<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 20 Aug 2026 09:46:56 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: ரேஷன் அரிசியின் தரம் குறித்து சட்டசபையில் காரசார விவாதம் - 20 ஆகஸ்ட் 2026
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-20-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-20-august-2026#comments</comments><guid isPermaLink="false">93b3f2e7-5044-4111-8cf3-3a4d554048e3</guid><pubDate>Thu, 20 Aug 2026 03:51:46 +0000</pubDate><atom:updated>2026-08-20T06:51:41.900Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/zg0t3hqj/minister-venkataramanan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/zg0t3hqj/minister-venkataramanan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரமான நெல்லை சேமித்து பாலிசுக்கு அனுப்பும் முன்னரே நிறம் மாற வாய்ப்பு உள்ளது. அதனால் முறையாக ட்ரை செய்து வாங்கப்படும்.</p><p>பெரும்பாலும் இட்லி, தோசைக்கு பயன்படுத்தும் ரேஷன் அரிசியை வருங்காலத்தில் சோறுக்கு பயன்படும் வகையில் நடவடிக்கை.</p><p>இம்முறை தமிழக அரிசி போதுமானதாக இல்லை என்றால் மட்டுமே பிற மாநில அரிசு ரேஷனுக்கு வாங்கப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன்</p><h2>அமைச்சர் வெங்கட்ரமணன் உரை</h2><p>டிசம்பர், ஜனவரி மாதத்திற்குள்ளாக ரேஷன் கடைகளில் தரமான அரிசி கிடைக்கும்.</p><p>வரும் காலங்களில் சோறுக்கும் பயன்படும் வகையில் ரேஷன் அரிசி வழங்கப்படும்.</p><p>தற்போது கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல்லை பாலிஷ் செய்து ரேஷன் கடைகளுக்கு அனுப்ப நடவடிக்கை. கையில் உள்ள 7 லட்சம் மெட்ரிக் டன் அரிசி விரைந்து பாலிஷ் செய்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும்.</p><p>தவெக அரசு ரேஷன் கடை மூலம் தரமான மக்கள் பயன்படுத்தும் சன்னரக அரிசி கொடுக்க முயற்சிக்கிறது.</p><p>ஈரமான நெல்லாக இருந்தால் கொள்முதல் நிலையங்களிலேயே ஹீட்டர் வைத்து காய வைத்து எடைபோட்டு வாங்க நடவடிக்கை.</p><p>நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை நேரடியாக அரவை ஆலைக்கு அனுப்பினால் கருப்பு அரிசி வராது.</p><p>ஆந்திராவில் அருமையான அரிசி தயாரிக்கின்றனர். நமது தமிழகத்திலும் பாலீஷ் செய்த பின் கொடுக்க கூடுதல் செலவு ஆகும்.</p><p>தமிழ்நாட்டில் உள்ள அரிசியை மட்டுமே ரேஷன் கடைகளில் கொடுத்தால் கூடுதலாக பல கோடி ரூபாய் செலவாகும் - எடப்பாடி பழனிசாமி</p><p>ரேஷன் அரிசி சாப்பிடுபவர்களை கொச்சைப்படுத்தும் நோக்கில் எதையும் பேசவில்லை, உண்மை நிலையை கூறுகிறோம் - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>ரேஷன் அரிசியை அனைவரும் சாப்பிடுகிறார்கள் - அதிமுக எம்எல்ஏ காமராஜ்</p><p>திமுக அரசின் ரேஷன் அரிசி திட்டத்தை உச்சநீதிமன்ற நீதிபதியே பாராட்டியுள்ளார்.</p><p>எதிர்க்கட்சியாக இருந்தபோது ரேஷன் அரிசி பற்றி பேசியுள்ளாரா செங்கோட்டையன்?</p><p>ஏழைகள் சாப்பிடும் ரேஷன் அரிசியை ஆடு, கோழி சாப்பிடுவது என கொச்சைப்படுத்தி செங்கோட்டையன் பேசலாமா? - எ.வ.வேலு</p><p>சத்தீஸ்கர், ஆந்திராவில் இருந்து மத்திய தொகுப்பின் மூலம் கிடைக்கும் அரிசி தான் ரேஷன் கடைகளில் தரப்படுகிறது.</p><p>சத்தீஸ்கரில் இருந்து வரப்படும் அரிசி தான் நிறம் மாறி இருக்கும், அதனால் வேண்டாம் என கூறிவிட்டோம்.</p><p>தமிழ்நாட்டில் விளையும் அரிசி சற்று என்னை போல் நிறம் குறைந்து தான் இருக்கும், ஆதவை போல் நிறமாக இருக்காது.</p><p>அவை முன்னவரே ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா - எ.வ.வேலு</p><p>சன்னரக நெல்லை ரேஷன் அரிசியாக தருவது சாத்தியம் இல்லை - கே.என்.நேரு திட்டவட்டம்</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உரை</h2><p>இலவச மருத்துவமனை, இலவச கல்விமுறையை எந்த எம்எல்ஏவும் எந்த அமைச்சரும் பயன்படுத்துவதில்லை.</p><p>எந்த அமைச்சருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால் அரசு மருத்துவமனை செல்வாரா?</p><p>எம்எல்ஏவுக்க உடல்நிலை சரியில்லை என்றால் கூட  சிங்கப்பூர் செல்கின்றனர்.</p><p>இலவசங்கள் என்ற வார்த்தையே தவறு, மக்கள் வரிப்பணத்தில் நடத்தும் அரசு நிலையங்களை அனைவரும் பயன்படுத்தும் நிலைவர வேண்டும்.</p><p>மற்ற ஆட்சியை விட்டுவிடுங்கள், நமது ஆட்சியில் ரேஷன் கடையில் சன்னரக அரிசியை கொடுங்கள் என முதல்வர் கூறினார்.</p><p>எனது அம்மாவும் அக்காவும் ரேஷன் கடையில் வாங்கி சாப்பிடும் அரிசி தரமாக இருக்க வேண்டும் என முதல்வர் நினைத்தார்.</p><p>ரேஷன் கடைகளில் வாங்கும் அரிசியை மக்கள் சாப்பிடும் நிலையை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். </p><p>ரேஷன் கடைகளில் வழங்க தரமான சன்னரக அரிசி தேவை, அதனால் தான் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காகத்தான் சன்னரக அரிசிக்கான ஊக்கத்தொகை முதல்வர் அதிகரித்து அறிவித்துள்ளார் - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உரை</h2><p>நெல் பயிரிட்டு சாப்பிடும் அண்ணன் கே.என்.நேரு, ரேஷன் அரிசி சாப்பிடுவதாகவும் பரமஏழை போன்றும் பேசுகிறார். நான் சிறுவயதில் இருக்கும்போது ரேஷன் அரிசியை தான் சாப்பிட்டேன், அப்போது பெரிய அளவில் நிறம் மாறிய அரிசி தான் கிடைக்கும்.</p><p>இந்த ஆட்சி அந்த ஆட்சி என பேசவில்லை, அவரவர் மனசாட்சிக்கு தெரியும் ரேஷனில் கிடைக்கும் அரிசியை பற்றி. பேரவையில் பெரும்பான்மையானோர் ரேஷன் அரிசி சாப்பிடவில்லை, மனசாட்சிப்படி உண்மையை பேச வேண்டும்.</p><p>சுகர் குறைவதற்காக ரேஷன் அரிசியை கஞ்சி வைத்து குடிக்கும் கே.என்.நேருவை வாழ்த்துகிறோம் - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>ரேஷன் அரிசியை எல்லா மக்களும் உண்கின்றனர், சர்க்கரை அளவு குறைவதால் சாப்பிடுகின்றனர் - கே.என்.நேரு</p><p>ஆட்டுக்கும் கோழிக்கும் ரேஷன் அரிசி என அமைச்சர் செங்கோட்டையன் பேசியதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு</p><p>தூய்மையான வெள்ளையான அரிசி ரேஷன் கடையில் தரும் வகையில் நெல் கொள்முதல் நிலையத்தில் திமுக நடவடிக்கை.</p><p>கே.என்.நேரு உள்ளிட்டோர் சுகர் குறையும் என்பதால் ரேஷன் அரிசி தான் உண்கின்றார் - எம்ஆர்கே பன்னீர்செல்வம்</p><p>திமுக ஆட்சியில் ரேஷன் கடையில் வாங்கிய அரிசியை ஆட்டுக்கும் கோழிக்கும் தான் மக்கள் பயன்படுத்தினர்.</p><p>சன்னரக நெல்லுக்கு உற்பத்தி உயர செய்யும் நோக்கில் ஊக்கத்தொகை உயர்த்தி உள்ளார் முதல்வர் விஜய் - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>இந்தியாவிலேயே முதல்முறையாக நுகர்பொருள் வாணிப கழகம் தொடங்கியது திமுக அரசு தான்.</p><p>தவெக ஆட்சியில் அதிகமாக நெல் திறந்தவெளியில் தான் உள்ளது. திமுக குடோனில் வைத்து நெல்லை முளைக்கவிடாமல் பாதுகாத்தது - எம்எல்ஏ சக்கரபாணி</p><p>திமுக ஆட்சியில் எந்த கொள்முதல் நிலையங்களிலும் அதிகாரிகளின் செல்போன் எண், புகார் பெட்டி இல்லை.</p><p>நெல் கொள்முதல் நிலையத்தின் வெளியே உள்ள நெல்லையும் உரிய முறையில் பயன்படுத்த தவெக அரசு நடவடிக்கை - அமைச்சர் வெங்கடரமணன்</p> <p>நேரடி கொள்முதல் நிலையத்தில் அதிகமாக கொள்முதல் செய்ததாக திமுக மார்தட்டி கொள்கிறது. ஆனால் சாலையில் உள்ளது நெல் - உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன்</p><p>தமிழகத்தில் 717 மதுக்கடைகள் மூடல், எங்கெங்கு மூடல் என்பதை முகவரியுடன் பட்டியலாக தரவும் அரசு தயார் - அமைச்சர் விக்னேஷ்</p><p>பட்டாசு ஆலை உள்ளிட்ட விவகாரத்தில் பிரச்சனை முடிந்தும் போராட்டம் நடத்துவதால் தான் அரசியல் என்கிறோம் - அமைச்சர் கீர்த்தனா</p><h2>பட்டாசு ஆலை விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் - திமுக எல்எல்ஏ தங்கம் தென்னரசு</h2><p>பட்டாசு ஆலை உரிமம் ரத்து, சீல் விவகாரத்தில் திமுக மட்டுமல்ல பொது அமைப்புகளும் போராட்டம் நடத்துகிறது.</p><p>விதிமுறை மீறி ஆலைகளை ஆய்வு செய்வதை யாரும் தடுக்கவில்லை, ஆனால் சிறு ஆலையையும் ஆய்வு செய்வதால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.</p><p>முந்தைய காலத்தில் ஆண்டு கணக்கில் பதில் இல்லா கேள்விகளுக்கு உள்ளது, முந்தைய காலம் என்றதும் பயப்பட வேண்டாம் - சபாநாயகர்</p><p>மின்கட்டண உயர்வு, மின் கணக்கீடு முறையில் குழப்பம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார் திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி</p><p>கொள்கை விளக்க குறிப்பு நள்ளிரவில் வருகிறது. 3 நாட்களுக்கு முன் கொடுத்தால் படித்துவிட்டு பேசலாம் - அக்ரி கிருஷ்ணமூர்த்தி</p><p>கேள்விகள் கொடுத்து பல நாட்கள் ஆகிறது, அமைச்சர்கள், அரசு அதிகாரிகளின் மெத்தனப்போக்கே இதற்கு காரணம்.</p><p>குறிப்பிட்ட காலத்திற்குள் பதில் அளிக்காத அமைச்சர்களுக்கு கடிதம் அனுப்பி விளக்கம் கேட்க வேண்டும்.</p><p>உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நீண்ட நாட்களாக பதிலளிக்காமல் தாமதப்படுத்துவது அவையை அவமதிக்கும் செயல் - திமுக எம்எல்ஏ ஆஸ்டின்</p> <p>விவசாயிகளுக்கு எப்போதும் தவெக அரசு துணை நிற்கும். என்எல்சி விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் கீர்த்தனா</p><p>மனசாட்சியே இல்லாத நிறுவனம் என்எல்சி, நிலம் கொடுத்த விவசாயிகள் பிள்ளைகளுக்குக்கூட பணி வழங்கவில்லை.</p><p>நிலம் கொடுத்த விவசாயிகளின் பிள்ளைகளை பணியில் சேர்த்துக்கொள்ள எந்த என்எல்சி தேர்வு வைக்க வேண்டும் - சவுமியா அன்புமணி</p><p>மயிலம் தொகுதியில் மூடப்பட்ட மதுக்கடையை எந்தவித அறிவிப்பும் இன்று மீண்டும் திறந்துள்ளனர்.</p><p>செஞ்சியில் மூடிவிட்டு தற்போது கிராம பகுதியில் திறந்துள்ள டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை தேவை - எம்எல்ஏ சிவி சண்முகம்</p><p>சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 2 மாதமாக ஆந்திராவில் உள்ளதால் அவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்குங்கள். </p><p>ஆந்திராவில் மீன்பிடித்ததாக சிறைபிடிக்கப்பட்ட 7 விசைப்படகுகளையும் ஆந்திர அரசு விடுவிக்கவில்லை - அக்ரி கிருஷ்ணமூர்த்தி</p><p>ஆந்திரா - தமிழக மீனவர்கள் மோதல் குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் சட்டசபையில் விளக்கம்</p><p>ஆந்திர அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை.</p><p>திமுக ஆட்சியில் அம்பேத்கர் அயலக கல்வி உதவி தொகைக்கு ரூ.84 கோடி ஒதுக்கீடு. தவெக ஆட்சியில் ரூ.131 கோடி ஒதுக்கீடு.</p><p>தவெக ஆட்சியில் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்த அனைவருக்கம் வழங்க நடவடிக்கை.</p><p>வெளிநாடுகளில் படிக்கும் தமிழக மாணவர்கள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார் - அமைச்சர் வன்னி அரசு</p><h2>அமைச்சர் வன்னி அரசு உரை</h2><p>மாணவனுக்கு நிதி கொடுத்தது திமுக ஆட்சியில் என்பது ஒத்துக்கொள்கிறேன்.</p><p>கடந்த ஆட்சியில் தான் மாணவனுக்கு நிதி வழங்கப்பட்டது என சரியாக குறிப்பிட்டு தான் பேசி உள்ளேன்.</p><p>தான் சமூக நீதித்துறை அமைச்சரான பின்னர் தான் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை 3 மடங்கு உயர்வு.</p><p>500 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் குறைந்த நபர்களுக்கு தான் திமுக வழங்கியது. நான் துறைக்கு வந்த பின் 3 மடங்கு உயர்வு.</p> <p>மற்ற மாணவர்களுக்கு வந்து விட்டது, தனக்கு நிலுவை தொகை வரவில்லை என்றே மாணவர் குற்றம்சாட்டி உள்ளார்.</p><p>திமுக ஆட்சியில் நிதி தரப்பட்டதை தான் அமைச்சர் தேதி வாரியாக வாசித்தார், குற்றச்சாட்டுக்கு பதில் தரவில்லை  - கோவி செழியன்</p> <p>இதுவரை மாணவரின் கல்வி நலனுக்காக ரூ.48 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.</p><p>இந்நாண்டு உதவித்தொகைக்கான உரிய ஆவணங்களை சமர்பிக்காமல் மாணவர் குற்றச்சாட்டு.</p><p>தவெக ஆட்சியில் அம்பேத்கர் அயலக கல்வி திட்டத்தில் ரூ.135 கோடி வழங்கப்பட்டுள்ளது.</p><p>முதலாம் ஆண்டு கல்வி கட்டணம் வழங்கப்பட்ட ரூ.31 லட்சத்திற்கு 10 மாதங்கள் கடந்தும் ஆவணங்கள் சமர்ப்பிக்கவில்லை - அமைச்சர் வன்னி அரசு</p><p>10 மாதங்கள் ஆகியும் மாணவர் தனது ஆவணங்களை பதிவு செய்யவில்லை.</p><p>அரசியல் உள்நோக்கத்துடன் குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது.</p><p>மாணவருக்கு அரசு வழங்கி உள்ள நிதியை தேதி வாரியாக குறிப்பிட்டு வன்னி அரசு பதில்</p><p>அம்பேத்கர் அயலக உதவி திட்டத்தின் கீழ் நிதி வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு.</p><p>மலேசியாவில் பயின்று வரும் மாணவரின் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் வன்னி அரசு பதில்</p> <p>ஒழுங்கு அமைதி பராமரிப்பது குறித்து உயர்கல்வித்துறை மூலம் கல்லூரி கல்வி இயக்கத்திற்கு சுற்றறிக்கை.</p><p>அனைத்து கல்லூரி முதல்வருக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. தவறுதலாக குறிப்பிடப்பட்ட வார்த்தை அறிந்ததும் வாபஸ்.</p><p>மாணவர்களின் நியாயமாக போராடும் உரிமைகளை காக்கும் அரசாக தவெக அரசு செயல்படும் - அமைச்சர் விஸ்வநாதன்</p> <h2>உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் விளக்கம்</h2><p>மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை கண்காணிக்க  சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.</p><p>சுற்றறிக்கையில் தவறுதலாக சில வார்த்தைகள் இடம் பெற்றிருந்தன.</p><p>மாணவர்களின் உரிமையை கட்டுப்படுத்தும் நோக்கம் அரசிற்கு இல்லை.</p><p>குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வட்டாட்சியரை சர்வே செய்வதற்காக அனுப்பப்பட்டவர். வட்டாட்சியர் தேவையில்லாமல் கடிதம் எழுதி உள்ளார் - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>இடதுசாரி அமைப்புகளுடன் செயல்பட்டு போராடுவோர் தொடர்பாக கணக்கெடுப்பு எடுக்க சொல்லி உள்ளனர் - மாரிமுத்து</p><p>மாணவர்கள் போராடுவதை கண்காணிக்க கடிதம் அனுப்பப்பட்டது தொடர்பாகவும் கவன ஈர்ப்பு தீர்மானம்</p><p>உயர்கல்வித்துறை இயக்குநர் சுற்றறிக்கை தொடர்பாக கம்யூ. எம்எல்ஏ மாரிமுத்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்.</p><p>அண்ணா பல்கலை. உள்ளிட்ட 9 கல்லூரிகளுக்கு டீன் இல்லை, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் -  அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம்</p><h2>மீனவர் பலி - அமைச்சர் ஆதவ் விளக்கம்</h2><p>சவுதி அரேபியாவில் 10-ந்தேதி ஈரானிய கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் தமிழக மீனவர் பலி.</p><p>புலன் விசாரணை நடைபெறுவதால் தான் உயிரிழந்த மீனவர் உடலை தமிழகம் அனுப்புவதில் தாமதம்.</p><p>மீனவர் உடலை தாயகம் கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.</p> <p>சவுதி தாக்குதலில் ஒரு மீனவர் பலி, 3 பேர் படுகாயம், இலங்கை கடற்படையும் மீனவர் மீது தாக்குதல்.</p><p>மீனவர்கள் மீதான தாக்குதல் விவகாரத்தில் தமிழக அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் - சிபிஐ ராமச்சந்திரன்</p><p>மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர் ஈரான் துப்பாக்கிச்சூட்டில் பலி, அரசு நடவடிக்கை எடுத்து மானியம் தர வேண்டும் - சிவக்குமார்</p><p>சிறப்பு கவன ஈர்ப்பு தந்தாலும் அமைச்சர் தரப்பில் பதில் வந்தால் தான் விவாதம்.</p><p>சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை பதிவு செய்ய மட்டும் அனுமதி தருகிறேன், பதில் வந்த பின் விவாதம் நடத்தலாம் - சபாநாயகர்</p> <p>அவசரம் என்பதால் தான் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருகிறோம் - எ.வ.வேலு</p><h2>எடப்பாடி பழனிசாமி உரை</h2><p>சவுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் துப்பாக்கிச்சூடு தாக்குதல்.</p><p>நேரமில்லா நேரத்தில் தமிழ்நாட்டில் முக்கிய நிகழ்வுகள் நடைபெறுவதை பதிவு செய்வது வழக்கம் தான்.</p><p>காசிமேடு மீனவர்கள் 80 பேர் சிறையில் அடைப்பு, அவர்களின் படகுகளை ஆந்திர அரசு பறிமுதல் செய்துள்ளது - எடப்பாடி பழனிசாமி</p><p>சட்டசபை கூடியது - அதிமுக சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்</p><p>5 நாட்களுக்கு பிறகு மீனவர் உயிரிழப்பு தொடர்பாக பேரவையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p>சட்டசபையில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கியது.</p><p>சட்டசபையில் இன்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, கூட்டுறவு ஆகிய துறைகள் மீதான மானிய கோரிக்கைகள் விவாதம் நடைபெறுகிறது. </p><p>இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசி முடிந்தவுடன் அவர்களுடைய கேள்விகளுக்கு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கடரமணன், கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் ஆகியோர் பதிலுரை வழங்குவார்கள். நிறைவாக, தங்களுடைய துறை சார்பில் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.</p>]]></content:encoded></item><item><title>காவிரி முதல் நீட் வரை... தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-urges-cauvery-water-to-neet-issues-till</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-urges-cauvery-water-to-neet-issues-till#comments</comments><guid isPermaLink="false">63efacc9-c1ff-4979-989f-ca6c7dcd95fc</guid><pubDate>Thu, 20 Aug 2026 07:57:11 +0000</pubDate><atom:updated>2026-08-20T07:57:11.596Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,நீட் தேர்வு,Neet exam,காவிரி நீர்,Cauvery water,தென் மாநில முதல்-மந்திரிகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/f5ox0wxt/vijay0.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மாநாட்டில் பேசிய முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ மாநாட்டில் பேசிய முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/f5ox0wxt/vijay0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>12-ம் வகுப்பு முடிவுகளின் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் <a href="https://www.maalaimalar.com/topic/தென்-மாநில-முதல்-மந்திரிகள்">தென் மாநில முதல்-மந்திரிகள்</a> மாநாடு மாமல்லபுரத்தை அடுத்த கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. </p><p>இந்த மாநாட்டில், வலுவான மாநிலங்கள்- வலுவான இந்தியா என கூட்டாட்சி தத்துவத்தை குறிப்பிட்டு முதலமைச்சர் விஜய் பேசியுள்ளார். மேலும் அவர் பேசுகையில், </p><p>* இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு தென் மாநிலங்கள் தான் முக்கிய பங்களிப்பு தரும் இயந்திரம். </p><p>* இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தென் மாநிலங்கள் மட்டும் 30 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன. </p><p>* <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dk-shivakumar-speech-mekedatu-dam-in-south-states-chief-ministers-conference">காவிரி</a> விவகாரத்தில் உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுகள் மதிக்கப்பட வேண்டும். </p><p>* காவிரி மேலாண்மை ஆணைய முடிவுகளை செயல்படுத்த வேண்டும். </p><p>* மக்கள் தொகையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததற்காக தென் மாநிலங்கள் பிரதிநிதித்துவத்தை இழக்கக்கூடாது. </p><p>* தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலமும் பாதிக்காது என்ற சட்டபூர்வ உறுதிமொழி தேவை.</p><p>* கடல்வழிப் போக்குவரத்து, மீன்பிடித்தலில் அண்டை மாநிலங்களுடன் இணைந்து செயல்படுவோம். </p><p>* மாநிலங்களுக்கு இடையேயான உளவுத் தகவல்களை பகிர்வதன் மூலம் போதைப்பொருளை ஒழிப்போம். </p><p>* போதைப்பொருள்களின் ஆன்லைன் விற்பனையை தடுக்க சட்ட விதிகளை கடுமையாக்க வேண்டும். </p><p>* போதைப்பொருள் தடுப்பில் மாநிலங்கள்  இணைந்த வலையமைப்பை உருவாக்க வேண்டும். </p><p>* 12-ம் வகுப்பு முடிவுகளின் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடத்த அனுமதி வழங்க வேண்டும்.  மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வால் கிராமப்புற ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். </p><p>* முல்லைப்பெரியாறு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நீதித்துறை உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். </p><p>* பரஸ்பர நம்பிக்கை, அறிவியல் ஆதாரங்கள், சட்டத்தின் மீதான மதிப்போடு நதிநீர் பிரச்சனையை அணுக வேண்டும். </p><p>* கர்நாடகாவின் பொம்மசந்திரா முதல் தமிழ்நாட்டின் ஓசூர் வரை மெட்ரோ ரெயில் நீட்டிக்க வேண்டும். </p><p>* வரி விகித நிர்ணயத்தில் மாநிலங்களுக்கான நெகிழ்வுத்தன்மையை  மீட்டெடுக்க வேண்டும். </p><p>* சிறப்பு சலுகை கேட்கவில்லை, நியாயமான மற்றும் சமமான அணுகுமுறையையே கேட்கிறோம் என்று பேசியுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>சூரியின் மண்டாடி படத்திற்கு  U/A 16+ சான்றிதழ்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/sooris-mandadi-gets-a-ua-16-censor-certificate</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/sooris-mandadi-gets-a-ua-16-censor-certificate#comments</comments><guid isPermaLink="false">b2fc2d83-f1e2-451a-8376-493d7d1754b1</guid><pubDate>Thu, 20 Aug 2026 09:40:25 +0000</pubDate><atom:updated>2026-08-20T09:40:25.874Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>நடிகர் சூரி,மண்டாடி,Soori,Mandaadi,தணிக்கை சான்றிதழ்,censorship</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/yd3j3iko/New-Project-2026-08-20T144255.520.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சூரியின் மண்டாடி படத்திற்கு  U/A 16+ தணிக்கை சான்றிதழ்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/yd3j3iko/New-Project-2026-08-20T144255.520.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சூரி நடித்துள்ள ‘மண்டாடி’ திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் யு/ஏ16+ சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தின் கால அளவு 154 நிமிடங்கள் மற்றும் 51 வினாடிகள் ஆகும். </p><p>செப்டம்பர் 10ம் தேதி படம் வெளியாக உள்ளநிலையில், இன்று சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக படம் செப்.4ம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பின் ஒத்திவைக்கப்பட்டது. </p><p>மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி, மகிமா நம்பியார், சுஹாஸ், சத்யராஜ், மிதுன் ஜெய் சங்கர், ரவீந்திர விஜய், பால சரவணன் மற்றும் ஸ்டன் சிவா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் பதாகையின் கீழ் எல்ரெட் குமார் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.</p><p>கடைசியாக சூரி நடிப்பில் வெளியானப் படம் மாமன். அதனைத்தொடர்ந்து மண்டாடி வெளிவருகிறது. அதன்பின் ராமின் இயக்கத்தில் உருவாகியுள்ள ஏழு கடல் ஏழு மலை வெளியாக உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் வருகிற 26-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/imd-inform-chance-of-moderate-rain-in-tamil-nadu-until-the-26th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/imd-inform-chance-of-moderate-rain-in-tamil-nadu-until-the-26th#comments</comments><guid isPermaLink="false">2a59159a-4b28-4039-b251-1f93360488b2</guid><pubDate>Thu, 20 Aug 2026 09:35:05 +0000</pubDate><atom:updated>2026-08-20T09:35:05.789Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/tgd3jzmc/rain.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மழை]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/tgd3jzmc/rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</strong></em></p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (feeble Trough) நிலவுகிறது.</p><p>இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>21-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>22-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>23-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>24 மற்றும் 25-ந்தேதிகளில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>26-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>இதனிடையே இன்று முதல் 24-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p>நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>20-ந்தேதி முதல் 24-ந்தேதிகளில் தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>‘உங்களையும், அப்பாவையும் கடைசியாக ஒன்றாகப் பார்த்து 35 ஆண்டுகள் ஆகிவிட்டது’ - தாய் சோனியா குறித்து ராகுல் காந்தி உருக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/it-has-been-35-years-since-i-last-saw-you-and-father-together-rahul-gandhis-emotional-words-about-his-mother-sonia</link><comments>https://www.maalaimalar.com/news/national/it-has-been-35-years-since-i-last-saw-you-and-father-together-rahul-gandhis-emotional-words-about-his-mother-sonia#comments</comments><guid isPermaLink="false">bdafe733-7602-4a06-9f69-bf8de78e6b18</guid><pubDate>Thu, 20 Aug 2026 09:10:20 +0000</pubDate><atom:updated>2026-08-20T09:10:20.838Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,ராஜீவ் காந்தி,sonia gandhi,சோனியா காந்தி,Belonging: A Journey of Love</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/lj9snx1b/New-Project-2026-08-20T143952.649.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘உங்களையும், அப்பாவையும் கடைசியாக ஒன்றாகப் பார்த்து 35 ஆண்டுகள் ஆகிவிட்டது’ - தாய் சோனியா குறித்து ராகுல் காந்தி உருக்கம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/lj9snx1b/New-Project-2026-08-20T143952.649.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய தேசிய காங்கிரஸின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் வாழ்க்கைப் பயணத்தை விவரித்து உருவாகியுள்ள சுயசரிதைப் புத்தகம் “பிலாங்கிங்: தி ஜர்னி ஆஃப் லவ்” (Belonging: A Journey of Love).</p><p>சோனியா காந்தி இத்தாலியின் ஒரு சிறிய நகரில் கழித்த தனது குழந்தைப் பருவம் மற்றும் போருக்குப் பிந்தைய வாழ்க்கை நினைவுகள், ராஜீவ் காந்தி உடனான திருமணம், அவரது இழப்பு என தனது வாழ்வின் முக்கிய அங்கங்களை இதில் பகிர்ந்துள்ளார். </p><p>இப்புத்தக்கம் நவம்பர் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்தப் புத்தகம் தொடர்பாகவும், தனது தந்தையின் பிறந்தநாளான இன்று தனது தாய் சோனியா குறித்து உருக்கமானப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.</p><p>தனது எக்ஸ் தளப் பக்கத்தில் இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர்.,</p><p>“அம்மா,</p><p>உங்களையும், அப்பாவையும் ஒன்றாக நான் கடைசியாகப் பார்த்து 35 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. அப்பா நம்மை விட்டுச் சென்ற நாளிலிருந்து, வாழ்க்கை உங்கள் முன் நிறுத்திய சவால்கள் அனைத்தையும் நீங்கள் எத்தகைய அளப்பரிய துணிச்சலுடனும், கண்ணியத்துடனும் எதிர்கொண்டீர்கள் என்பதை நான் பார்த்திருக்கிறேன். </p><p>நீங்கள் எத்தகைய சூழல்களைக் கடந்து வந்தீர்கள் என்பதையும், அப்பாவுக்குப் பிந்தைய உங்கள் வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்தது என்பதையும் பிரியங்காவும் நானும் மட்டுமே முழுமையாக அறிவோம்.</p><p>உங்களை நேசிக்கும் லட்சக்கணக்கான மக்கள், உங்கள் கதையான "Belonging: A Journey of Love"-ஐ வாசிக்கப்போகிறார்கள் என்பதை நினைத்து நான் மகிழ்ச்சியும், பெருமையும் கொள்கிறேன். </p><p>இயல்பிலேயே தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்பாத ஒருவரான நீங்கள், உங்கள் அழகான கதையை உலகிற்குச் சொல்வதற்கு எவ்வளவு சிரமப்பட்டிருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும்.</p><p>இன்று, அவருடைய பிறந்தநாளில், அப்பா புன்னகைத்தபடியே, பெருமையுடன் தன் அழகான சோனியாவைப் பார்த்துக் கொண்டிருப்பதை என்னால் காண முடிகிறது.</p><p>அன்புடன்,</p><p>ராகுல்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>6 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்தில் மீண்டும் குடியேறும் இளவரசர் ஹாரி-மேகன் தம்பதி!</title><link>https://www.maalaimalar.com/news/world/harry-and-meghan-plan-permanent-return-to-england</link><comments>https://www.maalaimalar.com/news/world/harry-and-meghan-plan-permanent-return-to-england#comments</comments><guid isPermaLink="false">82cc38e2-fd8e-4f3c-9c9c-f2805f0008f1</guid><pubDate>Thu, 20 Aug 2026 08:57:58 +0000</pubDate><atom:updated>2026-08-20T08:57:58.617Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>America,london,இளவரசர் ஹாரி,Meghan Markle,PrinceHarry,மேகன் மார்க்கல்,UKRelocation,Prince Archie,Princess Lilibet,British RoyalFamily</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/axdz0ga1/Untitled-design-2026-08-20T141048.867.png" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Prince Harry - Meghan Markle ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/axdz0ga1/Untitled-design-2026-08-20T141048.867.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D">பிரிட்டன் </a>அரச குடும்பத்தின் வாரிசான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF">இளவரசர் ஹாரி</a> மற்றும் அவரது மனைவி மேகன் தம்பதியினர், சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இங்கிலாந்தில் நிரந்திரமாகக் குடியேற முடிவு செய்துள்ளனர். </p><p>இந்த மாத இறுதிக்குள் இவர்கள் அமெரிக்காவிலிருந்து வெளியேறி பிரிட்டன் திரும்புவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.</p><h2><strong>அரச குடும்பப் பிரிவு பின்னணி:</strong></h2><p>பிரிட்டன் மன்னர் சார்லஸின் இளைய மகனான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF">இளவரசர் ஹாரி</a>, பிரபல அமெரிக்க மேகன் இருவரும் காதலித்து கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். </p><p>எனினும், பிரிட்டன் ஊடகங்களின் அதீத தலையீடு மற்றும் அரச குடும்பத்திற்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, கடந்த 2020 ஆம் ஆண்டு தங்களது அரச பதவிகளையும் பொறுப்புகளையும் துறப்பதாக அதிரடியான முடிவு ஒன்றை அறிவித்திருந்தனர்.</p><p>அதனைத் தொடர்ந்து பிரிட்டனை விட்டு வெளியேறிய அவர்கள், அமெரிக்காவில் குடியேறினர். அமெரிக்காவில் வசித்தபோது, ஓப்ரா வின்ஃப்ரேயுடனான நேர்காணல் மற்றும் ஹாரியின் 'ஸ்பேர்' சுயசரிதை நூல் ஆகியவற்றின் மூலம் தங்களுக்குள் இருந்த குடும்ப முரண்பாடுகளை அவர்கள் வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><h2><strong>தொடரும் சாதாரண குடிமக்கள் அந்தஸ்து</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">இங்கிலாந்து</a>க்கு மீண்டும் திரும்பினாலும், இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தம்பதி தங்களது பழைய அரச குடும்பப் பணிகளையோ அல்லது அதிகாரபூர்வப் பொறுப்புகளையோ மீண்டும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். அவர்கள் அங்கிருக்கும் சாதாரணத் தனிநபர்களாகவே பிரிட்டனில் வாசிக்க உள்ளனர்.</p><p>அதே நேரத்தில், <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE">அமெரிக்கா</a>வின் கலிபோர்னியாவில் உள்ள தங்கள் வீட்டையும், போர்ச்சுகலில் உள்ள தங்களது தனிப்பட்ட சொத்துக்களையும் அவர்கள் தொடர்ந்து தங்கள் வசம் வைத்திருப்பார்கள் என்று அவர்களுக்கு நெருக்கமான உறவினர்கள் தெரிவித்துள்ளனர். </p><p>6 வருடங்களுக்குப் பிறகு ஹாரி தனது குடும்பத்துடன் பிரிட்டன் திரும்புவது, அரச குடும்பத்தினருடன் உள்ள சுமுகமற்ற உறவில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தலாம் என சர்வதேச ஊடகங்கள் கருதுகின்றன.</p><figure><img alt="Prince Harry - Meghan Markle " src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/9aksjolt/Prince-Harry-Meghan-Markle" /></figure>]]></content:encoded></item><item><title>Khalifa - திரைவிமர்சனம்</title><link>https://www.maalaimalar.com/cinema/movie-review/khalifa-review-gold-smuggling-action-saga-shines-with-prithviraj-and-mohanlal-cameo</link><comments>https://www.maalaimalar.com/cinema/movie-review/khalifa-review-gold-smuggling-action-saga-shines-with-prithviraj-and-mohanlal-cameo#comments</comments><guid isPermaLink="false">618a616f-a7c9-4fd0-bb99-570a2d8747e0</guid><pubDate>Thu, 20 Aug 2026 08:53:24 +0000</pubDate><atom:updated>2026-08-20T08:53:24.390Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prithviraj Sukumaran,Mohanlal,திரைவிமர்சனம்,Khalifa</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/bsfyfj8e/tn-26.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Khalifa - திரைவிமர்சனம்]]></media:title><media:description type="html"><![CDATA[ Khalifa - திரைவிமர்சனம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/bsfyfj8e/tn-26.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தரவரிசை (Movie Review)</category><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மலையாள இயக்குநர் வைசாக் இயக்கத்தில் பிரித்விராஜ் நடித்துள்ள 'கலிபா' திரைப்படம் ஓணம் பண்டிகையை ஒட்டி இன்று மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி உள்ளது.</p><p>இப்படத்தில் பிருத்விராஜ் 'மம்பரக்கல் அமீர் அலி' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். </p><p>அவரின் தாத்தாவாக சிறப்பு தோற்றத்தில் மோகன்லால் 'மம்பரக்கல் அகமது அலி' பாத்திரத்தில் நடித்துள்ளார்.</p><p>பிருத்ராஜ்க்கு ஜோடியாக மாளவிகா ஷர்மா, ஃபிசா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். </p><p>மோகினி, இந்திரன்ஸ், பாலிவுட் நட்சத்திரங்களான நீல் நிதின் முகேஷ் மற்றும் கீர்த்தி ஷெட்டி ஆகியோரும் நடித்துள்ளனர்.</p><p>திரைக்கதையை ஜினு ஆபிரகாம் எழுதியுள்ளார். அவரே ஜினு இன்னோவேஷன்ஸ் பதாகையின் கீழ் இப்படத்தை தயாரித்துள்ளார்.</p> <p>ஜோமன் டி ஜான் ஒளிப்பதிவாளராகவும் சாமன் சாக்கோ படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.</p><h2>கதை</h2><p>ஒரு தங்கக் கடத்தல் கும்பலின் பின்னணியில் கதை நகர்கிறது.</p><p>பிருத்விராஜ் தனது குடும்ப தொழிலான தங்கக் கடத்தல் தொழிலில் ஈடுபடுகிறார். அவரது தாத்தா (மோகன்லால்) இதில் கில்லாடியாக இருந்துள்ளார்.</p><p>ஸ்டைல், ஆக்ஷன், நட்சத்திர பட்டாளம் என பல் ஈர்ப்பம்சங்கள் இப்படத்தில் உள்ளன.</p> <p>படத்தின் முதல் பாதியின் பெரும்பகுதி, நாயகன் அமீர் அலியின் பின்னணி மற்றும் அவரைத் தங்கம் கடத்தலுக்குள் இழுக்கும் சூழ்நிலைகளை உருவாக்குவதில் கழிகிறது.</p><p>இரண்டாம் பாதியில், கலிபா படம் அமீர் அலிக்கும் அவரது எதிரிகளுக்கும் இடையிலான தங்கம் கடத்தல் போராக மாறுகிறது.</p> <p>இதில் அவரது காதல் வாழ்க்கை மற்றும் குடும்பச் சூழல் ஆகிய அம்சங்களும் ஊடாடுகின்றன.</p><p>கேரளாவில் தங்கம் கடத்தலை சுற்றி நடக்கும் அரசியல் நகர்வுகளையும் படம் தொட்டுச் செல்ல முயல்கிறது.</p><p>தங்கம் கடத்தப்படும் முறைகளே படத்திற்கு அதிக சுவாரஸ்யத்தைக் கூட்டுகின்றன.</p> <h2>நடிப்பு மற்றும் இயக்கம்</h2><p>கலிபாவின் மிகப்பெரிய பலம் பிருத்விராஜ் தான். கம்பீரமான தோற்றத்தாலும் ஸ்டைலாலும் அமீர் அலி கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். </p><p>சண்டைக் காட்சிகளிலும் அவரின் ஸ்க்ரீன் ப்ரசன்ஸ் பிரமிக்க வைத்துள்ளது.</p><p>சண்டைக் காட்சிகள் நேர்த்தியாக கோரியோகிராப் செய்யப்பட்டுள்ளன. ஜேக்ஸ் பிஜோயின் பின்னணி இசை அதற்கு வலு சேர்க்கிறது.</p> <p>ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் படத்தின் தங்கக் கடத்தல் உலகின் பிரம்மாண்டத்தை தக்கவைக்கின்றன.</p><p>துணை கதாபாத்திரங்களும் நல்ல நடிப்பை வழங்கியுள்ளன. 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடித்துள்ள <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/khalifa-announcement-actress-all-set-for-mollywood-return-after-15-years">மோகினி </a>குறிப்பிடத்தக்க நடிப்பை வழங்கியுள்ளார்.</p><p>படத்தில் மோகன்லால் என்ட்ரி தனி ரகம். அவர் வரும் போர்ஷனில் படத்தின் நாயகனாக பிருத்விராஜ் நிறுவிய ஸ்க்ரீன் ப்ரசன்ஸ் எல்லாம் இரண்டாம் பட்சம் தான்.</p><h2>முதல் பாகம்</h2><p>கலிபா தனி சினிமாட்டிக் வேர்ல்டு ஆக வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. படத்தின் டைட்டிலின் கீழேயே இது முதல் பாகம் என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>இந்த முதல் பாகம் அந்த உலகத்தையும் கதாபாத்திரங்களையும் அறிமுகப்படுத்தும் ஒரு தொடக்கமாகவே அமைந்துள்ளது.</p> <h2>முடிவு</h2><p>அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பை உருவாக்கப் போதுமான விஷயங்கள் இதில் இருந்தாலும் முழுமையான திரை அனுபவத்தை முதல் பாகம் வழங்கத் தவறி உள்ளது.</p><p>படம் முடிந்து வெளியே வரும்போது நினைவில் நிற்கும் காட்சிகள் என்று பார்த்தால் மிகக் குறைவே.</p><p>பிருத்விராஜின் ஸ்டைலான நடிப்பு, சண்டைக் காட்சிகள் மற்றும் மோகன்லாலின் சிறப்புத் தோற்றம் ஆகிய தருணங்களில் பிரகாசிக்கும் படம் கதையம்சத்தில் சற்று சறுக்கியுள்ளது.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/8NiMCt2o-uQ"></iframe></figure>]]></content:encoded></item><item><title>ஏற்காடு பண்பலை வானொலியில் வேளாண்மை, காலநிலை சார்ந்த உள்ளூர் நிகழ்ச்சிகளை  ஒலிபரப்ப வேண்டும்!- அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-local-programs-related-to-agriculture-and-the-weather-should-be-broadcast-on-the-yercaud-fm-radio-station</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-local-programs-related-to-agriculture-and-the-weather-should-be-broadcast-on-the-yercaud-fm-radio-station#comments</comments><guid isPermaLink="false">ac149770-fa3b-425f-ac22-5cc64dd36f63</guid><pubDate>Thu, 20 Aug 2026 08:40:36 +0000</pubDate><atom:updated>2026-08-20T08:40:36.223Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/mt5ylna6/Anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/mt5ylna6/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஏற்காடு பண்பலை வானொலி மூலம் ஒரு நாளைக்கு குறைந்தது 10 மணி நேரமாவது  உள்ளூர் தயாரிப்பு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுவதை பிரசார் பாரதி அமைப்பு உறுதி செய்ய வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார். </p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>நோக்கத்தை நிறைவேற்ற உதவாது</strong></h2><p>சேலம் மாவட்டம் ஏற்காட்டில்  உள்ள பண்பலை வானொலி நிலையம் (அலைவரிசை: 103.7 மெகா ஹெர்ட்ஸ் ) தரம் உயர்த்தப்பட்டு, கடந்த  மார்ச் ஒன்றாம் தேதி நாட்டுக்கு அர்ப்பணித்த நிலையில்,  அதில் இன்னும் உள்ளூர் தயாரிப்பு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படவில்லை. மாறாக,  தேசிய அளவிலும், மாநில அளவிலும் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் மட்டுமே ரிலே ஒலிபரப்பாக செய்யப்படுகின்றன. இது ஏற்காடு பண்பலை வானொலி உருவாக்கப்பட்டதன் நோக்கத்தையே சிதைத்து விடும்.</p><p>பண்பலை வானொலிகள் மேம்படுத்தப்பட்ட சமூக வானொலிகள் தான். சமூகத்திற்கு தேவையான தகவல்களை வழங்குவது தான் அவற்றின் நோக்கம். ஏற்காட்டில் பண்பலை வானொலி தொடங்கப்பட்டுள்ள நிலையில், அதைச் சுற்றியுள்ள  சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின்  வேளாண்மை, கல்வி, வானிலை உள்ளிட்ட காலநிலை ஆகியவை சார்ந்த தேவைகளை நிறைவேற்றுவது தான் அதன் நோக்கமாக இருக்க வேண்டும்.  அதிலும் குறிப்பாக  சென்னை மற்றும்  டெல்லியில் இருந்து ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சிகளையே ஒலிபரப்புவது அந்த வானொலி நிலையங்களின் வருவாயைப் பெருக்க உதவுமே தவிர, பண்பலை வானொலி உருவாக்கப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்ற உதவாது.</p><p>அதிலும் குறிப்பாக  ஏற்காடு தமிழ்நாட்டின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். அங்கு நிலவும் காலநிலை, போக்குவரத்து நெரிசல், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட விவரங்கள் பண்பலை வானொலி மூலம் தெரிவிக்கப்பட்டால், அது அங்கு சுற்றுலா செல்ல விரும்புபவர்களுக்கு வசதியாக இருக்கும்.</p><p>எனவே, ஏற்காடு பண்பலை வானொலி மூலம் ஒரு நாளைக்கு குறைந்தது 10 மணி நேரமாவது  உள்ளூர் தயாரிப்பு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுவதை பிரசார் பாரதி அமைப்பு உறுதி செய்ய வேண்டும்.  சேலம் மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களின் கல்வி, வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, சுற்றுலா சார்ந்த தகவல்களையும்,  கலை, இலக்கியச் செழுமையையும் மக்களுக்கு கொண்டு செல்லும் வகையிலான நிகழ்ச்சிகளை தயாரித்து ஒலிபரப்ப ஏற்பாடு செய்ய வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>&apos;வரங்களை அருளும் லட்சுமி&apos; வரலட்சுமி 108 போற்றி</title><link>https://www.maalaimalar.com/spirituality/varalakshmi-vratam-108-potri</link><comments>https://www.maalaimalar.com/spirituality/varalakshmi-vratam-108-potri#comments</comments><guid isPermaLink="false">2db6ba65-be85-4bd6-bded-9e68489ff328</guid><pubDate>Thu, 20 Aug 2026 08:39:17 +0000</pubDate><atom:updated>2026-08-20T08:39:17.885Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,வழிபாடு,worship,வரலட்சுமி விரதம்,Varalakshmi Vratam,Varalakshmi 108 Potri,வரலட்சுமி 108 போற்றி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/bgpg300o/varalakshmi4.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Varalakshmi ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/bgpg300o/varalakshmi4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வரலட்சுமி என்றால் 'வரங்களை அருளும் லட்சுமி' என்று பொருள். இந்த ஆண்டு வரலட்சுமி விரதம் நாளை வருகிறது. அன்றைய தினம் வரலட்சுமி விரதம் இருக்க விரும்பும் பெண்கள், இல்லம் தேடி வரும் மகாலட்சுமியை மனம் குளிர வரவேற்று, பூஜை செய்து சிறப்பிக்க வேண்டும்.</p> <p>இந்த நாளில் மகாலட்சுமியை வழிபடுவதால் வேண்டிய வரங்களை பெறுவதுடன், அஷ்டலட்சுமிகளான ஆதி லட்சுமி, தன லட்சுமி, தானிய லட்சுமி, வீர லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜய லட்சுமி, வித்யா லட்சுமி ஆகியோரின் அருளையும் பெறலாம். சுமங்கலி பெண்கள், தங்கள் கணவன் ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும் வாழ்வதற்கும், செல்வ வளம் பெருகுவதற்கும், லட்சுமியின் பரிபூரண அருளை பெறுவதற்கும் இந்த விரதத்தை மேற்கொள்கிறார்கள்.</p><p>கீழே <a href="https://www.maalaimalar.com/spirituality/varalakshmi-vratam">வரலட்சுமி</a> 108 போற்றி கொடுக்கப்பட்டுள்ளது. இதை பக்தியுடன் படிப்போருக்கு செல்வம் கொழிக்கும். மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்.</p><p>ஓம் அகில லட்சுமியே போற்றி</p><p>ஓம் அன்ன லட்சுமியே போற்றி</p><p>ஓம் அலங்கார லட்சுமியே போற்றி</p><p>ஓம் அமிர்த லட்சுமியே போற்றி</p><p>ஓம் அமர லட்சுமியே போற்றி</p><p>ஓம் அம்ச லட்சுமியே போற்றி</p><p>ஓம் அபூர்வ லட்சுமியே போற்றி</p><p>ஓம் அரவிந்த லட்சுமியே போற்றி</p><p>ஓம் அனந்த லட்சுமியே போற்றி</p><p>ஓம் அஷ்ட லட்சுமியே போற்றி</p> <p>ஓம் ஆதி லட்சுமியே போற்றி</p><p>ஓம் ஆத்ம லட்சுமியே போற்றி</p><p>ஓம் ஆனந்த லட்சுமியே போற்றி</p><p>ஓம் இஷ்ட லட்சுமியே போற்றி</p><p>ஓம் இன்ப லட்சுமியே போற்றி</p><p>ஓம் இதய லட்சுமியே போற்றி</p><p>ஓம் ஈகை லட்சுமியே போற்றி</p><p>ஓம் உதய லட்சுமியே போற்றி</p><p>ஓம் உத்தம லட்சுமியே போற்றி</p><p>ஓம் உபாசன லட்சுமியே போற்றி</p> <p>ஓம் ஐஸ்வர்ய லட்சுமியே போற்றி</p><p>ஓம் ஓங்கார லட்சுமியே போற்றி</p><p>ஓம் ஒளஷத லட்சுமியே போற்றி</p><p>ஓம் கருணா லட்சுமியே போற்றி</p><p>ஓம் கனக லட்சுமியே போற்றி</p><p>ஓம் கபில லட்சுமியே போற்றி</p><p>ஓம் கமல லட்சுமியே போற்றி</p><p>ஓம் கற்பக லட்சுமியே போற்றி</p><p>ஓம் கஜ லட்சுமியே போற்றி</p><p>ஓம் கஸ்தூரி லட்சுமியே போற்றி</p> <p>ஓம் காருண்ய லட்சுமியே போற்றி</p><p>ஓம் குண லட்சுமியே போற்றி</p><p>ஓம் குரு லட்சுமியே போற்றி</p><p>ஓம் கோமள லட்சுமியே போற்றி</p><p>ஓம் கோமேதக லட்சுமியே போற்றி</p><p>ஓம் சந்தான லட்சுமியே போற்றி</p><p>ஓம் சங்கு லட்சுமியே போற்றி</p><p>ஓம் சக்கர லட்சுமியே போற்றி</p><p>ஓம் சர்வ லட்சுமியே போற்றி</p><p>ஓம் சந்தோஷ லட்சுமியே போற்றி</p>  <p>ஓம் சகல லட்சுமியே போற்றி</p><p>ஓம் சாந்த லட்சுமியே போற்றி</p><p>ஓம் சிங்கார லட்சுமியே போற்றி</p><p>ஓம் சிந்தாமணி லட்சுமியே போற்றி</p><p>ஓம் சீதா லட்சுமியே போற்றி</p><p>ஓம் செல்வ லட்சுமியே போற்றி</p><p>ஓம் சொர்ண லட்சுமியே போற்றி</p><p>ஓம் சுந்தர லட்சுமியே போற்றி</p><p>ஓம் சுப லட்சுமியே போற்றி</p><p>ஓம் ஜெய லட்சுமியே போற்றி</p> <p>ஓம் ஜோதி லட்சுமியே போற்றி</p><p>ஓம் ஞான லட்சுமியே போற்றி</p><p>ஓம் தங்க லட்சுமியே போற்றி</p><p>ஓம் தயா லட்சுமியே போற்றி</p><p>ஓம் தர்ம லட்சுமியே போற்றி</p><p>ஓம் தன லட்சுமியே போற்றி</p><p>ஓம் தவ லட்சுமியே போற்றி</p><p>ஓம் தான லட்சுமியே போற்றி</p><p>ஓம் தான்ய லட்சுமியே போற்றி</p><p>ஓம் தாமரை லட்சுமியே போற்றி</p> <p>ஓம் தெய்வ லட்சுமியே போற்றி</p><p>ஓம் தீப லட்சுமியே போற்றி</p><p>ஓம் தீர்த்த லட்சுமியே போற்றி</p><p>ஓம் திவ்ய லட்சுமியே போற்றி</p><p>ஓம் நாக லட்சுமியே போற்றி</p><p>ஓம் நித்ய லட்சுமியே போற்றி</p><p>ஓம் நிர்மல லட்சுமியே போற்றி</p><p>ஓம் நீல லட்சுமியே போற்றி</p><p>ஓம் பதும ராக லட்சுமியே போற்றி</p><p>ஓம் பவள லட்சுமியே போற்றி</p> <p>ஓம் பக்த லட்சுமியே போற்றி</p><p>ஓம் பத்ம லட்சுமியே போற்றி</p><p>ஓம் பங்கஜ லட்சுமியே போற்றி</p><p>ஓம் பராக்கிரம லட்சுமியே போற்றி</p><p>ஓம் பாற்கடல் லட்சுமியே போற்றி</p><p>ஓம் பாக்கிய லட்சுமியே போற்றி</p><p>ஓம் பால லட்சுமியே போற்றி</p><p>ஓம் புண்ணிய லட்சுமியே போற்றி</p><p>ஓம் புவன லட்சுமியே போற்றி</p><p>ஓம் புனித லட்சுமியே போற்றி</p> <p>ஓம் பொன் லட்சுமியே போற்றி</p><p>ஓம் போக லட்சுமியே போற்றி</p><p>ஓம் மகா லட்சுமியே போற்றி</p><p>ஓம் மதன லட்சுமியே போற்றி</p><p>ஓம் மதுர லட்சுமியே போற்றி</p><p>ஓம் மங்கள லட்சுமியே போற்றி</p><p>ஓம் மாதவ லட்சுமியே போற்றி</p><p>ஓம் மகா லட்சுமியே போற்றி</p><p>ஓம் மகுட லட்சுமியே போற்றி</p><p>ஓம் மரகத லட்சுமியே போற்றி</p> <p>ஓம் மாணிக்க லட்சுமியே போற்றி</p><p>ஓம் மாதா லட்சுமியே போற்றி</p><p>ஓம் முத்து லட்சுமியே போற்றி</p><p>ஓம் மோட்ச லட்சுமியே போற்றி</p><p>ஓம் யோக லட்சுமியே போற்றி</p><p>ஓம் ரத்தின லட்சுமியே போற்றி</p><p>ஓம் ராம லட்சுமியே போற்றி</p><p>ஓம் ராஜ்ய லட்சுமியே போற்றி</p><p>ஓம் வரலட்சுமியே போற்றி</p><p>ஓம் வித்யா லட்சுமியே போற்றி</p> <p>ஓம் விஜய லட்சுமியே போற்றி</p><p>ஓம் விமல லட்சுமியே போற்றி</p><p>ஓம் விஷ்ணு லட்சுமியே போற்றி</p><p>ஓம் வீர லட்சுமியே போற்றி</p><p>ஓம் வேங்கட லட்சுமியே போற்றி</p><p>ஓம் வேணு லட்சுமியே போற்றி</p><p>ஓம் வைடூர்ய லட்சுமியே போற்றி</p><p>ஓம் வைரலட்சுமியே போற்றி போற்றி!</p>]]></content:encoded></item><item><title>தனுஷ் அரசியலுக்கு வந்தால் எப்போதும் என் ஆதரவு உண்டு- இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/if-dhanush-enters-politics-my-support-is-always-there-gv-prakash-kumar</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/if-dhanush-enters-politics-my-support-is-always-there-gv-prakash-kumar#comments</comments><guid isPermaLink="false">0dd61a25-2882-4065-8f0f-d291db649384</guid><pubDate>Thu, 20 Aug 2026 08:33:30 +0000</pubDate><atom:updated>2026-08-20T08:33:30.049Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தனுஷ்,Dhanush,தமிழக அரசியல்,ஜி.வி.பிரகாஷ் குமார்,TNPolitics,G.V.Prakash Kumar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/i8rvb7zz/dhanush.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dhanush-G.V.Prakash Kumar  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/i8rvb7zz/dhanush.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ், சமீபத்தில் தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர் மன்றங்கள் ஏற்பாடு செய்திருந்த ரத்ததான முகாம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் பங்கேற்றார். அந்த நிகழ்வில் அவர் பேசிய கருத்துகள் மற்றும் அவர் எடுத்து வரும் நடவடிக்கைகள், அவர் விரைவில் அரசியலில் களமிறங்கக்கூடும் என்ற ஊகங்களை அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் ஏற்படுத்தியிருந்தது.</p><h2>ஒற்றுமை<strong>க்கு ஒரு நோக்கம்</strong> தேவை</h2><p>அந்த நிகழ்வில் உரையாற்றிய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-vs-dhanush-the-new-arena-of-tamil-nadu-politics-and-stalins-future">நடிகர் தனுஷ்</a>, ரசிகர்கள் ஒரே இடத்தில் திரளுவது வெறும் சினிமா படங்கள், ஆடியோ வெளியீட்டு விழாக்கள் அல்லது கட்-அவுட் கொண்டாட்டங்களோடு நின்றுவிடக் கூடாது என்று கேட்டுக் கொண்டார். "இவ்வளவு மக்கள் ஒரே இடத்தில் கூடும் போது ஒரு மிகப்பெரிய சக்தி உருவாகிறது. அந்த ஒற்றுமைக்கு சமூகப் பயனுள்ள ஒரு நோக்கம் இருக்க வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டார்.</p><p>ரசிகர்கள் தங்கள் பகுதி மக்களின் தேவைகளையும், தங்களைச் சுற்றியுள்ள குடும்பங்களின் நிலைமையையும் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மேலும், இந்த விழாவில் ரசிகர் மன்றத்திற்கான புதிய கொடியையும் அவர் அறிமுகப்படுத்தினார்.</p><h2>ஜி.வி<strong>.பிரகாஷ் ஆ</strong>தரவு</h2><p>இந்நிலையில், நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால் அவருக்கு தனது முழு ஆதரவும் இருக்கும் என இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில், "நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால் ஆதரவு அளிப்பீர்களா?" என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஜி.வி. பிரகாஷ், "தனுஷ் என்னுடைய மிகச்சிறந்த நண்பர். ஒரு நண்பராக அவர் எந்த முடிவு எடுத்தாலும், அரசியலுக்கு வந்தால் அவருக்கு என்னுடைய ஆதரவு எப்போதும் கண்டிப்பாக இருக்கும்" என்று கூறினார்.</p><p>சமீபகாலமாக நடிகர் தனுஷ் தன் ரசிகர் மன்றங்களை மாவட்ட மற்றும் தொகுதி வாரியாக வலுப்படுத்தி வருவதும், பொது மேடைகளில் சமூகக் கருத்துகளைப் பேசி வருவதும் அவர் அரசியலுக்கு வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பை தமிழ் சினிமாவில் அதிகரித்துள்ளது. இதனிடையே, அவரது நெருங்கிய நண்பரான ஜி.வி.பிரகாஷின் இந்த கருத்து இணையதளங்களில் வைரலாகி வருகிறது.</p><h2>அரசிய<strong>ல் திட்டமா</strong>?</h2><p>அரசியல் வருகை குறித்த ஊகங்கள் வலுத்து வரும் அதே வேளையில், தனுஷ் தரப்பிலிருந்து இதுவரை கட்சி தொடங்குவது குறித்தோ அல்லது தேர்தலில் போட்டியிடுவது குறித்தோ எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. தனுஷ் தரப்பு வட்டாரங்கள் இது முற்றிலும் சமூக நலப் பணிகள் மற்றும் தொண்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதி மட்டுமே என்றும், இதற்குப் பின்னால் அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கின்றனர்.</p><p>இருப்பினும், சமீபத்தில் தனது பள்ளிக் கட்டிடத்திற்கு புதிய வகுப்பறைகள் கட்டிக் கொடுத்தது, தாய்மொழி சார்ந்த விழிப்புணர்வு பேச்சுக்கள் மற்றும் ரசிகர் மன்ற சீரமைப்பு என அடுத்தடுத்த நிகழ்வுகள் தமிழ்நாட்டில் தனுஷின் அரசியல் நகர்வுகள் குறித்த விவாதத்தை மேலும் சூடேற்றியுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>டி.என்.பி.எல். கிரிக்கெட் பிளேஆப் சுற்று ஆர்வத்தில்.. மதுரை- திருப்பூர் அணிகள் இன்று மோதல்</title><link>https://www.maalaimalar.com/sports/tnpl-cricket-in-expecting-playoff-round-madurai-tiruppur-teams-clash-today</link><comments>https://www.maalaimalar.com/sports/tnpl-cricket-in-expecting-playoff-round-madurai-tiruppur-teams-clash-today#comments</comments><guid isPermaLink="false">74508809-6f49-48ee-b393-6545b9d86921</guid><pubDate>Thu, 20 Aug 2026 08:27:32 +0000</pubDate><atom:updated>2026-08-20T08:27:32.538Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,Playoff match,கிரிக்கெட் பிளேஆப்,மதுரை அணி,திருப்பூர் அணி,MaduraiVS Tirupur</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/3vjh5l9s/TNPL.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TNPL]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/3vjh5l9s/TNPL.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 2-ம் கட்ட ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கம்  எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடி யத்தில் நடைபெற்று வருகிறது.</p><h2>இன்று 2 ஆட்டங்கள்</h2><p>நேற்று நடந்த 22-வது லீக் ஆட்டத்தில் திருச்சி கிரான்ட் சோழாஸ் 28 ரன் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தியது. திருச்சி அணி பெற்ற 4-வது வெற்றியாகும். திண்டுக்கல் அணி 4-வது தோல்வியை தழுவியது. </p><p>இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் அனிருதா தலைமையிலான மதுரை பாந்தர்ஸ்- சாய்கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.</p><h2>பிளேஆப் ஆர்வத்தில் மதுரை</h2><p>மதுரை அணி 4 வெற்றி, 1 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. அந்த அணி திருப்பூரை வீழ்த்தி 5-வது வெற்றியுடன் பிளேஆப் சுற்றுக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.</p><p>மதுரை அணி, திருச்சி (2 விக்கெட்), கோவை (6 விக்கெட்), சேலம் (36 ரன்), திண்டுக்கல் (21 ரன்) ஆகியவற்றை வீழ்த்தியது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியிடம் 39 ரன் வித்தியாசத்தில் தோற்றது.</p><p>திருப்பூர் அணி 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளி யுடன் 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணி மதுரையை தோற்கடித்து 4-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது. </p><p>அந்த அணி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (7 விக்கெட்),  நெல்லை (8 விக்கெட்), கோவை (4 விக்கெட்) ஆகியவற்றை தோற்கடித்தது. திண்டுக்கல் (7 விக்கெட்), திருச்சி (17 ரன்) ஆகியவற்றிடம் தோற்றது.</p><h2>நெல்லை-சேலம்</h2><p>இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் சோனு யாதவ் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ்- அபிஷேக்  தலைமையிலான சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.</p><p>நெல்லை அணி 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று உள்ளது. அந்த அணி பலவீனமான சேலத்தை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. </p><p>சேலம் அணிதான் விளையாடிய 5 ஆட்டத்திலும் தோற்று பிளேஆப் சுற்று வாய்ப்பை இழந்து இருந்தது. நெல்லை அணிக்கு அதிர்ச்சியை கொடுத்து முதல் வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: 4வது சுற்றில் நம்பர் 1 வீராங்கனை அதிர்ச்சி தோல்வி</title><link>https://www.maalaimalar.com/sports/tennis/sabalenka-lose-4th-round-in-cincinnati-open-tennis</link><comments>https://www.maalaimalar.com/sports/tennis/sabalenka-lose-4th-round-in-cincinnati-open-tennis#comments</comments><guid isPermaLink="false">8efabdf3-3a5f-4afc-aa83-3ebf05fbdbd5</guid><pubDate>Thu, 20 Aug 2026 08:11:48 +0000</pubDate><atom:updated>2026-08-20T08:11:48.647Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Aryna Sabalenka,அரினா சபலென்கா,Cincinnati Open Tennis,சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-05-10/q68nf97p/sabaa.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ sabalenka]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-05-10/q68nf97p/sabaa.jpg?w=280" width="280"></media:thumbnail><category>டென்னிஸ் (Tennis)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இத்தொடர் வரும் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. தற்போது 4-வது சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.</p><p>இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீராங்கனையும், பெலாரசைச் சேர்ந்தவருமான அரினா சபலென்கா, செக் குடியரசின் சாரா பெஜ்லக் உடன் மோதினார்.</p><p>இதில் அதிரடியாக ஆடிய சாரா பெஜ்லக் 7-6 (9-7), 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.</p><p>இதன்மூலம் நம்பர் 1 வீராங்கனையான <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE">சபலென்கா</a> 4வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.</p><p>கடந்த மாதம் நடந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடர், இம்மாதத்தின் தொடக்கத்தில் நடந்த கனடா ஓபன் டென்னிஸ் தொடரிலும் அரினா சபலென்கா 4வது சுற்றில் தோல்வி அடைந்தார்.</p><p>நடப்பு ஆண்டில் பிரிஸ்பேன் ஓபன், இந்தியன் வெல்ஸ் மற்றும் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர்களில் மட்டுமே சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>நாளை நடைபெறவுள்ள காலிறுதி சுற்றில் செக் குடியரசின் சாரா பெஜ்லக், அமெரிக்காவின் மேடிசன் கீஸ் உடன் மோதுகிறார்.</p>]]></content:encoded></item><item><title>கிரிஷ் இயக்கத்தில் கௌரி கிஷன் நடிப்பில் &quot;தாரகை&quot; படத்தின் First Look வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/thaaragai-first-look-poster-introduces-emotional-journey-of-women</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/thaaragai-first-look-poster-introduces-emotional-journey-of-women#comments</comments><guid isPermaLink="false">73e0f801-67a4-483a-b1cd-438c6c234d20</guid><pubDate>Thu, 20 Aug 2026 08:06:22 +0000</pubDate><atom:updated>2026-08-20T08:06:22.423Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gouri kishan,கௌரி கிஷன்,Tharagai,தாரகை,Tharagai FirstLook,Dir.Krish,இயக்குனர் க்ரிஷ்,Speed Reels Studio</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/tlo3uhl0/GouriKishan" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/tlo3uhl0/GouriKishan?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>'96' திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் மனங்களையும் கொள்ளையடித்த இளம் நடிகை <a href="https://www.maalaimalar.com/topic/gouri-kishan">கௌரி கிஷன்</a>, தற்போது முற்றிலும் ஒரு அழுத்தமான பெண் மையக் கதாபாத்திரத்தில் களம் இறங்கியுள்ளார்.</p><p>ஸ்பீடு ரீல்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் இத்திரைப்படத்திற்கு 'தாரகை' எனப் பெயரிடப்பட்டு, அதன் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. </p><h2>பெண்களின் உலகமும் மாறுபட்ட பயணங்களும்</h2><p>வெளியாகியிருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. போஸ்டரின் மையத்தில் தீவிரமான, எமோஷனல் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகபாவனையுடன் கௌரி கிஷன் காட்சியளிக்கிறார்.</p><p>அவரைச் சுற்றி பல்வேறு வயது மற்றும் பின்னணிகளைக் கொண்ட பெண்கள் பல திசைகளில் பயணிப்பது போல் இந்த போஸ்டர் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><p>பெண்களின் வாழ்க்கை தேடல், தனிப்பட்ட தேர்வுகள், உறவுகள் மற்றும் அவர்களின் சுதந்திரம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இத்திரைப்படத்தின் கதைக்களம் நகர்வதை இந்த போஸ்டர் உணர்த்துகிறது.</p><h2>இயக்கம் மற்றும் தொழில்நுட்பக் குழு:</h2><p>இந்த திரைப்படத்தை கிரிஷ் இயக்குகிறார். கிரிஸுடன் சேர்ந்து துஹிரன் இணைந்து கதை எழுதியுள்ளனர். நாகராஜ் வசனங்களை எழுதியுள்ளார்.'தாரகை' திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சித்து குமார் இசையமைக்கிறார். </p><p>கார்த்திக் நேதா, விக்னேஷ் ராமகிருஷ்ணா மற்றும் மு.வி ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.</p><p>சுந்தர் சுகுமாரன் ஒளிப்பதிவு செய்ய, ஆலன் பி ஜான் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். கலை இயக்குனராக அருண்ஷங்கர் துரை பொறுப்பேற்றுள்ளார். </p><p>தனித்துவமான நடிப்புத் திறமையால் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள கௌரி கிஷன், இந்த ஆழமான எமோஷனல் பயணத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடுத்த கட்டத்திற்கு நகர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>படத்தின் டீசர் மற்றும் அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">She is not walking alone.<br><br>There are stories around her.<br>There are journeys behind her.<br>And there is a story waiting to be told.<br><br>Presenting the First Look Poster of <a href="https://x.com/hashtag/Tharagai?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Tharagai</a>.<a href="https://x.com/Gourayy?ref_src=twsrc%5Etfw">@Gourayy</a> <a href="https://x.com/krish_director?ref_src=twsrc%5Etfw">@krish_director</a> <a href="https://x.com/Music_Siddhu?ref_src=twsrc%5Etfw">@Music_Siddhu</a> <a href="https://x.com/speed_reels?ref_src=twsrc%5Etfw">@speed_reels</a> <a href="https://x.com/prosathish?ref_src=twsrc%5Etfw">@prosathish</a> <a href="https://x.com/hashtag/digitallypowerful?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#digitallypowerful</a><a href="https://x.com/hashtag/SpeedReelsStudio?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#SpeedReelsStudio</a>… <a href="https://t.co/xoZWtexEFh">pic.twitter.com/xoZWtexEFh</a></p>&mdash; Speed Reels Studio (@speed_reels) <a href="https://x.com/speed_reels/status/2090023867867918696?ref_src=twsrc%5Etfw">August 19, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>நாளை திரைக்கு வருகிறது &quot;பெத்லகேம் குடும்ப யூனிட்&quot;: நிவின் பாலி - மமிதா பைஜூ கூட்டணியில் புதிய கொண்டாட்டம்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/bethlehem-family-unit-film-releases-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/bethlehem-family-unit-film-releases-tomorrow#comments</comments><guid isPermaLink="false">b488434f-3b36-40aa-86af-edfce2d7013a</guid><pubDate>Thu, 20 Aug 2026 08:05:09 +0000</pubDate><atom:updated>2026-08-20T08:05:09.580Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Girish A.D,Mamitha Baiju,Nivin Pauly,மமிதா பைஜூ,நிவின் பாலி,Onam2026,Bethlehem Kudumba Unit,பெத்லகேம் குடும்ப யூனிட்,Bhavana Studios</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/wdej49fw/Bethlehem-Kudumba-Unit" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bethlehem Kudumba Unit ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/wdej49fw/Bethlehem-Kudumba-Unit?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திரம் <a href="https://www.maalaimalar.com/topic/nivinpauly">நிவின் பாலி</a> மற்றும் திரையுலகின் இளம் நடிகை <a href="https://www.maalaimalar.com/topic/mamitha-baiju">மமிதா பைஜூ</a> இணைந்து நடித்துள்ள "<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D">பெத்லகேம் குடும்ப யூனிட்</a>" திரைப்படம் நாளை உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%93%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88">ஓணம் பண்டிகை</a>யை முன்னிட்டு வெளியாகும் இந்தத் திரைப்படம் தற்போதே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>நட்சத்திரப் பட்டாளம்:</h2><p>முன்னணி கதாபாத்திரங்களில் நிவின் பாலி (ஜஸ்டின்) மற்றும் மமிதா பைஜூ (ஆஷ்லி) இவர்களுடன் துணைக் கதாபாத்திரங்களில் சங்கீத் பிரதாப், வினய் ஃபோர்ட், ஷியாம் மோகன், சுரேஷ் கிருஷ்ணா, பிந்து பணிக்கர், ஸ்ரிந்தா மற்றும் மீனாட்சி ரவீந்திரன் உள்ளிட்ட பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்.</p><h2>தொழில்நுட்பக் குழு</h2><p>'<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%81">பிரேமலு</a>' திரைப்படத்தின் மெகா வெற்றிக்குக் காரணமான அதே தொழில்நுட்பக் கூட்டணி மறுபடியும் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளது. கிரிஷ் ஏ.டி-யுடன் இணைந்து கிரண் ஜோசி இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளார். </p><p>அஜ்மல் சாபு ஒளிப்பதிவு செய்ய, ஆகாஷ் ஜோசப் வர்கீஸ் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். விஷ்ணு விஜய் இசையமைப்பில் வெளியான 'மாந்திரீகம்' மற்றும் 'இல்லே இல்லா' ஆகிய பாடல்கள் ஏற்கனவே இணையத்தில் வைரலாகி வருகின்றன.</p><p>பவானா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இந்தத் திரைப்படம், அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும்படி தணிக்கைக் குழுவால் 'UA 13+' சான்றிதழ் பெற்றுள்ளது.</p><p>நாளை வெளியாகும் இத்திரைப்படத்திற்கான முன்பதிவுகள் BookMyShow தளத்தில் தற்போது மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>கடன் வாங்கி எம்.எல்.ஏ-க்களுக்கு இலவச கார் எதற்கு?- சீமான் கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/seeman-slams-tamil-nadu-govt-over-free-cars-for-mlas</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/seeman-slams-tamil-nadu-govt-over-free-cars-for-mlas#comments</comments><guid isPermaLink="false">08709dd9-c6e8-457f-874e-fee99c48d782</guid><pubDate>Thu, 20 Aug 2026 07:51:06 +0000</pubDate><atom:updated>2026-08-20T07:51:06.903Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Seeman,TN Govt,தமிழக அரசு,சீமான்,தவெக அரசு,TVK Govt,எம்எல்ஏக்களுக்கு கார்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/3qorkqz3/seeman.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay- Seeman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/3qorkqz3/seeman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நிறைவேற்ற வேண்டிய மக்கள் நல திட்டங்கள் நிறைய உள்ள நிலையில் கடன்வாங்கி அனைத்து எம்எல்ஏக்களுக்கு கார் எதற்கு? என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- </p><p>நிறைவேற்ற வேண்டிய மக்கள் நலத் திட்டங்கள் எவ்வளவோ இருக்க, கடன் வாங்கி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இலவச மகிழுந்து (car) எதற்கு?</p><p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அவர்கள் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இலவச மகிழுந்து வழங்கப்படும் எனவும், அதோடு தனி உதவியாளர் மற்றும் ஓட்டுநருக்கான ஊதியம், எரிபொருள் படி ஆகியவற்றுக்காக மாதம் ஒரு லட்சம் ரூபாய்க் கூடுதலாக வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.</p><p>மகிழுந்து இல்லாத சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் அரசு மகிழுந்து வழங்கினால்கூட அதில் ஒரு நியாயம் உண்டு. ஆனால், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களில் 190 சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஏற்கனவே சொந்தமாக மகிழுந்து உள்ளதாகத் தங்களின் வேட்புமனுவில் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் நிலையில், புதிதாக இலவச மகிழுந்து வழங்க வேண்டிய அவசியம் என்ன?  </p><p>ஒரு மகிழுந்தின் விலை குறைந்தபட்சம் 30 இலட்சம் என்றாலும் 70 கோடி தேவைப்படுகிறது அதைத்தவிர, மாதம் ஒரு இலட்சம் ரூபாய் 234 உறுப்பினர்களுக்கும் வழங்குவதால் மேலும் ஆண்டிற்கு 28 கோடி ரூபாய் தேவை. இதுபோக எரிபொருள், வாகனப் பழுது என ஆண்டிற்கு பல நூறு கோடிகள் தேவைப்படுகிறது. அவையெல்லாம் யாருடைய வரிப்பணம்? இதுதான் மக்கள் பணத்தைத் தொடாத, வீணடிக்காத செயலா?</p><p>ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகனப்படி 25000 ரூபாய் உட்பட, மாதம் ஒரு இலட்ச ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிற நிலையில், ஆண்டுக்கு ஒரு இலட்சத்து 76 ஆயிரம் கோடி கடன் வாங்கும் நிலையில் கூடுதலாக மாதம் ஒரு இலட்சம் ரூபாய் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டிய தேவை என்ன?</p><p>பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, நிதியமைச்சர் மரியவில்சன் உள்ளிட்ட பெரும் செல்வந்தர்களுக்கும் மக்கள் வரிப்பணத்தில் மகிழுந்து வழங்க வேண்டிய அவசியம் என்ன? அப்படியே உங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உங்களிடம் வாகனம் கேட்டால் உங்கள் சொந்த செலவிலோ உங்கள் கட்சி செலவிலோ வாங்கிக்கொடுங்கள். மக்கள் பணத்தை எடுத்து ஏன் தருகிறீர்கள்?</p><p>அனைத்துக்கட்சி உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்கினால் இனி எந்தக் கட்சி உறுப்பினர் உங்களை எதிர்த்து பேசுவார்? ஆட்சி நிர்வாகச் செயல்பாடுகளில் ஏற்படும் குறைகளை எப்படி சுட்டிக்காட்டுவார்கள்? அரசை விமர்சிக்காமல் இருக்கக் கொடுக்கப்படும் மறைமுக கையூட்டா? இதுதான் ஊழல் இலஞ்சத்தை ஒழிக்கும் முறையா? </p><p>விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைய வைத்த நெல்லைப் பாதுகாக்க கிடங்குகள் இல்லை. வெட்டவெளியில் கொட்டி வீணாகிறது. அதனைப் பாதுகாக்க விவசாயிகள் கோரினால், வெறும் 10 கோடிக்கு தார்ப்பாய்களை தரும் தவெக அரசு, ஏற்கனவே ஒன்றுக்கு இரண்டு மகிழுந்து வைத்துள்ள தீயசக்தி, தூயசக்தி சட்டமன்ற  உறுப்பினர்களுக்கும் சேர்த்து சொகுசு வாகனங்கள் வழங்க இத்தனை கோடிகளை வாரி இறைப்பது தேவைதானா? </p><p>மறைமுக மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, பேருந்து கட்டண உயர்வு என மக்கள் பாதிக்கப்படுகையில் அதைச் சரி செய்யாமல் அவர்களின் பணத்தை எடுத்து இந்த ஊதாரித்தனம் தேவை தானா?</p><p>தேர்தல் பரப்புரையில் அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூபாய் 2500 உள்ளிட்ட பல வாக்குறுதிகள் அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் வெள்ளை அறிக்கை வெளியிட்டு பணம் இல்லை என்றீர்கள். இப்போது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மகிழுந்து வழங்க மட்டும் எங்கிருந்து பணம் வந்தது?</p><p>சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களின் சேவைக்கு வந்தார்களா? தங்களின் தேவையை நிறைவேற்றிக்கொள்ள வந்தார்களா? மக்கள் உதவிக்கு வந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தனியாக உதவியாளர் எதற்கு? அதற்குத் தனியே சம்பளம் எதற்கு?</p><p>அரசு அறிவிக்கும் எந்தவொரு திட்டத்தின் நன்மை தீமைகளையும் விவாதிப்பதற்கே சட்டமன்றம் உருவாக்கப்பட்டுள்ளது எனும் நிலையில், 110 விதி என்ற பெயரில் புதிய திட்டங்களைச் சட்டமன்றத்திலேயே அறிவித்துவிட்டு, அதைப்பற்றி யாரும் எவ்வித விமர்சனமும் செய்யக்கூடாது என்பதுதான் சனநாயகமா? விமர்சனம் செய்யக்கூடாது ஆனால் கேட்கவே கூசும் அளவிற்கு முதலமைச்சரைப் புகழ்ந்து மட்டும் பேசலாமா?</p><p>மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் இதுபோன்ற திட்டங்களைக் கைவிட்டு ஆக்கப்பூர்வமான மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>உங்களின் போதனைகளே எனது பலம்.. ராஜீவ் காந்தி ஜெயந்தி  -  மகன் ராகுல் அஞ்சலி 
</title><link>https://www.maalaimalar.com/news/national/rajiv-gandhi-jayanti-rahul-sonia-pay-tribute-at-veer-bhumi-memorial-in-delhi</link><comments>https://www.maalaimalar.com/news/national/rajiv-gandhi-jayanti-rahul-sonia-pay-tribute-at-veer-bhumi-memorial-in-delhi#comments</comments><guid isPermaLink="false">25633218-f42d-4bc6-b0c7-ec5b0e6f603c</guid><pubDate>Thu, 20 Aug 2026 07:46:09 +0000</pubDate><atom:updated>2026-08-20T07:46:09.546Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,ராஜீவ் காந்தி ஜெயந்தி,Rajiv Gandhi Jayanti</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/ogokdrse/tn-25.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராகுல் ]]></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/ogokdrse/tn-25.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் முன்னாள் பிரதமர்  ராஜீவ் காந்தியின்  82வது பிறந்தநாள் இன்று (ஆகஸ்ட் 20). </p><h2>அஞ்சலி </h2> <p>ராஜீவ் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டெல்லியில் உள்ள வீர் பூமி நினைவிடத்தில் அவரின் மனைவி சோனியா காந்தி, அவரது மகனும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான <a href="https://www.maalaimalar.com/topic/rahul-gandhi">ராகுல் காந்தி </a>மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.</p><h2>ராகுல்</h2><p>தொடர்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "இந்தியர்களிடையே நல்லிணக்கம், ஒவ்வொரு இதயத்திலும் கருணை, ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதி மற்றும் ஜனநாயகத்தில் சமமான உரிமைகள்...</p><p>அப்பா, உங்களின் போதனைகளே எனது பலம். உங்களின் நினைவுகளே எனது தைரியம். நீங்கள் கண்ட இந்தியாவின் கனவை நனவாக்கும் எனது உறுதிப்பாடு எப்போதும் என்னை வழிநடத்தும்." என தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கல்லூரி மாணவர்களுக்கு கூகுளின் மெகா சலுகை: ரூ.4,000 மதிப்பிலான கூகுள் AI பிளஸ் சேவை 1 வருடத்திற்கு இலவசம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/google-mega-offer-for-college-students-rs-4000-worth-google-ai-plus-free-for-1-year</link><comments>https://www.maalaimalar.com/news/national/google-mega-offer-for-college-students-rs-4000-worth-google-ai-plus-free-for-1-year#comments</comments><guid isPermaLink="false">bad46caf-8f01-4c53-99ac-4d67bf5e2048</guid><pubDate>Thu, 20 Aug 2026 07:43:28 +0000</pubDate><atom:updated>2026-08-20T07:43:28.477Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>செயற்கை நுண்ணறிவு,கூகுள் ஜெமினி,GoogleGemini,CollegeStudents,GoogleAIPlus,TechNews,இந்திய கல்லூரி மாணவர்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/z9g3cguy/ai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Google Gemini ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/z9g3cguy/ai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியக் கல்லூரி மாணவர்களின் கல்விச் செயல்பாடுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) திறன்களை மேம்படுத்தும் நோக்கில் கூகுள் நிறுவனம் https://gemini.google/students ஒரு முக்கிய அறிவிப்பை வெளியீடு செய்துள்ளது. வழக்கமாக ஆண்டிற்கு ரூ.4,000 கட்டணத்தில் வழங்கப்படும் <a href="https://www.maalaimalar.com/news/world/ai-solutions-most-diseases-next-10-years-anthropic-ceo-dario-amodei-prediction">கூகுள் AI பிளஸ் </a>சேவையை, தகுதிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு 1 ஆண்டிற்கு முற்றிலும் இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><h2>இலவச <strong>கூகுள் AI பிளஸ் திட்டம்</strong></h2><p>மாணவர்கள் தங்களது கல்லூரி பாடத்திட்டங்களை எளிதாகப் புரிந்து கொள்ளவும், ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவும் இந்த சிறப்புச் சலுகை பெரிதும் உதவியாக இருக்கும். இந்தத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்குக் கிடைக்கும் சலுகைகள் பற்றி பார்க்கலாம்.</p><p>*கூகுளின் அதிநவீன AI மாடலான Gemini Omni-ஐப் பயன்படுத்தும் வசதி.</p><p>*மாணவர்களின் கல்லூரி ஆவணங்கள் மற்றும் திட்டங்களைச் சேமிக்க 400 GB சேமிப்பகம்.</p><p>*சாதாரண பயனர்களை விட 2 மடங்கு கூடுதல் பயன்பாட்டு வரம்புகள்</p><p>*வகுப்புக் குறிப்புகளைப் பதிவேற்றி, தனிப்பயனாக்கப்பட்ட படிப்பு வழிகாட்டிகள் மற்றும் மாதிரி வினாடி வினாக்களை உருவாக்கும் வசதி.</p><p>* AI உடன் நேரடி குரல்வழியில் உரையாடி பாடங்களின் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளும் அம்சம்.</p><h2>மாணவர்க<strong>ள் இச்சலுகையைப் பெறுவது</strong> எப்படி?</h2><p>18 முதல் 24 வயதுக்குட்பட்ட தகுதியுள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் https://gemini.google/students என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்குச் சென்று, தங்களது மாணவர் அடையாளச் சான்றை உறுதிசெய்வதன் மூலம் இந்த 1 வருட இலவசச் சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும்.</p>]]></content:encoded></item><item><title>இனிய வாழ்வு அளிக்கும் வரலட்சுமி விரதம்</title><link>https://www.maalaimalar.com/spirituality/varalakshmi-vratam</link><comments>https://www.maalaimalar.com/spirituality/varalakshmi-vratam#comments</comments><guid isPermaLink="false">feb3e3e3-87e2-4095-a8d2-3aa4e6be1a48</guid><pubDate>Thu, 20 Aug 2026 07:32:30 +0000</pubDate><atom:updated>2026-08-20T07:32:30.458Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,வழிபாடு,worship,வரலட்சுமி விரதம்,Varalakshmi Vratam</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/e9chxeid/amman1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Varalakshmi ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/e9chxeid/amman1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>வரலட்சுமி விரதம்</h2><p>செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியை விரதம் இருந்து வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாள், வரலட்சுமி விரத நாள் ஆகும். மிகவும் பக்தி சிரத்தையோடு அனுஷ்டிக்கப்படும் இந்த விரதம் 'வரலட்சுமி விரதம் அல்லது வரலட்சுமி நோன்பு' என்று அழைக்கப்படுகிறது. ஆடி அல்லது ஆவணி மாதத்தில் வரும் பவுர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.</p> <h2>வரங்களை அருளும் லட்சுமி</h2><p>வரலட்சுமி என்றால் 'வரங்களை அருளும் லட்சுமி' என்று பொருள். இந்த நாளில் மகாலட்சுமியை வழிபடுவதால் வேண்டிய வரங்களை பெறுவதுடன், அஷ்டலட்சுமிகளான ஆதி லட்சுமி, தன லட்சுமி, தானிய லட்சுமி, வீர லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜய லட்சுமி, வித்யா லட்சுமி ஆகியோரின் அருளையும் பெறலாம். சுமங்கலி பெண்கள், தங்கள் கணவன் ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும் வாழ்வதற்கும், செல்வ வளம் பெருகுவதற்கும், லட்சுமியின் பரிபூரண அருளை பெறுவதற்கும் இந்த விரதத்தை மேற்கொள்கிறார்கள்.</p> <h2>மகாலட்சுமி</h2><p>முன்னொரு காலத்தில் குந்தினபுரம் என்ற ஊரில் சாருமதி என்ற பெண் வாழ்ந்து வந்தாள். அவள், தன் கணவருக்கும், மாமனார், மாமியாருக்கும் தக்க மரியாதை செலுத்தி குடும்பத்தை நல்ல முறையில் நடத்தினாள். மகாலட்சுமியின் தீவிர பக்தையான அவள், தினமும் லட்சுமி தேவியை வணங்கி வழிபடுவது வழக்கம். அவளது நற்குணத்திற்கும், பக்திக்கும் மனம் இரங்கிய மகாலட்சுமி, அவளுக்கு அருள்புரிய முடிவு செய்தார்.</p> <h2>செல்வ நலன்</h2><p>அதன்படி, ஒரு நாள் சாருமதியின் கனவில் தோன்றிய மகாலட்சுமி, வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கும் முறையை அவளுக்கு எடுத்துரைத்து, "இந்த விரதத்தை கடைப்பிடித்தால் அனைத்து செல்வ நலன்களும் கிடைக்கும். அவர்களின் வீட்டில் நான் குடிகொள்வேன்” என்று கூறி மறைந்தார். மறுநாள் இதுபற்றி சாருமதி, தன் குடும்பத்தினரிடம் தெரிவித்தாள். இதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த குடும்பத்தினர், வரலட்சுமி விரதத்தை கடைப்பிடிக்க உறுதி பூண்டனர்.</p><p>அதன்படி வரலட்சுமி விரதம் மேற்கொண்ட சாருமதி, அதன் பலனாக மகாலட்சுமியின் அருளையும், அனைத்து செல்வ நலன்களையும் பெற்று சிறப்புடன் வாழ்ந்து வந்தாள். இந்த விரதத்தின் மகிமையை அறிந்த அந்நாட்டு மக்களும் வரலட்சுமி விரதத்தை கடைப்பிடிக்க தொடங்கியதாக சொல்லப்படுகிறது.</p> <p>ஒரு முறை மகாலட்சுமி, வயதான சுமங்கலிப் பெண் வேடம் பூண்டு, எங்கு வாசம் செய்யலாம் என்று ஒவ்வொரு வீடு வீடாக சென்றார். முதலில் ஒரு வீட்டிற்கு சென்றபோது, அங்கு பொழுது விடிந்த பிறகும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அதனால் அடுத்த வீட்டிற்கு சென்றார். அந்த வீடு சுத்தமே இல்லாமல் குப்பையாக இருந்தது. அதையடுத்து, மூன்றாவதாக மற்றொரு வீட்டிற்கு சென்றார். அந்த வீட்டில் கணவன் - மனைவி இருவரும் சண்டை போட்டுக்கொண்டிருந்தனர்.</p> <p>எனவே, மகாலட்சுமி அடுத்த வீட்டிற்கு சென்றார். அந்த வீட்டின் வாசலில் அழகான கோலம் போடப்பட்டிருந்தது. பூஜையறையில் விளக்கு ஏற்றப்பட்டு, பக்தி பாடல்கள் ஒலித்தன. அந்த வீடே மங்களகரமாக காட்சி அளித்தது. இதைப் பார்த்த வயதான பெண் வடிவில் இருந்த மகாலட்சுமி, வீட்டிற்குள் செல்ல விரும்பினார். அவரை பார்த்த குடும்பத்தினர், வேகமாக வந்து அவரை வரவேற்று உபசரித்தனர்.</p> <p>அவருக்கு உணவு கொடுப்பதற்காக உள்ளே சென்று வந்தபோது, திடீரென அவரை காணவில்லை. இதையடுத்து, தனது பூஜையறைக்குள் சென்றபோது, அங்கு அறை முழுவதும் செல்வம் கொட்டிக் கிடந்தது. இதைப்பார்த்த குடும்பத்தினர், வீட்டிற்கு வயதான சுமங்கலிப் பெண் வடிவில் வந்தது மகாலட்சுமி தான் என்பதை புரிந்துகொண்டனர்.</p> <p>வரலட்சுமி விரத நாளன்று, மகாலட்சுமி தாயார் நம் இல்லம் தேடி வருவதாக நம்பிக்கை. எனவே அன்றைய தினம் வீட்டை சுத்தம் செய்து, விரதம் இருந்து மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வ வளம் பெருகும், வீட்டில் லட்சுமி குடிகொள்வார் என்பது நம்பிக்கை.</p> <p>இந்த ஆண்டு வரலட்சுமி விரதம் நாளை வருகிறது. அன்றைய தினம் வரலட்சுமி விரதம் இருக்க விரும்பும் பெண்கள், இல்லம் தேடி வரும் மகாலட்சுமியை மனம் குளிர வரவேற்று, பூஜை செய்து சிறப்பிக்க வேண்டும்.</p><p>விரதம் இருப்பதற்கு முதல் நாளே வீட்டை சுத்தம் செய்து, அலங்கரிக்க வேண்டும். வீட்டு வாசலில் கோலமிடுவதுடன், பூஜையறையில் மண்டபம் அமைத்து, அதன் முன்பாகவும் கோலம் இட வேண்டும். </p> <p>பின்னர் மண்டபத்தில் மகாலட்சுமியின் படம் அல்லது உருவ சிலையை வைத்து மலர்களால் அழகுபடுத்த வேண்டும். அன்னையின் முன்பாக ஒரு வாழை இலையை விரித்து, அதில் பச்சரிசியை பரப்ப வேண்டும். பின்னர், ஒரு கலசத்தை எடுத்து, அதில் பச்சரிசியை நிரப்பி, மஞ்சள், குங்குமம் தடவி, அதன் மேல் ஒரு முழு தேங்காயை வைக்க வேண்டும். அடுத்ததாக அந்த கலசத்தை, பச்சரிசி பரப்பிய இலையின் நடுவே வைக்க வேண்டும். கலசத்திற்கு மாலை அணிவித்து, அதை மகாலட்சுமியாகவே பாவிக்க வேண்டும். அருகில் வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், புடவை போன்ற பொருட்களை படைத்து, விளக்கேற்றி வழிபட வேண்டும்.</p> <p>பூஜையில் மஞ்சள் தடவிய ஒன்பது இழையால் ஆன நோன்பு சரடை வைக்க வேண்டும். பூஜையில் அன்னைக்கு பிடித்தமான நைவேத்தியங்களை படைப்பது சிறப்பு. முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை வணங்கிவிட்டு பூஜையை தொடங்க வேண்டும். பின்னர், மகாலட்சுமிக்கு மலர் தூவி, கற்பூர தீபம் காட்டி, அவருக்குரிய பாடல்களை பாடி வழிபட வேண்டும்.</p> <h2>கன்னிப் பெண்கள்</h2><p>பூஜை முடிவில், மஞ்சள் சரடை தங்கள் கணவன் கையால் கட்டிக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும் திருமணமாகாத கன்னிப் பெண்கள், நல்ல கணவன் அமைய வேண்டும் என்பதற்காக இந்த பூஜையில் கலந்து கொண்டு வரலட்சுமியை வழிபடலாம். வரலட்சுமி விரத நாளன்று, அன்னைக்கு படைக்கப்படும் நைவேத்தியங்களை வீட்டிற்கு வருபவர்களுக்கும், ஏழை, எளிய மக்களுக்கும் கொடுப்பது மிகவும் சிறப்பாகும்.</p> ]]></content:encoded></item><item><title>ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்துவதா?- சட்டசபையில் காரசார விவாதம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/denigrating-ration-rice-heated-debate-in-the-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/denigrating-ration-rice-heated-debate-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">41201b23-1652-4f96-9d24-0d0aca06e04d</guid><pubDate>Thu, 20 Aug 2026 07:27:22 +0000</pubDate><atom:updated>2026-08-20T07:27:22.704Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,ரேஷன் அரிசி,ration rice,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/x73974l3/ration.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ரேஷன் அரிசி]]></media:title><media:description type="html"><![CDATA[ ரேஷன் அரிசி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/x73974l3/ration.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>டிசம்பர், ஜனவரி மாதத்திற்குள்ளாக ரேஷன் கடைகளில் தரமான அரிசி கிடைக்கும். வரும் காலங்களில் சோறுக்கும் பயன்படும் வகையில் ரேஷன் அரிசி வழங்கப்படும் என அமைச்சர் கூறினார்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழக சட்டசபையில்</a> இன்று கூட்டுறவு மற்றும் உணவு நுகர்வோர் பாதுகாப்புத் துறை மீதான மானியக் கோரிக்கைகள் குறித்த விவாதம் நடைபெற்றது. அப்போது, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரம் மற்றும் விநியோகம் தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு:-</p><p>எம்எல்ஏ கே.என்.நேரு :- சன்னரக நெல்லை ரேஷன் அரிசியாக தருவது சாத்தியம் இல்லை என்றார். </p><p>எம்எல்ஏ எ.வ.வேலு :- சத்தீஸ்கர், ஆந்திராவில் இருந்து மத்திய தொகுப்பின் மூலம் கிடைக்கும் அரிசி தான் <a href="https://www.maalaimalar.com/news/topnews/vijay-is-firm-on-the-stance-that-quality-rice-must-be-supplied-at-ration-shops-minister-aadav-arjuna">ரேஷன்</a> கடைகளில் தரப்படுகிறது. சத்தீஸ்கரில் இருந்து வரப்படும் அரிசி தான் நிறம் மாறி இருக்கும், அதனால் வேண்டாம் என கூறிவிட்டோம். தமிழ்நாட்டில் விளையும் அரிசி சற்று என்னை போல் நிறம் குறைந்து தான் இருக்கும், ஆதவை போல் நிறமாக இருக்காது. அவை முன்னவரே ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? திமுக அரசின் ரேஷன் அரிசி திட்டத்தை உச்சநீதிமன்ற நீதிபதியே பாராட்டியுள்ளார். எதிர்க்கட்சியாக இருந்தபோது ரேஷன் அரிசி பற்றி பேசியுள்ளாரா செங்கோட்டையன்?. ஏழைகள் சாப்பிடும் ரேஷன் அரிசியை ஆடு, கோழி சாப்பிடுவது என கொச்சைப்படுத்தி செங்கோட்டையன் பேசலாமா? என்று கேள்வி எழுப்பினார்.</p><p>அதிமுக எம்எல்ஏ காமராஜ் கூறுகையில், ரேஷன் அரிசியை அனைவரும் சாப்பிடுகிறார்கள் என்றார். </p><p>அமைச்சர் செங்கோட்டையன்: ரேஷன் அரிசி சாப்பிடுபவர்களை கொச்சைப்படுத்தும் நோக்கில் எதையும் பேசவில்லை, உண்மை நிலையை கூறுகிறோம் என்றார். </p><p>எடப்பாடி பழனிசாமி:- நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை நேரடியாக அரவை ஆலைக்கு அனுப்பினால் கருப்பு அரிசி வராது. ஆந்திராவில் அருமையான அரிசி தயாரிக்கின்றனர். நமது தமிழகத்திலும் பாலீஷ் செய்த பின் கொடுக்க கூடுதல் செலவு ஆகும். தமிழ்நாட்டில் உள்ள அரிசியை மட்டுமே ரேஷன் கடைகளில் கொடுத்தால் கூடுதலாக பல கோடி ரூபாய் செலவாகும்.</p><p>அமைச்சர் வெங்கட்ரமணன் </p><p>டிசம்பர், ஜனவரி மாதத்திற்குள்ளாக ரேஷன் கடைகளில் தரமான அரிசி கிடைக்கும். வரும் காலங்களில் சோறுக்கும் பயன்படும் வகையில் ரேஷன் அரிசி வழங்கப்படும். தற்போது கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல்லை பாலிஷ் செய்து ரேஷன் கடைகளுக்கு அனுப்ப நடவடிக்கை. கையில் உள்ள 7 லட்சம் மெட்ரிக் டன் அரிசி விரைந்து பாலிஷ் செய்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும். தவெக அரசு ரேஷன் கடை மூலம் தரமான மக்கள் பயன்படுத்தும் சன்னரக அரிசி கொடுக்க முயற்சிக்கிறது. ஈரமான நெல்லாக இருந்தால் கொள்முதல் நிலையங்களிலேயே ஹீட்டர் வைத்து காய வைத்து எடைபோட்டு வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஈரமான நெல்லை சேமித்து பாலிசுக்கு அனுப்பும் முன்னரே நிறம் மாற வாய்ப்பு உள்ளது. அதனால் முறையாக ட்ரை செய்து வாங்கப்படும். பெரும்பாலும் இட்லி, தோசைக்கு பயன்படுத்தும் ரேஷன் அரிசியை வருங்காலத்தில் சோறுக்கு பயன்படும் வகையில் நடவடிக்கை. இம்முறை தமிழக அரிசி போதுமானதாக இல்லை என்றால் மட்டுமே பிற மாநில அரிசி ரேஷனுக்கு வாங்கப்படும் என்றார். </p>]]></content:encoded></item><item><title>4 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: பாதிரியாருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/court-death-penalty-priest-sexual-abuse-four-girls</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/court-death-penalty-priest-sexual-abuse-four-girls#comments</comments><guid isPermaLink="false">7e08e44a-6004-436d-bcd6-3869fa1f03e1</guid><pubDate>Thu, 20 Aug 2026 07:22:38 +0000</pubDate><atom:updated>2026-08-20T07:22:38.889Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாலியல் வன்கொடுமை,priest,தூக்கு தண்டனை,பாதிரியார்,Sexual Harassment,Death Penalty</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/bxr6i87g/Preist.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Preist Abraham]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/bxr6i87g/Preist.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த பாதிரியார் ஆபிரகாமுக்கு தூக்கு தண்டனை விதித்து நெல்லை <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B" rel="nofollow">போக்சோ</a> சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   </p><p>நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள மேல இலந்தைகுளம் பகுதியில் கிறிஸ்தவ சபை உள்ளது.</p><h2>பாலியல் தொல்லை</h2><p> இங்கு பாதிரியாராக பணியாற்றி வந்தவர் ஆபிரகாம் (வயது 47). இவர் கடந்த 2022-ம் ஆண்டு, திருச்சபைக்கு வந்த 4 சிறுமிகளை சட்ட விரோதமாக அடைத்து வைத்து, கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்தார். </p><p>மேலும், இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து வெளியே யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாக அந்த சிறுமிகளை அவர் கடுமையாக மிரட்டி உள்ளார்.</p><h2>பாதிரியார் கைது</h2><p>இது குறித்த புகாரின் பேரில், தேவர்குளம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி, பாதிரியார் ஆபிரகாம் மீது போக்சோ சட்டத்தின் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை அதிரடியாக கைது செய்தனர்.</p><p>இந்த வழக்கின் விசாரணை நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் உஷா ஆஜராகி திறமையாக வாதாடினார்.</p><h2>தூக்கு தண்டனை</h2><p>போலீசாரின் வலுவான ஆதாரங்கள் மற்றும் அரசு வக்கீலின் வாதங்கள் மூலம் பாதிரியார் ஆபிரகாம் மீதான <a href="https://www.maalaimalar.com/news/national/shock-in-assam-tribal-schoolgirl-sexual-assault-accused-shot" rel="nofollow">பாலியல் வன்கொடுமை</a> குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது. </p><p>இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ் குமார், 4 சிறுமிகளின் வாழ்க்கையை சீரழித்த குற்றவாளி ஆபிரகாமுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.  </p><h2>ரூ.10 லட்சம் இழப்பீடு</h2><p>மேலும் பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளுக்கும், தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி தீர்ப்பளித்தார். </p><h2>பாதிரியாருக்கு தூக்கு</h2><p>தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வருடத்தில்  போக்சோ வழக்கில் குற்றவாளிகளுக்கு நெல்லை  போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தூக்கு தண்டணை விதிக்கப்படுவது இது 4-வது முறை ஆகும்.</p>]]></content:encoded></item><item><title>குஜராத்தில் கள்ளச்சாராயம்  குடித்து 4 பேர் பரிதாப பலி: 18 பேர் மருத்துவமனையில் அனுமதி- காவல்துறை தீவிர விசாரணை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/fake-liquor-deaths-in-gujarat-four-killed-18-hospitalised</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/fake-liquor-deaths-in-gujarat-four-killed-18-hospitalised#comments</comments><guid isPermaLink="false">1a54f5c5-96ec-4e9d-9b5a-91a5ccfbee52</guid><pubDate>Thu, 20 Aug 2026 07:20:17 +0000</pubDate><atom:updated>2026-08-20T07:20:17.621Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>குஜராத்,மதுவிலக்கு,கள்ளச்சாராயம்,GujaratLiquor,Bhavnagar,SpuriousLiquor,GujaratPolice,பவ்நகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/2zv0teup/drugs.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gujarat Liquor]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/2zv0teup/drugs.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுவிலக்கு நடைமுறையில் உள்ள குஜராத் மாநிலத்தின் பவ்நகர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 18 பேர் பவ்நகரில் உள்ள வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p>பவ்நகர் மாவட்டம் கோகா தாலுகாவிற்கு உட்பட்ட கர்கடி கிராமத்தில், கடந்த (ஆகஸ்ட்) 16-ஆம் தேதி நடைபெற்ற ஒரு தனியார் விருந்தில் சிலர் மது அருந்தியுள்ளனர். இந்த <a href="https://www.maalaimalar.com/news/national/old-vehicles-e10-petrol-return-central-government-consideration">மதுபானம்</a>, இந்தியாவின் பிரபல நிறுவனமான ‘ராயல் ஸ்டேக்’ பிராண்டின் பெயரில் போலி முத்திரையிடப்பட்டு, அண்டை மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் இருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.</p><h2>கள்ளச்சா<strong>ராய பலி</strong></h2><p>கள்ளச்சாராயம் குடித்ததில் கார்த்திக் மக்வானா (40), உபேந்திர கோஹில் (25), கன்சியாம்சின் ஜடேஜா (50) மற்றும் நரேந்திர யாதவ் ஆகிய 4 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கும் 18 நபர்களில்,  2 பேர்  மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர். 4 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிக்கப்படுகின்றனர். </p><p>2 பேர் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை பெறுகின்றனர். 10 பேர் சீரான உடல்நிலையுடன் சிகிச்சையில் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க அகமதாபாத் சிறுநீரக நோய்கள் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இருந்து சிறப்பு மருத்துவக் குழு பவ்நகர் சர் தகத்சிங்ஜி அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><h2>காவல்<strong>துறை விசார</strong>ணை</h2><p>மாநில காவல்துறை தலைமை இயக்குநர் ஜி.எஸ். மாலிக் உத்தரவின் பேரில் மாநிலம் முழுவதும் தீவிர வாகனச் சோதனை தொடங்கப்பட்டுள்ளது. பவ்நகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிதேஷ் பாண்டே தலைமையில் 16 சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டு, கடத்தலில் தொடர்புடைய 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>அகமதாபாத் கிராமப்புற காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் ஜாட் தலைமையில் 800க்கும் மேற்பட்ட காவல்துறையினர் நடத்திய சோதனையில், மதுவிலக்குச் சட்டத்தின் கீழ் 177 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடத்தல் பாதை அகமதாபாத் வழியே சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தில், சுமார் 500 கிராமங்களின் பஞ்சாயத்துத் தலைவர்களுடன்இணைந்து காவல்துறையினர் தகவல்களைச் சேகரித்து வருகின்றனர்.</p><p>கள்ளச்சாராயம் மாதிரி தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. 'ராயல் ஸ்டேக்' பெயரில் சந்தேகத்திற்குரிய வகையில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களை வாங்கவோ உட்கொள்ளவோ வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சட்டமன்றத்தில் சொன்னதும் பிரமாண பத்திரத்தில் உள்ளதும்.. கார் இல்லை என்று சொன்ன எம்.எல்.ஏ.க்களின் சொத்து மதிப்பு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-mlas-car-allowance-row-asset-details-of-jothimani-shanmugan-and-sabari-aingaran-go-viral-after-car-demand</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-mlas-car-allowance-row-asset-details-of-jothimani-shanmugan-and-sabari-aingaran-go-viral-after-car-demand#comments</comments><guid isPermaLink="false">6a17b14a-8dd6-454d-953e-84ce58fc4fe8</guid><pubDate>Thu, 20 Aug 2026 07:10:12 +0000</pubDate><atom:updated>2026-08-20T07:10:12.751Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,தமிழக சட்டசபை,MLAs,எம்எல்ஏக்கள்,tvk,Tamil Nadu Legislative Assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/upxa4p5m/tn-24.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[  ஜோதிமணி, சபரி ஐங்கரன், சண்முகம் ]]></media:title><media:description type="html"><![CDATA[  ஜோதிமணி, சபரி ஐங்கரன், சண்முகம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/upxa4p5m/tn-24.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/assembly-members-thanks-to-cm-vijay">ஆளுக்கொரு காரும்</a>, கார் டிரைவர் மற்றும்  வாகன செலவுக்கு ரூ.75000  படிக்காசும் வழங்கப்படும் என சட்டமன்றத்தில் நேற்று முதல்வர் விஜய் அறிவித்தார். </p><p>இந்த அறிவிப்புக்கு விதை காட்டுமன்னார்கோவில் விசிக எம்எல்ஏ ஜோதிமணியால் கடந்த வாரம் போடப்பட்டது.  </p><p>சட்டமன்றத்தில் அவர் வைத்த கோரிக்கையில், "நான் 250 கி.மீ. தொலைவில் இருந்து தான் சட்டமன்றத்துக்கு வருகிறேன். எனக்கு சொந்தமாக வண்டி வாகனம் கிடையாது. வாடகை வண்டியில் தான் வருகிறேன்.</p><p>தொகுதி மக்களை சந்தித்து மக்களுக்கு பணி செய்ய வேண்டிய அளவிற்கான வாகன வசதி இல்லை.</p><p>ஒரு செயலாளரை கையில் வைத்துக் கொண்டு அவருக்கு ஊதியம் கொடுப்பதற்கு வசதி இல்லை. இப்படித்தான் இன்றைக்கு முக்கால்வாசி சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். </p><p>எனவே வாகன வசதியும் மற்றவைகளும் செய்து கொடுக்க வேண்டும்” என்று பேசியிருந்தார்.</p><h2>நிறைவேற்றிய முதல்வர் விஜய்</h2><p>இதைத்தொடர்ந்து நேற்று சட்டசபையில் விதி எண் 110இன் கீழ், அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார், காருக்கு டிரைவர், வாகன படியாக மாதம் ரூ.75 ஆயிரம், அலுவலக பணிகளில் உதவி செய்ய உதவியாளரை நியமித்துக் கொள்ள மாதம் ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் <a href="https://www.maalaimalar.com/topic/vijay">விஜய் </a>அறிவித்தார்.</p> <h2>வரவேற்ற எம்எல்ஏக்கள்</h2><p>இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து பல எம்எல்ஏக்கள் பேசினர். குறிப்பாக மொடக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ சண்முகன், "INNOVA கார் கொடுத்தால் நன்றாக இருக்கும்" என்றார்</p><p>பெரியகுளம் தவெக எம்எல்ஏ சபரி ஐங்கரன் பேசுகையில், "கல்லூரியில் காதல் தோல்வியடைந்த எனக்கு வேலையும் இல்லை காரும் இல்லை. முதல்வர் எனக்கு வேலை வழங்கினார். கார் இல்லாததால் ஆட்டோவில் வருகிறேன். இப்போது காரும் வழங்கியுள்ளார்" என்றார்.</p> <p>இந்நிலையில் கார் கேட்ட விசிக எம்எல்ஏ ஜோதிமணி, இன்னோவா கார் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்ற தவெக எம்.எல்.ஏ சண்முகன், ஆட்டோவில் வருகிறேன் என்று கூறிய தவெக எம்எல்ஏ சபரி ஐங்கரன் ஆகிய மூவரும் தேர்தல் பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்த அவர்களின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.</p> <h2>சொத்து மதிப்பு</h2><p>விசிக எம்எல்ஏ ஜோதிமணி தனது பிரமாண பத்திரத்தில், தனக்கு டொயோட்டா எட்டியோஸ் கார் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், மனைவியிடம் 25 லட்சம் மதிப்புடைய நகைகள் இருப்பதாகவும், தனக்கு 50 லட்சம் மதிப்புல்ல அசையா சொத்துக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். தனது மொத்த சொத்து மதிப்பு ரூ. 85 லட்சம் 47 ஆயிரம் என குறிப்பிட்டுள்ளார்.</p><p>இன்னோவா கார் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்ற தவெக எம்.எல்.ஏ சண்முகன் தன்னிடம் டொயோட்டா, வோல்ஸ்வேகன், மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட 4 கார்கள் உள்ளதாக பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். </p> <p>மேலும் தனது அசையும் சொத்து ரூ.6 கோடி 49 லட்சம், அசையா சொத்து ரூ.31 கோடி, மொத்த சொத்து மதிப்பு ரூ.37 கோடி 52 லட்சம் என குறிப்பிட்டுள்ளார்.</p><p>ஆட்டோவில் வருகிறேன் என்று கூறிய ஜோதிமணி, சபரி ஐங்கரன், சண்முகம்  தன்னிடம் டாடா டிகோர் கார் இருப்பதாக பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது மொத்த சொத்து மதிப்பு ரூ.72 லட்சத்துக்கு 76 ஆயிரம் என்று குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>எம்.எல்.ஏ.க்களின் கேள்விக்கு பதில் அளிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/demand-for-action-against-officials-who-failed-to-answer-mlas-questions</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/demand-for-action-against-officials-who-failed-to-answer-mlas-questions#comments</comments><guid isPermaLink="false">e2793839-065c-4546-9934-4502434f976b</guid><pubDate>Thu, 20 Aug 2026 07:05:06 +0000</pubDate><atom:updated>2026-08-20T07:05:06.640Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>O Panneer Selvam,தமிழக சட்டசபை,TN assembly,ஆஸ்டின்,ஓ பன்னீர்செல்வம்,சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/kwc41q8t/TNGovt.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ தமிழக சட்டசபை]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக சட்டசபை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/kwc41q8t/TNGovt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>குறிப்பிட்ட காலத்திற்குள் பதில் அளிக்காதவர்களுக்கு கடிதம் அனுப்பி விளக்கத்தை சபாநாயகர் கேட்க வேண்டும். கேள்விகளுக்கு பதில் அனுப்பாமல் தாமதப்படுத்துவதும் அவையை அவமதிக்கும் செயல் என்றார்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபையில்</a> இன்று திமுக எம்.எல்.ஏ.ஆஸ்டின் பேசுகையில், இந்த அரசு பதவியேற்ற பின் நாங்கள் ஆயிரக்கணக்கான கேள்விகளை கொடுத்துள்ளோம். ஆனால் இதுவரை பதில் வரவில்லை என்பதால் கேள்வி நேரம் வைக்கப்படவில்லை. இதனால் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பாதிக்கப்படுகின்றனர். </p><p>கேள்விகள் கொடுத்து 93 நாட்கள் ஆகிவிட்டது. விதிப்படி குறிப்பிட்ட காலத்திற்குள் பதில்கள் தயாரிக்க வேண்டும் அதிகாரிகள் மெத்தனபோக்கால் கால தாமதம் ஏற்படுகிறது. குறிப்பிட்ட காலத்திற்குள் பதில் அளிக்காதவர்களுக்கு கடிதம் அனுப்பி விளக்கத்தை சபாநாயகர் கேட்க வேண்டும். கேள்விகளுக்கு பதில் அனுப்பாமல் தாமதப்படுத்துவதும் அவையை அவமதிக்கும் செயல் என்றார்.</p><h2><strong>ஓ.பன்னீர்செல்வம்</strong> </h2><p>கடந்த சட்டமன்ற நிகழ்வுகளில் 2001ல் 20 கேள்விகளுக்கு கூட விடைகள் அளிக்கும் சூழல் இருந்தது. இவை எல்லாம் கடந்த காலங்களில் நடந்தவை. நான் அமைச்சராக இருந்த போது எனக்கு மட்டும் 2 கவன ஈர்ப்பு மற்றும் கேள்விகள் வரும். சட்டசபையில்  கேள்விகளுக்கு பதில் அளிப்பதை அந்தந்த தொகுதி மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றார். </p><h2><strong>சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்</strong></h2><p>நான் குறிப்பேடுகளை எடுத்து பார்த்தேன். கடந்த காலத்திலும் நீண்ட நாட்களாக பதில் வராத கேள்விகள் உள்ளன. 2021 கொடுத்த கேள்விகளுக்கு  2025 ஆம் ஆண்டு வரை பதிலே வராமலும்  இருந்திருக்கிறது. ஆனாலும் நான் அதிகாரிகளிடம் விரைவாக பதில்களை தயாரித்து அனுப்புங்கள் என கூறியுள்ளேன். தற்போது 50-க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதில் வந்துள்ளன. ஆனால் ஒரே துறையின்  பதிலாக  இருப்பதால் கூடுதலாக பதில் வந்தவுடன் விரைவில் கேள்வி நேரம் சட்டசபையில் எடுத்துக் கொள்ளப்படும் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாடு: மேகதாது அணை குறித்து பேசிய டி.கே.சிவக்குமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dk-shivakumar-speech-mekedatu-dam-in-south-states-chief-ministers-conference</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dk-shivakumar-speech-mekedatu-dam-in-south-states-chief-ministers-conference#comments</comments><guid isPermaLink="false">acd8f44f-0b0f-4547-a6d1-ecc30becad2f</guid><pubDate>Thu, 20 Aug 2026 06:49:11 +0000</pubDate><atom:updated>2026-08-20T06:49:11.910Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>mekedatu dam,மேகதாது அணை,DK Shivakumar,டிகே சிவக்குமார்,தென் மாநில முதல்-மந்திரிகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/wrl9dqam/TKShivakumar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார்]]></media:title><media:description type="html"><![CDATA[ கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/wrl9dqam/TKShivakumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மேகதாதுவில் அணை கட்டி நீரை சேமிப்பதால் தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் பயனடையும் என்று டி.கே.சிவக்குமார் பேசியுள்ளார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/south-state-chief-ministers-conference-started">தென் மாநில முதல்-மந்திரிகள்</a> மாநாட்டில் கலந்து கொள்ள நேற்று இரவே அமித்ஷா சென்னை வந்தார். விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் கோவளம் நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார். ஓட்டலில் மத்திய மந்திரி அமித்ஷாவை முதலமைச்சர் விஜய் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதை தொடர்ந்து இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.</p><p>பின்னர் அனைத்து மாநில முதல்-மந்திரிகள், உயர் அதிகாரிகளுடன் மத்திய அமைச்சர் அமித்ஷா இரவு விருந்து சாப்பிட்டார். அதை தொடர்ந்து இரவில் அந்த ஓட்டலிலேயே அமித்ஷா தங்கினார்.</p><h2><strong>மாநாடு தொடங்கியது</strong></h2><p>மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாடு மாமல்லபுரத்தை அடுத்த கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. </p><p>காலை 10.30 மணிக்கு தொடங்கிய மாநாட்டிற்கு அமித்ஷா தலைமை தாங்கினார். மாநாட்டு குழுவின் துணைத் தலைவரான முதலமைச்சர் விஜய் வரவேற்று பேசினார்.</p><p>மாநாட்டில் மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த்மோகன், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், கேரளம் முதல் -மந்திரி சதீசன், தெலுங்கானா துணை முதல்-மந்திரி மல்லுபாட்டி விக்ரமார்கா, புதுச்சேரி ஆளுநர் கைலாஷ் நாதன், </p><p>தமிழக அமைச்சர்கள் நிர்மல்குமார், ராஜ்மோகன், தலைமை செயலாளர் சாய் குமார், கூடுதல் தலைமை செயலாளர் மணிவாசன் மற்றும் அனைத்து மாநிலங்களில் இருந்தும் தலா 2 அமைச்சர்கள், தலைமை செயலாளர்கள், உள்துறை செயலாளர்கள் பங்கேற்றார்கள்.</p><p>இந்த <a href="https://www.maalaimalar.com/topic/தென்-மாநில-முதல்-மந்திரிகள்">மாநாட்டில்</a> பங்கேற்ற கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மேகதாது அணை குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது:-</p><p>* மேகதாதுவில் அணை கட்டி நீரை சேமிப்பதால் தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் பயனடையும். </p><p>* மேகதாது அணை கட்டப்படாததால் உபரிநீர் வீணாக கடலில் கலக்கிறது. </p><p>* நீரை சேமித்து வைப்பதால் வறட்சி உள்ளிட்ட நெருக்கடியான காலங்களில் பயன்படுத்த முடியும்</p><p>* ஆந்திரா எதிர்ப்பால் கிருஷ்ணா நீரை கர்நாடகா முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை.</p><p>* கிருஷ்ணா நதி நீர் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடந்து வருகிறது. </p><p>* நதி நீர் பங்கீடு என்ற நிலையில் இருந்து நதிநீர் ஒத்துழைப்பு என்ற நிலைக்கு நகர வேண்டிய நேரம்.</p><p>* தண்ணீர் நம்மை ஒன்று சேர்க்க வேண்டும்; பிரித்து விடக்கூடாது.</p><p>* மாநிலங்களுக்கு நியாயமான வரிப்பங்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை கர்நாடகா முன் வைத்தது என்றார். </p><p>அவரை தொடர்ந்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன் பேசுகையில், </p><p>*  புதுச்சேரியின் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்ய அண்டை மாநிலங்களின் ஒத்துழைப்பு அவசியம்.</p><p>* கோதாவரி இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டத்திலேயே குடிநீர், பாசனத்திற்காக கூடுதலாக நீர் திறக்க வேண்டும். </p><p>* குடிநீர் தேவைக்காக சாத்தனூர் அணையில் இருந்து புதுச்சேரிக்கு பிரத்யேக குழாய் அமைக்க வேண்டும். </p><p>* சங்கராபரணி- தென்பெண்ணையாறை இணைக்க நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தினார். </p><h2><strong>விவாதம்</strong> </h2><p>அதை தொடர்ந்து தென் மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு, பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் மாநிலங்கள் இணைந்து எடுக்க வேண்டிய முடிவுகள், போதைப் பொருட்களை கட்டுப்படுத்துவது, ஆந்திர பிரதேச மறுசீரமைப்பு சட்டம் தொடர்புடைய விவகாரங்கள், நதிநீர் பங்கீட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை களைவது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விரைந்து விசாரிக்க அமைக்கப்பட்ட விரைவு நீதிமன்றங்கள், பெண்கள் பாதுகாப்பு, பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைவாக புலனாய்வு செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவது, பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டம் உள்ளிட்ட பொதுவான மாநில விவகாரங்கள் பற்றியும் செயலாக்கத்தில் ஏற்படும் சிக்கல்கள் அவற்றை தீர்ப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் விரிவாக விவாதிக்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>இலங்கைக்கு எதிராக வெற்றி.. இந்தியாவின் நம்பிக்கை அதிகரிப்பு- கே.எல்.ராகுல்</title><link>https://www.maalaimalar.com/sports/india-confidence-boost-after-win-over-sri-lanka-kl-rahul</link><comments>https://www.maalaimalar.com/sports/india-confidence-boost-after-win-over-sri-lanka-kl-rahul#comments</comments><guid isPermaLink="false">47a8a15c-c95c-41cf-9b82-0071abd7da7b</guid><pubDate>Thu, 20 Aug 2026 06:45:56 +0000</pubDate><atom:updated>2026-08-20T06:45:56.703Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>KL Rahul,கேஎல் ராகுல்,முதல் டெஸ்ட் போட்டி,INDvsSL,first test match,இந்தியா vs இலங்கை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/25d4d7hk/KL-Rahul.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ KL Rahul]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/25d4d7hk/KL-Rahul.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இலங்கைக்கு எதிராக காலேயில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 165 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.</p><p>இந்த வெற்றி மூலம் 2 டெஸ்ட் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 23-ந் தேதி கொழும் பில் தொடங்குகிறது. </p><h2>நம்பிக்கை அதிகரிப்பு</h2><p>இந்த நிலையில் முதல் டெஸ்டில் பெற்ற வெற்றியால் இந்தியாவின் நம்பிக்கை அதிகரித்துள்ளதாக அணியின் துணை கேப்டன் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக அவர் கூறியதாவது:-</p><p>இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் வெற்றி பெற்றதால்  மட்டும் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று கூற மாட்டேன். ஏனெனில் ஒவ்வொரு டெஸ்ட் வெற்றியும் மிகவும் சிறப்பானது.  நீண்ட இடைவெளிக்குப் பிறகு இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடுகிறோம். பல வீரர்கள் இதற்கு முன்பு  இங்கு ஆடியது  கிடையாது.</p><h2>சிறப்பான செயல்பாடு </h2><p>இந்த தொடருக்கு முன்னதாக கூறியதுபோல இந்திய அணி அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டதாக  கருதுகிறேன். இந்த  வெற்றி  மகிழ்ச்சி அளிக்கிறது. </p><p>முதல்  டெஸ்டில் வெற்றி பெற்ற இதே நம்பிக்கையுடன்   2-வது போட்டியில் விளையாட உள்ளோம். அடுத்த ஆண்டு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மிகப்பெரிய தொடரில் விளையாட இருக்கிறோம் . </p><p>எனவே  சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான சூழலை புரிந்து கொண்டு  பேட்ஸ்மேன் கள் சிறப்பாக ஆட வேண்டியுள்ளது. அதில்  நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். </p><p>இந்த வெற்றி சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடு களங்களிலும் எங்களால் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளது.</p><p>இவ்வாறு கே.எல். ராகுல் கூறியுள்ளார். </p><p>அவர் இந்த டெஸ்டில் முதல் இன்னிங்சில் 82 ரன்னும், 2-வது இன்னிங்சில் 35 ரன்னும் எடுத்தார்.</p>]]></content:encoded></item><item><title>மகன்கள் கைவிட்டனர்: சிறுநீரகம் தானம் செய்த தாயை பராமரிக்கும் மகளுக்கு அரசு வேலை- ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/sons-abandoned-mother-daughter-who-donated-kidney-gets-government-job-jharkhand-high-court</link><comments>https://www.maalaimalar.com/news/national/sons-abandoned-mother-daughter-who-donated-kidney-gets-government-job-jharkhand-high-court#comments</comments><guid isPermaLink="false">5ee7cab7-0f8f-4089-86f0-32845a176bbd</guid><pubDate>Thu, 20 Aug 2026 06:44:57 +0000</pubDate><atom:updated>2026-08-20T06:44:57.727Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>JharkhandHighCourt,WomenRights,GenderEquality,ஜார்க்கண்ட்உயர்நீதிமன்றம்,நீதிமன்றதீர்ப்பு,மகளிர்உரிமை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/ssurthj9/kidney.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jharkhand HighCourt ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/ssurthj9/kidney.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் நிலக்கரிச் சுரங்கத்தில் உதவியாளராகப் பணியாற்றி வந்த அர்ஜுன் பிரசாத், கடந்த 2013-ஆம் ஆண்டு நவம்பர் 25 அன்று பணியில் இருக்கும்போதே உயிரிழந்தார். அவருக்கு மனைவி, இரு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அர்ஜுன் பிரசாத் உயிருடன் இருந்தபோது, அவருக்கு ஏற்பட்ட சிறுநீரகச் செயலிழப்பிற்காக அவரது மனைவியே தனது ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்கி உயிரைக் காப்பாற்றினார்.</p><p>தந்தையின் மறைவுக்குப் பின், குடும்பத்தைப் பராமரிக்க அவரது மனைவிக்கு வேலை செய்யக்கூடிய உடல் தகுதி இல்லை. வயது முதிர்வு மற்றும் <a href="https://www.maalaimalar.com/news/national/telangana-school-murder-two-class-10-students-stab-principal-roopa-reddy-27-times-for-cash">சிறுநீரக தான</a> அறுவை சிகிச்சை காரணங்களால் அவரால் கடினப் பணிகளைச் செய்ய இயலவில்லை. இதனிடையே, அவரது இரு மகன்களும் தாயைப் பராமரிக்க மறுத்துவிட்டுத் தனித்தனியாகச் சென்றுவிட்டனர்.</p><h2>மக<strong>ளின் தியா</strong>கம் </h2><p>தாயையும் தனது குழந்தைகளையும் காப்பாற்றும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட திருமணமான மகள், தனது கணவரின் மிகக் குறைந்த வருமானத்தை வைத்துக் கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தார். இதனால், தந்தையின் மறைவுக்குப் பின் காலியாக உள்ள பணியிடத்தில் கருணை அடிப்படையில் தன் மகளுக்கு வேலை வழங்குமாறு தாய் நிலக்கரிச் சுரங்க நிர்வாகத்திடம் மனு அளித்தார்.</p><p>ஆனால், 2017-ஆம் ஆண்டு நிலக்கரிச் சுரங்க பிராவிடன்ட் பண்ட் அமைப்பு, "மகள் திருமணமானவர்" என்ற ஒரே காரணத்தைக் கூறி அவரது விண்ணப்பத்தை நிராகரித்தது. இதை எதிர்த்து ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி மீண்டும் அளிக்கப்பட்ட மனுவையும் 2024 பிப்ரவரியில் நிர்வாகம் மீண்டும் நிராகரித்தது.</p><h2>திருமண நிலை <strong>மட்டும் உரி</strong>மையைப் பறிக்காது</h2><p>இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தீபக் ரோஷன் உத்தரவில், ஒரு பெண் திருமணமானவர் என்பதால் மட்டுமே தந்தையைச் சார்ந்திருக்கவில்லை என்று முடிவு செய்ய முடியாது என்று தெளிவுபடுத்தினார். கணவருக்குச் சொற்ப வருமானம் இருப்பதனால், அப்பெண் தன் தந்தையின் நிதி ஆதரவைச் சார்ந்திருக்கவில்லை என்று தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது.</p><p>மகன்கள் தாயைக் கைவிட்ட நிலையில், சிறுநீரக தானம் அளித்த முதிய தாயையும் குடும்பத்தையும் காப்பாற்றத் தயாராக இருக்கும் மகளுக்கு முழு தகுதியும் உள்ளது. திருமண நிலை மட்டுமே கருணை அடிப்படையிலான வேலைவாய்ப்பு உரிமையை ரத்து செய்ய முடியாது. எனவே, எட்டு வாரங்களுக்குள் மறைந்த ஊழியரின் மகளுக்குப் பொருத்தமான வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என நிலக்கரிச் சுரங்க அமைப்பிற்கு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரேஷன் அரிசி கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும் என்பதில் முதலமைச்சர் விஜய் உறுதி- அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</title><link>https://www.maalaimalar.com/news/topnews/vijay-is-firm-on-the-stance-that-quality-rice-must-be-supplied-at-ration-shops-minister-aadav-arjuna</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/vijay-is-firm-on-the-stance-that-quality-rice-must-be-supplied-at-ration-shops-minister-aadav-arjuna#comments</comments><guid isPermaLink="false">51ad0ffb-f32b-46b5-96f5-c494bc1e3ee4</guid><pubDate>Thu, 20 Aug 2026 06:39:05 +0000</pubDate><atom:updated>2026-08-20T06:39:05.686Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ரேஷன் அரிசி,தமிழக சட்டசபை |,தமிழக சட்டசபை கூட்டத்தொடர்,TNAssembly,அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,TNAssemblySession,RationRice,FoodDepartment,AdhavArjuna</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/jx21fy23/aadhav.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Adhav Arjuna]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/jx21fy23/aadhav.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் இன்று கூட்டுறவு மற்றும் உணவு நுகர்வோர் பாதுகாப்புத் துறை மீதான மானியக் கோரிக்கைகள் குறித்த விவாதம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் வெங்கடரமணன், காந்திராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினர். விவாதத்தின் போது, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரம் மற்றும் விநியோகம் தொடர்பாக ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே விவாதம் ஏற்பட்டது.</p><h2>ரேஷன் கடை<strong>களில் சன்ன ரக அரிசி வழங்கிட</strong> நடவடிக்கை</h2><p>சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-mla-sowmya-anbumani-slams-nlc-as-heartless-company">ஆதவ் அர்ஜுனா</a>, பொதுமக்கள் அனைவருக்கும் ரேஷன் கடைகளில் உயர்தரமான அரிசி மட்டுமே கிடைக்க வேண்டும் என்பதில் முதலமைச்சர் விஜய் மிக உறுதியாக உள்ளதாகத் தெரிவித்தார். ரேஷன் அரிசி பெரும் பகுதி இட்லி மாவு தயாரிக்க மட்டுமே பயன்படும் நிலையைக் குறிப்பிட்டு, மக்கள் நேரடியாகச் சமைத்து உண்ணக்கூடிய சன்ன ரக அரிசியை வழங்கிடவே சன்ன ரக நெல் கொள்முதலுக்கான ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறினார்.</p><h2>அமைச்சர் <strong>ஆதவ் அர்ஜுனாவின்</strong> விளக்கம்</h2><p>விவாதத்தின் போது உரையாற்றிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "நாம் சிறுவயதில் இருந்தபோது ரேஷன் கடைகளில் நிறம் மாறிய அரிசியே கிடைத்தது. நம் சட்டமன்றத்தில் இருக்கும் பெரும்பான்மையானோர் ரேஷன் அரிசியை சமைத்து உண்கிறோமா? மனசாட்சிப்படி பேச வேண்டும். 90 சதவீத மக்கள் ரேஷன் அரிசியை நேரடியாகச் சமைப்பதில்லை.</p><p>இந்நிலையை மாற்றவே, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றுச் சமைக்க உகந்த சன்ன ரக நெல்லுக்கு ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டார். நெல் பயிரிட்டு சாப்பிடும் அண்ணன் கே.என்.நேரு, ரேஷன் அரிசி சாப்பிடுவதாகவும் பரமஏழை போன்றும் பேசுகிறார். நான் சிறுவயதில் இருக்கும்போது ரேஷன் அரிசியை தான் சாப்பிட்டேன், அப்போது பெரிய அளவில் நிறம் மாறிய அரிசி தான் கிடைக்கும்.</p><p>மற்ற ஆட்சியை விட்டுவிடுங்கள், நமது ஆட்சியில் ரேஷன் கடையில் சன்னரக அரிசியை கொடுங்கள் என முதல்வர் கூறினார். எனது அம்மாவும் அக்காவும் ரேஷன் கடையில் வாங்கி சாப்பிடும் அரிசி தரமாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் நினைத்தார். ரேஷன் கடைகளில் வாங்கும் அரிசியை மக்கள் சாப்பிடும் நிலையை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேஷன் கடைகளில் வழங்க தரமான சன்னரக அரிசி தேவை, அதனால் தான் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காகத்தான் சன்னரக அரிசிக்கான ஊக்கத்தொகை முதல்வர் அதிகரித்து அறிவித்துள்ளார்.</p><p>மேலும், இலவச மருத்துவமனை, இலவச கல்விமுறையை எந்த எம்எல்ஏவும் எந்த அமைச்சரும் பயன்படுத்துவதில்லை. எந்த அமைச்சருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால் அரசு மருத்துவமனை செல்வாரா? எம்எல்ஏவுக்கே உடல்நிலை சரியில்லை என்றால் கூட  சிங்கப்பூர் செல்கின்றனர்.</p><p>இலவசங்கள் என்ற வார்த்தையே தவறு, மக்கள் வரிப்பணத்தில் நடத்தும் அரசு நிலையங்களை அனைவரும் பயன்படுத்தும் நிலைவர வேண்டும். இவ்வாறாக சட்டப்பேரவையில் உணவுத் துறை தொடர்பான மானியக் கோரிக்கை விவாதத்தில் ரேஷன் அரிசி தரம் குறித்து காரசாரமாக விவாதிக்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை: இலங்கைக்கு எதிரான வெற்றியைத் தொடர்ந்து இந்திய அணி முன்னேற்றம்</title><link>https://www.maalaimalar.com/sports/india-climb-wtc-table-after-big-win-over-sri-lanka</link><comments>https://www.maalaimalar.com/sports/india-climb-wtc-table-after-big-win-over-sri-lanka#comments</comments><guid isPermaLink="false">4a260e2d-7c49-4afb-8d2f-8c542eefe391</guid><pubDate>Thu, 20 Aug 2026 06:29:24 +0000</pubDate><atom:updated>2026-08-20T06:29:24.849Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இலங்கை,இந்திய அணி,World Test Championship,உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்,Indian team</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/peqs18cq/ICC.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ICC World Test Champioship]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/peqs18cq/ICC.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 165 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.</p><p>இந்த வெற்றி மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் புள்ளிகளில் முன்னேற்றம் அடைந்துள்ளது. 48.15 சதவீத புள்ளியில் இருந்து 53.33ஆக அதிகரித்துள்ளது. ஆனால் இந்திய அணி அதே 5-வது இடத்தில் உள்ளது.</p><p>ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வங்காள தேசம் கடந்த வாரம் பெற்ற வெற்றியால் அந்த அணி தொடர்ந்து 4-வது இடத்தில் உள்ளது. வங்காள தேசம் 66.67 சதவீத புள்ளிகள் பெற்றுள்ளது.</p><p>ஆஸ்திரேலியா 77.78 சதவீத புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா 75 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், நியூசிலாந்து 72.22 சதவீத புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளன.</p>]]></content:encoded></item><item><title>ஈரான் மீதும் ஈரானுக்கு உதவும் நாடுகள் மீதும் பொருளாதார போரை அறிவித்த டிரம்ப்</title><link>https://www.maalaimalar.com/news/world/us-iran-economic-war-trump-announces-unprecedented-sanctions-and-warns-allied-nations</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-iran-economic-war-trump-announces-unprecedented-sanctions-and-warns-allied-nations#comments</comments><guid isPermaLink="false">91ab4687-7342-4949-8bbd-72993e8defd2</guid><pubDate>Thu, 20 Aug 2026 06:26:43 +0000</pubDate><atom:updated>2026-08-20T06:26:43.124Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>trump,டிரம்ப்,பொருளாதார தடை,Economic sanctions,Iran War,ஈரான் போர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/rk17sx6q/tn-23.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டிரம்ப்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிரம்ப்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/rk17sx6q/tn-23.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடுவதை எதிர்த்து இஸ்ரேலுடன் இணைந்து கடந்த பிப்ரவரி கடைசியில் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலை தொடங்கியது. முதல் நாள் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனி கொல்லப்பட்டார். </p><h2></h2><h2>அழுத்தம்</h2><p>இதைத்தொடர்ந்து மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்களை ஈரான் தாக்கியது. மத்திய கிழக்கில் இருந்து எண்ணெய், எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல்களை தடுத்து நிறுத்தியது. இதனால் உலகளவில் நெருக்கடி ஏற்பட்டதால் போரை நிறுத்த வேண்டும் என்ற அழுத்தம் அமெரிக்காவுக்கு அதிகரித்தது.</p><p>இருப்பினும் ஈரான் உடன்பாட்டுக்கு வர மறுப்பதால் போர் முடிவின்றி தொடர்ந்து வருகிறது. இடையில் ஏற்பட்ட போர் நிறுத்தமும் தோல்வியில் முடிந்தது.</p><p>இரு தரப்பு இடையே மறைமுக பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.</p><p>ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஈரானுக்கு பல்வேறு அழுத்தங்களை அமெரிக்க அதிபர் டிரம்ப் கொடுத்து வருகிறார்.</p> <h2>புதிய பொருளாதார தடைகள்</h2><p>இந்த நிலையில் <a href="https://www.maalaimalar.com/news/world/iran-us-map-row-trump-sparks-middle-east-tension-by-depicting-hormuz-as-us-territory">ஈரான் </a>மீது இதுவரை இல்லாத அளவிலான கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்ள <a href="https://www.maalaimalar.com/topic/donald-trump">டிரம்ப்</a>, ஈரானுக்கு உதவும் நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.</p><p>இது தொடர்பாக அவர் தனது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்ப தாவது,</p><p>"ஈரானுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள என்னை விட சிறந்த வாய்ப்பை வேறு யாரும் வழங்கவில்லை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள ஈரான் தவறிவிட்டது.</p><p>எனவே நான் ஒரு நாட்டின் மீது இதுவரை மேற்கொள்ளப் பட்டதிலேயே மிகக் கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவிக்கிறேன்.</p> <p>இது முன்னெப்போதும் இல்லாத அளவிலான பொருளாதாரப் போர் மற்றும் தனிமைப்படுத்தலாக அமையும். ஈரானின் கடற்படை செயலிழந்துவிட்டது. விமானப்படை அழிக்கப்பட்டுவிட்டது. </p><p>ராணுவத் தொழிற்சாலைகள் இடிபாடுகளாகிவிட்டன. அவர்களின் நாணயம் மதிப்பற்றதாகிவிட்டது. அந்த நாடு மிக மோசமான நிலையில் ஒரு மெல்லிய நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கிறது.</p> <p>ஈரானுக்குத் தேவையான எந்தவொரு வாழ்வாதார உதவியையும் வழங்க தங்கள் நிதி நிறுவனங்கள், வணிகங்கள், விமான நிலையங்கள் அல்லது அரசு அமைப்புகளை அனுமதிக்கும் எந்தவொரு நாடும், மிகப்பெரிய பொருளாதார விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதை நான் அறிவிக்கிறேன்.</p><p>எண்ணை கடத்தல், பணப்பரிமாற்றங்கள், நாணயப் பரிமாற்ற நிலையங்கள், கப்பல் பதிவு சேவைகள், பினாமி நிறுவனங்கள் என அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.</p><p>இதைச் செய்பவர்கள் யார் என்பது உங்களுக்கே தெரியும். இது பொருளாதார ரீதியாக ஒரு தீர்க்கமான மற்றும் மிக முக்கியமான நடவடிக்கை நாளாக அமையும்.</p> <p>ஈரானின் அச்சுறுத்தலை முறியடிக்கவும் அவர்களைத் தனிமைப்படுத்தவும் அமெரிக்காவுடன் நட்பு நாடுகள் அனைத்தும் ஒன்றி ணைந்து நிற்க வேண்டும்.</p><p>அவர்கள்(ஈரான்) இப்போது வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளனர். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைகள் அவர்களை முடக்குவதுடன் அவர்களின் திறனையும் அழித்துவிடும். ஈரானிடம் ஒருபோதும் அணு ஆயுதம் இருக்காது" எனத் தெரிவித்தார்.</p>  ]]></content:encoded></item><item><title>சிவகாசி பட்டாசு தொழிலாளர் விவகாரத்தில் அரசியல் புகுத்தப்படுகிறது: சட்டசபையில் அமைச்சர் கீர்த்தனா விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D#comments</comments><guid isPermaLink="false">fd7453fb-cca6-4c49-b1b8-fac01ca70dbc</guid><pubDate>Thu, 20 Aug 2026 06:17:57 +0000</pubDate><atom:updated>2026-08-20T06:17:57.987Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தங்கம் தென்னரசு,தமிழக சட்டசபை,Thangam Thennarasu,TN assembly,Minister Keerthana,அமைச்சர் கீர்த்தனா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/ctu7rkd0/keerthana.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தங்கம் தென்னரசு- அமைச்சர் கீர்த்தனா]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம் தென்னரசு- அமைச்சர் கீர்த்தனா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/ctu7rkd0/keerthana.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அமைச்சர் கீர்த்தனா கூறுகையில், பிரச்சனையை தீர்த்து வைத்த பிறகும் எதிர்க்கட்சியினர்  கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். இதில் அரசியல் புகுத்தப்படுகிறது என்று கூறினார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழக சட்டசபையில்</a> கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய முன்னாள் அமைச்சர்  தங்கம் தென்னரசு, விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இயங்கி வரும் பட்டாசு ஆலைகளில் திடீர் ஆய்வு எனும் பெயரில் நடைபெறும் இடையூறுகளால் அங்குள்ள பட்டாசு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறினார்.</p><p>இதற்கு பதிலளித்து பேசிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, 6 மாதமாக ஆய்வு நடந்து வருவதாகவும், 1000-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளது என்றும், சிவகாசி மாவட்டத்தில் தொடர்ச்சியாக நான்கு விபத்துக்கள் ஏற்பட்ட நிலையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக கூறினார்.</p><p>மேலும், 177 பட்டாசு ஆலை விதிமீறல் கண்டறிந்து உடனடியாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறியவர் 13-ஆம் தேதிக்கு முன்பே பிரச்சனை சரி செய்யப்பட்டுள்ளது என்றும் தமிழக வெற்றி கழகம் ஆட்சியில் பட்டாசு தொழிலாளர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதோடு மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள் அங்கே ஏற்பட்ட உயிரிழப்புக்கு நிவாரணமாக  நம் தலைவர் 4 லட்சம் கொடுத்து துணை நின்றவர் என தெரிவித்தார்.</p><p>மேலும் அவர் கூறுகையில் பிரச்சனையை தீர்த்து வைத்த பிறகும் எதிர்க்கட்சியினர்  கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். இதில் அரசியல் புகுத்தப்படுகிறது என்று கூறினார். இதற்கு தங்கம் தென்னரசு போராட்டத்திற்கான காரணத்தை மறுபடியும் விளக்கினார்.</p>]]></content:encoded></item><item><title>மனசாட்சியே இல்லாத நிறுவனம் என்எல்சி- சவுமியா அன்புமணி குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-mla-sowmya-anbumani-slams-nlc-as-heartless-company</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-mla-sowmya-anbumani-slams-nlc-as-heartless-company#comments</comments><guid isPermaLink="false">9d3bd43a-acbe-4ecf-991a-2d5b920f0ea1</guid><pubDate>Thu, 20 Aug 2026 06:08:10 +0000</pubDate><atom:updated>2026-08-20T06:08:10.603Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,சவுமியா அன்புமணி,NLC,என்எல்சி,TN assembly,Sowmya Anbumani,Minister Keerthana,அமைச்சர் கீர்த்தனா</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/3pox0jl9/Sowmya.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MLA Sowmya Anbumani- Minister Keerthana]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/3pox0jl9/Sowmya.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் விவாதத்தின்போது பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி,"தமிழ்நாட்டில் மனசாட்சியே இல்லாத நிறுவனம் என்எல்சி தான்" என்று கூறினார். </p><h2>பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி</h2><p>தமிழ்நாட்டில் மனசாட்சியே இல்லாத நிறுவனம் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF" rel="nofollow">என்எல்சி</a> தான். அங்கிருந்த அனைத்து விவசாயிகளையும் ஒரே இரவில் தூக்கிப்போட்டுவிட்டு தண்ணீரையும் உறிஞ்சிவிட்டு அதன் வளத்தையும் கெடுத்துவிட்டார்கள்.</p><p>நிலம் கொடுத்த விவசாயிகள் பிள்ளைகளுக்குக்கூட பணி வழங்கவில்லை.</p><p>நிலம் கொடுத்த விவசாயிகளின் பிள்ளைகளை பணியில் சேர்த்துக்கொள்ள எதற்கு என்எல்சி தேர்வு வைக்க வேண்டும். மண்ணின் மைந்தர்கள் அவர்கள். </p><p>என்எல்சி கொடுக்கிற தகவல்கள் எல்லாமே உண்மைக்கு புறம்பான தகவல். விவசாயிகளுக்காக அவர்கள் எதுவும் செய்ததில்லை.</p><h2>அமைச்சர் கீர்த்தனா</h2><p>என்எல்சி நிறுவனம் குறித்து உண்மையாகவே பல்வேறு கோரிக்கைகளை வைக்கின்றனர். சிஎஸ்ஆர் நிதியில் இருந்து ஒதுக்காமல் இதுவரை நிறைய பிரச்சனைகளை செய்திருக்கலாம். அதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு இருக்கலாம். </p><p>ஆனால், விவசாயிகளுக்கு எப்போதும் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95" rel="nofollow">தவெக</a> அரசு துணை நிற்கும். என்எல்சி விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். </p><p>ஆட்சி வந்து 3 மாதங்கள் தான் ஆகியிருக்கிறது. கமிட்டி அமைத்திருக்கிறோம். முத்தரப்பு பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. இதுதொடர்பாக தகவல்கள் விரைவில் வழங்கப்படும்.</p><p>கண்டிப்பாக நாங்கள் யாருக்கு எதிராகவும் நடந்துக்கொள்ள மாட்டோம். விவசாயிகளுக்கு கண்டிப்பாக ஆதரவாக இருப்போம். மக்களுக்கும் ஆதரவாக இருப்போம். </p><p>என்எல்சி நிறுவனம் அப்படி இருப்பது உண்மையானால் தவெக அரசு நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: இலவச தரிசனத்திற்கு 20 மணி நேரம் காத்திருப்பு!</title><link>https://www.maalaimalar.com/spirituality/heavy-devotees-crowded-in-tirupati-3</link><comments>https://www.maalaimalar.com/spirituality/heavy-devotees-crowded-in-tirupati-3#comments</comments><guid isPermaLink="false">eb510497-9f9d-426a-887f-13aa860a168c</guid><pubDate>Thu, 20 Aug 2026 06:07:19 +0000</pubDate><atom:updated>2026-08-20T06:07:19.345Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>devotees,Tirupati temple,பக்தர்கள் கூட்டம்,திருப்பதி கோவில்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/6ishojgl/tirupati.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ திருப்பதி கோவில்]]></media:title><media:description type="html"><![CDATA[ திருப்பதி கோவில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/6ishojgl/tirupati.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>திருப்பதி மலையில் தற்போது கடும் வெயில் கொளுத்தி வருவதால், நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் முதியவர்கள், பெண்கள் மற்றும் சிறு குழந்தைகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/திருப்பதி-கோவில்">திருப்பதி ஏழுமலையான் கோவிலில்</a> இந்த மாத தொடக்கத்தில் இருந்து தரிசனத்திற்கு பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகிறது. வைகுந்தம் அறைகள் அனைத்தும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. தரிசன வரிசையில் இருந்து 3 கிலோமீட்டர் தூரம் உள்ள ஷீலா தோரணம் வரை பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர். </p><h2><strong>20 மணி நேரம் காத்திருப்பு</strong></h2><p>திருப்பதியில் நேற்று 76, 464 பேர் தரிசனம் செய்தனர். 36,913 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.94 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 4.27 லட்சம் லட்டு விற்பனையானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.</p><p>திருப்பதி மலையில் தற்போது கடும் வெயில் கொளுத்தி வருவதால், நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் முதியவர்கள், பெண்கள் மற்றும் சிறு குழந்தைகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.</p><p>பக்தர்களின் சிரமத்தைக் குறைக்க, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தன்னார்வலர்கள் மூலமாக தொடர்ந்து குடிநீர், டீ, காபி, பால் மற்றும் அன்னப் பிரசாதங்கள் தடையின்றி வழங்கப்பட்டு வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>26 வயதில் இத்தனை கின்னஸ் சாதனைகளா!.. கால்பந்து உலகின் Goal machine - யார் இந்த  எர்லிங் ஹாலண்ட்?</title><link>https://www.maalaimalar.com/sports/football/football-star-haaland-sets-4-guinness-records-premier-league-and-uefa-goal-scoring-feats</link><comments>https://www.maalaimalar.com/sports/football/football-star-haaland-sets-4-guinness-records-premier-league-and-uefa-goal-scoring-feats#comments</comments><guid isPermaLink="false">63070390-ca4e-4ebd-a024-2118245b0b99</guid><pubDate>Thu, 20 Aug 2026 06:00:47 +0000</pubDate><atom:updated>2026-08-20T06:00:47.001Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>FootBall,Footballer,Guinness World Record,கால்பந்து வீரர்,கின்னஸ் உலக சாதனை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/wd2kouco/tn-22.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ எர்லிங் ஹாலண்ட்]]></media:title><media:description type="html"><![CDATA[ எர்லிங் ஹாலண்ட்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/wd2kouco/tn-22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கால்பந்து (Football)</category><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கால்பந்து உலகில் மெஸ்ஸி, ரோனால்டோ போன்ற ஜாம்பவான்களின் காலம் மாறி இளம் வீரர்கள் கவனம் பெறத் தொடங்கியுள்ளனர். நடந்து முடிந் <a href="https://www.maalaimalar.com/topic/fifa-world-cup">பிஃபா உலகக் கோப்பை தொடரில்</a> பல இளம் வீரர்களின் எழுச்சி ஏற்பட்டது. </p><p>இந்த் சூழலில் 26 வயதியே ஆன இளம் கால்பந்து வீரர் எர்லிங் ஹாலண்ட் உலக சாதனை புத்தகத்தில் தனக்கென தனியிடம் பிடித்துள்ளார். </p><p>மான்செஸ்டர் சிட்டி கால்பந்து அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான இவர் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய கால்பந்து போட்டிகளில் தொடர்ச்சியாக பல கோல்களை அடித்து 4 <a href="https://www.maalaimalar.com/news/national/indian-man-sets-world-record-with-29-foot-long-fingernails">கின்னஸ் </a>உலக சாதனைகளை படைத்துள்ளார். </p><h2>சாதனைகள்</h2><p>*பிரீமியர் லீக்கில் வெறும் 111 போட்டிகளில் 100 கோல்களை எட்டி சாதனை படைத்தார்.</p><p>*2022-23 ஒரே சீசனில் 36 கோல்களை அடித்ததன் மூலம் ஒரே பிரீமியர் லீக் சீசனில் அதிக கோல்கள் அடித்தவர் என்ற சாதனையை படைத்தார். </p><p>*UEFA நேஷன்ஸ் லீக் தொடரின் வரலாற்றிலேயே அதிகபட்சமாக 19 கோல்களை சேர்த்து முதலிடம் பிடித்தார்.</p> <p>*அதே UEFA தொடரில் ஆர்பி லீப்சிக் அணிக்கு எதிரான ஒரே போட்டியில் 5 கோல்களை அடித்து லியோனல் மெஸ்ஸி மற்றும் லூயிஸ் அட்ரியானோ ஆகியோரின் உலக சாதனையை சமன் செய்தார்.</p> <p>வெவ்வேறு காலகட்டத்தில் அவர் படைத்த இந்த 4 சாதனைகளுக்குமான சான்றிதழ்களை, மான்செஸ்டர் நகரில்  உள்ள எதிஹாட் மைதானத்தில் வைத்து <a href="https://kids.guinnessworldrecords.com/news/2026/8/how-many-world-records-does-legendary-footballer-erling-haaland-hold">கின்னஸ் அமைப்பு</a> அவர் வசம் வழங்கியுள்ளது.</p><h2>எர்லிங் ஹாலண்ட்</h2><p>ஜூலை 21, 2000 அன்று இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் பிறந்தார் எர்லிங் ஹாலண்ட். நார்வேயை பூர்வீகமாக கொண்ட இவரது தந்தை அல்பி ஹாலண்ட்  முன்னாள் கால்பந்து வீரர் ஆவார்.</p><p>இங்கிலாந்தின் மான்செஸ்டர் சிட்டி  அணிக்காகவும், நார்வே தேசிய அணிக்காகவும் ஹாலண்ட்விளையாடி வருகிறார். கால்பந்து உலகில் இவருக்கு "கோல் மெஷின்"  என்றும் "வைக்கிங்" என்றும் பெயருண்டு. </p> ]]></content:encoded></item><item><title>எல்லை தாண்டிய காதல்: குருவாயூர் கோவிலில் மலையாளி பெண்ணை கரம்பிடித்த ஸ்காட்லாந்து எம்பி!</title><link>https://www.maalaimalar.com/news/national/scottish-mp-ties-the-knot-with-malayali-woman-at-guruvayur-temple</link><comments>https://www.maalaimalar.com/news/national/scottish-mp-ties-the-knot-with-malayali-woman-at-guruvayur-temple#comments</comments><guid isPermaLink="false">2414fbd0-6909-4986-a93e-5de23bfc19da</guid><pubDate>Thu, 20 Aug 2026 05:39:47 +0000</pubDate><atom:updated>2026-08-20T05:39:47.580Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ScotlandMP,GuruvayurTemple,InternationalCouple,loveCrossesBorders,ஸ்காட்லாந்துஎம்பி,குருவாயூர்கோவில்,எல்லைதாண்டியகாதல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/kidjcn2q/mp.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ScotlandMP Wedding]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/kidjcn2q/mp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் மார்ட்டின் டே, கேரளாவைச் சேர்ந்த நிதிஷா (நிதிச் சந்த்) என்பவரைப் புகழ்பெற்ற குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில் இந்து பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.</p><h2>சந்திப்பும் கா<strong>தல் மலர்ச்</strong>சியும்</h2><p>எர்ணாகுளம் மாவட்டம் பிரவம் பகுதியை சேர்ந்த நிதிச் சந்த், 2008-ஆம் ஆண்டு மேற்படிப்புக்காக இங்கிலாந்து சென்றார். அங்கு கல்வி பயின்ற போது, விசா விதிமுறை மாற்றங்களால் ஏற்பட்ட சிக்கல்களை எதிர்த்து நாடாளுமன்றக் குழுக்கள் முன் தீவிரமாகப் போராடினார். அந்தச் சமயத்தில் தான் அன்றைய இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினரான மார்ட்டின் டேவை அவர் சந்தித்தார். ஆரம்பத்தில் நட்பாகத் தொடங்கிய இவர்களது பந்தம், 2016-ஆம் ஆண்டு காதலாக மாறியது.</p><h2>10 ஆண்டு கா<strong>ல நீண்ட காத்திருப்</strong>பு</h2><p>2016-ஆம் ஆண்டிலேயே சட்டப்பூர்வமாக இங்கிலாந்தில்<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/avadi-man-marries-transgender-woman-who-acted-in-films"> பதிவுத் திருமணம்</a> செய்து கொண்ட போதிலும், குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் சந்நிதியில் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதே நிதிச் சந்தின் நீண்ட நாள் ஆசையாக இருந்தது. ஆனால் 2018 கேரள வெள்ளப்பெருக்கு, கோவிட் பெருந்தொற்று மற்றும் குடும்பச் சூழல் காரணமாக இந்த நிகழ்வு தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது.</p><h2>குருவாயூரில் ந<strong>டைபெற்ற கோலாகல</strong> விழா</h2><p>நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, மார்ட்டின் டே கேரளா வந்தடைந்து, தனது மனைவியின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றினார். வேஷ்டி அனிந்து கேரளா பாரம்பரிய உடையில் மாப்பிள்ளையாக மார்ட்டின் டே மிளிர, நிதிச் சந்த் கசவு புடவையில் காட்சியளித்தார். இந்த திருமண விழாவில் நிதிச் சந்தின் 22 வயது மகன் வேதிக் சங்கர் உட்பட நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் கலந்துகொண்டனர்.</p><p>தற்போது நிதிச் சந்த் மேலாண்மை ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார், மார்ட்டின் டே ஸ்காட்லாந்து தேசியக் கட்சியின் (SNP) முக்கிய தலைவராக மக்கள் பணியாற்றி வருகிறார். இவர்களது திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வாழ்த்துகளைப் பெற்று வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>வகுப்பறைகளை மாற்ற நினைக்கும் முயற்சிகளை மாணவர்கள் வீழ்த்துவார்கள்- சு.வெங்கடேசன் எம்பி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/su-venkatesan-says-students-will-thwart-attempts-to-change-the-classrooms</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/su-venkatesan-says-students-will-thwart-attempts-to-change-the-classrooms#comments</comments><guid isPermaLink="false">5526a442-8313-42fe-921b-6ddb5e12d6d9</guid><pubDate>Thu, 20 Aug 2026 05:38:30 +0000</pubDate><atom:updated>2026-08-20T05:38:30.312Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Su Venkatesan,சு வெங்கடேசன்,Tamilisai Soundararajan,தமிழிசை சவுந்தரராஜன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/tq3gc3mu/suvenkatesan.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சு.வெங்கடேசன் ]]></media:title><media:description type="html"><![CDATA[ சு.வெங்கடேசன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/tq3gc3mu/suvenkatesan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அறிவியல் மனப்பான்மை கொண்ட வகுப்பறைகளை மாட்டு மூத்திரத்தின் மேன்மையை விளக்கும் மேடையாக மாற்ற நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளையும் மாணவர்கள் வீழ்த்திக் காட்டுவார்கள் என்று கூறியுள்ளார்.</strong></em> </p><p>மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் <a href="https://www.maalaimalar.com/topic/சு-வெங்கடேசன்">சு.வெங்கடேசன்</a> எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><p>மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை, போராட்டம் தேவையில்லை என்ற கரடுதட்டிப் போன பழமைவாதத்தின் குரலைச் சுதந்திரப் போராட்ட காலத்திலேயே தூக்கி குப்பையில் வீசியவர்கள் நமது மாணவர்கள். அவர்களின் அறிவார்ந்த அரசியல் பார்வையும், தீர்க்கமான போராட்டமும்தான் விடுதலைப் போராட்டத்தை மேலும் தீவிரமாக்கியது.</p><h2><strong>நாடாளுமன்றத்திற்கே வரவில்லை</strong></h2><p>மாணவர்களின் பகுத்தறிவு மற்றும் அறிவியல் மனப்பான்மையைச் சீர்குலைக்க நீங்கள் செய்யும் பட்டவர்த்தன முயற்சிதான் புதிய கல்விக் கொள்கை, நீட் உள்ளிட்ட கல்வித் துறையின் மோசடிகள் அனைத்தும். அதற்கு எதிராக இந்திய மாணவர்கள் துணிவோடு களத்தில் நிற்கிறார்கள். </p><p>பெல்லட் குண்டுகளையும், ஆணி பொறுத்திய லத்திகளையும் துணிவோடு எதிர் கொண்டு அவர்கள் களத்தில் நின்றார்கள். ஆனால், மாணவர்களைத் தாக்க உத்தரவிட்டது யார் என்ற கேள்வியை எதிர்கொள்ள முடியாமல்  உள்துறை அமைச்சர் 20 நாளாக நாடாளுமன்றத்திற்கே வரவில்லை.</p><p>இந்த உண்மையை எதிர் கொள்ள முடியாமல் வெளிப்படுவதுதான் இன்றைய கதறல்கள் எல்லாம்.</p><p>தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் நடத்திய சட்டம் ஒழுங்கு தொடர்பான கூட்டத்தின் முடிவுகளும், தமிழிசை செளந்தரராஜனின் X தள பதிவும் ஒரே திசையில் மாணவர்களையும், இடது சாரிகளையும் குற்றம் சாட்டுகிறது.</p><p>“திமாமி நக்சல்” என பிரதம் பட்டம் சூட்டிய நபர்களின் பட்டயலைத் தயார் செய்ய துவங்குகிறீர்கள்.</p><p>சங்கமாகச் செயல்படும் மாணவர் உரிமையை சங்கிகள் கூட்டத்தால் தடுத்துவிட முடியாது. </p><p>அறிவியல் மனப்பான்மை கொண்ட வகுப்பறைகளை மாட்டு மூத்திரத்தின் மேன்மையை விளக்கும் மேடையாக மாற்ற நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளையும் மாணவர்கள் வீழ்த்திக் காட்டுவார்கள் என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை, போராட்டம் தேவையில்லை என்ற கரடுதட்டிப் போன பழமைவாதத்தின் குரலைச் சுதந்திரப் போராட்ட காலத்திலேயே தூக்கி குப்பையில் வீசியவர்கள் நமது மாணவர்கள். அவர்களின் அறிவார்ந்த அரசியல் பார்வையும், தீர்க்கமான போராட்டமும்தான் விடுதலைப் போராட்டத்தை மேலும்… <a href="https://t.co/78oOJiuqAS">https://t.co/78oOJiuqAS</a></p>&mdash; Su Venkatesan MP (@SuVe4Madurai) <a href="https://x.com/SuVe4Madurai/status/2090290445138198799?ref_src=twsrc%5Etfw">August 20, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>VIDEO: தொடங்கியது தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாடு: அருகருகே அமர்ந்த முதலமைச்சர் விஜய்- டி.கே.சிவக்குமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/south-state-chief-ministers-conference-started</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/south-state-chief-ministers-conference-started#comments</comments><guid isPermaLink="false">cb36fd62-7fd2-4e70-beee-fb6ee0c8232d</guid><pubDate>Thu, 20 Aug 2026 05:29:38 +0000</pubDate><atom:updated>2026-08-20T05:29:38.173Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,அமித்ஷா,Amitshah,தென்மாநில முதல்-மந்திரிகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/qh63ifkn/vijay.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நாடகா முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார்]]></media:title><media:description type="html"><![CDATA[ மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நாடகா முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/qh63ifkn/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2><strong>மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் 31-வது தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாடு தொடங்கியது.</strong> </h2><p>சென்னை அடுத்த கோவளத்தில் உள்ள ஃபிஷர்மேன்ஸ் கோவ் ஹோட்டலில் முதல்-மந்திரிகள் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-appointed-as-vice-chairman-of-the-southern-zonal-council">மாநாடு</a> தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் தமிழக முதலமைச்சர் விஜய், ஆந்திரா முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, கர்நாடகா முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், கேரள முதல்-மந்திரி சதீசன் உள்ளிட்டோரும் அரசு அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Chengalpattu, Tamil Nadu | Union Home Minister Amit Shah chairs the 31st Meeting of the Southern Zonal Council, which comprises the states of Andhra Pradesh, Karnataka, Keralam, Tamil Nadu and Telangana, and the Union Territories of Puducherry, Andaman and Nicobar… <a href="https://t.co/UFta3U3bAo">pic.twitter.com/UFta3U3bAo</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2090308839333879956?ref_src=twsrc%5Etfw">August 20, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>மேலும், தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி பங்கேற்காத நிலையில் துணை முதல்-மந்திரி மல்லுப்பட்டி விக்ரமர்கா பங்கேற்றுள்ளார். புதுச்சேரி சார்பில் துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உரையாற்றுவார் என்பதால் முதலமைச்சர் ரங்கசாமி இந்த மாநாட்டை புறக்கணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. </p><p>தென்மாநில முதல்-மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்க துணை நிலை ஆளுநர், முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் அந்தமான், லட்சத்தீவுகள் ஆகிய பகுதிகளை சேர்ந்த பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர். </p><p>இந்த மாநாட்டில் முதலமைச்சர் விஜய், கர்நாடகா முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் அருகருகே அமர்ந்துள்ளனர். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Chengalpattu, Tamil Nadu | Union Home Minister Amit Shah chairs the 31st Meeting of the Southern Zonal Council <a href="https://t.co/uPteMKrIRk">pic.twitter.com/uPteMKrIRk</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2090306978988142664?ref_src=twsrc%5Etfw">August 20, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure> <p>தென்மாநிலங்களுக்கு இடையேயயான உறவை சுமூகமாக பேணும் வகையில் நடத்தப்படும் இந்த மாநாட்டில் எல்லைப் பிரச்சனை, பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீடுகள், தொகுதி மறுவரையறை, காவிரி நீர் விவகாரம் ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. </p><p>தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாடு தொடங்கியதும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் விஜய் பொன்னாடை மற்றும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Chengalpattu, Tamil Nadu | Union Home Minister Amit Shah chairs the 31st Meeting of the Southern Zonal Council<br><br>The Union Home Minister was felicitated by Tamil Nadu CM Vijay at the event.<br><br>The Southern Zonal Council comprises the states of Andhra Pradesh, Karnataka,… <a href="https://t.co/ZbwL0VCh7N">pic.twitter.com/ZbwL0VCh7N</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2090307645609759086?ref_src=twsrc%5Etfw">August 20, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>தென்மண்டல கவுன்சிலின் துணைத் தலைவராக முதலமைச்சர் விஜய் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கவுன்சிலின் செயலாளராக தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சாய் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கவுன்சிலின் தலைவராக உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>அம்பேத்கர் அயலக கல்வி திட்டத்தில் இதுவரை நிதி தாமதமாக வழங்கப்படவில்லை- வன்னி அரசு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-minister-rebuts-claims-of-late-payments-in-ambedkar-overseas-education-plan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-minister-rebuts-claims-of-late-payments-in-ambedkar-overseas-education-plan#comments</comments><guid isPermaLink="false">079175d1-8c56-40e4-bdf2-ceea9f3c6fec</guid><pubDate>Thu, 20 Aug 2026 05:25:45 +0000</pubDate><atom:updated>2026-08-20T05:25:45.858Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,minister vanni arasu,அமைச்சர் வன்னி அரசு,அம்பேத்கர் அயலக கல்வி திட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/1814953k/vanni-arasu.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Vanni arasu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/1814953k/vanni-arasu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபை இன்று தொடங்கிய நிலையில், அம்பேத்கர் அயலக உதவி திட்டத்தின் கீழ் நிதி வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.</p><p>மலேசியாவில் பயின்று வரும் மாணவரின் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் வன்னி அரசு மறுப்பு தெரிவித்தார். மாணவருக்கு அரசு வழங்கி உள்ள நிதியை தேதி வாரியாக குறிப்பிட்டு <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81" target="_blank">வன்னி அரசு</a> பதில் அளித்தார்.</p><h2>அமைச்சர் வன்னி அரசு உரை</h2><p>அம்பேத்கர் அயலக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/officers-warns-novel-scam-targeting-parents-with-promises-of-educational-scholarships" rel="nofollow">கல்வி உதவி தொகை</a> கிடைக்கவில்லை என மலேசியாவில் பயிலும் தமிழக மாணவர் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்தாண்டு உதவித்தொகைக்கான உரிய ஆவணங்களை சமர்பிக்காமல் மாணவர் குற்றம்சாட்டி உள்ளார்.</p><p>மாணவனுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை என்பது தவறான, அரசியல் உள்நோக்கத்துடனான குற்றச்சாட்டு.</p><p>மாணவரின் குற்றச்சாட்டை ஆராயாமல் அரசியல் கட்சிகள் உள்நோக்கத்துடன் குற்றம்சாட்டுகின்றன.</p><p>இதுவரை மாணவரின் கல்வி நலனுக்காக ரூ.48 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. தவெக ஆட்சியில் அம்பேத்கர் அயலக கல்வி திட்டத்தில் ரூ.135 கோடி வழங்கப்பட்டுள்ளது.</p><p>முதலாம் ஆண்டு கல்வி கட்டணம் வழங்கப்பட்ட ரூ.31 லட்சத்திற்கு 10 மாதங்கள் கடந்தும் ஆவணங்கள் சமர்ப்பிக்கவில்லை.</p><p>மற்ற மாணவர்களுக்கு வந்துவிட்டது, தனக்கு நிலுவை தொகை வரவில்லை என்றே மாணவர் குற்றம்சாட்டி உள்ளார்.</p><h2>கோவி செழியன்</h2><p>திமுக ஆட்சியில் நிதி தரப்பட்டதை தான் அமைச்சர் தேதி வாரியாக வாசித்தார், குற்றச்சாட்டுக்கு பதில் தரவில்லை.</p><h2>அமைச்சர் வன்னி அரசு உரை</h2><p>கடந்த ஆட்சியில் தான் மாணவனுக்கு நிதி வழங்கப்பட்டது என சரியாக குறிப்பிட்டு தான் பேசி உள்ளேன்.</p><p>தான் சமூக நீதித்துறை அமைச்சரான பின்னர் தான் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.</p><p>500 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் குறைந்த நபர்களுக்கு தான் திமுக வழங்கியது. நான் துறைக்கு வந்த பின் 3 மடங்கு உயர்த்தியுள்ளேன்.</p><p>திமுக ஆட்சியில் அம்பேத்கர் அயலக கல்வி உதவி தொகைக்கு ரூ.84 கோடி ஒதுக்கீடு. தவெக ஆட்சியில் ரூ.131 கோடி ஒதுக்கீடு.</p><p>தவெக ஆட்சியில் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்த அனைவருக்கம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>வெளிநாடுகளில் படிக்கும் தமிழக மாணவர்கள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படக்கூடாது</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>27 முறை கத்திக்குத்து.. பணத்துக்காக பள்ளித் தலைமை ஆசிரியை கொலை - 10ஆம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் கைது</title><link>https://www.maalaimalar.com/news/national/telangana-school-murder-two-class-10-students-stab-principal-roopa-reddy-27-times-for-cash</link><comments>https://www.maalaimalar.com/news/national/telangana-school-murder-two-class-10-students-stab-principal-roopa-reddy-27-times-for-cash#comments</comments><guid isPermaLink="false">09010f24-841a-4067-9022-b8df904005e1</guid><pubDate>Thu, 20 Aug 2026 05:25:24 +0000</pubDate><atom:updated>2026-08-20T05:25:24.349Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Murder,கொலை,Telangana,Headmaster,தலைமையாசிரியர்,தெலுங்கானா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/6yrumy71/tn-21.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தெலுங்கானா]]></media:title><media:description type="html"><![CDATA[ தெலுங்கானா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/6yrumy71/tn-21.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தெலுங்கானாவில் பள்ளி தலைமை ஆசிரியரை மாணவர்கள் காசுக்காக கத்தியால் குத்திப் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88">படுகொலை </a>செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் அமைந்துள்ள தனியார் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">பள்ளியின் </a>தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் ரூபா ரெட்டி. </p><p>கடந்த ஆகஸ்ட் 11 அன்று அவரது வீட்டில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். </p> <h2>விசாரணை</h2><p>உடலைக் கைப்பற்றி இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் 5 தனிப்படைள் அமைத்து விசாரணையை செய்து வந்தனர்.</p><p>இந்நிலையில் இந்த கொலையை செய்தது அதே பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் இரு சிறுவர்கள் என கண்டுபிடித்துள்ளனர்.</p> <h2>சிக்கியது எப்படி?</h2><p>ரூபா ரெட்டி கொல்லப்படுவதற்கு முன்பு தனது அத்தையிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது அவர் யாரையோ பார்த்து 'பாபு' என்று அழைத்துள்ளார்.</p><p>அவர் பள்ளியில் மாணவர்களை அழைப்பதற்கு வழக்கமாகப் பயன்படுத்தும் சொல் இது என்பதை அறிந்த போலிசார், கொலை நடந்த காலகட்டத்தில் பள்ளிக்கு வராத மாணவர்கள் மீது கவனத்தைத் திருப்பினர்.</p><p>சம்பவம் நடந்து 4 நாட்களுக்குப் பிறகு பள்ளி மீண்டும் திறக்கப்பட்டபோது, பள்ளிக்கு வராத 13 மாணவர்களைப் போலிசார் கண்டறிந்து விசாரணை நடத்தினர்.</p> <p>அந்த 13 பேரில் 10ஆம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்கள் கையில் அதிக அளவில் பணத்தை வைத்துக்கொண்டு ஆடம்பரமாக செலவு செய்து வந்தது போலிசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.</p><h2>ரத்தக் கறை ரூபாய்</h2><p>போலிசார் நடத்திய சோதனையில், ஒரு சிறுவனிடமிருந்து ரத்தக் கறை படிந்த ரூ. 1.54 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.</p> <p>தடம் அறிவியல் சோதனையில் ரூபாய் நோட்டுகளில் ரூபா ரெட்டியின் ரத்தம் என்பது உறுதி செய்யப்பட்டது.</p><p>மேலுக்கும் 70 சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் அவர்களே கொலையை செய்தது உறுதியான நிலையில் அவர்களை போலீசார் கைது செய்த்தனர்.</p> <h2>காரணம்</h2><p>கைதான மாணவர்களில் ஒருவன் முன்பு பள்ளி விடுதியில் தங்கிப் படித்துள்ளான். </p><p>மதுப் பழக்கம், மோட்டார் சைக்கிள்கள் மீது மோகம் கொண்ட அவனது பையில் இருந்து கைபேசி மற்றும் பணத்தை ரூபா ரெட்டி கைப்பற்றியுள்ளார்.</p><p>அவனைக் கண்டித்ததோடு, விடுதியிலிருந்து வீட்டுக்கு அனுப்பியுள்ளார். இது அந்த மாணவனுக்கு அவர் மீது பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.</p> <p>கொலை நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு கோவா சென்று வந்த அந்த மாணவன், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கத் திட்டமிட்டுள்ளான்.</p><p>பள்ளிக் கட்டண பணம் ரூபா ரெட்டியின் வீட்டில் தான் இருக்கும் என்பதை அறிந்து, கொலை நடப்பதற்கு 5 நாட்களுக்கு முன்பு அவரது வீட்டை நோட்டம் பார்த்துள்ளான். கொலைக்கு தன் நண்பனையும் கூட்டு சேர்த்துள்ளான்.  </p><h2>கொலை</h2><p>ஆகஸ்ட் 11 அன்று, ரூபா ரெட்டி பள்ளியிலிருந்து வீடு திரும்பியதும், முகமூடி அணிந்த இரு சிறுவர்களும் சுவரேறி குதித்து வீட்டிற்குள் நுழைந்து அவரைத் தாக்கியுள்ளனர்.</p><p>தாக்குதலின் போது ஒருவனின் முகமூடி விலகியதால், ரூபா ரெட்டி அவனைக் அடையாளம் கண்டுகொண்டார்.</p> <p>மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில், அந்தச் சிறுவர்கள் ரூபா ரெட்டியை கத்தியால் 27 முறை கொடூரமாகக் குத்திக் கொலை செய்துள்ளனர்.</p><p>பின்னர் வீட்டிலிருந்த ரூ. 1.54 லட்சம் பணம், ஒரு ஐபோன் மற்றும் ரூபா ரெட்டியின் கைபேசி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தப்பியோடினர்.</p><p>கொலையாளிகள் இருவரும் சிறுவர்கள் என்பதால், போலிசார் அவர்களைச் சிறுவர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>ஆத்மநிர்பார் பாரத் புதிய உச்சம்: ரூ.3,070 கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்கள் சுதேசிமயமாக்கல்-பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/aatmanirbhar-bharat-new-milestone-rs-3070-crore-indigenisation-defence-ministry-announcement</link><comments>https://www.maalaimalar.com/news/national/aatmanirbhar-bharat-new-milestone-rs-3070-crore-indigenisation-defence-ministry-announcement#comments</comments><guid isPermaLink="false">5ef57d52-010a-439f-be9d-9b9cfab89f1c</guid><pubDate>Thu, 20 Aug 2026 05:19:08 +0000</pubDate><atom:updated>2026-08-20T05:19:08.144Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>AatmanirbharBharat,IndianDefence,இந்தியராணுவம்,IndianArmedForces,DefenceMinistry,பாதுகாப்புஅமைச்சகம்,ஆத்மநிர்பார்பாரத்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/zwmpean3/Untitled-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Indian Armed Forces]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/zwmpean3/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய பாதுகாப்புத் துறை உற்பத்தியை மேம்படுத்தவும், வெளிநாட்டு இறக்குமதியைக் குறைத்து சுயசார்பை எட்டவும் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பாதுகாப்பு உற்பத்தித் துறை 6-வது 'நேர்மறை உள்நாட்டுமயமாக்கல் பட்டியலை'  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புதிய பட்டியலில் 405 உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ உபகரணங்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் உள்நாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கு சுமார் ரூ.3,070 கோடி மதிப்பிலான வர்த்தக வாய்ப்புகள் உருவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.</p><h2>எந்தெந்த ராணு<strong>வ தளவாடங்களுக்</strong>கு இந்தத் தடை</h2><p>இந்த ஆறாவது பட்டியலில் 389 உபகரணங்கள் பொதுத்துறை பாதுகாப்பு நிறுவனங்களுக்கும், 16 உபகரணங்கள் இந்திய கடலோரக் காவல்படைக்கும் உரியவை ஆகும். போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், <a href="https://www.maalaimalar.com/news/national/us-envoy-affirms-jammu-kashmir-integral-part-of-india">போர்க்கப்பல்கள் </a>மற்றும் கனரகப் போர் வாகனங்களுக்குத் தேவையான முக்கிய உதிரிப்பாகங்கள், துணை அமைப்புகள் மற்றும் மூலப்பொருட்கள் இதில் அடங்கும்.</p><p>அட்வான்ஸ்டு லைட் ஹெலிகாப்டர், லைட் யுட்டிலிட்டி ஹெலிகாப்டர், சுகோய் Su-30MKI, தேஜஸ் லைட் காம்பாட் ஏர்கிராப்ட் மற்றும் AL-31FP இன்ஜின் உதிரிப்பாகங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. தரைப்படை வாகனங்களான T-72, T-90 போர் டாங்கிகள் மற்றும் BMP-II காலாட்படை போர் வாகனங்களின் பாகங்களும் இதில் அடங்கும்.</p><p>மேலும் கான்ஹர்-எம், இன்வார், எம்.ஆர்.எஸ்.ஏ.எம் ஏவுகணை அமைப்புகள், அதிநவீன டேங்க் எதிர்ப்பு வெடிமருந்துகள், ராடார் அமைப்புகள், சோனார் உபகரணங்கள், ஃபயர் கன்ட்ரோல் சிஸ்டம் மற்றும் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சாதனங்கள் எனப் பல அதிநவீன அமைப்புகள் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.</p><h2>ஸ்ரீஜன் தளம் மூலம் <strong>குறு, சிறு நிறுவனங்க</strong>ளுக்குப் பெரு வாய்ப்பு</h2><p>இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைத்துப் பொருட்களும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இந்தியாவில் மட்டுமே தயாரிக்கப்பட வேண்டும். தயாரிப்பு வெற்றி அடைந்த பிறகு, அவை இந்தியத் தொழில் நிறுவனங்களிடமிருந்து மட்டுமே கொள்முதல் செய்யப்படும். இதற்கான முழு விவரங்களும், காலக்கெடுவும் 'ஸ்ரீஜன்' இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் புதுமைத் தொடக்க நிறுவனங்கள் 'Make' நடைமுறைகள் மூலம் பெருமளவில் பயன்பெறும்.</p><h2>ரூ.<strong>9,000 கோடி இறக்குமதி</strong> செலவு மிச்சம்</h2><p>2020 ஆகஸ்ட் மாதம் ஸ்ரீஜன் இணையதளம் தொடங்கப்பட்டதிலிருந்து 33,000-க்கும் மேற்பட்ட ராணுவப் பொருட்கள் உள்நாட்டு உற்பத்திக்காக அறிவிக்கப்பட்டுள்ளன. இதுவரை வெளியிடப்பட்ட முதல் 5 பட்டியல்கள் மூலம் 15,700-க்கும் மேற்பட்ட பொருட்கள் வெற்றிகரமாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு, கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.9,000 கோடி மதிப்பிலான வெளிநாட்டு இறக்குமதி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. </p><p>மேலும், இந்திய நிறுவனங்களுக்கு சுமார் ரூ.10,000 கோடி மதிப்பிலான கொள்முதல் ஆர்டர்களும் வழங்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் இந்தத் தொடர் நடவடிக்கைகள் இந்திய பாதுகாப்பு உற்பத்திக் கட்டமைப்பை பலப்படுத்துவதோடு, உள்நாட்டு முதலீடு மற்றும் வேலைவாய்ப்பை பெருமளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>குடும்ப முன்னேற்றத்தை கொடுத்து செல்வ வளம் தரும் வரலட்சுமி விரதம்</title><link>https://www.maalaimalar.com/spirituality/worship/varalakshmi-vratam-worship</link><comments>https://www.maalaimalar.com/spirituality/worship/varalakshmi-vratam-worship#comments</comments><guid isPermaLink="false">d2972e7a-665f-4b98-97ea-8f99d681935d</guid><pubDate>Thu, 20 Aug 2026 05:14:18 +0000</pubDate><atom:updated>2026-08-20T05:14:18.842Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வழிபாடு,worship,வரலட்சுமி விரதம்,விரதம்,Varalakshmi Vratam,viratam</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/6iapn41a/VaralakshmiVratam.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Varalakshmi Vratam ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/6iapn41a/VaralakshmiVratam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வழிபாடு</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2><strong>வரலட்சுமி விரதம்</strong></h2><p>செல்வத்தை வாரி வழங்கக் கூடிய லட்சுமிதேவியை நினைத்து இருப்பது வரலட்சுமி விரதம்.  ஆவணி மாத பவுர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் தான் வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் பார்த்தால் வருகிற 27-ந் தேதி பவுர்ணமி திதி வருவதால் அதற்கு முந்தைய வெள்ளிக்கிழமையான நாளை வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.</p><h2><strong>பண்டிகை</strong></h2><p>மங்களத்தையும், மாங்கல்ய பலத்தையும் அளிக்கக் கூடிய இந்த விரதத்தை பெண்கள் அனுஷ்டிக்க வேண்டும். சில பண்டிகைகளையும், விரதங்களையும் கோவிலுக்கு செல்லாமல் வீட்டிலேயே கொண்டாடலாம். அந்த வகையில் பெண்களால் வீட்டிலேயே கொண்டாடப்படும் பண்டிகை வரலட்சுமி விரதம்.</p><h2><strong>பூஜை</strong></h2><p>வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்கள் வீட்டினை சுத்தம் செய்து மலர்களால் பூஜை அறையை அலங்கரிக்க வேண்டும். மகாலட்சுமியை வீட்டிற்கு அழைத்து, மங்கள பொருட்கள் சமர்பித்து, பழங்கள் மற்றும் சர்க்கரை பொங்கல் நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும். மகாலட்சுமியின் 108 திருநாமங்களை சொல்லும் லட்சுமி அஷ்டோத்திர சத நாமாவளியை சொல்லியோ அல்லது ஸ்ரீ சுக்தம் பாராயணம் செய்து வழிபடலாம்.</p><h2><strong>மங்கள பொருட்கள்</strong></h2><p>அதோடு சுமங்கலிகளை வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு குங்குமம், மங்கள பொருட்கள், தாம்பூலம் ஆகியவற்றைக் கொடுத்து, வயதில் மூத்த சுமங்கலிகள் கைகளால் நோம்பு கயிறு கட்டிக் கொண்டு, அவர்களிடம் ஆசி பெற வேண்டும்.</p><h2><strong>விளக்கு பூஜை</strong></h2><p>வரலட்சுமி பூஜை அன்று வீட்டில் லட்சுமிக்கு குங்குமம், வாசனை மலர்கள் ஆகியவற்றால் அர்ச்சனை செய்து வழிபடுவதும், விளக்கு பூஜை செய்து வழிபடுவதும் சிறப்பு. பொருளாதார சிக்கல்கள், கடன் பிரச்சனைகள் இருந்தாலும் அது நீங்கி விடும். வீட்டில் வழக்கமாக வரலட்சுமி விரதம் இருப்பவர்கள் மட்டுமின்றி, புதிதாக வரலட்சுமி விரதம் இருக்க நினைப்பவர்களும் இந்த விரதத்தத்தை மேற்கொள்ளலாம். இதனால் மகாலட்சுமியின் அருளால் வாழ்க்கையில் மாற்றம் வரும். வரலட்சுமி விரதம் என்பது மிகவும் சக்தி வாய்ந்த விரதமாகும். தன்னை வேண்டுவோருக்கு கேட்கும் வரங்களை தரும் லட்சுமி என்பதால் அவளுக்கு வரலட்சுமி என்று பெயர்.</p><h2><strong>திருமண வாழ்க்கை</strong></h2><p>குடும்ப நலன், கணவரின் ஆயுள், மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை, செல்வ வளம், சுபிட்சம், குழந்தைகள் மற்றும் கணவரின் ஆயுள், ஆரோக்கியம், அமைதி ஆகியவற்றுடன் நிறைவாக வாழ்க்கை வேண்டி பெண்கள் இந்த நாளில் விரதம் இருந்து, மகாலட்சுமியை வீட்டிற்கு அழைத்து, பூஜைகள் செய்து வழிபட்டு, மகாலட்சுமியின் அருளையும் ஆசியையும் பெறுவதற்கான நாளாகும்.</p><h2><strong>அஸ்வமேத யாகம்</strong></h2><p>இதை வரலட்சுமி நோன்பு, மாங்கல்ய நோன்பு, சுமங்கலி விரதம் என்பது உள்ளிட்ட பல பெயர்களின் மக்கள் குறிப்பிடுகிறார்கள். வரலட்சுமி விரதம் இருந்து வழிபட்டால் அஷ்டலட்சுமிகள் எனப்படும் 8 லட்சுமிகளின் அருள் கிடைக்கும். அஸ்வமேத யாகம் நடத்தியதற்கு இணையான பலன் கிடைக்கும்.</p><h2><strong>வெள்ளிக்கிழமை</strong></h2><p>இந்த நாளில் திருமணமான பெண்கள் மட்டுமின்றி, திருமணம் ஆகாத பெண்களும் நல்ல கணவர் அமைய வேண்டும் என வேண்டிக் கொண்டு நோம்புக் கயிறு கட்டிக் கொண்டு, விரதம் இருந்து மகாலட்சுமியை வழிபடுவார்கள். சில பெண்கள் உடல் பிரச்னை காரணமாக இந்த வரலட்சுமி விரதத்தை வரும் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்க முடியாவிட்டால், அடுத்து வரும் வெள்ளியன்று கடைப்பிடிக்கலாம். </p><h2><strong>குடும்ப வாழ்க்கை</strong></h2><p>அப்போதும் கடைப்பிடிக்க முடியாத சூழல் நவராத்திரி 9 நாட்களில் வரும் வெள்ளிக்கிழமை தினத்தில் இந்த விரதத்தை மேற் கொண்டால் மகாலட்சுமியின் அருள் அப்போதும் பரிபூரணமாக கிடைக்கும். சுமங்கலிகள் இந்த விரதத்தை மேற்கொள்வதால் குடும்பம் தலைத்தோங்கும். கன்னிப்பெண்கள் இந்த விரதம் இருந்து வழிபட்டால் சிறப்பான குடும்ப வாழ்க்கை அமையும்.</p>]]></content:encoded></item></channel></rss>