<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 18 Aug 2026 03:21:52 +0000</lastBuildDate><item><title>முகமது அலி ஜின்னா பற்றிய ரகசியத்தை பாதுகாத்த மும்பை மருத்துவர்கள் 2 பேருக்கு பாகிஸ்தானின் உயரிய விருது அறிவிப்பு </title><link>https://www.maalaimalar.com/news/world/pakistan-honours-mumbai-doctors-top-civilian-award-for-keeping-jinnahs-illness-secret</link><comments>https://www.maalaimalar.com/news/world/pakistan-honours-mumbai-doctors-top-civilian-award-for-keeping-jinnahs-illness-secret#comments</comments><guid isPermaLink="false">7f213d90-96ec-40ab-914e-192b785d6593</guid><pubDate>Tue, 18 Aug 2026 03:08:00 +0000</pubDate><atom:updated>2026-08-18T03:08:00.842Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,பிரிவினை,முகமது அலி ஜின்னா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/w7ivp7uv/tn-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஜின்னா ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஜின்னா ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/w7ivp7uv/tn-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.google.com/search?sca_esv=89ea68fd8af44367&amp;sxsrf=APpeQnsecMLmVPzfx0fYR--h23pyUgnhQg:1787019745961&amp;q=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+maalaimalar&amp;spell=1&amp;sa=X&amp;ved=2ahUKEwiPk6ipj6mWAxW6muEIHT-gO-cQBSgAegQIEBAB&amp;biw=1422&amp;bih=659&amp;dpr=1.35">1947 பிரிவினைக்கு</a> முன்னர் முஸ்லீம் லீக் தலைவர் முகமது அலி ஜின்னாவுக்கு இருந்த நோயை வைத்திருந்ததற்காக மும்பையை சேர்ந்த இரு மருத்துவர்களுக்குப் பாகிஸ்தானின் உயரிய குடிமகன் விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>நாட்டுக்கு <a href="https://www.maalaimalar.com/topic/independence-day">சுதந்திரம் </a>கிடைத்ததோடு பிரிவினையும் ஏற்பட்டு இந்தியா - பாகிஸ்தான் என பிரிந்தது. பாகிஸ்தான் உருவாக்கத்திற்கு மூல கர்த்தா முகமது அலி ஜின்னா ஆவார். அவரே பாகிஸ்தானின் நிறுவனராக அறியப்படுகிறார். </p> <h2>ரகசியம்</h2><p>1946இல் ஜின்னாவின் எக்ஸ்ரேயைப் பரிசோதித்து அவருக்கு நுரையீரல் காசநோய் முற்றிய நிலையில் இருப்பதாகவும், அவர் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் மட்டுமே உயிருடன் இருக்கக்கூடும் என்றும் இரு மருத்துவர்கள் கணித்திருந்தனர்.</p><p>மும்பையை சேர்ந்த மருத்துவர் ஜல் ரத்தன்ஜி படேல் மற்றும் எக்ஸ்ரே நிபுணர் டாக்டர் ஜல் தைபோ ஆகியோரே அவ்விருவர் ஆவர்.</p><p>இந்த இரு மருத்துவர்களும் ஜின்னாவின் மருத்துவ அறிக்கையை ரகசியமாக வைத்திருந்தனர்.</p> <h2>முக்கியத்துவம்</h2><p>லேரி காலின்ஸ் மற்றும் டொமினிக் லேபியர் எழுதிய Freedom at Midnight புத்தகத்தில், "ஜின்னாவின் நோய் குறித்த தகவல் லார்ட் மவுண்ட்பேட்டன், ஜவஹர்லால் நேரு அல்லது மகாத்மா காந்தி ஆகியோருக்கு தெரிந்திருந்தால், விடுதலை மற்றும் பிரிவினைக்கான அரசியல் கணக்கீடுகளே மாறியிருக்கக்கூடும்" எனகுறிப்பிடப்பட்டுள்ளது.</p> <h2>விருது</h2><p>இந்நிலையில் மறைந்த இந்த மருத்துவர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நாட்டின் உயரிய விருதான நிஷான் இ இம்தியாஸ் விருது வழங்கப்படும் எனப் பாகிஸ்தான் அமைச்சரும், நாட்டின் விருதுகள் குழுவின் தலைவருமான அஹ்சன் இக்பால் தெரிவித்துள்ளார்.</p> <h2>ஜின்னாவின் நோய்</h2><p>1930களில் இருந்தே ஜிண்ணா காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அந்த காலகட்டத்தில் இந்த நோய்யை குணப்படுத்த ஆன்டிபயாடிக் எதுவுமில்லை.</p><p>தனது அரசியல் வாழ்வின் இறுதிப் பகுதியில் கடும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார்.</p><p>பாகிஸ்தான் பிறந்த ஓராண்டிற்குப் பிறகு, 1948 செப்டம்பர் 11 அன்று நுரையீரல் காசநோய் காரணமாக அவர் காலமானார்.</p>]]></content:encoded></item><item><title>பணிக்கு தாமதமாக வந்ததை போட்டுக்கொடுத்த AI மேனேஜர்... ஊழியர் பணிநீக்கம் - வரலாற்றில் முதல்முறை!</title><link>https://www.maalaimalar.com/news/world/for-the-first-time-ai-boss-fires-human-employee-at-us-store-after-17-late-arrivals</link><comments>https://www.maalaimalar.com/news/world/for-the-first-time-ai-boss-fires-human-employee-at-us-store-after-17-late-arrivals#comments</comments><guid isPermaLink="false">3d37590f-5501-4812-9139-b03689d119c1</guid><pubDate>Tue, 18 Aug 2026 03:05:49 +0000</pubDate><atom:updated>2026-08-18T03:05:49.451Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>AI,பணிநீக்கம்,ஏஐ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/javv7bup/luna-aii.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/javv7bup/luna-aii.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மனித ஊழியர் ஒருவரை செயற்கை நுண்ணறிவு மேலாளர் மதிப்பிட்டுப் பணிநீக்கம் செய்யப் பரிந்துரைத்தது வரலாற்றிலேயே இதுவே முதல் முறை எனக் கூறப்படும் நிலையில், இது தொடர்பான செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.</strong></em></p><p>அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் ‘ஆண்டன் மார்க்கெட்’ என்ற சில்லறை விற்பனைக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் நிர்வாகத்தை கவனிக்க ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் 'கிளாட்' தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட ஏ.ஐ. மேலாளரை உருவாக்கி உள்ளனர். அதற்கு ‘லூனா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.</p><p>இந்த ஏ.ஐ. மேலாளருக்கு வரவு-செலவு கணக்கு பார்ப்பது, இணைய வசதியை அணுகுவது மற்றும் நிர்வாகம் செய்யவும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.</p><h2><strong>பணி நீக்கம்</strong></h2><p>இந்த கடையில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் 17 முறை பணிக்கு தாமதமாக வந்துள்ளார். மேலும், பணிநேரத்தில் வெளியே சென்றது உள்ளிட்ட விதிமீறல்களிலும் அவர் ஈடுபட்டுள்ளார். இந்தச் செயல்களைக் கவனித்த ஏ.ஐ. மேலாளர் லூனா, அந்த ஊழியரைப் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">பணி நீக்கம்</a> செய்ய பரிந்துரை செய்தது.</p><p>அந்த பரிந்துரையை, ஆண்டன் லேப்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மீண்டும் ஒருமுறை சரிபார்த்து, ஊழியரை பணிநீக்கம் செய்தனர். மனித ஊழியர் ஒருவரை <a href="https://www.maalaimalar.com/technology/techfacts/ai-job-loss-warning-anthropic-ceo-says-ai-will-permanently-displace-white-collar-work">செயற்கை நுண்ணறிவு</a> மேலாளர் மதிப்பிட்டுப் பணிநீக்கம் செய்யப் பரிந்துரைத்தது வரலாற்றிலேயே இதுவே முதல் முறை எனக் கூறப்படும் நிலையில், இது தொடர்பான செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>இந்த வார விசேஷங்கள்: 18-8-2026 முதல் 24-8-2026 வரை</title><link>https://www.maalaimalar.com/spirituality/this-week-specials-18-8-2026-to-24-8-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/this-week-specials-18-8-2026-to-24-8-2026#comments</comments><guid isPermaLink="false">4f84b333-1515-40f4-b12f-2dd069d62526</guid><pubDate>Tue, 18 Aug 2026 02:55:13 +0000</pubDate><atom:updated>2026-08-18T02:55:13.738Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,வழிபாடு,Astrology,this week special,இந்த வார விசேஷங்கள்,worship</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/837e0yq3/chokkanathar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ pittukku man sumantha leelai]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/837e0yq3/chokkanathar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>18-ந் தேதி (செவ்வாய்)</h2><p>* சஷ்டி விரதம்.</p><p>* விருதுநகர் சுவாமி பூத வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் பவனி.</p><p>* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.</p><p>* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.</p> <h2>19-ந் தேதி (புதன்)</h2><p>* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் தருமிக்கு பொற்கிழி அருளுதல்.</p><p>* குறுக்குத்துறை முருகப்பெருமான் புறப்பாடு.</p><p>* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.</p><p>* கீழ்நோக்கு நாள்.</p> <h2>20-ந் தேதி (வியாழன்)</h2><p>* திருப்பரங்குன்றம் ஆண்டவர் புறப்பாடு.</p><p>சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.</p><p>* திருப்பதி திருவேங்கட முடையானுக்கு புஷ்பாங்கி சேவை.</p><p>* கீழ்நோக்கு நாள்.</p> <h2>21-ந் தேதி (வெள்ளி)</h2><p>* வரலட்சுமி விரதம்.</p><p>* நெல்லை கெட்வெல் கனக மகாலட்சுமி வளையல் உற்சவம்.</p><p>* திருத்தணி முருகப் பெருமான் கிளி வாகன சேவை.</p><p>* சமநோக்கு நாள்.</p> <h2>22-ந் தேதி (சனி)</h2><p>* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் வளையல் விற்ற திருவிளையாடல், இரவு பட்டாபிஷேகம். </p><p>* மன்னார்குடி ராஜகோபால சுவாமி, காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள், திருமோகூர் காளமேகப் பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.</p><p>* திருவைகுண்டம் வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.</p><p>* சமநோக்கு நாள்.</p> <h2>23-ந் தேதி (ஞாயிறு)</h2><p>* முகூர்த்த நாள்.</p><p>* சுமார்த்த ஏகாதசி.</p><p>* திருப்பரங்குன்றம் ஆண்டவரும், திருவாதவூர் மாணிக்க வாசகரும் மதுரை எழுந்தருளல்.</p><p>* நெல்லை குறுக்குத் துறை சுப்பிரமணியர் அதிகாலை உருகுசட்ட சேவை.</p><p>* கீழ்நோக்கு நாள்.</p> <h2>24-ந் தேதி (திங்கள்)</h2><p>* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் புட்டுக்கு மண் சுமந்தருளிய லீலை.</p><p>* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.</p><p>* கீழ்நோக்கு நாள்.</p> ]]></content:encoded></item><item><title>&quot;ப. சிதம்பரம் உண்மையான நக்ஸலைட்..&quot; விசாரணை நடத்த அசாம் முதல்வர் வலியுறுத்தல் </title><link>https://www.maalaimalar.com/news/national/naxalism-political-row-chidambaram-and-himanta-trade-barbs-over-modis-dimagi-naxal-remark</link><comments>https://www.maalaimalar.com/news/national/naxalism-political-row-chidambaram-and-himanta-trade-barbs-over-modis-dimagi-naxal-remark#comments</comments><guid isPermaLink="false">eef3e399-8cf9-4d4b-b68a-0b7afc7732f8</guid><pubDate>Tue, 18 Aug 2026 02:42:53 +0000</pubDate><atom:updated>2026-08-18T02:42:53.213Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Naxalite,ஹிமாந்தா பிஸ்வா சர்மா,Himanta Biswa Sarma,p. chidambaram,ப. சிதம்பரம்,நக்ஸலைட்டு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/2cvn9rd4/tn-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ப. சிதம்பரம், ஹிமாந்தா பிஸ்வா]]></media:title><media:description type="html"><![CDATA[ ப. சிதம்பரம், ஹிமாந்தா பிஸ்வா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/2cvn9rd4/tn-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>80வது சுதந்திர தினமான கடந்த சனிக்கிழமை பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் உரையாற்றுகையில் நாட்டில் ஆயுதமேந்திய நக்ஸலைட்டுகளை ஒழித்துவிட்டோம் ஆனால் <a href="https://www.maalaimalar.com/news/national/dimaki-naxal-row-modis-independence-day-speech-sparks-opposition-backlash">திமாகி நக்சல்கள் </a>(அறிவுஜீவி நக்சல்கள்) இன்னும் இருக்கிறார்கள் என பேசியிருந்தார். </p> <h2>திமாகி நக்சல்</h2><p>இது கேள்வி கேட்டும் எதிர்கட்சிகளை நோக்கி பிரதமர் பயன்படுத்திய வார்த்தையாக பார்க்கப்பட்டது. இதற்கு எதிர்வினையாற்றிய காங்கிரஸ் மூத்த தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/national/proud-to-be-dimagi-naxal-congs-p-chidambaram-hits-back-at-pm">ப. சிதம்பரம் </a>தான் ஒரு திமாகி நக்சலாக இருப்பதில் பெருமை கொள்கிறேன் என எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.</p><p>மறுபுறம் திமாகி நக்சல் என பிரதமர் குறிப்பிட்டது எதிர்கட்சிகளை அல்ல, நாட்டை பிரிக்க நினைக்கும் பிரிவினைவாதிகளை என்று விளக்கம் அளித்தார் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ.</p><p>இந்த சூழலில் ப. சிதம்பரம் கருத்துக்கு பாஜகவை சேர்ந்த அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா எதிர்வினை ஆற்றியுள்ளார்.</p> <h2>ஹிமாந்தா பிஸ்வா</h2><p>நேற்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய சர்மா, ப. சிதம்பரம் வெறும் 'திமாகி நக்சல்' அல்ல, அவர் ஒரு ‘பியூர் நக்சல்’ (உண்மையான நக்சல்)</p><p>ப. சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், நாட்டில் மாவோயிஸ்ட் தாக்குதல்கள் தொடர்ந்தபோதிலும், அவர் வேண்டுமென்றே நக்சலிசத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்தாரா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும்.</p><p>சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோதுதான், சத்தீஸ்கரில் மூத்த காங்கிரஸ் தலைவர் வி.சி. சுக்லா உட்படப் பல காங்கிரஸ் தலைவர்கள் நக்சல் தாக்குதலில் உயிரிழந்தனர்.</p> <p>இவ்வளவு பெரிய இழப்புகள் ஏற்பட்ட பிறகும், நக்சலிசத்தை அழிக்கக் காங்கிரஸ் அரசு எந்த உறுதியான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.</p><p>நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்தி, அதைப் பயன்படுத்தி 2029ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றவே காங்கிரஸ் கட்சி முயற்சிக்கிறது.</p><p>பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான ஆட்சியில், ஆயுதமேந்திய நக்சலிசம் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.</p> ]]></content:encoded></item><item><title>ஈரான் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த திட்டமிடும் டிரம்ப்?.. லீக் ஆன தகவல்  </title><link>https://www.maalaimalar.com/news/world/iran-nuclear-strike-talks-trump-administration-accused-of-risking-global-war-over-iran-attack-plans</link><comments>https://www.maalaimalar.com/news/world/iran-nuclear-strike-talks-trump-administration-accused-of-risking-global-war-over-iran-attack-plans#comments</comments><guid isPermaLink="false">3e15815b-06b8-438e-8c9c-62af96f2b438</guid><pubDate>Tue, 18 Aug 2026 02:04:49 +0000</pubDate><atom:updated>2026-08-18T02:04:49.123Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>trump,டிரம்ப்,அணு ஆயுதம்,Nuclear weapon,Iran War,ஈரான் போர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/p5ga5yhg/tn-1.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டெய்லர் கிரீன், டிரம்ப்]]></media:title><media:description type="html"><![CDATA[ டெய்லர் கிரீன், டிரம்ப்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/p5ga5yhg/tn-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/iran-threatens-to-go-on-offensive-in-hormuz-if-diplomacy-with-us-fails">ஈரான் </a>மீது அணு ஆயுதங்களை பயன்படுத்துவது தொடர்பாக வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரிகள் ஆலோசனை கூட்டங்கள் நடத்தி வருவதாக அமெரிக்க முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர் மார்ஜோரி டெய்லர் கிரீன் தெரிவித்துள்ளார். </p><p>இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கிரீன்,</p> <h2>அணு ஆயுத தாக்குதல்</h2><p>"<a href="https://www.maalaimalar.com/topic/iran-war">வெளிநாட்டுப் போர்களில்</a> இனி அமெரிக்கா ஈடுபடாது என்று டிரம்ப் வாக்குறுதி அளித்தார். ஆனால் தற்போது ஈரான் மீது அணு ஆயுத தாக்குதலுக்கான எல்லையை டிரம்ப் நிர்வாகம் குறைத்து வருகிறது.</p><p>ஈரான் மீது தாக்குதல் நடத்த வெள்ளை மாளிகை மூத்த அதிகாரிகள் ஆலோசனை கூட்டங்கள் நடத்தி வருகின்றனர்.</p><p>ஈரான் அணுஆயுதம் தயாரிக்கும் அளவு விளிம்பிற்கு இன்னும் வரவில்லை என்ற அமெரிக்க உளவுத்துறையின் அறிக்கைகளை டிரம்ப் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.</p><p>இஸ்ரேலின் எச்சரிக்கைகளை கேட்டு மட்டுமே அவர்கள் நடக்கின்றனர்.</p><p>ஈரான் மீது அணுஆயுதத்தைப் பயன்படுத்தினால் அது மிகப்பெரிய உலகப்போராக மாறி, லட்சக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கும். கடுமையான பொருளாதாரச் சிக்கலை ஏற்படுத்தும்" என எச்சரித்துள்ளார்.</p> <h2>குற்றச்சாட்டு</h2><p>கிரீனின் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து வெள்ளை மாளிகை தரப்பிலிருந்து இதுவரை எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை.</p><p>ஜூன் 2025இல் ஈரான் அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, வெளிநாட்டுப் போர்களைத் தவிர்க்க வேண்டும் என்ற பிரச்சார வாக்குறுதிகளை டிரம்ப் கைவிட்டுவிட்டதாக கிரீன் முன்பும் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 18 ஆகஸ்ட் 2026:  வளர்பிறை சஷ்டி விரதம்
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-18-august-2026-valarpirai-sashti-viratham</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-18-august-2026-valarpirai-sashti-viratham#comments</comments><guid isPermaLink="false">46106342-a650-4b0b-a6b4-ca0d68c3054f</guid><pubDate>Tue, 18 Aug 2026 01:55:30 +0000</pubDate><atom:updated>2026-08-18T01:55:30.585Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/03/08/27259313-muruga1.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Murugan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/03/08/27259313-muruga1.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆவணி-1 (செவ்வாய்க்கிழமை)</p><p>பிறை : வளர்பிறை</p><p>திதி :  சஷ்டி இரவு 9.06 மணி வரை பிறகு சப்தமி</p><p>நட்சத்திரம் :  சித்திரை இரவு 8.50 வரை பிறகு சுவாதி</p> <p>யோகம் :  சித்தயோகம்</p><p>ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை</p><p>எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை</p><p>சூலம் : வடக்கு</p><p>நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை</p> <h2>திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்</h2><p>வளர்பிறை சஷ்டி விரதம். மதுரை ஸ்ரீ ஆலவாய் அண்ணல் மாணிக்கம் விற்றருளிய லீலை கைலாச வாகனத்தில் பவனி. சுவாமி மலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சனம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.</p> <p>திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம், திருநெல்வேலி 3-ஆம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய திருத்தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத ஸ்ரீ வைத்த மாநிதிப் பெருமாள் திருக்கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு சம்ஹார அர்ச்சனை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல் ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமாள் பவனி.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - ஆக்கம்</p><p>ரிஷபம் - சுகம்</p><p>மிதுனம் - ஆர்வம்</p><p>கடகம் - கவனம்</p><p>சிம்மம் - கடமை</p><p>கன்னி - உழைப்பு</p> <p>துலாம் - முயற்சி</p><p>விருச்சிகம் - நலம்</p><p>தனுசு - சுபம்</p><p>மகரம் - இரக்கம்</p><p>கும்பம் - ஜெயம்</p><p>மீனம் - புகழ்</p> ]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 18.8.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு சுபச்செய்திகள் வந்து சேரும்</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-18-august-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-18-august-2026#comments</comments><guid isPermaLink="false">179de9d1-dca7-4f8f-85b8-f4e327a40d71</guid><pubDate>Tue, 18 Aug 2026 01:44:29 +0000</pubDate><atom:updated>2026-08-18T01:44:29.883Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/01/07/24376583-rasipalan1.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/01/07/24376583-rasipalan1.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>அலைபேசி வழித்தகவலால் ஆதாயம் கிட்டும் நாள். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள் பண நெருக்கடி தீரும். உடன் இருப்பவர்கள் கேட்ட உதவி கிடைக்கும்.</p><h2>ரிஷபம்</h2><p>முக்கியப் புள்ளிகளின் சந்திப்பால் முன்னேற்றம் கூடும் நாள். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவம் நடைபெறும். செய்யும் காரியங்களில் உங்கள் திறமை மேம்படும்.</p> <h2>மிதுனம்</h2><p>வசந்த காலத்திற்கு வழிகாட்டும் நாள். பேச்சுத் திறமையால் சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள். பயணங்கள் பலன் தரும்.</p><h2>கடகம்</h2><p>மகிழ்ச்சி கூடும் நாள். இடமாற்றம் பற்றிய இனிய தகவல் வரும். பயணத்தால் பால்ய நண்பர் ஒருவரைச் சந்தித்து மகிழ்வீர்கள். உறவினர்களால் விரயமுண்டு.</p> <h2>சிம்மம்</h2><p>யோகமான நாள். சேமிப்பு உயரும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.</p><h2>கன்னி</h2><p>முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படுவர். தொழிலில் அனுபவமிக்க பங்குதாரர்கள் வந்திணைவர்.</p> <h2>துலாம்</h2><p>கனவுகள் நனவாகும் நாள். கடமையில் இருந்த தொய்வு அகலும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வர்.</p><h2>விருச்சிகம்</h2><p>சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். சொல்லைச் செயலாக்கிக் காட்டுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.</p> <h2>தனுசு</h2><p>சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக மாறும் நாள். பிரியமானவர்களோடு இருந்த பிரச்சனை அகலும். உத்தியோகத்தில் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.</p><h2>மகரம்</h2><p>மனக்குழப்பம் அகலும் நாள். சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். திருமணப் பேச்சு முடிவாகும்.</p> <h2>கும்பம்</h2><p>காரிய வெற்றி ஏற்படும் நாள். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும்.</p><h2>மீனம்</h2><p>சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். மனக்குழப்பம் அதிகரிக்கும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. கூட்டாளிகளின் ஒத்துழைப்பு குறையும்.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம் </title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/todays-petrol-and-diesel-price-status-in-chennai-2</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/todays-petrol-and-diesel-price-status-in-chennai-2#comments</comments><guid isPermaLink="false">e6a808f6-2a91-46b8-be22-769dab6004d8</guid><pubDate>Tue, 18 Aug 2026 01:36:26 +0000</pubDate><atom:updated>2026-08-18T01:36:26.578Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,கச்சா எண்ணெய்,Crude oil,பெட்ரோல் டீசல் விலை,petrol diesel prices</media:keywords><media:content height="614" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/b0nhpc4w/maalai-malar2026-08-11blbkipxnmaalai-malar2026-08-08eyp4pp4lpetrol.avif" width="1024"><media:title type="html"><![CDATA[ பெட்ரோல் டீசல் விலை]]></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல் டீசல் விலை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/b0nhpc4w/maalai-malar2026-08-11blbkipxnmaalai-malar2026-08-08eyp4pp4lpetrol.avif?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/iran-threatens-to-go-on-offensive-in-hormuz-if-diplomacy-with-us-fails">ஈரான் போரினால் </a>மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p> <h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.</p> <h2>இன்றைய பெட்ரோல், டீசல் விலை</h2><p>அந்த வகையில் இன்றைய (18.08.2026 - செய்வ்வாய்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கச்சா எண்ணெய் விலை</h2><p>இன்று சர்வதேச சந்தையில் பிரனட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 91.01 டாலர் என விற்பனை ஆகி வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>குடிநீர் குழாய்களில் பாக்டீரியா.. நாட்டின் ரெயில் நிலையங்களில் அடிப்படை வசதிகளே இல்லை - சிஏஜி அறிக்கை </title><link>https://www.maalaimalar.com/news/national/cag-report-flags-poor-passenger-amenities-and-contaminated-drinking-water-at-major-railway-stations</link><comments>https://www.maalaimalar.com/news/national/cag-report-flags-poor-passenger-amenities-and-contaminated-drinking-water-at-major-railway-stations#comments</comments><guid isPermaLink="false">d8bb99c5-2639-42b2-a846-a459f439b9db</guid><pubDate>Tue, 18 Aug 2026 01:03:25 +0000</pubDate><atom:updated>2026-08-18T01:03:25.835Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ரெயில்வே,Railways,railway stations,CAG Report,ரெயில் நிலையங்கள்,சிஏஜி அறிக்கை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/030opsjm/tn-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ரெயில் நிலையம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ ரெயில் நிலையம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/030opsjm/tn-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடு முழுவதும் உள்ள <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/another-ac-electric-train-in-chennai">ரெயில் </a>நிலையங்களில் பயணிகளுக்கான வசதிகளில் கடும் குறைபாடு இருப்பதாக சிஏஜி அறிக்கை  வெளியாகியுள்ளது. </p><p>பல்வேறு <a href="https://www.maalaimalar.com/topic/railway-stations">ரெயில்வே </a>மண்டலங்களில் உள்ள 512 புறநகர் அல்லாத வெளியூர் ரெயில்கள் இயக்கப்படும் ரெயில் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட தணிக்கையின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.</p><p>கோயம்புத்தூர், பாலக்காடு, ஐதராபாத், மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் ரெயில் நிலையம் ஆகியவை இதில் அடங்கும்.</p> <h2>பாக்டீரியா</h2><p>அறிக்கையின்படி, 2022-23 நிதியாண்டில் 8 மண்டலங்களில் உள்ள 49 ரெயில் நிலையங்களின் பிளாட்பார குடிநீர் குழாய்களில் எடுக்கப்பட்ட நீர் மாதிரிகளில் Total Coliform என்ற பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டது.</p><p>2023-24 நிதியாண்டில் 9 மண்டலங்களில் உள்ள 56 ரெயில் நிலையங்களில் வாட்டர் கூலர்களில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் E. coli பாக்டீரியா கண்டறியப்பட்டது.</p><p>E. coli பாக்டீரியா பொதுவாக மனித அல்லது விலங்கு கழிவு மாசுபாட்டால் நீரினுள் ஊடுருவக்கூடிய ஒன்றாகும்.</p>  <h2>அடிப்படை வசதிகள்</h2><p>ஆய்வு செய்யப்பட்ட 512 ரெயில் நிலையங்களில் 458 நிலையங்களில், அதாவது சுமார் 90% நிலையங்களில் குறைந்தபட்சம் இருக்க வேண்டிய அத்தியாவசிய வசதிகள் கூட இல்லை என்பது தெரியவந்துள்ளது.</p><p>மும்பை சென்ட்ரல், சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ், ஹவுரா - சீல்டா மற்றும் டெல்லி போன்ற நாட்டின் மிகப்பெரிய ரெயில் நிலையங்களிலும் கூட இருக்கை வசதி, தூய்மை, குப்பைத் தொட்டிகள் மற்றும் மின்னணு தகவல் பலகைகள் அமைப்பதில் பெருமளவு குறைபாடுகள் பதிவாகியுள்ளன.</p> <h2>பரிந்துரை</h2><p>ரெயில்வே வாரியம் ஏப்ரல் 2018இல் NSG-1 முதல் NSG-6 வகையை சேர்ந்த அனைத்து ரெயில் நிலையங்களிலும் குறைந்தபட்ச வசதிகளை உறுதி செய்ய உத்தரவிட்டிருந்தது. ஆனால் அந்த உத்தரவுகள் சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.</p><p>எனவே, ரெயில் நிலையங்களில் குடிநீர் விநியோக அமைப்புகளைத் தொடர்ந்து ஆய்வு செய்யவும், குடிநீரின் தரத்தைச் சோதிக்க நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை தீவிரமாக எடுத்துக்கொண்டு பின்பற்றவும் ரெயில்வே நிர்வாகத்திற்கு சிஏஜி பரிந்துரை செய்துள்ளது.</p> <p>NSG-1 முதல் NSG-3 வரை அதிக வருமானம் ஈட்டும் மிக முக்கியப் பெருநகர நிலையங்கள் எனவும், NSG-4 முதல் NSG-6 வரை நடுத்தர மற்றும் சிறிய அளவிலான ரெயில் நிலையங்களாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>தேர்வுகள் ரத்து - உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொண்ட மாணவர் தலைவர்</title><link>https://www.maalaimalar.com/news/national/jharkhand-devendra-nath-mahto-ends-hunger-strike-after-jssc-cgl-exam-cancelled</link><comments>https://www.maalaimalar.com/news/national/jharkhand-devendra-nath-mahto-ends-hunger-strike-after-jssc-cgl-exam-cancelled#comments</comments><guid isPermaLink="false">701adfe1-747c-4d29-8220-eb83f701a286</guid><pubDate>Tue, 18 Aug 2026 00:19:45 +0000</pubDate><atom:updated>2026-08-18T00:19:45.972Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தேர்வுகள் ரத்து,Jharkhand protest,ஜார்க்கண்ட் போராட்டம்,Exams Cancelled</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/a4y3aunq/Devendra-Nath-Mahto.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Devendra Nath Mahto]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/a4y3aunq/Devendra-Nath-Mahto.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பணி நியமன தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி மாணவர்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், JSSC-CGL தேர்வு மற்றும் 2014 முதல் வெளிமுகமை நிறுவனமான TDPL-ஆல் நடத்தப்பட்ட அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்வதாக <a href="https://www.maalaimalar.com/topic/jharkhand">ஜார்க்கண்ட்</a> முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்தார்.</p><p>JSSC-CGL தேர்வு மற்றும் TDPL மூலம் நடத்தப்பட்ட அனைத்துத் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் <a href="https://www.maalaimalar.com/topic/hemant-soren">ஹேமந்த் சோரன்</a> அறிவித்ததைத் தொடர்ந்து, ஜார்க்கண்ட் அமைச்சர்கள் தீபிகா பாண்டே சிங் மற்றும் இர்பான் அன்சாரி ஆகியோர் முன்னிலையில், ராஞ்சியில் உள்ள சதார் மருத்துவமனையில் மாணவர் தலைவர் தேவேந்திர நாத் மஹ்தோ தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார். </p><h2>கடுமையான சட்டங்கள் தேவை:</h2><p>மாநிலத்தில் ஆட்சேர்ப்பு தேர்வு நடைமுறைகள் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் ஒரு பகுதியாக மஹ்தோ இந்த உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தார். </p><p>செய்தியாளர்களிடம் பேசிய மஹ்தோ, தேர்வர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதற்காக முதல்வர் சோரன், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் மாநில அமைச்சர்கள் தீபிகா பாண்டே மற்றும் இர்பான் அன்சாரி ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.</p><p>தேர்வுகளை கண்காணிக்கவும், வினாத்தாள் கசிவை தடுக்கவும் கடுமையான சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் தேவை என்று அவர் வலியுறுத்தினார்.</p><p>இது குறித்து பேசும் போது மஹ்தோ கூறியதாவது: "இன்று உண்ணாவிரத போராட்டத்தின் 16-வது நாள்; இந்தப் போராட்டம் ஜூலை 2-ஆம் தேதி தொடங்கியது. ஜூலை 20-ஆம் தேதி முதல்வருடனான சந்திப்பை தொடர்ந்து, ஜூலை 28-ஆம் தேதி சிஐடி (CID) விசாரணை தொடங்கப்பட்டது. முன்னாள் தலைமைச் செயலாளர் மற்றும் JPSC தலைவர் போன்ற உயர்மட்டப் பொறுப்பில் உள்ளவர்கள் உட்பட யாரையும் விட்டுவைக்காமல், இந்த விசாரணை மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.</p><h2>துணிச்சலான நடவடிக்கை:</h2><p>இத்தகைய முக்கிய முடிவை எடுப்பதற்கான துணிச்சலை காட்டிய ஜார்க்கண்ட் அரசுக்கு நான் நன்றி கூறுகிறேன். ஒரு தேர்வை ரத்து செய்வது என்பது மிகப்பெரிய சவாலான காரியமாகும். JSSC CGL தேர்வுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறை ஏற்கனவே பணி நியமனம் பெறும் நிலையை எட்டியிருந்ததாலும், பல மாணவர்கள் ஏற்கனவே தங்கள் இடங்களை உறுதி செய்திருக்கக்கூடும் என்பதாலும், இது எளிதான முடிவாக இருக்கவில்லை.</p><p>இருப்பினும், இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மாணவர்களுக்காக அரசு இந்த துணிச்சலான நடவடிக்கையை மேற்கொண்டது... ஜார்க்கண்ட் அரசு, முதல்வர் ஹேமந்த் சோரன், ராகுல் காந்தி, எங்கள் எம்.எல்.ஏ., அமைச்சர் தீபிகா பாண்டே, இர்பான் அன்சாரி, மாணவர்கள், ஊடகங்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் போராட்டத்தின் போது நள்ளிரவு 1 அல்லது 2 மணிக்கு எங்களுக்குத் தண்ணீர் மற்றும் சிற்றுண்டிகளை வழங்கிய அறிமுகம் இல்லாத நபர்கள் என அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்காவுடன் ராஜதந்திர முயற்சிகள் தோல்வியுற்றால் - ஈரான் பகிரங்க எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/world/iran-threatens-to-go-on-offensive-in-hormuz-if-diplomacy-with-us-fails</link><comments>https://www.maalaimalar.com/news/world/iran-threatens-to-go-on-offensive-in-hormuz-if-diplomacy-with-us-fails#comments</comments><guid isPermaLink="false">75ceab94-9756-429f-9963-12c288deae5b</guid><pubDate>Mon, 17 Aug 2026 23:32:40 +0000</pubDate><atom:updated>2026-08-17T23:32:40.776Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஈரான்,Iran,Strait of Hormuz,ஹார்முஸ் நீரிணை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/54lnwim9/strait-of-hormuz.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Strait of Hormuz]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/54lnwim9/strait-of-hormuz.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவுடனான போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை காரணமாக, <a href="https://www.maalaimalar.com/topic/Iran">ஈரான்</a> தனது கொள்கையை தற்காப்பு நிலையில் இருந்து முழுமையான தாக்குதல் நிலைக்கு மாற்ற முடிவு செய்துள்ளது என்று ஒரு மூத்த ஈரானிய அதிகாரி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.</p><p>அமைதி பேச்சுவார்த்தைகள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கான முன்னேற்றம் முடங்கியுள்ளது. மேலும், பிப்ரவரி 28-ஆம் தேதியன்று <a href="https://www.maalaimalar.com/news/world">அமெரிக்கா</a> மற்றும் இஸ்ரேலும் தொடங்கிய இந்த மோதலை முடிவுக்கு கொண்டுவருவதற்கான எந்த அறிகுறியும் போரிடும் தரப்புகளுக்கு இல்லை.</p><h2>சரியான நேரத்தில் தாக்குதல்:</h2><p>"ஹோர்முஸ் நீரிணை மற்றும் பரந்த பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரிக்க ஈரானிய அமைப்புகள் தயாராக இருக்க வேண்டும், ஏனெனில் கடினமான முடிவுகள் மீது ஈரான் முடிவெடுக்கவும் நடவடிக்கை எடுக்கவும் தயாராக இருக்கும்," என்று அந்த ஈரானிய அதிகாரி கூறினார்.</p><p>மேலும், ராஜதந்திர முயற்சிகள் தோல்வியுற்றால், அமெரிக்க கடற்படை முற்றுகையை உடைக்க தெஹ்ரான் "சரியான நேரத்தில் மற்றும் துல்லியமான" ராணுவ தாக்குதலை நடத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><h2>சிதைந்து போன ஒப்பந்தம்:</h2><p>போரை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில், ஜூன் மாதம் ஒப்புக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், ஈரானும் அமெரிக்காவும் ஒரு இறுதி உடன்பாட்டை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நாள் திங்கட்கிழமை ஆகும்.</p><p>ஜூன் 17 அன்று கையெழுத்திடப்பட்ட இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், ஈரானின் அணுசக்தி திட்டத்தின் எதிர்காலம் போன்ற பரந்த பிரச்சினைகளை உள்ளடக்கிய ஒரு உடன்பாட்டை வாஷிங்டனும் தெஹ்ரானும் எட்டுவதற்கு, பரஸ்பர ஒப்புதலுடன் நீட்டிக்கப்படக்கூடிய 60 நாள் காலக்கெடுவை நிர்ணயித்தது.</p><p>இருப்பினும், அனைத்து முனைகளிலும் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாகவும் நிரந்தரமாகவும் நிறுத்துவதாக அறிவித்த அந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், ஹார்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு குறித்த தகராறு காரணமாக விரைவாக சிதைந்து போனது.</p><p>புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் 5-ஆவது பிரிவு, நீர்வழியை நிர்வகிக்கும் உரிமையை தங்களுக்கு அளிப்பதாக தெஹ்ரான் கூறியது, ஆனால் வாஷிங்டன் அந்த விளக்கத்தை நிராகரித்தது. அங்கீகரிக்கப்படாத பாதையில் நீர்வழி வழியாக செல்ல முயன்றதாக கூறப்பட்ட கப்பல்கள் மீது தெஹ்ரான் துப்பாக்கி சூடு நடத்த தொடங்கியதால், மோதல்கள் மீண்டும் தொடங்கின.</p>]]></content:encoded></item><item><title>இம்ரான் கானின் கண் பார்வை &apos;கிட்டத்தட்ட இயல்பு&apos; நிலைக்கு திரும்பியது: சிறை நிர்வாகம் தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/world/jail-authorities-said-imran-khans-eye-condition-almost-normal-to-apex-court</link><comments>https://www.maalaimalar.com/news/world/jail-authorities-said-imran-khans-eye-condition-almost-normal-to-apex-court#comments</comments><guid isPermaLink="false">7b02a04b-08f7-4c91-a183-490579caabfe</guid><pubDate>Mon, 17 Aug 2026 21:25:04 +0000</pubDate><atom:updated>2026-08-17T21:25:04.382Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறை,Imran Khan,இம்ரான் கான்,நீதிமன்றம்,jail,Court</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/utk8b4wh/Imran-Khan-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Imran Khan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/utk8b4wh/Imran-Khan-1.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கண் பார்வை கணிசமாக மேம்பட்டுள்ளதாகவும், அவரது பார்வைத்திறன் "கிட்டத்தட்ட இயல்பு நிலைக்கு" திரும்பியுள்ளதாக சிறை அதிகாரிகள் <a href="https://www.maalaimalar.com/news/world">பாகிஸ்தான்</a> உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்தனர்.</p><p>இஸ்லாமாபாத்தில் உள்ள முன்னணி தனியார் மருத்துவமனையான 'ஷிஃபா இன்டர்நேஷனல்' மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக <a href="https://www.maalaimalar.com/topic/imran-khan">இம்ரான் கான்</a> விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் விசாரிக்கவிருந்த நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>மருத்துவ அறிக்கை:</h2><p>ஆகஸ்ட் 2023 முதல் சிறையில் உள்ள 'பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப்' (PTI) கட்சியின் நிறுவனர் இம்ரான் கான், ஜனவரி மாத இறுதியில் அவருக்கு வலது கண்ணில் 'சென்ட்ரல் ரெட்டினல் வெயின் அக்லூஷன்' (CRVO) எனும் கண் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதில் இருந்து, கண் சிகிச்சைக்காக இஸ்லாமாபாத்தில் உள்ள 'பாகிஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ்' (PIMS) மருத்துவமனைக்கு பலமுறை அழைத்து செல்லப்பட்டுள்ளார்.</p><p>ராவல்பிண்டியில் உள்ள அடியால சிறை அதிகாரிகள், 73 வயதான இம்ரான் கான் கண்களின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.</p><p>இம்ரான் கானின் மருத்துவ பிரச்சனை கண்டறியப்பட்டதில் இருந்து அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், PIMS மருத்துவமனையின் கண் மருத்துவ பிரிவுத் தலைவர் டாக்டர் முகமது ஆரிஃப் கான் மற்றும் ராவல்பிண்டியில் உள்ள அல்ஷிஃபா டிரஸ்ட் கண் மருத்துவமனையின் விட்ரியோ-ரெட்டினல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் நதீம் குரேஷி ஆகியோர் அவருக்கு சிகிச்சை அளித்ததாகவும் அந்த அறிக்கை தெரிவித்தது.</p><h2>பார்வைத்திறன் முன்னேற்றம்:</h2><p>"இதன் விளைவாக, அவரது கண்ணில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுகிறது, மேலும் அவரது பார்வைத்திறன் கிட்டத்தட்ட இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது" என்று அந்த அறிக்கை கூறியது.</p><p>மருத்துவ சிகிச்சைகள் மற்றும் பார்வைத்திறனில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் ஆகியவை, கானுக்கு சிறந்த மருத்துவ வசதிகளை வழங்குவதில் சிறை நிர்வாகம் முழுமையான முயற்சிகளை மேற்கொண்டதை காட்டுவதாக அது மேலும் குறிப்பிட்டது.</p><p>மருத்துவ அதிகாரிகள் தினமும் மூன்று முறை இம்ரான் கானை சந்தித்து, அவரது உணவை சரிபார்ப்பதுடன், இரத்த அழுத்தம், இதய துடிப்பு மற்றும் ஆக்சிஜன் அளவு உள்ளிட்ட முக்கிய உடல்நல குறியீடுகளை பரிசோதிப்பதாக அது கூறியது. சிறைவாசத்தின் போது அவரது மருத்துவ பதிவுகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>உக்ரைன் போருக்கு எதிராக பேசிய கிரெம்ளின் விமர்சகருக்கு 11 ஆண்டுகள் சிறை - ரஷ்யா</title><link>https://www.maalaimalar.com/news/world/russia-jails-kremlin-critic-for-11-years-for-speaking-against-ukraine-war</link><comments>https://www.maalaimalar.com/news/world/russia-jails-kremlin-critic-for-11-years-for-speaking-against-ukraine-war#comments</comments><guid isPermaLink="false">5c189651-29cb-4e73-a72d-5248493789b3</guid><pubDate>Mon, 17 Aug 2026 20:25:52 +0000</pubDate><atom:updated>2026-08-17T20:25:52.556Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உக்ரைன் போர்,Russia,Ukraine War,ரஷ்யா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/kzqod4sa/Lev-Shlosberg.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Lev Shlosberg]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/kzqod4sa/Lev-Shlosberg.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக, <a href="https://www.maalaimalar.com/news/world">உக்ரைன்</a> போருக்கு எதிராக குரல் எழுப்பிய முக்கிய எதிர்க்கட்சி அரசியல்வாதி ஒருவருக்கு ரஷ்ய நீதிமன்றம் 11 ஆண்டுகள் மற்றும் ஒரு மாதம் சிறை தண்டனை விதித்தது.</p><p>2022 பிப்ரவரியில் <a href="https://www.maalaimalar.com/topic/russia">ரஷ்யா</a> தனது அண்டை நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை பேரில் போரை தொடங்கியதில் இருந்து, எதிர்ப்புக் குரல்களை ஒடுக்குவதற்காக ரஷ்யா எடுத்துவரும் மற்றுமொரு நடவடிக்கையாக, யப்லோகோ கட்சியின் மூத்த உறுப்பினரான லெவ் ஷ்லோஸ்பெர்க்கிற்கு எதிரான தீர்ப்பு அமைந்துள்ளது. போரை வெளிப்படையாக எதிர்க்கும் ஒரே அதிகாரப்பூர்வ அரசியல் கட்சி யப்லோகோ ஆகும்.</p><h2>சகித்துக்கொள்ளாது:</h2><p>திங்களன்று வழங்கப்பட்ட தனித் தீர்ப்பில், ரஷ்யாவின் உச்ச நீதிமன்றம், செப்டம்பர் 18-20 தேதிகளில் நடைபெறவிருந்த நாடாளுமன்ற தேர்தலில் யப்லோகோ கட்சியை வேட்பாளர் பட்டியலில் இருந்து தடைசெய்த தனது முந்தைய முடிவை உறுதிசெய்ததுடன், அக்கட்சியின் மேல்முறையீட்டையும் நிராகரித்தது.</p><p>தற்போது ஐந்தாம் ஆண்டில் இருக்கும் போர் குறித்த எந்தவொரு விமர்சனத்தையும் கிரெம்ளின் சகித்துக்கொள்ளாது என்பதை, ஷ்லோஸ்பெர்க் மற்றும் யாப்லோகோவுக்கு எதிரான இந்த நடவடிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன.</p><p>63 வயதான ஷ்லோஸ்பெர்க், யப்லோகோவின் துணைத் தலைவர் ஆவார். இவர் 2016 முதல் 2021 வரை பிஸ்கோவ் பிராந்திய சட்டமன்றத்தில் பணியாற்றினார். </p><p>மாஸ்கோவில் இருந்து வடமேற்கே சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிஸ்கோவ் நகரில், ரஷ்ய இராணுவத்தை பற்றி "அவமதிப்பு" விளைவித்ததாகவும் மற்றும் "பொய் தகவல்களை" பரப்பியதாகவும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் மீது விசாரணை நடைபெற்றது.</p><h2>வெளிநாட்டு உளவாளி:</h2><p>போரை முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுத்த விவாதத்தில் இருந்தும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் படத்திற்கு அருகில் இரத்தம் தோய்ந்த பெண்ணின் படத்தை கொண்ட ஒரு பிரிட்டிஷ் பத்திரிகையின் முதல் பக்கத்தை, "அவள் இரத்தம்... அவன் கைகள்" என்ற தலைப்புடன் தனது டெலிகிராம் சேனலில் பதிவிட்டதில் இருந்தும் இந்தக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஷ்லோஸ்பெர்க் இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று நிராகரித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>காலே டெஸ்ட்: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்த ஜடேஜா</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/ravindra-jadeja-joins-kapil-dev-in-elite-list-to-achieve-this-feat</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/ravindra-jadeja-joins-kapil-dev-in-elite-list-to-achieve-this-feat#comments</comments><guid isPermaLink="false">0ab2200a-dce3-47b7-b460-64a8794b42fb</guid><pubDate>Mon, 17 Aug 2026 19:33:54 +0000</pubDate><atom:updated>2026-08-17T19:33:54.933Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Kapil Dev,ரவீந்திர ஜடேஜா,Ravindra Jadeja,கபில் தேவ்,Galle Test,காலே டெஸ்ட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/yj63hrbi/Jadeja.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jadeja]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/yj63hrbi/Jadeja.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காலேயில் இலங்கைக்கு எதிரான <a href="https://www.maalaimalar.com/sports/cricket">முதல் டெஸ்ட்</a> போட்டியில், இந்திய ஆல்-ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 350 விக்கெட்டுகளை பூர்த்தி செய்து, ஒரு உயர்மட்டக் குழுவில் நுழைந்தார். </p><p>37 வயதான <a href="https://www.maalaimalar.com/topic/jadeja">ஜடேஜா</a>, டெஸ்ட் போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டிய ஐந்தாவது இந்திய பந்துவீச்சாளர் ஆனார். அவருக்கு முன்னதாக அனில் கும்ப்ளே (619), ரவிச்சந்திரன் அஸ்வின் (537), கபில் தேவ் (434) மற்றும் ஹர்பஜன் சிங் (417) ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர். </p><h2>மூன்றவது இடம்:</h2><p>இடது கை சுழற்பந்து வீச்சாளர்களில், இலங்கையின் ரங்கனா ஹெரத் (433) மற்றும் நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி (362) ஆகியோருக்குப் பின்னால், டெஸ்ட் விக்கெட்டுகளில் ஜடேஜா இப்போது மூன்றாவது இடத்தில் உள்ளார். </p><p>இலங்கை வீரர் கேசர நுவந்தா, வெளிநோக்கித் திரும்பிய பந்தை அடிக்க முயன்றபோது, ​​அவரது ஷாட்டை தவறவிட்டதால் ஜடேஜா இந்த மைல்கல்லை எட்டினார். சுப்மன் கில் அந்த கேட்சை பிடித்து, ஜடேஜாவின் 350-ஆவது டெஸ்ட் விக்கெட்டை பெற்றுத் தந்தார்.</p><p>இந்த மைல்கல்லை எட்டியதன் மூலம், 4,000-க்கும் மேற்பட்ட டெஸ்ட் ரன்களையும் 350 விக்கெட்டுகளையும் குவித்த ஒரே இந்தியர்களான முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் உடன் ஜடேஜா இணைந்தார். இந்த போட்டி தொடங்குவதற்கு முன், ஜடேஜா 89 டெஸ்ட் போட்டிகளில் 4,095 ரன்களையும் 348 விக்கெட்டுகளையும் எடுத்திருந்தார்.</p><p>ஒட்டுமொத்தமாக, டெஸ்ட் கிரிக்கெட்டில் 4,000-க்கும் மேற்பட்ட ரன்கள் மற்றும் 350-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்த நான்காவது வீரர் என்ற பெருமையை ஜடேஜா பெற்றார். அவருக்கு முன்னதாக கபில் தேவ், இங்கிலாந்தின் இயன் போத்தம் மற்றும் நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி ஆகியோர் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தனர்.</p><p>கபில் தனது புகழ்பெற்ற டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை 5,248 ரன்கள் மற்றும் 434 விக்கெட்டுகளுடன் நிறைவு செய்தார். அதே சமயம், போத்தம் 5,200 ரன்கள் மற்றும் 383 விக்கெட்டுகளையும், வெட்டோரி 4,531 ரன்கள் மற்றும் 362 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.</p><h2>பின்தங்கிய இலங்கை:</h2><p>இலங்கையின் இன்னிங்ஸ் தொடக்கத்திலேயே, கேப்டன் தனஞ்சய டி சில்வாவை 21 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்து ஜடேஜா தனது தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். </p><p>இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கில் 13 ரன்கள் மட்டுமே எடுத்த போதிலும், நாள் ஆட்டம் முடிவடைவதற்குள் அவர் மற்றொரு குறிப்பிடத்தக்க சாதனையை நிகழ்த்தினார்.</p><p>தேவ்தத் படிக்கலின் 167 ரன்களுக்குப் பிறகு இந்தியா 462 ரன்களை எடுத்தது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 284 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் அந்த அணி தற்போது 178 ரன்கள் பின்தங்கியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சீ கார்டியன் டிரோன்களை குத்தகைக்கு எடுக்கும் இந்திய கடற்படை - ரூ. 1,943 கோடியில் ஒப்பந்தம்</title><link>https://www.maalaimalar.com/news/national/indian-navy-to-get-2-mq-9b-sea-guardian-drones-in-rs-1943-cr-lease-deal</link><comments>https://www.maalaimalar.com/news/national/indian-navy-to-get-2-mq-9b-sea-guardian-drones-in-rs-1943-cr-lease-deal#comments</comments><guid isPermaLink="false">e590a10a-cc5d-4a68-b414-42faa82edfe2</guid><pubDate>Mon, 17 Aug 2026 18:51:47 +0000</pubDate><atom:updated>2026-08-17T18:51:47.637Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DRONES,Indian Navy,இந்திய கடற்படை,டிரோன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/te8irl5d/MQ-9B-SeaGuardian-Drone.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MQ-9B SeaGuardian Drone]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/te8irl5d/MQ-9B-SeaGuardian-Drone.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய கடற்படைக்காக, அதிக உயரத்தில் நீண்ட நேரம் பறக்கக்கூடிய ஆளில்லா விமானங்களான (UAV) இரண்டு MQ-9B சீ கார்டியன் (Sea Guardian) ரக டிரோன்களை, அமெரிக்காவின் முன்னணி பாதுகாப்பு நிறுவனமான 'ஜெனரல் அட்டாமிக்ஸ் ஏரோநாட்டிக்கல் சிஸ்டம்ஸ்'-இடம் இருந்து ரூ. 1,943 கோடிக்கு குத்தகைக்கு எடுப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது.</p><p>ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு குத்தகைக்கு எடுக்கப்பட்ட இரண்டு சீ கார்டியன் டிரோன்களை கடற்படை இயக்கி வருகிறது. அமெரிக்காவுடனான 4 பில்லியன் டாலர் மதிப்பிலான கொள்முதல் ஒப்பந்தத்தின் கீழ் இது போன்ற 31 டிரோன்களை இந்தியா பெற காத்திருக்கும் நிலையில், கூடுதலாக இரண்டு MQ-9B சீ கார்டியன் டிரோன்களை குத்தகைக்கு எடுக்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>ஒப்பந்த மதிப்பு:</h2><p>இந்த டிரோன்கள் 35 மணி நேரத்திற்கும் மேலாக வானில் பறக்கும் திறன் கொண்டவை. மேலும் இவை நான்கு 'ஹெல்ஃபயர்' (Hellfire) ஏவுகணைகளையும், சுமார் 450 கிலோ எடையுள்ள குண்டுகளையும் சுமந்து செல்லும் திறன் கொண்டவை. </p><p>கடல்சார் கண்காணிப்பு, நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு போர் மற்றும் எல்லைக்கு அப்பால் உள்ள இலக்குகளை குறிவைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் திறன் கொண்டவை என்பதால் இந்த சீ கார்டியன் டிரோன்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன.</p><p>தொலைவில் இருந்து இயக்கப்படும் இந்த விமானங்களுக்காக 'ஜெனரல் அட்டாமிக்ஸ் ஏரோநாட்டிக்கல் சிஸ்டம்ஸ்' நிறுவனத்துடன் 30 மாத காலத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்தது.</p><p>"இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் ரூ. 1,943 கோடியாகும். பாதுகாப்புத் துறையின் கூடுதல் செயலாளர் மற்றும் தலைமை இயக்குநர் (கொள்முதல்) முன்னிலையில் இது கையெழுத்தானது," என்று அது கூறியது.</p><h2>கடல்சார் விழிப்புணர்வு:</h2><p>MQ-9B சீ கார்டியன் தொலைவில் இருந்து இயக்கப்படும் விமானங்கள் மேம்பட்ட அமைப்புகள், அதிநவீன சென்சார்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப கருவிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை இந்திய கடற்படையின் கடல்சார் விழிப்புணர்வு திறனை கணிசமாக மேம்படுத்தும் என்று அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><p>"இந்த அமைப்புகள் கடல்சார் பகுதிகளில் பரந்த பரப்பளவில் தொடர்ச்சியான உளவு தகவல் சேகரிப்பு, கண்காணிப்பு மற்றும் உளவு பார்த்தல் (ISR) ஆகிய சேவைகளை வழங்கும். இதன் மூலம் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் ஏற்படும் நிகழ்வுகளை கண்காணிக்கவும், அவற்றுக்கு எதிர்வினையாற்றவும் இந்தியாவின் திறன் வலுப்படுத்தப்படும்," என்று அது கூறியது.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்களின் கோரிக்கையை ஏற்று தேர்வுகளை ரத்து செய்தது ஜார்க்கண்ட் அரசு</title><link>https://www.maalaimalar.com/news/national/jharkhand-cancels-jssc-cgl-all-exams-conducted-since-2014-by-outsourced-agency-tdpl</link><comments>https://www.maalaimalar.com/news/national/jharkhand-cancels-jssc-cgl-all-exams-conducted-since-2014-by-outsourced-agency-tdpl#comments</comments><guid isPermaLink="false">7425eea3-6495-43e3-a927-eada104d7316</guid><pubDate>Mon, 17 Aug 2026 17:58:20 +0000</pubDate><atom:updated>2026-08-17T17:58:20.321Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தேர்வுகள் ரத்து,Jharkhand protest,ஜார்க்கண்ட் போராட்டம்,Exams Cancelled</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/3nj3so0f/Jharkhand-Protestors.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jharkhand Protestors]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/3nj3so0f/Jharkhand-Protestors.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பணி நியமன தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி மாணவர்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், JSSC-CGL தேர்வு மற்றும் 2014 முதல் வெளிமுகமை நிறுவனமான TDPL-ஆல் நடத்தப்பட்ட அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்வதாக <a href="https://www.maalaimalar.com/news/national">ஜார்க்கண்ட்</a> முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்தார்.</p><p>தேர்வு ரத்து மற்றும் சி.பி.ஐ. விசாரணை கோரி <a href="https://www.maalaimalar.com/topic/jharkhand-protest">மாணவர்கள் போராட்டம்</a> மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், முதல்வரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><h2>அமைச்சரவை கூட்டம்:</h2><p>முதல்வர் சோரன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவையின் நீண்ட நேர கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. "போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் முக்கியக் கோரிக்கைகளில் ஒன்றான ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வு ஆணையத்தின் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வை (JSSC-CGL) ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ளது.</p><p>மேலும், வெளிமுகமை நிறுவனமான TDPL (TSR Data Processing Pvt Ltd) நடத்திய அனைத்துத் தேர்வுகளையும், அந்த நிறுவனம் வெளியிட்ட தேர்வு முடிவுகளையும் ரத்து செய்ய நாங்கள் முடிவு செய்துள்ளோம்," என்று அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு சோரன் கூறினார்.</p><h2>தேர்வு சீர்திருத்த குழு:</h2><p>மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமிதாப் கௌஷல் தலைமையில் தேர்வு சீர்திருத்த குழு ஒன்றை அமைப்பதாகவும் அவர் அறிவித்தார். பணி நியமனத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டி வரும் வேலை தேடுபவர்கள், சி.பி.ஐ. விசாரணை மற்றும் JSSC-CGL தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்திப் போராடி வருகின்றனர்.</p><p>இந்தப் போராட்டம் இன்றுடன் (திங்கள்கிழமை) 24-ஆவது நாளை எட்டியது; இதில் ஆறு போராட்டக்காரர்கள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><h2>பேச்சுவார்த்தை:</h2><p>முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் பிரதிநிதிகளுடன் ஜார்க்கண்ட் மாநில அரசு இன்றும் பேச்சுவார்த்தை நடத்தியது. ஏற்கனவே பலக்கட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இன்றும் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், மாணவர்களின் கோரிக்கைகளில் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அரசு தற்போது அறிவித்து இருக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>காசா விவகாரம் தொடர்பாக இஸ்ரேல் அதிபரை சந்தித்த டிரம்ப் தூதர்</title><link>https://www.maalaimalar.com/news/world/trump-envoy-meets-netanyahu-over-gaza-plan-day-after-talks-with-hamas</link><comments>https://www.maalaimalar.com/news/world/trump-envoy-meets-netanyahu-over-gaza-plan-day-after-talks-with-hamas#comments</comments><guid isPermaLink="false">ce320ce6-4f44-444d-9b55-69f9e1c8b67f</guid><pubDate>Mon, 17 Aug 2026 17:19:04 +0000</pubDate><atom:updated>2026-08-17T17:19:04.910Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டொனால்டு டிரம்ப்,Donald Trump,Benjamin Netanyahu,Hamas,ஹமாஸ்,பெஞ்சமின் நெதன்யாகு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/5n45pjf1/Jared-Kushner-and-benjamin-netanyahu.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jared Kushner and benjamin netanyahu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/5n45pjf1/Jared-Kushner-and-benjamin-netanyahu.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world">இஸ்ரேல்</a> இதுவரை நிராகரித்துள்ள காசா அமைதி திட்டத்திற்கு புத்துயிர் அளிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, அதிபர் டொனால்டு டிரம்பின் தூதர் ஜாரெட் குஷ்னர், <a href="https://www.maalaimalar.com/topic/hamas">ஹமாஸ்</a> தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், இன்று (திங்கள்கிழமை) இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்தார்.</p><p>டிரம்பின் காசா திட்டத்தின் சமீபத்திய கட்டத்திற்கு பாலஸ்தீனிய இஸ்லாமிய குழு ஒப்புதல் அளித்த இரண்டு வாரங்களுக்கு பிறகு இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த திட்டத்திற்கு நெதன்யாகு ஆதரவளிக்க மறுத்து, எந்தவொரு தீர்வும் அந்த குழு "உண்மையாகவே நிராயுதபாணியாக்கப்படுவதை" உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.</p><p>ஜெருசலேமில் இன்றைய கூட்டம் தாமதமாக தொடங்கியதாக தூதரக அதிகாரி ஏ.எஃப்.பி. (AFP) செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தினார்.</p><h2>குஷ்னர் கோரிக்கை:</h2><p>டிரம்பின் மருமகனான குஷ்னர், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) எகிப்தின் மத்திய தரைக்கடல் நகரமான எல்-அலமைனில் ஹமாஸின் புதிய தலைவர் கலீல் அல்-ஹய்யாவை சந்தித்தார். அமெரிக்காவால் பயங்கரவாதிகளாக வகைப்படுத்தப்பட்ட ஒரு குழுவிற்கும், ஒரு காலத்தில் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்றாக இருந்த பேச்சுவார்த்தைகளின் சமீபத்திய நிகழ்வு இது.</p><p>நெதன்யாகுவுக்கு ஒரு முக்கிய முட்டுக்கட்டையாக இருக்கும் வகையில், அந்த குழு தனது ஆயுதங்களை கைவிடுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும், 2023 அக்டோபர் 7-ஆம் தேதியன்று இஸ்ரேலுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத தாக்குதலை நடத்தி காசா போரை தொடங்கிய ஹமாஸ், பாலஸ்தீனத்தை ஆளும் எந்தவொரு எதிர்கால பங்கையும் கைவிட வேண்டும் என்றும் குஷ்னர் கோரியதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.</p><h2>ஹமாஸ் உறுதி:</h2><p>இஸ்ரேலிய தலைவருடன் நீண்டகால குடும்ப தொடர்புகளைக் கொண்ட குஷ்னர் மற்றும் திட்டத்தை செயல்படுத்தும் ட்ரம்பின் "அமைதி வாரியத்தில்" காசாவிற்கான உயர் பிரதிநிதியான நிக்கோலாய் மிலாடெனோவ் ஆகியோரை நெதன்யாகு சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இங்கிலாந்தின் முன்னாள் பிரதமரும், தற்போது அமைதி வாரியத்தின் மூத்த அதிகாரியுமான டோனி பிளேரும் கலந்துகொள்வார் என இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. </p><p>காசா திட்டத்திற்கு தாங்கள் உறுதியுடன் இருப்பதாகவும், நெதன்யாகு மீது அழுத்தம் கொடுக்க விரும்புவதாகவும் குஷ்னரிடம் ஹமாஸ் அமைப்பு தெரிவித்ததாக அந்நிறுவன அதிகாரி ஒருவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்காவில் வற்றிய பவல் ஏரி - நீர் மற்றும் மின்சார விநியோகத்திற்கு அச்சுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/world/us-lake-powell-drought-poses-risk-to-water-and-electricity-distribution</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-lake-powell-drought-poses-risk-to-water-and-electricity-distribution#comments</comments><guid isPermaLink="false">b7f75eaf-e4e3-47fa-a389-f1b409834c04</guid><pubDate>Mon, 17 Aug 2026 16:29:19 +0000</pubDate><atom:updated>2026-08-17T16:29:19.286Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,America,american lake,அமெரிக்க ஏரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/waipyhw6/Untitled-design-4.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Lake Powell]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/waipyhw6/Untitled-design-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நீர்த்தேக்கமான பவல் ஏரியின் நீர்மட்டம் வரலாறு காணாத அளவுக்குக் குறைந்துள்ளதால், கொலராடோ நதி அமைப்பில் நெருக்கடி நிலைகள் அதிகரித்துள்ளன.</p><p>லேக் பாவெல் ஏரியில் ஏற்பட்ட இந்த நிலைமையின் காரணமாக, ஆற்றின் மற்றொரு முக்கிய நீர்த்தேக்கமான லேக் மீட் ஏரியும் வரலாற்று சரிவை எட்டியுள்ளது. </p><p>கடுமையாக சரிந்துவரும் நீர்மட்டம், கொலராடோ ஆற்று படுகைக்கு ஒரு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. </p><p>இப்பகுதி, வனவிலங்குகள், நீர்மின்சக்தி மற்றும் ஏழு அமெரிக்க மாகாணங்களில் உள்ள 40 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு ஒரு முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.</p><p>கூட்டாட்சி அரசாங்கமும், ஆற்றை நம்பி வாழும் கலிபோர்னியா, அரிசோனா, நெவாடா, நியூ மெக்சிகோ, யூட்டா, வயோமிங் மற்றும் கொலராடோ போன்ற மாநிலங்களும், குறைந்து வரும் இந்த வளத்திற்கான நீண்டகால மேலாண்மைத் திட்டத்தில் உடன்பாடு காணப் போராடி வரும் வேளையில், ஆற்று நீரின் அளவுகள் குறைந்து காணப்படுகின்றன.</p><p>தொடர்ச்சியான அதீதப் பயன்பாடு, வரலாறு காணாத வறண்ட குளிர்காலம் மற்றும் அதிகரித்து வரும் வெப்பநிலை ஆகியவை இணைந்து பவல் ஏரி மற்றும் மீட் ஏரி ஆகிய இரண்டையும் வற்றச் செய்து வருகின்றன.</p><p>அமெரிக்க மீள்குடியேற்றப் பணியகத்தின் (US Bureau of Reclamation) தரவுகளின்படி, பவல் ஏரியின் நீர்மட்டம் கடல் மட்டத்திலிருந்து 3,519.91 அடியாக (1072.9 மீட்டர்) குறைந்துள்ளது.</p><p>இது, ஏப்ரல் 2023-ல் பதிவான முந்தைய சாதனையை விட சற்றே குறைவாகும். இந்த ஏரியின் நீர்மட்டம், ஆண்டின் தொடக்கத்தில் இருந்ததை விட 20 அடிக்கும் (6.10 மீட்டருக்கும்) அதிகமாகக் குறைந்துள்ளது என்று USBR தரவுகள் தெரிவித்துள்ளன.</p><p>டர்பைன்கள் நீர்மின்சார உற்பத்தியை நிறுத்தும் புள்ளியிலிருந்து நீர்த்தேக்கம் தற்போது சுமார் 30 அடி (9.1 மீட்டர்) தொலைவில் உள்ளது.</p><p>இந்த ஆண்டு இறுதிக்குள் அந்த வரம்பை எட்டுவதை தவிர்க்க, ஒரு "பெரிய தலையீடு" அவசியமாக இருக்கும் என்று மத்திய அதிகாரிகள் எச்சரித்திருந்தனர்.</p><p>அரிசோனா, கலிபோர்னியா மற்றும் நெவாடா ஆகிய மாநிலங்களில் பெரும் நீர் விநியோகக் குறைப்புகளை உள்ளடக்கிய 10 ஆண்டுத் திட்டத்தை USBR ஜூலை மாதம் முன்மொழிந்தது.</p><p>இந்த நெருக்கடி பல ஆண்டுகளாக உருவாகி வருகிறது. இரு நீர்த்தேக்கங்களும் கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த மட்டத்தில் உள்ளன, மேலும் நீர்மட்டம் தொடர்ந்து குறையக்கூடும் என்று USBR தரவுகள் காட்டுகின்றன.</p><p>கல்வியாளர்கள் மற்றும் ஓய்வுபெற்ற நீர் அதிகாரிகள் குழு ஒன்று வெளியிட்ட சமீபத்திய ஆய்வறிக்கையின்படி, பவல் ஆற்றைத் தடுத்து நிறுத்தும் கிளென் கேன்யன் அணை கட்டப்பட்ட மே 1957-இல்தான் கடைசியாக அவற்றின் ஒருங்கிணைந்த நீர்த்தேக்கம் இவ்வளவு குறைவாக இருந்தது.</p><p>மேலும் பவல் ஆறு 1963-இல் நிரம்பத் தொடங்கியது. அதன்பிறகு நீர் வற்றியதால், லேக் பாவெல்லின் கணிசமான சுற்றுலாத் துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், நீர்த்தேக்கத்திலுள்ள படகுத் துறைமுகங்கள் தங்களை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளன.</p><p>படகு இறங்குதளங்கள் மூடப்பட்டு வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. மேலும், படகுத் துறைமுகங்கள் தற்காலிகமாக ஆழமான நீர்ப்பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கியச் செய்திகள்- 17 ஆகஸ்ட் 2026 </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-17-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-17-august-2026#comments</comments><guid isPermaLink="false">e5056155-d3e7-4ac5-831d-27ef01f8d24e</guid><pubDate>Mon, 17 Aug 2026 04:01:34 +0000</pubDate><atom:updated>2026-08-17T16:20:12.354Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/obhwuvef/vijay1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/obhwuvef/vijay1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-today-debates-on-demands-forg-grants-session-begin">மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் சட்டசபையில் இன்று தொடக்கம்</a></p><p>4 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் இன்று சட்டசபை கூட்டத்தொடர் கூடியது.</p><p>சட்டசபையில் இன்று முதல் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.</p><p>100-வது நாளில் அடியெடுத்து வைத்துள்ள தவெக ஆட்சிக்கு பாராட்டு - சபாநாயகர்</p><p>மக்களின் நாடித்துடிப்பை அறிந்து தவெக அரசு பல துறைகளில் சிறப்பான திட்டங்களை செயல்படுத்துகிறது - சபாநாயகர்</p><p>வளமான சமத்துவமான ஊழலற்ற தமிழ்நாடு என்ற கட்டமைப்பை முதல் 100 நாட்களில் செயல்படுத்தி உள்ளது தவெக அரசு  - சபாநாயகர்</p><p>கோவை அமுதன் கொலை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்துள்ளோம் - திமுக எம்எல்ஏ வேலு</p><p>கோவை மாணவன் கொலை தொடர்பாக திமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதம் ஏற்கப்பட்டுள்ளது - சபாநாயகர்</p><p>கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகத்தில் ஏராளமான கொலைகள் நடந்துள்ளது - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி</p><h2>எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உரை</h2><p>கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகத்தில் ஏராளமான கொலைகள் நடந்துள்ளது.</p><p>கோவை கல்லூரி மாணவன் கொலையை ஏற்கெனவே அமைச்சர் ராஜ்மோகன் கோஷ்டி மோதலால் கொலை என கூறினார். இரு தரப்பாக பிரிந்து அடித்துக்கொண்டால் தான் கோஷ்டி மோதல், அமுதனை 20 பேர் அடித்துள்ளனர், இது கொலை. </p><p>அமுதனின் பெற்றோரிடம் தொலைபேசியில் ஆதரவு கூறினேன்.</p><p>போதைப்பொருள் புழக்கம் பற்றி தகவல் அளித்ததால் தான் அமுதன் கொலை என அவரின் பெற்றோர் திட்டவட்டம்.</p><p>கோவையில் மட்டுமல்ல சென்னை திருவொற்றியூர் பள்ளி மாணவன் தனுஷ் போதை பழக்கத்தை தட்டிக்கேட்டதால் கொலை.</p><p>சென்னை அம்பத்தூரில் ஆட்டோவில் வைத்து பெண் கழுத்தறுத்து கொலை.</p><p>கடந்த ஒரு வாரத்தில் தமிழகம் முழுவதும் நடந்த கொலைகளை பட்டியலிட்டு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உரையாற்றினார்.</p><p>கொலை மட்டுமல்ல பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் அதிகரித்துள்ளது.</p><p>100 நாள் சாதனை என பெருமை பேசும் தவெக அரசு, 100 நாட்களில் சட்டம் ஒழுங்கு நிலையையும் பார்க்க வேண்டும் - உதயநிதி</p><p>போதைக்கு எதிரான தொடர் விழிப்புணர்வு, வன்முறைக்கு எதிராக கவுன்சிலிங் நடத்த வேண்டும் என உதயநிதி கோரிக்கை விடுத்தார்.</p><h2>அதிமுக எம்எல்ஏ காமராஜ் உரை</h2><p>விடுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை, பயன்பாட்டை புகார் தந்த மாணவன் அமுதன் கொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p>மாணவன் தாக்கப்பட்ட பின் விடுதியில் இருந்து வெளியேறுமாறு கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.</p><p>மைதானத்தில் வைத்து மாணவன் அமுதனை இரும்பு கம்பியால் அடித்தும் கத்தியால் குத்தியும் 20 பேர் கொண்ட கும்பல் கொலை செய்துள்ளது.</p><p>செல்போன் சம்பந்தப்பட்ட சீனியர் ஜூனியர் சம்பவம், கோஷ்டி மோதல் என காவல்துறை அதிகாரியே சொல்கிறார்.</p> <h2>பாமக எம்எல்ஏ கணேஷ் குமார்</h2><p>போதைப்பொருள் 15 வயது மாணவர்கள் இடையே புழக்கத்தில் உள்ளது.</p><p>கடந்த ஆட்சியில் இருந்த போதைப்பொருள் புழக்கம் போன்றவை தற்போது தவெக ஆட்சியிலும் தொடர்வது வேதனை தருகிறது.</p><p>மாணவர்கள் கொலை விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க வேண்டும்.</p><p>எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வு நடைபெறாத வகையில் கடும் தண்டனை வழங்க வேண்டும் - பாஜக எம்எல்ஏ போஜராஜன்</p><p>கஞ்சா போதை பழக்கமே கல்லூரி, பள்ளிகளில் மாணவர்கள் தாக்குதலுக்கு காரணமாக உள்ளது - எம்எல்ஏ செல்லசாமி</p><p>சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக எடுத்துக்கொள்ளாமல்   காவல்துறையை களை எடுத்து கரைபடியாத கரங்களாக கொண்டு வர வேண்டும் - எம்எல்ஏ செல்லசாமி</p> <h2>காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கட்பட் உரை</h2><p>இரும்புக்கரம் கொண்டு அடக்கினாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக தமிழகத்தில் போதைப்பொருளால் அசம்பாவிதம் நடக்கிறது.</p><p>பள்ளி, கல்லூரிகளில் மாணவ அமைப்புகளை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவது முக்கியம்.</p><p>மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அமைப்பை உருவாக்கி செயல்பட வேண்டும் -  தாரகை கட்பட்</p><p>கோவை அமுதன் கொலை விவகாரம் தொடர்பாக அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்தார்.</p><p>இரண்டாமாண்டு பயிலும் அமுதனின் நண்பனுக்கும் 4-ம் ஆண்டு மாணவர்களுக்கும் இடையிலான மோதலில் தாக்கி உள்ளனர்.</p><h2>அமைச்சர் நிர்மல்குமார் உரை</h2><p>அமுதன் இறந்ததை தொடர்ந்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>அமுதன் கொலை தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.</p><p>போதைப்பொருள் தொடர்பாக எந்த தகவலும் இல்லை. பழிவாங்கல் காரணமாகவே கொலை என தெரிய வந்துள்ளது.</p><p>போதைப்பொருள் புகார் தந்தவரின் தகவலை போலீசார் கசிய விட்டது என எந்த நிகழ்வும் நடைபெறவில்லை என அமைச்சர் நிர்மல்குமார் திட்டவட்டம்.</p><p>போதைப்பொருள் குறித்து புகார் அளித்தவரின் தகவலை போலீசார் கசியவிட்டதாக கூறுவதில் உண்மையில்லை. போதைப்பொருள் தொடர்பாக புகாரளித்தால் கொலை என சித்தரித்து உண்மையை திசை திருப்ப வேண்டாம்.</p><p>கோவை மாணவன் அமுதன் கொலையில் உண்மையை மறைக்க வேண்டிய அவசியம் காவல்துறைக்கு இல்லை.  கடந்த 5 ஆண்டுகளாக போதைப்பொருள் புழக்கம் தமிழகத்தில் எப்படி இருந்தது என நாம் அறிந்ததே.</p><p>போதைப்பொருள் கடத்தல் மன்னர் ஜாபர் சாதிக் உடன் கடந்த ஆட்சியில் முதல்வரின் குடும்பத்தினரிடம் தொடர்பு உள்ளது - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>ஜாபர் சாதிக் உடன் திமுக ஆட்சியில் இருந்த முதல்வர் உடன் தொடர்பு என அமைச்சர் குற்றம்சாட்டியதற்கு திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.</p><p>ஒரு அமைச்சரே ஐபிஎல் போட்டியின்போது போதைப்பொருள் பயன்படுத்தியது வீடியோவாக வெளியாகி உள்ளது - உதயநிதி</p><p>ஐபிஎல் போட்டியில் தவெக அமைசசர் பவுடர் என உதயநிதி பேசியதும் தவெக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.</p><p>மாத்திரை நுணுக்கியதாக கதைவிட்ட தவெக அமைச்சரிடம் காவல்துறை விசாரணை நடத்தியதா? </p><p>போதைப்பொருள் கடத்தல் மன்னன் விவகாரத்தில் திமுக உடனடி நடவடிக்கை எடுத்தது - உதயநிதி</p><p>ஸ்டேடியத்தில் நடந்தவற்றை பற்றி விளக்கம் அளித்துவிட்டேன், ஆதாரம் இன்றி தேவையின்றி பேசக்கூடாது.</p><p>திமுக ஆட்சியில் தான் அந்த நிகழ்வு நடந்தது, அப்படியென்றால் ஸ்டேடியம் வளாகத்தில் போதைப்பொருள் விற்றார்களா?  - அமைச்சர் சரத்</p><p>திமுக ஆட்சியில் போதைப்பொருள் விற்கப்பட்டது என்று ஒப்புக்கொள்கிறீர்களா? என் அமைச்சர் சரத் கேள்வி எழுப்பினார்.</p><p>கோர்ட்டில் இருக்கும் வழக்கு பற்றி ஏன் பேசுகிறார்? பவுடர் பயன்படுத்தியது பற்றி மட்டும் அமைச்சர் பதில் தரட்டும் - கே.என்.நேரு</p><h2>கோவை மாணவர் விவகாரம் - அமைச்சர் ராஜ்மோகன் உரை</h2><p>கோவை மாணவர் குடும்பத்திற்கு இழப்பீடு, அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>மாணவர் தனுஷ் கொலையில் எந்தவித சார்பும் இன்றி காவல்துறை விசாரணை நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.</p><p>மாணவர் கொலை விவகாரத்தில் சார்பு தன்மை இன்றி நேர்மையாக காவல்துறை விசாரணை நடைபெறும்.</p><p>கொல்லப்பட்ட மாணவர்ன தனுஷின் சகோதரருக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உரை</h2><p>தவெகவின் 100 நாள் ஆட்சி, அடுத்த 25 ஆண்டுக்கான அடித்தளம். தவெக ஆட்சியை உருவாக்கிய இளைஞர்கள், பெண்களுக்கு நாங்கள் என்றும் உண்மையாக இருப்போம்.</p><p>மாணவர் கொலை வழக்கு விசாரணையில் எவ்வித அழுத்தம் இருக்காது. முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>மாநிலம் முழுவதும் 65 போதைப்பொருள் தடுப்பு குழு ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ளது.</p><p>தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டை அடியோடு ஒழிக்க தவெக அரசு உறுதியாக உள்ளது.</p><p>நாங்கள் எழுந்தால் நீங்கள் பேசவே முடியாது என்று அமைச்சர் ஆதவ் பேசியதற்கு திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.</p><p>கடந்த 2020ம் ஆண்டுக்கு முன்பு தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் உறுதியாக இல்லை.</p><p>போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்ததால் தான் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குற்றங்கள் அதிகரிப்பு - அமைச்சர் ஆதவ்</p> <p>திமுக ஆட்சியில் தான் போதைப்பொருள் பயன்பாடு, பாலியல் குற்றங்கள் அதிகரித்ததாக அமைச்சர் ஆதவ் குற்றச்சாட்டு.</p> <p>கடந்த திமுக ஆட்சியில் 40 சதவீத போக்சோ வழக்குகள் அதிகரித்துள்ளன. இது காவல்துறை கொடுத்த அறிக்கை - அமைச்சர் ஆதவ்  </p><p>போதைப்பொருள் அதிகரிப்பு காரணமாக தான் திமுகவை மக்கள் தூக்கி எறிந்தனர் என்ற அமைச்சர் ஆதவின் பேச்சுக்கு பேரவையில் அமளி</p><p>கவன ஈர்ப்பு தீர்மானத்தில் குற்றச்சாட்டுகளை அடுக்கக்கூடாது - எ.வ.வேலு</p><p>கேள்வி நேரத்திலும் கவன ஈர்ப்பு தீர்மான நேரத்திலும் குற்றச்சாட்டு கூறக்கூடாது என்பது தான் பேரவை விதி - எ.வ.வேலு</p><p>கவன ஈர்ப்பு, ஒத்திவைப்பு தீர்மானத்தில் அரசு விளக்கம் தான் கூற வேண்டும், பதில் குற்றச்சாட்டு கூறுவது அவை மரபு அல்ல - எ.வ.வேலு</p><p>திமுக ஆட்சியில் நடந்த குற்றங்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. தவெக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? அமைச்சர் ஆதவ் பேச்சிற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கேள்வி?</p><p>திமுக ஆட்சியை குறை சொல்ல புகைப்படம் காட்டும் அமைச்சரே நாங்கள் எடுத்த நடவடிக்கை குறித்து சான்று தருகிறார் - உதயநிதி</p><p>இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த திமுக ஆட்சியில் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்.</p><p>போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் எதற்காக நாங்கள் அமர்த்திய அதிகாரிக்கு முக்கிய பதவி தந்தீர்கள்?  - உதயநிதி</p><p>திமுக ஆட்சியில் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் சிறப்பாக செயல்பட்ட 15 போலீசாருக்கு தவெக அரசே விருது தந்தது ஏன்?- உதயநிதி</p><p>எதிர்க்கட்சி எழுப்பிய கேள்விக்கு உரிய விளக்கம் இல்லை என கூறி பேரவையில் இருந்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.</p><p>சட்டசபையில் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு சம்பந்தமே இல்லாமல் பேசுவதால் நேரம் வீணாகிறது - எடப்பாடி பழனிசாமி</p><h2>மேகமலை விவகாரம் - தொடர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்</h2><p>மேகமலையில் வசித்து வரும் பழங்குடியினர் உள்ளிட்ட மக்களை வெளியேற்றக்கூடாது - அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி</p><h2>அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி</h2><p>மேகமலையில் 98 கிராமங்களில் 100 ஆண்டுகளுக்கு மேலாக 5,000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.</p><p>மேகமலை விவகாரத்தில் அரசு கொள்கை முடிவெடுத்து சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என கோரிக்கை.</p><p>மேகமலை குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்து அப்பகுதி மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை தடுக்க வேண்டும்.</p><h2>எம்எல்ஏ செல்லசாமி உரை</h2><p>மேகமலையை காப்புக்காடு என அறிவித்த நிலையில் வனத்துறை அதிக கட்டுப்பாடு விதித்துள்ளது.</p><p>வனத்துறையினர் கெடுபிடிகள் காரணமாக விளைபொருளை விற்க கூட முடியாமல் மேகமலை மக்கள் தவிக்கின்றனர்.</p><p>சாலை, போக்குவரத்து, குடிநீர், பள்ளிக்கூடம், ரேஷன் உள்ளிட்ட வசதிகளை தமிழ்நாடு அரசே செய்து கொடுத்துள்ளது.</p> <p>உச்சநீதிமன்றமே சொந்த நாட்டு மக்களை துணை ராணுவம் கொண்டு வெளியேற்ற கூறியது வேதனை - எம்எல்ஏ ராமச்சந்திரன்</p><p>கடந்த 60 ஆண்டு காலமாக ஆட்சி செய்தவர்கள் பட்டா வழங்கியிருந்தால் இந்த நிலை வந்திருக்காது - எம்எல்ஏ ராமச்சந்திரன்</p><h2>தவெக எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா உரை</h2><p>மேகமலை - வருசநாடு மலைகிராம மக்களை வெளியேற்றுவததை ஏற்றுக்கொள்ள முடியாது.</p><p>உச்சநீதிமன்றத்தில் கடந்த கால அரசு சரியாக வாதாடாததே இந்த நிலைக்கான காரணம்.</p><h2>அமைச்சர் நிர்மல்குமார் உரை</h2><p>2009 திமுக ஆட்சியில்தான் மேகமலை காப்புக்காடுகளாக அறிவிக்கப்பட்டது.</p><p>2009-ல் காப்புக்காடாக அறிவித்தபோது திமுக முறையாக கையாண்டிருந்தால் இந்த இக்கட்டான சூழல் ஏற்பட்டிருக்காது.</p><p>மேகமலை விவகாரத்தில் கடந்த 5 ஆண்டுகளில் செய்த தவறுகளை தவெக அரசு செய்யாது.</p><p>மேகமலை விவகாரத்தில் நிரந்தர தீர்வு கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கையையும் தவெக அரசு மேற்கொள்கிறது. </p><p>15 ஆண்டுகளாக மக்கள் போராடுகின்றனர். கடந்த கால ஆட்சியில் இந்த வழக்குகள் முறையாக கையாளப்படவில்லை.</p><p>2025 முதல் 2026-ம் ஆண்டு வரை ஆய்வு செய்தபோது முறையான ஆதாரம் கொடுத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>மேகமலை விவகாரத்தில் திமுகவை குறிப்பிட்டு அமைச்சர் நிர்மல்குமார் பேசியதற்கு திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.</p><p>திமுக அளித்த இறுதி அறிக்கை பெயரில் தான் உச்சநீதிமன்றம் முடிவெடுத்து அறிவித்துள்ளது.</p><p>மேகமலை விவகாரத்தில் திமுக செய்த ஒட்டுமொத்த தவறின் காரணமாகத்தான் மக்கள் வெளியேற்றப்படுகின்றனர்.</p><p>திமுக தவற விட்ட நிலையில் எதை வைத்து மேகமலை மக்களை காப்பாற்ற போகிறோம் என 3 நாட்களில் தெரிவிப்போம் - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>மேகமலை விவகாரத்தில் திமுக குறித்து அமைச்சர் நிர்மல்குமார் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் - சபாநாயகர்</p><p>சட்டசபையில் வருவாய்த்துறை மீதான மானிய கோரிக்கை மீது விவாதம் தொடங்கியது.</p><p>வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மீதான மானிய கோரிக்கை மீது விவாதத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பதில்</p><p>சட்டசபையில் 3 துறைகள் மீதான மானிய கோரிக்கை மீது விவாதம் தொடங்கியது.</p><h2>அமைச்சர் அருண்ராஜ்</h2><p>முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற 100-வது நாள் இன்று.</p><p>மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை என்ற மாபெரும் தூணை தூக்கிப் பிடிக்க என்னிடம் ஒப்படைத்த முதல்வருக்கு நன்றி.</p><p>சுகாதாரம், வருவாய் மற்றும் பேரிடர் மீதான மானிய கோரிக்கை மீதும் விவாதம் தொடங்கியது. திமுக எம்எல்ஏ சாத்தூர் ராமச்சந்திரன் பேசினார்.</p><h2>திமுக எம்எல்ஏ சாத்தூர் ராமச்சந்திரன் உரை</h2><p>கலைஞரின் கொள்கை பிடிப்பும் மு.க.ஸ்டாலினின் செயல்திறனும் கொண்ட இளம் தலைவர் உதயநிதி.</p><p>திமுக ஆட்சியில் 400 பக்கங்கள் கொண்ட கொள்கை விளக்க குறிப்பு தவெக ஆட்சியில் 300 பக்கமாக குறைந்துள்ளது. </p><p>பக்கங்கள் தான் குறைந்துள்ளன. தவெக ஆட்சியில் கொள்கை, லட்சியங்கள் குறையவில்லை - அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி</p><p>தவெக அரசின் லட்சியங்கள் குறையவில்லை. லட்சியங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் அரசாக தவெக அரசு உள்ளது - செங்கோட்டையன்</p><h2>திமுக எம்எல்ஏ சாத்தூர் ராமச்சந்திரன் உரை</h2><p>திமுக ஆட்சியில் 27 லட்சம் பேருக்கு பட்டா வழங்கினோம். சொன்னது எதையும் தவெக அரசு நிறைவேற்றவில்லை.</p><p>கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் சென்னை மாநகராட்சியில் 77,000 பேருக்கு பட்டா வழங்கினோம்.</p><p>சென்னையில் மீட்கப்படாமல் இருந்த தோட்டக்கலை சங்கம், கிண்டி ரேஸ் கோர்ஸ் நிலத்தை மீட்டெடுத்தவர் ஸ்டாலின்.</p><p>திமுக ஆட்சிக்காலத்தில் கனமழை, வெள்ளம், புயல் ஏற்பட்ட நிலையில் ரூ.5,000 கோடி மத்திய அரசிடம் கேட்கப்பட்டது - சாத்தூர் ராமச்சந்திரன்</p> <p>தவெக அளித்த வாக்குறுதியான மகளிர் உரிமைத்தொகை வழங்காதது ஏன்? - திமுக எம்எல்ஏ சாத்தூர் ராமச்சந்திரன்</p><p>100 நாட்கள் தான் முடிந்தது, தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றுவோம் - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>மகளிர் உரிமைத்தொகையை 28 மாதங்களுக்கு திமுக தரவில்லை, நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் தான் தந்தது - செங்கோட்டையன்</p><p>கொரோனா பெருந்தொற்றின் காரணமாகத்தான் மகளிர் உரிமைத்தொகையை திமுக தாமதமாக தந்தது - சாத்தூர் ராமச்சந்திரன்</p> <p>திமுக ஆட்சியின் முந்தைய அதிமுக காலத்தில் தான் கொரோனா பெருந்தொற்று வந்தது - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>கொரோனா காலத்தில் கைகொடுக்காதீர் என்று தான் சொன்னார்கள். உரிமைத்தொகை தராதீர் என சொல்லவில்லை - அமைச்சர் ராஜ்மோகன் கிண்டல்</p><p>பட்டா கொடுத்தீர்கள், ஆனால் இடம் இல்லையே என்று கேள்வி எழுப்பிய மக்கள் தான் திமுகவுக்கு ஓட்டு போடவில்லை - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>ஒரு சில இடங்களில் தவறு நடந்திருக்கலாம், ஆனால் திமுக ஆட்சியில் நாங்கள் 27 லட்சம் பட்டா வழங்கி உள்ளோம் - சாத்தூர் ராமச்சந்திரன்</p><p>முறைகேடு நடந்ததாக திமுக முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஒப்புக்கொண்டதற்கு நன்றி - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்புகளை வெளியிட்டார்.</p><p>தமிழ்நாட்டு விவசாயிகள் நமது உயிர்நாடி - முதலமைச்சர் விஜய்</p> <p>தவெக அரசு பொறுப்பேற்ற 100-வது நாளையொட்டி 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்புகளை வெளியிடுகிறார்.</p><p>தமிழ்நாட்டு விவசாயிகள் நமது உயிர்நாடி - முதலமைச்சர் விஜய்</p> <p>திமுக தலைவர் பெயரை குறிப்பிட்டு அமைச்சர் பேசியதற்காக முதலமைச்சர் விஜய் பேரவையில் வருத்தம் தெரிவித்தார்.</p><p>தமிழக மக்கள் நம் உயிர் என்றால் விவசாயிகள் நம் உயிர்நாடி, சாதி மதம் என அனைத்திற்கும் அப்பாற்பட்ட தொழில் விவசாயம் - முதலமைச்சர்</p><p>தமிழ்நாட்டில் விவசாயிகளின் பயிர்க்கடன் கூடுதலாக தள்ளுபடி செய்து முதலமைச்சர் விஜய் அறிவிப்பு </p><p>75 ஆயிரம் ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்றுள்ளவர்களுக்கு முழுமையாக தள்ளுபடி.</p><p>ரூ.75 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை கடன் பெற்றவர்களுக்கு ரூ.75,000 வரை தள்ளுபடி.</p><p>ரூ.1 லட்சத்திற்கு மேல் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு ரூ.35,000 தள்ளபடி - முதலமைச்சர் விஜய்</p><p>சட்டமன்றத்தின் கண்ணியம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதிக்கு கற்றுக்கொடுங்கள்  </p><p>சட்டமன்ற கண்ணியம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதிக்கு ஓ.பன்னீர்செல்வம் கற்றுக்கொடுக்க வேண்டும்.</p><p>முதலமைச்சர் வரும்போது எதிர்க்கட்சி தலைவர் எழுந்திருக்க வேண்டும் - அமைச்சர் ரமேஷ் பேச்சால் அவையில் சலசலப்பு</p><p>முன்னாள் முதல்வர் வரும்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து நின்றதில்லை. அதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை - கே.என்.நேரு</p><p>அதிமுக ஆட்சியில் நீட் கொண்டு வரப்படவில்லை. 2011, 2012ல் தான் நீட் தொடர்பான அறிவிக்கை வந்தது - தளவாய் சுந்தரம்</p><h2>தளவாய் சுந்தரம் உரை</h2><p>தமிழ்நாட்டில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமி.</p><p>அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரி கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமி.</p> <p>2017-ம் ஆண்டு தான் நீட் தேர்வு வந்தது - அமைச்சர் ராஜேஷ் தளவாய் சுந்தரம்குமார்</p><p>நீட் தேர்வால் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவர்களின் பெற்றோரை ராகுல் சந்தித்தார் - அமைச்சர் ராஜேஷ் குமார்</p><p>விரும்பாத மாநிலங்களுக்கு நீட் இல்லை 2014-ல் ராகுல் காந்தி வாக்குறுதி - அமைச்சர் ராஜேஷ் குமார்</p><h2>எடப்பாடி பழனிசாமி உரை</h2><p>2010-ம் ஆண்டு டிசம்பரில் நீட் அறிவிக்கை வந்தது.</p><p>காங்கிரஸ் ஆட்சியில் தான் நீட் அறிவிக்கை வெளியிடப்பட்டது.</p><p>உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக நடந்து கொள்ள முடியாது.</p><p>நீட் தேர்வுக்கு விலக்கு தேவை என்பதே அதிமுகவின் கொள்கை.</p> <p>மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு செயல்படுகிறது.</p><p>மதுரவாயல் தொகுதியில் பட்டா பிரச்சனை அதிகமாக உள்ளது - தவெக எம்எல்ஏ ரேவந்த் சரண்</p><h2>ஓ.பன்னீர்செல்வம் உரை</h2><p>பேரவைக்கு சபாநாயகர் வரும்போது எழுந்து நிற்பது தான் மரபு. </p><p>முதலமைச்சர் வரும்போது அவையில் அனைவரும் எழுந்து நிற்பது மரபு இல்லை. </p> <p>சபாநாயகருக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தப்பட வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை - சபாநாயகர்</p><h2>சபாநாயகர் பேச்சு</h2><p>தமிழர் பண்பாட்டை கடைபிடித்து மரியாதை செலுத்துவது அவரவர் விருப்பம்.</p><p>முதலமைச்சர் விஜய் வரும்போது இ.பி.எஸ். எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்.</p><p>எழுந்து நிற்பது அவரவர் விருப்பம் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. </p> <h2>அமைச்சர் ஆனந்த் உரை</h2><p>அம்மா முதலமைச்சராக இருந்தபோது ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் எழுந்து நிற்பார். குனிந்தபடி நிற்பார் அதை உலகமே அறியும்.</p><p>தலைவர் தளபதிக்காக மட்டுமே எங்கள் எல்லோருக்கும் மக்கள் அனைவரும் வாக்களித்தார்கள் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.</p><p>ஏனென்றால் தளபதி முதலமைச்சராக வர வேண்டும் என்று தமிழ்நாடு மக்கள் முடிவெடுத்து விட்டார்கள்.  அதன்  அடிப்படையில் எங்களுக்கு வாக்களித்தார்கள்.</p> <p>நீட் தேர்வை இந்த அரசு எந்தளவிற்கு எதிர்க்கிறதோ அந்த அளவிற்கு நெக்ஸ்ட் தேர்வையும் கண்டிப்பாக எதிர்ப்போம் - அமைச்சர் அருண்ராஜ்</p> <p>கொள்ளிடத்தில் இருந்து அரியலூர் பொன்னேரிக்கு நீர் கொண்டு வர வேண்டும் - வைத்தியலிங்கம்</p><h2>பாமக எம்எல்ஏ வைத்தியலிங்கம் உரை</h2><p>கொள்ளிடத்தில் இருந்து அரியலூர் பொன்னேரிக்கு நீர் கொண்டு வர வேண்டும்.</p><p>முந்திரியை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். </p><p>விருத்தாசலம் - கும்பகோணம் சாலை 4 வழிச்சாலையாக்க வேண்டும்.</p><p>இயற்கை சீற்றங்களுக்கு நிரந்தர நிவாரண திட்டம் தேவை.</p><p>கும்பகோணம், விருத்தாசலத்தை தனி மாவட்டமாக பிரிக்க வேண்டும்.</p> <h2>அதிமுக எம்எல்ஏ நடராஜ் உரை</h2><p>அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை விரிவுப்படுத்தி காங்கேயம் பகுதியை இணைக்க வேண்டும்.</p><p>காங்கேயத்தில் தேங்காய், அரிசி உற்பத்திக்காக புதிய தொழிற்பேட்டை அவசியம்.</p><p>தொகுதி மேம்பாட்டு நிதியான ரூ.3 கோடியை ரூ.7 கோடியாக உயர்த்த வேண்டும்.</p><p>விவசாயிகள் நலன் கருதி 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.</p><p>வெள்ளவயலை தனி வட்டாரமாக அறிவிக்க வேண்டும்.</p><p>அமராவதி ஆற்றின் உபரி நீரை நீரேற்றம் செய்து காங்கேயம் தொகுதிக்கு வழங்க வேண்டும் - அதிமுக எம்எல்ஏ நடராஜ் உரை</p><h2>திமுக எம்எல்ஏ லெட்சுமணன் உரை</h2><p>3.2% மட்டுமே மருத்துவ கட்டமைப்புக்கு நிதி உயர்த்தப்பட்டுள்ளது.</p><p>செவிலியர்கள் பணி நிரந்தரம் - பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை.</p> <h2>அதிமுக எம்எல்ஏ ஓ.எஸ்.மணியன் உரை</h2><p>15 வகையான நோயாளிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை போதாது, ரூ.10,000- ஆக உயர்த்த வேண்டும்.</p><p>எந்த நேரத்திலும் உடல் கூறு ஆய்வுக்கு அனுமதிக்க வேண்டும். </p><h2>வருவாய்த்துறை மானியக்கோரிக்கை மீது அமைச்சர் செங்கோட்டையன் பதிலுரை</h2><p>வருவாய்த்துறை சேவை துறையாக மாறி உள்ளது. வருவாய்த்துறையில் 26 சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.</p><p>15 நாட்களுக்குள் சான்றிதழ்களை வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.</p><p>100 நாட்களில் சுமார் 39 லட்சம் சான்றிதழ்கள் வழங்கி உள்ளது வருவாய்த்துறை.</p><p>முதலமைச்சர் விஜய் ஒரு தீர்க்கதரிசி.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/shock-in-assam-tribal-schoolgirl-sexual-assault-accused-shot">அசாமில் பழங்குடியின மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான நபர் மீது துப்பாக்கிச்சூடு!... </a></p><p>* விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது தப்பிக்க முயன்றதால் காவல்துறை அவரைக் காலில் சுட்டுப் பிடித்துள்ளது. </p><p>*அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சிராங் மாவட்ட சிரேஷ்ட காவல் கண்காணிப்பாளர் துருபா போரா தெரிவித்துள்ளார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/546-crimes-in-100-days-dmk-legal-wing-deputy-secretary-parandhaman">100 நாளில் 546 குற்றச் சம்பவங்கள்: திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன்</a></p><p>* இந்த 100 நாள் ஆட்சி மக்களுக்கான சர்க்கார் அல்ல, வெறும் சர்க்கஸ் சர்க்கார்!</p><p>* நாளுக்கு நாள் நாசமாகும் தமிழ்நாடு இது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/bangkok-gun-market-thailand-tightens-rules-traders-protest">பாங்காக் துப்பாக்கி சந்தையில் தாய்லாந்து அரசின் புதிய கட்டுப்பாடுகள்: வியாபாரிகள் கொந்தளிப்பு!... </a></p><p>*அரசின் இந்தத் தொடர் கட்டுப்பாடுகள் காரணமாகப் பல தசாப்தங்களாகத் இயங்கி வந்த பாரம்பரிய துப்பாக்கிக் கடைகள் பெரும் நிதி நெருக்கடியைச் சந்தித்துள்ளன.</p><p>*ஆசிய கண்டத்திலேயே அதிகளவில் பொதுமக்களிடம் துப்பாக்கிகள் இருக்கும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானுக்கு அடுத்து தாய்லாந்து இரண்டாம் இடத்தில் உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்காவில் நடந்த உலகின் மிக அசிங்கமான நாய் போட்டி</title><link>https://www.maalaimalar.com/news/world/worlds-ugliest-dog-contest-held-in-america</link><comments>https://www.maalaimalar.com/news/world/worlds-ugliest-dog-contest-held-in-america#comments</comments><guid isPermaLink="false">314939e6-7f67-451a-82d9-76291ef48e5b</guid><pubDate>Mon, 17 Aug 2026 16:15:47 +0000</pubDate><atom:updated>2026-08-17T16:15:47.768Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ugliest dog,dog contest,american dog,அசிங்கமான நாய்,நாய் போட்டி,அமெரிக்க நாய்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/degu9he3/Untitled-design-3.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ World’s Ugliest Dog]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/degu9he3/Untitled-design-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2026 ஆம் ஆண்டின் உலகின் மிக அசிங்கமான நாய் போட்டியில், ஜின்னி லூ என்ற 6 வயது பக் நாய் வெற்றியாளராக முடிசூட்டப்பட்டுள்ளது.</p><p>அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தனித்துவமான தோற்றமுடைய நாய்களை ஒன்றிணைத்து உலகின் அசிங்கமான நாய் போட்டி நடத்தப்பட்டது. </p><p>சோனோமா-மரின் விவசாய சங்கத்தால் நடத்தப்பட்ட நாய் போட்டி, கலிபோர்னியாவின் சாண்டா ரோசாவில் உள்ள சோனோமா கவுண்டி கண்காட்சி மைதானத்தில் ஆகஸ்ட் 14 அன்று நடைபெற்றது.</p><p>இந்த நிகழ்வில், விசித்திரமான ஆனால் அழகான தோற்றமுடைய நாய்கள், முதல் பரிசை பெற்றுக் கொள்வதற்காக போட்டியிட்டன. சர்வதேச அளவில் அறியப்பட்ட இந்த போட்டியில் வெற்றி பெற்ற ஜின்னி லூவின் உரிமையாளர் மிஷேல் கிரேடிக்கு, MUG ரூட் பீர் நிறுவனத்திடமிருந்து சுமார் 4,77,252 ரூபாயும் ($5,000) பரிசாக வழங்கப்பட்டது.</p><p>MUG ரூட் பீர் நிறுவனம், இரண்டாம் இடம் பிடித்த சிஹுவாஹுவா/போமரேனியன் கலப்பின நாயான பிங்கிக்கு சுமார் 2,86,770 ரூபாயும், மூன்றாம் இடம் பிடித்த சிஹுவாஹுவா கலப்பின நாயான ஓட்டோவிற்கு சுமார் 1,91,180 ரூபாயும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.</p><p>முதல் பரிசை பெற்ற ஜின்னி லூ நாய், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பக் ரெஸ்க்யூ மூலம் தத்தெடுக்கப்பட்டதாகவும், அன்றிலிருந்து அது தொடர்ச்சியான குறும்பு மற்றும் மகிழ்ச்சியின் ஆதாரமாக இருந்து வருவதாகவும் அதன் பாதுகாவலர் தெரிவித்தார்.</p><p>இதுகுறித்து நாயின் உரிமையாளர் கூறுகையில், உலகின் மிக அசிங்கமான நாய் என்ற பட்டத்தை வெல்வதற்காக எனது ஜின்னி லூ நாய் தொடர்ந்து நான்காவது முயற்சியை மேற்கொண்டது.</p><p>அமெரிக்க்காவில் நடத்தப்பட்ட இந்த, ‘உலகின் மிக அசிங்கமான நாய் போட்டி’ என்பது ஒருபோதும் நாய்களை அவமானப்படுத்துவதற்காக நடத்தப்படுவதில்லை.</p><p>மாறாக, போட்டி அமைப்பாளர்கள் இந்த நிகழ்வை, ஒவ்வொரு நாயின் தனித்தன்மையையும் உள்ளார்ந்த அழகையும் எடுத்துக்காட்டவும், அன்புக்காக காத்திருக்கும் பாசமுள்ள நாய்களை வெளி உலகிற்கு காண்பித்து, செல்லப்பிராணிகளை தத்தெடுக்கும் ஊக்குவிப்பாக பார்கின்றனர்.</p><p>50 ஆண்டுகளாக, இந்த நிகழ்வு ஒவ்வொரு நாயின் தனித்துவத்தையும் கொண்டாடுவதோடு, கருணை, மீட்பு மற்றும் ஏற்றுக்கொள்ளுதல் ஆகிய செய்திகளையும் பகிர்ந்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>25 ஆண்டுகள் பொறியாளர் பணி - தற்போது பள்ளி பேருந்து ஓட்டுநர்: அமெரிக்க மென்பொருள் பொறியாளரின் வாழ்க்கை</title><link>https://www.maalaimalar.com/news/world/25-years-as-engineer-now-school-bus-driver-life-of-us-software-engineer</link><comments>https://www.maalaimalar.com/news/world/25-years-as-engineer-now-school-bus-driver-life-of-us-software-engineer#comments</comments><guid isPermaLink="false">f622adf3-cf32-4e6d-8be1-38af7d434bae</guid><pubDate>Mon, 17 Aug 2026 16:11:01 +0000</pubDate><atom:updated>2026-08-17T16:11:01.267Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,America,software engineer,Adobe,மென்பொருள் பொறியாளர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/q9a3mdsa/Untitled-design-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ 25 ஆண்டுகள் Adobe பொறியாளர் தற்போது பள்ளி பேருந்து ஓட்டுநராக புதிய வாழ்க்கை தொடக்கம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ Adobe engineer]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/q9a3mdsa/Untitled-design-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அடோபில் முன்னாள் மென்பொருள் தரப் பொறியாளராக 25 ஆண்டுகள் பணியாற்றிய ஒருவர், வேறு தொழில்நுட்ப பணியை கண்டுபிடிக்க முடியாத காரணத்தால், பள்ளி பேருந்து ஓட்டுநர் வேலையை தேர்ந்தெடுத்துள்ளார்.</p><p>அமெரிக்காவில் கொலராடோ மாகாணத்தை சேர்ந்த ஜேம்ஸ் ஸ்ட்ரான், ஆகஸ்ட் 2025-ல் அடோப் டிஜிட்டல் வீடியோவில் மூத்த மென்பொருள் தரப் பொறியாளர் பதவியிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார். அன்று முதல், அவர் நீண்ட நாட்களாக வேறு வேலையை தேடி வந்தார்.</p><p>ஆனால் ஒரு வருடத்திற்கும் மேலாகியும் வேலை கிடைக்காத காரணத்தால், அவர் முற்றிலும் மாறுபட்ட பாதையை தேர்ந்தெடுக்க முடிவு செய்தார். இதையடுத்து அவர் தனது மாவட்டத்தில் உள்ள பள்ளியில் பேருந்து ஓட்டுநர் வேலைக்கு முயற்சி செய்து, அதனை தேர்ந்தெடுத்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் லிங்க்ட்இன் தளத்தில் ஒரு பதிவில், “ஒரு வருடத்திற்கும் மேலாக நீண்ட, கடினமான வேலை தேடிய பிறகு, உயர் தொழில்நுட்ப துறையால் மனமுடைந்து, பாகுபாட்டிற்கு உள்ளானேன்.</p><p>இந்த நிலையில், எனது அடுத்த அத்தியாயம் தொடங்கியுள்ளது என்பதை பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்று அவர் எழுதியிருந்தார்.</p><p>மேலும் தனது முந்தைய தொழில்நுட்ப பணியை விட இந்த புதிய வேலையில் சம்பளம் கணிசமாக குறைவாக இருந்தாலும், இந்த மாற்றத்தை ஆவலுடன் எதிர்நோக்குவதாக அவர் குறிப்பிட்டார்.</p><p>இந்தப் பணி தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும், தனது புதிய சக ஊழியர்கள் அக்கறையோடும், அன்போடும், இயல்போடும் இருப்பதாகவும் அவர் கூறினார்.</p><p>மேலும், “என் முந்தைய நிறுவனத்தில் என்னை புறக்கணித்து, என்னை தாழ்த்தி, இறுதியில் வேலையை விட்டு நீக்கியவர்களுக்கும் நன்றி. ஆனால், நீங்கள் எனக்கு ஒரு சிறந்த எதிர்காலத்திற்கான வழியை காட்டியதால் மட்டுமே இந்த நன்றி.</p><p>உங்களைப் போன்றவர்களால் தான், நான் ஒரு கணினிக்கு பதிலாக 40 அடி பேருந்தை ஓட்டப் போகிறேன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.</p><p>மேலும், என் விண்ணப்பங்களைக் கண்மூடித்தனமாக நிராகரித்து, நேர்முக தேர்வுக்கு பதிலளிக்காமல் தவிர்த்தவர்களும், நேர்காணல்களுக்கு கூட வராமல் இருந்த முதலாளிகளும், இனியாவது வேலை தேடி வருபவர்களை நல்ல முறையில் நடத்துவார்கள் என்று நம்புகிறேன்,” என்று அவர் பதிவிட்டார்.</p><p>பொறியாளரின் இந்த பதிவிற்கு நெட்டிசன்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். ஒருவர் அந்த பதிவுக்கு, “அடோபில் நீங்கள் செய்த வேலையை போலவே பேருந்து ஓட்டுவதும் முக்கியமானது தான்.</p><p>நீங்கள் அதை ஆர்வத்துடன் செய்யும் வரை, நீங்கள் எதிர்பாராத விதத்தில் ஒருவரிடம் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். பெருநிறுவன உலகம் சிறந்த மனிதர்களை இழந்து வருகிறது, இதை நாம் வரும் தலைமுறைகளிலும் காண்போம்” என்று பதிவிட்டார்.</p><p>மற்றொரு நபர், “பள்ளி வாகனங்களில் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருப்பது ஒரு உன்னதமான கடமையாகும். நீங்களும் உங்களுக்காக கூடுதல் வழிகளை கண்டறிவீர்கள் என்று நம்புகிறேன்.</p><p>இந்த வாழ்க்கையில் நமக்கு இருப்பது ஒரே ஒரு உடல்தான், ஆனால் நாம் செய்யும் வேலைகள் எல்லாமே நமது நேரத்தையும் சக்தியையும் வேறு இடங்களில் செலவிட வேண்டும் என்று நிர்பந்திக்கிறது.</p><p>பணம் என்பது குறுகிய வடிவம் தான், ஆனால் நீங்கள் வாழ்வதற்கு தேவையானவை உங்களிடம் நிச்சயமாக இருக்கும்” என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>உயிரோடு இருக்கும் பெண்ணிற்கு இறந்ததாக சான்றிதழ்: கலெக்டரின் புகார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/certificate-declaring-living-woman-dead-collectors-complaint</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/certificate-declaring-living-woman-dead-collectors-complaint#comments</comments><guid isPermaLink="false">23127582-a5af-4918-a629-fced1d610b5b</guid><pubDate>Mon, 17 Aug 2026 16:02:37 +0000</pubDate><atom:updated>2026-08-17T16:02:37.835Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மதுரை,madurai,இறப்பு சான்றிதழ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/h1g3p1m8/complaint001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இறப்பு சான்றிதழ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/h1g3p1m8/complaint001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரோடு இருக்கும்போது வி.ஏ.ஓ. இறந்ததாக சான்றிதழ் வழங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>மதுரையில் வசிக்கும் பெண்மணி ஒருவர் வீட்டிற்கு போலீசார் சென்றுள்ளனர். அப்போது பெருமாள் என்பவர் யார்? என்று கேட்டுள்ளனர். அதற்கு என்னுடைய மகன்தான் என அந்த பெண்மணி கூறியுள்ளார். அப்போது பெருமாளுடைய அம்மா இறந்து விட்டதாகவும், இறந்து போன பெருமாளின் அம்மாவிற்கு நிலமும், நகையும் உள்ளது. அதை பெற்றுத் தருமாறு பெருமாளின் மனைவி மனு கொடுத்துள்ளார். அதன் விசாரணை நடத்த வந்துள்ளோம் என போலீசார் சென்னதை கேட்டு அந்த பெண் அதிர்ந்துள்ளார்.</p><p>நான் இங்கு உங்கள் முன் உயிரோடு நிற்கிறேன். நான் இறந்ததாக எப்படி கூறலாம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் என்னுடைய மகன் பெருமாள் சுமார் 6 மாதத்திற்கு முன் இறந்து போனார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து உடற்கூறு ஆய்வு ரிப்போர்ட் எனக்கு இன்னும் கிடைக்கவில்லை. அப்போது போலீசார் நீங்கள் இறந்ததாக சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. இந்தாங்க. இதுதான் சான்றிதழ் என காண்பித்துள்ளனர். ஆனால், அந்த பெண் நான் உயிரோடு இருக்கிறேன் என அடித்துச் சொல்லியுள்ளார். பின்னர்தான் சுந்தரி என்ற தனது மருமகள் போலியாக சான்றிதழ் பெற்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.</p><p>அப்படி என்றால் ஆதார் கார்டு உடன் காவல் நிலையத்திற்கு வாருங்கள் என்று கூறிவிட்டு போலீசார் சென்றுள்ளனர். அங்கு போலீசாரிடம் தன்னுடைய ஆதார் கார்டு உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் காட்டியுள்ளார். உடனே போலீசார், விஏஓ-வை சென்று பாருங்கள் என்று கூறியுள்ளனர்.</p><p>அந்த பெண்மணியும் வி.ஏ.ஓ. அலுவலகம் சென்று, நான் உயிரோடு இருக்கிறேன். அப்படி இருக்கும்போது இறந்து விட்டதாக சான்றிதழ் வழங்கியுள்ளீர்கள். என்ன நியாயம் என்று கேட்டுள்ளார்.</p><h2>வி.ஏ.ஓ.-விடம் முறையீடு</h2><p>அதற்கு வி.ஏ.ஓ. நாங்கள் ஆதாரத்துடன்தான் சான்றிதழ் வழங்கியுள்ளோம் என்று கூறியிருக்கிறார். நான் 100 நாள் வேலைத் திட்டத்திற்கும் செல்கிறேன் என்று கூறிய பின்னரும் வி.ஏ.ஓ. சொன்னதை திரும்பவும் சொல்லியிருக்கிறார். அப்படி என்றால் இறப்பு சான்றிதழை தாருங்கள் என்று கேட்க, அவரும் வழங்கியுள்ளார்.</p><p>இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்ததாக தெரிகிறது. பின்னர் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கும் தீர்வு கிடைக்கவில்லை. நாங்கள் உங்களுக்கு என்ன தேவையோ அதை செய்கிறோம் என சமாதானம் செய்யப்பட்டுள்ளது. எனக்கு ஏதும் தேவையில்லை. ஏன் வழங்கப்பட்டது என்று கேட்டு தீர்வு வேண்டும் எனக் கூறியுள்ளார்.</p><h2>கலெக்டரிடம் புகார்</h2><p>இறுதியாக கலெக்டரிடம் புகார் கொடுத்துள்ளார். கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. உயிரோடு இருக்கும் பெண்மணிக்கு இறந்ததாக சான்றிதழ் வழங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பாங்காக் துப்பாக்கி சந்தையில் தாய்லாந்து அரசின் புதிய கட்டுப்பாடுகள்: வியாபாரிகள் கொந்தளிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/world/bangkok-gun-market-thailand-tightens-rules-traders-protest</link><comments>https://www.maalaimalar.com/news/world/bangkok-gun-market-thailand-tightens-rules-traders-protest#comments</comments><guid isPermaLink="false">8d3153d2-897b-4d94-8d20-b9a796d293aa</guid><pubDate>Mon, 17 Aug 2026 15:15:07 +0000</pubDate><atom:updated>2026-08-17T15:15:07.934Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தாய்லாந்து,thailand,பாங்காக்,Asian countries,Bangkok gun market,பாங்காக் துப்பாக்கி சந்தை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/w16ml21l/yyyy.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bangkok gun market ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/w16ml21l/yyyy.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள புகழ்பெற்ற துப்பாக்கி விற்பனைப் பகுதியில் அரசு மேற்கொண்டு வரும் கடுமையான துப்பாக்கிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு உள்ளூர் வணிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தொடர்ச்சியாக நடைபெறும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களைத் தொடர்ந்து அரசு எடுத்து வரும் இந்த முடிவுகள், உண்மையான குற்றங்களைத் தடுக்காமல் சட்டப்பூர்வ வணிகங்களை மட்டுமே கடுமையாகப் பாதிப்பதாக வணிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.</p><h2>துப்பாக்கி இ<strong>றக்குமதித்</strong> தடை</h2><p>கடந்த 2023-ஆம் ஆண்டு <a href="https://www.maalaimalar.com/news/world/london-house-prices-see-largest-fall-in-eight-years">பாங்காக் </a>வணிக வளாகத்தில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, தாய்லாந்தில் வெளிநாடுகளிலிருந்து துப்பாக்கிகளை இறக்குமதி செய்வதற்கு அரசு முற்றுப்புள்ளி வைத்தது. இதனைத் தொடர்ந்து, சமீபத்தில் நடந்த பள்ளித் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் விளைவாக, புதிய துப்பாக்கி வாங்குவதற்கான அனுமதிகளை வழங்குவதையும் உரிமங்களைப் புதுப்பிப்பதையும் இடைநிறுத்த பிரதமர் அனுடின் சர்ன்விராகுல் தலைமையிலான அரசு உத்தரவிட்டுள்ளது.</p><h2>தொ<strong>ழில் இழ</strong>ப்பு</h2><p>அரசின் இந்தத் தொடர் கட்டுப்பாடுகள் காரணமாகப் பல தசாப்தங்களாகத் இயங்கி வந்த பாரம்பரிய துப்பாக்கிக் கடைகள் பெரும் நிதி நெருக்கடியைச் சந்தித்துள்ளன. பல கடைகளில் விற்பனைக்குத் துப்பாக்கிகளே இல்லாத நிலை உருவாகியுள்ளது. சில கடை உரிமையாளர்கள் தங்கள் ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுப்பதற்காகத் துப்பாக்கிக் கடைகளை ரொட்டிப் பாக்கரி போன்ற வேறு தொழில்களாக மாற்றி நடத்தி வரும் பரிதாபகரமான சூழல் ஏற்பட்டுள்ளது.</p><h2>கறுப்பு<strong>ச் சந்தை அதி</strong>கரிக்கும் என்ற எச்சரிக்கை</h2><p>அரசின் இந்த முடிவுகள் குறித்துப் பேசிய தாய்லாந்து துப்பாக்கி வணிகர்கள் சங்கத்தின் தலைவர், சட்டப்பூர்வமாகத் துப்பாக்கி வாங்குவதைக் கட்டுப்படுத்துவது குற்றங்களைக் குறைக்காது என்று தெரிவித்துள்ளார். சட்டப்பூர்வ வழிகள் அடைக்கப்படும் போது, மக்கள் சட்டவிரோத கறுப்புச் சந்தையை நோக்கித் தள்ளப்படுவார்கள் என்றும், இதனால் குற்றங்கள் மேலும் அதிகரிக்கவே வாய்ப்புள்ளது என்றும் எச்சரித்துள்ளார்.</p><p>ஆசிய கண்டத்திலேயே அதிகளவில் பொதுமக்களிடம் துப்பாக்கிகள் இருக்கும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானுக்கு அடுத்து தாய்லாந்து இரண்டாம் இடத்தில் உள்ளது. தோராயமாக 1 கோடிக்கும் அதிகமான துப்பாக்கிகள் பொதுமக்களிடம் உள்ள நிலையில், அதில் 40 லட்சத்திற்கும் அதிகமானவை எந்தவிதப் பதிவும் இல்லாத சட்டவிரோதத் துப்பாக்கிகள் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>100 நாளில் 546 குற்றச் சம்பவங்கள்: திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/546-crimes-in-100-days-dmk-legal-wing-deputy-secretary-parandhaman</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/546-crimes-in-100-days-dmk-legal-wing-deputy-secretary-parandhaman#comments</comments><guid isPermaLink="false">fc05a74b-6863-4e41-a81d-642ceacb1c2a</guid><pubDate>Mon, 17 Aug 2026 14:51:33 +0000</pubDate><atom:updated>2026-08-17T14:51:33.406Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>முதலமைச்சர் விஜய்,tn cm vijay,தவெக அரசு,TVK Govt,பரந்தாமன்,Parandhaman</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/rwwmea9d/Parandhaman001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பரந்தாமன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/rwwmea9d/Parandhaman001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-arunraj-remarks-trigger-dmk-aiadmk-protest-in-assembly">திமுக</a> சட்டத்துறை இணைச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பரந்தாமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-</p><p>த.வெ.க. அரசு பொறுப்பேற்றபோது ‘இட்ஸ் எ பிகினிங் ஆஃப் ஏ நியூ எரா’ என்று சொன்னார். உண்மைதான், இது ஒரு நியூ எரா—100 நாளில் 546 குற்றச் சம்பவங்களைச் செய்த ஒரு நியூ எரா!. இன்னைக்கு விஜய்யினுடைய சர்க்கஸ் சர்க்கார் ஆட்சியின் சாதனை இது. 'பெண்கள் பாதுகாப்பு ரொம்ப நான் ஸ்ட்ரிக்ட்டா வச்சிருப்பேன்'னு சொன்னார். ஆனால், இன்னைக்கு பெண்களுக்கான பாதுகாப்பு எந்த அளவில் தமிழ்நாட்டில் இருக்கின்றது என நாட்டு மக்களுக்கே நன்றாகத் தெரியும். தவெக கட்சியில் இருக்கக்கூடிய பெண்களுக்கே பாதுகாப்பு கொடுக்க முடியாத ஒரு பலவீனமான சர்க்காராகத்தான் இது.</p><h2>கல்லூரி வளாகத்தில் போதைப்பொருள் கடத்தப்படுகிறது, விற்கப்படுகிறது</h2><p>போதை கலாச்சாரத்திலிருந்து நம்ம பசங்களை மீட்கணும், அவங்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்குனு சொன்னார். ஆனால் போதை பழக்கமும் கடத்தலும் இங்க தீவிரமாக இருக்கிறது. கல்லூரி வளாகத்தில் போதைப்பொருள் கடத்தப்படுகிறது, விற்கப்படுகிறது என்று காவல்துறைக்குத் தகவல் கொடுத்த கோவை கல்லூரி மாணவன் அமுதனுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத வெட்கக்கேடான சர்க்கஸ் சர்க்கார் அரசுதான் இந்த விஜய்யின் அரசு.</p><p>காவல்துறையைக் கையில் வச்சிருக்கக்கூடிய முதலமைச்சர். 'ஜென்-ஜி' பிள்ளைகள் எல்லாம் உங்களுக்கு ஆர்வமாக வாக்களித்தார்களே, இந்த முதலமைச்சருக்கு, இன்னைக்கு 'ஜென்-ஜி'கள் மட்டும் ஏறத்தாழ 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இன்றைக்குக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த கொலைப் பழியை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். இந்த 100 நாளில் பல குற்றச் சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடந்திருக்கு. நான் ஏற்கனவே சொன்னது மாதிரி 546 குற்றச் சம்பவங்கள் இருக்கு. இந்த ஒரு வாரத்தில் மட்டும் நடந்த குற்றங்களின் எண்ணிக்கையை எடுத்துக்கிட்டீங்களா?</p><p>கோவையில் போதைப்பொருளைப் பற்றித் தகவல் கொடுத்ததாகச் சொல்லி, அமுதன் என்கிற மாணவனை அடித்துக் கொன்றுள்ளனர். அந்த மாணவன் போதை பொருள் பற்றி கொடுத்த தகவலை காவல்துறையே போதை கும்பலிடம் கொடுத்துள்ளது. ஆனால் சட்டமன்றத்தில் அமைச்சர் என்ன சொல்றாரு? 'இரு கோஷ்டிகளுக்கு இடையேயான மோதல்'னு சொல்லிட்டு வழக்கின் தன்மையை திசைதிருப்புறார்.</p><p>நான் கேட்கிறேன் முதலமைச்சர் அவர்களே, இளைஞர்களுக்கான அரசு' என்று நீங்கள் மார்தட்டிக் கொள்கிறீர்கள். இளைஞர்கள் மூலமாகவே ஆட்சிக்கு வந்தேன் என்று சொல்லுகிற நீங்கள், ஒரு இளைஞன் குற்றம் நடைபெறுகிறது என்று காவல்துறைக்குச் சொன்ன ரகசியத்தைக் காப்பாற்றாத காவல்துறை—அப்படிப்பட்ட காவல்துறை வைத்திருக்கும் உங்களுக்கு முதலமைச்சராக இருப்பதற்கு கொஞ்சமாவது தகுதி இருக்கிறதா என்ற கேள்வியைத்தான் உங்களை நோக்கி நான் கேட்கிறேன்.</p><p>அமுதனுடைய தாயார் சொல்லுகிறார்கள், அரசின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி  எங்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும் என்று சொல்லுகிறார்கள் என்றால், ஆளுகிற அரசின் மீது இந்த நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இல்லை! எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய திமுக மீதுதான் நம்பிக்கை இருக்கிறது என்பதை இது காட்டுகிறது.</p><h2>இரண்டு அமைச்சர்களை ஓட விட்டிருக்கிறார்கள்</h2><p>நேற்றைக்கு திருவொற்றியூரில் இரண்டு அமைச்சர்களை (ஆதவ் அர்ஜுனா மற்றும் ராஜ்மோகன்) ஓடவிட்டிருக்கிறார்கள். இந்த 100 நாள் சாதனை என்னவென்று சொன்னால், அமைச்சர்களை தலைதெறிக்க ஓட வைத்ததுதான் இந்த 100 நாள் சாதனை. இதே மாதிரி தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்றதை தட்டிக் கேட்ட பையனை அம்மிக்கல்லைத் தூக்கிப் போட்டுக் கொலை செஞ்சிருக்காங்க. திருவெறும்பூரில் இரண்டு தவெக காரங்க ஒருத்தரை வெட்டிக் கொலை பண்ணியிருக்காங்க.</p><p>விருதுநகரில் ஒரு பள்ளிப் பெண்ணைத் துன்புறுத்தியதைத் தட்டிக் கேட்ட அப்பாவை வெட்டிக் கொன்றிருக்காங்க. காஞ்சிபுரத்தில் கோயில் திருவிழாவில் இரண்டு இளைஞர்களை வெட்டிக் கொன்றிருக்காங்க. திருப்பூர்ல காதலை மறுத்த பெண்ணைக் கொலை செய்ததோடு மட்டுமல்லாமல், அந்த அம்மாவையும் இளைஞர்களையும் கொன்றிருக்காங்க. ஈரோட்டில் ஃபேன்சி ஸ்டோருக்குள் புகுந்து ஒரு பெண்ணைக் கத்தியால் குத்தியிருக்காங்க. இதெல்லாம் கடந்த ஒரு வாரத்தில் நடந்த குற்றச் சம்பவங்கள்.</p><p>அம்பத்தூர் புதூரில் ஆட்டோவில் ஒரு பெண்ணை உட்கார வச்சு கழுத்தை அறுத்து ரோட்டில் வீசியிருக்காங்க. இந்த மாதிரியான குற்றச் சம்பவங்கள் எல்லாம் இதற்கு முன்னாடி நடந்ததே இல்லை. சினிமா படத்தில் வருகிற மாதிரியான கொலைக் காட்சிகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். கும்மிடிப்பூண்டியில் 17 வயசு இளைஞனைக் கொன்று கல்லறை மேல போட்டு, சில கொலைச் சம்பவங்களைச் செய்து ரீல்ஸ் எடுத்து வெளியிடுகிறார்கள். இதெல்லாம் எந்தக் கலாச்சாரத்தைக் காட்டுகிறது?</p><p>ஒரு திரைத்துறையிலிருந்து வந்தவர் தமிழ்நாட்டுக்கு முதலமைச்சர். அதனுடைய விளைவு என்னவென்றால், நீங்கள் திரைப்படத்தில் ஹீரோவாக இருக்கலாம், நடித்த ஹீரோயிசத்தைப் பார்த்து இன்னைக்குத் தமிழ்நாட்டு இளைஞர்கள் இதைச் செய்கிறார்கள். தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு நீங்கள் ஒரு தவறான முன்னுதாரணமாக இருக்கிறீர்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது.</p><h2>வேலூரில் தலைமைப் பெண் காவலர் கொலை</h2><p>வேலூரில் தலைமைப் பெண் காவலரையே குத்திக் கொன்றிருக்கிறார்கள். இதைவிட என்ன கேவலம் இருக்கு? வெட்கமாக இல்லை முதலமைச்சருக்கு? காவல்துறையைத் தன் கையில் வச்சிருக்கக்கூடிய முதலமைச்சர், காவல்துறையிடம் தகவலைக் கொடுக்கும் பையனைக் காப்பாற்றுவதற்கு வக்கில்லை இந்த காவல்துறைக்கு. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் கைதின் போது, சாலைகளில் இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய இளைஞரைப் பார்த்து இரண்டு கையை வைத்து அடிப்பார் சென்னை மாநகரக் காவல் ஆணையர் அமல்ராஜ். எந்தக் காவல் ஆணையர் ஒரு கைது நடவடிக்கைக்கு ஸ்பாட்டிற்கு வந்திருக்கிறார்கள்? இருக்கிற வேலையை விட்டுவிட்டு வேறு வேலையை நீங்கள் செய்வதனால்தான் இந்த குற்றச் சம்பவங்கள் நடக்கிறது.</p><p>கோயம்புத்தூரில் இதே மாதிரி நகைக்காக ஒரு வயதான பெண்ணைக் கொன்றிருக்கிறார்கள். இந்த ஆட்சியில் பச்சிளம் குழந்தையிலிருந்து பாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். நான் ஆட்சிக்கு வந்தா சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்றுவேன்'னு சொன்னாரே, இதான் சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்றும் லட்சணமா?.</p><p>இந்த 100 நாள் ஆட்சி மக்களுக்கான சர்க்கார் அல்ல, வெறும் சர்க்கஸ் சர்க்கார்! நாளுக்கு நாள் நாசமாகும் தமிழ்நாடு இது. இந்த 100 நாட்களில் செய்ததெல்லாம் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது. போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. விலைவாசி பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை என எதையும் சரிசெய்ய முடியாமல் பல்லிளிக்குது இந்த 100 நாள் ஆட்சி.</p><p>இவ்வாறு பரந்தாமன் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அசாமில் பழங்குடியின மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான நபர் மீது துப்பாக்கிச்சூடு!</title><link>https://www.maalaimalar.com/news/national/shock-in-assam-tribal-schoolgirl-sexual-assault-accused-shot</link><comments>https://www.maalaimalar.com/news/national/shock-in-assam-tribal-schoolgirl-sexual-assault-accused-shot#comments</comments><guid isPermaLink="false">4a3885cc-3049-4421-984b-b31fbd6ca81f</guid><pubDate>Mon, 17 Aug 2026 14:50:26 +0000</pubDate><atom:updated>2026-08-17T14:50:26.477Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாலியல் வன்கொடுமை,Sexual assault,துப்பாக்கிச்சூடு,அசாம்,Assam,Kajalkhan Police Station</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/qv7v9o41/gun.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Assam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/qv7v9o41/gun.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அசாம் மாநிலத்தில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, அது தொடர்பான வீடியோவை இணையத்தில் பரப்பிய குற்றச்சாட்டில் கைதான நபர், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது தப்பிக்க முயன்றதால் காவல்துறை அவரைக் காலில் சுட்டுப் பிடித்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>கை<strong>து நடவடிக்கை</strong></h2><p>அசாம் மாநிலம் சிராங் மாவட்டத்திற்குட்பட்ட காஜல்கான் காவல் எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த நசிருல் ஷேக் என்பவன், தனது கூட்டாளிகளான பீர் முகமது மற்றும் ஹாருனுல் ஹசன் ஆகியோருடன் இணைந்து <a href="https://www.maalaimalar.com/news/national/bengaluru-toddler-critical-after-fall-two-year-old-boy-severely-injured-in-third-floor-apartment-grille-accident">பழங்குடியின</a>த்தைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவியை ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்று கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.</p><p>மேலும், அந்த கொடூரமான சம்பவத்தை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களிலும் பதிவேற்றம் செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், சிராங் மாவட்ட காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து, முதன்மை குற்றவாளியான நசிருல் ஷேக் உட்பட மூன்று பேரையும் கைது செய்தது.</p><h2>விசாரணை<strong>யின் போது தப்பியோ</strong>ட முயற்சி</h2><p>கைது செய்யப்பட்ட நசிருல் ஷேக்கை, நீதிமன்ற உத்தரவின்படி மூன்று நாள் காவலில் எடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையின் ஒரு பகுதியாக, வழக்கு தொடர்பான ஆதாரங்களைச் சேகரிக்க காஜல்கான் மாவட்ட தலைமையகத்திலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புமேஸ்வர் மலைப் பகுதிக்கு நசிருல் ஷேக்கை காவல்துறையினர் நேற்று அழைத்துச் சென்றனர்.</p><p>அப்போது, நசிருல் ஷேக் திடீரென பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரை பலமாகத் தள்ளிவிட்டு, அடர்ந்த காட்டுப்பகுதியை நோக்கித் தப்பியோட முயன்றுள்ளான்.</p><h2>கா<strong>லில் துப்பாக்கி</strong>ச்சூடு</h2><p>காவல்துறையினர் உடனடியாக எச்சரிக்கை விடுத்தும் அவன் நிற்காமல் தொடர்ந்து ஓடியதால், வேறு வழியின்றி அவனைக் கட்டுப்படுத்த துப்பாக்கியால் சுட்டனர். இதில் நசிருல் ஷேக்கின் காலில் குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்தான். உடனடியாக மீட்கப்பட்ட அவன், காஜல்கானில் உள்ள ஜே.எஸ்.பி சிவில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். </p><p>தற்போது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சிராங் மாவட்ட சிரேஷ்ட காவல் கண்காணிப்பாளர் துருபா போரா தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் புற்றுநோய் பாதிப்பு 1,00,097-ஆக உயர்வு - மருத்துவர்கள் எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/health/tamil-nadu-records-over-one-lakh-new-cancer-cases-in-2025</link><comments>https://www.maalaimalar.com/health/tamil-nadu-records-over-one-lakh-new-cancer-cases-in-2025#comments</comments><guid isPermaLink="false">22ee139e-cc04-482e-995b-0ffedf10ce19</guid><pubDate>Mon, 17 Aug 2026 14:47:27 +0000</pubDate><atom:updated>2026-08-17T14:47:27.891Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Cancer,புற்றுநோய் அபாயம்,Cancer hospital,Cancer Awareness,புற்றுநோய்,புற்றுநோய் அறிகுறி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/t27u3i23/Untitled-design-1.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தமிழ்நாட்டில் புற்றுநோய் பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது]]></media:title><media:description type="html"><![CDATA[ Tamil Nadu Cancer ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/t27u3i23/Untitled-design-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆரோக்யம் (Health)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் முதன்முறையாக ஒரே ஆண்டில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான புதிய <a href="https://www.maalaimalar.com/topic/புற்றுநோய்">புற்றுநோய்</a> பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. </p><p>மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த தரவுகளின்படி, 2025-ஆம் ஆண்டுக்கான சமீபத்திய புள்ளிவிவரங்களில், மாநிலத்தில் 1,00,097 புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன.</p><p>இது, நோய்ப் பரவலின் தீவிரம் மற்றும் தொடர்ச்சியான உயர்வை அடிக்கோடிட்டுக் காட்டுவதோடு, நோய்த்தடுப்பு, முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் சிகிச்சைத் திறன் குறித்து சுகாதார அதிகாரிகளிடையே கவலைகளையும் எழுப்பியுள்ளது. </p><h3><strong>புற்றுநோய் முன்னெச்சரிக்கை</strong></h3><p>வலுவான பரிசோதனைத் திட்டங்கள் மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்கள் இல்லாமல், வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயரக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p>புற்று நோய் பாதிப்பு 2020-ல் 68,750 இல் இருந்து, 2021-ல் 76,968 ஆகவும்; 2022-ல் 89,265 ஆகவும் 2023-ல் 92,816 ஆகவும், 2024-ல் 96,486 ஆகவும் உயர்ந்து, இந்த ஆண்டு ஒரு லட்சத்திற்கும் அதிகமான பாதிப்புகளை தாண்டியுள்ளது.</p><p>இந்தத் தொடர்ச்சியான அதிகரிப்பு, பெருகிவரும் நோய்ப் பாதிப்பையும், மாவட்டங்கள் முழுவதும் ஒருங்கிணைந்த பொது சுகாதார நடவடிக்கைகளின் அவசரத் தேவையையும் எடுத்துக்காட்டுகிறது.</p><h3><strong>புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு</strong></h3><p>2025-ஆம் ஆண்டில் புதிதாகப் பதிவுசெய்யப்பட்ட வழக்குகளில், 53,542 பேர் பெண்கள், 46,555 பேர் ஆண்கள் ஆவர். தமிழ்நாட்டில் தற்போது புற்றுநோயுடன் வாழும் மக்களின் மொத்த எண்ணிக்கை 1,09,097-ஐ எட்டியுள்ளது.</p><p>சென்னையில் இந்த ஆண்டு 8,505 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகி, தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. அதனைத் தொடர்ந்து காஞ்சிபுரத்தில் 7,295 வழக்குகளும், வேலூரில் 6,525 வழக்குகளும் பதிவாகியுள்ளன.</p><p>நகர்ப்புறங்களில் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகளுக்கு வாழ்க்கை முறை தொடர்பான இடர் காரணிகள், காற்று மாசுபாடு, மன அழுத்தம் மற்றும் தாமதமான நோயறிதல் ஆகியவற்றை சுகாதார வல்லுநர்கள் காரணமாகக் கூறுகின்றனர்.</p><h3><strong>புற்றுநோய் பாதிப்பு</strong></h3><p>புற்றுநோய்களின் தன்மைகள் பாலினத்தைப் பொறுத்தும் மாறுபடுகின்றன. ஆண்களிடையே, வாய்ப் புற்றுநோயே மிகவும் பொதுவானதாக உள்ளது; இது பெரும்பாலும் புகையிலைப் பயன்பாட்டுடன் தொடர்புடையது. அதனைத் தொடர்ந்து பெருங்குடல் மற்றும் வயிற்றுப் புற்றுநோய்கள் காணப்படுகின்றன.</p><p>பெண்களிடையே, மார்பகப் புற்றுநோய் முதலிடம் வகிக்கிறது. கருப்பை வாய் மற்றும் சினைப்பைப் புற்றுநோய்கள் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன. இது, வலுவான விழிப்புணர்வு மற்றும் வழக்கமான சமூகப் பரிசோதனை முயற்சிகளின் அவசியத்தைச் சுட்டிக்காட்டுகிறது.</p><p>கிட்டத்தட்ட பாதி புற்றுநோய் பாதிப்புகள் முற்றிய நிலைகளில் கண்டறியப்படுவதால், உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து, சிகிச்சைச் செலவுகளும் அதிகரிக்கின்றன என்று மருத்துவ வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.</p><h3><strong>பழக்க வழக்கங்கள்</strong></h3><p>வழக்கமான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரித்தல், புகையிலை மற்றும் மதுவைத் தவிர்த்தல், மற்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசோதனைகளை மேற்கொள்ளுதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகள், அபாயத்தைக் குறைப்பதற்கு அத்தியாவசியமானவையாகக் கருதப்படுகின்றன.</p><p>தொடர்ச்சியான கட்டிகள், காரணமற்ற எடை இழப்பு, நீடித்த வலி அல்லது அசாதாரண அறிகுறிகளுக்கு உடனடி மருத்துவ கவனிப்பு தேவை என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p>இதற்கிடையில், சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த தரவுகளின்படி, 2025-ஆம் ஆண்டில் கருப்பை, மார்பகம் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்களால் மட்டும் 10,821 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சின்னத்திரை இசை நிகழ்ச்சியில் முதல்முறையாக நடுவராகக் களம் இறங்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ar-rahman-to-judge-tamil-idol-tv-music-show</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ar-rahman-to-judge-tamil-idol-tv-music-show#comments</comments><guid isPermaLink="false">72e7022c-99cb-4037-ad78-b6402fe3505c</guid><pubDate>Mon, 17 Aug 2026 14:35:06 +0000</pubDate><atom:updated>2026-08-17T14:35:06.044Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஏ.ஆர்.ரகுமான்,a.r.rahman,Sony VIZHA,Tamil Idol,சோனி லிவ்,சோனி பிக்சர்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/u7ixpcmd/ar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  A.R.Rahman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/u7ixpcmd/ar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ் சின்னத்திரை வரலாற்றில் ஒரு புதிய திருப்பமாக, உலகப் புகழ்பெற்ற ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் முதல்முறையாக ஒரு தொலைக்காட்சி இசை ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவராகப் பொறுப்பேற்க உள்ளார்.</p><h2>சோனி பிக்சர்<strong>ஸ் நிறுவனத்தின் புதி</strong>ய முயற்சி</h2><p>இந்திய அளவில் முன்னணித் தொலைக்காட்சியாக விளங்கும் ‘சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க் இந்தியா’, தமிழ் பொழுதுபோக்குத் துறையில் கால்பதிக்கும் வகையில் ‘<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/jana-nayagan-ott-release-date-official-announcement-when-do-you-know">சோனி விழா</a>’ என்ற புதிய பொதுப் பொழுதுபோக்கு சேனலை அக்டோபர் 2026-இல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கவுள்ளது. தமிழ் கலாச்சாரம், உணர்வுகள் மற்றும் இசைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இச்சேனலின் நிகழ்ச்சிகள் அமையவுள்ளன.</p><h2>‘தமிழ் ஐ<strong>டல்’ இசை</strong>த் தேடல்</h2><p>உலகளவில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘இந்தியன் ஐடல்’ பாணியில், தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் மறைந்திருக்கும் குரல் வளங்களைக் கண்டறியும் வகையில் ‘தமிழ் ஐடல்’ என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ இணையவழிப் பதிவுகள் ’ஆகஸ்ட் 18’ முதல் தொடங்குகின்றன. விருப்பமுள்ள பாடகர்கள் ‘சோனி லிவ்’ செயலி வழியாகத் தங்களின் விவரங்களைப் பதிவு செய்து ஆடிஷனில் கலந்துகொள்ளலாம்.</p><h2>புதிய திற<strong>மைகளைத் தேடி</strong></h2><p>இச்சேனலின் நடுவராகப் பொறுப்பேற்பது குறித்துப் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், "இசையின் உண்மையான நோக்கமே புதிய குரல்களைக் கண்டறிவதுதான். அந்தப் புதிய குரல்களே கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைச் சென்றடைகின்றன. தமிழ் ஐடல் நிகழ்ச்சி மூலம் தமிழகத்தின் சிறந்த குரல்களை உலகிற்கு அடையாளம் காட்டவுள்ளோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>சின்னத்திரை<strong>யில் முன்ன</strong>ணி</h2><p>சோனி விழா சேனல் அறிமுகத்தை முன்னிட்டு முன்னணித் திரைநட்சத்திரங்கள் இதில் இணைந்து வருகின்றனர். நடிகை சமந்தா, சர்வதேச அளவில் பிரபலமான ‘மாஸ்டர் செப்’ சமையல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ளார். இந்த நிகழ்ச்சிகள் சோனி விழா தொலைக்காட்சியிலும், சோனி லிவ் ஓடிடி தளத்திலும் ஒரே நேரத்தில் ஒளிபரப்பாகவுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>கேரளாவின் பெயரை ‘கேரளம்’ என மாற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதல் </title><link>https://www.maalaimalar.com/news/national/keralas-name-changed-to-keralam-with-presidents-assent</link><comments>https://www.maalaimalar.com/news/national/keralas-name-changed-to-keralam-with-presidents-assent#comments</comments><guid isPermaLink="false">a70bcaa1-eef1-4365-8902-3fe611c8f11c</guid><pubDate>Mon, 17 Aug 2026 14:34:16 +0000</pubDate><atom:updated>2026-08-17T14:34:16.008Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>kerala,Draupadi Murmu,திரெளபதி முர்மு,கேரளம்,கேரளா,Keralam</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/lg2uhq54/Untitled-design.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கேரளா இனி ‘கேரளம்’: குடியரசுத் தலைவர் ஒப்புதல்]]></media:title><media:description type="html"><![CDATA[ Kerala Name Change]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/lg2uhq54/Untitled-design.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE">கேரளா</a> மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என பெயர் மாற்றம் செய்ய வலியுறுத்தி, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது அந்த மசோதாவிற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.</p><p>கேரள அரசு கடந்த 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் கேரளாவின் பெயரை கேரளம் என பெயர் மாற்றம் செய்ய கேரள சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.</p><h3><strong>கேரளாவில் தீர்மானம்</strong></h3><p>கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அந்த தீர்மானத்தில், “மலையாள மொழியில் மாநிலத்தின் பெயர் 'கேரளம்'-ஆக உள்ளது. 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி மொழி அடிப்படையில் மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. </p><p>கேரளா உருவான தினமும் நவம்பர் 1 ஆம் தேதியே கொண்டாடப்படுகிறது. தேசிய சுதந்திர போராட்ட காலம் முதலே, மலையாள மொழி பேசும் மக்களுக்காக ஒருங்கிணைந்த கேரளாவை உருவாக்க வேண்டும் என்ற வலுவான கோரிக்கை இருந்து வருகிறது.</p><p>ஆனால், அரசியலமைப்பின் முதல் அட்டவணையில் நமது மாநிலத்தின் பெயர் 'கேரளா' என்றே பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>அரசியலமைப்பின் 3 ஆம் பிரிவின்படி, பெயரை 'கேரளம்' என மாற்றுவதற்கு அவசர நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை இந்த சட்டமன்றம் ஒருமனதாக வலியுறுத்துகிறது” என்று குறிப்பிட்டது.</p><p>அரசியலமைப்பு பிரிவு 3-ன் கீழ், ஒரு மாநிலத்தின் பெயர் அல்லது எல்லையை மாற்றும் மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய குடியரசுத் தலைவரின் முன்அனுமதி (Prior Recommendation) கட்டாயமாகும்.</p><p>அதன்படி குடியரசுத் தலைவர் இந்த மசோதாவை கேரள சட்டமன்றத்தின் கருத்து அறிவதற்காக அனுப்பி வைத்தார். இதையடுத்து கேரள சட்டமன்றம் குறிப்பிட்ட காலத்திற்குள் தன் கருத்துகளைத் தெரிவித்து அதை மீண்டும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது.</p><p>குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்கு பின், மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டது.</p><p><strong>குடியரசுத் தலைவர் ஒப்புதல்</strong></p><p>இந்த மசோதா கடந்த செவ்வாய்கிழமை மக்களவையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, அடுத்த நாள் மாநிலங்கள் அவையிலும் நிறைவேற்றப்பட்டது.</p><p>இதையடுத்து இந்த மசோதா சட்டமாக மாற்றப்படுவதற்கு, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.</p><p>இந்த நிலையில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டமாக மாற்றப்படுவதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார்.</p><h3><strong>சட்ட திருத்தம்</strong></h3><p>இந்த மசோதாவானது மாநிலத்தின் பெயரை கேரளா என்பதில் இருந்து, கேரளம் என மாற்றுவதற்கும், அதற்கேற்ப அரசியலைப்பின் முதல் அட்டவணையை 3-வது பிரிவின் கீழ் திருத்துவதற்கும் வழிவகை செய்கிறது.</p><p>இந்த நிலையில் கேரளா மாநிலத்தின் பெயர் திருத்தம் செய்யப்பட்டு, ‘கேரளம்’ என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வி.சி.க மாநாட்டிற்கு முதலமைச்சர் விஜயின் வாழ்த்துக் கடிதம்: மேடையில் பெருமிதத்துடன் வாசித்துக் காட்டி நன்றி தெரிவித்த திருமாவளவன்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-congratulates-vck-conference-letter-read-on-stage</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-congratulates-vck-conference-letter-read-on-stage#comments</comments><guid isPermaLink="false">60e1a4e9-ce0b-4bb9-b5d3-cc3e47985f66</guid><pubDate>Mon, 17 Aug 2026 13:36:19 +0000</pubDate><atom:updated>2026-08-17T13:36:19.506Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>thirumavalavan,திருமாவளவன்,விசிக,vck,உளுந்தூர்பேட்டை,Ulundurpet,tvk,தமிழ் தேசிய எழுச்சி மாநாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/o8smxoam/gg.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chief Minister Vijay-Thirumavalavan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/o8smxoam/gg.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ‘தமிழ் தேசிய எழுச்சி மாநாடு’  கோலாகலமாக நடைபெற்றது. இந்த மாநாட்டின் முக்கிய நிகழ்வாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் அனுப்பி வைத்த வாழ்த்துக் கடிதத்தை விசிக தலைவர் திருமாவளவன் மேடையில் பெருமையுடன் படித்துக் காட்டினார். இரு தலைவர்களுக்கும் இடையிலான அரசியல் தோழமையையும் பரஸ்பர மரியாதையையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது.</p><h2>முதலமைச்<strong>சர் விஜய் கடி</strong>தம்..</h2><p>அந்த கடிதத்தில், அன்பிற்குரிய அண்ணன் <a href="https://www.maalaimalar.com/news/topnews/alliance-with-tavega-visika-and-tavega-to-journey-together-in-this-political-arena-thirumavalavan">திருமாவளவன் </a>அவர்களுக்கு வணக்கம், தமிழ் தேசிய எழுச்சி மாநாடு வெற்றிகரமாக நடைபெற எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். திராவிடமும் தமிழ்தேசியமும் இந்த மண்ணின் இரு கண்கள் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிலேயே தெரிவித்தோம். </p><p>எங்கள் செயற்குழு நிறேவேற்றிய தீர்மானத்தில் நிரந்தர அரசியல் தீர்மானத்தை உருவாக்க பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். மேலும் பேரறிஞர் அண்ணாவின் இருமொழிக்கொள்கையே தமிழகத்தின் இறுதியான மொழிக்கொள்கை என்று அறிவித்துள்ளோம்.</p><p>இந்நிலையில் தாங்கள் முன்னெடுத்து வரும் இந்த தமிழ் தேசிய எழுச்சி மாநாடு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தமிழ்மொழி பெருமையையும் தமிழர் உரிமைகளின் அவசியத்தையும் தமிழ்தேசியத் தேவைகளையும் உண்மைத் தன்மையுடன் உலகிற்கு எடுத்துரைக்கும் தங்களது முயற்சி பாராட்டுக்குரியது. மேலும் இம்மாநாடு தமிழ் சமூகத்தில் எதிர்காலம் குறித்த ஆழமான சிந்தனைகள் ஆக்கப்பூர்மான விவாதங்கள் மற்ற புதிய கொள்கை நோக்கங்கள் உருவாக ஒரு முக்கிய தளமாக அமையும் என நம்புகிறேன்.</p><p>இம்மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கான பல்வேறு ஆக்கப்பூர்வமான கருத்துகளை தீர்மானங்கள் மற்றும் செயல்திட்டங்கள் உருவாகிட வேண்டும் என மனமார வாழ்த்துகிறேன். இம்மாநாட்டின் முடிவுகள் தமிழ்சமூகத்திற்கு புதிய திசையை அமைக்கட்டும். தமிழும் தமிழரும் உயரட்டும்..தமிழ்நாடு வளம் பெறட்டும் என முதலமைச்சர் விஜய் கடிதத்தில் தெரிவித்திருந்தார்.</p><h2>நெஞ்<strong>சார்ந்த நன்றி</strong></h2><p>வாழ்த்துக் கடிதத்தை வாசித்து முடித்த திருமாவளவன், மாநாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து வாழ்த்துச் செய்தி அனுப்பிய முதலமைச்சர் விஜய்க்கு தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். எளிய மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் தேசியத்திற்காகவும் குரல் கொடுக்கும் விசிகவின் இந்த மாநாட்டிற்கு முதல்வரின் வாழ்த்து மேலும் உற்சாகத்தையும் எழுச்சியையும் அளித்துள்ளதாக அவர் மாநாட்டு மேடையில் சுட்டிக்காட்டினார்.</p><h2>கூட்ட நெரிச<strong>லால் சீக்கிரம் முடி</strong>ந்த உரை </h2><p>மாநாட்டுத் திடலில் கட்டுக்கடங்காத அளவில் தொண்டர்களும் பொதுமக்களும் திரண்டதால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. திருமாவளவன் மேடையில் பேசத் தொடங்கியதும், அவரைக் காண்பதற்காக தொண்டர்கள் முன்னோக்கி தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். திடலின் கொள்ளளவைக் கடந்து மக்கள் அலைமோதியதால், சூழலின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு தொண்டர்களின் பாதுகாப்பிற்காக விசிக தலைவர் திருமாவளவன் தனது நீண்ட உரையை விரைவாக முடித்துக் கொண்டார்.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய் வெற்றி பெற்றதற்கு காரணமே இதுதான்: இந்த விஷயத்தில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்- அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-this-reason-behind-chief-minister-vijay-victory</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-this-reason-behind-chief-minister-vijay-victory#comments</comments><guid isPermaLink="false">97b04102-cc5c-43e2-9a6b-56f7bef8e60c</guid><pubDate>Mon, 17 Aug 2026 13:31:35 +0000</pubDate><atom:updated>2026-08-17T13:31:35.514Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,முதலமைச்சர் விஜய்,tn cm vijay,தவெக அரசு,TVK Govt</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/0mrjc8x8/VijayAnbumani001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்- அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/0mrjc8x8/VijayAnbumani001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-</p><p>தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5 கொலைகள் நடந்திருக்கு. கடந்த 10 நாட்களாக மதுரை, கோவை, சென்னை போன்ற நகரங்களில் கொலைகள் நடந்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் போதை மற்றும் மது. இதை இன்னும் கட்டுப்படுத்தனும். ஓரளவிற்கு போதைப்பொருள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. இது போதுமானது கிடையாது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் போதைப் பொருட்களுக்கு இளைஞர்கள் அடிமை ஆகியிருக்கிறார்கள். அதை உடனடியாக கட்டுப்படுத்தவில்லை என்றால் மோசமான விளைவுகள் வரும்.</p><p>ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாக நாங்கள் படிப்படியாக மதுவை குறைப்போம் என்றார்கள். அவர்கள் செய்யும் நடவடிக்கைகளை பார்த்தால் மது வழிகளை அதிகப்படுத்துவற்கான பல முயற்சிகளை நடத்தியிருக்காங்க. வருவாயை இன்னும் எப்படி அதிகப்படுத்தலாம் என்பதற்கான அலுவாலியா தலைமையில் ஐவர் குழு அமைத்திருக்கிறார்கள். டாஸ்மாக்கில் எப்படி வருவாயை உயர்த்தலாம் என்பது போன்ற Terms கொடுக்கப்பட்டுள்ளது.</p><p>தற்போது டாஸ்மாக்கில் செயலி கொடுத்து ஆன்லையில் புக் செய்யலாம். தனியாரிடம் விற்பனை செய்யலாம் என்பது தேவையில்லாதது. இவ்வளவு கொலைகள் நடந்திருப்பது இதனால்தான்.</p><h2>விஜய் வெற்றி பெற்றதற்கு காரணம்</h2><p>த.வெ.க. தலைவர் விஜய் வெற்றி பெற்றதற்கு காரணம், கடந்த திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. சட்டம் ஒழுங்கு கெட்டு போய்விட்டது. அன்றாடம் கொலைகள் நடந்து கொண்டிருக்கு. இந்த காரணத்திற்காகத்தான் அனைத்து மக்களும் சேர்ந்து விஜய்க்கு வாக்கு அளித்தார்கள்.</p><p>அந்த பிரச்சினையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். முதலமைச்சர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். காவல்துறை அவரின் கீழ்தான் உள்ளது. இதை முதலமைச்சர் பார்க்க வேண்டும். </p>]]></content:encoded></item><item><title>பாஜக என பேச்சு வந்தால் அன்புமணி சைலன்ட் மோடுக்கு செல்கிறார்: மாணிக்கம் தாகூர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickamtagore-says-anbumani-ramadoss-goes-to-silent-mode-mention-bjp</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickamtagore-says-anbumani-ramadoss-goes-to-silent-mode-mention-bjp#comments</comments><guid isPermaLink="false">52328fce-8e2f-4c90-aff5-0340968c0182</guid><pubDate>Mon, 17 Aug 2026 13:11:25 +0000</pubDate><atom:updated>2026-08-17T13:11:25.782Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/xqtni9w9/AnbumaniramadossManickamTagore.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்- மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/xqtni9w9/AnbumaniramadossManickamTagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடகா அரசு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட <a href="https://www.maalaimalar.com/news/national/karnataka-to-release-cauvery-water-state-assures-12000-cusecs-per-day-to-tamil-nadu-in-supreme-court">காவிரி</a> மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட மறுப்பு தெரிவித்தது. தென்மேற்கு பருவமழை காரணமாக காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்ததால் வேறு வழியில்லாமல் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட்டது.</p><p>கர்நாடகாவை உரிய தண்ணீரை திறந்துவிட உத்தரவிடக்கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தண்ணீர் திறந்து விடப்படுவதை உறுதி செய்தார்.</p><p>இதற்கிடையே கர்நாடக மாநில காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தி மீது அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சனம் வைத்தார்.</p><h2>இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:-</h2><p>அன்புமணி ராமதாஸ் அவர்களை நாம் சும்மா விட்டுவிடக் கூடாது. காவிரியில் தண்ணீர் வரவில்லை என்றால் காங்கிரஸ்தான் காரணம் என்று சொல்லும் அவர், இதையும் மறந்து விடக்கூடாது. தண்ணீர் திறந்துவிடும்போது, அதை மறிக்கும் பாஜக-வினர் பற்றி பேசமால் ஏன் சைலன்ட் மோடுக்கு போய்விடுகிறார்? என்று தெரியவில்லை.</p><h2>சைலன்ட் மோடுக்கு செல்லும் அன்புமணி</h2><p>பாஜக என்று பேச்சு வந்தாலும் சைலன்ட் மோடுக்கு போய்விட்டார். ஏனென்றால் அவர் மீது சி.பி.ஐ. வழக்கு பாட்டியாலா நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதுதான காரணம். மருத்துவ கல்லூரிக்கு அனுமதி வழங்கியதற்காக ஊழல் செய்தது விளைவாக இன்னும் வழங்கு நிலுவையில் உள்ளதால், பா.ஜ.க. ஆட்டுவிக்கின்ற பொம்மை போன்று அன்புமணி செயல்படுகிறார்.</p><p>அவரை பொறுத்தமட்டில் தமிழர்கள் மீது அவ்வளவு அன்பு இருக்கிறது என்றால், குரல் கொடுப்பதாக நினைத்தால் பா.ஜ.க செய்யும் அட்டூழியத்தையும், தண்ணீர் திறந்து விடும் கர்நாடக அரசுக்கு எதிராக போராடும் பாஜக-வையும் அன்புமணி ராமதாஸ் கண்டிப்பாரா? என்பது முக்கியம்.</p><p>இவ்வாறு மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>தவெகவுடன் கூட்டணி: விசிகவும் தவெகவும் இனி இந்த அரசியல் களத்தில் இணைந்தே பயணிக்கும்- திருமாவளவன்!</title><link>https://www.maalaimalar.com/news/topnews/alliance-with-tavega-visika-and-tavega-to-journey-together-in-this-political-arena-thirumavalavan</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/alliance-with-tavega-visika-and-tavega-to-journey-together-in-this-political-arena-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">ccc889d5-40bb-49ea-b6c3-e2a2fc0c1e14</guid><pubDate>Mon, 17 Aug 2026 12:49:22 +0000</pubDate><atom:updated>2026-08-17T12:49:22.323Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>thirumavalavan,திருமாவளவன்,விசிக,vck,உளுந்தூர்பேட்டை,Ulundurpet,tvk,தமிழ் தேசிய எழுச்சி மாநாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/o8smxoam/gg.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Alliance with TVK]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/o8smxoam/gg.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற பிரமாண்ட மாநாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியதாவது, <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vck-tamil-national-uprising-conference-ulundurpet-grand-opening">தமிழக வெற்றிக் கழகத்துடன்</a> (தவெக) கூட்டணி அமைத்து இனிவரும் தேர்தல்களில் இணைந்து பயணிக்கப் போவதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மாநாட்டுத் திடலில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்களின் பலத்த கரகோஷத்திற்கு இடையே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.</p><h2>சகோ<strong>தரத்துவ உ</strong>றவு</h2><p>மாநாட்டில் உரையாற்றிய விசிக தலைவர் திருமாவளவன், தவெக தலைவர் ஜோசப் விஜய் அவர்களுடனான நட்புறவையும், கூட்டணி குறித்து எடுக்கப்பட்ட முடிவையும் விரிவாகப் பேசினார். "இன்றைக்கு ஆளுகிற முதலமைச்சர் அன்பு சகோதரர் ஜோசப் விஜய் அவர்களோடு நாம் கூட்டணி வைத்திருக்கிறோம். </p><p>விசிகவும் தவெகவும் இனி இந்த அரசியல் களத்தில் இணைந்தே பயணிக்கும்" என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். சமூக நீதி, மாநில உரிமைகள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளின் அடிப்படையில் இந்த கூட்டணி வலுப்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p>விசிக-தவெக கூட்டணியின் இந்த திடீர் அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களை உருவாக்கியுள்ளது. இரு முக்கியக் கட்சிகளின் கரங்கள் கோர்க்கப்பட்டுள்ள நிலையில், வரவிருக்கும் தேர்தல் களத்தில் இது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்த எதிர்பார்ப்பு அரசியல் விமர்சகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.</p><h2>ஆ<strong>ளுங்கட்சியாக</strong> வரவேண்டும்</h2><p>இத்தனை ஆண்டுகாலம் ஆளுங்கட்சிகளோடு நாம் கூட்டணி வைத்தோம். இனி நாம் ஆளுங்கட்சியாக வரவேண்டும் என திருமாவளவன் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>ஆடி மாதம் முடிஞ்சுடுச்சு.. மகளை அழைத்துச் செல்ல வந்த புதுமாப்பிள்ளைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மாமியார்</title><link>https://www.maalaimalar.com/news/national/aadi-month-over-wife-mother-in-law-surprise</link><comments>https://www.maalaimalar.com/news/national/aadi-month-over-wife-mother-in-law-surprise#comments</comments><guid isPermaLink="false">bb459491-9bbe-40a2-bdb0-482a534996d0</guid><pubDate>Mon, 17 Aug 2026 12:43:17 +0000</pubDate><atom:updated>2026-08-17T12:43:17.674Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Telangana,தெலங்கானா,ஆடி மாதம்,Aadi,ஆடி விருந்து,Aadi feast</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/g44y7y4u/Aadi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Aadi feast]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/g44y7y4u/Aadi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தெலுங்கானா மாநிலம், நர்சி பட்டினத்தை சேர்ந்தவர் ரமேஷ் குமார் - கலாவதி தம்பதி. அவரது மகள் நவ்யாவிற்கும், ஸ்ரீ ஹர்ஷா என்பவருக்கும் திருமணம் நடந்தது.</p><p>ஆடி மாதம் என்பதால் நவ்யா தனது தாய் வீட்டிற்கு வந்து இருந்தார். ஆடி மாதம் முடிந்ததால் ஸ்ரீஹர்ஷா மனைவியை தனது வீட்டிற்கு அழைத்துச் செல்ல நேற்று மாமியார் வீட்டிற்கு வந்தார்.</p><p>மருமகனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க மாமியார் வீட்டினர் தடல் புடலான ஏற்பாடுகளை செய்தனர். அதன்படி, வீட்டுக்கு வெளியில் இருந்து பூக்களால் ஒவ்வொரு அடிக்கும் இதயப்பூர்வமாக வரவேற்றனர். புது மாப்பிள்ளை ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போது வெள்ளி சாமி சிலை பணமுடிப்பு உள்ளிட்ட பரிசுகளை வழங்கினர். </p><p>பின்னர் மருமகனின் கண்ணைக் கட்டி மேசைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருமகனின் கண்ணில் கட்டப்பட்டிருந்த துணியை அகற்றினர். மேஜையில் அடிக்கி வைக்கப்பட்டு இருந்த உணவுப் பொருட்களைக் கண்டு ஸ்ரீஹர்ஷா திக்குமுக்காடி போனார். </p><p>மேஜையில் இட்லி வடை, பூரி, பொங்கல், உப்புமா மற்றும் இனிப்பு வகைகள் என 100-க்கும் மேற்பட்ட உணவுகளை அடுக்கி வைத்திருந்தனர்.</p><p>மாமனார், மாமியார், மனைவி ஆகியோர் ஸ்ரீஹர்ஷாவுக்கு உணவுகளை ஊட்டி விட்டனர். </p><p>இதுபோல் மாமனார் மாமியார் மனைவி கிடைப்பதற்கு பாக்கியம் செய்து இருக்க வேண்டும் என ஸ்ரீஹர்ஷா தெரிவித்தார்.</p> ]]></content:encoded></item><item><title>உளுந்தூர்பேட்டையில் விசிகவின் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு: தமிழ்த்தாய் வாழ்த்துடன் கோலாகலத் தொடக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vck-tamil-national-uprising-conference-ulundurpet-grand-opening</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vck-tamil-national-uprising-conference-ulundurpet-grand-opening#comments</comments><guid isPermaLink="false">571479ec-cd20-4587-bf9f-73f5a4baf661</guid><pubDate>Mon, 17 Aug 2026 12:34:17 +0000</pubDate><atom:updated>2026-08-17T12:34:17.096Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>thirumavalavan,திருமாவளவன்,விசிக,vck,உளுந்தூர்பேட்டை,Ulundurpet,தமிழ் தேசிய எழுச்சி மாநாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/9lrpv9nc/ff.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Thirumavalavan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/9lrpv9nc/ff.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் திருமாவளவன் பிறந்தநாளையொட்டி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்ட 'தமிழ் தேசிய எழுச்சி மாநாடு' தமிழ்த்தாய் வாழ்த்துடன் முறைப்படி தொடங்கியது. </p><p>தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மாநாட்டுத் திடலில் குவிந்துள்ளதால், உளுந்தூர்பேட்டை பகுதியே மக்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. மாநாட்டுத் திடல் முழுமையாக நிரம்பி வழிவதோடு, வாகனப் போக்குவரத்தும் அப்பகுதியில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.</p><h2>தலை<strong>வர்கள் பங்</strong>கேற்பு</h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-released-tvk-government-100-day-achievements-booklet">விடுதலைச் சிறுத்தைகள்</a> கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில், கட்சியின் முன்னணி நிர்வாகிகள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். எழுச்சிப் பாடல்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கிய இந்த மாநாட்டில், தமிழக அரசியல் சூழல், தமிழ் தேசிய உரிமைகள் மற்றும் சமூக நீதி குறித்த முக்கியக் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.</p><h2>மிகுந்த <strong>எதிர்பார்ப்பு</strong></h2><p>மாநாட்டின் முத்தாய்ப்பாக கட்சியின் தலைவர் திருமாவளவன் பேரணித் தொண்டர்கள் மத்தியில் சிறப்புரையாற்றவுள்ளார். வரவிருக்கும் தேர்தல் அரசியல், தமிழ் தேசியத்தின் தேவை மற்றும் மாநில உரிமைகள் தொடர்பாக அவர் பேசவிருக்கும் கருத்தாழமிக்க உரையை கேட்க மாநாட்டுத் திடலில் கூடியுள்ள மக்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். பாதுகாப்புப் பணியில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டு, மாநாடு அமைதியான முறையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>&apos;ஜன நாயகன்&apos; ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு:  எப்போது தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/jana-nayagan-ott-release-date-official-announcement-when-do-you-know</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/jana-nayagan-ott-release-date-official-announcement-when-do-you-know#comments</comments><guid isPermaLink="false">95484855-ebaf-4688-ac99-68ceb3fce2d6</guid><pubDate>Mon, 17 Aug 2026 12:10:44 +0000</pubDate><atom:updated>2026-08-17T12:10:44.632Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Jana Nayagan,ஜன நாயகன்,vijay,OTT,எச்.வினோத்,H.vinoth,ஓடிடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/4nwguaso/janana.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jana Nayagan ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/4nwguaso/janana.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக முதலமைச்சரும் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமுமான விஜயின் கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்', திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகத் தயாராகியுள்ளது. இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 21 அன்று 'ஜீ5' (Zee5) ஓடிடி தளத்தில் அதிகாரப்பூர்வமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது.</p><h2>திரைய<strong>ரங்குகளில் சாதனை</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/is-sathuranga-vettai-2-finally-hitting-screens-after-long-wait">எச்.வினோத் </a>இயக்கத்தில் பல தடைகளைத் தாண்டி கடந்த ஜூலை 23 அன்று வெளியான 'ஜன நாயகன்', பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. சாக்னில்க் தகவலின்படி, இந்தியாவில் மட்டும் ரூ.227.14 கோடியும், உலகளவில் ரூ.320.34 கோடியும் வசூலித்து மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது.</p><p>கே.வி.என் புரொடக்ஷன்ஸ் சார்பில் வெங்கட் கே நாராயணா தயாரித்த இப்படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி மற்றும் நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைப்பில் விவேக் வரிகளில் உருவான 'தளபதி கச்சேரி' போன்ற பாடல்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றன.</p><h2>அரசியல் <strong>வருகை</strong></h2><p>ஏப்ரல் 2026-இல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜயின் திரையுலகப் பயணத்தின் கடைசித் திரைப்படமாக 'ஜன நாயகன்' அமைந்துள்ளது. தளபதி வெற்றி கொண்டானாக அவரது வழக்கமான துடிப்பான நடனம், சுவாரஸ்யமான சண்டைக்காட்சிகள் மற்றும் மாஸ் நடிப்பால் ரசிகர்களை நெகிழ வைத்துள்ள இத்திரைப்படம், தற்போது ஓடிடி தளத்திற்கு வருவது விஜய் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காலே டெஸ்டில் சோனல் தினுஷா சதம்: முதல் இன்னிங்சில் 284 ரன்களில் ஆல்அவுட் ஆனது இலங்கை</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/galle-test-sonal-dinusha-century-sri-lanka-284-all-out-1st-innings</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/galle-test-sonal-dinusha-century-sri-lanka-284-all-out-1st-innings#comments</comments><guid isPermaLink="false">3e20cd99-7790-4977-a248-ced87a438e9a</guid><pubDate>Mon, 17 Aug 2026 11:44:39 +0000</pubDate><atom:updated>2026-08-17T11:44:39.815Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜடேஜா,jadeja,Galle Test,காலே டெஸ்ட்,Manav suthar,மானவ் சுதர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/nusbzxvf/GalleTest0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காலே டெஸ்ட்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/nusbzxvf/GalleTest0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியா- இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 460 ரன்கள் எடுத்திருந்தது. குல்தீப் யாதவ் 12 ரன்களுடனும், பிரசித் கிருஷ்ணா 1 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.</p><h2>இந்திய முதல் இன்னிங்சில் 462 ரன்களில் ஆல்அவுட்</h2><p>இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய இந்தியா மேலும் 2 ரன்கள் சேர்த்து 462 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இந்திய அணி சார்பில் தேவ்தத் படிக்கல் அதிகபட்சமாக 167 ரன்கள் குவித்தார். கே.எல். ராகுல் 82 ரன்களும், துருவ் ஜுரெல் 51 ரன்களும் சேர்த்தனர்.</p><p>இலங்கை அணி சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 4 விக்கெட்டுகளும், கேஷரா நுவாந்தா 3 விக்கெட்டும், அசிதா பெர்னாண்டோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><h2>தொடக்கத்தில் திணறிய இலங்கை</h2><p>பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. நிஷான் மதுஷ்கா பெர்னாண்டோ, லஹிரு உதாரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். நிஷான் மதுஷ்கா பெர்னாண்டோ ரன்ஏதும் எடுக்காமல் முகமது சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார்.</p><p>அடுத்து வந்த தினேஷ் சண்டிமல் 4 ரன்களிலும், கமிந்து மெண்டிஸ் 14 ரன்கிளலும், லஹிரு உதாரா 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை அணி 59 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.</p><p>5-வது விக்கெட்டுகு்கு தனஞ்ஜெயா டி சில்வா உடன் சோனால் தினுஷா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 31 ரன்கள் சேர்த்தது. தனஞ்ஜெயா டி சில்வா 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது இலங்கை 90 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.</p><h2>சோனல் தினுஷா- நிரோஷன் டிக்வெல்லா அரைசதம்</h2><p>அப்போது 6-வது விக்கெட்டுக்கு சோனல் தினுஷா உடன் நிரோஷன் டிக்வெல்லா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடியை இந்திய பந்து வீச்சாளர்கள் வீழ்த்த கடும் சிரமப்பட்டனர்.</p><p>டிக்வெல்லா 67 பந்திலும், தினுஷா 92 பந்திலும் அரைசதம் அடித்தனர். இறுதியாக 236 ரன்கள் எடுத்திருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. நிரோஷன் டிக்வெல்லா 80 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.</p><h2>சோனல் தினுஷா 100 ரன்கள்</h2><p>அதன்பின் இலங்கை அணி விக்கெட்டுகளை மளமளவென இழந்தது. கேஷரா நுவாந்தா 2 ரன்களிலும், பிரபாத் ஜெயசூர்யா 10 ரனகளிலும், லஹிரு குமாரா 10 ரன்களிலும் ஆட்டமிழந்தார். சோனல் தினுஷா சரியாக 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 284 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.</p><h2>மானவ் சுதர் 4 விக்கெட்</h2><p>இந்திய அணி சார்பில் மானவ் சுதர் 4 விக்கெட்டும், ரவிந்தீர ஜடேஜா 3 விக்கெட்டும், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p>178 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்க இருக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>பாஜக-வின் தேசிய துணைத் தலைவர்களாக 13 பேர் நியமனம்</title><link>https://www.maalaimalar.com/news/national/bjp-appoints-13-national-vice-presidents-piyush-goyal-named-national-treasurer</link><comments>https://www.maalaimalar.com/news/national/bjp-appoints-13-national-vice-presidents-piyush-goyal-named-national-treasurer#comments</comments><guid isPermaLink="false">2cd9f0c9-7c79-4046-a18c-0098ac88e3da</guid><pubDate>Mon, 17 Aug 2026 11:41:09 +0000</pubDate><atom:updated>2026-08-17T11:41:09.087Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/8zlnxomu/Untitled-design-70.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பாஜகவில் 13 தேசிய துணைத் தலைவர்கள் நியமனம்]]></media:title><media:description type="html"><![CDATA[ BJP National Leadership ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/8zlnxomu/Untitled-design-70.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின் தலைமையில் செயல்படவுள்ள தேசிய துணைத் தலைவர்கள், பொது செயலாளர்கள் மற்றும் தேசிய செயலாளர்கள் உள்ளிட்ட குழு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த பட்டியலில் பொருளாளர்கள், மத்திய அலுவலக பொறுப்பாளர்கள் மற்றும் பல்வேறு மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ஆகிய உயர் பதவிகளுக்கு பொறுப்பாளர்களை பாரதிய ஜனதா கட்சி நியமித்துள்ளது.</p><p>உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநிலத்தின் பொதுச் செயலாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை இணை அமைச்சராக இருந்த பியூஷ் கோயல், கட்சியின் தேசிய பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.</p><h3><strong>தேசிய துணைத் தலைவர்கள்</strong></h3><p>பாஜக-வின் தேசிய துணைத் தலைவர்களாக 13 பேர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.</p><p>வசுந்தரா ராஜே சிந்தியா, தீரத் சிங் ராவத், ராம் மாதவ், பைஜ்யந்த் ஜெய் பாண்டா, டி புரந்தேஸ்வரி, ரேகா வர்மா, வர்ஷாபென் நரேந்திரபாய் தோஷி, பார்தி பிரவின் பவார், மன்பிரீத் சிங் பாதல், லால் சிங் ஸ்ம்ரி ஆர்யா, நாகராஜா, தாரிக் மன்சூர் மற்றும் மதுசந்திர கர் உள்ளிட்ட 13 பேர் தேசிய துணைத் தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.</p><p>பி.எல். சந்தோஷ் தேசிய பொதுச் செயலாளராக தொடர்ந்து நீடிக்கிறார். வினாத் தாவ்டே மற்றும் ஸ்மிருதி இரானி ஆகியோர் எட்டு தேசிய பொதுச் செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளனர்.</p><p>ஒரு தசாப்தத்திற்கும் மேலாக சமூக ஊடக ஒருங்கிணைப்பாளராக இருந்த அமித் மால்வியாவிற்கு பதிலாக சத்தீஸ்கரைச் சேர்ந்த தீபக் மஸ்கே அந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.</p><h3><strong>சமூக ஊடகம்</strong></h3><p>அதேசமயம், அனில் பலூனி பாஜகவின் ஊடக ஒருங்கிணைப்பாளராகத் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிரீத்தி காந்தி, டெல்லியைச் சேர்ந்த சிவானந்த் திவேதி, உத்தரகாண்டைச் சேர்ந்த அலோக் பட் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த அருண் யாதவ் ஆகியோர் சமூக ஊடக ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.</p><p>மேலும், யுவ மோர்ச்சா தலைவராக பெங்களூரு தெற்கு எம்பி தேஜஸ்வி சூர்யாவுக்கு பதிலாக ஹேமங் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>சத்தீஸ்கரைச் சேர்ந்த ரூப் குமாரி சௌத்ரி மகளிர் அணியின் புதிய தலைவராகவும், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த குன்வர் பாசித் அலி சிறுபான்மையினர் அணியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>த்ரில்லர் கதைகளில் புதிய கட்டமைப்பு: &apos;வதந்தி 2&apos; அனுபவம் குறித்து தயாரிப்பாளர்கள் புஷ்கர்-காயத்ரி பேட்டி!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/new-structure-in-thriller-stories-vadhandhi-2-experience-producers-pushkar-gayathri-interview</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/new-structure-in-thriller-stories-vadhandhi-2-experience-producers-pushkar-gayathri-interview#comments</comments><guid isPermaLink="false">bf4fd16f-a114-42c1-ac8a-1a08dedff0ea</guid><pubDate>Mon, 17 Aug 2026 11:25:34 +0000</pubDate><atom:updated>2026-08-17T11:25:34.111Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சசிகுமார்,Sasikumar,காயத்ரி,gayathri,Vadhandhi 2,வதந்தி 2,Pushkar,புஷ்கர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/ddyi4apo/vadhanthi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vadhandhi 2 ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/ddyi4apo/vadhanthi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ள 'வதந்தி: தி மிஸ்டரி ஆஃப் மணி' தொடரின் கிரியேட்டிவ் புரொடியூசர்களான புஷ்கர்-காயத்ரி தம்பதியினர், தொடரின் திரைக்கதை உருவாக்கம் மற்றும் த்ரில்லர் கதைகளில் உள்ள சுவாரஸ்யங்கள் குறித்து நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.</p><p>கிராமப்புறப் பகுதிகளில் நடக்கும் குற்றப் புலனாய்வுகள் நவீனத் தொழில்நுட்பங்களை விடவும், காவல் அதிகாரிகளின் அனுபவம் மற்றும் மனித உள்ளுணர்வை நம்பியே அதிகம் நகர்கின்றன. வதந்தி தொடரின் முதல் பாகமான 'வேலோனியின் கதை' அமைந்த அதே பாணியில், இந்த இரண்டாம் பாகத்திலும் '<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/susindran-directs-shanthanu-seeman-new-film-oru-kaithiyin-diary-poster-release">மூசா ராசா</a>' என்ற காவல் அதிகாரியின் உள்ளுணர்வை மையமாக வைத்துதான் கதை நகர்த்தப்பட்டுள்ளது. தடய அறிவியல் ஆய்வகங்கள் மற்றும் நீதிமன்ற முடிவுகளிலும்கூட மனித அனுமானங்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன.</p><h2>வதந்திகளும் தவ<strong>றான புரிதல்க</strong>ளும் </h2><p>இத்தொடரில் காட்டப்படும் சம்பவங்கள் மற்றும் தகவல்கள் எந்தவித உள்நோக்கமும் இன்றி சாதாரணமாக மனிதர்களால் பேசப்படுபவை. ஆனால், ஒருவரைப் பற்றி முதன்முதலில் கேள்விப்படும் செய்தியை மக்கள் அப்படியே நம்பும்போது அது எங்கு போய் முடிகிறது என்பதைத்தான் கதையின் முதன்மைப் பொருளாக எடுத்துக்கொண்டுள்ளோம். உலகில் யாருமே முற்றிலும் சரியானவர்களும் இல்லை, முற்றிலும் தவறானவர்களும் இல்லை என்ற எங்களின் உலகப் பார்வையே இத்தொடரிலும் பிரதிபலிக்கிறது.</p><h2>சிகை அலங்கா<strong>ரம் மூலம் பே</strong>சப்பட்ட மனித உரிமை</h2><p>இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இத்தொடரில் மூசா ராசா என்ற கதாபாத்திரத்தை வடிவமைத்த விதம் மிகவும் இயல்பானது. ஒரு காவல் அதிகாரி தாடி வைத்துக்கொள்ளத் துறை ரீதியாக அனுமதி கோரும் உண்மையான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இக்கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது. தனது உரிமைக்காகத் துறையை எதிர்த்து நிற்கும் மூசா ராசாவின் குணாதிசயம், 'மணி' என்பவனின் இன்னொசென்ஸை நிரூபிக்க அவர் எடுக்கும் போராட்டத்திற்குப் பெரும் சான்றாக அமைகிறது.</p><p>இன்றைய காலகட்டத்தில் ரசிகர்கள் ஏராளமான த்ரில்லர் கதைகளையும் வெப் தொடர்களையும் பார்த்துப் பழகிவிட்டனர். அதனால் பார்வையாளர்களுக்குத் தெரிந்த த்ரில்லர் பாணியில் இருந்து விலகி புதிய கட்டமைப்புடன் கதையை உருவாக்க வேண்டியிருந்தது. 'முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது' போல, ஆரம்பத்தில் ஒரு நம்பகமான காரணத்தைக் காட்டி பார்வையாளர்களை நம்ப வைத்து, பின்னர் திடீரென திருப்பங்களை ஏற்படுத்தி கதையின் உண்மைத் தன்மையை உடைப்பதுதான் வதந்தி தொடரின் சிறப்பு.</p><p>சென்னையைத் தாண்டி கன்னியாகுமரி, கோவில்பட்டி மற்றும் மதுரை போன்ற களங்களில் கதையை அமைப்பது எங்களுக்குப் பெருமகிழ்ச்சியைத் தருகிறது. அப்பகுதி மக்களின் வட்டார வழக்கு மற்றும் வாழ்க்கை முறையைத் துல்லியமாகப் படம்பிடிப்பது சவாலானது என்றாலும், அதுவே கதையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது. கதாபாத்திரங்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும், பிரதான குற்றப் பின்னணியையும் ஒன்றாக இணைத்து ஒரு பெரிய உலகத்தை உருவாக்குவதே நீண்ட கதைக்களங்களை  நோக்கி எங்களை ஈர்க்கிறது.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் ஊழல் புகார்- காரசார விவாதம்: அமைச்சர் அருண்ராஜ் பேச்சுக்கு திமுக, அதிமுக கடும் எதிர்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-arunraj-remarks-trigger-dmk-aiadmk-protest-in-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-arunraj-remarks-trigger-dmk-aiadmk-protest-in-assembly#comments</comments><guid isPermaLink="false">273bad99-1e24-4747-a44c-f7af95f86042</guid><pubDate>Mon, 17 Aug 2026 11:19:19 +0000</pubDate><atom:updated>2026-08-17T11:19:19.122Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,ev velu,எவ வேலு,TN assembly,அமைச்சர் அருண்ராஜ்,Minister Arunraj</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/uh5esrcr/Arunraj.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Arunraj]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/uh5esrcr/Arunraj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில், சுகாதாரத்துறை மானிய கோரிக்கையின் மீது அமைச்சர் அருண்ராஜ் பதில் அளித்தார்.</p><p>அப்போது,"திமுக ஆட்சியில் பல நல்ல திட்டங்கள் கொண்டு வந்தாலும் லஞ்சத்தை எதார்த்தமாக மாற்றி விட்டார்கள். அதுதான் பிரச்சனை" என்றார்.</p><p>கடந்த ஆட்சியாளர்கள் ஊழலை அன்றாட வாழ்வின் எதார்த்தமாக பார்த்ததாக அமைச்சர் அருண்ராஜ் பேசியதற்கு கண்டனம் தெரிவித்தனர்.</p><p>ஊழலை எதார்த்தமாக பார்த்த கடந்த ஆட்சியாளர்கள் என அமைச்சர் அருண்ராஜ் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.</p><p>அப்போது, எந்த கட்சி என்றே அமைச்சர் அருண்ராஜ் குறிப்பிடவில்லை, ஊழல் என்றால் திமுகவினர் கத்துவது ஏன் என அமைச்சர் ஆனந்த் கேள்வி எழுப்பினார்.</p><p>மேலும்," கடந்த ஆட்சியாளர்களில் அதிமுகவும் உள்ளனர். அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள், திமுகவினர் ஏன் அமளி" எனவும் அமைச்சர் ஆனந்த் கேள்வி எழுப்பினார்.</p><p>மதவாத சக்தியை எதிர்த்தால் போதும், ஊழல் ஒரு பொருட்டல்ல என்பது அரை நூற்றாண்டில் தமிழகத்தின் வேதனை.</p><p>ஊழல் இல்லா ஆட்சி தருவோம் என நம்பிக்கையுடன் முதலமைச்சர் சொல்ல காரணம் நாங்கள் நேர்மையாக தேர்தலை சந்தித்து வென்றதுதான்.</p><p>கட்சி தொடங்கும் முன்னே ஓட்டுக்கு பணம் இல்லை என்பதை முதலமைச்சர் விஜய் நின்று நிரூபித்தார். </p><p>நல்ல அரசியலுக்கு தமிழ்நாட்டு மக்கள் என்று உறுதுணையாக இருப்பார்கள் என்பதை முதலமைச்சர் விஜய் முழுமையாக நம்பினார். </p><p>முதல்கோணல் முற்றுலும் கோணல் என்பது போல் ஊழல் கலாச்சாரத்திற்கு தேர்தலில் லஞ்சம் கொடுப்பது முதல் விஷயம்.</p><h2>யாரை ஊழல்வாதி என்கிறீர்கள்?- எ.வ.வேலு கேள்வி</h2><p>ஊழல் செய்தார்கள் என யாரை கூறுகிறீர்கள், அண்ணாவையா? எம்ஜிஆரையா? ஜெயலலிதாவையா, கலைஞரயைா?</p><p>கடந்த கால ஆட்சியாளர்கள் என குறிப்பிடும் அமைச்சர் அருண்ராஜ் திராவிட இயக்கங்களை குறிப்பிட்டு யாரை பேசுகிறார்?</p><h2>ஓ.எஸ்.மணியன்</h2><p>ஊழல் வழக்குகள் உள்ள இரண்டு முன்னாள் அமைச்சர்களை தவெகவில் சேர்த்துக்கொண்டீர்களே.</p><p>ஊழலை பற்றிபேசும் அருகதை தவெகவிற்கு கிடையாது.</p><h2>சபாநாயகர் அறிவுரை</h2><p>தகுந்த ஆதாரத்துடன் ஊழல் என குறிப்பிட்டு பேச வேண்டும், பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது.</p><p>ஊழல் குறித்து அமைச்சர் பேசியதும் அதற்கு திமுக, அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சபாநாயகர் அறிவுரை வழங்கினார்.</p><p>ஊழல் குறித்து நடத்தப்பட்ட அனைத்து பேச்சும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் உறுப்பினர்களுக்கு அறிவுரை வழங்கினார்.</p>]]></content:encoded></item><item><title>21 சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் ஒரு நாளைக்கு 63,810 டன் எல்பிஜி உற்பத்தி: மத்திய அரசு திட்டம் </title><link>https://www.maalaimalar.com/news/national/india-63-810-tonnes-lpg-daily-output-from-21-refineries-petroleum-ministry</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-63-810-tonnes-lpg-daily-output-from-21-refineries-petroleum-ministry#comments</comments><guid isPermaLink="false">e26566d2-7952-4a75-9ce1-8d67f06e5501</guid><pubDate>Mon, 17 Aug 2026 10:58:32 +0000</pubDate><atom:updated>2026-08-17T10:58:32.337Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>LPG,எல்பிஜி,ministry of petroleum,பெட்ரோலிய அமைச்சகம்,LPG production,எல்பிஜி உற்பத்தி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/1rrdvnul/Untitled-design-69.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ இந்தியாவில் எல்பிஜி உள்நாட்டு உற்பத்தி உயர்வு]]></media:title><media:description type="html"><![CDATA[ India LPG Production]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/1rrdvnul/Untitled-design-69.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் சமையல் எரிவாயு பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இறக்குமதி செய்யப்படும் எல்.பி.ஜி. தேவையும் அதிகரித்து காணப்படுகிறது. இதற்கிடையில் எல்.பி.ஜி. வெளிநாட்டு விநியோகத்தில் தடைகள் ஏற்படும்போது, அதனை சமாளிக்கும் வகையில் உள்நாட்டு எல்.பி.ஜி. உற்பத்திக்கான ஒரு புதிய மாற்று கட்டமைப்பை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>இந்த நடவடிக்கை வீடுகளில் சமையல் எரிவாயு கிடைப்பதை உறுதி செய்வதையும், திடீர் இறக்குமதி பற்றாக்குறையால் நாட்டு மக்கள் பாதிக்கப்படுவதை குறைப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது.</p><p>பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் ஆகஸ்ட் 13 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, 21 சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் மூல உற்பத்தியாளர்களுக்கு ஒரு நாளைக்கு சுமார் 63,810 டன் ஒருங்கிணைந்த எல்பிஜி உற்பத்தி திறன் ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>இது இந்தியாவின் வழக்கமான உள்நாட்டு உற்பத்தி அளவை விட கணிசமான அளவில் அதிகமாகும். மேலும் இந்த உற்பத்தி நாட்டின் தினசரி எல்.பி.ஜி. தேவையில் 70 சதவீதத்தை நோக்கமாக கொண்டு உற்பத்தி செய்யப்பட உள்ளது.</p><h3><strong>எல்பிஜி தட்டுப்பாடு</strong></h3><p>மேற்கு ஆசியாவில் சமீப காலமாக ஏற்பட்டுள்ள பதற்றத்தால் எரிவாயு இறக்குமதி பாதிக்கப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு உள்நாட்டு எல்.பி.ஜி. உற்பத்தியை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.</p><p>இந்தியாவில் எரிவாயு உற்பத்தி செய்வதை விட, மிக அதிகளவில் எல்பிஜி பயன்படுத்தப்பட்டு வருகிறது.</p><h3><strong>எல்பிஜி தேவை</strong></h3><p>கடந்த 2025-2026ஆம் நிதியாண்டில், நாடு சுமார் 33.2 மில்லியன் டன் எல்பிஜி-யை பயன்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் உள்நாட்டு உற்பத்தி தோராயமாக 13.1 மில்லியன் டன்களாக இருந்தது.</p><p>எனவே இந்த தேவையை பூர்த்தி செய்யும் வகையில், வெளிநாட்டில் இருந்து கணிசமான அளவில் எல்.பி.ஜி. இறக்குமதி செய்யப்பட்டது.</p><p>இந்தியா கடந்த நிதியாண்டில் சுமார் 21.3 மில்லியன் டன் எல்பிஜியை இறக்குமதி செய்துள்ளது. இது உள்நாட்டு சந்தை, வெளிநாட்டு விநியோகங்களை எந்த அளவிற்கு சார்ந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது.</p><p>இந்தியாவில் 2026 நிதியாண்டில் சராசரி உள்நாட்டு எல்.பி.ஜி. உற்பத்தி ஒரு நாளைக்கு சுமார் 35,900 டன்களாக இருந்தது. இதனை கருத்தில் கொண்டு ஒரு நாளைக்கு சுமார் 63,810 டன்கள் என்ற அதிகபட்ச கொள்ளளவு ஒதுக்கப்பட்டுள்ளது.</p><h3><strong>ரிலையன்ஸ் உள்நாட்டு உற்பத்தி</strong></h3><p>இந்த கட்டமைப்பின் கீழ் ரிலையன்ஸின் ஜாம்நகர் சுத்திகரிப்பு ஆலைக்கு மிகப்பெரிய தனிப்பட்ட அளவில் ஒரு நாளைக்கு சுமார் 18,000 டன் எல்பிஜி உற்பத்தி திறன் ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>இதற்கிடையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களால் இயக்கப்படும் 18 சுத்திகரிப்பு நிலையங்கள் ஒன்றிணைந்து ஒரு நாளைக்கு சுமார் 31,470 டன்கள் எண்ணெயை சுத்திகரிக்கின்றன.</p><p>நயாரா எனர்ஜியின் வதினார் சுத்திகரிப்பு ஆலைக்கு ஒரு நாளைக்குச் சுமார் 4,480 டன்கள் உற்பத்தி பணி ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>இத்திட்டத்தின் கீழ், ONGC மற்றும் GAIL இந்தியா உள்ளிட்ட மூல உற்பத்தி மற்றும் எரிவாயுத்துறை உற்பத்தியாளர்கள் இணைந்து, ஒரு நாளைக்கு மேலும் சுமார் 6,460 டன்கள் உற்பத்தி செய்கின்றனர்.</p><p>இந்த விநியோகமானது, அவசர காலங்களில் கூடுதல் வீட்டு உபயோக எல்.பி.ஜி. எங்கிருந்து கிடைக்கக்கூடும் என்பது குறித்து அதிகாரிகளுக்கு ஒரு தெளிவான கண்ணோட்டத்தை அளிக்கிறது.</p>]]></content:encoded></item></channel></rss>