<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 21 Jul 2026 07:22:34 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-21-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-21-july-2026#comments</comments><guid isPermaLink="false">e1a983bf-6930-4a96-8d7d-aee2f254884f</guid><pubDate>Tue, 21 Jul 2026 04:01:21 +0000</pubDate><atom:updated>2026-07-21T07:10:10.390Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/4243r6xf/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/4243r6xf/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/guyana-maritime-tragedy-27-bodies-found-sailors-test-positive">கயானா படகு விபத்து: 27 உடல்கள் மீட்பு; போதைப்பொருள் பரிசோதனையில் மாலுமிகள் சிக்கியதால் பரபரப்பு!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/ajit-doval-honoured-with-lokmanya-tilak-national-award">தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு 'லோக்மான்ய திலகர் விருது'!... </a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/92218ea6-e31e-429a-9c51-3ff04bfe209d">காவல்துறையினர் கண்ணியம் தவறக் கூடாது!- நயினார் நாகேந்திரன்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/deadly-flash-floods-in-eastern-afghanistan-20-killed">ஆஃப்கானிஸ்தானில் திடீர் வெள்ளப்பெருக்கு: 20 பேர் பலி; 100-க்கும் மேற்பட்டோர் மாயம்!... </a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/ca9c7d59-6f3b-4f07-939f-20fe3e86130f">நீட் வினாத்தாள் கசிவு கொடும் பாவச் செயல்.. பிரதமர் மோடி மௌனம் கலைப்பு</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/ba20a9ec-75bf-4a28-8321-0857667f4874">அலுவலகத்தை மாற்றும் முதலமைச்சர் விஜய்? - ஆஸ்தான ஜோதிடர் ஆலோசனை காரணமா?</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/4bc2c025-bc8f-40ba-b9a5-719999b95e35">கார்கே பிறந்தநாள் - முதலமைச்சர் விஜய் வாழ்த்து</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/9f91e859-c0ba-46cc-87d6-9e9266d1249a">நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம் - அமைச்சர் ராஜ்மோகன் மரியாதை</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/0462a245-3b74-4003-834b-ab1c2c54d599">ஆகஸ்ட் 5-ல் பட்ஜெட் தாக்கல்- சபாநாயகர் தகவல்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/cce69c86-57c0-4546-a672-e41cbf604cc5">வறட்சியால் வாடும் கிராம மக்கள் மழை வேண்டி நடத்திய தவளைத் திருமணம்!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/nta-warns-against-fake-omr-sheets-neet-ug-2026">NEET-UG 2026: போலியான OMR விடைத்தாள்கள் பரப்பினால் கடும் நடவடிக்கை-NTA எச்சரிக்கை!... </a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/b51c3442-a2ff-48bd-8e96-25961e36ed3a">ஜூலை 27-ல் அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/spain-second-world-cup-triumph-madrid-fans-historic-celebration">ஸ்பெயின் உலகக்கோப்பை வெற்றி கொண்டாட்டம்: மேட்ரிட் நகரில் ரசிகர்கள் பிரம்மாண்ட வரவேற்பு!...</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/single-call-from-virat-kohli-pv-sindhu-back-on-record-breaking-path-with-japan-open-title">விராட் கோலியின் ஒரே ஒரு போன் கால்: ஜப்பான் ஓபன் வெற்றியுடன் சாதனைப் பாதைக்குத் திரும்பிய பி.வி.சிந்து!...</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/3d3bc2a1-17f0-450c-8f98-a70fff36d1f4">நெல் கொள்முதலில் தொடரும் கையூட்டு: குவிண்டாலுக்கு ரூ.325 பறிப்பதைத் தடுக்க அன்புமணி வலியுறுத்தல்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/09a0f3aa-bfc4-4f11-9908-070d3eb4e781">GOLD PRICE TODAY: நாளுக்கு நாள் ஏறும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/diljit-dosanjh-supports-student-protests-despite-anti-national-tag-fears">'மீண்டும் என்னை தேசவிரோதி என்பார்கள்': மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த தில்ஜித் தோசாஞ்ச்!...</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/7b73f680-bc22-4187-be2e-eb93e6e20d27">தனது 83 ஆவது பிறந்தநாள் விழா ரத்து செய்யப்படுகிறது!- வைகோ</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/sikkim-tunnel-landslide-rescue-27-workers-trapped-methane-leak-hampers-operations">Sikkim: நிலச்சரிவால் சுரங்கப்பாதைக்குள் 27 தொழிலாளர்கள் சிக்கித் தவிப்பு - மீத்தேன் வாயு கசிவால் மீட்பதில் சிக்கல்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/cjp-dharna-continues-protest-march-to-parliament-over-dharmendra-pradhan-resignation-keeps-delhi-on-edge">இன்றும் பாராளுமன்றம் நோக்கி பேரணி தொடரும் - CJP அறிவிப்பு</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/6718ca4f-394f-4ce0-8f4d-f2a524f402dc">இங்கிலாந்து புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாமிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/ce5bfe19-8180-4674-acf1-75b69c84a40e">வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்- ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/0a27f43c-cc74-4fdc-8d32-fd9577d92fa3">கேபிள் டி.வி., டி.டி.எச். சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்த திட்டமா?- மத்திய அரசு விளக்கம்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/9f86052c-a139-4221-a893-68b35a1821b8">சென்னையில் நாளை (22.07.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்...</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/74493a2e-1175-4349-bd50-436bf3bd4bc3">போலி மருந்து தயாரிப்பு வழக்கில் 5 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு</a></p> ]]></content:encoded></item><item><title>இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு.. டெல்லி நோக்கி வந்த பஞ்சாப் விவசாயிகள் ஷம்பு எல்லையில் தடுத்து நிறுத்தம்</title><link>https://www.maalaimalar.com/news/national/india-us-trade-deal-protest-punjab-farmers-stopped-at-shambhu-border-on-way-to-delhi</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-us-trade-deal-protest-punjab-farmers-stopped-at-shambhu-border-on-way-to-delhi#comments</comments><guid isPermaLink="false">96ee06e9-2fb8-4d9b-a00c-50e35c16785d</guid><pubDate>Tue, 21 Jul 2026 07:17:03 +0000</pubDate><atom:updated>2026-07-21T07:17:03.090Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>farmers,விவசாயிகள்,Shambhu Border,மகாபஞ்சாயத்து,ஷம்பு எல்லை,Mahapanchayat</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/84qa21so/tn-12.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஷம்பு எல்லை]]></media:title><media:description type="html"><![CDATA[ ஷம்பு எல்லை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/84qa21so/tn-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இறுதிக்கட்டத்தில் இருக்கும் <a href="https://www.maalaimalar.com/news/world/india-us-trade-deal-soon-trump-cites-close-ties-with-modi-for-smooth-agreement">இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்திற்கு</a> எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் இன்று விவசாயிகளின் மகாபஞ்சாயத்து கூட்டப்பட்டது. </p><p>தேஷ் பச்சாவ் மோட்சா என்ற அமைப்பின் கீழ் பஞ்சாப், அரியானா மற்றும் இமாச்சல பிரதேச விவசாய அமைப்புகள் ஒன்று திரண்டு இந்த மகாபஞ்சாயத்துக்கு அழைப்பு விடுத்தன. </p><h2>தடுத்து நிறுத்தம்</h2><p>இதில் பங்கேற்க, பஞ்சாபில் இருந்து ஆயிரக்கணக்கான விவாசாயிகள் தலைநகர் நோக்கி வந்துகொண்டிருந்த நிலையில் பஞ்சாப், அரியானா எல்லையான ஷம்புவில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். </p><p>எல்லையில் இரும்பு முற்கள், பேரிக்கேட்கள் உள்ளிட்டவற்றால் தடுப்பு அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  </p><p>டெல்லி செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், கோபமடைந்த விவசாயிகள் ஷம்பு எல்லையையே போராட்டக் களமாக மாற்றியுள்ளனர்.</p><p>பஞ்சாப் அணிவகுப்பு தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், அரியானாவின் அம்பாலா, குருக்ஷேத்ரா ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து டெல்லி நோக்கிப் பயணித்து வருகின்றனர்.</p> <p>கடந்த ஆண்டு பிப்ரவரியில் இதேபோல டெல்லி நோக்கி செல்ல முற்பட்ட விவசாயிகள் ஷம்பு எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டதால் அவர்கள் அந்த இடத்தையே போராட்டக்களமாக மாற்றினர். இந்த போராட்டம் நாடு முழுவதும் கவனம் பெற்றது. அதேபோல இம்முறையும் ஷம்பு எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>டெல்லியில் CJP</h2><p>ஏற்கனவே டெல்லியில் நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து <a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-march-to-parliament-in-delhi-turns-violent-with-lathicharge-tear-gas-178-injured-and-70-arrested">கரப்பான்பூச்சி ஜனதா கட்சி</a> தலைமையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியதன் பின்னணியில் அவர்கள் நாடாளுமன்றம் நோக்கி செல்ல முயன்றபோது போலீசாரால் தாக்கப்பட்டனர். </p><p>தடியடி, கண்ணீர் புகைகுண்டுகளை பயன்படுத்தி அவர்களை போலீசார் கலைத்தனர். இதன்போது ஏற்பட்ட வன்முறையில் 118 போலீசார், 70 போராட்டக்காரர்கள் காயமுற்றனர். 70 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றும் நாடாளுமன்றம் நோக்கி பேரணி தொடரும் என சிஜேபி அறிவித்துள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.</p><p>இந்த சூழலில் டெல்லி நோக்கி வந்த விவசாயிகள் முன்னெச்சரிக்கையாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.</p> <h2>அமெரிக்கா -  இந்தியா ஒப்பந்தம்</h2><p>இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் ஆரம்பம் முதலே இந்த ஒப்பந்தத்தின் அம்சங்களுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அமெரிக்க வேளாண் பொருட்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்ய இந்த ஒப்பந்தத்தில் இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இது அமெரிக்க விவசாயிகளுக்கு வரப்பிரசாதம் என அந்நாட்டு தலைவர்கள் பேசியதும் வைரலானது.</p><p>அமெரிக்கப் பொருட்களுக்கான இறக்குமதி வரிகளைக் குறைக்க அமெரிக்கா தொடர்ந்து இந்தியாவுக்கு வெளிப்படையாக அழுத்தம் கொடுத்து வருகிறது.</p><h2>வாழ்வாதார இழப்பு  </h2><p>சோயாபீன், சோளம், பருத்தி, ஆப்பிள், பாதாம் மற்றும் பால் பொருட்கள் மீதான வரிகள் குறைந்தால், மானியம் பெறும் அமெரிக்கப் பொருட்கள் இந்தியச் சந்தையை ஆக்கிரமிக்கும். இதனால் இந்தியச் சிறு விவசாயிகள் அமெரிக்கப் பொருட்களுடன் போட்டியிட முடியாமல் வாழ்வாதாரத்தை இழப்பார்கள். </p><p>இந்தியாவில் சுமார் 8 கோடி கிராமப்புற குடும்பங்கள் பால் பண்ணைத் தொழிலையே நம்பியுள்ளன. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால் கிராமப்புற பொருளாதாரம் முற்றிலுமாகச் சீர்குலையும் என்று விவசாய அமைப்புகள் எச்சரிக்கின்றனர்.</p><p>இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மத்திய அரசு உடனடியாகக் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட வேண்டும். விவசாயிகள், தொழிலாளர்கள், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சிறு வணிகர்களிடம் விரிவான கலந்தாய்வு நடத்தாமல் எந்தவொரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடக் கூடாது என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>கயானா படகு விபத்து: 27 உடல்கள் மீட்பு; போதைப்பொருள் பரிசோதனையில் மாலுமிகள் சிக்கியதால் பரபரப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/world/guyana-maritime-tragedy-27-bodies-found-sailors-test-positive</link><comments>https://www.maalaimalar.com/news/world/guyana-maritime-tragedy-27-bodies-found-sailors-test-positive#comments</comments><guid isPermaLink="false">a68f669c-aea6-46ea-bc1d-b6056f56c2b9</guid><pubDate>Tue, 21 Jul 2026 07:08:23 +0000</pubDate><atom:updated>2026-07-21T07:08:23.795Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Guyana Ferry Disaster,MVBarima,Mark Phillips,கயானா படகு விபத்து,எம்.வி. பாரிமா,மார்க் பிலிப்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/g966ww04/boat.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Guyana Ferry Disaster]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/g966ww04/boat.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தென் அமெரிக்க நாடான கயானாவில் அண்மையில் நிகழ்ந்த மிக மோசமான கடல் விபத்தில், நீரில் மூழ்கிய படகில் இருந்து இதுவரை 27 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 'எம்.வி. பாரிமா' என்ற அந்தப் படகின் கேப்டன் உட்பட ஊழியர்கள் போதைப்பொருள் (கஞ்சா) பயன்படுத்தியிருந்தது மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2><strong>விபத்தின் பின்னணி மற்றும் மீட்புப் பணிகள்:</strong></h2><p>கயானாவின் தலைநகர் ஜார்ஜ்டவுனில் இருந்து வடமேற்குப் பகுதியில் உள்ள போர்ட் கைடூமா நோக்கிச் சென்று கொண்டிருந்த 'எம்.வி. பாரிமா' என்ற பயணிகள் படகு கடந்த சனிக்கிழமை இரவு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படகின் உத்தியோகபூர்வ பதிவேட்டில் 116 பயணிகளும் 17 ஊழியர்களும் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தனர். </p><p>ஆனால், மீட்புப் பணியின் போது பட்டியலில் பெயரில்லாத 32 பேர் மீட்கப்பட்டதால், படகில் மொத்தம் 179 பேர் வரை பயணித்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை '69 பேர்' உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 27 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் 83 பேரைக் காணவில்லை. அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p><h2><strong>போதைப்பொருள் சோதனை:</strong></h2><p>விபத்தைத் தொடர்ந்து படகின் கேப்டன் மற்றும் ஊழியர்களைக் காவலில் எடுத்துப் பரிசோதித்ததில், அவர்கள் கஞ்சா பயன்படுத்தியிருந்தது உறுதியானது."பணியில் இருக்கும்போது ஊழியர்கள் மது அருந்துவதையோ அல்லது போதைப்பொருள் பயன்படுத்துவதையோ எந்த வகையிலும் சகித்துக் கொள்ள முடியாது" என பொதுப்பணித்துறை அமைச்சர் ஜுவான் எட்ஜில் தெரிவித்துள்ளார்.</p><p>படகு முனையங்களில் உள்ள அதிகாரிகள் பயணிகளிடம் ரொக்கப் பணம் பெற்றுக்கொண்டு, பயணிகளின் உண்மையான எண்ணிக்கையைப் பதிவேட்டில் எழுதாமல் முறைகேடு செய்வதாகப் புகார்கள் எழுந்துள்ளன. ஊழியர்களின் அலட்சியம் மற்றும் பாதுகாப்பு விதிமீறல்கள் குறித்து விசாரணை நடத்த பிரதமர் மார்க் பிலிப்ஸ் உத்தரவிட்டுள்ளார்.</p><h2><strong>அதிபர் ஆறுதல்:</strong></h2><p>கயானா அதிபர் இர்ஃபான் அலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உயிர்தப்பியவர்களையும், காணாமல் போனவர்களின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் விரைந்து வழங்கப்படும் என அவர் உறுதியளித்தார். கடந்த பல தசாப்தங்களில் கயானா கண்ட மிக மோசமான கடல் பேரிடராக இது பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு &apos;லோக்மான்ய திலகர் விருது&apos;!</title><link>https://www.maalaimalar.com/news/national/ajit-doval-honoured-with-lokmanya-tilak-national-award</link><comments>https://www.maalaimalar.com/news/national/ajit-doval-honoured-with-lokmanya-tilak-national-award#comments</comments><guid isPermaLink="false">3852d399-dfe6-4174-9752-84583c57eb55</guid><pubDate>Tue, 21 Jul 2026 06:53:40 +0000</pubDate><atom:updated>2026-07-21T06:53:40.507Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Amit Shah,அமித் ஷா,Ajit Doval,அஜித் தோவல்,Lokmanya Tilak National Award,லோக்மான்ய திலகர் விருது</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/s6w0j5v9/ajith.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ajit Doval]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/s6w0j5v9/ajith.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் தேசியப் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் ஆற்றிய மிகச் சிறந்த பங்களிப்பிற்காக, நாட்டின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் 'அஜித் தோவல்' இந்த ஆண்டிற்கான மதிப்புமிக்க 'லோக்மான்ய திலகர் தேசிய விருது' வழங்கப்படவுள்ளது. இந்த முக்கிய அறிவிப்பைத் திலக் ஸ்மாரக் டிரஸ்ட் தலைவரான டாக்டர் ரோஹித் திலக் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.</p><h2><em><strong>விருது வழங்கப்படும் நாள்:</strong></em></h2><p>ஆகஸ்ட் 1 (விடுதலைப் போராட்ட வீரர் லோக்மான்ய பால் கங்காதர திலகரின் 106-வது நினைவு நாள்) அன்று மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள கடாரியா உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த விருதை அஜித் தோவலுக்கு வழங்குகிறார். இதில், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே மற்றும் சுனேத்ரா பவார் ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்கவுள்ளனர்.</p><h2><em><strong>நீண்ட காலம் பணியாற்றிய பாதுகாப்பு ஆலோசகர்:</strong></em></h2><p>இந்திய வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றிய பெருமை 81 வயதான அஜித் தோவலையே சேரும். 2014-ஆம் ஆண்டு முதல் இவர் இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.</p><p>இந்தியா-சீனா எல்லைப் பேச்சுவார்த்தைக்கான இந்தியாவின் சிறப்புப் பிரதிநிதியாகச் செயல்பட்ட தோவல், 2017-இல் இந்தியா-சீனா இடையே நிலவிய டோக்லாம் எல்லைப் பிரச்சனையை தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மூலம் அமைதியான முறையில் தீர்ப்பதில் முக்கியப் பங்காற்றினார்.</p><h2><em><strong>உளவுத்துறை &amp; முக்கிய ராணுவ நடவடிக்கைகள்:</strong></em></h2><p>1968-ஆம் ஆண்டு கேரளா கேடர் ஐ.பி.எஸ் அதிகாரியான இவர், உளவுத்துறையில் 3 தசாப்தங்களுக்கும் மேலாகப் பணியாற்றி அதன் இயக்குநராக ஓய்வு பெற்றார். மிசோரம், பஞ்சாப் (ஆபரேஷன் பிளாக் தண்டர்), சிக்கிம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் போன்ற பதற்றமான பகுதிகளில் உளவுப் பணிகளையும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளையும் திறம்பட கையாண்டுள்ளார்.</p><p>பாலகோட் வான்வழித் தாக்குதல், எல்லைத் தாண்டிய தாக்குதல்கள் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் போன்ற முக்கியமான பாதுகாப்பு வியூகங்களை வகுப்பதில் முதன்மை பங்காற்றியுள்ளார்.</p><h2><em><strong>லோக்மான்ய திலகர் விருதின் வரலாறு:</strong></em></h2><p>சுதந்திர போராட்ட வீரர் பால கங்காதர திலகரின் நினைவாக 1983-இல் திலக் ஸ்மாரக் டிரஸ்ட்டால் இந்த விருது தொடங்கப்பட்டது. நாட்டின் முன்னேற்றம், பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு அபார பங்களிப்பை அளித்த தலைவர்கள் மற்றும் ஆளுமைகளுக்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி இது வழங்கப்படுகிறது.</p><p>சோசலிசத் தலைவர் 'எஸ்.எம். ஜோஷி'க்கு முதன்முதலில் இந்த விருது வழங்கப்பட்டது. இதற்கு முன் பிரதமர் நரேந்திர மோடி (2023), முன்னாள் பிரதமர்கள் அடல் பிஹாரி வாஜ்பாய், மன்மோகன் சிங், இந்திரா காந்தி, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, மூத்த அரசியல்வாதி சரத் பவார் மற்றும் நிதின் கட்கரி (2025) போன்ற பல பிரபலங்கள் இவ்விருதைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>கட்டுமான அனுமதிக்கான கட்சி நிதி வசூல் நிறுத்தம் - வீடுகள் விலை குறைகிறது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/collection-party-funds-construction-permits-halted-housing-prices-to-drop</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/collection-party-funds-construction-permits-halted-housing-prices-to-drop#comments</comments><guid isPermaLink="false">a4d618d4-266a-4a6e-b6c1-6738d4a795b5</guid><pubDate>Tue, 21 Jul 2026 06:51:51 +0000</pubDate><atom:updated>2026-07-21T06:51:51.890Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,TN Government,Building permit,party funds,House prices,கட்சி நிதி,வீடுகள் விலை,கட்டிட அனுமதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/lgp703kf/house.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ House]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/lgp703kf/house.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கட்டுமான அனுமதி வழங்க வசூலிக்கப்பட்ட கட்சி நிதி நிறுத்தப்பட்டதால் வீடுகள் விலை குறைய வாய்ப்பு உள்ளது.</p><h2>கட்சி நிதி</h2><p>சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., சார்பிலும், நகர் ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி. சார்பிலும், கட்டுமான திட்ட அனுமதிகள் வழங்கப்படுகின்றன. இதில், அடுக்குமாடி திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கும்போது சதுர அடிக்கு ரூ.27 முதல் ரூ.35 வரை கட்சி நிதி என்ற பெயரில், கடந்த காலங்களில் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.</p><p>கட்டிட அனுமதிக்கான கோப்புகள் அதிகாரிகள் வசம் இருந்தாலும், அதில் உள்ள விபரங்களை பெறும் அரசியல் புள்ளிகள் கட்டுமான நிறுவனங்களை அணுகி கட்சி நிதி கேட்பது உண்டு. இதற்கு உடன்படாத நிறுவனங்களுக்கு, கட்டிட அனுமதி நிறுத்தி வைக்கப்படும். இதில் கட்சிநிதி கொடுப்பதற்கான செலவையும் கட்டுமான நிறுவனங்கள், வீட்டின் விலையில் சேர்த்து, மக்களிடம் வசூலித்து வந்தன. இதனால், வீடுகளின் விலைகள் வெகுவாக உயர்ந்தன.</p> <h2>தமிழக அரசு</h2><p>இந்த நிலையில், கட்டிட அனுமதி வழங்க கட்சி நிதி வசூலிக்க கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அரசின் முடிவை, இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பான கிரெடாய், இந்திய கட்டுமான வல்லுனர் சங்கத்தின் தென்னக மையம் ஆகியவை வரவேற்றுள்ளன.</p><h2>வீடுகள் விலை</h2><p>இதுகுறித்து கட்டுமான துறையினர் கூறியதாவது:</p><p>கட்சி நிதி வசூலிப்பது நிறுத்தப்பட்டதால், கட்டுமான நிறுவனங்களுக்கு செலவு மிச்சமாகி உள்ளது. இதன் பயனை மக்களுக்கு அளிக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. புதிதாக அறிவிக்கப்படும் குடியிருப்பு திட்டங்களில், வீடுகள் விலையை சதுரடிக்கு 100 ரூபாய் வரை குறைப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. </p><p>இவ்வாறு அவர்கள் கூறினர்.</p> ]]></content:encoded></item><item><title>மதுரை அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது</title><link>https://www.maalaimalar.com/spirituality/worship/madurai-alagar-kovil-worship</link><comments>https://www.maalaimalar.com/spirituality/worship/madurai-alagar-kovil-worship#comments</comments><guid isPermaLink="false">e4a3a1da-0258-4012-9d5a-8c69c8c90709</guid><pubDate>Tue, 21 Jul 2026 06:45:51 +0000</pubDate><atom:updated>2026-07-21T06:45:51.602Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மதுரை,madurai,வழிபாடு,worship,அழகர்கோவில்,Alagar kovil</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/zxcznp49/AlagarKovil.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Alagar Kovil ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/zxcznp49/AlagarKovil.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வழிபாடு</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் எனப்படும் சுந்தரராஜ பெருமாள் கோவிலில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் ஆடிப் பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டிற்கான விழா இன்று (21-ந்தேதி) காலை 8.15 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் மங்கள இசை முழங்க கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து பக்தர்கள் “கோவிந்தா... கோவிந்தா...” என பக்தி முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். </p><h2><strong>சிறப்பு யாகங்கள்</strong></h2><p>முன்னதாக வேத மந்திரங்கள் முழங்க, பட்டாச்சாரியார்கள் தலைமையில் சிறப்பு யாகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும் தோரணங்கள், வண்ண மலர் அலங்காரங்கள், தூப நறுமணம் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.</p><h2><strong>ஆடித் திருவிழா</strong></h2><p>ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றம் நடைபெற்றதன் மூலம் பல்வேறு ஆன்மீக நிகழ்ச்சிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கின. திருவிழா நாட்களில் தினமும் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், பூஜைகள், வாகன சேவைகள், மண்டகப்படி உள்ளிட்ட வைபவங்கள் நடைபெற உள்ளன. </p><p>இன்று இரவு அன்ன வாகனத்தில் கள்ளழகர் பெருமாள் எழுந்தருளி புறப்பாடு நடைபெறுகிறது. தொடர்ந்து திருவிழா நாட்களில் காலை மற்றும் இரவு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது. அதன்படி, நாளை (22-ந்தேதி) காலையில் தங்கப் பல்லக்கிலும், இரவு சிம்ம வாகனத்திலும் பெருமாள் புறப்பாடு நடைபெறும். 23-ந்தேதி இரவு அனுமார் வாகனத்திலும், 24-ந்தேதி இரவு கருட வாகனத்திலும் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளுகிறார்.</p><p>26-ந்தேதி மோகினி அவதாரத்தில் சுந்தரராஜ பெருமாள் இரவு யானை வாகனத்திலும், 27-ந்தேதி இரவு புஷ்ப சப்பரத்திலும், 28-ந்தேதி இரவு குதிரை வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெறும்.</p><h2><strong>தேரோட்டம்</strong></h2><p>திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வருகிற 29-ந்தேதி காலை கோலாகலமாக நடைபெற உள்ளது. அன்று காலை 7.05 மணிக்கு மேல் 7.25 மணிக்குள் பக்தர்கள் திருத்தேர் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் விமரிசையாக நடைபெறும். இதனைத் தொடர்ந்து 30-ந் தேதி தீர்த்தவாரியும், 31-ந் தேதி உற்சவ சாந்தியும் நடைபெறும்.</p><h2><strong>பக்தர்கள்</strong></h2><p>ஆடிப்பெருந்திருவிழாவையொட்டி மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் அழகர்கோவிலுக்கு வருகை தந்தனர். பக்தர்களின் வசதிக்காக குடிநீர், மருத்துவ உதவி, பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் சுகாதார வசதிகள் உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடுகளையும் கோவில் நிர்வாகம் செய்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இளைஞர்கள் மீது தாக்குதல், தேர்வு முறைகேடுகள் குறித்து மக்களவையில் விவாதிக்க  சபாநாயகரிடம்  ராகுல் கோரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-scam-police-crackdown-rahul-urges-parliament-debate-on-student-assault</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-scam-police-crackdown-rahul-urges-parliament-debate-on-student-assault#comments</comments><guid isPermaLink="false">8e3a5f8f-69f8-4a16-aada-390d8c2b9561</guid><pubDate>Tue, 21 Jul 2026 06:41:51 +0000</pubDate><atom:updated>2026-07-21T06:41:51.938Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords></media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/s39nyher/tn-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஓம் பிர்லா, ராகுல் ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஓம் பிர்லா, ராகுல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/s39nyher/tn-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் நேற்று பாராளுமன்றம் நோக்கிய கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் பேரணியின் போது <a href="https://www.maalaimalar.com/news/national/will-the-cockroach-partys-protest-succeed-is-dharmendra-pradhan-set-to-resign">இளைஞர்கள் </a>மீது காவல்துறையால் நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகள் இன்றும் நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. </p><p>விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் இன்றும் (செவ்வாய்க்கிழமை) கடும் அமளியில் ஈடுபட்டன. </p><h2>மாநிலங்களவையில் கார்கே பேச்சு </h2><p>மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, </p><p> "லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. அமைதியான முறையில் போராடிய மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டு, அரசு அவர்களின் குரலை ஒடுக்க முயல்கிறது" என்று அவர் குற்றம் சாட்டினார்.</p><p>கார்கே பேசத் தொடங்கியதும் ஆளுங்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். அதற்குப் பதிலடியாக காங்கிரஸ் எம்பிக்களும் முழக்கங்களை எழுப்பியதால் அவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டு, அவையை நடத்த முடியாத சூழல் உருவானது.   </p><p>இதனால் அவை மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையும் அமளியால் மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது. </p><h2>ராகுல் காந்தி - சபாநாயகர் சந்திப்பு</h2><p>மறுபுறம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, எதிர்க்கட்சி எம்பிக்களுடன் சென்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை நேரில் சந்தித்துப் பேசினார்.</p><p>சிஜேபி போராட்டத்தின் போது மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் மற்றும் நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் தேர்வு முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.</p><p>சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி கூறியதாவது:</p><p>"நேற்று தங்கள் எதிர்காலம் குறித்து நியாயமான கேள்விகளை எழுப்பியதற்காக மாணவர்கள் மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டது.</p><p>தேர்வு முறைகேடுகள் குறித்து எந்தப் அக்கறையும் இல்லாத அரசைக் கண்டித்தும், மாணவர் நலன் குறித்தும் நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்க வேண்டும் என்ற எளிமையான கோரிக்கையைத்தான் நாங்கள் முன்வைத்துள்ளோம்.</p><p>இந்தியாவின் எதிர்காலமான மாணவர்களின் பிரச்சனைகளைப் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியவில்லை என்றால், இந்த நாடாளுமன்றம் வேறு எதற்காக இயங்குகிறது?</p><p>இந்த விவகாரத்தை சும்மா விட்டுவிடாது. மாணவர்களின் குரல் வீதிகளிலும் ஒலிக்கும், நாடாளுமன்றத்திலும் ஒலிக்கும் என்பதை நாங்கள் உறுதிசெய்வோம்." என்று தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>காவல்துறையினர் கண்ணியம் தவறக் கூடாது!- நயினார் நாகேந்திரன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-says-police-personnel-must-not-compromise-their-dignity</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-says-police-personnel-must-not-compromise-their-dignity#comments</comments><guid isPermaLink="false">92218ea6-e31e-429a-9c51-3ff04bfe209d</guid><pubDate>Tue, 21 Jul 2026 06:36:39 +0000</pubDate><atom:updated>2026-07-21T06:36:39.598Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,காவல்துறை,நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran</media:keywords><media:content height="350" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/rea5olea/NainarNagendran.jpg" width="615"><media:title type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/rea5olea/NainarNagendran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>காவல் துறை கண்ணியம் தவறக்கூடாது; தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளரின் நாகரிகமற்ற செயலுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.</aside><p>பா.ஜ.க. மாநில தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/நயினார்-நாகேந்திரன்">நயினார் நாகேந்திரன்</a> எக்ஸ்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><h2><strong>கண்டனம்</strong></h2><p>முதல்வர் மீது அவதூறு பரப்பியதாகக் கூறி தமிழகக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அவர்களிடம் பேட்டி பெற முயன்ற பத்திரிகையாளர்களைத் தாக்கியதோடு, நாக்கைத் துருத்திக் கொண்டு அவர்களை “வாடா, போடா” என ஒருமையில் சாடியுள்ள, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  திபு அவர்களின் நாகரிகமற்ற செயல் கண்டனத்திற்குரியது. </p><p>காக்கிச் சட்டைக்கென்று ஒரு தனி மரியாதையும், கண்ணியமும் உண்டு என்பதை மறந்து விட்டு, காவல்துறையின் உயரிய பொறுப்பில் இருக்கும் காவல் அதிகாரியே “பேட்டை ரவுடி” போல இப்படி பொதுவெளியில் சண்டைக்கு நிற்பது ஒட்டுமொத்த காவல்துறையின் பிம்பத்தையும் சிதைத்து விடும். </p><h2><strong>அடக்குமுறைகளை தடுத்து நிறுத்த வேண்டும்</strong></h2><p>ஏற்கனவே தமிழகத்தில் தொடரும் லாக்-அப் மரணங்களால், காவல்துறையின் மீது மக்களுக்குள்ள நம்பிக்கையும், பாதுகாப்புணர்வும் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து வரும் நிலையில், காவல்துறையினர் மிகுந்த கவனத்துடன் தங்களது “Decorum”-மை கடைபிடிக்க வேண்டும். </p><p>மேலும், காவல்துறையைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இயக்கும் முதல்வர் விஜய் அவர்கள், காவல்துறையை வெறும் “ஏவல்துறை”யாக மட்டும் பயன்படுத்தக் கூடாது எனவும், ஜனநாயகத்தின் முக்கியத் தூண்களில் ஒன்றான பத்திரிக்கைத் துறையின் அடிப்படை உரிமைகள் மீது தொடரும் இதுபோன்ற அடக்குமுறைகளை தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">காவல்துறையினர் கண்ணியம் தவறக் கூடாது! <br><br>முதல்வர் மீது அவதூறு பரப்பியதாகக் கூறி தமிழகக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. மார்க்கண்டேயன் அவர்களிடம் பேட்டி பெற முயன்ற பத்திரிக்கையாளர்களைத் தாக்கியதோடு, நாக்கைத் துருத்திக் கொண்டு அவர்களை… <a href="https://t.co/jkyp77jzq5">pic.twitter.com/jkyp77jzq5</a></p>&mdash; Nainar Nagenthran (@NainarBJP) <a href="https://x.com/NainarBJP/status/2079447132038439274?ref_src=twsrc%5Etfw">July 21, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>ஆஃப்கானிஸ்தானில் திடீர் வெள்ளப்பெருக்கு: 20 பேர் பலி; 100-க்கும் மேற்பட்டோர் மாயம்!</title><link>https://www.maalaimalar.com/news/world/deadly-flash-floods-in-eastern-afghanistan-20-killed</link><comments>https://www.maalaimalar.com/news/world/deadly-flash-floods-in-eastern-afghanistan-20-killed#comments</comments><guid isPermaLink="false">d207f0e8-9382-44fe-91de-e02740810c00</guid><pubDate>Tue, 21 Jul 2026 06:28:19 +0000</pubDate><atom:updated>2026-07-21T06:28:19.056Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வெள்ளப்பெருக்கு,Flash Flood,Afghanistan Floods,Parun,ஆஃப்கானிஸ்தான் வெள்ளப்பெருக்கு,பாரூன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/b5x3mrdh/flood.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Afghanistan Floods ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/b5x3mrdh/flood.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆஃப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நூரிஸ்தான் மாகாணத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட பயங்கரத் திடீர் வெள்ளப்பெருக்கில் குறைந்தபட்சம் '20 பேர்' உயிரிழந்துள்ளனர். 80-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.</p><h2><strong>பாரூன் நகரில் பேரழிவு:</strong></h2><p>நூரிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான பாரூன் நகரமே இந்த வெள்ளத்தினால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி அலுவலகம், உணவகங்கள், நூற்றுக்கணக்கான கடைகள் மற்றும் வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு முற்றிலும் உருக்குலைந்துள்ளன.</p><h2><strong>முக்கிய அதிகாரிகள் மாயம்:</strong></h2><p>பாரூன் நகர மேயர் மற்றும் பல அரசு ஊழியர்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகியுள்ளதாக மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><h2><strong>சிக்கலான மீட்புப்பணி:</strong></h2><p>வெள்ள நீருடன் பெரிய பாறைகளும் இடிபாடுகளும் அடித்து வரப்பட்டுள்ளதால், போதிய நவீன உபகரணங்கள் இல்லாத நிலையிலும் உள்ளூர் மக்களும் பேரிடர் மீட்புக் குழுவினரும் இடிபாடுகளுக்கிடையே மனித உயிர்களைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.</p><h2><strong>வெள்ளப் பெருக்குக்கான முக்கியக் காரணங்கள்:</strong></h2><p> புவி வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றத்தின் தீவிர விளைவுகளால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய உலக நாடுகளில் ஆஃப்கானிஸ்தானும் ஒன்று. தெற்காசியாவில் தீவிரமடைந்துள்ள பருவமழைப் பொழிவு இங்கு திடீர் வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2><strong>காடழிப்பு:</strong></h2><p>நூரிஸ்தான் பகுதி அடர்ந்த காடுகளுக்கும் இயற்கை எழிலுக்கும் பெயர் பெற்றது. இருப்பினும், சமீபகாலமாக நடைபெற்று வரும் சட்டவிரோத மரம் வெட்டுதல் மற்றும் காடழிப்பு காரணமாக, நிலத்தின் மழைநீரை உறிஞ்சும் இயற்கைத்தன்மை குறைந்து வெள்ளத்தின் வீரியம் அதிகரித்துள்ளது.</p><h2><strong>அரசு எச்சரிக்கை:</strong></h2><p>தாலிபன் அரசாங்கத்தின் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், நாட்டின் 34 மாகாணங்களில் 10 மாகாணங்களில் தொடர்ந்து கனமழை, இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. நதிக்கரைகள் மற்றும் ஆபத்தான தாழ்வான பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் எனத் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நீட் வினாத்தாள் கசிவு கொடும் பாவச் செயல்.. பிரதமர் மோடி மௌனம் கலைப்பு </title><link>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-pm-modi-breaks-silence-13-arrested-as-youth-protests-intensify</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-pm-modi-breaks-silence-13-arrested-as-youth-protests-intensify#comments</comments><guid isPermaLink="false">ca9c7d59-6f3b-4f07-939f-20fe3e86130f</guid><pubDate>Tue, 21 Jul 2026 06:14:42 +0000</pubDate><atom:updated>2026-07-21T06:14:42.105Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,Sonam Wangchuk,பிரதமர் மோடி,சோனம் வாங்சுக்,நீட் வினாத்தாள் கசிவு,NEET Question Paper Leak,சிஜேபி,CJP</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/vfcblpeg/tn-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரதமர் மோடி ]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர் மோடி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/vfcblpeg/tn-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இன்று பாராளுமன்ற கூட்டத்தொடர் 2 ஆம் நாள் கூட்டம் தொடங்கும் முன்னர் பிரதமர் மோடி என்டிஏ கூட்டணி பாராளுமன்ற எம்.பிக்கள் கூட்டத்தை நடத்தினார். </p><p>இந்த கூட்டத்தில்,  கடந்த மே 3 நடைபெற்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து பிரதமர் மோடி முதல் முறையாக வாய்திறந்துள்ளார். </p><p>ஜூன் 20 முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் சிஜேபி கட்சியின் தொடர் போராட்டம் இன்றுடன் 23வது நாளை எட்டும் <a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-sonam-wangchuk-seeks-discharge-activist-asks-hospital-to-allow-him-join-parliament-march">சோனம் வாங்சுக் </a>உண்ணாவிரதம், நேற்றைய சிஜேபி பேரணியில் ஏற்பட்ட வன்முறை உள்ளிட்ட தொடர் அழுத்தங்களை தொடர்ந்து மோடி மௌனம் கலைத்துள்ளார். </p><h2>மோடி</h2><p>கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாக பாராளுமன்ற விவகாரங்கள் குழு அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியதாவது,</p><p>வினாத்தாள் கசிவு ஒரு கொடிய பாவச் செயல். இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். தவறான பாதையில் செல்வது எளிது. ஆனால் அதிலிருந்து மீண்டும் சரியான பாதைக்கு திரும்புவது மிகவும் கடினம். அவர்களை தூண்டுவிடாமல், சரியான நாம் அவர்களை சரியான பாதைக்கு கொண்டு வர வேண்டும். அது நமது பொறுப்பு. இளைஞர்களின் எதிர்காலமே முக்கியம். இதில் அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும்" என பேசியுள்ளார்.</p><p>இது அரசுக்கு எதிராக ஜந்தர் மந்தரில் போராடும் இளைஞர்களை குறிப்பிட்டு மோடி பேசியதாக புரிந்துகொள்ளப்படுகிறது.</p> <h2>ரிஜிஜூ</h2><p> தொடர்ந்து கிரண் ரிஜிஜூ பேசுகையில், நீட் வினாத்தாள் கசிவு தெரியவந்ததும் 13 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும், தேர்வர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் அரசு, மறுதேர்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டு, குறித்த நேரத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டதாக தெரிவித்தார்.</p><p>குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கவும், எதிர்காலத்தில் போட்டித் தேர்வுகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பிரதமர் மோடியின் கறார் உத்தரவிட்டுள்ளார் என கிரண் ரிஜிஜூ மேலும் தெரிவித்தார்.</p> <h2>கரப்பான்பூச்சி ஜனதா கட்சி</h2><p>நேற்று <a href="https://www.maalaimalar.com/news/national/cjp-leaders-meet-union-minister-jp-nadda-submit-letter-of-demands">கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின்</a> பிரதிநிதிகள் இருவர், மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவை சந்தித்து தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர்.</p><p>அதில், நிர்வாக தோல்விக்கு காரணமான மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவிநீக்கம் செய்ய வேண்டும், மருத்துவமனையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சோனம் வாங்சுக்கை விடுவிக்க வேண்டும், நீட் குளறுபடிகளால் மன அழுத்தத்தில் தற்கொலை செய்துகொண்ட 20 மாணவர்களுக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தது.</p>]]></content:encoded></item><item><title>அலுவலகத்தை மாற்றும் முதலமைச்சர் விஜய்? - ஆஸ்தான ஜோதிடர் ஆலோசனை காரணமா?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-shifting-his-office-due-to-astrologers-advice</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-shifting-his-office-due-to-astrologers-advice#comments</comments><guid isPermaLink="false">ba20a9ec-75bf-4a28-8321-0857667f4874</guid><pubDate>Tue, 21 Jul 2026 06:13:26 +0000</pubDate><atom:updated>2026-07-21T06:13:26.314Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,தலைமை செயலகம்,Astrologer,Secretariat,ஜோதிடர்,cm vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/vzzz7g2d/cmvijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/vzzz7g2d/cmvijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யின் அறை இடம் மாறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.</p><h2>முதலமைச்சர் அறை, அலுவலகம்</h2><p>சென்னை காமராஜர் சாலையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழக அரசின் தலைமைச்செயலகம் இயங்கி வருகிறது. கோட்டை கட்டிடத்தின் முதல் தளத்தில், முதலமைச்சர் அறை, அலுவலகம் உள்ளது. இதேபோல், அமைச்சர்கள் அலுவலகம், சட்டசபை கூட்ட அரங்கம், தலைமைச் செயலாளர் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த செயலாளர்களின் அலுவலகங்கள், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அறை, நூலகம் உள்ளிட்டவை அந்தக் கட்டிடத்தில்தான் இயங்கி வருகின்றன.</p><h2>இட நெருக்கடி</h2><p>இந்த நிலையில், <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mallikarjun-kharge-birthday-cm-vijay-wishes">முதலமைச்சர் விஜயை</a> சந்திக்க நாள்தோறும் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள் என பலரும் வந்து செல்கின்றனர்.</p><p>தற்போதுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இட நெருக்கடி ஏற்படுவதால், அவரை சந்திக்க வருபவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, முதலமைச்சர் அறை மற்றும் அலுவலகத்தை, கோட்டை கட்டிடத்திற்கு அருகே உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p> <h2>ஆஸ்தான ஜோதிடர்</h2><p>தற்போது, 10-வது மாடியில் கருத்தரங்க கூடமும், ஆய்வு கூட்டங்களில் பங்கேற்பவர்களுக்கான உணவருந்தும் கூடமும் உள்ளது. அவற்றை வேறு இடத்திற்கு மாற்றிவிட்டு, 10-வது மாடி முழுவதுமே முதலமைச்சர் அறை மற்றும் அலுவலக பயன்பாட்டிற்காக எடுத்துக்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.</p><p>இடநெருக்கடியால், முதலமைச்சர் அறை மாற்றப்பட இருப்பதாக கூறப்பட்டாலும், வாஸ்துபடி தற்போதைய அறை சரியில்லை என்று அவருடைய ஆஸ்தான ஜோதிடர் கூறியதாகவும், தொடர்ந்து உச்சத்தில் இருக்க உயரமான கட்டிடத்தில் முதலமைச்சர் அலுவலகம் செயல்பட வேண்டும் என்று கூறியதாகவும், அதுவும் கடலை பார்த்தபடி முதலமைச்சர் அறை இருக்க வேண்டும் என்று கூறியதாகவும் தெரிகிறது. </p><p>அதன்படியே, முதலமைச்சர் அறை மற்றும் அலுவலகம் மாற்றப்பட இருப்பதாக சொல்லப்பட்டாலும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.</p> ]]></content:encoded></item><item><title>ஆகஸ்ட் 5-ல் பட்ஜெட் தாக்கல்- சபாநாயகர் தகவல் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-filed-on-august-5th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-filed-on-august-5th#comments</comments><guid isPermaLink="false">0462a245-3b74-4003-834b-ab1c2c54d599</guid><pubDate>Tue, 21 Jul 2026 06:13:07 +0000</pubDate><atom:updated>2026-07-21T06:13:07.679Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,TN budget,தமிழக பட்ஜெட்,tvk,JCD Prabhakar,ஜேசிடி பிரபாகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/vgdr7ezj/JCDPrabhakar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்]]></media:title><media:description type="html"><![CDATA[ சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/vgdr7ezj/JCDPrabhakar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தமிழகத்தில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் என்பதால் பொதுமக்களை கவரும் புதிய திட்டங்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.</aside><p>முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு பதவி ஏற்ற பிறகு முதல் சட்டசபை கூட்டம் கடந்த ஜூன் மாதம் 18-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜூன் 19, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தது. நிறைவு நாளில் முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, சட்டசபை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.</p><h2><strong>தமிழக பட்ஜெட்</strong></h2><p>இந்த நிலையில், 2026-2027-ம் ஆண்டுக்கான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D">பொது பட்ஜெட்</a> மற்றும் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய புதிய திட்டங்கள், நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை தொடர்பாக முதலமைச்சர் விஜய், பல்வேறு துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கடந்த சில நாட்களாக ஆலோசனை நடத்தி வருகிறார். நாளை வரை அவர் ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.</p><p>இதனிடையே <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-filed-likely-chance-august-first-week">ஆகஸ்ட்</a> முதல் வாரத்தில் தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருந்தன.</p><h2><strong>ஆகஸ்ட் 5-ல் பட்ஜெட்</strong></h2><p>இந்த நிலையில், ஆகஸ்ட் 5-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பின் போது சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறியதாவது:-</p><p>ஆகஸ்ட் 5-ந்தேதி காலை 10 மணிக்கு 2026-27-ம் ஆண்டுக்கான  நிதி நிலை அறிக்கை சபையில் தாக்கல் செய்யப்படுகிறது. ஆகஸ்ட் 6-ந்தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். </p><h2><strong>நேரலை</strong></h2><p>மேலும் அனைத்து தரப்பு மக்களுக்குமான பட்ஜெட்டாக இருக்கும். கூட்டத்தொடர் எவ்வளவு நாட்கள் நடத்தப்படும் என்பது அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். பட்ஜெட் கூட்டத்தொடரை முழு நேரலை செய்ய வேண்டும் என நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம். எம்எல்ஏக்களை கைது செய்ய சபாநாயகரின் அனுமதி தேவையில்லை என்றார். </p><p>தமிழகத்தில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் என்பதால், பொதுமக்களை கவரும் புதிய திட்டங்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.</p>]]></content:encoded></item><item><title>NEET-UG 2026: போலியான OMR விடைத்தாள்கள் பரப்பினால் கடும் நடவடிக்கை-NTA எச்சரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/national/nta-warns-against-fake-omr-sheets-neet-ug-2026</link><comments>https://www.maalaimalar.com/news/national/nta-warns-against-fake-omr-sheets-neet-ug-2026#comments</comments><guid isPermaLink="false">a6e50631-d03c-44ab-8c01-ab7fb08591ca</guid><pubDate>Tue, 21 Jul 2026 06:07:01 +0000</pubDate><atom:updated>2026-07-21T06:07:01.984Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நீட் ஊழல்,NTA,தேசிய தேர்வு முகமை,NEET-UG 2026,OMR answer sheets,OMR விடைத்தாள்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/oman4fr0/omr.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ fake omr sheets]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/oman4fr0/omr.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேசிய தேர்வு முகமை (NTA), நீட் (NEET-UG 2026) தேர்வின் போலியான மற்றும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்ட OMR விடைத்தாள்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுவதற்கு எதிராக மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.</p><h2><strong>போலியான விடைத்தாள்கள் வதந்தி:</strong></h2><p>சமூக வலைதளங்களில் சில மாணவர்களின் "சரியான OMR விடைத்தாள்கள்" எனக் கூறி சில படங்கள் வைரலாகி வருகின்றன. ஆனால், அந்த படங்கள் அனைத்தும் டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI/OCR) தொழில் நுட்பத்தின் மூலம் போலியாக உருவாக்கப்பட்டவை என NTA திட்டவட்டமாக மறுத்துள்ளது.</p><h2><strong>NTA-வின் விளக்கம்:</strong></h2><p>சர்ச்சைக்குரிய மாணவர்களின் தேர்வுப் பதிவேடுகள் மற்றும் அசல் OMR விடைத்தாள்களை ஆய்வு செய்ததில், அவர்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்கள் முற்றிலும் சரியானவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பகிரப்படும் படங்களில் கூடுதல் விடைகள் குறிக்கப்பட்டது போலவும், வினாத்தாள் விவரங்கள் மற்றும் அறை கண்காணிப்பாளரின் கையொப்ப நேரம் மாற்றப்பட்டது போலவும் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. </p><p>அசல் OMR விடைத்தாள்கள் ஏற்கனவே மாணவர்களின் மின்னஞ்சல் மற்றும் அதிகாரப்பூர்வ லாகின் கணக்குகளுக்கு அனுப்பப்பட்டுவிட்டதாக NTA தெளிவுபடுத்தியுள்ளது.</p><h2><strong>AI &amp; டிஜிட்டல் முறைகேடு கண்டறியப்பட்டது:</strong></h2><p>அசல் OMR விடைத்தாள்கள் குறைந்த தெளிவுத்திறன் கொண்டவை, ஆனால் போலி OMR தாள்கள் உயர் தெளிவுத்திறன் கொண்டவையாகவும், பேனா மை நிறம் கருப்பிலிருந்து நீல-ஊதா நிறமாக மாற்றப்பட்டும் உள்ளன. AI தொழில்நுட்பத்தைக் கொண்டு எழுத்துக்களை மீண்டும் உருவாக்க முயன்றதில், OMR தாளில் உள்ள அச்சிடப்பட்ட வாக்கியங்களில் பிழைகள் ஏற்பட்டுள்ளதை NTA நுணுக்கமாகக் கண்டறிந்துள்ளது.</p><h2><strong>சட்டப்பூர்வ நடவடிக்கை எச்சரிக்கை:</strong></h2><p>போலியான OMR விடைத்தாள்களை உருவாக்குவது, சமூக வலைதளங்களில் பரப்புவது அல்லது முறையீட்டிற்காக சமர்ப்பிப்பது சட்டப்படி குற்றமாகும். இதன் மீது கீழ் கண்ட சட்டங்களின் கீழ் கடுமையாக வழக்குப்பதிவு செய்யப்படும் என NTA எச்சரித்துள்ளது:</p><p>1. பொதுத் தேர்வுகள் (நடைமுறை முறைகேடுகள் தடுப்பு) சட்டம், 2024</p><p>2. பாரதிய நியாய சன்ஹிதா, 2023 </p><p>3. தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000</p><h2><strong>மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு வேண்டுகோள்:</strong></h2><p> சமூக வலைதளங்களில் பரவும் போலித் தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், மதிப்பெண் வேறுபாடுகள் குறித்த புகார்களுக்கு அசல் OMR நகல்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் NTA கேட்டுக்கொண்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கார்கே பிறந்தநாள் - முதலமைச்சர் விஜய் வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mallikarjun-kharge-birthday-cm-vijay-wishes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mallikarjun-kharge-birthday-cm-vijay-wishes#comments</comments><guid isPermaLink="false">4bc2c025-bc8f-40ba-b9a5-719999b95e35</guid><pubDate>Tue, 21 Jul 2026 06:01:47 +0000</pubDate><atom:updated>2026-07-21T06:01:47.911Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,விஜய்,vijay,mallikarjun kharge,மல்லிகார்ஜூன கார்கே</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/rcideyp7/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mallikarjun Kharge - CM Vijay ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/rcideyp7/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு முதலமைச்சர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><h2>முதலமைச்சர் விஜய்</h2><p>இதுதொடர்பாக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-vijay-reviews-chennai-waste-to-gas-project">முதலமைச்சர் விஜய்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மதிப்பிற்குரிய மல்லிகார்ஜுன் கார்கே அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!</p><p>தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், மக்கள் நலப் பணிகளைத் தொடர்ந்து சிறப்பாக ஆற்றிட எனது உளமார்ந்த வாழ்த்துகள்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வறட்சியால் வாடும் கிராம மக்கள் மழை வேண்டி நடத்திய தவளைத் திருமணம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/villagers-suffering-from-drought-hold-a-frog-wedding-to-pray-for-rain</link><comments>https://www.maalaimalar.com/news/national/villagers-suffering-from-drought-hold-a-frog-wedding-to-pray-for-rain#comments</comments><guid isPermaLink="false">cce69c86-57c0-4546-a672-e41cbf604cc5</guid><pubDate>Tue, 21 Jul 2026 05:59:32 +0000</pubDate><atom:updated>2026-07-21T05:59:32.920Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,மழை,special worship,சிறப்பு வழிபாடு,தவளை திருமணம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/bqjwfx6i/frog.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  கிராம மக்கள் மழை வேண்டி நடத்திய தவளைத் திருமணம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/bqjwfx6i/frog.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>கர்நாடகா மாநிலத்தில் இரண்டு  தவளைகளுக்கு திருமணம் நடத்தி கிராம மக்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.</aside><h2><strong>சிறப்பு வழிபாடு</strong></h2><p>வெயிலின் தாக்கம் அதிகரித்து நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால், விவசாயத்தை காக்கவும், கோடை வெப்பத்தைத் தணிக்கவும் மழை வேண்டி பொதுமக்கள் தீவிர வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>நாடு முழுவதும் முக்கிய சிவாலயங்கள் மற்றும் அம்மன் கோவில்களில் 'வருண ஜெபம்' மற்றும் 'மகா வருண யாகங்கள்' நடத்தப்பட்டு வருகின்றன. அர்ச்சகர்கள் கழுத்தளவு தண்ணீரில் நின்றுகொண்டு, வருண பகவானுக்குரிய மந்திரங்களை ஓதி சிறப்பு பூஜைகள் செய்கின்றனர். மேலும், நந்திகேஸ்வரருக்கு நவதானியங்கள் மற்றும் பழங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மழை பொழிய வேண்டி பிரார்த்தனைகள் செய்யப்படுகின்றன.</p><p>நகரங்களில் யாகங்கள் நடத்தப்படும் வேளையில், கிராமப்புறங்களில் தொன்றுதொட்டு பின்பற்றி வரும் பாரம்பரிய வினோத வழிபாட்டு முறைகளும் அரங்கேறி வருகின்றன. </p><p>இந்த நிலையில், கர்நாடகா மாநிலத்தில் இரண்டு  தவளைகளுக்கு திருமணம் நடத்தி கிராம மக்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். அது குறித்து பார்ப்போம்... </p><h2><strong>கடும் வறட்சி</strong></h2><p>கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகாவிற்கு உட்பட்ட தபதேஷ்வரா காலனி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில மாதங்களாக போதிய மழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து, குடிநீர் தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளது.</p><p>தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயப் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகள் கவலையில் உள்ளனர். மேலும், குடிநீருக்காக பெண்கள் தினமும் பல கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலை தொடர்கிறது. மக்களும், கால்நடைகளும் குடிநீருக்காக கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.</p><h2><strong>சிறப்பு பிரார்த்தனை</strong></h2><p>இந்த சூழலில், ஊரில் நல்ல மழை பெய்து வறட்சி நீங்க வேண்டும் என்ற நோக்கில் அப்பகுதி பெண்கள் பாரம்பரிய நம்பிக்கையின்படி இரண்டு தவளைகளை பிடித்து வந்து, அவற்றுக்கு மாலை அணிவித்து மேளதாளத்துடன் திருமண சடங்குகளை நடத்தினர். பின்னர், மழை பெய்ய வேண்டி சிறப்பு வழிபாடும் பிரார்த்தனையும் மேற்கொண்டனர்.</p><h2><strong>நம்பிக்கை</strong></h2><p>இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில், "வறட்சி காலங்களில் தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்பது முன்னோர்களிடம் இருந்து வந்த நம்பிக்கை. தற்போது கடும் தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும், குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவும் இந்த வழிபாட்டை நடத்தினோம்" என்று தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>ஜூலை 27-ல் அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/admk-protest-on-july-27th-in-nerkundram</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/admk-protest-on-july-27th-in-nerkundram#comments</comments><guid isPermaLink="false">b51c3442-a2ff-48bd-8e96-25961e36ed3a</guid><pubDate>Tue, 21 Jul 2026 05:50:51 +0000</pubDate><atom:updated>2026-07-21T05:50:51.951Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,Edappadi Palaniswami,அதிமுக,எடப்பாடி பழனிசாமி,ADMK protest,அதிமுக ஆர்ப்பாட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/xqn4k21n/EdappadiPalaniswami0002.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/xqn4k21n/EdappadiPalaniswami0002.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>மதுரவாயல் தொகுதி நெற்குன்றம் பல்லவன் நகரில் விடியா திமுக அரசால் தொடங்கப்பட்டு செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக மூட த.வெ.க. அரசை வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாடம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</aside><p>அ.தி.மு.க.பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF">எடப்பாடி பழனிசாமி</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>டாஸ்மாக் மதுபானக் கடை</strong></h2><p>சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்பு விடியா திமுக அரசால் திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி நெற்குன்றம் பல்லவன் நகரில் அரசுப் பள்ளி, வழிபாட்டுத் தலம், பேருந்து நிழற்குடை இவைகளுக்கு அருகில் டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.</p><p>நாள்தோறும் பள்ளிக்குச் செல்லும் மாணவச் செல்வங்கள், வேலைக்குச் செல்வோர் என மக்கள் அதிகம் புழங்கும் இந்த இடத்தில் செயல்பட்டு வரும் மதுபானக் கடையை அகற்றக் கோரி விடியா திமுக ஆட்சியில், கழகத்தின் சார்பில் பொதுமக்களுடன் இணைந்து முறையிட்டதைத் தொடர்ந்து, இக்கடை விரைவில் மூடப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டும் தற்போதுவரை மூடப்படவில்லை. இதன் காரணமாக அப்பகுதிவாழ் மக்களும், நாள்தோறும் இந்தச் சாலையை பயன்படுத்தும் பொதுமக்களும் பல்வேறு வகையில் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.</p><h2><strong>இடையூறு</strong></h2><p>மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் இடங்களில் அமைந்திருக்கும் டாஸ்மாக் கடைகளை அகற்றிவிட்டதாகக் கூறும் த.வெ.க. அரசு, நெற்குன்றம் பல்லவன் நகரில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றாதது வேதனைக்குரிய விஷயமாகும். இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>இந்நிலையில், மதுரவாயல் தொகுதி, நெற்குன்றம் பல்லவன் நகரில் அரசுப் பள்ளி, வழிபாட்டுத் தலம், பேருந்து நிழற்குடை இவைகளுக்கு அருகில் விடியா திமுக அரசால் தொடங்கப்பட்டு செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை, பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக மூட த.வெ.க. அரசை வலியுறுத்தி, அனைத்திந்திய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/1000-supporters-of-cve-shanmugam-in-villupuram-district-resign-en-masse">அண்ணா திராவிட முன்னேற்றக் கழக</a> திருவள்ளூர் மத்திய மாவட்டத்தின் சார்பில், 27.7.2026 - திங்கட் கிழமை காலை 10 மணியளவில், மதுரவாயல் பகுதி, நெற்குன்றம் N.T. பட்டேல் சாலை அம்மா உணவகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.</p><h2><strong>மக்கள் நலன்</strong></h2><p>இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் கழக அமைப்புச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான  S. கோகுல இந்திரா அவர்கள் தலைமையிலும், திருவள்ளூர் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் K.S. ரவிச்சந்திரன் அவர்கள் முன்னிலையிலும் நடைபெறும்.</p><p>இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், திருவள்ளூர் மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த, கழகம் மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், சென்னை மாநகராட்சி மாமன்ற வார்டு உறுப்பினர், மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகளும், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.</p><p>மக்கள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.</p>]]></content:encoded></item><item><title>ஸ்பெயின் உலகக்கோப்பை வெற்றி கொண்டாட்டம்: மேட்ரிட் நகரில் ரசிகர்கள் பிரம்மாண்ட வரவேற்பு!</title><link>https://www.maalaimalar.com/sports/spain-second-world-cup-triumph-madrid-fans-historic-celebration</link><comments>https://www.maalaimalar.com/sports/spain-second-world-cup-triumph-madrid-fans-historic-celebration#comments</comments><guid isPermaLink="false">d500d17a-c2a0-4609-a59d-9701bc9d5fe4</guid><pubDate>Tue, 21 Jul 2026 05:43:51 +0000</pubDate><atom:updated>2026-07-21T05:43:51.157Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கால்பந்து,FootBall,Madrid,மேட்ரிட்,spainworldcup,King Felipe VI,ஸ்பெயின் உலகக்கோப்பை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/6jg71tci/winning.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Spain World Cup Victory Celebration]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/6jg71tci/winning.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் தேசிய அணி, தங்களது தாய்நாட்டிற்குத் திரும்பியதை அடுத்து, தலைநகர் மேட்ரிட்டில் வரலாறு காணாத வகையில் பிரம்மாண்ட வெற்றி ஊர்வலமும், அரச குடும்பத்து வரவேற்பும் அளிக்கப்பட்டது.</p><p>அமெரிக்காவில் இருந்து மேட்ரிட் பராகாஸ் விமான நிலையம் வந்தடைந்த ஸ்பெயின் வீரர்களை, அந்நாட்டு மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.</p><h2><strong>அரச வரவேற்பு:</strong></h2><p>அரசர் ஆறாம் பெலிப்பே மற்றும் அரச குடும்பத்தினர் வீரர்களை நேரில் சந்தித்துப் பாராட்டினர். "இது ஒரு வீர காவிய வெற்றி; உங்கள் திறமையையும் உறுதியையும் கண்டு ஒட்டுமொத்த ஸ்பெயினும் பெருமிதம் கொள்கிறது" என்று அரசர் புகழாரம் சூட்டினார்.</p><h2><strong>பிரதமர் வாழ்த்து:</strong> </h2><p>அதன் பின்னர், மொன்க்லோவா அரண்மனையில் பிரதமர் பெட்ரோ சான்செஸ் வீரர்களைச் சந்தித்து வாழ்த்தினார். "உங்கள் விளையாட்டுத் திறனுக்கும், உழைப்பிற்கும், வெற்றிக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்" எனத் தெரிவித்தார்.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/42een4ww/foot-baal.jpg" /></figure><h2><strong>திறந்தவெளி பேருந்தில் பிரம்மாண்ட பேரணி:</strong></h2><p>அரசு மரியாதைகளுக்குப் பிறகு, ஸ்பெயின் அணி வீரர்கள் திறந்தவெளிப் பேருந்தில் மேட்ரிட்டின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்றனர். சுமார் '18 லட்சம் முதல் 20 லட்சம் ரசிகர்கள்' சிவப்பும் மஞ்சளுமான தேசியக் கொடிகளை ஏந்தி, வீதிகளிலும், கட்டிடங்களின் பால்கனிகளிலும் திரண்டு நின்று வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.</p><h2><strong>கொண்டாட்டத்தின் உச்சம்:</strong></h2><p>கேப்டன் ரோட்ரி, இளம் நட்சத்திரம் லாமின் யமால், மார்க் குக்குரெல்லா உள்ளிட்ட வீரர்கள் உலகக்கோப்பையைக் கையில் ஏந்தி, "Somos Campeones" (நாம் சாம்பியன்கள்) என்ற ஆடைகளை அணிந்து ரசிகர்களுடன் பாடி ஆட்டமிட்டனர்.</p><h2><strong>சிபெலெஸ் சதுக்கத்தில் கலைநிகழ்ச்சிகள்:</strong></h2><p>பேரணியின் இறுதி இலக்கான புகழ்பெற்ற 'சிபெலெஸ் சதுக்கத்தை' அடைந்தபோது, அங்கு சுமார் 1,20,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்திருந்தனர். ஐதானா, அனா மெனா மற்றும் லோலா இண்டிகோ ஆகிய முன்னணி இசைக்கலைஞர்களின் நேரலை கலைநிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டங்கள் களைகட்டின. </p><p>பயிற்சியாளர் லூயிஸ் டி லா ஃபுயென்டே பேசுகையில்: "இத்தகைய உணர்ச்சிப்பூர்வமான மற்றும் அர்ப்பணிப்புமிக்க ரசிகர்களைக் கொண்ட நாட்டிற்காகப் பிரதிநிதித்துவப்படுத்தியது எங்களுக்குப் பெருமை அளிக்கிறது" என்றார்.</p><h2><strong>வரலாற்றுச் சாதனை: </strong>2வது உலகக்கோப்பை:</h2><p>2010-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் உலகக்கோப்பையை வென்ற ஸ்பெயின், 16 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது 2வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.</p><h2><strong>இரட்டைச் சாதனை:</strong></h2><p>2023-ல் ஸ்பெயின் பெண்கள் அணி உலகக்கோப்பையை வென்ற நிலையில், தற்போது ஆண்கள் அணியும் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம், ஆண்கள் மற்றும் பெண்கள் உலகக்கோப்பை இரண்டையும் ஒரே நேரத்தில் கைவசம் வைத்துள்ள முதல் நாடு என்ற வரலாற்றுச் சாதனையை ஸ்பெயின் படைத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சிக்கிம்: நிலச்சரிவால் சுரங்கப்பாதைக்குள் சிக்கிய 7 பேர் பலி.. ஏனையோரை மீட்கும் பணி தீவிரம் </title><link>https://www.maalaimalar.com/news/national/sikkim-hydropower-tunnel-tragedy-7-workers-dead-after-landslide-and-methane-leak</link><comments>https://www.maalaimalar.com/news/national/sikkim-hydropower-tunnel-tragedy-7-workers-dead-after-landslide-and-methane-leak#comments</comments><guid isPermaLink="false">af1dac4e-58bf-49b2-8866-78ae73722a28</guid><pubDate>Tue, 21 Jul 2026 05:34:59 +0000</pubDate><atom:updated>2026-07-21T05:34:59.236Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>landslide,Tunnel,sikkim,நிலச்சரிவு,சுரங்கப்பாதை,methane gas leak,மீத்தேன் வாயு கசிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/kpve6f1d/tn-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Sikkim tragedy]]></media:title><media:description type="html"><![CDATA[ Sikkim tragedy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/kpve6f1d/tn-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சிக்கிமில் நீர்மின் திட்ட சுரங்கப்பாதையில் திடீர் <a href="https://www.maalaimalar.com/news/national/sikkim-tunnel-landslide-rescue-27-workers-trapped-methane-leak-hampers-operations">நிலச்சரிவு </a>காரணமாக உள்ளே சிக்கிய தொழிலாளர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். </p><h2>நிலச்சரிவு</h2><p>சிக்கிம் மாநிலம் நாம்ச்சி மாவட்டத்தில் நேற்று மதியம் Teesta Stage-VI நீர்மின் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் சாமர்துங் சுரங்கப்பாதைக்கு வெளியே திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.</p><p>கனமழையினால் மலைச்சரிவில் இருந்து பெருமளவில் பாறைகளும் மண்ணும் சரிந்து விழுந்ததில், சுரங்கப்பாதையின் நுழைவு வாயில் முற்றிலும் அடைபட்டது.</p><p>நிலச்சரிவு ஏற்பட்ட போது சுரங்கத்தின் உள்ளே பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 27 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர்.</p><p>நிலச்சரிவைத் தொடர்ந்து சுரங்கப்பாதைக்குள் மீத்தேன் வாயு கசியத் தொடங்கியுள்ளது.</p><p>நிலச்சரிவினால் ஏற்பட்ட பாறை முறிவுகள் மற்றும் நிலத்தடி அடுக்குகளின் அதிர்வு காரணமாகவே இந்த இயற்கை வாயு கசியத் தொடங்கியுள்ளதாக நம்பப்படுகிறது.</p><p>விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தேசிய பேரிடர் மீட்புப் படை மாநில பேரிடர் மீட்புப் படை மாவட்ட காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.</p><p>மீட்புப் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்ட போதிலும், சுரங்கப்பாதையின் உட்பகுதியில் இருந்து ஆபத்தான மீத்தேன் வாயு கசியத் தொடங்கியது மீட்புக் குழுவினருக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.</p><p>வாயு கசிவு காரணமாக உள்ளே செல்ல முயன்ற சில மீட்புப் படை வீரர்களுக்கு தலைச்சுற்றல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.</p><p>வாயு கசிவை சமாளிக்கும் வகையில், அதிநவீன வாயு கவசங்கள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் கூடிய சிறப்புப் பயிற்சி பெற்ற மீட்புக் குழுவினர் பக்கத்து மாநிலமான மேற்கு வங்கத்தில் இருந்து வரவழைக்கப்பட்டனர்.</p><p>மீட்புப் படையினர் சிறப்பு மாஸ்க்குகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் நவீன துளையிடும் கருவிகளின் உதவியுடன் அடைபட்டுள்ள நுழைவு வாயிலைத் தோண்டி உள்ளே செல்ல தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>சுரங்கப்பாதையின் குறுகிய அமைப்பு, புகை மற்றும் வாயு கசிவால் ஏற்பட்டுள்ள மோசமான பார்வைத்திறன்  ஆகியவை மீட்புப் பணியை மிகவும் கடினமாக்கியுள்ளன.</p><p>சுரங்கத்தில் இருந்து வெளியே அழைத்துவரப்படும் தொழிலாளர்களுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ்களும், மருத்துவக் குழுக்களும் சம்பவ இடத்திலேயே தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.</p><p> உள்ளே சிக்கிய தொழிலாளர்களில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது. </p><h2>மாவட்ட ஆட்சியர்</h2><p>மாவட்ட ஆட்சியர் அனுபமா தாம்லிங் இது குறித்து தெரிவிக்கையில், </p><p>'சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களின் துல்லியமான எண்ணிக்கை இன்னமும் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும், அது தற்போதைய மதிப்பீட்டை விட அதிகமாகவோ குறைவாகவோ இருக்கலாம்.</p><p>தற்போது உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களைப் பத்திரமாக மீட்பதற்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.</p><p>மீட்புப் பணிகள் முடிந்த பிறகு, இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும்' என்று தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>அம்மன் வேடத்தில் திரிஷா: ஆடித் திருவிழா பேனரால் வெடித்த சர்ச்சை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/trisha-in-goddess-attire-controversy-erupts-over-aadi-festival-banner</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/trisha-in-goddess-attire-controversy-erupts-over-aadi-festival-banner#comments</comments><guid isPermaLink="false">d6ddd858-cd47-4045-a1f7-e8bd096df244</guid><pubDate>Tue, 21 Jul 2026 05:24:54 +0000</pubDate><atom:updated>2026-07-21T05:24:54.454Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Aadi Festival,trisha,திரிஷா,ஆடி திருவிழா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/82c60g32/trisha.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சர்ச்சையான கோவில் திருவிழா பேனர்]]></media:title><media:description type="html"><![CDATA[ சர்ச்சையான கோவில் திருவிழா பேனர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/82c60g32/trisha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. 20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் உள்ள நடிகை திரிஷா சமீப காலமாக சர்ச்சையில் சிக்கி வருகிறார். அவர் ஏதாவது ஒரு போஸ்ட் போட்டால்கூட அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பேசு பொருளாகி வருகிறது. இந்த நிலையில், நடிகை திரிஷாவை அம்மன் போல சித்தரித்து ரசிகர்கள் வைத்த போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.</aside><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/ugrz7znu/trisha01.jpg" /></figure><h2><strong>அம்மன் வேடத்தில் திரிஷா</strong></h2><p>ஆடி மாதம் தொடங்கினால் அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் களைகட்டும். திருவிழா தொடர்பாக வித்தியாசமாக வைக்கப்படும் பேனர்கள் வைரலாகும். அந்த வகையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் பெரிய மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழாவையொட்டி ஆத்தூர் பயணியர் மாளிகை பகுதியில் பேனர்கள் வைக்கப்பட்டன. அதில் ஒரு பேனரில் தமிழக முதலமைச்சர் விஜய்யின் மிகப்பெரிய படமும், அதற்கு பின்னால், ராவணன் தலை இருப்பது போன்றும்... அதற்கு கீழே நடிகை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE">திரிஷா</a> அம்மன் வேடத்தில் இருப்பது போன்ற படம் அச்சிடப்பட்டிருந்தது.</p> <p>இந்த பேனரின் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. இதனை பார்த்த நெட்டிசன்கள், கோவில் திருவிழாவில் நடிகையின் போட்டோவை அம்மன் வேடத்தில் வைத்து பேனர் அடிக்க வேண்டிய அவசியம் என்ன? கடவுள் திருவிழாவிற்கும் சினிமா பிரபலங்களுக்கும் சம்பந்தமே இல்லாத விஷயத்தை ஏன் இப்படி செய்கிறார்கள்? என்று  தங்களது கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். </p><h2><strong>2 பேர் மீது வழக்குப்பதிவு</strong></h2><p>மேலும் பேனர்கள் வைப்பது தொடர்பாக நீதிமன்றங்களும் அரசும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தும் பேனர்கள் எப்படி வைக்கப்படுகின்றன? கோவில் திருவிழா என்ற பெயரில் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் அச்சிடிட்டு வைக்கலாமா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து இரவோடு இரவாக பேனரில் இருந்து நடிகை திரிஷா புகைப்படம் மாற்றப்பட்டது. திரிஷா படம் இருந்த இடத்தில் வேறு ஒரு பெண் அம்மன் வேடத்தில் இருப்பது போன்ற படத்தை ஒட்டி வைத்தனர்.</p><p>இதற்கிடையே, ஆத்தூர் பயணியர் மாளிகை முன்பு அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வைக்கப்பட்ட பேனர்களை போலீசார் அகற்றினர். இதுகுறித்த புகாரின்பேரில் ஆத்தூர் டவுன் போலீசார் கடைவீதியை சேர்ந்த சந்துரு, தலைவாசல் பகுதியை சேர்ந்த கோகுல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>இச்சம்பவம் கோவில் திருவிழாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம் - அமைச்சர் ராஜ்மோகன் மரியாதை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nadigar-thilagam-sivaji-ganesan-memorial-day-minister-rajmohan-pays-respect</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nadigar-thilagam-sivaji-ganesan-memorial-day-minister-rajmohan-pays-respect#comments</comments><guid isPermaLink="false">9f91e859-c0ba-46cc-87d6-9e9266d1249a</guid><pubDate>Tue, 21 Jul 2026 05:19:55 +0000</pubDate><atom:updated>2026-07-21T05:19:55.684Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sivaji Ganesan,சிவாஜி கணேசன்,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/lwskqxiy/sivaji.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Rajmohan respect nadigar thilagam sivaji ganesan
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/lwskqxiy/sivaji.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அடையாறில் உள்ள நினைவு மண்டபத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலைக்கு அமைச்சர் ராஜ்மோகன்  மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.</p><h2>நடிகர் திலகம் சிவாஜி கணேசன்</h2><p>'நடிகர் திலகம்' பத்ம பூஷன் சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு நாள் ஆண்டுதோறும் ஜூலை 21 அன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழ் திரையுலகின் ஈடு இணையற்ற நடிப்பு ஆளுமையான திகழ்ந்த அவர், 2001-ம் ஆண்டு ஜூலை 21-ந்தேதி அன்று காலமானார். அவரது நினைவைப் போற்றும் வகையில் சென்னை அடையாறில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.</p><h2>மணிமண்டபம்</h2><p>நடிகர் சிவாஜி கணேசனின் திருவுருவச் சிலையுடன் தமிழக அரசால் கட்டப்பட்ட இந்த நினைவகத்தில அவரது அரிய புகைப்படங்கள் மற்றும் திரைப்படங்களின் தொகுப்புகளைக் கொண்டுள்ளது. அவரது நினைவு நாளன்று ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் இந்த மணிமண்டபத்திற்குச் சென்று மரியாதை செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.</p> <h2>அமைச்சர் ராஜ்மோகன் மரியாதை</h2><p>இந்நிலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 25-வது ஆண்டு நினைவு நாளான இன்று தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.</p><p>அடையாறில் உள்ள நினைவு மண்டபத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலைக்கு பள்ளிக்கல்வித்துறை <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D">அமைச்சர் ராஜ்மோகன்</a> திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து சிவாஜி குடும்பத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.</p> ]]></content:encoded></item><item><title>video-’அயர்ன் மேன்’ ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்-இணையத்தை ஆக்கிரமித்த ’அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ டிரெய்லர்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/iron-man-returns-as-doctor-doom-in-viral-avengers-doomsday-trailer</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/iron-man-returns-as-doctor-doom-in-viral-avengers-doomsday-trailer#comments</comments><guid isPermaLink="false">7cbeb8a8-05d9-4cf6-8901-4a3fa198464d</guid><pubDate>Tue, 21 Jul 2026 05:15:43 +0000</pubDate><atom:updated>2026-07-21T05:15:43.745Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Iron Man,அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்,Avengers End Game,Avengers Doomsday,அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே,அயர்ன் மேன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/nte0mtd7/AVANGERS.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Avengers: Doomsday]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/nte0mtd7/AVANGERS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p> ’அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. டூம்ஸ்டே டிரெய்லரில் அயர்ன் மேன் கதாபாத்திரம் கம்பேக் கொடுத்துள்ளது ரசிகர்களுக்கு மிகப்பெரும் சர்ப்ரைஸாக அமைந்துள்ளது. கடைசியாக கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படத்தில் அயர்ன் மேன் கதாபாத்திரத்தில் நடித்த ராபர்ட் டவுனி ஜூனியர் உயிரிழப்பது போல காட்டப்பட்டிருக்கும்.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/bWDGKRdiVZc"></iframe></figure><p>ஆனால், இந்த டிரெய்லர் மூலம் மீண்டும் மார்வெல் உலகில் நுழைந்துள்ளார். அதில் தான் ரசிகர்களுக்கு மிகப்பெரும் ட்விஸ்ட் காத்திருக்கிறது. இதுவரை டோனி ஸ்டார்க்காக கலக்கி வந்த அயர்ன் மேன் டாக்டர் டூம் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்துள்ளார். ’அயர்ன் மேன்’ கதாபாத்திரம் குறித்து இயக்குநர் ஜோ ரூஸோ கூறுகையில், ”அவர் சாதாரண வில்லன் கிடையாது. மார்வல் யுனிவர்சில் மிகக் கடினமான வில்லன்களின் ஒருவர்” என்றார். </p><p>மார்வெல் யுனிவர்சில் அயர்ன் மேன் முக்கிய சூப்பர் ஹீரோவாக வலம் வந்த நிலையில், டூம்ஸ்டே படத்தில் கொடூர வில்லனாக நடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் நடிகர் கிறிஸ்டியன் எவான்ஸ் மீண்டும் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடித்துள்ளது ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக உள்ளது. </p><p>மேலும், ‘ஃபெண்டாஸ்டிக் ஃபோர்’ மற்றும் ‘தண்டர்போல்ட்ஸ்’ பட கதாபாத்திரங்களும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது. அதேபோல், ‘தோர்’, ‘எக்ஸ் மேன்’ போன்ற கேரக்டர்களும் இப்படத்தில் முக்கிய பங்காற்றும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதுதவிர ’ஸ்பைடர் மேன்’ டூம்ஸ்டே படத்தில் இடம்பெறுவாரா என்பது ரசிகர்களின் கேள்விக்குறியாக உள்ளது. டிரெய்லரில் அவரது கதாபாத்திரம் இடம்பெறாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக உள்ளது. </p><p>கடைசியாக ’அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான நிலையில், வரும் செப்டம்பர் மாதம் மீண்டும் ரீரிலீஸ் செய்யப்பட்ட உள்ளது. அந்த படத்தின் இறுதியில் டூம்ஸ் டே படத்திற்கு முன்னோட்டமாக 7 நிமிட காட்சிகள் இடம்பெறவுள்ளது.’அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம் வரும் டிசம்பர் 18ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. </p><p>ரூஸோ பிரதர்ஸ் இயக்கியுள்ள அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தில் கிறிஸ் ஹெம்ஸ்வோர்த், ஆண்டனி மெக்கி, ராபர்ட் டவுனி ஜூனியர், வனிஸா கிர்பி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முன்னதாக ரூஸோ பிரதர்ஸ் அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார், எண்ட்கேம் ஆகிய படங்களை இயக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>விராட் கோலியின் ஒரே ஒரு போன் கால்: ஜப்பான் ஓபன் வெற்றியுடன் சாதனைப் பாதைக்குத் திரும்பிய பி.வி.சிந்து!</title><link>https://www.maalaimalar.com/sports/single-call-from-virat-kohli-pv-sindhu-back-on-record-breaking-path-with-japan-open-title</link><comments>https://www.maalaimalar.com/sports/single-call-from-virat-kohli-pv-sindhu-back-on-record-breaking-path-with-japan-open-title#comments</comments><guid isPermaLink="false">5ff3c63c-715f-4246-a996-551ddc7e1a26</guid><pubDate>Tue, 21 Jul 2026 04:57:05 +0000</pubDate><atom:updated>2026-07-21T04:57:05.634Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Virat Kohli,விராட் கோலி,pv sindhu,பேட்மிண்டன்,பி.வி.சிந்து,badminton</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/99lv5gcl/virat.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ virat-pv.sindhu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/99lv5gcl/virat.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் நட்சத்திரமான பி.வி. சிந்த ஜப்பான் ஓபன் சூப்பர் 750  தொடரின் இறுதிப்போட்டியில் ஜப்பானின் அகானே யமகுச்சியை வீழ்த்தி தனது முதல் சூப்பர் 750 பட்டத்தைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.</p><p>கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர் தோல்விகள், எலும்பு முறிவு  காயம் மற்றும் ஃபார்ம் இழப்பு போன்ற கடுமையான சவால்களைச் சந்தித்து வந்த பி.வி.சிந்துவின் இந்த பிரமாண்ட மீட்சிக்குக் காரணம், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியுடன் அவர் பேசிய ஒரு தொலைபேசி உரையாடல்தான் என்ற சுவாரசியமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.</p><h2><strong>சாம்பியன் பட்டம்:</strong></h2><p>இறுதிப்போட்டியில் ஜப்பானின் அகானே யமகுச்சியை 21-17, 21-17 என்ற நேர் செட்களில் வீழ்த்தி பி.வி. சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். 2024 சையத் மோடி சர்வதேச தொடருக்குப் பிறகு பி.வி.சிந்து கைப்பற்றும் முதல் முக்கியச் சர்வதேச பட்டம் இதுவாகும். தனது பேட்மிண்டன் வாழ்க்கையில் சிந்து வெல்லும் முதல் 'சூப்பர் 750' பட்டமும் இதுவே.</p><h2><strong>விராட் கோலியுடன் பேசிய தொலைபேசி உரையாடல்:</strong></h2><p>பாரிஸ் ஒலிம்பிக் தொடருக்குப் பிறகு ஃபார்ம் இல்லாமல் தவித்த பி.வி. சிந்து, மன அழுத்தத்தில் இருந்தபோது விளையாட்டு உலகத்தில் உச்சத்தைத் தொட்டு, பல விமர்சனங்களை எதிர்கொண்டு மீண்டும் மீண்டு வந்த விராட் கோலியைத் தொடர்புகொண்டு ஆலோசனைக் கேட்டுள்ளார்.</p><p>"நான் பட்டங்களை வெல்வதற்காக மட்டுமே என் வாழ்க்கையைத் தொடரவில்லை. விளையாட்டின் மீதான இயல்பான மகிழ்ச்சியைக் கண்டறியவே விரும்பினேன். மனதளவில் மிகவும் சோர்வடைந்திருந்த தருணத்தில் விராட் கோலியுடன் உரையாடினேன். உச்சக்கட்ட அழுத்தங்களையும், விமர்சனங்களையும் ஒரு விளையாட்டு வீரராக எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து அவர் அளித்த ஆலோசனைகளும் பார்வையும் தான் எனது மனநிலையை முற்றிலும் மாற்றியது".</p><p>"நாங்கள் என்ன பேசினோம் என்பது எப்போதும் எங்களுக்குள்ளேயே இருக்கும். ஆனால், எனக்கு ஒரு வழிகாட்டுதல் தேவைப்பட்ட அந்தத் தருணத்தில் அவர் எனக்கு ஆதரவாக நின்றதற்கு நான் என்றும் நன்றியுள்ளவளாக இருப்பேன். அவர் அதிக வார்த்தைகள் பேசவில்லை; ஆனால், அவர் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் எனக்கும் தத்தாவுக்கும் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. </p><p>சில உரையாடல்கள் நாம் உலகத்தைப் பார்க்கும் பார்வையையே முற்றிலும் மாற்றிவிடும்; எங்களுக்கு அந்த உரையாடல் அப்படிப்பட்டதுதான்." நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இந்த உரையாடலின் போது சிந்துவின் கணவர் தத்தாவும் உடனிருந்தார்.</p><h2><strong>காயத்தில் இருந்து மீண்ட கதை:</strong></h2><p>கால் எலும்பு முறிவு காயத்திலிருந்து மீண்டு வருவது சிந்துவுக்குப் பெரும் சவாலாக இருந்தது.மேலும், பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆரம்பக் கட்டத்திலேயே வெளியேறியது சிந்துவுக்குப் பலத்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. ஆனால், கடுமையான உடற்பயிற்சிகள், முறையான வழிகாட்டுதல் மற்றும் சரியான மனநிலையுடன் களம் கண்ட சிந்து, தற்போது ஜப்பான் ஓபன் தொடரைக் கைப்பற்றி தான் இன்னும் ஃபார்மில் தான் இருக்கிறேன் என்பதை உலகிற்கு நிரூபித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நெல் கொள்முதலில் தொடரும் கையூட்டு: குவிண்டாலுக்கு ரூ.325 பறிப்பதைத் தடுக்க அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-measures-to-prevent-the-deduction-of-rs-325-per-quintal</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-measures-to-prevent-the-deduction-of-rs-325-per-quintal#comments</comments><guid isPermaLink="false">3d3bc2a1-17f0-450c-8f98-a70fff36d1f4</guid><pubDate>Tue, 21 Jul 2026 04:56:15 +0000</pubDate><atom:updated>2026-07-21T04:56:15.981Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,நெல் கொள்முதல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/zxmts0af/Anbumaniramadoss01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/zxmts0af/Anbumaniramadoss01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>இனியும் தாமதிக்காமல் கொள்முதல் நிலைய சுரண்டல்களை தடுத்து, உழவர்களிடமிருந்து கையூட்டு இல்லாமல் உடனுக்குடன் நெல் வாங்கப்படுவதை அரசு உறுதி செய்யவேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.</aside><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>கவலை</strong></h2><p>தமிழ்நாடு முழுவதும், குறிப்பாக காவிரி பாசன மாவட்டங்களில் கோடை பருவ அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உழவர்களிடமிருந்து குவிண்டாலுக்கு ரூ.325 வரை கட்டாயமாகக் கையூட்டு பறிக்கப்படும் கொடுமை இன்னும் தொடர்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. உணவு அமைச்சர் மேற்கொண்ட கள ஆய்விலேயே கையூட்டு வசூலிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதைத் தடுக்க அரசுத் தரப்பில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படாதது கவலையளிக்கிறது.</p><p>காவிரி பாசன மாவட்டங்களில் 1.60 லட்சம் ஏக்கரில் கோடை பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. விளைந்த நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணி தீவிரமடைந்திருக்கும் நிலையில், அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்பனை செய்வது தான் உழவர்களுக்கு பெரும் துயரமாக மாறியிருக்கிறது. ஒருபுறம் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடப்பதால், உழவர்கள் தங்களில் நெல்லை விற்பனை செய்வதற்கு  ஒரு வாரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இன்னொருபுறம் கொள்முதல் நிலையங்களில் ஊழல் தொடர்கிறது.</p><h2><strong>முறைகேடுகள்</strong></h2><p>40 கிலோ எடை கொண்ட <a href="https://www.maalaimalar.com/topic/நெல்-கொள்முதல்">நெல் மூட்டையை</a> எடை வைத்து கொள்முதல் செய்வதற்கு கையூட்டாக ரூ.40 முதல் ரூ.60 வரை உழவர்கள் தர வேண்டியுள்ளது. இது தவிர ஒவ்வொரு மூட்டைக்கும் நிர்ணயிக்கப்பட்ட எடையான 40 கிலோவுக்கு பதிலாக கூடுதலாக எடை வைத்து கொள்முதல் செய்வதன் வாயிலாகவும், பதர்களைத் தூற்றுவதாகக் கூறி ஒன்றரை கிலோ வரையிலான நெல்லை ஒதுக்குவதன் வாயிலாகவும் 3 கிலோ நெல் கூடுதலாக வாங்கப்படுவதாக உழவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த வகையில் மட்டும் ஒரு குவிண்டாலுக்கு ரொக்கமாக ரூ.150, நெல்லாக ரூ.175 என மொத்தம்  ரூ.325 கையூட்டாக பறிக்கப்படுகிறது. தனியார் வணிகர்களை விட அரசு  கொள்முதல் நிலையங்களில் குவிண்டாலுக்கு அதிகபட்சமாக ரூ.500 முதல் ரூ.600 வரை கூடுதல் விலை கிடைக்கிறது என்பதால் தான் அரசு கொள்முதல் நிலையங்களைத் தேடி உழவர்கள் வருகிறார்கள். அதற்காக அவர்களை வாரக் கணக்கில் காத்திருக்க வைப்பதும், குவிண்டாலுக்கு ரூ.325 வரை கையூட்டாக பறித்துக் கொள்வதும் பெரும் அநீதி. இதே நிலை தொடர்ந்தால் உழவர்கள் தனியார் வணிகர்களிடம் நெல்லை விற்கத் தயாராகி விடுவார்கள்.அப்படி  ஒரு நிலை ஏற்பட்டால் நியாயவிலைக் கடைகளில் வழங்குவதற்கு அரிசியே கிடைக்காத நிலை உருவாகி விடும்.</p><p>காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதலில் முறைகேடுகள் நடப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை  தமிழக அரசு மறுக்க முடியாது. சில நாள்களுக்கு முன் கடலூர் மாவட்டத்தில் இது குறித்து ஆய்வு செய்த உணவுத் துறை அமைச்சர், நெல் விற்பனை செய்த உழவர் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுகிறார். கொள்முதலுக்காக கையூட்டு ஏதேனும் கொடுத்தீர்களா? என்று அமைச்சர் கேட்டபோது, எதிர்முனையில் இருந்த உழவர் முட்டைக்கு ரூ.50 கையூட்டு கொடுத்ததாக தெரிவிக்கிறார். இதைத் தொடர்ந்து உழவரிடம் கையூட்டு வாங்கிய கொள்முதல் நிலைய எழுத்தரை பணியிடை நீக்கம் செய்ய அமைச்சர் ஆணை பிறப்பிக்கிறார். இவற்றைப் பார்க்கும் போது நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழல் நடப்பதைத் தடுக்க வேண்டும் என ஆட்சியாளர்கள் விரும்புவதை புரிந்து கொள்ள முடிகிறது. அது வரவேற்கத்தக்கது. ஆனால், கொள்முதல் நிலைய  ஊழலுக்கான காரணங்களை கண்டுபிடித்து சரி செய்யாமல் அங்கொன்றும், இங்கொன்றுமாக கடைநிலை ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்வதால் ஊழல் ஒழியப்போவதில்லை; உழவர்களும் பயனடையப் போவதில்லை.</p><h2><strong>தமிழக அரசு</strong></h2><p>நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உழவர்களிடமிருந்து கையூட்டு வழங்கப்படுவதற்கு கொள்முதல் நிலையப் பணியாளர்கள் தரப்பில் சில நியாயங்கள் கூறப்படுகின்றன.  நெல் கொள்முதல் நிலையங்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்படவில்லை; பணியாளர்களுக்கு போதிய ஊதியமும் வழங்கப்படுவதில்லை. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின்  தவிர்க்க முடியாத செலவுகளுக்காக நிரந்தர முன்வைப்புத் தொகையாக ஒவ்வொரு நிலையத்திற்கும் ரூ.20 ஆயிரம் வழங்கப்பட வேண்டும். ஆனால், அந்தத் தொகை முறையாக வழங்கப் படவில்லை. அதே போல், நெல் எடை போடும் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு ரூ.10 மட்டுமே கூலியாக வழங்கப்படுவது போதுமானது அல்ல என்றெல்லாம் கொள்முதல் நிலையப் பணியாளர்கள் கூறுவதை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. இதை சரி செய்தால் மட்டும் தான் கொள்முதல் நிலைய ஊழலை ஒழிக்க முடியும்.</p><p>நெல் கொள்முதல் நிலைய கையூட்டு கலாச்சாரம் புதிதாக தோன்றியதில்லை. பல ஆண்டுகளாகவே இந்த சுரண்டல்  தொடர்கிறது. இதை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே கடந்த தேர்தலில் உழவர்கள் வாக்களித்தனர். அவர்களின் விருப்பத்தை அரசு நிறைவேற்ற வேண்டும். இனியும் தாமதிக்காமல் கொள்முதல் நிலைய சுரண்டல்களை தடுத்து, உழவர்களிடமிருந்து கையூட்டு இல்லாமல் உடனுக்குடன் நெல் வாங்கப்படுவதை அரசு உறுதி செய்யவேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>சிந்து நதிநீர் ஒப்பந்தம் மீண்டும் அமலுக்கு வர வாய்ப்பே இல்லை - பாகிஸ்தானுக்கு இந்தியா மெசேஜ் </title><link>https://www.maalaimalar.com/news/world/indus-waters-treaty-india-rules-out-return-to-status-quo-links-future-to-pakistans-anti-terror-action</link><comments>https://www.maalaimalar.com/news/world/indus-waters-treaty-india-rules-out-return-to-status-quo-links-future-to-pakistans-anti-terror-action#comments</comments><guid isPermaLink="false">afe7edbd-aafb-4af6-8c9c-bd83d8bbe490</guid><pubDate>Tue, 21 Jul 2026 04:53:42 +0000</pubDate><atom:updated>2026-07-21T04:53:42.040Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Pakistan,பஹல்காம் தாக்குதல்,Pahalgam attack,indus waters treaty,சிந்து நதிநீர் ஒப்பந்தம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/lvtxmu71/tn-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சிந்து நதிநீர் ஒப்பந்தம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சிந்து நதிநீர் ஒப்பந்தம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/lvtxmu71/tn-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜம்மு காஷ்மீரின் பஹ்லகாமில் கடந்த ஆண்டு ஏப்ரலில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் உடன் சிந்து மற்றும் அதன் கிளை நதிகளின் நீரை பகிரும் <a href="https://www.maalaimalar.com/news/national/what-is-the-indus-water-treaty-770109">சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை</a> இந்தியா தற்காலிகமாக நிறுத்தியது.</p><p>தற்போதுவரை இந்த ஒப்பந்தம் முடக்கத்திலேயே உள்ளது. மேலும் சிந்துவின் துணை நதியான செனாபில் அணை கட்ட இந்தியா முனைப்பு காட்டி வருகிறது. இந்தியாவில் இருந்து செல்லும் நீரை நம்பி பாகிஸ்தானின் விவசாயம் இருப்பதால் இந்த ஒப்பந்த முறிவை பாகிஸ்தான் கடுமையாக எதிர்த்து வருகிறது. </p><p>இதுதொடர்பாக இந்தியா மீது போர் தொடுக்கப்படும் போன்ற மிரட்டல்களையும் அந்நாட்டு அமைச்சர்கள் உள்ளிட்ட உயர் பொறுப்புகளில் உள்ளவர்கள் கூறி வருகின்றனர். மேலும் சர்வதேச அரங்கிலும் இந்த விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்பியுள்ளது. </p><p>சர்வதேச மேற்பார்வையில் 1960 இல் போடப்பட்ட  இந்த ஒப்பந்தத்தில் இருந்து தன்னிச்சையாக விலகும் அதிகாரம் இந்தியாவுக்கு இல்லை என பாகிஸ்தான் வாதிடுகிறது. </p> <h2>பாகிஸ்தானுக்கு இந்தியா திட்டவட்டமான பதில்</h2><p>இந்த சூழலில் இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு இந்தியா திட்டவட்டமான பதில் ஒன்றை தெரிவித்துள்ளது.</p><p>அதாவது இந்த ஒப்பந்தம் அதன் தற்போதைய வடிவில் மீண்டும் அமலுக்கு வர வாய்ப்பே இல்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p>பயங்கரவாதத்தை ஒழிப்பதில் பாகிஸ்தான் எவ்வித நம்பிக்கையான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.</p><p>ஐக்கிய நாடுகள் சபையால் தடைசெய்யப்பட்ட நபர்களும் அமைப்புகளும் இன்னமும் பாகிஸ்தானில் சுதந்திரமாக செயல்பட்டு வருகின்றனர்</p><p>பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் எடுக்கும் நடவடிக்கைகளைப் பொறுத்தே இந்த ஒப்பந்தத்தின் எதிர்காலம் அமையும்.</p><p>தற்போதைக்கு இந்த ஒப்பந்தத்தில் இருந்து முற்றிலுமாக வெளியேறும் எண்ணம் இந்தியாவுக்கு இல்லை என்றாலும், நாட்டின் நலன்களுக்கு எதிராக இருக்கும் எந்தவொரு சர்வதேச ஒப்பந்தத்தையும் ரத்து செய்யும் உரிமை ஒரு இறையாண்மை கொண்ட நாடாக இந்தியாவுக்கு உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <h2>குற்றச்சாட்டு</h2><p>ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்டதால் தான் பாகிஸ்தானில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டது என்ற குற்றச்சாட்டுகளை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.</p><p>பாகிஸ்தானில் போதிய நீர் சேமிப்புத் திறன் இல்லாதது, நீர் கசிவுகள் மற்றும் அந்நாட்டின் மாநிலங்களுக்கு இடையேயான நீர் தகராறுகளே அங்குள்ள நீர் பற்றாக்குறைக்கு உண்மையான காரணங்கள் என தெரிவித்துள்ளது.</p><p>ஜம்மு காஷ்மீரில் நீர்மின் திட்டங்களுக்குபாகிஸ்தான் தேவையில்லாமல் மீண்டும் மீண்டும் ஆட்சேபனை தெரிவித்து வளர்ச்சிப் பணிகளைத் தாமதப்படுத்துவதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>பட்ஜெட் விலையில் புது ரெட்மி ஸ்மார்ட்வாட்ச்கள்... லீக் ஆன முக்கிய தகவல்கள்!</title><link>https://www.maalaimalar.com/technology/newgadgets/redmi-watch-6-active-watch-6-lite-key-specifications-colours-price-revealed</link><comments>https://www.maalaimalar.com/technology/newgadgets/redmi-watch-6-active-watch-6-lite-key-specifications-colours-price-revealed#comments</comments><guid isPermaLink="false">c7037584-71f9-42d4-aea4-f31cc8b1a71f</guid><pubDate>Tue, 21 Jul 2026 04:41:00 +0000</pubDate><atom:updated>2026-07-21T04:41:00.000Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Redmi,ரெட்மி,Smartwatch,ஸ்மார்ட்வாட்ச்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/ikdufen9/rdmi-wtch-6.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரெட்மி வாட்ச் 6]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/ikdufen9/rdmi-wtch-6.png?w=280" width="280"></media:thumbnail><category>புதிய கேஜெட்டுகள் (New gadgets)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சில மாதங்களுக்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச சந்தைகளில் 'ரெட்மி வாட்ச் 6'-ஐ அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து, இப்போது 'ரெட்மி வாட்ச் 6 ஆக்டிவ்' மற்றும் 'ரெட்மி வாட்ச் 6 லைட்' ஆகிய மாடல்களை அறிமுகப்படுத்த சியோமி நிறுவனம் தயாராகி வருவதாக தெரிகிறது. </p><p>இவற்றின் வெளியீட்டுத் தேதி குறித்த விவரங்கள் இன்னும் தெரியவில்லை என்றாலும், பிரபல டிப்ஸ்டரான சுதன்ஷு மூலம் இந்த ஸ்மார்ட்வாட்ச்களின் முக்கிய சிறப்பம்சங்கள், ரெண்டர் படங்கள் மற்றும் ஐரோப்பாவில் எதிர்பார்க்கப்படும் விலை விவரங்கள் கசிந்துள்ளன.</p><p>'ரெட்மி வாட்ச் 6 ஆக்டிவ்' சற்று குறைவான விலையில் கிடைக்கும் மாடலாகவும், மேம்பட்ட அம்சங்களை விரும்பும் பயனர்களை குறிவைப்பதாகவும் அமைகிறது. அதே சமயம், 'வாட்ச் 6 லைட்' மாடலானது அடிப்படை அளவிலான உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி கண்காணிப்பு தேவைகளை மட்டும் எதிர்பார்க்கும் பயனர்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்று தெரிகிறது.</p><p><strong>சிறப்பம்சங்கள்:</strong></p><p>ரெட்மி வாட்ச் 6 மாடலில் உள்ள 2.07-இன்ச் ஸ்கிரீனுடன் ஒப்பிடும் போது, ரெட்மி வாட்ச் 6 ஆக்டிவ் மாடலில் சற்றே சிறிய அளவிலான 1.85-இன்ச் AMOLED ஸ்கிரீன் கொண்டிருக்கும். அதேபோல, 'வாட்ச் 6'-இன் அதிக ரெசல்யூஷன் 432×514 பிக்சல்களுடன் ஒப்பிடும் போது, 390×450 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட ரெட்மி வாட்ச் 6 ஆக்டிவ் ஸ்கிரீனின் பிரைட்னஸ் சற்று குறைவாகவே இருக்கும் என்று தெரிகிறது.</p><p>இதன் அம்சங்களை பொறுத்தவரை ரெட்மி வாட்ச் 6 ஆக்டிவ் மாடலில் ப்ளூடூத் 5.3 தொழில்நுட்பம் மூலம் ப்ளூடூத் காலிங் வசதி, கால் மற்றும் நோட்டிபிகேஷன் மற்றும் 140-க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும், இதில் பல்வேறு சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இதன் மூலம் இதயத் துடிப்பு கண்காணிப்பு, SpO₂, தூக்கத்தைக் கண்காணித்தல், கடந்த தூரம் மற்றும் எரிக்கப்பட்ட கலோரிகள் ஆகியவற்றை கண்காணித்தல், மற்றும் ஒரு நாளில் நடந்த படிகளை எண்ணும் 'பெடோமீட்டர்' போன்ற பல கண்காணிப்பு வசதிகள் இதில் கிடைக்கும். ரெட்மி வாட்ச் 6 ஆக்டிவ் மாடலில் 470mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம்.</p><p><strong>ரெட்மி வாட்ச் 6 லைட் அம்சங்கள்:</strong></p><p>இந்த மாடலில் 1.96 இன்ச் AMOLED ஸ்கிரீன், ரெட்மி வாட்ச் 6 ஆக்டிவ் மாடலில் உள்ளதை போன்ற இதயத் துடிப்பு கண்காணிப்பு, SpO₂, தூக்கத்தைக் கண்காணித்தல், கடந்த தூரம் மற்றும் எரிக்கப்பட்ட கலோரிகள் ஆகியவற்றை கண்காணித்தல், மற்றும் ஒரு நாளில் நடந்த படிகளை எண்ணும் 'பெடோமீட்டர்' போன்ற பல கண்காணிப்பு வசதிகள் இதிலும் வழங்கப்படலாம்.</p><p>இத்துடன் 9 ஆக்சிஸ் மோஷன் சென்சார், மல்டி சிஸ்டம் பொசிஷனிங் மற்றும் ஸ்பீக்கர் வழங்கப்படலாம். இந்த மாடலில் 470mAh பேட்டரி வழங்கப்படலாம். மற்றப்படி இரு மாடல்களும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். சாதனங்களுடன் இணைந்து இயங்கும் திறன் கொண்டிருக்கும்.</p><p>விலையை பொருத்தவரை ரெட்மி வாட்ச் 6 ஆக்டிவ் மாடல் 50 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 5500 என்றும் ரெட்மி வாட்ச் 6 லைட் மாடல் 60 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 6600 வரை நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY: நாளுக்கு நாள் ஏறும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-21-07-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-21-07-2026#comments</comments><guid isPermaLink="false">09a0f3aa-bfc4-4f11-9908-070d3eb4e781</guid><pubDate>Tue, 21 Jul 2026 04:19:10 +0000</pubDate><atom:updated>2026-07-21T04:19:10.695Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-04-29/8jne1dbu/Gold.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-04-29/8jne1dbu/Gold.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சர்வதேச பொருளாதார சூழல், போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. இதனால் தங்கத்தின் விலை கடந்த ஓரிரு நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக உள்ளது. </p><p>சென்னையில் நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,150-க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,05,200-க்கும் விற்பனையானது.</p><h2>தங்கம் விலை நிலவரம்</h2><p>இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு  ரூ.560 உயர்ந்து ரூ.1,05,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.13,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><h2>வெள்ளி விலை உயர்வு</h2><p>தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-</h2><p>20-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,200</p><p>19-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,080</p><p>18-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,080</p><p>17-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,800</p><p>16-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,200</p><h2>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-</h2><p>20-07-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>19-07-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>18-07-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>17-07-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>16-07-2026- ஒரு கிராம் ரூ.240</p> ]]></content:encoded></item><item><title>&apos;மீண்டும் என்னை தேசவிரோதி என்பார்கள்&apos;: மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த தில்ஜித் தோசாஞ்ச்!</title><link>https://www.maalaimalar.com/news/national/diljit-dosanjh-supports-student-protests-despite-anti-national-tag-fears</link><comments>https://www.maalaimalar.com/news/national/diljit-dosanjh-supports-student-protests-despite-anti-national-tag-fears#comments</comments><guid isPermaLink="false">15ea32a7-333e-40d6-8633-37e1ce6d07c1</guid><pubDate>Tue, 21 Jul 2026 04:19:02 +0000</pubDate><atom:updated>2026-07-21T04:19:02.016Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>delhi,டெல்லி,Cockroach Janta Party,சிஜேபி,diljit-dosanjh,தில்ஜித் தோசாஞ்ச்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/h51su07g/cjp.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Diljit Dosanjh ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/h51su07g/cjp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட்  தேர்வு முறைகேடுகள் மற்றும் கல்விச் சீர்திருத்தங்களை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நடத்தி வரும் சிஜேபி போராட்டத்திற்குப் பிரபல பஞ்சாபி பாடகரும் நடிகருமான தில்ஜித் தோசாஞ்ச் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். </p><p>மாணவர்கள் மீது காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையைக் கண்டித்துள்ள அவர், மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகக் குரல் கொடுப்பதால், தனக்கு மீண்டும் "தேசவிரோதி" என்ற முத்திரை குத்தப்படலாம் என்றும் கவலை தெரிவித்துள்ளார்.</p><h3>இதுகுறித்து, தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தில்ஜித் தோசாஞ்ச் கூறியுள்ளதாவது:</h3><p>"இன்று நடந்தது மிகவும் தவறானது. மாணவர்களை இப்படி நடத்தியிருக்கக் கூடாது. அவர்களின் கோரிக்கைகளை அரசு அதிகாரிகளும் நிர்வாகமும் கவனமாகக் கேட்டுப் பரிசீலிக்க வேண்டும். மக்களின் குரலே கடவுளின் குரல் ."மேலும், மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகப் பேசுவதால் மீண்டும் தன் மீது "தேசவிரோதி" என்ற விமர்சனங்கள் எழக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2><strong>போராட்டத்தின் பின்னனி:</strong></h2><p>நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முடிவுகளில் நடந்த முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், கல்வித் துறையில் உடனடி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். </p><p>டெல்லியில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறை பலப்பிரயோகம் செய்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தில்ஜித் தோசாஞ்ச் மட்டுமன்றி, பாலிவுட் பிரபலங்களான பூமி பெட்னேகர், ஹுமா குரேஷி உள்ளிட்ட பலரும் மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து, மாணவர்களின் போராட்டத்திற்குத் தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.</p><h2><strong>விவசாயிகள் போராட்டம்:</strong></h2><p>இதற்கு முன்னதாக, டெல்லியில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகள் போராட்டத்தின் போதும் தில்ஜித் தோசாஞ்ச் விவசாயிகளுக்கு ஆதரவாக நேரில் சென்று குரல் கொடுத்தார்.</p><p>விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததால், தாம் சந்தித்த கடுமையான விமர்சனங்கள், சமூக வலைதளத் தாக்குதல்கள் மற்றும் சட்ட ரீதியான சிக்கல்கள் குறித்து இப்போதும் வெளிப்படையாகப் பேச முடியாத நிலை உள்ளதாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தனது 83 ஆவது பிறந்தநாள் விழா ரத்து செய்யப்படுகிறது!- வைகோ </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vaiko-announced-my-83rd-birthday-celebration-is-being-cancelled</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vaiko-announced-my-83rd-birthday-celebration-is-being-cancelled#comments</comments><guid isPermaLink="false">7b73f680-bc22-4187-be2e-eb93e6e20d27</guid><pubDate>Tue, 21 Jul 2026 04:18:27 +0000</pubDate><atom:updated>2026-07-21T04:18:27.311Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வைகோ,vaiko,MDMK,மதிமுக</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/mahwcxp7/vaiko.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ வைகோ]]></media:title><media:description type="html"><![CDATA[ வைகோ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/mahwcxp7/vaiko.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>இந்த ஆண்டு மட்டுமல்ல, நான் வாழும் காலம் வரையிலும் செப்டம்பர் 22 ஆம் நாளை என் பிறந்தநாள் விழாவாக கழகத் தோழர்கள் நடத்தக் கூடாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.</aside><p>ம.தி.மு.க. பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/வைகோ">வைகோ</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>பிறந்தநாள் அல்ல</strong></h2><p>நான் 1944 ஆம் ஆண்டு, செப்டம்பர் 22 ஆம் நாள் பிறந்தேன். ஆனால், கலிங்கப்பட்டி ஆரம்ப பாடசாலையில் என்னை சேர்க்கும் போது வயது குறைவாக இருக்கிறது என்று கூறி, நான்கு மாதங்கள் முன்னதாக மே 22 இல் நான் பிறந்தேன் என்று பள்ளி ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டது.</p><p>என்னுடைய இறுதி வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) சான்றிதழில் எனது பிறந்த நாள் மே 22 என்று குறிக்கப்பட்டுள்ளது. எனக்கு வாழ்த்துக் கூற விரும்புகிறவர்கள் பல நேரங்களில் மே 22 ஆம் நாள் அன்று வாழ்த்துக் கூறுவார்கள். இந்த நாள் எனது பிறந்தநாள் அல்ல என்று தெரிவித்துவிடுவேன்.</p><p>எம் இயக்கத்தில் யாரும் எனது பிறந்தநாளைக் கொண்டாடக் கூடாது என்று திட்டவட்டமாகக் கூறி வந்தேன். 2002 ஆம் ஆண்டு மே 22 ஆம் நாள் அன்று காலையில் அன்றைய இந்திய தலைமை அமைச்சர் அடல்பிகாரி வாஜ்பாய் அவர்கள் என்னை அலைபேசியில் தொடர்புகொண்டு, இந்த இனிய நாள் மீண்டும் மீண்டும் உங்களுக்கு வருவதாக என்று வாழ்த்தினார்.</p><p>நான் உடனே அவரிடம், இந்த நாள் எனது பிறந்தநாள் அல்ல. பள்ளியில் சேர்ப்பதற்காக முன்னதாக உள்ள நாளை சேர்த்துவிட்டார்கள் என்றேன்.</p><p>வாஜ்பாய் அவர்கள் கவிஞர் அல்லவா? கணமும் தாமதிக்காமல் ஒரு வருடத்தில் 365 நாட்கள் உள்ளன. அதில் ஏதாவது ஒரு நாள் உங்கள் பிறந்தநாளாகத்தானே இருக்கும்! என்னுடைய வாழ்த்துக்கள் அந்த நாளுக்கு போய்ச் சேரட்டும் என்றார்.</p><h2><strong>பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள்</strong></h2><p>திராவிட இயக்கத் தலைவர்கள் பலர் 40 வயதிலேயே பிறந்தநாள் விழா கொண்டாட ஆரம்பித்துவிட்டார்களே! நீங்கள் ஏன் இப்படி மறுக்கிறீர்கள்? என்று கூறி வந்தனர். பின்னர் எப்படியோ எனது பிறந்த நாள் செப்டம்பர் 22 என்று அறிந்துகொண்டார்கள்.</p><p>எனக்குத் தெரியாமலேயே பல இடங்களில் அந்த நாளைக் கொண்டாடினார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளாக இன்றைய துணைப் பொதுச்செயலாளர் சகோதரர் ஜீவன் அவர்கள் பலரிடமும் கூறி, என் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் என்று எனக்குத் தெரியாமலேயே நடத்தி வந்தார்.</p><p>இந்தப் பின்னணியில், கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு “அண்ணே, இந்த வருடம் நீங்கள் எங்களை ஏமாற்ற விடமாட்டோம். செப்டம்பர் 22ஐ மிகப் பெரிய விழவாகக் கொண்டாட கழக முன்னணியினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து முடிவு செய்திருக்கிறோம். நீங்கள் மறுக்கவே கூடாது” என்று பிடிவாதமாக நிர்பந்தித்தார்கள். நான் அரை மனதுடன் அதற்கு இசைவு அளித்தேன்.</p><p>உடனே அவர்கள் எழும்பூரில், ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள ராஜா முத்தையா மன்றத்தை பதிவு செய்து, முன்பணமும் செலுத்திவிட்டார்கள். ஆனால் கடந்த சில நாட்களாக என் மனதில் இந்த ஏற்பாடு உறுத்தலாகவே இருந்தது.</p><h2><strong>எழுச்சி மாநாடு</strong></h2><p>அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை நமது இயக்கம் தோன்றிய நாள் முதல் மாபெரும் மாநாடுகளாக தொடர்ந்து நடத்தி வருகிறோம். அறிஞர் அண்ணாவின் 100ஆவது பிறந்த நாள் விழாவை செப்டம்பர் 15 இல் தி.மு.க. கொண்டாடவில்லை. மதுரை மாநகரே குலுங்கும் வகையில் நாம் எழுச்சி மாநாடாக நடத்தினோம்.</p><p>தி.மு.கழகம், அண்ணா பிறந்த நாளுக்கு அகில இந்திய தலைவர்களையோ, இந்திய தலைமை அமைச்சரையோ அழைத்து நடத்தவில்லை. அதற்கு மாறாக அந்த ஆண்டில் அவர்கள் செப்டம்பர் 15க்குப் பதிலாக செப்டம்பர் 21 ஆம் நாளில் காஞ்சிபுரத்தில் நடத்தினார்கள்.</p><p>“தி.மு.க தலைவர் தனது பிறந்தநாளை ஜூன் 3 ஆம் தேதிக்குப் பதிலாக வேறு நாளில் நடத்துவாரா?” என்று மாநாட்டில் கேட்டேன்.</p><p>தி.மு.க ஆட்சியில் இருந்த காலத்திலும், இந்தியாவின் தலைமை அமைச்சரை அழைத்துக் கொண்டு வந்து அண்ணா பிறந்தநாளை நடத்தும் எண்ணமாவது வந்ததா? இல்லை. ஆனால் நாங்கள் 1998 செப்டம்பர் 15 இல் தலைமை அமைச்சர் வாஜ்பாய் அவர்களையும், உள்துறை அமைச்சர் அத்வானி அவர்களையும், காஷ்மீர் முதலமைச்சர் டாக்டர் பரூக் அப்துல்லா அவர்களையும், பஞ்சாப் முதலமைச்சர் பர்காஷ்சிங் பாதல் அவர்களையும், இராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் அவர்களையும், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அவர்களையும் பங்கேற்கச் செய்து, மெரினா கடற்கரையில் விடியற்காலை இரண்டரை மணி வரை நடத்தினோம்.</p><p>இயக்கத்தில் தோழர்கள் அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை நடத்திவிட்டு, எனக்கு தெரியாமல் பொருட் செலவு செய்து, எனது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதை அறிந்து மிகவும் வேதனைப்பட்டேன்.</p><h2><strong>மனதைப் புண்படுத்த வேண்டாம்</strong></h2><p>இந்த ஆண்டு ‘வைகோ 83’ என்று இலச்சினை தயாரித்திருக்கிறார்கள். அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை மிகச் சிறப்பாக ஆண்டுதோறும் நடத்துவது மட்டும்தான் கழகத்தின் கடமை ஆகும். எனக்கு பிறந்தநாள் விழா எடுப்பதை நான் முற்றிலும் விரும்பவில்லை.</p><p>இந்த ஆண்டு மட்டுமல்ல, நான் வாழும் காலம் வரையிலும் செப்டம்பர் 22 ஆம் நாளை என் பிறந்தநாள் விழாவாக கழகத் தோழர்கள் நடத்தக் கூடாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>அந்த நாளில் யாரும் என்னைச் சந்திக்க முற்பட வேண்டாம். நான் எங்காவது பிறர் அறியாவண்ணம் அமைதியாகக் கழிக்க நினைக்கிறேன்.</p><p>என் புகைப்படம் போட்ட சுவரொட்டிகளை ஒட்டுவது, பேனர் அடிப்பது போன்ற செயல்களில் கழகத் தோழர்கள் ஈடுபட்டு என் மனதைப் புண்படுத்த வேண்டாம்.</p><p>‘வைகோ 83’ என்ற தலைப்பில் என் பிறந்தநாள் விழாவைக் கொண்டாட எவரும் முற்பட வேண்டாம் என்பதை மீண்டும் அழுத்தம் திருத்தமாகக் கூறிக் கொள்கிறேன்.</p><p>இந்த ஏற்பாட்டில் ஈடுபட்டவர்கள் மனம் காயப்படுமானால் என் மன அமைதிக்காக, என் எண்ணத்தைச் செயல்படுத்துமாறு உரிமையுடனும், நீங்காத பற்றுடனும் வேண்டிக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>இங்கிலாந்து புதிய பிரதமர்  ஆண்டி பர்ன்ஹாமிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!</title><link>https://www.maalaimalar.com/news/world/india-uk-ties-modi-greeting-pm-modi-congratulates-new-uk-pm-andy-burnham-says-ceta-will-boost-bilateral-partnership</link><comments>https://www.maalaimalar.com/news/world/india-uk-ties-modi-greeting-pm-modi-congratulates-new-uk-pm-andy-burnham-says-ceta-will-boost-bilateral-partnership#comments</comments><guid isPermaLink="false">6718ca4f-394f-4ce0-8f4d-f2a524f402dc</guid><pubDate>Tue, 21 Jul 2026 04:16:10 +0000</pubDate><atom:updated>2026-07-21T04:16:10.544Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,britain,England,பிரதமர் மோடி,பிரிட்டன்,இங்கிலாந்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/5ek4ripe/tn-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரதமர் மோடி, ஆண்டி பர்ன்ஹாம்]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர் மோடி, ஆண்டி பர்ன்ஹாம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/5ek4ripe/tn-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள ஆண்டி பர்ன்ஹாமிற்கு இந்திய பிரதமர் மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். </p><p>பிரதமர் மோடி தனது எக்ஸ்  பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, </p><p>"இங்கிலாந்து நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள  ஆண்டி பர்ன்ஹாம் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். </p><p>இந்தியாவும் இங்கிலாந்தும் பகிர்ந்தளிக்கப்பட்ட ஜனநாயக மதிப்பீடுகளால் பிணைக்கப்பட்டுள்ளன. </p><p>வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் இருநாட்டு மக்களிடையேயான உறவு என விரிவான ஒத்துழைப்பை இரு நாடுகளும்  பேணி வருகின்றன. </p><p>இந்த மாதத்தில் CETA (Comprehensive Economic and Trade Agreement) <a href="https://www.maalaimalar.com/news/world/india-uk-free-trade-agreement-signed-771672">ஒப்பந்தம் </a>நடைமுறைக்கு வருவதன் மூலம், நமது இருதரப்பு பங்களிப்பு மேலும் வலுவடையும்." என தெரிவித்துள்ளார்.  </p><p>மேலும், இந்தியா-இங்கிலாந்து இடையேயான விரிவான மூலோபாய பங்களிப்பை வலுப்படுத்தவும், பகிரப்பட்ட Vision 2035 இலக்குகளை முன்னோக்கி கொண்டு செல்லவும் ஆண்டி பர்ன்ஹாமுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருப்பதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.</p> <h2>இங்கிலாந்தில் அரசியல் மாற்றம்</h2><p>பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் முந்தைய இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் நேற்று ராஜினாமா செய்கிறார்.</p><p>அதைத் தொடர்ந்து, அண்மையில் நடந்த உட்கட்சித் தேர்தலில் வெற்றி பெற்று ஆளும் தொழிற்கட்சியின் புதிய தலைவராக தேர்வான ஆண்டி பர்ன்ஹாம் நேற்று இங்கிலாந்து மன்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். புதிய அரசாங்கத்தை அமைக்குமாறு அவருக்கு மன்னர் முறைப்படி அழைப்பு விடுத்தார்.</p> <p>புதிய பிரதமர் மன்னரின் கையை முத்தமிட்டுத் தனது விசுவாசத்தை உறுதிப்படுத்தியதை தொடர்ந்து அவர் அதிகாரப்பூர்வமாக பிரதமராக அறிவிக்கப்பட்டார்.</p><p>2016ம் ஆண்டு ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறியதில் இருந்து 6 பிரதமர்களும், 2022ம் ஆண்டு தொடங்கி 4 பிரதமர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.</p><p>கடந்த 10 ஆண்டுகளில் இங்கிலாந்தின் பிரதமராக பொறுப்பேற்கும் 7வது நபர் ஆண்டி பர்ன்ஹாம்.</p><h2>இந்தியா - இங்கிலாந்து ஒப்பந்தம் </h2><p>கடந்த ஆண்டு இறுதியில் இந்தியா- இங்கிலாந்து இடையே சுதந்திர வார்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகினது. இந்த ஒப்பந்தத்தில் இரு நாடுகளின் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி குறைப்பு உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.</p><p>இதில் இந்தியர்களுக்கான விசா பிரச்சனைகள் தீர்வு, கார்கள் மற்றும் ஸ்காட்ச் விஸ்கி போன்ற இங்கிலாந்து ஏற்றுமதிகள் மீதான வரிகள் குறைப்பு ஆகியவை அடங்கும்.</p>]]></content:encoded></item><item><title>வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்- ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/australia-back-opener-jake-weatherald-for-home-test-series-against-bangladesh</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/australia-back-opener-jake-weatherald-for-home-test-series-against-bangladesh#comments</comments><guid isPermaLink="false">ce5bfe19-8180-4674-acf1-75b69c84a40e</guid><pubDate>Tue, 21 Jul 2026 04:06:45 +0000</pubDate><atom:updated>2026-07-21T04:06:45.155Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Bangladesh,Australia,ஆஸ்திரேலியா,வங்கதேசம்,டெஸ்ட் தொடர்,Test series</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/ucv0h5mt/australia.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆஸ்திரேலியா அணி வீரர்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/ucv0h5mt/australia.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ், வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் ஆகியோர் காயத்திலிருந்து மீண்டு வந்துள்ளதால், அடுத்த மாதம் வங்கதேசத்திற்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறவுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான 13 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.</aside><h2><strong>போட்டி அட்டவணை</strong></h2><p>வங்கதேச அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 13-ந்தேதி தொடங்க உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 13-ந்தேதி தொடங்கி 17-ந்தேதி வரை டார்வினில் உள்ள மராரா மைதானத்தில் நடைபெற உள்ளது. இதன் மூலம் கடந்த 2004ஆம் ஆண்டிற்கு பிறகு இந்த மைதானத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் டெஸ்ட் ஆகஸ்ட் 22-ந்தேதி தொடங்கி 26-ந்தேதி வரை மெக்கேவில் கிரேட் பேரியர் ரீஃப் மைதானத்தில் நடைபெற உள்ளது. </p><h2><strong>ஆஸ்திரேலிய அணி வீரர்கள்</strong></h2><p>2 போட்டிகள் கொண்ட <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D">டெஸ்ட் தொடரில்</a> விளையாட உள்ள ஆஸ்திரேலிய அணி வீரர்களின் பெயர்களை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, </p><p>பேட் கம்மின்ஸ் தலைமையிலான அணியில் ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மார்னஸ் லாபுஷேன், நாதன் லயன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், ஜேக் வெதரால்ட், பியூ வெப்ஸ்டர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.</p><p>மேலும் இது 13 வீரர்கள் கொண்ட அணியாக இருந்தாலும், டெஸ்ட் தொடருக்கு முன்னதாக ஏதேனும் மாற்றங்கள் தேவைப்பட்டால், அதற்காகத் தயாராக வீரர்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. </p><h2><strong>உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை</strong></h2><p>இந்த ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற <a href="https://www.maalaimalar.com/topic/ஆஸ்திரேலியா">ஆஸ்திரேலியாவின்</a> சமீபத்திய டெஸ்ட் தொடரில் இடம்பெற்ற அணியிலிருந்து மைக்கேல் நெசர், டாட் மர்பி மற்றும் பிரெண்டன் டோகெட் ஆகியோர் நீக்கப்பட்ட வீரர்கள் ஆவர்.</p><p>உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், வங்கதேசம் நான்காவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>குறைந்த விலை ஸ்மர்ட்போன்களின் விலையையும் உயர்த்திய ஒப்போ</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/oppo-raises-prices-of-its-affordable-k-and-a-series-smartphones</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/oppo-raises-prices-of-its-affordable-k-and-a-series-smartphones#comments</comments><guid isPermaLink="false">aa589a16-29c1-4d30-b51c-cbbb353f2ba2</guid><pubDate>Tue, 21 Jul 2026 03:35:00 +0000</pubDate><atom:updated>2026-07-21T03:35:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விலை உயர்வு,price hike,OPPO,ஒப்போ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/kvje4hv7/oppo-k14-5g.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Oppo K14 5G]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/kvje4hv7/oppo-k14-5g.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆகியவற்றின் பற்றாக்குறையால் ஏற்படும் விலை உயர்வு மீண்டும் ஒப்போ ஸ்மார்ட்போன்களை பாதித்துள்ளது. இம்முறை, நிறுவனம் தனது பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களான ஒப்போ K14, K14x மற்றும் A6s 5G ஆகியவற்றின் விலையை உயர்த்தியுள்ளது. </p><p>ஒப்போ தவிர பல்வேறு ஸ்மார்ட்போன் பிரான்டுகளும் இந்திய சந்தையில் தங்களது மாடல்களின் விலையை அடிக்கடி உயர்த்தி வருகின்றன. சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் ஜப்பான் சந்தையில் தனது ஐபோன் மாடல்கள் விலையை கணிசமாக உயர்த்தியது.</p><p><strong>புதிய விலை:</strong></p><p>குறிப்பாக, ஒப்போ K14x மாடலின் விலை கடந்த இரண்டு மாதங்களில் இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் பேஸ் வேரியண்ட் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி மாடல் விலை, முந்தைய விலையான ரூ. 15,999-இல் இருந்து ரூ. 16,999-ஆக உயர்ந்துள்ளது. இந்த ரூ. 1,000 விலை உயர்வு மற்ற வேரியண்டுகளுக்கும் பொருந்தும்.</p><p>அதேவேளையில், ஒப்போ K14-இன் டாப் எண்ட் வேரியண்ட் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை அதிகபட்சமாக ரூ. 4,000 உயர்த்தப்பட்டுள்ளது.</p><p>ஒப்போவின் சில்லறை விற்பனையாளர்களுடன் பகிரப்பட்ட சுற்றறிக்கையின்படி, இந்த ஸ்மார்ட்போன்களுக்கான புதிய விலை உயர்வு நேற்று (ஜூலை 20) முதலே அமலுக்கு வந்துள்ளது. திருத்தப்பட்ட விலைகள் ப்ளிப்கார்ட் இணையதளத்திலும் ஏற்கனமே மாற்றப்பட்டு விட்டன. இருப்பினும், இந்த மாடல்களின் சில வேரியண்டுகள் தற்போது கையிருப்பில் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.</p><p><strong>அம்சங்கள்:</strong></p><p>ஒப்போ K14 சீரிஸ் மற்றும் A6s 5G ஆகியவை இந்நிறுவனத்தின் சமீபத்திய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களாக தொடர்கின்றன. இந்த மூன்று ஸ்மார்ட்போன்களும் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 பிராசஸர் மூலம் இயக்கப்படுகின்றன; இது அன்றாட பணிகளை சிறப்பாக கையாளும் திறன் கொண்டது. இவை அனைத்தும் 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட 6.75-இன்ச் HD+ LCD திரையைக் கொண்டுள்ளன.</p><p>இந்த மூன்று ஸ்மார்ட்போன்களிலும் 50MP + 2MP டூயல் பிரைமரி கேமரா செட்டப் கொண்டுள்ளன. இத்துடன் ஒப்போ K14 மாடலில் 8MP செல்ஃபி கேமராவும், ஒப்போ K14x மற்றும் ஒப்போ A6s 5G ஆகியவற்றில் சற்றே குறைந்த திறன் கொண்ட 5MP செல்ஃபி கேமரா கொண்டுள்ளன.</p><p>ஒப்போ K14 மாடலில் உள்ள 7,000mAh பேட்டரியுடன் ஒப்பிடுகையில், OPPO K14x மற்றும் A6s 5G ஆகியவை சிறிய அளவிலான 6,500mAh பேட்டரிகளை கொண்டுள்ளன. இந்த மூன்று ஸ்மார்ட்போன்களிலும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை ஆதரிக்கின்றன. மென்பொருளைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு 15-ஐ அடிப்படையாக கொண்ட ColorOS-உடன் வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>கேபிள் டி.வி., டி.டி.எச். சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்த திட்டமா?- மத்திய அரசு விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/central-govt-explain-is-there-a-plan-to-hike-charges-for-cable-tv-and-dth-services</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/central-govt-explain-is-there-a-plan-to-hike-charges-for-cable-tv-and-dth-services#comments</comments><guid isPermaLink="false">0a27f43c-cc74-4fdc-8d32-fd9577d92fa3</guid><pubDate>Tue, 21 Jul 2026 03:19:50 +0000</pubDate><atom:updated>2026-07-21T03:19:50.785Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,Central govt,Cable TV,கேபிள் டிவி,DTH,டிடிஎச்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/8g82lewl/cable.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/8g82lewl/cable.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>கேபிள் டி.வி., டி.டி.எச். சேவைகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக பரவும் தகவலுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.</aside><h2><strong>கேபிள் டி.வி. கட்டணம்</strong></h2><p>மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் சமீபத்தில் வரைவு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதை மையமாக வைத்து சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. அதில், கேபிள் டி.வி. மற்றும் டி.டி.எச். சேவைகளுக்கான கட்டணம் இப்போது வசூலிக்கப்படுவதில் இருந்து 4 முதல் 6 மடங்கு அதிகமாக வசூலிக்கப்பட உள்ளது. இதனால் 11 கோடி டி.வி.க்களின் இணைப்பு துண்டிக்கப்பட உள்ளது.</p><p>அதிகப்படியான லைசென்சு கட்டணம் விதிக்கப்பட உள்ளதால், லட்சக்கணக்கானவர்களின் வேலையும் பறிபோக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இந்த தகவல் பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.</p><h2><strong>வரைவு அறிக்கை</strong></h2><p>இதுதொடர்பாக <a href="https://www.maalaimalar.com/topic/மத்திய-அரசு">மத்திய அரசின்</a> பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது:-</p><p>இணையதளங்களில் பரவும் தகவலில் உண்மை இல்லை. மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் 'தொலைதொடர்பு விதிகள் 2026' தொடர்பான வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. தொடர்புடையவர்கள் இந்த வரைவு அறிக்கை தொடர்பாக வருகிற 27-ந்தேதி வரையிலும் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம். அந்த வரைவு அறிக்கையில் கேபிள் டி.வி. மற்றும் டி.டி.எச். சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான எந்த பிரிவுகளும் இல்லை.</p><p>தொலைக்காட்சி மற்றும் ரேடியோ சேவைகளுக்காக வழங்கப்பட்ட பல்வேறு வழிகாட்டுதல்களை ஒருங்கிணைப்பதை இந்த விதிகள் நோக்கமாக கொண்டுள்ளன. மேலும் தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒளிபரப்பு துறையின் செயல்பாடுகளை எளிதாக்குவதை ஊக்குவிக்கும் அதே வேளையில் தற்போதுள்ள நடைமுறையை மேலும் சுலபமாக்குவதற்கும், இணக்கமாக செயல்படுவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளன.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இந்த வார விசேஷங்கள்: 21-7-2026 முதல் 27-7-2026 வரை</title><link>https://www.maalaimalar.com/spirituality/this-week-specials-21-7-2026-to-27-7-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/this-week-specials-21-7-2026-to-27-7-2026#comments</comments><guid isPermaLink="false">ac9a6fd8-9078-4402-b741-ad707e9e5150</guid><pubDate>Tue, 21 Jul 2026 03:15:10 +0000</pubDate><atom:updated>2026-07-21T03:15:10.891Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,வழிபாடு,Astrology,this week special,இந்த வார விசேஷங்கள்,worship</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-04-21/t1l1nc5e/krishna2.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Krishna]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-04-21/t1l1nc5e/krishna2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>21-ந் தேதி (செவ்வாய்)</h2><p>* குரங்கணி முத்துமாலையம்மன் கோவிலில் நாராயண சுவாமி தீர்த்த உற்சவம்.</p><p>* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் உற்சவம் ஆரம்பம்.</p><p>* நத்தம் மாரியம்மன் பூந்தேரில் பவனி.</p><p>* வடமதுரை சவுந்திர ராஜப் பெருமாள் விழா தொடக்கம்.</p><p>* சமநோக்கு நாள்.</p><h2>22-ந் தேதி (புதன்)</h2><p>* ஆடி சுவாதி.</p><p>* சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளி சப்பரத்தில் பவனி.</p><p>* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கிருஷ்ணாவதாரம்.</p><p>* மதுரை மீனாட்சி அம்மன் புஷ்பப் பல்லக்கில் பவனி.</p><p>* சமநோக்கு நாள். </p><h2>23-ந் தேதி (வியாழன்)</h2><p>* ராமநாதபுரம் கோதண்டராமர் தீர்த்த உற்சவம்.</p><p>* வடமதுரை சவுந்திர ராஜப் பெருமாள் சிம்ம வாகனத்தில் பவனி.</p><p>* திருப்பரங்குன்றம் ஆண்டவர் புறப்பாடு.</p><p>* கீழ்நோக்கு நாள்.</p> <h2>24-ந் தேதி (வெள்ளி)</h2><p>* சங்கரன்கோவில் கோமதியம்மன் பூம்பல்லக்கில் பவனி.</p><p>* திருவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு.</p><p>* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் பவனி.</p><p>* சமநோக்கு நாள்.</p><h2>25–ந் தேதி (சனி)</h2><p>* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் ராஜாங்க சேவை.</p><p>* திருவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.</p><p>* திருவரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சனம்.</p><p>* மதுரை கூடலழகர் புறப்பாடு.</p><p>* சமநோக்கு நாள்.</p><h2>26-ந் தேதி (ஞாயிறு)</h2><p>* பிரதோஷம்.</p><p>* சங்கரன்கோவில் கோமதியம்மன் ரத உற்சவம்.</p><p>* திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.</p><p>* கீழ்நோக்கு நாள்.</p><h2>27-ந் தேதி (திங்கள்)</h2><p>* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் விழா தொடக்கம். </p><p>* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் சூர்ணோற்சவம்.</p><p>* வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் திருக்கல்யாணம்.</p> ]]></content:encoded></item><item><title>இன்றும் பாராளுமன்றம் நோக்கி பேரணி தொடரும் - CJP அறிவிப்பு </title><link>https://www.maalaimalar.com/news/national/cjp-dharna-continues-protest-march-to-parliament-over-dharmendra-pradhan-resignation-keeps-delhi-on-edge</link><comments>https://www.maalaimalar.com/news/national/cjp-dharna-continues-protest-march-to-parliament-over-dharmendra-pradhan-resignation-keeps-delhi-on-edge#comments</comments><guid isPermaLink="false">7fc1fd80-417d-4f98-86be-1dd210f24501</guid><pubDate>Tue, 21 Jul 2026 03:10:59 +0000</pubDate><atom:updated>2026-07-21T03:10:59.864Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>protest,rally,பேரணி,போராட்டம்,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,CJP</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/xp0ep1la/tn-4.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ CJP ]]></media:title><media:description type="html"><![CDATA[ CJP ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/xp0ep1la/tn-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி நேற்று நடத்தப்பட்ட 'நாடாளுமன்ற நோக்கிய பேரணி' இன்றும் தொடரும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ( (<a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-march-to-parliament-in-delhi-turns-violent-with-lathicharge-tear-gas-178-injured-and-70-arrested">CJP</a>) அறிவித்துள்ளது.  </p><p>நேற்று நடந்த பேரணியை தடியடி நடத்தியும் கண்ணீர்ப்புகை குண்டு வீசியும் போலீசார் கலைத்தனர். </p><p>இன்றும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கூட்டம் கூட உள்ளதால் இரண்டாவது நாளாக இன்றும் இந்தப் பேரணி தொடரும் என்று சிஜேபி நிறுவனர் அபிஜீத் திப்கே அறிவித்துள்ளார்.</p><p>ஜந்தர் மந்தரில் நேற்று இரவு நிலவிய பதற்றமான சூழ்நிலைக்கு இடையே செய்தியாளர்களிடம் பேசிய அபிஜீத் திப்கே, "நாங்கள் இங்கிருந்து நகரப்போவதில்லை. செவ்வாய்க்கிழமையும் நாடாளுமன்றத்தை நோக்கி மீண்டும் பேரணியாகச் செல்வோம்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.</p> <h2>வன்முறை</h2><p>நேற்று பேரணியின் போது நடந்த கல்வீச்சு மற்றும் வன்முறையில் 118க்கும் மேற்பட்ட காவல் துறையினர் காயமடைந்ததாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. 70க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களும் இதில் காயமடைந்தனர்.</p><p>நேற்று நடந்த மோதலின் போது ஜந்தர் மந்தரில் இருந்த போராட்ட மேடைகளை டெல்லி காவல்துறை அகற்றியிருந்தது.</p><p>இருப்பினும், இரவு மழை பெய்து கொண்டிருந்த போதிலும், நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் மீண்டும் ஜந்தர் மந்தருக்குத் திரும்பி, தற்காலிகக் கூடாரங்களையும் மேடைகளையும் அமைத்து போராட்டத்தைத் தொடர்ந்தனர்.</p><p>மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை இந்த அமைதிப் போராட்டம் ஓயாது என்றும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் சிஜேபி நிர்வாகிகள் தெரிவித்தனர்.</p> <h2>பேச்சுவார்த்தை</h2><p>சிஜேபி அமைப்பின் பிரதிநிதிகள் நேற்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவை இருமுறை சந்தித்துப் பேசினர்.</p><p>காலை நடந்த முதல் சந்திப்பில் கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாகச் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.</p><p>மாலை இரண்டாம் சந்திப்பில் சிஜேபி பிரதிநிதிகள் தங்கள் 3 முக்கியக் கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஜே.பி. நட்டாவிடம் முறைப்படி ஒப்படைத்தனர்.</p> <h2>இன்றும் பேரணி</h2><p>இன்று மீண்டும் பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால், ஜந்தர் மந்தர் பகுதியைச் சுற்றிலும் மீண்டும் பலத்த போலீஸ் பாதுகாப்பும், தடுப்புகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.</p><p>ஜந்தர் மந்தர் பகுதியில் இணையதளச் சேவைகள் முடக்கப்பட்ட நிலையிலும், மழைக்கு இடையிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களும் நூற்றுக்கணக்கான போலீசாரும் அங்கு குவிந்துள்ளதால் தலைநகரில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவுகிறது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை (22.07.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-30</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-30#comments</comments><guid isPermaLink="false">9f86052c-a139-4221-a893-68b35a1821b8</guid><pubDate>Tue, 21 Jul 2026 03:10:04 +0000</pubDate><atom:updated>2026-07-21T03:10:04.278Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மின்தடை,TNEB,மின்சார வாரியம்,Power Cut,தமிழ்நாடு மின்சார வாரியம்,சென்னையில் மின்தடை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/nfuqkutf/powercut.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/nfuqkutf/powercut.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை:</p><p>சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் <a href="https://www.maalaimalar.com/topic/சென்னையில்-மின்தடை">மின் தடை</a> செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><p>அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (22.07.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.  அதன்படி, </p><h2><strong>கோவிலம்பாக்கம்</strong></h2><p>வடக்குப்பட்டு ஓம் சக்தி நகர், சுபிக்ஷா அவென்யூ, சுசிலா நகர், பெரியார் சாலை, வடக்குப்பட்டு பிரதான சாலை, திருவேங்கடம் நகர், திருவள்ளூர் தெரு, நாவின்ஸ், விஷ்ராந்தி, செல்வகணபதி நகர், சத்யா நகர்.</p><h2><strong>ராமாபுரம்</strong></h2><p>ராயலா நகர், காந்தி நகர், நேரு நகர், குமரன் நகர்,ஜெயபாலாஜி நகர், வள்ளுவர் சாலை, ஜி ஆர் நகர், ராஜீவ் காந்தி நகர், கங்கை அவன்யு, மாந்திநாயகம் தோட்டம், மாரியம்மன் கோவில் தெரு.</p><h2><strong>முகலிவாக்கம்</strong></h2><p>சுரேஷ் நகர், உதயா நகர், குருசாமி நகர், சந்தோஷ் நகர், அவலன்சேரி, லக்ஷ்மி நகர், ஒத்தவாடை தெரு, ஏவி மல்லீஸ், ப்ரைம் எக்ஸ், மேக்ஸ் வொர்த் நகர் பேஸ்1, நாராயணன் நகர் பேஸ்1, 2 , தட்டான்குளம்.</p><h2><strong>அடையாறு</strong></h2><p>காந்தி நகர் 1 வது முதல் 3வது பிரதான சாலை வரை.</p><h2><strong>பல்லாவரம்</strong></h2><p>மல்லிகா நகர், ஹரியன் தெரு, பாரத் நகர், மாரியம்மன் கோவில் தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு, சரோஜினி தெரு, ஆபீசர் லேன், வெட்டரன் லேன்.</p><h2><strong>கீழ்க்கட்டளை</strong></h2><p>ஈஸ்வரி நகர், நியூ காலனி, வேம்புலி அம்மன் கோயில் தெரு, சித்ரா டவுன்ஷிப், ஜெயின் கிரீன் ஏக்கர்ஸ், லத்தீப் காலனி, காமராஜர் நகர்.</p><h2><strong>ஆலந்தூர்</strong></h2><p>எம்.கே.என். சாலை, அஷர்கானா, ஆலந்தூர் பிரதான சாலை, ரயில்வே ஸ்டேஷன் சாலை, மார்க்கெட் லேன், ஜி.எஸ்.டி. சாலை, ஈஸ்வரன் கோவில் தெரு, மதுரை தெரு, கருணீகர் தெரு, ஏரிக்கரை, ஆதம்பாக்கம் பகுதி, சாந்திநிகேதன் அபார்ட்மெண்ட்ஸ், மகாலட்சுமி அபார்ட்மெண்ட்ஸ், குரோவ் அபார்ட்மெண்ட்ஸ், மஸ்தான் கோரி அபார்ட்மெண்ட்ஸ், திருவள்ளுவர் பிரதான சாலை, வேளச்சேரி சாலை, பொன்னியம்மன் கோவில் தெரு, முத்தையால் ரெட்டி தெரு, குப்புசாமி காலனி, ஆபீஸ் காலனி, கக்கன் நகர், என்.ஜி.ஓ. காலனி, எஸ்.பி.ஐ. காலனி, மண்ணடியம்மன் மற்றும் பழனியம்மன் கோவில் தெரு, ரேஸ் கோர்ஸ் பகுதி, அம்பேத்கர் நகர், மடுவங்கரை.</p><h2><strong>பெரும்பாக்கம்</strong></h2><p>டிஎச்எஸ்சிபி பிளாக் எண் ஏஐ, ஏஜே, ஏகே, பிளாக் எண் 8 முதல் 86 வரை மற்றும் 152 முதல் 158 வரை, கிருஷ்ணா நகர், கோகுல் நகர், சௌமியா நகர், பெரும்பாக்கம் பிரதான சாலை, மாம்பாக்கம் பிரதான சாலை, பாரதியார் தெரு, அரசு மருத்துவமனை, நெசவாளர் நகர், அண்ணா சாலை, விமலா நகர், நல்லதம்பி தெரு, கோல்டன் அவென்யூ, சரஸ்வதி தெரு, சிவகாமி தெரு, சி.பி.ஐ. காலனி 1 வது முதல் 7 வது குறுக்குத் தெருக்கள் வரை.</p><h2><strong>மாங்காடு</strong></h2><p>ஜனனி நகர், சிதம்பரம் நகர், மலையம்பாக்கம், ரகுநாதபுரம், இந்திர நகர், செல்வராஜ் நகர், சாதிக் நகர், சிவானந்த நகர், ஸ்ரீராம் நகர், சக்ரா நகர், ஓம் சக்தி நகர், முத்துசாமி நகர், வீரா ஆஞ்சநேயர் கோவில் தெரு, மல்லிகா தியேட்டர், குன்றத்தூர் பிரதான சாலை.</p><h2><strong>ஆவடி</strong></h2><p>சி.டி.எச் சாலை, போலீஸ் கன்வர்சன் ஹால் முதல் ஹோட்டல் ஏ மற்றும் பி வரை, சரஸ்வதி நகர், தென்றல் நகர்.</p>]]></content:encoded></item><item><title>ராமின் &apos;ஏழு கடல் ஏழு மலை&apos; ரிலீஸ் தேதி அறிவிப்பு - சிறப்பு டீசர் வெளியீடு   
</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ezhukadal-ezhumalai-to-release-on-october-1-after-winning-multiple-international-film-festival-awards</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ezhukadal-ezhumalai-to-release-on-october-1-after-winning-multiple-international-film-festival-awards#comments</comments><guid isPermaLink="false">298bf204-a464-4a1e-bc99-1ebd6c0314a0</guid><pubDate>Tue, 21 Jul 2026 02:36:50 +0000</pubDate><atom:updated>2026-07-21T02:36:50.858Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Nivin Pauly,ஏழு கடல் ஏழு மலை,director ram,Ezhu Kadal Ezhu Malai,நிவின் பாலி,இயக்குநர் ராம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/y8kej4pn/nivin-pauly.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ nivin pauly]]></media:title><media:description type="html"><![CDATA[ nivin pauly]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/y8kej4pn/nivin-pauly.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.</p><h2>இயக்குநர் ராம் </h2><p>கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு, பறந்து போ உள்ளிட்ட படங்களை இயக்கி புகழ்பெற்றவர் இயக்குனர் ராம்.</p><p>தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்துடன் இயக்கும் இயக்குனர்களில் இயக்குனர் ராம் மிக முக்கியமானவர். </p><p>இவர் எடுக்கும் திரைப்படங்கள் ஒரு வாழ்க்கையின் தீஸிஸ் என்று சொல்லலாம். சமூதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட கதாப்பாத்திரங்களை மையமாக வைத்து படங்களை இயக்குவார்.</p><p>ராம் தற்பொழுது <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/a-man-a-witch-an-immortal-and-a-trainwreck-yezhu-kadal-yezhu-malai-trailer-released-756808">ஏழு கடல் ஏழு மலை</a> திரைப்படத்தை இயக்கியுள்ளார்.</p> <h2>ஏழு கடல் ஏழு மழை</h2><p>இப்படம் சுரேஷ் காமாட்சியின் 'வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்' தயாரிப்பில் நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ளது.</p><p>இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.</p><h2>சர்வதேச அங்கீகாரம்</h2><p>இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிட்டு பல விருதுகளை வென்றும், சர்வதேச பார்வையாளர்களின் பாராட்டையும் பெற்றது.</p><p>குறிப்பாக 46-வது மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ படம் திரையிடப்பட்டது.</p><p>இவ்விழாவில் இந்த ஆண்டு திரையிடப்படும் முதல் தமிழ் படம் இதுவாகும்.</p><p>ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது. ரொமேனியாவில் நடந்த ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிட தேர்வு செய்யப்பட்டது. </p><p>பார்வையாளர்களை காட்சியமைப்பினால் பிரமிப்பில் ஆழ்த்தும் 'நோ லிமிட்' எனும் பிரிவில் 'ஏழு கடல் ஏழு மலை' தேர்வானது.</p><h2>ரிலீஸ்</h2><p>படத்தின் டீசர், டிரெய்லர், பாடல்கள் முன்னதாக வெளியாகி கவனம் பெற்றிருந்தன. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை சிறப்பு டீசர் மூலம் படக்குழு அறிவித்துள்ளது. </p><p>அதன்படி படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி வெளியாக உள்ளது.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/d7iiPAxXUBo"></iframe></figure>]]></content:encoded></item><item><title>மதுபானங்கள் கொள்முதலில் புதிய நடைமுறை - ‘டாஸ்மாக்&apos; நிர்வாகம் அதிரடி
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-new-procedure-liquor-procurement</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-new-procedure-liquor-procurement#comments</comments><guid isPermaLink="false">fec29c07-00e4-40ab-b2b0-9b66348b5a71</guid><pubDate>Tue, 21 Jul 2026 02:29:32 +0000</pubDate><atom:updated>2026-07-21T02:29:32.037Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tasmac,டாஸ்மாக் நிர்வாகம்,டாஸ்மாக்,liquor procurement ​​,மதுபானங்கள் கொள்முதல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/4flrvvvq/tasmac.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tasmac]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/4flrvvvq/tasmac.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுபானங்கள் கொள்முதலில் புதிய நடைமுறையை ‘டாஸ்மாக்' நிர்வாகம் தொடங்கி உள்ளது.</p><h2>மது விற்பனை</h2><p>தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 'டாஸ்மாக்' கடைகள் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபான வகைகளை 11 நிறுவனங்களிடம் இருந்தும், 'பீர்' வகைகள் 6 நிறுவனங்களிடம் இருந்தும் 'டாஸ்மாக்' நிர்வாகம் கொள்முதல் செய்கிறது.</p><p>இதில் பிரபல அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் நடத்தும் நிறுவனங்களும் அடங்கும். எந்த நிறுவனத்தின் மதுபானம் அதிகம் விற்பனையாகிறதோ, அவை கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டன. அதாவது குறிப்பிட்ட நிறுவனங்களின் மது வகைகள் மட்டும் 60 முதல் 70 சதவீதம் வரையில் கொள்முதல் செய்யப்பட்டது.</p><h2>டாஸ்மாக் நிர்வாகம்</h2><p>இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு த.வெ.க. அரசு அமைந்தவுடன் '<a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D">டாஸ்மாக்</a>' நிர்வாகம் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த 6-ந் தேதி அன்று 'டாஸ்மாக்' நிர்வாக கூட்டம் நடைபெற்றது. இதில் குறிப்பிட்ட சில நிறுவனங்களிடம் இருந்து மட்டும் அதிகளவு மதுபானங்களை கொள்முதல் செய்யாமல் அனைத்து நிறுவனங்களிடம் இருந்தும் சரிசமமாக மதுபானங்கள் கொள்முதல் செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.</p> <h2>எலைட் கடைகள்</h2><p>அதன்படி அனைத்து நிறுவனங்களிடம் இருந்து சரிசமமாக மதுபானங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. உயரக மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் 'எலைட்' கடைகளில் பிரீமியம், மீடியம் ரக மதுவகைகளில் ஒரு பெட்டி கட்டாயம் விற்பனை செய்ய வேண்டும் என்றும் உத்தரவு வழங்கப்பட்டு உள்ளது.</p><h2>விரும்பிய மது வகைகள்</h2><p>'டாஸ்மாக்' கடைகளில் விற்பனை செய்யப்படும் சாதாரண ரக மதுபான வகைகளை அனைத்து மதுபான உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து சமமாக கொள்முதல் செய்தால், மதுபிரியர்கள் விரும்பும் மது வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும். இது மறைமுகமாக குறிப்பிட்ட நிறுவனத்தின் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-decides-to-introduce-54-more-liquor-brands">மதுவகைகளை</a> அதிகளவில் கொள்முதல் செய்வதற்கு புறவழி செயல் போன்று அமைந்துவிடும். மதுபிரியர்கள் விரும்பாத மதுபானங்கள் விற்பனையாகாமல் அப்படியே கடையில் தேங்கிவிடும்' என்பது 'டாஸ்மாக்' ஊழியர்களின் கருத்தாக உள்ளது.</p><p>புதுச்சேரி போன்று அண்டை மாநிலங்களில் விற்கப்படும் வெளிநாட்டு மதுபான வகைகளையும் 'டாஸ்மாக்' நிர்வாகம் கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும் என்பது மதுபிரியர்களின் விருப்பமாக இருக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>CJP பேரணி மோதல்: 118 போலீசார், 60 போராட்டக்காரர்கள் காயம்.. 70 பேர் கைது </title><link>https://www.maalaimalar.com/news/national/neet-protest-march-to-parliament-in-delhi-turns-violent-with-lathicharge-tear-gas-178-injured-and-70-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-protest-march-to-parliament-in-delhi-turns-violent-with-lathicharge-tear-gas-178-injured-and-70-arrested#comments</comments><guid isPermaLink="false">2bd3b9bc-d74f-4dec-b5c4-f56cd44cf819</guid><pubDate>Tue, 21 Jul 2026 01:57:04 +0000</pubDate><atom:updated>2026-07-21T01:57:04.717Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>protest,போராட்டம்,Sonam Wangchuk,சோனம் வாங்சுக்,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,Cockroach Janata Party</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/m9utb31r/cjp.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ CJP RALLY]]></media:title><media:description type="html"><![CDATA[ CJP RALLY]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/m9utb31r/cjp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி:</p><p>நேற்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் ஜந்தர் மந்தரில் ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வந்த கரப்பான்பூச்சி கட்சியை (சிஜேபி) சேர்ந்தவர்களும், நாடு முழுவதும் இருந்து வந்திருந்த பெருமளவிலான இளைஞர்களும்  நாடாளுமன்ற கட்டிடம் நோக்கி <a href="https://www.maalaimalar.com/news/national/most-anti-youth-pm-says-rahul-as-oppn-slams-govt-over-crackdown-on-protesters">பேரணி </a>செல்ல முயன்றனர். </p><p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி இந்த போராட்டம், பேரணி நடைபெற்றது. </p><p>ஜந்தர் மந்தரில் தொடங்கிய பேரணி, மத்திய டெல்லியின் முக்கியச் சாலைகளுக்கு பரவியதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.</p> <h2>தடியடி, கண்ணீர் புகை</h2><p>டெல்லி போலீசார் மற்றும் மத்திய படையினர் தடுப்புகளை மீறி முன்னேறும் அவர்களை தடுத்து நிறுத்த தடியடி நடத்தியும் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும் கலைக்க முயன்றனர். மேலும் அவர்கள் பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்தால் அவர்களை சுட்டுத் தள்ள மத்திய படையினர் துப்பாக்கியை தூக்கி குறிபார்த்தாவாறு நின்றிருந்தனர்.</p><p>தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீச்சுக்கு மத்தியில் போலீசார், போராட்டக்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.</p>  <h2>காயம் - கைது</h2><p>நாள் முடிவில் கிடைத்த தகவலின்படி, போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் 118 காவல் துறையினரும், போலீசாரின் தடியடியில் 60 போராட்டக்காரர்களும் காயமடைந்துள்ளனர்.</p><p>வன்முறையில் ஈடுபட்டதாக 70 பேரை காவல்துறையினர் கைது செய்துதுள்ளனர்.</p><p>பொதுச்சொத்துக்களுக்குசேதம் விளைவித்தல், அரசு ஊழியர்களைத் தாக்குதல் மற்றும் கலவரத்தை தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p> <h2>நட்டாவுடன் பேச்சுவார்த்தை</h2><p>போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், சிஜேபி அமைப்பின் பிரதிநிதிகள் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவை சந்தித்துப் <a href="https://www.maalaimalar.com/news/national/nadda-assures-protesting-cjp-that-govt-will-consider-its-demands-including-pradhans-resignation">பேச்சுவார்த்தை </a>நடத்தினர்.</p><p>இதன் பின்னர், ஜந்தர் மந்தருக்குத் திரும்புமாறு போராட்டக்காரர்களுக்கு சிஜேபி தலைமை அறிவுறுத்தியது. அதற்குள் ஜந்தர் மந்தரில் அமைக்கப்பட்டிருந்த போராட்ட மேடைகள் அகற்றப்பட்டிருந்தன. இருப்பினும் சிஜேபியினர் மற்றும் இளைஞர்கள் தங்கள் போராட்டத்தை ஜந்தர் மந்தரில் தொடர்ந்து வருகின்றனர்.</p><h2> உண்ணாவிரதம் </h2><p>இந்த போராட்டத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ், மூத்த பாலிவுட் நடிகை ஷாபனா அஸ்மி உள்ளிட்ட பிரபலன்களும் சமூக செயல்பாட்டாளர்களும் இளைஞர்களுக்கு பக்க பலமாக பங்கேற்றுள்ளனர். </p><p>இவர்களின் அறிவுறுத்தலின் பேரில், கடந்த 23 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த அகில இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த 3 மாணவர்கள் நேற்று தங்கள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டனர். </p><p>இந்த போராட்டத்திற்கு ஆதரவாக மருத்துவமனையில் இருந்தபடி கல்வியாளர் சோனம் வாங்சுக் தன் உண்ணாவிரதத்தை 23வது நாளாக தொடர்ந்து வருகிறார்.</p>]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 21.7.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு இனிய செய்தி இல்லம் தேடி வரும்</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-21-july-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-21-july-2026#comments</comments><guid isPermaLink="false">9b32cb51-594c-4414-8e7c-755a4d4915c6</guid><pubDate>Tue, 21 Jul 2026 01:42:52 +0000</pubDate><atom:updated>2026-07-21T01:42:52.259Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/01/20/25060454-rasipalan.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/01/20/25060454-rasipalan.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>ராசிபலன்(Rasipalan)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>அலைச்சல் ஏற்பட்டாலும் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் விருப்ப ஓய்வு பெற்று தொழில் தொடங்குவோமா என்று சிந்திப்பீர்கள்.</p><h2>ரிஷபம்</h2><p>அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். நாவன்மையால் நல்ல பெயர் எடுப்பீர்கள். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். தொழில் குறுக்கீடுகள் அகலும்.</p><h2>மிதுனம்</h2><p>மதி நுட்பத்தால் மகத்தான காரியமொன்றை செய்து முடிக்கும் நாள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வாகனம் மாற்றம் செய்யலாமா என்று சிந்திப்பீர்கள்.</p><h2>கடகம்</h2><p>நினைத்தது நிறைவேற்றும் நாள். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.</p> <h2>சிம்மம்</h2><p>தொட்ட காரியம் துளிர்விடும் நாள். வரவு எதிர்பார்த்தபடியே வந்து சேரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.</p><h2>கன்னி</h2><p>விடா முயற்சிக்குவெற்றி கிட்டும் நாள். வளர்ச்சிக்கு மாற்றினத்தவர்கள் கைகொடுத்து உதவுவர். பயணங்கள் மகிழ்ச்சிக்குரியதாக இருக்கும்.</p><h2>துலாம்</h2><p>முயற்சி கைகூடும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடி சிறப்பாக முடியும். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.</p><h2>விருச்சிகம்</h2><p>புகழ் கூடும் நாள். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தினர்களின் குணமறிந்து செயல்படுவது நல்லது.</p> <h2>தனுசு</h2><p>இனிய செய்தி இல்லம் தேடி வரும் நாள். வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொதுவாழ்வில் புகழ் கூடும்.</p><h2>மகரம்</h2><p>செல்வாக்கு உயரும் நாள். பெரிய மனிதர்களின் தொடர்பு உங்கள் தகுதியை உயர்த்தும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு உறுதியாகலாம்.</p><h2>கும்பம்</h2><p>விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வீடு மாற்றம், உத்தியோக மாற்றம் பற்றி யோசிப்பீர்கள். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை.</p><h2>மீனம்</h2><p>மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. நினைத்தது ஒன்றும் நடந்தது ஒன்றுமாக இருக்கும்.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்று பெட்ரோல் - டீசல் விலை நிலவரம் </title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/fuel-prices-stable-chennai-petrol-and-diesel-rates-unchanged-amid-hormuz-tension</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/fuel-prices-stable-chennai-petrol-and-diesel-rates-unchanged-amid-hormuz-tension#comments</comments><guid isPermaLink="false">31905645-a049-4ca8-9c20-76b909ceb173</guid><pubDate>Tue, 21 Jul 2026 01:37:42 +0000</pubDate><atom:updated>2026-07-21T01:37:42.193Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,கச்சா எண்ணெய்,Crude oil,பெட்ரோல் டீசல் விலை,Petrol and Diesel Prices</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/zb9pki7q/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பெட்ரோல் - டீசல் விலை]]></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல் - டீசல் விலை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/zb9pki7q/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/us-military-says-its-carrying-out-its-10th-consecutive-night-of-strikes-on-iran">ஈரான் போரினால்</a> மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.</p><h2>எண்ணெய் நிறுவனங்கள்</h2><p>இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது. கச்சா எண்ணெய்யை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது.</p><p>அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.</p> <h2>பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்</h2><p>அந்த வகையில் இன்று (21.07.2026 - செவ்வாய்கிழமை)க்கான பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ. 99.55-க்கும் நேற்றைய விலையில் எனது மாற்றமுமின்றி விற்பனை செய்யப்படுகிறது.</p><p>அதேவேளை, இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97 -க்கு நேற்றைய விலைப்படி விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கச்சா எண்ணெய்</h2><p>இன்று சர்வதேச சந்தையில் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 88.470 டாலர் என விற்பனை ஆகி வருகிறது. நேற்று 90 டாலர் என்ற அளவை தொட்ட நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது.</p><p>வரும் நாட்களில் போர் மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுவதால் விலை மேலும் உயரக்கூடும். இதனால் வாகன ஓட்டிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.</p><p>மத்திய அரசு உலக சந்தை நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.</p>]]></content:encoded></item></channel></rss>