<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 22 Jul 2026 03:52:33 +0000</lastBuildDate><item><title>தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது! - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadhav-arjuna-crushing-of-democracy-in-capital-strongly-condemnable</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadhav-arjuna-crushing-of-democracy-in-capital-strongly-condemnable#comments</comments><guid isPermaLink="false">e304f00c-5c9d-4469-99ff-20689993bb60</guid><pubDate>Wed, 22 Jul 2026 03:47:54 +0000</pubDate><atom:updated>2026-07-22T03:47:54.782Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆதவ் அர்ஜூனா,Aadhav Arjuna,நீட் தேர்வு,Neet exam,CJP Protest</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-25/l38tsaej/AadhavArjuna.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆதவ் அர்ஜூனா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-25/l38tsaej/AadhavArjuna.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>டெல்லியில் நடைபெற்ற இளைஞர்களின் அறவழிப் போராட்டத்துக்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டிருப்பது ஜனநாயக உரிமைகள் மீதான அப்பட்டமான தாக்குதல் என்று  அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.</strong></em></p><p>பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BE">ஆதவ் அர்ஜூனா</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p> <p>'நீட் தேர்வு' என்ற தகுதித் தேர்வு மருத்துவ மாணவர்களுக்கு கொண்டுவரப்படும் என்ற அறிவிப்பு வந்தபோதே, அதற்கான முதல் எதிர்ப்புக் குரல் தமிழகத்தில் இருந்துதான் ஒலித்தது; தொடர்ந்து தமிழகத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. </p><p>தமிழகத்தின் எதிர்ப்புக் குரலை இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் எதிரொலிக்கிறது. அகில இந்திய அளவில் மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிரான அறப் போராட்டங்களை ஜனநாயக வழியில் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.</p> <p>அந்த மாணவர்களின் அறவழிப் போராட்டத்தின் நியாயங்களை உணராமல் அவர்களை குண்டுக்கட்டாகத் தூக்கியும், கடுமையாகத் தாக்கியும் ஒன்றிய அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. </p><p>அதேபோல், டெல்லியில் நடைபெற்ற இளைஞர்களின் அறவழிப் போராட்டத்துக்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் <a href="https://www.maalaimalar.com/news/national/rahul-priyanka-released-from-detention-as-congress-staged-protest-at-lok-kalyan-marg">பிரியங்கா காந்தி</a> அவர்களும் டெல்லி காவல்துறையால் இழுத்துச்செல்லப்பட்டும் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றும் கைது செய்யப்பட்டிருப்பது ஜனநாயக உரிமைகள் மீதான அப்பட்டமான தாக்குதல்; வன்மையான கண்டனத்திற்குரிய செயல். </p> <p>மாணவர்களின் நலனுக்கு எதிராக ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வை எதிர்த்து, எழுச்சிமிக்க போராட்டத்தை முன்னெடுக்கும் மாணவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, ஒன்றிய அரசு உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.</p><p>அதுபோல், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். </p> <p>நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ஒவ்வொரு அடியையும் மிக உறுதியாக எடுத்து வைப்போம். மாணவர்கள் நலனுக்கும், மாணவர்கள் உரிமைக் குரலுக்கும் என்றும் துணையிருப்போம்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சர்வதேச கிரிக்கெட் ஓய்வுக்குப் பின் புதிய அத்தியாயம்: டர்ஹாம் அணிக்காக அபார சதமடித்து பென் ஸ்டோக்ஸ் சாதனை!</title><link>https://www.maalaimalar.com/sports/ben-stokes-century-for-durham</link><comments>https://www.maalaimalar.com/sports/ben-stokes-century-for-durham#comments</comments><guid isPermaLink="false">d8fccff6-2848-4a27-ac79-14e931fe982c</guid><pubDate>Wed, 22 Jul 2026 03:40:04 +0000</pubDate><atom:updated>2026-07-22T03:40:04.073Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Ben Stokes,பென் ஸ்டோக்ஸ்,Durham,Derbyshire,டர்ஹாம்,டெர்பிஷைர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/htuchq5c/ben.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ben Stokes]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/htuchq5c/ben.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த சில நாட்களிலேயே, இங்கிலாந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் உள்நாட்டுப் போட்டியில் களமிறங்கி தன்னுள் இன்னும் ஆட்டம் மீதமுள்ளது என்பதை நிரூபித்துள்ளார்.</p><p>இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டின் 'ஒன்-டே கப்' தொடரில் டெர்பி  நகரில் நடைபெற்ற போட்டியில், டர்ஹாம் மற்றும் டெர்பிஷைர் அணிகள் மோதின. சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு தனது முதல் போட்டியில் களமிறங்கிய ஸ்டோக்ஸ், ஆட்டமிழக்காமல் '108 ரன்கள்' குவித்து டர்ஹாம் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்.</p><h2><strong>12 ஆண்டுகளுக்குப் பிறகு:</strong></h2><p>டர்ஹாம் அணிக்காக 50-ஓவர் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் விளையாடிய முதல் போட்டி இதுவாகும். பேட்டிங்கிற்கு முன் பந்துவீச்சிலும் அசத்திய ஸ்டோக்ஸ், 9 ஓவர்கள் வீசி 38 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து சிக்கனமாக பந்துவீசினார் (0/38). 257 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய டர்ஹாம் அணி, 98 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. </p><p>அப்போது களமிறங்கிய ஸ்டோக்ஸ் அணியை பொறுப்புடன் வழிநடத்தினார். ஆட்டத்தின் இடையே தசைப்பிடிப்பு ஏற்பட்ட போதிலும், கடைசி வரை களத்தில் நின்று 123 பந்துகளில் 108 ரன்கள் (10 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) விளாசி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.</p><h2><strong>போட்டி முடிவு:</strong></h2><p>முதலில் பேட்டிங் செய்த டெர்பிஷைர் அணி 50 ஓவர்களில் 256/9 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு ஆடிய டர்ஹாம் அணி 49.1 ஓவர்களில் 257/5 ரன்கள் எடுத்து, 5 பந்துகள் மீதமிருந்த நிலையில் அபார வெற்றி பெற்றது.</p><h2><strong>சர்வதேச ஓய்வும் உருக்கமான விடைபெறலும்:</strong></h2><p>நியூஸிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஸ்டோக்ஸ் அறிவித்திருந்தார். தனது 15 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் பயணத்தைக் குறித்து அவர், "இது ஒரு மறக்க முடியாத 15 ஆண்டு கால பயணம். உச்சக்கட்ட மகிழ்ச்சி, ஏற்ற இறக்கங்கள் என அனைத்தையும் கண்டேன். </p><p>என் மீதும், இங்கிலாந்து அணி மீதும் அன்பு செலுத்திய அனைத்து ரசிகர்களுக்கும், உடன் விளையாடிய வீரர்களுக்கும் என் நன்றிகள்." என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார்.</p><h2><strong>பென் ஸ்டோக்ஸின் சர்வதேச சாதனைகள்:</strong></h2><h3><strong>டெஸ்ட் போட்டிகள்:</strong></h3><p> 122 போட்டிகள் (44 போட்டிகளில் கேப்டன்), 7,000+ ரன்கள் மற்றும் 200+ விக்கெட்டுகள்.</p><h3><strong>ஒருநாள் &amp; டி20:</strong></h3><p> 114 ஒருநாள் போட்டிகள் மற்றும் 43 T20I போட்டிகளில் இங்கிலாந்து அணியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.</p><p>தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகியிருந்தாலும், கவுண்டி போட்டிகளில் தனது முத்திரையைப் பதித்து ரசிகர்களை மீண்டும் உற்சாகப்படுத்தியுள்ளார் ஸ்டோக்ஸ்!</p> ]]></content:encoded></item><item><title>10,000mAh பேட்டரியுடன் விரைவில் அறிமுகமாகும்  புது ஸ்மார்ட்போன்</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/oppo-a7-pro-max-is-tipped-to-feature-a-10000mah-battery</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/oppo-a7-pro-max-is-tipped-to-feature-a-10000mah-battery#comments</comments><guid isPermaLink="false">eabf7b6b-855f-4773-bc7c-8728ed95f2d6</guid><pubDate>Wed, 22 Jul 2026 03:37:00 +0000</pubDate><atom:updated>2026-07-22T03:37:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>OPPO,ஒப்போ,smartphone,ஸ்மார்ட்போன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/eyva74xj/oppo-phn.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ OPPO Smartphone]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/eyva74xj/oppo-phn.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஒப்போ நிறுவனத்தின் முற்றிலும் புதிய A7 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. பிரபல டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டுள்ள தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போன் தற்போது உருவாக்கப்பட்டு வருவதாகவும், இதில் அதிகபட்சம் 10,000mAh பேட்டரி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். </p><p>இது உண்மையாகும் பட்சத்தில் இத்தனை பெரிய கேமரா சென்சார் கொண்ட முதல் ஒப்போ ஸ்மார்ட்போனாக இது இருக்கும். முன்னதாக கடந்த ஜூன் மாத வாக்கில் வெளியான தகவல்களிலும், ஒப்போ நிறுவனம் 10,000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக கூறப்பட்டது.</p><p><strong>அம்சங்கள்:</strong></p><p>தற்போது லீக் ஆகி இருக்கும் தகவல்களின் படி ஒப்போ A7 ப்ரோ மேக்ஸ் மாடலில் 6.78 இன்ச் ஃபிளாட் AMOLED டிஸ்ப்ளே, 1.5K ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 5 பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது.</p><p>இத்துடன் இந்த ஸ்மார்ட்போன் 10,000mAh பேட்டரி, 80 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அளவில் பெரிய பேட்டரி வழங்கப்படும் போதிலும், இந்த ஸ்மார்ட்போன் 8.47mm தடிமனாக இருக்கும் என்றும் இதன் எடை 226 கிராம்கள் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. ஒப்பிட்டளவில் இது ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடலை விட மெல்லியதாக இருக்கும்.</p><p>புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP லென்ஸ் மற்றும் 50MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதன் மூலம் ஒப்போ நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் மூலம் ஃபிளாக்ஷிப் தர கேமரா அனுபவத்திற்கு மாற்றாக நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்குவதில் அதிக கவனம் செலுத்துவதாக தெரிகிறது.</p><p>முதற்கட்டமாக ஒப்போ A7 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. எனினும், இந்த ஸ்மார்ட்போன் மற்ற சந்தைகளில் வெளியாவது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.</p>]]></content:encoded></item><item><title>வார விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1,635 சிறப்பு பஸ்கள் இயக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/1635-special-bus-running-across-tamilnadu-for-weekly-holidays</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/1635-special-bus-running-across-tamilnadu-for-weekly-holidays#comments</comments><guid isPermaLink="false">17db2fd0-85e3-44f9-bfc2-bb776d17dd23</guid><pubDate>Wed, 22 Jul 2026 03:29:15 +0000</pubDate><atom:updated>2026-07-22T03:29:15.790Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு பஸ்கள்,TN Govt,தமிழக அரசு,special bus</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/m8a8j7wp/Buskilampakkam.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ சிறப்பு பஸ்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ சிறப்பு பஸ்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/m8a8j7wp/Buskilampakkam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு, பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு தடையின்றி பயணம் செய்ய வசதியாக, சென்னையில் உள்ள முக்கிய பேருந்து நிலையங்கள் மற்றும் தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களில் இருந்து <a href="https://www.maalaimalar.com/topic/சிறப்பு-பஸ்கள்">சிறப்பு பேருந்துகள்</a> இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பொது மேலாளர் (இயக்கம்) ஜெரோலின் லிஸ்பன் சிங் தெரிவித்துள்ளார்.</p><p>பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, வரும் 24 (வெள்ளிக்கிழமை) மற்றும் 25 (சனிக்கிழமை) ஆகிய தேதிகளில் இயக்கப்படவுள்ள சிறப்பு பேருந்துகளின் விவரம் பின்வருமாறு:-</p><h2><strong>கிளாம்பாக்கம்</strong></h2><p>வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று 395 பஸ்களும், 25-ந் தேதி (சனிக்கிழமை) 330 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><h2><strong>கோயம்பேடு</strong></h2><p>சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 24-ந் தேதி வெள்ளிக்கிழமை 120 பஸ்களும், 25-ந் தேதி சனிக்கிழமை 120 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><h2><strong>மாதவரம்</strong></h2><p>மாதாவரத்திலிருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, போளூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு 24 மற்றும் 25-ந் தேதிகளில் தலா 25 பஸ்களும் சிறப்பு பஸ்களாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 420 சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.</p><h2><strong>அறிவுறுத்தல்</strong></h2><p>வார இறுதி நாட்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால், கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க பயணிகள் தங்களது பயணங்களை முன்னரே திட்டமிட்டு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை (23.07.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-31</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-31#comments</comments><guid isPermaLink="false">bb0fe696-1890-43f3-b29f-4ae83e0d7d9e</guid><pubDate>Wed, 22 Jul 2026 03:14:38 +0000</pubDate><atom:updated>2026-07-22T03:14:38.858Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மின்தடை,TNEB,மின்சார வாரியம்,Power Cut,தமிழ்நாடு மின்சார வாரியம்,சென்னையில் மின்தடை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/mxc8pspa/powercut0.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/mxc8pspa/powercut0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் <a href="https://www.maalaimalar.com/topic/சென்னையில்-மின்தடை">மின் தடை</a> செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><p>அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (23.07.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.  அதன்படி, </p><h2><strong>அயப்பாக்கம்</strong></h2><p>ஐ.சி.எப் காலனி, செல்லியம்மன் நகர், கங்கை சாலை, காவேரி தெரு, டி.என்.எச்.பி. கட்டம் I முதல் III வரை, திருவேற்காடு பிரதான சாலை, அம்பத்தூர், வானகரம் சாலை, அத்திப்பட்டு, பாரதி மேடு தெரு, தினேஷ் தெரு, ரோஜா தெரு, குப்பம், கே.எஸ்.ஆர். நகர், வி.ஜி.என். சாந்தி நகர், மதுரவாயல், செட்டியார் தெரு, விஜயா நகர், பச்சையப்பா நகர், சென்னை நியூ சிட்டி, ஈடன் அவென்யூ, கொன்ராஜ் குப்பம், அக்கிரஹாரம், தேவி நகர், சின்ன கோலடி, ஜோதி நகர், மூன்று நகர், எழில் நகர், அண்ணனூர்.</p><h2><strong>அடையாறு</strong></h2><p>சாஸ்திரி நகர், எல்.பி. சாலை, கலாஷேத்ரா சாலை, ஆர்.கே.நகர், ஸ்ரீராம் நகர், சாந்தி அவென்யூ, சிவசுந்தர் அவென்யூ.</p><h2><strong>பாரிவாக்கம்</strong></h2><p>அணைகட்டுசேரி, காவல்சேரி, சோரன்சேரி, சித்துகாடு, திருமணம், அமுதுர்மேடு, வயலானல்லூர், திருகோவில்பத்து.</p><h2><strong>பள்ளிக்கரணை</strong></h2><p>200 அடி ரேடியல் சாலை, ராம் நகர் தெற்கு விரிவாக்கம், நாராயணபுரம், வி.ஜி.பி. ராஜேஷ் நகர், கணேஷ் அவென்யூ, வி.எம். சாலை, ஜெயின் அபார்ட்மெண்ட், ரமணியம் ஓஷன் டியூ அபார்ட்மெண்ட், சர்வம் அபார்ட்மெண்ட்.</p><h2><strong>சித்தாலப்பாக்கம்</strong></h2><p>மாம்பாக்கம் பிரதான சாலை, பாபு நகர், நீலா நகர், விமலா நகர், பிரின்ஸ் கல்லூரி சாலை, சிவகாமி நகர், நல்லதம்பி நகர், அண்ணா சாலை, நெசவாளர் நகர், பச்சையம்மன் கோவில் தெரு, பத்மாவதி நகர், மகேஸ்வரி தெரு.</p><h2><strong>கவுரிவாக்கம்</strong></h2><p>சாந்தி நகர், சிவகாமி நகர், பழனியப்பா நகர், சந்தானம்மாள் நகர், வேளச்சேரி பிரதான சாலை, எஸ்.ஐ.வி.டி. கல்லூரி.</p><h2><strong>கே.கே. நகர்</strong></h2><p>கன்னிகாபுரம் 1-வது முதல் 3-வது தெரு வரை, விஜயராகவபுரம் 1-வது முதல் 5-வது தெரு வரை மற்றும் குறுக்குத் தெரு, பீரான்சாஹிப் தெரு, ஆற்காடு சாலை, ராஜமன்னார் சாலை, சத்யா கார்டன், சாஸ்த்ரா கல்லூரி, ஏ.வி.எம். அஸ்டா, ஏ.வி.எம். ஸ்டுடியோ, கபெல்லா, குமரன் காலனி பிரதான சாலை, சாலிகிராமம், 80 அடி சாலை, ராணி அண்ணா நகர், பி.டி. ராஜன் சாலை, 14-வது மற்றும் 15-வது செக்டர், கே.கே. நகர் 94-வது முதல் 104-வது தெரு வரை, எஸ்.எஸ்.பி. நகர், எஸ்.வி. லிங்கம் சாலை, அழகர்பெருமாள் கோவில் தெரு, விஜயா தெரு, ஒட்டகப்பாளையம்.</p><h2><strong>செம்பரம்பாக்கம்</strong></h2><p>பெங்களூர் நெடுஞ்சாலை, நசரத்பேட்டை சந்திப்பிலிருந்து ஓட்டல் நெடுஞ்சாலை வரை.</p><h2><strong>குமணன்சாவடி</strong></h2><p>பூந்தமல்லி புற வழிச்சாலை, அம்பாள் நகர், ஆவடி சாலை, சென்னீர்குப்பம், மேட்டு தெரு.</p><h2><strong>தாம்பரம்</strong></h2><p>சி.டி.ஓ. காலனி, சசிவரதன் நகர், எப்.சி.ஐ. நகர், காசா கிராண்ட், குட்வில் நகர், மூகாம்பிகை நகர், பாரதி நகர், ராமகிருஷ்ணா நகர், சிட்லபாக்கம் ராமகிருஷ்ணா நகர் 1-வது முதல் 6-வது தெருக்கள் வரை, பாம்பன் சாமிகள் சாலை, ஐ.சி.ஐ.சி.ஐ., வைத்தியலிங்கம் சாலை, எம்.எம்.டி.ஏ. நகர், சர்மா நகர், முனியாத்தி தெரு, பிரதாப் அவென்யூ, ஆபிரகாம் லிங்கன் தெரு, நசீப் அவென்யூ, மருதுபாண்டியர் தெரு, பாபு தெரு.</p><h2><strong>ஆவடி</strong></h2><p>திருமலைவாசன் நகர், அசோக் நகர், பூம்பொழில் நகர், கன்னடபாளையம், பாரதி நகர், திருமுல்லைவாயல் சாலை, ராமகிருஷ்ணா நகர்.</p><h2><strong>பல்லாவரம்</strong></h2><p>ராஜாஜி நகர், சக்தி நகர், சஞ்சய் காந்தி நகர், நார்த் செயின்ட் மேரிஸ் சாலை, பி.வி. ஆச்சாரியா தெரு, சரோஜினி தெரு, ஜவாது உசேன் தெரு, சுந்தரேசன் தெரு, எத்திராஜ் தெரு, சாலமன் தெரு.</p>]]></content:encoded></item><item><title>போராடுவோரை கைது செய்வது நீட் விஷயத்தில் ஆளுங்கட்சியின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது  - உதயநிதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-arresting-protesters-reveals-ruling-partys-double-standard-regarding-neet</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-arresting-protesters-reveals-ruling-partys-double-standard-regarding-neet#comments</comments><guid isPermaLink="false">91442214-ee55-44a5-8277-59db325e174b</guid><pubDate>Wed, 22 Jul 2026 03:01:07 +0000</pubDate><atom:updated>2026-07-22T03:01:07.424Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Udhayanidhi Stalin,உதயநிதி ஸ்டாலின்,நீட் தேர்வு,Neet exam,CJP Protest</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/idg85s8p/udhayanidhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Udhayanidhi Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/idg85s8p/udhayanidhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>‘நீட்’ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றம் நோக்கி செல்ல முயன்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து, சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ததற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.</strong></em></p><h2>நீட் தேர்வில் குளறுபடி</h2><p>'நீட்' தேர்வில் நடைபெற்ற குளறுபடிகளை கண்டித்தும், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நேற்று முன்தினம் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். இந்த சம்பவத்தை கண்டித்தும், 'நீட்' தேர்வுக்கு எதிராகவும் சென்னை தியாகராயநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பாலன் இல்ல வளாகத்தில் அமர்ந்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் முழக்க போராட்டத்தை முன்னெடுத்து உள்ளனர்.</p><h2>தர்ணா போராட்டம்</h2><p>இதற்கிடையே டெல்லியில் 'நீட்' தேர்வுக்கு எதிராக நாடாளுமன்றம் நோக்கி செல்ல முயன்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து, சென்னை எழும்பூர் எல்.ஜி.கார்டன் சாலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்றிரவு பேரணி நடத்தினார்கள். பேரணி முடிவில் அவர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p> <p>இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக கைது செய்தனர். 25 பெண்கள் உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் எழும்பூரில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.</p><p>இதைபோல நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை கண்டித்து வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வியாசர்பாடி அடுத்த எம்.கே.பி. நகர் தபால் நிலையம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p> <h2>உதயநிதி ஸ்டாலின் கண்டனம்</h2><p>இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">உதயநிதி ஸ்டாலின்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>சென்னை எழும்பூர் மற்றும் மதுரை தமுக்கம் பகுதிகளில் #NEET தேர்வுக்கு எதிராக போராடிய SFI மற்றும் DYFI அமைப்பினரை காவல்துறை மூலம் வலுக்கட்டாயமாக கைது செய்யும் #SofaModel அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.</p><p>#<a href="https://www.maalaimalar.com/news/national/aap-says-rahul-gandhi-protest-near-pm-house-modi-allowed-it-to-weaken-cjp">CJP</a> முன்னெடுப்பில் டெல்லியில் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக, தமிழ்நாட்டில் போராடுவோரை கைது செய்வது என்பது, NEET விஷயத்தில் ஆளுங்கட்சியின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது.</p> <p>ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான போராட்டத்தைத் தனக்கெதிரான போராட்டமாக கருதி முடக்கும் இந்த அடக்குமுறையை, Sofa Model அரசு உடனே நிறுத்திக் கொள்ள  வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>டெல்லியில் ராகுல் காந்தி கைது-நீட் தேர்வுப் பிரச்சனை: ஒன்றிய அரசுக்கு எதிராக தவெக கடும் கண்டனம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-vettri-kazhagam-condemns-rahul-gandhi-arrest-and-neet-issues</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-vettri-kazhagam-condemns-rahul-gandhi-arrest-and-neet-issues#comments</comments><guid isPermaLink="false">9c7c11b0-75f9-4bb7-9a9c-6c44aa6801bd</guid><pubDate>Wed, 22 Jul 2026 02:53:45 +0000</pubDate><atom:updated>2026-07-22T02:53:45.696Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,NeetExam,நீட் ஊழல்,tvk,முதலமைச்சர் விஜய்,சிஜேபி,CJPProtest,தமிழக வெற்றிக்கழகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/z6srb0ba/tvk.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chief minister vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/z6srb0ba/tvk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காவல்துறையினரால் பலவந்தமாக கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கும், நீட் தேர்வால் மாணவர்கள் சந்தித்து வரும் பாதிப்புகளுக்கும் 'தமிழக வெற்றிக்கழகம்' தனது பலத்த கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.</p><p>இது தொடர்பாக தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் தலைமையிலான அக்கட்சி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுவதாகவும், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளது.</p><h2><strong>ஜனநாயக உரிமை மீதான அப்பட்டமானத் தாக்குதல்:</strong></h2><p>நாட்டின் தலைநகரில் ஜனநாயகத்தின் குரல் நசுக்கப்படுவதாகத் தெரிவித்துள்ள தவெக, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காவல்துறையினரால் தரதரவென இழுத்துச்செல்லப்பட்டு குண்டுக்கட்டாகக் கைது செய்யப்பட்ட செயல் ஜனநாயக அமைப்பின் மீதான நேரடித் தாக்குதல் என்று குற்றம் சாட்டியுள்ளது.</p><p>மேலும், "தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ராகுல் காந்தி காவல்துறையால் இழுத்துச்செல்லப்பட்டும், குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டதும் ஜனநாயக உரிமைகள் மீதான அப்பட்டமானத் தாக்குதலாகும்." என தமிழக வெற்றிக்கழகம் வன்மையாக கண்டித்துள்ளது.</p><h2><strong>நீட் தேர்வை ரத்து செய்ய கோரிக்கை:</strong></h2><p>அறிக்கையின் மற்றொரு முக்கிய பகுதியாக, நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நீட் தேர்வு நடைமுறை குறித்தும் தவெக தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.</p><h2><strong>ஒன்றிய அரசுக்குக் கோரிக்கை:</strong></h2><p>நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதலே, அத்தேர்வின் மீதான பொதுமக்களின் மற்றும் மாணவர்களின் நம்பகத்தன்மை தொடர்ந்து குறைந்து வருகிறது.தேர்வு தொடர்பான குளறுபடிகளால் மாணவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் அவர்களின் எதிர்காலக் கனவுகளும் கேள்விக் குறியாக மாறியுள்ளன.</p><p>நீட் தேர்வால் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் பாதிப்பிற்குள்ளாவது நின்றபாடில்லை. எனவே, ஒன்றிய அரசு நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக வெற்றிக்கழகம் திட்டவட்டமாகக் வலியுறுத்தியுள்ளது.</p><h2><strong>அரசியல் களத்தில் எதிரொலி:</strong></h2><p>நீட் தேர்வு விவகாரம் மற்றும் டெல்லிப் போராட்டம் தொடர்பாகத் தமிழக அரசியல் கட்சிகள் பலவும் குரல் கொடுத்து வரும் நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் இந்த திடீர் மற்றும் காட்டமான அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் எதிரொலி - கச்சா எண்ணெய் விலை உயர்வு  </title><link>https://www.maalaimalar.com/news/world/us-attacks-iran-oil-ships-hormuz-after-secret-pakistan-talks</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-attacks-iran-oil-ships-hormuz-after-secret-pakistan-talks#comments</comments><guid isPermaLink="false">5315f217-15b8-4227-92f3-3237b91972ec</guid><pubDate>Wed, 22 Jul 2026 02:35:11 +0000</pubDate><atom:updated>2026-07-22T02:35:11.114Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Pakistan,Hormuz,ஹார்முஸ்  ஜலசந்தி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/r0c37pvd/Untitled-design-47.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Hormuz oil tanker attack pushes crude and fuel prices up]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/r0c37pvd/Untitled-design-47.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாகிஸ்தான் உடனான மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் ஈரான் ஈடுபட்டு வரும் சூழலில், ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா நேற்று தாக்குதல் நடத்தியது.</p><p>இதன்மூலம் ஈரான் மீது அமெரிக்க ராணுவம் தொடர்ந்து 11-வது நாளாக வான்வழி தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளது.</p><p>ஈரானில் நடத்தப்பட்ட சமீபத்திய தாக்குதலுக்கு முன்னதாக, இப்போரில் முக்கிய மத்தியஸ்தராக விளங்கும் ஈரானிய உள்துறை அமைச்சர் எஸ்கந்தர் மொமெனி, போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை புதுப்பிக்கும் நோக்கில் பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டார். </p><p>அப்போது அவர் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீரை சந்தித்தார். இதைத்தொடர்ந்து மொமேனி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃபையும் சந்தித்தார்.</p><p>இதையடுத்து பாகிஸ்தானில் மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தையில் தங்களுக்கு உடன்பாடு இல்லை எனக் கூறி, ஈரான் மீது அமெரிக்க ராணுவம் நேற்று தாக்குதல்கள் நடத்தியது.</p><p>இந்த சம்பவத்தில் ஈரான் ஜலசந்தியில் ஒரு எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள எச்சரிக்கை ஒலிப்பான்கள் எச்சரிக்கப்பட்டன.</p><p>இதன் விளைவாக எரிசக்தி விலைகள் அதிகரித்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 91 டாலருக்கும், அமெரிக்காவில் பெட்ரோலின் விலை ஒரு கேலனுக்கு சராசரியாக 4 டாலராகவும் உயர்ந்தது.</p><p>இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பேசிய டிரம்ப், யுரேனியத்தைச் செறிவூட்டும் ஈரானின் முக்கியத் தளங்களில் ஒன்றிற்கு அருகிலுள்ள ஒரு பகுதியை அமெரிக்கப் படைகள் விரைவில் குறி வைக்கக்கூடும் என்று சூசகமாகத் தெரிவித்தார்.</p><p>இந்நிலையில் அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தல் வரவிருக்கும் சூழலில், ஈரான் உடனான போர் நிறுத்தம் முடிவுக்கு வராததை தொடர்ந்து, எரிசக்தி மீதான இந்த விலை உயர்வு அமெரிக்க மக்களிடையே விரக்தியை ஏற்படுத்தியுள்ளதாக கருத்துக் கணிப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்காவில் ஜெனரிக் மருந்துகளுக்கு 2 ஆண்டுகள் வரிவிலக்கு: டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/world/tax-exemption-for-generic-drugs-in-us-for-2-years-donald-trump-announcement</link><comments>https://www.maalaimalar.com/news/world/tax-exemption-for-generic-drugs-in-us-for-2-years-donald-trump-announcement#comments</comments><guid isPermaLink="false">dd01f8f9-cece-4d87-8557-a1759e4fdb53</guid><pubDate>Wed, 22 Jul 2026 02:31:53 +0000</pubDate><atom:updated>2026-07-22T02:31:53.427Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Donald Trump,அமெரிக்கா,America,டொனால்ட் டிரம்ப்,Generic Drugs,ஜெனரிக் மருந்துகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/wqhzcwq9/trump.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ donald trump]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/wqhzcwq9/trump.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் 'ஜெனரிக் ரக மருந்துகளுக்கு அடுத்த 2 ஆண்டுகளுக்கு எவ்வித சுங்க வரியும் விதிக்கப்படாது  என்றும், அதன் பிறகு வரி விகிதங்கள் '100% மற்றும் 200% ஆக உயர்த்தப்படும்' என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.</p><h2><strong>0% வரி:</strong></h2><p>வரவிருக்கும் ஆகஸ்ட் 1 முதல் தொடங்கும் இந்த விலக்கின் மூலம், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து ஜெனரிக் மருந்துகளுக்கும் முதல் 2 ஆண்டுகளுக்குச் சுங்க வரி எதுவும் கிடையாது.</p><h2><strong>100% வரி:</strong></h2><p>இரண்டு ஆண்டு கால அவகாசம் முடிந்த பிறகு, அடுத்த ஒரு ஆண்டிற்கு இறக்குமதி செய்யப்படும் ஜெனரிக் மருந்துகளுக்கு 100% வரி விதிக்கப்படும்.</p><h2><strong>200% வரி :</strong></h2><p>அதன்பிறகு, அனைத்து வெளிநாட்டு ஜெனரிக் மருந்துகளுக்கும் 200% சுங்க வரி நடைமுறைக்கு வரும்.</p><p> "அமெரிக்காவிற்குள்ளேயே ஜெனரிக் மருந்துகளின் உற்பத்தியை மீண்டும் கொண்டுவருவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்திற்குள் அமெரிக்காவில் தொழிற்சாலைகளையும் உபகரணங்களையும் நிறுவத் தவறும் companies-க்கு இது அபராதமாக அமையும்."</p><h2><strong>அமெரிக்க சந்தையின் நிலை:</strong></h2><p>அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பின் தரவுகளின்படி, அமெரிக்காவில் விற்பனையாகும் மருந்துகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை ஜெனரிக் ரக மருந்துகளாகும். காப்புரிமை பெற்ற பிராண்டட் மருந்துகளுக்கான தற்போதைய இறக்குமதி கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>கடந்த ஏப்ரல் மாதத்தில், அமெரிக்காவில் உற்பத்தி செய்ய ஒப்புக்கொள்ளாத பிராண்டட் மருந்துகளுக்கு 100% வரி விதிக்கும் நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2><strong>சர்வதேச மருந்து நிறுவனங்களின் மீதான தாக்கம்:</strong></h2><p>இந்திய நிறுவனங்கள் உட்பட உலகளாவிய மருந்து உற்பத்தியாளர்கள் அமெரிக்காவிற்கு அதிகளவில் ஜெனரிக் மருந்துகளை ஏற்றுமதி செய்து வருகின்றனர். இந்த 2 ஆண்டு கால அவகாசம், மருந்து நிறுவனங்கள் அமெரிக்காவிலேயே தங்களது புதிய உற்பத்தி ஆலைகளைத் தொடங்குவதற்கோ அல்லது தங்களது வணிக உத்திகளை மாற்றி அமைப்பதற்கோ வழங்கப்பட்டுள்ள வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் பெட்ரோல், டீசல் விலை - இன்றைய நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-and-diesel-price-in-chennai-22nd-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-and-diesel-price-in-chennai-22nd-july-2026#comments</comments><guid isPermaLink="false">034e9e22-4a64-4c01-a644-f73dfe277948</guid><pubDate>Wed, 22 Jul 2026 02:15:12 +0000</pubDate><atom:updated>2026-07-22T02:15:12.105Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,கச்சா எண்ணெய்,Crude oil,பெட்ரோல் டீசல் விலை,Petrol Diesel Price</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-10/cf7voyax/Petrol-diesel-price.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பெட்ரோல், டீசல் விலை ]]></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல், டீசல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-10/cf7voyax/Petrol-diesel-price.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் போரினால் மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p><h2>கச்சா எண்ணெய்</h2><p> கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.</p><h2>பெட்ரோல், டீசல் விலை</h2><p>அந்த வகையில் இன்றைய (22.07.2026 - புதன்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.76-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 22.7.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு சொத்துகள் வாங்கும் யோகமுண்டு</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-22-july-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-22-july-2026#comments</comments><guid isPermaLink="false">86ed5323-570e-4a4f-8aca-97f92c53f6b1</guid><pubDate>Wed, 22 Jul 2026 01:53:19 +0000</pubDate><atom:updated>2026-07-22T01:53:19.086Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Daily Rasipalan,ராசிபலன்,Raspalan</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/30/20839250-rasipalan2.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/30/20839250-rasipalan2.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>ராசிபலன்(Rasipalan)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>வருமானம் திருப்தி தரும் நாள். வீட்டை சீரமைப்பதில் அக்கறை காட்டுவீர்கள். சகோதர வழியில் ஒரு சுபச்செய்தி வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.</p><h2>ரிஷபம்</h2><p>நாவன்மையால் நல்ல பெயர் எடுக்கும் நாள். நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்து உதவுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும்.</p><h2>மிதுனம்</h2><p>ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமையும் நாள். பெற்றோர் நலனில் அக்கறை காட்டுவீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.</p><h2>கடகம்</h2><p>அக்கம்பக்கத்தில் உள்ளவர்களின் ஆலோசனை கைகொடுக்கும் நாள். குடும்பச்செலவுகள் கூடும். கொடுக்கல், வாங்கல்களில் கவனம் தேவை.</p> <h2>சிம்மம்</h2><p>பொருளாதார முன்னேற்றம் உண்டு. நண்பர்கள் நல்ல தகவலை தருவர். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம் பெறுவீர்கள்.</p><h2>கன்னி</h2><p>மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மனக்கசப்புகள் மாறும். இடம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அன்னிய தேசத்திலிருந்து ஆதாயம் தரும் தகவல் வந்து சேரும்.</p><h2>துலாம்</h2><p>உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும் நாள். உயர்ந்த மனிதர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழ்வீர்கள். உடல் நலம் சீராகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.</p><h2>விருச்சிகம்</h2><p>பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். தொழிலில் லாபம் உண்டு. தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். சொத்துகள் வாங்கும் யோகமுண்டு.</p> <h2>தனுசு</h2><p>செலவுகள் கூடும் நாள். சேமிப்பு கரைகின்றதே என்று கவலைப்படுவீர்கள். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்பு உங்களிடமே வரலாம்.</p><h2>மகரம்</h2><p>குடும்பச்சுமை கூடும் நாள். உடல் ஆரோக்கியத்திற்காக செலவு செய்யும் சூழ்நிலை உண்டு. வளர்ச்சிக்கு நண்பர்கள் ஒத்துழைப்பு செய்வர்.</p><h2>கும்பம்</h2><p>வருமானத்தை பெருக்கிக் கொள்ளும் முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றம் திருப்தி தரும். முக்கியப் புள்ளிகளை சந்திப்பீர்கள்.</p><h2>மீனம்</h2><p>எந்தக் காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்ய இயலாது. அத்தியாவசிப் பொருட்களை வாங்க அதிகம் செலவிட நேரிடலாம்.</p> ]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 22 ஜூலை 2026:  கோமதியம்மன் ரிஷப வாகனத்தில் புறப்பாடு</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-22-july-2026-gomathi-amman-rishaba-vahanam-bhavani</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-22-july-2026-gomathi-amman-rishaba-vahanam-bhavani#comments</comments><guid isPermaLink="false">288111b7-f4ff-42d3-9cd8-558e462690bd</guid><pubDate>Wed, 22 Jul 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-07-22T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/7xvpjfsk/gomathiamman.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ gomathi amman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/7xvpjfsk/gomathiamman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆடி-6 (புதன்கிழமை)</p><p>பிறை : வளர்பிறை</p><p>திதி :   அஷ்டமி காலை 9.23 வரை பிறகு நவமி</p><p>நட்சத்திரம் : சுவாதி பின்னிரவு 3 மணி வரை பிறகு விசாகம்</p><p>யோகம் :  சித்தயோகம்</p><p>ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை</p><p>எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை</p><p>சூலம் : வடக்கு</p><p>நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை</p> <h2>திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்</h2><p>ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் புறப்பாடு. சேரமான் பெருமான் நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் குரு பூஜை. ராமநாதபுரம் ஸ்ரீ கோதண்டராமர் ரதோற்சவம் வடமதுரை ஸ்ரீ சௌந்தரராஜப் பெருமாள் அன்ன வாகனத்தில் திருவீதியுலா. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் ரிஷப வாகனத்தில் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கிருஷ்ணாவதாரம் சிம்ம வாகனத்தில் பவனி. வேலூர் கோட்டை ஸ்ரீ துர்கையம்மன், பட்டீஸ்வரன் ஸ்ரீ துர்கையம்மன், கதிராமங்கலம் ஸ்ரீ வனதுர்கையம்மன் கோவில்களில் பால் அபிஷேகம். </p><p>திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சனம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை தலத்தில் திருமஞ்சனம். மதுராந்தகம் ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - உயர்வு</p><p>ரிஷபம் - நன்மை</p><p>மிதுனம் - நலம்</p><p>கடகம் - உதவி</p><p>சிம்மம் - நட்பு</p><p>கன்னி - பணிவு</p><p>துலாம் - லாபம்</p><p>விருச்சிகம் - தெளிவு</p><p>தனுசு - பண்பு</p><p>மகரம் - ஈகை</p><p>கும்பம் - முயற்சி</p><p>மீனம் - வெற்றி</p> ]]></content:encoded></item><item><title>சிக்கிம் சுரங்கப்பாதை நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20-ஆக அதிகரிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/20-workers-die-in-sikkim-tunnel-collapse</link><comments>https://www.maalaimalar.com/news/national/20-workers-die-in-sikkim-tunnel-collapse#comments</comments><guid isPermaLink="false">750561a4-b0bc-4a40-8d25-ef9899efe8d0</guid><pubDate>Wed, 22 Jul 2026 00:26:54 +0000</pubDate><atom:updated>2026-07-22T00:26:54.870Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சிக்கிம்,sikkim,Tunnel collapse,நிலச்சரிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/bo3ffcw8/sikkim-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/bo3ffcw8/sikkim-1.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சிக்கிமின் நாம்ச்சி மாவட்டத்தில், மீத்தேன் வாயு கசிவு என சந்தேகிக்கப்படும் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, கட்டுமானத்தில் இருந்த சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் 20 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் 24 மணி நேரத்திற்கும் மேலாக உள்ளே சிக்கியிருப்பதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.</p><p>NHPC சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் உயிரிழந்த ஒவ்வொரு தொழிலாளியின் குடும்பத்தினருக்கும் ரூ.4 லட்சமும், காயமடைந்த ஒவ்வொருவருக்கும் ரூ.50,000-மும் கருணைத் தொகையாக வழங்கப்படும் என முதலமைச்சர் பிரேம் சிங் தமாங் அறிவித்தார்.</p><p><strong>கருணைத் தொகை:</strong></p><p>பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சருடன் தொலைபேசியில் பேசி நிலைமையை ஆய்வு செய்ததோடு, மத்திய அரசின் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் அவருக்கு உறுதியளித்தார். மேலும், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் கருணைத் தொகையும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000-மும் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்தார்.</p><p>திங்கள்கிழமை மதியம் 1 மணிக்கு சற்று பின்னர், சமர்துங்கில் உள்ள NHPC டீஸ்டா ஆறாம் கட்ட நீர்மின் திட்டத்தின் இடிந்து விழுந்த சுரங்கப்பாதைக்குள், சில திட்ட அதிகாரிகள் உட்பட சுமார் 25 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.</p><p>"சுரங்கப்பாதைக்குள் சிக்கியிருந்த 25 பேரில், 20 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது," என நாம்ச்சி காவல் கண்காணிப்பாளர் (SP) சோனம் டி பூட்டியா தெரிவித்தார்.</p><p><strong>சிறப்புக் குழு:</strong></p><p>பல்வேறு முகமைகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளின் போது 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். இதுவரை ஏழு உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன, மீதமுள்ள உடல்களை அடையாளம் காணும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.</p><p>NHPC அறிக்கையின்படி, பாறைகளுக்குள் சிக்கியிருந்ததாக சந்தேகிக்கப்படும் மீத்தேன் வாயு திடீரென வெளியேறியதால், அடர்த்தியான புகையும் நச்சு வாயுக்களும் உருவாகி இந்த வெடிப்பு ஏற்பட்டது. சுரங்கப்பாதை இடிந்து விழுவதற்கு காரணமான மீத்தேன் வாயு வெடிப்புக்கான காரணத்தை கண்டறிய ஒரு சிறப்புக் குழு அமைக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.</p><p>முன்னதாக ஆளுநர் ஓம் பிரகாஷ் மாத்தூர் மற்றும் முதலமைச்சர் ஆகியோர் நிலைமையை ஆய்வு செய்வதற்காக சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர். அவர்கள் களத்தில் இருந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடி, காயமடைந்த தொழிலாளர்களுக்கு சிறந்த மருத்துவ பராமரிப்பும் ஆதரவும் கிடைப்பதை உறுதிசெய்ய, சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அறிவுறுத்தினர்.</p><p>பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு விரைவில் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு, என்.எச்.பி.சி தலைவரும் நிர்வாக இயக்குனருமான பூபேந்தர் குப்தாவிற்கு அவர்கள் உத்தரவிட்டனர்.</p><p><strong>மௌன அஞ்சலி:</strong></p><p>இறந்தவர்களை அடையாளம் காண்பதற்காக ரங்போவில் ஒரு பிரத்யேக அமைப்பை நிறுவுமாறும், இந்த இக்கட்டான நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குறிப்பாக பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு, அனைத்து உதவிகளும் கிடைப்பதை உறுதி செய்யுமாறும் ஆளுநரும் முதலமைச்சரும் நாம்ச்சி மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர்.</p><p>சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், சிக்கிம் சட்டமன்றம் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தியது. பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இச்சம்பவம் தொடர்பாக தன்னிடம் பேசியதாக முதலமைச்சர் அவையில் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>குருகிராம் மருத்துவமனையில் வாங்சுக்கை சந்தித்தனர் நட்டா மற்றும் ஜிதேந்திர சிங்</title><link>https://www.maalaimalar.com/news/national/jp-nadda-jitendra-singh-meet-wangchuk-at-gurugram-hospital</link><comments>https://www.maalaimalar.com/news/national/jp-nadda-jitendra-singh-meet-wangchuk-at-gurugram-hospital#comments</comments><guid isPermaLink="false">1786256a-b0d6-4aad-87b3-e7c83d7605b7</guid><pubDate>Tue, 21 Jul 2026 23:44:59 +0000</pubDate><atom:updated>2026-07-21T23:44:59.832Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜேபி நட்டா,JP Nadda,ஜிதேந்திர சிங்,Jitendra Singh,Wangchuk,வாங்சக்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/km9iquij/jp-n-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜே.பி. நட்டா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/km9iquij/jp-n-1.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் குருகிராமில் உள்ள மேடான்டா மருத்துவமனையில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவின்படி, மேல் சிகிச்சைக்காக சஃப்தர்ஜங் மருத்துவமனையில் இருந்து குருகிராமில் உள்ள மேடான்டா மருத்துவமனைக்கு வாங்சுக் மாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். </p><p>"மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் மருத்துவமனையில் சோனம் வாங்சுக்கை சந்தித்தனர்," என்று ஒரு வட்டாரம் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தது.</p><p><strong>தீவிர சிகிச்சை:</strong></p><p>பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆம்புலன்ஸ் மூலம் வாங்சுக் மேடான்டா மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அவர் உள் மருத்துவ நிபுணரான டாக்டர் சுஷீலா கட்டாரியாவின் மேற்பார்வையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேடான்டா மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.</p><p>முன்னதாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தனியார் மருத்துவமனைக்கு மாற்ற டெல்லி ஐகோர்ட் அனுமதி அளித்ததை அடுத்து நேற்று (ஜூலை 21) மாலை அவர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.</p><p><strong>தனியார் மருத்துவமனை:</strong></p><p>டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவைத் தொடர்ந்து, சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், குருகிராமில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் இருந்து மேதந்தா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.</p><p>இது தொடர்பாக சப்தர்ஜங் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், "டெல்லி ஐகோர்ட் உத்தரவுப்படி, சோனம் வாங்சுக், இன்று மாலை 6:40 மணியளவில் மேல் சிகிச்சைக்காக மேதந்தா மருத்துவர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரது மருத்துவ ஆவணங்கள், பரிசோதனை விவரங்கள், சிகிச்சை ஆவணங்கள் அனைத்தும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது," என கூறப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>5-ஆவது ஒருநாள் போட்டி - வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற 269 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/nz-set-269-runs-as-target-for-wi</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/nz-set-269-runs-as-target-for-wi#comments</comments><guid isPermaLink="false">e01c7c6c-23d5-4903-a60b-f39a9070ffd4</guid><pubDate>Tue, 21 Jul 2026 23:02:54 +0000</pubDate><atom:updated>2026-07-21T23:02:54.684Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நியூசிலாந்து,வெஸ்ட் இண்டீஸ்,WIvsNZ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/rtxh0h4t/NZ-bat.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Will Young & Nick Kelly]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/rtxh0h4t/NZ-bat.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. </p><p>இந்தத் தொடரின் முதல் நான்கு போட்டிகளில் மூன்று வெற்றிகளுடன் நியூசிலாந்து அணி தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. தொடரின் முதல் போட்டியில் மட்டும் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற, மற்ற மூன்று போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.</p><p>இந்த நிலையில், 5-ஆவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 268 ரன்களை குவித்துள்ளது.</p><p>நியூசிலாந்து அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய ஹென்றி நிகிகோல்ஸ் 10 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இவருடன் களமிறங்கிய வில் யங், 3-ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய நிக் கெல்லியுடன் இணைந்து அபாரமாக ஆடினார்.</p><p>இந்த ஜோடி நிதானமாக ஆடி ரன்குவிப்பில் ஈடுபட்டது. மேலும், இருவரும் அரைசதம் கடந்தனர். வில் யங் (56), நிக் கெல்லி (64) எடுத்து ஆட்டமிழந்தனர்.</p><p>அடுத்து களமிறங்கியவர்களில் டாம் லேதம் (69) தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 268 ரன்களை குவத்துள்ளது.</p><p>வெஸ்ட் இண்டீஸ் சார்பில் சிறப்பாக பந்துவீசிய விடெல் லாவ்ஸ் மற்றும் அல்சாரி ஜோசப் தலா 2 விக்கெட்டுகளையும், மேத்யூ ஃபோர்ட், ஜேடென் சீல்ஸ் மற்றும் குடகேஷ் மோத்தி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.</p>]]></content:encoded></item><item><title>அசாம் வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 21-ஆக உயர்வு, 5.64 லட்சம் பேர் பாதிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/21-killed-in-a-day-as-flood-situation-worsens-in-assam</link><comments>https://www.maalaimalar.com/news/national/21-killed-in-a-day-as-flood-situation-worsens-in-assam#comments</comments><guid isPermaLink="false">eb41f8de-4bc8-4161-afc3-ccbffb58bcb9</guid><pubDate>Tue, 21 Jul 2026 22:29:04 +0000</pubDate><atom:updated>2026-07-21T22:29:04.463Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உயிரிழப்பு,Death,அசாம் வெள்ளம்,Assam Floods</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/vrl9mtmj/asm-flds.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Assam Floods]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/vrl9mtmj/asm-flds.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அசாமில் வெள்ள நிலைமை மேலும் மோசமடைந்தது; இதில் மேலும் 21 பேர் உயிரிழந்தனர் மற்றும் 16 மாவட்டங்களில் 5.64 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/assam-floods">அசாம்</a> மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட அறிக்கையின்படி, மிக மோசமாக பாதிக்கப்பட்ட சிவசாகர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 13 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன; அதைத் தொடர்ந்து சாரைடியோவில் 5 பேரும், கோலாகாட்டில் 2 பேரும், ஜோர்ஹட்டில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.</p><p><strong>சமூக வலைதள பதிவு:</strong></p><p>இந்த உயிரிழப்புகளுடன் சேர்த்து, மாநிலத்தில் இந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 31-ஆக உயர்ந்துள்ளது. நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக, மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நேரில் சென்று பார்வையிட இருப்பதாக முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்தார்.</p><p>"ஆற்றுப் படுகையின் மேல் பகுதிகளில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக உருவான சமீபத்திய அசாம் வெள்ளம் எங்கள் மக்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. நிவாரண பணிகளை ஆய்வு செய்வதற்காக, சாரைடியோ, நசிரா, சிவசாகர், சோனாரி, ஜோர்ஹட் மற்றும் டியோக் ஆகிய இடங்களில் உள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் நிவாரண முகாம்களை நான் பார்வையிடவுள்ளேன்" என்று அவர் சமூக வலைதள பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார்.</p><p><strong>5.64 லட்சம் பேர் பாதிப்பு:</strong></p><p>கோலாகாட், காம்ரூப், ஹோஜாய், திப்ருகார், பிஸ்வநாத், தேமாஜி, சோனித்பூர், உதல்குரி, நாகான், சாரைடியோ, காம்ரூப் (மெட்ரோ), ஜோர்ஹட், டின்சுகியா, கார்பி ஆங்லாங், லக்கிம்பூர் மற்றும் சிவசாகர் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 5,64,600-க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். திங்களன்று 15 மாவட்டங்களில் 3.63 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.</p><p>44 வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட 872 கிராமங்கள் தொடர்ந்து வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.</p><p>சிவசாகரில் மொத்தம் 3,59,535 பேரும், அதைத் தொடர்ந்து ஜோர்ஹட்டில் 87,662 பேரும், சாரைடியோவில் 72,646 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><strong>மீட்பு பணிகள்:</strong></p><p>இடம்பெயர்ந்த 12,284 பேர் தங்கியுள்ள 71 நிவாரண முகாம்களும், 202 நிவாரண பொருட்கள் விநியோக மையங்களும் தற்போது செயல்பட்டு வருவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மூலம் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>ரெயில் தண்டவாளங்களில் வெள்ள நீர் சூழ்ந்ததால், தொடர்ந்து இரண்டாவது நாளாக ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>காங்கிரஸ் கட்சி மாணவர்களை அரசியல் கருவிகளாக பயன்படுத்துகிறது  - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்</title><link>https://www.maalaimalar.com/news/national/dharmendra-pradhan-said-congress-exploiting-students-as-political-tools</link><comments>https://www.maalaimalar.com/news/national/dharmendra-pradhan-said-congress-exploiting-students-as-political-tools#comments</comments><guid isPermaLink="false">558b8c31-23d4-49be-9c40-769aae673e02</guid><pubDate>Tue, 21 Jul 2026 20:11:04 +0000</pubDate><atom:updated>2026-07-21T20:11:04.416Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/gu8lou0m/D-P-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் தர்மேந்திர பிரதான்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/gu8lou0m/D-P-1.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் (NEET) தேர்வு தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவும், இளைஞர்களின் நியாயமான கவலைகள் ஒவ்வொன்றையும் நாடாளுமன்றத்தில் தீர்த்து வைக்கவும் அரசு உறுதியுடன் உள்ளது என்று மத்திய அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/dharmendra-pradhan">தர்மேந்திர பிரதான்</a> வலியுறுத்தினார்.</p><p>மேலும், பிரதமர் <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">நரேந்திர மோடி</a> இல்லத்திற்கு வெளியே தர்ணா போராட்டம் நடத்தியதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சாடிய பிரதான், நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் இடையூறுகளை 'உருவாக்குவதற்காக' மாணவர்களை 'அரசியல் கருவிகளாக' பயன்படுத்துவதாக அவர் மீது குற்றம் சாட்டினார்.</p><p><strong>எக்ஸ் தள பதிவு:</strong></p><p>முன்னதாக, நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக போராடிய மாணவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்ததை கண்டித்து, ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பல மூத்த தலைவர்கள் பிரதமரின் இல்லத்திற்கு வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்; அப்போது அவர்கள் பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.</p><p>"எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இடையூறுகளை உருவாக்க மாணவர்களை வெட்கமின்றி அரசியல் கருவிகளாக பயன்படுத்துவதைத் தொடர்கின்றனர். அவர்கள் மாண்புமிகு பிரதமரின் இல்லத்திற்கு வெளியே தர்ணா நடத்தத் தேர்ந்தெடுத்ததன் மூலம், பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததுடன், நிறுவப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளையும் புறக்கணித்தனர்," என்று பிரதான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p>"விரிவான விவாதத்திற்கு அரசு தயாராக இருப்பதாகத் தெரிவித்த பின்னரும், காங்கிரஸ் ஜனநாயக ரீதியான விவாதத்தை விடுத்து அரசியல் நாடகத்தையே தேர்ந்தெடுத்தது. மாணவர்களுக்கான தீர்வுகளை காண்பது அவர்களின் நோக்கமாக இருக்கவில்லை; மாறாக, அரசியல் ரீதியான தலைப்பு செய்திகளை பெறுவதற்காக இடையூறுகளை உருவாக்குவதே அவர்களின் நோக்கமாக இருந்தது.</p><p>ராகுல் காந்தியை பொறுத்தவரை, இது மாணவர்களை பற்றியது அல்ல; விவாதத்திற்கான அனைத்து நியாயமான வழிகளும் திறக்கப்பட்ட பிறகும் மோதலை உருவாக்குவதை பற்றியதே இது</p><p>நீட் தேர்வு குறித்து விவாதிக்கவும், நாடாளுமன்றத்தில் நமது இளைஞர்களின் நியாயமான கவலைகள் ஒவ்வொன்றையும் தீர்க்கவும் எங்கள் அரசு 100 சதவீதம் உறுதியுடன் உள்ளது. அரசியல் பிரச்சாரத்திற்கான வெறும் கருவிகளாக நடத்தப்படுவதை விட மிக சிறந்ததையே இந்தியாவின் மாணவர்கள் பெற தகுதியானவர்கள். குழப்பத்திற்கு பதிலாக தெளிவையும், முழக்கங்களுக்கு பதிலாகத் தீர்வுகளையும், இடையூறுகளுக்கு பதிலாக பொறுப்புணர்வையும் அவர்கள் பெற தகுதியானவர்கள்.</p><p>மாணவர்களுக்கு வெறும் கோபத்தை மட்டும் வெளிப்படுத்துவது போதாது; அவர்களுக்கு பதில்களையும், சீர்திருத்தங்களையும், பொறுப்புக்கூறலையும் வழங்குவதே நமது கடமை. அதைத்தான் எங்கள் அரசாங்கம் தொடர்ந்து நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளது," என்று பிரதான் கூறினார்.</p><p><strong>பேச்சுவார்த்தை:</strong></p><p>பிரதமர் அலுவலகத்தின் (PMO) இணையமைச்சர் ஜிதேந்திர சிங் மற்றும் மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் ஆகியோர் காந்தியை சந்தித்து, அவர் மேற்கொண்டு வரும் போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தினர். ஆனால், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அதற்கு உடன்பட மறுத்துவிட்டார்.</p><p>நீட் (NEET) தேர்வு மற்றும் அது தொடர்பான இயக்கம் குறித்த அனைத்து விவகாரங்கள் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக தான் காந்தியிடம் கூறியதாகவும், ஆனால் காங்கிரஸ் தலைவர் தனது நிலைப்பாட்டை மாற்றி, பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக சிங் தெரிவித்தார்.</p><p>பின்னர், எதிர்க்கட்சித் தலைவர்கள் அப்பகுதியிலிருந்து காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டு பின்னப் விடுவிகப்பட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் தொடக்க விழா: இந்திய அணி பயணப் பெட்டிகள் காணாமல் போனதால் குத்துச்சண்டை வீரர்கள் தவிப்பு</title><link>https://www.maalaimalar.com/sports/missing-luggage-leave-indian-boxers-scrambling-before-cwg-opening-ceremony</link><comments>https://www.maalaimalar.com/sports/missing-luggage-leave-indian-boxers-scrambling-before-cwg-opening-ceremony#comments</comments><guid isPermaLink="false">358c162f-05d7-46c8-b636-79020d8e34ce</guid><pubDate>Tue, 21 Jul 2026 19:15:06 +0000</pubDate><atom:updated>2026-07-21T19:15:06.953Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Commonwealth games,Indian Boxing Team,இந்திய குத்துச்சண்டை அணி,காமன்வெல்த் போட்டிகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/h7pkygsd/boxing.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Boxing Gloves]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/h7pkygsd/boxing.png?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய குத்துச்சண்டை அணியின் பயண பெட்டிகளில் கிட்டத்தட்ட பாதி பெல்ஃபாஸ்டில் விடப்பட்டதால், அணிக்கு சிரமமான தொடக்கம் ஏற்பட்டது.</p><p>22 பேர் கொண்ட இந்திய குத்துச்சண்டை அணி, பெல்ஃபாஸ்டில் நடந்த ஆயத்த பயிற்சி முகாமுக்கு பிறகு கிளாஸ்கோ வந்தடைந்தது. </p><p><strong>பைகள் மாயம்:</strong></p><p>ஆனால், சாக்ஷி சௌத்ரி (51 கிலோ), உலக சாம்பியன் ஜெய்ஸ்மின் லம்போரியா (57 கிலோ), பர்வீன் ஹூடா (65 கிலோ), ஜதுமணி சிங் (55 கிலோ), கபில் பொக்காரியா (90 கிலோ) மற்றும் ஆண்கள் அணியின் தலைமைப் பயிற்சியாளர் சி. குட்டப்பா உள்ளிட்டோரின் பைகள் அவர்களுடன் வந்து சேரவில்லை.</p><p>குறுகிய பெல்ஃபாஸ்ட்-கிளாஸ்கோ வழித்தடத்தில் இயக்கப்பட்ட விமானம் சிறியது என்று அணி உறுப்பினர்கள் தெரிவித்தனர். காணாமல் போன பயண பெட்டிகளில், பயிற்சி உபகரணங்களும், வியாழக்கிழமை நடைபெறும் தொடக்க விழாவில் குத்துச்சண்டை வீரர்கள் அணியவிருந்த உடைகளும் இருந்தன.</p><p><strong>தொடர்கதை:</strong></p><p>இந்த மாத தொடக்கத்தில், குத்துச்சண்டை வீரர்கள் தோஹாவில் இருந்து பெல்ஃபாஸ்டுக்கு விமானத்தில் சென்றபோதும் இதே போன்ற சம்பவங்கள் நடந்திருந்தன.</p><p>குத்துச்சண்டை போட்டி வெள்ளிக்கிழமை தொடங்குவதால், இறுதி தயாரிப்புகள் வேகம் பிடிப்பதற்குள் பயண பெட்டிகள் கிளாஸ்கோவை சென்றடையும் என்று குழுவினர் நம்புகின்றனர்.</p><p>மேலும், மகளிர் பயிற்சியாளர் மந்தகானி சானுவுக்கு, குத்துச்சண்டை வீரர்கள் தங்கியிருக்கும் அதே ஹோட்டலில் தங்குமிடம் வழங்கப்படவில்லை. குத்துச்சண்டை நிகழ்வு வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி விடுவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/rahul-priyanka-released-from-detention-as-congress-staged-protest-at-lok-kalyan-marg</link><comments>https://www.maalaimalar.com/news/national/rahul-priyanka-released-from-detention-as-congress-staged-protest-at-lok-kalyan-marg#comments</comments><guid isPermaLink="false">72200364-b6a5-4254-a952-5ece11f881f7</guid><pubDate>Tue, 21 Jul 2026 18:31:05 +0000</pubDate><atom:updated>2026-07-21T18:31:05.096Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,காங்கிரஸ் போராட்டம்,congress protest,Priyanka gandhi,பிரியங்கா காந்தி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/ri9aky9q/p-g.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிரியங்கா காந்தி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/ri9aky9q/p-g.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரதமர் <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">நரேந்திர மோடி</a> மற்றும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் பதவி விலகக் கோரி 'லோக் கல்யாண் மார்க்' பகுதியில் காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டத்தின்போது, ​​டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்த <a href="https://www.maalaimalar.com/topic/rahul-gandhi">ராகுல் காந்தி</a>, பிரியங்கா காந்தி மற்றும் பல கட்சித் தலைவர்கள் விடுவிக்கப்பட்டனர்.</p><p>காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட சத்ராசல் மைதானத்தில் இருந்து ராகுல் காந்தி, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் பல எதிர்க்கட்சி தலைவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். பிரியங்கா காந்தி தடுத்து வைக்கப்பட்டிருந்த மந்திர் மார்க் காவல் நிலையத்திற்கு காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சி தலைவர் சோனியா காந்தி சென்றார்.</p><p><strong>கங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்பு:</strong></p><p>காங்கிரஸ் தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா, கே.சி. வேணுகோபால் மற்றும் பவன் கேரா ஆகியோர் லோக் கல்யாண் மார்க்கில் போராட்டத்தில் ஈடுபட்டனர். </p><p>கேரள முதல்வர் வி.டி. சதீசன் மற்றும் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.</p><p>பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் லோக் கல்யாண் மார்க்கில் அமைந்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி, தேசிய ஜனநாயக கூட்டணியுடன் (NDA) இணையக்கூடும் என்ற வதந்திகள் பரவியிருந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சுலேவும் காங்கிரஸின் போராட்டத்தில் பங்கேற்றார்.</p><p><strong>எக்ஸ் தள பதிவு:</strong></p><p>நாடாளுமன்றத்தில் இப்பிரச்சினையை எழுப்ப தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறிய காங்கிரஸ் தலைவர்கள், 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) நடத்திய 'சான்சத் சலோ' (நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணி) போராட்டத்தின் மீது காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையைக் கண்டித்து, பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு அருகே போராட்டம் நடத்தினர்.</p><p>இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ராகுல் காந்தி, "அரசு எந்த பொறுப்பையும் ஏற்க விரும்பவில்லை; அதேவேளையில் நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்கவும் விரும்பவில்லை. இந்தியாவின் இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழித்ததற்காக பிரதமரும், உள்துறை அமைச்சரும் பதவி விலக வேண்டும்," என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பீகார் தலைமை செயலகம், முதலமைச்சர் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/bomb-threat-emails-trigger-security-alert-in-patna-gayaji</link><comments>https://www.maalaimalar.com/news/national/bomb-threat-emails-trigger-security-alert-in-patna-gayaji#comments</comments><guid isPermaLink="false">107dd69c-7976-4022-ba07-9e2a0ad9e79c</guid><pubDate>Tue, 21 Jul 2026 17:40:49 +0000</pubDate><atom:updated>2026-07-21T17:40:49.288Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>bomb threat,வெடிகுண்டு மிரட்டல்,Patna,பாட்னா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/gwc8z436/patna.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/gwc8z436/patna.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பீகார் தலைமைச் செயலகம், முதலமைச்சர் இல்லம், பள்ளிகள் மற்றும் பஸ்போர்ட் அலுவலகங்களை குறிவைத்து அனுப்பப்பட்ட தொடர்ச்சியான வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள், பாட்னா மற்றும் கயாஜியில் பாதுகாப்பு எச்சரிக்கையை ஏற்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>உள்துறை ஆணையர் மற்றும் மாநில தலைமை செயலகம் உள்ளிட்ட பல அதிகாரப்பூர்வ அரசு மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பப்பட்ட முதல் மிரட்டல் மின்னஞ்சல், பாட்னாவில் உள்ள முக்கிய அரசு நிறுவனங்களில் குண்டுவெடிப்புகள் நிகழும் என எச்சரித்ததாக அவர்கள் கூறினர்.</p><p><strong>பாதுகாப்பு அதிகரிப்பு:</strong></p><p>முக்கிய அரசு நிறுவனங்களை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் ஒன்று பெறப்பட்டதாக காவல் கண்காணிப்பாளர் (பாட்னா - மத்திய) மம்தா கல்யாணி கூறினார். "காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது. நகருக்கு உள்ளேயும் அதை சுற்றியும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் மின்னஞ்சலின் மூலத்தைக் கண்டறியும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன," என்று அவர் கூறினார்.</p><p>அதிகாரப்பூர்வ வட்டாரங்களின்படி, அந்த மின்னஞ்சலை அனுப்பியவர் காலிஸ்தான் ஆதரவு அமைப்புடன் தொடர்புடையவர் என்று கூறிக்கொண்டார். மேலும், 2023 ஜூன் மாதம் கனடாவில் சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்கில் இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.</p><p><strong>மனித வெடிகுண்டு தாக்குதல்:</strong></p><p>அந்த மின்னஞ்சலில், நிஜ்ஜாரின் கொலைக்கு அப்போதைய கனடாவுக்கான இந்திய உயர் ஆணையரே காரணம் என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டும் கூறப்பட்டிருந்தது. மேலும், பீகார் அரசு அவருக்கு பாட்னாவில் அடைக்கலம் கொடுத்திருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. மனித வெடிகுண்டு தாக்குதல் மூலம் அவரை குறிவைப்பதாகவும் அது மேலும் அச்சுறுத்தியதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.</p><p>பாட்னாவின் தானாபூர் பகுதியில் உள்ள நான்கு பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்திருந்தன.</p><p><strong>தீவிர சோதனை:</strong></p><p>வெடிகுண்டு அகற்றும் குழு மற்றும் மோப்ப நாய் படைகள் பள்ளி வளாகத்தில் சோதனை நடத்தினர், ஆனால் சந்தேகத்திற்கிடமான எந்த பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.</p><p>இதற்கிடையில், பாட்னாவில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகம், வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் குறித்து அதன் கிளைகளை எச்சரித்ததை தொடர்ந்து, கயாஜியில் உள்ள பொது அஞ்சல் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திலும் பாதுகாப்பு படையினர் சோதனைகளை நடத்தினர்.</p><p>சிவில் லைன்ஸ் காவல் நிலைய ஆய்வாளர் ஷாமின் அகமது கூறுகையில், வெடிகுண்டு அகற்றும் மற்றும் மோப்ப நாய் படைகள் வளாகத்தை ஆய்வு செய்து, அந்த மிரட்டல் ஒரு பொய் என அறிவித்தன.</p><p>மூத்த அஞ்சல் அதிகாரி பிரணவ் குமார் ஜா கூறுகையில், பாட்னாவில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அந்த மிரட்டல் மின்னஞ்சல் கிடைத்ததாகவும், அதைத் தொடர்ந்து அதன் அதிகார வரம்பிற்குட்பட்ட பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் காவல்துறையுடன் ஒருங்கிணைந்து பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cong-sfi-stage-protest-in-chennai-condemning-police-action-on-students-in-delhi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cong-sfi-stage-protest-in-chennai-condemning-police-action-on-students-in-delhi#comments</comments><guid isPermaLink="false">26ea6114-53be-4a5c-b164-006fe547a473</guid><pubDate>Tue, 21 Jul 2026 17:13:49 +0000</pubDate><atom:updated>2026-07-21T17:13:49.606Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,protest,போராட்டம்,SFI,இந்திய மாணவர் சங்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/z715nknk/sfi-protest.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ SFI Protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/z715nknk/sfi-protest.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் நீட் (NEET) தேர்வு விவகாரம் தொடர்பாக போராடிய மாணவர்கள் மீது காவல்துறை மேற்கொண்ட கடுமையான நடவடிக்கையை கண்டித்து <a href="https://www.maalaimalar.com/topic/sfi">இந்திய மாணவர் சங்கம்</a> மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p><strong>போராட்டம்:</strong></p><p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின்போது டெல்லி காவல்துறை மேற்கொண்ட "தன்னிச்சையான" கைது நடவடிக்கைகளை கண்டித்தும், இந்த தேசிய தகுதி தேர்வை ரத்து செய்ய கோரியும் இந்திய மாணவர் சங்க (SFI) உறுப்பினர்கள் <a href="https://www.maalaimalar.com/topic/protest">போராட்டம்</a> நடத்தினர்.</p><p>பிரதமர் நரேந்திர மோடியின் ராஜினாமாவை வலியுறுத்தி அவரது இல்லத்திற்கு வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை டெல்லி காவல்துறை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியதை கண்டித்து, மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் பி. விஸ்வநாதன் மற்றும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர்.</p><p><strong>தங்கபாலு கண்டனம்:</strong></p><p>மத்திய அரசின் சர்வாதிகார போக்கு மற்றும் ஜனநாயக குரல்களை ஒடுக்கும் நடவடிக்கைகள் என கூறப்படுபவற்றை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு கண்டித்தார்.</p><p>டெல்லியில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பிற எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையை ஜனநாயகத்தின் மீதான நேரடி தாக்குதல் என்று அவர் விமர்சித்தார். மேலும், இந்த தேசிய பிரச்சினையை கையாண்ட விதம் குறித்து மத்திய அரசு மற்றும் காவல்துறையை அவர் குறை கூறினார்.</p><p>குறிப்பாக, நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்கள் எதிர்கொள்ளும் அநீதி மற்றும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் ஒடுக்கப்படுவது குறித்தும் அவர் குறிப்பிட்டார். மோடி அரசின் கொள்கைகளுக்கு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில், லோக் பவனை முற்றுகையிடும் போராட்ட பேரணியை தமிழ்நாடு காங்கிரஸ் நடத்தும் என்று தங்கபாலு அறிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>போராட்டத்தால் கைது... மகளை காண காவல் நிலையம் சென்ற சோனியா காந்தி!</title><link>https://www.maalaimalar.com/news/national/sonia-gandhi-visited-the-police-station-to-see-her-daughter</link><comments>https://www.maalaimalar.com/news/national/sonia-gandhi-visited-the-police-station-to-see-her-daughter#comments</comments><guid isPermaLink="false">7352a508-a4ec-4227-8c5b-897ea321e6d6</guid><pubDate>Tue, 21 Jul 2026 16:19:31 +0000</pubDate><atom:updated>2026-07-21T16:19:31.017Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,sonia gandhi,Priyanka gandhi,சோனியா காந்தி,பிரியங்கா காந்தி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/0d51wzxg/New-Project-2026-07-21T214322.532.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மகளை காண காவல் நிலையம் சென்ற சோனியா காந்தி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/0d51wzxg/New-Project-2026-07-21T214322.532.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியின் கைதைத் தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி டெல்லி மந்திர் மார்க் காவல் நிலையத்திற்கு விரைந்துள்ளார்.</p><p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் போராட்டக்காரர்களுக்கு எதிரான போலீசாரின் அராஜகப் போக்கை கண்டித்து பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகவேண்டும் என பிரதமர் இல்லம் முன்பு காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>தொடர்ந்து பிரதமர் மோடியின் இல்லத்தை நோக்கி பேரணியாகச் சென்று முற்றுகையிட முயன்ற போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.</p><p>பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்ட முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதின்போது ராகுல் காந்தியின் மூக்கில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. </p><p>தலைவர்கள் கைது செய்யப்பட்டு காவல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதையறிந்த சோனியா காந்தி, மந்திர் மார்க் காவல் நிலையத்திற்கு அடைக்கப்பட்ட பிரியங்கா காந்தியை சென்று பார்த்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கடுமையான குற்றம் என வகைப்படுத்தப்பட்டால்., சிறார் கிடையாது, வயது வந்தோர்: உச்சநீதிமன்றம்</title><link>https://www.maalaimalar.com/news/national/minor-can-be-tried-as-adult-if-crime-qualifies-as-heinous-offence-supreme-court</link><comments>https://www.maalaimalar.com/news/national/minor-can-be-tried-as-adult-if-crime-qualifies-as-heinous-offence-supreme-court#comments</comments><guid isPermaLink="false">cc95ba72-2e49-4ec3-997c-ac014537ee52</guid><pubDate>Tue, 21 Jul 2026 15:47:30 +0000</pubDate><atom:updated>2026-07-21T15:47:30.974Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,உச்சநீதிமன்றம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-09/902uanwe/supremecourt.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சுப்ரீம் கோர்ட்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-09/902uanwe/supremecourt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>18 வயதிற்கு உட்பட்டோருக்கான சிறார் கொலைக் குற்றத்தில் ஈடுபட்டால், சிறாருக்கான நீதி சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படும்.</p><p>18 வயதிற்கு உட்பட்டோருக்கான சிறார் சில சமயங்களில் பெரிய அளவிலான குற்றத்தில் ஈடுபடும் சம்பவம் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. கூட்டு பாலியல் வன்கொடுமை, கொலை போன்ற குற்றச் செயல்களிலும் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>இவ்வாறு கைது செய்யப்படும் சிறார்களுக்கு, சிறார் நீதி சட்டத்தின் தண்டனை வழங்கப்படும். இந்தியத் தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவு 302-ன் கீழ் வரும் கொலைக் குற்றத்தை, சிறுவர் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015-ன் கீழ் கொடுமையான குற்றம் என வகைப்படுத்த வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.</p><p>சிறுவர்களைப் பெரியவர்களைப் போல விசாரிப்பதற்கான சட்டக் கட்டமைப்பைத் தெளிவுபடுத்தும் நோக்கில் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.</p><p>இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவு 302-ன் கீழ் தண்டனைக்குரிய குற்றத்திற்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. இதில் ஆயுள் தண்டனையே குறைந்தபட்ச தண்டனையாக உள்ளது. எனவே, இது கடுமையான குற்றம் என வகைப்படுத்தப்படும் என்று நீதிபதி பார்திவாலா தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.</p><p>மேலும், பிரிவு 302-இன் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், நீதிமன்றங்கள் ஆயுள் தண்டனைக்குக் குறைவான தண்டனையை விதிக்க முடியாது என்பதால், கொலைக்கான குறைந்தபட்ச தண்டனை ஆயுள் தண்டனை என்பது அதன் தவிர்க்க முடியாத உட்பொருளாகும்.</p><p>சிறார் நீதிச் சட்டத்தின்படி, குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றங்களே கடுமையான குற்றங்கள் (heinous offences) எனக் கருதப்படுகின்றன.</p><p>பீகார் மாநிலம் பாட்னா உயர்நீதிமன்தற்தில் இது தொடர்பான ஒரு வழக்கில் மேல்முறையீட்டாளரை வயது வந்தவராகக் கருதி விசாரிக்க வேண்டும் என்று பாட்னா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன், இந்த வழக்கை ஒரு வழக்கமான நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு சிறார் நீதி வாரியத்திற்கு உத்தரவிட்டது.</p><p>சிறுவரைத் தாங்களே விசாரிக்க வேண்டும் என்று சிறார் நீதி வாரியம் ஆரம்பத்தில் முடிவு செய்திருந்தது, ஆனால் மேல்முறையீட்டு அமர்வு நீதிமன்றம் அந்த முடிவை ரத்து செய்தது. பின்னர், சிறாரை வயது வந்தவராகக் கருதி விசாரிக்க அனுமதிக்கும் உத்தரவை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டவர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.</p><p>இந்த நிலையில் உச்சநீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பு அளித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டும் &apos;கட்டா குஸ்தி 2&apos; - உலகளவில் ரூ.55 கோடி வசூல்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/gatta-kusthi-2-makes-a-massive-impact-at-the-box-office-grosses-55-crore-worldwide</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/gatta-kusthi-2-makes-a-massive-impact-at-the-box-office-grosses-55-crore-worldwide#comments</comments><guid isPermaLink="false">43013b3e-1730-4548-ab11-03abdcd993a1</guid><pubDate>Tue, 21 Jul 2026 15:46:13 +0000</pubDate><atom:updated>2026-07-21T15:46:13.913Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Vishnu Vishal,விஷ்ணு விஷால்,aishwarya lekshmi,கட்டா குஸ்தி 2,Gatta Kusthi 2,ஐஸ்வர்யா லக்ஷ்மி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/oeie4mwh/New-Project-2026-07-21T211549.828.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டும் 'கட்டா குஸ்தி 2' – உலகளவில் ரூ.55 கோடி வசூல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/oeie4mwh/New-Project-2026-07-21T211549.828.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>செல்ல அய்யாவு எழுத்து மற்றும் இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை.3ம் தேதி வெளியானப் படம் ‘கட்டா குஸ்தி 2’. 2022-ல் வெளியாகி வெற்றிபெற்ற 'கட்டா குஸ்தி' படத்தின் தொடர்ச்சியாக இது உருவாக்கப்பட்டுள்ளது.</p><p>இரண்டாம் பாகத்திலும், முதல் பாகத்தில் நடித்த கருணாஸ், காளி வெங்கட், முனிஷ்காந்த், மற்றும் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஷான் ரோல்டன்  இசையமைத்துள்ளார். </p><p>வெளியானதிலிருந்து தற்போதுவரை திரையரங்குகளில் படம் நன்றாக ஓடிவருகிறது. இந்நிலையில் படம் உலகளவில் ரூ.55 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p><p>இதன்மூலம் நடிகர் விஷ்ணு விஷாலின் திரைப்பயணத்திலேயே ரூ.50 கோடி வசூலைக் கடந்த முதல் திரைப்படம் இதுவாகும். மேலும் 2026 ஆம் ஆண்டில் ரூ.50 கோடி வசூலைக் கடந்த 8-வது தமிழ் படம் என்ற பெருமையையும் இப்படம் பெற்றுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-21-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-21-july-2026#comments</comments><guid isPermaLink="false">e1a983bf-6930-4a96-8d7d-aee2f254884f</guid><pubDate>Tue, 21 Jul 2026 04:01:21 +0000</pubDate><atom:updated>2026-07-21T15:07:11.371Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/4243r6xf/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/4243r6xf/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/aap-says-rahul-gandhi-protest-near-pm-house-modi-allowed-it-to-weaken-cjp">CJP போராட்டத்தை பலவீனப்படுத்த ராகுல் காந்தியை உட்கார அனுமதித்ததே பிரதமர் மோடிதான்: ஆம் ஆத்மி பகிரங்க குற்றச்சாட்டு</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/arivu-secretariat-meeting-with-chief-minister-vijay">தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயுடன் பின்னணி பாடகர் அறிவு சந்திப்பு!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/prison-is-not-new-to-dmk-kanimozhi-mp-interview">சிறைச்சாலை தி.மு.க.விற்கு புதிது கிடையாது: கனிமொழி எம்.பி. பேட்டி</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/amid-cjp-protests-iit-roorkee-asks-students-staff-not-to-partake-in-political-activity">CJP போராட்டம் எதிரொலி: மாணவர்கள், ஸ்டாஃப்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த ஐ.ஐ.டி. ரூர்க்கீ</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/world-cup-hockey-tournament-india-mens-team-announced">உலகக் கோப்பை ஹாக்கி போட்டி: இந்திய ஆண்கள் அணி அறிவிப்பு</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/us-iran-war-iranian-delegation-in-pakistan-to-hold-talks-with-pm-sharif-field-marshal-munir">பாகிஸ்தானில் ஈரானின் உயர்மட்டக் குழு: பிரதமர், ராணுவ தளபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/bengal-cm-blames-previous-tmc-govt-for-loss-of-europe-air-links-mounting-debt-on-state-economy">ரூ. 8 லட்சம் கோடி கடன்: முந்தைய மம்தாவின் திரிணாமுல் அரசு மீது சுவேந்து அதிகாரி குற்றச்சாட்டு</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/food-delivery-worker-wins-chinas-top-literary-prize">சீனாவின் உயரிய இலக்கிய விருதை வென்ற உணவு டெலிவரி ஊழியர்</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/hs-prannoy-and-devika-sihag-exit-early-at-china-open">சீனா ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் இந்தியர்கள் ஏமாற்றம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/opposition-parties-disrupt-parliament-both-houses-adjourned-all-day">எதிர்க்கட்சிகள் அமளி: இரு அவைகளும் நாள்முழுவதும் ஒத்திவைப்பு</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/cjp-protest-do-not-drag-us-into-it-delhi-high-court-on-plea-alleging-use-of-force-on-students">மாணவர்கள் போராட்டம் விவகாரத்தில் எங்களை இழுக்காதீர்கள்: டெல்லி உயர்நீதிமன்றம்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/77516b2d-5a97-484d-ab57-83028e4f9e4e">நீட் தேர்வுக்கு எதிராக முழக்கம் - பாடகர் அறிவு கைது</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/delhi-high-court-allows-sonam-wangchuk-to-choose-hospital">விருப்பப்பட்ட மருத்துவமனைக்குச் செல்ல அனுமதி: சோனம் வாங்சுக்கிற்கு டெல்லி உயர் நீதிமன்றம் சாதகமான தீர்ப்பு!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/uttarakhand-downpour-dabkeshwar-mahadev-temple-flooded">உத்தரகாண்டில் கனமழை: டப்கேஷ்வர் மகாசிவன் கோவிலை சூழ்ந்த வெள்ளம்!</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/number-1-in-rankings-arina-sabalenkas-new-record">தரவரிசையில் நம்பர் 1: அரினா சபலென்காவின் மற்றொரு சாதனை</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/both-teams-have-equal-chance-to-win-t20-series-sikandar-raza">இரு அணிகளும் வெற்றிபெற சம வாய்ப்பு: டி20 தொடர் குறித்து சிக்கந்தர் ராசா</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/this-country-is-not-your-fathers-property-pm-modi-arvind-kejriwal-slams">"இந்த நாடு உங்கள் தந்தையின் சொத்து அல்ல, பிரதமர் மோடி!"-அரவிந்த் கெஜ்ரிவால் கடும் தாக்கு!... </a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/be4bfd4a-1099-42c1-a508-04536354f321">பிறந்தநாள் கொண்டாடும் மனநிலையில் இல்லை - மல்லிகார்ஜூன கார்கே</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/03334d6b-6bde-42fe-a82d-3764dba7b6c9">பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு - முதலமைச்சர் விஜய்க்கு ஐகோர்ட் நோட்டீஸ்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/36d83f67-0602-4ab4-b0b3-77cfbae2bbb4">துணை ஜனாதிபதி வருகை - திருப்பூரில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/a4d618d4-266a-4a6e-b6c1-6738d4a795b5">கட்டுமான அனுமதிக்கான கட்சி நிதி வசூல் நிறுத்தம் - வீடுகள் விலை குறைகிறது</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/trump-slaps-50-tariffs-new-duties-on-key-canadian-imports-under-uscanada-trade-dispute">இது நியாயமே இல்ல.. கனடா மீது 50% வரியை தீட்டிய டிரம்ப் -கார்னி கொந்தளிப்பு<br></a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/c06bac6b-6b04-4642-9bd5-8b4c9398b0d7">மக்களே ஆணவத்துக்குச் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள்! - மு.க.ஸ்டாலின்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/guyana-maritime-tragedy-27-bodies-found-sailors-test-positive">கயானா படகு விபத்து: 27 உடல்கள் மீட்பு; போதைப்பொருள் பரிசோதனையில் மாலுமிகள் சிக்கியதால் பரபரப்பு!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/ajit-doval-honoured-with-lokmanya-tilak-national-award">தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு 'லோக்மான்ய திலகர் விருது'!... </a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/92218ea6-e31e-429a-9c51-3ff04bfe209d">காவல்துறையினர் கண்ணியம் தவறக் கூடாது!- நயினார் நாகேந்திரன்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/deadly-flash-floods-in-eastern-afghanistan-20-killed">ஆஃப்கானிஸ்தானில் திடீர் வெள்ளப்பெருக்கு: 20 பேர் பலி; 100-க்கும் மேற்பட்டோர் மாயம்!... </a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/ca9c7d59-6f3b-4f07-939f-20fe3e86130f">நீட் வினாத்தாள் கசிவு கொடும் பாவச் செயல்.. பிரதமர் மோடி மௌனம் கலைப்பு</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/ba20a9ec-75bf-4a28-8321-0857667f4874">அலுவலகத்தை மாற்றும் முதலமைச்சர் விஜய்? - ஆஸ்தான ஜோதிடர் ஆலோசனை காரணமா?</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/4bc2c025-bc8f-40ba-b9a5-719999b95e35">கார்கே பிறந்தநாள் - முதலமைச்சர் விஜய் வாழ்த்து</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/9f91e859-c0ba-46cc-87d6-9e9266d1249a">நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம் - அமைச்சர் ராஜ்மோகன் மரியாதை</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/0462a245-3b74-4003-834b-ab1c2c54d599">ஆகஸ்ட் 5-ல் பட்ஜெட் தாக்கல்- சபாநாயகர் தகவல்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/cce69c86-57c0-4546-a672-e41cbf604cc5">வறட்சியால் வாடும் கிராம மக்கள் மழை வேண்டி நடத்திய தவளைத் திருமணம்!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/nta-warns-against-fake-omr-sheets-neet-ug-2026">NEET-UG 2026: போலியான OMR விடைத்தாள்கள் பரப்பினால் கடும் நடவடிக்கை-NTA எச்சரிக்கை!... </a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/b51c3442-a2ff-48bd-8e96-25961e36ed3a">ஜூலை 27-ல் அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/spain-second-world-cup-triumph-madrid-fans-historic-celebration">ஸ்பெயின் உலகக்கோப்பை வெற்றி கொண்டாட்டம்: மேட்ரிட் நகரில் ரசிகர்கள் பிரம்மாண்ட வரவேற்பு!...</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/single-call-from-virat-kohli-pv-sindhu-back-on-record-breaking-path-with-japan-open-title">விராட் கோலியின் ஒரே ஒரு போன் கால்: ஜப்பான் ஓபன் வெற்றியுடன் சாதனைப் பாதைக்குத் திரும்பிய பி.வி.சிந்து!...</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/3d3bc2a1-17f0-450c-8f98-a70fff36d1f4">நெல் கொள்முதலில் தொடரும் கையூட்டு: குவிண்டாலுக்கு ரூ.325 பறிப்பதைத் தடுக்க அன்புமணி வலியுறுத்தல்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/09a0f3aa-bfc4-4f11-9908-070d3eb4e781">GOLD PRICE TODAY: நாளுக்கு நாள் ஏறும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/diljit-dosanjh-supports-student-protests-despite-anti-national-tag-fears">'மீண்டும் என்னை தேசவிரோதி என்பார்கள்': மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த தில்ஜித் தோசாஞ்ச்!...</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/7b73f680-bc22-4187-be2e-eb93e6e20d27">தனது 83 ஆவது பிறந்தநாள் விழா ரத்து செய்யப்படுகிறது!- வைகோ</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/sikkim-tunnel-landslide-rescue-27-workers-trapped-methane-leak-hampers-operations">Sikkim: நிலச்சரிவால் சுரங்கப்பாதைக்குள் 27 தொழிலாளர்கள் சிக்கித் தவிப்பு - மீத்தேன் வாயு கசிவால் மீட்பதில் சிக்கல்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/cjp-dharna-continues-protest-march-to-parliament-over-dharmendra-pradhan-resignation-keeps-delhi-on-edge">இன்றும் பாராளுமன்றம் நோக்கி பேரணி தொடரும் - CJP அறிவிப்பு</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/6718ca4f-394f-4ce0-8f4d-f2a524f402dc">இங்கிலாந்து புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாமிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/ce5bfe19-8180-4674-acf1-75b69c84a40e">வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்- ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/0a27f43c-cc74-4fdc-8d32-fd9577d92fa3">கேபிள் டி.வி., டி.டி.எச். சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்த திட்டமா?- மத்திய அரசு விளக்கம்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/9f86052c-a139-4221-a893-68b35a1821b8">சென்னையில் நாளை (22.07.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்...</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/74493a2e-1175-4349-bd50-436bf3bd4bc3">போலி மருந்து தயாரிப்பு வழக்கில் 5 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு</a></p> ]]></content:encoded></item><item><title>CJP போராட்டத்தை பலவீனப்படுத்த ராகுல் காந்தியை உட்கார அனுமதித்ததே பிரதமர் மோடிதான்: ஆம் ஆத்மி பகிரங்க குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/national/aap-says-rahul-gandhi-protest-near-pm-house-modi-allowed-it-to-weaken-cjp</link><comments>https://www.maalaimalar.com/news/national/aap-says-rahul-gandhi-protest-near-pm-house-modi-allowed-it-to-weaken-cjp#comments</comments><guid isPermaLink="false">7297e388-64db-41c8-8406-7fd6350a82ed</guid><pubDate>Tue, 21 Jul 2026 15:05:54 +0000</pubDate><atom:updated>2026-07-21T15:05:54.970Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,AAP,pm modi,பிரதமர் மோடி,CJP Protest,கரப்பான் பூச்சி ஜனதா கட்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/xdxogc8n/RahulGAndhi00004.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rahul Gandhi Arrest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/xdxogc8n/RahulGAndhi00004.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததை எதிர்த்து, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தை முன்னெடுத்தது. கடந்த மாதம் டெல்லி ஜந்தர் மந்தரில் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினர். மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை அமைச்சரவையில் இருந்து நீக்கும் வரை போராட்டம் நடைபெறும் என அறிவித்தனர்.</p><h2>நாடாளுமன்றம் முற்றுகை போராட்டம்</h2><p>நேற்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இதை சரியாக பயன்படுத்த நினைத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி, நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவித்தது. நேற்று பாராளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றபோது, போலீசார் துணை ராணுவத்துடன் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது தடியடி நடத்தப்பட்டது. கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.</p><p>மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு எதிரான இந்த அடக்கு முறைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.</p><h2>ராகுல் காந்தி தர்ணா</h2><p>இன்று மாலை திடீரென ராகுல் காந்தி பிரதமர் மோடி வீட்டை நோக்கி பேரணி சென்றார். அவருடன் காங்கிரஸ் தலைவர்களும் சேர்ந்து சென்றனர். பிரதமர் மோடி வீட்டின் அருகில் போலீசார் <a href="https://www.maalaimalar.com/news/national/protest-near-prime-ministers-residence-rahul-and-priyanka-gandhi-forcibly-detained">ராகுல் காந்தி</a>யை தடுத்து நிறுத்தனர்.</p><p>அவர் கீழே அமர்ந்து போராட்டம் நடத்தினார். பின்னர், கலைந்து செல்லவில்லை என்றால், கைது செய்யப்படுவீர்கள் என்று போலீசார் எச்சரித்தனர். ஆனால், ராகுல் காந்தி கலைந்து செல்லவில்லை. இதனால் போலீசார் அவரை கைது செய்தனர். அவருடன் பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.</p><h2>ஆம் ஆத்மி குற்றச்சாட்டு</h2><p>இந்த நிலையில் ராகுல் காந்தி பிரதமர் வீட்டு அருகே போராட்டம் நடத்தியதை ஆம் ஆத்மி கட்சி விமர்சனம் செய்துள்ளது. மோடிதான் அவரை உட்கார வைத்துள்ளார் என்று குற்றம்சாட்டியுள்ளது.</p><p>இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய்சிங் தனது எக்ஸ் பக்கத்தில் "கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) போராட்டத்தை பலவீனப்படும் வகையில், பிரதமர் மோடி ராகுல் காந்தியை போராட்டம் நடத்த கொண்டு வந்துள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.</p><h2>அதிஷி</h2><p>டெல்லி மாநில முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான அதிஷி கூறுகையில் "மத்திய அரசு ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் CJP மற்றும் வாங்சுக் உடன் பேச மறுத்துவிடடது. ராகுல் காந்தி போராட்டத்தில் இருந்து ஒரு மணி நேரத்திற்குள் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.</p><p>நேற்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் பாராளுமன்றத்தை நோக்கி பேரணி சென்றபோது 100 மீட்டருக்கு முன்னதாகவே தடுத்து நிறுத்தப்பட்டனர். ஆனால், ராகுல் காந்தியை பிரதமர் வீடு வரைக்கும் அனுமதித்துள்ளனர். காங்கிரஸ்- பாஜக ஒன்று என்பது இதுவே சாட்சி" எனத் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவராக தவெக செயலாளர் சிவா நியமனம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-secretary-siva-appointed-as-chairman-of-the-tamil-nadu-housing-board</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-secretary-siva-appointed-as-chairman-of-the-tamil-nadu-housing-board#comments</comments><guid isPermaLink="false">1a70fe52-f8de-41af-9213-0b437c27b2f7</guid><pubDate>Tue, 21 Jul 2026 14:55:47 +0000</pubDate><atom:updated>2026-07-21T14:55:47.469Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்,தவெக அரசு,TVK Govt,Tamil Nadu Housing Board</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/ekr74mcz/New-Project-2026-07-21T202522.818.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவராக தவெக செயலாளர் சிவா நியமனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/ekr74mcz/New-Project-2026-07-21T202522.818.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் புதிய தலைவராக வடசென்னை வடக்கு மாவட்ட தவெக செயலாளர் சிவா நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியில் இருந்த பூச்சி முருகன் கடந்த மே மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். </p><p>அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்து இந்த புதிய நியமனம் போடப்பட்டுள்ளது. நியமனத்திற்கான அரசாணை வெளியானதைத் தொடர்ந்து, வி. சிவா தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.</p><p>முதலமைச்சர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராகவும், தவெகவின் உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தியதிலும் வி. சிவா முக்கியப் பங்காற்றியுள்ளார்.  </p><p>விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடாமல் இருந்திருந்தால், இவர்தான் அங்கு தேர்தலில் நின்றிருப்பார் என்றும் கூறப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>போராட்டத்தின்போது பர்கர் சாப்பிட்ட செய்தித் தொடர்பாளர் நீக்கம் - கரப்பான் பூச்சி கட்சி அதிரடி!</title><link>https://www.maalaimalar.com/news/national/spokesperson-dismissed-for-eating-a-burger-during-the-protest-cockroach-party-takes-drastic-action</link><comments>https://www.maalaimalar.com/news/national/spokesperson-dismissed-for-eating-a-burger-during-the-protest-cockroach-party-takes-drastic-action#comments</comments><guid isPermaLink="false">1e4a678c-a44c-464e-916b-815b060cbcf8</guid><pubDate>Tue, 21 Jul 2026 14:39:40 +0000</pubDate><atom:updated>2026-07-21T14:39:40.128Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Burger,பர்கர்,Cockroach Party,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,Vijeta Dahiya,விஜேதா தஹியா</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/16ce12hr/New-Project-2026-07-21T200917.938.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ போராட்டத்தின்போது பர்கர் சாப்பிட்ட செய்தித் தொடர்பாளர் நீக்கம் - கரப்பான் பூச்சி கட்சி அதிரடி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/16ce12hr/New-Project-2026-07-21T200917.938.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் விஜேதா தஹியா அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். நேற்று கரப்பான்பூச்சி கட்சி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியில் ஈடுப்பட்டிருந்த வேளையில், அதில் பங்கேற்காமல், பர்கர் சாப்பிட்டுக் கொண்டும், விமர்சிப்பவர்களைக் கேலி செய்துகொண்டும் இருந்த காணொளிகள் இணையத்தில் வைரலாகின.</p><p>இதனைத்தொடர்ந்து சிஜேபியின் தலைமை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் கட்சியின் பிற உறுப்பினர்கள் காவல்துறையின் கடுமையான அடக்குமுறையை எதிர்கொண்ட நேரத்தில், அவர் இவ்வாறு நடந்துகொண்டது "மிகவும் உணர்ச்சியற்றது" மற்றும் பொறுப்பற்றது என்று சிஜேபி தெரிவித்துள்ளது. </p><p>இதுதொடர்பாக எழுந்த விமர்சனங்களுக்கு, போராட்டத்தில் ஈடுபட்ட பலரைப் போலவே தானும் இரண்டு நாட்களாக தூங்கவில்லை என்றும், பசியின் காரணமாகவே பர்கர் சாப்பிட்டதாகவும் விஜேதா தஹியா விளக்கம் அளித்துள்ளார். </p><p>“போராட்டக்காரராக இருப்பதுதான் என் வேலை என்பது போல என்னை ஏன் பொறுப்பேற்கச் சொல்கிறீர்கள்?” எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>அனிருத் குரலில் &apos;Hi&apos; படத்தின் &apos;ரசகுல்லா&apos; பாடலின் ப்ரோமோ வெளியானது!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/hi-rasagulla-song-promo-out-anirudh-second-single</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/hi-rasagulla-song-promo-out-anirudh-second-single#comments</comments><guid isPermaLink="false">987675a0-cb79-478b-a8b6-d54a3ea5df95</guid><pubDate>Tue, 21 Jul 2026 14:28:58 +0000</pubDate><atom:updated>2026-07-21T14:28:58.231Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Anirudh Ravichander,நயன்தாரா,Nayanthara,kavin,கவின்,HiMovie,RasgullaPromo,VishnuEdavan</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/vsqbhna0/Hi-Movie-Second-Single-Update" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Hi Movie Second Single Update]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/vsqbhna0/Hi-Movie-Second-Single-Update?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இயக்குனர் விஷ்ணு எடவன் இயக்கத்தில், 'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா மற்றும் வளர்ந்து வரும் இளம் நடிகர் கவின் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்து வரும் திரைப்படம் 'Hi'.</p><p>ரவுடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார்.</p><p>ஏற்கனவே வெளியான இந்த படத்தின் முதல் பாடல் ஜிவி பிரகாஷ் குரலில் வெளியான ' கண்ணக்குழியா' மெலடி பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது இரண்டாவது சிங்கிள் பாடலின் அப்டேட் வெளியாகியுள்ளது.</p><h2>'ரசகுல்லா' ப்ரோமோ:</h2><p>'Hi' திரைப்படத்தின் இரண்டாவது பாடலான 'ரசகுல்லா' பாடலின் ப்ரோமோ வீடியோ இன்று வெளியாகியுள்ளது. இப்பாடலை பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான அனிருத் ரவிச்சந்தர் தனது துள்ளலான குரலில் பாடியுள்ளார். </p><p>ப்ரோமோ வீடியோவின் இறுதியில், இப்பாடல் நாளை வெளியாகும் என்று அப்படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.</p><h2><strong>புதிய ஜோடி..</strong></h2><p>நயன்தாரா - கவின் ஆகியோர் முற்றிலும் புதிய காம்பினேஷனில் உருவாகி வரும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/FWBApe_54w0?si=-6SJi528xpfqhxZt"></iframe></figure>]]></content:encoded></item><item><title>பிரதமர் இல்லம் அருகே போராட்டம்: ராகுல், பிரியங்கா காந்தி குண்டுகட்டாக கைது!</title><link>https://www.maalaimalar.com/news/national/protest-near-prime-ministers-residence-rahul-and-priyanka-gandhi-forcibly-detained</link><comments>https://www.maalaimalar.com/news/national/protest-near-prime-ministers-residence-rahul-and-priyanka-gandhi-forcibly-detained#comments</comments><guid isPermaLink="false">fd28a478-da75-42b8-897d-2fdaac4ca249</guid><pubDate>Tue, 21 Jul 2026 13:55:17 +0000</pubDate><atom:updated>2026-07-21T13:55:17.559Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,pm modi,Priyanka gandhi,பிரதமர் மோடி,பிரியங்கா காந்தி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/4x3dbvd8/New-Project-2026-07-21T191654.032.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர் இல்லம் அருகே போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி குண்டுகட்டாக கைது!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/4x3dbvd8/New-Project-2026-07-21T191654.032.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் பிரதமர் இல்லம் அருகே நீட் தேர்வு முறைகேடு தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தி ஜூன்.20 முதல் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று நாடாளுமன்றத்தில் நோக்கி பேரணியாக சென்றனர்.</p><p>இந்த பேரணியின்போது போலீசார் இளைஞர்கள் மற்றும் பெண்கள்மீது சராமாரி தாக்குதல் நடத்தினர். இந்நிலையில் இந்த தாக்குதலை கண்டித்து இன்று காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>போராட்டக்காரர்கள் மீதான காவல்துறையின் அராஜகப் போக்கிற்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா பதவி விலகவேண்டும் என வற்புறுத்தி போராட்டத்தை தொடங்கினர்.</p><p>ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மல்லிகார்ஜூனே கார்கே, பிரியங்கா காந்தி, வேணுகோபால், கர்நாடகா மற்றும் கேரள மாநில முதலமைச்சர்களும் மற்றும் பல கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களும் கலந்துகொண்டனர். </p><p>போராட்டத்திற்கு நடுவே மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் ராகுல் காந்தியிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் பேச்சுவார்த்தை ஒத்திவராத நிலையில் கிட்டத்தட்ட 3 மணிநேரத்திற்கும் மேலாக போராட்டம் தொடர்ந்தது. தொடர்ந்து பிரதமரின் இல்லத்தை நோக்கி பேரணியாக சொல்ல முற்பட்டனர். </p><p>இந்தப் பேரணியை கலைக்க முற்பட்டபோது காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை போலீசார் கைது செய்தனர். மேலும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்வையும் கைது செய்தனர். </p>]]></content:encoded></item><item><title>தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயுடன் பின்னணி பாடகர் அறிவு சந்திப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/arivu-secretariat-meeting-with-chief-minister-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/arivu-secretariat-meeting-with-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">5d9ff185-cc58-4f78-b281-99298c9016ae</guid><pubDate>Tue, 21 Jul 2026 13:44:00 +0000</pubDate><atom:updated>2026-07-21T13:44:00.217Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Secretariat,CMVIJAY,AadhavArjuna,NEETProtest,TherukuralArivu,பாடகர்அறிவு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/ytk8hl25/CMVijay-SingerArivu" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CMVijay - SingerArivu ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/ytk8hl25/CMVijay-SingerArivu?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறை சீர்திருத்தக் கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியைக் கண்டித்து தமிழ்நாட்டில் சில இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. </p><p>இதன் ஒரு பகுதியாக, இன்று பிற்பகல் சென்னை தலைமைச் செயலகத்தின் முன்பாகப் பிரபல ராப் பாடகர் 'தெருக்குரல்' அறிவு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.</p><h2><strong>தலைமைச் செயலகத்தில் போராட்டம்</strong></h2><p>இன்று பிற்பகல் சுமார் 12:30 மணியளவில் பாடகர் அறிவு தலைமைச் செயலகத்திற்குள் நுழைய முயன்றார். "நாடு தழுவிய அளவில் நீட் தேர்வை உடனடியாகத் தடை செய்ய வேண்டும், இதுகுறித்துத் தமிழக முதல்வர் பேச வேண்டும்" எனப் பலத்த கோஷங்களை எழுப்பினார்.</p><h2><strong>போலீசார் நடவடிக்கை:</strong></h2><p>அனுமதியின்றித் தலைமைச் செயலகம் முன்பாகப் போராட்டம் நடத்தியதால், அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தினர். </p><p>இதனால் அங்குச் சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து முழக்கமிட்டபடி இருந்த பாடகர் அறிவைக் காவல்துறையினர் கைது செய்து, போலீஸ் வாகனத்தில் ஏற்றி விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.</p><h2><strong>'கைதான அறிவை கூட்டிட்டு வாங்க" - முதல்வர் விஜய் உத்தரவு</strong></h2><p>பாடகர் அறிவு கைது செய்யப்பட்ட விபரம் அறிந்த சில நிமிடங்களிலேயே, தமிழக முதல்வர் விஜய் காவல்துறை அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார். "கைது செய்யப்பட்ட பாடகர் அறிவை உடனடியாகத் தலைமைச் செயலகத்திற்கு அழைத்து வாருங்கள்" என முதலமைச்சர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரில் சென்று, அறிவை ஏற்றிச் செல்லப்பட்ட அதே போலீஸ் வாகனத்திலேயே அவரை மீண்டும் தலைமைச் செயலகத்திற்குப் பலத்த பாதுகாப்புடன் ஏற்றி அனுப்பினார்.</p><p>தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. நீட் தேர்வுக்கு எதிராகத் டெல்லி மற்றும் தமிழகத்தில் நடக்கும் மாணவர்களின் போராட்ட நிலவரங்கள் குறித்தும், மாநிலத்தின் கல்வி உரிமை சார்ந்த கோரிக்கைகள் குறித்தும் முதல்வரிடம் அறிவு விரிவாக எடுத்துரைத்தார் என்ற செய்தியும் தெரிவந்துள்ளது.</p><p>போராட முயன்ற கலைஞர் ஒருவரைத் தடுத்துக் கைது செய்யாமல், உடனே நேரில் அழைத்து அவரது கோரிக்கைகளைக் கேட்டறிந்த முதல்வர் விஜய்யின் இந்தச் செயல் சமூக வலைத்தளங்களில் தற்போதைய டிரெண்டிங் டாபிக்காக மாறி இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>சிறைச்சாலை தி.மு.க.விற்கு புதிது கிடையாது: கனிமொழி எம்.பி. பேட்டி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/prison-is-not-new-to-dmk-kanimozhi-mp-interview</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/prison-is-not-new-to-dmk-kanimozhi-mp-interview#comments</comments><guid isPermaLink="false">fcd96713-5959-4a7b-ac6b-5ed7f8ba9c9b</guid><pubDate>Tue, 21 Jul 2026 13:29:54 +0000</pubDate><atom:updated>2026-07-21T13:29:54.285Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,சிறை,Kanimozhi,கனிமொழி,Prison</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/8rto6mas/kanimozhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ kanimozhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/8rto6mas/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் தி.மு.க. சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. </p><p>தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் விளாத்திகுளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனும் பங்கேற்றார்.</p><p>கூட்டத்தில், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பேசும்போது முதலமைச்சர் விஜய்யை கடுமையான வார்த்தைகளால் ஒருமையில் பேசினார். அவரது பேச்சு சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியது. </p><h2>3 பிரிவுகளில் வழக்கு</h2><p>மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வின் இந்தப் பேச்சுக்கு எதிராக தூத்துக்குடி வடக்கு மாவட்ட த.வெ.க. செயலாளர் பாலசுப்பிரமணியன் தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தாவிடம் புகார் மனு அளித்தார். </p><p>அதில், முதலமைச்சர் பற்றி அவதூறாகவும், மிரட்டும் வகையிலும் பேசிய மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.</p><p>புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மீது புதிய குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 351(3)-கொலை மிரட்டல் விடுத்தல், 352- அவதூறாக பேசுதல், 353(2)- மக்களிடையே பகை வெறுப்பை தூண்டும் வகையில் பேசுவது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.</p><h2>மார்க்கண்டேயன் கைது</h2><p>இதைத்தொடர்ந்து விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. இல்லத்திற்கு டி.எஸ்.பி.க்கள் கண்ணன், சுந்தரபாண்டியன், இன்ஸ்பெக்டர் ஜானி தலைமையிலான போலீசார் சென்றனர். அதன்பின், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வை கைது செய்து போலீஸ் வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.</p><p>தி.மு.க. எம்.எல்.ஏ. கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாருக்கு எதிராக திமுகவினர் கண்டன கோஷங்கள் எழுப்பி, போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>இந்நிலையில், நீதிமன்ற காவலில் பாளையங்கோட்டை சிறையில் உள்ள தி.மு.க. எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை திமுக எம்.பி. கனிமொழி சந்தித்தார். அதன்பின் செய்தியாளர்களுக்கு கனிமொழி பேட்டி அளித்தார்.</p><p>அப்போது அவர் கூறுகையில், தி.மு.க.விற்கு சிறைச்சாலை புதிது கிடையாது. வழக்குகள், கைதுக்கு திமுக அஞ்சாது.</p><p>திமுகவினர் பாளையங்கோட்டை சிறைக்கு வருவதைப் பெருமையாகக் கருதுவர்.</p><p>புகார் குறித்து விசாரிக்க கூட அரசு தயாராக இல்லை.</p><p>முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனனையும் சிறையில் அடைக்க முயற்சித்தனர்.</p><p>ஜனநாயகத்தின் மீது அக்கறை இல்லாமல் செயல்படுகிறது தவெக அரசு.</p><p>எதிர்க்கட்சிகளை அடக்கவே காவல்துறை முயற்சிக்கிறது.</p><p>திமுக ஆட்சியில் இருந்தபோது இதுபோன்ற நடவடிக்கை இல்லை.</p><p>பாஜக பெயரை சொல்ல தயக்கம் காட்டுகிறது.</p><p>கொள்கையை ஒருபோதும் திமுக விட்டுக் கொடுக்காது.</p><p>அதிமுக, திமுக ஒருபோதும் நெருங்கி வந்தது கிடையாது.</p><p>தமிழ்நாட்டின் உரிமைக்கு எல்லா கட்சிகளும் ஒரே குரலில் பேச வேண்டும் என தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நீட் தேர்வு வேண்டாம் என்பதே எங்களின் நிலைப்பாடு - தவெக அறிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/our-stance-is-that-the-neet-exam-is-not-needed-tvk-statement</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/our-stance-is-that-the-neet-exam-is-not-needed-tvk-statement#comments</comments><guid isPermaLink="false">9f977a06-013c-4c60-ba1d-c5a70a27cbc3</guid><pubDate>Tue, 21 Jul 2026 13:15:24 +0000</pubDate><atom:updated>2026-07-21T13:15:24.194Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,Neet exam,tvk</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/hbwkr3o7/New-Project-2026-07-21T184509.271.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நீட் தேர்வு வேண்டாம் என்பதே எங்களின் நிலைப்பாடு - தவெக அறிக்கை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/hbwkr3o7/New-Project-2026-07-21T184509.271.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வு வேண்டாம் என்பதே தங்களின் நிலைப்பாடு என நாடு முழுவதும் எதிரொலிக்கும் போராட்டங்களுக்கு மத்தியில் தவெக தெரவித்துள்ளது. இதுதொடர்பாக தவெக தலைமை வெளியிட்டுள்ளப் பதிவில்,</p><p>“நீட் தேர்வுக் குளறுபடிகளை மட்டும் எதிர்க்கவில்லை. நீட் தேர்வு என்பது அறவே கூடாது என்பதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு. ஓட்டுக்காக நீட்டை நாங்களே நீக்குவோம் என்று மக்களை ஏமாற்றும் மோசடி அரசியல் வேலையில் தவெக ஒருபோதும் ஈடுபடாது.</p><p>கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். </p><p>அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை நம் கட்சித் தலைவர் விஜய் ஏற்கனவே வலியுறுத்தி இருக்கிறார்.</p><p>மற்றவர் உழைப்புக்கும், மற்றவர் சிந்தனைக்கும், மற்றவர் போராட்டத்திற்கும் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளும் அரசியல் அறமற்ற வேலையைச் செய்பவர்கள், தவெக மீது சேறு வாரி இறைப்பதை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். </p><p>இதை மீறியும், தொடர்ந்து அவதூறு பரப்பினால், அவதூறு கழகத்தின் பழைய அரசியல் மோசடி வரலாறுகளை உலகமே தோண்டி எடுத்து அம்பலப்படுத்தும் சூழல் உருவாகும். அது அவதூறு கழக அரசியலுக்கு முடிவுரை எழுதுவதாகவும் அமையும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் மறந்துவிட வேண்டாம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>CJP போராட்டம் எதிரொலி: மாணவர்கள், ஸ்டாஃப்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த ஐ.ஐ.டி. ரூர்க்கீ</title><link>https://www.maalaimalar.com/news/national/amid-cjp-protests-iit-roorkee-asks-students-staff-not-to-partake-in-political-activity</link><comments>https://www.maalaimalar.com/news/national/amid-cjp-protests-iit-roorkee-asks-students-staff-not-to-partake-in-political-activity#comments</comments><guid isPermaLink="false">a8068579-401f-4a56-9993-d8706ea8d581</guid><pubDate>Tue, 21 Jul 2026 13:04:22 +0000</pubDate><atom:updated>2026-07-21T13:04:22.652Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>CJP Protest,கரப்பான் பூச்சி ஜனதா கட்சி,IIT Roorkee,ஐஐடி ரூர்க்கீ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/er4bw7l7/IITRoorkee.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ IIT Roorkee]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/er4bw7l7/IITRoorkee.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் அரசியல் சார்பான அறிக்கைகள் வெளியிடக்கூடாது என உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஐஐடி ரூர்க்கீ அறிவுறுத்தியுள்ளது.</p><h2>NEET வினாத்தாள் லீக்</h2><p>மத்திய அரசின் தேசிய தேர்வு முகமை (NTA) எம்.பி.பி.எஸ். படிப்பிற்கான தகுதித் தேர்வை (NEET) நடத்துகிறது. இந்த வருட படிப்பிற்கான நீட் தேர்வு நடைபெற்றது. ஆனால், தேர்வு நடைபெற்ற பின்னர், தேர்வுக்கு முன்னதாக வினாத்தாளில் கேட்கப்பட்ட பெரும்பாலான கேள்விகள் அடங்கிய மாதிரி வினாத்தாள் கசிந்தது தெரியவந்தது.</p><p>இதனால், பல்வேறு தரப்பில் இருந்து கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனால் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு, மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது.</p><h2>தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தல்</h2><p>இதனால் ஒரு தேர்வை சரியாக நடத்த முடியவில்லை. உயர்க்கல்வி சீர்குலைந்துள்ளது. இதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் பிரதான் மந்திரி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவர் ராஜினாமா செய்யவில்லை என்றால், பிரதமர் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கரப்பான் பூச்சி கட்சி வலியுறுத்தியது.</p><p>இரண்டு நடைபெறவில்லை. இதனால் கடந்த மாதம் காலவரையற்ற போராட்டத்தை ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடங்கினர். நேற்று இந்திய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது. இதை பயன்படுத்தி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் வகையில் பேரணி நடத்தினர். இதனால் போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி மாணவர்களை தடுத்து நிறுத்தினர். இதில் பலர் காயம் அடைந்தனர்.</p><h2>ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டம்</h2><p>இருந்தபோதிலும், ஜந்தர் மந்தரில் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஐஐடி ரூர்க்கீ, தனது மாணவர்கள் மற்றும் ஸ்டாஃப்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று ரிஜிஸ்டர் ஆபிஸ் மூலமாக அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.</p><p>அந்த அறிவுறுத்தலில் "அரசியல் அறிக்கைகள் வெளியிட மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அனுமதி இல்லை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>அத்தகைய கருத்துகள் மத்திய அரசுடனான ஐ.ஐ.டி.யின் உறவில் தர்மசங்கடத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>பிரதமர் மோடி</h2><p>நீட் வினாத்தாள் லீக் தொடர்பான இன்று பிரதமர், தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் மத்தியில் பேசினார். அப்போது இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். மாணவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவது நாம் உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>உலகக் கோப்பை ஹாக்கி போட்டி: இந்திய ஆண்கள் அணி அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/sports/world-cup-hockey-tournament-india-mens-team-announced</link><comments>https://www.maalaimalar.com/sports/world-cup-hockey-tournament-india-mens-team-announced#comments</comments><guid isPermaLink="false">d7ed01bd-ace5-469b-98cb-4610463114c1</guid><pubDate>Tue, 21 Jul 2026 12:23:37 +0000</pubDate><atom:updated>2026-07-21T12:23:37.280Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய அணி,Team India,ஹாக்கி இந்தியா,India squad,World cup Hockey,உலகக் கோப்பை ஹாக்கி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/7twe7iwq/india.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ indian team]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/7twe7iwq/india.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலகக் கோப்பை ஹாக்கி போட்டி அடுத்த மாதம் பெல்ஜியம், நெதர்லாந்தில் நடக்கிறது.</p><p>சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு நடத்தும் ஆண்கள் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி அடுத்த மாதம் 15-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை பெல்ஜியம், நெதர்லாந்தில் நடக்கிறது.</p><h2>மொத்தம் 16 அணிகள்</h2><p>மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. ஏ, பி, சி, டி என 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.</p><p>இந்தியா, வேல்ஸ், இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் டி பிரிவில் இடம்பெற்றுள்ளன.</p><p>ஆகஸ்ட் 15-ம் தேதி வேல்ஸ் அணியுடனும், ஆகஸ்ட் 17-ம் தேதி இங்கிலாந்து அணியுடனும், ஆகஸ்ட் 19-ம் தேதி பாகிஸ்தான் அணியுடனும் இந்திய அணி மோதுகிறது.</p><p>இந்நிலையில், உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கான 20 பேர் கொண்ட இந்திய ஆண்கள் ஹாக்கி அணி இன்று அறிவிக்கப்பட்டது.</p><p>இதில் இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.</p><h2>இந்திய அணி</h2><p>இந்திய ஆண்கள் அணி விவரம் வருமாறு:</p><p>கோல்கீப்பர்கள்: மோஹித் எச்.எஸ், சூரஜ் கர்கேரா</p><p>டிபெண்டர்கள்: ஜர்மன்பிரீத் சிங், ஹர்மன்பிரீத் சிங் (கேப்டன்), அமித் ரோஹிதாஸ், ஜுக்ராஜ் சிங், சஞ்சய் சுமித், யஷ்தீப் சிவாச்</p><p>மிடில் பீல்டர்கள்: ரஜிந்தர் சிங், ஆதித்யா அர்ஜுன் லலாகே, ஹர்திக் சிங், மன்பிரீத் சிங், நீலகண்ட சர்மா, விவேக் சாகர் பிரசாத்</p><p>முன்கள வீரர்கள்: தில்பிரீத் சிங், ஷீலானந்த் லக்ரா, ஷுக்தீக் சிங், மன்தீப் சிங், அபிஷேக்</p><p>உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் 1975-ல் தங்கமும், 1973-ல் வெள்ளியும், 1971-ல் வெண்கலமும் இந்தியா வென்றது. அதன்பின், இந்திய அணி எந்த பதக்கத்தையும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>பாகிஸ்தானில் ஈரானின் உயர்மட்டக் குழு: பிரதமர், ராணுவ தளபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது</title><link>https://www.maalaimalar.com/news/world/us-iran-war-iranian-delegation-in-pakistan-to-hold-talks-with-pm-sharif-field-marshal-munir</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-iran-war-iranian-delegation-in-pakistan-to-hold-talks-with-pm-sharif-field-marshal-munir#comments</comments><guid isPermaLink="false">3e513fa2-4f46-4ca3-bb32-edb4a781f785</guid><pubDate>Tue, 21 Jul 2026 11:58:41 +0000</pubDate><atom:updated>2026-07-21T11:58:41.611Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Asim Munir,அசிம் முனிர்,shehbaz sharif,US Iran war,அமெரிக்கா ஈரான் போர்,ஷெபாஸ் ஷெரீப்,Iran delegation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/90jsoiho/Iraniandelegation.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Iranian delegation]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/90jsoiho/Iraniandelegation.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் நிறுத்தம் முடிவுக்கு வந்து இரு நாடுகளும் மீண்டும் பயங்கரமான தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில், ஈரானின் உயர்மட்டக்குழு பாகிஸ்தான் சென்றுள்ளது.</p><h2>முடிவுக்கு வந்த அமெரிக்கா- ஈரான் போர்</h2><p>பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் முயற்சியால் அமெரிக்கா- ஈரான் இடையில் கடந்த மாதம் 60 நாள் இடைக்கால போர் நிறுத்தத்திற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்பின் சுவிட்சர்லாந்தில் டெக்னிக்கல் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனால் <a href="https://www.maalaimalar.com/news/world/us-military-says-its-carrying-out-its-10th-consecutive-night-of-strikes-on-iran">அமெரிக்கா</a>- ஈரான் இடையில் நிரந்தர போர் நிறுத்தம் ஏற்படும் என நம்பப்பட்டது.</p><p>ஆனால், ஹார்முஸ் ஜலசந்தியில் சென்ற வணிக கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக, அமெரிக்கா குற்றம்சாட்டியது. இதனால் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.</p><h2>போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது- அமெரிக்கா</h2><p>பின்னர் ஈரான் உடனான இடைக்கால போர் நிறுத்தம் முடிவடைந்ததாக அமெரிக்கா அறிவித்தது. அத்துடன் ஹார்முஸ் ஜலசந்தியை நிர்வகிக்கக் கூடிய ஈரானின் கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.</p><p>ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் அமெரிக்காவைச் சேர்ந்த 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதனால் ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா தீவிரப்படுத்தியது. இதற்கிடையே இடைக்கால போர் நிறுத்தத்திற்கான இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக ஈரான் அறிவித்தது.</p> <h2>ஷெபாஸ் ஷெரீப் உடன் சந்திப்பு</h2><p>இதனால் அமெரிக்கா- ஈரான் இடையே மீண்டும் தீவிரமான போர் ஏற்படும் என அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் ஈரான் உள்துறை அமைச்சர் மொமேனி தலைமையிலான ஈரானின் உயர்மட்டக்குழு பாகிஸ்தான் சென்றுள்ளது. இந்த குழுவை பாகிஸ்தான் அமைச்சர் மொஹ்சின் நக்வி வரவேற்றார்.</p><p>இந்த குழு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி பீல்டு மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்கள்.</p><p>போரை நிறுத்த திரைக்குப் பின்னால் பாகிஸ்தான் இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. போர் தொடங்கியதில் இருந்து பாகிஸ்தான் முக்கிய மத்தியஸ்தராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>காவிரி அணைகளில் நீரிருப்பு 60 டி.எம்.சியாக உயர்வு: தமிழ்நாட்டிற்கு உரியநீரை அரசு கேட்டுப்பெற வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/water-storage-in-cauvery-dams-rises-to-60-tmc-government-must-secure-tamil-nadus-due-share-of-water-anbumani-urges</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/water-storage-in-cauvery-dams-rises-to-60-tmc-government-must-secure-tamil-nadus-due-share-of-water-anbumani-urges#comments</comments><guid isPermaLink="false">2b3c9456-9f7a-4667-99b1-ee3d66a6b37a</guid><pubDate>Tue, 21 Jul 2026 11:36:26 +0000</pubDate><atom:updated>2026-07-21T11:36:26.042Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,Cauvery,Government of Tamil Nadu,காவிரி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/ohqtcsmm/New-Project-2026-07-21T170553.796.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காவிரி அணைகளில் நீரிருப்பு 60 டி.எம்.சியாக உயர்வு: தமிழ்நாட்டிற்கு உரியநீரை அரசு கேட்டுப்பெற வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/ohqtcsmm/New-Project-2026-07-21T170553.796.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக காவிரி அணைகளில் நீர் இருப்பு 60 டி.எம்.சியாக உயர்ந்துள்ள நிலையில், நாளை டெல்லியில் நடைபெறவுள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் இதனை எடுத்துரைத்து, தமிழ்நாடு உரிய நீரை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். </p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில்,</p><p>“கர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள  கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளின் நீர் இருப்பு இன்று பிற்பகல் நிலவரப்படி 60  டி.எம்.சியாக  உயர்ந்திருக்கிறது. </p><p>நான்கு அணைகளுக்கும் சேர்த்து வினாடிக்கு 9 ஆயிரம் கன அடிக்கும் கூடுதலாக தண்ணீர்  வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுத்து வருவது கண்டிக்கத்தக்கது.</p><p>காவிரி நடுவர் மன்றம்  மற்றும்  உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு ஜூன் மாதம் 9.91 டி.எம்.சி, ஜூலை மாதம் 31.24 டிஎம்சி என மொத்தம் 41.15 தண்ணீர் வழங்க வேண்டும் . அதன்படி ஜூன் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி இன்று வரை 31.07 டி.எம்.சி நீரை கர்நாடக அரசு காவிரியில் வழங்கியிருக்க வேண்டும். </p><p>ஆனால்,  கடந்த 50 நாள்களில் 3.44 டி.எம்.சி நீரை மட்டுமே கர்நாடகம் வழங்கியுள்ளது. இன்று வரை கர்நாடகம்  தமிழ்நாட்டுக்கு 28.63 டி.எம்.சி நீரை பாக்கி வைத்திருக்கிறது. கர்நாடக அணைகளில் 50 விழுக்காட்டுக்கும் கூடுதலாக தண்ணீர் இருந்தும் கூட  காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுப்பது மனிதநேயமற்றது.</p><p>மேட்டூர் அணையின் நீர்மட்டம்  இன்று காலை நிலவரப்படி  74.7 அடியாக (நீர் இருப்பு 36.87 டி.எம்.சி) குறைந்துவிட்டது.  காவிரியில் தண்ணீர் திறக்கப்படாததாலும்,  நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டதாலும்  காவிரி பாசன மாவட்டங்களில்  குறுவை பயிர்கள் கருகத் தொடங்கி விட்டன. இதன்பிறகும் கர்நாடக அரசு தண்ணீர் திறக்காததை தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால்  அது தமிழ்நாடு உழவர்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும்.</p><p>கர்நாடக அணைகளுக்கு கடந்த 20 நாள்களில் மட்டும் 35 டி.எம்.சி தண்ணீர் வந்துள்ளது. இப்போதும் தினமும்  0.8  டி.எம்.சி அளவுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த உண்மைகளையும், காவிரி பாசன மாவட்டங்களில் குறுவைப் பயிர்கள் கருகத்  தொடங்கியிருப்பதையும்  டெல்லியில் நாளை நடைபெறவுள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் எடுத்துக் கூறி, தமிழ்நாட்டுக்கு உரிய நீரை காவிரியில் பெறுவதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஒரே வாரத்தில் உடல் எடையை குறைக்க வேண்டுமா?</title><link>https://www.maalaimalar.com/health/generalmedicine/lose-5-kilos-in-one-week-with-horse-gram</link><comments>https://www.maalaimalar.com/health/generalmedicine/lose-5-kilos-in-one-week-with-horse-gram#comments</comments><guid isPermaLink="false">bb1d6a54-7f55-494e-9c83-e8e0fef22e6f</guid><pubDate>Tue, 21 Jul 2026 11:28:47 +0000</pubDate><atom:updated>2026-07-21T11:28:47.475Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Health,ஆரோக்கியம்,health benefits,கொள்ளு,horse gram,உடல்நலம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/v8om9nxw/ell.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ weight loss]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/v8om9nxw/ell.jpg?w=280" width="280"></media:thumbnail><category>பொது மருத்துவம் (General Medicine)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உடல் எடையைக் எளிதாகவும், எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல் இயற்கை முறையில் குரைக்க கொள்ளு பருப்பு உகந்தவை. அதன் அற்புத பயன்களையும் எப்படி உட்கொள்ளவேண்டும் என்பதையும் இங்கே காணலாம்.</p><p>1) கொள்ளுப் பருப்பை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். அதேபோல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச்சதை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு. மேலும், இதில் அதிகளவு மாவுச்சத்து உள்ளது. கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம்.</p><figure><img alt="horse gram" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/kq2yht32/sdf.jpg" /></figure><p>2) கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும். வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும். பிரசவ அழுக்கை வெளியேற்றும்.</p><p>3) தினமும் கொள்ளினை உணவில் சேர்த்து வருபவர்களின் உடலில் தேங்கியுள்ள கொழுப்புகள் அனைத்தும் கரையும். தினமும் சிறுதளவு கொள்ளினை ஊறவைத்து வெறும் வயிற்றில் உண்டு வந்தால் உங்களின் உடல் எடை விரைவில் குறையும் மேலும் உங்களுக்கு கட்டுடல் கிடைக்கும்.</p><p>4) கொள்ளு பருப்பை வறுத்து பொடி செய்துகொண்டு, ஒரு டம்ளர் தண்ணீர் கொதிக்கவைத்து அதில் ஒரு டீஸ்பூன் கொள்ளு பவுடர் மற்றும் சீரகத்தை போட்டு நன்றாக கொதிக்க வைத்து மறுநாள் காலை பருகி வர ஒரே வாரத்தில் 5 கிலோ உடல் எடை குறைவதை உணரமுடியும்.</p><p>‘இளைத்தவனுக்கு எள்ளு’ ‘கொழுத்தவனுக்கு கொள்ளு’ என்ற பழமொழிக்கேற்ப உடல் எடையை குறைப்பதில் கொள்ளுவில் அதிக சக்தி உள்ளது....</p> ]]></content:encoded></item><item><title>சீனாவின் உயரிய இலக்கிய விருதை வென்ற உணவு டெலிவரி ஊழியர்</title><link>https://www.maalaimalar.com/news/world/food-delivery-worker-wins-chinas-top-literary-prize</link><comments>https://www.maalaimalar.com/news/world/food-delivery-worker-wins-chinas-top-literary-prize#comments</comments><guid isPermaLink="false">5f8b7459-cbd9-4736-9779-1a0b65bfceae</guid><pubDate>Tue, 21 Jul 2026 11:16:51 +0000</pubDate><atom:updated>2026-07-21T11:16:51.642Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>China,சீனா,Literary Awards,wang jibing,வாங் ஜிபிங்,இலக்கிய விருது</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/69jysaxv/wang.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ wang jibing]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/69jysaxv/wang.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சீனாவைச் சேர்ந்த உணவு டெலிவரி பணியாளரும், கவிஞருமான வாங் ஜிபிங், கவிதைப் பிரிவில் சீனாவின் மதிப்புமிக்க லு சூன் இலக்கியப் பரிசை வென்றுள்ளார்.</p><p>நவீன சீன இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படும் லு சூனின் பெயரால் வழங்கப்படும் இந்த விருது, சீனாவின் மிக உயர்ந்த இலக்கிய அங்கீகாரங்களில் ஒன்றாகும்.</p><h2>லோ பிளைட்</h2><p>சீனாவில் பணிபுரியும் தொழிலாளர்களின் அன்றாடப் போராட்டங்கள், விரக்திகள் மற்றும் சவால்களை மையமாக வைத்து 'லோ பிளைட்' (Low Flight) எனும் கவிதைத் தொகுப்பு நூலை எழுதியுள்ளார்.</p><p>இந்த நூலுக்காக சுமார் 200 சக டெலிவரி ஊழியர்களிடம் அவர் உரையாடியுள்ளார்.</p><h2>6,000 கவிதைகள்</h2><p>பகலில் உணவு டெலிவரி செய்யும் இவர், கடந்த 8 ஆண்டுகளில் தனது ஸ்கூட்டரில் சுமார் 1,50,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் பயணித்து, ஓய்வு நேரங்களில் 6,000-க்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியுள்ளார்.</p><p>களப்பணியாளர்களின் யதார்த்தமான வாழ்க்கையை எழுத்தாக்கிய இவரது வெற்றி, சீனாவில் தொழிலாளர்களின் இலக்கிய படைப்புகளுக்குக் கிடைத்துவரும் மிகப்பெரிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.</p><p>ஜியாங்சு மாகாணத்தில் பிறந்த வாங் ஜிபிங், வீட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி காரணமாக இளமையிலேயே பள்ளியிலிருந்து விலகினார். அவர் உணவு டெலிவரி ஊழியராக மாறுவதற்கு முன் கட்டுமானம், குப்பை சேகரிப்பு மற்றும் தெருவோர வியாபாரம் என பல்வேறு வேலைகளைச் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>ரூ. 8 லட்சம் கோடி கடன்: முந்தைய மம்தாவின் திரிணாமுல் அரசு மீது சுவேந்து அதிகாரி குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/national/bengal-cm-blames-previous-tmc-govt-for-loss-of-europe-air-links-mounting-debt-on-state-economy</link><comments>https://www.maalaimalar.com/news/national/bengal-cm-blames-previous-tmc-govt-for-loss-of-europe-air-links-mounting-debt-on-state-economy#comments</comments><guid isPermaLink="false">1baf92e4-6b4f-484b-b08d-bce0f5e0dc1d</guid><pubDate>Tue, 21 Jul 2026 11:14:53 +0000</pubDate><atom:updated>2026-07-21T11:14:53.446Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,Mamata Banerjee,சுவேந்து அதிகாரி,Suvendu Adhikari,TMC,திரிணாமுல் காங்கிரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/6udk6xah/SuvenduAdhikari001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Suvendu Adhikari]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/6udk6xah/SuvenduAdhikari001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்க மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி பரிபஹன் பவன்-IIல் இருந்து 50 ஏ.சி. பேருந்தகள் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.</p><h2>சுவேந்து அதிகாரி பேருந்துகள் சேவையை தொடங்கி வைத்து பேசியதாவது:-</h2><p>கொல்கத்தாவில் வாட்டர் மெட்ரோவை அறிமுகம் செய்யும் திட்டமிட்டுள்ளது. மற்ற நகரங்களுக்கும் மெட்ரோ ரெயில் சேவையை இணைக்கும் திட்டமும் உள்ளது. மின்சார பேருந்துகளுக்கு சார்ஜிங் ஏற்றும் சார்ஜிங் நிலையங்கள், கல்யாணியின் க்ரீன்பீல்டு விமான நிலையம் போன்ற திட்டங்களும் அரசிடம் உள்ளது என்றார்.</p><h2>ஐரோப்பிய நாடுகளின் நகரங்களுக்கான விமான போக்குவரத்து நிறுத்தம்</h2><p>நாம் ஐரோப்பியாவில் உள்ள பெரும்பாலான நாடுகளில் உள்ள நகரங்களுக்கு விமான போக்குவரத்தை தொடர்பை கொண்டிருந்தோம். முந்தைய திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியின் கீழ், பெரும்பாலான நகரங்களுக்கான விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளன. லண்டன் உள்பட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் உள்ள நகரங்களுக்கு கொல்கத்தாவில் இருந்து விமான சேவை இல்லை.</p><p>கொல்கத்தா அருகே 2-வது விமான நிலையத்திற்கான முன்மொழிவையும் முன்னெடுக்கவில்லை. கொல்கத்தா அருகே மற்றொரு விமான நிலையம் அமைக்க மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா, நிலம் கேட்டு கடிதம் எழுந்தியிருந்தார். பங்கர் பகுதியில் இருந்து நிலத்தை கையகப்படுத்த முடியாது என்று முந்தைய மம்தா அரசு கடிதம் எழுதியது. அது பலவீனமான அரசு.</p><h2>8 லட்சம் கோடி ரூபாய் கடன்</h2><p>மேற்கு வங்க மாநிலத்தை ஆண்ட இடதுசாரி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் அரசுகள் மாநிலத்தை கடனில் ஆழ்த்தியுள்ளன.சுமார் 8 லட்சம் கோடி ரூபாய் சுமையை தற்போதைய அரசு மீது சுமத்தியுள்ளனர்.</p><p>சிறந்த வருவாயை கொண்டு வருவதற்கான முக்கியம்சமாக போக்குவரத்துத்துறை இருக்க முடியும். கடனில் இருந்து மீட்டுக் கொண்டு வருவதற்கான வாய்ப்பாகவும் இருக்கும். 8 லட்சம் ரூபாய் கடன் மாநில அரசு மீது உள்ளது.</p><p>ஒரு மாநிலத்தின் போக்குவரத்து உள்கட்டமைப்பு நவீனமாக இருக்கும்போது, ​​அதன் பொருளாதாரம் வேகமான வளர்ச்சியைப் பெற முடியும். உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டால், அதிகமான தொழில்முனைவோர்கள் அம்மாநிலத்தில் முதலீடு செய்வார்கள். இதன் விளைவாக வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும்.</p><h2>மத்திய அரசு உதவியுடன் கூடுதல் மின்சார பேருந்துகள்</h2><p>கொல்கத்தா மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு உகந்த சிஎன்ஜி (CNG) மற்றும் மின்சார வாகனங்களை அதிகளவில் அறிமுகப்படுத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம்... 60:40 என்ற நிதிப் பகிர்வு முறையின் கீழ், மத்திய அரசின் உதவியுடன் கூடுதல் மின்சாரப் பேருந்துகள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும்.</p><p>இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item></channel></rss>