<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 27 Jul 2026 18:33:05 +0000</lastBuildDate><item><title>நீட் எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்ப பெற பீகார் அரசு முடிவு</title><link>https://www.maalaimalar.com/news/national/bihar-govt-to-withdraw-cases-lodged-against-protesters-over-neet-paper-leak</link><comments>https://www.maalaimalar.com/news/national/bihar-govt-to-withdraw-cases-lodged-against-protesters-over-neet-paper-leak#comments</comments><guid isPermaLink="false">92a5f44f-9a49-4f2e-a2ca-2066218e3127</guid><pubDate>Mon, 27 Jul 2026 18:06:59 +0000</pubDate><atom:updated>2026-07-27T18:06:59.978Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>பீகார்,Bihar,neet protest,வினாத்தாள் கசிவு,NEET Paper Leak,நீட் போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/a60opxu8/bihar-neet-protest.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bihar Neet Protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/a60opxu8/bihar-neet-protest.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் (NEET) <a href="https://www.maalaimalar.com/topic/paper-leaks">வினாத்தாள் கசிவு</a> விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறவும், சிறையில் உள்ளவர்களை விடுவிக்கவும் பீகார் அரசு முடிவு செய்துள்ளது.</p><p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறவும், பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுவிக்கவும் <a href="https://www.maalaimalar.com/topic/bihar">பீகார் அரசு</a> முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.</p><h2>அதிகாரப்பூர்வ அறிவிப்பு:</h2><p>மாநில உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், "ஜூலை 26-ஆம் தேதியன்று காலை 6 மணிக்கு முன்னதாக நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட அனைத்து முதல் தகவல் அறிக்கைகள் (FIR), புகார்கள் மற்றும் விளக்கம் கோரும் அறிவிப்புகள் (show-cause notices) ஆகியவை திரும்பப் பெறப்படுகிறது," என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும், இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுவிக்கப்படுவார்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.</p><h2>சி.ஜே.பி. போராட்டம்:</h2><p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை எதிர்த்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சி.ஜே.பி.) சார்பில் மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலகலை வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்தது. இந்த போராட்டம் நாடு முழுக்க பல மாநிலங்கள் வரை மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது.</p><p>அந்த வரிசையில் பீகார் மாநிலத்திலும் மாணவர்கள், மாணவர் அமைப்புகள் சார்பில் போரட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. மாநிலம் முழுக்க நடைபெற்ற போராட்டங்களில் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு, பலர் கைது செய்யப்பட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் போட்டிகள்: பளுதூக்கும் போட்டியில் பிந்த்யாராணி தேவி வெண்கலப் பதக்கம் வென்றார்!</title><link>https://www.maalaimalar.com/sports/weightlifter-bindyarani-devi-wins-bronze-medal-in-women-58kg-category</link><comments>https://www.maalaimalar.com/sports/weightlifter-bindyarani-devi-wins-bronze-medal-in-women-58kg-category#comments</comments><guid isPermaLink="false">c7beed00-d76c-4ea2-af36-1ea88e956c71</guid><pubDate>Mon, 27 Jul 2026 17:09:14 +0000</pubDate><atom:updated>2026-07-27T17:09:14.912Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காமன்வெல்த் போட்டிகள்,CWG 2026,Bindyarani Devi,பிந்த்யாராணி தேவி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/r7knna3i/Bindyarani-Devi.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bindyarani Devi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/r7knna3i/Bindyarani-Devi.png?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 <a href="https://www.maalaimalar.com/topic/cwg-2026">காமன்வெல்த் விளையாட்டு</a> போட்டிகளில், இந்தியா தனது ஆறாவது பதக்கத்தை வென்றது. </p><p>இன்று (திங்கள்கிழமை) நடைபெற்ற மகளிர் 58 கிலோ எடைப்பிரிவுப் போட்டியில் அனுபவம் வாய்ந்த இந்திய பளுதூக்கும் வீராங்கனை பிந்த்யாராணி தேவி வெண்கல பதக்கம் வென்று அசத்தினார்.</p><h2>மூன்றாவது இடம்:</h2><p>பிந்த்யாராணி 'ஸ்னாட்ச்' (snatch) பிரிவில் 87 கிலோவையும், 'கிளீன் அண்ட் ஜெர்க்' (clean and jerk) பிரிவில் 112 கிலோவையும் தூக்கி, மொத்தம் 199 கிலோ எடையை உயர்த்தினார்.</p><p>ஸ்னாட்ச் பிரிவில் 83 கிலோவுடன் தனது முயற்சியை தொடங்கிய பிந்த்யாராணி, இரண்டாவது முயற்சியில் 85 கிலோவையும், மூன்றாவது முயற்சியில் 87 கிலோவையும் வெற்றிகரமாக உயர்த்தினார்.</p><p>நைஜீரியாவின் ரஃபியாத்து ஃபோலாஷாடே மொத்தம் 229 கிலோ எடையை உயர்த்தி (இது ஒரு போட்டி சாதனையாகும்) தங்க பதக்கத்தை வென்றார். கனடாவின் ஆன் சோஃபி டாஷெரோ மொத்தம் 215 கிலோ எடையை உயர்த்தி வெள்ளி பதக்கத்தை கைப்பற்றினார்.</p><h2>ஆறாவது பதக்கம்:</h2><p>பிந்த்யாராணி ஏற்கனவே 2022-இல் பர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் வெள்ளி பதக்கம் வென்றிருந்தார். மேலும் கடந்த ஆண்டு அகமதாபாத்தில் நடைபெற்ற காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாமிடம் பிடித்திருந்தார்.</p><p>நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில், பளுதூக்குதலில் இந்தியா வென்ற ஐந்தாவது பதக்கமும், ஒட்டுமொத்தமாக ஆறாவது பதக்கமும் இதுவாகும்.</p>]]></content:encoded></item><item><title>Honda | QC3 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - 2 மணி நேரம் சார்ஜ் செய்தால் 145 கிலோமீட்டர் பயணம் செய்யலாம்</title><link>https://www.maalaimalar.com/automobilenews/bike/honda-qc3-electric-scooter-145km-range-2-hour-charge</link><comments>https://www.maalaimalar.com/automobilenews/bike/honda-qc3-electric-scooter-145km-range-2-hour-charge#comments</comments><guid isPermaLink="false">f4e6be4d-832a-4948-84f8-e0ea310c70aa</guid><pubDate>Mon, 27 Jul 2026 16:32:41 +0000</pubDate><atom:updated>2026-07-27T16:32:41.688Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Electric Scooter,Honda Scooter,Honda QC3,ஹோண்டா QC3,மின்சார ஸ்கூட்டர்,ஹோண்டா ஸ்கூட்டர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/7nbpfguu/Untitled-design-6.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Honda QC3 Electric Scooter]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/7nbpfguu/Untitled-design-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>பைக் (Automobile)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h3><strong>ஹோண்டா ஸ்கூட்டர் QC3:</strong></h3><p>ஹோண்டா ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது புதிய QC3 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. </p><p>இந்த புதிய மாடல், ஆக்டிவா இ மற்றும் QC1 ஆகியவற்றுக்குப் பிறகு இந்திய சந்தையில் மூன்றாவது எலக்ட்ரிக் ஸ்கூட்டராக அறிமுகமாகியுள்ளது.</p><h3><strong>மைலேஜ்:</strong></h3><p>ஹோண்டா QC3 ஹப்-இல் பொருத்தப்பட்ட மின்சார மோட்டாருடன் இணைக்கப்பட்ட 3 kWh பேட்டரி பேக் மூலம் இயக்கப்படுகிறது. </p><p>ஒரு முழு சார்ஜில் அதிகபட்சமாக 145 கி.மீ. தூரம் வரை பயணிக்க முடியும் என அந்நிறுவனம் கூறுகிறது.</p><p>பேட்டரியை 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 2 மணி 40 நிமிடங்கள் ஆகும். அதே சமயம் முழுமையாக சார்ஜ் செய்ய சுமார் நான்கு மணி நேரம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதன் முன்பக்க ஏப்ரனில் ஹெட்லைட் மற்றும் டர்ன் இண்டிகேட்டர்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் இதில் LED DRL-களும் உள்ளன. இது ஒரு தட்டையான ஃப்ளோர் போர்டு மற்றும் நீளமான ஒற்றை இருக்கையையும் கொண்டுள்ளது.</p><p>இந்த ஸ்கூட்டரில், ஹோண்டா ரோட்சின்க் இணைப்பு மற்றும் படிப்படியான வழிசெலுத்தலை ஆதரிக்கும் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது.</p><p>இந்த QC3 ஸ்கூட்டர் அலாய் வீல்களில் இயங்குகிறது. மேலும் இதில் டெலஸ்கோபிக் முன்பக்க ஃபோர்க்குகள், இரட்டைப் பின்பக்க ஷாக் அப்சார்பர்கள் மற்றும் முன்பக்க டிஸ்க் பிரேக் ஆகியவை இடம்பெற்றுள்ளன.</p><h3><strong>விலை மற்றும் விற்பனை:</strong></h3><p>ஹோண்டா நிறுவனம் தனது சந்தை அறிமுகத்திற்கு நெருங்கிய நேரத்தில், வெளியீட்டு கால அட்டவணை மற்றும் விலை நிர்ணயம் ஆகியவற்றை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதலமைச்சர் அறை - அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-ministers-office-shifting-to-namakkal-kavignar-maligai-official-government-announcement</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-ministers-office-shifting-to-namakkal-kavignar-maligai-official-government-announcement#comments</comments><guid isPermaLink="false">ac67d8d3-82b5-4b9e-b829-ec119b8621f3</guid><pubDate>Mon, 27 Jul 2026 16:16:03 +0000</pubDate><atom:updated>2026-07-27T16:16:03.271Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>vijay,முதலமைச்சர் விஜய்,St George building,Namakkal Kavignar Maligai,நாமக்கல் கவிஞர் மாளிகை,புனித ஜார்ஜ் கோட்டை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/6kuaiels/New-Project-2026-07-27T214533.749.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதலமைச்சர் அறை - அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/6kuaiels/New-Project-2026-07-27T214533.749.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்திற்கு மாற உள்ளதாக தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. </p><p>முதலமைச்சர், முதலமைச்சரின் செயலாளர்கள், ஆலோசகர்களின் அறை 10வது மாடிக்கு மாறுகிறது என்றும், 10வது மாடியில் உள்ள செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையின் பல்வேறு பிரிவுகள் கலைவாணர் அரங்கிற்கு மாற்றப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தற்போதைய பிரதான கட்டிடத்தில் நிலவும் கடுமையான இடப் பற்றாக்குறை காரணமாக இந்த மாறுதல் நடைபெறுகிறது. </p><p>ஆனால் அரசியல் வட்டாரத்தில், தற்போதைய அறை வாஸ்துபடி இல்லை என்றும், ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க உயரமான இடத்தில் அமர வேண்டும் என்ற ஜோதிடரின் ஆலோசனையும் இதற்குக் காரணம் எனப் பரவலாகப் பேசப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>வருவாயை பெருக்க தமிழக அரசு குழு அமைப்பு: 3 மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/montek-singh-led-committee-to-identify-new-revenue-sources-for-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/montek-singh-led-committee-to-identify-new-revenue-sources-for-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">7964c801-77f7-432c-8b4e-30b00670d610</guid><pubDate>Mon, 27 Jul 2026 16:10:18 +0000</pubDate><atom:updated>2026-07-27T16:10:18.875Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திட்டக்குழு,montek singh ahluwalia,தமிழ்நாடு வருவாய்,Planning commission,tamilnadu income,மான்டேக் சிங் அலுவாலியா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/oghofcx9/Untitled-design-5.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tamil Nadu Govt forms Montague Singh Ahluwalia panel to identify new income sources]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/oghofcx9/Untitled-design-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டின் மாநில வருவாயை பெருக்குவதற்காக, மான்டேக் சிங் அலுவாலியா தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.</p><p>பொருளாதார நிபுணரான மான்டேக் சிங் அலுவாலியா, மத்திய திட்டக்குழுவின் முன்னாள் தலைவராக செயல்பட்டு வந்தார். </p><p>தமிழ்நாடு பட்ஜெட்டின் நிதி நிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5 அன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.</p><p>இதையடுத்து தமிழ்நாடு அரசின் வருவாயை பெருக்கும் குழுவின் தலைவராக மான்டேக் சிங் நியமிக்கட்டுள்ளார். </p><p>இவர் தலைமையிலான குழுவினர்கள், மாநிலத்தில் வருவாய் ஆதாரங்களை பெருக்க, வழிமுறைகளை ஆராய்ந்து தமிழக அரசுக்கு பரிந்துரைகளை வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>மான்டேக் சிங் தலைமையிலான குழு, வரி மற்றும் வரியில்லா வருவாயை அதிகரிக்க கொள்கை மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களை அரசுக்கு வழங்க உள்ளது.</p><p>மேலும் மாநிலத்திற்கு தேவையான புதிய வருவாய் ஆதாரங்களை அடையாளம் காணுதல் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ள உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இந்த குழு, தமிழ்நாடு அரசிடம் மூன்று மாத காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-27-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-27-july-2026#comments</comments><guid isPermaLink="false">8b4780d9-1157-4420-b1d3-5493e3a0aec3</guid><pubDate>Mon, 27 Jul 2026 04:28:11 +0000</pubDate><atom:updated>2026-07-27T16:06:26.523Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/po8rkawb/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/po8rkawb/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-mariya-wilson-says-a-list-of-dmks-acts-of-corruption-will-be-released-during-the-upcoming-budget-session">நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் தி.மு.க. ஊழல் பட்டியல் வெளியாகும்- அமைச்சர் மரிய வில்சன்</a></p><p>* முதலமைச்சராக விஜய் பதவியேற்ற போதே, ஊழல் இல்லாத வெளிப்படைத்தன்மையுடன் கூடிய அரசாக இருக்கும் என்று உறுதியளித்தார்.</p><p>* '100 சதவீதம் மக்களுக்கு நன்மை அளிக்க கூடிய பட்ஜெட்டாக த.வெ.க. அரசின் பட்ஜெட் இருக்கும்' என்று தெரிவித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/plans-for-womens-premier-league-cricket-in-tamil-nadu" rel="nofollow">தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு முதல் 'பெண்கள் பிரீமியர் லீக்' போட்டி?</a></p><p>* தமிழ்நாட்டிற்கு மேலும் ஒரு சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கும் திட்டம் நீண்ட காலமாக உள்ளது.</p><p>* போட்டியுடன் பெண்களுக்கான இரண்டு கண்காட்சி போட்டி நடத்தப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/seattle-food-festival-shooting-two-killed-five-injured-at-space-needle-event">அமெரிக்கா: உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச்சூடு - 2 பேர் பலி - ஐவர் காயம்</a></p><p>*தப்பிக்கும் முயற்சியில், மக்கள் ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டபடி சென்றதால் பலர் கீழே விழுந்தது பதிவாகியுள்ளது.</p><p>*இருவர் கைது என சியாட்டில் நகர மேயர் கேட்டி வில்சன் தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-ban-student-assault-row-dmk-congress-push-for-heated-debate-in-parliament">நீட் தேர்வு தடை, மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து விவாதிக்க தி.மு.க நோட்டீஸ்</a></p><p>*தொடர்ச்சியான தற்கொலைகள் குறித்து விவாதிக்க வேண்டும்</p><p>* கூட்டத்தொடரின் இரண்டாம் கட்டம் இன்று தொடங்கி வரும் ஆகஸ்ட் 2 வரை நடைபெற உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-27-07-2026">GOLD PRICE TODAY: வார தொடக்கத்திலேயே தங்கப் பிரியர்களுக்கு அதிர்ச்சி: அதிரடியாக உயர்ந்த விலை!</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.13,370-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kavin-first-death-anniversary-minister-vanni-arasu-meets-family">கவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் - குடும்பத்தினரை சந்தித்து  அமைச்சர் வன்னி அரசு ஆறுதல்</a></p><p>* காதல் விவகாரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 27-ந்தேதி நெல்லையில் படுகொலை செய்யப்பட்டார். </p><p>* கவினின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.</p>  <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/abdul-kalam-memorial-day-11th-death-anniversary-collector-and-annamalai-pay-tribute">11-ம் ஆண்டு நினைவு நாள் - அப்துல் கலாம் நினைவிடத்தில் கலெக்டர், அண்ணாமலை மரியாதை</a></p><p>* ஏபிஜே அப்துல் கலாம் நினைவை போற்றும் வகையில், மத்திய அரசு பல கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம் அமைத்தது. </p><p>* பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் திரண்டு வந்து  அப்துல்கலாம் சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். </p> <p><a href="https://www.maalaimalar.com/sports/hattrick-gold-for-india-brings-immense-joy-mirabai-chanu" rel="nofollow">இந்தியாவுக்காக ‘ஹாட்ரிக்’ தங்கம் வென்றது மிகுந்த மகிழ்ச்சி- மீராபாய் சானு</a></p><p>* நான் 48 கிலோ எடை பிரிவில் போட்டியிடும் போது அதில் கடினமாக இருக்கிறது. </p><p>* நான் 3 நாட்களாக தண்ணீர் கூட குடிக்கவில்லை. </p><p><a href="https://www.maalaimalar.com/sports/what-events-will-india-participate-in-at-the-commonwealth-games-today" rel="nofollow">காமன்வெல்த் விளையாட்டில் இன்று இந்தியா பங்கேற்கும் போட்டிகள் எவை?</a></p><p>* ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டம் முதல் சுற்று - குரிந்தர்விர் சிங். </p><p>* ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் தகுதிச் சுற்று, (பி பிரிவு)-லோகேஷ் சத்யநாதன். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/parliament-disruption-both-houses-adjourned-as-opposition-demands-debate-on-neet-leak-and-student-assault">தர்மேந்திர பிரதானுக்கு ராஜ வரவேற்பு.. மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளி - அவைகள் ஒத்திவைப்பு</a></p><p>*கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகிய தர்மேந்திர பிரதான், மக்களவை எம்.பி.யாக இன்று அவைக்கு வருகை புரிந்தார்.</p><p>*அவையின் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளை ஒத்திவைத்து இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/11th-death-anniversary-of-peoples-president-dr-apj-abdul-kalam">"மக்கள் ஜனாதிபதி" டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 11-ம் ஆண்டு நினைவு அஞ்சலி!</a></p><p>* இராமேஸ்வரத்தில் பிறந்த எளிய செய்தித்தாள் விற்பனையாளர் மகன்</p><p>* மக்களின் ஜனாதிபதி, மாணவர்களுக்கு கனவு காண கற்றுக்கொடுத்தவர்</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-congratulates-raja-muthupandi-on-commonwealth-games-silver-medal" rel="nofollow">காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம்: தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து</a></p><p>* தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக 30 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.</p><p>* ராஜா முத்துப்பாண்டியின் வெற்றி, இளைஞர்களுக்கு புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கட்டும்.  </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/supreme-court-slams-excessive-police-force-on-peaceful-delhi-student-march">போராட்டம் நடத்தினாலே தடியடியா? மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்</a><br><br>*போராட்டம் என்பது வன்முறை என்று அர்த்தமாகாது.</p><p>*தாக்குதல் குறித்த மனுக்கள் மீதான விசாரணையில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/tamil-nadu-weightlifter-raja-muthupandi-brings-pride-to-india" rel="nofollow">இந்தியாவிற்கு பெருமை சேர்த்த தமிழக வீரர்..!- யார் இந்த ராஜா முத்துப்பாண்டி?</a></p><p>* ராஜா தனது பள்ளி காலத்தில் இருந்தே பளுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்று வந்துள்ளார்.</p><p>* 2018-ம் ஆண்டில் முதல் முறையாக காமன்வெல்த் போட்டியில் பங்கேற்று 6-வது இடம் பிடித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anticipatory-bail-for-person-who-watched-jana-nayagan-online">இணையத்தில் 'ஜன நாயகன்' பார்த்தவருக்கு முன்ஜாமின்</a></p><p>* படம் கசிந்த விவகாரத்தில் மூளையாக செயல்பட்ட 8 முதல் 21 வரையிலான குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்</p><p>* வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் சிலர் ஏற்கனவே சட்டப்படியான ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/desilting-of-water-bodies-minister-anand-conducts-field-inspection-after-arriving-on-a-motorcycle">நீர்நிலைகள் தூர்வாரும் பணி - மோட்டார் சைக்கிளில் வந்து கள ஆய்வு செய்த அமைச்சர் ஆனந்த் </a></p><p>* கோயம்பேடு பகுதியில் ஆய்வு செய்வதற்காக அமைச்சர் ஆனந்த் தனது காரில் சென்றார்.</p><p>* கோயம்பேடு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-modi-government-must-withdraw-highway-toll-robbery"> சுங்கக் கட்டண கொள்ளையை மோடி அரசு திரும்பப் பெற வேண்டும் - மாணிக்கம் தாகூர்</a></p><p>* கடந்த நான்கு மாதங்களில் மூன்றாவது முறையாக கட்டணம் சுங்கக் கட்டணம் உயர்ந்துள்ளது.</p><p>* தமிழ்நாட்டில் இருந்து ஆண்டுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் சுங்கக் கட்டணம் வசூலிக்கிறது மோடி அரசு. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-says-law-against-honor-killing-soon">ஆணவக்கொலைக்கு எதிராக விரைவில் சட்டம் - அமைச்சர் வன்னி அரசு</a></p><p>* சாதிய ஆணவப்படுகொலைக்கு எதிரான சட்டம் தொடர்பாக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.</p><p>* பிரதமர் மோடி அமைத்துள்ள உயர்மட்ட குழுவே ஒரு ஏமாற்ற வேலைதான். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-government-introduces-strict-exam-malpractice-prevention-bill-in-parliament">கடும் அமளிக்கு மத்தியில் 'தேர்வு முறைகேடுகளை தடுக்கும் மசோதா' மக்களவையில் தாக்கல்.. அம்சங்கள் என்ன? </a></p><p>பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்த மசோதா 2026' அவையில் தாக்கல் செய்யப்பட்டது.</p><p>*சட்ட விதிமுறைகளை கடுமையாகும் வகையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/dr-apj-abdul-kalam-11th-death-anniversary-leaders-pay-tribute">"ஏவுகணை நாயகனின் கனவுகள் இன்றும் இளைஞர்களுக்கு வழிகாட்டுகின்றன" - கலாமுக்கு தலைவர்கள் புகழஞ்சலி!</a></p><p>* தலைவர்கள் கலாமின் எளிமை, தேசபக்தி, அறிவியல் பங்களிப்பை புகழ்ந்தனர்</p><p>* இளைஞர்களுக்கு கனவு, புதுமை வழிகாட்டியாக கலாம் இன்றும் வாழ்கிறார்</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/e20-ethanol-row-nitin-gadkari-moves-bombay-high-court">E20 எத்தனால் விவகாரம்: பொய் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில் நிதின் கட்கரி வழக்கு!... </a></p><p>*சமீபகாலமாக யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் E20 பெட்ரோல் பயன்பாட்டினால் வாகனங்களின் என்ஜின் பழுதடைவதாகவும், மைலேஜ் குறைவதாகவும் வீடியோக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. </p><p>*தனது குடும்பத்தினரின் வணிக வருவாயில் எத்தனால் உற்பத்தி மூலம் கிடைக்கும் பங்கு 10 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/case-against-mk-stalin-for-allegedly-concealing-information-in-election-nomination-papers-hearing-adjourned">தேர்தல் வேட்புமனுவில் தகவல்களை மறைத்ததாக மு.க.ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு - விசாரணை ஒத்திவைப்பு</a></p><p>* வேட்புமனுவில் அறக்கட்டளை குறித்த விவரங்களை சமர்ப்பிக்க அவசியமில்லை என மு.க.ஸ்டாலின் தரப்பில் வாதிடப்பட்டது.</p><p>* ஆவணங்களை மொழிபெயர்த்து தாக்கல் செய்ய மனுதாரருக்கு  ஐகோர்ட் உத்தரவு.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-shooting-bihar-cop-suspended-for-firing-ak-47-at-students">VIDEO: பீகாரில் போராடிய மாணவர்களை ஏகே 47 துப்பாக்கியால் சுட்ட காவலர் சஸ்பெண்டு!</a></p><p>*குறைந்தபட்சம் 4 முதல் 5 சுற்றுகள் வரை சுடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>*15 வயது சிறுவன் முகமது ஆரிப் கழுத்தில் குண்டடிபட்ட நிலையில், அறுவை சிகிச்சை மூலம் தோட்டா அகற்றப்பட்டு தற்போது நலமாக உள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/agriculture-budget-to-feature-key-announcements-minister-vinod" rel="nofollow">வேளாண் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இடம்பெறும்- அமைச்சர் வினோத்</a></p><p>* விவசாயிகள்   கருத்துகளின்  அடிப்படையில்  வேளாண் பட்ஜெட்  தயாரிக்கப்பட உள்ளது.</p><p>* குளிர்சாதன கிடங்குகள், நெல் சேகரிப்பு கிடங்குகள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbil-mahesh-poyyamozhi-comfort-young-woman-sobs-and-wails-against-reels-culture">‘ரீல்ஸ்’ கலாச்சாரத்திற்கு எதிராக கண்ணீர் விட்டு கதறி அழுத இளம்பெண்- அன்பில்மகேஷ் பொய்யாமொழி ஆறுதல்</a></p><p>* தமிழ் சங்கங்கள் தாங்கிப்பிடித்த நமது பாரம்பரிய தமிழ் சமூகம், வெறும் 'ரீல்ஸ்' மோகத்திற்காக இப்படி தரம் தாழ்ந்து போகலாமா?" என  உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார். </p><p>* சமூக ஊடக மோகத்தால் தடம் மாறும் அந்த இளைஞர்களும் நமது பிள்ளைகள் தான் என்றார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-visit-to-karnataka-duraimurugan-comments">முதலமைச்சர் கர்நாடகா பயணம்: உச்சநீதிமன்ற உத்தரவு நம்மிடம் இருக்கும்போது நாம் ஏன் கெஞ்ச வேண்டும் - துரைமுருகன்</a></p><p>* எம்ஜிஆர் கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்திய காலம் என்பது நீதிமன்ற உத்தரவு இல்லாத காலம்.</p><p>* மேகதாது, காவிரி நீர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை கூட்டி ஆலோசனை நடத்தி இருக்க வேண்டும்.</p>  <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-moderate-rain-in-tamil-nadu-until-the-2nd">தமிழகத்தில் வருகிற 2-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு</a></p><p>* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். </p><p>* மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-stalin-says-dmk-never-fears-sofa-government-arrests" rel="nofollow">சோஃபா அரசின் கைது நடவடிக்கைகளுக்கு திமுக ஒருபோதும் அஞ்சாது..!- உதயநிதி ஸ்டாலின்</a></p><p>* சட்ட நடவடிக்கைகளை எடுத்துக்கூறி ஆறுதல் தெரிவித்தோம்.</p><p>* ஆட்சியாளர்கள், மக்கள் மன்றத்திலும் சரிவைச் சந்திப்பது உறுதி.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/case-on-fetal-gender-reveal-health-officials-to-requestion-youtuber-irfan">கருவின் பாலினம் அறிவித்த வழக்கு: யூடியூபர் இர்ஃபானை மீண்டும் விசாரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு!...</a></p><p>*கடந்த திமுக ஆட்சியில் வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்டதால் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. </p><p>*மருத்துவப் பயிற்சி பெறாத ஒருவர் அறுவை சிகிச்சை அரங்கிற்குள் நுழைந்து மருத்துவ நடைமுறையைச் செய்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/government-jobs-granted-to-the-families-of-those-who-died-in-the-karur-stampede-have-been-cancelled">கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசுப்பணி ரத்து!</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/vvs-laxman-urges-vaibhav-sooryavanshi-to-improve-fitness-after-first-player-of-the-series-win">வைபவ் சூர்யவன்ஷி இதை கண்டிப்பாக செய்யனும்: லக்ஷ்மண் அட்வைஸ்</a></p><p>* வைபவ் சூர்யவன்ஷி மிகவும் இளம் வயதுடையவர். விளையாட்டின் அனைத்து அம்சங்களிலும் தன்னை மேம்படுத்திக்கொள்ள அவரே விரும்புகிறார்.</p><p>* டீப் ஸ்கொயர் லெக் (deep square leg) பகுதியிலிருந்து ஓடிவந்து டைவிங் கேட்ச் (diving catch) பிடிக்க முயன்றபோது அவருக்கு காயம் ஏற்பட்ட நிலையிலும், அவர் தொடர்ந்து களத்தில் இருக்கவே விரும்பினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cpi-urges-immediate-approval-for-coimbatore-madurai-metro-projects">கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு CPI வலியுறுத்தல்!...</a> </p><p>*தமிழகத்தில் உள்ள இரண்டு முக்கிய நகரங்களுக்கு இந்த அனுமதி மறுத்திருப்பது என்பது ஒன்றிய அரசின் பாரபட்ச போக்காகும்.</p><p>*தமிழ்நாட்டுக்கு எதிரான இத்தகைய போக்கை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/devotee-death-issue-key-guidelines-for-thiruvannamalai-idukku-temple-visit">பக்தர் உயிரிழந்த விவகாரம்: திருவண்ணாமலை இடுக்கு கோயிலுக்கு செல்ல முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!... </a></p><p>*பெரும்பாலான கிரிவல பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று இடுக்கு பிள்ளையார் கோவில் குகையில் நுழைந்து வெளியே வழிபட்டு செல்கின்றனர்.</p><p>*பக்தர்கள் அனைவரும் கோயில் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பிற்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/if-cases-not-withdrawn-protests-will-return-cockroach-janata-party-deadline-to-centre">வழக்குகள் வாபஸ் பெறப்படாவிட்டால் மீண்டும் போராட்டம்: மத்திய அரசுக்கு 'காக்ரோச் ஜனதா கட்சி' கெடு!... </a></p><p>*டெல்லி ஜந்தர் மந்தரில் 37 நாட்களாக நடைபெற்று வந்த மாணவர்கள் போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்</p><p>*போராட்டத்தைக் கைவிட்ட போதிலும், மத்திய அரசு மற்றும் காவல்துறை அளித்த வாக்குறுதிகளை மீறி வருவதாக CJP குற்றம் சாட்டியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/karnataka-does-not-need-to-obtain-tamil-nadus-permission-to-build-the-mekedatu-dam-central-government">மேகதாது அணைகட்ட கர்நாடகா தமிழ்நாட்டின் அனுமதியை பெறவேண்டிய அவசியமில்லை - மத்திய அரசு!</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/gyaneshwari-yadav-won-silver-weightlifting-women-53-kg-commonwealth-games">காமன்வெல்த் போட்டி: இந்திய வீராங்கனை ஞானேஷ்வரி யாதவ் வெள்ளிப் பதக்கம் வென்றார்</a></p><p>* நைஜீரியா வீராங்கனை Snatch முறையில் 93 கிலோவும், Clean and Jerk முறையில் 113 கிலோவும் என மொத்தமாக 206 கிலோ பளு தூக்கி முதல் இடம் பிடித்தார்.</p><p>* கனடா வீராங்கனை 178 (83+95) கிலோ தூக்கி வெண்கல பதக்கம் வென்றார்.</p> ]]></content:encoded></item><item><title>விருதுநகர் பட்டாசு வெடிவிபத்து - உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/virudhunagar-firecracker-accident-rs-4-lakh-relief-announced-for-the-families-of-the-deceased</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/virudhunagar-firecracker-accident-rs-4-lakh-relief-announced-for-the-families-of-the-deceased#comments</comments><guid isPermaLink="false">68164548-be22-457c-aad8-5c8120a51d23</guid><pubDate>Mon, 27 Jul 2026 15:42:16 +0000</pubDate><atom:updated>2026-07-27T15:42:16.989Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>relief,நிவாரணம்,Virudhunagar Firecracker Accident,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,விருதுநகர் பட்டாசு வெடிவிபத்து</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/utj3z9rb/New-Project-2026-07-27T211151.390.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விருதுநகர் பட்டாசு வெடிவிபத்து - உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/utj3z9rb/New-Project-2026-07-27T211151.390.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர் மாவட்டம் செங்கமலப்பட்டி பகுதியில் இயங்கிவந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் விஜய் ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;</p><p>”விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம் செங்கமலப்பட்டி பகுதியில் நேற்று (26.07.2026) காலை தனியாருக்குச் சொந்தமான இடத்தில் முறையான அனுமதி பெறாமல் இயங்கிவந்த பட்டாசு ஆலையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ராம்பிரகாஷ்(வயது 32) த/பெ ரவீந்திரன், </p><p>ராமச்சந்திரன் (வயது 40). த/பெ. ரவீந்திரன். இன்னாசிமுத்து (வயது 44) த/பெ. சிங்கராஜ் மற்றும் நாராணாப்புரத்தைச் சேர்ந்த  பாண்டித்துரை (35) த/பெ. மாரியப்பன் ஆகியோர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகவும் வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.</p><p>இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் நான்கு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.</p><p>மேலும், முறையான அனுமதி பெறாமல் சட்டத்திற்குப் புறம்பாக பட்டாசு ஆலைகள் நடத்தப்படுகின்றனவா என்பதனை ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>மேகதாது அணை விவகாரம்: மத்திய அமைச்சர் உள்ளிட்ட கர்நாடக எம்.பி.க்களுடன் டி.கே. சிவகுமார் ஆலோசனை</title><link>https://www.maalaimalar.com/news/national/union-education-minister-pralhad-joshi-joins-dk-shivakumar-for-delhi-talks-on-mekedatu-dam</link><comments>https://www.maalaimalar.com/news/national/union-education-minister-pralhad-joshi-joins-dk-shivakumar-for-delhi-talks-on-mekedatu-dam#comments</comments><guid isPermaLink="false">0bc05179-1710-4433-bf39-057f9e08f309</guid><pubDate>Mon, 27 Jul 2026 15:28:36 +0000</pubDate><atom:updated>2026-07-27T15:28:36.729Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>mekedatu dam,மேகதாது அணை,டிகே சிவக்குமார்,TK Sivakumar,kaveri,காவேரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/jgqd8lmk/Untitled-design-3.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DK Shivakumar and Pralhad Joshi Talks about Mekedatu Dam ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/jgqd8lmk/Untitled-design-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேகதாது அணை விவகாரம் தொடர்பாக டெல்லியில் மத்திய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷியுடன், கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார்.</p><h3><strong>மேகதாது அணை விவகாரம்:</strong></h3><p>கர்நாடகா மாநிலத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்ட அம்மாநில அரசு தீவிரமாக முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.</p><p>கர்நாடகா மாநிலத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்டுவதற்கு, அம்மாநில அரசு தீவிரமாக முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.</p><p>தமிழகத்திற்கு திறக்க வேண்டிய காவிரி நீரை, கர்நாடக அரசு திறந்துவிடாமல் இருந்து வருகிறது. கர்நாடகவில் போதுமான மழை பெய்யாமல் வறட்சி நிலவி வருவதால், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.</p><p>இதையடுத்து பெங்களூருவில் டி.கே. சிவக்குமாரை தமிழக முதல்வர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் கலந்துகொள்ள கூடாது என தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த அணை கட்டுவதற்கு தமிழ்நாடு அரசும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.</p><p>இந்நிலையில் டெல்லியில் கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தலைமையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக மாநில அனைத்து கட்சிகளின் எம்.பி.க்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.</p><p><strong>டெல்லியில் ஆலோசனை கூட்டம்:</strong></p><p>இந்த ஆலோசனை கூட்டத்தில் கர்நாடக துணை முதலமைச்சர் பரமேஸ்வர், அமைச்சர்கள் ஜார்ஜ், ஈஸ்வர் காந்த்ரே, சரண் பிரகாஷ், கிருஷ்ண பைரே கவுடாம், சதீஷ் ஜார்கிஹோலி, ராம லிங்கரெட்டி ஆகியோர்களும் பங்கேற்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.</p><p>இவர்களுடன் கர்நாடகவை சேர்ந்த மத்திய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி மற்றும் மத்திய இணை அமைச்சர் ஷோபா உள்ளிட்டோரும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>பெண்களே...ஒவ்வொரு மாதமும் உங்கள் உடலில் என்ன நடக்கிறது தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/health/generalmedicine/do-you-know-what-happens-in-your-body-every-month</link><comments>https://www.maalaimalar.com/health/generalmedicine/do-you-know-what-happens-in-your-body-every-month#comments</comments><guid isPermaLink="false">99169102-c568-44a5-8a70-d5f19f72ec52</guid><pubDate>Mon, 27 Jul 2026 15:16:11 +0000</pubDate><atom:updated>2026-07-27T15:16:11.366Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Health,ஆரோக்கியம்,HealthTips,மாதவிடாய் சுழற்சி,உடல்நலம்,மாதவிடாய் சுழற்சி மாற்றம்,Cycle Syncing,Menstrual Phase</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/hiwi7xbo/fff.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Cycle Syncing ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/hiwi7xbo/fff.jpg?w=280" width="280"></media:thumbnail><category>பொது மருத்துவம் (General Medicine)</category><category>பெண்கள் உலகம் (Women)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெண்களின் உடல் ஒவ்வொரு மாதமும் இயற்கையாகவே ஒரு அற்புதமான ஹார்மோன் சுழற்சியை கடந்து செல்கிறது. இந்தச் சுழற்சி வெறும் மாதவிடாய் நிகழ்வாக மட்டும் இல்லாமல், உடலின் சக்தி, மனநிலை, உணர்வுகள், பசி, தூக்கம், கவனம், இனப்பெருக்க ஆரோக்கியம் என பல அம்சங்களை நிர்ணயிக்கிறது.</p><p>இந்த இயற்கையான மாற்றங்களை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்வதே Cycle Syncing எனப்படுகிறது. இது பெண்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு இயற்கையான அணுகுமுறையாகக் கருதப்படுகிறது.</p><h2><strong>Cycle Syncing என்றால் என்ன?</strong></h2><p>Cycle Syncing என்பது மாதவிடாய் சுழற்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களுக்கு ஏற்ப உணவுமுறை, உடற்பயிற்சி, வேலைத் திட்டம், ஓய்வு மற்றும் தூக்கப் பழக்கங்களை மாற்றிக் கொள்வதாகும். ஒவ்வொரு நாளும் உடல் ஒரே அளவு சக்தியுடன் இயங்காது. அந்த மாற்றங்களை மதித்து வாழ்வதே இந்த முறையின் அடிப்படை நோக்கமாகும்.</p><h2><strong>Menstrual Phase-உடலுக்கு ஓய்வு தேவைப்படும் நாட்கள்:</strong></h2><p>மாதவிடாயின் முதல் நாளிலிருந்து பொதுவாக ஐந்து நாட்கள் வரை நீடிக்கும் இந்தக் கட்டத்தில், ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரோன் ஹார்மோன்களின் அளவு குறைவாக இருக்கும். இதனால் சோர்வு, வயிற்றுவலி, முதுகுவலி, உணர்ச்சி மாற்றங்கள் போன்றவை ஏற்படலாம். இந்த நாட்களில் உடலுக்கு அதிக ஓய்வு அளிப்பது மிகவும் அவசியம். </p><figure><img alt="Menstrual Phase" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/xrxgznzx/aa.jpg" /></figure><p>சூடான சூப், கீரை வகைகள், இரும்புச்சத்து நிறைந்த உணவுகள், பழங்கள் மற்றும் புரதம் நிறைந்த உணவுகள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்கும். அதிக தண்ணீர் குடிப்பது உடல் நீர்ச்சத்தை சீராக வைத்திருக்க உதவும். கடுமையான உடற்பயிற்சிகளைத் தவிர்த்து, மெதுவான நடைப்பயிற்சி, யோகா மற்றும் தியானம் போன்றவை உடலையும் மனதையும் அமைதிப்படுத்தும்.</p><h2><strong>Follicular Phase-புதிய தொடக்கங்களுக்கான நேரம்:</strong></h2><p>மாதவிடாய் முடிந்த பிறகு தொடங்கும் இந்தக் கட்டத்தில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் அளவு மெதுவாக உயரத் தொடங்குகிறது. இதனால் உடலில் புத்துணர்ச்சி அதிகரிக்கும். மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும், வேலைகளில் கவனம் அதிகரிக்கும், கற்றுக்கொள்ளும் திறனும் மேம்படும்.</p><p>இந்த காலத்தில் காய்கறிகள், முழுத் தானியங்கள், பழங்கள், விதைகள், பருப்பு வகைகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்வது நல்லது. உடற்பயிற்சியில் ஓட்டம், சைக்கிள், நடனம் அல்லது வலிமையை அதிகரிக்கும் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய திட்டங்களை தொடங்கவும், முக்கிய முடிவுகளை எடுக்கவும் இந்தக் காலம் ஏற்றதாகக் கருதப்படுகிறது.</p><h2><strong>Ovulation Phase-உடல் மற்றும் மனம் உச்சத்தில் இருக்கும் நேரம்:</strong></h2><p>பொதுவாக மாதவிடாய் சுழற்சியின் நடுப்பகுதியில் ஏற்படும் Ovulation கட்டத்தில், ஈஸ்ட்ரோஜன் அதிகபட்ச அளவை அடைகிறது. இந்த நேரத்தில் உடலின் சக்தி, தன்னம்பிக்கை, சமூக தொடர்பு மற்றும் கவனத்திறன் அதிகமாக இருக்கும். இந்தக் கட்டத்தில் புரதம் நிறைந்த உணவுகள், முட்டை, மீன், பச்சை இலைக்காய்கறிகள், பழங்கள் மற்றும் போதுமான தண்ணீர் ஆகியவற்றை உணவில் சேர்ப்பது நல்லது.</p><p>அதிக ஆற்றல் இருப்பதால் தீவிர உடற்பயிற்சி, விளையாட்டு மற்றும் முக்கியமான வேலைகளை மேற்கொள்ளலாம். சமூக நிகழ்வுகள் மற்றும் குழு செயல்பாடுகளில் ஆர்வத்துடன் பங்கேற்கவும் இந்தக் காலம் மிகவும் பொருத்தமானது.</p><figure><img alt="Luteal Phase" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/55m97kp2/tt.jpg" /></figure><h2><strong>Luteal Phase-உடலை மெதுவாக அமைதிப்படுத்தும் கட்டம்:</strong></h2><p>Ovulation முடிந்த பிறகு தொடங்கும் இந்தக் கட்டத்தில் புரோஜெஸ்டிரோன் ஹார்மோனின் அளவு அதிகரிக்கும். சில பெண்களுக்கு இந்த நேரத்தில் சோர்வு, வீக்கம், இனிப்பு உணவுகளின் மீது ஆர்வம், மனநிலை மாற்றங்கள் மற்றும் PMS அறிகுறிகள் தோன்றக்கூடும்.</p><p>இந்த நாட்களில் ஆரோக்கியமான கொழுப்புச் சத்து கொண்ட உணவுகள், நட்ஸ், விதைகள், வாழைப்பழம், தயிர், முழுத் தானியங்கள் மற்றும் மெக்னீசியம் நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்வது உடலுக்கு உதவும். போதுமான தூக்கம், மன அழுத்தத்தைக் குறைக்கும் தியானம், மெதுவான யோகா மற்றும் ஓய்வு ஆகியவை இந்தக் கட்டத்தில் மிகவும் முக்கியமானவை.</p><p>ஹார்மோன் சுழற்சிக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வது உடலின் இயற்கையான செயல்பாடுகளை மதிப்பதாகும். இதன் மூலம் உடல் சோர்வு குறையலாம், மனநிலை சீராக இருக்கலாம், வேலைத்திறன் மேம்படலாம், நல்ல தூக்கம் கிடைக்கலாம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் நேர்மறையான மாற்றங்களை உணர முடியும். </p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/ls41kvgn/menstu.jpg" /></figure><p>இருப்பினும், ஒவ்வொரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சியும் வேறுபட்டதாக இருக்கும். எனவே, தங்களுடைய உடலின் தேவைகளை கவனித்து அதற்கேற்ற வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது சிறந்தது.</p><p>ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியான சக்தி அல்லது மனநிலை இருக்க வேண்டிய அவசியமில்லை. அது உங்கள் உடலின் இயற்கையான ஹார்மோன் மாற்றங்களின் ஒரு பகுதியாகும். அந்த மாற்றங்களை ஏற்றுக்கொண்டு, உடலுக்கு தேவையான உணவு, ஓய்வு, உடற்பயிற்சி மற்றும் பராமரிப்பை வழங்குவதுதான் உண்மையான Self-Care. உங்கள் உடலை புரிந்து கொண்டு அதனுடன் இணைந்து வாழும்போது, ஆரோக்கியமான வாழ்க்கையும் மனநிறைவும் இயல்பாகவே உங்களைத் தேடி வரும்.</p>]]></content:encoded></item><item><title>பரோடா வங்கி தரவுகள் டார்க் நெட்டில் கசிவு- பயனர்களின் ஏடிஎம், நெட்பேக்கிங், ஆதார் பதிவேற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/national/bank-of-baroda-data-leak-darknet-atm-netbanking-aadhaar</link><comments>https://www.maalaimalar.com/news/national/bank-of-baroda-data-leak-darknet-atm-netbanking-aadhaar#comments</comments><guid isPermaLink="false">0a8c805a-f9b4-4644-a1fd-76451dd2fec4</guid><pubDate>Mon, 27 Jul 2026 15:03:34 +0000</pubDate><atom:updated>2026-07-27T15:03:34.978Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>RBI,Bank of Baroda,இந்திய ரிசர்வ் வங்கி,பேங்க் ஆஃப் பரோடா,darknet,டார்க் நெட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/928904ln/Untitled-design-2.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bank of Baroda Data Leak: Customer ATM, netbanking and Aadhaar details on dark net]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/928904ln/Untitled-design-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h3><strong>பேங்க் ஆஃப் பரோடா தரவுகள் கசிவு:</strong></h3><p>பேங்க் ஆஃப் பரோடா தேசிய வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களின் சுமார் 1,000 ஜிபி டேடா கொண்ட தரவுகள், டார்க் நெட்டில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதாக டார்க் வெப் இன்டெலிஜென்ஸ் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.  </p><p>குஜராத்தை தலைமையிடமாக கொண்டு கடந்த 1908-ஆம் ஆண்டு, இந்தியாவின் இரண்டாவது பெரிய தேசிய வங்கியான பேங்க் ஆஃப் பரோடா ஆரம்பிக்கப்பட்டது.</p><p>இந்த வங்கி நாடு முழுவதும் எட்டாயிரத்திற்கும் அதிகமான கிளைகளை கொண்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தங்களது பணத்தை வசதியாக எடுத்துக்கொள்ளும் வகையில், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஏடிஎம்-களையும் கொண்டுள்ளது.</p><p>கொரோனா பெருந்தொற்றிற்கு பிறகு, பணப்பரிவர்த்தனைகள் பெரும்பாலும் இணையத்தின் மூலமாகவே நடைபெற்று வருகிறது.</p><p>இந்நிலையில் பேங்க் ஆஃப் பரோடா மற்றும் கார்ப்பரேட் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள பயனர்களின் தொலைபேசி எண்கள், ஆதார் எண்கள், நெட்பேங்கிங் பயனர் ஐடிகள், கடன் விண்ணப்பங்கள், ஏடிஎம் தொடர்பான பதிவு விவரங்கள் டார்க்நெட்டில் கசிந்துள்ளன.</p><h3><strong>கேஷ்லெஸ் நிறுவனர் குற்றச்சாட்டு:</strong></h3><p>இதுகுறித்து மென்பொருள் பொறியாளரும், கேஷ்லெஸ் நிறுவனத்தின் நிறுவனருமான ஸ்ரீகாந்த் லட்சுமணன் கூறுகையில், பரோடா வங்கி வாடிக்கையாளர்களின் உண்மையான தகவல்கள் கசிந்துள்ளதாக ஆய்வு செய்து கூறினார்.</p><p>இதுதான் வங்கி கிளை தணிக்கையின் தரம் என்றும் செயற்கை நுண்ணறிவு சைபர் இணையத்தில் உள்ள குறைபாடுகளை சரிசெய்யுமாறும், எக்ஸ் தளத்தில் இந்திய ரிசர்வ் வங்கியை குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>மேலும், இந்திய ரிசர்வ் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் இந்த பிரச்சனையை எக்ஸ் தளத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>இந்த தரவுகள் வெளியான பின்னணியில், தரவு மிரட்டல் மற்றும் ரான்சம்வேர் அச்சுறுத்தல் குழுவான ‘டிரிபிள் எக்ஸ்’ இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>இந்த குறிப்பிட்ட குழு, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தோனேசியாவின் அரசுக்கு சொந்தமான வங்கி ஒன்றின் மீது இணையவழி தாக்குதலில் ஈடுபட்டிருந்தது தெரியவந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>துல்கர் - பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ படத்தின் முதல் பாடல் வெளியானது!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-first-song-from-the-movie-sri-sri-starring-dulquer-and-pooja-hegde-has-been-released</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-first-song-from-the-movie-sri-sri-starring-dulquer-and-pooja-hegde-has-been-released#comments</comments><guid isPermaLink="false">40e66e83-a395-4633-82e5-5d6b2f8c8c2e</guid><pubDate>Mon, 27 Jul 2026 15:02:41 +0000</pubDate><atom:updated>2026-07-27T15:02:41.689Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Pooja Hegde,பூஜா ஹெக்டே,Dulquer Salmaan,துல்கர் சல்மான்,Sri Sri,ஸ்ரீ ஸ்ரீ</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/br5uqjoa/New-Project-2026-07-27T200638.699.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ துல்கர் - பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ படத்தின் முதல் பாடல் வெளியானது!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/br5uqjoa/New-Project-2026-07-27T200638.699.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அறிமுக இயக்குநர் ரவி நேலகுதிடி இயக்கத்தில், துல்கர் நடிக்கும் பான் இந்திய திரைப்படம் ‘ஸ்ரீ ஸ்ரீ’. எஸ்.எல்.வி. சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக, முதல்முறையாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.</p><p>காதல், நகைச்சுவை மற்றும் உணர்வுபூர்வமான தருணங்களை இணைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. குறிப்பாக துல்கர் – பூஜா இருவரின் இயல்பான கெமிஸ்ட்ரி அனைவரையும் கவர்ந்தது.</p><p>காதல் கதையாக உருவாகி உள்ளப் படம், தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான ‘வானே வானே’ பாடல் வெளியாகி உள்ளது.</p><p>படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில், தரன் வரிகளில் உருவாகியுள்ளப் பாடலை நகுல் அபயங்கர் பாடியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>காதல் மெலடியில் ஜி.வி.பிரகாஷ்-கயாடு லோஹர்! &apos;இம்மார்டல்&apos; படத்தின் &apos;She Is My&apos; பாடல் வெளியானது!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/gv-prakash-kayadu-lohar-in-love-melody-immortal-she-is-my-song-released</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/gv-prakash-kayadu-lohar-in-love-melody-immortal-she-is-my-song-released#comments</comments><guid isPermaLink="false">24d34fe8-60c4-4653-add4-7d7d706652b7</guid><pubDate>Mon, 27 Jul 2026 14:45:00 +0000</pubDate><atom:updated>2026-07-27T14:45:00.879Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Kayadu Lohar,கயாடு லோஹர்,gv prakash,ஜி.வி.பிரகாஷ்குமார்,Immortal,இம்மார்டல்,She Is My</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/jk412alb/immmo.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/jk412alb/immmo.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் கயாடு லோஹர் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'இம்மார்டல்' திரைப்படத்தின் 'She Is My' எனும் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/k3T5qoquCso?list=RDk3T5qoquCso"></iframe></figure><h2><strong>இதமான ரொமான்டிக் மெலடி:</strong></h2><p>முன்னதாக வெளியான 'லவ்வு லவ்வு காட்டேரி' என்ற குத்துப் பாடலைத் தொடர்ந்து, தற்போது வெளியாகியுள்ள 'She Is My' பாடல் முற்றிலும் காதலைக் மையமாகக் கொண்ட இதமான லவ் மெலடி பாடலாக உருவாகியுள்ளது. சாம் சி.எஸ்-இன் மெல்லிசையான இசையும், ஜி.வி.பிரகாஷ் கயாடு லோஹரின் கெமிஸ்ட்ரியும் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.</p><h2><strong>பான்-இந்தியா ரிலீஸ்:</strong></h2><p>அருண்குமார் தனசேகரன் பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் இத்திரைப்படம், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பான்-இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது. இப்படத்தின் ஆடியோ உரிமையைத் பிரபல நிறுவனமான 'திங்க் மியூசிக்' கைப்பற்றியுள்ளது.</p><p>ஒரு நவீன அப்பார்ட்மெண்ட்டில் நடக்கும் வித்தியாசமான ஹாரர்-த்ரில்லர் மற்றும் ரொமான்ஸ் பாணியிலான கதைக் களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் ஏற்கெனவே வெளியாகி மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. </p><p>இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவடைந்து, தற்போது இறுதிக்கட்டப் பின் தயாரிப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 'இம்மார்டல்' திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>சாம் சி.எஸ் இசையில் உருவாகியுள்ள இந்த ரொமான்டிக் பாடல், தற்போது யூடியூப் மற்றும் இசைத்தளங்களில் இளைஞர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு ட்ரெண்டாகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் போட்டி: இந்திய வீராங்கனை ஞானேஷ்வரி யாதவ் வெள்ளிப் பதக்கம் வென்றார்</title><link>https://www.maalaimalar.com/sports/gyaneshwari-yadav-won-silver-weightlifting-women-53-kg-commonwealth-games</link><comments>https://www.maalaimalar.com/sports/gyaneshwari-yadav-won-silver-weightlifting-women-53-kg-commonwealth-games#comments</comments><guid isPermaLink="false">41f9fefe-e941-47e6-b00e-4fea09afdde0</guid><pubDate>Mon, 27 Jul 2026 14:38:08 +0000</pubDate><atom:updated>2026-07-27T14:38:08.483Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>காமன்வெல்த் போட்டி,Glasgow,commonwealth game,கிளாஸ்கோ,Gyaneshwari Yadav,ஞானேஷ்வரி யாதவ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/37ud024j/Gyaneshwariyadav.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gyaneshwari Yadav]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/37ud024j/Gyaneshwariyadav.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காமன்வெல்த் போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரவு நடைபெற்ற பளுதூக்குதல் இறுதிச் சுற்றில் பெண்களுக்கான 53 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ஞானேஷ்வரி யாதவ் போட்டியிட்டார்.</p><h2>Snatch முறையில் 88 கிலோ</h2><p>மொத்தம் 10 பேர் கலந்து கொண்டதில் இருவர் முழுமையாக போட்டியை நிறைவு செய்யவில்லை. இந்திய வீராங்கனை ஞானேஷ்வரி யாதவ் Snatch முறையில் 88 கிலோ தூக்கினார். மொத்தம் 3 முறை முயற்சி செய்ய வேண்டும். அதில் எந்த முறை அதிக பளு தூக்குகிறாரோ? அது குறித்துக் கொள்ளப்படும். இவர் முதல் முயற்சியில் 82, 2-வது முயற்சியில் 85, 3-வது முயற்சியில் 88 கிலோ தூக்கினார்.</p><h2>Clean and Jerk முறையில் 111 கிலோ</h2><p>அதன்பின் நடைபெற்ற Clean and Jerk முறையில் 111 கிலோ தூக்கினார். முதல் முயற்சியில் 103, 2-வது முயற்சியில் 107, 3-வது முயற்சியில் 111 என தூக்கினார். இறுதியாக இரண்டையும் சேர்த்து 199 (88+111) கிலோ தூக்கி 2-வது இடம் பிடித்தார்.</p><p>நைஜீரியா வீராங்கனை Snatch முறையில் 93 கிலோவும், Clean and Jerk முறையில் 113 கிலோவும் என மொத்தமாக 206 கிலோ பளு தூக்கி முதல் இடம் பிடித்தார். கனடா வீராங்கனை 178 (83+95) கிலோ தூக்கி வெண்கல பதக்கம் வென்றார்.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது அணைகட்ட கர்நாடகா தமிழ்நாட்டின் அனுமதியை பெறவேண்டிய கட்டாயமில்லை - மத்திய அரசு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/karnataka-does-not-need-to-obtain-tamil-nadus-permission-to-build-the-mekedatu-dam-central-government</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/karnataka-does-not-need-to-obtain-tamil-nadus-permission-to-build-the-mekedatu-dam-central-government#comments</comments><guid isPermaLink="false">c3007898-f7f7-4fca-aa1b-7f8306f31e5e</guid><pubDate>Mon, 27 Jul 2026 14:25:47 +0000</pubDate><atom:updated>2026-07-27T14:25:47.582Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,கர்நாடகா,Karnataka,mekedatu dam,மேகதாது அணை,mekedatu,தமிழ்நாடு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/p23aj9cl/New-Project-2026-07-27T195526.653.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மேகதாது அணைகட்ட கர்நாடகா தமிழ்நாட்டின் அனுமதியை பெறவேண்டிய அவசியமில்லை - மத்திய அரசு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/p23aj9cl/New-Project-2026-07-27T195526.653.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதற்கு, தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையில்லை என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. </p><p>மாநிலங்களவையில் அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் பூஷன் சௌத்ரி, </p><p>“காவிரியின் குறுக்கே எந்தவொரு கட்டுமானப் பணியையும் மேற்கொள்வதற்கு முன்பு தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி போன்ற எந்த மாநில அரசின் ஒப்புதலையும் கர்நாடகா பெறவேண்டும் என்ற அவசியமில்லை என 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளார். </p><p>இதுபோன்ற திட்டங்களுக்கு கீழ்நிலை ஆற்று மாநிலங்களிடமிருந்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற எந்த விதியும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். </p><p>மேகதாது அணைக்கு தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி அரசுகளின் ஒப்புதலை கர்நாடகா பெற்றுள்ளதா? மத்திய அரசின் பரிசீலனையில் உள்ள அந்தத் திட்டத்தின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து அன்புமணி கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் மத்திய அமைச்சர் தான் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் இந்த விளக்கத்தை அளித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>வழக்குகள் வாபஸ் பெறப்படாவிட்டால் மீண்டும் போராட்டம்: மத்திய அரசுக்கு &apos;காக்ரோச் ஜனதா கட்சி&apos; கெடு!</title><link>https://www.maalaimalar.com/news/national/if-cases-not-withdrawn-protests-will-return-cockroach-janata-party-deadline-to-centre</link><comments>https://www.maalaimalar.com/news/national/if-cases-not-withdrawn-protests-will-return-cockroach-janata-party-deadline-to-centre#comments</comments><guid isPermaLink="false">80310ffe-be56-456c-b01d-62c50bdfc371</guid><pubDate>Mon, 27 Jul 2026 13:58:22 +0000</pubDate><atom:updated>2026-07-27T13:58:22.080Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டெல்லி ஜந்தர் மந்தர்,Cockroach Janta Party,abhijeet dipke,அபிஜீத் திப்கே,காக்ரோச் ஜனதா கட்சி,CJPProtest</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/aorc3803/cjp.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Cockroach Janta Party  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/aorc3803/cjp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி ஜந்தர் மந்தரில் 37 நாட்களாக நடைபெற்று வந்த மாணவர்கள் போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெற்ற நிலையில், கைது செய்யப்பட்ட மாணவர்கள் மீதான வழக்குகளை உடனடியாகத் திரும்பப் பெறாவிட்டால் மீண்டும் போராட்டம் தொடங்கும் என 'காக்ரோச் ஜனதா கட்சி (CJP)' மத்திய அரசுக்குக் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு புகார்களைத் தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அபிஜீத் திப்கே தலைமையிலான காக்ரோச் ஜனதா கட்சி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வந்தது. </p><p>கடந்த வார இறுதியில் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, மத்திய அரசுடன் நடைபெற்ற மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் போராட்டம் நல்லெண்ண அடிப்படையில் தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.</p><h2><strong>CJP அமைப்பின் குற்றச்சாட்டுகள்:</strong></h2><p>போராட்டத்தைக் கைவிட்ட போதிலும், மத்திய அரசு மற்றும் காவல்துறை அளித்த வாக்குறுதிகளை மீறி வருவதாக CJP குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து, CJP செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, "போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது எவ்வித காவல் துறை நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்ற ஒப்பந்தத்தை அரசு மீறியுள்ளது. </p><p>பீகார் மற்றும் மேற்கு வங்கத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லி மற்றும் பிற மாநிலங்களில் மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்களுக்கு உணவு, தங்குமிடம் உள்ளிட்ட உதவிகளைச் செய்த தன்னார்வலர்கள் காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.</p><h2><strong>வழக்குகளை வாபஸ் பெற கோரிக்கை:</strong></h2><p>போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட அனைத்து எஃப்.ஐ.ஆர் வழக்குகளையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். கைது செய்யப்பட்ட மாணவர்களை எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.</p><p>மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பாஜக தலைவர்களான ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோரை Tag செய்து வெளியிடப்பட்டுள்ள அந்தப் பதிவில், "நாளைக்குள் இது தொடர்பான எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தை வழங்கி, வழக்குகளைத் திரும்பப் பெறாவிட்டால், நாங்கள் மீண்டும் போராட்டக்களத்தில் இறங்க வேண்டியிருக்கும்" எனத் தெள்ளத் தெளிவாக எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>உச்ச நீதிமன்றத்தின் கருத்து:</strong></h2><p>இதனிடையே, டெல்லியில் ஜூலை 20 அன்று நடைபெற்ற 'சலோ சன்சாத்' பேரணியின் போது காவல்துறை நடத்திய கண்ணீர்ப்புகை தாக்குதல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் முக்கிய கருத்து தெரிவித்துள்ளது. "அமைதியான வழியில் போராட்டம் நடத்துவது என்பது அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமை. வெறும் போராட்டம் நடக்கிறது என்பதற்காகக் காவல்துறையின் வரம்பு மீறிய தடியடியை நியாயப்படுத்த முடியாது"* என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><h2><strong>பாராளுமன்றத்தில் எதிரொலி:</strong></h2><p>மாணவர்கள் மீதான காவல்துறை நடவடிக்கை மற்றும் வழக்குகள் தொடரப்படும் விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் புயலைக் கிளப்பியுள்ளது. எதிர்க்கட்சிகள் இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வலியுறுத்திச் முழக்கங்களை எழுப்பியதால் அவைகள் ஒத்திவைக்கப்பட்டன. </p><p>மத்திய அரசு மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் காவல்துறையினர் நாளைக்குள் வழக்கு திரும்பப் பெறுதல் குறித்த தெளிவான முடிவை அறிவிக்காத பட்சத்தில், நாடு தழுவிய அளவில் மீண்டும் மாணவர் போராட்டம் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>பக்தர் உயிரிழந்த விவகாரம்: திருவண்ணாமலை இடுக்கு கோயிலுக்கு செல்ல முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/devotee-death-issue-key-guidelines-for-thiruvannamalai-idukku-temple-visit</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/devotee-death-issue-key-guidelines-for-thiruvannamalai-idukku-temple-visit#comments</comments><guid isPermaLink="false">6f1b30b3-e90f-451f-b720-0a0bfeb871aa</guid><pubDate>Mon, 27 Jul 2026 13:29:18 +0000</pubDate><atom:updated>2026-07-27T13:29:18.427Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruvannamalai,திருவண்ணாமலை,Tiruvannamalai temple,Idukku Temple,திருவண்ணாமலை கிரிவலப்பாதை,இடுக்கு பிள்ளையார் கோயில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/hp5vze6p/thiruvannamalai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tiruvannamalai Idukku Temple]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/hp5vze6p/thiruvannamalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலின் உட்கோயிலாக அமைந்துள்ளது அருள்மிகு அருணகிரி இடுக்கு பிள்ளையார் கோயில்.  இந்த கோவிலில் சிறிய குகை போன்ற அமைப்பில் 3 வாசல்கள் உள்ளன. பின் வாசல் வழியாக ஒருக்களித்து படுத்தவாறு உள்ளே நுழைந்து, மெல்லமாக கைகளை ஊன்றியவாறு நகர்ந்து முன் வாசல் வழியாக வெளியே வரவேண்டும்.</p><p>குகை போன்ற பகுதியில் இருந்து வெளியே வந்த உடன் நந்தி இருக்கும். பக்தர்கள் நந்தி பகவானையும், இடுக்கு பிள்ளையாரையும் வணங்கி செல்கின்றனர். பெரும்பாலான கிரிவல பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று இடுக்கு பிள்ளையார் கோவில் குகையில் நுழைந்து வெளியே வழிபட்டு செல்கின்றனர்.</p><h2><strong>பக்தர் உயிரிழப்பு:</strong></h2><p>இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு ஆந்திராவை சேர்ந்த மணிக்குமார் (வயது 36) என்பவர் தனது குடும்பத்துடன் கிரிவலம் சென்றார். சுமார் 11 மணியளவில் இடுக்கு பிள்ளையார் கோவிலுக்கு மணிக்குமார் வந்தார். குகை வடிவத்தில் உள்ள கோவில் பகுதியில் படுத்தபடி நுழைந்தார். உடல் பருமன் அதிகம் என்பதால் குகையில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தார்.</p><p>பின்னர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினார். இதனை கண்ட சக பக்தர்கள் மயங்கி கிடந்தவரை போராடி வெளியே கொண்டு வந்தனர்.108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மணிக்குமார் வரும் வழியிலே இறந்துவிட்டதாக கூறினர். இதை கேட்ட மணிக்குமார் குடும்பத்தினர் கதறி அழுதனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.</p><h2><strong>கோயில் நிர்வாகம் அறிவிப்பு:</strong></h2><p>இந்நிலையில், திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலின் உட்கோயிலாக அமைந்துள்ள அருள்மிகு அருணகிரி இடுக்கு பிள்ளையார் (அரைஇடுக்கு முக்கூர்ணி பிள்ளையார்) கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு, கோயில் நிர்வாகம் சார்பில் முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.</p><p>பிரசித்தி பெற்ற இந்த இடுக்கு பிள்ளையார் கோயிலுக்குச் செல்லும் வழிப்பாதை மிகவும் குறுகிய அமைப்பைக் கொண்டதாகும். இதனால், அங்கு செல்லும் பக்தர்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கும் வகையிலும், அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, உடல்பருமன் உள்ளவர்கள், கடுமையான உடல்நலக்குறைவு உள்ளவர்கள், முதியவர்கள் மற்றும் சிறு குழந்தைகள் ஆகியோர் இடுக்கு பிள்ளையார் கோயிலின் குறுகலான வழிப்பாதைக்குள் சென்று வர அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>பக்தர்களின் பாதுகாப்பை மட்டுமே முதன்மையாகக் கொண்டு இந்த நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதால், சுவாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அனைவரும் கோயில் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பிற்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\</p>]]></content:encoded></item><item><title>கரூர் விவகாரத்திற்கு முதலமைச்சர் விஜய் வழங்கிய அரசுப்பணி ரத்து - உச்ச நீதிமன்றத்தை நாடும் தமிழ்நாடு அரசு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/government-job-granted-by-chief-minister-to-vijay-in-the-karur-case-cancelled-tamil-nadu-government-to-move-the-supreme-court</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/government-job-granted-by-chief-minister-to-vijay-in-the-karur-case-cancelled-tamil-nadu-government-to-move-the-supreme-court#comments</comments><guid isPermaLink="false">96b2f9f7-d2e6-43e5-9a40-4d3873361de1</guid><pubDate>Mon, 27 Jul 2026 13:10:35 +0000</pubDate><atom:updated>2026-07-27T13:10:35.929Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,Supreme Court,உச்ச நீதிமன்றம்,Government of Tamil Nadu,government jobs,அரசுப்பணி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/n666w22f/New-Project-2026-07-27T183729.488.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கரூர் விவகாரத்திற்கு முதலமைச்சர் விஜய் வழங்கிய அரசுப்பணி ரத்து - உச்ச நீதிமன்றத்தை நாடும் தமிழ்நாடு அரசு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/n666w22f/New-Project-2026-07-27T183729.488.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசுப்பணி ஆணையை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இன்று உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யவுள்ளது. </p><p>பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் வாதங்களை கேட்காமலேயே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும், இதனால் நாளையே மேல்முறையீடு செய்யப்போவதாகவும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். </p><h2>நீதிமன்றம் கூறியது என்ன?</h2><p>“உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கி ஏன் சுய தொழில் முனைவோராக மாற்றக்கூடாது. அரசு பணி வழங்குவதற்கு பதில் அது பயனுள்ளதாக இருக்கும். தமிழ்நாடு அரசு தரப்பில் சாதாரண பணி வழங்குவதாக கூறுவதை ஏற்க முடியாது. எந்த பணியும் சாதரண பணியல்ல. அது ஒவ்வொருவரின் குடும்பத்துக்கு உதவும் பணியே.</p><p>கருணை அடிப்படையில் வேலை கிடைக்க பலர் காத்திருக்க கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது ஏன்? சிவகாசி வெடிவிபத்தில், பேருந்து விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு அரசுப்பணி வழங்குவீர்களா? தினமும் சாலை விபத்தில் பலர் உயிரிழக்கின்றனர். அவர்களது குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படுமா? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-inspection-at-koyambedu-industrial-water-treatment-plant</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-inspection-at-koyambedu-industrial-water-treatment-plant#comments</comments><guid isPermaLink="false">6d629442-691c-4e87-abab-975642cda654</guid><pubDate>Mon, 27 Jul 2026 12:37:03 +0000</pubDate><atom:updated>2026-07-27T12:37:03.494Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Koyambedu,சுத்திகரிப்பு நிலையம்,cm vijay,முதலமைச்சர் விஜய்,tn cm vijay,கோயம்பேடு,RO plant</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/j0g4iqeh/Untitled-design-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay inspects reviews Chennai Sewage Plant]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/j0g4iqeh/Untitled-design-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கோயம்பேட்டில் செயல்பட்டு வரும் மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு செய்தார்.</p><p>தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்ற பின்பு சென்னை எழும்பூர் மகப்பேறு அரசு மருத்துவமனை, சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா சமூக நீதி மாணவர் விடுதி, சேத்துப்பட்டு எரிவாயு உற்பத்தி மையம் ஆகிய இடங்களில் திடீரென் ஆய்வு மேற்கொண்டார்.</p><p>நெம்மேலியில் உள்ள கடல்நீர் குடிநீராக்கும் பணி குறித்து முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டிந்தார்.</p><p>ஏற்கனவே நான்கு இடங்களில் ஆய்வு செய்த நிலையில், தற்போது தொழில்துறை தேவைக்கு வழங்கப்படும் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை நேரடியாக ஆய்வு செய்தார்.</p><p>இந்நிலையில் கோயம்பேட்டில் உள்ள சுத்திகரிப்பு ஆலையில், ஆய்வு பணியில் ஈடுபட்டபோது, நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.</p><p>இந்த சுத்திகரிப்பு ஆலையில் 45 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கொள்ளளவு செயல்பாட்டில் உள்ளது.</p><p>இங்கு சுத்திகரிக்கப்படும் நீரின் தரம் சரியான அளவில் இருப்பதால், அந்த நீரை கொண்டு வாகனங்கள் மற்றும் ரெயில் பெட்டிகள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள், திரையரங்குகள், உணவகங்கள் உள்ளிட்ட பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது உண்மையா, புரளியா?- தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-questions-claim-of-717-closed-tasmac-shops</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-questions-claim-of-717-closed-tasmac-shops#comments</comments><guid isPermaLink="false">69ebd9f7-8f47-4cc6-90b6-657091cf5527</guid><pubDate>Mon, 27 Jul 2026 12:34:31 +0000</pubDate><atom:updated>2026-07-27T12:34:31.366Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,டாஸ்மாக் கடைகள்,Tasmac,தவெக அரசு,TVK Govt</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/hkg4jg5n/Nainar.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nainar Nagendran]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/hkg4jg5n/Nainar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>“மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் முகவரிகள், RTI சட்டத்தின் கீழ் வெளியிடப்படவில்லை. உண்மையிலேயே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா? அல்லது எதையாவது செய்து மக்களிடம் நற்பெயர் வாங்க வேண்டுமென தவெக அரசே இந்த புரளியைக் கிளப்பியதா?” என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். </p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>"மூடப்பட்ட” டாஸ்மாக் கடைகளில் தொடரும் மர்மங்கள், வெள்ளையறிக்கை வெளியிடுமா தவெக அரசு?</p><p>"நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு 717 டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டோம்" என தம்பட்டம் அடித்துக் கொள்கிறது ஜோசப் விஜய் தலைமையிலான அரசு. ஆனால், மூடப்பட்ட கடைகளின் முகவரிகள், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இதுவரை வெளியிடப்படவில்லை.</p><p>“மூடப்பட்டதாக” கூறப்படும் கடைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனவா என்ற கேள்விக்கும், RTI- இடம் பதிலில்லை. விஜய் அவர்கள் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு புதிய டாஸ்மாக் கடைகள் ஏதேனும் திறக்கப்பட்டுள்ளனவா என்ற கேள்விக்கான பதிலையும் மென்று முழுங்குகிறது தற்போதைய அரசு. </p><p>மொத்தத்தில் மூடப்பட்டதாக கூறிய 717 டாஸ்மாக் கடைகள் பற்றி எது கேட்டாலும்,"அந்தந்த மாவட்ட மேலாளர் அலுவலகத்திற்கு அணுகவும்" என்றே ஒரே பதில் மட்டும் தான் RTI இடமிருந்து கிடைக்கிறது.</p><p>அந்தந்த மாவட்ட மேலாளரிடம் தரவுகள் இருக்குமாயின், அவற்றை சேகரித்து RTI மூலம் எளிதாக மக்கள் பார்வைக்கு வெளிப்படுத்துவதில் அரசுக்கு என்ன சிக்கல்? தவெக ஆட்சியில் இதுவரை மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் முழு விவரங்களையும், முகவரிகளையும், அங்கு பணிபுரிந்த ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட மாற்றுப் பணிகள் குறித்தும் வெள்ளையறிக்கை வெளியிட ஆளும் அரசு எதற்கு தயங்குகிறது?</p><p>உண்மையிலேயே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளனவா அல்லது ஆட்சிக்கு வந்த புதிதில் எதையாவது செய்து மக்களிடம் நற்பெயர் வாங்க வேண்டுமென தவெக அரசே இந்த புரளியைக் கிளப்பியதா? உள்ளிட்ட மக்களின் கேள்விகளுக்கு முதல்வர் உடனடியாக பதிலளிக்க வேண்டும்! வெட்டி வசனமும், வீண் விளம்பரமும் இனி கதைக்காகாது.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு CPI வலியுறுத்தல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cpi-urges-immediate-approval-for-coimbatore-madurai-metro-projects</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cpi-urges-immediate-approval-for-coimbatore-madurai-metro-projects#comments</comments><guid isPermaLink="false">6e6d268e-444f-4814-8972-4c1dc30f58bc</guid><pubDate>Mon, 27 Jul 2026 12:34:28 +0000</pubDate><atom:updated>2026-07-27T12:34:28.605Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>coimbatore metro train,Madurai Metro,மதுரை மெட்ரோ,CPI Veerapandiyan,கோயம்புத்தூர் மெட்ரோ,CPI வீரபாண்டியன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/4ptxrj2s/veerapandian.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CPI  Veerapandiyan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/4ptxrj2s/veerapandian.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கைகளை (DPR), போதுமான மக்கள் தொகை இல்லை மற்றும் பயண நேரம் குறைய வாய்ப்பில்லை எனக் கூறி ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் மீண்டும் நிராகரித்துத் திருப்பி அனுப்பியுள்ளது.</p><p>ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, இரு நகரங்களின் வேகமான வளர்ச்சி மற்றும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு திட்டங்களுக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. </p><h2><strong>கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை:</strong></h2><p>மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்தும் அளவிற்கு மக்கள் தொகை இல்லை என்று கூறி மதுரை ,கோவை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு ஒன்றிய அரசு மீண்டும் அனுமதி தர மறுத்துள்ளது.</p><p>2017 மெட்ரோ ரெயில் கொள்கையின் குறைந்தபட்ச விதிமுறையான 20 லட்சம் மக்கள் தொகை இருக்கவேண்டும் என்பதை காரணமாக சுட்டிக் காட்டி, சுமார் 15.8 லட்சம் மக்கள் தொகை கொண்ட கோயம்புத்தூர், சுமார் 15 லட்சம் மக்கள் தொகை கொண்ட மதுரை&nbsp;ஆகியவற்றுக்கான மெட்ரோ திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துள்ளது.</p><h2><strong>மாற்றாந்தாய் மனப்பான்மை:</strong></h2><p>ஆனால், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், ஏறக்குறைய கோவை மற்றும் மதுரைக்கு சமமான&nbsp;மக்கள் தொகையைக் கொண்ட ஆக்ரா,போபால்,பாட்னா போன்ற வட இந்திய நகரங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. </p><p>தமிழகத்தில் உள்ள இரண்டு முக்கிய நகரங்களுக்கு இந்த அனுமதி மறுத்திருப்பது என்பது ஒன்றிய அரசின் பாரபட்ச போக்காகும். இது கடும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டுக்கு எதிரான இத்தகைய போக்கை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.</p><p>உடனடியாக கோவை,மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என ,ஒன்றிய பாஜக அரசை&nbsp;&nbsp;இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு&nbsp;வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</p><p>தமிழக அரசு இத்திட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தி மீண்டும் விண்ணப்பித்துள்ள நிலையில், ஒன்றிய அரசு எவ்வித அரசியலும் செய்யாமல் கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகள் தரப்பில் இருந்தும் கோரிக்கை வலுத்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>விண்வெளி குப்பைகளைக் கண்காணிக்க சீனாவின் புதிய &apos;கண்டே&apos; செயற்கைக்கோள் நெட்வொர்க்!</title><link>https://www.maalaimalar.com/news/world/china-new-kande-satellite-network-to-track-space-debris</link><comments>https://www.maalaimalar.com/news/world/china-new-kande-satellite-network-to-track-space-debris#comments</comments><guid isPermaLink="false">811e6774-ebd6-4a6b-9aa6-4eda14422d2b</guid><pubDate>Mon, 27 Jul 2026 12:29:28 +0000</pubDate><atom:updated>2026-07-27T12:29:28.734Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ChinaSpace,SpaceDebris,விண்வெளிக்குப்பைகள்,GandeConstellation,Lijian1,Tiangong,SpaceExploration</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/zwtola3b/ChinaSpaceDebris" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ChinaSpaceDebris ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/zwtola3b/ChinaSpaceDebris?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விண்வெளியில் அதிகரித்து வரும் ஆபத்தான குப்பைகளைக் கண்காணித்து விண்கலன்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சீனா தனது முதல் வணிக ரீதியிலான 'கண்டே' செயற்கைகோள் நெட் வொர்க் திட்டத்தை தொடங்கியுள்ளது. </p><p>இதற்கான முதல் செயற்கைகோள், வடமேற்கு சீனாவிலிருந்து 'லிஜியான்-1' என்ற வணிக ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.</p><h2><strong>கண்டே திட்டத்தின் முக்கியப் பின்னணி</strong></h2><p>கண்டே திட்டம் என்பது சீனாவின் விண்வெளிப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு முக்கியமான விண்வெளிக் கண்காணிப்பு வலையமைப்பாகும்.</p><p>விண்வெளியில் அதிவேகமாகச் சுற்றி வரும் ஆபத்தான விண்வெளிக் குப்பைகளைக் கண்காணிப்பதும், புவியின் அனைத்து வகையான வட்டப்பாதைகளிலும் உள்ள விண்கலன்கள் மற்றும் இலக்குகளைத் துல்லியமாகக் கண்டறிந்து கண்காணிப்பதுமே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.</p><p>குறிப்பாக, சீனா வேகமாக ஏவி வரும் வணிகரீதியான பெரும் செயற்கைக்கோள் கூட்டங்கள் விண்வெளிக் குப்பைகளுடன் மோதி சேதமடையாமல் தடுத்து, ஒட்டுமொத்த விண்வெளிப் பயண விபத்துகளைத் தவிர்த்துப் பாதுகாப்பதில் இத்திட்டம் ஒரு முக்கியப் பின்னணியாகச் செயல்படுகிறது. </p><p>இந்த நெட்வொர்க் சீனாவின் விண்வெளிப் போக்குவரத்து மேலாண்மையை மேம்படுத்துகிறது.</p><h2><strong>செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தும் உத்திகள்</strong></h2><p>'கண்டே' திட்டத்தின் செயற்கைகோள் நிலைநிறுத்தும் உத்திகள் படி, ஒட்டுமொத்தமாக 120 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த சீனா இலக்கு நிர்ணயித்துள்ளது. </p><p>இந்த முழு நெட்வொர்க்கும் வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் மூன்று முக்கிய கட்டங்களாக விண்வெளியில் முழுமையாக நிலைநிறுத்தப்பட உள்ளது. இதன் முதற்கட்டத்தில் (LX630), 14 செயற்கைக்கோள்கள் மட்டும் முதலில் அனுப்பப்பட்டு, அவை பூமியின் கீழ் வட்டப்பாதையில் உள்ள விண்வெளிப் பொருட்கள் மற்றும் குப்பைகளை முழுமையாகக் கண்காணித்துப் பட்டியலிடும் பணியைச் செய்யும். </p><p>சீனாவின் வணிக விண்வெளித் துறையில் விண்வெளிக் குப்பைகளைக் கண்காணிப்பதற்கான பிரத்யேக வசதி இதுவரை இல்லாமல் இருந்த பெரிய குறையை இத்திட்டம் முழுமையாக நிவர்த்தி செய்கிறது என்றும், இது ஒரு முக்கிய மைல்கல் என்றும் இதன் தலைமைப் பொறியாளர் ஃபான் வெய் தெரிவித்துள்ளார்.</p><h2><strong>அதிநவீன தொழில்நுட்பப் புரட்சி</strong></h2><p>'கண்டே' திட்டத்தின் அதிநவீன தொழில்நுட்பப் புரட்சி படி, விண்ணில் செலுத்தப்பட்டுள்ள இதன் முதல் செயற்கைக்கோளில் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் இயங்கும் ஏஐ கணினி பொருத்தப்பட்டுள்ளது. </p><p>இந்த ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம், பூமியிலிருந்து தரைக்கட்டுப்பாடு மையத்தின் தலையீடு மிகக் குறைவாக இருந்தாலும், செயற்கைகோள் தனது சுயக் கட்டுப்பாட்டுடன் தானாகவே வழக்கமான கண்காணிப்பு, அவசரக்கால நடவடிக்கைகள் மற்றும் அதிவேகத் தேடுதல் பணிகளைச் செய்யும் திறன் பெற்றுள்ளது. </p><p>மேலும் விண்வெளிக் குப்பைகளை மிக அருகில் சென்று உற்று நோக்குவதற்கும், பிற விண்வெளிச் செயல்பாடுகளுக்கும் தகுந்தபடி தனது வட்டப்பாதையைத் தானே மாற்றிக் கொள்ளும் பாதை மாறும் திறனும் இந்த அதிநவீன செயற்கைக்கோள்களில் உள்ளடக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>விண்வெளிக் குப்பைகளால் சீனா சந்தித்த ஆபத்துகள்</strong></h2><p>விண்வெளிக் குப்பைகளால் சீனா சந்தித்த ஆபத்துகள் காரணமாகவே தற்போதைய பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. </p><p>அண்மையக் காலங்களில் சீனா தனது விண்வெளிப் பயணங்களில் குப்பைகளால் பெரும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளது. </p><p>குறிப்பாக, ஷென்சோ-20 விண்கலத்தின் திரும்பும் காப்ஸ்யூல் பகுதியில் உள்ள ஜன்னல் விண்வெளிக் குப்பைகளால் தாக்கப்பட்டது, இதனால் விண்வெளி வீரர்கள் திட்டமிட்ட நேரத்தை விடக் கூடுதல் காலம் 'தியாங்காங்' விண்வெளி நிலையத்திலேயே தங்க வேண்டியதாயிற்று. </p><p>அதேபோல், கடந்த 2024 இல் ஷென்சோ-17 பயணத்தின்போது விண்வெளிக் குப்பைகள் மோதியதால் விண்வெளி நிலையத்தின் மையப் பகுதியில் இருந்த சோலார் பேனல்கள் பழுதடைந்தன, இதனைப் பழுதுபார்க்க விண்வெளி வீரர்கள் விண்கலத்திற்கு வெளியே வந்து இரண்டு முறை விண்வெளி நடைபயணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>Video: வெல்லம் ஊட்டிய ஆட்டோ ஓட்டுனரை மிதித்து கொன்ற யானை - பாகன் மீது வழக்கு!</title><link>https://www.maalaimalar.com/news/national/auto-driver-killed-by-elephant-in-indore-after-feeding-jaggery</link><comments>https://www.maalaimalar.com/news/national/auto-driver-killed-by-elephant-in-indore-after-feeding-jaggery#comments</comments><guid isPermaLink="false">1296eff4-f240-489e-892f-74dc9ebaa986</guid><pubDate>Mon, 27 Jul 2026 12:28:24 +0000</pubDate><atom:updated>2026-07-27T12:28:24.224Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>indore,CCTVFootage,ElephantAttack,யானைதாக்குதல்,TragicIncident,BNSAct,PublicSafety</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/uk4nsixk/ElephantAttack" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ElephantAttack ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/uk4nsixk/ElephantAttack?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், சாலையில் நின்றிருந்த யானை ஒன்றுக்கு அன்போடு வெல்லம் ஊட்ட முயன்ற ஆட்டோ ஓட்டுநர், அந்த யானையால் கொடூரமாக மிதித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>கடந்த சனிக்கிழமை நகரின் ராஜ் நகர் காவல் நிலையத்திற்கு நேர் எதிரே அரங்கேறிய இந்த நெஞ்சை உலுக்கும் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.</p><h2><strong>வெல்லம் ஊட்டியதால் ஆபத்து</strong></h2><p>இறந்துபோன நபர் இந்தூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் விஜய் ஹோல்கர் (49) என அடையாளம் காணப்பட்டுள்ளார். சனிக்கிழமையன்று சாலையில் யானை நிற்பதைக் கண்ட அவர், அதற்கு ஏதேனும் உணவளிக்க விரும்பியுள்ளார். </p><p>அதன்படி, கையில் வெல்லக் கட்டிகளுடன் யானையின் அருகில் சென்று அதை ஊட்ட முயன்றுள்ளார். ஆனால், எதிர்பாராதவிதமாக அந்த யானை திடீரென கோபமடைந்து, தனது தும்பிக்கையால் விஜய் ஹோல்கரை பலமாகத் தள்ளி கீழே வீழ்த்தியது.</p><h2><strong>பாகனின் அஜாக்கிரதை</strong></h2><p>விஜய் ஹோல்கர் கீழே விழுந்ததைக் கண்டு பதற்றமடைந்த யானையின் பாகன் உமேஷ் கோஸ்வாமி, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர நினைத்தார். </p><p>ஆனால், அவர் கையாண்ட விதம் நிலைமையை மேலும் மோசமாக்கியது. யானையைத் அமைதிப்படுத்துவதற்குப் பதிலாக, தனது கையில் இருந்த தடியால் யானையின் தலைப்பகுதியில் பலமாக அடித்தார். </p><p>பாகன் அடித்த அடியில் ஏற்பட்ட வலியால் நிலைதடுமாறிய அந்த யானை, முற்றிலும் தனது கட்டுப்பாட்டை இழந்து ஆக்ரோஷத்தின் உச்சத்துக்கே சென்றது.</p><h2><strong>தும்பிக்கையால் வீச்சு</strong></h2><p>கட்டுப்பாட்டை இழந்த யானை, கீழே விழுந்து தவித்துக் கொண்டிருந்த விஜய் ஹோல்கரை மீண்டும் தனது தும்பிக்கையால் சுருட்டி காற்றில் தூக்கி வீசியது. </p><p>அத்துடன் நிறுத்தாமல், கீழே விழுந்த அவரது வயிற்றுப் பகுதியின் மீது தனது கால்களால் பலமாக மிதித்துத் துவைத்தது. அங்கிருந்தவர்கள் அலறியடித்தபடி ஓடிவந்து, பெரும் போராட்டத்திற்குப் பிறகு அவரை மீட்டனர்.</p><h2><strong>சிகிச்சை பலனின்றி மரணம்</strong></h2><p>கடுமையான காயங்களுடன் கிடந்த விஜய் ஹோல்கர் உடனடியாக அருகில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். </p><p>அங்கு அவருக்கு முதலுதவி வழங்கப்பட்ட போதிலும், நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால் உடனடியாக ஒரு தனியார் மருத்துவமனைக்கு அவசரப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். </p><p>அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி விஜய் ஹோல்கர் பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p>யானையின் மிதியால் அவரது உடலின் முக்கிய உட்புற உறுப்புகள் கடுமையாகச் சிதைந்து, கடுமையான காயங்கள் ஏற்பட்டதே மரணத்திற்குக் காரணம் என்று பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர் .</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/MlskmA4WdTk"></iframe></figure><h2><strong>காவல்துறை விசாரணை மற்றும் வழக்குப்பதிவு</strong></h2><p>போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சில ஆன்மீகத் துறவிகள் தங்களது சமூக நிகழ்ச்சி ஒன்றிற்காக இந்த யானையை நகருக்குள் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. </p><p>அந்த யானையை நகரின் பல்வேறு தெருக்களுக்குக் கூட்டிச் சென்று, மக்களிடம் யாசகம் பெற வைத்துள்ளனர்.</p><p>பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகன நெரிசல் மிகுந்த நகர்ப்புற பகுதிக்கு யானையை அழைத்து வருவதற்கு முன்பாக, வனத்துறையிடமிருந்து முறையான அனுமதி பெறப்பட்டதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். </p><p>இதற்கிடையில், யானையைச் சரியாகப் பராமரிக்காமல் அஜாக்கிரதையாகச் செயல்பட்டு ஒருவரின் மரணத்திற்குக் காரணமான பாகன் உமேஷ் கோஸ்வாமி மீது காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவுகள் 106 மற்றும் 291 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வைபவ் சூர்யவன்ஷி இதை கண்டிப்பாக செய்யனும்: லக்ஷ்மண் அட்வைஸ்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/vvs-laxman-urges-vaibhav-sooryavanshi-to-improve-fitness-after-first-player-of-the-series-win</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/vvs-laxman-urges-vaibhav-sooryavanshi-to-improve-fitness-after-first-player-of-the-series-win#comments</comments><guid isPermaLink="false">f5f1260e-53eb-46b4-9417-d7fd2b2d7309</guid><pubDate>Mon, 27 Jul 2026 12:18:32 +0000</pubDate><atom:updated>2026-07-27T12:18:32.879Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>வைபவ் சூர்யவன்ஷி,vvs laxman,விவிஎஸ் லக்ஷ்மண்,Vaibhav Sooryavanshi,INDvsZIM</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/d6oz5e41/Sooryavanshi0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sooryavanshi and Laxman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/d6oz5e41/Sooryavanshi0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய டி20 அணியில் 15 வயதேயான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இடம் பிடித்துள்ளார். அயர்லாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு  எதிரான தொடரில் அயர்லாந்துக்கு எதிராக களம் இறக்கப்படவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகளில் 4 போட்டிகள் முழுமையாக நடைபெற்றன. ஒரு போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.</p><h2>ஜிம்பாப்வே தொடரில் தொடர் நாயகன்</h2><p>4 போட்டிகளிலும் இரண்டு போட்டிகளில் வைபவ் சூர்யவன்ஷி இடம் பெற்றார். ஆனால் சரியாக விளையாடவில்லை. <a href="https://www.maalaimalar.com/sports/india-whitewashes-zimbabwe-on-home-soil-back-to-the-top-spot-in-t20-rankings">ஜிம்பாப்வே</a> அணிக்கெதிராக 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடினார். இதில் இரண்டு அரைசதங்களுடன் 151 ரன்கள் குவித்தார். 3-வது போட்டியில் 81 ரன்கள் விளாசினார். அத்துடன் தொடர் நாயகன் விருதை கைப்பற்றி அசத்தினார்.</p><p>முதல் போட்டியில் 19 பந்தில் தலா 4 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 50 ரன்கள் அடித்தார். 2-வது போட்டியில் 9 பந்தில் 3 பவுண்டரி, 1 சிக்சருடன் 20 ரன்கள் சேர்த்தார். கடைசி போட்டியில் 49 பந்தில் 8 பவுண்டரி, 4 சிக்சருடன் 81 ரன்கள் விளாசினார்.</p><p>கடைசி போட்டியில் கேட்ச் பிடிக்க சென்றபோது, சூர்யவன்ஷிக்கு காயம் ஏற்பட்டது. இந்த தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக வி.வி.எஸ். லக்ஷ்மண் இருந்தார்.</p><h2>லக்ஷ்மண் அட்வைஸ்</h2><p>வைபவ் சூர்யவன்ஷி ஒட்டுமொத்தமாக உடற்தகுதியில் மேம்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக லக்ஷ்மண் கூறியதாவது:-</p><p>வைபவ் சூர்யவன்ஷி மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்பும் ஒரு விஷயம் அவரது ஒட்டுமொத்த உடற்தகுதிதான். வைபவ் சூர்யவன்ஷி மிகவும் இளம் வயதுடையவர். விளையாட்டின் அனைத்து அம்சங்களிலும் தன்னை மேம்படுத்திக்கொள்ள அவரே விரும்புகிறார். டீப் ஸ்கொயர் லெக் (deep square leg) பகுதியிலிருந்து ஓடிவந்து டைவிங் கேட்ச் (diving catch) பிடிக்க முயன்றபோது அவருக்கு காயம் ஏற்பட்ட நிலையிலும், அவர் தொடர்ந்து களத்தில் இருக்கவே விரும்பினார்.</p><p>எங்கள் பிசியோதான் அவரை வெளியே வருமாறு கேட்டுக்கொண்டார். அணியின் நலனுக்காக முடிந்த வழிகளிலெல்லாம் பங்களிக்க வேண்டும் என்பதில் அவருக்கு இருக்கும் ஆர்வமும் தீவிரமும் அத்தகையது.</p><h2>ராஜஸ்தான் ராயல்ஸ்</h2><p>கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அவர் முதன்முறையாக விளையாடியபோதே, நெருக்கடியை அவர் கையாண்ட விதம் ஈர்க்கக்கூடியதாக இருந்தது. எந்தவொரு ஐபிஎல் போட்டியும் ஒரு சர்வதேச போட்டிக்கு இணையானது என்றே நான் கருதுகிறேன். 14 அல்லது 15 வயதில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும்போது, ​​அந்த சூழலை கண்டு மலைத்துப்போகவோ அல்லது அந்த நெருக்கடியை ஏற்றுக்கொண்டு செயல்படவோ வாய்ப்புள்ளது. அவர் இரண்டாவது வழியையே தேர்ந்தெடுத்தார் என்று நான் நினைக்கிறேன்.</p><h2>சர்வதேச அளவில் அனைத்து சாதனைகளையும் முறியடிப்பார்</h2><p>ஆகவே, இந்தத் தொடர் சென்ற விதம் எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை. சதம் அடிக்காதது அவருக்கு ஏமாற்றமாக இருந்தது. ஆனால் இது அவருக்கு கிடைக்கும் முதல் அல்லது கடைசி வாய்ப்பாக இருக்காது என்று நாங்கள் அவரிடம் கூறியிருந்தோம். அவருக்கு முன்னால் ஒரு நீண்ட கிரிக்கெட் வாழ்க்கை இருக்கிறது. மேலும் ஒவ்வொரு நாளும் தன்னை மேம்படுத்திக் கொள்வதற்கான மனப்பான்மையும் மனநிலையும் அவரிடம் உள்ளது. அவர் முன்னேறி, சர்வதேச அளவில் அனைத்து சாதனைகளையும் முறியடிப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அதைச் செய்வதற்கான அனைத்து ஆற்றலும் திறமையும் அவரிடம் உள்ளது.</p><p>இவ்வாறு லக்ஷ்மண் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசுப்பணி ரத்து!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/government-jobs-granted-to-the-families-of-those-who-died-in-the-karur-stampede-have-been-cancelled</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/government-jobs-granted-to-the-families-of-those-who-died-in-the-karur-stampede-have-been-cancelled#comments</comments><guid isPermaLink="false">5ee8aa82-9606-4abd-a1a8-1fb1f3cd6af1</guid><pubDate>Mon, 27 Jul 2026 12:10:16 +0000</pubDate><atom:updated>2026-07-27T12:10:16.726Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உயர் நீதிமன்ற மதுரைக்கிளை,கரூர்,Karur,Madurai Bench of the High Court,கரூர் கூட்ட நெரிசல்  வழக்கு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/hozfbunj/New-Project-2026-07-27T173947.313.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசுப்பணி ரத்து!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/hozfbunj/New-Project-2026-07-27T173947.313.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் தவெகவின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது விஜய்யை காண ஒரேநேரத்தில் அதிகளவிலான மக்கள் திரண்டதால்  கூட்டநெரிசல் ஏற்பட்டு, அதில் சிக்கி பிஞ்சு குழந்தை உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். </p><p>இச்சம்பவம் அப்போது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவுசெய்யப்பட்டு, தற்போது சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. </p><p>இந்நிலையில் கடந்த 10ம் தேதியன்று கரூருக்கு சென்ற முதலமைச்சர் விஜய், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு பணிக்கான நியமன ஆணையை வழங்கினார். தகுதியுடைய 31 பேருக்கு அரசுப்பணியும், ஒருவருக்கு ரூ.10 லட்சம் பணமும் வழங்கினார். </p><p>இந்த பணி நியமன ஆணைகளுக்கு பெரும் கண்டனங்களும், விமர்சனங்களும் எழுந்தன. ஒருதரப்பினர் இதனை ஆதரிக்கவும் செய்தனர். இந்நிலையில் இந்த பணி வழங்கலை எதிர்த்து நாதக மற்றும் மஜக தரப்பு நிர்வாகிகள் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். </p><p>இந்தமனு விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியது செல்லாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>தினந்தோறும் சாலை விபத்தில், பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலர் உயிரிழக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் அரசு வேலை வழங்க முடியுமா? என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. </p><p>சாதாரண அரசு வேலையே வழங்கப்பட்டதாக அரசுத்தரப்பு வைத்த வாதத்திற்கு, “எந்தப் பணியும் சாதாரணம் அல்ல; ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் உதவும் பணியே” என்றும் நீதிபதிகள் பதில் அளித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>கருவின் பாலினம் அறிவித்த வழக்கு: யூடியூபர் இர்ஃபானை மீண்டும் விசாரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/case-on-fetal-gender-reveal-health-officials-to-requestion-youtuber-irfan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/case-on-fetal-gender-reveal-health-officials-to-requestion-youtuber-irfan#comments</comments><guid isPermaLink="false">60ae3c81-0ad6-4bec-bc80-7501ecbab3bb</guid><pubDate>Mon, 27 Jul 2026 12:08:03 +0000</pubDate><atom:updated>2026-07-27T12:08:03.856Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Youtuber Irfan,தமிழக சுகாதாரத்துறை,யூடியூபர் இர்ஃபான்,Tamil Nadu health department,PCPNDT Act,பாலினத் தேர்வு தடை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/7649lds1/irfan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ YouTuber Irfan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/7649lds1/irfan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரபல யூடியூபரும் உணவு விமர்சகருமான இர்ஃபான் மீது ஏற்கனவே பதிவான மருத்துவ விதிமீறல் புகார்கள் தொடர்பான விவகாரத்தில், அவரை மீண்டும் நேரில் வரவழைத்து தீவிர விசாரணை நடத்த தமிழக மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.</p><h2><strong>தொப்புள் கொடி அறுவை சிகிச்சை சர்ச்சை:</strong></h2><p>தனக்குக் குழந்தை பிறந்தபோது, சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அரங்கிற்குள் சென்று, தனது குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் சுயமாகக் கத்தரித்து அதனை வீடியோவாகச் சமூக வலைதளங்களில் பதிவிட்டார். மருத்துவப் பயிற்சி பெறாத ஒருவர் அறுவை சிகிச்சை அரங்கிற்குள் நுழைந்து மருத்துவ நடைமுறையைச் செய்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.</p><h2><strong>மருத்துவமனை மீது நடவடிக்கை:</strong></h2><p>இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையின் உரிமத்தை 10 நாட்களுக்குத் தற்காலிகமாக ரத்து செய்த சுகாதாரத்துறை, ரூ.50,000 அபராதமும் விதித்து நடவடிக்கை எடுத்தது.</p><h2><strong>கருவின் பாலினம் அறிவித்த வழக்கு:</strong></h2><p>இதற்கு முன்பாகவும், வெளிநாட்டில் தனது மனைவிக்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனை மூலம் பிறந்த குழந்தையின் பாலினத்தை அறிந்து, அதை வீடியோவாக வெளியிட்டு பாலினத் தேர்வு தடைச் சட்டத்தை (PCPNDT Act) மீறியதாக இர்ஃபான் மீது புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.</p><p>கடந்த திமுக ஆட்சியில் வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்டதால் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து அடுத்தடுத்து மருத்துவத்துறை விதிகளை மீறிச் செயல்பட்டது குறித்தும், இது தொடர்பான வழக்குகள் மற்றும் விளக்கங்கள் குறித்தும் விரிவாக விசாரணை நடத்தவே யூடியூபர் இர்பான் பைலை  மீண்டும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு  எடுத்துள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>சிவகாசி பட்டாசு ஆலை விபத்து- பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/sivakasi-fireworks-factory-accident-death-toll-rises-to-5</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/sivakasi-fireworks-factory-accident-death-toll-rises-to-5#comments</comments><guid isPermaLink="false">3276549d-b9a2-42b7-a950-8795cc512145</guid><pubDate>Mon, 27 Jul 2026 11:55:37 +0000</pubDate><atom:updated>2026-07-27T11:55:37.363Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sivakasi,பலி எண்ணிக்கை உயர்வு,பட்டாசு விபத்து,Firecrackers Explosion,சிவகாசி பட்டாசு ஆலை,Death rate raise</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/2alrq4ga/sivakasi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ fireworks blast in sivakasi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/2alrq4ga/sivakasi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் ராம் பிரகாஷ் என்பவர் தனது இடத்தில் தகரசெட் அமைத்து சட்ட விரோதமாக பட்டாசுகள் தயாரித்து வந்தார். </p><p>இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று அங்கு 5 தொழிலாளர்கள் பணியில் இருந்துள்ளனர். </p><h2>வெடி விபத்து</h2><p>அப்போது திடீரென எதிர்பாராத விதமாக பலத்த சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறத் தொடங்கியது. இதில் அந்த பட்டாசு தயாரிக்க அமைக்கப்பட்டிருந்த தகர செட்டுகள் முழுவதும் வெடித்து சிதறி தரைமட்டமானது.</p><p>இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உரிமையாளர் ராம் பிரகாஷ் (வயது 32), மீனம்பட்டியை சேர்ந்த இன்னாசி முத்து (42) ஆகியோர் உடல் கருகிய நிலையில் உயிரிழந்தனர். </p><p>இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த சிவகாசி தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும், அங்கு பணிபுரிந்த மூன்று தொழிலாளர்களை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர். இதில் ராமச் சந்திரன் என்பவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். </p><h2>5 பேர் பலி</h2><p>மேலும் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த அய்யப்ப ராஜா (38), பாண்டித்துரை (35) ஆகிய இரண்டு பேரை</p><p>யும் தேடும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரங்களுக்கு பின்பு அவரது உடல்கள் சிதறிய நிலையில் உடல் பாகங்கள் மீட்கப்பட்டது. இதனால் 4 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது.</p><p>மேலும், விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராமச்சந்திரன் என்பவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதன் மூலம் பட்டாசு ஆலை விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>உலகெங்கிலும் இருந்து வந்த 2,500 வாழ்த்து அட்டைகள்: அன்பு மழையில் நனைந்த ‘பஞ்ச்’!</title><link>https://www.maalaimalar.com/news/world/2500-greeting-cards-from-across-the-globe-punch-drenched-in-a-shower-of-love</link><comments>https://www.maalaimalar.com/news/world/2500-greeting-cards-from-across-the-globe-punch-drenched-in-a-shower-of-love#comments</comments><guid isPermaLink="false">a95092c1-9a50-42f0-8f45-296efeb809a1</guid><pubDate>Mon, 27 Jul 2026 11:50:56 +0000</pubDate><atom:updated>2026-07-27T11:50:56.387Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>japan,ஜப்பான்,Birthday,பிறந்தநாள்,monkey Punch,பஞ்ச் குரங்கு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/g6jna4cr/New-Project-2026-07-27T162607.455.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உலகெங்கிலும் இருந்து வந்த 2,500 வாழ்த்து அட்டைகள்: அன்பு மழையில் நனைந்த ‘பஞ்ச்’!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/g6jna4cr/New-Project-2026-07-27T162607.455.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மனிதர்கள் சிலநேரம் தனிமையை விரும்புவார்கள் அல்லது தனிமை அவர்களுக்கு பரிசளிக்கப்படும். தானாக தனிமையை விரும்புவது என்பது வேறு. ஆனால் அது பரிசளிக்கம்படும்போது சொல்லொண்ணா துயரம் ஆட்கொள்ளும்.</p><p>அப்படி தனிமைப்படுத்தப்பட்டு, மனதை உருக்கும் தன்னுடைய கதையால் உலகம் முழுவதும் பிரபலமாகி, போதும் போதும் என்ற அளவிற்கும் அன்பை பெற்றதுதான் பஞ்ச் குரங்கு. </p><p>இந்நிலையில் நேற்று பஞ்ச் தனது முதல் பிறந்தநாளை கொண்டாடியது. அதற்கு உலகம் முழுவதிலிருந்து வாழ்த்துக்கள் வந்து குவிந்துள்ளன.</p><p>ஜப்பானுக்கு உள்ளேயும், வெளியேயும் இருந்து சுமார் 2,500 பிறந்தநாள் வாழ்த்து அட்டைகளை பஞ்ச் பெற்றுள்ளதாக மிருகக்காட்சிசாலையின் தலைவர் தகாஷி யசுனாகா கூறியுள்ளார். </p><h2>பஞ்ச் </h2><p>ஜப்பான் நாட்டின் சிபா மாகாணத்தில் உள்ள இச்சிகாவா நகர மிருகக்காட்சி சாலையில் 2025ஆம் ஆண்டு ஜூலை 26 அன்று பஞ்ச் பிறந்தது. </p><p>கோடைக்கால வெப்பம், முதல் குழந்தை, சோர்வு என பல காரணங்களால் பஞ்சின் தாய் அதனை கைவிட்டது. தாயன்பு கிடைக்காமல் ஏங்கிய பஞ்ச், கடுமையான தனிமையிலும் மன உளைச்சலிலும் வாடியது. </p><p>மேலும் அங்கிருந்த மற்றக் குரங்குகளும் பஞ்சை தங்களுடன் சேர்த்துக்கொள்ளாமல் ஒதுக்கின. இதனால் மிருகக்காட்சி சாலையின் ஊழியர்கள் ஆரஞ்சு நிற ஒராங்குட்டான் பஞ்சுப் பொம்மை ஒன்றை பஞ்சிற்கு கொடுத்துள்ளனர். </p><p>எங்கு சென்றாலும் அந்தப் பெரிய பொம்மையைத் தன் சிறிய கைகளால் கட்டிப்பிடித்து பஞ்ச் இழுத்துச் சென்றது. உறங்கும் போதும், பயப்படும் போதும் அந்தப் பொம்மையின் நெஞ்சில் முகத்தைப் புதைத்து ஆறுதல் தேடிக்கொண்டது. </p><p>இதுதொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும், காட்சிகளுமே இணையத்தை உலுக்கின.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/f4pko1su/New-Project-2026-07-27T170740.531.jpg" /></figure><p>பின்னர் பூங்கா ஊழியர்களின் தொடர் பராமரிப்பால், பஞ்ச் படிப்படியாகப் பொம்மையைச் சார்ந்திருப்பதைக் குறைத்துக் கொண்டு, மற்ற குரங்குகளுடன் விளையாடவும், இருக்கவும் பழகிகொண்டது. இதனையும் பூங்கா நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு தெரியப்படுத்தியிருந்தது. </p><h2>முதல் பிறந்தநாள்</h2><p>இந்நிலையில் பஞ்ச் நேற்று தனது முதல் பிறந்தநாளை கொண்டாடியது. அதற்கு உலகம் முழுவதிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்துள்ளன. அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து 2,500-க்கும் மேற்பட்ட வாழ்த்து அட்டைகள் பூங்காவிற்கு வந்துள்ளன. பூங்கா நிர்வாகம் இந்த வாழ்த்து அட்டைகளை ஒரு தனி அறையில் மக்கள் பார்வைக்காகக் காட்சிப்படுத்தியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் போட்டி: ஷிர்சே, ஸ்ரீஷங்கர், லோகேஷ் சத்யநாதன் இறுதி சுற்றுக்கு முன்னேற்றம்</title><link>https://www.maalaimalar.com/sports/glasgow-commonwealth-games-shirse-shrishankar-reached-final</link><comments>https://www.maalaimalar.com/sports/glasgow-commonwealth-games-shirse-shrishankar-reached-final#comments</comments><guid isPermaLink="false">ae0aa39c-b9a8-4281-9266-8714558183cc</guid><pubDate>Mon, 27 Jul 2026 11:36:47 +0000</pubDate><atom:updated>2026-07-27T11:36:47.770Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Commonwealth games,Glasgow,கிளாஸ்கோ,Shirse,ஷிர்சே</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/x6o3i0kz/Shirse0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இந்திய வீரர் ஷிர்சே]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/x6o3i0kz/Shirse0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஸ்காட்லாந்து கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று மதியம் ஆண்களுக்கான 100மீ தடைகள் தாண்டி ஓட்டம் (110M HURDLES) தகுதிச் சுற்று நடைபெற்றது.</p><h2>அஷோக் ஷிர்சே</h2><p>இதில் ஹீட் 1-ல் இந்திய வீரர் தேஜாஷ் அஷோக் ஷிர்சே கலந்து கொண்டார். இவர் பந்தைய தூரத்தை 13.76 விநாடிகளில் கடந்து 3-வது இடத்தை பிடித்தார். இந்த பிரிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் வீரர்கள் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறுவார்கள் என்பதால் இவர் தகுதி பெற்றார்.</p><p>இங்கிலாந்து வீரர் சாமுவேல் பென்னெட் 13.20 விநாடிகளில் கடந்து முதல் இடம் பிடித்தார். ஜமைக்கா வீரர் ஜெரோம் கேம்ப்பெல் 13.33 விநாடிகளில் கடந்து 2-வது இடம் பிடித்தார். இந்திய வீரர் ஷிர்சே மொத்தமாக 7-வது இடத்தை பிடித்தார்.</p><p>இறுதிச் சுற்று இந்திய நேரப்படி நாளை அதிகாலை 2.15 மணிக்கு நடக்கிறது.</p><h2>நீளம் தாண்டுதல்</h2><p>நீளம் தாண்டுதல் போட்டிக்கான தகுதிச் சுற்று நடைபெற்றது. இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீஷங்கர் குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்திருந்தார். இவருடன் மொத்தம் 10 பேர் பங்கேற்றனர். இதில் ஸ்ரீஷங்கர் 8.01 மீட்டர் தாண்டி முதலிடம் பிடித்தார். அத்துடன் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.</p><h2>லோகேஷ் சத்யநாதன்</h2><p>லோகேஷ் சத்யநாதன் குரூப் பி-யில் 7.77 மீட்டர் தூரம் தாண்டி 4-வது இடம் பிடித்தார். இவர் தகுதிக்கான தூரத்தை தாண்டவில்லை என்றாலும், பெஸ்ட் என்ற அடிப்படையில் இறுதி சுற்றுககு தகுதி பெற்றார். 29-ந்தேதி இறுதிச் சுற்று நடைபெற இருக்கிறது.</p><h2>பதக்கம் பட்டியல்</h2><p>தற்போது வரை ஆஸ்திரேலியா 17 தங்கம், 9  வெள்ளி, 13 வெண்கல பதக்கங்களுடன் மொத்தமாக 39 பதக்கங்கள் வென்று முதல் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து 4 தங்கம், 9 வெள்ளி, 6 வெண்கலத்துடன் 19 பதக்கங்கள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.</p><p>நைஜீரியா 4 தங்கம், 4 வெள்ளியுடன் மொத்தம் 8 பதக்கங்களுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கல பதக்கங்களுடன் மொத்தம் 4 பதக்கங்கள் வென்று 8-வது இடத்தை பிடித்துள்ளது.</p><h2>குர்விந்தர்வீர் சிங்</h2><p>இந்தியா சார்பில் குர்விந்தர்வீர் சிங் 100மீ ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டார். இவர் 4-வது ஹீட்டில் ஓடினார். இவருடன் மேலும் 6 பேர் ஓடினர். மொத்தமாக 7 பேர் ஓடியதில் ஜமைக்கா வீரர் ரோஹன் வாட்சன் 10.13 விநாடிகளில் பந்தைய தூரத்தை கடந்து முதலிடம் பிடித்தார். இந்த வீரர் குர்விந்தர்வீர் சிங் 10.39 விநாடிகளில் பந்தைய தூரத்தை கடந்து 2-வது இடம் பிடித்தார்.</p><h2>கானா வீரர் பெஞ்சமின் அசாமதி</h2><p>என்றபோதிலும், ஒட்டுமொத்தமாக அரையிறுதிக்கு 17 வீரர்கள்தான் தகுதி பெற முடியும். அந்த வகையில் குர்விந்தவீர் சிங் அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்தார். ஒட்டுமொத்தமாக குர்விந்தர்வீர் சிங் 28-வது இடத்தை பிடித்தார்.</p><p>கானா வீரர்கள் பெஞ்சமின் அசாமதி (10.00 விநாடி), அப்துல்-ரஷீத் சமினு (10.01 விநாடி) ஆகியோர் முதல் இரண்டு இடங்களை பிடித்தனர். இங்கிலாந்து வீரர் எலியட் ஜோன்ஸ் 10.07 விநாடிகளில் கடந்து 3-வது இடத்தை பிடித்தார்.</p>]]></content:encoded></item><item><title>நாட்டில் போராட்டத்தை உருவாக்க முயற்சிப்பதே, ராகுல் காந்தியின் ஒரே குறிக்கோளாக உள்ளது: பா.ஜ.க</title><link>https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-s-only-goal-is-to-create-protests-in-the-country-bjp</link><comments>https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-s-only-goal-is-to-create-protests-in-the-country-bjp#comments</comments><guid isPermaLink="false">06656907-8e6d-4fc8-8026-c759d3c95446</guid><pubDate>Mon, 27 Jul 2026 11:13:42 +0000</pubDate><atom:updated>2026-07-27T11:13:42.474Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Bihar Bandh,பீகார் பந்த்,AK 47,ஏகே 47</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/30qutxj2/Untitled-design.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ BJP Slams Rahul Gandhi over AK-47 claims in Bihar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/30qutxj2/Untitled-design.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பீகாரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கலைக்க ஏ.கே 47 ரக துப்பாக்கியை காவலர் ஒருவர் பயன்படுத்தியதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டிய நிலையில், அவருக்கு பாரதிய ஜனதா கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.  </p><h3><strong>பீகார் பந்த:</strong></h3><p>பீகாரில் மாநிலம் தழுவிய பந்த் (முழு அடைப்பு) போராட்டம் நடைபெற்றது. அப்போது மாணவர் அமைப்புகள் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. </p><p>இதையடுத்து போராட்டாத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது காவலர் ஒருவர், ஏகே-47 துப்பாக்கியை பயன்படுத்துவது போன்ற காட்சிகள் இணையத்தில் பரவின. </p><p>இதைதொடர்ந்து துப்பாக்கியை பயன்படுத்திய காவல் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். </p><h3><strong>ஏகே-47 பயன்படுத்தியதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு:</strong></h3><p>இந்த சம்பவத்திற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்தார்.</p><p>மேலும், போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை கொலை செய்வதற்கு, யார் அதிகாரம் கொடுத்தது என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.</p><p>இந்நிலையில் பாஜக தேசிய செய்தி தொடர்பாளரும், மக்களவை உறுப்பினருமான சம்பித் பத்ரா, ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் எதிர்கட்சித் தலைவர் மிகுந்த பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்தி இருப்பது வெட்கக்கேடான செயல் என்றும் அவர் கூறினார்.</p><h3><strong>பாஜக கண்டனம்:</strong></h3><p>இதுகுறித்து சம்பித் பத்ரா செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்தியாவில் எதிர்கட்சி தலைவர் பதவியில் இருக்கும் ஒருவரால், இத்தகைய பொய் பரப்பப்படுவது முற்றிலும் கண்டிக்கத்தக்கது.</p><p>இந்த நாட்டில் காவல்துறை எப்போதாவது போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த ஏகே-47 துப்பாக்கிகளை பயன்படுத்தி இருக்கிறதா?</p><p>அந்த மாதிரி சம்பவம் எப்போதாவது நடந்திருக்கிறதா? ஏகே-47 துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதாக ராகுல் காந்தியால் எப்படி கூற முடியும்?</p><p>இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதுபோன்ற அவதூறுகளையும் பொய்களையும் பரப்பியதற்காக ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.</p><p>இதுபோன்ற பிரச்சாரங்களை செய்து, தவறான தகவல்களை பரப்புவதன் மூலம், ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் நாடு முழுவதும் பீதியையும், குழப்பத்தையும், அராஜகச் சூழலையும் உருவாக்க விரும்புகிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.</p><p>ராகுல் காந்தி ஒரு பொறுப்பான எதிர்கட்சி தலைவராக நடந்துகொண்டு, இதுபோன்ற தவறான செய்திகளை பரப்பியதற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.</p><p>இயற்கையாகவே பிரச்சனைகளை தீர்ப்பது ராகுல் காந்தியின் நோக்கம் அல்ல. அமளியை தூண்டிவிட்டு, செயற்கையான கோபத்தை உருவாக்கி ஒரு போராட்டத்தை உருவாக்க முயற்சிப்பது, எல்லாவற்றிற்கும் மேலாக அராஜகத்தை உருவாக்க முயற்சிப்பது ஆகியவையே ராகுல் காந்தியின் ஒரே குறிக்கோளாக உள்ளது,” என்று பத்ரா கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>கோவை மருத்துவமனையில் நடிகர் ராம் சரணுக்கு வெற்றிகரமாக முடிந்த அறுவை சிகிச்சை!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/successful-wrist-surgery-for-actor-ram-charan-at-coimbatore-hospital</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/successful-wrist-surgery-for-actor-ram-charan-at-coimbatore-hospital#comments</comments><guid isPermaLink="false">2533e244-d3ac-40aa-ac76-c9829eab2e4e</guid><pubDate>Mon, 27 Jul 2026 11:08:54 +0000</pubDate><atom:updated>2026-07-27T11:08:54.471Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பெத்தி,கோவை மருத்துவமனை,coimbatore hospital,actor Ram Charan,Beddi,நடிகர் ராம் சரண்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/4dzft596/ram.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ram Charan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/4dzft596/ram.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான ராம்சரண், மாவீ ரன், 'ஆர்.ஆர்.ஆர்.' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து உள்ளார். கடினமான சண்டை காட்சிகள் மற்றும் நடன அசைவுகளுக்கு பெயர் பெற்ற இவர், 'பெத்தி' திரைப்படத்தில் நடித்து வந்தார்.</p><h2><strong>மணிக்கட்டில் காயம்:</strong></h2><p>இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு விறுவிறுப்பாக நடை பெற்றது. அப்போது அதில் இடம்பெற்ற ஒரு மல்யுத்த சண்டை காட்சியில் ராம்சரண் பங்கேற்றார். அப்போது அவருக்கு இடதுகை மணிக்கட்டில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. </p><p>இருந்தபோதிலும் படத்தின் இறுதிகட்ட பணிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ராம்சரண் உடனடியாக பெரிய அளவிலான சிகிச்சை மேற்கொள்ளாமல் தற்காலிகமாக தள்ளி வைத்திருந்தார்.</p><h2><strong>மருத்துவமனையில் அனுமதி</strong></h2><p>பெத்தி படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து அவருக்கு எம்.ஆர்.ஐ., எக்ஸ்ரே பரிசோதனைகள் செய்து பார்க்கப்பட்டன. மருத்துவ பரிசோதனையின் முடிவில், ராம்சரணுக்கு இடதுகை மணிக்கட்டில் தசைநார் கிழிவு மற்றும் லேசான எலும்பு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் தசைநார் முழுமையாக கிழிந்து உள்ளதால், உடனடியாக அறுவை சிகிச்சை செய்வது அவசியம் என்று டாக்டர்கள் பரிந்துரைத்தனர்.</p><p>இந்தியாவில் எலும்பு, தசைநார் மற்றும் கை அறுவை சிகிச்சையில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை உலகத்தரம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதன் காரணமாகவே ராம்சரண் அறுவை சிகிச்சைக்காக ஐதராபாத் அல்லது வெளிநாடுகளுக்கு செல்லாமல், கோவை தனியார் மருத்துவமனையை தேர்ந்தெடுத்தார். </p><p>அதன்படி, அவர் சிறப்பு விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அப்போது அவருடன் தந்தை ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி, தாயார் சுரேகா மற்றும் மனைவி உபாசனா கொனிடேலா ஆகியோரும் வந்திருந்தனர்.</p><h2><strong>அறுவை சிகிச்சை</strong></h2><p>கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள நடிகர் ராம்சரணுக்கு இன்று மணிக்கட்டு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. அறுவை சிகிச்சைக்கு பிறகு ராம்சரண் ஒருசில வாரங்கள் முழுமையான ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p>மேலும் காயம் அடைந்த இடது கை மணிக்கட்டு இயல்புநிலைக்கு திரும்ப குறைந்தது 4-6 வாரங்கள் வரை ஆகும் என்பதால் அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை தேவைப்படலாம். இதனால் அவர் கோவை மருத்துவமனையில் இன்னும் சில நாட்கள் தங்கியிருந்து டாக்டர்களின் அறிவுறுத்தலின்படி சில நாட்கள் ஓய்வெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>கோவை தனியார் மருத்துவமனையில் நடிகர் ராம்சரண் அனுமதிக்கப்பட்டு உள்ள செய்தி வெளியானதில் இருந்து, லட்சக்கணக்கான ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வேண்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் போட்டி: 100மீ ஓட்டத்தில் இந்திய வீரர் குர்விந்தர்வீர் சிங் ஏமாற்றம்</title><link>https://www.maalaimalar.com/sports/glasgow-commonwealth-games-gurvindervir-singh-100m-running-fail-to-reach-semi-final</link><comments>https://www.maalaimalar.com/sports/glasgow-commonwealth-games-gurvindervir-singh-100m-running-fail-to-reach-semi-final#comments</comments><guid isPermaLink="false">e5252092-6dd7-4576-92a7-8641ffa957fb</guid><pubDate>Mon, 27 Jul 2026 10:55:18 +0000</pubDate><atom:updated>2026-07-27T10:55:18.617Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Commonwealth games,காமன்வெல்த் போட்டி,Gurvindervir singh,குர்விந்தர்வீர் சிங்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/g6wnfgqe/Gurvindervirsingh.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gurvindervir singh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/g6wnfgqe/Gurvindervirsingh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகிறது. தடகளத்தில் இன்று ஆடவர்களுக்கான 100மீ தகுதிச் சுற்று ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. மொத்த 11 ஹீட் (பிரிவு) ஆக வீரர்கள் பிரிக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது.</p><h2>குர்விந்தர்வீர் சிங்</h2><p>இந்தியா சார்பில் குர்விந்தர்வீர் சிங் 100மீ ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டார். இவர் 4-வது ஹீட்டில் ஓடினார். இவருடன் மேலும் 6 பேர் ஓடினர். மொத்தமாக 7 பேர் ஓடியதில் ஜமைக்கா வீரர் ரோஹன் வாட்சன் 10.13 விநாடிகளில் பந்தைய தூரத்தை கடந்து முதலிடம் பிடித்தார். இந்த வீரர் குர்விந்தர்வீர் சிங் 10.39 விநாடிகளில் பந்தைய தூரத்தை கடந்து 2-வது இடம் பிடித்தார்.</p><h2>கானா வீரர் பெஞ்சமின் அசாமதி</h2><p>என்றபோதிலும், ஒட்டுமொத்தமாக அரையிறுதிக்கு 17 வீரர்கள்தான் தகுதி பெற முடியும். அந்த வகையில் குர்விந்தவீர் சிங் அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்தார். ஒட்டுமொத்தமாக குர்விந்தர்வீர் சிங் 28-வது இடத்தை பிடித்தார்.</p><p>கானா வீரர்கள் பெஞ்சமின் அசாமதி (10.00 விநாடி), அப்துல்-ரஷீத் சமினு (10.01 விநாடி) ஆகியோர் முதல் இரண்டு இடங்களை பிடித்தனர். இங்கிலாந்து வீரர் எலியட் ஜோன்ஸ் 10.07 விநாடிகளில் கடந்து 3-வது இடத்தை பிடித்தார்.</p><h2>பதக்கம் பட்டியல்</h2><p>தற்போது வரை ஆஸ்திரேலியா 17 தங்கம், 9  வெள்ளி, 13 வெண்கல பதக்கங்களுடன் மொத்தமாக 39 பதக்கங்கள் வென்று முதல் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து 4 தங்கம், 9 வெள்ளி, 6 வெண்கலத்துடன் 19 பதக்கங்கள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.</p><p>நைஜீரியா 4 தங்கம், 4 வெள்ளியுடன் மொத்தம் 8 பதக்கங்களுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கல பதக்கங்களுடன் மொத்தம் 4 பதக்கங்கள் வென்று 8-வது இடத்தை பிடித்துள்ளது.</p><p>ஆடவர் நீளம் தாண்டுதல் தகுதிச் சுற்றில் முரளி ஸ்ரீஷங்கர், லோகேஷ் சத்யநாதன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.</p><p>110மீ தடைதாண்டும் ஓட்டத்தில் தேஜாஸ் ஷிர்சே இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.</p><p>பெண்களுக்கான வெயிட்லிப்ட்டிங் 52 கிலோ எடைப்பிரிவில் ஞானேஷ்வரி யாதவ் கலந்து கொள்கிறார். இது பதக்கத்திற்கான போட்டியாகும். 58 கிலோ எடைப்பிரிவில் பந்தியாராணி தேவி கலந்து கொள்கிறார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் வருகிற 2-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-moderate-rain-in-tamil-nadu-until-the-2nd</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-moderate-rain-in-tamil-nadu-until-the-2nd#comments</comments><guid isPermaLink="false">47670048-d20c-4d56-ac46-c77bc1588526</guid><pubDate>Mon, 27 Jul 2026 10:29:19 +0000</pubDate><atom:updated>2026-07-27T10:29:19.776Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/lc4ndtdt/rain007.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மழை]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/lc4ndtdt/rain007.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</aside><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>மிதமான மழை</strong></h2><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.</p><p>இன்று வடகடலோர தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின், ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>நாளை மற்றும் நாளை மறுநாள் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>30-ந்தேதி நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>31-ந்தேதி கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>01-ந்தேதி கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். உள் மற்றும் வடகடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>02-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடகடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும், ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>இன்று மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>30 மற்றும் 31-நதேதிகளில் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>5 வயது சிறுவனின் பிறப்புறுப்பில் சூடு வைத்த ஆசிரியை! - உத்தரப்பிரதேசத்தில் பயங்கரம்</title><link>https://www.maalaimalar.com/news/national/uttar-pradesh-play-school-teacher-accused-of-burning-childs-private-parts</link><comments>https://www.maalaimalar.com/news/national/uttar-pradesh-play-school-teacher-accused-of-burning-childs-private-parts#comments</comments><guid isPermaLink="false">adc59bfe-486c-4913-b8ff-4b605d4641f1</guid><pubDate>Mon, 27 Jul 2026 10:26:09 +0000</pubDate><atom:updated>2026-07-27T10:26:09.689Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Uttar Pradesh,வாரணாசி,playschool,physically assaulted,உத்தரப் பிரதேச மாநிலம்,பிளேஸ்கூல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/bqp9ug6c/up.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Horrific Incident in UP]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/bqp9ug6c/up.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், வகுப்பறையில் சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியாமல் பேண்ட்டிலேயே கழித்த 5 வயது சிறுவனின் பிறப்புறுப்பில் பிளேஸ்கூல் ஆசிரியை ஒருவர் பழுக்கக் காய்ச்சிய கத்தியால் சூடு வைத்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p><h2><strong>வகுப்பறையில் நடந்த அநியாயம்:</strong></h2><p>வாரணாசியில் உள்ள அகதா பகுதியில் இயங்கி வரும் 'சீரீன் சோனி பிளேஸ்கூல்' என்ற தனியார் பள்ளியில், வழக்கறிஞர் ஒருவரின் 5 வயது சிறுவன் நர்சரி படித்து வருகிறான். சம்பவத்தன்று வகுப்பில் இருந்த சிறுவன், இயற்கை உபாதையைக் கழிக்க ஆசிரியையிடம் அனுமதி கேட்டுள்ளான். ஆனால், ஆசிரியை அனுமதி மறுத்ததால், சிறுவனால் சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியாமல் பேண்ட்டிலேயே கழித்துவிட்டான்.</p><h2><strong>பழுக்கக் காய்ச்சிய கத்தியால் சித்திரவதை:</strong></h2><p>இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை, சிறுவனை மற்றொரு அறைக்கு இழுத்துச் சென்றுள்ளார். அங்கு இருந்த கேஸ் ஸ்டவ்வை பற்றவைத்து, அதில் கத்தியை பழுக்கக் காய்ச்சிய ஆசிரியை, அச்சிறுவனின் பிறப்புறுப்பில் சூடு வைத்துள்ளார். மேலும், இச்சம்பவம் குறித்து வெளியில் யாருடனாவது சொன்னால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அச்சிறுவனைத் தாக்கி மிரட்டியும் உள்ளார்.</p><h2><strong>தாயிடம் கண்ணீருடன் கூறிய சிறுவன்:</strong></h2><p>வீட்டிற்குத் திரும்பிய சிறுவன், வலியால் கதறி அழுது நடந்த கொடுமைகளைத் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளான். அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுவனின் உடலில் கொப்புளம் இருப்பதைக் கண்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் குறித்து சிறுவனின் பெற்றோர் சம்பந்தப்பட்ட ஆசிரியையைத் தொடர்பு கொள்ள முயன்றபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை.</p><p>இதையடுத்து பள்ளி முதல்வர் ஹேமலதா சிங் மற்றும் மேலாளரிடம் புகார் தெரிவிக்க நேரில் சென்றபோது, அவர்கள் சிறுவனின் பெற்றோருக்கு ஆதரவாகச் செயல்படாமல் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.பள்ளி நிர்வாகத்தின் இந்த போக்கைக் கண்டு ஆத்திரமடைந்த பெற்றோர், லால்பூர்-பாண்டேபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். </p><p>புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட ஆசிரியை மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளியில் பாதுகாப்புடன் படிக்க வேண்டிய 5 வயதுக் குழந்தைக்கு நடந்த இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சோஃபா அரசின் கைது நடவடிக்கைகளுக்கு திமுக ஒருபோதும் அஞ்சாது..!- உதயநிதி ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-stalin-says-dmk-never-fears-sofa-government-arrests</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-stalin-says-dmk-never-fears-sofa-government-arrests#comments</comments><guid isPermaLink="false">946286cd-89ea-423b-9452-24c204f433e7</guid><pubDate>Mon, 27 Jul 2026 10:22:25 +0000</pubDate><atom:updated>2026-07-27T10:22:25.678Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>udhayanithi stalin,DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,Markandeyan MLA,மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/gnph5rf6/udhayanithi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Udhayanithi stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/gnph5rf6/udhayanithi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள எம்எல்ஏ மார்கண்டேயனை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்தார்.</p><p>இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பபதாவது:-</p><p>சர்வாதிகார சோஃபா மாடல் அரசால் பழிவாங்கும் நோக்கத்தில் கைது செய்யப்பட்டுள்ள கழக சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் மார்க்கண்டேயன் அவர்களை பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன்று சந்தித்தோம். </p><p>சிறையில் இருந்தாலும் முன்பை விட இன்னும் வேகமாக கழகப்பணி - மக்கள் பணியாற்றிடும் உத்வேகத்துடன் உள்ள அண்ணன் மார்க்கண்டேயன் அவர்களிடம் நலம் விசாரித்தோம்.</p><p>அவரின் விடுதலைக்காக கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கழக வழக்கறிஞர்கள் மேற்கொண்டு வரும் சட்ட நடவடிக்கைகளை எடுத்துக்கூறி ஆறுதல் தெரிவித்தோம்.</p><p>மிசா - எமர்ஜன்சியை பார்த்தது தி.மு.கழகம். தத்தித்தாவி ஆட்சிக்கு வந்து தறிகெட்டு அரசு நடத்தும் சோஃபா அரசின் கைது நடவடிக்கைகளுக்கு எல்லாம் கழகத்தின் கடைக்கோடி தொண்டர்கள் கூட அஞ்ச மாட்டார்கள்.</p><p>விமர்சனத்துக்காக செய்யப்படும் ஒவ்வொரு கைதின்போதும் நீதிமன்றத்திடம் குட்டுப்படும் இந்த ஆட்சியாளர்கள், மக்கள் மன்றத்திலும் சரிவைச் சந்திப்பது உறுதி.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தந்தை பட இயக்குநருடன் ஜேசன் சஞ்சய் சந்திப்பு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/jason-sanjay-meets-the-director-of-the-movie-thanthai</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/jason-sanjay-meets-the-director-of-the-movie-thanthai#comments</comments><guid isPermaLink="false">57c5c90d-15ac-4576-9728-d5db174e0c48</guid><pubDate>Mon, 27 Jul 2026 10:19:00 +0000</pubDate><atom:updated>2026-07-27T10:19:00.800Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Jana Nayagan,ஜன நாயகன்,jason sanjay,H. Vinoth,ஹெச்.வினோத்,ஜேசன் சஞ்சய்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/pecu564i/New-Project-2026-07-27T154841.538.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தந்தை பட இயக்குநருடன் ஜேசன் சஞ்சய் சந்திப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/pecu564i/New-Project-2026-07-27T154841.538.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகர் விஜய்யின் மகனும், இயக்குநருமான ஜேசன் சஞ்சய், இயக்குநர் ஹெச்.வினோத்தை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் அண்மையில் வெளியாகியுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.</p><p>இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளன. இச்சந்திப்பின்போது, இயக்குநராக மட்டுமல்லாமல், நடிகராகவும் மாறவேண்டும் என சஞ்சய்க்கு வினோத் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. </p><h2>சிக்மா</h2><p>ஜேசன் சஞ்சய் தற்போது லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சந்தீப் கிஷன் நடித்துள்ள 'சிக்மா'  திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வரும் 31ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படம் தொடர்பாக வினோத்தை சஞ்சய் சந்தித்தாரா அல்லது ஜன நாயகன் தொடர்பாக சந்தித்தாரா என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="qme" dir="ltr"><a href="https://x.com/hashtag/JasonSanjay?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#JasonSanjay</a> <a href="https://x.com/hashtag/HVinoth?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#HVinoth</a> ❤️ <a href="https://t.co/lAkkLr0qll">pic.twitter.com/lAkkLr0qll</a></p>&mdash; Cine World Entertainment  (@CineWorldEnt) <a href="https://x.com/CineWorldEnt/status/2081091220739404242?ref_src=twsrc%5Etfw">July 25, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் சார்பில் வரும் அக்.15-ல் அரசியல் அறநெறி மையம் தொடக்கம்..!- அண்ணாமலை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/we-the-leaders-political-ethics-center-launch-oct-15-annamalai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/we-the-leaders-political-ethics-center-launch-oct-15-annamalai#comments</comments><guid isPermaLink="false">47554ef2-2d03-4022-b7b5-b913c3902cd5</guid><pubDate>Mon, 27 Jul 2026 09:52:00 +0000</pubDate><atom:updated>2026-07-27T09:52:00.010Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அண்ணாமலை,annamalai,We the Leaders,வீ த லீடர்ஸ்,அறநெறி மையம்,ethics centre</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/1pmgyhga/annamalai.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Annamalai]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/1pmgyhga/annamalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராமேசுவரம் பேய்க்கரும்பில் உள்ள அப்துல் கலாம் நினைவிடத்தில் அவரது நினைவு நாளையொட்டி அஞ்சலி செலுத்திய, ‘வி த லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><h2>மலரஞ்சலி</h2><p> அப்துல் கலாமின் குடும்பத்தினர் ஒவ்வொரு ஆண்டும் அவரது மறைவுக்கு பிறகு அவருடைய நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி துவா செய்து வருகின்றனர்.</p><p>இந்த ஆண்டு நானும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளேன். அதனைத் தொடர்ந்து கலாம் குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறேன்.</p><p>அறிவியலும், ஆன்மீகமும் கலந்து இருக்க வேண்டும் என்று கலாம் விரும்பினார். நாட்டின் விஞ்ஞான வளர்ச்சிக்கு பாடுபட்டவர் அப்துல் கலாம். நான் மாணவராக இருக்கும்போதே அப்துல் கலாமின் பேச்சைக் கேட்டு வளர்ந்தவன்.</p><p>கலாம் வழியில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பை நல்வழியில் நடத்த வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறேன். இங்கு வந்து உரம் ஏற்றிக் கொண்டு செல்வதற்காக வந்திருக்கிறேன்.</p><h2>அரசியலில் அறநெறி</h2><p>அரசியலில் நன்நெறிமுறைகள் இருக்க வேண்டும் என்று விரும்பியவர் அப்துல் கலாம். அரசியலில் அறநெறி என்பதை விரும்பி அதற்காக அன்றே புத்தகம் எழுதியவர். தகுதியானவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று விரும்பியவர். கலாம் வழியில் எங்களது பயணம் தொடரும்.</p><p>அக்டோபர் 15-ந்தேதி கோவையில் அப்துல் கலாம் பிறந்த நாளில் அரசியல் அறநெறிக்கான மையம் என்ற பெயரில் மையம் ஒன்றை தொடங்கி  வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்க இருக்கிறோம். ஒரு ஆண்டில் ஒரு லட்சம் பேர் அதில் தகுதி பெற்று வருவார்கள். கலாம் அய்யாவின் கனவுகளை நனவாக்க பாடுபடுவோம்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><p>பின்னர் அவரிடம் தமிழக அரசின் செயல்பாடு தற்போது எப்படி இருக்கிறது என்று நிருபர்கள் கேட்டதற்கு, கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்திருப்பதால் அரசியல் பேச விரும்பவில்லை என்று கூறிவிட்டு சென்றார்.</p>]]></content:encoded></item><item><title>‘தேர்தலுக்கு பின் அழுது பிரயோஜனமில்லை... சமாஜ்வாதியுடன் கூட்டணிக்கு தயார்’ - ஓவைசி அழைப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/no-use-crying-after-the-election-ready-for-an-alliance-with-samajwadi-owaisis-call</link><comments>https://www.maalaimalar.com/news/national/no-use-crying-after-the-election-ready-for-an-alliance-with-samajwadi-owaisis-call#comments</comments><guid isPermaLink="false">3c7a8f91-683c-45a5-9f99-3174a600763e</guid><pubDate>Mon, 27 Jul 2026 09:42:21 +0000</pubDate><atom:updated>2026-07-27T09:42:21.459Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>அகிலேஷ் யாதவ்,Akhilesh Yadav,asaduddin owaisi,AIMIM,UP Polls,உ.பி. தேர்தல்,அசாதுதீன் ஓவைசி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/3yrde59v/New-Project-2026-07-27T145125.953.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/3yrde59v/New-Project-2026-07-27T145125.953.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைக்கத் தயார் என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி அறிவித்துள்ளார்.</p><p>பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியில் நீடிப்பதை தான் விரும்பவில்லை என்றும், ஓட்டுகள் பிரிவதை தவிர்ப்பதற்காகவே சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக மொராதாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஓவைசி.,</p><p>“இதை நான் முன்பே கூறியுள்ளேன், மீண்டும் கூறுகிறேன்: உத்தரப் பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைப்பதை மஜ்லிஸ் விரும்பவில்லை. நான் கைகோர்க்கத் தயார். நான் கூட்டணி அமைக்கத் தயார். பேசுவதற்கான நேரம் இது. தேர்தல் முடிந்த பிறகு அழ வேண்டாம். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதை நாங்கள் விரும்பவில்லை.</p><p>ஓவைசி போட்டியிடுவது நமக்குத் தீங்கு விளைவிக்கும் என்று நீங்கள் கூறுகிறீர்கள். நான் உங்களுடன் இணைந்து போராடத் தயார். எங்கள் போராட்டம் எங்கள் கௌரவத்திற்கான போராட்டம். எங்கள் போராட்டம் நீதிக்கான போராட்டம். இப்போது நாங்கள் சும்மா உட்கார்ந்திருக்க விரும்பவில்லை. இப்போது எங்களுக்கு சமத்துவம் வேண்டும்.</p><p>அகிலேஷ் ஒரு நாற்காலியில் அமர்ந்தால், ஓவைசி அந்த நாற்காலிக்கு முன்னால் சம்மணமிட்டு அமர்ந்து உரிமைகள் மற்றும் நீதி பற்றிப் பேசுவார்.” என்று கூறினார்.</p><p>ஓவைசியின் இந்த அழைப்பு விமர்சித்துள்ள பாஜக, இருவரும் நாணயத்தின் இரு பக்கங்கள். அகிலேஷ் யாதவும், ஓவைசியும் ஒருவரையொருவர் திருப்திப்படுத்துவதில் போட்டியிடுகிறார்கள். இன்று அவர்கள், 'யார் பெரிய அண்ணா?' என்ற போட்டியை ஒதுக்கிவிட்டு, 'அண்ணா கூட்டணி அமைப்போம்' என்கிறார்கள். </p><p>ஓவைசி, அகிலேஷ் யாதவ்வுக்கு ஃபிரண்ட் ரிக்வஸ்ட் கொடுத்துள்ளார் என விமர்சித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>ஞானபீட விருது வென்ற கவிஞர் வைரமுத்துவுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/home-minister-amit-shah-congratulates-jnanpith-laureate-poet-vaairamuthu</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/home-minister-amit-shah-congratulates-jnanpith-laureate-poet-vaairamuthu#comments</comments><guid isPermaLink="false">ae26e962-de14-4abf-8ebb-17eff7ba97a1</guid><pubDate>Mon, 27 Jul 2026 09:26:09 +0000</pubDate><atom:updated>2026-07-27T09:26:09.471Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Amit Shah,அமித் ஷா,கவிஞர் வைரமுத்து,Kavignar Vairamuthu,Jnanpith Award,ஞானபீட விருது</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/zrfj1xnx/vairamuthu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vairamuthu-Amit Shah]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/zrfj1xnx/vairamuthu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய இலக்கியத் துறையின் மிக உயரிய விருதான 'ஞானபீட விருதை' வென்றுள்ள பிரபல தமிழ் கவிஞரும் பாடலாசிரியருமான 'வைரமுத்துவுக்கு', மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.</p><h2><strong>வரலாற்றுச் சாதனை:</strong></h2><p>தமிழ் இலக்கிய உலகின் 60-வது ஞானபீட விருதை கவிஞர் வைரமுத்து பெற்றுள்ளார். அகிலன் (1975) மற்றும் ஜெயகாந்தன் (2002) ஆகியோருக்குப் பிறகு இந்த விருதைப் பெறும் 3-வது தமிழ் எழுத்தாளர் இவர் ஆவார்.</p><h2><strong>கவிதைக்கு முதல் முறை:</strong></h2><p>இதற்கு முன் இந்த விருதைப் பெற்ற தமிழ் எழுத்தாளர்கள் வசன நடை/நாவல்களுக்காகப் பெற்ற நிலையில், தமிழ் கவிதைக்காக ஞானபீட விருது பெறப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.</p><h2><strong>அமைச்சரின் வாழ்த்து:</strong></h2><p>தங்களின் பல ஆண்டுகால தளராத அர்ப்பணிப்பு, ஆழமாக அறிவுத்திறன் மற்றும் சிறந்த படைப்பாற்றலுக்கு கிடைத்த அங்கீகாரம் தான் இந்த விருது. எதிர்காலத்திலும் உங்கள் படைப்புகள் சமூகத்திற்கு புதிய பார்வை, புதிய விழிப்புணர்வு மற்றும் நேர்மறையான வழிகாட்டுதலை வழங்கும். </p><p>வருங்காலத் தலைமுறைகள் தங்களது தாய்மொழிகளுடனும், இலக்கியத்துடனும் தொடர்ந்து இணைந்திருக்க ஊக்கமளிக்கும் இந்த வரலாற்று சாதனையை முன்னிட்டு எனது மனமார்ந்த பாராட்டுகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துகொள்கிறேன்.</p><p>தமிழ் மொழி மற்றும் இலக்கியத்திற்கு கவிஞர் வைரமுத்து ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டும் வகையில், அவருக்குப் பல்வேறு தேசியத் தலைவர்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>குஜராத்தில் இ-ஜீரோ எஃப்.ஐ.ஆர் முறை அறிமுகம்: புகார்களை வீட்டில் இருந்தபடியே பதிவு செய்யலாம்</title><link>https://www.maalaimalar.com/news/national/e-zero-fir-system-introduced-in-gujarat-online-complaints-from-home</link><comments>https://www.maalaimalar.com/news/national/e-zero-fir-system-introduced-in-gujarat-online-complaints-from-home#comments</comments><guid isPermaLink="false">33cb09fb-7fb7-4112-b5f4-a9ff25e1ae0d</guid><pubDate>Mon, 27 Jul 2026 09:20:08 +0000</pubDate><atom:updated>2026-07-27T09:20:08.704Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>FIR,குஜராத்,gujarat,e-zero FIR,எஃப்.அப்.ஆர்,இ-ஜீரோ எஃப்.ஐ.ஆர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/4v4qhucx/Untitled-design-86.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gujarat launched e-Zero FIR System]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/4v4qhucx/Untitled-design-86.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குஜராத் மாநிலத்தில் இணையவழி நிதி மோசடி தொடர்பான புகார்களுக்கு, பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்திற்கு செல்லாமலேயே சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தொடங்க, இ-ஜீரோ எஃப்.ஐ.ஆர் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>குஜராத் துணை முதலமைச்சர் ஹர்ஷ் சங்வி, காந்தி நகரில் சைபர் நிதி மோசடி இ-ஜீரோ எஃப்.ஐ.ஆர் சேவையை இன்று தொடங்கி வைத்தார்.</p><h3><strong>குஜராத்தில் இ-ஜீரோ எஃப்.ஐ.ஆர் அறிமுகம்:</strong> </h3><p>இதன் தொடக்க விழாவில் பேசிய ஹர்ஷ் சங்வி, “இ-ஜீரோ முதல் தகவல் அறிக்கை ( e-Zero FIR) அமைப்பு மூலம், இணையவழி மோசடியால் பாதிக்கப்படவர்கள் தங்கள் விடுகளில் இருந்தபடியே வசதியாக புகார்களை பதிவு செய்ய முடியும்.</p><p>மேலும் உரிய நேரத்தில் எடுக்கப்படும் நடவடிக்கை, மோசடி செய்யப்பட்ட தொகையை மீட்பதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கும்” என்று கூறினார்.</p><p>இந்த விழாவில் இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் குமார் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.</p><h3><strong>புகார்களுக்கு விரைந்து நடவடிக்கை:</strong></h3><p>காவல்துறை தலைமை இயக்குநர் ஞானேந்திர சிங் மாலிக் கூறுகையில், அனைத்து களப் பிரிவுகளும் இதுபோன்ற புகார்களை தீவிரமாகவும், கவனமாகவும் கையாள வேண்டும் என்று கூறினார்.</p><p>மேலும் புதிய அமைப்பை திறம்பட செயல்படுத்துவதன் மூலம் புகார்தாரர்களுக்கு விரைவான நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.</p><p>சைபர் சென்டர் ஆஃப் எக்சலன்ஸ் அமைப்பின் தலைவர் பிபின் அஹிரா கூறுகையில், “இ-ஜீரோ முதல் தகவல் அறிக்கை செயல்முறையானது 14C உடன் ஒருங்கிணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.</p><h3><strong>இணையவழி நிதி மோசடி புகார் எண்:</strong></h3><p>1930 என்ற உதவி எண் மூலம் பெறப்படும் இணையவழி நிதி மோசடி தொடர்பான புகார்கள், தானாகவே பூஜ்ஜிய முதல் தகவல் அறிக்கையாக (Zero FIR) உருவாக்கப்பட்டு, பின்னர் அது சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பப்படும்.</p><p>மேலும், இதனை தொடர்ந்து காவல்துறையினர் புகார்தாரரை தொடர்புகொண்டு, தேவையான தகவல்களை பெற்று, சட்ட நடைமுறைகளின்படி முதல் தகவல் அறிக்கையை பதிவுசெய்து, உடனடியாக விசாரணையை தொடங்குவார்கள்” என்று பிபின் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் கர்நாடகா பயணம்: உச்சநீதிமன்ற உத்தரவு நம்மிடம் இருக்கும்போது நாம் ஏன் கெஞ்ச வேண்டும் - துரைமுருகன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-visit-to-karnataka-duraimurugan-comments</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-visit-to-karnataka-duraimurugan-comments#comments</comments><guid isPermaLink="false">1609cadc-fa9e-4043-9e3c-348f8fdc1e89</guid><pubDate>Mon, 27 Jul 2026 09:18:50 +0000</pubDate><atom:updated>2026-07-27T09:18:50.469Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,விஜய்,கர்நாடகா,Karnataka,vijay,மேகதாது அணை,துரைமுருகன்,duraimurugan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/1kgde3d4/duraimurugan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Durai Murugan - Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/1kgde3d4/duraimurugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[  <p><em>காவிரி பிரச்சனைக்கு காவிரி மேலாண்மை குழு, ஒழுங்காற்று குழுவை தான் நாட வேண்டும். நேரடியாக சென்றால் கோர்ட் உத்தரவு வீணாகும் என்று திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.</em></p><p>தமிழகத்துக்கு காவிரி நீரில் உரிய பங்கை தருவதற்கு கர்நாடகா தொடர்ந்து மறுத்து வருகிறது. நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளையும் செயல்படுத்த மறுக்கிறது.</p> <h2>விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிப்பு</h2><p>சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகா 177.25 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். ஆனால் போதிய மழை பெய்யாததால் அணைகளில் தண்ணீர் குறைவாக உள்ளது. வறட்சி நிலவுகிறது என்ற காரணத்தை சொல்லி காவிரியில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விடுவதில்லை.</p><p>காவிரி நீரில் உரிய பங்கு கிடைக்காததால் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் வெகுவாக பாதித்து வருகிறது.</p> <h2>மேகதாது அணை</h2><p>இந்த சூழ்நிலையில் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு, புதிதாக அணை கட்டுவதற்கு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.</p><p>மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது. டெல்டா பகுதிகள் பாலைவனமாக மாறிவிடும் என்று விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.</p> <h2>முதலமைச்சர் விஜய் கடிதம்</h2><p>மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் விஜய் கடிதமும் எழுதி உள்ளார்.</p><p>மேலும் மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் அனைத்து முயற்சிகளையும் சட்டரீதியாக தடுப்பது குறித்து முதலமைச்சர் விஜய், தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தினார்.</p> <h2>காவிரி மேலாண்மை ஆணையம்</h2><p>இந்த சூழலில் டெல்லியில் சமீபத்தில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் பேசிய தமிழக நீர்வளத்துறை செயலாளர், கர்நாடகத்தில் உள்ள 4 முக்கிய அணைகளில் 48.979 டி.எம்.சி. தண்ணீர் இருப்பை சுட்டிக்காட்டியதுடன், சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின்படி விகிதாசார அடிப்படையில் தண்ணீரை திறக்கவும் ஆணையம் உத்தரவிட வேண்டும் என்று கூறினார்.</p><p>அதற்கு கர்நாடக அரசு, தங்கள் மாநிலத்தில் உள்ள 4 முக்கிய அணைகளிலும் போதிய அளவு தண்ணீர் இல்லை என்பதால் தங்களால் தற்போதைக்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று கூறிவிட்டது.</p><p>இதனையடுத்து காவிரி மேலாண்மை ஆணையம் சார்பில், தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.</p> <h2>பெங்களூரு செல்லும் விஜய்</h2><p>இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் விஜய், கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு எழுதி உள்ள கடிதத்தில், வருகிற ஆகஸ்டு 3-ந் தேதி, தான் பெங்களூரு வந்து காவிரி நீர் பிரச்சனை, மேகதாது விவகாரம் குறித்து உங்களுடன் பேச விரும்புகிறேன் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.</p><p>இதற்காக பெங்களூரு செல்லும் முதலமைச்சர் விஜய், கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாருடன் காவிரியில் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை பெறுவது குறித்தும், மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்த உள்ளார்.</p> <h2>துரைமுருகன்</h2><p>இந்நிலையில், திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p><p>* முதலமைச்சர் எதற்காக கர்நாடகா செல்கிறார் என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.</p><p>* எம்ஜிஆர் கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்திய காலம் என்பது நீதிமன்ற உத்தரவு இல்லாத காலம்.</p><p>* உச்சநீதிமன்ற உத்தரவு நம்மிடம் இருக்கும்போது நாம் போய் கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை.</p> <p>* காவிரி பிரச்சனைக்கு காவிரி மேலாண்மை குழு, ஒழுங்காற்று குழுவை தான் நாட வேண்டும். நேரடியாக சென்றால் கோர்ட் உத்தரவு வீணாகும்.</p><p>* மேகதாது, காவிரி நீர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை கூட்டி ஆலோசனை நடத்தி இருக்க வேண்டும்.</p><p>* என்ன நடக்கிறது என்பது முதலமைச்சர் சென்று வந்த பின்னர் தான் தெரியும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item></channel></rss>