<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 12 Aug 2026 07:58:02 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: தமிழ்நாடு விவசாயிகள் போற்றும் வெற்றி பட்ஜெட் - அமைச்சர் வினோத் - 12 ஆகஸ்ட் 2026
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-12-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-12-august-2026#comments</comments><guid isPermaLink="false">2688edc8-8b1b-44e4-a900-ccc79547ce8d</guid><pubDate>Wed, 12 Aug 2026 03:59:22 +0000</pubDate><atom:updated>2026-08-12T07:54:12.698Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/movxczzi/vinoth.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Vinoth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/movxczzi/vinoth.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாகன வசதி செய்து தருமாறு விசிக எம்எல்ஏ ஜோதிமணி கோரிக்கை.</p><p>இதற்கு பதிலளித்த சபாநாயகர்,"கிள்ளி கொடுப்பவர் அல்ல, அள்ளி கொடுப்பவர் முதல்வர்; எம்எல்ஏ கோரிக்கையை முதல்வர் கவனம் கொண்டு செல்கிறேன்" என்றார்.</p><p>சூரியனுக்கே வியர்த்தது என்ற அமைச்சரின் கருத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலடி</p><p>இதுவரை யாரும் நெருங்க முடியாத நிலையில் தான் சூரியன் இருக்கிறார் - ஓ.பன்னீர்செல்வம்</p><p>அனைவருக்கும் சூரியனால் வியர்த்தது. நீங்கள் வந்த பிறகு சூரியனுக்கே வியர்த்தது - அமைச்சர் வினோத்</p><p>கடும் நிதி நெருக்கடியிலும் ரூ.6,000 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி - அமைச்சர் வினோத்</p><p>ரூ.134 கோடிக்கு குறுவை தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. நடப்பாண்டில் 3.98 லட்சம் ஏக்கர் நெற்பயிர்களுக்கு காப்பீடு - அமைச்சர் வினோத்</p>  <p>பொது ரகம், சன்ன ரகம் நெல், கரும்புக்கான சிறப்பு ஊக்கத்தொகை உயர்த்தி உள்ளார் முதலமைச்சர் விஜய்.</p><p>விவசாயிகள் கோரிக்கைக்கேற்ப சிலவற்றை மேம்படுத்தி திட்டங்களின் பெயரை மாற்றி உள்ளோம்.</p><p>தமிழகத்தின் இதயம் விவசாயிகளிடத்தில் உள்ளது - அமைச்சர் வினோத்</p><h2>வேளாண் அமைச்சர் வினோத் உரை</h2><p>திமுக தலைவர் ஸ்டாலின் தவெக வேளாண் பட்ஜெட்டை வெற்று பட்ஜெட் என விமர்சித்திருந்தார்.</p><p>தவெகவின் வேளாண் பட்ஜெட் வெற்று பட்ஜெட் அல்ல அது விவசாயிகள் போற்றும் வெற்றி பட்ஜெட்.</p><p>இவர்களுக்கு என்ன ஆட்சி செய்ய தெரியும் என கேட்டனர். லஞ்சம் இல்லாத ஆட்சியை முதலமைச்சர் விஜய் தந்துள்ளார்.</p><p>வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசுக்கு போதிய கால அவகாசத்தை எதிர்க்கட்சியினர் வழங்க வேண்டும்.</p><p>விவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையில் ஏற்கெனவே உள்ள திட்டங்களுடன் புதிய திட்டங்களும் செயல்படுத்தப்படும்.</p><h2>நிதி அமைச்சர் மரிய வில்சன் பதில்</h2><p>ஆயத்தீர்வு துறை மூலமாக ரூ.1,500 கோடி, மோட்டார் வாகன வரி ரூ.750 கோடி வருவாய் வந்துள்ளது.</p><p>அதிக கடன் வாங்கக்கூடாது என்பதில் முதலமைச்சர்  விஜய் உறுதியாக உள்ளார்.</p><h2>திமுக முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு</h2><p>3 மாதத்தில் ரூ.15,000 கோடி வருவாய் என சொன்ன நிலையில் எதன் வழியாக வந்தது என விளக்கம் தருக.</p><p>தவெக ஆட்சி பொறுப்பேற்ற பின் ரூ.7,000 கோடிக்கு மேல் வருவாய் பற்றாக்குறை.</p><p>60 நாளில் சொந்த வரி வருவாயை உயர்த்தி இருக்கிறோம் - நிதி அமைச்சர் மரிய வில்சன்</p><p>திருத்த பட்ஜெட்டில் வருவாய் அதிகரிக்க வேண்டுமே? </p><p>ரூ.16,000 கோடி அதிக வருவாய் என்றால் பட்ஜெட்டில் ஏன் வித்தியாசம்? - எடப்பாடி பழனிசாமி </p><p>முதல்முறையாக அமைச்சர் பொறுப்பேற்று சிறப்பாக விளக்கம் தந்த நிதியமைச்சர் மரியவில்சனுக்கு பாராட்டு - சபாநாயகர்</p><p>கடந்த ஆட்சியில் மேற்கொண்டுள்ள திட்டங்களை நகல் எடுக்காமல் பலன்களை மட்டும் மேம்படுத்தி உள்ளோம்.</p><p>பொதுமக்களும் பயனளிக்கும் திட்டங்களின் அறிவிப்பால் செலவினம் அதிகரித்துள்ளது.</p><p>திமுக அரசு வழங்கிய டெண்டரில் உள்ள முறைகேடுகளை ஒவ்வொன்றாக ஆராய வேண்டும்.</p><p>விபி ஜிராம்ஜி திட்டம், கடன் தள்ளுபடி, 200 யூனிட் மானியத்துக்கு ரூ.18,000 கோடி அளிக்கப்பட்டுள்ளது - அமைச்சர் மரிய வில்சன் </p> <p>மாநிலத்தின் நிதிநிலை காரணம் காட்டி 28 மாதங்களுக்கு பின்னரே ஒரு திட்டத்தை நிறைவேற்றியது முந்தைய அரசு.</p><p>திட்டங்கள், அதன் பலன்களை மேம்படுத்தும் நோக்கில் தான் பெயர் மாற்றம், வெற்றி வீடு திட்டத்தில் முந்தைய ஆட்சி விட நிதி உயர்வு - அமைச்சர் மரிய வில்சன் </p><h2>அமைச்சர் மரிய வில்சன் உரை</h2><p>மத்திய அரசிடம் இருந்து நியாயமான நிதிப்பகிர்வு கோரிய தீர்மானத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.</p><p>வரி மற்றும் வரி அல்லாத வருவாயில் அரசுக்கு ரூ.15,000 கோடி கிடைக்கும்.</p><p>எந்த பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி திட்டமும் நிறுத்தப்படவில்லை.</p><p>நடைமுறை திட்டங்கள் தொடர்வதுடன் தவெக அரசு புதிய திட்டங்களையும் செயல்படுத்தும். தவெக அரசு அளித்துள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்.</p><p>சொந்த வரி வருவாய் வளர்ச்சி 12 சதவீதம் தான் சாத்தியம்.</p><p>திட்டம் அனுமதி பெறுவதற்கான ஊழல் தவெக அரசால் தடுக்கப்பட்டுள்ளது. </p> <p>மத்திய அரசிடம் இருந்து நியாயமான நிதிப்பகிர்வு கோரிய தீர்மானத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.</p><p>வரி மற்றும் வரி அல்லாத வருவாயில் அரசுக்கு ரூ.15,000 கோடி கிடைக்கும் - அமைச்சர் மரிய வில்சன் </p> <h2>வெற்றி பட்ஜெட்</h2><p>இடைத்தரகர்களுக்கு சென்ற வீணான செலவினம் தவெக அரசில் நிறுத்திவைப்பு.</p><p>தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் ஒரு வெற்றி பட்ஜெட் - அமைச்சர் மரிய வில்சன் </p><p>எங்கள் தவறை திருத்தி உங்களிடம் இருந்து சிலவற்றை கற்றுக்கொண்டு மீண்டும் வலிமையாக நாங்கள் வருவோம்.</p><p>தமிழ் மொழி விவகாரத்தில் அன்று ஆவேசப்பட்டு விட்டேன். முன்னாள் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனையும் என்னையும் ஒப்பிட்டு பேசினார்கள்.</p><p>நான் பிறந்தது திருவாரூர், வளர்ந்தது புதுச்சேரி, படித்தது சென்னை, தற்போது ஆர்.கே.நகர் தத்தெடுத்துள்ளது - அமைச்சர் மரிய வில்சன் </p><h2>அமைச்சர் மரிய வில்சன் உரை</h2><p>வெற்றி அடைவதற்கு குறுக்கு வழியை அடையாமல் உண்மையுடன் இருந்தால் எல்லாம் சாத்தியம் என்பதற்கு முதல்வரே எடுத்துக்காட்டு.</p><p>அன்றும் இன்றும் என்றும் உண்மைக்கு புறம்பாக தவெகவினர் பேசுவதில்லை.</p><p>30 ஆண்டுகள் கழித்து மீண்டும் அரசியலுக்கு வருவதற்கு முதல்வர் விஜய் மூலம் வாய்ப்பு.</p><p>குறி வைத்தால் தவற மாட்டேன், தவறுமானால் குறியே வைக்க மாட்டேன் என்ற எம்ஜிஆர் வசனத்தை ரீ-டிரெண்ட் செய்து சாதித்தவர் முதல்வர்.</p><p>கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம், கடமை இருந்தால் வீரன் ஆகலாம், பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம் பாடலுக்கு முதல்வரே உதாரணம்.</p><p>பேரவையில் பட்ஜெட் மீதான பதிலுரையில் குட்டிக்கதை சொல்லி உரை தொடங்கினார் நிதியமைச்சர் மரிய வில்சன்</p><p>சட்டரீதியான போராட்டம் நடத்தி தேனி மக்களுடன் அரசு உறுதுணையாக இருக்கும்.</p><p>உச்சநீதிமன்ற உத்தரவின்படி தான் வெளியேற்றம் என அறிவிப்பு, முதல்வர் அறிவுறுத்தல்படி சட்டரீதியில் போராடுவோம் - அமைச்சர் ஆதவ்</p><p>மலை கிராம மக்கள் வெளியேற்றம் தொடர்பாகவும் திங்கட்கிழமை விவாதத்திற்கு ஏற்பதாக சபாநாயகர் அறிவிப்பு</p><p>3 தலைமுறையாக அப்பகுதியில் வசிக்கும் மக்களை வனப்பகுதி என கூறி வெளியேற்றும் நடவடிக்கையை எதிர்த்து முற்றுகை - திமுக எம்எல்ஏ</p><p>தேனி ஆட்சியர் அலுவலகம் முன் மலை கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கை கண்டித்து முற்றுகை ஆர்ப்பாட்டம் - அதிமுக கவனஈர்ப்பு</p> <p>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை திங்கட்கிழமை எடுத்து கொள்கிறேன் - சபாநாயகர்</p><p>போதைப்பொருள் குறித்து புகார் தந்த மாணவன் குறித்து காவல்துறை தகவலை கசியவிட்டதால் கொலை என பெற்றோர் குற்றச்சாட்டு.</p><p>போதைப்பொருள் பயன்பாடு குறித்து புகார் தந்த அமுதனை 20 பேர் கொண்ட கும்பல் அடித்து கொலை.</p><p>புகார் தந்தவரின் தகவலை அலட்சியமாக போலீசார் கசியவிட்டது தொடர்பாக விளக்கம் தர வேண்டும் - உதயநிதி</p><p>கோவையில் கல்லூரி மாணவன் அமுதன் சக மாணவர்களால் அடித்து கொல்லப்பட்டுள்ளார் - எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி</p><p>தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து சட்டசபையில் தனித்தீர்மானம் நிறைவேறியது.</p><p>தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையில் முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் நிறைவேற்றம்.</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உரை</h2><p>ரூ.1 தந்தால் நமக்கு 29 பைசா மட்டுமே திருப்பி தருகிறார்கள், நாம் உழைத்தாலும் நம்மால் அதிகாரத்தை உருவாக்க முடியா நிலை.</p><p>2026-க்கு பின் காங்கிரசுக்கும் திமுகவுக்கும் தற்போது வேறு நிலை இருக்கலாம். ஆனால் மாநில சுயாட்சி பிரச்சனை ஒன்று சேருக.</p><p>தமிழ்நாட்டிற்கான பிரச்சனை என்றால் திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒன்றாக நிற்க வேண்டும்.</p><p>ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை எதிர்த்து தமிழக எம்பிக்கள் ஒற்றுமையாக நின்று எதிர்த்தனர். தமிழக எம்பிக்கள் 39 பேரும் அவையில் இருந்த வெளிநடப்பு செய்யாமல், சட்டத்தை எதிர்த்து வாக்களிக்குமாறு அமைச்சர் வேண்டுகோள்.</p> <h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உரை</h2><p>இன்றைய தீர்மானம் என்பது காங்கிரஸ் பாஜக என்பதல்ல, மாநில சுயாட்சியை நிலைநிறுத்துவதற்கு தீர்மானம்.</p><p>பேரவையில் குறைவான எண்ணிக்கையில் உள்ள பாஜக, காங்கிரசின் நிலை நாளை நாடாளுமன்றத்தில் நமக்கு வரக்கூடாது.</p><p>பாஜக உறுப்பினராக இருந்தாலும் இந்த தீர்மானத்தில் தமிழன் என்ற முறையில் செயல்படுங்கள்.</p><p>தொகுதி மறுவரையறையில் மு.க.ஸ்டாலின் தான் இதற்கு முதலில் குரல் கொடுத்தார் என்பதை நாங்கள் ஆதரிக்கிறோம். தென்னிந்திய விகிதாசாரம் குறைவதை முன்னாள் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கடுமையாக எதிர்த்தனர்.</p><p>வடகிழக்கு மாநிலங்களின் நிலை நமக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தீர்மானம் கொண்டு வந்துள்ளார் முதல்வர்.</p> <p>5, 6 வடமாநிலங்கள் சேர்ந்தாலே ஒரு பிரதமரை உருவாக்கும் நிலையில் உள்ளது, அது மாற்றப்பட வேண்டும்.</p><p>அதிகாரம் குஜராத், உ.பி.க்கு மட்டுமல்ல, நமது குரல் அதிகாரம் பிரதமராக ஒலிக்க வேண்டும். வருங்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து ஒரு பிரதமர் உருவாக வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</p><p>உயிருள்ள வரை மாநில சுயாட்சிக்காக இதே பேரவையில் குரல் கொடுத்தவர்கள் முன்னாள் முதல்வர்கள் கலைஞர், ஜெயலலிதா.</p><p>உள்ளாட்சி, கட்சியில் நிர்வாக ரீதியாக மாற்றம் செய்யும்போது நாடாளுமன்றத்தில் ஏன் மாற்றம் கூடாது என கேட்கின்றனர்?</p><p>மக்கள்தொகை அடிப்படையில் நாடாளுமன்ற விகிதாசாரத்தை உருவாக்கவில்லை அமெரிக்கா - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</p> <h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உரை</h2><p>மாநில சுயாட்சி இல்லாமல் இந்தியாவை உருவாக்க முடியாது என அண்ணா கூறி உள்ளார்.</p><p>நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லாதபோது அரசியலமைப்பில் முதல் தீர்மானம் கொண்டு வந்தது தமிழ்நாடு.</p><p>அரசியல் ரீதியில் மாறுபட்ட கருத்தில் இருந்தாலும் தனித்தீர்மானத்தை ஆதரித்த எதிர்க்கட்சி தலைவருக்கு நன்றி.</p> <p>2026 மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் தமிழக எம்பிக்கள் எண்ணிக்கை குறையும். </p><p>ஏப்.16-ல் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதா நகலை எரித்து திமுக தனது எதிர்ப்பை பதிவு செய்தது.</p><p>Delimitation அடுத்த 25 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்குமாறும் கூறினோம்.  </p><p>33% மகளிர் இடஒதுக்கீட்டை முழுமனமுடன் திமுக ஆதரிக்கிறது வரவேற்கிறது. 7.18 விகிதாசாரத்தை குறைக்கக்கூடாது எனக்கூறி தவெக அரசு கொண்டுவந்த தனித்தீர்மானத்தை திமுக ஆதரிக்கிறது - உதயநிதி</p> <p>திமுக அமைச்சரவை கூட்டம் நடத்திய பின்னர் கடந்தாண்டு மார்ச்சில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டது.</p><p>Fair Delimitation தலைப்பில் 5 மாநில முதல்வர்கள், 10 கட்சிகளுக்கு கடிதம் எழுதி நடவடிக்கை எடுத்தார் மு.க.ஸ்டாலின் - உதயநிதி</p><p>மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்தால் என்ன பாதிப்பு என நாட்டுக்கே முதலில் கூறியது திமுக தான்.</p><p>தொகுதி மறுவரையறையின் ஆபத்தை இந்தியாவிற்கே கூறியது திமுகதான்.</p><p>எம்பிக்கள் எண்ணிக்கை குறைக்க அனுமதிக்க மாட்டோம், தமிழகத்தின் விகிதாசாரம் குறையக்கூடாது என திமுக பேரவையில் தீர்மானம் - எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி</p> <h2>முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி உரை</h2><p>தொகுதி மறுவரையறை விவகாரத்தில் எக்காரணத்தை கொண்டும் தமிழகம் பாதிக்கப்பட கூடாது என்பதே திமுக நிலைப்பாடு.</p> <p>வாக்கு வங்கி அரசியல் ஆதாயத்திற்காக மத்திய பாஜக அரசு தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வருகிறது - ராஜேஷ்குமார்</p><h2>தொகுதி மறுவரையறை தனித்தீர்மானம் ஏன்? - சபாநாயகர் விளக்கம்</h2><p>வரும் முன் காக்க எச்சரிக்கை நடவடிக்கையாகவே தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர் விஜய் - சபாநாயகர்</p><p>தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு தமிழக காங்கிரஸ் ஆதரவு - ராஜேஷ்குமார்</p><p>2029 தேர்தலிலேயே மகளிருக்கு 33% இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும். அடுத்த 30 ஆண்டுகளுக்கு தொகுதி மறுவரையறை இருக்கக்கூடாது - மனிதநேய மக்கள் கட்சி எம்எல்ஏ ஜவாஹிருல்லா</p> <p>தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் கொண்டுவந்த தனித்தீர்மானத்திற்கு மமக ஆதரவு - ஜவாஹிருல்லா</p><h2>தமிமுன் அன்சாரி  உரை</h2><p>தொகுதி எண்ணிக்கை குறைவாக இருப்பதால் வடகிழக்கு மாநிலங்களின் குரல்கள் நசுக்கப்படுகிறது, அதே சூழல் இங்கும் வரும்.</p><p>மகளிர் இடஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு உள் இடஒதுக்கீடு தேவை.</p><p>தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் கொண்டுவந்த தனித்தீர்மானத்திற்கு மஜக ஆதரவு.</p><h2>அமைச்சர் ஷாஜகான் உரை</h2><p>மத்திய பாஜக அரசு கொண்டு வரும் சட்டங்களும் திட்டங்களும் மக்களுக்கு விரோதமானதாகவே உள்ளது. பாஜக வெற்றி பெறவே முடியாத தென் மாநிலங்களின் குரலை நசுக்கும் வகையில் தொகுதி மறுவரையறை.</p><p>பல ஆண்டுகளை கடந்த அமெரிக்கா போன்ற நாடுகளிலும் தொகுதி எம்பிக்கள் எண்ணிக்கை உயர்த்தப்படவில்லை.</p> <p>அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி போன்றோர் நாடாளுமன்றத்திற்குள் பேசுவது வேறு, வெளியே பேசுவது வேறு. பிரதமர மோடியும் அமித்ஷாவும் 2 வித நாடகம் நடத்துவதை வெளிப்படுத்தும் விதமான தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.</p><p>வடமாநிலத்தவருக்கு முக்கியத்துவம் கொடுத்து சமத்துவ நிலையை நீக்கும் வகையில் தொகுதி மறுவரையறை.</p><p>மகளின் இடஒதுக்கீடுக்கு தடை இல்லாத போதும் தொகுதி மறுவரையறையுடன் இணைத்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்.</p><p>இந்தி பேசும் மாநில எம்பிக்கள் எண்ணிக்கை உயரும். எனவே அவர்கள் மட்டுமே நாட்டை ஆளும் வாய்ப்பை பெறுவர் - அமைச்சர் வன்னிஅரசு</p> <h2>அமைச்சர் வன்னிஅரசு உரை</h2><p>தொகுதி மறுவரையறையை எதிர்த்து முதலமைச்சர் விஜய் கொண்டுவந்துள்ள தீர்மானம் தனித்துவமானது, மகத்துவமானது.</p><p>தமிழ்நாட்டின் உரிமையை, தென்னிந்தியாவின் உரிமையை பாதுகாக்கும் வகையில் தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.</p><p>தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் கொண்டுவந்த தனித்தீர்மானத்திற்கு விசிக ஆதரவு - அமைச்சர் வன்னிஅரசு</p><p>அரசியல் காரணங்கள், பரபரப்பை ஏற்படுத்துவதற்காகவே தவெக அரசு தொகுதி மறுவரையறை தனித்தீர்மானம் கொண்டு வந்துள்ளது.</p><p>தொகுதி மறுவரையறை மசோதா பாதகமானதா? சாதகமானதா? என தெரியாத நிலையில் தனித்தீர்மானத்திற்கு அதிமுக எதிர்ப்பு என்று எடப்பாடி பழனிசாமி தெரித்தார்.</p> <h2>எடப்பாடி பழனிசாமி உரை</h2><p>விகிதாசாரம் பாதிக்கப்படாததை உறுதிசெய்யுமாறு மத்திய அமைச்சரிடம் அதிமுக வலியுறுத்தி உள்ளது. </p><p>அதிமுகவின் கோரிக்கையை ஏற்று உறுப்பினர் எண்ணிக்கை குறையாது என மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார். 7.18 விகிதாசாரம் குறையக்கூடாது என்ற அதிமுகவின் நிலைப்பாட்டால், எம்பிக்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.</p><p>தமிழகத்திற்கான எம்பிக்கள் எண்ணிக்கை 39ல் இருந்து 59 ஆக உயர்வதற்கு தொகுதி மறுவரையறை வழிவகை செய்யும்.</p> <p>மக்கள்தொகை கட்டுப்பாட்டில் உள்ள தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு தொகுதி மறுவரையறை விகிதாசாரம் குறையக்கூடாது - எடப்பாடி பழனிசாமி</p> <p>செவி வழி செய்தியை வைத்து தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. தொகுதி மறுவரையறை தொடர்பாக கொண்டு வந்த தனித்தீர்மானத்தை முதலமைச்சர் திரும்ப பெற வேண்டும் -  பாமக எம்எல்ஏ</p><p>மக்கள்தொகை அடிப்படையில் எடுக்கப்பட்ட தரவின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் பாமக எதிர்க்கும். </p><p>தொகுதி மறுவரையறையை 2026 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி செய்தால் பாமக கடுமையாக எதிர்க்கும் - எம்எல்ஏ கணேஷ்குமார்</p> <p>தமிழ்நாட்டில் தனிப்பெரும் கட்சியான தவெகவில் கூட ஒரு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் வைத்துள்ளது. பெரிய கட்சிகளே நிர்வாக வசதிக்காக மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை உயர்த்துகிறார்கள் - பாமக எம்எல்ஏ கணேஷ்குமார்</p><h2>பாஜக எம்எல்ஏ போஜராஜன் உரை</h2><p>சட்டமுன்வடிவு பரிசீலனையில் உள்ளபோது தனித்தீர்மானம் கொண்டுவரும் அவசரம் என்ன?</p><p>மக்களின் தேவை அறிந்து மாற்றம் கொண்டு வருவது அவசியம். மாற்றம் ஒன்றே மாறாதது. அடுத்த தலைமுறையை கருத்தில் கொண்டே நாடாளுமன்றம் பெரிதாக கட்டப்பட்டுள்ளது.</p><p>பெண்ணுக்கு முன்னுரிமை முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி பாஜக என்பதை நாடறியும்.</p><p>தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானத்தை பாஜக எதிர்க்கிறது.</p> <h2>தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா உரை</h2><p>சட்டமுன்வடிவை கொண்டுவராத நிலையில் எதன் அடிப்படையில் தமிழக அரசு தனித்தீர்மானத்தை கொண்டுவந்துள்ளது?</p><p>தொகுதி மறுவரையறை மூலம் 59 எம்பிக்கள் தமிழகத்திற்கு வர வாய்ப்பு உள்ளது. அது சிறப்பானது என்பதில் மாற்றில்லை.</p><p>10 லட்சம் மக்களுக்கு ஒரு எம்.பி. தான் தற்போது உள்ளனர். தொகுதி மறுவரையறை மூலம் 8 லட்சம் மக்களுக்கு ஒரு எம்பி வருவர்.</p><p>முதல்வருக்கும் அரசியலில் பெண்களை ஊக்கப்படுத்தும் கட்சியினருக்கும் என் வாழ்த்துகள்.</p><p>தமிழ்நாட்டின் விகிதாச்சாரம் 7:2 என்ற வகையிலேயே தொடர வேண்டும். அது மாற்றப்படக்கூடாது.</p> <p>தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாவில் மத்திய அரசு சட்டமுன்வடிவு இதுவரை கொண்டுவரப்படவில்லை - பிரேமலதா</p><p>தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் வகையில் தொகுதி மறுவரையறை மசோதா. நிதிப்பகிர்வில் மத்திய பாஜக அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது -  எம்எல்ஏ ராமச்சந்திரன்</p> <p>தொகுதிமறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் கொண்டுவந்த தனித்தீர்மானத்திற்கு சிபிஐ ஆதரவு - எம்எல்ஏ ராமச்சந்திரன்</p><h2>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ செல்லசாமி</h2><p>பாஜக செல்வாக்கு அதிகம் உள்ள வடமாநிலங்களில் எம்பிக்கள் எண்ணிக்கை அதிகரிப்பதே அவர்களின் திட்டம்.</p><p>மக்கள்தொகையில் குறைவாக உள்ள தமிழகம் போன்ற தென்பகுதி மாநிலங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும்.</p><p>நாடாளுமன்றத்தில் இப்போது உறுப்பினர்களே எல்லோரும் பேச நேரம் இல்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 800-க்கு மேல் உயர்த்தினால் எப்படி பேச முடியும்?</p><p>பாஜக செல்வாக்கு அதிகம் உள்ள வடமாநிலங்களில் எம்பிக்கள் எண்ணிக்கை அதிகரிப்பதே அவர்களின் திட்டம்.</p><p>மக்கள்தொகையில் குறைவாக உள்ள தமிழகம் போன் தென்பகுதி மாநிலங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும்.</p> <p>மற்ற கட்சிகள் பேசிய பிறகு திமுக  உறுப்பினர்கள் பேசலாம் என அவை முன்னவர் செங்கோட்டையன் பதில்</p><p>முதல்வர் தனித்தீர்மானத்தின் மீது முதலில் பிரதான எதிர்க்கட்சியான திமுகவை பேச அனுமதிக்குமாறு எ.வ.வேலு கோரிக்கை விடுத்தார்.</p><p>முதலமைச்சர் கொண்டு வந்த தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித்தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது - செல்லசாமி</p><p>நாடாளுமன்ற உறுப்பினர்களின் விகிதம் 2.2:1 என்ற அளவிலேயே தொடர வேண்டும். 543 என்ற அளவிலேயே நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை நிரந்தரமாக வைக்க வேண்டும். வரும் பொதுத்தேர்தலில் பெண்களுக்கு 3ல் 1 என்ற அளவில் இடமளிக்க வேண்டும் - முதலமைச்சர் விஜய்</p> <p>மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதால் தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. </p><p>தற்போதைய மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 543 என்ற அளவிலேயே தொடர வேண்டும் - முதலமைச்சர் விஜய்</p><p>தொகுதி மறுவரையறை குறித்த ஆலோசனையில் 6 கட்சிகளின் எம்பிக்கள் பங்கேற்றனர். அனைத்துக்கட்சி எம்பிக்களுடன் நடத்திய ஆலோசனையில் தொகு மறுவரையறை குறித்து விவாதித்தோம் - முதலமைச்சர் விஜய்</p><p>அனைத்துக்கட்சி எம்பிக்களுடன் நடத்திய ஆலோசனையில் தொகு மறுவரையறை குறித்து விவாதித்தோம்.</p><p>நாட்டின் மக்கள்தொகையில் சமஅளவில் பெண்கள் உள்ளதால் அவர்களுக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டும்.</p><p>மகளிருக்கான 33% இடஒதுக்கீட்டை மேலும் தாமதிக்க கூடாது. மத்திய அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் - முதலமைச்சர் விஜய்</p><p>பெண்களின் வெற்றி சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் அதிகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.</p><p>ஒரு பெண் அதிகாரம் பெற்றால் ஒரு குடும்பம் உயர்கிறது. ஆயிரக்கணக்கான பெண்கள் அதிகாரம் பெறும்போது நாடே உயர்கிறது - முதலமைச்சர் விஜய்</p> <p>2021-ல் 12 பெண்கள் இருந்த நிலையில் 2026 சட்டசபையில் 26 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.</p><p>தமிழ்நாட்டில் ஆண்களை விட பெண்கள் தான் அதிக ஓட்டு போட்டுள்ளனர். பெண்களுக்கான முன்னுரிமை வழங்குவதில் இந்தியாவுக்கு தவெக அரசு முன்னுதாரணமாக உள்ளது.</p><p>உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீட்டால் பெண்களின் தலைமை பண்பும் நிரூபிக்கப்பட்டுள்ளது - முதலமைச்சர் விஜய்</p><h2>முதலமைச்சர் விஜய்</h2><p>பெண்கள் தனிப்பட்ட முறையில் சமூகத்தில் உயர்ந்தால் மட்டுமே ஒட்டுமொத்த சமூகத்திற்கும் நல்ல பெயர் வரும்.</p><p>பெண்கள் இடஒதுக்கீடு என்பது சலுகை  அல்ல சமூக நீதி.</p><p>மிகப்பெரிய பணம் இருந்தால் வீட்டுக்கோ , பொருளாதாரம் இருந்தால் நாட்டுக்கோ பெரிய பெயரி வந்துவிடும் என நினைப்பர் - முதலமைச்சர் விஜய்</p><p>நமது குடும்பத்தில் உள்ள பாட்டி, அம்மா, அக்கா, தங்கையை பற்றிய தீர்மானம் இது - முதலமைச்சர் விஜய்</p><p>தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்டசபையில் தனித்தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் கொண்டு வருகிறார்.</p><p>தமிழ்நாடு சட்டசபை நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் அமர்வு தொடங்கியது</p><p>தமிழ்நாடு சட்டசபை நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் அமர்வு தொடங்கியதுதமிழ்நாடு சட்டசபை நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் அமர்வு தொடங்கியது</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/resolution-against-constituency-delimitation-to-be-tabled-in-assembly-today">தொகுதி மறுவரையறைக்கு எதிராக தீர்மானம் - சட்டசபையில் இன்று தாக்கல்</a></p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை: போலீசார் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-drone-fly-in-chennai-for-4-days</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-drone-fly-in-chennai-for-4-days#comments</comments><guid isPermaLink="false">7a33dfdc-e1d3-47c3-aa0f-e29b2ba64766</guid><pubDate>Wed, 12 Aug 2026 07:57:20 +0000</pubDate><atom:updated>2026-08-12T07:57:20.987Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DRONES,Independence Day,சுதந்திர தினம்,டிரோன்கள் பறக்க தடை,டிரோன்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/p9h8fmzo/dron.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ டிரோன்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிரோன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/p9h8fmzo/dron.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>4 நாட்களும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெற்று விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் கூடுதல் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.</strong></em> </p><p>நாடு முழுவதும் வருகிற 15-ந்தேதி 80-வது <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">சுதந்திர தின விழா </a>கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.</p><h2><strong>தமிழகத்தில்</strong></h2><p>தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதலமைச்சர் விஜய் முதல் முறையாக  தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடி ஏற்றி வைக்கிறார்.</p><p>சென்னை மாநகரில் பி.என்.எஸ். பிரிவு 14 (2)படி டிரோன்கள் ரிமோட் மூலம் இயக்கப்படும் மைக்ரோ லைட் ஏர்கிராப்ட், பாரா கிளைடர்ஸ், பாரா மோட்டார்ஸ், ஹேங் கிளைடர்ஸ், ஹாட் ஏர் பலூன்கள்  ஆகியவை பறப்பதற்கு கடந்த ஜூன் 19-ந்தேதி முதல் வருகிற 17-ந்தேதி வரை தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. </p><p>இந்த உத்தரவு ஏற்கனவே அமலில் இருக்கும் நிலையில் சுதந்திர தின பாதுகாப்பை கருத்தில் கொண்டு வருகிற 14 மற்றும் 15 ஆகிய 2 நாட்களும் (அரசு ஏற்பாடுகள் தவிர ) தலைமைச் செயலகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் முதலமைச்சர் விஜய்  தனது இல்லத்தில் இருந்து தலைமைச் செயலகம் செல்லும் வரை உள்ள வழித்தடங்களில் டிரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகள் அனைத்தும்  சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>4 நாட்கள்</strong></h2><p>இந்த நிலையில் வருகிற 16 மற்றும் 17 ஆகிய 2 நாட்கள் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/80th-independence-day-5-layer-security-at-chennai-airport">சென்னைக்கு</a> வருகை தர உள்ளார். இதையொட்டி அந்த நாட்களிலும் டிரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வருகிற 14-ந்தேதியில் இருந்து 17-ந்தேதி வரை 4 நாட்கள் சென்னை மாநகர பகுதிகளில் டிரோன்களை பறக்க விடக்கூடாது என போலீசார் தெரிவித்து உள்ளனர்.</p><p>பாதுகாப்பு காரணங்களுக்காக மீனம்பாக்கம், கிண்டி,  தி.நகர், அரும்பாக்கம் ஆகிய பகுதிகள் மற்றும் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பயணிக்கும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக  அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மேற்குறிப்பிட்ட இடங்களில் டிரோன் கேமராக்களுடன் ஆளில்லா வான்வழிகருவிகள் பறப்பதற்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது. </p><p>இந்த 4 நாட்களும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெற்று விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் கூடுதல் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.  வாகன சோதனையையும் தீவிரப்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>&apos;சூரியன்&apos; குறித்து கருத்து சொன்ன அமைச்சர்- பதிலடி கொடுத்த ஓ.பன்னீர்செல்வம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/o-panneer-selvam-replay-to-minister-vinod</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/o-panneer-selvam-replay-to-minister-vinod#comments</comments><guid isPermaLink="false">162f5472-1b11-41ae-b7a7-42bc715a0ffe</guid><pubDate>Wed, 12 Aug 2026 07:51:47 +0000</pubDate><atom:updated>2026-08-12T07:51:47.045Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,TN assembly,அமைச்சர் வினோத்,Minister Vinodh</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/vgh2zblx/OPS.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் வினோத்- ஓ.பன்னீர்செல்வம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் வினோத்- ஓ.பன்னீர்செல்வம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/vgh2zblx/OPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>எத்தனையோ விஞ்ஞானிகள் முயற்சி செய்தும் அங்கே ஏவுகணைகளை செலுத்த முடியவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்றார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> இன்று தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த தனித்தீர்மானம் உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதத்திற்கு அரசின் பதிலுரை தொடங்கியது. இதில் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு அமைச்சர் வினோத் பதில் அளித்து பேசியதாவது:-</p><h2><strong>தொலைநோக்கு திட்டங்கள்</strong></h2><p>தி.மு.க. தலைவர் ஸ்டாலின் த.வெ.க. வேளாண் பட்ஜெட்டை வெற்று பட்ஜெட் என விமர்சித்திருந்தார். த.வெ.க.வின் வேளாண் பட்ஜெட் வெற்ற பட்ஜெட் அல்ல அது விவசாயிகள் போற்றும் வெற்றி பட்ஜெட். இவர்களுக்கு என்ன ஆட்சி செய்ய தெரியும் என கேட்டனர். லஞ்சம் இல்லாத ஆட்சியை முதலமைச்சர் விஜய் தந்துள்ளார். தமிழகத்தின் இதயம் விவசாயிகளிடத்தில் உள்ளது.  ஓரிரு நாட்களில் தீர்க்க முடியும் என்றால் கடந்த ஆட்சி காலங்களில் ஏன் செய்யவில்லை? வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசுக்கு போதிய கால அவகாசத்தை எதிர்க்கட்சியினர் வழங்க வேண்டும். விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்க தொலைநோக்கு திட்டங்கள் தேவை. </p><p>கடும் நிதி நெருக்கடியிலும் ரூ.6 ஆயிரம் கோடி பயிர்க்கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையில் ஏற்கெனவே உள்ள திட்டங்களுடன் புதிய திட்டங்களும் செயல்படுத்தப்படும்.  பொது ரகம், சன்ன ரகம் நெல், கரும்புக்கான சிறப்பு ஊக்கத்தொகை உயர்த்தியுள்ளார் முதலமைச்சர் விஜய். எங்கள் திட்டங்களை எதிர்க்கட்சிகள் சரியாக புரிந்து கொள்ளவில்லை. </p><p>விவசாயிகள் கோரிக்கைக்கேற்ப சிலவற்றை மேம்படுத்தி திட்டங்களின் பெயரை மாற்றியுள்ளோம். திட்டங்களின் பலனை மேம்படுத்தும் நோக்கில் பெயர் மாற்றம், வெற்றி வீடு திட்டத்தில் முந்தைய ஆட்சியை விட கூடுதல் நிதி. அனைத்து மாவட்டங்களிலும் பயிர் சாகுபடி பாதிக்கப்பட்ட பரப்பளவை கண்டறியுமாறு முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். இதுவரை ஆய்வு செய்ததில் 23,399 ஹெக்டேர் பரப்பளவில் 33 சதவீதம் மேல் பாதிக்கப்பட்ட பயிர்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு முடித்த பின்னர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாநில பேரிடர் நிதியிலிருந்து நிவாரணம் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். </p><p>அனைவருக்கும் சூரியனால் வேர்த்தது. நீங்கள் வந்தபிறகு சூரியனுக்கே வேர்த்தது. இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய முதலமைச்சருக்கும், பேரவை தலைவருக்கும் நன்றி. </p><p>இவ்வாறு அமைச்சர் வினோத் உரையை நிறைவு செய்தார். </p><p>அமைச்சர் வினோத் கூறியதற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறுகையில், வேளாண்துறை அமைச்சர் நீண்ட நெடிய விளக்கத்தை அளித்தார்கள். அதனை நாங்கள் எல்லோரும் கூர்மையாக கேட்டுக்கொண்டு இருந்தோம். அவருடைய பதிலுரை முடிவில் சூரியனுக்கே வேர்த்தது என்ற கருத்தை கூறியுள்ளார். இதுவரை யாருமே நெருங்க முடியாத நிலையில் தான் சூரியன் இருக்கிறார். எத்தனையோ விஞ்ஞானிகள் முயற்சி செய்தும் அங்கே ஏவுகணைகளை செலுத்த முடியவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்றார். </p>]]></content:encoded></item><item><title>வாட்ஸ்அப் ரகசிய குறியீடுகள் மூலம் இயங்கிய மும்பை பிக்பாக்கெட் அடிக்கும் கும்பல் சிக்கியது!</title><link>https://www.maalaimalar.com/news/national/whatsapp-secret-codes-mumbai-pickpocket-gang-busted</link><comments>https://www.maalaimalar.com/news/national/whatsapp-secret-codes-mumbai-pickpocket-gang-busted#comments</comments><guid isPermaLink="false">9e37d7fa-9fdb-4c7f-801b-27f988620214</guid><pubDate>Wed, 12 Aug 2026 07:45:16 +0000</pubDate><atom:updated>2026-08-12T07:45:16.250Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மும்பை,pickpockets,Dhakka Gang,Mumbai gang,பிக்பாக்கெட் கும்பல்,தக்கா கேங்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/qbh3z9ph/picpockets.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ pickpockets]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/qbh3z9ph/picpockets.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மும்பையில் 'தக்கா கேங்' என்ற பெயரில் செயல்பட்டு வந்த பாக்கெட் அடிக்கும் திருட்டுக் கும்பலை எம்.ஐ.டி.சி காவல் துறையினர் வெற்றிகரமாகக் கைது செய்துள்ளனர். இந்த கும்பல் தங்களது அன்றாட திருட்டுச் சம்பவங்களை நடத்துவதற்கும், காவலர்களிடம் இருந்து தப்பிப்பதற்கும் மிகவும் புதுமையான முறையில் வாட்ஸ்அப் ரகசிய குறியீடுகளைப் பயன்படுத்தி வந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p><h2>தினமும் <strong>மாறும் ரகசிய கு</strong>றியீடுகள்</h2><p>மேற்கு மண்டல துணை காவல் ஆணையர் தத்தா நளவாடே தலைமையில் நடைபெற்ற விசாரணையில், இக்கும்பலின் தலைவன் தினமும் காலையில் உறுப்பினர்களுக்கு வாட்ஸ்அப் வழியாக ஒரு புதிய குறியீட்டுச் சொல்லை அனுப்புவது வழக்கம் எனத் தெரியவந்துள்ளது. "அங்கிள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்" அல்லது "இன்று வானிலை எப்படி இருக்கிறது?" போன்ற சாதாரண உரையாடல்கள் போல் தோன்றும் சொற்களே இவர்களின் ரகசிய குறியீடுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.</p><p>இந்தக் குறியீடுகளின் முதன்மை நோக்கம் திருட்டைத் திட்டமிடுவது அல்ல, மாறாகக் கும்பலின் உறுப்பினர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்களா அல்லது யாராவது காவல்துறையிடம் பிடிபட்டுள்ளனரா என்பதை உறுதி செய்வதே ஆகும். உறுப்பினர்களிடம் இருந்து எந்த ஆபத்தும் இல்லை என்பதற்கான பதில் வந்த பின்னரே, அன்றைய தினம் எந்த வழித்தடப் பேருந்துகளில் திருட வேண்டும் என்பதை முடிவு செய்வார்கள்.</p><h2>செயல்ப<strong>டும்</strong> முறை </h2><p>இந்தக் கும்பல் 4 முதல் 5 உறுப்பினர்களைக் கொண்டு இயங்கியுள்ளது. பேருந்துகளில் ஏறும் இவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ளாமல், இரண்டு அல்லது மூன்று பேர் கூட்ட நெரிசலை உருவாக்கி பயணிகளின் கவனத்தைத் திசைதிருப்புவார்கள். அந்த சமயத்தில் "மெஷின்" என்று அழைக்கப்படும் முதன்மைத் திருடன், பயணிகளின் பாக்கெட்டில் இருக்கும் செல்போன்கள் மற்றும் பணப்பைகளை நைசாகத் திருடி விடுவான். திருட்டு முடிந்ததும் அனைவரும் வெவ்வேறு பேருந்து நிறுத்தங்களில் இறங்கி தப்பிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.</p><h2>ஐபோ<strong>னை தவிர்த்த கு</strong>ம்பல்</h2><p>காவல்துறையினர் நடத்திய சோதனையில் இக்கும்பலிடமிருந்து ரூ.90,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை மதிப்புள்ள 135 உயர்ரக ஸ்மார்ட்போன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஐபோன் மாடல்களை அன்லாக் செய்வது மிகவும் கடினம் என்பதாலும், வங்கதேசம் மற்றும் நேபாளப் பகுதி கறுப்புச் சந்தைகளில் அவற்றிற்கு குறைந்த விலையே கிடைப்பதாலும், ஐபோன்களைத் திருடுவதை இவர்கள் திட்டமிட்டுத் தவிர்த்து வந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>அந்தேரி பகுதியில் இரண்டு கும்பல் உறுப்பினர்களைக் காவல் துறையினர் கைது செய்த உடனடியாக, எஞ்சிய உறுப்பினர்கள் நவி மும்பையில் உள்ள ஜூய்நகர் பகுதிக்குத் தங்களது இருப்பிடத்தை மாற்றி தலைமறைவாகினர். தற்போது இச்சம்பவம் தொடர்பாகக் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>&quot;லவ்வுல இத்தனை கண்டிஷனா&quot;? ரியோ ராஜின் ‘ராம் இன் லீலா’ ட்ரெய்லர் வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/rio-raj-ram-in-leela-trailer-release</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/rio-raj-ram-in-leela-trailer-release#comments</comments><guid isPermaLink="false">53fa9ddb-aca4-4ac4-a5d7-17dc1feb22b3</guid><pubDate>Wed, 12 Aug 2026 07:33:46 +0000</pubDate><atom:updated>2026-08-12T07:33:46.696Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rio Raj,ரியோ ராஜ்,ராம் இன் லீலா,RamInLeela,Vartika,வர்த்திகா,AnkitMenon,RamachandrranKannan,MaKaPaAnand,RomCom</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/s50sw81p/RamInLeela-Trailer" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ RamInLeela Trailer]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/s50sw81p/RamInLeela-Trailer?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>'ஜோ' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/rio-raj">ரியோ ராஜ்</a> நடிப்பில், புதுமுக இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள '<a href="https://www.maalaimalar.com/topic/ram-in-leela">ராம் இன் லீலா</a>' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் இன்று காலை 11:11 மணிக்கு வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. </p><p>முழுக்க முழுக்க கலர்புல் மற்றும் ரொமாண்டிக் காமெடி பாணியில் இந்த ட்ரெய்லர் உருவாகியுள்ளது.</p><h2><strong>ட்ரெய்லர் எப்படி இருக்கு?</strong></h2><p>ட்ரெய்லரின் ஆரம்பத்திலேயே, இன்றைய காலகட்டத்தில் மிடில் கிளாஸ் பையன்கள் கல்யாணம் செய்ய எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை "ஒரு லட்சம் சம்பளம், சொந்த வீடு, கொட்டாத முடி, விழாத தொப்பை இதெல்லாம் இருந்தா போதும்ல..." என ரியோவின் நக்கல் வசனத்துடன் ட்ரெய்லர் ஜாலியாகத் தொடங்குகிறது.</p><p>ரயிலில் பார்த்த ஒரு பெண்ணை உருகி உருகி காதலிக்கும் ரியோ, எப்படியாவது அவளைக் கல்யாணம் செய்யத் துடிக்கிறார்.. ஆனால், அந்தப் பெண் ரியோவிடம் ஒரு விசித்திரமான கண்டிஷன் போடுகிறார். "சாயங்காலம் 6 மணிக்கு மேல நீ எங்க போற, என்ன பண்றன்னு யாருக்கும் தெரியல" என்ற வசனங்கள் மூலம் கதையில் ஒரு சுவாரஸ்யமான ட்விஸ்ட் மற்றும் சஸ்பென்ஸ் ஒளிந்திருப்பது போல் காட்டப்படுகிறது.</p><h2><strong>நட்சத்திரப் பட்டாளம்:</strong></h2><p>ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், ரியோ ராஜுக்கு ஜோடியாக வர்த்திகா அறிமுகமாகிறார். </p><p>இவர்களுடன் காமெடிக்கு உத்தரவாதம் தர முனிஷ்காந்த், மா கா பா ஆனந்த், லொள்ளு சபா சுவாமிநாதன், 'டிஜே பிளாக்' சுதன்குமார், தீபா வெங்கட், சேத்தன் மற்றும் மாளவிகா அவினாஷ் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர்.</p><h2>ரிலீஸ் தேதி:</h2><p>அங்கித் மேனனின் பின்னணி இசையும், அண்மையில் வெளியான 'செப்பு சேலை' போன்ற பாடல்களும் படத்திற்கு கூடுதல் எனர்ஜியைக் கொடுத்துள்ளன.</p><p>வரும் <strong>ஆகஸ்ட் 21 </strong>அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் இந்தத் திரைப்படம் வெளியாகவுள்ளது. இளைஞர்களையும், குடும்ப ரசிகர்களையும் கவரும் ஒரு பக்கா என்டர்டெய்னராக 'ராம் இன் லீலா' இருக்கும் என ட்ரெய்லர் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/SFrKBnj13qI"></iframe></figure>]]></content:encoded></item><item><title>இடைத்தரகர்கள் செலவினம், ஊழல் முற்றிலும் தடுப்பு..!- தவெக அரசின் சாதனைகளை பட்டியலிட்ட நிதியமைச்சர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/completely-curbing-middlemens-spending-and-corruption-tvk-finance-minister</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/completely-curbing-middlemens-spending-and-corruption-tvk-finance-minister#comments</comments><guid isPermaLink="false">4b57edac-c04b-45f1-9e0f-ad33a61705d9</guid><pubDate>Wed, 12 Aug 2026 07:17:13 +0000</pubDate><atom:updated>2026-08-12T07:17:13.029Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,தவெக அரசு,TVK Govt,அமைச்சர் மரிய வில்சன்,Minister Mariya Wilson</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/z955emp3/wilson.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Maria Wilson]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/z955emp3/wilson.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் நிதியமைச்சர் மரிய வில்சன் பதிலுரை வழங்கினார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><p>வெற்றி அடைவதற்கு குறுக்கு வழியை அடையாமல் உண்மையுடன் இருந்தால் எல்லாம் சாத்தியம் என்பதற்கு முதல்வரே எடுத்துக்காட்டு.</p><p>அன்றும் இன்றும் என்றும் உண்மைக்கு புறம்பாக தவெகவினர் பேசுவதில்லை.</p><p>30 ஆண்டுகள் கழித்து மீண்டும் அரசியலுக்கு வருவதற்கு முதல்வர் விஜய் மூலம் வாய்ப்பு கிடைத்துள்ளது.</p><p>குறிவைத்தால் தவற மாட்டேன், தவறுமானால் குறியே வைக்க மாட்டேன் என்ற எம்ஜிஆர் வசனத்தை ரீ-டிரெண்ட் செய்து சாதித்தவர் முதல்வர்.</p><p>கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம், கடமை இருந்தால் வீரன் ஆகலாம், பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம் பாடலுக்கு முதல்வரே உதாரணம்.</p><p>எங்கள் தவறை திருத்தி உங்களிடம் இருந்து சிலவற்றை கற்றுக்கொண்டு மீண்டும் வலிமையாக நாங்கள் வருவோம்.</p><p>தமிழ் மொழி விவகாரத்தில் அன்று ஆவேசப்பட்டு விட்டேன். முன்னாள் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனையும் என்னையும் ஒப்பிட்டு பேசினார்கள்.</p><p>நான் பிறந்தது திருவாரூர், வளர்ந்தது புதுச்சேரி, படித்தது சென்னை, தற்போது ஆர்.கே.நகர் தத்தெடுத்துள்ளது.</p><h2>வெற்றி பட்ஜெட்</h2><p>இடைத்தரகர்களுக்கு சென்ற வீணான செலவினம் தவெக அரசில் நிறுத்திவைப்பு. மத்திய அரசிடம் இருந்து நியாயமான நிதிப்பகிர்வு கோரிய தீர்மானத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.</p><p>வரி மற்றும் வரி அல்லாத வருவாயில் அரசுக்கு ரூ.15,000 கோடி கிடைக்கும். எந்த பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி திட்டமும் நிறுத்தப்படவில்லை.</p><p>நடைமுறை திட்டங்கள் தொடர்வதுடன் தவெக அரசு புதிய திட்டங்களையும் செயல்படுத்தும். தவெக அரசு அளித்துள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்.</p><p>சொந்த வரி வருவாய் வளர்ச்சி 12 சதவீதம் தான் சாத்தியம். திட்டம் அனுமதி பெறுவதற்கான ஊழல் தவெக அரசால் தடுக்கப்பட்டுள்ளது. </p><p>மாநிலத்தின் நிதிநிலை காரணம் காட்டி 28 மாதங்களுக்கு பின்னரே ஒரு திட்டத்தை நிறைவேற்றியது முந்தைய அரசு.</p><p>திட்டங்கள், அதன் பலன்களை மேம்படுத்தும் நோக்கில் தான் பெயர் மாற்றம், வெற்றி வீடு திட்டத்தில் முந்தைய ஆட்சி விட நிதி உயர்வு.</p><p>கடந்த ஆட்சியில் மேற்கொண்டுள்ள திட்டங்களை நகல் எடுக்காமல் பலன்களை மட்டும் மேம்படுத்தி உள்ளோம்.</p><p>பொதுமக்களும் பயனளிக்கும் திட்டங்களின் அறிவிப்பால் செலவினம் அதிகரித்துள்ளது. திமுக அரசு வழங்கிய டெண்டரில் உள்ள முறைகேடுகளை ஒவ்வொன்றாக ஆராய வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சிக்மா படத்தின் &apos;அய்யய்யோ அம்மாடி&apos; பாடல் இன்று மாலை வெளியீடு: இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிடுகிறார்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/sigma-film-second-single-ayyayyo-ammadi-out-today</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/sigma-film-second-single-ayyayyo-ammadi-out-today#comments</comments><guid isPermaLink="false">25ab8856-7dde-44db-94de-357cfad8ddca</guid><pubDate>Wed, 12 Aug 2026 07:03:54 +0000</pubDate><atom:updated>2026-08-12T07:03:54.556Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Yuvan Shankar Raja,யுவன் சங்கர் ராஜா,சிக்மா,sigma,Thaman S,Ayyayyo Ammadi,அய்யய்யோ அம்மாடி,தமன் எஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/90cwcld0/sigma.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sigma ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/90cwcld0/sigma.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திரைப்பட ரசிகர்களிடையே பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'சிக்மா' திரைப்படத்தின் இரண்டாவது பாடலான 'அய்யய்யோ அம்மாடி' இன்று மாலை 6 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியாகிறது. பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இந்த பாடலை சமூக வலைத்தளங்களில் வெளியிடவுள்ளார்.</p><h2>ஜேசன் ச<strong>ஞ்சயின் அ</strong>றிமுக இயக்கம்</h2><p>தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரம் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் 'சிக்மா'. லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சுபாஸ்கரன் வழங்கும் இத்திரைப்படத்தில் கதாநாயகனாக சுந்தீப் கிஷனும், கதாநாயகியாக ஃபரியா அப்துல்லாவும் நடித்துள்ளனர். மேலும் சம்பத் ராஜ், சிவ பண்டிட், ராஜு சுந்தரம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.</p><h2>தமன் இ<strong>சையில் உருவாகும் பா</strong>டல்கள்</h2><p>இத்திரைப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் தமன் எஸ் இசையமைத்து வருகிறார். ஏற்கனவே வெளியான 'சிக்மா ஸ்டைல்' எனும் முதல் பாடலும், படத்தின் டீசரும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று இணையத்தில் வைரலானது. அந்த வரிசையில் தற்போது வெளியாகவுள்ள 'அய்யய்யோ அம்மாடி' பாடல் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.</p><h2>ரசி<strong>கர்களின்</strong> ஆவல்</h2><p>அதிரடி மற்றும் சுவாரஸ்யமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள 'சிக்மா' திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, தற்போது இறுதிப் பிந்தைய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், யுவன் சங்கர் ராஜா மூலமாக இந்த பாடல் வெளியாவது இசைப் பிரியர்கள் மற்றும் விஜய் ரசிகர்களிடையே மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வட தமிழக கடலோர பகுதியில் அடுத்த வாரம் கனமழைக்கு வாய்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-heavy-rain-in-coastal-north-tamil-nadu-next-week</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-heavy-rain-in-coastal-north-tamil-nadu-next-week#comments</comments><guid isPermaLink="false">d71f850c-c8a4-4971-9262-c93dd0db7cf4</guid><pubDate>Wed, 12 Aug 2026 07:02:51 +0000</pubDate><atom:updated>2026-08-12T07:02:51.188Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Heavy Rain,Southwest Monsoon,தென்மேற்கு பருவமழை,கனமழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/090pq3tz/rain003.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/090pq3tz/rain003.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்தாலும் அடுத்த வாரம் முதல்  வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.</strong></em> </p><p>வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகலில் வெயில் சுட்டெரித்த போதிலும் இரவு நேரத்தில் ஆங்காங்கே  லேசான மழை பெய்து வருகிறது.</p><p>மழை குறித்து சென்னை மண்டல வானிலை இயக்குனர் துரை கூறியதாவது:- </p><p>வட தமிழக  மாவட்டங்கள் தொடங்கி திருநெல்வேலி வரை  என 3 நாட்களுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும். இயல்பை விட 4 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கடல் காற்று உள்ளே வந்து நில காற்றுடன் சேர்ந்து வீசுவதால் மாலை நேரங்களில் மழை பெய்கிறது. </p><p>தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்தாலும் அடுத்த வாரம் முதல்  வட தமிழக கடலோர மாவட்டங்களில் <a href="https://www.maalaimalar.com/topic/கனமழை">கனமழைக்கு</a> வாய்ப்பு உள்ளது. வடமேற்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட தமிழக கடலோரப் பகுதிகளில் 17-ந்தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை இன்னும் 2 நாட்களுக்கு பெய்யக்கூடும்.</p><p>தென்மேற்கு பருவமழை குறையும் போது வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பது வழக்கமான ஒன்றுதான். வெப்பம் அதிகரிப்பதற்கு எல் நினோவும் ஒரு காரணம். </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>எங்கள் தலைவரே சாட்சி..!- குட்டிக்கதை சொல்லி உரையாற்றிய அமைச்சர் மரிய வில்சன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/our-leader-as-witness-minister-maria-wilsons-moral-tale-in-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/our-leader-as-witness-minister-maria-wilsons-moral-tale-in-assembly#comments</comments><guid isPermaLink="false">12a1f1dc-052e-4e0d-85d3-110efe12018b</guid><pubDate>Wed, 12 Aug 2026 07:00:56 +0000</pubDate><atom:updated>2026-08-12T07:00:56.923Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,short story,Minister Maria Wilson,அமைச்சர் மரிய வில்சன்,குட்டிக்கதை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/2fjc6jig/Maria-wilson.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Maria Wilson]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/2fjc6jig/Maria-wilson.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் நிதியமைச்சர் மரிய வில்சன் பதிலுரை வழங்கினார்.</p><p>சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான பதிலுரையில் குட்டிக்கதை சொல்லி தனது உரையை நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.</p><h2>குட்டிகதையில்..</h2><p>அடுத்து இந்த தேசத்தை ஆளப்போவது யார்? என்று பெரியவர் ஒருவர் போட்டி வைத்திருக்கிறார். அதற்கு இஞைர்கள் பலருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். </p><p>அங்கு வந்த இளைஞர்கள் பெரியவரிடம் விதிமுறைகள் குறித்து கேட்டு தெரிந்துக்கொண்டனர்.</p><p>விதிமுறைகள் எல்லாம் கேட்ட பிறகு, அந்த பெரியவர், அனைவருக்கும் ஒரு விதையை கொடுத்தார். அப்போது, நீங்கள் 3 மாதங்களுக்கு பிறகு இந்த விதையை செடியாக வளரச்செய்து வாருங்கள் என்றார்.</p><p>3 மாதம் முடிந்து, இளைஞர்கள் வந்தார்கள். செடிகள் வளர்ந்து பூக்கள் வளர்ந்த நிலையில பெரியவரிடம் வந்தார்கள்.</p><p>ஆனால் ஒருத்தர் மட்டும், ஒன்றுமே வளர முடியாத நிலையில் தொட்டியை எடுத்து வந்து கொடுத்தார். அதை பார்த்து நிறையபேர் சிரிக்கிறார்கள். நகைக்கிறார்கள்..</p><p>அப்போது, அந்த பெரியவர் சொல்கிறார். இவர் தான் வெற்றி பெற்றார் என்று சொல்கிறார். அப்போது, மற்ற இளைஞர்கள் எல்லாம் அதிர்ச்சி அடைகிறார்கள். இந்த வெற்றி ஒரு பெரிய கேள்விக்குறியாகிறது? எப்படி இது சாத்தியம் என்று?</p><p>அதற்கு அந்தபெரியவர் சொன்னாராம். நாம் கொடுத்தது வேகவைத்த விதை. அது ஒருபோதும் முளைக்காது.</p><p>வெற்றி அடைவதற்காக பொய் சொல்லாமல் நேர்மையாக வந்த இவரை தான் நாங்கள் தேர்வு செய்கிறோம் என்று சொன்னாராம்.</p><p>வெற்றி அடைவதற்காகபொய் சொல்லாமல் குறுக்குவழியை கடைப்பிடிக்காமல், நேர்மையாக இருந்தால் எல்லாம் இங்கு சாத்தியம் என்பதற்கு எங்கள் தலைவரே சாட்சி..</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மாநிலங்களுக்கு வரி இழப்பை ஏற்படுத்தும் கனிமச் சட்டத்திருத்தம் தேவையற்றது!- அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-mineral-law-amendment-that-causes-revenue-loss-to-states-is-unnecessary</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-mineral-law-amendment-that-causes-revenue-loss-to-states-is-unnecessary#comments</comments><guid isPermaLink="false">8b1a3706-9db4-467e-b01c-932120cc3cc4</guid><pubDate>Wed, 12 Aug 2026 06:57:13 +0000</pubDate><atom:updated>2026-08-12T06:57:13.560Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,கனிம சட்டத்திருத்தம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/1dt5xu2o/Anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/1dt5xu2o/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத் திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் வரி விதிக்கும் உரிமையைப் பறிக்கும் வகையில், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தில் 9டி என்ற புதிய பிரிவை சேர்ப்பதற்கான சட்டத் திருத்த முன்வரைவை நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்திருக்கிறது. தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய அளவில் வருவாய் இழப்பை ஏற்படுத்தக் கூடிய இச்சட்டத் திருத்தம் ஏற்றுக்கொள்ள முடியாதது.</p><h2><strong>அரசுக்கு வருவாய் இழப்பு</strong></h2><p>நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத் திருத்த முன்வரைவின் மூலம் சேர்க்கப்படவுள்ள 9டி பிரிவு மிகவும் ஆபத்தானது. அந்த பிரிவின்படி, கனிம வளங்கள் உரிமை மீது எந்த வரியையும், கூடுதல் வரியையும், தீர்வைகளையும் மாநில அரசுகள் தன்னிச்சையாக  விதிக்க முடியாது. அதுமட்டுமின்றி, மாநில அரசுகளால் ஏற்கனவே இது போன்ற வரிகள் விதிக்கப்பட்டு, அதை கனிமச் சுரங்க ஒப்பந்ததாரர்கள் செலுத்தாமல் இருந்தால், இந்தச் சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வரும் போது, நிலுவையில் உள்ள வரித் தொகையை செலுத்தத் தேவையில்லை. கனிமங்கள்,  அவை கிடைக்கும் நிலங்கள் ஆகியவை மாநிலப் பட்டியலில் இருந்தாலும், மத்திய அரசால் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், வழிகாட்டுதல்கள் ஆகியவற்றுக்கு ஏற்ற வகையில் மட்டும் தான் வரி விதிக்க முடியும்.</p><p>சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத் திருத்த முன்வரைவு மாநில அரசின் வரி விதித்து, வருவாய் ஈட்டும் அதிகாரத்தைப் பறிக்கிறது. நிலங்கள், கனிமங்கள் ஆகியவை மாநிலப் பட்டியலில் இருந்தாலும் கூட, வரி விதிப்பை முறைப்படுத்தும் அதிகாரம் தங்களுக்கு இருப்பதை பயன்படுத்தி கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு முயல்கிறது. இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.</p><p>2025-26ஆம் ஆண்டில் கனிம வளங்கள் மீதான வரி, ராயல்டி உள்ளிட்ட அம்சங்கள் மூலம் தமிழ்நாடு அரசு ரூ.4100 கோடி வருவாய் ஈட்டியது. 2026-27ஆம் ஆண்டில் இந்த வருவாயை ரூ.11 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட தமிழக அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது. தமிழ்நாட்டின் கனிமவளங்கள் முறையாக கையாளப்பட்டால் ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் கோடி வரை வருவாய் ஈட்ட முடியும் என்பது பாமகவின் நிலைப்பாடு ஆகும். எந்தெந்த வகைகளில் எல்லாம் இந்த வருவாயை ஈட்ட முடியும் என்பதை ஆண்டுதோறும் தாக்கல் செய்யும் நிழல் நிதிநிலை அறிக்கைகளில் பாட்டாளி மக்கள் கட்சி தெளிவாக விவரித்திருக்கிறது.</p><h2><strong>வருமானம் தடைபடும் ஆபத்து</strong></h2><p>சரக்குகள் மற்றும் சேவை வரி விதிப்பு சட்டம் 2017ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த பிறகு மாநில அரசுகளின் வரி விதிக்கும் அதிகாரம் முற்றிலுமாக பறிக்கப்பட்டு விட்டது. மதிப்புக் கூட்டு வரி, மோட்டார் வாகன வரி, பத்திரப் பதிவுக்கான முத்திரைத் தீர்வை மற்றும் கனிமங்கள் மீதான வரிகள் மூலமாகத் தான் மாநில அரசுகள் தங்களுக்கான வருவாயைத் திரட்ட வேண்டியுள்ளது. அதையும் பறிக்கும் வகையில் மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றுவது மாநில அரசுகளின் வருவாய் ஆதாரங்களை முடக்கி மக்களுக்கு எந்த வகையான நலத்திட்டங்களையும் செயல்படுத்த முடியாத நிலையை ஏற்படுத்தி விடும்.</p><p>அதிலும் குறிப்பாக தமிழ்நாடு தான் இந்த சட்டத் திருத்தத்தால் கடுமையாக பாதிக்கப்படும். கடந்த திமுக ஆட்சியில் மிகப்பெரிய அளவில் கனிமவளக் கொள்ளை நடைபெற்றது. கனிமக் கொள்ளையை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்ததைத் தொடர்ந்து கனிமக் கொள்ளைகள் குறித்து ஆய்வு செய்து அவற்றின் மீது பல்வேறு வரிகளும், அபராதங்களும் விதிக்கப்பட்டு வருகின்றன. அவற்றை தவணை முறையிலும் செலுத்தலாம் என்று சலுகை வழங்கப்பட்டதால், அவற்றில் பெரும்பாலான தொகை இன்னும் வசூலிக்கப்படவில்லை. இப்போது கனிமச் சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வந்தால், கனிமக் கொள்ளை நடத்தியவர்களிடமிருந்து தமிழக அரசுக்கு வர வேண்டிய வருமானம் தடைபடும் ஆபத்து உள்ளது.</p><p>கனிமங்களைத் தாங்கி நிற்கும் நிலங்கள் மீது வரி விதிக்கும் அதிகாரம் யாருக்கு? என்பது தொடர்பான வழக்கில் கடந்த 25.07.2024ஆம் நாள் தீர்ப்பளித்த 9 நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு, கனிமங்கள் மீது வரி விதிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு மட்டுமே இருப்பதாக அறிவித்தது. அந்தத் தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் தான் இந்த சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. மத்திய அரசு கொண்டு வரும் சட்டத் திருத்தங்கள் சீர்திருத்தங்களை நோக்கமாகக் கொண்டு இருக்க வேண்டுமே தவிர, மாநில அரசின் உரிமைகளை பறிப்பதாக இருக்கக் கூடாது. எனவே, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத் திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>மகனைத் தேடிய மூத்த குடிமகனிடம் ரூ.29 லட்சம் மோசடி: கொல்கத்தாவில் அதிர்ச்சி சம்பவம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/senior-citizen-cheated-of-rs-29-lakh-while-searching-for-missing-son</link><comments>https://www.maalaimalar.com/news/national/senior-citizen-cheated-of-rs-29-lakh-while-searching-for-missing-son#comments</comments><guid isPermaLink="false">7ddf9546-a5fd-44b8-993e-e2d368e6d31b</guid><pubDate>Wed, 12 Aug 2026 06:51:35 +0000</pubDate><atom:updated>2026-08-12T06:51:35.892Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கொல்கத்தா,Kolkata,money laundering,மோசடி புகார்,Kariyahat,காரியாஹாட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/wehyfz6l/fraud.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kolkata  Money laundering]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/wehyfz6l/fraud.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தனது காணாமல் போன மகனைத் தேட உதவி செய்வதாகக் கூறி, மூத்த குடிமகன் ஒருவரிடம் தனியார் புலனாய்வாளர் ஒருவர் ரூ.29 லட்சத்துக்கும் அதிகமான தொகையை ஏமாற்றிப் பறித்த சம்பவம் கொல்கத்தாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>பர்த்வான் பகுதியைச் சேர்ந்த 64 வயதான ஓய்வுபெற்ற அரசு அதிகாரி (WBCS) என்பவரின் 29 வயது மகன், கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி 21 அன்று திடீரென காணாமல் போனார். உள்ளூர் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால், கவலையடைந்த தந்தை கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் புலனாய்வு நிறுவனத்தை அணுகினார். மகனைக் கண்டுபிடிக்க ரூ.5 லட்சம் கட்டணமாக ஒப்பந்தம் செய்யப்பட்டு, முதற்கட்டமாக ரூ. 4.5 லட்சம் செலுத்தப்பட்டது.</p><h2>பணம் <strong>பறிப்</strong>பு</h2><p>அந்தத் தனியார் நிறுவனம் இந்த வழக்கை சாம்ராட் பௌமிக் என்ற நபரிடம் ஒப்படைத்தது. 2025 ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில், காணாமல் போன இளைஞர் புருலியா-ஜார்க்கண்ட் எல்லைக்கு அருகில் இருப்பதாகவும், அவரைப் பற்றிய முக்கியமான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் சாம்ராட் பௌமிக் போலியான வாக்குறுதிகளை அளித்தார்.</p><p>ரகசியத் தகவலாளர்களுக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றும், களத்தில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடுதல் நிதி தேவை என்றும் கூறி, தந்தையின் பதற்றத்தைப் பயன்படுத்தி மீண்டும் மீண்டும் பணம் கோரினார். இதை நம்பிய தந்தை, டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் ரொக்கம் மூலமாக மொத்தம் ரூ. 25,34,746 வழங்கினார்.</p><h2>மோ<strong>சடி வெளிச்சத்திற்கு வந்த</strong> விதம்</h2><p>தொடர்ந்து பணம் பெற்ற போதிலும் எந்த முன்னேற்றமும் இல்லாததால், தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த தந்தை 2025 டிசம்பர் 20 அன்று சாம்ராட்டைச் சந்தித்துத் தான் கொடுத்த பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டார். அதற்கு சாம்ராட் ரூ.1 லட்சத்தை மட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டு, தொடர்பைத் துண்டித்ததுடன் அவருக்கு மிரட்டலும் விடுத்துள்ளார். இதற்கிடையில், சேவை வழங்காததால் தனியார் புலனாய்வு நிறுவனம் தான் பெற்ற ரூ. 4.5 லட்சத்தை முழுமையாகத் திருப்பி அளித்துவிட்டது.</p><h2>காவ<strong>ல் துறை விசாரணை</strong></h2><p>ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மூத்த குடிமகன், ஆகஸ்ட் 8 அன்று காரியாஹாட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், முதலமைச்சரின் 'ஜனதார் தர்பார்' நிகழ்விலும் இச்சம்பவம் குறித்து முறையிட்டதைத் தொடர்ந்து, காணாமல் போன மகனைக் கண்டுபிடிக்க குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. </p><p>தற்போது காரியாஹாட் காவல் துறையினரும் சிஐடியும் இணைந்து விசாரணையைத் தொடங்கியுள்ளன. சாம்ராட் பௌமிக்கிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர்களின் நிதிப் பரிவர்த்தனைகள் குறித்துத் தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>29 வீரர்கள், 100 கி.மீ தூரம், ஒரே ஒரு பிரம்மாண்ட ஜாகுவார்: கின்னஸ் சாதனை படைத்தது ஜாகுவார் டிசிஎஸ் ரேசிங் அணி!</title><link>https://www.maalaimalar.com/news/world/29-players-100-km-one-giant-jaguar-guinness-record</link><comments>https://www.maalaimalar.com/news/world/29-players-100-km-one-giant-jaguar-guinness-record#comments</comments><guid isPermaLink="false">a3b6e8e7-5ce5-4a29-b9e0-26352f7b32b1</guid><pubDate>Wed, 12 Aug 2026 06:26:59 +0000</pubDate><atom:updated>2026-08-12T06:26:59.796Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Guinness World Record,கின்னஸ் சாதனை,Jaguar TCS,TCS Racing,GEN3,ஜாகுவார் டிசிஎஸ்,டிசிஎஸ் ரேசிங் அணி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/uoljsdyz/tcs.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jaguar TCS]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/uoljsdyz/tcs.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஃபார்முலா ஈ கார் பந்தயத் தொடரின் GEN3 சகாப்தம் முடிவடைவதை முன்னிட்டு, லண்டன் வீதிகளில் 100 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் ஓடி, ஜாகுவார் ஐ-டைப் 7 ரேஸ் காரின் பிரம்மாண்ட வடிவத்தை ஜிபிஎஸ் வரைபடமாக உருவாக்கி ஜாகுவார் டிசிஎஸ் ரேசிங் அணி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.</p><h2>சாத<strong>னை</strong></h2><p>வரும் ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள லண்டன் ஈ-ப்ரீ தொடருடன் ஃபார்முலா ஈ கார பந்தயத்தின் GEN3 சகாப்தம் நிறைவடைகிறது. இதனைச் சிறப்பிக்கும் வகையில், ஜாகுவார் டிசிஎஸ் ரேசிங் அணி மற்றும் அதன் முக்கிய தொழில்நுட்பப் பங்காளியான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் அமைப்பைச் சேர்ந்த 29 ஓட்டப் பந்தய வீரர்கள் இந்த கின்னஸ் முயற்சியில் ஈடுபட்டனர்.</p><p>டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் லண்டன் தலைமையகத்தில் தொடங்கிய இந்த ஓட்டம், லண்டனின் முக்கிய வீதிகள் வழியாக 100 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தைக் கடந்து மீண்டும் அதே இடத்தில் நிறைவடைந்தது. ஒவ்வொரு வீரரும் தங்களது ஜிபிஎஸ் சாதனையைத் தொடரோட்டப் பேடன் போல அடுத்த வீரரிடம் வழங்கி, தடையற்ற தொடர்ச்சியான பாதையைப் பதிவு செய்தனர். துல்லியமான வரைபடம், தடையற்ற பாதை அமைப்பு மற்றும் ஜிபிஎஸ் பதிவுகள் போன்ற கின்னஸ் அமைப்பின் அனைத்து விதிகளையும் பூர்த்தி செய்து இந்த சாதனை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><h2>GEN3 சகாப்த<strong>த்தின் நா</strong>யகன்</h2><p>கடந்த நான்கு சீசன்களாக நடைபெற்ற GEN3 சகாப்தத்தில், ஜாகுவார் டிசிஎஸ் ரேசிங் அணி 18 பந்தயங்களில் வெற்றி பெற்று மிக வெற்றிகரமான அணியாகத் திகழ்கிறது. மேலும், 23 முறை போடியம் இடங்களையும், மொத்தம் 1,144 புள்ளிகளையும் ஈட்டி சாதனை படைத்துள்ளது. இது தவிர, லண்டன் எக்செல் மெய்நிகர் ரேஸ் களத்தில் 109 நபர்கள் பங்கேற்ற சிமுலேட்டர் வீடியோகேம் ரிலே தொடரிலும் பங்கேற்று, ஒரே வாரத்தில் இரண்டாவது கின்னஸ் சாதனையையும் இந்த அணி தன்வசப்படுத்தியுள்ளது.</p><h2>சாம்பியன்ஷி<strong>ப் ரேஸில்</strong> ஜாகுவார்</h2><p>தற்போது ஃபார்முலா ஈ அணிகளுக்கான உலக சாம்பியன்ஷிப் தரவரிசையில் ஜாகுவார் டிசிஎஸ் ரேசிங் அணி போர்ச்சே அணியை விட 14 புள்ளிகள் முன்னிலையில் உள்ளது. ஓட்டுநர்களுக்கான தரவரிசையில் ஜாகுவார் அணியின் மிட்ச் எவன்ஸ் இரண்டாம் இடத்தில் உள்ளார். 10 ஆண்டுகள் ஜாகுவார் அணியுடன் பயணித்த மிட்ச் எவன்ஸுக்கு இந்த லண்டன் ஈ-ப்ரீ போட்டி இறுதிப் போட்டியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தின் உரிமைக்காக அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்..!- அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-athav-arjuna-urges-unity-for-tamil-nadus-rights</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-athav-arjuna-urges-unity-for-tamil-nadus-rights#comments</comments><guid isPermaLink="false">cfbcd6a8-9da9-4153-a4a4-7e1110de5ccc</guid><pubDate>Wed, 12 Aug 2026 06:21:48 +0000</pubDate><atom:updated>2026-08-12T06:21:48.187Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,தொகுதி மறுவரையறை,Delimitation Bill,அமைச்சர் ஆதவ் அர்ஜூனா,Minister Adhav Arjuna</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/yozo3dxy/Adhav-arjuna.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Aadhav Arjuna]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/yozo3dxy/Adhav-arjuna.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டபையில் இன்று 4வது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. இதில், தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்பசபையில் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார்.</p><p>முதலமைச்சர் கொண்டு வரும் தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துளை பதிவு செய்தனர்.</p><p>இதில், திமுக, காங்கிரஸ், மஜக, மமக, சிபிஎம், சிபிஐ, விசிக, ஐயூஎம்எல் ஆதரவு தெரிவித்துள்ளது. அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.</p><p>தொடர்ந்து, சட்டசபையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உரையாற்றியதாவது:-</p><p>மாநில சுயாட்சி இல்லாமல் இந்தியாவை உருவாக்க முடியாது என அண்ணா கூறி உள்ளார்.</p><p>நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லாதபோது அரசியலமைப்பில் முதல் தீர்மானம் கொண்டு வந்தது தமிழ்நாடு.</p><p>அரசியல் ரீதியில் மாறுபட்ட கருத்தில் இருந்தாலும் தனித்தீர்மானத்தை ஆதரித்த எதிர்க்கட்சி தலைவருக்கு நன்றி.</p><p>அண்ணாவின் கொள்கை திமுக, அதிமுகவுக்கு மட்டுமல்ல, அவரது கொள்கை வழியில் வந்தவர்கள் தவெகவினர்.</p><p>உயிருள்ள வரை மாநில சுயாட்சிக்காக இதே பேரவையில் குரல் கொடுத்தவர்கள் முன்னாள் முதல்வர்கள் கலைஞர், ஜெயலலிதா.</p><p>உள்ளாட்சி, கட்சியில் நிர்வாக ரீதியாக மாற்றம் செய்யும்போது நாடாளுமன்றத்தில் ஏன் மாற்றம் கூடாது என கேட்கின்றனர்?</p><p>மக்கள்தொகை அடிப்படையில் நாடாளுமன்ற விகிதாசாரத்தை உருவாக்கவில்லை அமெரிக்கா.</p><p>5,6 வடமாநிலங்கள் சேர்ந்தாலே ஒரு பிரதமரை உருவாக்கும் நிலையில் உள்ளது. அது மாற்றப்பட வேண்டும்.</p><p>அதிகாரம் குஜராத், உ.பி.க்கு மட்டுமல்ல, நமது குரல் அதிகாரம் பிரதமராக ஒலிக்க வேண்டும். வருங்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து ஒரு பிரதமர் உருவாக வேண்டும்.</p><p>இன்றைய தீர்மானம் என்பது காங்கிரஸ் பாஜக என்பதல்ல, மாநில சுயாட்சியை நிலைநிறுத்துவதற்கு தீர்மானம்.</p><p>பேரவையில் குறைவான எண்ணிக்கையில் உள்ள பாஜக, காங்கிரசின் நிலை நாளை நாடாளுமன்றத்தில் நமக்கு வரக்கூடாது.</p><p>பாஜக உறுப்பினராக இருந்தாலும் இந்த தீர்மானத்தில் தமிழன் என்ற முறையில் செயல்படுங்கள்.</p><p>தொகுதி மறுவரையறையில் மு.க.ஸ்டாலின் தான் இதற்கு முதலில் குரல் கொடுத்தார் என்பதை நாங்கள் ஆதரிக்கிறோம். தென்னிந்திய விகிதாசாரம் குறைவதை முன்னாள் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கடுமையாக எதிர்த்தனர்.</p><p>தமிழ்நாட்டிற்கான விகிதாச்சாரம் உயர்ந்தாலும் கூட முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்த்தார். வடகிழக்கு மாநிலங்களின் நிலை நமக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தீர்மானம் கொண்டு வந்துள்ளார் முதல்வர்.</p><p>ரூ.1 தந்தால் நமக்கு 29 பைசா மட்டுமே திருப்பி தருகிறார்கள், நாம் உழைத்தாலும் நம்மால் அதிகாரத்தை உருவாக்க முடியா நிலை.</p><p>2026-க்கு பின் காங்கிரசுக்கும் திமுகவுக்கும் தற்போது வேறு நிலை இருக்கலாம். ஆனால் மாநில சுயாட்சி பிரச்சனை ஒன்று சேருக.</p><p>தமிழ்நாட்டிற்கான பிரச்சனை என்றால் திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒன்றாக நிற்க வேண்டும்.</p><p>ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை எதிர்த்து தமிழக எம்பிக்கள் ஒற்றுமையாக நின்று எதிர்த்தனர். தமிழக எம்பிக்கள் 39 பேரும் அவையில் இருந்த வெளிநடப்பு செய்யாமல், சட்டத்தை எதிர்த்து வாக்களிக்குமாறு அமைச்சர் வேண்டுகோள்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றம்- சபாநாயகர் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/speaker-announces-resolution-moved-by-the-chief-minister-in-the-assembly-passed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/speaker-announces-resolution-moved-by-the-chief-minister-in-the-assembly-passed#comments</comments><guid isPermaLink="false">4416fa4c-6bb4-43a9-a2ce-0fbbed1dce74</guid><pubDate>Wed, 12 Aug 2026 06:20:11 +0000</pubDate><atom:updated>2026-08-12T06:20:11.205Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly,தொகுதி மறுவரையறை,Delimitation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/83p1jt8x/JCDPrabhakar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் ]]></media:title><media:description type="html"><![CDATA[ சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/83p1jt8x/JCDPrabhakar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சட்டசபையில் முதலமைச்சர் முன்மொழிந்த தனித்தீர்மானத்தின் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பின்பு, தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார்.</strong></em> </p><p>முதலமைச்சர் விஜய் தலைமையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%88">தொகுதி மறுசீரமைப்பு</a> மசோதாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடிவு எடுக்கப்பட்டது.</p><p>அதன்படி இன்று தமிழக சட்டசபையில் முதலமைச்சர் விஜய் தொகுதி மறுவரையறை தொடர்பாக அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வந்து முன் மொழிந்தார்.</p><p>அப்போது முதலமைச்சர் விஜய் பேசியதாவது:-</p><h2><strong>இதயத்தில் இருந்து பேசுகிறோம்</strong></h2><p>நமது குடும்பத்தில் இருக்கிற, நமது வீட்டில் இருக்கிற நமது பாட்டி, அம்மா, அக்காவை, தங்கையை பற்றிய ஒரு தீர்மானம். அதைபற்றி அவர்களுக்காக நமது இதயத்தில் இருந்து பேசுகிறோம்.  இதற்கு முன்னாடி இந்த விஜய்க்கு கிடைத்த இடத்துக்கும் இன்னிக்கு இந்த விஜய்க்கு கிடைத்திருக்கிற இடத்துக்கும் மிகப்பெரிய காரணமாக இருக்கிறது என்னுடைய பாட்டி, அம்மா, தங்கைகள்தான். </p><p>அவர்கள் மிகப்பெரிய காரணம் என்பதை என்னால் மறுக்கவே முடியாது.  அந்த நன்றி, விசுவாதத்தோடு, அப்படி ஒரு உணர்வோடுதான் இங்கு நின்று பேசுகிறேன். பெரிதாக பணம் இருந்தால் ஒரு வீட்டுக்கோ, பெரிதாக பொருளாதாரம் இருந்திட்டால் ஒரு நாட்டுக்கோ பெரிய பெயர் வந்து விடும் என்று சிலபேர் நினைக்கலாம். ஆனால் உண்மையாகவே ஒரு நாட்டுக்கோ, வீட்டுக்கோ எப்போது பெரிய பெயர் கிடைக்கும் தெரியுமா?</p><p>அந்த வீட்டு பெண்கள் தனிப்பட்ட முறையில் சமூகத்தில் உயர்ந்தால்தான் பெரிய பெயர் ஒட்டுமொத்த சமூகத்துக்கே கிடைக்கும். நமது தமிழ்நாட்டு மண்ணில் சங்க காலத்தில் இருந்து அன்றும் சரி, இன்றும் சரி மிகப்பெரிய ஆளுமையாக பெண் ஆளுமைகள் நிறைய பேர் இருக்கிறாங்க. </p><p>இன்று இந்த பேரவையின் வாயிலாக பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை இனியும் தாமதிக்காமல் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம்.  இது பெண்களுக்கான சலுகை அல்ல. அவர்களின் ஜனநாயக உரிமை. இது ஒருவருக்கான வெற்றி அல்ல. இது இந்திய ஜனநாயகத்தின் வெற்றி. ஒரு பெண் அதிகாரம் பெறும்போது ஒரு குடும்பம் உயருகிறது. </p><p>ஆயிரக்கணக்கான பெண்கள் அதிகாரம்பெறும்போது ஒரு நாடே உயருகிறது. மக்கள் தொகை மற்றும் தொகுதி மறுசீரமைப்புடன் பெண்களுக்கான தொகுதி ஒதுக்கீட்டை இணைப்பதால் ஏற்படும் காலதாமத்தின் காரணமாக பெண்களுக்கான தொகுதி ஒதுக்கீட்டை ஒத்திவைக்கக் கூடாது என்றும், அதை விரைவாக அமல்படுத்த தகுந்த அரசியல் அமைப்பு மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.</p><p>இவ்வாறு முதலமைச்சர் விஜய் பேசினார். </p><h2><strong>ஆதரவு</strong></h2><p>இதனை தொடர்ந்து <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-supports-the-resolution-moved-by-the-chief-minister">திமுக</a>, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஐயூஎம்எல், மனிதநேய ஜனநாயக கட்சி,  மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. </p><p>அதனை தொடர்ந்து சட்டசபையில் முதலமைச்சர் முன்மொழிந்த தனித்தீர்மானத்தின் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பின்பு, தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>அரசு பள்ளி நிதியில் ரூ.2.66 கோடி சுருட்டல்! 4 ஆண்டுகளாக போக்கு காட்டிய பள்ளி முன்னாள் முதல்வர் அதிரடி கைது!</title><link>https://www.maalaimalar.com/news/national/uttar-pradesh-government-school-fund-scam-arrest</link><comments>https://www.maalaimalar.com/news/national/uttar-pradesh-government-school-fund-scam-arrest#comments</comments><guid isPermaLink="false">6b4e8436-24f6-4b51-a0fe-783596006584</guid><pubDate>Wed, 12 Aug 2026 06:15:17 +0000</pubDate><atom:updated>2026-08-12T06:15:17.438Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Uttar Pradesh,உத்தரப் பிரதேசம்,AshramSchoolScam,EOWArrest,JeetlalPatel,PrayagrajCorruption,GovtFundScam,அரசுபணமோசடி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/wp72hfs7/GovtFund-Scam" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ GovtFund Scam ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/wp72hfs7/GovtFund-Scam?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">உத்தரப் பிரதேச</a> மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள அரசு ஆசிரமப் பள்ளி நிதியில், விதிகளை மீறி பல கோடி ரூபாய் ஊழல் செய்துவிட்டு தலைமறைவாக இருந்த முன்னாள் பொறுப்பு முதல்வர் ஜீத்லால் படேலை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.</p><h2>என்ன நடந்தது?</h2><p>பிரயாக்ராஜ் மாவட்டத்தில் சமூக நலத்துறையின் கீழ் 'ராஜ்கியா ஆசிரம பத்ததி' என்ற அரசு குடியிருப்புப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. </p><p>கடந்த 2018-19 முதல் 2021-22 வரையிலான நிதியாண்டுகளில், இங்குள்ள 4 பள்ளிகளுக்கு அரசு வழங்கிய நிதியில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாகப் புகார்கள் எழுந்தன. </p><p>இதுகுறித்து உத்தரப் பிரதேச அரசின் உள்துறை உத்தரவின் பேரில், பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.</p><h2>சாமர்த்தியமாக நடந்த ஊழல்:</h2><p>விசாரணையில், சுர்வால் ஷஹ்னி கிளையின் பொறுப்பு முதல்வராக இருந்த ஜிதலால் படேல் மற்றும் சில அதிகாரிகள் சேர்ந்து இந்த ஊழலை அரங்கேற்றியது தெரிய வந்தது. அரசு விதிகளின்படி எந்தவொரு பொருளையும் வாங்க வேண்டுமானால் முறையான டெண்டர் மற்றும் கொட்டேஷன் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். </p><p>ஆனால், இவர்கள் எந்த விதியையும் மதிக்காமல், தங்களுக்கு வேண்டிய தனியார் நபர்களிடம் இருந்து பள்ளிக்குத் தேவையற்ற பொருட்களைக் கூடுதல் விலைக்கு வாங்கியுள்ளனர். </p><p>இதன் மூலம் ஒட்டுமொத்தமாக ரூ 2.66 கோடி அரசுப் பணத்தை மோசடி செய்து சுருட்டியுள்ளனர்.</p><h2>போலீஸ் வலைவீச்சு &amp; கைது:</h2><p>இந்த மெகா ஊழல் தொடர்பாக 5 அரசு அதிகாரிகள் மற்றும் 12 தனியார் நபர்கள் மீது கூட்டுச்சதி, நம்பிக்கை துரோகம் மற்றும் ஏமாற்றுதல் (IPC Sections 409, 420, 120-B) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. </p><p>போலீசார் தன்னைத் தேடுவதை அறிந்த ஜீத்லால் படேல், கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.</p><p>அவரைப் பிடிக்கத் தனிப்படை அமைத்து தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்ட லக்னோ பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார், ஆகஸ்ட் 10 அன்று பிரயாக்ராஜின் சங்கர்கர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வைத்து அவரை மடக்கிப் பிடித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>ரியல் எஸ்டேட் உலகையே மிரள வைத்த டீல்! ₹271 கோடிக்கு பென்ட்ஹவுஸ் வாங்கிய இந்திய தொழிலதிபர்!</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/record-breaking-luxury-penthouse-sale-indian-tycoon-pays-rs-271-crore</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/record-breaking-luxury-penthouse-sale-indian-tycoon-pays-rs-271-crore#comments</comments><guid isPermaLink="false">fc978ad8-6ef1-4099-955e-c30c9874dc68</guid><pubDate>Wed, 12 Aug 2026 06:08:07 +0000</pubDate><atom:updated>2026-08-12T06:08:07.056Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gurugram RealEstate,குருகிராம் ரியல்எஸ்டேட்,DLF TheDahlias,டிஎல்எஃப்டாலியாஸ்,Luxury Penthouse,CroreClubHouses,Property Investment India</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/xbp6gf3d/Gurugram-RealEstate" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gurugram RealEstate]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/xbp6gf3d/Gurugram-RealEstate?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF">ரியல் எஸ்டேட்</a> வரலாற்றிலேயே மிக விலையுயர்ந்த மற்றும் பிரம்மாண்டமான சொகுசு பங்களா விற்பனை ஒப்பந்தம் ஒன்று டெல்லிக்கு அருகிலுள்ள குருகிராமில் அரங்கேறியுள்ளது. </p><p>பிரபல தொழிலதிபர் மானவ் சர்தானா, அங்குள்ள ஒரு அதிநவீன பென்ட்ஹவுஸை ரூ.271 கோடிக்கு வாங்கி ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.</p><h2>ஒரு சதுர அடி விலை எவ்வளவு தெரியுமா?</h2><p>டி.எல்.எஃப் நிறுவனத்தின் அதிசொகுசு திட்டமான 'தி டாலியாஸ்' குடியிருப்பில் தான் இந்த டீல் நடந்துள்ளது. இந்த பென்ட்ஹவுஸின் மொத்த பரப்பளவு 17,200 சதுர அடியும், இதன் கார்பெட் ஏரியா மட்டும் சுமார் 10,500 சதுர அடியிலும் அமைந்துள்ளது. </p><p>கணக்கிட்டுப் பார்த்தால், கார்பெட் ஏரியாவின் அடிப்படையில் ஒரு சதுர அடிக்கு சுமார் ரூ.2.6 லட்சம் விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் ஒரு சதுர அடிக்கு விற்கப்பட்ட மிக காஸ்ட்லியான வீடுகளில் ஒன்றாக விளங்குகிறது.</p><h2>மும்பைக்கு டஃப் கொடுக்கும் குருகிராம்:</h2><p>இதுவரை இந்தியாவின் மிக விலையுயர்ந்த வீடுகள் மற்றும் சொகுசு வாழ்க்கை முறையில் மும்பைதான் முதலிடம் பிடித்து வருகிறது. </p><p>உதாரணமாக, மும்பை வொர்லி பகுதியில் லீனா காந்தி திவாரி ரூ.639 கோடிக்கும், மலபார் ஹில் பகுதியில் ஜே.பி.தப்பாரியா ரூ.369 கோடிக்கும் வீடுகளை வாங்கியுள்ளனர். </p><p>ஆனால், இப்போது குருகிராமும் மும்பைக்கு இணையாக கோடீஸ்வரர்களின் சொர்க்க பூமியாக மாறி வருகிறது.</p><h2>கோடீஸ்வரர்களின் கூடாரம்:</h2><p>'தி டாலியாஸ்' திட்டத்திற்கு முன்பாக, குருகிராமில் இருந்த 'தி கேமலியாஸ்' என்ற திட்டத்தில் தான் பெரும் பணக்காரர்கள் வீடுகளை வாங்கி வந்தனர். </p><p>அங்கு வாரன் பஃபெட்டின் நெருங்கிய கூட்டாளியான அஜித் ஜெயின் ரூ.85 கோடிக்கும், தொழிலதிபர் ரிஷி பார்ட்டி ரூ.190 கோடிக்கும் பென்ட்ஹவுஸ் வாங்கியிருந்தனர். </p><p>ஆனால், இப்போது 'தி டாலியாஸ்' அந்த சாதனைகளை எல்லாம் முறியடித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் டெல்லியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் இங்கு ரூ.380 கோடிக்கு 4 வீடுகளை மொத்தமாக வாங்கினார்.</p><h2>'தி டாலியாஸ்' திட்டத்தின் பிரம்மாண்டம்:</h2><p>இந்த ஒட்டுமொத்த திட்டத்தின் மதிப்பு மட்டும் ரூ.40,000 கோடிக்கும் அதிகம். மொத்தம் 8 கோபுர டவர்ஸ் மற்றும் 29 அடுக்கு மாடிகளைக் கொண்ட இந்த திட்டத்தில் 420 அல்ட்ரா-லக்சரி வீடுகள் மட்டுமே கட்டப்படுகின்றன. </p><p>இதில் 15 டூப்ளெக்ஸ் பென்ட்ஹவுஸ்கள் மற்றும் 3.5 லட்சம் சதுர அடியில் ஒரு பிரம்மாண்ட கிளப்ஹவுஸ் அமையவுள்ளது.</p><p>டி.எல்.எஃப் நிறுவனத்தின் முதன்மை வணிக அதிகாரி ஆகாஷ் ஓஹ்ரி கூறுகையில், "இந்த திட்டத்தில் 65% வீடுகள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டன. இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு வாழ் இந்தியர்களும் இங்கு வீடுகளை வாங்க போட்டி போட்டு வருகின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவிற்கு முதன்முறை தங்கம்: ஏரியல் சில்க் மற்றும் பிரிட்ஜ் விளையாட்டில் மும்பை உடன்பிறப்புகள் சர்வதேச சாதனை!</title><link>https://www.maalaimalar.com/sports/indias-first-gold-aerial-silk-bridge-mumbai-siblings-record</link><comments>https://www.maalaimalar.com/sports/indias-first-gold-aerial-silk-bridge-mumbai-siblings-record#comments</comments><guid isPermaLink="false">4453ed12-e745-4532-aea4-1e988329d4e4</guid><pubDate>Wed, 12 Aug 2026 05:50:17 +0000</pubDate><atom:updated>2026-08-12T05:50:17.329Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Mumbai siblings,Aerial silk Game,Bridge Game,மும்பை உடன்பிறப்புகள்,ஏரியல் சில்க்,பிரிட்ஜ் விளையாட்டு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/z9e7p26o/mumbai-sibings.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mumbai siblings]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/z9e7p26o/mumbai-sibings.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மும்பை வொர்லி பகுதியைச் சேர்ந்த சகோதர சகோதரியான வீர் கஹ்ரோத்ரா மற்றும் விஹா கஹ்ரோத்ரா ஆகிய இருவரும் சர்வதேச அளவிலான மாற்று விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளனர். உடலியல் ரீதியான சவால்களை எதிர்கொள்ள விளையாட்டுக்குள் நுழைந்த இவர்கள், இன்று உலக சாம்பியன் பட்டங்களைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர்.</p><h2>ஏரியல் <strong>சில்க் பிரிவில் வீர் கஹ்</strong>ரோத்ராவின் தங்கம்</h2><p>17 வயதான வீர் கஹ்ரோத்ரா, ஹங்கேரியில் நடைபெற்ற போல் அண்ட் ஏரியல் ஸ்போர்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஏரியல் சில்க் பிரிவில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இந்த பிரிவில் இந்தியாவிற்காக தங்கம் வெல்லும் முதல் வீரர் இவராவார். தரைப்பகுதியில் இருந்து சுமார் 30 அடி உயரத்தில் தொங்கும் துணிகளைப் பயன்படுத்தி உடலின் நெகிழ்வுத்தன்மை, வலிமை மற்றும் சமநிலையை வெளிப்படுத்தும் இந்த விளையாட்டில் வீர் தீவிர பயிற்சி பெற்றுள்ளார். தனது தொடை தசைகளின் வளர்ச்சிக்காக பிசியோதெரபியின் ஒரு பகுதியாக 8 வயதில் இதில் சேரத் தொடங்கி, இன்று உலகளவில் சாதனை அடைந்துள்ளார்.</p><h2>பிரிட்ஜ் கார்டு வி<strong>ளையாட்டி</strong>ல் விஹா கஹ்ரோத்ராவின் சாதனை</h2><p>14 வயதான விஹா கஹ்ரோத்ரா, சீனாவில் நடைபெற்ற 9வது உலக யூத் டிரான்ஸ்நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டியில் 16 வயதுக்குட்பட்டோருக்கான பிரிட்ஜ் கார்டு விளையாட்டில் தங்கம் வென்றார். இந்த விளையாட்டில் நார்வே, இங்கிலாந்து மற்றும் இந்திய வீராங்கனைகளுடன் இணைந்து அவர் வெற்றி பெற்றார். கணிதத் திறனும் மன வியூகங்களும் நிறைந்த இந்த விளையாட்டில், எதிராளிகளின் நகர்வுகளைக் கணித்து விளையாடுவதற்காக தினமும் பல மணிநேரம் இணையவழி பயிற்சிகளில் விஹா ஈடுபட்டு வந்தார்.</p><h2>இந்தியாவி<strong>ல் நிலவு</strong>ம் சவால்கள்</h2><p>இந்தியாவில் இந்த இரண்டு விளையாட்டுக்களுக்கும் போதிய பயிற்சி மையங்களோ அல்லது உள்கட்டமைப்புகளோ இல்லாததே இவர்கள் எதிர்கொண்ட மிகப்பெரிய சவாலாகும். ஏரியல் சில்க் பயிற்சிக்கு ஐரோப்பாவில் 30 அடி உயர கூரைகள் உள்ள அரங்குகள் இருக்கும் வேளையில், இந்தியாவில் 18 அடி உயரமுள்ள அரங்கைத் தேடுவதே சிரமமாக இருந்தது. அதேபோல பிரிட்ஜ் விளையாட்டுக்குத் தகுந்த பயிற்சியாளர்களைக் கண்டுபிடிப்பதும் கடினமாக இருந்தது. இத்தனை சவால்களையும் தாண்டி இருவருமே சர்வதேச அரங்கில் தங்கப் பதக்கம் வென்று நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்துக்கு தி.மு.க. ஆதரவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-supports-the-resolution-moved-by-the-chief-minister</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-supports-the-resolution-moved-by-the-chief-minister#comments</comments><guid isPermaLink="false">2fcee17a-e88d-4b59-ad30-3daa239fd312</guid><pubDate>Wed, 12 Aug 2026 05:49:35 +0000</pubDate><atom:updated>2026-08-12T05:49:35.856Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly,தொகுதி மறுவரையறை,Delimitation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/wrkhcacw/udhayanidhi.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/wrkhcacw/udhayanidhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>7.18 விகிதாச்சாரத்தை குறைக்கக்கூடாது எனக்கூறி த.வெ.க. அரசு கொண்டு வந்த தனித்தீர்மானத்தை தி.மு.க. ஆதரிக்கிறது. </p><p>தமிழக சட்டசபையில் முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%88">தொகுதி மறுவரையறை</a> விவகாரத்தில் எக்காரணத்தை கொண்டும் தமிழகம் பாதிக்கப்படக் கூடாது என்பதே தி.மு.க. நிலைப்பாடு. மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்தால் என்ன பாதிப்பு என நாட்டுக்கே முதலில் கூறியது தி.மு.க. தான். </p><p>எம்பிக்கள் எண்ணிக்கை குறைக்க அனுமதிக்க மாட்டோம், தமிழகத்தின் விகிதாச்சாரம் குறையக்கூடாது என இதே சட்டசபையில் மு.க.ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றினார். திமுக அமைச்சரவை கூட்டம் நடத்திய பின்னர் கடந்தாண்டு மார்ச்சில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. Fair Delimitation தலைப்பில் 5 மாநில முதல்வர்கள், 10 கட்சிகளுக்கு கடிதம் எழுதி நடவடிக்கை எடுத்தார் மு.க.ஸ்டாலின். தி.மு.க.வின் எதிர்ப்பால் தான் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/separate-resolution-against-constituency-delimitation-vck-and-iuml-extend-support">தொகுதி மறுவரையறை</a> மசோதா நாடாளுமன்றத்தில் தோற்கடிக்ப்பட்டது. </p><p>2026 மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் தமிழக எம்பிக்கள் எண்ணிக்கை குறையும். ஏப்.16-ல் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதா நகலை எரித்து திமுக தனது எதிர்ப்பை பதிவு செய்தது. அடுத்த 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுவரையறை நடத்தக்கூடாது. 7.18 விகிதாச்சாரத்தை குறைக்கக்கூடாது எனக்கூறி த.வெ.க. அரசு கொண்டு வந்த தனித்தீர்மானத்தை தி.மு.க. ஆதரிக்கிறது. </p><p>மேலும், 33 சதவீத மகளிர் இடஒதுக்கீட்டை முழுமனதுடன் திமுக ஆதரிக்கிறது வரவேற்கிறது என்றார். </p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம்: ம.ஜ.க., ம.ம.க., காங்கிரஸ் ஆதரவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-motion-against-delimitation-mjk-mmk-support</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-motion-against-delimitation-mjk-mmk-support#comments</comments><guid isPermaLink="false">a7400be3-f821-462f-9ea9-87c564cfd722</guid><pubDate>Wed, 12 Aug 2026 05:45:46 +0000</pubDate><atom:updated>2026-08-12T05:45:46.348Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,மஜக,தொகுதி மறுவரையறை,Delimitation,tn cm vijay,மமக</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/b5gjf3o8/MJK.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Thamimun Ansari- Jawahirulla ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/b5gjf3o8/MJK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டபையில் இன்று 4வது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. இதில், தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்பசபையில் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார்.</p><p>முதலமைச்சர் கொண்டு வரும் தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துளை பதிவு செய்து வருகின்றனர்.</p><h2>மனிதநேய ஜனநாயக கட்சி</h2><p>இந்நிலையில், தொகுதிமறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு மஜக ஆதரவு தெரிவித்துள்ளது.</p><p>இதுகுறித்து மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி கூறியதாவது:-</p><p>தொகுதி எண்ணிக்கை குறைவாக இருப்பதால் வடகிழக்கு மாநிலங்களின் குரல்கள் நசுக்கப்படுகிறது. அதே சூழல் இங்கும் வரும்.</p><p>மகளிர் இடஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு உள் இடஒதுக்கீடு தேவை.</p><p>தொகுதிமறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு மஜக ஆதரவு தெரிவிக்கிறது.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>மனிதநேய மக்கள் கட்சி</h2><p>தொடர்ந்து, தொகுதிமறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் கொண்டுவந்த தனித்தீர்மானத்திற்கு மமக ஆதரவு தெரிவித்துள்ளார்.</p><p>மேலும்,"2029 தேர்தலிலேயே மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும்.</p><p>அடுத்த 30 ஆண்டுகளுக்கு தொகுதி மறுவரையறை இருக்க கூடாது" என்று மமக எம்எல்ஏ ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.</p><h2>காங்கிரஸ்</h2><p>தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு தமிழக காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.</p><p>வாக்கு வங்கி அரசியல் ஆதாயத்திற்காக மத்திய பாஜக அரசு தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வருகிறது என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் ராஜேஷ்குமார் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு : அவசரமாகத் தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/engine-malfunction-indigo-flight-makes-emergency-landing-at-chennai-airport</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/engine-malfunction-indigo-flight-makes-emergency-landing-at-chennai-airport#comments</comments><guid isPermaLink="false">0f2bf13f-3205-4861-a840-73c9bb8e419e</guid><pubDate>Wed, 12 Aug 2026 05:40:30 +0000</pubDate><atom:updated>2026-08-12T05:40:30.229Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை விமான நிலையம்,Indigo Flight,chennai airport,Engine Malfunction,என்ஜின் கோளாறு,இன்டிகோ விமானம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/dyw98dtl/tt.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ IndiGo flight]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/dyw98dtl/tt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கொல்கத்தாவில் இருந்து 224 பயணிகளுடன் சென்னை நோக்கி வந்த இண்டிகோ நிறுவனத்தின் பயணிகள் விமானத்தில், தரையிறங்குவதற்குச் சிறிது நேரத்திற்கு முன்பு திடீரென இடதுபுற என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. நேற்று இரவு 11:29 மணியளவில் விமான ஓட்டுநர் எஞ்சின் செயலிழந்ததை உணர்ந்து உடனடியாகக் கட்டுப்பாட்டு அறைக்குச் செய்தி அனுப்பினார்.</p><h2>அவ<strong>சரநிலை பிரக</strong>டனம்</h2><p>இதனைத் தொடர்ந்து, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் உடனடியாக முழு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு, தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மருத்துவ மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. என்ஜின் பழுது ஏற்பட்ட போதிலும், விமானி திறம்படச் செயல்பட்டு இரவு 11:37 மணியளவில் விமானத்தை ஓடுபாதை 25-இல் பாதுகாப்பாகத் தரையிறக்கினார்.</p><h2>பாது<strong>காப்பாக தரையிறக்க</strong>ப்பட்டது</h2><p>விமானத்தில் இருந்த 224 பயணிகளும் எவ்வித காயமுமின்றி பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டனர். நிலைமை கட்டுக்குள் வந்ததை அடுத்து, இரவு 11:47 மணியளவில் அவசரநிலை திரும்பப் பெறப்பட்டு, விமான நிலையச் செயல்பாடுகள் இயல்புநிலைக்குத் திரும்பின.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித்தீர்மானம்: வி.சி.க., ஐயூஎம்எல் ஆதரவு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/separate-resolution-against-constituency-delimitation-vck-and-iuml-extend-support</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/separate-resolution-against-constituency-delimitation-vck-and-iuml-extend-support#comments</comments><guid isPermaLink="false">ddb1a40c-3a88-498f-8fa2-d95a0ca0a19f</guid><pubDate>Wed, 12 Aug 2026 05:33:03 +0000</pubDate><atom:updated>2026-08-12T05:33:03.844Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,vck,தமிழக சட்டசபை,TN assembly,விடுதலை சிறுத்தைகள் கட்சி,தொகுதி மறுவரையறை,Delimitation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/zc2qcmvh/IUML.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர்கள் வன்னி அரசு- ஷாஜகான்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர்கள் வன்னி அரசு- ஷாஜகான்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/zc2qcmvh/IUML.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்நாடு சட்டசபையில் தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியை தொடர்ந்து இந்திய முஸ்லிம் லீக் கட்சியும் ஆதரவு தெரிவித்தது.</strong></em> </p><p>அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி போன்றோர் நாடாளுமன்றத்திற்குள் பேசுவது வேறு, வெளியே பேசுவதும் வேறு. பிரதமர் மோடியும், அமித்ஷாவுடம் 2 வித நாடகம் நடத்துவதை வெளிப்படுத்தும் விதமான தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. மகளிர் இடஒதுக்கீடுக்கு தடை இல்லாத போதும் <a href="https://www.maalaimalar.com/topic/தொகுதி-மறுவரையறை">தொகுதி மறுவரையறையுடன்</a> இணைத்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டம். வடமாநிலத்தவருக்கு முக்கியத்துவம் கொடுத்து சமத்துவ நிலையை நீக்கும் வகையில் தொகுதி மறுவரையறை. இந்தி பேசும் மாநில எம்பிக்கள் எண்ணிக்கை உயரும். எனவே அவர்கள் மட்டுமே நாட்டை ஆளும் வாய்ப்பை பெறுவர். தொகுதி மறுவரையறை அனுமதிக்கக்கூடாது, அனுமதிக்க மாட்டோம் என முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவு என்று தெரிவித்தார். </p><p>விடுதலை சிறுத்தைகள் கட்சியை தொடர்ந்து இந்திய முஸ்லிம் லீக் கட்சியும் ஆதரவு தெரிவித்தது. இதுதொடர்பாக அமைச்சர் ஷாஜகான் கூறுகையில், </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/pmk-member-says-chief-minister-must-withdraw-the-resolution">தொகுதி மறுவரையறை</a> தொடர்பாக முதலமைச்சர் கொண்டுவந்த தனித்தீர்மானத்திற்கு IUML ஆதரவு தெரிவிக்கிறது. மத்திய பாஜக அரசு கொண்டு வரம் சட்டங்களும், திட்டங்களும் மக்களுக்கு விரோதமானதாகவே உள்ளது. நாட்டு மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்காமல் பாஜக வெற்றி பெற வேண்டும் என்ற சூழ்ச்சியில் தொகுதி மறுவரையறை. பாஜக வெற்றிபெறவே முடியாத தென் மாநிலங்களின் குரலை நசுக்கும் வகையில் தொகுதி மறுவரையறை. பல ஆண்டுகளை கடந்த அமெரிக்கா போன்ற நாடுகளிலும் தொகுதி எம்பிக்கள் எண்ணிக்கை உயர்த்தப்படவில்லை. சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்படாத நிலையிலும் வருமுன் காக்கும் நோக்கிலேயே முதலமைச்சர் தனித்தீர்மானம் நிறைவேற்றம்.</p><p>இவ்வாறு அமைச்சர் ஷாஜகான் பேசினார். </p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித்தீர்மானத்திற்கு அதிமுக எதிர்ப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/aiadmk-rejects-tn-govt-special-resolution-on-delimitation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/aiadmk-rejects-tn-govt-special-resolution-on-delimitation#comments</comments><guid isPermaLink="false">89047a35-1fc4-474d-b08a-9a1c2a894d1a</guid><pubDate>Wed, 12 Aug 2026 05:20:44 +0000</pubDate><atom:updated>2026-08-12T05:20:44.983Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,எடப்பாடி பழனிசாமி,Edappadi pazhanisamy,தமிழக சட்டசபை,TN assembly,தொகுதி மறுவரையறை,Delimitation</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/dvjtssl3/EPS.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Edappadi pazhanisamy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/dvjtssl3/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டபையில் இன்று 4வது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. இதில், தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்பசபையில் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார்.</p><p>முதலமைச்சர் கொண்டு வரும் தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துளை பதிவு செய்து வருகின்றனர்.</p><p>இந்நிலையில், மக்கள்தொகை கட்டுப்பாட்டில் உள்ள தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு தொகுதி மறுவரையறை விகிதாசாரம் குறையக்கூடாது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-</p><p>மக்கள்தொகை கட்டுப்பாட்டில் உள்ள தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு தொகுதி மறுவரையறை விகிதாசாரம் குறையக்கூடாது. </p><p>விகிதாசாரம் பாதிக்கப்படாததை உறுதிசெய்யுமாறு மத்திய அமைச்சரிடம் அதிமுக வலியுறுத்தி உள்ளது. </p><p>அதிமுகவின் கோரிக்கையை ஏற்று உறுப்பினர் எண்ணிக்கை குறையாது என மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார். 7.18 விகிதாசாரம் குறையக்கூடாது என்ற அதிமுகவின் நிலைப்பாட்டால், எம்பிக்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.</p><p>தமிழகத்திற்கான எம்பிக்கள் எண்ணிக்கை 39ல் இருந்து 59 ஆக உயர்வதற்கு தொகுதி மறுவரையறை வழிவகை செய்யும்.</p><p>அரசியல் காரணங்கள், பரபரப்பை ஏற்படுத்துவதற்காகவே தவெக அரசு தொகுதி மறுவரையறை தனித்தீர்மானம் கொண்டு வந்துள்ளது.</p><p>தொகுதி மறுவரையறை மசோதா பாதகமானதா? சாதகமானதா? என தெரியாத நிலையில் தனித்தீர்மானத்திற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவிக்கிறது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>இன்று சர்வதேச இளைஞர் தினம்: இளைய சமுதாயத்திற்கு நல்வாழ்த்துகள்!</title><link>https://www.maalaimalar.com/news/world/today-is-international-youth-day-best-wishes-to-the-young-community</link><comments>https://www.maalaimalar.com/news/world/today-is-international-youth-day-best-wishes-to-the-young-community#comments</comments><guid isPermaLink="false">b5cb35ac-b29c-40ac-9357-3f3f5102766b</guid><pubDate>Wed, 12 Aug 2026 05:10:21 +0000</pubDate><atom:updated>2026-08-12T05:10:21.315Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>united nations,இளைய தலைமுறை,International Youth Day,young genarations,சர்வதேச இளைஞர் தினம்,ஐக்கிய நாடுகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/g9i0r3z5/youth-day.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ International Youth Day]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/g9i0r3z5/youth-day.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இன்று உலகெங்கிலும் சர்வதேச இளைஞர் தினம் (ஆகஸ்ட் 12) சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சமுதாயத்தின் மாற்றத்திற்கும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கியத் தூணாகத் திகழும் இளைஞர்களின் பங்கை அங்கீகரிக்கும் வகையிலும், அவர்கள் எதிர்கொள்ளும் உலகளாவிய சவால்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும் இத்தினம் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.</p><h2>2026-ஆம் ஆண்டின் மையக் <strong>கருப்பொருள்</strong></h2><p>இந்த ஆண்டிற்கான சர்வதேச இளைஞர் தின கருப்பொருளாக "மாறுபட்ட சூழல்கள், பொதுவான லட்சியங்கள்" என்பதை ஐக்கிய நாடுகள் சபை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உலகெங்கிலும் வாழும் இளைஞர்களின் சமூக, பொருளாதார மற்றும் புவியியல் சூழல்கள் வேறுபட்டதாக இருந்தாலும், கண்ணியமான வாழ்க்கை, தரமான கல்வி, பாதுகாப்பான வேலைவாய்ப்பு, மனநலம் மற்றும் நிலையான எதிர்காலம் போன்ற விஷயங்களில் அவர்களின் லட்சியங்கள் ஒன்றே என்பதை இந்த மையக்கரு வலியுறுத்துகிறது. </p><p>குறிப்பாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் வளரும் நாடுகளில் உள்ள இளைஞர்களின் தேவைகளுக்கு உலகளாவிய அளவில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என ஐ.நா சுட்டிக்காட்டியுள்ளது.</p><h2>வரலாற்<strong>று பின்னணி</strong></h2><p>இளைஞர்களுக்கெனத் தனியாக ஒரு உலகளாவிய தினத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் முதன்முதலில் 1991-ஆம் ஆண்டு ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் நடைபெற்ற ஐ.நா அமைப்பின் உலக இளைஞர் மன்றக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இளைஞர் விவகாரங்களுக்கான அமைச்சர்களின் உலக மாநாட்டின் பரிந்துரையை ஏற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, 1999-ஆம் ஆண்டு தனது 54/120 தீர்மானத்தின் மூலம் ஆகஸ்ட் 12-ஆம் தேதியை சர்வதேச இளைஞர் தினமாக முறைப்படி பிரகடனம் செய்தது. இதன் தொடர்ச்சியாக, ஆகஸ்ட் 12, 2000 அன்று உலகின் முதல் சர்வதேச இளைஞர் தினம் அனுசரிக்கப்பட்டது.</p><h2>சமூக மு<strong>க்கிய</strong>த்துவம்</h2><p>தற்போதைய உலகளாவிய தரவுகளின்படி, 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை சுமார் 120 கோடியைத் தொட்டுள்ளது. இது உலகின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 16 சதவீதமாகும். ஆனால் அதே நேரத்தில், பெரியவர்களைக் காட்டிலும் இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகமாக உள்ளது என்பதும், பருவநிலை மாற்றம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப இடைவெளி போன்ற பிரச்சனைகள் இளைஞர்களைப் பெரிதும் பாதிக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. </p><p>செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் விமர்சன சிந்தனை போன்ற எதிர்காலத்திற்குத் தேவையான திறன்களை இளைஞர்களுக்குக் கொண்டு சேர்ப்பதன் மூலமே இந்த சவால்களை எதிர்கொள்ள முடியும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.</p><p>மாறுபட்ட சூழல்களில் நாம் வாழ்ந்தாலும் நமது லட்சியங்களும் கனவுகளும் ஒன்றே என்பதை உணர்ந்து, புதிய உலகைப் படைக்க உழைக்கும் அனைத்து இளைஞர்களுக்கும் சர்வதேச இளைஞர் தின நல்வாழ்த்துகள். உலகை மாற்றியமைக்கும் ஆற்றலும், தடைகளைத் தகர்க்கும் துணிச்சலும் கொண்ட நாட்டின் எதிர்காலத் தூண்களான இளைஞர்கள் அனைவருக்கும் இனிய இளைஞர் தின வாழ்த்துகளைப் பகிர்ந்து மகிழ்வோம்.</p>]]></content:encoded></item><item><title>தீர்மானத்தை முதலமைச்சர் திரும்பப் பெற வேண்டும்- பாமக</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/pmk-member-says-chief-minister-must-withdraw-the-resolution</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/pmk-member-says-chief-minister-must-withdraw-the-resolution#comments</comments><guid isPermaLink="false">56261064-1dee-4bd5-a8ba-a125f4559f9d</guid><pubDate>Wed, 12 Aug 2026 05:08:16 +0000</pubDate><atom:updated>2026-08-12T05:08:16.623Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,PMK,பாமக,தமிழக சட்டசபை,TN assembly,தொகுதி மறுவரையறை,Delimitation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/5ywns5lx/PMK.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பா.ம.க. எம்.எல்.ஏ.கணேஷ் குமார் - முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ பா.ம.க. எம்.எல்.ஏ.கணேஷ் குமார் - முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/5ywns5lx/PMK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தாக்கல் செய்த தீர்மானத்தை முதலமைச்சர் திரும்பப் பெற வேண்டும் என பா.ம.க. எம்.எல்.ஏ.கணேஷ் குமார் பேசினார்.</strong></em> </p><p>தமிழ்நாடு சட்டசபையில் இன்று முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%88">தொகுதி மறுவரையறை</a> தொடர்பான தீர்மானத்தின் மீது பா.ம.க. எம்.எல்.ஏ.கணேஷ் குமார் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-</p><h2><strong>பா.ம.க. எதிர்க்கும்</strong></h2><p>தமிழ்நாட்டில் தனிப்பெரும் கட்சியான த.வெ.க.வில் கூட ஒரு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் வைத்துள்ளது. பெரிய கட்சிகளே நிர்வாக வசதிக்காக மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கையை உயர்த்துகிறார்கள். உள்ளாட்சிகளிலேயே 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/separate-resolution-against-constituency-delimitation-cpi-and-cpm-extend-support">தொகுதி மறுவரையறை</a> செய்யப்படுகிறது.</p><p>மக்கள் தொகை அடிப்படையில் எடுக்கப்பட்ட தரவின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் பா.ம.க. எதிர்க்கும். ஒவ்வொரு தொகுதியிலும் 14 முதல் 18 லட்சம் வரையிலான வாக்காளர்கள் உள்ளனர்.  தொகுதி மறுவரையறையை 2026 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி செய்தால் பா.ம.க. கடுமையாக எதிர்க்கும்.</p><p>செவி வழி செய்தியை வைத்து தொகுதி மறுவரையறை தொடர்பாக தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.  தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தாக்கல் செய்த தீர்மானத்தை முதலமைச்சர் திரும்பப் பெற வேண்டும். இந்த தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. ஏற்கனவே இதுதொடர்பாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டதால் தமிழ்நாட்டில் இருவேறு நிலைப்பாடு என்றது போல் ஆகி விடும் என்றார். </p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறைக்கு எதிராக தீர்மானத்தை கொண்டு வர என்ன அவசரம்?- பாஜக எம்.எல்.ஏ கேள்வி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/bjp-mla-questions-urgency-of-resolution-against-constituency-delimitation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/bjp-mla-questions-urgency-of-resolution-against-constituency-delimitation#comments</comments><guid isPermaLink="false">3b360caa-0c04-4611-9dc0-0900980e3f3d</guid><pubDate>Wed, 12 Aug 2026 04:56:40 +0000</pubDate><atom:updated>2026-08-12T04:56:40.022Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,தமிழக சட்டசபை,TN assembly,தொகுதி மறுவரையறை,Delimitation Bill,எம்.எல்.ஏ போஜராஜன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/gyu7q8zl/BJP.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ BJP MLA Bhojarajan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/gyu7q8zl/BJP.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டபையில் இன்று 4வது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. இதில், தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்பசபையில் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார்.</p><p>முதலமைச்சர் கொண்டு வரும் தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துளை பதிவு செய்து வருகின்றனர்.</p><p>இந்நிலையில், பாஜக எம்எல்ஏ போஜராஜன் சட்டசபையில் பேசியதாவது:-</p><p>சட்டமுன்வடிவு பரிசீலனையில் உள்ளபோது தனித்தீர்மானம் கொண்டு வரும் அவசரம் என்ன? </p><p>மக்களின் தேவை அறிந்து மாற்றம் கொண்டு வருவது அவசியம். மாற்றம ஒன்றே மாறாதது.</p><p>அடுத்த தலைமுறையை கருத்தில் கொண்டே நாடாளுமன்றம் பெரியதாக கட்டப்பட்டுள்ளது.</p><p>மாற்றத்தை நாம்  ஏற்க வேண்டும். அதே வேளையில் தமிழ்நாட்டில் பாதிப்பில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். </p><p>தொகுதி மறுவரையறை பரிசீலனையில்தான் உள்ளது. அடுத்த தலைமுறையினரை மனதில் வைத்தே கொண்டு வரப்படுகிறது. </p><p>பெண்களுக்கு முன்னுரிமை முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி பாஜக என்பதை நாடறியும்.</p><p>தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை பாஜக எதிர்க்கிறது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித்தீர்மானம்: சிபிஐ, சிபிஎம் ஆதரவு- தே.மு.தி.க. நிலை? </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/separate-resolution-against-constituency-delimitation-cpi-and-cpm-extend-support</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/separate-resolution-against-constituency-delimitation-cpi-and-cpm-extend-support#comments</comments><guid isPermaLink="false">cf4accac-7eae-41d0-a485-9e8d9f7ad8c7</guid><pubDate>Wed, 12 Aug 2026 04:50:52 +0000</pubDate><atom:updated>2026-08-12T04:50:52.703Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly,தொகுதி மறுவரையறை,Delimitation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/eah4i4oj/cpi.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தீர்மானத்தின் மீது உரையாற்றிய உறுப்பினர்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ தீர்மானத்தின் மீது உரையாற்றிய உறுப்பினர்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/eah4i4oj/cpi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த தொகுதி மறுவரையறை எதிர்ப்பு தீர்மானத்தை  ஆதரிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்துள்ளன.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%88">தொகுதி மறுவரையறையை</a> எதிர்த்து தமிழ்நாடு சட்டசபையில் இன்று முதலமைச்சர் தனித்தீர்மானம் கொண்டுவந்தார்.  அப்போது முதலமைச்சர் விஜய் பேசியதாவது:-</p><p>நமது குடும்பத்தில் உள்ள பாட்டி, அம்மா, அக்கா, தங்கையை பற்றிய தீர்மானம் இது. மிகப்பெரிய பணம் இருந்தால் வீட்டுக்கோ, பொருளாதாரம் இருந்தால் நாட்டுக்கோ பெரிய பெயர் வந்துவிடும் என நினைப்பர். பெண்கள் தனிப்பட்ட முறையில் சமூகத்தில் உயர்ந்தால் மட்டுமே ஒட்டுமொத்த சமூகத்திற்கும் நல்ல பெயர் வரும். பெண்களுக்கான அரசாக, அவர்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்தும் அரசாக இந்த அரசு இருக்கும்.  பெண்களுக்கான அரசியல் இட ஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கானது. பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை விரைந்து நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தொகுதி வரையறையுடன் பெண்கள் இடஒதுக்கீட்டை இணைக்கக் கூடாது. நாட்டின் மக்கள் தொகையில் சமஅளவில் பெண்கள் உள்ளதால் அவர்களுக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டும். ஆகையால் உறுப்பினர்கள் இத்தீர்மானத்தை நிறைவேற்றித்தருமாறு கேட்டுக்கொண்டார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-time-to-boost-womens-representation-in-assembly-and-parliament">முதலமைச்சர்</a> தனித்தீர்மானத்தின் மீது முதலில் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வை. பேச அனுமதிக்குமாறு எ.வ.வேலு கோரிக்கை விடுத்தார். </p><p>மற்ற கட்சிகள் பேசிய பிறகு தி.மு.க. உறுப்பினர்கள் பேசலாம் என அவை முன்னவர் செங்கோட்டையன் பதில் கூறினார். </p><h2><strong>ஆதரவு</strong></h2><p>இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் விவாதம் தொடங்கியது. முதலில் தீர்மானத்தின் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ செல்லசுவாமி பேசினார். </p><p>அப்போது, முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த தொகுதி மறுவரையறை எதிர்ப்பு தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது, வரவேற்கிறது. நாடாளுமன்றத்தில் இப்போது உறுப்பினர்கள் எல்லோரும் பேச நேரம் இல்லை. பாஜக செல்வாக்கு அதிகம் உள்ள வடமாநிலக்ஙளில் எம்பிக்கள் எண்ணிக்கை அதிகரிப்பதே அவர்களின் திட்டம்.  மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்திய நமக்கு மத்திய அரசு இதை ஒரு தண்டனையாக கொடுக்கிறது. மக்கள் தொகையை கணக்கெடுக்காமலேயே புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டுள்ளது. மாநில உரிமை பாதிக்கப்படுவதை ஏற்க முடியாது. வடமாநிலங்களில் தொகுதிகளை அதிகரிப்பதே பாஜகவின் நோக்கம் என்றார். </p><p>இதையடுத்து முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த தொகுதி மறுவரையறை எதிர்ப்பு தீர்மானத்தை  ஆதரிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ தளி ராமச்சந்திரன் தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், </p><p>தொகுதி மறுவரையறை தென்மாநிலங்களுக்கு பாதிப்பாக அமையும். தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் வகையில் தொகுதிவரையறை மசோதா. நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் மறுக்கப்படுவது கூட்டாட்சித் தத்துவத்திற்கு விடுக்கப்படும் சவால். குடும்பக் கட்டுப்பாட்டை கறாராக நிறைவேற்றிய தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் பாதிக்கப்படும். மக்கள் தொகையை கட்டுப்படுத்தாத உ.பி., பீகார், மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு சாதகமாகிவிடும் என்றார். </p><p>இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளை தொடர்ந்து தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா பேசுகையில், </p><h2><strong>எதன் அடிப்படையில் தனித்தீர்மானம்?</strong></h2><p>தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான சட்ட முன்வடிவை மத்திய அரசு இதுவரைகொண்டு வரவில்லை. சட்ட முன்வடிவை கொண்டுவராத நிலையில் எதன் அடிப்படையில் தமிழக அரசு தனித்தீர்மானத்தை கொண்டுவந்துள்ளது? மக்கள் தொகையை காரணம் காட்டி தமிழ்நாட்டு எம்.பி.க்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்பிருக்கிறது. 815 எம்.பி.க்கள் வருவதற்கு வாய்ப்பு ஏற்பட்டால் தமிழ்நாட்டு எம்பிக்களின் எண்ணிக்கை 59 ஆகும். தமிழ்நாட்டுக்கான எம்பிக்கள் உயரும்போது நமது மக்கள் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் பேசமுடியும். 10 லட்சம் பேருக்கு ஒரு எம்.பி. என இருக்கும் நிலையில் அது 8 லட்சம் பேருக்கு ஒரு எம்பி என மாறும். தொகுதி மறுசீரமைப்பின் மூலம் தமிழ்நாட்டின் எம்பிக்கள் எண்ணிக்கை உயர்ந்தால் சிறப்பாக இருக்கும் என்றார். </p>]]></content:encoded></item><item><title>7.1 விர்ச்சுவல் சவுண்ட், அதிநவீன சென்சார்களுடன் புது கேமிங் ஹெட்போன் அறிமுகம்!</title><link>https://www.maalaimalar.com/technology/newgadgets/noise-clutch-hp-p01-gaming-headphone-launched-in-india</link><comments>https://www.maalaimalar.com/technology/newgadgets/noise-clutch-hp-p01-gaming-headphone-launched-in-india#comments</comments><guid isPermaLink="false">a506b8b5-ec5d-4032-917c-56913e633da5</guid><pubDate>Wed, 12 Aug 2026 04:46:00 +0000</pubDate><atom:updated>2026-08-12T04:46:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Headphone,ஹெட்போன்,Noise,நாய்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/x77dn293/Noise-Clutch-HP-P01.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Noise Clutch HP-P01 Gaming Headphone]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/x77dn293/Noise-Clutch-HP-P01.png?w=280" width="280"></media:thumbnail><category>புதிய கேஜெட்டுகள் (New gadgets)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/noise">நாய்ஸ்</a> நிறுவனம் இந்தியாவில் கேமிங் ஹெட்போன் சந்தையில் களமிறங்கியது. கிளட்ச் HP-P01 என அழைக்கப்படும் புதிய ஹெட்போன் நாய்ஸ் நிறுவனத்தின் முதல் கேமிங் ஹெட்போன் மாடல் ஆகும். இந்த <a href="https://www.maalaimalar.com/topic/headphone">ஹெட்போன்</a> மொபைல் சாதனங்கள், கணினி மற்றும் கன்சோல் கொண்டு கேமிங் செய்வோருக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. </p><p>இந்த புது ஹெட்போனில் 50மில்லிமீட்டர் டிரைவர், 24ms வரையிலான லோ-லேடன்சி வயர்லெஸ் கனெக்டிவிட்டி மற்றும் கழற்றக்கூடிய பூம் மைக்ரோபோன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 7.1 விர்ச்சுவல் சரவுண்ட் சவுண்ட், ஆர்.ஜி.பி. லைட்டிங் மற்றும் அதிகபடசம் 40 மணி  நேர பேட்டரி பேக்கப் வழங்குகிறது. </p><h2>அம்சங்கள்:</h2><p>புதிய நாய்ஸ் கிளட்ச் HP-P01 மாடல் 50mm டைனமிக் டிரைவர் மற்றும் 20Hz to 20kHz frequency response வழங்குகிறது. இத்துடன் இந்த ஹெட்செட் ஸ்டீரியோ மற்றும் டாகிள் செய்யக்கூடிய 7.1 விர்ச்சுவல் சரவுண்ட் சவுண்ட் சப்போர்ட் கொண்டிருக்கிறது. அழைப்புகளின் போது தெளிவான ஆடியோவை உறுதி செய்யும் வகையில் இந்த ஹெட்போனில் கழற்றக்கூடிய பூம் மைக்ரோபோன் வழங்கப்பட்டுள்ளது.</p><p>இந்த ஹெட்போன் 2.4GHz வயர்லெஸ், ப்ளூடூத் 6 மற்றும் 3.5எம்.எம். வயர்டு கனெக்டிவிட்டியுடன் வருகிறது. இத்துடன் வயர்லெஸ் லேடன்சி 24ms வரையிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஹெட்போனை கணினி, லேப்டாப், சோனி பிளேஸ்டேஷன் 5, எக்ஸ்பாக்ஸ் கன்சோல், நின்டென்டோ ஸ்விட்ச் மற்றும் மொபைல் சாதனங்களுடன் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.</p><h2>விலை விவரங்கள்:</h2><p>புதிய நாய்ஸ் கிளட்ச் HP-P01 ஹெட்போனின் இந்திய விலை ரூ. 4,999 என நிர்ணயம் செய்யப்ட்டுள்ளது. இந்த ஹெட்போன் நாய்ஸ் வலைதளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.</p><p>இந்த ஹெட்போன் பிளாக்\ரெட், பர்ப்பிள்\கோல்டு மற்றும் கிரே\கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஹெட்போனின் அதிகாரப்பூர்வ வினியோகம் இம்மாதம் 27-ஆம் தேதி தொடங்கும் எ தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பெண்களின் வெற்றி சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் அதிகரிக்க வேண்டிய நேரம் இது- முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-time-to-boost-womens-representation-in-assembly-and-parliament</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-time-to-boost-womens-representation-in-assembly-and-parliament#comments</comments><guid isPermaLink="false">e9b8157f-60b8-4449-9565-f94792f167e9</guid><pubDate>Wed, 12 Aug 2026 04:29:24 +0000</pubDate><atom:updated>2026-08-12T04:29:24.519Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN assembly,தமிழக சட்டசபை கூட்டம்,தொகுதி மறுவரையறை,Delimitation Bill,முதலமைச்சர் விஜய்,tn cm vijay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/o4x8h2b4/Vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijjay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/o4x8h2b4/Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டபையில் இன்று 4வது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. இதில், தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்பசபையில் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார்.</p><p>அதில், மக்களவை உறுப்பினர் எண்ணிக்கையை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாக்க வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.</p><p>மாநிலங்களுக்கு இடையிலான விகிதாச்சார பிரதிநிதித்துவம் தற்போதுள்ள அளவிலேயே நிரந்தரமாக்கவும் வலியுறுத்தி தனித் தீர்மானம்.</p><p>மக்களவை, சட்டமன்ற தேர்தலில் மகளிருக்கு மூன்றில் ஒரு பங்கு தொகுதி ஒதுக்கீட்டை உறுதி செய்யவும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p>முதலமைச்சர் கொண்டு வரும் தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துளை பதிவு செய்து வருகின்றனர்.</p><p>முன்னதாக, தீர்மானம் குறித்து முதலமைச்சர் விஜய் கூறியதாவது:-</p><p>நமது குடும்பத்தில் உள்ள பாட்டி, அம்மா, அக்கா, தங்கையை பற்றிய தீர்மானம் இது. மிகப்பெரிய பணம் இருந்தால் வீட்டுக்கோ, பொருளாதாரம் இருந்தால் நாட்டுக்கோ பெரிய பெயர் வந்துவிடும் என நினைப்பர். </p><p>பெண்கள் தனிப்பட்ட முறையில் சமூகத்தில் உயர்ந்தால் மட்டுமே ஒட்டுமொத்த சமூகத்திற்கும் நல்ல பெயர் வரும்.</p><p>பெண்கள் இடஒதுக்கீடு என்பது சலுகை அல்ல, சமூக நீதி. </p><h2>2026 சட்டமன்றத்தில்..</h2><p>2021-ல் 12 பெண்கள் இருந்த நிலையில், 2026 சட்டமன்றத்தில் 26 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.</p><p>தமிழ்நாட்டில் ஆண்டுகளை விட பெண்கள் தான் அதிக ஓட்டு போட்டுள்ளனர். பெண்களுக்கான முன்னுரிமை வழங்குவதில் இந்தியாவுக்கே தவெக அரசு முன்னுதாரணமாக உள்ளது. உள்ளாட்சித் தேர்தில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீட்டால் பெண்களின் தலைமை பண்பும் நிரூபிக்கப்பட்டுள்ளது.</p><p>2021-ல் 12 பெண்கள் இருந்த நிலையில் 2026 சட்டசபையில் 26 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். பெண்களின் வெற்றி சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் அதிகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. </p><p>அனைத்துக்கட்சி எம்பிக்களுடன் நடத்திய ஆலோசனையில் தொகுதிமறுவரையறை குறித்து விவாதித்தோம். நாட்டின் மக்கள்தொகையில் சம அளவில் பெண்கள் உள்ளதால் அவர்களும் சமவாய்ப்பு வழங்க வேண்டும்.</p><h2>மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு</h2><p>மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை மேலும் தாமதிக்க கூடாது, மத்திய அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். </p><p>நாடாளுமன்ற உறுப்பினர்களின் விகிதம் 2.2:1 என்ற அளவிலேயே தொடர வேண்டும். 543 என்ற அளவிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை நிரந்தரமாக வைக்க வேண்டும்.</p><p>வரும் பொதுத்தேர்தல்களில் பெண்களுக்கு 3-ல் 1 என்ற அளவில் இடமளிக்க வேண்டும். </p><p>இவ்வாறு அவர் கூறி, தொகுதி மறுவரையறைவுக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்தார். </p>]]></content:encoded></item><item><title>ஈரான் ஏவுகணை அச்சுறுத்தல்: &apos;ஏர் ஃபோர்ஸ் ஒன்&apos; விமானத்தில் இருந்து ரகசியமாகத் தப்பிய டிரம்ப்!</title><link>https://www.maalaimalar.com/news/world/iran-missile-threat-trump-secretly-escapes-air-force-one</link><comments>https://www.maalaimalar.com/news/world/iran-missile-threat-trump-secretly-escapes-air-force-one#comments</comments><guid isPermaLink="false">b687c864-7fc4-4c7f-84a0-ba6891841066</guid><pubDate>Wed, 12 Aug 2026 04:11:10 +0000</pubDate><atom:updated>2026-08-12T04:11:10.132Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>trump,டிரம்ப்,Turkey,NATO,ஈரான் ஏவுகணை,Air Force One,ஏர் ஃபோர்ஸ் ஒன்,Iran missile</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/ln2c2kth/Untitled-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Air Force One]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/ln2c2kth/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அங்காராவில் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டிற்குப் பிறகு, சாத்தியமான பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகத் தாம் ரகசியமாக வேறு விமானத்திற்கு மாறியதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.</p><h2><strong>ஈரான் ஏவுகணை அச்சுறுத்தல் பின்னணி</strong></h2><p>துருக்கி தலைநகர் அங்காராவில் நேட்டோ மாநாடு முடிந்ததும், டிரம்பைக் குறிவைத்துத் தோளில் வைத்து இயக்கும் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்த அல்லது படுகொலை செய்ய ஈரான் ஆதரவுப் படைகள் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரித்தது. ஈரான் அச்சுறுத்தல்களின் அடிப்படையில் தாம் சீக்ரெட் சர்வீஸ் மற்றும் ராணுவ அதிகாரிகளின் வழிகாட்டுதலைப் பின்பற்றியதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.</p><h2>கே<strong>ட்டரிங் டிரக் மூலம் ர</strong>கசியமாகத் தப்பிய டிரம்ப்</h2><p>டிரம்ப் அனைவரும் பார்க்கும் வகையில் கேமராக்களுக்கு முன்னால் 'ஏர் ஃபோர்ஸ் ஒன்' விமானத்தில் ஏறியுள்ளார். விமானத்தில் ஏறிய பிறகு, அதன் மறுபக்கக் கதவு வழியாக உணவுப்பொருட்களை ஏற்றும் 'கேட்டரிங் டிரக்'  மூலமாக ரகசியமாக இறக்கப்பட்டு, அருகில் நிறுத்தப்பட்டிருந்த 'C-32A' என்ற சிறிய ராணுவ விமானத்திற்கு மாற்றப்பட்டார். அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் இந்தச் சிறிய விமானத்தில் தனியாக ஏறி, பயணம் சாதாரணமானது போலக் காட்ட முயன்றார்.</p><h2>செய்தியாள<strong>ர்களும் அதிகாரிகளும்</strong> ஏமாற்றப்பட்டது எப்படி?</h2><p>வெள்ளை மாளிகை பணியாளர்கள், செய்தியாளர்கள் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, நிதித்துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட் உள்ளிட்டோர் டிரம்ப் வழக்கமான 'ஏர் ஃபோர்ஸ் ஒன்' விமானத்தில்தான் பயணிக்கிறார் என்று நம்பினர். பாதுகாப்பு காரணங்களுக்காக விமானத்தின் ஜன்னல் திரைகளை மூடி வைக்குமாறு அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது. டிரம்ப் இல்லாமல் அந்த விமானம் வழக்கமான அழைப்புக் குறியீட்டுடன் பறந்தது.</p><h2>பிரிட்டன் வழிப் <strong>பயணமும் விமான மாற்</strong>றமும்</h2><p>டிரம்ப் பயணித்த சிறிய C-32A விமானம் "Reach 18" என்ற அழைப்புக் குறியீட்டைப் பயன்படுத்தியது. பிரிட்டன் சென்று சேர்ந்ததும், டிரம்ப் மீண்டும் பழைய ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் ஏறி இறங்கி கேமராக்களுக்குக் காட்சியளித்தார். அதன் பின்னர் கத்தார் அரசு பரிசளித்த அதிநவீன போயிங் 747-8 விமானத்திற்கு மாறி அமெரிக்கா திரும்பினார்.</p><h2>பத்திரிகை<strong>யாளர்கள் அமை</strong>ப்பின் அதிருப்தி</h2><p>பத்திரிகையாளர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளைப் போலி விமானத்தில் பயணிக்க வைத்து ஆபத்தில் தள்ளியது குறித்து அமெரிக்கப் பத்திரிகையாளர்கள் பாதுகாப்புச் சங்கம் கடும் கவலையை வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்துச் செய்தியாளர்களுக்கு முன்னரே தெரிந்திருக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>ரேஷன் கடை வேலை நேரம் மாற்றம்?- ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/change-in-ration-shop-working-hours-officials-ordered-to-review-the-matter</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/change-in-ration-shop-working-hours-officials-ordered-to-review-the-matter#comments</comments><guid isPermaLink="false">17acbf8d-1c98-466a-a2eb-ac667dfddd63</guid><pubDate>Wed, 12 Aug 2026 04:04:03 +0000</pubDate><atom:updated>2026-08-12T04:04:03.186Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,ரேஷன் கடை,ration shop</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/04r2jmko/rationshop.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ரேஷன் கடை]]></media:title><media:description type="html"><![CDATA[ ரேஷன் கடை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/04r2jmko/rationshop.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ரேஷன் கடை வேலை நேரத்தை மாற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</strong></em></p><h2><strong>மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்</strong></h2><p>தமிழ்நாடு அரசு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88">ரேஷன் கடை</a> பணியாளர் சங்கம் சார்பில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டிருந்தது. அதில், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் தற்போது ரேஷன் கடைகள் காலை 8.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மீண்டும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 7 மணி வரையிலும் செயல்பட்டு வருகிறது. அதன்படி, மதிய இடைவேளை நேரம் நீட்டிக்கப்பட்டு, பணி நேரம் சுமார் 12 மணி நேரமாக உள்ளது. இதனால் பணியாளர்கள் மனச்சோர்வுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும், நுகர்பொருள் வாணிபக் கழக குடோன்களுக்கு வெள்ளிக்கிழமை வேலை நாளாகவும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகவும் உள்ளது. ஆனால், ரேஷன் கடை பணியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறையாகவும், ஞாயிற்றுக்கிழமை வேலை நாளாகவும் இருப்பதால், விடுமுறை நாட்கள் யாருக்கும் பயனுள்ளதாக இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><h2><strong>ஆய்வு செய்ய உத்தரவு</strong></h2><p>எனவே, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/new-procedure-for-quality-rice-at-ration-shops">ரேஷன் கடை</a> வேலை நேரத்தை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் மாற்றி அமைக்க வேண்டும் என்றும் மாதத்தின் முதல் 2  வெள்ளிக்கிழமைகளை வேலை நாட்களாகவும், முதல் 2 ஞாயிற்றுக்கிழமைகளை விடுமுறை நாட்களாகவும் அறிவிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.</p><p>இந்த கோரிக்கை மனுவின்படி, மாற்றங்களைச் செயல்படுத்தினால் கள அளவில் ஏற்படும் சாதக, பாதகங்களை ஆய்வு செய்து, அது குறித்து அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட துணைப்பதிவாளர்களுக்கு பொது வினியோகத்திட்டத்தின் இணைப்பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>உ.பி-ல் போலி சான்றிதழ்கள் மூலம் வக்கீலாக பதிவு: 39 பேர் மீது போலீசார் வழக்கு</title><link>https://www.maalaimalar.com/news/national/fake-certificates-lawyers-registered-in-up-case-filed-against-39</link><comments>https://www.maalaimalar.com/news/national/fake-certificates-lawyers-registered-in-up-case-filed-against-39#comments</comments><guid isPermaLink="false">c3ee49fa-870f-42a8-b6cd-84ff166daf88</guid><pubDate>Wed, 12 Aug 2026 04:03:08 +0000</pubDate><atom:updated>2026-08-12T04:03:08.881Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வழக்குப்பதிவு,உத்தரபிரதேசம்,uttarpradesh,case filed,fake document,போலி சான்றிதழ்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/18alqi3s/fake.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Fake document]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/18alqi3s/fake.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அலகாபாத் ஐகோர்ட்டு கடந்த ஜூன் 3-ந் தேதி பரபரப்பு உத்தரவு பிறப்பித்தது. உத்தரபிரதேச பார் கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்தவர்களில், யாருடைய பட்டப்படிப்பு சான்றிதழ் போலி என்று தெரிகிறதோ, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும் என்று கூறியது.</p><p>இதற்கிடையே, உத்தரபிரதேச பார் கவுன்சில், 105 வக்கீல்களுக்கு எதிராக பிரயாக்ராஜ் நகரில் உள்ள சிவில் லைன்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தது.</p><p>பதிவு செய்து, வக்கீலாக பணியாற்றுவதற்கான சான்றிதழ் பெற்று வக்கீல் தொழில் செய்து வருவதாக புகாரில் கூறியுள்ளது.</p><p>புகாரின் அடிப்படையில், கடந்த 3 நாட்களில் 39 வக்கீல்கள் மீது போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இத்தகவலை சிவில் லைன்ஸ் இன்ஸ்பெக்டர் ராமாஷ்ரே யாதவ் தெரிவித்தார்.</p><p>மீதியுள்ள வக்கீல்கள் மீது ஓரிரு நாட்களில் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும், அதன்பிறகு விசாரணை தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ரூ. 8 ஆயிரம் பட்ஜெட்டில் புது ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த லாவா</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/lava-smart-4-launched-in-india</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/lava-smart-4-launched-in-india#comments</comments><guid isPermaLink="false">3248a9fb-f77d-443c-8752-e28a736eb6ba</guid><pubDate>Wed, 12 Aug 2026 03:48:00 +0000</pubDate><atom:updated>2026-08-12T03:48:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>LAVA,லாவா,smartphone,ஸ்மார்ட்போன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/m4vcuim2/Lava-Smart-4.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Lava Smart 4]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/m4vcuim2/Lava-Smart-4.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/technology">லாவா</a> நிறுவனம் விராட் வி1 மற்றும் விராட் வி1 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த சில வாரங்களில் மற்றொரு புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் ரூ. 10,000 பட்ஜெட்டில் விற்பனைக்கு வருகிறது. ஸ்மார்ட் 4 என அழைக்கப்படும் புதிய <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மார்ட்போன்</a> 6.59 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது.</p><p>அளவில் சற்றே சிறியதாக உருவாக்கப்பட்டு இருக்கும் லாவா ஸ்மார்ட் 4 மாடல் முதல் முறை ஸ்மார்ட்போன் வாங்குவோர் மற்றும் இரண்டாவது ஸ்மார்ட்போனாக பயன்படுத்த விரும்புவோருக்கு சிறந்த தேர்வாக இருக்கும். இது குறுந்தகவல் மற்றும் அழைப்புகள் போன்ற அடிப்படை பயன்பாடுகளுக்கு ஏற்றதாக இருக்கும்படி உருவாக்கப்பட்டு இருக்கிறது.</p> <h2>சிறப்பு அம்சங்கள்:</h2><p>லாவா ஸ்மார்ட் 4 மாடலில் 6.59 இன்ச் எல்.சி.டி. பேனல் கொண்ட டிஸ்ப்ளே, qHD ரெசல்யூஷன், 90ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் யுனிசாக் SC9863A சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 28 மில்லிமீட்டர் பிராசஸர் யூனிட் ஆகும். இதே பிராசஸர் தான் லாவா விராட் வி1 4ஜி மாடலிலும் வழங்கப்பட்டு இருந்தது. அழைப்புகள், குறுந்தகவல், பிரவுசிங் என அடிப்படை பயன்பாடுகளுக்கு இந்த சிப்செட் ஏற்றதாக இருக்கும்.</p><p>புகைப்படங்களை எடுக்க இந்த ஸ்மார்ட்போனில் 8MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 கோ எடிஷன் ஓ.எஸ். கொண்டிருக்கிறது. இது என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன்களில் சீரான அனுபவத்தை வழங்குவதில் பெயர் பெற்றது குறிப்பிடத்தக்கது.</p><p>இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 10 வாட் சார்ஜிங் மற்றும் யு.எஸ்.பி. டைப் சி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் புதிய லாவா ஸ்மார்ட் 4 மாடல் MIL-STD-810H தர மிலிட்டரி கிரேடு சான்று பெற்றிருக்கிறது. இதில் உள்ள டூயல் சிம் ஸ்லாட் கொண்டு பயனர்கள் ஒரே நேரத்தில் இரு 4ஜி சிம் கார்டுகளை பயன்படுத்த முடியும்.</p><h2>விலை விவரங்கள்:</h2><p>புதிய லாவா ஸ்மார்ட் 4 மாடலின் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கொனார்க் கோல்டு மற்றும் அஜந்தா கிரே என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் தற்போது ஆஃப்லைன் விற்பனை மையங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>அருகாமையில் வசிப்பவர்கள் சுங்கச்சாவடிகளில் கட்டணம் இன்றி பயணிக்கலாமா?- நெடுஞ்சாலை ஆணையம் பதில்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/highways-authority-inform-can-nearby-residents-travel-through-toll-plazas-without-paying-a-fee</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/highways-authority-inform-can-nearby-residents-travel-through-toll-plazas-without-paying-a-fee#comments</comments><guid isPermaLink="false">f1e92d79-c477-41ce-b5ed-d4aed1d21ded</guid><pubDate>Wed, 12 Aug 2026 03:46:20 +0000</pubDate><atom:updated>2026-08-12T03:46:20.572Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தேசிய நெடுஞ்சாலை ஆணையம்,National Highways Authority,Toll plaza,சுங்கச்சாவடி,கட்டணம்</media:keywords><media:content height="350" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/7m0ie7mr/tollgate.jpg" width="615"><media:title type="html"><![CDATA[ சுங்கச்சாவடி]]></media:title><media:description type="html"><![CDATA[ சுங்கச்சாவடி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/7m0ie7mr/tollgate.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சுங்கச்சாவடிகளின் அருகாமையில் உள்ளவர்கள் அடையாள அட்டையை காண்பித்து கட்டணம் இன்றி பயணிக்கலாமா? என்பது குறித்து நெடுஞ்சாலை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.</strong></em></p><h2><strong>சுங்கச்சாவடிகள்</strong></h2><p>தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தனியார் பங்களிப்புடன் சாலைகளை சீரமைத்து, அதற்கான கட்டணத்தை வாகன ஒட்டிகளிடம் இருந்து <a href="https://www.maalaimalar.com/topic/சுங்கச்சாவடி">சுங்கச்சாவடி</a> மூலமாக வசூலித்து வருகிறது.</p><p>நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 78 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. இந்த சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் கார், ஜீப், ஆட்டோ, பஸ், லாரி, டெம்போ உள்பட பல்வேறு வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.</p><h2><strong>கட்டணம் இன்றி...</strong></h2><p>இந்தநிலையில் சுங்கச்சாவடிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள வாகன ஓட்டிகள் தங்களது அடையாள அட்டையை காண்பித்து கட்டணம் இன்றி கடந்து செல்லலாம் என்று ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.</p><p>சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் அந்த தகவலுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.</p><h2><strong>உள்ளூர் மாதாந்திர பாஸ்</strong></h2><p>அதில் "தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில், அடையாள அட்டையை காண்பித்தால் உள்ளூர் வாசிகள் கட்டணம் இன்றி பயணிக்கலாம் என்பது தவறான கருத்து. உள்ளூர்வாசிகளுக்கு கட்டணமில்லா பயணம் கிடையாது.</p><p>ஆனால் சுங்கச்சாவடிக்கு அருகில் வசிக்கும் உள்ளூர் மக்களுக்கு கட்டண சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதற்காக உள்ளூர் மாதாந்திர பாஸ் முறை நடைமுறையில் உள்ளது.</p><p>சுங்கச்சாவடியைச் சுற்றி 20 கிலோமீட்டர் சுற்றளவில் வசிப்பவர்கள் மட்டுமே இந்த சலுகையைப் பெற தகுதியுடையவர்கள். குறிப்பிட்ட அந்த சுங்கச்சாவடிக்கென அறிவிக்கப்பட்டுள்ள விதிகளின்படியே இந்த பாஸ்கள் வழங்கப்படுகின்றன. எனவே, அடையாள அட்டையை காண்பித்து கட்டணமில்லாமல் செல்லலாம் என்று கருத வேண்டாம். சலுகை பெற விரும்புவோர் அந்த சுங்கச்சாவடியின் விதிகளைப் பின்பற்றி முறைப்படி உள்ளூர் மாதாந்திர பாஸை பெற வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தெலங்கானாவில் டேங்கர் லாரி மீது ஆட்டோ மோதி விபத்து- 6 கூலித் தொழிலாளர்கள் பலி!</title><link>https://www.maalaimalar.com/news/national/auto-crash-with-tanker-lorry-in-telangana-kills-six-workers</link><comments>https://www.maalaimalar.com/news/national/auto-crash-with-tanker-lorry-in-telangana-kills-six-workers#comments</comments><guid isPermaLink="false">94f59ff9-3428-4af7-ba84-a4c15571a608</guid><pubDate>Wed, 12 Aug 2026 03:37:43 +0000</pubDate><atom:updated>2026-08-12T03:37:43.728Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உயிரிழப்பு,Death,Telangana,lorry accident,லாரி விபத்து,தெலங்கானா</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/8fidlrnc/Accident.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Accident]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/8fidlrnc/Accident.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி பகுதியில் ஆட்டோ மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.</p><p>தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் சத்வார் கிராம பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று ஒரு ஆட்டோ சென்று கொண்டிருந்தது.</p><p>அப்போது, அந்த வழியாக வந்த டேங்கர் லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ முற்றிலும் நசுங்கியது. மேலும் ஆட்டோவில் பயணித்தவர்களில் 6 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். </p><h2>கூலித் தொழிலாளர்கள்</h2><p>ஆட்டோவில் இருந்தவர்கள் அனைவரும் கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம் ராஜகிரி கிராமத்தை சேர்ந்தவர்கள் என்றும் இதில் உயிரிழந்தவர்களில் ரேகா, ஸ்ரீதேவி, கவிதா, ரேஷ்மா, நிகிதா மற்றும் தேவதாஸ் ஆகியோர் என்பது தெரியவந்தது. </p><p>வேலை முடிந்து ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்த 5 பெண்கள் உள்ளிட்ட 6 கூலித் தொழிலாளர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.</p><p>ஆட்டோ மீது டேங்கர் லாரி மோதியதில் படுகாயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>மேலும், விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் 9 இடங்களில் என்ஐஏ சோதனை
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nia-raid-at-9-locations-in-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nia-raid-at-9-locations-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">051aa7c4-ff19-40c7-8048-391149c7a22d</guid><pubDate>Wed, 12 Aug 2026 03:03:56 +0000</pubDate><atom:updated>2026-08-12T03:03:56.667Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN,போதைப்பொருள் கடத்தல்,Drug trafficking,NIA Raid,என்ஐஏ சோதனை,தமிழ்நாடு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2024/04/22/2097618-nia.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ NIA Raid]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2024/04/22/2097618-nia.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்நாட்டில் 9 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடைபெற்று வருகிறது.</strong></em></p><p>சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 9 இடங்களில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%90%E0%AE%8F%20%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88">தேசிய புலனாய்வு முகமை</a> அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.</p> <p>2024-ம் ஆண்டு அந்தமானில் போதைப்பொருட்கள் சிக்கிய வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் பிடிபட்ட 7 பேருடன் தொடர்பில் இருந்தவர்கள் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பர்மாவில் இருந்து செயல்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் உள்ளவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படுகிறது.</p><p>மியான்மரில் இருந்து செயல்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பா? என அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறைக்கு எதிராக தீர்மானம் - சட்டசபையில் இன்று தாக்கல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/resolution-against-constituency-delimitation-to-be-tabled-in-assembly-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/resolution-against-constituency-delimitation-to-be-tabled-in-assembly-today#comments</comments><guid isPermaLink="false">e0228e91-0042-4d3e-95fb-e9223bdc030d</guid><pubDate>Wed, 12 Aug 2026 02:38:06 +0000</pubDate><atom:updated>2026-08-12T02:38:06.154Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,தொகுதி மறுவரையறை,Delimitation,Constituency Delimitation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/tx5fkhcs/tnassembly.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN Assembly]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/tx5fkhcs/tnassembly.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சட்டசபையில் தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/aadav-arjuna-answer-to-eps-speech-in-tn-assembly">தமிழக சட்டசபையில்</a> நேற்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. </p><p>நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வெளிநாட்டு நன்கொடை மசோதாவுக்கு எதிராகவும் தமிழக சட்டசபையில் நேற்று 2 தீர்மானங்கள் நிறைவேறின. இந்த மசோதாக்களுக்கு பா.ஜ.க. தவிர அனைத்துக்கட்சி எம்எல்ஏக்களும் ஆதரவு அளித்தனர்.</p> <p>சட்டசபையில் இன்று இதுதொடர்பான தீர்மானம் தாக்கல் செய்யப்படுகிறது.</p><p>நாடாளுமன்ற <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%88">தொகுதி மறுவரையறைக்கு</a> எதிராக கடந்த 8-ந்தேதி முதலமைச்சர் விஜய் தலைமையில் சென்னையில் அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தை தி.மு.க., அ.தி.மு.க. புறக்கணித்தது.</p><p>இந்த கூட்டத்தில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது என முடிவு செய்யப்பட்டது.</p> <p>இந்நிலையில், தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிய இருக்கிறார். இதை வழிமொழிந்து எம்.எல்.ஏ.க்கள் பேசுவார்கள். ஏற்கனவே, தி.மு.க., அ.தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் இந்த தீர்மானத்தின் மீது கடுமையான விவாதங்கள் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>சுதந்திர தின விழா - மதுரை விமான நிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/independence-day-celebrations-5-layer-security-for-madurai-airport</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/independence-day-celebrations-5-layer-security-for-madurai-airport#comments</comments><guid isPermaLink="false">5013d0c3-6eb1-46e4-9c2b-566ec9475475</guid><pubDate>Wed, 12 Aug 2026 02:17:38 +0000</pubDate><atom:updated>2026-08-12T02:17:38.674Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>madurai airport,மதுரை விமான நிலையம்,Independence Day,சுதந்திர தினவிழா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/70wi82rw/maduraiairport.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Madurai airport]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/70wi82rw/maduraiairport.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மதுரை விமான நிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 20-ந்தேதி வரை பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.</strong></em></p> <h2>சுதந்திரதின விழா</h2><p>நாடு முழுவதும் வருகிற 15-ந்தேதி (சனிக்கிழமை) <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE">சுதந்திர தின விழா</a>, கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு <a href="https://www.maalaimalar.com/news/national/modi-urges-people-to-take-developed-india-pledge-on-i-day">மத்திய அரசின்</a> அறிவுறுத்தலின்பேரில் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளன.</p><h2>மதுரை விமான நிலையம்</h2><p>மதுரை விமான நிலையத்தில் நேற்று முதல் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை விமான நிலைய உள்வளாகம், விமான நிலைய ஓடுபாதை, விமான நிலைய சுற்றுப்புற கண்காணிப்பு கோபுரங்கள், விமான நிலைய வெளிவளாகம், வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட இடங்களில் மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.</p> <h2>சோதனை</h2><p>24 மணி நேரமும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினரும், மோப்பநாய் படை பிரிவினரும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் பயணிகள் மற்றும் அவர்கள் கொண்டு வரும் உடைமைகள் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.</p>  <h2>பார்வையாளர்களுக்கு தடை</h2><p>இதுதவிர விமான நிலையத்தின் வெளிப்பகுதிகளான பெருங்குடி, சின்ன உடைப்பு உள்ளிட்ட பகுதிகளில் மாநகர போலீசாரும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விமான நிலையத்திற்குள் செல்ல பார்வையாளர்களுக்கு வருகிற 20-ந்தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>இதற்கிடையே, மதுரை மாநகர பகுதியில் உள்ள விடுதிகள் சந்தேகத்திற்கிடமாக யாராவது தங்கி உள்ளார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுபோல, ரெயில் நிலையம், பஸ் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>கொலம்பியாவை உருக்குலைத்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 250-ஆக உயர்வு</title><link>https://www.maalaimalar.com/news/world/colombia-earthquake-death-toll-rises-to-250</link><comments>https://www.maalaimalar.com/news/world/colombia-earthquake-death-toll-rises-to-250#comments</comments><guid isPermaLink="false">0f9bf790-ff22-4bcf-a695-6ac5357cdcfd</guid><pubDate>Wed, 12 Aug 2026 02:04:37 +0000</pubDate><atom:updated>2026-08-12T02:04:37.318Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Earthquake,கொலம்பியா,பலி எண்ணிக்கை உயர்வு,death toll raise,நிலநடுக்கம்,colombia earthquake</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/m0377h7v/colombia.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Colombia Earthquake]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/m0377h7v/colombia.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கொலம்பியாவில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 254-ஆக உயர்ந்துள்ளது.</p><p>மேலும் 2,600-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், 3,900-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>மேற்கு கொலம்பியாவின் சொகோ (Choco) மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் டெல் பால்மர் நகருக்கு அருகே பூமிக்கு அடியில் சுமார் 100 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.</p><p>தொடர்ந்து பல நில அதிர்வுகள் பதிவாகின. இந்த அதிர்வுகள் அண்டை நாடுகளான ஈக்வடார், பானமா மற்றும் வெனிசுவேலா வரையிலும் உணரப்பட்டன.</p><h2>கொலம்பியா நிலநடுக்க பாதிப்பு</h2><p>கொலம்பியாவில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தால் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நகரமாகப் பெரேரா உருவெடுத்துள்ளது. இங்கு மட்டும் 60 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 254 ஆக உயர்ந்துள்ளது.</p><p>நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 3.900க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை எனத் தரவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாகக் காளி (Cali) மற்றும் பெரேரா (Pereira) நகரங்களில் அதிகமானோர் மாயமாகியுள்ளனர். காளி பகுதியில் 95 பேரும், பெரேராவில் 101 பேரும் உயிரிழந்துள்ளனர்.</p><p>பாதிக்கப்பட்ட பிராந்தியம் முழுவதும் சுமார் 1600 கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. அதே நேரத்தில் கிட்டத்தட்ட 5,000 வீடுகள் நிலநடுக்கத்தின் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.</p><p>நாட்டின் 5 முக்கியத் நகரங்களுக்கு இன்னமும் ரெட் அலர்ட் அமலில் உள்ளது.</p><h2>அவசர நிலை</h2><p>நிலநடுக்கம் குறித்து பேசிய கொலம்பியா அதிபர் அபெலார்டோ டி லா எஸ்ப்ரீல்லா கூற்றுப்படி,</p><p>நிலநடுக்கத்தால் 1,577 குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. அதில் 37 கட்டிடங்கள் முற்றிலும் அழிந்துவிட்டன.</p><p>60க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் முழுமையாக இடிந்து தரைமட்டமாகியுள்ளன. 18 மருத்துவ மையங்கள் மற்றும் 52 பள்ளிகள் பலத்த சேதமடைந்துள்ளன. 7 விமான நிலையங்களின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன.</p><p>நிலநடுக்கத்தின் பேரழிவைக் கருத்தில் கொண்டு கொலம்பியா அரசு தேசிய பேரிடர் அவசரநிலை பிரகடனம் செய்துள்ளது.</p><p>இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை விரைவாக மீட்க ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.</p><p>காளி நகரில் உள்ள ஒரு மருத்துவமனையின் குழந்தைகள் பராமரிப்புப் பிரிவுகள் இடிந்து விழுந்துள்ளதால், அங்குப் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.</p><p>நகரின் பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து தூசிப் படலம் பரவியது. பயத்தில் மக்கள் வீடுகளின் மாடியிலிருந்து குதித்தும் தப்பிக்க முயன்றனர்.</p><p>பெரேரா நகரில் 4 அடுக்கு மாடி கட்டிடம் உள்ளிட்ட பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.</p><p>மேனிசேல்ஸ் நகரின் புகழ்பெற்ற நவதோதிக் கதீட்ரல் தேவாலயத்தின் பக்கவாட்டுக் கோபுரம் இடிந்து விழுந்தது.</p><h2>உதவி</h2><p>அவசரகால நிதியாக கொலம்பியாவுக்கு சுமார் ரூ.130 கோடி வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.</p><p>எல் சால்வடார் அதிபர் நயீப் புக்கேலே, மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் மற்றும் சிலி அதிபர் ஜோஸ் அன்டோனியோ காஸ்ட் ஆகிய லத்தீன் அமெரிக்க நாட்டுத் தலைவர்கள் கொலம்பியாவுக்கு தேவையான மருத்துவக் குழுக்கள், மீட்புப் படைகள் மற்றும் நிவாரணப் பொருட்களை உடனடியாக அனுப்பத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளனர்.</p><h2>வெனிசுலாவை தொடர்ந்து..</h2><p>அண்டை நாடான வெனிசுவேலாவில் கடந்த மாதம் ஜூன் 24 அன்று 7.2, 7.5 ரிக்டர் அளவுகளில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கத்தில் மீட்பு பணிகள் இன்னும் தொடர்ந்து வரும் நிலையில் இன்றைய நிலவரப்படி 6,301 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>இந்த சூழலில் தற்போது கொலம்பியாவில் 21ஆம் நூற்றாண்டின் ஏற்பட்ட மிகக் கடுமையான நிலநடுக்கம் இது. வெனிசுலாவில் 3.8 ரிக்டர் அளவு தற்போது நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 12 ஆகஸ்ட் 2026: ஆடி அமாவாசை
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-12-august-2026-aadi-amavasai</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-12-august-2026-aadi-amavasai#comments</comments><guid isPermaLink="false">4a8a0c1e-ef1b-4eaa-be8a-65b5fa2b00db</guid><pubDate>Wed, 12 Aug 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-08-12T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/914no0ei/tharpanam.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ tharpanam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/914no0ei/tharpanam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆடி-27 (புதன்கிழமை)</p><p>பிறை : தேய்பிறை</p><p>திதி :  அமாவாசை நள்ளிரவு 12.16 மணி வரை பிறகு பிரதமை</p><p>நட்சத்திரம் :  பூசம் காலை 9.10 வரை பிறகு ஆயில்யம்</p> <p>யோகம் :  சித்தயோகம்</p><p>ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை</p><p>எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை</p><p>சூலம் : வடக்கு</p><p>நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை</p> <h2>ஆடி அமாவாசை</h2><p>ஆடி அமாவாசை. ராமேஸ்வரம், வேதாரண்யம், திருவள்ளூர், திலதர்ப்பணபுரி கோவில்களில் பித்ரு தர்ப்பணம் செய்ய நன்று. திருக்கண்ணபுரம் ஸ்ரீ சௌரிராஜப் பெருமாள் விபீஷணாழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல். நயினார் கோவில் ஸ்ரீ சௌந்திர நாயகி சிவலிங்க பூஜை செய்தருளல். விருதுநகர் சமீபம் சதுரகிரி ஸ்ரீ சுந்தரமகாலிங்கம் கோவிலில் பெருந்திருவிழா. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் புறப்பாடு. </p>  <p>திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை தலத்தில் திருமஞ்சனம். கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு. விருதுநகர் ஸ்ரீ விஸ்வநாதர், வேதாரண்யம் ஸ்ரீ திருமறைக்காடர் கோவில்களில் அபிஷேகம்.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - நலம்</p><p>ரிஷபம் - பொறுப்பு</p><p>மிதுனம் - லாபம்</p><p>கடகம் - போட்டி</p><p>சிம்மம் - நட்பு</p><p>கன்னி - ஆதரவு</p> <p>துலாம் - ஆக்கம்</p><p>விருச்சிகம் - உதவி</p><p>தனுசு - தேர்ச்சி</p><p>மகரம் - நன்மை</p><p>கும்பம் - புகழ்</p><p>மீனம் - முயற்சி</p> ]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 12.8.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு கனவுகள் நனவாகும் நாள்...</title><link>https://www.maalaimalar.com/Today-Transit/today-rasi-palan-in-tamil-12-8-2026</link><comments>https://www.maalaimalar.com/Today-Transit/today-rasi-palan-in-tamil-12-8-2026#comments</comments><guid isPermaLink="false">fdf53f96-9eb3-4c77-a741-04efab78a3a8</guid><pubDate>Wed, 12 Aug 2026 01:27:17 +0000</pubDate><atom:updated>2026-08-12T01:27:17.196Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rasipalan,Daily Rasipalan,ராசி பலன்,இன்றைய ராசி பலன்கள்,Todays rasipalan</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-04-06/tfs7454t/astrology.jpg.jpeg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Today Rasi palan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-04-06/tfs7454t/astrology.jpg.jpeg?w=280" width="280"></media:thumbnail><category>இன்றைய ராசி பலன்கள்</category><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>நட்பால் நன்மை ஏற்படும் நாள். வாகனம் வாங்கும் யோகம் உண்டு. தாமதப்பட்டு வந்த காரியங்களை இன்று துரிதமாகச் செய்து முடிப்பீர்கள்.</p><h2>ரிஷபம்</h2><p>முக்கியப் புள்ளிகளால் முன்னேற்றம் கூடும் நாள். பொருளாதார நிலை உயரும். நாட்டுப்பற்று மிக்க நண்பர் ஒருவரால் நல்ல காரியம் விரைவாக நடைபெறும்.</p><h2>மிதுனம்</h2><p>எதிரிகள் விலகும் நாள். சுபகாரியப் பேச்சு முடிவாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்பு வந்து சேரும்.</p><h2>கடகம்</h2><p>குடும்பச்சுமை கூடும் நாள். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது.</p><h2>சிம்மம்</h2><p>விரயத்திற்கேற்ற வரவு வந்து சேரும் நாள். வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். பெற்றோர் நலனில் அக்கறை தேவை. வாகனப் பராமரிப்புச் செலவுகளால் வாட்டம் ஏற்படும்.</p><h2>கன்னி</h2><p>கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். கடமையில் கண்ணும், கருத்துமாக 2 இருப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்க முன்வருவீர்கள்.</p><h2>துலாம்</h2><p>தொல்லை தந்தவர்கள் எல்லையை விட்டு விட்டு விலகும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்காக எடுத்த முயற்சி கைகூடும்.</p><h2>விருச்சிகம்</h2><p>கனவுகள் நனவாகும் நாள். நாணயமும், நேர்மையும் கொண்ட நண்பர்களால் நம்பிக்கைகள் நடைபெறும். சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.</p><h2>தனுசு</h2><p>யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்சினை ஏற்படும்.</p><h2>மகரம்</h2><p>நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.</p><h2>கும்பம்</h2><p>ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். கைமாத்தாக கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும். பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட பகை மாறும்.</p><h2>மீனம்</h2><p>பொது வாழ்வில் புகழ் கூடும் நாள். அடுத்தவர் நலனில் எடுத்த அக்கறைக்கு ஆதாயம் கிட்டும். பூர்வீக சொத்தை விற்றுப் புதிய சொத்தை வாங்குவீர்கள்.</p>]]></content:encoded></item></channel></rss>