<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 30 Jul 2026 07:30:42 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-30-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-30-july-2026#comments</comments><guid isPermaLink="false">bf0c91f5-aaf3-410c-a1d3-867674186d8c</guid><pubDate>Thu, 30 Jul 2026 04:27:27 +0000</pubDate><atom:updated>2026-07-30T07:21:25.190Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/f9fzok5j/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/f9fzok5j/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-announced-dmk-protest-against-tvk-govt-on-august-3rd">த.வெ.க. அரசைக் கண்டித்து ஆக. 3-ல் தஞ்சாவூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு</a></p><p>* மாநிலத்தின் முக்கியப் பிரச்சனையில் யார் குரலையும் கேட்காமல் indifferent ஆகவும், inactive ஆகவும் இந்த அரசு இருப்பது நல்லதல்ல.</p><p>* அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கும் தி.மு.க.தான் அழைப்பு விடுக்க வேண்டும் என முதலமைச்சர் எதிர்பார்க்கிறாரா? அரசால் முடியாது என்றால் சொல்லிவிடுங்கள்; </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-super-speciality-seats-to-central-pool-controversy" rel="nofollow">சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்கள்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்</a></p><p>*  திமுக ஆட்சியில் எந்த எதிர்ப்பும் இன்றி மத்திய அரசிற்கு சரண்டர் செய்யப்பட்டன.</p><p>* கட் ஆஃப் அதிகமாக இருப்பதால் மாணவர்களை முழுமையாக சேர்க்க முடியவில்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/grammy-racism-row-bts-to-boycott-after-recording-academy-adds-separate-best-asian-pop-category">இனப்பாகுபாடு?.. அடுத்த ஆண்டு கிராமி விருதுகளை புறக்கணித்த BTS இசைக்குழு</a></p><p>*ஜின், சுகா, ஜே ஹோப், ஜிமின், வி, ஜங்குக் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.</p><p>*கிராமி விருதுகளுக்கு தங்கள் படைப்பை சமர்ப்பிக்க போவதில்லை என்று அறிவித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/plan-for-officials-to-conduct-on-site-inspections-of-370-lakh-houses">மின் கட்டண உயர்வு புகார்: 3.70 லட்சம் வீடுகளில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய திட்டம்</a></p><p>* மின் கட்டண உயர்வு புகார் வந்ததை தொடர்ந்து 3.70 லட்சம் வீடுகளில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய மின்சார வாரியம் உத்தரவிட்டு உள்ளது.</p><p>* ஆய்வின்போது ஏதேனும் தவறுகள் கண்டறியப்பட்டால், அவற்றை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-anticipatory-bail-petition-dismissed">டாஸ்மாக் முறைகேடு வழக்கு : செந்தில் பாலாஜியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி</a></p><p>* முறைகேடு நடந்துள்ளதற்கும், அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதற்கும் ஆதாரங்கள் உள்ளன. </p><p>* குற்றம்சாட்டப்பட்டவர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர் என்பதற்கு முகாரந்திரம் உள்ளது. </p> <p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/ajinkya-rahane-retirement-india-batter-quits-all-formats-of-international-cricket">சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் ரஹானே!<br></a></p><p>*அஜிங்க்யா' என்றால் 'வெல்ல முடியாதவன்' என்று பொருள்.</p><p>* கேப் எண் 278 (ரஹானேவின் தொப்பி எண்), இத்துடன் விடைபெறுகிறது.   <br></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/assam-flood-death-toll-rises-to-78-heavy-rain-warning-issued">அசாம் வெள்ளப்பெருக்கில் உயிரிழப்பு எண்ணிக்கை 78 ஆக உயர்வு: கனமழை எச்சரிக்கை விடுத்தது வானிலை மையம்!...</a></p><p>*மாநிலம் முழுவதும் '3,00,031 பேர்' வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>*அசாம் மற்றும் அதன் சுற்றியுள்ள வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்கு மேலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-praise-to-doctor-muthulakshmi-reddy-birthday">டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாள்- முதலமைச்சர் விஜய் புகழாரம்</a></p><p>* முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.  </p><p>* பெண்களின் சமூக முன்னேற்றத்திற்காகவும் ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும் முத்துலட்சுமி ரெட்டி ஆற்றிய மகத்தான சேவைகளை அவர் நினைவு கூர்ந்துள்ளார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/cjp-new-protest-warning-delhi-jantar-mantar-security">CJP புதிய போராட்டம் எச்சரிக்கை: டெல்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் உச்சகட்ட பாதுகாப்பு!</a></p><p>*தற்போது நிலுவையில் உள்ள வழக்குகளை மையமாக வைத்து மீண்டும் அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.</p><p>*பாஜனதா ஆளும் மாநிலங்களில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கைது செய்யப்பட்டு வருவதாக சிஜேபி குற்றம் சாட்டியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/nasa-to-livestream-total-solar-eclipse-on-august-12">ஆகஸ்ட் 12-ல் முழு சூரிய கிரகணத்தை நேரலையில் ஒளிபரப்பும் நாசா!</a></p><p>*சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு கடந்து செல்லும் போது, நிலவின் நிழல் பூமியின் மீது விழுவதால் இந்த முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது.</p><p>*இந்திய நேரப்படி ஆகஸ்ட் 12 ஆம் தேதி இரவு இந்த நிகழ்வு நடைபெறுவதால், இந்தியாவில் இதனை நேரில் பார்க்க முடியாது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-metro-phase-2-works-cm-vijay-orders-speedy-completion">சென்னை மெட்ரோ 2-ம் கட்டப் பணிகள்: விரைந்து முடிக்க முதலமைச்சர் விஜய் உத்தரவு!... </a></p><p>*கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகள், அவசரகால பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பயணிகளுக்கான வசதிகளை விரிவாகக் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.</p><p>*முதலமைச்சரைக் கண்ட பயணிகள் அவருடன் ஆர்வத்துடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/pok-human-rights-abuses-over-30-civilians-killed-in-pakistan-security-forces-firing">POK பேரணி.. பாகிஸ்தான் பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் 30 பொதுமக்கள் பலி</a></p><p>*இணையம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளை பாகிஸ்தான் அரசு முற்றிலும் முடக்கியுள்ளது.</p><p>* 33க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/us-iran-airstrikes-us-hits-iranian-targets-after-jordan-base-missile-attack">ஜோர்டான் சம்பவத்துக்கு பதிலடி.. ஈரான் மீது மீண்டும் முழுவீச்சில் அமெரிக்கா தாக்குதல்</a></p><p>*டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு இடையேயான சந்திப்பைத் தொடர்ந்து தாக்குதல்கள் மீண்டும் தொடங்கியுள்ளன</p><p>* குடியிருப்புப் பகுதி மீது ஏவுகணை தாக்கியதாகவும் ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-diesel-prices-in-chennai">சென்னையில் இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்</a></p><p>*பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.</p><p>*கடல்வழிப்பாதையில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/telegram-international-warrant-shock-russia-targets-pavel-durov-over-alleged-terror-support">பயங்கரவாதத்திற்கு உதவியதாக டெலிகிராம் நிறுவனருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த ரஷியா</a></p><p>*ரஷியாவில் பிறந்த பாவெல் தற்போது பிரஞ்சு, ஐக்கிய அரபு அமீரக குடியுரிமையைக் கொண்டு வெளிநாட்டில் வாழ்ந்து வருகிறார்.</p><p>*பிரான்சிலும் துரோவ் மீது விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-30-07-2026">GOLD PRICE TODAY : இன்று அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... எவ்வளவு தெரியுமா?</a></p><p>* சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. </p><p>* ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-irregularities-case-senthil-balajis-anticipatory-bail-plea">டாஸ்மாக் முறைகேடு வழக்கு- செந்தில் பாலாஜி முன்ஜாமின் கோரி மனு</a></p><p>* டாஸ்மாக் மதுபான கொள்முதல், டெண்டர் உள்ளிட்டவற்றில் மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி, டாஸ்மாக் முன்னாள் எம்.டி.விசாகன் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. </p><p>* டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தி.மு.க. முன்னால் அமைச்சர் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமின் மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/notice-issued-to-woman-who-worked-for-125-days-demanding-tax-payment-of-rs-2-75-crore">ஊரக வேலை திட்டத்தில் பணியாற்றும் பெண்ணுக்கு ரூ.2.75 கோடி வரி செலுத்தும்படி நோட்டீஸ்</a></p><p>* தனது வங்கி கணக்கு முடக்கப்பட்டதால் அதில் இருந்து கூலி பணத்தை எடுக்க முடியாமல் திரும்பி உள்ளார்.</p><p>* 125 நாள் வேலை செய்யும் பெண்ணுக்கு ரூ.2.75கோடி ஜி.எஸ்.டி. செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் சிக்கன் கடைகள் 
நாளை வழக்கம் போல் செயல்படும்- வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-chicken-shops-to-remain-open-despite-shutdown-call</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-chicken-shops-to-remain-open-despite-shutdown-call#comments</comments><guid isPermaLink="false">454ac728-5da0-48ec-8fe4-3f1197af4b11</guid><pubDate>Thu, 30 Jul 2026 07:30:19 +0000</pubDate><atom:updated>2026-07-30T07:30:19.636Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,Chicken,சிக்கன் தடை,வியாபாரிகள் சங்கம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/ec2vg0iu/chicken.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chicken]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/ec2vg0iu/chicken.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை (வெள்ளிக் கிழமை) கோழி கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>விற்பனைக்கு கொண்டு வரப்படும் கோழிகளுக்கு குறிப்பிட்ட நாட்களுக்கு முன்பு தீவனம் வழங்கக் கூடாது. அதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு கோழி கறி விற்பனையாளருக்கு  தொழில் ரீதியாக நஷ்டம் ஏற்படுவதாக கூறி இந்த கடை அடைப்பு போராட்டத்தை அறிவித்தனர். </p><p>திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் நாளை கடைகள் அடைக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>தமிழகத்தில் அதிக அளவு <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF" rel="nofollow">கோழி கறி</a> விற்பனை செய்யும் நகரமாக சென்னை தலைநகரம் இருப்பதால்  கடைகளை மூடினால் கடுமையான பாதிப்பு ஏற்படக்கூடும் என்று கருதி சென்னை கோழி மொத்த வியாபாரிகள் சங்கம் நாளை கோழிக்கறி கடைகள் வழக்கம் போல் செயல்படும். மூடப்பட மாட்டாது என்று  தெரிவித்துள்ளது. </p><p>சென்னையில் 8 ஆயிரம் கோழி கடைகள் செயல்பட்டு வருகின்றன. தினமும் 600 டன் கோழிக்கறி விற்பனை செய்யப்படுகிறது.  அதாவது 6 லட்சம் கிலோ  கோழிகள் உயிரோடு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>இதுகுறித்து சங்கத்தின் பொதுச்செயலாளர் ஞானம் கூறியதாவது:- </p><p>தமிழ்நாடு கோழி மொத்த விற்பனையாளர்கள் சங்கம் எடுத்துள்ள முடிவு சென்னை  பெருநகருக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். </p><p>பொதுமக்கள் மட்டுமல்லாது ஓட்டல்கள், சிறு சிறு சில்லறை விற்பனையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். </p><p>ஒரு நாள் கோழிக் கடை களை அடைத்தால் கூட கோழி தொழில் சார்ந்தவர்கள் மட்டுமல்லாது ஓட்டல் தொழிலும் கடுமையான  பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். அதனால்  எங்களது கோரிக்கை குறித்து  கோழி பண்ணையாளர்களிடம் ஆலோசிக்கப்பட்டு இருக்கிறது. நல்ல முடிவு எதிர்பார்க்கப்படுகிறது. எனவே சென்னையில் நாளை கோழி கறி கடைகள் வழக்கம் போல் செயல்படும். </p><p>இவ்வாறு அவர் கூறினார். </p><p>சென்னையையொட்டி உள்ள காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் கோழிக்கடைகள் நாளை மூடப்படாது. </p><p>சென்னை மாவட்டத்தை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளில் தான் அதிகளவு கோழி இறைச்சி கடைகள் இயங்குகிறது. </p><p>சிறு ஓட்டல்கள் முதல் நட்சத்திர ஓட்டல்கள் வரை <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-consult-with-chicken-biryani-with-nutritious-meal-for-government-school-students" rel="nofollow">கோழி இறைச்சி </a>பயன்பாடு உள்ளது.  அதனால் சென்னையையொட்டிய புறநகர் பகுதியில் வழக்கம் போல் நாளை கோழிக்கடைகள் செயல்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. அரசைக் கண்டித்து ஆக. 3-ல் தஞ்சாவூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-announced-dmk-protest-against-tvk-govt-on-august-3rd</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-announced-dmk-protest-against-tvk-govt-on-august-3rd#comments</comments><guid isPermaLink="false">54e136d7-8591-468e-8e0d-23d3e0117b09</guid><pubDate>Thu, 30 Jul 2026 07:18:30 +0000</pubDate><atom:updated>2026-07-30T07:18:30.140Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,மேகதாது அணை,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/1vdvj5cl/MKStalin09.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/1vdvj5cl/MKStalin09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தி.மு.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/முக-ஸ்டாலின்">மு.க.ஸ்டாலின்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>வேதனை தரும் த.வெ.க. ஆட்சி! விவசாயிகள் படும் துன்பமே அதற்கு சாட்சி! என நாட்டின் முதுகெலும்பாய் விளங்கும் விவசாயிகளை வீதிகளில் போராடவிட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்.</p><h2><strong>கடன் தள்ளுபடியில் ஏமாற்றம்</strong></h2><h3><strong>தேர்தலுக்கு முன்பு</strong></h3><p>“5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்கள் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும். 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்களில் 50 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும்.”</p><h2><strong>தேர்தலுக்குப் பின்பு</strong></h2><p>50 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே முழுக் கடன் தள்ளுபடி என்ற வெற்று அறிவிப்பை வெளியிட்டு, அதன் காரணமாக விவசாயிகள் வெகுண்டெழுந்து தற்போது வரை போராட்டம் நடத்திக் கொண்டிருப்பதால், 75 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே முழுக் கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டது.</p><p>சொன்னதைச் செய்ய நேரம் கேட்ட முதலமைச்சர், இன்னும் எவ்வளவு நேரம் வேண்டும் என்றாவது விவசாயிகளிடம் சொல்லியிருக்க வேண்டும்.</p><h2><strong>மேகதாது விவகாரத்தில் த.வெ.க. அரசின் செயல்படா நிலை</strong></h2><p>தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்தே மேகதாது அணை கட்டுவதில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது.</p><p>ஜூன் 11: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை கர்நாடக முதலமைச்சர் நேரில் சந்தித்து மேகதாது நிதியுதவி கோரி மனு அளித்துள்ளார்.</p><p>ஜூன் 12: ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சரை நேரில் சந்தித்து <a href="https://www.maalaimalar.com/topic/மேகதாது-அணை">மேகதாது</a> திட்டத்துக்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்தினார்.</p><p>ஜூலை 27: டெல்லியில் கர்நாடகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பி.க்களுடன் கூட்டம் நடத்தி, மேகதாது அணை கட்டக் கடைமடை மாநிலங்களின் அனுமதி தேவையில்லை என நாடாளுமன்றத்தில் ஒன்றிய ஜல்சக்தி துறை தெரிவித்த பதிலை மேற்கோள் காட்டிப் பேசியுள்ளார்.</p><p>அதேநாளில், கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி, கர்நாடக அரசின் டெல்லி பிரதிநிதி, கர்நாடக அரசின் தலைமை வழக்கறிஞர் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் மேகதாது அணை தொடர்பான ஆய்வுக் கூட்டத்தையும் நடத்தியுள்ளார்.</p><p>ஊடகங்களிடம் தொடர்ந்து மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் எனவும், தமிழ்நாடு அரசின் அனுமதி தேவையில்லை எனவும் பேசி வருகிறார்.</p><p>இதற்கு மாறாக, இவ்விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பிரதமருக்குக் கடிதம் எழுதியதோடு தனது கடமை முடிந்துவிட்டது என மவுனம் காத்து வருகிறார்.</p><p>இதற்கிடையில், தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடகம் சென்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என்று வேளாண் துறை அமைச்சர் சொன்னார். பின்னர் அவரும் இன்னும் சிலரும் இல்லை என்று மறுத்தார்கள்.</p><p>இப்போது தமிழ்நாடு சார்பில் சில விவகாரங்கள் தொடர்பாகத் தமிழ்நாடு முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளதாக, கர்நாடக முதலமைச்சரே தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடக செல்வதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில், காவிரியில் நமக்கு உரிய பங்கினை வழங்க காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டும், அதனை நிறைவேற்ற முடியாது என்று கர்நாடக மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் இன்னும் வாய் திறக்காமல் இருக்கிறார்.</p><p>அதுமட்டுமல்ல, மேகதாது விவகாரம் தொடர்பாக ஒரு தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தின் மூலம் வலியுறுத்தி இருக்கின்ற நிலையில், இந்த கர்நாடக பயணம் இதனை நீர்த்துபோகச் செய்யாதா? என்ற கேள்வியும் எழுகிறது.</p><p>இப்படி இந்த அரசைப் பொறுத்தவரையில் எந்தத் தகவல்களிலும் தெளிவு இல்லை; எதிலும் வெளிப்படைத்தன்மை இல்லை. எதற்கெடுத்தாலும் குழப்பம்; எல்லாவற்றிலும் ஏமாற்றம். இதுவே இந்த அரசின் வழக்கமாக மாறியிருக்கிறது.</p><p>தனது திரைப்படம் கர்நாடகம் வெளியாவதில் சிக்கல் ஏற்படக் கூடாது என்பதற்காகவே முதலமைச்சர் இதுகுறித்து வெளிப்படையாகப் பேசாமல் அமைதி காப்பதாக ஊடகங்களில் ஓயாமல் செய்திகள் வெளியாகின்றன. அதற்கும் எந்தப் பதிலும் இல்லை.</p><h2><strong>அனைத்துக் கட்சிக் கூட்டம்</strong></h2><p>அனைத்துக் கட்சிக் கூட்டத்தோடு, விவசாயச் சங்கப் பிரதிநிதிகளின் கூட்டத்தையும் கூட்டச் சொல்லி, முதலமைச்சருக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகள் உட்பட தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கட்சிகளும், விவசாயச் சங்கங்களும் அரசுக்குக் கோரிக்கை விடுத்தும் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்து வருகிறார் முதலமைச்சர்.</p><p>மாநிலத்தின் முக்கியப் பிரச்சனையில் யார் குரலையும் கேட்காமல் indifferent ஆகவும், inactive ஆகவும் இந்த அரசு இருப்பது நல்லதல்ல.</p><p>அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கும் தி.மு.க.தான் அழைப்பு விடுக்க வேண்டும் என முதலமைச்சர் எதிர்பார்க்கிறாரா? அரசால் முடியாது என்றால் சொல்லிவிடுங்கள்; அதற்கும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.</p><h2><strong>விவசாயிகளின் அடுத்த பெரும் பிரச்சனை</strong> </h2><h3><strong>குறுவை சிறப்பு நிவாரணத் தொகுப்பு</strong></h3><p>கடந்த ஆண்டு 6.5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடந்து சாதனை படைத்த நிலையில், இந்த ஆண்டு மேட்டூர் அணை திறக்கப்படாததால் 1.5 லட்சம் ஏக்கர் சாகுபடி மட்டுமே நடப்பதாகச் செய்திகள் வருகிறது.</p> <p>இதனால் 2,500 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டு 14 இலட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுத் தவிக்கிறார்கள். எனவே அவர்களுக்குக் கீழ்க்கண்ட வகையில் தமிழ்நாடு அரசு நிவாரணத் தொகுப்பினைக் காலம் தாழ்த்தாமல் அறிவித்திட வேண்டும்.</p><p>1) ஏக்கர் ஒன்றுக்குக் குறுவை நிவாரணமாக 25 ஆயிரம் ரூபாய்.</p><p>2) காப்பீட்டுத் திட்டத்துக்கான பிரீமியம் தொகையை அரசே செலுத்தி முழுக் காப்பீடு கிடைக்க உதவி.</p><p>3) சம்பா சாகுபடிக்கான மறுமுதலீடாக விதை, உரம், பூச்சிக்கொல்லி என இடுபொருட்கள் மானியமாக வழங்குதல்.</p><h2><strong>கழகம் சார்பில் டெல்டா மண்ணில் போராட்டம்</strong></h2><p>இப்படி, விவசாயப் பெருமக்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், காவிரி உரிமையை நிலைநாட்டுவதில் த.வெ.க. அரசின் மெத்தனப்போக்கைக் கண்டித்தும் வரும் 03-08-2026 அன்று காலை 10.00 மணியளவில், தஞ்சாவூர், பனகல் கட்டடம் அருகில் கழக இளைஞரணிச் செயலாளரும் மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த தி.மு.க. முடிவெடுத்துள்ளது.</p><p>இப்போராட்டத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கழகத் துணை அமைப்புகளானப் பல்வேறு சார்பு அணிகளின் நிர்வாகிகள் என அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு விவசாயிகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டும்.</p><p>மேலும், அனைத்து விவசாயச் சங்கங்களைச் சேர்ந்த தோழர்களும், இவ்விவகாரத்தில் ஒருமித்த கருத்துடைய அனைத்து அரசியல் கட்சிகளின் தோழர்களும் போராட்டத்தில் கலந்துகொண்டு விவசாயிகளின் கோரிக்கைகள் விரைவில் வென்றிடத் துணை நிற்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் என்பது, விவசாயிகளின் குரலைக் கேட்காமல் இருக்கும் த.வெ.க. அரசின் கவனத்தை ஈர்க்கும் முதல்கட்ட நடவடிக்கைதான். அரசின் இந்த மெத்தனப்போக்குத் தொடர்ந்தால், மிகப்பெரிய போராட்டத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதையும் எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு அமித் ஷா பொறுப்பேற்க வேண்டும்.. அமளியால் மக்களவை ஒத்திவைப்பு </title><link>https://www.maalaimalar.com/news/national/parliament-clash-opposition-uproar-over-july-20-student-protest-crackdown-stalls-lok-sabha</link><comments>https://www.maalaimalar.com/news/national/parliament-clash-opposition-uproar-over-july-20-student-protest-crackdown-stalls-lok-sabha#comments</comments><guid isPermaLink="false">93e51114-076f-47e3-8ff2-be2f8295f63c</guid><pubDate>Thu, 30 Jul 2026 07:15:15 +0000</pubDate><atom:updated>2026-07-30T07:15:15.226Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மக்களவை,Lok Sabha,monsoon session,மழைக்கால கூட்டத்தொடர்,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/rt0vh3sn/tn-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மக்களவை ]]></media:title><media:description type="html"><![CDATA[ மக்களவை ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/rt0vh3sn/tn-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்டம் கடந்த திங்கள் கிழமை தொடங்கிய நிலையில் வரும் ஆகஸ்ட் 2 வரை நடைபெறுகிறது. </p><p>இன்றைய கூட்டமும் வழக்கம்போல அமளியால் முடங்கியுள்ளது. ஜூலை 20 அன்று நாடாளுமன்றம் நோக்கி <a href="https://www.maalaimalar.com/news/national/cjp-new-protest-warning-delhi-jantar-mantar-security">பேரணி </a>வந்த இளைஞர்கள் மீது டெல்லி காவல்துறைக்கு மற்றும் ஆர்ஏஎப் மத்திய படை தடியடி, கண்ணீர் புகை உள்ளிட்டவையால் தாக்கியது. மேலும் பெல்லட் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களும் பயன்படுத்ததட்தற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. </p><p>இந்த தாக்குதல் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக மக்களவை இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.</p> <h2>ராகுல் காந்தி குற்றச்சாட்டு</h2><p>ஜூலை 20 அன்று டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின் போது காவல்துறை நடத்திய தாக்குதலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.</p><p>உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்திற்கு நேரில் வந்து எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு விளக்கமளிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி வலியுறுத்தினார்.</p> <h2>இந்தியா கூட்டணி போராட்டம்</h2><p>நாடாளுமன்றத்தின் மகார் துவார் பகுதியில் திரண்ட எதிர்க்கட்சி எம்பிக்கள், மாணவர்கள் மீதான காவல்துறை நடவடிக்கைக்கும், அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை நன்கொடை முறைகேடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.</p><h3>சபாநாயகர்</h3><p>முன்னதாக மக்களவை தொடங்கியபோது கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்த இந்திய வீரர்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வாழ்த்து தெரிவித்தார்</p><p>இன்று நடந்த நீளம் தாண்டுதல் பிரிவு போட்டியில் 8.09 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார்.</p><p>மாற்றுத்திறனாளிகளுக்கான ஆண்களுக்கான 100 மீட்டர் T47 ஓட்டப்பந்தயத்தில் திலீப் மகாது கவித் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.</p><p>அதே 100 மீட்டர் T47 பிரிவில் முகமது பாசில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.</p>]]></content:encoded></item><item><title>VIDEO- வதந்தி சீசன் 2: வெளியானது ‘டைவா கோட்டிங்’ பாடல் வீடியோ! </title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/vathanti-season-2-daiva-coating-song-video-release</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/vathanti-season-2-daiva-coating-song-video-release#comments</comments><guid isPermaLink="false">0a6facae-1447-4eb6-a9d2-bcbfadee4ba5</guid><pubDate>Thu, 30 Jul 2026 07:14:49 +0000</pubDate><atom:updated>2026-07-30T07:14:49.090Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சசிகுமார்,Sasikumar,Vadhandhi Season 2,வதந்தி சீசன் 2,Daiva Coatingu,டைவா கோட்டிங்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/wze3moeo/daiva.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vadhandhi Season 2  Daiva Coatingu ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/wze3moeo/daiva.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திரையுலகிலும் ஓடிடி தளங்களிலும் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘வதந்தி’ வெப் சீரிஸின் இரண்டாவது பாகம் வரவிருக்கும் ஆகஸ்ட் 7-ம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் உலகளவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், இந்தத் தொடரில் இடம்பெற்றுள்ள ‘டைவா கோட்டிங்’ என்ற வீடியோ பாடலை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/FPyHPOVLgQg"></iframe></figure><h2><strong>புதிய கதைக்களம்:</strong></h2><p>முதல் சீசனின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இதையும் இயக்கி எழுதியுள்ளார். முன்னணி தயாரிப்பாளர்களான புஷ்கர்-காயத்ரி தங்களது 'வால்வாட்சர் ஃபிலிம்ஸ்' நிறுவனம் சார்பில் இதன் கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாகச் செயல்பட்டுள்ளனர். முதல் பாகத்தில் எஸ்.ஜே.சூர்யா முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், இரண்டாம் பாகத்தில் பிரபல நடிகரும் இயக்குநருமான 'சசிகுமார்' சப்-இன்ஸ்பெக்டர் மூசா ராசா என்ற அதிரடியான காவலர் கதாபாத்திரத்தில் களமிறங்கியுள்ளார்.</p><p>இந்தக் க்ரைம்-த்ரில்லர் தொடரில் சசிகுமாருடன் இணைந்து, அபர்னா தாஸ், விவேக் பிரசன்னா, யஷ்வந்த், அனகா, ரேவதி சர்மா, அர்ஜுன் நந்தகுமார் உள்ளிட்டப் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்தொடருக்கு 'சைமன் கே.கிங்' இசையமைத்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள 'டைவா கோட்டிங்' பாடல் துள்ளலான இசையுடனும், அட்டகாசமான காட்சிகளுடனும் இணையதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.</p><h2><strong>ரசிகர்களின் எதிர்பார்ப்பு:</strong></h2><p>மதுரையின் பின்னணியில் நடைபெறும் அரசியல், வதந்தி மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த க்ரைம் புலனாய்வுக் கதையாக 'வதந்தி சீசன் 2' உருவாகியுள்ளது. தமிழ் தவிர தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் ஒரே நேரத்தில் 8 அத்தியாயங்களாக ஒளிபரப்பாகவுள்ள இத்தொடருக்கு ஓடிடி பார்வையாளர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.</p>]]></content:encoded></item><item><title>டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாள்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-pays-tribute-on-dr-muthulakshmi-reddy-birthday</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-pays-tribute-on-dr-muthulakshmi-reddy-birthday#comments</comments><guid isPermaLink="false">dd58ed12-4ff8-4f85-9c86-ecb58623d7bc</guid><pubDate>Thu, 30 Jul 2026 07:08:55 +0000</pubDate><atom:updated>2026-07-30T07:08:55.165Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,Edappadi pazhanisamy,பிறந்தநாள் வாழ்த்து,birthday wish,டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி,Doctor muthulakshmi reddy</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/03/29/10980480-eps.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Edappadi pazhanismy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/03/29/10980480-eps.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் மிக முக்கிய சமூகப் போராளியும் தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவருமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-</p><p>பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் பெண் சட்ட மேலவை உறுப்பினராகவும், தலைசிறந்த மருத்துவராகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், பெண் கல்வி, பெண்ணுரிமை, குழந்தைகள் நலன் மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் புகழைப் போற்றி வணங்குகிறேன்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இனப்பாகுபாடு?.. அடுத்த ஆண்டு கிராமி விருதுகளை புறக்கணித்த  BTS இசைக்குழு</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/grammy-racism-row-bts-to-boycott-after-recording-academy-adds-separate-best-asian-pop-category</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/grammy-racism-row-bts-to-boycott-after-recording-academy-adds-separate-best-asian-pop-category#comments</comments><guid isPermaLink="false">bdcf88cd-7884-4420-b687-513daf69e90f</guid><pubDate>Thu, 30 Jul 2026 06:35:56 +0000</pubDate><atom:updated>2026-07-30T06:35:56.456Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பிடிஎஸ்,BTS,grammy awards,கிராமி விருதுகள்,இசைக்குழு,பாப் இசை,music group,pop music</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/4yt55pob/tn-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ BTS ]]></media:title><media:description type="html"><![CDATA[ BTS ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/4yt55pob/tn-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆண்டுதோறும் உலகம் முழுவதும் சிறந்த இசைக்கு பல்வேறு பிரிவுகளில் <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/lady-gaga-takes-home-grammy-for-mayhem-807629">கிராமி விருதுகள் </a>வழங்கப்படுகின்றன. ரெக்கார்டிங் அகாடமி என்ற அமைப்பால் வழங்கப்படும் இவ்விருதுகள் இசைக்கான ஆஸ்கார் என்றே கூறலாம். </p><p>இந்நிலையில் தென் கொரியாவை சேர்ந்த பிரபல இசைக்குழுவான BTS, அடுத்த ஆண்டு கிராமி விருதுகளுக்கு தங்கள் படைப்பை சமர்ப்பிக்க போவதில்லை என்று அறிவித்துள்ளது. </p> <h2>கிராமி விருதுகள்</h2><p>கிராமி விருதுகளில் இருந்து விலகும் பிடிஎஸ் உடைய முடிவுக்கு பின்னால் உள்ள காரணம் இனப்பாகுபாடு.</p><p>அமெரிக்காவை சேர்ந்த ரெக்கார்டிங் அகாடமி அமைப்பு அதன் கிராமி விருதுகளில் ஒரு புதிய பிரிவை சேர்த்துள்ளது. அதன் பெயர் 'சிறந்த ஆசிய பாப் இசை' என்பதாகும். இதுவரை இப்படி ஒரு பிரிவு கிராமி விருதுகளில் இல்லை.</p><p>2027ஆம் ஆண்டிற்கான 69வது கிராமி விருதுகள் விழாவில் இந்த பிரிவு அறிமுகப்படுத்தப்படும் என ரெக்கார்டிங் அகாடமி அறிவித்தது.</p><h2>குற்றச்சாட்டு</h2><p>இது இசையை மொழி மற்றும் பிராந்தியத்தின் அடிப்படையில் இது பிரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.</p><p>ஆண்டின் சிறந்த ஆல்பன் உள்ளிட்ட முதன்மை விருது பிரிவுகளில் இருந்து ஆசியக் கலைஞர்களை</p><p>போட்டியிட அனுமதிப்பதற்குப் பதிலாக தனியாக ஒரு பிராந்தியப் பிரிவை உருவாக்குவது அவர்களை முதன்மைப் போட்டியிலிருந்து ஒதுக்கி வைக்கும் ஒரு முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.</p> <h2>பிடிஎஸ் முடிவு</h2><p>இந்த காரணத்தால் அடுத்த ஆண்டு தங்களின் சமீபத்திய ஆல்பமான 'Arirang' உட்பட எந்தவொரு படைப்பையும் கிராமி விருதுகளுக்கு அனுப்பப் போவதில்லை என பிடிஎஸ் குழுவின் தலைவர் ஆர்.எம் மற்றும் கலைஞர்கள் ஜின், சுகா, ஜே ஹோப், ஜிமின், வி, ஜங்குக் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.</p><p>தங்கள் இசையை பிராந்தியம் அல்லது மொழியின் அடிப்படையில் பிரித்துப் பார்ப்பதை விட, இசையாகவே கேட்டு ரசிக்க வேண்டும் விரும்புவுவதாக பி.டி.எஸ் தெரிவித்துள்ளது.</p><p>புதிய பிரிவில் உள்ள விதிகளின்படி, பாடல்களில் ஆசிய மொழிகளின் பயன்பாடு கட்டாயம் இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், ஆங்கில மொழிகயை அதிகம் கலந்து பயன்படுத்தும் பயன்படுத்தும் பி.டி.எஸ் போன்ற குழுக்களுக்கு இந்த விதிமுறை நியாயமற்ற ஒன்றாக அமைகிறது.</p><p>2021 முதல் 2023 வரை கிராமி விருதுகளில் தொடர்ச்சியாக 3 முறை 'Best Pop Duo - Group Performance' பிரிவில் பிடிஎஸ் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்கள்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-super-speciality-seats-to-central-pool-controversy</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-super-speciality-seats-to-central-pool-controversy#comments</comments><guid isPermaLink="false">a1283d03-266e-4dfe-adf1-5d0b7ef5a97e</guid><pubDate>Thu, 30 Jul 2026 06:35:28 +0000</pubDate><atom:updated>2026-07-30T06:35:28.247Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,மருத்துவ இடங்கள்,Medical seat,முக ஸ்டாலின்,Minister Arunraj,அமைச்சர் அருண் ராஜ்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/8an8kzmb/Arun-raj.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Arunraj]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/8an8kzmb/Arun-raj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மருத்துவ இடங்கள் மத்திய தொகுப்பிற்கு சென்ற விவகாரம் தொடர்பாக,"தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்களை தவெக அரசு காற்றில் பறக்கவிட்டுவிட்டதாக" முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனத்திற்கு சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் பதில் அளித்துள்ளார்.</p><h2>மு.க.ஸ்டாலின்</h2><p>ஆறாண்டுகளுக்கு முன் இதே நாளில், இந்தியா முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீட்டைத் தி.மு.க. போராடிப் பெற்றுத் தந்தது. ஆனால் இன்றோ, மருத்துவப் படிப்பில் தமிழ்நாட்டின் இடங்களை இழக்கும் செய்தி வந்திருக்கிறது.</p><p>தமிழ்நாட்டின் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-super-speciality-medical-seats-lost-mk-stalin-questions-dmk-government" rel="nofollow">சூப்பர் ஸ்பெஷாலிட்டி</a> இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட த.வெ.க. அரசு; உச்சநீதிமன்றத்தில் வாய்பொத்தி நின்ற தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள்.</p><p>தமிழ்நாடு அரசு நியமித்த மூத்த வழக்கறிஞர்கள் ஏன் ஆஜராகவில்லை?</p><p>மிகுந்த முக்கியத்துவம் கொண்ட இந்த வழக்கில் தொடக்கம் முதல் அலட்சியம் ஏன்? மூத்த வழக்கறிஞரை நியமிப்பதில் கூட ஏன் தாமதம்?</p><p>நியாயம் நம் பக்கம் இருந்தும் நீதிமன்றத்தில் எந்த வலுவான வாதங்களையும் எடுத்து வைக்காமல் 'சரண்டர்' ஆனதன் பின்னணி என்ன?</p><p>அகில இந்திய கவுன்சிலிங்கின் இரண்டாம் சுற்று நடைபெறுவதற்கு முன்னரே, மாநிலக் கலந்தாய்வை அவசரமாக நடத்தி 151 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவித்தது திட்டமிட்டே செய்யப்பட்டதா?</p><p>தமிழ்நாட்டுக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் அகில இந்தியத் தொகுப்புக்கு மாற்றப்படுவதை எதிர்த்து, கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் சிறப்புத் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D" rel="nofollow">தீர்மானம்</a> நிறைவேற்ற வலியுறுத்தியும் செய்யாதது ஏன்?</p><p>29-05-2026 உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனு என்ன ஆனது?</p><p>இப்படி பல கேள்விகளை இதனால் பாதிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவர்கள் எழுப்புகிறார்கள்.</p><p>எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் தொண்டாற்ற இருந்த 151 உயர்சிறப்பு அரசு மருத்துவர்களை இழந்திருக்கிறோம். லட்சக்கணக்கான தமிழ்நாட்டு மக்களின் உயிர்ப்பிரச்சினை இது.</p><p>த.வெ.க. அரசு இதில் உரிய விளக்கத்தை நம் அரசு மருத்துவர்களுக்கும் மக்களுக்கும் அளித்தாக வேண்டும்!</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.</p><h2>அமைச்சர் அருண்ராஜ்</h2><p>முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் விமர்சனத்திற்கு சுகாதாரத்துறை அமைச்சர் கூறியதாவது:-</p><p>2024-ல் 119 இடங்களும், 2025-ல் 149 இடங்களும் மத்திய தொகுப்பிற்கு அளிக்கப்பட்டுள்ளன. திமுக ஆட்சியில் எந்த எதிர்ப்பும் இன்றி மத்திய அரசிற்கு சரண்டர் செய்யப்பட்டன.</p><p>கட் ஆஃப் அதிகமாக இருப்பதால் மாணவர்களை முழுமையாக சேர்க்க முடியவில்லை; மத்திய அரசு கட் ஆஃப்-ஐ குறைத்து மாணவர்களை சேர்த்து கொள்கிறது.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் முறைகேடு வழக்கு: கைதாகிறாரா செந்தில் பாலாஜி...?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-scam-case-will-senthil-balaji-be-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-scam-case-will-senthil-balaji-be-arrested#comments</comments><guid isPermaLink="false">919a0d93-b0f5-454e-aafc-411830e83a53</guid><pubDate>Thu, 30 Jul 2026 06:34:40 +0000</pubDate><atom:updated>2026-07-30T06:34:40.039Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>senthil balaji,செந்தில் பாலாஜி,wineshops,டாஸ்மாக்,டாஸ்மாக் முறைகேடு வழக்கு,TASMAC irregularities</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/0vnadxhv/senthil.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Senthil Balaji]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/0vnadxhv/senthil.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்ற பல கோடி ரூபாய் முறைகேடு தொடர்பான வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதனால் அவர் எந்நேரமும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.</p><h2><strong>மனு தள்ளுபடி:</strong></h2><p>முன்ஜாமீன் கோரி <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-anticipatory-bail-petition-dismissed">செந்தில் பாலாஜி</a> தாக்கல் செய்த மனுவை விசாரித்த 'நீதிபதி ஜி.கே.இளந்திரையன்', மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார். விசாரணையின் போது, "டாஸ்மாக் நிறுவனத்தில் பெரும் முறைகேடு நடந்திருப்பதற்கும், அதன் மூலம் அரசு கருவூலத்திற்குப் பலத்த நிதி இழப்பு ஏற்பட்டிருப்பதற்கும் போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மேலும், குற்றம்சாட்டப்பட்டவர் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்ததற்கான ஆரம்பக்கட்ட முகாந்திரங்கள் தெளிவாக உள்ளன." இந்நிலையில், எதனடிப்படையில் முன்ஜாமீன் கோருகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.</p><h2><strong>11 பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு:</strong></h2><p>தமிழக அரசின் கீழ் இயங்கும் டாஸ்மாக் நிறுவனம் மூலம் 5,380 மதுக் கடைகளும், 3,240 மதுக் கூடங்களும் (பார்கள்) இயங்கி வருகின்றன. 2021 முதல் 2025 வரை மது விற்பனை உயர்ந்தபோதிலும், அரசுக்கான வருவாய் கணிசமாகக் குறைந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து, தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை  தீவிர விசாரணை நடத்தி, 11 பிரிவுகளின் கீழ் வழக்கைப் பதிவு செய்தது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி உட்பட '7 பேர்' குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.</p><h2><strong>போலி டெண்டர் மற்றும் கூட்டுச்சதி:</strong></h2><p>2021-ஆம் ஆண்டில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் 857 டாஸ்மாக் பார்களுக்கு டெண்டர் கோரப்பட்டதில் பெரும் முறைகேடு நடந்துள்ளது. டெண்டரில் பங்கேற்றவர்கள் ஒரே வங்கிக் கிளையிலிருந்து தொடர்ச்சியான எண்களில் வரைவு காசோலைகளை பிணையத் தொகையாகச் செலுத்தியதன் மூலம் கூட்டுச்சதி அம்பலமாகியுள்ளது.</p><h2><strong>பாட்டில் சேகரிப்பு முறைகேடு:</strong></h2><p>45 கிடங்குகளுக்கான போக்குவரத்து டெண்டர் நடைமுறையிலும் முறைகேடு நடந்துள்ளது. மேலும், பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட பாட்டில்களைச் சேகரித்து மதுபான ஆலைகளுக்கு வழங்குவதில் ரூ.143 கோடி வரை முறைகேடு செய்யப்பட்டுள்ளது.</p><h2><strong>14 மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை:</strong></h2><p>வழக்கின் ஆதாரங்களைத் திரட்டும் வகையில், சென்னை, கரூர், நாமக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் 45 இடங்களில் ஊழல் தடுப்புத் துறையினர் ஒரே நேரத்தில் அதிரடிச் சோதனை நடத்தினர். கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு, அவரது ஆதரவாளர்கள் மற்றும் நண்பர்களின் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பல முக்கியமான ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><h2><strong>கைது செய்யப்படுகிறாரா?</strong></h2><p>வழக்கின் முதல் தகவல் அறிக்கை (FIR) சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், முன்ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், செந்தில் பாலாஜியை விசாரணைக்காகக் கைது செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை சட்டரீதியான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. இந்நிலையில், செந்தில் பாலாஜி கட்சி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். </p>]]></content:encoded></item><item><title>மின் கட்டண உயர்வு புகார்: 3.70 லட்சம் வீடுகளில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய திட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/plan-for-officials-to-conduct-on-site-inspections-of-370-lakh-houses</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/plan-for-officials-to-conduct-on-site-inspections-of-370-lakh-houses#comments</comments><guid isPermaLink="false">50812a59-11f7-47e0-b935-022b7d159d75</guid><pubDate>Thu, 30 Jul 2026 06:20:50 +0000</pubDate><atom:updated>2026-07-30T06:20:50.867Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TNEB,EB Charge Hike,தமிழ்நாடு மின்சார வாரியம்,மின் கட்டணம் உயர்வு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/v8jaghsv/EB.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/v8jaghsv/EB.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>மின் கட்டண உயர்வு புகார் வந்ததை தொடர்ந்து 3.70 லட்சம் வீடுகளில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய மின்சார வாரியம் உத்தரவிட்டு உள்ளது.</aside><h2><strong>மின் கட்டண உயர்வு</strong></h2><p>தமிழகத்தில் ஜூலை மாத மின் கட்டண உயர்வு தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து அதிக அளவில் புகார்கள் வந்தது. இதையடுத்து, <a href="https://www.maalaimalar.com/topic/தமிழ்நாடு-மின்சார-வாரியம்">மின் நுகர்வு</a> கணக்கீட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஆய்வு செய்ய தமிழ்நாடு மின்சாரவாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக மூத்த அதிகாரிகள் மூலம் மறு ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.</p><p>கடந்த மே மாதம் வழங்கப்பட்ட மின் கட்டணத்துடன் ஒப்பிடும்போது, ஜூலை மாதம் மின் நுகர்வில் அதிக மாற்றம் காணப்பட்ட 3.70 லட்சம் மின் இணைப்புகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த ஆய்வை ஆகஸ்ட் 7-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.</p><h2><strong>இணைப்புகள் ஆய்வு</strong></h2><p>இந்த ஆய்வில் தலைமைப் பொறியாளர் 25 இணைப்புகளையும், மேற்பார்வைப் பொறியாளர் 50 இணைப்புகளையும், கோட்டப்பொறியாளர் 75 இணைப்புகளையும் ஆய்வு செய்ய வேண்டும்.</p><p>அதேபோல், துணை நிதி கட்டுப்பாட்டாளர் 50, உதவி கோட்டப் பொறியாளர் 100, வருவாய் புலனாய்வு பிரிவு கணக்கு அலுவலர் 150, மூத்த மதிப்பீட்டு அலுவலர் 150, வருவாய் பிரிவு உதவி கணக்கு அலுவலர் 100, மதிப்பீட்டு அலுவலர் 150 மற்றும் உதவிப் பொறியாளர் 100 மின் இணைப்புகளை ஆய்வு செய்ய வேண்டும்.</p><p>இந்த ஆய்வின்போது ஏதேனும் தவறுகள் கண்டறியப்பட்டால், அவற்றை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் வி.அருண் ராய் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் முறைகேடு வழக்கு : செந்தில் பாலாஜியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-anticipatory-bail-petition-dismissed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-anticipatory-bail-petition-dismissed#comments</comments><guid isPermaLink="false">8cb450a7-a222-4137-a71f-f22739fbdc01</guid><pubDate>Thu, 30 Jul 2026 06:06:28 +0000</pubDate><atom:updated>2026-07-30T06:06:28.364Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,senthil balaji,செந்தில் பாலாஜி,Tasmac case,டாஸ்மாக் முறைகேடு வழக்கு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/gimmnvvk/senthilbalaji.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/gimmnvvk/senthilbalaji.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>முறைகேடு நடந்துள்ளதற்கும், அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதற்கும் ஆதாரங்கள் உள்ளன. குற்றம்சாட்டப்பட்டவர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர் என்பதற்கு முகாரந்திரம் உள்ளது.</aside><h2><strong>வழக்கு பதிவு</strong></h2><p>தி.மு.க. ஆட்சியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்த <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF">செந்தில்பாலாஜி</a> மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். </p><p>கடந்த தி.மு.க. ஆட்சியில் டாஸ்மாக்கில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி கூட்டுச் சதி மோசடி, முறைகேடு உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள். 120, 167, 409, 109, 420, 61 (2), 201, 316 (5), 13 (2) ஆகிய சட்டப்பிரிவுகளில் செந்தில் பாலாஜி மற்றும் டாஸ்மாக் முன்னாள் மேலாண்மை இயக்குனர் விசாகன், டாஸ்மாக் அதிகாரிகள் ராமதுரை முருகன், பன்னீர் செல்வம், பாஸ்கர், செந்தில் பாலாஜியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ரதேஷ் மற்றும் கார்த்திக் உள்பட டாஸ்மாக் ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.</p><h2><strong>சம்மன்</strong></h2><p>இது தொடர்பாக 45 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த செந்தில் பாலாஜியிடம் நேரில் சென்றும் விசாரித்தார்கள். இந்த நிலையில் டாஸ்மாக் முறைகேடுகள் தொடர்பாக மேலும் பல்வேறு தகவல்களை திரட்ட வேண்டி இருப்பதால் செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்ப லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர்.</p><p>இது தொடர்பாக அவருக்கு விரைவில் சம்மன் அனுப்பப்பட இருப்பதாகவும் அப்போது அவரிடம் நேரில் பல்வேறு தகவல்களை சேகரிக்க உள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்து உள்ளனர். </p><h2><strong>டிஜிட்டல் ஆவணங்கள்</strong></h2><p>இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் குற்றம் புரிந்ததற்கான ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையிலேயே செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. </p><p>இந்த நிலையில் செந்தில் பாலாஜி இந்த வழக்கில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-irregularities-case-senthil-balajis-anticipatory-bail-plea">முன் ஜாமின்</a> கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. </p><h2><strong>முகாந்திரம் உள்ளது</strong></h2><p>அப்போது, முதல் தகவல் அறிக்கையில் தன் மீது பொத்தம் பொதுவாக குற்றச்சாட்டுகள் உள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது. </p><p>காவல்துறை தரப்பில் ரூ.100 கோடி வரை முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளது என்பதால் விரிவான விசாரணை தேவை என கூறப்பட்டது. </p><p>இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜிகே. இளந்திரையன்,  முறைகேடு நடந்துள்ளதற்கும், அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதற்கும் ஆதாரங்கள் உள்ளன. குற்றம்சாட்டப்பட்டவர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர் என்பதற்கு முகாரந்திரம் உள்ளது. காவலில் வைத்து விசாரிக்க அவசியம் உள்ளது. இதனால் முன் ஜாமின் தர மறுப்பு தெரிவித்து செந்தில் பாலாஜியின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். </p>]]></content:encoded></item><item><title>
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் ரஹானே! </title><link>https://www.maalaimalar.com/sports/cricket/ajinkya-rahane-retirement-india-batter-quits-all-formats-of-international-cricket</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/ajinkya-rahane-retirement-india-batter-quits-all-formats-of-international-cricket#comments</comments><guid isPermaLink="false">8407f7f7-e3a9-46ef-b093-5d7efeeb75e7</guid><pubDate>Thu, 30 Jul 2026 05:59:04 +0000</pubDate><atom:updated>2026-07-30T05:59:04.989Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய அணி,Indian team,rahane,international cricket,சர்வதேச கிரிக்கெட்,ரஹானே</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/z6iqv9o0/tn-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ரஹானே]]></media:title><media:description type="html"><![CDATA[ ரஹானே]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/z6iqv9o0/tn-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய கிரிக்கெட் அணி வீரர்  <a href="https://www.maalaimalar.com/sports/cricket/kkr-captain-ajinkya-rahane-now-tops-this-unwanted-ipl-list">அஜிங்க்யா ரஹானே</a>, சர்வதேச கிரிக்கெட்டில் தனது ஓய்வை அறிவித்துள்ளார். </p><p>இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். </p><h2>வீடியோ</h2><p>தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது, ஒவ்வொன்றுக்கும் ஒரு தொடக்கமும் முடிவும் உண்டு என்பதே வாழ்வின் நிதர்சனம். </p><p>பேட்டிங்கில் எப்படி சரியான டைமிங் இருப்பதை நம்புகிறேனோ,  இன்று சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களில் இருந்தும் விலகுவதற்கு இதுவே சரியான டைமிங் என உணர்கிறேன். </p><p>கேப் எண் 278 (ரஹானேவின் தொப்பி எண்), இத்துடன் விடைபெறுகிறது. </p><p>இத்தனை ஆண்டுகளாக நீங்கள் அளித்த அன்பு, நம்பிக்கை மற்றும் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றிகள். </p><p>'அஜிங்க்யா' என்றால் 'வெல்ல முடியாதவன்' என்று பொருள், ஆனால் கிரிக்கெட் எனக்கு பல தோல்விகளைக் கற்றுக்கொடுத்திருக்கிறது. </p><p>நாம் வெற்றியை விட பெறுவதை விட தோல்விகளையே அதிகம் சந்திக்கிறோம். இருப்பினும், ரசிகர்களின் இதயங்களில் நான் ஒருபோதும் தோற்றதில்லை." என உருக்கமாக தெரிவித்துள்ளார். </p><figure><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DbZ1f0-tcFB/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:658px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DbZ1f0-tcFB/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a></div></blockquote>
<script async src="//platform.instagram.com/en_US/embeds.js"></script></figure><h2>ரஹானே டிராக் ரெக்கார்ட்</h2><p>ரஹானே இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வடிவங்களிலும் சேர்த்து 35.95 சராசரியில் 8,414 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 15 சதங்களும் 51 அரை சதங்களும் அடங்கும்.</p><h3>டெஸ்ட்</h3><p>இவற்றில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 85 போட்டிகளில் விளையாடி 5,077 ரன்கள் குவித்துள்ளார்.</p><p>டெஸ்ட் கிரிக்கெட்டில், அவர் ஆறு போட்டிகளில் இந்தியாவை கேப்டனாக வழிநடத்தினார். </p><p>அவற்றில் நான்கு போட்டிகளில் அணி வெற்றி பெற்றது மற்றும் இரண்டு போட்டிகள் சமனில் முடிந்தன. அவர் தலைமை தாங்கிய ஒரு போட்டியில் கூட இந்திய அணி தோல்வி அடையவில்லை.</p><h3>ஒருநாள் போட்டி</h3><p>ஒருநாள் போட்டிகளில் 90 போட்டிகளில் விளையாடியுள்ள ரஹானே 2,962 ரன்கள் குவித்துள்ளார்.</p><p>இதில் ரஹானே மூன்று போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார். அவை அனைத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.</p><h3>டி20</h3><p>டி20 சர்வதேச போட்டிகளில் 20 போட்டிகளில் விளையாடி 375 ரன்கள் குவித்துள்ளார். அதேநேரம் அவற்றில் இரண்டு போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமை தாங்கினார். அவற்றில் ஒன்றில் இந்தியா வெற்றி பெற்றது மற்றும் ஒன்றில் தோல்வியடைந்தது.</p><p>மேலும் 2008 முதல் தனது ஐபிஎல் பயணத்தில் 212 ஐபிஎல் போட்டிகளில் மொத்தம் 5,367 ரன்கள் குவித்துள்ளார். இதில் 2 சதங்கள், 35 அரைசதங்கள் அடங்கும்.</p> ]]></content:encoded></item><item><title>அசாம் வெள்ளப்பெருக்கில் உயிரிழப்பு எண்ணிக்கை 78 ஆக உயர்வு: கனமழை எச்சரிக்கை விடுத்தது வானிலை மையம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/assam-flood-death-toll-rises-to-78-heavy-rain-warning-issued</link><comments>https://www.maalaimalar.com/news/national/assam-flood-death-toll-rises-to-78-heavy-rain-warning-issued#comments</comments><guid isPermaLink="false">276f876d-26ee-4abf-9785-18502a6d7c8c</guid><pubDate>Thu, 30 Jul 2026 05:58:14 +0000</pubDate><atom:updated>2026-07-30T05:58:14.408Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Heavy Rain,Meteorological Department,கனமழை எச்சரிக்கை,Assam Floods,அசாம் வெள்ளப்பெருக்கு,இந்திய வானிலை மையம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/lv0dejsi/rain.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Assam floods ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/lv0dejsi/rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அசாம் மாநிலத்தில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 78 ஆக உயர்ந்துள்ளது என அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (ASDMA) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p><p>சிவசாகர் மாவட்டத்தில் இருவரும், கோலாகாட் மாவட்டத்தில் ஒருவரும் என புதிதாக 3 பேர் வெள்ளத்திற்கு பலியானதைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது.  மாநிலம் முழுவதும் '3,00,031 பேர்' வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><h2><strong>பாதிக்கப்பட்ட பகுதிகள்:</strong></h2><p>சிவசாகர், சராடியோ, கோலாகாட், ஜோர்ஹாட், நகோன், பிஸ்வநாத் மற்றும் கம்ரூப் மெட்ரோபொலிட்டன் ஆகிய 7 முக்கிய மாவட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மொத்தம் 21 வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட 551 கிராமங்கள் வெள்ள நீரில் தவித்து வருகின்றன. மேலும் 21,523 ஹெக்டேர் விவசாய நிலங்கள் முற்றிலும் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.</p><h2><strong>கனமழை எச்சரிக்கை:</strong></h2><p>அசாம் மற்றும் அதன் சுற்றியுள்ள வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்கு மேலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. மீண்டும் பெய்யும் கனமழையால் நகர்ப்புற நீர் தேக்கம், ஆறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படக்கூடிய ஆபத்தான பகுதிகளில் மேலும் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், வெள்ள நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதால் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள்:</strong></h2><p>வெள்ளத்தில் சிக்கிய மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணிகளில் மாநில பேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்க நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.</p><p>அசாமில் பிரம்மபுத்திரா மற்றும் அதன் துணை ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக தொடர்ந்து இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. தற்போதைய வானிலை எச்சரிக்கையைத் தொடர்ந்து கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>‘ஜனநாயகன்’ வெற்றிக்கு விஜய்யின் மேஜிக்கே காரணம்: தயாரிப்பாளர் கே.வெங்கட் நாராயணா பேட்டி!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/jananayagan-success-due-to-vijays-magic-producer-k-venkat-narayana-interview</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/jananayagan-success-due-to-vijays-magic-producer-k-venkat-narayana-interview#comments</comments><guid isPermaLink="false">40ba8d57-0eb0-4661-a19f-83e2445b796e</guid><pubDate>Thu, 30 Jul 2026 05:35:30 +0000</pubDate><atom:updated>2026-07-30T05:35:30.601Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Vijay,ஜன நாயகன்,JanaNayagan,KVN Productions,K.Venkat Narayana,கே.வெங்கட் நாராயணா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/y7b4x7xy/vj.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vijay-K.Venkat Narayana]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/y7b4x7xy/vj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>எச்.வினோத் இயக்கத்தில், <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்</a> நடிப்பில் கடந்த 23ஆம் தேதி அன்று '<a href="https://www.maalaimalar.com/topic/ஜனநாயகன்">ஜனநாயகன்</a>' திரைப்படம் வெளியானது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் மற்றும் மமிதா பைஜூ ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.</p><p>நடிகர் விஜய்யின் சினிமாப் பயணத்தில் கடைசிப் படமாக வெளியாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம், வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.அனைத்துத் தடைகளையும் தாண்டி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இத்திரைப்படத்தின் வெற்றி குறித்து, அதன் தயாரிப்பாளரான 'கேவிஎன் புரொடக்ஷன்ஸ்' உரிமையாளர் 'கே.வெங்கட் நாராயணா' தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.</p><h2><strong>6 மாத கால போராட்டம்:</strong></h2><p>இப்படத்தை உருவாக்குவது எங்களுக்கு எளிதான காரியமாகவே இருந்தது. ஆனால், எதிர்பாராத சில காரணங்களால் பல இன்னல்களையும், போராட்டங்களையும் சந்திக்க வேண்டியதாயிற்று. தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் தாமதம், ஏப்ரல் மாதத்தில் முழு படமும் இணையதளங்களில் கசிந்த பைரசி பிரச்சனை என அடுக்கடுக்கான சவால்கள் எங்களுக்கு எழுந்தன. </p><p>சான்றிதழ் கிடைத்த பிறகு, விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களை ஒன்றிணைத்து சரியான நாளில் படத்தை ரிலீஸ் செய்வதே எங்கள் ஒரே இலக்காக இருந்தது. விஜய்யின் கடைசிப் படம் என்பதால், அதை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் கொண்டு சேர்ப்பதே எங்கள் நோக்கமாக இருந்தது என்றார்.</p><h2><strong>இயக்குநர் ஆதங்கம்:</strong></h2><p>முன்னதாக, இயக்குநர் எச்.வினோத்பேட்டி  அளிக்கையில், "இப்படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் 'A' சான்றிதழ் அளித்தது பின்னடைவாக அமைந்தது. ஒருவேளை 'U/A' சான்றிதழ் கிடைத்திருந்தால், குடும்பங்கள் திரளாக வந்து இப்படத்தின் வசூல் சாதனையை யாராலும் தடுக்க முடியாத அளவிற்குப் பெருக்கியிருக்கும்" என்று வருத்தம் தெரிவித்திருந்தார்.</p><p>பொங்கல் பண்டிகை அல்லது தேர்தல் விடுமுறை நேரத்தில் ரிலீஸாகியிருந்தால் வசூல் இன்னும் வேற லெவலில் இருந்திருக்கும் எனக் குறிப்பிட்ட தயாரிப்பாளர், தற்போதைய சூழலிலும் படம் அடைந்துள்ள வெற்றிக்கு 'விஜய்யின் நட்சத்திர அந்தஸ்தும், அவரது மேஜிக் மற்றும் உணர்வுப்பூர்வமான இணைப்புமே காரணம்' எனத் தெரிவித்துள்ளார்.</p><h2><strong>திரைப்பயணத்தின் நிறைவு:</strong></h2><p>விஜய் தனது அரசியல் வாழ்க்கையில் தீவிரமாக கவனம் செலுத்தி வருவதால், அவரது கடைசிப் படமான 'ஜனநாயகன்' மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பும் எமோஷனல் பிணைப்பும் உருவாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாள்- முதலமைச்சர் விஜய் புகழாரம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-praise-to-doctor-muthulakshmi-reddy-birthday</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-praise-to-doctor-muthulakshmi-reddy-birthday#comments</comments><guid isPermaLink="false">32716fed-6e34-446e-93c0-445eb9967389</guid><pubDate>Thu, 30 Jul 2026 05:01:43 +0000</pubDate><atom:updated>2026-07-30T05:01:43.283Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Dr Muthulakshmi Reddy,டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/9inpxa9a/vijay.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி- முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி- முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/9inpxa9a/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்</a>, இந்தியாவின் மிக முக்கிய சமூகப் போராளியும் தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவருமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.  அதில், பெண்களின் சமூக முன்னேற்றத்திற்காகவும் ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும் முத்துலட்சுமி ரெட்டி ஆற்றிய மகத்தான சேவைகளை அவர் நினைவு கூர்ந்துள்ளார். </p><p>முதலமைச்சர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><h2><strong>சமூகப் போராளி</strong></h2><p>தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவரும், மெட்ராஸ் மாகாண சட்டமன்ற மேலவைக்கு 1927ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவரும், பெண்களின் கல்வி, உரிமை மற்றும் சமூக முன்னேற்றத்திற்காகவும், ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவருமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் பிறந்த நாளில் அவரது மகத்தான சேவைகளை நினைவுகூர்ந்து போற்றுகிறேன்!</p><p>டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள், ஆதரவற்ற பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் புகலிடமாக 'அவ்வை இல்லம்', புற்றுநோயாளிகளின் வாழ்வொளியாக 'அடையாறு புற்றுநோய் நிலையம்' போன்ற மகத்தான நிறுவனங்களை உருவாக்கியதோடு, குழந்தைத் திருமண தடைச்சட்டத்துக்கு வித்திட்ட சமூகப் போராளி ஆவார்.</p><p>அவரது உயரிய இலட்சியங்களும், பெண் முன்னேற்ற முன்னெடுப்புகளும், மனிதநேயப் பணிகளும், தன்னலமற்ற அர்ப்பணிப்பும் தலைமுறைகளைக் கடந்து என்றும் தமிழ் மண்ணில் நிலைத்திருக்கும்! என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவரும், மெட்ராஸ் மாகாண சட்டமன்ற மேலவைக்கு 1927ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவரும், பெண்களின் கல்வி, உரிமை மற்றும் சமூக முன்னேற்றத்திற்காகவும், ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவருமான டாக்டர்… <a href="https://t.co/wip3GFieSA">pic.twitter.com/wip3GFieSA</a></p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2082681800778981759?ref_src=twsrc%5Etfw">July 30, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>சென்னை மெட்ரோ 2-ம் கட்டப் பணிகள்: விரைந்து முடிக்க முதலமைச்சர் விஜய் உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-metro-phase-2-works-cm-vijay-orders-speedy-completion</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-metro-phase-2-works-cm-vijay-orders-speedy-completion#comments</comments><guid isPermaLink="false">eb20e855-6883-46b2-8c50-eb948dd67c33</guid><pubDate>Thu, 30 Jul 2026 04:52:06 +0000</pubDate><atom:updated>2026-07-30T04:52:06.805Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை மெட்ரோ,cm vijay,முதலமைச்சர் விஜய்,CM Vijay Inspects,Chennai Metro Phase 2,முதலமைச்சர் விஜய் ஆய்வு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/nn7wv915/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay Inspects Travel by Train]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/nn7wv915/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளைத் தமிழக முதலமைச்சர் விஜய் நேற்று நேரில் ஆய்வு செய்தார். கள ஆய்வின் ஒரு பகுதியாக, பொதுமக்களுடன் சக பயணியாக ரெயிலில் பயணம் செய்து அவர்களுடைய கருத்துகளையும் கேட்டறிந்தார்.</p><h2><strong>அரசினர் தோட்டம் முதல் நந்தனம் வரை பயணம்:</strong></h2><p>தலைமைச் செயலகத்தில் அன்றாடப் பணிகளை முடித்துக் கொண்டு புறப்பட்ட முதலமைச்சர் விஜய், அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்தை வந்தடைந்தார். அங்கு தானே டிக்கெட் பெற்றுக்கொண்டு ரெயிலில் ஏறினார். அரசினர் தோட்டம் முதல் நந்தனம் வரை பயணிகளுடன் சேர்ந்து பயணித்த அவர், மக்களிடம் உரையாடினார். முதலமைச்சரைக் கண்ட பயணிகள் அவருடன் ஆர்வத்துடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.</p><h2><strong>பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வு:</strong></h2><p>நந்தனத்தில் அமைந்துள்ள மெட்ரோ தலைமை அலுவலகத்திற்குச் சென்ற முதலமைச்சரை உயர் அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து, மெட்ரோ ரெயில் பாதுகாப்பு ஏற்பாடுகள், கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகள், அவசரகால பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பயணிகளுக்கான வசதிகளை விரிவாகக் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.</p><h2><strong>101 அடி உயர மேம்பாலத்தில் பிரம்மாண்ட பாதை:</strong></h2><p>கிண்டி கத்திப்பாரா பகுதியில் சுமார் 101 அடி உயரத்தில், 1,354 அடி நீளத்திற்கு அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்ட ரெயில் பாதையின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் நேரில் பார்வையிட்டார். இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்பணிகளின் முன்னேற்றத்தைக் கண்டு மெட்ரோ ரயில் அதிகாரிகளுக்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.</p><h2><strong>ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்:</strong></h2><p>தொடர்ந்து போரூர் மெட்ரோ ரெயில் நிலையம் சென்ற முதலமைச்சர், அங்கிருந்து பூந்தமல்லி வரை இயக்கப்பட்ட ஓட்டுநர் இல்லா  மெட்ரோ ரெயிலின் சோதனை ஓட்டத்தில் பங்கேற்றுப் பார்வையிட்டார்.</p><h2><strong>காலக்கெடுவுக்குள் முடிக்க உத்தரவு:</strong></h2><p>ஆய்வின் நிறைவாக, மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டப் பணிகள் அனைத்தையும் திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>பயங்கரவாதத்திற்கு உதவியதாக டெலிகிராம் நிறுவனருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த ரஷியா </title><link>https://www.maalaimalar.com/news/world/telegram-international-warrant-shock-russia-targets-pavel-durov-over-alleged-terror-support</link><comments>https://www.maalaimalar.com/news/world/telegram-international-warrant-shock-russia-targets-pavel-durov-over-alleged-terror-support#comments</comments><guid isPermaLink="false">24790f60-bb74-486f-93f6-eac5d407c061</guid><pubDate>Thu, 30 Jul 2026 04:37:12 +0000</pubDate><atom:updated>2026-07-30T04:37:12.218Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Pavel Navageethan,Russia,பயங்கரவாதம்,Terrorism,Telegram,பாவெல் துரோவ்,ரஷியா,டெலிகிராம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/84kqeztc/tn-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ புதின், பாவெல்]]></media:title><media:description type="html"><![CDATA[ புதின், பாவெல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/84kqeztc/tn-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தொழில்நுட்பம் (Technology)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெலிகிராம் நிறுவனம், தலைமை நிர்வாக அதிகாரியுமான பாவெல் துரோவ் மீது பயங்கவரத்திற்கு உதவி செய்வதாக  குற்றம்சாட்டி சர்வதேச பிடிவாரண்ட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது ரஷியா. </p><p>ரஷியாவில் பிறந்த பாவெல் தற்போது பிரஞ்சு, ஐக்கிய அரபு அமீரக குடியுரிமையைக் கொண்டு வெளிநாட்டில் வாழ்ந்து வருகிறார். </p><h2>ரஷியா</h2><p>ரஷியாவின் பரவலாக பயன்படுத்தப்படும் ஊடகங்களில் ஒன்றாக டெலிகிராம் உள்ளது. ரஷிய அரசு டெலிகிராமில் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க முயன்று வருகிறது. பயனர்கள் தரவுகளை அரசுடன் பகிர்ந்துகொள்ள துரோவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. </p><p>மேலும் ரஷிய மக்களை அரசு ஆதரவு பெற்ற MAX என்ற தகவல் பரிமாற்ற செயலிக்கு மாறவும் ரஷிய அரசு ஊக்குவித்து வருகிறது.</p><p>இந்த சூழலில் ரஷியாவின் பாதுகாப்பு அமைப்பான பெடரல் செக்யூரிட்டி சர்வீஸ் (FSB) துரோவை கைது செய்ய சர்வதேச பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. </p> <h2>குற்றச்சாட்டு</h2><p>துரோவ், பயங்கரவாத செயல்பாடுகளுக்கு உதவி செய்வதாக FSB குற்றம்சாட்டியுள்ளது. மேலும் உக்ரைனிய உளவு அமைப்புகளும், பயங்கரவாத குழுக்களும் பயன்படுத்தும் வகையில் டெலிகிராமில் உள்ள உள்ளடக்கங்களை அந்நிறுவனம் நீக்கத் தவறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.</p><p>FSBயின்படி, ரஷியாவுக்குள் ஆட்களை பணிக்கு எடுக்கவும், நாசவேலைகளை ஒருங்கிணைக்கவும் , பயங்கரம், படுகொலைகள் மற்றும் சைபர் மோசடிகளை அரங்கேற்றவரும் டெலிகிராம் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தடை செய்யப்பட்ட தகவல்களையும் டெலிகிராமில் இருந்து நீக்க துரோவ் தவறிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்ச்சாட்டுகள் குறித்தும் கைது வாரண்ட் குறித்தும் பாவெல் துரோவ் தரப்பில் இன்னும் எந்த பதிலும் இல்லை. அழுத்தத்திற்கு மத்தியிலும் டெலிகிராம் தொடர்ந்து அதிகம் பயன்படுத்தப்படும் தகவல் பரிமாற்ற ஊடகங்களில் ஒன்றாக நீடித்து வருகிறது.</p> <p>குறிப்பாக 2022 முதல் நடைபெற்று வரும் <a href="https://www.maalaimalar.com/news/world/black-sea-ukraine-port-attack-indian-sailors-trapped">ரஷியா உக்ரைன் போரில் </a>இரு தரப்பிலும் டெலிகிராம் தகவல் பரிமாற்றத்துக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது பல அதிகாரபூர்வ பதிவுகளை தனது டெலிகிராம் கணக்கின் வழியே வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.</p><p>மேலும் டெலிகிராம் செயலி சட்டவிரோத உள்ளக்கடகங்களை கொண்டுள்ளதாக துரோவ் மீது பிரான்சிலும் துரோவ் மீது விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>வாட்ஸ்அப் வெப் வெர்ஷனில் வேற லெவல்அப்டேட்!</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/whatsapp-web-gets-audio-and-video-calling-support-with-call-transfer-and-more</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/whatsapp-web-gets-audio-and-video-calling-support-with-call-transfer-and-more#comments</comments><guid isPermaLink="false">fe4aa2a1-2d33-4d32-84ba-c28be4085a9e</guid><pubDate>Thu, 30 Jul 2026 04:32:00 +0000</pubDate><atom:updated>2026-07-30T04:32:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>WhatsApp,Apps,வாட்ஸ்அப்,ஆப்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/a3r8cb4w/WA-Update.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Whatsapp]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/a3r8cb4w/WA-Update.png?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலகளவில் முன்னணி குறுந்தகவல் செயலி வாட்ஸ்அப், அவ்வப்போது புதுப்துபு அம்சங்களை வழங்கி பயனர் அனுபவத்தை மேம்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், வாட்ஸ்அப் தனது இணைய வெர்ஷனில் அழைப்புகளை மேம்படுத்தும் புதிய அப்டேட் வழங்கியுள்ளது.</p><p>வாட்ஸ்அப் நிறுவனம் நிறுவனம் தனது  வெப் வெர்ஷனில் காலிங் வசதியை வழங்குகிறது. இதன் மூலம் பயனர்கள் டெஸ்க்டாப் ஆப் இன்றி வாட்ஸ்அப் வெப் மூலம் க்ரூப் ஆடியோ மற்றும் வீடியோ கால் மேற்கொள்ளலாம். </p><h2>புது அப்டேட்:</h2><p>புதிய அப்டேட் மூலம் பயனர்கள் க்ரூப் ஆடியோ மற்றும் க்ரூப் வீடியோ கால்களை வெப் பிரவுசரில் இருந்தபடியே மேற்கொள்ள முடியும். இதற்காக டெக்ஸ்டாப் செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இதுதவிர பயனர்கள் ஸ்கிரீன் ஷேரிங், எமோஜி ரியாக்ஷன், பிரத்யேக Calls Tab, கால் ஹிஸ்டரி மற்றும் காண்டாக்ட் உள்ளிட்ட ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.</p><p>இணைய வெர்ஷனில் மேற்கொள்ளப்படும் வாட்ஸ்அப் அழைப்புகளும் முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்படும் என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. இந்த சேவையில் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை என்றும் இது முற்றிலும் இலவசமாகவே வழங்கப்படுவதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.</p><h2>புதிய அம்சங்கள்:</h2><p>வாட்ஸ்அப் அழைப்புகளில் வழங்கப்பட்டுள்ள புதிய அப்டேட் வழக்கமான காலிங் அம்சங்களுடன் கால் டிரான்ஸ்ஃபர், வெயிட்டிங் ரூம், குயிக் ஹெச்.டி., நாய்ஸ் சப்ரெஷன் போன்ற வசதிகளுடன் வருகிறது.</p><p>இதில் கால் டிரான்ஸ்ஃபர் அம்சம் கொண்டு பயனர்கள் அழைப்பை துண்டிக்காமல் நேரடியாக ஆக்டிவ் க்ரூப் கால்-இல் இணைய முடியும். ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட் கொண்டு அழைப்புகளை மேற்கொண்டு அதனை வாட்ஸ்அப் வெப் அல்லது டெக்ஸ்டாப் செயலியில் தொடர முடியும்.</p><p>வெயிட்டிங் ரூம் அம்சம் கொண்டு பயனர்கள் க்ரூப் கால்களில் லின்க் இன்றி இணைய அனுமதிக்கிறது. வாட்ஸ்அப் கால் லின்க் உருவாக்கும் போது, பயனர்கள் “Require approval to join” ஆப்ஷனை செயல்படுத்தலாம். இவ்வாறு செய்யும் போது அழைப்பாளர்கள் அழைப்பிற்கு முன் காத்திருக்க செய்கிறது.</p><p>குயிக் ஹெச்.டி. அம்சம் அழைப்பு தொடங்கிய சில நொடிகளில் ஹெச்.டி. வீடியோ ஆப்ஷனை செயல்படுத்திவிடும். நாய்ஸ் சப்ரெஷன் வசதி அழைப்புகளின் போது பின்னணியில் இருக்கும் இரைச்சல் மற்றும் சத்தத்தை குறைத்து அழைப்பின் தரத்தை மேம்படுத்தும். இந்த அம்சத்தை இன்-கால் செட்டிங்ஸ்-இல் எப்போது வேண்டுமானாலும் செயல்படுத்த முடியும்.</p><p>வாட்ஸ்அப் நிறுவனம் இந்த அம்சங்களை உலகளவில் வரும் வாரங்களில் வெளியிடும் என்று தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆகஸ்ட் 12-ல் முழு சூரிய கிரகணத்தை நேரலையில் ஒளிபரப்பும் நாசா!</title><link>https://www.maalaimalar.com/news/world/nasa-to-livestream-total-solar-eclipse-on-august-12</link><comments>https://www.maalaimalar.com/news/world/nasa-to-livestream-total-solar-eclipse-on-august-12#comments</comments><guid isPermaLink="false">61b5509b-b35f-41eb-952a-5c69bc93f83a</guid><pubDate>Thu, 30 Jul 2026 04:22:46 +0000</pubDate><atom:updated>2026-07-30T04:22:46.128Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நாசா,முழு சூரிய கிரகணம்,Total Solar Eclipse  NASA,Perseid Meteor Shower,பெர்சீட்ஸ் விண்கல் மழை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/n0iqj6vm/nasa.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Total Solar Eclipse  NASA ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/n0iqj6vm/nasa.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வரும் ஆகஸ்ட் 12த் தேதி அன்று வட அரைக்கோளத்தின் பல பகுதிகளில் அரிதான மற்றும் கண்கவர் 'முழு சூரிய கிரகணம்' நிகழவுள்ளது. இந்த அரிய வானியல் நிகழ்வை உலகெங்கிலும் உள்ள மக்கள் பார்க்கும் வகையில் 'நாசா' தனது அதிகாரப்பூர்வ தளம் மற்றும் சமூக வலைத்தள பக்கங்களில் நேரலை செய்ய ஏற்பாடு செய்துள்ளது.</p><h2><strong>கிரகணம் எங்கெல்லாம் தெரியும்?</strong></h2><p>சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு கடந்து செல்லும் போது, நிலவின் நிழல் பூமியின் மீது விழுவதால் இந்த முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது.</p><h2><strong>முழு கிரகணம்:</strong></h2><p>கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யாவின் வட பகுதி, அட்லாண்டிக் பெருங்கடல், ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலின் சில பகுதிகளில் சூரியன் முழுமையாக நிலவால் மறைக்கப்பட்டு 'முழு சூரிய கிரகணம்' தென்படும்.</p><h2><strong>பகுதி கிரகணம்:</strong></h2><p>அமெரிக்காவின் வடகிழக்கு பகுதிகள், கனடா, ஐரோப்பாவின் பெரும்பகுதி மற்றும் வடமேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இது பகுதி கிரகணமாக தெரியும்.</p><h2><strong>முழு மறைப்பு நேரம்:</strong></h2><p>ஐஸ்லாந்தின் மேற்கு பகுதியில் கிரகணத்தின் உச்சக்கட்டத்தில் சூரியன் முழுமையாக மறைக்கப்படும் நிகழ்வு '2 நிமிடங்கள் 18 வினாடிகள்' வரை நீடிக்கும். ஐஸ்லாந்தில் மாலை வேளையிலும், ஸ்பெயினில் சூரிய அஸ்தமனத்திற்கு சற்று முன்பாகவும் முழு கிரகணம் தென்படும்.</p><p>பகுதி கிரகணம் தொடங்குவது முதல் முடிவது வரை இந்த முழு நிகழ்வும் சுமார் '4 மணி நேரமும் 23 நிமிடங்களும்' நீடிக்கும். இந்த கிரகணம் நிகழும் அதே இரவில் ஆண்டின் புகழ்பெற்ற 'பெர்சீட்ஸ் விண்கல் மழை' மற்றும் 'அமாவாசை' இரவும் இணைவது இதன் மற்றொரு சிறப்பு அம்சம்.</p><h2><strong>நாசாவின் அறிவியல் ஆராய்ச்சிகள்:</strong></h2><p>இந்த கிரகணத்தின் போது சூரியனின் வளிமண்டல மேலடுக்கான 'கொரோனா' பகுதியை விரிவாக ஆய்வு செய்ய அறிவியல் குழுக்கள் தீவிரமாக தயாராகி வருகின்றன.</p><h2><strong>WB-57 ஜெட் விமானங்கள்:</strong></h2><p> நாசாவின் அதிவேக ஆராய்ச்சி ஜெட் விமானங்கள் நிலவின் நிழலைத் தொடர்ந்து பறந்து, மேகங்கள் இல்லாத வளிமண்டலத்தின் மேல் பகுதியில் இருந்து சூரியன் கொரோனாவைத் தெளிவான புகைப்படங்கள் மற்றும் தரவுகள் மூலம் ஆய்வு செய்யும்.</p><h2><strong>ஆராய்ச்சி பலூன்கள்:</strong></h2><p>அமெரிக்கப் பல்கலைக்கழக மாணவர்கள் மூலம் ஐஸ்லாந்து மற்றும் ஸ்பெயினில் அறிவியல் பலூன்கள் விண்ணில் செலுத்தப்பட்டு, கிரகணத்தின் போது பூமியின் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள் அளவிடப்படும்.</p><h2><strong>பார்வையாளர்களுக்கான எச்சரிக்கை:</strong></h2><p>ஐரோப்பா மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளில் இந்த கிரகணத்தைப் பார்க்க சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் குவிந்து வருகின்றனர். சூரிய கிரகணத்தைப் வெறும் கண்களாலோ அல்லது சாதாரண கூலிங் கிளாஸ் மூலமாகவோ பார்க்கக்கூடாது. 'ISO 12312-2 'சான்றிதழ் பெற்ற சூரிய கிரகணக் கண்ணாடிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என நாசா எச்சரித்துள்ளது.</p><p>இந்திய நேரப்படி ஆகஸ்ட் 12 ஆம் தேதி இரவு இந்த நிகழ்வு நடைபெறுவதால், இந்தியாவில் இதனை நேரில் பார்க்க முடியாது. இருப்பினும், நாசாவின் நேரலை ஒளிபரப்பு மூலம் விண்வெளி ஆர்வலர்கள் இதனை தங்களது மொபைல் மற்றும் கணினிகளில் நேரடியாகக் கண்டு ரசிக்கலாம்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY : இன்று அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... எவ்வளவு தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-30-07-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-30-07-2026#comments</comments><guid isPermaLink="false">c6636af7-fdb0-4d45-b189-c5a9c6946ff3</guid><pubDate>Thu, 30 Jul 2026 04:18:06 +0000</pubDate><atom:updated>2026-07-30T04:18:06.917Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="350" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/vdfsbd0p/gold04.jpg" width="615"><media:title type="html"><![CDATA[ தங்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/vdfsbd0p/gold04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.</aside><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">தங்கம்</a> விலை கடந்த 27-ந்தேதி வரை குறைந்து வந்து, அதன் தொடர்ச்சியாக நேற்றும் விலை குறைந்திருந்தது. அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 215-க்கும் ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 720-க்கும் விற்பனை ஆனது. <a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-29-07-2026">நேற்றைய</a> நிலவரப்படி, கிராமுக்கு ரூ.60-ம், சவரனுக்கு ரூ.480-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 155-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 240-க்கும் விற்பனை செய்யப்பட்டது. </p><h2><strong>தங்கம் விலை உயர்வு</strong></h2><p>இந்நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு 75 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,230-க்கும் சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 840 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. </p><h2><strong>வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>வெள்ளி விலையில் மூன்றாவது நாளாக மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><h2><strong>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-</strong></h2><p>29-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,240</p><p>28-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,720</p><p>27-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,960</p><p>26-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,400</p><p>25-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,400</p><h2><strong>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-</strong></h2><p>28-07-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>28-07-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>27-07-2026- ஒரு கிராம் ரூ.240</p><p>26-07-2026- ஒரு கிராம் ரூ.240</p><p>25-07-2026- ஒரு கிராம் ரூ.240</p>]]></content:encoded></item><item><title>மோடி பிரதமர் வேலையை விட்டுவிட்டு முழுநேர Influencer ஆக மாறலாம் - தீப்கே காட்டம்
</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-scam-protest-dharmendra-pradhan-quits-as-abhijit-deepke-slams-pm-modi</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-scam-protest-dharmendra-pradhan-quits-as-abhijit-deepke-slams-pm-modi#comments</comments><guid isPermaLink="false">de79404e-bce0-4c70-a012-2098f7a8d12b</guid><pubDate>Thu, 30 Jul 2026 04:09:43 +0000</pubDate><atom:updated>2026-07-30T04:09:43.603Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,பிரதமர் மோடி,CJP,அபிஜித் தீப்கே,சிஜேபி போராட்டம்,Abhijit Deepke</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/2t6rjrkz/tn-5.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தீப்கே, மோடி ]]></media:title><media:description type="html"><![CDATA[ தீப்கே, மோடி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/2t6rjrkz/tn-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் பதவியை தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யவேண்டும் என்ற முழக்கத்துடன் அபிஜித் தீப்கேவின் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்திய 1 மாத கால <a href="https://www.maalaimalar.com/news/national/cjp-new-protest-warning-delhi-jantar-mantar-security">போராட்டம் </a>கடந்த வாரம் வெற்றி பெற்றது. </p><h2>போராட்டம் வெற்றி </h2><p>அழுத்தத்தின் பேரில் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். அதேநேரம், பிரதமர் மோடியும் தனது நீண்ட நெடிய மௌனத்தை களைத்து கடந்த வாரம் இன்ஸ்டாகிராமில் வீடியோ மூலம் இதுபற்றி பேசினார். </p><p>தேர்வு முறைகேடுகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளுக்கு அதிக தண்டனை விதிக்கும் சிறப்பு மசோதா ஆகிய அறிவுப்புகளை அவர் அடுத்தடுத்து வெளியிட்டார். </p><p>இதன்படி நேற்று, பொதுத் தேர்வுகள் (முறைகேடு தடுப்பு) மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. </p><p>போராட்டத்தின் வெற்றியை தொடர்ந்து சிஜேபி தலைவர் அபிஜித் தீப்கே மகாராஷ்டிராவில் உள்ள தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.  </p> <h2>பேட்டி </h2><p>அங்கு ஊடகங்களிடம் பேசிய அவர் மாணவர்களை ஈர்ப்பதற்காக பிரதமர் மோடி வெளியிட்ட சமூக வலைத்தள வீடியோக்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.</p><p>தீப்கே கூறியதாவது, "பிரதமர் மோடி இப்போது ஒரு இன்புளூயன்சராக மாறலாம். அவர் அந்த வேலையை மிகவும் சிறப்பாகச் செய்கிறார். எனவே, அவர் பிரதமர் பதவியை விட்டுவிட்டு முழுநேர இன்புளூயன்சராக மாறட்டும். நாட்டின் ஆட்சியை வேறு ஏதேனும் தலைவர் கவனிக்கட்டும்" என்று கூறினார்.</p> <h2>நடவடிக்கை</h2><p>மேலும், போராட்டம் வாபஸ் பெறப்பட்ட பின்னரும், பல்வேறு மாநில அரசுகள் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் கண்டறிந்து அச்சுறுத்தி வருவதாகக் குற்றம் சாட்டினார்.</p><p>ஜூலை 20 அன்று டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மீது தடியடி நடத்தவும், பெல்லட் துப்பாக்கிகளை பயன்படுத்தவும் உத்தரவிட்ட அமித் ஷா உட்படப் பொறுப்பான அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.</p><p>தொடர்ந்து பேசிய அவர், "மாணவர்கள் ஒன்றும் தீவிரவாதிகள் அல்ல. மத்திய அரசு தனது அடக்குமுறையைக் கைவிடாவிட்டால், தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது போல, அடுத்து ஆட்சியையே மாற்றுவோம்" என்றும், அடுத்தகட்டப் போராட்டம் இதைவிட மிகப்பெரிய அளவில் இருக்கும் என்றும் எச்சரித்தார்.</p><p>தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்த பின் சிஜேபி உறுப்பினர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது குறித்து பேசிய தீப்கே, 36 நாட்கள் வெயிலிலும் மழையிலும் போராடிய தன்னார்வலர்களைக் கௌரவிக்கவே அந்த நிகழ்வு நடத்தப்பட்டது என்றார்.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் முறைகேடு வழக்கு- செந்தில் பாலாஜி முன்ஜாமின் கோரி மனு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-irregularities-case-senthil-balajis-anticipatory-bail-plea</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-irregularities-case-senthil-balajis-anticipatory-bail-plea#comments</comments><guid isPermaLink="false">15df6957-c24e-4c7e-8872-b85da0d8d5dc</guid><pubDate>Thu, 30 Jul 2026 04:05:40 +0000</pubDate><atom:updated>2026-07-30T04:05:40.196Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,senthil balaji,செந்தில் பாலாஜி,Tasmac case,டாஸ்மாக் முறைகேடு வழக்கு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/fjr6d0w7/senthilbalaji.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/fjr6d0w7/senthilbalaji.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமின் மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.</aside><h2><strong>சோதனை</strong></h2><p>தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் த.வெ.க. ஆட்சி அமைந்த பிறகு கடந்த தி.மு.க. ஆட்சியில் எழுப்பப்பட்ட பல்வேறு முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. </p><p>கடந்த தி.மு.க. ஆட்சியில் டாஸ்மாக்கில் பல்வேறு முறைகேடுகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக சட்டமன்றத்திலும் முதலமைச்சர் விஜய் விமர்சனம் செய்து பேசினார். ‘‘பார்ட்டி பண்ட்” என்ற பெயரில் தனியாக பணம் வசூல் செய்யப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியதுடன் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து இருந்தார். </p><p>இதனை தொடர்ந்து டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சென்னை, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 41 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னை தி.நகர் தணிகாசலம் சாலையில் உள்ள மதுபான நிறுவன அலுவலகத்திலும், கரூரில் <a href="https://maalaimalar.com/news/tamilnadu/rs-35-crore-bribery-case-questioning-of-senthil-balaji-completed">செந்தில் பாலாஜியின்</a> வீடு உள்பட 6 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. மேலும் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் இடங்களிலும் சோதனை நடைபெற்றது. </p><h2><strong>வழக்கு பதிவு</strong></h2><p>இதற்கிடையே, டாஸ்மாக் மதுபான கொள்முதல், டெண்டர் உள்ளிட்டவற்றில் மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி, டாஸ்மாக் முன்னாள் எம்.டி.விசாகன் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. </p><h2><strong>முன்ஜாமின் மனு</strong></h2><p>இந்த நிலையில், டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF">செந்தில்பாலாஜி</a> தாக்கல் செய்த முன்ஜாமின் மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. </p><p>முன்ஜாமின் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு 3-வது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>CJP புதிய போராட்டம் எச்சரிக்கை: டெல்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் உச்சகட்ட பாதுகாப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/cjp-new-protest-warning-delhi-jantar-mantar-security</link><comments>https://www.maalaimalar.com/news/national/cjp-new-protest-warning-delhi-jantar-mantar-security#comments</comments><guid isPermaLink="false">8aeda57e-cce2-41dd-96ef-33317819aeea</guid><pubDate>Thu, 30 Jul 2026 03:52:46 +0000</pubDate><atom:updated>2026-07-30T03:52:46.808Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Jantar Mantar,delhi,டெல்லி,காக்ரோச் ஜனதா கட்சி,ஜந்தர் மந்தர்,CJPProtest</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/va7atry1/jantar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jantar Mantar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/va7atry1/jantar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலகியதைத் தொடர்ந்து, 36 நாட்கள் நீடித்த போராட்டத்தை கடந்த 25ஆம் தேதி அன்று தற்காலிகமாக முடித்துக்கொள்வதாக 'காக்ரோச் ஜனதா கட்சி' அறிவித்திருந்தது.</p><p>ஆனால், போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட FIR-ஐ திரும்பப் பெறுவது குறித்த வாக்குறுதியை மத்திய அரசு மீறிவிட்டதாகக் கூறி, CJP கட்சி மீண்டும் போராட்டக் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து புதுடெல்லியிலுள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் டெல்லி காவல்துறையினரும் துணை ராணுவப் படையினரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மிகத் தீவிரப்படுத்தியுள்ளனர்.</p><h2><strong>இரும்புத் தடுப்புகள்:</strong></h2><p>முந்தைய போராட்டங்களின் போது போராட்டக்காரர்கள் தடுப்புகளை அகற்றிவிட்டு நாடாளுமன்றத்தை நோக்கி முன்னேற முயன்றனர். இதைத் தவிர்க்கும் வகையில், தற்போது ஜந்தர் மந்தரின் இரு புறங்களிலும் வைக்கப்பட்டுள்ள இரும்புத் தடுப்புகளை அகற்றிவிட முடியாதபடி, அவற்றை இரும்பு வெல்டிங் செய்து ஒன்றாக இணைத்து பலப்படுத்தி வருகின்றனர்.</p><h2><strong>சிஜேபி விடுத்துள்ள முக்கியக் குற்றச்சாட்டுகள்:</strong></h2><h2><strong>வாக்குறுதி மீறல்:</strong></h2><p>போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது எந்தவித சட்ட நடவடிக்கையோ, வழக்குப்பதிவோ செய்யப்பட மாட்டாது என கடந்த 25 ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது மத்திய அரசு உறுதியளித்ததாக சிஜேபி செய்தி தொடர்பாளர் அசுதோஷ் ரன்கா தெரிவித்துள்ளார். ஆனால், பாஜனதா ஆளும் மாநிலங்களில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கைது செய்யப்பட்டு வருவதாக சிஜேபி குற்றம் சாட்டியுள்ளது.</p><h2><strong>கட்சியின் கோரிக்கைகள்:</strong></h2><p>* அனைத்து FIR வழக்குகளையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.</p><p>* கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்.</p><p>* டெல்லி போலீஸ் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகள் புதிய வழக்குகளைப் பதிவு செய்யக் கூடாது.</p><p>* அரசுடன் எட்டப்பட்ட ஒப்பந்த நகலை உடனடியாகப் பகிரங்கமாக வெளியிட வேண்டும்.</p><h2><strong>சட்ட உதவிகள் மற்றும் நிதியுதவி:</strong></h2><p>போராட்டத்தில் பாதிக்கப்பட்டு சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு உதவ CJP கட்சி "SAAKSHI" என்ற ஆன்லைன் தளத்தையும், தேசிய அளவிலான சட்ட உதவி மையத்தையும் தொடங்கியுள்ளது. மேலும், மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல், பாதிக்கப்பட்ட மாணவர்களின் சட்டப் போராட்டத்திற்கு உதவ ரூ.1 கோடி நிதி ஒதுக்குவதாக அறிவித்துள்ளார்.</p><h2><strong>CJP நிறுவனர் அபிஜீத் திப்கே எச்சரிக்கை:</strong></h2><p>மகாராஷ்டிராவில் செய்தியாளர்களைச் சந்தித்த CJP நிறுவனர் அபிஜீத் திப்கே, "மாணவர்களை மீண்டும் வீதிக்கு வர அரசு வற்புறுத்துகிறது. மாணவர்களின் கோபம் இன்னும் தணியவில்லை. அரசு தனது போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால் மாணவர்கள் அதைச் செய்வார்கள்" என எச்சரித்துள்ளார்.</p><p>NEET தேர்வுத் தாள்கள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ மதிப்பீட்டு குளறுபடிகளைக் கண்டித்து CJP அமைப்பினர் நடத்திய தொடர் போராட்டத்தைத் தொடர்ந்து, முன்னாள் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். தற்போது நிலுவையில் உள்ள வழக்குகளை மையமாக வைத்து மீண்டும் அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஜோர்டான் சம்பவத்துக்கு பதிலடி.. ஈரான் மீது மீண்டும் முழுவீச்சில் அமெரிக்கா தாக்குதல் </title><link>https://www.maalaimalar.com/news/world/us-iran-airstrikes-us-hits-iranian-targets-after-jordan-base-missile-attack</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-iran-airstrikes-us-hits-iranian-targets-after-jordan-base-missile-attack#comments</comments><guid isPermaLink="false">7979ba4d-2320-4f0f-9f7d-cb6c64592447</guid><pubDate>Thu, 30 Jul 2026 03:51:46 +0000</pubDate><atom:updated>2026-07-30T03:51:46.824Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>trump,டிரம்ப்,Iraq,ஈராக்,Iran War,ஈரான் போர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/8qed8afw/tn-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஈரான் மீது தாக்குதல் ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஈரான் மீது தாக்குதல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/8qed8afw/tn-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/trump-netanyahu-explored-all-iran-options-including-attack-israeli-official">ஈரான் </a>மீதான வான்வழித் தாக்குதல்களை அமெரிக்கா இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. </p><p>ஜோர்டானில் உள்ள அமெரிக்கப் படைத்தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்கா ஈரானில் தாக்குதல் நடத்தியுள்ளது .  </p><p> அமெரிக்க மத்திய நேரப்படி இரவு 8 மணி (இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணி) முதல் ஈரான் இலக்குகள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதலைத் தொடங்கியதாக அமெரிக்க மத்தியக் கட்டளையகமான சென்ட்காம் அறிவித்துள்ளது. </p> <h2>தாக்குதல்</h2><p>அமெரிக்கத் தாக்குதல் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, ஈரானின் தெற்குப் பகுதியில் ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள கெஷ்ம் தீவில் 3 சக்திவாய்ந்த குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாகவும், குடியிருப்புப் பகுதி மீது ஏவுகணை தாக்கியதாகவும் ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>புஷெர் உட்பட தெற்கு ஈரானின் பல இடங்களில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல்களால் ஏற்பட்ட சேதம் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.</p> <h2>டிரம்ப் எச்சரிக்கை</h2><p>முன்னதாக, ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தைக் குறிவைத்து ஈரானின் புரட்சிகரப் படை ஏவுகணைகளை வீசியது. அவை அனைத்தையும் அமெரிக்கக் வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்தன.</p><p>இதுகுறித்து நேற்று வெள்ளை மாளிகையில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், "இப்போது எங்கள் முறை, அவர்களுக்குக் கடுமையான பதிலடி கொடுப்போம்" என்று எச்சரித்திருந்தார்.</p><p>டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு இடையேயான சந்திப்பைத் தொடர்ந்து ஈரான் மீது கடந்த வாரம் நிறுத்தப்பட்ட தாக்குதல்களை அமெரிக்கா மீண்டும் தொடங்கியுள்ளது பேசுபொருளாகி உள்ளது.</p><h2>ஈராக்</h2><p>முன்னதாக ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள் மீது அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா நடத்திய கூட்டு வான்வழித் தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர்.</p><p>சவுதி எண்ணெய் நிறுவனங்கள் மீது 30க்கும் மேற்பட்ட டிரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>முன்பதிவில் நல்ல வரவேற்பை பெற்ற கேலக்ஸி Z ஃபோல்டு 8</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/samsung-galaxy-z-fold-8-series-and-z-flip-8-record-271000-pre-orders-in-india-in-72-hours</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/samsung-galaxy-z-fold-8-series-and-z-flip-8-record-271000-pre-orders-in-india-in-72-hours#comments</comments><guid isPermaLink="false">039f06e6-7248-4ef8-a060-3a8ea636ea5a</guid><pubDate>Thu, 30 Jul 2026 03:41:00 +0000</pubDate><atom:updated>2026-07-30T03:41:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஸ்மிதா,Samsung,சாம்சங்,Foldable Smartphone</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/e44s4m70/Z-Fold-8-Ulra.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Galaxy Z Fold 8 ultra]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/e44s4m70/Z-Fold-8-Ulra.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/samsung">சாம்சங் </a>நிறுவனத்தின் கேலக்ஸி Z ஃபோல்டு 8 அல்ட்ரா, கேலக்ஸி Z ஃபோல்டு 8 மற்றும் கேலக்ஸி Z ப்ளிப் 8 மாடல்கள் சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. அறிமுக தினம் தொடங்கி புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு நடைபெற்று வருகிறது.</p><p>இந்த நிலையில், கேலக்ஸி Z ஃபோல்டு 8 அல்ட்ரா, கேலக்ஸி Z ஃபோல்டு 8 மற்றும் கேலக்ஸி Z ஃப்ளிப் 8 மாடல்கள் முன்பதிவு தொடங்கிய 72 மணி நேரத்திலேயே 2,71,000 யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவில் இது சாம்சங் நிறுவனத்தின் முந்தைய தலைமுறை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை விட அதிகம் ஆகும்.</p><h2>அதிகரிக்கும் வரவேற்பு:</h2><p>இதுகுறித்து சாம்சங் வெளியிட்ட தகவல்களின் படி, புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் ஒட்டுமொத்த முன்பதிவில் 45 சதவீத யூனிட்கள் 2-ஆம் கட்ட நகரங்கள் மற்றும் சிறு பிராந்தியங்களில் இருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p><p>அதன்படி புதிய பிரீமியம் பிரிவில் இடம்பெற்றுள்ள மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை வாங்க வழக்கமான மெட்ரோ பகுதிகளை தவிர்த்து பரவலாக பல்வேறு பகுதிகளில் இருப்பவர்கள் வரை ஆர்வம் அதிகரித்து வருவது தெரிகிறது.</p><h2>விலை விவரங்கள்:</h2><p>கேலக்ஸி Z ஃபோல்டு 8 அல்ட்ரா ரூ. 1,99,999</p><p>கேலக்ஸி Z ஃபோல்டு 8 ரூ. 1,79,999</p><p>கேலக்ஸி Z ஃப்ளிப் 8 ரூ. 1,24,999</p><p>கடுமையான விலையை கருத்தில் கொண்டு சாம்சங் நிறுவனம் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை வாங்குவோருக்கு சந்தையிலேயே முதல் முறையாக முன்பணம் இல்லாமலேயே வாங்கும் வசதி, வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் விற்பனை ஆகஸ்ட் 08-ஆம் தேதி தொடங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஊரக வேலை திட்டத்தில் பணியாற்றும் பெண்ணுக்கு ரூ.2.75 கோடி வரி செலுத்தும்படி நோட்டீஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/notice-issued-to-woman-who-worked-for-125-days-demanding-tax-payment-of-rs-2-75-crore</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/notice-issued-to-woman-who-worked-for-125-days-demanding-tax-payment-of-rs-2-75-crore#comments</comments><guid isPermaLink="false">26c9209a-23bf-424f-900b-d027c4101234</guid><pubDate>Thu, 30 Jul 2026 03:20:28 +0000</pubDate><atom:updated>2026-07-30T03:20:28.108Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>GST,ஜிஎஸ்டி வரி,GST Tax,ஜிஎஸ்டி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/eucj7d3u/jolarpet.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வரி செலுத்தும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்ட பெண்மணி ருக்மணி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/eucj7d3u/jolarpet.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>125 நாள் வேலை செய்யும் பெண்ணுக்கு, ரூ.2.75 கோடி ஜி.எஸ்.டி. செலுத்துமாறு நோட்டீஸ் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.</aside><h2><strong>125 நாள் வேலை</strong></h2><p>திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த புதூர் படவேட்டம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி ருக்மணி (வயது 56). இவர் 100 நாள் வேலை திட்டத்தில் ஏரி வேலைக்கு சென்று குடும்பம் நடத்தி வருகிறார்.</p><p>இந்த நிலையில் 125 நாள் வேலை திட்டத்தில் வந்த கூலி பணத்தை எடுப்பதற்காக நேற்று சந்தைக்கோடியூர் பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்றுள்ளார்.</p><h2><strong>ரூ.2.75 கோடி வரி ஏய்ப்பு</strong></h2><p>அங்கு வங்கியில் இருந்த ஊழியர்கள் நீங்கள் ஆர்.எம்.டிரேடர்ஸ் என்ற பெயரில் தொழில் நிறுவனம் நடத்துவதாகவும், அதன் மூலம் ஜி.எஸ்.டி. செலுத்தாமல் ரூ.2 கோடியே 79 லட்சத்து 19 ஆயிரத்து 420 வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் ஆம்பூர் வட்ட வணிகவரித்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் இருந்து கடிதம் வந்துள்ளது.</p><p>அதன்பேரில் உங்களுடைய வங்கி கணக்கு முடக்கம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.</p><h2><strong>பரபரப்பு</strong></h2><p>இதனால் அதிர்ச்சியடைந்த ருக்மணி, தான் அதுபோன்று தொழில் நிறுவனம் எதுவும் நடத்தவில்லை என்றும், 125 நாள் வேலைக்கு சென்று குடும்பம் நடத்தி வருவதாகவும் கூறியிருக்கிறார். மேலும் தனது வங்கி கணக்கு முடக்கப்பட்டதால் அதில் இருந்து கூலி பணத்தை எடுக்க முடியாமல் திரும்பி உள்ளார்.</p><p>125 நாள் வேலை செய்யும் பெண்ணுக்கு ரூ.2.75கோடி ஜி.எஸ்.டி. செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>4.09 நிமிட நீளம்.. ராவணனாக மிரட்டும் யாஷ் - வெளியானது &apos;ராமாயணா&apos; டிரெய்லர் </title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ramayana-trailer-release-epic-film-trailer-drops-at-415-am-featuring-ranbir-kapoor-sai-pallavi-and-yash</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ramayana-trailer-release-epic-film-trailer-drops-at-415-am-featuring-ranbir-kapoor-sai-pallavi-and-yash#comments</comments><guid isPermaLink="false">d71cc0b2-a22b-4fb6-b9a9-8153fbf38c6b</guid><pubDate>Thu, 30 Jul 2026 03:07:46 +0000</pubDate><atom:updated>2026-07-30T03:07:46.785Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிரெய்லர்,ரன்பீர் கபூர்,ராமாயணா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/u9ag129e/tn-4.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராமாயணா]]></media:title><media:description type="html"><![CDATA[ ராமாயணா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/u9ag129e/tn-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BE">ராமாயணா</a>’ படத்தின் டிரெய்லர் இன்று (ஜூலை.30ம் தேதி) அதிகாலை 4.15 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் வெளியாகி உள்ளது. </p><p>முன்னதாக இந்த டிரெய்லர் ஜூலை 24 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டு தற்பொழுது வெளியாகி உள்ளது. </p> <h2>ராமாயணா</h2><p>ரமேஷ் திவாரி இயக்கத்தில், ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, மற்றும் இராவணனாக யஷ் நடித்துள்ள வரலாற்றுப் படம் ராமாயணா. அனுமன் கதாபாத்திரத்தில் சன்னி தியோல் நடித்துள்ளார்.</p><p>ஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த இதிகாசத் திரைப்படத்தின் முதல் பாகம், 2026 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.</p> <h2>டிரெய்லர்</h2><p>4.09 நிமிடங்கள் நீளமுள்ள இந்த டிரெய்லர், ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக உள்ளது.</p><p>மூன்று உலகங்களுக்கும் தானே அரசன் என்று பெருமையுடன் அறிவித்துக்கொள்ளும் ராவணனின் (யாஷ்) உரையாடலுடன் டிரெய்லர் தொடங்குகிறது.</p><p>ராமரின் (ரன்பீர்) குழந்தைப் பருவம், அசுரர்களுடனான போர்கள் மற்றும் சீதையுடனான திருமணம் போன்ற காட்சிகள் இதில் காட்டப்பட்டுள்ளன.</p><p>அதன்பிறகு, 14 வருட வனவாசம், சீதாராமன் லட்சுமணனுடன் வனத்திற்குச் செல்வது, மற்றும் ராவணன் சீதையைக் கடத்துவது போன்ற முக்கியக் காட்சிகளுடன் இந்த டிரெய்லர் கதையின் மீதான ஆர்வத்தை அதிகரித்தது.</p><p>குறிப்பாக, விஷுவல் எபெக்ட்ஸ் மற்றும் பின்னணி இசை ஆகியவை படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/K7zjRJ_0sgk"></iframe></figure>]]></content:encoded></item><item><title>POK பேரணி.. பாகிஸ்தான் பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் 30 பொதுமக்கள் பலி</title><link>https://www.maalaimalar.com/news/world/pok-human-rights-abuses-over-30-civilians-killed-in-pakistan-security-forces-firing</link><comments>https://www.maalaimalar.com/news/world/pok-human-rights-abuses-over-30-civilians-killed-in-pakistan-security-forces-firing#comments</comments><guid isPermaLink="false">31fc64d4-cec9-4770-b460-2365df790a57</guid><pubDate>Thu, 30 Jul 2026 02:40:50 +0000</pubDate><atom:updated>2026-07-30T02:40:50.234Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Pakistan,PoK,பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்,Violence,வன்முறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/clj8ram6/tn-1.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ POK ]]></media:title><media:description type="html"><![CDATA[ POK ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/clj8ram6/tn-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/pok-election-boycott-empty-polling-stations-protests-and-violence-rock-pok">பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்</a> (PoK) கடந்த சில தினங்களில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் நடத்திய தாக்குதலில், 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். 33க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். </p><h2>பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்</h2><p>ஜம்மு காஷ்மீரின் 35 சதவீத நிலம் பாகிஸ்தான் வசம் உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (POK) என அழைக்கப்படும் இந்த பகுதிக்கு தனி ஜனாதிபதி, பிரதமர், சட்டசபை உள்ளது.</p><p>இங்கு மக்களுக்கு எதிராக பாகிஸ்தான் அரசின் அடக்குமுறை, உரிமைகள் மறுப்பு, விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றால் மக்கள் பெருமளவில் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.</p><h2>தேர்தல்</h2><p>பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்  ஜூலை 27 முதற்கட்ட சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. ஜாயிண்ட் அவாமி ஆக்ஷன் கமிட்டி (JAAC) என்ற அமைப்பு மக்களை தேர்தலை புறக்கணிக்கச் செய்து போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.  </p><h2>துப்பாக்கிச்சூடு</h2><p>ஜூலை 27, 28,29 ஆகிய நாட்களில் ராவலாகோட்டில் இருந்து முசாபராபாத் நோக்கி JAAC அமைப்பின் தலைமையில் மக்கள் சென்ற பேரணியில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் துப்பாக்கிச்சூடு மற்றும் பிற வகைகளில் தாக்குதல் நடத்தின. </p><p>இந்த தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதில் JAAC மத்தியக் குழு உறுப்பினர் உமர் நசீரின் சகோதரர் உஸ்மான் நசீர் என்பவரும் உயிரிழந்துள்ளார்.  </p> <h2>மூடி மறைப்பு</h2><p>பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த அத்துமீறல்கள் வெளியுலகிற்குத் தெரியாமல் இருக்க, PoK பகுதி முழுவதும் இணையம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளை பாகிஸ்தான் அரசு முற்றிலும் முடக்கியுள்ளது.</p><p>இந்த கொலைகள் குறித்து உடனடியாகச் சுதந்திரமான விசாரணை நடத்தக் கோரியும், வன்முறையை உடனடியாக நிறுத்தக் கோரியும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளுக்கு JAAC அதிகாரப்பூர்வமாக முறையீடு செய்துள்ளது.</p> <h2>தேர்தல் புறக்கணிப்பு</h2><p>மீர்பூர் பிரிவில் நடைபெற்ற முதல்கட்டத் தேர்தலில், மக்களின் தேர்தல் புறக்கணிப்பு காரணமாக 10 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.</p><p>இருப்பினும், பாகிஸ்தான் அரசு 45% வாக்குப்பதிவு நடந்ததாகக் கணக்கு காட்டியுள்ளது.</p> <h2>இந்தியா காட்டம்</h2><p>பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் அரசு நடத்தும் இந்தத் தேர்தலானது, தனது சட்டவிரோத ஆக்கிரமிப்பையும், அப்பகுதியில் நடத்தும் மனித உரிமை மீறல்களையும் மூடி மறைப்பதற்காக நடத்தப்படும் ஒரு நாடகம் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடுமையாக விமர்சித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 30.7. 2026 - இந்த ராசிக்காரர்கள் தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள் </title><link>https://www.maalaimalar.com/astrology/today-horoscope-30-07-2026-zodiac-signs-to-see-progress-support-and-removal-of-obstacles</link><comments>https://www.maalaimalar.com/astrology/today-horoscope-30-07-2026-zodiac-signs-to-see-progress-support-and-removal-of-obstacles#comments</comments><guid isPermaLink="false">cf4af267-f77e-48e0-8a28-1efc4fb084b3</guid><pubDate>Thu, 30 Jul 2026 02:11:07 +0000</pubDate><atom:updated>2026-07-30T02:11:07.750Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-04-12/8s8oyr31/astrology.jpg.jpeg" width="1500"><media:title type="html"><![CDATA[ Rasipalan]]></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-04-12/8s8oyr31/astrology.jpg.jpeg?w=280" width="280"></media:thumbnail><category>ராசிபலன்(Rasipalan)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h3>மேஷம்</h3><p>யோகமான நாள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வீட்டை விரிவுபடுத்திக் காட்டும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.</p><h3>ரிஷபம்</h3><p>சுபசெய்திகள் வந்துசேரும் நாள். அஸ்திவாரத்தோடு நின்று கட்டடப்பணி தொடரும். உத்தியோகத்தில் தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள்.</p><h3>மிதுனம்</h3><p>யோசித்து செய்த வேண்டிய நாள். உடல்நலத்தில் கவனம் தேவை. உதவி செய்த சிலரே உதாசீனப்படுத்தலாம். உத்தியோகத்தில் கெடுபிடி அதிகரிக்கும்.</p> <h3>கடகம்</h3><p>உற்சாகம் உள்ளத்தில் குடிகொள்ளும் நாள். திட்டமிட்ட காரியங்கள் திடப்பிட்டபடி நடைபெறும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர்.</p><h3>சிம்மம்</h3><p>எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.</p><h3>கன்னி</h3><p>சேமிப்பு உயரும் நாள். நண்பர்கள் நல்ல தகவலவத் தருவர். கொடுக்கல், வாங்கல் ஒழுங்காகும். தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும்.</p><h3>துலாம்</h3><p>நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு இருந்து கைகொடுக்கும். தூரதேசத்திலிருந்து வரும் தகவல் மகிழ்ச்சி தரும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.</p> <h3>விருச்சிகம்</h3><p>பாராட்டும், புகழும் கூடும் நாள். நண்பர்கள் உங்கள் தேவையை பூர்த்தி செய்வார்கள். விஐபிகளின் சந்திப்பும் உண்டுஉண்டு. உத்தியோகத்தில் மதிப்பம், மரியாதையும் உயரும்.</p><h3>தனுசு</h3><p>பாசம் மிக்கவர்களின் நேசம் கிட்டும். பூர்வீக சொத்துக்களில் ஏற்பட்ட வில்லங்கங்கள் அகலும். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும்.</p><h3>மகரம்</h3><p>சந்திக்கும் நண்பர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். அதிகம் பக்கத்து வீட்டார் ஆதரவு கிடைக்கும். பயணங்களால் உடல்நலம் பாதிக்கலாம்.</p><h3>கும்பம்</h3><p>நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நான். சான்றோர்களின் சந்திப்பால் சந்தோஷம் ஏற்படும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சி வெற்றி பெறும்.</p><h3>மீனம்</h3><p>முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். தொழிலில் அனுபவமிக்கவர்களின் ஆலோசனை கைகொடுக்கும். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-diesel-prices-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-diesel-prices-in-chennai#comments</comments><guid isPermaLink="false">b44f5c84-0ca8-4ec6-9977-f05be8be7d85</guid><pubDate>Thu, 30 Jul 2026 01:35:15 +0000</pubDate><atom:updated>2026-07-30T01:35:15.322Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,கச்சா எண்ணெய்,Crude oil,பெட்ரோல் டீசல் விலை,Petrol and Diesel Prices</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/q1r6os09/tn-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பெட்ரோல் - டீசல் விலை ]]></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல் - டீசல் விலை ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/q1r6os09/tn-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/trump-netanyahu-explored-all-iran-options-including-attack-israeli-official"> ஈரான் போரினால் </a>மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.</p><h2>எண்ணெய் நிறுவனங்கள்</h2><p>இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது. கச்சா எண்ணெய்யை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது.</p><p>அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.</p> <h2>பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்</h2><p>அந்த வகையில் இன்று (30.07.2026 - வியாழக்கிழமை)க்கான பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல்ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p>அதேவேளை, இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><h2>கச்சா எண்ணெய்</h2><p>இன்று சர்வதேச சந்தையில் பிரனட் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 89.79 டாலர் என விற்பனை ஆகி வருகிறது.</p><p>மத்திய அரசு உலக சந்தை நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 30 ஜூலை 2026: குருபகவானுக்கு திருமஞ்சனம்</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-30-july-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-30-july-2026#comments</comments><guid isPermaLink="false">4434ec56-72d8-440a-a5fb-63b3318f972a</guid><pubDate>Thu, 30 Jul 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-07-30T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/11/19/21853306-gurubhagavan3.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Guru bhagavan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/11/19/21853306-gurubhagavan3.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆடி-14 (வியாழன்கிழமை)</p><p>பிறை : தேய்பிறை</p><p>திதி :   பிரதமை இரவு 10 மணி வரை பிறகு துவிதியை</p><p>நட்சத்திரம் : திருவோணம் இரவு 6.52 வரை பிறகு அவிட்டம்</p> <p>யோகம் :  சித்தயோகம்</p><p>ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை</p><p>எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை</p><p>சூலம் : தெற்கு</p><p>நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை</p> <h2>திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சன சேவை</h2><p>திருவோண விரதம். சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் பால் அபிஷேகம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள், ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் புறப்பாடு. சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் வெள்ளி விமான புறப்பாடு. சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். </p> <p>திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சன சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெருமான் அபிஷேகம், அலங்காரம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவான மாமுனிகள் ஸ்ரீ உடையவர் கூட புறப்பாடு. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - வரவு</p><p>ரிஷபம் - சாந்தம்</p><p>மிதுனம் - செலவு</p><p>கடகம் - உற்சாகம்</p><p>சிம்மம் - அமைதி</p><p>கன்னி - மகிழ்ச்சி</p> <p>துலாம் - இன்பம்</p><p>விருச்சிகம் - உற்சாகம்</p><p>தனுசு - உவகை</p><p>மகரம் - துணிவு</p><p>கும்பம் - பணிவு</p><p>மீனம் - உயர்வு</p> ]]></content:encoded></item><item><title>காமன்வெல்த்: சாதனை படைத்த முரளி ஸ்ரீசங்கர்..  நீளம் தாண்டுதலில் இரண்டாவது வெள்ளி!</title><link>https://www.maalaimalar.com/sports/commonwealth-long-jump-silver-murali-sreeshankar-wins-809m-becomes-first-indian-man-with-two-cwg-medals</link><comments>https://www.maalaimalar.com/sports/commonwealth-long-jump-silver-murali-sreeshankar-wins-809m-becomes-first-indian-man-with-two-cwg-medals#comments</comments><guid isPermaLink="false">244be191-ece0-49d5-b72a-16beffba249b</guid><pubDate>Thu, 30 Jul 2026 01:06:13 +0000</pubDate><atom:updated>2026-07-30T01:06:13.347Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Commonwealth games,Long Jump,காமன்வெல்த் போட்டிகள்,CWG 2026,நீளம் தாண்டுதல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/dys9p9l9/tn.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முரளி ஸ்ரீசங்கர்]]></media:title><media:description type="html"><![CDATA[ முரளி ஸ்ரீசங்கர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/dys9p9l9/tn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில்  2026 <a href="https://www.maalaimalar.com/sports/india-assures-nine-boxing-medals-at-commonwealth-games">காமன்கவெல்த் விளையாட்டுப் போட்டிகள்</a> நடந்து வருகின்றன. </p><p>இதில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் பிரிவில் இந்திய வீரா் முரளி ஸ்ரீசங்கர் 8.09 மீட்டர் தூரம்  வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.  இது அவர் தொடர்ச்சியாக வெல்லும் இரண்டாவது வெள்ளிப் பதக்கம் ஆகும்.</p><h2>போட்டி</h2><p>போட்டியின் தொடக்கத்தில் 8.09 மீட்டர் தூரம் தாண்டிய ஸ்ரீசங்கர், முதல் மூன்று சுற்றுகளின் முடிவில் முதலிடத்தில் நீடித்தார்.  </p><p>ஆனால் 4வது சுற்றில் ஜமைக்காவின் முன்னாள் உலக சாம்பியன் தாஜே கெயில் 8.15 மீட்டர் தூரம் தாண்டி தங்கப் பதக்கத்தைக் தட்டிச் சென்றார்.  </p><p>ஸ்ரீசங்கர் 8.09 மீட்டருடன் வெள்ளிப் பதக்கத்தையும், ஸ்காட்லாந்தின் ஸ்டீபன் மெக்கன்சி8.08 மீட்டருடன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.  </p><p>இப்போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரரான லோகேஷ் சத்யநாதன் 7.97 மீட்டர் தாண்டி 5வது இடத்தைப் பிடித்தார்.  </p> <h2>ஸ்ரீசங்கர்</h2><p>2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக முழங்காலில் ஏற்பட்ட கடுமையான காயம் மற்றும் அறுவை சிகிச்சை காரணமாக ஸ்ரீசங்கர் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தார்.</p><p>தீவிரப் பயிற்சிகளுக்குப் பின் கம்பேக் கொடுத்த அவர், காமன்கவெல்த் நீளம் தாண்டுதலில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய ஆண் வீரர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார்.</p><p>கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ஸ்ரீசங்கரின் தந்தை முரளி மற்றும் தாய் பிஜிமோல் ஆகிய இருவருமே தடகள வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.</p> <h2>பேட்டி</h2><p>வெளிப்பதக்கம் வென்ற ஸ்ரீசங்கர் பேசுகையில், "எல்லோரும் எப்போதும் தங்கப் பதக்கத்தையே இலக்காகக் கொண்டு களமிறங்குகிறோம். வெள்ளிப் பதக்கம் கிடைத்தது மகிழ்ச்சிதான் என்றாலும், திருப்தியளிக்கவில்லை.</p><p>ஏனெனில், இதைவிடச் சிறந்த செயல்திறனை நான் எதிர்பார்த்தேன். பர்மிங்ஹாம் தொடரில் வென்ற வெள்ளியைத் தங்கமாக மாற்ற வேண்டும் என்றே விரும்பினேன்.</p><p>ஆனாலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் நான் சந்தித்த கடுமையான காயங்கள் மற்றும் சவால்களை தாண்டி, மீண்டும் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி பதக்கம் வென்றதை நினைத்து பெருமைப்படுகிறேன்" என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் போட்டிகள்: பாரா-தடகள பிரிவில் முதல் இரு இடங்களை பிடித்து அசத்திய கவிட், பாசில்</title><link>https://www.maalaimalar.com/sports/gavit-basil-script-historic-1-2-finish-for-india-in-mens-100m-t47-final</link><comments>https://www.maalaimalar.com/sports/gavit-basil-script-historic-1-2-finish-for-india-in-mens-100m-t47-final#comments</comments><guid isPermaLink="false">63caf580-7a12-408c-8877-328d6044c5ed</guid><pubDate>Thu, 30 Jul 2026 00:30:58 +0000</pubDate><atom:updated>2026-07-30T00:30:58.806Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>காமன்வெல்த் போட்டிகள்,CWG 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/gecrfk0g/Dilip-Gavit-and-Mohammed-Basil.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dilip Gavit and Mohammed Basil]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/gecrfk0g/Dilip-Gavit-and-Mohammed-Basil.png?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளின் பாரா-தடகளப் பிரிவில், ஆண்களுக்கான 100 மீட்டர் T47 இறுதி போட்டியில் திலீப் மஹாது காவிட் தங்க பதக்கத்தையும், முகமது பாசில் மொர்சிங்கனகாத் வெள்ளி பதக்கத்தையும் வென்று, இந்தியா வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தது. </p><p>காவிட் 10.71 வினாடிகள் என்ற நேரத்தில் பந்தய தூரத்தை கடந்து, போட்டித் தொடரின் சாதனையையும் தனது இந்த சீசனின் சிறந்த நேரத்தையும் பதிவு செய்து தெளிவான முன்னிலையுடன் முதலிடத்தை பிடித்தார். அதேவேளையில், கடும் போட்டி நிலவிய பந்தயத்தில் பாசில் 10.83 வினாடிகள் என்ற தனது சீசனின் சிறந்த நேரத்துடன் இரண்டாவது இடத்தை பிடித்தார்.</p><p>இங்கிலாந்தின் கெவின் சாண்டோஸ் 10.85 வினாடிகள் என்ற தனது சீசனின் சிறந்த நேரத்தைப் பதிவு செய்து வெண்கல பதக்கத்தை வென்றார். </p><h2>தங்கப்பதக்கம்:</h2><p>மகளிருக்கான 48 கிலோ பளுதூக்குதல் பிரிவில் மீராபாய் சானு மற்றும் மகளிருக்கான F57 பாரா-தடகள குண்டு எறிதல் பிரிவில் ஷர்மிளா தன்கர் ஆகியோர் பெற்ற வெற்றிகளை தொடர்ந்து, கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா வென்ற மூன்றாவது தங்க பதக்கம் இதுவாகும்.</p><p>ஆண்களுக்கான 100 மீட்டர் T47 என்பது ஒரு பக்க கையின் செயல்பாடு அல்லது வலிமை பாதிக்கப்பட்டுள்ள அல்லது கை இல்லாத குறைபாடுள்ள விளையாட்டு வீரர்களுக்கான பாரா-தடகள விரைவோட்ட (sprint) போட்டியாகும்.</p><h2>ஒன்பது பதக்கங்கள்:</h2><p>ஐந்து குத்துச்சண்டை வீரர்கள் அரையிறுதிக்கு முன்னேறியதால், இந்தியாவின் குத்துச்சண்டை அணி மேலும் உத்வேகம் பெற்றுள்ளது. இதன்மூலம், நாடு உறுதிசெய்த பதக்கங்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்தோடு, 2022 பர்மிங்காம் காமன்வெல்த் போட்டிகளில் பெற்ற ஒட்டுமொத்த குத்துச்சண்டை பதக்கங்களின் எண்ணிக்கையையும் இது கடந்துள்ளது.</p><p>தற்போது நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில், சாக்ஷி சௌத்ரி (51 கிலோ), அருந்ததி சௌத்ரி (70 கிலோ), சச்சின் சிவாச் (60 கிலோ), அங்குஷ் பங்கல் (80 கிலோ) மற்றும் நரேந்தர் பெர்வால் (+90 கிலோ) ஆகியோர், லவ்லினா போர்கோஹைன் (75 கிலோ), பிரியா கங்காஸ் (60 கிலோ), பிரீத்தி பவார் (54 கிலோ) மற்றும் ஜதுமணி சிங் (55 கிலோ) ஆகியோருடன் தத்தமது பிரிவுகளில் கடைசி நான்கு இடங்களுக்குள் நுழைந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>ஈரானுக்கு எதிராக மூன்று ஆப்ஷன்கள் - இஸ்ரேல் அதிகாரி சொன்ன பகீர் தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/world/trump-netanyahu-explored-all-iran-options-including-attack-israeli-official</link><comments>https://www.maalaimalar.com/news/world/trump-netanyahu-explored-all-iran-options-including-attack-israeli-official#comments</comments><guid isPermaLink="false">345be175-091d-478b-a615-4c2398b341dd</guid><pubDate>Thu, 30 Jul 2026 00:07:02 +0000</pubDate><atom:updated>2026-07-30T00:07:02.955Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>டொனால்டு டிரம்ப்,Donald Trump,Benjamin Netanyahu,பெஞ்சமின் நெதன்யாகு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/hkc9fnet/Trump-Netanyahu.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Trump & Netanyahu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/hkc9fnet/Trump-Netanyahu.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்க அதிபர் <a href="https://www.maalaimalar.com/topic/donald-trump">டொனால்டு டிரம்ப்</a> மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் தங்களது சந்திப்பில், ஈரானின் அணுசக்தி திட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான ராஜதந்திரம், பொருளாதார அழுத்தம் மற்றும் படைபலம் உள்ளிட்ட அனைத்து வழிகளையும் ஆராய்ந்ததாக ஒரு மூத்த இஸ்ரேலிய அதிகாரி தெரிவித்தார்.</p><p>வெள்ளை மாளிகையில் இருவரும் சந்தித்த பிறகு, செய்தியாளர்களுடனான சந்திப்பில் அந்த அதிகாரி கூறும் போது, ஈரான் மீது தாக்குதல் நடத்துவதே இஸ்ரேலின் விருப்பம் என்பதை <a href="https://www.maalaimalar.com/topic/benjamin-netanyahu">நெதன்யாகு</a> டிரம்ப்பிடம் தெரிவிக்கவில்லை.</p><h2>மூன்று ஆப்ஷன்கள்:</h2><p>"ஒரு உடன்பாடு, முற்றுகை அல்லது பொருளாதார அழுத்தங்களை தொடர்வது, மற்றும் ஒரு மாபெரும் தாக்குதல் என டிரம்புக்கு மூன்று ஆப்ஷன்கள் இருந்தன. இறுதியில், அது அவருடைய முடிவுதான்," என்று டிரம்ப் குறித்து அந்த அதிகாரி கூறினார்.</p><p>அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் பொதுமக்களின் விரக்தியால் ஈரானின் மதகுரு ஆட்சியாளர்கள் கலக்கமடைந்துள்ளதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும், ஆனால் உலக பொருளாதாரம் மற்றும் எண்ணெய் சந்தை மீதான தாக்கமும் கருத்தில் கொள்ளப்படுவதாகவும் அந்த அதிகாரி கூறினார்.</p><p>ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா இணைந்து நடத்திய வான்வழி குண்டுவீச்சு தாக்குதல்களை தொடர்ந்து, பிப்ரவரி 28-ஆம் தேதியன்று போர் தொடங்கியதில் இருந்து ஏற்பட்ட மிகக் கடுமையான உயர்வுகளில் ஒன்றாக, நேற்று (புதன்கிழமை) எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்தன. இதற்கு பதிலடியாக, தெஹ்ரான் இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகள் மீது தாக்குதல்களை நடத்தியது.</p><h2>எச்சரிக்கை:</h2><p>இந்த மாதம் இரண்டு வாரங்களாக அமெரிக்கா நடத்திய குண்டுவீச்சு தாக்குதல்களில் இஸ்ரேல் பங்கேற்கவில்லை. இந்த தாக்குதல்களுக்கு பதிலடியாக அமெரிக்க தளங்கள் மீது தெஹ்ரான் தாக்குதல் நடத்தியது. இருப்பினும், தாக்கப்பட்டால் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் தெஹ்ரானை எச்சரித்துள்ளது.</p><p>நேற்று, அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு துணை ராணுவ குழுக்கள் மீது தாக்குதல் நடத்தின. மேலும், தான் வான்வழி தாக்குதல்களை நிறுத்திய சில நாட்களுக்கு பிறகு அமெரிக்க படைகள் மீது துப்பாக்கி சூடு நடத்திய ஈரானை "நன்றாக அடித்து நொறுக்குவேன்" என்று டிரம்ப் சூளுரைத்தார்.</p><p>ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளங்கள் மீதும், ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாகவும், நீரிணையை கூட்டாக நிர்வகிப்பது குறித்த ஓமானின் முன்மொழிவை நிராகரித்ததாகவும் ஈரான் நேற்றிரவு உறுதிப்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>பாலியல் குற்றச்சாட்டின் பேரில் பயிற்சி ஐ.பி.எஸ். அதிகாரி கைது!</title><link>https://www.maalaimalar.com/news/national/trainee-ips-officer-accused-of-sexual-assault-arrested-in-hyderabad</link><comments>https://www.maalaimalar.com/news/national/trainee-ips-officer-accused-of-sexual-assault-arrested-in-hyderabad#comments</comments><guid isPermaLink="false">0ab2b520-7134-4c5d-a397-df4c247369e0</guid><pubDate>Wed, 29 Jul 2026 23:31:42 +0000</pubDate><atom:updated>2026-07-29T23:31:42.712Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Arrest,கைது,Sexual assault,Trainee IPS,பயிற்சி ஐஏஎஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/r0jswnkx/arrest-4.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ File Pic]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/r0jswnkx/arrest-4.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவலர் பயிற்சி மையத்தில் தன்னுடன் பயிற்சி பெறும் பெண் அதிகாரியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட பயிற்சி <a href="https://www.maalaimalar.com/topic/ips">ஐ.பி.எஸ்.</a> அதிகாரி கைது செய்யப்பட்டார்.</p><p>ஆந்திர பிரதேச மாநிலத்தின் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்த உதய கிருஷ்ண ரெட்டி (33), சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவல் பயிற்சி மையத்தில் சக பெண் பயிற்சியாளரை பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் ஜூலை 18-ஆம் தேதியன்று வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், <a href="https://www.maalaimalar.com/topic/arrest">கைது</a> செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.</p><h2>யு.பி.எஸ்.சி. தேர்ச்சி:</h2><p>அவர் 14 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டதாக ஐதராபாத் காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஐ.பி.எஸ். பயிற்சி அதிகாரி, முன்னதாக காவலராக பணியாற்றி, பின்னர் 2025-இல் யு.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்று ஐ.பி.எஸ்.-இல் சேர்ந்தார். அவர் டிசம்பர் 2025 முதல் பயிற்சி பெற்று வந்தார்.</p><p>ஐ.பி.எஸ். தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான தனது பயணம் குறித்த குற்றஞ்சாட்டியவரின் பதிவிற்கு, சக ஐ.பி.எஸ். அதிகாரி பயிற்சியாளரான பாதிக்கப்பட்ட பெண் பதிலளித்ததை தொடர்ந்து, 2025 ஆம் ஆண்டின் மத்தியில் சமூக வலைதளங்கள் மூலம் அவர் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் தொடர்பு கொண்டார்.</p><p>தொடர்பு விவரங்களை பரிமாறிக்கொண்டு, தனது எளிமையான பின்னணி குறித்து உரையாடி ஒரு நல்லுறவை ஏற்படுத்திக்கொண்ட பிறகு, குற்றம் சாட்டப்பட்டவரும் பாதிக்கப்பட்டவரும் ஓர் உறவில் ஈடுபட்டதாக காவல்துறை தெரிவித்தது.</p><h2>காவல் துறை விளக்கம்:</h2><p>காவல்துறையின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்டவர் மீண்டும் மீண்டும் தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டியதுடன், ஆயுதங்களை காட்டி, அவரை அவமதித்து, "பல உறவுகளை" வைத்துக்கொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தியதுடன், அவரது மடிக்கணினியை தூக்கி எறிந்து சேதப்படுத்துவது, தடுக்கப்பட்ட பிறகும் போலியான சமூக வலைதள கணக்குகளை உருவாக்குவது, தனிப்பட்ட உரையாடல்களை வெளியிடுவதாக மிரட்டுவது, மற்றும் அவரது அனுமதியின்றி குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்களை தொடர்புகொள்வது உள்ளிட்ட துன்புறுத்தல் செயல்களிலும் ஈடுபட்டார்.</p><p>"இந்தத் தாங்க முடியாத மனப்பான்மையால், பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டப்பட்டவருடனான உறவை முறித்துக்கொண்டு வேறொருவரைத் திருமணம் செய்துகொண்டார்," என்று காவல்துறை தெரிவித்தது.</p><p>இதை அறிந்த குற்றவாளி, தனது கணக்கு முடக்கப்பட்ட பிறகு போலி சமூக வலைதள கணக்குகளை உருவாக்கி, தனிப்பட்ட உரையாடல்களை வெளியிடுவதாக மிரட்டி, அவரது அனுமதியின்றி குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்களைத் தொடர்பு கொண்டு, பாதிக்கப்பட்டவர் மற்றும் பிற சாட்சிகளால் கூறப்பட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டார் என்று அவர்கள் தெரிவித்தனர்.</p><h2>பாலியல் புகார்:</h2><p>புகாரைத் தொடர்ந்து, அட்டப்பூர் போலீசார், பெண்ணின் மானபங்கத்திற்கு உள்ளாக்கும் நோக்கத்துடன் அவர் மீது தாக்குதல் அல்லது குற்றவியல் பலத்தை பயன்படுத்துதல், பாலியல் துன்புறுத்தல், மற்றும் அவமதிக்கும் நோக்கம் கொண்ட சொற்கள், சைகைகள் அல்லது செயல்கள் உள்ளிட்ட பாரதிய நியாய சம்ஹிதாவின் தொடர்புடைய பிரிவுகள் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.</p><p>அதன்படி, ஜூலை 28 ஆம் தேதி ஆராம்கர் எக்ஸ் ரோடு அருகே அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது. இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவரிடம் காவல்துறை விசாரணை நடத்தியது. சட்ட விதிகளுக்கு இணங்க இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.</p><p>இந்த வழக்கு தொடர்பான அனைத்து உண்மைகளையும் சூழ்நிலைகளையும் கண்டறிய தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. சட்டப்படி உரிய நடவடிக்கை கடுமையாக எடுக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><h2>கைது நடவடிக்கை:</h2><p>ஐதராபாத் காவல் ஆணையரால் அமைக்கப்பட்ட சிறப்புக்குழு, ஐதராபாத் மகளிர் பாதுகாப்பு பிரிவின் துணை ஆணையர் பி. லாவண்யா நாயக் ஜாதவின் மேற்பார்வையில் இந்த கைது நடவடிக்கையையும் விசாரணையையும் மேற்கொண்டதாக அந்த செய்திக்குறிப்பு தெரிவித்தது.</p><p>வழக்கு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டவர் சமூக ஊடகப் பதிவு ஒன்றில், புகாரும் வதந்திகளும் "ஆதாரமற்றவை" என்று கூறியிருந்தார்.</p><p>அதனை தொடர்ந்து அவர், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய கோரி தெலங்கானா உயர் நீதிமன்றத்தை அணுகியிருந்தார். இவ்வழக்கை நான்கு வாரங்களுக்கு பிறகு மீண்டும் விசாரணைக்கு நீதிமன்றம் புதன்கிழமை ஒத்திவைத்தது.</p>]]></content:encoded></item><item><title>காட்டுத்தீயை அணைக்க சென்று விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் - 7 பேர் உயிரிழந்ததால் சோகம்</title><link>https://www.maalaimalar.com/news/world/7-killed-in-helicopter-crash-in-argentina-officials</link><comments>https://www.maalaimalar.com/news/world/7-killed-in-helicopter-crash-in-argentina-officials#comments</comments><guid isPermaLink="false">13741ec2-e0ee-42f9-9f4b-d05bb69f2b90</guid><pubDate>Wed, 29 Jul 2026 22:57:57 +0000</pubDate><atom:updated>2026-07-29T22:57:57.908Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>argentina,அர்ஜென்டினா,helicopter crash,ஹெலிகாப்டர் விபத்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/rytx49tl/Bell-412.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ File Pic]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/rytx49tl/Bell-412.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அர்ஜென்டினாவின் மேற்கு சான் ஜுவான் மாகாணத்தில் தீயணைப்பு <a href="https://www.maalaimalar.com/topic/helicopter">ஹெலிகாப்டர்</a> ஒன்று விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.</p><p>சான் ஜுவானின் இஷிகுவாலாஸ்டோ இயற்கை பூங்காவில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்க பெல் 412 விமானம் பயன்படுத்தப்பட்டது.</p><p>"நமது மாகாணத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்த செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் பெற்றோம், அதில் ஏழு பேர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தனர்," என்று சான் ஜுவான் ஆளுநர் மார்செலோ ஒர்ரெகோ <a href="https://www.maalaimalar.com/topic/x">எக்ஸ்</a> தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>விபத்து:</h2><p>உயிரிழந்தவர்களில் தீயணைப்பு வீரர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் குடிமை பாதுகாப்புப் பணியாளர்கள் அடங்குவதாக அவர் தெரிவித்தார். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர், நேற்று (புதன்கிழமை) காலை ஹெலிகாப்டர் தளத்துடனான தொடர்பை இழந்ததாக அவசரகால சேவைகள் தெரிவித்தன.</p><p>அருகிலுள்ள லா ரியோஜா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயை கட்டுப்படுத்த உதவுவதற்காக அது சென்று கொண்டிருந்ததாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விபத்துக்கான காரணம் குறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம்:  பாக். படைகளின் கொடூர ஒடுக்குமுறையில் 30-க்கும் மேற்பட்டோர் பலி</title><link>https://www.maalaimalar.com/news/world/pok-unrest-over-30-civilians-killed-in-brutal-crackdown-by-pakistani-forces</link><comments>https://www.maalaimalar.com/news/world/pok-unrest-over-30-civilians-killed-in-brutal-crackdown-by-pakistani-forces#comments</comments><guid isPermaLink="false">81248b56-4445-44b3-b435-9f7641c611ec</guid><pubDate>Wed, 29 Jul 2026 19:29:39 +0000</pubDate><atom:updated>2026-07-29T19:29:39.506Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,ஆக்கிரமிப்பு காஷ்மீர்,PoK unrest,Pakistan force</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/6oebme3i/Pok-Protest.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pok Protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/6oebme3i/Pok-Protest.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/pakistan">பாகிஸ்தான்</a> ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) கடந்த இரண்டு நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்பு படைகள் நடத்திய கொடூரமான ஒடுக்குமுறையில் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்ததாகவும், 33-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.</p><p>PoK-இல் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்று வரும் நிலையில், 'ஜாயிண்ட் அவாமி ஆக்ஷன் கமிட்டி' (JAAC) இந்த போராட்டங்களுக்கு தலைமை தாங்கி வருகிறது.</p><h2>போராட்டம்:</h2><p>அதிகரித்து வரும் வாழ்க்கை செலவு, நிர்வாக அலட்சியம், அரசியல் பாகுபாடு மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான அத்துமீறல்கள் ஆகியவற்றுக்கு எதிராக கடந்த மாதம் முதல் PoK-இல் மிகப்பெரிய <a href="https://www.maalaimalar.com/topic/protest">போராட்டங்கள்</a> நடைபெற்று வருகின்றன.</p><p>PoK-இல் நடைபெறும் தேர்தல்களை, அப்பகுதியில் தாங்கள் மேற்கொண்டுள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்பை மறைப்பதற்கும், அங்கு இழைக்கப்படும் "கடுமையான" மனித உரிமை மீறல்களை மூடிமறைப்பதற்கும் இஸ்லாமாபாத் மேற்கொள்ளும் ஒரு முயற்சி என மத்திய அரசு தெரிவித்தது.</p><h2>கொடிய தாக்குதல்:</h2><p>ரவாலகோட்டில் இருந்து முசாஃபராபாத் வரை JAAC நடத்திய நீண்ட பேரணியின்போது போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் கொடிய தாக்குதல் முறைகளை கையாண்டதாகவும், இந்த ஒடுக்குமுறையில் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்ததாகவும், 33-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.</p><p>உயிரிழந்தவர்களில் JAAC மத்தியக் குழு உறுப்பினர் உமர் நசீரின் சகோதரரான உஸ்மான் நசீரும் அடங்குவார் என்று அவர்கள் கூறினர்.</p><h2>வேண்டுகோள்:</h2><p> சட்டவிரோத கொலைகள் குறித்து உடனடி மற்றும் சுதந்திரமான விசாரணை நடத்தவும், கொடிய தாக்குதல் முறைகளை உடனடியாக நிறுத்தவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில் மற்றும் சர்வதேச உரிமை அமைப்புகளிடம் JAAC அதிகாரப்பூர்வமாக வேண்டுகோள் விடுத்துள்ளது என்று அவர்கள் சுட்டிக்காட்டினர். </p><p>சுயாதீன அறிக்கைகளை மேற்கோள் காட்டி, மிர்பூர் பிரிவில் நடைபெற்ற பிராந்திய தேர்தல்களின் முதல் கட்டத்தில் வாக்காளர் வருகை 10 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்ததாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.</p><p>இது 45 சதவீத வாக்குப்பதிவு என்று கூறப்படும் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களுக்கு முற்றிலும் முரணாக உள்ளது என்றும், JAAC-இன் தேர்தல் புறக்கணிப்பு அழைப்பிற்கு ஆதரவாக முக்கிய நகரங்களில் முழு அடைப்பு கடைபிடிக்கப்பட்டது என்றும் அவர்கள் கூறினர். </p>]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் போட்டிகள்: குத்துச்சண்டையில் 9 பதக்கங்களை உறுதிப்படுத்திய இந்தியா</title><link>https://www.maalaimalar.com/sports/india-assures-nine-boxing-medals-at-commonwealth-games</link><comments>https://www.maalaimalar.com/sports/india-assures-nine-boxing-medals-at-commonwealth-games#comments</comments><guid isPermaLink="false">895878f0-f4f3-4527-9364-2e480303b7f3</guid><pubDate>Wed, 29 Jul 2026 18:37:28 +0000</pubDate><atom:updated>2026-07-29T18:37:28.302Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,காமன்வெல்த் போட்டிகள்,CWG 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/mrzbhe6t/Arundhati-Choudhary.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Arundhati Choudhary]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/mrzbhe6t/Arundhati-Choudhary.png?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஐந்து குத்துச்சண்டை வீரர்கள் அரையிறுதிக்கு முன்னேறியதால், இந்தியாவின் குத்துச்சண்டை அணி மேலும் உத்வேகம் பெற்றுள்ளது. இதன்மூலம், நாடு உறுதிசெய்த பதக்கங்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்தோடு, 2022 பர்மிங்காம் <a href="https://www.maalaimalar.com/topic/cwg-2026">காமன்வெல்த்</a> போட்டிகளில் பெற்ற ஒட்டுமொத்த குத்துச்சண்டை பதக்கங்களின் எண்ணிக்கையையும் இது கடந்துள்ளது.</p><p>தற்போது நடைபெற்று வரும் காமன்வெல்த் <a href="https://www.maalaimalar.com/sports/commonwealth-games-2026-updated-list-of-all-medal-winners-for-india">விளையாட்டு</a> போட்டிகளில், சாக்ஷி சௌத்ரி (51 கிலோ), அருந்ததி சௌத்ரி (70 கிலோ), சச்சின் சிவாச் (60 கிலோ), அங்குஷ் பங்கல் (80 கிலோ) மற்றும் நரேந்தர் பெர்வால் (+90 கிலோ) ஆகியோர், லவ்லினா போர்கோஹைன் (75 கிலோ), பிரியா கங்காஸ் (60 கிலோ), பிரீத்தி பவார் (54 கிலோ) மற்றும் ஜதுமணி சிங் (55 கிலோ) ஆகியோருடன் தத்தமது பிரிவுகளில் கடைசி நான்கு இடங்களுக்குள் நுழைந்தனர்.</p><h2>ஏழு பதக்கங்கள்:</h2><p>பர்மிங்காம் விளையாட்டு போட்டிகளில் குத்துச்சண்டை நிகழ்வுகளில் இந்தியா ஏழு பதக்கங்களை வென்றது. இதில் மூன்று தங்கம், ஒரு வெள்ளி மற்றும் மூன்று வெண்கல பதக்கங்கள் அடங்கும்.</p><p>உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வென்றவரான ஜெய்ஸ்மின் லம்போரியா, இன்று நடைபெறும் மகளிர் 57 கிலோ எடைப் பிரிவுக்கான தனது காலிறுதி போட்டியில் பங்கேற்கிறார்.</p><h2>எளிய வெற்றி:</h2><p>சாக்ஷி ஆதிக்கம் செலுத்தும் வகையில் விளையாடி, வடக்கு அயர்லாந்தின் கெய்ட்லின் ஃப்ரையர்ஸை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தினார். அதே நேரத்தில், உலகத் தரவரிசையில் 5-ஆம் இடத்தில் உள்ள சச்சினும், ட்ரெஷர் மோரேமியை 5-0 என்ற கோல் கணக்கில் எளிதாக வீழ்த்தி வெற்றி பெற்றார். இருப்பினும், அருந்ததி கடுமையான சவாலை எதிர்கொண்டு, நியூசிலாந்தின் மோர்கன் ஹென்டர்சனை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.</p><p>அங்குஷும் அதே அளவு ஆதிக்கம் செலுத்தி, செஷல்ஸின் ஜேட் மைகாக்கை 5-0 என்ற கணக்கில் எளிதாக வீழ்த்தினார். அதே நேரத்தில், ஆசிய விளையாட்டு போட்டிகளின் வெண்கல பதக்க வீரரான நரேந்தர் பெர்வால், கடுமையான போட்டியை சமாளித்து சமோவாவின் மைக்கேல் செக்கோவை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தினார்.</p>]]></content:encoded></item><item><title>கரூர் அரசுப்பணி ரத்து - உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது தமிழ்நாடு அரசு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/karur-incident-govt-job-appointment-cancelled-tn-government-appeals-supreme-court</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/karur-incident-govt-job-appointment-cancelled-tn-government-appeals-supreme-court#comments</comments><guid isPermaLink="false">8a23c22c-3f85-41fc-8aa5-a20adce0c24c</guid><pubDate>Wed, 29 Jul 2026 18:06:00 +0000</pubDate><atom:updated>2026-07-29T18:06:00.984Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>government job,அரசு பணி,Karur incident,உச்சநீதிமன்றம்,கரூர் விவகாரம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/hozfbunj/New-Project-2026-07-27T173947.313.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசுப்பணி ரத்து!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/hozfbunj/New-Project-2026-07-27T173947.313.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கரூர் <a href="https://www.maalaimalar.com/topic/karur-stampede">கூட்ட நெரிசல்</a> சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரசுப்பணி உத்தரவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து <a href="https://www.maalaimalar.com/topic/tamil-nadu">தமிழ்நாடு</a> அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.</p><p>கரூர் வேலுசாமிபுரத்தில், கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதியன்று நடைபெற்ற த.வெ.க. பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.</p><h2>அரசுப்பணி ஆணை:</h2><p>இதையடுத்து, கடந்த ஜூலை 10-ஆம் தேதியன்று கரூர் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சேர்ந்த 31 பேருக்கு அரசுப்பணி ஆணைகளை வழங்கினார்.</p><p>எனினும், இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு, தமிழக அரசால் வழங்கப்பட்ட அரசுப்பணி உத்தரவை ரத்து செய்தது. இந்த விவகாரம் குறித்து விரைவில் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யும் என்று தமிழ்நாடு சட்டத்துறை சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்தார்.</p><h2>உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு:</h2><p>இந்த நிலையில், கரூர் கூட்டநெரிசலில் சிக்கி பலியானோர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரசுப்பணியை ரத்து செய்த உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு இன்று (ஜூலை 29) உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அசாம் வெள்ள பாதிப்பு: ஆய்வு பணிகளை முடித்தது மத்தியக் குழு!</title><link>https://www.maalaimalar.com/news/national/central-team-concludes-visit-to-assess-assam-flood-situation</link><comments>https://www.maalaimalar.com/news/national/central-team-concludes-visit-to-assess-assam-flood-situation#comments</comments><guid isPermaLink="false">0b673865-8b3d-4dc3-a6f2-2c2f4910a0ef</guid><pubDate>Wed, 29 Jul 2026 17:09:45 +0000</pubDate><atom:updated>2026-07-29T17:09:45.600Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Central team,அசாம் வெள்ளம்,Assam Floods,மத்தியக் குழு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/owgad3p8/Minister-Keshab-Mahanta.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Keshab Mahanta]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/owgad3p8/Minister-Keshab-Mahanta.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள சூழலை ஆய்வு செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட நான்கு நாள் பயணத்தை <a href="https://www.maalaimalar.com/topic/central-team">மத்தியக் குழு</a> (IMCT) இன்று (புதன்கிழமை) நிறைவு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். </p><p>இங்கு நடைபெற்ற கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் ராமச்சந்திருடு தலைமையிலான மத்தியக் குழுவிடம் தலைமை செயலாளர் ரவி கோட்டா விரிவான விளக்கங்களை அளித்தார்.</p><h2>விளக்கம்:</h2><p>அசாம் மற்றும் அண்டை மாநிலங்களில், குறிப்பாக நாகாலாந்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் கனமழை மற்றும் குறிப்பிட்ட சில பகுதிகளில் பெய்த அதீத மழையினால் ஏற்பட்ட பெரும் சேதங்கள் குறித்து மத்தியக் குழுவுக்கு தெரிவிக்கப்பட்டது.</p><p>SDRF, NDRF, தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் துறை, இந்திய ராணுவம், இந்திய விமானப்படை மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் இணைந்து மேற்கொண்ட மீட்பு நடவடிக்கைகள் குறித்தும், அத்துடன் கரைகள், பாலங்கள், சாலைகள், வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு ஏற்பட்ட பெரும் சேதங்கள் குறித்தும் இக்குழுவுக்கு விளக்கப்பட்டது.</p><h2>எக்ஸ் தள பதிவு:</h2><p>"அமைச்சகங்களுக்கு இடையிலான மத்தியக் குழு (IMCT), மேல் அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று, வெள்ள சூழல் மற்றும் நடைபெற்று வரும் நிவாரணம், மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தது" என்று முதலமைச்சரின் அலுவலகம் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளது.</p><p>"மாநில முதலமைச்சர் டாக்டர் ஹிமந்த பிஸ்வா அறிவுறுத்தலின்படி, சிவசாகர், சாரைடியோ, ஜோர்ஹாட் மற்றும் கோலாகாட் ஆகிய மாவட்டங்களை கடுமையாக பாதித்த, முன்னெப்போதும் இல்லாத வகையிலான திடீர் வெள்ளம் குறித்த விரிவான கண்ணோட்டத்தை தலைமை செயலாளர் மத்தியக் குழுவிடம் சமர்ப்பித்தார்" என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>"மாவட்ட வாரியான மறுசீரமைப்பு திட்டத்திற்கு மத்திய அரசின் கூடுதல் ஆதரவு தேவைப்படுவது; கடுமையாகப் பாதிக்கப்பட்ட சிவசாகர், சாரைடியோ, ஜோர்ஹாட் மற்றும் கோலாகாட் மாவட்டங்களுக்குச் சிறப்பு உதவிகள் வழங்குவது; உடைந்த கரைகளை சீரமைத்து வலுப்படுத்துவது; மற்றும் உள்கட்டமைப்பை மீட்டெடுத்து நீண்டகால வெள்ள தடுப்பு திறனை மேம்படுத்த 'சிறந்த முறையில் மீண்டும் கட்டமைத்தல்' கொள்கைகளை கடைப்பிடிப்பது ஆகியவை குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது" என்று முதலமைச்சரின் அலுவலகம் மேலும் தெரிவித்தது.</p><p>இந்த ஆண்டு அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தால் குறைந்தது இதுவரை 75 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 3.32 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item></channel></rss>