<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 21 Aug 2026 14:30:46 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: 2026 தேர்தல் சூரசம்ஹாரம் போன்றது- முதலமைச்சர் விஜயை மேற்கோள் காட்டி விளக்கிய அமைச்சர் ரமேஷ்- 21 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-21-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-21-august-2026#comments</comments><guid isPermaLink="false">ac47dc11-4fb4-4fd1-9107-7bf9bddc91e2</guid><pubDate>Fri, 21 Aug 2026 03:54:46 +0000</pubDate><atom:updated>2026-08-21T11:53:29.931Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/h2dj8zu4/ramesh.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/h2dj8zu4/ramesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த 5 ஆண்டுகளில் மின்சார உற்பத்திக்கு புதிய திட்டங்கள் கொண்டு வரப்படவில்லை என அமைச்சர் நிர்மல்குமார் குற்றம்சாட்டினார்.</p><p>ரூ.8 லட்சம் மின்மாற்றியை ரூ.13 லட்சத்திற்கு வாங்கியது ஏன்? என கேள்வி எழுப்பினார்.</p><p>மின்துறை அமைச்சர் நிர்மல்குமாரின் புகார்கள், குற்றச்சாட்டுக்கு செந்தில் பாலாஜி விளக்கம்.</p><p>திமுக ஆட்சியில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டதற்கு தவெக அரசின் வெள்றை அறிக்கையே சாட்சி.</p><p>மின்சார துறையில் சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டது.</p><p>திமுக ஆட்சியில் புதிய மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன என்றார்.</p><p>சட்டசபையில் மின்துறை சார்ந்த அறிவிப்புகளை அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட்டார்.</p><p>ஆரம்பநிலை பணிகளை உடனடியாக மேற்கொள்ளும் வகையில் 10,000 பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.</p><p>புதிய மின் இணைப்பு கோரும் வீட்டு விண்ணப்பதாரர்களுக்கான நடைமுறை எளிதாக்கப்படும்.</p><p>50,000 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கப்படும்.</p><p>சென்னை பகுதியில் உள்ள துணை மின் நிலையங்களில் கூடுதல் மின்னூட்டிகள் அமைக்கப்படும்.</p><p>அதிக சுமை உள்ள துணை மின் நிலையங்களில் மின்மாற்றிகளின் திறன் உயர்த்தப்படும்.</p><h2>அமைச்சர் ரமேஷ்: </h2><p>திமுக ஆட்சியில் அறநிலையத்துறையில் செய்யப்பட்ட ஊழல்களை ஆதாரத்துடன் எடுத்து வைத்துள்ளோம். அதை விரைவில் வெளியிடுவோம்.</p><h2>திமுக எம்எல்ஏ சேகர் பாபு: </h2><p>'சிவன் சொத்து குல நாசம்' என்பதை உணர்ந்தவன் நான். ஆதாரத்தோடு எந்த குற்றச்சாட்டை சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.</p><p>மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு அமைச்சர் அருண் ராஜ் பதிலுரை வழங்கினார்.</p><p>மக்கள் நல்வாழ்வு துறை மூலம் எப்படி தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்கு தங்கம் வாங்க முடியும் என்று கேட்டார்கள். கடந்த அதிமுக, திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கான பெட்டகங்கள் மருத்துவ கழகம் மூலமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவ கழகம் மூலம் மருந்துகள், மருத்துவ கருவிகள் அல்லாத பொருள்களையும் வாங்க முடியும்</p><p>திருப்போரூர் அருள்மிகு கந்தசாமி திருக்கோவிலில் ரூ.2 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.</p><p>1000 ஆண்டுகள் பழமையான 64 கோவில்களில் ரூ.125 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.</p><p>சர்வதேச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்களுடன் கூடிய பாதுகாப்பு திறனாளர்களை உருவாக்கும் பயிற்சி வழங்கப்படும். உயர் மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்று வரும் மாணவர்களுக்கு தொழிற்துறை சார்ந்த சான்றிதழ் பயிற்சிகள் வழங்கப்படும்.</p><p>வெற்றி திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு ஐஐடி மெட்ராஸ் மூலம் சிறப்பு திறன் பயிற்சிகள் வழங்கப்படும்- அமைச்சர் ரமேஷ்.</p><p>சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோவிலில் ரூ.5 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும.</p><p>சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டப்படும்.</p><p>9 திருக்கோயில்களில் ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் புதிய அன்னதானக் கூடங்கள் கட்டப்படும்.- அமைச்சர் ரமேஷ்.</p><h2>அறநிலையத்துறை- புதிய அறிவிப்புகள்</h2><p>152 திருக்கோவில்களில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.</p><p>குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் முடி காணிக்கை மண்டபம் கட்டப்படும்.</p><p>3 கோவில்களில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிய பொங்கல் மண்டபங்கள் அமைக்கப்படும்.</p><p>சட்டசபையில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:- </p><p>திமுக ஆட்சியில் அறநிலையத்துறை சார்பில் 10 கல்லூரிகள் கட்டப்படும் என அறிவித்து, அதில் 4 கல்லூரிகளைத் திறந்துவைத்தோம்</p><p>கோவில் பணத்தில் கல்லூரிகள் கட்டக்கூடாது என வழக்குத் தொடர்ந்து தடுக்க நினைத்தவர்களின் எண்ணம் முறியடிக்கப்பட்டு, 4 கல்லூரிகளைக் கட்டி முடித்துள்ளோம்; மீதமுள்ள கல்லூரிகளையும் கட்டி முடிக்க த.வெ.க. அரசு நடவடிக்கை எடுக்குமா?.</p><p>2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் சூரசம்ஹாரம் போன்றது என சட்டசபையில் அமைச்சர் ரமேஷ் பேசினார். முதலமைச்சர் விஜய் வேலேந்தி, சூரனை வீழ்த்தினார்.</p><p>பெரியாரின் பேரனாக முதலமைச்சர் விஜய் ஆட்சி நடத்தி வருவதாக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் புகழாரம்.</p><p>அண்ணாவின் தம்பிகள் போல இன்று அண்ணனின் தம்பிகளாக தவெக எம்எல்ஏக்கள் செயல்பட்டு வருகின்றனர்.</p><p>சாதி, மத அரசியலை வீழ்த்தி எங்களுடைய வேலன் ஜனநாயகத்தின் ஆட்சியை நடத்தி வருகிறார்.</p><p>முதலமைச்சர் விஜயின் அழகிய முகத்தைப் பார்க்க பேரவையில் தனி SCREEN வைக்க வேண்டும் என சபாநாயகரிடம் தவெக எம்.எல்.ஏ. விஜய் அன்பன் கல்லாணை கோரிக்கை வைத்துள்ளார்.</p><p>"எதிர்க்கட்சிகள் தன் அரசைப் பற்றி விமர்சித்தாலும் அதில் காமெடி இருந்தால் குலுங்கி குலுங்கி சிரிக்கும் தலைவன்" என புகழாரம்.</p><p>கருகிய 1 லட்சம் ஏக்கல் குறுவை பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அறநிலையத்துறைக்கு என தேசிய அளவில் பொதுச்சட்டம் இல்லை.</p><p>இனாம் ஒழிப்பு சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். இனாம் நிலங்கள் கோவில் நிலங்கள் அல்ல - அதிமுக எம்எல்ஏ ஓ.எஸ்.மணியன்</p><h2>அதிமுக ஓ.எஸ்.மணியன் உரை</h2><p>அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் தரப்பட்டது.</p><p>தவெக ஆட்சியில் மும்முனை மின்சாரம் வழங்கப்படவில்லை.</p><p>எப்போது தவெக அரசு மேட்டூர் அணையை திறக்கும்?</p><p>மாதாந்திர மின் கணக்கீடு எப்போது தொடங்கும்?</p><p>சவுக்கு உள்ளிட்ட மரங்கள், பயிர்கள் கருகி விட்டன.</p><p>844 அறிவிப்புகளை தந்த சேகர்பாபு 79 அறிவிப்புகளுக்கான பணியை தொடங்கவில்லை - அமைச்சர் ரமேஷ்</p><p>106 அறிவிப்புகளை எத்தனை ஆண்டுகளில் நிறைவேற்றுவீர்கள் என பார்ப்போம்.</p><p>எங்களுக்கு இடைவேளை முடிந்து தொடர் வேலை வரும், மீண்டு வருவோம் - சேகர்பாபு</p><h2>சேகர்பாபு உரை</h2><p>கடந்த ஆட்சியில் அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட கல்லூரிகள் இந்த ஆட்சியில் கட்டப்படுமா?</p><p>திமுக ஆட்சியில் 4,641 கோவில்களில் குடமுழுக்கு நடத்தினோம்.</p><p>திமுக ஆட்சியில் ரூ.2,000 கோடி உபயதாரர் நிதி வந்தது. அன்னதான திட்டத்திற்கு ரூ.300 கோடி அளவுக்கு நிதியை பெற்றோம்.</p><p>திமுக ஆட்சியில் திருக்கோவில்களுக்கான நிதி அதிகரித்து வழங்கப்பட்டது.</p><p>ஒருகால பூஜை அர்ச்சகர் பிள்ளைகள் 2,000 பேருக்கு மாதம் ரூ.10,000 கல்வி நிதி தந்தோம்.</p><p>கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த சேகர்பாபு வெளியிட்ட அறிவிப்புகளில் பல தொடங்கப்படவில்லை.</p><p>நிதிநிலை கருத்தில் கொண்டு எண்ணிக்கையை உயர்த்தி கூறாமல் என்ன செய்ய முடியுமோ அவற்றை கூறி உள்ளோம் - அமைச்சர் ரமேஷ்</p><p>மக்களுக்கு பயன்படாத திட்டங்களை தான் ரத்து செய்தோம், தேவையற்றதை தான் தடுத்து நிறுத்தினோம் - அமைச்சர் ரமேஷ்</p><p>மக்கள் நலப்பணிக்கு விடப்பட்ட டெண்டரை தான் தவெக அரசு ரத்து செய்துள்ளது. அதை மக்கள் பார்த்து கொள்வர் - சேகர்பாபு</p><p>இறைவனுக்கு வந்த சோதனையாக கருதி என் உரையை தொடங்குகிறேன்- சேகர்பாபு</p><p>உள்ளாட்சி அமைப்புகளில் கூடுதல் பிரதிநிதிகளை மக்கள் கேட்கிறார்களா?</p><p>தொகுதி மறுவரையறையில் விசிக முதலில் ஒரு நிலைப்பாடு தற்போது வேறு நிலைப்பாடு  - பாமக எம்எல்ஏ கணேஷ்குமார்</p><p>யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் பாமகவுக்கு இல்லை - பாமக எம்எல்ஏ கணேஷ்குமார்</p><p>அன்புமணியை காப்பாற்றுவதை விட மோடியை காப்பாற்றும் நோக்கில் பாமக எம்எல்ஏ செயல்படுகிறார் - அமைச்சர் வன்னிஅரசு</p><p>50 சதவீதம் எம்பிக்கள் எண்ணிக்கை உயர்வு என்பதையும் திமுக எதிர்க்க வேண்டும்.</p><p>மாநில கோரிக்கை என்று வரும்போது திமுக, காங்கிரஸ், விசிக என எல்லோரும் ஒன்றிணைந்து எதிர்த்து நிற்க வேண்டும் - ஆதவ் அர்ஜூனா</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உரை</h2><p>எம்பி, எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை உயர்த்துவது தீர்வு அல்ல.</p><p>தமிழ்நாடு கேட்காமலேயே மத்திய அரசு ஏன் 50% எம்பிக்களின் எண்ணிக்கையை உயர்த்துகிறது? </p><p>12 வருடங்களாக தமிழ்நாட்டிற்கு எதிராகவே மத்திய அரசு சட்டங்களை கொண்டு வருகிறது.</p><p>தமிழ்நாட்டிற்கு எதிரான சட்டங்களை திமுக எதிர்த்தது.</p><p>தொகுதி மறுவரையறை தொடர்பாக பாமக எம்எல்ஏ பேசியதை எதிர்த்து அமைச்சர் வன்னிஅரசு பேசிய நிலையில் சட்டசபையில் அமளி.</p><h2>அமைச்சர் வன்னிஅரசு உரை</h2><p>மக்களவையில் ஒன்று பேசும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவைக்கு வெளியே ஒன்று பேசுகிறார்.</p><p>மசோதாவில் இல்லாததை நாடாளுமன்றத்தில் பேசி உள்ளார்.</p><p>543 இடங்களில் தென்மாநிலங்களுக்கான 129 எம்பி என்ற எண்ணிக்கை 195 என உயரும் என அமித்ஷா கூறி உள்ளார்.</p><p>தென்மாநில எம்பிக்கள் எண்ணிக்கை தொடர்பான அமித்ஷாவின் கருத்து தொகுதி மறுவரையறை மசோதாவில் இல்லை.</p><p>அன்புமணியை காப்பாற்றுவதைவிட மோடியை காப்பாற்றும் நோக்கில் பாமக எம்எல்ஏ செயல்படுகிறார்.</p> <p>தொகுதி மறுவரையறையில் 50% உயர்வு கொடுத்தால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இல்லை - பாமக</p><p>தொகுதி மறுவரையறையில் 50% உயர்வு என்றால் நமக்கு 59 எம்பிக்கள் கிடைப்பார்கள் - பாஜக</p><p>7.18 என்ற விகிதத்தில் தமிழகத்திற்கான எம்பிக்கள் எண்ணிக்கையில் மாற்றம் கூடாது என்பதே அதிமுக நிலைப்பாடு - எடப்பாடி பழனிசாமி</p><p>தேர்தலுக்கு முன் எண்ணிக்கை மாற்றம் வேண்டாம் என நகல் எரிப்பு போராட்டம் நடத்தியது திமுக.</p><p>தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பாஜகவும் 25 ஆண்டுகள் மேலும் கால அவகாசம் வழங்கியது தொடர வேண்டும் - ஆதவ் அர்ஜூனா</p><p>543 எம்பிக்கள் தொடர வேண்டும் என்பது தான் திமுக நிலைப்பாடு - உதயநிதி</p><p>543 எம்பிக்கள் தான் தவெக நிலைப்பாடு என நேற்றே தெளிவுபடுத்தி விட்டோம் - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>தென்மண்டல மாநில முதல்வர்கள் மாநாட்டில் 543  எம்பி சீட்டை மாற்றக்கூடாது என முதல்வர் எங்கும் கூறவில்லை - உதயநிதி</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உரை</h2><p>தொகுதி மறுவரையறை குறித்து தவறான பிரசாரம்.</p><p>தொகுதி மறுவரையறை விவகாரத்தில் 543 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பது தான் தவெகவின் நிலைப்பாடு.</p><p>சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானத்தில் அரசு உறுதியாக உள்ளது.</p><p>தென்மாநிலக் குழு கூட்டம் குறித்து ஊடகங்களில் பொய் பரப்புரை.</p><p>நத்தம் செந்துறையில் புதிய காவல்நிலையம் அமைத்து தர வேண்டும்.</p><p>ஆயத்த ஆடைப் பூங்கா நத்தத்தில் அமைத்து தர வேண்டும்.</p><p>நத்தம் கூட்டுக்குடிநீர் திட்டத்தை அனைத்து கிராமங்களுக்கும் விரிவாக்கம் செய்ய வேண்டும் - நத்தம் விஸ்வநாதன்</p><p>சிறுமலைக்கு அதிக சுற்றுலா பயணியர் வருகை.</p><p>மின்வெட்டில் இருந்து தமிழ்நாட்டை அதிமுக ஆட்சியில் மீட்டெடுத்தோம்.</p><p>மின்சாரத்துறை இடியாப்ப சிக்கல் நிறைந்த துறை - நத்தம் விஸ்வநாதன்</p><p>திருவள்ளுவரின் கூற்று ஜேசிடி பிரபாகருக்கு நன்றாக பொருந்தும் - நத்தம் விஸ்வநாதன்</p><p>மிகவும் பொருத்தமான ஜேசிடி பிரபாகரை சபாநாயகராக நியமித்துள்ளார் முதலமைச்சர் விஜய் - நத்தம் விஸ்வநாதன்</p><p>திமுக ஆட்சியில் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே அறங்காவலர் குழு அமைக்கப்பட்டது - சேகர்பாபு</p><p>அமைச்சருக்கு இணையான வசதியை எதிர்க்கட்சித் தலைவருக்கு பங்களா தருவது புரோடாகால், அதை ஏன் குறை கூறுகிறீர்கள்.</p><p>திமுகவினருக்கு தான் வேண்டாம் என சொன்னோம். மற்றவரை வாங்காதீர் என சொல்லவே இல்லையே - எ.வ.வேலு</p><p>கலைஞர் ஆட்சியில் 300-க்கும் அதிகமான யூனியன் சேர்மன்களுக்கு கார் வழங்கப்பட்டது. இதுவொன்றும் புதிதல்ல.</p><p>கலைஞர் கார் வழங்கியபோது கேள்வி கேட்காமல் இப்போது கேள்வி கேட்பது சரியாக இருக்காது - அமைச்சர் ஷாஜகான்</p><p>பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள எம்எல்ஏக்களுக்கு கார் வழங்குவது அவசியம் தான் - பாமக எம்எல்ஏ கணேஷ்குமார்</p> <p>நிதி நெருக்கடியில் கார்கள் வேண்டாம் என்பது தவறா? எங்களுக்கு கார்கள் வேண்டாம் என்றால் குதர்க்கமாக பேசுவதா? - கே.என்.நேரு</p><p>அரசின் நிதி சுமை எங்களுக்கு தெரியாததை போலவும், கார் வழங்குவது ஆடம்பரம் என்பதை போல் பேசுகிறார் உதயநிதி - ஆதவ்</p><p>கம்யூனிஸ்டுகளுக்கும் கார்கள் வேண்டாம் - தளி ராமச்சந்திரன்</p><h2>திமுக எம்எல்ஏ கே.என்.நேரு</h2><p>கார் வேண்டாம் என்று தானே சொன்னோம், வேண்டும் என்றா சொல்கிறோம்.</p><p>அமைச்சர் சொந்த வீட்டில் இருந்தாலும் கூட அரசாங்கம் வாடகை தருகிறது. அதை வேண்டாம் என எழுதி தாருங்கள்.</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உரை</h2><p>ஏழை எம்எல்ஏக்களும் இருக்கிறார்கள்.</p><p>என்னிடம் 4 கார் இருந்தாலும் அரசு காரில் சென்றால்தான் அதிகாரிகள் முன் மரியாதை இருக்கும் என மன்னார்குடி எம்எல்ஏ கூறினார்.</p><p>எதிர்க்கட்சி தலைவருக்கு ஏற்கெனவே 3 வீடுகள் இருந்தாலும் ஏன் அரசு பங்களாவில் உள்ளார்.</p><p>எம்எல்ஏக்களுக்கு கார்கள் என்பது ஆடம்பரமல்ல.</p><p>ஊழல் இல்லா எம்எல்ஏவுக்கு மக்களை சந்திக்க கார் தேவை தான்.</p> <p>தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் உள்ள நிலையில் திமுகவின் 59 எம்எல்ஏக்களுக்கு கார் வேண்டாம் - உதயநிதி</p><p>கொள்கை விளக்க குறிப்பு இரவு 10 மணிக்கு தான் கொடுத்தனர். படித்து முடிக்கவே 3.30 ஆகி விட்டது. 834 பக்கங்களை படித்து விட்டு வந்திருக்கிறேன்.</p><p>மின் வாரியத்தில் 18 ஹார்டு டிஸ்க் மாயமானதாக கூறப்படும் நிலையில் 38 ஹார்டு டிஸ்க் கிடைத்ததாக சொல்கின்றனர்  - செந்தில்பாலாஜி</p> <p>திமுக ஆட்சியில் மின்மாற்றிகள் குறைபாடு என கூறிய நிலையில் 5 ஆண்டில் 99,000 மின்மாற்றி அமைப்பு  - செந்தில்பாலாஜி</p><p>கடந்த 5 ஆண்டு திராவிட மாடல் ஆட்சியில் இதே ஊழியர்களை வைத்து தான் தடையின்றி மின்சாரம் வழங்கினோம்  - செந்தில்பாலாஜி</p><p>ஊழியர்கள் பற்றாக்குறை என தவெக அமைச்சர் தொடர்ந்து கூறி வருகிறார் - செந்தில்பாலாஜி</p><p>திமுக ஆட்சியில் மின்சாரத்துறைக்கு 4 அமைச்சர்கள் மாற்றப்பட்டனர் - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>கடந்த  திமுக ஆட்சியில் 343 பேர் மட்டுமே மின்துறைக்கு புதிதாக தேர்வு.</p><p>திமுக ஆட்சியில் போதுமான மின்மாற்றிகள் வாங்கப்படவில்லை.</p><p>மின்துறை அதிகாரிகளின் செல்போன் எண்கள் செயல்பாட்டிற்கு வந்துவிட்டது. </p><p>கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் அதிகம் மின்கட்டணம் வந்த நுகர்வோரை மின்வாரியம் தானாக மறுமதிப்பீடு - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>செந்தில்பாலாஜி குறித்த வார்த்தையை திரும்ப பெறுவதாக அமைச்சர் நிர்மல்குமார் தகவல்</p><p>ஒரு அமைச்சர் சிறைக்கு சென்ற பிறகு தங்கம் தென்னரசு மின்சாரத்துறை அமைச்சராகிறார் - நிர்மல்குமார்</p><p>பாத்ரூமில் யார் யார் எவ்வளவு நேரம் என கணக்கெடுக்க ஒரு அமைச்சரா? - உதயநிதி</p> <p>திமுக எம்எல்ஏக்கள் எழுந்து நிற்பது போல் நாங்கள் எழுந்தால் அவை நடைபெறாது - ஆதவ்</p><p>கரூர் கம்பெனி ஓனர் சாரி சாரி கரூர் முன்னாள் எம்எல்ஏ - அமைச்சர் நிர்மல்குமார் பேச்சார் திமுக அமளி</p><p>2719 நுகர்வோருக்கும் குளறுபடி ஏற்பட டேபிள் ரீடிங் தான் காரணம்- அமைச்சர் நிர்மல்குமார்</p><p>3.70 லட்சம் மறுமதிப்பீடு என்பது புகாரின் அடிப்படையில் செய்யப்பட்டது அல்ல - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>எண்களை மாற்றாமல் ஏர் டெல்லில் இருந்து ஜியோவிற்கு மாறவில்லை?</p><p>மின்துறையும் அமைச்சரும் ஒன்றாக இணைந்து மின்கட்டண கணக்கீட்டில் குளறுபடி குறித்து தீர்வு காண வேண்டும்.</p><p>தவெக ஆட்சியில் மின்துறையில் பதவி உயர்வு நிறுத்தப்பட்டுள்ளது - செந்தில்பாலாஜி</p><h2>மானியக்கோரிக்கை மீதான விவாதம் - செந்தில் பாலாஜி உரை</h2><p>திமுக ஆட்சியில் கரூருக்கு 5 வருடங்களில் ரூ.5,000 கோடியில் திட்டங்கள்.</p><p>மின்கட்டண கணக்கீட்டில் குளறுபடி - மின்கட்டணம் உயர்ந்துள்ளதாக லட்சக்கணக்கானோர் புகார்.</p><p>மின்துறையில் முக்கிய பணியிடங்கள் காலியாக உள்ளன. மின் விநியோக இயக்குநர் பணியிடமே காலியாக உள்ளது.</p> <p>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசிக்கொண்டிருக்கும்போதே அமைச்சர் ஆதவ் எழுந்து பேசுகிறார்.</p><p>அமைச்சர் பதவிக்கு இணையான எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்குரிய மரியாதை தர வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்</p><p>கடந்த வாரம் உதயநிதி பேச எழுந்தபோது 4 முறை அமர வைக்கப்பட்டார். இது எந்த வகையில் நியாயம்? - ஓ.பன்னீர்செல்வம்</p><p>பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதிக்கு மரியாதை தேவை என சபாநாயகரிடம் திமுக எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்</p><p>கோப்பு திறப்பதில் முதல்வருக்கு எந்த தயக்கமும் இல்லை. எதிர்க்கட்சி தலைவரின் கோரிக்கையை முதலமைச்சர் நிறைவேற்றுவார் - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>சட்டசபை நிகழ்வுகளில் நீக்கப்பட்ட காட்சிகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டால் நடவடிக்கை - சபாநாயகர்</p><p>ஆளுங்கட்சிக்கு சாதகமானவை மட்டுமின்றி முழுமையாக நேரலையாக தவெக அரசு தான் கொடுக்கிறது - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>சட்டசபை கேள்வி நேரத்தை முதன்முறையாக நேரலை செய்தது திமுக ஆட்சி தான் - உதயநிதி</p><p>எதிர்க்கட்சி உறுப்பினர்கள் செய்யும் அனைத்தையும் கேமராமேன்கள் காட்ட வேண்டும் என சபாநாயரிடம் அமைச்சர் ராஜ்மோகன் கோரிக்கை</p><p>உருட்டல் மிரட்டல்களுக்கெல்லாம் திமுக பயப்படாது, ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள் - உதயநிதி</p><p>முதல்வருக்கு ஓபன் சேலஞ்சாக சொல்கிறேன், கோப்புகளை திறந்து பார்க்கட்டும், ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும்.</p><p>சட்டசபையில் சினிமா பஞ்ச் டயலாக் பேசுவது போல் பேசக்கூடாது - உதயநிதி</p><p>நாங்கள் கேள்வி கேட்டால் நாங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு தான் ஆளுங்கட்சியினர் பதில் அளிக்கின்றனர். </p><p>ஜோசியக்காரன் என்பது தவறான வார்த்தையல்ல, ஜோசியக்காரணை அரசு பணியில் நியமித்து நீக்கியது தவெக அரசு.</p><p>அவை குறிப்பில் இருந்து நீங்கள் நீக்கியவை எல்லாம் நேரலையில் டிவியில் ஒளிபரப்பப்பட்டு, ரீல்ஸ் ஆக பரவுகிறது - உதயநிதி</p><p>ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டதை எல்லாம் தமிழ்நாடு பார்த்துவிட்டது - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>யாரையும் கன்சல்ட் செய்யாமல் சுயமாக சிந்தித்து முடிவெடுக்கிறார் முதலமைச்சர் என்பதை மக்கள் அறிவர்.</p><p>கருத்து கூறும்போது அதனை ஒட்டி பாடல் பாடுவதில் எந்த தவறும் இல்லை, சூப்பர் சிங்கர் வார்த்தை அவசியம் இல்லை - சபாநாயகர்</p><p>நாங்கள் சீரியல் பார்ப்பதில்லை, நாங்கள் சட்டசபை நேரலையை பார்க்கிறோம் என 70 வயது முதியவர் சொன்னார் - அமைச்சர் ஆனந்த்</p><p>பெரும்பான்மை கட்சியாக தன்னை நிரூபித்த தவெகவுக்கு எந்த பயமும் இல்லை. சட்டசபை நிகழ்வுகளை நேரலை செய்யும் தைரியம் திமுகவுக்கு இல்லை - அமைச்சர் ஆதவ்</p> <h2>அமைச்சர் ஆதவ் உரை</h2><p>நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறையினர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>நேர்மையான வெளிப்படைத்தன்மையான சட்டமன்றத்தை நடத்தக்கூடிய தைரியம் திமுகவுக்கு இல்லை.</p><p>2021 தேர்தல் அறிக்கைப்படி சட்டசபை நிகழ்வை நேரலை செய்யாதது ஏன்?</p><h2>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி உரை</h2><p>ஆளுங்கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் ஆதாரமின்றி குற்றச்சாட்டு வைக்கின்றனர்.</p><p>சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்துள்ளோமா என்று சிந்திக்கும் வகையில் பேரவை நடக்கிறது.</p><p>முதலமைச்சர் முன் வைக்கப்பட்டுள்ள கோப்புகளை ஜோசியக்காரன் சொன்னால் தான் திறப்பாரா?</p><p>முதல்வர் முன் உள்ள ஊழல் தொடர்பான கோப்புகளை திறக்கலாம், உடனடி நடவடிக்கை எடுக்கட்டும்.</p><p>பர்வதமலைக்கு செல்வதற்கான தடைகளை நீக்க வேண்டும் என அதிமுக சார்பில் சட்டசபையில் கோரிக்கை</p><p>விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பூசாரி காவலர்கள் தாக்கியதால் உயிரிழப்பு குறித்து திமுக சார்பில் கவனஈர்ப்பு தீர்மானம்.</p><p>புளியஞ்சோலை சுற்றுலாத்தலத்தில் அடிப்படி வசதி தேவை, துறையூரில் உள்ள ஏரியை பராமரிக்க நடவடிக்கை தேவை.</p><p>20 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ள துறையூர் சின்ன ஏரியை பராமரிக்க நடவடிக்கை தேவை.</p><p>காவல்நிலையம், மருத்துவமனை, பெண்கள் உடைமாற்றும் இடம் இல்லை - பேரவை துணைத்தலைவர் ரவிசங்கர்</p><p>முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள், நினைவு நாளில் சிலை அலங்கரிக்கப்பட்டு உரிய மரியாதையை அரசு அளித்து வருகிறது. </p><p>லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் உள்ள ஜெயலலிதா சிலை முறையாக தான் பராமரிக்கப்பட்டு வருகிறது - அமைச்சர் விஸ்வநாதன்</p><p>சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா மாளிகை வளாகத்தில் உள்ள சிலை முறையாக பராமரிக்கப்படவில்லை. பிறந்தநாள் அன்று மட்டுமே மாலை போடப்படுகிறது. ஜெயலலிதா சிலையை தினமும் பராமரித்து மாலை அணிவிக்க வேண்டும், செலவை கூட நாங்கள் ஏற்க தயார்.</p><p>ஜெயலலிதா பலகலைக்கழகத்தை மீண்டும் தொடங்க வேண்டும். கல்வியில் பின்தங்கிய மாவட்டத்தில் ஜெயலலிதா ஆட்சியில் அவரது பெயரில் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது - சி.வி. சண்முகம்</p><p>தவறு செய்வது எந்த தொழிற்சாலையாக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுப்போம்.</p><p>மணலி, எண்ணூர் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் சரியாக செயல்படுத்தவில்லை, சரி செய்யும் பணி நடக்கிறது. </p><p>மனித கழிவு கலந்தால் தான் நீரில் ஆக்சிஜன் தன்மை குறையும், ஆலை கழிவு தற்போது வரை கலக்கவில்லை என தகவல் - அமைச்சர் ராஜீவ் </p><p>ரசாயனம் கலக்கவில்லை என அமைச்சர் சொல்கிறார் ஆனால் ரசாயனம் கலந்தால் தான் நீர் தரம் மாறும், அதனை மறுபரிசீலனை செய்க - பாமக</p><h2>அமைச்சர் ராஜீவ் விளக்கம்</h2><p>ஆற்றில் மீன்கள் செத்து கிடந்தது தொடர்பாக 5 இடங்களில் ஆய்வு நடத்தினோம்.</p><p>ஆய்வு செய்ததில் 2 இடங்களில் உள்ள தண்ணீரில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்தது கண்டறியப்பட்டது.</p><p>இறந்த மீன்களும் ஆய்வுக்காக மீனவளத்துறைக்கு அனுப்பு வைப்பு, ஆய்வு முடிவுக்கு பின் நடவடிக்கை.</p><p>முகத்துவார பகுதியில் எந்த ரசாயனமும் இல்லை. கழிவு நீர் கலப்பும் இதுவரை கண்டறியப்படவில்லை.</p><p>மீன்கள் செத்து மிதப்பது தொடர்பாக ஆய்வு செய்து உண்மை கண்டறிவதற்கு 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.</p><p>கொசஸ்தலை ஆற்றில் பல நிறுவனத்தின் கழிவுகள் கலப்பதால் மீன்கள் செத்து மிதக்கின்றன.</p><p>விசாரணை ஆணையம் அமைத்து சுற்றுச்சூழலை பாதிக்கும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை தேவை - பாமக எம்எல்ஏ கணேஷ்குமார்</p><p>மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க உரிய நடவடிக்கை தேவை.</p><p>எண்ணூர் கழிமுகத்தில் கொத்து கொத்தாக மீன்கள் இறப்பு.</p><p>முகத்துவாரத்தில் ரசாயனம் கலப்பால் மீன்கள் இறப்பு  - எடப்படி பழனிசாமி</p> <p>எண்ணூர் முகத்துவாரத்தில் மீன்கள் கொத்து கொத்தாக செத்து மிதந்தது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் - எடப்படி பழனிசாமி</p><p>எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் கழிமுகம் தொடர்பாக சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.</p><p>தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.</p><p>தமிழக சட்டசபையில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை, நீதி நிர்வாகம், எரிசக்தித் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் (உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை), சட்டத்துறை, இந்து சமய அறநிலையத்துறை (வணிக வரிகள், பதிவு மற்றும் அறநிலையங்கள் துறை) ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது.</p><p>இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசி முடித்தவுடன் அவர்களுடைய கேள்விகளுக்கு அமைச்சர்கள் நிர்மல்குமார், ரமேஷ் ஆகியோர் பதிலுரை வழங்குவார்கள். </p><p>நிறைவாக, தங்களுடைய துறை சார்பில் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள். இதில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை முதலமைச்சர் விஜய்யிடம் உள்ளது. அவர் அல்லது அவரது சார்பில் அமைச்சர்கள் யாரேனும் அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.</p> ]]></content:encoded></item><item><title>பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/veteran-actress-sowcar-janaki-passes-away</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/veteran-actress-sowcar-janaki-passes-away#comments</comments><guid isPermaLink="false">8f0e19f7-8066-42b8-ac78-de58974755f0</guid><pubDate>Fri, 21 Aug 2026 09:18:13 +0000</pubDate><atom:updated>2026-08-21T09:18:13.095Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>sowcar janaki,சௌகார் ஜானகி,பழம்பெரும் நடிகை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/fkrgt3xv/sowgarjanaki.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sowcar Janaki ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/fkrgt3xv/sowgarjanaki.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>உடல்நலக்குறைவு காரணமாக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்.</strong></em></p><p>நடிகை சௌகார் ஜானகி 1950, 60-களில் முன்னணி கதாநாயகியாக ஜொலித்தவர். இவர் சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.</p> <p>தமிழைத் தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த சௌகார் ஜானகி, சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.</p> <p>94 வயதாகும் அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டது. அவரது உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து, டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.</p> <p>இந்நிலையில் நடிகை சௌகார் ஜானகி இன்று காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானார்.</p><p>கடந்த 2022-ம் ஆண்டில் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தது. தமிழக அரசின் கலைமாமணி விருது உள்பட பல விருதுகளை சௌகார் ஜானகி பெற்றுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>டிஎன்பிஎல்: திண்டுக்கல்லை வீழ்த்தி முதலிடத்துக்கு முன்னேறியது கோவை கிங்ஸ்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/kovai-kings-beat-dindigul-dragons-in-tnpl-2026</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/kovai-kings-beat-dindigul-dragons-in-tnpl-2026#comments</comments><guid isPermaLink="false">9190a102-1cf2-4d16-97f6-c6cffe53badd</guid><pubDate>Fri, 21 Aug 2026 14:27:13 +0000</pubDate><atom:updated>2026-08-21T14:27:13.146Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,திண்டுக்கல் டிராகன்ஸ்,Dindigul Dragons,கோவை கிங்ஸ்,vida kovai kings</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/f7mzvu2n/kovai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ kovai kings]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/f7mzvu2n/kovai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல் அணிக்கு எதிரான போட்டியில் கோவை கிங்ஸ் அணி 85 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.</p><p>10-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியின் 2வது கட்டம் சென்னையின் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது.</p><h2>கோவை கிங்ஸ்</h2><p>இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெற்ற 25-வது லீக் ஆட்டத்தில் கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பவுலிங் தேர்வு செய்தது. மழையால் போட்டி 16 ஓவராகக் குறைக்கப்பட்டது.</p><h2>ஷாருக் கான் அதிரடி</h2><p>அதன்படி, முதலில் ஆடிய கோவை கிங்ஸ் அணி 16 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 171 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் ஷாருக் கான் 18 பந்தில் 59 ரன்கள் குவித்தார்.  சுரேஷ் லோகேஷ்வர் 31 ரன்னும், பாலசுப்பிரமணியன் 30 ரன்னும் எடுத்தனர்.</p><p>டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 16 ஓவரில் 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது. தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன. அதிகபட்சமாக சக்தி கருப்பசாமி 19 ரன் எடுத்தார்.</p><h2>முதல் இடத்துக்கு முன்னேறிய கோவை கிங்ஸ்</h2><p>இறுதியில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 13.2 ஓவரில் 93 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் கோவை கிங்ஸ் அணி 85 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், 4 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது.</p><p>கோவை கிங்ஸ் அணி சார்பில் ஜாதாவேத் சுப்ரமணியன் 4 விக்கெட்டும், மணிமாறன் சித்தார்த் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p>திண்டுக்கல் அணி தான் ஆடிய 7 போட்டிகளில் 5-வது தோல்வி அடைந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இனப்படுகொலை: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு கைது வாரண்ட் பிறப்பித்து துருக்கி அதிரடி!</title><link>https://www.maalaimalar.com/news/world/genocide-turkey-takes-bold-action-by-issuing-an-arrest-warrant-for-israeli-prime-minister-netanyahu</link><comments>https://www.maalaimalar.com/news/world/genocide-turkey-takes-bold-action-by-issuing-an-arrest-warrant-for-israeli-prime-minister-netanyahu#comments</comments><guid isPermaLink="false">69fa6d4d-41f8-4991-8fae-6fe4b9c46008</guid><pubDate>Fri, 21 Aug 2026 14:22:46 +0000</pubDate><atom:updated>2026-08-21T14:22:46.938Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>இஸ்ரேல்,Israel,துருக்கி,Turkey,Benjamin Netanyahu,பெஞ்சமின் நெதன்யாகு,arrest warrant,பிடியாணை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/7attklue/New-Project-2026-08-21T192420.974.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இனப்படுகொலை: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு கைது வாரண்ட் பிறப்பித்து துருக்கி அதிரடி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/7attklue/New-Project-2026-08-21T192420.974.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இனப்படுகொலை குற்றச்சாட்டின் பேரில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு சர்வதேசப் பிடியாணை பிறப்பித்து துருக்கி உத்தரவிட்டுள்ளது. </p><p>கடந்த மே மாதம் காசாவிற்கு அனுப்பிய உதவிப் படகுகளை இடைமறித்தது மற்றும் காசாவில் இஸ்ரேல் நடத்திய மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக துருக்கி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. </p><p>கடந்த ஜூலை மாதம் துருக்கியின் இஸ்தான்புல் நீதிமன்றம் நெதன்யாகுவுக்கு எதிராக உள்நாட்டு அளவில் பிடியாணை பிறப்பித்திருந்தது. இந்நிலையில் சர்வதேச அளவில் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளது. </p><p>துருக்கியின் நீதித்துறை அமைச்சர் அகின் குர்லெக் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பில், நெதன்யாகுவை சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து கைது செய்ய ஏதுவாக 'ரெட் நோட்டீஸ்' வழங்குமாறு துருக்கி உள்துறை அமைச்சகம் வழியாக இன்டர்போல் அமைப்பிற்கு கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.</p><p>காசாவில் நடந்த கொடூரக் குற்றங்களைச் செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும், குற்றவாளிகள் தப்பித்துக் கொள்ள துருக்கி அனுமதிக்காது என்றும் துருக்கி தெரிவித்துள்ளது.</p><h2>சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முந்தைய வாரண்ட்</h2><p>இதற்கு முன்னதாக, கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் நெதர்லாந்தின் டென் ஹாக் நகரில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் காசா போரில் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்ததாகக் கூறி பிரதமர் நெதன்யாகு மற்றும் இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் ஆகியோருக்கு சர்வதேச பிடியாணை பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>‘ஜெயிலர் 2’ படத்தின் முதல் பாடல் வெளியானது!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-first-song-from-the-movie-jailer-2-has-been-released</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-first-song-from-the-movie-jailer-2-has-been-released#comments</comments><guid isPermaLink="false">91ee1a90-eaa5-417e-933f-ee2597af6fb0</guid><pubDate>Fri, 21 Aug 2026 13:49:12 +0000</pubDate><atom:updated>2026-08-21T13:49:12.255Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>அனிருத்,Anirudh,Rajinikanth,ரஜினிகாந்த்,Jailer 2,ஜெயிலர் 2</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/bjp37mik/New-Project-2026-08-21T191836.869.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘ஜெயிலர் 2’ படத்தின் முதல் பாடல் வெளியானது!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/bjp37mik/New-Project-2026-08-21T191836.869.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023ல் வெளியாகி வரவேற்பை பெற்றப் படம் ஜெயிலர். ஜெயிலரின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் 'ஜெயிலர் 2' உருவாகி வருகிறது. </p><p>இப்படத்தையும் இயக்குநர் நெல்சனே இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க, அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். படம் அக்டோபர் 15ம் தேதி வெளியாக உள்ளது. </p><p>இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் அல போலேலோ இன்று அறிவித்தவாறே வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுவருகிறது.</p><p>அருண்ராஜா காமராஜ் வரிகளில் உருவாகி உள்ள இப்பாடலை அனிருத் ரவிச்சந்தர், தீப்தி சுரேஷ், அபர்ணா ஹரிகுமார், நிரஞ்சனா ராமன் ஆகியோர் பாடியுள்ளனர்.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/hIHUeuw2yj8"></iframe></figure>]]></content:encoded></item><item><title>கிடுகிடுவென உயர்ந்த சர்க்கரை விலை: வரியில்லாமல் 1 மில்லியன் டன் இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி</title><link>https://www.maalaimalar.com/news/national/india-allows-duty-free-import-of-1-million-tonnes-of-raw-sugar-to-cool-prices</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-allows-duty-free-import-of-1-million-tonnes-of-raw-sugar-to-cool-prices#comments</comments><guid isPermaLink="false">2a7bf8c2-8fcd-4d2b-b9fc-b7b84bce8f38</guid><pubDate>Fri, 21 Aug 2026 13:43:17 +0000</pubDate><atom:updated>2026-08-21T13:43:17.457Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>sugar,சர்க்கரை விலை உயர்வு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/ei43jawf/Sugar0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சர்க்கரை விலை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/ei43jawf/Sugar0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பண்டிகை காலம் வரவிருப்பதால் அக்டோபர் 31-ந்தேதி வரை சர்க்கரை இறக்குமதிக்கு வரி விதிக்கப்படாது என்று வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வெகுவாக குறைந்த நிலையில், சர்க்கரை விலை கடந்த இரண்டு மாதங்களில் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. வரும் மாதங்களில் பல்வேறு பண்டிகை வர இருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு அக்டோபர் 31-ந்தேதி ஒரு லட்சம் டன் சர்க்கரை இறக்குமதி செய்ய வரி தளர்த்தப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வர்த்தக அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.</p><p>விலை உயர்ந்து வருவதை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியா இறக்குமதி செய்ய இருக்கும் நிலையில், லண்டன் மற்றும் நியூயார்க்கில் அடிப்படை விலையில் உயர்வு ஏற்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>50 கிராம் தங்க கட்டியை விழுங்கிய 5 வயது சிறுமி..!</title><link>https://www.maalaimalar.com/news/world/5-year-old-girl-swallows-50-gram-gold-bar-hospitalized-by-parents</link><comments>https://www.maalaimalar.com/news/world/5-year-old-girl-swallows-50-gram-gold-bar-hospitalized-by-parents#comments</comments><guid isPermaLink="false">4bb47ce2-0551-4b4a-816c-e7d7e9e0b2ca</guid><pubDate>Fri, 21 Aug 2026 13:41:08 +0000</pubDate><atom:updated>2026-08-21T13:41:08.810Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>China,சீனா,gold bar,beijing hospital,தங்க கட்டி,பெய்ஜிங் மருத்துவமனை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/gaaenx3g/Untitled-design-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சீனாவில் 5 வயது சிறுமி தங்கக் கட்டி விழுங்கிய அதிர்ச்சி சம்பவம்]]></media:title><media:description type="html"><![CDATA[ China child swallows 50g gold bar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/gaaenx3g/Untitled-design-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE">சீனாவில்</a>, தவறுதலாக 50 கிராம் எடையுள்ள தங்க கட்டியை விழுங்கிய ஐந்து வயது சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறுமியின் உடல்நிலை கவலைக்கிடமானதை அடுத்து, மருத்துவர்கள் சிறுமியின் உடலில் இருந்த தங்க கட்டியை பத்திரமாக அகற்றினர்.</p><h3><strong>தங்க கட்டியை விழுங்கிய சிறுமி</strong></h3><p>சீனாவின் வடக்கு பகுதியில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஒருவர், அங்கு இருந்த 4 சென்டிமீட்டர் நீளத்தில் 50 கிராம் எடையுள்ள சிறிய தங்கக் கட்டியை தவறுதலாக விழுங்கியுள்ளார்.</p><p>இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியதையடுத்து, அருகிலுள்ள மருத்துவமனையில் பெற்றோர்கள் அனுமதித்துள்ளனர்.</p><p>ஆனால் அந்த மருத்துவமனையில் தங்க கட்டியை அகற்றும் கருவி இல்லாமல் இருந்துள்ளது. இதனால் அந்த சிறுமியை பெற்றோர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கேப்பிட்டல் மெடிசின் பல்கலைக்கழகத்துடன் இணைந்த பெய்ஜிங் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.</p><p>அப்போது அந்த சிறுமியின் வயிற்றை மருத்துவர்கள் எக்ஸ்-ரே சோதனை செய்து பார்த்தனர். இதையடுத்து சிறுமியின் வயிற்றில் 4 சென்டிமீட்டர் நீளமுள்ள தங்க கட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டது.</p><p>அந்த தங்க கட்டியானது சிறுமி வயிற்றின் உள்சவ்வை கீறி, கடுமையான உள் இரத்தப்போக்கு மற்றும் உறுப்புகளில் துளைகளை ஏற்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்துள்ளது.</p><p><strong>மருத்துவமனை நிர்வாகம்</strong></p><p>இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், அந்த சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் கொண்டுவரப்பட்டதாகத் தெரிவித்தது.</p><p>மேலும் மருத்துவமனை நிர்வாகம், “அந்த தங்க கட்டியானது கடினமாகவும், அடர்த்தியாகவும், வழுவழுப்பான மேற்பரப்புடனும் இருந்ததால், அது செரிமானப் பாதையில் எளிதில் சிக்கிக்கொள்ளக்கூடியதாக இருந்தது.</p><p>அதனை கவனிக்காமல் விட்டால், அந்த தங்க கட்டியானது வயிற்றின் உள்சவ்வைக் கீறி, கடுமையான உடல்நல சிக்கல்களுக்கு வழிவகுத்திருக்கும்.</p><p>அந்த தங்கக் கட்டி, அறுவை சிகிச்சை செய்வதற்கு மிகவும் குறுகலான இடமான சிறுமியின் இரைப்பைக் குழியில் சிக்கியிருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.</p><p>அப்படியிருந்தும், மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின்போதே எண்டோஸ்கோபி செய்து, ஒரு சுருக்குக் கயிற்றின் உதவியால் அந்த தங்க கட்டியை மீட்டு, கவனமாக இரைப்பை குழியிலிருந்து வெளியே எடுத்தனர்.</p><p>மருத்துவர் குழு தங்கக் கட்டியை அகற்ற சில நிமிடங்களே ஆனது, ஆனால் அது ஒரு நுட்பமான அறுவை சிகிச்சையாக இருந்தது. </p><p>அந்த சிறுமியும் குணமடைந்துவிட்டார், மேலும் அவரது முக்கிய உடல் அறிகுறிகள் அனைத்தும் சீராக உள்ளன,” என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.</p><h3><strong>இணையத்தில் வைரல்</strong></h3><p>இந்த மருத்துவ நடவடிக்கை குறித்த செய்தி இணையத்தில் வைரலானதும், அந்த சிறுமிக்கு விலை உயர்ந்த தங்க கட்டி எப்படி கிடைத்தது என்று பயனர்கள் கேள்வி எழுப்பினர்.</p><p>மேலும், பெற்றோர் அந்த பொருளைச் சிறுமிக்கு எட்டாதவாறு வைத்திருக்க வேண்டும் என்று கூறினர்.</p><p>ஐந்து வயது குழந்தை 50 கிராம் தங்கக் கட்டியை எளிதில் எடுக்கும் அளவுக்கு இருந்த நிகழ்வு, அந்த குடும்பம் எவ்வளவு செல்வந்தராக இருக்க வேண்டும் என்பதை காட்டுவதாக பதிவிட்டனர்.</p><p>பொறுப்புள்ள பெற்றோர்கள் எப்போதும் தங்கள் குழந்தைகளின் நடத்தையை கண்காணித்து, அபாயகரமான பொருட்களை அவர்கள் கைக்கு எட்டாதவாறு வைக்க வேண்டும் என்று பயனர்கள் வலைதளத்தில் கருத்து தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>Firebase தளத்தில் போலி செயலி, இணையதளங்கள்: நீக்கக்கோரி கூகுள் நிறுவனத்திற்கு இந்தியா உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/national/fake-banks-financial-fraud-india-pressures-google</link><comments>https://www.maalaimalar.com/news/national/fake-banks-financial-fraud-india-pressures-google#comments</comments><guid isPermaLink="false">4f925751-4e72-4a6d-92fe-74df4e916cc7</guid><pubDate>Fri, 21 Aug 2026 13:35:24 +0000</pubDate><atom:updated>2026-08-21T13:35:24.300Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Google,கூகுள்,firebase,14c,ஃபயர்பேஸ்,14சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/4xzftsex/Untitled-design-4.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Google Firebase]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/4xzftsex/Untitled-design-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் செயல்பட்டு வரும் பொதுத்துறை மற்றும் முக்கிய வங்கிகளை போல் ஆள்மாறாட்டம் செய்து, பொதுமக்களின் போன்களை ஹேக் செய்து அவர்களின் கணக்கில் இருந்து பணத்தை மோசடி செய்யும் ஃபயர்பேஸ்-ல் (firebase) கணக்கு வைத்துள்ள நூற்றுக்கணக்கான கணக்குகளை முடக்குமாறு கூகுள் நிறுவனத்திடம் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.</p><h3><strong>ஃபயர்பேஸ் மோசடி</strong></h3><p>செயலிகளை உருவாக்கவும் இணையதளங்களை ஹோஸ்ட் செய்யவும் உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான டெவலப்பர்களால் ஃபயர்பேஸ் பயன்படுத்தப்படுகிறது. இது கூகுளின் கிளவுட் வணிகத்தின் ஒரு பகுதியாகும். இது சமீபத்திய காலாண்டில் கிட்டத்தட்ட 25 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டியுள்ளது.</p><p>இந்த ஃபயர்பேஸ் தளத்தில் கணக்கு வைத்துள்ளவர்கள் (செயலி, இணையதளம் உருவாக்கியுள்ளவர்கள்), ஆண்ட்ராய்டு அடிப்படையிலான வங்கி சேவைகள் போல் வேடமிட்டு, குறிப்பாக கடன் அட்டைகளை (credit card) கொண்ட ஆண்ட்ராய்டு பயனர்களைக் குறிவைக்கின்றனர்.</p><p>புதிய கடன் அட்டைகள், வெகுமதிப் பெறுதல்கள் அல்லது கடன் வரம்பு மேம்படுத்தல்கள் போன்ற சலுகைகளை விளம்பரப்படுத்தி மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்டவர்களை ஈர்த்துள்ளதாக இந்திய இணையக் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (I4C) தெரிவித்துள்ளது.</p><p>இணையவழி மோசடிகள் இந்தியாவின் மிக முக்கியமான சட்ட அமலாக்க சவால்களில் ஒன்றாக மாறியுள்ளன. அரசுத் தரவுகளின்படி, 2025-ஆம் ஆண்டில் இணையவழி மோசடிகள் எனக் கூறப்படும் சம்பவங்களால் இந்தியர்கள் கிட்டத்தட்ட 2.4 பில்லியன் டாலர்களை இழந்துள்ளனர்.</p><p>இதன் காரணமாக, மோசடி செய்பவர்களின் இணையதளங்களை அகற்றுமாறு 14C வலியுறுத்தியுள்ளது.</p><p>ஃபயர்பேஸில் உள்ள 57 வலைத்தளங்களும் தரவுத்தளங்களும் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் கைபேசிகளிலிருந்து முக்கியமான நிதி தகவல்களைத் திரட்டியதாக இந்திய இணையக் குற்ற ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்தது.</p><p>இதுகுறித்து ஆல்பபெட் நிறுவனத்திற்கு சொந்தமான கூகுள் கூறுகையில், ஃபிஷிங், மால்வேர் மற்றும் நிதி மோசடிக்காக எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதை தடைசெய்யும் கடுமையான கொள்கைகளை எங்கள் நிறுவனம் கொண்டுள்ளது.</p><p>இந்த சம்பவம் குறித்து மதிப்பீடு செய்து நடவடிக்கை எடுக்க I4C உள்ளிட்ட சட்ட அமலாக்கத் துறைகளுடன் இணைந்து செயல்பட கூகுள் தாயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளது.</p><p>மார்ச் 2026-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், இந்தியாவின் நிகழ்நேரப் பணப்பரிவர்த்தனை அமைப்பு மூலமாக மட்டுமே கிட்டத்தட்ட 242 பில்லியன் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் செயல்படுத்தப்பட்டன. இது இந்தியாவை உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைச் சந்தைகளில் ஒன்றாக ஆக்குகிறது.</p><h3><strong>போலி அரசாங்க சேவைகள்</strong></h3><p>அகற்றப்படக் கோரப்பட்ட 57 இணையதளங்கள் மற்றும் தரவுத்தளங்களில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி வங்கிகளைப் போல போலியாக உருவாக்கி ஃபயர்பேஸ் மோசடியில் ஈடுபட்டுள்ளது.</p><p>மேலும் மத்திய அரசின் திட்டமான பிஎம்-கிசான் திட்டத்தின் கீழ் சிறு விவசாயிகளுக்கு ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் சுமார் 2,000 இந்திய ரூபாய் வழங்கப்படுகிறது.</p><p>இதை நோட்டம் விட்ட ஃபயர்பேஸ், அதனை பயன்படுத்தும் பயனர்கள், பணம் பெறுபவர்களுக்கு அவர்களின் பணத்தைப் பெறுவதற்கு உதவுவதாக இணையதளங்களின் மூலம் உறுதியளித்து, பின்னர் பணத்தை பெருவதற்காக ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்யுமாறு கூறியுள்ளது.</p><p>இதையடுத்து அந்த மோசடி செயலியை பயனர்கள் பதிவிறக்கம் செய்தபோது, அவர்களின் தரவுகள் திருடப்பட்டுள்ளது. இதன் விளைவாக, கைபேசி ஹேக் செய்யப்பட்டு, மோசடிக்காரர்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட மற்ற செயலிகளை அணுகி, வாடிக்கையாளர்களின் நிதி மோசடி செய்ய வழிவகை செய்கிறது.</p><h3><strong>இந்தியா அறிக்கை</strong></h3><p>இதுகுறித்து இந்திய அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பில், ஃபயர்பேஸ் நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிடாமல், பாதிக்கப்பட்டவர்களின் தொலைபேசிகள் மீது ஏறக்குறைய முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் "ஆண்ட்ராய்டு காட் மோடு" என இணையப் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்களால் பரவலாக அழைக்கப்படும் இதுபோன்ற மோசடி சேவைகளை குறித்து கவலைகளை எழுப்பியிருந்தது.</p><p>மேலும் இந்த விதமான தீங்கிழைக்கும் செயலிகள் பெரும்பாலும் வங்கி, அரசு மற்றும் பொதுப் பயன்பாட்டுத் தளங்கள் போன்ற நம்பகமான சேவைகளைப் போல் நடித்து, இணைப்புகள் மூலம் பயனர்களை ஏமாற்றி அவற்றை நிறுவச் செய்கின்றன,” எனவும் இந்திய அரசாங்கத்தின் ஆலோசனைக் குறிப்பு தெரிவித்தது.</p>]]></content:encoded></item><item><title>பாகிஸ்தான், துருக்கி, சவுதி அரேபியாவுடன் கைக்கோர்க்க விருப்பம் தெரிவித்த வங்கதேசம் - கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இணையுமா?</title><link>https://www.maalaimalar.com/news/world/bangladesh-expresses-interest-in-joining-hands-with-pakistan-turkey-and-saudi-arabia-will-it-join-a-joint-defense-pact</link><comments>https://www.maalaimalar.com/news/world/bangladesh-expresses-interest-in-joining-hands-with-pakistan-turkey-and-saudi-arabia-will-it-join-a-joint-defense-pact#comments</comments><guid isPermaLink="false">e26ec00b-8f42-480d-bdbe-be02976626a5</guid><pubDate>Fri, 21 Aug 2026 12:53:56 +0000</pubDate><atom:updated>2026-08-21T12:53:56.411Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Bangladesh,வங்கதேசம்,Makkah Joint Defence Agreement,மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/s6nopt5m/New-Project-2026-08-21T174907.235.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பாகிஸ்தான், துருக்கி, சவுதி அரேபியாவுடன் கைக்கோர்க்க விருப்பம் தெரிவித்த வங்கதேசம் - கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இணையுமா?]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/s6nopt5m/New-Project-2026-08-21T174907.235.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் - அமெரிக்கா மோதலால் மத்திய கிழக்கில் பதற்றம் நிலவிய நிலையில் இம்மாத தொடக்கத்தில் பாகிஸ்தான், துருக்கி, சவுதி அரேபியா இடையே மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. </p><p>அந்த ஒப்பந்தத்தின்படி, மூன்று நாடுகளில் எந்த நாடுமீது தாக்குதல் நடத்தப்பட்டாலும், அவை மூன்று நாடுகள்மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாக கருதப்பட்டு, மற்ற இரண்டு நாடுகளும் தாக்குதலில் இறங்கும். </p><p>இந்நிலையில் இந்த பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளது வங்கதேசம். வங்கதேச பிரதமரின் வெளியுறவு விவகார ஆலோசகர் ஹுமாயூன் கபீர், தங்களின் சொந்த தேசிய நலன்கள் மற்றும் உலகளாவிய பொருளாதார வர்த்தக மாற்றங்களைக் கருத்தில் கொண்டு இந்த கூட்டணியில் இணையத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.</p><h2>வங்கதேசத்தின் இந்த முடிவிற்கான காரணங்கள்</h2><p>2024-ல் ஷேக் ஹசீனா அரசாங்கத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, தனது பாரம்பரிய நட்பு நாடான இந்தியாவுடன் உறவு தற்போது கசந்துள்ளது. இதனால் இந்தியாவை மட்டும் சார்ந்திருக்காமல், தனது மூலோபாயக் கூட்டாளிகளைப் பலப்படுத்த வங்கதேசம் முயன்றுவருகிறது. </p><p>வங்கதேசம் தற்போது பாகிஸ்தானுடன் வர்த்தகம் மற்றும் மக்கள் தொடர்புகளை வலுப்படுத்தி வருகிறது. அதே நேரத்தில் சீனாவுடனும் தனது உறவை ஆழப்படுத்தி வருகிறது.</p><p>இந்நிலையில் வங்கதேசம் இந்த நகர்வு குறித்து விருப்பம் தெரிவித்துள்ளது. </p><h2>கூட்டணி பலம்</h2><p>பாகிஸ்தான், இஸ்லாமிய நாடுகளில் அணுஆயுத வல்லமை கொண்ட ஒரே நாடு. துருக்கி நேட்டோ அமைப்பில் இரண்டாவது பெரிய ராணுவப் படையைக் கொண்ட மற்றும் மேம்பட்ட ட்ரோன் தொழில்நுட்பத்தைக் கொண்ட நாடு.</p><p>பலமான பொருளாதார நிதி ஆதாரங்கள் மற்றும் பிராந்திய செல்வாக்கைக் கொண்ட நாடு சவுதி அரேபியா. </p>]]></content:encoded></item><item><title>பூ உடம்பு மறையலாம், புகழ் உடம்பு மறையாது..!-சௌகார் ஜானகியின் மறைவுக்கு வைரமுத்து உருக்கம்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/sowcar-janaki-passes-away-vairamuthu-pays-emotional-tribute</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/sowcar-janaki-passes-away-vairamuthu-pays-emotional-tribute#comments</comments><guid isPermaLink="false">4ee1146b-6a2d-40f3-b9d7-85a0eb6c0bc2</guid><pubDate>Fri, 21 Aug 2026 12:41:23 +0000</pubDate><atom:updated>2026-08-21T12:41:23.040Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sowcar Janaki,condolence,இரங்கல்,Vairamuthu,சௌகார் ஜானகி,வைரமுத்து</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/13u17wir/vairamuthu.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sowcar janaki- Vairamuthu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/13u17wir/vairamuthu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்.</p><p>இவரது மறைவுக்கு முதலமைச்சர் விஜயை தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்களும், திரைத்துறையினரும்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.</p><p>இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.</p><p>அவர் கூறியிருப்பதாவது:-</p><p>செளகார் ஜானகி</p><p>கலைப் பெண்களில்</p><p>பெருமைக்குரிய பெருமாட்டி</p><p>பதின்பருவம் முதல்</p><p>உதிர்பருவம் வரை</p><p>நகர்ந்துகொண்டே இருந்த</p><p>நட்சத்திரம்</p><p>400படங்கள் என்பது</p><p>இனிவரும் தலைமுறைக்கு</p><p>வாய்க்காத வரலாறு</p><p>பெண்ணினத்தின்</p><p>காத்திரமான</p><p>பாத்திரங்கள் அனைத்தையும்</p><p>நடித்துக்காட்டிய நாயகி</p><p>'இரு கோடுகள், புதிய பறவை</p><p>படிக்காத மேதை, எதிர் நீச்சல்</p><p>பாக்கியலட்சுமி, ஒளிவிளக்கு</p><p>பெற்றால்தான் பிள்ளையா' இப்படி</p><p>எம்.ஜி.ஆர் - சிவாஜி - ஜெமினி</p><p>என்ற முப்பெரும் கலைஞர்களுக்கும்</p><p>ஈடுகொடுத்த ஒப்பிலா நடிகை</p> <p>ரங்கராட்டினம் என்ற</p><p>ஒருபடத்தில் தவிர</p><p>அவர் எந்தப் படத்திலும்</p><p>கவர்ச்சி காட்டியதில்லை</p><p>உடலைவிட</p><p>உடல்மொழியை நம்பினார்</p><p>ஆங்கிலத்தைத்</p><p>தாய்மொழிபோல் பேசும்</p><p>சில நடிகைகளுள்</p><p>தலைசிறந்தவர் செளகார் ஜானகி</p><p>பத்மபூஷணுக்கே உரிய</p><p>பத்மஸ்ரீ அவர்</p><p>ஆந்திரா இந்தியாவிற்குக் </p><p>கொடுத்தகொடை முடிந்துவிட்டது</p><p>அவர் </p><p>பூ உடம்பு மறையலாம்;</p><p>புகழ் உடம்பு மறையாது</p><p>அவருக்கு என் அஞ்சலி;</p><p>கலையன்பர்களுக்கும்</p><p>குடும்பத்தார்க்கும்</p><p>ஆழ்ந்த இரங்கல்</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">செளகார் ஜானகி<br><br>கலைப் பெண்களில்<br>பெருமைக்குரிய பெருமாட்டி<br><br>பதின்பருவம் முதல்<br>உதிர்பருவம் வரை<br>நகர்ந்துகொண்டே இருந்த<br>நட்சத்திரம்<br><br>400படங்கள் என்பது<br>இனிவரும் தலைமுறைக்கு<br>வாய்க்காத வரலாறு<br><br>பெண்ணினத்தின்<br>காத்திரமான<br>பாத்திரங்கள் அனைத்தையும்<br>நடித்துக்காட்டிய நாயகி<br><br>&#39;இரு கோடுகள், புதிய… <a href="https://t.co/2JhfDWZ8rx">pic.twitter.com/2JhfDWZ8rx</a></p>&mdash; வைரமுத்து (@Vairamuthu) <a href="https://x.com/Vairamuthu/status/2090764310184370662?ref_src=twsrc%5Etfw">August 21, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: 1 பைசாவுக்கு ஒப்பந்தம் கோரிய ஜாய் ஆலுகாஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thaimaman-thanga-mothiram-scheme-joy-alukkas-gold-tender-free-1-gram-gold-ring-cm-vijay-schemes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thaimaman-thanga-mothiram-scheme-joy-alukkas-gold-tender-free-1-gram-gold-ring-cm-vijay-schemes#comments</comments><guid isPermaLink="false">11120911-1276-4554-ac42-c7c532df6814</guid><pubDate>Fri, 21 Aug 2026 12:40:57 +0000</pubDate><atom:updated>2026-08-21T12:40:57.589Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Vijay,தவெக,TN Government,தமிழக அரசு,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/4i2qje66/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/4i2qje66/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்காக ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் 1 பைசாவுக்கு ஒப்பந்தம் கோரியுள்ளது.</p><p>தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலின்போது தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 'மகளிர் நலன்' என்ற தலைப்பில் சில வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன.</p><p>அதன்படி, "தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தங்க மோதிரம், மென்மையான துணி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 'தாய்மாமன் சீர் பெட்டகம்' வழங்கப்படும்" என்ற வாக்குறுதி இடம்பெற்றிருந்தது.</p><p>அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய், குழந்தைகளை கவுரவிக்கும் வகையில் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.</p><h2>தவெக ஆட்சி</h2><p>சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பின், 'தாய்மாமன் தங்க மோதிர திட்டம்' என்ற பெயரில் அது அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தில் பயன்பெறுபவர், தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும், அரசு மருத்துவமனை மற்றும் அரசு சுகாதார மையங்களில் பிரசவிக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும்.</p><p>அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ரூ.755.83 கோடி மதிப்பில் 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' தொடங்கி வைக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.</p><h2>தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்</h2><p>தமிழ்நாடு அரசு 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்திற்கான தங்கத்தை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப் புள்ளி கோரியது. அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் மோதிரம் வழங்குவதற்கான தங்கம் கொள்முதலுக்கு ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது.</p><p>தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு ஆண்டுக்கு ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.</p><p>இந்தத் திட்டத்திற்கு 4.41 லட்சம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. அந்த தங்க மோதிரங்கள் 22 காரட் தூய்மையுடனும், 916 தரச்சான்றிதழ் கட்டாயம் இருக்கவேண்டும் என டெண்டரில் கூறப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில், தாய்மாமன் தங்க மோதிர திட்டத்துக்காக டெண்டர் கோரிய நிறுவனங்களின் பட்டியல் வெளியானது.</p><h2>ஒப்பந்தப் புள்ளி</h2><p>இதில் தங்கத்தின் சந்தை விலையைத் தவிர்த்து செய்கூலி, சேதாரம், ஹால்மார்க் முத்திரை, பேக்கிங், காப்பீடு மற்றும் போக்குவரத்து என அனைத்துக் கூடுதல் செலவுகளுக்கும் சேர்த்து வெறும் 1 பைசா மட்டுமே கோரி ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் (குறைந்த விலைப்புள்ளி அளித்த நிறுவனம்) கோரியுள்ளது.</p><p>பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்.</p>]]></content:encoded></item><item><title>டெல்லியில் துணிகரம்: ஜெய்ப்பூர் வியாபாரியின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.2 கோடி மதிப்பிலான நகை அபேஸ்</title><link>https://www.maalaimalar.com/news/national/thieves-smash-jaipur-trader-car-window-in-delhi-steal-rs-2-crore-jewellery</link><comments>https://www.maalaimalar.com/news/national/thieves-smash-jaipur-trader-car-window-in-delhi-steal-rs-2-crore-jewellery#comments</comments><guid isPermaLink="false">eb3a9fbe-4220-4732-9517-b8dc6f7f11a5</guid><pubDate>Fri, 21 Aug 2026 12:28:31 +0000</pubDate><atom:updated>2026-08-21T12:28:31.656Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>robbery,நகை கொள்ளை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/0nugmmiw/CarGlass0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கார் கண்ணாடி உடைப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/0nugmmiw/CarGlass0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பகுதியை சேர்ந்த நகை வியாபாரி கணையா லால். இவர் கடையும் நடத்தி வருகிறார். இவர் மார்க்கெட்டிங் தொடர்பான வேலையாக கடந்த 18-ந்தேதி டெல்லி சென்றுள்ளார்.</p><p>தன்னுடைய மகன் மற்றும் ஸ்டாஃப் ஒருவரையும் அழைத்துச் சென்றுள்ளார். மூன்று பேரும் நகைகள் அடங்கிய இரண்டு பேக் மற்றும் துணிகள் அடங்கிய சூட்கேஸ் ஒன்றையும் எடுத்துச் சென்றுள்ளனர். இரண்டு பேக்குகளிலும் தங்கம் மற்றும் டைமண்ட் ஆபரணங்கள் இருந்துள்ளன. அத்துடன் லேப்டாப் மற்றும் ஆதார் கார்டு போன்றவைகளும் இருந்துள்ளன.</p><p>கடந்த 19-ந்தேதி வியாபாரம் தொடர்பாக கிரேட்டர் கைலாஷில் உள்ள எம். பிளாக் மார்க்கெட்டில் வியாபாரம் தொடர்பாக பல தொழில் அதிபர்களை சந்தித்துள்ளார்.</p><p>பின்னர் கரோல் பாக்கில் உள்ள கனரா வங்கிக்கு எதிராக உள்ள ஆர்யா சமாஜ் சாலையில் உள்ள பார்க்கில் காரை நிறுத்திவிட்டு ஒரு கடையில் சாப்பிட சென்றுள்ளனர்.</p><p>கார் கண்ணாடியை உடைத்து நகை திருட்டு</p><p>அப்போது, பேக்குகள் மற்றும் சூட்கேசை காரிலேயே வைத்துவிட்டு சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் திரும்பி வரும்போது, காரின் பின் கண்ணாடி உடைக்கப்பட்டு நகைகள் திருடப்பட்டது.</p><p>இது தொடர்பாக கணையா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் இரண்டு பேர் ஹெல்மெட் அணிந்து இரு சக்கரவாகனத்தில் வந்து கொள்ளை அடித்தது தெரியவந்துள்ளது. அவர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மஞ்சள் துண்டிற்கு பின்னிருக்கும் கதை என்ன? அவரே கொடுத்த விளக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/what-is-the-story-behind-karunanidhis-yellow-shawl-the-explanation-he-himself-gave</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/what-is-the-story-behind-karunanidhis-yellow-shawl-the-explanation-he-himself-gave#comments</comments><guid isPermaLink="false">62a6615b-7af0-42d8-8412-cff01d0ecde7</guid><pubDate>Fri, 21 Aug 2026 12:10:59 +0000</pubDate><atom:updated>2026-08-21T12:10:59.657Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Karunanidhi,கருணாநிதி,அமைச்சர் நிர்மல்குமார்,minister nirmal kumar,Yellow shawl,மஞ்சள் துண்டு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/0e72tp7w/New-Project-2026-08-21T174032.850.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மஞ்சள் துண்டிற்கு பின்னிருக்கும் கதை என்ன? அவரே கொடுத்த விளக்கம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/0e72tp7w/New-Project-2026-08-21T174032.850.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “முதலமைச்சர் விஜய் நீண்டநாட்களாக மூன்று கோப்பைகளை திறந்துவிடுவதாக கூறிவருகிறார். அதை உடனடியாக திறக்கவேண்டும், அதற்கு ஜோசியக்காரர் சொல்லவேண்டுமா” எனப் பேசியிருந்தார்.</p><p>இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், “யார் ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டார் என்பதை அனைவரும் அறிவர்” என முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை குறிக்கும் வகையில் பதிலளித்தார். </p><p>ஆனால் உண்மையில் கருணாநிதி ஜோசியம் பார்த்துதான் மஞ்சள் துண்டு அணிந்தாரா, அந்த மஞ்சள் துண்டு குறித்து அவரே கூறியது குறித்து இங்கு காண்போம்.</p><p>இதுதொடர்பாக தொண்டர்களுக்கு கருணாநிதி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாவது;</p><p>சுமார் மூன்றாண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் எண்ணெய் தடவி உடம்பு வழித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று என் வலது கன்னத்தில் மாம்பிஞ்சு அளவுக்கு ஒரு வீக்கம் ஏற்பட்டு, அது கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகவும் தொடங்கியது.</p><p>உடனே நரம்பியல் நிபுணர் டாக்டர் இராமமூர்த்தி அவர்களும், டாக்டர் கோபால் அவர்களும் என்னை சென்னை மலர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பல்வேறு சோதனைகளைச் செய்தனர். </p><p>வலது கன்னத்தில் உமிழ் நீர் சுரப்பியுடன் இணைந்துள்ள மெல்லிய நரம்புக் குழாயில் சிறிய அளவு வெடிப்பு ஏற்பட்டு அதன் காரணமாக உமிழ்நீர்த் தேக்கம் ஏற்பட்டு அதனால் அந்த வீக்கம் என்று கண்டறியப்பட்டது.</p><p>வலதுபுறம் வாய்க்குள் அறுவை சிகிச்சை செய்து அந்த மெல்லிய குழாயை ஒட்ட வைக்கலாமென முடிவெடுத்த டாக்டர்கள் என்னை ஆபரேஷன் தியேட்டருக்குள் இட்டுச் சென்றனர். அறுவை சிகிச்சைக்குத் தயாராக முன்னேற்பாடுகள் அனைத்தும் நடந்து முடிந்தபிறகு - மீண்டும் டாக்டர்கள் கலந்துபேசிக் கொண்டிருந்தனர்.</p><p>அந்த அறுவை சிகிச்சையினால் எதிர்விளைவுகள் எதுவும் ஏற்படுமோ என்ற அய்யப்பாட்டின் அடிப்படையில்தான் டாக்டர்களுக்கு இடையே அந்த விவாதம் நடைபெற்றிருக்கிறது.</p><p>வீக்கமும் சிறிது குறைந்து கொண்டு வந்திருக்கிறது. கடைசியாக ஒரு வழியாக அறுவை சிகிச்சை வேண்டாமென முடிவு செய்யப்பட்டு சில நாட்கள் சில மாத்திரைகள் மட்டும் நாள்தோறும் சாப்பிட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். அதற்குள் மலர் மருத்துவமனைக்கு ஏராளமான தொலைபேசிகள் - நண்பர்கள் - கழகக் கண்மணிகள்!</p><p>கழுத்துப் பகுதியும், முகம் உள்ளிட்ட தோள் பகுதியும் எப்போதும் கதகதப்பான வெம்மையுடன் இருக்க வேண்டுமென்றும் அதற்கு நான் வழக்கமாக அணியும் கைத்தறித் துண்டுக்குப் பதிலாகக் கம்பளிச் சால்வையும் கழுத்தின் மேல் பட்டுக் கொண்டிருக்கும்படியாக அணிவது நல்லது என்றும் டாக்டர் வலியுறுத்திக் கூறினார்.</p><p>இப்படிக் கம்பளிச் சால்வையை அணிந்து கொண்டால் கழுத்து வலிக்காமல் இருப்பதற்கும் நல்ல பாதுகாப்பு என்றும் டாக்டர்கள் கூறினர்.</p><p>அவர்களின் அறிவுரை கேட்டு அப்போது நான் உடனடியாக அணிந்து கொண்டது மஞ்சள் நிற சால்வையாக இருந்தது.</p><p>தொடர்ந்து இரண்டொரு நாள் மஞ்சள் சால்வையை என் கழுத்தை வளைத்துப் போட்டுக் கொண்டதைக் கண்ட என் வீட்டில் உள்ளவர்களும், நண்பர்களும் - இது நன்றாக இருக்கிறது - இதையே உங்களுக்குத் தனி அடையாளமாக, இதே வண்ணத்தில் எப்போதும் அணிந்திடுங்கள் என்று அன்புக் கட்டளையிட்டனர்.</p><p>அடையாளமாகச் சிலர் தாடி வைத்துக் கொண்டிருப்பதைப்போல - சிலர் தொப்பி அணிந்து கொண்டிருப்பதைப்போல - சிலர் கையில் பிரம்பு வைத்துக் கொண்டிருப்பதைப்போல - நமக்கும் இந்த மஞ்சள் சால்வை அடையாளமாக இருக்கட்டுமே என்று எண்ணினேன். தொடர்ந்து அணிந்து வருகிறேன்.</p><p>இந்தச் சால்வை சிலரது கேலிக்கும் கிண்டலுக்கும் உரியதாகியிருக்கிறது என்பதைக் கண்டும், கேட்டும் எனக்குச் சிரிப்பு மேலிடுகிறதே தவிர, சீற்றம் பிறக்கவில்லை.” என்றுக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>விவசாயிகளை சென்றடையாத குறுவை சிறப்புத் தொகுப்பு - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kuruvai-special-package-fails-to-reach-farmers-udhayanidhi-stalin-condemns-the-situation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kuruvai-special-package-fails-to-reach-farmers-udhayanidhi-stalin-condemns-the-situation#comments</comments><guid isPermaLink="false">4ed59668-5a82-40a9-a066-30d4a98183f5</guid><pubDate>Fri, 21 Aug 2026 11:52:02 +0000</pubDate><atom:updated>2026-08-21T11:52:02.422Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,Kuruvai Special Package,குறுவைத் தொகுப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/b2903z4h/New-Project-2026-08-21T172139.137.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விவசாயிகளை சென்றடையாக குறுவை சிறப்புத் தொகுப்பு - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/b2903z4h/New-Project-2026-08-21T172139.137.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குறுவை சிறப்புத் தொகுப்பு நிதி விரைவில் விவசாயிகளை சென்றடைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்.,</p><p>“குறுவை சிறப்புத்தொகுப்பு அறிவிக்கப்பட்டு 2 மாதங்கள் கடந்துவிட்ட பிறகும், விவசாயிகளை அது சென்று சேராமல் இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.</p><p>மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்காத காரணத்தால், குறுவை சாகுபடி பொய்த்துவிட்டது. விவசாயிகளுக்கு அரசு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று பேரவையில் பேசி இருந்தேன்.</p><p>வறட்சி நிவாரணம் பற்றிக் கேட்டதற்கு, குறுவை சிறப்புத்தொகுப்புக்காக நிதி ஒதுக்கியதைப் பற்றி முதலமைச்சர் விளக்கினார்.</p><p>ஆனால், அவர் ஒதுக்கியதாக சொன்ன அந்த நிதியும் இன்று வரை விவசாயிகளைச் சென்றடையவில்லை. </p><p>இது தொடர்பான செய்திகள்  ஊடகங்களில் வெளியாகியுள்ளன. அவற்றை இந்த திறனற்ற அரசு கவனித்ததா? அல்லது வழக்கம்போல விவசாயிகள் பிரச்சினையில் அலட்சியம் காட்டுகிறதா?</p><p>எம்.எல்.ஏ.க்களுக்குக் கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை, விவசாயிகளுக்கான நிதியைக் கொண்டு சேர்ப்பதில் இந்த அரசு காட்டியிருக்க வேண்டும்.</p><p>விவசாயிகள் நலனில் அக்கறையின்றி தொடர்ந்து மெத்தனப் போக்கோடு நடந்து கொள்வது ஏற்புடையது அல்ல. </p><p>குறுவை சிறப்புத்தொகுப்பு நிதி விவசாயிகளுக்குச் சென்று சேர இந்த விவசாயிகள் விரோத அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>ஜாப்னா அருகே மிகப்பெரிய மனித புதைகுழி: ஒரே இடத்தில் 582 எலும்புக் கூடுகள் கண்டெடுப்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/excavation-at-chemmani-sri-lanka-site-linked-to-tamil-civilian-killings</link><comments>https://www.maalaimalar.com/news/world/excavation-at-chemmani-sri-lanka-site-linked-to-tamil-civilian-killings#comments</comments><guid isPermaLink="false">3be25979-e5b1-4ff3-9b0d-d4657e4db3b7</guid><pubDate>Fri, 21 Aug 2026 11:38:36 +0000</pubDate><atom:updated>2026-08-21T11:38:36.622Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இலங்கை,srilanka,Jaffna</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/37sbunlq/Jaffa001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜாஃப்னா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/37sbunlq/Jaffa001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜாஃப்னாவில் உள்ள செம்மணி என்ற இடத்தில் தமிழின மக்கள் கொல்லப்பட்டு மொத்தமாக புதைக்கப்பட்டதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது.</p><p>இலங்கையில் 1983 மற்றும் 2009-ம் ஆண்டு வரை விடுதலைப்புலிகள்- இலங்கை ராணுவம் இடையே உள்நாட்டு போர் நடைபெற்றது. போரின் இறுதிக் காலங்களில் தமிழின மக்கள் கொத்துக் கொத்துக்காக படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. ஆயிரக்கணக்கான தமிழன மக்கள் இன்னும் காணப்படாதவர்களாக உள்ளனர்.</p><p>இந்த நிலையில் ஜாஃப்னா அருகே செம்மணி என்ற இடத்தில் மிகப்பெரிய அளவிலான மனித புதைகுழி அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், பல ஆண்டுகள் காலதாமத் ஏற்பட்டது. தற்போது மீண்டும் ஆராய்ச்சி தொடங்கப்பட்டது. இதில் 582 மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பால் பாட்டில் மற்றும் பள்ளிப் பைகள், குழந்தைகளுக்கான பொம்மை, வளையலகள் போன்றவையும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p><p>மீட்கப்பட்ட 582 சடலங்களில் ஏதேனும் ஒன்று, இலங்கையில் காணாமல் போனவர்களின் பட்டியலில் உள்ளவர்களுடையதா என்பதை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. உயிரிழந்தவர்களை அடையாளம் காண தடயவியல் பரிசோதனைகளும், தேவைப்பட்டால் உறவினர்களுடன் டிஎன்ஏ (DNA) ஒப்பீடுகளும் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கும்.</p><h2>பல வருடத் தாமதத்திற்குப் பிறகு செம்மணி அகழ்வாராய்ச்சி மீண்டும் தொடங்கியது</h2><p>18 வயதுடைய தமிழ் பள்ளி மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றத்திற்காக, இலங்கை ராணுவ வீரரான தேவாகே சோமரத்ன ராஜபக்ஷ மீது நடத்தப்பட்ட விசாரணையின்போது, ​​1998-ல் செம்மணி பகுதி முதன்முதலில் கவனத்திற்கு வந்தது. அவர் தற்போது சிறையில் உள்ளார் மற்றும் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது காணாமல் போன 300 முதல் 400 வரையிலான தமிழர்கள் கொல்லப்பட்டு, செம்மணியில் புதைக்கப்பட்டதாக ராஜபக்ஷ விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.</p><p>1999-ல் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் 15 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றில் 10 எலும்புக்கூடுகள் தாக்குதல் மற்றும் கொலைக்குள்ளானதற்கான அறிகுறிகளைக் கொண்டிருந்ததாக அரசு விசாரணை அறிக்கை தெரிவித்தது.  இருப்பினும், அதன்பிறகு அந்த விசாரணை பல தசாப்தங்களாக நிறுத்தப்பட்டிருந்தது.</p><p>பிப்ரவரி 2025-ல், இந்து மயானம் ஒன்றிற்கு அருகில் கட்டுமான பணியாளர்கள் மனித எலும்புக்கூடுகளைக் கண்டெடுத்ததைத் தொடர்ந்து இப்பகுதி மீண்டும் கவனத்திற்கு வந்தது. இதுவே தற்போதைய அகழ்வாராய்ச்சிப் பணிக்குக் காரணமாக அமைந்தது.</p><p>தடயவியல் ரீதியான அகழ்வாராய்ச்சிக்கு நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், நிதி பற்றாக்குறை காரணமாக அப்பணி நிறுத்தப்பட்டது. கூட்டுப் புதைகுழிகளை அகழ்ந்தெடுப்பதற்காக இலங்கை அரசு 21 மில்லியன் இலங்கை ரூபாயை (சுமார் 47,000 பவுண்டுகள்) ஒதுக்கியதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அகழ்வாராய்ச்சிப் பணிகள் மீண்டும் தொடங்கின.</p><p>பெரியவர்கள், குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கூட்டமாகவும், சில இடங்களில் ஒன்றன் மீதொன்று அடுக்கப்பட்ட நிலையிலும் இருப்பதை விசாரணை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். ஒரு சம்பவத்தில், தலை இல்லாத மனித எலும்புக்கூடு ஒன்று, இரு கைகளும் மார்பின் மீது கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.</p><h2>பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண தடயவியல் சோதனைகள் தேவை</h2><p>அந்த 582 பேரின் அடையாளம் அல்லது அவர்கள் எவ்வாறு உயிரிழந்தனர் என்பது குறித்து அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. அவர்களை அடையாளம் காணும் செயல்முறையில் தடயவியல் பரிசோதனைகள் மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்களுடன் டிஎன்ஏ (DNA) ஒப்பீடுகள் ஆகியவை தேவைப்படலாம்.</p><p>இன சிறுபான்மையினரான தமிழர்கள் பெருமளவில் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் நடத்தப்பட்ட விசாரணைகளில் பல தசாப்த கால தாமதத்திற்குப் பிறகு இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.</p><p>1983 முதல் 2009 வரை நீடித்த இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது, ​​பல்லாயிரக்கணக்கான மக்கள்- அவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் கட்டாயமாகக் காணாமல் போகச் செய்யப்பட்டனர்.</p><h2>சர்வதேச விசாரணைக்கு உறவினர்கள் கோரிக்கை</h2><p>இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட புதைக்குழி தொடர்பான முந்தைய விசாரணைகள், பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவோ அல்லது குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவோ தவறிவிட்டதாகக் கூறி, மனித உரிமை அமைப்புகளும் காணாமல் போனவர்களின் உறவினர்களும் சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தி டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.</p><p>செம்மணி விவகாரம் தொடர்பான விசாரணை சுதந்திரமானதாகவே உள்ளது என்றும், அது உள்நாட்டு நிறுவனங்கள் மூலமாகவே முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அரசாங்கம் வலியுறுத்துகிறது.</p><p>தமிழ் குடும்பங்களுக்கு உதவ அரசாங்க நிறுவனங்கள் தவறிவிட்டன என்ற குற்றச்சாட்டுகளை நீதி அமைச்சர் ஹர்ஷன நானயக்கார நிராகரித்தார்.</p><p>"நான் அனைவரிடமும் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். இந்த அமைப்புகளை அவற்றின் கடந்தகால செயல்பாடுகளைக் கொண்டு மதிப்பிடாதீர்கள்; மாறாக, எங்கள் அரசாங்கத்தின் கீழ் அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதைக் கொண்டு மதிப்பிடுங்கள்," என்று அவர் கூறினார்.</p><p>இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவரான யோகராசா கனகரன்ஜினி, உள்நாட்டு விசாரணைகளை நிராகரித்தார்.</p><p>இலங்கை அரசாங்கத்தால் நிறுவப்பட்ட உள்நாட்டு வழிமுறைகளையோ அல்லது விசாரணைகளையோ நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.</p><p>இலங்கை அரசு எங்களுக்கு ஒருபோதும் நீதியை வழங்காது. பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு உயிரிழந்தனர் என்பதை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.</p>]]></content:encoded></item><item><title>சௌகார் ஜானகி மறைவு: நடிகர் கமல்ஹாசன் இரங்கல்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/kamal-haasan-condoles-death-of-sowcar-janaki</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/kamal-haasan-condoles-death-of-sowcar-janaki#comments</comments><guid isPermaLink="false">508fe4c4-02e1-4817-9712-039d2b9c1024</guid><pubDate>Fri, 21 Aug 2026 11:35:22 +0000</pubDate><atom:updated>2026-08-21T11:35:22.527Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sowcar Janaki,kamal haasan,சௌகார் ஜானகி,கமல்ஹாசன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/7lruggy0/janaki.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ sowkar janaki]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/7lruggy0/janaki.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகை <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BF">சௌகார் ஜானகி</a> மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.</p><p>தமிழ்த் திரையுலகின் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.</p><p>சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் வசித்து வரும் சௌகார் ஜானகியின் வயது 94. இன்று சிகிச்சை பலனளிக்காமல் நடிகை சௌகார் ஜானகி காலமானார். அவரது மறைவு தமிழ்த் திரையுலகினரையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.</p><p>நடிகை சௌகார் ஜானகி மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.</p><h2>கமல்ஹாசன் இரங்கல்</h2><p>இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘பார்த்தால் பசி தீரும்’ படம் தொடங்கி நாற்பதாண்டுக் காலப்பரப்பில் பல படங்கள் இணைந்து பணியாற்றியுள்ளோம். அவர் அம்மா, நான் பிள்ளை. தென்னிந்தியத் திரையின் தவிர்க்கவியலாத நடிப்புக் கலைஞர் சௌகார் ஜானகி. அன்றைய கதாநாயகர்கள் அத்தனை பேரோடும் நடித்தவர். என் ஆசிரியர் கே.பாலசந்தரின் விருப்பத் தேர்வாக இருந்தவர். மறைந்துவிட்டார். அன்னை பிம்பம் ஒன்று விடைபெற்றது. கண்ணீரோடு வழியனுப்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.</p><p>நடிகை சௌகார் ஜானகி 1950, 60-களில் முன்னணி கதாநாயகியாக ஜொலித்தவர். இவர் சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.</p><p>தமிழைத் தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.</p><h2>விருதுகள்</h2><p>கடந்த 2022-ம் ஆண்டில் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தது. தமிழக அரசின் கலைமாமணி விருது உள்பட பல விருதுகளை சௌகார் ஜானகி பெற்றுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பாதுகாப்பு படை வீரர்களிடம் Gen Z எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளம்பெண் - வைரலாகும் சர்ச்சை வீடியோ</title><link>https://www.maalaimalar.com/news/national/women-gen-z-tourists-ladakh-security-controversy</link><comments>https://www.maalaimalar.com/news/national/women-gen-z-tourists-ladakh-security-controversy#comments</comments><guid isPermaLink="false">86aab4ac-a79a-4c4e-bde0-2d8b78921873</guid><pubDate>Fri, 21 Aug 2026 10:36:29 +0000</pubDate><atom:updated>2026-08-21T10:36:29.166Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gen z,ladakh,omar abdullah,Indian soldiers,ஓமர் அப்துல்லா,லடாக்,இந்திய ராணுவம்,ஜென் சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/3joqsitz/Untitled-design-2.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ladakh Gen Z Controversy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/3joqsitz/Untitled-design-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>லடாக் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப் படை வீரர்களிடம், சுற்றுலா சென்ற பெண்கள் ‘நாங்கள் ஜென் சி தலைமைறையினர்’ என்று கூறி மரியாதையில்லாமல் பேசியது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. </p><h3><strong>லடாக் சோதனைச் சாவடி</strong></h3><p>லடாக் பகுதியில் உள்ள மினிமார்க் சோதனைச் சாவடியில், சுற்றுலா சென்ற பயணிகளின் வாகனங்களை நிறுத்தி பாதுகாப்பு படை வீரர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.</p><p>அப்போது தங்களின் வாகனம் பல மணி நேரமாக தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டதாக, அங்கு இருந்த இரண்டு பெண்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.</p><h3><strong>சர்ச்சை பேச்சு</strong></h3><p>அந்த சமயத்தில் ஒரு பெண் பாதுகாப்பு அதிகாரியிடம், ‘நாங்கள் ஜென் சி தலைமுறையினர், இந்த முட்டாள்தனத்தை நாங்கள் பொறுத்துக் கொள்ளப் போவதில்லை’ என்று கூறினார்.</p><p>மேலும், பாதுகாப்பு படை வீரர்களின் கட்டுப்பாடுகளை கேள்விக்குள்ளாக்கியதோடு, மற்ற சுற்றுலா பயணிகளையும் அங்கிருந்து வெளியேறுமாறு அந்த பெண் கூறினார்.</p><p>மேலும் அந்த பெண், நமது வரிப் பணத்தால் அனைவருக்கும் சம்பளம் கிடைக்கிறது. அவர் இப்போது நமக்கு மேல் போய் விடுவாரா? என்றும் கேள்வி எழுப்பினார்.</p><p>பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் மரியாதை இல்லாமல் நடந்து கொண்ட சம்பவம் இணையத்தில் பரவி வைரலானது. இந்த பதிவிற்கு சமூக வலைதள பயனர்கள், அந்த பெண்ணின் நடத்தை மோசமானது மற்றும் மிகவும் அருவருப்பானது என்று கூறினர்.</p><p>இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை அடுத்து, தான் சொன்ன வார்த்தைகளுக்காக தன்னை மன்னித்து கொள்ளும்படி, அந்த பெண் பதிவிட்டுள்ளார்.</p><h3><strong>மன்னிப்பு</strong></h3><p>அவர் அந்த வீடியோவில், “எங்களுடைய தேசத்தின் பாதுகாவலனாக உள்ள சகோதரரே, தயவு செய்து என்னை மன்னித்து கொள்ளுங்கள்” என்று பதிவிட்டார்.</p><p>நாங்கள் விரக்தியின் காரணமாகவே அப்படி பேசுகிறோம். ஆனால் நாங்கள் வைத்த விமர்சனத்திற்கு நீங்கள் ஒருபோதும் பதிலுக்கு எதுவும் சொல்வதில்லை. என்னை உங்களின் ஒரு சிறு தங்கையாக கருதி மன்னித்து கொள்ள வேண்டும்,” என்று கூறினார்.</p><h3><strong>கண்டனம்</strong></h3><p>இதையடுத்து ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா, அந்த பெண் கூறிய இந்த கருத்திற்கு தனது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர், ஜென் Z என்ற அடையாளத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது, பழைய என் அப்பா யார் என்று தெரியாது என்ற மனப்பான்மையை போல் ஆகிவிட்டது என்று கூறினார்.</p><p>பாதுகாப்பு படை வீரர்கள் மீதான விமர்சனத்திற்கு முன்னாள் ராணுவ அதிகாரி கே.ஜே.எஸ். தில்லனும், அந்த சுற்றுலா பயணியின் நடத்தையை விமர்சித்தார்.</p><p>லெப்டினண்ட் ஜெனரல் டி.பி. பாண்டே கூறுகையில், இந்த சம்பவம் ஜென் Z தலைமுறையினரை மிகவும் எதிர்மறையாக சித்தரித்துள்ளது என்று கூறினார்.</p><p>இதற்கிடையில் லெப்டினண்ட் ஜெனெரல் சதீஷ் துவா, ராணுவ சம்பளங்கள் குறித்ததாக கூறப்பட்ட கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தடோடு, லடாக் பிராந்தியத்தின் பாதுகாப்பு சார்ந்த முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.</p>]]></content:encoded></item><item><title>22 வருடத்திற்கு முன் பதியப்பட்ட வழக்கில் இந்திய வீரர் நிரபராதி என அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/india-cricketer-jacob-martin-played-10-odis-acquitted-in-22-year-old-criminal-case</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/india-cricketer-jacob-martin-played-10-odis-acquitted-in-22-year-old-criminal-case#comments</comments><guid isPermaLink="false">9a829638-0763-450c-adf9-1e903510717b</guid><pubDate>Fri, 21 Aug 2026 10:22:39 +0000</pubDate><atom:updated>2026-08-21T10:22:39.295Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BCCI,பிசிசிஐ,Jacob Martin,ஜேக்கப் மார்ட்டின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/3oq82pek/JacobMartin001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜேக்கப் மார்ட்டின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/3oq82pek/JacobMartin001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜேக்கப் மார்ட்டின் மீது கடந்த 2004-ம் ஆண்டு இங்கிலாந்து குடிவரவு முத்திரை, பயண ஏற்பாடுகள் மற்றும் நிதிப் பரிவர்த்தனைகள் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது.</p><p>இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜேக்கப் மார்ட்டின். இவர் இந்திய அணிக்காக 10 ஆண்டுகள் விளையாடியுள்ளார். இவர் மீது 2004-ம் ஆண்டு மீது டெல்லியில் உள்ள பாட்டியாலா நீதிமன்றத்தில் போலியான இங்கிலாந்து குடிவரவு முத்திரை, பயண ஏற்பாடுகள் மற்றும் நிதிப் பரிவர்த்தனைகள் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது.</p><p>இந்த வழக்கு மீதான விசாரணை முடிவில் "ஜேக்கப் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியவில்லை. நிதிப் பரிவர்த்தனைகள் அல்லது அஜ்வா ஸ்போர்ட்ஸ் கிளப்பின் மீதான அவரது உரிமை அல்லது கட்டுப்பாடு குறித்து நம்பகமான சான்றுகள் எதுவும் இல்லை. பல சாட்சிகளும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத் தவறிவிட்டனர்" எனக் கூறி நீதிமன்றம் ஜேக்கப் மார்ட்டினை விடுதலை செய்துள்ளது.</p><h2>இது தொடர்பாக ஜேக்கப் மார்ட்டின் கூறியதாவது:-</h2><p>2004-ல் விளையாடுவதற்காக எனது தலைமையிலான ஒரு அணி இங்கிலாந்துக்குச் சென்றிருந்தது. அந்த அணியில் சென்ற அனைவரும் திரும்பி வந்தனர். ஆனால் ஒரு வீரர் மட்டும் அங்கேயே தங்கிவிட்டார். அவரது விசா 6 மாத காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதால், அவர் 6 மாதங்கள் வரை அங்கு தங்கியிருக்கலாம். ஆனால் அவர் அனுமதிக்கப்பட்ட காலத்தையும் தாண்டி அங்கேயே தங்கிவிட்டார்.</p><p>பின்னர், யாரோ ஒருவரின் உதவியுடன் அவர் போலியான விசா முத்திரையைப் (fake stamping) பெற்றுக்கொண்டார். அந்தப் போலியான முத்திரையுடன் இந்தியா திரும்ப முயன்றபோது அவர் பிடிபட்டார். இங்கிலாந்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட அவர், டெல்லியின் IGI விமான நிலையத்தில் பிடிபட்டு விசாரணையை எதிர்கொண்டார்.</p><h2>பிசிசிஐ-யிடம் இருந்து எனக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை</h2><p>முதல் தகவல் அறிக்கையில் (FIR) என் பெயர் கூட இடம்பெறவில்லை. ஆனால் விசாரணை தொடங்கியபோது, ​​நான் ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரராகவும் பிரபலமான நபராகவும் இருந்ததால், இந்த வழக்கில் என் பெயரும் சேர்க்கப்பட்டது. வழக்கு நடந்து கொண்டிருந்த அந்த 22 ஆண்டுகளும் எனக்கு மிகுந்த மன உளைச்சலாக இருந்தது. பிசிசிஐ-யிடமிருந்தும் எனக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. அதே சமயம் ரெயில்வேயில் இருந்த எனது வேலையையும் இழந்தேன்.</p><p>ஆனால் இப்போது வந்துள்ள இந்தத் தீர்ப்பின் மூலம் நான் குற்றமற்றவன் என்று நிரூபிக்கப்பட்டு முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளேன். இது என் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையாகவும், மிகப்பெரிய நிம்மதியைத் தருவதாகவும் அமைந்துள்ளது. 22 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்துள்ள இந்த முடிவு என் வாழ்க்கையையே மாற்றியமைக்கும் ஒரு முக்கிய நிகழ்வாக இருக்கிறது.</p><p>இவ்வாறு ஜேக்கப் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY : மீண்டும் ஜெட் வேகத்தில் ஏறிய தங்கம் விலை- இல்லத்தரசிகள் அதிர்ச்சி</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-21-08-2026-2</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-21-08-2026-2#comments</comments><guid isPermaLink="false">0cfc0016-fcea-4fde-b053-c2460142545e</guid><pubDate>Fri, 21 Aug 2026 10:21:13 +0000</pubDate><atom:updated>2026-08-21T10:21:13.383Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/htle9kc1/gold07.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ தங்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/htle9kc1/gold07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">தங்கம்</a>... என்றால் தற்போது நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாகவே மாறி வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய விலையில் விற்பனை செய்யப்படுவதால் உச்சத்தை தொட்டு விற்பனையாகிறது. ஆடி மாதம் முடிந்து சுபமுகூர்த்த தினங்கள் நிறைந்த ஆவணி மாதம் பிறந்துள்ளதால், இனி வரும் நாட்களில் தங்கத்தின் தேவை அதிகரித்து விலை மேலும் உயரும் என கணிக்கப்பட்டது. </p><p>அதன்படி, நேற்று முன்தினம் காலை தங்கம் விலை சற்று குறைந்த நிலையில் மாலை திடீரென உயர்ந்தது. கிராமுக்கு ரூ.195 உயர்ந்து ரூ.14 ஆயிரத்து 400-க்கும், சவரனுக்கு ரூ.1,560 உயர்ந்து ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 200-க்கும் விற்பனையானது. அதனை தொடர்ந்து நேற்று  கிராமுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,600-க்கும் சவரனுக்கு 1,600 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 800-க்கு விற்பனையானது.</p><p>இதனை தொடர்ந்து இன்று காலையும் <a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-21-08-2026">தங்கம்</a> விலை அதிரடியாக உயர்ந்தது.  அதன்படி, கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,710-க்கும் சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 680-க்கு விற்பனை செய்யப்பட்டது. </p><h2><strong>ஜெட் வேகத்தில் உயர்வு</strong></h2><p>இந்த நிலையில், தற்போது தங்கம் விலை மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு 140 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,850-க்கும் சவரனுக்கு 1,120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2000 உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.</p><h2><strong>வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>தங்கத்தை போலவே வெள்ளி விலையும் மீண்டும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 270 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><h2><strong>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்</strong></h2><p>20-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,800</p><p>19-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,200</p><p>18-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,320</p><p>17-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,160</p><p>16-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,760</p><h2><strong>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>20-08-2026- ஒரு கிராம் ரூ.260</p><p>19-08-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>18-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>17-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>16-08-2026- ஒரு கிராம் ரூ.255</p>]]></content:encoded></item><item><title>சௌகார் ஜானகி மறைவு: முதலமைச்சர் விஜய் இரங்கல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-condoles-death-of-veteran-actress-sowcar-janaki</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-condoles-death-of-veteran-actress-sowcar-janaki#comments</comments><guid isPermaLink="false">ee7d077f-fb92-41ba-9430-6fe99d850081</guid><pubDate>Fri, 21 Aug 2026 10:17:22 +0000</pubDate><atom:updated>2026-08-21T10:17:22.294Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sowcar Janaki,Vijay,விஜய்,condolence,இரங்கல்,சௌகார் ஜானகி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/rpgi0kim/VJ.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Actress Sowcar Janaki- TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/rpgi0kim/VJ.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார். இவரது மறைவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.</p><h2>முதலமைச்சர் இரங்கல்</h2><p>முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-</p><p>பழம்பெரும் திரைப்பட நடிகையும், தனது தனித்துவமான நடிப்பால் பல தலைமுறை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவருமான திருமதி <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/veteran-actress-sowcar-janaki-passes-away" rel="nofollow">சௌகார் ஜானகி</a> அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.</p><p>திரைத்துறையில் 70 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்து, எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டிய அவரது கலைப்பணி என்றும் போற்றத்தக்கது. </p><p>தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல்வேறு மொழிப் படங்களில் நடித்து சாதனை படைத்துள்ளதோடு, பத்மஸ்ரீ விருது, <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/nikhil-murugan-who-worked-as-a-public-relations-officer-for-575-films-receives-kalaimamani-award-792492" rel="nofollow">கலைமாமணி</a> விருது, நந்தி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள திருமதி சௌகார் ஜானகி அவர்களின் மறைவு திரையுலகத்திற்கு பேரிழப்பாகும்.</p><p>திருமதி சௌகார் ஜானகி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடிகளில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>மறைவு</h2><p>நடிகை சௌகார் ஜானகி 1950, 60-களில் முன்னணி கதாநாயகியாக ஜொலித்தவர். இவர் சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.</p><p>தமிழைத் தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த சௌகார் ஜானகி, சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.</p><p>94 வயதாகும் அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார். </p><p>அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டது. அவரது உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து, டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.</p><p>இந்நிலையில் நடிகை சௌகார் ஜானகி இன்று காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானார்.</p><h2>விருதுகள்</h2><p>கடந்த 2022-ம் ஆண்டில் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தது. தமிழக அரசின் கலைமாமணி விருது உள்பட பல விருதுகளை சௌகார் ஜானகி பெற்றுள்ளார்.</p><h2>திரையுலகினர் இரங்கல்</h2><p>பழம்பெரும் நடிகை சௌவுக்கார் ஜானகியின் மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>அராஜக அரசியலில் ஈடுபடுகிறார் ராகுல் காந்தி: பாஜக எம்.பி. சாடல்</title><link>https://www.maalaimalar.com/news/national/bjp-mp-ravi-shankar-prasad-condemn-rahul-gandhi-dharna</link><comments>https://www.maalaimalar.com/news/national/bjp-mp-ravi-shankar-prasad-condemn-rahul-gandhi-dharna#comments</comments><guid isPermaLink="false">b8fb861d-1d03-43b9-9408-ddecd5cfbac2</guid><pubDate>Fri, 21 Aug 2026 10:02:06 +0000</pubDate><atom:updated>2026-08-21T10:02:06.744Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Ravi Shankar Prasad,dharna,ரவிசங்கர் பிரசாத்,தர்ணா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/epy8ttlq/ravi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ravishankar prasad, rahul gandhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/epy8ttlq/ravi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தலைநகர் டெல்லியில் தர்ணாவில் ஈடுபட்டு வரும் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">ராகுல் காந்தி</a> அராஜக அரசியலில் ஈடுபடுவது துரதிர்ஷ்டவசமானது என்றார் பா.ஜ.க. எம்.பி.</p><h2>மாணவர்கள் போராட்டம்</h2><p>நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகக் கோரி சிஜேபி தலைமையில் டெல்லியில் ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடைபெற்றது.</p><p>ஜூலை 20-ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் மாணவர்கள், இளைஞர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தினர். அவர்கள்மீது காவல்துறை மற்றும் ஆர்ஏஎப் மத்திய படையினர் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தாக்கினர்.</p><p>ஆர்.ஏ.எப். படையினர் மாணவர்கள்மீது ஆபத்தான பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி சுட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்தன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிலர் உடலில் பெல்லட் துப்பாக்கி குண்டு காயங்கள் இருந்தது மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.</p><p>இதற்கிடையே, பெல்லட் துப்பாக்கி குண்டுகளால் காயமடைந்த 19 வயது இளைஞர் சாஹில் லோசப் என்ற இளைஞருடன் இன்று டெல்லி நாடாளுமன்ற தெரு காவல்நிலையத்திற்கு சென்ற அவர், இவ்விவகாரத்தில் எப்.ஐ.ஆர். பதிவுசெய்யும்படி காவலர்களைக் கோரினார்.</p><h2>ராகுல் காந்தி தர்ணா</h2><p>ஆனால், காவலர்கள் எப்.ஐ.ஆர். பதிய மறுப்பு தெரிவிக்கவே, காவல்நிலையத்தில் வெளியே அமர்ந்து ராகுல் காந்தி தர்ணாவில் ஈடுபட்டார்.</p><p>இந்நிலையில், ராகுல் காந்தி தர்ணா குறித்து பா.ஜ.க. எம்.பி. ரவிசங்கர் பிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:</p><p>எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அராஜக அரசியலில் ஈடுபடுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.</p><p>தற்போது ​​எவ்வித அனுமதியோ அல்லது முன் அறிவிப்போ இன்றி நாடாளுமன்ற வீதியில் உள்ள காவல்நிலையத்தில் அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.</p><p>அவர் குறிப்பிடும் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே FIR பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என காவல்துறையினர் அவருக்குத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்துள்ளது.</p><h2>சட்டத்தை மதிக்காத ராகுல் காந்தி</h2><p>ராகுல் காந்தி அவர்களே, நீங்கள் எந்தச் சட்டத்தையும் மதிக்க விரும்பவில்லையா? 'வந்தே மாதரம்' என்ற தேசியப் பாடல் விவகாரத்தில் காங்கிரஸ் எடுத்துள்ள நிலைப்பாட்டாலேயே அக்கட்சி தற்போது இக்கட்டான சூழலில் சிக்கியுள்ளதாக நாங்கள் சந்தேகிக்கிறோம், குற்றம் சாட்டுகிறோம்.</p><p>ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் தற்போது செய்து வரும் செயலை நாங்கள் கண்டிக்கிறோம் என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>‘டோரதி’ படத்தின் முதல் பாடல் நாளை வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-first-song-from-the-movie-dorothy-releases-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-first-song-from-the-movie-dorothy-releases-tomorrow#comments</comments><guid isPermaLink="false">7f9c6d16-9c64-497f-ad54-df86e91953be</guid><pubDate>Fri, 21 Aug 2026 09:56:32 +0000</pubDate><atom:updated>2026-08-21T09:56:32.318Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>இளையராஜா,Ilayaraja,Karthik Subbaraj,கார்த்திக் சுப்பராஜ்,டோரதி,Dorothy</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/fuogknr8/New-Project-2026-08-21T152608.326.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘டோரதி’ படத்தின் முதல் பாடல் நாளை வெளியீடு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/fuogknr8/New-Project-2026-08-21T152608.326.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் 10வது திரைப்படம் டோரதி. கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். </p><p>கார்த்திக் சுப்பராஜின் தம்மம் ஃபிலிம்ஸ், ஜியோ ஸ்டுடியோஸ், சிக்யா என்டர்டெயின்மென்ட் இணைந்து படத்தை தயாரித்துள்ளன. இப்படம் செப்.25ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. </p><p>இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான கல்யாண விருந்து நாளை வெளியாகும் என இயக்குநர் சுப்பராஜ் தெரிவித்துள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="et" dir="ltr">&quot;Kalyana Virundhu&quot;  &quot;கல்யாண விருந்து&quot; <br><br>An Ex-Wedding Paattu by Maestro <a href="https://x.com/ilaiyaraaja?ref_src=twsrc%5Etfw">@ilaiyaraaja</a> Sir <br><br>The First &#39;Raaja Sambhavam&#39; for <a href="https://x.com/hashtag/Dorothy?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Dorothy</a> is releasing tomorrow... <br><br>Muhurtam naal - Aug 22nd <a href="https://x.com/hashtag/KalyanaVirundhu?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#KalyanaVirundhu</a><a href="https://x.com/hashtag/ExWeddingPaattu?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ExWeddingPaattu</a><a href="https://x.com/hashtag/RaajaSambhavam?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#RaajaSambhavam</a><a href="https://x.com/hashtag/DorothyfromSep25?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#DorothyfromSep25</a>… <a href="https://t.co/QQ6YKDLbNs">pic.twitter.com/QQ6YKDLbNs</a></p>&mdash; karthik subbaraj (@karthiksubbaraj) <a href="https://x.com/karthiksubbaraj/status/2090708867122598167?ref_src=twsrc%5Etfw">August 21, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>சர்க்கரை விலை உயர்வு: நீரிழிவு நோயை குறிப்பிட்டு விசித்திரமான பதில் அளித்த பீகார் அமைச்சர்</title><link>https://www.maalaimalar.com/news/national/bihar-ministers-bizarre-diabetes-logic-over-sugar-price-hike</link><comments>https://www.maalaimalar.com/news/national/bihar-ministers-bizarre-diabetes-logic-over-sugar-price-hike#comments</comments><guid isPermaLink="false">9ee7501e-482d-4bd7-ac27-bffb7725a284</guid><pubDate>Fri, 21 Aug 2026 09:43:57 +0000</pubDate><atom:updated>2026-08-21T09:43:57.567Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பீகார்,Bihar,சர்க்கரை விலை உயர்வு,Sugar Rate</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/bh9pwbhs/ShravanKumar001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சர்க்கரை விலை உயர்வு- ஷ்ரவன் குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/bh9pwbhs/ShravanKumar001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/bihar-government-approves-rs-10000-for-social-media-creators-promoting-welfare-schemes">பீகார்</a> மாநிலத்தில் சர்க்கரை விலை அதிக அளவில் உயர்ந்தது குறித்த கேள்விக்கு அமைச்சர் ஷ்ரவன் குமார், இப்போதெல்லாம் யார் ஸ்வீட்ஸ் சாப்பிடுகிறார்கள்? சர்க்கரை விலை உயர்வால் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படப்போவதில்லை என்று தெரிவித்துள்ள கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>சர்க்கரை விலை உயர்வு</h2><p>இந்தியாவில் உற்பத்தி திறன் குறைவு, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் சர்க்கரையின் அளவு அதிகரித்துள்ளதால் சர்க்கரை விலை அதிகரித்துள்ளது. பீகாரில் சில்லறை விலையில் ஒரு கிலோ சர்க்கரை 48 ரூபாய் 50 ரூபாய் வரை விற்பனையாகி வந்தது. தற்போது 65 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.</p><p>இது தொடர்பாக பீகார் அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அமைச்சர் அளித்த பதில் விசித்திரமாக இருந்தது.</p><h2>இது தொடர்பாக பீகார் அமைச்சர் ஷ்ரவன் குமார் கூறியதாவது:-</h2><p>எப்படியும் மக்கள் இப்போது குறைவான அளவிலேயே சர்க்கரையை உட்கொள்கிறார்கள். எல்லோரும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போதெல்லாம் யார் ஸ்வீட்ஸ் சாப்பிடுகிறார்கள்? சர்க்கரை விலை உயர்வால் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படப்போவதில்லை என்றே நான் கருதுகிறேன். எனவே, இதுகுறித்து கவலைப்படத் தேவையில்லை.</p><p>இவ்வாறு ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.</p><h2>மற்றொரு அமைச்சர் விஜய் குமார் கூறியதாவது:-</h2><p>சர்க்கரையின் விலையில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணத்தை ஆராய வேண்டும். சர்க்கரை உற்பத்திக்கு என ஒரு அமைச்சர் உள்ளார். இது குறித்து நாங்கள் விவரங்களைக் கேட்போம். எனது விவசாயிகளின் விளைபொருட்களின் விலை உயரும்போது நான் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியடைகிறேன்.</p><p>இவ்வாறு அமைச்சர் விஜய் குமார் தெரிவித்தார்.</p><h2>அமைச்சர் ஷ்ரவன் குமார் கருத்துக்கு பப்பு யாதவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பப்பு யாதவ் இதுகுறித்து கூறியதாவது:-</h2><p>மாட்டுச் சாணத்தின் மீது எவ்வளவு நெய் ஊற்றினாலும், அது மாட்டுச் சாணத்தின் சுவையையே கொண்டிருக்கும். அத்தகைய அமைச்சரிடமிருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்க முடியும்? சமையல் எரிவாயு மற்றும் தக்காளி விலை உயர்ந்தபோது, ​​ஸ்மிருதி இரானி உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் கேள்விகளை எழுப்பினர். ஆனால் இன்று சர்க்கரை விலை உயரும்போது, ​​அவர்கள் நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) பற்றி பேசுகிறார்கள். உண்மையில், அரசாங்கமே மிகப்பெரிய நீரிழிவு நோயாக உள்ளது.</p><p>இவ்வாறு பப்பு யாதவ் கடுமையாக சாடியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு தலைமைச் செயலாளர் அப்பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் - பெ.சண்முகம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-chief-secretary-unfit-to-continue-in-the-post-p-shanmugam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-chief-secretary-unfit-to-continue-in-the-post-p-shanmugam#comments</comments><guid isPermaLink="false">71f7df86-7609-4bb8-a393-5f0a2fa97133</guid><pubDate>Fri, 21 Aug 2026 09:41:32 +0000</pubDate><atom:updated>2026-08-21T09:41:32.448Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>P. Shanmugam,பெ.சண்முகம்,தவெக அரசு,tvk government,Chief Secretary Saikumar,தலைமைச் செயலாளர் சாய்குமார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/4li5nbb2/New-Project-2026-08-21T151104.102.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாடு தலைமைச் செயலாளர் அப்பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் - பெ.சண்முகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/4li5nbb2/New-Project-2026-08-21T151104.102.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சாய்குமார் அப்பதவியில் இருப்பதற்கு தகுதியற்றவர் என்றும், அவரை நீக்க வலியுறுத்தி நாளை (ஆக.22) மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;</p><p>“இடதுசாரி மாணவர் இயக்கங்களைக் குறி வைத்ததன் மூலம் தலைமைச் செயலாளரின் சித்தாந்த சாய்மானம் அம்பலப்பட்டு நிற்கிறது. அரசு எந்திரத்தை அவரது நோக்கத்திற்காக தவறாக பயன்படுத்தும் எல்லைக்கு அவர் சென்றிருக்கிறார். </p><p>நியாயமான நிர்வாகத்தை இனிமேலும் அவரிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது. கடிதத்தின் 'பொருள்' இடதுசாரி இயக்கங்கள் குறித்து இருந்தாலும், உள்ளடக்கத்தில், மாணவர்களின் போராட்ட உரிமைகளையே அடக்கி ஒடுக்கும் எதேச்சதிகார மனோபாவமே அதில் பிரதிபலிக்கிறது. இது மிக ஆபத்தானது. </p><p>ஒன்றிய அரசின் பாணியை அடியொற்றி எடுக்கப்பட்ட நடவடிக்கையாகவே கருத வேண்டியிருக்கிறது. இது முதலமைச்சரின் அனுமதியுடன் நடந்ததா என்கிற கேள்வி எழுகிறது.</p><p>கல்லூரி கல்வி இயக்குநர் தம் சுற்றறிக்கையைத் திரும்பப் பெற்றிருக்கலாம். ஆனால், சட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டத்தின் முடிவும், அதனை அறிவுறுத்தி தமிழ்நாடு அரசின் சிறப்பு செயலாளர் அனுப்பிய கடிதமும் நீடிக்கின்றன. </p><p>உயர் கல்வித் துறை செயலாளர், கல்லூரி கல்வி இயக்ககம் தவிர, மற்ற இயக்ககங்களோ, பல்கலைக்கழகங்களோ இந்த சுற்றறிக்கையை அனுப்பவில்லை என்று 'டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கைக்குக் கூறியிருப்பதாக தகவல் உள்ளது. </p><p>ஆனால், தமிழ்நாடு அரசின் சிறப்பு செயலாளரின் கடிதம், கல்லூரி கல்வி இயக்ககம், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்பட்டு, சென்னை பல்கலைக்கழக பதிவாளர் மூலம் அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. </p><p>அவையும் இன்னும் திரும்பப் பெறப்படவில்லை. 'டாப் பிரையாரிட்டி, மோஸ்ட் இம்மீடியட்' என்ற வார்த்தைகளுடன் நடவடிக்கை எடுக்கப்பட்ட விவரம் குறித்த அறிக்கை கோரப்பட்டுள்ளதானது, எவ்வளவு தீவிரத் தன்மையுடன் திட்டமிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. எனவே, கல்லூரி கல்வி இயக்ககம் மட்டுமே தவறு செய்தது என்பது உண்மையல்ல. எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.</p><p>இப்பிரச்சனை சட்டமன்றத்தில் எழுப்பப்பட்டபோது, உயர்கல்வித்துறை அமைச்சர் அளித்த விளக்கமானது முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியதாகும். கல்வி வளாக அமைதி, மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்குவதில் தான் இருக்கிறதா என அவர் விளக்க வேண்டும். சில வார்த்தைகள் தவறாக வந்துவிட்டன என்கிறார். மொத்த உள்ளடக்கமே மோசமானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுகிறது.</p><p>குஜிலியம்பாறை வட்டாட்சியர் பிரச்சனையிலும் சட்டப்பேரவையில் வருவாய்த்துறை அமைச்சர், நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று குறிப்பிட்டார். ஆனால், மாவட்ட ஆட்சியரின் குறிப்பு, பயிற்சி முடிந்து விட்டதால் பேரிடர் மேலாண்மை ஆணையரகத்தில் பணியில் சேர்வதற்காக சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் விடுவிக்கப்பட்டதாகக் கூறுகிறது. பயிற்சி முடிந்த பின் விடுவிக்கப்பட்டு, வேறு பணியில் சேர்வதற்கு பெயர், தவெக ஆட்சியில், நடவடிக்கையா?</p><p>அடுத்தடுத்து இடதுசாரிகள் குறிவைக்கப்படுவதைத் தற்செயலானது என எடுத்துக் கொள்ள முடியாது.</p><ul><li><p>தமிழக முதலமைச்சரும், அரசும் தம் நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும்.</p></li><li><p>தலைமைச் செயலாளர் அப்பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் என்ற முறையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p></li><li><p> குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.</p></li></ul><p>என வலியுறுத்தி நாளைய தினம் (22.08.2026) தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வலிமையான கண்டனம் முழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுக்கிறது. </p><p>அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறது.” என தெரிவிக்கப்பட்டது. </p>]]></content:encoded></item><item><title>‘தி டாக் ஸ்டார்ஸ்’ பட நிகழ்ச்சியில் வித்தியாசமான தோற்றத்தில் ரசிகர்களை ஈர்த்த நடிகை மார்கரெட் குவாலி</title><link>https://www.maalaimalar.com/photo-gallery/cinema/actress-attends-the-dog-stars-premiere-barefoot</link><comments>https://www.maalaimalar.com/photo-gallery/cinema/actress-attends-the-dog-stars-premiere-barefoot#comments</comments><guid isPermaLink="false">ed038f31-8246-4b8e-a5df-9e3b29c926f2</guid><pubDate>Fri, 21 Aug 2026 09:35:28 +0000</pubDate><atom:updated>2026-08-21T09:35:28.232Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Hollywood,ஹாலிவுட்,the dog stars,Margaret Qualley,த டாக் ஸ்டார்ஸ்,மார்கரெட் குவாலி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/7nmvux06/Untitled-design.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மார்கரெட் குவாலி]]></media:title><media:description type="html"><![CDATA[ Margaret Qualley]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/7nmvux06/Untitled-design.jpg?w=280" width="280"></media:thumbnail><category>Cinema</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D">ஹாலிவுட்</a> நடிகையான மார்கரெட் குவாலி தனது அடுத்த படமான ‘தி டாக் ஸ்டார்ஸ்’ வெளியீட்டின் பிரீமியர் நிகழ்ச்சியில் செருப்பு அணியாமல் வெறுங்காலுடன் வந்து கலந்து கொண்ட நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.</p><h3><strong>மார்கரெட் குவாலி</strong></h3><p>அமெரிக்க நடிகையான 31 வயதான மார்கரெட் குவாலி கதா நாயகியாக தி டாக் ஸ்டார்ஸ் திரைப்படத்தில் நடிகர் ஜேக்கப் எல்ரோடியுடன் நடித்துள்ளார்.</p><p>கிளாடியேட்டர்ஸ் முதல் பாகம், இரண்டாம் பாகம் மற்றும் நெப்போலியன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ரிட்லெ ஸ்காட், இந்த தி டாக் ஸ்டார்ஸ் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.</p><p>இந்த திரைப்படத்தில் ஜேக்கப் எல்ரோடி, ஜோஷ் ப்ரோலின், அலிசன் ஜானி மற்றும் பெனடிக்ட் வோங் ஆகியோர் நடித்துள்ளனர்.</p><p>இந்த திரைப்படம் அமெரிக்காவில் வரும் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையே இங்கிலாந்தில் நடைபெற்ற தி டாக் ஸ்டார்ஸ் திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்வில், திரைப்படத்தில் நடித்த நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.</p><p>அப்போது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில், கருப்பு நிற உடையுடன் வந்த நடிகை மார்கரெட் குவாலி, செருப்பு அணியாமல் வெறுங்காலுடன் வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.</p><p>அவர் அணிந்திருந்த முழுவதும் வட்ட வடிவ விளிம்புகளால் அலங்கரிக்கப்பட்ட V-வடிவ கழுத்துடைய ஒரு பாரம்பரியமான உடையில் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.</p><p>இந்த சிவப்பு கம்பள நிகழ்விற்காக, சமூக வலைதளங்களில் பிரபலமாக அறியப்படுகின்ற வெறுங்கால் குதிகால் செருப்புகளை அணிந்து வந்து தைரியமாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.</p><p><strong>வெறுங்கால் ஹீல்ஸ்</strong></p><p>நடிகை அணிந்து வந்த ‘வெறுங்கால் ஹீல்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள செருப்பின் வடிவம், ஒரு சிறிய தோல் குதிங்கால் மூடியுடன் மட்டுமே வடிவமைக்கப்பட்டிருந்தது.</p><p>பிரான்சில் உள்ள பியாரிட்ஸ் நகரில், பிரபல ஆடை வடிவமைப்பாளரான மேத்யூ பிளேஸி, முதன்முதலில் இந்த ஒப்பனையை அறிமுகம் செய்திருந்தார்.</p><p>மேலும் இந்த வடிவமைப்பை ஆடம்பர பிராண்டிற்காக தனது 2027 ரிசார்ட் கலெக்‌ஷனை வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருச்சி அணிகள் இன்று மோதல்</title><link>https://www.maalaimalar.com/sports/tnpl-cricket-chepauk-super-gillies-trichy-teams-clash-today</link><comments>https://www.maalaimalar.com/sports/tnpl-cricket-chepauk-super-gillies-trichy-teams-clash-today#comments</comments><guid isPermaLink="false">64a53544-78e8-4701-84de-f9f49f92da11</guid><pubDate>Fri, 21 Aug 2026 08:55:22 +0000</pubDate><atom:updated>2026-08-21T08:55:22.129Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Trichy,திருச்சி,டிஎன்பிஎல்,tnpl,சேப்பாக் சூப்பர் கில்லீஸ்,chepauk super ghillies</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/qac7mqsr/TNPL.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TNPL]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/qac7mqsr/TNPL.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>8 அணிகள் பங்கேற்றுள்ள 10- வது டி.என். பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்னும் 4 லீக் ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.  ஒவ்வொரு அணிகளும் 6 போட்டிகளில் விளையாடிவிட்டன.</p><h2>இன்றும் 2 ஆட்டங்கள் </h2><p>பிளே ஆப் சுற்றுக்கு நுழையும் 4 அணிகள் இன் னும்  முடிவாகவில்லை. திண்டுக்கல் டிராகன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் வாய்ப்பை இழந்தன. 6 அணிகள்  போட்டியில் உள்ளன. </p><p>இன்றும் 2 ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் - பாபா இந்திரஜித் தலைமையிலான  திண்டுக் கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.</p><p>கோவை அணி 3 வெற்றி, 3 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 5- வது இடத்தில் உள்ளது. 4-வது வெற்றி யுடன் பிளே ஆப் சுற்று ஆர்வத்தில் அந்த அணி இருக்கிறது. கோவை அணி யின் ரன்ரேட்  நன்றாக உள்ளது. தோற்றால் வெளி யேறிவிடும்.</p><h2>சேப்பாக் சூப்பர் கில்லீஸ் </h2><p>இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட் டத்தில் என். ஜெகதீசன் தலைமையிலான  சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - சுரேஷ் குமார் தலைமையிலான   திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன.</p><p>4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ 3 வெற்றி, 3 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளன. பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க  கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும்.  சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி  திண் டுக்கல் (7 விக்கெட்), சேலம் ( 5  விக்கெட்), மதுரை (39 ரன்) ஆகியவற்றை வீழ்த்தி இருந்தது.</p><p>நெல்லை  (50 ரன்), திருப்பூர்  ( 7 விக்கெட்), கோவை (5 விக்கெட்) ஆகிய வற்றிடம் தோற்றது. திருச்சி அணி 4 வெற்றி, 2 தோல்வியுடன்  8 புள்ளி பெற்றுள்ளது. அந்த அணி  வெற்றி பெற்றால்  10 புள்ளிகளுடன் பிளே ஆப் சுற்றுக்கு நுழையும்.</p><h2>நாளையுடன் லீக் முடிகிறது </h2><p>லீக் ஆட்டங்கள் நாளை யுடன் முடிகிறது. நாளையும் 2 போட்டி நடைபெறுகிறது. மாலை 3.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில்  சாய்  கிஷோர் தலைமையிலான  திருப்பூர் தமிழன்ஸ் - அபிஷேக் தலைமையிலான   சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகளும், இரவு 7.30 மணிக்கு நடை பெறும் 2- வது  போட்டியில் சோனு  யாதவ் தலைமை யிலான  நெல்லை  ராயல் கிங்ஸ் - அணிருத் தலைமை யிலான    மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.</p>]]></content:encoded></item><item><title>உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறியது ஜாலி-கோபிசந்த் ஜோடி</title><link>https://www.maalaimalar.com/sports/indian-pair-enter-sf-round-in-world-championship-badminton-womens-doubles</link><comments>https://www.maalaimalar.com/sports/indian-pair-enter-sf-round-in-world-championship-badminton-womens-doubles#comments</comments><guid isPermaLink="false">2f0957a4-125e-430a-bba3-35e24476dd08</guid><pubDate>Fri, 21 Aug 2026 08:25:00 +0000</pubDate><atom:updated>2026-08-21T08:25:00.009Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Treesa Jolly,Gayatri Gopichand,காயத்ரி கோபிசந்த்,World Championship badminton,உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்,திரிசா ஜாலி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/z8b943xs/jolly.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ jolly, gayatri]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/z8b943xs/jolly.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D">உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்</a> தொடர் டெல்லி இந்திரா காந்தி உள்ளரங்கில் நடந்து வருகிறது. இந்தத் தொடரில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.</p><p>இதில் பெண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் திரிசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி, சீனாவின் ஜியா யீபான் - ஜாங் சுக்சியான் ஜோடி உடன் மோதியது.</p><p>இதில் சிறப்பாக ஆடிய சீன ஜோடி 21-16 என முதல் செட்டைக் கைப்பற்றியது. இதில் சுதாரித்துக் கொண்ட திரிசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 21-15, 21-13 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியது.</p><p>ஆண்கள் ஒற்றையர், பெண்கள் ஒற்றையர், கலப்பு இரட்டையர் ஆகிய பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகள் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் அரங்கேறும் தேச விரோத செயல்கள்... மாணவர் வன்முறையை தொடர்ந்து அமைச்சர் குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/national/jadavpur-campus-clash-abvp-and-left-student-groups-in-violent-confrontation-arson-and-anti-national-allegations</link><comments>https://www.maalaimalar.com/news/national/jadavpur-campus-clash-abvp-and-left-student-groups-in-violent-confrontation-arson-and-anti-national-allegations#comments</comments><guid isPermaLink="false">4717b8ac-741d-49e8-974a-8cf9cf8255f6</guid><pubDate>Fri, 21 Aug 2026 08:24:14 +0000</pubDate><atom:updated>2026-08-21T08:24:14.414Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மேற்கு வங்கம்,கொல்கத்தா,Kolkata,west bengal,jadavpur university,ஜாதவ்பூர் பல்கலைக்கழகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/1q446hln/tn-6.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/1q446hln/tn-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">மேற்கு வங்க</a> தலைநகர் கொல்கத்தாவில் அரசு நடத்தி வரும் ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. </p><h2>மோதல் </h2><p>ஆர்எஸ்எஸ் உடன் இணைந்த வலதுசாரி மாணவர்கள் அமைப்பான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8F%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF">ஏபிவிபியை </a>சேர்ந்த மாணவர்களுக்கும் இடதுசாரி மாணவர்கள் அமைப்புகளை சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே நேற்று காலை பல்கலைக்ககழக வளாகத்தில் மோதல் ஏற்பட்டது. </p><p>இதில் பல மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் தெற்கு கொல்கத்தாவில் உள்ள பலக்லைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் பல இடங்களில் தீவைப்பு சம்பவங்களும் நடந்துள்ளன.</p><p>முன்னதாக நேற்று முன் தினம் நடந்த 'இன்ஜீனியர்கிங் அண்ட் டெக்னாலஜி யூனியன்' மீட்டிங்கில் இரு தரப்பு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதன் பின்னணியில் நேற்று இந்த கைகலப்பு நடந்துள்ளது.</p> <p>மாணவர்கள் அல்லாதோரை வெளியில் இருந்து அழைத்து வந்து தங்களை தாக்கியதாக இரு தரப்பினரும் குற்றம்சாட்டியுள்ளனர்.</p><p>இந்த விவகாரம் மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பாஜகவை சேர்ந்த அம்மாநில அமைச்சர் திலீப் கோஸ் இதுகுறித்து இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.</p><h2>தேச விரோத செயல்கள்</h2><p>அவர் கூறுகையில், "ஜாதவ்பூர் பல்கலைக்கழக வளாகத்தில் சில குழுக்கள் தேச விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. தேசத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்புவது உள்ளிட்டவற்றில் அவை ஈடுபட்டு வருகின்றன. </p><p>மரியாதைக்குரிய ஆளுனரிடத்திலும் அவமரியாதையாக நடந்துகொண்ட சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.</p><p>ஒரு கல்வி நிறுவனத்தில் இதுபோன்ற தேசவிரோத, சமூக விரோத செயல்கள் அனுமதிக்கப்படாது. அவை நிறுத்தப்பட வேண்டும்.</p><p>மாணவர் அரசியல் என்பது எப்போதுமே இதுபோன்ற பதற்றங்களை ஏற்படுத்துகிறது. நேற்று நடந்த வன்முறை குறித்த உண்மைகளை காவல்துறை கண்டறியும். </p><p>பல்கலைகழக வளாகத்தில் நடப்பட்டவற்றுக்கு பல்கலைக்கழக துணை வேந்தரும் பொறுப்பேற்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் அமைதியும், ஒழுங்கும் இருக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.</p> <h2>துணை வேந்தர்</h2><p>இதனிடையே இந்த விவகாரம் குறித்தும் வெளியாட்கள் வந்தனரா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருவதாக பல்கலைக்கழக துணை வேந்தர் சிரஞ்சிப் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார். </p><p>பொழுது சாய்ந்த பிறகு வெளியாட்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் வருவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>உலக கோப்பை ஹாக்கி: இந்திய பெண்கள் அணி நெதர்லாந்துடன் இன்று மோதல்</title><link>https://www.maalaimalar.com/sports/india-women-hockey-team-to-clash-with-netherlands-in-world-cup</link><comments>https://www.maalaimalar.com/sports/india-women-hockey-team-to-clash-with-netherlands-in-world-cup#comments</comments><guid isPermaLink="false">2e293874-6794-4882-807d-33ba1f6d4f36</guid><pubDate>Fri, 21 Aug 2026 08:11:34 +0000</pubDate><atom:updated>2026-08-21T08:11:34.769Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உலக கோப்பை ஹாக்கி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/v6zyufj0/Indian-team.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Indian Hockey Team]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/v6zyufj0/Indian-team.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>16- வது உலக கோப்பை ஹாக்கி போட்டி பெல்ஜியத்தில் உள்ள  வேவ்ரே, நெதர்லாந்தின் ஆம்ஸ்டல்வீன் ஆகிய 2 நகரங்களில் நடைபெற்று வருகிறது.</p><h2>இந்திய பெண்கள் அணி </h2><p>சலிமா டெட்டே தலைமையிலான இந்திய  பெண்கள் அணியும் டி பிரிவில் இடம் பெற்று இருந்தது. சீனா இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளும் அந்த பிரிவில் இருந்தன.</p><p>இந்திய மகளிர் அணி தொடக்க ஆட்டத்தில் சீனாவுடன் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. 2-வது போட்டியில் தென் ஆப்பிரிக்காவை  6-1 என்ற கோல் கணக்கில்  வீழ்த்தியது.</p><p>நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில்  இங்கிலாந்துடன் கோல் எதுவுமின்றி டிரா செய்தது. இதன் மூலம் 5 புள்ளிகளுடன்  இரண்டா வது இடத்தை பிடித்து 2- வது சுற்றுக்கு முன்னேறியது.</p><p>இந்த பிரிவில்  சீனா 7 புள்ளிகளுடன்  முதல் இடத்தை பிடித்தது. இங்கிலாந்து  4 புள்ளிகளும், தென் ஆப்பிரிக்கா புள்ளிகள்  எதுவும் பெறாமலும் வாய்ப்பை இழந்தன. 9 முதல் 16 இடங்களுக்கான  போட்டியில் அவைகள் விளையாடும்.</p><h2>நெதர்லாந்துடன் இன்று மோதல்</h2><p>2-வது சுற்றில் இந்திய அணி இ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதேபோல  சீனாவும், ஏ பிரிவில் முதல்  இடத்தை பிடித்த நெதர்லாந்து, 2- வது இடத்தை பிடித்த ஆஸ்திரேலியா  அணிகளும்  அதில்  உள்ளன. </p><p>இதில் ஒவ்வொரு அணிக்கும் 2 ஆட்டம் இருக்கும். முதல் சுற்றில் மோதிய அணியுடன் மீண்டும் மோத  தேவையில்லை. அதன் முடிவு கணக்கிடப்படும். அதன்படி நெதர்லாந்து 3 புள்ளிகளுடனும், இந்தியா, சீனா தலா ஒரு புள்ளிகளுடனும் 2-வது  சுற்றில் விளையாடுகிறது. இதன்  முடிவில் முதல்  2  இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.</p><p>சலிமா டெட்டே தலைமையிலான இந்திய  பெண்கள் அணி இன்று இரவு 9.30 மணிக்கு   நெதர்லாந்தை  எதிர்கொள்கிறது. அரை இறுதி வாய்ப்பில் நீடிக்க இதில் வெற்றி பெறுவது அவசியமாகும். </p><p>இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் ஆஸ்திரேலி வை  23- ந் தேதி (இரவு 10.30) சந்திக்கிறது.</p><h2>ஆண்கள் அணி </h2><p>ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய ஆண்கள் அணி  2-வது சுற்றில் இ பிரிவில் உள்ளது.‌ இங்கிலாந்து ஏ பிரிவில் முதல் இடத்தை பிடித்த நெதர்லாந்து, 2-வது இடத்தை பிடித்த அர்ஜெ ன்டினா ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன. </p><p>இங்கிலாந்து, நெதர்லாந்து தலா   3 புள்ளிகளுடன் 2- வது சுற்றில் விளையாடும். இந்திய அணி   முதல் ஆட்டத்தில் நெதர்லாந்தை  நாளை (22- ந் தேதி) இரவு 7.30 மணிக்கு சந்திக்கிறது.</p><p>அடுத்த போட்டியில் அர்ஜென்டினாவை  24-ந் தேதி  மாலை 6.15 மணிக்கு எதிர்கொள்கிறது. நேற்று ஏ பிரிவில் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டங்களில் அர்ஜென்டினா 7-1 என்ற கணக்கில் நியூசிலாந்தையும், நெதர் லாந்து 4-1 என்ற கணக்கில் ஜப்பானையும் வீழ்த்தின.</p>]]></content:encoded></item><item><title>பெல்லட் துப்பாக்கி சர்ச்சை: நேராக டெல்லி காவல் நிலையம் சென்ற ராகுல் காந்தி.. எப்ஐஆர் பதிய கோரி தர்ணா!</title><link>https://www.maalaimalar.com/news/national/pellet-gun-controversy-rahul-gandhi-stages-dharna-over-injured-student-demands-fir</link><comments>https://www.maalaimalar.com/news/national/pellet-gun-controversy-rahul-gandhi-stages-dharna-over-injured-student-demands-fir#comments</comments><guid isPermaLink="false">254cbc7b-013d-4fbe-b985-0a9b33217747</guid><pubDate>Fri, 21 Aug 2026 07:50:54 +0000</pubDate><atom:updated>2026-08-21T07:50:54.317Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,delhi,டெல்லி,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/3iadf041/tn-5.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராகுல் காந்தி]]></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல் காந்தி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/3iadf041/tn-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மக்களவை எதிர்க்கட்சி தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/rahul-gandhi">ராகுல் காந்தி</a>, ஜூலை 20 நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக வந்த மாணவர்கள் மீது பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். </p><h2>தர்ணா</h2><p>பெல்லட் துப்பாக்கி குண்டுகளால் காயமடைந்த 19 வயது இளைஞர் சாஹில் லோசப் என்ற இளைஞருடன் இன்று டெல்லி நாடாளுமன்ற தெரு காவல் நிலையத்திற்கு சென்ற அவர், இவ்விவகாரத்தில் எப்ஐஆர் பதிவு செய்யும்படி காவலர்களை கோரினார்.</p><p>ஆனால் காவலர்கள் எப்ஐஆர் பதிய மறுப்பு தெரிவிக்கவே, காவல்நிலையத்தில் வெளியே அமர்ந்து ராகுல் தர்ணாவில் ஈடுபட்டார்.</p><h2>ஜூலை 20 தாக்குதல்</h2><p>தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலக கோரி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">சிஜேபி </a>தலைமையில் டெல்லியில் ஒரு மாதத்திற்கும் போராட்டம் நடைபெற்றது.</p><p>ஜூலை 20 நாடாளுமன்ற மழைக்கால கூட்டம் தொடங்கிய முதல் நாளில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தினர். அவர்கள் மீது காவல்துறை மற்றும் ஆர்ஏஎப் மத்திய படையினர் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தாக்கினர்.</p><p>மேலும் ஆர்ஏஎப் படையினர் மாணவர்கள் மீது ஆபத்தான பெல்லட் துப்பாக்கிகளை பயன்படுத்தி சுட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. </p><p>மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிலர் உடலில் பெல்லட் துப்பாக்கி குண்டு காயங்கள் இருந்தது மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.</p><h2>சாஹில்</h2><p>குறிப்பாக சாஹில், உடலில் கடுமையான காயங்கள் இருந்ததன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. அவரின் ஒரு பக்க கண் பார்வை பரிபோகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.</p><p>அவருடன் ஏற்கனவே ஒரு முறை செய்தியாளர்களை சந்தித்து இவ்விவகாரத்தை எழுப்பிய ராகுல் இன்று அவருடன் காவல்நிலையம் சென்று எப்ஐஆர் பதிய வலியுறுத்தியதும் அதற்கு போலீஸ் மறுத்ததால் தர்ணாவில் ஈடுபட்டுள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>பெல்லட்</h2><p>பெல்லட் துப்பாக்கிகளில் இருந்து ஒரே நேரத்தில் ரப்பர் அல்லது ஈயத்தால் ஆன சிறு குண்டுகளை சுட முடியும். அது உடலில் புள்ளி புள்ளியான காயங்களை ஏற்படுத்தும். </p><p>இதை பயன்படுத்த மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. </p><p>அவ்வாறிருக்க அமைதியான முறையில் பேரணி சென்ற இளைஞர்கள் மீது இவை பயன்படுத்தப்பட்டதாக குற்றசாட்டு எழுந்துள்ளது விவாதப்பொருளாக மாறியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை விவகாரம்: சட்டசபையில் காரசார விவாதம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/constituency-delimitation-issue-heated-debate-in-the-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/constituency-delimitation-issue-heated-debate-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">a268b6e0-1ff6-4769-9be8-721f522d79bb</guid><pubDate>Fri, 21 Aug 2026 07:40:50 +0000</pubDate><atom:updated>2026-08-21T07:40:50.342Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Fair Delimitation,தமிழக சட்டசபை,TN assembly,தொகுதி மறுவரையறை,Delimitation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/lcxyacjc/aadhavarjuna.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் ஆதவ் அர்ஜூனா]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ஆதவ் அர்ஜூனா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/lcxyacjc/aadhavarjuna.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அனைத்து கட்சிகளின் நிலைப்பாடு என்னவோ அது தான் அரசின், தவெகவின் நிலைப்பாடு என்றார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபையில்</a> பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசுகையில், </p><p>பேரவைத் தலைவர் அவர்களே... ஒரு சிறு விளக்கம். நேற்று தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாடு நடந்தது. சில ஊடகங்கள், சில பத்திரிகைகள், சில கட்சிகள் தொகுதி மறுவரையறை பற்றி ஒரு தவறான பிரசாரத்தையும், கண்ணோட்டத்தையும் உருவாக்கப்பட்டது. முதலமைச்சர் கொண்டு வந்த தொகுதி மறுவரையறை தீர்மானம் இங்கு இருக்கக்கூடிய உறுப்பினர்களுடன் சட்டமன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசின் சார்பாக எங்களுடைய நன்றியை தெரிவித்தோம். </p><p>அதில் நேற்று பரப்பப்பட்ட போலி பிரசாரங்கள் தவறானது. தொகுதி மறுவரையறை தொடர்பாக எந்த விவாதமும் நேற்று நடந்த முதல்வர்கள் மாநாட்டில் வரவில்லை.  நம்முடைய தொகுதி மறுவரையறை கொள்கை சட்டமன்றத்தில் தீர்மானத்தில் என்ன நிறைவேற்றினோமோ அதில் அரசும் முதலமைச்சரும் உறுதியாக இருக்கிறார். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் 543 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பது தான் த.வெ.க.வின் நிலைப்பாடு. 25 ஆண்டுகள் 543 சீட் என்ற எண்ணிக்கையில் மாற்றம் செய்யக்கூடாது என்பதில் த.வெ.க. உறுதியாக இருப்பதை அவையில் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். </p><p>இதனை தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், தென்மண்டல மாநில முதல்வர்கள் மாநாட்டில் 543 எம்பி சீட்டை மாற்றக்கூடாது என முதல்வர் எங்கும் கூறவில்லை என்பதை இந்த அவையில் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். </p><p>தொடர்ந்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசுகையில், அனைத்து கட்சிகளின் நிலைப்பாடு என்னவோ அது தான் அரசின், தவெகவின் நிலைப்பாடு என்றார். </p><p>இதையடுத்து பேசிய எடப்பாடி பழனிசாமி, 7.18 என்ற விகிதத்தில் தமிழகத்திற்கான எம்பிக்கள் எண்ணிக்கையில் மாற்றம் கூடாது என்பதே அதிமுக நிலைப்பாடு என்றார். </p><p>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசுகையில், தொகுதி மறுவரையறை வேண்டாம் என்று நகலை எதிர்த்த திமுக, எதிர்க்கட்சியாக மாறிவிட்டதால் நிலைப்பாட்டை மாற்றியது. வாஜ்பாய் கொண்டு வந்ததை போல் 25 ஆண்டுகள் நீட்டிக்க சிறப்பு சட்டம் கொண்டு வரவேண்டும் என்றார். </p><p>இதையடுத்து பேசிய பாஜக எம்எல்ஏ போஜராஜன், 50% உயர்வு என வரம் போது தமிழக எம்பிக்கள் எண்ணிக்கை 59 ஆக உயரும், தொகுதி மறுவரையறை தமிழகத்துக்கு நல்லது. தமிழக எம்பிக்களின் எண்ணிக்கை உயர்த்தும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.  </p><p>பாமக எம்எல்ஏ கணேஷ்குமார் பேசுகையில், விகிதாச்சார அடிப்படையில் கூடுதல் எம்பிக்கள் தான் கிடைப்பார்கள், தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் வராது. முதலில் Fair Delimittation என கூறிய காங்கிரஸ் தற்போது ஏன் No Delimitation என சொல்வது ஏன்? 7.18 என்ற விகிதம் குறையாமல் இருந்தால் தொகுதி மறுவரையறையை ஆதரிப்பதாக த.வெ.க.வும் கூறியது. முந்தைய திமுக ஆட்சியில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தவெக பொதுச்செயலர் பங்கேற்றார். திமுக தலைமையில் நடந்த அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் த.வெ.கவும் கையெழுத்திட்டது. தவெகவும், காங்கிரசும் Fair Delimitation என கூறிவிட்டு இப்போது நிலைப்பாட்டை மாற்றுகின்றன. உள்துறை அமைச்சர் அமித்ஷா உரிய விளக்கம் கொடுத்துள்ளார் என்றார். </p><p>அமைச்சர் வன்னி அரசு பேசுகையில், மக்களவையில் ஒன்று பேசும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவைக்கு வெளியே ஒன்று பேசுகிறார். 543 இடங்களில் தென் மாநிலங்களுக்கான 129 எம்பி என்ற எண்ணிக்கை 195 என உயரும் என அமித்ஷா கூறியுள்ளார். தென்மாநில எம்பிக்கள் எண்ணிக்கை தொடர்பான அமித்ஷாவின் கருத்து தொகுதி மறுவரையறை மசோதாவில் இல்லை. பாமக உறுப்பினர் ராமதாஸை காப்பாற்றுவதை விட மோடியே காப்பாற்றுவதில் தீவிரம் காட்டுகிறார். அமித்ஷா மாற்றி மாற்றி பேசுவதாக ஆங்கில நாளிதழில் வந்த கட்டுரையை ஆதாரமாக வைத்து குற்றம்சாட்டினார். </p><p>இவ்வாறு சட்டசபையில் விவாதம் நடைபெற்றது.</p>]]></content:encoded></item><item><title>வங்கக்கடலில் காணாமல் போன மீனவர்களை தேடும் பணியை தீவிரப்படுத்துக- அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-intensified-search-for-missing-andhra-fishermen</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-intensified-search-for-missing-andhra-fishermen#comments</comments><guid isPermaLink="false">aae63499-a0fd-43ec-a008-9a44a484bc06</guid><pubDate>Fri, 21 Aug 2026 07:29:47 +0000</pubDate><atom:updated>2026-08-21T07:29:47.487Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,மீனவர்கள்,Fishermen</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/t4zhncyw/Anbumani.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anbumani Ramadoss]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/t4zhncyw/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வங்கக்கடலில் காணாமல் போன 7 ஆந்திர மீனவர்களை தேடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் குடும்பங்களுக்கு உதவ வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>ஆந்திரப் பிரதேசம் அம்பேத்கர் கோணசீமா மாவட்டம் ஒடலரேவு கடற்கரையிலிருந்து கடந்த ஆகஸ்ட் 3-ம்  தேதி வங்கக்கடலுக்கு சூறை மீன்பிடிப்புக்காக சென்ற 7 மீனவர்கள் காணாமல் போய், 14 நாள்களாகும் நிலையில், இதுவரை அவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. </p><p>அவர்களைத் தேடும் பணிகளைத்  தீவிரப்படுத்த வேண்டிய நிலையில், தேடும் பணிகள் கைவிடப்படவுள்ளதாக வெளியாகும் செய்திகள் கவலையளிக்கின்றன.</p><p>ஒடலரேவு பகுதியைச் சேர்ந்த 7 மீனவர்கள் கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி ஓடலரேவு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சூறை மீன்பிடிக்கச் சென்றனர். கர்ரி ராமுடு, கே ராமகிருஷ்ணா, எஸ் தாத்தாராவ், ஏசுதாசு, பலேபு சாந்தராவ், கொல்லட்டி ஸ்ரீனிவாஸ், சதீஷ் ஆகிய 7 மீனவர்களும் கடந்த 10 அல்லது 11-ம் தேதி துறைமுகம் திரும்பியிருக்க வேண்டும்.</p><p>ஆனால், கடைசியாக கடந்த 7-ஆம் தேதி குடும்பத்தினரைத் தொடர்பு கொண்ட அவர்களை அதன்பின் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்களின் படகு  ஒதிஷா அல்லது மேற்கு வங்காள கடல்பகுதிக்கு காற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.</p><p>காணாமல் போன மீனவர்களை மீட்கும் பணியில் கடற்படைக்கு சொந்தமான இரு கப்பல்கள், கடலோரக் காவல் படைக்கு சொந்தமான 5 கப்பல்கள், விமானப் படைக்கு சொந்தமான இரு ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளன. </p><p>அவர்கள் காணாமல் போனதாக கருதப்படும் பகுதியில் இருந்து 300 கடல் மைல் சுற்றளவில்  தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காக்கிநாடா, விசாகப்பட்டினம், ஒடிசா மாநிலம் பாரதீப் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களின் உதவியும் கோரப்பட்டிருக்கிறது. </p><p>ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் அதிகாரிகளுக்கும் இது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உதவிகள் கோரப்பட்டுள்ளன.</p><p>கடற்படை, விமானப்படை ஆகியவை இணைந்து மேற்கொள்ளும் தேடுதல் வேட்டையை குறை சொல்ல முடியாது. ஆனால், இரு வாரங்களாகியும் அவர்களை கண்டுபிடிக்க முடியாததால், இன்னும் ஓரிரு நாள்களில் தேடும் பணிகளை நிறுத்த அரசு முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. </p><p>இதனால் மீனவர்களின் குடும்பத்தினரும், உறவினர்களும் கவலை அடைந்துள்ளனர். கடலுக்கு சென்ற மீனவர்களிடம் 1000 லிட்டர் டீசலும், 20 நாள்களுக்குத் தேவையான உணவும் இருப்பதாகக் கூறப்படுகிறது. கடுமையான காற்று காரணமாக அவர்கள் வெகு தொலைவுக்கு அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>அதனால், தேடுதல் தொலைவை சற்று அதிகரித்து பணிகளை தீவிரப்படுத்தினால், காணாமல் போன மீனவர்களை கண்டுபிடித்து விடலாம். காணாமல் போன மீனவர்களில் மூவருக்குக் நீச்சல் கூட தெரியாது என்று கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தேடும் பணிகள் கைவிடப்பட்டால், இதுநாள் வரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வீணாகிவிடும்.</p><p>எனவே, காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்கும் வரை தேடுதல் பணிகளை நீட்டிக்க வேண்டும் என்று ஆந்திர அரசையும், கடற்படை மற்றும் கடலோரக் காவல்படைகளை  கேட்டுக் கொள்கிறேன். </p><p>காணால் போல மீனவர்கள் குடும்பத்தினருக்குஇ வாழ்வாதாரம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அவர்களுக்கு தேவையான உணவு, நிதி ஆகியவற்றை அரசு வழங்க வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மருத்துவ பரிசோதனைக்கு பின் மீண்டும் சிறையில் அடைப்பு .. இம்ரான் கான் உடல்நிலை என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/world/imran-khan-health-check-pakistan-ex-pm-taken-to-hospital-on-supreme-court-order-and-sent-back-to-jail</link><comments>https://www.maalaimalar.com/news/world/imran-khan-health-check-pakistan-ex-pm-taken-to-hospital-on-supreme-court-order-and-sent-back-to-jail#comments</comments><guid isPermaLink="false">4775169e-e613-4f9f-8ea2-9668bb8a7fa2</guid><pubDate>Fri, 21 Aug 2026 07:13:31 +0000</pubDate><atom:updated>2026-08-21T07:13:31.394Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,இம்ரான் கான்,மருத்துவ பரிசோதனை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/e603ubb1/tn-4.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ இம்ரான் கான்]]></media:title><media:description type="html"><![CDATA[ இம்ரான் கான்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/e603ubb1/tn-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>73 வயதான பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்<a href="https://www.maalaimalar.com/news/world/jailed-pak-ex-pm-imran-khan-taken-to-hospital-after-court-order"> இம்ரான் கான் </a>பல்வேறு ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்று 2023 முதல் சிறையில் இருந்த நிலையில் மருத்துவ பரிசோதனைக்காக உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று இரவு அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.  </p><p>பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிபா சர்வதேச மருத்துவமனையில்  நள்ளிரவில் நடந்த சில மணி நேரம் பரிசோதனைக்கு பின் அவர் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சில மணி நேர பரிசோதனைக்கு பிறகு அவர் மீண்டும் அடியாலா சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். </p> <h2>உச்ச நீதிமன்ற உத்தரவு</h2><p>முன்னதாக, சிறையிலுள்ள இம்ரான் கானின் உடல்நிலை குறித்து கவலைகள் எழுந்ததைத் தொடர்ந்து, அவருக்கு 48 மணி நேரத்திற்குள் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும் என பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p>நீதிமன்ற உத்தரவின் பேரில், ஆறு மருத்துவ நிபுணர்கள் அடங்கிய சிறப்பு மருத்துவ நிபுணர் குழு இம்ரான் கானுக்கு விரிவான பரிசோதனைகளை மேற்கொண்டது.</p> <h2>பரிசோதனை முடிவுகள்</h2><p>அவரது ரத்த அழுத்த மாறுபாடுகள், சீரற்ற இதயத் துடிப்பு, தலைவலி, மனஅழுத்தம் மற்றும் அவரது வலது கண்ணில் ஏற்கனவே இருந்த பிரச்சனை பரிசோதிக்கப்பட்டது.</p><p>பரிசோதனைகளின் முடிவில் இம்ரான் கானின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p>மருத்துவப் பரிசோதனைகளுக்கு பிறகு, அவரை உள்நோயாளியாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய அவசியமில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்ததால் அவர் உடனடியாக மீண்டும் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/pakistan">பாகிஸ்தான் </a>அரசியலில் அவரது உடல்நிலையும் சிறைவாசமும் தொடர்ந்து முக்கிய விவாதப் பொருளாக நீடித்து வருகின்றன. சிறையில் அவரை சித்திரவதை செய்வதாக தொடர்ந்து அவரின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர். </p><p>மருத்துவ பரிசோதனைக்கு முன் அவரை நீதிமன்ற அனுமதியின்படி குடும்பத்தினர் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வேண்டாம் என சொன்ன உதயநிதி... பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜூனா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/aadhav-arjuna-reply-to-udhayanidhi-stalin</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/aadhav-arjuna-reply-to-udhayanidhi-stalin#comments</comments><guid isPermaLink="false">5322950a-757d-4b1f-a2ed-1e70f4bf9aa8</guid><pubDate>Fri, 21 Aug 2026 06:59:02 +0000</pubDate><atom:updated>2026-08-21T06:59:02.275Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,ஆதவ் அர்ஜூனா,தமிழக சட்டசபை,Aadhav Arjuna,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/u53eejob/aadhav.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் ஆதவ் அர்ஜூனா- உதயநிதி ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ஆதவ் அர்ஜூனா- உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/u53eejob/aadhav.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அரசின் நிதி சுமை எங்களுக்கு தெரியாததை போலவும், கார் வழங்குவது ஆடம்பரம் என்பதை போல் பேசுகிறார் உதயநிதி என்றார்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> இன்று சட்டம், எரிசக்தி துறை, அறநிலையத்துறை மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது.</p><p>சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:</p><p>தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் உள்ள நிலையில் திமுகவின் 59 எம்எல்ஏக்களுக்கு கார் வேண்டாம் என்று கூறினார்.</p><p>இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, </p><p>* ஏழை எம்எல்ஏக்களும் இருக்கிறார்கள்.</p><p>* என்னிடம் 4 கார் இருந்தாலும் அரசு காரில் சென்றால்தான் அதிகாரிகள் முன் மரியாதை இருக்கும் என மன்னார்குடி எம்எல்ஏ கூறினார்.</p><p>* எதிர்க்கட்சி தலைவருக்கு ஏற்கெனவே 3 வீடுகள் இருந்தாலும் ஏன் அரசு பங்களாவில் உள்ளார்.</p><p>* எம்எல்ஏக்களுக்கு கார்கள் என்பது ஆடம்பரமல்ல. ஊழல் இல்லா எம்எல்ஏவுக்கு மக்களை சந்திக்க கார் தேவை தான்.</p><p>* முதல்வர் அறிவிப்பு வெளியிடும்போது குறிப்பிட்ட கட்சியினருக்கு மட்டும் தர முடியாது, பொது அறிவிப்பாக தான் இருக்கும் என்று கூறினார்.</p><p>இதையடுத்து பேசிய திமுக எம்எல்ஏ கே.என்.நேரு, கார் வேண்டாம் என்று தானே சொன்னோம், வேண்டும் என்றா சொல்கிறோம். அமைச்சர் சொந்த வீட்டில் இருந்தாலும் கூட அரசாங்கம் வாடகை தருகிறது. அதை வேண்டாம் என எழுதி தாருங்கள் என்று கூறினார்.</p><p>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா: அரசின் நிதி சுமை எங்களுக்கு தெரியாததை போலவும், கார் வழங்குவது ஆடம்பரம் என்பதை போல் பேசுகிறார் உதயநிதி என்றார்.</p><p>கே.என்.நேரு: நிதி நெருக்கடியில் கார்கள் வேண்டாம் என்பது தவறா? எங்களுக்கு கார்கள் வேண்டாம் என்றால் குதர்க்கமாக பேசுவதா?</p><p>அமைச்சர் ஷாஜகான்: கலைஞர் ஆட்சியில் 300-க்கும் அதிகமான யூனியன் சேர்மன்களுக்கு கார் வழங்கப்பட்டது. இதுவொன்றும் புதிதல்ல. கலைஞர் கார் வழங்கியபோது கேள்வி கேட்காமல் இப்போது கேள்வி கேட்பது சரியாக இருக்காது.</p><p>எ.வ.வேலு: அமைச்சருக்கு இணையான வசதியை எதிர்க்கட்சித் தலைவருக்கு பங்களா தருவது புரோடாகால், அதை ஏன் குறை கூறுகிறீர்கள். திமுகவினருக்கு தான் வேண்டாம் என சொன்னோம். மற்றவரை வாங்காதீர் என சொல்லவே இல்லையே என்று கூறினார்.</p><p>கம்யூனிஸ்டுகளுக்கும் கார்கள் வேண்டாம் என்று தளி ராமச்சந்திரன் கூறினார்.</p><p>பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள எம்எல்ஏக்களுக்கு கார் வழங்குவது அவசியம் தான் என்று பாமக எம்எல்ஏ கணேஷ்குமார் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>எத்தனை Sim Card-கள் வைத்திருக்கலாம்?.. ஆகஸ்ட் 24 முதல் அமலுக்கு வரும் Strict Rule </title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/india-sim-cap-govt-enforces-strict-9-sim-limit-to-curb-fake-connections-and-digital-fraud-from-august-24</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/india-sim-cap-govt-enforces-strict-9-sim-limit-to-curb-fake-connections-and-digital-fraud-from-august-24#comments</comments><guid isPermaLink="false">6a314f80-6b57-4261-bff8-a45bf7c8750e</guid><pubDate>Fri, 21 Aug 2026 06:56:20 +0000</pubDate><atom:updated>2026-08-21T06:56:20.709Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சிம் கார்டு,SIM card,மொபைல் எண்,mobile number</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/2ezcl286/tn-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சிம் கார்டு]]></media:title><media:description type="html"><![CDATA[ சிம் கார்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/2ezcl286/tn-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் ஒரு தனிநபர் தனது பெயரில் அதிகபட்சமாக 9 சிம் கார்டுகள் மட்டுமே வைத்திருக்க முடியும் என்ற விதியை வரும் ஆகஸ்ட் 24 முதல் கட்டாயமாக செயல்படுத்த மத்திய தொலைத்தொடர்புத் துறை உத்தரவிட்டுள்ளது.  </p><h2>வரம்பு</h2><p>ஏற்கனவே தங்கள் பெயரில் 9 சிம் கார்டுகளை வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு இனி புதிய சிம் கார்டுகளை வழங்கக் கூடாது என <a href="https://www.maalaimalar.com/technology/techfacts/jio-prime-membership-relaunched-in-india">ஜியோ</a>, ஏர்டெல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.</p><p>அதேநேரம் ஜம்மு காஷ்மீர், அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகபட்சமாக 6 சிம் கார்டுகள் மட்டுமே வைத்திருக்க முடியும்.</p><p>இந்த வரம்பு பத்தாண்டுகளுக்கு முன்பே கொண்டுவரப்பட்டது என்றாலும், தற்போது போலி சிம்கள் மற்றும் டிஜிட்டல் நிதி மோசடிகளை தடுக்கும் நோக்கில் இதை தீவிரமாக கடைபிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.</p><h2>என்ன மாற்றம்?</h2><p>இனி புதிய சிம் கார்டு பெற விண்ணப்பிக்கும் போது, வாடிக்கையாளர்கள் தங்கள் பெயரில் ஏற்கனவே இயங்கி வரும் அனைத்து மொபைல் எண்களின் விவரங்களையும் விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட வேண்டும்.</p><p>தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளரின் தற்போதைய இணைப்புகளை சரிபார்த்த பின்னரே புதிய சிம் வழங்க முடியும்.</p><h2>சரிபார்ப்பது எப்படி?</h2><p>மத்திய அரசின் 'சஞ்சார் சாதி' இணையதளம் அல்லது செயலி மூலம் உங்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்களை எளிதாகக் கண்டறியலாம்.</p><p>Sanchar Saathi TAFCOP Portal இணையதளத்திற்கு செல்லவும்.</p><p>"Know mobile connections in your name" என்பதை தேர்வு செய்து உங்கள் மொபைல் எண் மற்றும் திரையில் தோன்றும் 'Captcha' குறியீட்டை பதிவு செய்யவும். உங்கள் மொபைலுக்கு வரும் OTP எண்ணை உள்ளிட்டு 'Validate' செய்யவும்.</p><p>இதன்பின் உங்கள் அடையாள ஆவணத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து மொபைல் எண்களின் பட்டியலும் திரையில் தோன்றும்.</p><p>இந்தப் பட்டியலில் உங்களுக்கு தெரியாத அல்லது நீங்கள் பயன்படுத்தாத எண்கள் இருந்தால், "This is not my number" அல்லது "Not Required" என்பதை பயன்படுத்தி புகாரளிக்கலாம்.</p>]]></content:encoded></item><item><title>அடுத்த ஆண்டே மேகதாது அணைக்கு  அடிக்கல் நாட்ட திட்டம்: அரசு இனியும் அலட்சியம் காட்டக்கூடாது!- அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-says-plan-to-lay-the-foundation-stone-for-the-mekedatu-dam-next-year-the-government-must-not-show-any-further-negligence</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-says-plan-to-lay-the-foundation-stone-for-the-mekedatu-dam-next-year-the-government-must-not-show-any-further-negligence#comments</comments><guid isPermaLink="false">50be157e-db2d-4ef1-a221-ad2fd1f7b3c9</guid><pubDate>Fri, 21 Aug 2026 05:27:15 +0000</pubDate><atom:updated>2026-08-21T05:27:15.192Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,mekedatu dam,மேகதாது அணை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/yf4ay2m9/anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/yf4ay2m9/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மேகதாது அணை விவகாரத்தில் எந்த ஈகோவும் பார்க்காமல் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை முதலமைச்சர் விஜய் அவர்கள் கூட்ட வேண்டும் என அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>அலட்சியம்</strong> </h2><p>காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயாரித்து மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளது. உரிய அனுமதிகளை பெற்று அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் புதிய அணைக்கு அடிக்கல் நாட்டப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேகதாது அணைக்கு கர்நாடகம் இவ்வளவு தீவிரம் காட்டும் நிலையில் தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டக்கூடாது.</p><p>மத்திய நீர்வள அமைச்சகத்திடம் கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையில், மத்திய அரசால் ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்ட தொழில்நுட்ப அடிப்படையிலான சில திருத்தங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளனவே தவிர, அணையின் கொள்ளளவு, நீர்த்தேக்கப்பகுதி ஆகியவற்றில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதனால் தமிழகத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறைய வாய்ப்பில்லை.</p><p>புதிய விரிவான திட்ட அறிக்கையின்படி <a href="https://www.maalaimalar.com/topic/மேகதாது-அணை">மேகதாது அணையின்</a> கொள்ளளவு 67 டி.எம்.சியாக இருக்கும்;  அதில் 4.75 டி.எம்.சி மட்டும் பெங்களூர் நகரின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்படும்; 400 மெகாவாட் மின்திட்டம் செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அணை கட்டி முடிக்கப்பட்டால் 12,500 ஏக்கர் வனப்பகுதி நீர்த்தேக்கப்பகுதியாக மாற்றப்பட்டு மூழ்கடிக்கப்படும். அணை கட்டப்படும் பகுதிகளில் உள்ள 8 லட்சத்து 90 ஆயிரம் மரங்கள் வெட்டி வீழ்த்தப்படும் என்றும் திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>விரிவான திட்ட அறிக்கை</strong></h2><p>மேகதாது அணை கட்டப்பட்டால், மிகமோசமான சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும்; 12,500 ஏக்கர் பரப்பளவிலான  காவிரி வனவிலங்கு சரணாலய நிலப்பகுதி நீரில் மூழ்கும். யானைகள், புலிகள், பறவைகள் வாழிடம் அழியும்; அதனால் வனவிலங்குகள் உள்ளிட்ட அரிய வகை விலங்குகள் அழியும்;  பல மலைவாழ் கிராமங்கள் மூழ்கும்; இது ஒரு மாபெரும் சூழலியல் பேரழிவாக அமையும் என்று பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி எச்சரித்து வந்தது. அது உண்மை என்பது புதிய விரிவான திட்ட அறிக்கை மூலம் மீண்டும் உறுதியாகி உள்ளது.</p><p>அதேபோல், பெங்களூர் நகரத்தின் குடிநீர் தேவைக்காக 4.75 டி.எம்.சி நீர் எடுப்பதற்காக 67 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட மேகதாது அணை கட்டுவது தேவையற்றது. பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக கூறி வருவதைப் போல, அணையின் கொள்ளளவு 67 டி.எம்.சி என கூறப்பட்டாலும் நீர்த்தேக்கப்பகுதி அதிகமாக இருப்பதால் 70 டி.எம்.சிக்கும் கூடுதலாக தேக்கி வைக்க முடியும். ஏற்கனவே, கர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகரம், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய 4 அணைகளின் கொள்ளளவு 114.57 டி.எம்.சி ஆகும். இப்போது மேகதாது அணையையும் சேர்த்தால் மொத்தக் கொள்ளளவு 185 டி.எம்.சியாக அதிகரிக்கும். இது தவிர ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் 40 டி.எம்.சி நீரையும் சேர்த்து 225 டி.எம்.சி நீரை காவிரியின் குறுக்கே கர்நாடகம் தேக்கி வைத்தால் தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு நீர் கூட வராது. அதனால் காவிரி பாசன மாவட்டங்கள் விரைவில் பாலைவனமாகி விடும். மேலும் சென்னை உள்ளிட்ட 25 மாவட்டங்களில் உள்ள 5 கோடி மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் போகும்.</p><p>திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்து தேவையான அனுமதிகளைப் பெற்று 2027&amp;ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் மேகதாது அணைக்கு அடிக்கல் நாட்டப்படும் என்று கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சாலுவராயசாமி தெரிவித்துள்ளார். இதுவும் பாட்டாளி மக்கள் கட்சியின் குற்றச்சாட்டை உறுதி செய்யும் வகையில் தான் உள்ளது. கர்நாடகத்தில் அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத் தான் மேகதாது அணை விவகாரத்தை கர்நாடக காங்கிரஸ் அரசு தீவிரப்படுத்தி வருவதாக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து கூறிவருகிறது. கர்நாடகத்தில் 2028-ஆம்  ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 2027&amp;ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மேகதாது அணைக்கு அடிக்கல் நாட்டப்பட்டால், அதையே பரப்புரையின் முக்கிய அம்சமாக மாற்றி, அரசியல்   இலாபம் தேடலாம் என்பது தான் கர்நாடக காங்கிரசின் திட்டம். மேகதாது அணை விவகாரத்தில் கடந்த சில ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி எதையெல்லாம் கணித்ததோ, அவையெல்லாம் நடந்து வருகின்றன.</p><p>மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு இவ்வளவு தீவிரம் காட்டி வரும் நிலையில், தமிழக அரசு இனியும் அலட்சியப் போக்கைத் தொடரக்கூடாது. மேகதாது அணை கட்டப்படுவதையும், காவிரியில் தமிழக உரிமைகளை பாதுகாக்கவும் அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் தமிழக அரசு உடனடியாகக் கூட்ட வேண்டும். அக்கூட்டத்தில்  எடுக்கப்படும் முடிவை முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கொண்ட குழு பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் அவர்களையும் நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும். அப்போது தான் மேகதாது அணை கட்டுவதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க 2018&amp;ஆம் ஆண்டில் அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு ரத்து செய்யும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு அழுத்தம் தரத் தவறினால், மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிப்பதற்கு கூட வாய்ப்பு உள்ளது. அது நடந்தால் மிகப்பெரிய வரலாற்றுப் பிழையாகி விடும். அதற்கான பழியை காலம் முழுவதும் முதலமைச்சர் விஜய் அவர்கள் தான் சுமக்க நேரிடும்.</p><p>எனவே, மேகதாது அணை விவகாரத்தில் எந்த ஈகோவும் பார்க்காமல் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை முதலமைச்சர் விஜய் அவர்கள் கூட்ட வேண்டும். அதில் முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு உடன்பாடு இல்லை என்றால், அனைத்துக் கட்சித் தலைவர்கள் அடங்கிய குழுவுடன் தில்லி சென்று பிரதமர், நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோரையாவது நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.</p>]]></content:encoded></item><item><title>ஜோசியக்காரர் சொன்னால்தான் முதலமைச்சர் கோப்புகளைத் திறப்பாரா?- உதயநிதி கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/will-chief-minister-open-files-only-if-astrologer-says-udhaynidhi-asks</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/will-chief-minister-open-files-only-if-astrologer-says-udhaynidhi-asks#comments</comments><guid isPermaLink="false">a9587db0-4aa8-44fa-891a-b83e900c1d6a</guid><pubDate>Fri, 21 Aug 2026 05:09:25 +0000</pubDate><atom:updated>2026-08-21T05:09:25.097Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக முதலமைச்சர்,உதயநிதி ஸ்டாலின்,தமிழக சட்டசபை,TN assembly,tn cm vijay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/m6d8x5nq/TVK.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay- Udhayanithi stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/m6d8x5nq/TVK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றியதாவது:-</p><h2>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி உரை</h2><p>ஆளுங்கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் ஆதாரமின்றி குற்றச்சாட்டு வைக்கின்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D" rel="nofollow">சூப்பர் சிங்கர்</a> நிகழ்ச்சிக்கு வந்துள்ளோமா என்று சிந்திக்கும் வகையில் பேரவை நடக்கிறது.</p><p>முதலமைச்சர் முன் வைக்கப்பட்டுள்ள கோப்புகளை ஜோசியக்காரன் சொன்னால் தான் திறப்பாரா?</p><p>முதல்வர் முன் உள்ள ஊழல் தொடர்பான கோப்புகளை திறக்கலாம், உடனடி நடவடிக்கை எடுக்கட்டும்.</p><h2>அமைச்சர் ஆதவ் உரை</h2><p>நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறையினர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>நேர்மையான வெளிப்படைத்தன்மையான சட்டமன்றத்தை நடத்தக்கூடிய தைரியம் திமுகவுக்கு இல்லை.</p><p>2021 தேர்தல் அறிக்கைப்படி சட்டசபை நிகழ்வை நேரலை செய்யாதது ஏன்?</p><p>பெரும்பான்மை கட்சியாக தன்னை நிரூபித்த தவெகவுக்கு எந்த பயமும் இல்லை. சட்டசபை நிகழ்வுகளை நேரலை செய்யும் தைரியம் திமுகவுக்கு இல்லை.</p><h2>அமைச்சர் ஆனந்த்</h2><p>நாங்கள் சீரியல் பார்ப்பதில்லை, நாங்கள் சட்டசபை நேரலையை பார்க்கிறோம் என 70 வயது முதியவர் சொன்னார் - </p><p>யாரையும் கன்சல்ட் செய்யாமல் சுயமாக சிந்தித்து முடிவெடுக்கிறார் முதலமைச்சர் என்பதை மக்கள் அறிவர்.</p><h2>சபாநாயகர்</h2><p>கருத்து கூறும்போது அதனை ஒட்டி பாடல் பாடுவதில் எந்த தவறும் இல்லை, சூப்பர் சிங்கர் வார்த்தை அவசியம் இல்லை - </p><h2>அமைச்சர் நிர்மல்குமார்</h2><p>ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டதை எல்லாம் தமிழ்நாடு பார்த்துவிட்டது.</p><h2>உதயநிதி</h2><p>நாங்கள் கேள்வி கேட்டால் நாங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு தான் ஆளுங்கட்சியினர் பதில் அளிக்கின்றனர். </p><p>ஜோசியக்காரன் என்பது தவறான வார்த்தையல்ல, ஜோசியக்காரணை அரசு பணியில் நியமித்து நீக்கியது <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-says-resolution-drama-staged-by-the-tvk-government-in-the-legislative-assembly-has-been-exposed" rel="nofollow">தவெக அரசு</a>.</p><p>அவை குறிப்பில் இருந்து நீங்கள் நீக்கியவை எல்லாம் நேரலையில் டிவியில் ஒளிபரப்பப்பட்டு, ரீல்ஸ் ஆக பரவுகிறது.</p><p>முதல்வருக்கு ஓபன் சேலஞ்சாக சொல்கிறேன், கோப்புகளை திறந்து பார்க்கட்டும், ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும்.</p><p>சட்டசபையில் சினிமா பஞ்ச் டயலாக் பேசுவது போல் பேசக்கூடாது.</p><p>உருட்டல் மிரட்டல்களுக்கெல்லாம் திமுக பயப்படாது, ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள் என்றார்.</p><h2>அமைச்சர் ராஜ்மோகன்</h2><p>எதிர்க்கட்சி உறுப்பினர்கள் செய்யும் அனைத்தையும் கேமராமேன்கள் காட்ட வேண்டும் என சபாநாயகரிடம் அமைச்சர் ராஜ்மோகன் கோரிக்கை வைத்தார்.</p><p>அமைச்சர் ராஜ்மோகனின் கோரிக்கையை ஏற்று ஔிப்பதிவாளர்கள் திரையில் காட்டினர்.</p><p>ஆளுங்கட்சிக்கு சாதகமானவை மட்டுமின்றி முழுமையாக நேரலையாக தவெக அரசுதான் கொடுக்கிறது.</p><h2>சபாநாயகர்</h2><p>சட்டப்சபை நிகழ்வுகளில் நீக்கப்பட்ட காட்சிகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டார் நடவடிக்கை எடுக்கப்படும்.</p>]]></content:encoded></item><item><title>&apos;KGF 2&apos;-க்கு பிறகு திரையில் யாஷ்.. &apos;Toxic&apos; டிக்கெட் முன்பதிவு தொடக்கம் </title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/toxic-movie-yash-double-action-global-release-in-12000-screens-online-booking-opens-today</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/toxic-movie-yash-double-action-global-release-in-12000-screens-online-booking-opens-today#comments</comments><guid isPermaLink="false">15bc9df6-63be-4f78-b4f6-0fe719c46193</guid><pubDate>Fri, 21 Aug 2026 05:07:18 +0000</pubDate><atom:updated>2026-08-21T05:07:18.368Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Yash,Toxic,டாக்ஸிக்,நயன்தாரா,Nayanthara,யாஷ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/mlp602ew/tn-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Toxic ]]></media:title><media:description type="html"><![CDATA[ Toxic ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/mlp602ew/tn-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கன்னடத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ராக் ஸ்டார் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் '<a href="https://www.maalaimalar.com/topic/toxic">டாக்ஸிக்</a>' </p><p>இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம், சுதந்திரத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில் போர்த்துகீசிய ஆட்சின்கீழ் இருந்த கோவாவை பின்னணியாகக் கொண்டு அமைந்துள்ளது.</p> <h2>நடிகர்கள்</h2><p>இப்படத்தில் யாஷ் இரண்டு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். யாஷுடன் இணைந்து நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, தாரா சுதாரியா மற்றும் ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர்.</p> <h2>தயாரிப்பு</h2><p>இப்படம் கிட்டத்தட்ட ரூ 600 முதல் 800 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.</p><p>கே.வி.என் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படம், கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்டு, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது.</p> <h2>புக்கிங்</h2><p>வருகின்ற ஆகஸ்ட் 26 அன்று உலகமெங்கும் சுமார் 12,000 திரையரங்குகளில் பிரம்மாண்டமாக திரைக்கு வரவுள்ள நிலையில் படத்தின் ஆன்லைன் முன்பதிவு இன்று (ஆகஸ்ட் 21) அதிகாரபூர்வமாக தொடங்கியுள்ளது.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Baddies...and The Daddy - Taking over in 6 Days! ❤️‍<a href="https://x.com/hashtag/Toxic?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Toxic</a>: A Fairy Tale for Grown-Ups In Cinemas Worldwide from 26.08.2026. <br><br>Nationwide Bookings open Tomorrow! <a href="https://x.com/hashtag/ToxicTheMovie?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ToxicTheMovie</a> <a href="https://x.com/hashtag/ToxicOn26thAug?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ToxicOn26thAug</a><a href="https://x.com/TheNameIsYash?ref_src=twsrc%5Etfw">@TheNameIsYash</a> <a href="https://x.com/hashtag/Nayanthara?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Nayanthara</a> <a href="https://x.com/advani_kiara?ref_src=twsrc%5Etfw">@advani_kiara</a> <a href="https://x.com/hashtag/TaraSutaria?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TaraSutaria</a> <a href="https://x.com/rukminitweets?ref_src=twsrc%5Etfw">@rukminitweets</a>… <a href="https://t.co/BHUxxiSbX0">pic.twitter.com/BHUxxiSbX0</a></p>&mdash; KVN Productions (@KvnProductions) <a href="https://x.com/KvnProductions/status/2090426470699274293?ref_src=twsrc%5Etfw">August 20, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>டாக்ஸிக் படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p>கே.ஜி.எப் படத்திற்குப் பிறகு யஷ் மற்றொரு ஆக்‌ஷன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால், ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளது.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/f5M1d7r2UNQ"></iframe></figure>]]></content:encoded></item><item><title>ஜெயலலிதா சிலைக்கு உரிய மரியாதையை அரசு அளித்து வருகிறது- அமைச்சர் விஸ்வநாதன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-viswanathan-says-government-is-according-due-respect-to-jayalalithaas-statue</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-viswanathan-says-government-is-according-due-respect-to-jayalalithaas-statue#comments</comments><guid isPermaLink="false">df99b7bf-a574-4c6d-b1ef-45c6517c291f</guid><pubDate>Fri, 21 Aug 2026 05:02:27 +0000</pubDate><atom:updated>2026-08-21T05:02:27.780Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>jayalalithaa,தமிழக சட்டசபை,TN assembly,Jayalalithaa Statue,ஜெயலலிதா சிலை,ஜெயலலிதா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/p13369hr/viswanathan.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் விஸ்வநாதன்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் விஸ்வநாதன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/p13369hr/viswanathan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள், நினைவு நாளில் சிலை அலங்கரிக்கப்பட்டு உரிய மரியாதையை அரசு அளித்து வருகிறது என்றார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> இன்று நடைபெற உள்ள மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு முன் எண்ணூர் கழிமுகம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அத்தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் விவாதத்தை தொடர்ந்து அமைச்சர் விளக்கமும் அளித்தார். </p><p>அதனை தொடர்ந்து பேசிய எம்எல்ஏ சண்முகம், சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா மாளிகை வளாகத்தில் உள்ள சிலை முறையாக பராமரிக்கப்படவில்லை. பிறந்தநாள் அன்று மட்டுமே மாலை போடப்படுகிறது. ஜெயலலிதா சிலையை தினமும் பராமரித்து மாலை அணிவிக்க வேண்டும், செலவை கூட நாங்கள் ஏற்க தயார். ஜெயலலிதா பலகலைக்கழகத்தை மீண்டும் தொடங்க வேண்டும். கல்வியில் பின்தங்கிய மாவட்டத்தில் ஜெயலலிதா ஆட்சியில் அவரது பெயரில் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது என்றார். </p><p>இதனை தொடர்ந்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், எங்கள் அரசு, மேடம் ஜெயலலிதா அவர்களுக்கு என்றும் உரிய முக்கியத்துவத்தை இழந்து விடாது. லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் உள்ள ஜெயலலிதா சிலை முறையாக தான் பராமரிக்கப்பட்டு வருகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள், நினைவு நாளில் சிலை அலங்கரிக்கப்பட்டு உரிய மரியாதையை அரசு அளித்து வருகிறது என்றார். </p>]]></content:encoded></item><item><title>7,050mAh பேட்டரி, 50MP கேமராவுடன் ஐகூ Z11 இந்தியாவில் அறிமுகம்</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/iqoo-z11-debuts-in-india-with-7050mah-battery</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/iqoo-z11-debuts-in-india-with-7050mah-battery#comments</comments><guid isPermaLink="false">9a80d5b6-0a91-432f-8004-9eae9c9b421f</guid><pubDate>Fri, 21 Aug 2026 04:42:00 +0000</pubDate><atom:updated>2026-08-21T04:42:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>iQOO,smartphone,ஸ்மார்ட்போன்,ஐகூ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/fip89jgy/iQOO-Z11.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ iQOO Z11]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/fip89jgy/iQOO-Z11.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஐகூ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது Z11 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. <a href="https://www.maalaimalar.com/topic/iqoo">ஐகூ</a> Z11x மற்றும் ஐகூ Z11 லைட் மாடல்களைத் தொடர்ந்து அறிமுகமான மூன்றாவது Z சீரிஸ் மாடலாக இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகி இருக்கிறது.</p><p>புதிய Z11 மாடல் மீடியாடெக் டிமென்சிட்டி 7500 டர்போ சிப்செட், கர்வ்டு டிசைன் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் கேமரா மாட்யூல் மாற்றப்பட்டு Horizontal கேமரா பம்ப் கொண்டுள்ளது. இந்த <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மார்ட்போன்</a> செலஸ்டியல் புளூ மற்றும் அரோரா கிரீன் என இருவித நிறங்களில் கிடைக்கிறது.</p><h2>ஐகூ Z11 அம்சங்கள்:</h2><p>புதிய ஐகூ Z11 மாடலில் 6.83 இன்ச் 1.5K 2800x1260 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, 144 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 2000-நிட் பிரைட்னஸ் மோட், HDR10+, அமேசான் பிரைம் வீடியோ HDR மற்றும் நெட்ப்ளிக்ஸ் HDR சப்போர்ட் கொண்டுள்ளது. </p><p>இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 7500 டர்போ சிப்செட், LPDDR4X ரேம், UFS 3.1 ஸ்டோரேஜ்-உடன் வருகிறது.</p><p>புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் பிரைமரி மற்றும் முன்புற கேமராக்களில் 4K வீடியோ வசதி உள்ளது. </p><p>இத்துடன் IP68 மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ஒரிஜின் ஓஎஸ் 6 கொண்டிருக்கிறது.</p><p>புதிய ஐகூ Z11 ஸ்மார்ட்போன் 7050mAh பேட்டரி, 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் அதிக சூடாகாமல் இருப்பதை குறைக்க 3800 mm2 vapour chamber வழங்கப்பட்டுள்ளது.</p><h2>விலை விவரங்கள்:</h2><p>இந்திய சந்தையில் ஐகூ Z11 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 34,999 என்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 39,999 என்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் ரூ. 44,999 என்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் ரூ. 49,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>