<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 03 Sep 2026 09:20:10 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: நீட் ஒழிப்பு ரகசியம் இருக்கிறது என கூறியது தான் காதுகுத்து: அமைச்சர் ராஜ்மோகன் - 3 செப். 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-3-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-3-september-2026#comments</comments><guid isPermaLink="false">ea8bcccc-7a9b-4b92-af1a-1b1e45c9f097</guid><pubDate>Thu, 03 Sep 2026 03:50:13 +0000</pubDate><atom:updated>2026-09-03T09:18:16.491Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/40phxesb/rajmohan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/40phxesb/rajmohan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>எடப்பாடி தொகுதியில் ஜலகண்டபுரத்தில் புறவழிச்சாலை அமைக்க 80% நிலம் எடுப்பு பணிகள் முடிந்து விட்டது.</p><p>திமுக ஆட்சியில் கைவிட்ட புறவழிச்சாலை திட்டத்தை தவெக அரசு செயல்படுத்த வேண்டும்.</p><p>அதிமுக ஆட்சியை போல் விவசாயிகள் 22 மணி நேரம் மின் மோட்டாரை இயக்க அனுமதி வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி</p><p>சட்டசபையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரை</p><p>கொரோனா காலகட்டத்தில் காவல்துறையினர் சிறப்பாக கணியாற்றினர். அவர்களால் பல உயிர்கள் காக்கப்பட்டது.</p><p>அதிமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாக்கப்பட்டனர். சட்டம், ஒழுங்கு சீராக இருந்தது.</p><p>உலகத்தரத்தில் தமிழ்நாடு காவல்துறையினருக்கு சீருடை வழங்க வேண்டும் - பிரேமலதா கோரிக்கை</p><p>திருநங்கைகள் மிகவும் தைரியமானவர்கள், அவர்களை சிங்கப்பெண் அதிரடிப்படையில் சேர்க்க வேண்டும்.</p><p>அதிக வழக்குகளை கையாளும் காவல்நிலையங்களில் கூடுதல் காவலர்களை நியமிக்க வேண்டும்.</p><p>போக்குவரத்து காவலர்களுக்கு உணவு, பழச்சாறு, கழிப்பறை வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் -  பிரேமலதா</p> <p>காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>காவல்துறையில் கூடுதல் பணியிடங்களை உருவாக்கி புதியவர்களை நியமிக்க வேண்டும்.</p><p>8 மணி நேரம் வேலை, வார விடுப்பு போன்றவற்றை படிப்படியாக அமல்படுத்த வேண்டும்  - பிரேமலதா</p> <p>நான் 2 மணி நேரம் பேசவில்லை. வெறும் 35 நிமிடங்கள் தான் பேசி உள்ளேன் என அக்கா பிரேமலதாவிற்கு கூறிக்கொள்கிறேன் - உதயநிதி</p><p>காவல்துறைக்கு அடையாளமாக வாழ்ந்தவர் கேப்டன் விஜயகாந்த் - பிரேமலதா</p><p>இது சட்டசபை, சண்டை சபை இல்லை.</p><p>தங்களுக்கான அறிவிப்புகள் வரப்போகிறது என ஆயிரக்கணக்கான காவலர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் - பிரேமலதா</p><h2>சட்டசபையில் பிரேமலதா உரை</h2><p>நாங்கள் எதிர்க்கட்சிகள் தான் எதிரி கட்சிகள் இல்லை. கடந்த 2 மணி நேரத்தில் விவாதம் மட்டும் நடந்து வருகிறது.</p><p>இன்று சட்டசபையில் உதயநிதி மட்டும் தான் பேசியிருக்கிறார். எந்த உறுப்பினரும் பேசவில்லை.</p> <p>ஆபத்து இருக்கும்போது தயாராக இருப்பது நல்லதுதான், தவெக ஆட்சியில் அதிக ஆபத்து உள்ளதால் தயாராக உள்ளோம்- உதயநிதி ஸ்டாலின்.</p><p>தவெக ஆட்சியை மைக்ரோ ஸ்கோப் வைத்து பார்த்து 100 நாள் தயார் செய்த ஸ்கிரிப்டை உதயநிதி வாசித்துள்ளார்.</p><p>கேள்வி கேட்டுகும் இடத்தில் மட்டும் தான் திமுக இருக்கும்- சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ்.</p><p>அமைச்சர் ஒவ்வொருவரும் பாடம் எடுப்பதுபோல் ஒரு மணி நேரம் பேசினால் எப்படி?- கே.என்.நேரு</p><p>நீதியரசர் அருணா ஜெகதீசன் அறிக்கை நாங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை, நீங்கள் நடவடிக்கை எடுங்கள்.</p><p>தவெக அரசுக்கு தைரியம் இருந்தால் நீதியரசர் அருணா ஜெகதீசன் அறிக்கை மீது நடவடிக்கை எடுக்கட்டும் என உதயநிதி சவால் விடுத்துள்ளார்.</p><p>தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் உத்தரவிட்ட அதிகாரிகள் மீது திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.</p><p>நீதியரசர் அருணா ஜெகதீசன் அறிக்கை மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? உயிரிழந்த மக்களுக்கு என்ன பதில்?- அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</p><p>நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறற எதிர்கட்சி தலைவருக்கும் 3 நாள் அவகாசம் உள்ளது.</p><p>காவல்துறையில் தவறு நடந்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கும் அரசு தவெக அரசு.</p><p>கன்னியாகுமரி காவல்நிலைய மரணத்தில் தொடர்புபகைய அனைத்து காவலர்களும் கைது செய்யப்பட்டனர்.</p><p>போதைப்புழக்கம், மதுப்பழக்கத்தால் திமுக ஆட்சியில் குற்றங்கள் அதிகரிப்பு, போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க தவறிவிட்டனர்- ஆதவ் அர்ஜூனா. </p><p>பட்டிமன்றத்தில் பேசியவர் என உதயநிதி கூறியதை இழிவாக பேச வேண்டாம் - அமைச்சர் ராஜ்மோகன்.</p><p>இழிவாக பேசவில்லை, நான் பட்டிமன்றத்தை விரும்பிப் பார்ப்பவன் என எதிர்கட்சித்தலைவர் உதயநிதி விளக்கம்.</p><p>பட்டிமன்றத்திற்கு பேசிய என்னை சட்டமன்றத்திற்கு அழைத்து வந்தவர் முதலமைச்சர் விஜய்.</p><p>பட்டிமன்றத்தில் பேசியவர் என உதயநிதி கூறியதை இழிவாக பேச வேண்டாம் - அமைச்சர் ராஜ்மோகன்.</p><p>நான் அவைக்கு சரியாக வருவதில்லை என அமைச்சர் கூறினார், வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டுள்ளேன், பாருங்கள். </p><p>பட்டிமன்ற பேச்சாளர் ராஜ்மோகன் அமைச்சராவதற்கு முன்பு திமுகவை ஆதரித்து பல மேடைகளில் பேசினார். தற்போது தவெகவில் இருப்பதால் அமைச்சர் ராஜ்மோகன் மாற்றி பேசி வருகிறார்- உதயநிதி ஸ்டாலின்.</p><p>தவெக ஆட்சியில் சிங்கப்பெண்களுக்கே பாதுகாப்பில்லை என எதிர்கட்சி தலைவர் உதயநிதி குற்றம்சாட்டினார்.</p><p>மெரினாவுக்கு எப்படி பூட்டு போடுவது என சொல்லிக்கொடுத்தது முந்தைய திமுக அரசு தான். கடந்த 5 ஆண்டுகளாக பீச்சிற்கு பூட்டு போடுவதில் பிஎச்டி செய்தவர்கள் திமுக தான்.</p><p>திமுக ஆட்சியில் மெரினா கடற்கரையில் எந்த போராட்டத்திற்கு அனுமதி அளித்தார்கள் என ராஜ்மோகன் கேள்வி எழுப்பினார். </p><p>நான் பதிலளிக்கும்போது யாரும் ஓடிவிடக்கூடாது என முதமைச்சர் கூறிய வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்.</p><p>அந்த வார்த்தையை எல்லாம் நீக்க முடியாது என ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கையை நிராகரித்தார் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர். </p><p>திமுக ஆட்சியில் குற்றங்களே நடக்காததுபோல் நாடகம் ஆடினார்கள் என அமைச்சர் ராஜ்மோகன் குற்றச்சாட்டு.</p><p>தவெக ஆட்சியில் குற்றங்களை தடுக்க வரலாற்றில் முதன்முறையாக சிங்கப்பெண் அதிரடிப்படை உருவாக்கப்பட்டது- அமைச்சர் ராஜ்மோகன்.</p><p>அண்ணா பல்கலை மாணவி வழக்கின் எப்ஐஆர்-ஐ ஆன்லைனில் பதிவிட்டு அவரது அடையாளத்தை வெளிப்படுத்தியது திமுக அரசு. </p><p>புகார் அளித்த அரைமணி நேரத்தில் மாணவி பெயர், வீட்டின் முகவரியை வெளியிட்டு அவரை அச்சுறுத்தியது திமுக அரசு- அமைச்சர் ராஜ்மோகன்.</p><p>திமுக உறுப்பினர் ஜாபர் சாதிக் பல கோடி போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார்- அமைச்சர் ராஜ்மோகன்.</p><p>பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களில் அடையாளம் வெளியிடப்பட்டது - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>அமைச்சர் ராஜ்மோகன் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் அமளி</p><p>உண்மையில் நீட் ஒழிப்பு ரகசியம் எனக்குத்தெரியும் என்று உதயநிதி கூறியது தான் மிகப்பெரிய காதுகுத்து- அமைச்சர் ராஜ்மோகன்.</p><p>தரமான பதிலடி முதலமைச்சர் மூலமாக தரப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>சட்டசபையில் இருந்து இப்போது யார் ஓடியது என அனைவருக்கும் தெரியும் - உதயநிதி</p><p>நான் பதிலளிக்கும் போது யாரும் ஓடிவிடக்கூடாது என பிராமிஸ் தர வேண்டும் என புன்னகையுடன் கூறிவிட்டு புறப்பட்டார் முதலமைச்சர் விஜய்</p> <p>அனைத்து கேள்விகளுக்கும் திங்களன்று பதில் கூறுகிறேன். நான் பதில் கூறும்போது யாரும் ஓடிவிடக்கூடாது - முதலமைச்சர் விஜய்</p><p>டிஜிபி நியமனத்தில் யுபிஎஸ்சி-க்கும் அன்றைய திமுக அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது - உதயநிதி</p><p>3 ஆண்டுகளில் ஒரே மாதிரி 1,597 கொலைகள் பதிவானது எப்படி?- அமைச்சர் ஆதவ்</p> <p>சட்டசபையில் தவெகவினர் - திமுகவினர் இடையில் கடும் வாக்குவாதம்</p><p>எங்கள் முதலமைச்சருக்கு யாரும் உபதேசம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.</p><p>2020-ல் 1,597 கொலைகள், 2021-ல் 1,597 கொலைகள், 2022-ல் 1,597 கொலைகள் - அமைச்சர் ஆதவ்</p><p>முதலமைச்சர் தயாரானதால் தான் முதலமைச்சராக இருக்கிறார், நீங்கள் எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறீர்கள் - உதயநிதிக்கு ஆதவ் பதிலடி</p><p>திங்கள்கிழமை உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறப்படும். முதலமைச்சர் அமைதியாக இருப்பதே அவர் தயாராக இருப்பதற்கு சமம்  - சபாநாயகர் விளக்கம்</p><p>முதல்வரை விமர்சித்தால் கைது, ஆனால் பாஜகவினர் விமர்சித்தால் தவெக அரசு கண்டுகொள்வதில்லை.</p><p>உலகத்திலேயே கடற்கரைக்கு பூட்டு போட்ட ஒரே அரசு தவெக அரசு தான் - உதயநிதி ஸ்டாலின் </p><p>கடந்த 106 நாட்களில் தவெகவினர் சிக்கிய பல்வேறு புகார்களை சட்டசபையில் குறிப்பிட்டு உதயநிதி ஸ்டாலின் பேச்சு</p><p>106 நாட்களில் ஆளுங்கட்சியினர் பெண்களுக்கு எதிராக செய்த அட்ரா சிட்டிக்கு பெரிய லிஸ்டே உள்ளது.</p><p>தவெகவின் 106 நாளில் 8 காவல், சிறை மரணங்கள் நடந்துள்ளது. இதுகுறித்து முதல்வர் ஒரு Sorry கூட சொல்லவில்லை.</p><p>திமுக ஆட்சியின் காவல்நிலைய மரணத்தின்போது Sorry  வேண்டாம் நீதி வேண்டும் என்றவர் இப்போது Sorry கூட சொல்லவில்லை.</p><p>திமுக ஆட்சியில் கட்சியினர் தவறு செய்தால் வழக்கு பதியலாமா? வேண்டாமா? என 10 நாள் யோசிப்பீர்கள், நாங்கள் அப்படியில்லை.</p><p>தவெக ஆட்சியில் யார் தவறு செய்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ஆனந்த்</p><p>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசும்போது குறுக்கீடு வேண்டாம் - சபாநாயகர்</p> <p>தவறு செய்தவர் யாராக இருந்தாலும் முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.</p><p>புலன் விசாரணையில் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏவுக்கு தொடர்பில்லை என தெரிய வந்தது - அமைச்சர் ஆனந்த்</p><p>ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ மீதான புகாருக்கு அமைச்சர் ஆனந்த் பதில்</p><p>பெண் அளித்த புகாரில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>பாலியல் வன்கொடுமை புகாரில் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏவுக்கு தொடர்பில்லை.</p><p>ஆணவ கொலைகள் தற்போது காதல் மரணங்களாக மாறிவிட்டன.</p><p>தவெக எம்எல்ஏ மீதான பாலியல் வன்கொடுமை புகார் குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை - உதயநிதி</p><p>பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் விரைந்து தீர்ப்பு வாங்கி கொடுத்தோம்.</p><p>தமிழ்நாட்டில் கொலை நடக்காத நாளே இல்லை.</p><p>தவெக ஆட்சியில் 10 ஆணவ கொலைகள் நடந்துள்ளன - உதயநிதி</p><p>வருடத்திற்கு 6 இலவச சிலிண்டர் என வாக்குறுதி அளித்துவிட்டு இப்போது 3 சிலிண்டர் மட்டும் தான் என்கிறீர்கள்.</p><p>இதுவரை இல்லாத அளவில் திமுக ஆட்சியில் போதை பொருட்கள் பறிமுதல் - உதயநிதி</p><p>கொடுத்த வாக்குறுதிகளை பாதி பாதியாக நிறைவேற்றுவது ஏன்? - உதயநிதி</p> <p>திமுக ஆட்சியில் தமிழ்நாடு டாப் கியரில் சென்று கொண்டிருந்த தவெக ஆட்சியில் ரிவர்ஸ் கியரில் சென்று கொண்டிருக்கிறது.</p><p>தாய்மாமன் காது குத்து திட்டம் என பெயர் மாற்றம் செய்யலாம் - உதயநிதி</p><p>முந்தைய ஆண்டுகளை விட திமுக ஆட்சியில் சாதிய பாகுபாடு, பாலியல் வன்கொடுமைகள் குறைந்ததாக ஒப்புக்கொண்டதற்கு நன்றி.</p><p>தவெகவின் 100 நாள் ஆட்சியில் ஒன்று பழைய திட்டத்தை ரத்து செய்கிறீர்கள், இல்லை பழைய திட்டத்தை தொடர்கிறீர்கள்  -  உதயநிதி</p><p>திமுக ஆட்சியில் சாதிய கொலைகள் குறைந்துள்ளதாக கொள்கை விளக்க குறிப்பில் கூறி உள்ளீர்கள்.</p><p>பெயர் மாற்ற அறிவிப்பு அல்ல திட்டம் ரத்து என்ற அறிவிப்பு தான் வருகிறது -  உதயநிதி</p><h2>சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி உரை</h2><p>நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு எங்கள் மீதே பழி போடாமல் முதலமைச்சர் பதில் கூற வேண்டும்.</p><p>திமுக ஆட்சியில் குற்றங்கள் குறைந்திருப்பதாக கொள்கை விளக்கக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p> <p>காவல்துறை சிறப்பு பிரிவுகளுக்கு எதிர்பாரா செலவீனம் உயர்த்தப்படும்.</p><p>வண்டலூரில் உள்ள காவலர் உயர்பயிற்சியத்தில் உள் விளையாட்டு அரங்கு, விளையாட்டு வசதிகள் ரூ.23 கோடியில் ஏற்படுத்தப்படும்  - முதலமைச்சர் விஜய்</p> <p>நடப்பாண்டில் 10,000 பணியிடங்கள் நிரப்பப்படும்.</p><p>பணியின்போது துணிச்சலுடன் பணியாற்றி உயிரிழக்கும் காவலர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்கப்படும்.</p><p>பணியின்போது உயிரிழக்கும் காவலர் குடும்பத்திற்கு தரப்படும் கருணைத்தொகை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்வு - முதலமைச்சர் விஜய்</p><p>கூடுதல் காவல் பணியிடங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் உயர்த்தப்படும்.</p><p>போதைப்பொருளை ஒழிக்கும் கிராமங்களுக்கு ரூ.10 லட்சம் வீதம் 50 கிராமங்களுக்கு வழங்கப்படும்.</p><p>ரூ.212 கோடி ஒதுக்கீட்டில் காவல்துறை நவீனமயமாக்கப்படும் - முதலமைச்சர் விஜய்</p><p>காவல் நிலையங்களில் 29,108 கூடுதல் காவல் பணியிடங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் உருவாக்கப்படும்- முதலமைச்சர் விஜய்</p><p>காவல்துறை மீதான மானிய கோரிக்கையை தாக்கல் செய்தார் முதலமைச்சர் விஜய்</p><p>கலைஞரால் எப்போதும் பிள்ளையார் சுழி போட முடியாது பெரியார் சுழி தான் போட முடியும்.</p><p>தமிழ் வழக்காடு மொழியாக மாற்ற வேண்டும் என கோரிக்கைக்கு பிள்ளையார் சுழி போட்டவர் கலைஞர் என ரகுபதி பேசியதற்கு பதிலடி</p><p>ஐகோர்ட்டில் தமிழை முதன்மை மொழியாக்கக்கோரி முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்திற்கு விசிக ஆதரவு.</p><p>ஐகோர்ட்டில் தமிழை முதன்மை மொழியாக்கக்கோரி முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்திற்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆதரவு</p><p>முதலமைச்சர் விஜய் ஆட்சியில் தமிழுக்கு தான் எப்போதும் முதலிடம் - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>முதலமைச்சர் 110 விதியின் கீழ் அறிவிக்கும் எல்லா அறிவிப்புகளும் மிகச் சிறப்பாக வரவேற்றும் வகையில் உள்ளது.</p><p>புதிய தலைமை செயலகத்தை யார் ஆட்சிக்கு வந்தாலும் தடை செய்யாத வகையில் ஒரு சட்டத்தை உருவாக்க வேண்டும்.</p><p>ஐகோர்ட்டில் தமிழை முதன்மை மொழியாக்கக்கோரி முதலமைச்சர் விஜய் கொண்டுவந்த தீர்மானத்திற்கு தேமுதிக ஆதரவு - பிரேமலதா</p><p>ஐகோர்ட்டில் தமிழை முதன்மை மொழியாக்கக்கோரி முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாஜக,  ஆதரவு</p><p>மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்ற பெயரி சென்னை உயர்நீதிமன்றமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் - சிபிஎம் எம்எல்ஏ செல்லசாமி</p><p>உலகில் மக்கள் அதிகம் பேசும் முதல் 25 மொழிகளில் தமிழும் உள்ளது. ஒரு வாரத்திற்கு 2 மொழிகள் அழிகிறது.</p><p>10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் தமிழ் மொழிப்பாடம் என்ற வார்த்தையே இல்லை.</p><p>மொழிப்பாடம் என்று தான் இருக்கிறது, அதை சரி செய்ய வேண்டும் - சவுமியா அன்புமணி </p> <p>பழமையாக நெல் ரகங்களில் பெயர், நாட்டு மாடுகளின் பெயர்களை குறிப்பிட்டு சட்டசபையில் சவுமியா அன்புமணி பேச்சு</p><p>ஐகோர்ட்டில் தமிழை முதன்மை மொழியாக்கக்கோரி முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்திற்கு பாமக முழு மனதுடன் வரவேற்பு</p><p>ராஜஸ்தான், உ.பி., ம.பி. உயர்நீதிமன்றங்களில் இந்தி அலுவல் மொழி - சி.வி.சண்முகம்</p><p>மெட்ராஸ் ஐகோர்ட் என்பதை இன்று வரை மாற்ற முடியவில்லை. ஜென் Z இளைஞர்களுக்கு மெட்ராஸ் என்பதே தெரியாது.</p><p>தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயரை மாற்ற தனி தீர்மானம் தேவை. சென்னை உயர்நீதிமன்றம் என பெயர் மாற்ற வேண்டும் - சி.வி.சண்முகம்</p> <p>முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்திற்கு திமுக வரவேற்பு, அதிமுக ஆதரவு</p><p>முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு</p><p>என்னை பேச அழைக்காமல் தளவாய் சுந்தரத்தை அழைக்கலாமா? </p><p>என்னை விட தளவாய் சுந்தரம் அதிகம் பேசி விடுவாரா? - டென்ஷன் ஆன சி.வி.சண்முகம்</p><p>எதிர்க்கட்சி கொறடா எழுந்தவுடன் திமுகவினர் எழுந்து நிற்பதை ஏற்க முடியாது - சபாநாயகர்</p><p>ஆங்கிலத்திற்கு பிறகே தமிழ் என்று தான் திமுக ஆட்சியில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.</p><p>இது யாருடைய குழந்தையும் கிடையாது என ரகுபதிக்கு அமைச்சர் நிர்மல் குமார் பதிலடி</p> <p>சட்ட சொற்களஞ்சியங்களை உருவாக்கினால் உச்சநீதிமன்றம் மறுக்காது.</p><p>ஐகோர்ட்டில் ஒரே மொழியாக தமிழை கொண்டு வர முடியாது. ஆங்கிலம் உடன் இருக்கத்தான் செய்யும் - ரகுபதி</p><p>இந்த தீர்மானம் எங்கள் குழந்தை, இதை வரவேற்கிறோம்.</p><p>மக்கள் நேரலையில் பார்த்துக்கொண்டிருப்பதால் வரலாறு முக்கியம் - ரகுபதி</p><p>சென்னையில் உச்சநீதிமன்றக் கிளை வேண்டும் என முதலில் கேட்டவர் ஸ்டாலின்.</p><p>2022-ல் பிரதமரிடம் நேரடியாக தைரியமாக குரல் எழுப்பியர் ஸ்டாலின்.</p><p>உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என கேட்டார் ஸ்டாலின் - திமுக எம்எல்ஏ ரகுபதி</p><h2>தீர்மானத்தின் மீது திமுக எம்எல்ஏ ரகுபதி உரை</h2><p>தமிழ் வழக்காடு மொழி என்பதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் கருணாநிதி.</p><p>தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்றுத் தந்தவர் கருணாநிதி.</p><p>சட்ட சொற்களஞ்சியம் இல்லாத காரணத்தால் 2006-ல் தீர்மானத்தை ஏற்க மறுப்பு.</p> <p>நீதிமன்றங்களில் தமிழ் மொழி பயன்பாட்டுக்கு சட்ட அங்கீகாரம்.</p><p>மாநில மொழியை நீதிமன்றங்களில் பயன்படுத்த சட்ட வாய்ப்புள்ளது - முதலமைச்சர் விஜய் </p> <p>இந்த கோரிக்கை எந்த மொழிக்கும் எதிரானது அல்ல. தமிழ் மொழிக்கான சட்ட அங்கீகாரம் கேட்கும் கோரிக்கை.</p><p>குடியரசுத் தலைவரும் மத்திய அரசும் இதற்கு ஒப்புதல் தர வேண்டும்.</p><p>தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாக தமிழ் அறிவிக்கப்பட்டுள்ளது - முதலமைச்சர் விஜய் </p> <p>மாவட்ட நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக உள்ளது.</p><p>தீர்ப்பு, தீர்ப்பாணை, உத்தரவுகளை தமிழில் வழங்க வேண்டும்.</p><p>வழக்கு தொடர்பான வாதங்கள் தமிழில் இருந்தால் எளிதாக புரியும்  - முதலமைச்சர் விஜய் </p> <p>வருங்கால தலைமுறைக்கும் தமிழ் மொழியின் வளத்தையும் பெருமையையும் கொண்டு சேர்ப்பது நமது கடமை.</p><p>தமிழை முதன்மை மொழியாக அங்கீகரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.</p><p>ஆளுநரால் அனுப்பப்படும் முன்மொழிவுகளுக்கு உடனடி நடவடிக்கை - முதலமைச்சர் விஜய் </p> <p>தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பது நமக்கெல்லாம் கிடைத்த பெருமை.</p><p>பல்லாயிரம் ஆண்டுகள் உயிர்ப்புடன் பேசப்படும் மொழி தமிழ் மொழி -  முதலமைச்சர் விஜய் </p> <p>சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்கக் கோரி சட்டசபையில் தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார் முதலமைச்சர் விஜய்</p> <p>ரூ.1200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும்  - முதலமைச்சர் விஜய் </p><p>தற்போது தலைமைச் செயலகம் 2 கட்டடங்களில் இயங்கி வருகிறது. 2 கட்டிடங்களில் 6000 பேர் பணியாற்றும் நிலை உள்ளது  - முதலமைச்சர் விஜய் </p> <p>மோட்டார் ஸ்போர்ட் சிட்டி உருவாக்கப்படும்.</p><p>இளைஞர்களின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் திறமைகளை அறிந்து பயிற்சி அளிக்கப்படும்  - முதலமைச்சர் விஜய் </p> <p>தேசிய, உலக அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெறும் வகையில் ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும்.</p><p>ஒலிம்பிக் நகரத்தில் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்களுக்கான நவீன உள்கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்படும் - முதலமைச்சர் விஜய் </p> <p>சுற்றுச்சூழல் மாறு ஏற்படுத்தாத நிறைய நிறுவனங்கள் கொண்டு வருவோம் - அமைச்சர் ராஜீவ்</p><p>தொழில் வளமும், சுற்றுச்சூழலும் உறுதி செய்யப்படும் - அமைச்சர் கீர்த்தனா</p><p>பெங்களூருவில் இருந்து 1400 எம்எல்டி கழிவுநீர் தென்பெண்ணையில் திறக்கப்படுகிறது. கர்நாடக அரசிடம் பேசி தீர்வு காணப்படும் - அமைச்சர் ராஜீவ் உறுதி</p> <p>தென்பெண்ணையாற்றில் கர்நாடக ஆலைக்கழிவுகள் கலப்பு - பாலகிருஷ்ணாரெட்டி</p><p>20% அளவுக்கு அனுமதி பெறாமல் மோர் மிளகாய் தயாரிக்கப்படுகிறது -  அமைச்சர் ராஜீவ்</p><p>திண்டுக்கல்லில் முறையாக அனுமதி பெற்று மோர் மிளகாய் தயாரிப்பு. மோர் மிளகாய் தயாரிப்பால் நிலத்தடி நீர் பாதிப்பு என சில விவசாயிகள் புகார் - ஐ.பெரியசாமி</p><p>கடந்த ஆட்சியில் சுற்றுச்சூழல் துறையில் சரியான நடவடிக்கை இல்லை.</p><p>பவானி, ஈரோடு தொகுதிகளில் தான் எனக்கு அதிக சவால்கள்.</p><p>விதிகளை மீறி சாயக்கழிவுகளை வெறியேற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ராஜீவ்</p><p>நிலக்கரியை சாலைகளில் கொண்டு செல்வதற்கு விதிகள் உள்ளன. </p><p>துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ராஜீவ்</p><p>அதானி துறைமுகத்திற்கு நிலக்கரியை கொண்டு செல்லும்போது காற்றுமாசு உருவாகிறது - ஜவாஹிருல்லா</p><p>அரசு அதிகாரிகள், முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ராஜீவ் உறுதி</p><p>சாய ஆலைக்கழிவுகளை சுத்திகரிப்பதே இந்த திட்டத்தின் நோக்கம். ரூ.11 ஆயிரம் கோடி செலவில் நடந்தாய் வாழி காவிரி திட்டம். நடந்தாய் வாழி காவிரி திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்து விட்டது - எடப்பாடி பழனிசாமி </p><p>நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை தவெக அரசு தொடருமா? - எடப்பாடி பழனிசாமி </p> <p>வேதாரண்யத்திற்காகவும் வேதா ஜவுளி பூங்கா, வேதா நிலையத்தை நினைவில் வைத்தும் வேதா ஜவுளி பூங்கா என்று வைத்தீர்கள்.</p><p>இதில் 40 சதவீதம் மத்திய அரசு பங்கு, 9 சதவீதம் மாநில அரசு பங்கு.</p><p>தொழில் முதலீட்டாளர்கள் முழு மானியம் போட்டு தொழில் தொடங்க முடியாது என்று தெரிவித்தனர்.</p><p>உடனடியாக டெல்லி சென்று மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தோம். அவர்களும் பரிசீலனை செய்வதாக தெரிவித்துள்ளார்கள்.</p><p>நீங்களும் கூட்டணியில் உள்ளீர்கள். நீங்களும் முயற்சி செய்தால் இணைந்து இந்த திட்டத்தை நிறைவேற்றி விடலாம் - அமைச்சர் விஜய் பாலாஜி</p> <p>வேதாரண்யத்தில் வேதா ஜவுளி பூங்கா முழுமை பெறுமா? மாநில அரசின் நிதியில் வேதா ஜவுளி பூங்கா முடிக்கப்படுமா? - ஓ.எஸ்.மணியன்</p><p>தொழில் முதலீட்டாளர்கள் முன்வரும் பட்சத்தில் திருத்தணியில் புதிய ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை - அமைச்சர் விஜய் பாலாஜி</p><p>திருத்தணியில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும். எங்கள் தொகுதியில் எந்த தொழிற்சாலையும் இல்லை.</p><p>ஜவுளி பூங்கா அமைந்தால் 500 - 1000 பேர் வேலைவாய்ப்பு பெறுவர்  - எம்எல்ஏ கோ அரி </p><p>அனைத்து பாலங்களின் பணிகளும் தொடர்வதாகவும் எந்த பணியும் நிறுத்தப்படவில்லை - அமைச்சர் ஆதவ்</p><p>திமுக ஆட்சியில் காவிரி டெல்டா பகுதிகளில் 1,000-க்கும் மேற்பட்ட பாலங்கள் அமைக்கும் பணி நடந்து வந்தது. பாலம் அமைக்கும் பணிகள் தவெக ஆட்சியில் தொடர்கிறதா? - எம்ஆர்கே பன்னீர்செல்வம்</p><p>குளித்தலையில் ரெயில்வே மேம்பாலம் அமைத்துத்தர வேண்டும் - எம்எல்ஏ சந்திரன் கோரிக்கை</p><p>செய்யாற்றின் குறுக்கே, விருகண்டா நதியின் குறுக்கே  மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும் - அக்ரி கிருஷ்ணமூர்த்தி</p><p>புவனகிரி தொகுதியில் புறச்சாலையில் மேம்பாலம் கட்டிக்கொடுக்க வேண்டும் - எம்எல்ஏ அருள்மொழித்தேவன் வேண்டுகோள்</p><p>துரைப்பாக்கம் to நீலாங்கரை வரையிலான மேம்பாலப்பணிகள் முடிந்து 6 மாதங்கள் ஆகியும் இன்னும் திறக்கப்படவில்லை - சரவணன்</p><p>மொடக்குறிச்சி: நால்ரோடு பகுதிகளில் பாலம் தேவை - சண்முகம்</p><p>அனைத்து கோரிக்கைகளையும் ஆய்வு செய்து நடவடிக்கை - அமைச்சர் ஆதவ்</p><p>ரெயில்வே பாலங்கள் தேவை என பல எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். </p><p>மாநிலம் முழுவதும் 42 இடங்களில் ரெயில்வே பாலம் கட்ட எம்எல்ஏக்கள் கோரிக்கை, அதுகுறித்து பரிசீலிக்கப்படும்.</p><p>அனைத்து கோரிக்கைகளையும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ஆதவ்</p><p>30 நொடிகளில் சுருக்கமாக பேசி முடிக்க வேண்டும் - சபாநாயகர்</p> <p>சூலூரில் உயர்மட்ட பாலம் - ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>திருச்சி - கோவை இடையே பசுமை வழித்தடத்திற்கு DPR தயாரிப்பு - அமைச்சர் ஆதவ்</p><p>சூலூர் மையப்பகுதியில் உயர்மட்ட பாலம் கட்ட அரசு முன்வருமா? - உறுப்பினர் கேள்வி</p><p>தமிழக சட்டசபையில் இன்று காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகள் மீதான  மானிய கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது. முதலமைச்சர் விஜய் பதில் அளித்து, முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சட்டமன்றம்... பட்டிமன்றம்... ராஜ்மோகன் Vs உதயநிதி- சட்டசபையில் நடந்த காரசார விவாதம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajmohan-vs-udhayanidhi-stalin-arguments-in-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajmohan-vs-udhayanidhi-stalin-arguments-in-assembly#comments</comments><guid isPermaLink="false">5d8ef164-3243-49a5-8255-2cee40eec32d</guid><pubDate>Thu, 03 Sep 2026 08:59:18 +0000</pubDate><atom:updated>2026-09-03T08:59:18.282Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,தமிழக சட்டசபை,TN assembly,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/662rwe6g/assembly06.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராஜ்மோகன்- உதயநிதி ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ ராஜ்மோகன்- உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/662rwe6g/assembly06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>உண்மையில் நீட் ஒழிப்பு ரகசியம் எனக்குத் தெரியும் என்று உதயநிதி கூறியது தான் மிகப்பெரிய காதுகுத்து என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> இன்றைய நிகழ்வில் காரசார விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றைய காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திட்டங்களுக்கு கட்டுபாடு விதிக்கும் அரசு தாய் மாமன் காது குத்தும் திட்டம் என மொத்தமாக பெயரிடலாம் என கூறினார். </p><p>இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், உண்மையில் நீட் ஒழிப்பு ரகசியம் எனக்குத் தெரியும் என்று உதயநிதி கூறியது தான் மிகப்பெரிய காதுகுத்து என்றார். </p><p>அமைச்சர் ராஜ்மோகன் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டனர். </p><p>இதைதொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், தி.மு.க. உறுப்பினர் ஜாபர் சாதிக் பல கோடி போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார். அண்ணா பல்கலை மாணவி வழக்கின் FIR-ஐ ஆன்லைனில் பதிவிட்டு அவரது அடையாளத்தை வெளிப்படுத்தியது தி.மு.க. அரசு. </p><p>புகாரளித்த அரைமணி நேரத்தில் மாணவி பெயர், வீட்டின் முகவரியை வெளியிட்டு வரை தி.மு.க. அரசு அவரை அச்சுறுத்தியது. தி.மு.க. ஆட்சியில் குற்றங்களே நடக்காதது போல் நாடகம் ஆடினார்கள். </p><p>த.வெ.க. ஆட்சியில் குற்றங்களை தடுக்க வரலாற்றில் முதன்முறையாக சிங்கப்பெண் அதிரப்படை உருவாக்கப்பட்டது. தரமான பதிலடி முதலமைச்சர் மூலமாக தரப்படும். போன வருடம் நடைபெற்ற சட்டசபையில் துணை முதலமைச்சர் அவைக்கு வரவே இல்லை. அவருக்கு பதில் அன்றைய முதலமைச்சரே எழுந்து நின்று அவருக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் மானியக்கோரிக்கையை நானே வாசிக்கிறேன் என்றார். </p><p>மேலும், மெரினாவுக்கு எப்படி பூட்டு போடுவது என சொல்லிக்கொடுத்தது முந்தைய தி.மு.க. அரசு தான். கடந்த 5 ஆண்டுகளாக மெரினாவுக்கு பூட்டு போடுவதில் PHD செய்தவர்கள் தி.மு.க. தான். தி.மு.க. ஆட்சியில் மெரினா கடற்கரையில் எந்த போராட்டத்திற்கு அனுமதி அளித்தார்கள் என்றார். </p><p>இதனை தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், நான் அவைக்கு சரியாக வருவதில்லை என அமைச்சர் கூறினார், வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டுள்ளேன், பாருங்கள்.  அமைச்சர் ராஜ்மோகனின் வரவலாறு எங்களுக்கு தெரியும். பட்டிமன்ற பேச்சாளர் ராஜ்மோகன் அமைச்சராவதற்கு முன்பு திமுகவை ஆதரித்து பல மேடைகளில் பேசினார். தற்போது தவெகவில் இருப்பதால் அமைச்சர் ராஜ்மோகன் மாற்றி பேசி வருகிறார் என்றார். </p><p>இதனிடையே பேசிய  ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவரின் குற்றச்சாட்டிற்கு முதலமைச்சர் பதலளிக்க கால அவகாசம் உள்ளது. நான் பதிலளிக்கும் போது யாரும் ஒடிவிடக்கூடாது என முதலமைச்சர் கூறிய வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றார். </p><p>அந்த வார்த்தையை எல்லாம் நீக்க முடியாது என ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கையை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் நிராகரித்தார். </p>]]></content:encoded></item><item><title>வாரணாசியில் இருந்து டெல்லி சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் லக்னோவில் அவசர தரையிறக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/air-india-express-flight-from-varanasi-to-delhi-makes-emergency-landing-in-lucknow</link><comments>https://www.maalaimalar.com/news/national/air-india-express-flight-from-varanasi-to-delhi-makes-emergency-landing-in-lucknow#comments</comments><guid isPermaLink="false">f0515a68-9a2a-46d5-bcef-95f0245ffccf</guid><pubDate>Thu, 03 Sep 2026 08:48:40 +0000</pubDate><atom:updated>2026-09-03T08:48:40.397Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வாரணாசி,varanasi,ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்,Air India Express,delhi,டெல்லி,உத்தரப்பிரதேச மாநிலம்,Cargo Hold</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/puy6re1d/air.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Air India Express  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/puy6re1d/air.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து டெல்லி நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், நடுவானில் எழுந்த புகை எச்சரிக்கை காரணமாக லக்னோவில் உள்ள செளத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.</p><p>விமானம் உயரே பறந்து கொண்டிருந்தபோது, அதன் சரக்கு வைக்கும் பகுதியில் புகை வருவதற்கான எச்சரிக்கை மணிகள் ஒலித்துள்ளன. இதையடுத்து எச்சரிக்கையான விமானி, உடனடியாக லக்னோ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்புகொண்டு அவசரமாகத் தரையிறங்க அனுமதி கோரினார். அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து, காலை 8:52 மணியளவில் விமானம் லக்னோ விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த 155 பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் காலை 9:02 மணியளவில் எவ்வித ஆபத்துமின்றி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.</p><p>உடனடியாகச் செயல்பட்ட விமான நிலைய அவசரகால மீட்புக் குழு மற்றும் தீயணைப்புப் படையினர் விமானத்தைச் சோதனையிட்டனர். முதற்கட்ட ஆய்வில் சரக்குப் பகுதியில் புகையோ அல்லது தீப்பிடித்ததற்கான சுவடுகளோ எதுவும் கண்டறியப்படவில்லை. போலியான எச்சரிக்கை மணி ஒழித்ததா அல்லது தொழில்நுட்பக் கோளாறா என்பது குறித்துப் பொறியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.</p><p>பயணிகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்தே விமானம் லக்னோவிற்கு திருப்பி விடப்பட்டதாகத் தெரிவித்துள்ள <a href="https://www.maalaimalar.com/news/world/us-passport-rule-shakeup-parents-must-prove-citizenship-for-kids">ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்</a> நிறுவனம், பயணிகள் டெல்லி செல்வதற்கு மாற்று விமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் கோவாவில் இருந்து டெல்லி சென்ற இண்டிகோ விமானம் ஒன்றின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டு அவசரமாகத் தரையிறக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஒரு பயணிகள் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட சம்பவம் விமானப் பயணிகள் மத்தியில் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்க பாஸ்போர்ட் விதிகளில் அதிரடி மாற்றம்: குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் பெற பெற்றோரின் குடியுரிமை சான்று கட்டாயம்!</title><link>https://www.maalaimalar.com/news/world/us-passport-rule-shakeup-parents-must-prove-citizenship-for-kids</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-passport-rule-shakeup-parents-must-prove-citizenship-for-kids#comments</comments><guid isPermaLink="false">266b5687-7f61-4a04-a80e-ccb0ed30171f</guid><pubDate>Thu, 03 Sep 2026 08:33:49 +0000</pubDate><atom:updated>2026-09-03T08:33:49.203Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,குடியுரிமை,Green Card,டொனால்ட் டிரம்ப்,US passport rules,Birthright Citizenship,அமெரிக்க பாஸ்போர்ட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/9ezxl76s/PASS.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ US passport rules  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/9ezxl76s/PASS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் குடியுரிமை மற்றும் பாஸ்போர்ட் விதிகளில் கடுமையான மாற்றங்களைக் கொண்டுவர டிரம்பின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. </p><p>அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பான விதிகளில் கடுமையான மாற்றங்களை கொண்டு வர அமெரிக்க வெளியுறவுத்துறை திட்டமிட்டுள்ளது. புதிய வரைவு வழிகாட்டுதலின்படி, இனி தங்களின் குழந்தைகளுக்கு அமெரிக்க பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்கும் பெற்றோர்கள், தங்களது சொந்த குடியுரிமை அல்லது சட்டப்பூர்வ அமெரிக்க வாழ்வுக்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட உள்ளது.</p><h2>‘பிறப்<strong>பு சுற்றுலா’வுக்கு</strong> முற்றுப்புள்ளி </h2><p>அமெரிக்க அதிபர் <a href="https://www.maalaimalar.com/news/world/iran-is-under-total-surveillance-they-cannot-even-go-to-the-restroom-without-our-permission-trump">டொனால்ட் டிரம்ப்</a>, அந்நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு தானாகவே கிடைக்கும் 'பிறப்புரிமை குடியுரிமையை' கட்டுப்படுத்தும் நோக்கில் ஆகஸ்ட் 6 அன்று பிறப்பித்த நிர்வாக உத்தரவைச் செயல்படுத்தவே இந்த புதிய விதிகளை வெளியுறவுத்துறை வரைவு செய்துள்ளது. வெளிநாட்டினர் சுற்றுலா விசா மூலம் அமெரிக்கா வந்து குழந்தை பெற்று, அதன் மூலம் அக்குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை பெறுவதை தடுப்பதே இதன் முதன்மை நோக்கமாகும்.</p><p>தற்போதைய நடைமுறைப்படி, அமெரிக்காவில் பிறந்த குழந்தைக்கு பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும்போது பெற்றோர் தங்களின் அடையாளச் சான்றையும், குழந்தையுடனான உறவையும் நிரூபித்தால் போதுமானது. ஆனால் புதிய விதிகளின்படி, பெற்றோர்கள் தங்களின் குடியுரிமையை நிரூபிக்க அமெரிக்க பாஸ்போர்ட் அல்லது பிறப்பு சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். குடியுரிமை பெறாத சட்டப்பூர்வ குடியிருப்பாளர்கள் தங்களின் நிரந்தர குடியிருப்பு அட்டை அல்லது I-94 படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.</p><p>டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக மனித உரிமை அமைப்புகளும் வழக்கறிஞர்களும் ஏற்கனவே மேரிலாந்தின் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர். இந்த உத்தரவு அமெரிக்க அரசியலமைப்பின் 14-வது திருத்தத்திற்கு எதிரானது என்று எதிர்தரப்பினர் வாதிடுகின்றனர். இருப்பினும், நாட்டின் குடியுரிமை அமைப்பின் மதிப்பைப் பாதுகாக்கவும், முறைகேடுகளைத் தடுக்கவுமே இத்தகைய கட்டுப்பாடுகள் அவசியம் என டிரம்ப் நிர்வாகம் தனது முடிவை தீவிரமாக நியாயப்படுத்தி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>போலவரம் கால்வாய் வழியாக வட ஆந்திராவிற்குள் பாயும்  கோதாவரி நீர்...</title><link>https://www.maalaimalar.com/news/topnews/godavari-water-flows-into-north-andhra-through-polavaram-canal</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/godavari-water-flows-into-north-andhra-through-polavaram-canal#comments</comments><guid isPermaLink="false">1fecfd2f-ac5c-4f94-a1a0-ff4de9a6d8ca</guid><pubDate>Thu, 03 Sep 2026 08:23:14 +0000</pubDate><atom:updated>2026-09-03T08:23:14.154Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Andhra Pradesh,ChandraBabu Naidu,ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு,Polavaram project,போலவரம் கால்வாய்,Godavari Water,கோதாவரி நீர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/boac4qo0/Chandrababu-Naidu" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chandrababu Naidu ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/boac4qo0/Chandrababu-Naidu?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p>வட ஆந்திர மக்களின் பல தசாப்த கனவு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாக நேற்று நனவாகியுள்ளது. </p><p>போலவரம் இடது பிரதான கால்வாய் மூலமாக உத்தர ஆந்திராவிற்குள் நுழைந்த <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81">கோதாவரி நதிநீரை</a>, ஆந்திர மாநில முதல்-மந்திரி <a href="https://www.maalaimalar.com/topic/chandrababu-naidu">என். சந்திரபாபு நாயுடு</a> அனகாபள்ளி மாவட்டம் பாயகாராவுபேட்டா மண்டலத்தின் சீதாரம்புரத்தில் முறைப்படி ‘ஜல ஹாரத்தி’ எடுத்து மலர் தூவி வரவேற்றார்.</p><h2>பொறியியல் சாதனை: 213 கி.மீ நீளப் பிரம்மாண்ட கால்வாய்</h2><p>கிழக்குத் தொடர்ச்சி மலையின் மிகக் கடினமான நிலப்பரப்புகளைக் கடந்து, சுரங்கப் பாதைகள், நீர் பாலங்கள் மற்றும் ஏலேரு ஆற்றின் அடிவாரத்தில் அமைக்கப்பட்ட பிரத்யேக சைஃபோன் கட்டமைப்பு போன்ற பல கடினமான பொறியியல் சவால்களைக் கடந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த 213 கிலோமீட்டர் நீளமுள்ள இடது பிரதான கால்வாய், பாசனம், குடிநீர் மற்றும் தொழில்துறை தேவைகளுக்காக 23.44 டிஎம்சி கோதாவரி நீரை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், இத்திட்டத்திற்காக இதுவரை சுமார் ரூ.4,192 கோடி செலவிடப்பட்டுள்ளது.</p><h2>முதல் கட்டத்தால் பயன்பெறும் மாவட்டங்களும், விவசாய நிலங்களும்</h2><p>இந்த முதற்கட்ட நீர் வெளியீட்டின் மூலம் 4 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 5.23 லட்சம் மக்களும், 2.87 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களும் நேரடியாகப் பயன்பெறவுள்ளனர்.</p><p>அனகாபள்ளி மாவட்டத்தில் மட்டும் சுமார் 1.5 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு நீர்ப்பாசனம் கிடைக்கும். இந்த நீர் பகிர்வு ஏலேரு கால்வாய் மற்றும் அப்பகுதியில் உள்ள 110 ஏரிகளை நிரப்பப் பயன்படுத்தப்படும். மேலும், ஏலேரு, பம்பா, தாண்டவா, வராஹா, சாரதா ஆகிய நதி அமைப்புகளின் வழியாக இந்த நீர் பயணிக்கும். </p><p>புஷ்கரா பாசன மண்டலத்தின் கீழ் 1.48 லட்சம் ஏக்கர் நிலங்கள் இதனால் ஸ்திரத்தன்மை பெறும். இதில் ஏலேருவின் கீழ் 80,700 ஏக்கர், பம்பா கீழ் 12,000 ஏக்கர், மற்றும் தாண்டவா, வராஹா, மாமிடி கெட்டா மண்டலங்களில் 46,620 ஏக்கர் நிலங்கள் அடங்கும்.</p><h2>"உத்தர ஆந்திரா இனி வளர்ச்சி மையம்" - முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பேச்சு</h2><p>பாயகாராவுபேட்டாவில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் சந்திரபாபு நாயுடு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்:</p><p>இந்த இடது பிரதான கால்வாய் மேலும் விரிவுபடுத்தப்பட்டு, 'உத்தராந்திர சுஜல ஸ்ரவந்தி' திட்டத்துடன் இணைக்கப்படும். இதன் மூலம் அனகாபள்ளி, விசாகப்பட்டினம், விஜயநகரம், பார்வதிபுரம் மன்யம் மற்றும் ஸ்ரீகாகுளம் மாவட்டங்களின் மேட்டுப்பாங்கான பகுதிகளுக்கும் கோதாவரி நீர் கொண்டு செல்லப்படும்.</p><p>"இனி வாழ்வாதாரத்திற்காக மக்கள் உத்தர ஆந்திராவை விட்டு வெளியேற மாட்டார்கள், மாறாக மற்ற பகுதிகளில் இருந்து மக்கள் உத்தர ஆந்திராவை நோக்கி வேலை தேடி புலம்பெயர்ந்து வருவார்கள்" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். </p><p>கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் நீர்ப்பாசனத்திற்காக அரசு ரூ. 25,000 கோடி செலவிட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.35,000 கோடி செலவில் 36 முக்கிய நீர்ப்பாசனத் திட்டங்கள் முழுமையாக நிறைவு செய்யப்படும் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>ஈரான் முழு கண்காணிப்பில் உள்ளது.. எங்கள் அனுமதியின்றி அவர்கள் கழிவறைக்கு கூட செல்ல முடியாது - டிரம்ப்</title><link>https://www.maalaimalar.com/news/world/iran-is-under-total-surveillance-they-cannot-even-go-to-the-restroom-without-our-permission-trump</link><comments>https://www.maalaimalar.com/news/world/iran-is-under-total-surveillance-they-cannot-even-go-to-the-restroom-without-our-permission-trump#comments</comments><guid isPermaLink="false">55933a62-f7ad-43c9-b957-d8ab3c5fa39b</guid><pubDate>Thu, 03 Sep 2026 08:21:16 +0000</pubDate><atom:updated>2026-09-03T08:21:16.812Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>trump,டிரம்ப்,Iran War,ஈரான் போர்,ஹார்முஸ் ஜலசந்தி,Strait of Hormuz</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/rponenim/tn-26.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டிரம்ப்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிரம்ப்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/rponenim/tn-26.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/attacks-on-60-positions-in-a-single-day-40-tankers-carrying-18-million-barrels-of-oil-pass-through-the-strait-of-hormuz-us-reports-incident">ஈரானை </a>அமெரிக்கா முழுமையாக கண்காணித்து வருவதாகவும் தங்களது கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு ஈரானால் எதையும் செய்ய முடியாது என்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். </p><h2>கண்காணிப்பு </h2><p>வெள்ளை மாளிகை ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய <a href="https://www.maalaimalar.com/topic/donald-trump">டிரம்ப்</a>,  "நாங்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எங்களது அனுமதியின்றி அவர்களால் நகரக்கூட முடியாது. கழிப்பறைக்குக் கூடச் செல்ல முடியாது" என்று கூறியுள்ளார்.</p><p>தேவைப்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல்களை நடத்தத் நாங்கள் தயார் நிலையில் உள்ளோம் என்றும், இந்தத் தற்காலிக மோதல் நீண்ட காலம் நீடிக்காது என நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். </p><h2>அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் ஹார்முஸ்</h2><p>ஹார்முஸ் ஜலசந்தியின் முழுமையான கட்டுப்பாடு தற்போது அமெரிக்காவின் கைகளில் உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>அங்கிருந்து தினமும் மில்லியன் கணக்கான பேரல் எண்ணெய் ஏற்றிக்கொண்டு தங்களது கப்பல்கள் பாதுகாப்பாகப் புறப்படுவதாகவும், ஈரானின் டிரோன்கள் தென்பட்டால் அவை சுட்டு வீழ்த்தப்படுவதாகவும் அவர் கூறினார்.</p><p>ரேடார் அமைப்புகள் மற்றும் ஏவுகணைகளை மீண்டும் நிறுவுவதற்கும், கண்ணிவெடிகளைப் பதிப்பதற்குமான ஈரானின் புதிய முயற்சிகள் அனைத்தையும் தங்களது ஏவுகணைத் தாக்குதல்கள் மூலம் தகர்த்தெறிந்துள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.</p><p>ஹார்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை பதிப்பதற்காக ஈரான் தயாரித்து வந்த ஒரு பெரிய ராக்கெட்டின் பணி நிறைவடையும் தருவாயில், அதைத் தங்களது படைகள் கண்டறிந்து அழித்ததாகவும் டிரம்ப் மேலும் கூறினார்.</p><h2>அமெரிக்கா - ஈரான் மோதல்</h2><p>அமெரிக்கா - ஈரான் இடையே ஹார்முஸ் மற்றும் அதனை சுற்றிய பகுதியில் பரஸ்பர தாக்குதல் நடந்து வருகிறது.</p><p>ஈரான் மீது இந்த வாரம் அமெரிக்கா நடத்திய இந்தத் தாக்குதலில் ஈரானில் குறைந்தது 18 பேர் உயிரிழந்தனர் மற்றும் 108 பேர் காயமடைந்தனர்.</p><p>ஈரான் குஹெஸ்டாக் நகரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றின் மீது அமெரிக்க வான்வழித் தாக்குதல் நடத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.</p><h2>ஈரான் பதிலடி</h2><p>பதிலடியாக குவைத், ஜோர்டான், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்து ஈரான் எதிர்த்தாக்குதல் நடத்தியுள்ளது.</p><p>அமெரிக்காவின் அடித்தளத்தையே ஆட்டிப்படைக்கும் வகையிலான புதிய உத்தியை ஈரான் கையாண்டு வருவதாக ஈரானின் பாதுகாப்பு கவுன்சில் தலைவர் மொஹ்சென் ரெசாய் எச்சரித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>யாரும் ஓடிவிடக்கூடாது... முதலமைச்சர் விஜய் Vs உதயநிதி: சட்டசபையில் வெடித்த வார்த்தை மோதல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-vs-udhayanidhi-stalin-arguments</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-vs-udhayanidhi-stalin-arguments#comments</comments><guid isPermaLink="false">f9cb10f7-44fb-49be-be6f-e4176b15fd57</guid><pubDate>Thu, 03 Sep 2026 08:18:07 +0000</pubDate><atom:updated>2026-09-03T08:18:07.141Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,விஜய்,vijay,Udhayanidhi Stalin,தமிழக சட்டசபை,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/eb35vanq/vijay01.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்- உதயநிதி ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்- உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/eb35vanq/vijay01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>எல்லாத்துக்கும் நான் தெளிவா பதில் சொல்றேன். உங்கள் சார்பாக அவர்களிடம் ஒரு ப்ராமிஸ் கேட்கிறேன். யாரும் எழுந்திருச்சி ஓடிவிடக் கூடாது என முதலமைச்சர் விஜய் பேசினார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">சட்டசபையில்</a> இன்று காவல்துறை மானிய கோரிக்கை மீது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-</p><p>சட்டம் ஒழுங்கு பிரச்சனை சார்ந்த நான் வைக்கும் கேள்விகளுக்கு முதலமைச்சர் உரிய பதிலை வழங்குவார் என நம்பி எனது உரையை தொடங்குகிறேன். திமுக ஆட்சியில் குற்றச்சம்பவங்கள் குறைந்திருப்பதை சுட்டிக்காட்டி கொள்கை விளக்க குறிப்பில் குறிப்பிட்டுள்ள தகவலுக்கு நன்றி. </p> <p>தற்போதைய ஆட்சியில் சட்டம் இருக்கிறது, ஆனால் ஒழுங்கு இல்லை, பெண்களுக்கு Tragedy ஆக ஆட்சி மாறிவிட்டது.  தவெக அரசு ரிவர்ஸ் கியரில் தற்போது சென்று கொண்டிருக்கிறது. தவெக ஆட்சியமைந்த பின் பெயர் மாற்ற அறிவிப்பு வருகிறது இல்லை என்றால் திட்டமே இல்லை என்ற அறிவிப்பு தான் வருகிறது.</p><p>இதுவரை எந்த கேள்விக்கும் முதலமைச்சர் பதில் சொல்லவில்லை. ஒரு கேள்விக்கு மற்றொரு அமைச்சர் பதில் சொல்கிறார். டிவி சீரியலில் வரும் கதாபாத்திரம் போல அவருக்கு பதில் இவர், இவருக்கு பதில் அவர் என்பது போல அமைச்சர்கள் பதில் அளிக்கின்றனர்.</p><p>காவல்துறை முதலமைச்சர் கட்டுப்பாட்டில் தான் இருப்பதாக நம்பி நான் பேசிக்கொண்டிருக்கிறேன்.  முதலமைச்சரின் பதிலுரைக்கு மூன்று நாட்கள்  நேரம் இருக்கு. நல்லா பிரிப்பேர் பண்ணிட்டு வாங்க.</p><p>சபாநாயகர் ஜே சி.டி.பிரபாகர் :- முதலமைச்சரை பார்க்கும் போது தயார் படுத்துபவர் போல அல்ல, தயாரான நிலையில் தான் வந்திருக்கிறார் என தெரிகிறது.</p><p>இவ்வாறு சட்டசபையில் த.வெ.க. மற்றும் தி.மு.க.வினர் இடையே காரசார விவாதம் நடைபெற்று வந்தது. </p><p>அதனை தொடர்ந்து த.வெ.க. ஆட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து பேசிய உதயநிதி ஸ்டாலின், எங்களுடைய ஆட்சி காலத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைளை மேற்கொண்ட அமல்ராஜ் ஐபிஎஸை இன்றைக்கு சென்னை மாநகர காவல் ஆணையராக ஏன் பதவி உயர்வு கொடுத்து வைத்தீர்கள் என்ற கேள்வியையும் இந்த அரசுக்கு வைக்கிறேன் என்றார். </p><p>இதையடுத்து பேசிய முதலமைச்சர் விஜய், பேரவைத் தலைவர் அவர்களே, உறுப்பினர்கள் கேட்கிற எல்லா கேள்விகளுக்கும், அதற்கான தெளிவான விளக்கத்தை நான் திங்கட்கிழமை பேசுகிறேன். நான் இங்கே இல்லை என்றாலும் கூட யார், யார் என்னென்ன கேள்வி கேட்குகிறார்கள் என்பது குறித்து எனக்கு வந்துவிடும். எல்லாத்துக்கும் நான் தெளிவா பதில் சொல்றேன். உங்கள் சார்பாக அவர்களிடம் ஒரு ப்ராமிஸ் கேட்கிறேன். யாரும் எழுந்திருச்சி ஓடிவிடக் கூடாது என்றார். </p><p>இதனால் த.வெ.க. தரப்பில் கை தட்டி ஆரவாரம் செய்தனர். அதன்பிறகு முதலமைச்சர் விஜய் அவையில் இருந்து சென்றுவிட்டார். </p><p>இதையடுத்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், சட்டசபையில் இருந்து இப்போது யார் ஓடியது என அனைவருக்கும் தெரியும். 3 நாட்கள் நன்றாக தயாராகிவிட்டு முதலமைச்சர் வரட்டும் என்றுதான் நான் முன்னதாகவே கூறினேன் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>மத்திய அரசுத் துறைகள் மீது 70,584 ஊழல் புகார்கள்: வங்கி மற்றும் ரெயில்வே துறைகள் முதலிடம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/70584-corruption-complaints-against-central-government-departments-banks-and-railways-top-list</link><comments>https://www.maalaimalar.com/news/national/70584-corruption-complaints-against-central-government-departments-banks-and-railways-top-list#comments</comments><guid isPermaLink="false">c8a6a4a5-4efd-46aa-bd84-45217ca53c88</guid><pubDate>Thu, 03 Sep 2026 08:18:06 +0000</pubDate><atom:updated>2026-09-03T08:18:06.987Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,central government,Corruption,ஊழல் புகார்கள்,Delhi administration,Railway sectors,ரெயில்வே துறைகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/plrry401/CURRUPTI.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Corruption]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/plrry401/CURRUPTI.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பொதுமக்களிடம் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், பொதுத்துறை வங்கிகள் மற்றும் ரெயில்வே துறை ஆகியவை அதிக அளவிலான ஊழல் குற்றச்சாட்டுகளைச் சந்தித்துள்ளன. </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/india-gdp-growth-claims-challenged-ex-finance-secretary-subhash-chandra-garg-says-real-growth-below-2-5-percent">மத்திய ஊழல் கண்காணிப்பு </a>ஆணையத்தின் (CVC) 2025-ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. இதில், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு எதிராக மொத்தம் 70,584 ஊழல் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>பொதுமக்களிடம் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், பொதுத்துறை வங்கிகள் மற்றும் ரெயில்வே துறை ஆகியவை அதிக அளவிலான ஊழல் குற்றச்சாட்டுகளைச் சந்தித்துள்ளன. பெறப்பட்ட மொத்த புகார்களில் வங்கித் துறை தொடர்பாக 9,933 புகார்களும், ரெயில்வே துறை தொடர்பாக 9,381 புகார்களும் பதிவாகி முதலிடத்தில் உள்ளன. இதனைத்தொடர்ந்து, நகர்ப்புற மேம்பாட்டுத் துறை மீது 6,531 புகார்களும், உள்ளாட்சி அமைப்புகள் மீது 4,834 புகார்களும், நிலக்கரித் துறை பணியாளர்கள் மீது 4,118 புகார்களும், நிதித் துறை மீது 3,107 புகார்களும் பதிவாகியுள்ளன.</p><p>டெல்லி நிர்வாகத்திற்கு எதிராக 2,804 புகார்களும, பெட்ரோலிய அமைச்சகத்திற்கு எதிராக 2,722 புகார்களும் வந்துள்ளன. டெல்லி காவல்துறையினருக்கு எதிராக 2,633 புகார்கள் பெறப்பட்ட வேளையில், மத்திய உள்துறை அமைச்சகம் (டெல்லி காவல்துறை நீங்கலாக) தொடர்பாக 2,036 புகார்கள் பதிவாகியுள்ளன.</p><p>கூடுதலாக, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மீது 2,139 புகார்கள், மனிதவள மேம்பாட்டுத் துறை மீது 2,030 புகார்கள், தொழிலாளர் நல அமைச்சகம் மீது 1,894 புகார்கள், காப்பீட்டு நிறுவனங்கள் மீது 1,536 புகார்கள் மற்றும் தொலைத்தொடர்புத் துறை மீது 1,469 புகார்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்புத் துறை (1,410), நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் பொது விநியோகத் துறை (1,123), எஃகு துறை (1,023) மற்றும் அஞ்சல் துறை (1,003) ஆகியவையும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.</p><h2>புகார்<strong>கள் மீதான நட</strong>வடிக்கை </h2><p>பதிவு செய்யப்பட்ட 70,584 புகார்களில், டிசம்பர் 31-ஆம் தேதி நிலவரப்படி 64,905 புகார்கள் பரிசீலிக்கப்பட்டு முடித்து வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 5,679 புகார்கள் தற்போது விரிவான விசாரணையில் உள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது. பொதுவாக, ஊழல் தொடர்பான புகார்கள் மீது மூன்று மாதங்களுக்குள் தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான அனைத்து முன்னெடுப்புகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஊழல் கண்காணிப்பு ஆணையம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கிருஷ்ண தேவராயராக நடிக்கும் கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப்! </title><link>https://www.maalaimalar.com/news/topnews/kannada-superstar-kiccha-sudeep-as-krishnadevaraya</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/kannada-superstar-kiccha-sudeep-as-krishnadevaraya#comments</comments><guid isPermaLink="false">b0fdd67a-5453-4922-baf7-d08d8ef9a278</guid><pubDate>Thu, 03 Sep 2026 08:11:59 +0000</pubDate><atom:updated>2026-09-03T08:11:59.700Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>Kichcha Sudeep,தேவராயா,Devaraaya,SriKrishna Devaraya,கிருஷ்ண தேவராயர்,Historical Movie,Pan India project,கிச்சா சுதீப்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/cbgu9ogc/Kichcha-Sudeep" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kichcha Sudeep ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/cbgu9ogc/Kichcha-Sudeep?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><content:encoded><![CDATA[ <p>பான் இந்திய நட்சத்திரம் கிச்சா சுதீப், தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ஒன்றை அளித்துள்ளார். விஜயநகரப் பேரரசின் மாபெரும் மன்னனான ஸ்ரீ கிருஷ்ணதேவராயரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகும் 'தேவராயா' என்று புதிய திரைப்படத்தில் அவர் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். </p><p>இத்திரைப்படத்தின் பிரம்மாண்ட 'டைட்டில் அனவுன்ஸ்மென்ட்' வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.</p><h2>சுதீப்பின் நீண்ட நாள் தயக்கமும்... தற்போதைய முடிவும்!</h2><p>வரலாற்றுப் பின்னணி கொண்ட திரைப்படங்களில் நடிப்பதற்கு தனக்கிருந்த தயக்கம் குறித்து <a href="https://www.maalaimalar.com/topic/kicha-sudeep">கிச்சா சுதீப்</a> இதற்கு முன்பு பலமுறை பேசியுள்ளார். படத்தின் பிரம்மாண்டம் அவருக்குப் பயத்தை தரவில்லை.</p><p>மாறாக, நிஜமாக வாழ்ந்த ஒரு வரலாற்று நாயகனின் பாத்திரத்தை ஏற்கும் போது, அவரது வரலாற்றை எந்தவித தவறும் இல்லாமல் மிகத் துல்லியமாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற பொறுப்புணர்வே அவரது தயக்கத்திற்கு முக்கியக் காரணமாக இருந்தது. </p><p>ஆனால், தற்போது அந்தத் தயக்கங்களை உடைத்து, இந்திய வரலாற்றின் மிக முக்கிய மன்னரான ஸ்ரீ கிருஷ்ணதேவராயர் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார்.</p><h2>டைட்டில் வீடியோ மற்றும் சுதீப்பின் மிரட்டலான தோற்றம்</h2><p>நடிகர் சுதீப்பின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் வெளியிட்டுள்ள பிரத்யேக டைட்டில் அனவுன்ஸ்மென்ட் வீடியோ, படத்தின் பிரம்மாண்டத்தை எதிர்பார்க்க வைக்கிறது.</p><p>பாரம்பரிய அரச உடையில், நவரத்தினங்கள் மற்றும் முத்துக்கள் பதிக்கப்பட்ட பிரம்மாண்ட கிரீடத்துடன் சுதீப் கம்பீரமாகத் தோன்றும் ஃபர்ஸ்ட் லுக் காட்சிகள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/R4Xej28XR5M"></iframe></figure><p>இந்த ஆரம்பக்கட்ட வீடியோவில் சண்டைக் காட்சிகளோ அல்லது வசனங்களோ எதுவும் இடம்பெறவில்லை. மாறாக, சுதீப்பின் முகபாவனைகளும், அவரது கம்பீரமான நிற்கும் தோரணையும் மட்டுமே அந்த மாமன்னரின் ஆளுமையை அப்படியே பிரதிபலிக்கிறது. </p><p>கௌரா ஹரி கே-வின் பின்னணி இசையும், காலகட்டத்தை அப்படியே பிரதிபலிக்கும் கலை இயக்கமும் படத்திற்கு மிகப் பெரிய பலமாக அமைந்துள்ளது.</p><p>படக்குழுவினர் இந்தத் திரைப்படத்தை "வரலாற்றை செதுக்கிய ஒரு பேரரசு. ஒரு சகாப்தத்தை வரையறுத்த ஒரு மன்னன். காலத்தைக் கடந்து வாழும் ஒரு ஜாம்பவான்" என்ற மூன்று வரிகளுடன் அறிமுகப்படுத்தியுள்ளனர்.</p><h2>தொழில் நுட்பக்குழு</h2><p>கிச்சா சுதீப் கதாநாயகனாக (ஸ்ரீ கிருஷ்ணதேவராயர் வேடத்தில்) நடிக்கும் இத்திரைப்படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம், TG விஸ்வ பிரசாத், பிரசாத் ஆகியோர் தயாரிக்கின்றனர். </p><p>சுப்ரியான்வி பிக்சர் ஸ்டுடியோ சார்பில் பிரியா சுதீப் வழங்கும் இப்படத்திற்கு, சுஜித் கொல்லி தலைமை நிர்வாகத் தயாரிப்பாளராகவும், கௌரா ஹரி கே இசையமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். </p><p>இத்திரைப்படத்தின் இயக்குநர் யார் இதில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் யார் என்பது குறித்த விவரங்களை படக்குழுவினர் தற்போது ரகசியமாக வைத்துள்ளனர்.</p><h2>ரிலீஸ் எப்போது?</h2><p>மிகப்பெரிய பட்ஜெட்டில், பான்-இந்திய திரைப்படமாக உருவாகவிருக்கும் இந்த வரலாற்றுத் காவியம் 2027-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பதிலுரைக்கு இன்னும் 3 நாட்களே உள்ளன.. நன்றாக தயார் செய்து வாருங்கள்- முதலமைச்சருக்கு சவால்விட்ட உதயநிதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/three-days-left-for-response-udayanidhi-throws-challenge-at-chief-minister</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/three-days-left-for-response-udayanidhi-throws-challenge-at-chief-minister#comments</comments><guid isPermaLink="false">75e3d91a-aa61-4af0-84ba-36ecc794853a</guid><pubDate>Thu, 03 Sep 2026 07:59:13 +0000</pubDate><atom:updated>2026-09-03T07:59:13.512Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Udhayanidhi Stalin,உதயநிதி ஸ்டாலின்,தமிழக சட்டசபை,TN assembly,முதலமைச்சர் விஜய்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/3uzu5bfx/VJ.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay- Udhayanithi stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/3uzu5bfx/VJ.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த 106 நாட்களில் தவெகவினர் சிக்கிய பல்வேறு புகார்களை சட்டசபையில் குறிப்பிட்டு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><p>106 நாட்களில் ஆளுங்கட்சியினர் பெண்களுக்கு எதிராக செய்த அட்ரா சிட்டிக்கு பெரிய லிஸ்டே உள்ளது.</p><p>தவெகவின் 106 நாளில் 8 காவல், சிறை மரணங்கள் நடந்துள்ளது. இதுகுறித்து முதல்வர் ஒரு Sorry கூட சொல்லவில்லை.</p><p>திமுக ஆட்சியின் காவல்நிலைய மரணத்தின்போது Sorry  வேண்டாம் நீதி வேண்டும் என்றவர் இப்போது Sorry கூட சொல்லவில்லை.</p><p>காவல் மரணங்களுக்கு நீதியும் கிடைக்கவில்லை, சாரியும் கிடைக்கவில்லை.</p><p>முதல்வரை விமர்சித்தால் கைது, ஆனால் பாஜகவினர் விமர்சித்தால் தவெக அரசு கண்டுகொள்வதில்லை.</p><p>எங்களுக்கு வந்தால் ரத்தம், உங்களுக்கு வந்தால் தக்காளி சட்டினியா?</p><p>உலகத்திலேயே கடற்கரைக்கு பூட்டு போட்ட ஒரே அரசு தவெக அரசு தான் - உதயநிதி ஸ்டாலின்</p><p>நாங்கள் எழுப்பும் எந்த கேள்விக்கும் முதலமைச்சர் என்றும் நேரடியாக உடனடியாக பதில் கூறவில்லை.</p><p>டிவி சீரியலில் இனி இவருக்கு பதில் அவர் என கார்டு போடுவதுபோல குறிப்பிட்ட அமைச்சர்கள் மட்டும் தான் பதில் கூறுகிறார்கள்.</p><p>உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் கூறுவதில்லை.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><p>திங்கட்கிழமை அன்று உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறப்படும் என சபாநாயகர் விளக்கம் அளித்தார்.</p><p>தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின்," நாங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு 3 நாட்கள் தயாராகி வந்து முதலமைச்சர் திங்களன்று பதிலளிப்பார் என நினைக்கிறேன். நன்றாக தயார் செய்து வாருங்கள், தேவையற்ற குட்டிக்கதைகள் கூறாமல் லாஜிக்கின்றி பேசாமல் உரிய ஆதாரத்துடன் முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும். டேக் டைவர்ஷன் இன்றி முதலமைச்சர் எங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்" என்றார்.</p><p>முதலமைச்சர் தயாராகி வரவேண்டிய அவசியமில்லை. முதலமைச்சர் தயாராகி முதலமைச்சர் விஜய் தற்போதே தயாராக தான் இருக்கிறார். தங்கட்கிழமை பதில் அளிப்பார்.</p><p>அமைதியாக அமர்ந்திருக்கிறார் என நினைக்க வேண்டாம், அவர் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார் என்று சபாநாயகர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>&apos;சுத்திகரிப்பு&apos; சடங்கு செய்தவர்கள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.. ஜே.பி நட்டாவுக்கு கார்கே கடிதம்</title><link>https://www.maalaimalar.com/news/national/no-action-has-been-taken-yet-against-those-who-performed-the-purification-ritual-kharge-writes-to-jp-nadda</link><comments>https://www.maalaimalar.com/news/national/no-action-has-been-taken-yet-against-those-who-performed-the-purification-ritual-kharge-writes-to-jp-nadda#comments</comments><guid isPermaLink="false">5cefd9ae-1746-4073-9a73-71a8808de9ee</guid><pubDate>Thu, 03 Sep 2026 07:44:59 +0000</pubDate><atom:updated>2026-09-03T07:44:59.777Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,மல்லிகார்ஜுன கார்கே,mallikarjun kharge,ஜேபி நட்டா,JP Nadda</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/wovwf945/tn-25.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஜே.பி நட்டா, கார்கே ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஜே.பி நட்டா, கார்கே ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/wovwf945/tn-25.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தான் பேசிச்சென்ற இடத்தை சுத்தம் செய்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்களவை தலைவர் ஜே.பி நட்டாவுக்கு மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.</p><h2></h2><h2>மல்லிகார்ஜூன கார்கே </h2><p>உத்​த​ராகண்ட் மாநிலம் ஹல்த்​வானி​யில் உள்ள ராம்​லீலா மைதானத்​தில் கடந்த 8ந் தேதி நடை​பெற்ற  பொதுக்​கூட்​டத்​தில் காங்​கிரஸ்  தலை​வர் <a href="https://www.maalaimalar.com/topic/mallikarjuna-kharge">மல்​லி​கார்​ஜுன கார்கே</a> பங்​கேற்​றார்.</p><p>அதனைத் தொடர்ந்​து 10ந் தேதி அந்த மைதானத்​தில் வலது​சாரி அமைப்​பினர் மற்​றும் பா.ஜ.க. - ஆர்​.எஸ்.​எஸ். ஆதர​வாளர்​கள் ‘சுத்​தி​கரிப்​பு’ (புனிதப்​படுத்​தும்) சடங்​கு​களை மேற்​கொண்​ட​தாக குற்​றச்​சாட்டு  எழுந்தது.</p><p>இந்த விவ​காரத்தை காங்​கிரஸ் செயற்​குழு கூட்​டத்​தி​லும், பாராளுமன்றத்திலும் கார்​கேவே நேரடி​யாக எழுப்​பி தனது ஆதங்​கத்​தைப் பதிவு செய்து இருந்​தார்.</p><p>இதுதொடர்பாக ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். அவர் மீது உத்தரகாண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து இருந்தனர். </p> <h2>கடிதம்</h2><p>இந்த நிலையில் மல்லிகார்ஜூன கார்கே, மாநிலங்களவை தலைவரும் மத்திய மந்திரியுமான ஜே.பி. நட்டாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.</p><p>அதில் புனிதப்படுத்தும் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்ய உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர்சிங் தாமிக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த கடிதத்தில் வலியுறுத்தி இருக்கிறார்.</p> <h2>பதிவு</h2><p>இது தொடர்பாக கார்கே தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது,</p><p>"ஹல்த்வானியில் நான் நடத்திய பொதுக்கூட்டத்திற்கு பிறகு ராம்லீலா மைதானத்தில் மேற் கொள்ளப்பட்ட புனிதப்படுத்துதல் நடவடிக்கை தொடர்பான விவகாரம் குறித்து மேல் சபையின் அவைத் தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு நான் ஒரு கடிதம் எழுதியுள்ளேன்.</p><p>அவையில் அவர் அளித்து இருந்த உறுதியை அவருக்கு நினைவூட்டியதுடன் இந்த விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தி உள்ளேன்.</p> <h2>பாடம் புகட்டுவது அவசியம்</h2><p>24 நாட்கள் ஆன பிறகும் இந்த இழிவான செயலுக்கு காரணமானவர்கள் மற்றும் அமைப்புகள் மீது இதுவரை எந்தவொரு முதல் தகவல் அறிக்கையும் ( எப். ஐ. ஆர்.) பதிவு செய்யப்படவில்லை.</p><p>அந்தக் கடிதத்தில், இந்த விவகாரம் என்னையோ அல்லது காங்கிரசின் தலைவராக எனது பதவியையோ மட்டும் சார்ந்ததல்ல.</p> <p>ஒவ்வொரு நாளும் இத்தகைய கொடூரமான யதார்த்தத்தை எதிர்கொள்ளும் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளுடன் பரந்த அளவில் இது தொடர்புடையது. இத்தகைய தவறு செய்பவர்களுக்கு பாடம் புகட்டுவது அவசியமாகும்.</p><p>இந்த உண்மைகள் மற்றும் மேல் சபையில் அளிக்கப்பட்ட உறுதியின் அடிப்படை யில் ஹல்த்வானியில் எனது பொதுக்கூட்டத்திற்கு பிறகு ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற ‘சுத்திகரிப்பு’ சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மற்றும் அமைப்புகள் மீது வழக்கு பதிவு செய்யப்படுவதை உறுதி செய்யுமாறு உத்தரகண்ட் முதல்வருக்கு ஜேபி நட்டா அறிவுறுத்த வேண்டும்" என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ரிஷப் பண்ட்டுடன் பார்ட்டி செய்த தோனி: &apos;ஹூக்கா&apos; குடிக்கப் போவதாகப் பேசிய வீடியோ இணையத்தில் வைரல்!</title><link>https://www.maalaimalar.com/sports/dhoni-parties-with-rishabh-pant-hookah-video-goes-viral</link><comments>https://www.maalaimalar.com/sports/dhoni-parties-with-rishabh-pant-hookah-video-goes-viral#comments</comments><guid isPermaLink="false">8e6c71ed-5c89-4fc6-89e8-c126a65fa281</guid><pubDate>Thu, 03 Sep 2026 07:39:38 +0000</pubDate><atom:updated>2026-09-03T07:39:38.771Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rishabh Pant,Dhoni,எம்.எஸ்.தோனி,இந்திய கிரிக்கெட் அணி,ஹூக்கா,Hookah,ரிஷப் பண்ட்,Dhoni parties with Rishabh Pant</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/j32joi12/dhoni.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dhoni parties with Rishabh Pant]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/j32joi12/dhoni.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/sports/t20-series-against-afghanistan-indian-squad-led-by-shreyas-iyer-announced">இந்திய கிரிக்கெட் அணியின்</a> முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி மற்றும் தற்போதைய முன்னணி விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பண்ட் ஆகியோர் ஒன்றாகப் பங்கேற்ற தனியார் விருந்தின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.</p><p>ஹோட்டல் அறை போன்ற சூழலில் நண்பர்களுடன் ரிஷப் பண்ட் சோபாவில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருப்பது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. அப்போது அங்கு வரும் எம்.எஸ்.தோனி, மற்றவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட பிறகு, ரிஷப் பண்ட்டிற்கு கை கொடுத்துவிட்டு இந்தி மொழியில் "நான் போய் ஹூக்கா குடித்துவிட்டு வருகிறேன்" என்று சொல்வது போன்ற குரல் கேட்கிறது.</p><p>இந்த வீடியோ இணையத்தில் வெளியான சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலானது. தோனி புகையிலை கலந்த 'ஹூக்கா' புகைப்பது குறித்துப் பேசியது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் பல்வேறு விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>இருப்பினும், இந்த வீடியோவின் உண்மைத்தன்மை மற்றும் அது எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்திய அணியின் மூத்த வீரரான தோனிக்கும் இளைய வீரரான ரிஷப் பண்ட்டுக்கும் இடையே இருக்கும் நெருங்கிய நட்பு அனைவரும் அறிந்ததே. கிரிக்கெட்டிற்கு வெளியே இருவரும் ஒன்றாக நேரம் செலவிடும் பல வீடியோக்கள் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில், தற்போது இந்த புதிய வீடியோ இணையத்தில் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தவறு செய்தவர் யாராக இருந்தாலும் நடவடிக்கை: உதயநிதி பேச்சுக்கு சட்டசபையில் அமைச்சர் ஆனந்த் பதிலடி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-bussy-anand-reply-udhayanidhi-speech</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-bussy-anand-reply-udhayanidhi-speech#comments</comments><guid isPermaLink="false">d1ed84c0-106c-4370-a4ba-5846703417a5</guid><pubDate>Thu, 03 Sep 2026 07:29:01 +0000</pubDate><atom:updated>2026-09-03T07:29:01.568Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,தமிழக சட்டசபை,Bussy Anand,TN assembly,அமைச்சர் புஸ்சி ஆனந்த்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/4pzxjlp5/bussy.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் ஆனந்த்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ஆனந்த்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/4pzxjlp5/bussy.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தவறு செய்தவர் யாராக இருந்தாலும் முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார் என்று அமைச்சர் புஸ்சி ஆனந்த் தெரிவித்தார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. முதலில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-</p><p>தற்போதை ஆட்சியில் சட்டம் இருக்கிறது, ஆனால் ஒழுங்கு இல்லை, பெண்களுக்கு Tragedy ஆக ஆட்சி மாறிவிட்டது.  தவெக அரசு ரிவர்ஸ் கியரில் தற்போது சென்று கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியின் திட்டங்களை தவெக அரசு ரத்து செய்தது ஏன்?</p><p>பாலியல் வழக்கில் கைதான தவெக பிரமுகர் தவெக எம்எல்ஏ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பெண்ணின் பாலியல் புகாரில் வழக்கு பதிவு செய்தும் தவெக நிர்வாகிகள் கைது செய்யப்படவில்லை என்று பேசினார். </p><p>அப்போது நீர்வளத்துறை அமைச்சர் புஸ்சி ஆனந்த் குறுக்கிட்டு பேசியதாவது:-</p><p>த.வெ.க.வை சேர்ந்த பெண் பிரமுகர் கொடுத்த பாலியல் புகாரில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவறு செய்தவர் யாராக இருந்தாலும் முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். பெண் பிரமுகரிடம் அத்துமீறிய நபர் த.வெ.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். த.வெ.க பெண் அளித்த புகாரில் த.வெ.க. எம்.எல்.ஏ. சரவணனுக்கு தொடர்ப்பு இல்லை என தெரியவந்துள்ளது. தவெக ஆட்சியில் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். </p><p>உதயநிதி ஸ்டாலின் பேசிக்கொண்டு இருந்த போது அமைச்சர் புஸ்சி ஆனந்த் குறுக்கிட்டு பேசியதற்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். </p>]]></content:encoded></item><item><title>த.வெ.க ஆட்சியில் ரிவர்ஸ் கியரில் செல்லும் தமிழ்நாடு- உதயநிதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-moving-in-reverse-gear-under-tvk-rule-udayanidhi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-moving-in-reverse-gear-under-tvk-rule-udayanidhi#comments</comments><guid isPermaLink="false">3368fceb-862b-43dd-b053-87b4fa4fa2db</guid><pubDate>Thu, 03 Sep 2026 07:12:15 +0000</pubDate><atom:updated>2026-09-03T07:12:15.165Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Udhayanidhi Stalin,உதயநிதி ஸ்டாலின்,தவெக,தமிழக சட்டசபை,TN assembly,TVK Govt</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/2tyc55pc/udhayanithi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Udhayanithi stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/2tyc55pc/udhayanithi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவல்துறை மீதான மானிய கோரிக்கையை முதலமைச்சர் வஜய் தாக்கல் செய்தார். அப்போது, புதிய அறிவுப்புகளை முதலமைச்சர் விஜய் வெளியிட்டார்.</p><p>இதைதொடர்ந்து, காவல்துறை மீதான மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி உரையாற்றினார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><p>நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு எங்கள் மீதே பழி போடாமல் முதலமைச்சர் பதில் கூற வேண்டும்.</p><p>திமுக ஆட்சியில் குற்றங்கள் குறைந்திருப்பதாக கொள்கை விளக்கக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>திமுக ஆட்சியில் சாதிய கொலைகள் குறைந்துள்ளதாக கொள்கை விளக்க குறிப்பில் கூறி உள்ளீர்கள்.</p><p>பெயர் மாற்ற அறிவிப்பு அல்ல திட்டம் ரத்து என்ற அறிவிப்பு தான் வருகிறது. </p><p>முந்தைய ஆண்டுகளை விட திமுக ஆட்சியில் சாதிய பாகுபாடு, பாலியல் வன்கொடுமைகள் குறைந்ததாக ஒப்புக்கொண்டதற்கு நன்றி.</p><p>தவெகவின் 100 நாள் ஆட்சியில் ஒன்று பழைய திட்டத்தை ரத்து செய்கிறீர்கள், இல்லை பழைய திட்டத்தை தொடர்கிறீர்கள்.</p><p>திமுக ஆட்சியில் தமிழ்நாடு டாப் கியரில் சென்று கொண்டிருந்த தவெக ஆட்சியில் ரிவர்ஸ் கியரில் சென்று கொண்டிருக்கிறது.</p><p>தாய்மாமன் காது குத்து திட்டம் என பெயர் மாற்றம் செய்யலாம். கொடுத்த வாக்குறுதிகளை பாதி பாதியாக நிறைவேற்றுவது ஏன்?</p><p>வருடத்திற்கு 6 இலவச சிலிண்டர் என வாக்குறுதி அளித்துவிட்டு இப்போது 3 சிலிண்டர் மட்டும் தான் என்கிறீர்கள்.</p><p>இதுவரை இல்லாத அளவில் திமுக ஆட்சியில் போதை பொருட்கள் பறிமுதல். நீண்ட நாட்களாக சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளுக்கு நீண்ட கால விடுப்பு வழங்க வேண்டும்.</p><p>பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் விரைந்து தீர்ப்பு வாங்கி கொடுத்தோம்.</p><p>தமிழ்நாட்டில் கொலை நடக்காத நாளே இல்லை. </p><p>தவெக ஆட்சியில் 10 ஆணவ கொலைகள் நடந்துள்ளன.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>வான்வெளியில் நாட்டைக் காத்த போர் நாயகன் இனி பயணிகள் விமானியாக பயணம்: விங் கமாண்டர் அபினந்தனின் புதிய அத்தியாயம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/air-hero-who-guarded-nation-in-sky-now-flies-as-commercial-pilot-abhinandans-new-chapter</link><comments>https://www.maalaimalar.com/news/national/air-hero-who-guarded-nation-in-sky-now-flies-as-commercial-pilot-abhinandans-new-chapter#comments</comments><guid isPermaLink="false">90135768-df83-4f59-83b1-c3512a0d9875</guid><pubDate>Thu, 03 Sep 2026 07:04:42 +0000</pubDate><atom:updated>2026-09-03T07:04:42.745Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய விமானப்படை,Wing Commander Abhinandan,Vir Chakra,wing commander abhinandan varthman,MiG-21 Bison,விங் கமாண்டர் அபினந்தன்,வீர சக்ரா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/l7izbow3/abinandhan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Wing Commander Abhinandan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/l7izbow3/abinandhan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வீர சக்ரா விருதாளர் குரூப் கேப்டன் அபினந்தன் வர்த்தமான் தனியார் பயணிகள் விமானத்தின் விமானியாக இணைந்தார்.</p><p>கடந்த 2019-ஆம் ஆண்டு பாகிஸ்தானின் எஃப்-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தி நாட்டிற்கே பெருமை சேர்த்த இந்திய விமானப்படையின் வீர சக்ரா விருதாளர் குரூப் கேப்டன் அபினந்தன் வர்த்தமான், இந்திய விமானப்படைப் பணியில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து தனியார் பயணிகள் விமான நிறுவனத்தில் விமானியாக இணைந்துள்ளார். &nbsp;</p><p>சுமார் 22 ஆண்டுகாலம் இந்திய விமானப்படையில் தீவிர சேவைக்கு பின், கடந்த மார்ச் மாதத்தில் ஓய்வு பெற்ற இவர், தற்போது கோவாவை தளமாகக் கொண்டு இயங்கும் 'FLY91' என்ற பிராந்திய பயணிகள் விமான நிறுவனத்தில் சேர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><h2><strong>பாகிஸ்தான் சிறைப்பிடிப்பு</strong></h2><p>பிப்ரவரி 2019-ல் நடைபெற்ற புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, <a href="https://www.maalaimalar.com/news/national/retired-air-marshal-jitendra-mishra-appointed-as-ceo-of-the-ayodhya-ram-temple-trust">இந்திய விமானப்படை</a> பாகிஸ்தானின் பாலக்கோட் பகுதியில் இருந்த பயங்கரவாத முகாம்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து மறுநாள் எல்லைப் பகுதியில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் போர் விமானங்களை இந்தியப் படை எதிர்த்துத் தாக்கியது. &nbsp; </p><p>அப்போது ஸ்ரீநகர் விமானப்படை தளத்திலிருந்து மிஃக்-21 பைசன் போர் விமானத்தில் புறப்பட்ட அப்போதைய விங் கமாண்டர் அபினந்தன் வர்த்தமான், தொழில்நுட்ப ரீதியாக மிகவும் மேம்பட்ட பாகிஸ்தானின் எஃப்-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தி ராணுவ வரலாற்றில் புதிய சாதனை படைத்தார். &nbsp; </p><p>இருப்பினும், இந்த வான்வழி மோதலின் போது இவரது விமானமும் எதிரி படையின் ஏவுகணையால் தாக்கப்பட்டு சேதமடைந்ததால், அபினந்தன் விமானத்தில் இருந்து அவசரமாக வெளியேறி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் விழுந்தார். அங்கிருந்த பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறைப்பிடிக்கப்பட்ட அவர், கடுமையான விசாரணைக்கும் அச்சுறுத்தல்களுக்கும் நடுவிலும் காட்டிய மனவுறுதியும் தைரியமும் ஒட்டுமொத்த இந்திய மக்களையும் நெகிழ வைத்தது. இந்தியாவின் தீவிர அழுத்தத்தை அடுத்து சுமார் 60 மணி நேரத்திற்குப் பின் பாகிஸ்தான் அவரை தாயகம் திருப்பி அனுப்பியது. </p><h2>தாயக மரி<strong>யாதை</strong></h2><p>தாயகம் திரும்பிய அவருக்கு, எதிரியின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் காட்டிய இணையற்ற வீரத்திற்காக இந்தியாவின் மூன்றாவது உயரிய போர் விருதான 'வீர சக்ரா' விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. பின்னர், இந்திய விமானப்படை அவருக்கு 'குரூப் கேப்டன்' என்ற உயரிய பதவி உயர்வை அளித்தது. &nbsp; </p><h2>ப<strong>யணிகள்</strong> விமானத்தில் புதிய அத்தியாயம்</h2><p>விமானப்படையில் இருந்து முறைப்படி ஓய்வுபெற்ற 43 வயதான அபினந்தன், ஃப்ளை91 நிறுவனத்தின் ஏடிஆர் 72-600 (ATR 72-600) ரக பயணிகள் விமானங்களை இயக்குவதற்காக சிறப்புப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். 2024 மார்ச் முதல் செயல்பட்டு வரும் இந்த தனியார் நிறுவனம், கோவா மற்றும் ஐதராபாத்தை முக்கிய மையங்களாகக் கொண்டு நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இடையே விமான சேவைகளை வழங்கி வருகிறது. வான்வெளியில் நாட்டைக் காத்த நாயகன் தற்போது பயணிகள் விமானத்தின் மூலம் சிவிலியன் சேவையில் தடம் பதித்திருப்பது நாடு முழுவதிலும் உள்ள மக்களுக்குப் பெருமகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் வரவழைத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பனிப்பிரதேசமாக மாறிய உலகின் மிக வறண்ட அட்டகாமா பாலைவனம் - எப்படி? </title><link>https://www.maalaimalar.com/news/world/worlds-driest-atacama-desert-turned-into-ice-how</link><comments>https://www.maalaimalar.com/news/world/worlds-driest-atacama-desert-turned-into-ice-how#comments</comments><guid isPermaLink="false">18188dde-bd59-4229-b86f-07654d721cf6</guid><pubDate>Thu, 03 Sep 2026 07:04:17 +0000</pubDate><atom:updated>2026-09-03T07:04:17.789Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சிலி,Chile,Desert,பாலைவனம்,Wind Storm,பனிப்புயல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/9oc8a72c/tn-22.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அட்டகாமா பாலைவனம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ அட்டகாமா பாலைவனம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/9oc8a72c/tn-22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தென் அமெரிக்க நாடான <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/catastrophes-and-the-26th">சிலியில் </a>அட்டகாமா என்ற பாலைவனம் அமைந்துள்ளதுதென். உலகின் மிக வறண்ட பாலைவனம் இதுவாகும். இந்த பாலைவனத்தை திடீரென <a href="https://www.maalaimalar.com/news/world/unprecedented-heavy-snowfall-in-russia-normal-life-affected-806031">பனிப்படலம் </a>போர்த்தியுள்ளது. அதுவும் ஆகஸ்ட் மாதத்தில்.</p><h2>புகைப்படங்கள் </h2><p>பனிப்புயல் காரணமாக பாலைவனத்தின் வறண்ட பரப்பை பனி போர்த்தி பனிப்பிரதேசம் போல காட்சியளிக்கிறது. </p><p>கடந்த ஆகஸ்ட் 6 பனிப்புயலுக்கு முன் பாலைவனம் வறண்ட நிலையில் இருந்த சாட்டிலைட் புகைப்படம், ஆகஸ்ட் 14 மற்றும் 19 இல் பனிப்புயலுக்கு பின் பனி போர்த்திய நிலையில் பாலைவனம் இருந்த சாட்டிலைட் புகைப்படங்கள் ஒப்பிடப்பட்டு குறுகிய காலத்தில் நேர்ந்த நேரெதிர் மாற்றம் குறித்து பலரும் ஆச்சரியம் தெரிவித்து வருகின்றனர்.</p><p>ஆனால் ஆகஸ்ட் மாதத்தில் பனிப்புயல் எப்படி வந்தது என்பதே இதில் மறைந்துள்ள கேள்வி.</p><figure><img alt="அட்டகாமா பாலைவனம் " src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/u3azpnlk/tn-23.jpg" /><figcaption>அட்டகாமா பாலைவனம் </figcaption></figure><h2>பனிப்புயல்கள்</h2><p>நாம் (இந்தியா) பூமியின் வடக்கு அரைக்கோளத்தில் இருக்கிறோம். பூமியின் வடக்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ள சிலி உள்ளிட்ட நாடுகளில் இது பனிக்காலம். இந்த பனிப் படலம் ஏற்பட்ட பின்னர் மற்றொரு புயல் ஆகஸ்ட் அன்று பாலைவனத்தை தாக்கியது. இதனால் பாலைவனம் மேலும் பனிப்படலாமாக காட்சி அளித்து வருகிறது.</p><p>கடந்த ஆகஸ்டில் இந்த பனிப்புயல்களானது சிலி உட்பட 7 லத்தீன் அமெரிக்க நாடுகளின் ஊடே செல்லும் ஆண்டெஸ் மலைப்பகுதியில் இருக்கும் பனியை, அட்டகாமா பாலைவனம் அமைந்துள்ள பசிபிக் கரை வரை கொண்டு வந்துள்ளது.</p><p>பெரும்பாலும் வறண்டு காணப்படும் அட்டகாமா பாலைவனம் அனைத்து பனிக்காலத்திலும் இப்படி பனிப்பிரதேசமாக மாறுவதில்லை. ஆனால் கடந்த 2025 மற்றும் 2011 இல் இதுப்போன்ற பனிப்படலம் ஏற்பட்டது. மற்றைய ஆண்டுகளில் இவ்வாறு இல்லை.</p> <figure><img alt="அட்டகாமா பாலைவனம் " src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/55cpuz01/tn-21.jpg" /><figcaption>அட்டகாமா பாலைவனம் </figcaption></figure><p>பனிப்படலத்துடன் பாலைவனத்தில் இந்த காலகட்டத்தில் அதிகளவில் பூத்துக்குலுங்கும் காட்டு மலர்களும் வென் பனிக்கு மேட்சிங் ஆக அழகுற காட்சி அளிக்கிறது.</p><p>அட்டகாமா பாலைவனம் மட்டுமின்றி வடக்கு சிலியின் பல பகுதிகள் பனி போர்த்திய நிலையில் காணப்படுகிறது. நாசா எடுத்த இந்த பனி படர்வின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.அட்டகாமா பாலைவனம் </p><figure><img alt="அட்டகாமா பாலைவனம் " src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/qb6f2ehi/tn-24.jpg" /><figcaption>அட்டகாமா பாலைவனம் </figcaption></figure>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றம்- சபாநாயகர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/resolution-moved-by-the-chief-minister-passed-unanimously-in-the-legislative-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/resolution-moved-by-the-chief-minister-passed-unanimously-in-the-legislative-assembly#comments</comments><guid isPermaLink="false">82b8b633-472d-4b2e-80a4-9359c92ca62b</guid><pubDate>Thu, 03 Sep 2026 06:59:39 +0000</pubDate><atom:updated>2026-09-03T06:59:39.030Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,தனித்தீர்மானம்,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/c52lbsei/JCDPrabhakar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்]]></media:title><media:description type="html"><![CDATA[ சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/c52lbsei/JCDPrabhakar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்க கோரி முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> இன்றைய நிகழ்வில் முதலில் வினாக்கள்-விடை நேரம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்கக் கோரி தனித்தீர்மானத்தை கொண்டு வந்து முதலமைச்சர் விஜய் பேசினார்.</p><p>இதைதொடர்ந்து முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் விவாதம் நடைபெற்றது. விவாத்தில் தீர்மானத்தை வரவேற்பதாக தி.மு.க.வும், தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதாக அ.தி.மு.க., சிபிஐ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக, தேமுதிக உள்ளிட்ட பெரும்பாலான  கட்சிகள் தெரிவித்தனர். </p><p>அதனை சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்க கோரி முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்தார். </p><p>முன்னதாக, தனித்தீர்மானம் மீதான விவாதத்தின் போது திமுக- த.வெ.க. இடையே காரசார விவாதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.  </p>]]></content:encoded></item><item><title>ரூ.212 கோடி ஒதுக்கீட்டில் காவல்துறை நவீனமயமாக்கப்படும்- புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-police-to-be-modernised-with-rs-212-crore-announces-cm-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-police-to-be-modernised-with-rs-212-crore-announces-cm-vijay#comments</comments><guid isPermaLink="false">74c3c525-29b6-4113-8468-53d18a758d56</guid><pubDate>Thu, 03 Sep 2026 06:56:43 +0000</pubDate><atom:updated>2026-09-03T06:56:43.165Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,காவல்துறை,தமிழக சட்டசபை,TN assembly,Police department,முதலமைச்சர் விஜய்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/9ybdtimu/Vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/9ybdtimu/Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவல்துறை மீதான மானிய கோரிக்கையை முதலமைச்சர் வஜய் தாக்கல் செய்தார்.</p><p>அப்போது, புதிய அறிவுப்புகளை முதலமைச்சர் விஜய் வெளியிட்டார்.</p><p>அதன் விவரம்:-</p><p>காவல் நிலையங்களில் 29,108 கூடுதல் காவல் பணியிடங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் உருவாக்கப்படும்.</p><p>போதைப்பொருளை ஒழிக்கும் கிராமங்களுக்கு ரூ.10 லட்சம் வீதம் 50 கிராமங்களுக்கு வழங்கப்படும்.</p><p>ரூ.212 கோடி ஒதுக்கீட்டில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88" rel="nofollow">காவல்துறை</a> நவீனமயமாக்கப்படும்.</p><p>பணியின்போது துணிச்சலுடன் பணியாற்றி உயிரிழக்கும் காவலர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்கப்படும்.</p><p>பணியின்போது உயிரிழக்கும் காவலர் குடும்பத்திற்கு தரப்படும் கருணைத்தொகை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்படும்.</p><p>வண்டலூரில் உள்ள காவலர் உயர்பயிற்சியகத்தில் உள்விளையாட்டு அரங்கு, விளையாட்டு வசதிகள் ரூ.23 கோடியில் ஏற்படுத்தப்படும்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சொத்தை விற்றதால் ஆத்திரம்:  பெற்றோரை வீதியில் வைத்து தடியால் தாக்கிய மகன்கள்- புனேயில் பரபரப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/sons-beat-elderly-parents-on-street-over-land-sale-in-pune</link><comments>https://www.maalaimalar.com/news/national/sons-beat-elderly-parents-on-street-over-land-sale-in-pune#comments</comments><guid isPermaLink="false">f1e95ed9-a16f-41a7-ba8c-a52d1d352574</guid><pubDate>Thu, 03 Sep 2026 06:47:26 +0000</pubDate><atom:updated>2026-09-03T06:47:26.920Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,புனே,Pune,property dispute,மகாராஷ்டிரா மாநிலம்,இந்தாப்பூர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/p0pwfgjq/onsters.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sons attack parents ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/p0pwfgjq/onsters.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் நில விற்பனை தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறில், வயதான பெற்றோரையே வீதியில் வைத்து இரண்டு மகன்கள் தடியால் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>புனே மாவட்டம் இந்தாப்பூர் பகுதியைச் சேர்ந்த 65 வயதான துகாராம் கிசான் ராவத் என்பவரும், அவரது மனைவி அஞ்சனாவும் வழக்கம்போல் மாலை நேரத்தில் வீதியின் வழியே நடைபயிற்சி மேற்கொண்டிருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த அவர்களின் மகன்களான சஞ்சய் மற்றும் ராஜேந்திர ராவத் ஆகியோர், பெற்றோரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>தனது மனைவியின் பெயரில் இருந்த நிலத்தை துகாராம் விற்பனை செய்ததே இந்த மோதலுக்குக் காரணம் எனத் தெரிகிறது. நிலத்தை விற்றதால் ஆத்திரமடைந்த மகன்கள் இருவரும், பெற்றோரிடம் தகாத வார்த்தைகளால் பேசி, உடனடியாக அந்த நிலப் பரிவர்த்தனையை ரத்து செய்ய வேண்டும் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.</p><p>விவாதம் முற்றிய நிலையில், தாங்கள் கையோடு கொண்டு வந்திருந்த மரத்தடிகளால் <a href="https://www.maalaimalar.com/news/national/barefoot-mother-wins-marathon-to-fund-daughters-studies">பெற்றோர் </a>இருவரையும் மகன்கள் இரக்கமின்றி சரமாரியாகத் தாக்கினர். இந்த கொடூரத் தாக்குதலில் துகாராமின் முதுகு, முகம், தொடைகள் மற்றும் இடது தோள்பட்டையில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. மேலும் அவரது மனைவி அஞ்சனாவுக்கு மணிக்கட்டு மற்றும் இடுப்புப் பகுதியில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.</p><p>இச்சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விரைந்து வந்த காவலர்கள் காயமடைந்த தம்பதிய மீட்டெடுத்து, சிகிச்சைக்காக இந்தாப்பூர் துணை மாவட்ட மருத்துவமனையில் சேர்த்தனர்.</p><p>பாதிக்கப்பட்ட துகாராம் அளித்த புகாரின் அடிப்படையில், அவரது மகன்கள் சஞ்சய் மற்றும் ராஜேந்திர ராவத் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் உள்ள சாலையில் பெற்றோரையே மகன்கள் தடியால் தாக்கிய இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பாஜக அரசின் தவறான கல்விக் கொள்கையால் 84,318 பள்ளிகள் மூடல்- மாணிக்கம் தாகூர் விமர்சனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/congress-leader-manickam-thakur-slams-bjp-over-84318-school-closures</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/congress-leader-manickam-thakur-slams-bjp-over-84318-school-closures#comments</comments><guid isPermaLink="false">adc7db26-6e6f-4eff-862b-eb85bb8b7995</guid><pubDate>Thu, 03 Sep 2026 06:41:42 +0000</pubDate><atom:updated>2026-09-03T06:41:42.914Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அரசுப் பள்ளிகள்,govt schools,பாஜக அரசு,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore,bjp govt</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/b6xefi61/manickam-tagore.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Manickam Tagore]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/b6xefi61/manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மோடி அரசின் திட்டமிட்ட அலட்சியத்தாலும் தவறான கல்விக் கொள்கைகளாலும் நம் நாட்டின் அரசுப் பள்ளிக் கல்வி கட்டமைப்பு மிகக் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து வருவதாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>மோடி அரசின் திட்டமிட்ட அலட்சியத்தாலும் தவறான கல்விக் கொள்கைகளாலும் நம் நாட்டின் அரசுப் பள்ளிக் கல்வி கட்டமைப்பு மிகக் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது.</p><p>கடந்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் 84,318 பள்ளிகள் காணாமல் போயுள்ளன. இதில் அதிர்ச்சியூட்டும் உண்மை என்னவென்றால், மூடப்பட்டவற்றில் 93 சதவீதப் பள்ளிகள் அரசுப் பள்ளிகள்தான். </p><p>சுமார் 78,502 அரசுப் பள்ளிகளுக்கு மோடி அரசு மூடுவிழா நடத்தியுள்ள அதே வேளையில், 15,461 தனியார் சுயநிதிப் பள்ளிகள் காளான்கள் போலப் பெருகியிருப்பது இவர்கள் யாருக்காக ஆட்சி நடத்துகிறார்கள் என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது.</p><p>சமூக நீதியையும் பொதுக் கல்வியையும் உயிர்மூச்சாகக் கொண்ட நமது தமிழ்நாட்டிலும் கூட, இந்த ஒன்றிய அரசின் தவறான அணுகுமுறையால் சுமார் 1,976 பள்ளிகள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.</p><p>கிராமப்புற ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட சமூகத்து மாணவர்களின் ஒரே புகலிடமாக விளங்கும் அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்துவதற்கு உரிய நிதி ஒதுக்காமல், பள்ளிக் கல்வியை திட்டமிட்டுச் சீரழிக்கும் வேலையை பாஜக அரசு தீவிரமாகச் செய்து வருகிறது.</p><p>குறிப்பாக, தேசிய கல்விக் கொள்கை மற்றும் பிஎம் ஸ்ரீ திட்டத்தை ஏற்கவில்லை என்பதற்காகவே, கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய மொத்தம் ₹5,109 கோடி கல்வி நிதியை மோடி அரசு தடுத்து நிறுத்தியுள்ளது.</p><p>நீதிமன்றம் தலையிட்டதால் வேறு வழியின்றி RTE-க்கு மட்டும் ₹714 கோடியை கிள்ளிப் போட்டுவிட்டு, ஒட்டுமொத்த பள்ளி கல்வி நிதியையும் தடுத்து வைத்து தமிழக மாணவர்களின் எதிர்காலத்தோடு பிளாக்மெயில் அரசியல் செய்வது கண்டனத்திற்குரியது! </p><p>"பள்ளி சீரமைப்பு மற்றும் முறைப்படுத்துதல்" என்ற போலி அறிக்கையை வைத்துக்கொண்டு, ஒற்றை ஆசிரியர் பள்ளி, குறைவான மாணவர்கள் என்ற காரணங்களைக் கூறி எளிய மக்களின் கல்வி உரிமையைப் பறிக்கப் பார்க்கிறார்கள்.</p><p>பள்ளிகளை ஒருங்கிணைக்கிறோம் என்ற பெயரில் அரசுப் பள்ளிகளை இழுத்து மூடி, ஒட்டுமொத்தக் கல்வியையும் கார்ப்பரேட் மற்றும் தனியார் கல்வி மாஃபியாக்களின் கைகளில் தாரைவார்ப்பதே மோடி அரசின் உண்மையான நோக்கம்.</p><p>அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்கி மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்குத் திறனற்ற ஒன்றிய அரசு, மாநிலங்களுக்கான சட்டப்பூர்வ நிதிப் பங்கையும் வஞ்சகமாக மறுத்து, தனியார் முதலாளிகளுக்கு சேவை செய்யும் வகையில் அரசுப் பள்ளிகளை ஒழித்துக் கட்டுவதை உடனடியாகக் கைவிட வேண்டும்.</p><p>இதை மாற்ற #RahulGandhiForPM</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் அறிவிக்கின்ற அறிவிப்புகள் எல்லாம் வரவேற்கத்தக்கது- பிரேமலதா </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/premalatha-vijayakanth-says-all-announcements-made-by-the-chief-minister-are-welcome</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/premalatha-vijayakanth-says-all-announcements-made-by-the-chief-minister-are-welcome#comments</comments><guid isPermaLink="false">edd6f6a6-a64c-4c51-b09c-e31e6c37ff3e</guid><pubDate>Thu, 03 Sep 2026 06:36:11 +0000</pubDate><atom:updated>2026-09-03T06:36:11.233Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,DMDK,தேமுதிக,பிரேமலதா விஜயகாந்த்,premalatha vijayakanth,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/szy5acvr/premalatha.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரேமலதா விஜயகாந்த்]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரேமலதா விஜயகாந்த்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/szy5acvr/premalatha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதலமைச்சர் 110 விதியின் கீழ் அறிவிக்கின்ற எல்லா அறிவிப்புகளும் மிக மிக சிறப்பாக வரவேற்கக்கூடியதாக இருக்கிறது என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழ்நாடு சட்டசபையில்</a> இன்றைய நிகழ்வில் முதலில் வினாக்கள்-விடை நேரம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்கக் கோரி தனித்தீர்மானத்தை கொண்டு வந்து முதலமைச்சர் விஜய் பேசினார். </p><p>இதனை தொடர்ந்து தனித்தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் விவாதம் நடைபெற்றது. தனித்தீர்மானத்தை திமுக வரவேற்றது. , அதிமுக ஆதரவு தெரிவித்தது. இதையடுத்து பா.ம.க. எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி பேசியதாவது:-</p><p>ஐகோர்ட்டில் தமிழை முதன்மை மொழியாக்கக்கோரி முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்திற்கு பாமக முழு மனதுடன் வரவேற்கிறது. உலகில் மக்கள் அதிகம் பேசும் முதல் 25 மொழிகளில் தமிழும் உள்ளது. ஒரு வாரத்திற்கு 2 மொழிகள் அழிகிறது.  10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் தமிழ் மொழிப்பாடம் என்ற வார்த்தையே இல்லை. மொழிப்பாடம் என்று தான் இருக்கிறது, அதை சரி செய்ய வேண்டும் என்றார். </p><p>தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-</p><p>முதலமைச்சர் 110 விதியின் கீழ் அறிவிக்கின்ற எல்லா அறிவிப்புகளும் மிக மிக சிறப்பாக வரவேற்கக்கூடியதாக இருக்கிறது. இன்று மட்டும் இல்லை தினந்தோறும் பார்க்கிறேன். அந்த அறிவிப்புகள் எல்லாம் ஆக்கப்பூர்வமாக வெகு விரைவில் செயல்வடிவம் பெற வேண்டும் என்பதையும் இந்த அவையில் குறிப்பிட கடமைப்பட்டுள்ளேன். கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன்பு இருந்தே உருவானது தான் தமிழ். நான் முதல்வரிடம் கேட்டுக்கொள்வது ஒன்றுதான். இது தமிழ்நாடு தமிழ்மொழிக்கு மிகமிக முக்கியத்துவம் தர வேண்டும். தமிழ் மொழி தமிழ்நாட்டில் முக்கிய இடத்தை பெற வேண்டும் என்றால் பள்ளிகளில் இருந்தே அதை கண்டிப்பாக கொண்டு வரவேண்டும். </p><p>புதிதாக தலைமைச் செயலகம் கட்டப்படும் என்று முதலமைச்சர் அறிவித்து உள்ளார். இது வரவேற்கத்தக்கது. எந்த ஆட்சி வரட்டும், போகட்டும் ஆனால் நீங்கள் உருவாக்கப்போகும் புதிய தலைமைச் செயலகம் யார் வந்தாலும் எந்த காலத்திற்கும் தடை செய்யவே முடியாத அளவிற்கு கடுமையான சட்டத்தை உருவாக்கி விட்டு அந்த பணிகளை நீங்கள் தொடங்கவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். உங்களின் அனைத்து தீர்மானத்தையும் வரவேற்கிறேன் என்றார். </p>]]></content:encoded></item><item><title>6 நாட்கள் இடைவெளி.. 14வது மாடியிலிருந்து விழுந்து பலி - சுஷாந்த் சிங் மேலாளர் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/national/a-gap-of-six-days-death-after-a-fall-from-the-14th-floor-sushant-singhs-managers-death-case-transferred-to-the-cbi</link><comments>https://www.maalaimalar.com/news/national/a-gap-of-six-days-death-after-a-fall-from-the-14th-floor-sushant-singhs-managers-death-case-transferred-to-the-cbi#comments</comments><guid isPermaLink="false">d54d4e34-87e1-413f-9b8b-01c064a3ec31</guid><pubDate>Thu, 03 Sep 2026 06:23:51 +0000</pubDate><atom:updated>2026-09-03T06:23:51.381Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sushanth Singh Rajput,சிபிஐ,cbi,பாலிவுட்,Bollywood,சுஷாந்த் சிங் ராஜ்புத்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/p62rnz8x/tn-20.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ திஷா சாலியன், சுஷாந்த் சிங் ராஜ்புத் ]]></media:title><media:description type="html"><![CDATA[ திஷா சாலியன், சுஷாந்த் சிங் ராஜ்புத் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/p62rnz8x/tn-20.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மறைந்த நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/sushant-singh-rajput">சுஷாந்த் சிங் ராஜ்புத்தின்</a> மேலாளர் திஷா சாலியன் மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p> <p>2020ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் தேதி இரவு மும்பையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் 14வது மாடியில் இருந்து விழுந்து திஷா சாலியன் உயிரிழந்தார்.  </p> <h2>சுஷாந்த் தற்கொலை</h2><p>தீஷா உயிரிழந்த 6 நாட்களுக்கு பிறகு நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பை பாந்ராவில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் தற்கொலை செய்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.</p><p>பட வாய்ப்புகள் இல்லாமல் போனது அவரது தற்கொலைக்கு காரணமாக கூறப்பட்டது. அதேநேரம் சுஷாந்தின் முன்னாள் காதலி மற்றும் நடிகை <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-sushant-singhs-suicide-girlfriend-rhea-chakraborty-has-no-connection-cbi-final-report-794276">ரியா சக்கரபர்த்தி </a>அவரை தற்கொலைக்கு தூண்டியதாகவும் பணத்தை கையாடல் செய்ததாவும் குற்றச்சாட்டு எழுந்தது.</p><p>இதுகுறித்து சிபிஐ நடத்திய 5 ஆண்டு விசாரணைக்கு பின் ரியா நிரபராதி என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.</p> <h2>திஷா சாலியன் சர்ச்சை</h2><p>இதனிடையே சுஷாந்த் தற்கொலை செய்துகொள்வதற்கு 6 நாட்களுக்கு முன் 26 வயதான அவரின் மேலாளர் திஷா சாலியன் 14 வது மாடியில் இருந்து விழுந்து இறந்ததன் பின்னணியில் பல்வேறு சந்தேகங்கள் கிளம்பின.</p><p>அவர் தற்கொலை செய்ததாக மும்பை போலீஸ் தனது விசாரணைக்கு பின் தெரிவித்தது.</p> <p>ஆனால் திஷாவின் தந்தை சதீஷ் சாலியன் தன் மகள் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டி, அவரது தந்தை கடந்த ஆண்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.</p><p>இந்த மனு மீதான முந்தைய விசாரணையில் திஷா சாலியன் இறந்து ஐந்து ஆண்டுகள் ஆகியும், அவரது குடும்பத்தினருக்கு உடற்கூறாய்வு அறிக்கை நகல்கள் வழங்கப்படாததற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். </p><p>மேலும் பெற்றோர் முன்வைத்த கொலை குற்றச்சாட்டு தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படாதது குறித்தும் காவல்துறையை கண்டித்தனர்.</p> <h2>சிபிஐ விசாரணை</h2><p>இதைதொடர்ந்து நேற்று நடந்த விசாரணையில் நீதிபதிகள் சாரங் கோட்வால் மற்றும் ரஞ்சித்சிங் ராஜா போன்ஸ்லே ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியது, திஷா சாலியன் மரண வழக்கை சிபிஐக்கு மாற்றுவதாக மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது.</p><p>எப்ஐஆர் பதிவு செய்து அதிகாரியை நியமித்து விசாரணையை தொங்க சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனுதாரர் சதீஷ் சாலியனின் வாக்குமூலத்தை பதிவு செய்யுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது</p><p>மேலும் எந்தவொரு நபர் மீதும் போதுமான ஆதாரங்களை விசாரணை அதிகாரி கண்டறியும் வரை, யாரையும் குற்றவாளியாகக் கருதக்கூடாது என்றும் நீதிபதிகள் வலியுறுத்தியினர்.</p>]]></content:encoded></item><item><title>VIDEO- Harry Potter HBO Series: ரசிகர்களைக் கவர்ந்த புதிய டிரெய்லர் வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/video-harry-potter-hbo-series-new-trailer-charms-fans</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/video-harry-potter-hbo-series-new-trailer-charms-fans#comments</comments><guid isPermaLink="false">7cf1d3b5-e17c-429d-b6dd-48910dc512c2</guid><pubDate>Thu, 03 Sep 2026 06:18:46 +0000</pubDate><atom:updated>2026-09-03T06:18:46.900Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Harry Potter,ஹாரி பாட்டர்,ஜேம்ஸ்,James,Harry Potter HBO Series,HBO Max,Lily,லிலி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/xe1x4mlo/horry.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Harry Potter HBO Series]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/xe1x4mlo/horry.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டிரெய்லரில் பயன்படுத்தப்பட்டுள்ள நீலம் மற்றும் சாம்பல் நிறம் சார்ந்த டார்க் பின்னணி லைட்டிங், 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தொடரைப் போன்று இருப்பதாக சில ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/GyEpwGQIEZw"></iframe></figure><p>உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஹாரி பாட்டர்' கதையின் புதிய எச்பிஓ (HBO) தொலைக்காட்சித் தொடருக்கான டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>வழக்கமான கதையமைப்பைத் தாண்டி,<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-trailer-for-the-movie-street-fighters-featuring-vidyut-jammwal-as-the-villain-has-been-released"> ஹாரி பாட்டரின் </a>பெற்றோர்களான ஜேம்ஸ் மற்றும் லிலியின் கடந்த கால வாழ்க்கையைப் பற்றிய கூடுதல் காட்சிகளை இந்தத் தொடர் வெளிப்படுத்த உள்ளது. அத்துடன் ஹாரி பாட்டர், ரோன் மற்றும் ஹெர்மியோனி ஆகிய முதன்மை கதாபாத்திரங்களில் புதிய இளம் நட்சத்திரங்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். முதல் பாகத்தில் வரும் பாத்ரூம் டிரோல் காட்சி, இந்த புதிய பதிப்பில் மிகவும் பயங்கரமாகவும் ஆபத்தானதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.</p><h2>திரைவ<strong>ண்ணம்</strong> </h2><p>டிரெய்லரில் பயன்படுத்தப்பட்டுள்ள நீலம் மற்றும் சாம்பல் நிறம் சார்ந்த டார்க் பின்னணி லைட்டிங், 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தொடரைப் போன்று இருப்பதாக சில ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். முதல் பாகத்தின் மாயாஜால உணர்வுக்கு பிரகாசமான வண்ணங்களே பொருத்தமாக இருக்கும் என ஒரு தரப்பும், கதையின் தீவிரத்தன்மைக்கு இந்த இருண்ட வண்ண அமைப்பே சரியானது என மற்றொரு தரப்பும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.</p><h2>வெளியீட்டு தேதி <strong>அறிவி</strong>ப்பு</h2><p>ஜான் லித்கோ, பாப்பா எஸீடு, சாநெட் மொக்டீர் போன்ற பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இத்தொடர், 'ஹாரி பாட்டர் அண்ட் தி ஃபிலாசஃபர்ஸ் ஸ்டோன்' என்ற தலைப்பில் 2026-ஆம் ஆண்டு டிசம்பர் 25 கிறிஸ்மஸ் பண்டிகையன்று எச்பிஓ மேக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>Reels-க்காக &quot;தூய்மை தேவதைகள்&quot; என்பதா?- தவெக அரசை சாடிய டிடிவி தினகரன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/reels-praise-vs-job-security-ttv-dhinakaran-attacks-tvk-govt</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/reels-praise-vs-job-security-ttv-dhinakaran-attacks-tvk-govt#comments</comments><guid isPermaLink="false">8b53fe97-2fec-42b2-9e09-c510cbbb2427</guid><pubDate>Thu, 03 Sep 2026 06:08:12 +0000</pubDate><atom:updated>2026-09-03T06:08:12.771Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>டிடிவி தினகரன்,Sanitation workers,TTV Dinakaran,தவெக அரசு,TVK Govt,தூய்மை பணியாளர்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/z8tfix3u/TTV-Dinakaran.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TTV Dinakaran]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/z8tfix3u/TTV-Dinakaran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>15 நாட்களுக்கும் மேலாக தூய்மைப் பணியாளர்கள் போராடும் நிலையில், Reels-க்காக “தூய்மை தேவதைகள்” எனப் புகழாரம் சூட்டினால் மட்டும் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுமா? என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-  </p><p>15 நாட்களுக்கும் மேலாகப் போராடும் தூய்மைப் பணியாளர்கள் – Reels-க்காக “தூய்மை தேவதைகள்” எனப் புகழாரம் சூட்டினால் மட்டும் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுமா? </p><p>தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல், அவர்களைத் தொடர்ந்து போராட விடுவது எந்த விதத்தில் நியாயம்?</p><p>பணிநிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-rajinikanth-praise-to-padma-807774" rel="nofollow">தூய்மைப் பணியாளர்</a>களின் போராட்டம் 15 நாட்களையும் கடந்து தொடர்ந்து நடைபெற்று வருவதால், மாநகரின் தூய்மைப் பணிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p>ஐந்து ஆண்டுகள் மற்றும் அதற்கும் மேலாகப் பணியாற்றி வரும் ஒப்பந்தப் பணியாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என வாக்குறுதியளித்த தவெக, ஆட்சிக்கு வந்து நூறு நாட்களைக் கடந்தும், தூய்மைப் பணியாளர்களின் அடிப்படைக் கோரிக்கையான பணிநிரந்தரம் குறித்து விவாதிக்க மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது.</p><p>15 நாட்களுக்கும் மேலாக நீடித்துவரும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தைப் பேச்சுவார்த்தையின் மூலம் முடிவுக்குக் கொண்டுவர எந்தவித நடவடிக்கையும் எடுக்காத தவெக அரசு, அவர்கள் போராடுவதற்கு ரிப்பன் மாளிகை வளாகத்தில் இடம் ஒதுக்கிக் கொடுத்ததையே பெருமையாகப் பேசுவது வெட்கக்கேடானது.</p><p>ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, பணி நிரந்தரம் கோரி போராடிய தூய்மைப் பணியாளர்களை தனது பனையூர் இல்லத்திற்கு அழைத்து அவர்களது கோரிக்கையை நிறைவேற்றுவதாக சொன்ன <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D" rel="nofollow">முதலமைச்சர் ஜோசப் விஜய்</a> அவர்கள் தற்போது சட்டமன்றத்திற்கு அருகேயே உள்ள ரிப்பன் மாளிகை வளாகத்தில் போராடுபவர்களை சந்திப்பதற்கு என்ன தயக்கம்?</p><p>சென்னை மாநகரத்தைத் தூய்மையாக வைத்திருப்பதிலும், பொதுமக்களின் சுகாதாரத்தைப் பேணிக்காப்பதிலும் அளப்பரிய பங்களிப்பை வழங்கி வரும் முன்களப் பணியாளர்களான தூய்மைப் பணியாளர்களை, குறைந்தபட்சம் அமைச்சர்களாவது நேரில் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிவதில் என்ன தயக்கம்?</p><p>எனவே, சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதோடு, தவெக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, ஐந்து ஆண்டுகள் மற்றும் அதற்கும் மேலாகப் பணியாற்றி வரும் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/they-are-not-cleaners-they-are-cleanliness-angels-minister-rajmohan" rel="nofollow">ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள்</a> அனைவரையும் பணிநிரந்தரம் செய்திட வேண்டும் எனவும் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>தீர்மானம் எங்கள் குழந்தை... இது யாருடைய குழந்தையும் கிடையாது: சட்டசபையில் காரசார விவாதம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-resolution-dmk-and-tvk-arguments-in-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-resolution-dmk-and-tvk-arguments-in-assembly#comments</comments><guid isPermaLink="false">1424405c-dd87-48fb-a60c-9bca3c50b153</guid><pubDate>Thu, 03 Sep 2026 06:03:01 +0000</pubDate><atom:updated>2026-09-03T06:03:01.389Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தவெக,விஜய்,vijay,தமிழக சட்டசபை,தனித்தீர்மானம்,TN assembly,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/55rpg7ti/Assembly0.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் நிர்மல்குமார்- ரகுபதி]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் நிர்மல்குமார்- ரகுபதி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/55rpg7ti/Assembly0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சட்டசபையில் முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்தின் மீது காரசார விவாதம் நடைபெற்றது.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழ்நாடு சட்டசபையில்</a> இன்றைய நிகழ்வில் முதலில் வினாக்கள்-விடை நேரம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்கக் கோரி தனித்தீர்மானத்தை கொண்டு வந்து முதலமைச்சர் விஜய் பேசினார். </p><p>இதனை தொடர்ந்து தனித்தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் விவாதம் நடைபெற்றது. முதலில் தனி தீர்மானத்தின் மீது திமுக எம்எல்ஏ ரகுபதி பேசியதாவது:-</p><p>* தமிழ் வழக்காடு மொழி என்பதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் கருணாநிதி.</p><p>* தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்றுத் தந்தவர் கருணாநிதி.</p><p>* சட்ட சொற்களஞ்சியம் இல்லாத காரணத்தால் 2006-ல் தீர்மானத்தை ஏற்க மறுக்கப்பட்டது. </p><p>* சென்னையில் உச்சநீதிமன்றக் கிளை வேண்டும் என முதலில் கேட்டவர் ஸ்டாலின்.</p><p>* 2022-ல் பிரதமரிடம் நேரடியாக தைரியமாக குரல் எழுப்பியர் ஸ்டாலின்.</p><p>* உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என கேட்டார் ஸ்டாலின் என்றார். </p><p>அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், தீர்மானம் குறித்து சுருக்கமாக சொல்லும்படி கேட்டார். </p><p>இதையடுத்து பேசிய ரகுபதி, </p><p>* இந்த தீர்மானம் எங்கள் குழந்தை, இதை வரவேற்கிறோம்.</p><p>* மக்கள் நேரலையில் பார்த்துக்கொண்டிருப்பதால் வரலாறு முக்கியம்.</p><p>* ஆங்கிலத்திற்கு பிறகே தமிழ் என்று தான் திமுக ஆட்சியில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.</p><p>* சட்ட சொற்களஞ்சியங்களை உருவாக்கினால் உச்சநீதிமன்றம் மறுக்காது என்றார். </p><p>அமைச்சர் நிர்மல் குமார் பேசுகையில், கோரிக்கை விடுப்பது எல்லாம் வரலாறு ஆகாது. எப்போது செயல்வடிவத்திற்க வருதோ யார் செயல்படுத்துகிறாரோ அதுதான் வரலாறு. இதுவரை ஆயிரம் கோரிக்கைகள் வந்து இருக்கலாம்.  இது யாருடைய குழந்தையும் கிடையாது என்றார். </p><p>இவ்வாறு முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. </p>]]></content:encoded></item><item><title>உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்க வேண்டும்- தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார் முதலமைச்சர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-moves-a-special-resolution-to-make-tamil-the-primary-language-in-the-high-court</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-moves-a-special-resolution-to-make-tamil-the-primary-language-in-the-high-court#comments</comments><guid isPermaLink="false">dd5b596e-84fe-4075-85ac-1d72ee1f3efc</guid><pubDate>Thu, 03 Sep 2026 05:45:36 +0000</pubDate><atom:updated>2026-09-03T05:45:36.238Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,சென்னை ஐகோர்ட்,Madras HC,தமிழக சட்டசபை,தனித்தீர்மானம்,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/65vywx6i/vijay0.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/65vywx6i/vijay0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்கக் கோரி தனித்தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் கொண்டு வந்தார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> இன்றைய நிகழ்வில் முதலில் வினாக்கள்-விடை நேரம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்கக் கோரி தனித்தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் கொண்டு வந்தார். </p><p>அப்போது முதலமைச்சர் விஜய் பேசியதாவது:-</p><p>* தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பது நமக்கெல்லாம் கிடைத்த பெருமை.</p><p>* பல்லாயிரம் ஆண்டுகள் உயிர்ப்புடன் பேசப்படும் மொழி தமிழ் மொழி. </p> <p>* வருங்கால தலைமுறைக்கும் தமிழ் மொழியின் வளத்தையும் பெருமையையும் கொண்டு சேர்ப்பது நமது கடமை.</p><p>* தமிழை முதன்மை மொழியாக அங்கீகரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.</p><p>* ஆளுநரால் அனுப்பப்படும் முன்மொழிவுகளுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. </p><p>* மாவட்ட நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக உள்ளது.</p><p>* தீர்ப்பு, தீர்ப்பாணை, உத்தரவுகளை தமிழில் வழங்க வேண்டும்.</p><p>* வழக்கு தொடர்பான வாதங்கள் தமிழில் இருந்தால் எளிதாக புரியும் வழங்க வேண்டும். </p><p>* இந்த கோரிக்கை எந்த மொழிக்கும் எதிரானது அல்ல. தமிழ் மொழிக்கான சட்ட அங்கீகாரம் கேட்கும் கோரிக்கை.</p><p>* குடியரசுத் தலைவரும் மத்திய அரசும் இதற்கு ஒப்புதல் தர வேண்டும்.</p><p>* தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாக தமிழ் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>* நீதிமன்றங்களில் தமிழ் மொழி பயன்பாட்டுக்கு சட்ட அங்கீகாரம்.</p><p>* மாநில மொழியை நீதிமன்றங்களில் பயன்படுத்த சட்ட வாய்ப்புள்ளது என்றார். </p><p>முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் விவாதம் நடைபெறுகிறது. </p>]]></content:encoded></item><item><title>பாகிஸ்தானுக்கு எதிரான இறுதி டெஸ்ட்.. இங்கிலாந்து அணி அறிவிப்பு - தொடரும் பிரைடன் கார்ஸ் சர்ச்சை </title><link>https://www.maalaimalar.com/sports/cricket/3rd-test-against-pakistan-england-squad-announced-brydon-carse-controversy-continues</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/3rd-test-against-pakistan-england-squad-announced-brydon-carse-controversy-continues#comments</comments><guid isPermaLink="false">e9a56ed0-6e3c-4188-8ffe-1f689cb8fbe6</guid><pubDate>Thu, 03 Sep 2026 05:44:05 +0000</pubDate><atom:updated>2026-09-03T05:44:05.704Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டெஸ்ட் கிரிக்கெட்,இங்கிலாந்து அணி,பாகிஸ்தான் அணி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/nkq3ccgh/tn-18.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரைடன் கார்ஸ், இங்கிலாந்து அணி  ]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரைடன் கார்ஸ்,  இங்கிலாந்து அணி  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/nkq3ccgh/tn-18.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் மூன்று போட்டிகள் கொண்ட மூன்றாவது மற்றும் கடைசி <a href="https://www.maalaimalar.com/sports/cricket/srilanka-announce-squads-for-england-tour">டெஸ்ட்டில்</a> விளையாட உள்ள 15 வீரர்கள் கொண்ட தங்களின் அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.</p><p>ஜோ ரூட் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் பிரைடன் கார்ஸ் இடமெபிறவில்லை. </p><h2>பிரைடன் கார்ஸ் சர்ச்சை</h2><p>கடந்த மாதம் இங்கிலாந்தின் டெர்பி நகரில் பார் விடுதி ஒன்றில் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக அவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.</p><p>பாரில் இருந்து அவர் கைவிலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டது அவர் மீது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.</p><p>இதன் காரணமாக லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார்.</p> <p>இரண்டாவது டெஸ்டில் கார்ஸ்க்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் சோனி பேக்கர் அணியில் இடம்பெற்றார்.</p><p>மூன்றாவது டெஸ்டில் கார்ஸ் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரின் பெயர் அணியின் பட்டியலில் இடம்பெறவில்லை.</p><p>எனவே இங்கிலாந்தின் எட்க்பேஸ்டன் மைதானத்தில் நடக்க உள்ள இந்த மூன்றாவது டெஸ்டிலும் அவரே அணியில் தொடர உள்ளார்.</p> <figure><img alt="பிரைடன் கார்ஸ் " src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/aexo1vc7/tn-19.jpg" /><figcaption>பிரைடன் கார்ஸ் </figcaption></figure><h2>மேட் பிஷர் நீக்கம்</h2><p>வெளியாகியுள்ள புதிய பட்டியல்படி, ஒரே ஒரு மாற்றத்தை தவிர இரண்டாம் டெஸ்டில் இருந்த இங்கிலாந்து அணி அப்படியே தொடர்கிறது. </p><p>கடந்த டெஸ்டில் அணியில் இடம்பெற்ற மேட் பிஷர் இந்த மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்டுக்கான இங்கிலாந்து அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.</p><h2>பாகிஸ்தான் அணி</h2><p>இதனிடையே இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் விளையாட பாகிஸ்தான் அணி மறுசீரமைக்கப்ட்டுள்ளது.</p><p>முதல் இரண்டு டெஸ்டில் அடைந்த தோல்வி காரணமாக தலைமை பயிற்சியாளர் சர்பராஸ் அகமது மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் உமர் குல் ஆகியிற் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அணியில் பாதி பேர் மாற்றப்பட்டுள்ளனர்.</p><p>இரண்டாம் டெஸ்டில் ஆடிய முகமது ரிஸ்வான், இமாம் உல் ஹக், சல்மான் ஆகா, அலி உஸ்மான், அமீர் ஜமால், அவைஸ் ஜாபர், குர்ரம் சாஷாத் ஆகியோர் தோல்வி காரணமாக மூன்றாம் டெஸ்ட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.</p><h2>தோல்வி</h2><p>இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்டில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது. அதிலும் இரண்டாம் டெஸ்டில் 194 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்றது.</p><p>எனவே தொடரில் இங்கிலாந்து 2-0 என்ற அளவில் முன்னிலையில் உள்ளது. எனவே மூன்றாம் மற்றும் கடைசி டெஸ்ட்டில் வெல்வதற்கு பாகிஸ்தான் மும்முரம் காட்டி வருகிறது.</p><h2>மூன்றாம் டெஸ்ட் இங்கிலாந்து அணி</h2><p>ஜோப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், சோனி பேக்கர், சொஹைப் பஷீர்,ஹேரி புரூக், சாம் குக், ஜோர்டான் காக்ஸ், பென் டக்கெட், எமிலியோ கே, டேன் லாரன்ஸ், ஓலி போப், ஜோ ரூட் (கேப்டன்), ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), ஜோஷ் டங்.</p>]]></content:encoded></item><item><title>பாட்டிலுக்கு ரூ.10 வாங்கிய மேலும் 157 பேர் சஸ்பெண்ட்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/157-more-tasmac-staff-suspended-for-collecting-rs10-per-bottle</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/157-more-tasmac-staff-suspended-for-collecting-rs10-per-bottle#comments</comments><guid isPermaLink="false">de7f9bd7-752e-401c-a34c-a2e34b8f22b7</guid><pubDate>Thu, 03 Sep 2026 05:38:43 +0000</pubDate><atom:updated>2026-09-03T05:38:43.858Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,Tamilnadu,suspension,Tasmac,டாஸ்மாக்,ஊழியர்கள் சஸ்பெண்டு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/ol9kpy2w/TASMAC-PIC.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TASMAC]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/ol9kpy2w/TASMAC-PIC.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்கிய புகாரில் மேலும் 157 டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.</p><p>நேற்று பிற்பகலுக்கு மேல் இரவு வரை பாட்டிலுக்கு ரூ.10 வாங்கிய புகாரில் 150-க்கும் மேற்பட்ட <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D" rel="nofollow">ஊழியர்கள் சஸ்பெண்ட்</a> செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே கூடுதலாக பணம் வாங்கிய 67 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நிலையில் மீண்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>தமிழகத்தில் மொத்தம் 4 ஆயிரத்து 48 டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகள் உள்ளன.</p><h2>ரூ.10 வசூல்</h2><p>இந்தக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு அரசு நிர்ணயித்த அதிகபட்ச சில்லறை விலையைவிட, பாட்டிலுக்கு ரூ.10 மற்றும் அதற்கு மேலும் கூடுதலாக வசூலிக்கப்படுவதாக நீண்டகாலமாக புகார்கள் இருந்து வருகின்றன.</p><p>இந்தக் கூடுதல் வசூல் முறைக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று த.வெ.க. அரசு அறிவித்தது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.</p><p>செயலி மூலம் முன்பதிவு செய்துவிட்டு, கடைகளில் நேரடியாக மதுபானங்களை வாங்கும் நடைமுறையும் கொண்டு வரப்பட்டது. அதனால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.</p><h2>ஊதிய உயர்வு</h2><p>இதன் ஒரு பகுதியாக டாஸ்மாக் ஊழியர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். அதில் பெரும்பாலானவை அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.</p><p>அதன்படி, கடந்த 1-ந்தேதி முதல் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vinoth-announces-pay-rise-for-tasmac-staff" rel="nofollow">டாஸ்மாக்</a> ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேற்பார்வையாளர்களுக்கு ரூ.22 ஆயிரத்து 313-ல் இருந்து ரூ.33 ஆயிரத்து 23 ஆகவும், விற்பனையாளர்களுக்கு ரூ.19 ஆயிரத்து 413-ல் இருந்து ரூ.30 ஆயிரத்து 284 ஆகவும், உதவி விற்பனையாளர் களுக்கு ரூ.17 ஆயிரத்து 925-ல் இருந்து ரூ.28 ஆயிரத்து 680 ஆகவும் மாத ஊதியம்உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.486.90 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.</p><h2>சலுகைகள்</h2><p>மேலும், ஊழியர்களுக்கு ரூ.20 ஆயிரம் பண்டிகை போனஸ் வழங்கப்படும். ஆண்டு தோறும் 3 சீருடைகளுக்கான துணி மற்றும் தையல் செலவுக்காக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும்.</p><p>கடைகளுக்கு பராமரிப்புத் தொகை, 8 மணி நேர சுழற்சி முறையில் பணி, வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை, மாதத்திற்கு 2 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடு முறை உள்ளிட்ட சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.</p><p>இதுதவிர தகுதியுள்ள 250 டாஸ்மாக் பணியாளர்கள் சிறப்புத் தேர்வு மூலம் இளநிலை உதவியாளர்களாக நியமிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து டாஸ்மாக் ஊழியர்களுக்கும் இ.எஸ்.ஐ. சலுகை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>அமைச்சர் எச்சரிக்கை</h2><p>செப்டம்பர் மாதம் முதல் ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்ட சலுகைகள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இனிமேல் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பதை அரசு எந்த வகையிலும் அனுமதிக்காது என்று அமைச்சர் விக்னேஷ் கடுமையாக எச்சரித்தார்.</p><p>அரசு நிர்ணயித்த விலையைவிட ஒரு ரூபாய் கூடுதலாக வசூலித்தால்கூட முதல் முறையில் 3 மாதங்கள் பணியிடைநீக்கம் செய்யப்படுவார்கள்.</p><p>அதே தவறை மீண்பரவைடும் செய்தால் நிரந்தரமாக பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று சட்டசபையிலும் அமைச்சர் அறிவித்தார்.</p><p>இந்தநிலையில், டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்தும், அமைச்சரின் எச்சரிக்கையையும் மீறி பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குவது தொடர்வதாக மதுப்பிரியர்கள் வேதனை தெரிவித்தனர்.</p><p>இதுதொடர்பான செய்தி நேற்றைய தினத்தந்தியில் பிரசுரிக்கப்பட்டது. இது அரசின் கவனத்துக்குச் சென்றது.</p><h2>67 ஊழியர்கள் மீது நடவடிக்கை</h2><p>மேலும், டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலை வசூலிப்பது உள்ளிட்ட புகார்களை மதுபிரியர்கள் எளிதாகத் தெரிவிக்கும் வகையில் தமிழக அரசு புதிய புகார் சேவை மையத்தை தொடங்கியது. </p><p>இந்த மையத்திற்கு வந்த புகார்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், 67 டாஸ்மாக் ஊழியர்கள் தவறு செய்தது உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. </p><p>இதையடுத்து, கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்ததாக 67 டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.</p><h2>மேலும் 157 ஊழியர்கள்</h2><p>டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்கிய புகாரில் மேலும் 157 டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.</p><p>அந்த வகையில், கடந்த 2 நாட்களில் மட்டும் மொத்தம் 224 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 3 மாதங்கள் பணி வழங்கப்படாது.</p><p>அரசின் நடவடிக்கை டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>புதிய தலைமை செயலகம் உள்ளிட்ட 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-three-major-initiatives-including-the-new-secretariat</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-three-major-initiatives-including-the-new-secretariat#comments</comments><guid isPermaLink="false">36ca376a-0cab-4d76-960a-ec7b2e0daad9</guid><pubDate>Thu, 03 Sep 2026 05:33:54 +0000</pubDate><atom:updated>2026-09-03T05:33:54.966Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/abyikiui/vijay.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/abyikiui/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்நாடு சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> இன்று 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-</p><p>* தமிழக விளையட்டு வீரர்கள் சர்வதேச அளவில் பதக்கங்களை வெல்லும் வகையில் சென்னையில் உலகத்தரம் வாய்ந்த தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும். </p><p>* தேசிய, உலக அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெறும் வகையில் ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும். </p><p>* சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்த, திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்க திட்டம். </p><p>* தமிழ்நாட்டில் சர்வதேச தரத்திலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும். </p><p>* இளைஞர்களின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் திறமைகளை அறிந்து பயிற்சி அளிக்கப்படும். </p><p>* மோட்டார் பந்தய தடம் மற்றும் அதற்கான நவீன கட்டமைப்புகள் உருவாக்கப்படும். </p><p>* கார் பந்தய அரங்குகளை அமைப்பதால் சுற்றுலா, சிறப்பு வாகன உற்பத்தி ஆலை, வேலைவாய்ப்பு மேம்படும். </p><p>* தற்போதைய தலைமைச் செயலக கட்டிடம் 400 ஆண்டுகள் பழமையானது. ஜார்ஜ் கோட்டை பகுதியில் 4 ஏக்கர் மட்டுமே பயன்படுத்தும் வகையில் உள்ளது. ஒருங்கிணைந்த புதிய தலைமைச் செயலக கட்டிடம் அவசியம். </p><p>* ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடியில் புதிய சட்டமன்றம் அமைக்கப்படும். நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம், தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டிட வளாகம் அமைக்கப்படும். </p><p>* அனைத்து அரசு துறைகளும் ஒரே நிர்வாக வளாகத்தில் கொண்டு வந்து ஒருங்கிணைக்கப்படும். </p><p>* தீயணைப்பு வசதிகள், மாற்றுத்திறனாளிகள் சென்றுவர வசதிகள், பசுமைக் கட்டட தர நிலைகளுக்கு உட்பட்டு வளாகம் உருவாக்கப்படும்.</p>]]></content:encoded></item><item><title>அதிகபட்சம் 243 கி.மீ. ரேன்ஜ் வழங்கும் எலெகட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்</title><link>https://www.maalaimalar.com/automobilenews/bike/simple-wave-electric-scooter-launched-in-india</link><comments>https://www.maalaimalar.com/automobilenews/bike/simple-wave-electric-scooter-launched-in-india#comments</comments><guid isPermaLink="false">d217c3d8-6efe-4aae-9d37-8e7af53e9fe4</guid><pubDate>Thu, 03 Sep 2026 05:22:00 +0000</pubDate><atom:updated>2026-09-03T05:22:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Electric Scooter,Simple Wave,சிம்பிள் வேவ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/9sf01g3u/Simple-Wave-Electric-Scooter.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Simple Wave Electric Scooter]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/9sf01g3u/Simple-Wave-Electric-Scooter.png?w=280" width="280"></media:thumbnail><category>பைக் (Automobile)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சிம்பிள் வேவ் <a href="https://www.maalaimalar.com/topic/electric-scooter">எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்</a> இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய சிம்பிள் வேவ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இந்திய சந்தையில் ரூ. 1,09,999 (எக்ஸ்-ஷோரூம்) என தொடங்குகிறது. இது அந்த பிராண்டின் முதல் குடும்ப பயன்பாட்டிற்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும்.</p><p>புதிய <a href="https://www.maalaimalar.com/automobilenews/newautomobile">சிம்பிள் வேவ்</a> எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்கூட்டர் மொத்தம் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டரின் விநியோகம் வருகிற செப்டம்பர் 25-ஆம் தேதி முதல் தொடங்கும். </p><h2>அசத்தல் டிசைன்:</h2><p>இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பாக்ஸி டிசைன் கொண்டுள்ளது, மேலும் மற்ற சிம்பிள் ஸ்கூட்டர்களில் நாம் வழக்கமாக பார்த்த கூர்மையான மற்றும் ஸ்போர்ட்டியான வடிவமைப்புகளில் இருந்து இது மாறுபட்டுள்ளது. இது ஒரு குடும்ப பயன்பாட்டிற்கான ஸ்கூட்டர் என்பதால், இதில் 920 மிமீ அளவுள்ள பெரிய இருக்கை மற்றும் விசாலமான கால் வைக்கும் பலகை போன்ற சில நடைமுறை அம்சங்கள் உள்ளன.</p><p>இருக்கைக்குக் கீழ் உள்ள ஸ்டோரேஜ் பகுதி 70 லிட்டர் கொள்ளளவு கொண்டது, மேலும் பொருட்களை சேமிப்பதற்காக வாகனத்தின் வெளிப்புற பேனல்களிலும் இரண்டு அறைகள் உள்ளன. கையுறைகள் மற்றும் பிற பொருட்களை சேமிப்பதற்காக, ஏப்ரன் பகுதியில் ஒரு சிறிய மறைவான இடமும் உள்ளது.</p><h2>ரேன்ஜ் விவரங்கள்:</h2><p>புதிய சிம்பிள் வேவ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 6.4kW மோட்டாரால் இயக்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் அதிகபட்ச வேகம் மணிக்கு 90 கிலோமீட்டர் வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது. வேவ் மற்றும் வேவ் பிளஸ் வேரியண்ட்களில் இந்த மோட்டார் 0-40 கிலோமீட்டர் வேகத்தை 3.3 வினாடிகளில் எட்டுகிற.</p><p>இந்து ஸ்கூட்டரின் எஸ் வேரியண்ட்டில் இதற்கு 4 வினாடிகள் ஆகிறது. இது மாறுபட்ட பேட்டரி திறன்களுடன் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும்.</p><h2>வேரியண்ட் விவரங்கள்:</h2><p>சிம்பிள் வேவ் S EBN மற்றும் S TFT வேரியண்ட் 2.2 கிலோவாட் ஹவர் மற்றும் 2.7 கிலோவாட் ஹவர் பேட்டரி ஆப்ஷன்களில் வருகிறது. இவை முறையே 110 கிலோமீட்டர் மற்றும் 132 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.</p><p>சிம்பிள் வேவ் EBN மற்றும் TFT வேரியண்ட் 3.7 கிலோவாட் ஹவர் பேட்டரி ஆப்ஷனில் வருகிறது. இவை அதிகபட்சம் 171 கிலோமீட்டர் . இவற்றுடன் வேவ் பிளஸ் மாடல் 5 கிலோவாட் ஹர் பேட்டரி ஆப்ஷனில் கிடைக்கிறது. இந்த வேரியண்ட் அதிகபட்சம் 243 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும்.</p>]]></content:encoded></item><item><title>கொளத்தூர் தொகுதியில் த.வெ.க., எம்.எல்.ஏ. வெற்றியை எதிர்த்து மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kolathur-constituency-election-case-madras-hc-dismissed-mk-stalin-petition</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kolathur-constituency-election-case-madras-hc-dismissed-mk-stalin-petition#comments</comments><guid isPermaLink="false">af5d8cf6-c067-4969-8b24-c1eb41b95dc7</guid><pubDate>Thu, 03 Sep 2026 05:20:53 +0000</pubDate><atom:updated>2026-09-03T05:20:53.204Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,தவெக,சென்னை ஐகோர்ட்,Madras HC,Kolathur Constituency,tvk,முக ஸ்டாலின்,கொளத்தூர் தொகுதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/2av3dhsc/MadrasHC.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/2av3dhsc/MadrasHC.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கொளத்தூர் தொகுதியில் த.வெ.க., எம்.எல்.ஏ. வெற்றியை எதிர்த்து மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</strong></em> </p><p>தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF">கொளத்தூர் தொகுதியில்</a> தி.மு.க., தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த தொகுதியில் த.வெ.க., சார்பில் வி.எஸ்.பாபு போட்டியிட்டு வெற்றிப்பெற்றார்.</p><h2><strong>வழக்கு தொடரவில்லை</strong></h2><p>பொதுவாக தேர்தலில் வெற்றிப் பெற்றவர்களை எதிர்த்து தேர்தல் வழக்கு, தேர்தல் முடிவு வெளியாகி 45 நாட்களுக்குள் தாக்கல் செய்யவேண்டும். ஆனால், வி.எஸ்.பாபு வெற்றியை எதிர்த்து மு.க.ஸ்டாலின் 45 நாட்களுக்குள் தேர்தல் வழக்கு தொடரவில்லை.</p><h2><strong>கோரிக்கை</strong></h2><p>இந்தநிலையில், கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்கு எந்திரங்களில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, வி.எஸ்.பாபு வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க.ஸ்டாலின்</a> தொடர்ந்தார். 45 நாட்களுக்குள் வழக்கு தாக்கல் செய்யாததற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். </p><p>இந்த வழக்கை ஐகோர்ட் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் விசாரித்து தீர்ப்புக்காக தள்ளிவைத்தனர்.</p><h2><strong>தீர்ப்பு</strong></h2><p>இந்தநிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று நீதிபதிகள் பிறப்பித்துள்ளனர். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், த.வெ.க. வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>ஒரே நாளில் 60 நிலைகள் மீது அட்டாக்.. 18 மில்லியன் பேரல் எண்ணெய்யுடன் ஹார்முஸை கடந்த 40 கப்பல்கள் - அமெரிக்கா சம்பவம் </title><link>https://www.maalaimalar.com/news/world/attacks-on-60-positions-in-a-single-day-40-tankers-carrying-18-million-barrels-of-oil-pass-through-the-strait-of-hormuz-us-reports-incident</link><comments>https://www.maalaimalar.com/news/world/attacks-on-60-positions-in-a-single-day-40-tankers-carrying-18-million-barrels-of-oil-pass-through-the-strait-of-hormuz-us-reports-incident#comments</comments><guid isPermaLink="false">f5c68d42-2392-4b12-987b-c9788a0bb13d</guid><pubDate>Thu, 03 Sep 2026 05:08:10 +0000</pubDate><atom:updated>2026-09-03T05:08:10.186Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>trump,டிரம்ப்,Iran War,ஈரான் போர்,ஹார்முஸ் ஜலசந்தி,Strait of Hormuz</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/fae4hfw0/tn-17.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஹார்முஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஹார்முஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/fae4hfw0/tn-17.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் - அமெரிக்கா இடையே மீண்டும் நேரடி தாக்குதல் தொடங்கியுள்ளது. இந்நிலையில் அமெரிக்க ராணுவம் சாதனை அளவாக ஒரே நாளில் ஹார்முஸ் ஜலசந்தியை 40 வணிக கப்பல்கள் பாதுகாப்பாக கடக்க உதவியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. </p> <h2>அமெரிக்கா நடவடிக்கை</h2><p>அமெரிக்க அதிகாரிகள் கூற்றுப்படி கடந்த செய்வ்வாய்கிழமை <a href="https://www.maalaimalar.com/news/world/marco-rubio-speaks-out-on-pm-modi-pezeshkian-meeting-regarding-aid-to-iran">ஈரானின் </a>தாக்குதல்களில் இருந்து தப்பித்து ஹார்முஸ் ஜலசந்தியை இக்கப்பல்கள் பாதுகாப்பாக கடக்க அமெரிக்க ராணுவம் உதவியுள்ளது. அந்த கப்பல்களில் மொத்தம் 18 மில்லியன் பேரல் எண்ணெய் இருந்துள்ளது.</p><p>ஈரானின் ஏவுகணைகளை தடுத்து கப்பல்கள் செல்ல உதவிய அதேநேரம், அமெரிக்க படைகள் அந்நாளில் ஹார்முஸ் ஜலசந்தியை சுற்றியுள்ள 60 ஈரான் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்கியுள்ளது.</p><p>இதற்காக அமெரிக்க வான்படை, கடற்படை உள்ளிட்டவை ஒருங்கிணைந்து செயல்பட்டுள்ளன. மேலும் தன்வசம் உள்ள விண்வெளி செயற்கைகோள் தரவுகளையும் அமெரிக்க ராணுவம் இதற்கு பயன்படுத்தியுள்ளது.</p><p>மேலும் <a href="https://www.maalaimalar.com/topic/iran-war">ஈரான் </a>துறைமுகங்களின் செயல்பாடுகளை தடுக்கும் விதமாக அமெரிக்க ராணுவம் கடல் முற்றுகையிலும் ஈடுபட்டுள்ளது.</p> <h2>ஹார்முஸ் நெருக்கடி</h2><p>போர் தொடங்குவதற்கு முன்னர் ஹார்முஸ் வழியே தினமும் 20 மில்லியன் பேரல் எண்ணெய் ஏற்றுமதியாகும். ஆனால் இப்போது அந்த வரத்து குறைந்து எண்ணெய் ஏற்றுமதி குதிரைக்கொம்பாக மாறியுள்ளது. எனவே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் உயர்ந்துள்ளன.</p><p>அமெரிக்காவின் செயல்களுக்கு பதிலடியாக அதன் ஆதரவு வளைகுடா நாடுகள் மீதான தாக்குதல்களை ஈரான் முன்னெடுத்துள்ளது. நேற்று ஈரான் வான்பரப்பில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளை தங்கள் ஏவுகணை அமைப்பு தடுத்து அழித்ததாக பஹ்ரைன் தெரிவித்துள்ளது.</p><p>இதனிடையே ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள ஈரான் நிலைகளில் வரும் நாட்களில் தாக்குதல் தீவிரப்படுத்தப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும் ஹார்முஸ் ஜலசந்திக்கு சொந்தம் கொண்டாடும் விதமாக அதன் பெயரை மாற்றும் முடிவையும் டிரம்ப் முன்மொழிந்துள்ளார்.</p> <h2>ஹார்முஸ் பதற்றம்</h2><p>ஹார்முஸில் பதற்றம் அதிகரிக்க முக்கிய காரணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">ஹார்முஸ் ஜலசந்தியை</a> சுற்றி அமைந்துள்ள ஈரான் ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதே ஆகும். </p><p>அங்கிருந்து ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டதாக கூறி அமெரிக்கா அந்த ஏவுதளங்கள் மீது தாக்குதல் நடத்தியது.</p><p>அதைத்தொடர்ந்தே ஹார்முஸ் வழியே செல்லும் அமெரிக்க ஆதரவு நாடுகளின் வணிக கப்பல்களை ஈரான் தாக்க முற்பட்டது.</p><p> அதிலிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 40 வணிக கப்பல்களை அமெரிக்கா பாதுகாத்துள்ளது தற்போது தெரியவந்துள்ள நிலையில் இனி வரும் நாட்களில் ஹார்முஸில் பதற்றம் மென்மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா- ஹாங்காங் இன்று மோதல்</title><link>https://www.maalaimalar.com/sports/womens-asia-cup-cricket-india-vs-hong-kong-clash-today</link><comments>https://www.maalaimalar.com/sports/womens-asia-cup-cricket-india-vs-hong-kong-clash-today#comments</comments><guid isPermaLink="false">8b416573-c6e7-4ef3-beef-201caa845b45</guid><pubDate>Thu, 03 Sep 2026 05:05:14 +0000</pubDate><atom:updated>2026-09-03T05:05:14.372Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா,Cricket,ஹாங்காங்,HongKong,Womens Asia Cup,பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/xbh4n0yu/ind-vs-hong.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ IND vs HONGKONG]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/xbh4n0yu/ind-vs-hong.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>8 அணிகள் இடையிலான 10-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) துபாயில் நடந்து வருகிறது.</p><p>இதில் 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்தியா தனது முதலாவது ஆட்டத்தில் தாய்லாந்தை 94 ரன்கள் வித்தியாசத்தில் பந்தாடியது.</p><p>இந்த நிலையில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது 2-வது லீக்கில் இன்று (வியாழக்கிழமை) ஹாங்காங்குடன் மோதுகிறது.</p><p>தாய்லாந்துக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட் செய்து 9 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. ஒரு விக்கெட்டுக்கு 91 ரன்களுடன் வலுவான நிலையில் இருந்த இந்திய அணிக்கு மிடில் வரிசை சொதப்பலால் ஸ்கோர் வெகுவாக குறைந்து போனது.</p><p>இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். மற்றபடி இந்தியா பலம் வாய்ந்த அணியாக திகழ்வதால், குட்டி அணியான ஹாங்காங்கை எளிதில் சுருட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இவ்விரு அணிகள் சர்வதேச 20 ஓவர் போட்டியில் நேருக்கு நேர் மோத இருப்பது இதுவே முதல் முறையாகும். இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் டென் 1, 3, 4 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.</p><p>இதற்கிடையே 'பி' பிரிவில் நேற்று நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இலங்கை, அறிமுக அணியான இந்தோனேசியாவை சந்தித்தது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை 7 விக்கெட்டுக்கு 124 ரன்களே எடுத்தது.</p><p>ஒரு கட்டத்தில் 62 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்த அந்த அணியை நிலாஸிகா சில்வா (50 ரன்), காவ்யா கவிந்தி (15 ரன்) மீட்டனர். அடுத்து 125 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்தோனேசியா 18.3 ஓவர்களில் 49 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.</p><p>இதனால், இலங்கை 75 ரன்கள் வித்தியாசத்தில் 2-வது வெற்றியை பதிவு செய்தது. இலங்கை கேப்டன் சமாரி அட்டப்பட்டு ஹாட்ரிக் சாதனையுடன் 7 விக்கெட்டுகளை அள்ளினார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழக சட்டசபையில் வினா- விடை நேரம்: உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/question-hour-in-the-tamil-nadu-legislative-assembly-ministers-reply-to-members-questions</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/question-hour-in-the-tamil-nadu-legislative-assembly-ministers-reply-to-members-questions#comments</comments><guid isPermaLink="false">1a213ab8-3251-4b06-948d-bc53595e1ba0</guid><pubDate>Thu, 03 Sep 2026 04:52:16 +0000</pubDate><atom:updated>2026-09-03T04:52:16.052Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN assembly,தமிழக சட்டசபை |</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/1bi0vo1t/assembl.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் ஆதவ் அர்ஜூனா]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ஆதவ் அர்ஜூனா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/1bi0vo1t/assembl.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>காவிரி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கப்படுமா? என்ற கேள்விக்கு, நேற்று கோரிக்கை மனு கிடைத்ததும் ஆய்வு தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையின்</a> இன்றைய நிகழ்வுகள் தொடங்கியது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். </p><p>சூலூர் மையப்பகுதியில் உயர்மட்ட பாலம் கட்ட அரசு முன்வருமா? என்று சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் எழுப்பிய கேள்விக்கு, மேம்பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு பற்றி கொள்கை ரீதியில் ஒப்புதல் பெறப்பட்டு விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார். </p><p>காவிரி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கப்படுமா? என்ற கேள்விக்கு, நேற்று கோரிக்கை மனு கிடைத்ததும் ஆய்வு தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். </p><p>மேலும், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, மாநிலம் முழுவதும் 42 இடங்களில் ரெயில்வே பாலம் கட்ட எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுகுறித்து பரிசிலீக்கப்படும். தேவையான இடங்களில் ரெயில்வே மேம்பாலங்கள், ஆற்று பாலங்கள் ரிங் சாலை போன்றவை இந்த ஆண்டுக்குள்ளேயே கட்டப்படும் என்று மேம்பாலங்கள் குறித்து பெரும்பாலான உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார். </p><p>வேதாரண்யத்தில் வேதா ஜவுளி பூங்கா முழுமை பெறுமா? மாநில அரசின் நிதியில் வேதா ஜவுளி பூங்கா முடிக்கப்படுமா? என்று அதிமுக எம்எல்ஏ ஓ.எஸ்.மணியன் எழுப்பிய கேள்விக்கு, </p><p>வேதாரண்யத்திற்காகவும் வேதா ஜவுளி பூங்கா, வேதா நிலையத்தை நினைவில் வைத்தும் வேதா ஜவுளி பூங்கா என்று வைத்தீர்கள். இதில் 40 சதவீதம் மத்திய அரசு பங்கு, 9 சதவீதம் மாநில அரசு பங்கு. தொழில் முதலீட்டாளர்கள் முழு மானியம் போட்டு தொழில் தொடங்க முடியாது என்று தெரிவித்தனர். உடனடியாக டெல்லி சென்று மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தோம். அவர்களும் பரிசீலனை செய்வதாக தெரிவித்துள்ளார்கள். நீங்களும் கூட்டணியில் உள்ளீர்கள். நீங்களும் முயற்சி செய்தால் இணைந்து இந்த திட்டத்தை நிறைவேற்றி விடலாம் என்று அமைச்சர் விஜய் பாலாஜி தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>நெட்ப்ளிக்ஸ்-இல் மாஸ் காட்டிய ஜி.டி.ஏ. 6 எக்ஸ்டெண்டட் லுக் - டாப் 10-இல் முதலிடம் பிடித்து அசத்தல்</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/grand-theft-auto-6-extended-look-tops-netflixs-top-10-list</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/grand-theft-auto-6-extended-look-tops-netflixs-top-10-list#comments</comments><guid isPermaLink="false">f8c6f68a-b8d1-4d76-b77a-8a24ed00c808</guid><pubDate>Thu, 03 Sep 2026 04:41:00 +0000</pubDate><atom:updated>2026-09-03T04:41:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Netflix,நெட்ப்ளிக்ஸ்,ஜிடிஏ 6,Grand Theft Auto 6,கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ 6,GTA 6 Extended Look</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/thtg54te/GTA-6-Extended-Look-Poster.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ GTA 6 Extended Look Poster]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/thtg54te/GTA-6-Extended-Look-Poster.png?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ 6: எக்ஸ்டெண்டட் லுக், இந்த வாரம் 31.1 மில்லியன் பார்வைகளுடன் <a href="https://www.maalaimalar.com/topic/netflix">நெட்ப்ளிக்ஸ்</a> ஆங்கிலத் திரைப்படங்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. </p><p>ஆகஸ்ட் 27-ஆம் தேதியன்று இந்த ஸ்ட்ரீமிங் தளத்தில் வெளியான <a href="https://www.maalaimalar.com/topic/gta-6">ஜிடிஏ 6</a> கேம்பிளே காட்சிப்படுத்தல், உலகளவில் கண்காணிக்கப்பட்ட 93 நாடுகளில் 87 நாடுகளில் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படமாக இருந்தது.</p><h2>நெட்ப்ளிக்ஸ் டாப் 10 பட்டியல்:</h2><p>ஜி.டி.ஏ. 6-இன் எக்ஸ்டெண்டட் லுக் டிரெய்லர், ஆகஸ்ட் 24 முதல் ஆகஸ்ட் 30 வரையிலான வாரத்தில், வெறும் நான்கு நாட்களில் 31.1 மில்லியன் பார்வைகளை எட்டி, நெட்ப்ளிக்ஸ்-இன் உலகளாவிய ஆங்கில திரைப்படப் பட்டியலில் முதலிடம் பிடித்தது. நெட்ப்ளிக்ஸ்-இன் கூற்றுப்படி, இந்த விளையாட்டின் 27 நிமிட நீட்டிக்கப்பட்ட முன்னோட்டம் 14,000,000 மணிநேரம் பார்க்கப்பட்டுள்ளது.</p><p>ஜி.டி.ஏ. 6 எக்ஸ்டெ்டட் லுக் வெறும் ஆறு மணி நேரத்திற்கு மட்டுமே நெட்ப்ளிக்ஸ்-இல் பிரத்தியேகமாக கிடைத்தது என்பதை கருத்தில் கொள்ளும்போது, ​​இந்த சாதனை இன்னும் வியக்கத்தக்கதாக அமைகிறது. அதன் விளையாட்டுக்காட்சி அதே நாளில் யூடியூபில் வெளியானது. இருப்பினும், அது முதலில் நெட்ப்ளிக்ஸ் பயனர்களுக்கு மட்டுமே கிடைத்தது.</p><h2>டாப் 3 திரைப்படங்கள்:</h2><p>நெட்ப்ளிக்ஸ்-இன் ஆங்கிலத் திரைப்படங்கள் பட்டியலில், குற்றத் திரில்லர் திரைப்படமான 'தி விஸ்பர் மேன்' மற்றும் திகில் திரைப்படமான 'தி லாஸ்ட் ஹவுஸ்' முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தன.</p><p>வரவிருக்கும் GTA 6 விளையாட்டின் விளையாட்டு முறையை வெளிப்படுத்திய தொடர்ச்சியான கசிவுகளை தொடர்ந்து, 'கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ 6 : எக்ஸ்டெண்டட் லுக்' ஆகஸ்ட் 27 அன்று நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது.</p><p>நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியான அதிகாரப்பூர்வ முன்னோட்டத்தில், ஜிடிஏ 6 விளையாட்டின் 27 நிமிட முழுமையான விளையாட்டு காட்சிகள் எந்தவித வர்ணனையுமின்றி இடம்பெற்றிருந்தன. அந்த டிரெய்லரில், கதாநாயகர்களான ஜேசன் மற்றும் லூசியா குற்றச் செயல்கள், பணிகள், கொள்ளைகள் மற்றும் பலவற்றில் ஈடுபடுவது காட்டப்பட்டது.</p><p>ஜி.டி.ஏ. 6 எக்ஸ்டெ்டட் லுக் இப்போது ராக்ஸ்டார் கேம்ஸ்-இன் யூடியூப் சேனல் மற்றும், ஜி.டி.ஏ. 6 இணையதளத்தில் பார்க்கலாம். கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ 6, நவம்பர் 19-ஆம் தேதியன்று PS5 மற்றும் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் S/X-ல் வெளியிடப்படும்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY : ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை- சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்து அதிர்ச்சி</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-03-09-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-03-09-2026#comments</comments><guid isPermaLink="false">1e3692d0-8d0b-4921-bab3-7289f31facc8</guid><pubDate>Thu, 03 Sep 2026 04:34:10 +0000</pubDate><atom:updated>2026-09-03T04:34:10.751Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/2hr3r03d/gold07.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ தங்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/2hr3r03d/gold07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">தங்கம்</a> விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் தங்கம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 175-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 400-க்கும் விற்பனையானது. இதனை தொடர்ந்து நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.225 குறைந்து, ரூ.13 ஆயிரத்து 950-க்கும், சவரனுக்கு ரூ.1,800 சரிந்து ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 600-க்கும் விற்றது.</p><h2><strong>அதிரடி உயர்வு</strong></h2><p>இந்த நிலையில் இன்று <a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/hallmarking-silver-jewellery-may-become-mandatory-from-october">தங்கம்</a> விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு 290 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 240 ரூபாய்க்கும் சவரனுக்கு 2,320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><h2><strong>வெள்ளி விலை உயர்வு</strong></h2><p>தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது. </p><h2><strong>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்</strong></h2><p>02-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,600</p><p>01-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,400</p><p>31-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,960</p><p>30-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,040</p><p>29-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,040</p><h2><strong>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>02-08-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>01-09-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>31-08-2026- ஒரு கிராம் ரூ.260</p><p>30-08-2026- ஒரு கிராம் ரூ.260</p><p>29-08-2026- ஒரு கிராம் ரூ.260</p>]]></content:encoded></item><item><title>பழிவாங்குறாங்க.. வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் - பஞ்சாப் அரசு மீது ராகவ் சதா பாய்ச்சல்</title><link>https://www.maalaimalar.com/news/national/controversy-over-names-removed-from-punjab-voters-list-raghav-chadha-levels-allegations-against-the-aam-aadmi-government</link><comments>https://www.maalaimalar.com/news/national/controversy-over-names-removed-from-punjab-voters-list-raghav-chadha-levels-allegations-against-the-aam-aadmi-government#comments</comments><guid isPermaLink="false">f319897b-7420-4050-95d8-7827896cc1a2</guid><pubDate>Thu, 03 Sep 2026 04:25:55 +0000</pubDate><atom:updated>2026-09-03T04:25:55.049Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sir,எஸ்ஐஆர்,பஞ்சாப்,Punjab,ஆம் ஆத்மி,Raghav Chadha,ராகவ் சதா,Aam Aadmi</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/vm8gibkb/tn-16.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராகவ் சதா ]]></media:title><media:description type="html"><![CDATA[ ராகவ் சதா ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/vm8gibkb/tn-16.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாஜக மாநிலங்களவை எம்.பி ராகவ் சதா பெயர் பஞ்சாப் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. </p><p>கடந்த ஏப்ரலில் ஆம் ஆத்மியில் இருந்து பாஜகவுக்கு தாவியவர் மாநிலங்களவை எம்.பி ராகவ் சதா. பஞ்சாபை சேர்ந்தவர் இவர்.</p><p>அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று வரும் நிலையில்<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BE"> ராகவ் சதாவின் </a>பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்படுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. </p> <h2>ராகவ் சதா தாவல்</h2><p>2022 இல் ஆம் ஆத்மி சார்பில் பஞ்சாபில் இருந்து மாநிலங்களவைக்கு ராகவ் சதா தேர்ந்தெடுக்கப்பட்டார்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/aam-aadmi">ஆம் ஆத்மியில்</a> இருந்தபோது ராகவ் சதா கட்சியின் நிலைப்பாட்டை அவையில் எதிரொலிக்கவில்லை என கூறி அவரின் மாநிலங்களவை எம்.பிக்கள் குழு துணை தலைவர் பதவியை பறித்தது ஆம் ஆத்மி.</p><p>எனவே அதிருப்தி அடைந்த அவரும் ஸ்வாதி மலிவால் உள்ளிட்ட மேலும் 6 ஆம் ஆத்மி அதிருப்தி எம்பிக்களும் பாஜகவில் இணைந்தனர்.</p><p>ஒரு காலத்தில் பிரதமர் மோடி மற்றும் பாஜகவை தீவிரமாக விமர்சித்து வந்த ராகவ் சதா தற்போது தலைகீழாக ஆதரித்து வருகிறார்.</p><h2>பெயர் நீக்கம்</h2><p>பஞ்சாபில் வாக்களர் பட்டியல் தீவிர திருத்த பணி நடந்து வரும் சூழலில், அவர் பஞ்சாபில் இருந்து நிரந்தரமாக குடிபெயர்ந்து சென்றுவிட்டதாக கூறி அவரின் பெயரானது நீக்கப்பட்டுள்ளது</p><p>கடந்த ஆகஸ்ட் 13 வெளியான வரைவு பட்டியலில் இடம்பெயர்ந்தவர்கள் லிஸ்டில் அவர் பெயர் உள்ளது. நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர் என அவரின் பெயர் நீக்கத்திற்கு காரணம் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>அவருடன் 20.66 லட்சம் பேரின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து சிறப்பு தீவிர திருத்தம் மூலம் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இது பஞ்சாப் மொத்தம் வாக்காளர்கள் சதவீதத்தில் 9.7 சதவீதம் ஆகும்.</p><h2>ராகவ் சதா குற்றச்சாட்டு</h2><p>பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி அரசு நடந்து வரும் நிலையில் வரைவு பட்டியலில் தனது பெயர் நீக்கப்பட்டதற்கு ஆம் ஆத்மி மீது ராகவ் சதா குற்றம்சாட்டியுள்ளார்.</p><p>இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட ராகவ் சதா, "இது சாதராண அலுவல் பிழையாக தெரியவில்லை. இது அரசியல் பழிவாங்கல். </p><p>ஊழல் நிறைந்த ஆம் ஆத்மியில் இருந்து நான் விலகியதில் இருந்தே என்மீது அதன் தலைமை ஆத்திரத்தால் வயிறெரிந்துகொண்டிருக்கிறது. </p><p>கட்சியில் இருந்து விலகியவர்களை பழிவாங்க தனக்கு இருக்கும் மாநில அரசு நிர்வாக அதிகாரத்தை ஆம் ஆத்மி பயன்படுத்தி வருகிறது" என குற்றம்சாட்டியுள்ளார்.</p><p>தனது பெயர் பஞ்சாபின் மொஹாலி தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்ததாவும், மக்கள் பிரதிநிதிகளுக்கு எஸ்ஐஆர் விதிமுறைகளில் வழங்கப்பட்டிருந்த சிறப்பு பாதுகாப்பு மீறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p> <p>இது வரைவு பட்டியல் மட்டுமே ஆகும். இதில் ஆட்சேபனை தெரிவிக்க செப்டம்பர் 12 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த தவறை சரிசெய்ய ஆவன செய்ய உள்ளதாக ராகவ் சதா மேலும் தெரிவித்துள்ளார்.</p><p>அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ள பஞ்சாபில் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும்.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவில் மிவி நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் - பெயர் மற்றும் சிப்செட் விவரங்கள் வெளியீடு</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/mivi-one-5g-confirmed-as-companys-first-smartphone-in-india</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/mivi-one-5g-confirmed-as-companys-first-smartphone-in-india#comments</comments><guid isPermaLink="false">62e1fff5-f31b-4eb3-a9a0-7667ebffa5d0</guid><pubDate>Thu, 03 Sep 2026 03:34:00 +0000</pubDate><atom:updated>2026-09-03T03:34:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>smartphone,Mivi,மிவி,ஸ்மார்ட்போன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/ycqfu1mq/Mivi-One-5G.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mivi One 5G]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/ycqfu1mq/Mivi-One-5G.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மிவி நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்போனின் டீசர்களை வெளியிட தொடங்கியது. அந்த வகையில், மிவி நிறுவனத்தின் முதல் <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மார்ட்போன்</a> ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர மிவி நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் 'மிவி ஒன் 5ஜி' என்ற பெயரில் அழைக்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. </p><p>பெயர் மட்டுமின்றி புதிய ஸ்மார்ட்போனில் வழங்கப்பட உள்ள சிப்செட் பற்றிய விவரங்களையும் மிவி நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது. இதற்காக அந்நிறுவனம் டீசர் வெளியிட்டுள்ளது. மேலும், இதுபற்றிய தகவல் <a href="https://www.maalaimalar.com/topic/flipkart">ப்ளிப்கார்ட்</a> தளத்தில் உருவாக்கப்பட்டு இருக்கும் பிரத்யேக வலைப்பக்கத்திலும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.</p><h2>விரைவில் இந்திய வெளியீடு:</h2><p>ப்ளிப்கார்ட் தளத்தின் மைக்ரோசைட் விவரங்களின் படிி மிவி ஒன் 5ஜி மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்த ஸ்மார்ட்போன் 5ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் என்றும் இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 5ஜி சிப்செட் வழங்குவதும் உறுதியாகி உள்ளது.</p><p>இவற்றுடன் புதிய மிவி ஒன் 5ஜி மாடல் கிரீன் நிறம் கொண்டிருப்பதும் இதன் வளைந்த கார்னர்களை கொண்டிருப்பதும் உறுதியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் டீசர்களில் “Pretty Powerful” எனும் டேக்லைன் வருகிறது. அந்த வகையில், வரும் நாட்களில் இந்த ஸ்மார்ட்போனின் இதர விவரங்களை மிவி நிறுவனம் வெளியிடும் என்று எதிர்பார்க்கலாம்.</p><h2>விலை விவரங்கள்:</h2><p>சமீபத்தில் வெளியான தகவல்களின் படி மிவி ஒன் 5ஜி மமாடலின் விலை இந்திய சந்தையில் ரூ. 15,000-க்கும் குறைவாகவே தொடங்கும் என்று கூறப்பட்டது. எனினும், இந்த மாடல் அறிமுகமாகும் போது தான் இதன் சரியான விலை பற்றிய விவரங்கள் வெளியாகும்.</p><p>மிவி நிறுவனம் ஏற்கனவே இயர்போன், சவுண்ட்பார், ப்ளூடூத் ஸ்பீக்கர், ஹோம் தியேட்டர் சிஸ்டம் உள்ளிட்ட சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில், மிவி நிறுவனத்தின் புதிய ஒன் 5ஜி அந்நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் மாடலாக அறிமுகம் செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>வந்தே பாரத், வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில ரெயில்கள் தாமதம்: தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/southern-railway-announced-some-trains-including-the-vande-bharat-and-vaigai-express-are-delayed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/southern-railway-announced-some-trains-including-the-vande-bharat-and-vaigai-express-are-delayed#comments</comments><guid isPermaLink="false">7614e0d9-2d59-4123-b6e9-a68f29a23ce5</guid><pubDate>Thu, 03 Sep 2026 03:18:52 +0000</pubDate><atom:updated>2026-09-03T03:18:52.513Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Southern Railway,Express trains,தெற்கு ரெயில்வே,எக்ஸ்பிரஸ் ரெயில்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/a8lyhohr/train01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ ரெயில்]]></media:title><media:description type="html"><![CDATA[ ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/a8lyhohr/train01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள பேரணி பணிமனையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் சில ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தெற்கு-ரெயில்வே">தெற்கு ரெயில்வே</a> வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள பேரணி பணிமனையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் சில ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-</p><p>* எழும்பூரில் இருந்து இன்று (3-ந்தேதி), நாளை (4-ந்தேதி), நாளை மறுநாள் (5-ந்தேதி) ஆகிய தேதிகளில் மாலை 3.10 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.20665), 20 நிமிடம் தாமதமாக நெல்லை சென்றடையும்.</p><p>* எழும்பூரில் இருந்து இன்று (3-ந்தேதி), நாளை (4-ந்தேதி), நாளை மறுநாள் (5-ந்தேதி) ஆகிய தேதிகளில் மதியம் 1.15 மணிக்கு புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் (12635), 1 மணி நேரம் 50 நிமிடம் தாமதமாக மதுரை சென்றடையும்.</p><p>* தாம்பரத்தில் இருந்து இன்று (3-ந்தேதி) மதியம் 2 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06109), 1 மணி நேரம் 30 நிமிடம் தாமதமாக திருவனந்தபுரம் சென்ட்ரல் சென்றடையும்.</p><p>* தாம்பரத்தில் இருந்து நாளை (4-ந்தேதி) இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06059), 1 மணி நேரம் 30 நிமிடம் தாமதமாக போடிநாயக்கனூர் சென்றடையும்.</p><p>* புதுச்சேரியில் இருந்து நாளை (4-ந்தேதி) மற்றும் 6 ஆகிய தேதிகளில் மதியம் 12.45 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (17654), 2 மணி நேரம் 20 நிமிடம் தாமதமாக தெலுங்கானா மாநிலம் காச்சிகுடா சென்றடையும்.</p><p>* புதுச்சேரியில் இருந்து வருகிற 6-ந்தேதி மதியம் 2.20 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில் (16112), 30 நிமிடம் தாமதமாக திருப்பதி சென்றடையும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அறம், கடமை, பக்தி... உயர்ந்த தத்துவங்களை உணர்த்தும் கிருஷ்ணர் அவதாரம்
</title><link>https://www.maalaimalar.com/spirituality/krishna-jayanthi-worship-4</link><comments>https://www.maalaimalar.com/spirituality/krishna-jayanthi-worship-4#comments</comments><guid isPermaLink="false">68aa93cb-ffe4-4e09-a526-5bc90e2742a1</guid><pubDate>Thu, 03 Sep 2026 03:18:08 +0000</pubDate><atom:updated>2026-09-03T03:18:08.158Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,வழிபாடு,கிருஷ்ணர்,worship,கிருஷ்ண ஜெயந்தி,krishna jayanthi,krishnar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/hhhk9tmm/krishnar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ krishna jayanthi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/hhhk9tmm/krishnar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>கிருஷ்ணர் அவதாரம்</h2><p>உலகில் அநீதி தலைதூக்கும் போதெல்லாம், தர்மத்தை நிலைநாட்ட இறைவன் பூமியில் அவதரிப்பான் என்பது பகவத்கீதையின் உபதேசம் ஆகும். அதன்படி, திருமாலின் அவதாரமான கிருஷ்ணரின் வாழ்க்கை, மக்களின் மனதை மிகவும் கவர்ந்த ஒன்றாகும். தெய்வீக குணங்கள் முழுமையாக வெளிப்பட்ட அவதாரம் என்பதால், கிருஷ்ணரின் அவதாரம் 'பூர்ணவதாரம்' (முழுமையான அவதாரம்) என்று கருதப்படுகிறது.</p> <h2>கோகுலாஷ்டமி</h2><p>கிருஷ்ணரின் அவதாரம், மனித குலத்திற்கு வாழ்வியல் நெறிகளையும், அறம், கடமை, பக்தி ஆகியவற்றின் உயர்ந்த தத்துவங்களையும் உணர்த்துகிறது. இத்தகைய மகத்தான கீதோபதேசத்தை வழங்கிய கண்ணனின் பிறப்பைத் தான் பக்தர்கள் கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி எனப் பல பெயர்களில் உலகெங்கும் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர். </p> <h2>தேவகி - வசுதேவர்</h2><p>ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் இணைந்த தினத்தில், நள்ளிரவு வேளையில் மதுரா நகரச் சிறைச்சாலையில் தேவகி - வசுதேவரின் எட்டாவது மகனாக கிருஷ்ணர் அவதரித்தார். கொடுங்கோலன் கம்சனை வதம் செய்து, உலகில் தர்மத்தை நிலைநாட்டுவதற்காக திருமால் கண்ணனாக அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன.</p> <h2>நந்தகோபர் - யசோதை</h2><p>கண்ணன் பிறந்ததும், தந்தையான வசு தேவர் அவரை தலையில் சுமந்தபடி, நள்ளிரவில் கொட்டிய பெருமழையையும் பொருட்படுத்தாமல் யமுனை நதியைக் கடந்து ஆயர்பாடியில் உள்ள நந்தகோபர் -யசோதையின் இல்லத்தில் சேர்த்தார். அங்கு வளர்ந்த பாலகிருஷ்ணர், தனது பிஞ்சுப் பருவத்திலேயே எண்ணற்ற லீலைகளைப் புரிந்து அனைவரது உள்ளங்களையும் கொள்ளைக்கொண்டார்.</p> <h2>குழந்தைப் பருவம் </h2><p>கிருஷ்ணரின் வசீகரமான புல்லாங்குழல் இசையால் மனிதர்கள் மட்டுமின்றி, விலங்குகளும் ஈர்க்கப்பட்டன. வெண்ணெய் திருடி உண்பது, ஆயர்குலச் சிறுவர்களுடன் விளையாடியது என அவரது குழந்தைப் பருவம் குறும்புதனங்கள் நிறைந்தவை. அதேவேளையில், தன்னை அழிக்க வந்த பல்வேறு அசுரர்களை அழித்து மக்களைக் காத்தார்.</p> <h2>கோபமுற்ற இந்திரன்</h2><p>கிருஷ்ணரின் வேண்டுகோளின் படி, தனக்குச் செய்யவேண்டிய வழிபாடு மறுக்கப்பட்டதால், கோபமுற்ற இந்திரன் கோகுலத்தில் பெருமழையைப் பொழிவித்தபோது, கிருஷ்ணன் கோவர்தன மலையை தன் சுண்டு விரலால் குடை போலத் தூக்கி, மக்களை பாதுகாத்தார். பின்னர் மதுராவுக்குச் சென்று கம்சனை வதம் செய்து, தர்மத்தை நிலைநாட்டினார். இவ்வாறு குழந்தைப் பருவத்திலேயே தமது தெய்வீக ஆற்றலால் உலகைக் காத்த கண்ணன், பக்தர்களின் உள்ளங்களில் என்றும் நீங்காத இடம் பிடித்த இறைவனாகத் திகழ்கிறார்.</p> <h2>கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு</h2><p>கிருஷ்ண ஜெயந்தி நாளில், கிருஷ்ணர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகளும், பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். வீட்டின் நுழைவாசலில் இருந்து பூஜை அறை வரை அரிசி மாவினால் குழந்தை கிருஷ்ணரின் திருவடிகளை வரைந்து, "கண்ணன் நம் வீட்டிற்குள் எழுந்தருளுகிறார்” என்ற நம்பிக்கையுடன் அவரை வரவேற்பார்கள். வீடுகளையும், பூஜை அறைகளையும் மலர்கள் மற்றும் மாவிலைத் தோரணங்களால் அழகுபடுத்தி, கிருஷ்ணரின் திருவுருவத்துக்கு புத்தாடை அணிவித்து, நெற்றியில் திலகம் சாற்றி வழிபடுவர்.</p> <h2>நைவேத்தியங்கள்</h2><p>கண்ணனுக்கு உகந்ததாகக் கருதப்படும் வெண்ணெய், தயிர், அவல், சீடை, முறுக்கு, அப்பம், நாவல் பழம் உள்பட பல்வேறு நைவேத்தியங்களைப் படைத்து சிறப்பு பூஜைகள் செய்வார்கள். கோவில்களில் உறியடித் திருவிழாவும், வழுக்கு மரம் ஏறுதல் போன்ற போட்டிகளும் மிகுந்த உற்சாகத்துடன் நடத்தப்படும். குழந்தைகள், கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமணிந்து கண்ணனின் லீலைகளை நினைவூட்டும் வகையில் மகிழ்ச்சியாக உலா வருவர்.</p><p>மேலும், சில பகுதிகளில் உயரத்தில் கட்டப்பட்ட தயிர்க்குடத்தை இளைஞர்கள் குழுவாகச் சேர்ந்து உடைக்கும் 'தஹி ஹண்டி விழாவும் களைகட்டும். இவ்வாறு பக்தி, மகிழ்ச்சி, பாரம்பரியம் ஆகியவை ஒன்றிணைந்து, கிருஷ்ண ஜெயந்தி விழாவைச் சிறப்பிக்கின்றன.</p> <h2>கண்ணனின் திருவடி</h2><p>கிருஷ்ண ஜெயந்தி என்பது ஒரு அவதாரத்தின் பிறப்பைக் கொண்டாடும் விழா மட்டுமல்ல; அன்பு, பக்தி, தர்மம், கடமை ஆகியவற்றை நம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை நினைவூட்டும் புனித நாளாகும். தர்மத்தின் வழிகாட்டியாக விளங்கிய கண்ணனின் திருவடிகளைப் போற்றி, அவரது அருளையும் நல்லெண்ணத்தையும் நம் வாழ்வில் வளர்ப்போம்.</p>]]></content:encoded></item></channel></rss>