<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 04 Aug 2026 18:49:51 +0000</lastBuildDate><item><title>மூத்த நடிகர் பிரதீப் ராவத் மூத்த நடிகர் பிரதீப் ராவத் ரத்தப் புற்றுநோயால் மறைவு</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/veteran-actor-pradeep-rawat-passes-away-senior-star-dies-in-mumbai-after-battle-with-blood-cancer</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/veteran-actor-pradeep-rawat-passes-away-senior-star-dies-in-mumbai-after-battle-with-blood-cancer#comments</comments><guid isPermaLink="false">4bc36186-4282-41b1-988e-64e467302d46</guid><pubDate>Tue, 04 Aug 2026 18:46:17 +0000</pubDate><atom:updated>2026-08-04T18:46:17.900Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>mumbai,மும்பை,Bollywood actor,Pradeep Rawat,பாலிவுட் நடிகர்,பிரதீப் ராவத்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/4s3vivt0/tn-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரதீப் ராவத்]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரதீப் ராவத்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/4s3vivt0/tn-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மூத்த நடிகர்  பிரதீப் ராவத் (74), ரத்தப் புற்றுநோய் பாதிப்பு காரணமாக நேற்று  மாலை மும்பையில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-cm-vijay-offers-condolences-on-iuml-president-kader-mohideen-sons-death">காலமானார்</a>.</p><p>நான்கு ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயிலிருந்து மீண்ட அவருக்கு, கடந்த ஒன்றரை மாதங்களாக நோய் மீண்டும் தீவிரமடைந்தது. </p><p>மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல்நிலை மோசமடைந்து அவர் நேற்று காலமானார். </p><p>அவருக்குக் கல்யாணி என்ற மனைவியும், விக்ரமாதித்யா என்ற மகனும் உள்ளனர். அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை மும்பையில் நடைபெறவுள்ளது.  </p> <h2>திரைப்பயணம்</h2><p>பி.ஆர்.சோப்ராவின் புகழ்பெற்ற 'மகாபாரதம்' தொடரில் அஸ்வத்தாமன் கதாபாத்திரத்தில் நடித்து தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.</p><p>இந்தியில் அமீர் கான் நடித்த 'லகான்' மூலம் பிரபலமான பிரதீப் ராவத் தமிழில் சூர்யாவின் கஜினியில் இரட்டை வேடத்தில் வில்லனாக மிரட்டியிருந்தார். அமீர் கான் நடிப்பில் அதன் இந்தி ரீமேக்கிலும் அவர் வில்லன் பாத்திரத்தில் நடித்திருந்தார்.</p> <p>இந்தி, தெலுங்கு, தமிழ் என பல மொழிகளில் வில்லன் வேடங்களில் அவர் நடித்திருக்கிறார். தமிழில் அஜித் நடித்த வீரம் படத்தில் ஒரு போர்ஷனில் அவர் தோன்றியிருப்பார்.</p><p>இந்தி, தெலுங்கு, தமிழ் தவிர கன்னடம், மலையாளம், போஜ்புரி மற்றும் நேபாளி மொழிப் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.</p><p>பிரதீப் ராவத்தின் மறைவுக்கு இந்தியா முழுவதும் உள்ள பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>TNPL முதல் ஆட்டம்: திருப்பூர் தமிழன்ஸை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றி </title><link>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-cricket-dindigul-dragons-win-opener-tiruppur-tamizhans-all-out-for-107-as-dindigul-chase-with-7-wicket-margin</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-cricket-dindigul-dragons-win-opener-tiruppur-tamizhans-all-out-for-107-as-dindigul-chase-with-7-wicket-margin#comments</comments><guid isPermaLink="false">d96949a1-0e9b-45b4-9388-67729cf1ea1a</guid><pubDate>Tue, 04 Aug 2026 17:49:45 +0000</pubDate><atom:updated>2026-08-04T17:49:45.380Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கிரிக்கெட் போட்டி,tnpl,டிஎன்பிஎல் கிரிக்கெட்,Tiruppur Tamizhans,Dindugul draganos</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/lb5gy4uq/tn-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ திண்டுக்கல் டிரகன்ஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ திண்டுக்கல் டிரகன்ஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/lb5gy4uq/tn-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 10-வது <a href="https://www.maalaimalar.com/sports/eight-teams-participating-tnpl-20-over-cricket-tournament-begins-tomorrow">டி.என்.பி.எல்</a>. 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது. வருகிற 28-ந்தேதி வரை 2 கட்டமாக இந்த போட்டி நடத்தப்படுகிறது.</p><h2>போட்டிகள் </h2><p>மொத்தம் உள்ள 32 ஆட்டங்களில் திண்டுக்கல்லில் 20 போட்டிகளும், சென்னையில் 12 ஆட்டங்களும் நடக்கிறது. 16 மற்றும் 17- ந் தேதி ஓய்வு தினமாகும்.</p><p>முதல் கட்ட போட்டிகள் இன்று முதல் 15ந்தேதி வரை திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடக்கின்றன. </p><p>இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நடப்பு சாம்பியன் திருப்பூர் தமிழன்ஸ், கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ் , நெல்லை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.</p> <h2>இன்றைய ஆட்டம்</h2><p>இன்று நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின.</p><p>டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து திருப்பூர் தமிழன்ஸ் முதலில் பேட்டிங் செய்தது.</p><p>திண்டுக்கல் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்கத்தில் இருந்தே தடுமாறிய திருப்பூர் அணியின் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதிகபட்சமாக அமித் சாத்விக் 20 ரன்கள் எடுத்தார்.</p> <p>இறுதியில் 15.4 ஓவர்களில் 107 ரன்களுக்கு திருப்பூர் தமிழன்ஸ் ஆல் அவுட் ஆனது.</p><p>திண்டுக்கல் டிராகன்ஸ் தரப்பில் புவனேஷ்வரன் மற்றும் நிரங்கர் சர்மா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.</p><p>108 ரன்கள் என்ற எளிய இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் களமிறஙகியது. அதிகபட்சமாக அனுராக் ராஜேஷ் குமார் 39 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். விமல் குமார் 40 பந்துகளில் 30 ரன்கள் எடுக்க ஹன்னி சைனி 17 ரன்கள் சேர்க்க, இறுதியில் 9 பந்துகள் மீதமிருந்த நிலையில் 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் குவித்தது திண்டுக்கல்.</p><p>இதன்மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூரை எளிதில் வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது திண்டுக்கல்.</p>]]></content:encoded></item><item><title> குஜராத்தை மிரட்டும் சண்டிபுரா வைரஸ் தொற்று.. 22 குழந்தைகள் பலி!
</title><link>https://www.maalaimalar.com/news/national/gujarat-sandipura-virus-outbreak-22-children-dead-as-encephalitis-spreads-across-multiple-districts</link><comments>https://www.maalaimalar.com/news/national/gujarat-sandipura-virus-outbreak-22-children-dead-as-encephalitis-spreads-across-multiple-districts#comments</comments><guid isPermaLink="false">3208b623-864b-4ea9-b29b-1b8360e8c8af</guid><pubDate>Tue, 04 Aug 2026 17:06:45 +0000</pubDate><atom:updated>2026-08-04T17:06:45.881Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Children,குஜராத்,gujarat,Viral infection,குழந்தைகள்,வைரஸ் தொற்று</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/80tfxqdx/tn.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சண்டிபுரா வைரஸ் ]]></media:title><media:description type="html"><![CDATA[ சண்டிபுரா வைரஸ் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/80tfxqdx/tn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குஜராத் மாநிலத்தில் சண்டிபுரா <a href="https://www.maalaimalar.com/topic/virus">வைரஸ் </a>தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 22 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பிரபுல் பனஷேரியா தெரிவித்துள்ளார்.</p><h2>பாதிப்பு </h2><p>ஜூலை முதல் வாரத்தில் இருந்து  இந்த வைரஸ் குஜராத்தில் பரவி வருகிறது. </p><p>தரவுகளின்படி, குஜராத்தில் இதுவரை 184 பேருக்குச் சண்டிபுரா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. அதில் 35 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p>தொற்று உறுதியானவர்களில் 7 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  6 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆகஸ்ட் 3 நிலவரப்படி மேலும் 11 பேரின் மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளன.</p><p>பாதிக்கப்பட்ட அனைவரும் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆவர். இந்தத் தொற்று குறிப்பிட்ட ஒரு கிராமத்திற்கோ அல்லது பகுதிக்கு மட்டும் வரையறுக்கப்படவில்லை; மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவியுள்ளது.</p> <h2>சண்டிபுரா வைரஸ்</h2><p>'சண்டிபுரா என்செபாலிடிஸ்' என்று அழைக்கப்படும் சண்டிபுரா வைரஸ் என்பது மூளையைத் தாக்கி அழற்சியை உண்டாக்கும் ஒரு ஆபத்தான வைரஸ் தொற்றாகும்.</p><p>ஈக்கள் மற்றும் டெங்குவை பரப்பும் ஏடீஸ் கொசுக்கள் உள்ளிட்ட பகல் நேரத்தில் கடிக்கும் கொசுக்கள் மூலம் இந்த வைரஸ் மனிதர்களுக்குப் பரவுகிறது.</p><p>காய்ச்சல், வாந்தி, மயக்கம், வலிப்பு, வயிற்றுப்போக்கு, நரம்பியல் பிரச்சினைகள் மற்றும் மூளை வீக்கம் போன்றவை இதன் முக்கிய அறிகுறிகளாகும்.</p> <h2>அரசு கோரிக்கை</h2><p>சண்டிபுரா வைரஸ் தொற்றைத் தடுக்கவோ அல்லது குணப்படுத்தவோ தற்போது பிரத்யேக தடுப்பூசியோ அல்லது மருந்தோ இல்லை.</p><p>எனவே, குழந்தைகளுக்குக் காய்ச்சல், வாந்தி, வலிப்பு அல்லது நரம்பியல் சார்ந்த உடல்நலக்குறைவு அறிகுறிகள் தென்பட்டால், பெற்றோர்கள் சிறிதும் தாமதிக்காமல் உடனடியாக அருகில் உள்ள அரசு மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அர்ஜுன் தாஸ், அதிதி சங்கரின் ‘ஒன்ஸ் மோர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/release-date-announced-for-arjun-das-and-aditi-shankars-once-more</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/release-date-announced-for-arjun-das-and-aditi-shankars-once-more#comments</comments><guid isPermaLink="false">42e4f795-7239-4cc1-ab19-779e474fbe85</guid><pubDate>Tue, 04 Aug 2026 16:24:01 +0000</pubDate><atom:updated>2026-08-04T16:24:01.406Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>arjun das,அர்ஜுன் தாஸ்,aditi shankar,Once More,அதிதி சங்கர்,ஒன்ஸ் மோர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/51tp6c92/New-Project-2026-08-04T215258.210.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அர்ஜுன் தாஸ், அதிதி சங்கரின் ‘ஒன்ஸ் மோர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/51tp6c92/New-Project-2026-08-04T215258.210.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் எழுத்து மற்றும் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி சங்கர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள காதல் திரைப்படம் ‘ஒன்ஸ் மோர்’. </p><p>மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு புகழ்பெற்ற மலையாள இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். </p><p>இப்படத்தின் இரண்டு பாடல்கள் இதுவரை வெளியாகி உள்ள நிலையில், தற்போது ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் ஆக.28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்டார் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி - 04 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-04-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-04-august-2026#comments</comments><guid isPermaLink="false">d97691eb-fde2-4478-81b0-8c01330a1625</guid><pubDate>Tue, 04 Aug 2026 04:17:36 +0000</pubDate><atom:updated>2026-08-04T16:20:21.357Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/fdlup75f/udayaa.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ udhayanidhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/fdlup75f/udayaa.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-bjp-president-to-be-changed-soon">சட்டசபை தேர்தலில் தோல்வி: தமிழக பா.ஜ.க. தலைவர் விரைவில் மாற்றம்</a></p><p>* புதிய மாநிலத் தலைவரை நியமிப்பதற்கான ஆலோசனை இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. </p><p>* 2029-ம் ஆண்டு நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டே புதிய தலைவரை தேர்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thanjavur-police-visit-udhayanidhi-stalin-house-in-nilangarai">உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய தஞ்சை போலீசார் வருகை?- பரபரப்பில் நீலாங்கரை</a></p><p>* சென்னை நீலாங்கரையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வீட்டை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். </p><p>*  உதயநிதி ஸ்டாலின் வீடு அருகே பேரிகார்டு அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-governments-first-budget-to-be-presented-tomorrow">த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் நாளை தாக்கல் - மகளிருக்கு ரூ.2,500 அறிவிப்பு வெளியாகுமா?</a></p><p>* அனல்பறக்கும் விவாதங்கள், இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>* நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறும்.&nbsp;</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-released-from-kabini-dam-reached-hogenakkal">கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் ஒகேனக்கல்லுக்கு வந்து சேர்ந்தது</a></p><p>* கேரளம் மற்றும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.&nbsp;</p><p>* &nbsp;திரிவேணி சங்கமத்தில் ஒன்றாக சங்கமித்து அகண்ட காவிரியாக தமிழகம் நோக்கி வந்தது.</p><p>10 நிமிடம், 10 நிமிடம் என எவ்வளவு நேரம் கூறுவீர்கள்? சட்டப்பூர்வ கைது நடவடிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டும்- இணை ஆணையர் விஜயகுமார் அறிவுறுத்தல்</p><p>காவல்துறைக்கு எதிராக கண்டன தி.மு.க.வினர் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.</p><p>உதயநிதி குளித்து முடித்த பிறகு தான் வருவார்- மா.சுப்பிரமணியன்</p><p>உதயநிதி ஸ்டாலின் மீது பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. </p><p>உதயநிதி கைது நடவடிக்கைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு- இன்று பிற்பகலில் விசாரிப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதி தகவல்</p><p>இது உச்சக்கட்ட அடக்குமுறை, அராஜகம்- உதயநிதியை கைது செய்ய நீலாங்கரை வீட்டில் குவிக்கப்பட்ட போலீசார்:  கே.என். நேரு </p><p>தஞ்சாவூர் திமுக ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி பேச்சு அதிர்ச்சியளிக்கிறது - காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி</p><p>உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய நடவடிக்கை- சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் வருகை</p><p>கைது நடவடிக்கை பற்றி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியுடன் காவல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை</p><p>நண்பகல் 12 மணிவரை உதயநிதியை கைது செய்யும் நடவடிக்கையை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தல். </p><p>காவல்துறையிடம் தெரிவிக்க அரசு வழக்கறிஞர் மூலம் நீதிபதி அறிவுறுத்தல். </p><p>உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கைக்கு எதிராக தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்</p><p>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் செல்கின்றனர். </p><p>காவல்துறைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் கைது</p><p>தஞ்சையில் நடைபெற்ற போராட்டத்தில் நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை தஞ்சை போலீசார் கைது செய்துள்ளனர். </p><p>என் மீதான கைது நடவடிக்கையை காமெடியாக பார்க்கிறேன்- உதயநிதி ஸ்டாலின்</p><p>திசை திருப்பும் நடவடிக்கையில் மட்டுமே இந்த அரசு கவனம் செலுத்தி வருகிறது. முக்கிய பிரச்சனை வரும்போது இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிறது- உதயநிதி ஸ்டாலின்</p><p>பேசாததை ஒன்றை பேசியதாக என் மீது பொய் பரப்புரையை த.வெ.க. அரசு மேற்கொண்டுள்ளது- உதயநிதி ஸ்டாலின்</p><p>விவசாயிகள் பிரச்சனையை திசை திருப்பவே இவ்விவகாரத்தை த.வெ.க. அரசு கையில் எடுத்துள்ளது- உதயநிதி ஸ்டாலின்</p><p>கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் விசாரணைக்காக தஞ்சாவூர் அழைத்துச் செல்லப்படுகிறார். </p><p>கைதுக்கு பயப்படுபவன் நான் அல்ல... உதயநிதி </p><p>உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கைக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் முழக்கம்</p><p>உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கைக்கு எதிராக தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். </p><p>உதயநிதியை கைது செய்து அழைத்துச் செல்லப்படும் வாகனத்தை மறித்து தி.மு.க.வினர் போராட்டம்</p><p>அரசியலில் நாகரிகமாகப் பேசுவது மிகவும் அவசியம்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் சண்முகம் பேட்டி</p><p>உதயநிதி ஸ்டாலின் கைது- தேனியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் கைது</p><p>ஆங்கிலேயரின் வாய்ப்பூட்டு சட்டத்துக்கு இணையாக எதிர்க்கட்சிகளை முடக்கும் செயலுக்கு கண்டனம்- பிரேமலதா</p><p>உதயநிதி ஸ்டாலின் பேச்சும், கைதும் கண்டிக்கத்தக்கவை: ஆளுங்கட்சியும்,  எதிர்க்கட்சியும் ஆக்கப்பூர்வ அரசியலை முன்னெடுக்க வேண்டும்!- அன்புமணி</p><p>உதயநிதி ஸ்டாலின் கைது- தமிழகம் முழுவதும் சாலை போராட்டத்தில் ஈடுபடும் தி.மு.க.வினர்</p><p>உதயநிதி மீதான கைது நடவடிக்கை ஜனநாயக உரிமைகள் மீதான நேரடித் தாக்குதலாகும்- தங்கம் தென்னரசு</p><p>சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை பங்கேற்கவிடாமல் தடுப்பதற்காகவே கைது செய்வது அப்பட்டமான கோழைத்தனம் -கனிமொழி</p><p>உதயநிதி ஸ்டாலின் கைது- பரபரப்பான சூழ்நிலையில் அறிவாலயம் வந்தார் மு.க.ஸ்டாலின்</p><p>எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை கைது செய்த பாசிச த.வெ.க அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்- திமுக</p><p>உதயநிதி ஸ்டாலினை அழைத்து சென்ற வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற தி.மு.க. நிர்வாகிகளின் வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர்.</p><p> நாளை சட்டப்பேரவை கூடவிருக்கும் நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவரை கைது செய்வது என்பது  ஜனநாயக விரோத செயல் - திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி</p><p>உதயநிதி கைது - தூத்துக்குடியில் கீதாஜீவன் தலைமையில் தி.மு.க.வினர் போராட்டம் </p><h3>சட்டம் தனது கடமையைச் செய்யும்- ஜி.கே.வாசன்</h3><p>தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><p>பொறுப்புள்ள தலைவர்கள் பொறுப்பற்ற முறையிலே பேசக்கூடாது.</p><p>பொதுவாழ்வில் பொறுப்புள்ள தலைவர்கள் பொறுப்போடு பேசுவதையே மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.</p><p>மகளிர் குறித்து பொது இடத்தில்  பேசும்போது,  அநாகரிகமாகப் பேசக்கூடாது.</p><p>சட்டத்தின் முன் எல்லோரும் சமம்.</p><p>சட்டம் தனது கடமையைச் செய்யும் என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">பொறுப்புள்ள தலைவர்கள் பொறுப்பற்ற முறையிலே பேசக்கூடாது.<br><br>பொதுவாழ்வில் பொறுப்புள்ள தலைவர்கள் பொறுப்போடு பேசுவதையே மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.<br><br>மகளிர் குறித்து பொது இடத்தில்  பேசும்போது,  அநாகரிகமாகப் பேசக்கூடாது.<br><br>சட்டத்தின் முன் எல்லோரும் சமம்.<br>சட்டம் தனது கடமையைச் செய்யும்.</p>&mdash; G.K.Vasan (@GK__Vasan) <a href="https://x.com/GK__Vasan/status/2084531754493174137?ref_src=twsrc%5Etfw">August 4, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>எதிர்க்கட்சியினர் மீது த.வெ.க. அரசு அடக்குமுறை செய்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை- கே.பி.முனுசாமி</p><h3>உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வரவேற்பு</h3><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">I wholeheartedly welcome the arrest of Udayanidhi Stalin today. It is definitely a bold step by the Tamil Nadu police and the <a href="https://x.com/CMOTamilnadu?ref_src=twsrc%5Etfw">@CMOTamilnadu</a> <a href="https://x.com/TVKVijayHQ?ref_src=twsrc%5Etfw">@TVKVijayHQ</a>  and I hope this arrest would be lesson to others who is not bothered about the dignity of women.  Now it is for the courts to…</p>&mdash; Narayanan Thirupathy (@narayanantbjp) <a href="https://x.com/narayanantbjp/status/2084521915126091843?ref_src=twsrc%5Etfw">August 4, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>உதயநிதி ஸ்டாலின் கைது- த.வெ.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்</p><p><strong>உதயநிதி ஸ்டாலின் கைது..நிவேதா பெத்துராஜ் பதிவிட்ட திருக்குறள்</strong></p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்<br>அறங்கூறும் ஆக்கம் தரும்.<br><br>- திருக்குறள் 183</p>&mdash; Nivetha Pethuraj (@Nivetha_Tweets) <a href="https://x.com/Nivetha_Tweets/status/2084510185549418820?ref_src=twsrc%5Etfw">August 4, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h3>உதயநிதி ஸ்டாலின் கைது, பெண்களைப் பற்றி அவதூறாகப் பேசும் ஒவ்வொருவருக்கும் பாடம் - வானதி ஸ்ரீனிவாசன்</h3><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">உதயநிதி ஸ்டாலின் கைது இனி பெண்களைப் பற்றி அவதூறாகப் பேசும் ஒவ்வொருவருக்கும் தக்க பாடம்.  சட்டத்தின் மீதான நம்பிக்கை ஒவ்வொரு தருணங்களிலும் நாட்டு மக்களுக்கு நிரூபிக்கப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது.<br><br>அதேபோல், தமிழ்நாட்டுப் பெண்களை அவதூறாகப் பேசுபவர்கள் மற்றும் பாலியல் ரீதியாகத்…</p>&mdash; Vanathi Srinivasan (@VanathiBJP) <a href="https://x.com/VanathiBJP/status/2084526048126054735?ref_src=twsrc%5Etfw">August 4, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>தஞ்சையில் காலணிகளை வீசி தி.மு.க. மற்றும் த.வெ.க.வினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.</p><p>உதயநிதி ஸ்டாலினை வலுக்கட்டாயமாக கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது- நெல்லை முபாரக்</p><p>புதுச்சேரி: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து திமுகவினர் போராட்டம்</p><p>எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தேனாம்பேட்டை சிக்னலில் திமுகவினர் போராட்டம்</p><h3>உதயநிதி பேச்சுக்கும், கைதுக்கும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்</h3><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக் கூடிய <br>திரு. <a href="https://x.com/Udhaystalin?ref_src=twsrc%5Etfw">@Udhaystalin</a> அவர்களை காவல்துறை கைது செய்திருக்கிறது<br><br>திரு. உதயநிதிக்கு நாவடக்கம் தேவை என்பதை நாம் பல ஆண்டுகளாக கூறி வருகிறோம். தான் இருக்கும் பொறுப்பின் மாண்பு அறியாமல் அவர் தொடர்ந்து வாய்க்கு வந்தபடி பேசுவதும், பெண்களை இழிவாக…</p>&mdash; Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&amp;AIADMK (@EPSTamilNadu) <a href="https://x.com/EPSTamilNadu/status/2084544938986148016?ref_src=twsrc%5Etfw">August 4, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>உதயநிதி கைதுக்கு தடை கோரிய வழக்கு- விசாரணை தாமதம்</p><h3>பொதுமக்களை தாக்கும் திமுகவினர்! சட்டம் தன் கடமையை செய்யும்! - அமைச்சர் ராஜ்மோகன்</h3><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">பொதுமக்களை தாக்கும் திமுகவினர்! <br><br>மக்களுக்கு இடையூறாக சாலை மறியல் செய்ய வேண்டாம் எனக் கூறிய இருசக்கர வாகன ஓட்டியை, திமுகவினர் சரமாரியாக தாக்கும் காட்சி அதிர்ச்சி அளிக்கிறது! <br><br>அடுத்தடுத்து பெண்களை தரக்குறைவாக பேசி வந்த திமுகவினர் தற்போது வன்முறையை கையில் எடுக்கிறார்கள். பேச்சில்… <a href="https://t.co/xArFYrpZMk">pic.twitter.com/xArFYrpZMk</a></p>&mdash; Rajmohan (@imrajmohan) <a href="https://x.com/imrajmohan/status/2084544751865668025?ref_src=twsrc%5Etfw">August 4, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>காவல்துறைக்கு என்ன புகார் வந்திருக்கிறதோ அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது- அமைச்சர் நிர்மல்குமார்</p><p>ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கு எதற்கு? உதயநிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்- கிருஷ்ணசாமி</p><p>கருத்தை கருத்தால்தான் எதிர்கொள்ள வேண்டும்- சிபிஎம்</p><p>பெண்கள் குறித்து இழிவாக பேசிய உதயநிதி சட்டசபைக்குள் வர தகுதியில்லை- அமைச்சர் நிர்மல்குமார்</p><p>பெண்கள் குறித்து அவதூறாக பேசியது தவறு- கம்யூனிஸ்டுகள்</p><p>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்துள்ள த.வெ.க. அரசுக்கு வன்மையான கண்டனங்கள்- திவ்யா சத்யராஜ்</p><h3>உதயநிதி பேச்சு: நாகரிக அரசியலுக்கு ஏற்புடையதல்ல- திருமாவளவன்</h3><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">அண்மையில் திமுக சார்பில் காவிரி நீர் உரிமைக்காக தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்,  &#39;இரட்டுற மொழிதல்&#39; என்னும் வகையில் எள்ளி நகையாடும் கருத்தொன்றைக் கூறியிருக்கிறார்.<br><br>எதிர்க்கட்சிகளின் மீது பொய்வழக்குப் போடுவதிலேயே…</p>&mdash; Thol. Thirumavalavan (@thirumaofficial) <a href="https://x.com/thirumaofficial/status/2084553115643084985?ref_src=twsrc%5Etfw">August 4, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>கைது செய்யப்பட்டவருக்கு வெளி உணவை கொடுக்கக்கூடாது- காவல்துறை</p><p>விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் காவல்நிலையத்தில் மதிய உணவுக்காக உதயநிதி ஸ்டாலின் அழைத்து செல்லப்பட்டார். </p><p>உதயநிதி கைதுக்கு எதிரான மனு- உயர்நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது</p><p>விசாரணைக்கு பிறகு உதயநிதி விடுவிக்கப்படுவார்- உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தகவல்</p><p>இன்றைக்குள் விசாரணையை முடித்து இன்றே உதயநிதியை விடுவிக்க வேண்டும்- உயர்நீதிமன்றம் </p><p>உதயநிதி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்- உயர்நீதிமன்றம்</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-arrogance-leads-to-ruin-persistent-arrogance-accelerates-that-ruin">ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும்; தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும்!- மு.க.ஸ்டாலின்</a></p><p>* ஆட்சிக்கு வந்தது முதல் தன்னையும் தனது அமைச்சர்களையும், ஆட்சியையும் விமர்சிப்பவர்களைக் கைது செய்யும் ஒரே வேலையைத்தான் முதலமைச்சர் விஜய் பார்த்து வருகிறார்.</p><p>* தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டதற்காகக் கைது செய்துள்ள கழக உடன்பிறப்புகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்! </p><p>தஞ்சாவூர் திமுக அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.</p><p>தஞ்சை தெற்கு காவல் நிலைய சாலை காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு சீல் வைக்கப்பட்டது.</p><p>தஞ்சைக்கு அதிவிரைவுப்படை வரவழைக்கப்பட்டது. அதிவிரைவுப் படையுடன் நாகை எஸ்.பி. தஞ்சைக்கு வருகை </p><p>தஞ்சை தெற்கு காவல் நிலையத்தை சுற்றி பேரிகார்டுகள் வைத்து தடுப்புகளை அமைத்தது காவல்துறை</p><p>உதயநிதி அழைத்து வரப்படும் தஞ்சை தெற்கு காவல் நிலையம் அருகே ஏராளமான திமுகவினர் குவிந்து வருகின்றனர்.</p><p>தஞ்சை தெற்கு காவல்நிலைய எல்லையைச் சுற்றியுள்ள 4 பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டது.</p><p>தஞ்சையில் முதல்வர் விஜய்யின் உருவ பொம்மையை எரித்த திமுகவினர்</p><p>தஞ்சை தெற்கு காவல்நிலையத்துக்கு பதிலாக செங்கப்பட்டி காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் உதயநிதி</p><p>போலீஸ் வாகனத்தில் இருந்து இறங்க உதயநிதி மறுப்பு</p><p>முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகி்யோர் செங்கிப்பட்டி காவல்நிலையம் வருகை</p><p>செங்கிப்பட்டி காவல் நிலையம் அருகே பதற்றமான சூழல் நிலவுகிறது.</p><p>முன்னாள் அமைச்சர்களின் ஆலோசனைக்கு பிறகு செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் இறங்கி விசாரணைக்கு சென்றார் உதயநிதி</p><p>காவல்துறை வேனில் இருந்து இறங்கிய உதயநிதி தொண்டர்களை நோக்கி உற்சாகமாக கையசைத்தார்.</p><p>8 மணி நேர பயணத்திற்கு பிறகு தஞ்சை கிழக்கு நிலைய ஆய்வாளர் உதயநிதியிடம் விசாரணை</p><p>உதயநிதியிடம் அரை மணி நேரம் கடந்து போலீசார் விசாரணை</p><p>ஒரு மணி நேரம் கடந்து உதயநிதியிடம் போலீசார் விசாரணை</p><p>விசாரணை நிறைவு: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி விடுவிப்பு</p><p>உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு: தொண்டர்கள் ஆரவாரம்</p> <p>காவல் நிலையத்தில் இருந்து கார் மூலமாக சென்னை புறப்பட்டார் உதயநிதி</p><p>உதயநிதி விடுதலை: பட்டாசு வெடித்து திமுகவினர் கொண்டாட்டம்</p>]]></content:encoded></item><item><title>‘குறிப்பிட்ட பெண்ணை தவறாக பேசவேண்டும் என்ற எண்ணம் துளிக்கூட இல்லை... இது ஆட்சியல்ல சர்க்கஸ்கூடம்’ - உதயநிதி ஸ்டாலின்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/there-wasnt-even-the-slightest-intention-to-speak-ill-of-a-particular-woman-this-isnt-a-government-its-a-circus-udhayanidhi-stalin</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/there-wasnt-even-the-slightest-intention-to-speak-ill-of-a-particular-woman-this-isnt-a-government-its-a-circus-udhayanidhi-stalin#comments</comments><guid isPermaLink="false">b530e373-e43a-4e1a-985f-ffe80f9e3595</guid><pubDate>Tue, 04 Aug 2026 16:05:48 +0000</pubDate><atom:updated>2026-08-04T16:05:48.253Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,தவெக,Udhayanidhi Stalin,tvk,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/07aiiugk/New-Project-2026-08-04T213526.236.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘குறிப்பிட்ட பெண்ணை தவறாக பேசவேண்டும் என்ற எண்ணம் துளிக்கூட இல்லை... இது ஆட்சியல்ல சர்க்கஸ்கூடம்’ - உதயநிதி ஸ்டாலின்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/07aiiugk/New-Project-2026-08-04T213526.236.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூரில் நேற்று காவிரி விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், நடிகை ஒருவர் குறித்து இரட்டை அர்த்த கருத்தைப் பேசியதாக அவர்மீது வழக்குப் பதியப்பட்டு இன்று காலை சென்னையில் கைது செய்யப்பட்டார்.</p><p>சென்னையில் கைது செய்யப்பட்ட அவர் விசாரணைக்காக தஞ்சாவூர் அழைத்துச் செல்லப்பட்டு, விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்டார். செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் விசாரணையை முடித்த அவர் சென்னை திரும்புவதற்காக திருச்சி விமான நிலையம் சென்றார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர்.,</p><p>“நேற்று தஞ்சாவூரில் விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை குறித்துதான் பேசினேன். ஒவ்வொரு ஆண்டும் ஜூன்.12ம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு திறக்கப்படவில்லை.</p><p>தண்ணீரை கேட்டுப்பெற, கர்நாடகாவை எதிர்த்துப் பேச இந்த அரசுக்கு தைரியம் இல்லை. மேகதாது விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட சொல்லினோம். அதனை செய்யவில்லை. அமைச்சர்களின் தவறுகள் குறித்து ஆதாரமாகப் பேசினேன். அதற்கு பதில் சொல்லத் தைரியம் இல்லாமல், என் பேச்சை தவறாக திரித்துப் பரப்புகின்றனர்.</p><p>மாநிலத்தில் ஏதேனும் பிரச்னை எழுந்தால் அதை மடைமாற்ற ஏதாவது ஒன்றை செய்வது. தவெக எம்.எல்.ஏக்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவது கிடையாது. எல்லாவற்றிற்கும் மடைமாற்று. நேற்று என் பேச்சு விவசாயிகளிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது. நாளை சட்டசடையில் இதுகுறித்து பேசுவேன் என இந்த கைது நடவடிக்கை.</p><p>கைதுக்கு முழு ஒத்துழைப்பு தந்தேன். இன்று காலை அரசு வழக்கறிஞர் கூறுகிறார் என்னை கைது செய்யும் நோக்கமே கிடையாது. விசாரணைக்காகத்தான் அழைத்து செல்கிறோம் என்று. ஒரு தீவிரவாதியை கூட்டி செல்வதுபோல 3000 காவலர்கள் பாதுகாப்போடு சென்னையில் இருந்து சாலைவழியாக 400 கி.மீ. தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றனர்.</p><p>இதை சட்டப்படியாக சந்திப்போம். நான் எந்த தவறான எண்ணத்திலும் நேற்றுப் பேசவில்லை. குறிப்பிட்டுக் கூறிய பெண்ணை தாழ்த்திப் பேசவேண்டும் என்ற எண்ணம் துளிக்கூட இல்லை. என் குடும்பம் என்னை அப்படி வளர்க்கவில்லை. என் மனைவியுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன். மனைவி, தங்கை, மகள் என பெண்களோடு வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்.</p><p>பொய் வழக்குக்கு அஞ்சும் ஆள் நான் இல்லை. என்னுடன் இந்நேரத்தில் இருந்த பொதுச்செயலாளர்கள், தலைவர்கள் அனைவருக்கும் நன்றி. சிலத் தலைவர்கள் நான் பேசியதை முழுதாக பார்க்காமல், நான் தவறாகப் பேசியதாக கண்டனம் தெரிவித்துள்ளனர். அது எனக்கு வருத்தமாக இருக்கிறது. </p><p>விவசாயிகளுக்கு ஆதரவாக பேசியதால் இந்த தரங்கெட்ட அரசு என்னை கைது செய்துள்ளது. நான் எந்த இரட்டை அர்த்தத்திலும் பேசவில்லை, ஒரு அர்த்ததில்தான் பேசினேன். காவிரி தண்ணீர் வரவேண்டும் என்றுதான் பேசினேன், மீண்டும் பேசுவேன். இது ஆட்சியாகவே நான் பார்க்கவில்லை. இது ஒரு சர்க்கஸ் கூடம்.</p><p>திமுகவை பார்த்தால் கைது செய்யத் தோன்றும், அதிமுகவைப் பார்த்தால் சோபா அனுப்பத் தோன்றும். முதலமைச்சருக்கு திமுகவின், தமிழ்நாட்டின் வரலாறு தெரியவில்லை. மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தகுந்த பதிலை தருவார்கள். தலைவர் மு.க.ஸ்டாலினை பார்க்க இருக்கிறோம். அவர் சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கான தகுந்த அறிவுரையை தருவார்.” எனத் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>விசாரணை முடிந்தது: காவல் நிலையத்தில் இருந்து புறப்பட்டார் உதயநிதி ஸ்டாலின்- திமுக தொண்டர்கள் ஆரவாரம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/interrogation-completed-udayanidhi-stalin-leaves-police-station-amid-supporters-cheers</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/interrogation-completed-udayanidhi-stalin-leaves-police-station-amid-supporters-cheers#comments</comments><guid isPermaLink="false">ec9702dd-cc14-4625-9791-7254aa194d9a</guid><pubDate>Tue, 04 Aug 2026 15:01:46 +0000</pubDate><atom:updated>2026-08-04T15:01:46.003Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/pp9lp2pl/UdhayanidhiStalin.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/pp9lp2pl/UdhayanidhiStalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சையில் நேற்று நடைபெற்ற தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நடிகை குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக த.வெ.க. மகளிர் அணி சார்பில் மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பைரவி சங்கர்ராமன் மற்றும் நிர்வாகிகள் தஞ்சாவூரில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் குற்ற எண் 287/2026-ன் கீழ் 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><h2>உதயநிதி ஸ்டாலின் கைது</h2><p>இதையடுத்து, சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைத்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை தஞ்சை மாவட்ட காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்த உதயநிதி ஸ்டாலினை விசாரணைக்காக போலீசார் தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றனர்.</p><p>இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் சார்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு பிற்பகல் விசாரணைக்கு வந்தது. விசாரணைியன்போது அரசு தலைமை வழக்கறிஞர் வாதாடுகையில் "எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்படுவார். உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை. உதயநிதி விசாரணைக்கு பின் போலீஸ் ஜாமினில் விடுவிக்கப்படுவார்" என்று தெரிவித்தார்.</p><h2>தஞ்சாவூர் அழைத்துச் செல்லப்பட்டார்</h2><p>இதனையடுத்து, விசாரணைக்கு பின்னர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-alights-at-sengipatti-and-waves-to-cadres-inquiry-begins">உதயநிதி</a>யை இன்றே விடுவிக்க வேண்டும் என ஐகோர்ட் நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார். மேலும், காவல்துறை விசாரணைக்கு உதயநிதி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.</p><p>மாலை 6 மணியளவில் தஞ்சாவூர் அருகே சென்றபோது, திடீரென தஞ்சாவூர் செல்லாமல், தஞ்சை எல்லையில் உள்ள செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். முதலில் இங்கு வைத்து விசாரணை நடத்தக்கூடாது என்று உதயநிதி கூறினார். பின்னர், திமுக தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு விசாரணைக்கு ஒப்புக்கொண்டார்.</p><h2>ஒன்றரை மணி நேரம் விசாரணை</h2><p>இதனையடுத்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு போலீசார் இவரிடம் சுமார் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் 8.15 மணிக்கு காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து காவில் நிலையத்தில் இருந்து வெளியே வந்தார்.</p><p>அவரை வரவேற்க ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடினர். அவர்களுக்கு கையசைத்த படி உதயநிதி ஸ்டாலின் திருச்சி நோக்கி புறப்பட்டார். திருச்சியில் இருந்து இன்று இரவு விமானம் மூலம் சென்னை விரைகிறார்.</p>]]></content:encoded></item><item><title>பொதுமக்களை தாக்கும் திமுக-வினர்: வீடியோ வெளியிட்டு அமைச்சர் ராஜ்மோகன் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-arrest-dmk-supporter-attack-on-public-minister-rajmohan-attack</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-arrest-dmk-supporter-attack-on-public-minister-rajmohan-attack#comments</comments><guid isPermaLink="false">7fbe81df-3fb5-4a47-b5f2-6ff27149d4cd</guid><pubDate>Tue, 04 Aug 2026 14:46:46 +0000</pubDate><atom:updated>2026-08-04T14:46:46.001Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/mlnjyr0m/MinisterRajmohan0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ராஜ்மோகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/mlnjyr0m/MinisterRajmohan0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூரில் நேற்று திமுக சார்பில் நடைபெற்ற கண்டன பொதுக் கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவரான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது, நடிகை குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசினார். அது மட்டுமல்லாமல் த.வெ.க. அமைச்சர்களை கடுமையாக விமர்சனம் செய்தார்.</p><p>நடிகைக்கு எதிராக இரட்டை அர்த்தத்தில் பேசிய நிலையில், தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகார் அடிப்படையில் அவர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது.</p><h2>உதயநிதி ஸ்டாலின் கைது</h2><p>இதன் அடிப்படையில் இன்று சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். பின்னர் விசாரணைக்காக தஞ்சாவூர் அழைத்துச் செல்லப்பட்டார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-alights-at-sengipatti-and-waves-to-cadres-inquiry-begins">உதயநிதி </a>கைதை எதிர்த்து தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில இடங்களில் கடைகளை மூடவும், சாலையில் செல்லும் வாகனத்தை நிறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><h2>வாகன ஓட்டி மீது தாக்குதல்</h2><p>இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒருவரை தாக்கி, வாகனத்தை கீழே தள்ளி திமுக-வினர் அத்துமீறலில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ வெளியானது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">பொதுமக்களை தாக்கும் திமுகவினர்! <br><br>மக்களுக்கு இடையூறாக சாலை மறியல் செய்ய வேண்டாம் எனக் கூறிய இருசக்கர வாகன ஓட்டியை, திமுகவினர் சரமாரியாக தாக்கும் காட்சி அதிர்ச்சி அளிக்கிறது! <br><br>அடுத்தடுத்து பெண்களை தரக்குறைவாக பேசி வந்த திமுகவினர் தற்போது வன்முறையை கையில் எடுக்கிறார்கள். பேச்சில்… <a href="https://t.co/xArFYrpZMk">pic.twitter.com/xArFYrpZMk</a></p>&mdash; Rajmohan (@imrajmohan) <a href="https://x.com/imrajmohan/status/2084544751865668025?ref_src=twsrc%5Etfw">August 4, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure> <p>இந்த நிலையில், அது தொடர்பான வீடியோவை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட அமைச்சர் ராஜ்மோகன், அதில் பதிவிட்டிருப்பதாவது:-</p><p>மக்களுக்கு இடையூறாக சாலை மறியல் செய்ய வேண்டாம் எனக் கூறிய இருசக்கர வாகன ஓட்டியை, திமுக-வினர் சரமாரியாக தாக்கும் காட்சி அதிர்ச்சி அளிக்கிறது.</p><p>அடுத்தடுத்து பெண்களை தரக்குறைவாக பேசி வந்த திமுக-வினர் தற்போது வன்முறையை கையில் எடுக்கிறார்கள். பேச்சில் வன்கொடுமையும், செயலில் வன்முறையும் மிகவும் மோசமானது. இவர்களின் அச்சுறுத்தல் காரணமாக பொது மக்கள், பெண்கள், வியாபாரிகள் பாதிக்கப்படுகிறார்கள்.</p><p>இது ஏற்புடையது அல்ல. சமூக ஒழுங்கை சீர்குலைத்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால்.. சட்டம் தன் கடமையை செய்யும்.</p><p>இவ்வாறு ராஜ்மோகன் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கேரளா: 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்... 5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!</title><link>https://www.maalaimalar.com/news/national/kerala-red-alert-for-8-districts-holiday-declared-for-schools-and-colleges-in-5-districts</link><comments>https://www.maalaimalar.com/news/national/kerala-red-alert-for-8-districts-holiday-declared-for-schools-and-colleges-in-5-districts#comments</comments><guid isPermaLink="false">f9e4b174-ffc2-40e8-b7f5-dc76c6bcbc11</guid><pubDate>Tue, 04 Aug 2026 14:42:11 +0000</pubDate><atom:updated>2026-08-04T14:42:11.991Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>kerala,Red Alert,ரெட் அலர்ட்,இந்திய வானிலை ஆய்வு மையம்,India Meteorological Department,கேரளா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/59l55ta4/New-Project-2026-08-04T195137.824.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கேரளா: 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்... 5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/59l55ta4/New-Project-2026-08-04T195137.824.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று 8 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. </p><p>அதன்படி, பத்தனம்திட்டா, இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் 204 மில்லி மீட்டருக்கும் அதிகமான மிக பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>மலப்புறம், பாலக்காடு, திருச்சூர் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>இதனிடையே கடந்த மூன்று நாட்களில் மழை மற்றும் நிலச்சரிவு தொடர்பான விபத்துகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. </p><p>மேலும் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நாளை (ஆக.4) 5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பத்தனம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி, காசர்கோடு, வயநாடு ஆகிய 5 மாவட்டங்களிலும் உள்ள ஐடிஐ உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>திமுகவிற்கு பாடம் எடுத்துள்ளார் முதலமைச்சர் விஜய் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-athav-arjuna-says-cm-vijay-has-taught-dmk-a-lesson</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-athav-arjuna-says-cm-vijay-has-taught-dmk-a-lesson#comments</comments><guid isPermaLink="false">aef02936-23ef-49ab-90dd-e370b5035806</guid><pubDate>Tue, 04 Aug 2026 14:38:57 +0000</pubDate><atom:updated>2026-08-04T14:38:57.948Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>udhayanithi stalin,Aadhav Arjuna,ஆதவ் அர்ஜுனா,CMVIJAY,முதலமைச்சர் விஜய்,BussyAnand</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/a7t727mo/Aadhav-Arjuna" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Aadhav Arjuna ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/a7t727mo/Aadhav-Arjuna?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டமன்றத்தில் நாளை தவெக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கட்சியின் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கலந்துகொண்டு உரையாற்றினார். இதில் முதலமைச்சர் விஜய், புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.</p><h2><strong>அமைச்சர் ஆதவ் அர்ஜுனா </strong>இந்த கூட்டத்தில்<strong> பேசியதாவது;</strong></h2><p>"தவெக ஆட்சி அமைந்த 80 நாட்களில் திமுகவின் ஒரே கொள்கையே, தவெக ஆட்சியை எப்படி கவிழ்ப்பது என்பது தான். தவெக எம்எல்ஏ க்களிடம் ரூ.50 கோடி, ரூ 100 கோடி தருவதாக செந்தில் பாலாஜி தரப்பு விலை பேசியது. கொளத்தூர் மக்கள் ஏன் தன்னை தூக்கி எறிந்தார்கள் என்பதை முக ஸ்டாலின் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. கொளத்தூர் சென்ற முதலமைச்சர் விஜய்யால் அன்று சேப்பாக்கம் செல்ல முடியாமல் போனது. அதனால் சேப்பாக்கம் மிஸ் ஆகிவிட்டது.</p><p>சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் பேச தொடங்கி பார்ட்டி பண்ட் எனக் கூறியவுடன் திமுகவினர் ஓடி விட்டனர். சட்டப்பேரவையில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் அமைதியாக இருந்தார், திமுகவினர் அம்பலப்பட்டுவிட்டனர். எதிர்காலமே இல்லாத திமுக கட்சி, எங்கள் கட்சி எம்எல்ஏக்களை விலை பேச முயற்சித்து மாட்டிக்கொண்டது. திமுகவின் சாம்ராஜ்யம் முடிந்து விட்டது என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்வதற்கு 6 மாதம் எடுத்துக்கொண்டனர். </p><p>ஆட்சியில் இருந்தபோது துணை முதலமைச்சர் என உதயநிதி க்கு பட்டாபிஷேகம், தற்போது எதிர்க்கட்சி தலைவர் என்று பட்டாபிஷேகம். ஒருமுறை கூட முதலமைச்சர் விஜய் ஒருமையில் பேசியதில்லை, முக ஸ்டாலினை அங்கிள் என்று கூறியதற்கு முதலமைச்சர் வருந்தினார். பெண்களை கொச்சமாக பேசுவதை வழக்கமாக வைத்திருந்தார் கருணாநிதி பெண்களை சக மனுஷியாக கூட நினைக்கவில்லை உதயநிதி" என்று கடுமையாக சாடியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>&quot;சாதி, மதம் எல்லாம் பிறப்பால் வந்தவை&quot;: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நடிகை மீனாவின் பதிவு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actress-meenas-humanitarian-message-goes-viral-on-social-media</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actress-meenas-humanitarian-message-goes-viral-on-social-media#comments</comments><guid isPermaLink="false">35a5217f-2c08-4d2f-8190-8b823163d7ac</guid><pubDate>Tue, 04 Aug 2026 13:58:07 +0000</pubDate><atom:updated>2026-08-04T13:58:07.792Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Meena,Humanity,மீனா,InstagramStory,மனிதநேயம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/8cdhk8lv/Actress-Meena" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Meena ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/8cdhk8lv/Actress-Meena?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரபல தென்னிந்தியத் திரைப்பட நடிகை <a href="https://www.maalaimalar.com/topic/meena">மீனா</a> தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சமூகக் கருத்து அடங்கிய ஸ்டோரி தற்பொழுது இணையதளங்களில் மிக வேகமாகப் பரவி, பெரும் கவனத்தைப் பெற்று வருகிறது.</p><h2><strong>மீனாவின் பதிவு:</strong></h2><p>இதுகுறித்து நடிகை மீனா தனது பதிவில், "உங்கள் சாதி, மதம், பிறந்த இடம் மற்றும் பாலினம் ஆகியவை அனைத்தும் பிறப்பால் அமைந்தவை. அவற்றைப் பெறுவதற்கு நீங்கள் எந்த முயற்சியும் செய்யவில்லை; எனவே, அவற்றைக் குறித்துப் பெருமைப்படுவதை நிறுத்துங்கள். உங்கள் குணம், உங்கள் செயல்கள் மற்றும் ஒவ்வொரு நாளும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் மனிதாபிமானம் ஆகியவற்றைக் குறித்துப் பெருமை கொள்ளுங்கள்" என்ற செய்தியை வெளிப்படையாக பதிவிட்டுள்ளார்.</p><h2><strong>ஆதரவு:</strong></h2><p>சாதி மற்றும் மதப் பிரிவினைகளுக்கு அப்பாற்பட்டுச் சிந்திக்கும் அவரது இந்த மனிதநேயப் பண்பிற்குப் பல்வேறு தரப்பு ரசிகர்களும் இணையவாசிகளும் தங்களின் பாராட்டுகளையும் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர். இந்த செய்தி தற்போது இணையத்தளத்தில் பரவி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>நடிகர் ஜீவாவின் &apos;தகப்பன்&apos; ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு: டிசம்பரில் வெளியாகிறது!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-jiiva-s-thagappan-first-look-poster-release-film-to-hit-theatres-in-december</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-jiiva-s-thagappan-first-look-poster-release-film-to-hit-theatres-in-december#comments</comments><guid isPermaLink="false">2d468d19-e3a1-4edf-99ff-e6037d2b9543</guid><pubDate>Tue, 04 Aug 2026 13:29:28 +0000</pubDate><atom:updated>2026-08-04T13:29:28.763Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Lakshmi ramakrishnan,ஜீவா,Jiiva,rajisha vijayan,think music,Thagappan,தகப்பன்,Lark Studios,Thagappan FirstLook</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/ewqeom34/Thagappan-FirstLook" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Thagappan FirstLook  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/ewqeom34/Thagappan-FirstLook?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், பிரபல தமிழ் நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE">ஜீவா </a>முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படமான 'தகப்பன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இணையதளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. </p><p>'கிடா' திரைப்படத்தின் மூலம் உணர்வுப்பூர்வமான கதையைத் தந்து ரசிகர்களின் மனதை வென்ற இயக்குநர் ரா. வெங்கட் இத்திரைப்படத்தை எழுதி இயக்கி வருகிறார்.</p><h2><strong>தந்தை - மகன் பாசம்</strong></h2><p>இத்திரைப்படம் மதுரையைச் சுற்றியுள்ள கிராமத்துப் பகுதிகளை மையமாகக் கொண்டு, தந்தை மற்றும் மகனுக்கு இடையேயான ஆழமான பாசப்பிணைப்பை மையமாக வைத்து உணர்வுப்பூர்வமான டிராமா பாணியில் உருவாக்கப்பட்டு வருகிறது.</p><p>தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் ஜீவா மற்றும் ஒரு சிறுவன் படிக்கட்டில் அமர்ந்திருப்பது போன்ற காட்சி, குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.</p><p>ஜீவாவின் முந்தைய நகைச்சுவைத் திரைப்படமான 'தலைவர் தம்பி தலைமையில்' படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், படத்தின் போஸ்டரில் 'கருப்பசாமி' திருவிழா பின்னணி காட்டப்பட்டிருப்பது கதைக்களத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.</p><h2><strong>படப்பிடிப்பு</strong></h2><p>திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரே கட்டமாக மிக விறுவிறுப்பாக நடைபெற்றது. படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர். </p><p>படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில உணர்வுப்பூர்வமான காட்சிகளைக் கண்ட உள்ளூர் மக்கள், படக்குழுவினரை நேரில் பாராட்டி மகிழ்ந்து வருகின்றனர்.</p><h2><strong>நட்சத்திரப் பட்டாளம் மற்றும் ரிலீஸ் தேதி</strong></h2><p>இத்திரைப்படத்தில் ஜீவாவுடன் இணைந்து பிரபல மலையாள நடிகை<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D"> ரஜிஷா விஜயன்</a> கதாநாயகியாக நடிக்கிறார். முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் நடிக்கிறார். </p><p>கே. குமார் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு எம். சுகுமார் ஒளிப்பதிவையும், நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பையும் மேற்கொள்கின்றனர். மார்ஷல் ராபின்சன் இசையமைக்கும் இத்திரைப்படத்தின் ஆடியோ உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.</p><p>இத்திரைப்படம் வரும் டிசம்பர் 2026 அன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Everything is fair in a father’s love❤️‍<br><br>Presenting the world <a href="https://x.com/hashtag/Thagappan?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Thagappan</a> !<br><br>In Cinemas December 2026.<a href="https://x.com/larkstudios1?ref_src=twsrc%5Etfw">@larkstudios1</a> <a href="https://x.com/JiivaOfficial?ref_src=twsrc%5Etfw">@JiivaOfficial</a> <a href="https://x.com/rajisha_vijayan?ref_src=twsrc%5Etfw">@rajisha_vijayan</a> <a href="https://x.com/LakshmyRamki?ref_src=twsrc%5Etfw">@LakshmyRamki</a> <a href="https://x.com/ravenkatdir83?ref_src=twsrc%5Etfw">@ravenkatdir83</a> <a href="https://x.com/dopmsukumar?ref_src=twsrc%5Etfw">@dopmsukumar</a> <a href="https://x.com/Inagseditor?ref_src=twsrc%5Etfw">@Inagseditor</a> <a href="https://x.com/MaheshMathewMMS?ref_src=twsrc%5Etfw">@MaheshMathewMMS</a> <a href="https://x.com/hashtag/BalaKumar?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#BalaKumar</a> <a href="https://x.com/dineshashok_13?ref_src=twsrc%5Etfw">@dineshashok_13</a> <a href="https://x.com/Udaykumar_Mix?ref_src=twsrc%5Etfw">@Udaykumar_Mix</a> <a href="https://x.com/prithivipradeep?ref_src=twsrc%5Etfw">@prithivipradeep</a>… <a href="https://t.co/HPRBvQCxH6">pic.twitter.com/HPRBvQCxH6</a></p>&mdash; Jiiva (@JiivaOfficial) <a href="https://x.com/JiivaOfficial/status/2084233805880320386?ref_src=twsrc%5Etfw">August 3, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>செங்கிப்பட்டியில் இறங்கி தொண்டர்களுக்கு கையசைத்த உதயநிதி ஸ்டாலின் - விசாரணை தொடக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-alights-at-sengipatti-and-waves-to-cadres-inquiry-begins</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-alights-at-sengipatti-and-waves-to-cadres-inquiry-begins#comments</comments><guid isPermaLink="false">c648030c-ac8b-473e-b159-bbf551432b2f</guid><pubDate>Tue, 04 Aug 2026 13:28:28 +0000</pubDate><atom:updated>2026-08-04T13:28:28.818Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,Thanjavur,தஞ்சாவூர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/w7587wui/New-Project-2026-08-04T185556.153.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ செங்கிப்பட்டியில் இறங்கி தொண்டர்களுக்கு கையசைத்த உதயநிதி ஸ்டாலின் - விசாரணை தொடக்கம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/w7587wui/New-Project-2026-08-04T185556.153.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரி நீர் விவகாரம் தொடர்பாகத் தஞ்சாவூரில் நேற்று நடந்த திமுக ஆர்ப்பாட்டத்தில், நடிகை ஒருவரை தவறாகப் பேசியதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்மீது புகார் எழுந்தது. </p><p>இதுதொடர்பாக தவெகவினர் அளித்தப் புகாரின்பேரில், தஞ்சை காவல்துறையினரால் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை கைது செய்யப்பட்டார்.  சென்னையில் கைது செய்யப்பட்ட உதயநிதி தஞ்சாவூருக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டார். </p><p>முதலில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட தஞ்சை தெற்கு காவல் நிலையத்திற்கு உதயநிதியை அழைத்துச் செல்ல போலீசார் திட்டமிட்டிருந்தனர். </p><p>ஆனால், அங்கு ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், சட்டம் ஒழுங்குப் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு போலீசார் திடீரென வாகனத்தைத் திருப்பி திருச்சி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.</p><p>ஆனால் வழக்குப்பதிவு செய்யப்பட்ட காவல்நிலையத்தில்தான் இறங்குவேன் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபின், செங்கிப்பட்டி காவல்நிலையத்தில் விசாரணைக்கு ஒப்புக்கொண்டார்.</p><p>விசாரணைக்காக காவல் வாகனத்தில் இறங்கிய உதயநிதி, அங்கு கூடியிருந்த தொண்டர்களிடையே கையசைத்தார். தொடர்ந்து விசாரணைக்காக காவல்நிலையம் உள்ளே சென்றுள்ளார். விசாரணை முடிந்து மீண்டும் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>2019-ல் இருந்து வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய குற்றவாளிகள் 274 பேர் இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளனர்- மத்திய அரசு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/274-fugitives-36-countries-how-india-is-bringing-its-most-wanted-criminals-back-home</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/274-fugitives-36-countries-how-india-is-bringing-its-most-wanted-criminals-back-home#comments</comments><guid isPermaLink="false">c0a5dce5-f8ba-4020-ab18-71d9ce8b52d7</guid><pubDate>Tue, 04 Aug 2026 13:17:28 +0000</pubDate><atom:updated>2026-08-04T13:17:28.968Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,Central govt</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/bag0gl0h/MEA0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/bag0gl0h/MEA0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பயங்கரவாதிகள், கேங்ஸ்டர்ஸ், பொருளாதார குற்றவாளிகள், குழந்தைகளுக்கு எதிராக வன்கொடுமை குற்றவாளிகள் என பல்வேறு குற்ற வழக்கில் சிக்கி வெளிநாட்டுக்கு தப்பி ஓடியவர்களில், 2019-ல் இருந்து 274 பேர் இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.</p><p>இந்தியாவில் இருந்து வெளியே சென்றுவிட்டால், இந்திய சட்டத்தின் மூலம் தங்களை பிடிக்க முடியாது என்றும் அவர்களில் சிலர் நினைத்துள்ளனர். சிலர் தங்களுடைய பெயர்களை மாற்றியுள்ளனர். புதிய அடையாளங்களை ஏற்றுக் கொண்டுள்ளனர். தாங்கள் நீதியிலிருந்து தப்பித்துவிட்டதாக நம்பி, பலர் பல ஆண்டுகளாக வெளிநாடுகளில் தலைமறைவாக வாழ்ந்தனர்.</p><p>ஆனால், இந்தியாவில் குற்றம் செய்து வெளிநாட்டிற்கு தப்பி ஓடியவர்களை கைது செய்ய மத்திய அரசு வெளிநாட்டு அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சட்டத்தில் திருத்தங்கள் செய்து நடவடிக்கையை மேற்கொண்டது.</p><p>இதன்மூலம் 2019-ல் இருந்து 36 நாடுகளில் இருந்து 274 பேரை இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளோம் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>62 பேர் கொலை, திருட்டு போன்ற சம்பவங்களில் குற்றம்சாட்டப்பட்டவர்கள். 53 பேர் பாலியல் வன்கொடுமை, பாலியல் தாக்குதல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டவர்கள்.</p><h2>ஒவ்வொரு வருடமும் எவ்வளவு பேர்?</h2><p>2 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், குண்டர் வலையமைப்புகள் மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் ஆகியவற்றுடன் தொடர்புடையவர்கள். அதே சமயம் 17 பேர் பயங்கரவாதம், தேசவிரோத நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் பயங்கரவாதம் ஆகியவற்றுக்காக தேடப்பட்டவர்கள். இந்தப் பட்டியலில் ஆட்கடத்தல், கடத்தல், போதைப்பொருள் குற்றங்கள், இணையவழிக் குற்றங்கள், கடத்தல், கள்ள நோட்டு மோசடி மற்றும் நிதி மோசடி ஆகியவற்றில் குற்றம் சாட்டப்பட்ட தப்பியோடியவர்களும் அடங்குவர்.</p><p>இந்தியா 2019-ல் ஒன்பது தலைமறைவுக் குற்றவாளிகளையும், 2020-ல் ஏழு பேரையும் அழைத்து வந்தது.  அதன்பின்னர் இவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து, 2021-ல் 23 ஆகவும், 2022-ல் 40 ஆகவும், 2023-ல் 37 ஆகவும், 2024-ல் 43 ஆகவும், 2025-ல் 70 ஆகவும் உயர்ந்தது. 2026-ஆம் ஆண்டு ஜூலை மாத இறுதிக்குள், மேலும் 45 தலைமறைவு குற்றவாளிகள் மீண்டும் அழைத்து வரப்பட்டிருந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>காவிரி நதிநீர்ச் சிக்கலில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதலமைச்சர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான் கேள்வி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/why-is-chief-minister-vijay-showing-such-urgency-regarding-the-arrest-when-he-failed-to-show-similar-speed-in-the-cauvery-river-water-dispute-seeman-asks</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/why-is-chief-minister-vijay-showing-such-urgency-regarding-the-arrest-when-he-failed-to-show-similar-speed-in-the-cauvery-river-water-dispute-seeman-asks#comments</comments><guid isPermaLink="false">8bc31b38-1013-4e40-be7f-c15dc2f32fca</guid><pubDate>Tue, 04 Aug 2026 13:08:05 +0000</pubDate><atom:updated>2026-08-04T13:08:05.042Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Seeman,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,சீமான்,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/ohospajr/New-Project-2026-08-04T183744.257.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காவிரி நதிநீர்ச் சிக்கலில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதலமைச்சர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான் கேள்வி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/ohospajr/New-Project-2026-08-04T183744.257.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரி நதிநீர்ச்சிக்கலில் காட்டாத வேகத்தை, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் கைது நடவடிக்கைக்கு முதலமைச்சர் விஜய் காட்டுவது ஏன்? என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில்.,</p><p>“காவிரி நதிநீர்ச்சிக்கல் உச்சம்பெற்று, மேகதாதுவில் அணை கட்டுவதில் மிகுந்த முனைப்போடு, அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, கர்நாடக அரசும், அங்குள்ள எதிர்க்கட்சிகளும் ஒருமித்துச் செயல்பட்டு, முன்னெடுப்புகளைச் செய்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் அரங்கேறி வரும் அரசியல் காட்சிகள் மிகுந்த ஏமாற்றத்தைத் தருகின்றன. </p><p>ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் சேர்ந்ததுதான் அரசாங்கம் எனும் அடிப்படையை மறந்து, இருவரும் பகைமை பாராட்டுவதும், காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுவதும், அரசியல் பழிவாங்கல் செய்வதும்தான் ஆட்சி நிர்வாகமா? மக்களுக்கான அரசியலா? என்ற கேள்வி எழுகிறது. தற்போது நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்குமான தலைகுனிவாகும். </p><p>காவிரி நதிநீர் சிக்கல் தொடர்பாக திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த சில கருத்துகள் தேவையற்றவை; எதிர்க்கட்சித்தலைவர் எனும் பதவிக்குரிய மாண்பை மறந்து, கண்ணியக்குறைவான கருத்துக்களை பொதுஅவையில் வைத்திருக்க வேண்டியதில்லை. </p><p>அதேசமயம், இதனையே வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, கைதுநடவடிக்கை எனும் பெயரில் தவெக அரசு இறங்குவதும் ஏற்புடையதல்ல. </p><p>அரசியல் மேடைப் பேச்சுக்கெல்லாம், தவெக அரசு கைது நடவடிக்கை எடுக்குமென்றால், என் மீதும், என் தம்பி, தங்கைகள் மீதும் தனிநபர் விமர்சனமும், அவதூறும், ஆபாசத்தாக்குதலும் நாள்தோறும் தொடுக்கும் தவெகவினர் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்காதது ஏன்? </p><p>அவ்வாறு அவதூறு பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் நீதியரசரே, சட்ட நடவடிக்கை எடுக்கச் சொல்லி, உத்தரவு கொடுத்துவிட்டப் பிறகும், கைது செய்யாது விட்டிருப்பதேன்? அவர்கள் தவெகவின் ஆதரவாளர்கள் என்பதாலா? </p><p>இன்று காலை 9 மணிக்குப் புகார் கொடுத்து, இரண்டு மணி நேரத்தில் முற்பகல் 11 மணிக்கெல்லாம் உதயநிதியைக் கைதுசெய்கிற காவல்துறையினர், என்னைப் பற்றி அவதூறுப் பரப்பியவர்களை இத்தனை நாட்களாகியும் கைதுசெய்யாது, காப்பாற்றுவது ஏன்? </p><p>என்னைப் பற்றி மேடையில் ‘சீமான் பழைய சாமான்’ என்று தரம்தாழ்ந்து பேசிய லயோலா மணி மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? அப்படி பேசியதை ஊக்கப்படுத்தும் விதமாக  பாடநூல் கழகத் தலைவராக அரசுப்பதவி கொடுத்து அழகுபார்ப்பதற்கு பெயரென்ன முதல்வர் அவர்களே? இதுதான் உங்களின் நாகரீக அரசியலா? </p><p>என் மீதும், என் தம்பிகள் மீதும் கடந்தகாலத்தில் முந்தைய திமுக அரசு பாய்ச்சாத வழக்குகள் இல்லை; ஏவிவிடாத கைது நடவடிக்கைகள் இல்லை. ஏறக்குறைய 200க்கும் மேற்பட்ட வழக்குகளை திமுகவின் ஆட்சியிலேயேதான் பெற்றிருக்கிறேன். எல்லாவற்றிற்கும் கைது என்று முந்தைய திமுக அரசு, கடைப்பிடித்த அதிகார அடக்குமுறையையே தவெக அரசும் கடைப்பிடிக்குமென்றால், இதுதான் சனநாயக ஆட்சியா? </p><p>இதுதான் மக்களுக்கான மாற்று அரசியலா? மக்களுக்குத் துளியும் நலன்பயக்காத, தரம்தாழ்ந்த அரசியல் நடைபெற்று வருவதைப் பார்க்கிறபோது மனவலியைத் தருகிறது. முந்தைய திமுகவின் ஆட்சிபோலவே, எல்லாவற்றிற்கும் கைது என தவெகவின் அரசு கிளம்புவது துளியும் சகிப்புத்தன்மையற்ற போக்காகும். </p><p>மேடைதோறும் திமுகவை தீயசக்தியென விமர்சித்துவிட்டு, திமுக கடந்த காலத்தில் செய்த கொடுங்கோன்மையை நிகழ்காலத்தில் தவெக அரசு கட்டவிழ்த்துவிடுவது எந்தவிதத்தில் மாற்று அரசியலாகும்? </p><p>திருவைகுண்டம் தொகுதியின் தவெகவின் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மீதும், இன்னபிற தவெகவின் நிர்வாகிகள் மீதும் பாலியல் புகார்கள் பொதுவெளியில் முன்வைக்கப்பட்டு, இதுவரை விசாரணை செய்யக்கூடாத நிலையில், இந்த விவகாரத்தில் மட்டும் இவ்வளவு வேகம் காட்டுவதேன்? காவிரி நதிநீர் விவகாரத்தில் காட்டாத வேகத்தை, கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்?</p><p>காவிரிப்படுகையில் குறுவை சாகுபடிப் பொய்த்து, சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகியிருக்கும் நேரத்தில், அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, காவிரி நதிநீர் விவகாரத்தில் செய்ய வேண்டிய ஆக்கப்பூர்வ முன்னெடுப்புகளைச் செய்யாது, தவெக அரசு தான்மையுடன் வறட்டுத்தனமான செயல்பாடுகளில் ஈடுபட்டு, தமிழ்நாட்டின் கவனத்தை ஒட்டுமொத்தமாகத் திசைதிருப்பி இருப்பது வெட்கக்கேடானது. </p><p>காவிரி நதிநீர் விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு ஆளுங்கட்சி காட்டுவதும், காவிரிக்காக தீவிரமாக போராட வேண்டிய சமயத்தில் எதிர்க்கட்சியான திமுக கைதுக்கு எதிராக போராடிக் கொண்டிருப்பதுமான தமிழ்நாட்டின் அரசியல் நிலை சாபக்கேடானதாகும்.</p><p>சகிப்புத்தன்மையே சனநாயகத்திற்குத் தேவையான அடிப்படை என்பதை மறந்து, அரசியல் மேடைகளில் பேசுவதற்கெல்லாம் கைது நடவடிக்கை என்பதை எந்த அரசு செய்தாலும் அது மிகத்தவறானது; மேடைகளில் தவறாகப் பேசினால், அவதூறு வழக்கு தொடுக்க வேண்டுமே ஒழிய, எடுத்த எடுப்பிலேயே கைதென இறங்குவது மக்களாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என தவெக அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>‘நாடாளுமன்றத்தில் வைகோ’ புத்தகத்தை வெளியிட்டார் ராகுல் காந்தி!</title><link>https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-released-the-book-vaiko-in-parliament</link><comments>https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-released-the-book-vaiko-in-parliament#comments</comments><guid isPermaLink="false">e95baf03-70e8-4391-adb7-a0af397c7280</guid><pubDate>Tue, 04 Aug 2026 12:55:13 +0000</pubDate><atom:updated>2026-08-04T12:55:13.866Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Vaiko in Parliament,MDMK chief Vaiko,மதிமுக தலைவர் வைகோ,நாடாளுமன்றத்தில் வைகோ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/a5c11ckc/New-Project-2026-08-04T182201.797.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘நாடாளுமன்றத்தில் வைகோ’ புத்தகத்தை வெளியிட்டார் ராகுல் காந்தி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/a5c11ckc/New-Project-2026-08-04T182201.797.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் நாடாளுமன்ற உரைகள் அடங்கிய, ‘நாடாளுமன்றத்தில் வைகோ’ புத்தகத்தை வெளியிட்டார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. </p><p>டெல்லி கான்ஸ்டிடியூசன் கிளப்பில் நடைபெற்ற இந்த புத்தக வெளியீட்டு விழாவில், ராகுல் காந்தி வெளியிட்ட முதல் பிரதியை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பெற்றுக்கொண்டார். </p><p>30 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்றத்தில் வைகோ ஆற்றிய உரைகள் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த நிகழ்ச்சியில் தவெக சார்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கலந்துகொண்டார். </p><p>புத்தகத்தை வெளியிட்டு நிகழ்வில் பேசிய ராகுல் காந்தி,</p><p>“வைகோ அவர்களை, அவரது உரைகள் அல்லது அவர் எழுதிய நூலுக்காக மட்டும் நான் பாராட்டவில்லை. அவரது பொதுவாழ்வுப் பயணம் முழுவதும் அவர் வெளிப்படுத்திய மன உறுதிக்காகவும் நான் பாராட்ட விரும்புகிறேன். ஒரு அரசியல்வாதியை நான் மதிப்பிடும்போதெல்லாம், நான் உற்றுநோக்கும் முதல் மற்றும் மிக முக்கியமான அம்சம் 'நிலைத்தன்மை. அதில் அவர் எப்போதும் உள்ளார்.” என வைகோவை பாராட்டினார்.</p><p>தொடர்ந்து பிரதமர் மோடி தொடர்பாக பேசிய ராகுல் காந்தி.,</p><p>“நமது நாடு ஒரு விசித்திரமான காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. மாணவர்கள் வீதிகளில் இறங்கி, கடும் வேதனையுடன், தேர்வுகளில் நியாயத்தையும், முறையாகச் செயல்படும் ஒரு கல்வி முறையையும் கோரி வருகின்றனர். </p><p>மறுபுறம், அவர்களை 'மன்னிக்க' முற்படும் பிரதமரை நாம் காண்கிறோம். அவர்களை மன்னிப்பதற்கு அவர் யார் என்று எனக்குத் தெரியவில்லை. இந்தியாவின் எதிர்காலத்தையே மன்னிக்கும் உரிமை தனக்கு இருப்பதாக அவர் எந்த அடிப்படையில் கருதுகிறார் என்பதும் எனக்குப் புரியவில்லை. </p><p>ஆனால், அவர் அதைத்தான் செய்யத் துணிகிறார். பிரதமரின் சிந்தனைக்கும், அவரது சகாக்களின் - குறிப்பாக ஆர்.எஸ்.எஸ்-இன் - சிந்தனைக்கும் பின்னால் மிகவும் ஆபத்தான மற்றும் விஷத்தன்மை வாய்ந்த ஒரு கருத்து ஒளிந்திருக்கிறது. அதாவது, இந்த நாடு பன்முகத்தன்மையின் வெளிப்பாடு அல்ல.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>நேதாஜியையும் அவரது பாரம்பரியத்தையும் அவமதிக்கும் பாஜக-வுக்கு எதிராக மக்கள் போராட வேண்டும்: மம்தா பானர்ஜி</title><link>https://www.maalaimalar.com/news/national/bjp-insulting-netaji-and-his-legacy-mamata-banerjee-urge-people-to-protest-against</link><comments>https://www.maalaimalar.com/news/national/bjp-insulting-netaji-and-his-legacy-mamata-banerjee-urge-people-to-protest-against#comments</comments><guid isPermaLink="false">081ac366-f986-4d8b-abf3-fe910ab4059c</guid><pubDate>Tue, 04 Aug 2026 12:32:14 +0000</pubDate><atom:updated>2026-08-04T12:32:14.797Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,மம்தா பானர்ஜி,Mamata Banerjee,TMC,திரிணாமுல் காங்கிரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/g0nqr179/Mamata0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மம்தா பானர்ஜி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/g0nqr179/Mamata0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் அவரது பாரம்பரியத்தை அவமதித்ததற்காக பாஜக-வை கடுமையாகச் சாடிய திரிணாமுல் காங்கிரஸ் (TMC) தலைவர் மம்தா பானர்ஜி, இத்தகைய கருத்துகளுக்கு எதிராக மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று வலியுறுத்தினார்.</p><h2>நேதாஜி கொள்ளுப் பேரன் சந்திர குமார் போஸ்</h2><p>திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய நேதாஜியின் கொள்ளுப் பேரனான சந்திர குமார் போஸ், முக்கிய அரசியல் கட்சிகள் மீது ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும், ஆளும் பாஜக மற்றும் மம்தா பானர்ஜி தலைமையிலான கட்சி ஆகியவற்றின் அரசியல் செயல்பாடுகளுக்கு இடையே எந்த வித்தியாசமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.</p><p>இந்த நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்த பாஜக-வின் மேற்கு வங்க தலைவர் கருத்துக்கு மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><h2>இது தொடர்பாக மம்தா பானர்ஜி தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:-</h2><p>நமது தேசிய நாயகனான நேதாஜி குறித்து பாஜக தலைவர்கள் பேசிய விதம் என்னைக் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நேதாஜி சுபாஷ் போஸ் அவமதிக்கப்படும் விதம் குறித்து நான் மிகுந்த ஏமாற்றமும் மனவேதனையும் அடைகிறேன். இது வங்காளத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டிற்கே இழைக்கப்பட்ட அவமதிப்பாகும்.</p><h2>மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்</h2><p>நேதாஜிக்கு இழைக்கப்படும் அவமதிப்புக்கு எதிராக மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் சமிக் பட்டாச்சார்யா சமீபத்தில் சுதந்திரப் போராட்ட வீரரான நேதாஜிக்கும் சங் பரிவாரின் கொள்கை வழிகாட்டியான சியாமா பிரசாத் முகர்ஜிக்கும் இடையிலான அரசியல் கருத்து வேறுபாடுகள் குறித்த சூழலில், நேதாஜியால் உருவாக்கப்பட்ட ஃபார்வர்ட் பிளாக் (Forward Bloc) கட்சியின் உறுப்பினர்களை குண்டர்கள் என்று விமர்சித்திருந்தார்.</p><p>இக்கருத்து எதிர்க்கட்சிகள் மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் குடும்பத்தினரிடையே விமர்சனங்களை எழுப்பியது. அவர்கள் இதனை மரியாதையற்ற செயல் என்று வர்ணித்தனர்.</p><p>நேதாஜி மீது எந்தவிதமான அவமரியாதையும் காட்டப்படவில்லை என்று பாஜக மறுத்துள்ளது.</p><h2>தேசவிரோதிகள் என முத்திரை குத்தப்படும் Gen-Z</h2><p>தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகப் போராடிய இளம் தலைமுறையினர் (Gen-Z) தேசவிரோதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு துன்புறுத்தப்படுவதாகவும், அவர்களின் குடும்பங்கள் அச்சுறுத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டிய மம்தா, அந்த இயக்கத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார்.</p><p>தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வங்காளத்தில் ஆயிரக்கணக்கான திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், பாஜக ஒட்டுமொத்த மாநிலத்தையும் ஒரு மிகப்பெரிய சிறைச்சாலையாக மாற்றிவிட்டது என்றும் குற்றம் சாட்டினார்.</p>]]></content:encoded></item><item><title>வெளியான 4 நாட்களில் ரூ.8,800 கோடி வசூலித்து சாதனைப் படைத்த ஸ்பைடர்மேன்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/spider-man-sets-a-record-by-grossing-8800-crore-in-just-four-days-of-release</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/spider-man-sets-a-record-by-grossing-8800-crore-in-just-four-days-of-release#comments</comments><guid isPermaLink="false">ecb248a6-7866-4480-bc2e-a99cab0580e9</guid><pubDate>Tue, 04 Aug 2026 12:03:21 +0000</pubDate><atom:updated>2026-08-04T12:03:21.930Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>box office collection,ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே,SpiderMan Brand New Day,திரையரங்க வசூல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/qf5wzsox/New-Project-2026-08-04T173253.055.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வெளியான 4 நாட்களில் ரூ.8,800 கோடி வசூலித்து சாதனைப் படைத்த ஸ்பைடர்மேன்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/qf5wzsox/New-Project-2026-08-04T173253.055.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ திரைப்படம் வெளியான நான்கு நாட்களிலேயே உலகளவில் ரூ.8,846 கோடி வசூலித்துள்ளது. இதன்மூலம் சினிமா வரலாற்றிலேயே வெளியான முதல் வாரத்திலேயே அதிக வசூல்பெற்ற இரண்டாவது படம் என்ற சாதனையை படைத்துள்ளது. </p><p>அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் திரைப்படத்திற்கு அடுத்தபடியாக 2-வது மிகப்பெரிய உலகளாவிய ஓப்பனிங் பெற்ற திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. </p><p>இந்தியாவில் ஜூலை.30ம் தேதி வெளியானநிலையில், நேற்றுவரை மட்டும் ரூ.306.37 கோடி வசூல் செய்துள்ளது. இங்கு ஆங்கில பதிப்பு முதலிடத்தில் இருந்தாலும், இந்தி மற்றும் பிற இந்திய மொழிகளில் டப் செய்யப்பட்ட பதிப்புகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. </p><p>மேலும் வேறு படங்கள் எதுவும் பெரிதாக வெளியாக நிலையில், விடுமுறை நாட்களில் (சனி, ஞாயிறு) நல்ல வசூலை குவித்துள்ளது. </p><h2>ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே</h2><p>டெஸ்டின் டேனியல் க்ரெட்டன் இயக்கியுள்ள இப்படத்தில், டாம் ஹாலண்ட் மற்றும் ஜெண்டாயா முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்' படத்தின் தொடர்ச்சியாக, தனது அடையாளத்தை அனைவரும் மறந்த பிறகு பீட்டர் பார்க்கர் எதிர்கொள்ளும் புதிய சவால்களை இக்கதை விவரிக்கிறது.</p><p>ஸ்பைடர்மேன் திரைப்படங்களுக்கு எப்போதும் இந்திய ரசிகர்களிடம் இருக்கும் தனி வரவேற்பே இந்த பிரம்மாண்ட வசூலுக்கு முக்கியக் காரணம் எனத் திரையரங்கு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய்க்கு எதிரான பேச்சு - விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ஜாமினில் விடுவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/remarks-against-chief-minister-vijay-vilathikulam-dmk-mla-markandeyan-released-on-bail</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/remarks-against-chief-minister-vijay-vilathikulam-dmk-mla-markandeyan-released-on-bail#comments</comments><guid isPermaLink="false">80a5a32c-d9fd-4e67-b5c4-9729a7638c8b</guid><pubDate>Tue, 04 Aug 2026 11:31:09 +0000</pubDate><atom:updated>2026-08-04T11:31:09.637Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை உயர் நீதிமன்றம்,Madras High Court,Markandayan,மார்க்கண்டேயன்,Vilathikulam DMK MLA,விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/dbkea1xi/New-Project-2026-08-04T165827.705.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்க்கு எதிரான பேச்சு - விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ஜாமினில் விடுவிப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/dbkea1xi/New-Project-2026-08-04T165827.705.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. ஜி.வி. மார்க்கண்டேயனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று நிபந்தனை ஜாமின் வழங்கியநிலையில், இன்று விடுதலையானார்.</p><p>தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகவும், மிரட்டல் விடுத்தும் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், கடந்த ஜூலை 20 அன்று மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். </p><p>இனிவரும் காலங்களில் முதலமைச்சர் குறித்து அவதூறாகவோ அல்லது ஆபாசமாகவோ பேசமாட்டேன் என்று தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் மார்க்கண்டேயன் எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்க வேண்டும். </p><p>அடுத்த இரண்டு வாரங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி அவர் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனைகளோடு ஜாமின் வழங்கப்பட்டது. </p><p>நாளை தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கும்நிலையில், கூட்டத்தொடரில் பங்கேற்கும் நாட்களுக்கு மட்டும் காவல் நிலையத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ராமர் கோவில் நன்கொடை திருட்டு, மாணவர்கள் விவகாரம்: விவாதிக்க பயப்படும் பிரதமர், அமித் ஷா- கார்கே குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/national/kharge-says-pm-modi-shah-scared-insulting-parliament-by-evading-answers-on-donation-theft-students-issue</link><comments>https://www.maalaimalar.com/news/national/kharge-says-pm-modi-shah-scared-insulting-parliament-by-evading-answers-on-donation-theft-students-issue#comments</comments><guid isPermaLink="false">3b21ade8-252f-45e6-a711-3086322f9269</guid><pubDate>Tue, 04 Aug 2026 11:25:55 +0000</pubDate><atom:updated>2026-08-04T11:25:55.857Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Amit Shah,அமித் ஷா,கார்கே,Kharge,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/l5m6hztf/Kharge0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர் மோடி, அமித் ஷா- கார்கே]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/l5m6hztf/Kharge0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராமர் கோயில் நன்கொடை திருட்டு விவகாரம் மற்றும் ஜந்தர் மந்தரில் போராடிய மாணவர்கள் மீதான காவல் துறை நடவடிக்கை குறித்து பதிலளிக்காமல் தவிர்ப்பதன் மூலம், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் "பயத்தில்" உள்ளனர் அல்லது நாடாளுமன்றத்தை அவமதிக்கிறார்கள் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டினார்.</p><p>எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் இந்த விவகாரம் தொடர்பாகப் போராட்டம் நடத்தி வருவதோடு, நாடாளுமன்ற நடவடிக்கைகளையும் முடக்கியுள்ளனர்.</p><p>மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள கார்கே, அவையில் இந்த விஷயத்தை எழுப்ப முயன்றாலும் அவருக்குப் பேச அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த விவகாரத்தை எழுப்பிய அவர், ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் நிர்வாகம், நிலம் வாங்குதல், பண நன்கொடைகள் மற்றும் மதிப்புமிக்க காணிக்கைகளை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பான தீவிரமான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.</p><h2>மேலும், இது தொடர்பாக கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-</h2><p>ராமர் கோவில் நன்கொடை திருட்டு விவகாரம் கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கை சார்ந்த விஷயம்.  ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. பிரதமர் மோடியே நாடாளுமன்றத்தில் தனிப்பட்ட முறையில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.</p><p>மத்திய அரசு 70 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை இந்த அறக்கட்டளையிடம் ஒப்படைத்தார். பூமி பூஜை முதல் கும்பாபிஷேக விழா வரையிலான ஒவ்வொரு முக்கிய நிகழ்விலும் மோடி பங்கேற்றார்.</p><h2>பிரதமர் பொறுப்பில் இருந்து தப்பிக்க முடியாது</h2><p>இத்தகைய சூழலில், காணிக்கைகள் திருடப்பட்டது உள்ளிட்ட தீவிரமான குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமர் தனது பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது. அமலாக்கத்துறை (ED), சிபிஐ (CBI), வருமான வரித்துறை மற்றும் பிற புலனாய்வு அமைப்புகள் எங்கே உள்ளன என்பதை அவர் அவையில் விளக்க வேண்டும்.</p><p>ராமர் பெயரில் கொள்ளையடிப்பவர்கள் ஒட்டுமொத்த நாட்டிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் நாட்டைத் தவறாக வழி நடத்துவதை நிறுத்த வேண்டும்.</p><p>இவ்வாறு கார்கே தெரிவித்திருந்தார்.</p><h2>பயப்படும் பிரதமர் மோடி, அமித் ஷா</h2><p>பின்னர் நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, நாடாளுமன்றம் சுமூகமாகச் செயல்பட மோடியும் ஷாவும் அவைக்கு வர வேண்டும் என்பதே தனது கோரிக்கை என்று கூறினார்.</p><p>நாங்கள் விவாதிக்க விரும்புகிறோம். இரு அவைகளிலும் விவாதம் நடத்த அவைத் தலைவரும் (மாநிலங்களவை) சபாநாயகரும் (மக்களவை) அனுமதிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ராமர் கோயில் நன்கொடை திருட்டு மற்றும் மாணவர்கள் மீதான வன்முறை குறித்து விவாதம் நடந்தால் உண்மை தானாகவே வெளிவரும். ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக அரசு பீதியடைந்திருப்பதாகத் தெரிகிறது.</p><p>அதோடு மட்டுமல்லாமல், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அவைக்கு வரவில்லை. அவர்கள் பயப்படுகிறார்கள் அல்லது இங்கு வராததன் மூலம் நாடாளுமன்றத்தை அவமதிக்க விரும்புகிறார்கள்" என்றார்.</p><p>காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், அந்த இரண்டு விவகாரங்கள் குறித்தும் பதிலளிக்கக் கோரி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பின.</p>]]></content:encoded></item><item><title>E20 போராட்டம் மூலம் அரசியல் தோல்வியை உயிர்ப்பிக்க முயற்சிக்கும் கெஜ்ரிவால்: பாஜக விமர்சனம்</title><link>https://www.maalaimalar.com/news/national/kejriwal-trying-to-revive-his-failed-politics-through-e20-protest-bjp</link><comments>https://www.maalaimalar.com/news/national/kejriwal-trying-to-revive-his-failed-politics-through-e20-protest-bjp#comments</comments><guid isPermaLink="false">acbedea6-eebc-4bef-aa12-972ee18fd759</guid><pubDate>Tue, 04 Aug 2026 10:56:12 +0000</pubDate><atom:updated>2026-08-04T10:56:12.659Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,Arvind Kejriwal,அரவிந்த் கெஜ்ரிவால்,எத்தனால் கலந்த எரிபொருள்,E20 fuel</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/f3mzdjxm/KejriwalTarun0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கெஜ்ரிவால்- தருண் சுக்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/f3mzdjxm/KejriwalTarun0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>E20 எரிபொருளுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தை நோக்கிப் பேரணி நடத்த முயன்ற ஆம் ஆத்மி கட்சியின் (AAP) தேசிய ஒருங்கிணைப்பாளர் <a href="https://www.maalaimalar.com/news/national/aap-agitation-against-e20-fuel-to-continue-people-must-join-protest-kejriwal">அரவிந்த் கெஜ்ரிவாலை</a> பாஜக கடுமையாக கடுமையாக சாடியுள்ளது. கெஜ்ரிவால் இந்திய விவசாயிகளின் நலன்களுக்கு எதிராகச் செயல்படுவதாகவும், தனது தோல்வியடைந்த அரசியலை மீண்டும் உயிர்ப்பிக்க முயல்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.</p><h2>கெஜ்ரிவால் பேரணி</h2><p>தொடர்பான 2.30 லட்சத்திற்கும் அதிகமான மனுக்களைச் சமர்ப்பிப்பதற்காக கெஜ்ரிவால் சுமார் 100 பேருடன் இந்தப் பேரணியை மேற்கொண்டிருந்தார். பிரதமரின் இல்லத்தை நோக்கிப் பேரணியாகச் சென்ற கெஜ்ரிவால் மற்றும் அவருடன் சென்றவர்களை டெல்லி காவல்துறை ஃபெரோஸ் ஷா சாலையில் தடுத்து நிறுத்தியது.</p><h2>இது தொடர்பாக பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக் கூறியதாவது:-</h2><p>அரவிந்த் கெஜ்ரிவாலின் பேரணி அபத்தமானது, பொறுப்பற்றது மற்றும் அர்த்தமற்றது. அனைத்தும் அறிவியல் பூர்வமான முறையிலேயே செய்யப்பட்டுள்ளன. இச்செயல்முறை முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. யாரும் எந்தப் புகாரையும் எழுப்பவில்லை.</p><p>கெஜ்ரிவாலின் பிரசாரம் இந்தியாவின் விவசாயிகளுக்கு எதிரானது. கெஜ்ரிவால் அவர்களே, நீங்கள் விவசாயிகளின் வருமானத்தைப் பறிக்க முயற்சிக்கிறீர்கள். மக்காச்சோளம், கரும்பு மற்றும் பிற விவசாய விளைபொருட்களிலிருந்து எத்தனால் தயாரிக்கப்படுகிறது.</p><p>உலகம் முழுவதும் பல நாடுகளில் பல தசாப்தங்களாக எத்தனால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் இதன் பயன்பாடு அறிவியல் பூர்வமான முறையிலேயே செயல்படுத்தப்பட்டுள்ளது.</p><h2>சர்ச்சையை உருவாக்க முயலும் கெஜ்ரிவால்</h2><p>ஆனால் கெஜ்ரிவால் தேவையற்ற சர்ச்சையை உருவாக்கவே விரும்புகிறார். எப்படியாவது அரசியல் செய்யவே அவர் விரும்புகிறார். தேசமோ, வாகனங்களோ அல்லது மக்களின் பிரச்சினைகளோ அவருக்கு முக்கியமல்ல. அவர் தனது தோல்வியடைந்த அரசியலை மீண்டும் உயிர்ப்பிக்கவே முயற்சிக்கிறார். அவரது வாதங்களுக்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை.</p><p>பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் பாஜக தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. ஒரு வலுவான அரசியல் சக்தியாக உருவெடுத்து வருகிறது.</p><p>இவ்வாறு தருண் சுக் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>இரட்டை அர்த்தத்தில் பேசுவதை உதயநிதி தவிர்த்திருக்க வேண்டும் - திருமாவளவன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-should-have-avoided-speaking-with-double-meanings-thirumavalavan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-should-have-avoided-speaking-with-double-meanings-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">08b65950-9703-49a6-b2bc-edd94f688166</guid><pubDate>Tue, 04 Aug 2026 10:53:03 +0000</pubDate><atom:updated>2026-08-04T10:53:03.049Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,thirumavalavan,திருமாவளவன்,Udhayanidhi Stalin,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/yeetbcgm/New-Project-2026-08-04T162239.045.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இரட்டை அர்த்தத்தில் பேசுவதை உதயநிதி தவிர்த்திருக்க வேண்டும் - திருமாவளவன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/yeetbcgm/New-Project-2026-08-04T162239.045.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் கைது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் சமூக வலைதளப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;</p><p>“அண்மையில் திமுக சார்பில் காவிரி நீர் உரிமைக்காக தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்,  'இரட்டுற மொழிதல்' என்னும் வகையில் எள்ளி நகையாடும் கருத்தொன்றைக் கூறியிருக்கிறார்.</p><p>எதிர்க்கட்சிகளின் மீது பொய்வழக்குப் போடுவதிலேயே  முதலமைச்சரின் கவனம் இருக்கிறது என்று அவர் சொல்லியபோது,  ஆங்கே திரண்டிருந்தவர்கள் பிரபல நடிகை ஒருவரின் பெயரைச் சொல்லிக் கூச்சலிடுகின்றனர்.</p><p>அப்போது அவர் கிண்டலாகப் பேசும் முனைப்பில் தவறான பொருள்படும்படி ஒரு கருத்தைப் பேசியுள்ளார். இது ஆங்கில ஊடகங்களில் விவாதிக்கும் அளவுக்கு - கண்டிக்கும் அளவுக்கு தேசிய அளவிலான பிரச்சினையாக மாறியுள்ளது. </p><p>எதிர்க்கட்சித் தலைவர் என்கிற பொறுப்பு வாய்ந்த இடத்தில் இருப்பவர் இதுபோல இரட்டை பொருள் தரும் 'எள்ளல் நடையில்' பேசும் முறையைத் தவிர்த்திருக்க வேண்டும். ஒரு பெண்ணைக் குறித்து இழிவாகப் பேசும் இத்தகைய அணுகுமுறை அவரது அரசியல் தகுதிக்குப் பொருத்தமானதில்லை. நாகரிக அரசியலுக்கு ஏற்புடையதல்ல.</p><p>சூழ்ந்திருப்பவர்களின் சுவைக்கேற்ப சொல்லாடல் செய்வது என்கிற உந்துதலால் உணர்ச்சிவயப்பட்ட -  தன்னிலை மறந்த அணுகுமுறையைக் கைவிட வேண்டும். பெண்மையைக் கொச்சைப்படுத்தும் வகையில் புரிதலை ஏற்படுத்திய அந்த அணுகுமுறை கண்டிக்கத் தக்கதாகும். </p><p>நாளை ( ஆக-05) சட்டமன்றம் கூடும் சூழ்நிலையில்,  எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பிலிருப்பவரைச் சிறைப்படுத்துவதைத் தவிர்ப்பது ஆளுங்கட்சியின் மீதான நன்மதிப்பை உயர்த்தும். </p><p>தற்போதைய நிலையில், காவிரிநீர் உரிமைக்காக அனைத்துக் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என யாவரும் இணைந்து குரல் கொடுப்பதற்கும்; இந்திய ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கும் இது ஏதுவாக அமையும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும்; தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும்!- மு.க.ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-arrogance-leads-to-ruin-persistent-arrogance-accelerates-that-ruin</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-arrogance-leads-to-ruin-persistent-arrogance-accelerates-that-ruin#comments</comments><guid isPermaLink="false">389a5892-6935-487c-927f-f77a46e38258</guid><pubDate>Tue, 04 Aug 2026 10:22:23 +0000</pubDate><atom:updated>2026-08-04T10:22:23.624Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/dzhxw5z4/MKStalin09.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/dzhxw5z4/MKStalin09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டதற்காகக் கைது செய்துள்ள கழக உடன்பிறப்புகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்! என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.</aside><p>தி.மு.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/முக-ஸ்டாலின்">மு.க.ஸ்டாலின்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>காவிரியில் தமிழ்நாட்டுக்கான உரிமையை நிலைநாட்ட துப்பு இல்லாத, மேகதாது அணையைத் தடுக்க முதுகெலும்பு இல்லாத த.வெ.க. அரசின் அலட்சிய ஆணவப் போக்கைக் கண்டித்து தஞ்சையில் தி.மு.க. சார்பில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தின் எழுச்சி ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கொந்தளிப்பை உணர்த்துவதாக அமைந்திருந்தது.</p><p>கழக உடன்பிறப்புகளோடு உழவர் பெருமக்களும் பொதுமக்களும் பங்கெடுத்து தங்களது உணர்ச்சியை வெளிப்படுத்தினார்கள். கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, த.வெ.க. அரசின் கையாலாகாத்தனத்தை மிகக்கடுமையாக அம்பலப்படுத்தி விமர்சித்தார்.</p><p>"நிர்வாகத் திறனற்ற டம்மி முதலமைச்சரால் காவிரி நீரைக் கொண்டுவர முடியவுமில்லை, மேகதாது அணையைத் தடுக்க பேசவும் முடியவில்லை, விவசாயிகள் வேதனையில் கண்ணீர் வடித்துக் கொண்டு இருக்கிறார்கள், ஆனால் அமைச்சர்களோ முதலமைச்சர் நடித்த படத்தை பார்த்து கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள், ஜோக்கர் அமைச்சரவை தமிழ்நாட்டில் அமைந்திருக்கிறது" என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சித் தலைவர் வைத்தார். இதற்கு இதுவரை ஆட்சியாளர்களால் பதில் சொல்ல முடியவில்லை.</p><p>காவிரி பிரச்சனையில் அரசின் தோல்வி வெளிச்சத்துக்கு வந்துவிட்டதை மறைக்கும் வகையில், பிரச்சனையையே திசை திருப்பும் வகையில் இன்று காலையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வீட்டுக்கு வந்த போலீஸ் படை அவரை அராஜகமாக கைது செய்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அவரைக் கைது செய்து தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றுள்ளது த.வெ.க. அரசு. பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருப்பதன் மூலமாக <a href="https://www.maalaimalar.com/topic/உதயநிதி-ஸ்டாலின்">உதயநிதியை</a> மிரட்டப் பார்க்கிறார்கள்.</p><p>நாளை சட்டமன்றம் கூட இருக்கிறது. நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறார்கள். அப்போது கேபினெட் தகுதி பெற்ற எதிர்க்கட்சித் தலைவர் அவையில் இருக்க வேண்டும். ஆனால் இருக்கக் கூடாது என்று நினைத்து இந்த நடவடிக்கையைத் தொடங்கி இருக்கிறார்கள்.</p><p>நாடு முழுவதும் கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் காட்டிய எதிர்ப்புக்குப் பிறகு, 'கைது செய்யும் எண்ணம் இல்லை, விசாரணை முடிந்ததும் விடுவித்துவிடுவோம்' என்று நீதிமன்றத்தில் த.வெ.க. அரசு வழக்கறிஞர் சொல்லி இருக்கிறார். விசாரணை நடத்துவதுதான் நோக்கம் என்றால் சென்னையிலேயே வைத்து நடத்தி இருக்கலாமே? எதற்காக தஞ்சாவூர் அழைத்துச் செல்ல வேண்டும்? எதற்கு ஜாமினில் விடுவிக்க முடியாத பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்?  மக்கள் எதிர்ப்பால் பின் வாங்கியது தெரியாமல் பூசி மெழுகுகிறது அரசு. 'உதயநிதியை இன்றே விடுதலை செய்ய வேண்டும்' என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கி இருக்கும் உத்தரவு, த.வெ.க.வின் பாசிசத் தன்மைக்கு விழுந்த அடி!</p><p>ஆட்சிக்கு வந்தது முதல் தன்னையும் தனது அமைச்சர்களையும், ஆட்சியையும் விமர்சிப்பவர்களைக் கைது செய்யும் ஒரே வேலையைத்தான் முதலமைச்சர் விஜய் பார்த்து வருகிறார். ட்வீட் போட்டால், வீடியோ பேசினால் கைது செய்து வருகிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மார்க்கண்டேயன் ஆகியோர் மீதும் கைது நடவடிக்கை பாய்ந்தது. நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், இளைஞர்களைப் போராட விடவில்லை. போராட்டம் நடத்தியவர்கள் மீது அராஜகமான தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. சென்னை மெரினா கடற்கரையே பூட்டி வைக்கப்பட்டது பாசிசத்தின் உச்சம். விவசாயிகள் தன்னெழுச்சியாகப் போராடியதை எதிர்க்கட்சிகளின் தூண்டுதலின் பேரில் போராடியதாகச் சொல்லப்பட்டது. நீட் தேர்வு எதிர்ப்பு பரப்புரை செய்யச் சென்ற திராவிடர் கழக வாகனப் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாகத்தான் விவசாயிகளுக்காக ஆர்ப்பாட்டம் நடத்திய, அதில் பங்கெடுத்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மீது கைது நடவடிக்கையைப் பாய்ச்சியது த.வெ.க. அரசு.</p><p>இதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் சில தலைவர்கள், உண்மை என்னவென்று தெரிந்து கொள்ளாமல் உதயநிதிக்குக் கண்டனம் தெரிவித்திருப்பது வருந்தத்தக்கது. உதயநிதி தனது உரையில் ஆபாசமாக ஏதும் பேசவில்லை. யாரையும் குறிப்பிடவில்லை. அவர் பேசாத ஒன்றை பேசியதாகச் சிலர் பரப்பியதைச் சரிபார்க்காமல் அரசியல் தலைவர்கள் சிலர் உதயநிதியைக் கண்டிப்பது பிரச்சனையை திசைதிருப்புவது ஆகும். உதயநிதி தவறுதலாகப் பேசுகிறவர் அல்ல. அப்படியே தவறுதலாகப் பேசினாலும், உடனடியாக மன்னிப்பு கேட்கும் இயல்புடையவர்.</p><p>ஆட்சிக்கு வந்தது முதல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நினைக்காமல், ரீல்ஸ் கிரியேட்டராக மட்டுமே வலம் வரும் முதலமைச்சர் விஜய், தனது பொறுப்பை உணர்ந்து இனியாவது செயல்பட வேண்டும்.</p><p>தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டதற்காகக் கைது செய்துள்ள கழக உடன்பிறப்புகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்!</p><p>ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும்; தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும்! என்று கூறியுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தமிழக முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் கொடுத்த சர்ப்ரைஸ் பரிசு: நெகிழ்ந்த தொகுப்பாளர் DD!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/jason-sanjays-sigma-interview-surprise-dd-receives-bouquet-and-heartfelt-thanks</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/jason-sanjays-sigma-interview-surprise-dd-receives-bouquet-and-heartfelt-thanks#comments</comments><guid isPermaLink="false">4141eb58-2d7a-451b-8f41-3d7540a3cf0b</guid><pubDate>Tue, 04 Aug 2026 10:17:06 +0000</pubDate><atom:updated>2026-08-04T10:17:06.910Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>jason sanjay,DD,திவ்யதர்ஷினி,ஜேசன் சஞ்சய்,சிக்மா,sigma,Divya Dharshini,LycaProductions,ThalapathyVijaySon</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/2v262crf/DD-Jason-Sanjay" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DD - Jason Sanjay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/2v262crf/DD-Jason-Sanjay?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>ஜேசன் சஞ்சய் அனுப்பிய பரிசு!</h2> <p>லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகும் 'சிக்மா' திரைப்படத்தின் நேர்காணல் சமீபத்தில் நடைபெற்றது. </p><p>இந்த நேர்காணலை பிரபல தொகுப்பாளர் DD தொகுத்து வாங்கினார். நேர்காணல் மிகவும் சிறப்பாக அமைந்ததைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனும் இயக்குனருமான ஜேசன் சஞ்சய், DD-க்கு மலர்க்கொத்து மற்றும் வாழ்த்துச் செய்தி அனுப்பி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.</p><h2>ஜேசன் சஞ்சய் வாழ்த்து!</h2><p>ஜேசன் சஞ்சய் அனுப்பிய வாழ்த்துக் குறிப்பில், "இந்த சிறப்பான நேர்காணலுக்கு மிக்க நன்றி DD MAM " என்று குறிப்பிட்டிருந்தார்.</p><p> இந்த அன்பான பரிசைக் கண்டு நெகிழ்ந்துபோன தொகுப்பாளர் DD, அந்த மலர்க்கொத்துடன் இருக்கும் புகைப்படத்தைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.</p><figure><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DblQcDtFOS_/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:658px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DblQcDtFOS_/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a></div></blockquote>
<script async src="//platform.instagram.com/en_US/embeds.js"></script></figure><h2>லைகா தயாரிப்பாளரின் பாராட்டு:</h2><p>இந்த நேர்காணல் குறித்து லைகா குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரன் தனது எக்ஸ் பக்கத்தில், "உங்களுடன் பணிபுரிவது எப்போதும் ஒரு அற்புதமான அனுபவம் DD! இதேபோல் நாம் இணைந்து இன்னும் பல வெற்றிகரமான திட்டங்களை உருவாக்க வாழ்த்துகள்" என DD -யைப் பாராட்டிப் பதிவிட்டுள்ளார்.</p><h2>இயக்குநராக ஜேசன் சஞ்சய்:</h2><p>தமிழக முதல்வர் விஜய் அரசியல் பணிகளில் தீவிரமாக இருக்கும் நிலையில், அவரது மகன் ஜேசன் சஞ்சய் லண்டனில் திரைத்துறை சார்ந்த படிப்பை முடித்துவிட்டு தற்போது தமிழ் சினிமாவில் இயக்குநராகக் கால் பதித்துள்ளார். </p><p>இவரது முதல் பட நேர்காணல் மற்றும் டிடி-யின் இந்த சமூக வலைதளப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>E20 எரிபொருளுக்கு எதிரான AAP-யின் போராட்டம் தொடரும்: மக்கள் இதில் இணைய வேண்டும்: கெஜ்ரிவால்</title><link>https://www.maalaimalar.com/news/national/aap-agitation-against-e20-fuel-to-continue-people-must-join-protest-kejriwal</link><comments>https://www.maalaimalar.com/news/national/aap-agitation-against-e20-fuel-to-continue-people-must-join-protest-kejriwal#comments</comments><guid isPermaLink="false">7e5571ea-8de6-4676-b1d2-91378159dd04</guid><pubDate>Tue, 04 Aug 2026 10:16:22 +0000</pubDate><atom:updated>2026-08-04T10:16:22.448Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Arvind Kejriwal,அரவிந்த் கெஜ்ரிவால்,ஆம் ஆத்மி,AAP,எத்தனால் கலந்த எரிபொருள்,E20 fuel</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/a5hwau5d/arvindKejriwal.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அரவிந்த் கெஜ்ரிவால் போராட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/a5hwau5d/arvindKejriwal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/some-degree-of-damage-is-possible-central-governments-reply-in-parliament-regarding-ethanol-blended-petrol">E20</a> எரிபொருளுக்கு எதிரான தங்கள் கட்சியின் பிரசாரம் தொடரும் என்றும், இதன் அமலாக்கத்தை மக்கள் தடுக்க விரும்பினால் பெருமளவில் இந்தப் போராட்டத்தில் இணைய வேண்டும் என்றும் ஆம் ஆத்மி கட்சியின்  தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.</p><h2>E20 எரிபொருள்</h2><p>E20 எரிபொருளுக்கு எதிரான 2.30 லட்சத்திற்கும் மேற்பட்ட மனுக்களைச் சமர்ப்பிக்க, சுமார் 100 பேருடன் பிரதமர் இல்லத்தை நோக்கிச் செல்ல முயன்ற கெஜ்ரிவால் மற்றும் பிற கட்சித் தலைவர்களை டெல்லி காவல்துறை தடுத்து நிறுத்தியது. இதனால் அவர்கள் ஃபிரோஸ் ஷா சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><h2>அப்போது கெஜ்ரிவால் கூறியதாவது:-</h2><p>தங்கள் கட்சிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள மாநிலங்களிலும் இக்கொள்கையை அமல்படுத்தும் எந்தவொரு முயற்சியையும் எதிர்ப்போம்.</p><p>கோவா மற்றும் குஜராத்தில் எங்களுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அங்கே E20 நடைமுறைக்கு வருவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவைகளில் இதை எதிர்ப்பார்கள்.</p><h2>மக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும்</h2><p>இன்று நடைபெற்ற பேரணியில் சுமார் 100 பேர் மட்டுமே பங்கேற்றாலும், சமூக ஊடகங்களில் விமர்சனங்களையும் கேலிப் பேச்சுகளையும் எதிர்கொண்ட போதிலும் அவர்கள் துணிச்சலுடன் பங்கேற்றனர்.</p><p>மக்கள் E20-லிருந்து விடுபட விரும்பினால், அவர்கள் பெருமளவில் வீதிகளுக்கு வந்து போராட வேண்டும்.</p><p>எத்தனால் உற்பத்தியால் இந்திய விவசாயிகளுக்கு எந்தப் பயனும் கிடைக்காது என்றும், மாறாக இக்கொள்கை அமெரிக்க விவசாயிகளுக்கே பயனளிக்கும். இந்திய விவசாயிகளை விட வெளிநாட்டு நலன்களுக்கே இக்கொள்கை முன்னுரிமை அளிப்பதாக உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அழுத்தத்தை எதிர்த்து நின்று அமெரிக்காவிலிருந்து எத்தனால் இறக்குமதி செய்வதை பிரதமர் மோடி நிறுத்த வேண்டும்.</p><p>இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.</p> <h2>சஞ்சய் சிங் எம்.பி.</h2><p>நாடாளுமன்றத்தில் தான் இந்த விவகாரத்தை எழுப்பியதாகவும், E20-ஐ அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதை உணர்த்தும் வகையிலான பதிலை பெற்றதாகவும் ஆம் ஆத்மி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் தெரிவித்தார்.</p><p>இது தொடர்பாக சஞ்சய் சிங் கூறுகையில் "இன்று நாடாளுமன்றத்தில் நான் இந்தக் கேள்வியை எழுப்பினேன். அரசு E20-ஐ அமல்படுத்துவதில் உறுதியாக உள்ளது என்பதை அந்தப் பதில் தெளிவுபடுத்துகிறது" என்றார்.</p><p>எத்தனால் கலந்த பெட்ரோலால் மைலேஜ் குறைவாக கிடைப்பதாகவும், என்ஜின் பராமரிப்பு செலவு கூடுவதாகவும் வாகன ஒட்டிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>காலி பணியிடங்களை நிரப்புவதாக வாக்குறுதி அளித்து விட்டு காலியிடங்களை ஒழிப்பதா?- அன்புமணி கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-abolishing-vacancies-after-promising-to-fill-them</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-abolishing-vacancies-after-promising-to-fill-them#comments</comments><guid isPermaLink="false">511dfbf6-0670-411b-a1f4-837eb2899425</guid><pubDate>Tue, 04 Aug 2026 10:09:40 +0000</pubDate><atom:updated>2026-08-04T10:09:40.278Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/s65e15e5/anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/s65e15e5/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>செவிலியர் பணியிடங்களை ஒழிக்க வகை செய்யும் அரசாணை எண் 204-ஐ ரத்து செய்ய வேண்டும். காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டும்.</aside><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகள், பொது சுகாதாரத்துறை ஆகியவற்றில் உள்ள 502 செவிலியர் பணியிடங்களை ஒழித்து விட்டு, அந்த இடங்களில் பணியாற்றி வந்த செவிலியர்களை வேறு இடங்களில் அமர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பப் போவதாக வாக்குறுதி அளித்திருந்த தவெக, ஆட்சிக்கு வந்த பின் காலியிடங்களை ஒழிப்பது அநீதியாகும்.</p><p>தமிழ்நாட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கி, மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகள் வரை அனைத்து இடங்களிலும் செவிலியர்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. அவற்றிலுள்ள காலியிடங்களை நிரப்புவதன் மூலம் தான் இந்த சிக்கலுக்கு தீர்வு காண முடியும். ஆனால், தமிழக அரசோ, ஓரிடத்தில் பணியாற்றும் செவிலியர்களை இன்னொரு இடத்திற்கு மாற்றி நிலைமையை சமாளிக்கும் வித்தையை செயல்படுத்தி வருகிறது. இதனால் ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த நோயர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர்.</p><p>சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, சேலம் மருத்துவக் கல்லூரி, திருச்சி மருத்துவக் கல்லூரி ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் போதிய அளவில் செவிலியர்கள் இல்லை. புதிய செவிலியர்களை தேர்வு செய்து அந்த இடங்களில் நியமிப்பது தான் இதற்கு தீர்வு ஆகும். ஆனால், அதை செய்யாத தமிழக அரசு நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பூர், நீலகிரி, அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர் ஆகிய 7 மருத்துவக் கல்லூரிகளில் உள்ள தலா 30 செவிலியர் பணியிடங்களை ஒழித்து விட்டு, அங்கு பணியாற்றி வந்த 210 செவிலியர்களை ஸ்டான்லி, செங்கல்பட்டு, சேலம், திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நியமித்துள்ளது. இதற்காக கடந்த ஜூலை 21&amp;ஆம் நாள் 204 என்ற அரசாணையை மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை பிறப்பித்திருக்கிறது.</p><p>இன்னொருபுறம், மனநல மருத்துவம் மற்றும் மறுவாழ்வு வழங்குவதற்காக அரசு மருத்துவமனைகளில் இயங்கும் 17 அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையங்களில் பணியமர்த்துவதற்காக 292 செவிலியர்கள் தேவைப்படுகின்றனர். அவர்களை புதிதாக நியமிக்காமல் அரசு மருத்துவமனைகளில் உள்ள 100 செவிலியர் பணியிடங்களையும், பொது சுகாதாரத்துறையில் உள்ள 192 செவிலியர் பணியிடங்களையும் ஒழித்துள்ள அரசு, அந்த பணியிடங்களில் பணியாற்றிய செவிலியர்களை அவசர சிகிச்சை மையங்களில் நியமித்துள்ளது.</p><h2><strong>நியாயமல்ல</strong></h2><p>தேசிய மருத்துவ ஆணையம் உள்ளிட்ட ஒழுங்குமுறை அமைப்புகள் வரையறுத்துள்ள விதிகளின்படி  தேவைப்படும் செவிலியர்கள் எண்ணிக்கையில் நான்கில் ஒரு பங்கு செவிலியர்கள் மட்டும் தான் அரசு  மருத்துவமனைகளில் பணியாற்றுகின்றனர். தமிழ்நாட்டில் 1832 ஊரக ஆரம்ப சுகாதார நிலையங்கள், 504 நகர்ப்புற சுகாதார நிலையங்கள் என மொத்தம் 2334 நிலையங்கள் செயல்பட்டு வரும் நிலையில்,  அவற்றில் 1400-க்கும் குறைவான செவிலியர்கள் மட்டும் தான் நிரந்தர அடிப்படையில் பணியாற்றுகின்றனர். இந்த எண்ணிக்கை போதுமானதல்ல எனும் போது இருக்கும் பணியிடங்களையும் குறைப்பது நியாயமல்ல.</p><p>தமிழ்நாடு முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மாவட்ட மருத்துவமனைகள் வரை 6500&amp;க்கும் கூடுதலான செவிலியர்கள் மிகக் குறைந்த ஊதியத்தில்  தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றுகின்றனர். இவர்கள் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் மூலம் தகுதி மற்றும் இட ஒதுக்கீட்டை பின்பற்றி தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆவர். மருத்துவமனைகளில் நிரந்தர செவிலியர் பணியிடங்கள் காலியாகும் போது அந்த இடங்கள் தொகுப்பூதிய செவிலியர்களைக் கொண்டு நிரப்பப்பட வேண்டும் என்பது தான் நடைமுறையாகும். ஆனால், இருக்கும் பணியிடங்களையும் தமிழக அரசு ஒழித்து வருவதால், இப்போது  தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் செவிலியர்கள் பணி நிலைப்பு பெற முடியாத நிலை உருவாகியுள்ளது.</p><p>அரசு மருத்துவக் கல்லூரிகளில் 6 செவிலியர் கல்லூரிகள் புதிதாகத்  தொடங்கப்படவுள்ளன. அவற்றில் பணி செய்யவும் ஒப்ப்ந்த அடிப்படையிலான செவிலியர்கள் தான் நியமிக்கப்படவுள்ளனர். இதனால் அரசு மருத்துவமனைகளில் 9 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிலைப்பு என்பது பகல் கனவாக மாறிவிட்டது. இது செவிலியர்களிடம் மனச்சோர்வை ஏற்படுத்தியுள்ளது.</p><p>2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தவெக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், அரசுத் துறைகளில் ஐந்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்று வரும் தற்காலிக பணியாளர்களுக்கு பணி நிலைப்பு  வழங்கப் படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு பதிலாக இருக்கும் பணியிடங்களை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதே நிலை நீடித்தால், தமிழக மருத்துவமனைகளில் சில ஆண்டுகளில் செவிலியர்கள் இருக்க மாட்டார்கள். அத்தகைய நிலை ஏற்படுவதைத்  தடுக்க வேண்டும் என்றால், செவிலியர் பணியிடங்களை ஒழிக்க வகை செய்யும் அரசாணை எண் 204-ஐ ரத்து செய்ய வேண்டும். காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>மழைக்கால கூட்டத்தொடர்: மாநிலங்களவையில் பிறப்பு-இறப்பு பதிவுகள் (திருத்தம்) மசோதா தாக்கல்</title><link>https://www.maalaimalar.com/news/national/rajya-sabha-passes-the-registration-of-births-and-deaths-amendment-bill-2026-amid-sloganeering-by-opposition</link><comments>https://www.maalaimalar.com/news/national/rajya-sabha-passes-the-registration-of-births-and-deaths-amendment-bill-2026-amid-sloganeering-by-opposition#comments</comments><guid isPermaLink="false">29ed327f-41c0-4775-9a33-c4ad060b33a0</guid><pubDate>Tue, 04 Aug 2026 09:55:59 +0000</pubDate><atom:updated>2026-08-04T09:55:59.055Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மாநிலங்களவை,rajya sabha,opposition parties,நாடாளுமன்றம்,parliment,எதிர்க்கட்சிகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/kz7a30ro/rajya-sabha.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rajya sabha]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/kz7a30ro/rajya-sabha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டம் தொடங்கிய முதல் நாள் முதலே எதிர்க்கட்சிகளின் அமளி நீடித்து வருகிறது.</p><p>இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 12-வது நாளான இன்று நீட் முறைகேடு விவகாரம், மாணவர் போராட்டங்கள் மீதான போலீஸ் நடவடிக்கை, ராமர் கோவில் நன்கொடை விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பினர்.</p><p>மேலும், உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>அப்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. தொடக்கத்திலேயே ஏற்பட்ட அமளியால் மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.</p><p>இதேபோல், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோஷங்களால் அவை பாதிக்கப்பட்டது. தொடர் அமளியால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.</p><p>இதற்கிடையே, மாநிலங்களவையில் பிறப்பு-இறப்பு பதிவுகள் (திருத்தம்) மசோதா 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின், எதிர்க்கட்சியினரின் அமளியால் மாநிலங்களவை நாள் முழுதும் ஒத்திவைக்கப்பட்டது.</p><p>கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிறப்பு-இறப்பு பதிவுகள் (திருத்தம்) மசோதா 2026 தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.</p><p>நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளதால், அவையில் தொடர்ந்து அமளி நீடித்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>ராமர் கோவில் நன்கொடை திருட்டு, மாணவர்கள் போராட்டம்தான் பாஜக-வின் இடைத்தேர்தல் தோல்விக்கு காரணம்: சஞ்சய் ராவத்</title><link>https://www.maalaimalar.com/news/national/sanjay-raut-ayodhya-temple-loot-police-action-on-student-protesters-cost-bjp-bankipur-seat</link><comments>https://www.maalaimalar.com/news/national/sanjay-raut-ayodhya-temple-loot-police-action-on-student-protesters-cost-bjp-bankipur-seat#comments</comments><guid isPermaLink="false">ca688ec4-03e1-4925-b23e-9836fff5230b</guid><pubDate>Tue, 04 Aug 2026 09:52:43 +0000</pubDate><atom:updated>2026-08-04T09:52:43.306Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பிரசாந்த் கிஷோர்,Prashant Kishor,ஜன் சுராஜ் கட்சி,சஞ்சய் ராவத்,Sanjay Raut,Jan Suraaj Party</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/s8l3oyjv/SanjayRaut0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சஞ்சய் ராவத்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/s8l3oyjv/SanjayRaut0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அயோத்தி கோவில் விவகாரத்தில் நடந்த கொள்ளை மற்றும் மாணவர் போராட்டக்காரர்கள் மீதான காவல் துறை நடவடிக்கை ஆகியவை பாங்கிபூர் தொகுதியில் பாஜக-வின் தோல்விக்குக் காரணமாக அமைந்தன என்ற சிவசேனா (UBT) எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.</p><h2>பாங்கிபூர் இடைத்தேர்தல்</h2><p>பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நிதின் நபின் பாஜக கட்சியின் தேசிய தலைவராக பதவி ஏற்றதால், பாங்கிபூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.</p><p>தேர்தல் வியூகம் அமைப்பாளரான பிரசாந்த் கிஷோர், தனது கட்சியான ஜன் சுராஜ் சார்பில் போட்டியிட்டார். இதில் பாஜக வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றார். பீகார் மாநில சட்டசபை தேர்தலில் மோசமான தோல்வியை சந்தித்த நிலையில், தற்போது இடைத்தேர்தலில் அவருக்கு வெற்றி கிடைத்துள்ளது.</p><h2>இந்த நிலையில் சிவசேனா (UBT) கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் கூறியதாவது:-</h2><p>ஜந்தர் மந்தரில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டம் மற்றும் இளம் போராட்டக்காரர்கள் மீது காவல் துறை எடுத்த நடவடிக்கை, அயோத்தி ராமர் கோவிலில் நடந்ததாகக் கூறப்படும் நன்கொடை திருட்டு ஆகியவை குறித்து பாஜக தலைமை மௌனம் காத்தது ஆகியவை பாஜக-வின் கோட்டையான பாங்கிபூரில் அதன் தோல்விக்குக் காரணங்களாக அமைந்தன.</p><p>லக்னோவில் கட்சித் தலைவர் நிதின் நபினை வரவேற்கும் நிகழ்வின்போது, ​​இந்து கடவுளான அனுமன் வேடமணிந்த ஒருவர் பாஜக கொடியை அசைத்து நடனமாடிய வீடியோ மக்களின் மனதைப் புண்படுத்தியது.</p><h2>எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை அதிகரிப்பு</h2><p>இந்த இடைத்தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. 1988-ல் நடிகர் அமிதாப் பச்சன் பதவி விலகியதால் அலகாபாத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வி.பி. சிங் வெற்றி பெற்றார். அவரது வெற்றி நாட்டில் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சியின் தொடக்கமாக அமைந்தது.</p><p>உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஐந்து முறை வென்ற கோரக்பூர் மக்களவைத் தொகுதியை, 2018-ல் நடைபெற்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சியிடம் பாஜக இழந்தது.</p><h2>Gen Z</h2><p>மும்பையில் உள்ள நீடா அம்பானி கலாச்சார மையத்தில் (NMACC) இந்த வாரம் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் 'ஜென்-இசட்' (Gen Z) தலைமுறையினருடன் மேற்கொள்ளவிருக்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள், பாஜக தலைவர்கள் அல்லது சங்கத்தின் பிரதிநிதிகளின் பிள்ளைகள் அல்லது பேரக்குழந்தைகளாகவே இருப்பார்கள்.</p><p>அங்கு வேறு யார் செல்வார்கள்? அதில் பங்கேற்பவர்கள் ஜென்-இசட் (Gen Z) தலைமுறையைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தியவர்கள், கண்ணீர்ப்புகை மற்றும் தடியடியை எதிர்கொண்டவர்கள் ஆகியோரே 'ஜென்-இசட்' தலைமுறையினர். ஆர்எஸ்எஸ் (RSS) தலைவரின் நிகழ்ச்சிக்கு அவர்களே அழைக்கப்பட்டிருக்க வேண்டும்.</p><p>இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/possibility-of-heavy-rain-in-13-districts-including-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/possibility-of-heavy-rain-in-13-districts-including-chennai#comments</comments><guid isPermaLink="false">9cf7defd-926c-4de9-9848-01a3403bb02a</guid><pubDate>Tue, 04 Aug 2026 09:48:40 +0000</pubDate><atom:updated>2026-08-04T09:48:40.599Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,IMD</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/27qhme6p/rain005.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மழை]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/27qhme6p/rain005.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</aside><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>சுமார் 5.8 கிமீ உயரத்தில் தெற்கு உள் கர்நாடகா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.</p><p>சுமார் 5.8 கிமீ உயரத்தில் ஸ்ரீலங்காவின் தென்மேற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.</p><p>சுமார் 4.5 கிமீ உயரத்தில் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.</p><p>வட தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.</p><h2><strong>மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்</strong></h2><p>இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி, கரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>நாளை திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி, கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>6 மற்றும் 7-ந்தேதிகளில்  தேனி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>8-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>இன்று குமரிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>நாளை முதல் 7-ந்தேதி வரை குமரிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் நினைவு விழாவினை புறக்கணிக்கும் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/film-writers-association-boycotts-the-memorial-event-for-directors-bharathiraja-and-bhagyaraj</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/film-writers-association-boycotts-the-memorial-event-for-directors-bharathiraja-and-bhagyaraj#comments</comments><guid isPermaLink="false">e78239cd-8573-4292-9a8f-73e49ae97cdd</guid><pubDate>Tue, 04 Aug 2026 09:35:11 +0000</pubDate><atom:updated>2026-08-04T09:35:11.326Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Bhagyaraj,பாக்யராஜ்,பாரதிராஜா,BharathiRaja,Commemoration Function,SWAN,நினைவு விழா,தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/brfgw0nm/New-Project-2026-08-04T150426.252.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் நினைவு விழாவினை புறக்கணிக்கும் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/brfgw0nm/New-Project-2026-08-04T150426.252.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மறைந்த இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும்  பாக்யராஜுக்காக தென்னிந்திய நடிகர் சங்கம், இயக்குநர் சங்கம், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட 4 சங்கங்கள் சார்பாக நடத்தப்படவுள்ள நினைவு விழாவை புறக்கணிப்பதாக தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;</p><p>“பாரதிராஜா மற்றும் கே.பாக்யராஜ் இருவருக்கும் உங்கள் சங்கம் உள்பட ஐந்து அமைப்புகள் இணைந்து நடத்தவிருக்கும் விழா குறித்த தகவல் அறிந்ததுமே, அதாவது 26.07.2026 அன்றே இந்த விழாவில் எழுத்தாளர்கள் சங்கமும் பங்கு பெறுவது தானே சரியானதாக, முறையானதாக இருக்கும் என்கிற எங்கள் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் நியாயமான உணர்வை தாய்ச் சங்கத்தின் தலைவரான ஆர்.கே.செல்வமணி அவர்களை அழைத்து எங்கள் தலைவர் சேரன் போனில் பேசினார். </p><p>அதற்கு அவர் சொன்ன சமாதானம் ஏற்றுக்கொள்ளத் தக்கதாய் இல்லை. திரைத்துறையில் முக்கியமான சங்கம் எழுத்தாளர் சங்கம்தான். எங்கள் சங்கமே அனைத்து சங்கங்களுக்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறது என்பது அனைவரும் அறிந்த மறுக்க முடியாத உண்மை. </p><p>கடந்த ஐந்து வருடங்களாக பாக்யராஜ் இந்தச் சங்கத்தில் தலைவராக இருந்தார். அவர் இருந்தபோதுதான் சங்கத்தின் மீது வெளிச்சம் விழுந்து திரையுலகம் கடந்து வெளியில் இருக்கும் மக்களும் கதை, எழுத்தாளர்கள் பற்றி பேசும் வண்ணம் சிறப்பாக செயல்பட்டது.</p><p>எதிர்பாராத அவரின் திடீர் மறைவுக்குப் பின் சங்கத்தில் இப்போதுதான் தேர்தல் நடந்தது. எங்கள் உறுப்பினர்கள் சேரனை அதிக வாக்குகள் அளித்து தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள். பட்டுக்கோட்டை பிரபாகர், ஆர். சுந்தர்ராஜன், சமுத்திரகனி, கவிஞர் சினேகன் என பலரும் புதிய பொறுப்புக்கு வந்தோம்.</p><p>அடுத்தக் கட்டத்திற்கு சங்கம் உயர நிறைய நல்ல திட்டங்களுடன் முழு வேகத்தில் செயல்பட்டு வரும் எங்களுக்கு மன உளைச்சலையும், மிகுந்த வருத்தத்தையும் உண்டாக்கும் ஒரு சம்பவம்தான் இந்த விழாவில் எங்கள் சங்கம் அறமற்ற முறையில் புறக்கணிக்கப் பட்டிருப்பது!</p><p>நாங்களும் இந்த விழாவில் இணைந்து பங்கெடுக்க விரும்புகிறோம் என ராதிகா சரத்குமார், தமிழ்குமரன், திரு.ரத்னகுமார், சித்ரா லட்சுமணன், நாசர் என்று விழாவுடன் தொடர்புகொண்ட இத்தனைப் பேரிடமும் எங்கள் தலைவர் சேரன் போனில் பேசினார். அவர்கள் அத்தனைப் பேருமே எங்கள் உணர்வை மதித்தும், அதுவே சரியானது என்றும்தான் பேசினார்கள்.</p><p>ஐந்து அமைப்புகளுக்கும் எங்கள் ஆதங்கத்தையும், கோரிக்கையையும் தெரிவித்து கடிதம் எழுதத் தயார் நிலையில் நாங்கள் இருந்தபோது சித்ரா லட்சுமணன் கடிதம் அனுப்ப வேண்டாம் என்றும், இணக்கமாக முடிவெடுத்துவிடலாம் என்றும் நம்பிக்கை அளித்ததன் காரணமாக அன்று யாருக்கும் கடிதம் அனுப்பவில்லை. (கடிதத்தின் நகலையும் அவருக்கு அனுப்பியிருந்தோம்) </p><p>பத்திரிகையாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் சந்தித்தபோது எங்கள் தலைவர் ஆர்.கே.செல்வமணி அவர்களிடம் இது குறித்து நேரிலும் பேசினார்.</p><p>ஆனால் கடந்த ஒரு வாரமாக யாரிடமிருந்தும் எந்தத் தகவலும் இல்லாத சூழ்நிலையில் திடீரென்று நேற்று சித்ரா லட்சுமணன் தலைவரை ப்ரஸ் மீட்டில் கலந்துகொள்ளுமாறு அழைத்தார்.</p><p>ஆனால் எங்களது நிர்வாக உறுப்பினர்கள் அந்த அழைப்பில் எந்த முக்கியத்துவமும் இல்லை, விழாவில் நாம் என்ன செய்யப் போகிறோம், நம் பங்களிப்பென்ன என்று எதுவுமே தெரியாமல் கூட்டத்தில் ஒருவராக நாம் அமர்ந்து என்ன சொல்லப் போகிறோம். </p><p>நம் நோக்கம் ப்ரஸ் மீட்டில் அமர்வது அல்ல விழாவில் பங்கெடுத்துச் சிறப்பிப்பது..அதற்குத்தானே அவர்கள் அழைத்துப் பேசியிருக்க வேண்டும்...இப்போது வெறும் பிரஸ் மீட்டிற்கு மட்டும் அழைப்பதில் அர்த்தமில்லை என்பதால் நாம் போக வேண்டாம் என்று முடிவு செய்தனர்.</p><p>பெப்சியுடன் உள்ளடங்கிய இயக்குனர் சங்கத்துக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும்போது எழுத்தாளர் சங்கத்துக்கு கொடுக்க பெப்சி மறுப்பதும் அதை ஏன் குழுவில் இருக்கும் அடுத்த நான்கு சங்கங்களும் கேட்கவில்லை என்பதும் புரியாத புதிராக இருக்கிறது.</p><p>நேற்று இந்த விழா தொடர்பாக நிகழ்ந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஒருவர் எங்களின் குரலாக எழுத்தாளர்கள் சங்கம் ஏன் சேர்க்கப்படவில்லை என்று கேட்ட சரியான கேள்விக்கு, “நாங்கள் அழைத்தோம், அவர்கள்தான் வரவில்லை" என்று அபாண்டமாக பழி போட்டு அப்பட்டமான தவறான பதில் சொல்லப்பட்டிருப்பது எங்களை மேலும் காயப்படுத்துகிறது என்பதையும் பதிவு செய்கிறோம்.</p><p>இயக்குநர் சங்கத்தில் பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகள் சிலர் எங்கள் எழுத்தாளர்கள் சங்கத்திலும் பொறுப்பில் இருக்கிறார்கள். இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் எங்கள் சங்கத்தின் சார்பாக அவர்கள் கலந்து கொள்ளவில்லை.</p><p>ஆனால் பத்திரிகையாளர்களுக்கான அறிக்கையில் ரவிமரியாவை எங்கள் சங்கத்தின் நிர்வாகியாக அடையாளப்படுத்தி இருப்பதையும் நாங்கள் மறுக்கிறோம். நடைபெறவிருக்கும் விழாவிலும் எங்கள் சங்கத்தின் நிர்வாகிகளை எழுத்தாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளாக அறிமுகம் செய்ய வேண்டாம் என்று விழாக் குழுவினரையும் கேட்டுக் கொள்கிறோம்.</p><p>பல வகையில் முறையாக முயற்சிகள் செய்தும், எங்கள் சங்கத்தின் உணர்வுகள் மதிக்கப்படாததால் எங்கள் எழுத்தாளர் சங்கம் இந்த விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இது எங்களை மிகுந்த மரியாதையுடன் வாக்களித்து தேர்ந்தெடுத்த ஒவ்வொரு உறுப்பினரின் கௌரவத்தையும் காப்பாற்ற நாங்கள் எடுக்கும் முடிவாகக் கருதுகிறோம். </p><p>எதிர்காலத்தில் வரும் நிகழ்வுகளில் எங்களுக்கான நியாயமான உரிமைகளைப் புறக்கணிக்காமல் தாய்ச் சங்கம் என்கிற ஸ்தானத்திற்கான நேர்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று பெப்சி நிர்வாகிகளையும், உண்மையான நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று மற்ற நான்கு அமைப்புகளின் நிர்வாகிகளையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.</p><p>உண்மை நிலையையும், பின்னணியையும் அனைவரும் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இந்தக் கடிதத்தின் விபரங்கள் எங்கள் சங்கத்தின் அத்தனை உறுப்பினர்களுக்கும் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எங்கள் அறிக்கையாகவும் அனுப்பப்படுகிறது என்கிற தகவலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-must-be-released-today-madras-high-court-orders</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-must-be-released-today-madras-high-court-orders#comments</comments><guid isPermaLink="false">365191ab-dbba-4f54-9415-7bf0e5f788b8</guid><pubDate>Tue, 04 Aug 2026 09:27:41 +0000</pubDate><atom:updated>2026-08-04T09:27:41.471Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,விஜய்,vijay,Udhayanidhi Stalin,சென்னை ஐகோர்ட்,trisha,திரிஷா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/o6h3zsd2/udhayanidhi4.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Madras High Court - Udhayanidhi Stalin ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/o6h3zsd2/udhayanidhi4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>திமுக ஆர்ப்பாட்டம்</h2><p>தஞ்சையில் நடைபெற்ற <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">தி.மு.க.</a> ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி  தலைவர் உதயநிதி ஸ்டாலின் நடிகை குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.</p><p>இது தொடர்பாக த.வெ.க. மகளிர் அணி சார்பில் மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பைரவி சங்கர்ராமன் மற்றும் நிர்வாகிகள் புகார் அளித்தனர்.</p> <h2>உதயநிதி ஸ்டாலின் கைது</h2><p>இதையடுத்து, சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைத்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை தஞ்சை மாவட்ட காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூர் நடுவர் நீதிமன்றம் -1க்கு அழைத்துச் செல்லப்பட்டார்.</p><p>தஞ்சை பொதுக்கூட்டத்தில் பேசியது தொடர்பாக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/case-registered-against-opposition-leader-udhayanidhi-stalin-under-9-sections">உதயநிதி</a> ஸ்டாலின் மீது தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் குற்ற எண் 287/2026-ன் கீழ் 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. </p> <h2>சென்னை உயர்நீதிமன்றம்</h2><p>இந்நிலையில் உதயநிதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமின் மனு  சென்னை உயர்நீதிமன்றத்தில் பிற்பகலில் விசாரணை தொடங்கியது.</p><p>அப்போது, அரசு தலைமை வழக்கறிஞர் கூறுகையில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்படுவார். உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை. உதயநிதி விசாரணைக்கு பின் போலீஸ் ஜாமினில் விடுவிக்கப்படுவார் என்று தெரிவித்தார்.</p> <p>இதனையடுத்து, விசாரணைக்கு பின்னர் உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும் என ஐகோர்ட் நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார். மேலும், காவல்துறை விசாரணைக்கு உதயநிதி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.</p> ]]></content:encoded></item><item><title>ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்படும்: அதிருப்தி எம்.எல்.ஏ.-க்களுக்கு டி.கே. சிவக்குமார் எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/dk-shivakumar-cong-mlas-party-is-important-resignations-will-be-accepted</link><comments>https://www.maalaimalar.com/news/national/dk-shivakumar-cong-mlas-party-is-important-resignations-will-be-accepted#comments</comments><guid isPermaLink="false">611a59ae-11f5-420c-8636-b82329fc3c0c</guid><pubDate>Tue, 04 Aug 2026 09:26:10 +0000</pubDate><atom:updated>2026-08-04T09:26:10.923Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,கர்நாடகா,Karnataka,DK Shivakumar,டிகே சிவக்குமார்,​​Congress</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/7573bbpj/19072026Shivakumar0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DK Shivakumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/7573bbpj/19072026Shivakumar0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமைச்சரவை விரிவாக்கத்தில் இடம் கிடைக்காததால் ராஜினாமா செய்வதாக மிரட்டும் அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களுக்குக் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் கடுமையான எச்சரிக்கை விடுத்தார். அத்துடன் கட்சியே முக்கியம், அவர்கள் ராஜினாமா செய்தால் சில நிமிடங்களிலேயே அது ஏற்றுக்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.</p><p>டி.கே. சிவக்குமார் கர்நாடக மாநில முதல்வராக பொறுப்பேற்று இரண்டு மாதங்களுக்குப் பிறகு, நேற்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. 19 அமைச்சர்களைச் சேர்த்துத் தனது அமைச்சரவையை விரிவுபடுத்தினார்.</p><h2>அதிருப்தி எம்.எல்.ஏ.-க்கள் ராஜினாமா மிரட்டல்</h2><p>நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட அமைச்சரவை விரிவாக்கம் இறுதியாக நடந்தேறிய நிலையில், அது ஆளும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. அமைச்சர் பதவி கிடைக்காத சிலர் ராஜினாமா செய்வதாகத் தெரிவித்தனர்.</p><p>இண்டி (Indi) தொகுதி சட்டமன்ற உறுப்பினரான யஷ்வந்தராயகௌடா வி. பாட்டீல், திங்களன்று தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.</p> <p>அமைச்சரவையில் இடம்பெற விரும்பும் பலரின் ஆதரவாளர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்தினர். முதலமைச்சர் உட்பட கர்நாடக அமைச்சரவையின் அனுமதிக்கப்பட்ட மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 34 ஆகும். திங்களன்று மேற்கொள்ளப்பட்ட விரிவாக்கத்தைத் தொடர்ந்து, தற்போது அதில் ஒரு அமைச்சர் பதவி காலியாக உள்ளது.</p><h2>அதிருப்தி எம்.எல்.ஏ.-க்கள் விவகாரம் தொடர்பாக கர்நாடக மாநில முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் கூறியதாவது:-</h2><p>நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டேன். அரசியலில் ராஜினாமாக்கள் நிகழ்வது இயல்பு. ராஜினாமா செய்பவர்களை யாரும் தடுக்க முடியாது. கட்சி மற்றும் தங்கள் எதிர்காலம் முக்கியம் என்று கருதினால், கட்சிதான் முதன்மையானது. கட்சி இருந்தால்தான் மற்ற அனைத்தும் சாத்தியம்.</p><p>தரம் சிங் மற்றும் சித்தராமையா ஆகியோர் முதல்வராக இருந்தபோது எனக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. அப்போதே நானும் ராஜினாமா செய்திருக்கலாமே? பரமேஸ்வரா (துணை முதல்வர்) மற்றும் நான் பொறுமை காக்கவில்லையா? வீரேந்திர பாட்டீல் முதல்வராக இருந்தபோது பங்காரப்பா, கார்கே (ஏஐசிசி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே) மற்றும் தரம் சிங் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. ஆனால், பின்னர் பங்காரப்பா மற்றும் சிங் முதல்வர்களாகவில்லையா? ஒருவருக்குப் பொறுமை அவசியம்.</p><h2>ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்படும்</h2><p>யாராவது ராஜினாமா செய்தால், சில நிமிடங்களிலேயே அதை ஏற்றுக்கொள்வேன். முன்பு வாரியங்கள் மற்றும் கழகங்களின் உறுப்பினர்களாகவும் தலைவர்களாகவும் நியமிக்கப்பட்ட கட்சித் தொண்டர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களிடம், அவர்களின் பதவிக்காலம் இரண்டரை ஆண்டுகள் மட்டுமே என்று கூறப்பட்டிருந்தது.</p><p>ஏற்கனவே இதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. முதலில் அந்தப் பதவிகளில் இருப்பவர்களை ராஜினாமா செய்யச் சொல்லிவிட்டு, புதியவர்களை நியமிப்பேன். அதன் பிறகு எம்.எல்.ஏ-க்களுடன் தனித்தனியாகப் பேசுவேன்.</p><p>இவ்வாறு டி.கே. சிவக்குமார் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>FSSAI அதிரடி: டாபர் நிறுவனத்தின் 100% தூய்மை விளம்பரங்களுக்குத் தடை!</title><link>https://www.maalaimalar.com/news/national/fssai-crackdown-ban-on-dabur-100-percent-purity-ads</link><comments>https://www.maalaimalar.com/news/national/fssai-crackdown-ban-on-dabur-100-percent-purity-ads#comments</comments><guid isPermaLink="false">6abac9e7-2574-4d36-b92e-f3a0a82ef725</guid><pubDate>Tue, 04 Aug 2026 08:52:17 +0000</pubDate><atom:updated>2026-08-04T08:52:17.068Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>FSSAI,Dabur India Limited,டாபர்,DaburHoney,FoodSafety,Misleading Ads,Consumer Rights,Organic Food</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/qbph1n8l/FSSAI-Dabur" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ FSSAI - Dabur]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/qbph1n8l/FSSAI-Dabur?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டாபர் நிறுவனம் தனது தயாரிப்புகளான தேன், நெய், எண்ணெய் மற்றும் வினிகர் உள்ளிட்ட உணவுப் பொருட்களில் '100 சதவீதம் தூய்மையானது' என்று விளம்பரம் செய்ய இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அதிரடியாகத் தடை விதித்துள்ளது.</p><h2>விவகாரம் என்ன?</h2><p>டாபர் நிறுவனம் தனது இணையதளத்திலும், தயாரிப்பு லேபிள்களிலும் "100% இயற்கை", "100% ஆர்கானிக்", "100% தூய்மைக்கு உத்திரவாதம்" போன்ற வாசகங்களைப் பயன்படுத்தி வந்தது. </p><p>இந்த '100%' என்ற வார்த்தை நுகர்வோரை திசைதிருப்பும் வகையிலும், சட்டவிதிகளுக்குப் புறம்பாகவும் இருப்பதாக FSSAI தெரிவித்துள்ளது.</p><h2>முக்கியக் காரணங்கள்:</h2><p>எந்தவொரு உணவுப் பொருளையும் '100% தூய்மையானது' என்று முழுமையாக நிரூபிக்க முடியாது என்பதால், இந்த வாசகங்கள் மக்களை ஏமாற்றும் வகையில் உள்ளன. </p><p>டாபரின் ஆர்கானிக் தேன் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர் ஆகியவற்றில், உரிய அனுமதியின்றி 'ஜெவிக் பாரத்' என்ற ஆர்கானிக் முத்திரை பயன்படுத்தப்பட்டுள்ளது. </p><p>கடந்த 2020 மே மாதமே இது போன்ற '100% விளம்பரங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று ஒட்டுமொத்த உணவு நிறுவங்களுக்கும் FSSAI எச்சரிக்கை விடுத்திருந்தது. </p><p>டாபர் நிறுவனத்திற்குத் தனியாக நோட்டீஸ் அனுப்பியும் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காததால் தற்போது இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><h2>தயாரிப்புகள் ஆபத்தானவையா?</h2><p>டாபர் நிறுவனத்தின் இந்த பொருட்கள் தரமற்றவை என்றோ அல்லது சாப்பிடப் பாதுகாப்பற்றவை என்றோ FSSAI கூறவில்லை. </p><p>இந்த நடவடிக்கை முழுக்க முழுக்க அவர்கள் லேபிளிங் செய்த விதம் மற்றும் தவறான விளம்பர உத்திக்காக மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>அடுத்தகட்ட நடவடிக்கை:</h2><p>குறிப்பிட்ட அந்த தயாரிப்புகளைச் சந்தையில் விற்பனை செய்வதை டாபர் நிறுவனம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், இது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் FSSAI உத்தரவிட்டுள்ளது. </p><p>டாபர் நிறுவனம் இந்த நோட்டீசை ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>உதயநிதி கைது எதிரொலி - மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-arrested-mk-stalin-consultation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-arrested-mk-stalin-consultation#comments</comments><guid isPermaLink="false">df6b9f60-76a8-4ee1-9cfe-4997af60ad2b</guid><pubDate>Tue, 04 Aug 2026 08:47:52 +0000</pubDate><atom:updated>2026-08-04T08:47:52.199Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,விஜய்,vijay,Udhayanidhi Stalin,trisha,திரிஷா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/9vpm1h29/mkstalin1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/9vpm1h29/mkstalin1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று கைது செய்யப்பட்டு தஞ்சாவூர் அழைத்துச் செல்லப்பட்டிருந்த நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.</strong></em></p> <p>தஞ்சையில் நடைபெற்ற <a href="https://www.maalaimalar.com/topic/dmk">தி.மு.க.</a> ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி  தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/case-registered-against-opposition-leader-udhayanidhi-stalin-under-9-sections">உதயநிதி ஸ்டாலின்</a> நடிகை குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.</p><p>இது தொடர்பாக த.வெ.க. மகளிர் அணி சார்பில் மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பைரவி சங்கர்ராமன் மற்றும் நிர்வாகிகள் புகார் அளித்தனர்.</p> <p>இதையடுத்து, சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைத்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை தஞ்சை மாவட்ட காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூர் நடுவர் நீதிமன்றம் -1க்கு அழைத்துச் செல்லப்பட்டார்.</p><p>தஞ்சை பொதுக்கூட்டத்தில் பேசியது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் குற்ற எண் 287/2026-ன் கீழ் 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. </p> <p>இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று கைது செய்யப்பட்டு தஞ்சாவூர் அழைத்துச் செல்லப்பட்டிருந்த நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் விரைந்து வந்தார். அங்கு பொதுச் செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி  உள்ளிட்ட மூத்த  நிர்வாகிகளுடன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.</p> <p>அப்போது பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறுகையில், பொய் வழக்கு போட்டு உதயநிதியை கைது செய்துள்ளனர். இதற்காக மக்களுக்கு இந்த அரசு பதில் சொல்ல வேண்டும். </p><p>பேசாத ஒன்றைப் பேசியதாக பொய் வழக்கு போட்டு உதயநிதியை கைது செய்துள்ளது ஆணவ அடக்குமுறை. இதற்காக மக்களுக்கு இந்த அரசு பதில் சொல்ல வேண்டும். </p><p>பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பயந்து செய்த பாசிச கைது நடவடிக்கை மூலம் எதிர்க்கட்சி தலைவரை அச்சுறுத்த முடியாது. உதயநிதி ஸ்டாலின் கைது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்றார்.</p>]]></content:encoded></item><item><title>உதயநிதி கைது - நடிகை நிவேதா பெத்துராஜின் திடீர் எக்ஸ் பதிவு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/udayanidhi-arrest-actress-nivedha-pethuraj-surprise-x-post</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/udayanidhi-arrest-actress-nivedha-pethuraj-surprise-x-post#comments</comments><guid isPermaLink="false">f01e5db9-9d21-49cb-b902-9ca879f9168b</guid><pubDate>Tue, 04 Aug 2026 08:37:39 +0000</pubDate><atom:updated>2026-08-04T08:37:39.054Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நிவேதா பெத்துராஜ்,Udhayanidhi,Nivetha Pethuraj,உதயநிதி,உதயநிதி கைது,UdhayanidhiArrested</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/524o4b74/nivetha.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nivetha Pethuraj ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/524o4b74/nivetha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சையில் நடந்த காவிரி விவகாரம் தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் பிரபல நடிகை குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முக்கிய நிர்வாகியுமான உதயநிதி ஸ்டாலின் காவல்துறையினரால் இன்று  அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>இந்த அரசியல் பரப்பரப்புக்கு இடையே, தமிழ் சினிமா நடிகை நிவேதா பெத்துராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு திருக்குறள் பதிவு, தற்போது இணையத்தில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2><strong>கைதுக்கான பின்னணி என்ன?</strong></h2><p>தஞ்சாவூரில் திமுக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது கூட்டத்தில் இருந்த சிலர் நடிகையின் பெயரை முழக்கமிட்டனர். அதற்குப் பதிலளிக்கும் விதமாக, உதயநிதி ஸ்டாலின் இரட்டை அர்த்தத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது. </p><p>இது பெண் வன்கொடுமை மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் செயல் என தவெக தரப்பில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதனைத் தொடர்ந்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்<br>அறங்கூறும் ஆக்கம் தரும்.<br><br>- திருக்குறள் 183</p>&mdash; Nivetha Pethuraj (@Nivetha_Tweets) <a href="https://x.com/Nivetha_Tweets/status/2084510185549418820?ref_src=twsrc%5Etfw">August 4, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2><strong>நிவேதா பெத்துராஜ் பகிர்ந்த திருக்குறள்:</strong> </h2><p>நடிகை நிவேதா பெத்துராஜ் தனது எக்ஸ் பக்கத்தில்,</p><p>'புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் </p><p>அறங்கூற்றும் ஆக்கம் தரும்.' </p> <p>என்ற புறங்கூறாமை அதிகாரத்தில் உள்ள 183-வது திருக்குறளை பதிவிட்டுள்ளார்.</p><h2><strong>இதன் அர்த்தம் என்ன?</strong></h2><p>“பிறர் இல்லாத போது அவரைப் புறங்கூறி, நேரில் முகத்திற்குப் புகழ்ந்து பொய்யாக வாழ்வதை விட இறந்து விடுவது மேல்" என்று பொருளாகும்.</p>]]></content:encoded></item><item><title>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/case-registered-against-opposition-leader-udhayanidhi-stalin-under-9-sections</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/case-registered-against-opposition-leader-udhayanidhi-stalin-under-9-sections#comments</comments><guid isPermaLink="false">62ff126f-f8ba-413f-a581-0d6e93cf0846</guid><pubDate>Tue, 04 Aug 2026 08:29:44 +0000</pubDate><atom:updated>2026-08-04T08:29:44.855Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,விஜய்,vijay,Udhayanidhi Stalin,trisha,திரிஷா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/jslhp5vm/udhayanidhi3.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Udhayanidhi Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/jslhp5vm/udhayanidhi3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தஞ்சை பொதுக்கூட்டத்தில் பேசியது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் குற்ற எண் 287/2026-ன் கீழ் 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. </strong></em></p> <p>தஞ்சையில் நடைபெற்ற தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி  தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-stalin-arrest-move-welcomed-bjp-spokesperson-narayanan-proud">உதயநிதி ஸ்டாலின்</a> நடிகை குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.</p><p>இது தொடர்பாக த.வெ.க. மகளிர் அணி சார்பில் மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பைரவி சங்கர்ராமன் மற்றும் நிர்வாகிகள் புகார் அளித்தனர்.</p> <p>இதையடுத்து, சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைத்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை தஞ்சை மாவட்ட காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">உதயநிதி ஸ்டாலின்</a> தஞ்சாவூர் நடுவர் நீதிமன்றம் -1க்கு அழைத்துச் செல்லப்பட்டார்.</p><p>இந்நிலையில், தஞ்சை பொதுக்கூட்டத்தில் பேசியது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் குற்ற எண் 287/2026-ன் கீழ் 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-</p> <p>* பி.என்.எஸ். பிரிவு 196 - சமூகங்களுக்கிடையே பகைமை அல்லது வெறுப்பைத் தூண்டும் செயல்கள்.</p><p>* பிரிவு 192 - கலவரம் அல்லது பொது அமைதிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான தூண்டுதல்.</p><p>* பிரிவு 352 - அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் நோக்கில் திட்டமிட்டு அவமதித்தல் அல்லது தூண்டுதல்.</p><p>* பிரிவு 79 - பெண்ணின் மரியாதையை இழிவுபடுத்தும் நோக்கிலான சொல், சைகை அல்லது செயல்.</p><p>* பிரிவு 296(பி) - ஆபாசமான அல்லது ஒழுக்கக்கேடான வார்த்தைகள்/வெளிப்பாடுகளைப் பொதுவெளியில் பயன்படுத்துதல்.</p> <p>* பிரிவு 61 - குற்றம் செய்யத் தூண்டுதல் அல்லது உடந்தையாக இருப்பது.</p><p>* பிரிவு 351(2) - குற்றவியல் மிரட்டல்.</p><p>* பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் - பிரிவு 4 - பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் தொடர்பான குற்றம்.</p><p>* ஐ.டி. ஆக்ட் - பிரிவு 67 - மின்னணு ஊடகங்களில் ஆபாசமான உள்ளடக்கத்தை வெளியிடுதல் அல்லது பரப்புதல்.</p> ]]></content:encoded></item><item><title>Wi-Fi, டிவி, ஓடிடி பலன்களுடன் புது ரீசார்ஜ்களை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/jio-3-in-1-service-packs-combined-wi-fi-tv-and-ott-subscriptions-launched-price-benefits</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/jio-3-in-1-service-packs-combined-wi-fi-tv-and-ott-subscriptions-launched-price-benefits#comments</comments><guid isPermaLink="false">8c39eeef-b8cc-48c8-a2c5-7853cebedeb8</guid><pubDate>Tue, 04 Aug 2026 08:28:40 +0000</pubDate><atom:updated>2026-08-04T08:28:40.756Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>OTT,Jio,Offers,ஓடிடி,ஜியோ,சலுகைகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/05yqzh6b/Jio-Logo-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jio Logo]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/05yqzh6b/Jio-Logo-1.png?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனம் <a href="https://www.maalaimalar.com/topic/jio">ஜியோ</a>. அவ்வப்போது பயனர்களுக்கு புதிய ரீசார்ஜ்களை அறிவித்து வருகிறது. சந்தையில் மேலும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், ஏற்கனவே உள்ள பயனர்கள் எண்ணிக்கையை தக்க வைத்துக் கொள்ளவும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>அந்த வகையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ 3-இன்-1 ரீசார்ஜ்களை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய 3-இன்-1 ரீசார்ஜ்கள், ஜியோவின் டிவி-மட்டும் மற்றும் வைபை-மட்டும் திட்டங்களின் பலன்களை ஒருங்கிணைப்பதோடு, இந்த இரு ஒருங்கிணைந்த மாதாந்திர செலவை விட குறைவாக வைத்திருக்க உதவுகின்றன. புதிய ஜியோ 3-இன்-1 ரீசார்ஜ், 2+1 மாதங்கள் மற்றும் 3+1 மாதங்கள் என இரண்டு கால அளவுகளில் கிடைக்கின்றன. </p><h2>3-இன்-1 ஆஃபர்:</h2><p>நீண்ட காலத் திட்டத்திற்கு முன்பணச் செலவு அதிகமாகும். இருப்பினும், 2+1 மாத திட்டத்தை விட இதன் மாதாந்திர செலவு குறைவாக உள்ளது. இரண்டு திட்டங்களும் ஒரே மாதிரியான பலன்களை வழங்குகின்றன, ஆனால் 3-இன்-1 மாத சந்தாவில் பிராட்பேண்ட் வேகம் குறைவாக இருக்கும்.</p><p>புதிய ஜியோ 3-இன்-1 ரீசார்ஜ்கள், டிவி மட்டும் மற்றும் வை-பை மட்டும் சந்தா திட்டங்களுடன் அறிமுகமாகி இருக்கிறது. இந்த 3-இன்-1 ரீசார்ஜ்கள், டிவி மட்டும் மற்றும் வைபை திட்டங்களின் பலன்களை ஒன்றாக இணைக்கின்றன. இதில் இரண்டு திட்டங்கள் கிடைக்கின்றன. 2+1 மாதங்களுக்கான தொகுப்பின் விலை இந்தியாவில் ரூ. 2,122 ஆகும், இதன் மாதாந்திரக் கட்டணம் ரூ. 707 ஆகும்.</p><p>மறுபுறம், 3+1 மாத பேக்கின் விலை ரூ. 2,222 ஆகும், இதற்கு மாதத்திற்கு ரூ. 555 செலவாகும். 2+1 மாத ஜியோ 3-இன்-1 சேவைத் திட்டம், 100 Mbps பிராட்பேண்ட் வேகத்துடன், 1,000-க்கும் மேற்பட்ட நேரலை டிவி சேனல்கள் மற்றும் 12 OTT தளங்களுக்கான சந்தா வழங்குகிறது. </p><p>மறுபுறம், 3+1 மாத ஆப்ஷன், அதே எண்ணிக்கையிலான OTT செயலிகள் மற்றும் நேரலை டிவி சேனல்களுக்கான அணுகலுடன் 30 Mbps வைபை வேகத்தை வழங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமிக்கு தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து!</title><link>https://www.maalaimalar.com/news/puducherry/tamil-nadu-cm-joseph-vijay-extends-birthday-greetings-to-puducherry-cm-n-rangasamy</link><comments>https://www.maalaimalar.com/news/puducherry/tamil-nadu-cm-joseph-vijay-extends-birthday-greetings-to-puducherry-cm-n-rangasamy#comments</comments><guid isPermaLink="false">f346fb7a-0d67-4ada-ace5-88fe2ad438b2</guid><pubDate>Tue, 04 Aug 2026 08:17:50 +0000</pubDate><atom:updated>2026-08-04T08:17:50.136Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Puducherry,புதுச்சேரி,முதல்வர் விஜய்,Chief Minister Vijay,N.Rangasamy,என்.ரங்கசாமி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/tqnx6avg/NR.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chief Minister Vijay -N.Rangasamy ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/tqnx6avg/NR.jpg?w=280" width="280"></media:thumbnail><category>புதுச்சேரி (Puducherry)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>புதுச்சேரி முதலமைச்சரும் அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் (AINRC) தலைவருமான என்.ரங்கசாமி பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான ஜோசப் விஜய் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு தனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.</p><p>முதலமைச்சர் ரங்கசாமிக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்துத் தெரிவித்த முதல்வர் விஜய், அவர் நல்ல உடல்நலனுடனும், நீண்ட ஆயுளுடனும் புதுச்சேரி மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்ய வேண்டும் என விருப்பம் தெரிவித்தார். விஜய்யின் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, அவருடன் சில நிமிடங்கள் நலம் விசாரித்துப் பேசினார்.</p><h2><strong>தலைவர்கள் வாழ்த்து:</strong></h2><p>புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் பிறந்தநாளை முன்னிட்டுப் புதுச்சேரி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், அமைச்சர்களும் அவருக்கு நேரில் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். புதுச்சேரி முழுவதும் என்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கியும், இனிப்புகள் வழங்கியும் பிறந்தநாளைக் விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>உதயநிதி ஸ்டாலின் கைது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/eps-condemn-udhayanidhi-arrest-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/eps-condemn-udhayanidhi-arrest-in-chennai#comments</comments><guid isPermaLink="false">6677e33f-1a68-43a0-85e5-cda25052c637</guid><pubDate>Tue, 04 Aug 2026 08:08:19 +0000</pubDate><atom:updated>2026-08-04T08:08:19.470Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Udhayanidhi Stalin,DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,Edappadi Palaniswami,எடப்பாடி பழனிசாமி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/t51fff05/EPS.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Edappadi Palaniswami, Udhayanidhi Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/t51fff05/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>தஞ்சையில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நடிகை குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.</p><h2>உதயநிதி ஸ்டாலின்</h2><p>இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. உதயநிதிக்கு எதிராக மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த த.வெ.க.வினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>த.வெ.க தொண்டர்களின் முற்றுகை போராட்டம் அல்லது அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் சென்னை நீலாங்கரையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வீட்டை சுற்றி சென்னை தெற்கு இணை ஆணையர் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.</p><p>உதயநிதி ஸ்டாலின் வீடு அருகே பேரிகார்டு அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்படலாம் என்ற தகவல் பரவியது. இதனால் நீலாங்கரை பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.</p><h2>தஞ்சை போலீசார் வழக்குப்பதிவு</h2><p>இதற்கிடையே, ஆபாசமாக பேசியதாக உதயநிதி மீது 6 பிரிவுகளின் கீழ் தஞ்சை போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.</p><h2>எடப்பாடி பழனிசாமி கண்டனம்</h2><p>இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைதுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள செய்தியில் கூறியதாவது:</p><p>சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய உதயநிதி ஸ்டாலின் அவர்களை காவல்துறை கைது செய்திருக்கிறது</p><p>உதயநிதிக்கு நாவடக்கம் தேவை என்பதை நாம் பல ஆண்டுகளாக கூறி வருகிறோம். தான் இருக்கும் பொறுப்பின் மாண்பு அறியாமல் அவர் தொடர்ந்து வாய்க்கு வந்தபடி பேசுவதும், பெண்களை இழிவாக பேசுவதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.</p><p>அவரது பேச்சுக்கு வழக்கு பதிவது என்பது வேறு. ஆனால், நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கும் நிலையில், இன்றைய தினம் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரை இந்த பொய்க்கால் குதிரை அரசு கைதுசெய்யத் துடிப்பது என்பது, இது வழக்கைத் தாண்டிய அரசியல் பின்புலம் கொண்டதோ என்ற சந்தேகத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.</p><p>எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பு சட்டமன்றத்தின் முக்கிய அங்கம். அந்த பொறுப்பில் உள்ளவர் இல்லாமல் முடக்கிவிட்டு சட்டப்பேரவை நடத்தவேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பொய்க்கால் குதிரை அரசு செயல்படுவது கடும் கண்டனத்திற்கு உரியது.</p><p>அதேபோல், நாளை சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெறும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மீதான கைது நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அதிகபட்சம் ரூ. 10,000 தள்ளுபடி - மோட்டோ ஸ்மார்ட்போன்களுக்கு  முரட்டு ஆஃபர் அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/motorola-smartphone-deals-flipkart-freedom-sale</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/motorola-smartphone-deals-flipkart-freedom-sale#comments</comments><guid isPermaLink="false">271c584c-991c-4a42-b3cf-c2dddb6af3a1</guid><pubDate>Tue, 04 Aug 2026 07:54:59 +0000</pubDate><atom:updated>2026-08-04T07:54:59.051Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Motorola,மோட்டோரோலா,Flipkart,smartphone,ஸ்மார்ட்போன்,ப்ளிப்கார்ட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/a49j5x5v/MOTOROLA-Edge-70-Fusion.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MOTOROLA Edge 70 Fusion]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/a49j5x5v/MOTOROLA-Edge-70-Fusion.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ப்ளிப்கார்ட் ஃப்ரீடம் சேல் (flipkart freedom sale) சிறப்பு விற்பனைக்கான தனது <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மார்ட்போன்</a> மாடல்களுக்கான சலுகைகளை மோட்டோரோலா நிறுவனம் அறிவித்துள்ளது. வருகிற ஆகஸ்ட் 8-ஆம் தேதி தொடங்க இருக்கும் இந்த சிறப்பு விற்பனை, தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் அல்லது வீட்டு உபகரணங்களை வாங்குவோரை குறிவைத்து நடத்தப்படுகிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/topic/motorola">மோட்டோரோலா</a> நிறுவனத்தின் சலுகைகளின் ஒரு பகுதியாக, சமீபத்தில் வெளியிடப்பட்ட மோட்டோ எட்ஜ் 70 மேக்ஸ் ரூ. 49,999-க்கும், அதே நேரத்தில் எட்ஜ் 70 ப்ரோ ரூ. 36,999-க்கும் விற்பனை செய்யப்படும்.</p><h2>சலுகை விவரங்கள்:</h2><ul><li><p>மோட்டோ ஜி37 விலை ரூ 15,999-இல் இருந்து ரூ. 3,000 குறைக்கப்பட்டு ரூ 12,999-க்கு கிடைக்கும்</p></li><li><p>மோட்டோ ஜி77 பவர் விலை ரூ 25,999-இல் இருந்து ரூ. 4,000 குறைக்கப்பட்டு ரூ 21,999-க்கு கிடைக்கும்</p></li><li><p>மோட்டோ எட்ஜ் 60 ப்ரோ விலை ரூ 29,999-இல் இருந்து ரூ. 1,000 குறைக்கப்பட்டு ரூ 28,999-க்கு கிடைக்கும்</p></li><li><p>மோட்டோ எட்ஜ் 70 ஃபியூஷன் விலை ரூ 30,999-இல் இருந்து ரூ. 3,000 குறைக்கப்பட்டு ரூ 27,999-க்கு கிடைக்கும்</p></li><li><p>மோட்டோ எட்ஜ் 70 விலை ரூ 29,999-இல் இருந்து ரூ. 2,000 குறைக்கப்பட்டு ரூ 27,999-க்கு கிடைக்கும்</p></li><li><p>மோட்டோ எட்ஜ் 70 ப்ரோ விலை ரூ 39,999-இல் இருந்து ரூ. 3,000 குறைக்கப்பட்டு ரூ 36,999-க்கு கிடைக்கும்</p></li><li><p>மோட்டோ எட்ஜ் 70 ப்ரோ+ விலை ரூ 47,999-இல் இருந்து ரூ. 3,000 குறைக்கப்பட்டு ரூ 44,999-க்கு கிடைக்கும்</p></li><li><p>மோட்டோ எட்ஜ் 70 மேக்ஸ் விலை ரூ 54,999-இல் இருந்து ரூ. 5,000 குறைக்கப்பட்டு ரூ 49,999-க்கு கிடைக்கும்</p></li><li><p>மோட்டோரோலா கையொப்பம் விலை ரூ 59,999-இல் இருந்து ரூ. 5,000 குறைக்கப்பட்டு ரூ 54,999-க்கு கிடைக்கும்</p></li><li><p>மோட்டோரோலா ரேசர் ஃபோல்டு விலை ரூ 1,49,999-இல் இருந்து ரூ. 10,000 குறைக்கப்பட்டு ரூ 1,39,999-க்கு கிடைக்கும்</p></li></ul><h2>சிறப்பு அம்சங்கள்:</h2><p>உயர் ரக மற்றும் பிரீமியம் மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களில் தொடங்கி, ரூ. 1,39,999 என்ற தள்ளுபடி விலையில் கிடைக்கும் மோட்டோ ரேசர் ஃபோல்டு, ஒரு பெரிய 8.1-இன்ச் உள் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட், மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50MP பெரிஸ்கோப் கேமரா உள்ளன.</p><p>மோட்டோ எட்ஜ் 70, ரூ. 49,999 என்ற குறைந்த விலையில் விற்பனையாகலாம். இதன் மூலம், ஐகூ 15R-க்கு அடுத்தபடியாக, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 பிராசஸர் கொண்ட குறைந்த விலை ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இது விளங்குகிறது.</p>]]></content:encoded></item></channel></rss>