், இந்திய ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.</p><p>பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான 'தி ஒடிசி' திரைப்படம், இந்தியாவில் முதல் நாளில் மட்டும் ரூ.20.76 கோடி மொத்த வசூலையும், ரூ.17.40 கோடி நிகர வசூலையும் ஈட்டி சாதனை படைத்துள்ளது.</p><p>ஹாலிவுட் படங்களுக்கு இந்தியாவில் இருக்கும் அசுரத்தனமான வரவேற்பை இந்த வசூல் மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளது.</p><h2>திரையரங்குகளில் குவியும் ரசிகர்கள்</h2><p>இந்திய அளவில் இந்தத் திரைப்படம் சராசரியாக 48.7% திரையரங்கு ஆக்குபென்சியுடன் இயங்கியது. குறிப்பாக, கிறிஸ்டோபர் நோலனின் முந்தைய படங்களைப் போலவே, இதற்கும் ஐமேக்ஸ் மற்றும் முப்பரிமாண திரையரங்குகளில் டிக்கெட்டுகள் அனைத்தும் மின்னல் வேகத்தில் விற்றன.</p><h2>தமிழகத்தில் மிரட்டலான வரவேற்பு</h2><p>இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் நோலனின் படங்களுக்கு எப்போதும் தனி இடமுண்டு. அதற்கேற்ப தமிழ்நாட்டில் இத்திரைப்படம் மிரட்டலான வரவேற்பைப் பெற்றுள்ளது.</p><p>ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானதால், அனைத்து தரப்பு ரசிகர்களையும் இந்தத் திரைப்படம் வெகுவாகக் கவர்ந்துள்ளது.</p><p>உலகம் முழுவதும் 8,413-க்கும் மேற்பட்ட திரைகளில் திரையிடப்பட்டுள்ள 'தி ஒடிசி', ரசிகர்களிடம் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வருகிறது.</p><p>இந்நிலையில், தி ஒடிசி படத்தின் வசூல் இந்தியாவில் மட்டும் இதுவரை 100 கோடி ரூபாயைக் கடந்துள்ளதாக படக்குழு தெரிவித்தது. உலக அளவில் 3 ஆயிரம் கோடியைத் தாண்டியுள்ளது என வார்னர் ப்ரோஸ் இந்தியா என்ற வெளியீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘சினிமா பார்த்து அழுதுட்டு சீன் ஓட்டுவது அல்ல அரசாங்கம்’ - தவெக அரசை விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/governance-is-not-about-watching-a-movie-shedding-tears-and-playing-to-the-gallery-premalatha-vijayakanth-criticizes-tvk</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/governance-is-not-about-watching-a-movie-shedding-tears-and-playing-to-the-gallery-premalatha-vijayakanth-criticizes-tvk#comments</comments><guid isPermaLink="false">21de334f-472f-4919-b8bd-37093d6008f5</guid><pubDate>Fri, 24 Jul 2026 10:33:55 +0000</pubDate><atom:updated>2026-07-24T10:33:55.376Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMDK,தேமுதிக,பிரேமலதா விஜயகாந்த்,premalatha vijayakanth,தவெக அரசு,tvk government</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/7gp9fnux/New-Project-2026-07-24T160340.666.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘சினிமா பார்த்து அழுதுட்டு சீன் ஓட்டுவது அல்ல அரசாங்கம்’ - தவெகவை விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/7gp9fnux/New-Project-2026-07-24T160340.666.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரி ஆற்றில் இருந்து ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய தண்ணீரை கர்நாடக இன்னும் வழங்கவில்லை. மேலும் மேகதாது அணையை கட்டியே தீர்வோம் என அம்மாநில முதலமைச்சர் டி.கே.சிவகுமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.</p><p>இந்த விவகாரங்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசு தரப்பிலோ, முதலமைச்சர் விஜய்யோ இதுவரை வாய்திறக்கவில்லை. இந்நிலையில் இன்று கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா இந்த விவகாரங்கள் தொடர்பாகப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;</p><p>“இன்றுவரை காவேரியில் தண்ணீர் திறக்கவில்லை. மேகதாது அணை கட்டுவோம் என கர்நாடகா தைரியமாக கூறுகிறது. நம் அரசு என்ன செய்கிறது?</p><p>அதுமட்டுமில்லாமல் நேற்று அரசி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு டன் அரிசிவிலை நேற்று மட்டும் ரூ.15 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. அரிசிக்கே இந்த நிலை என்றால், மற்றப் பொருட்களின் விலையும் உயரும். அரசு இதுகுறித்து சிந்திக்க வேண்டும். வெறும் சினிமா பார்த்துவிட்டு தியேட்டரில் உட்கார்ந்து அழுதுகொண்டு வெறும் சீன் ஓட்டுவது அரசு கிடையாது. இது பலகோடி மக்களின் வாழ்வாதாரம். </p><p>எல்நினோ காலநிலை,வறட்சியை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் மழை இல்லை. விவசாயிகள் நன்றாக இருந்தால்தான் நாடு நன்றாக இருக்கும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடைமை. </p><p>மீண்டும் ஒரு லாக்கப் மரணம் தூத்துக்குடியில் நிகழ்ந்துள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் என தொடர்ந்து லாக்கப் மரணங்கள் நிகழ்ந்துகொண்டு இருக்கிறது. இது தடுக்கப்பட வேண்டும். காவல்துறைக்கு ஒருவரை அடித்துக்கொல்ல அதிகாரம் இல்லை. விசாரியுங்கள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துங்கள். மற்ற எந்த அதிகாரமும் காவல்துறைக்கு இல்லை.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>குதிரை பேர வழக்கில் ஜாமின் பெற்றார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/former-minister-senthil-balaji-granted-bail-in-the-horse-trading-case</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/former-minister-senthil-balaji-granted-bail-in-the-horse-trading-case#comments</comments><guid isPermaLink="false">4388a41f-fc6e-450a-8bad-fe60979e5882</guid><pubDate>Fri, 24 Jul 2026 10:16:11 +0000</pubDate><atom:updated>2026-07-24T10:16:11.744Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>senthil balaji,செந்தில் பாலாஜி,Conditional Bail,நிபந்தனை ஜாமின்,TVK MLA bribery case,தவெக எம்எல்ஏ குதிரைபேர வழக்கு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/oxep7lad/New-Project-2026-07-24T154553.123.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ குதிரை பேர வழக்கில் ஜாமின் பெற்றார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/oxep7lad/New-Project-2026-07-24T154553.123.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ இளையராஜாவிடம் பேரம்பேசி, தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்டோர் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.</p><p>இந்த வழக்கில் இருவருக்கும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கியது. மேலும், மறு உத்தரவு வரும் வரை காலையும், மாலையும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராக நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.</p><p>இதற்கிடையே, போலீசார் தங்களை துன்புறுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் இருவரும் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு விசாரணையின்போது, “முன் ஜாமின் வழங்கப்பட்டு இதுவரை இருவரும் சரணடையவில்லை; சரணடையாத பட்சத்தில் துன்புறுத்தக்கூடாது என எப்படி கோர முடியும்? என நீதிபதி கேள்வி எழுப்பியதுடன், இருவரது மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.</p><p>நீதிமன்றம் ஜாமின் வழங்கிய நிலையில், பிணைத்தொகை செலுத்துவதற்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு இன்று ஆஜரானார். </p><p>நீதிமன்ற உத்தரவிற்கிணங்க ஆஜரானதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம். நாளை முதல் திருவல்லிகேணி காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என தெரிவித்துள்ளது. </p><p>காலை 10.30 மணிக்கும், மாலை 5.30 மணிக்கும் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தர்மேந்திர பிரதான் ராஜினாமா குறித்து ஆலோசனை செய்ய நாளைவரை அவகாசம் கோரிய மத்திய அரசு!</title><link>https://www.maalaimalar.com/news/national/central-government-seeks-time-until-tomorrow-to-deliberate-on-dharmendra-pradhans-resignation</link><comments>https://www.maalaimalar.com/news/national/central-government-seeks-time-until-tomorrow-to-deliberate-on-dharmendra-pradhans-resignation#comments</comments><guid isPermaLink="false">d0eba668-c359-43a3-8089-59eb80c26847</guid><pubDate>Fri, 24 Jul 2026 09:48:43 +0000</pubDate><atom:updated>2026-07-24T09:48:43.070Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,CJP,Dharmendra Pradhan Resignation,தர்மேந்திர பிரதான் பதவி விலகல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/0mqej2bs/New-Project-2026-07-24T145633.015.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தர்மேந்திர பிரதான் ராஜினாமா குறித்து ஆலோசனை செய்ய நாளைவரை அவகாசம் கோரிய மத்திய அரசு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/0mqej2bs/New-Project-2026-07-24T145633.015.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் கரப்பான்பூச்சி கட்சித் தொடங்கிய நீட்டுக்கு எதிரான மற்றும் தர்மேந்திர பிரதான் பதவி விலகல் தொடர்பான போராட்டம் தற்போது இந்தியா முழுவதும் தீவிரமடைந்துள்ளது. </p><p>இந்நிலையில் இப்போராட்டத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு கரப்பான்பூச்சி கட்சியுனருடன் பலகட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.</p><p>மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவுடனான முதல்கட்ட பேச்சுவார்த்தையில் தர்மேந்திர பிரதான் பதவி விலகல், நீட் தேர்வால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம், உயர்கல்வித்துறையில் சீர்த்திருந்தங்களை மேற்கொள்ளுதல் என மூன்று கோரிக்கைகளை கரப்பான்பூச்சி கட்சியினர் முன்வைத்தனர்.</p><p>அதனைத்தொடர்ந்து இன்று இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின்போது பிரதானின் பதவி விலகல் கோரிக்கை சமரசத்திற்கு அப்பாற்பட்டது என கரப்பான்பூச்சி கட்சியினர் மத்திய அரசின் சார்பில் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, ஜிதேந்திர சிங் ஆகியோரிடம் தெரிவித்துள்ளனர். </p><p>“கல்வி அமைச்சரின் ராஜினாமாவே, ஒரு மாத காலமாக நடைபெற்று வரும் சி.ஜே.பி. போராட்டங்களின் மையக்கருவாக இருந்து வருகிறது. பிரதான் பதவியை ராஜினாமா செய்யாவிட்டால், போராட்டங்களைத் தீவிரப்படுத்துவோம்” என எச்சரித்ததாக பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட சி.ஜே.பி. தேசிய செய்தித் தொடர்பாளர்கள் சௌரவ் தாஸ் மற்றும் அஷுதோஷ் ரங்கா ஆகியோர் தெரிவித்துள்ளனர். </p><p>இதனைத்தொடர்ந்து இதுதொடர்பாக ஆலோசிக்க நாளை மதியம் வரை மத்திய அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டுள்ளது. இதனையடுத்து நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p>]]></content:encoded></item></channel></rss>