<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 29 Aug 2026 07:34:12 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 29 ஆகஸ்ட் 2026...
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-29-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-29-august-2026#comments</comments><guid isPermaLink="false">18607955-3bbe-49aa-abf1-a6d73cdd86bd</guid><pubDate>Sat, 29 Aug 2026 04:04:14 +0000</pubDate><atom:updated>2026-08-29T07:32:29.576Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/om47bexj/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/om47bexj/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/national-sports-day-minister-aadhav-arjuna-wishes">இந்திய நாட்டின் தனித்துவ சிறப்பான விளையாட்டை போற்றுவோம் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</a></p><p>* விளையாட்டு விளையாடுபவர்கள் அனைவருக்கும் மன அமைதியைக் கொடுக்கிறது.</p><p>* விளையாட்டு என்பது ஒவ்வொரு மனிதர்க்கும் அவர்கள் யார் என்கிற சிறப்பை அடையாளம் காட்டுகிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-government-information-another-39-tamils-stranded-in-tibet-are-safe">திபெத்தில் சிக்கியுள்ள மேலும் 39 தமிழர்களும் பாதுகாப்பாக உள்ளனர் - தமிழக அரசு தகவல்</a></p><p>* 21 தமிழர்கள் தமிழகம் திரும்பிய நிலையில் மீதமுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. </p><p>* திபெத்தில் சிக்கி உள்ள 39 தமிழர்களும் நலமாக உள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/7-arrested-case-of-murder-vck-functionary-near-pallavaram">பல்லாவரம் அருகே விசிக நிர்வாகி கொலையில் 7 பேர் கைது</a></p><p>* கடந்த 2021-ம் வருடம் பம்மல் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அன்பழகன் மற்றும் வீனஸ் சிறையில் இருந்துள்ளனர்.</p><p>* இருவருக்கும் இடையே அவ்வப்போது தொழில் போட்டிகள் நடந்துள்ளது.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/0a2602fc-afa0-4738-abe3-981f6935c2f9">626 பேர் பலி.. நிறம் மாறிய புதிய ஏரி - நேபாளத்திற்கு சீனா எச்சரிக்கை</a></p><p>*2,500 பேர் மாயமாகியுள்ளனர். </p><p>*திபெத்திலும் வெள்ள பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmalkumar-says-members-of-the-public-can-even-stop-us-to-voice-their-issues">எங்களை வழிமறித்து கூட பொதுமக்கள் பிரச்சினைகளை சொல்லலாம்: அமைச்சர் நிர்மல்குமார்</a></p><p>* போதை பொருள் விற்பனை தொடர்பாக எந்த சந்தேகம் இருந்தால், எந்த பயமுமின்றி ஆசிரியர்களிடம் கூறுங்கள்.</p><p>* குழந்தைகளின் பாதுகாப்பு தான் முதலமைச்சர் விஜய்யின் முதல் முன்னுரிமை. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sengottaiyan-says-chief-minister-vijay-sat-next-to-me-in-the-legislative-assembly-and-boosted-everyones-morale">சட்டசபையில் என் அருகில் அமர்ந்து முதலமைச்சர் விஜய் அனைவரையும் உற்சாகப்படுத்தினார்- அமைச்சர் செங்கோட்டையன்</a></p><p>* எதிர்காலத்தில் இதுபோன்ற துயர சம்பவங்களை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.</p><p>*  நேபாளத்தில் உள்ள தமிழர்களின் நிலை குறித்து தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-says-let-us-make-sports-a-part-of-life-and-build-a-strong-india">விளையாட்டை வாழ்வின் ஒரு பகுதியாக்கி வலிமையான இந்தியாவை உருவாக்குவோம்! - நயினார் நாகேந்திரன்</a></p><p>* விளையாட்டு என்பது வெற்றிக்கான பாதை மட்டுமல்ல; ஒழுக்கம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை மற்றும் குழு உணர்வை வளர்க்கும் சிறந்த களம்.</p><p>* ஒவ்வொரு வெற்றியின் பின்னாலும் இருக்கும் கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் போற்றுவோம்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/prime-minister-modi-left-for-uzbekistan-and-kyrgyzstan-on-a-4-day-trip">4 நாள் பயணமாக உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் புறப்பட்டார் பிரதமர் மோடி!</a></p><p>* பயணத்தின் போது முதலாவதாக அவர் உஸ்பெகிஸ்தான் செல்கிறார்.</p><p>*உச்சிமாநாட்டில் ரஷிய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்வார்கள்</p>  <p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-29-8-2026"> GOLD PRICE TODAY: தங்கம் வாங்குவோருக்கு குட் நியூஸ் - அதிரடியாக குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.295 குறைந்து ரூ.14,505-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* தங்கத்தை போலவே வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. </p><p><a href="https://maalai-malar.quintype.com/story/38db2f44-0d69-4039-8e5d-b660bab57679">அமெரிக்காவிடம் இருந்து ஜாவலின் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் கையெழுத்து</a></p><p>*அமெரிக்காவுடன் இந்திய ராணுவம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.</p><p>*ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/a6819e51-84ba-49d1-9c0f-574b54b98586">நேபாள வெள்ளம்: அதிர்ச்சியில் உறைந்த பெண்.. அதிசயமாக உயிர்தப்பிய குடும்பம் - அதிரவைக்கும் வீடியோக்கள்</a></p><p>*சீறிப் பாயும் நீரால் சூழப்பட்ட போதிலும் ஒரு பச்சை வீடு எவ்விதச் சேதமும் இன்றி அப்படியே நின்றது.</p><p>*மரணத்தின் விளிம்பு வரை சென்ற அவர், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/e0806bf7-ac8b-4e79-a62c-a0d782ba38dc">உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம்.. அமெரிக்கா கட்டுப்பாட்டுக்கு வரும் வெனிசுலா எண்ணெய் - டிரம்ப் அறிவிப்பு</a></p><p>*வெனிசுலாவின் 65 பில்லியன் பேரல் கச்சா எண்ணெய் இருப்பை அமெரிக்கா, கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும்</p><p>*, ஈரான் போர் தொடங்கி ஆறு மாதங்களைக் கடந்துள்ளது</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/a38d2012-cf1b-4f8b-b29d-45b7bcf362f9">600-ஐ நெருங்கிய பலி எண்ணிக்கை.. U டர்ன் அடித்த நேபாள அரசு - வெளிநாட்டு மீட்பு குழுக்களுக்கு அனுமதி</a></p><p>* சுமார் 1,500 பேர் இன்னும் மாயமாகியுள்ளனர்.</p><p>*சுமார் 400 இந்தியர்கள் சீனப் பகுதியில் மாட்டிக்கொண்டனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-car-accident-4-college-students-death">மதுராந்தகம் அருகே கார் டயர் வெடித்து விபத்து - 4 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு</a></p><p>* ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது. </p><p>* இந்த விபத்தில் மேலும் 3 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.</p> ]]></content:encoded></item><item><title> 626 பேர் பலி.. நிறம் மாறிய புதிய ஏரி - நேபாளத்திற்கு சீனா எச்சரிக்கை </title><link>https://www.maalaimalar.com/news/world/626-people-died-new-lake-changed-color-china-warns-nepal</link><comments>https://www.maalaimalar.com/news/world/626-people-died-new-lake-changed-color-china-warns-nepal#comments</comments><guid isPermaLink="false">0a2602fc-afa0-4738-abe3-981f6935c2f9</guid><pubDate>Sat, 29 Aug 2026 06:06:24 +0000</pubDate><atom:updated>2026-08-29T06:06:24.613Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>China,சீனா,நேபாளம்,nepal,வெள்ளம்,floods</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/abbivs8d/tn-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நேபாளம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ நேபாளம்  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/abbivs8d/tn-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இமயமலை அருகே சீனா <a href="https://www.maalaimalar.com/news/world/broken-dam-in-tibet-risk-of-flooding-again-in-nepal-warning-to-people">திபெத் </a>எல்லையில் உருவாகி ஓடும் லெண்டே கோலா நதி, நேபாளத்தில் கோஷி நதியாக பெயர் பெற்று, இந்தியாவுக்குள் கங்கையில் கலக்கிறது. </p><p>இந்த லெண்டே கோலா  நதியில் கடந்த புதன்கிழமை இமயமலை பனிப்பாறைகள் விழுந்து நீரோட்டத்தை அடைத்ததால் அணை உடைந்தது. </p><p>போக வழியின்றி தேங்கியிருந்த தண்ணீர் அணை உடைந்ததால் வேகமாக கீழ் நோக்கி பாய்ந்தது. இதனால் நதியானது கோஷியாக நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் நுழையும்போது வெள்ளப்பெருக்குக்கு உள்ளானது. </p> <p>இந்த திடீர் வெள்ளபெருக்கு காரணமாக ரசுவா மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதுவரை இந்த பேரிடரில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 626 ஆக உயர்ந்துள்ளது. </p><p>2,500 பேர் மாயமாகியுள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திபெத்திலும் வெள்ள பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது.</p><h2>புதிய ஏரி</h2><p>இந்நிலையில் திபெத்தில் லெண்டே கொலோ நதி அமைப்பின் மேல் பகுதியில் தற்காலிக ஏரி ஒன்று உருவாகி உள்ளது. அந்த ஏரியில் உள்ள நீரின் நிறம் மாறியுள்ளதை சுட்டிக்காட்டி, அது எந்நேரத்திலும் கரைபுரண்டு பாயக்கூடும் என சீனா எச்சரித்துள்ளது.</p><p>கடந்த புதனன்று ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து பனிப்பாறை சரிவு இடிபாடுகளால் நதி நீர் தடைபட்டு இந்த ஏரி உருவாகக் காரணமாக அமைந்தது.</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/stv972r7/tn-7.jpg" /></figure><p>சீனப் பகுதியில் உள்ள 'சோசென்' நதியும், நேபாளப் பகுதியில் உள்ள 'புரேபு' நதியும் இணையும் இடத்திற்கு அருகில் இந்த ஏரி உருவாகியுள்ளது.</p><p>இந்த ஏரியின் நிறம் தொடர்ந்து கருமையாக மாறி வருவதாக நேபாள வெளியுறவு அமைச்சகத்துடன் பகிர்ந்த செய்தியில் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது ஏரி எந்நேரத்திலும் தடுப்பை உடைத்து பாயக்கூடும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர். </p> <p>சீன நீர் வள அமைச்சகத்தின் கூற்றுப்படி, ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.</p><p>நேற்றைய நிலவரப்படி, இந்த ஏரியில் சுமார் 25 லட்சம் கன மீட்டர் நீர் தேங்கியுள்ளது.</p><p>தண்ணீரின் அளவு மிக அதிகமாக இல்லாததால், கீழ்நோக்கிய பகுதிகளில் உள்ள ஆறுகளில் நீர்வரத்து சற்று அதிகரிக்கக்கூடும் என்றும், ஆனால் மிகப்பெரிய அளவில் நீர்மட்டம் உயர வாய்ப்பில்லை என்பதையும் சீனா தெரிவித்துள்ளது.</p><p>இருப்பினும் கீழ்நோக்கிய பகுதிகளில் வாழும் மக்கள் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு சீன அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பொறுப்பான கார் உரிமையில் நிதித் திட்டமிடல் வகிக்கும் பங்கு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/how-much-does-used-car-maintainance-cost-in-india</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/how-much-does-used-car-maintainance-cost-in-india#comments</comments><guid isPermaLink="false">5b355145-0b89-4b4d-8653-908e2eb43cb4</guid><pubDate>Thu, 27 Aug 2026 13:33:12 +0000</pubDate><atom:updated>2026-08-27T13:33:12.775Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Car,கார்,கார் பராமரிப்பு,car maintainance</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/1bpese07/car.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ car]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/1bpese07/car.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெரும்பாலான மக்கள் ஒரு காரை வாங்குவதற்கு முன் பல வாரங்கள் ஒப்பிட்டுப் பார்ப்பதில் செலவிடுகிறார்கள். ஆனால் அந்தக் காரை வைத்திருப்பதற்கு உண்மையில் எவ்வளவு செலவாகும் என்பதைப் பற்றி சிந்திக்க அதே அளவு நேரம் செலவிடுபவர்கள் மிகச் சிலரே.</p><p>வாங்குதல் என்பது வெறும் தொடக்கம் மட்டுமே. எரிபொருள், சர்வீஸிங், இன்சூரன்ஸ், பழுதுபார்ப்பு, தேய்மானம் ஆகியவை ஒவ்வொரு மாதமும் அமைதியாக, தொடர்ச்சியாக பின்தொடர்கின்றன. ஒரு திட்டமில்லாமல், இவை ஒருபோதும் அத்தகைய செலவுகளைத் தாங்குவதற்கு உருவாக்கப்படாத ஒரு குடும்ப பட்ஜெட்டின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.</p><h2>ஒரு காரை வாங்குவது ஒருமுறை மட்டும் செய்யும் செலவு அல்ல ஏன்?</h2><p>ஆன்-ரோடு விலையும் EMI-யும் தான் பெரும்பாலான வாங்குபவர்கள் கவனம் செலுத்தும் எண்கள். ஆனால் இரண்டுமே முழு கதையையும் சொல்வதில்லை. உரிமையின் இரண்டாம் ஆண்டு முதல், ஒரு காரை ஓட்டுவதற்கான செலவில் எரிபொருள், இன்சூரன்ஸ், சர்வீஸிங், பார்க்கிங், டோல், அவ்வப்போது தேவைப்படும் பழுதுபார்ப்பு ஆகியவை அடங்கும். இந்த செலவுகள் EMI-க்கு அப்பால் மொத்த மாதாந்திர கடமையைக் கணிசமாக அதிகரிக்கக்கூடும்.</p><p>அந்த இடைவெளியில்தான் உரிமை பட்ஜெட்டுகள் அமைதியாக சிதைந்துவிடுகின்றன. பெரும்பாலான இந்திய குடும்பங்கள் ஒரு காரை ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரை வைத்திருக்கின்றன. நிதி கடமை கடன் காலத்தில் மட்டுமல்ல, முழு காலத்திலும் தொடர்கிறது. எதையும் கையெழுத்திடுவதற்கு முன் இதைப் பற்றிய தெளிவான புரிதலைப் பெறுவது தான் கார் உரிமையை மன அழுத்தமாக இல்லாமல் நிர்வகிக்கக் கூடியதாக ஆக்குகிறது.</p><h2>காரை வாங்கிய விலைக்கு அப்பால் அதை வைத்திருப்பதற்கான உண்மையான செலவுகள் என்ன?</h2><p>பெரும்பாலான கார் உரிமையாளர்களுக்கு வாங்குதல் முடிந்த பின்னரும் ஒட்டுச் செலவுகள் தொடர்கின்றன. எரிபொருள், சர்வீஸிங், இன்சூரன்ஸ் புதுப்பித்தல்கள், பார்க்கிங் கட்டணங்கள், டோல், எதிர்பாராத பழுதுபார்ப்புகள் ஆகிய அனைத்தும் மொத்த உரிமை செலவில் பங்களிக்கின்றன. இந்த செலவுகளில் அடங்குவன: </p><p><strong>எரிபொருள்:</strong> இது எந்த விதிவிலக்கும் இல்லாமல் ஒவ்வொரு மாதமும் ஏற்படும் செலவு. காரை எவ்வளவு தூரம் ஓட்டுகிறோம், என்ன பாதைகளில் செல்கிறோம், இன்ஜின் எவ்வளவு திறமையாக இயங்குகிறது என்பதைப் பொறுத்து இது மாறுபடும்.</p><p><strong>இன்சூரன்ஸ் புதுப்பித்தல்:</strong> முதல் ஆண்டில் ஆன்-ரோடு விலையுடன் இணைக்கப்பட்டிருக்கும். இரண்டாம் ஆண்டு முதல் இது ஒரு தனி வருடாந்திர செலவாக மாறும். இதற்கு பல வாங்குபவர்கள் பட்ஜெட் ஒதுக்கியிருக்க மாட்டார்கள்.</p><p><strong>சர்வீஸிங்:</strong> உரிமையாளர் திட்டமிடட்டும் இல்லையோ, காருக்கு குறிப்பிட்ட இடைவெளிகளில் கவனிப்பு தேவை. ஒரு சர்வீஸை தவிர்ப்பது சேமிப்பாகத் தோன்றலாம். ஆனால் பின்னர் அதை சரிசெய்ய அதிக செலவாகும்.</p><p><strong>டயர்களும் பிரேக்குகளும்:</strong> இவை பயன்பாட்டால் தேய்ந்து, அவ்வப்போது மாற்றப்பட வேண்டும். வருடத்திற்கு சுமார் 15,000 கி.மீ. ஓடும் ஒரு கார், பொதுவாக மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை டயர் செட் மாற்றப்பட வேண்டியிருக்கும்.</p><p><strong>பேட்டரி:</strong> பெரும்பாலான கார் பேட்டரிகள் 4-5 ஆண்டுகள் நீடிக்கும். மாற்றுவது ஒருமுறை மட்டுமே ஏற்படும், ஆனால் தவிர்க்க முடியாத செலவு.</p><p><strong>பார்க்கிங்கும் டோலும்:</strong> தினசரி செலவுகள், இவை படிப்படியாக ஒரு காரை வைத்திருப்பதன் மற்றும் பயன்படுத்துவதன் மொத்த செலவை அதிகரிக்கக் கூடும்.</p><p><strong>தேய்மானம்:</strong> எரிபொருள் அல்லது சர்வீஸிங் போலல்லாமல் இது நேரடி செலவு அல்ல. ஆனால் காலப்போக்கில் வாகனத்தின் மறுவிற்பனை மதிப்பை பாதிக்கிறது.</p><p><strong>திட்டமிடப்படாத பழுதுபார்ப்புகள்:</strong> வாரண்டி முடிந்தவுடன் ஒவ்வொரு பழுதுபார்ப்பும் உரிமையாளரின் சொந்த பணத்தில் இருந்து தான். எதிர்பாராத பழுதுபார்ப்புகளுக்கு ஒரு அவசர நிதியை ஒதுக்கி வைப்பது, பராமரிப்பு தேவைகள் ஏற்படும்போது திடீர் நிதி நெருக்கடியைத் தவிர்க்க உதவும்.</p><h2>ஒரு நிலையான கார் உரிமை பட்ஜெட்டை உருவாக்க நிதி திட்டமிடல் எவ்வாறு உதவுகிறது?</h2><p>எந்தவொரு கார் உரிமை பட்ஜெட்டின் தொடக்க புள்ளியும், வெறும் EMI அல்ல, மாதாந்திர முழு எண்ணிக்கை. அனைத்தும் மீண்டும் நிகழும் மற்றும் அவ்வப்போது ஏற்படும் உரிமை செலவுகளும், பின்னர் எதிர்பாராத செலவுகளாக கருதப்படுவதற்குப் பதிலாக, ஆரம்பத்திலிருந்தே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.</p><p>கார் தொடர்பான செலவுகளுக்காக ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி வைப்பது, சர்வீஸிங், டயர் மாற்றங்கள், சிறிய பழுதுபார்ப்புகள் ஆகியவற்றை மற்ற நிதி இலக்குகளை பாதிக்காமல் ஈடுகட்ட உதவும்.</p><h2>ஒவ்வொரு கார் உரிமையாளரின் நிதி திட்டத்திலும் இன்சூரன்ஸ் ஏன் சேர்க்கப்பட வேண்டும்?</h2><p>இன்சூரன்ஸ் தான் புதுப்பித்தல் மாதம் வரும் வரை பெரும்பாலான வாங்குபவர்கள் குறைத்து மதிப்பிடும் செலவு. முதல் ஆண்டு இன்சூரன்ஸ் ஆன்-ரோடு விலையில் அமைதியாக இணைக்கப்பட்டிருக்கும். 13வது மாதம் அதை மாற்றிவிடும். ₹18,000 புதுப்பித்தல் அறிவிப்பு வந்திறங்குகிறது, ஆனால் பட்ஜெட்டில் அதற்காக எதுவும் ஒதுக்கப்படவில்லை.</p><p>பிரீமியத்தைத் தாண்டி, சரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கார் இன்சூரன்ஸ் பாலிசி தான், முன்கூட்டியே கணிக்க முடியாதவற்றை உள்வாங்கும் நிதி வழிமுறையாக செயல்படுகிறது. ஒரு விபத்து, ஒரு திருட்டு, ஒரு வெள்ளம், ஒரு மூன்றாம் தரப்பு பொறுப்புக் கோரிக்கை. உரிமையின் முதல் மாதத்திலிருந்தே வருடாந்திர புதுப்பித்தலுக்காக பட்ஜெட் ஒதுக்குவது, 13வது மாதத்தில் தொகையைத் தேடி அலைவதற்குப் பதிலாக, கார் உரிமையில் மிகவும் பொதுவான நிதி அதிர்ச்சிகளில் ஒன்றை நீக்கும் ஒரு எளிய பழக்கமாகும்.</p><h2>சாலையில் எதிர்பாராத நிதி அபாயங்களுக்கு கார் உரிமையாளர்கள் எவ்வாறு தயாராகலாம்?</h2><p>எதிர்பாராத நிதி அபாயங்களுக்குத் தயாராவது, அந்த அபாயங்கள் எங்கிருந்து வருகின்றன என்பதைப் புரிந்துகொள்வதில் தொடங்குகிறது. பெரும்பாலான கார் உரிமையாளர்களுக்கு, இவை பொதுவாக மூன்று வகைகளில் அடங்கும்: வாகனத்திற்கு ஏற்படும் சேதம், மற்றொருவருக்கு ஏற்படும் பொறுப்பு, மற்றும் வாகனம் பழுதுபார்க்கப்படும்போது ஏற்படும் தற்காலிக இடையூறு.</p><p>வாகனத்திற்கு ஏற்படும் சேதம்தான் மிகவும் தெரியும் ஒன்று. எலக்ட்ரானிக்ஸ் நிறைந்த நவீன காரின் பழுதுபார்ப்பு பில், மிதமான சேதத்திற்குக் கூட லட்சக்கணக்கில் செல்லலாம். திருட்டு அல்லது முழுமையான இழப்பு, கடன் தொடர்ந்து கொண்டிருக்கும்போதே வாகனத்தையே முழுமையாக அகற்றிவிடும்.</p><p>மூன்றாம் தரப்பு பொறுப்பு என்பது குறைவாகத் தெரியக்கூடிய, ஆனால் பெரியதாக இருக்கக்கூடிய அபாயம். மோட்டார் வாகன சட்டத்தின் கீழ், மற்றொருவருக்கு ஏற்படும் மரணம் அல்லது நிரந்தர ஊனத்திற்கான இழப்பீட்டிற்கு மேல் வரம்பு இல்லை. போதுமான இன்சூரன்ஸ் இல்லாத பட்சத்தில், அந்தப் பொறுப்பு நேரடியாக வாகன உரிமையாளர் மீது விழும்.</p><p>மூன்றுக்கும் தயாராவது ஒரே சில படிகளில் தொடங்குகிறது. காரின் இன்றைய உண்மையான மதிப்பை பிரதிபலிக்கும் ஒரு பாலிசியைத் தேர்ந்தெடுக்கவும். இடைவெளியில்லாமல் அதை செயலில் வைத்திருக்கவும். இன்சூரன்ஸ் தீர்க்கும் தொகைக்கும் உண்மையான பழுதுபார்ப்பு செலவுக்கும் இடையே விழும் தொகைகளுக்கு சில பணத்தை ஒதுக்கி வைக்கவும். இவை சிக்கலான படிகள் அல்ல, ஆனால் இவை அனைத்தும் சேர்ந்துதான், ஒரு சம்பவம் ஒரு நீடித்த நிதிப் பிரச்சினையாக மாறுவதைத் தடுக்கின்றன.</p><h2>நீண்டகால உரிமை செலவுகளை நிர்வகிப்பதில் காம்ப்ரிஹென்சிவ் பாதுகாப்பு என்ன பங்கு வகிக்கிறது?</h2><p>அடிப்படை மூன்றாம் தரப்பு பாலிசி மற்றவர்கள் மீதான பொறுப்பை மட்டுமே உள்வாங்குகிறது. இது காரையே முற்றிலும் பாதுகாப்பின்றி விட்டுவிடுகிறது. காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் விபத்துகள், திருட்டு, தீ, இயற்கை பேரிடர்கள் ஆகியவற்றால் ஏற்படும் சொந்த-வாகன சேதத்தை, மூன்றாம் தரப்பு பொறுப்புடன் சேர்த்து உள்வாங்குகிறது.</p><p>இங்கு ஆட்-ஆன்கள் முக்கியமானவை. ஜீரோ டெப்ரிசியேஷன் கவர் என்பது பாகங்கள் தேய்மான மதிப்பில் அல்ல, முழு மாற்று செலவில் தீர்க்கப்படுவதைக் குறிக்கிறது. இது ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான கார்களுக்கு உண்மையான வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. என்ஜின் பாதுகாப்பு, நீர் உட்புகுதல் அல்லது எண்ணெய் கசிவால் ஏற்படும் சேதத்தை உள்வாங்குகிறது, இது நிலையான பாலிசிகளில் விலக்கப்பட்டுள்ளது. ரிட்டர்ன் டு இன்வாய்ஸ் கவர், முழுமையான இழப்பு தீர்வு, தேய்மானத்திற்குப் பின் காரின் மதிப்பை அல்ல, அசல் வாங்கிய விலையை பிரதிபலிக்கிறது என்பதை உறுதி செய்கிறது.</p><p>இந்த ஆட்-ஆன்கள் ஒவ்வொன்றும், அவை உள்வாங்குவதன் ஒரு சிறு பகுதியே செலவாகும். உரிமைக் காலம் முழுவதும், இவை பழுதுபார்ப்பு மற்றும் கோரிக்கைகளின் சொந்த பண செலவை கணிசமாகக் குறைக்கின்றன. இதுதான் இன்சூரன்ஸ் வெறும் ஒரு சட்ட முறைமையாக இல்லாமல் ஒரு நிதி திட்டத்தின் பகுதியாக மாறும் விதம்.</p><h2>ஸ்மார்ட் நிதி முடிவுகள் ஒரு காரின் ஆயுள் மற்றும் மதிப்பை எவ்வாறு நீட்டிக்க முடியும்?</h2><p>நன்கு பராமரிக்கப்பட்ட ஒரு கார் ஓட்ட செலவு குறைவாக இருக்கும். இறுதியில் விற்கும்போது அதன் மதிப்பையும் சிறப்பாக தக்க வைத்திருக்கும். ஒழுங்குபடுத்தப்பட்ட பராமரிப்பின் நிதி பலன் இரண்டு முனைகளிலும் தெரியும், அதாவது உரிமைக் காலத்தில் குறைந்த ஓட்ட செலவுகள் மற்றும் முடிவில் சிறந்த மறுவிற்பனை விலை.</p><p>உற்பத்தியாளரின் சர்வீஸ் அட்டவணையைப் பின்பற்றுவது, சிறிய பிரச்சினைகள் விலையுயர்ந்தவையாக மாறுவதைத் தடுக்கிறது. சர்வீஸ் பதிவுகளை முழுமையாக வைத்திருப்பது மறுவிற்பனையின் போது உண்மையான மதிப்பைச் சேர்க்கிறது. வாங்குபவர்கள் ஒரு முழுமையான ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றைப் பார்க்கும்போது தொடர்ந்து அதிக விலை கொடுக்கிறார்கள். ஏனெனில் இது தாங்கள் வாங்குவது என்ன என்பது பற்றிய நிச்சயமற்ற தன்மையைக் குறைக்கிறது.</p><p>நோ கிளைம் போனஸை (NCB) புத்திசாலித்தனமாக நிர்வகிப்பதும் உரிமை செலவுகளைக் குறைக்க முடியும். காலப்போக்கில், அதிக NCB இன்சூரன்ஸ் புதுப்பித்தல் பிரீமியங்களில் கணிசமான சேமிப்பை ஏற்படுத்தலாம்.</p><h2>ஒரு நிதிரீதியாக பொறுப்புள்ள கார் உரிமையாளரை வரையறுக்கும் பழக்கங்கள் என்ன?</h2><p>ஒரு நிதிரீதியாக பொறுப்புள்ள கார் உரிமையாளர், வாகனத்தை ஒருமுறை மட்டும் எடுக்கும் முடிவாக அல்லாமல், தொடர்ந்து சுறுசுறுப்பான மேலாண்மை தேவைப்படும் ஒன்றாகக் கருதுகிறார்.</p><p>நடைமுறையில் இதன் பொருள், முதல் நாளிலிருந்தே முழு மாதாந்திர உரிமை செலவிற்காக பட்ஜெட் ஒதுக்குவது. காப்பீட்டை சரியான நேரத்தில் புதுப்பித்து, புதுப்பிக்கும்போது கவரேஜை மறுஆய்வு செய்வது, சாம் இன்சூர்டு இன்னும் காரின் மதிப்பையும் உரிமையாளரின் உண்மையான ஆபத்தையும் பிரதிபலிக்கிறதா என்பதை சரிபார்ப்பது. பதிவு, இன்சூரன்ஸ், PUC ஆவணங்களை புதுப்பித்த நிலையில் வைத்திருப்பது, ஏனெனில் காலாவதி ஆவது சட்ட மற்றும் நிதி ரீதியான ஆபத்தை ஒரே நேரத்தில் உருவாக்குகிறது.</p><p>சில முடிவுகள் அவ்வப்போது வரும். காரை எங்கு சர்வீஸ் செய்வது, ஒரு பழுதுபார்ப்புக்கு கோரிக்கை வைப்பது நல்லதா அல்லது நேரடியாக செலுத்துவது நல்லதா, மற்றும் ஒரு கட்டத்தில், காரை தொடர்ந்து ஓட்டுவது இன்னும் நிதி ரீதியாக அர்த்தமுள்ளதா அல்லது புதிதாக ஒன்றுக்கு மாறுவது புத்திசாலித்தனமான நகர்வா என்பது. இவை எதுவும் சிக்கலானவை அல்ல. இவை வெறுமனே இயல்பாக இல்லாமல் உணர்வுபூர்வமாக எடுக்கப்பட வேண்டும்.</p><h2>முடிவுரை</h2><p>பொறுப்புள்ள கார் உரிமை என்பது சரியான வாகனத்தைத் தேர்ந்தெடுப்பதைத் தாண்டியது. வருடங்களாக அதைப் பயன்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் வரும் செலவுகளுக்கு திட்டமிடுவதும் இதில் அடங்கும். சர்வீஸிங், இன்சூரன்ஸ் புதுப்பித்தல்கள், பழுதுபார்ப்புகள், தேய்மானம் போன்ற செலவுகள் முன்கூட்டியே எதிர்பார்க்கப்படும்போது, கார் உரிமை மேலும் கணிக்கக்கூடியதாகவும் நிதி ரீதியாக நிலையானதாகவும் மாறுகிறது. ஒரு கவனமான நிதி திட்டம், உரிமையாளர்கள் தங்கள் நீண்டகால நிதி நிலைமையின் மீது தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்தாமல் தங்கள் வாகனத்தின் பலன்களை அனுபவிக்க உதவுகிறது.</p><h2>Reference Links:</h2><p>https://fintoolbaba.com/blog/hidden-cost-owning-car-india</p><p>https://fintoolbaba.com/blog/used-car-maintenance-cost-india</p><p>https://tukkbook.in/car-ownership-cost-calculator/</p><p>https://www.godigit.com/motor-insurance/car-insurance/ncb-in-car-insurance </p>]]></content:encoded></item><item><title>இந்திய நாட்டின் தனித்துவ சிறப்பான விளையாட்டை போற்றுவோம் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/national-sports-day-minister-aadhav-arjuna-wishes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/national-sports-day-minister-aadhav-arjuna-wishes#comments</comments><guid isPermaLink="false">5b71f544-0823-4dbc-b365-d74c5cdeafdf</guid><pubDate>Sat, 29 Aug 2026 07:26:05 +0000</pubDate><atom:updated>2026-08-29T07:26:05.974Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,National Sports Day,தேசிய விளையாட்டு தினம்,அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,Minister Aadhav Arjuna</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/x4he97gx/aadhav.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Aadhav Arjuna - National Sports Day]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/x4he97gx/aadhav.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களின் வழிகாட்டுதலில் விரைவில் ஒலிம்பிக் பதக்கங்களைக் கைப்பற்றி, இந்தியத் திருநாட்டிற்கு பெருமை சேர்ப்போம் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வாழ்த்து தெரிவித்துள்ளார்.</strong></em></p><p>இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29-ந்தேதி தேசிய விளையாட்டு தினம் (National Sports Day) கொண்டாடப்படுகிறது.</p><p>இந்தியாவின் ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தியான் சந்த் அவர்களின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் இந்நாள் கொண்டாடப்படுகிறது. </p> <p>மேஜர் தியான் சந்த் தலைமையிலான இந்திய ஹாக்கி அணி, 1928, 1932 மற்றும் 1936 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து மூன்று முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்தது.</p><p>இந்தியாவில் விளையாட்டுத் துறையை ஊக்குவிப்பதற்கும், ஆரோக்கியமான உடல் உறுதியைப் பேணுவதற்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்திய அரசால் கடந்த 2012-ம் ஆண்டு முதல் அதிகாரப்பூர்வமாக தேசிய விளையாட்டு தினம் அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.  </p> <p>இந்தியக் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் அல்லது சிறப்பு விழாக்களில், விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைக்கும் தலைசிறந்த வீரர்களுக்கு மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருது, மற்றும் துரோணாச்சார்யா விருது போன்ற உயரிய விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறார்கள்.</p><p>இந்நிலையில் தேசிய விளையாட்டு தினத்தையொட்டி பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-candidates-voters-to-respond-in-court-on-cm-vijay-adhav-arjuna-election-cases">ஆதவ் அர்ஜுனா</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p> <p>விளையாட்டு என்பது ஒருவருக்கு வெற்றியையோ, தோல்வியையோ தருவதில்லை. மாறாக, விளையாடுபவர்கள் அனைவருக்கும் மன அமைதியைக் கொடுக்கிறது; உடல் வலிமையை உறுதிப்படுத்துகிறது; மகிழ்வான பொழுதுகளை வழங்குகிறது; போதைப்பொருள் பயன்பாடு போன்ற தீங்கான வழிகளிலிருந்து பாதுகாக்கிறது; இறுதியாக, ஒவ்வொரு மனிதர்க்கும் அவர்கள் யார் என்கிற சிறப்பை அடையாளம் காட்டுகிறது.</p> <p>ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய நாட்டிற்குத் தொடர் தங்கப் பதக்கங்களைப் பெற்றுத் தந்த இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் மேஜர். தியான் சந்த் பிறந்தநாள், தேசிய விளையாட்டு நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்திய நாட்டின் தனித்துவ சிறப்பான விளையாட்டைப் போற்றுவோம்.</p> <p>தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் விளையாட்டைச் சென்றடையச் செய்வதும், ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வெல்வதுமே தமிழ்நாடு அரசின் முதன்மை நோக்கமாகும்; இதற்காக 8-18 திட்டம், 10 ஒலிம்பிக் சிறப்புப் பயிற்சி மையங்கள், வெளிநாட்டுப் பயிற்சியாளர்கள், குளிர்சாதன வசதியுடன் கூடிய விடுதிகள் உள்ளிட்ட பல திட்டங்கள் அறிவித்துள்ளோம். தமிழ்நாடு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sengottaiyan-says-chief-minister-vijay-sat-next-to-me-in-the-legislative-assembly-and-boosted-everyones-morale">முதலமைச்சர் விஜய்</a> அவர்களின் வழிகாட்டுதலில் விரைவில் ஒலிம்பிக் பதக்கங்களைக் கைப்பற்றி, இந்தியத் திருநாட்டிற்கு பெருமை சேர்ப்போம்.</p><p>அனைவருக்கும் தேசிய விளையாட்டு நாள் நல்வாழ்த்துகள்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திபெத்தில் சிக்கியுள்ள மேலும் 39 தமிழர்களும் பாதுகாப்பாக உள்ளனர் - தமிழ்நாடு அரசு தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-government-information-another-39-tamils-stranded-in-tibet-are-safe</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-government-information-another-39-tamils-stranded-in-tibet-are-safe#comments</comments><guid isPermaLink="false">7f565151-e836-4f82-a3a7-913a082b07e4</guid><pubDate>Sat, 29 Aug 2026 06:59:24 +0000</pubDate><atom:updated>2026-08-29T06:59:24.390Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,தமிழர்கள்,Tamil people,TN Government,Nepal Floods,நேபாள வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/6pfaph48/tibet.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/6pfaph48/tibet.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p> <em><strong>திபெத்தில் சிக்கியுள்ள மேலும் 39 தமிழர்களும் பாதுகாப்பாக இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.</strong></em></p> <h2>நேபாள பெருவெள்ளம்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/national/nepal-flash-floods-320-indians-missing">நேபாளத்தில்</a> கடந்த 26-ந்தேதி ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானார் மாயமாகி உள்ளனர்.</p><p>நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த பேரிடரில் சிக்கியவர்களை தேடி மீட்கும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது.</p> <h2>சுற்றுலா சென்ற தமிழர்கள்</h2><p>நேபாளத்துக்கு சுற்றுலா சென்ற <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/nepal-floods-21-tamil-people-return-chennai-safely">தமிழர்களும்</a> இந்த இயற்கை சீற்றத்தில் சிக்கினார்கள். அவர்களில் 21 பேர் மீட்கப்பட்டனர். அவர்கள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.</p><p>இதற்கிடையே, நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழர்களை மீட்க தமிழக அமைச்சர்கள் குழு ஆலோசனை நடத்தி வருகிறது.</p> <h2>21 தமிழர்கள் மீட்பு</h2><p>21 தமிழர்கள் தமிழகம் திரும்பிய நிலையில் மீதமுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழர்கள் பலரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் மத்திய அரசுடன் இணைந்து தொடர் மீட்பு நடவடிக்கைகளில் தமிழக அமைச்சர்கள் குழு ஈடுபட்டுள்ளது.</p><p>இந்நிலையில் திபெத்தில் சிக்கியுள்ள மேலும் 39 தமிழர்களும் பாதுகாப்பாக இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.</p> <h2> 39 தமிழர்கள் பாதுகாப்பு</h2><p>திபெத்தில் சிக்கி உள்ள 39 தமிழர்களும் நலமாக உள்ளனர். அவர்கள் பாதுகாப்பாக உள்ள நிலையில் நாளை நேபாளத்திற்கு அழைத்து வரப்பட்டு டெல்லி அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.</p><p>நேபாளத்திலிருந்து டெல்லி வந்தடைந்ததும் 33 பேர் கோவைக்கும், 6 பேர் சென்னைக்கும் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>ஆந்திராவில் சோகம்: 3 வயது குழந்தையை பாலத்தின் மீது தவிக்கவிட்டு கோதாவரி ஆற்றில் குதித்த தம்பதி!</title><link>https://www.maalaimalar.com/news/national/andhra-pradesh-couple-dies-by-suicide-in-godavari-leaving-toddler-on-bridge</link><comments>https://www.maalaimalar.com/news/national/andhra-pradesh-couple-dies-by-suicide-in-godavari-leaving-toddler-on-bridge#comments</comments><guid isPermaLink="false">50be2d14-6129-4fb0-9d17-c08e29dea3b8</guid><pubDate>Sat, 29 Aug 2026 06:57:10 +0000</pubDate><atom:updated>2026-08-29T06:57:10.901Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆந்திரபிரதேசம்,Godavari river,கோதாவரி ஆறு,AndraPradesh,Family Tragedy,Financial Distress,Child Rescuedce</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/lf0mju7h/Family-Tragedy" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Family Tragedy ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/lf0mju7h/Family-Tragedy?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">ஆந்திரப் பிரதேச</a>த்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில், வியாழக்கிழமை இரவு தங்களின் 3 வயது ஆண் குழந்தையை பாலத்தின் மீது தனியாக தவிக்கவிட்டு, பெற்றோர் இருவரும் கோதாவரி ஆற்றில் குதித்த செய்தி நெஞ்சை உலுக்கும் சம்பவமாக அரங்கேறியுள்ளது.</p><h2><strong>நள்ளிரவில் நடந்த பயங்கரம்</strong></h2><p>வேல்புரூ கிராமத்தைச் சேர்ந்த <strong>தொட்டா சாய் (29)</strong> மற்றும் அவரது மனைவி <strong>சிரீஷா (28)</strong> ஆகிய இருவரும், வியாழக்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் தங்களது 3 வயது குழந்தையுடன் ஸ்கூட்டரில் சின்சினாடா பாலத்திற்கு வந்துள்ளனர்.</p><p>அங்கு யாரும் எதிர்பாராத விதமாக, குழந்தையை ஸ்கூட்டரிலேயே அமரவைத்துவிட்டு, இருவரும் ஆற்றில் குதித்துள்ளனர்.</p><h2>"அம்மா... அப்பா..." - கதறிய குழந்தை</h2><p>இருள் சூழ்ந்த, கடுமையான குளிரில் அந்தப் பிஞ்சு குழந்தை பாலத்தின் மீது தனியாக நின்றுகொண்டிருந்தது.</p><p>தெலுங்கில் "அம்மா... அப்பா " என்று அழுதுகொண்டே கத்தியுள்ளது. அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள், குழந்தை தனியாக அழுது கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து, உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். </p><p>சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், குழந்தையை மீட்டு அவர்களது உறவினர்களிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.</p><h2><strong>தீவிர தேடுதல் வேட்டை</strong></h2><p>அண்மையில் பெய்த மழையால் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81">கோதாவரி ஆற்றில்</a> வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. </p><p>இதனால், ஆற்றில் குதித்த தம்பதியை மீட்கும் பணியில் சிரமம் ஏற்பட்டாலும், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், உள்ளூர் நீச்சல் வீரர்கள் மற்றும் படகு குழுவினர் இணைந்து ஆற்றில் தீவிரமாக தேடி வருகின்றனர்.</p><h2>காரணம் என்ன?</h2><p>போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஓட்டுநராக பணிபுரிந்து வந்த தொட்டா சாய், வளைகுடா நாட்டிற்குச் சென்றுவிட்டு சமீபத்தில்தான் ஆந்திரா திரும்பியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.</p><p>அவர் கடன் சுமை மற்றும் கடுமையான நிதி நெருக்கடியால் மன உளைச்சலில் இருந்ததாகவும், இதன் காரணமாகவே அவர்கள் தங்களது வீட்டை விற்க முடிவெடுத்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது.</p><p>எனினும், தற்கொலை முயற்சிக்கான முழுமையான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. </p><p>சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஆண்டு பெருவிழா</title><link>https://www.maalaimalar.com/spirituality/worship/velankanni-matha-temple-church-festival</link><comments>https://www.maalaimalar.com/spirituality/worship/velankanni-matha-temple-church-festival#comments</comments><guid isPermaLink="false">85075069-30a3-4542-8323-29da931d2534</guid><pubDate>Sat, 29 Aug 2026 06:40:57 +0000</pubDate><atom:updated>2026-08-29T06:40:57.213Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Velankanni Mata,Velankanni Festival,Velankanni,வேளாங்கண்ணி பேராலயம்,வேளாங்கண்ணி,வேளாங்கண்ணி திருவிழா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/bhkxazdm/velankannic.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/bhkxazdm/velankannic.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வழிபாடு</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது.</p><h2><strong>‘கீழ்​திசை நாடுகளின் லூர்து நகரம்’</strong></h2><p>‘கீழ்​திசை நாடுகளின் லூர்து நகரம்’ என அழைக்கப்படும் இங்கு ஆண்டுதோறும் பெருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான பெருவிழா இன்று (சனிக்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.</p><h2><strong>ஆண்டு பெருவிழா கொடியேற்றம்</strong></h2><p>முன்னதாக மாலை 5.45 மணிக்கு தஞ்சை மறை​மாவட்ட ஆயர் சகாய​ராஜ் கொடியை புனிதம் செய்து வைத்த பின், கொடி ஊர்​வலம் புறப்படும். பின்னர், கொடிக்கம்பத்தில் தஞ்சை மறை​மாவட்ட ஆயர் சகாய​ராஜ் கொடி ஏற்றுகிறார். தொடர்ந்து, திருத்தல கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்​கருணை ஆசி, தமிழில் திருப்பலி நிறைவேற்றுதல் ஆகியவை நடைபெறுகிறது.</p><h2><strong>சிலுவைப்பாதை</strong></h2><p>தொடர்ந்து, நாளை (30-ந்தேதி) முதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி வரை பேராலயம், விண்​மீன் ஆலயம், மாதாகுளம், மேல்​கோயில், கீழ்​கோயில் ஆகிய இடங்களில் தமிழ், மராத்தி, ஆங்கிலம், கொங்கனி, கன்னடம், தெலுங்கு, இந்தி, கிழக்கத்திய மராத்தி ஆகிய மொழிகளில் இரவு, பகலாக சிறப்பு திருப்பலிகள் நடைபெறுகிறது. இதனிடையே வருகிற 1-ந்தேதி சிலுவைப்பாதை ஊர்வலம் நடக்கிறது.</p><h2><strong>பெரிய தேர்பவனி</strong></h2><p>விழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேர்பவனி வருகிற 7-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்பவனியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>தொடர்ந்து, 8-ந்தேதி விண்​மீன் ஆலயத்தில் அன்னையின் பிறந்தநாளை முன்னிட்டு, அன்று காலை தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாய​ராஜ் தலைமையில் சிறப்பு கூட்டுப்​பாடல் திருப்பலி நிறைவேற்றப்பட்டு, கொடி இறக்கம் செய்யப்பட்டு விழா நிறைவடைகிறது.</p><h2><strong>ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்</strong></h2><p>ஆண்டு பெருவிழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதேப்போல், சிறு, சிறு குழுக்களாக பிரிந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த படி உள்ளனர். இவ்வாறு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் வசதிக்காக நாகை மற்றும் வேளாங்கண்ணி பகுதிகளில் ஆங்காங்கே அன்னதானம், குடிநீர், தேநீர், குளிர்பானங்கள் ஆகியவற்றை பொதுமக்கள், தன்னார்வலர்கள் வழங்கி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நேபாள வெள்ளம்: மீட்கப்பட்ட இரட்டைக் குழந்தைகளை அரவணைத்த வீராங்கனைகள் 
- நம்பிக்கையை விதைக்கும்
வீடியோ </title><link>https://www.maalaimalar.com/news/world/nepal-floods-twin-babies-rescued-a-heartwarming-video-that-sowed-hope</link><comments>https://www.maalaimalar.com/news/world/nepal-floods-twin-babies-rescued-a-heartwarming-video-that-sowed-hope#comments</comments><guid isPermaLink="false">418f12f8-74cb-4f27-bfe2-ebaef20a7020</guid><pubDate>Sat, 29 Aug 2026 06:39:43 +0000</pubDate><atom:updated>2026-08-29T06:39:43.242Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாளம்,nepal,வைரல் வீடியோ,வெள்ளம்,floods,viral video</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/a4xxgm1z/tn-9.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நேபாள வெள்ளம்]]></media:title><media:description type="html"><![CDATA[ நேபாள வெள்ளம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/a4xxgm1z/tn-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">நேபாளத்தில் </a>கடந்த புதன்கிழமை ரசுவா மாவட்டத்தில் கோஷி நதியில் ஏற்பட்ட வெள்ளபெருக்கில் சிக்கி இதுவரை 626 பேர் பலியாகியுள்ளனர். 2500க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். </p><p>நேபாள ராணுவத்துடன் இணைந்து மீட்பு பணிகள் துரிதகதியில் நடந்து வருகின்றன. முதலில் வெளிநாட்டு மீட்பு குழுக்களின் உதவியை மறுத்த நேபாள் தற்போது உதவியை ஏற்பதாக அறிவித்துள்ளது. </p><p>இதனிடையே மீட்பு பணிகள் தொடர்பாக வீடியோக்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. </p><p>பலர் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்துள்ளனர். இருந்தபோதும் பலர் உயிருடன் மீட்கப்படுவது மக்களையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.</p> <h2>குழந்தைகள் மீட்பு</h2><p>இந்த சூழலில் நேபாள வெள்ளத்தில் சிக்கிய இரட்டை குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட குழநதைகளை நேபாள ராணுவப் பெண் வீராங்கனைகள் தங்கள் கையில் ஏந்தியுள்ள வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.</p><p>எங்கும் மரண ஓலம் ஒலிக்கும் நம்பிக்கையற்ற சூழலுக்கு மத்தியில் இந்த நிகழ்வு அழிவில் இருந்து மீளும் நம்பிக்கையை வழங்கி இருக்கிறது.</p><p>மேலும் தங்கள் உயிரை பணயம் வைத்து மீட்பு பணியில் ஈடுபடும் வீரர் வீராங்கனைகளின் துணிச்சலையும் பறைசாற்றும் வண்ணம் அமைந்துள்ளது.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Amid the devastating floods in Nepal, two little lives found the most beautiful support.<br><br>The way the women soldiers held the rescued twin babies in their arms and comforted them with such warmth and care is truly heart touching.<br><br>In the middle of a disaster, this beautiful…</p>&mdash; Ajit Doval ᴾᵃʳᵒᵈʸ (@IAjitDoval_IND) <a href="https://x.com/IAjitDoval_IND/status/2093201619534184845?ref_src=twsrc%5Etfw">August 28, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>தொடரும் மீட்பு பணிகள்</h2><p>நேபாள ராணுவம் ரசுவா மாவட்டத்தில் இதுவரை 883 பேரைக் காப்பற்றியுள்ளது.</p><p>இதில் மேல் திரிசூலி நீர்மின் திட்டத் சுரங்கப்பாதைக்குள் சிக்கியிருந்த 350 தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளும் அடங்குவர்.</p> <h2>சிக்கல்</h2><p>வெள்ளபெருக்கில் வீடுகள், பாலங்கள், சாலைகள் மற்றும் மின் உள்கட்டமைப்புகளை அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பள்ளத்தாக்கு கிராமங்கள் உள்ளிட்ட தொலைதூர பகுதிகளுக்கு உதவி சென்று சேருவதில் இன்னும் சிக்கல் நீடிக்கிறது.</p><p>இதனிடையே சீனா - திபெத் எல்லையில் மேலும் ஒரு <a href="https://www.maalaimalar.com/news/world/626-people-died-new-lake-changed-color-china-warns-nepal">புதிய செயற்கை ஏரி</a> உருவாகி உள்ளதும் அதனை தடுத்து நிறுத்தியிருக்கும் பனிப்பாறைகள் உடைந்து நீர் வேகமாக கீழ்நோக்கி வரும் ஆபத்து என்பதால் நேபாளத்தில் மீண்டும் வெள்ளைப்பருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>எங்களை வழிமறித்து கூட பொதுமக்கள் பிரச்சனைகளை சொல்லலாம்: அமைச்சர் நிர்மல்குமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmalkumar-says-members-of-the-public-can-even-stop-us-to-voice-their-issues</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmalkumar-says-members-of-the-public-can-even-stop-us-to-voice-their-issues#comments</comments><guid isPermaLink="false">04b342cc-ee31-4e82-8d0b-7ee881f16f91</guid><pubDate>Sat, 29 Aug 2026 06:04:19 +0000</pubDate><atom:updated>2026-08-29T06:04:19.544Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,Drugs,போதை பொருள்,tvk,அமைச்சர் நிர்மல்குமார்,minister nirmal kumar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/grmkemng/nirmalkumar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் நிர்மல்குமார்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் நிர்மல்குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/grmkemng/nirmalkumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பொதுமக்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் நாங்கள் செல்லும்போது எங்களை வழி மறித்து கூட சொல்லுங்கள். கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம் என்றார்.</strong></em></p><p>மதுரை காந்தி மியூசியத்தில்  தனியார் பள்ளி சார்பில் இன்று போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதனை சட்டத்துறை <a href="https://www.maalaimalar.com/topic/அமைச்சர்-நிர்மல்குமார்">அமைச்சர் நிர்மல்குமார்</a> கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-</p><h2><strong>உரிமை உள்ளது</strong></h2><p>போதை பொருட்கள் சாக்லெட் உள்ளிட்ட எல்லா வடிவிலும் கிடைக்கிறது. இதுகுறித்து தெரிந்தால் மாணவர்கள் உடனே ஆசிரியரிடம் சொல்ல வேண்டும். இது உங்கள் அண்ணனோட அரசு. நீங்கள் எல்லாம் சேர்ந்து உருவாக்கிய அரசு தான் இது. 100 சதவீத உரிமை உங்களுக்கு உள்ளது.</p><p>மாணவ-மாணவிகளாகிய நீங்கள் பள்ளிக்கு செல்லும்போது இடையூறு வந்தாலோ, போதை பொருள் விற்பனை தொடர்பாக எந்த சந்தேகம் இருந்தால், எந்த பயமுமின்றி ஆசிரியர்களிடம் கூறுங்கள். உங்களுக்கு வேலை பார்க்க தான் த.வெ.க. அரசு உள்ளது. போதை பொருள் தடுக்கும் நடவடிக்கை தொடர்பாக நீங்கள் மற்றவர்களிடம் எடுத்து கூற வேண்டும். காவல்துறை முன்புபோல இல்லை.</p><p>குழந்தைகளின் பாதுகாப்பு தான் முதலமைச்சர் விஜய்யின் முதல் முன்னுரிமை. பொதுமக்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் நாங்கள் செல்லும்போது எங்களை வழி மறித்து கூட சொல்லுங்கள். கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம்.</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p><p>இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் கோபிசன், மதார் பதூருதின் என்ற முஸ்தபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  </p><h2><strong>தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாமிடம்</strong></h2><p>அண்மையில் தமிழக அரசு தமிழ்த்தாய் வாழ்த்து அரசு விழாவில் முதலாவதாக பாட வேண்டும் என அரசாணை வெளியிட்டிருந்தது. ஆனால் இன்று மதுரையில் அமைச்சர் நிர்மல்குமார் பங்கேற்ற போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி தொடக்க விழாவில் முதலாவதாக பள்ளியின் பாடலும், அதனை தொடர்ந்து கடவுள் வாழ்த்தும் பாடப்பட்டது. 3-வதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இந்த நடைமுறை விழாவில் பங்கேற்றவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் என் அருகில் அமர்ந்து முதலமைச்சர் விஜய் அனைவரையும் உற்சாகப்படுத்தினார்- அமைச்சர் செங்கோட்டையன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sengottaiyan-says-chief-minister-vijay-sat-next-to-me-in-the-legislative-assembly-and-boosted-everyones-morale</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sengottaiyan-says-chief-minister-vijay-sat-next-to-me-in-the-legislative-assembly-and-boosted-everyones-morale#comments</comments><guid isPermaLink="false">33881fcd-38d3-430f-8930-cb3c56fc5034</guid><pubDate>Sat, 29 Aug 2026 05:52:05 +0000</pubDate><atom:updated>2026-08-29T05:52:05.058Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly,minister Sengottaiyan,அமைச்சர் செங்கோட்டையன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/t5lv3hva/sengottaiyan.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் செங்கோட்டையன்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் செங்கோட்டையன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/t5lv3hva/sengottaiyan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சட்டசபையில் முதலமைச்சர் விஜய் என் அருகில் அமர்ந்து இருந்தது அனைவரையும் உற்சாகப்படுத்தியது. மாற்றத்தை உருவாக்கும் ஆட்சியாக தமிழக வெற்றிக் கழக அரசு  செயல்பட்டு வருகிறது என்றார்.</strong></em> </p><p>தமிழக வருவாய்த்துறை <a href="https://www.maalaimalar.com/topic/அமைச்சர்-செங்கோட்டையன்">அமைச்சர் செங்கோட்டையன்</a> கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>இந்தியாவுக்கே வழிகாட்டும் சிறந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவதே இலக்கு என்ற அடிப்படையில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான விஜய், ஒவ்வொரு துறையாக நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்.</p><h2><strong>முன்னெச்சரிக்கை நடவடிக்கை</strong></h2><p>இதன் ஒரு பகுதியாக மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தும், சென்னை புழல் சிறைக்கு சென்றும் ஆய்வு மேற்கொண்டார். சென்னை குடிநீர் திட்டப்பணிகளையும் நேரில் ஆய்வு செய்து, மக்களின் பிரச்சனைகளை நேரடியாக அறிந்து நடவடிக்கை எடுத்து வருகிறார். நேபாள துயர சம்பவம் தொடர்பாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அங்கு நடைபெற்று வரும் கள நிலவரங்களை ஒவ்வொரு நிமிடமும் கண்காணித்து வருகிறோம். நேபாளத்தில் உள்ள தமிழர்களின் நிலை குறித்து தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் 4 அமைச்சர்கள் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவர்கள் மத்திய அரசுடன் இணைந்து மீட்பு நடவடிக்கைகள் குறித்த தகவல்களை சேகரித்து வருகின்றனர்.</p><p>எதிர்காலத்தில் இதுபோன்ற துயர சம்பவங்களை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.</p><p>சட்டசபையில் முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்</a> என் அருகில் அமர்ந்து இருந்தது அனைவரையும் உற்சாகப்படுத்தியது. மாற்றத்தை உருவாக்கும் ஆட்சியாக தமிழக வெற்றிக் கழக அரசு  செயல்பட்டு வருகிறது என்றார். </p>]]></content:encoded></item><item><title>விளையாட்டை வாழ்வின் ஒரு பகுதியாக்கி வலிமையான இந்தியாவை உருவாக்குவோம்! - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-says-let-us-make-sports-a-part-of-life-and-build-a-strong-india</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-says-let-us-make-sports-a-part-of-life-and-build-a-strong-india#comments</comments><guid isPermaLink="false">e4871e37-a5e7-41cf-9246-a3f248e1fbe5</guid><pubDate>Sat, 29 Aug 2026 05:41:55 +0000</pubDate><atom:updated>2026-08-29T05:41:55.648Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,National Sports Day,தேசிய விளையாட்டு தினம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/zvfxphmz/nainarnagendran.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nainar nagendran]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/zvfxphmz/nainarnagendran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>தேசிய விளையாட்டு தினம்</h2><p>இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29-ந்தேதி தேசிய விளையாட்டு தினம் (National Sports Day) கொண்டாடப்படுகிறது.</p><h2>மேஜர் தியான் சந்த்</h2><p>இந்தியாவின் ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தியான் சந்த் அவர்களின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் இந்நாள் கொண்டாடப்படுகிறது. </p> <p>மேஜர் தியான் சந்த் தலைமையிலான இந்திய ஹாக்கி அணி, 1928, 1932 மற்றும் 1936 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து மூன்று முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்தது.</p><p>இந்தியாவில் விளையாட்டுத் துறையை ஊக்குவிப்பதற்கும், ஆரோக்கியமான உடல் உறுதியைப் பேணுவதற்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்திய அரசால் கடந்த 2012-ம் ஆண்டு முதல் அதிகாரப்பூர்வமாக தேசிய விளையாட்டு தினம் அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.  </p> <h2>துரோணாச்சார்யா விருது</h2><p>இந்தியக் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் அல்லது சிறப்பு விழாக்களில், விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைக்கும் தலைசிறந்த வீரர்களுக்கு மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருது, மற்றும் துரோணாச்சார்யா விருது போன்ற உயரிய விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறார்கள்.</p><p>விளையாட்டு என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது நம் வாழ்வில் ஒழுக்கம், தன்னம்பிக்கை மற்றும் உடல்நலத்தை வளர்க்கும் ஒரு அத்தியாவசியக் கலை என்பதை மக்களுக்கு நினைவூட்டுவதே இந்நாட்டின் முக்கிய நோக்கமாகும்.</p> <p>பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியை ஒரு வாழ்வியலாக மாற்றும் நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் மாரத்தான் போட்டிகள் நாடு முழுவதும் நடத்தப்படுகின்றன.</p><h2>நயினார் நாகேந்திரன்</h2><p>இந்நிலையில் தேசிய விளையாட்டு தினத்தையொட்டி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95">பா.ஜ.க.</a> மாநில தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">நயினார் நாகேந்திரன்</a> வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்</p> <p>அனைவருக்கும் தேசிய விளையாட்டு தின நல்வாழ்த்துகள்!</p><p>விளையாட்டு என்பது வெற்றிக்கான பாதை மட்டுமல்ல; ஒழுக்கம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை மற்றும் குழு உணர்வை வளர்க்கும் சிறந்த களம்.</p> <p>பாரத இளைஞர்கள் அனைவரும் விளையாட்டில் ஆர்வம் கொண்டு, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பேணி, தங்கள் திறமைகளை உலக அரங்கில் வெளிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு வெற்றியின் பின்னாலும் இருக்கும் கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் போற்றுவோம்.</p> <p>விளையாட்டை வாழ்வின் ஒரு பகுதியாக்கி, ஆரோக்கியமான மற்றும் வலிமையான இந்தியாவை உருவாக்குவோம்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>4 நாள் பயணமாக உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் புறப்பட்டார் பிரதமர் மோடி!</title><link>https://www.maalaimalar.com/news/national/prime-minister-modi-left-for-uzbekistan-and-kyrgyzstan-on-a-4-day-trip</link><comments>https://www.maalaimalar.com/news/national/prime-minister-modi-left-for-uzbekistan-and-kyrgyzstan-on-a-4-day-trip#comments</comments><guid isPermaLink="false">c1e56c42-2fa8-434b-9d7d-021a3fbf207a</guid><pubDate>Sat, 29 Aug 2026 05:15:14 +0000</pubDate><atom:updated>2026-08-29T05:15:14.303Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,uzbekistan,பிரதமர் மோடி,உஸ்பெகிஸ்தான்,கிர்கிஸ்தான்,Kyrgyzstan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/z9jeprlk/tn-5.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மோடி]]></media:title><media:description type="html"><![CDATA[ மோடி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/z9jeprlk/tn-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">பிரதமர் மோடி </a>உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு நான்கு நாள் அரசுமுறைப் பயணமாகச் இன்று (சனிக்கிழமை) புறப்பட்டார். </p><p>இந்தப் பயணத்தின் போது முதலாவதாக அவர் உஸ்பெகிஸ்தான் செல்கிறார். </p><p>உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்ட்டில் உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்காத்  மிர்சியோயேவுடன் பிரதமர் மோடி, இந்தியா-உஸ்பெகிஸ்தான் மூலோபாயக் கூட்டாண்மையை வலுப்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தைகளை நடத்துவார்.</p><p>அங்கு இரு நாட்கள் இருந்துவிட்டு பின்னர் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் 26வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டிற்காக கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக் செல்கிறார்.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Delhi: Prime Minister Narendra Modi leaves for Tashkent, Uzbekistan<br><br>During the visit, the Prime Minister will hold delegation-level talks with President Mirziyoyev to further strengthen the strategic partnership between the two countries. The two leaders will review… <a href="https://t.co/PG3DnIXHoU">https://t.co/PG3DnIXHoU</a> <a href="https://t.co/uS1Lr8ZqDr">pic.twitter.com/uS1Lr8ZqDr</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2093549407895703611?ref_src=twsrc%5Etfw">August 29, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>மோடி பதிவு</h2><p>புறப்படுவதற்கு முன்னதாகப் பிரதமர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், மத்திய ஆசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் மூலோபாயப் பங்களிப்பை வலுப்படுத்துவதிலும், அப்பகுதியுடனான உறவுகளை ஆழப்படுத்துவதிலும் இந்தப் பயணம் கவனம் செலுத்தும் என்று தெரிவித்துள்ளார்.</p><p>"வர்த்தகம், முதலீடு, டிஜிட்டல் இணைப்பு, பாதுகாப்பு, எரிசக்தி ஆகியவற்றில் நமது ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்துவது குறித்தும், நமது 'வளர்ச்சியடைந்த இந்தியா' மற்றும் 'புதிய உஸ்பெகிஸ்தான்' என்ற பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வைகளை முன்னோக்கி எடுத்துச் செல்வது குறித்தும் அதிபர் மிர்சியோயேவுடனான எனது பேச்சுவார்த்தையை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்" என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.</p> <p>பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் செல்வது இது நான்காவது முறையாகும். தாஷ்கண்ட் மாநிலக் கிழக்கத்திய ஆய்வுகள் பல்கலைக்கழகத்தில் உள்ள சாஸ்திரி நினைவிடம் மற்றும் மகாத்மா காந்தி மையத்திற்கும் பிரதமர் செல்லத் திட்டமிட்டுள்ளார்.</p> <h2>உச்சிமாநாடு</h2><p>தாஷ்கண்டில் இருந்து, கிர்கிஸ்தான் அதிபர் சாதிர் ஜபரோவின் அழைப்பின் பேரில், <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் </a>அமைப்பின் 25 ஆண்டுகளைக் குறிக்கும் 26வது உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் மோடி பிஷ்கேக் செல்வார்.</p><p>இந்தியா 2017 முதல் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் முழு மற்றும் தீவிர உறுப்பினராக இருந்து வருகிறது.</p><p>பிஷ்கேக்கில் நடைபெறும் இந்த இரண்டு நாள் உச்சிமாநாட்டில் ரஷிய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>ட்வென்டி எடிஷன் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் இந்தியாவில் அறிமுகம் - என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/automobilenews/newautomobile/range-rover-sport-twenty-edition-launched-in-india</link><comments>https://www.maalaimalar.com/automobilenews/newautomobile/range-rover-sport-twenty-edition-launched-in-india#comments</comments><guid isPermaLink="false">a958e67d-a090-498e-855e-3d4e5d57a9c2</guid><pubDate>Sat, 29 Aug 2026 05:14:00 +0000</pubDate><atom:updated>2026-08-29T05:14:00.000Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Car,Range Rover,ரேன்ஜ் ரோவர்,கார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/ozxpb1sq/Range-Rover-Sport-Twenty-Edition.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Range Rover Sport Twenty Edition]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/ozxpb1sq/Range-Rover-Sport-Twenty-Edition.png?w=280" width="280"></media:thumbnail><category>இது புதுசு (Automobile)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/range-rover">ரேன்ஜ் ரோவர்</a> ஸ்போர்ட் அறிமுகமாகி 20 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில், அதன் சிறப்புப் பதிப்பு ஒன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. </p><p>'தி ட்வென்டி எடிஷன்' என்று அழைக்கப்படும் இந்த மாடலில், ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் SV சீரிசில் இருந்து பெறப்பட்ட பிரத்யேக 'ட்வென்டி' விவரங்கள், முதன்மை பவர்டிரெய்ன்கள் மற்றும் செயல்திறன் மிக்க இருக்கைகள் இடம்பெற்றுள்ளன.</p><p>இது மேம்படுத்தப்பட்ட வெளிப்புற விவரங்கள், செம்மைப்படுத்தப்பட்ட உட்புற அம்சங்கள் மற்றும் உயர் செயல்திறன் கொண்ட பவர்டிரெய்ன் தேர்வுகளை அறிமுகப்படுத்துகிறது. </p><p>அசல் 'ஸ்டார்மர்' ஆரஞ்சு ரேன்ஜ் ஸ்டார்மர் கான்செப்ட் மற்றும் வெசுவியஸ் ஆரஞ்சு ஃபர்ஸ்ட் எடிஷன் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் ஆகியவற்றில் இருந்து உத்வேகம் பெற்று இந்த ட்வென்டி எடிஷன் உருவாக்கப்பட்டு இருக்கிறது. </p><h2>பலவித வண்ண விருப்பங்கள்:</h2><p>sபுதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல் சான்டோரினி பிளாக் மற்றும் ஒஸ்டுனி ஒயிட் உள்ளிட்ட பரந்த வண்ண தேர்வுகளுடன், ஒரு துணிச்சலான, அதி-உலோக தன்மையுள்ள சங்குனெல்லோ ஆரஞ்சு ஃபினிஷில் கிடைக்கிறது.</p><p>இவற்றை தவிர்த்து மேலும் நுட்பமான மாடலை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு பிளாக் எக்ஸ்டீரியர் பேக் உள்ளது. இந்த வெர்ஷனில் 'TWENTY' என்ற பொறிப்பு மற்றும் 23-இன்ச் ஸ்பார்க்கிள் சில்வர் வீல்களை கொண்டிருக்கிறது. இதன் உள்புறத்தில், ஒளிரும் 'TWENTY' ட்ரெட்பிளேட்டுகள் மற்றும் 'TWENTY' சென்டர் கன்சோல் எழுத்துக்கள் வழங்கப்படுகின்றன.</p><p>ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் ஆட்டோபயோகிராஃபி வேரியண்ட்டை அடிப்படையாக கொண்டு, பிரேக்கிங் மூலம் டார்க் வெக்டரிங் செய்யும் எலக்ட்ரானிக் ஆக்டிவ் டிஃபரன்ஷியல், ஆல்-வீல் ஸ்டீயரிங், டெரெய்ன் ரெஸ்பான்ஸ் புரோகிராம்கள் மற்றும் டைனமிக் ஏர் சஸ்பென்ஷன் ஆகியவை வழங்கப்படுகின்றன.</p><h2>சக்திவாய்ந்த என்ஜின்:</h2><p>இதன் உள்புறம், செயல்திறன் மிக்க முதன்மை மாடலான ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் SV-இல் இருந்து பெறப்பட்ட எபோனி வின்ட்சர் இருக்கைகள் இடம்பெற்றுள்ளன. எடை குறைந்த, நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட மற்றும் மோட்டார் பந்தயத்தால் ஈர்க்கப்பட்ட இந்த இருக்கைகள், துல்லியமாக வடிவமைக்கப்பட்ட பயன்பாட்டு வசதியை ஆடம்பர கைவினைத்திறனுடன் இணைக்கின்றன.</p><p>புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல் 4.4-லிட்டர் ட்வின் டர்போ V8 மைல்ட் ஹைப்ரிட் பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது, இது 529bhp பவர், 750 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிககு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை வெறும் 4.5 வினாடிகளில் எட்டிவிடும்.</p> ]]></content:encoded></item><item><title>ஜல்லிக்கட்டை இழிவுப்படுத்தி பேசுவதா?- தவெக எம்எல்ஏவுக்கு அதிமுக கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/admk-condemns-tvk-mla-speech</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/admk-condemns-tvk-mla-speech#comments</comments><guid isPermaLink="false">5098c24c-62db-49a4-8add-42a34cfd63d4</guid><pubDate>Sat, 29 Aug 2026 04:49:00 +0000</pubDate><atom:updated>2026-08-29T04:49:00.065Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,ADMK,அதிமுக,tvk,jallikattu,ஜல்லிக்கட்டு,தவெக எம்எல்ஏ,TVK MLA</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/m1e0rd4a/ADMKOffic.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அதிமுக]]></media:title><media:description type="html"><![CDATA[ அதிமுக]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/m1e0rd4a/ADMKOffic.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழரின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விளையாட்டைப் பற்றி இழிவாக சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என அதிமுக தெரிவித்துள்ளது.</strong></em> </p><p><a href="http://www.maalaimalar.com/topic/அதிமுக">அ.தி.மு.க. </a>தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>ஜல்லிக்கட்டிற்கு உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரை தனது தொகுதியில் வைத்துள்ள ஒரு சட்டமன்ற உறுப்பினர் இப்படி பேசியிருப்பது மிகுந்த அதிர்ச்சியும் பல சந்தேகங்களையும் ஏற்படுத்துகிறது.</p><h2><strong>சந்தேகம்</strong></h2><p>சங்க காலம் தொட்டே தமிழர்களுக்கும் மாடுகளுக்குமான உறவை பறைசாற்றும் இந்த “ஏறு தழுவுதல்” பற்றி புரிதல் இல்லாமலா அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் இருப்பார்?</p><p>மாணவர்கள், இளைஞர்கள் தன்னெழுச்சியாக திரண்டு நடத்திய வரலாற்றுப் புரட்சியின் விளைவாக, அன்றைய அஇஅதிமுக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்திப் பெற்ற ஒரு உரிமையை, மிகவும் கீழ்த்தரமாக பேசியுள்ள சட்டமன்ற உறுப்பினரின் இந்த பேச்சு ஏன் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படவில்லை?</p><h2><strong>மன்னிப்பு கேட்க வேண்டும்</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/seeman-urges-tvk-mla-karuppaiya-must-apologize">ஜல்லிக்கட்டிற்கு</a> தடை கொண்டு வர வேண்டும் என்று இன்றைய பொய்க்கால் குதிரை அரசு நினைத்து, அதற்கான First Look-ஆக தனது MLA-வை பேச வைத்துள்ளாரா இன்றைய முதல்வர்? என்ற சந்தேகம் தமிழக மக்களுக்கு வலுவாக எழுகிறது.</p> <p>தனது MLA பேசிய பேச்சிற்கு முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்! ஜல்லிக்கட்டு குறித்த இந்த அரசின் நிலைப்பாட்டை சட்டமன்றத்தில் அறிவிக்க வேண்டும்!</p><p>(பி.கு. : Incase you have forgotten, 2017-ல் “இதுக்கு காரணமான அமைப்பை வெளியே அனுப்’பீட்டா’ ” என்று நீங்கள் வெளியிட்ட வீடியோவை மீண்டும் ஒரு முறை பார்க்கவும்)</p><p>இவ்வாறு கூறப்பட்டுள்ளது. </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தமிழரின் பாரம்பரியமான <a href="https://x.com/hashtag/%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ஜல்லிக்கட்டு</a> விளையாட்டைப் பற்றி இழிவாக சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.<br><br>ஜல்லிக்கட்டிற்கு உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூரை தனது தொகுதியில் வைத்துள்ள ஒரு சட்டமன்ற உறுப்பினர் இப்படி…</p>&mdash; AIADMK (@AIADMKOfficial) <a href="https://x.com/AIADMKOfficial/status/2093554912043085899?ref_src=twsrc%5Etfw">August 29, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>இந்திய சந்தையில் ரீ-எண்ட்ரி கொடுக்கும் கார்பன் - லீக் ஆன புது ஸ்மார்ட்போன் விவரங்கள்</title><link>https://www.maalaimalar.com/technology/newgadgets/karbonn-making-a-comeback-with-zen-z-pro-smartphone</link><comments>https://www.maalaimalar.com/technology/newgadgets/karbonn-making-a-comeback-with-zen-z-pro-smartphone#comments</comments><guid isPermaLink="false">e70f9bd8-5a49-4f0c-bf08-b00c90a2b98c</guid><pubDate>Sat, 29 Aug 2026 04:41:00 +0000</pubDate><atom:updated>2026-08-29T04:41:00.000Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>smartphone,கார்பன்,Karbonn,ஸ்மார்ட்போன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/ezac91nc/File-Pic-karbonn-Mobile.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ File Pic: karbonn Mobile]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/ezac91nc/File-Pic-karbonn-Mobile.png?w=280" width="280"></media:thumbnail><category>புதிய கேஜெட்டுகள் (New gadgets)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/karbonn">கார்பன்</a> நிறுவனம் இந்திய ஸ்மார்ட்பன் சந்தையில் ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகி வருகிறது. உள்நாட்டு ஸ்மார்ட்போன் பிராண்டான கார்பன், தனது ரீ-என்ட்ரி குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. எனினும், கார்பன் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்றுள்ளன.</p><p>கீக்பென்ச் தகவல்களின் படி இந்த <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மார்ட்போன்</a> பல்வேறு ஸ்கோர்களை பெற்றுள்ளது. எனினும், இதன் சிறப்பம்சங்கள் கிட்டத்தட்ட ஒரேமாதிரியாகவே உள்ளன. புதிய ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம், ஆக்டா கோர் மீடியாடெக் சிப்செட் உடன் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.</p><h2>கீக்பென்ச் தளத்தில் கார்பன் ZenZ ப்ரோ:</h2><p>கார்பன் நிறுவனத்தின் புதிய ZenZ ப்ரோ ஸ்மார்ட்போன் கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்றுள்ளது. டெஸ்டிங்கில் இந்த ஸ்மார்ட்போன் சிங்கிள் கோரில் 422 புள்ளிகளையும், மல்டி-கோர் டெஸ்டிங்கில் 1,525 புள்ளிகளையும் பெற்றுள்ளது.</p><p>மற்றப்படி புதிய ZenZ ப்ரோ மாடல் ஆண்ட்ராய்டு 16 ஓ.எஸ். உடன் வரும் என்றும் அதிகபட்சம் 6 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வெளியீட்டின் போது இந்த ஸ்மார்ட்போன் மேலும் சில வெர்ஷன்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். தற்போது கீக்பென்ச் தகவல்களின் இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் MT6769V/CB ஆக்டா-கோர் சிப்செட் கொண்டிருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>அந்த வகையில் வெளியீட்டின் போது இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ G70 பிராசஸர் கொண்டிருக்கும் என்பதை உணர்த்துகிறது. இத்துடன் மாலி-G52 MC2 GPU கிராஃபிக்ஸ் வழங்கப்படுகிறது.</p><h2>ஸ்மார்ட்போன் சந்தையில் ரீ-எண்ட்ரி:</h2><p>கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்றுள்ள நிலையில், கார்பன் ZenZ ப்ரோ மூலம் இந்திய சந்தையில் கார்பன் பிராண்டு மீண்டும் களமிறங்குவது உறுதியாகிறது. எனினும், இதுபற்றி கார்பன் தரப்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p>அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் இந்த ஸ்மார்ட்போன் வெளியீடு இதுவரை உறுதிப்படுத்த முடியாத நிலையிலேயே உள்ளது.</p><p>கார்பன் பிரான்டு முன்னதாக என்ட்ரி லெவல் ஃபீச்சர் போன், ஸ்மார்ட்போன், டேப்லெட், ஸ்மார்ட் டிவி மற்றும் மொபைல் போன் அக்சஸரீக்களை விற்பனை செய்து வந்தது. 2009-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கார்பன் மொபைல் நிறுவனம் புது டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்தது.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY: தங்கம் வாங்குவோருக்கு குட் நியூஸ் - அதிரடியாக குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-29-8-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-29-8-2026#comments</comments><guid isPermaLink="false">e8ee0fa6-62d3-415a-bcd1-2ed00e348bd5</guid><pubDate>Sat, 29 Aug 2026 04:26:30 +0000</pubDate><atom:updated>2026-08-29T04:26:30.974Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/vjusha2y/gold.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ தங்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ Gold]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/vjusha2y/gold.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தங்கத்தின் விலை கடந்த ஓரிரு நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக உள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் தங்கம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 725-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து17 ஆயிரத்து 800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. </p><p>நேற்று காலை கிராமுக்கு ரூ.75 குறைந்து, ரூ.14 ஆயிரத்து 650-க்கும், சவரனுக்கு ரூ.600 குறைந்து ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 200-க்கும் விற்பனையானது.</p> <p>இதற்கிடையில் மாலையில் தங்கத்தின் விலை திடீரென அதிகரித்தது. காலையில் குறைந்த தங்கத்தின் விலையில் இருந்து கிராமுக்கு ரூ.150-ம், சவரனுக்கு ரூ.1,200-ம் உயர்ந்தது. அந்த வகையில் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து800-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 400-க்கும் விற்பனையானது.</p> <h2>தங்கம் விலை சரிவு</h2><p>இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு  ரூ.2,360 குறைந்து ரூ.1,16,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.295 குறைந்து ரூ.14,505-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p> <h2>வெள்ளி விலை நிலவரம்</h2><p>தங்கத்தை போலவே வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி 260 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்</h2><p>28-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,400</p><p>27-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,800</p><p>26-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,080</p><p>25-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,080</p><p>24-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,240</p> <h2>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்</h2><p>28-08-2026- ஒரு கிராம் ரூ.265</p><p>27-08-2026- ஒரு கிராம் ரூ.265</p><p>26-08-2026- ஒரு கிராம் ரூ.265</p><p>25-08-2026- ஒரு கிராம் ரூ.265</p><p>24-08-2026- ஒரு கிராம் ரூ.275</p> ]]></content:encoded></item><item><title>600-ஐ நெருங்கிய பலி எண்ணிக்கை.. U டர்ன் அடித்த நேபாள அரசு - வெளிநாட்டு மீட்பு குழுக்களுக்கு அனுமதி</title><link>https://www.maalaimalar.com/news/world/death-toll-nears-600-nepal-government-makes-a-u-turn-grants-permission-to-foreign-rescue-teams</link><comments>https://www.maalaimalar.com/news/world/death-toll-nears-600-nepal-government-makes-a-u-turn-grants-permission-to-foreign-rescue-teams#comments</comments><guid isPermaLink="false">a38d2012-cf1b-4f8b-b29d-45b7bcf362f9</guid><pubDate>Sat, 29 Aug 2026 04:18:18 +0000</pubDate><atom:updated>2026-08-29T04:18:18.757Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாளம்,nepal,வெள்ளம்,floods,Rescue Team,மீட்பு படை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/i8ogwa36/tn-4.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நேபாள வெள்ளம், பாலன் ஷா 
]]></media:title><media:description type="html"><![CDATA[ நேபாள வெள்ளம், பாலன் ஷா 
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/i8ogwa36/tn-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">நேபாளத்தில் </a>கடந்த புதன்கிழமை ஏற்பட்ட திடீர் <a href="https://www.maalaimalar.com/news/world/nepal-floods-family-survives-miraculously-woman-left-frozen-in-shock-shocking-videos">வெள்ளப்பெருக்கு </a>காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 600 ஐ எட்டியுள்ளது. சுமார் 1,500 பேர் இன்னும் மாயமாகியுள்ளனர்.</p><p>லடாக்கில் இமயமலை பகுதியில் பனிப்பாறை சரிந்து நதியில் விழுந்து பாதையை அடைத்தால் அணை உடைந்து நீர் வேகமாக கீழ்நோக்கி நேபாளத்தின் புகுந்ததே வெள்ளபெருகுக்கு காரணம் என தெரியவந்துள்ளது.</p><p>ரசுவா மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்கள் இதில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வெள்ளவதில் நேபாளத்தில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. </p> <h2>நிராகரிப்பு</h2><p>மீட்புப்பணிகளில் அந்நாட்டு ராணுவமும் இணைந்துள்ளது. இதனிடையே சர்வதேச நாடுகள் பல மீட்புப் குழுக்களை அனுப்பி உதவ முன்வந்த நிலையில் அந்த உதவியை பாலன் ஷா தலைமையிலான நேபாள அரசு நிராகரித்தது.</p><p>கடந்த 2015 இல் சுமார் 9000 பேர் உயிரிழந்த நேபாள நிலநடுக்கத்தின்போது சர்வதேச மீட்பு குழுக்கள் நேபாளம் வந்தன. அப்போது உள்நாடு மற்றும் வெளிநாடு என அனைத்து மீட்பு குலுக்களையும் ஒருங்கிணைத்து மீட்பு பணியில் ஈடுபடுவதில் சிக்கல் ஏற்பட்டதாக கூறப்பட்டது.</p><p>இதை கருத்தில் கொண்டு, தனது சொந்தப் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை முகமைகளே நிவாரண மற்றும் மீட்புப் பணிகளைக் கையாளும் திறன் கொண்டவை என்று நேபாளம் கூறியிருந்தது.</p><p>ஏதேனும் குறிப்பிட்ட தொழில்நுட்ப உதவி தேவைப்பட்டால், தானே மற்ற நாடுகளிடம் உதவி கேட்கும் என்றும் அரசு தெரிவித்திருந்தது.</p> <h2>ஏற்பு</h2><p>இந்த சூழலில் நேபாள அரசு தனது முடிவை மாற்றி உதவியை ஏற்க முன்வந்துள்ளது. இந்த வெள்ளபெருக்கில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்தவர்களும் காணாமல் போயுள்ளனர். எனவே சர்வதேச குழுக்களை வேண்டாம் என நேபாள அரசு கூறுவது முறையற்றது என விமர்சிக்கப்பட்டது.</p><p>சர்வதேச அழுத்தத்திற்குப் பிறகு சில வெளிநாட்டு மீட்புக் குழுக்கள் மற்றும் அதில் அனுபவமிக்க நிபுணர்களுக்கு வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.</p><p>அறிக்கைகளின்படி, வெள்ளத்திற்குப் பிறகு தங்களது குடிமக்கள் காணாமல் போன நாடுகளிடமிருந்து நேபாள அரசுக்குக் கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டது.</p><p>இதையடுத்தே, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் பங்கேற்க இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான வெளிநாட்டு நிபுணர்கள் மற்றும் மீட்பு குழுக்களுக்கு நேபாளம் அனுமதி அளித்துள்ளது.</p><h2>இந்தியா</h2><p>நேபாளத்திற்கு உதவுவதற்காக இந்தியா ஏற்கனவே பெருமளவிலான நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளது. இது தவிர, தேசிய பேரிடர் மீட்புப் படையின் குழுக்களையும் நேபாளத்திற்கு அனுப்ப இந்தியா முன்வந்துள்ளது.</p><p>இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் தகவல்படி, நேபாள குறைந்தது 320 இந்தியர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.</p><p>அதே நேரத்தில், சுமார் 400 இந்தியர்கள் சீனப் பகுதியில் மாட்டிக்கொண்டனர். அவர்களில் 153 இந்தியர்கள் பாதுகாப்பாக நேபாளத்தை வந்தடைந்துள்ளனர்.</p> <p>இந்திய அரசு நேபாளத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதுடன், தேவைப்பட்டால் அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக உள்ளது.</p><p>இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், பயிற்சி பெற்ற என்டிஆர்எப் குழு மற்றும் தேவையான உபகரணங்களை நேபாளத்திற்கு அனுப்ப இந்தியா முன்வந்துள்ளதாகத் தெரிவித்தார்.</p><p>இந்தக் குழுக்களின் உதவியுடன் மாயமானவர்களைத் தேடும் பணி மற்றும் மீட்பு நடவடிக்கைகள் வேகம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம்.. அமெரிக்கா கட்டுப்பாட்டுக்கு வரும் வெனிசுலா எண்ணெய் - டிரம்ப் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/the-largest-oil-deal-in-world-history-venezuelan-oil-to-come-under-us-control-trump-announces</link><comments>https://www.maalaimalar.com/news/world/the-largest-oil-deal-in-world-history-venezuelan-oil-to-come-under-us-control-trump-announces#comments</comments><guid isPermaLink="false">e0806bf7-ac8b-4e79-a62c-a0d782ba38dc</guid><pubDate>Sat, 29 Aug 2026 03:47:58 +0000</pubDate><atom:updated>2026-08-29T03:47:58.725Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>trump,வெனிசுலா,டிரம்ப்,Venezuela,கச்சா எண்ணெய்,Crude oil</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/57fbb6id/tn-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டிரம்ப் ]]></media:title><media:description type="html"><![CDATA[ டிரம்ப் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/57fbb6id/tn-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/venezuela">வெனிசுலாவின் </a>65  பில்லியன் பேரல் கச்சா எண்ணெய் இருப்பை அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் வகையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.</p> <h2>வெனிசுலா</h2><p>தென்அமெரிக்க நாடான வெனிசுலாவை இந்த ஆண்டு தொடக்கத்தில் முற்றுகையிட்ட அமெரிக்க ராணுவம் அந்நாட்டு அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவியை கடத்தி அமெரிக்காவுக்கு அழைத்து வந்தது.</p><p>அவர்கள் மீது போதைப்பொருள் பயங்கரவாத குற்றச்சாட்டை அமெரிக்கா சுமத்தியுள்ளது.</p><p>வெனிசுலாவிடம் 303 பேரல் கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது. அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகத்தின் கூற்றுப்படி, இது உலகளாவிய எண்ணெய் இருப்புகளில் சுமார் 17% ஆகும்.</p> <p>இடதுசாரியான மதுரோ அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டதும் அந்நாட்டின் எண்ணெய் வளங்களை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயன்றதுமே அமெரிக்காவின் இந்த செயலுக்கு காரணம் என சொல்லப்படுகிறது.</p><p>மதுரோவுக்கு பதில் துணை அதிபராக இருந்த டெல்சி ரோட்ரிக்ஸ் வெனிசுலாவின் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றார். அவர் அமெரிக்காவுக்கு ஒத்துழைப்பதாக தெரிவித்தார். மேலும் வெனிசுலா எண்ணெய் வளத்தை அமெரிக்க நிறுவனங்கள் நிர்வகிக்கும் என டிரம்ப் அறிவித்தார்.</p> <h2>ஒப்பந்தம்</h2><p>இந்நிலையில் ஏறத்தாழ ஒன்பது மாதங்களுக்குப் பிறகு புதிய ஒப்பந்தத்தை டிரம்ப் நேற்று தன் சமூக வலைதள பதிவில் அறிவித்துள்ளார்.</p><p>அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, பாதுகாப்புத்துறை செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் வெனிசுலாவின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் ஆகியோரால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டது என டிரம்ப் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.</p><p>"உலக வரலாற்றிலேயே மிகப்பாரிய எண்ணெய் ஒப்பந்தத்தை வெனிசுலா நாட்டுடன் அமெரிக்கா தற்போது மேற்கொண்டுள்ளது" என்று ட்ரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>அமெரிக்காவில் எரிபொருள் நெருக்கடி</h2><p>அமெரிக்காவில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் விலையேற்றம் டிரம்ப் நிர்வாகத்திற்குப் பெரும் நெருக்கடியைக் கொடுத்து வரும் சூழலில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.</p><p>மற்றொருபுறம், ஈரான் போர் தொடங்கி ஆறு மாதங்களைக் கடந்துள்ள நிலையிலும் முடிவுக்கு வராமல் நீடிப்பதால், எரிசக்தி விநியோகம் குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன.</p> <p>எரிசக்தி அழுத்தத்தைச் சமாளிக்க அமெரிக்கா ஏற்கனவே தனது மூலோபாய பெட்ரோலிய இருப்புகளைப் பயன்படுத்தி வருகிறது.</p><p>2026ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து 10 கோடி பேரல்களுக்கு மேல் குறைந்ததைத் தொடர்ந்து, ஆகஸ்ட் தொடக்கத்தில் இந்த இருப்பு 30 கோடி பேரல்களுக்கும் கீழே சரிந்தது.</p>]]></content:encoded></item><item><title>ராமேசுவரத்தில் திறப்பு விழாவுக்கு தயாராகி வரும் 108 அடி உயர ஆஞ்சநேயர் சிலை </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/108-foot-tall-anjaneyar-statue-being-prepared-for-its-inauguration-in-rameswaram</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/108-foot-tall-anjaneyar-statue-being-prepared-for-its-inauguration-in-rameswaram#comments</comments><guid isPermaLink="false">9c0a7621-8966-4984-bd45-bcaeec3c080c</guid><pubDate>Sat, 29 Aug 2026 03:47:51 +0000</pubDate><atom:updated>2026-08-29T03:47:51.429Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>rameshwaram temple,ராமேசுவரம் கோவில்,anjaneyar statue,ஆஞ்சநேயர் சிலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/9oqg4c4w/anjaneyar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ 108 அடி உயர ஆஞ்சநேயர் சிலை ]]></media:title><media:description type="html"><![CDATA[ 108 அடி உயர ஆஞ்சநேயர் சிலை ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/9oqg4c4w/anjaneyar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ராமேசுவரத்தில் 108 அடி உயரத்தில் கட்டப்பட்டு வரும் ஆஞ்சநேயர் சிலை திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது.</strong></em></p><h2><strong>108 அடி உயர சிலை</strong></h2><p>ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் உருவான வரலாற்றில் ஆஞ்சநேயர் மிக முக்கிய இடம்பெறுகிறார். எனவே ராமேசுவரம் ஓலைக்குடா கடற்கரையில் வடமாநில அறக்கட்டளை மூலம் ரூ.100 கோடியில் 108 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிலை கட்டும் பணியானது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.</p><p>இந்த பணி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. பாதத்தில் இருந்து தலை வரையிலும் ஆஞ்சநேயர் சிலை முழுவதும் கான்கிரீட் மூலம் கட்டி சிமெண்டு பூச்சு முடிவடைந்துவிட்டன. தற்போது முகத்தை வடிவமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். உப்பு காற்நால் சிலை சேதமடைவதை தடுக்கும் வகையல் ரசாயனம் கலந்த சிமெண்டு பூசி, அதற்கான வர்ணங்கள் மூலம் சிலையை வடிவமைக்கும் பணி நடந்து வருகிறது.</p><h2><strong>பிரதமர் திறந்து வைக்கிறார்</strong></h2><p>இந்த 108 அடி உயர ஆஞ்சநேயர் சிலை இலங்கையை நோக்கி பார்ப்பதை போன்று கட்டப்பட்டு வருகிறது. செப்டம்பர் மாதத்துக்குள் இந்த சிலை பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த ஆஞ்சநேயர் சிலையை பிரதமர் மோடி ராமேசுவரம் வந்து திறந்து வைப்பார் என்றும் கூறப்படுகிறது.</p><p>அதன்பின்பு ராமேசுவரம் வரக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் குஜராத், சிம்லா ஆகிய 2 இடங்களில் ஆஞ்சநேயர் சிலை கட்டப்பட்டு திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>10,000mAh பேட்டரியுடன் புது போக்கோ ஸ்மார்ட்போன் - விரைவில் வெளியீடு</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/poco-x8-5g-and-x8-power-5g-india-launch-date-set-for-september-4</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/poco-x8-5g-and-x8-power-5g-india-launch-date-set-for-september-4#comments</comments><guid isPermaLink="false">bc5783bd-3ef6-4408-a260-05827f214bb4</guid><pubDate>Sat, 29 Aug 2026 03:44:00 +0000</pubDate><atom:updated>2026-08-29T03:44:00.000Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>POCO,smartphone,ஸ்மார்ட்போன்,போக்கோ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/7900p7fz/Poco-X8-5g-Teaser.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Poco X8 5g Teaser]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/7900p7fz/Poco-X8-5g-Teaser.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/poco">போக்கோ</a> நிறுவனத்தின் X8 சீரிஸ் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது. புதிய X சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல் செப்டம்பரில் அறிமுகமாகிறது. அறிமுக தேதியுடன் போக்கோ நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனின் பின்புற டிசைனை அம்பலப்படுத்தும் டீசர் வீடியோக்களை வெளியிட்டுள்ளது.</p><p>மேலும், இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி திறன், சார்ஜிங் விவரங்களும் டீசர் வீடியோவில் தெரியவந்துள்ளது. புதிய போக்கோ <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மார்ட்போன்</a> 6.83 இன்ச் டிஸ்ப்ளே, குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் சிப்செட் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.</p><h2>போக்கோ X8 சீரிஸ் வெளியீடு:</h2><p>இந்திய சந்தையில் புதிய போக்கோ X8 பவர் 5ஜி மற்றும் போக்கோ X8 5ஜி ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 04-ஆம் தேதி அறிமுகமாகும் என போக்கோ இந்தியா தெரிவித்துள்ளது. இந்த இரு மாடல்களும் இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.</p><p>மேலும், இவை ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன. ஸ்மார்ட்போன் வெளியீட்டை ஒட்டி ப்ளிப்கார்ட் தளத்தில் இந்த மாடல்களுக்கான மைக்ரோசைட் உருவாக்கப்பட்டுள்ளது.</p><h2>சிறப்பு அம்சங்கள்:</h2><p>போக்கோ X8 5ஜி மாடலில் அதிகபட்சமாக 9000mAh பேட்டரி வழங்கப்படும் என்றும் இந்த ஸ்மார்ட்போன் ஒரு முறை சார்ஜ் செய்தால் 3.2 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் 67 வாட் சார்ஜிங் மற்றும் 22.5 வாட் ரிவர்ஸ் சார்ஜிங் வசதியுடன் வருகிறது.</p><p>போக்கோ X8 பவர் 5ஜி மாடலில் அதிகபட்சம் 10,000mAh பேட்டரியுடன் வருகிறது. இந்த மாடல் முழு சார்ஜ் செய்தால் 3.5 நாட்களுக்கு பிளேபேக் வழங்கும். இத்துடன் 100 வாட் வயர்டு சார்ஜிங், 27 வாட் வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இரு ஸ்மார்ட்போன்களும் பைபாஸ் சார்ஜிங், பி.பி.எஸ். சார்ஜிங் மற்றும் ஸ்மார்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளன.</p><p>அதிகாரப்பூர்வ டீசர் வீடியோவின் படி போக்கோ X8 மால் ஆரஞ்சு மற்றும் வைட் நிறங்களிலும், இதன் கேமரா சென்சார்கள் செங்குத்தாக பொருத்தப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது. இதேபோல் போக்கோ X8 பவர் 5ஜி மாடல் எல்லோ ஃபினிஷ் மற்றும் பிளாக் சதுரங்க வட்ட வடிவம் கொண்ட கேமரா மாட்யூல் கொண்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தவெக MLA கருப்பையா மன்னிப்புக் கோர வேண்டும்- சீமான் வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/seeman-urges-tvk-mla-karuppaiya-must-apologize</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/seeman-urges-tvk-mla-karuppaiya-must-apologize#comments</comments><guid isPermaLink="false">bb5de6d4-c26c-429e-83df-3e6f320e30f7</guid><pubDate>Sat, 29 Aug 2026 03:35:11 +0000</pubDate><atom:updated>2026-08-29T03:35:11.237Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Seeman,தவெக,Naam Thamizhar katchi,tvk,jallikattu,ஜல்லிக்கட்டு,சீமான்,நாம் தமிழர் கட்சி,தவெக எம்எல்ஏ</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/q74z56g3/seeman.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ சீமான்]]></media:title><media:description type="html"><![CDATA[ சீமான்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/q74z56g3/seeman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழர்களின் தொன்மையான வீர விளையாட்டான ஏறுதழுவுதலை “இளைஞர்களையும் சமூகத்தையும் சீரழிக்கும் விளையாட்டு” என்று சட்டப்பேரவையில் பேசிய சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா தனது கருத்தை உடனடியாகத் திரும்பப்பெற்று, தமிழ்நாட்டு மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் <a href="https://www.maalaimalar.com/topic/சீமான்">சீமான்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழர்களின் பல்லாயிரம் ஆண்டுகாலப் பண்பாட்டு அடையாளமாகவும், வீரத்தின் வெளிப்பாடாகவும், நாட்டு மாடுகளைக் காக்கும் மரபின் நீட்சியாகவும் திகழும் ஏறுதழுவுதல் எனும் ஜல்லிக்கட்டு, இளைஞர்களைச் சீரழிக்கும் விளையாட்டு என்று தமிழ்நாடு சட்டப்பேரவையிலேயே சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா பேசியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.</p><h2><strong>மோசமான பார்வை</strong></h2><p>அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்க வேண்டும்; அதற்குத் தேவையான நிதியை அரசு ஒதுக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கை முற்றிலும் நியாயமானது. உழவர்களின் வாழ்வாதாரத்தோடு தொடர்புடைய சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாம் தமிழர் கட்சியும் முழுமையாக ஆதரிக்கிறது. ஆனால், சர்க்கரை ஆலைக்கு நிதி கேட்டுப் பெறுவதற்காக ஜல்லிக்கட்டை இழிவுபடுத்தி பேச வேண்டிய தேவை என்ன?</p><p>தமிழ்நாட்டு தெருவுக்கு தெரு இருக்கும் சாராயக்கடைக்கு சென்று மது அருந்தும் இளைஞர்கள் சீரழியவில்லையா? அலங்காநல்லூர் வாடிவாசலில் காளையைத் தழுவி வீரத்தைக் காட்டும் இளைஞர்கள்தான் சீரழிகிறார்களா?</p><p>வாடிவாசலில் நின்று காளையை எதிர்கொள்வது பண்பாட்டு சீரழிவு? ஆனால், அரசு விற்கும் மது குடித்து உடலையும், குடும்பத்தையும், பொருளாதாரத்தையும் இழப்பது இளைஞர்களின் முன்னேற்றமா?</p><p>இளைஞர்களை மதுவை நோக்கி அழைத்துச் செல்லும் சாராயக்கடைகளை மூடச் சொல்ல உங்களுக்குத் துணிவு இருக்கிறதா? இளைஞர்களை மண்ணோடும், மாடுகளோடும், உழவோடும் இணைக்கும் ஏறுதழுவுதலை மட்டும், சீரழிவு என்று சொல்லும் துணிவு எங்கிருந்து  உங்களுக்கு வந்தது?</p><p>குடிக்கிற இளைஞன் சீரழியவில்லை; காளையை வளர்க்கிற இளைஞன் சீரழிகிறானா? மதுப்புட்டியைத் தூக்குகிற கை நல்ல கை; காளையின் திமிலைத் தழுவுகிற கை கெட்ட கையா? சாராயக்கடைக்கு அரசு இடம் கொடுத்தால் அது வருவாய்; ஜல்லிக்கட்டுக்கு அரசு இடம் கொடுத்தால் அது வீண் செலவா? எப்படிபட்ட மோசமான பார்வை இது?</p><p><a href="https://www.maalaimalar.com/topic/ஜல்லிக்கட்டு">ஜல்லிக்கட்டு</a> என்பது ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. அது தமிழர்களின் வேளாண்மையோடும், கால்நடை வளர்ப்போடும், நாட்டு மாட்டு இனங்களின் பாதுகாப்போடும், கிராமியப் பொருளாதாரத்தோடும் பின்னிப் பிணைந்த வாழ்வியல் பண்பாடு. ஒரு காளையை ஜல்லிக்கட்டுக்குத் தயார்படுத்துவதற்காக ஓர் உழவர் குடும்பம் ஆண்டுக்கணக்கில் அதனைத் தனது குடும்ப உறுப்பினரைப் போல வளர்க்கிறது. அதன் உணவு, உடல்நலம், பராமரிப்பு என அத்தனையிலும் அக்கறை செலுத்துகிறது. "ஓஓ! இவள் இ ‘பொருபுகல் நல்லேறு கொள்பவர் அல்லால், திருமா மெய் தீண்டலர் என்று, கருமமா,எல்லாரும் கேட்ப அறைந்து, எப்பொழுதும்சொல்லால் தரப்பட்டவள்..."-  ஆயமகன் ஆயமகளை மணமுடிக்க வேண்டுமானால் கொடிய போரேற்றைத் தழுவி வெற்றி பெற வேண்டும். இல்லையேல் இவள் அழகு மேனியைத் தீண்ட இயலாது என்று குறிப்பிடுகிறது கலிப்பாடல், </p><h2><strong>வேதனையளிக்கிறது</strong></h2><p>இதை எல்லாம் அறியாமல், அந்த வாழ்வியலைப் புரிந்துகொள்ளாமல், அந்த மண்ணின் வரலாற்றை உணராமல், “இளைஞர்களைச் சீரழிக்கும் ஜல்லிக்கட்டு” என்று பேசுவது அறியாமையின் உச்சமல்லவா? அதுவும் உலகமே அறிந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைத் தனது தொகுதிக்குள் கொண்டிருக்கும் சட்டமன்ற உறுப்பினரிடமிருந்தே இப்படியொரு கருத்து வருவது மிகுந்த வேதனையளிக்கிறது.</p><p>ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்டபோது என்ன நடந்தது என்பதை மறந்துவிடக்கூடாது  மெரினா கடற்கரையிலும் தமிழ்நாட்டின் வீதிகளிலும் உலக நாடுகளின் தெருக்களிலும் இலட்சக்கணக்கான இளைஞர்கள் திரண்டது எதற்காக?</p><p>“எங்கள் மாடு! எங்கள் மண்! எங்கள் உரிமை! எங்கள் ஜல்லிக்கட்டு!” என்று தங்களது இனத்தின் அடையாளத்தைக் காக்கத்தானே போராடினார்கள்?</p><p>அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இளைஞர் எழுச்சியையும் “சீரழிவு” என்று சொல்வீர்களா?</p><p>ஒரு மக்கள் நலத்திட்டத்திற்குக் கொடுக்கப்பட்ட நிதியை மற்றொரு திட்டத்திற்கு பயன்படுத்துவதை எதிரியாக நிறுத்துவது சரியான அரசியல் அல்ல. பள்ளிக்கூடத்திற்கு நிதி கொடுத்ததால் மருத்துவமனை வேண்டாமா? மருத்துவமனை கட்டியதால் சாலை போடக்கூடாதா? என்ன மாதிரியான கருத்துருவாக்கம் இது?</p><p>தமிழர்களின் அடையாளத்தை அழித்துவிட்டு தமிழ்நாட்டை வளர்க்க முடியாது. தமிழர்களின் பண்பாட்டை இழிவுபடுத்திவிட்டு தமிழர்களுக்கு நல்லாட்சி தர முடியாது.</p><p>ஜல்லிக்கட்டு தமிழர்களின் விளையாட்டு மட்டுமல்ல; அது எமது மண்ணின் அடையாளம்! அது வெறும் காளையும் மனிதனும் மோதும் களம் அல்ல; மனிதனுக்கும் மாட்டிற்குமான ஆயிரமாண்டுப் பந்தத்தின் பண்பாட்டு வெளிப்பாடு!</p><p>எனவே, தமிழர்களின் தொன்மையான வீர விளையாட்டான ஏறுதழுவுதலை “இளைஞர்களையும் சமூகத்தையும் சீரழிக்கும் விளையாட்டு” என்று சட்டப்பேரவையில் பேசிய சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா தனது கருத்தை உடனடியாகத் திரும்பப்பெற்று, தமிழ்நாட்டு மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.</p><p>இவ்வாறு சீமான் கூறியுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம் அருகே கார் டயர் வெடித்து விபத்து - 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-car-accident-4-college-students-death</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-car-accident-4-college-students-death#comments</comments><guid isPermaLink="false">27416285-57d3-4b96-b0a3-0d42b1dc72b5</guid><pubDate>Sat, 29 Aug 2026 03:30:31 +0000</pubDate><atom:updated>2026-08-29T03:30:31.161Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>students death,accident,விபத்து,மாணவர்கள் உயிரிழப்பு,madurantakam car accident,மதுராந்தகம் கார் விபத்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/ausl8hsf/car.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Car accident]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/ausl8hsf/car.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மதுராந்தகம் அருகே காரின் டயர் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலியாகினர்.</strong></em></p> <p>சென்னையில் உள்ள தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 7 பேர் புதுச்சேரிக்கு சுற்றுலா சென்றுவிட்டு மீண்டும் கார் மூலம் சென்னை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர். </p> <p>கார் மதுராந்தகம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக காரின் பின்புற டயர் திடீரென வெடித்து சிதறியது.</p><p>இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது. </p><p>இந்த விபத்தில் மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.</p> <p>தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் மற்றும் காவல்துறையினர் காயமடைந்த மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு மற்றும் மதுராந்தகம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><p>கார் டயர் வெடித்து கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 29 ஆகஸ்ட் 2026: திருநள்ளாறு சனிபகவான் சிறப்பு அபிஷேகம்
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-29-august-2026-thirunallar-sani-bhagavan-special-abhishekam</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-29-august-2026-thirunallar-sani-bhagavan-special-abhishekam#comments</comments><guid isPermaLink="false">205b7a2f-5b59-4d7c-8c47-dc45c24b6f35</guid><pubDate>Sat, 29 Aug 2026 02:48:24 +0000</pubDate><atom:updated>2026-08-29T02:48:24.766Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/01/30/25616771-sanibagavan1.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ sani bhagavan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/01/30/25616771-sanibagavan1.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆவணி-12 (சனிக்கிழமை)</p><p>பிறை : தேய்பிறை</p><p>திதி :  பிரதமை காலை 10.34 மணி வரை பிறகு துவிதியை</p><p>நட்சத்திரம் : பூரட்டாதி நாளை விடியற்காலை 5.03 வரை பிறகு உத்திரட்டாதி</p> <p>யோகம் :  மரண / சித்தயோகம்</p><p>ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை</p><p>எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை</p><p>சூலம் : கிழக்கு</p><p>நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை</p> <h2>திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்</h2><p>திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். நயினார் கோவில் ஸ்ரீ சௌந்தரநாயகி, திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம். </p><p>திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்த ராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி. காரமடை ஸ்ரீ அரங்கநாதர், திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - நன்மை</p><p>ரிஷபம் - நலம்</p><p>மிதுனம் - வரவு</p><p>கடகம் - ஆதாயம்</p><p>சிம்மம் - போட்டி</p><p>கன்னி - முயற்சி</p> <p>துலாம் - பயிற்சி</p><p>விருச்சிகம் - ஆதரவு</p><p>தனுசு - பரிசு</p><p>மகரம் - நிம்மதி</p><p>கும்பம் - உயர்வு</p><p>மீனம் - பயணம்</p> ]]></content:encoded></item><item><title>நேபாள வெள்ளத்தில் அதிசயமயாக தப்பிய பச்சை வீடு.. பால்கனியில் நின்று வேடிக்கை பார்த்த குடும்பம் - வைரல் வீடியோ</title><link>https://www.maalaimalar.com/news/world/nepal-floods-family-survives-miraculously-woman-left-frozen-in-shock-shocking-videos</link><comments>https://www.maalaimalar.com/news/world/nepal-floods-family-survives-miraculously-woman-left-frozen-in-shock-shocking-videos#comments</comments><guid isPermaLink="false">a6819e51-84ba-49d1-9c0f-574b54b98586</guid><pubDate>Sat, 29 Aug 2026 02:46:09 +0000</pubDate><atom:updated>2026-08-29T02:46:09.610Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாளம்,nepal,வைரல் வீடியோ,வெள்ளம்,floods,viral video</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/6yyg1ddp/tn-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நேபாள வெள்ளம்]]></media:title><media:description type="html"><![CDATA[ நேபாள வெள்ளம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/6yyg1ddp/tn-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">நேபாளத்தில் </a>கடந்த புதன்கிழமை ஏற்பட்ட திடீர் <a href="https://www.maalaimalar.com/news/world/death-toll-from-nepal-floods-rises-to-579-1924-missing">வெள்ளப்பெருக்கு </a>காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 600 ஐ எட்டியுள்ளது. சுமார் 1,500 பேர் இன்னும் மாயமாகியுள்ளனர். </p><p>லடாக்கில் இமயமலை பகுதியில் பனிப்பாறை சரிந்து நதியில் விழுந்து பாதையை அடைத்தால் அணை உடைந்து நீர் வேகமாக கீழ்நோக்கி நேபாளத்தின் புகுந்ததே வெள்ளபெருகுக்கு காரணம் என தெரியவந்துள்ளது. </p> <p>ரசுவா மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்கள் இதில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வெள்ளவதில் நேபாளத்தில் பல வீடுகள், மனிதர்கள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஒரு வீடு மட்டும் தனித்து நின்றதும் அதன் முதல் தளத்தில் உள்ள பால்கனியில் நின்று அதை வேடிக்கை பார்த்த குடும்பத்தினரின் வீடியோவும் வைரலாகி வருகிறது.</p><p>சுற்றியிருந்த அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட அவர்கள் மட்டும் அதியசயமாக உயிர்தப்பியது குறித்து பலரும் இணையத்தில் ஆச்சர்யம் தெரிவித்து வருகின்றனர்.</p> <h2>வீடியோ</h2><p>கரைபுரண்டு ஓடும் சேற்று வெள்ளம், அதன் பாதையில் உள்ள அனைத்துக் கட்டமைப்புகளையும் இடிபாடுகளையும் அடித்துச் செல்வதை அந்த வீடியோ காட்டுகிறது.</p><p>இருப்பினும், சீறிப் பாயும் நீரால் சூழப்பட்ட போதிலும் ஒரு பச்சை வீடு எவ்விதச் சேதமும் இன்றி அப்படியே நின்றது.</p><p>வெள்ள நீர் சூழ்ந்தபோது, அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த குறைந்தது மூன்று பேர் அந்த வீட்டில் இருப்பது காண முடிந்தது.</p><p>அருகில் இருந்த கட்டமைப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அந்த கட்டிடம் மிகக் குறைந்த சேதத்தையே சந்தித்ததாக தெரிகிறது.</p><p>அதேவேளையில், அந்த வீட்டில் காணப்பட்ட குடும்பத்தின் நிலை என்ன ஆனது என்பது குறித்தும் கவலை எழுந்தது.</p><p>பின்னர் மற்றொரு சமூக வலைதளப் பயனர் அந்த குடும்பத்தினர் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்தும் வீடியோவை பகிர்ந்தார்.</p> <figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">That family in the green house. I hope they are alive and safe.  what a nightmare. <a href="https://t.co/t2tVR2cFD7">pic.twitter.com/t2tVR2cFD7</a></p>&mdash; Pooja Shali (@PoojaShali) <a href="https://x.com/PoojaShali/status/2093225981557502059?ref_src=twsrc%5Etfw">August 28, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2>மற்றொரு சம்பவம்</h2><p>மற்றொரு சம்பவடத்தில் மலைப் பகுதியில் மாட்டிக்கொண்ட பெண் ஒருவரை ராணுவப் படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். மரணத்தின் விளிம்பு வரை சென்ற அவர், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.</p><p>வெள்ளத்தில் அவரின் வீடு, குடும்ப உறுப்பினர்கள் உட்படத் தனது அனைத்து உடைமைகளும் கண்ணெதிரே அடித்துச் செல்லப்பட்டதாகப் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் கண்ணீர் மல்கக் கதறினார்.</p><p>உயிர்தப்பிய போதிலும், அவர் மீளமுடியாத அதிர்ச்சியில் உறைந்துபோயிருந்ததை வீடியோவில் காணமுடிந்தது.</p> <figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">: Heartbreaking visuals from Nepal.  <br><br>A woman trapped in the devastating floods was rescued by the Nepal Army after reportedly losing her home, family and everything she had to the disaster.<a href="https://x.com/hashtag/nepal?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#nepal</a> <a href="https://x.com/hashtag/viral?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#viral</a> <a href="https://x.com/hashtag/breaking?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#breaking</a> <a href="https://x.com/hashtag/tibet?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#tibet</a> <a href="https://x.com/hashtag/india?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#india</a> <a href="https://t.co/Qv7bCjU4hE">pic.twitter.com/Qv7bCjU4hE</a></p>&mdash; pradhyumn sharma (@pradhyu78651514) <a href="https://x.com/pradhyu78651514/status/2093326590692438522?ref_src=twsrc%5Etfw">August 28, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><p>இந்தச் வீடியோ காட்சி தற்போதைய கள நிலவரத்தின் பயங்கரத்தை பிரதிபலிக்கின்றன.</p><p>இவரைப் போலவே இன்னும் ஏராளமானோர் உதவிக்காக காத்திருந்தபடி மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் சிக்கியிருக்கலாம் எனப் கவலை எழுந்துள்ளது.</p><p>மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும், தொலைதூரப் பகுதிகளில் சிக்கியுள்ளவர்களின் நிலை குறித்து அச்சம் நிலவுகிறது.</p>]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 29.8.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு திருமணத்தடை அகலும்
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-29-august-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-29-august-2026#comments</comments><guid isPermaLink="false">33dac167-8268-4484-aec9-c8d1e11f6631</guid><pubDate>Sat, 29 Aug 2026 01:53:07 +0000</pubDate><atom:updated>2026-08-29T01:53:07.102Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/03/13/27322352-rasi-3.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/03/13/27322352-rasi-3.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வரவை விடச் செலவு கூடும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.</p><h2>ரிஷபம்</h2><p>திட்டமிட்ட காரியத்தில் திடீர் மாற்றம் ஏற்படும் நாள். உடல் நலத்தில் கவனம் தேவை. தொழில் ரீதியான பயணமொன்றால் லாபம் உண்டு.</p> <h2>மிதுனம்</h2><p>ஆதாயம் அதிகரிக்கும் நாள். அனுபவமிக்கவர்களின் ஆலோசனை கைகொடுக்கும். தொழில் முன்னேற்றம் உண்டு. எதிர்பார்த்த காரியம் இன்று நடைபெறும்.</p><h2>கடகம்</h2><p>முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள். வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பிறருக்குப் பொறுப்புச் சொல்வதால் பிரச்சனைகள் உண்டு.</p> <h2>சிம்மம்</h2><p>மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மறதியால் விட்டுப்போன பணிகளை செய்ய முன்வருவீர்கள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.</p><h2>கன்னி</h2><p>துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். சொத்து சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும். பணியாளர்கள் பக்கபலமாக இருப்பர்.</p> <h2>துலாம்</h2><p>சேமிப்பு உயரும் நாள். பயணம் பலன் தரும். செல்வாக்கு மேலோங்கும். வருமோ, வராதோ என்று நினைத்த பணம் ஒன்று கைக்கு வரும். திருமணத்தடை அகலும்.</p><h2>விருச்சிகம்</h2><p>கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்கும் நாள். கண்ணியமிக்க நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.</p> <h2>தனுசு</h2><p>மதிநுட்பத்தால் மகத்தான காரியங்களைச் செய்து முடிக்கும் நாள். வெளிவட்டாரத் தொடர்பு விரிவடையும். பிள்ளைகளால் உதிரி வருமானம் உண்டு.</p><h2>மகரம்</h2><p>அலைபேசி மூலம் அனுகூலத் தகவல் வந்து சேரும் நாள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் உதவி கிடைக்கும். திருமணங்கள் முடிவாகும்.</p> <h2>கும்பம்</h2><p>இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும் நாள். உறவு பகை பாராமல் உதவி செய்ய முன்வருவீர்கள். அரசியல் ஈடு பாடு அதிகரிக்கும். தடைப்பட்ட காரியம் தானாக நடைபெறும்.</p><h2>மீனம்</h2><p>கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். அயல்நாட்டு நிறுவனங்களின் அழைப்பை ஏற்பது பற்றி யோசிப்பீர்கள்.</p> ]]></content:encoded></item><item><title>எதிர்பார்த்த படங்கள் தோற்கும், எதிர்பாராத படங்கள் வெல்லும் - நயன்தாரா</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/toxic-negative-reviews-nayantharas-reaction</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/toxic-negative-reviews-nayantharas-reaction#comments</comments><guid isPermaLink="false">d90f718d-d8b6-4762-851c-38a1f28fa6cb</guid><pubDate>Sat, 29 Aug 2026 01:46:37 +0000</pubDate><atom:updated>2026-08-29T01:46:37.475Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Nayanthara,நயன்தாரா,Yash,டாக்ஸிக்,யாஷ்</media:keywords><media:content height="576" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/dklv0sx2/maalai-malar2026-08-21mlp602ewtn-2.avif" width="1024"><media:title type="html"><![CDATA[ நயன்தாரா ]]></media:title><media:description type="html"><![CDATA[ நயன்தாரா ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/dklv0sx2/maalai-malar2026-08-21mlp602ewtn-2.avif?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>யாஷ், நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான '<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/toxic-review">டாக்ஸிக்</a>'  திரைப்படம், மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. </p><h2>டாக்ஸிக்</h2><p>இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம், சுதந்திரத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில் போர்த்துகீசிய ஆட்சின்கீழ் இருந்த கோவாவை பின்னணியாகக் கொண்டு அமைந்துள்ளது.</p><p>இப்படத்தில் யாஷ் இரண்டு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். யாஷுடன் இணைந்து நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, தாரா சுதாரியா மற்றும் ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர்.</p> <p>இப்படம் கிட்டத்தட்ட ரூ 600 முதல் 800 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.</p><p>கே.வி.என் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படம், கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்டு, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகியது.</p><p>ஆகஸ்ட் 26 அன்று உலகெங்கிலும் வெளியாகிய இப்படம் எதிர்மறை விமர்சனங்கள் வந்தபோதும் பாக்ஸ் ஆபீசில் ரூ.100 கோடியை கடந்துள்ளது.</p> <h2>நயன்தாரா</h2><p>சமூக வலைதளங்களில் இப்படம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை நயன்தாரா இதுகுறித்து மனம் திறந்துள்ளார்.</p><p>படத்தின் முடிவுகள் குறித்துப் பேசிய அவர், "திரைத்துறையில் உள்ள அனுபவம் ஒரு படம் எவ்வாறு உருவாகிறது என்பது குறித்த அடிப்படை புரிதலை வழங்கக்கூடும்.</p><p>ஆனால் சினிமா என்பது மிகவும் உணர்வுப்பூர்வமானது. எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்தது. எனது திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று நான் பெரிதும் எதிர்பார்த்த சில படங்கள் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியுள்ளன.</p> <p>அதே வேளையில், சில படங்களின் முடிவுகள் குறித்து எனக்கே சந்தேகங்கள் இருந்தன. ஆனால் அவை வசூல் ரீதியாக எதிர்பாராத மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ஆச்சரியப்படுத்தின.</p><p>திரைத்துறையில் எனது இத்தனை ஆண்டுகால பயணம் எனக்கு ஒரு விஷயத்தைக் கற்றுக் கொடுத்துள்ளது. ஒரு படத்தின் வெற்றியையும் தோல்வியையும் ஒரே மாதிரியாக, அடக்கத்துடன் ஏற்றுக்கொள்ள நான் பழகிக்கொண்டேன்" என்று தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>அமெரிக்காவிடம் இருந்து ஜாவலின் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் கையெழுத்து</title><link>https://www.maalaimalar.com/news/national/agreement-signed-to-purchase-javelin-anti-tank-missiles-from-the-us</link><comments>https://www.maalaimalar.com/news/national/agreement-signed-to-purchase-javelin-anti-tank-missiles-from-the-us#comments</comments><guid isPermaLink="false">38db2f44-0d69-4039-8e5d-b660bab57679</guid><pubDate>Sat, 29 Aug 2026 01:13:05 +0000</pubDate><atom:updated>2026-08-29T01:13:05.294Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,USA,ஏவுகணை,missile,INDIAN ARMY,இந்திய ராணுவம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/ak9kxk44/tn.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஜாவலின் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை]]></media:title><media:description type="html"><![CDATA[ ஜாவலின் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/ak9kxk44/tn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE">அமெரிக்க </a>தயாரிப்பான 'ஜாவலின்' பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை அமைப்பை வாங்குவதற்காக அமெரிக்காவுடன் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D">இந்திய ராணுவம்</a> ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.</p><p>இந்தியாவின் கோரிக்கையை ஏற்று இந்த ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல் அளித்த ஒன்பது மாதங்களுக்குப் பிறகு தற்போது கையெழுத்தாகியுள்ளது.</p> <h2>கருத்து</h2><p>இந்த ஒப்பந்தம், இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.</p><p>இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்புப் பங்களிப்பு மேலும் ஆழமாகவும் பலமாகவும் மாறுவதின் சான்றாகும் என்று இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார்.</p><p>இந்திய ராணுவத்திற்கு அமெரிக்கா அளிக்கும் ஆதரவின் ஆழத்தை இந்த ஒப்பந்தம் பிரதிபலிக்கிறது என்றும், இரு நாடுகளின் பாதுகாப்பு தொழில் துறைக்கான புதிய வாய்ப்புகளை இது திறந்துவிடும் என்றும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.</p> <h2>சிறப்பம்சங்கள்</h2><p>சுமார் 45.7 மில்லியன் டாலர் மதிப்பிலானது இந்த ஜாவலின் ஏவுகணை ஒப்பந்தம். அமெரிக்க ராணுவம் தவிர பல சர்வதேச வாடிக்கையாளர்களாலும் ஜாவலின் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.</p><p>கவச வாகனங்கள் மற்றும் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு அரண்களை தகர்க்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><p>ஆர்டிஎக்ஸ் மற்றும் லாக்ஹீட் மார்ட்டின் ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியான 'ஜாவலின் ஜாயிண்ட் வென்ச்சர்' இந்த ஏவுகணைகளை தயாரிக்கிறது.</p> <h2>பாதுகாப்பு</h2><p>கடந்த ஆண்டு இந்தியாவும் அமெரிக்காவும் தங்களின் பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்காக 10 ஆண்டுகால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தன.</p><p>அமெரிக்க-இந்திய மூலோபாய உறவை வலுப்படுத்துவதற்கும், இந்தோ-பசிபிக் மற்றும் தெற்காசிய பிராந்தியங்களில் அரசியல் ஸ்திரத்தன்மை, அமைதி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு முக்கிய பாதுகாப்பு கூட்டாளியின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் இந்த ஒப்பந்தம் உதவும் என்று அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு முகமை சுட்டிக்காட்டியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/todays-petrol-and-diesel-prices-in-chennai-2</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/todays-petrol-and-diesel-prices-in-chennai-2#comments</comments><guid isPermaLink="false">92751f4d-8086-4504-931c-8b703af86fe1</guid><pubDate>Sat, 29 Aug 2026 00:56:31 +0000</pubDate><atom:updated>2026-08-29T00:56:31.275Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,கச்சா எண்ணெய்,Crude oil,பெட்ரோல் டீசல் விலை,Petrol and Diesel Prices</media:keywords><media:content height="576" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/awvbgdsi/maalai-malar2026-08-24b0k0t00ltn-32.avif" width="1024"><media:title type="html"><![CDATA[ பெட்ரோல், டீசல் விலை]]></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல், டீசல் விலை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/awvbgdsi/maalai-malar2026-08-24b0k0t00ltn-32.avif?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/china-warns-us-over-iran-trade-new-economic-sanctions-row">ஈரான் போரினால்</a> மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p> <h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.</p> <h2>இன்றைய பெட்ரோல், டீசல் விலை</h2><p>அந்த வகையில் இன்றைய (29.08.2026 - சனிக்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கச்சா எண்ணெய் விலை</h2><p>இன்று சர்வதேச சந்தையில் பிரனட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 88.29 டாலர் என விற்பனை ஆகி வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>ஜி20 கூட்டத்திற்காக அமெரிக்கா சென்றடைந்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்</title><link>https://www.maalaimalar.com/news/world/fm-sitharaman-lands-in-us-for-six-day-visit-for-g20-talks</link><comments>https://www.maalaimalar.com/news/world/fm-sitharaman-lands-in-us-for-six-day-visit-for-g20-talks#comments</comments><guid isPermaLink="false">f306c530-2116-4355-97a3-c691000ff968</guid><pubDate>Sat, 29 Aug 2026 00:46:10 +0000</pubDate><atom:updated>2026-08-29T00:46:10.628Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,நிர்மலா சீதாராமன்,nirmala Sitharaman,G20,ஜி20,us</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/12lk6hj6/Nirmala-Sitharaman.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nirmala Sitharaman ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/12lk6hj6/Nirmala-Sitharaman.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய நிதியமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/nirmala-sitharaman">நிர்மலா சீதாராமன்</a> ஆறு நாள் பயணமாக அமெரிக்கா சென்றடைந்தார். இந்த பயணத்தின் போது, ​​அவர் ஜி20 நிதியமைச்சர்களின் கூட்டத்தில் பங்கேற்பதுடன், முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விவாதிக்க பல்வேறு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் மற்றும் வணிக தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.</p><p>கனடாவில் நடைபெற்ற முதல் '<a href="https://www.maalaimalar.com/news/national">இந்தியா</a>-கனடா பொருளாதார மற்றும் நிதிசார் கலந்துரையாடல்' நிகழ்வில் பங்கேற்ற பிறகு, மூன்று நாள் பயணத்தை முடித்துக்கொண்டு நிர்மலா சீதாராமன் சிகாகோவின் ஓ'ஹேர் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். </p><p>அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, இந்திய தூதரகத்தின் துணை தூதர் நம்க்யா சி. கம்பா மற்றும் சிகாகோவிற்கான இந்திய தூதரக அதிகாரி சோமநாத் கோஷ் ஆகியோர் அவரை வரவேற்றனர்.</p><h2>ஒன்பது நாள் கூட்டுப் பயணம்:</h2><p>சீதாராமன் கனடா மற்றும் அமெரிக்காவில் ஒன்பது நாள் கூட்டுப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்; இப்பயணம் செப்டம்பர் 2-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.</p><p>சிகாகோவில் தங்கியிருக்கும் காலத்தில், அவர் முக்கிய முதலீட்டாளர்களுடனான மாநாட்டில் பங்கேற்பதுடன், தனியார் துறையை சேர்ந்த முன்னணி தலைமை செயல் அதிகாரிகள், தலைவர்கள் மற்றும் மூத்த பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடுவார் என்று அந்த அறிக்கை தெரிவித்தது.</p><p>இந்தியாவின் முதலீட்டு வாய்ப்புகள், பொருளாதார கண்ணோட்டம் மற்றும் இந்தியா-அமெரிக்கா இடையிலான வணிக மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் ஆகியவை குறித்த விவாதங்கள் இதில் இடம்பெறும்.</p><p>மேலும், சிகாகோ பல்கலைக்கழகத்தில் உள்ள 'போல்ஸ்கி தொழில்முனைவு மற்றும் புத்தாக்க மையத்தை' பார்வையிடும் அவர், தொழில்முனைவு, புத்தாக்கம், தொழில்நுட்ப வணிகமயமாக்கல் மற்றும் இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் ஸ்டார்ட்-அப் மற்றும் புத்தாக்க சூழலுடனான தொடர்புகளை வலுப்படுத்துவது குறித்த கருத்துக்களை பரிமாறி கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>ஜி20 நிதியமைச்சர்கள் கூட்டம்:</h2><p>பின்னர், மத்திய நிதியமைச்சர் சிகாகோவில் உள்ள இந்தியச் சமூகத்தினருடன் கலந்துரையாடுவார். அமெரிக்காவின் தலைமையில் வட கரோலினாவின் ஆஷ்வில் நகரில் நடைபெறவுள்ள ஜி20 நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டத்தில் இந்திய குழுவிற்கு அவர் தலைமை தாங்குவார்.</p><p>ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், ஜி20 உறுப்பு நாடுகளின் நிதியமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர்கள் மற்றும் மூத்த பொருளாதார அதிகாரிகள் ஒன்றிணைந்து, முக்கிய உலகளாவிய பொருளாதார மற்றும் நிதிசார் விவகாரங்கள் குறித்து விவாதிப்பார்கள் என்று அந்த அறிக்கை கூறியது.</p>]]></content:encoded></item><item><title>காசாவில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் 5 பேர் பலி</title><link>https://www.maalaimalar.com/news/world/israeli-strikes-kill-5-in-gaza</link><comments>https://www.maalaimalar.com/news/world/israeli-strikes-kill-5-in-gaza#comments</comments><guid isPermaLink="false">41e8254c-df6c-4896-bcfb-147798323aed</guid><pubDate>Fri, 28 Aug 2026 22:24:43 +0000</pubDate><atom:updated>2026-08-28T22:24:43.964Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>காசா,இஸ்ரேல்,gaza,Israel</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/4as2rtqc/Gaza-Attacked.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gaza Attacked]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/4as2rtqc/Gaza-Attacked.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் மேற்கொள்ளப்பட்ட நிலையற்ற போர்நிறுத்த ஒப்பந்தம் இருந்தபோதிலும், நேற்று காசாவில் நடத்தப்பட்ட இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.</p><p>இதற்கிடையில், <a href="https://www.maalaimalar.com/topic/Iran">ஈரான்</a> போரினால் பாரசீக வளைகுடாவில் ஆயிரக்கணக்கான மாலுமிகள் சிக்கி தவிக்கின்றனர். இத்துடன், ரஷ்யா உடனான எரிசக்தி ஒப்பந்தத்தை ஈரான் முன்னிலைப்படுத்தி வருகிறது, மேலும் ஈரானுடனான தொடர்புகளுக்காக ஒரு முக்கிய எகிப்திய வங்கி மீது <a href="https://www.maalaimalar.com/topic/US">அமெரிக்கா</a> கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.</p><h2>ஐந்து பேர் உயிரிழப்பு:</h2><p>காசாவில் நடத்தப்பட்ட இஸ்ரேலிய தாக்குதல்களில் ஐந்து பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>கான் யூனிஸ் (Khan Younis) பகுதிக்கு வெளியே இருந்த ஒரு குடும்பத்தின் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு சகோதரர்களும் மற்றொரு உறவினரும் உயிரிழந்ததாக நாசர் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். கான் யூனிஸில் தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து தங்களுக்கு தெரியாது என்று இஸ்ரேலிய ராணுவம் கூறியது.</p><p>நேற்று (வெள்ளிக்கிழமை) காசா நகரில் நடத்தப்பட்ட இரண்டு தனித்தனி இஸ்ரேலிய தாக்குதல்களில் தலா ஒருவர் வீதம் கொல்லப்பட்டதாக ஷிஃபா மருத்துவமனை சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். நகரின் இரண்டு வெவ்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தியதை இஸ்ரேலிய ராணுவம் உறுதிப்படுத்தியது, ஆனால் கூடுதல் விவரங்களை அளிக்கவில்லை.</p><h2>70 தாக்குதல்கள் நடத்தப்பட்டன:</h2><p>இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த போரை நிறுத்த அக்டோபரில் மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, காசாவில் நிகழ்ந்த சமீபத்திய உயிரிழப்புகள் இவை. </p><p>கடுமையான சண்டைகள் குறைந்திருந்தாலும், இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன; இதில் குறைந்தது 1,303 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>பிப்ரவரி 28 அன்று ஈரான் போர் தொடங்கியதில் இருந்து, இப்பகுதியை விட்டு வெளியேற முடியாமல் நூற்றுக்கணக்கான கப்பல்களில் சிக்கியுள்ள குறைந்தது 6,000 மாலுமிகள் மற்றும் 19 கப்பல் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் கடல்சார் அமைப்பு தெரிவித்துள்ளது.</p><p>சர்வதேச கடல்சார் அமைப்பின் கூற்றுப்படி, பாரசீக வளைகுடாவில் சர்வதேச கப்பல் போக்குவரத்தின் மீது குறைந்தது 70 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>&quot;நடிகர் சூரி ஹீரோ ஆக 25 வருடங்கள் ஆனது&quot; மண்டாடி பட விழாவில் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/rj-balaji-said-actor-soori-took-25-years-to-become-a-hero</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/rj-balaji-said-actor-soori-took-25-years-to-become-a-hero#comments</comments><guid isPermaLink="false">051a9786-fcc5-4d7a-88db-0e29b22bf762</guid><pubDate>Fri, 28 Aug 2026 21:53:07 +0000</pubDate><atom:updated>2026-08-28T21:53:07.533Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>RJ Balaji,ஆர்ஜே பாலாஜி,மண்டாடி,Soori,Mandaadi,சூரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/e034iaoq/Soori-and-RJ-Balaji.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Soori and RJ Balaji]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/e034iaoq/Soori-and-RJ-Balaji.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகி வரும் படம் <a href="https://www.maalaimalar.com/topic/mandaadi">மண்டாடி</a>. இதில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். சத்யராஜ், சுஹாஷ், ரவீந்திர விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.</p><p>மீனவர்களின் வாழ்க்கை பின்னணியை அடிப்படையாக கொண்டும், அவர்களுக்குள் நடக்கும் படகுப்போட்டியை அடிப்படையாக கொண்டும் படம் உருவாகி உள்ளது. </p><p>இந்தப் படத்தில் முத்துக்காளி எனும் கதாபாத்திரத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/soori">சூரி</a> நடித்துள்ளார். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.</p><h2>ஆர்.ஜே. பாலாஜி பெருமிதம்:</h2><p>இந்தப் படம் வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் மண்டாடி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் படக்குழுவுடன் இயக்குநர் வெற்றி மாறன், நடிகர் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.</p><p>இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய நடிகர், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி நடிகர் சூரியின் திரைப்பயணம் குறித்து பெருமையாக பேசினார்.</p><p>இதுகுறித்து பேசிய இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, "சூரி சார் சங்கமம் படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக நடித்திருந்தார். அந்தப் படம் 1999-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. அன்று தொடங்கி தற்போது சூரி ஹீரோ ஆக 25 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. </p><p>அவர் போராடினார், போராடினார், போராடினார்- அவர் தன்னுடைய இடத்தை கைவிடவே இல்லை. எதையும் கைவிடாமல் இருந்தால் ஒருநாள் சாதிக்கலாம் என்பதற்கு சூரி மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்," என்று தெரிவித்தார்.</p><h2>யார் மண்டாடி?</h2><p>காற்றையும், அலையையும், கடல் நீரோட்டத்தையும் நன்கு கணித்து, மீன்களின் வளத்தையும் அவற்றின் திசைவழி போக்கையும் பற்றிய நல்ல அறிவையும் அனுபவத்தையும் பெற்ற ஒருவர், மீன்பிடிக்க செல்லும்போது படகை வழிநடத்தக்கூடிய தலைமை நிலையில் இருப்பார். அவரைத்தான் மண்டாடி என அழைப்பர். இதில் சூரி தலைவராக இருப்பதால் படத்திற்கு மண்டாடி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.</p><p>மண்டாடி திரைப்படம் அறிவிக்கப்பட்டது முதலே, இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது. விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், இந்தப் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.</p>]]></content:encoded></item><item><title>மொத ராத்திரி திரைப்படத்தை மிகவும் ரசித்தேன் - நடிகர் சிலம்பரசன்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-silambarasan-praises-modha-rathiri-movie</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-silambarasan-praises-modha-rathiri-movie#comments</comments><guid isPermaLink="false">10b7fc68-18e9-4934-b342-e81f44da9e79</guid><pubDate>Fri, 28 Aug 2026 21:21:38 +0000</pubDate><atom:updated>2026-08-28T21:21:38.409Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>silambarasan,சிலம்பரசன்,Modha Rathiri,மொத ராத்திரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/o9t1i2we/Modha-Rathiri-Poster-and-STR.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Modha Rathiri Poster and STR]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/o9t1i2we/Modha-Rathiri-Poster-and-STR.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகர்கள் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா நடிப்பில் வெளியான "<a href="https://www.maalaimalar.com/topic/modha-rathiri">மொத ராத்திரி</a>" திரைப்படத்திற்கு நடிகர் சிலம்பரசன் பாராட்டு தெரிவித்துள்ளார். அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் உருவாகி சமீபத்தில் வெளியான திரைப்படம் "மொத ராத்திரி".</p><p>புதிதாக திருமணமான ஜோடியின் முதலிரவில் நடக்கும் நகைச்சுவையான கதைகளத்துடன் உருவான இந்தப் <a href="https://www.maalaimalar.com/cinema">படம்</a> ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.</p><h2>நடிகர் சிலம்பரசன் பாராட்டு:</h2><p>இந்த நிலையில், மண் மணத்தோடு கூடிய ஒரு சுவாரஸ்யமான படைப்பு என கூறி "மொத ராத்திரி" திரைப்படத்தை நடிகர் சிலம்பரசன் பாராட்டினார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "மொத ராத்திரி படத்தைப் பார்த்தேன், மிகவும் ரசித்தேன்.</p><p>பிற மொழிகளில் வெளியாகும் சிறிய, அழகான படங்களை கண்டறிந்து நாம் கொண்டாடுகிறோம். அதேபோல, ஒரு புதிய குழுவுடன் புதிய முயற்சியாக ஒரு தமிழ்ப் படம் வெளியாகையில் அதற்கும் நாம் அதே அன்பையும், ஆதரவையும் அளிக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.</p><h2>ஒரே இரவில் நடக்கும் கதை:</h2><p>ஒரு கிராமத்து திருமண பின்னணியை கொண்டு, ஒரே இரவில் நடக்கும் கதை. இதில் வரும் பல கதாபாத்திரங்களும், சிறிய தருணங்களும் மிகவும் இயல்பானவையாக அமைந்திருக்கின்றன. கதைகளம், நகைச்சுவை, மனிதர்கள் இடையேயான உரையாடல்கள் மற்றும் கதாபாத்திரங்களின் சித்தரிப்பு என அனைத்தும் மிகவும் சிறப்பாக கையாளப்பட்டிருந்தன.</p><p>ஒரு புதிய இயக்குநரும் அவரின் குழுவும், மண்ணின் மணத்தோடு கூடிய சுவாரஸ்யமான ஒரு படைப்பை உருவாக்கியிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இயக்குநர் ராஜா கருப்பசாமி, நடிகர்கள் மற்றும் படக்குழுவினர்; இவர்களுடன், இப்படத்துக்கு துணையாக நின்ற அனைவருக்கும் எனது பாராட்டுகள்.</p><p>என் ரசிகர்கள் மற்றும் சினிமாவை விரும்புபவர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்; "மொத ராத்திரி" திரைப்படத்தை திரையரங்குகளில் சென்று பார்த்து, அக்குழுவுக்கு ஆதரவு அளியுங்கள். முழு படக்குழுவுக்கும் எனது வாழ்த்துகள். தொடர்ந்து நல்ல படங்களை உருவாக்குங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நேபாள வெள்ளத்தில் உயிர்தப்பிய 21 தமிழர்கள் சென்னை திரும்பினர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nepal-floods-21-tamil-people-return-chennai-safely</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nepal-floods-21-tamil-people-return-chennai-safely#comments</comments><guid isPermaLink="false">7f575d16-0498-408e-8054-14a8f29de14d</guid><pubDate>Fri, 28 Aug 2026 20:46:24 +0000</pubDate><atom:updated>2026-08-28T20:46:24.341Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழர்கள்,Tamil people,Nepal Floods,நேபாள வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/hdfxftjt/Tamilans-arrive-chennai.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tamilans Arrive Chennai]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/hdfxftjt/Tamilans-arrive-chennai.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாளத்தில் ஏற்பட்ட <a href="https://www.maalaimalar.com/topic/nepal-floods">வெள்ளத்தில்</a> சிக்கி மீட்கப்பட்ட 21 தமிழர்கள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.</p><p>கடந்த புதன்கிழமையன்று நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை காணவில்லை. தேடுதல் மற்றும் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</p><p>இந்த சூழலில், நேபாளத்துக்கு சென்று மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க, அமைச்சர்களுக்கு உத்தரவிட்டிருந்த தமிழக முதலமைச்சர்<a href="https://www.maalaimalar.com/topic/vijay"> விஜய்</a>, மீட்கப்பட்டுள்ள 21 தமிழர்களை தாயகம் அழைத்து வர ஏற்பாடு செய்யவும், தொடர்பு கொள்ள இயலாதவர்களின் நிலையை கண்டறிந்து மீட்புப்பணிகளை துரிதப்படுத்தவும் அறிவுறுத்தி இருந்தார்.</p><h2>டெல்லியில் தமிழக அமைச்சர்கள்:</h2><p>அதன்படி தமிழக பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் ராஜ்மோகன், வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் க.தென்னரசு, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் ர.வினோத் ஆகியோர் டெல்லியில், மத்திய அரசின் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியை சந்தித்தனர்.</p><p>அப்போது, நேபாளத்திற்கு சுற்றுலா சென்றிருந்த தமிழர்களை மீட்டு பாதுகாப்பாக அழைத்து வருவது தொடர்பாக மத்திய அரசின் வெளியுறவு அமைச்சகம் மற்றும் நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் மூலம் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப்பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.</p><h2>சென்னை திரும்பிய தமிழர்கள்:</h2><p>இந்நிலையில் காத்மண்டுவில் இருந்து மதியம் 2.15 மணிக்கு, 21 தமிழர்களுடன் புறப்பட்ட இண்டிகோ விமானம் மதியம் 3.45 மணிக்கு டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தது. இதன்பின்னர் தமிழர்கள் 21 பேரையும் தமிழ்நாடு அமைச்சர்கள் நேற்று நேரில் வரவேற்றனர்.</p><p>இதன்பின்னர் இரவு 8 மணியளவில் டெல்லியில் இருந்து புறப்பட்ட அவர்கள், நேற்று இரவு 11.15 மணியளவில் சென்னை வந்தடைந்தனர். விமான நிலையம் வந்த 21 பேரையும் தமிழக அமைச்சர்கள் என்.ஆனந்த், சரத்குமார் ஆகியோர் நேரில் வரவேற்றனர்.</p><p>மீட்கப்பட்ட 21 நபர்களும் திருச்சி, மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் சென்னையை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களை இனிப்புகள் வழங்கி உறவினர்கள் வரவேற்றனர்.</p>]]></content:encoded></item><item><title>UGC-NET ஜூன் 2026 தேர்வு முடிவுகள் வெளியீடு</title><link>https://www.maalaimalar.com/news/national/ugc-net-june-2026-results-declared-for-84-subjects</link><comments>https://www.maalaimalar.com/news/national/ugc-net-june-2026-results-declared-for-84-subjects#comments</comments><guid isPermaLink="false">1812a18d-1642-438b-ac75-325ba7defdb7</guid><pubDate>Fri, 28 Aug 2026 19:11:18 +0000</pubDate><atom:updated>2026-08-28T19:11:18.232Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>UGC,UGC-NET Results,யுஜிசி,யுஜிசி நெட் தேர்வு முடிவுகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/37hrdmhi/UGC.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ UGC]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/37hrdmhi/UGC.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/nta">தேசிய தேர்வு முகமை</a> 84 பாடங்களுக்கான UGC-NET ஜூன் 2026 தேர்வு முடிவுகளை அறிவித்துள்ளது. தேர்வில் பங்கேற்ற மாணவர்கள், ugcnet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ UGC-NET இணையதளம் மூலம் தங்களின் மதிப்பெண் அட்டைகளை சரிபார்த்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.</p><p>யுஜிசி-நெட் ஜூன் 2026 தேர்வானது, 87 பாடங்களுக்கு, ஜூன் 22 முதல் 30, 2026 வரை நடத்தப்பட்டது. ஒரு விண்ணப்பதாரர் தகுதிபெறும் பிரிவைப் பொறுத்து, இந்த தேர்வு இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை (JRF) பெறுவதற்கும், உதவி பேராசிரியராக நியமனம் பெறுவதற்கும், மற்றும் முனைவர் பட்ட படிப்புகளில் சேர்வதற்கும் உள்ள தகுதியை தீர்மானிக்கிறது.</p><h2>தேர்வு முடிவை சரிபார்ப்பது எப்படி?</h2><p>தேர்வர்கள் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றித் தங்களின் மதிப்பெண் அட்டைகளைச் சரிபார்க்கலாம்:</p><p>ugcnet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ UGC-NET இணையதளத்தை பார்வையிடவும்.</p><p>முகப்புப் பக்கத்தில் உள்ள சமீபத்திய அறிவிப்புகள் அல்லது முடிவு பகுதிக்கு செல்ல வேண்டும்.</p><p>UGC-NET ஜூன் 2026 தேர்வு முடிவு இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.</p><p>விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி போன்ற தேவையான உள்நுழைவு விவரங்களை உள்ளிட வேண்டும்.</p><p>UGC-NET தேர்வு முடிவு மற்றும் மதிப்பெண் அட்டையைக் காண விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.</p><p>மதிப்பெண் அட்டையைப் பதிவிறக்கம் செய்து, எதிர்கால சேர்க்கை அல்லது ஆட்சேர்ப்பு தொடர்பான தேவைகளுக்காக ஒரு நகலை வைத்துக்கொள்ள வேண்டும்.</p><h2>மறுதேர்வு விவரம்:</h2><p>2026 செப்டம்பர் 09 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மறுதேர்வு நடத்தப்படவுள்ள ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் பாடப்பிரிவுகளை சேர்ந்த தேர்வர்கள், UGC-NET ஜூன் 2026 மதிப்பெண் அட்டையை அணுக முயற்சிக்கும்போது, ​​"தவறான விண்ணப்ப எண்/கடவுச்சொல்" என்ற செய்தியைப் பெறக்கூடும்.</p><p>இந்த தேர்வர்களுக்கான மதிப்பெண் பட்டியல் மற்றும் தேர்வு முடிவுகள், அவர்களுக்கான மறுதேர்வு நடத்தப்பட்ட பின்னரே வெளியிடப்படும்.</p><p>NTA, ஆங்கிலப் பாடத்திற்கான மறுதேர்வை செப்டம்பர் 9 (ஷிப்ட் 1) அன்றும், வணிகவியல் பாடத்திற்கு செப்டம்பர் 9 (ஷிப்ட் 2) அன்றும், சமூகவியல் பாடத்திற்கு செப்டம்பர் 10 (ஷிப்ட் 1) அன்றும் திட்டமிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டி.என்.பி.எல்.: மதுரை அணியை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது கோவை கிங்ஸ்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-kovai-kings-beat-madurai-panthers-to-become-champions</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-kovai-kings-beat-madurai-panthers-to-become-champions#comments</comments><guid isPermaLink="false">9ffc5b79-d4ff-4eba-ad85-51b6e005e43d</guid><pubDate>Fri, 28 Aug 2026 17:35:54 +0000</pubDate><atom:updated>2026-08-28T17:35:54.350Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,madurai panthers,மதுரை பாந்தர்ஸ்,கோவை கிங்ஸ்,kovai Kings</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/pefimogq/Kovai-Kings-Champion.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kovai Kings Champion]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/pefimogq/Kovai-Kings-Champion.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2026 <a href="https://www.maalaimalar.com/topic/tnpl">டி.என்.பி.எல்.</a> டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணியை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய கோவை கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.</p><p>தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று நடந்தது. இறுதிப் போட்டியில் <a href="https://www.maalaimalar.com/topic/madurai-panthers">மதுரை பாந்தர்ஸ்</a> அணிக்கு எதிராக டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.</p><h2>கோவை அபார ஆட்டம்:</h2><p>கோவை கிங்ஸ் அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய ராதாகிருஷ்ணன் மற்றும் சுரேஷ் லோகேஷ்வர் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். ராதாகிருஷ்ணன் 12 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சுரேஷ் லோகேஷ்வர் 7 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து வெளியேறினார்.</p><p>3-வது விக்கெட்டுக்கு அந்த்ரே சித்தார்த் உடன் பாலசுப்ரமணியன் சச்சின் ஜோடி சேர்ந்தார். சச்சின் நிதானமாக விளையாட, அந்த்ரே சித்தார்த் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்த்ரே சச்சின் 34 பந்தில் அரைசதம் அடித்தார். சச்சின் 33 பந்தில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 117 ரன்கள் குவித்தது.</p><p>4-வது விக்கெட்டுக்கு அந்த்ரே சித்தார்த் உடன் ஷாரூக்கான் ஜோடி சேர்ந்தார். ஷாரூக் கான் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து அம்ப்ரிஸ் களம் இறங்கினார். அந்த்ரே சித்தார்த் 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் கோவை கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் சேர்த்தது.</p><h2>மதுரை பாந்தர்ஸ் சொதப்பல்:</h2><p>183 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ராம் குமார் மற்றும் சித்தார்த் மகாதேவன் ரன் ஏதும் எடுக்காமல், அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். தொடக்கத்திலேயே தடுமாறிய கோவை கிங்ஸ் அணிக்கு சதுர்வேத் மற்றும் ஹரி ராகவேந்தரா ஜோடி சற்றே ஆறுதல் அளிக்கும் வகையில் ரன் குவிப்பில் ஈடுபட்டது.</p><p>சதுர்வேத் 28 பந்துகளில் 40 ரன்கள் (2 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) விளாசி தனது விக்கெட்டை பறிக்கொடுக்க, ஹரி ராகவேந்திரா 14 பந்துகளில் 24 ரன்கள் (3 பவுண்டரிகள்) எடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் பாலசந்தர் அனிருத் 25 பந்துகளில் 24 ரன்ளை சேர்த்தார்.</p><h2>கோவை கிங்ஸ் சாம்பியன்:</h2><p>பின்னர் களமிறங்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். இதனால் மதுரை பாந்தர்ஸ் அணி 14.2 ஓவர்களில் 98 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், கோவை கிங்ஸ் அணி 84 ரன்களில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.</p><p>கோவை தரப்பில் சிறப்பாக பந்துவீசிய மணிமாறன் சித்தார்த் மற்றும் ஷாருக் கான் தலா 3 விக்கெட்டுகளையும், தீபன் லிங்கேஷ் 2 விக்கெட்டுகளையும் ஜதாவேத் சுப்ரமணியன் 1 விக்கெட் எடுத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>நேபாள வெள்ளம்: 320 இந்தியர்கள் மாயம்</title><link>https://www.maalaimalar.com/news/national/nepal-flash-floods-320-indians-missing</link><comments>https://www.maalaimalar.com/news/national/nepal-flash-floods-320-indians-missing#comments</comments><guid isPermaLink="false">edfea9ba-1269-404b-bf86-1a71f58d56bf</guid><pubDate>Fri, 28 Aug 2026 17:13:51 +0000</pubDate><atom:updated>2026-08-28T17:13:51.050Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>indians,Nepal Floods,இந்தியர்கள்,நேபாள வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/dwcjdnd1/tn-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு]]></media:title><media:description type="html"><![CDATA[ நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/dwcjdnd1/tn-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/nepal-floods">நேபாள</a>-திபெத் எல்லையில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கை தொடர்ந்து, குறைந்தது 320 இந்தியர்கள் காணாமல் போயுள்ளனர் மற்றும் 400 பேர் சீன பகுதியில் சிக்கியுள்ளனர் என்று வெளியுறவு அமைச்சகம் (MEA) தெரிவித்துள்ளது. </p><p>இந்த சூழ்நிலையை சமாளிக்க காத்மாண்டுவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க <a href="https://www.maalaimalar.com/news/national">இந்தியா</a> தயாராக இருப்பதாகவும் அமைச்சகம் கூறியது. </p><p>சீன பகுதியில் சிக்கியிருந்த 153 இந்தியர்கள் பாதுகாப்பாக நேபாளத்திற்கு வந்து சேர்ந்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. </p><p>நேபாளத்தின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து காத்மாண்டுவை அடைந்த மறுநாளான இன்று மதியம், 21 இந்தியர்கள் டெல்லிக்கு வந்து சேர்ந்தனர் என்று வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார். </p><h2>அதிகரிக்கும் உயிரிழப்புகள்:</h2><p>தமிழ்நாட்டை சேர்ந்த அந்த இந்தியர்கள், தலைநகரில் உள்ள விமான நிலையத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரால் வரவேற்கப்பட்டனர்.</p><p>நேபாள அதிகாரிகளின் சமீபத்திய தகவல்களின்படி, தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மேலும் பல உடல்கள் மீட்கப்பட்டதால், புதன்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 579-ஆக உயர்ந்துள்ளது.</p><h2>காணாமல் போன இந்தியர்கள்:</h2><p>"தொடர்பு கொள்ள முடியாத அல்லது காணாமல் போன இந்தியர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, தற்போதைய நிலவரப்படி அந்த எண்ணிக்கை 320-ஆக உள்ளது," என்று ஜெய்ஸ்வால் கூறினார்.</p><p>திரிசூலி-ஒன் நீர்மின் திட்டத்தில் பணிபுரிந்த 63 இந்தியர்களும் மீட்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். "தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுமார் 100 பேரும் உள்ளனர். இவர்கள் கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காக சென்றிருக்கக்கூடிய இந்திய வம்சாவளியினர், ஆனால் அவர்கள் வேறு நாடுகளின் குடியுரிமை பெற்றவர்கள்," என்று அவர் கூறினார்.</p><h2>தீவிர ஆலோசனை:</h2><p>400 இந்தியர்கள் சீனப் பகுதியில் சிக்கியிருந்தாலும் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.</p><p>"அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளனர். எங்கள் தூதரகம் அவர்களில் பலருடன் தொடர்பில் உள்ளது. பெய்ஜிங்கில் உள்ள எங்கள் தூதரகம் இயக்கும் உதவி எண் சேவைகள் மூலமாகவும் அவர்களது குடும்பத்தினர் பலர் எங்களைத் தொடர்பு கொண்டனர்."</p><p>"சீனாவில் உள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் எங்கள் தூதரகம் தொடர்பில் உள்ளது; அங்குள்ளவர்களை எவ்வாறு வெளியேற்றுவது என்பது குறித்து அவர்கள் ஆலோசித்து வருகின்றனர்," என்று அவர் குறிப்பிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>பேருந்தில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த மாணவர் - ரூ.13,000 அபராதம் கேட்ட பரிசோதனை அதிகாரி</title><link>https://www.maalaimalar.com/news/national/student-fined-13000-rupees-for-travelling-without-bus-ticket</link><comments>https://www.maalaimalar.com/news/national/student-fined-13000-rupees-for-travelling-without-bus-ticket#comments</comments><guid isPermaLink="false">a4748172-f4e4-4447-94a5-4c30dc8a56f2</guid><pubDate>Fri, 28 Aug 2026 16:42:05 +0000</pubDate><atom:updated>2026-08-28T16:42:05.177Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Government Bus,அரசு பேருந்து,Ticket Examiner,டிக்கெட் பரிசோதகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/m3x7btyj/Untitled-design-5.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pune Bus Fine Controversy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/m3x7btyj/Untitled-design-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிராவில் அரசு பேருந்தில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த மாணவர் ஒருவரிடம் அபராத தொகையாக, புனே மாநகர பயணச்சீட்டு சோதனை அதிகாரி ரூ.7,000 வலுக்கட்டாயமாக வசூலித்ததாக அந்த மாணவர் குற்றம்சாட்டியுள்ளார்.</p><p>மேலும் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்யும் நபர்களிடம் வசூலிக்கப்படும் அபராதம் ரூ.500-ஆக இருக்கும்போது தன்னிடம் இருந்து பணத்தை பறித்துவிட்டதாக மாணவர் கூறியுள்ளார்.</p><p>புனேவில் கடந்த செவ்வாய்க்கிழமை வகாடி பேருந்து நிலையத்தில் இருந்து கத்ராஜூக் பகுதிக்கு அரசுப் பேருந்தில் மாணவர் ஒருவர் பயணம் செய்தார். அப்போது அந்த பேருந்தை சோதனை செய்த பயணச்சீட்டு அதிகாரி, மாணவரிடம் பயணச்சீட்டு கேட்டுள்ளார்.</p><p>பின்னர் மாணவர் தனது செல்போனில் காலை 9:15 மணி முதல் 10:30 மணி வரை இணையவழியில் தோல்வியடைந்த பயணச்சீட்டு பணப்பரிவர்த்தனைகளை காண்பித்துள்ளார்.</p><p>இந்த நிலையில் தோல்வியடைந்த பரிவர்த்தனைகள் பயணச்சீட்டு இல்லாத பயணமாக கருதப்பட்டதாகவும், அதன் காரணமாக ஆரம்பத்தில் தன்னிடம் ரூபாய் 13,000 செலுத்தும்படி டிக்கெட் பரிசோதனை அதிகாரி கேட்டதாகவும் மாணவர் கூறினார்.</p><p>பின்னர் அந்தத் தொகை ரூ.10,000 ஆகக் குறைக்கப்பட்டு, இறுதியாக ரூ.7,000 வசூலிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். அபராதத் தொகையை எவ்வாறு பேரம் பேச முடியும் என்றும், அவ்வாறு செய்வதற்கு பயணச்சீட்டு சோதனை அதிகாரிக்கு அதிகாரம் உள்ளதா என்றும் அந்த மாணவர் கூறினார்.</p><p>இதையடுத்து அங்கீகரிக்கப்பட்ட அரசு பேருந்தின் (PMPML) கணக்கிற்கு பதிலாக, டிக்கெட் பரிசோதகரின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு ரூ.7,000 மாற்றப்பட்டதாக மாணவர் கூறினார்.</p><p>மேலும் அதற்கான ரசீது தனக்கு வழங்கும்போது, ரூ.7,000 அபராத தொகையை தானாக முன்வந்து செலுத்துவதாக தன்னை எழுத வைத்ததாகவும் அந்த மாணவர் கூறினார்.</p><p>இந்த நிலையில் போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிக்கையில், டிக்கெட் இல்லாத பயணம் அனுமதிக்கப்படாது; அதே சமயம், அபராதம் வசூலிக்கும்போது எங்கள் ஊழியர்கள் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறையை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளது.</p><p>ஒரு பயணி ஏதேனும் சிரமத்தை எதிர்கொண்டாலோ அல்லது தவறான தொகை வசூலிக்கப்பட்டதாக நம்பினாலோ, நாங்கள் டிக்கெட் மற்றும் கட்டணப் பதிவுகளை சரிபார்ப்போம் என்றும் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறையை மீறும் எந்தவொரு ஊழியர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று புனே போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சகோதரனின் கையை பிடித்து ராக்கி கட்டும்போது 20 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுமி</title><link>https://www.maalaimalar.com/news/national/girl-falls-into-20-foot-borewell-while-tying-rakhi-to-brother</link><comments>https://www.maalaimalar.com/news/national/girl-falls-into-20-foot-borewell-while-tying-rakhi-to-brother#comments</comments><guid isPermaLink="false">1bb5466d-f80f-44ab-9bd6-3b98700406e6</guid><pubDate>Fri, 28 Aug 2026 16:40:15 +0000</pubDate><atom:updated>2026-08-28T16:40:15.370Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>uttarpradesh,Rakhi,ரக்‌ஷா பந்தன்,ராக்கி கயிறு,Raksha Bhandan,உத்தரப் பிரதேசம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/wzbrw9n9/Untitled-design-6.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Uttar Pradesh Raksha Bandhan tragedy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/wzbrw9n9/Untitled-design-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">உத்தரப் பிரதேசத்தில்</a> சகோதரனின் கையில் ராக்கி கட்டுவதற்காக தனது வீட்டின் முற்றத்தில் நின்று கொண்டிருந்த 16 வயது சிறுமி ஒருவர், தவறி 20 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த நிலையில், பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத் துறையினர் அவரை வெளியில் எடுத்து மருத்துவமனையில் அனுமதித்தனர்.</p><figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Kanpur, UP: Rescue operation underway after a 16-year-old girl falls into a borewell. <a href="https://t.co/zV6TYtK769">pic.twitter.com/zV6TYtK769</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2093248103721955470?ref_src=twsrc%5Etfw">August 28, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><p>உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் சுமார் 35 கி.மீ. தொலைவில் புர்வாமிர் என்ற கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தில் சுட்சி ஷர்மா என்ற 16 வயது சிறுமி ஒருவர், தனது வீட்டின் முற்றத்தில் ரக்‌ஷ பந்தனை கொண்டாடும் வகையில் தனது சகோதரனின் கையில் ராக்கி கட்டுவதற்காக நின்று கொண்டிருந்தார்.</p><p>காலை 6:40 மணியளவில் அந்த சிறுமி தனது சகோதரனின் கையை பிடித்து ராக்கி கட்ட முயன்றபோது, வீட்டின் முற்றத்திற்கு அருகில் மூடாமல் இருந்த 20 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். </p><p>இதையடுத்து சிறுமியின் சகோதரன் கத்தி கூச்சலிட்டதை தொடர்ந்து, அக்கம்பக்கத்தினர் வந்து ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுமியை மீட்க முயற்சி செய்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக மகாராஜ்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.</p><p>இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள், தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) வீரர்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.</p><p>மீட்பு பணி குறித்து தலைமை தீயணைப்பு அதிகாரி தீபக் சர்மா கூறுகையில், தீயணைப்புத் துறையைச் சேர்ந்த குழுக்கள் உதவியுடன் சிறுமியை மீட்கும் பணியில் சுமார் 60 மீட்புபடை வீரர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறினார்.</p><p>ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுமியை சென்றடைவதற்காக, மீட்புக் குழுவினர் அருகில் ஒரு குழியைத் தோண்டினர்.</p><p>ஆழ்துளை கிணற்றையும் வீட்டையும் சுற்றியுள்ள தரை உறுதியற்றதாக இருந்ததாலும், மேலும் ஒரு சரிவு ஏற்படக்கூடும் என்ற கவலைகள் எழுந்ததாலும், இந்த மீட்புப் பணியை கவனமாக மீட்பு படை வீரர்கள் மேற்கொண்டனர்.</p><p>இதற்கிடையில் பல மணி நேர போராட்ட முயற்சிக்குப் பிறகு, மீட்புக் குழுவினர் அந்த சிறுமியை ஆழ்துளைக் கிணற்றிலிருந்து வெளியே எடுத்து, அருகில் இருந்த சர்சால் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.</p><p>அங்கு அந்த சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.</p><p>இந்த நிலையில் சிறுமி ஆழ்துளை கிணற்றில் விழுந்தது குறித்து குடும்பத்தினர் கூறுகையில், சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு முற்றத்தில் ஆழ்துளைக் கிணறு தோண்டப்பட்டது. ஆனால் பணியை முடிக்க முடியாததால் அது கைவிடப்பட்டது.</p><p>பின்னர் மற்றொரு இடத்தில் இரண்டாவது ஆழ்துளைக் கிணறு தோண்டப்பட்டது. கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறு மண்ணைப் பலவீனப்படுத்தியதால், சமீபத்திய மழையின் காரணமாக மண் சரிந்து விழுந்தது என்று அவர்கள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சமையலறையில் புகுந்து தீ வைத்த கரடி - குடும்பத்தை காப்பாற்ற கரடியை கருணை கொலை செய்த அதிகாரிகள்</title><link>https://www.maalaimalar.com/news/world/bear-sets-kitchen-fire-colorado-home</link><comments>https://www.maalaimalar.com/news/world/bear-sets-kitchen-fire-colorado-home#comments</comments><guid isPermaLink="false">fc54d886-4397-40e5-b49c-827242e6b75c</guid><pubDate>Fri, 28 Aug 2026 16:37:52 +0000</pubDate><atom:updated>2026-08-28T16:37:52.942Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,America,Bear,கரடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/8273mmbg/TRASH-.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Colorado Bear shot dead]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/8273mmbg/TRASH-.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவின் கொலராடோ பகுதியில் குடும்பத்தினர் தங்களது வீட்டில் இருந்தபோது, அந்த வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்த கரடி ஒன்று வீட்டை சூறையாடி சமையலறையில் தீ விபத்து ஏற்படுத்தியதை அடுத்து, அங்கு வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் கரடியை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.</p><p>அமெரிக்காவின் மவுண்ட் கிரெஸ்டட் பட் குடியிருப்பு பகுதியில் உள்ள இல்லத்தில் ஒரு குடும்பம் வசித்து வந்துள்ளது. இதையடுத்து கடந்த வாரம் ஆகஸ்ட் 19 ஆம் தேதி இரவு, வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு கரடி ஒன்று உள்ளே நுழைய முயன்றுள்ளது.</p><p>இதையடுத்து வீட்டின் நுழைவாயிலில் இருந்த கண்ணாடி ஜன்னலை உடைத்துக் கொண்டு, அந்த கரடி விட்டின் உள்ளே புகுந்துள்ளது.</p><p>பின்னர் வீட்டின் உள்ளே நுழைந்த கரடி, நுழைவாயில் மற்றும் வரவேற்பறையில் இருந்த அலமாரிகள் மற்றும் ஜன்னல் திரைகளை கீறி சேதப்படுத்தியுள்ளது.</p><p>இதைத்தொடர்ந்து அந்த கரடி, குளிர்சாதனப் பெட்டியை சிதைத்துவிட்டு, சமையலறையில் இருந்த பாத்திரங்களையும், மர அலமாறிகளையும் உடைத்துள்ளது.</p><p>பின்னர் சமையலறைக்குள் நுழைந்த அந்த கரடி, அங்கிருந்த மின்சார அடுப்பை தட்டி விட்டதில், அந்த அடுப்பு தீப்பிடித்து எரிந்து, வீடு முழுவதும் புகை சூழ்ந்தது.</p><p>இந்த சம்பவம் குறித்து வீட்டில் இருந்த குடும்பத்தினர் 911 என்ற எண்ணை தொடர்பு கொண்டு, கிரெஸ்டட் பட் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.</p><p>தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை அதிகாரிகள், கரடி ஒன்று வரவேற்பறை ஜன்னலை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைய முயற்சிப்பதை கண்டனர்.</p><p>கரடியின் ஆக்ரோஷமான நடத்தையை கண்ட அதிகாரிகள், அதை விரட்டி தீயை அணைக்க முயற்சி செய்தனர்.</p><p>ஆனால் கரடி அங்கிருந்து செல்லாமல் ஆக்ரோஷமாக நின்று கொண்டிருந்ததால், எரிந்து கொண்டிருந்த வீட்டின் உள்ளே இருந்த குடும்பத்தை காப்பாற்ற, தீயணைப்புத் துறையினர் வேறு வழியில்லாமல் கரடியை துப்பாக்கியால் சுட்டனர்.</p><p>இதையடுத்து குண்டடிபட்டு கரடி கீழே விழுந்து உயிரிழந்ததை அடுத்து, தீயை அணைத்து வீட்டின் உள்ளே சிக்கி கொண்டிருந்த குடும்பத்தை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>நேபாள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை  579 ஆக உயர்வு... 1,924 மாயம்!</title><link>https://www.maalaimalar.com/news/world/death-toll-from-nepal-floods-rises-to-579-1924-missing</link><comments>https://www.maalaimalar.com/news/world/death-toll-from-nepal-floods-rises-to-579-1924-missing#comments</comments><guid isPermaLink="false">a9869096-f1ca-406c-9670-b8eb26107538</guid><pubDate>Fri, 28 Aug 2026 16:21:06 +0000</pubDate><atom:updated>2026-08-28T16:21:06.169Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>China,சீனா,நேபாளம்,nepal,nepal flood,நேபாள வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/p4haj6ym/New-Project-2026-08-28T215039.605.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நேபாள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை  579 ஆக உயர்வு... 1,924 மாயம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/p4haj6ym/New-Project-2026-08-28T215039.605.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாளத்தில் புதன்கிழமையன்று (ஆக.26) திடீரென ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கிய குறைந்தது 1,924 பேரைக் காணவில்லை என நேபாள பேரிடர் நிவாரண மையம் தெரிவித்துள்ளது. </p><p>மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 579ஆக உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது. இவர்களில் 517 வெளிநாட்டினர் என்றும் தெரிவித்துள்ளது. இதில் இந்தியர்கள் மட்டும் 178 பேர் காணவில்லை என நேபாள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>திபெத்தில் 5 பேர் உயிரிழந்ததாகவும், 558 பேரை காணவில்லை என்றும் சீன அரசு தெரிவித்துள்ளது. இவர்களில் 260 பேர் வெளிநாட்டினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  </p><p>இன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 பேர் நேபாளத்தில் இருந்து மீட்கப்பட்டு டெல்லி திரும்பிய நிலையில், மற்றவர்களை மீட்கும் பணியில் மாநில, மத்தி மற்றும் நேபாள அரசுகள் ஈடுபட்டுள்ளன.</p><p>புதன்கிழமை ஏற்பட்ட வெள்ளம் மட்டுமின்றி, அந்த வெள்ளத்தால் உருவான தற்காலிக ஏரி உடைந்து மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருந்ததால், மீட்புப் பணிகள் சில மணி நேரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டன.</p>]]></content:encoded></item></channel></rss>