<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 12 Sep 2026 09:29:44 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 12 செப். 2026...
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-12-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-12-september-2026#comments</comments><guid isPermaLink="false">46d65b0f-475d-4a26-9683-2f1c1d5bcde0</guid><pubDate>Sat, 12 Sep 2026 05:05:09 +0000</pubDate><atom:updated>2026-09-12T08:32:19.309Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/a3cevkbq/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live News]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/a3cevkbq/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cpi-m-to-announce-byelection-support-tomorrow-madurantakam-dharapuram">இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு?- சிபிஐ(எம்) மாநிலக் குழு நாளை அறிவிப்பு... </a></p><p>*மதுராந்தகம், தாராபுரம்  இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு தருவது என்பது தொடர்பாக நாளை அறிவிக்கப்படும். </p><p>*நாளை பிற்பகல் 2 மணியளவில் ஆதரவு நிலைப்பாடு குறித்து தெரிவிக்கப்படும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-indictment-tvk-govt-5">'ப்யூஸ் போன' த.வெ.க. அரசு மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும்- உதயநிதி ஸ்டாலின்</a></p><p>* தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்சாரம் இருந்தாலும் voltage பிரச்சனை என மக்கள் வெகுண்டெழுந்து வீதிக்கு வந்து போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.</p><p>* துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரோ, இதைச் சரிசெய்யும் முயற்சிகளைச் செய்யாமல் தேவையில்லாத அவதூறுகளை உளறிக் கொண்டிருக்கிறார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/isharani-baruah-enter-final-in-vietnam-open-badminton">வியட்நாம் ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இஷாராணி பரூவா</a></p><p>* வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் தொடர் வியட்நாமில் நடந்து வருகிறது.</p><p>* மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் தன்வி ஷர்மா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/ai-technology-used-for-missile-production-anthropic-exposes-yemen-group">ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஏவுகணை தயாரிப்பு: ஏமன் குழுவின் முயற்சியை வெளிப்படுத்திய 'ஆந்த்ரோபிக்' நிறுவனம்!... </a></p><p>*வடக்கு ஏமனில் செயல்பட்டு வரும் இந்த அடையாளம் தெரியாத குழு, மூன்று வெவ்வேறு ஆயுத வளர்ச்சித் திட்டங்களில் ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியைப் பெற்றுள்ளது. </p><p>*இக்குழுவினர் ஒரு நேரடி ராக்கெட் சோதனையையும் நடத்தியுள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-says-tvk-government-must-focus-on-improving-the-energy-sector">தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி: எரிசக்தி துறையை மேம்படுத்துவதில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும்- தினகரன்</a></p><p>* தமிழகத்தில் நிலவும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டுகளைத் தடுத்து நிறுத்துவதோடு, பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும்.</p><p>* வீண் விதண்டாவாதப் பேச்சுகளின் மூலம் மக்களை மடைமாற்றுவதை விட்டுவிட்டு, எரிசக்தி துறையை மேம்படுத்துவதில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/spirituality/vinayagar-arupadai-veedu-6">ஆனைமுகனின் அறுபடை வீடும், அதன் சிறப்புகளும்</a></p><p>* சித்தி விநாயகர் நாம் விரும்புகிற காரியங்களை நிறைவேற்றித் தருபவராக உள்ளார்.</p><p>* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை வணங்கினால் தீட்சையும் ஞானமும் கிடைக்கும்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/zverev-enter-the-final-round-in-us-open-tennis">அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஸ்வரேவ்</a></p><p>* அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.</p><p>* ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி சுற்று போட்டிகள் நடந்தன.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/congress-leader-harish-rawat-quits-party-posts-after-cash-jewellery-recovered-from-aide-house">உதவியாளர் வீட்டில் பணம், நகைகளை கைப்பற்றிய ED: கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் விலகிய காங்கிரஸ் தலைவர்</a></p><p>* உதவியாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.</p><p>* சோதனையில் உயர்ரக கைக்கடிகாரங்கள், பணம் கைப்பற்றப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-by-elections-tvk-sets-up-election-task-force">மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்- த.வெ.க.வில் தேர்தல் பணிக்குழு அமைப்பு</a></p><p>*  இடைத்தேர்தல் வரலாற்றிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர் என்கிற புதிய வரலாறு படைக்கும் வகையில் அனைவரும் தேர்தல் பணியாற்றிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>* நம் வெற்றி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நமது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளைத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக விரைவில் முன்னெடுப்போம் என்று தெரிவித்துள்ளார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-urges-government-itself-must-fully-bear-the-cost-of-the-breakfast-scheme-in-government-schools">தலைமை ஆசிரியர்கள் மீது நிதிச் சுமை: அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டச் செலவை அரசே முழுமையாக ஏற்க வேண்டும்- தினகரன்</a></p><p>* தேவையான பெயர்ப்பலகை, மின்விளக்கு, குடிநீர் உள்ளிட்ட தொடக்க நிகழ்வுக்கான ஏற்பாடுகளுக்கான செலவினங்களைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் தலையில் சுமத்துவது ஏற்புடையதல்ல.</p><p>* அரசு நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள நிர்வாகச் சிக்கல்களையும் அதிகாரக் குளறுபடிகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-says-dmk-defeat-in-by-election">இடைத்தேர்தலில் திமுக தோல்வி அடைவது உறுதி - அமைச்சர் நிர்மல்குமார்</a></p><p>* மு.க.ஸ்டாலின் மிகப்பெரிய தியாகி என்று திமுக சித்தரிக்க முயன்றாலும் மக்கள் அதை நம்பமாட்டார்கள்.</p><p>* திமுக நடத்தும் போராட்டத்தை பார்த்து மக்கள் சிரித்தவாறே கடந்து செல்வர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/state-honours-for-the-late-solomon-pappaiah">மறைந்த சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை</a></p><p>* சாலமன் பாப்பையா காலமானார் என்ற செய்தி அறிந்து பலரும் இரங்கல் தெரிவித்தனர். </p><p>* தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என அமைச்சர் நிர்மல்குமார் என அறிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-ministers-and-members-of-the-legislative-assembly-must-also-disclose-their-asset-details">அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களும் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும்!- அன்புமணி ராமதாஸ்</a></p><p>* அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிப்பதற்காக இந்தியாவின் பல மாநிலங்களில் பல்வேறு நடவடிக்கைகள் கடந்த சில பத்தாண்டுகளில் மேற்கொள்ளப்பட்டன. </p><p>* சொத்து விவரங்களை தாக்கல் செய்ய அரசு ஊழியர்கள் தவறினால் அது விதிமீறலாகக் கருதப்படும்;  அது அவர்களின் பதவி உயர்வை பாதிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/saudi-arabia-shuts-down-pipeline-as-houthis-seize-island-opening-new-front-in-iran-war">முக்கியமான பைப்லைனை மூடிய சவுதி அரேபியா: கச்சா எண்ணெய் விலை மேலும் உயரும் அபாயம்..!</a></p><p>* ஈராக்கில் இருந்து டிரோன்கன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக சவுதி அரேபியா குற்றச்சாட்டு</p><p>* முன்னெச்சரிக்கை காரணமாக பைப்லைனை மூடியதாக சொல்கிறது சவுதி அரேபியா</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-12-9-2026">GOLD PRICE TODAY: சற்றே உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.14,170-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madurai-meenakshi-amman-temple-kumbabishekam-special-train-service-between-chennai-central-and-madurai">மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: சென்னை சென்ட்ரல் - மதுரை இடையே சிறப்பு ரெயில் இயக்கம்</a></p><p>&nbsp;* தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 16-ந்தேதி இரவு புறப்பட்டு செல்லும் சிறப்பு ரெயில், மறுநாள் காலை 5 மணிக்கு மதுரை சென்றடையும்.</p><p>* மதுரையில் இருந்து வருகிற 17-ந்தேதி இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், மறுநாள் காலை 3.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tirupati-kudai-rally-traffic-diversions-in-chennai-tomorrow">திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் - சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்</a></p><p>* திருக்குடை ஊர்வலம் வால்டாக்ஸ் சாலையை கடக்கும் வரை, காலை 8 மணி முதல் மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.&nbsp;</p><p>* ஊர்வலம் ஏ.பி. சாலை வரும்போது, பெரம்பூர் பேரக்ஸ் சாலை சந்திப்பில் இருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதி இல்லை.</p> ]]></content:encoded></item><item><title>ஆசிய விளையாட்டு போட்டியில் புறக்கணிப்பு: தற்கொலை செய்து கொள்வதாக இந்திய வீராங்கனை வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு</title><link>https://www.maalaimalar.com/sports/harassed-and-bullied-teenage-wushu-athlete-threatens-suicide-after-asian-games-snub</link><comments>https://www.maalaimalar.com/sports/harassed-and-bullied-teenage-wushu-athlete-threatens-suicide-after-asian-games-snub#comments</comments><guid isPermaLink="false">d590bdc3-96ac-4c67-a0ab-ce07af6cfcb6</guid><pubDate>Sat, 12 Sep 2026 09:29:10 +0000</pubDate><atom:updated>2026-09-12T09:29:10.532Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Asian Games,ஆசிய விளையாட்டு போட்டி,wushu</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/sjdig6nr/Divyanshi0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Divyanshi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/sjdig6nr/Divyanshi0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானில் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் இன்று ஜப்பான் புறப்பட்டு செல்கிறார்கள். இந்த நிலையில் வுஷு விளையாட்டின் 18 வயதாக இந்தியாவின் இளம் வீராங்கனையான திவ்யான்ஷி, ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் இருந்து தன்னை நீக்கியதால், தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டல் விடுக்கும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>நியாயமற்ற முறையில் நீக்கம்</h2><p>ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் இருந்து கடைசி நமிடத்தில் நீக்கப்பட்டேன். 60 கிலோ சாண்டா பிரிவில் நியாயமற்ற முறையில் நீக்கப்பட்டேன். மாதக்கணக்கில் மனதளவில் துன்புறுத்தப்பட்டேன். வாழ்வதில் இனி எந்த பயனும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.</p><p>ரோஷிபினா தேவி என்பவர் 2022ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார். இவரை தேர்வுக்கான போட்டியில் திவ்யான்ஷி வீழ்த்தியிருந்தார். இருந்தபோதிலும் இடம் மறுக்கப்பட்டுள்ளது.</p><h2>விஷு பெடரேசன் சொல்வது என்ன?</h2><p>அதேவேளையில் விஷு பெடரேசன், திவன்யான்ஷிக்கு மருத்துவ ஆய்வின்போது ACL காயம் கண்டறியப்பட்டது. போட்டிக்கு தன்னை தயார் படுத்தும் வகையில் முறையான பயிற்சியை மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ளது. அதேவேளையில், திவ்யான்ஷியின் பயிற்சியாளர் அஷோக் கவுதம், ஆசிய போட்டியில் நீக்குவதற்கு ஏற்ப மோசமான நிலையில் காயம் இல்லை. கடைசி நேரத்தில் மாற்று வீராங்கனையை தேர்வு செய்ய காரணம் என்ன? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>ரோஷிபினாவுக்கும் இரண்டு கால்களில் ACL காயம் ஏற்பட்டுள்ளது. அவரை மட்டும் தேர்வு செய்தது எப்படி? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். வீராங்கனை ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தடைகளை நீக்கி வெற்றியை தரும் விநாயகர் மந்திரம்</title><link>https://www.maalaimalar.com/spirituality/vinayagar-mantra-6</link><comments>https://www.maalaimalar.com/spirituality/vinayagar-mantra-6#comments</comments><guid isPermaLink="false">b381deb3-a7dc-4e57-a283-59ac5f032633</guid><pubDate>Sat, 12 Sep 2026 09:25:16 +0000</pubDate><atom:updated>2026-09-12T09:25:16.879Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,வழிபாடு,worship,விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,Vinayagar Chaturthi 2026,விநாயகர் சதுர்த்தி 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/4occi9b7/vinayagar6.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vinayagar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/4occi9b7/vinayagar6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்து சமயத்தில் எந்தவொரு செயலை செய்ய தொடங்கும் முன்பும், முழுமுதற் கடவுளான விநாயகரை வணங்கி தொடங்குவது வழக்கம். காரணம், செய்யும் காரியங்கள் தடைகள் இன்றி வெற்றிகரமாக நடைபெற அருள் புரிபவர், விநாயகப் பெருமான். அவரை போற்றும், பத்ம புராணத்தில் இடம்பெற்ற ஒரு மந்திரத்தை பார்ப்போம்.</p> <p><em>ஓம் நமோ கணபதயே நமஹ</em></p><p><em>கணபதிர் விக்னராஜோ லம்பதுண்டோ கஜானன:</em></p><p><em>த்வைமாதுரஸ்ச ஹேரம்ப ஏகதந்தோ கணாதிப:</em></p><p><em>விநாயகஸ்சாருகர்ண: பஸூபாலோ பவாத்மஜ:</em></p><h2>பொருள்:-</h2><p>'ஓம்' எனும் பிரணவ மந்திரத்தின் அதிபதியான கணபதியை வணங்குகிறேன். பூத கணங்களுக்கு தலைவனாக விளங்குபவரே, இடையூறுகள் இல்லாது செய்பவரே, அழகான நீண்ட துதிக்கையை உடையவரே, யானை முகம் படைத்தவரே, கங்கா, கவுரி என இரண்டு தாய்களை கொண்டவரே, பக்தர்களுக்கு குறைவில்லாமல் அருள்புரிபவரே, ஒரு தந்தத்தை உடையவரே, பெரிய காதுகளை கொண்டவரே, உலக மக்களை காப்பவரே, பரமனின் புத்திரனே, உனக்கு வணக்கம். எங்கள் தடைகளை எல்லாம் விலக்கி, நிம்மதி பெருவாழ்வு வாழ வழிநடத்துவீராக.</p> <h2>விநாயகர் சதுர்த்தி</h2><p>விநாயகர் சதுர்த்தி நாளில், அருகம்புல் மாலை சாற்றி, இந்த மந்திரத்தைக் கூறி விநாயகரை வழிபட்டால் காரிய வெற்றியும், எல்லா வளங்களும் பெறலாம்.</p>]]></content:encoded></item><item><title>டெல்லியில் 18-வது பிரிக்ஸ் மாநாடு தொடங்கியது</title><link>https://www.maalaimalar.com/news/national/18th-brics-summit-begins-in-delhi</link><comments>https://www.maalaimalar.com/news/national/18th-brics-summit-begins-in-delhi#comments</comments><guid isPermaLink="false">86506be4-8006-4737-8ef9-055b19818ee5</guid><pubDate>Sat, 12 Sep 2026 09:04:36 +0000</pubDate><atom:updated>2026-09-12T09:04:36.793Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மாநாடு,Conference,delhi,டெல்லி,பிரிக்ஸ் மாநாடு,Bricks conference</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/06luvrx9/bricks.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bricks conference]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/06luvrx9/bricks.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரிக்ஸ் நாடுகளின் 18வது உச்சி மாநாடு தொடங்கியது.</p><p>பிரிக்ஸ் அமைப்பில் இந்தியா, ரஷியா, சீனா, பிரேசில், தென் ஆப்பி ரிக்கா, ஈரான், எகிப்து, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தோனேசியா, எத்தியோப்பியா ஆகிய 11 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.</p><p>மேலும், பெலாரஸ், பொலிவியா, கஜகஸ்தான், கியூபா, மலேசியா, நைஜீரியா, தாய்லாந்து, உகாண்டா, உஸ்பெகிஸ் தான், வியட்நாம் ஆகியவை நட்பு நாடுகளாக இருக்கின்றன.</p><h2>உச்சி மாநாடு</h2><p>பிரிக்ஸ் அமைப்பின் 18-வது உச்சி மாநாடு இன்று தொடங்கி  2 நாட்கள் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடக்கிறது. இந்த மாநாடு இந்தியாவில் 4-வது முறையாக நடை பெறுகிறது.</p><p>மாநாட்டில் பங்கேற்பதற்காக உலக தலைவர்கள் டெல்லியில் குவிந்து உள்ளனர். நேற்று நடந்த பிரிக்ஸ் வர்த்தக மன்ற கூட்டத்தில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.</p><h2>மாநாடு தொடங்கியது</h2><p>பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று பிற்பகல் 2.35 மணிக்கு அதிகாரபூர்வமாக தொடங்கியது. மாநாட்டில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபி யாண்டோ, எகிப்து அதிபர் அப்தெல் பத்தாக் எல்-சிசி, மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம், அபுதாபி இளவரசர் முகமது பின் சயீத் அல் நஹ்யான், பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் ஆர். மார்கோஸ், எத்தியோப்பிய  பிரதமர் அபி அகமது அலி, வியட்நாம் பிரதமர் லே மின் ஹங், பிரேசில் வெளியுறவுத் துறை மந்திரி மவுரோ வியரா, நைஜீரியா துணை அதிபர் செனட்டர் காஷிம் ஷெட்டிமா, உகாண்டா துணை அதிபர் ஜெசிகா அலுபோ, </p><p>புருண்டி அதிபர் எவரிஸ்ட் ண்டாயிஷிமியே, தாய்லாந்து துணைப் பிரத மர் சிகாசக் புவாங்செட் கியோ, கியூபா வெளி யுறவுத்துறை மந்திரி புருனோ ரோட்ரிக்ஸ் பரில்லா, பெலாரஸ் வெளியுறவுத் துறை மந்திரி மாக்சிம் ரைஷென்கோவ், உருகுவே  வெளியுறவு அமைச்சர் மரியோ லுபெட்கின் மற்றும் ஐ.நா.பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர்  டெட்ரோஸ் அதானோம் உள்ளிட்ேடார் கலந்து கொள்கிறார்கள்.</p><p>மேலும் பல சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கிறார்கள்.</p><h2>வர்த்தகம், நிதி</h2><p>இம்மாநாட்டில் வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் மற்றும் தெற்கு உலக நாடுகளுக்கு இடையிலான மேம்பாடு, வர்த்தகம், நிதி, தொழில்நுட்பம், நிலைத் தன்மை மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது.</p><p>மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக அனைவரையும் உள்ளடக்கிய உலகளாவிய நிர்வாகம் மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பை வலுப்ப டுத்துதல் என்ற தலைப்பில் அமர்வு நடக்கிறது. இதில் பிரிக்ஸ் தலைவர்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்துகின்றனர்.</p><h2>மோடி-சீன அதிபர் பேச்சுவார்த்தை</h2><p>மாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று காலை தலைநகர் பிஜீங்கில் இருந்து புறப்பட்டார். </p><p>அவர் 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வர உள்ளார். கடைசியாக 2019-ம் ஆண்டு இந்தியா வுக்கு வந்த ஜின்பிங், சென்னை மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>ஜின்பிங்குடன், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட அரசியல் குழுவின் நிலைக்குழு உறுப்பினரும், அக்கட்சியின் மத்தியக் குழுவின் பொது அலுவலக இயக்குநருமான காய் கி, வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகியோர் அடங்கிய உயர்மட்ட குழுவினரும் வருகிறார்கள்.</p><p>இதற்கிடையே உச்சி மாநாட்டுக்கு இடையே இன்று மாலை 5.45 மணிக்கு பிரதமர் மோடி- ஜின்பிங் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.</p><p>வர்த்தகம், முதலீடு உள்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோ சனை நடத்துகிறார்கள்.</p><h2>எல்லை பிரச்சினை</h2><p>கடந்த 2020-ம் ஆண்டு கிழக்கு லடாக்கில் ஏற்பட்ட எல்லை மோதலுக்குப் பிறகு இரு நாடுகளும் உறவைச் சீராக்க முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வரும் நிலையில்  இரு தலைவர்களின் சந்திப்பு முக்கி யத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இரு தலைவர்களின் சந்திப்பில் எல்லைப் பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.</p><p>இதற்கிடையே மோடி-ஜின்பிங் இருதரப்பு பேச்சு வார்த்தை தொடர்பாக இந்தியாவில் உள்ள சீன தூதர் எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும்போது, அதிபர் ஜின்பிங்-பிரதமர் மோடி  இடையிலான இரு தரப்புச் சந்திப்புக்கான ஏற்பாடுகளை சீனாவும் இந்தியாவும் செய்து வருகின்றன. </p><h2>3-வது ஆண்டு</h2><p>கசான், தியான்ஜின் ஆகிய இடங்களில் நடை பெற்ற சந்திப்புகளைத் தொடர்ந்து, இரு தலைவர்களும் நேரில் சந்தித்துக் கொள்வது தொடர்ந்து 3-வது ஆண்டாகும்.</p><p>இரு தரப்பு உறவுகளை  நீண்ட கால கண்ணோட்டத்தில் கையாளவும், தகவல் தொடர்பை அதிகரிக்கவும், ஒத்துழைப்பை மேம்படுத்தவும், வேறுபாடுகளைச் சரியாகக் கையாளவும், நல்ல அண்டை நாடுகளாக வும் ஒருவருக்கொருவர் வெற்றிபெற உதவும் கூட்டாளிகளாகவும் இருக்க இந்தியாவுடன் சீனா இணைந்து செயல்படும் என்று தெரிவித்தார்.</p><h2>பிரதமர் மோடியுடன் ஆலோசனை</h2><p>இந்தநிலையில் பிரதமர் மோடி இன்று காலை எத்தியோப்பிய பிரதமர், மலேசிய பிரதமர், அபுதாபி இளவரசர், வியட்நாம் பிரதமர் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினார். </p><p>நேற்று ரஷிய அதிபர் புதின், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் ஆகியோருடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.</p><p>இன்று மாலை 4.25 மணிக்கு பாரத் புத்தாக்க கண்காட்சியை  தலைவா்கள் பாா்வையிடுகின்றனா். பின்னா் பாரத் மண்டபத்தில் தலைவா்கள் ஒன்றாக குழு புகைப்படம் எடுக்க உள்ளனா். மேலும், தலைவா்கள் மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. </p><h2>விருந்து</h2><p>பின்னர் தலைவா்களுக்கு பிரதமா் மோடி  இரவு 7.30 மணிக்கு விருந்து  அளிக்கிறார். அதனுடன் இன்றைய முதல் நாள் மாநாடு நிறைவு பெறுகிறது.</p>]]></content:encoded></item><item><title>“சூப்பர் மேன் இல்ல, ஆனா ஒரு சூப்பர் பவர் இருக்கு” - விரைவில் வெளியாகும் &apos;பீப்&apos; படம் குறித்து நடிகர் ராகவ்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/not-a-superman-but-has-a-superpower-actor-raghav-on-upcoming-beep-film</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/not-a-superman-but-has-a-superpower-actor-raghav-on-upcoming-beep-film#comments</comments><guid isPermaLink="false">6bf5e173-da3a-4599-bc1f-c28275e57b83</guid><pubDate>Sat, 12 Sep 2026 08:51:58 +0000</pubDate><atom:updated>2026-09-12T08:51:58.814Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>Beep Movie,பீப் திரைப்படம்,Actor Raghav,நடிகர் ராகவ்,Crime Thriller,ThaniOruvan Vibe</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/2457x36g/Actor-Raghav" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Actor Raghav]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/2457x36g/Actor-Raghav?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>'எந்திரன்', 'வேலாயுதம்', 'நஞ்சுபுரம்', 'கல்யாண சமையல் சாதம்' போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் நடிகர் <strong>ராகவ்</strong>. </p><p>இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் கிரைம் த்ரில்லர் திரைப்படம் <strong>'பீப்' (Beep)</strong>. அறிமுக இயக்குநர் இல. சண்முகசுந்தர் இயக்கியுள்ள இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் சுவாரசியமான அனுபவங்களை நடிகர் ராகவ் பகிர்ந்துள்ளார்.</p><h2><strong>'பீப்' தலைப்பின் ரகசியம் என்ன?</strong></h2><p>படத்தின் தலைப்பு குறித்துப் பேசிய ராகவ், “நாம் ஒரு விஷயம் கேட்கக் கூடாது என்று நினைக்கும் போது அந்த இடத்தில் 'பீப்' சத்தம் போடுகிறோம். அதாவது, துண்டிக்கப்பட்ட குரல்கள் அல்லது வெளியில் சொல்லப்படாத விஷயங்கள் என்று இதற்கு அர்த்தம் கொள்ளலாம். </p><p>சமூகத்தில் வழக்கமாக வெளியில் சொல்லப்படாத பல அதிர்ச்சியூட்டும் உண்மைகளை இந்த படத்தில் தொட்டிருக்கிறோம். இது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் ஒரு பக்கா <a href="https://www.maalaimalar.com/topic/crime">கிரைம் </a>த்ரில்லராக இருக்கும்” என்றார்.</p><h2><strong>சூப்பர் மேன் இல்ல... ஆனா 'சூப்பர் பவர்' இருக்கு!</strong></h2><p>படத்தின் நாயகன் கதாபாத்திரம் குறித்துப் பேசிய அவர், “படத்தின் ஹீரோவுக்கு ஒரு விதமான 'சூப்பர் பவர்' இருக்கிறது. ஆனால், அவர் வழக்கமான சினிமா சூப்பர் மேன் கிடையாது. </p><p>நிஜ வாழ்க்கையில் சில மனிதர்கள் 4 டிஜிட் பெருக்கல் கணக்குகளை நொடிப் பொழுதில் சொல்வார்களே, அதுபோன்ற ஒரு எதார்த்தமான சூப்பர் பவர் தான் அது. நிஜ வாழ்வில் அப்படி ஒரு பவர் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை இயக்குநர் அழகாகக் காட்டியுள்ளார்.</p><p>எனது கதாபாத்திரத்தின் மேனரிசங்கள் அனைத்தும் இயக்குநரின் கற்பனையே. படத்தை முன்கூட்டியே பார்த்த என் மனைவியே, 'உன்னை இயக்குநர் முற்றிலும் வேறு மாதிரி காட்டியுள்ளார்' என்று ஆச்சரியப்பட்டார்,” எனக் குறிப்பிட்டார்.</p><h2><strong>17-வது மாடியில் இருந்து கயிற்றில் இறங்கி ரிஸ்க்!</strong></h2><p>படத்தில் இடம்பெற்ற சவாலான ஆக்ஷன் காட்சி பற்றிப் பகிர்ந்த ராகவ், “ஒரு முக்கியமான காட்சிக்காக 17-வது மாடியில் இருந்து கயிறு கட்டி 10-வது மாடி வரை தலைகீழாக இறங்குவது போல படமாக்கினார்கள். </p><p>அது எனக்கு மிகப்பெரிய சவாலாகவும் ரிஸ்க்காகவும் இருந்தது. ஒரு நடிகனாக இந்த அளவுக்கு நாம் ரிஸ்க் எடுத்துதான் ஆக வேண்டும்.</p><p>எனக்கு 'தனி ஒருவன்' படத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF">அரவிந்த் சாமி</a> நடித்தது போன்ற ஒரு பவர்புல்லான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. </p><p>இது தவிர நானும் சில கதைகளை எழுதி வைத்துள்ளேன், அதையும் விரைவில் இயக்குவேன் ,” என்றார். இத்திரைப்படம் விரைவில் வெளியாகும் என்றும் மக்களிடம் நல்</p><p>ல வரவேற்பை பெரும் என்ற நம்பிக்கையும் எனக்கு உள்ளது என்றும் கூறியுள்ளார்.</p><h2><strong>படத்தின் ஆன்மாவாக இருக்கும் பின்னணி இசை</strong></h2><p>இயக்குநர் ராஜு முருகனின் உதவி இயக்குநரான தினா ராகவனிடம் இணை இயக்குநராக இருந்த இல. சண்முகசுந்தர் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் இரண்டு பாடல்கள் மட்டுமே உள்ளன. </p><p>ஆனால், இசையமைப்பாளர் பிரசாந்த் விஹாரியின் பின்னணி இசை படத்தின் ஆன்மாவாக அமைந்துள்ளது. </p><p>குறிப்பாக, இடைவேளைக்குப் பிறகு கதையை நகர்த்துவதில் இசை முக்கியப் பங்கு வகிக்கிறது. ரசிகர்கள் தியேட்டரில் அமர்ந்து தாங்களே கதையோடு பயணித்து, சில கணக்குகளைப் போட்டு குற்றவாளியைக் கண்டுபிடிப்பது போன்ற ஒரு சுவாரசியமான திரைக்கதை இதில் உள்ளது என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார்.</p><h2><strong>தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம்</strong></h2><p>நடிகர் ராகவ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் 'பீப்' திரைப்படத்தை இல. சண்முக சுந்தர் இயக்கியுள்ளார். இதற்கு பிரசாந்த் விஹாரி இசையமைக்க, பிரதீப் பத்மகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். </p><p>மேலும், இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை அபிஷேக் மற்றும் விக்னேஷ் கவனிக்க, சண்டைக் காட்சிகளை ராம்குமார் வடிவமைத்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பிரிக்ஸ் உச்சிமாநாடு: 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு வருகை தந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்!</title><link>https://www.maalaimalar.com/news/world/brics-summit-chinese-president-xi-jinping-visits-india-after-7-years</link><comments>https://www.maalaimalar.com/news/world/brics-summit-chinese-president-xi-jinping-visits-india-after-7-years#comments</comments><guid isPermaLink="false">ab5598e2-3004-401f-8689-bb4cbfccdc1b</guid><pubDate>Sat, 12 Sep 2026 08:50:40 +0000</pubDate><atom:updated>2026-09-12T08:50:40.297Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா,BRICS Summit,Prime Minister Narendra Modi,பிரிக்ஸ் உச்சிமாநாடு,Chinese President Xi Jinping,பிரதமர் மோடி,சீன அதிபர் ஜி ஜின்பிங்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/tivtbwm2/brics.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Xi Jinping -Narendra Modi   ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/tivtbwm2/brics.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த 2019-ஆம் ஆண்டு மாமல்லபுரத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முறைசாரா உச்சிமாநாட்டிற்குப் பிறகு, சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவிற்கு வருகை தருவது இதுவே முதன்முறையாகும்.</p><p>18-வது <a href="https://www.maalaimalar.com/news/world/saudi-arabia-shuts-down-pipeline-as-houthis-seize-island-opening-new-front-in-iran-war">பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் </a>பங்கேற்பதற்காகச் சீன அதிபர் ஜி ஜின்பிங் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக டெல்லி வந்தடைந்தார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு இந்திய மத்திய இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கலைக் குழுவினரின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளுடன் சீன அதிபருக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு வழங்கப்பட்டது. </p><p>ஜின்பிங்குடன் சீன கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக் குழு நிலைக்குழு உறுப்பினரும், கட்சியின் மத்திய குழு அலுவலக இயக்குனருமான காய் கி, சீன வெளியுறவு மந்திரியும், கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான வாங் யி உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர். ஜி ஜின்பிங் பிரதமர் மோடியை இன்று மாலை 5.45 மணிக்கு சந்தித்து பேச உள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு மாமல்லபுரத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முறைசாரா உச்சிமாநாட்டிற்குப் பிறகு, சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவிற்கு வருகை தருவது இதுவே முதன்முறையாகும்</p><h2>மோடி-ஜி ஜி<strong>ன்பிங் சந்திப்பு</strong></h2><p>பிரிக்ஸ் மாநாட்டின் ஒருபகுதியாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அதிபர்ஜி ஜின்பிங் சந்தித்துப் பேசுகிறார். 2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட எல்லை மோதலுக்குப் பிறகு, இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் நிலவி வந்த பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியாக இந்தச் சந்திப்பு பார்க்கப்படுகிறது.</p><p>இந்த இருதரப்புப் பேச்சுவார்த்தையின் போது, எல்லைப் பகுதிகளில் அமைதியை உறுதி செய்வது, எல்லைக் எல்லை நிர்ணயம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வது மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஏற்றத்தாழ்வுகளைச் சீரமைப்பது ஆகிய முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன.</p><h2>பிரிக்ஸ் உச்சிமா<strong>நாட்டின் முக்கிய</strong>த்துவம்</h2><p>இந்தியாவின் தலைமையில் டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெறும் இந்த 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உட்படப் பல உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். உலகளாவிய பொருளாதாரச் சவால்கள், உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ப் பதற்றங்கள், ஆற்றல் பாதுகாப்பு மற்றும் விநியோகச் சங்கிலி சீரமைப்பு போன்ற முக்கிய சர்வதேச விவகாரங்கள் குறித்து இம்மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. இரு பெரிய ஆசிய வல்லரசுகளின் தலைவர்கள் சந்தித்துப் பேசுவது சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பிரிக்ஸ் புது டெல்லி பிரகடனம்: இந்தியாவின் முயற்சிக்கு அனைத்து நாடுகளும் ஒப்புதல்</title><link>https://www.maalaimalar.com/news/national/dialogue-and-diplomacy-way-forward-brics-new-delhi-declaration-agreed</link><comments>https://www.maalaimalar.com/news/national/dialogue-and-diplomacy-way-forward-brics-new-delhi-declaration-agreed#comments</comments><guid isPermaLink="false">56046714-85d8-4061-b86a-003e1dbc6bdd</guid><pubDate>Sat, 12 Sep 2026 08:37:29 +0000</pubDate><atom:updated>2026-09-12T08:37:29.532Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>BRICS Summit,பிரிக்ஸ் மாநாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/t2nje2h7/BricsSummit001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிரிக்ஸ் மாநாடு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/t2nje2h7/BricsSummit001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரிக்ஸ் மாநாடு இந்தியாவில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் புதுடெல்லி வந்துள்ளனர். ரஷிய அதிபர் புதின், ஈரான் பிரதமர், சீன அதிபர் ஜி ஜின் பிங் உள்ளிட்ட தலைவர்கள் வந்துள்ளனர்.</p><p>பொதுவாக மாநாட்டின் போது உலகளவில் பாதிக்கப்படக்கூடிய ஒரு குறிப்பிட்ட சம்பவம் குறித்து பொது கருத்து ஒற்றுமையுடன் பிரகடனம் வெளியிடப்படும். தற்போது உலகளவில் அமெரிக்கா- ஈரான் போர், உக்ரைன்- ரஷியா போர் சண்டை நடைபெற்று வருகிறது. அதேபோல் ஹவுதி- சவுதி அரேபியா இடையே சண்டை நடைபெறுகிறது.</p><h2>பிரகடனம்</h2><p>இந்த நிலையில் எந்தவொரு நாட்டையும் குறிப்பிடாமல் எந்த வகையான ஆக்கிரமிப்பையும் வன்மையாக கண்டிக்கும் வகையில் ஒருமித்த கருத்துடன் பிரகடனம் வெளியிட இந்தியா முயற்சி மேற்கொண்டது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் அனைத்து நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.</p><p>இதன் அடிப்படையில் மோதலை முடிவுக்கு கொண்டு வர உரையாடலும் ராஜதந்திரமுமே முன்னேற்றத்திற்கான வழி என்பதை மையமாக வைத்து பிரிக்ஸ் புது டெல்லி பிரகடனம் வெளியிடப்பட இருக்கிறது. இதற்கு அனைத்து நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன.</p><p>இதனைத் தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு பிரகடனம் வெளியிடப்பட இருக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>ஔவையார் அருளிய விநாயகர் அகவல் பாமாலை</title><link>https://www.maalaimalar.com/spirituality/vinayagar-chaturthi-avvaiyar-agaval</link><comments>https://www.maalaimalar.com/spirituality/vinayagar-chaturthi-avvaiyar-agaval#comments</comments><guid isPermaLink="false">2b373f81-485a-47c4-8679-fd27311179c1</guid><pubDate>Sat, 12 Sep 2026 08:29:33 +0000</pubDate><atom:updated>2026-09-12T08:29:33.400Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,வழிபாடு,worship,விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,Vinayagar Chaturthi 2026,விநாயகர் சதுர்த்தி 2026,avvaiyar,vinayagar agaval</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/pr9k5ep9/vinayagar5.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vinayagar - Avvaiyar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/pr9k5ep9/vinayagar5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஔவையார் சீதக்களப செந்தாமரைப்பூம் என்று துவங்கும் விநாயகர் அகவல் என்னும் பாமாலையை எழுதியவர். இதை சதுர்த்தியன்று பாடினால், நீங்கள் பிள்ளையாரிடம் ஏதாவது வேண்டினால், அவர் இரட்டிப்பாகத் தருவார்.</p><p>மற்ற கிழமைகளில் மறந்து விட்டாலும் விநாயகரை வெள்ளிக்கிழமை மற்றும் சதுர்த்தி திதிகளில் மறக்காமல் வணங்க வேண்டும். அவ்வாறு, விநாயகரை வணங்கும்போது உங்கள் நினைவிற்கு வரவேண்டிய இன்னொருவர் ஔவையார். அவர் சீதக்களப செந்தாமரைப்பூம் என்று துவங்கும் விநாயகர் அகவல் என்னும் பாமாலையை எழுதியவர்.</p><p>இந்த பாமாலையை சதுர்த்தியன்று பாடினால், நீங்கள் பிள்ளையாரிடம் ஏதாவது வேண்டினால், அவர் இரட்டிப்பாகத் தருவார். விநாயகர் அகவல் படிப்பது வீட்டுக்கும், நாட்டுக்கு மட்டுமல்ல, உலகுக்கே நல்லது. காஞ்சிப்பெரியவர் இது பற்றி கூறும்போது, நமக்கும், நாட்டுக்கும், உலகத்துக்கும் நன்மை உண்டாவதற்கு ஔவையார் மூலம் பிள்ளையாரைப் பிடிப்பதே வழி, என்கிறார்.</p> <p>இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி நாளை மறுநாள் கோலோகமாக கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் அகவலை பாடி அவரது அருள் பெறுவோம்.</p><h2>விநாயகர் அகவல்</h2><p>பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை</p><p>நாலும் கலந்துனக்கு நான் தருவேன் -கோலம்செய்</p><p>துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்</p><p>சங்கத் தமிழ் மூன்றும் தா.</p> <h2>அகவல்</h2><p>சீதக் களபச் செந்தா மரைப்பூம்</p><p>பாதச் சிலம்பு பலவிசை பாடப்</p><p>பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்</p><p>வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்</p><p>பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)</p> <p>வேழ முகமும் விளங்குசிந் தூரமும்</p><p>அஞ்சு கரமும் அங்குச பாசமும்</p><p>நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்</p><p>நான்ற வாயும் நாலிரு புயமும்</p><p>மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)</p> <p>இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்</p><p>திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்</p><p>சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான</p><p>அற்புதம் நின்ற கற்பகக் களிறே!</p><p>முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15)</p> <p>இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்</p><p>தாயா யெனக்குத் தானெழுந் தருளி</p><p>மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்</p><p>திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்</p><p>பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20)</p> <p>குருவடி வாகிக் குவலயந் தன்னில்</p><p>திருவடி வைத்துத் திறமிது பொருளென</p><p>வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்</p><p>கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே</p><p>உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)</p> <p>தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி</p><p>ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்</p><p>இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்</p><p>கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)</p><p>இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30)</p> <p>தலமொரு நான்கும் தந்தெனக் கருளி</p><p>மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே</p><p>ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்</p><p>ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி</p><p>ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35)</p> <p>பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே</p><p>இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்</p><p>கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி</p><p>மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்</p><p>நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)</p><p>குண்டலி யதனிற் கூடிய அசபை</p><p>விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து</p><p>மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்</p><p>காலால் எழுப்பும் கருத்தறி வித்தே</p><p>அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)</p> <p>குமுத சகாயன் குணத்தையும் கூறி</p><p>இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்</p><p>உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்</p><p>சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்</p><p>எண் முகமாக இனிதெனக் கருளிப் (50)</p> <p>புரியட்ட காயம் புலப்பட எனக்குத்</p><p>தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்</p><p>கருத்தினில் கபால வாயில் காட்டி</p><p>இருத்தி முத்தி யினிதெனக் கருளி</p><p>என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)</p> <p>முன்னை வினையின் முதலைக் களைந்து</p><p>வாக்கும் மனமும் இல்லா மனோலயம்</p><p>தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)</p><p>இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன</p><p>அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60)</p> <p>எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)</p><p>அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்</p><p>சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்</p><p>சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி</p><p>அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65)</p> <p>கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி</p><p>வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்</p><p>கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி</p><p>அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை</p><p>நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70)</p> <p>தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட</p><p>வித்தக விநாயக விரைகழல் சரணே! (72)</p><p>ஓம் விக்ன விநாயகா போற்றி!</p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு?- சிபிஐ(எம்) மாநிலக் குழு நாளை அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cpi-m-to-announce-byelection-support-tomorrow-madurantakam-dharapuram</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cpi-m-to-announce-byelection-support-tomorrow-madurantakam-dharapuram#comments</comments><guid isPermaLink="false">0b00c371-3601-40bd-ac17-9dad0bc6f63c</guid><pubDate>Sat, 12 Sep 2026 08:28:19 +0000</pubDate><atom:updated>2026-09-12T08:28:19.522Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>சிபிஐ,Shanmugam,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,CPM,CPI,dharapuram,தாராபுரம்,மதுராந்தகம்,பெ.சண்முகம்,Madhuranthakam</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/tmursbtr/cpi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Shanmugam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/tmursbtr/cpi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுராந்தகம், தாராபுரம்  இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு தருவது என்பது தொடர்பாக நாளை அறிவிக்கப்படும். </p><p>தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இதில் எந்தக் கட்சிக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/the-proposed-secretariat-project-at-pattinapakkam-must-be-immediately-abandoned-cpi-urges-the-government">இந்திய கம்யூனிஸ்ட்</a> (மார்க்சிஸ்ட்) கட்சி தனது அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை நாளை அறிவிக்க உள்ளது. இத்தேர்தல் களம் அரசியல் கட்சிகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.</p><h2>மாநிலக் குழு <strong>கூட்டத்தில் விரிவான</strong> ஆலோசனை</h2><p>சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இடைத்தேர்தல் ஆதரவு நிலப்பாடு குறித்து விளக்கமளித்தார். அப்போது பேசுகையில், இரு தொகுதிகளின் கள நிலவரங்கள் மற்றும் தேர்தல் உத்திகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். கட்சியின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளின் கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னரே இறுதி முடிவு எட்டப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><h2>நாளை பிற்<strong>பகலில் அதிகாரப்பூர்வ</strong> அறிவிப்பு</h2><p>மாநிலக் குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில், நாளை பிற்பகல் 2 மணியளவில் செய்தியாளர்கள் சந்திப்பு வாயிலாக தங்களது ஆதரவு நிலைப்பாடு முறைப்படி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சிபிஐ(எம்) கட்சியின் இந்த அறிவிப்பு தொகுதி மறுசீரமைப்பு மற்றும் கூட்டணி கணக்குகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>&apos;ப்யூஸ் போன&apos; த.வெ.க. அரசு மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும்- உதயநிதி ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-indictment-tvk-govt-5</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-indictment-tvk-govt-5#comments</comments><guid isPermaLink="false">a7313323-3311-497d-ad9b-a4580b6b0c9b</guid><pubDate>Sat, 12 Sep 2026 08:25:32 +0000</pubDate><atom:updated>2026-09-12T08:25:32.866Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,தவெக,Udhayanidhi Stalin,மின் தடை,Power Cut,tvk</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/np6hhi2g/udhayanidhistalin004.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/np6hhi2g/udhayanidhistalin004.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரோ, இதைச் சரிசெய்யும் முயற்சிகளைச் செய்யாமல் தேவையில்லாத அவதூறுகளை உளறிக் கொண்டிருக்கிறார்.</strong></em></p><p>எதிர்க்கட்சி தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/உதயநிதி-ஸ்டாலின்">உதயநிதி ஸ்டாலின்</a> எக்ஸ் தள பக்கத்தில் ஊடகங்களில் வெளியான செய்திகளின் புகைப்படங்களை வெளியிட்டு கூறியிருப்பதாவது:-</p><p>நேற்று முதல் ஊடகங்களில் வெளியாகி வரும் செய்திகள் இவை.</p><h2><strong>பொதுமக்கள் போராட்டம்</strong></h2><p>தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்சாரம் இருந்தாலும் voltage பிரச்சனை என மக்கள் வெகுண்டெழுந்து வீதிக்கு வந்து போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.</p><p>ஆனால், துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரோ, இதைச் சரிசெய்யும் முயற்சிகளைச் செய்யாமல் தேவையில்லாத அவதூறுகளை உளறிக் கொண்டிருக்கிறார்.</p><p>மின்சாரம், ஆவின் பால் விநியோகம் என மக்களின் அன்றாட அடிப்படைத் தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாமல் திண்டாடும் 'ப்யூஸ் போன' த.வெ.க. அரசு திசைதிருப்பும் வேலைகளை நிறுத்திவிட்டு, மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">நேற்று முதல் ஊடகங்களில் வெளியாகி வரும் செய்திகள் இவை.<br><br>தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்சாரம் இருந்தாலும் voltage பிரச்சினை என மக்கள் வெகுண்டெழுந்து வீதிக்கு வந்து போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.<br><br>ஆனால், துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரோ, இதைச்… <a href="https://t.co/Qjpr0BQevV">pic.twitter.com/Qjpr0BQevV</a></p>&mdash; Udhay (@Udhaystalin) <a href="https://x.com/Udhaystalin/status/2098685103711134110?ref_src=twsrc%5Etfw">September 12, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>தியேட்டரை தொடர்ந்து OTT-யிலும் அசுர வேட்டை! &apos;உலகளாவிய டாப் 10&apos; பட்டியலில் இடம்பிடித்து மாதவனின் ‘ஜி.டி.என்’ !</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/from-theatres-to-ott-gtn-continues-its-blockbuster-run</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/from-theatres-to-ott-gtn-continues-its-blockbuster-run#comments</comments><guid isPermaLink="false">d3cd6dfb-beb8-4d38-b60d-801a2510edb3</guid><pubDate>Sat, 12 Sep 2026 08:20:18 +0000</pubDate><atom:updated>2026-09-12T08:20:18.341Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>Madhavan,மாதவன்,நெட்ஃபிளிக்ஸ்,GDN,ஜிடிஎன்,Netflix Global Top10,OTT Success,GDNaidu Biopic</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/utzji4en/GDN-Movie" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ GDN Movie]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/utzji4en/GDN-Movie?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இன்றைய டிஜிட்டல் திரையுலக சூழலில், ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது திரையரங்குகளைத் தாண்டி ஓடிடி தளங்கள் மூலமும் உலகளவில் தீர்மானிக்கப்படுகிறது என்பதற்குச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D">நடிகர் ஆர். மாதவனின்</a> <strong>‘ஜி.டி.என்.’</strong> திரைப்படம்.</p><p>'இந்தியாவின் எடிசன்' என்று போற்றப்படும் பழம்பெரும் இந்திய கண்டுபிடிப்பாளரும் தொழிலதிபருமான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81">ஜி.டி. நாயுடுவின்</a> வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவான இப்படம், தற்போது நெட்ஃபிளிக்ஸ் சர்வதேச தளத்தில் பிரம்மாண்ட சாதனை படைத்து வருகிறது.</p><h2><strong>திரையரங்கில் தொடங்கி டிஜிட்டலில் தொடரும் வெற்றி</strong></h2><p>கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘ஜி.டி.என்.’ திரைப்படம், விமர்சகர்களின் ஒருமித்த பாராட்டுகளாலும், ரசிகர்களின் வாய்மொழிப் பரிந்துரைகளாலும் நான்கு வாரங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. ஜி.டி. நாயுடுவாக நடிகர் ஆர். மாதவனின் அசாத்திய நடிப்பும், காலனித்துவ ஆட்சிக் காலத்தில் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்காக அவர் எதிர்கொண்ட சவால்களும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன.</p><p>இதனைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி இத்திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பல்வேறு பிராந்திய மொழிகளில் வெளியானது. வெளியான ஒரே வாரத்திற்குள், இந்தியாவில் அதிகம் டிரெண்டாகும் திரைப்படங்களின் பட்டியலில் டாப் 2 இடங்களுக்குள் முன்னேறி <a href="https://www.maalaimalar.com/topic/ott">ஓடிடி தளத்தை</a> அதிரவைத்தது.</p><h2><strong>நெட்ஃபிளிக்ஸ் உலகளாவிய டாப் 10 பட்டியலில் ‘ஜி.டி.என்.’</strong></h2><p>இந்திய எல்லையைத் தாண்டி, இத்திரைப்படம் தற்போது <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D">நெட்ஃபிளிக்ஸ் </a>உலகளாவிய டாப் 10 திரைப்படங்களின் பட்டியலில் அதிகாரப்பூர்வமாக இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது. </p><p>வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் மட்டுமின்றி, உலகெங்கிலும் உள்ள சர்வதேச திரைப்பட ரசிகர்களிடமும் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.</p><p>தற்போது ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை, சிங்கப்பூர், பாகிஸ்தான் மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட பல நாடுகளில் 'டாப் 5' தரவரிசைக்குள் இப்படம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.</p><h2><strong>நட்சத்திர பட்டாளம் மற்றும் படக்குழு</strong></h2><p>இப்படத்தில் ஆர். மாதவனுடன் இணைந்து முன்னணி நட்சத்திரங்களான சத்யராஜ், ஜெயராம், பிரியாமணி மற்றும் <a href="https://www.maalaimalar.com/topic/dushara-vijayan">துஷாரா விஜயன்</a> உள்ளிட்ட பலரும் தங்களின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.</p><p>வலுவான கதைக்களத்தைக் கொண்ட இந்தியத் திரைப்படங்கள், ஸ்ட்ரீமிங் தளங்கள் மூலம் உலகளாவிய ரசிகர்களை மிக எளிதாகச் சென்றடைய முடியும் என்பதற்கு 'ஜி.டி.என்' திரைப்படம் மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது என சினிமா வர்த்தக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் வருகிற 15-ந்தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/sep-15th-power-cut-areas-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/sep-15th-power-cut-areas-in-chennai#comments</comments><guid isPermaLink="false">6cc4ec90-f994-4010-b91c-ec39df5b8d14</guid><pubDate>Sat, 12 Sep 2026 08:01:26 +0000</pubDate><atom:updated>2026-09-12T08:01:26.386Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>மின்தடை,TNEB,chennai power cut,Power Cut,தமிழ்நாடு மின்சார வாரியம்,சென்னையில் மின்தடை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/d7jhu7ci/powercut0.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மின்தடை]]></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/d7jhu7ci/powercut0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் <a href="https://www.maalaimalar.com/topic/சென்னையில்-மின்தடை">மின் தடை</a> செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><p>அந்த வகையில், வருகிற செவ்வாய்கிழமை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் வருகிற 15-ந்தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.  அதன்படி, நாளை திருவொற்றியூர் பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-</p><h2><strong>முடிச்சூர்</strong></h2><p>எஸ்.கே. அவென்யூ, பல்லவா நகர், மாருதி நகர், கலைஞர் சாலை, சிவா விஷ்ணு நகர், மதனாபுரம், ஞானபண்டிதர் நகர், சூரஜ் அவென்யூ, பிள்ளையார் கோவில் தெரு, வஞ்சிநாதன் தெரு, ஸ்ரீராம் நகர், நேரு தெரு, மணவாளன் நகர், செந்தில் நகர், இந்திரா காந்தி சாலை, கே.வி.டி. கிரீன் சிட்டி, செல்லியம்மன் கோவில் தெரு, பழைய பெருங்களத்தூர் மெயின் ரோடு, பார்வதி நகர். </p><h2><strong>சேலையூர்</strong></h2><p>புவனேஸ்வரி நகர், மல்லேஸ்வரி நகர், ஆண்டாள் நகர், ஜீவந்தபுரம், ஜல்வாவ் கார்டன், ஜல்வாவுவிகர், குமாரசாமி தெரு, பத்மாவதி நகர் 21 வது தெரு, அலமேலுபுரம். </p><h2><strong>குன்றத்தூர்</strong></h2><p>வழுத்தலம்பேடு கிராமம், விஜயராஜா நகர், நத்தம், வர்ஷ் நகர், சந்தோஷ் அவென்யூ, அருணாசலேஸ்வரர் நகர், சம்பந்தம் நகர், லட்சுமி நகர், ஐஸ்வர்யம் நகர், பத்மாவதி நகர், எம்.எம். அவென்யூ.</p>]]></content:encoded></item><item><title>ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஏவுகணை தயாரிப்பு: ஏமன் குழுவின் முயற்சியை வெளிப்படுத்திய &apos;ஆந்த்ரோபிக்&apos; நிறுவனம்!</title><link>https://www.maalaimalar.com/news/world/ai-technology-used-for-missile-production-anthropic-exposes-yemen-group</link><comments>https://www.maalaimalar.com/news/world/ai-technology-used-for-missile-production-anthropic-exposes-yemen-group#comments</comments><guid isPermaLink="false">091efb75-90cf-4d3f-b6ab-10c46867a975</guid><pubDate>Sat, 12 Sep 2026 07:59:10 +0000</pubDate><atom:updated>2026-09-12T07:59:10.150Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>செயற்கை நுண்ணறிவு,Anthropic,ஆந்த்ரோபிக்,Missile production,Claude AI,ஏவுகணை தயாரிப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/ro7frmq7/Untitled-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Anthropic]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/ro7frmq7/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வடக்கு ஏமனில் செயல்பட்டு வரும் இந்த அடையாளம் தெரியாத குழு, மூன்று வெவ்வேறு ஆயுத வளர்ச்சித் திட்டங்களில் ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியைப் பெற்றுள்ளது. </p><p>செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் உள்ள 'ஆந்த்ரோபிக்' நிறுவனம் தயாரித்துள்ள '<a href="https://www.maalaimalar.com/news/world/european-climate-agency-warns-2027-hottest-year">கிளாட்</a>' ஏஐ மாதிரியைப் பயன்படுத்தி, ஏமனில் உள்ள ஒரு குழு ஏவுகணை மற்றும் ராக்கெட் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஆயுதத் தயாரிப்பில் ஏஐ தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்த தனது புதிய அறிக்கையில் ஆந்த்ரோபிக் இந்த விவரங்களை வெளியிட்டுள்ளது.</p><h2>மூன்று முக்கிய <strong>ஆயுத திட்டங்கள்</strong></h2><p>வடக்கு ஏமனில் செயல்பட்டு வரும் இந்த அடையாளம் தெரியாத குழு, மூன்று வெவ்வேறு ஆயுத வளர்ச்சித் திட்டங்களில் ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியைப் பெற்றுள்ளது. இதில் வழிகாட்டப்பட்ட ராக்கெட், 2,000 கிலோமீட்டருக்கும் (1,243 மைல்) அதிகமான தூரம் சென்று தாக்கக்கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் 'R2000' எனப்படும் ஏவுகணைத் தொடர் தயாரிப்பு ஆகியவை அடங்கும்.</p><p>பொதுவாக மென்பொருள் பொறியாளர்களால் உருவாக்கப்படும் ஏவுகணைகளுக்கான வழிகாட்டுதல், வழிசெலுத்தல் மற்றும் கட்டுப்பாட்டு மென்பொருள்களை உருவாக்க இக்குழு கிளாட் ஏஐ-ஐப் பயன்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் ஏஐ பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தவிர்க்கும் பொருட்டு, தங்களது ஆயுதத் தயாரிப்புப் பணிகளைப் பல கணக்குகள் மூலம் பிரித்து, வழக்கமான மென்பொருள் சோதனைகள் போல காட்டி ஏஐ அமைப்பை ஏமாற்ற முயன்றுள்ளனர்.</p><h2>மீ<strong>ண்டும் ஏஐ உதவி</strong></h2><p>இக்குழுவினர் ஒரு நேரடி ராக்கெட் சோதனையையும் நடத்தியுள்ளனர். ஆனால் அந்தச் சோதனை தோல்வியில் முடிவடைந்ததைத் தொடர்ந்து, தோல்விக்கான காரணத்தைக் கண்டறியவும், தவறுகளைச் சரிசெய்யவும் மீண்டும் கிளாட் ஏஐ-இன் உதவியை நாடியுள்ளனர். மேலும், ஏஐ அமைப்பின் நேரடி இணைப்பு இல்லாதபோதும் பணிகளைத் தொடர வசதியாக, ஆஃப்லைன் உருவகப்படுத்துதல் கருவிகளையும் இவர்கள் உருவாக்கியுள்ளனர்.</p><h2>ஆ<strong>ந்த்ரோபிக் நடவடிக்</strong>கை</h2><p>இந்த முறையற்ற பயன்பாட்டைக் கண்டறிந்த உடனடியாக, அக்குழுவுடன் தொடர்புடைய அனைத்து ஏஐ கணக்குகளையும் ஆந்த்ரோபிக் நிறுவனம் தடை செய்துள்ளது. மேலும், இது தொடர்பான புலனாய்வுத் தகவல்களை சர்வதேசப் பாதுகாப்புப் பங்காளிகளுடன் பகிர்ந்துகொண்டுள்ளது. எதிர்காலத்தில் ஏஐ அமைப்புகள் ராணுவ நோக்கங்களுக்காகவோ அல்லது ஆயுதத் தயாரிப்பிற்காகவோ தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க கூடுதல் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளையும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>இருப்பினும், இந்த ஏஐ உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் முழுமையான செயல்பாட்டுக்கு வந்த ஆயுதமாக மாறவில்லை என்று ஆந்த்ரோபிக் உறுதியளித்துள்ளது. செங்கடல் பகுதியில் ஹூதி அமைப்பினரின் தாக்குதல்கள் அதிகரித்து வரும் சூழலில், ஏஐ தொழில்நுட்பம் ஆயுதக் குழுக்களின் கைக்குச் செல்வது உலகளாவிய பாதுகாப்பிற்கு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கொச்சி விமான நிலையத்தில் பயணிகளுக்கு உதவும் ரோபோ அறிமுகம்..!</title><link>https://www.maalaimalar.com/news/national/cial-introduces-passenger-assistance-robot-at-kochi-airport</link><comments>https://www.maalaimalar.com/news/national/cial-introduces-passenger-assistance-robot-at-kochi-airport#comments</comments><guid isPermaLink="false">e6d4591f-f88c-4734-a8ac-c1b43ce68772</guid><pubDate>Sat, 12 Sep 2026 07:58:01 +0000</pubDate><atom:updated>2026-09-12T07:58:01.722Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ரோபோ,கொச்சி விமான நிலையம்,robot,cochin airport</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/ogqlupp3/Robot0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கொச்சி விமான நிலையம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/ogqlupp3/Robot0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரள மாநிலமை் கொச்சின் விமான நிலையத்தில் முதல் கட்டமாக, உள்நாட்டுப் பிரிவு பாதுகாப்புப் பகுதியில் (Domestic Security Hold Area) அமைந்துள்ள கலங்கன் (Kalangan) எனும் கலை அருங்காட்சியகத்தில் பயணிகளுக்கு உதவும் ரோபோ ஒன்று பணியமர்த்தப்பட்டுள்ளதாக CIAL தெரிவித்துள்ளது. CIAL-ன் நிர்வாக இயக்குநர் எஸ். சுஹாஸ் (IAS) இந்த ரோபோ சேவையைத் தொடங்கி வைத்தார்.</p><h2>பயணிகளை வரவேற்கும் ரோபோ</h2><p>இந்த ரோபா பயணிகளை வரவேற்பது, வழிமுறைகள் வழங்குவது, விமானத்தின் நேரம் குறித்த தகவல்களை வழங்குவது உள்ளிட்ட பணிகளை செய்யும். அத்துடன் பயணிகளை விமானத்தில் ஏறும் வாயில்கள் (boarding gates) மற்றும் பிற விமான நிலைய வசதிகளுக்கு அழைத்துச் செல்கிறது.</p><p>CIAL சேவைகள், விமான அட்டவணைகள் மற்றும் வாயில் எண்கள் உள்ளிட்ட பயணம் தொடர்பான உதவிகளைப் பெற பயணிகள் இந்த ரோபோவுடன் உரையாடலாம்.</p><p>கதகளி மற்றும் ஒட்டன்துள்ளல் போன்ற பாரம்பரிய கலை வடிவங்கள் மற்றும் கலங்கன் பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சிற்பங்கள், கலைப்படைப்புகள் பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் கேரளாவின் கலாச்சார பாரம்பரியத்தையும் இந்த ரோபோ முன்னிலைப்படுத்தும்.</p><h2>செக்-இன் கூடங்களிலும் பணியமர்த்த திட்டம்</h2><p>மேலும், இது பயணிகளை அந்தந்தக் கலைக் கண்காட்சிப் பகுதிகளுக்கு வழிநடத்திச் செல்லும். அடுத்த கட்டமாக, விமான நிலையத்தின் செக்-இன் (check-in) கூடங்களிலும் பயணிகளுக்கு உதவும் ரோபோக்களைப் பணியமர்த்த CIAL திட்டமிட்டுள்ளது.</p><p>அத்துடன், முனையத்திற்குள் பயணிகளுக்கு நேரடியாக உணவு மற்றும் பிற பொருட்களைக் கொண்டு வந்து சேர்க்கக்கூடிய 'டெலிவரி ரோபோக்களை' (delivery robots) அறிமுகப்படுத்துவது குறித்தும் விமான நிலைய நிர்வாகம் பரிசீலித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>புனேவைச் சேர்ந்த கைனடிக்ஸ் ரோபோட்டிக்ஸ் (Kinetics Robotics) நிறுவனம் CIAL-க்காக இந்த ரோபோவை உருவாக்கியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ராணுவ முகாமில் புகுந்து AK-203 துப்பாக்கிகள், 1900 தோட்டாக்களை சுருட்டிய ஓய்வுபெற்ற ஹவில்தார்!</title><link>https://www.maalaimalar.com/news/national/ex-soldier-arrested-for-theft-of-ak-203-rifles-and-1900-rounds</link><comments>https://www.maalaimalar.com/news/national/ex-soldier-arrested-for-theft-of-ak-203-rifles-and-1900-rounds#comments</comments><guid isPermaLink="false">501f3234-047a-43ed-90c2-d8b2a04751d4</guid><pubDate>Sat, 12 Sep 2026 07:54:23 +0000</pubDate><atom:updated>2026-09-12T07:54:23.430Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Hyderabad,ஐதராபாத்,Army Theft,Army Havildar Arrested,துப்பாக்கிகொள்ளை,Army Rescue,Military Security Lapse,Military Rifles</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/zmdmxf07/Military-Rifles" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Military Rifles]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/zmdmxf07/Military-Rifles?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D">ஐதராபாத் </a>செகந்திராபாத் கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள அதீத பாதுகாப்பு நிறைந்த பொல்லாரம் ராணுவ முகாமில் இருந்து, துப்பாக்கிகள் மற்றும் சுமார் 1,900 தோட்டாக்களைத் திருடிய ஓய்வு பெற்ற ராணுவ ஹவில்தார் ஒருவரை ஐதராபாத் போலீசார் கைது செய்துள்ளனர்.</p><h2>பிடிபட்ட நபர் யார்?</h2><p>கைது செய்யப்பட்ட நபர் 20 பட்டாலியன் மெட்ராஸ் ரெஜிமென்ட்டில் ஹவில்தாராகப் பணியாற்றிய உப்புதொல்லா மல்லேஷ் (37) என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். </p><p>2010-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்த இவர், கடந்த ஜூன் 30 அன்று ராணுவப் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். </p><p>தனக்கு வழங்கப்பட்ட முன்கூட்டிய ஓய்வு காரணமாக ஏற்பட்ட அதிருப்தியே இந்தத் திருட்டுக்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><h2>துணிகர திருட்டு மற்றும் கடத்தல்</h2><p>ஓய்வு பெற்று சில மாதங்களே ஆன நிலையில், கடந்த ஆகஸ்ட் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட நள்ளிரவில் மல்லேஷ் இந்தத் திருட்டை அரங்கேற்றியுள்ளார். </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D">ராணுவ முகாமின்</a> ஆயுதக் கிடங்கு மற்றும் பாதுகாப்புப் பெட்டகங்களை உடைத்து ஆயுதங்களை சூறையாடியுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.</p><h2>திருடப்பட்ட ஆயுதங்களின் பட்டியல்</h2><p>4 AK-203 ரக துப்பாக்கிகள்,1 இன்சாஸ் ரக துப்பாக்கி, 7 பிஸ்டல்கள், துப்பாக்கி குண்டுகள் நிரப்பும் மேகசின்கள், 1 இரவு நேரக் கண்காணிப்பு பைனாகுலர் போன்ற சுமார் 1,900 ரவுண்ட் தோட்டாக்கள் திருடப்பட்டுள்ளன.</p><h2>போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற தருணம்</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE">தெலங்கானா </a>டிஜிபி சி.வி. ஆனந்த் இதுகுறித்துத் தெரிவிக்கையில், மல்லேஷ் ஆயுதங்களைத் திருடிவிட்டு அதிகாலை 4:34 மணியளவில் பாலாஜி நகரிலுள்ள தனது வீட்டிற்குச் சென்றது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.</p><p>பின்னர், தனக்குச் சொந்தமான வெள்ளை நிற பிரெஸ்ஸா காரில் ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு அச்சம்பேட்டை நோக்கிப் புறப்பட்டார். </p><p>போலீசாரின் சோதனச் சாவடிகள் மற்றும் சுங்கச்சாவடிகளை தவிர்ப்பதற்காக அவர் ஸ்ரீசைலம் சாலையைப் பயன்படுத்தாமல், வெளிவட்டச் சாலை, சாகர் ரிங் ரோடு மற்றும் பெங்களூரு கேட் சாலை வழியாகப் பயணித்துள்ளார்.</p><h2>காரில் பயணிகளை ஏற்றி நாடகம்</h2><p>ராணுவப் பணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, மல்லேஷ் தனது காரை வாடகைக்கு ஓட்டி பிழைப்பு நடத்தி வந்துள்ளார். </p><p>இந்தத் திருட்டுப் பயணத்தின் போது, போலீசாருக்குத் தன் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காகவும், தான் வேறு வேலைக்காகத் தான் அச்சம்பேட்டை சென்றேன் என்பதைக் காட்டுவதற்காகவும் வழியில் பயணிகளை காரில் ஏற்றியுள்ளார்.</p><p>சாகர் ரிங் ரோடு டாக்ஸி பாயிண்ட் அருகே 4 பயணிகளை ஏற்றி தேவராக்கொண்டாவில் இறக்கிவிட்டு அவர்களிடம் பணத்தைப் பெற்றுள்ளார். தொடர்ந்து திண்டி பகுதியில் மேலும் 2 பயணிகளை ஏற்றி இறக்கியுள்ளார். ஆகஸ்ட் 31 மதியம் 1:15 மணியளவில் அவர் அச்சம்பேட்டையை சென்றடைந்துள்ளார்.</p><h2>சிக்கியது எப்படி? ஆயுதங்கள் மீட்பு!</h2><p>மல்லேஷ் மீது போலீசாருக்குச் சந்தேகம் வலுத்ததை அடுத்து, பயந்துபோன அவர் செப்டம்பர் 6 அன்று ஆயுதங்களை வேறு இடத்திற்கு மாற்றியுள்ளார். எனினும், தீவிர விசாரணையில் செப்டம்பர் 10 அன்று மல்லேஷ் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.</p><p>அவரது ஒப்புதல் வாக்குமூலத்தைத் தொடர்ந்து, ஐதராபாத் டாஸ்க் ஃபோர்ஸ் போலீசார் மற்றும் டிசிபி தலைமையிலான குழுவினர், திருடப்பட்ட அனைத்து AK-203 துப்பாக்கிகள், பிஸ்டல்கள் மற்றும் 1,900 தோட்டாக்கள் அடங்கிய ஒட்டுமொத்த ஆயுதக் குவியலையும் பத்திரமாக மீட்டனர். </p><p>இந்தத் திருட்டின் பின்னணியில் வேறு ஏதேனும் சதித்திட்டம் உள்ளதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>அதிரடி அரசியல் திரில்லர்: கௌதம் கார்த்திக் - செல்வராகவன் நடிக்கும் &apos;பிளடி பாலிடிக்ஸ்&apos; டீசர் வெளியானது!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/goutham-karthik-selvaraghavan-bloody-politics-teaser</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/goutham-karthik-selvaraghavan-bloody-politics-teaser#comments</comments><guid isPermaLink="false">0693c5d4-5527-4292-98f4-c01c49fba342</guid><pubDate>Sat, 12 Sep 2026 07:43:50 +0000</pubDate><atom:updated>2026-09-12T07:43:50.597Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>Sam C.S,Gautham Karthik,Vijay sethupathi,கௌதம் கார்த்திக்,Bloody Politics,பிளடி பாலிடிக்ஸ்,Selva Raghavan,Dhina Raghavan</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/zyaggu9n/Bloody-Politics-Teaser" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bloody Politics Teaser]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/zyaggu9n/Bloody-Politics-Teaser?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D">கௌதம் கார்த்திக்கின்</a> பிறந்தநாளை முன்னிட்டு, அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் 'பிளடி பாலிடிக்ஸ்' திரைப்படத்தின் அதிரடியான டீசர் வெளியாகியுள்ளது. </p><p>இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் கௌதம் கார்த்திக்குிற்கு திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்துகளைக் குவித்து வரும் வேளையில், இந்த டீசர் ரசிகர்களுக்கு ஒரு டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது.</p><p>அறிமுக இயக்குனர் தினா ராகவன் இயக்கிய இத்திரைப்படத்தின் டீசரை மக்கள் செல்வன் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF">விஜய் சேதுபதி </a>இந்த டீசரைத் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு படக்குழுவினருக்கும், பிறந்தநாள் காணும் கௌதம் கார்த்திக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.</p><h2><strong>பிறந்தநாள் பரிசாக அமைந்த டீசர் காட்டும் அரசியல் களம்</strong></h2><p>107 வினாடிகள் (1 நிமிடம் 47 நொடிகள்) ஓடக்கூடிய இந்த டீசர், பிறந்தநாளை கொண்டாடும் கௌதம் கார்த்திக்கை ஒரு ஆக்ரோஷமான மற்றும் லட்சியம் கொண்ட இளம் அரசியல்வாதியாக முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் அறிமுகப்படுத்துகிறது. </p><p>'இளையா' என்று இப்படத்தில் கெளதம் கார்த்திக்கு பெயரிடப்பட்டுள்ளது.</p><p>மக்களிடையே இருக்கும் பிரபலம் எப்படி வாக்குகளாக மாறுகிறது என்பது போன்ற வசனங்கள் டீசரில் இடம்பெற்றுள்ளன. மேலும், இந்தத் திரைப்படம் தமிழக அரசியல் சூழலை தெரிவிக்கின்றன. படத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D">இயக்குனர் செல்வராகவன்</a> இரக்கமற்ற ஒரு மூத்த அரசியல்வாதி கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார்.</p><h2><strong>பின்னணி மற்றும் கதைக்களம்</strong></h2><p>தேசிய விருது பெற்ற இயக்குனர் ராஜு முருகனிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய தினா ராகவன் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.</p><p>தென் சென்னை பகுதியின் அடிமட்ட அரசியல் மற்றும் அங்கு வாழும் மக்களின் எதார்த்தமான வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. </p><p>படத்தின் அழுத்தமான அரசியல் வசனங்களை இயக்குனர் ராஜு முருகன் எழுதியுள்ளார். படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.</p><h2><strong>தயாரிப்பு மற்றும் நட்சத்திர பட்டாளம்</strong></h2><p>இப்படத்தை 'டிராஃப்ட் பை ஜிகேபி' நிறுவனம் சார்பில் கணேஷ் கே. பாபு தயாரித்துள்ளார். சஞ்சய் முத்துக்குமார் இணை தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.</p><p>இப்படத்தில் கௌதம் கார்த்திக், செல்வராகவனுடன் இணைந்து பிரபல இயக்குனர் பி. வாசு, அஞ்சனா நேத்ரன், ராபி, ஏ. வெங்கடேஷ், மாறன், இந்துமதி, வி.ஐ.எஸ் ஜெயபாலன், ஆதித்யா கதிர் மற்றும் பாக்கியம் சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்கள் நடித்துள்ளனர். </p><p>பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவையும், தீபக் எஸ் படத்தொகுப்பையும் கவனித்துள்ளனர்.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/mwdrLGGFT1I"></iframe></figure><p>'பிளடி பாலிடிக்ஸ்' படத்தின் டிரெய்லர், ஆடியோ வெளியீட்டு விழா மற்றும் திரையரங்கு ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புகளைப் படக்குழுவினர் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி: எரிசக்தி துறையை மேம்படுத்துவதில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும்- தினகரன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-says-tvk-government-must-focus-on-improving-the-energy-sector</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-says-tvk-government-must-focus-on-improving-the-energy-sector#comments</comments><guid isPermaLink="false">bc831f30-2f74-4fed-b589-6eea35419037</guid><pubDate>Sat, 12 Sep 2026 07:30:36 +0000</pubDate><atom:updated>2026-09-12T07:30:36.994Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,AMMK,TTV Dhinakaran,அமமுக,டிடிவி தினகரன்,மின் தடை,Power Cut</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/cmtxc5gh/TTVDhinakaran001.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/cmtxc5gh/TTVDhinakaran001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>வீண் விதண்டாவாதப் பேச்சுகளின் மூலம் மக்களை மடைமாற்றுவதை விட்டுவிட்டு, எரிசக்தி துறையை மேம்படுத்துவதில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/டிடிவி-தினகரன்">டி.டி.வி.தினகரன்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>கடும் இன்னல்கள்</strong></h2><p>தலைநகர் சென்னையில் தொடங்கி, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p>குறிப்பாக, இரவு நேரங்களில் அதிகளவில் ஏற்படும் மின்வெட்டால் பச்சிளம் குழந்தைகள் தொடங்கி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினருமே தங்களின் தூக்கத்தைத் தொலைத்து, கடும் இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.</p><p>மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான மின்சாரத்தைத் தடையின்றி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய துறை சார்ந்த அமைச்சர், மக்களை மடைமாற்றும் விதமாக முடிந்து போன கதைகளையும், காலம் கடந்த குற்றச்சாட்டுகளையும் தோண்டி எடுத்து சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதிலேயே முழு கவனத்தையும் செலுத்தி, ஒட்டுமொத்த எரிசக்தி துறையையும் பாழாக்கிக் கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.</p><h2><strong>ஏற்புடையதல்ல</strong></h2><p>மின்சாரத்தை உற்பத்தி செய்து, அதனைத் தடையின்றி விநியோகிக்க வேண்டிய தவெக அரசு, அதற்கு மாறாக அறிவிக்கப்படாத மின்வெட்டுகளையும், கூடுதல் மின்கட்டணச் சுமையையும் ஏற்படுத்தி, தனது திறனற்ற நிர்வாகத்தை மறைக்க ஏழை, எளிய விளிம்புநிலைப் பொதுமக்களை வாட்டி வதைப்பது ஏற்புடையதல்ல.</p><p>எனவே, தமிழகத்தில் நிலவும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டுகளைத் தடுத்து நிறுத்துவதோடு, பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என எரிசக்தி துறையையும், தமிழ்நாடு அரசையும் வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தடைகளை நீக்கும் விநாயகர் சதுர்த்தி: உகந்த வழிபாட்டு நேரமும்... சிறப்பு தகவல்களும்!</title><link>https://www.maalaimalar.com/spirituality/important-points-to-note-on-vinayagar-chaturthi</link><comments>https://www.maalaimalar.com/spirituality/important-points-to-note-on-vinayagar-chaturthi#comments</comments><guid isPermaLink="false">25e2c7ef-a03d-432a-a935-11020175690f</guid><pubDate>Sat, 12 Sep 2026 07:10:38 +0000</pubDate><atom:updated>2026-09-12T07:10:38.923Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,vinayagar,விநாயகர்,Vinayagar Chaturthi 2026,விநாயகர் சதுர்த்தி 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/u88zd3le/vinayagar01.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விநாயகர்]]></media:title><media:description type="html"><![CDATA[ விநாயகர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/u88zd3le/vinayagar01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>விநாயகர் சதுர்த்தி அன்று எந்த நேரத்தில் படையல் போட்டு வழிபடலாம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்வோமா!</strong></em></p><p>முழுமுதற் கடவுள், தடைகளை நீக்குபவர் ஞானத்தின் அதிபதி என்றெல்லாம் போற்றப்படுபவர் விநாயகப் பெருமான். அவர் அவதரித்த திருநாளை <a href="https://www.maalaimalar.com/topic/விநாயகர்-சதுர்த்தி">விநாயகர் சதுர்த்தி</a>. ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி திதியன்று இந்த பண்டிகை இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரலா மாநிலங்களில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. </p><p>அப்படியான விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனால் விநாயகர் சதுர்த்தி அன்று எந்த நேரத்தில் படையல் போட்டு வழிபடலாம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க...</p><h2><strong>* விநாயகரை வழிபட உகந்த நேரம்</strong> </h2><p>திங்கட்கிழமை காலை 6 மணி முதல் 7 மணி வரை, மதியம் 12 மணி முதல் 1 மணிவரையும் மற்றும் 1 மணிமுதல் 2 மணி வரையும் விநாயகரை வழிபடலாம். </p><figure><img alt="மஞ்சளில் விநாயகர்" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/w5gfdgvt/vinaygar02.jpg" /><figcaption>மஞ்சளில் விநாயகர்</figcaption></figure><h2><strong>* மஞ்சளில் விநாயகர் செய்வது எப்படி?</strong> </h2><p>மஞ்சள் பொடி + மைதா ( பிணைப்புப் பொருளாக செயல்படும்) + சிறிது சர்க்கரை + தண்ணீர் சேர்த்து பிசைந்து விநாயகரை உருவாக்கலாம். </p><h2><strong>விநாயகர் சிலை வாங்க நல்ல நேரம்</strong></h2><p>நாளை (செப்டம்பர் 13ந்தேதி) பகல் 3.10 மணி முதல் மாலை 4.20 வரை, அல்லது நாளை மறுநாள் (செப்டம்பர் 14-ந்தேதி) காலை 9.10 மணி முதல் 10.20 வரை.</p><p>விநாயகர் சதுர்த்திக்கு சிலையை வாங்கும்போது எப்படி வாங்குவது என்று தெரியாமல் சில தவறான சிலைகளை வாங்குகிறோம். கடையில் பார்க்கிற எல்லா சிலைகளையும் வாங்கக்கூடாது. விநாயகர் சிலை வாங்குவதற்கு என்று ஒருமுறை உள்ளது. </p><figure><img alt="விநாயகர்" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/xparx29u/vinayagar.jpg" /><figcaption>விநாயகர்</figcaption></figure><h2><strong>விநாயகர் சிலையை வாங்கும் முறை</strong></h2><p>* அமர்ந்திருக்கும் விநாயகரை தான் வாங்க வேண்டும். </p><p>* விநாயகருடைய துதிக்கை இடது பக்கமாக திரும்பி இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும். </p><p>* சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு ஆகிய நிறங்களில் வாங்க வேண்டும். </p><p>* விநாயகர் கையில் பிரசாதம் இருக்கும்மாதிரி சிலையை பார்த்து வாங்குங்கள். </p><p>* மூஷிக வாகனம் விநாயகர் பக்கத்தில் இருக்கும் மாதிரியும் பார்த்து வாங்குகள். </p><p>இந்த மாதிரி சிலையை வாங்குவதால் காரிய தடை நீங்கும், நமது வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும், விநாயகரின் முழு அருளும் அன்று நமக்கு கிடைத்து விடும். </p><h2><strong>* விநாயகர் வழிபாட்டில் ‘தானமும் அதன் பலன்களும்’</strong> </h2><p>பழங்கள் தானம்:  புத்தி கூர்மை, தொழில் லாபம், வம்ச விருத்தி </p><p>ஆடை (வஸ்திர) தானம் : நாள்பட்ட நோய்கள் நீங்கி ஆயுள் பலம் கூட்டும். </p><p>விளக்கு/ நெய் தானம் : கண் திருஷ்டி நீங்கும், பித்ரு ஆசி கிடைக்கும். </p><p>தேங்காய் தானம்:  காரிய வெற்றி. ராகு கேது தோஷ நிவர்த்தி </p><p>மஞ்சள்/ மாங்கல்யப் பொருட்கள்: திருமணத் தடைகள் நீங்கும், சுமங்கலி பாக்கியம். </p><p>அன்னதானம்: வறுமை நீங்கும், தானிய லட்சுமி அருள் கிடைக்கும்</p><h2><strong>*  விநாயகருக்கு எத்தனை சிதறு தேங்காய் உடைக்க வேண்டும்? தேங்காய் உடைப்பதன் பலன்கள் என்ன?</strong></h2><p>11 சிதறு தேங்காய் உடைத்தால் விரைவில் திருமணம் கைக்கூடும்.</p><p>9 சிதறு தேங்காய் உடைத்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.</p><p>7 சிதறு தேங்காய் உடைத்தால் கடன் தொல்லை நீங்கும்.</p><p>5 சிதறு தேங்காய் உடைத்தால் சிறந்த கல்வி பெறலாம். </p><p>3 சிதறு தேங்காய் உடைத்தால் உடல் நலம் பெறலாம். தொழில் உயர்வு, வேலை வாய்ப்பு கிடைக்கும் </p><p>1 சிதறு தேங்காய் உடைத்தால் தடைகள் நீங்கும். </p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கு தடை கோரி ஐகோர்ட்டில் மனு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/petition-filed-in-high-court-seeking-a-stay-on-maduranthakam-and-dharapuram-by-election</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/petition-filed-in-high-court-seeking-a-stay-on-maduranthakam-and-dharapuram-by-election#comments</comments><guid isPermaLink="false">cf93d5cb-0e4f-4604-a1d3-635e2961edaf</guid><pubDate>Sat, 12 Sep 2026 07:08:02 +0000</pubDate><atom:updated>2026-09-12T07:08:02.603Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Madras High Court,சென்னை ஐகோர்ட்,by election,dharapuram,தாராபுரம்,Maduranthakam,மதுராந்தகம்,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/6khbfjl5/highcourt.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Madras High Court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/6khbfjl5/highcourt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p> <p>கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு எம்எல்ஏக்கள், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு ஆளுங்கட்சியில் இணைந்தனர்.</p> <p>இதில் தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ள, அம்பாசமுத்திரம் பெருந்துறை கரூர் விராலிமலை மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளுக்கு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-by-elections-tvk-sets-up-election-task-force">இடைத்தேர்தல்</a> அறிவிக்க ஐகோர்ட்டு தடை விதித்து உள்ளது.</p><p>தேர்தல் வழக்கு நிலுவையில் இல்லாததால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்துள்ளது.</p>  <p>இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான குறுகிய காலத்தில், மக்கள் தீர்ப்பை புறக்கணித்து அரசியல் காரணங்களுக்காக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததால், இடைத்தேர்தலில் அவர்கள் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, தேர்தல் செலவை டெபாசிட் செய்யும் வகையில் உரிய நடைமுறையை வகுக்கும் படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த வக்கீல் சுதன் என்பவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%90%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D">ஐகோர்ட்டில்</a> பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.</p> <p>அந்த மனுவில், சொந்த அரசியல் காரணங்களுக்காக எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்ததால், பொதுமக்களின் வரிப்பணத்தில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய உள்ளது. இந்த செலவுகளுக்கு அவர்களை பொறுப்பாக்கும் வகையில் உரிய நடைமுறைகளை வகுக்க வேண்டும்.</p> <p>மேலும், தேர்தல் முடிவுகள் வெளியான குறுகிய காலத்தில் அரசியல் காரணங்களுக்காக மக்கள் தீர்ப்பை புறக்கணித்து பதவி விலகுபவர்களை குறிப்பிட்ட காலத்துக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.</p> <p>இந்த வழக்கு முடியும் வரை மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும். இந்த தொகுதிகளுக்கு தவெக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமாரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோரின் வேட்பு மனுக்களை ஏற்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும்.</p> <p>அதேபோல, திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த ஆகும் செலவுகளை அறிக்கையாக தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.</p><p>இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>பிரிக்ஸ் மாநாடு: இந்தியா வந்தடைந்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங்</title><link>https://www.maalaimalar.com/news/national/brics-summit-chinese-president-xi-lands-in-delhi</link><comments>https://www.maalaimalar.com/news/national/brics-summit-chinese-president-xi-lands-in-delhi#comments</comments><guid isPermaLink="false">22abc559-c71b-4650-b9cc-ad85c699faf5</guid><pubDate>Sat, 12 Sep 2026 06:59:02 +0000</pubDate><atom:updated>2026-09-12T06:59:02.616Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Xi Jinping,ஜி ஜின்பிங்,BRICS Summit,பிரிக்ஸ் மாநாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/1yhfr7sd/XiJinping001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜி ஜின்பிங்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/1yhfr7sd/XiJinping001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரிக்ஸ் மாநாடு இன்று தொடங்கி நாளை வரை நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக உலக தலைவர்கள் இந்திய வந்த வண்ணம் உள்ளனர். நேற்று ரஷிய அதிபர் புதின், ஈரான் பிராதமர் பெசெஸ்கியன் உள்ளிட்ட தலைவர்கள் வந்தனர்.</p><p>இந்த நிலையில் இன்று மதியம் சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வந்தடைந்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஜி ஜின்பிங் இந்தியா வந்துள்ளார்.</p><h2>பிரதமர் மோடி- ஜி ஜின்பிங் சந்திப்பு</h2><p>பிரிக்ஸ் மாநாட்டிற்கு இடையே இந்திய பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர்.</p><p>நேற்று ரஷிய அதிபர் புதின் உடன் இந்திய பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது புதினிடம் உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி முயற்சிகளுக்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.</p><p>மேலும், அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, எரிசக்தி, விண்வெளி மற்றும் திறன் பரிமாற்றம் ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகள் குறித்து பிரதமர் மோடியும் அதிபர் புதினும் விவாதித்தனர். அத்துடன் மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல்கள் மற்றும் கருங்கடல் பிராந்தியத்தின் நிலைமை குறித்து பிரதமர் மோடியும் அதிபர் புதினும் தங்கள் கண்ணோட்டங்களைப் பகிர்ந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>உதவியாளர் வீட்டில் பணம், நகைகளை கைப்பற்றிய ED: கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் விலகிய காங்கிரஸ் தலைவர்</title><link>https://www.maalaimalar.com/news/national/congress-leader-harish-rawat-quits-party-posts-after-cash-jewellery-recovered-from-aide-house</link><comments>https://www.maalaimalar.com/news/national/congress-leader-harish-rawat-quits-party-posts-after-cash-jewellery-recovered-from-aide-house#comments</comments><guid isPermaLink="false">20aa8128-3a8c-4e4a-8580-061e4c28324e</guid><pubDate>Sat, 12 Sep 2026 06:30:51 +0000</pubDate><atom:updated>2026-09-12T06:30:51.209Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,Harish Rawat,ஹரிஷ் ராவத்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/8wtq2lz5/Rawatquits001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஹரிஷ் ராவத்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/8wtq2lz5/Rawatquits001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரகாண்ட் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஹரிஷ் ராவத். இவர் ஏற்கனவே உத்தரகாண்ட் மாநில முதல்வராக இருந்துள்ளார். இவரின் 2014 முதல் 2017-ம் ஆண்டு வரையிலான முதல்வர் பதவி காலத்தில், சிறப்புப்பணி அதிகாரியாக செயல்பட்டவர் சந்தன் சிங் ஜீனா. தற்போது தனிப்பட்ட உதவியாளராக (PA) உள்ளார்.</p><h2>32 லட்சம் ரூபாய் பணம்</h2><p>இவரது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அப்போது 32 லட்சம் ரூபாய் பணம் மற்று 12-க்கும் மேற்பட்ட விலையுயர்ந்த கடிகாரங்களை அதிகாரிகள் கைப்பற்றினார்.</p><p>உதவியாளர் வீட்டில் இருந்து பணம் மற்றும் நகை கைப்பற்றப்பட்ட நிலையில், ஹாரிஷ் ராவத், காங்கிரஸ் கட்சியில் தனது அனைத்து பதவிகளிலும் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தலைமை ஆசிரியர்கள் மீது நிதிச் சுமை: அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டச் செலவை அரசே முழுமையாக ஏற்க வேண்டும்- தினகரன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-urges-government-itself-must-fully-bear-the-cost-of-the-breakfast-scheme-in-government-schools</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-urges-government-itself-must-fully-bear-the-cost-of-the-breakfast-scheme-in-government-schools#comments</comments><guid isPermaLink="false">31bf92c7-ac98-4461-af12-35a2056c644b</guid><pubDate>Sat, 12 Sep 2026 06:01:40 +0000</pubDate><atom:updated>2026-09-12T06:01:40.810Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,AMMK,TTV Dhinakaran,அமமுக,டிடிவி தினகரன்,காலை உணவு திட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/6nb3d7aa/TTVDhinakaran001.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ டி.டி.வி.தினகரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ டி.டி.வி.தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/6nb3d7aa/TTVDhinakaran001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மீது தேவையற்ற பொருளாதாரச் சுமையை ஏற்றும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் எனவும் தவெக அரசை வலியுறுத்துவதாக டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.</strong></em> </p><p>அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>ஏற்புடையதல்ல</strong></h2><p>தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பெருந்தலைவர் காமராஜர் <a href="https://www.maalaimalar.com/topic/காலை-உணவு-திட்டம்">காலை உணவுத் திட்டம்</a> வரும் 17ஆம் தேதி முதல் விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், அந்நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் பள்ளித் தலைமை ஆசிரியர்களே தங்களது சொந்த செலவில் மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p>ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி உட்பட, அரசால் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் நிலையில், அதற்குத் தேவையான பெயர்ப்பலகை, மின்விளக்கு, குடிநீர் உள்ளிட்ட தொடக்க நிகழ்வுக்கான ஏற்பாடுகளுக்கான செலவினங்களைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் தலையில் சுமத்துவது ஏற்புடையதல்ல.</p><p>பல ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பயன்பெறக்கூடிய ஒரு திட்டத்தை விரிவாக்கம் செய்யும்போது, அதற்கான ஏற்பாட்டுச் செலவுகளுக்குத் தேவையான நிதியை ஒதுக்க மறுப்பதும், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மீது பொருளாதாரச் சுமையை ஏற்றுவதும், அரசு நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள நிர்வாகச் சிக்கல்களையும் அதிகாரக் குளறுபடிகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.</p><p>எனவே, செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற உள்ள பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்திற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு நிதியின் மூலமாகவே மேற்கொள்ள வேண்டும் என்பதோடு, பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மீது தேவையற்ற பொருளாதாரச் சுமையை ஏற்றும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் எனவும் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>6 வருடத்திற்குப் பிறகு குவாங்சூ- டெல்லி இடையே விமான சேவையை தொடங்கும் சீன நிறுவனம்</title><link>https://www.maalaimalar.com/news/national/china-southern-airlines-to-resume-guangzhou-to-delhi-flights-after-6-years</link><comments>https://www.maalaimalar.com/news/national/china-southern-airlines-to-resume-guangzhou-to-delhi-flights-after-6-years#comments</comments><guid isPermaLink="false">cd975128-8cb1-4b60-b0b5-157366eba254</guid><pubDate>Sat, 12 Sep 2026 05:51:13 +0000</pubDate><atom:updated>2026-09-12T05:51:13.856Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா சீனா,India China,விமான போக்குவரத்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/7mlzyq5l/ChinaSouther-Airlines.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ China Southern Airlines]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/7mlzyq5l/ChinaSouther-Airlines.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சீனாவின் China Southern Airlines நிறுவனம், இந்தியாவின் தலைநகர் டெல்லிக்கு சீனாவின் குவாங்சூவில் இருந்து விமானப் போக்குவரத்து வருகிற 21-ந்தேதியில் இருந்து தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளது.</p><h2>வாரத்திற்கு 100 விமானங்கள்</h2><p>China Southern Airlines நிறுவனத்தின் தலைமையகம் சீனாவின் தெற்கு குவாங்டோங் பிராந்தியத்தின் குவாங்சூவில் உள்ளது. சீனாவில் உள்ள முக்கியமான விமான சேவை நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இருவழிப் பாதையில் வாரத்திற்கு 100 விமானங்கள் இயக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது.</p><p>இந்தியாவில் இன்று பிரிக்ஸ் மாநாடு தொடங்க இருக்கிறது. இதில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொள்ள இருக்கிறார். இந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><h2>கொரோனாவில் தடைபட்டு விமான சேவை</h2><p>கடந்த 6 வருடத்திற்கு முன்னதாக கொரோனா தொற்று காரணமாக விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன்பின் எல்லையில் மோதல் ஏற்பட்டு பதற்றம் நிலவியதால் விமான சேவை தொடர்ந்து நிறுத்தப்பட்டிருந்தது.</p><h2>மோடி- ஜி ஜின்பிங் சந்திப்பால் மீண்டும் தொடங்கப்பட்ட விமான சேவை</h2><p>இந்திய பிரதமர் மோடி மற்றும் சீனா அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் கடந்த 2024 மற்றும் 2025-ம் ஆண்டு நேரடியாக சந்தித்து பேசினார். அதனடிப்படையில் படிப்படியாக இருநாடுகளுக்கு இடையிலான விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டு வருகிறது.</p><p>கடந்த மார்ச் மாதம் இண்டிகோ நிறுவுனம் ஷாங்காய்- கொல்கத்தா இடையே தினசரி விமான சேவையை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்- த.வெ.க.வில் தேர்தல் பணிக்குழு அமைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-by-elections-tvk-sets-up-election-task-force</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-by-elections-tvk-sets-up-election-task-force#comments</comments><guid isPermaLink="false">136ac976-440a-4ef8-ac06-cdcb999216b5</guid><pubDate>Sat, 12 Sep 2026 05:50:45 +0000</pubDate><atom:updated>2026-09-12T05:50:45.285Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,dharapuram,தாராபுரம்,மதுராந்தகம்,tvk,by elections,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/pxeeeri9/TVK.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தவெக]]></media:title><media:description type="html"><![CDATA[ தவெக]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/pxeeeri9/TVK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இடைத்தேர்தல் வரலாற்றிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர் என்கிற புதிய வரலாறு படைக்கும் வகையில் அனைவரும் தேர்தல் பணியாற்றிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/தவெக">தமிழக வெற்றிக்கழகத்</a> தலைவரும், முதலமைச்சருமான விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>அனைவருக்கும் வணக்கம்,</p><p>வருகின்ற அக்டோபர் 6-ந்தேதி நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகளை மேற்கொள்ள தேர்தல் பணிக்குழுவும், பணிகளைக் கண்காணிக்க தேர்தல் கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்படுகிறார்கள். </p><p>தேர்தல் கண்காணிப்பாளர்கள்:</p><p>1. அமைச்சர் N. ஆனந்த்</p><p>2. அமைச்சர் K.A. செங்கோட்டையன்</p><p>3. அமைச்சர் CTR நிர்மல் குமார்</p><p>தேர்தல் பணிக்குழு</p><p>35-மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதி.</p><p>பொறுப்பாளர்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</p><p>இணைப் பொறுப்பாளர்கள்:</p><p>1. அமைச்சர் ராஜ்குமார்</p><p>2. அமைச்சர் தென்னரசு</p><p>3. அமைச்சர் வினோத்</p><p>துணைப் பொறுப்பாளர்கள்:</p><p>1. சரவணமூர்த்தி MLA, சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி</p><p>2. தியாகராஜன் MLA, செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி</p><p>3. விஜயராஜ் MLA, திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி</p><p>4. காமாட்சி MLA, பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி</p><p>5.பாலாஜி (எ) மணிகண்டன் செங்கல்பட்டு தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்</p><p>101-தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதி:</p><p>பொறுப்பாளர்:  அமைச்சர் அருண்ராஜ்</p><p>இணைப் பொறுப்பாளர்கள்:</p><p>1. அமைச்சர் விஜய் பாலாஜி</p><p>2. அமைச்சர் விஜயலட்சுமி</p><p>3. அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்</p><p>துணைப் பொறுப்பாளர்கள்:</p><p>1. பாலமுருகன் MLA, திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி</p><p>2. சத்தியபாமா MLA, திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி</p><p>3.ராம்குமார் MLA, பல்லடம் சட்டமன்றத் தொகுதி</p><p>4. திலீப் MLA, நாமக்கல் சட்டமன்றத் தொகுதி</p><p>5. சத்யா MLA, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி</p><p>மேற்கண்ட குழுவினர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் பணிகளை மேற்கொள்வார்கள். தேர்தல் கண்காணிப்பாளர்கள், இரண்டு தொகுதிகளின் தேர்தல் பணிகளைக் கண்காணிப்பார்கள்.</p><p>அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட கழகத் தோழர்கள் அனைவரும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். வெற்றிச் சின்னமாம் விசில் சின்னம், மீண்டும் வாகை சூட வேண்டும். இடைத்தேர்தல் வரலாற்றிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர் என்கிற புதிய வரலாறு படைக்கும் வகையில் அனைவரும் தேர்தல் பணியாற்றிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இந்தத் தொகுதிகளில் நம் வெற்றி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நமது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளைத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக விரைவில் முன்னெடுப்போம் என்று தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்ற நம்பர் 1 ஜோடி</title><link>https://www.maalaimalar.com/sports/tennis/katerina-siniakova-taylor-townsend-pair-won-the-womens-doubls-title-in-us-open-tennis</link><comments>https://www.maalaimalar.com/sports/tennis/katerina-siniakova-taylor-townsend-pair-won-the-womens-doubls-title-in-us-open-tennis#comments</comments><guid isPermaLink="false">b6d25fe8-5452-4c19-9af6-b84f939f6a03</guid><pubDate>Sat, 12 Sep 2026 05:45:18 +0000</pubDate><atom:updated>2026-09-12T05:45:18.357Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>US Open Tennis,அமெரிக்க ஓபன் டென்னிஸ்,katerina siniakova,taylor townsend,கடெரினா சினியாகோவா,டெய்லர் டவுன்செண்ட்</media:keywords><media:content height="1000" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/s2tqm301/siniakova.jpg" width="1600"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ siniakova, townsend]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/s2tqm301/siniakova.jpg?w=280" width="280"></media:thumbnail><category>டென்னிஸ் (Tennis)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் இரட்டையரில் கடேரினா சினியாகோவா - டெய்லர் டவுன் செண்ட் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.</strong></em></p><p>கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.</p><p>இந்நிலையில், பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டி நேற்று நடந்தது.</p><p>இதில் செக் குடியரசின் கடெரினா சினியாகோவா - அமெரிக்காவின் டெய்லர் டவுன்செண்ட் ஜோடி, அமெரிக்காவின் மோண்ட்கோமேரி-ஆஷ்லின் குருகர் ஜோடி உடன் மோதியது.</p><p>இதில் சிறப்பாக ஆடிய அமெரிக்க ஜோடி முதல் செட்டை 7-5 என வென்றது.</p><p>இதில் சுதாரித்துக் கொண்டு அதிரடியாக ஆடிய சினியாகோவா-டவுன்செண்ட் ஜோடி அடுத்த இரு செட்களை 6-0, 6-2 என வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தியது.</p><p>செக் குடியரசின் கடெரினா சினியாகோவா-அமெரிக்காவின் டெய்லர் டவுன்செண்ட் ஜோடி இரட்டையரில் நம்பர் 1 ஜோடி என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களும் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும்!- அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-ministers-and-members-of-the-legislative-assembly-must-also-disclose-their-asset-details</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-ministers-and-members-of-the-legislative-assembly-must-also-disclose-their-asset-details#comments</comments><guid isPermaLink="false">ff85be4d-9e9c-4bf5-a779-d82ba54da25b</guid><pubDate>Sat, 12 Sep 2026 05:28:42 +0000</pubDate><atom:updated>2026-09-12T05:28:42.539Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,Govt employees,அரசு ஊழியர்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/5slhh0sl/Anbumaniramadoss01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/5slhh0sl/Anbumaniramadoss01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சித்  தலைவர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் நாளில் அவர்களின் அனைத்து வகையான சொத்துகளையும் பொதுவெளியில் வெளியிடுவதை கட்டாயமாக்கி சமூகத் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.</strong></em></p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>ஊழலை ஒழிக்க உதவாது</strong></h2><p>தமிழ்நாட்டில் ஆசிரியர்கள், நீதிமன்றப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியர்களும் அடுத்த மாதத்திற்குள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிப்பதற்கான சிறந்த முயற்சி என்ற வகையில் இந்த நடவடிக்கை  வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளை விடுத்து, அரசு ஊழியர்களுக்கு மட்டும் இக்கட்டுப்பாட்டை விதிப்பது நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்க உதவாது.</p><p>தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளின் 7(3) பிரிவில் முந்தைய திமுக அரசால் கடந்த ஜனவரி மாதம் செய்யப்பட்ட திருத்தத்தின்படி அனைத்து நிலை அரசு ஊழியர்களும் ஒவ்வொரு ஆண்டும் திசம்பர் 31-ஆம் தேதியன்று அவர்களின் பெயரிலும், அவர்களால் மற்ற குடும்ப உறுப்பினர்களின் பெயர்களிலும் உள்ள நிலங்கள், கட்டிடங்கள் உள்ளிட்ட அசையா சொத்துகள், வாகனங்கள், நகைகள், வங்கி வைப்பீடுகள் உள்ளிட்ட அசையும் சொத்துகள், கடன்கள் உள்ளிட்ட விவரங்களை அடுத்த ஆண்டின் மார்ச் 31ஆம் தேதிக்கு முன்பாக தமிழக அரசின் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்புக்கான தளத்தில்  தனித்தனி படிவத்தில் தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2025-ஆம் ஆண்டு திசம்பர் 31-ஆம்  நாள் நிலவரப்படியான அரசு ஊழியர்களின் சொத்து விவரங்கள் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் இதுவரை தாக்கல் செய்யப்படாத நிலையில், அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது.</p><h2><strong>ஊழலை ஒழிக்க முடியும்</strong></h2><p>சொத்து விவரங்களை தாக்கல் செய்ய அரசு ஊழியர்கள் தவறினால் அது விதிமீறலாகக் கருதப்படும்;  அது அவர்களின் பதவி உயர்வை பாதிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால், அனைவரும் இந்த விதியை மதித்து சொத்துக் கணக்குகளைத் தாக்கல் செய்வது கட்டாயமாகிவிடும். அரசு ஊழியர்கள் சொத்துக் கணக்குகளை தாக்கல் செய்வது புதிய நடைமுறை அல்ல. கடந்த காலங்களில் பணியில் சேர்ந்த முதல் ஆண்டிலும், அதன்பின் ஐந்தாண்டுக்கு ஒருமுறையும் சொத்துக்கணக்கை தாக்கல் செய்ய வேண்டியிருந்தது. இப்போது இந்த நடைமுறை ஆண்டுக்கு ஒருமுறை என மாற்றப்பட்டிருப்பதால் அரசு ஊழியர்கள் ஊழல் செய்து சொத்து வாங்குவது குறையும்; இதன் மூலம் அரசு நிர்வாகம் படிப்படியாக தூய்மையடையக் கூடும்.</p><p>ஆனால், ஊழல் ஒழிப்புக்கான இந்த நடைமுறைகள் அரசு ஊழியர்களுடன் மட்டும் நின்று விடக்கூடாது. முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சித்  தலைவர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் இந்த  கட்டுப்பாடு நீட்டிக்கப்பட வேண்டும். அப்போது தான் தமிழக அரசு நிர்வாகத்திலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் பல பத்தாண்டுகளாக மலிந்து கிடக்கும் ஊழலை முழுமையாக ஒழிக்க முடியும்.</p><p>அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிப்பதற்காக இந்தியாவின் பல மாநிலங்களில் பல்வேறு நடவடிக்கைகள் கடந்த சில பத்தாண்டுகளில் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் முதன்மையானது லோக் அயுக்தா அமைப்பை  ஏற்படுத்துவது ஆகும். எந்தெந்த மாநிலங்களில் எல்லாம் லோக் அயுக்தாவின் அதிகார வரம்புக்குள் மாநில முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொண்டுவரப்பட்டிருக்கிறார்களோ, அந்த மாநிலங்களில் எல்லாம் அரசு நிர்வாகத்தில் ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை என்றாலும் கூட, கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் லோக் அயுக்தாவின் அதிகார வரம்புக்குள்ளும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கொண்டு வரப்படவில்லை, சொத்துக்கணக்குகளைக் காட்ட வேண்டிய கட்டாயத்திற்குள்ளும் கொண்டு வரப்படவில்லை என்றால் ஊழல் ஒழிப்பு என்பது நகைச்சுவையாகவே இருக்கும்.</p><p>ஊழல் ஒழிப்பில் அரசு ஊழியர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டியவர்கள் அரசியல்வாதிகள் தான். அவர்கள் நேர்மையாக இருந்தால் அதிகாரிகளால் ஊழல் செய்ய முடியாது. எனவே, தமிழக அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிப்பதற்கான முன்முயற்சிகளை முதலமைச்சரும், அமைச்சர்களும் மேற்கொள்ள வேண்டும்.</p><p>அதற்கான முதல் நடவடிக்கையாக முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சித்  தலைவர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் நாளில் அவர்களின் அனைத்து வகையான சொத்துகளையும் பொதுவெளியில் வெளியிடுவதை கட்டாயமாக்கி சமூகத் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும். மக்கள் பிரதிநிதிகளின் சொத்து மதிப்பு ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டுக்கும் மேல் அதிகரித்திருந்தால், அதுகுறித்து பொதுமக்களுக்கு சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதி விளக்கம் அளிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். பொது வாழ்வில் தூய்மையை உறுதி செய்வதற்காக இந்நடவடிக்கைகளை கட்டாயமாக்கி விதிகளை வகுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>முக்கியமான பைப்லைனை மூடிய சவுதி அரேபியா: கச்சா எண்ணெய் விலை மேலும் உயரும் அபாயம்..!</title><link>https://www.maalaimalar.com/news/world/saudi-arabia-shuts-down-pipeline-as-houthis-seize-island-opening-new-front-in-iran-war</link><comments>https://www.maalaimalar.com/news/world/saudi-arabia-shuts-down-pipeline-as-houthis-seize-island-opening-new-front-in-iran-war#comments</comments><guid isPermaLink="false">78a61da3-72ba-4ca9-8bfc-be6b953a1658</guid><pubDate>Sat, 12 Sep 2026 05:28:22 +0000</pubDate><atom:updated>2026-09-12T05:28:22.521Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Saudi Arabia,சவுதி அரேபியா,Houthi,Red Sea,ஹவுதி கிளர்ச்சியாளர்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/118h9uxw/SaudiArabia001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சவுதி அரேபியா- பாப் அல்-மாண்டெப்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/118h9uxw/SaudiArabia001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பாக ஈரான்- அமெரிக்கா இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், ஈரானுக்கு ஆதரவாக ஏமனில் உள்ள கிளர்ச்சிக்குழுவான ஹவுதி, செங்கடலில் செல்லும் சரக்கு மற்றும் எண்ணெய் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக சவுதி அரேபியா எல்லையில், எல்லைத் தாண்டி தாக்குதல் நடத்திய ஹவுதி, முக்கியமான ஜலசந்தியான பாப் அல்-மாண்டெப்பில் இருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில் உள்ள மோகா என்ற துறைமுகத்தை கைப்பற்றியுள்ளது.</p><p>இதனால் பாப் அல்-மாண்டெப் ஜலசந்தி வழியாக செல்லும் கடல் போக்குவரத்துக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. ஈரான் உடனனா போர் காரணமாக எண்ணெய் போக்குவரத்திற்காக சவுதி அரேபியா, ஹார்முஸ் ஜலசந்தியை பயன்படுத்துவதற்காக பாப் அல்-மாண்டெப் ஜலசந்தி வழியாக எண்ணெய் ஏற்றுமதி மேற்கொள்ள மிகப்பெரிய அளவிலான கிழக்கு-மேற்கு பைப்லைனை கடந்த 1980-ல் கட்டியது.</p><p>இதன் பைப்லைன் மூலம் கச்சா எண்ணெய் பாப் அல்-மாண்டெப் ஜலசந்திக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து சவுதி அரேபியா ஏற்றுமதி செய்து வந்தது.</p><h2>ஈராக்கில் இருந்து டிரோன் மூலம் தாக்குதல்</h2><p>ஹவுதி கிளர்ச்சிக்குழு பாப் அல்-மாண்டெப் ஜலசந்தியை நெருங்கி வரும் நிலையில், பைப்லைனை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக சவுதி அரேபியா குற்றம்சாட்டியது. அத்துடன் ஈராக்கில் இருந்து டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக சவுதி அரேபியா குற்றம்சாட்டியுள்ளது. அத்துடன், முன்னெச்சரிக்கை பாதுகாப்பிற்காக இந்த பைப்லைனை மூடுவதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.</p><p>ஏற்கனவே ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் எண்ணெய் போக்குவரத்து வெகுவாக குறைந்துள்ள நிலையில், தற்போது சவுதி அரேபியாவும் முக்கிய பைப்லைனை மூடியதால் கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.</p><h2>விசாரணைக்கு ஈரான் பிரதமர் உத்தரவு</h2><p>இதற்கிடையே, ஈராக்கில் இருந்து டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது என சவுதி அரேபியா கூறியுள்ள நிலையில், ஈராக் பிரதமர் அலி அல்-ஜைதி, இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.</p><p>கடந்த ஜூலை மாதம் ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக்குழுக்கள் மீது சவுதி அரேபியா மற்றும் அமெரிக்கா இணைந்து தாக்குதல் நடத்தியது. சவுதி அரேபியாவில் உள்ள எண்ணெய் வளங்கள் மீது நாங்கள்தான் தாக்குதல் நடத்தினோம் என்று ஹவுதி கூறியது. ஆனால், பிராந்திய அதிகாரிகள் ஹவுதி உதவியுடன் ஈராக்கில் உள்ள போராட்டக்குழு தாக்குதலை நடத்தியது என்றனர்.</p><p>ஹவுதியின் முன்னேற்றம், அமெரிக்காவுக்கு எதிரான போரில் ஈரானுக்கு புதிய பாதையை திறந்து விடுவது போல் உள்ளதாக வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தலில் திமுக தோல்வி அடைவது உறுதி - அமைச்சர் நிர்மல்குமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-says-dmk-defeat-in-by-election</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-says-dmk-defeat-in-by-election#comments</comments><guid isPermaLink="false">630c54b2-fcff-45bc-9611-2bdb385bde81</guid><pubDate>Sat, 12 Sep 2026 05:21:00 +0000</pubDate><atom:updated>2026-09-12T05:21:00.815Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,by election,இடைத்தேர்தல்,அமைச்சர் நிர்மல்குமார்,minister nirmal kumar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/08yfcf01/nirmalkumar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Nirmal Kumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/08yfcf01/nirmalkumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருமங்கலம் பார்முலாவை போல் திமுக பல கோடி கொடுத்தாலும் மக்கள் அதை வாங்கிக்கொண்டு தெளிவாக வாக்களிப்பர் என்று அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madurai-meenakshi-amman-temple-kumbabishekam-special-train-service-between-chennai-central-and-madurai">மதுரையில் </a>சட்டத்துறை <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">அமைச்சர் நிர்மல்குமார்</a> செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p><p>* மிசாவில் மு.க.ஸ்டாலின் கைதானார் என்பதற்கான ஆதாரம் இல்லை.</p><p>* மு.க.ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்படவில்லை என்பதற்கு தன்னிடம் ஆதாரமுள்ளது.</p> <p>* மிசா குறித்து மீண்டும் மீண்டும் பேசினால் திமுகவுக்கு தான் அழிவு ஏற்படும்.</p><p>* மிசாவில் கைதானதற்கான ஆதாரமே இல்லாத ஒரே தியாகி ஸ்டாலின்தான்.</p><p>* மிசா சட்டத்தில்தான் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார் என்றால் Detention Copy அழிக்கப்பட்டது ஏன்?</p> <p>* திமுக ஆட்சிக்கு வந்தபிறகு ஸ்டாலின் கைது குறித்த Detention Copy அழிக்கப்பட்டது.</p><p>* மு.க.ஸ்டாலின் மிகப்பெரிய தியாகி என்று திமுக சித்தரிக்க முயன்றாலும் மக்கள் அதை நம்பமாட்டார்கள்.</p><p>* மதுராந்தகத்துக்கும் திமுக வேட்பாளர் பரந்தாமனுக்கும் என்ன சம்பந்தம்?</p> <p>* மதுராந்தகம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியி எழும்பூரை சேர்ந்த பரந்தாமனை நியமிப்பதால் என்ன பயன்?</p><p>* இடைத்தேர்தலில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் டெபாசிட் கூட கிடைக்காது.</p><p>* வாக்காளர்களுக்கு பணம், அன்பளிப்பை வழங்கிய திருமங்கலம் பார்முலாவை திமுக செய்தாலும் பயனில்லை.</p> <p>* திருமங்கலம் பார்முலாவை போல் திமுக பல கோடி கொடுத்தாலும் மக்கள் அதை வாங்கிக்கொண்டு தெளிவாக வாக்களிப்பர்.</p><p>* திமுக நடத்தும் போராட்டத்தை பார்த்து மக்கள் சிரித்தவாறே கடந்து செல்வர்.</p><p>* இடைத்தேர்தலில் திமுக தோல்வி அடைவது உறுதி.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ஆனைமுகனின் அறுபடை வீடும், அதன் சிறப்புகளும்</title><link>https://www.maalaimalar.com/spirituality/vinayagar-arupadai-veedu-6</link><comments>https://www.maalaimalar.com/spirituality/vinayagar-arupadai-veedu-6#comments</comments><guid isPermaLink="false">cc56324e-5316-43ab-be1e-d0fc690018ff</guid><pubDate>Sat, 12 Sep 2026 05:14:48 +0000</pubDate><atom:updated>2026-09-12T05:14:48.607Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>arupadai veedu,விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,அறுபடை வீடு,vinayagar,விநாயகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/vnl5c61a/pillai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ vinayagar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/vnl5c61a/pillai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முருகப் பெருமானுக்கு உள்ள அறுபடை வீடு போல் விநாயகருக்கும் அறுபடை வீடு உள்ளது.</strong></em></p><h2>அறுபடை வீடு</h2><p>அறுபடை வீடு என்றால் நினைவுக்கு வருவது முருகப் பெருமான்தான். ஆனால், முருகனது அண்ணனான விநாயகருக்கும் அறுபடை வீடு உள்ளது என்றால் ஆச்சரியப்பட தேவையில்லை.</p><p>விநாயக பெருமானின் அறுபடை வீட்டைப் பற்றியும், அந்த அறுபடை வீடுகளில் வழிபட்டால் கிடைக்கும் பலன்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்.</p><h2>விநாயகரின் அறுபடை வீடுகள்</h2><p>திருவண்ணாமலை</p><p>விருத்தாசலம்</p><p>திருக்கடவூர்</p><p>மதுரை</p><p>பிள்ளையார்பட்டி</p><p>திருநாரையூர் ஆகியவையே விநாயகருக்கான அறுபடை வீடுகள் ஆகும்.</p><p>விநாயகரின் அறுபடை வீடுகளை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்</p><h2>முதல் படைவீடு: திருவண்ணாமலை</h2><p>திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள விநாயகரின் பெயர் 'அல்லல் போம் விநாயகர்'. இந்த விநாயகரைக் குறித்து போற்றப்படும் பாடலே 'அல்லல் போம் வல்வினை போம், அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம்' என்பது. இவரை வழிபட அல்லல்கள் தீரும்.</p><h2>இரண்டாவது படைவீடு: விருத்தாசலம்</h2><p>இங்குள்ள ஆலயத்தில் எழுந்தருளியுள்ள கணபதிக்கு ஆழத்துப் பிள்ளையார் என பெயர். பெயருக்கேற்ப ஆழத்தில் சன்னதி கொண்டுள்ளார். இந்த விநாயகரைத் துதித்தால் செல்வமும், கல்வியும் மற்றும் சீரான வாழ்வும் நம்மை வந்து சேரும்.</p><h2>மூன்றாவது படைவீடு: திருக்கடவூர்</h2><p>எந்தவிதமான வாழ்க்கை வசதிகள் நமக்கு அமையப் பெற்றிருந்தாலும், அதை அடைய நமக்கு மிக முக்கிய தேவை நீண்ட ஆயுள். இந்த ஆயுளை அள்ளி வழங்குகிறவராக திருக்கடவூர் கள்ளவாரணப் பிள்ளையார் விளங்குகிறார்.</p><h2>நான்காவது படைவீடு: மதுரை</h2><p>மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மீனாட்சி அம்மன் சன்னதிக்குள் நுழையும் முன் சித்தி விநாயகரின் தரிசனத்தைப் பெறலாம். நாம் விரும்புகிற காரியங்களை நிறைவேற்றித் தருபவராக உள்ளார்.</p><p>மாணிக்கவாசகர் பாண்டிய மன்னருக்காக குதிரை வாங்கப் புறப்படுகையில் இந்த சித்தி விநாயகரையே தரிசித்துச் சென்றதாக திருவிளையாடல் புராணம் தெரிவிக்கிறது.</p><h2>ஐந்தாவது படைவீடு: பிள்ளையார்பட்டி</h2><p>அனைத்துப் பேறுகளும் நம்மை வந்தடைந்தாலும் ஞானம் இல்லையேல் அந்தப் பேறுகளால் ஒரு பலனும் இல்லை. அந்த ஞானத்தை வழங்குபவராக இவர் அருள்பாலிக்கிறார். இவர் சிவலிங்கத்தைக் கையில் தாங்கி அருள்புரிகிறார். சிவலிங்கத்தை கையில் ஏந்தி சிவபூஜை செய்பவராகத் திகழும் இந்த கற்பக விநாயகரை வணங்கினால் தீட்சையும் ஞானமும் கிடைக்கும்.</p><h2>ஆறாவது படைவீடு: திருநாரையூர்</h2><p>திருநாரையூரில் பொள்ளாப் பிள்ளையாராக அருள்பாலிக்கிறார். அப்பரும் சம்பந்தரும் பாடிய இத்தலத்தில் இவரை வழிபட புதிய முயற்சிகளில் கை மேல் பலன் கிடைக்கும்.</p><p>விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் இந்த வேளையில், விநாயகரின் அறுபடை வீடுகளுக்கும் சென்று ஆனைமுகனின் அருள் பெற்று உய்வோமாக.</p>]]></content:encoded></item><item><title>கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தின் தந்தை காலமானார்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/former-indian-cricketer-sreesanth-father-dies-at-89</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/former-indian-cricketer-sreesanth-father-dies-at-89#comments</comments><guid isPermaLink="false">394a6559-d2ab-4af5-acb0-a3ffb2d2aae1</guid><pubDate>Sat, 12 Sep 2026 05:00:41 +0000</pubDate><atom:updated>2026-09-12T05:00:41.623Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ஸ்ரீசாந்த்,Sree Santh</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/gmjuc7tq/Sreesanth001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஸ்ரீசாந்த்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/gmjuc7tq/Sreesanth001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த். இவர் கேரளாவைச் சேர்ந்தவர். ஐபிஎல் போட்டியில் விளையாடும்போது, மேட்ச்-பிக்சிங்கில் சிக்கினார். இதனால் இவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. பின்னர், மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டார். நீதிமன்றம் அவரை விடுவித்தாலும், பிசிசிஐ அவர் மீதான தடையை நீக்க மறுத்தது.</p><p>இவரது தந்தை வி. சாந்தகுமாரன் நாயர். 89 வயதான இவர், வயது மூப்பு காரணமாக உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்றிரவு 9.45 மணிக்கு உயிரிழந்தார் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.</p><h2>ஞாயிற்றுக்கிழமை இறுதிச் சடங்கு</h2><p>வெளிநாட்டில் இருந்து உறவினர்கள் வர வேண்டியுள்ளதால் ஞாயிற்றுக்கிழமை வரை, உடல் மருத்துவமனையில் வைக்கப்படுகிறது. ஞாயிறு காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கோதமங்கலத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதன்பின் 4 மணிக்கு இறுதிச் சடங்கு நடைபெற இருக்கிறது.</p><p>ஸ்ரீசாந்தின் தாயார் டி.என். சாவித்ரிதேவி ஆவார். தீபு என்ற சகோதரனும், நிவேதிதா, திவ்யா ஆகிய இரண்டு சகோதரிகளும் உள்ளனர்.</p><h2>இந்திய அணியில் 2005-ல் அறிமுகம்</h2><p>43 வயதாகும் ஸ்ரீசாந்த், 2005-ல் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியிலும், 2006-ல் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியிலும் அறிமுகம் ஆனார். 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 87 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 53 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 75 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 10 டி20 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.</p><p>இந்திய அணிக்காக கடைசியாக 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓவலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.</p><p>உலக கோப்பையை வென்ற டி20 மற்றும் ஒருநாள் இந்திய அணியில் இடம் பிடித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>தொடர் விடுமுறை - நேற்று இரவு முதல் இன்று காலை வரை கடும் போக்குவரத்து நெரிசல் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/festival-holiday-severe-traffic-congestion-from-last-night-until-this-morning</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/festival-holiday-severe-traffic-congestion-from-last-night-until-this-morning#comments</comments><guid isPermaLink="false">33cdde8f-eea4-4982-8858-601801b731a7</guid><pubDate>Sat, 12 Sep 2026 04:58:35 +0000</pubDate><atom:updated>2026-09-12T04:58:35.385Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>போக்குவரத்து நெரிசல்,traffic jam,தொடர் விடுமுறை,விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/4lf4srp9/traffic.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ போக்குவரத்து நெரிசல்]]></media:title><media:description type="html"><![CDATA[ போக்குவரத்து நெரிசல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/4lf4srp9/traffic.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தொடர் விடுமுறை காரணமாக 10 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் ஜி எஸ் டி சாலையை கடப்பதால் நேற்று இரவு முதல் இன்று காலை வரை போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.</strong></em></p><h2><strong>போக்குவரத்து நெரிசல்</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/விநாயகர்-சதுர்த்தி">விநாயகர் சதுர்த்தி</a> மற்றும் தொடர் விடுமுறை முன்னிட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருக்கக்கூடிய தென் மாவட்ட, வட மாவட்டத்தை சேர்ந்த மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு கார், இருசக்கர வாகனங்கள், குடும்பமாக தனியார் வேன் மற்றும் அரசு பேருந்து, ஆம்னி பேருந்து என புறப்பட்ட லட்சக்கணக்கான வாகனங்களால் பெருங்களத்தூர், வண்டலூர், கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, காட்டாங்குளத்தூர், மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில், மகேந்திரா சிட்டி டோல்கேட் வரை வாகனங்கள் நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.</p><h2><strong>10 லட்சம் வாகனங்கள்</strong></h2><p>தினசரி வண்டலூர், கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி, ஜிஎஸ்டி சாலையில் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வாகனங்கள் பயணித்தால் நேற்றைய தினம் இரவு 7 மணி முதல் இன்று காலை எட்டு மணி வரை 10 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் கடந்து சென்றுள்ளதாகவும் வாகனங்கள் ஊர்ந்து செல்லத்தக்க போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.</p><p>இது போன்று போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று முன்னதாகவே அறிந்த தாம்பரம் மாநகர போக்குவரத்து போலீசார் இதற்காக வண்டலூர், கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, காட்டாங்குளத்தூர், மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில், மகேந்திரா சிட்டி, செங்கல்பட்டு டோல்கேட் வரை கூடுதலாக போக்குவரத்து போலீசார் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.</p><p>மேலும் கனரக வாகனங்களை ஜிஎஸ்டி சாலை வழியாக அனுமதியும் மறுக்கப்பட்டது. அப்படி இருந்தும் 10 லட்சத்துக்கு மேலான வாகனங்கள் ஒரே நேரத்தில் கடந்து சென்றதால் இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்று கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY: சற்றே உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-12-9-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-12-9-2026#comments</comments><guid isPermaLink="false">63ac1c12-b669-46d5-8042-f734283edf1b</guid><pubDate>Sat, 12 Sep 2026 04:52:14 +0000</pubDate><atom:updated>2026-09-12T04:52:14.062Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/06/12/14166045-gold03.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/06/12/14166045-gold03.webp?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. </p><p>சென்னையில் கடந்த 1-ந்தேதி தங்கம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 175-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 400-க்கும் விற்பனையானது. இதனை தொடர்ந்து 2-ந்தேதி தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.225 குறைந்து, ரூ.13 ஆயிரத்து 950-க்கும், சவரனுக்கு ரூ.1,800 சரிந்து ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 600-க்கும் விற்றது. </p> <p>கடந்த 3-ந்தேதி தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு 290 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 240 ரூபாய்க்கும் சவரனுக்கு 2,320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 920-க்கு விற்பனையானது. 4-ந்தேதி சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து சவரன் ரூ.1,14,880-க்கு விற்பனை செய்யப்பட்டது. </p> <p>கடந்த 5-ந்தேதி அதிரடியாக கிராமுக்கு 170 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14,190-க்கும் சவரனுக்கு ரூ.1360 குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 520-க்கு விற்பனையானது. 6-ந்தேதி ஒரு கிராம் ரூ.14,190-க்கும், ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 520-க்கு விற்பனையானது. 7-ந்தேதி ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 130-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 40-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 8-ந்தேதி கிராமுக்கு ரூ.140 அதிகரித்து ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 270-க்கும், சவரனுக்கு ரூ.1,120 அதிகரித்து ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 160-க்கும் விற்பனையானது. </p> <p>கடந்த 9-ந்தேதி சவரனுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.1,13,160-க்கும், கிராமுக்கு ரூ.125 குறைந்து ரூ.14,145-க்கும் விற்பனையானது.10-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு  ரூ.800 உயர்ந்து ரூ.1,14,040-க்கும், கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.14,255-க்கும் விற்பனையானது.</p><p>நேற்று காலை தங்கம் விலை சவரனுக்கு  ரூ.1,920 குறைந்து ரூ.1,12,120-க்கும், கிராமுக்கு ரூ.240 குறைந்து ரூ.14,015-க்கும் விற்பனையானது. நேற்று மாலையில் கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ரூ.14,155-க்கும், சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.1,13,240-க்கும் விற்பனை செய்யப்பட்டது.</p> <p>இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு  ரூ.120 உயர்ந்து ரூ.1,13,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.14,170-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்</h2><p>11-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,240</p><p>10-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.114,040</p><p>09-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,160</p><p>08-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.114,160</p><p>07-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,040</p> <h2>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்</h2><p>11-09-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>10-09-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>09-09-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>08-09-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>07-09-2026- ஒரு கிராம் ரூ.255</p> ]]></content:encoded></item><item><title>ரூ. 1.95 கோடி விலையில் புது பிஎம்டபிள்யூ கார் அறிமுகம் - விலை மற்றும் முழு விவரங்கள்! </title><link>https://www.maalaimalar.com/automobilenews/newautomobile/new-bmw-7-series-and-i7-launched-in-india</link><comments>https://www.maalaimalar.com/automobilenews/newautomobile/new-bmw-7-series-and-i7-launched-in-india#comments</comments><guid isPermaLink="false">58d24236-0a23-4344-8f91-6d4a28ef0b17</guid><pubDate>Sat, 12 Sep 2026 04:21:00 +0000</pubDate><atom:updated>2026-09-12T04:21:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Car,BMW,பிஎம்டபிள்யூ,கார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/fanq72rl/BMW-7-Series.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ BMW 7 Series]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/fanq72rl/BMW-7-Series.png?w=280" width="280"></media:thumbnail><category>இது புதுசு (Automobile)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/bmw">பி.எம்.டபிள்யூ.</a> நிறுவனம், புதிய 7 சீரிஸ் மற்றும் i7 எலெக்ட்ரிக் செடான் கார்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றின் விலை ரூ. 1.95 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இந்த மாடல்களுக்கான ஒரு இடைக்கால மேம்படுத்தலாகும். </p><p>மேலும், இந்த ஜி70 தலைமுறை முதலில் அறிமுகப்படுத்தப்பட்டு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகியுள்ளது. ஐசி என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் ஆகிய இரண்டு <a href="https://www.maalaimalar.com/topic/car">கார்</a> மாடல்களும் தற்போது உள்நாட்டிலேயே அசெம்பிள் செய்யப்படுகின்றன. இதன் மூலம், ஜெர்மனிக்கு வெளியே எலெக்ட்ரிக் மாடலை அசெம்பிள் செய்யும் இரண்டாவது நாடாக இந்தியா திகழ்கிறது.</p><h2>பிஎம்டபிள்யூ i7 சிறப்பு அம்சங்கள்:</h2><p>இந்தியாவிற்கான i7 சீரிசில் மிக முக்கியமான புதிய வரவு, 680 ஹெச்பி பவர் மற்றும் 1100Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் இரட்டை இன்ஜின்களைக் கொண்ட புதிய M70 xDrive வேரியன்ட் ஆகும். இது WLTP அடிப்படையில் 686 கிலோமீட்டர் தூரம் செல்லும் திறன் கொண்டுள்ளது.</p><p>மேலும் 3.8 நொடிகளில் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் திறன் கொண்டது. மேலும், i7 eDrive50 மாடலில் மேம்படுத்தப்பட்ட 112.5kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. </p><p>இது தற்போது WLTP அடிப்படையில் 728 கிலோமீட்டர் தூரம் செல்லும் திறன் கொண்டது. eDrive50 மாடல் உள்நாட்டிலேயே அசெம்பிள் செய்யப்படும், அதேசமயம் M70 மாடல் CBU ஆக வழங்கப்படும். இதன் விலை ரூ. 2.65 கோடி ஆகும்.</p><h2>சக்திவாய்ந்த பெட்ரோல் என்ஜின்:</h2><p>7 சீரிஸ், அதன் 740 மாடலிலேயே தொடரும். இதில் 400 ஹெச்பி பவர் மற்றும் 540Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் மூன்று-லிட்டர் இன்லைன்-6 பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின், பின்புற சக்கரங்களுக்கு ஆற்றலை வழங்கும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் (AT) இணைக்கப்பட்டுள்ளது.</p><p>இது மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 5.4 வினாடிகளில் எட்டும் திறன் கொண்டது மற்றும் இதன் வேகம் மின்னணு முறையில் 250 கிலோமீட்டர்களாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.</p><h2>8K ஸ்கிரீன் மற்றும் போட்டி மாடல்கள்:</h2><p>பிஎம்டபிள்யூ நிறுவனம் i7 மற்றும் 7 சீரிஸ் ஆகிய இரண்டு மாடல்களுக்கும் திரைகளை பெரிதாக வழங்கியுள்ளது. அவற்றில், பயணிகளுக்கான 14.6-இன்ச் டிஸ்ப்ளே, A-பில்லரில் இருந்து A-பில்லர் வரை நீளும் பனோரமிக் விஷன் HUD, மற்றும் பவர்ஸ் அண்ட் வில்கின்ஸ் சவுண்ட் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்ட, பின் இருக்கையில் அமர்பவர்களுக்கான 31.3-இன்ச் 8K தியேட்டர் ஸ்கிரீன் ஆகியவை இடம்பெற்றுள்ளன.</p><p>இந்திய சந்தையில் புதிய பிஎம்டபிள்யூ மாடல்: மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-கிளாஸ் மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் EQS செடான் ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது. </p><p>மேலும், மெர்சிடிஸ்-பென்ஸ் GLS, வரவிருக்கும் ஆடி Q9, பிஎம்டபிள்யூவின் சொந்த X7, வோல்வோ XC90 மற்றும் வோல்வோ EX90 போன்ற சில முக்கிய எஸ்யூவி கார்களுடனும் இது போட்டியிடுகிறது.</p>]]></content:encoded></item><item><title>மறைந்த சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/state-honours-for-the-late-solomon-pappaiah</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/state-honours-for-the-late-solomon-pappaiah#comments</comments><guid isPermaLink="false">0891a13d-d9c1-4ae7-b848-93d89326b635</guid><pubDate>Sat, 12 Sep 2026 04:15:37 +0000</pubDate><atom:updated>2026-09-12T04:15:37.702Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அரசு மரியாதை,அமைச்சர் நிர்மல்குமார்,Solomon Pappaiah,சாலமன் பாப்பையா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/g108dxs8/SolomonPappaiah.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சாலமன் பாப்பையா]]></media:title><media:description type="html"><![CDATA[ சாலமன் பாப்பையா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/g108dxs8/SolomonPappaiah.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என அமைச்சர் நிர்மல்குமார் என அறிவித்துள்ளார்.</strong></em> </p><p>பட்டிமன்ற நடுவராக மக்கள் மனங்களை வென்றவர் <a href="https://www.maalaimalar.com/topic/சாலமன்-பாப்பையா">சாலமன் பாப்பையா</a>. கல்லூரி பேராசிரியராக பணியாற்றிய இவர் தமிழ் அறிஞரும் ஆவார். 90 வயதான சாலமன் பாப்பையா வயது முதுமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். </p><h2><strong>இறுதிசடங்கு</strong></h2><p>சாலமன் பாப்பையா காலமானார் என்ற செய்தி அறிந்து பலரும் இரங்கல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்களின் அஞ்சலிக்காக சாலமன் பாப்பையா உடல் ஞான ஒளிவுபுரம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனிடையே சாலமன் பாப்பையாவின் இறுதிசடங்கு இன்று பகல் 11 மணிக்கு மேல் நடைபெறுகிறது. </p><h2><strong>அரசு மரியாதை</strong></h2><p>இந்த நிலையில், தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என அமைச்சர் நிர்மல்குமார் என அறிவித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக அமைச்சர் நிர்மல்குமார் மேலும் கூறுகையில், தமிழஞர்கள் உள்ளிட்ட பலரின் கோரிக்கையை ஏற்று சாலமன் பாப்பையா உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: தலைமை ஆசிரியர்களை சொந்த செலவில் செய்யுமாறு கட்டாயப்படுத்துவதா?- அன்புமணி ஆவேசம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-expansion-of-the-breakfast-scheme-are-headmasters-being-forced-to-bear-the-costs-themselves</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-expansion-of-the-breakfast-scheme-are-headmasters-being-forced-to-bear-the-costs-themselves#comments</comments><guid isPermaLink="false">c46949a7-f55f-4944-903b-b05b29539de2</guid><pubDate>Sat, 12 Sep 2026 04:00:29 +0000</pubDate><atom:updated>2026-09-12T04:00:29.183Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,காலை உணவு திட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/kbd8rdse/anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/kbd8rdse/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>காலை உணவுத் திட்டத்திற்கான பெயர்ப்பலகைகள், தட்டுகள், டம்ளர்கள்  மற்றும் பிற வசதிகளுக்கான  செலவை அரசே ஏற்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>பொருளாதார சுமை</strong></h2><p>தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு எட்டாம் வகுப்பு வரை நீட்டிக்கப்பட்ட பெருந்தலைவர் காமராசர்  காலை உணவுத் திட்டத்தின் தொடக்க விழா வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான  தேவைகள் அனைத்தையும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அவர்களின் சொந்த செலவில் மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டிருக்கிறது. ஆசிரியர்கள் மீது தேவையற்ற பொருளாதார சுமையை  அரசே ஏற்படுத்துவது கண்டிக்கத்தக்கது.</p><p>தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் கடந்த 2022 செப்.15-ம் தேதி அண்ணா பிறந்த நாளில் அறிமுகம் செய்யப்பட்டது. 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இந்தத் திட்டம் நீட்டிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இத்திட்டம் எட்டாம் வகுப்பு வரை நீட்டிக்கப்பட்டு, பெருந்தலைவர் காமராசர்  <a href="https://www.maalaimalar.com/topic/காலை-உணவு-திட்டம்">காலை உணவுத் திட்டம்</a> என்ற பெயரில் தந்தைப் பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஆம் தேதி தொடக்கி வைக்கப்படவுள்ளது.</p><h2><strong>அதிர்ச்சி</strong> </h2><p>பெருந்தலைவர் காமராசர்  காலை உணவுத் திட்டத் தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் பள்ளிகளில் புதிய பெயர்ப்பலகைகளை 4க்கு 2 அடி அளவில் ஸ்டீல் குழாய்களில் தயாரித்து நிறுவ வேண்டும்;  பள்ளிகளுக்குத் தேவையான  சமயலறை, உணவுப் பொருள்கள் இருப்பு வைக்கும் அறை, குடிநீர், மின்விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் சார்ந்த குறைகளை களைய வேண்டும்; மாணவர்களுக்கு தட்டு, டம்ளர் ஆகியவற்றை வாங்கித் தர வேண்டும் என்று பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு ஆணையிட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை, இதற்காக ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை. இந்த வசதிகள் அனைத்தையும் தலைமை ஆசிரியர்கள் அவர்களின் சொந்த செலவில் செய்ய வேண்டும் என்று அரசு ஆணையிட்டிருப்பது தான் அதிர்ச்சியளிக்கிறது.</p><p>ஒவ்வொரு பள்ளியிலும் அரசால் பட்டியலிடப்பட்டுள்ள பணிகளை செய்வதற்கு மாணவர்களின் எண்ணிக்கை ஏற்ப ரூ.8000 முதல் ரூ.10 ஆயிரம் வரை செலவாகக் கூடும். இந்த செலவுகளை ஒட்டுமொத்தமாக தலைமை ஆசிரியர்களின் தலையில் சுமத்துவது  அநீதியாகும். காலை உணவுத் திட்டத்திற்காக பல நூறு கோடியை ஒதுக்கீடு செய்துள்ள தமிழக அரசு,  இந்த வசதிகளை செய்து கொடுப்பதற்காக கூடுதலாக சில லட்சங்களை ஒதுக்குவதற்கு எந்தத் தடையும் இல்லை. அதை செய்யாமல், அச்செலவுகளை தலைமை ஆசிரியர்கள் மீது திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதை ஆசிரியர்களால் சமாளிக்க முடியாது.</p><h2><strong>அரசே ஏற்க வேண்டும்</strong></h2><p>நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், அரசு மதுக்கடைகள் போன்றவற்றில் அடிப்படை வசதிகளை செய்து கொள்வதற்காக அரசு நிதி ஒதுக்காமல், அதை பணியாளர்களின் தலையில் சுமத்தியதால் தான் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு 60 ரூபாயும், அரசு மதுக்கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாயும் வசூலிக்கும் நிலை உருவானது. அந்த கலாச்சாரத்தை ஒழிக்க முடியாமல் அரசு திண்டாடிக் கொண்டிருக்கிறது. அதே கலாச்சாரத்தை பள்ளிகளுக்கும் நீட்டித்தால் அங்கும் தவறுகள் நடக்க வாய்ப்பு ஏற்பட்டு விடும். நேர்மையையும், ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுக்க வேண்டிய பள்ளிகளில் தவறுகள் கற்பிக்கப்படக்கூடாது.</p><p>எனவே, காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ள பள்ளிகளுக்கு  மாவட்டக் கல்வி அலுவலரால் அனுப்பப்பட்டுள்ள இது தொடர்பான சுற்றறிக்கை உடனடியாக திரும்பப் பெற  வேண்டும். காலை உணவுத் திட்டத்திற்கான பெயர்ப்பலகைகள், தட்டுகள், டம்ளர்கள்  மற்றும் பிற வசதிகளுக்கான  செலவை அரசே ஏற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>வெற்றிகளை குவிக்கும் விநாயகர் சதுர்த்தி வழிபாடு
</title><link>https://www.maalaimalar.com/spirituality/vinayagar-chaturthi-worship-3</link><comments>https://www.maalaimalar.com/spirituality/vinayagar-chaturthi-worship-3#comments</comments><guid isPermaLink="false">e40b2c6b-88d3-48b2-999d-7c9915193bf2</guid><pubDate>Sat, 12 Sep 2026 03:47:52 +0000</pubDate><atom:updated>2026-09-12T03:47:52.329Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,வழிபாடு,worship,விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/r42tyq4r/vinayagar1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ vinayagar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/r42tyq4r/vinayagar1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>விநாயகப் பெருமான்</h2><p>'விநாயகர்' என்றாலே 'மேலான தலைவர்' என்று பொருள். வேண்டிய வரங்களை அள்ளித் தருபவர், விநாயகப் பெருமான். இந்து சமயத்தில் முழு முதற்கடவுளாக போற்றப்படும் விநாயகப் பெருமானை போற்றி வழிபடுவதற்கு மிகவும் உகந்த திருநாள், விநாயகர் சதுர்த்தி ஆகும்.</p> <h2>வளர்பிறை சதுர்த்தி</h2><p>ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாளில் விநாயகர் அவதரித்ததாக கூறப்படுகிறது. ஆண்டுதோறும் இந்நாளையே 'விநாயகர் சதுர்த்தி' திருவிழாவாக இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கோவில்களில் மட்டுமல்லாமல், வீடுகளிலும், பொதுமக்கள் ஒன்றாகக்கூடும் இடங்களிலும் விநாயகர் சிலைகளை வைத்து விமரிசையாக வழிபடப்படுவது இந்நாளின் சிறப்பாகும்.</p> <h2>பார்வதி தேவி</h2><p>விநாயகர் அவதாரம் குறித்து பல்வேறு புராணக் கதைகள் கூறப்படுகின்றன.</p><p>ஒரு சமயம் சிவபெருமான் கயிலாயத்தில் இல்லாதபோது, பார்வதி தேவி நீராடச் சென்றார். அப்போது பார்வதி தேவி, தன்னுடைய உடலில் இருந்து வாசனை துகள்களை உருட்டி ஒரு உருவத்தை உருவாக்கினார். பின்னர், அதற்கு தன்னுடைய சக்தியால் உயிரூட்டிய பார்வதி தேவி, காவலுக்கு வைத்தார். அவரே விநாயகப் பெருமான். பார்வதி தேவி, விநாயகப் பெருமானிடம் “நான் நீராடும் வரை யாரையும் உள்ளே அனுமதிக்கக் கூடாது” என கட்டளையிட்டார்.</p> <h2>சிவபெருமான்</h2><p>அந்த வேளையில் கயிலாயத்திற்குள் நுழைந்த சிவபெருமானை விநாயகர் தடுத்தார். இதனால் சிவபெருமானுக்கும், விநாயகருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இறுதியில் சிவபெருமான், தன்னுடைய திரிசூலத்தால் விநாயகரின் தலையை வெட்டினார். அப்போது நீராடிவிட்டு வந்த பார்வதி தேவி, தன் மகனான விநாயகரின் நிலையைக் கண்டு அதிர்ச்சியும், கோபமும் அடைந்தார். </p> <h2>யானை முகம்</h2><p>உலகையே அழித்துவிடும் அளவுக்கு அவரது கோபம் பெருகியது. இதனால் தேவர்கள், சிவபெருமானிடம் பார்வதி தேவியை சமாதானப்படுத்தும் படி வேண்டினர். உடனே சிவபெருமான், வடக்கு திசையில் முதலில் தென்படும் உயிரினத்தின் தலையை கொண்டுவரும்படி தன்னுடைய கணங்களுக்கு ஆணையிட்டார். இதையடுத்து வடதிசையில் தலை வைத்திருந்த வெள்ளை யானையின் தலையை கணங்கள் கொண்டு வந்தனர். பின்னர் சிவபெருமான், யானை தலையை விநாயகரின் உடலில் பொருத்தி உயிர் கொடுத்தார்.</p><h2>கணபதி</h2><p>இதைக் கண்டு பார்வதி தேவி சாந்தமானார். இவ்வாறு தான் விநாயகருக்கு யானை முகமும், மனித உடலும் கிடைத்தது. பின்னர் சிவபெருமான், விநாயகரை கணங்களின் தலைவனாக நியமித்தார். இதனால் விநாயகர் 'கணபதி' என அழைக்கப்படுகிறார்.</p> <h2>சத்ரபதி சிவாஜி</h2><p>இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி, செப்டம்பர் மாதம் 14-ந் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழா, மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி காலத்தில் இருந்தே கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது. இருப்பினும் சுதந்திரப் போராட்ட வீரரான பாலகங்காதர திலகர், விநாயகர் சதுர்த்தியை ஒரு பெரும்விழாவாக மாற்றியமைத்தார். ஆங்கிலேயர் ஆட்சியின்போது, தேசிய உணர்வை வளர்ப்பதற்காக இந்த விழாவை பயன்படுத்தினார்.</p> <h2>விநாயகர் சதுர்த்தி</h2><p>விநாயகர் சதுர்த்தி என்பது வெறும் மத வழிபாட்டு விழா மட்டுமல்ல. இது சமூக ஒருமைப்பாடு, கலாசார பரிமாற்றம், சமூக சேவை போன்றவற்றை ஊக்குவிக்கும் ஒரு நிகழ்வாகும். இவ்விழாவின்போது, மக்கள் தங்கள் வீடுகளிலும், பொது இடங்களிலும் விநாயகர் மண் சிலைகளை நிறுவி வழிபடுவார்கள். விழாவின் இறுதி நாளில் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடல்களிலும், அருகில் உள்ள நீர் நிலைகளிலும் கரைக்கப்படும். இதன்மூலம் நம்முடைய கவலைகளும், கஷ்டங்களும் நீரில் கரைவது போல கரைந்துவிடும், வெற்றிகள் குவியும் என்பது நம்பிக்கை.</p> <p>விநாயகர் சதுர்த்தி தினத்தன்று, அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, விநாயகருக்கு அருகம்புல், எருக்கம்புல் சாற்றி, மோதகம், சுண்டல், அவல், பொரி, தேங்காய் போன்றவை படைக்க வேண்டும். அன்றைய தினம் விநாயகர் மந்திரங்கள், விநாயகர் கவசம், விநாயகர் அகவல் படித்து வழிபடுவது சிறந்தது. விநாயகர் சதுர்த்தியில் விநாயகரை மனதார வழிபடுபவர்களுக்கு வினைகள் தீர்ந்து இனிமையான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை.</p>]]></content:encoded></item><item><title>திருப்பரங்குன்றம் கோவிலில் நாளை ஒரே நாளில் 102 ஜோடிகள் திருமணம் செய்ய பதிவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/102-couples-have-registered-to-get-married-at-the-thiruparankundram-temple-tomorrow-all-on-the-same-day</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/102-couples-have-registered-to-get-married-at-the-thiruparankundram-temple-tomorrow-all-on-the-same-day#comments</comments><guid isPermaLink="false">1a9bc6c8-7363-43c5-bb89-613ed6328167</guid><pubDate>Sat, 12 Sep 2026 03:46:00 +0000</pubDate><atom:updated>2026-09-12T03:46:00.622Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமணம்,திருப்பரங்குன்றம் கோவில்,முகூர்த்த நாள்,Thirupparankundram Temple</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/1zvubmf6/thirupparakundram.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ திருப்பரங்குன்றம் கோவில்]]></media:title><media:description type="html"><![CDATA[ திருப்பரங்குன்றம் கோவில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/1zvubmf6/thirupparakundram.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நாளை ஒரே நாளில் திருமணம் செய்ய 102 ஜோடிகள் பதிவு செய்துள்ளனர்.</strong></em> </p><h2><strong>திருப்பரங்குன்றம் கோவில்</strong></h2><p>தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">திருப்பரங்குன்றம் கோவிலில்</a> மட்டும் தான் முருகப்பெருமான் அமர்ந்த நிலையில் திருமணக் கோலத்தில் காட்சிதருகிறார். இந்த கோவிலில் தங்களது திருமணம் நடந்தால் சகல பாக்கியமும் கிடைக்கும் என்று பக்தர்களிடையே நம்பிக்கை நிலவுகிறது. இதனால் இந்த கோவிலில் முகூர்த்த நாளில் சராசரியாக 50 முதல் 100-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு மேல் திருமணம் நடக்கிறது.</p><h2><strong>102 ஜோடிகள் பதிவு</strong></h2><p>இந்தநிலையில் ஆவணி மாதத்தின் முதல் வளர்பிறை முகூர்த்த நாளான கடந்த 23-ந்தேதி அன்று ஒரே நாளில் 104 ஜோடிகளுக்கு பதிவு திருமணம் நடந்தது. இந்தநிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 17-ந்தேதி ஆகிய 2 நாட்கள் வளர்பிறை முகூர்த்தமாகும். நாளை ஒரே நாளில் மட்டும் திருமணம் செய்ய 102 ஜோடிகள் பதிவு செய்துள்ளனர். வருகின்ற 17-ந்தேதிக்கு நேற்று வரை 52 ஜோடிகளுக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்கள்.</p><h2><strong>ரூ.4.59 லட்சம் வருமானம்</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/price-hike-for-prasadam-at-thiruparankundram-temple">திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில்</a> முதல் திருமணம் செய்யக்கூடியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். குறைந்தபட்சம் 20 நாட்களுக்கு முன்பே திருமண பதிவு செய்யப்பட வேண்டும். கோவிலின் திருவாட்சி மண்டப வளாகத்தில் முத்துக்குமாரசுவாமி-தெய்வானை அம்பாள் சன்னதியில் திருமணம் செய்கிறார்கள். இதனை தொடர்ந்து கோவில் கருவறைக்கு மணமக்கள் உள்ளிட்ட 20 பேருக்கு அனுமதி டிக்கெட் மற்றும் திருமண பதிவு கட்டணம் என்று ஒவ்வொரு ஜோடிகளுக்கும் தலா ரூ.4,500 வசூலிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நாளை ஒரே நாளில் 102 ஜோடிகள் திருமணம் செய்ய பதிவு செய்யப்பட்டதில் கோவிலுக்கு ரூ.4 லட்சத்து 59 ஆயிரம் வருமானம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>7,000mAh பேட்டரியுடன் விரைவில் அறிமுகமாகும் புது ஒப்போ ஸ்மார்ட்போன்</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/oppo-k14-lite-to-launch-in-india-on-september-16</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/oppo-k14-lite-to-launch-in-india-on-september-16#comments</comments><guid isPermaLink="false">b8e883ae-f157-4fad-828a-d0f00d73cce6</guid><pubDate>Sat, 12 Sep 2026 03:39:00 +0000</pubDate><atom:updated>2026-09-12T03:39:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>OPPO,ஒப்போ,smartphone,ஸ்மார்ட்போன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/rquiu3z9/Oppo-K14-Lite.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Oppo K14 Lite]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/rquiu3z9/Oppo-K14-Lite.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/oppo">ஒப்போ</a> நிறுவனம் இந்தியாவில் புதிய K14 சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சமாக அதன் பேட்டரி இருக்கும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய ஒப்போ <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மார்ட்போன்</a> 7,000mAh பேட்டரி கொண்டிருக்கும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. </p><p>பேட்டரி மட்டுமின்றி ஒப்போ நிறுவனம் K14 லைட் ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் வண்ண தேர்வுகளையும் வெளியிட்டுள்ளது. ஒப்போ K14 மற்றும் ஒப்போ K14x மாடல்களுக்குப் பிறகு, இந்த வரிசையில் இது மூன்றாவது ஸ்மார்ட்போனாக இருக்கும். </p><p>மேலும், இந்த வரிசையில் மிகவும் மலிவு விலை மாடலாக இது அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. K14 லைட்மூலம், வாடிக்கையாளர்களுக்குத் தேர்வு செய்ய அதிக விருப்பங்களை வழங்கி, பட்ஜெட் பிரிவில் ஒப்போ தனது இருப்பை விரிவுபடுத்துவதாகத் தெரிகிறது.</p><h2>இந்திய அறிமுக தேதி:</h2><p>ஒப்போ K14 லைட் ஸ்மார்ட்போன், செப்டம்பர் 16 ஆம் தேதி மதியம் 12:00 மணிக்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கும். இது பெரும்பாலும் ஒப்போவின் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் வழியாக விற்பனைக்கு வரும்.</p><p>புதிய ஒப்போ K14 லைட்ஸ்மார்ட்போனில் "நீண்ட நேரம் நீடிக்கும் பேட்டரி, சீரான செயல்பாடு மற்றும் உறுதியான வடிவமைப்பு" ஆகியவை இடம்பெறும் என ஒப்போ நிறுவனம் அறிவித்துள்ளது.</p><p>K14 லைட் மாடலில் 7,000mAh பேட்டரி இடம்பெறும் என்பதை ஒப்போ உறுதி செய்துள்ளது. இந்த பேட்டரி மூலம், ஒரு நாள் முழுவதற்கும், அதற்கும் சற்று கூடுதலாகவும் பேட்டரி நீடிக்கும். டீசரின்படி, இது ஆறு ஆண்டுகள் வரை பேட்டரி ஆயுளை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>தற்போது பட்ஜெட் பிரிவில் உள்ள பெரும்பாலான போன்கள் 7,000mAh மற்றும் அதற்கும் அதிகமான பேட்டரி திறனை வழங்குகின்றன. எனவே, வன்பொருள் மற்றும் விலை நிர்ணயத்தில் K14 லைட் எவ்வாறு தனித்து நிற்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>மண்டல, மகர விளக்கு சீசன் - சபரிமலையில் 70 லட்சம் டின் அரவணையை இருப்பு வைக்க நடவடிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/mandala-pooja-and-makaravilakku-measures-taken-to-stock-70-lakh-tins-of-aravana-at-sabarimala</link><comments>https://www.maalaimalar.com/news/national/mandala-pooja-and-makaravilakku-measures-taken-to-stock-70-lakh-tins-of-aravana-at-sabarimala#comments</comments><guid isPermaLink="false">c1282dc9-45e1-4fa7-8646-ef4b8fbba0a3</guid><pubDate>Sat, 12 Sep 2026 02:47:50 +0000</pubDate><atom:updated>2026-09-12T02:47:50.956Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சபரிமலை கோவில்,Sabarimala temple,makaravilakku pooja,Mandala Pooja,அரவணை,மண்டல - மகரவிளக்கு பூஜை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/2wy6suhs/aravana.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ aravana payasam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/2wy6suhs/aravana.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சீசனுக்கு முன்னதாக சபரிமலையில் 70 லட்சம் டின் அரவணை பிரசாதம் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.</p> <p>சபரிமலையில் நடப்பு மண்டல <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D">மகரவிளக்கு சீசன்</a> வரும் நவம்பர் மாதம் தொடங்க உள்ளது. இதனையொட்டி திருவனந்தபுரத்தில் முதல்-மந்திரி வி.டி.சதீசன் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் அவர் கூறியதாவது:-</p> <p>சபரிமலை சன்னிதானத்தில் அனைத்து துறைகளின் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை தொடங்கப்படும். சபரிமலையில் பல மணி நேரம் காத்திருக்கும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும். பொதுப்பணித்துறை சார்பில் சீசனுக்கு முன்னதாக ரூ.551 கோடியில் சாலை மற்றும் கட்டுமான பணிகள் நிறைவேற்றப்படும். </p> <p>பம்பை ஆற்றில் தேங்கி கிடக்கும் துணிகள் உள்பட அனைத்து அசுத்தங்களும் அகற்றப்படும். போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 500 பஸ்கள் குத்தகைக்கு எடுத்து இயக்கப்படும்.</p><p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88">சபரிமலையில்</a> அரவணை உற்பத்தி திறன் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், சீசனுக்கு முன்னதாக சபரிமலையில் 70 லட்சம் டின் அரவணை பிரசாதம் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: சென்னை சென்ட்ரல் - மதுரை இடையே சிறப்பு ரெயில் இயக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurai-meenakshi-amman-temple-kumbabishekam-special-train-service-between-chennai-central-and-madurai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurai-meenakshi-amman-temple-kumbabishekam-special-train-service-between-chennai-central-and-madurai#comments</comments><guid isPermaLink="false">feef7073-5d7f-4cc6-bcb6-f834cde07453</guid><pubDate>Sat, 12 Sep 2026 02:31:47 +0000</pubDate><atom:updated>2026-09-12T02:31:47.190Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>special train,சிறப்பு ரெயில்,Kumbabishekam,கும்பாபிஷேகம்,Madurai Meenakshi Amman temple,மதுரை மீனாட்சி அம்மன் கோவில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/cv7tk81a/train.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Express Train]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/cv7tk81a/train.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, சென்னையில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87">தெற்கு ரெயில்வே</a> வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><h2>எக்ஸ்பிரஸ் ரெயில்கள்</h2><p>* சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 16-ந்தேதி (புதன்கிழமை) மாலை 4.10 மணிக்கு புறப்பட்டு செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.06153), மறுநாள் காலை 4.30 மணிக்கு மதுரை சென்றடையும்.</p> <p>மறுமார்க்கமாக, மதுரையில் இருந்து வருகிற 17-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 3.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06154), மறுநாள் காலை 3.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு வந்தடையும்.</p><p>அதேபோல, தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 16-ந்தேதி இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு செல்லும் சிறப்பு ரெயில் (06157), மறுநாள் காலை 5 மணிக்கு <a href="https://www.maalaimalar.com/spirituality/meenakshi-amman-temple-kumbabishekam-on-sep-17th">மதுரை</a> சென்றடையும்.</p> <p>மறுமார்க்கமாக, மதுரையில் இருந்து வருகிற 17-ந்தேதி இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06158), மறுநாள் காலை 3.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.</p><h2>கடற்கரை-மானாமதுரை</h2><p>சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 16-ந்தேதி காலை 10.45 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில் (06161), இரவு 11.30 மணிக்கு மானாமதுரை சென்றடையும்.</p> <p>மறுமார்க்கமாக, மானாமதுரையில் இருந்து வருகிற 17-ந்தேதி மதியம் 12 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில் (06162), இரவு 11.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>