<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 28 Aug 2026 10:12:25 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: பிரேமலதா வாழ்த்து- நன்றி தெரிவித்தார் சபாநாயகர் - 28 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-28-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-28-august-2026#comments</comments><guid isPermaLink="false">9bc913c5-ed9d-43ae-847f-c4bc775f64fc</guid><pubDate>Fri, 28 Aug 2026 04:01:44 +0000</pubDate><atom:updated>2026-08-28T09:24:13.541Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/85q6eeqo/prematha.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரேமலதா - சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரேமலதா - சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/85q6eeqo/prematha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள், வாக்குறுதிகள் அனைத்தையும் முதலமைச்சர் அறிவிப்பாக வெளியிடுவார்- அமைச்சர் என்.ஆனந்த்</p><p>ஆளும் அரசு செய்ய வேண்டியதை நினைவூட்டிக்கொண்டே இருப்பது தான் எதிர்கட்சிகளின் வேலை- கே.என்.நேரு</p><p>தவெக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என அமைச்சர் விளக்கம்.</p><p>தவெக நிறைவேற்றாத வாக்குறுதிகளின் பட்டியலை எதிர்கட்சியினர் வாசித்த நிலையில் அமைச்சர் ஆனந்த் விளக்கம்.</p><p>சட்டப்பேரவையில் அமைச்சர் விக்னேஷுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சபாநாயகர் JCD பிரபாகர்.</p><p>அவை உறுப்பினர்கள் அனைவரது சார்பாக வாழ்த்துவதாக தெரிவித்த சபாநாயகருக்கு அமைச்சர் விக்னேஷ் நன்றி தெரிவித்தார்.</p><p>ஜல்லிக்கட்டு என்ன Gladiator போட்டியா? ஊருக்கு வெளியே கட்டிய மைதானத்தால் பிரயோஜனம் இல்லை - அமைச்சர் நிர்மல் குமார்</p><p>ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு. அதனால் புதிய மைதானம் கட்டப்பட்டது - திமுக MLA எ.வ.வேலு</p><p>திமுக ஆட்சியில் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மைதானத்தை கட்டியதற்கு பதிலாக அந்த தொகையை சர்க்கரை ஆலைக்கு வழங்கியிருக்கலாம்- தவெக MLA கருப்பையா</p><p>திருவள்ளூர் தொட்டா ரெட்டி குப்பத்தில் ஆசிட் ஊற்றி பெண் எரித்துக்கொன்றவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்- பிரேமலதா</p><p>அனைத்து சகோதரர்களுக்கும் ரக்ஷா பந்தன் வாழ்த்துகள் எனக் கூறிய பிரேமலதாவுக்கு சபாநாயகர் நன்றி தெரிவித்தார். </p><p>கலைஞருக்கு பேனா சிலை வைப்பதற்கு பல்வேறு எதிர்ப்புகள் இருந்தது, அதனால்தான் கைவிடப்பட்டது என்றும் சபாநாயகர் தெரிவித்தார். </p><p>கலைஞரின் சேவையைப் பாராட்டி தமிழ்நாட்டின் சிற்பி என பேனா சிலை அமைக்க எழுத்தாளர்கள் கோரிக்கை வைத்தனர். பொதுமக்கள் கருத்து கேட்டு மத்திய அரசின் அனுமதி பெற்றுத்தான் கலைஞர் பேனா சிலை அமைக்க நடவடிக்கை எடுத்தோம். தற்போதைய பொருளாதார நிலையில் கலைஞருக்கு பேனா சிலை வேண்டாம் என்று தான் மு.க.ஸ்டாலின் கூறினார்- எ.வ.வேலு</p><h2><strong>கடலில் பேனா சிலை எதற்கு? அருண்ராஜ்</strong></h2><p>நிதியில்லை என்றால் கலைஞரின் பேனா சிலையை கடலில் வைக்க முயன்றது ஏன்?. நிதி பற்றாக்குறை என்று கூறித்தான் 24 மாதங்களாக மகளிர் உரிமைத்தொகை கொடுக்காமல் காலம் தாழ்த்தினீர்கள். இன்னொருத்தரை சார்ந்து இருக்கும் நிலையை தவிர்க்க தான் சட்டமன்ற உறுப்பினருக்கு கார் வழங்குகிறார் முதலமைச்சர் என  அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.</p><p>விளையாட்டு துறை அமைச்சராக செங்கோட்டையன் இருந்த போது ரூ.10 கோடியில் பதக்கம் கூட தராமல் இருந்தது ஏன்?. உங்களை போல் நாங்களும் ஒன்றுமே செய்யாமல் இருக்க வேண்டுமா என செங்கோட்டையனுக்கு கேஎன் நேரு கேள்வி எழுப்பினார். </p><p>செஸ் போட்டிகளை போலத்தான் கார் ரேஸை விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த உதயநிதி நடத்தினார்- கேஎன் நேரு</p><p>நீங்கள் கார் ரேஸை கொச்சைப்படுத்தவில்லை, கார் ரேஸ் வீரர்களை கொச்சைப்படுத்துகிறீர்கள்- உதயநிதி ஆவேசம்</p><p>சென்னை நகரத்திற்குள் இரவு நேரத்தில் முதன்முறையாக கார் ரேஸ் நடத்தி சாதித்து காட்டினோம்- உதயநிதி</p><p>கார் ரேஸ் ரூ.24 கோடியில் நடத்தினீர்கள், சட்டமன்ற உறுப்பினருக்கு கார் தருவதை கேள்வி கேட்கிறீர்களே நியாயமா? என அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பினார். </p><p>தொகுதியை சுற்றி வந்து ஆய்வு மேற்கொள்ளவே எம்எல்ஏக்களுக்கு கார் கொடுக்கப்படுகிறது- அமைச்சர் நிர்மல்குமார்</p><p>எம்எல்ஏக்கள் பல கார்கள் வைத்திருந்து பலன் இல்லை, கார் எடுத்துக் கொண்டு தொகுதிக்கு செல்ல வேண்டும்- அமைச்சர் நிர்மல்குமார்</p><p>எம்எல்ஏக்களுக்கு கார் கொடுத்து என்ன பயன்? முழு பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய முடியவில்லை, மக்கள் வாழ்வாதாரம் உயர்த்தாது எம்எல்ஏக்கு கார் தநந்து என்ன பயன்? என திமுக எம்எல்ஏ மார்கண்டேயன் கேள்வி எழுப்பினார். </p><p>சாதிய பிரச்சனைகள் அதிகம் நடக்கும் கிராமங்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும்- அமைச்சர் வன்னி அரசு</p><p>சமத்துவ சுடுகாடு வைத்துள்ள ஊராட்சிக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும்-அமைச்சர் வன்னி அரசு</p><p>ஏகனாபுரம் பகுதியில் புதிதாக ஒரு சமூக நல கூடம் கட்டித்தரப்படும்- அமைச்சர் வன்னி அரசு</p><p>புதிய சமூக நல்லிணக்க ஊராட்சி விருது வழங்கப்படும்- வன்னிஅரசு</p><p>பதவி, பரிசுக்காக நாங்கள் அரசியலுக்கு வரவில்லை, நாங்கள் பதவிக்காக போனோம் என யாரும் சொல்ல முடியாது- வன்னி அரசு</p><p>அமைச்சர் இருக்கையில் என்னை அமர வைத்த திருமா நாளையே அழைத்தாலும் போராட்டக்களத்திற்கு சென்றுவிடுவேன்- வன்னி அரசு</p><p>எங்கள் இலக்கு என்பது சமூகநீதி, சமத்துவம்; அதன் அடிப்படையில் தான் த.வெ.க. அமைச்சரவையில் பங்கு பெற்றுள்ளோம்- வன்னி அரசு</p><p>விசிக தலைவர் திருமாவளவனுக்கு நன்றி கூறுகிறேன் என உதயநிதி கூறியதம் முதன்முறையாக நன்றி கிடைத்துள்ளது என வன்னி அரசு மகிழ்ச்சி அடைந்தார்.</p><p>திருமாவளவனுக்கும் எனக்கும் இருந்த உறவு அண்ணன் தம்பி போன்ற உறவு. திமுகவும், விசிகவும் தேர்தலுக்கான கூட்டணி மட்டுமின்றி கொள்கைக் கூட்டணியாக செயல்பட்டது - உதயநிதி ஸ்டாலின்</p><p>என் அரசியல் ஆசான் திருமாவளவன் தான் என ஏற்கனவே கூறியிருக்கிறேன்- உதயநிதி ஸ்டாலின்</p><p>வெற்றி பெற்ற திமுகவினர் திருமாவளவனுக்கு நன்றி கூறவில்லை என அமைச்சர் வன்னி அரசு பேசினார்.</p><p>கூட்டணியில் வெற்றி கிடைக்கும் போது அது இருதரப்புக்கும் பொருந்தும், நாங்கள் நன்றி கூறிவிட்டோம்- அமைச்சர் </p><p>அமைச்சர்கள் மானியக்கோரிக்கை மீது பேசுவார்கள் நாங்கள் பார்த்திருக்கிறோம், இன்று எங்களுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது- அமைச்சர் வன்னி அரசு</p><p>தமிழ்த்தேசிய பேரியக்கம் த.வெ.க. ஆட்சியில் இடம்பெற்றிருப்பது மிகப்பெரிய வரலாறு- அமைச்சர் வன்னி அரசு</p><p>சாதி ஒழிப்பு களத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது- அமைச்சர் வன்னி அரசு</p><p>எனது தேர்தல் வெற்றிக்காக உழைத்த பாமக நிர்வாகிகளுக்கும் எனது நன்றிகள்- அமைச்சர் வன்னி அரசு</p><p>தமிழ்நாட்டின் முக்கிய ஊடகங்கள், பத்திரிகைகளின் பெயர்களை குறிப்பிட்ட சட்டசபையில் நன்றி தெரிவத்தார் அமைச்சர் வன்னி அரசு</p><p>எனது வெற்றியை விட வன்னி அரசுவின் வெற்றிதான் முக்கியமானது என எனக்காக தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்ட உதயநிதிக்கு நன்றி- வன்னி அரசு</p><p>என்னை கைது செய்ய வேண்டும் என முழக்கமிட்டப்பட்ட அதே சபையில் என்னை அமரவைத்து அழகு பார்த்திருக்கிறார் திருமாவளவன்- வன்னி அரசு</p><p>பேரவையில் இன்று நான் பேசுவது கன்னி உரையல்ல, வன்னி உரை- சமூகநீதி துறை மானியக்கோரிக்கை விவாதங்கள் மீதான உரையை தொடங்கிய அமைச்சர் வன்னி அரசு</p><p>நன்றி சொல்லியிருக்க வேண்டும் என்று தான் கூறினாரே தவிர வேறு தவறாக கூறவில்லை- அமைச்சர் செங்கோட்டையன்</p><p>நன்றி சொல்ல தகுதியில்லை என தமிமுன் அன்சாரியை பார்த்து எப்படி கூற முடியும்? என அமைச்சர் ஷாஜகானுக்கு கே.என்.நேரு கேள்வி எழுப்பினார்.</p><p>மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின் சமூகநீதி கணக்கெடுப்பு நடத்தப்படும்- அமைச்சர் சம்பத்குமார் அறிவிப்பு</p><p>கலைஞர் மஞ்சள் துண்டு அணிந்தது குறித்து அமைச்சர் ஒருவர் சபையில் பேசியிருந்தார். இடஒதுக்கீடு வழங்கியதற்காக கலைஞர் கருணாநிதிக்கு ராமதாஸ் மஞ்சள் துண்டு அணிவித்தார். பாராட்டு விழா நடத்தி அந்த மேடையிலேயே கலைஞருக்கு மஞ்சள் துண்டு அணிவித்தார் ராமதாஸ். 10.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கும் சாதிவாரி கணக்கெடுப்புக்கும் தொடர்பில்லை- பாமக எம்எல்ஏ கணேஷ்குமார். </p><p>திமுக கூட்டணியில் இருந்து ஐயூஎம்எல் நன்றி கெட்டத்தனமாக வெளியே வரவில்லை- அமைச்சர் நிர்மல்குமார்</p><p>திமுகவும் அதிமுகவும் சேர்ந்து ஆட்சியமைக்க முயன்றதால் கூட்டணியில் இருந்து வெளியேறியதாக காதர் மொய்தீன் கூறினார்- நிர்மல்குமார்</p><p>யாரால் வென்றோம் என திமுகவை குறிப்பிட்டு அமைச்சர் ஷாஜகான் பேசியதே நன்றி உணர்வுதானே- சபாநாயகர்</p><p>எந்த துறை சார்ந்த அமைச்சர் பதலளிக்க வேண்டுமோ அவருக்குத்தான் சட்டசபை விவாதத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்- சபாநாயகர்</p><p>தேவையற்ற வார்த்தைகளை பேசாமல் இருந்தால் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கலாம்- அமைச்சர் நிர்மல்குமார்</p><p>அமைச்சர் ஷாஜகான் குறித்து தமிமுன் அன்சாரி பேசிய பேச்சு  அமளி ஏற்பட்டது.</p><p>IUML அலுவலகத்துக்கு வந்த முதல் முதலமைச்சர் விஜய் தான். முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சி நல்ல திசை நோக்கி செல்கிறது- அமைச்சர் ஷாஜகான்</p><p>ஒரு கையில் குர்ஆனையும் மறு கையில் அரசியலமைப்பை தாங்கிப் பிடியுங்கள் எங்களை வழிநடத்தியவர் காதர் மொய்தீன்- அமைச்சர் ஷாஜகான்</p><p>சட்டமன்ற தேர்தலில் தனது வெற்றிக்கு உழைத்த முக ஸ்டாலின், உதயநிதிக்கு நன்றி- சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான்</p><p>வன்னியருக்கான உள்இடஒதுக்கீடு கேட்டு நீண்ட நாட்களாக வன்னியர் சங்கத்தினர் போராடி வருகின்றனர்- எடப்பாடி பழனிசாமி</p><p>வன்னியர் இடஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டதாக சிவி சண்முகம் பேசியதற்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். </p><p>10.5% ஒதுக்கீட்டை வழங்கக்கூடாது என 2021-ல் நடந்த சபையில் தீர்மானம், ஸ்டாலின் உறவினர் வழக்கு தொடர்ந்தார்-சிவி சண்முகம்</p><p>வன்னியருக்கான இடஒதுக்கீடு தொடர்பாக சிவி சண்முகம் கூறிய குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கொடுக்க வேண்டும்- எம்ஆர்கே பன்னீர்செல்வம்</p><p>வன்னியர்களுக்கு இடஒதுக்கீடுக்கு முட்டுக்கட்டை என சிவி சண்முகம் நேற்று பேரவையில் பேசியது தவறு- எம்ஆர்கே பன்னீர்செல்வம்</p><p><strong>வன்னியர் இடஒதுக்கீடு- சட்டசபையில் வாக்குவாதம்</strong> </p><p>வன்னியர்களுக்கான 10.5% ஒதுக்கீட்டுக்கு எதிராக ஸ்டாலினின் உறவினர் வழக்கு தொடுத்து முட்டுக்கட்டை போட்டனர்-சிவி சண்முகம்</p><p>விடுதியை ஆய்வு செய்தபோது மாணவர்களுடன் உரையாடிய முதலமைச்சர் எங்களை அழைத்து அறிவுறுத்தினார்- அமைச்சர்</p><p>கனவுகளுடன் விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களுக்கான அனைத்து வசதியும் செய்து கொடுக்க முதலமைச்சர் அறிவுறுத்தினார்- அமைச்சர்</p><p>575 விடுதிகளில் கண்காணிப்பு கேமராமக்கள் பொருத்தப்பட்டுள்ளன- அமைச்சர் சம்பத்குமார்</p><p>மாதந்தோறும் விடுதியில் ஆய்வு நடைபெறுகிறது, மாணவர் விடுதிகளை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்ய அனுமதி- அமைச்சர்</p><p>பிளஸ் 1 மாணவர்களுக்கான ஹெல்மெட், குடிநீர் பாட்டிலுடன் நவீன சைக்கிள் வழங்க ரூ.277 கோடி நிதி ஒதுக்கீடு- அமைச்சர்</p><p>விடுதிகளில் காலி பணியிடங்கள் ஆசிரியர் தேர்வாணையம் மூலம் பூர்த்தி செய்ய நடவடிக்கை- அமைச்சர் சம்பத்குமார்</p><p>5 லட்சம் மாணவர்களுக்கு நவீன மிதிவண்டி வழங்குவதற்கு 11 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைப்பு- அமைச்சர் சம்பத்குமார்</p><p>ஒரு தலைமுறையை மாற்ற வேண்டுமென்றால் அந்த தலைமுறைக்கு கல்வியை கொடுக்க வேண்டும்- அமைச்சர் சம்பத்குமார்</p><p>திறமை இருந்தும் வாய்ப்பு இல்லாத நிலை இருக்க கூடாது, வாய்ப்பு கிடைத்தால் எந்த சமூகமும் உயரும்- அமைச்சர் சம்பத்குமார்</p><p>விஜய் தமிழ்நாடு முதலமைச்சராவார் என 12 ஆண்டுகளுக்கு மு ன்பே கணித்தவர் அமைச்சர் ஆனந்த்- அமைச்சர் சம்பத்குமார்</p><p>பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கும் அமைச்சர் பாடிய எம்ஜிஆர் பாடலுக்கும் என்ன சம்பந்தம் என தெரியவில்லை- கே.என்.நேரு</p><p>மக்கள் நலன் என்று கூறி தன் மக்கள் நலனை மட்டும் பார்த்தனர் என எம்ஜிஆர் பாடல் பாடி அமைச்சர் சம்பத்குமார் உரை</p><p>பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மீதான மானிய கோரிக்கை- அமைச்சர் சம்பத்குமார் பதிலுரை அளித்து வருகிறார். </p><p>இந்தாண்டு மழைப்பொழிவு கூடுதலாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை- சேகர்பாபு</p><p>பருவமழைக்கு முன்னதாக சென்னையில் மழைநீர் கால்வாய்கள் தூர்வாருவதற்கு ஒப்பந்ததாரர்களுக்கு நிதிவிடுவிக்கவில்லை- சேகர்பாபு</p><p>அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து தீவிர ஆலோசனை- அமைச்சர் வெங்கட்ரமணன்</p><p>கடந்த ஆட்சிகளில் நடந்தது போல் ரேஷன் கடை மூலம் மட்டுமல்ல பசுமை அங்காடி மூலமும் பொருட்கள் வழங்க நடவடிக்கை அமைச்சர் வெங்கட்ரமணன்</p><p>உணவுத்துறை அமைத்து கண்காணித்து வரும் நிலையில் விலை அதிகமாக உள்ள பொருளை அரசு விற்பனை செய்ய நடவடிக்கை- அமைச்சர் வெங்கட்ரமணன்</p><p>வெங்காயம் உள்ளிட்ட 41 பொருட்களுக்கான விலையை தினமும் கவனித்து வருகிறோம்- அமைச்சர் வெங்கட்ரமணன்</p><p>ஈரான் போர், எரிபொருள் விலை உயர்வால் தான் விலைவாசி பொருட்களும் விலை உயர்ந்துள்ளது- அமைச்சர் வெங்கட்ரமணன்</p><p>எரிபொருள் விலை உயரும் நேரத்தில் மளிகை பொருட்கள் பதுக்கல், அதனால் விலை உயர்வு சாதாரணம்- சிபிஎம் எம்எல்ஏ செல்லசாமி</p><p>பண்டிகை காலம் வருவதால் அத்தியாவசிய பொருட்களும் ரேஷன் கடை மூலம் வழங்க வேண்டும்- சிபிஐ எம்எல்ஏ ராமச்சந்திரன்</p><p>பண்டிகை காலங்களில் மளிகை பொருள் தொகுப்பு தருவதை போல் ரேஷனில் தற்போதும் வழங்க வேண்டும்- தாரகை கத்பட்</p><p>அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலைவாசி 30 முதல் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது- பாமக எம்எல்ஏ கணேஷ்குமார்</p><p>வறட்சி காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து வந்த அரிசியின் வரத்தும் குறைந்ததால் விலை உயர்வு- எடப்பாடி பழனிசாமி</p><p>துவரம் பருப்பு, அரிசி, சர்க்கரை, எண்ணெய் விலைவாசி உயர்வால மக்கள் அவதி- உதயநிதி ஸ்டாலின்</p><p>த.வெ.க. அரசு அமைந்தது முதல் அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது- உதயநிதி ஸ்டாலின்</p><p>அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு தொடர்பாக சபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்</p><p>தொடங்கியது சட்டசபை- எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரை</p><p>சட்டசபைக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வருகை.</p>]]></content:encoded></item><item><title>GTA-6 | வீடியோ கேம் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதிய வெர்சன் வெளியீடு</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/gta-6-highly-anticipated-new-version-release</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/gta-6-highly-anticipated-new-version-release#comments</comments><guid isPermaLink="false">d30a66b3-ca69-4361-9a1d-477258d4f402</guid><pubDate>Fri, 28 Aug 2026 10:02:03 +0000</pubDate><atom:updated>2026-08-28T10:02:03.835Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Video game,Rockstar Games,GTA 6,ராக்ஸ்டார் கேம்ஸ்,ஜிடிஏ 6,வீடியோ கேம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/fu8y5rq0/Untitled-design.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ GTA-6 video game version]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/fu8y5rq0/Untitled-design.jpg?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வீடியோ கேம் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஜி.டி.ஏ (Grand Theft Auto) கேமின் அடுத்த வெர்சனான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D">ஜி.டி.ஏ.6</a>-இன் முன்னோட்ட 26 நிமிட காணொளி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.</p><p>ராக்ஸ்டார் வெளியிட்டுள்ள காணொளியில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் வசிக்கும் முக்கிய கதாபாத்திரங்களான ஜேசன் டுவால் மற்றும் லூசியா கமீனோஸின் வாழ்க்கை இடம்பெற்றிருந்தன.</p><h3><strong>ஜி.டி.ஏ வீடியோ கேம்</strong></h3><p>ஜி.டி.ஏ (GTA) கேம் என்பது அமெரிக்க நகரத்தில் வசிக்கும் ஒருவர், அந்த தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களையோ அல்லது காரில் வரும் வேறொருவரை வெளியே இழுத்து தள்ளிவிட்டு, அந்த வாகனத்தை திருடி செல்வதுதான் கதைக்களமாக உள்ளது.</p><p>இதையடுத்து அந்த நபர் காரை எடுத்தவுடன், அவருக்கு ஒரு வேலையை முடிக்குமாறு ஒரு டாஸ்க் (task) கொடுக்கப்படுகிறது. </p><p>அந்த டாஸ்கை எந்த நபர் முடிக்க திருடப்பட்ட வாகனத்தில் செல்லும்போது, காரில் உள்ள ஜிபிஎஸ் கருவி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து, அந்த காரை காவல்துறை விரட்டி துரத்துவதும் கதைக்களமாக உள்ளது.</p><h3><strong>1997-இல் அறிமுகம்</strong></h3><p>இந்த கேமில் பல அம்சங்கள் வீடியோ கேம் பயனர்களுக்கு அளிக்கப்பட்டு, சுவாரஸ்யமாக விளையாட தூண்டுகிறது. இந்த வீடியோ கடந்த 1997-ஆம் ஆண்டு வெளியானதில் இருந்து, உலகம முழுவதும் பல கோடி கேம் பிரியர்களால் விளையாடப்பட்டு வருகிறது.</p><p>இதையடுத்து வெளியான தொடர்களில், ஜேசன் டுவால் என்ற கதாபாத்திரத்திற்கும் லூசியா கமீனோஸ் என்ற மற்றொரு கதாபாத்திரத்திற்கும் இடையேயான காதல் உறவு அறிமுகம் செய்யப்பட்டது.</p><p>ராக்ஸ்டார் நிறுவனம் கடந்த 2018-இல் வெளியிட்ட ‘ரெட் டெட் ரிடெம்ப்ஷன் 2’ என்ற தொடரில், பயனர்கள் விளையாடும் முக்கிய கதாபாத்திரம் செய்யும் செயலானது, அந்த கதாபாத்திரத்தின் நற்பெயரை பாதிப்பதாக அமைந்தது.</p><p>இதைத்தொடர்ந்து 2013-இல் வெளியான ஜிடிஏ-5 வீடியோ கேம், 2,000 கோடிக்கும் அதிகமான பிரதிகளை விற்பனை செய்தது.</p><p>மேலும் உலகம் முழுவதும் அதிகம் விளையாடப்படும் விளையாட்டுகளில் ஒன்றாக மாறியது. இது ராக்ஸ்டார் நிறுவனத்திற்கு கோடிக்கணக்கான பணத்தை ஈட்டித் தருவதாக அமைந்தது.</p><h3><strong>புதிய வெர்சன்</strong></h3><p>இந்த நிலையில் ராக்ஸ்டார் நிறுவனம் தனது அடுத்த மேம்படுத்தப்பட்ட வெர்சனான ஜிடிஏ-6 வீடியோ கேமின் டிரெய்லரை நெட்ஃபிளிக்ஸ் மற்றும் யூடியூப் தளத்தில் இன்று வெளியிட்டுள்ளது. இந்த 26 நிமிட காணொளி 5,000 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.</p><p>இந்த புதிய வெர்சன் நவம்பர் 19 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>மேலும் ராக்ஸ்டார் வெளியிடவுள்ள ஜிடிஏ-6 வீடியோ கேம், பார்வையாளர்களை எந்த அளவுக்கு ஈர்க்கிறது என்பதை பொறுத்தே இதன் வெற்றி தீர்மானிக்கப்படும்.</p>]]></content:encoded></item><item><title>நேபாளத்தை உலுக்கிய வெள்ளம்..  தோண்ட, தோண்ட பிணங்கள்.. பலி எண்ணிக்கை
500-ஆக உயர்வு</title><link>https://www.maalaimalar.com/news/world/nepal-flash-flood-massive-devastation-and-rising-death-toll-of-500</link><comments>https://www.maalaimalar.com/news/world/nepal-flash-flood-massive-devastation-and-rising-death-toll-of-500#comments</comments><guid isPermaLink="false">cfbad3c0-f079-49eb-967a-bd84ac843c5b</guid><pubDate>Fri, 28 Aug 2026 10:01:41 +0000</pubDate><atom:updated>2026-08-28T10:01:41.869Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாளம்,nepal,பலி எண்ணிக்கை உயர்வு,Death toll,nepal flood,நேபாளம் வெள்ளம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/0aqsixbm/Nepal.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nepal flood]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/0aqsixbm/Nepal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நேபாளத்தை உலுக்கிய வெள்ளப்பெருக்கில் பலர் சிக்கியுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 500-ஆக உயர்ந்துள்ளது.</strong></em></p><p>நேபாளத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம், அங்குள்ள மத்திய மாவட்டங்களை உருக்குலைத்து உள்ளது.</p><p>திபெத்தின் இமயமலை பகுதியில் உருவாகும் கோலா ஆறு, நேபாளம் எல்லைப்பகுதி வழியாக பாய்ந்து நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தை அடைகிறது. </p><p>அதன்பின் சிறு ஆறுகளுடன் இணைந்து ரசுவா பகுதியில் போடே கோஷி ஆறாக ஓடுகிறது. இதற்கிடையே <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81" rel="nofollow">பனிச்சரிவு</a> காரணமாக லெண்டே கோலா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நேபாளத்தை நோக்கி அசுர வேகத்தில் பாய்ந்தது.</p><p>சுமார் 30 அடி உயரத்தில் பாறைகள், மண் உள்ளிட்டவைகளுடன் சீறி வந்த காட்டாற்று வெள்ளம் நேபாளத்தின் ரசுவா, தாடிங் ஆகிய மாவட்டங்களில் ஓடும் போடே கோஷி ஆற்றில்  நுழைந்தது. அந்த ஆற்றின் வழியாக திரிசூலி ஆற்றில் கலந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. </p><p>கட்டுக்கடங்காமல் சென்ற காட்டாற்று வெள்ளம் ஆறுகளின் இருபுறமும் உள்ள வீடுகள், பெரிய கட்டிடங்கள், சாலைகள், பாலங்கள், வாகனங்கள்,மின் நிலையங்களை அடித்துச் சென்றது. இதில் ஒரு கிராமத்தை சில வினாடிகளில் வெள்ளம் வாரி சுருட்டி சென்றது.</p><h2>தோண்ட, தோண்ட உடல்கள்</h2><p>இந்த காட்டாற்று வெள்ளத்தில் 32 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் அடித்து செல்லப்பட்டனர்.</p><p>இதையடுத்து மீட்புப்பணிகளில் நேபாள ராணுவம், போலீசார் மற்றும் மீட்புக்குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன. அக்கு ழுக்கள் சேறு-சகதிகளில் இருந்து உடல்களை மீட்டு வருகிறார்கள். </p><p>இதில் தோண்ட, தோண்ட உடல்கள் வந்த வண்ணம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று நிலவரப்படி வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 392-ஆக அதிகரித்தது. இன்று 3-வது நாளாக  மீட்புப்பணிகள் நடந்து வரும் நிலையில் சேறு-சகதிகளில் இருந்து தொடர்ந்து உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. </p><p>பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வெள்ளம் பாய்ந்த பகுதிகளில் சேறு-சகதி, மண் குவியல்கள் காணப்படுகின்றன. அதில் உடல்கள் புதைந்திருந்த நிலையில் கடும் சவாலுக்கு மத்தியில் மீட்புப்பணிகள் நடந்து வருகிறது. சேறு-சகதிகள், பாறைகளை அகற்றி உடல்கள் மீட்கப்படுகின்றன.</p><p>பெரும்பாலும் உடல்கள் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டன. மீட்புப்பணிகளில் பொதுமக்களும் உதவி வருகிறார்கள். அவர்களும் சிலரது உடல்களை மீட்டனர்.</p><h2>பலி 500-ஆக உயர்வு</h2><p>இந்த நிலையில் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 500-ஆக உயர்ந்து உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களது உடல்கள் 8 மாவட்டங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக நேபாள போலீசார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p><p>இதில் அதிகபட்சமாக சித்வான் மாவட்டத்தில் 178 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. நவல்ப்பராசி கிழக்கு மாவட்டத்தில் 110 உடல்களும், கோர்கா மாவட் டத்தில் 44 உடல்களும், நுவாகோட் மாவட்டத்தில் 37 உடல்களும், தாடிங் மாவட்டத்தில் 33 உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. </p><p>தனஹு மாவட்டத்தில் 28 உடல்களும், நவல்ப்பராசி மேற்கு மாவட்டத்தில் 27 உடல்களும், ரசுவா மாவட் டத்தில் 12 உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.</p><p>பல்வேறு பகுதிகளில் இருந்து காயமடைந்த மற்றும் சிக்கித் தவித்த 1,545 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 84 பேர் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p> மீட்பு - நிவாரணப் பணிகளுக்காக 14 ஹெலிகாப்டர்கள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக நேபாள ராணுவம் தெரிவித்துள்ளது.</p><p>இந்தியர்கள் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D" rel="nofollow">நேபாளம்</a>, திபெத்தில் வெள்ள பாதிப்பில் சிக்கி வெளிநாட்டினர் உள்பட 1468 பேர் மாயமாகி உள்ளனர். இதில் நேபாளத்தில் உள்ள 517 வெளிநாட்டினர் உள்பட  910 பேரை இன்னும் தொடர்பு கொள்ள முடியவில்லை.</p><p>இதற்கிடையே நேபாளத்துக்கு ஆன்மிக சுற்றுலா சென்ற 21 தமிழர்கள் மீட்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு நேற்று தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் நேபாளத்தின் திரிசூலி-1 மின் திட்ட பகுதியில் பணிபுரிந்த 63 இந்திய தொழிலாளர்கள் மீட்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மீட்கப்பட்ட தொழிலா ளர்களின் பெயர் விவரங்களை மத்திய வெளியுற வுத்துறை வெளியிட்டது. </p><p>இதற்கிடையே 90 அமெரிக்கர்கள் வெள்ளத்தில் சிக்கி மாயமாகி உள்ளனர் என்றும் அவர்களின் நிலை குறித்த தகவல் ஏதும் இல்லை என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். </p><p>இதுதொடர்பாக அமெ ரிக்க வெளியுறவுத்துறை கூறும்போது, அமெரிக்கர்கள் யாரும் உயிரிழந்ததாகத் தகவல் இல்லை என்றும், 3 அமெரிக்கர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தது.</p>]]></content:encoded></item><item><title>‘எந்தக் குழந்தையும் சாதியால் அடையாளம் காணப்படக் கூடாது’ - பள்ளி சேர்க்கை படிவங்களில் இருந்து சாதிப் பத்தியை நீக்க இமாச்சல் அரசு உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/national/no-child-should-be-identified-by-caste-himachal-government-orders-removal-of-the-caste-column-from-school-admission-forms</link><comments>https://www.maalaimalar.com/news/national/no-child-should-be-identified-by-caste-himachal-government-orders-removal-of-the-caste-column-from-school-admission-forms#comments</comments><guid isPermaLink="false">67030a98-13a7-45e8-922c-2c9f906bc015</guid><pubDate>Fri, 28 Aug 2026 09:54:30 +0000</pubDate><atom:updated>2026-08-28T09:54:30.403Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>schools,பள்ளிகள்,சாதி,Himachal Pradesh,இமாச்சலப் பிரதேசம்,caste column,CM Sukhvinder Singh Sukhu,முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/b3w2vbqh/New-Project-2026-08-28T152345.328.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘எந்தக் குழந்தையும் சாதியால் அடையாளம் காணப்படக் கூடாது’ - பள்ளி சேர்க்கை படிவங்களில் இருந்து சாதிப் பத்தியை நீக்க இமாச்சல் அரசு உத்தரவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/b3w2vbqh/New-Project-2026-08-28T152345.328.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2027-28 கல்வியாண்டு முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் மாணவர் சேர்க்கை படிவத்தில் உள்ள, சாதி விவரங்களை கோரும் பகுதியை நீக்கவேண்டும் என இமாச்சலப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. </p><p>முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையில் ஆக.26ம் தேதி நடைபெற்ற பட்டியல் சாதியினர் நல வாரியக் கூட்டத்தில் இந்த முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p><p>சாதி அடிப்படையிலான பாகுபாட்டைக் குறைத்து, சமூகத்தில் சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் மேம்படுத்துவதே இந்த முடிவின் நோக்கம் என்று முதலமைச்சர் சுக்விந்தர் சிங் தெரிவித்துள்ளார்.</p><p>பள்ளி சேர்க்கைப் படிவங்களிலிருந்து சாதிப் பகுதியை நீக்குவது, குழந்தைகள் தங்கள் சாதியின் அடிப்படையில் தாழ்வு மனப்பான்மை கொள்வதைத் தடுக்கவும் உதவும் என்றும் அவர் கூறினார்.</p><h2>சலுகைகள் தொடரும்</h2><p>இந்த உத்தரவால் மாணவர்களுக்கான அரசு சலுகைகள் எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என்றும் அரசு உறுதி அளித்துள்ளது.</p><p>சேர்க்கை படிவங்களில் சாதிப் பத்தி நீக்கப்பட்டாலும், அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை, இடஒதுக்கீடு மற்றும் இதர நலத்திட்டங்களைப் பெற விரும்பும் தகுதியுடைய மாணவர்கள் தங்களின் சாதி சான்றிதழ் விவரங்களைத் தனியாகச் சமர்ப்பித்து சலுகைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>ஆசிய கோப்பை கிரிக்கெட்: வசதி வாய்ப்பு, ஏற்பாடு சரியில்லை என பிசிசிஐ அதிருப்தி- &quot;பி&quot; டீமை அனுப்ப ஆலோசனை</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/india-b-team-likely-for-asian-games-2026-as-bcci-unhappy-with-facilities-and-arrangements-in-japan</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/india-b-team-likely-for-asian-games-2026-as-bcci-unhappy-with-facilities-and-arrangements-in-japan#comments</comments><guid isPermaLink="false">45b94ea3-69ef-4e3d-8548-bf40502360be</guid><pubDate>Fri, 28 Aug 2026 09:52:57 +0000</pubDate><atom:updated>2026-08-28T09:52:57.214Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BCCI,Team India,டீம் இந்தியா,பிசிசிஐ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/ile2jysc/BCCI001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிசிசிஐ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/ile2jysc/BCCI001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆசிய விளையாட்டு போட்டிக்கான ஏற்பாட்டில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதால், பி அணியை அனுப்பி வைக்கலாமா? என்று பிசிசிஐ ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.</p><p>ஆசிய விளையாட்டு போட்டிக்கான ஏற்பாட்டில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதால், பி அணியை அனுப்பி வைக்கலாமா? என்று <a href="https://www.maalaimalar.com/sports/cricket/test-cricket-won-today-shubman-gill-after-2nd-test-vs-sri-lanka-ends-in-draw">பிசிசிஐ</a> ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.</p><p>ACC கூட்டத்தின்போது ஜப்பான் ஒலிம்பிக் அதிகாரிகளிடம் நாங்கள் ஒரு விஷயத்தைத் தெரிவித்தோம். அதாவது, உடை மாற்றும் அறைகள் கூடாரங்களில் அமைக்கப்பட்டிருந்தன மற்றும் கழிவறைகள் அந்தக் கூடாரங்களிலிருந்து 500மீ தொலைவில் இருந்தன. இது வீரர்களுக்கு அதிருப்தி அளிக்கும் சூழலை உருவாக்கியுள்ளது. மேலும், ஹோட்டல் அறைகள் மிகவும் சிறியதாக இருப்பதும் ஒரு பெரிய கவலையாக உள்ளது என்று பிசிசிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.</p><p>2023-ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி தங்கப் பதக்கம் வென்றன.</p><h2>ஆசிய போட்டிக்கான ஆண்கள் டி20 அணி:-</h2><p>ஷ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (வி.கீ.), அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் (வி.கீ.), ஷிவம் துபே, திலக் வர்மா (துணைக்கேப்டன்), அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், வைபவ் சூர்யவன்ஷி, பும்ரா.</p> <p>இந்திய பெண்கள் டி20 அணி:-</p><p>ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிரிதி மந்தனா (துணைக் கேப்டன்), ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ் (வி.கீ.), ஜி. கமாலினி (வி.கீ.), பாரதி புல்மாலி, ஸ்ரீ சாரணி, ரேனுகா தாகூர், கிராந்தி காட், அருந்ததி ரெட்டி, ஷ்ரேயங்கா பாடீல், ராதா யாதவ், நந்தி ஷர்மா.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-thunderstorms-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-thunderstorms-in-chennai#comments</comments><guid isPermaLink="false">3b371b18-89bc-45f3-a1fb-c24b152798ad</guid><pubDate>Fri, 28 Aug 2026 09:51:37 +0000</pubDate><atom:updated>2026-08-28T09:51:37.014Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,Chennai Rain,சென்னை மழை,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/ebm5rj05/rain.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மழை]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/ebm5rj05/rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.</strong></em> </p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>லேசான மழை</strong></h2><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p><p>இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்.</p><p>நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>30-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழையும் பெய்யக்கூடும்.</p><p>31-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழையும் பெய்யக்கூடும்.</p><p>01-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.</p><p>2-ந்தேதி மற்றும் 3-ந்தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.</p><p>இதனிடையே இன்று முதல் 1-ந்தேதி வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>இன்று முதல் 1-ந்தேதி வரை தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>நேபாளத்தில் இருந்து இன்றிரவு சென்னை திரும்பும் 21 தமிழர்கள் - தமிழ்நாடு அரசு ஏற்பாடு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/21-tamils-returning-to-chennai-from-nepal-tonight-tamil-nadu-government-makes-arrangements</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/21-tamils-returning-to-chennai-from-nepal-tonight-tamil-nadu-government-makes-arrangements#comments</comments><guid isPermaLink="false">7853d1d3-07cc-470e-93e1-adf57eaafa29</guid><pubDate>Fri, 28 Aug 2026 09:21:30 +0000</pubDate><atom:updated>2026-08-28T09:21:30.041Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,Government of Tamil Nadu,nepal flood,நேபாள பெருவெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/lz4ug0i3/New-Project-2026-08-28T143320.090.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நேபாளத்தில் இருந்து இன்றிரவு சென்னை திரும்பும் 21 தமிழர்கள் - தமிழ்நாடு அரசு ஏற்பாடு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/lz4ug0i3/New-Project-2026-08-28T143320.090.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாள வெள்ளப்பெருக்கால் அங்கு சிக்கியுள்ள 21 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளதாக, மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்கள் விமானம் மூலம் இன்று இரவு சென்னை திரும்புவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>கைலாஷ் மானசரோவர் யாத்திரை எனப் பல்வேறு பயணங்களுக்காக நேபாளம் சென்றிருந்த 101 தமிழர்களை மீட்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி மற்றும் தகவல் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்திருந்தார்.</p><p>இந்த மீட்பு பணிகள் தொடர்பாக ராஜ்மோகன், ஆதவ் அர்ஜூனா, தென்னரசு உள்ளிட்ட நான்கு அமைச்சர்கள் நேற்று டெல்லியும் விரைந்தனர். </p><p>சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதிலளித்த ராஜ்மோகன், கும்பகோணத்தை தளமாகக் கொண்ட சூப்பர் யாத்ரா நிறுவனம், </p><p>நேபாளத்தை தளமாகக் கொண்ட சாம்ராட் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டின் 10 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 57 பேர் கொண்ட குழு நேபாளத்திற்குச் சென்றிருந்ததில், அக்குழுவில் இருந்த 20 பேர் மீட்கப்பட்டதாகத் தெரிவித்தார். </p><p>கடலூரிலிருந்து 11 பேர், கிருஷ்ணகிரியிலிருந்து ஐந்து பேர், தஞ்சாவூரிலிருந்து 16 பேர், தர்மபுரியிலிருந்து ஒருவர், திருச்சியிலிருந்து நான்கு பேர், திருவண்ணாமலையிலிருந்து ஒருவர், திருவாரூரிலிருந்து இரண்டு பேர், நாமக்கல்லிலிருந்து ஒருவர், மயிலாடுதுறையிலிருந்து ஏழு பேர், சென்னையிலிருந்து ஆறு பேர் மற்றும் புதுச்சேரியிலிருந்து மூன்று பேர் மீட்கப்பட்டவர்களில் அடங்குவர்.</p><p>இந்நிலையில் மத்திய அமைச்சகம் அறிவித்த தகவலின்படி, மீட்கப்பட்ட 21 பேரும் இன்று தமிழ்நாடு வரவுள்ளனர். காத்மண்டுவில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்படும் விமானம் 3.45க்கு டெல்லி வரவுள்ளது. அங்கிருந்து 8 மணிக்கு சென்னைக்கு அழைத்து வரப்படவுள்ளனர். மற்றவர்களை மீட்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. </p><h2>நேபாள பெருவெள்ளம்</h2><p>நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஆக.26ம் தேதி ஏற்பட்ட பயங்கர <a href="https://www.maalaimalar.com/news/world/95-dead-rapidly-melting-himalayas-did-an-earthquake-pave-the-way-for-disaster-what-caused-the-floods-in-nepal">நிலச்சரிவு மற்றும் பனிப்பாறை சரிவு </a>காரணமாக திரிசூலி மற்றும் போதேகோஷி ஆறுகளில் கடுமையான பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த இயற்கைப் பேரிடரால் இதுவரை 480-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>ஈரான் போரால் தான் தமிழ்நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளதாக சட்டசபையில் உணவுத்துறை அமைச்சர் தகவல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/iran-war-blamed-for-price-rise-in-tamil-nadu-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/iran-war-blamed-for-price-rise-in-tamil-nadu-assembly#comments</comments><guid isPermaLink="false">0ccb38f0-167f-45d1-991e-98559b59757b</guid><pubDate>Fri, 28 Aug 2026 09:04:45 +0000</pubDate><atom:updated>2026-08-28T09:04:45.990Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>essential commodities,price hike,விலைவாசி உயர்வு,assembly,Iran War,ஈரான் போர்,சட்டசபை,அத்தியாவசியபொருட்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/ywgqfiwo/Price-Hike-TN-Assembly" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Price Hike - TN Assembly ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/ywgqfiwo/Price-Hike-TN-Assembly?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்ததாக உதயநிதி, எடப்பாடி உள்ளிட்டோர் குற்றம்சாட்டினர். </p><p>ஈரான் போர், வறட்சியே காரணம் என அமைச்சர் விளக்கி, ரேஷன், பசுமை கடைகள் மூலம் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.</p><h2><strong>எதிர்க்கட்சி தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">உதயநிதி ஸ்டாலின்</a></strong></h2><p>விலைவாசி தற்போது நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே இருக்கின்றது. அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை என எந்த பொருளை எடுத்தாலும் கடந்த 3 மாதங்களில் பல மடங்கு விலை உயர்ந்திருக்கின்றது. இதனால் நடுத்தர வர்க்க பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.</p><p>குறிப்பாக இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து அத்தியாவசிய பொருட்களுடைய விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. கம்யூனிஸ்டு கட்சிகள் கூட விலை வாசி உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.</p><h2><strong>விலைவாசி உயர்வு - உதயநிதி</strong></h2><p>விலைவாசி உயர்வில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க தி.மு.க. ஆட்சியில் சிறப்பு பொதுவினியோக திட்டத்தை அறிமுகப்படுத்தி பருப்பு, ரவா, மைதா உள்ளிட்ட பொருட்களை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கபட்டது.</p><p>இந்த ஆட்சியில் மே மாதம் ஒரு கிலோ அரிசி 55 ரூபாய்க்கு, இன்றைக்கு 75 ரூபாயாக விற்பனை ஆகிறது.</p><p>மே மாதம் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 40 ரூபாய் இன்றைக்கு கிலோ 80 ரூபாய். மே மாதம் ஒரு கிலோ துவரம் பருப்பு 150 ரூபாய் இன்றைக்கு கிலோ 180 ரூபாய்.</p><p>மே மாசம் ஒரு கிலோ சர்க்கரை ரூபாய் 40 இன்னைக்கு ஒரு கிலோ 70 ரூபாய் வரை வந்துள்ளது.</p><p>எனவே முதல்-அமைச்சர் தலைமையில் நிதி, உணவு கூட்டுறவு உள்ளிட்ட துறை அமைச்சர்கள் அதிகாரிகள் பங்கேற்கின்ற அளவில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தி விலைவாசி உயர்வை கட்டுபடுத்த உடனடியாக நல்ல தீர்வை காண வேண்டும் என்று <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">உதயநிதி </a>வலியுறுத்தல்.</p><h2><strong>கடும் விலைவாசி உயர்வு - எடப்பாடி பழனிசாமி</strong></h2><p>அ.தி.மு.க. பொதுச் செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF">எடப்பாடி பழனிசாமி</a> கூறுகையில், தமிழ்நாட்டில் அரிசி விலை கிலோ ரூ. 20 வரை உயர்ந்து விட்டது சர்க்கரை ஒரு கிலோ 48 லிருந்து 72 ரூபாயாக உயர்ந்துள்ளது. </p><p>மஞ்சள் ஒரு கிலோ 200 ல் இருந்து 250 ஆகவும் மிளகாய் கிலோ ரூ.200 ல் இருந்து 300 ஆகவும் வெல்லம் ஒரு கிலோ 55 லிருந்து 75 ஆகவும் புளி கிலோ ரூ. 150 ல் இருந்து 250 ஆக உயர்ந்துள்ளது.</p><h2><strong>அரிசி தட்டுப்பாடு</strong></h2><p>இப்போது இங்கும் வறட்சி ஆந்திராவிலும் வறட்சி. இதனால் ஆந்திராவில் இருந்து வரும் அரிசி வரத்து குறைந்துவிட்டது. எனவே விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு முயற்சி எடுக்க வேண்டும். </p><p>இதைத் தொடர்ந்து கணேஷ்குமார்(பா.ம.க ) தாரகை கத் பட், (காங்கிரஸ்) டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்) செல்ல சுவாமி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) ஆகியோரும் விலைவாசி உயர்வு பற்றி எடுத்துச் சொன்னார்கள்.</p><h2><strong>உணவுத்துறை அமைச்சர் விளக்கம்</strong></h2><p>இதைத் தொடர்ந்து உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் பதில் அளித்து கூறியதாவது:- ஈரான் போரால் தான் தமிழ்நாட்டில் விலை வாசி உயர்ந்துள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்ந்ததால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது.</p><p>நம் மாநிலத்தில் மட்டுமல்ல மற்ற மாநிலங்களிலும் விலைவாசி ஏறி உள்ளது. எனவே 41 அத்தியாவசியப் பொருட்களின் விலையை கண்காணித்து வருகிறோம். மக்களுக்கு தங்கு தடையின்றி அத்தியா வசியப் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.</p><h2><strong>விலைக் கட்டுப்பாடு</strong></h2><p>எந்த பொருள் விலை அதிகமாக இருக்கிறதோ அதனை கண்டறிந்து அதனை கட்டுப்படுத்துவதற்கான வழிகளை ஆராய்ந்து வருகிறோம். </p><p>அரிசி சர்க்கரை உருளைக்கிழங்கு உள்ளிட்ட பொருட்களையும் விலையையும் மானிட்டர் செய்கிறோம். மக்களுக்கு தட்டுப்பாடு இருக்கக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக உள்ளோம். </p><p>இதனால் வாரா வாரம் எந்த பொருளின் விலை அதிகமாகிறது என்பதையும் கண்காணிக்கிறோம்.</p><p>எனவே ரேசன் கடைகள் மட்டுமல்லாமல் பசுமை கடைகள் மூலமாகவும் மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்ய அரசு உரிய நடவடிக்கைகளை விரைவில் எடுக்கும்.</p><p>எனவே விலைக்கட்டுப்பாட்டை கட்டுக்குள் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் என்று கூறி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>‘யாரையும் யாரையும் யாரையும் வாழ்க்கையில்  நம்பாதீர்கள்’ - இயக்குநர் செல்வராகவனின் திடீர் பதிவு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/dont-trust-anyoneanyone-at-allin-life-director-selvaraghavans-sudden-post</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/dont-trust-anyoneanyone-at-allin-life-director-selvaraghavans-sudden-post#comments</comments><guid isPermaLink="false">17a4c164-4af8-416b-bf48-357768eedf80</guid><pubDate>Fri, 28 Aug 2026 09:00:06 +0000</pubDate><atom:updated>2026-08-28T09:00:06.804Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Cinema,Director selvaraghavan,சினிமா,இயக்குநர் செல்வராகவன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/sro2dqas/New-Project-2026-08-28T142942.249.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘யாரையும் யாரையும் யாரையும் வாழ்க்கையில்  நம்பாதீர்கள்’ - இயக்குநர் செல்வராகவனின் திடீர் பதிவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/sro2dqas/New-Project-2026-08-28T142942.249.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இயக்குநராக மட்டுமல்லாமல், சமீபகாலமாக படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து, தனது நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/dont-lie-down-in-agony-for-any-reason-selvaraghavans-advice-740689">இயக்குநர் செல்வராகவன்</a>. </p><p>இதனிடையே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர் செல்வராகவன். அவ்வப்போது அவர் பதிவிடும் பதிவுகளும் ரசிகர்களிடையே பெரும் கவனம் ஈர்க்கும். </p><p>அந்தவகையில், தற்போது அவர் ஒரு பதிவை வெளியிட்டு ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார். அப்பதிவில்.,</p><p>“யாரையும் யாரையும் யாரையும் வாழ்க்கையில்  நம்பாதீர்கள்.  எப்பொழுது யார் கவிழ்ப்பார்கள் என்று சொல்லவே முடியாது.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p><p>இப்பதிவால் அவரது குடும்பத்தில் ஏதேனும் பிரச்னையா என இணையவாசிகள் கேள்வி எழுப்பிவருகின்றனர். சமீபகாலமாகவே அவரது மனைவியுடன் பிரச்னை என்பதுபோல தகவல்கள் பரவிவரும் நிலையில் இந்த பதிவு கவனம் ஈர்த்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பெரம்பூர் மக்களின் 30 ஆண்டு கோரிக்கை நிறைவேறியது: முதலமைச்சர் விஜய்க்கு பொதுமக்கள் நன்றி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/peoples-thanks-to-cm-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/peoples-thanks-to-cm-vijay#comments</comments><guid isPermaLink="false">b5502e91-183e-4273-80cd-c819909ce11e</guid><pubDate>Fri, 28 Aug 2026 08:56:36 +0000</pubDate><atom:updated>2026-08-28T08:56:36.570Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,Perambur,tvk,பெரம்பூர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/furepv2d/perambur.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பெரம்பூர் கணபதி தெரு, ராமகிருஷ்ணன் தெரு இடையே சாலை அமைக்கப்பட்டு உள்ளது.]]></media:title><media:description type="html"><![CDATA[ பெரம்பூர் கணபதி தெரு, ராமகிருஷ்ணன் தெரு இடையே சாலை அமைக்கப்பட்டு உள்ளது.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/furepv2d/perambur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கணபதி தெரு, ராமகிருஷ்ணன் தெரு இடையே சாலை வசதி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதி மக்களின் 30 ஆண்டு கோரிக்கை நிறைவேறி இருக்கிறது.</strong></em></p><p>பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட  கணபதி தெரு மற்றும் ராமகிருஷ்ணா தெரு இடையே போதுமான சாலை வசதிகள் இல்லை. இதனால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை இருந்தது. </p><p>எனவே இப்பகுதியில் பாதை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் 30 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இது நிறைவேற்றப்படாமல் இருந்தது.</p><p>இந்த நிலையில் தனது சொந்த தொகுதி மக்களின் 30 ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக முதலமைச்சர் விஜய்யின் உத்தரவுப்படி கணபதிதெரு, ராம கிருஷ்ணன் தெரு இடையே பாதை ஏற்படுத்தப்பட்டு சாலை அமைக்கப்பட்டு உள்ளது.</p><p>இதன் மூலம் மாணவர்கள் சிரமமின்றி பள்ளிக்கு செல்ல முடியும். இதனை அப்பகுதி மக்கள் வரவேற்று உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, கணபதி தெரு, ராமகிருஷ்ணன் தெரு இடையே சாலை வசதி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதி மக்களின் 30 ஆண்டு கோரிக்கை நிறைவேறி இருக்கிறது.</p><p>முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்க்கு</a> எங்களது நன்றி. இதுபோலவே, பெரம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள அடிப்படை வசதிகள், கழிவுநீர் தேங்குவதை தடுக்கவும் மற்றும் தெரு விளக்குகள் எரியாமல் இருப்பதை  கண்டறிந்து மாற்றி அமைப்பது உள்ளிட்ட பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும், அனைத்து பகுதிகளிலும் சாலை வசதிகள் ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவித்து உள்ளனர் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>செப்டம்பர் 1-ந்தேதி நடைபெற இருந்த தமிழ் சினிமா வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு - 
தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/tamil-cinema-strike-postponed-from-september-1</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/tamil-cinema-strike-postponed-from-september-1#comments</comments><guid isPermaLink="false">287e708c-eaca-4bb1-a5f0-67ace0d3dfb6</guid><pubDate>Fri, 28 Aug 2026 08:30:04 +0000</pubDate><atom:updated>2026-08-28T08:30:04.907Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தயாரிப்பாளர்கள் சங்கம்,Tamil Film Producers Council,cm vijay,முதலமைச்சர் விஜய்,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan,Kollywood Strike,Strike Postponed,வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/fyg90v9n/Tamil-Film-Producers-Council" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tamil Film Producers Council ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/fyg90v9n/Tamil-Film-Producers-Council?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திரையரங்குகளில் வெளியிடும் திரைப்படங்களை 8 வாரங்கள் கழித்து மட்டுமே ஓடிடியில் வெளியிட வேண்டும் என விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்தது.</p><h2>வேலை நிறுத்தம்</h2><p>தயாரிப்பாளர்களுடன் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளதாக கூறி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்</a> மற்றும் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் வருகிற 1-ந்தேதி முதல் புதிய தமிழ் திரைப்படங்களை வெளியிடமாட்டோம் எனவும் புதிய படப்பிடிப்புகள் நடைபெறாது என வேலை நிறுத்தத்தை அறிவித்தது. </p><p>தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அறிவிப்பு திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><p>முன்னணி கதாநாயகர்கள் நடித்துள்ள பெரிய பட்ஜெட் படங்கள், சிறு பட்ஜெட் படங்களும் வெளியாக இருந்த நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தம் திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D">வேலை நிறுத்தத்தை</a> கைவிட வேண்டும் என அரசு மற்றும் பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்த நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இன்று வேலை நிறுத்தத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்து உள்ளது.</p><h2>தயாரிப்பாளர்கள் மனு</h2><p>இதுகுறித்து<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D"> தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்</a> மற்றும் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் விடுக்கப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,</p><p>தமிழ்த் திரைப்படத்துறையில் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு கவனத்திற்கு கொண்டு சேர்க்கும் வகையில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், மற்றும் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகியோர் இணைந்து கடந்த 26-ந்தேதி அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ராஜ்மோகனை சந்தித்து திரைத்துறையில் உள்ள பிரச்சினைகளை எடுத்துரைத்து மனுவாக அளித்துள்ளோம்.</p><h2>அமைச்சர் ராஜ்மோகன் அறிவுறுத்தல்</h2><p>அந்த மனுவினை பரிசீலித்த <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D">அமைச்சர் ராஜ்மோகன்</a> சம்பந்தப்பட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்திற்கும் தற்போது தமிழ்நாட்டில் திரைப்பட வெளியீட்டில் என்ன நடைமுறை உள்ளதோ அதனை தொடர்ந்து பின்பற்றுங்கள்.</p><p>சட்டசபை கூட்டத் தொடர் முடிந்தவுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள், ஆகியோரை தமிழ்நாடு அரசு அழைத்து மேற்படி பிரச்சினைக்கு தீர்வு காணும் என்று தெரிவித்துள்ளார். </p><p>மேலும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களையும் தற்போது வேலை நிறுத்தம் என்பது வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.</p><h2>வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு</h2><p>மேற்படி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதலமைச்சர் ஜோசப் விஜய்யின்</a> கவனத்திற்கு கொண்டு சென்று, முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலோடு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று உறுதியாக தெரிவித்ததின் அடிப்படையில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் இணைந்து செப்டம்பர் 1-முதல் அறிவித்த புதிய திரைப்படங்கள் வெளியீடு, படப்பிடிப்பு பணிகள், போஸ்ட் புரொடக்‌ஷன் போன்ற வேலை நிறுத்தம் தற்போது ஒத்திவைக்கப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நேபாள பேரழிவு ஆரம்பம்தான்.. சீனா கட்டும் அணையால்  இந்திய மாநிலங்கள் அழியும் அபாயம்</title><link>https://www.maalaimalar.com/news/world/the-disaster-in-nepal-is-just-the-beginning-indian-states-in-danger-of-total-destruction-due-to-the-dam-built-by-china</link><comments>https://www.maalaimalar.com/news/world/the-disaster-in-nepal-is-just-the-beginning-indian-states-in-danger-of-total-destruction-due-to-the-dam-built-by-china#comments</comments><guid isPermaLink="false">bf2cfb1d-44a8-4a93-ad1a-f17a245a53e9</guid><pubDate>Fri, 28 Aug 2026 08:24:40 +0000</pubDate><atom:updated>2026-08-28T08:24:40.112Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>China,சீனா,நேபாளம்,nepal,வெள்ளம்,flood,வடகிழக்கு மாநிலங்கள்,northeastern states,dam,அணை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/ah2x5w8l/tn-16.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சீனா கட்டும் அணை]]></media:title><media:description type="html"><![CDATA[ சீனா கட்டும் அணை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/ah2x5w8l/tn-16.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">நேபாளத்தில் </a>நேற்று முன் தினம் ஏற்பட்ட திடீர் <a href="https://www.maalaimalar.com/news/world/broken-dam-in-tibet-risk-of-flooding-again-in-nepal-warning-to-people">வெள்ளப்பெருக்கில் </a>பலியானோர் எண்ணிக்கை 469 ஆக உயர்ந்துள்ளது.  2015 நிலநடுக்கத்திற்குப் பிறகு நேபாளத்தில் ஏற்பட்ட மிக மோசமான பேரிடர் இது. </p><p>இதில் நூற்றுக்கணக்கானோர் மாயமாகியுள்ள நிலையில் அவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.</p><h2>எப்படி ஏற்பட்டது?</h2><p>இமயமலையில் திபெத் சீன எல்லையில் உற்பத்தியாகும் கைரோங் நகருக்கு அருகே ஏற்பட்ட பனிச்சரிவு தான் இந்த வெள்ளபெருக்குக்கு காரணம் என்று கூறப்படுகிறது.</p><p>போதே கோஷி நதியில் பனிப்பாறைகள் விழுந்து ஏற்பட்ட அடைப்பினால் அதிகளவில் நீர் அடைபட்டு அணை உடைந்து இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.</p><p>திபெத்தில் மீண்டும் அணை உடைந்ததால் நேபாளத்தில் இன்று மீண்டும் வெள்ளபெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.</p><p>மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதால், திபெத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த மீட்புப் பணிகளை சீனா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக சீன அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p> <h2>பிரம்மாண்ட அணை</h2><p>இமயமலை உலகிலேயே மிக அதிகமான நிலநடுக்க அபாயம் கொண்ட மலைத்தொடராகும்.</p><p>இந்த பேரிடர், இந்தியா-சீனா எல்லைக்கு அருகில் சீனா கட்டி வரும் 'மெடோக்' (Medog) என்ற பிரம்மாண்டமான நீர்மின் அணை மீதான சர்வதேச கவனத்தை திருப்பியுள்ளது.</p> <p>சீன ஆக்கிரமிப்பில் உள்ள திபெத் தன்னாட்சிப் பகுதியின் மெடோக் பகுதியில், யார்லுங் சாங்போ (இந்தியாவில் பிரம்மபுத்திரா) நதியின் குறுக்கே சீனா 60,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன்கொண்ட அணையை அமைத்து வருகிறது.</p><p>2033க்குள் பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ள இந்த அணை, நிலநடுக்கங்கள் அதிகம் நிகழக்கூடிய அதிபாயகரமான மண்டலத்தில் அமைந்துள்ளது.</p><p>எனவே இந்த அணை ஒரு "நீர் வெடிகுண்டு" போன்றது என எச்சரிக்கப்படுகிறது.</p> <h2>எச்சரிக்கை</h2><p>இந்திய மூலோபாய நிபுணர் பிரம்மா செல்லானி, "இமயமலை மண்டலத்தில் உலகின் மிகப்பெரிய அணையைத் தொடர்ந்து கட்டும் சீனாவின் அறியாமையின் மீது இந்த நேபாள பேரிடர் சர்வதேச கவனத்தைத் திருப்புவதோடு ஒரு முக்கிய எச்சரிக்கையும் விடுத்துள்ளது.</p><p>இந்திய திபெத் எல்லைக்கு அருகில் அமையும் இத்திட்டம், கட்டுமானத்தில் உள்ள ஒரு நீர் வெடிகுண்டாகும்.</p><p>இது நேபாளத்தை தாண்டி இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை மூழ்கடிப்பதோடு, வங்கதேசத்திலும் பேரழிவை ஏற்படுத்தும்" என்று எச்சரித்துள்ளார்.</p> <p>முன்னாள் இந்தியத் தூதர் ராஜீவ் டோக்ராவும், சீனா இந்த 60,000 மெகாவாட் அணையை நிறைவு செய்தால் இந்தியாவின் வடகிழக்குப் பகுதிக்கு மிகப்பெரிய ஆபத்து காத்திருப்பதாகக் கவலை தெரிவித்துள்ளார்.</p><p>சுமார் 167 பில்லியன் டாலர் செலவில் கட்டப்படும் இந்த மெடோக் அணை திட்டத்தின் பாதுகாப்பு குறித்து சீன அரசு சார்ந்த புவியியல் ஆய்வு அமைப்பின் வல்லுநர்களே கடந்த ஜூலை மாதம் ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தனர்.</p><p>அதில் இந்த மெடோக் அணை அமையவிருக்கும் தளத்திற்கு நேர் அடியில் Paizhen Fault எனப்படும் செயலில் உள்ள Active fault line, அதாவது நிலநடுக்க அபாய கோடு இருப்பது கண்டறியப்பட்டது குறிப்பிடப்பட்டுள்ளது.</p> <figure><img alt=" &apos;U&apos; வளைவு 
" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/cw6knttl/tn-17.jpg" /><figcaption> 'U' வளைவு 
</figcaption></figure><h2>இந்தியாவுக்கு பேராபத்து</h2><p>திபெத்தில் இருந்து பாயும் யார்லுங் சாங்போ நதி, அருணாச்சல பிரதேசத்தில் 'சியாங்' என்ற பெயரில் நுழைந்து, பின்னர் அசாமில் 'பிரம்மபுத்திரா'வாக உருவெடுத்து வங்கதேசத்திற்குச் செல்கிறது.</p><p>நதி மிகப்பெரிய 'U' வளைவை எடுக்கும் நம்சா பர்வா மலைப் பகுதியில் தான் சீனா இந்த அணையை கட்டுகிறது.</p> <p>கீழ்நோக்கி பாயும் நதியின் நீரை கட்டுப்படுத்தும் ஆற்றல் சீனாவிற்கு செல்வதால், மழைக்காலத்தில் திடீரென தண்ணீரை திறந்துவிட்டால் இந்தியாவில் கடுமையான வெள்ளமும், வறட்சிக் காலத்தில் தண்ணீரைத் தேக்கினால் விவசாயப் பாதிப்பும் ஏற்படும்.</p><p>மேலும் அணையானது நிலநடுக்க மண்டலத்தில் அமைந்திருப்பதால், அணை உடையும் பட்சத்தில் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம் மற்றும் அசாம் மாநிலங்கள் முற்றிலும் அழியும் அபாயம் உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மோசமாக பாதிக்கப்பட்ட தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க என்ன தயக்கம்?- அன்புமணி கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-question-to-tn-govt</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-question-to-tn-govt#comments</comments><guid isPermaLink="false">5f108595-788b-461d-9735-8a47542324f9</guid><pubDate>Fri, 28 Aug 2026 08:17:39 +0000</pubDate><atom:updated>2026-08-28T08:17:39.905Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/g89lhy44/anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/g89lhy44/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். அத்துடன் விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க.  தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>வறட்சி பாதிப்பு</strong></h2><p>கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை சுமார் 30% அளவுக்கு குறைவாக பெய்திருப்பதால் பாதிக்கப்பட்டுள்ள 101 வட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும், குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவும் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் கர்நாடக அரசு அறிவித்திருக்கிறது.  இத்தகைய சூழலில் கர்நாடகத்தை விட கொடுமையாக பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டின் பெரும்பான்மையான பகுதிகள் இன்னும் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்படாதது ஏன்? என்ற வினா எழுகிறது.</p> <p>கர்நாடகத்தில் ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஆகஸ்ட் 26-ஆம் தேதி வரை கர்நாடகத்தில் 666 மி.மீ மழை பெய்ய வேண்டிய நிலையில், 465 மி.மீ மழை மட்டுமே பெய்திருக்கிறது;  வழக்கமாக சாகுபடி செய்யப்படும் 84.10 லட்சம் ஹெக்டேருக்கு பதிலாக 60 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில், அதாவது 71 விழுக்காடு மட்டுமே  சாகுபடி செய்யப்பட்டிருப்பது தான் 101 வட்டங்கள் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருப்பதற்கு காரணமாக கூறப்பட்டிருக்கிறது.</p><p>ஆனால், தமிழகத்தின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது.  ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் 180 மிமீ அளவுக்கு மட்டுமே மழை பெய்திருக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த ஆண்டு  6.31 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட நிலையில் நடப்பாண்டில்  சுமார் 2 லட்சம்  ஏக்கரில் மட்டுமே  குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் அளவில் வெறும் 30% மட்டும் தான்.</p><h2><strong>பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்</strong></h2><p>தமிழகத்தில் மொத்தம் உள்ள 14,141 நீர்நிலைகளில், 4208 நீர்நிலைகள், அதாவது 29.25% நீர்நிலைகள் முற்றிலுமாக வறண்டு விட்டன. மேலும், 5,814 நீர்நிலைகளில் 1% முதல் 25% வரை மட்டுமே நீர் உள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் பயனளிக்கும் வகையில் தண்ணீர் இல்லை.  காவிரி பாசன மாவட்டங்களில் காவிரி, கல்லணைக் கால்வாய், வெண்ணாறு ஆகிய ஆறுகளில் இருந்து கால்வாய்கள் மூலம் தண்ணீர் பெறும் 737 நீர்நிலைகளில் 694 நீர்நிலைகள், அதாவது 95% தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கின்றன.</p><p>நிலத்தடி நீர்மட்டமும் வேகமாக குறைந்து விட்டதால்  காவிரி பாசன மாவட்டங்களில் குறுவைப் பயிர்கள் கருகுகின்றன.  இதே நிலை இன்னும் சில வாரங்களுக்கு நீடித்தால் தமிழ்நாட்டில் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து  ஏற்பட்டிருக்கிறது.  நிலைமை இந்த அளவுக்கு மோசமாக மாறியிருக்கும் நிலையில் தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து வறட்சி தணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது தான் சிறந்ததாக இருக்கும்.</p><p>எனவே, தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். அத்துடன் விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்; குறுவை சாகுபடி செய்யாத விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 வீதமும், குறுவை சாகுபடி செய்து நீரின்றி பயிர்கள் வாடியதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதமும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். சம்பா சாகுபடி செய்யமுடியாத நிலை  உருவாகும் சூழலில் அதனால் பாதிக்கப்படும் உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.10000 உதவி வழங்க வேண்டும். நிலமில்லா தொழிலாளர்களுக்கு ஒருமுறை உதவியாக ரூ.25,000 வழங்க வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.972 கோடியில் கொள்ளிடம்-வெள்ளாறு, நொய்யல் ஆறுகளை பாதுகாக்க நடவடிக்கை-
அமைச்சர் என்.ஆனந்த்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/government-allocates-rs-972-crore-to-safeguard-key-tamil-nadu-rivers</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/government-allocates-rs-972-crore-to-safeguard-key-tamil-nadu-rivers#comments</comments><guid isPermaLink="false">65d5911c-cc30-45a3-8621-17db84d1664e</guid><pubDate>Fri, 28 Aug 2026 08:16:59 +0000</pubDate><atom:updated>2026-08-28T08:16:59.208Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,rivers,TN assembly,ஆறுகள்,அமைச்சர் என் ஆனந்த்,MInister N Anand</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/4twzznhh/Minister-Anand.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister N Anand]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/4twzznhh/Minister-Anand.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ரூ.972 கோடியில் கொள்ளிடம்-வெள்ளாறு, நொய்யல் ஆறுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.</strong></em></p><p>தமிழக சட்டப்பேரவை யில் இன்று கேள்வி நேரத்தின்போது, சிதம்பரம் மற்றும் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏக்கள் எழுப்பிய கோரிக்கைகளுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் பதில் அளித்தார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><p>கொள்ளிடம் ஆற்றின் கடைமடை பகுதியில் தடுப்புச்சுவர் பருவநிலை மாற்றத்தின் காரணமாக கடல் நீர்மட்டம் உயர்ந்து, கொள்ளிடம் ஆற்றின் முகத்துவாரம் வழியாக சுமார் 18 கிலோமீட்டர் தூரத்திற்கு கடல்நீர் உட்புகுவதால் சுற்றியுள்ள கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p>இதனைத் தடுக்கும் வகையில், <a href="https://www.maalaimalar.com/news/national/boy-swam-from-dharamdar-bay-to-gateway-of-india-in-8-hours-576322" rel="nofollow">வங்காள விரிகுடா</a> கடலிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில், கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் திருக்கழிப் பாலை கிராமத்திற்கும், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் அளக்குடி கிராமத்திற்கும் இடையே, கொள்ளிடம் ஆற்றின் கடைமடை பகுதியில் சுவர் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p>இந்தத் திட்டத்தின் மூலம் வீரன் கோயில்திட்டு, கொட்டாமேடு, கவரப்பட்டு, ஜெயங்கொண்டபட்டினம், அளக்குடி, ஆச்சாள்புரம், கொள்ளிடம் உள்ளிட்ட பல கிராமங்கள் பயன்பெறுவது டன், நிலத்தடி நீர் செறி வூட்டல் மூலம் சுமார் 13,220 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும்.</p><p>இத்திட்டத்திற்காக முதற்கட்டமாக ரூ.773 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது துறை மேற்கொண்ட மாதிரி ஆய்வுகளின் முடிவுகளின் அடிப்படையில் திருத்தப்பட்ட விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது. அது பெறப்பட்டவுடன் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.</p><p>வெள்ளாற்றில் ரூ.194 கோடியில் தடுப்பணை மேலும், கடல் நீர் உட்புகுவதைத் தடுக்கும் வகையில் கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம், தீத்தாம்பாளையம் கிராமம் அருகே ஆதிவராகநல்லூர் பகுதியில் வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p>பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், ஆதிவராக நல்லூர் பகுதியில் தடுப்பணை அமைப்பதற்கான திட்டத்தில் நில எடுப்புப் பணிக்கு ரூ.44.39 கோடி உட்பட மொத்தம் ரூ.194 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு துறையின் பரிசீலனையில் உள்ளது.</p><p>தொழிற்சாலைகளிலிருந்து கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதைத் தடுக்க <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D" rel="nofollow">தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்</a> தொடர்ந்து கண்காணித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.</p><p>திருப்பூர் மாநகராட்சி பகுதிக்குள் மங்கலம் பாலம் முதல் மணியகாரம் பாளையம் பாலம் வரையிலான நொய்யல் ஆற்றுப் பகுதியில், ஓடைகள் மற்றும் மழைநீர் வடிகால்கள் வழியாக சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நீண்ட காலமாக கலந்ததன் காரணமாக ஆகாயத்தாமரை, சீமைக்கரு வேலம் உள்ளிட்ட செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன.</p><p>இதனை கருத்தில் கொண்டு, முதலமைச்சர்  விஜய்யின் அறிவுறுத்தலின் படி, நொய்யல் ஆற்றை புனரமைக்கும் பணிக்காக ரூ.5 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, தற்போது அரசின் பரிசீலனையில் உள்ளது.</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதி இடைத்தேர்தல் தடையை நீக்கக் கோரி முதலமைச்சர் விஜய் ஐகோர்ட்டில் மனு தாக்கல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-files-plea-to-allow-byelections-in-five-barred-constituencies</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-files-plea-to-allow-byelections-in-five-barred-constituencies#comments</comments><guid isPermaLink="false">4709b298-fd6f-4f21-8ccb-ab1d2a4efc7f</guid><pubDate>Fri, 28 Aug 2026 07:55:57 +0000</pubDate><atom:updated>2026-08-28T07:55:57.623Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Madras High Court,by-election,சென்னை ஐகோர்ட்டு,இடைத்தேர்தல்,cm vijay,முதலமைச்சர் விஜய்,ராஜினாமா,Election Petition</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/6s2heicu/By-Election" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ By-Election]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/6s2heicu/By-Election?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>5 தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கப்பட்ட வழக்கில், <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதலமைச்சர் விஜய்</a> ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்தார். ராஜினாமா செய்தபோது வழக்கு இல்லை, தடையை நீக்கி தேர்தல் நடத்த வேண்டும் என்றார்.</p><h2><strong>இடைத்தேர்தலுக்கு தடை</strong></h2><p>தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளதால் திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதி களுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் <a href="https://www.maalaimalar.com/topic/chennai-high-court">சென்னை ஐகோர்ட்டில்</a> பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.</p><p>இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு, 5 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் அறிவிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.</p><p>தேர்தல் ஆணையமும், தேர்தல் வழக்கு முடியும் வரை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட மாட்டாது என பதில்மனு தாக்கல் செய்திருந்தது.</p><h2><strong>ராஜினாமா செல்லும்</strong></h2><p>இந்த வழக்கில் எதிர் மனுதாரர், <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதலமைச்சர் விஜய் </a>தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், திருச்சி கிழக்கு தொகுதி வெற்றியை எதிர்த்து ஜூன் 17-ந்தேதி தான் தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. </p><p>ஆனால் மே 10-ந்தேதியே தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டேன். என் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்ற நாளில் எந்த தேர்தல் வழக்கும் நிலுவையில் இல்லை.</p><p>காலியான தொகுதிக்கு தேர்தல் வழக்கு தாக்கல் செய்ய முடியாது. இடைத் தேர்தல் அறிவிக்க தடை கோரி வழக்கு தாக்கல் செய்தவர், தேர்தல் வழக்கு தாக்கல் செய்தவரல்ல. தொகுதியின் வாக்காளருமல்ல.</p><h2><strong>வழக்கு உள்நோக்கம்</strong></h2><p>திருச்சி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என்ற உள்நோக்கத்தில், அடிப்படை உரிமையில்லாமல் , இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. </p><p>தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், தொகுதியின் லட்சக்கணக்கான மக்கள், எம்.எல்.ஏ. இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். பொது நலனுக்கு எதிரான இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல.</p><h2><strong>இடைத்தேர்தல் அவசியம்</strong></h2><p>5 தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக தேர்தல் வழக்கு தாக்கல் செய்தவர்களுக்காக, இந்த பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது.</p><p>திருச்சி கிழக்கு தொகுதியில் 20 பேர் போட்டியிட்ட நிலையில், தேர்தல் வழக்கை தாக்கல் செய்தவரை வெற்றி பெற்றவராக அறிவிக்க முடியாது. காலியாக உள்ள திருச்சி கிழக்கு தொகுதிக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தல் ஆணையம், இடைத்தேர்தல் அறிவிக்க வேண்டும்.</p><h2><strong>தடை நீக்குக</strong></h2><p>இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கப்பட்ட 5 தொகுதிகளிலும் பல முனைப் போட்டி நடந்து உள்ளது. இரு வேட்பாளர்கள் மட்டும் போட்டியிடவில்லை என்பதால், பொதுநலன் கருதி, இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>புழல் ஜெயிலை தொடர்ந்து காவல் நிலையத்திலும் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-suddenly-inspection-puzhal-jail</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-suddenly-inspection-puzhal-jail#comments</comments><guid isPermaLink="false">889cb67e-f14a-4a9e-9b34-0a85e6df6b15</guid><pubDate>Fri, 28 Aug 2026 07:49:21 +0000</pubDate><atom:updated>2026-08-28T07:49:21.111Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,புழல் சிறை,Puzhal Jail,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/9tzoqulb/vijay.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ புழல் ஜெயிலை தொடர்ந்து காவல் நிலையத்திலும் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு]]></media:title><media:description type="html"><![CDATA[ புழல் ஜெயிலை தொடர்ந்து காவல் நிலையத்திலும் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/9tzoqulb/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதலமைச்சர் விஜய்யை பார்த்ததும் கைதிகள் உற்சாகம் அடைந்தனர். அவர்களிடம் பேசிய விஜய் உங்களை நன்றாக கவனித்து கொள்கிறார்களா? ஏதேனும் குறைகள் இருக்கிறதா? என்று கேட்டறிந்தார்.</strong></em></p><p>முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்</a> அவ்வப்போது அதிரடியாக அரசு அலுவலகங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகிறார். </p><p>கடந்த மாதம் எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரி, நெமிலிசேரியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிறுவனம், கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரெயில் நிறுவனம் ஆகியவற்றை அவர் ஆய்வு செய்தார். </p><h2><strong>திடீர் ஆய்வு</strong></h2><p>இன்று திடீரென புழல் ஜெயிலில் முதலமைச்சர் விஜய் ஆய்வு மேற்கொண்டார்.  அவர் வருவதை கேள்விபட்டதும் ஜெயில் வாசலில் ஏராளமானவர்கள் திரண்டனர். முதலமைச்சர் விஜய் சென்ற கார் நேரடியாக ஜெயில் வளாகத்துக்குள் சென்றது. அங்கு அவரை சிறைத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். </p><p>அதை தொடர்ந்து தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் ஜெயிலுக்கு சென்றார். விஜய்யை பார்த்ததும் கைதிகள் உற்சாகம் அடைந்தனர். அவர்களிடம் பேசிய விஜய் உங்களை நன்றாக கவனித்து கொள்கிறார்களா? ஏதேனும் குறைகள் இருக்கிறதா? என்று கேட்டறிந்தார்.</p><p>அதைத் தொடர்ந்து ஜெயிலின் மற்ற பகுதிகளையும் சுற்றிப்பார்த்து கைதிகளிடம் பேசி குறகைளை கேட்டார். பின்னர் அதிகாரிகளிடம் சிறைத்துறைக்கு என்னென்ன தேவை என்று கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து புழல் காவல்நிலையத்துக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார்.</p>]]></content:encoded></item><item><title>திபெத்தில் உடைந்த அணை.. நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு அபாயம் - மக்களுக்கு எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/world/broken-dam-in-tibet-risk-of-flooding-again-in-nepal-warning-to-people</link><comments>https://www.maalaimalar.com/news/world/broken-dam-in-tibet-risk-of-flooding-again-in-nepal-warning-to-people#comments</comments><guid isPermaLink="false">df764878-cec0-4245-8423-9dfef3c39533</guid><pubDate>Fri, 28 Aug 2026 07:48:32 +0000</pubDate><atom:updated>2026-08-28T07:48:32.185Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாளம்,nepal,வெள்ளம்,flood,dam,திபெத்,Tibet,அணை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/0n11niup/tn-13.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நேபாள வெள்ளப்பெருக்கு ]]></media:title><media:description type="html"><![CDATA[ நேபாள வெள்ளப்பெருக்கு ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/0n11niup/tn-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திபெத்தில் மற்றொரு அணை உடைந்ததால் மீண்டும் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">நேபாளத்தில் </a>வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><h2>நேபாள வெள்ளம்</h2><p>நேபாளத்தில் நேற்று முன் தினம் ஏற்பட்ட <a href="https://www.maalaimalar.com/news/world/is-china-responsible-for-the-floods-in-nepal-a-shocking-backstory">திடீர் வெள்ளப்பெருக்கில்</a> பலியானோர் எண்ணிக்கை 469 ஆக உயர்ந்துள்ளது.</p><p>நூற்றுக்கணக்கானோர் மாயமாகியுள்ள நிலையில் அவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.</p><p>இமயமலையில் திபெத் சீன எல்லையில் உற்பத்தியாகும் கைரோங் நகருக்கு அருகே ஏற்பட்ட பனிச்சரிவு தான் இந்த வெள்ளபெருக்குக்கு காரணம் என்று கூறப்படுகிறது.</p><p>போதே கோஷி நதியில் பனிப்பாறைகள் விழுந்து ஏற்பட்ட அடைப்பினால் அதிகளவில் நீர் அடைபட்டு அணை உடைந்து இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.</p><h2>புதிய ஏரிகள்</h2><p>முன்னதாக திபெத் பகுதியில் மீண்டும் புதிதாக ஒரு பெரிய ஏரி உருவாகி உள்ளதாக சீனா எச்சரிக்கை விடுத்தது.</p><p>சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் கியிராங் எல்லைத் துறைமுகத்திற்கு அருகே ஏற்பட்ட நிலச்சரிவு ஒரு தடுப்பு ஏரியை உருவாக்கி உள்ளது என்றும் இதனால் அடுத்த 3 நாட்களில் மீண்டும் வெள்ள அபாயம் உள்ளதாகவும் சீனா தெரிவித்தது.</p><p>நேற்று காலை நிலவரப்படி, அந்த ஏரியில் சுமார் 2 மில்லியன் கன மீட்டர் நீர் தேங்கியிருந்தது.</p><p>தொடர்ந்து மழை பெய்து வருவதால், அடுத்த மூன்று நாட்களில் நீர்வரத்து சுமார் 3 மில்லியன் கன மீட்டரை எட்டும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.</p><p>இது ஏரி உடைந்து, கீழ்நிலைப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.</p><p>நேற்று காலை நிலவரப்படி, அந்த ஏரியில் சுமார் 20 லட்சம் கன மீட்டர் நீர் தேங்கியிருந்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், அடுத்த 3 நாட்களில் நீர்வரத்து சுமார் 30 லட்சம் கன மீட்டரை எட்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>இந்தத் தடுப்பு ஏரி, பெருமளவிலான நீரைத் தடுத்து நிறுத்தி வருகிறது. இதில் பாறைத் தடுப்பு உடைந்தால், அந்த நீர் நேபாளத்தை நோக்கி கீழ்நோக்கிப் பாயும் என்று எச்சரிக்கப்பட்டது.</p><p>இதையடுத்து தங்களது எல்லைக்கு அருகே 2 தடுப்பு ஏரிகள் உருவானதைத் தொடர்ந்து, நேபாளமும் சீனாவும் புதிய வெள்ள எச்சரிக்கைகளை விடுத்தன.</p><h2>மீண்டும் வெள்ளப்பெருக்கு?</h2><p>இந்நிலையில் திபெத் பகுதியில் உள்ள மற்றொரு அணை உடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் திபெத் பகுதியில் உள்ள ஏரியின் அணை உடைந்துவிட்டதாக கூறப்படுகிறது.</p><p>இதையடுத்து மீட்புக் குழுவினரும் அப்பகுதி மக்களும் பாதுகாப்பான, உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு நேபாளக் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.</p><p>இதுதொடர்பாக நேபாள போலீசார் கூறும்போது, திபெத் பகுதியில் மீண்டும் ஒரு நீர் அணை உடைந்த தாகத் தகவல் கிடைத்து உள்ளது. </p><p>எனவே தற்போது மீட்புப்பணியில் ஈடுபட்டு உள்ள மீட்புக்குழுவினர், பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கைகளை விடுத்து உள்ளோம். </p><p>அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளோம் என்றனர்.</p><p>மீண்டும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதால் நேபாளத்தில் மீட்புப்ப ணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. அங்கு ராணுவத்தினர், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.</p><p>இதற்கிடையே ரசுவா மாவட்டத்தில் உள்ள ஒரு ஏரி கரை உடைந்து நீர்மட்டம் உயர்ந்து வருவ தாக அதிகாரிகள் தெரி வித்தனர்.</p><h2>திபெத்</h2><p>காட்டாற்று வெள்ளம் காரணமாக திபெத்தில் 550க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர் இதில் 260 பேர் வெளிநாட்டினர் ஆவர். </p><p>இந்த நிலையில் இமயமலை பகுதியில் பயங்கர பனிச்சரிவால் உருவான ஏரியிலிருந்து மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால் திபெத்தில் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்புப் பணிகளை தற்காலிகமாக நிறுத்துமாறு மீட்புக் குழுவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சீன அரசு ஊடகங்கள் தெரிவித்து உள்ளன.</p> <p>இதற்கிடையே திபெத்தில் மீட்புப்பணிகள் குறித்து சீன அதிபர் ஜின்பிங், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். </p><p>இதில் பனிப்பாறை மற்றும் தடுப்பு ஏரிகளைத் தீவிரமாகக் கண்காணிப்பது, காணாமல் போனவர்களைக் கண்டறியும் முயற்சிகள், நேபாளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவசரகால உதவி வழங்குவது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.</p> ]]></content:encoded></item><item><title>சமத்துவ இடுகாடு வைத்துள்ள ஊராட்சிகளுக்கு ரூ.10 லட்சம் பரிசு- அமைச்சர் வன்னி அரசு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/equal-burial-grounds-village-councils-10-lakh-reward-vanni-arasu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/equal-burial-grounds-village-councils-10-lakh-reward-vanni-arasu#comments</comments><guid isPermaLink="false">fce9a202-2657-484a-a277-cffa3f2e4ed2</guid><pubDate>Fri, 28 Aug 2026 07:44:05 +0000</pubDate><atom:updated>2026-08-28T07:44:05.684Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,minister vanni arasu,அமைச்சர் வன்னி அரசு,சமத்துவ இடுகாடு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/dvx0u6t9/vanni-arasu.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Vanni arasu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/dvx0u6t9/vanni-arasu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சமத்துவ இடுகாடு வைத்துள்ள ஊராட்சிகளுக்கு ரூ.10 லட்சம் பரிசு- அமைச்சர் வன்னி அரசு</p><p>சமூகநீதி துறை மானியக்கோரிக்கை விவாதங்கள் மீது அமைச்சர் வன்னி அரசு பதிலளித்தார்.</p><p>அப்போது, சட்டசபையில் இன்று நான் பேசுவது கன்னி உரையல்ல, வன்னி உரை என அமைச்சர் வன்னி அரசு தனது உரையை தொடங்கினார்.</p><p>அவர் கூறியதாவது:-</p><p>என்னை கைது செய்ய வேண்டும் என முழக்கமிடப்பட்ட அதே சபையில் என்னை அமரவைத்து அழகு பார்த்திருக்கிறார் திருமாவளவன்.</p><p>விடுதலை புலிகளுக்கு ஆதரவு அளித்ததால் திருமாவளவனை கைது செய், வன்னி அரசுவை கைது செய் என 2007-ல் சட்டசபையில் முழக்கமிட்டனர்.</p><p>எனது வெற்றியைவிட வன்னி அரசுவின் வெற்றிதான் முக்கியமானது என எனக்காக தேர்தல் பரப்புரை மேற்கொண்ட உதயநிதிக்கு நன்றி. சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>தீக்கிரையாக்கப்பட்ட குடிசைகளின் சம்பலில் இருந்து வந்தவன் நான். அமைச்சர் இருக்கையில் என்னை அமர வைத்த திருமா நாளையே அழைத்தாலும் போராட்டக் களத்திற்கு சென்றுவிடுவேன்.</p><p>பதவி, பரிசுக்காக நாங்கள் அரசியலுக்கு வரவில்லை. நாங்கள் பதவிக்காக போனோம் என யாரும் சொல்ல முடியாது. பொதுத்தொகுதியில் தலித்தை நிறுத்தவிடமாட்டோம் என்கின்றனர். ஆனால், 234 தொகுதியிலும் போட்டியிட சட்டத்தில் இடமுண்டு.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>அறிவிப்புகள்</h2><p>சமத்துவ இடுகாடு வைத்துள்ள ஊராட்சிகளுக்கு ரூ.10 லட்சம் பரிசு. சாதிய பிரச்சனைகள் அதிகம் நடக்கும் கிராமங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. </p><p>இந்த ஆண்டு மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் மேலவளவு கிராமத்திற்கு சிறப்பு கவனம் செலுத்த உள்ளோம்.</p><p>ஏகனாபுரம் மக்களின் கோரிக்கைக்கு இணங்க புதிய சமூக நலக்கூடம் கட்டித்தரப்படும்.</p><h2>"மேலவளவு" கிராமத்தில் அம்பேத்கர் படிப்பகம்</h2><p>மேலவளவு கிராமம் தொடர்ந்து சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு வருகிறது. அந்த கிராமத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்தி அங்கு அம்பேத்கர் படிப்பகம் உருவாக்கப்படும். சாதிய வன்கொடுமை இல்லாத கிராமமாக மேலவளவு கிராமம் மாற்றப்படும் என அமைச்சர் வன்னி அரசு அறிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>&quot;பாசம் எப்போதும் நிலைத்திருக்கட்டும்&quot; – பிரதமர் மோடி ரக்ஷா பந்தன் வாழ்த்து!</title><link>https://www.maalaimalar.com/news/national/nationwide-raksha-bandhan-celebrations-pm-modi-amit-shah-and-cms-extend-greetings</link><comments>https://www.maalaimalar.com/news/national/nationwide-raksha-bandhan-celebrations-pm-modi-amit-shah-and-cms-extend-greetings#comments</comments><guid isPermaLink="false">2b75f41e-36af-4d89-ab5d-812ba2969d09</guid><pubDate>Fri, 28 Aug 2026 07:33:29 +0000</pubDate><atom:updated>2026-08-28T07:33:29.946Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Amitshah,raksha bandhan,pm modi,பிரதமர் மோடி,Droupadi Murmu,ரக்ஷா பந்தன்,Indian Festivals</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/3fb8do7z/Raksha-Bandhan" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Raksha Bandhan ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/3fb8do7z/Raksha-Bandhan?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடு முழுவதும் இன்று <a href="https://www.maalaimalar.com/topic/raksha-bandhan">ரக்ஷா பந்தன்</a> பண்டிகை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. சகோதர-சகோதரிகளுக்கு இடையேயான அன்பையும், பாதுகாப்பையும் பலப்படுத்தும் இந்த உன்னத நாளில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட நாட்டின் முக்கியத் தலைவர்கள் மக்களுக்கு தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.</p><h2>பாரம்பரியத்தை நினைவூட்டிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு</h2><p>ரக்ஷா பந்தன் தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81">திரௌபதி முர்மு</a> விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், "இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் அங்கமாக ரக்ஷா பந்தன் விளங்கி வருகிறது.</p><p>நம்பிக்கையுடன் மணிக்கட்டில் கட்டப்படும் 'ராகி' கயிறு, பாதுகாப்பின் புனிதமான பிணைப்பாகக் கருதப்படுகிறது. 'ரக்‌ஷே, மா சலா, மா சலா' என்ற மந்திர வரிகள், இந்த பாதுகாப்பு பிணைப்பு என்றென்றும் தொடர வேண்டும் என்பதை உணர்த்துகின்றன.</p><p>ஒவ்வொரு உறவும் நம்பிக்கை, உணர்திறன், பரஸ்பர ஒத்துழைப்பு ஆகியவற்றின் தூண்களில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை இப்பண்டிகை நமக்கு நினைவூட்டுகிறது. </p><p>குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு இடையிலான உறவை வலுப்படுத்த இந்த நன்னாளில் நாம் உறுதியேற்போம். 'விக்சித் பாரத்' (வளர்ச்சியடைந்த இந்தியா) நோக்கிய பயணத்தில் ஆக்கப்பூர்வமான சிந்தனையோடு நாம் முன்னோக்கிச் செல்வோம்" என்று தெரிவித்துள்ளார்.</p><h2>"பாசம் எப்போதும் நிலைத்திருக்கட்டும்" – பிரதமர் மோடி</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF">பிரதமர் நரேந்திர மோடி</a> தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "ரக்ஷா பந்தன் திருநாளை முன்னிட்டு அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். இந்த புனிதமான பண்டிகை உங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் மகிழ்ச்சி, வளம் மற்றும் வெற்றியைக் கொண்டுவரட்டும். </p><p>சகோதரத்துவத்தின் மீதான பாசம், அன்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கை என்றென்றும் உடையாத பிணைப்பாக நீடிக்க வேண்டும் என்பதே எனது மனமார்ந்த விருப்பம்" என்று குறிப்பிட்டுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="hi" dir="ltr">रक्षाबंधन की बहुत-बहुत शुभकामनाएं। <br><br>यह पावन पर्व आप सभी के जीवन में खुशहाली, समृद्धि और सफलता लेकर आए। <br><br>स्नेह, अपनत्व और आपसी विश्वास की डोर सदैव अटूट बनी रहे, यही कामना है। <a href="https://t.co/bfH7GRVwUe">pic.twitter.com/bfH7GRVwUe</a></p>&mdash; Narendra Modi (@narendramodi) <a href="https://x.com/narendramodi/status/2093158719052005705?ref_src=twsrc%5Etfw">August 28, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2>"அன்பின் அடையாளம்" – மத்திய அமைச்சர் அமித் ஷா</h2><p>மத்திய உள்துறை அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE">அமித் ஷா </a>விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "சகோதர சகோதரிகளுக்கு இடையிலான அசைக்க முடியாத அன்பு மற்றும் நம்பிக்கையைப் போற்றும் புனிதமான ரக்ஷா பந்தன் திருநாளில், சக நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். </p><p>இந்த திருவிழா ஒவ்வொருவரின் வாழ்விலும் அமைதியையும், மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டு வர பிரார்த்திக்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="hi" dir="ltr">समस्त देशवासियों को भाई-बहन के अटूट स्नेह और विश्वास को समर्पित ‘रक्षाबंधन’ के पावन पर्व की हार्दिक शुभकामनाएँ।<br><br>यह पर्व सभी के जीवन में सुख, शांति और समृद्धि लेकर आए। <a href="https://t.co/iOVnSZT2l5">pic.twitter.com/iOVnSZT2l5</a></p>&mdash; Amit Shah (@AmitShah) <a href="https://x.com/AmitShah/status/2093161949454623013?ref_src=twsrc%5Etfw">August 28, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2>பள்ளி குழந்தைகளுடன் கொண்டாடிய டெல்லி முதல்வர்</h2><p>டெல்லி முதல்வர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE">ரேகா குப்தா</a>, பள்ளி குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்தார். டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பள்ளி மாணவிகள், முதல்வருக்கு ராகி கயிறுகளைக் கட்டி தங்களது அன்பை வெளிப்படுத்தினர்.</p><p>இதுகுறித்து முதல்வர் கூறுகையில், "டெல்லி முழுவதும் உள்ள விளிம்புநிலைச் சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகள், 'முக்கியமந்திரி ஜன சேவா சதன்' இல்லத்திற்கு வந்து ராக்கி கயிறுகளைக் கட்டினர். அவர்களின் புன்னகையும், உற்சாகமும், அவர்கள் வெளிப்படுத்திய அன்பும் இந்நிகழ்வை மிகவும் சிறப்பானதாக மாற்றின.</p><p>டெல்லியின் வீதிகளிலும் சந்துகளிலும் எண்ணற்ற குழந்தைகள் வளர்கிறார்கள்; அவர்களின் எதிர்காலம் இன்னும் எழுதப்பட வேண்டிய ஒன்றாகவே உள்ளது. </p><p>இந்த ரக்ஷா பந்தன் நன்னாளில், ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பான குழந்தைப் பருவம், தரமான கல்வி, முறையான சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றைப் பெறுவதையும், முன்னேறுவதற்கான அனைத்து வாய்ப்புகளை கொண்டிருப்பதையும் உறுதி செய்வதே எனது முக்கிய நோக்கமாகும். அனைவருக்கும் ரக்ஷா பந்தன் நல்வாழ்த்துகள் என்று தெரிவித்தார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Children from marginalised communities across Delhi came to Mukhyamantri Jan Seva Sadan to tie rakhis. Their smiles, their excitement and the affection with which they celebrated made the occasion deeply special.<br><br>In Delhi’s streets and lanes, countless children are growing up… <a href="https://t.co/jKEjEeHjWG">pic.twitter.com/jKEjEeHjWG</a></p>&mdash; Rekha Gupta (@gupta_rekha) <a href="https://x.com/gupta_rekha/status/2093187496527950299?ref_src=twsrc%5Etfw">August 28, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2>பீகார் 'ஜீவிகா திதி'களுக்கு சூரிய ஒளி மின்சார திட்டம் – முதல்வர் சாம்ராட் சௌத்ரி பரிசு</h2><p>பீகார் மாநில முதல்வர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF">சாம்ராட் சௌத்ரி</a>, ரக்ஷா பந்தனை முன்னிட்டு அம்மாநிலத்தைச் சேர்ந்த 'ஜீவிகா திதி'களுக்கு (சுயஉதவிக் குழுப் பெண்கள்) சூரிய ஒளி மின்சார திட்டம் என்ற சிறப்பான பரிசை அறிவித்துள்ளார்.</p><p>மேலும் அவர் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், ரக்ஷா பந்தன் எனும் இந்த நன்னாளில், என் சகோதரிகள் அன்போடும் ஆசிகளோடும் ரக்ஷியைக் கட்டியுள்ளனர். நமது சகோதரிகள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, அமைதி, செழிப்பு மற்றும் ஆனந்தம் என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="hi" dir="ltr">इस पवित्र धागे में सिमटा है स्नेह अपार<br><br>आज रक्षाबंधन के पावन अवसर पर मेरी बहनों ने स्नेह और आशीर्वाद से मेरी कलाई पर राखी बाँधी।<br><br>ईश्वर से कामना है कि हमारी सभी बहनों के जीवन में सुख, शांति, समृद्धि और खुशियाँ सदैव बनी रहें। रक्षाबंधन की सभी प्रदेशवासियों को हार्दिक शुभकामनाएँ।… <a href="https://t.co/rV9Mdxyvc4">pic.twitter.com/rV9Mdxyvc4</a></p>&mdash; Samrat Choudhary (@samrat4bjp) <a href="https://x.com/samrat4bjp/status/2093206343385805220?ref_src=twsrc%5Etfw">August 28, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வழக்கு: மு.க.ஸ்டாலினுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/high-court-notice-to-mk-stalin-in-athav-arjuna-defamation-suit</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/high-court-notice-to-mk-stalin-in-athav-arjuna-defamation-suit#comments</comments><guid isPermaLink="false">e44701c9-aa9a-41a4-8a46-c4712e99a404</guid><pubDate>Fri, 28 Aug 2026 07:19:30 +0000</pubDate><atom:updated>2026-08-28T07:19:30.464Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,சென்னை ஐகோர்ட்,ஆதவ் அர்ஜூனா,Madras highcourt,அவதூறு வழக்கு,defamation case,முக ஸ்டாலின்,Minister Adhav Arjuna,திமுக ஐடிவிங்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/qet8hbc0/Adhav-Arjuna-MK-Stalin" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Adhav Arjuna - MK Stalin  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/qet8hbc0/Adhav-Arjuna-MK-Stalin?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுக ஐடி விங் அவதூறு பரப்பியதாக ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு ஆதவ் அர்ஜூனா வழக்கு தொடர்ந்தார். இதற்கு செப்.15க்குள் பதிலளிக்க ஸ்டாலினுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.</p><p>சென்னை ஐகோர்ட்டில் அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BE">ஆதவ் அர்ஜுனா</a>, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், " தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க.ஸ்டாலின்</a>, கட்டுப்பாட்டிலும், மேற்பார்வையிலும் செயல்படக் கூடிய திமுக ஐடி விங்க் சமூக வலைதளத்தில் கடந்த ஜூன் 8-ந்தேதி ஒரு பதிவை வெளியாகியுள்ளது.</p><p>அதில் "அமலாக்க துறையின் அதிகாரப்பூர்வ செய்தி குறிப்பின்படி சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.258 கோடி மதிப்புலான போதை பொருள் கடத்தலில் செயல்பட்ட ஜான் பிரிட்டோ தற்போது த.வெ.க அரசின் சிறு தொழில் முகங்கள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் நெருங்கிய உறவினர் என அதிர்ச்சியூட்டும் உண்மை அம்பலமாகியுள்ளது" என்று கூறியுள்ளது.</p><h2><strong>வைரல் பதிவு</strong></h2><p>இந்தப் பதிவு வெளியிட்டு இரண்டு நாட்களில் சுமார் 2 லட்சத்து 67 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். அந்த பதிவை 2,600 பேர் மறு பதிவு செய்துள்ளனர் 4,400 பேர் விருப்பம் (லைக்) தெரிவித்துள்ளனர். 150 பேர் பதிலும் தெரிவித்துள்ளனர். </p><p>இந்தப் பதிவு மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி அனுமதியுடன் வெளியிடப்பட்டுள்ளது. திமுக தான் இந்த சமூக வலைதள கணக்கை பராமரித்து வருகின்றது. எனவே இந்த பதிவுக்கு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க.ஸ்டாலின்</a> தான் பொறுப்பு.</p><h2><strong>இழப்பீடு கோரிக்கை</strong></h2><p>இந்த ஜான் பிரிட்டோ எனக்கு உறவினர் இல்லை. மேலும் பி.ஜான் பிட்டோ என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்து, அமலாக்கத்துறை சொல்லும் ஜான் பிட்டோ நான் இல்லை என்றும் கூறியுள்ளார். </p><p>எனவே அவதூறு பதிவை வெளியிட்டதற்காக திமுக ஐடி விங் மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இணைந்து ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடவேண்டும். </p><p>அந்த பதிவையும் சமூக வலைதளத்தில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும்" என்று கூறியுள்ளார்.</p><h2><strong>நோட்டீஸ் உத்தரவு</strong></h2><p>இந்த வழக்கு நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பின் வக்கீல் ஏ.பி.சூரிய பிரகாசம் ஆஜராகி வாதிட்டார். </p><p>இவரது வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்த மனுவுக்கு வருகிற செப்டம்பர் 15-ந்தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க.ஸ்டாலின்</a> மற்றும் திமுக தகவல் தொடர்பு குழுவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பள்ளிக் கல்வியின் தரத்தில் முதல் 10 மாநிலங்கள்.. தமிழ்நாட்டிற்கு எத்தனையாவது இடம் தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/news/national/top-10-states-in-school-education-quality-do-you-know-what-rank-tamil-nadu-holds</link><comments>https://www.maalaimalar.com/news/national/top-10-states-in-school-education-quality-do-you-know-what-rank-tamil-nadu-holds#comments</comments><guid isPermaLink="false">4242df54-2c81-4bbb-b47d-33257bd604c9</guid><pubDate>Fri, 28 Aug 2026 07:18:18 +0000</pubDate><atom:updated>2026-08-28T07:18:18.826Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,kerala,School Education,கேரளா,தமிழ்நாடு,பள்ளிக் கல்வி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/5npnunn1/tn-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பள்ளி]]></media:title><media:description type="html"><![CDATA[ பள்ளி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/5npnunn1/tn-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2025-26 ஆம் ஆண்டிற்கான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">பள்ளிக் கல்வி</a> வளர்ச்சிப் குறியீடு பட்டியல் வெளியாகி உள்ளது. </p><p>அதில், இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள் அங்கு வழங்கப்படும் கல்வித் தரம் மற்றும் வளர்ச்சியின் அடிப்படையில்  தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. </p><p>பள்ளி கல்விக்கான அணுகல், பங்களிப்பு, தக்கவைப்பு, தரம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய 5 பிரிவுகளின் கீழ் இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது. </p><p>பள்ளிகள் கிடைக்கும் தன்மை, சேர்க்கை மற்றும் சமத்துவம், மாணவர் தக்கவைப்பு, கற்றல் முடிவுகள் மற்றும் பள்ளி வசதிகள் உள்ளிட்ட காரணிகளும் அடங்கும்.</p><h2>பட்டியல்</h2><p>அதன்படி இந்த குறியீட்டில் டாப் 10 பட்டியலில் யூனியன் பிரதேசமான சண்டிகர் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் நம் அண்டை மாநிலமான கேரளா உள்ளது.</p><p>பட்டியலில் புதுச்சேரி 3வது இடத்தையும், கோவா 4வது இடத்தையும், டெல்லி 5வது இடத்தையும், பஞ்சாப் 6வது இடத்தையும் பிடித்துள்ளது.</p> <h2>தமிழ்நாடு</h2><p>இந்த பட்டியலில் 7வது இடத்தை பிடித்துள்ளது தமிழ்நாடு. கடந்த முறையைவிட 0.018 மதிப்பெண் தமிழ்நாட்டிற்கு அதிகரித்தாலும், 7 வது இடத்தையே தக்கவைத்துள்ளது.</p><p>பட்டியலில் அடுத்தாக அந்தமான் நிகோபார் தீவு 8வது இடத்திலும் லட்சத்தீவு 9வது இடத்திலும், அரியானா 10வது இடத்திலும் உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நிதியமைச்சர் மரியவில்சன் இங்கிலாந்தின் அரசர் அல்ல- ஐகோர்ட் நீதிபதி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-hc-judge-condemned-minister-maria-wilson</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-hc-judge-condemned-minister-maria-wilson#comments</comments><guid isPermaLink="false">c160a0ce-83f3-4b49-91d2-b490a6f3d434</guid><pubDate>Fri, 28 Aug 2026 07:12:56 +0000</pubDate><atom:updated>2026-08-28T07:12:56.742Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,சென்னை ஐகோர்ட்,Madras HC,tvk,maria wilson,மரிய வில்சன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/pi4vhwim/mariawilson.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மரிய வில்சன்]]></media:title><media:description type="html"><![CDATA[ மரிய வில்சன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/pi4vhwim/mariawilson.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நிதியமைச்சர் மரியவில்சன் இங்கிலாந்தின் அரசர் அல்ல. அவர் நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டேன் எனக் கூற முடியாது என சென்னை ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.</strong></em></p><p>தமிழக நிதி அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D">மரிய வில்சன்</a>, கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ந்தேதி புதுச்சேரி, எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரர் மரிய குலோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று மரிய குலோத், அவரது மனைவி கெரோலின் ஆகியோரை தாக்கியதாக லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்‌.</p><h2><strong>நீதிபதி கேள்வி</strong></h2><p>புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்ய கோரி அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-hc-order-exemption-granted-to-minister-maria-wilson-from-appearing-in-the-case-regarding-the-assault-on-his-brother">மரிய வில்சன்</a> தாக்கல் செய்த மனு, நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மரிய வில்சன் தரப்பில் ஆஜரான வக்கீல்,  சட்டமன்றக் கூட்டத் தொடர் நடந்து வருவதால், நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.</p><p>இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, நீதிமன்றத்துக்கு செல்ல முடியாது எனக்கூற நிதியமைச்சர் மரிய வில்சன் இங்கிலாந்தின் அரசர் அல்ல. நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோதே நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கிறார். மனுதாரர் மாநிலத்தின் நிதி அமைச்சர்தான். அமைச்சராவதற்கு முன்பு நீதிமன்றத்தில் ஆஜரான மனுதாரர், பதவிக்கு வந்தபிறகு ஆஜராக மாட்டாரா? எனக் கேள்வி எழுப்பினார்.</p><p>அப்போது புதுச்சேரி காவல்துறை தரப்பில் ஆஜரான வக்கீல்,  வேளாங்கண்ணி ஆலய கொடி ஏற்ற நிகழ்ச்சிக்கு அமைச்சர் செல்லவிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, அமைச்சர் வேளாங்கண்ணி சென்று திரும்பும்போது, புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராகலாமே என்று கேள்வி எழுப்பினார். மேலும், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்க முடியாது. அமைச்சர் சட்டத்துக்கு மேலானவர் அல்ல என்ற தகவலை மக்களிடம் கொண்டு சேர்க்க விரும்பவில்லை எனக்கூறி, எந்த தேதியில் அமைச்சர் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராவார் எனத் தெரிவிக்கும்படி அவர் தரப்பு வக்கீலுக்கு உத்தரவிட்டு விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைத்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மனுக்கள்- திமுக வேட்பாளர்கள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-candidates-voters-to-respond-in-court-on-cm-vijay-adhav-arjuna-election-cases</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-candidates-voters-to-respond-in-court-on-cm-vijay-adhav-arjuna-election-cases#comments</comments><guid isPermaLink="false">e513aceb-839a-4d2b-96c5-65a730453321</guid><pubDate>Fri, 28 Aug 2026 07:10:20 +0000</pubDate><atom:updated>2026-08-28T07:10:20.777Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,ஆதவ் அர்ஜூனா,chennai highcourt,Aadhav Arjuna,நீதிமன்றம் உத்தரவு,திமுக வேட்பாளர்கள்,முதலமைச்சர் விஜய்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/27xkihb3/VJ.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay- Minister Adhav arjuna]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/27xkihb3/VJ.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதலமைச்சர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தேர்தல் வழக்கில், தி.மு.க. வேட்பாளர்கள் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</strong></em></p><p>நடைபெற்று முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் தமிழக முதலமைச்சர்  விஜய், சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். </p><p>அவரின் வெற்றியை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் தொகுதி வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் தனித் தனியாக தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.</p><p>இதேபோல் திருச்சி கிழக்கு தொகுதியில், விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.</p><p>இதேபோல் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D" rel="nofollow">வில்லிவாக்கம் </a>தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் மோகன், தொகுதி வாக்காளர் சிவராஜ் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.</p><p>இந்த தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி, முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.</p><p>இந்த மனுக்களை இன்று விசாரித்த நீதிபதி வி.லட்சுமி நாராயணன், முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மனுக்களுக்கு பதிலளிக்கும்படி தேர்தல் வழக்குகளை தாக்கல் செய்த தி.மு.க. வேட்பாளர்களுக்கும், வாக் காளர்களுக்கும் உத்தர விட்டு, விசாரணையை செப்டம்பர் 3-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.</p>]]></content:encoded></item><item><title>தி.மு.க.வில் 110 மாவட்டங்கள் உருவாக்கம்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-announced-110-districts-created-within-the-dmk</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-announced-110-districts-created-within-the-dmk#comments</comments><guid isPermaLink="false">d96da6ae-db40-492b-9b46-9aa4be5bad65</guid><pubDate>Fri, 28 Aug 2026 07:01:48 +0000</pubDate><atom:updated>2026-08-28T07:01:48.637Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,முக ஸ்டாலின்,110 மாவட்டங்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/iaik31cl/MKStalin09.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/iaik31cl/MKStalin09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தற்போதுள்ள மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கையை 77-இலிருந்து 110-ஆக அதிகரித்து, எந்தெந்தத் தொகுதிகள் எந்தெந்த மாவட்டங்களில் இடம்பெற வேண்டும் என்பதை வரையறுப்பதற்கான அதிகாரம் கழகத் தலைவரான எனக்கு வழங்கப்பட்டது.</strong></em></p><p>தி.மு.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/முக-ஸ்டாலின்">மு.க.ஸ்டாலின்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பேரியக்கம், கொள்கை - அமைப்புமுறை - செயல்பாடுகள் – உடன்பிறப்புகள் என்ற நான்கு அடிப்படைகளைக் கொண்டு இயங்கும் இயக்கம். இந்நான்கையும் காலங்கள் தோறும் நாம் புதுப்பித்தும், மேன்மைப்படுத்தியும், கூர்தீட்டியும், செழுமைப்படுத்தியும் வந்திருக்கிறோம். இவை அனைத்தும் கோடிக்கணக்கான உடன்பிறப்புகளின் எண்ணங்கள் அடிப்படையில்தான் அமைந்துள்ளன.</p><p>அந்த அடிப்படையில், கடந்த 22.8.2026 அன்று நடைபெற்ற கழக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிர்வாகச் சீரமைப்புக்குத் தேவையான மிகமுக்கியமான முடிவுகளைத் தீர்மானங்களாக நிறைவேற்றி இருக்கிறோம்.</p><p>கழகம் தொடங்கப்பட்ட நாள் முதல், இதுவரையில் 15 முறை கழக அமைப்புரீதியாகத் தேர்தல் நடத்தி, நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்துள்ளோம். இதன் தொடர்ச்சியாக 16-ஆவது கழக அமைப்புத் தேர்தலை நடத்திடவும் – பல்வேறு அமைப்புரீதியாக நிர்வாக மாற்றங்கள் மேற்கொள்ளப்படவும் பல தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் மிக முக்கியமானது மாவட்டக் கழகங்கள் குறித்த தீர்மானமாகும்.</p><p>அதில், தற்போதுள்ள மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கையை 77-இலிருந்து <a href="https://www.maalaimalar.com/topic/110-மாவட்டங்கள்">110-ஆக</a> அதிகரித்து, எந்தெந்தத் தொகுதிகள் எந்தெந்த மாவட்டங்களில் இடம்பெற வேண்டும் என்பதை வரையறுப்பதற்கான அதிகாரம் கழகத் தலைவரான எனக்கு வழங்கப்பட்டது.</p><p>இதனையடுத்து, கழக மறுசீரமைப்புக் குழு வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில், கழக முன்னணியினருடன் கலந்தாலோசித்து, தமிழ்நாட்டில் உள்ள தொகுதிகளை 110 மாவட்டங்களாகப் பகுத்து அறிவிக்கிறேன். அதில், அதிகமான மக்கள் தொகை இருப்பதன் காரணமாகச் சோழிங்கநல்லூர் தொகுதி மட்டும் தனி மாவட்டமாக அறிவிக்கப்படுகிறது.</p><p>அறிவிக்கப்பட்டுள்ள இந்த 110 மாவட்டக் கழகங்களில் தற்போதுள்ள மாவட்டக் கழகச் செயலாளர்கள், தலைமைக் கழகத்தால் அனுப்பப்படும் பிரதிநிதியின் முன்னிலையில் மாவட்டச் செயற்குழுவைக் கூட்டி, மேற்குறிப்பிடப்பட்டுள்ள கழக மாவட்டங்களின் அடிப்படையில், நகர – ஒன்றிய – பகுதி – பேரூர் – வட்ட – கிளை அமைப்புகளைப் பிரிப்பதற்கான பரிந்துரைகளை 15 நாட்களுக்குள் வழங்கிட வேண்டும் என்றும், தலைமைச் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையிலும், கழக மறுசீரமைப்புக்குழு மூலம் வழங்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, கழக அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.</p>]]></content:encoded></item><item><title>நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட சீனா காரணமா? - அதிர்ச்சி பின்னணி </title><link>https://www.maalaimalar.com/news/world/is-china-responsible-for-the-floods-in-nepal-a-shocking-backstory</link><comments>https://www.maalaimalar.com/news/world/is-china-responsible-for-the-floods-in-nepal-a-shocking-backstory#comments</comments><guid isPermaLink="false">e5069da9-c508-499f-8090-c49662639484</guid><pubDate>Fri, 28 Aug 2026 06:52:13 +0000</pubDate><atom:updated>2026-08-28T06:52:13.252Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>China,சீனா,நேபாளம்,nepal,வெள்ளம்,flood,Himalayas,இமயமலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/dwcjdnd1/tn-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு]]></media:title><media:description type="html"><![CDATA[ நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/dwcjdnd1/tn-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாளத்தில் ஏற்பட்ட  திடீர் <a href="https://www.maalaimalar.com/news/world/nepal-two-arrested-for-stealing-gold-jewelry-from-a-body-floating-in-floodwaters">வெள்ளப்பெருக்கில் </a>பலியானோர் எண்ணிக்கை 469 ஆக உயர்ந்துள்ளது.</p><p>நூற்றுக்கணக்கானோர் மாயமாகியுள்ள நிலையில் அவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது. </p><h2>பனிச்சரிவு</h2><p>இமயமலையில் திபெத் சீன எல்லையில் உற்பத்தியாகும் கைரோங் நகருக்கு அருகே ஏற்பட்ட பனிச்சரிவு தான் இந்த வெள்ளபெருக்குக்கு காரணம் என்று கூறப்படுகிறது.</p><p>போதே கோஷி நதியில் பனிப்பாறைகள் விழுந்து ஏற்பட்ட அடைப்பினால் அதிகளவில் நீர் அடைபட்டு அணை உடைந்து இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.</p><p>முன்னதாக பனிப்பாறைகள் திபெத்தில் ஏற்பட்ட 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் நடந்ததாக கணிக்கப்பட்டது. ஆனால் இமயமலையில் வெப்பமயமாததால் ஏற்பட்ட விளைவினால் பனிப்பாறைகள் பிடிப்பை இழந்து விழுந்ததாக மற்றொரு ஆய்வு தெரிவிக்கிறது.</p><h2>சீனா காரணமா?</h2><p>இந்த சூழலில் நேபாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கிற்கு இமயமலைப் பகுதியில் சீனா மேற்கொண்டு வரும் கட்டுமானப் பணிகளே காரணம் என்ற கண்ணோட்டத்தையும் சிலர் முன்வைத்துள்ளனர்.</p><p>நேபாள புலனாய்வு பத்திரிகை குழுவான 'நேபாள் கரஸ்பாண்டன்ஸ்', இந்த கட்டுமானங்களால் தான் பனிச்சரிவு ஏற்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளது.</p><p>சீனப் பகுதியில் உள்ள இமயமலையில் உயரமான பனிப்பாறைகள் நிறைந்த பகுதிகளில் குடியிருப்பு உள்ளிட்ட கட்டுமானங்கள் மூலம் புதிய நகரை சீனா அமைத்து வருகிறது.</p><h2>புதிய நகரம்</h2><p>அங்கு மலைகளை குடைந்து புதிய நகரத்தை சீனா அமைத்து வருகிறது. சுரங்கப் பணிகள், மலைகளைக் குடைந்து சாலைகள் மற்றும் திரிசூலி நதியின் இயல்புப் போக்கை மாற்றி அமைக்கும் வண்ணம் அதன் மீது பெரிய அளவிலான கட்டுமானப் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.</p><p>இது அப்பகுதியின் மென்மையான இமயமலை சூழலியலை தீவிரமாகப் பாதித்துள்ளன.</p><p>குறிப்பாக நேபாளத்தின் ரசுவா எல்லையில் சீனாவால் அமைக்கப்பட்ட கைரோங் துறைமுகம் 2 நதிகள் இணையும் இடத்தில் கட்டப்பட்டுள்ளது.</p><p>இதன் காரணமாக, நேபாள எல்லையை நோக்கிப் பாயும் நதி நீரின் வேகம் பல மடங்கு அதிகரிக்கிறது.</p><h2>எச்சரிக்கை இல்லை</h2><p>கட்டுமானங்களால் ஏற்பட்ட நிலப்பரப்பு மாற்றங்களே பனிச்சரிவுக்கு வித்திட்டுள்ளது என்றும் இவ்வளவு பெரிய அளவிலான பேரிடர் மற்றும் அணை உடைப்பு அபாயம் குறித்து சீன தரப்பிற்கு தெரிந்திருந்தும், நேபாளத்திற்கு உரிய நேரத்தில் முன் எச்சரிக்கை விடுக்க தவறிவிட்டதாக பத்திரிகை குழு சாடியுள்ளது.</p><p>இப்படி, எல்லைக்கு அப்பால் சீன பகுதியில் நடக்கும் திட்டமிடப்படாத கட்டுமானங்களால், ஆற்றின் கீழ்நோக்கிய பகுதியில் அமைந்துள்ள நேபாளம் தொடர்ந்து இயற்கை சீற்றங்களுக்கு இலக்காகி வருவதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.</p><p>இருப்பினும், இக்குற்றச்சாட்டுகளை பொய் என மறுத்துள்ள சீன அரசு, இது இயற்கையாக ஏற்பட்டது என்றும் இந்த வெள்ளத்தால் சீனப் பகுதியிலும் உயிர்ச்சேதமும் உள்கட்டமைப்பு சேதமும் ஏற்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இது கன்னி உரை அல்ல.. வன்னி உரை..!- சட்டசபையில் அமைச்சர் வன்னி அரசு பேச்சு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-says-this-is-vanni-speech-not-maiden-speech</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-says-this-is-vanni-speech-not-maiden-speech#comments</comments><guid isPermaLink="false">4550ac16-db5d-426f-aa93-551ac6ac790b</guid><pubDate>Fri, 28 Aug 2026 06:51:42 +0000</pubDate><atom:updated>2026-08-28T06:51:42.479Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விசிக,vck,TN assembly,vanni arasu,தமிழக சட்டசபை |,வன்னி அரசு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/2ddhu5h5/vanni.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Vanni Arasu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/2ddhu5h5/vanni.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சமூகநீதி துறை மானியக்கோரிக்கை விவாதங்கள் மீது அமைச்சர் வன்னி அரசு பதிலளித்தார்.</p><p>அப்போது, சட்டசபையில் இன்று நான் பேசுவது கன்னி உரையல்ல, வன்னி உரை என அமைச்சர் வன்னி அரசு தனது உரையை தொடங்கினார்.</p><p>அவர் கூறியதாவது:-</p><p>என்னை கைது செய்ய வேண்டும் என முழக்கமிடப்பட்ட அதே சபையில் என்னை அமரவைத்து அழகு பார்த்திருக்கிறார் திருமாவளவன்.</p><p>விடுதலை புலிகளுக்கு ஆதரவு அளித்ததால் திருமாவளவனை கைது செய், வன்னி அரசுவை கைது செய் என 2007-ல் சட்டசபையில் முழக்கமிட்டனர்.</p><p>எனது வெற்றியைவிட வன்னி அரசுவின் வெற்றிதான் முக்கியமானது என எனக்காக தேர்தல் பரப்புரை மேற்கொண்ட உதயநிதிக்கு நன்றி. சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>தங்கம் தென்னரசு, கனிமொழி, எம்ஆர்கே பன்னீர்செல்வம், எ.வ.வேலு உள்ளிட்ட அத்தனை திமுக உறுப்பினர்களுக்கு நன்றி.</p><p>அப்போது, தமிழ்நாட்டின் முக்கிய ஊடகங்கள், பத்திரிகைகளின் பெயர்களை குறிப்பிட்டு சட்டசபையில் வன்னி அரசு நன்றி தெரிவித்தார்.</p><p>எனது தேர்தல் வெற்றிக்காக உழைத்த பாமக நிர்வாகிகளுக்கும் எனது நன்றிகள். </p><h2>சாதி ஒழிப்பு</h2><p>சாதி ஒழிப்பு களத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தமிழீழ விடுதலை களத்தில்.. சாதிய ஒழிப்பு களத்தில்.. என்றோ நான் கொல்லப்பட்டிருக்கலாம்.</p><p>தமிழ்த்தேசிய பேரியக்கம் தவெக ஆட்சியில் இடம்பெற்றிருப்பது மிகப்பெரிய வரலாறு. அமைச்சர்கள் மானியக்கோரிக்கை மீது பேசுவார்கள் நாங்கள் பார்த்திருக்கிறோம், இன்று எங்களுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.</p><p>கூட்டணியில் வெற்றி கிடைக்கும்போது அது இருதரப்புக்கும் பொருந்தும், நாங்கள் நன்றி கூறிவிட்டோம். ஆனால், எங்களுக்கு யாரும் இதுவரை நன்றி கூறவில்லை.</p><h2>எதிர்கட்சித் தலைவர் உதயநிதி</h2><p>திருமாவளவனுக்கும் எனக்கும் இருந்த உறவு அண்ணன் தம்பி போன்ற உறவு. மு.க.ஸ்டாலினுக்கும், திருமாவளவனுக்கும் இடையே இருந்த கூட்டணி தேர்தல் கூட்டணி கிடையாது, அது கொள்கை கூட்டணி.</p><p>என்னுடைய அரசியல் ஆசான் திருமாவளவன் என பலமுறை குறிப்பிட்டுள்ளேன். விசிக தலைவர் திருமாவளவனுக்கு நன்றி கூறுகிறேன்.</p><h2>அமைச்சர் வன்னி அரசு</h2><p>விசிக தலைவர் திருமாவளவனுக்கு நன்றி கூறுகிறேன் என உதயநிதி கூறியதும் முதன்முறையாக நன்றி கிடைத்துள்ளது.</p><p>எங்கள் இலக்கு என்பது சமூகநீதி, சமத்துவம்; அதன் அடிப்படையில் தான் தவெக அமைச்சரவையில் பங்கு பெற்றுள்ளோம்.</p><p>தீக்கிரையாக்கப்பட்ட குடிசைகளின் சம்பலில் இருந்து வந்தவன் நான். அமைச்சர் இருக்கையில் என்னை அமர வைத்த திருமா நாளையே அழைத்தாலும் போராட்டக் களத்திற்கு சென்றுவிடுவேன்.</p><p>பதவி, பரிசுக்காக நாங்கள் அரசியலுக்கு வரவில்லை. நாங்கள் பதவிக்காக போனோம் என யாரும் சொல்ல முடியாது. பொதுத்தொகுதியில் தலித்தை நிறுத்தவிடமாட்டோம் என்கின்றனர். ஆனால், 234 தொகுதியிலும் போட்டியிட சட்டத்தில் இடமுண்டு.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சீனாவில் அஜித் தோவல்.. இந்தியா - சீனா எல்லை நிர்ணயத்தில் உடன்பாடு </title><link>https://www.maalaimalar.com/news/world/ajit-doval-in-china-agreement-on-demarcation-of-india-china-border</link><comments>https://www.maalaimalar.com/news/world/ajit-doval-in-china-agreement-on-demarcation-of-india-china-border#comments</comments><guid isPermaLink="false">71c2ee04-6d48-4bed-8153-b639f113e2bd</guid><pubDate>Fri, 28 Aug 2026 05:57:46 +0000</pubDate><atom:updated>2026-08-28T05:57:46.633Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கல்வான் தாக்குதல்,Galwan attack,Ajit Doval,India-China,இந்தியா - சீனா,அஜித் தோவல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/5eakym0l/tn-9.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அஜித் தோவல்]]></media:title><media:description type="html"><![CDATA[ அஜித் தோவல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/5eakym0l/tn-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியா - சீனாவுக்கு இடையே எல்லை மோதல் நீண்ட காலமாக நீடித்து வருகிறது. கடந்த 2019 இல் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி சீன வீரர்கள் கல்வான் பள்ளத்தாக்கில் புகுந்து நடத்திய தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.    </p><p>இதையடுத்து சீனாவுடனான இந்தியாவின் உறவு பின்னடைவை சந்தித்த நிலையில் அந்த கசப்புகளை மறந்து பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின் பிங் சந்திப்பு 2025 ஷாங்காய் உச்சிமாநாட்டில் நடைபெற்றது.</p><p>முன்னதாக எல்லைக் கோட்டில் இரு நாட்டு வீரர்களும் இதன்முன் தாங்கள் இருந்த நிலைகளுக்கு திரும்புவதாக 2024 இல் ஒப்புக்கொள்ளப்பட்டது. </p><p>இருந்தபோதும் லடாக் உள்ளிட்ட எல்லைகளில் சீனா, தனது ராணுவ இருப்பை தொடர்ந்து அதிகப்படுத்தியும், ராணுவ கட்டமைப்புகளை மேற்கொண்டும், இமாச்சல பிரதேசத்தின் பகுதிகளை தங்களின் நாட்டு பகுதிகளாக வரைபடம் வெளியிட்டும் இந்தியாவுக்கு அச்சறுத்தலாக இருந்து வருகிறது. </p><p>இந்த சூழலில் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபர் பங்கேற்ப்பார் என கூறப்படுகிறது. </p><p>இதனிடையே இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் <a href="https://www.maalaimalar.com/topic/ajit-doval">அஜித் தோவல்</a> எல்லை பிரச்சனை மற்றும் இரு நாட்டு உறவுகள் குறித்து பேச சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார். </p><h2>அஜித் தோவல்</h2><p>சீன வெளியுறவு அமைச்சகத்தின் தகவலின்படி, ஆகஸ்ட் 25 அன்று பெய்ஜிங்கில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகியோருக்கு இடையே நடைபெற்ற 25வது சுற்றுப் பேச்சுவார்த்தையின் போது சில உடன்பாடுகள் எப்பட்டுள்ளன.</p><p>எல்லைப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க இரு தரப்பும் ஒப்புக்கொண்டன.</p><h2>எல்லை நிர்ணயம்</h2><p>இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே 3,488 கி.மீ நீளத்திற்கு 'எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு' மட்டுமே உள்ளதே தவிர, இரு நாடுகளும் கூட்டாக ஏற்றுக்கொண்ட நிலையான எல்லைக்கோடு இல்லை.</p><p>எல்லையை துல்லியமாக நிர்ணயிப்பதுகுறித்து அஜித் தோவல் மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி ஆகியோர் ஆலோசித்துள்ளனர்.</p><p>வரைபடத்தில் எந்தெந்த நிலப்பரப்பு யாருக்குச் சொந்தம், எல்லைக்கோடு எங்கு அமையும் என்பதைப் பேச்சுவார்த்தை மூலம் முடிவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><h2>பேச்சுவார்த்தை</h2><p>எல்லைப் பிரச்சனை தொடர்பாக சிறப்புப் பிரதிநிதிகள் மட்டத்திலான அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தையை 2027இல் இந்தியாவில் நடத்துவதற்கும் இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன.</p><p>எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் எழும் சிக்கல்களுக்கு ராணுவ தளபதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும்.</p><p>எல்லையின் கிழக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் இரு நாடுகளுக்கும் இடையே மேலும் இரண்டு புதிய ராணுவ ஹாட்லைன் தொடர்பு வழிகள் நிறுவப்படும்.</p><p>குறிப்பிட்ட 3 எல்லை வர்த்தக மையங்களை மீண்டும் திறப்பதை இரு தரப்பும் வரவேற்றதோடு, எல்லை வர்த்தகம் மற்றும் புனிதப் பயணங்களை வலுப்படுத்தவும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.</p><p>2024 இல் இரு நாட்டு படைகளையும் அதன் முந்தைய நிலைகளுக்கு திரும்பச் செய்வதாக ஒப்புக்கொள்ளப்பட்ட பின்னர் அஜித் தோவல் மற்றும் வாங் யி சந்திப்பது இது மூன்றாவது முறையாகும்.</p>]]></content:encoded></item><item><title>கிராண்ட் செஸ் டூர் சாம்பியன் பட்டம்- பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-hails-praggnanandhaa-grand-chess-tour-2026-champion</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-hails-praggnanandhaa-grand-chess-tour-2026-champion#comments</comments><guid isPermaLink="false">6f74293f-c4bf-43af-bdaa-ed00d12141fd</guid><pubDate>Fri, 28 Aug 2026 05:38:47 +0000</pubDate><atom:updated>2026-08-28T05:38:47.755Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,பிரக்ஞானந்தா,முதலமைச்சர் விஜய்,Praggnanadhaa,Grand Chess Tour,கிராண்ட் செஸ் டூர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/4irc63jv/praggnanandha.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chess champion praggnanandha- TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/4irc63jv/praggnanandha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அமெரிக்காவில் நடந்த கிராண்ட் செஸ் டூரில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</strong></em></p><p>கிராண்ட் செஸ் டூரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனை படைத்த பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகள் என முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் 2026 போட்டியில் <a href="https://www.maalaimalar.com/sports/first-indian-to-win-the-grand-chess-tour-praggnanandhaa-makes-history" rel="nofollow">சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் </a>என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ள தமிழ்நாட்டின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>உலகின் தலைசிறந்த வீரர்களுடன் நடைபெற்ற போட்டிகளில், அபாரமான மனஉறுதியுடனும், மதிநுட்பத்துடனும் விளையாடி சாம்பியன் பட்டத்தை வென்றிருப்பது அவரது அசாதாரண ஆற்றலுக்கும், விடாமுயற்சிக்கும் கிடைத்த அங்கீகாரமாகும்.</p><p>இந்த மகத்தான வெற்றி, இளம் தலைமுறையினருக்குப் புதிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிப்பதோடு, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளது. உலக அரங்கில் மேலும் பல சாதனைகளைப் படைக்க பிரக்ஞானந்தா அவர்களை மனமார வாழ்த்துகிறேன்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் 2026 போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ள தமிழ்நாட்டின் இளம் கிராண்ட்மாஸ்டர் திரு.பிரக்ஞானந்தா அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக்… <a href="https://t.co/q55B3CdcbD">pic.twitter.com/q55B3CdcbD</a></p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2093204008341282919?ref_src=twsrc%5Etfw">August 28, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>பிரதமர் ரேஸில் மோடி, ராகுலுக்கு அடுத்து 3ஆம் இடத்தில் முதல்வர் விஜய் - சர்வே </title><link>https://www.maalaimalar.com/news/national/chief-minister-vijay-ranks-third-behind-modi-and-rahul-in-the-race-for-prime-minister-survey</link><comments>https://www.maalaimalar.com/news/national/chief-minister-vijay-ranks-third-behind-modi-and-rahul-in-the-race-for-prime-minister-survey#comments</comments><guid isPermaLink="false">266af11b-adc0-4252-bc72-dd57c8696017</guid><pubDate>Fri, 28 Aug 2026 05:19:55 +0000</pubDate><atom:updated>2026-08-28T05:19:55.152Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,விஜய்,vijay,Prime Minister Modi,கருத்துக்கணிப்பு,opinion poll,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/w7g4lkxp/tn-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராகுல், விஜய், மோடி ]]></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல், விஜய், மோடி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/w7g4lkxp/tn-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2029 நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் மூன்று ஆண்டுகளே உள்ளது.  </p><p>இந்நிலையில் தமிழக முதல்வரும் தமிழக வெற்றி தமிழக தலைவருமான <a href="https://www.maalaimalar.com/topic/vijay">விஜய்</a>, நாட்டின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ள தலைவர்களின் பட்டியலில் 3வது இடத்தைப் பிடித்துள்ளார். </p><h2>கருத்துக்கணிப்பு</h2><p>'இந்தியா டுடே - சிவோட்டர்' அமைப்பு நடத்திய 'மூட் ஆப் தி நேஷன்' கருத்துக்கணிப்பில் பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்திக்கு அடுத்தபடியாக விஜய் இடம் பெற்றுள்ளார்.  </p><p>ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 25 வரை 25,184 பேரிடம் நேரடியாக  கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. </p><p>மேலும்  சிவோட்டர்  அமைப்பு கடந்த 6 மாதங்களில் 91,795 பேரிடம் நடத்திய கருத்துக்கணிப்பு தரவுகளும் இந்த கருத்துக்கணிப்பின் முடிவுகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.  </p><h2>ரிசல்ட் </h2><p>கருத்துக்கணிப்பில், அடுத்த பிரதமராக யாரைப் பார்க்க விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு 9.2% பேர் விஜய்யின் பெயரைப் பரிந்துரைத்துள்ளனர். மோடிக்கு 48.7% மற்றும் ராகுல் காந்திக்கு 27.1% ஆதரவு கிடைத்துள்ளது.</p><p>மேற்கு வங்கமுன்னாள் முதல்வரும் திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜிக்கு 2%, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு 1.7%, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) நிறுவனர் அபிஜித் தீப்கேவுக்கு 1.3% மற்றும் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 1.2% பேர் ஆதரவளித்துள்ளனர்</p><p>2024இல் அரசியலில் களமிறங்கிய விஜய் வெறும் இரண்டே ஆண்டுகளில் மாநில அரசியலையும் தாண்டி தேசிய அரசியலின் சென்சேஷனாக மாறியுள்ளதாக சர்வே கூறுகிறது.</p><h2>எதிர்க்கட்சி தலைவர்</h2><p>எதிர்க்கட்சிகளின் கூட்டணியை வழிநடத்தத் தற்போது எந்தத் தலைவர் பொருத்தமானவர் என்ற கேள்விக்கம் விஜய்க்கு குறிப்பிடத்தக்க ஆதரவு கிடைத்துள்ளது.</p><p>இப்பட்டியலில் ராகுல் காந்தி 29% ஆதரவுடன் முதலிடத்தில் உள்ள நிலையில், விஜய் 12.2% ஆதரவுடன் 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.</p><p>எதிரணியை வழிநடத்த மம்தா பானர்ஜி 8.5%, அரவிந்த் கெஜ்ரிவால் 7.5% மற்றும் அகிலேஷ் யாதவ் 6.9% ஆதரவைப் பெற்றுள்ளனர்.</p><h2>தேசிய முகம்</h2><p>தமிழகத்தில் தவெகவுடன் காங்கிரஸ் பயணிக்கும் நிலையில் விஜயின் தேசிய பிம்பம் அக்கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தவெகவை சேர்ந்த அமைச்சர்கள், விஜய்க்கு பிரதமர் ஆக முழு தகுதியும் உள்ளது என கூறிவருகின்றனர்.</p><p>வட மாநிலங்களிலும் விஜய் தளபதி என்ற பெயர் அண்மைக் காலமாக சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.=</p>]]></content:encoded></item><item><title>பிளஸ் 1 மாணவர்களுக்கு நவீன சைக்கிள் வழங்க ரூ.277 கோடி நிதி ஒதுக்கீடு- அமைச்சர் சம்பத் குமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sampath-kumar-announces-277-crore-for-plus-one-student-bicycles</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sampath-kumar-announces-277-crore-for-plus-one-student-bicycles#comments</comments><guid isPermaLink="false">4c7dcc07-2e1e-4169-9671-ade1e629b986</guid><pubDate>Fri, 28 Aug 2026 05:15:05 +0000</pubDate><atom:updated>2026-08-28T05:15:05.147Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,அமைச்சர் சம்பத்குமார்,Minister sambathkumar,Modern cycle,நவீன சைக்கிள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/3cjpkkhq/sambathkumar.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Sambathkumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/3cjpkkhq/sambathkumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பிளஸ் 1 மாணவர்களுக்கு ஹெல்மெட், குடிநீர் பாட்டிலுடன் நவீன சைக்கிள் வழங்க ரூ.277 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார்.</strong></em></p><p>பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மீதான மானிய கோரிக்கை குறித்து அமைச்சர் சம்பத்குமார் பதிலுரை அளித்தார்.</p><p>அப்போது, மக்கள் நலன் என்று கூறி தன் மக்கள் நலனை மட்டும் பார்த்தனர் என எம்ஜிஆர் பாடல் பாடி அமைச்சர் சம்பத்குமார் உரையாற்றினார். </p><p>இதற்கு,<a href="http://maalaimalar.com/search?q=%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88" rel="nofollow"> பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை</a>க்கும் அமைச்சர் பாடிய எம்ஜிஆர் பாடலுக்கும் என்ன சம்பந்தம் என தெரியவில்லை என கே.என்.நேரு விமர்சித்தார். </p><p>தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் பதிலுரை வழங்கினார்.</p><p>அப்போது அவர் கூறியதவது:-</p><p>விஜய் தமிழ்நாடு முதலமைச்சராவார் என 12 ஆண்டுகளுக்கு முன்பே கணித்தவர் அமைச்சர் ஆனந்த்.</p><p>திறமை இருந்தும் வாய்ப்பு இல்லாத நிலை இருக்க கூடாது, வாய்ப்பு கிடைத்தால் எந்த சமூகமும் உயரும்.</p><p>பிளஸ் 1 மாணவர்களுக்கான ஹெல்மெட், குடிநீர் பாட்டிலுடன் நவீன சைக்கிள் வழங்க ரூ.277 கோடி <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-allocates-rs-264-14-crore-forms-65-special-forces-to-fight-drugs" rel="nofollow">நிதி ஒதுக்கீடு</a> செய்யப்பட்டுள்ளது.</p><p>ஒரு தலைமுறையை மாற்ற வேண்டுமென்றால் அந்த தலைமுறைக்கு கல்வியை கொடுக்க வேண்டும்.</p><p>5 லட்சம் மாணவர்களுக்கு நவீன மிதிவண்டி வழங்குவதற்கு 11 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.</p><p>விடுதிகளில் காலி பணியிடங்கள் ஆசிரியர் தேர்வாணையம் மூலம் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>575 விடுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மாதந்தோறும் விடுதியில் ஆய்வு நடைபெறுகிறது. மாணவர் விடுதிகளை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p>கனவுகளுடன் விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களுக்கான அனைத்து வசதியும் செய்து கொடுக்க முதலமைச்சர் அறிவுறுத்தினார்.</p><p>விடுதியை ஆய்வு செய்தபோது மாணவர்களுடன் உரையாடிய முதலமைச்சர், எங்களை அழைத்து அறிவுறுத்தினார்.</p><p>ஆபத்து காலத்தில் காக்கும் 108 ஆம்புலன்ஸ்போல் தமிழக மக்கள் அச்சம் போக்க தவெகவுக்கு 108 எம்எல்ஏக்களை கொடுத்துள்ளனர்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>சக்திவாய்ந்த 200சிசி என்ஜினுடன் அறிமுகமானது யமஹாவின் YZF-R2</title><link>https://www.maalaimalar.com/automobilenews/bike/yamaha-r2-launched-india-price</link><comments>https://www.maalaimalar.com/automobilenews/bike/yamaha-r2-launched-india-price#comments</comments><guid isPermaLink="false">e9e03275-122b-4c8c-9fa4-39e3353f5732</guid><pubDate>Fri, 28 Aug 2026 05:08:00 +0000</pubDate><atom:updated>2026-08-28T05:08:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>yamaha,யமஹா,Motorcycle,மோட்டார்சைக்கிள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/lzenqjk7/Yamaha-R2.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Yamaha R2]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/lzenqjk7/Yamaha-R2.png?w=280" width="280"></media:thumbnail><category>பைக் (Automobile)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/yamaha">யமஹா</a> நிறுவனம் YZF-R2 பைக்கை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய யமஹா பைக்கின் விலை இந்தியாவில் ரூ. 2,30,500 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. </p><p>இந்த புதிய <a href="https://www.maalaimalar.com/topic/bike">பைக்</a> மூன்று வேரியண்ட்கள் மற்றும் ஐந்து வண்ணங்களில் கிடைக்கிறது. </p><h2>என்ஜின் மற்றும் செயல்திறன்:</h2><p>புதிய YZF-R2 பைக்கில் 204சிசி, லிக்விட்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 26.1bhp பவர் மற்றும் 19.1 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது. </p><p>இந்த என்ஜினுடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்லிப்-அண்ட்-அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மிட்-ஸ்பெக் மற்றும் M வேரியன்ட்களில், பை-டைரக்ஷனல் குயிக்ஷிஃப்டர் வழங்கப்படுகிறது.</p><h2>ஹார்டுவேர் அம்சங்கள்:</h2><p>யமஹா R15 உடன் ஒப்பிடும் போது, இந்த பைக் மிகவும் ஆக்ரோஷ வடிவமைப்பு மற்றும், கூர்மையான தோற்றம் கொண்ட ஹெட்லைட் பகுதியை கொண்டுள்ளது. இவை இந்த பைக்கிற்கு தனித்துவ தோற்றத்தை அளிக்கின்றன. இது டைமண்ட் ஃபிரேமில் கட்டமைக்கப்பட்டு, இன்வெர்டட் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் அமைப்பில் சஸ்பென்ஷன் செய்யப்பட்டுள்ளது.</p><p>இந்த பைக் இரு முனைகளிலும் 17-இன்ச் அலாய் வீல்களில் இயங்குகிறது, மேலும் முன்புறம் மற்றும் பின்புறம் டிஸ்க் பிரேக்குகள் மூலம் பிரேக்கிங் செய்யப்படுகிறது. YZF-R2 M பைக்கில் கூடுதலாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய முன்புற ஃபோர்க், பின்புற ஷாக் அப்சார்பர், கிளட்ச் லீவர் மற்றும் பிரேக் லீவர் ஆகியவை உள்ளன.</p><h2>யமஹா YZF-R2 சிறப்பு அம்சங்கள்:</h2><p>சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை, இந்த பைக்கில் ஸ்மார்ட்போன் இணைப்பு வசதியுடன் கூடிய TFT கன்சோல் உள்ளது. டாப்-எண்ட் M வேரியண்ட்டில், கீலெஸ் இக்னிஷனுக்காக ஸ்மார்ட் கீ சிஸ்டம் வழங்கப்படுகிறது.</p><p>அனைத்து வேரியண்ட்களிலும் டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இத்துடன், ஸ்ட்ரீட், ஸ்போர்ட் மற்றும் ரெயின் என மூன்று ரைடிங் மோட்களும் உள்ளன. இதன் மூலம், ஓட்டுநர் தனது விருப்பத்திற்கும் சாலை நிலைமைகளுக்கும் ஏற்ப பைக்கின் செயல்திறனை மாற்றியமைத்து கொள்ளலாம்.</p><p>இந்தியாவில் யமஹா R2 பைக் கே.டி.எம். ஆர்.சி.200 மற்றும் ஹீரோ கரிஸ்மா XMR 210 ஆகிய மாடல்களுடன் போட்டியிடுகிறது.</p>]]></content:encoded></item><item><title>புதிய அரசின் கீழ் விலைவாசி உயர்வு.. சட்டமன்றத்தில் உதயநிதி, இபிஎஸ் கவன ஈர்ப்பு - அமைச்சர் விளக்கம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rising-prices-under-the-new-government-udhayanidhi-and-eps-raise-the-issue-in-the-assembly-minister-offers-clarification</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rising-prices-under-the-new-government-udhayanidhi-and-eps-raise-the-issue-in-the-assembly-minister-offers-clarification#comments</comments><guid isPermaLink="false">3749ef41-0e6f-4f62-9ddb-e3ae56f4a634</guid><pubDate>Fri, 28 Aug 2026 04:44:10 +0000</pubDate><atom:updated>2026-08-28T04:44:10.541Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,விலைவாசி உயர்வு,Rising prices,Tamil Nadu Legislative Assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/rj1a1dac/tn-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சட்டமன்றம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சட்டமன்றம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/rj1a1dac/tn-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விலைவாசி உயர்வு குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் கீழ் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-28-august-2026">சட்டமன்றத்தில் </a>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசுகையில், "அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே இருக்கிறது. </p><p>அரசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை என எந்த பொருளை எடுத்தாலும் கடந்த 6 மாதங்களில் விலை பன்மடங்கு உயர்ந்திருக்கிறது. ஏழை எளிய நடுத்தர வர்க்க மக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். </p><p>குறிப்பாக இந்த அரசு அமைந்ததில் இருந்து அத்தியவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது.</p><p>மே மாதம் ஒரு கிலோ அரிசி 55 ரூபாய், இன்றைக்கு 75 ரூபாய், மே மாதம் ஒரு கிலோ வெங்காயம் 40 ரூபாய், இன்று கிலோ 80 ரூபாய், மே மாதம் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.150, இன்றைக்கு ரூ.180, மே மாதம் ஒரு கிலோ சர்க்கரை ரூ.40, இன்று ரூ.80 ரூபாயாக உயர்ந்துள்ளது. </p><p>மக்கள் இதனால் மிகவும் பாதித்திருக்கிறார்கள். மளிகை கடை பக்கம் செல்வதையே குறைத்து வருகிறார்கள் என செய்தி வருகிறது. </p><p>ஆளும் கட்சியின் கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் இயக்கங்கள் இதை கண்டித்து போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். </p><p>விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உதாரணமாக 2007 ஆம் ஆண்டு தேசிய அளவில் கடுமையான விலைவாசி உயர்வு ஏற்பட்டது. </p><p>அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர், தமிழ்நாடு மக்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக சிறப்பு பொது விநியோக திட்டத்தை அறிவித்தார்.</p><p>அதன் மூலம் பருப்பு, எண்ணெய், ரவா உள்ளிட்ட பொருட்களை சந்தை விலையை விட குறைவான விலையில் வழங்கினார். கடுகு, சீரகம் , வெந்தையம் உள்ளிட்ட 10 மளிகை பொருட்களை 50 ரூபாய்க்கு வழங்கினார்கள். கலைஞர் தொடங்கி வைத்த திட்டம் தற்போதுவரை நடந்து வருகிறது.</p><p>தற்போது வழங்கும் அளவை விட கூடுதலாக வழங்க வேண்டும் என இந்த அரசு ஆவன செய்ய வேண்டும். முதலமைச்சர் தலைமையில் நிதி, உணவு, கூட்டுறவு அமைச்சர்கள், அதன் துறை அதிகாரிகள் பங்கேற்கும் வகையில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடத்தி விலைவாசி உயர்வு பிரச்சனைக்கு இந்த அரசு உடனடியாக நல்ல தீர்வு காண வேண்டும்." என கேட்டுக்கொண்டார்.</p><h2>இபிஎஸ்</h2><p>அதிமுக தலைவர் இபிஎஸ் பேசுகையில், "அரசி விலை கிலோவுக்கு ரூ.20 உயர்ந்துள்ளது. சர்க்கரை விலை கிலோ ரூ.48 இல் இருந்து ரூ.72 ஆக விற்பனை செய்யப்படுகிறது. மஞ்சள் ஒரு கிலோ ரூ.200 இல் ரூ.250 ஆக உயர்ந்துள்ளது. மிளகாய் ரூ.200 இல் இருந்து தற்போது ரூ.300க்கு விற்கிறது.</p><p>வெள்ளம் ரூ.58 இல் இருந்து தற்போது ரூ.85 ஆக உயர்ந்துள்ளது. புளி, பருப்பு விலைகளும் அதிகரித்துள்ளது. எண்ணெய் விலை 40 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>நமக்கு வறட்சி நிலவுகிறது. இதனால் ஆந்திராவில் இருந்து வரும் அரிசி வரத்தும் குறைந்துள்ளது. அதிமுக அரசு இருந்தபோது விலை ஏற்றத்தின்போது எந்த பொருள் விலை ஏறுகிறதோ, அந்த பொருள் எந்த மாநிலத்தில் எங்கு குறைவாக உள்ளதோ அங்கிருந்து இறக்குமதி செய்து கூட்டுறவு சங்கம் மூலம் கொள்முதல் செய்து விற்கப்பட்டது. </p><p>அதனால் விலைவாசியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தோம். எனவே இந்த அரசும் விலைவாசியை கட்டுப்படுத்த முயற்சி செய்ய வேண்டும்." என தெரிவித்தார்.</p><h2>விளக்கம்</h2><p>இதற்கு விளக்கம் அளித்த உணவு வழங்கல் துறை அமைச்சர் வெங்கட்ரமணன், " ஈரான் போரால் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மற்ற பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக சர்க்கரை நமது மாநிலத்தில் மட்டுமல்ல, அதிக உற்பத்தி செய்யும் மகாராஷ்டிராவிலும் ரூபாய் ஏறியுள்ளது. எல்லா இடங்களிலும் விலை ஏறத்தான் செய்திருக்கிறது.</p><p>நமது முதலமைச்சர் தலைமையிலான கமிட்டியில் வாராவாரம் 41 பொருட்களுக்கு உண்டான விலையை தினமும் கண்கணிக்கிறோம். வெங்காயம், உருளைக்கிழங்கு, அரசி என எல்லா பொருட்களையும் கண்காணிக்கிறோம். </p><p>விலை உயர்வு அதிக உள்ளவற்றை கண்டறிந்து கடந்த காலங்களில் என்ன நடைமுறைப்படுத்தினோமோ அதை நடைமுறைப்படுத்தி மக்களுக்கு பாதிப்பில்லாத வண்ணம் விலையை குறைக்க முயன்று வருகிறோம்.</p><p>ரேஷன் கடைகள் மூலமாக மட்டுமல்ல, அங்கன்வாடி பசுமை கடைகள் மூலமாகவும் சென்ற ஆட்சிக்காலங்களை போல இப்போதும் கண்டிப்பாக செய்யப்படும்" என தெரிவித்தார்.</p> ]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY : இரண்டாவது நாளாக குறைந்த தங்கம் விலை- எவ்வளவு தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-28-08-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-28-08-2026#comments</comments><guid isPermaLink="false">64531ed8-cab6-4e55-895a-00d44c71593d</guid><pubDate>Fri, 28 Aug 2026 04:36:05 +0000</pubDate><atom:updated>2026-08-28T04:36:05.424Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="350" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/y2gwkogj/gold04.jpg" width="615"><media:title type="html"><![CDATA[ தங்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/y2gwkogj/gold04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 260 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</strong></em> </p><p>ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் பிறந்துள்ளதால் <a href="https://www.maalaimalar.com/topic/தங்கம்">தங்கம்</a> விலை ஏறுமுகமாகவே உள்ளது. அந்த வகையில், வார தொடக்கநாளான திங்கட்கிழமை தங்கம் விலை கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 30-க்கும் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 240 ரூபாய்க்கும் செவ்வாய்கிழமை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 10-க்கும் சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்றுமுன்தினம் விடுமுறை தினம் என்பதால் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. </p><p>இதனை தொடர்ந்து நேற்று தங்கம் இரண்டு முறை குறைந்தது. காலை தங்கம் கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் 14 ஆயிரத்து 940-க்கும் சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 520-க்கும் மாலை கிராமுக்கு 285 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 725-க்கும் சவரனுக்கு 1,720 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனையானது. இதனால் நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,280 குறைந்தது குறிப்பிடத்தக்கது. </p><h2><strong>இன்றும் குறைந்த தங்கம் விலை</strong></h2><p>இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 75 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 650-க்கும் சவரனுக்கு 600 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. </p><h2><strong>வெள்ளி விலை நிலவரம்</strong> </h2><p>வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 260 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. </p><h2><strong>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்</strong></h2><p>27-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,800</p><p>26-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,080</p><p>25-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,080</p><p>24-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,240</p><p>23-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,600</p> <h2><strong>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>27-08-2026- ஒரு கிராம் ரூ.265</p><p>26-08-2026- ஒரு கிராம் ரூ.265</p><p>25-08-2026- ஒரு கிராம் ரூ.265</p><p>24-08-2026- ஒரு கிராம் ரூ.275</p><p>23-08-2026- ஒரு கிராம் ரூ.270</p>]]></content:encoded></item><item><title>10,000mAh பேட்டரி, 100W சார்ஜிங் வசதியுடன் புதிய ரெட்மி நோட் ஸ்மார்ட்போன் அறிமுகம்</title><link>https://www.maalaimalar.com/technology/newgadgets/redmi-note-17-pro-max-5g-launched-in-with-10000mah-battery</link><comments>https://www.maalaimalar.com/technology/newgadgets/redmi-note-17-pro-max-5g-launched-in-with-10000mah-battery#comments</comments><guid isPermaLink="false">9d192394-d7b1-4c3b-84f1-b96d6a4d2879</guid><pubDate>Fri, 28 Aug 2026 04:36:00 +0000</pubDate><atom:updated>2026-08-28T04:36:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Redmi,ரெட்மி,smartphone,ஸ்மாரட்போன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/39pstbio/REDMI-Note-17-Pro-Max-5G.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ REDMI Note 17 Pro Max 5G]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/39pstbio/REDMI-Note-17-Pro-Max-5G.png?w=280" width="280"></media:thumbnail><category>புதிய கேஜெட்டுகள் (New gadgets)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/xiaomi">சியோமி</a> நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி தேர்வு செய்யப்பட்ட சர்வதேச சந்தைகளில் தனது ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. </p><p>இந்த <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மார்ட்போன்</a> அளவில் பெரிய பேட்டரி, அதிவேக சார்ஜிங் வசதி, 50MP பிரைமரி கேமரா போன்ற அம்சங்களுடன் வருகிறது.</p><p>புதிய ரெட்மி நோட் ஸ்மார்ட்போன் இருவித மெமரி ஆப்ஷன்கள் மற்றும் மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியுடன் வருகிறது.</p><h2>ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் அம்சங்கள்:</h2><p>சிறப்பம்சங்களை பொருத்தவரை புதிய ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் மாடல் 6.83 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 1.5K ரெசல்யூஷன், அதிகபட்சம் 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், HDR10+ மற்றும் டால்பி விஷன் கொண்டிருக்கிறது. இந்த ஸ்கிரீன் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 மூலம் பாதுகாக்கப்படுகிறது.</p><p>இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 5 பிராசஸர், அதிகபட்சம் 8ஜிபி LPDDR5X ரேம், 512ஜிபி UFS 4.1 ஸ்டோரேஜ் கொண்டிருக்கிறது. மென்பொருளை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ஹைப்பர் ஓ.எஸ். 3 உடன் வருகிறது. இத்துடன் ஏ.ஐ. சார்ந்து பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகின்றன.</p><p>புகைப்படங்கள் எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, 8MP அல்ட்ரா வைடு சென்சார், 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, டூயல் சிம், வைபை 6, ப்ளூடூத் 6 வழங்கப்பட்டுள்ளது. </p><p>புதிய ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் 10,000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 100 வாட் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 27 வாட் வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் வசதி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டுள்ளது.</p><h2>விலை விவரங்கள்:</h2><p>புதிய ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம், 256ஜிபி மெமரி மாடல் விலை JPY79,980 இந்திய மதிப்பில் ரூ. 47,900 என்றும் 8ஜிபி ரேம், 512ஜிபி மெமரி மாடல் விலை JPY99,980 இந்திய மதிப்பில் ரூ. 59,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கிளவுட் பிரஷ், பர்ப்பிள் மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>50MP கேமரா, 45W சார்ஜிங்: சாம்சங் கேலக்ஸி S26 FE ஸ்மார்ட்போன் அறிமுகம்</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/samsung-galaxy-s26-fe-launched</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/samsung-galaxy-s26-fe-launched#comments</comments><guid isPermaLink="false">c97d5155-eef6-4d07-a320-a1a995af97f8</guid><pubDate>Fri, 28 Aug 2026 03:38:00 +0000</pubDate><atom:updated>2026-08-28T03:38:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Samsung,சாம்சங்,smartphone,ஸ்மார்ட்போன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/3jpofrgt/Galaxy-S26-FE.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Samsung Galaxy S26 FE]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/3jpofrgt/Galaxy-S26-FE.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/samsung">சாம்சங்</a> நிறுவனத்தின் கேலக்ஸி S26 FE ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. முதற்கட்டமாக இந்த ஸ்மார்ட்போன் தேர்வு செய்யப்பட்ட உலக சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் இந்த <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மார்ட்போன்</a> அடுத்த மாத தொடக்கத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.</p><p>புதிய கேலக்ஸி S26 FE மாடலில் எக்சைனோஸ் 2000 சீரிஸ் சிப்செட் கொண்டிருக்கிறது. இந்த சிப்செட் 3 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் 4900mAh பேட்டரி, வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங் வசதிகளுடன் வருகிறது. </p><h2>கேலக்ஸி S26 FE சிறப்பம்சங்கள்:</h2><p>சாம்சங் கேலக்ஸி S26 FE மாடலில் 6.7 இன்ச் Full HD+ Dynamic AMOLED 2X டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 3 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்ட எக்சைனோஸ் 2000 சீரிஸ் சிப்செட் உடன் வருகிறது.</p><p>மெமரியை பொருத்தவரை இந்த மாடலில் 8 ஜிபி ரேம், அதிகபட்சம் 512 ஜிபி வரையிலான ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 8MP டெலிபோட்டோ கேமரா, OIS, 12MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.</p><p>இந்த ஸ்மார்ட்போன் 4900mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 45 வாட் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், 15 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு இந்த ஸ்மார்ட்போன் 5ஜி, 4ஜி, எல்.டி.இ., வைபை 6E, ப்ளூடூத் 5.4, யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டுள்ளது.</p><h2>விலை விவரங்கள்:</h2><p>புதிய சாம்சங் கேலக்ஸி S26 FE ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை 799 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 89,000 என தொடங்குகிறது. இதன் டாப் எண்ட் 8 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடல் விலை 1,099 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 1,22,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.</p><p>புளூபெரி, கிராஃபைட் மற்றும் பிஸ்தாச்சியோ நிறங்களில் கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி S26 FE ஸ்மார்ட்போன் செப்டம்பர் 4-ஆம் தேதி தேர்வு செய்யப்பட்ட சர்வதேச சந்தைகளில் சாம்சங் ஆன்லைன் ஸ்டோரில் விற்பனைக்கு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்| 27 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-27-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-27-august-2026#comments</comments><guid isPermaLink="false">fdcac3cc-5277-4752-b476-f0f1c8922a11</guid><pubDate>Thu, 27 Aug 2026 04:02:06 +0000</pubDate><atom:updated>2026-08-28T03:32:57.974Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly,tvk</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/zok08jg6/vanni-arasu.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Vanni Arasu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/zok08jg6/vanni-arasu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் இன்று சமூக நீதித்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மீதான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது.</p><p>சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு மானிய கோரிக்கை தாக்கல் செய்ய உள்ள நிலையில் சட்டசபைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வருகை</p><p>தமிழக சட்டசபையில் உறுப்பினர்களின் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். </p><p>வேலூர் காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து பாலாறு பாலம் வரை உயர்மட்ட பாலம் கட்ட அரசு ஆவணம் செய்யுமா? என்று எம்.எல்.ஏ. சுதாகர் கேள்வி எழுப்பினார். சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து உரியநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார். </p><p>கீழ்வேளூர் ரெயில்வே மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என பா.ம.க. எம்எல்ஏ லதா கோரிக்கை விடுத்தார். அதற்கு பதில் அளித்த அமைச்சர், பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். </p><p>திருத்துறைப்பூண்டியில் போக்குவரத்து நெரிசலாக உள்ளதால் ரெயில்வே மேம்பாலம் கட்டப்படுமா? என்று உறுப்பினர் மாரிமுத்து எழுப்பிய கேள்விக்கு, மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து தண்டவாளத்தை கடந்து செல்வதால் ரெயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.</p><p>தாம்பரம்-செங்கல்பட்டு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க அதிமுக ஆட்சியில் நடவடிக்கை, கடந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது. மேம்பாலம் குறித்து இன்றைய அரசின் நிலை என்ன? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, செங்கல்பட்டு முதல் சென்னை வரை போக்குவரத்து நெரிசல் அதிகளவில் உள்ளதால் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை- கன்னியாகுமரி 8 வழிச்சாலைக்கான பணிகளை தொடங்கியுள்ளோம், திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெறுகிறது என்றார். </p><p>செஞ்சி அரசு மருத்துவமனைக்கு சி.டி.ஸ்கேன் உள்ளிட்ட கூடுதல் நவீன உபகரணங்கள் வழங்கப்படுமா? என பா.ம.க. எம்எல்ஏ கணேஷ் குமார் எழுப்பிய கேள்விக்கு, ஆய்வு செய்து தேவைப்பட்டால் கூடுதலாக வழங்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.</p><p>கும்மிடிப்பூண்டியில் அரசு மருத்துவமனைக்கு டயாலிசஸ் செய்வதற்கான கருவி கூடுதலாக வழங்க வேண்டும் என எம்எல்ஏ விஜயகுமார் கோரிக்கை விடுத்தார். அதற்கு அமைச்சர் அருண்ராஜ், கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்து தேவைப்பட்டால் டயாலிசஸ் கருவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். </p><p>சட்டசபை நிகழ்வுக்கு பின்னர் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் ஆய்வு நடத்தப்படும். அனைத்து மருத்துவமனைகளிலும் ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அருண் ராஜ் தெரிவித்தார். </p><p>H1N1 காய்ச்சலை கட்டுப்படுத்த முதியவர், கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை உள்ளதா? என்று உறுப்பினர் லட்சுமணன் எழுப்பிய கேள்விக்கு, H1N1 வைரஸ் காய்ச்சல் கட்டுப்பாட்டில்தான் உள்ளது, தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். H1N1 வைரஸ் குறித்து ஆய்வு செய்து தேவைப்பட்டால் தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். </p><p>கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவர், செவிலியர் பற்றாக்குறை நிலவுவதாக எஸ்.பி.வேலுமணி கூறியதற்கு கோவை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார். </p><p>தென்காசியில் உள்ள இருளர், காட்டுநாயக்கன் சமுதாயத்தினருக்கு சாதிச்சான்று கிடைக்க நடவடிக்கை தேவை. வீரகுடி வெள்ளாளர் சமுதாயத்தினருக்கு தென்காசியில் வைச பிள்ளை என்றுதான் சாதி சான்று தருகின்றனர் என எம்எல்ஏ ராஜா எழுப்பிய கேள்விக்கு, குறும்பர், நாயக்கர் மலைவாழ் நாயக்கர் என்று சாதி சான்றிதழ் தருவதில் சிக்கல் உள்ளது. சாதிச்சான்றிதழ் கோரிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளோம், அனுமதி கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். </p><p>சோழிங்கநல்லூரில் உள்ள ஊராட்சிகளை சென்னை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் என எம்எல்ஏ சரவணன் கோரிக்கை விடுத்தார். சென்னை மாநகராட்சியுடன் இணைப்பது தொடர்பாக ஆய்வு செய்து ஆட்சியர்களுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.</p><p>திருத்தணி அரசு மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி இல்லை என அதிமுக எம்எல்ஏ அரி எழுப்பிய கேள்விக்கு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி உள்ளது. பயனாளிகளை கணக்கில் கொண்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதியை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கூறினார். </p><p>என்னுடைய திருவெறும்பூர் தொகுதியில் மழைக்காலத்தில் நெல் வீணாவதை தடுக்க குடோன்கள் கட்டித் தரப்படுமா?- எம்எல்ஏ நாவல்பட்டு விஜி.</p><p>செப்டம்பரில் இருந்து காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை கொள்முதல் நிலையம் செயல்பட நடவடிக்கைகள் எடுத்து இருக்கிறோம். தார்பாய் மூலமாக நெல்மணியை காய வைக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். எந்த இடத்தில் பிரச்னை வந்தாலும், கோரிக்கை வந்தாலும் அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்- அமைச்சர் வெங்கடரமணன்.</p><p>ராமநாதபுரம் பணங்குடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் எப்போது அமைக்கப்படும் என எம்எல்ஏ சதீஷ் கிறிஸ்டோபர் எழுப்பிய கேள்விக்கு, 2026-27 கொள்முதல் பருவத்தில் நடக்கும் சாகுபடிக்கு ஏற்றவாறு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் செயல்பாட்டை கண்காணிப்பதற்காக ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்படும் என அமைச்சர் வெங்கட்ராமன் தெரிவித்தார். </p><p>மொடக்குறிச்சியில் நீர்நிலை புறம்போக்கு எனக் கூறி 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு பட்டா மறுக்கப்படுவதாக தவெக எம்.எல்.ஏ. சண்முகன் கூறியதற்கு, நீர் ஓடக் கூடிய இடமாக இல்லை என்றால் பரிசீலித்து நடவடிக்கை என அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்தார். </p><p>“சோழிங்கநல்லூரை தனி மாவட்டமாக அல்லது தனி மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும்” என தவெக எம்.எல்.ஏ., ஈசிஆர் சரவணன் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர்,“சோழிங்கநல்லூரை தனி மாவட்டமாக அல்லது தனி மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும். 7 ஊராட்சிகள் செங்கல்பட்டிலும் 20 வார்டுகள் சென்னை மாநகராட்சியிலும் இருப்பதால் இரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கும் சென்று மக்கள் அவதியடையும் சூழ்நிலை உள்ளது” என்றார்.</p><p>கலசப்பாக்கம் ஜவ்வாது மலைப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தப்படுமா? என்று உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எழுப்பிய கேள்விக்கு, மலைவாழ் மக்கள் வாழும் பகுதியில் சாலை வசதி மேம்படுத்த தொடர் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று வனத்துறை அமைச்சர் தெரிவித்தார்.</p><p>ராதாபுரம் தொகுதி பணகுடியில் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்கப்படுமா?- எம்எல்ஏ சதீஷ் கிறிஸ்டோபர்</p><p>ராதாபுரம் தொகுதி பணகுடியில் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்கப்படுவது குறித்து குழு மூலம் ஆய்வு செய்து ஆட்சியர் மூலம் நடவடிக்கைகள் எடுப்போம்- அமைச்சர் வெங்கடரமணன்.</p><h2>அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்த பாமக எம்எல்ஏ</h2><p>சட்டமன்றத்தில் பாமக எம்எல்ஏ கணேஷ்குமார் கூறுகையில்," செஞ்சி மருத்துவமனையில் கடந்த ஆட்சிக் காலத்தில் மகப்பேறுக்கான தனிக் கட்டடம் கட்டப்பட்டு ஆபரேஷன் தியேட்டர் நடைமுறைக்கு வராமல் இருந்தது அமைச்சர் ஆனந்திடம் ஒரே ஒரு கோரிக்கைதான் வைத்தேன். மறுநொடியே DM-ஐ அழைத்து சொன்னதன் விளைவாக 10 நாட்களுக்கு முன்பாக ஆபரேஷன் தியேட்டர் முழு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.</p><p>சிசேரியன் மிக சிறப்பாக சிசேரியன் நடைபெற்றுள்ளது. நீர்வளத்துறை அமைச்சருக்கும்(ஆனந்த்) சுகாதாரத்துறை அமைச்சருக்கும்(அருண்ராஜ்) நன்றிக்கடனுடன் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.</p><p>கோவை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாமல் உள்ளனர். கூடுதல் நியமனம் அவசியம். Liver Transplantation சிகிச்சை செய்யவும் அரசு முன்வர வேண்டும் என்று அதிமுகவின் எஸ்.பி வேலுமணி வலியுறுத்தினார்.</p><p>அதற்கு பதில் அளித்த அமைச்சர் அருண்ராஜ்,"அரசு மருத்துவமனைகளில் உயர் சிறப்பு மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கிறது. முதல் முறையாக 284 உயர்சிறப்பு மருத்துவர் பணியிடம் உருவாக்கி இருக்கிறோம். Liver Transplantation தேவை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கைகள் எடுப்போம்" என்றார்.</p><p>நேபாள விவகாரம்.. எதிர்கட்சிகள் கோரிக்கை ஏற்பு</p><p>தமிழகத்தில் இருந்து நேபாளம் சென்றவர்கள் வெள்ளத்தில் சிக்கியது குறித்து எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தில், அவர்கள் விளக்கும் முன்பாக அமைச்சர் ராஜ்மோகன் பதிலளிக்க, எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், அமைச்சருக்கு முன்பாக எதிர்க்கட்சிகள் எடுத்துரைக்க சபாநாயகர் வாய்ப்பளித்தார்.</p><p>தமிழ்நாடு சட்டசபை ஒருநாள் விடுமுறைபின் இன்று கூடியது. சபைகூட்டத்தொடர் தொடங்கியதும் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். இதனை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், நேபாளத்தில் பெரு வெள்ளம் தொடர்பாக விளக்கம் அளிக்க தொடங்கினார். </p><p>அதற்கு நேபாளம் பெரு வெள்ளம் தொடர்பாக சபையில் கவன ஈர்ப்பு கொடுக்கப்பட்ட நிலையில், அதற்கு முன்பாகவே அமைச்சர் விளக்கம் அளிப்பதற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். </p><p>பதில் அளித்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்:- </p><p>நாட்டையே உலுக்கிய சம்பவம் தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் முன்னால் பேசினால் என்ன, பின்னால் பேசினால் என்ன?. நாங்கள் கவனத்திற்கு கொண்டு வந்ததால் தான் அமைச்சர் பதிலளிக்கிறார் என்பதல்ல. </p><p>அதற்கு எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய பின்னர் அமைச்சர் பதிலளிப்பது தான் முறையாக இருக்கும் என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. </p><p>அரசிற்கு கவனத்திற்கு கொண்டுவருவதற்கு முன்பே அமைச்சர் பதிலளிப்பதா?. அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம் அதன் பின்னர் விளக்கம் அளியுங்கள் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். அதற்கு, சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், அமைச்சர் பேசிய பின் உறுப்பினர்கள் கேள்வி கேட்பதில் ஒன்றும் தவறில்லையே என்றார். </p><p>மேலும், கரூர் சம்பவம் நடந்தபோது இதே சபையில் முதலமைச்சர் பேசிய பின்னர் கேள்வி கேளுங்கள் என நடந்ததாக சபாநாயகர் விளக்கம் அளித்தார்- ஜே.சி.டி.பிரபாகர். </p><p>இருப்பினும் சட்டசபையில் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் எதிர்க்கட்சித் தலைவரே முதலில் பேசட்டும் என அமைச்சர் ராஜ்மோகன் பரிந்துரைத்த நிலையில் சபாநாயகர் அனுமதி வழங்கினார்- ஜே.சி.டி.பிரபாகர். </p><p>நேபாள நாட்டில் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 160 பேர் உயிரிழப்பு, 750 பேரை காணவில்லை என செய்திகள் வருகின்றன. சுற்றுலா சென்ற 110 இந்தியர்கள் சிக்கியுள்ளதாகவும், குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு மாவட்டங்களில் 40-க்கும் மேற்பட்டோர் சென்றிருப்பதாக கூறப்படுகிறது.</p><p>எத்தனை தமிழர்கள் சிக்கியுள்ளனர்? அவர்களில் எத்தனை பேர் மீட்கப்பட்டுள்ளார்கள்.</p><p>தமிழர்களை மீட்க சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்களா? ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சிக்கி இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. இதில் அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்- உதயநிதி</p><p>நேபாளம் சென்ற தமிழர்கள் 57 பேர் மாயம், அரசு தரிதமாக செயல்பட்டு அவர்களை தாயகம் மீட்டுவர நடவடிக்கை தேவை.  நேபாளத்திற்கு கோவை ஈஷா மூலம் ஆன்மிக பயணம் சென்றோரின் நிலை என்ன?- இபிஎஸ்.</p><p>திருக்குறுங்குடி நம்பி ஆண்டவர் கோயிலுக்குச் செல்லும் பாதை, காலம் செல்ல செல்ல குறுகிக்கொண்டே செல்கிறது. பொதுமக்களின் வசதிக்காக அதன் பாதையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?- எம்எல்ஏ ரெட்டியார்பட்டி நாராயணன்</p><p>எம்எல்ஏ ரெட்டியார்பட்டி நாராயணணின் கோரிக்கையை ஏற்று, அதிகாரிகளிடம் பரிசீலித்து ஆவண செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்- வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார்</p><p>நேபாள சம்பவம் தொடர்பாக கவனஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பர்ட்,"பேச்சின் இறுதியில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க ஐடியா ஒன்றை தந்தார்.</p><p>அவர்"காலநிலை மாற்றம் ஏற்பட்டு வருவதால், எந்தந்த பகுதிகளில் காலநிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து ஒவ்வொரு மாதமும் தெரிவித்தால், சுற்றுலா செல்பவர்களுக்கும், மீட்பு பணிகளுக்கும் வசதியாக இருக்கும்" என்றார்.</p><p>நேபாள நாட்டில் கைலாஷ் யாத்திரைக்கு தமிழகத்தை சேர்ந்த 103 பேர் பல குழுக்களாக சென்றுள்ளனர். நேபாள பெருவெள்ளம் ஏற்பட்ட ரஸ்வா மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியவில்லை.</p><p>நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழகர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 34 பேரின் விவரங்களை பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.</p><p>நேபாள வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் குறித்த விவரங்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்- சட்டசபையில் நேபாள வெள்ளம் தொடர்பான கவன ஈர்ப்புக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பதில்.</p><p>அரசு நிகழ்வை முடித்துவிட்டு, முதல்வர் விஜய் வந்து கொண்டிருக்கிறார். அவர் தலைமையில் நேபாள சம்பவம் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான அவசரக் கூட்டம் நடைபெற உள்ளது- அமைச்சர் ராஜ்மோகன்.</p><p>துறை சார்ந்த அதிகாரிகள் அவையில் இருக்க வேண்டும் என்பதனை சபாநாயகர் அறிவுறுத்த வேண்டும் என்று சபாநாயகருக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலிறுத்தியுள்ளார்.</p><p>கேள்வி நேரம் இருக்கும்போது துறையின் செயலாளர்கள் இருக்க வேண்டும். அவர்கள் அதனைக் குறிப்பு எடுக்க வேண்டும். துறை சார்ந்த அதிகாரிகள் அவையில் இருக்க வேண்டும் என்பதனை சபாநாயகர் அறிவுறுத்த வேண்டும்- உதயநிதி</p><p>டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் பரவும் நிலையில், கட்டுப்பாடு நடவடிக்கை என்ன என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>இதற்கு பதில் அளித்த அமைச்சர் அருண்ராஜ்,"டெங்கு, பன்றிக்காய்ச்சல் பரவல் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது கொசு ஒழிப்பு பணியும் மேற்கொள்ளப்படுகிறது. </p><p>டெங்கு காய்ச்சல் தொடர்பாக 2  நாட்களுக்கு முன்னர் அனைத்து இயக்குநர், மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம்.</p><p>ஏடிஎஸ் கொசுவால் டெங்கு பாதிப்பு ஏற்படுவதால் வீடுகளை சுற்றி கொசு உற்பத்தியாகாமல் பாதுகாப்பது மக்களின் பொறுப்பு.</p><p>கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு ஆகஸ்ட்டில் கூடுதலாக 300 பேருக்கு டெங்கு பாதிப்பு உள்ளது என்றாலும் நிலை கட்டுப்பாட்டிற்குள்தான் உள்ளது.</p><p>தமிழ்நாட்டில் முதலீடு செய்த நிறுவனம் ஆந்திராவிலும் முதலீடு செய்துள்ளது. சுஸ்லாண் நிறுவனம் ஆந்திராவுக்கு சென்றதாக செய்தி பரவும் நிலையில் அமைச்சர் கீர்த்தனா விளக்கம்.</p><p>மேலும் அவர்,"பல ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் இருந்து சென்ற நிறுவனம் அரசின் நடவடிக்கையால் தற்போது ரூ.500 கோடியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.500 கோடி முதலீடு செய்யும் நிறுவனத்தின் மூலம் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.</p><p>சின்னபிள்ளை சுயஉதவி குழு மூலம் மதுரையில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு என நான் பேசியது திருத்தி வெளியிடப்பட்டுள்ளது" என்றார்.</p><p>கீர்த்தனாவின் திருத்த அறிக்கை.. ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய திமுக..</p><p>விதியின் கீழ் திருத்த அறிக்கை சமர்ப்பிக்க அமைச்சர் கீர்த்தனாவுக்கு உரிமை இருக்கிறது. அதே விதியில், திருத்தக் குறிப்பை பேரவை கூடும் அரை மணி நேரத்திற்கு முன்பாக உறுப்பினர்களின் தகவலுக்காக வைக்க வேண்டும். எனவே, இதை ஒழுங்குப் பிரச்சினையாக எடுத்துக்கொள்ள வேண்டும்-  திமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின்.</p><p>நிச்சயமாக, வருங்காலங்களில் திருத்த அறிக்கையை அரை மணி நேரத்திற்கு முன்பாக உறுப்பினர்களின் கவனத்திற்குக் கொண்டு வர அமைச்சர்கள் முன்வர வேண்டும்- சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்.</p><p>சென்ற ஆகஸ்ட் 25-ஆம் தேதி மானியக் கோரிக்கை விவாதம் சிறப்பாக நடந்தது. முதன்முறையாக 9:43 மணி நேரம் தொடர்ந்து அவை நடந்தது. இருப்பினும், நேரம் காரணமாக அறிவிப்பவர்களுக்கு, அவையில் இருப்பவர்களுக்கு ஏற்படும் பதற்றத்தைப் போக்கும் வகையில், இனி அறிவிப்புகளை வெளியிட்ட பிறகு அமைச்சர்கள் பேசும் நடைமுறை கொண்டுவரப்படும்- சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்.</p><p>அமைச்சர்கள் அறிவிப்புகளை வெளியிட்ட பிறகு பதிலுரை வழங்குவது என்பது, திரைப்படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியை முதலில் போடுவது போல இருக்கும். அது சரியா?- அமைச்சர் தங்கம் தென்னரசு.</p><p>என்னுடைய கருத்து, க்ளைமாக்ஸை மக்கள் பார்க்காமல் போய்விடுவார்களோ என்கிற கவலை- சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்</p><p>படம் நன்றாக இருந்தால், பொறுமையாக இருந்து மக்கள் கடைசி வரை க்ளைமாக்ஸ் பார்ப்பார்கள். நீங்கள் சொல்வதைப் பார்த்தால், இந்தப் படம் ஓடாது, நன்றாக இருக்காது. எனவே, முன்பே க்ளைமாக்ஸ் போட்டுவிடுவோம் என்பது போல இருக்கிறது- எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி</p><p>படம் நன்றாக இருந்தால், பொறுமையாக இருந்து மக்கள் கடைசி வரை க்ளைமாக்ஸ் பார்ப்பார்கள். நீங்கள் சொல்வதை பார்த்தால், இந்த படம் ஓடாது, நன்றாக இருக்காது, எனவே முன்பே க்ளைமாக்ஸ் போட்டு விடுவோம் என்பது போல இருக்கிறது- எதிர்கட்சி தலைவர் உதயநிதி.</p><p>இப்போதெல்லாம் படத்திற்கு இரு க்ளைமாக்ஸ் இருக்கிறது. படத்தின் துவக்கத்திலும், இறுதியிலும் அவை வருகிறது. மாற்றத்தை விரும்ப வேண்டும். நீங்கள் ஆட்சி மாற்றத்தையும் விரும்புவதில்லை, நடைமுறை மாற்றத்தையும் விரும்புவதில்லை- அமைச்சர் வன்னி அரசு.</p><p>சட்டமன்றத்தில் கேள்வி, விடை நேரம் நிறைவு பெற்று பிற்படுத்தப்பட்டோர்-சிறுபான்மையினர்-சமூகநீதித்துறை தொடர்பான மானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது.</p><p>சமூகநீதித்துறையில் புதிய அறிவிப்புகள்</p><p>ஆதிதிராவிடர் மக்களுக்கு தேவையான நல உதவிகளை வழங்க ஏதுவாக சமூக நீதி நல வாரியம் அமைக்கப்படும்.</p><p>பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு கல்வி, மருத்துவம், திருமண உதவி தொகை வழங்கி பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ திட்டம்.</p><p>ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகளுக்கான வருடாந்திர பராமரிப்பு தொகை உயர்த்தி வழங்கப்படும்- வன்னி அரசு.</p><p>ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாமாக்கருக்கு ரூ.160 கோடியில் 150 சமூகநீதி விடுதிகள் கட்டப்படும்.</p><p>ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கல்லூரி விடுதி ஆண்டு பராமரிப்பு தொகை ரூ.50,000-ல் இருந்து ரூ. 1 லட்சமாக உயர்த்தப்படும்.</p><p>ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகளுக்கான வருடாந்திர பராமரிப்பு தொகை உயர்த்தி வழங்கப்படும்- வன்னி அரசு.</p><p>ஆதிதிராவிடர், பழங்குடியினர் விடுதியை நிர்வகிக்க, மாணவர் பாதுகாப்பை உறுதிசெய்ய அரண்- விடுதி பராமரிப்பு மேலாண்மை.</p><p>தரமான, சத்தான உணவு வழங்கும் பொருட்டு விடுதி மாணவர்களுக்கு வழங்கும் மாதாந்திர உணவு கட்டணம் உயர்த்தப்படும்.</p><p>ஆதி திராவிட மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் சமுதாய நிகழ்வுகளை நடத்த ஏதுவாக 100 சமுதாய கூடங்கள் கட்டப்படும்- வன்னி அரசு</p><p>மாணாக்கருக்கு பாதுகாப்பு, சுகாதாரமான மற்றுமு் கல்விக்கு உகந்த தகுமிடம் சூழலை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை.</p><p>ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர் மற்றும் காப்பாளர்களுக்கு 'அறிவொளி ஆசிரியர் விருது மற்றும் அறிவொளி காப்பாளர் விருது' வழங்கப்படும்.</p><p>இதன் மூலம், ஆசிரியர்கள் மற்றும் விடுதி காப்பாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் புதுமையான முயற்சிகளைப் பாராட்டி, சிறந்த கற்பித்தல் நடைமுறைகள் ஊக்குவிக்கப்படும்- வன்னி அரசு</p><p>ஊடகத் துறையில் இளம் திறமைகளை ஊக்குவிக்க உட்பயிற்சி உதவித்தொகை வழங்கும் “ஊடகத்திறன் ஊக்குவிப்பு திட்டம்” செயல்படுத்தப்படும் என பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார் அமைச்சர் வன்னி அரசு.</p><p>இதன் மூலம் மாணாக்கர் ஊடக நிறுவனங்களில் நடைமுறை பயிற்சி பெற்று, தொழில்முறைத் திறன்களை வளர்த்துக் கொண்டு ஊடகத் துறையில் சிறந்து விளங்க பயிற்சி.</p><p>பள்ளி விடுதி மாணாக்கர்களுக்கு ரூ.1400ல் இருந்து ரூ.1800 ஆகவும், கல்லூரி விடுதி மாணாக்கர்களுக்கு ரூ.1500ல் இருந்து ரூ.2000 ஆகவும் உயர்த்தி மாதாந்திர உணவு கட்டணம் வழங்கப்படும்- அமைச்சர் வன்னி அரசு </p><h2>சென்னையில் பழங்குடியினர் பண்பாட்டு மையம்</h2><p>நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் செயல்படும் பழங்குடியினர் ஆய்வு மையத்தின் பணிகளை சென்னை மாநகருக்கும் விரிவுபடுத்தும் வகையில், சென்னை நந்தனத்தில் ‘பழங்குடியினர் பண்பாட்டு மையம்' அமைக்கப்படும்- அமைச்சர் வன்னிஅரசு</p><h2>விடிவெள்ளி மகளிர் வாழ்வாதார திட்டம்</h2><p>பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒரு இலட்சம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின குடும்பத் தலைவிகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக 'விடிவெள்ளி மகளிர் வாழ்வாதார திட்டம்' செயல்படுத்தப்படும்- அமைச்சர் வன்னிஅரசு</p><h2>தூய்மை பணியாளர்களுக்கு சொந்த வீடு</h2><p>தூய்மை பணியாளர்களுக்கு சொந்த வீடு வழங்க ‘அகம் திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டு, 2500 கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்- அமைச்சர் வன்னி அரசு</p><h2>சமூகநீதி விடுதிகளுக்கு Fridge</h2><p>சமூக நீதி விடுதிகளில் 20 கல்லூரி விடுதிகளுக்கு Inverter, fridge, Water Purifiers w 940 பள்ளி விடுதிகளுக்கு Inverter, Water Purifiers வழங்கப்படும்- அமைச்சர் வன்னி அரசு</p><h2>கொசுவலைகள் பொருத்த நடவடிக்கை</h2><p>1,238 சமூகநீதி பள்ளி, கல்லூரி விடுதிகளில் உள்ள அனைத்து ஜன்னல்களுக்கும் ரூ.26.85 கோடியில் தரமான கொசுவலைகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்- அமைச்சர் வன்னி அரசு</p><h2>பூம்பொழில் தங்கும் வசதிகள்</h2><p>மலைப்பகுதிகளில் பழங்குடியின வாழ்விடத்திற்கு அருகில் அமைந்துள்ள இயற்கை வளம், உயிரியல் பன்முகத்தன்மை மற்றும் வாழ்வியலை கண்டு மகிழும் வகையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த 'பூம்பொழில் தங்கும் வசதிகள்' ஏற்படுத்தப்படும். </p><p>உள்ளூர் பழங்குடியின இளைஞர்களுக்கு வழிகாட்டி பயிற்சி வழங்கப்படும்- அமைச்சர் வன்னி அரசு.</p><h2>சிறப்பு அங்கன்வாடி மையங்கள்</h2><p>பழங்குடியின குழந்தைகளுக்கு மழலையர் கல்வி வழங்கவும், படித்த பழங்குடியின இளைஞர்களுக்கு வசிப்பிடத்திற்கு அருகே வேலைவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்யவும், தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 250 இடங்களில் ‘சிறப்பு அங்கன்வாடி மையங்கள்' உருவாக்கப்படும்- அமைச்சர் வன்னி அரசு.</p><p>பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோருக்கு நிதியுதவி தொடர்பாக, சட்டப்பேரவையில் அமைச்சர் சம்பத்குமார் அறிவித்துள்ளார்.</p><p>அதன்படி, பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோருக்கு நவீன சிகைதிருத்தும் அழகு நிலையம் அமைக்க நிதியுதவி வழங்கப்படும்.</p><p>சலூன் கடை அமைக்க ஒரு பயனாளிக்கு ரூ.1.50 லட்சம் என 100 பேருக்கு ரூ.1.50 கோடி நிதியுதவி வழங்கப்படும்.</p><p>மதுரை, தேனி, திண்டுக்கல்லில் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் ரூ.4.50 கோடியில் உட்கட்டமைப்பு பணி மேற்கொள்ளப்படும்</p><p>ரூ.3 கோடியில் மிக பிற்படுத்தப்பட்டோர் நல வாரியம் புதிதாக உருவாக்கப்படும்</p><p>பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த 5,000 பேருக்கு இஸ்திரி பெட்டி வழங்கப்படும்.</p><p>தலித் மக்களில் 28 சதவீதம் பேர் குடிசைகளில் தான் உள்ளனர். 75 ஆண்டுகளில் தலித் பெண்களுக்கு முக்கியத்துவம் தரவில்லை.</p><p>அமைச்சர் ஆதவ் பேசியபோது திமுகவினர் எழுந்துநின்று கோஷம் எழுப்பிய நிலையில் நாங்களும் எழுந்து நிற்போம் என ஆதவ் பேசினார்.</p><p>மேலும் அவர், எத்தனை மாற்று சாதியினர் அர்ச்சகராக தற்போது வரை கோவில்களில் உள்ளனர் என தகவல் எடுத்து நான் கொடுக்கிறேன்.</p><p>திமுக அரசாணை போட்டது, விழா நடத்தியது ஆனால் 32 பேருக்கு மட்டும் பணி நியமன ஆணை வழங்கியுள்ளது. 5 ஆண்டு ஆட்சியில் இருந்தது திமுக, ஆனால் நீதிமன்றத்தில் வழக்கில் வெற்றிபெற முடியவில்லை. அந்த வழக்கை தொடுத்தது யார்?- அமைச்சர் ஆதவ்</p><p>கோவி செழியன்- இந்தியாவிலேயே பிற்படுத்தப்பட்டோருக்காக தீப்பிடித்து எரியாத கான்கிரீட் வீடு கட்டி தந்தது திமுக அரசு தான்.</p><p>5 ஆண்டுகளுக்கு தான் மக்கள் வாக்களித்துள்ளனர், 5 ஆண்டுக்கும் தவெக ஆட்சி இருக்கும் என சபாநாயகர் திட்டவட்டம்.</p><h2>திமுக எம்எல்ஏ சேகர் பாபு </h2><p>அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தில் 32 பேருக்கு அர்ச்சகர் பணிநியமன ஆணை திமுக ஆட்சியில் வழங்கப்பட்டது.</p><p>சில நல்ல மனம் படைத்தவரகள் நீதிமன்றத்திற்கு சென்ற காரணத்தினால் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதில் சிக்கல்.</p><p>அர்ச்சகர் வழக்கில் தனி குழு அமைத்து உச்சநீதிமன்றத்தில சட்ட போராட்டம் நடத்தியது திமுக அரசு.</p><h2>அமைச்சர் ஷாஜகான்</h2><p>சிறுபான்மையினருக்கு 18 அறிவிப்புகளை கொடுத்து சரித்திரம் படைத்துள்ளது தவெக அரசு.</p><p>ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வேலை செய்வது ஒவ்வொரு அரசின் கடமை. திமுக ஏன் இதுவரை ஒரு தலித்தை கூட பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக்கவில்லை?- அமைச்சர் ராஜ்மோகன்.  </p><p>ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு கொடுத்தது தமிழக வெற்றிக் கழக அரசு. கடந்த தேர்தலில் 4 பேர் விசிக சார்பில் வெற்றி பெற்று வந்திருந்தோம், ஆனால் திமுக அரசு ஒரு அமைச்சர் பதவி கூட கொடுக்கவில்லை- வன்னி அரசு. </p><p>சமூக நீதி பேசக்கூடிய திமுக கடந்த ஆட்சியில் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசவே இல்லை. மேற்குவங்க், பீகாரில் 3 மாதத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி செயல்படுத்தினார்கள்.</p><p>சாதிவாரி கணக்கெடுப்பு கோப்பைகளை எங்கேயோ தூக்கிபோட்டுவிட்டது கடந்த திமுக அரசு.</p><p>தமிழக வெற்றிக் கழக அரசு தான் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என அறிவித்திருக்கிறது- அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</p><p>அண்ணன் சேகர்பாபு, பெரியார் பெயரை உச்சரிக்கவே கூடாது. கடந்த ஆட்சி பெரியார் பெயரை பெயரளவில் சொல்லிவிட்டு, அனைத்து ஜாதியினர் திட்டத்தை கைவிட்டுவிட்டார்கள். எல்லாம் பேப்பரில் தான் இருக்கிறது.</p><p>வாளோடு வரும் எதிர்க்கட்சியினரை ஆளும் கட்சி கேடயம் கொண்டு தடுக்க வேண்டுமே தவிர வாள் கொண்டு எதிர்க்கக் கூடாது.</p><p>இணக்கமான சுழ்நிலையை சுமுகமாக நடத்தவேண்டும் என்பது தான் அவையின் நோக்கம்: சபாநாயகர்</p><p>விஜயகாந்த் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த தலைவர்களுக்கு நன்றி.</p><p>மானிய கோரிக்கை மீதான விவாதத்தை தவிர்த்து மற்ற விஷயங்கள் நடந்து வருகின்றன.</p><p>சட்டப்பேரவையில் கடந்த 3 நாளாக சண்டை மட்டுமே நடந்து வருகிறது.</p><p>சட்டமன்றத்தில் சண்டையைப் பார்க்க நாங்கள் வரவில்லை.</p><p>ஆளும்கட்சியினர், எதிர்க்கட்சியினர் மாறி மாறி சண்டை போட்டுக் கொள்வதால் என்ன பயன்?</p><p>சட்டசபையில் நடைபெறும் சண்டையால் மக்களுக்கு என்ன பயன்? - பிரேமலதா</p><p>தமிழக சிறையில் உள்ள சிறைவாசிகளை நன்னடத்தை விதிகளை கருத்தில் கொண்டு விரைவில் விடுவிக்க வேண்டுகிறேன்</p><p>புளியங்குடி நகராட்சியை தரம் உயர்த்த வேண்டும்.</p><p>கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும்.</p><p>தென்மலையில் நெல் சேமிப்பு கிடங்கு அமைத்து தரவேண்டும்.</p><p>பூலித்தேவன் மணிமண்டபத்தை பராமரிக்க வேண்டும்- திமுக எம்.எல்.ஏ. ராஜா</p><p>சென்னையின் பழமையான தொகுதி ராயபுரம் மற்றும் முக்கிய தொகுதிகளில் ஒன்று. நட்சத்திர தொகுதி என்றுக் கூறுவார்கள். ஆனால் அதன் நிலை சொல்வதற்கு இல்லை.</p><p>ஏழ்மை நிலையில் இருக்கும் மக்கள் அங்கு நிறைய இருக்கிறார்கள். அங்கு வீடுகள் இன்று வசிக்கும் 850 குடும்பங்களுக்கு வீடு கட்டித்தர வேண்டும் என்று வேண்டுகிறேன். </p><p>காசிமேடு மீன் சந்தையை புதிப்பித்துத் தர வேண்டுகிறேன். மீனவர்களுக்கு தற்போது தரப்படும் நிவாரணத் தொகையை ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரமாக உயர்த்தி தரவேண்டும். </p><p>ராயபுரத்தில் அதிநவீன தொழில்நுட்ப பூங்கா அமைக்கவேண்டும். இதன்மூலம் வடசென்னை இளைஞர்களுக்கு அருகிலேயே வேலைவாய்ப்புகள் கிடைக்கும். </p><p>அதிக கொள்ளளவு கொண்ட குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்கள் அமைக்கப்பட வேண்டும் - ராயபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜய் தாமு அரசுக்கு வைத்த கோரிக்கைகள்.</p><p>விலையில்லா விருந்தகத்தை பார்த்துதான் காலை உணவுத் திட்டத்தை கொண்டுவந்தனர். அதுபோல தாய்மாமன் தங்க மோதிரத் திட்டமும் எப்போதிலிருந்து நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். இப்போதுதான் திட்டமாக அறிவித்துள்ளோம். - சட்டமன்ற உறுப்பினர் விஜய் தாமு</p><p>தேர்தலுக்கு முன்னர் என்னைப் பார்த்து எதிர்க்கட்சித் தலைவர் சிரிப்பார். ஆனால் முதல் மாநாட்டிற்கு பிறகு அவர் எனக்கு நிறைய இடைஞ்சல்களை கொடுத்தார். - விஜய் தாமு </p><p>அதிமுக எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி</p><p>ஈலுவாத்தியா சமூதாயத்தில் தமிழக முழுவதும் சுமார் 15 லட்சம்பேர் வசிக்கிறாரகள். இவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான சாதி சான்றிதழ் கன்னியாகுமரி மாவட்டம் செங்கோட்டை தாலுகாவில் மட்டுமே சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது. கடந்த முறை ஜூலை 2020ல் நானும் சமூதாயத் தலைவர்கள் அனைவரும் சேர்ந்து அன்னைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரடியாக சந்தித்து பரிந்துரை செய்யப்பட்டு தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வசிக்கும் ஈலுவாத்தியா சமூதாய மக்களுக்கு பிசி சான்றிதழ் ஆவாணம் செய்யப்பட்டது.</p><p>வங்கி பணிகளில் பணிப்புரிய விரும்புவோருக்கு ஓபிசி சான்றிதழ் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அது இன்னும் நிலுவையில் உள்ளது.</p><p>இதன் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு  பரிந்துரை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.</p> <p>பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார்</p><p>தமிழ்நாடு சட்டம் 45-ன் கீழ் 1994-ன்படி பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல்கள் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் ஒரு சமூகத்தை சேர்த்தல் அல்லது நீக்குதல் தொடர்பான திருத்தங்களை மேற்கொள்வதற்கு உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி அமைக்கப்பட்ட தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணயைத்தின் பரிந்துரைகளை பெற்று அரசு பரிசீலனை செய்யப்படும் அரசால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>தாஹிராவுக்கு வாய்ப்பு... திமுக எதிர்ப்பு</p><p>திமுக கொறடா எ.வ.வேலு:</p><p>அலுவல் ஆய்வு குழு என்று உள்ளது, அதன் படி தான் அவை நடக்கிறது. அந்த பட்டியலில் இல்லாதவரை பேச அனுமதிப்பது எப்படி? </p><p>இதுக்கு எந்த முன் உதாரணமும் இல்லை. அனுபவம் உள்ள முன்னவர் செங்கோட்டையன், இது பற்றி சொல்ல வேண்டாமா?</p><p>சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசை ஏன் நம்பியிருக்க வேண்டும்? என்று சி.வி.சண்முகம் கேள்வி. </p><p>நம்மிடம் உள்ள பட்டியலை வைத்து மாநில அரசே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் என்ன பிரச்சனை? என கேள்வி எழுப்பினார்.</p><p>மத்திய அரசு தான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என ஜனார்த்தனன் கமிட்டி சொன்னதால் அதை பின்பற்றினோம் என்று எ.வ.வேலு கூறினார்.  </p><p>இடம் மாறி அமர்ந்த முதல்வர்</p><p>சட்டப்பேரவையில் தனது இருக்கையிலிருந்து எழுந்துவந்து அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா நடுவே அமர்ந்த முதலமைச்சர் விஜய்.</p>]]></content:encoded></item><item><title>பக்தர்களின் வசதிக்காக வேளாங்கண்ணிக்கு சிறப்பு பஸ்கள் - போக்குவரத்துக்கழகம் அதிரடி அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-buses-to-velankanni-for-the-convenience-of-devotees-transport-corporations-prompt-announcement</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-buses-to-velankanni-for-the-convenience-of-devotees-transport-corporations-prompt-announcement#comments</comments><guid isPermaLink="false">86c873f1-15eb-4acf-90fb-96339c0a8196</guid><pubDate>Fri, 28 Aug 2026 03:27:45 +0000</pubDate><atom:updated>2026-08-28T03:27:45.661Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு பஸ்கள்,special bus,velankanni temple,வேளாங்கண்ணி கோவில்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/ns4o5iim/Buskilampakkam.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ சிறப்பு பஸ்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ சிறப்பு பஸ்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/ns4o5iim/Buskilampakkam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மற்ற நாட்களில் தேவைக்கேற்ப சென்னையிலிருந்து வேளாங்கண்ணிக்கும், வேளாங்கண்ணியிலிருந்து சென்னைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.</strong></em></p><p>தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><h2><strong>சிறப்பு பஸ்கள்</strong></h2><p>வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு நேற்று முதல் செப்டம்பர் 10-ந் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி, சென்னை, பெங்களூரு, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் ஆகிய ஊர்களிலிருந்து வேளாங்கண்ணிக்கு <a href="https://www.maalaimalar.com/topic/சிறப்பு-பஸ்கள்">சிறப்பு பஸ்கள்</a> நேற்று முதல் வருகிற செப்டம்பர் 10-ந் தேதி வரை இயக்கப்பட உள்ளது.</p><p>வேளாங்கண்ணி மாதா கோவிலில் 29-ந் தேதி (நாளை) கொடியேறுவதை முன்னிட்டு 28-ந் தேதி (இன்று) சென்னையிலிருந்து வேளாங்கண்ணிக்கு 150 சிறப்பு பேருந்துகளும், 29-ந் தேதி வேளாங்கண்ணியிலிந்து சென்னைக்கு 150 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளது. </p><p>அதே போல் செப்டம்பர் 8-ந் தேதி கொடி இறங்குவதை முன்னிட்டு சென்னையிலிருந்து வேளாங்கண்ணிக்கும், வேளாங்கண்ணியிலிருந்து சென்னைக்கும் 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.</p><p>மற்ற நாட்களில் தேவைக்கேற்ப சென்னையிலிருந்து வேளாங்கண்ணிக்கும், வேளாங்கண்ணியிலிருந்து சென்னைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இதுமட்டுமின்றி குழுவாக பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேற்படி சேவையை வேளாங்கண்ணி செல்லும் பக்தர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கிராண்ட் செஸ் தொடரை வென்ற முதல் இந்தியர்.. வரலாறு படைத்தார் பிரக்ஞானந்தா</title><link>https://www.maalaimalar.com/sports/first-indian-to-win-the-grand-chess-tour-praggnanandhaa-makes-history</link><comments>https://www.maalaimalar.com/sports/first-indian-to-win-the-grand-chess-tour-praggnanandhaa-makes-history#comments</comments><guid isPermaLink="false">a4b56de9-4250-4e6e-98a4-4ac3bf00185e</guid><pubDate>Fri, 28 Aug 2026 03:21:20 +0000</pubDate><atom:updated>2026-08-28T03:21:20.964Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Chess,செஸ்,PragGnanandhaa,பிரக்ஞானந்தா,Grand Chess Tour,கிராண்ட் செஸ் தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/7hzz8tfv/tn-5.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரக்ஞானந்தா]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரக்ஞானந்தா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/7hzz8tfv/tn-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர்&nbsp; <a href="https://www.maalaimalar.com/topic/praggnanandhaa">பிரக்ஞானந்தா</a>, கிராண்ட் செஸ் இறுதிப்போட்டியில் வென்று வரலாறு படைத்துள்ளார்.&nbsp;</p><p>அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நேற்று&nbsp; நடைபெற்ற 'கிராண்ட் செஸ் டூர் பைனல்ஸ்' தொடரில்&nbsp; உலகப் புகழ்பெற்ற பேபியானோ கருவானாவை பிரக்ஞானந்தா எதிர்கொண்டார்.&nbsp;</p><h2>ஆட்டம்</h2><p>கிளாசிக்கல்&nbsp; சுற்றுகளின் முடிவில் கருவானா 6 புள்ளிகள் முன்னிலையுடன் இருந்தார்.&nbsp;பிரக்ஞானந்தா 3-9 என்ற கணக்கில் பின்தங்கியிருந்தார்</p><p>இருப்பினும், ரேபிட் சுற்றில் விஸ்வரூபம் எடுத்த பிரக்ஞானந்தா, இரு போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆட்டத்தின் போக்கையே முற்றிலும் மாற்றியமைத்தார்.</p> <p>அடுத்து நடைபெற்ற பிளிட்ஸ் சுற்றின் முதல் போட்டியில் பிரக்ஞானந்தாவுக்கு சிறிய பின்னடைவு ஏற்பட்டது. அந்தப் போட்டி டிராவில் முடிந்தது.</p><p>ஆனால்&nbsp; பிளிட்ஸ் சுற்றின் அடுத்த 3 போட்டிகளில் சமநிலையை&nbsp; தக்கவைத்துக்கொண்ட பிரக்ஞானந்தா, இறுதியில் 15-13 என்ற புள்ளிக் கணக்கில் தனது வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை உறுதி செய்தார்.</p> <h2>சாதனை</h2><p>இந்த வெற்றியின் மூலம் கிராண்ட் செஸ் டூர் பட்டத்தைக் கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை பிரக்ஞானந்தா படைத்துள்ளார்.&nbsp;</p><p>இந்த சாம்பியன் பட்டத்தின் மூலம் அவருக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.68 கோடி பரிசுத்தொகை கிடைத்துள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சீமானுக்கு ஆதரவாக நிற்பேன்- ட்விஸ்ட் வைத்த நடிகை விஜயலட்சுமி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/actress-vijayalakshmi-support-to-seeman</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/actress-vijayalakshmi-support-to-seeman#comments</comments><guid isPermaLink="false">d2edc1d2-665c-4f18-85a7-297ade517fb6</guid><pubDate>Fri, 28 Aug 2026 03:11:45 +0000</pubDate><atom:updated>2026-08-28T03:11:45.914Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Seeman,Naam Thamizhar katchi,Vijayalakshmi,விஜயலட்சுமி,சீமான்,நாம் தமிழர் கட்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/2l3w7op7/vijayalakshmi.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சீமான்-விஜயலட்சுமி]]></media:title><media:description type="html"><![CDATA[ சீமான்-விஜயலட்சுமி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/2l3w7op7/vijayalakshmi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>எனது வாழ்க்கை பற்றியும், சீமான் பற்றியும் கொச்சைப்படுத்தி பேசிக்கொண்டே இருப்பீர்கள் என்றால், இனி நான் சீமானுக்கு ஆதரவாக உறுதியாக நிற்பேன் என விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.</strong></em> </p><p>நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">சீமான்</a> தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் இருதரப்புக்கும் சுப்ரீம் கோர்ட்டில் சமரசம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நடிகை விஜயலட்சுமி எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்தார்.</p><p>இந்தநிலையில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF">விஜயலட்சுமி</a> ஒரு புதிய வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-</p><h2><strong>ஆதரவாக நிற்பேன்...</strong></h2><p>நாம் தமிழர் கட்சியினரின் வாயை அடைக்க வேண்டும் என்றால் உடனே ‘விஜயலட்சுமி... விஜயலட்சுமி...' என்று எனது பெயரை கூறி விடுகிறார்கள். ஒரு வாரமாக பார்க்கிறேன். சீமானையும், என்னையும், நாம் தமிழர் கட்சியையும் தொடர்ந்து கொச்சைப்படுத்தி விமர்சித்து வருகிறார்கள்.</p><p>ஒருவர் தவறை உணர்ந்து <a href="https://www.maalaimalar.com/news/national/supreme-court-quashes-vijayalakshmi-case-791918">மன்னிப்பு</a> கேட்கும்போது, அவர்களை வாழ விடவேண்டும். அதுதான் மனித நேயம். அதைத்தான் நானும் செய்தேன். ஆனால் தொடர்ந்து எனது வாழ்க்கை பற்றியும், சீமான் பற்றியும் கொச்சைப்படுத்தி பேசிக்கொண்டே இருப்பீர்கள் என்றால், இனி நான் சீமானுக்கு ஆதரவாக உறுதியாக நிற்பேன்.</p><p>நாம் தமிழர் கட்சிக்கு நான் ஆதரவாக பேசுவதால், உடனே ‘ஒரு பெரிய தொகை செட்டில் பண்ணிட்டாங்க போல...' என்று பேசவேண்டாம். ஏனெனில், என்னை பணம் கொடுத்து யாராலும் விலைக்கு வாங்க முடியாது.</p><p>இவ்வாறு அந்த வீடியோவில் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.</p><p>இத்தனை நாட்களாக சீமானுக்கு எதிரான கருத்துக்களுடன் வீடியோ வெளியிட்டு வந்த விஜயலட்சுமி, தற்போது அவருக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் மறைமுகமாக தமிழக வெற்றி கழகத்தினரை தாக்கும் வகையில் இந்த வீடியோவை அவர் வெளியிட்டு இருப்பதாக பேசப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>மணிப்பூர்: கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் பள்ளி முதல்வர் உட்பட 4 பேர் பலி </title><link>https://www.maalaimalar.com/news/national/four-people-including-a-school-principal-killed-in-a-militant-attack-in-manipur</link><comments>https://www.maalaimalar.com/news/national/four-people-including-a-school-principal-killed-in-a-militant-attack-in-manipur#comments</comments><guid isPermaLink="false">7f6296ae-079d-4bf5-bf84-31a6cc48756b</guid><pubDate>Fri, 28 Aug 2026 02:45:42 +0000</pubDate><atom:updated>2026-08-28T02:45:42.031Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>துப்பாக்கிச்சூடு,manipur,கலவரம்,firing,மணிப்பூர்,unrest</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/c2d70nfe/tn-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மணிப்பூர்]]></media:title><media:description type="html"><![CDATA[ மணிப்பூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/c2d70nfe/tn-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/manipur">மணிப்பூரில் </a>கிளர்ச்சியாளர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் நாகா சமூகத்தை சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். </p><p>காங்போக்பி மாவட்டத்தில் குக்கி  இன மக்கள் பெரும்பான்மையாக வாழும் மகுய் அஷாங்  மற்றும் தபாம்பா நாகா  கிராமங்களுக்கு இடைப்பட்ட காட்டுப் பகுதியில் நேற்று காலை 8:30 மணியளவில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.  </p><p>தனியார் பள்ளி நிறுவனர் மற்றும் முதல்வர் தட்சோங்போ ரிங்காங்மாய், சவாங்கிணிங் கிராம நிர்வாகத் தலைவர் விசோபூ சாரேனமாய், எம். விஜுனமாய், அனில் விஜுனமாய் ஆகியோர் உயிரிழந்தனர். கெய்காமங் ரிங்காங்மாய் என்பவர் காயமடைந்தார். </p><p>பலியான 5 பேரும் 'லியாங்மை நாகா' சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களின் சடலங்கள் அருகில் உள்ள சேனாபதி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.</p><p>இதில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு மாநில முதல்வர் ஒய். கேம்சந்த் சிங் பாதுகாப்புப் படை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><h2>கிளர்ச்சி</h2><p>மணிப்பூரின் நாகா சமூகத்தின் உச்ச அமைப்பான 'ஐக்கிய நாகா பேரவை' இந்தத் தாக்குதலுக்குக் குக்கி கிளர்ச்சி அமைப்புகளே காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளது.</p><p>இதனிடையே, மே 3, 2023 அன்று பழங்குடியினர் பேரணிக்குப் பிறகு வெடித்த கலவரத்தின் பின்னணி குறித்து ஆராய அரசு அமைத்த விசாரணை ஆணையத்திற்கு, மத்திய அரசு மேலும் 6 மாத கால அவகாசம் அளித்து நவம்பர் 20 வரை காலநீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.</p> <h2>மணிப்பூர் வன்முறை</h2><p>மே 2023 முதல் பள்ளத்தாக்கில் வாழும் மெய்தி மற்றும் மலைப்பகுதியில் வாழும் குக்கி இனமக்களுக்கு இடையே ஏற்பட்ட இனக்கலவரத்தில் இதுவரை 260க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 58,800க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர்.</p><p>தொடர் கலவரம் மற்றும் அப்போதைய முதல்வர் என். பிரேன் சிங் ராஜினாமாவைத் தொடர்ந்து, 2025 பிப்ரவரி 13 முதல் 2026 பிப்ரவரி 4 வரை மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்தது.</p>]]></content:encoded></item></channel></rss>