<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 18 Aug 2026 13:28:18 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கியச் செய்திகள் - 18 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-18-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-18-august-2026#comments</comments><guid isPermaLink="false">c27daa42-6f88-4a58-93d9-0737d7f66078</guid><pubDate>Tue, 18 Aug 2026 03:58:44 +0000</pubDate><atom:updated>2026-08-18T12:14:05.848Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/2xvhx5yb/speaker1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/2xvhx5yb/speaker1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பொதுப்பணி துறைக்கான மானியக் கோரிக்கை மீதான பதிலுரையில் ஆதவ் அர்ஜூனா கூறியதாவது:-</p><p>* 30 மாடிகள் கொண்ட அரசு அலுவலகங்களை உருவாக்க வேண்டும்.</p><p>* அரசு கட்டிடங்களின் அனைத்து தரவுகளையும் ஒன்றிணைக்க DashBoard உருவாக்கப்படும்.</p><p>* கட்டிடங்களின் பராமரிப்பை ஊழல் இல்லாமல் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்</p><p>* பணிக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு  பொதுப்பணித்துறையில் சலுகைகளுடன் வாய்ப்பு</p><p>* பொதுப்பணித்துறையில் ஒப்பந்ததாரர்கள் பதிவு முறை எளிமைப்படுத்தப்படும்</p><p>* வெளிப்படை தன்மையுடன் டெண்டர்கள் உருவாக்கப்படும்.</p><p>* டெண்டர்களில் இனிமேல் பினாமிகளுக்கு இடம் கிடையாது.</p><p>நெடுஞ்சாலை துறைக்கான மானியக் கோரிக்கை மீதான பதிலுரையில் ஆதவ் அர்ஜூனா கூறியதாவது:-</p><p>* மாவட்ட சாலைகள் மீது கவனம் செலுத்தப்படும்.</p><p>* சென்னை- கோவை- தூத்துக்குடி இணைக்கும் விரைவு தொழில் தர விரைவு சாலை உருவாக்கப்படும்.</p><p>* தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை விரைவுபடுத்த நடவடிக்கை</p><p>* ரூ. 500 கோடியில் சாலை பாதுகாப்பு கண்காணிப்பு குழு செயல்படுத்தப்படும்</p><p>* கடல்வழி போக்குவரத்து மும்பையில் இருப்பது போல் செயல்படுத்தப்படும்</p><p>* சென்னை- புதுவை இடையே படகு போக்குவரத்து</p><p>* 2027 முதல் சாலை விதிகள் மேலும் கடுயைமாக்கப்படும்</p><p>* பேட்ச் ஒர்க்கை ஒழிக்க புதிய திட்டம்</p><p>* ரூ. 400 கோடியில் சென்னையில் முக்கோண வழித்தட சாலை</p><p>* பாம்பன் டூ அக்னி தீர்த்தம் வரை உள்நாட்டு பயணிகள் போக்குவரத்து சேவை</p><p>* நாகை - காங்கேசன்துரை இடையிலான படகு போக்குவரத்து விரிவுப்படுத்தப்படும்</p><p>விளையாட்டுத்துறைக்கான மானியக்கோரிக்கை மீதான பதிலுரையில் ஆதவ் அர்ஜூனா கூறியதாவது:-</p><p>* 38 விளையாட்டு மாவட்டத்தில் விளையாட்டு விடுதி தொடங்கப்படும்</p><p>* மாற்று திறனாளிகளுக்கு தனிப்பட்ட வசதி செய்து தரப்படும்.</p><p>* சென்னையில் பாரா ஒலிம்பிக் பயிற்சி மையம் ஏற்படுத்தப்படும்.</p><p>* பெண்களுக்கான சிங்கப்பெண் விளையாட்டு திருவிழா நடத்தப்படும்.</p><p>* ஆண்டுதோறும் கிராமிய பாரம்பரிய விளையாட்டுப் போட்டுகள் நடத்தப்படும்.</p><p>* திறமையான மாணவர்களை கண்டுபிடித்து ஒலிம்பிக் பயிற்சி.</p><p>* ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை அதிகரிப்பு.</p><p>* விளையாட்டு சங்கங்கள் பிரச்சனை இருந்தால் SDAT சங்கத்தை ஏற்று நடத்தும்</p><p>* திருநர்களுக்கான போட்டி நடத்தப்படும்.</p><p>* கோவையில் என்.சி.சி. அகாடமி</p><p>அரசு பெண் ஊழியர்களின் 3வது குழந்தைக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு: அமைச்சர் சரத்குமார்</p><p>லாக்அப் மரணங்களில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிதியுதவி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும்.</p><p>சபரிவர்மன் மட்டுமின்றி பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிதியுதவி, அரசு பணி வழங்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்</p> <p>மாணவர் படுகொலை, குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு போதையே காரணம்.</p><p>இதுபோன்ற கொடூர குற்றங்களுக்கு என்கவுன்டர் மட்டுமே தீர்வு - பிரேமலதா விஜயகாந்த்</p> <p>சாலைப்பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்.</p><p>தமிழ்நாடு முழுவதும் மாணவர் விடுதிகள் சுத்தம் சுகாதாரம் இல்லாத நிலையில் உள்ளன.</p><p>கர்நாடகா, ஆந்திரா, இலங்கை எந தமிழர்கள் அனைத்து இடங்களிலும் தாக்கப்படுகின்றனர் -  பிரேமலதா விஜயகாந்த்</p><p>தமிழ்நாடு முழுவதும் உள்ள பாரம்பரிய கட்டிடங்களை மேம்படுத்த வேண்டும்.</p><p>பல இடங்களில் அரசு அலுவலகங்கள் மிகவும் மோசமாக உள்ளன.</p><p>விருத்தாசலம் அரசு அச்சகத்தை புனரமைக்க வேண்டும்.</p><p>அரசு கட்டிடங்கள் தனியார் கட்டிடங்கள் போன்று பராமரிக்கப்பட வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்</p><p>போதையில் இருந்து இளைஞர்களை மீட்க விளையாட்டு அவசியம்.</p><p>இளைஞர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுத் தருவது விளையாட்டு.</p><p>கிராமப்புறங்களில் உள்ள விளையாட்டு மைதானங்களை மேம்படுத்த வேண்டும்.</p><p>சேதமடைந்த மாநில நெடுஞ்சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்</p><h2>மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பிரேமலதா விஜயகாந்த் உரை</h2><p>விளையாட்டின் முக்கியத்துவத்தை ஒரு விளையாட்டு வீராங்கனையாக நான் உணர்ந்துள்ளேன்.</p><p>இளைஞர்களின் எதிர்காலமே நாட்டின் வருங்காலம்.</p><p>தேவைப்படும் பட்சத்தில் கலந்துரையாடி அதிகாரிகளுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>எம்எல்ஏக்களிடம் அதிகாரிகள் உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும் என அரசு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் - எடப்பாடி பழனிசாமி</p><p>வண்டல் மண் பிரச்சனைக்காக 4 எம்எல்ஏக்கள் நேரில் சென்றபோது சேலம் ஆட்சியர் அவமதித்து விட்டார்.</p><p>சேலம் ஆட்சியருக்கு 47 முறை தொலைபேசியில் அழைத்தும் அவர் பேசவில்லை - எம்எல்ஏ மணி</p><p>பக்கத்து ஊருக்கு கூட போகாது - அமைச்சர் பிரபு</p><p>வண்டல் மண் பாகிஸ்தானுக்கா செல்கிறது?  - அதிமுக</p><p>விவசாயிகளை மாஃபியாக்கள் எனக்கூறுவதை ஏற்க முடியாது என இபிஎஸ் கூறியதற்கு நான் விவசாயிகளை குறிப்பிடவில்லை என அமைச்சர் பிரபு பதில் அளித்தார்.</p><p>வண்டல் மண்ணை விவசாய நிலத்திற்கு மட்டும் தான் பயன்படுத்த முடியும் - எடப்பாடி பழனிசாமி </p><p>விவசாயிகள் என்ற பெயரில் வண்டல் மண்ணை அதிகம் அள்ளும் மாஃபியாக்களை விட மாட்டோம்.</p><p>விவசாயிகளுக்கு மட்டுமே வண்டல் மண் என்பதில் தவெக அரசு உறுதியாக உள்ளது -  அமைச்சர் பிரபு</p><h2>அதிமுக எம்எல்ஏ மணி</h2><p>தமிழ்நாட்டில் சாலை புரட்சியை உருவாக்கியவர் இபிஎஸ்.</p><p>தொலைநோக்குடன் பல மேம்பாலங்களை கொண்டு வந்தவர் இபிஎஸ்.</p><p>கட்டாய விளையாட்டு, உடற்பயிற்சிக்கு நிதி ஒதுக்கப்படுகிறதா? - மெய்யநாதன் கேள்வி</p><p>உலக செஸ் போட்டியை முதல் முதலில் தமிழ்நாட்டில் நடத்தியவர் ஜெயலலிதா.</p><p>ரூ.29 கோடியில் செஸ் போட்டியை நடத்தியவர் ஜெயலலிதா - சபாநாயகர்</p><p>விளையாட்டு விடுதியில் ஏசி பொருத்தித் தர வேண்டும்.</p><p>வீரர், வீராங்கனைகளுக்கு ஸ்மார்ட் வாட்ச் வழங்க வேண்டும்.</p><p>அனைத்து தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் திட்டம் தொடர வேண்டும் - எம்எல்ஏ மெய்யநாதன் </p><h2>ஆலங்குடி தொகுதி திமுக எம்எல்ஏ மெய்யநாதன் உரை</h2><p>விருது பெறும் வீரர்களுக்கான ஊக்கத்தொகை கிடைப்பதில் முன்பு சிக்கல் இருந்தது.</p><p>திமுக ஆட்சியில் 48 மணி நேரத்தில் உயரிய ஊக்கத்தொகை கிடைத்தது.</p><p>5 ஆண்டு கால ஆட்சியில் 6,689 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.215 கோடி ஊக்கத்தொகை அளிக்கப்பட்டுள்ளது.</p><p>உச்சநீதிமன்ற தீர்ப்பை செல்லாததாக்கி சட்டத்திருத்தம் கொண்டு வரும் மத்திய அரசால் நீட்டை நீக்க முடியாதா? - சிவி சண்முகம்</p><p>மாணவர்கள் மீது அக்கறை இருந்திருந்தால் நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வந்து நீட்டை நீக்கி இருக்கலாம்.</p><p>உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நீட்டை தொடர்வதாக பாஜக கூறுவது எல்லாம் ஏமாற்று வேலை.</p><p>உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த 6 மாதங்களில் கனிமவள சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது மத்திய பாஜக அரசு  - சிவி சண்முகம்</p> <p>காங்கிரஸ், பாஜக உடலில் இருப்பது ஒரே ஜீன் தான்.</p><p>உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நீட் தொடர்வதாக பாஜக உறுப்பினர் கூறுகிறார் - சிவி சண்முகம்</p><p>வைபவ் சூர்யவன்ஷி போல் குழந்தைகள் விளையாட்டில் சாதிக்க வேண்டும்.</p><p>டிஎன்பிஎஸ்சியில் 8 உறுப்பினர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.</p><p>தமிழகத்தில் அளவுக்க அதிகமாக உள்ள சுங்கச்சாவடிகளை மூட வேண்டும்.</p><p>மத்திய அரசிடம் பேசி சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக எம்எல்ஏ சிவக்குமார்</p><p>8 ஆண்டுகளுக்கு முன்பு அமைச்சராக இருந்தபோது தூர்வாரும் பணி நடைபெற்றது.</p><p>ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் நந்தன் கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்றது - சிவி சண்முகம்</p><h2>மானியக் கோரிக்கை விவாதம் - விக்கிரவாண்டி பாமக எம்எல்ஏ சிவக்குமார் உரை</h2><p>விக்கிரவாண்டியில் தொழிற்பயிற்சி கல்லூரி அமைத்து தர வேண்டும்.</p><p>விக்கிரவாண்டியில் சிங்கப்பெண் சிறப்புப் படை காவல் நிலையம் தேவை.</p><p>நந்தன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றித் தர வேண்டும்.</p><h2>காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பட் உரை</h2><p>நீட் எந்தெந்த மாநிலத்திற்கு தேவையோ அந்த மாநிலத்திற்கு கொண்டு வரலாம் என்று தான் சொன்னோம்.</p><p>காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த ஒவ்வொரு சட்டத்தையும் பில் திருத்தம் என்ற பெயரில் அனைத்து சட்டத்தையும் பாஜக அரசு திருத்திக்கொண்டு இருக்கிறது.</p><p>மக்களுக்கு எது தேவையோ அதை காங்கிரஸ் ஆட்சியில் நாங்கள் கொண்டு வந்தோம்.</p><p>அனைத்து திட்டங்களையும் திருத்திக்கொண்டு இருக்கும்போது மாணவர்களுக்கான இந்த திட்டத்தை திருத்துவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்?</p> <p>காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தான் நீட் வந்தது என தாரகை கத்பட் கூறி விட்டார் - பாஜக எம்எல்ஏ போஜராஜன்</p><p>கன்னியாகுமரியில் உள்ள அனைத்து குளங்களையும் இணைக்க வேண்டும் - தாரகை கத்பட்</p><p>குளச்சல் தொகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.</p><p>தாமிரபரணி, கோதையாறு, பரளியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் தேவை  - தாரகை கத்பட்</p> <p>பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மிகப்பெரிய சவாலாக உள்ளன. இரும்புக்கரம் கொண்டு குற்றங்களை அரசு அடக்க வேண்டும் - தாரகை கத்பட்</p><p>சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு காங்கிரஸ் வரவேற்பு.</p><p>மீனவர்கள் கைது பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.</p><p>கடலில் காணாமல் போகும் மீனவர்களை மீட்க கடல் ஆம்புலன்ஸ் தேவை - தாரகை கத்பட்</p><p>இருமொழிக் கொள்கையை பாதுகாப்பதிலும் காங்கிரஸ் உறுதியாக இருக்கும்.</p><p>IREL அரிய வகை கனிம நிறுவனத்தால் கடல் அரிப்பு, கடற்கரை சுருங்கி விட்டது  - தாரகை கத்பட்</p><p>காலை உணவுத்திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டியதற்க நன்றி. </p><p>காங்கிரஸ் திட்டங்களை மாற்றும் பாஜக, நீட் தேர்வை ஏன் மாற்றவில்லை?</p><p>100 நாள் வேலைத்திட்டத்தை நிறுத்துவதற்கு பாஜக முயற்சி செய்கிறது - தாரகை கத்பட்</p><h2>மானியக்கோரிக்கை விவாதம் - காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பட் உரை</h2><p>எனது வெற்றிக்கு உழைத்த கூட்டணி கட்சியினருக்கு நன்றி.</p><p>ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கொடுத்து, கூட்டணி கட்சிக்கு மரியாதை தந்தவர் விஜய்.</p><p>தவெக பட்ஜெட் ஏழை, எளிய மக்களுக்கான பட்ஜெட்.</p><p>தமிழகத்திற்கான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும்.</p><p>செம்மேடு - தாழம்பட்டு சாலை பெரிய ஓடையின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைத்து தர  வேண்டும் -  எம்எல்ஏ ராஜேந்திரன்</p><h2>என்எல்சி தொழிலாளர்கள் நலன் குறித்து அதிமுக எம்எல்ஏ ராஜேந்திரன் உரை</h2><p>சுற்றுவட்டார கிராமங்களின் மேம்பாட்டிற்கு என்எல்சி 3% சிஎஸ்ஆர் நிதி தர வேண்டும்.</p><p>சிஎஸ்ஆர் நிதி தொடர்பாக என்எல்சியை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/0nckklvs/thahira.jpg" /></figure><p>அந்த கவுரம் என்னை சார்ந்தது மட்டும் அல்ல. இஸ்லாமியர்கள் அனைவருக்குமான பெருமை அளிப்பதுபோல் நடத்தினார்.</p><p>அன்றே முடிவு செய்தேன். எந்த கட்சிக்காக இந்த இடத்திற்கு நான் வந்தேனோ சாகும் வரை இந்த ஆடை தான் அணிந்து இருப்பேன். இது என் அடையாளம் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்,.</p><p>தளபதியால் நான், தளபதிக்காகவே நான், என்றும் தலைமைக்கும் தளபதிக்கும் விசுவாசத்துடன் நன்றியுடன் நடந்து கொள்வேன் - எம்எல்ஏ தாஹிரா</p> <p>என்னைப்போன்ற பெண்களுக்கு முக்கிய இடத்தை கொடுத்து இந்த இடத்தில்  நிற்க வைத்து இருக்கிறார்.</p><p>எந்த அரசியல்வாதிகளும், எந்த அமைப்பில் இருப்பவர்களும் இஸ்லாமிய பெண்களுக்கு முதல் இடம் கொடுத்தது இல்லை.</p><p>எங்கள் தலைவர் கட்சியில் பதவி கொடுத்தபோது அவருடன் பக்கத்தில் அமரவைத்து கவுரவித்தார்.</p> <h2>கட்சி கொடி நிறத்தில் உடை அணிந்திருப்பது  ஏன்? என எம்எல்ஏ தாஹிரா விளக்கம்</h2><p>தலைவருடன் கடந்த 27 ஆண்டுகளாக பயணித்து இருக்கிறேன்.</p><p>தமிழ்நாட்டில் முதல் பெண் ரசிகர் மன்றத்தில் நான் அந்த பட்டத்தை வாங்கி இருக்கிறேன்.</p> <p>ராணிப்பேட்டையில் புதிய மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, வாலாஜா அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் - எம்எல்ஏ தாஹிரா</p><h2>ராணிப்பேட்டை தொகுதி தவெக எம்எல்ஏ தாஹிரா உரை</h2><p>வாயால் வடை சுட்ட காலம் போய் சுவையான வடை சுட்டு கையில் கொடுக்கும் காலம்.</p><p>முதலமைச்சரை பேச சொல்லும் கூட்டம், அவர் பேசத் தொடங்கினால் ஓடுகிறது.</p><p>தவெக ஆட்சி ஊழலற்ற உண்மையான மக்கள் ஆட்சி.</p><p>அதிகாரிகள் எந்த திட்டத்தை தீட்டினாலும் அமைச்சரின் கவனத்திற்கு வராமல் வெளியிடப்படாது.</p><p>நெடுஞ்சாலை, பொதுப்பணித் துறையிலும் விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட உள்ளது - ஆதவ்</p><p>தான் மட்டும் நல்ல அறையில் அமர்ந்திருக்க வேண்டும் என முதல்வர் நினைக்கவில்லை.</p><p>முதல்வரை சுற்றி பணியாற்றும் 80-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அவரை காண வருவோர் வசதிக்காகத்தான் அறை மாற்றம்.</p><p>எளிமையை விரும்பும் முதலமைச்சர் விஜய், தன்னை சுற்றி இருப்பவகளை நினைத்துதான் அறையை மாற்றுகிறார் - அமைச்சர் ஆதவ்</p> <p>கலைஞரும், ஜெயலலிதாவும் புதிய தலைமைச்செயலகத்தை கட்ட வேண்டும் என நினைத்தனர் - அமைச்சர் ஆதவ்</p> <p>5 வருடத்தில் நடைபெற்ற டெண்டர் குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிட உள்ளோம்.</p><p>தான் மட்டும் நல்ல அறையில் அமர்ந்திருக்க வேண்டும் என முதல்வர் நினைக்கவில்லை - அமைச்சர் ஆதவ்</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உரை</h2><p>வாழைப்பழத்தில் ஊசி ஏற்றி அதனை மக்களுக்கே கொடுப்பது போல் சிரித்துக்கொண்டு பேசியிருக்கிறார் எ.வ.வேலு</p><p>கடந்த 5 வருட பத்திரிகை செய்திக எடுத்து பார்த்தால் பொதுப்பணித்துறையில் ஊழல் மட்டுமே நிறைந்திருக்கும்.</p><p>முதல்வர் அறை மாற்றத்திற்கான டெண்டர் இன்னும் முடியவில்லை.</p><p>தவெக அரசின் வாக்குறுதி புத்தகத்தில் அறம் திட்டத்தின் 25-வது பக்கத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் பற்றி கூறி உள்ளீர்கள்.</p><p>எந்த ஓய்வூதிய திட்டத்திற்கு தவெக அரசு அனுமதி அளிக்கப்போகிறது, அரசு அதிகாரிகளுக்கு தெளிவான விளக்கம் தேவை.</p><p>முதல்வர் அறையை தயார் செய்ய ரூ.5.54 கோடி மதிப்பிலான பணிக்கு டெண்டர் விடப்படவில்லை என்ற செய்தியை சுட்டிக்காட்டி எ.வ. வேலு பேச்சு</p><p>காலை உணவுத்திட்டத்தின் பெயர் காமராஜர் பெயரில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. காலை உணவுத்திட்டத்திற்கு காமராஜர் பெயரை தவிர வேறு எந்த பெயரும் பொருத்தமாக இருக்காது - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>பெயர் மாற்றம் என்பது கலைஞர் ஆட்சியிலும் இருந்தது என்பதை சுட்டிக்காட்டி அமைச்சர் ராஜ்மோகன் பேசினார்.</p><p>அந்த மைக், சேர், டேபிள் செய்தது நாங்கள் தான் என்கிறார்கள். இவை அனைத்தும் செய்தது மக்கள் வரிப்பணத்தில் தான்.</p><p>கடந்த திமுக ஆட்சியில் அம்மா மினி கிளினிக் முதல்வர் கிளினிக் ஆக மாறி உள்ளது.</p><p>பொதுக்கூட்டத்தில் பேசுவதை போல் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேரவையில் பேசிக்கொண்டிருக்கிறார் - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>பொதுக்கூட்டத்தில் பேசுவதை போல் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேரவையில் பேசிக்கொண்டிருக்கிறார் - அமைச்சர் செங்கோட்டையன்</p><p> மானியக்கோரிக்கை தொடர்பாக மட்டும் பேசுங்கள் - சபாநாயகர்</p><p>2003-ல் பழைய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டது - எ.வ.வேலு</p><p>அரசு அதிகாரிகள் பொதுவானவர்கள்.</p><p>நேற்று எங்களுக்கு சல்யூட்... இன்று உங்களுக்கு சல்யூட் - எ.வ.வேலு </p><h2>எ.வ.வேலு உரை</h2><p>இந்த நிதி ஆண்டுக்கான எதிர்கால திட்டமிடல் குறித்து எதுவும் இல்லை.</p><p>வெள்ளத் தடுப்புப் பணிகள் குறித்து கொள்ளை விளக்க குறிப்பில் இல்லை.</p><p>சட்டசபையை கலைநயமிக்கதாக மாற்றியது திமுக தான்.</p><p>4 வழித்தடம், 2 வழித்தடம் சாலைகள் இந்த நிதி ஆண்டில் எவ்வளவு அமைக்கப்பட்டது? - எ.வ.வேலு</p><p>முதலமைச்சருக்கு அதிக திறமை இருக்கிறது என்பதை ஏற்கிறேன் - எ.வ.வேலு</p><p>டெண்டர் விலையை உயர்த்தி முறைகேடு செய்யத் தெரியாது என முதல்வர் கூறுகிறார் - எ.வ.வேலு</p><p>அமைச்சர் போல் திமுக ஆட்சியின் சாதனைகளை பட்டியல் போடுகிறீர்கள் - சபாநாயகர்</p><p>மானியக்கோரிக்கையை விட்டுவிட்டு காலை உணவு குறித்து பேசுவது ஏன்? - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>காலை உணவுத்திட்டத்திற்கு காமராஜர் பெயரை வைக்க வேண்டிய அவசியம் என்ன?</p><p>புதிய திட்டத்திற்கு காமராஜர் பெயரை வைத்தால் அதை வரவேற்கிறோம்.</p><p>முதலமைச்சர் என்பது பொதுவான சொற்றொடர் - எ.வ.வேலு</p><p>மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கையில் தான் கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்தோம் - எ.வ.வேலு</p><p>கோவை தந்தை பெரியார் நூலகத்தை திறக்க வேண்டும் - எ.வ.வேலு கோரிக்கை</p><p>அண்ணா அறிவாலயத்தில் பெரியார் சிலை இல்லை.</p><p>எங்கள் கட்சி அலுவலகத்தில் பெரியாருக்கு சிலை இருக்கிறது - ஆதவ் அர்ஜூனா</p><p>3 மாத காலமாக பெரியார் நூலகத்தை கிடப்பில் போட்டது ஏன்? - எ.வ.வேலு</p><p>பெரியார் கொள்கை தலைவர் என தவெக தம்பட்டம் அடித்துக்கொள்கிறது - எ.வ.வேலு</p><p>விடுதலை போராட்ட வீரர்களுக்கு சிலைகள், மணிமண்டபங்கள் அமைத்து தந்தோம் - எ.வ.வேலு</p><p>மானியக் கோரிக்கை மீது விவாதம் - எதிர்க்கட்சி கொறடா எ.வ.வேலு உரை</p><p>சென்னை வள்ளுவர் கோட்டம் முதல் குமரி வள்ளுவர் சிலை வரை கலைஞரின் அடையாளம் இல்லா ஊரே இல்லை - எ.வ.வேலு</p><p>4 துறைகள் மீதான மானிய கோரிக்கை தொடங்கியது.</p><p>மனிதவள மேலாண்துறை மானிய கோரிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் சரத்குமார்.</p><p>பொதுப்பணித்துறை மானிய கோரிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</p><p>மீன்வளம், சுற்றுச்சூழலை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் தவெக அரசு அனுமதிக்காது - அமைச்சர் ராஜீவ்</p><p>3 கிணறுகளுக்கு திமுக ஆட்சியிலும், ஒரு கிணறுக்கு அதிமுக ஆட்சியிலும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது - அமைச்சர் ராஜீவ்</p><p>ஹைட்ரோ கார்பன் கிணறு திட்டத்தால் புதுவை முதல் கன்னியாகுமரி வரை கடல் வளம் பாதிக்கப்படும் -  சிபிஐ எம்எல்ஏ மாரிமுத்து</p><h2>எம்எல்ஏ தமிமுன் அன்சாரி உரை</h2><p>சுற்றுச்சூழல் பாதிப்பை கூர்ந்தாய்வு செய்து அரசு நடவடிக்கை என அமைச்சர் கூறி உள்ளார்.</p><p>புதிதாக 4 கிணறு தோண்டினால் மீனவர் நலன் என பல பாதிப்பு உள்ளதால் அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம்.</p><p>பரங்கிப்பேட்டையில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைப்பதற்கான HOEC நிறுவன விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும்.</p><h2>கடலூர் பரங்கிப்பேட்டையில் ஹைட்ரோ கார்பன் திட்டமா? அமைச்சர் ராஜீவ் விளக்கம் அளித்தார்.</h2><p>பரங்கிப்பேட்டையில் 4 புதிய எண்ணெய் கிணறுகள் அமைக்க இந்துஸ்தான் நிறுவனம் திட்டம்.</p><p>மீனவர்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் முதலமைச்சர் விஜய் அரசு அனுமதிக்காது.</p><p>சுற்றுச்சூழலை பாதிக்கும் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்.</p><p>பரங்கிப்பேட்டையில் இந்துஸ்தான் ஆயில் எக்ஸ்ப்ளோஷன் நிறுவன கிணறுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு என கவன ஈர்ப்பு தீர்மானம்.</p><p>தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டதில் தமிழ்நாடு அரசின் மேல் நடவடிக்கை என்ன? </p><p>தமிழர்களை சுட்டுக்கொன்றவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய தமிழக அரசு கோரியுள்ளதா?  - திமுக</p><p>கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி - அமைச்சர் ரஞ்சித்</p><p>கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள் குடும்பத்திற்கு நிதி வழங்கப்படுமா? - எடப்பாடி பழனிசாமி</p><p>கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொலை - கர்நாடக அரசின் விசாரணையை தமிழ்நாடு அரசு கண்காணிக்கிறது - அமைச்சர் நிர்மல்குமார்</p> <p>சிபிஐ விசாரணை தேவை என்கிறோம் - தவெக அரசின் நிலைப்பாடு என்ன? - பாமக</p><p>கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொலை - தவெக அரசு அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? - பாமக</p><p>யாருடைய கவனத்தை ஈர்க்க இப்படி பேசுகிறீர்கள்? - அமைச்சர் நிர்மல்குமாருக்கு சபாநாயகர் கண்டிப்பு</p><p>அமைச்சர் நிர்மல்குமார் இனி தேவையற்றதை பேச அனுமதிக்க மாட்டேன் - சபாநாயகர்</p><p>திமுகவை விமர்சித்து அமைச்சர் நிர்மல்குமார் பேசியவை அவை குறிப்பில் இருந்து நீக்கம் - சபாநாயகர்</p><p>உலகம் முழுவதும் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களின் ஒரே நம்பிக்கை முதலமைச்சர் விஜய் - அமைச்சர் நிர்மல்குமார்</p><h2>கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொலை - கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அமைச்சர் நிர்மல்குமார் பதில்</h2><p>சுட்டுக்கொல்லப்பட்ட தமிழகர்கள் குடும்பத்திற்கு கூடுதல் நிதி வழங்குவது குறித்து கர்நாடகா பரிசீலனை.</p><p>தமிழர்களை சுட்டுக்கொன்ற வனத்துறை மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு.</p><p>தமிழர்களை சுட்டுக்கொன்ற வனத்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல்.</p><h2>பாஜக எம்எல்ஏ போஜராஜன்</h2><p>துப்பாக்கிச்சூட்டில் பலியான தமிழர்கள் குடும்பத்திற்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும். </p><p>பலியான தமிழர்கள் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசும் நிதி வழங்க வேண்டும்.</p><p>தமிழர்கள் நலனுக்கு கட்சி வேறுபாடுகள் இன்றி ஒன்றிணைய வேண்டும்.</p><p>மான் வேட்டைக்கு சென்றவர்கள் சுட்டுக்கொலை என்பது பொய்யான செய்தி - கீழ்வேளூர் மார்க்சிஸ்ட் எம்எல்ஏ லதா</p><p>தமிழர்களின் உயிரை துப்பாக்கி குண்டுகள் தீர்மானிக்கக்கூடாது.  சிபிஐ விசாரணைக்கு கர்நாடக அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ ராமச்சந்திரன்</p><p>தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட வேண்டும் - தளி இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ ராமச்சந்திரன்</p><p>கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொலை - அதிமுக, பாமக, காங்கிரஸ், சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தல்.</p><p>கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை தேவை - காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பட்</p><p>தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதில் ஏதோ இருக்கிறது என கர்நாடக எம்எல்ஏவே கூறுகிறார். கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் - பாமக எம்எல்ஏ கணேஷ் </p><h2>பாமக எம்எல்ஏ கணேஷ் உரை</h2><p>மேட்டூர் கட்டப்பட்டதால் கர்நாடகாவிற்கு புலம்பெயர்ந்த 3 பேர் சுட்டுக்கொலை.</p><p>தங்கள் கால்நடைகளை தேடிச்சென்றவர்களை சுட்டுக்கொன்றுள்ளது கர்நாடக வனத்துறை.</p><p>மான் வேட்டைக்கு சென்றவர்கள் சுட்டுக்கொலை என்பது ஏற்புடையது அல்ல.</p><p>மான் வேட்டையில் ஈடுபட்டதாக 3 தமிழர்களை குற்றம்சாட்டி கொன்றுள்ளது கர்நாடக வனத்துறை.</p><p>2 மாநில எல்லை பகுதியில் கொலை நடைபெற்றுள்ளதால் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை.</p><p>வனத்துறை சுட்டுக்கொன்ற தமிழர்களுக்கு ரூ.5 லட்சம் மட்டுமே இழப்பீடு அறிவிப்பு, தமிழக அரசு கூடுதலாக நிதி தர வேண்டும்  - எடப்பாடி பழனிசாமி</p> <h2>கவன ஈர்ப்பு தீர்மானத்தில் எடப்பாடி பழனிசாமி உரை</h2><p>பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் தனது கால்நடை தேடிச்சென்ற 3 தமிழர்கள் சுட்டுககொலை, ஒருவர் படுகாயத்துடன் சிகிக்சை.</p><p>அப்பாவி விவசாயிகளை வனத்துறை சுட்டுக்கொன்றது மனித உரிமை மீறல் - மனோஜ்பாண்டியன் </p><h2>கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்கள்  - கவன ஈர்ப்பு தீர்மானத்தில் மனோஜ்பாண்டியன் உரை</h2><p>கர்நாடகாவில் கால்நடை தேடிச்சென்ற 3 தமிழர்கள் கர்நாடக வனத்துறையால்  சுட்டுக்கொலை.</p><p>சட்டசபையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது.</p><p>சட்டசபையில் இன்று இளைஞர் நலன், விளையாட்டு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள், பொதுப்பணி, மனிதவள மேம்பாட்டுத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.</p><p>கடலூரில் இந்துஸ்தான் ஆயில் நிறுவனம், மேம்பாட்டுக் கிணறுகள் அமைப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பிலிப்பைன்ஸ் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி</title><link>https://www.maalaimalar.com/news/world/two-killed-in-school-shooting-in-southern-philippines</link><comments>https://www.maalaimalar.com/news/world/two-killed-in-school-shooting-in-southern-philippines#comments</comments><guid isPermaLink="false">4de940b5-3ca7-4ff3-9071-5ca4ba914408</guid><pubDate>Tue, 18 Aug 2026 13:27:32 +0000</pubDate><atom:updated>2026-08-18T13:27:32.295Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>துப்பாக்கிச்சூடு,Philippines,பிலிப்பைன்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/2kqz6ftm/Philippines0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிலிப்பைன்ஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/2kqz6ftm/Philippines0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் இன்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்தனர். தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த இரண்டு மாதங்களுக்குள் நடைபெற்ற 2-வது சம்பவம் இதுவாகும்.</p><p>தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள ஜம்போங்கா நகரில் உள்ள தனியார் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அடெினியோ டி ஜம்போங்கா (Ateneo de Zamboanga) பல்கலைக்கழகத்துடன் இணைந்த பள்ளியில் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் கைத்துப்பாக்கி மற்றும் ரைஃபிளைப் பள்ளி வளாகத்திற்குள் கொண்டு வந்து, வகுப்பறைக்குள் இருந்த மாணவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டதாகக் காவல்துறையினர் முதற்கட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.</p><p>GMA News வெளியிட்ட காணொளியில், பலமுறை துப்பாக்கிச் சத்தம் கேட்டபோது மாணவர்கள் பாதுகாப்பிற்காக குனிந்து பதுங்கும் வகையிலான வகுப்பறைக்குள்ளான குழப்பமான காட்சிகள் இடம்பெற்றிருந்தன.</p><h2>10-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு</h2><p>உயிரிழந்தவர் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் என்று காவல்துறை தெரிவித்தது. துப்பாக்கிச் சூடு நடத்திய 9-ம் வகுப்பு மாணவர், பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகக் காவல்துறை கூறியுள்ளது. மேலும் இருவர் காயமடைந்தனர்.</p><p>மத்திய பிலிப்பைன்ஸின் டக்லோபன் (Tacloban) நகரில் உள்ள ஒரு பொது உயர்நிலைப் பள்ளியில் கடந்த ஜூன் மாதம் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. முந்தைய சம்பவத்தில், பள்ளியைச் சேர்ந்த இருவர் வளாகத்திற்குள் துப்பாக்கியால் சுட்டதில் குறைந்தது மூன்று மாணவர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 20 பேர் காயமடைந்தனர்.</p><p>பிலிப்பைன்ஸில் துப்பாக்கி வைத்திருப்பதற்கான விதிமுறைகள், பின்னணி சரிபார்ப்பு மற்றும் உளவியல் பரிசோதனை உள்ளிட்டவை கடுமையானவை என்பதால், அங்கு பள்ளிகளில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரிதாகவே நிகழ்கின்றன. இருப்பினும், சட்டவிரோத துப்பாக்கிகள் புழக்கத்தில் உள்ளன.</p> <h2>அதிபர் உத்தரவு</h2><p>பள்ளிகளில் வன்முறையைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தீர்மானிக்கவும், இதுகுறித்து விசாரணை நடத்தவும் சட்ட அமலாக்க முகமைகளுக்கு பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் உத்தரவிட்டார்.</p><p>"நமது குழந்தைகள் கல்வி கற்கவும், வளரவும், தங்கள் எதிர்கால வாழ்க்கையைப் பற்றி கனவு காணவும் நாம் அவர்களை ஒப்படைக்கும் இடங்கள்தான் நமது பள்ளிகள். அவை நம் நாட்டின் மிக பாதுகாப்பான இடங்களாகவும் இருக்க வேண்டும்," என்று மார்கோஸ்  அறிக்கையில் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>காலே டெஸ்ட்: நான்காம் நாள் முடிவில் இலங்கை 84/4 - வெற்றியின் விளிம்பில் இந்தியா</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/srilanka-need-288-runs-to-win-in-lats-day-against-india-first-test</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/srilanka-need-288-runs-to-win-in-lats-day-against-india-first-test#comments</comments><guid isPermaLink="false">35e1d39d-a4b3-45bc-998b-cb4da38318d7</guid><pubDate>Tue, 18 Aug 2026 13:19:44 +0000</pubDate><atom:updated>2026-08-18T13:19:44.650Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rishabh Pant,SLvIND,ரிஷப் பண்ட்,Manav suthar,மானவ் சுதார்,இலங்கை இந்தியா தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/mqsjsjcm/manav.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ manav suthar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/mqsjsjcm/manav.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற கடைசி நாளில் 288 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 6 விக்கெட்டுகள் உள்ளன.</p><p>இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.</p><p>இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.</p><h2>சதமடித்த படிக்கல்</h2><p>அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 462 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தேவ்தத் படிக்கல் 167 ரன்னும், கே.எல்.ராகுல் 82 ரன்னும், துருவ் ஜுரல் 51 ரன்னும் எடுத்தனர்.</p><p>இலங்கை சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 4 விக்கெட்டும், கேஷரா நுவந்தா 3 விக்கெட்டும், அசிதா பெர்னாண்டோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><h2>சோனல் தினுஷா சதம்</h2><p>தொடர்ந்து ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 284 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் சோனல் தினுஷா 100 ரன்னில் அவுட்டானார். நிரோஷன் டிக்வெலா 80 ரன்னில் ஆட்டமிழந்தார்.</p><h2>மானவ் சுதர் 4 விக்கெட்</h2><p>இந்தியா சார்பில் மானவ் சுதர் 4 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><h2>ரிஷப் பண்ட் அரை சதம்</h2><p>178 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி 2வது இன்னிங்சில் 193 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ரிஷப் பண்ட் அரை சதமடித்து 66 ரன்னில் அவுட்டானார். படிக்கல் 44 ரன்னும், கே.எல்.ராகுல் 35 ரன்னும் எடுத்தனர்.</p><p>இலங்கை சார்பில் அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட்டும், லஹிரு குமாரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><h2>இலங்கைக்கு இலக்கு 372</h2><p>இதன்மூலம் 372 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் நிஷான் மதுஷ்கா 6 ரன்னில் அவுட்டானார். பசிந்து சுரியபந்தாரா டக் அவுட்டானார். அடுத்து இறங்கிய கமிந்து மெண்டிஸ் 2 ரன்னில் வெளியேறினார்.</p><p>மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் லஹிரு உதாரா 16 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 47 ஆக இருந்தது.</p><p>5வது விக்கெட்டுக்கு கேப்டன் தனஞ்செய டி சில்வா-சோனல் தினுஷா ஜோடி இணைந்து நிதானமாக ஆடியது.</p><p>இறுதியில், நான்காம் நாள் முடிவில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்கு 84 ரன்கள் எடுத்துள்ளது. டி சில்வா 31 ரன்னும், சோனல் தினுஷா 25 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.</p><p>இந்தியா சார்பில் மானவ் சுதார் 2 விக்கெட் வீழ்த்தினர்.</p><p>நாளை கடைசி நாள் என்பதால் மேலும் 288 ரன்களை எடுத்தால் இலங்கைக்கும், மேலும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினால் இந்திய அணிக்கும் வெற்றி கிடைக்கும். எனவே காலே டெஸ்ட் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>டிரம்ப் விடுத்த திடீர் மிரட்டல்: 2 வாரத்தில் இல்லாத அளவிற்கு கச்சா எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு</title><link>https://www.maalaimalar.com/news/world/crude-oil-prices-hit-2-week-high-aboveamid-trump-oman-threat</link><comments>https://www.maalaimalar.com/news/world/crude-oil-prices-hit-2-week-high-aboveamid-trump-oman-threat#comments</comments><guid isPermaLink="false">e8c0660e-d2b6-455a-b2df-2146e6375a37</guid><pubDate>Tue, 18 Aug 2026 13:12:39 +0000</pubDate><atom:updated>2026-08-18T13:12:39.326Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டொனால்டு டிரம்ப்,Donald Trump,கச்சா எண்ணெய்,Crude oil</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/ahmcts2v/CrudeOil001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கச்சா எண்ணெய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/ahmcts2v/CrudeOil001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு ஆசியாவில் மோதல் தீவிரமடைதல் மற்றும் ஓமன் மீது <a href="https://www.maalaimalar.com/news/world/usiran-tensions-trump-warns-unconditional-surrender-and-tougher-sanctions">டிரம்ப்</a> விடுத்த மிரட்டல் ஆகியவற்றால் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 91 டாலருக்கும் அதிகமாக உயர்ந்து, கடந்த இரண்டு வாரங்களில் இல்லாத உச்சத்தை எட்டியது.</p><p>மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் மோதல் சூழலில், ஓமன் மீது குண்டு வீசுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விடுத்த சமீபத்திய மிரட்டலை முதலீட்டாளர்கள் உன்னிப்பாக கவனித்து வரும் நிலையில், இன்று கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 91 டாலருக்கும் அதிகமாக உயர்ந்து, கடந்த இரண்டு வாரங்களில் இல்லாத உச்சத்தை எட்டியது.</p><p>ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் அல்லது போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான எந்த அறிகுறியும் இல்லாத சூழலிலும், பேச்சுவார்த்தைக்கான 60 நாள் காலக்கெடு திங்கட்கிழமையுடன் முடிவடைந்த நிலையிலும், இந்த மோதல் முடிவுக்கு வர எவ்வளவு காலம் ஆகும் என்பது குறித்த நிச்சயமற்ற தன்மையிலேயே முதலீட்டாளர்கள் உள்ளனர்.</p><h2>பிரெண்ட் கச்சா எண்ணெய்</h2><p>Investing.com-இன் தரவுகளின்படி, முந்தைய வர்த்தக நாள் முடிவில் பீப்பாய் ஒன்றுக்கு 90.87 டாலராக இருந்த உலகளாவிய கச்சா எண்ணெய் அளவுகோலான 'பிரெண்ட்' (Brent) கச்சா எண்ணெயின் விலை, செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தின்போது பீப்பாய் ஒன்றுக்கு 91.84 டாலர் என்ற உச்சத்தை எட்டியது.</p><p>ஜூலை 30, 2026 அன்று பீப்பாய் ஒன்றுக்கு சுமார் 93 டாலராக இருந்த விலையுடன் ஒப்பிடுகையில், தற்போது கச்சா எண்ணெய் விலைகள் மீண்டும் உயர்ந்து இரண்டு வாரங்களுக்கும் மேலான உச்சத்தை எட்டியுள்ளதாக வர்த்தகத் தரவுகள் காட்டுகின்றன.</p><p>வர்த்தகத் தரவுகளின்படி, 2026-ஆம் ஆண்டில் இதுவரை உலக சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 44%-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 30% அதிகரித்துள்ளது.</p><p>அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே இறுதி அமைதி ஒப்பந்தம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் கடந்த மூன்று மாதங்களில் எரிசக்தி விலைகள் 15% வரை குறைந்திருந்தாலும், தற்போது அத்தகைய ஒப்பந்தத்திற்கான எந்த அறிகுறியும் இல்லாததால் விலைகள் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளன.</p><h2>கடந்த ஒரு மாதத்தில் 3 சதவீதம் உயர்வு</h2><p>Investing.com தரவுகளின்படி, கடந்த ஒரு மாதத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 3%-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. கடந்த ஐந்து வர்த்தக காலத்தில் விலை 2%-க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.</p><p>பங்குச் சந்தையின் முந்தைய நாள் வர்த்தக முடிவில் ஒரு பீப்பாய்க்கு (bbl) 90.87 டாலராக இருந்த ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை, செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3:03 மணி நிலவரப்படி 0.14% உயர்ந்து 91.01 டாலராக வர்த்தகமானது.</p><h2>எண்ணெய் விலை ஏன் மீண்டும் உயர்கிறது?</h2><p>இறுதி அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கான 60 நாள் காலக்கெடு முடிந்த பின்னரும், ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) விவகாரத்தில் ஓமன் தலையிட்டால் அந்நாட்டின் மீது குண்டு வீசுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த சமீபத்திய மிரட்டலாலும் எண்ணெய் விலை இரண்டு வாரங்களுக்கும் மேலான உச்சத்தை எட்டியது.</p><p>ஓமன் குறுக்கே நின்றால், நாங்கள் அவர்கள் மீது கடுமையான குண்டுவீச்சை நடத்துவோம் என்று டொனால்ட் டிரம்ப் நேற்று கூறியிருந்தார்.</p><p>உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தி குறித்து ஓமனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஈரான் தெரிவித்தது. இருப்பினும், இந்த பேச்சுவார்த்தைகள் சிக்கலான நிலையில் உள்ளன.</p><p>மேற்கு ஆசியாவில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமெரிக்காவின் முயற்சிகளுக்கு ஓமன் இடையூறு விளைவித்தால் மட்டுமே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிரம்ப் தனது மிரட்டலில் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அன்று சண்டை இன்று ஒற்றுமை... அப்பா - மகன் சண்டையால் நின்றுபோன திரைப்படம் - இயக்குநர் சேரன் வேதனை!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/conflict-then-unity-now-a-film-halted-by-a-father-son-feud-director-cheran-expresses-his-anguish</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/conflict-then-unity-now-a-film-halted-by-a-father-son-feud-director-cheran-expresses-his-anguish#comments</comments><guid isPermaLink="false">c62aa709-b33b-4d5a-b7d8-17f0aeec40ab</guid><pubDate>Tue, 18 Aug 2026 13:04:02 +0000</pubDate><atom:updated>2026-08-18T13:04:02.775Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Ramadoss,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,இயக்குநர் சேரன்,Director Cheran,ராமதாஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/j6blsw6v/New-Project-2026-08-18T183341.460.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்று சண்டை இன்று ஒற்றுமை... அப்பா - மகன் சண்டையால் நின்றுபோன திரைப்படம் - இயக்குநர் சேரன் வேதனை!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/j6blsw6v/New-Project-2026-08-18T183341.460.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்தாண்டு பாமக நிறுவனர் ராமதாஸின் சுயசரிதைப் படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகி இருந்தன. அந்த சுயசரிதைப் படத்தை இயக்குநர் சேரன் இயக்கவிருப்பதாகவும், நடிகர் ஆரி ராமதாஸ் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.</p><p>படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் எல்லாம் வெளியிடப்பட்டன. ஆனால் அதன்பின் அப்படம் குறித்த எந்த தகவல்களும் வெளிவரவில்லை. இதுதொடர்பான கேள்விக்கும் நடிகர் ஆரி, இயக்குநர் சேரன் அப்டேட்டுகளை வெளியிடுவார் என தெரிவித்திருந்தார். </p><p>இருப்பினும் படம் தொடர்பாக எந்தத் தகவல்களும் வெளிவராமல் படம் கைவிடப்பட்டது. இந்நிலையில் இப்படம் கைவிடப்பட்டது தொடர்பாக இயக்குநர் சேரன் பேசியுள்ளார். </p><p>இயக்குநர் சங்ககிரி ராஜ்குமாரின் ‘ஒன் மேன்’ திரைப்படம் ஆகஸ்ட் 21-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளநிலையில், இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் ராமதாஸின் படம் தொடர்பாக பேசிய சேரன்.,</p><p>“ராமதாஸ் படத்திற்கு எனக்கு முன்னால் கதை எழுத அமர்ந்தவர் சங்ககிரி ராஜ்குமார்தான். அவர்தான்  படத்தை இயக்கியிருக்க வேண்டியது. சில காரணங்களால், தயாரிப்பாளர்கள் என்னை அணுகினார்கள். </p><p>அப்போது ராஜ்குமார் நிறைய குறிப்புகளை எழுதி வைத்துள்ளதாகவும், அதை நான் எடுத்துக்கொள்ளும்படியும் கூறும்போது எனக்கு ஒரு நெருடல். </p><p>அவர் எடுக்கவிருக்கும் படத்தை, அவர் எடுக்க வேண்டும் என்று நினைத்து எழுதிய படத்தை நான் ஏன் எடுக்க வேண்டும் என்று சொல்லி, நான் ராமதாஸிடம், “தம்பி எடுக்கட்டும், நான் வேணா கூட இருந்து ஆதரவு தருகிறேன். ஏனென்றால், அவருக்கு ஒரு கனவு இருந்திருக்கும், அவருக்கு ஒரு அடையாளம் வேண்டும். அவர் மிக அழகாக அந்தக் கதையைத் தொகுத்திருப்பார்.</p><p>அப்போது அதைப்போய் நான் எடுத்தால், அவர் உழைப்பைத் தட்டிப்பறித்தது போல் இருக்கும்” என்று அவரிடம் சொன்னேன்.</p><p>அவர்கள் பின்னர் பேசிவிட்டு, “இல்லை, இந்தக் கதை இன்னும் சிறப்பாக வர வேண்டும், இப்படி வர வேண்டும், அப்படி வர வேண்டும்” என்று தயாரிப்பாளர்கள் வற்புறுத்தியபோது, நான் ராஜ்குமாரைக் கூப்பிட்டு, “தம்பி, என்னால் மறுக்க முடியவில்லை, வேறு வழியில்லை. </p><p>பெரியவர்கள் கேட்கும்போது அதை வேண்டாம் என்று தூக்கி எறிந்துவிட்டு வரும் அளவுக்கு அவர்களது அன்பை உதாசினப்படுத்த முடியாது. வேறு வழியில்லாமல் நான் ஒப்புக்கொள்கிறேன் தம்பி” என்று அவரிடம் சொன்னேன். அதற்கு அவனுக்கு என் மீது வருத்தம் இருந்தது.</p><p>ஆனால் இப்போது அந்தப் படம் உனக்கும் இல்லை, எனக்கும் இல்லை என்றாகிவிட்டது. அந்தப் படத்திற்காக இவரது உழைப்பு 2 வருடம், என்னுடைய உழைப்பு கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் வீணானது. </p><p>நாங்கள் ஒரு 15 பேர் கொண்ட குழுவாகச் சென்று, இடங்களைப் பார்த்து, படப்பிடிப்புத் தளங்களைத் தேடி, எத்தனையோ இடங்களுக்கு அலைந்து, காடுகளையும் மேடுகளையும் கடந்து ஊர்களை கண்டுபிடித்தோம்.</p><p>காரணம் அது 1987-ஆம் ஆண்டு காலத்து வரலாறு. 1987-லிருந்து நடந்த சம்பவங்களை முழுமையாகப் பதிவு செய்ய வேண்டும். இப்போது அந்த கிராமங்களைத் தேடினால், 2026-ஆம் ஆண்டில் 1987-ன் காலத்து கிராமங்களை எங்கே போய் தேடுவது?</p><p>தமிழ்நாடு முழுவதும் அலைந்து அந்தக்காலத்து கிராமங்களையும், சாலைகளையும் கண்டறிந்து, அப்போதைய மனிதர்களைப் போன்ற தோற்றமுடைய ஆட்களைக் கண்டுபிடித்தோம். காரணம் அந்த காலத்து ஆட்களின் தோற்றம் என்பது வேறு. இப்போது அதுபோல யாரும் இல்லை.</p><p>அதனைவைத்து ஒன்றரை வருடமாக தகவல்களை திரட்டி வைத்திருந்தால், அந்தப் படம் நடக்கவில்லை. இது எவ்வளவு பெரிய வலி. அவர்கள் வேண்டுமானால் சொல்லலாம், “நாங்கள் உங்களுக்கு அந்தப் பணி செய்த வரைக்கும் சம்பளம் கொடுத்துவிட்டோமே” என்று. ஆனால் எங்களுக்குத் தேவை சம்பளம் அல்ல, நான் எடுத்தப் படம் வெளியே வரவேண்டும்.</p><p>ஆனால் அது நடக்கவில்லை, நின்றுவிட்டது. அதற்கு காரணம் என்ன அப்பா-மகன் சண்டை போட்டனர், படம் நின்றுவிட்டது. இப்போது அப்பா- மகனும் சேர்ந்துவிட்டார்கள், ஆனால் படம் எடுக்க ஆளில்லை. என்ன செய்வது?</p><p>இதுதான் சினிமாத் துறையின் அவலம். அதுபோலத்தான் சினிமா என்பது எங்கு நம்மைத் தூக்கி நிறுத்தும், எங்கு நம்மை ஏமாற்றும், எங்கு நம்மை உட்கார வைக்கும் என்று யாருக்கும் தெரியாது.” என சேரன் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>இடஒதுக்கீடு இல்லை என்றால், பாஜக-வுக்கு தோல்வி: கூட்டணி கட்சி மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/if-bjp-fails-it-will-also-be-voted-out-up-minister-on-nishad-reservation</link><comments>https://www.maalaimalar.com/news/national/if-bjp-fails-it-will-also-be-voted-out-up-minister-on-nishad-reservation#comments</comments><guid isPermaLink="false">d94deba1-2f5a-427c-848a-6143df6eb218</guid><pubDate>Tue, 18 Aug 2026 12:54:58 +0000</pubDate><atom:updated>2026-08-18T12:54:58.995Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,Yogi Adityanath,யோகி ஆதித்யநாத்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/i07b33pm/SanjayNishad.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சஞ்சய் நிஷாத்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/i07b33pm/SanjayNishad.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு உ.பி.யில் நடைபெற்று வருகிறது. யோகி ஆதித்யநாத் தலைமையில் இரண்டு முறை பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. பா.ஜ.க. 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க முனைப்புடன் உள்ளது.</p><p>இந்த நிலையில் பாஜக கூட்டணியில் உள்ள நிஷாத் கட்சியைச் சேர்ந்த சஞ்சய் நிஷாத் அமைச்சர், பாஜக இட ஒதுக்கீடு வழங்கவில்லை என்றால் தோல்வியை சந்திக்கும் எனத் தெரிவித்துள்ளார்.</p><h2>நிஷாத் சமூகம்</h2><p>சஞ்சய் நிஷாத், நிஷாத் சமூகத்தை சேர்ந்தவர்கள். நிஷாத் சமூகத்திற்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.</p><p>உத்தர பிரதேச மாநில அமைச்சரவையில் இடம் பிடித்திருக்கும் மீன் வளத்துறை அமைச்சராக இருக்கும் சஞ்சய் நிஷாத் கூறியதாவது:-</p><p>யானை (பி.எஸ்.பி.), சைக்கிள் (சமாஜ்வாதி) மற்றும் கை (காங்கிரஸ்) நிஷாத் இட ஒதுக்கீட்டிற்கான கோரிக்கையை நிராகரித்தது. இதனால் அவர்கள் அதிகாரத்தில் இருந்து நீக்கப்பட்டார்கள். பாஜக-வும் கோரிக்கையை நிறைவேற்ற தவறினால், அவர்களும் ஆட்சியில் இருந்து அகற்றப்படுவார்கள். எங்களுடைய மூதாதையர்கள் நாட்டின் சுதந்திரத்தை நிலைநாட்டியதுடன், அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படுவதையும் உறுதி செய்தனர்.</p><p>நாங்கள் இடஒதுக்கீட்டை விரும்புகிறோம். பாஜக அரசு இதை கட்டாயம் அமல்படுத்த வேண்டும். முன்னதாகவே, இந்த விவகாரத்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் அரசு கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நாங்கள் உங்களுடைய வழக்கறிஞர். பாஜக நீதிபதி. எனினும், எங்களுக்கு இடஒதுக்கு வழங்க வேண்டும்.</p><p>இவ்வாறு சஞ்சய் நிஷாத் தெரிவித்துள்ளார்.</p><p>அத்துடன் சொந்த பூத்களை தயார் செய்யவும், கட்சியை வலுப்படுத்தவும் தொண்டர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.400 கோடியில் சென்னையில் முக்கோண வழித்தட சாலை: அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadav-arjuna-announce-tn-assembly-for-triangle-road-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadav-arjuna-announce-tn-assembly-for-triangle-road-in-chennai#comments</comments><guid isPermaLink="false">6932b807-6052-4e03-be35-ec95a15adb2e</guid><pubDate>Tue, 18 Aug 2026 12:29:59 +0000</pubDate><atom:updated>2026-08-18T12:29:59.289Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,Minister Aadav Arjuna</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/5ou1flwr/aadav.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ minister aadav arjuna]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/5ou1flwr/aadav.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் நெடுஞ்சாலை துறைக்கான மானியக் கோரிக்கை மீதான பதிலுரையில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BE">அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</a> கூறியதாவது:</p><p>சென்னை- கோவை - தூத்துக்குடியை இணைக்கும் தொழில் தட விரைவு சாலை உருவாக்கப்படும்.</p><p>சென்னை கன்னியாகுமரி 8 வழிச்சாலை, சென்னை நுழைவு வழித்தடச் சந்திப்புகளை மேம்படுத்துதல், திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் மற்றும் கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு உயர்மட்ட சாலை உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>சென்னை-மாமல்லபுரம்-புதுச்சேரியை இணைக்கும் கடல்வழி உயர்மட்ட சாலைத் தொடர், மும்பை - நவி மும்பை கடல் இணைப்புச் சாலை போல் கட்டம் கட்டமாக உருவாக்கப்படும்.</p><p>வெற்றி சட்டமன்ற உறுப்பினர் சாலை மேம்பாட்டுத் திட்டம்.</p><p>நம்ம சாலை செயலி மேம்பாட்டை உள்ளடக்கிய சீரான சாலைகள் திட்டம் ரூ.250 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும்.</p><p>சென்னை-மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே கடல்வழிப் பயணிகள் படகுப் போக்குவரத்து சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>சென்னையின் கலங்கரை விளக்கம் முதல் அடையாறு திருவிக பாலம் வரை உயர்மட்டச் சாலை அமைக்கப்படும்,</p><p>வடசென்னையில் பெருகி வரும் போக்குவரத்து தேவைகளை கருத்தில் கொண்டு, வியாசர்பாடியில் உள்ள ரெயில்வே மேம்பாலம் நீட்டிக்கப்படும்.</p><p>தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>ரூ.500 கோடியில் சாலை பாதுகாப்பு கண்காணிப்பு குழு செயல்படுத்தப்படும்.</p><p>சென்னை-புதுவை இடையே படகு போக்குவரத்து</p><h2>கடுமையாகும் சாலை விதிகள்</h2><p>சாலை விபத்துகளைத் தடுக்க அடுத்த ஆண்டு முதல் சாலை விதிகள் மேலும் கடுமையாக்கப்படும்.</p><p>நெடுஞ்சாலைகளில் பேட்ச் ஒர்க்கிற்கு மட்டும் அதிக செலவு செய்யப்படுகிறது. அதில் அதிக ஊழலும் நடந்துள்ளது.</p><p>ரூ. 400 கோடியில் சென்னையில் முக்கோண வழித்தட சாலை</p><p>45,000 கிலோ மீட்டர் சாலைகள் இருவழிப் பாதையாக மாற்றப்படும்.</p><p>பாம்பன் டூ அக்னி தீர்த்தம் வரை உள்நாட்டு பயணிகள் போக்குவரத்து சேவை</p><p>நாகை - காங்கேசன்துரை இடையிலான படகு போக்குவரத்து விரிவுப்படுத்தப்படும் என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>மஞ்சள் காய்ச்சல்: ஆரம்ப அறிகுறிகளை அறிந்துகொள்வது ஏன் முக்கியம்?</title><link>https://www.maalaimalar.com/health/generalmedicine/yellow-fever-why-early-symptoms-matter</link><comments>https://www.maalaimalar.com/health/generalmedicine/yellow-fever-why-early-symptoms-matter#comments</comments><guid isPermaLink="false">e4094fd6-a07e-40ec-ba36-25a7a3888dbf</guid><pubDate>Tue, 18 Aug 2026 12:29:32 +0000</pubDate><atom:updated>2026-08-18T12:29:32.422Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆரோக்கியம்,HealthTips,HealthAwareness,Yellow Fever,மஞ்சள்காய்ச்சல்,சுகாதாரவிழிப்புணர்வு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/omerhvor/sss.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Yellow Fever]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/omerhvor/sss.jpg?w=280" width="280"></media:thumbnail><category>பொது மருத்துவம் (General Medicine)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மஞ்சள் காய்ச்சல் என்பது ஒரு வகை வைரஸால் ஏற்படும் கடுமையான பாதிப்பாகும். இது முக்கியமாக ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் காரிபியன் பகுதிகளின் சில இடங்களில் பரவுகிறது. பாதிக்கப்பட்ட கொசுக்கள் கடிப்பதன் மூலம் இந்த வைரஸ் மனிதர்களுக்குப் பரவுகிறது. இருப்பினும், தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம் இந்த நோயைத் தடுக்க முடியும். </p><h2>நோய் பரவு<strong>ம் முறை</strong></h2><p>பாதிக்கப்பட்ட கொசுக்கள் மனிதர்களைக் கடிக்கும்போது இந்நோய் பரவுகிறது. வைரஸைக் கடத்தும் கொசுக்கள் பகல் நேரத்திலேயே மனிதர்களைக் கடிக்கின்றன. இவை நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்கள் ஆகிய இரண்டிலும் காணப்படுகின்றன. மஞ்சள் காய்ச்சல் மனிதர்களிடமிருந்து மற்றொரு மனிதருக்கு நேரடியாகத் தொடுதல் மூலமாகவோ நெருங்கிய தொடர்பின் மூலமாகவோ பரவாது. தொற்று ஏற்பட்ட 3 முதல் 6 நாட்களுக்குள் இதன் அறிகுறிகள் தோன்றத் தொடங்கும். </p><h2>முதல் கட்<strong>ட அறிகுறி</strong>கள் </h2><p>கடுமையான காய்ச்சல், தலைவலி, குமட்டல் அல்லது வாந்தி, தசை வலி, கடுமையான முதுகுவலி மற்றும் பசியின்மை. </p><figure><img alt="Yellow Fever" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/156eq26x/yellow.jpg" /></figure><p>இந்த ஆரம்ப அறிகுறிகள் பொதுவாக 3 முதல் 4 நாட்களுக்குள் சரியாகிவிடும். பெரும்பாலோர் இதிலிருந்து முழுமையாகக் குணமடைந்துவிடுவார்கள்.</p><h2>இரண்டாம் கட்<strong>டம் மிகவும் ஆ</strong>பத்தானது</h2><p>பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 15 சதவீதம் பேருக்கு நோய் தீவிரமடைகிறது. மஞ்சள் காமாலை, சிறுநீரக செயலிழப்பு, வாய், மூக்கு, கண்கள் மற்றும் வயிற்றுப் பகுதியில் ரத்தப்போக்கு ஏற்படுதல் போன்றவை இதற்கான முக்கிய அறிகுறிகளாகும். தீவிர நிலை அடையும் நோயாளிகளில் பாதி பேர் உயிரிழக்கக் கூடும்.</p><h2>மருத்துவ ஆ<strong>லோசனையு</strong>ம் சிகிச்சையும்</h2><p>மஞ்சள் காய்ச்சல் பரவும் பகுதிகளுக்குப் பயணம் செய்தாலோ அல்லது அங்கு சென்று திரும்பிய சில நாட்களிலோ அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். ரத்த பரிசோதனை மூலம் இந்நோய் உறுதி செய்யப்படுகிறது. மஞ்சள் காய்ச்சலுக்கு நேரடியாகக் குணப்படுத்தும் குறிப்பிட்ட மருந்துகள் எதுவும் இல்லை. இருப்பினும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மற்றும் அறிகுறிகளுக்கான சிகிச்சை அளிப்பதன் மூலம் நோயாளிகள் காப்பாற்றப்படுகிறார்கள்.</p><h2>தடுப்<strong>பூசியின் முக்கிய</strong>த்துவம் </h2><p>மஞ்சள் காய்ச்சல் பரவும் நாடுகளுக்குப் பயணம் செய்வதற்கு முன் தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம். தடுப்பூசி போட்ட பிறகு வழங்கப்படும் சர்வதேச தடுப்பூசி சான்றிதழ் ஆயுள் முழுமைக்கும் செல்லுபடியாகும். இந்த சான்றிதழ் பாஸ்போர்ட்டுடன் இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நோய் பரவும் வாய்ப்புள்ள நாடுகள் அல்லது நோய் பரப்பும் கொசுக்கள் உள்ள நாடுகளுக்குப் பயணம் செய்ய இந்த சான்றிதழ் கட்டாயமாகும்.</p>]]></content:encoded></item><item><title>ஒரே குடும்பத்தில் 3 டாக்டர்கள்! நீட் தேர்வில் வென்று நெசவாளர் மகன்கள் அசத்தல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/three-doctors-in-one-family-weaver-sons-crack-neet</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/three-doctors-in-one-family-weaver-sons-crack-neet#comments</comments><guid isPermaLink="false">05ef3ac8-f141-4e96-ab8b-c5e092d49692</guid><pubDate>Tue, 18 Aug 2026 11:45:17 +0000</pubDate><atom:updated>2026-08-18T11:45:17.682Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,NeetExam,Tirunelveli,மருத்துவக்கல்லூரி,தமிழ்நாடு,GovtSchoolStudents,MedicalSeats</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/90uxfu6m/neet.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ GovtSchoolStudents]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/90uxfu6m/neet.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளாங்குளி கிராமத்தைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளி ராம்குமார் - மங்கையர் திலகம் தம்பதியின் மூன்று மகன்கள், அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக் கல்லூரிகளில் இடம் பிடித்துப் பெருமை சேர்த்துள்ளனர்.</p><h2>விடாமுயற்சி<strong>யால் வெ</strong>ன்ற மூத்த மகன்</h2><p>ராம்குமாரின் மூத்த மகனான வெங்கட் ஸ்ரீ, கடந்த 2023-ஆம் ஆண்டு பிளஸ்-2 தேர்ச்சி பெற்று, தொடர்ந்து 2 ஆண்டுகள் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/neet-controversy-aiadmk-congress-clash">நீட் தேர்வு </a>எழுதியும் போதிய மதிப்பெண் கிடைக்காத சூழலில், சோர்ந்து போகாமல் விடாமுயற்சியுடன் மீண்டும் தேர்வு எழுதி 440 மதிப்பெண்கள் பெற்றார்.</p><h2>ஒரே முயற்<strong>சியில் சாதித்த</strong> இரட்டையர்கள்</h2><p>அண்ணன் வழியைப் பின்பற்றி, அவரது இரட்டைச் சகோதரர்களான அருண் மற்றும் தரண் ஆகிய இருவரும் இந்த ஆண்டு அரசுப் பள்ளியில் பிளஸ்-2 முடித்து முதன்முறையாக நீட் தேர்வை எதிர்கொண்டனர். இதில் அருண் 511 மதிப்பெண்களும், தரண் 494 மதிப்பெண்களும் பெற்று அசத்தினர்.</p><h2>மருத்து<strong>வக் கல்லூரிக</strong>ளில் இடம்</h2><p>அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத முன்னுரிமை இடஒதுக்கீட்டின் கீழ் நடைபெற்ற மருத்துவக் கலந்தாய்வில் மூன்று சகோதரர்களுக்கும் சேர்க்கை உறுதியானது. மூத்த மகன் வெங்கட் ஸ்ரீக்கு நாகர்கோவில் அரசு பல் மருத்துவக் கல்லூரியிலும், அருணுக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியிலும், தரணுக்கு கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியிலும் இடங்கள் கிடைத்துள்ளன. வறுமை சூழலிலும் விடாமுயற்சியால் சாதித்த இந்தச் சகோதரர்களுக்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>விளையாட்டுதான் என்னுடைய சாதி, மதம், மொழி, குடும்பம் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/sports-is-my-caste-religion-language-family-minister-athav-arjuna</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/sports-is-my-caste-religion-language-family-minister-athav-arjuna#comments</comments><guid isPermaLink="false">9029d015-b6da-47b8-aa0b-5088545ba032</guid><pubDate>Tue, 18 Aug 2026 11:40:51 +0000</pubDate><atom:updated>2026-08-18T11:40:51.248Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tvk,TNassembly meeting,AadhavArjuna,ஆதவ்அர்ஜுனா,SportsDevelopment,OlympicMission,தமிழகசட்டப்பேரவை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/524pxsc2/Aadhav-Arjuna" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Aadhav Arjuna   ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/524pxsc2/Aadhav-Arjuna?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகிறது. அப்போது விளையாட்டுக்கான முக்கிய அறிவிப்புகளையும் பல்வேறு முக்கிய கோரிக்கைகளையும் விளையாட்டு துறை அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BE">ஆதவ் அர்ஜுனா </a>கூறியுள்ளார்.</p><h2>இது குறித்து அவர் கூறியதாவது:-</h2><h2>ஜெயலலிதாவை போல் தனித்து நின்று வெற்றி</h2><p>"2016-ல் புரட்சித்தலைவி ஜெயலலிதா தனித்து நின்று வெற்றி பெற்றார். அதேபோல் 2026-ல் 41 எதிர்கட்சிகளை எதிர்த்து நின்று முதல்வர் விஜய் வெற்றி பெற்றுள்ளார்" என அமைச்சர் ஆதவ் தெரிவித்தார். "மக்கள் துணையுடன், இளைஞர்கள் துணையுடன், தமிழக மக்கள் துணையுடன் ஆட்சியை பிடித்துள்ளார் முதல்வர் விஜய். </p><p>3 வருடத்தில் கட்சி ஆரம்பித்து வெற்றி பெற முடியுமா, பூத் இருக்கா, ஏஜெண்ட் இருக்கா என கேட்டார்கள். ஆனால் 41 எதிர்கட்சிகளை எதிர்த்து இந்த வெற்றி சாத்தியமானது" என அவர் பேசினார்.</p><h2>அண்ணாவின் கனவு நிறைவேறியது</h2><p>"அண்ணாவை போல் ஒரு இளைஞர் கூட்டத்தை உருவாக்கி வெற்றி பெற்றுள்ளார் முதல்வர் விஜய். அண்ணா கூறியதை போல இளைஞர்களுக்கு வேகமும் அதிகம், விவேகமும் அதிகம்" என ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டார்.</p><p>"சாதி, மதம், ஏழை, பணக்காரர் என்ற எந்த வித்தியாசமும் இல்லாத அண்ணா கண்ட கனவு இன்று நிறைவேறியுள்ளது. இன்று சட்டப்பேரவையில் இருப்பவர்கள் பண்ணையாரின் பிள்ளைகள் அல்ல, மன்னர் ஆட்சியின் பிள்ளைகள் அல்ல. அம்பேத்கர் கண்ட கனவு இன்று தமிழக சட்டமன்றத்தில் நிறைவேறி உள்ளது. </p><p>21 தலித் உறுப்பினர்கள் அமர்ந்துள்ளனர்" என்றார்."1 ரூபாய் காசு செலவு செய்யாமல் இங்குள்ள தவெக எம்எல்ஏக்கள் அனைவரும் வெற்றி பெற்றுள்ளனர்" என்றும் அவர் பெருமையுடன் கூறினார்.</p><h2>விளையாட்டு துறைக்கு முக்கியத்துவம் - புதிய திட்டங்கள்</h2><p>விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஆதவ் அர்ஜுனா, "விளையாட்டுதான் என்னுடைய சாதி, மதம், மொழி, குடும்பம்" என்றார். புரட்சித்தலைவி அம்மாவின் Sports Development Authority திட்டத்தின் கீழ் திருச்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 3 மாணவர்களில் ஒருவராக தான் இருந்ததாகவும், நேரு ஸ்டேடியத்தில் மாநிலத்திற்காக விளையாடிய தேசிய அளவிலான பாஸ்கெட்பால் வீரர் என்றும் தெரிவித்தார்.</p><p>"இங்கேயே 3 பாஸ்கெட்பால் வீரர்கள் உள்ளனர். நிதியமைச்சர் மரிய வில்சன்,  முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி, சபாநாயகர் ஜெ.எஸ்.டி பிரபாகர் உட்பட பலரும் விளையாட்டு பின்னணியில் இருந்து வந்தவர்கள்" என கூறினார்.</p><p>"100 ஆண்டுகளில் தமிழர்கள் யாரும் ஒலிம்பிக் பதக்கம் வாங்கவில்லை. இதை மாற்ற '8 to 18' என்ற புதிய திட்டத்தை கொண்டு வரப்போகிறோம். விளையாட்டு வீரர்களுக்கு என தனி கல்விக்கொள்கை உருவாக்கப்பட வேண்டும். </p><p>விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறப்பு கல்வி வழங்கப்படும். அவர்கள் எங்கு சென்றாலும் அவர்களுக்கான செலவுகளை அரசே ஏற்கும்" என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>விவாகரத்து செய்யாமல் 2வது திருமணம் செய்தால் 20% சம்பளம் பிடித்தம் செய்யப்படும் - ஊழியர்களுக்கு அசாம் அரசு எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/20-salary-deduction-for-second-marriage-without-divorce-assam-govt-warns-employees</link><comments>https://www.maalaimalar.com/news/national/20-salary-deduction-for-second-marriage-without-divorce-assam-govt-warns-employees#comments</comments><guid isPermaLink="false">2d1a3e42-9527-4470-9fca-a93906541cfc</guid><pubDate>Tue, 18 Aug 2026 11:28:08 +0000</pubDate><atom:updated>2026-08-18T11:28:08.182Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Divorce,விவாகரத்து,Assam govt,CM Himanta Biswa Sarma,அசாம் அரசு,முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/cru6yljy/New-Project-2026-08-18T164231.550.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விவாகரத்து செய்யாமல் 2வது திருமணம் செய்தால் 20% சம்பளம் பிடித்தம் செய்யப்படும் - ஊழியர்களுக்கு அசாம் அரசு எச்சரிக்கை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/cru6yljy/New-Project-2026-08-18T164231.550.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அசாம் மாநிலத்தில் பலதார மணமுறையை தடை செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. </p><p>அதன் ஒருபகுதியாக மாநிலத்தின் அரசு ஊழியர்கள் தங்களது முதல் மனைவியை சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்துகொண்டால் அவர்களின் ஊதியத்திலிருந்து 20% பிடித்தம் செய்யப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. </p><p>பிடித்தம் செய்யப்படும் அந்தத் தொகை நேரடியாக முதல் மனைவியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இருப்பினும் இதற்காக முதல் மனைவி அரசிடம் விண்ணப்பிக்க வேண்டும்.</p><p>விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலும், சம்பளப் பிடித்தம் தொடரும். சட்டரீதியான நடவடிக்கைகள் முடியும் வரை முதல் மனைவி எந்தச் சிரமங்களையும் சந்திக்காமல் இருப்பதற்காக, அவருக்கு நிதி உதவி வழங்குவதே தங்களின் நோக்கம் என்று அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.</p><p>இந்த முடிவை தனியார் துறை ஊழியர்களுக்கும் செயல்படுத்தத் திட்டமிட்டப்பட்டுள்ளது. </p><p>ஏற்கனவே அசாமில் அரசு ஊழியர்கள் தங்களின் வயதான பெற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி உடன்பிறப்புகளை புறக்கணித்தால் அவர்களது சம்பளத்தில் இருந்து 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு, அந்தத் தொகை நேரடியாக அவர்களின் பெற்றோர் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கியச் செய்திகள்- 17 ஆகஸ்ட் 2026 </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-17-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-17-august-2026#comments</comments><guid isPermaLink="false">e5056155-d3e7-4ac5-831d-27ef01f8d24e</guid><pubDate>Mon, 17 Aug 2026 04:01:34 +0000</pubDate><atom:updated>2026-08-18T11:19:16.665Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/obhwuvef/vijay1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/obhwuvef/vijay1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-today-debates-on-demands-forg-grants-session-begin">மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் சட்டசபையில் இன்று தொடக்கம்</a></p><p>4 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் இன்று சட்டசபை கூட்டத்தொடர் கூடியது.</p><p>சட்டசபையில் இன்று முதல் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.</p><p>100-வது நாளில் அடியெடுத்து வைத்துள்ள தவெக ஆட்சிக்கு பாராட்டு - சபாநாயகர்</p><p>மக்களின் நாடித்துடிப்பை அறிந்து தவெக அரசு பல துறைகளில் சிறப்பான திட்டங்களை செயல்படுத்துகிறது - சபாநாயகர்</p><p>வளமான சமத்துவமான ஊழலற்ற தமிழ்நாடு என்ற கட்டமைப்பை முதல் 100 நாட்களில் செயல்படுத்தி உள்ளது தவெக அரசு  - சபாநாயகர்</p><p>கோவை அமுதன் கொலை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்துள்ளோம் - திமுக எம்எல்ஏ வேலு</p><p>கோவை மாணவன் கொலை தொடர்பாக திமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதம் ஏற்கப்பட்டுள்ளது - சபாநாயகர்</p><p>கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகத்தில் ஏராளமான கொலைகள் நடந்துள்ளது - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி</p><h2>எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உரை</h2><p>கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகத்தில் ஏராளமான கொலைகள் நடந்துள்ளது.</p><p>கோவை கல்லூரி மாணவன் கொலையை ஏற்கெனவே அமைச்சர் ராஜ்மோகன் கோஷ்டி மோதலால் கொலை என கூறினார். இரு தரப்பாக பிரிந்து அடித்துக்கொண்டால் தான் கோஷ்டி மோதல், அமுதனை 20 பேர் அடித்துள்ளனர், இது கொலை. </p><p>அமுதனின் பெற்றோரிடம் தொலைபேசியில் ஆதரவு கூறினேன்.</p><p>போதைப்பொருள் புழக்கம் பற்றி தகவல் அளித்ததால் தான் அமுதன் கொலை என அவரின் பெற்றோர் திட்டவட்டம்.</p><p>கோவையில் மட்டுமல்ல சென்னை திருவொற்றியூர் பள்ளி மாணவன் தனுஷ் போதை பழக்கத்தை தட்டிக்கேட்டதால் கொலை.</p><p>சென்னை அம்பத்தூரில் ஆட்டோவில் வைத்து பெண் கழுத்தறுத்து கொலை.</p><p>கடந்த ஒரு வாரத்தில் தமிழகம் முழுவதும் நடந்த கொலைகளை பட்டியலிட்டு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உரையாற்றினார்.</p><p>கொலை மட்டுமல்ல பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் அதிகரித்துள்ளது.</p><p>100 நாள் சாதனை என பெருமை பேசும் தவெக அரசு, 100 நாட்களில் சட்டம் ஒழுங்கு நிலையையும் பார்க்க வேண்டும் - உதயநிதி</p><p>போதைக்கு எதிரான தொடர் விழிப்புணர்வு, வன்முறைக்கு எதிராக கவுன்சிலிங் நடத்த வேண்டும் என உதயநிதி கோரிக்கை விடுத்தார்.</p><h2>அதிமுக எம்எல்ஏ காமராஜ் உரை</h2><p>விடுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை, பயன்பாட்டை புகார் தந்த மாணவன் அமுதன் கொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p>மாணவன் தாக்கப்பட்ட பின் விடுதியில் இருந்து வெளியேறுமாறு கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.</p><p>மைதானத்தில் வைத்து மாணவன் அமுதனை இரும்பு கம்பியால் அடித்தும் கத்தியால் குத்தியும் 20 பேர் கொண்ட கும்பல் கொலை செய்துள்ளது.</p><p>செல்போன் சம்பந்தப்பட்ட சீனியர் ஜூனியர் சம்பவம், கோஷ்டி மோதல் என காவல்துறை அதிகாரியே சொல்கிறார்.</p> <h2>பாமக எம்எல்ஏ கணேஷ் குமார்</h2><p>போதைப்பொருள் 15 வயது மாணவர்கள் இடையே புழக்கத்தில் உள்ளது.</p><p>கடந்த ஆட்சியில் இருந்த போதைப்பொருள் புழக்கம் போன்றவை தற்போது தவெக ஆட்சியிலும் தொடர்வது வேதனை தருகிறது.</p><p>மாணவர்கள் கொலை விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க வேண்டும்.</p><p>எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வு நடைபெறாத வகையில் கடும் தண்டனை வழங்க வேண்டும் - பாஜக எம்எல்ஏ போஜராஜன்</p><p>கஞ்சா போதை பழக்கமே கல்லூரி, பள்ளிகளில் மாணவர்கள் தாக்குதலுக்கு காரணமாக உள்ளது - எம்எல்ஏ செல்லசாமி</p><p>சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக எடுத்துக்கொள்ளாமல்   காவல்துறையை களை எடுத்து கரைபடியாத கரங்களாக கொண்டு வர வேண்டும் - எம்எல்ஏ செல்லசாமி</p> <h2>காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கட்பட் உரை</h2><p>இரும்புக்கரம் கொண்டு அடக்கினாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக தமிழகத்தில் போதைப்பொருளால் அசம்பாவிதம் நடக்கிறது.</p><p>பள்ளி, கல்லூரிகளில் மாணவ அமைப்புகளை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவது முக்கியம்.</p><p>மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அமைப்பை உருவாக்கி செயல்பட வேண்டும் -  தாரகை கட்பட்</p><p>கோவை அமுதன் கொலை விவகாரம் தொடர்பாக அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்தார்.</p><p>இரண்டாமாண்டு பயிலும் அமுதனின் நண்பனுக்கும் 4-ம் ஆண்டு மாணவர்களுக்கும் இடையிலான மோதலில் தாக்கி உள்ளனர்.</p><h2>அமைச்சர் நிர்மல்குமார் உரை</h2><p>அமுதன் இறந்ததை தொடர்ந்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>அமுதன் கொலை தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.</p><p>போதைப்பொருள் தொடர்பாக எந்த தகவலும் இல்லை. பழிவாங்கல் காரணமாகவே கொலை என தெரிய வந்துள்ளது.</p><p>போதைப்பொருள் புகார் தந்தவரின் தகவலை போலீசார் கசிய விட்டது என எந்த நிகழ்வும் நடைபெறவில்லை என அமைச்சர் நிர்மல்குமார் திட்டவட்டம்.</p><p>போதைப்பொருள் குறித்து புகார் அளித்தவரின் தகவலை போலீசார் கசியவிட்டதாக கூறுவதில் உண்மையில்லை. போதைப்பொருள் தொடர்பாக புகாரளித்தால் கொலை என சித்தரித்து உண்மையை திசை திருப்ப வேண்டாம்.</p><p>கோவை மாணவன் அமுதன் கொலையில் உண்மையை மறைக்க வேண்டிய அவசியம் காவல்துறைக்கு இல்லை.  கடந்த 5 ஆண்டுகளாக போதைப்பொருள் புழக்கம் தமிழகத்தில் எப்படி இருந்தது என நாம் அறிந்ததே.</p><p>போதைப்பொருள் கடத்தல் மன்னர் ஜாபர் சாதிக் உடன் கடந்த ஆட்சியில் முதல்வரின் குடும்பத்தினரிடம் தொடர்பு உள்ளது - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>ஜாபர் சாதிக் உடன் திமுக ஆட்சியில் இருந்த முதல்வர் உடன் தொடர்பு என அமைச்சர் குற்றம்சாட்டியதற்கு திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.</p><p>ஒரு அமைச்சரே ஐபிஎல் போட்டியின்போது போதைப்பொருள் பயன்படுத்தியது வீடியோவாக வெளியாகி உள்ளது - உதயநிதி</p><p>ஐபிஎல் போட்டியில் தவெக அமைசசர் பவுடர் என உதயநிதி பேசியதும் தவெக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.</p><p>மாத்திரை நுணுக்கியதாக கதைவிட்ட தவெக அமைச்சரிடம் காவல்துறை விசாரணை நடத்தியதா? </p><p>போதைப்பொருள் கடத்தல் மன்னன் விவகாரத்தில் திமுக உடனடி நடவடிக்கை எடுத்தது - உதயநிதி</p><p>ஸ்டேடியத்தில் நடந்தவற்றை பற்றி விளக்கம் அளித்துவிட்டேன், ஆதாரம் இன்றி தேவையின்றி பேசக்கூடாது.</p><p>திமுக ஆட்சியில் தான் அந்த நிகழ்வு நடந்தது, அப்படியென்றால் ஸ்டேடியம் வளாகத்தில் போதைப்பொருள் விற்றார்களா?  - அமைச்சர் சரத்</p><p>திமுக ஆட்சியில் போதைப்பொருள் விற்கப்பட்டது என்று ஒப்புக்கொள்கிறீர்களா? என் அமைச்சர் சரத் கேள்வி எழுப்பினார்.</p><p>கோர்ட்டில் இருக்கும் வழக்கு பற்றி ஏன் பேசுகிறார்? பவுடர் பயன்படுத்தியது பற்றி மட்டும் அமைச்சர் பதில் தரட்டும் - கே.என்.நேரு</p><h2>கோவை மாணவர் விவகாரம் - அமைச்சர் ராஜ்மோகன் உரை</h2><p>கோவை மாணவர் குடும்பத்திற்கு இழப்பீடு, அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>மாணவர் தனுஷ் கொலையில் எந்தவித சார்பும் இன்றி காவல்துறை விசாரணை நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.</p><p>மாணவர் கொலை விவகாரத்தில் சார்பு தன்மை இன்றி நேர்மையாக காவல்துறை விசாரணை நடைபெறும்.</p><p>கொல்லப்பட்ட மாணவர்ன தனுஷின் சகோதரருக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உரை</h2><p>தவெகவின் 100 நாள் ஆட்சி, அடுத்த 25 ஆண்டுக்கான அடித்தளம். தவெக ஆட்சியை உருவாக்கிய இளைஞர்கள், பெண்களுக்கு நாங்கள் என்றும் உண்மையாக இருப்போம்.</p><p>மாணவர் கொலை வழக்கு விசாரணையில் எவ்வித அழுத்தம் இருக்காது. முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>மாநிலம் முழுவதும் 65 போதைப்பொருள் தடுப்பு குழு ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ளது.</p><p>தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டை அடியோடு ஒழிக்க தவெக அரசு உறுதியாக உள்ளது.</p><p>நாங்கள் எழுந்தால் நீங்கள் பேசவே முடியாது என்று அமைச்சர் ஆதவ் பேசியதற்கு திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.</p><p>கடந்த 2020ம் ஆண்டுக்கு முன்பு தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் உறுதியாக இல்லை.</p><p>போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்ததால் தான் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குற்றங்கள் அதிகரிப்பு - அமைச்சர் ஆதவ்</p> <p>திமுக ஆட்சியில் தான் போதைப்பொருள் பயன்பாடு, பாலியல் குற்றங்கள் அதிகரித்ததாக அமைச்சர் ஆதவ் குற்றச்சாட்டு.</p> <p>கடந்த திமுக ஆட்சியில் 40 சதவீத போக்சோ வழக்குகள் அதிகரித்துள்ளன. இது காவல்துறை கொடுத்த அறிக்கை - அமைச்சர் ஆதவ்  </p><p>போதைப்பொருள் அதிகரிப்பு காரணமாக தான் திமுகவை மக்கள் தூக்கி எறிந்தனர் என்ற அமைச்சர் ஆதவின் பேச்சுக்கு பேரவையில் அமளி</p><p>கவன ஈர்ப்பு தீர்மானத்தில் குற்றச்சாட்டுகளை அடுக்கக்கூடாது - எ.வ.வேலு</p><p>கேள்வி நேரத்திலும் கவன ஈர்ப்பு தீர்மான நேரத்திலும் குற்றச்சாட்டு கூறக்கூடாது என்பது தான் பேரவை விதி - எ.வ.வேலு</p><p>கவன ஈர்ப்பு, ஒத்திவைப்பு தீர்மானத்தில் அரசு விளக்கம் தான் கூற வேண்டும், பதில் குற்றச்சாட்டு கூறுவது அவை மரபு அல்ல - எ.வ.வேலு</p><p>திமுக ஆட்சியில் நடந்த குற்றங்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. தவெக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? அமைச்சர் ஆதவ் பேச்சிற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கேள்வி?</p><p>திமுக ஆட்சியை குறை சொல்ல புகைப்படம் காட்டும் அமைச்சரே நாங்கள் எடுத்த நடவடிக்கை குறித்து சான்று தருகிறார் - உதயநிதி</p><p>இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த திமுக ஆட்சியில் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்.</p><p>போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் எதற்காக நாங்கள் அமர்த்திய அதிகாரிக்கு முக்கிய பதவி தந்தீர்கள்?  - உதயநிதி</p><p>திமுக ஆட்சியில் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் சிறப்பாக செயல்பட்ட 15 போலீசாருக்கு தவெக அரசே விருது தந்தது ஏன்?- உதயநிதி</p><p>எதிர்க்கட்சி எழுப்பிய கேள்விக்கு உரிய விளக்கம் இல்லை என கூறி பேரவையில் இருந்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.</p><p>சட்டசபையில் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு சம்பந்தமே இல்லாமல் பேசுவதால் நேரம் வீணாகிறது - எடப்பாடி பழனிசாமி</p><h2>மேகமலை விவகாரம் - தொடர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்</h2><p>மேகமலையில் வசித்து வரும் பழங்குடியினர் உள்ளிட்ட மக்களை வெளியேற்றக்கூடாது - அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி</p><h2>அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி</h2><p>மேகமலையில் 98 கிராமங்களில் 100 ஆண்டுகளுக்கு மேலாக 5,000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.</p><p>மேகமலை விவகாரத்தில் அரசு கொள்கை முடிவெடுத்து சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என கோரிக்கை.</p><p>மேகமலை குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்து அப்பகுதி மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை தடுக்க வேண்டும்.</p><h2>எம்எல்ஏ செல்லசாமி உரை</h2><p>மேகமலையை காப்புக்காடு என அறிவித்த நிலையில் வனத்துறை அதிக கட்டுப்பாடு விதித்துள்ளது.</p><p>வனத்துறையினர் கெடுபிடிகள் காரணமாக விளைபொருளை விற்க கூட முடியாமல் மேகமலை மக்கள் தவிக்கின்றனர்.</p><p>சாலை, போக்குவரத்து, குடிநீர், பள்ளிக்கூடம், ரேஷன் உள்ளிட்ட வசதிகளை தமிழ்நாடு அரசே செய்து கொடுத்துள்ளது.</p> <p>உச்சநீதிமன்றமே சொந்த நாட்டு மக்களை துணை ராணுவம் கொண்டு வெளியேற்ற கூறியது வேதனை - எம்எல்ஏ ராமச்சந்திரன்</p><p>கடந்த 60 ஆண்டு காலமாக ஆட்சி செய்தவர்கள் பட்டா வழங்கியிருந்தால் இந்த நிலை வந்திருக்காது - எம்எல்ஏ ராமச்சந்திரன்</p><h2>தவெக எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா உரை</h2><p>மேகமலை - வருசநாடு மலைகிராம மக்களை வெளியேற்றுவததை ஏற்றுக்கொள்ள முடியாது.</p><p>உச்சநீதிமன்றத்தில் கடந்த கால அரசு சரியாக வாதாடாததே இந்த நிலைக்கான காரணம்.</p><h2>அமைச்சர் நிர்மல்குமார் உரை</h2><p>2009 திமுக ஆட்சியில்தான் மேகமலை காப்புக்காடுகளாக அறிவிக்கப்பட்டது.</p><p>2009-ல் காப்புக்காடாக அறிவித்தபோது திமுக முறையாக கையாண்டிருந்தால் இந்த இக்கட்டான சூழல் ஏற்பட்டிருக்காது.</p><p>மேகமலை விவகாரத்தில் கடந்த 5 ஆண்டுகளில் செய்த தவறுகளை தவெக அரசு செய்யாது.</p><p>மேகமலை விவகாரத்தில் நிரந்தர தீர்வு கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கையையும் தவெக அரசு மேற்கொள்கிறது. </p><p>15 ஆண்டுகளாக மக்கள் போராடுகின்றனர். கடந்த கால ஆட்சியில் இந்த வழக்குகள் முறையாக கையாளப்படவில்லை.</p><p>2025 முதல் 2026-ம் ஆண்டு வரை ஆய்வு செய்தபோது முறையான ஆதாரம் கொடுத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>மேகமலை விவகாரத்தில் திமுகவை குறிப்பிட்டு அமைச்சர் நிர்மல்குமார் பேசியதற்கு திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.</p><p>திமுக அளித்த இறுதி அறிக்கை பெயரில் தான் உச்சநீதிமன்றம் முடிவெடுத்து அறிவித்துள்ளது.</p><p>மேகமலை விவகாரத்தில் திமுக செய்த ஒட்டுமொத்த தவறின் காரணமாகத்தான் மக்கள் வெளியேற்றப்படுகின்றனர்.</p><p>திமுக தவற விட்ட நிலையில் எதை வைத்து மேகமலை மக்களை காப்பாற்ற போகிறோம் என 3 நாட்களில் தெரிவிப்போம் - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>மேகமலை விவகாரத்தில் திமுக குறித்து அமைச்சர் நிர்மல்குமார் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் - சபாநாயகர்</p><p>சட்டசபையில் வருவாய்த்துறை மீதான மானிய கோரிக்கை மீது விவாதம் தொடங்கியது.</p><p>வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மீதான மானிய கோரிக்கை மீது விவாதத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பதில்</p><p>சட்டசபையில் 3 துறைகள் மீதான மானிய கோரிக்கை மீது விவாதம் தொடங்கியது.</p><h2>அமைச்சர் அருண்ராஜ்</h2><p>முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற 100-வது நாள் இன்று.</p><p>மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை என்ற மாபெரும் தூணை தூக்கிப் பிடிக்க என்னிடம் ஒப்படைத்த முதல்வருக்கு நன்றி.</p><p>சுகாதாரம், வருவாய் மற்றும் பேரிடர் மீதான மானிய கோரிக்கை மீதும் விவாதம் தொடங்கியது. திமுக எம்எல்ஏ சாத்தூர் ராமச்சந்திரன் பேசினார்.</p><h2>திமுக எம்எல்ஏ சாத்தூர் ராமச்சந்திரன் உரை</h2><p>கலைஞரின் கொள்கை பிடிப்பும் மு.க.ஸ்டாலினின் செயல்திறனும் கொண்ட இளம் தலைவர் உதயநிதி.</p><p>திமுக ஆட்சியில் 400 பக்கங்கள் கொண்ட கொள்கை விளக்க குறிப்பு தவெக ஆட்சியில் 300 பக்கமாக குறைந்துள்ளது. </p><p>பக்கங்கள் தான் குறைந்துள்ளன. தவெக ஆட்சியில் கொள்கை, லட்சியங்கள் குறையவில்லை - அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி</p><p>தவெக அரசின் லட்சியங்கள் குறையவில்லை. லட்சியங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் அரசாக தவெக அரசு உள்ளது - செங்கோட்டையன்</p><h2>திமுக எம்எல்ஏ சாத்தூர் ராமச்சந்திரன் உரை</h2><p>திமுக ஆட்சியில் 27 லட்சம் பேருக்கு பட்டா வழங்கினோம். சொன்னது எதையும் தவெக அரசு நிறைவேற்றவில்லை.</p><p>கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் சென்னை மாநகராட்சியில் 77,000 பேருக்கு பட்டா வழங்கினோம்.</p><p>சென்னையில் மீட்கப்படாமல் இருந்த தோட்டக்கலை சங்கம், கிண்டி ரேஸ் கோர்ஸ் நிலத்தை மீட்டெடுத்தவர் ஸ்டாலின்.</p><p>திமுக ஆட்சிக்காலத்தில் கனமழை, வெள்ளம், புயல் ஏற்பட்ட நிலையில் ரூ.5,000 கோடி மத்திய அரசிடம் கேட்கப்பட்டது - சாத்தூர் ராமச்சந்திரன்</p> <p>தவெக அளித்த வாக்குறுதியான மகளிர் உரிமைத்தொகை வழங்காதது ஏன்? - திமுக எம்எல்ஏ சாத்தூர் ராமச்சந்திரன்</p><p>100 நாட்கள் தான் முடிந்தது, தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றுவோம் - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>மகளிர் உரிமைத்தொகையை 28 மாதங்களுக்கு திமுக தரவில்லை, நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் தான் தந்தது - செங்கோட்டையன்</p><p>கொரோனா பெருந்தொற்றின் காரணமாகத்தான் மகளிர் உரிமைத்தொகையை திமுக தாமதமாக தந்தது - சாத்தூர் ராமச்சந்திரன்</p> <p>திமுக ஆட்சியின் முந்தைய அதிமுக காலத்தில் தான் கொரோனா பெருந்தொற்று வந்தது - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>கொரோனா காலத்தில் கைகொடுக்காதீர் என்று தான் சொன்னார்கள். உரிமைத்தொகை தராதீர் என சொல்லவில்லை - அமைச்சர் ராஜ்மோகன் கிண்டல்</p><p>பட்டா கொடுத்தீர்கள், ஆனால் இடம் இல்லையே என்று கேள்வி எழுப்பிய மக்கள் தான் திமுகவுக்கு ஓட்டு போடவில்லை - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>ஒரு சில இடங்களில் தவறு நடந்திருக்கலாம், ஆனால் திமுக ஆட்சியில் நாங்கள் 27 லட்சம் பட்டா வழங்கி உள்ளோம் - சாத்தூர் ராமச்சந்திரன்</p><p>முறைகேடு நடந்ததாக திமுக முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஒப்புக்கொண்டதற்கு நன்றி - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்புகளை வெளியிட்டார்.</p><p>தமிழ்நாட்டு விவசாயிகள் நமது உயிர்நாடி - முதலமைச்சர் விஜய்</p> <p>தவெக அரசு பொறுப்பேற்ற 100-வது நாளையொட்டி 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்புகளை வெளியிடுகிறார்.</p><p>தமிழ்நாட்டு விவசாயிகள் நமது உயிர்நாடி - முதலமைச்சர் விஜய்</p> <p>திமுக தலைவர் பெயரை குறிப்பிட்டு அமைச்சர் பேசியதற்காக முதலமைச்சர் விஜய் பேரவையில் வருத்தம் தெரிவித்தார்.</p><p>தமிழக மக்கள் நம் உயிர் என்றால் விவசாயிகள் நம் உயிர்நாடி, சாதி மதம் என அனைத்திற்கும் அப்பாற்பட்ட தொழில் விவசாயம் - முதலமைச்சர்</p><p>தமிழ்நாட்டில் விவசாயிகளின் பயிர்க்கடன் கூடுதலாக தள்ளுபடி செய்து முதலமைச்சர் விஜய் அறிவிப்பு </p><p>75 ஆயிரம் ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்றுள்ளவர்களுக்கு முழுமையாக தள்ளுபடி.</p><p>ரூ.75 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை கடன் பெற்றவர்களுக்கு ரூ.75,000 வரை தள்ளுபடி.</p><p>ரூ.1 லட்சத்திற்கு மேல் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு ரூ.35,000 தள்ளபடி - முதலமைச்சர் விஜய்</p><p>சட்டமன்றத்தின் கண்ணியம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதிக்கு கற்றுக்கொடுங்கள்  </p><p>சட்டமன்ற கண்ணியம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதிக்கு ஓ.பன்னீர்செல்வம் கற்றுக்கொடுக்க வேண்டும்.</p><p>முதலமைச்சர் வரும்போது எதிர்க்கட்சி தலைவர் எழுந்திருக்க வேண்டும் - அமைச்சர் ரமேஷ் பேச்சால் அவையில் சலசலப்பு</p><p>முன்னாள் முதல்வர் வரும்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து நின்றதில்லை. அதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை - கே.என்.நேரு</p><p>அதிமுக ஆட்சியில் நீட் கொண்டு வரப்படவில்லை. 2011, 2012ல் தான் நீட் தொடர்பான அறிவிக்கை வந்தது - தளவாய் சுந்தரம்</p><h2>தளவாய் சுந்தரம் உரை</h2><p>தமிழ்நாட்டில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமி.</p><p>அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரி கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமி.</p> <p>2017-ம் ஆண்டு தான் நீட் தேர்வு வந்தது - அமைச்சர் ராஜேஷ் தளவாய் சுந்தரம்குமார்</p><p>நீட் தேர்வால் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவர்களின் பெற்றோரை ராகுல் சந்தித்தார் - அமைச்சர் ராஜேஷ் குமார்</p><p>விரும்பாத மாநிலங்களுக்கு நீட் இல்லை 2014-ல் ராகுல் காந்தி வாக்குறுதி - அமைச்சர் ராஜேஷ் குமார்</p><h2>எடப்பாடி பழனிசாமி உரை</h2><p>2010-ம் ஆண்டு டிசம்பரில் நீட் அறிவிக்கை வந்தது.</p><p>காங்கிரஸ் ஆட்சியில் தான் நீட் அறிவிக்கை வெளியிடப்பட்டது.</p><p>உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக நடந்து கொள்ள முடியாது.</p><p>நீட் தேர்வுக்கு விலக்கு தேவை என்பதே அதிமுகவின் கொள்கை.</p> <p>மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு செயல்படுகிறது.</p><p>மதுரவாயல் தொகுதியில் பட்டா பிரச்சனை அதிகமாக உள்ளது - தவெக எம்எல்ஏ ரேவந்த் சரண்</p><h2>ஓ.பன்னீர்செல்வம் உரை</h2><p>பேரவைக்கு சபாநாயகர் வரும்போது எழுந்து நிற்பது தான் மரபு. </p><p>முதலமைச்சர் வரும்போது அவையில் அனைவரும் எழுந்து நிற்பது மரபு இல்லை. </p> <p>சபாநாயகருக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தப்பட வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை - சபாநாயகர்</p><h2>சபாநாயகர் பேச்சு</h2><p>தமிழர் பண்பாட்டை கடைபிடித்து மரியாதை செலுத்துவது அவரவர் விருப்பம்.</p><p>முதலமைச்சர் விஜய் வரும்போது இ.பி.எஸ். எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்.</p><p>எழுந்து நிற்பது அவரவர் விருப்பம் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. </p> <h2>அமைச்சர் ஆனந்த் உரை</h2><p>அம்மா முதலமைச்சராக இருந்தபோது ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் எழுந்து நிற்பார். குனிந்தபடி நிற்பார் அதை உலகமே அறியும்.</p><p>தலைவர் தளபதிக்காக மட்டுமே எங்கள் எல்லோருக்கும் மக்கள் அனைவரும் வாக்களித்தார்கள் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.</p><p>ஏனென்றால் தளபதி முதலமைச்சராக வர வேண்டும் என்று தமிழ்நாடு மக்கள் முடிவெடுத்து விட்டார்கள்.  அதன்  அடிப்படையில் எங்களுக்கு வாக்களித்தார்கள்.</p> <p>நீட் தேர்வை இந்த அரசு எந்தளவிற்கு எதிர்க்கிறதோ அந்த அளவிற்கு நெக்ஸ்ட் தேர்வையும் கண்டிப்பாக எதிர்ப்போம் - அமைச்சர் அருண்ராஜ்</p> <p>கொள்ளிடத்தில் இருந்து அரியலூர் பொன்னேரிக்கு நீர் கொண்டு வர வேண்டும் - வைத்தியலிங்கம்</p><h2>பாமக எம்எல்ஏ வைத்தியலிங்கம் உரை</h2><p>கொள்ளிடத்தில் இருந்து அரியலூர் பொன்னேரிக்கு நீர் கொண்டு வர வேண்டும்.</p><p>முந்திரியை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். </p><p>விருத்தாசலம் - கும்பகோணம் சாலை 4 வழிச்சாலையாக்க வேண்டும்.</p><p>இயற்கை சீற்றங்களுக்கு நிரந்தர நிவாரண திட்டம் தேவை.</p><p>கும்பகோணம், விருத்தாசலத்தை தனி மாவட்டமாக பிரிக்க வேண்டும்.</p> <h2>அதிமுக எம்எல்ஏ நடராஜ் உரை</h2><p>அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை விரிவுப்படுத்தி காங்கேயம் பகுதியை இணைக்க வேண்டும்.</p><p>காங்கேயத்தில் தேங்காய், அரிசி உற்பத்திக்காக புதிய தொழிற்பேட்டை அவசியம்.</p><p>தொகுதி மேம்பாட்டு நிதியான ரூ.3 கோடியை ரூ.7 கோடியாக உயர்த்த வேண்டும்.</p><p>விவசாயிகள் நலன் கருதி 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.</p><p>வெள்ளவயலை தனி வட்டாரமாக அறிவிக்க வேண்டும்.</p><p>அமராவதி ஆற்றின் உபரி நீரை நீரேற்றம் செய்து காங்கேயம் தொகுதிக்கு வழங்க வேண்டும் - அதிமுக எம்எல்ஏ நடராஜ் உரை</p><h2>திமுக எம்எல்ஏ லெட்சுமணன் உரை</h2><p>3.2% மட்டுமே மருத்துவ கட்டமைப்புக்கு நிதி உயர்த்தப்பட்டுள்ளது.</p><p>செவிலியர்கள் பணி நிரந்தரம் - பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை.</p> <h2>அதிமுக எம்எல்ஏ ஓ.எஸ். மணியன் உரை</h2><p>15 வகையான நோயாளிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை போதாது, ரூ.10,000- ஆக உயர்த்த வேண்டும்.</p><p>எந்த நேரத்திலும் உடல் கூறு ஆய்வுக்கு அனுமதிக்க வேண்டும். </p><h2>வருவாய்த்துறை மானியக்கோரிக்கை மீது அமைச்சர் செங்கோட்டையன் பதிலுரை</h2><p>வருவாய்த்துறை சேவை துறையாக மாறி உள்ளது. வருவாய்த்துறையில் 26 சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.</p><p>15 நாட்களுக்குள் சான்றிதழ்களை வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.</p><p>100 நாட்களில் சுமார் 39 லட்சம் சான்றிதழ்கள் வழங்கி உள்ளது வருவாய்த்துறை.</p><p>முதலமைச்சர் விஜய் ஒரு தீர்க்கதரிசி.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/shock-in-assam-tribal-schoolgirl-sexual-assault-accused-shot">அசாமில் பழங்குடியின மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான நபர் மீது துப்பாக்கிச்சூடு!... </a></p><p>* விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது தப்பிக்க முயன்றதால் காவல்துறை அவரைக் காலில் சுட்டுப் பிடித்துள்ளது. </p><p>*அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சிராங் மாவட்ட சிரேஷ்ட காவல் கண்காணிப்பாளர் துருபா போரா தெரிவித்துள்ளார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/546-crimes-in-100-days-dmk-legal-wing-deputy-secretary-parandhaman">100 நாளில் 546 குற்றச் சம்பவங்கள்: திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன்</a></p><p>* இந்த 100 நாள் ஆட்சி மக்களுக்கான சர்க்கார் அல்ல, வெறும் சர்க்கஸ் சர்க்கார்!</p><p>* நாளுக்கு நாள் நாசமாகும் தமிழ்நாடு இது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/bangkok-gun-market-thailand-tightens-rules-traders-protest">பாங்காக் துப்பாக்கி சந்தையில் தாய்லாந்து அரசின் புதிய கட்டுப்பாடுகள்: வியாபாரிகள் கொந்தளிப்பு!... </a></p><p>*அரசின் இந்தத் தொடர் கட்டுப்பாடுகள் காரணமாகப் பல தசாப்தங்களாகத் இயங்கி வந்த பாரம்பரிய துப்பாக்கிக் கடைகள் பெரும் நிதி நெருக்கடியைச் சந்தித்துள்ளன.</p><p>*ஆசிய கண்டத்திலேயே அதிகளவில் பொதுமக்களிடம் துப்பாக்கிகள் இருக்கும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானுக்கு அடுத்து தாய்லாந்து இரண்டாம் இடத்தில் உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>எச்1என்1 காய்ச்சல் அறிகுறி: 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு-பெங்களூரு பள்ளி திடீர் மூடல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/h1n1-flu-symptoms-over-500-students-affected-bengaluru-school-shuts</link><comments>https://www.maalaimalar.com/news/national/h1n1-flu-symptoms-over-500-students-affected-bengaluru-school-shuts#comments</comments><guid isPermaLink="false">8642b7aa-8662-4d7e-baf7-cc62336cce46</guid><pubDate>Tue, 18 Aug 2026 11:16:06 +0000</pubDate><atom:updated>2026-08-18T11:16:06.915Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பெங்களூரு,bengaluru,H1N1Flu,BengaluruSchoolNews,பெங்களூரு பள்ளி,எச்1என்1 காய்ச்சல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/hfd38dss/hi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ H1N1Flu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/hfd38dss/hi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக மாநிலம் பெங்களூருவின் ரிச்சர்ட்ஸ் டவுன் பாட்டரி சாலையில் இயங்கி வரும் புகழ்பெற்ற கிளாரன்ஸ் உயர்நிலைப் பள்ளியில் திடீரென காய்ச்சல் மற்றும் இருமல் தீவிரமாக பரவியுள்ளது. பள்ளியில் பயிலும் 2,500 மாணவர்களில் 500க்கும் மேற்பட்டோர் (சுமார் 20 சதவீதம்) காய்ச்சல், சளி, கடுமையான இருமல் மற்றும் உடல் வலியால் பாதிக்கப்பட்டு பள்ளிக்கு வரவில்லை. மேலும், 21 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களும் இதே அறிகுறிகளுடன் விடுப்பு எடுத்துள்ளனர்.</p><h2>உறுதியா<strong>ன எச்1என்</strong>1 தொற்றுகள்</h2><p>பள்ளியின் முதலுதவி மையத்திற்கு 137 மாணவர்கள் காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சைக்காக வந்ததை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரண்டு பேருக்கு H1N1 / Swine Flu வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/less-painful-lethal-injection-for-death-penalty-supreme-court-says-no">வைரஸ்</a> மேலும் பரவுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆகஸ்ட் 18 வரை பள்ளி வளாகத்தில் நேரடி வகுப்புகள் அனைத்தும் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.</p><h2>பள்ளி <strong>சுற்றியுள்ள சுகாதார சீர்கேடு காரண</strong>ம்?</h2><p>பள்ளி நிர்வாகம் மாநகராட்சி சுகாதார அதிகாரி மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள அவசர கடிதத்தில், பள்ளி வளாகத்தை சுற்றி அனுமதியின்றி செயல்படும் தெருவோர உணவகங்களே இந்த சுகாதார சீர்கேட்டிற்கு காரணம் எனக் குற்றம்சாட்டியுள்ளது. </p><p>நடைபாதைகளை ஆக்கிரமித்து விற்கப்படும் உணவுப் பொருட்கள், கொட்டப்படும் கழிவுகள் மற்றும் அதனால் சேரும் எலிகள் மாணவர்களின் ஆரோக்கியத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>பள்ளி வளாகத்திலிருந்து 50 மீட்டர் சுற்றளவில் சுகாதாரமற்ற உணவுகள் விற்கப்படுவதைத் தடுக்கவும், சட்டவிரோத கடைகளை உடனடியாக அகற்றவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அரசு பெண் ஊழியர்களின் 3வது குழந்தைக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு: அமைச்சர் சரத்குமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sarathkumar-speech-in-tn-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sarathkumar-speech-in-tn-assembly#comments</comments><guid isPermaLink="false">0ae4a793-bddb-4dc4-9ab2-b23e6dce8b8f</guid><pubDate>Tue, 18 Aug 2026 11:10:46 +0000</pubDate><atom:updated>2026-08-18T11:10:46.182Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Govt employees,TN assembly,தமிழக சட்டசபை |,அரசு ஊழியர்கள்,Minister Sarathkumar,அமைச்சர் சரத்குமார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/fodn4hk5/sarath.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ minister sarathkumar ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/fodn4hk5/sarath.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அரசு பெண் ஊழியர்களின் 3வது குழந்தைக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என அமைச்சர் சரத்குமார் அறிவித்தார்.</p><p>தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகிறது. அப்போது மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் சரத்குமார் பதிலளித்துப் பேசியதாவது:</p><p>AM, PM என நேரம் பார்க்காமல் வேலை பார்க்கும் முதல்வரே நாளைய பாரதத்தின் PM நீங்கள் தான்.</p><p>அரசு பெண் ஊழியர்களின் 3வது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு 365 நாட்கள் வழங்கப்படும்.</p><p>போட்டித் தேர்வுக்கு தயாராகும் ஆர்வலர்களுக்காக வெற்றி பாதை செயலி உருவாக்கப்படும்.</p><p>அரசு பணியிடங்களை நிரப்ப தனி செயலி உருவாக்கப்படும்.</p><p>டிஎன்பிஎஸ்சி கூடுதல் இணைப்பு கட்டிடம் ரூ.5.12 கோடி செலவில் கட்டப்படும் உள்ளிட்ட பல்வேரு அறிவிப்புகளை வெளியிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>3 தமிழர்கள் சுட்டுக்கொலை: “உங்கள் வேலையை பாருங்கள்”
தமிழ்நாட்டிற்கு கர்நாடக முதலமைச்சர் கண்டனம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/three-tamils-shot-dead-mind-your-own-businesskarnataka-chief-minister-criticizes-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/news/national/three-tamils-shot-dead-mind-your-own-businesskarnataka-chief-minister-criticizes-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">8ea1d26d-22b7-44c9-8ae0-7b80f6874089</guid><pubDate>Tue, 18 Aug 2026 11:05:06 +0000</pubDate><atom:updated>2026-08-18T11:05:06.336Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,டி.கே.சிவகுமார்,joseph vijay,D.K. Shivakumar,முதலமைச்சர் விஜய்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/nqt7ltwp/New-Project-2026-08-18T163153.791.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: “உங்கள் வேலையை பாருங்கள்”
தமிழ்நாட்டிற்கு கர்நாடக முதலமைச்சர் கண்டனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/nqt7ltwp/New-Project-2026-08-18T163153.791.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர் மற்றும் குமார் ஆகிய 3 பேர் கொல்லப்பட்டனர்.</p><p>இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த முதலமைச்சர் விஜய் இது ஒரு படுகொலை என்றும், இந்த விவகாரத்தில் கர்நாடக அரசு கொடுக்கும் விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார். </p><p>மேலும் மற்ற தமிழ்நாடு தலைவர்களும் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.</p><h2>டி.கே.சிவக்குமார் கண்டனம்</h2><p>இந்நிலையில் தமிழ்நாடு அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்துகளுக்கு கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்து அவர் பேசியதாவது:-</p><p>“இது ஒரு கூட்டாட்சி அமைப்பு. எந்தவொரு மாநிலமும் மற்றொரு மாநிலத்தின் உள் விவகாரங்களில் தலையிடக் கூடாது. நான் தமிழ்நாடு விவகாரங்களில் ஒருபோதும் தலையிட்டதில்லை, மேலும் உங்கள் நிர்வாகம் குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவும் இல்லை.  </p><p>ஒவ்வொரு மாநிலமும் அதற்கே உரிய சவால்களை எதிர்கொள்கிறது. கர்நாடகாவின் சட்டம், ஒழுங்கு விவகாரம் குறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும். </p><p>எங்கள் மாநிலத்தைப் பாதுகாப்பது எப்படி என்று எங்களுக்குத் தெரியும். நீங்கள் உங்கள் வேலையை செய்யுங்கள், நாங்கள் எங்கள் வேலையைச் செய்வோம். </p><p>கர்நாடகாவின் நிர்வாகம் மற்றும் சட்டம் ஒழுங்கு விஷயங்களில் தலையிடக் கூடாது.” என தெரிவித்தார். </p><p>இவ்வாறு டி.கே.சிவகுமார் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>காந்தி, நேரு மீது கூட வழக்கு பதியப்பட வேண்டும்: கார்கே தடாலடி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vante-mataram-issue-case-should-be-filed-against-gandhi-and-nehru-too-kharge-slams</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vante-mataram-issue-case-should-be-filed-against-gandhi-and-nehru-too-kharge-slams#comments</comments><guid isPermaLink="false">0da8de1a-643b-499c-aa5b-e544b6a69387</guid><pubDate>Tue, 18 Aug 2026 11:00:17 +0000</pubDate><atom:updated>2026-08-18T11:00:17.331Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வந்தே மாதரம்,Vande Mataram,கார்கே,Kharge,sonia gandhi,சோனியா காந்தி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/8ln9aiea/Kharge001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கார்கே- சோனியா காந்தி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/8ln9aiea/Kharge001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் தேசிய கீதமாக ஜன கண மன உள்ளது. தேசிய பாடலாக வந்தே மாதரம் உள்ளது. தேசிய கீதம் பாடலுக்கு முன்னதாக வந்தே மாதரம் பாடல் பாடப்பட வேண்டும். அத்துடன் வந்தே மாதரம் முழுமையாக பாடப்பட வேண்டும் என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றியது.</p><h2>வந்தே மாதரம்</h2><p>தேசிய பாடலான வந்தே மாதரம் அவமதிக்கப்படுவதை தடுப்பதற்கும், தேசிய கீதத்திற்கும் இணையான சட்டப் பாதுகாப்பை வழங்குவதற்கும் 2026 ஜூலை மாதத்தில் (The Prevention of Insults to National Honour (Amendment) Bill, 2026) என்ற வந்தே மாதரம் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, பின்னர் ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்று சட்டமாகியுள்ளது.</p><p>இச்சட்டத்தின் கீழ் இப்பாடலை வேண்டுமென்றே பாடுவதைத் தடுத்தாலோ அல்லது அவமதித்தாலோ மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது அரசு விழாக்கள் மற்றும் பள்ளிகளில் தேசிய கீதத்திற்கு முன்பாக வந்தே மாதரம் பாடப்பட வேண்டும் என்றும், பாடலின் ஆறு பத்திகளையும் (Stanzas) முழுமையாகப் பாடப்பட வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.</p><p>இந்த சட்டம் நிறைவேற்றதுடன் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. சுதந்திர தினத்தின்போது பல்வேறு இடங்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.</p><h2>காங்கிரஸ் அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றியபோது சர்ச்சை</h2><p>அந்த வகையில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. தேசியக் கொடி ஏற்றப்படுவதற்கு முன்னதாக வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது. அப்போது இரண்டு பத்திகள் பாடப்பட்ட பின்னர், அவற்றை சோனியா காந்தி நிறுத்தச் சொல்வது போன்று சைகை காட்டியது போன்ற செய்தி வெளியானது. ஆனால், சோனியா காந்தி, கார்கேவுக்கு நாற்காலிதான் கேட்டார். பாடலை நிறுத்தச் சொல்லவில்லை என்று காங்கிரஸ் விளக்கம் அளித்தது.</p><p>இதற்கிடையே வந்தே மாதரம் பாடலை அவமதித்ததாக சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புகார் அளிக்கப்பட்டது குறித்து மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.</p><h2>இது தொடர்பாக மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:-</h2><p>அவர்கள் என்ன புகாரை பதிவு செய்யப் போகிறார்கள்? மகாத்மா காந்தி பாடிய அதே வந்தே மாதரம் பாடலைத்தான் நாங்களும் பாடினோம். ஜவஹர்லால் நேரு பாடியதையும் நாங்கள் பாடினோம். கடந்த 18 ஆண்டுகளாக, வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு பாடியது உட்பட, அவர்கள் பாடியவற்றையே நாங்களும் பாடி வருகிறோம். மேலும், 12 ஆண்டுகள் முதல்வராக இருந்தபோதும், இத்தனை ஆண்டுகளாக அவர் (பிரதமர் நரேந்திர மோடி) பாடி வரும் அதே வந்தே மாதரம் பாடலைத்தான் அவரும் பாடினார்.</p><p>இது ஒரு குற்றம் என்றால், கடந்த 18 ஆண்டுகளாக அவர்களும் இந்த குற்றத்தை செய்து வந்துள்ளனர் என்றுதான் அர்த்தம். இதுவே குற்றம் என்றால், மகாத்மா காந்தி மீதும் வழக்குத் தொடருங்கள். நேரு மீதும் வழக்குத் தொடருங்கள்.</p><p>மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ரியோவின் ‘ராம் இன் லீலா’ படத்தின் பெயர் மாற்றம்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/title-of-rios-film-ram-in-leela-changed</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/title-of-rios-film-ram-in-leela-changed#comments</comments><guid isPermaLink="false">9b329cd4-f10b-43c0-82d1-cefb0b18677b</guid><pubDate>Tue, 18 Aug 2026 10:32:47 +0000</pubDate><atom:updated>2026-08-18T10:32:47.030Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Actor Rio Raj,Ram and Leela,நடிகர் ரியோ ராஜ்,ராம் அண்ட் லீலா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/41w0o9gq/New-Project-2026-08-18T155301.769.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரியோவின் ‘ராம் இன் லீலா’ படத்தின் பெயர் மாற்றம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/41w0o9gq/New-Project-2026-08-18T155301.769.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் ரியோ ராஜ், வர்த்திகா நடிப்பில் உருவாகி உள்ளப் படம் ராம் இன் லீலா. இப்படத்தில் பாலாஜி தியாகராஜன் தயாளன், முனிஷ்காந்த், சேத்தன், தீபா வெங்கட், மாளவிகா அவினாஷ், நயனா எல்சா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.</p><p>இப்படத்தை டிரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஈவா என்டர்டெயின்மென்ட் பதாகைகளின் கீழ் ஆர். ரவீந்திரன் மற்றும் சுதர்சன் ஆகியோர் தயாரித்துள்ளனர். அங்கித் மேனன் படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள், டிரெய்லர் எல்லாம் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், ஆக.21ம் தேதி படம் வெளியாக உள்ளது.</p><p>இந்நிலையில் இப்படத்தின் பெயரை படக்குழு மாற்றியுள்ளது. அதன்படி, திரைப்படத்தின் பெயர் தற்போது ‘ராம் அண்ட் லீலா’ என மாற்றப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சீனாவில் உருவாகும் புதுவித &apos;டார்க் டூரிசம்&apos;: செயற்கைப் பேரிடர்களைப் பணம்கொடுத்து அனுபவிக்கும் இளைஞர்கள்!</title><link>https://www.maalaimalar.com/news/world/china-youth-flock-to-artificial-disaster-parks-as-dark-tourism-trend-grows</link><comments>https://www.maalaimalar.com/news/world/china-youth-flock-to-artificial-disaster-parks-as-dark-tourism-trend-grows#comments</comments><guid isPermaLink="false">3007af8e-f657-47da-8e8a-fe3cb93e5b5b</guid><pubDate>Tue, 18 Aug 2026 10:30:42 +0000</pubDate><atom:updated>2026-08-18T10:30:42.093Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>China,சீனா,சுற்றுலா,Hangzhou,DarkTourism,LvxingBase,டார்க்டூரிசம்,இயற்கைபேரிடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/qvoxhnoj/chin.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ China DarkTourism]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/qvoxhnoj/chin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சீனாவில் தற்போது இளைஞர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே 'டார்க் டூரிசம்' எனும் சோக சம்பவங்கள் அல்லது ஆபத்தான சூழல்களை அனுபவிக்கும் புதிய டிரெண்ட் வேகமாகப் பரவி வருகிறது. வழக்கமாக வரலாற்றுப் பேரழிவுகள் நடந்த இடங்களைப் பார்வையிடுவதற்குப் பதிலாக, செயற்கையாக உருவாக்கப்படும் இயற்கைச் சீற்றங்களை நேரில் சந்தித்து ஆபத்திலிருந்து தப்பிக்கும் பயிற்சிகளைப் பெற சீன இளைஞர்கள் பெரும் தொகை கொடுத்து ஆர்வம் காட்டி வருகின்றனர்.</p><h2>ஹங்சோவில் அமை<strong>ந்துள்ள பிரம்மா</strong>ண்ட 'லுக்சிங் பேஸ்'</h2><p>சீனாவின் கிழக்குக் பகுதியில் அமைந்துள்ள ஹங்சோ நகரில் 'லுக்சிங் பேஸ்' என்ற நாட்டின் முதல் அதிநவீன செயற்கைப் பேரிடர் மையம் தொடங்கப்பட்டுள்ளது. பிரபல சீனப் பெண் மற்றும் ஆண் சாகசப் பயணிகளான சாங் சின்யு மற்றும் லியாங் ஹாங் ஆகியோரால் நிறுவப்பட்ட இந்த மையம், குறுகிய காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.</p><p>இந்த மையத்தில் மணிக்கு 165 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் செயற்கைப் புயல், கனமழை, மற்றும் திடீர் நகர்ப்புற வெள்ளப்பெருக்கு போன்ற ஆபத்தான சூழல்கள் அப்படியே உருவாக்கப்படுகின்றன. இங்கு வருபவர்கள் வெப்பப் பாதுகாப்பு உடைகள் மற்றும் தலைக்கவசங்களை அணிந்து, நிஜ பேரிடரின் நடுவே நின்று தப்பிப்பிழைக்கும் வழிமுறைகளைக் கற்றுக்கொள்கின்றனர்.</p><h2>கட்டண <strong>விவரங்</strong>கள்</h2><p>* தனிநபர் பெரியவர்களுக்கான கட்டணம்: 899 யுவான் (சுமார் $135 USD)</p><p>* குடும்பப் தொகுப்புக் கட்டணம்: 5,000 யுவான் வரை </p><p>இந்த மையம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 1,60,000-க்கும் அதிகமானோர் வருகை தந்துள்ளனர். இந்த பேரிடர் அனுபவ மையம் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஆபத்து காலங்களில் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் தற்காப்புப் பயிற்சிகளைப் பெற இது ஒரு நல்ல வாய்ப்பு என சிலர் ஆதரவு தெரிவிக்கின்றனர்.</p><p>அதேவேளையில், நிஜ வாழ்க்கையில் வெள்ளம் மற்றும் இயற்கைச் சீற்றங்களால் வீடுகளையும் உறவினர்களையும் இழந்து தவிக்கும் மக்களின் வேதனையை, வணிக ரீதியிலான பொழுதுபோக்காக மாற்றுவது அவர்களின் துயரத்தைக் கொச்சைப்படுத்துவது போல் உள்ளது என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>IT வேலையை உதறிவிட்டு காளான் விவசாயம் : மாதம் ரூ.10 லட்சம் சம்பாதிக்கும் பி.டெக் பட்டதாரி!</title><link>https://www.maalaimalar.com/news/national/btech-graduate-quits-it-job-earns-10-lakh-a-month-from-mushroom-farming</link><comments>https://www.maalaimalar.com/news/national/btech-graduate-quits-it-job-earns-10-lakh-a-month-from-mushroom-farming#comments</comments><guid isPermaLink="false">e788772d-c520-477a-a5c4-98ca0d859f06</guid><pubDate>Tue, 18 Aug 2026 10:28:57 +0000</pubDate><atom:updated>2026-08-18T10:28:57.716Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Mushroom Farming,காளான் விவசாயம்,ITtoAgriculture,BTechFarmer,பிடெக் விவசாயி,Ganga Bhumi Mushrooms,Agripreneurship</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/jdtta0z7/Mushroom-Farming" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mushroom Farming ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/jdtta0z7/Mushroom-Farming?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பொதுவாகப் பொறியியல் படிக்கும் இளைஞர்களின் இலக்கு ஒரு நல்ல ஐடி நிறுவனத்தில் சேர்ந்து கைநிறையச் சம்பாதிப்பதாகத் தான் இருக்கும். </p><p>ஆனால், <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%92%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE">ஒடிசா</a>வைச் சேர்ந்த விக்ரம்தேவ் மஹாபத்ரா என்ற இளைஞர், 14 ஆண்டுகால தனது வெற்றிகரமான கார்ப்பரேட் ஐடி வாழ்க்கையைத் துறந்து, சொந்த ஊரில் காளான் விவசாயம் செய்து மாதம் 10 லட்ச ரூபாய்க்கும் மேல் லாபம் ஈட்டி சாதனை படைத்து வருகிறார்.</p><h2>14 ஆண்டுகால ஐடி வாழ்க்கை</h2><p>ஒடிசாவின் நபரங்பூர் பகுதியைச் சேர்ந்த விக்ரம்தேவ், கடந்த 2012-ஆம் ஆண்டு பிஜு பட்நாயக் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் 'எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்' பிரிவில் பி.டெக் முடித்தார். </p><p>படிப்பை முடித்தவுடன் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">ஐடி துறை</a>யில் கால்பதித்த அவர், அடுத்த 14 ஆண்டுகளில் மைண்ட்ட்ரீ, செரோல் டெக்னாலஜிஸ் மற்றும் எல்டிஐமைண்ட்ட்ரீ போன்ற இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் பல்வேறு உயர் பொறுப்புகளில் மிக வெற்றிகரமாகப் பணியாற்றினார்.</p><h2>கார்ப்பரேட் டூ விவசாயம் எப்படி?</h2><p>கார்ப்பரேட் வாழ்க்கையில் நல்ல வருமானம் கிடைத்தாலும், சொந்த ஊருக்குச் சென்று சுயதொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் விக்ரம்தேவிடம் இருந்தது. </p><p>ஒருகட்டத்தில் தனது ஐடி வேலையை ராஜினாமா செய்த அவர், தனது சொந்த ஊரான நபரங்பூருக்குத் திரும்பினார். அங்கு விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த வணிக வாய்ப்புகளை ஆராய்ந்தவர், காளான் வளர்ப்பைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்தார். </p><p>அதன்படி, 'கங்கா பூமி மஷ்ரூம்ஸ்' என்ற வணிக ரீதியிலான காளான் உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் மையத்தைத் தொடங்கினார்.</p><h2>தினசரி 600 கிலோ உற்பத்தி; மாதம் 10 லட்சம் லாபம்!</h2><p>நவீன தொழில்நுட்பங்களை விவசாயத்தில் புகுத்திய விக்ரம்தேவின் பண்ணை, தற்போது மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. இவரது பண்ணையில் ஒரு நாளைக்குச் சுமார் 500 முதல் 600 கிலோ வரை காளான்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. </p><p>இது ஒரு மாதத்திற்கு 15 முதல் 18 டன்கள் ஆகும். இங்கு விளையும் காளான்கள் ஒடிசா மாநிலத்தின் முக்கிய நகரங்களான பெர்ஹாம்பூர், புவனேசுவர் போன்ற பெரிய சந்தைகளுக்கு நேரடியாகக் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. </p><p>அனைத்துப் பராமரிப்பு மற்றும் இதர செலவுகளும் போக, இந்த காளான் பண்ணை மூலம் மட்டுமே இவருக்கு மாதம் ரூ.10 லட்சத்திற்கும் மேல் நிகர லாபம் கிடைக்கிறது.</p><h2>24 கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு</h2><p>விக்ரம்தேவ் தனக்கான வருமானத்தை உருவாக்கியதோடு நிறுத்திக்கொள்ளாமல், தனது பகுதியைச் சேர்ந்த 24 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பையும் வழங்கியுள்ளார். மிக முக்கியமாக, அவரது பண்ணையில் பணிபுரியும் 24 ஊழியர்களில் 18 பேர் பெண்கள். </p><p>இதன் மூலம் கிராமப்புறப் பெண்களின் வாழ்வாதாரத்திற்கு அவர் வழிவகை செய்துள்ளார். பெருநகரங்களை நோக்கி வேலைக்காக ஓடாமல், சரியான திட்டமிடலும் சந்தை தேவையைப் புரிந்துகொள்ளும் திறனும் இருந்தால், நவீன விவசாயம் மூலம் சொந்த ஊரிலேயே மிகப்பெரிய தொழிலதிபராக மாற முடியும் என்பதற்கு விக்ரம்தேவ் மஹாபத்ராவின் இந்த பயணம் சிறந்த எடுத்துக்காட்டாகும்.</p>]]></content:encoded></item><item><title>இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/imd-inform-districts-likely-to-experience-heavy-rain-today-and-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/imd-inform-districts-likely-to-experience-heavy-rain-today-and-tomorrow#comments</comments><guid isPermaLink="false">a3059989-dd9a-4205-9a2c-2fabcec3394a</guid><pubDate>Tue, 18 Aug 2026 10:23:44 +0000</pubDate><atom:updated>2026-08-18T10:23:44.571Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/17rnn3gv/rain.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/17rnn3gv/rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</strong></em></p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p><h2><strong>லேசான மழை</strong></h2><p>இன்று மற்றும் நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.</p><p>திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>20-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>21 மற்றும் 22-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>23 மற்றும் 24-ந்தேதிகளில் வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>இதனிடையே இன்று முதல் 22-ந்தேதி வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong> </h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>இன்று முதல் 22-ந்தேதி வரை தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>சாக்கடை கால்வாய் தோண்டிய 18 வயது மாணவருக்கு கிடைத்த ரூ.85.90 கோடி தங்கப் புதையல்!</title><link>https://www.maalaimalar.com/news/world/18-year-old-student-finds-8-59-crore-gold-treasure-while-digging-drain</link><comments>https://www.maalaimalar.com/news/world/18-year-old-student-finds-8-59-crore-gold-treasure-while-digging-drain#comments</comments><guid isPermaLink="false">1e4a9315-ac5a-42ff-a418-a0ce7b2c0f23</guid><pubDate>Tue, 18 Aug 2026 10:20:00 +0000</pubDate><atom:updated>2026-08-18T10:20:00.366Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பெல்ஜியம்,GoldTreasure,தங்கப்புதையல்,Belgium GoldFind,புதையல்,Gold BullionHoard,9MillionEuroGold,SewerLineGold</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/rttfmplo/Gold-Treasure" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold Treasure ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/rttfmplo/Gold-Treasure?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">பெல்ஜியம் </a>நாட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை நேரத்தில், சாக்கடை கால்வாய் அமைப்பதற்காக குழி தோண்டிய 18 வயது மாணவருக்கு சுமார் 9 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் சுமார் ரூ.85.90 கோடி) மதிப்புள்ள மிகப்பெரிய தங்கப் புதையல் கிடைத்துள்ளது.</p><h2>1 யூரோ நாணயம் என நினைத்த மாணவர்</h2><p>பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகருக்கு வடமேற்கே 30 கி.மீ தொலைவில் உள்ள 'சின்ட்-கில்லிஸ்-டெண்டர்மாண்டே' என்ற பகுதியில் ஒரு கட்டுமானப் பணி நடந்து வந்தது. </p><p>அங்கு 'கோபி' என்ற 18 வயது மாணவர் தனது சக ஊழியர்களுடன் சேர்ந்து சாக்கடைத் திட்டத்திற்காக குழி தோண்டிக் கொண்டிருந்தார்.</p><p>இதுகுறித்து மாணவர் கோபி பேசுகையில், "நாங்கள் தோண்டிக் கொண்டிருக்கும் போது திடீரென ஏதோ பளபளப்பாகக் கிடப்பதைப் பார்த்தோம். முதலில் அது சாதாரண 1 யூரோ நாணயங்கள் என்றுதான் நினைத்தோம். </p><p>ஆனால் தொடர்ந்து தோண்டிய போது, பெரிய தங்கக் கட்டிகள் வெளியே வந்தன. நாங்கள் நினைத்ததை விட அது மிகப்பெரிய புதையலாக இருந்தது" என்றார்.</p><h2>சுவருக்குள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த தங்கம்</h2><p>அங்கு கண்டெடுக்கப்பட்ட பையில் தங்க நாணயங்கள், தங்கக் கட்டிகள் மற்றும் வரிசை எண்கள் குறிக்கப்பட்ட நவரத்தின தங்கப் பாளங்கள் இருந்தன. </p><p>அந்த இடம் 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த பிரபல மதுபான ஆலை அதிபரான 'தியோபிலஸ் வான் அஸ்ஸே' என்பவருக்குச் சொந்தமான பிரம்மாண்ட பங்களா ஆகும்.</p><p>அங்குள்ள அடித்தளத்தின் செங்கல் சுவருக்குள், யாரும் கண்டுபிடிக்க முடியாதபடி இந்தத் தங்கப் பை ரகசியமாக மறைத்து வைத்துப் பூசப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><h2>நேர்மையுடன் போலீசில் ஒப்படைப்பு</h2><p>இவ்வளவு பெரிய புதையலைக் கண்டதும் மாணவர் கோபியும் அவரது சக ஊழியர்களும் உடனடியாக காவல்துறைக்கும், கட்டுமான நிறுவனத்திற்கும் தகவல் கொடுத்தனர். </p><p>இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் தங்கத்தைக் கைப்பற்றி, பிரஸ்ஸல்ஸில் உள்ள அதீத பாதுகாப்பு நிறைந்த அரசு கருவூலத்திற்கு மாற்றினர்.</p><p>இதுகுறித்து கோபி கூறுகையில், "சில நாணயங்கள் மட்டும் கிடைத்திருந்தால் நாங்கள் யாரிடமும் சொல்லாமல் இருந்திருப்போம். </p><p>ஆனால், இது இவ்வளவு பெரிய புதையலாக இருந்ததால் உடனடியாக அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். எங்களுக்கு அரசு தரப்பில் இருந்து நல்ல சன்மானம் கிடைக்கும் என நம்புகிறோம்" என்றார்.</p><h2>புதையல் யாருக்குச் சொந்தம்? </h2><p>தற்போது இந்தத் தங்கப் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D">புதையல் </a>யாருக்குச் சொந்தம் என்ற போராட்டம் தொடங்கியுள்ளது. பெல்ஜியம் நாட்டுச் சட்டப்படி, புதையல் கண்டெடுக்கப்பட்டால் அதன் உண்மையான உரிமையாளர்கள் யாராவது உரிமை கோரி வருகிறார்களா என்று குறைந்தது 5 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும். </p><p>அந்த பங்களாவின் பழைய உரிமையாளரான வான் அஸ்ஸே குடும்பத்தின் வாரிசுகள், கட்டுமான நிறுவனம், தற்போதைய நில உரிமையாளர் மற்றும் புதையலைக் கண்டுபிடித்த மாணவர் கோபி ஆகியோரிடையே இந்த ரூ.85.90 கோடியைப் பிரித்துக் கொள்வதில் சட்ட ரீதியான சிக்கல்கள் எழ வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.</p><p>மேலும், இந்தத் தங்கம் ஏதேனும் குற்றச் செயல்களோடு தொடர்புடையதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சல்மான் கான் உடலமைப்பு தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்: பாரா பவர்லிஃப்டர் ஜண்டு குமார் உருக்கம்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/salman-khan-physique-is-my-inspiration-para-powerlifter-jandu-kumar-emotional</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/salman-khan-physique-is-my-inspiration-para-powerlifter-jandu-kumar-emotional#comments</comments><guid isPermaLink="false">30198631-0268-40b4-8b84-afdcfb67843f</guid><pubDate>Tue, 18 Aug 2026 10:17:43 +0000</pubDate><atom:updated>2026-08-18T10:17:43.733Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சல்மான்கான்,salmankhan,Dabangg,ஜண்டு குமார்,JhanduKumar,ParaPowerlifting,பாரா பவர்லிஃப்டர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/biyen4nw/jhandhu-kumar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ JhanduKumar-SalmanKhan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/biyen4nw/jhandhu-kumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த பாரா பவர்லிஃப்டிங் வீரர் ஜண்டு குமார், பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானின் உடற்பயிற்சி அர்ப்பணிப்பு மற்றும் '<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/ajith-kumar-daredevil-mohanlal-casting-rumours">தபாங்</a>' திரைப்படம் தான் தனது வாழ்க்கை முறையையே மாற்றியது குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.</p><h2>வாழ்க்கை<strong>யை மாற்றிய த</strong>பாங் திரைப்படம்</h2><p>பிரபல தொலைக்காட்சி நிகழ்வில் கலந்துகொண்ட ஜண்டு குமார், சிறுவயதில் போலியோவால் பாதிக்கப்பட்ட பிறகு சந்தித்த சவால்களைப் பற்றிப் பேசினார். 2010-இல் வெளியான சல்மான் கானின் 'தபாங்' திரைப்படத்தைப் பார்த்த பிறகுதான் அவருக்குள் பாடிபில்டிங் மற்றும் உடற்பயிற்சி மீது தீராத ஆர்வம் பிறந்தது.</p><p>திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சல்மான் கானின் சட்டை கிழிந்து அவருடைய கட்டுக்கோப்பான உடலமைப்பு வெளிப்படும் போது, தனக்கும் அத்தகைய பாசெப்ஸ், டிரைசெப்ஸ் மற்றும் வலுவான மார்புப் பகுதியைக் கொண்ட உடலமைப்பை உருவாக்க வேண்டும் என்ற உத்வேகம் எழுந்ததாக அவர் தெரிவித்தார்.</p><h2>போலி<strong>யோவை வென்ற சாத</strong>னைப் பயணம்</h2><p>ஐந்து வயதிலேயே போலியோ நோயால் பாதிக்கப்பட்ட ஜண்டு குமார், தனது உடல் குறைபாட்டை ஒரு தடையாக என்றுமே கருதியதில்லை. சல்மான் கானை முன்மாதிரியாகக் கொண்டு உடற்பயிற்சிக் கூடத்திற்குச் செல்லத் தொடங்கிய அவர், தனது மேல் உடலை வலுப்படுத்தி பவர்லிஃப்டிங் விளையாட்டிற்குள் அடிஎடுத்து வைத்தார். காய்கறி விற்பனை மற்றும் இ-ரிக்‌ஷா ஓட்டுதல் எனப் பல வறுமைகளுக்கு மத்தியிலும் தனது விடாமுயற்சியைக் கைவிடாமல் பயிற்சி செய்து, 2026 காமன்வெல்த் போட்டியில் பவர்லிஃப்டிங் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்குப் பெருமை தேடித்தந்துள்ளார்.</p><h2>சல்மான் கா<strong>னின் ஃபிட்னஸ்</strong> தாக்கம்</h2><p>1998-இல் வெளியான 'பியார் கியா தோ டர்னா கியா' படத்தில் 'ஓ ஓ ஜானே ஜானா' பாடல் மூலம் சட்டை அணியாமல் தோன்றி இந்தியளவில் மிகப்பெரிய ஃபிட்னஸ் ட்ரெண்டை உருவாக்கியவர் சல்மான் கான். இன்று வரை தனது கடுமையான உடற்பயிற்சி வீடியோக்கள் மூலம் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகிறார்.</p>]]></content:encoded></item><item><title>ஞானேஷ் குமாரை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லுங்கள்: டிரம்ப் பாராட்டிய நிலையில் காங்கிரஸ் பதிலடி</title><link>https://www.maalaimalar.com/news/national/take-gyanesh-kumar-to-us-congress-jibe-after-trump-praises-indian-polls</link><comments>https://www.maalaimalar.com/news/national/take-gyanesh-kumar-to-us-congress-jibe-after-trump-praises-indian-polls#comments</comments><guid isPermaLink="false">320eeadc-b12a-41b0-8f53-d7146911a14e</guid><pubDate>Tue, 18 Aug 2026 10:05:38 +0000</pubDate><atom:updated>2026-08-18T10:05:38.960Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,டொனால்டு டிரம்ப்,Donald Trump,ஞானேஷ் குமார்,Gyanesh Kumar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/4z4drtwb/DonaldTrumpPawanKherra.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டொனால்டு டிரம்ப்- பவன் கெர்ரா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/4z4drtwb/DonaldTrumpPawanKherra.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய தேர்தல் ஆணையத்தையும், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரையும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெகுவாக பாராட்டியிருந்தார்.</p><p>டொனால்டு டிரம்ப் பாராட்டிய நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான பவன் கெர்ரா அதற்கு பதில் கொடுத்துள்ளார்.</p><h2>பவன் கெர்ரா</h2><p>பவன் கெர்ரா "அமெரிக்க அதிபர் டிரம்ப் ஞானேஷ் குமாரை அழைத்துக் கொள்ளுங்கள். அத்துடன் வாக்கு இயந்திரங்களை அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக பவன் கெர்ரா வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>அன்புள்ள டொனால்டு டிரம்ப் அவர்களே, தயவு செய்து ஞானேஷ் குமாரை அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லுங்கள். அவரையே அங்கேயே வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக கிடைக்கும் விமானத்தில் எங்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களையும் (EVMs) நாங்கள் அனுப்பி வைக்கிறோம். நீங்கள் எங்களுக்கு இழைத்த அவமானங்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்குப் பதிலாக, நாங்கள் உங்களுக்குச் செய்யக்கூடிய மிகச்சிறிய கைமாறு இதுவே. அன்புடன் இந்தியா.</p><p>இவ்வாறு பவன் கெர்ரா தெரிவித்துள்ளார்.</p><h2>டொனால்டு டிரம்ப்</h2><p>முன்னதாக டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைத்தள பக்கத்தில் "இந்த மாத தொடக்கத்தில், இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையரான ஞானேஷ் குமார் எங்கள் நிர்வாகத்திடம் ஒரு கேள்வியை எழுப்பினார். அது செல்லுபடியாகும் புகைப்பட அடையாள அட்டை இல்லாமல் அமெரிக்காவில் எப்படித் தேர்தல்களை நடத்த முடியும்? என்பதுதான்.</p><p>இந்தியாவின் கடந்த தேர்தலில் 64 கோடியே 60 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்றனர். ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்களே தபால் மூலம் வாக்களித்தனர். அதேவேளையில், ஒவ்வொரு வாக்காளரும் செல்லுபடியாகும் புகைப்பட அடையாள ஆவணத்தை கொண்டிருப்பது கட்டாயமாக இருந்தது. நாம் அமெரிக்காவை காக்கும் சட்டத்தை (The Save America Act) இப்போதே நிறைவேற்ற வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.</p><p>வெள்ளை மாளிகையின் கூற்றுப்படி, கூட்டாட்சி தேர்தல்களை தீர்மானிப்பதில் அமெரிக்க குடிமக்கள் மட்டுமே பங்கேற்பதை உறுதி செய்வதே இந்தச் சட்டத்தின் நோக்கமாகும்.</p><p>கூட்டாட்சி தேர்தலில் வாக்களிக்க பதிவு செய்வதற்கு முன்பு, வாக்காளர்கள் தங்கள் குடியுரிமைக்கான ஆதாரத்துடன், செல்லுபடியாகும் அடையாள அட்டையையும் வழங்க வேண்டும். அமெரிக்க தேர்தல்களை அமெரிக்கக் குடிமக்கள் மட்டுமே தீர்மானிக்க வேண்டும் என Save சட்ட முன்மொழிவு வலியுறுத்துகிறது.</p><h2>இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்</h2><p>இந்திய தேர்தல் ஆணையராக இருக்கும் ஞானேஷ் குமார், பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் வாக்காளர்கள் பெயர்களை நீக்கியது, சேர்த்தது தொடர்பாக பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டார் என காங்கிரஸ் விமர்சனம் செய்தது. அத்துடன் SIR மூலம் வாக்குகள் நீக்கப்பட்டதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதிநீக்க நடவடிக்கையை கைவிட்டதில் என்ன தவறு உள்ளது? - உயர் நீதிமன்றம் கேள்வி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/what-is-wrong-with-dropping-the-disqualification-proceedings-against-the-aiadmk-mlas-high-court-asks</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/what-is-wrong-with-dropping-the-disqualification-proceedings-against-the-aiadmk-mlas-high-court-asks#comments</comments><guid isPermaLink="false">c98d755d-67bc-4079-b83f-c47fba182351</guid><pubDate>Tue, 18 Aug 2026 10:03:03 +0000</pubDate><atom:updated>2026-08-18T10:03:03.338Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,சென்னை உயர் நீதிமன்றம்,Madras High Court</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/6hjx1wij/New-Project-2026-08-18T153231.546.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதிநீக்க நடவடிக்கையை கைவிட்டதில் என்ன தவறு? - உயர் நீதிமன்றம் கேள்வி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/6hjx1wij/New-Project-2026-08-18T153231.546.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் தவெக அரசு, கடந்த மே 13-ந்தேதி நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்த போது, கொறடா உத்தரவை மீறி அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாகக் கூறி, 25 அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில், சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது. </p><p>இந்நிலையில், நான்கு எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததை அடுத்து, மீதமுள்ள 21 எம்.எல்.ஏ.க்கள் மன்னிப்புக் கடிதம் அளித்ததால், அவர்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கைக் கோரிய மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக எடப்பாடி பழனிசாமி சபாநாயகருக்கு கடிதம் அளித்தார். </p><p>இதை ஏற்று சபாநாயகர், 21 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கைகளை கைவிடுவதாக உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, வழக்கறிஞர் செல்வகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். </p><p>இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, ஏற்கனவே இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய உள்ளதாக தெரிவித்ததை அடுத்து மனு வாபஸ் பெறப்பட்டது என நீதிபதிகள் தெரிவித்தனர்.</p><p>மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சக்திவேல், கட்சி மாறி வாக்களித்தவர்களை மன்னிக்க அரசியல் கட்சிகளுக்கு அதிகாரமில்லை. கொறடா உத்தரவை மீறியதன் மூலம், சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள், தாமாக முன்வந்து தங்கள் பதவியை துறந்து விடுகின்றனர். அவர்களின் மன்னிப்பை ஏற்று, தகுதி நீக்க நடவடிக்கையை கைவிட்டது, அரசியல் சாசன கேலிக்கூத்து என வாதிடப்பட்டது. </p><p>அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், இந்த பிரச்னை கட்சிக்கும், உறுப்பினர்களுக்கும் இடையிலான பிரச்னை. பொதுச்செயலாளர் மன்னித்து விட்டதால் அவர்கள் மீண்டும் கட்சி உறுப்பினர்களாக செயல்படுகின்றனர். இதுசம்பந்தமாக மூன்றாம் நபர் பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்றார்.</p><p>விசாரணையின் போது குறுக்கிட்ட நீதிபதிகள், கொறடா உத்தரவை மீறி வாக்களித்தவர்களை மன்னித்து விட்டதால், அவர்கள் கட்சி உறுப்பினர்களாகவே நீடிக்கின்றனர். அவர்கள் ராஜினாமா செய்யவில்லை. மனுதாரர் மூன்றாம் நபர். கட்சி வழக்கு தாக்கல் செய்யவில்லை. </p><p>சட்டப்படி 15 நாட்களில் மன்னித்து, தகுதி நீக்க நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது. அதை சபாநாயகர் ஏற்றுள்ளார். இதில் என்ன தவறு உள்ளது. தற்போதைய நிலையில் எந்த கட்சித்தாவல் நடவடிக்கையும் இல்லை எனத் தெரிவித்தனர்.</p><p>பின்னர், இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டனர். </p>]]></content:encoded></item><item><title>ரெயில் பயணிகளின் கவனத்திற்கு! எழும்பூருக்கு பதிலாக தாம்பரம், கடற்கரை நிலையங்களில் இருந்து இயங்கும் ரெயில்கள்- முழு விவரம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/trains-operating-from-tambaram-and-beach-stations-instead-of-egmore</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/trains-operating-from-tambaram-and-beach-stations-instead-of-egmore#comments</comments><guid isPermaLink="false">52059fa4-60a8-4ee5-a6ba-8399fbe457c8</guid><pubDate>Tue, 18 Aug 2026 10:00:45 +0000</pubDate><atom:updated>2026-08-18T10:00:45.834Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Egmore railway station,எழும்பூர் ரெயில் நிலையம்,தாம்பரம் ரெயில் நிலையம்,Tambram Railway Station,Beach Station,கடற்கரை ரெயில் நிலையம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/xamj4p0d/tambaram.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ தாம்பரம் ரெயில் நிலையம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தாம்பரம் ரெயில் நிலையம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/xamj4p0d/tambaram.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறு சீரமைப்பு பணிகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சில ரெயில்கள் தாம்பரத்தில் இருந்து, கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்தும் இயக்கப்படுகிறது.</strong></em></p><h2><strong>தாம்பரத்தில் இயக்கம்</strong></h2><p>மன்னார்குடி-எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் செப்டம் பர் 4-ந்தேதி முதல் அக்டோபர் 13-ந்தேதி வரை மன்னார்குடியில் இருந்து இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு எழும்பூருக்கு பதிலாக <a href="https://www.maalaimalar.com/topic/தாம்பரம்-ரெயில்-நிலையம்">தாம்பரத்தில்</a> நிறுத்தப்படும். </p><p>திருச்சி-எழும்பூர் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் செப்டம்பர் 9-ந்தேதியில் இருந்து 15-ந்தேதி வரையிலும் செப்டம்பர் 21- ந்தேதி முதல் அக்டோபர் 14-ந்தேதி வரையிலும்  இரவு 10.35 மணிக்கு புறப்பட்டு மாம்பலத்தில் நிறுத்தப்படும். </p><p>மும்பை சி.எஸ்.டி- எழும்பூர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் செப்டம்பர் 12-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை  மும்பையில் இரவு 10.52 மணிக்கு புறப்பட்டு எழும்பூருக்கு பதிலாக கடற்கரை நிலையத்தில் நிறுத்தப்படும். </p><h2><strong>சேலம் எக்ஸ்பிரஸ்</strong></h2><p>சேலம்-எழும்பூர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் செப்டம்பர் 12-ந்தேதி முதல் 15 -ந்தேதி வரை சேலத்தில் இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு மாம்பலத்தில் நிறுத்தப்படும். </p><p>எழும்பூர்-மன்னார்குடி எக்ஸ்பிரஸ் செப்டம்பர் 5-ந்தேதி முதல் அக்டோபர் 14-ந்தேதி வரை தாம்பரத்தில் இருந்து இரவு 11.25 மணிக்கு புறப்படும். </p><p>எழும்பூர்-சேலம் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் செப்டம்பர் 13-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை இரவு 11.30 மணிக்கு கடற்கரை நிலையத்தில் இருந்து புறப்படும். </p><p>தஞ்சாவூர்-எழும்பூர் உழவன் எக்ஸ்பிரஸ் 16-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை மாம்பலம், கோடம்பாக்கம் பகுதியில் 20 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். மேலும் செப்டம்பர் 22-ந்தேதி முதல் அக்டோபர் 15-ந்தேதி வரை இந்த ரெயில் மாம்பலம், கோடம்பாக்கம் பகுதியில் 30 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அஜித் குமாரின் ‘DareDevil’: ஷாலினி தயாரிப்பில் உருவாகும் படத்தில் மோகன்லால் நடிக்கிறாரா? </title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ajith-kumar-daredevil-mohanlal-casting-rumours</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ajith-kumar-daredevil-mohanlal-casting-rumours#comments</comments><guid isPermaLink="false">ed167086-c2a9-43cf-bcbd-59a8c89b9d0c</guid><pubDate>Tue, 18 Aug 2026 09:55:55 +0000</pubDate><atom:updated>2026-08-18T09:55:55.941Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>AjithKumar,மோகன்லால்,mohanlal,அஜித் குமார்,டேர் டெவில்,DareDevil,ShaliniAjithkumar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/8w1gzwvc/mohan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DareDevil ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/8w1gzwvc/mohan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் குமார், 'குட் பேட் அக்லி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் கைகோர்க்கும் புதிய திரைப்படத்திற்கு 'டேர் டெவில்'  என தலைப்பிடப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>தயாரிப்பாளராக கள<strong>மிறங்கும் ஷாலி</strong>னி </h2><p>இத்திரைப்படம் நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி அஜித் குமாருக்கு ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. அவர் 'பிரேவ் ஹார்ட்ஸ் புரொடக்ஷன்' என்ற தனது புதிய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இப்படத்தைத் தயாரிக்கிறார். திரைப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இணையவுள்ளது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>மோக<strong>ன்லால் விலக</strong>லா? </h2><p>'டேர் டெவில்' திரைப்படத்தில் மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார்<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/visa-delay-mohanlal-sydney-show-cancelled-apology-to-fans"> மோகன்லால்</a> ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால், அவர் இப்படத்திலிருந்து விலகியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அவருக்குப் பேசப்பட்ட சம்பளக் குறைபாடு அல்லது கருத்து வேறுபாடு காரணமாகவே அவர் இப்படத்தில் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும், இது தொடர்பாகப் படக்குழுவிடமிருந்தோ அல்லது மோகன்லால் தரப்பிலிருந்தோ எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை.</p><h2>ப<strong>டப்பி</strong>டிப்பு எப்போது ?</h2><p>இப்படத்தின் படப்பிடிப்பு தயாரிப்புப் பணிகளின் தாமதம் காரணமாகத் தள்ளிப்போன நிலையில், வரும் 2026 செப்டம்பர் மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இம்முறை அனைத்துத் தரப்பு குடும்ப ரசிகர்களையும் கவரும் வகையில் ஒரு மாறுபட்ட கதைக் களத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>“கூடுதலாக உழைத்து த.வெ.க.வைப்போல நாங்களும் ஆட்சிக்கு வருவோம்” - அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/we-too-will-work-harder-and-come-to-power-just-like-tvk-anbumani-ramadoss</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/we-too-will-work-harder-and-come-to-power-just-like-tvk-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">32337ba2-f34d-4e6e-bb3a-9a8c1b564233</guid><pubDate>Tue, 18 Aug 2026 09:48:08 +0000</pubDate><atom:updated>2026-08-18T09:48:08.393Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/ggmmfkik/New-Project-2026-08-18T151731.099.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ File image]]></media:title><media:description type="html"><![CDATA[ “கூடுதலாக உழைத்து த.வெ.க.வைப்போல நாங்களும் ஆட்சிக்கு வருவோம்” - அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/ggmmfkik/New-Project-2026-08-18T151731.099.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை எம்.ஆர்.சி. நகரில் நேற்று நடைபெற்ற இந்தியா டுடே கான்கிலேவ் நிகழ்ச்சியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டுப் பேசினார். அப்போது.,</p><h2>சாதி கட்சி அல்ல</h2><p>“பாட்டாளி மக்கள் கட்சியை சாதிக் கட்சி என முத்திரை குத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் சமூக நீதிக்கான கட்சி. பாட்டாளி மக்கள் கட்சி 6 இட ஒதுக்கீடுகளை பெற்று கொடுத்துள்ள கட்சி. தொடர்ந்து சமூக நீதிக்காக எங்கள் இயக்கம் போராடி வருகிறது.</p><p>இதுபோன்ற கொச்சைப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாட்டில் கடந்த அறுபது ஆண்டுகளாக திமுகவும், அதிமுகவும் மாறி ஆட்சி செய்து வந்தார்கள். அதிலிருந்து தமிழக வெற்றிக் கழகத்தின் மூலமாக ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இந்த மாற்றம் என்பது தமிழ்நாட்டு மக்கள் கலந்த 20 ஆண்டு காலமாக எதிர்பார்த்த ஒரு மாற்றம்.</p><p>இந்த மாற்றத்தின் மூலமாக பாட்டாளி மக்கள் கட்சி போன்ற வர துடிக்கும் புதிய கட்சிகளுக்கு நம்பிக்கை பிறந்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது உள்ள சட்டமன்ற உறுப்பினர்களில் பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தான் சிறந்த சட்டமன்ற உறுப்பினர்களாக செயல்பட்டு வருகிறார்கள்.</p><h2>சட்டமன்றத்தில் சிறப்பாக செயல்படும் கட்சி</h2><p>நீங்கள் தமிழ்நாட்டில் எங்கு சென்று யாரை கேட்டாலும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் தான் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு எங்கள் உறுப்பினர்கள் தொடர்ந்து மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளை கொல்லி விவரங்களோடு எடுத்து பேசி வருகிறார்கள். </p><p>2031-ல் பாடி மக்கள் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு நாங்கள் மிகத் தீவிரமாக களப்பணி ஆற்றி வருகிறோம். நிச்சயம் தமிழ்நாட்டு மக்கள் எங்களுக்கு வாய்ப்பு கொடுப்பார்கள் என்ற உறுதியான நம்பிக்கை பிறந்துள்ளது. </p><p>தொகுதி மறுவரையறை  விவகாரத்தை பொருத்த வரையில் நியாயமான தொகுதி மறுவரையறை  வேண்டும் என்பதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு. தமிழ்நாடு மக்கள் தொகையை பொருத்தவரையில் உலக மக்கள் தொகையோடு ஒப்பிடும்போது தனி நாடாக இருந்தால் 25வது பெரிய நாடாக இருந்திருக்கும். </p><h2>தொகுதி மறுவரையறையில் பாமக நிலைப்பாடு</h2><p>நியாயமான தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் 39 எம்பிகளுக்கு பதிலாக 59 எம்பிக்கள் கிடைப்பார்கள். இதன் மூலமாக 20 பெண் எம்பிக்கள் நாடாளுமன்றம் செல்லக்கூடிய நல்ல சூழல் உருவாகும். ஆறரை கோடி மக்கள் இருக்கக்கூடிய இங்கிலாந்து நாட்டில் 650 எம்பிக்கள் இருக்கிறார்கள். </p><p>அங்கு ஒரு லட்சம் பேருக்கு ஒரு எம்.பி. என்ற அடிப்படையில் இருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் 20 லட்சம் மக்களுக்கு ஒரு எம்பி என்ற நிலை இருக்கிறது. 20 லட்சம் பேருக்கு ஒரு எம்பி எப்படி போதுமானதாக இருக்கும்? சீனாவிலே 3000 எம்பிக்கள் இருக்கும்போது, 145 கோடி மக்கள் தொகை இருக்கக்கூடிய இந்தியாவில் ஏன் 543 எம்பிக்கள் மட்டுமே இருக்க வேண்டும்? </p><p>தொகுதி மறுவரையறை என்பது காலத்தின் அவசியம். அது நியாயமாக நடைபெற வேண்டும் என்பதுதான் எங்களுடைய வலியுறுத்தல். மேலும் தான் மத்திய அமைச்சராக இருந்த காலத்தை நினைவுகூர்ந்த அன்புமணி ராமதாஸ், 108 ஆம்புலன்ஸ் திட்டம், தேசிய ஊரக சுகாதார இயக்கம், பொது இடங்களில் புகைபிடிக்கத் தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்ட தாக குறிப்பிட்டார். </p><h2>மீண்டும் மத்திய அமைச்சர்?</h2><p>“பிரதமர் மோடியிடம் என்னை அடுத்த மத்திய சுகாதார அமைச்சராக்குங்கள் என்று கேட்கிறீர்களா?” என ராஜ்தீப் சர்தேசாய் கேள்வி எழுப்ப, அதற்கு அன்புமணி ராமதாஸ் “இல்லை, இல்லை, அப்படி இல்லை”.. எங்களுடைய இலக்கு தமிழ்நாடு தான். தமிழ்நாட்டில் 2031-ல் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் மக்களுக்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வர என்று நாங்கள் உழைத்துக் கொண்டு இருக்கிறோம். </p><p>அதனால் மத்திய அமைச்சர் பதவி எல்லாம் தேவையில்லை என குறிப்பிட்டார். காவிரி நீர் விவகாரம் குறித்து பேசிய அன்புமணி, “நாம் அனைவரும் அரசியல் ரீதியாக நண்பர்கள். தண்ணீரை அடிப்படையாக வைத்து கர்நாடகாவையும் தமிழ்நாட்டையும் பிரிக்க வேண்டாம்” என கேட்டுக்கொண்டார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழர்கள் மீதான தாக்குதலை தடுக்க வேண்டும்- பிரேமலதா வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/premalatha-urges-attacks-on-tamils-must-be-prevented</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/premalatha-urges-attacks-on-tamils-must-be-prevented#comments</comments><guid isPermaLink="false">add2a516-a611-43a5-880b-bf60e683874f</guid><pubDate>Tue, 18 Aug 2026 09:46:12 +0000</pubDate><atom:updated>2026-08-18T09:46:12.571Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,DMDK,தேமுதிக,பிரேமலதா விஜயகாந்த்,premalatha vijayakanth,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/jn75fqqs/premalatha.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரேமலதா விஜயகாந்த்]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரேமலதா விஜயகாந்த்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/jn75fqqs/premalatha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் மீதான தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபையில்</a> இன்று மானியக் கோரிகை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உரையாற்றியதாவது:-</p><p>* பள்ளி, கல்லூரி படிப்பை முடித்து சட்டமன்ற உறுப்பினராக இந்த அவையில் என்னுடைய கருத்துக்களை தைரியமாக நான் பேசுகிறேன் என்றால், என்னுடைய பெற்றோர் மற்றும் கணவர் கேப்டன் அவர்களிடம் இருந்து வந்த தைரியம் தான்.</p><p>* விளையாட்டின் முக்கியத்துவத்தை ஒரு விளையாட்டு வீராங்கனையாக நான் உணர்ந்துள்ளேன்.</p><p>* இளைஞர்களின் எதிர்காலமே நாட்டின் வருங்காலம்.</p><p>* போதையில் இருந்து இளைஞர்களை மீட்க விளையாட்டு அவசியம்.</p><p>* இளைஞர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுத் தருவது விளையாட்டு.</p><p>* கிராமப்புறங்களில் உள்ள விளையாட்டு மைதானங்களை மேம்படுத்த வேண்டும்.</p><p>* சேதமடைந்த மாநில நெடுஞ்சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்.</p><p>* தமிழ்நாடு முழுவதும் உள்ள பாரம்பரிய கட்டிடங்களை மேம்படுத்த வேண்டும்.</p><p>* பல இடங்களில் அரசு அலுவலகங்கள் மிகவும் மோசமாக உள்ளன.</p><p>* விருத்தாசலம் அரசு அச்சகத்தை புனரமைக்க வேண்டும்.</p><p>* அரசு கட்டிடங்கள் தனியார் கட்டிடங்கள் போன்று பராமரிக்கப்பட வேண்டும்.</p><p>* சாலைப்பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்.</p><p>* நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களுக்கு ஓய்வூதிய பலன்களை விரைந்து வழங்க வேண்டும். </p><p>* தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தை கலைத்து அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். </p><p>* அரசு விடுதிகளில் பள்ளி மாணவர்களுக்கு தரமான உணவு தரப்பட வேண்டும். </p><p>* அரசு விடுதிகள் சுத்தம், சுகாதாரம் இல்லாத கட்டிடங்களில் இயங்குகிறது, அதனை சீரமைக்க வேண்டும். </p><p>* தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு போதைப்பொருளே காரணம். </p><p>* இதுபோன்ற கொடூர குற்றங்களுக்கு என்கவுன்டர் மட்டுமே தீர்வு.</p><p>* லாக்அப் மரணங்களில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிதியுதவி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும்.</p><p>* சபரிவர்மன் மட்டுமின்றி பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிதியுதவி, அரசு பணி வழங்க வேண்டும். </p><p>* தமிழர்கள் கொல்லப்படுவது தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய தலைகுனிவாக இருக்கிறது.</p><p>* பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் மீதான தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். </p><p>* அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்றார். </p>]]></content:encoded></item><item><title>காலே டெஸ்ட்: இலங்கை வெற்றிபெற 372 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/srilanka-need-372-runs-to-win-against-india-first-test</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/srilanka-need-372-runs-to-win-against-india-first-test#comments</comments><guid isPermaLink="false">41a463a9-6743-452a-aa6d-bb3887dbcc04</guid><pubDate>Tue, 18 Aug 2026 09:35:43 +0000</pubDate><atom:updated>2026-08-18T09:35:43.752Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rishabh Pant,Devdutt Padikkal,தேவ்தத் படிக்கல்,SLvIND,ரிஷப் பண்ட்,இலங்கை இந்தியா தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/yt8spqof/pant.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rishabh pant]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/yt8spqof/pant.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற 372 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p>இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.</p><p>இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.</p><h2>சதமடித்த படிக்கல்</h2><p>அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 462 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தேவ்தத் படிக்கல் 167 ரன்னும், கே.எல்.ராகுல் 82 ரன்னும், துருவ் ஜுரல் 51 ரன்னும் எடுத்தனர்.</p><p>இலங்கை சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 4 விக்கெட்டும், கேஷரா நுவந்தா 3 விக்கெட்டும், அசிதா பெர்னாண்டோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><h2>சோனல் தினுஷா சதம்</h2><p>தொடர்ந்து ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 284 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் சோனல் தினுஷா 100 ரன்னில் அவுட்டானார். நிரோஷன் டிக்வெலா 80 ரன்னில் ஆட்டமிழந்தார்.</p><h2>மானவ் சுதர் 4 விக்கெட்</h2><p>இந்தியா சார்பில் மானவ் சுதர் 4 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><h2>ரிஷப் பண்ட் அரை சதம்</h2><p>178 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி தொடர்ந்து 2வது இன்னிங்சை தொடர்ந்தது. ரிஷப் பண்ட் மட்டும் தாக்குப்பிடித்து அரை சதம் அடித்து 66 ரன்னில் அவுட்டானார். படிக்கல் 44 ரன்னும், கே.எல்.ராகுல் 35 ரன்னும் எடுத்தனர்.</p><p>இறுதியில், இந்திய அணி 2-வது இன்னிங்சில் 193 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.</p><p>இலங்கை சார்பில் அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட்டும், லஹிரு குமாரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p>இதன்மூலம் 372 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>மரண தண்டனையை விஷ ஊசியால் நிறைவேற்ற உத்தரவிடக்கோரி மனு: &apos;No&apos; சொன்ன உச்சநீதிமன்றம்</title><link>https://www.maalaimalar.com/news/national/less-painful-lethal-injection-for-death-penalty-supreme-court-says-no</link><comments>https://www.maalaimalar.com/news/national/less-painful-lethal-injection-for-death-penalty-supreme-court-says-no#comments</comments><guid isPermaLink="false">dae5db6a-c9de-4c15-8abf-0739f37fa61a</guid><pubDate>Tue, 18 Aug 2026 09:28:59 +0000</pubDate><atom:updated>2026-08-18T09:28:59.018Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,மரண தண்டனை,Death Penalty,உச்சநீதிமன்றம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/gsbw0c7k/SupremeCourt001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உச்சநீதிமன்றம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/gsbw0c7k/SupremeCourt001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் கொடூர குற்றத்திற்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்கப்படுகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் பல விதமாக மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. ஆனால், இந்தியாவில் மரண தண்டனை தூக்கு மூலம் நிறைவேற்றப்படுகிறது. இதனால் இந்தியாவில் மரண தண்டனை தூக்குத் தண்டனையாகவே அழைக்கப்படுகிறது.</p><h2>மரண தண்டனையை வேறு வழியில் நிறைவேற்ற வேண்டும்</h2><p>இந்த நிலையில் வழக்கறிஞர் ரிஷி மல்ஹோத்ரா என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தூக்கு மூலம் தண்டனை நிறைவேற்றப்படுவதற்குப் பதிலாக விஷ ஊசி, துப்பாக்கியால் சுட்டு, மின்சாரம் பாய்ச்சு அல்லது வாயு அறை ஆகிய வழிகளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட பரிந்துரை செய்யலாம்.</p><p>தூக்கு மூலம் தண்டனை நிறைவேற்றுவதன் மூலம் அதிகப்படியான வலி குற்றவாளிக்கு ஏற்படும். இது மனிதாபிமானமற்றது. கொடூரமானது. தூக்கு போட்ட பிறகு, சுமார் 40 நிமிடம் கழித்து அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்படும். இது துப்பாக்கியால் சுட்டு அல்லது விஷ ஊசி செலுத்தி நிறைவேற்றப்பட்டால் 5 நிமிடங்கள் போதுமானது.</p><h2>வலி அதிகமானது தூக்கு</h2><p>மரண தண்டனை விதிக்கப்படும்போது அது மிகக் குறைந்த அளவிலான வேதனையை ஏற்படுத்தும் வகையிலேயே நிறைவேற்றப்பட வேண்டும் என ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என குறிப்பிட்டிருந்தார்.</p><p>வழக்கறிஞர் ரிஷி மல்ஹோத்ரா தாக்கல் செய்த மனு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.</p><p>தூக்கிலிடுவதன் மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதன் அரசியலமைப்பு சட்ட செல்லுபடியை உறுதி செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தற்போதைக்கு நாட்டில் தூக்கிலிடப்படும் முறையே தொடரும் எனத் தெரிவித்தனர்.</p><p>அத்துடன் தங்கள் தீர்ப்பே இறுதியானது அல்ல என்றும், மத்திய அரசு விரும்பினால் மாற்று வழிமுறைகளை ஆய்வு செய்ய நிபுணர் குழு ஒன்றை அமைக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>திமுக பாதையில் தவெக அரசும் பயணிக்கிறதா? - அண்ணாமலை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/annamalai-says-tvk-government-following-dmk-path</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/annamalai-says-tvk-government-following-dmk-path#comments</comments><guid isPermaLink="false">6f621f4b-84e0-4543-af3c-11e6ee48e225</guid><pubDate>Tue, 18 Aug 2026 09:02:27 +0000</pubDate><atom:updated>2026-08-18T09:02:27.912Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,அண்ணாமலை,annamalai,தவெக அரசு,tvk government,வீ தி லீடர்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/gckgrywv/annamalai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Annamalai]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/gckgrywv/annamalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சிறிய விமர்சனங்களுக்குக்கூட வழக்கு, கைது என்ற போக்கு தொடர்வது துரதிருஷ்டவசமானது என்று வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.</strong></em></p><p>வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88">அண்ணாமலை</a> வெளியிட்டுள்ள அறிக்கையில்,</p><p>தமிழக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ev-velu-says-i-acknowledge-that-chief-minister-vijay-is-aware-of-all-the-details">முதலமைச்சர் விஜய்</a> அவர்களின் கவனத்திற்கு,</p><p>திமுக ஆட்சி வீழ்ச்சியடைந்ததற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, ஆளுங்கட்சியினர் என்ற அதிகார போதையில், மக்களின் விமர்சனங்களையும் எதிர்க்கருத்துகளையும் அலட்சியப்படுத்தியதுதான். அதே பாதையில் உங்கள் அரசும் பயணிக்கிறதோ என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது.</p> <p>கடந்த ஒரு மாதத்தில் மட்டும், சமூக வலைத்தளங்களில் உங்கள் கட்சியினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் விமர்சனங்களுக்காக மாற்றுக் கருத்து கொண்ட 25-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. குறிப்பாக, தனது குடும்பத்தை தகாத வார்த்தைகளால் விமர்சித்த தவெக தொண்டருக்கு பதிலளித்த We The Leaders தன்னார்வலர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்திருப்பது கவலைக்குரியது.</p> <p>சமூக வலைத்தளங்களில் தனிநபர் அவதூறு மற்றும் வரம்பு மீறிய பேச்சுகளை கண்காணிப்பது அவசியம்தான். ஆனால், ஆட்சியையும் ஆளும் கட்சியையும் விமர்சிக்கும் ஒவ்வொரு குரலையும் வழக்கு, கைது என்ற அதிகாரத்தின் மூலம் அடக்க முயற்சிப்பது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதல்ல. முதலமைச்சரை மகிழ்விக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் தன்னிச்சையாக செயல்படுவதை நீங்கள் அனுமதிக்கக் கூடாது.</p> <p>நீங்கள் இன்று ஒரு கட்சியின் தலைவர் மட்டுமல்ல; தமிழகத்தின் அனைத்து மக்களுக்கும் பொதுவான முதலமைச்சர். எதிர்க்கருத்துகளும் விமர்சனங்களும் ஜனநாயகத்தின் இயல்பான அங்கங்கள். சிறிய விமர்சனங்களுக்குக்கூட வழக்கு, கைது என்ற போக்கு தொடர்வது துரதிருஷ்டவசமானது. எனவே, இந்தப் போக்கை உடனடியாகத் தடுத்து, ஜனநாயகக் குரல்களுக்கும் விமர்சனங்களுக்கும் உரிய இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தமிழக முதலமைச்சர் திரு <a href="https://x.com/TVKVijayHQ?ref_src=twsrc%5Etfw">@TVKVijayHQ</a> அவர்களின் கவனத்திற்கு,<br><br>திமுக ஆட்சி வீழ்ச்சியடைந்ததற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, ஆளுங்கட்சியினர் என்ற அதிகார போதையில், மக்களின் விமர்சனங்களையும் எதிர்க்கருத்துகளையும் அலட்சியப்படுத்தியதுதான். அதே பாதையில் உங்கள் அரசும் பயணிக்கிறதோ என்ற… <a href="https://t.co/gaAgiDwJcB">pic.twitter.com/gaAgiDwJcB</a></p>&mdash; K.Annamalai (@annamalai_k) <a href="https://x.com/annamalai_k/status/2089610893688758391?ref_src=twsrc%5Etfw">August 18, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>நகர வாழ்க்கையை விட்டு மலை கிராமத்திற்கு சென்ற ஜென் இசட் இளைஞருக்கு கிடைத்த அனுபவங்கள்! </title><link>https://www.maalaimalar.com/news/national/the-experiences-of-a-gen-z-youth-who-left-city-life-for-a-mountain-village</link><comments>https://www.maalaimalar.com/news/national/the-experiences-of-a-gen-z-youth-who-left-city-life-for-a-mountain-village#comments</comments><guid isPermaLink="false">2d5d7047-c15a-4dd4-be6f-4c9f4b19605b</guid><pubDate>Tue, 18 Aug 2026 08:50:28 +0000</pubDate><atom:updated>2026-08-18T08:50:28.722Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜென் இசட்,Gen z,சுற்றுலா,Tourism,வைரல்,viral</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/akm1jt4x/tn-15.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அஜய் சர்மா]]></media:title><media:description type="html"><![CDATA[ அஜய் சர்மா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/akm1jt4x/tn-15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வாழ்க்கை அதிவேகமாக செல்லும் மெட்ரோபோலிடன்களால் களைப்புற்று தொலைதூர பகுதியில் அமைதியான வேலையை தேட பலர்  விரும்புகின்றனர். </p><p>பலர் அப்படி நினைப்பதோடு நிறுத்திக்கொள்ளும் வேலையில் அந்த வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை அறிய ஜென் இசட் <a href="https://www.maalaimalar.com/topic/viral">கண்டெட் கிரியேட்டரான</a> அஜய் சர்மா, டெல்லியின் பரபரப்பான வாழ்க்கையை உதறிவிட்டு இமாச்சல பிரதேசத்தின் மனாலியில் உள்ள மலை கிராமமான சியால் கிராமத்திற்கு இந்த ஆண்டு மே மாதம் இடம்பெயர்ந்தார்.  </p><p>சரியாக 71 நாட்கள்  அங்கு கழித்து ஆகஸ்ட் 2 இல் டெல்லி திரும்பிய அஜய் சர்மா, அங்கு கழித்த நாட்களில் 55 வீடியோக்கள் பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றியுள்ளார். </p><p>தற்போது மீண்டும் டெல்லி திரும்பியுள்ளது பற்றி அவர் ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு மனாலியில்  தான் இருந்த நாட்களை குறித்தும் அங்கிருந்த எளிமையான வாழ்க்கை முறை குறித்தும், சேகரித்த நினைவுகள் குறித்தும் அவர் விவரிக்கிறார்.  </p><h2>புதிய வாழ்க்கை</h2><p>யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் மனாலிக்கு சென்ற புதிதில் பரீட்சயம் இல்லாத சாலைகளும் பரீட்சயமானதாகின. மலைகள் வீட்டில் இருக்கும் உணர்வை தரத் தொடங்கின. மறக்க முடியாத ஞாபகங்கள் கிடைத்தன. </p><p>ஆனால் மீண்டும் டெல்லி திரும்பியபோது நகர வாழ்க்கைக்கு தகவமைத்து கொள்வது கடினமானதாக ஆகிவிட்டது. இரண்டு மாதங்கள் ஒரு இடத்தில் இருந்துவிட்டு அதை விட்டு வருவது இத்தனை கடினமானது என்று நினைக்கவில்லை என கூறுகிறார் அஜய்.</p><p>ஆனால் தொடங்கப்படும் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் இரு முடிவு இருக்கிறது. தற்போது தன் வாழ்வின் புதிய கட்டத்தை தொடங்கியது போல் உள்ளது என்றும் ஒப்புக்கொள்கிறார் அவர்.</p> <h2>அன்றாட செலவுகள்</h2><p>மனாலியின் அந்த கிராமத்தில் ஒரு படுக்கையறை கொண்ட வீட்டில் மாதம் ரூ.14000 வாடகைக்கு (வை பை - கரண்ட் பில் சேர்த்து) செலவழித்திருக்கிறார்.</p><p>செலவை குறைக்க மாதம் ரூ.3500 க்கு பலசரக்கு வாங்கி வீட்டிலேயே சமைத்து சாப்பிட்டிருக்கிறார். சமைக்க தோணாத நாட்களில் வெளியே சாப்பிட வாரம் ரூ.500 மட்டும் ஒதுக்கியிருக்கிறார்.</p><p>உள்ளூரில் உள்ள ஒரு ஜிம்மிலும் அவர் சேர்ந்திருக்கிறார். அதற்கு கட்டணம் ரூ.1800. பேரம் பேசி ரூ.1500 என்று குறைத்திருக்கிறார். எங்கு சென்றாலும் நடந்தே செல்வதால் போக்குவரத்துக்கு பெரிதாக செலவாகவில்லை.</p><p>மொத்தமாக மாதம் அவருக்கு ரூ.21000 தான் செலவாகி உள்ளது.</p> <h2>இடர்பாடுகள்</h2><p>இந்த வாழ்க்கை அவருக்கு முழுவதும் சொர்கமாகவும் இல்லை. மலைக் காட்சி, காலை சூரியோதயம், பச்சைப் பசேல் இடங்களின் ஊடே செல்லும் சாலைகள், உள்ளூர் உணவுகள், நெருப்பை சுற்றி அமர்ந்திருக்கும் புதிய மனிதர்கள் என்பதே அவர் எதிர்பார்ப்பு.</p><p>அதில் பெரும்பாலானவற்றை அவர் பார்த்தபோதும், மலைகளுக்கு சுற்றுலா பயணியாக செல்வது என்பதும் அங்கேயே வாழ்வது என்பதும் முற்றிலும் வேறுபட்டது என்று அவர் உணர்ந்துள்ளார். அதையே அவரை சமூக வலைத்தளத்தில் பின்பற்றிய பலரும் கூறியுள்ளனர்.</p> <p>எந்த நேரத்திலும் இணையம் கிடைக்காமல் போகும். எதிர்பாராத நேரத்தில் மழை பேசியத் தொடங்கும், தானாகவே சமைத்து, அனைத்தையும் நிர்வகிக்க வேண்டும், மழைக்காகதில் சாலைகளின் மோசமான நிலை, சுற்றுலா தலங்களுக்கு நீண்ட மலையேற்றம் செய்ய வேண்டி இருப்பது, நடந்து செல்ல வேண்டியது ஆகியவற்றை அசௌகர்யமாக கருத்தியுள்ளார்.</p><p>டெல்லி திரும்பியதும் ஜூலை 3 அன்று தனது பயணம் குறித்த இந்த வீடியோவை அவர் பதிவிட்டுள்ள நிலையில் இதற்கு பலவிதமான கருத்துக்கள் வந்த வண்ணம் உள்ளன.</p> ]]></content:encoded></item><item><title>மாநில சுயாட்சி குரலை ஓங்கி ஒலிக்க வலியுறுத்தினோம்- முதலமைச்சரை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-meet-cm-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-meet-cm-vijay#comments</comments><guid isPermaLink="false">e44d99a2-a92f-4504-9280-872e15d080f2</guid><pubDate>Tue, 18 Aug 2026 08:42:51 +0000</pubDate><atom:updated>2026-08-18T08:42:51.186Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,thirumavalavan,திருமாவளவன்,vijay,Viduthalai chiruthaigal katchi,tvk,விடுதலை சிறுத்தைகள் கட்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/hh0tmwal/thirumavalavan.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ திருமாவளவன்]]></media:title><media:description type="html"><![CDATA[ திருமாவளவன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/hh0tmwal/thirumavalavan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மாநில சுயாட்சி குரலை ஓங்கி ஒலிக்க வேண்டும், அதனை வலுவாக முன்னெடுக்க வேண்டும் என முதலமைச்சரிடம் வலியுறுத்தினேன்.</strong></em> </p><p>சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/திருமாவளவன்">தொல்.திருமாவளவன்</a> சந்தித்து பேசினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியதாவது:-</p><p>* அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது தொடர்பான தீர்மானத்திற்கு நன்றி தெரிவித்தேன். </p><p>* விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டில் நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை முதலமைச்சரிடம் வழங்கினேன். </p><p>* த.வெ.க. ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆதரவு எப்போதும் உண்டு என முதலமைச்சரிடம் கூறினேன். </p><p>* மக்களின் பார்வையில் தான் முடிவு எடுக்கிறோம், கட்சியின் நலனுக்காக முடிவெடுப்பதில்லை. </p><p>* மாநில சுயாட்சி குரலை ஓங்கி ஒலிக்க வேண்டும், அதனை வலுவாக முன்னெடுக்க வேண்டும் என முதலமைச்சரிடம் வலியுறுத்தினேன். </p><p>* மேகமலை மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என முதலமைச்சரிடம் வலியுறுத்தினேன். </p><p>* போதைப்பொருள் ஒழிப்பில் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது. </p><p>* போதைப்பொருள் ஒழிப்பு அதிரடிப்படையை உருவாக்க முதலமைச்சர் விஜயிடம் கோரிக்கை வைத்தேன். </p><p>* போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த முதலமைச்சர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினேன். </p><p>* த.வெ.க.வுடன் கைகோர்த்துள்ளோம், கூட்டணி அமைச்சரவையில் இணைத்துக்கொண்டுள்ளார்கள். சட்டமன்ற கூட்டத்துக்குப் பின் த.வெ.க. கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெறும். </p><p>* த.வெ.க.வுடன் இணைந்து 100 நாட்கள் தான் ஆகிறது, தொடர்ந்து இணைந்து செயல்படுவோம் என மாநாட்டில் உறுதி செய்துள்ளோம். </p><p>* அமைச்சரவையில் இடம்பெற்றதன் மூலம் விசிகவுக்கும் ஆளுங்கட்சி என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றார். </p>]]></content:encoded></item><item><title>மேற்கு வங்கத்தின் இந்த நகரங்கள் ஆகஸ்ட் 18-இல் இந்தியாவுடன் இணைந்த தினத்தை கொண்டாடுவது ஏன்? - 1947இல் நடந்தது என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/national/india-pakistan-border-confusion-nadia-malda-and-dinajpur-mark-delayed-independence-on-august-18-as-bharat-bhukti-diwas</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-pakistan-border-confusion-nadia-malda-and-dinajpur-mark-delayed-independence-on-august-18-as-bharat-bhukti-diwas#comments</comments><guid isPermaLink="false">439d426f-9d7c-41b7-9fbd-c13b79abb185</guid><pubDate>Tue, 18 Aug 2026 08:39:40 +0000</pubDate><atom:updated>2026-08-18T08:39:40.330Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மேற்கு வங்கம்,இந்தியா பாகிஸ்தான்,Independence Day,சுதந்திர தினம்,west bengal,India-Pakistan,partition,தேசப் பிரிவினை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/cb37hw49/tn-14.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சுதந்திர தினம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சுதந்திர தினம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/cb37hw49/tn-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆகஸ்ட் 14 பாகிஸ்தானும், ஆகஸ்ட் 15 இந்தியாவும் தனது சுதந்திர தினத்தை கொண்டாடியது. இரு நாடுகளுக்கும் இது 80வது சுதந்திர தினம். 1947 <a href="https://www.maalaimalar.com/news/national/partition-horrors-remembrance-day-india-pakistan-division-victims-honoured-and-national-unity-stressed">தேசப் பிரிவினையால்</a> இந்தியா - பாகிஸ்தான் பிரிந்ததன் பின்னணியில் இந்த தேதி வித்தியாசம். </p><p>ஆனால் இந்தியாவின் மேற்கு வங்கத்தில்  உள்ள சில நகரங்கள் மட்டும் வருடந்தோறும் தாமதமாகவே சுதந்திர இந்தியாவில் இணைந்ததை கொண்டாடுகின்றன.</p> <h2>ஏன்?</h2><p>சர் சிரில் ராட்கிளிப் இந்தியா - பாகிஸ்தான் எல்லைக்கோடுகளை வரையறுத்தார்.</p><p>ஒருங்கிணைந்த வங்காளமும் இந்த பிரிவினையால் துண்டாடப்பட்டது. கிழக்கில் இந்தியாவுக்குள் இருக்கும் வங்கம் மேற்கு வாங்கமாகவும், மறுபுறம் பாகிஸ்தானுக்கு சொந்தமானது கிழக்கு பாகிஸ்தானாகவும் பிரிக்கப்பட்டது.</p> <h2>குழப்பம்</h2><p>மேற்கு வங்கத்தின் நாடியா, மால்டா மற்றும் தினாஜ்பூர் (இப்போதைய பெயர்கள்) ஆகிய நகரங்களின் பெரும் பகுதிகள்  தாங்கள் இந்தியாவுக்குள் வருகிறோமா அல்லது கிழக்கு பாகிஸ்தானுக்குள் வருகிறோமா என்பது தெரியாமல் குழம்பின.</p><p>எல்லைக்கோடுகள் எங்கு பிரிக்கப்பட்டுள்ளன என்பது அதிகாரப்பூர்வமாக தெரியாததால், அப்பகுதிகள் கிழக்கு பாகிஸ்தானுடன் இணையக்கூடும் என கருதப்பட்டது. அங்கு 1947 சுதந்திரத்தின்போது பாகிஸ்தான் கொடிகளே ஏற்றப்பட்டன.</p><p>1947, ஆகஸ்ட் 17 மாலை வரை இந்தப் பகுதிகள் எந்த நாட்டிற்கு சொந்தம் என்பதில் பெரும் குழப்பம் நிலவியது.</p> <h2>கொடியேற்றம்</h2><p>அன்றைய தினம் இரவு ஆல் இந்தியா ரேடியோவில், சர் சிரில் ராட்கிளிப் தயாரித்த எல்லைப் வரையறை அறிக்கை வாசிக்கப்பட்டபோது தான், அவை இந்தியாவுக்குள் வருவது தெரியவந்தது.</p><p>நாடியாவின் ஆகிய மெஹெர்பூர், சுவாடங்கா, குஷ்டியா3 உட்பிரிவுகள் மட்டுமே கிழக்கு பாகிஸ்தானுக்கு சென்றன.</p><p>இதனைத் தொடர்ந்து, 1947, ஆகஸ்ட் 18 மதியம், அதாவது இந்தியாவின் பிற பகுதிகள் சுதந்திரம் அடைந்து மூன்று நாட்களுக்குப் பிறகு, அப்பகுதிகளில் பறந்த பாகிஸ்தான் கொடிகள் இறக்கப்பட்டு இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டது.</p><p>இன்றும் இந்த பகுதிகளில் ஆகஸ்ட் 18ஆம் தேதி, 'பாரத் புக்தி திவாஸ்' (பாரதத்துடன் சேர்ந்த நாள்) என்ற பெயரில் சுதந்திர தினமாக கொண்டாடப்படுகிறது.</p><h2>கட்டுக்கதை</h2><p>சர் ராட்க்ளிப் தவறுதலாக இந்துக்கள் அதிகம் வாழும் பகுதிகளை கிழக்கு பாகிஸ்தானுக்கு ஒதுக்கி வரைபடம் வரைந்ததாகவும் அதை அறிந்த வைஸ்ராய் மவுண்ட்பேட்டன் பிரபு, உடனடியாக வரைபடத்தை திருத்தி வரைய உத்தரவிட்டதால் தான் அறிவிப்பு தாமதமானதாகவும் ஒரு கதை கூறப்படுகிறது. ஆனால் அது பொய்யானது என வரலாற்றாய்வாளர்கள் மறுக்கின்றனர்.</p><h2>தாமதம் ஏன்?</h2><p>ராட்கிளிப் தனது எல்லைப் வரையறை அறிக்கையை வைஸ்ராய் மவுண்ட் பேட்டனிடம் ஆகஸ்ட் 12லேயே கையெழுத்திட்டு சமர்ப்பித்துவிட்டார்.</p><p>எல்லைப் பகிர்வை சுதந்திரத்திற்கு முன்பே அறிவித்தால் ஏற்கனவே நடந்து வந்த மதக் கலவரம் தீவிரமடையும் என மவுண்ட் பேட்டன் கருதினார். </p><p>இதனால் ராட்கிளிப் அறிக்கை ஆகஸ்ட் 17 அன்று 'தி கெஸட் ஆப் இந்தியா எக்ஸ்ட்ராஆர்டினரி' இதழில் வெளியிடப்படும் வரை ரகசியமாக வைக்கப்பட்டது.</p><p>எல்லை குறித்த தகவல்கள் இல்லாத அந்த 3 நாட்களில் முஸ்லிம் லீக் தொண்டர்கள் பல இடங்களில் பாகிஸ்தான் கொடிகளை ஏற்றினர்.  ஆகஸ்ட் 17 இந்தியா ரேடியோவில் அறிவிக்கப்பட்ட பின் தெளிவு ஏற்பட்டு ஆகஸ்ட் 18 இந்திய கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன. </p>]]></content:encoded></item><item><title>மும்பையில் இன்ஸ்டாகிராம் நண்பனால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை- 17 வயது சிறுவர்கள் இருவர் கைது!</title><link>https://www.maalaimalar.com/news/national/atrocity-against-14-year-old-girl-by-instagram-friend-in-mumbai</link><comments>https://www.maalaimalar.com/news/national/atrocity-against-14-year-old-girl-by-instagram-friend-in-mumbai#comments</comments><guid isPermaLink="false">14a37b8c-93a7-4333-8646-7b1c2fbca5f1</guid><pubDate>Tue, 18 Aug 2026 08:35:23 +0000</pubDate><atom:updated>2026-08-18T08:35:23.290Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sexual assault,போக்சோ சட்டம்,POCSOAct,MumbaiNews,SocialMediaSafety,InstagramWarning,மும்பை செய்திகள்,இன்ஸ்டாகிராம் எச்சரிக்கை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/mtfuqwic/pocso.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sexual assault of a minor girl]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/mtfuqwic/pocso.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/delhi-schools-major-reforms-vocational-education-class-9-third-language-mandatory">மும்பை</a> பெருநகரப் பகுதிக்கு உட்பட்ட பால்கர் பகுதியில் 14 வயது சிறுமி ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் மூலமாக 17 வயது சிறுவன் ஒருவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூலை 11-ஆம் தேதி, அவசர விஷயமாகப் பேச வேண்டும் எனக் கூறி, அந்தச் சிறுவன் சிறுமியை உள்ளூர் சால் பகுதிக்கு வரவழைத்துள்ளான்.</p><h2>பாலி<strong>யல் அத்துமீறல்</strong></h2><p>சிறுமி அங்கே சென்றபோது, அந்தச் சிறுவனும் அவனது 17 வயது நண்பனும் சேர்ந்து சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், இந்த கொடூர சம்பவத்தை அவர்கள் தங்களது மொபைல் போனில் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். </p><p>இச்சம்பவம் குறித்து வெளியே யாரிடமாவது கூறினால், சிறுமியின் சகோதரனைக் கொன்றுவிடுவதாக இரு சிறுவர்களும் மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அச்சமடைந்த சிறுமி யாரிடமும் இதுபற்றித் தெரிவிக்காமல் அமைதியாக இருந்துள்ளார்.</p><h2>வெளிச்ச<strong>த்திற்கு வந்த</strong> கொடூரம் </h2><p>இந்த நிலையில், கடந்த 15-ஆம் தேதி சிறுமியின் தாய்மாமன் இணையதளத்தில் உலாவிக் கொண்டிருந்த, அச்சிறுமி பாதிக்கப்பட்ட வீடியோவை ஆன்லைனில் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இதுகுறித்து சிறுமியிடம் விசாரிக்கப்பட்டு, காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. </p><p>சிறுமியின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பால்கர் காவல்துறையினர், பாரதிய நியாய சன்ஹிதா, போக்சோ சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குகளைப் பதிவு செய்து, குற்றச் செயலில் ஈடுபட்ட 17 வயது சிறுவர்கள் இருவரையும் கைது செய்து சிறார் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தஞ்சையில் நடந்தது என்ன? வாலிபரை சப்-இன்ஸ்பெக்டர் முதலில் தாக்கினாரா?-வைரல் வீடியோவுக்கு போலீஸ் விளக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/what-happened-in-thanjavur-did-sub-inspector-attack-youth-first-police-clarifies-viral-video</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/what-happened-in-thanjavur-did-sub-inspector-attack-youth-first-police-clarifies-viral-video#comments</comments><guid isPermaLink="false">19c5b92f-7e7d-46f9-8059-58bf071efa54</guid><pubDate>Tue, 18 Aug 2026 08:16:26 +0000</pubDate><atom:updated>2026-08-18T08:16:26.560Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காவல்துறை,Thanjavur,தஞ்சாவூர்,ThanjavurPolice,TamilNaduNews,VCKProtest,தமிழ்நாடுசெய்திகள்,விசிக சாலைமறியல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/nbhkxj9k/tanjay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Thanjavur-VCKProtest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/nbhkxj9k/tanjay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர் ரெயில் நிலையம் அருகே நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தின் போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரைத் தாக்கிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்துச் சமூக வலைதளங்களில் பல கருத்துகள் பரவி வரும் நிலையில், தஞ்சாவூர் மாவட்டக் காவல் துறை அதிகாரப்பூர்வ விளக்கமளித்துள்ளது.</p><h2>விசிகவி<strong>னர் சாலை ம</strong>றியல்</h2><p>தஞ்சை ரெயில் நிலையம் முன்பாக <a href="https://www.maalaimalar.com/news/topnews/alliance-with-tavega-visika-and-tavega-to-journey-together-in-this-political-arena-thirumavalavan">விடுதலைச் சிறுத்தைகள் </a>கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்த நாள் மற்றும் மாநாடு தொடர்பாக அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பேனரை மாநகராட்சி அலுவலர்கள் அகற்றினர். இதைக் கண்டித்து, அகற்றிய பேனரை அதே இடத்தில் மீண்டும் வைக்கக் கோரி விசிகவைச் சேர்ந்த சுமார் 40 பேர் மாநகராட்சி அலுவலகம் எதிரே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.</p><h2>வாக்குவா<strong>தத்தில் முடிந்த ஹா</strong>ரன் சத்தம்</h2><p>போராட்டம் காரணமாகப் போக்குவரத்து ஸ்தம்பித்திருந்த வேளையில், விளார் கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் (26) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் அவ்வழியாக வந்துள்ளார். பணிக்குச் செல்ல தாமதமானதால், அவர் தொடர்ந்து ஹாரன் அடித்து வழி கேட்டுள்ளார். இதனால் ஆகாஷுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் உருவானது.</p><h2>நி<strong>லைமையைக் கட்டுப்படுத்</strong>த முயன்ற காவல் துறை</h2><p>இச்சம்பவம் சட்டம் - ஒழுங்குப் பிரச்சனையாக மாறாமல் தடுக்கும் பொருட்டு, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அப்துல் ரஹீம் தலையிட்டு, ஆகாஷை அமைதிப்படுத்தி அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினார். ஆனால், ஆகாஷ் காவல்துறையினரை நோக்கித் தொடர்ச்சியாக ஒருமையில் மரியாதையற்ற மற்றும் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.</p><h2>காவல் துறை அளி<strong>த்த விளக்க</strong> அறிக்கை</h2><p>சூழ்நிலை மேலும் மோசமடைவதைத் தடுக்கச் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரஹீம் குறைந்தபட்ச பலப்பிரயோகத்தைப் பயன்படுத்தியதாகவும், உடனே ஆவேசமடைந்த ஆகாஷ் அவரது கன்னத்தில் அறைந்ததாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, காவல்துறையினர் ஆகாஷைக் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர்.</p><p>மேலும், ஆகாஷ் மீது ஏற்கனவே தஞ்சை தாலுகா காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு பெண் ஒருவரை தகாத வார்த்தைகளால் பேசிய வழக்கு நிலுவையில் இருப்பதை காவல் துறை சுட்டிக்காட்டியுள்ளது. காவல்துறை தேவையின்றி வாலிபரைத் தாக்கியதாக வரும் தகவல்கள் உண்மைக்கு மாறானவை என்றும், சட்ட ஒழுங்கைப் பராமரிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் காவல் துறை தெளிவுபடுத்தியுள்ளது. தற்போது ஆகாஷ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காவிரி நீர், மேகதாது அணை விவகாரம்: முதல்வர் விஜயை சந்தித்துப் பேச கர்நாடக முதல்-மந்திரி சிவக்குமார் திட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dk-shivkumar-plan-to-meet-tn-cm-vijay-in-chennai-for-south-states-cm-summit</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dk-shivkumar-plan-to-meet-tn-cm-vijay-in-chennai-for-south-states-cm-summit#comments</comments><guid isPermaLink="false">d1d7ad21-b056-43f4-9d38-08276eb2c371</guid><pubDate>Tue, 18 Aug 2026 08:07:46 +0000</pubDate><atom:updated>2026-08-18T08:07:46.062Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DK Shivakumar,டிகே சிவக்குமார்,தமிழக முதல்வர்,tn cm,cm vijay,முதல்வர் விஜய்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/8xroe4kn/tn-cm.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ cm vijay, dk shivkumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/8xroe4kn/tn-cm.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க சென்னை வரும் கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், முதலமைச்சர் விஜயைச் சந்தித்துப் பேச திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.</p><h2>நீடிக்கும் பிரச்சனை</h2><p>காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதேபோல், காவிரி மேலாண்மை வாரியம் சொன்னபடி காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடுவதில்லை. இதனால் 2 மாநிலங்களுக்கு இடையே பிரச்சனை நீடித்து வருகிறது.</p><p>இந்தப் பிரச்சனையை கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாருடன் நேரில் சந்தித்துப் பேசி முடிவு காண  முதலமைச்சர் விஜய் திட்டமிட்டார். இந்தச் சந்திப்பு கடந்த 3-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. </p><p>ஆனால் முதலமைச்சர் விஜய்க்கு எதிராக கன்னட அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. அவரது படத்தின் பேனர்களைக் கிழித்து எறிந்தார்கள். இதனால் பெங்களூரு, மைசூரு உள்பட பல இடங்களில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து, பயணத்தை தவிர்க்கும்படி கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார். இதனால் அந்தச் சந்திப்பு நடைபெறவில்லை.</p> <p>இந்நிலையில், அமித்ஷா தலைமையில்  நடைபெறும் தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நாளை இரவு சென்னை வருகிறார். அவர் மாநாடு நடைபெறும் கோவளம் நட்சத்திர ஓட்டலில் இரவில் தங்குகிறார். மறுநாள் மாநாட்டில் பங்கேற்கிறார். </p><h2>சந்திக்க திட்டம்...</h2><p>இந்தத் தருணத்தில் முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்து இரு மாநிலங்களுக்கு இடையே நிலவும் காவிரி விவகாரம் தொடர்பாக பேசுவதற்கு கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.</p><p>காவிரியில் அறிவித்தபடி கர்நாடக அரசு தண்ணீர் திறக்கவில்லை என சுப்ரீம் கோர்ட் கண்டித்துள்ளது. மேலும், மேகதாது அணை கட்டும் விஷயத்திலும் சிவக்குமார் உறுதியாக இருக்கிறார்.</p><p>ஆனால் மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்திலேயே தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்.</p><p>அதேபோல், காவிரி நீர் தொடர்பாக புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற தீர்மானத்தையும் நிறைவேற்றி இருக்கிறார்.</p><p>இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருவரும் சந்தித்தால் என்ன மாதிரி பலன் கிடைக்கும் என்பது கேள்விக்குறிதான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.</p><h2>எம்.ஜி.ஆர். முதல்...</h2><p>ஏற்கனவே, எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது அப்போதைய கர்நாடக முதல்-மந்திரி குண்டுராவை சந்தித்துப் பேசினார். அதன்பிறகு, 1997-ல் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது சுப்ரீம் கோர்ட் ஆலோசனையின்படி அப்போதைய கர்நாடக முதல்-மந்திரி ஜே.எச்.பாட்டீலைச் சந்தித்துப் பேசினார். அதேபோல், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது 2012-ம் ஆண்டு அப்போதைய கர்நாடக முதல்-மந்திரி ஜெகதீஸ் ஷெட்டரைச் சந்தித்துப் பேசினார். </p><p>இந்தச் சந்திப்புக்கள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளது. இதன் அடிப்படையிலேயே முதலமைச்சர் விஜய் கர்நாடக முதல்-மந்திரியைச் சந்தித்துப் பேசுவது சரியாக இருக்காது என பல எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.</p>]]></content:encoded></item><item><title>டெல்லி பள்ளிகளில் அதிரடி மாற்றம் : 9-ஆம் வகுப்பில் தொழிற்கல்வி... 3-வது மொழி கட்டாயம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-schools-major-reforms-vocational-education-class-9-third-language-mandatory</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-schools-major-reforms-vocational-education-class-9-third-language-mandatory#comments</comments><guid isPermaLink="false">79f89a32-95a0-408f-84ca-b599228627db</guid><pubDate>Tue, 18 Aug 2026 08:03:51 +0000</pubDate><atom:updated>2026-08-18T08:03:51.644Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>delhi,vocational education,டெல்லி,delhi EducationReform,Class9 Assessment,தொழிற்கல்வி கட்டாயம்,Third LanguageMandatory,DoECircular,Advanced MathsScience</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/9w23ajv2/Delhi-EducationReform" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Delhi EducationReform ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/9w23ajv2/Delhi-EducationReform?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/delhi">டெல்லி</a> அரசுப் பள்ளிகளில் பயிலும் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு மற்றும் தேர்ச்சி முறையில் அதிரடி மாற்றங்களை டெல்லி கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் வரும் 2026-27 கல்வியாண்டு முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரவுள்ளன.</p><p>மாணவர்களின் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு அறிவை வளர்க்கும் நோக்கில் இந்த புதிய பாடத்திட்டமும், தேர்வு முறையும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.</p><h2>6 முக்கிய பாடங்கள் கட்டாயம்</h2><p>புதிய கல்வி முறையின்படி, 9-ஆம் வகுப்பு மாணவர்கள் இனி 6 முக்கிய பாடங்களை கட்டாயம் படிக்க வேண்டும். மொழிப்பாடம் - 1, மொழிப்பாடம் - 2, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் மற்றும் தொழிற்கல்வி ஆகிய பாடங்களை கட்டாயம் பயில வேண்டும்.</p><p>மாணவர்கள் 10-ஆம் வகுப்பிற்கு தேர்ச்சி பெறுவதை இந்த 6 முக்கிய பாடங்களின் மதிப்பெண்களே தீர்மானிக்கும். மாணவர்களுக்கு சிறுவயதிலேயே வேலைவாய்ப்பு மற்றும் திறன் சார்ந்த கல்வியை வழங்க தொழிற்கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.</p><h2>3-வது மொழி கட்டாயம்!</h2><p>8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் படித்த அதே மூன்று மொழிகள் கொண்ட கூட்டணியே 9-ஆம் வகுப்பிலும் தொடரும். அதில் ஒரு மொழி 3-வது மொழியாக கருதப்படும்.இந்த 3-வது மொழிக்கான தேர்வு பள்ளி அளவிலேயே நடத்தப்படும். </p><p>மதிப்பெண் சான்றிதழில் மதிப்பெண்களுக்குப் பதிலாக 'தகுதி பெற்றார்' அல்லது 'தகுதி பெறவில்லை' என்பது மட்டும் குறிப்பிடப்படும்.</p><p>இதில் முக்கியமாக 9-ஆம் வகுப்பில் இந்த 3-வது மொழியில் தேர்ச்சி பெறாவிட்டாலும், மற்ற பாடங்களில் தேர்ச்சி பெற்றிருந்தால் மாணவர்கள் 10-ஆம் வகுப்பிற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்படுவார்கள். </p><p>ஆனால்,10-ஆம் வகுப்பில் படிக்கும்போதே 9-ஆம் வகுப்பின் இந்த மொழித்தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். 3-வது மொழியில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.</p><h2>கணிதம், அறிவியலில் புதிய 'Advanced' தேர்வுகள்</h2><p>தற்போது நடைமுறையில் உள்ள 'Mathematics Basic' மற்றும் 'Mathematics Standard' முறைகள் 2026-27 கல்வியாண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு நீக்கப்படுகின்றன. ஆனால், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த பழைய முறை 2026-27-ல் தொடரும்.</p><p>அதற்குப் பதிலாக புதிய முறை அறிமுகமாகிறது. அனைத்து மாணவர்களுக்கும் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் பொதுவான தேர்வு நடத்தப்படும். பாடப்புத்தகத்தைத் தாண்டி, கூடுதல் திறனை வளர்த்துக்கொள்ள விரும்பும் மாணவர்கள் Mathematics Advanced அல்லது Science Advanced (அல்லது இரண்டையும்) தேர்வு செய்து எழுதலாம். இந்த 'Advanced' தேர்வுகள் 25 மதிப்பெண்களுக்கு, 1 மணி நேரம் நடக்கும். </p><p>இதில் சிந்தனைத் திறனை சோதிக்கும் கேள்விகள் கேட்கப்படும். இதில் பெறும் மதிப்பெண்கள் மாணவர்களின் தேர்ச்சிக்கோ அல்லது மொத்த மதிப்பெண் சதவீதத்திற்கோ கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. </p><p>ஆனால், இந்த 'Advanced' தேர்வில் 50% அல்லது அதற்கு மேல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களின் சாதனை அவர்களது மதிப்பெண் சான்றிதழில் தனியாகப் பதிவு செய்யப்படும்.</p><h2>புதிய பாடங்கள் மற்றும் AI அறிமுகம்</h2><p>'சமூகத்தில் தனிநபர்கள்', கலைக் கல்வி, உடற்கல்வி மற்றும் நல்வாழ்வு ஆகிய துறைகளும் பள்ளி அளவிலான மதிப்பீடுகளுடன் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. </p><p>கணினி சிந்தனை மற்றும் செயற்கை நுண்ணறிவு பாடங்கள் 2026-27-ல் ஒரு சிறப்புப் பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் 2027-28 கல்வியாண்டு முதல் கட்டாயப் பாடமாக மாற்றப்படும்.</p><h2>தேர்ச்சி பெறுவதற்கான புதிய விதிகள் என்ன?</h2><p>9-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 10-ஆம் வகுப்பிற்குச் செல்ல மாணவர்கள் 6 முக்கிய பாடங்களிலும், அகமதிப்பீடு மற்றும் எழுத்துத் தேர்வு ஆகிய இரண்டிலும் தனித்தனியாகக் குறைந்தது 33% மதிப்பெண்கள் பெற வேண்டும். ஆண்டு இறுதித் தேர்வில் மட்டும் குறைந்தது 25% மதிப்பெண்கள் எடுத்திருப்பது அவசியமாகும்.</p><h2>தோல்வி அடைந்தால் என்ன நடக்கும்?</h2><p>6 முக்கிய பாடங்களில் 3 பாடங்கள் வரை தோல்வி அடையும் மாணவர்கள், துணைத் தேர்வு எழுத தகுதியுடையவர்கள் ஆவர். துணைத் தேர்விலும் தேர்ச்சி பெறாதவர்கள் அல்லது தேர்ச்சி பெற முற்றிலும் தகுதி இல்லாத மாணவர்கள் 'Essential Repeat' (கட்டாய மறுபடி) பிரிவின் கீழ் வைக்கப்பட்டு, மீண்டும் அதே 9-ஆம் வகுப்பிலேயே படிக்க நேரிடும்.</p>]]></content:encoded></item><item><title>மானியக் கோரிக்கையில் எழுந்த நீட் தேர்வு விவகாரம்: காங்., பாஜக உறுப்பினர்கள் சொன்னது என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/neet-exam-issue-congress-vs-bjp-members-arguments</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/neet-exam-issue-congress-vs-bjp-members-arguments#comments</comments><guid isPermaLink="false">fd7f7e50-6457-47cb-9230-7f888f04064f</guid><pubDate>Tue, 18 Aug 2026 07:52:03 +0000</pubDate><atom:updated>2026-08-18T07:52:03.361Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,Congress,காங்கிரஸ்,தமிழக சட்டசபை,நீட் தேர்வு,Neet exam,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/6w4e0udr/NEET.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காங்கிரஸ் எம்.எல்.ஏ. தாரகை கத்பட்- பா.ஜ.க. எம்.எம்.எல்.ஏ. போஜராஜன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/6w4e0udr/NEET.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அனைத்து திட்டங்களையும் திருத்திக்கொண்டு இருக்கும்போது மாணவர்களுக்கான இந்த திட்டத்தை திருத்துவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? என கேள்வி எழுப்பினார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழக சட்டசபையில்</a> இன்று மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தாரகை கத்பட் பேசுகையில், </p><p>* எனது வெற்றிக்கு உழைத்த கூட்டணி கட்சியினருக்கு நன்றி.</p><p>* ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கொடுத்து, கூட்டணி கட்சிக்கு மரியாதை தந்தவர் விஜய்.</p><p>* தவெக பட்ஜெட் ஏழை, எளிய மக்களுக்கான பட்ஜெட்.</p><p>* தமிழகத்திற்கான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும்.</p><p>* காலை உணவுத்திட்டத்திற்கு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kamarajar-name-row-opposition-and-minister-spar-over-renaming-cm-breakfast-scheme-in-tamil-nadu-assembly">காமராஜர்</a> பெயர் சூட்டியதற்கு நன்றி. </p><p>* காங்கிரஸ் திட்டங்களை மாற்றும் பாஜக, நீட் தேர்வை ஏன் மாற்றவில்லை?</p><p>* 100 நாள் வேலைத்திட்டத்தை நிறுத்துவதற்கு பாஜக முயற்சி செய்கிறது.</p><p>* இருமொழிக் கொள்கையை பாதுகாப்பதிலும் காங்கிரஸ் உறுதியாக இருக்கும்.</p><p>* IREL அரிய வகை கனிம நிறுவனத்தால் கடல் அரிப்பு, கடற்கரை சுருங்கி விட்டது.</p><p>* சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு காங்கிரஸ் சார்பில் வரவேற்கிறேன். </p><p>* மீனவர்கள் கைது பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.</p><p>* கடலில் காணாமல் போகும் மீனவர்களை மீட்க கடல் ஆம்புலன்ஸ் தேவை.</p><p>* பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மிகப்பெரிய சவாலாக உள்ளன. இரும்புக்கரம் கொண்டு குற்றங்களை அரசு அடக்க வேண்டும்.</p><p>* குளச்சல் தொகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.</p><p>* தாமிரபரணி, கோதையாறு, பரளியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் தேவை.</p><p>* கன்னியாகுமரியில் உள்ள அனைத்து குளங்களையும் இணைக்க வேண்டும் என்றார். </p><p>இதனை அடுத்து பேசிய பா.ஜ.க. எம்.எம்.எல்.ஏ. போஜராஜன், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தான் நீட் வந்தது என தாரகை கத்பட் கூறி விட்டார் என்றார். </p><p>அதற்கு  பதில் அளித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. தாரகை கத்பட், </p><p>* நீட் எந்தெந்த மாநிலத்திற்கு தேவையோ அந்த மாநிலத்திற்கு கொண்டு வரலாம் என்று தான் சொன்னோம்.</p><p>* காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த ஒவ்வொரு சட்டத்தையும் பில் திருத்தம் என்ற பெயரில் அனைத்து சட்டத்தையும் பாஜக அரசு திருத்திக்கொண்டு இருக்கிறது.</p><p>* மக்களுக்கு எது தேவையோ அதை காங்கிரஸ் ஆட்சியில் நாங்கள் கொண்டு வந்தோம்.</p><p>* அனைத்து திட்டங்களையும் திருத்திக்கொண்டு இருக்கும்போது மாணவர்களுக்கான இந்த திட்டத்தை திருத்துவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? என கேள்வி எழுப்பினார். </p>]]></content:encoded></item><item><title>முற்றிலும் மாறுபட்ட உலகத்தைக் கண்டேன்: இந்தியாவின் கல்வி மற்றும் பண்பாட்டைப் பாராட்டிய ஜிம்பாப்வே இளைஞர்!</title><link>https://www.maalaimalar.com/news/national/i-saw-a-completely-different-world-zimbabwean-youth-praises-indias-education-and-culture</link><comments>https://www.maalaimalar.com/news/national/i-saw-a-completely-different-world-zimbabwean-youth-praises-indias-education-and-culture#comments</comments><guid isPermaLink="false">4ae704c0-eab5-430a-9263-67b5eba003eb</guid><pubDate>Tue, 18 Aug 2026 07:49:23 +0000</pubDate><atom:updated>2026-08-18T07:49:23.261Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,ஜிம்பாப்வே,Zimbabwean,India&apos;s medical sector,இந்திய மருத்துவத் துறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/m2phmwrk/india.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Zimbabwean ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/m2phmwrk/india.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கத்திய நாடுகளைத் தாண்டி தரமான கல்வியும், வாழ்க்கையை மாற்றும் வாய்ப்புகளும் இந்தியாவில் நிறைந்துள்ளன என்பதைத் தனது அனுபவத்தின் மூலம் உணர்ந்துள்ளதாகக் கூறுகிறார் ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த கலும்பா முவாலே.</p><h2>வாய்ப்புகளை க<strong>ண்டு வியப்பு</strong></h2><p>உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்ல நினைப்பவர்கள் பெரும்பாலும் அமெரிக்கா, பிரிட்டன், கனடா அல்லது ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளையே முதன்மையாகத் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், <a href="https://www.maalaimalar.com/news/national/aadi-month-over-wife-mother-in-law-surprise">இந்தியா</a>வுக்கு உயர்கல்விக்காக வந்த கலும்பா முவாலே, இங்குள்ள வாய்ப்புகளைக் கண்டு வியப்படைந்துள்ளார். </p><p>தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஜிம்பாப்வேவில் பல்கலைக்கழகங்களில் சேருவது மிகவும் கடினமானது மற்றும் கடுமையான போட்டி நிறைந்தது என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் பல்வேறு கட்டண அமைப்புகளில், எண்ணற்ற பாடப் பிரிவுகளுடன் நூற்றுக்கணக்கான கல்லூரிகள் செயல்பட்டு வருவதை அவர் பாராட்டியுள்ளார். உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்தியாவில் பயின்று வருவதைக் கண்டு தான் ஆச்சரியப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>உலகத்த<strong>ரம் வாய்ந்த மருத்</strong>துவம் </h2><p>கல்வியைத் தவிர இந்தியாவின் மருத்துவத் துறை மற்றும் உணவு முறையையும் அவர் வெகுவாகப் பாராட்டியுள்ளார். ஜிம்பாப்வே நாட்டில் சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் பெறுவது கடினம் மற்றும் அதிக செலவு பிடிக்கக்கூடியது என்றும், ஆனால் இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த உயர்தர சிகிச்சை மிக எளிதாகக் கிடைக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p>உணவு முறையைப் பொறுத்தவரை, ஜிம்பாப்வேயில் சாட்சா, அரிசி சாதம் மற்றும் காரத்திற்காக மிளகாய் மட்டுமே சேர்க்கப்பட்ட உணவுகள் பிரதானமாக இருக்கும். ஆனால் இந்தியாவில் தினமும் ஒரு புதிய சுவையை அனுபவிக்க முடியும் என்றும், சுவைகளின் பிரம்மாண்ட உலகமே இந்தியாவில் உணவில் நிறைந்துள்ளது என்றும் அவர் நெகிழ்ச்சியடைந்துள்ளார்.</p><h2>இணைய<strong>வாசிகளின் வரவே</strong>ற்பு</h2><p>கலும்பா முவாலே பகிர்ந்துள்ள இந்த வீடியோ 53 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவிற்கு கருத்து தெரிவித்துள்ள பல இந்திய இணையவாசிகள், அவருக்கு நெகிழ்ச்சியான வரவேற்பை அளித்து வருகின்றனர். "அன்பும் பரபரப்பும் நிறைந்த இந்தியாவிற்கு உங்களை வரவேற்கிறோம், உங்கள் இந்திய வாழ்க்கையை மகிழ்ச்சியாகக் கழிப்பீர்கள் என்று நம்புகிறோம்" எனப் பலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item></channel></rss>