<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 25 Aug 2026 04:53:04 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: டெட் தேர்வில் இருந்து விலக்களிக்க கோரி தனித்தீர்மானம்: சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றம் - 25 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-25-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-25-august-2026#comments</comments><guid isPermaLink="false">11be16ef-2d9c-4bff-90aa-9f30801d224f</guid><pubDate>Tue, 25 Aug 2026 03:58:44 +0000</pubDate><atom:updated>2026-08-25T04:45:34.116Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/8wrsnhto/rajmohan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/8wrsnhto/rajmohan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் தொகுதி சார்ந்த பிரச்சனைகளை எழுப்பும் எம்எல்ஏக்கள். உறுப்பினர்களின் கேள்விகள் &amp; கோரிக்கைகளுக்கு அமைச்சர்கள் பதில் அளிக்கிறார்கள்.</p><p>சட்டசபையில் தொகுதி சார்ந்த பிரச்சனைகளை எழுப்பும் எம்எல்ஏக்கள்.</p><p>மேட்டூர் அணை திறப்பு தொடர்பாக கூடிய விரைவில் நல்ல செய்தி வரும் - நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த்</p> <p>காவிரி டெல்டா பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது, குடிநீருக்கே தட்டுப்பாடு உள்ளது - எம்எல்ஏ மாரிமுத்து</p><p>மேட்டூர் நீர் திறப்பு எப்போது என கூறினார் தான் சம்பா சாகுபடிக்கான முன்னேற்பாடு பணிகளை செய்ய முடியும் - எடப்பாடி பழனிசாமி</p><p>சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்கு தோண்டிய பள்ளத்தில் விழுந்து பெண் பலியாகி உள்ளார்.</p><p>மழைநீர் வடிகால் பணி நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட வேண்டும்  - திமுக எம்எல்ஏ சேகர்பாபு</p><p>மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும்? - திமுக எம்எல்ஏ கோவி செழியன்.</p><p>டெட் தேர்வில் இருந்து விலக்களிக்க கோரி தனித்தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றம்.</p><p>பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு அதிமுக, திமுக, காங்கிரஸ், பாமக, சிபிஐ, சிபிஎம் ஆதரவு.</p><p>ஆசிரியர்களுக்கு திமுக உறுதுணையாக இருக்கும் - எ.வ.வேலு உறுதி</p><p>ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வகையிலான தீர்மானத்திற்கு சிபிஐ ஆதரவு - ராமச்சந்திரன்</p><p>அரசின் தனித்தீர்மானத்திற்கு ஆதரவு, கல்வியை பொதுப்பட்டியலை இருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் - பாமக</p><p>அமைச்சர் ராஜ்மோகன் கொண்டுவந்த தனித்தீர்மானத்திற்கு பாமக, இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு</p><p>பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அரசினர் தனித்தீர்மானம்</p><p>டெட் தேர்வில் இருந்து விலக்களிக்க கோரி சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்.</p><p>3.28 லட்சம் ஆசிரியர்கள் கட்டாயம் டெட் தேர்வில் தேர்ச்சி என்ற உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>பழுதான கட்டிடத்தை இடிக்க நடவடிக்கை, 50 மாணவிகள் தங்கும் வகையில் விடுதி கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>திண்டுக்கல் ஆயக்குடியில் ரூ.3.70 கோடியில் மாணவியர் விடுதி - அமைச்சர் வன்னி அரசு</p><p>பழனி ஆயக்குடி அரசு மாநில விடுதிக்கு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் - எம்எல்ஏ ரவி மனோகரன் கோரிக்கை</p><p>அத்தியாவசிய மருந்து பட்டியலில் சேர்க்கப்படாத நிலையிலும் எமிசிஜுமாப் மருந்தை வழங்க வேண்டும் - அமைச்சர் அருண்ராஜ்</p><p>ஹீமோபிலியா மரபணுக் கோளாறால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு எமிசிஜுமாப் மருந்தை விலையின்றி வழங்க வேண்டும் - எம்எல்ஏ ரவி</p><p>3 தமிழர்களின் மரணத்திற்கு நீதி கிடைக்க தமிழ்நாடு அரசு துணை நிற்க வேண்டும். அவர்கள் குடும்பத்திற்கு தேவையான நிதி உதவியும், சட்ட உதவியும் அரசு செய்ய வேண்டும் - உதயநிதி</p> <p>சட்டத்துறை, வனத்துறை அமைச்சர்கள் இதுதொடர்பாக விரிவாக விளக்கம் அளித்துள்ளனர் - சபாநாயகர்</p><h2>கர்நாடகத்தில் 3 தமிழர்கள் கொலை - உதயநிதி ஸ்டாலின் உரை</h2><p>கர்நாடகாவில் வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள் சித்ரவதை செய்யப்பட்டு கொலை என கூராய்வு அறிக்கை.</p><p>உயிரிழந்த தமிழர்கள் உடலில் காயம் இருந்ததாக கூராய்வு அறிக்கை வந்துள்ளது.</p><p>தமிழக அமைச்சர்கள் யாராவது கர்நாடகா சென்றார்களா?</p><p>3 தமிழர்கள் கொலையில் அரசின் நிலைப்பாடு என்ன?</p><p>சட்டசபையில் இயற்கை வளங்கள் துறை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகிய துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.</p><p>எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பேசியவுடன் அவர்களது கேள்விகளுக்கு துறையின் அமைச்சர்கள் டி.கே.பிரபு (இயற்கை வளங்கள்), கீர்த்தனா (தொழில்), குமார் (தகவல் தொழில்நுட்பம்) ஆகியோர் பதிலுரை வழங்குவார்கள். </p> ]]></content:encoded></item><item><title>கேப்டனின் புகழ் நீடுவாழ்க!- மு.க.ஸ்டாலின் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-praise-vijayakanth</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-praise-vijayakanth#comments</comments><guid isPermaLink="false">48c6610c-a749-4768-90f6-e7da14f8ba68</guid><pubDate>Tue, 25 Aug 2026 04:52:15 +0000</pubDate><atom:updated>2026-08-25T04:52:15.265Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMDK,தேமுதிக,vijayakanth,முக ஸ்டாலின்,விஜயகாந்த்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/737hovcr/mkstalin.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/737hovcr/mkstalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>விஜயகாந்தின் கனவுகளை நனவாக்க உழைக்கும் தே.மு.தி.க. தோழர்களுக்கும் அவர்களை வழிநடத்தும் அன்புச் சகோதரி திருமதி பிரேமலதாவுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.</strong></em></p><p>நடிகரும், தே.மு.தி.க. நிறுவனத் தலைவருமான மறைந்த <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D">விஜயகாந்தின்</a> 74-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் தொண்டர்கள், ரசிகர்கள் திரண்டு மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-praise-to-vijayakanth">விஜயகாந்த்</a> பிறந்தநாளையொட்டி அவரை அரசியல் தலைவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். </p><p>அந்த வகையில், முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><h2><strong>புகழ் நீடுவாழ்க!</strong> </h2><p>ஏழை மக்களின் மேல் கொண்ட அளவற்ற அன்பால் அவர்களின் நெஞ்சத்தில் நீங்காத நினைவாய் வாழும் எனது அருமை நண்பரும் தே.மு.தி.க. நிறுவனருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் இன்று!</p><p>அவரின் கனவுகளை நனவாக்க உழைக்கும் தே.மு.தி.க. தோழர்களுக்கும் அவர்களை வழிநடத்தும் அன்புச் சகோதரி திருமதி </p><p>பிரேமலதாவுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>கேப்டன் அவர்களின் புகழ் நீடுவாழ்க! என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">ஏழை மக்களின் மேல் கொண்ட அளவற்ற அன்பால் அவர்களின் நெஞ்சத்தில் நீங்காத நினைவாய் வாழும் எனது அருமை நண்பரும் தே.மு.தி.க. நிறுவனருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் இன்று!<br><br>அவரின் கனவுகளை நனவாக்க உழைக்கும் தே.மு.தி.க. தோழர்களுக்கும் அவர்களை வழிநடத்தும் அன்புச் சகோதரி திருமதி… <a href="https://t.co/x2epVGxjgC">pic.twitter.com/x2epVGxjgC</a></p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2092102624015495294?ref_src=twsrc%5Etfw">August 25, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>ரூ. 10,000 பட்ஜெட்டில் புது IER ஹெட்போன்அறிமுகம் செய்த சோனி - என்ன ஸ்பெஷல்?</title><link>https://www.maalaimalar.com/technology/newgadgets/sony-ier-m500-wired-in-ear-monitors-launched-in-india</link><comments>https://www.maalaimalar.com/technology/newgadgets/sony-ier-m500-wired-in-ear-monitors-launched-in-india#comments</comments><guid isPermaLink="false">c6dbc43f-178d-42f7-a5ed-947d5f6b96ec</guid><pubDate>Tue, 25 Aug 2026 04:46:00 +0000</pubDate><atom:updated>2026-08-25T04:46:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sony,சோனி,IEM,இன் இயர் மாணிட்டர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/apu9v9vs/Sony-IER-M500.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sony IER-M500]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/apu9v9vs/Sony-IER-M500.png?w=280" width="280"></media:thumbnail><category>புதிய கேஜெட்டுகள் (New gadgets)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/sony">சோனி</a> நிறுவனம் இந்திய சந்தையில் IER-M500 பெயரில் புதிய இன்-இயர் மாணிட்டர் மாடலை அறிமுகம் செய்தது. இந்த மாடல் தொழில்முறை ஆடியோ மாணிட்டரிங் மற்றும் லைவ் பெர்ஃபார்மன்ஸ் பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. </p><p>இந்த இயர்போன்கள் 5mm டைனமிக் டிரைவர்கள், சீல்டு அகௌஸ்டிக் டிசைன் கொண்டுள்ளன. இது பேசிவ் நாய்ஸ் ஐசோலேஷன் வசதியை வழங்குகிறது. இத்துடன் பல்வேறு இயர் டிப்கள், ஃபிட்டிங் சப்போர்ட்ர்ஸ், கேபிள் க்ளிப் மற்றும் கேஸ் உள்ளிட்டவை இந்த இயர்போனுடன் வழங்கப்படுகிறது.</p><p>புதிய சோனி IER-M500 மாடல் கடந்த ஜூலை மாத வாக்கில் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்திய சந்தையிலும் விற்பனைக்கு வந்தள்ளது. இந்த இயர்போன் மொத்தத்தில் மூன்றுவித நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.</p><h2>சிறப்பு அம்சங்கள்:</h2><p>சோனி IER-M500 5mm டிரைவர்களை கொண்டிருக்கிறது. இந்த இயர்போன்கள் சீல்டு ஹவுசிங், இன்டர்னல் அகௌஸ்டிக் வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இது வெளிப்புற சத்தத்தை குறைக்க செய்கிறது. இத்துடன் நாய்ஸ்-ஐசோலேட்டிங் இயர் டிப்கள் வழங்கப்படுகிறது. இது பேசிவ் நாய்ஸ் ஐசோலேஷன் அனுபவத்தை மேம்படுத்துகிறது.</p><p>கனெக்டிவிட்டிக்கு சோனி IER-M500 மாடலிில் 1.6m வயர்டு Y-டைப் கேபிள் மற்றும் L-வடிவ ஸ்டீரியோ மினி பிளக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த இயர்போனுடன் ஃபிட்டிங் சப்போர்ட்டர்ஸ், பலவித அளவுகளல் நாய்ஸ்-ஐசோலேட்டிங் இயர் டிப்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய கேபிள் க்ளிப் வழங்கப்படுகிறது. கேபிள் தவிர்த்து இந்த இயர்போனின் எடை 6.9 கிராம் ஆகும்.</p><h2>விலை மற்றும் விவரங்கள்:</h2><p>இந்திய சந்தையில் சோனி IER-M500 மாடலின் விலை ரூ. 10,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இயர்போன் பிளாக், க்ளியர் மற்றும் ரெட் அண்ட் பிளாக் நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த இயர்போன் அமேசான், ப்ளிப்கார்ட், ரியல் இமேஜ், சவுண்ட் க்ளிட்ஸ், ஹெட்போன் ஜோன் மற்றும் இதர ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>டெட் தேர்வில் இருந்து விலக்களிக்க கோரி சட்டசபையில் தனித்தீர்மானம் நிறைவேற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-passes-tet-exam-exemption-resolution</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-passes-tet-exam-exemption-resolution#comments</comments><guid isPermaLink="false">d0983fd4-5d1d-4ba4-ae08-070229f16a84</guid><pubDate>Tue, 25 Aug 2026 04:40:34 +0000</pubDate><atom:updated>2026-08-25T04:40:34.997Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டெட் தேர்வு,TET Exam,தனித்தீர்மானம்,TN assembly,தமிழக சட்டசபை |,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/10bt3k6y/raj.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Rajmohan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/10bt3k6y/raj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் டெட் தேர்வில் இருந்து விலக்களிக்க கோரி <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">தனித்தீர்மானம்</a> ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.</p><p>தமிழக சட்டசபையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசினார். அப்போது அவர், டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.</p><p>3.28 லட்சம் ஆசிரியர்கள் கட்டாயம் டெட் தேர்வில் தேர்ச்சி என்ற உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.</p><p>அமைச்சர் ராஜ்மோகன் கொண்டுவந்த தனித்தீர்மானத்திற்கு திமுக, அதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.</p><p>இறுதியில், மறுப்போர் இல்லை என்பதால் டெட் தொடர்பான தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>விஜயகாந்த் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்!- முதலமைச்சர் விஜய் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-praise-to-vijayakanth</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-praise-to-vijayakanth#comments</comments><guid isPermaLink="false">08c3c32a-2a5a-4800-8ba3-9811aac69605</guid><pubDate>Tue, 25 Aug 2026 04:39:46 +0000</pubDate><atom:updated>2026-08-25T04:39:46.913Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,DMDK,தேமுதிக,vijayakanth,விஜயகாந்த்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/mbtovj0b/vijay.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விஜயகாந்த்- முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ விஜயகாந்த்- முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/mbtovj0b/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>திரைத்துறையில் தனக்கெனத் தனி முத்திரை பதித்ததோடு, அரசியலில் மக்கள் நலனை முன்னிறுத்திய தலைவராகவும் திகழ்ந்து, ஏழை, எளிய மக்களின் மீது அன்பும், அக்கறையும் கொண்டு கொடையுள்ளத்தோடு உதவிய புரட்சிக் கலைஞரின் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்! என்று கூறியுள்ளார்.</strong></em> </p><p>நடிகரும், தே.மு.தி.க. நிறுவனத் தலைவருமான மறைந்த <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D">விஜயகாந்தின்</a> 74-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் தொண்டர்கள், ரசிகர்கள் திரண்டு மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி அவரை அரசியல் தலைவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். </p><p>அந்த வகையில், முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/why-didnt-you-seek-the-blessings-of-vijayakanth-who-helped-you-grow-vijaya-prabhakaran-asks-chief-minister-vijay">விஜய்</a> எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><h2><strong>புகழ் வணக்கங்கள்...</strong></h2><p>மனிதநேயம், துணிச்சல், தன்னலமற்ற சேவை ஆகியவற்றை அடையாளமாகக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எனது புகழ் வணக்கங்களைச் செலுத்துகிறேன்.</p><p>திரைத்துறையில் தனக்கெனத் தனி முத்திரை பதித்ததோடு, அரசியலில் மக்கள் நலனை முன்னிறுத்திய தலைவராகவும் திகழ்ந்து, ஏழை, எளிய மக்களின் மீது அன்பும், அக்கறையும் கொண்டு கொடையுள்ளத்தோடு உதவிய புரட்சிக் கலைஞரின் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்! என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">மனிதநேயம், துணிச்சல், தன்னலமற்ற சேவை ஆகியவற்றை அடையாளமாகக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எனது புகழ் வணக்கங்களைச் செலுத்துகிறேன்.<br><br>திரைத்துறையில்… <a href="https://t.co/hH9qLSXkbw">pic.twitter.com/hH9qLSXkbw</a></p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2092106246149271783?ref_src=twsrc%5Etfw">August 25, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>3 தமிழர்கள் படுகொலை குறித்து தமிழக சட்டசபையில் கேள்வி எழுப்பிய உதயநிதி ஸ்டாலின்  </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-stalin-speech-in-tn-assembly-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-stalin-speech-in-tn-assembly-today#comments</comments><guid isPermaLink="false">3341242b-6bdb-4098-9003-023acb360b17</guid><pubDate>Tue, 25 Aug 2026 04:17:23 +0000</pubDate><atom:updated>2026-08-25T04:17:23.788Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Udhayanidhi Stalin,உதயநிதி ஸ்டாலின்,தமிழக சட்டசபை,எதிர்க்கட்சி தலைவர்,TN assembly,opposite leader</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/0we3y0gw/udaya.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/0we3y0gw/udaya.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் 3 தமிழர்கள் படுகொலை குறித்து கேள்வி எழுப்பினார்.</p><p>தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகிறது.</p><p>அப்போது எதிர்க்கட்சி தலைவரான உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:</p><p>கர்நாடகாவில் வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள் சித்ரவதை செய்யப்பட்டு கொலை என கூராய்வு அறிக்கை.</p><p>உயிரிழந்த தமிழர்கள் உடலில் காயம் இருந்ததாக கூராய்வு அறிக்கை வந்துள்ளது.</p><p>தமிழக அமைச்சர்கள் யாராவது கர்நாடகா சென்றார்களா?</p><p>3 தமிழர்கள் கொலையில் அரசின் நிலைப்பாடு என்ன? என கேள்வி எழுப்பினார்.</p><p>இதற்கு சபாநாயகர், சட்டத்துறை அமைச்சர் நாளை விளக்கம் அளிப்பார் என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>6000mAh பேட்டரி, 50MP கேமராவுடன் பட்ஜெட் விலையில் அறிமுகமான புது ஸ்மார்ட்போன்</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/lava-virat-v1-pro-5g-launched-in-india</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/lava-virat-v1-pro-5g-launched-in-india#comments</comments><guid isPermaLink="false">9f447df7-7c68-4972-ba81-592d4682f816</guid><pubDate>Tue, 25 Aug 2026 03:42:00 +0000</pubDate><atom:updated>2026-08-25T03:42:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>LAVA,லாவா,smartphone,ஸ்மார்ட்போன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/j0ky9zjq/Lava-Virat-V1-Pro-5G.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Lava Virat V1 Pro 5G]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/j0ky9zjq/Lava-Virat-V1-Pro-5G.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/lava">லாவா</a> நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் லாவா விராட் V1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மார்ட்போன்</a> விராட் V1 5ஜி மாடலின் மேல் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த மாடலில் மேம்பட்ட கேமரா, அதிவேக சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.</p><p>மேலும், இந்த ஸ்மார்ட்போன் 5ஜி வசதி கொண்ட யுனிசாக் பிராசஸர், IP64 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.</p><h2>சிறப்பு அம்சங்கள்:</h2><p>லாவா விராட் V1 ப்ரோ 5ஜி மாடலில் 6.74 இன்ச் HD+ டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், யுனிசாக் T8200 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 128 ஜிபி மெமரி, மெமரியை 1 டிபி வரை நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ரேம் பூஸ்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.</p><p>புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. முந்தைய லாவா விராட் V1 மாடலில் 13MP பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனில் உள்ள இரு கேமராக்களிலும் அதிகபட்சம் 2K ரெசல்யூஷனில் வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.</p><p>இத்துடன் ஆண்ட்ராய்டு 16 ஓ.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும், ஆண்ட்ராய்டு 17 அப்டேட், இரு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி பேட்ச்கள் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.</p><p>இந்த ஸ்மார்ட்போன் 3.5mm ஹெட்போன் ஜாக், பக்கவாட்டில் கைரேகை சென்சார், ஹைப்ரிட் சிம் கார்டு ஸ்லாட் கொண்டிருக்கிறது.</p><h2>விலை விவரங்கள்:</h2><p>புதிய லாவா விராட் V1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ. 15,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஆகஸ்ட் 31-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி என ஒற்றை மெமரி ஆப்ஷனில் கிடைக்கிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் சிக்கிம் மிட்நைட் மற்றும் ஸ்பிட்டி ஃப்ராஸ்ட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>இந்த வார விசேஷங்கள்: 25-8-2026 முதல் 31-8-2026 வரை</title><link>https://www.maalaimalar.com/spirituality/this-week-specials-25-8-2026-to-31-8-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/this-week-specials-25-8-2026-to-31-8-2026#comments</comments><guid isPermaLink="false">dde4aa2a-1cdf-477d-b679-101af2de1129</guid><pubDate>Tue, 25 Aug 2026 03:02:20 +0000</pubDate><atom:updated>2026-08-25T03:02:20.568Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,வழிபாடு,Astrology,this week special,இந்த வார விசேஷங்கள்,worship</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/01/13/24703153-muruga1.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Murugan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/01/13/24703153-muruga1.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>25-ந் தேதி (செவ்வாய்)</h2><p>* பிரதோஷம்.</p><p>* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் விறகு விற்ற திருவிளையாடல்.</p><p>* விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் ரத உற்சவம்.</p><p>* சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.</p><p>* மேல்நோக்கு நாள்.</p> <h2>26-ந் தேதி (புதன்)</h2><p>* ஓணம் பண்டிகை.</p><p>* சிரவண விரதம்.</p><p>* நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணியர் ரத உற்சவம்.</p><p>* சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் புறப்பாடு. </p><p>* மேல்நோக்கு நாள்.</p> <h2>27-ந் தேதி (வியாழன்)</h2><p>* பவுர்ணமி.</p><p>* ஆவணி அவிட்டம்.</p><p>* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தீர்த்தவாரி.</p><p>* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.</p><p>* மேல்நோக்கு நாள்.</p> <h2>28-ந் தேதி (வெள்ளி)</h2><p>* வரகூர் உறியடி உற்சவம் ஆரம்பம்.</p><p>* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.</p><p>* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் பவனி.</p><p>* திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.</p><p>* மேல்நோக்கு நாள்.</p> <h2>29-ந் தேதி (சனி)</h2><p>* திருவரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், மதுரை கூடலழகர் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.</p><p>* கீழ்நோக்கு நாள்.</p> <h2>30-ந் தேதி (ஞாயிறு)</h2><p>* நாங்குநேரி உலகநாயகி அம்மன் வருசாபிஷேகம்</p><p>* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு அலங்கார திருமஞ்சனம்.</p><p>* திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.</p><p>* மேல்நோக்கு நாள்.</p> <h2>31-ந் தேதி (திங்கள்)</h2><p>* முகூர்த்த நாள்.</p><p>* சங்கடகர சதுர்த்தி.</p><p>* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி உற்சவம் ஆரம்பம்.</p><p>* பெருவயல் முருகப்பெருமான் விழா தொடக்கம். </p><p>* சங்கரன்கோவில் கோமதியம்மனுக்கு புஷ்பப் பாவாடை தரிசனம்.</p><p>* சமநோக்கு நாள்.</p> ]]></content:encoded></item><item><title>10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-rain-in-10-districts-until-10-am</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-rain-in-10-districts-until-10-am#comments</comments><guid isPermaLink="false">62aefb2f-3011-4114-8428-09550e24e848</guid><pubDate>Tue, 25 Aug 2026 02:44:08 +0000</pubDate><atom:updated>2026-08-25T02:44:08.876Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,IMD,Rain,மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/01/11/24586346-rain.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rain]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/01/11/24586346-rain.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் வாட்டி வதைத்தும், மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை கொட்டியும் வருகிறது. நேற்று முன்தினம் இரவில் திடீரென இடி மின்னலுடன் கனமழை கொட்டியதால் வெப்பம் தணிந்தது.</p><h2>சென்னையில் மழை</h2><p>நேற்று காலை முதல் சென்னையில் வானம் மேகமூட்டத்துடனும், வெயிலின் தாக்கம் குறைவாகவும் இருந்த நிலையில், இரவு 8 மணியளவில் திடீரென மழை வெளுக்கத் தொடங்கியது. </p> <p>சென்ட்ரல், எழும்பூர், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கிண்டி, எம்.ஆர்.சி. நகர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. </p><p>இந்நிலையில், தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">சென்னை வானிலை மையம்</a> தெரிவித்துள்ளது.</p> <p>அதன்படி, கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.</p><h2>கனமழை</h2><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வுப்பாதை நிலவுவதால், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் கூடிய கனமழை பெய்யக்கூடும்.</p> <p>ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். </p><p>தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p> <p>நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p> <p>இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரெயில் பயணிகள் கவனத்திற்கு.... இன்று முதல் இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/night-time-electric-trains-cancelled-starting-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/night-time-electric-trains-cancelled-starting-today#comments</comments><guid isPermaLink="false">0424a501-f209-4d9a-8a0b-afa4d417adf2</guid><pubDate>Tue, 25 Aug 2026 02:05:37 +0000</pubDate><atom:updated>2026-08-25T02:05:37.926Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>electric train,Egmore railway station,எழும்பூர் ரெயில் நிலையம்,மின்சார ரெயில்கள்,மின்சார ரெயில்கள் ரத்து,electric train cancelled</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2024/08/24/4165049-beachtrain.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Electric train]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2024/08/24/4165049-beachtrain.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை <a href="https://www.maalaimalar.com/news/topnews/changes-to-electric-train-services-starting-tomorrow">எழும்பூர் ரெயில் நிலையத்தில்</a> ரூ.842 கோடியில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தற்போது இரும்பு நடைமேம்பாலம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. </p> <p>இன்று முதல் செப்டம்பர் 6-ந்தேதி வரையில் இரவு 11.15 மணி முதல் அதிகாலை 4.15 மணி (5 மணி நேரம்) வரையில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%20%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">மின்சார ரெயில்கள்</a> செல்லும் தண்டவாள பகுதியில் பணிகள் நடைபெற உள்ளது. </p><p>எனவே சென்னை கடற்கரையில் இருந்து இன்று முதல் செப்டம்பர் 6-ந்தேதி வரையில் இரவு 10.20 மணி முதல் 11.59 வரை இயக்கப்படும் மின்சார ரெயில்களும், அதிகாலை 3.50 மணிக்கு புறப்படும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. </p> <p>செங்கல்பட்டு மற்றும் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் ரெயில்கள் கடற்கரை-தாம்பரம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. எனவே, பயணிகள் தங்களுக்கு ஏற்றவாறு திட்டமிட்டு பயணம் மேற்கொள்ள ரெயில்வே நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்றைய நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/petrol-diesel-price-today-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/petrol-diesel-price-today-in-chennai#comments</comments><guid isPermaLink="false">67342036-9a1d-4a99-ad60-bbe0fa13ea58</guid><pubDate>Tue, 25 Aug 2026 01:33:23 +0000</pubDate><atom:updated>2026-08-25T01:33:23.015Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல்,Petrol,கச்சா எண்ணெய்,Crude oil,diesel,டீசல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/b0k0t00l/tn-32.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ petrol, diesel]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/b0k0t00l/tn-32.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் போர் ஓய்ந்து ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டு மத்திய கிழக்கில் இருந்து கச்சா எண்ணெய் வரத்து அதிகரித்த ஒரு சில நாட்களில் மீண்டும் போர் மூண்டுள்ளதால் சர்வதேச கச்சா எண்ணெய் விலைகளில் மீண்டும் தாக்கம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.</p><h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.</p><h2>பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</h2><p>இந்நிலையில், இன்றைய (25.08.2026 - செவ்வாய்க்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 25 ஆகஸ்ட் 2026: முருகன் கோவில்களில் அபிஷேகம்</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-25-august-2026-murugan-temples-abhishekam</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-25-august-2026-murugan-temples-abhishekam#comments</comments><guid isPermaLink="false">8a28d076-afe5-49ca-a644-0f936a30b7dc</guid><pubDate>Tue, 25 Aug 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-08-25T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/12/26339678-murugar2.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Murugan Abhishekam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/12/26339678-murugar2.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆவணி-8 (செவ்வாய்க்கிழமை)</p><p>பிறை : வளர்பிறை</p><p>திதி :   துவாதசி காலை 7.22 வரை பிறகு திரயோதசி</p><p>நட்சத்திரம் : உத்திராடம் நள்ளிரவு 12.28 வரை பிறகு திருவோணம்</p> <p>யோகம் :  சித்தயோகம்</p><p>ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை</p><p>எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை</p><p>சூலம் : வடக்கு</p><p>நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை</p> <h2>பிரதோஷம்</h2><p>பிரதோஷம். சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். மதுரை ஸ்ரீ சுந்தரேசுவரர் விறகு விற்றருளிய காட்சி, ஸ்ரீ அம்பாள் தங்கச் சப்பரத்தில் திருவீதியுலா. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை ஸ்ரீ சுவாமி ஸ்ரீ அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். </p> <p>திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் 3 ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் திருக்கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல் ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப்பெருமான் பவனி.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - உழைப்பு</p><p>ரிஷபம் - செலவு</p><p>மிதுனம் - முயற்சி</p><p>கடகம் - சாதனை</p><p>சிம்மம் - அமைதி</p><p>கன்னி - நாட்டம்</p> <p>துலாம் - மகிழ்ச்சி</p><p>விருச்சிகம் - வரவு</p><p>தனுசு - பரிசு</p><p>மகரம் - நலம்</p><p>கும்பம் - களிப்பு</p><p>மீனம் - மேன்மை</p> ]]></content:encoded></item><item><title>Today Rasipalan | இன்றைய ராசிபலன் 25.8.2026: இவர்களுக்கு பணத்தேவைகள் பூர்த்தியாகும்</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasipalan-2582026-in-tamil</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasipalan-2582026-in-tamil#comments</comments><guid isPermaLink="false">2523bce5-2cbb-46e6-be14-3573a65712df</guid><pubDate>Tue, 25 Aug 2026 00:57:16 +0000</pubDate><atom:updated>2026-08-25T00:57:16.503Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-30/e831d3ae/rasi-2.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-30/e831d3ae/rasi-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். தொழில் முன்னேற்றம் உண்டு.</p><h2>ரிஷபம்</h2><p>பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். உடல்நலம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பகையை வளர்த்துக் கொள்ள வேண்டாம்.</p><h2>மிதுனம்</h2><p>யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். அத்தியாவசியச் செலவுகளை முன்னிட்டு கைமாற்று வாங்கும் சூழ்நிலை உருவாகலாம். உத்தியோகத்தில் மனக்கலக்கம் அதிகரிக்கும்.</p><h2>கடகம்</h2><p>முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். குடும்பத்தினர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். தொழில் பங்குதாரர்களால் தொல்லைகள் ஏற்படலாம்.</p><h2>சிம்மம்</h2><p>வருமானம் அதிகரிக்கும் நாள். வீட்டிற்குத் தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்காலம் இனிமையாக வழிவகுத்துக் கொள்வீர்கள்.</p><h2>கன்னி</h2><p>எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிக்கும் நாள். வருமானம் திருப்தி தரும். தொழில் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும். வீடு வாங்கும் முயற்சி கைகூடும்.</p><h2>துலாம்</h2><p>தடைகள் அகலும் நாள். தனவரவு திருப்தி தரும். அலுவலகப் பணிகளில் ஏற்பட்ட அல்லல்கள் அகலும். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும்.</p><h2>விருச்சிகம்</h2><p>நல்ல சந்தர்ப்பங்கள் இல்லம் தேடி வரும் நாள். நிதிநிலை உயரும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய சந்தோஷத் தகவல் உண்டு. திருமண முயற்சி கைகூடும்.</p><h2>தனுசு</h2><p>உறவினர் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வாழ்க்கைத் துணை வழியே வந்த பிரச்சனை தீரும்.</p><h2>மகரம்</h2><p>ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். கடன் பிரச்சனைகளை சாமர்த்தியமாகப் பேசிச் சமாளிப்பீர்கள். உத்தியோகம் சம்பந்தமாக முக்கிய முடிவெடுப்பீர்கள்.</p><h2>கும்பம்</h2><p>யோகமான நாள். அடுத்தவர் நலனில் எடுத்த அக்கரைக்கு ஆதாயம் கிடைக்கும். முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். தொழிலில் புதிய ஒப்பந்தம் வந்துசேரும்.</p><h2>மீனம்</h2><p>நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். வீடு கட்டும் பணியைத் தொடர நினைப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்களை மேலதிகாரிகள் ஏற்றுக் கொள்வர்.</p>]]></content:encoded></item><item><title>மதிய உணவு சாப்பிட்ட 27 மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு - ராஜஸ்தானில் சோகம்</title><link>https://www.maalaimalar.com/news/national/27-students-fall-ill-after-consuming-mid-day-meal-at-rajasthan-school</link><comments>https://www.maalaimalar.com/news/national/27-students-fall-ill-after-consuming-mid-day-meal-at-rajasthan-school#comments</comments><guid isPermaLink="false">8c2f36ae-e4f7-4502-aee6-0eef072e52f0</guid><pubDate>Tue, 25 Aug 2026 00:23:28 +0000</pubDate><atom:updated>2026-08-25T00:23:28.166Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Rajasthan,Students,மாணவர்கள்,மதிய உணவு திட்டம்,mid-day meal,ராஜஸ்தான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/174ka39a/Students-Ill.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Students Ill]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/174ka39a/Students-Ill.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national">ராஜஸ்தான்</a> மாநிலத்தின் கோட்டா மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மதிய உணவு உட்கொண்ட 27 குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். </p><p>அதிகாரிகளின் கூற்றுப்படி, உணவை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே குழந்தைகளுக்கு தலைவலி, தலைச்சுற்றல் மற்றும் வாந்தி ஏற்பட்டது. சிகிச்சையை மேற்பார்வையிட மருத்துவ கல்லூரிக்கு வந்த மாவட்டக் கல்வி அதிகாரி (DEO) ரூப் சிங் மீனா, மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்க உடனடியாக ஒரு மருத்துவ குழு பள்ளிக்கு அனுப்பப்பட்டதாக தெரிவித்தார்.</p><h2>மருத்துவ குழு அமைப்பு:</h2><p>"சுமார் 27 குழந்தைகள் உடல்நலக்குறைவாகவும், தலைவலியுடனும் இருப்பதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. இவர்களில் 10 முதல் 12 குழந்தைகள் மருத்துவ கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டதை அறிந்ததும், நானும் இங்கு வந்தேன். ஏற்கனவே நான்கு குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர், மற்றவர்களை கவனிப்பதற்காக ஒரு மருத்துவ குழு அனுப்பப்பட்டது," என்று மீனா கூறினார்.</p><p>அவர் மேலும் கூறுகையில், "யாருக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படவில்லை என்பதை உறுதி செய்வதற்காக அவர்கள் தற்போது கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டுவிட்டது, மேலும் அவர்களின் முக்கிய உடல் செயல்பாடுகள் இயல்பாக இருப்பதையும், உடல்நிலை மோசமடையாமல் இருப்பதையும் உறுதிசெய்ய நாங்கள் அவர்களை கண்காணித்து வருகிறோம்," என்றார்.</p><h2>களத்தில் இறங்கிய அமைச்சர்:</h2><p>ராஜஸ்தான் அமைச்சர் மதன் திலாவரும் பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்திப்பதற்கும் மருத்துவர்களுடன் கலந்துரையாடுவதற்கும் மருத்துவமனைக்கு சென்றார். அனைத்து குழந்தைகளும் தற்போது நலமாகவும் அபாயமின்றியும் இருப்பதாக அவர் உறுதியளித்தார்.</p><p>"தற்போது நான் மருத்துவக் கல்லூரியில் இருக்கிறேன். நான் இப்போதுதான் எல்லா குழந்தைகளையும் சந்தித்தேன், அனைவரும் நலமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு வாந்தியும் தலைசுற்றலும் ஏற்பட்டதாக என்னிடம் கூறினார்கள். இப்போது அனைவரும் நலமாக இருக்கிறார்கள்," என்று மதன் திலாவர் செய்தியாளர்களிடம் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>H-1B விசா விண்ணப்பங்களுக்கு கூடுதலாக 1 லட்சம் டாலர் கட்டணம் - டிரம்ப் அதிரடி</title><link>https://www.maalaimalar.com/news/world/us-proposes-additional-usd-103-lakh-fee-for-h-1b-visa-cap-subject-applications</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-proposes-additional-usd-103-lakh-fee-for-h-1b-visa-cap-subject-applications#comments</comments><guid isPermaLink="false">54d7289a-4aed-4146-95f1-62b7ff3e3784</guid><pubDate>Mon, 24 Aug 2026 23:49:34 +0000</pubDate><atom:updated>2026-08-24T23:49:34.352Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,us,H-1B visa</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/09/20/18896931-h1bvisa.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ H-1B Visa]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/09/20/18896931-h1bvisa.webp?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவில் H-1B விசா ஒதுக்கீட்டு வரம்பிற்கு உட்பட்ட அனைத்து விண்ணப்பங்களுக்கும் கூடுதலாக 1,03,265 டாலர் கட்டணம் விதிக்க <a href="https://www.maalaimalar.com/news/world">அமெரிக்கா</a> முன்மொழிந்தது. அமெரிக்க நாடாளுமன்றம் தற்போது H-1B விசா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 65,000 விசாக்கள் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்ற வழக்கமான வரம்பை நிர்ணயித்துள்ளது.</p><p>அமெரிக்க கல்வி நிறுவனங்களில் முதுகலை அல்லது அதற்கு மேற்பட்ட பட்டம் பெற்ற வெளிநாட்டு பணியாளர்களுக்கு கூடுதலாக 20,000 விசாக்கள் ஒதுக்கப்படுகின்றன. இது பொதுவாக "முதுகலை ஒதுக்கீட்டு வரம்பு" என்று அழைக்கப்படுகிறது. </p><h2>புதிய முன்மொழிவு:</h2><p>H-1B விசா விண்ணப்பங்களுக்கு 1,00,000 அமெரிக்க டாலர் கட்டணம் விதிக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் திட்டத்தை ரத்து செய்து மாவட்ட நீதிபதியின் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை நிறுத்தி வைக்க கோரிய மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்த ஒரு மாதத்திற்குப் பிறகு, உள்நாட்டு பாதுகாப்பு துறையின் இந்த புது முன்மொழிவு வந்துள்ளது.</p><p>"தற்போதுள்ள H-1B விண்ணப்ப கட்டணத்துடன் இணைப்பதற்கு பதிலாக, 1,03,265 அமெரிக்க டாலர் தொகையை ஒரு தனிப்பட்ட, கூடுதல் H-1B கட்டணமாக செயல்படுத்த உள்நாட்டு பாதுகாப்பு துறை முன்மொழிகிறது" என்று 'ஃபெடரல் ரெஜிஸ்டர்' இதழில் வெளியிடப்பட்ட அறிவிப்பு தெரிவிக்கிறது.</p><h2>கூடுதல் கட்டணம் பொருந்தாது:</h2><p>அடுத்த 30 நாட்களுக்குள் இந்த முன்மொழிவு குறித்து பொதுமக்களின் கருத்துக்களை தெரிவிக்குமாறு இத்துறை அழைப்பு விடுத்துள்ளது. கருத்துக்கள் பரிசீலிக்கப்பட்ட பிறகு இறுதி விதிமுறை வெளியிடப்படும். </p><p>இந்தக் கட்டணம் H-1B ஒதுக்கீட்டு வரம்பிற்கு உட்பட்ட மனுக்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், வரம்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட மனுக்களுக்குப் பொருந்தாது என்றும் அது கூறியது.</p><p>முன்மொழியப்பட்ட விதியின் கீழ், குறிப்பிட்ட லாப நோக்கற்ற ஆராய்ச்சி நிறுவனங்கள், அரசு ஆராய்ச்சி அமைப்புகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் தாக்கல் செய்யும் மனுக்கள் போன்ற ஒதுக்கீட்டு வரம்பிற்கு உட்படாத H-1B மனுக்களுக்கு இந்தக் கூடுதல் கட்டணம் பொருந்தாது என்று உள்நாட்டு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.</p><h2>செய்தி தொடர்பாளர் விளக்கம்:</h2><p>"முன்மொழியப்பட்ட H-1B கட்டணமானது, சட்டப்பூர்வ குடியேற்ற திட்டங்களை ஆய்வு செய்யவும், சரிபார்க்கவும் மற்றும் ஆதரிக்கவும் கூட்டாட்சி அரசாங்கத்திற்கு ஏற்படும் செலவுகளை ஈடுகட்டுவதற்காகவே கொண்டுவரப்படுகிறது. </p><p>இல்லையெனில் இச்செலவுகள் வரி செலுத்துவோரின் பணத்தில் இருந்து மேற்கொள்ளப்பட வேண்டி இருக்கும்" என்று அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் செய்தி தொடர்பாளர் ஜாக் காலர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>7 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்?</title><link>https://www.maalaimalar.com/news/world/chinas-xi-likely-to-visit-india-for-first-time-in-seven-years</link><comments>https://www.maalaimalar.com/news/world/chinas-xi-likely-to-visit-india-for-first-time-in-seven-years#comments</comments><guid isPermaLink="false">dae5bbef-6b68-4d64-a9b0-368fff9e0e48</guid><pubDate>Mon, 24 Aug 2026 23:18:15 +0000</pubDate><atom:updated>2026-08-24T23:18:15.261Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,China,சீனா,Xi Jin Ping,ஜி ஜின் பிங்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/m7q07rkv/pm-modi-and-xi-jinping.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ pm modi and xi jinping]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/m7q07rkv/pm-modi-and-xi-jinping.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world">சீன</a> அதிபர் ஜி ஜின்பிங், அடுத்த மாதம் டெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். இதற்காக சீன அதிபர் பெரிய தூதுக்குழுவுடன் <a href="https://www.maalaimalar.com/news/national">இந்திய</a> பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் இந்திய பயணமாக இது அமைவதோடு  இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேம்படுவதற்கான ஒரு புதிய அறிகுறியாகவும் இது அமையும்.</p><h2>இறுதிக்கட்ட ஏற்பாடுகள்:</h2><p>"சீன அதிகாரிகள் தங்கும் விடுதிகள் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை இறுதி செய்வதில் மும்முரமாக உள்ளனர்," என இதுகுறித்த விவரம் அறிந்த இந்திய வட்டாரங்களில் ஒன்று ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தது.</p><p>கடந்த ஆண்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏழு ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார், ஆனால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு படிப்படியாகவே மேம்பட்டுள்ளது. மிக சமீபத்தில், ஒரு புதிய எல்லை தொடர்பான தகராறு இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான ராஜதந்திர பரிமாற்றங்களை தூண்டியது.</p><h2>400 அதிகாரிகள் குழு:</h2><p>2019-ஆம் ஆண்டில் சீன அதிபர் 200-க்கும் குறைவான அதிகாரிகளுடன் வந்திருந்த நிலையில், இந்த முறை ஜி ஜின்பிங்குடன் சுமார் 400 அதிகாரிகள் கொண்ட குழு இந்தியா வர வாய்ப்புள்ளதாக மற்ற இரண்டு இந்திய வட்டாரங்கள் தெரிவித்தன.</p><p>எல்லை மற்றும் பிராந்திய பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பான நீண்டகாலக் கருத்து வேறுபாடுகளை கையாண்டுகொண்டே, ஈடுபாட்டை விரிவுபடுத்துவதற்கான வழிகளை ஆராய இரு நாடுகளின் அதிகாரிகளும் இந்த உச்சிமாநாட்டை பயன்படுத்தி கொள்வார்கள் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.</p><h2>இன்னும் இறுதி செய்யப்படவில்லை:</h2><p>இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நடைபெற வாய்ப்புள்ள இருதரப்பு சந்திப்புக்கான ஜி ஜின்பிங்கின் இறுதி பயண் திட்டங்களும் நிகழ்ச்சி நிரலும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.</p><p>"சீனா, பிரிக்ஸ் ஒத்துழைப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து அதில் தீவிரமாக பங்கேற்கிறது. மேலும் , இந்த ஆண்டு பிரிக்ஸ் உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கு, தற்போதைய தலைமை பொறுப்பில் உள்ள இந்தியாவை ஆதரிக்கிறது," என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>ஜி ஜின்பிங்கின் பயணம் குறித்து "தற்போது எங்களிடம் வழங்குவதற்கு எந்த தகவலும் இல்லை" என்று அது கூறியது. 2025-இல் பிரேசிலில் நடைபெறவிருந்த கடைசி பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் ஜி ஜின்பிங் கலந்துகொள்ளவில்லை. இந்திய வெளியுறவு அமைச்சகம் இதுகுறித்து கருத்தும் தெரிவிக்கவில்லை.</p>]]></content:encoded></item><item><title>பஞ்சாப் சட்டசபை தேர்தலில் தனித்து களம் காணும் பாஜ.க.</title><link>https://www.maalaimalar.com/news/national/bjp-says-will-contest-all-seats-in-punjab-assembly-polls</link><comments>https://www.maalaimalar.com/news/national/bjp-says-will-contest-all-seats-in-punjab-assembly-polls#comments</comments><guid isPermaLink="false">5e07a772-c040-43c5-b310-114e469fbe84</guid><pubDate>Mon, 24 Aug 2026 21:12:04 +0000</pubDate><atom:updated>2026-08-24T21:12:04.874Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,ஆம் ஆத்மி,AAP,பஞ்சாப் சட்டசபை தேர்தல்,Punjab Assembly Polls</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/h0bc1m1b/BJP.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bjp]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/h0bc1m1b/BJP.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>"<a href="https://www.maalaimalar.com/news/national">பஞ்சாப்</a> மாற்றத்திற்கு முழுமையாகத் தயாராக உள்ளது, அதை நனவாக்க பா.ஜ.க.வும் முழுமையாக தயாராக இருக்கிறது. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில், பஞ்சாபில் உள்ள 117 சட்டமன்ற தொகுதிகளிலும் <a href="https://www.maalaimalar.com/topic/bjp">பா.ஜ.க.</a> போட்டியிட்டு, வெற்றி பெற்ற பிறகு மாநிலத்தில் தனது ஆட்சியை அமைக்கும்," என்று பா.ஜ.க. தேசிய பொது செயலாளர் பி.எல். சந்தோஷ் கூறினார்.</p><p>பஞ்சாப் மாநிலத்திற்கு அவர் மேற்கொண்ட இரண்டு நாள் அமைப்பு பயணத்தின் முதல் நாளில், பாட்டியாலாவில் நடைபெற்ற முதல் மண்டலக் கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.</p><p>நேற்று காலை மொஹாலி விமான நிலையத்தில் பி.எல். சந்தோஷை, மாநில பா.ஜ.க. தலைவர் சர்தார் கேவல் சிங் தில்லன் மற்றும் பஞ்சாப் இணை பொறுப்பாளர் சர்தார் நரேந்திர சிங் ரெய்னா ஆகியோர் வரவேற்றனர்.</p><h2>தேர்தல் ஆயத்த பணிகள்:</h2><p>தனது பயணத்தின் போது சந்தோஷ், பஞ்சாபின் பல்வேறு பிராந்தியங்களில் உள்ள பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் அமைப்பு பொறுப்பாளர்களுடன் மண்டல கூட்டங்கள் நடத்தி, அமைப்பின் செயல்பாடுகளையும் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளையும் ஆய்வு செய்வார்.</p><p>இந்தக் கூட்டங்கள், வாக்குச்சாவடி நிலை வரை அமைப்பை வலுப்படுத்துவதிலும், கட்சியின் கொள்கைகளையும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் சாதனைகளை பஞ்சாப் மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் குறிப்பாக கவனம் செலுத்தும்.</p><p>நேற்று சந்தோஷ் பாட்டியாலா மற்றும் பதிண்டாவில் நடைபெற்ற அமைப்புக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்கினார். இன்று (ஆகஸ்ட் 25), லூதியானா, ஜலந்தர் மற்றும் அமிர்தசரஸில் மண்டல கூட்டங்கள் நடைபெறும்கின்றன. மாநில பொது செயலாளர்களுடன் தனியாக ஒரு கூட்டமும் அமிர்தசரஸில் நடைபெறும்.</p><h2>வெற்றி பெற முடியாது:</h2><p>"பா.ஜ.க. தனித்து போட்டியிட்டாலும் சரி, யாருடனாவது கூட்டணி அமைத்தாலும் சரி, பஞ்சாபில் அதனால் வெற்றி பெற முடியாது," என மாநில நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா தெரிவித்தார்.</p><p>"மார்ச் 2022-க்கு முன்பு, எங்கள் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலும், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானும் ஐந்து வாக்குறுதிகளை அளித்தனர். அந்த ஐந்து வாக்குறுதிகளையும் நாங்கள் நான்கு ஆண்டுகளுக்குள் நிறைவேற்றி இருக்கிறோம். </p><p>எனவே, பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியுடன் எந்த அரசியல் கட்சியும் போட்டியிட முடியாது. இது ஒரு நேரடி போட்டி, மேலும் 2022-ல் நாங்கள் அடைந்த செயல்திறனை விட சிறப்பாகச் செயல்படுவோம்," என்று அவர் மேலும் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>டி.என்.பி.எல்.: எலிமினேட்டர் சுற்றுப் போட்டி மழையால் ரத்து... 2-ஆவது தகுதி சுற்றுக்கு முன்னேறியது கோவை</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-eliminator-match-abandoned</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-eliminator-match-abandoned#comments</comments><guid isPermaLink="false">f9a306b3-7c23-4ed3-8199-6372ddb2ee6f</guid><pubDate>Mon, 24 Aug 2026 20:42:41 +0000</pubDate><atom:updated>2026-08-24T20:42:41.245Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,திருப்பூர் தமிழன்ஸ்,கோவை கிங்ஸ்,Tiruppur Tamizhans,kovai Kings</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/2fdrajfx/TNPL-Eliminator.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TNPL Eliminator]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/2fdrajfx/TNPL-Eliminator.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/tnpl">டி.என்.பி.எல்.</a> 2026 கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் சுற்று போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனால், இரண்டாவது தகுதிச்சுற்று போட்டிக்கு கோவை கிங்ஸ் அணி முன்னேறியது.</p><p>8 அணிகள் பங்கேற்ற 10-வது டி.என்.பி.எல். <a href="https://www.maalaimalar.com/sports/cricket">கிரிக்கெட்</a> தொடர் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல்கட்ட போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்றன. இதனை தொடர்ந்து தொடரின் தற்போதைய இறுதிக்கட்ட போட்டிகள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.</p><h2>இறுதிப்போட்டியில் மதுரை:</h2><p>இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள டி.என்.பி.எல். தொடரில், புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த மதுரை, திருச்சி, கோவை, திருப்பூர் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தன. இதில் நேற்று முன்தினம் நடந்த முதலாவது தகுதி சுற்று போட்டியில் மதுரை மற்றும் திருச்சி அணிகள் மோதின. இந்தப் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து புள்ளிகள் அடிப்படையில் மதுரை இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.</p><p>இதைத் தொடர்ந்து நேற்று இரவு எலிமினேட்டர் சுற்று போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் கோவை கிங்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில், டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய திருப்பூர் தமிழன்ஸ் அணி 3 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 15 ரன்களை எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது.</p><h2>மழையால் கைவிடப்பட்டது:</h2><p>இதனால் ஆட்டம் தடைப்பட்டது. இதனை தொடர்ந்து போட்டி மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தொடர் மழையால் காரணமாக ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எலிமினேட்டர் சுற்று போட்டியும் கைவிடப்பட்டதால், புள்ளிகள் பட்டியல் அடிப்படையில் கோவை கிங்ஸ் அணி இரண்டாவது தகுதி சுற்று போட்டிக்கு முன்னேறியது.</p><p>இரண்டாவது தகுதி சுற்றுப் போட்டியில், கோவை கிங்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி நாளை (ஆகஸ்ட் 26) நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி ஆகஸ்ட் 28-ஆம் தேதி நடக்கும் இறுதிப் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணியை எதிர்கொள்ளும்.</p>]]></content:encoded></item><item><title>ரஷ்ய அதிபர் புதினுடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ச்திப்பு</title><link>https://www.maalaimalar.com/news/topnews/s-jaishankar-meets-putin-in-moscow</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/s-jaishankar-meets-putin-in-moscow#comments</comments><guid isPermaLink="false">61e4f852-66f1-4760-9e85-97ad439badb3</guid><pubDate>Mon, 24 Aug 2026 19:18:15 +0000</pubDate><atom:updated>2026-08-24T19:18:15.272Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Russia,விளாடிமிர் புதின்,Vladimir Putin,ரஷ்யா,S Jaishankar,ஜெய்சங்கர்</media:keywords><media:content height="454" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/mjsh3pj5/S-Jai-shankar-met-Vladimir-Putin" width="680"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ S Jai shankar met Vladimir Putin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/mjsh3pj5/S-Jai-shankar-met-Vladimir-Putin?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>உலகம் (World)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்தார். வர்த்தகம், எரிசக்தி, உரங்கள் மற்றும் அணுசக்தி ஒத்துழைப்பு போன்ற முக்கிய துறைகளில் கவனம் செலுத்தி, இரு தரப்பினரும் பொருளாதார உறவுகள் குறித்து விவாதித்தனர்.</p><p>அடுத்த மாதம் நடைபெறவுள்ள பிரிக்ஸ் தலைவர்கள் உச்சி மாநாட்டிற்காக புதின் டெல்லிக்கு பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, ஜெய்சங்கர் இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) மாஸ்கோ சென்றடைந்தார்.</p><p>நல்ல அறிக்கை:</p><p>இந்தியாவும் ரஷ்யாவும் தங்களது பொருளாதார ஈடுபாட்டை ஆழப்படுத்தவும், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் முற்படுவதால், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.</p><p>இரு தரப்பினரும் இன்று காலை அரசுகளுக்கிடையேயான ஆணையத்தின் கூட்டத்தை நடத்தியதாகவும், தங்களது பொருளாதார ஒத்துழைப்பு குறித்து ஒரு 'நல்ல அறிக்கை' கிடைத்ததாகவும் ஜெய்சங்கர் கூறினார்.</p><p>"நமது பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தகம், எரிசக்தி, உரங்கள், அணுசக்தி மற்றும் பிற பரிமாணங்கள் குறித்து நான் விரிவாகப் பேச விரும்புகிறேன். ஒட்டுமொத்தமாக, நமது பொருளாதார ஒத்துழைப்பு மிகவும் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்துள்ளது என்று நான் கருதுகிறேன்," என வெளியுறவு அமைச்சர் கூறினார்.</p><p>விநியோகம் அதிகரிப்பு:</p><p>இந்தியாவுக்கான உர விநியோகத்தை ரஷ்யா அதிகரித்து வருவதாகவும், அதை தொடர தயாராக இருப்பதாகவும் புதின் கூறியதாக அரசுக்கு சொந்தமான டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p>"இந்திய விவசாயிகள் மற்றும் விவசாய துறையின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்வதற்கும், இந்த விநியோகங்களை அதிகரிப்பதற்கும் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம், மேலும் அவ்வாறே தொடர்ந்து செய்ய தயாராக இருக்கிறோம்," என்று புதின் கூறியதாக டாஸ் செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டியுள்ளது.</p><p>"இந்த ஆண்டு நமது வர்த்தகம் அதிகரித்திருப்பதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த ஆண்டு அது சற்று சரிந்திருந்தது, ஆனால் இந்த ஆண்டு வளர்ந்து வருகிறது," என்று புதின் கூறியதாக அந்த செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டியுள்ளது.</p><p>இந்திய பிரதமர் ஆவல்:</p><p>ரஷ்யாவும் இந்தியாவும் பல தசாப்தங்களாகக் கட்டியெழுப்பிய உறவுகளின் அளவை ஜெய்சங்கரின் பயணம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றும், இரு அரசாங்கங்கள், நாடாளுமன்றங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் ஒத்துழைப்பு நடைபெற்று வருகிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.</p><p>பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துகளையும் ஒரு தனிப்பட்ட செய்தியையும் புதினிடம் தெரிவித்த ஜெய்சங்கர், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில் அவரை சந்திப்பதற்கும், பின்னர் பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக இந்தியாவிற்கு அவரை வரவேற்பதற்கும் இந்திய பிரதமர் ஆவலுடன் காத்திருப்பதாக கூறினார்.</p><p>"பிரதமர் மோடி, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் உங்களைச் சந்திப்பதையும், அதைத் தொடர்ந்து பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக உங்களை இந்தியாவிற்கு வரவேற்பதையும், உரிய காலத்தில் உங்கள் இருவரின் பரஸ்பர வசதிக்கேற்ப வருடாந்திர உச்சிமாநாட்டை நடத்துவதையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்," என்று ஜெய்சங்கர் கூறினார்.</p><p>2026-ஆம் ஆண்டுக்கான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாடு ஆகஸ்ட் 31-ஆம் தேதி முதல் செப்டம்பர் 1 வரை கிர்கிஸ்தானில் நடைபெறுகிறது, அதேசமயம் பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாடு செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெறும். "எனவே, மாண்புமிகு அவர்களே, ஒத்துழைப்பின் மிகவும் வலுவான ஒரு சித்திரம் நம்மிடம் இருப்பதாக நான் கருதுகிறேன்," என்று இந்திய வெளியுறவு அமைச்சர் மேலும் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மூக்குத்தி அம்மன் 2 திரையரங்க வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்க்கும் நயன்தாரா</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/nayanthara-expects-mookuthi-amman-2-theatrical-release</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/nayanthara-expects-mookuthi-amman-2-theatrical-release#comments</comments><guid isPermaLink="false">7ad88033-51d9-4644-aa83-c554f151ec56</guid><pubDate>Mon, 24 Aug 2026 18:27:26 +0000</pubDate><atom:updated>2026-08-24T18:27:26.965Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நயன்தாரா,Nayanthara,Sundar C,சுந்தர் சி,Mookuthi Amman 2,மூக்குத்தி அம்மன் 2</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/sr6589k9/nayanthara-mookuthi-amman-2.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ nayanthara mookuthi amman 2]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/sr6589k9/nayanthara-mookuthi-amman-2.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/nayanthara">நயன்தாரா</a> நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம் "மூக்குத்தி அம்மன் 2." இயக்குநர் சுந்தர் சி இயக்கும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மூக்குத்தி அம்மன் 2 <a href="https://www.maalaimalar.com/cinema">திரைப்படம்</a> முன்னணி ஓ.டி.டி. தளங்களிடையே மிகப்பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. </p><h2>ஓ.டி.டி. வெளியீடு:</h2><p>மேலும், பல முன்னணி ஓ.டி.டி. நிறுவனங்கள் இந்தப் படத்தை வாங்க ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. இந்த தகவல்கள் படத்தை சுற்றிய எதிர்பார்ப்புக்கு வலுவான சான்றாக அமைந்துள்ளது. இருப்பினும், இந்தப் படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வருவதால், திரையரங்க அனுபவம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. </p><p>மேலும், இப்படத்தை பெரிய திரையில் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க படக்குழு மிகுந்த ஆர்வம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.</p><p>நடிகை நயன்தாராவும், மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தின் திரையரங்கு வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்தப் படம் தனது திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான மற்றும் உற்சாகமான மைல்கல்லாக இருக்கும் என்று அவர் எண்ணுவதாக தகவல் வெளியாகி உள்ளது.</p><h2>மறக்க முடியாத அனுபவம்:</h2><p>இப்படத்தில் பொழுதுபோக்கு, பிரம்மாண்டம் மற்றும் உணர்வுபூர்வமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளதால், இது ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமையும் என்றும், அவரது திரைப்பயணத்தில் மிகப்பெரிய படங்களில் ஒன்றாக உருவாகக்கூடும் என்றும் திரையுலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>மேலும், இயக்குநர் சுந்தர் சி, மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை பொழுதுபோக்கு, பிரம்மாண்டம் மற்றும் காட்சியமைப்பின் பிரம்மாண்டத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து உருவாக்கியுள்ளார். </p><p>இந்தப் படத்தை திரையரங்குகளில் கொண்டு வருவதில் அவர் மிகுந்த உற்சாகத்துடன் இருப்பதாகவும், ஃபேண்டசி, நகைச்சுவை, உணர்வு மற்றும் பிரம்மாண்ட கதைசொல்லல் ஆகியவற்றின் கலவையானது ரசிகர்களிடம் வலுவாக சென்றடையும் என்று அவர் நம்புவதாகவும் கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>வக்பு வாரிய விவகாரம்: மணிப்பூரில் வலுக்கும் போராட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/national/protests-in-manipur-over-inclusion-of-2-non-muslim-members-in-waqf-board</link><comments>https://www.maalaimalar.com/news/national/protests-in-manipur-over-inclusion-of-2-non-muslim-members-in-waqf-board#comments</comments><guid isPermaLink="false">cdaaf527-b050-4ff2-9e55-eacd65d369cd</guid><pubDate>Mon, 24 Aug 2026 17:28:32 +0000</pubDate><atom:updated>2026-08-24T17:28:32.180Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>protest,Waqf Board,போராட்டம்,manipur,மணிப்பூர்,வக்பு வாரியம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/r8upqi8b/Manipur-Protests.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Manipur Protests]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/r8upqi8b/Manipur-Protests.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>புதிதாக அமைக்கப்பட்ட 8-ஆவது <a href="https://www.maalaimalar.com/news/national">மணிப்பூர்</a> வக்பு வாரிய குழுவில் இரண்டு முஸ்லிம் அல்லாத உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டதை கண்டித்து, மணிப்பூர் முழுவதும் <a href="https://www.maalaimalar.com/topic/protest">போராட்டம்</a> தீவிரமடைந்தது. கடந்த மூன்று நாட்களாக சோரா, லிலோங் மற்றும் க்ஷேத்ரிகாவ் ஆகிய இடங்களில் பேரணிகள் நடைபெற்றன.</p><p>இந்த பேரணி, முதலமைச்சர் யும்னம் கேம்சந்த் சிங்கை மெய்தி பங்கல் சமூக பிரதிநிதிகளை சந்தித்து, வக்பு வாரியத்தின் அமைப்பு குறித்த அவர்களின் கவலைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காணப்படும் என்று உறுதியளிக்க வலியுறுத்தி நடத்தப்பட்டது.</p><h2>முதல் பேரணி:</h2><p>மணிப்பூரின் 8-ஆவது வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களை சேர்ப்பதற்கு எதிரான கூட்டு குழு (JCAINMM-WB), முஸ்லிம் அமைப்புகள், உள்ளூர் மன்றங்கள் மற்றும் சிவில் சமூக குழுக்களுடன் இணைந்து சமீபத்திய போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. மாநிலம் தழுவிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, முதல் பேரணி ஆகஸ்ட் 20 அன்று காக்சிங் மாவட்டத்தின் சோராவில் நடைபெற்றது.</p><p>கூட்டுக் குழு, அஞ்சுமன் நஸ்ருல் இஸ்லாம் சோரா, அனைத்து சோரா கிளப்களின் ஒருங்கிணைப்பு குழு, சோரா, பூண்ட்ரே மற்றும் கீராக் ஆகிய ஜமியத்துல் உலமா கிளைகள் மற்றும் கீராக் மக்கா சமூக நலக் கழகம் ஆகியவை இணைந்து இந்தப் பேரணியை ஏற்பாடு செய்தன.</p><p>முஸ்லிம் அல்லாத இரு உறுப்பினர்களை சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பதாகைகளை ஏந்தியும் முழக்கங்களை எழுப்பியும் பெருந்திரளான மக்கள் அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.</p><h2>ரத்து செய்ய கோரிக்கை:</h2><p>கூட்டத்தில் உரையாற்றிய ஜமியத்-உல்-உலமா சோரா கிளை தலைவர் எம்.எல். சுல்பிகார் ஆலம் ஷேக், வக்பு வாரியத்தை முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு முக்கியமான நிறுவனம் என்று விவரித்ததோடு, முஸ்லிம் அல்லாத இரு உறுப்பினர்களை சேர்க்கும் முடிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.</p><p>கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க தவறினால், மாநிலம் முழுவதும் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர் எச்சரித்தார். மேலும், மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு முன்பு தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) புதுப்பிப்பதற்கும் ஷேக் ஆதரவு தெரிவித்தார்.</p><p>கூட்டுக் குழுவின் தலைவர் எம்.வி. அத்தாவுர் ரஹ்மான், முஸ்லிம் அல்லாத இரு உறுப்பினர்களை நீக்கிவிட்டு, அவர்களுக்குப் பதிலாக முஸ்லிம் உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.</p>]]></content:encoded></item><item><title>மும்பை கடத்தலில் மீட்கப்பட்ட 216 ஆமைகள் - வனவிலங்கு காப்பகத்தில் மீள்குடியேற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/national/216-tortoises-rescued-from-mumbai-trafficking-rewilded-in-tadoba</link><comments>https://www.maalaimalar.com/news/national/216-tortoises-rescued-from-mumbai-trafficking-rewilded-in-tadoba#comments</comments><guid isPermaLink="false">ca070cb7-6ab6-425c-909e-4472cef185d4</guid><pubDate>Mon, 24 Aug 2026 16:33:22 +0000</pubDate><atom:updated>2026-08-24T16:33:22.270Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,மகாராஷ்டிரா,ஆமை,tortoise,Star Tortoise,நட்சத்திர ஆமை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/b90vm5tt/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B9%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%82%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AF%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D.-3.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 216 trafficked star tortoises rescued from Mumbai ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/b90vm5tt/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B9%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%82%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AF%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D.-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிராவில் வனவிலங்கு பாதுகாப்பிற்கு ஒரு முக்கிய நடவடிக்கையாக, மும்பை மற்றும் தானே பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 216 இந்திய நட்சத்திர ஆமைகள் தடோபா அந்தாரி புலிகள் காப்பகத்தில் (TATR) பத்திரமாக மீள்குடியேற்றப்பட்டன.</p><p>கடத்தப்பட்ட ஊர்வனவற்றை அவற்றின் இயற்கை வாழ்விடங்களுக்கு மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்ட வனத்துறை மற்றும் RAWW-இன் பிரத்யேக முயற்சியான, 'திட்டம் ஸ்ட்ரைப்ஸ்' (Project STRIPES - Star Tortoise Repatriation Initiative Protecting Endangered Species) அதிகாரப்பூர்வ தொடக்கத்தை ஒட்டி இந்த மாபெரும் மீள்குடியேற்றம் நடைபெற்றது.</p><p>இதுகுறித்து ரெஸ்கிங்க் வனவிலங்கு நலச் சங்கத்தின் (RAWW) நிறுவனரும், மாநில வனத்துறையின் கௌரவ வனவிலங்கு காப்பாளருமான பவன் சர்மா கூறுகையில், “மும்பை மற்றும் எம்.எம்.ஆர் பகுதிகளில் தொடர்ந்து மீட்கப்பட்டு, கைப்பற்றப்படும் நட்சத்திர ஆமைகளின் தொடர்ச்சியான பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.</p><p>இதன் மூலம், அவற்றை ஒரு கட்டமைக்கப்பட்ட மற்றும் அறிவியல் பூர்வமாக நிர்வகிக்கப்படும் கட்டமைப்பின் கீழ், குறிப்பிட்ட கால இடைவெளியில் மறுவாழ்வு பயிற்சிக்காக அவற்றின் இயற்கை வாழ்விடத்தில் மீண்டும் அறிமுகப்படுத்த முடியும்.</p><p>வனவிலங்கு நிபுணர்கள் மற்றும் மகாராஷ்டிர வனத்துறையின் மும்பை சரகம் மற்றும் RAWW-ஐச் சேர்ந்த பணியாளர்களை உள்ளடக்கிய, 10 பேர் கொண்ட கூட்டுக்குழுவால் இந்த வெற்றிகரமான நடவடிக்கை செயல்படுத்தப்பட்டது.</p><p>இந்த முழுப் பணியும் மகாராஷ்டிர மாநிலத்தின் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (PCCF) மற்றும் தலைமை வனவிலங்கு பாதுகாவலர் ஆகியோர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்டது.</p><p>மேலும், தானே நகரத்தை சேர்ந்த துணை வனப் பாதுகாவலர், தானே உதவி வனப் பாதுகாவலர் மற்றும் வனத்துறையின் பிராந்தியப் பிரிவின் சரக வன அதிகாரி (மும்பை) ஆகியோர் முன்னிலையில் இது மேற்பார்வையிடப்பட்டது.</p><p>சட்டவிரோத வனவிலங்கு கடத்தலுக்கு எதிரான பல்வேறு சட்ட அமலாக்க நடவடிக்கைகளின் போதும், மும்பை மற்றும் தானே பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தனித்தனி மீட்பு நடவடிக்கைகளின் போதும் இந்த 216 ஆமைகள் முன்னதாகப் பறிமுதல் செய்யப்பட்டன.</p><p>இவற்றில் 150 நட்சத்திர ஆமைகள் RAWW-இன் மறுவாழ்வு மற்றும் பராமரிப்பில் இருந்தன. மீதமுள்ளவை, வனத்துறையின் தானே TTC (இடைநிலை சிகிச்சை மையம்), TCPCA, PAWS மற்றும் WWA ஆகியவற்றின் வசம் இருந்தன.</p><p>அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அந்த ஊர்வன RAWW-இன் சிறப்பு வனவிலங்கு ஆம்புலன்ஸ் மூலம் 800 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.</p><p>மெத்தைகள் வைக்கப்பட்ட, காற்றோட்ட வசதியுள்ள வண்டிகளில் அவைகள் கொண்டு செல்லப்பட்டன; அப்போது, அவர்களின் உடல்நலம் மற்றும் நீரேற்ற அளவுகளை கண்காணிப்பதற்காக, போக்குவரத்து குழுவினர் திட்டமிட்டபடி சீரான இடைவெளியில் நிறுத்தங்களை மேற்கொண்டனர்.</p><p>தடோபா காப்பகத்திற்கு வந்தடைந்ததும், அந்த ஆமைகளுக்கு ஒரு விரிவான மருத்துவ மறுபரிசோதனையும், ஓர் இரவு ஓய்வும் அளிக்கப்பட்டது.</p><p>கடுமையான பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, அவற்றின் நீண்டகால இனப்பெருக்க நிலைத்தன்மையை ஆதரிக்கும் வகையில், அறிவியல் பூர்வமாக கணக்கிடப்பட்ட ஆண்-பெண் விகிதத்துடன், அவை தொகுதி தொகுதியாக நியமிக்கப்பட்ட வனப்பகுதிகளில் விடுவிக்கப்பட்டன.</p><p>இந்த வெற்றிகரமான மறுவாழ்வு, வனவிலங்கு குற்றங்களை எதிர்த்துப் போராடுவதிலும், சட்டவிரோத செல்லப்பிராணி வர்த்தகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வெற்றிகரமாக மீண்டும் காட்டுக்குள் மீள்குடியேற்றப்படுவதை உறுதி செய்வதிலும் மாநில வனத்துறையின் தீவிரமான அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது” என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மைதானத்தில் மோதிக் கொண்ட ஜெய்ஸ்வால்- பெர்னாண்டோ: அபராதம் விதித்தது ஐசிசி</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/jaiswal-fernando-slapped-with-fines-after-on-field-altercation</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/jaiswal-fernando-slapped-with-fines-after-on-field-altercation#comments</comments><guid isPermaLink="false">f6871bc9-ed08-4af0-b0a3-6ea6906e38fb</guid><pubDate>Mon, 24 Aug 2026 16:27:56 +0000</pubDate><atom:updated>2026-08-24T16:27:56.288Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>jaiswal,ஜெய்ஸ்வால்,ICC,Colombo Test,கொழும்பு டெஸ்ட்,IND vs SL</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/7rcu8yjf/INDvsSL.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜெய்ஸ்வால்- அசிதா பெர்னாண்டோ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/7rcu8yjf/INDvsSL.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கொழும்பில் நடைபெற்ற போட்டியில் ஜெய்ஸ்வால் 45 ரன்களில் ஆட்டமிழக்கும்போது சண்டை ஏற்பட்டது.</p><p>இந்தியா- இலங்கை இடையில் 2-வது டெஸ்ட் போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜெய்ஸ்வால், அசிதா பெரனாண்டஸ் பந்தில் ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்ததும், பெர்னாண்டோ சக வீரரகளுடன் வெறுப்பேற்றும் வகையில் விக்கெட் வீழந்ததை கொண்டாடினார். இதனால் ஜெய்ஸ்வால்ஸ் பெர்னாண்டோவை நோக்கி சண்டையிடுவது போல் சென்று மோதிக் கொண்டார்.</p><p>இதனால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சக வீரர்கள் பெர்னாண்டோவை சமாதானம் செய்தனர். இது தொடர்பாக ஐசிசி விசாரணை மேற்கொண்டு இருவருக்கும் போட்டிக்கான கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதித்தது. பின்னர், போட்டிக்கு தடைவிதிப்பதற்கான புள்ளி ஒன்றும் வழங்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>‘சர்தார் 2’ படத்தின் முதல் பாடல் நாளை வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-first-song-from-the-movie-sardar-2-releases-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-first-song-from-the-movie-sardar-2-releases-tomorrow#comments</comments><guid isPermaLink="false">55ea5129-2ba6-4858-9909-b3e115300206</guid><pubDate>Mon, 24 Aug 2026 16:25:34 +0000</pubDate><atom:updated>2026-08-24T16:25:34.663Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Karthi,கார்த்தி,Sam CS,Sardar 2,சர்தார் 2,சாம் சிஎஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/r527pn3m/New-Project-2026-08-24T215044.019.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘சர்தார் 2’ படத்தின் முதல் பாடல் நாளை வெளியீடு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/r527pn3m/New-Project-2026-08-24T215044.019.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கார்த்தியின் ‘சர்தார் 2’ படத்தின் முதல் பாடலான ‘மயில்வீரா’ நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. </p><p>2022 ஆம் ஆண்டு வெளியான சர்தார் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றநிலையில், அதன் இரண்டாம் பாகம் ‘சர்தார் 2’ உருவாகி உள்ளது. இரண்டாம் பாகத்தையும் இயக்குநர் பி.எஸ்.மித்ரனே இயக்கியுள்ளார். </p><p>எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகி பாபு, ரஜிஷா விஜயன், வி.டி.வி கணேஷ் ஆகியோ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஐவிஒய் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் படத்தை தயாரித்துள்ளன. </p><p>சாம் சி.எஸ். படத்திற்கு இசையமைத்துள்ளார். இது சாம் சி.எஸ். இசையமைக்கும் 100வது படம் எனக்கூறப்படுகிறது. படம் செப்.10ம் தேதி வெளியாக உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>குப்பை கிடங்கை சீர்படுத்தும் பயோ மைனிங் திட்டத்திற்கு மகாராஷ்டிர அரசு ஒப்புதல்</title><link>https://www.maalaimalar.com/news/national/partial-clearance-for-15000-mt-theonar-legacy-waste-biomining-in-maharashtra</link><comments>https://www.maalaimalar.com/news/national/partial-clearance-for-15000-mt-theonar-legacy-waste-biomining-in-maharashtra#comments</comments><guid isPermaLink="false">52b2cc11-b277-4676-9920-151d74fe0653</guid><pubDate>Mon, 24 Aug 2026 16:04:51 +0000</pubDate><atom:updated>2026-08-24T16:04:51.644Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,மகாராஷ்டிரா,waste management,திடக்கழிவு மேலாண்மை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/jcgcr2a9/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B9%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%82%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AF%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D.-2.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mumbai Waste Management]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/jcgcr2a9/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B9%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%82%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AF%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D.-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிர மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தியோனார் பழைய கழிவு உயிரிச் சுரங்கத் திட்டம் செயல்படுவதற்கான பகுதி அனுமதியை வழங்கியுள்ளது.</p><p>இந்த ஒப்புதலானது ஒரு நாளைக்கு 15,000 மெட்ரிக் டன்கள் என்ற அனுமதிக்கப்பட்ட கொள்ளளவிலான உயிரிச் சுரங்கச் செயல்பாடுகளை உள்ளடக்கியது. </p><p>மேலும் இது, தியோனாரில் ஏறத்தாழ 110 ஹெக்டேர் நிலத்தை மீட்டெடுக்கும் பெரும் நோக்கத்துடன், சுமார் 185 லட்சம் டன்கள் அளவிலான கழிவுகளை அறிவியல் ரீதியாக சுத்திகரிக்க உள்ளது.</p><p>மும்பையில் தினந்தோறும் சுமார் 7,000 மெட்ரிக் டன்கள் திடக்கழிவுகள் உருவாகின்றன. உயிரிச் சுரங்க செயல்முறையின் மூலம் தேங்கியுள்ள கழிவுகள் பல்வேறு பயனுள்ள மற்றும் எஞ்சிய கூறுகளாகப் பிரிக்கப்படும்.</p><p>இவற்றில் கழிவுவழி எரி பொருள் (RDF), பதப்படுத்தப்பட்ட உரம், மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள் மற்றும் எஞ்சிய பொருட்கள் ஆகியவை அடங்கும்.</p><p>மீட்கப்பட்ட பிளாஸ்டிக், கண்ணாடி, உலோகங்கள், கந்தல் துணிகள் மற்றும் துணி போன்ற மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள் அங்கீகரிக்கப்பட்ட மறுசுழற்சிக்கு அனுப்பப்படும்.</p><p>அதே சமயம் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்கை சாலைகள் அமைத்தல் பணிகளுக்கும், RDF அலகுகள் அல்லது சிமெண்ட் ஆலைகளுக்கு பணிகளுக்கும் பயன்படுத்தப்பட உள்ளது.</p><p>மண் போன்ற துகள்கள் மற்றும் மண் சார்ந்த கூறுகள் நில வடிவமைப்பு, தோட்டக்கலை, சாலை நடுப்பகுதிகள் மற்றும் பசுமைப் பகுதிகளை மேம்படுத்துவதற்கும் இந்த கழிவுகள் பயன்படுத்தப்பட உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>32 ஆண்டுகள் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றிய ஜெர்மன் புறா: தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாப்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/german-war-pigeon-kaiser-32-years-of-us-military-service</link><comments>https://www.maalaimalar.com/news/world/german-war-pigeon-kaiser-32-years-of-us-military-service#comments</comments><guid isPermaLink="false">954befaf-99e0-4773-a9c0-198ff0d5f598</guid><pubDate>Mon, 24 Aug 2026 15:58:30 +0000</pubDate><atom:updated>2026-08-24T15:58:30.273Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>புறா,Pigeon,kaiser,german pigeon,கைசர்,அமெரிக்க புறா,ஜெர்மானிய புறா,american pigeon</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/ryx2d97j/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B9%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%82%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AF%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D.-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Military Pigeon Kaiser Honored]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/ryx2d97j/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B9%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%82%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AF%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D.-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவில் உள்ள ஒரு தேசிய அருங்காட்சியகத்தில், முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின் போது அமெரிக்க ராணுவத்திற்காக பயன்படுத்தப்பட்ட ஜெர்மன் நாட்டை சேர்ந்த புறாவின் எச்சங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. </p><p>முதலாம் உலகப் போருக்கு முன்பு 1917-ஆம் ஆண்டு கைசர் என்ற குஞ்சு புறா ஒன்று ஜெர்மனியில் பொறிக்கப்பட்டது.</p><p>பிறந்து ஐந்து நாட்களே ஆன அந்த புறாவின் இடது காலில் ஒரு அலுமினிய அடையாள வளையம் பொருத்தப்பட்டது. அந்த சிறிய வளையத்தில் ஜெர்மானியப் பேரரசின் மகுடமும், 17-0350-47 என்ற எண்ணும் பொறிக்கப்பட்டிருந்தன. அதன் முதல் இரண்டு இலக்கங்கள் அது பிறந்த ஆண்டைக் குறித்தன.</p><p>இதையடுத்து சுமார் ஆறு வாரமான கைசர் புறா, ஜெர்மானிய பேரரசின் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது.</p><p>முதலாம் உலகப் போரின் போது, ராணுவத் தகவல் தொடர்புகளில் புறாக்கள் ஒரு முக்கிய அங்கமாக மாறியிருந்தன. குறிப்பாக பீரங்கித் தாக்குதலால் சாதாரண தகவல் தொடர்பு முறைகள் செயலிழக்கச் செய்யப்படக்கூடிய இடங்களில் இது முக்கியத்துவம் பெற்றது.</p><p>பயிற்சி பெற்ற கைசர் புறா சாலை, கம்பி மற்றும் போர்க்களத்தின் வழியே பாதை இல்லாத பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி ஒரு சிறிய செய்தியை திரும்பக் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டது. இந்த பணிக்காக கைசர் பயிற்சி பெற்று, இறுதியில் வடக்கு பிரான்சில் உள்ள ஜெர்மானிய நிலைகளுக்கு இடையே தூது பணிகளில் ஈடுபடுத்தப்பட்டது.</p><p>1917 ஏப்ரலில் அமெரிக்கா போர் செய்த போது, அமெரிக்க ராணுவம் தனது சொந்த புறா சேவையை உருவாக்கத் தொடங்கியது.</p><p>1918 செப்டம்பரில் நடந்த மியூஸ்-ஆர்கோன் தாக்குதலின்போது, நூற்றுக்கணக்கான அமெரிக்க ராணுவப் புறாக்கள் பயன்படுத்தப்பட்டன.</p><p>சண்டை நடக்கும் இடங்களுக்கு அருகில் இயங்கிய படைப்பிரிவுகளிடமிருந்து செய்திகளை இந்தப் புறாக்கள் கொண்டு சென்றன. வழக்கமான தகவல் தொடர்பு முறைகள் தோல்வி அடைந்தபோது, இவை தளபதிகளுக்கு மற்றொரு தகவல் தொடர்பு வழியை வழங்கின.</p><p>28-வது காலாட்படைப் பிரிவைச் சேர்ந்த அமெரிக்க வீரர்கள் ஆர்கோன் காட்டில் இருந்த ஒரு ஜெர்மானிய புதைக் கிடங்கை கைப்பற்றினர். அங்கு கைவிடப்பட்டிருந்த உபகரணங்களில், 10 ஜெர்மானியப் புறாக்கள் இருந்த ஒரு கூடையில் கைசர் புறாவும் இருந்தது.</p><p>1918 நவம்பர் 11 அன்று போர் நிறுத்தம் ஏற்பட்டபோது, கைசர் புறாவை அமெரிக்க ராணுவம் தாயகம் கொண்டு வந்தது. 1919-ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி, மேலும் 21 ஜெர்மானியப் புறாக்கள் போக்குவரத்துக் கப்பல் மூலம் அமெரிக்காவிற்கு வந்தடைந்தது.</p><p>கைசர் புறா இறுதியில் நியூ ஜெர்சியில் உள்ள சிக்னல் கார்ப்ஸ் புறா மையத்திற்கு மாற்றப்பட்டு, அமெரிக்க ராணுவத்திற்காகப் புறாக்களை இனப்பெருக்கம் செய்ய பயன்படுத்தப்பட்டது.</p><p>1930-களில் முதலாம் உலகப் போரிலிருந்து அமெரிக்க ராணுவத்திடம் எஞ்சியிருந்த கடைசி ஜெர்மானியப் புறாவாக கைசர் இருந்தது. பின்னர் அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் நுழைந்தபோது, கைசரின் வம்சாவளியைச் சேர்ந்த புறாக்கள் ஐரோப்பாவிலும் பசிபிக்கிலும் ராணுவ சேவைக்கு அனுப்பப்பட்டன.</p><p>கைசர் புறா ராணுவ பணிகளுக்கு பயன்படுத்தப்பட முடியாமல் மிகவும் வயதானைதை தொடர்ந்து, அது மிசோரியில் உள்ள கேம்ப் க்ரௌடருக்கு மாற்றப்பட்டது. அங்கு ராணுவம் தனது புறா இனப்பெருக்கம் மற்றும் பயிற்சி மையத்தை இயக்கியது.</p><p>1945-ஆம் ஆண்டிற்குள், கைசர் புறா ராணுவத்திற்காக 75-க்கும் மேற்பட்ட பறவைகளை உருவாக்கியிருந்தது.</p><p>கைசர் 31-வது வயதின் போது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஃபோர்ட் மாகாணத்திற்கு திருப்பி அனுப்பபட்டது.</p><p>அந்த ஆண்டின் பிற்பகுதியில், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அமெரிக்கன் லீஜியன் குழு, கைசர் ஆற்றிய சேவைக்காக கெளரவ உறுப்பினராக சேர்க்கப்பட்டது.</p><p>கைசர் புறாவுக்காக ஒரு சிறப்பு கால்பட்டை உருவாக்கப்பட்டு, அதில் அதனது பெயரும் அந்தப் பிரிவின் 667 என்ற குறியீடும் பொறிக்கப்பட்டன.</p><p>ஜெர்மானிய ராணுவ அடையாள எண்ணைத் தாங்கி தன் வாழ்வைத் தொடங்கிய ஒரு புறாவுக்கு, அது ஓர் அசாதாரணமான இரண்டாவது அடையாளமாக இருந்தது.</p><p>1949 ஜனவரி 20 அன்று ஜனாதிபதி ஹாரி ட்ரூமனின் பதவியேற்பு விழாவிற்காக அது வாஷிங்டனுக்கு பயணம் செய்தது. அங்கு ஜி.ஐ. ஜோ மற்றும் ஜங்கிள் ஜோ என்ற மற்ற இரண்டு புகழ்பெற்ற ராணுவப் புறாக்களுடன், சிக்னல் கார்ப்ஸ் கண்காட்சியின் ஒரு பகுதியாக கைசர் தோன்றியது.</p><p>அதே ஆண்டு ஹாலோவீன் இரவில் ஃபோர்ட் மான்மவுத்தில் கைசர் புறா 32 வயதில் இறந்தது. அதன் பெயருக்குக் காரணமான ஜெர்மானியப் பேரரசரை விடவும், முதலாம் உலகப் போரில் பணியாற்றியதாக அறியப்பட்ட மற்ற அனைத்து புறாக்களை விடவும் கைசர் புறா அதிக காலம் வாழ்ந்திருந்தது.</p><p>அதன் ராணுவ சேவையானது, செய்திகளைக் கொண்டு செல்வதிலிருந்து அடுத்த தலைமுறை ராணுவப் புறாக்களை உருவாக்குவதற்கு அமெரிக்க ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டது.</p><p>1957-ல் அமெரிக்க ராணுவம் தனது புறா சேவையை முடிவுக்குக் கொண்டுவந்தபோது, கைசரின் வழித்தோன்றல்களான பறவைகள் பொதுமக்களுக்கு விற்கப்பட்டன.</p><p>ராணுவத்தின் புறா திட்டம் மூடப்பட்டதால் கைசரின் குடும்ப வம்சம் அழிந்துவிடவில்லை. பந்தயத்திற்காக வளர்க்கப்பட்ட பறவைகள் உட்பட, அதன் வழித்தோன்றல்கள் தனியார் புறாக்கூடுகளில் தொடர்ந்து வளர்க்கப்பட்டு வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>வாக்குறுதிகளை நிறைவேற்றாத மத்திய அரசு - செப்.5 போராட்டப் பேரணியை அறிவித்தது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி!</title><link>https://www.maalaimalar.com/news/national/central-government-fails-to-fulfill-promises-cockroach-janata-party-announces-rally-for-september-5</link><comments>https://www.maalaimalar.com/news/national/central-government-fails-to-fulfill-promises-cockroach-janata-party-announces-rally-for-september-5#comments</comments><guid isPermaLink="false">164982ca-3209-4d8c-b9e4-6ad08ed2a0d3</guid><pubDate>Mon, 24 Aug 2026 15:55:26 +0000</pubDate><atom:updated>2026-08-24T15:55:26.820Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,Centre,Protest march,Cockroach Janta Party,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,போராட்டப் பேரணி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/fec8oz44/New-Project-2026-08-24T212502.656.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வாக்குறுதிகளை நிறைவேற்றாத மத்திய அரசு - செப்.5 போராட்டப் பேரணியை அறிவித்தது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/fec8oz44/New-Project-2026-08-24T212502.656.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் உள்ள இந்திய நுழைவாயிலில் இருந்து டெல்லி காவல்துறை தலைமையகம் வரை, செப்.5ம் தேதி போராட்டப் பேரணி நடத்தவுள்ளதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது.</p><p>ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டம் வாபஸ் பெறப்படுவதற்கு வழிவகுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மத்திய அரசு தவறிவிட்டதாக குற்றம்சாட்டி செப்.5ம் தேதி இளைஞர் போராட்டப் பேரணியை அறிவித்துள்ளது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி.</p><p>இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள கரப்பான்பூச்சி ஜனதா கட்சி.,</p><p>“ஜூலை 25 அன்று இந்தியாவின் இளைஞர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை, குறிப்பாக மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீதான முதல் தகவல் அறிக்கைகளை திரும்பப் பெறுவது தொடர்பான வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய மத்திய அரசை ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ வன்மையாகக் கண்டிக்கிறது.</p><p>அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தொடர்ந்து தாமதம் செய்து வருவதாலும், அவற்றைச் செயல்படுத்தாமல் தவிர்த்து வருவதாலும், அமைதியான முறையில் மக்களைத் திரட்டும் போராட்டத்தை மீண்டும் தொடங்க CJP-யின் தேசிய செயற்குழு முடிவு செய்துள்ளது.</p><p>நீட் (NEET) தேர்வால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காவல் துறையின் அத்துமீறல்களால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தலைமையில், செப்டம்பர் 5 அன்று டெல்லியில் உள்ள இந்தியா நுழைவாயில் முதல் டெல்லி காவல் துறை தலைமையகம் வரை அமைதியான இளைஞர் பேரணியை CJP நடத்தவுள்ளது.</p><p>அரசு தான் அளித்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும். எங்கள் பொறுமையை பலவீனம் என்று தவறாகக் கருதக்கூடாது.” என தெரிவித்துள்ளது.</p><h2>அரசிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகள் என்ன?</h2><p>நீட் தேர்வு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும், போராட்டத்தில் ஈடுபட்டோர்மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்யவேண்டும், நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்ற மூன்று முக்கிய வாக்குறுதிகளை மத்திய அரசிடம் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி முன்வைத்தது. </p><p>இதில் தர்மேந்திர பிரதான் பதவி விலகம் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் மற்ற இரண்டு வாக்குறுதிகளை நிறைவேற்ற நினைவுறுத்தி இந்த போராட்டப் பேரணியை கரப்பான்பூச்சி கட்சி முன்னெடுக்கிறது. </p>]]></content:encoded></item><item><title>உலக கோப்பை ஹாக்கி: அர்ஜென்டினாவிடம் 3-5 என இந்தியா தோல்வி- அரையிறுதி வாய்ப்பை இழந்தது</title><link>https://www.maalaimalar.com/sports/india-lose-3-5-against-argentina-to-crash-out-of-hockey-world-cup-semifinal-race</link><comments>https://www.maalaimalar.com/sports/india-lose-3-5-against-argentina-to-crash-out-of-hockey-world-cup-semifinal-race#comments</comments><guid isPermaLink="false">0c27390b-54b5-40db-bfde-18188d23f073</guid><pubDate>Mon, 24 Aug 2026 15:26:41 +0000</pubDate><atom:updated>2026-08-24T15:26:41.621Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Hockey India,ஹாக்கி இந்தியா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/knknagdi/HockeyIndia0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஹாக்கி இந்தியா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/knknagdi/HockeyIndia0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதல் ஸ்டேஜில் நெதர்லாந்திடம் தோல்வியடைந்த நிலையில், அதன்பிறகு இங்கிலாந்து மற்றும் அர்ஜென்டினாவிடம் தோல்வியடைந்து இந்தியா ஏமாற்றம் அடைந்தது.</p><p>ஹாக்கி உலக கோப்பை நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் நடைபெற்று வருகிறது. ஸ்டேஜ் 2 சுற்றில் இந்தியா தனது கடைசி போட்டியில் அர்ஜென்டினாவை எதிர்கொண்டது. இதில் இந்தியா 3-5 எனத் தோல்வியடைந்தது. இதன் மூலம் அரையிறுதி வாய்ப்பை இழந்தது.</p><p>ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே இந்தியாவுக்கு அதர்ச்சி காத்திருந்தது. அர்ஜென்டினா வீரர் ஜோக்யின் தோஸ்கானி 41-வது விநாடிகளில் கோல் அடித்தார். அதன்பின் 5.53 நிமிடத்தில் நிக்கோலஸ் டெல்லா டொர்ரே கோல் அடித்தார். இந்தியாவைச் சேர்ந்த 9.12-வது நிமிடத்தில் சுக்ஜீத் சிங் முதல் கோலை பதிவு செய்தார். இதனால் முதல் காலிறுதி ஆட்டத்தில் இந்தியா 1-2 என பின்தங்கிய நிலையில் இருந்தார்.</p><p>2-வது காலிறுதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. 3-வது காலிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா ஆதிக்கம் செலுத்தியது. 32.20 நிமிடத்தில் தாமஸ் டோமென் கோல் அடித்தார். 44.40 நிமிடத்தில் தாமஸ் டோமென் மீண்டும் கோல் அடித்தார். இதனால் 3-வது காலிறுதியில் அர்ஜென்டினா 4-1 என முன்னிலைப் பெற்றது.</p><p>கடைசி காலிறுதி ஆட்டத்தில் 52.14-வது நிமிடத்தில் லூகாஸ் டோஸ்கானி கோல் அடித்தார். 57.50-வது நிமிடத்தில் சுக்ஜீத் சிங் மீண்டும் ஒரு கோல் அடிதத்தார். 59.25 நிமிடத்தில் இந்தியாவின் ஹர்திக் சிங் கோல் அடித்தார். இதனால் இந்தியா 3-5 எனத் தோல்வியடைந்தது.</p>]]></content:encoded></item><item><title>செய்தியாளர் சந்திப்புக்கு நோ சொன்ன இந்தியா... முதலில் ஓகே சொல்லி பின்னர் கதையை மாற்றிய ட்ரம்ப் - ஜி7 மாநாட்டில் நடந்த சம்பவம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/india-said-no-to-the-press-conference-trump-initially-agreed-but-later-changed-his-tune-an-incident-at-the-g7-summit</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-said-no-to-the-press-conference-trump-initially-agreed-but-later-changed-his-tune-an-incident-at-the-g7-summit#comments</comments><guid isPermaLink="false">1680b078-630d-411e-b008-81dbc1c5c689</guid><pubDate>Mon, 24 Aug 2026 15:20:31 +0000</pubDate><atom:updated>2026-08-24T15:20:31.703Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,அமெரிக்கா,pm modi,Press Meet,us,பத்திரிக்கையாளர் சந்திப்பு,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/5jftlav3/New-Project-2026-08-24T195359.627.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ செய்தியாளர் சந்திப்புக்கு நோ சொன்ன இந்தியா... முதலில் ஓகே சொல்லி பின்னர் கதையை மாற்றிய ட்ரம்ப் - ஜி7 மாநாட்டில் நடந்த சம்பவம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/5jftlav3/New-Project-2026-08-24T195359.627.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரான்சில் நடந்த ஜி7 உச்சி மாநாட்டின் போது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிபர் ட்ரம்பின் சந்திப்புக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பை தவிர்க்குமாறு அமெரிக்காவை இந்தியா கேட்டுக்கொண்டதாக இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார்.</p><p>ஆரம்பத்தில் டொனால்ட் ட்ரம்ப் இந்த கோரிக்கைக்கு ஓகே சொல்லிவிட்டு பின்னர் கிட்டதட்ட 45 நிமிடங்கள் செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். </p><h2>இந்தியாவின் கோரிக்கை</h2><p>மோடி - டிரம்ப் சந்திப்பின் போது ஊடகங்களை அனுமதிக்கலாம், ஆனால் செய்தியாளர்கள் எவ்வித கேள்விகளும் கேட்கக் கூடாது என்ற நிபந்தனையை இந்தியா முன்வைத்துள்ளது.</p><h2>முதலில் ஓகே சொல்லிய ட்ரம்ப் </h2><p>டெல்லியில் நடைபெற்ற ஊடக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட செர்ஜியோ கோர் இதுதொடர்பாக பேசியதாவது;</p><p>“செய்தியாளர் சந்திப்புக்கு முன்பு நானும் (செர்ஜியா கோர்), அதிபர் ட்ரம்பும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அவர் இந்தியா எதைப் பற்றி பேசப் போகிறார்கள் என என்னிடம் கேட்டார். நான் சில விவகாரங்கள் குறித்து அவரிடம் தெரிவித்தேன்.</p><p>அவர்களிடம் ஏதேனும் கோரிக்கைகள் உள்ளதா என்று அவர் கேட்டார். வெளியுறவு அமைச்சகம் மட்டும் ஒரு கோரிக்கையை வைத்துள்ளது. ‘ஊடகங்களை முழுமையாக அனுமதிப்போம். ஆனால் செய்தியாளர் சந்திப்பை நடத்தவேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டுள்ளனர் என தெரிவித்தேன்.</p><p>அதற்கு அவர் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, பத்திரிகையாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களின் முன்னிலையில் இருதலைவர்களின் சந்திப்பும் தொடங்கியது. மோடியும், டிரம்ப்பும் ஒருவருக்கொருவர் எதிரெதிரே அமர்ந்து தங்களது தொடக்க உரைகளை ஆற்றினர். </p><p>ஆனால் ட்ரம்பின் பேச்சு முடிந்த உடன் அவர் கேமராக்களை நோக்கித் திரும்பி, செய்தியாளர்களிடம், "ஏதேனும் கேள்விகள் உள்ளதா?" என்று கேட்டார். அதன் பிறகு அனைத்தும் சுலபமாகிவிட்டது. 45 நிமிட பத்திரிகையாளர் சந்திப்பில் எல்லாமே வெளிப்படையாகப் பேசப்பட்டன.” என தெரிவித்தார்.</p><p>இவரின் இந்த தகவல் தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகிறது. </p><h2>இந்தியா விளக்கம்</h2><p>முக்கிய தலைவர்கள் சந்திக்கும் போது, அவர்களின் பொது நிகழ்ச்சிகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை முன்கூட்டியே திட்டமிடுவது ஒரு சாதாரண தூதரக நடைமுறைதான் என்று இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><h2>ஜி7 உச்சி மாநாடு</h2><p>கிழக்கு பிரான்சில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக , ஜூன் 17 அன்று பிரதமர் மோடி, ட்ரம்பை சந்தித்தார். ஹார்முஸ் ஜலசந்தியில் வர்த்தகக் கப்பல் மீது அமெரிக்க கடற்படை நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த சந்திப்பு நடைபெற்றது. </p><p>இந்த சந்திப்பின்போது இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு குறித்து மோடி வலியுறுத்தினார். மேலும் இந்த சந்திப்பின் போதுதான் அதிபர் ட்ரம்ப், இந்தியா மீது யாரேனும் தாக்குதல் நடத்தினால், அமெரிக்கா நிச்சயம் வந்து நிற்கும். ஆனால் அப்போது மோடி பிரதமராக இருந்தால் மட்டுமே, வேறு யாராவது இருந்தால் எங்களுக்கு உறுதியாக தெரியாது என தெரிவித்திருந்தார். </p>]]></content:encoded></item><item><title>இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியில் நவீன்-உல்-ஹக்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/naveen-ul-haq-returns-to-afghanistan-side-for-india-t20i-series</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/naveen-ul-haq-returns-to-afghanistan-side-for-india-t20i-series#comments</comments><guid isPermaLink="false">3328f23b-7ed0-4a80-b283-4aa4c945dd9a</guid><pubDate>Mon, 24 Aug 2026 14:51:02 +0000</pubDate><atom:updated>2026-08-24T14:51:02.842Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நவீன் உல் ஹக்,naveen ul haq,IND Vs AFG</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/szkglkm2/NaveenUlHaq.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நவீன் உல் ஹக்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/szkglkm2/NaveenUlHaq.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆப்கானிஸ்தான் அணி டெல்லியில் இந்தியாவுக்கு எதிராக செப்டம்பர் 13, 15 மற்றும் 17-ந்தேதிகளில் டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது.</p><p>ஆப்கானிஸ்தான் அணி அடுத்த மாதம் 2-வது வாரத்தில் ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கான 15 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இப்ராகிம் ஜத்ரன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டு வருடத்திற்குப் பிறகு நவீன்-உல்-ஹக் அணியில் இடம் பிடித்துள்ளார். இவர் இறுதியாக கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாடி இருந்தார்.</p><p>ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக விளையாடினார். அதே வருடம் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் விளையாடினார்.</p><h2>இந்திய தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி:-</h2><p>இப்ராகிம் ஜத்ரன் (கேப்டன்), ரஹ்மதுல்லா குர்பாஸ், நூர் அல் ரஹ்மான், சேதிக்குல்லா அடல், தார்விஷ் ரசூலி, அஸ்மதுல்லா ஓமர்சாய், குல்பதின் நைப், முகமது நபி, ரஷித் கான், நங்கேயலியா கரோட், நூர் அகமது, முஜிப் உர் ரஹ்மான், பஸல்ஹாக் பரூக்கி, அப்துல்லா அகமதுசாய், நவீன் உல்ஹக்.</p><p>டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் செப்டம்பர் 13, 15 மற்றும் 17-ந்தேதிகளில் போட்டி நடைபெற இருக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்காவில் பீட்சா விற்பனை செய்து வந்த இந்திய இளைஞர் சுட்டுக்கொலை</title><link>https://www.maalaimalar.com/news/world/indian-pizza-delivery-worker-shot-dead-in-us-punjabi-group-condemns</link><comments>https://www.maalaimalar.com/news/world/indian-pizza-delivery-worker-shot-dead-in-us-punjabi-group-condemns#comments</comments><guid isPermaLink="false">723463c6-7e92-40d1-b6e6-2b9ac9c05700</guid><pubDate>Mon, 24 Aug 2026 14:48:14 +0000</pubDate><atom:updated>2026-08-24T14:48:14.677Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,America,பஞ்சாப்,Punjab,gurdeep singh,குர்தீப் சிங்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/ca5o3tdu/Untitled-design-14.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ US Punjabi youth shot dead]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/ca5o3tdu/Untitled-design-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவில் அடையாளம் தெரியாத நபரால் 27 வயதான பஞ்சாபி இளைஞர் குர்தீப் சிங் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அமெரிக்காவில் உள்ள வட அமெரிக்க பஞ்சாபி சங்கம் கண்டம் தெரிவித்துள்ளது.</p><h3><strong>பஞ்சாப் இளைஞர்</strong></h3><p>பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த குர்தீப் சிங் என்பவர், கடன் வாங்கி அமெரிக்காவுக்கு வந்து சிறிய வேலைகளை செய்து தனது பெற்றோர்களுக்கு பணம் அனுப்பி வந்துள்ளார்.</p><p>அமெரிக்காவில் 13 ஆண்டுகளாக வசித்து வந்த குர்தீப் சிங், ஆகஸ்ட் 21-ம் தேதி இரவு ஏற்பட்ட அடையாளம் தெரியாத நபருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து சுட்டுக் கொல்லப்பட்டார். குயின்ஸ் பகுதியைச் சேர்ந்த அவர், ஈஸ்ட் நியூயார்க் சுற்றுப் புறத்தில் உள்ள ஸ்டான்லி அவென்யூ அருகே பீட்சா விநியோகித்து கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.</p><p>இரவு 10 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூட்டை அடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு காவல்துறை அதிகாரிகள் சென்றபோது, மார்பில் சுடப்பட்ட நிலையில் குர்தீப் சிங் இருந்துள்ளார்.</p><p>அப்போது அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.</p><h3><strong>சிசிடிவி காட்சிகள் ஆய்வு</strong></h3><p>இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தபோது, அந்த தெருவில் இருவர் சண்டையிடுவதும் பின்னர் அந்த மர்ம நபர் குர்தீப் சிங் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு, காரில் ஏறி தப்பிச் செல்வது பதிவாகியுள்ளது.</p><p>இந்த சம்பவம் குறித்து நியூயார்க் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொள்ளை முயற்சி ஒன்றின்போது இந்த துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என தெரிவித்தனர். இதையடுத்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடிய மர்ம நபரை நியூயார்க் போலீசார் தேடிவருகின்றனர்.</p><h3><strong>குர்தீப் சிங் தந்தை</strong></h3><p>அமெரிக்காவில் குர்தீப் சிங் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து அவரின் தந்தை பியாரா லால் கூறுகையில், அவர் அமெரிக்காவுக்கு பயணம் செய்வதற்காக கணிசமாக கடன் வாங்கியதாகவும், ஆனால் அங்கு சென்றடைந்த பிறகு பெரும் சிரமங்களை எதிர்கொண்டதாகவும் கூறினார்.</p><p>மேலும் தனது குடும்பத்திற்கு ஒரு சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதற்காக அவர் இரவும் பகலும் வேலை பார்த்ததாக அவரின் தந்தை குறிப்பிட்டார்.</p><p>இதையடுத்து அவரது உடலை விரைவில் இந்தியாவிற்கு கொண்டுவர ஏற்பாடு செய்யுமாறு குடும்பத்தினர் அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.</p><p>மேலும், குற்றம் சாட்டப்பட்டவரை விரைவாகக் கைது செய்யவும், அவருக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படுவதை உறுதி செய்யவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அமெரிக்க அதிகாரிகளை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p><h3><strong>வட அமெரிக்க பஞ்சாப் சங்கம்</strong></h3><p>இந்தச் கொலை சம்பவம் குறித்து வட அமெரிக்க பஞ்சாபி சங்கத்தின் (NAPA) நிர்வாக இயக்குநர் சத்னம் சிங் சஹால் கூறுகையில், “ஒவ்வொரு முறையும் ஒரு இளம் பஞ்சாபியோ அல்லது சீக்கியரோ கொல்லப்படும்போது, ஒரு குடும்பம் சிதைக்கப்படுகிறது.</p><p>தொடர்ச்சியான வன்முறையை, சமூகம் சகித்துக்கொண்டு வாழப் பழகிக்கொள்ளும் ஒரு விஷயமாக நாம் அனுமதிக்க முடியாது. பெருகிவரும் பாதிக்கப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்படும் மற்றொரு பெயராக குர்தீப் சிங் மாறிவிடக்கூடாது. போதும், இதுவே போதும்,” என்று அவர் கூறினார்.</p><p>மேலும் வட அமெரிக்க பஞ்சாபி சங்கம், குர்தீப் சிங்கின் கொலைக்கான சரியான நோக்கத்தை கண்டறியுமாறு புலனாய்வாளர்களிடம் கேட்டுக்கொண்டதோடு, விசாரணை முடிவதற்குள் எந்தவொரு முடிவிற்கும் வர வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.</p><h3><strong>இந்திய துணை தூதரகம்</strong></h3><p>இந்தியர் மீதா+ன இந்த தாக்குதல் குறித்து இந்தியத் துணைத் தூதரகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “நியூயார்க்கின் புரூக்ளின் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், இந்திய குடிமகனான குர்தீப் சிங் மரணம் அடைந்ததை அறிந்து நாங்கள் வருத்தம் அடைகிறோம்.</p><p>இந்த இக்கட்டான நேரத்தில் எங்கள் எண்ணங்களும் ஆழ்ந்த இரங்கல்களும் அவரது குடும்பத்தினருடன் உள்ளன. துணைத் தூதரகம் அவரது குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதுடன், சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது” என்று பதிவிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரூ.30,000 கோடி இணையவழி பண மோசடி புகார்: இரண்டு பேரை கைது செய்த அமலாக்கத்துறை</title><link>https://www.maalaimalar.com/news/national/rs-30000-crore-online-fraud-case-two-arrested-by-ed</link><comments>https://www.maalaimalar.com/news/national/rs-30000-crore-online-fraud-case-two-arrested-by-ed#comments</comments><guid isPermaLink="false">cd0b9387-c318-4c96-92a0-99f5afdf3649</guid><pubDate>Mon, 24 Aug 2026 14:42:25 +0000</pubDate><atom:updated>2026-08-24T14:42:25.220Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Enforcement Directorate,சைபர் மோசடி,cyber fraud,online scam,இணையவழி மோசடி,அமலாக்கத்துறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/j5rsucrf/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B9%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%82%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AF%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rs 30,000 Crore Online Fraud]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/j5rsucrf/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B9%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%82%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AF%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் தேசிய அளவில் நடந்த இணையவழி பணமோசடி புகாரில், ரூ. 30,000 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்ததாக இரண்டு நபர்களை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.</p><p>கோவாவை சேர்ந்த பெண் ஒருவர் இணையவழி மோசடி நபர்களால் ஏமாற்றப்பட்டு, மே முதல் ஜூன் 2025 வரையிலான காலகட்டத்தில் ரூ.2.60 இழந்ததாக கூறிய புகாரை தொடர்ந்து, ஃபஹீம் மொய்ன் ஹூசைன் சையத் மற்றும் நயீம் முயீன் சையத் ஆகியோர்களை மும்பையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.</p><h3><strong>அமலாக்கத்துறை நடவடிக்கை</strong></h3><p>தேசிய அளவில் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 300-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட நபர்கள் அளித்த புகார் மற்றும் 150-160 முதல் தகவல் அறிக்கைகளில் (FIR) அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.</p><p>இந்த சைபர் மோசடி கும்பல், ரூ.27,000 கோடி மதிப்பிலான வங்கி பரிவர்த்தனைகளையும், ரூ.3,000 கோடி மதிப்பிலான ரொக்க பரிவர்த்தனைகளையும் செய்திருக்க வாய்ப்புள்ளதாக புகார்கள் எழுந்தன.</p><p>இந்த வழக்கில், அமலாக்கத்துறை கடந்த ஜூலை மாதம் கோவாவிலும் மும்பையிலும் இரண்டு கட்டங்களாக சோதனைகளை நடத்தியது. கடைசியாக ஆகஸ்ட் 21 அன்று நடத்தப்பட்ட சோதனையில், மோசடி நபர்களிடம் இருந்த சுமார் ரூ.3.25 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.</p><p>இணையவழி மோசடி மூலம் பணத்தை இழந்தவர்களின் கணக்குகளை ஆராய்ந்ததில், சம்பந்தப்பட்ட போலி மற்றும் ஏமாற்று நிறுவனங்களில், ஓட்டுநர்களும் ஊழியர்களும் ஒற்றை அறை குடியிருப்புகளில் இயக்குநர்களாக வசித்து வந்தது தெரியவந்தது.</p><h3><strong>கைது செய்யப்பட்டவர்கள்</strong></h3><p>இந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஃபஹீம் மொய்ன் மற்றும் நயீம் முயீன் ஆகியோர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாதிக்கப்பட்டவரிடம் இருந்து பறிக்கப்பட்ட பணம் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு, ரொக்கமாக எடுக்கப்பட்டு, பின்னர் இந்திய ரிசர்வ் வங்கியால் உரிமம் பெற்ற பணமாற்று நிறுவனங்கள் மூலம் வெளிநாட்டு நாணயமாக மாற்றப்பட்டது தெரியவந்தது.</p><p>மத்திய நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறையின் கீழ் செயல்படும் அமலாக்கத்துறை முகமை, அவர்களை மும்பையில் உள்ள பணமோசடி தடுப்புச் சட்ட (PMLA) சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.</p><h3><strong>கோவா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்</strong></h3><p>அதனைத் தொடர்ந்து, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள கோவாவிற்கு அவர்களை அழைத்துச் செல்வதற்காக, அவர்களின் இடைக்காலக் காவலை அமலாக்கத்துறைக்கு (ED) நீதிமன்றம் ஒப்படைத்தது.</p><p>இதையடுத்து அவர்களைக் காவலில் எடுத்து விசாரிக்க, கோவாவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அவர்களை அதிகாரிகள் ஆஜர்படுத்த உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தேனியில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்: அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/memorial-hall-for-director-bharathiraja-in-theni-minister-rajmohan-announces</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/memorial-hall-for-director-bharathiraja-in-theni-minister-rajmohan-announces#comments</comments><guid isPermaLink="false">de436e7c-760f-4907-940a-8c0b0a9a4547</guid><pubDate>Mon, 24 Aug 2026 14:19:14 +0000</pubDate><atom:updated>2026-08-24T14:19:14.602Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாரதிராஜா,BharathiRaja,தேனி,Theni,TNAssembly,சட்டசபை கூட்டத் தொடர்,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/o5sptjhv/barathi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bharathiraja-Minister Rajmohan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/o5sptjhv/barathi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ் திரையுலகின் இயக்குநர் இமயம் பாரதிராஜாவின், திரைத்துறை பங்களிப்பையும் கலைச் சேவையையும் போற்றும் வகையில், அவரது சொந்த மாவட்டமான தேனியில் அரசு சார்பில் பிரம்மாண்ட மணிமண்டபம் கட்டப்படும் என்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.</p><h2>ரூ.<strong>2.50 கோடியில் அமையவுள்ள நினைவுச் சி</strong>ன்னம்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/topnews/monsoon-precaution-separate-wet-and-dry-waste-says-minister-rajmohan">சட்டசபை</a>யில் கேள்வி நேரத்தின் போது எழுப்பப்பட்ட வினாக்களுக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், தமிழ் சினிமா வரலாற்றில் கிராமத்து வாழ்வியலையும் மனித உறவுகளையும் தத்ரூபமாக காட்சிப்படுத்தியதில் இயக்குநர் பாரதிராஜாவிற்கு முக்கியப் பங்குண்டு எனக் குறிப்பிட்டார். அவரது கலை சாதனைகளை என்றென்றும் நினைவுகூரும் வகையில், தேனி மாவட்டத்தில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் அதிநவீன அம்சங்களுடன் கூடிய நினைவு மணிமண்டபம் அமைக்க அரசாணை வெளியீடு மற்றும் முதற்கட்ட பணிகள் விரைவுபடுத்தப்படும் என உறுதியளித்தார்.</p><p>இயக்குநர் பாரதிராஜாவிற்கு அவரது சொந்த மண் அமைந்த தேனியிலேயே மணிமண்டபம் கட்டப்படும் என்ற இச்செய்தி, சினிமா ரசிகர்கள், கலை உலகத்தினர் மற்றும் தென் தமிழக மக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பாரதிராஜாவின் உருவச்சிலை, அவரது திரைப்பயண சாதனைகளை விளக்கும் புகைப்படக் கூடம் மற்றும் கலைப் பொருட்கள் இந்த மணிமண்டபத்தில் இடம்பெறவுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>‘தமிழ்நாட்டிற்கு கருப்பு நாள்’ - பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடல் குறித்து டி.ஆர்.பி.ராஜா கருத்து!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/a-black-day-for-tamil-nadu-trb-rajaa-comments-on-the-dropping-of-the-parandur-airport-project</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/a-black-day-for-tamil-nadu-trb-rajaa-comments-on-the-dropping-of-the-parandur-airport-project#comments</comments><guid isPermaLink="false">c7ffd29e-f868-4a05-943e-6743b93a1819</guid><pubDate>Mon, 24 Aug 2026 14:16:40 +0000</pubDate><atom:updated>2026-08-24T14:16:40.276Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Parandur Airport,பரந்தூர் விமான நிலையம்,டிஆர்பி ராஜா,TRB Rajaa,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/4rxdgyy2/New-Project-2026-08-24T194619.561.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘தமிழ்நாட்டிற்கு கருப்பு நாள்’ - பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடல் குறித்து டி.ஆர்.பி.ராஜா கருத்து!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/4rxdgyy2/New-Project-2026-08-24T194619.561.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பரந்தூரில் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டது தொடர்பாக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்.,</p><h2>திமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சி</h2><p>தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு அதன் உட்கட்டமைப்பு மிக மிக அவசியம். தமிழ்நாடு காணாத ஒரு தொழில் வளர்ச்சியை, இந்தியாவில் எந்த மாநிலமும் காணாத ஒரு தொழில் வளர்ச்சியை கடந்த ஐந்து ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு கண்டது. இந்தியா வியந்து பார்த்தது. “நம்பர் ஒன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்” என்று இந்தியாவே வியந்து பார்த்தது.</p><p>தமிழ்நாடு எப்படி இந்த வளர்ச்சி எல்லாம் கொடுக்கிறது என்று நம்மிடம் கற்றுக்கொண்டு, மற்ற மாநிலங்கள் எல்லாம் அதை செயல்படுத்தத் துவங்கினார்கள். அதற்குக் காரணம் துரிதமான திட்டமிடல், சரியான திட்டமிடல், தெளிவு எல்லாமே. அதைத் தாண்டி உள்கட்டமைப்பில் சாலைகள், துறைமுகங்கள், போக்குவரத்து வசமிகள் எல்லாம் சரியான நேரத்தில் முடிவெடுக்கப்பட்டு, திட்டங்கள் வகுக்கப்பட்டன.</p><p>அதில் முக்கியமான ஒரு திட்டம்  துறைமுக இணைப்பு. அதேபோல கப்பல் போக்குவரத்தும், விமானப் போக்குவரத்தும், தரைவழிப் போக்குவரத்தும், அனைத்தும் சரியாக இருந்தால்தான் தயாரிக்கப்படும் பொருட்கள் எல்லாம் சரியான நேரத்தில், உரிய நேரத்தில் துறைமுகத்தை சென்றடையும்; உலகம் எங்கும் அது சென்றடையும். அந்த உள்கட்டமைப்பு மிகச் சரியாக இருக்கவேண்டும் என்பதில் மு.க.ஸ்டாலின் தெளிவாக இருந்தார்.</p><h2>தமிழ்நாட்டிற்கு கருப்பு நாள்</h2><p>இன்று தமிழ்நாட்டிற்கு கருப்பு நாள் என்றுதான் சொல்லவேண்டும். பொருளாதார வல்லுனர்கள், தொழில்நுட்ப வல்லுனர்களிடம் கேட்டு, பிறகு தேர்வு செய்யப்பட்ட பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை இன்று த.வெ.க அரசு கைவிட்டுள்ளது. இது ஒட்டுமொத்த வளர்ச்சி, சுற்றுலாத்துறைக்கு என மிகப்பெரிய அடி. </p><p>ஒரு திட்டத்தைக் கொண்டு வருவது எவ்வளவு கடினம் என்பது அரசு இயந்திரத்தில் பணிபுரிந்தவர்களுக்கு, ஏன் படித்த இளைஞர்கள் அனைவருக்கும் நன்றாகப் புரியும். திட்டத்தைக் கொண்டு வருவது சாதாரண விஷயம் இல்ல.</p><h2>மீனம்பாக்கம் விமான நிலையம் நமது கட்டுப்பாட்டில் இல்லை</h2><p>மீனம்பாக்கம் விமான நிலையம் மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் நிலையம். மாநில அரசின் கட்டுப்பாடு அங்கு இருக்காது. ஆனால் பரந்தூரில் புதிய விமான நிலையம் வந்திருந்தால், அது முழுமையாக மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கும். ஒட்டுமொத்த தமிழ்நாடு அரசின் சொத்தாக இருந்திருக்கும்.</p><h2>அரசியல் வேண்டாம்</h2><p>பல லட்சம் பேருக்கு, கோடிக்கணக்கான மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு, பெண்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய இந்தத் துறையில் உங்கள் அரசியலைப் புகுத்தாதீர்கள். நீங்கள் இன்று அரசியல் செய்ய நினைத்து, இன்று தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய, மிகப்பெரிய கேடை இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறீர்கள்.</p><p>இந்த முடிவை மீண்டும் மறுபரிசீலனை செய்யவேண்டும். சிந்தனையே இல்லாமல், தொலைநோக்குப் பார்வை இல்லாமல் பரந்தூர் திட்டத்தை கைவிட்டது மிக மிக மிக தவறான ஒரு செயல். இதற்கு தமிழ்நாடு மக்கள் நிச்சயமாக எதிர்காலத்தில் உங்கள் மீது மிகப்பெரிய ஒரு பழியை நீங்களே சுமத்திக் கொண்டிருக்கிறீர்கள்.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>காவிரி நீர் பங்கீடு வழக்கு: மேலாண்மை வாரியத்தை அணுக தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/supreme-court-tells-tamil-nadu-to-move-cauvery-water-management-board</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/supreme-court-tells-tamil-nadu-to-move-cauvery-water-management-board#comments</comments><guid isPermaLink="false">7471b8a5-4a96-454a-a14a-0120892c91ba</guid><pubDate>Mon, 24 Aug 2026 13:54:34 +0000</pubDate><atom:updated>2026-08-24T13:54:34.548Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,தமிழ்நாடு அரசு,Supreme Court,Tamil Nadu government,Karnataka Government,காவிரி நீர்,Cauvery water,உச்சநீதிமன்றம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/qn38gn9f/sc.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Cauvery water-Supreme Court   ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/qn38gn9f/sc.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்திற்குச் சேர வேண்டிய விகிதாச்சாரப் பங்கு நீர் முழுமையாக வந்து சேரவில்லை என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இது குறித்து காவிரி நீர் மேலாண்மை வாரியத்திடம் (CWMA) முறையிட்டுத் தீர்வு காணுமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.</p><h2>தமிழ<strong>க அரசின் மனு</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/news/national/what-is-karnatakas-problem-in-releasing-tamil-nadus-due-water-asks-supreme-court">காவிரி நீர் </a>ஒழுங்காற்றுக்குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை வாரியம் பிறப்பித்த உத்தரவுகளின்படி, தினசரி 3,500 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு மொத்தம் 4.536 டி.எம்.சி நீரை கர்நாடகா உடனடியாகத் திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழக அரசு ஆகஸ்ட் 3-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.</p><p>கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து உத்தரவிட்டபடி தண்ணீர் திறந்துவிடப்படவில்லை என்றும், இதனால் டெல்டா மாவட்டங்களில் விவசாயப் பணிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் தமிழக அரசு குற்றம்சாட்டியது. மேலும், திமுக விவசாயி அணி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுவிலும், பிலிகுண்டுலு எல்லையில் நீர் வரத்தை தினசரி அடிப்படையில் கண்காணித்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க மேலாண்மை வாரியத்திற்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டது.</p><p>இவ்வழக்கு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, காவிரி நீர் மேலாண்மை வாரியம் பிறப்பித்த உத்தரவுகளின்படி கர்நாடக அரசு ஏற்கனவே தண்ணீரைத் திறந்துவிட்டுள்ளதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.</p><p>இதற்குப் பதிலளித்த தமிழக அரசுத் தரப்பு மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், திங்கள்கிழமை காலை நிலவரப்படி வாரியம் உத்தரவிட்ட நீர் வந்து சேர்ந்திருந்தாலும், அது தற்காலிகமானது என்றும், பருவமழை மற்றும் ஒட்டுமொத்தப் பங்கை ஒப்பீட்டளவில் கணக்கிடும்போது தமிழகத்திற்குச் சேர வேண்டிய விகிதாச்சார பங்கு நீர் இன்னும் முழுமையாக வழங்கப்படவில்லை என்றும் வாதிட்டார்.</p><p>இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நீர் பங்கீட்டு அளவீடு மற்றும் பற்றாக்குறை குறித்த முறையீடுகளை காவிரி நீர் மேலாண்மை வாரியத்தின் முன்னிலையிலேயே முன்வைத்து நிவாரணம் பெறுமாறு தமிழகத்திற்கு அறிவுறுத்தினர். கர்நாடகா அரசு வெளியிடும் நீரின் அளவு மற்றும் பிலிகுண்டுலு எல்லையை அடையும் நீரின் அளவீடுகள் தொடர்பான புதிய நிலை அறிக்கையை ஆய்வு செய்ய உள்ளதாகத் தெரிவித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணையை வரும் 31-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.</p>]]></content:encoded></item><item><title>6000 உதவி பேராசிரியர்கள் நியமனம்...விவசாய குடும்ப மாணவர்களுக்கு கல்லூரி கட்டணத்தில் விலக்கு - உயர்கல்வித்துறையின் முக்கிய அறிவிப்புகள்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/appointment-of-6000-assistant-professors-college-fee-waivers-for-students-from-farming-families-key-announcements-from-the-higher-education-department</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/appointment-of-6000-assistant-professors-college-fee-waivers-for-students-from-farming-families-key-announcements-from-the-higher-education-department#comments</comments><guid isPermaLink="false">f24776da-c475-4fca-9239-882ca0199eb8</guid><pubDate>Mon, 24 Aug 2026 13:47:01 +0000</pubDate><atom:updated>2026-08-24T13:47:01.573Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உயர்கல்வித்துறை,Higher Education Department,அமைச்சர் விஸ்வநாதன்,minister viswanathan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/6bfp3ily/New-Project-2026-08-24T191633.377.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 6000 உதவி பேராசிரியர்கள் நியமனம்...விவசாய குடும்ப மாணவர்களுக்கு கல்லூரி கட்டணத்தில் விலக்கு - உயர்கல்வித்துறையின் முக்கிய அறிவிப்புகள்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/6bfp3ily/New-Project-2026-08-24T191633.377.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பி. விஸ்வநாதன் சட்டப்பேரவையில் இன்று பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். </p><p>சட்டமன்றத்தில் நடைபெற்ற உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது அவர் வெளியிட்ட முதன்மையான அறிவிப்புகள்;</p><h2>ஆசிரியர்களுக்கான அறிவிப்புகள்</h2><ul><li><p>அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 2021-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசாணை எண்.5-இன் அடிப்படையிலும், அரசு மற்றும் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் உதவிபெறும் பலவகை கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 2020-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசாணை எண்.19 மற்றும் 20-இன் அடிப்படையிலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட CAS திட்டம், இது தொடர்பான பல்வேறு தீர்ப்புகளை முறையாக நீதிமன்ற ஆய்வு செய்து, 2026 செப்டம்பர் 1-ம் தேதி முதல் நிதி பயன் பெறும் வகையில் செயல்படுத்தப்படும்.</p></li><li><p>அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் அரசு பல பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் 6,000 உதவி பேராசிரியர்கள் மூன்று கட்டங்களாக நியமிக்கப்படுவார்கள்.</p></li><li><p>அரசு கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களின் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.30,000/-லிருந்து ரூ.35,000/-ஆகவும், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் பணிபுரிபவர்களின் தொகுப்பூதியம் ரூ.25,000/-லிருந்து ரூ.30,000/- ஆகவும் உயர்த்தப்படும்.</p></li></ul><h2>மாணவர்களுக்கான அறிவிப்புகள்</h2><ul><li><p>மாணாக்கர்கள் உயர்கல்வியைத் தடையின்றி தொடர்வதற்காக, 20 லட்சம் ரூபாய் வரையிலான பிணையற்ற கல்விக் கடன் வழங்க 'கல்வி உத்தரவாதத் திட்டம்' (Education Guarantee Scheme) செயல்படுத்தப்படும். இதற்கென தொகுப்பு நிதி உருவாக்கப்படும்.  இத்திட்டம் 2026-27ஆம் கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்படும்.</p></li><li><p>செயற்கைக்கோள் வடிவமைக்கும் திட்டத்திற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த பொறியியல் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 10 திட்டங்களுக்கு ரூ.5 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.50 இலட்சம் நிதியுதவி வழங்கப்படும்.</p></li><li><p>தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தும் பொருட்டு தமிழ்நாட்டிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களில் ஜெர்மன் மற்றும் ஜப்பானிய மொழிப் பயிற்சி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p></li></ul><ul><li><p>அரசு கலை மற்றும் கல்லூரிகளில் அறிவியல் பயின்று, அடிப்படை அறிவியல் படிப்புகளைத் தேர்வு செய்து, முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்வாதாரச் செலவுகளுக்கு நிதியுதவி வழங்கப்படும். இதற்காக ரூ.40 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p></li><li><p>உயர்கல்வி பயிலும் திருநர் மாணாக்கர்களின் கல்வி, வாழ்வாதாரம் மற்றும் மருத்துவச் செலவுகளுக்காக, அரசு உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் 50 திருநர் மாணாக்கர்களுக்கு தலா ரூ.2 இலட்சம் நிதியுதவி வழங்கப்படும். இதற்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p></li></ul><ul><li><p>ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த முதல் தலைமுறை மாணாக்கர்களுக்கு முழுமையான கட்டண விலக்கு வழங்கப்படும்.</p></li><li><p>விவசாய நிலம் இரண்டு ஏக்கருக்கும் குறைவாக உள்ள விவசாய குடும்பங்களைச் சேர்ந்த மாணாக்கர்கள், அரசு கல்லூரிகள்/அரசு பல்கலைக் கழகங்களில் படிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு முழு கல்விகட்டணம் விலக்கு அளிக்கப்படும்.</p></li></ul><h2>கல்வி நிறுவனங்கள் மேம்பாடு மற்றும் பிற அறிவிப்புகள்</h2><ul><li><p>உயர்கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாநில உருது அகாடமியில் உருது மொழி மேம்பாட்டிற்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p></li><li><p>தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் பழமையான ஆவணங்களின் மின்னுருவாக்கம் மற்றும் பாதுகாப்பு திட்டத்திற்கென 2026-27 முதல் ஐந்தாண்டுகளுக்கு மொத்தம் ரூ.31.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p></li><li><p>உயர்கல்வித் துறையின் பணியாளர்கள், அரசு கல்லூரி முதல்வர்கள் உள்ளிட்ட 500 அலுவலர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்காக ரூ.40 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p></li></ul><ul><li><p>அடிப்படை அறிவியல் பாடங்களில் சிறப்புமிக்க கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவுவதற்கான ஒரு தனிச்சட்டம் இயற்றப்படும்.</p></li><li><p>தமிழ்நாட்டிற்கென தனித்துவமான அறிவியல் மற்றும்  தொழில்நுட்பக் கொள்கை உருவாக்கப்படும்.</p></li><li><p>செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கணினியியல், உயிரித் தொழில்நுட்பம், காலநிலைத் தொழில்நுட்பம், விண்வெளித் தொழில்நுட்பம் மற்றும் இணையப் பாதுகாப்பு போன்ற வளர்ந்து வரும் துறைகளில் பட்டப்படிப்புகளை வழங்கும் வகையில், “பெரியார் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான நிறுவனம் (PIET)" நிறுவப்படும்.</p></li><li><p>அரசு கல்லூரிகளின் ஆய்வக நுகர்பொருட்களின் தேவைகளுக்காக, 270 அரசு கல்லூரிகளுக்கு ரூ.8.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p></li></ul><ul><li><p>தமிழ்நாட்டில் உள்ள 130 நிலை || (Grade II) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 260 ஊடாடும் திறன் பலகைகள் (Interactive Smart Boards) வழங்க ரூ.5.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p></li><li><p>அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்குத் தேவையான தளவாடங்கள் வழங்க ரூ.36.26 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p></li><li><p>அரசு கல்வி நிறுவனங்களின் கல்விசார் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் (நிலை - 2) 2026-27 முதல் ஐந்தாண்டுகளில் செயல்படுத்தப்படும். இதற்கென ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p></li></ul><ul><li><p>2026-27ஆம் ஆண்டில், கூடலூர், சிவகாசி, ஒரத்தநாடு மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் நிலை 2-லிருந்து நிலை 1-ஆக தரம் உயர்த்தப்படும்.</p></li><li><p>2026-27 ஆம் ஆண்டில் NAAC அங்கீகாரம் பெற்ற 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தன்னாட்சி கல்லூரிகளாகத் தரம் உயர்த்தப்படும். இதற்காக ரூபாய் 20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p></li></ul>]]></content:encoded></item><item><title>வாகனங்களின் ஹெட்லைட்டுக்கான விதிகளை கடுமையாக்கும் மத்திய அரசு</title><link>https://www.maalaimalar.com/news/national/govt-to-tighten-vehicle-lighting-rules-low-beam-only-bikes-reduced-headlamp-glare</link><comments>https://www.maalaimalar.com/news/national/govt-to-tighten-vehicle-lighting-rules-low-beam-only-bikes-reduced-headlamp-glare#comments</comments><guid isPermaLink="false">ea8d014a-cda2-4417-8e24-ce97080a4526</guid><pubDate>Mon, 24 Aug 2026 13:38:25 +0000</pubDate><atom:updated>2026-08-24T13:38:25.834Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords></media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/15bvr98s/HeadLight0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வாகன ஹெட்லைட்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/15bvr98s/HeadLight0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சாலைகளில் இரவு நேர பயணத்தின்போது விபத்துகளை தடுக்கும் வகையில் ஹெட்லைட் முறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர மத்திய மோட்டார் வாகனத்துறை முடிவு செய்துள்ளது.</p><p>இருசக்கர வாகனங்களில் உள்ள தானியங்கி முகப்பு விளக்குகள் (automatic headlamps) இனி பாஸிங் பீம் (குறைந்த ஒளி வீச்சு அல்லது Low-beam) முறையில் மட்டுமே செயல்படும் வகையில் மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளன. மேலும், இரவு நேரங்களிலும் மோசமான வானிலையிலும் வாகனங்கள் தெளிவாகத் தெரியும் வகையில், பேருந்துகள் மற்றும் பிற கனரக வாகனங்களில் தரமான பிரதிபலிப்பு டேப்கள் (reflective tapes) பயன்படுத்துவது கட்டாயமாக்கப்படவுள்ளது.</p><p>அதேவேளையில், மற்ற வாகன ஓட்டிகளின் பார்வையை மறைக்கும் அல்லது அவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையிலான அதிக செறிவு கொண்ட முகப்பு விளக்குகளின் பயன்பாடும் அனைத்து வகையான வாகனங்களிலும் கட்டுப்படுத்தப்படவுள்ளது.</p><p>மத்திய மோட்டார் வாகன விதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பாக சாலைப் போக்குவரத்து அமைச்சகம் இம்மாற்றங்களைப் முன்மொழிந்துள்ளது. இந்த புதிய பாதுகாப்பு விதிமுறைகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் அமலுக்கு வரவுள்ளன. </p><p>'லோ பீம்' முறையைப் பயன்படுத்துவதன் அவசியத்தை ஓட்டுநர்களுக்கு உணர்த்தவும், அவர்களை அதைப் பின்பற்றச் செய்யவும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எதிர்பார்த்த பலனைத் தராத நிலையில், வாகனத் தரநிலைகளில் இத்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.</p><p>தானியங்கி முகப்பு விளக்கு தொடர்பான இந்த விதிமுறைகள் புதிய இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள வாகனங்களுக்குப் பொருந்தாது. தற்போதுள்ள தானியங்கி முகப்பு விளக்கு (AHO) அமைப்பானது, வாகனத்தின் அமைப்பைப் பொறுத்து 'லோ பீம்' அல்லது 'ஹை பீம்' (அதிக ஒளி வீச்சு) ஆகிய இரண்டிலும் செயல்படக்கூடியது. ஆனால், முன்மொழியப்பட்ட புதிய விதியின்படி, இந்த தானியங்கி அமைப்பு செயல்படும்போது முகப்பு விளக்கு 'லோ பீம்' முறையில் மட்டுமே எரிய வேண்டும்.</p><p>அதிக செறிவு கொண்ட முகப்பு விளக்குகளைப் பொறுத்தவரை, இருசக்கர வாகனங்களுக்கான அதிகபட்ச ஒளிச் செறிவு வரம்பு 1.5 லட்சம் கேண்டெலா (cd - ஒளிச் செறிவின் அடிப்படை அலகு) என்பதிலிருந்து 1 லட்சம் cd-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.</p><p>நான்கு சக்கர வாகனங்களுக்கான (கார்கள்) அதிகபட்ச ஒளிச் செறிவு வரம்பு 2.25 லட்சம் cd-லிருந்து 1.5 லட்சம் cd-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.</p><p>ஆய்வுகளின்படி, அதிக வண்ண வெப்பநிலை (colour temperature) கொண்ட முகப்பு விளக்குகள் மற்றும் முன்பக்க மூடுபனி விளக்குகளிலிருந்து (fog lamps) வெளிப்படும் வெண்மையான ஒளி சாலைப் பயனாளர்களுக்குக் கடுமையான கண் கூச்சலையும் (glare), அசௌகரியத்தையும், பார்வைத்திறன் குறைபாட்டையும் ஏற்படுத்துகிறது. இப்பிரச்சினையைச் சரிசெய்ய, அதிகபட்ச வண்ண வெப்பநிலை 6,500 கெல்வின் (K) ஆகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>மேலும், மெயின் பீம் (முக்கிய ஒளி வீச்சு) முகப்பு விளக்குகளைப் பொருத்தும் உயரமானது, 'பாஸிங் பீம்' முகப்பு விளக்குகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட உயரத்திற்கு இணையாக இருக்க வேண்டும் என்றும் முன்மொழியப்பட்டுள்ளது. இந்தியாவில் இரவு நேர சாலை விபத்துகளுக்கு முக்கியக் காரணங்களில் ஒன்றைச் சரிசெய்வதே இந்த நடவடிக்கைகளின் நோக்கமாகும். நகர்ப்புறங்களில் ஓட்டுநர்கள் 'ஹை பீம்' முறையில் முகப்பு விளக்குகளைப் பயன்படுத்துவதால், எதிரே வரும் வாகன ஓட்டிகளின் பார்வை தற்காலிகமாக மறைக்கப்பட்டு, விபத்து அபாயம் அதிகரிக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>பருவமழை முன்னெச்சரிக்கை: மக்கும், மக்காத குப்பைகளைப் பிரித்து வழங்க வேண்டும்- அமைச்சர் ராஜ்மோகன்</title><link>https://www.maalaimalar.com/news/topnews/monsoon-precaution-separate-wet-and-dry-waste-says-minister-rajmohan</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/monsoon-precaution-separate-wet-and-dry-waste-says-minister-rajmohan#comments</comments><guid isPermaLink="false">a859d211-3a94-4276-a64d-c0884c06f0f3</guid><pubDate>Mon, 24 Aug 2026 13:23:05 +0000</pubDate><atom:updated>2026-08-24T13:23:05.883Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>School Education Department,பள்ளிக்கல்வித் துறை,TN assembly,assembly,சட்டசபை கூட்டதொடர்,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/pu2onebi/mini.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Rajmohan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/pu2onebi/mini.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வருகின்ற பருவமழைக் காலத்தை எதிர்கொள்ளும் வகையில் அரசு மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை ஆய்வுக் கூட்டங்கள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன. மழைநீர்வடிகால் அமைப்புகளின் தற்போதைய திறன் மற்றும் தயார்நிலை குறித்து பள்ளி இடைக்காலக் கட்டமைப்பு மற்றும் பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் விளக்கமளித்துள்ளார். </p><p>நகரின் பெரும்பாலான இடங்களில் மழைநீர்வடிகால் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. இந்த வடிகால்கள் அனைத்தும் மணிக்கு 6 முதல் 7 சென்டிமீட்டர் வரையிலான மழைப் பொழிவை எளிதில் சமாளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், அதைவிட மிக அதிகளவில் மழை பெய்யும் பட்சத்தில் ஆங்காங்கே தண்ணீர் தேங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன.</p><h2>திண்<strong>மக் கழிவுக</strong>ளால் உருவாகும் சவால்</h2><p>மழை பெய்து முடிந்த பின்பும் தேங்கிய நீர் வடியாமல் தாமதமானால், வடிகால் பாதைகளில் திண்மக் கழிவுகள் அடைத்துக் கொண்டிருப்பதே அதற்கு முதன்மை காரணமாகும். பிளாஸ்டிக் கழிவுகள், பாட்டில்கள் மற்றும் மக்காத பிற குப்பைகள் மழைநீருடன் அடித்துச் செல்லப்பட்டு வடிகால்களை முடக்கிவிடுகின்றன. இதனால் மழைநீரின் இயல்பான ஓட்டம் தடைபட்டு குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உருவாகிறது. இத்தகைய சூழலை முற்றிலுமாகத் தவிர்க்கவே மாநகராட்சி நிர்வாகம் இரவு பகலாகத் துப்புரவுப் பணிகளையும் தூர்வாரும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.</p><h2>பொதுமக்<strong>களின் ஒத்துழை</strong>ப்பு அவசியம்</h2><p>மழைநீர் தேங்காமல் நகரம் பாதுகாப்பாக இருக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும். பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை 'மக்கும் குப்பை' மற்றும் 'மக்காத குப்பை' எனத் தனித்தனியாகப் பிரித்து மட்டுமே தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். சாலைகளிலோ அல்லது திறந்தவெளி வடிகால்களிலோ குப்பைகளைக் கொட்டுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கினால் மட்டுமே வெள்ளப் பாதிப்பற்ற பாதுகாப்பான நகரத்தை உருவாக்க முடியும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பழனி கோவில் நிலமோசடி வழக்கு - சிபிஐ விசாரணைக் கோரிய மனுக்கள் தள்ளுபடி! </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-temple-land-fraud-case-petitions-seeking-cbi-probe-dismissed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-temple-land-fraud-case-petitions-seeking-cbi-probe-dismissed#comments</comments><guid isPermaLink="false">2136030f-a2ee-453d-991c-7db8ba234112</guid><pubDate>Mon, 24 Aug 2026 13:14:35 +0000</pubDate><atom:updated>2026-08-24T13:14:35.780Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சிபிஐ,cbi,உயர் நீதிமன்ற மதுரைக்கிளை,Madurai Bench of the High Court,Palani Dandayuthapani Temple,பழனி தண்டாயுதபாணி கோயில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/e37o0yor/New-Project-2026-08-24T184413.352.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பழனி கோவில் நிலமோசடி வழக்கு - சிபிஐ விசாரணைக் கோரிய மனுக்கள் தள்ளுபடி! ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/e37o0yor/New-Project-2026-08-24T184413.352.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. </p><p>பழனி தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வேணுகோபாலு சேனாபதி, பழனி நகராட்சித் தலைவர் உமா மகேஸ்வரி மற்றும் கோவில் அறங்காவலர் அன்னபூரணி ஆகியோர் சிபிஐ விசாரணைக்கோரி மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.</p><p>சிபிசிஐடி போலீசாரின் விசாரணை சரியானப் பாதையில் செல்வதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டநிலையில், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றத் தேவையில்லை எனக் கூறி நீதிபதிகள் சி. வி. கார்த்திகேயன் மற்றும் ஆர். சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. </p><h2>வழக்கின் பின்னணி</h2><p>பழனி தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான சுமார் ரூ. 100 கோடி மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலம் வெறும் ரூ.2 கோடிக்கு தவறான ஆவணங்கள் மூலம் இரண்டு தனி நபர்களுக்கு சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. </p><p>இந்த விவகாரத்தில் முறைகேடாகப் பதிவு செய்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உட்பட, இடைத்தரகர்கள் மற்றும் நிலத்தை வாங்கியவர்கள் எனப் பலரை சிபிசிஐடி போலீசார் ஏற்கனவே கைது செய்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கை: அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-assembly-school-education-grant-debate-minister-rajmohan-major-announcements</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-assembly-school-education-grant-debate-minister-rajmohan-major-announcements#comments</comments><guid isPermaLink="false">d3600cf9-aa7a-41e8-884f-4f733662ceb5</guid><pubDate>Mon, 24 Aug 2026 12:54:19 +0000</pubDate><atom:updated>2026-08-24T12:54:19.036Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>School Education Department,பள்ளிக்கல்வித் துறை,TN assembly,assembly,சட்டசபை கூட்டதொடர்,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/qo1gwbs9/mini.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Rajmohan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/qo1gwbs9/mini.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, அமைச்சர் ராஜ்மோகன் உறுப்பினர்களின் வினாக்களுக்கு பதிலளித்துப் பேசினார். அப்போது, மாநிலத்தின் கல்வி முறையை மேம்படுத்துவது மற்றும் மாணவர் நலனை முதன்மைப்படுத்துவது தொடர்பாகப் பல்வேறு புதிய திட்டங்களையும், நிர்வாகச் சீர்திருத்தங்களையும் அவர் விரிவாக அறிவித்தார்.</p><h2>மரபு சார்ந்த <strong>சொல் மாற்றமும் தொடக்க உ</strong>ரையும்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/the-directorate-of-vigilance-and-anti-corruption-must-conduct-an-inquiry-into-minister-mary-wilson-anbil-mahesh">சட்டசபை</a>யில் வழக்கமாக உறுப்பினர்கள் அல்லது அமைச்சர்களின் முதல் உரையை 'கன்னிப் பேச்சு' என்று குறிப்பிடும் வழக்கம் இருந்து வருகிறது. இந்த மரபுசார்ந்த சொற்றொடருக்கு பதிலாக 'அறிமுக உரை' எனப் பயன்படுத்த வேண்டும் என்று பாமக சட்டமன்ற உறுப்பினர் காலையில் கோரிக்கை விடுத்திருந்தார். இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சர் ராஜ்மோகன், தமது உரையை 'அறிமுக உரை' எனக் கூறித் தொடங்கி, பேரவை விவாதத்தில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தினார்.</p><h2>மாணவர் மை<strong>யப் பாடத்திட்டமு</strong>ம் கற்பித்தல் முறைகளும்</h2><p>மாணவர்களின் கற்றல் சுமையைக் குறைக்கவும், பாடங்களை ஆர்வத்துடன் அணுகவும் புதிய கற்பித்தல் முறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.</p><h2>கதை <strong>வழிப் பாடங்க</strong>ள்</h2><p>கடினமான பாடங்களை எளிமையாக்கும் வகையில் கதை வடிவிலான பாடத்திட்டம் உருவாக்கப்படும். குறிப்பாக, கணிதப் பாடங்கள் அனைத்தும் கதைகள் மற்றும் நடைமுறை எடுத்துக்காட்டுகள் வாயிலாகக் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.</p><h2>கற்றல் <strong>மதிப்பீடு</strong> </h2><p>மாணவர்களின் கற்றல் திறனை ஒப்பிடுவதைத் தவிர்க்கும் வகையில், இனி எந்தவொரு மாணவரையும் 'சராசரி மாணவர்' எனக் குறிப்பிடக் கூடாது எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.</p><h2>அறிவுத்<strong>தளம் மற்றும்</strong> தமிழ் வளர்ச்சி</h2><p> 'TN3 அறிவுத்தளம்' உருவாக்கப்படுவதோடு, தமிழகத்தில் உள்ள 13,259 அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் 'தமிழ்ப்பேச்சு உயிர் மூச்சு' என்ற சிறப்புத் திட்டம் அறிமுகம் செய்யப்படும்.</p><h2><strong>உடற்கல்வி மேம்பாடு மற்றும் ஆசிரியர் நியமனங்கள்</strong></h2><p>பள்ளிகளில் மாணவர்களின் உடற்தகுதி மற்றும் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கத் துறை ரீதியாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. பள்ளிக்கல்வித் துறையில் காலியாக உள்ள 2,771 உடற்பயிற்சி ஆசிரியர் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும். ஆசிரியர்களுக்காக முக்கியமான தீர்மானம் நாளை கொண்டு வருவோம்.</p><h2>விளை<strong>யாட்டு நேரம் கட்டா</strong>யம்</h2><p>தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் உட்பட அனைத்துப் பள்ளிகளிலும் உடற்கல்விக்கான  பாடவேளையை எக்காரணம் கொண்டும் ரத்து செய்யவோ அல்லது வேறு பாடங்களுக்குப் பயன்படுத்தவோ கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. நடுநிலைப் பள்ளிகளில் சதுரங்கம், சடுகுடு (கபடி) போன்ற பாரம்பரிய விளையாட்டு முறைகள் மீட்டெடுக்கப்பட்டு மேம்படுத்தப்படும். பள்ளி மாணவர்களுக்கு வழக்கம் போல் வழங்கப்படும் இலவச சீருடைகளுடன் சேர்த்து, சிறப்பு ஸ்போர்ட்ஸ் ஜெர்சியும் வழங்கப்படும்.</p><h2><strong>மாணவர் நலன்</strong></h2><p>தவறுகள் செய்யும் மாணவர்களைக் குற்றவாளிகளாகப் பார்க்காமல், நல்வழிப்படுத்தும் கோணத்திலேயே அணுக வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். தற்போது வழங்கப்படும் சத்துணவுத் திட்டத்தில் அனைத்து ஊட்டச்சத்துகளும் உள்ள போதிலும், மாணவர்களின் உடல் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு புரதச்சத்தை மேலும் அதிகரிக்கும் கோரிக்கை முதலமைச்சரின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. குறைந்த எண்ணிக்கையில் (10 மாணவர்கள் மட்டுமே) மாணவர்கள் இருந்தாலும் அப்பள்ளிகள் தொடர்ந்து செயல்படும். தனியார் பள்ளிகள் விதிகளை மீறி அதிக கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.</p><h2>உள்கட்ட<strong>மைப்பு மற்றும்</strong> குடிநீர் விநியோகம்</h2><p>அரசு கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்பை சர்வதேசத் தரத்திற்கு உயர்த்த பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். மேலும், நகர்ப்புற மற்றும் மாநகராட்சி சார்ந்த ஒப்பந்தங்களில் முழுமையான வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும். நாகப்பட்டினம் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, வரும் செப்டம்பர் 15 முதல் பயனாளிகளுக்குக் கூட்டுக் குடிநீர் விநியோகம் முறைப்படி தொடங்கப்படும் எனவும் அமைச்சர் ராஜ்மோகன் உறுதியளித்தார்.</p>]]></content:encoded></item></channel></rss>