<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 12 Sep 2026 05:13:29 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 12 செப். 2026...
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-12-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-12-september-2026#comments</comments><guid isPermaLink="false">46d65b0f-475d-4a26-9683-2f1c1d5bcde0</guid><pubDate>Sat, 12 Sep 2026 05:05:09 +0000</pubDate><atom:updated>2026-09-12T05:08:53.436Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/a3cevkbq/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live News]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/a3cevkbq/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-12-9-2026">GOLD PRICE TODAY: சற்றே உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.14,170-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madurai-meenakshi-amman-temple-kumbabishekam-special-train-service-between-chennai-central-and-madurai">மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: சென்னை சென்ட்ரல் - மதுரை இடையே சிறப்பு ரெயில் இயக்கம்</a></p><p>&nbsp;* தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 16-ந்தேதி இரவு புறப்பட்டு செல்லும் சிறப்பு ரெயில், மறுநாள் காலை 5 மணிக்கு மதுரை சென்றடையும்.</p><p>* மதுரையில் இருந்து வருகிற 17-ந்தேதி இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், மறுநாள் காலை 3.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tirupati-kudai-rally-traffic-diversions-in-chennai-tomorrow">திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் - சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்</a></p><p>* திருக்குடை ஊர்வலம் வால்டாக்ஸ் சாலையை கடக்கும் வரை, காலை 8 மணி முதல் மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.&nbsp;</p><p>* ஊர்வலம் ஏ.பி. சாலை வரும்போது, பெரம்பூர் பேரக்ஸ் சாலை சந்திப்பில் இருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதி இல்லை.</p> ]]></content:encoded></item><item><title>கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தின் தந்தை காலமானார்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/former-indian-cricketer-sreesanth-father-dies-at-89</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/former-indian-cricketer-sreesanth-father-dies-at-89#comments</comments><guid isPermaLink="false">394a6559-d2ab-4af5-acb0-a3ffb2d2aae1</guid><pubDate>Sat, 12 Sep 2026 05:00:41 +0000</pubDate><atom:updated>2026-09-12T05:00:41.623Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ஸ்ரீசாந்த்,Sree Santh</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/gmjuc7tq/Sreesanth001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஸ்ரீசாந்த்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/gmjuc7tq/Sreesanth001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த். இவர் கேரளாவைச் சேர்ந்தவர். ஐபிஎல் போட்டியில் விளையாடும்போது, மேட்ச்-பிக்சிங்கில் சிக்கினார். இதனால் இவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. பின்னர், மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டார். நீதிமன்றம் அவரை விடுவித்தாலும், பிசிசிஐ அவர் மீதான தடையை நீக்க மறுத்தது.</p><p>இவரது தந்தை வி. சாந்தகுமாரன் நாயர். 89 வயதான இவர், வயது மூப்பு காரணமாக உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்றிரவு 9.45 மணிக்கு உயிரிழந்தார் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.</p><h2>ஞாயிற்றுக்கிழமை இறுதிச் சடங்கு</h2><p>வெளிநாட்டில் இருந்து உறவினர்கள் வர வேண்டியுள்ளதால் ஞாயிற்றுக்கிழமை வரை, உடல் மருத்துவமனையில் வைக்கப்படுகிறது. ஞாயிறு காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கோதமங்கலத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதன்பின் 4 மணிக்கு இறுதிச் சடங்கு நடைபெற இருக்கிறது.</p><p>ஸ்ரீசாந்தின் தாயார் டி.என். சாவித்ரிதேவி ஆவார். தீபு என்ற சகோதரனும், நிவேதிதா, திவ்யா ஆகிய இரண்டு சகோதரிகளும் உள்ளனர்.</p><h2>இந்திய அணியில் 2005-ல் அறிமுகம்</h2><p>43 வயதாகும் ஸ்ரீசாந்த், 2005-ல் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியிலும், 2006-ல் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியிலும் அறிமுகம் ஆனார். 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 87 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 53 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 75 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 10 டி20 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.</p><p>இந்திய அணிக்காக கடைசியாக 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓவலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.</p><p>உலக கோப்பையை வென்ற டி20 மற்றும் ஒருநாள் இந்திய அணியில் இடம் பிடித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>தொடர் விடுமுறை - நேற்று இரவு முதல் இன்று காலை வரை கடும் போக்குவரத்து நெரிசல் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/festival-holiday-severe-traffic-congestion-from-last-night-until-this-morning</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/festival-holiday-severe-traffic-congestion-from-last-night-until-this-morning#comments</comments><guid isPermaLink="false">33cdde8f-eea4-4982-8858-601801b731a7</guid><pubDate>Sat, 12 Sep 2026 04:58:35 +0000</pubDate><atom:updated>2026-09-12T04:58:35.385Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>போக்குவரத்து நெரிசல்,traffic jam,தொடர் விடுமுறை,விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/4lf4srp9/traffic.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ போக்குவரத்து நெரிசல்]]></media:title><media:description type="html"><![CDATA[ போக்குவரத்து நெரிசல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/4lf4srp9/traffic.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தொடர் விடுமுறை காரணமாக 10 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் ஜி எஸ் டி சாலையை கடப்பதால் நேற்று இரவு முதல் இன்று காலை வரை போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.</strong></em></p><h2><strong>போக்குவரத்து நெரிசல்</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/விநாயகர்-சதுர்த்தி">விநாயகர் சதுர்த்தி</a> மற்றும் தொடர் விடுமுறை முன்னிட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருக்கக்கூடிய தென் மாவட்ட, வட மாவட்டத்தை சேர்ந்த மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு கார், இருசக்கர வாகனங்கள், குடும்பமாக தனியார் வேன் மற்றும் அரசு பேருந்து, ஆம்னி பேருந்து என புறப்பட்ட லட்சக்கணக்கான வாகனங்களால் பெருங்களத்தூர், வண்டலூர், கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, காட்டாங்குளத்தூர், மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில், மகேந்திரா சிட்டி டோல்கேட் வரை வாகனங்கள் நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.</p><h2><strong>10 லட்சம் வாகனங்கள்</strong></h2><p>தினசரி வண்டலூர், கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி, ஜிஎஸ்டி சாலையில் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வாகனங்கள் பயணித்தால் நேற்றைய தினம் இரவு 7 மணி முதல் இன்று காலை எட்டு மணி வரை 10 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் கடந்து சென்றுள்ளதாகவும் வாகனங்கள் ஊர்ந்து செல்லத்தக்க போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.</p><p>இது போன்று போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று முன்னதாகவே அறிந்த தாம்பரம் மாநகர போக்குவரத்து போலீசார் இதற்காக வண்டலூர், கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, காட்டாங்குளத்தூர், மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில், மகேந்திரா சிட்டி, செங்கல்பட்டு டோல்கேட் வரை கூடுதலாக போக்குவரத்து போலீசார் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.</p><p>மேலும் கனரக வாகனங்களை ஜிஎஸ்டி சாலை வழியாக அனுமதியும் மறுக்கப்பட்டது. அப்படி இருந்தும் 10 லட்சத்துக்கு மேலான வாகனங்கள் ஒரே நேரத்தில் கடந்து சென்றதால் இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்று கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY: சற்றே உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-12-9-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-12-9-2026#comments</comments><guid isPermaLink="false">63ac1c12-b669-46d5-8042-f734283edf1b</guid><pubDate>Sat, 12 Sep 2026 04:52:14 +0000</pubDate><atom:updated>2026-09-12T04:52:14.062Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/06/12/14166045-gold03.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/06/12/14166045-gold03.webp?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. </p><p>சென்னையில் கடந்த 1-ந்தேதி தங்கம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 175-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 400-க்கும் விற்பனையானது. இதனை தொடர்ந்து 2-ந்தேதி தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.225 குறைந்து, ரூ.13 ஆயிரத்து 950-க்கும், சவரனுக்கு ரூ.1,800 சரிந்து ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 600-க்கும் விற்றது. </p> <p>கடந்த 3-ந்தேதி தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு 290 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 240 ரூபாய்க்கும் சவரனுக்கு 2,320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 920-க்கு விற்பனையானது. 4-ந்தேதி சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து சவரன் ரூ.1,14,880-க்கு விற்பனை செய்யப்பட்டது. </p> <p>கடந்த 5-ந்தேதி அதிரடியாக கிராமுக்கு 170 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14,190-க்கும் சவரனுக்கு ரூ.1360 குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 520-க்கு விற்பனையானது. 6-ந்தேதி ஒரு கிராம் ரூ.14,190-க்கும், ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 520-க்கு விற்பனையானது. 7-ந்தேதி ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 130-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 40-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 8-ந்தேதி கிராமுக்கு ரூ.140 அதிகரித்து ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 270-க்கும், சவரனுக்கு ரூ.1,120 அதிகரித்து ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 160-க்கும் விற்பனையானது. </p> <p>கடந்த 9-ந்தேதி சவரனுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.1,13,160-க்கும், கிராமுக்கு ரூ.125 குறைந்து ரூ.14,145-க்கும் விற்பனையானது.10-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு  ரூ.800 உயர்ந்து ரூ.1,14,040-க்கும், கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.14,255-க்கும் விற்பனையானது.</p><p>நேற்று காலை தங்கம் விலை சவரனுக்கு  ரூ.1,920 குறைந்து ரூ.1,12,120-க்கும், கிராமுக்கு ரூ.240 குறைந்து ரூ.14,015-க்கும் விற்பனையானது. நேற்று மாலையில் கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ரூ.14,155-க்கும், சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.1,13,240-க்கும் விற்பனை செய்யப்பட்டது.</p> <p>இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு  ரூ.120 உயர்ந்து ரூ.1,13,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.14,170-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்</h2><p>11-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,240</p><p>10-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.114,040</p><p>09-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,160</p><p>08-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.114,160</p><p>07-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,040</p> <h2>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்</h2><p>11-09-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>10-09-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>09-09-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>08-09-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>07-09-2026- ஒரு கிராம் ரூ.255</p> ]]></content:encoded></item><item><title>ரூ. 1.95 கோடி விலையில் புது பிஎம்டபிள்யூ கார் அறிமுகம் - விலை மற்றும் முழு விவரங்கள்! </title><link>https://www.maalaimalar.com/automobilenews/newautomobile/new-bmw-7-series-and-i7-launched-in-india</link><comments>https://www.maalaimalar.com/automobilenews/newautomobile/new-bmw-7-series-and-i7-launched-in-india#comments</comments><guid isPermaLink="false">58d24236-0a23-4344-8f91-6d4a28ef0b17</guid><pubDate>Sat, 12 Sep 2026 04:21:00 +0000</pubDate><atom:updated>2026-09-12T04:21:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Car,BMW,பிஎம்டபிள்யூ,கார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/fanq72rl/BMW-7-Series.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ BMW 7 Series]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/fanq72rl/BMW-7-Series.png?w=280" width="280"></media:thumbnail><category>இது புதுசு (Automobile)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/bmw">பி.எம்.டபிள்யூ.</a> நிறுவனம், புதிய 7 சீரிஸ் மற்றும் i7 எலெக்ட்ரிக் செடான் கார்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றின் விலை ரூ. 1.95 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இந்த மாடல்களுக்கான ஒரு இடைக்கால மேம்படுத்தலாகும். </p><p>மேலும், இந்த ஜி70 தலைமுறை முதலில் அறிமுகப்படுத்தப்பட்டு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகியுள்ளது. ஐசி என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் ஆகிய இரண்டு <a href="https://www.maalaimalar.com/topic/car">கார்</a> மாடல்களும் தற்போது உள்நாட்டிலேயே அசெம்பிள் செய்யப்படுகின்றன. இதன் மூலம், ஜெர்மனிக்கு வெளியே எலெக்ட்ரிக் மாடலை அசெம்பிள் செய்யும் இரண்டாவது நாடாக இந்தியா திகழ்கிறது.</p><h2>பிஎம்டபிள்யூ i7 சிறப்பு அம்சங்கள்:</h2><p>இந்தியாவிற்கான i7 சீரிசில் மிக முக்கியமான புதிய வரவு, 680 ஹெச்பி பவர் மற்றும் 1100Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் இரட்டை இன்ஜின்களைக் கொண்ட புதிய M70 xDrive வேரியன்ட் ஆகும். இது WLTP அடிப்படையில் 686 கிலோமீட்டர் தூரம் செல்லும் திறன் கொண்டுள்ளது.</p><p>மேலும் 3.8 நொடிகளில் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் திறன் கொண்டது. மேலும், i7 eDrive50 மாடலில் மேம்படுத்தப்பட்ட 112.5kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. </p><p>இது தற்போது WLTP அடிப்படையில் 728 கிலோமீட்டர் தூரம் செல்லும் திறன் கொண்டது. eDrive50 மாடல் உள்நாட்டிலேயே அசெம்பிள் செய்யப்படும், அதேசமயம் M70 மாடல் CBU ஆக வழங்கப்படும். இதன் விலை ரூ. 2.65 கோடி ஆகும்.</p><h2>சக்திவாய்ந்த பெட்ரோல் என்ஜின்:</h2><p>7 சீரிஸ், அதன் 740 மாடலிலேயே தொடரும். இதில் 400 ஹெச்பி பவர் மற்றும் 540Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் மூன்று-லிட்டர் இன்லைன்-6 பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின், பின்புற சக்கரங்களுக்கு ஆற்றலை வழங்கும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் (AT) இணைக்கப்பட்டுள்ளது.</p><p>இது மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 5.4 வினாடிகளில் எட்டும் திறன் கொண்டது மற்றும் இதன் வேகம் மின்னணு முறையில் 250 கிலோமீட்டர்களாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.</p><h2>8K ஸ்கிரீன் மற்றும் போட்டி மாடல்கள்:</h2><p>பிஎம்டபிள்யூ நிறுவனம் i7 மற்றும் 7 சீரிஸ் ஆகிய இரண்டு மாடல்களுக்கும் திரைகளை பெரிதாக வழங்கியுள்ளது. அவற்றில், பயணிகளுக்கான 14.6-இன்ச் டிஸ்ப்ளே, A-பில்லரில் இருந்து A-பில்லர் வரை நீளும் பனோரமிக் விஷன் HUD, மற்றும் பவர்ஸ் அண்ட் வில்கின்ஸ் சவுண்ட் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்ட, பின் இருக்கையில் அமர்பவர்களுக்கான 31.3-இன்ச் 8K தியேட்டர் ஸ்கிரீன் ஆகியவை இடம்பெற்றுள்ளன.</p><p>இந்திய சந்தையில் புதிய பிஎம்டபிள்யூ மாடல்: மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-கிளாஸ் மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் EQS செடான் ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது. </p><p>மேலும், மெர்சிடிஸ்-பென்ஸ் GLS, வரவிருக்கும் ஆடி Q9, பிஎம்டபிள்யூவின் சொந்த X7, வோல்வோ XC90 மற்றும் வோல்வோ EX90 போன்ற சில முக்கிய எஸ்யூவி கார்களுடனும் இது போட்டியிடுகிறது.</p>]]></content:encoded></item><item><title>மறைந்த சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/state-honours-for-the-late-solomon-pappaiah</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/state-honours-for-the-late-solomon-pappaiah#comments</comments><guid isPermaLink="false">0891a13d-d9c1-4ae7-b848-93d89326b635</guid><pubDate>Sat, 12 Sep 2026 04:15:37 +0000</pubDate><atom:updated>2026-09-12T04:15:37.702Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அரசு மரியாதை,அமைச்சர் நிர்மல்குமார்,Solomon Pappaiah,சாலமன் பாப்பையா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/g108dxs8/SolomonPappaiah.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சாலமன் பாப்பையா]]></media:title><media:description type="html"><![CDATA[ சாலமன் பாப்பையா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/g108dxs8/SolomonPappaiah.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என அமைச்சர் நிர்மல்குமார் என அறிவித்துள்ளார்.</strong></em> </p><p>பட்டிமன்ற நடுவராக மக்கள் மனங்களை வென்றவர் <a href="https://www.maalaimalar.com/topic/சாலமன்-பாப்பையா">சாலமன் பாப்பையா</a>. கல்லூரி பேராசிரியராக பணியாற்றிய இவர் தமிழ் அறிஞரும் ஆவார். 90 வயதான சாலமன் பாப்பையா வயது முதுமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். </p><h2><strong>இறுதிசடங்கு</strong></h2><p>சாலமன் பாப்பையா காலமானார் என்ற செய்தி அறிந்து பலரும் இரங்கல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்களின் அஞ்சலிக்காக சாலமன் பாப்பையா உடல் ஞான ஒளிவுபுரம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனிடையே சாலமன் பாப்பையாவின் இறுதிசடங்கு இன்று பகல் 11 மணிக்கு மேல் நடைபெறுகிறது. </p><h2><strong>அரசு மரியாதை</strong></h2><p>இந்த நிலையில், தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என அமைச்சர் நிர்மல்குமார் என அறிவித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக அமைச்சர் நிர்மல்குமார் மேலும் கூறுகையில், தமிழஞர்கள் உள்ளிட்ட பலரின் கோரிக்கையை ஏற்று சாலமன் பாப்பையா உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: தலைமை ஆசிரியர்களை சொந்த செலவில் செய்யுமாறு கட்டாயப்படுத்துவதா?- அன்புமணி ஆவேசம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-expansion-of-the-breakfast-scheme-are-headmasters-being-forced-to-bear-the-costs-themselves</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-expansion-of-the-breakfast-scheme-are-headmasters-being-forced-to-bear-the-costs-themselves#comments</comments><guid isPermaLink="false">c46949a7-f55f-4944-903b-b05b29539de2</guid><pubDate>Sat, 12 Sep 2026 04:00:29 +0000</pubDate><atom:updated>2026-09-12T04:00:29.183Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,காலை உணவு திட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/kbd8rdse/anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/kbd8rdse/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>காலை உணவுத் திட்டத்திற்கான பெயர்ப்பலகைகள், தட்டுகள், டம்ளர்கள்  மற்றும் பிற வசதிகளுக்கான  செலவை அரசே ஏற்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>பொருளாதார சுமை</strong></h2><p>தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு எட்டாம் வகுப்பு வரை நீட்டிக்கப்பட்ட பெருந்தலைவர் காமராசர்  காலை உணவுத் திட்டத்தின் தொடக்க விழா வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான  தேவைகள் அனைத்தையும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அவர்களின் சொந்த செலவில் மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டிருக்கிறது. ஆசிரியர்கள் மீது தேவையற்ற பொருளாதார சுமையை  அரசே ஏற்படுத்துவது கண்டிக்கத்தக்கது.</p><p>தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் கடந்த 2022 செப்.15-ம் தேதி அண்ணா பிறந்த நாளில் அறிமுகம் செய்யப்பட்டது. 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இந்தத் திட்டம் நீட்டிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இத்திட்டம் எட்டாம் வகுப்பு வரை நீட்டிக்கப்பட்டு, பெருந்தலைவர் காமராசர்  <a href="https://www.maalaimalar.com/topic/காலை-உணவு-திட்டம்">காலை உணவுத் திட்டம்</a> என்ற பெயரில் தந்தைப் பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஆம் தேதி தொடக்கி வைக்கப்படவுள்ளது.</p><h2><strong>அதிர்ச்சி</strong> </h2><p>பெருந்தலைவர் காமராசர்  காலை உணவுத் திட்டத் தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் பள்ளிகளில் புதிய பெயர்ப்பலகைகளை 4க்கு 2 அடி அளவில் ஸ்டீல் குழாய்களில் தயாரித்து நிறுவ வேண்டும்;  பள்ளிகளுக்குத் தேவையான  சமயலறை, உணவுப் பொருள்கள் இருப்பு வைக்கும் அறை, குடிநீர், மின்விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் சார்ந்த குறைகளை களைய வேண்டும்; மாணவர்களுக்கு தட்டு, டம்ளர் ஆகியவற்றை வாங்கித் தர வேண்டும் என்று பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு ஆணையிட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை, இதற்காக ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை. இந்த வசதிகள் அனைத்தையும் தலைமை ஆசிரியர்கள் அவர்களின் சொந்த செலவில் செய்ய வேண்டும் என்று அரசு ஆணையிட்டிருப்பது தான் அதிர்ச்சியளிக்கிறது.</p><p>ஒவ்வொரு பள்ளியிலும் அரசால் பட்டியலிடப்பட்டுள்ள பணிகளை செய்வதற்கு மாணவர்களின் எண்ணிக்கை ஏற்ப ரூ.8000 முதல் ரூ.10 ஆயிரம் வரை செலவாகக் கூடும். இந்த செலவுகளை ஒட்டுமொத்தமாக தலைமை ஆசிரியர்களின் தலையில் சுமத்துவது  அநீதியாகும். காலை உணவுத் திட்டத்திற்காக பல நூறு கோடியை ஒதுக்கீடு செய்துள்ள தமிழக அரசு,  இந்த வசதிகளை செய்து கொடுப்பதற்காக கூடுதலாக சில லட்சங்களை ஒதுக்குவதற்கு எந்தத் தடையும் இல்லை. அதை செய்யாமல், அச்செலவுகளை தலைமை ஆசிரியர்கள் மீது திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதை ஆசிரியர்களால் சமாளிக்க முடியாது.</p><h2><strong>அரசே ஏற்க வேண்டும்</strong></h2><p>நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், அரசு மதுக்கடைகள் போன்றவற்றில் அடிப்படை வசதிகளை செய்து கொள்வதற்காக அரசு நிதி ஒதுக்காமல், அதை பணியாளர்களின் தலையில் சுமத்தியதால் தான் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு 60 ரூபாயும், அரசு மதுக்கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாயும் வசூலிக்கும் நிலை உருவானது. அந்த கலாச்சாரத்தை ஒழிக்க முடியாமல் அரசு திண்டாடிக் கொண்டிருக்கிறது. அதே கலாச்சாரத்தை பள்ளிகளுக்கும் நீட்டித்தால் அங்கும் தவறுகள் நடக்க வாய்ப்பு ஏற்பட்டு விடும். நேர்மையையும், ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுக்க வேண்டிய பள்ளிகளில் தவறுகள் கற்பிக்கப்படக்கூடாது.</p><p>எனவே, காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ள பள்ளிகளுக்கு  மாவட்டக் கல்வி அலுவலரால் அனுப்பப்பட்டுள்ள இது தொடர்பான சுற்றறிக்கை உடனடியாக திரும்பப் பெற  வேண்டும். காலை உணவுத் திட்டத்திற்கான பெயர்ப்பலகைகள், தட்டுகள், டம்ளர்கள்  மற்றும் பிற வசதிகளுக்கான  செலவை அரசே ஏற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>வெற்றிகளை குவிக்கும் விநாயகர் சதுர்த்தி வழிபாடு
</title><link>https://www.maalaimalar.com/spirituality/vinayagar-chaturthi-worship-3</link><comments>https://www.maalaimalar.com/spirituality/vinayagar-chaturthi-worship-3#comments</comments><guid isPermaLink="false">e40b2c6b-88d3-48b2-999d-7c9915193bf2</guid><pubDate>Sat, 12 Sep 2026 03:47:52 +0000</pubDate><atom:updated>2026-09-12T03:47:52.329Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,வழிபாடு,worship,விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/r42tyq4r/vinayagar1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ vinayagar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/r42tyq4r/vinayagar1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>விநாயகப் பெருமான்</h2><p>'விநாயகர்' என்றாலே 'மேலான தலைவர்' என்று பொருள். வேண்டிய வரங்களை அள்ளித் தருபவர், விநாயகப் பெருமான். இந்து சமயத்தில் முழு முதற்கடவுளாக போற்றப்படும் விநாயகப் பெருமானை போற்றி வழிபடுவதற்கு மிகவும் உகந்த திருநாள், விநாயகர் சதுர்த்தி ஆகும்.</p> <h2>வளர்பிறை சதுர்த்தி</h2><p>ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாளில் விநாயகர் அவதரித்ததாக கூறப்படுகிறது. ஆண்டுதோறும் இந்நாளையே 'விநாயகர் சதுர்த்தி' திருவிழாவாக இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கோவில்களில் மட்டுமல்லாமல், வீடுகளிலும், பொதுமக்கள் ஒன்றாகக்கூடும் இடங்களிலும் விநாயகர் சிலைகளை வைத்து விமரிசையாக வழிபடப்படுவது இந்நாளின் சிறப்பாகும்.</p> <h2>பார்வதி தேவி</h2><p>விநாயகர் அவதாரம் குறித்து பல்வேறு புராணக் கதைகள் கூறப்படுகின்றன.</p><p>ஒரு சமயம் சிவபெருமான் கயிலாயத்தில் இல்லாதபோது, பார்வதி தேவி நீராடச் சென்றார். அப்போது பார்வதி தேவி, தன்னுடைய உடலில் இருந்து வாசனை துகள்களை உருட்டி ஒரு உருவத்தை உருவாக்கினார். பின்னர், அதற்கு தன்னுடைய சக்தியால் உயிரூட்டிய பார்வதி தேவி, காவலுக்கு வைத்தார். அவரே விநாயகப் பெருமான். பார்வதி தேவி, விநாயகப் பெருமானிடம் “நான் நீராடும் வரை யாரையும் உள்ளே அனுமதிக்கக் கூடாது” என கட்டளையிட்டார்.</p> <h2>சிவபெருமான்</h2><p>அந்த வேளையில் கயிலாயத்திற்குள் நுழைந்த சிவபெருமானை விநாயகர் தடுத்தார். இதனால் சிவபெருமானுக்கும், விநாயகருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இறுதியில் சிவபெருமான், தன்னுடைய திரிசூலத்தால் விநாயகரின் தலையை வெட்டினார். அப்போது நீராடிவிட்டு வந்த பார்வதி தேவி, தன் மகனான விநாயகரின் நிலையைக் கண்டு அதிர்ச்சியும், கோபமும் அடைந்தார். </p> <h2>யானை முகம்</h2><p>உலகையே அழித்துவிடும் அளவுக்கு அவரது கோபம் பெருகியது. இதனால் தேவர்கள், சிவபெருமானிடம் பார்வதி தேவியை சமாதானப்படுத்தும் படி வேண்டினர். உடனே சிவபெருமான், வடக்கு திசையில் முதலில் தென்படும் உயிரினத்தின் தலையை கொண்டுவரும்படி தன்னுடைய கணங்களுக்கு ஆணையிட்டார். இதையடுத்து வடதிசையில் தலை வைத்திருந்த வெள்ளை யானையின் தலையை கணங்கள் கொண்டு வந்தனர். பின்னர் சிவபெருமான், யானை தலையை விநாயகரின் உடலில் பொருத்தி உயிர் கொடுத்தார்.</p><h2>கணபதி</h2><p>இதைக் கண்டு பார்வதி தேவி சாந்தமானார். இவ்வாறு தான் விநாயகருக்கு யானை முகமும், மனித உடலும் கிடைத்தது. பின்னர் சிவபெருமான், விநாயகரை கணங்களின் தலைவனாக நியமித்தார். இதனால் விநாயகர் 'கணபதி' என அழைக்கப்படுகிறார்.</p> <h2>சத்ரபதி சிவாஜி</h2><p>இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி, செப்டம்பர் மாதம் 14-ந் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழா, மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி காலத்தில் இருந்தே கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது. இருப்பினும் சுதந்திரப் போராட்ட வீரரான பாலகங்காதர திலகர், விநாயகர் சதுர்த்தியை ஒரு பெரும்விழாவாக மாற்றியமைத்தார். ஆங்கிலேயர் ஆட்சியின்போது, தேசிய உணர்வை வளர்ப்பதற்காக இந்த விழாவை பயன்படுத்தினார்.</p> <h2>விநாயகர் சதுர்த்தி</h2><p>விநாயகர் சதுர்த்தி என்பது வெறும் மத வழிபாட்டு விழா மட்டுமல்ல. இது சமூக ஒருமைப்பாடு, கலாசார பரிமாற்றம், சமூக சேவை போன்றவற்றை ஊக்குவிக்கும் ஒரு நிகழ்வாகும். இவ்விழாவின்போது, மக்கள் தங்கள் வீடுகளிலும், பொது இடங்களிலும் விநாயகர் மண் சிலைகளை நிறுவி வழிபடுவார்கள். விழாவின் இறுதி நாளில் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடல்களிலும், அருகில் உள்ள நீர் நிலைகளிலும் கரைக்கப்படும். இதன்மூலம் நம்முடைய கவலைகளும், கஷ்டங்களும் நீரில் கரைவது போல கரைந்துவிடும், வெற்றிகள் குவியும் என்பது நம்பிக்கை.</p> <p>விநாயகர் சதுர்த்தி தினத்தன்று, அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, விநாயகருக்கு அருகம்புல், எருக்கம்புல் சாற்றி, மோதகம், சுண்டல், அவல், பொரி, தேங்காய் போன்றவை படைக்க வேண்டும். அன்றைய தினம் விநாயகர் மந்திரங்கள், விநாயகர் கவசம், விநாயகர் அகவல் படித்து வழிபடுவது சிறந்தது. விநாயகர் சதுர்த்தியில் விநாயகரை மனதார வழிபடுபவர்களுக்கு வினைகள் தீர்ந்து இனிமையான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை.</p>]]></content:encoded></item><item><title>திருப்பரங்குன்றம் கோவிலில் நாளை ஒரே நாளில் 102 ஜோடிகள் திருமணம் செய்ய பதிவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/102-couples-have-registered-to-get-married-at-the-thiruparankundram-temple-tomorrow-all-on-the-same-day</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/102-couples-have-registered-to-get-married-at-the-thiruparankundram-temple-tomorrow-all-on-the-same-day#comments</comments><guid isPermaLink="false">1a9bc6c8-7363-43c5-bb89-613ed6328167</guid><pubDate>Sat, 12 Sep 2026 03:46:00 +0000</pubDate><atom:updated>2026-09-12T03:46:00.622Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமணம்,திருப்பரங்குன்றம் கோவில்,முகூர்த்த நாள்,Thirupparankundram Temple</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/1zvubmf6/thirupparakundram.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ திருப்பரங்குன்றம் கோவில்]]></media:title><media:description type="html"><![CDATA[ திருப்பரங்குன்றம் கோவில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/1zvubmf6/thirupparakundram.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நாளை ஒரே நாளில் திருமணம் செய்ய 102 ஜோடிகள் பதிவு செய்துள்ளனர்.</strong></em> </p><h2><strong>திருப்பரங்குன்றம் கோவில்</strong></h2><p>தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">திருப்பரங்குன்றம் கோவிலில்</a> மட்டும் தான் முருகப்பெருமான் அமர்ந்த நிலையில் திருமணக் கோலத்தில் காட்சிதருகிறார். இந்த கோவிலில் தங்களது திருமணம் நடந்தால் சகல பாக்கியமும் கிடைக்கும் என்று பக்தர்களிடையே நம்பிக்கை நிலவுகிறது. இதனால் இந்த கோவிலில் முகூர்த்த நாளில் சராசரியாக 50 முதல் 100-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு மேல் திருமணம் நடக்கிறது.</p><h2><strong>102 ஜோடிகள் பதிவு</strong></h2><p>இந்தநிலையில் ஆவணி மாதத்தின் முதல் வளர்பிறை முகூர்த்த நாளான கடந்த 23-ந்தேதி அன்று ஒரே நாளில் 104 ஜோடிகளுக்கு பதிவு திருமணம் நடந்தது. இந்தநிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 17-ந்தேதி ஆகிய 2 நாட்கள் வளர்பிறை முகூர்த்தமாகும். நாளை ஒரே நாளில் மட்டும் திருமணம் செய்ய 102 ஜோடிகள் பதிவு செய்துள்ளனர். வருகின்ற 17-ந்தேதிக்கு நேற்று வரை 52 ஜோடிகளுக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்கள்.</p><h2><strong>ரூ.4.59 லட்சம் வருமானம்</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/price-hike-for-prasadam-at-thiruparankundram-temple">திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில்</a> முதல் திருமணம் செய்யக்கூடியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். குறைந்தபட்சம் 20 நாட்களுக்கு முன்பே திருமண பதிவு செய்யப்பட வேண்டும். கோவிலின் திருவாட்சி மண்டப வளாகத்தில் முத்துக்குமாரசுவாமி-தெய்வானை அம்பாள் சன்னதியில் திருமணம் செய்கிறார்கள். இதனை தொடர்ந்து கோவில் கருவறைக்கு மணமக்கள் உள்ளிட்ட 20 பேருக்கு அனுமதி டிக்கெட் மற்றும் திருமண பதிவு கட்டணம் என்று ஒவ்வொரு ஜோடிகளுக்கும் தலா ரூ.4,500 வசூலிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நாளை ஒரே நாளில் 102 ஜோடிகள் திருமணம் செய்ய பதிவு செய்யப்பட்டதில் கோவிலுக்கு ரூ.4 லட்சத்து 59 ஆயிரம் வருமானம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>7,000mAh பேட்டரியுடன் விரைவில் அறிமுகமாகும் புது ஒப்போ ஸ்மார்ட்போன்</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/oppo-k14-lite-to-launch-in-india-on-september-16</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/oppo-k14-lite-to-launch-in-india-on-september-16#comments</comments><guid isPermaLink="false">b8e883ae-f157-4fad-828a-d0f00d73cce6</guid><pubDate>Sat, 12 Sep 2026 03:39:00 +0000</pubDate><atom:updated>2026-09-12T03:39:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>OPPO,ஒப்போ,smartphone,ஸ்மார்ட்போன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/rquiu3z9/Oppo-K14-Lite.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Oppo K14 Lite]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/rquiu3z9/Oppo-K14-Lite.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/oppo">ஒப்போ</a> நிறுவனம் இந்தியாவில் புதிய K14 சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சமாக அதன் பேட்டரி இருக்கும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய ஒப்போ <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மார்ட்போன்</a> 7,000mAh பேட்டரி கொண்டிருக்கும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. </p><p>பேட்டரி மட்டுமின்றி ஒப்போ நிறுவனம் K14 லைட் ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் வண்ண தேர்வுகளையும் வெளியிட்டுள்ளது. ஒப்போ K14 மற்றும் ஒப்போ K14x மாடல்களுக்குப் பிறகு, இந்த வரிசையில் இது மூன்றாவது ஸ்மார்ட்போனாக இருக்கும். </p><p>மேலும், இந்த வரிசையில் மிகவும் மலிவு விலை மாடலாக இது அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. K14 லைட்மூலம், வாடிக்கையாளர்களுக்குத் தேர்வு செய்ய அதிக விருப்பங்களை வழங்கி, பட்ஜெட் பிரிவில் ஒப்போ தனது இருப்பை விரிவுபடுத்துவதாகத் தெரிகிறது.</p><h2>இந்திய அறிமுக தேதி:</h2><p>ஒப்போ K14 லைட் ஸ்மார்ட்போன், செப்டம்பர் 16 ஆம் தேதி மதியம் 12:00 மணிக்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கும். இது பெரும்பாலும் ஒப்போவின் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் வழியாக விற்பனைக்கு வரும்.</p><p>புதிய ஒப்போ K14 லைட்ஸ்மார்ட்போனில் "நீண்ட நேரம் நீடிக்கும் பேட்டரி, சீரான செயல்பாடு மற்றும் உறுதியான வடிவமைப்பு" ஆகியவை இடம்பெறும் என ஒப்போ நிறுவனம் அறிவித்துள்ளது.</p><p>K14 லைட் மாடலில் 7,000mAh பேட்டரி இடம்பெறும் என்பதை ஒப்போ உறுதி செய்துள்ளது. இந்த பேட்டரி மூலம், ஒரு நாள் முழுவதற்கும், அதற்கும் சற்று கூடுதலாகவும் பேட்டரி நீடிக்கும். டீசரின்படி, இது ஆறு ஆண்டுகள் வரை பேட்டரி ஆயுளை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>தற்போது பட்ஜெட் பிரிவில் உள்ள பெரும்பாலான போன்கள் 7,000mAh மற்றும் அதற்கும் அதிகமான பேட்டரி திறனை வழங்குகின்றன. எனவே, வன்பொருள் மற்றும் விலை நிர்ணயத்தில் K14 லைட் எவ்வாறு தனித்து நிற்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>மண்டல, மகர விளக்கு சீசன் - சபரிமலையில் 70 லட்சம் டின் அரவணையை இருப்பு வைக்க நடவடிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/mandala-pooja-and-makaravilakku-measures-taken-to-stock-70-lakh-tins-of-aravana-at-sabarimala</link><comments>https://www.maalaimalar.com/news/national/mandala-pooja-and-makaravilakku-measures-taken-to-stock-70-lakh-tins-of-aravana-at-sabarimala#comments</comments><guid isPermaLink="false">c1282dc9-45e1-4fa7-8646-ef4b8fbba0a3</guid><pubDate>Sat, 12 Sep 2026 02:47:50 +0000</pubDate><atom:updated>2026-09-12T02:47:50.956Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சபரிமலை கோவில்,Sabarimala temple,makaravilakku pooja,Mandala Pooja,அரவணை,மண்டல - மகரவிளக்கு பூஜை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/2wy6suhs/aravana.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ aravana payasam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/2wy6suhs/aravana.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சீசனுக்கு முன்னதாக சபரிமலையில் 70 லட்சம் டின் அரவணை பிரசாதம் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.</p> <p>சபரிமலையில் நடப்பு மண்டல <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D">மகரவிளக்கு சீசன்</a> வரும் நவம்பர் மாதம் தொடங்க உள்ளது. இதனையொட்டி திருவனந்தபுரத்தில் முதல்-மந்திரி வி.டி.சதீசன் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் அவர் கூறியதாவது:-</p> <p>சபரிமலை சன்னிதானத்தில் அனைத்து துறைகளின் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை தொடங்கப்படும். சபரிமலையில் பல மணி நேரம் காத்திருக்கும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும். பொதுப்பணித்துறை சார்பில் சீசனுக்கு முன்னதாக ரூ.551 கோடியில் சாலை மற்றும் கட்டுமான பணிகள் நிறைவேற்றப்படும். </p> <p>பம்பை ஆற்றில் தேங்கி கிடக்கும் துணிகள் உள்பட அனைத்து அசுத்தங்களும் அகற்றப்படும். போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 500 பஸ்கள் குத்தகைக்கு எடுத்து இயக்கப்படும்.</p><p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88">சபரிமலையில்</a> அரவணை உற்பத்தி திறன் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், சீசனுக்கு முன்னதாக சபரிமலையில் 70 லட்சம் டின் அரவணை பிரசாதம் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: சென்னை சென்ட்ரல் - மதுரை இடையே சிறப்பு ரெயில் இயக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurai-meenakshi-amman-temple-kumbabishekam-special-train-service-between-chennai-central-and-madurai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurai-meenakshi-amman-temple-kumbabishekam-special-train-service-between-chennai-central-and-madurai#comments</comments><guid isPermaLink="false">feef7073-5d7f-4cc6-bcb6-f834cde07453</guid><pubDate>Sat, 12 Sep 2026 02:31:47 +0000</pubDate><atom:updated>2026-09-12T02:31:47.190Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>special train,சிறப்பு ரெயில்,Kumbabishekam,கும்பாபிஷேகம்,Madurai Meenakshi Amman temple,மதுரை மீனாட்சி அம்மன் கோவில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/cv7tk81a/train.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Express Train]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/cv7tk81a/train.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, சென்னையில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87">தெற்கு ரெயில்வே</a> வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><h2>எக்ஸ்பிரஸ் ரெயில்கள்</h2><p>* சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 16-ந்தேதி (புதன்கிழமை) மாலை 4.10 மணிக்கு புறப்பட்டு செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.06153), மறுநாள் காலை 4.30 மணிக்கு மதுரை சென்றடையும்.</p> <p>மறுமார்க்கமாக, மதுரையில் இருந்து வருகிற 17-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 3.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06154), மறுநாள் காலை 3.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு வந்தடையும்.</p><p>அதேபோல, தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 16-ந்தேதி இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு செல்லும் சிறப்பு ரெயில் (06157), மறுநாள் காலை 5 மணிக்கு <a href="https://www.maalaimalar.com/spirituality/meenakshi-amman-temple-kumbabishekam-on-sep-17th">மதுரை</a> சென்றடையும்.</p> <p>மறுமார்க்கமாக, மதுரையில் இருந்து வருகிற 17-ந்தேதி இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06158), மறுநாள் காலை 3.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.</p><h2>கடற்கரை-மானாமதுரை</h2><p>சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 16-ந்தேதி காலை 10.45 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில் (06161), இரவு 11.30 மணிக்கு மானாமதுரை சென்றடையும்.</p> <p>மறுமார்க்கமாக, மானாமதுரையில் இருந்து வருகிற 17-ந்தேதி மதியம் 12 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில் (06162), இரவு 11.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஸ்வரேவ்</title><link>https://www.maalaimalar.com/sports/tennis/zverev-enter-the-final-round-in-us-open-tennis</link><comments>https://www.maalaimalar.com/sports/tennis/zverev-enter-the-final-round-in-us-open-tennis#comments</comments><guid isPermaLink="false">16dc2f50-35d8-463a-b4d9-898eb5b0df5b</guid><pubDate>Sat, 12 Sep 2026 02:15:09 +0000</pubDate><atom:updated>2026-09-12T02:15:09.433Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Alexandar Zverev,அலெக்சாண்டர் ஸ்வரேவ்,US Open Tennis,அமெரிக்க ஓபன் டென்னிஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/y71g4hev/zverev.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ zverev]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/y71g4hev/zverev.jpg?w=280" width="280"></media:thumbnail><category>டென்னிஸ் (Tennis)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் ரஷியாவின் கரண் கச்சனாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.</strong></em></p><p>கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.</p><p>ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி சுற்று போட்டிகள் இன்று நடந்தன.</p><p>இன்று காலை நடைபெற்ற முதல் அரையிறுதியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், ரஷியாவின் கரண் கச்சனாவ் உடன் மோதினார்.</p><p>இதில் சிறப்பாக ஆடிய <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B5%E0%AF%8D">ஸ்வரேவ்</a> 6-3, 7-6 (9-7), 7-6 (8-6) என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.</p><p>நாளை நடைபெறும் இறுதிச்சுற்றில் ஸ்வரேவ், அமெரிக்காவின் பென் ஷெல்டன் அல்லது பிரான்சிஸ் தியாபே உடன் மோத உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் - சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tirupati-kudai-rally-traffic-diversions-in-chennai-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tirupati-kudai-rally-traffic-diversions-in-chennai-tomorrow#comments</comments><guid isPermaLink="false">50a5d3ef-f5a9-4041-90cd-207b35cd5635</guid><pubDate>Sat, 12 Sep 2026 02:04:43 +0000</pubDate><atom:updated>2026-09-12T02:04:43.431Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,போக்குவரத்து மாற்றம்,Traffic Diversion,Tirupati Kudai,திருப்பதி திருக்குடை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/59cgc6rd/tirupatikudai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ thirupathi kudai ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/59cgc6rd/tirupatikudai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் நாளை நடைபெறுவதையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.</p> <p>சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><h2>திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம்</h2><p>சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88">திருப்பதி திருக்குடை</a> ஊர்வலம், இந்த ஆண்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில், இந்த திருக்குடை பாதயாத்திரை ஊர்வலம் நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p> <p>எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு. ஊர்வலம் செல்லும் இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும். அதன் விவரம் வருமாறு:-</p><h2>வால்டாக்ஸ் சாலை</h2><p>* திருக்குடை ஊர்வலம் வால்டாக்ஸ் சாலையை கடக்கும் வரை, காலை 8 மணி முதல் மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், ஈ.வெ.ரா.பெரியார் சாலை, ராஜாஜி சாலை, வால்டாக்ஸ் சாலை, பேசின் பிரிட்ஜ் சாலை மற்றும் பிரகாசம் சாலையை பயன்படுத்தலாம்.</p> <p>* ஊர்வலம் யானைகவுனி பாலத்தை கடக்கும் வரை, மாலை 3 மணி முதல் வால்டாக்ஸ் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பேசின் பிரிட்ஜ் சாலை, மின்ட் சாலை வழியாக பிரகாசம் சாலை அல்லது ராஜாஜி சாலையை பயன்படுத்தலாம். மேலும் ஈ.வெ.ரா.பெரியார் சாலை, முத்து சாமி சாலை மற்றும் ராஜாஜி சாலையையும் பயன்படுத்தலாம்.</p>  <p>* ஊர்வலம் யானைக்கவுனி பாலத்தை கடக்க வரும்போது, சூளை ரவுண்டானாவில் இருந்து டெமலாஸ் சாலை நோக்கி செல்ல வாகனங்களுக்கு அனுமதி இல்லை. அத்தகைய வாகனங்கள் சூளை நெடுஞ்சாலை மற்றும் ராஜா முத்தையா சாலை வழியாக போகலாம்.</p> <h2>வேப்பேரி நெடுஞ்சாலை </h2><p>* ஊர்வலம் ராஜா முத்தையா சாலையில் வரும்போது, மசூதி சந்திப்பில் இருந்து சூளை ரவுண்டான நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அத்தகைய வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக போகலாம்.</p><p>* ஊர்வலம் சூளை நெடுஞ்சாலையில் வரும்போது, நாராயணகுரு சாலை-ஈ.வி.கே. சம்பத் சாலை சந்திப்பில் இருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதி இல்லை. அத்தகைய வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக போகலாம்.</p> <p>ஊர்வலம் ஏ.பி. சாலை வரும்போது, பெரம்பூர் பேரக்ஸ் சாலை சந்திப்பில் இருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதி இல்லை.</p><h2>பெரம்பூர் பேரக்ஸ் சாலை</h2><p>* பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் ஊர்வலம் வரும்போது, டவுட்டன் சந்திப்பில் இருந்து பெரம்பூர் பேரக்ஸ் சாலை நோக்கி வாகனங்கள் போகமுடியாது. அந்த வாகனங்கள் நாராயணகுரு சாலை வழியாக போகலாம்.</p> <h2>ஓட்டேரி சந்திப்பு</h2><p>* ஊர்வலம் ஓட்டேரி சந்திப்பை அடையும்போது, மில்லர்ஸ் சாலை சந்திப்பில் இருந்து பிரிக்ளின் சாலை வழியாக, ஓட்டேரி சந்திப்பை நோக்கி வாகனங்கள் போகமுடியாது. அந்த வாகனங்கள் புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக போகலாம்.</p> <p>* ஊர்வலம் கொன்னூர் பாயிண்ட் பகுதிக்கு வரும்போது, ஓட்டேரி பாலம், மேடவாக்கம் டேங்க் சாலை மற்றும் ஐ.சி.எப். சந்திப்பு ஆகிய இடங்களில் இருந்து கொன்னூர் பாயிண்ட் நோக்கி வரும் வாகனங்கள் மாற்றுப்பாதைகளில் திருப்பிவிடப்படும். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> <h2>பாதுகாப்பு ஏற்பாடுகள்</h2><p>திருப்பதி திருக்குடை ஊர்வலத்தையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. ஊர்வலம் செல்லும் பாதையில், போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்றைய நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-diesel-price-in-chennai-3</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-diesel-price-in-chennai-3#comments</comments><guid isPermaLink="false">17f59ede-0265-4db3-871b-0a4aad89b030</guid><pubDate>Sat, 12 Sep 2026 01:41:16 +0000</pubDate><atom:updated>2026-09-12T01:41:16.977Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல்,Petrol,diesel,டீசல்</media:keywords><media:content height="576" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/awvbgdsi/maalai-malar2026-08-24b0k0t00ltn-32.avif" width="1024"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ petrol, diesel]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/awvbgdsi/maalai-malar2026-08-24b0k0t00ltn-32.avif?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் போர் ஓய்ந்து ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டு மத்திய கிழக்கில் இருந்து கச்சா எண்ணெய் வரத்து அதிகரித்த ஒரு சில நாட்களில் மீண்டும் போர் மூண்டுள்ளதால் சர்வதேச கச்சா எண்ணெய் விலைகளில் மீண்டும் தாக்கம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.</p><h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.</p><h2>பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</h2><p>இந்நிலையில், இன்றைய (12.09.2026 - ஞாயிற்றுக்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 12 செப்டம்பர் 2026: பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம்
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-12-september-2026-perumal-temple-tirumanjanam</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-12-september-2026-perumal-temple-tirumanjanam#comments</comments><guid isPermaLink="false">c45cdc32-135d-4433-a74f-0f7de229ea97</guid><pubDate>Sat, 12 Sep 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-09-12T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/12/05/22666996-perumal5.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Perumal sridevi bhudevi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/12/05/22666996-perumal5.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆவணி-26 (சனிக்கிழமை)</p><p>பிறை : வளர்பிறை</p><p>திதி :  பிரதமை காலை 8.51 மணி வரை பிறகு துவிதியை</p><p>நட்சத்திரம் : உத்திரம் பிற்பகல் 2.47 மணி வரை பிறகு அஸ்தம்</p> <p>யோகம் :  மரணயோகம்</p><p>ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை</p><p>எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை</p><p>சூலம் : கிழக்கு</p><p>நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை</p> <h2>திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சனம்</h2><p>சந்திர தரிசனம். தேரெழுந்தூர், திண்டுக்கல், மிலட்டூர், திருவலஞ்சுழி கோவில்களில் ஸ்ரீ விநாயகப் பெருமாள் பவனி வரும் காட்சி. மறைஞான சம்பந்தர் நாயனார் குரு பூஜை. உப்பூர் ஸ்ரீ வெயிலுகந்த விநாயகர் திருக்கல்யாணம். சோழசிம்மபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் புறப்பாடு. மதுரை ஸ்ரீ நவநீத கிருஷ்ண சுவாமி காலை ராஜமன்னார் திருக்கோலம், மாலை சுவாமி சேஷ வாகனத்திலும், இரவு புஷ்பப் பல்லக்கிலும் கள்ளர் திருக்கோலமாய் காட்சி, திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சனம். </p> <p>நயினார் கோவில் ஸ்ரீ சௌந்தரநாயகி, திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் கோவில்களில் அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சனம், திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம்.</p><h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - லாபம்</p><p>ரிஷபம் - நலம்</p><p>மிதுனம் - பண்பு</p><p>கடகம் - திடம்</p><p>சிம்மம் - வெற்றி</p><p>கன்னி - அமைதி</p> <p>துலாம் - பண்பு</p><p>விருச்சிகம் - தாமதம்</p><p>தனுசு - உண்மை</p><p>மகரம் - திறமை</p><p>கும்பம் - புகழ்</p><p>மீனம் - உழைப்பு</p> ]]></content:encoded></item><item><title>Today Rasipalan | இன்றைய ராசிபலன் 12.9.2026: இந்த ராசிக்காரர்களுக்கு பணவரவு திருப்தி அளிக்கும்</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasipalan-1292026-in-tamil</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasipalan-1292026-in-tamil#comments</comments><guid isPermaLink="false">94ad4b2f-1bd5-4ce6-8c63-defb573bf506</guid><pubDate>Sat, 12 Sep 2026 00:54:26 +0000</pubDate><atom:updated>2026-09-12T00:54:26.249Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/11/16/21684309-rasi.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/11/16/21684309-rasi.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>நண்பர்களின் ஒத்துழைப்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். வருமானம் திருப்தி தரும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.</p><h2>ரிஷபம்</h2><p>புதிய பாதை புலப்படும் நாள். பிரச்சனைகளைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். அசையாச் சொத்துகள் வாங்குவதில் ஆர்வம் கூடும்.</p><h2>மிதுனம்</h2><p>அல்லல்கள் அகலும் நாள். வியாபாரத்தில் இருந்த குறுக்கீடுகள் அகலும். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.</p><h2>கடகம்</h2><p>மனக்குழப்பம் அகலும் நாள். முன்பின் தெரியாதவர்களை நம்பிப் பெரிய முதலீடுகள் செய்யவேண்டாம். உத்தியோகத்தில் நேற்றைய பிரச்சனை இன்று முடிவிற்கு வரும்.</p><h2>சிம்மம்</h2><p>யோகமான நாள். தனவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் வேலைகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். ஆரோக்கியம் சீராகும்.</p><h2>கன்னி</h2><p>வெளியுலகத் தொடர்பு நன்மை தரும் நாள். தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும்.</p><h2>துலாம்</h2><p>யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வாய்ப்புகள் வந்தும் உபயோகப்படுத்திக் கொள்ள இயலாது. உத்தியோகத்தில் கெடுபிடி அதிகரிக்கும்.</p><h2>விருச்சிகம்</h2><p>எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். அசையாச் சொத்துகள் வாங்குவதில் ஆர்வம் கூடும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். புதிய ஒப்பந்தங்கள் உண்டு.</p><h2>தனுசு</h2><p>குழப்பங்கள் அகலும் நாள். கூட்டுத்தொழில் புரிவோர் லாபம் காண்பர், திட்டமிட்ட பயணத்தில் திடீர் மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டு.</p><h2>மகரம்</h2><p>செல்வாக்கு உயரும் நாள். தெய்வீக சிந்தனை மேலோங்கும். கடமையில் இருந்த தொய்வு அகலும். பணியாளர்களிடம் பக்குவமாக நடந்துகொள்வது நல்லது.</p><h2>கும்பம்</h2><p>அருகில் உள்ளவர்களின் ஆதரவு குறையும் நாள். அடுத்தவர்களின் மனம் புண்படும் விதம் நடந்துகொள்ள வேண்டாம். பயணங்களில் கவனம் தேவை.</p><h2>மீனம்</h2><p>புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு பற்றிய தகவல் உண்டு. பணவரவு திருப்தி அளிக்கும்.</p>]]></content:encoded></item><item><title>லண்டனில் அஜித் குமார் பங்கேற்கும் கார் பந்தயம்: முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்</title><link>https://www.maalaimalar.com/news/world/cm-vijay-to-inagrate-silverstone-car-race-in-which-ajith-kumar-will-participate</link><comments>https://www.maalaimalar.com/news/world/cm-vijay-to-inagrate-silverstone-car-race-in-which-ajith-kumar-will-participate#comments</comments><guid isPermaLink="false">1dbb71c8-1c35-4cd5-9864-5c944f6570c9</guid><pubDate>Sat, 12 Sep 2026 00:27:52 +0000</pubDate><atom:updated>2026-09-12T00:27:52.738Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Ajith Kumar,vijay,அஜித் குமார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/jea95t55/Ajith-and-Vijay.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ajith and Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/jea95t55/Ajith-and-Vijay.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/vijay">விஜய்</a> லண்டன் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் விஜய், இன்று நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/ajith-kumar">அஜித் குமார்</a> பங்கேற்கும் கார் பந்தயத்தை தொடங்கி வைக்கிறார்.</p><p>தமிழகத்துக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 6 நாள் அரசுமுறை பயணமாக முதலமைச்சர் விஜய் லண்டன் சென்று உள்ளார். அதற்காக அவர் நேற்று முன்தினம் (செப்டம்பர் 10) இரவு 10 மணியளவில் எமிரேட்ஸ் விமானத்தில் புறப்பட்டார். துபாய் வழியாக லண்டன் சென்ற விஜய், நேற்று காலை 7 மணியளவில் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தை சென்றடைந்தார்.</p><h2>உற்சாக வரவேற்பு:</h2><p>விமான நிலையத்தில் காத்திருந்த பிரிட்டன் தமிழ் சங்க தலைவர் ஜேக்கப் ரவிபாலன், த.வெ.க. துரைகண்ணன் மற்றும் பிரிட்டன் வாழ் தமிழர்கள் அவருக்கு பூங்கொத்துகள் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.</p><p>அதனைத்தொடர்ந்து விஜய், 'ஷாங்க்ரி-லா தி ஷார்ட்' ஓட்டலுக்கு சென்றார். லண்டன் பிரிட்ஜ் பகுதியில் உள்ள புகழ்பெற்ற தி ஷார்ட் கட்டிடத்தில் இந்த ஓட்டல் அமைந்துள்ளது. கட்டிடத்தின் 34-வது தளம் முதல் 52-வது தளம் வரை ஓட்டல் செயல்படுகிறது.</p><p>ஐரோப்பாவின் உயரமான கட்டிடங்களில் ஒன்றான 'தி ஷார்டில்' அமைந்துள்ளதால், ஓட்டலின் அறைகளில் இருந்து தேம்ஸ் நதி மற்றும் லண்டனின் நகரை பார்க்க முடியும். இந்த ஓட்டலில் 185 அறைகள், 14 டீலக்ஸ் அறைகள் மற்றும் 3 சிறப்பு எக்ஸ்கியூட்வ் அறைகள் உள்ளன.</p><h2>முதலீடுகளை ஈர்க்கும் பயணம்:</h2><p>தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதும், உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுமே முதலமைச்சர் விஜய்யின் பிரிட்டன் பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.</p><p>மேம்பட்ட உற்பத்தி, மோட்டார் வாகனங்கள், மின்சார வாகனங்கள், மின்னணுவியல் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் உள்ளிட்ட துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்களை முதல்வர் விஜய் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.</p><p>பிரிட்டன் பயணத்தின் முக்கிய நிகழ்வாக, இன்று புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தய திடலுக்கு முதலமைச்சர் விஜய் செல்கிறார். அங்கு நடைபெறும் மிஷெலின் லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை அவர் பச்சை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.</p><p>இந்தப் போட்டியில் நடிகர் அஜித்குமார் பங்கேற்கிறார். அவருடன் இந்தியாவை சேர்ந்த முன்னணி கார் பந்தய வீரர்களும் கலந்து கொள்கின்றனர். இந்த போட்டி. இந்திய நேரப்படி இரவு 9.45 மணிக்கு தொடங்கி இரவு 11.45 மணிக்கு நிறைவடைகிறது.</p>]]></content:encoded></item><item><title>கடற்பரப்பை நோக்கி Projectile ஏவிய வட கொரியா </title><link>https://www.maalaimalar.com/news/world/north-korea-launches-projectile-toward-waters-off-its-east-coast</link><comments>https://www.maalaimalar.com/news/world/north-korea-launches-projectile-toward-waters-off-its-east-coast#comments</comments><guid isPermaLink="false">4813ae9f-4f05-407b-8dd4-ef3154faa7f2</guid><pubDate>Fri, 11 Sep 2026 23:59:20 +0000</pubDate><atom:updated>2026-09-11T23:59:20.576Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>North korea,வடகொரியா,South Korea,தென் கொரியா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/ac33dyi9/Projectile.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Projectile]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/ac33dyi9/Projectile.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/north-korea">வட கொரியா</a> தனது சமீபத்திய ஆயுதப் பிரயோகத்தின் ஒரு பகுதியாக, அடையாளம் தெரியாத பொருளைக் கடலை நோக்கி ஏவியதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.</p><p>இந்த ஏவுதல் இன்று (சனிக்கிழமை) காலை வட கொரியாவின் கிழக்கு கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் நிகழ்ந்ததாக தென் கொரிய ராணுவம் கூறியது, ஆனால் இது குறித்த கூடுதல் விவரங்களை அளிக்கவில்லை.</p><h2>ஐந்தாண்டு ராணுவ பயிற்சி:</h2><p>வட கொரியா ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தலாக கருதும் அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் தங்களது ஐந்தாண்டு ராணுவ பயிற்சியை முடித்த ஒரு நாள் கழித்து இந்த ஏவுதல் நிகழ்ந்துள்ளது.</p><p>'ஃப்ரீடம் எட்ஜ்' பயிற்சி தற்காப்புத் தன்மையுடையது என்றும், வட கொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு எதிரான கூட்டு பதிலடித் திறனை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டது என்றும் தென் கொரிய இராணுவம் கூறியது.</p><p>திங்களன்று பயிற்சி தொடங்கிய சில மணி நேரங்களுக்கு பிறகு, வட கொரியாவின் பாதுகாப்பு அமைச்சர் கிம் சோங் கி, இந்தப் பயிற்சியை விமர்சித்ததுடன், "சக்தியின் அடிப்படையில் வலுவான மற்றும் ஆழ்ந்து சிந்திக்கும் எதிர் நடவடிக்கைகளை" எடுக்கும் திறன் வட கொரியாவிற்கு உள்ளது என்றும் எச்சரித்தார்.</p>]]></content:encoded></item><item><title>பிரிக்ஸ் உச்சிமாநாடு: டெல்லி காவல்துறை போக்குவரத்து அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/brics-summit-delhi-police-issues-traffic-advisory-for-september-12</link><comments>https://www.maalaimalar.com/news/national/brics-summit-delhi-police-issues-traffic-advisory-for-september-12#comments</comments><guid isPermaLink="false">e4749c5f-f43b-45f8-86ac-505356563c8e</guid><pubDate>Fri, 11 Sep 2026 23:31:00 +0000</pubDate><atom:updated>2026-09-11T23:31:00.337Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>போக்குவரத்து மாற்றம்,Delhi Police,BRICS Summit,பிரிக்ஸ் உச்சி மாநாடு,டெல்லி காவல் துறை,traffic advisory</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/x7itvt2z/Brics-DL-Map.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Brics Delhi Map]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/x7itvt2z/Brics-DL-Map.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>18-ஆவது <a href="https://www.maalaimalar.com/topic/brics">பிரிக்ஸ்</a> (BRICS) தலைவர்கள் உச்சிமாநாடு நடைபெறவுள்ளதையொட்டி, இன்று (செப்டம்பர் 12) தலைநகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து சீரமைக்கப்படவுள்ளது. இதற்காக காலை 9:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் மாற்றுப் பாதைகள் அமலில் இருக்கும் என்று <a href="https://www.maalaimalar.com/news/national">டெல்லி</a> காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>போக்குவரத்து குறித்த இந்த அறிவிப்பு வரைபடம், மத்திய டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட சாலைகள், தடைசெய்யப்பட்ட பகுதிகள், மாற்று பாதைகள் மற்றும் போக்குவரத்து திருப்பி விடப்படும் இடங்களை அடையாளம் காட்டுகிறது.</p><h2>போக்குவரத்து சீரமைப்பு:</h2><p>குறிப்பாக பாரத் மண்டபம்/பிரகதி மைதானம் பகுதியை சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் இருக்கும்; மேலும் மத்திய டெல்லி மண்டலத்தை வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு டெல்லியுடன் இணைக்கும் பல முக்கிய வழித்தடங்களிலும் போக்குவரத்து சீரமைக்கப்படும்.</p><p>இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய வழித்தடங்களில் ரிங் ரோடு, மதுரா ரோடு, பைரோன் மார்க், திலக் மார்க், இந்தியா கேட்/சி-ஹெக்ஸகன் பகுதி, சர்தார் படேல் மார்க், படேல் ரோடு, தேசிய நெடுஞ்சாலை-48 (NH-48) மற்றும் பரேட் ரோடு ஆகியவை அடங்கும்; அத்துடன் லுட்யன்ஸ் டெல்லி (Lutyens' Delhi) பகுதியிலுள்ள பல சாலைகளும் இதில் அடங்கும்.</p><h2>காவல்துறை அறிவுறுத்தல்:</h2><p>பயணிகள் சிரமத்தை தவிர்க்க, தங்கள் பயணத்தை திட்டமிட்டுக்கொள்ளுமாறும், முடிந்தவரை மெட்ரோ ரயிலை பயன்படுத்துமாறும், ஒதுக்கப்பட்ட மாற்று பாதைகளை பின்பற்றுமாறும் மற்றும் போக்குவரத்து காவலர்களின் அறிவுறுத்தல்களுக்குக் கீழ்ப்படியுமாறும் டெல்லி காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.</p><p>அவசர மற்றும் அத்தியாவசிய சேவை வாகனங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் செல்ல அனுமதி அளிக்கப்படும். அறிவிப்பு வரைபடத்தில் மாற்றுப் பாதைகள் நீல நிறத்திலும், கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட சாலைகள் ஆரஞ்சு நிறத்திலும், தடைசெய்யப்பட்ட பகுதிகள் ஊதா நிறத்திலும், போக்குவரத்து திருப்பி விடப்படும் இடங்கள் சிவப்பு நட்சத்திரக் குறியீட்டிலும் குறிக்கப்பட்டுள்ளன.</p><p>இதன் மூலம் உச்சிமாநாட்டின் போது பயணிகள் எங்கு கட்டுப்பாடுகள் அல்லது போக்குவரத்து மாற்றங்களைச் சந்திக்க நேரிடும் என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>18-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டை இந்தியா புது தில்லியில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடத்துகிறது.</p>]]></content:encoded></item><item><title>லண்டனில் மகாராஷ்டிர துணை முதல்வர் ஷிண்டேவை சந்தித்த விராட் கோலி</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/virat-kohli-meets-maharashtra-dy-cm-shinde-in-london</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/virat-kohli-meets-maharashtra-dy-cm-shinde-in-london#comments</comments><guid isPermaLink="false">f9668047-f18e-4d40-9e31-aab527368b5c</guid><pubDate>Fri, 11 Sep 2026 22:56:57 +0000</pubDate><atom:updated>2026-09-11T22:56:57.772Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Virat Kohli,விராட் கோலி,Eknath Shinde,ஏக்நாத் ஷின்டே</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/387wc6cj/Virat-Kohli-and-Eknath-Shinde.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Virat Kohli and Eknath Shinde]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/387wc6cj/Virat-Kohli-and-Eknath-Shinde.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் <a href="https://www.maalaimalar.com/topic/virat-kohli">விராட் கோலி</a>, லண்டனுக்குச் சென்றிருந்த மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்து பேசினார்.</p><p>விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகள், விளையாட்டு வீரர்களின் மேம்பாடு மற்றும் மாநிலத்தின் வளர்ச்சி ஆகியவை குறித்து அவர்கள் விரிவாக விவாதித்ததாக <a href="https://www.maalaimalar.com/topic/eknath-shinde">ஏக்நாத் ஷிண்டே</a> அலுவலகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.</p><h2>பரஸ்பர வாழ்த்து மற்றும் வரவேற்பு:</h2><p>இந்த சந்திப்பின்போது, ​​பாரம்பரியமான சால்வை மற்றும் பூங்கொத்து வழங்கி ஷிண்டே கோலியை வரவேற்றார்; அதேவேளையில், இங்கிலாந்து பயணத்தின்போது மூன்று மதிப்புமிக்க விருதுகளைப் பெற்றதற்காக ஷிண்டேவுக்கு கோலி வாழ்த்து தெரிவித்தார்.</p><p>மகாராஷ்டிராவில் விளையாட்டு வசதிகளை விரிவுபடுத்துவதற்கும், தேசிய மற்றும் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெறும் திறமையாளர்களை உருவாக்குவதற்கும் தேவையான கொள்கை மாற்றங்கள் குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.</p><p>சம்ருத்தி விரைவுச்சாலை, நவி மும்பை சர்வதேச விமான நிலையம், கடலோரச் சாலைத் திட்டம் (Coastal Road), அடல் சேது மற்றும் வதவன் துறைமுகம் உள்ளிட்ட மாநிலத்தின் வளர்ச்சியை முன்னெடுக்கும் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் குறித்து ஷிண்டே எடுத்துரைத்தார். மேலும், நவி மும்பை அருகே பல்வேறு விளையாட்டுகளுக்கான நவீன வசதிகளுடன் அமையவுள்ள 'விளையாட்டு நகரம்' குறித்த திட்டங்கள் குறித்தும் அவர் பேசினார்.</p><h2>விராட் கோலி ஆர்வம்:</h2><p>இளைஞர்களுக்கு உயர்தரக் கல்வியுடன் சிறந்த விளையாட்டுப் பயிற்சியையும் வழங்கும் இத்தகைய முயற்சிகளை வலுப்படுத்துவதில் கோலி மிகுந்த ஆர்வம் காட்டினார். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான 'கேலோ இந்தியா' போன்ற தேசிய அளவிலான முன்னெடுப்புகள், லட்சக்கணக்கான இளைஞர்களை விளையாட்டுத் துறையில் ஈடுபட தூண்டுவதாகவும் ஷிண்டே குறிப்பிட்டார்.</p><p>தனது தனிப்பட்ட பயணத்தை பற்றி பகிர்ந்துகொண்ட கோலி, கிரிக்கெட் மீதான தனது தீராத ஆர்வத்தை வெளிப்படுத்தினார். ஓய்வுக்குப் பிறகும் இத்துறையில் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க விரும்புவதாகவும், உடற்தகுதி, ஊட்டச்சத்து மற்றும் முறையான உணவுமுறை ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து இளம் விளையாட்டு வீரர்களுக்கு வழிகாட்டுவதில் தனக்குள்ள ஈடுபாட்டையும் அவர் வலியுறுத்தினார்.</p><p>யுவ சேனா பொதுச் செயலாளர் ராகுல் கனல் மற்றும் துணை முதல்வரின் மூத்த உதவியாளர்கள் முன்னிலையில் இந்தச் சந்திப்பு நிறைவடைந்தது. ஷிண்டே தனது லண்டன் பயணத்தை செப்டம்பர் 9-ஆம் தேதி தொடங்கினார்.</p>]]></content:encoded></item><item><title>அச்சுறுத்தல்களுக்கு ஈரான் ஒருபோதும் பணியாது: ஈரான் அதிபர் மசூத் பெசெஸ்கியான்</title><link>https://www.maalaimalar.com/news/national/iran-will-not-surrender-to-bullies-president-masoud-pezeshkian-in-new-delhi</link><comments>https://www.maalaimalar.com/news/national/iran-will-not-surrender-to-bullies-president-masoud-pezeshkian-in-new-delhi#comments</comments><guid isPermaLink="false">c59ca25f-1d7f-43e1-a139-9e43b3244ce2</guid><pubDate>Fri, 11 Sep 2026 21:14:03 +0000</pubDate><atom:updated>2026-09-11T21:14:03.936Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஈரான்,Iran,மசூத் பெசஸ்கியான்,Masoud Pezeshkian</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/48ea20dq/Masoud-Pezeshkian.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Masoud Pezeshkian]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/48ea20dq/Masoud-Pezeshkian.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு ஆசியாவில் மோதல்கள் தீவிரமடைந்துள்ள சூழலில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு நேரடியாக விடுத்த செய்தியில், <a href="https://www.maalaimalar.com/topic/Iran">ஈரான்</a> அதிபர் மசூத் பெசஸ்கியான் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதில், "அச்சுறுத்தல்" மற்றும் "அதிகாரத் திமிருக்கு" ஈரான் ஒருபோதும் பணியாது என்றும், தனது தேசிய நலன்களைப் பாதுகாக்க உறுதியுடன் நிற்கும் என்றும் அவர் கூறினார். </p><p>மதத் தலைவர்கள், அறிஞர்கள், கல்வியாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய பெசெஸ்கியான், வளைகுடா பிராந்தியத்திற்கான ஈரானின் தொலைநோக்கு பார்வையை விளக்கினார். அமைதியான சகவாழ்வுக்கான அர்ப்பணிப்பை வலியுறுத்திய அவர், அதேவேளையில் ஈரானிய சமூகத்திற்குள் "கருத்து வேறுபாடுகளை தூண்டும்" வெளிநாட்டு சக்திகளை முறியடிப்பதாகவும் உறுதியளித்தார். </p><h2>உண்மையான தீவிரவாதிகள்:</h2><p>இதுகுறித்து பேசிய மசூத் பெசஸ்கியான், "நாங்கள் அடக்குமுறைக்கு ஒருபோதும் பணியமாட்டோம். இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு நாங்கள் அடிபணியாததாலேயே அவற்றை எதிர்த்து நிற்கிறோம்; அவர்கள் எங்களை நெருக்கடிக்கு உள்ளாக்கினால், நாங்களும் அவர்களை திருப்பி தாக்குவோம்," என்று ஈரான் அதிபர் கூறினார்.</p><p>தெற்கு ஈரானில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளிக்கு அருகே அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 168 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டிய அவர், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகளை "உண்மையான தீவிரவாதிகள்" என்று சாடினார்.</p><h2>ஈரானியர்கள் பணியமாட்டார்கள்:</h2><p>"மருத்துவமனைகள், உள்கட்டமைப்பு மற்றும் மக்களின் வாழ்வாதாரங்களை இலக்கு வைப்பதற்கு பதிலாக, அவர்கள் எங்கள் ராணுவ வீரர்களை நேருக்கு நேர் எதிர்கொள்ள வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாட்டால் மக்கள் பணிந்துவிடுவார்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள்; ஆனால் ஈரானிய மக்கள் ஒருபோதும் பணியமாட்டார்கள்," என்று அவர் கூறினார்.</p><p>ஈரானிய இலக்குகள் மீது அமெரிக்கா புதிய வான்வழி தாக்குதல்களை நடத்தியுள்ள சூழலிலும், கடுமையான பொருளாதாரத் தடைகள் மூலம் ஈரானுக்கு நெருக்கடி கொடுக்க வாஷிங்டன் முயற்சிக்கும் நிலையிலும், மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழலில் பெசஸ்கியானின் இந்த கருத்துகள் வெளியாகியுள்ளன.</p><p>பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக மூன்று நாள் பயணமாக ஈரான் அதிபர் பெசஸ்கியான் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை டெல்லி வந்தடைந்தார். இந்த நிகழ்வுக்கு முன்னதாக, ஈரான் அதிபர் பிரதமர் நரேந்திர மோடியுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்; இதில் மேற்கு ஆசியாவின் ஒட்டுமொத்த சூழல் மற்றும் இருதரப்பு உறவுகள் ஆகியவை முக்கியமாக விவாதிக்கப்பட்டன.</p>]]></content:encoded></item><item><title>முதல்வர் விஜய் என் அழைப்பை ஏற்று வந்ததில் மகிழ்ச்சி - அஜித் குமார்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ajith-kumar-happy-to-welcome-cm-vijay</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ajith-kumar-happy-to-welcome-cm-vijay#comments</comments><guid isPermaLink="false">e44e8104-36ce-4b5c-94ff-0c68db2ab95f</guid><pubDate>Fri, 11 Sep 2026 20:11:57 +0000</pubDate><atom:updated>2026-09-11T20:11:57.192Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Ajith Kumar,vijay,அஜித் குமார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/4jqphel7/AK-and-Vijay.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ AK and Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/4jqphel7/AK-and-Vijay.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதல்வர் விஜய் பிரிட்டன் கார் பந்தயத்திற்கு வரவிருப்பது பற்றி <a href="https://www.maalaimalar.com/topic/ajith-kumar">அஜித் குமார்</a> மனம் திறந்து பேசியுள்ளார். </p><p>பிரிட்டனில் நடைபெற இருக்கும் லீ மேன்ஸ் கப் தொடரில் நடிகரும் ரேசருமான அஜித் குமாரின் அணி பங்கேற்கிறது. இன்று நடைபெறம் இந்த கார் பந்தயத்தை தமிழ்நாடு முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/vijay">விஜய்</a> பங்கேற்று தொடங்கி வைக்கிறார். அஜித் குமாரின் அழைப்பின் பேரில் முதலமைச்சர் விஜய் அங்கு செல்வதாக கூறப்பட்டது. </p><p>மேலும், தமிழ் நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அதுதொடர்பாக கார் பந்தய தளங்களை பார்வையிடும் நோக்கில் முதல்வர் அங்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து அஜித் குமார் கருத்து தெரிவித்துள்ளார்.</p><h2>அஜித் குமார் பேச்சு:</h2><p>இதுகுறித்து பேசிய அஜித் குமார், "முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது பிசியான வேலைகளுக்கு மத்தியிலும் நேரம் ஒதுக்கி லண்டன் வந்துள்ளார். நாங்கள் இருவரும் ஒரே துறையில் 34 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளோம். அவர் முதல்வர் ஆனதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.</p><p>விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதற்காக அவர் நிறைய செய்து வருகிறார். எனது அழைப்பை ஏற்று அவர் இங்கு வருவது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தியாவில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறையை மேம்படுத்த தமிழக அரசு முயற்சித்து வருகிறது. மோட்டார் ஸ்போர்ட்ஸ் போன்றவை இந்தியாவில் வர வேண்டும் என்பதே எனது விருப்பம்," எனத் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மகளிர் ஆசிய கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இலங்கை மகளிர் அணி</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/womens-asia-cup-sl-w-beat-pak-w-to-enter-finals</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/womens-asia-cup-sl-w-beat-pak-w-to-enter-finals#comments</comments><guid isPermaLink="false">6277c43e-f851-4db6-9a0d-d1bd1dcdce93</guid><pubDate>Fri, 11 Sep 2026 19:22:40 +0000</pubDate><atom:updated>2026-09-11T19:22:40.107Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Womens Asia Cup,மகளிர் ஆசிய கோப்பை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/k04dtnqk/SL-W-Won.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ SL W Won]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/k04dtnqk/SL-W-Won.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/womens-asia-cup">மகளிர் ஆசிய கோப்பை</a> இரண்டாவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இலங்கை மகளிர் அணி.</p><p>10-ஆவது மகளிர் ஆசிய கோப்பை டி20 <a href="https://www.maalaimalar.com/sports/cricket">கிரிக்கெட்</a> தொடர் துபாயில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் இரு பிரிவுகளை சேர்ந்த நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.</p><p>அதன்படி 'ஏ' பிரிவில் முதல் இரு இடங்களை பிடித்த இந்தியா (3 வெற்றியுடன் 6 புள்ளி), பாகிஸ்தான் (4 புள்ளி) அணியும் 'பி' பிரிவில் முதல் இரு இடங்களை பெற்ற நடப்பு சாம்பியன் இலங்கை (6 புள்ளி) மற்றும் வங்காளதேசம் (4 புள்ளி) ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.</p><h2>இரண்டாவது அரையிறுதி போட்டி:</h2><p>நேற்று முன்தினம் நடந்த முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேசம் மகளிர் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அந்த வகையில் நேற்றிரவு (செப். 11) நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதின.</p><p>இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் மகளிர் அணிக்கு ஆரம்பமே அதர்ச்சி காத்திருந்தது. அந்த அணிக்கு தொடக்கம் கொடுத்த முனீபா அலி 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய ஷவால் ஜூல்ஃபிகர் 16 பந்துகளில் 24 ரன்களை எடுத்து அவுட் ஆனார். பிறகு களமிறங்கிய குல் ஃபெரோஸா 21 ரன்களுக்கு நடையை கட்டினார்.</p><p>ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையில், மிடில் ஆர்டரில் களமிறங்கிய கேப்டன் ஃபாத்திமா சனா அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் கவனம் செலுத்தியது. கடைசி வரை களத்தில் இருந்த ஃபாத்திமா 36 பந்துகளில் 47 ரன்களை எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் மகளிர் அணி 5 விக்கெட் இழப்புக்கு 130 ரன்களை எடுத்தது.</p><h2>இலங்கை மகளிர் அணி வெற்றி:</h2><p>சற்றே எளிய இலக்கை துரத்திய இலங்கை மகளிர் அணி ஆரம்பத்தில் தடுமாறியது. அந்த அணியின் தொடக்க வீராங்கனைகள்</p><p>சமாரி அட்டப்பட்டு 5 ரன்களுக்கு ஆட்டமிழக்க இமெஷா துலானி 24 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய சஞ்சனா கவிண்டி ரன் ஏதும் எடுக்காமலும், ஹாசினி பெரெரா 3 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.</p><p>பிறகு களமிறங்கிய ஹர்ஷிதா சமரவிக்ரம மற்றும் கவிஷா தில்ஹாரி அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இந்த ஜோடி முறையே 36 மற்றும் 33 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது. கடைசியில் 18.4 ஓவர்களில் இலங்கை மகளிர் அணி வெறும் 5 விக்கெட் இழப்புக்கு 134 ரன்களை எடுத்தது. இதன் மூலம் இலங்கை மகளிர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.</p><p>இந்த வெற்றியின் மூலம் இலங்கை மகளிர் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. நாளை (செப்டம்பர் 13) நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகள் களம் காண்கின்றன.</p>]]></content:encoded></item><item><title>Bigg Boss Tamil-ல் அதிரடி! முதல் முறையாக யார் வெளியேற வேண்டும் என போட்டியாளர்களே முடிவு செய்ய அதிகாரம்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/a-dramatic-twist-in-bigg-boss-tamil-for-the-first-time-contestants-to-decide-who-should-be-evicted</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/a-dramatic-twist-in-bigg-boss-tamil-for-the-first-time-contestants-to-decide-who-should-be-evicted#comments</comments><guid isPermaLink="false">cd1177b6-2ddb-433f-b5b9-3ed4c7d302ff</guid><pubDate>Fri, 11 Sep 2026 18:12:53 +0000</pubDate><atom:updated>2026-09-11T18:12:53.291Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Bigg Boss Tamil,பிக் பாஸ் தமிழ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/ydl11gwz/Bigg-Boss-Tamil-Poster.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bigg Boss Tamil Poster]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/ydl11gwz/Bigg-Boss-Tamil-Poster.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/biggboss">பிக் பாஸ் தமிழ்</a> சீசன் 10 வீட்டில் இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக எவிக்ஷன் முடிவு போட்டியாளர்களின் கைகளுக்கு செல்கிறது. இந்த வாரம் யார் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பதை சக போட்டியாளர்களே தீர்மானிக்க உள்ளனர்.</p><p>இந்த வார எவிக்ஷனுக்காக கேப்டன் வினோத் பாபுவால் தன்யா பல்லத், முனியம்மாள் மற்றும் சவின்யா ஆகிய மூவரும் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் வழக்கமான எவிக்ஷனைப் போல இல்லாமல், இந்த முறை இவர்களில் ஒருவரை வீட்டை விட்டு வெளியேற்றும் முடிவு சக போட்டியாளர்களிடம் வழங்கப்படுகிறது.</p><p>இதனால் வீட்டிற்குள் நட்பும், பகையும், தனிப்பட்ட உறவுகளும் சோதனைக்கு உள்ளாகும் சூழல் உருவாகியுள்ளது. போட்டியாளர்கள் விளையாட்டை மட்டும் கருத்தில் கொண்டு முடிவு எடுப்பார்களா? அல்லது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இந்த முடிவில் தாக்கத்தை ஏற்படுத்துமா?</p><h2>வீட்டை விட்டு வெளியேறத் தயார்:</h2><p>இதற்கிடையில், முனியம்மாள் தனது நாமினேஷனுக்கு அதிரடியாக பதிலளித்து, தன்னைப் பார்த்து பயந்துதான் நாமினேட் செய்கிறார்கள் என்றால், பெருமையுடன் வீட்டை விட்டு வெளியேறத் தயாராக இருப்பதாகவும், பயப்படவில்லை என்றால் அனைவரும் தன்னுடன் போட்டியிடுமாறும் சவால் விடுத்துள்ளார்.</p><p>எவிக்ஷன் அதிகாரமே போட்டியாளர்களின் கைகளில் இருக்கும் நிலையில், தன்யா, முனியம்மாள், சவின்யா – இவர்களில் யார் வீட்டை விட்டு வெளியேறப் போகிறார்?</p><p>பிக் பாஸ் தமிழ் சீசன் 10-ஐ இரவு 9:30 மணிக்கு விஜய் டிவியில் காணலாம். JioHotstar-ல் எப்போது வேண்டுமானாலும் ஸ்ட்ரீம் செய்யலாம். மேலும், பிக் பாஸ் வீட்டின் 24x7 நேரலை ஒளிபரப்பையும் JioHotstar-ல் காணலாம்.</p>]]></content:encoded></item><item><title>என்னைப் பார்த்து பயப்படுகிறீர்கள் என்றால், பெருமையுடன் வெளியேறுவேன்!” – பிக் பாஸ் தமிழ் வீட்டில் முனியம்மாள் விடுக்கும் சவால்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/muniyammal-challenge-in-the-bigg-boss-tamil-house</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/muniyammal-challenge-in-the-bigg-boss-tamil-house#comments</comments><guid isPermaLink="false">bfbd5157-68e6-40e8-8577-92c404c76e06</guid><pubDate>Fri, 11 Sep 2026 17:47:39 +0000</pubDate><atom:updated>2026-09-11T17:47:39.602Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Bigg Boss Tamil,பிக் பாஸ் தமிழ்,முனியம்மாள்,Muniyammal</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/k9zcymrd/BB-Muniyammal.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bigg Boss Tamil Muniyammal]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/k9zcymrd/BB-Muniyammal.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/biggboss">பிக் பாஸ்</a> தமிழ் சீசன் 10 வீட்டில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் பரபரப்பு அதிகரித்துள்ளது. கேப்டன் வினோத் பாபு, முனியம்மாள், தன்யா பல்லத் மற்றும் சவின்யா ஆகிய மூவரையும் எவிக்ஷனுக்காக நாமினேட் செய்கிறார்.</p><p>இதனை தொடர்ந்து, முனியம்மாள் தனது நாமினேஷன் குறித்து தைரியமாக பதிலளிக்கிறார். தன்னை நாமினேட் செய்வதன் மூலம், வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் தன்னைக் கண்டு பயப்படுகிறார்கள் என்றால், அந்தப் பெருமையுடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறத் தயாராக இருப்பதாக அவர் கூறுகிறார்.</p><h2>வினோத் பாபுவுக்கு சவால்:</h2><p>மேலும், இது வினோத் பாபுவுக்கு மட்டும் விடுக்கும் சவால் அல்லாமல், பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைத்து போட்டியாளர்களுக்கும் ஒரு திறந்த சவாலை முன்வைக்கிறார் முனியம்மாள். தன்னைக் கண்டு பயப்படவில்லை என்றால், தன்னுடன் போட்டியிட்டு தங்களது திறமையை நிரூபிக்குமாறு அவர் சவால் விடுக்கிறார்.</p><p>முனியம்மாளின் இந்த அதிரடியான பேச்சு, நாமினேஷன் பரபரப்பை மேலும் அதிகரித்துள்ள நிலையில், அவரது தன்னம்பிக்கை அவருக்கு சாதகமாக அமையுமா? அல்லது இந்த நாமினேஷன் அவரது பிக் பாஸ் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.</p><p>பிக் பாஸ் தமிழ் சீசன் 10-ஐ இரவு 9:30 மணிக்கு விஜய் டிவியில் காணலாம். JioHotstar-ல் எப்போது வேண்டுமானாலும் ஸ்ட்ரீம் செய்யலாம். மேலும், பிக் பாஸ் வீட்டின் 24x7 நேரலை ஒளிபரப்பையும் JioHotstar-ல் காணலாம்.</p>]]></content:encoded></item><item><title>2ஆவது ஒருநாள் போட்டி: 178 ரன்களில் சுருண்ட நமீபியா - 157 ரன்களில் தென் ஆப்பிரிக்கா வெற்றி</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/2nd-odi-south-africa-beat-namibia-by-157-runs</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/2nd-odi-south-africa-beat-namibia-by-157-runs#comments</comments><guid isPermaLink="false">7dc75628-738c-49a4-a681-a907c92f2f86</guid><pubDate>Fri, 11 Sep 2026 17:28:46 +0000</pubDate><atom:updated>2026-09-11T17:28:46.824Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>NAMvSA,நமீபியா தென் ஆப்பிரிக்கா தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/gtwasi3c/SA-Win-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ SA Win]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/gtwasi3c/SA-Win-1.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/namvsa">தென் ஆப்பிரிக்க</a> அணி நமீபியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.</p><p>இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது <a href="https://www.maalaimalar.com/sports/cricket">ஒருநாள் போட்டி</a> இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நமீபிய அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. </p><h2>கானர் அதிரடி சதம்:</h2><p>அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 335 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கானர் அதிரடியாக ஆடி 119 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவருக்கு டோனி டி ஜோர்ஜி நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.</p><p>2-ஆவது விக்கெட்டுக்கு கானர் உடன் இணைந்த டோனி ஜி ஜோர்ஜி அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. இந்த ஜோடி 183 ரன்கள் சேர்த்த நிலையில் ஜோர்ஜி 79 ரன்னில் ஆட்டமிழந்தார். </p><p>நமீபியா சார்பில் ஜேக் பிரேசல் 4 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து, 336 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நமீபியா களமிறங்கியது.</p><h2>நமீபியா திணறல்:</h2><p>கடின இலக்கை துரத்திய நமீபியா அணிக்கு மைக்கேல் வான் லின்ஜென் மற்றும் மாலன் க்ரூகர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகினர். </p><p>தொடர்ந்து மூன்றாவது வீரராக களமிறங்கிய ஜான் ஃபிரைலின்க் ரன் எதும் எடுக்காமல் அவுட் ஆக நமீபியா அணி தொடக்கத்திலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.</p><p>மிடில் ஆர்டரில் லௌரென் ஸ்டீன்கேம்ப் சற்றே நிதானமாக ஆடி ரன் குவிக்க தொடங்கினார். இவருடன் ஆடிய கேப்டன் கெர்ஹார்டு எராஸ்மஸ் தனது விக்கெட்டை பறிக்கொடுக்காமல் ரன் குவிப்பில் கவனம் செலுத்தினார். </p><p>லௌரென் 12 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து களமிறங்கியவர்களில் ஜான் பால்ட் 26 ரன்கள், ரூபென் டிரம்பெல்மேன் 30 ரன்கள் எடுத்தனர்.</p><h2>தென் ஆப்பிரிக்கா வெற்றி:</h2><p>கேப்டன் கெர்ஹார்டு 84 பந்துகளை எதிர்கொண்டு 68 ரன்களை குவித்தார். ஒருகட்டத்தில் நமீபிய அணி விக்கெட்டுகளை இழக்க 41.5 ஓவர்களில் வெறும் 178 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. </p><p>இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்கா சார்பில் யான்சென் 4 விக்கெட்டுகளையும், ஈத்தன் போஷ் 3 விக்கெட்டுகளையும், மோகெனா மற்றும் ஜேசன் ஸ்மித் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.</p><p>இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இரு அணிகள் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி வருகிற 13-ஆம் தேதி நடைபெறுகிறது.</p>]]></content:encoded></item><item><title>‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-second-song-from-the-movie-anbil-avan-has-been-released</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-second-song-from-the-movie-anbil-avan-has-been-released#comments</comments><guid isPermaLink="false">7bab3c7a-b0e7-452a-8d54-670d9c0c758c</guid><pubDate>Fri, 11 Sep 2026 16:36:18 +0000</pubDate><atom:updated>2026-09-11T16:36:18.687Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Ashok Selvan,அசோக் செல்வன்,ப்ரீத்தி முகுந்தன்,Anbil Avan,அன்பில் அவன்,Preity</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/g90acubx/New-Project-2026-09-11T220406.870.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/g90acubx/New-Project-2026-09-11T220406.870.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அறிமுக இயக்குநர் ஆர்.கார்த்திகேயன் இயக்கத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள காதல் திரைப்படம் அன்பில் அவன்.</p><p>ஐங்கரன் இன்டர்நேஷனல், ஹேப்பி ஹை பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இப்படம் செப்.25ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. </p><p>சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடல் ஆசை வரமே வெளியாகி வரவேற்பை பெற்றது.</p><p>இந்நிலையில் இன்று இப்படத்தின் இரண்டாவது பாடல் ‘கல்லா நிக்கிறியே’ வெளியாகி உள்ளது. கார்த்திக் நேதா வரிகளில் உருவாகி உள்ளப் பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/b-IJaMCIhm8"></iframe></figure>]]></content:encoded></item><item><title>சி.எஸ்.கே. பங்குகளை வாங்க எம்.எஸ். தோனி முயற்சி செய்யவில்லை: மூத்த அதிகாரி</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/csk-deny-dhoni-bid-to-buy-a-stake-but-he-owns-some-shares-anyway</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/csk-deny-dhoni-bid-to-buy-a-stake-but-he-owns-some-shares-anyway#comments</comments><guid isPermaLink="false">667901bc-0677-4002-b9e6-6a4414118a89</guid><pubDate>Fri, 11 Sep 2026 15:53:55 +0000</pubDate><atom:updated>2026-09-11T15:53:55.611Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>CSK,சிஎஸ்கே,MS Dhoni,எம்எஸ் தோனி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/gvh5erhl/MSDhoni001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எம்.எஸ். தோனி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/gvh5erhl/MSDhoni001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஐ.பி.எல். தொடங்கிய காலக்கட்டத்தில் இருந்து எம்.எஸ். தோனி, சிஎஸ்கே அணியில் விளையாடி வருகிறார். சிஎஸ்கே அணியில் தொடர்ந்து விளையாடி வரும் அவர், அந்த அணியின் பங்குகளை தோனி வாங்க முயன்றதாகக் கூறப்படுவதை அணி நிர்வாகம் மறுக்கிறது. இருப்பினும் அவர் ஏற்கனவே சில பங்குகளை வைத்துள்ளார்.</p><p>சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியில் பங்கு வாங்க மகேந்திர சிங் தோனி விரும்பினாரா? இது குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, தோனி CSK-வில் பங்கு வாங்க ஆர்வம் காட்டினார். ஆனால் முன்னாள் கேப்டனான எம்.எஸ். தோனி முன்வைத்த நிபந்தனைகளை நிர்வாகம் ஏற்கவில்லை எனச் செய்திகள் வெளியாகினது.</p><p>ஆனால், இதுகுறித்து தோனியுடன் எந்த விவாதமும் நடத்தப்படவில்லை என்று CSK-வின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எம்.எஸ். (தோனி) இது பற்றி எங்களிடம் ஒருபோதும் கேட்டதில்லை. நாங்கள் இதுகுறித்து விவாதிக்கவும் இல்லை. என். சீனிவாசனிடம் அவர் இது பற்றிப் பேசியது குறித்த எந்தத் தகவலும் எங்களிடம் இல்லை" என்று அந்த மூத்த அதிகாரி கூறினார்.</p><p>அதே சமயம், அந்த அணியில் தோனிக்கு எந்த பங்கும் இல்லை என்று அர்த்தமல்ல. பங்குகள் விற்பனைக்கு வந்தபோது அவர் சில பங்குகளை வாங்கியதாக சென்னை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. CSK பங்குகள் பங்குச் சந்தையில் (open market) வர்த்தகம் செய்யப்படுவதில்லை என்றாலும் (நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படவில்லை), சந்தைக்கு வெளியே நடைபெறும் தனிப்பட்ட பரிவர்த்தனைகள் மூலம் அவற்றை வாங்க முடியும்.</p><h2>ஒரு லட்சம் பங்குகள் வைத்திருக்கும் எம்.எஸ். தோனி</h2><p>கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, தோனி ஒரு லட்சத்திற்கும் அதிகமான பங்குகளை வைத்துள்ளார். ஆனால், மொத்தப் பங்கு அமைப்பில் இது மிகச்சிறிய பகுதியாகும். பொதுமக்களிடம் 30 கோடிக்கும் அதிகமான பங்குகள் உள்ளன, இது அணியின் மொத்தப் பங்கு மூலதனத்தில் சுமார் 40 சதவீதமாகும். எனவே, தோனியின் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பங்குகள், பொதுமக்களிடம் உள்ள பங்குகளின் ஒரு சிறிய பகுதியை மட்டுமே குறிக்கின்றன. குறிப்பிடத்தக்க வகையில், சீனிவாசன் குடும்பத்தினர் அணியில் 55 சதவீதத்திற்கும் அதிகமான கட்டுப்பாட்டுப் பங்குகளை (controlling stake) வைத்துள்ளனர்.</p><p>ஐபிஎல் அணியின் தற்போதைய சந்தை மதிப்பீட்டின் அடிப்படையில் (கடைசியாக ஒரு ஐபிஎல் அணி 16,600 கோடி ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்பட்டது), அவரது பங்குகளின் மதிப்பு 2.6 முதல் 3 கோடி ரூபாய் வரை இருக்கலாம். சர்வதேச கிரிக்கெட், ஐபிஎல் மற்றும் விளம்பரங்கள் மூலம் அவரது 21 ஆண்டுகால விளையாட்டு வாழ்க்கையில் அவர் ஈட்டிய வருமானத்துடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவான தொகையாகும். தோனி உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். அவரது நிகர சொத்து மதிப்பு சுமார் 1,200 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கரூர் நெரிசல்: நான் வலியுறுத்தியும் விஜய்மீது வழக்குப் போடாதது ஏன்? - திமுக, தவெகமீது திருமா பாய்ச்சல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/karur-congestion-why-wasnt-a-case-filed-against-vijay-despite-my-insistence-thiruma-lashes-out-at-dmk-and-tvk</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/karur-congestion-why-wasnt-a-case-filed-against-vijay-despite-my-insistence-thiruma-lashes-out-at-dmk-and-tvk#comments</comments><guid isPermaLink="false">e9490fc6-00d5-4be7-aefd-b58b67265241</guid><pubDate>Fri, 11 Sep 2026 15:53:37 +0000</pubDate><atom:updated>2026-09-11T15:53:37.613Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,விஜய்,thirumavalavan,திருமாவளவன்,vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/mbjcs4y6/New-Project-2026-09-11T212258.979.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கரூர் நெரிசல்: நான் வலியுறுத்தியும் விஜய்மீது வழக்குப் போடாதது ஏன்? - திமுக, தவெகமீது திருமா பாய்ச்சல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/mbjcs4y6/New-Project-2026-09-11T212258.979.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கரூர் விவகாரத்தில் தான் வலியுறுத்தியும் விஜய்மீது திமுக வழக்குப் பதியவில்லை என்றும், தவெகவை குறைத்து மதிப்பிட்டதே திமுக தோல்விக்கும் காரணம் என விசிக தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/why-did-the-dmk-bring-the-dmdk-into-the-alliance-against-the-wishes-of-its-coalition-partners-thirumavalavan">திருமாவளவன்</a> தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள அவர்.,</p><h2>கரூர் சம்பவத்திற்கு விஜய்யின் தாமதமே காரணம்</h2><p>தவெகவை குறைத்து மதிப்பிட்டதற்கு திமுகவின் கணிக்க தவறிய அணுகுமுறைதான் காரணம். கணித்திருக்க வேண்டுமா? வேண்டாமா? அதற்கேற்ப எதிர்ப்பு அரசியலை செய்திருக்க வேண்டுமா? வேண்டாமா? கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்கு தொடர வேண்டும் என்று நான் சொன்னேனா, இல்லையா? ஏன் வழக்கு போடவில்லை.</p><p>அவர் மீது வழக்கு போட என்ன தயக்கம். காலம் தாழ்த்தி வந்தார். வேண்டுமென்றே காலம் தாழ்த்தினார். அதனால் தான் கும்பல் கூடியது. நெரிசல் ஏற்பட்டது. நெரிசல் தான் உயிரிழப்புகளுக்கு காரணம் என்கிறபோது அதற்கு பொறுப்பேற்கக்கூடிய அத்தனைப் பேரையும் வழக்கில் சேர்த்திருக்க வேண்டுமா? வேண்டாமா? இந்த அணுகுமுறை தானே காரணம்.</p><h2>விஜய் அரசியலை அம்பலப்படுத்தியிருக்க வேண்டும்</h2><p>அப்போதே விஜய் அரசியலை அம்பலப்படுத்தியிருக்க வேண்டுமா? வேண்டாமா? திமுகவை குறி வைத்து விஜய் பேசும்போது எதிர்ப்பு அரசியலை செய்திருக்க வேண்டாமா? </p><p>ஆனால் நீங்கள் (திமுக) பேசவில்லை, நான் பேசினேன். விஜய் ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்தப் பிள்ளை என்று... அன்றைக்கு அவர் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. </p><p>இன்றைக்கு எப்படி நம்பிக்கை வந்தது? விஜய் அதிமுக, பாமக, பாஜக ஆதரவைக் கேட்கவில்லை. காங்கிரஸ் ஆதரவைக் கேட்டார். திருமாவளவன் ஆதரவைக் கேட்டார். </p><p>ஆர்.எஸ்.எஸ். பெற்றெடுத்த பிள்ளை என்று விமர்சித்துவிட்டு விஜய்யுடன் கூட்டணி வைத்திருக்கிறீர்களே? என்று என்னைக் கேட்கிறார்கள். ஏன்? ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்த பிள்ளை என்று விமர்சித்த திருமாவை கூட்டணிக்குள் சேர்த்தீர்கள் என்று விஜய்யை யாரும் கேட்கவில்லை.</p><h2>விஜய்தான் வந்தார்... நாங்கள் போகவில்லை</h2><p>அவர்தானே எங்களிடம் வந்தார். நாங்கள் அவரிடம் போகவில்லையே. அவருக்குதான் தேவை இருந்தது. எங்களுக்கு தேவையில்லையே. கூட்டணிக்கு பெயர் வைக்கும்போது சமூகநீதி வெற்றிக் கூட்டணி என்று சொன்னார்கள்.</p><p>வெற்றிக் கூட்டணி… அந்தக் கூட்டணி… இந்தக் கூட்டணி… என என்ன வேண்டுமானாலும் பெயர் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், அதில் ‘மதச்சார்பற்ற’ என்ற சொல் இருக்க வேண்டும் என்ற சொன்னவன் திருமாவளவன்.</p><p>மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி இப்படித்தான் உருவானது.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>கூட்டணி கட்சிகளின் விருப்பமில்லாமல் தேமுதிகவை, திமுக உள்ளேக் கொண்டு வந்தது ஏன்? - திருமாவளவன்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/why-did-the-dmk-bring-the-dmdk-into-the-alliance-against-the-wishes-of-its-coalition-partners-thirumavalavan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/why-did-the-dmk-bring-the-dmdk-into-the-alliance-against-the-wishes-of-its-coalition-partners-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">dab3e674-7a93-4eee-aeee-b1a7276654f3</guid><pubDate>Fri, 11 Sep 2026 15:30:00 +0000</pubDate><atom:updated>2026-09-11T15:30:00.282Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,thirumavalavan,திருமாவளவன்,பிரேமலதா விஜயகாந்த்,premalatha vijayakanth</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/kfyfpe4z/New-Project-2026-09-11T205404.551.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கூட்டணி கட்சிகளின் விருப்பமில்லாமல் தேமுதிகவை, திமுக உள்ளேக் கொண்டு வந்தது ஏன்? - திருமாவளவன்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/kfyfpe4z/New-Project-2026-09-11T205404.551.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கூட்டணியில் இருந்து விசிக, காங்கிரஸ், இடதுசாரிகள் வெளியேறியதற்கு திமுகவின் அணுகுமுறையே காரணம் என விசிக தலைவர்<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-says-communist-parties-support-tvk-alliance"> திருமாவளவன்</a> குற்றம் சாட்டியுள்ளார். </p><p>இன்று திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு இதுதொடர்பாக பேசிய அவர்.,</p><h2>திமுகவின் அணுகுமுறை</h2><p>திமுக கூட்டணி உடைந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவன் நான். இன்று அவதூளை அள்ளி வீசுபவர்களுக்கு இது தெரியாது. கூட்டணியை காப்பாற்றும் முயற்சியை திமுகவால் எடுக்கமுடியவில்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை.</p><p>காங்கிரஸோடு நல்ல உறவை திமுக பேணியிருந்தால், காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறியிருக்குமா? தேர்தல் நேரத்தில் கூட்டணி கட்சிகளுடனான திமுகவின் அணுகுமுறை எப்படி இருந்தது? </p><h2>திடீரென உள்ளே வந்த தேமுதிக..</h2><p>தேமுதிகவை திடீரென கூட்டணியில் சேர்த்தது மற்ற கூட்டணியினருக்கு மகிழ்ச்சியை அளித்ததா? தோற்றாலும் ஒன்றாக இருக்கலாம் என முடிவெடுக்கும் அளவில் திமுக - விசிக உறவு இல்லை. </p><p>கூட்டணியை விட்டுவிலக அமைச்சர் பதவி காரணம் இல்லை. திமுகவுடன் நல்லுறவு இல்லாததே காரணம். காங்கிரஸ், இடதுசாரிகள் சென்றபின்தான் விசிக சென்றது. </p><p>இடைத்தேர்தலில் நிற்கமாட்டேன், அமைச்சர் பதவியை ஏற்கமாட்டேன் என தொடக்கத்தில் இருந்தே மறுதலித்தவன் நான்.</p><h2>தவெக கூட்டணிக்கு வன்னி அரசே காரணம்..</h2><p>பின்னர் ஏன் விலகினேன்? ஒரு எளியக் குடும்பத்தில் பிறந்த ஒருவர் அமைச்சராகும் வாய்ப்பு வந்தது. இந்த வாய்ப்பை தவறவிடுவது ஏற்புடையதல்ல. 30 ஆண்டுகள் என்னுடன் விசுவாசமாக பயணித்தவர் வன்னி அரசு. அவருக்காகத்தான் இந்த முடிவு.</p><p>திராவிட இயக்கங்கள் இதை பாராட்ட வேண்டுமா? அவதூறு செய்யவேண்டுமா? திமுக கூட்டணியில் விசிக நீடிக்காத்தற்கு பொறுப்பு திமுகதான். கூட்டணி கட்சிகள் வெளியே சென்றதற்கு திமுகவின் அணுகுமுறை.” </p><p>எனப் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>கைது செய்யப்பட்ட தொண்டர்கள்: காவல் நிலையத்தில் கண்ணீர் விட்ட பாஜக அமைச்சர்</title><link>https://www.maalaimalar.com/news/national/up-minister-breaks-down-at-police-station-over-detention-of-bjp-workers</link><comments>https://www.maalaimalar.com/news/national/up-minister-breaks-down-at-police-station-over-detention-of-bjp-workers#comments</comments><guid isPermaLink="false">bf5b8fa6-87a9-4a2b-8c6f-6dc270cd9bcc</guid><pubDate>Fri, 11 Sep 2026 15:28:16 +0000</pubDate><atom:updated>2026-09-11T15:28:16.521Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Uttar Pradesh,BJP,பாஜக,உத்தர பிரதேசம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/m95vwfoc/RakeshRathore001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உ.பி. அமைச்சர் ராகேஷ் ரதோர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/m95vwfoc/RakeshRathore001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தர பிரதேச மாநிலம் ரம்பா மஹால் என்ற இடத்தில் ஆக்கிரமிப்பை நீக்குவது தொடர்பாக பாஜக தொண்டர்களுக்கும், நகராட்சி அதிகாரிகளுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது போலீசார் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபோது, இருதரப்பிற்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் போலீசார் பாஜக தொண்டர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.</p><p>கைது செய்தவர்களை சந்திப்பதற்காக உத்தர பிரதேச மாநில நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ராகேஷ் ரதோர் குரு, தனது ஆதரவாளர்களுடன் காவல் நிலையம் சென்றுள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசும்போது கண்ணீர் சிந்தினார்.</p><h2>இந்த சம்பவம் தொடர்பாக ராகேஷ் ரதோர் குரு கூறியதாவது:-</h2><p>ஏதேனும் ஒரு விஷயம் தொடர்பாக காவல் நிலையத்திற்கு வர வேண்டிய நிலை எனக்கு ஏற்படுவது என் வாழ்க்கையில்  இதுவே முதல் முறை. உள்ளூர் ரவுடியாக திகழும் முஜிப் அகமது மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் உள்ளன. ஆனால், அவரது கைது செய்யப்பட்டு, அதிகாரிகளுடன் போட்டோ எடுத்துக் கொண்ட பிறகு விடுவிக்கப்பட்டார். ஆனால், பாஜக தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அமர்வதற்கு இருக்கைகள் கூட வழங்கப்படவில்லை.</p><p>எஸ்.பி. உள்பட அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகளுடன் பேசினேன். நீண்ட நேரம் ரிலீஸ் செய்யும்படி கேட்டுக் கொண்டேன். அவர்கள் உத்தரவாதம் தந்தார்கள் தவிர, ரிலீஸ் செய்யவில்லை. வாக்குவாதத்தின்போது ஏதாவது தவறான வார்த்தைகள் பயன்படுத்தினால், அதற்காக நான் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இளம் வயதினர் சில சமயங்களில் தங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தத் தவறலாம்; எனவே, நிர்வாகம் உணர்வுப்பூர்வமாகவும் கனிவுடனும் செயல்பட வேண்டும்.</p><p>எனது தொண்டர்களுக்கு அளிக்கும் மரியாதைக்காகவே நான் இங்கு வந்துள்ளேன். தொண்டர்கள் இல்லையென்றால், பிறகு பாஜக எங்கே இருக்கும்?</p><p>இவ்வாறு அமைச்சர் ராகேஷ் ரதோர் குரு தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>பினராயி விஜயன் ஆட்சிக் காலத்தில் அதிக அளவில் தனிப்பட்ட பணியாளர்கள் நியமனம்: வி.டி. சதீசன் குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/national/cm-satheesan-stands-by-claim-787-personal-staff-appointed-during-ldf-govt-tenure</link><comments>https://www.maalaimalar.com/news/national/cm-satheesan-stands-by-claim-787-personal-staff-appointed-during-ldf-govt-tenure#comments</comments><guid isPermaLink="false">cee95759-15f4-4649-823b-bc7455092223</guid><pubDate>Fri, 11 Sep 2026 14:51:38 +0000</pubDate><atom:updated>2026-09-11T14:51:38.458Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பினராயி விஜயன்,Pinarayi Vijayan,VD Satheesan,விடி சதீசன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/oicmjt4y/VDSatheesan001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பினராயி விஜயன்- விடி சதீசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/oicmjt4y/VDSatheesan001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரளம் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பினராயி விஜய் ஆட்சிக் காலத்தில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு தனிப்பட்ட பணியாளர் 787 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர் என்று தற்போதை முதலமைச்சர் வி.டி. சதீசன் குறிப்பிட்டிருந்தார். ஆனால், பினராயி விஜய் இந்த குற்றச்சாட்டை மறுத்திருந்தார்.</p><p>இந்த நிலையில், நான் சொன்னது உண்மை. இந்த உறுதியாக இருக்கிறேன் என்ற வி.டி. சதீசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் சதீசன் கூறியிருப்பதாவது:-</p><p>பெயர்களை மட்டுமல்ல, தனிப்பட்ட பணியாளர்களின் முகவரி உள்பட அனைத்து விவரங்களையும் வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்த நியமனம் 2021-ம் ஆண்டில் இருந்து 2026-ம் ஆண்டு வரை நடைபெற்றுள்ளது.</p><h2>முதலமைச்சர் சமூக வலைத்தளங்களுக்காக 12 பேர்</h2><p>முதலமைச்சர் சமூக வலைத்தளங்களை கையாள்வதாக கூடுதலாக 12 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 22,290 ரூபாயில் இருந்து 75 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். மாதத்திற்கு 7 லட்சம் ரூபாய்க்கு மேலும், வருடத்திற்கு 84 லட்சம் ரூபாயும் சமூக வலைத்தளங்களை கையாள்வதற்காக மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளது.</p><p>இதை எல்லாம் செய்தவர்கள் தற்போது எங்களது அரசை இழிவுப்படுத்த முயற்சிக்கிறது. எங்களுடைய அரசு குறிப்பிட்ட வரையறையை மீறவில்லை. முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கான 478 தனிப்பட்ட பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.</p><p>இவ்வாறு சதீசன் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: சதத்தை தவறவிட்ட ஷான் மசூத்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/eng-vs-pak-3rd-test-shan-masood-missed-century</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/eng-vs-pak-3rd-test-shan-masood-missed-century#comments</comments><guid isPermaLink="false">e59f2bae-e69f-457c-842e-7bf2f23cdae1</guid><pubDate>Fri, 11 Sep 2026 14:30:51 +0000</pubDate><atom:updated>2026-09-11T14:30:51.670Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Shan Masood,ஷான் மசூத்,ENG vs PAK</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/wiu8cw29/shanMasood001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஷான் மசூத்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/wiu8cw29/shanMasood001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இங்கிலாந்து- பாகிஸ்தான் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் கடந்த 9-ந்தேதி (நேற்றுமுன்தினம்) தொடங்கியது.</p><h2>133 ரன்களில் சுருண்ட பாகிஸ்தான்</h2><p>டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 133 ரன்களில் சுருண்டது. இங்கிலாந்து அணி சார்பில் ஜோஷ் டாங்க் 4 விக்கெட்டும், ஜாஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ஒல்லி ராபின்சன் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><h2>இங்கிலாந்து 453 ரன்கள் குவிப்பு</h2><p>பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 453 ரன்கள் குவித்தது. ஹாரி ப்ரூக் 75 ரன்களும் டான் லாரன்ஸ், ஜேமி ஸ்மித், எமிலியோ கே, ஒல்லி ராபின்சன் ஆகியோர் அரைசதம் அடித்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் ரசயுல்லா 4 விக்கெட்டும், முகமது அலி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><h2>320 ரன்கள் பின்தங்கியது பாகிஸ்தான்</h2><p>320 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 2 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்திருந்தது. அசான் அவைஸ் 29 ரன்களுடனும், ஷான் மசூத் 21 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தொடக்க வீரர் சைம் ஆயுப், 3-வது வீரராக களம் இறங்கிய அப்துல்லா ஷபிக் ஆகியோர் டக் அவுட் ஆகினர்.</p><p>இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது, இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவைஸ் 59 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ஷான் மசூத் உடன் கேப்டன் பாபர் அசாம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் சிறப்பாக விளையாடியது.</p><h2>சதத்தை தவறவிட்ட ஷான் மசூத்</h2><p>ஷான் மசூத் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 95 ரன்கள் எடுத்த நிலையில் அட்கின்சன் பந்தில் ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 12 பவுண்டரிகள் அடங்கும். 5-வது விக்கெட்டுக்கு பாபர் அசாம் உடன் சாத் ஷாகீல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தற்போது வரை நிலைத்து நின்று விளையாடி வருகிறது.</p><p>பாபர் அசாம் 54 ரன்களுடனும், ஷகீல் 14 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது வரை 70 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சுவிட்சர்லாந்தில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்து - 5 பேர் உயிரிழப்பு... 40 பேர் காயம்!</title><link>https://www.maalaimalar.com/news/world/tourist-bus-overturns-in-switzerland-5-dead-40-injured</link><comments>https://www.maalaimalar.com/news/world/tourist-bus-overturns-in-switzerland-5-dead-40-injured#comments</comments><guid isPermaLink="false">ec88db06-b030-487f-b64d-738d0307788a</guid><pubDate>Fri, 11 Sep 2026 14:12:43 +0000</pubDate><atom:updated>2026-09-11T14:12:43.283Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சுவிட்சர்லாந்து,switzerland,Dutch tour bus,Alpine,சுற்றுலாப் பேருந்து,ஆல்ப்ஸ் மலைத்தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/ulz4grt4/New-Project-2026-09-11T194109.604.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சுவிட்சர்லாந்தில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்து - 5 பேர் உயிரிழப்பு... 40 பேர் காயம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/ulz4grt4/New-Project-2026-09-11T194109.604.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கிழக்கு <a href="https://www.maalaimalar.com/news/world/iran-us-peace-agreement-to-be-signed-on-june-19-switzerland-announces">சுவிட்சர்லாந்தின்</a> ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40 பேர் காயமடைந்தனர். </p><p>விசாரணையில், விபத்தில் சிக்கிய பேருந்து, 48 பேருடன் பயணித்த நெதர்லாந்தின் சுற்றுலாப் பேருந்து என தெரியவந்துள்ளது.</p><p>ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் உள்ள கிராபுண்டன் மாகாணத்தின் சுஷ் மற்றும் ஜெர்னெஸ் கிராமங்களுக்கு இடையே உள்ள சாலையில், நேற்று (செப்.10) இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.</p><p>டச்சு சுற்றுலா நிறுவனமான OAD மூலம் இயக்கப்பட்ட இந்தப் பேருந்து, திடீரென சாலையோரத் தடுப்புச் சுவரில் மோதி, பின்னர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேறு எந்த வாகனமும் சிக்கவில்லை என காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.</p><h2>3 பேர் கவலைக்கிடம்</h2><p>விபத்துக்குள்ளான பேருந்தில் ஓட்டுநர் உட்பட மொத்தம் 48 டச்சு நாட்டவர் பயணம் செய்துள்ளனர். நெதர்லாந்திலிருந்து திங்கட்கிழமை புறப்பட்ட இவர்கள், ஆஸ்திரியாவிலிருந்து சுவிட்சர்லாந்திற்கு ஒரு நாள் பயணமாக வந்தபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது.</p><p>இதில் 30 பேர் லேசான காயங்களுடனும், 7 பேர் கொஞ்சம் கடுமையான காயங்களுடன் மீட்கப்பட்டமாகவும், 3 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்ததோடு, இதுதொடர்பாக விசாரணை நடத்த &nbsp;சுவிஸ் அதிபர் கை பார்மெலின் உத்தரவிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தீபிகா படுகோனேவின் கர்ப்ப கால &apos;போட்டோசூட்’</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/deepika-padukone-maternity-photoshoot</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/deepika-padukone-maternity-photoshoot#comments</comments><guid isPermaLink="false">d6d41e69-11dc-4d5b-9f1b-abaa4a0fae43</guid><pubDate>Fri, 11 Sep 2026 13:48:04 +0000</pubDate><atom:updated>2026-09-11T13:48:04.920Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>Deepika Padukone,தீபிகா படுகோனே,Photoshoot,போட்டோஷூட்,Maternity,கர்ப்பகாலம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/5or9q92p/deepika.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ranveer singh- Deepika padikone]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/5or9q92p/deepika.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகர் ரன்வீர்சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்ட தீபிகா படுகோனேவிற்கு கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 8-ந்தேதி துவா என்ற மகள் பிறந்தார். </p><p>இருவரும் தங்களது மகள் துவாவின் 2-வது பிறந்தநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினர். இந்நிலையில் மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ள தீபிகா படுகோனே தனது கர்ப்பகால படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.</p><p>தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,"பேபி துவாவும், எங்கள் இதயங்களும் பெரிதாகிக் கொண்டிருக்கின்றன. </p><p>உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி என பதிவிட்டிருந்தார். கர்ப்ப கால போட்டோ ஷுட்டின் போது தீபிகா படுகோனே ரூ.48,643 மதிப்புள்ள ஆடையை அணிந்திருந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது" என்றார்.</p>]]></content:encoded></item><item><title>மிகக் கடுமையான வெப்ப ஆண்டாக 2027 இருக்கும்- ஐரோப்பிய கால நிலை மையம் எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/world/european-climate-agency-warns-2027-hottest-year</link><comments>https://www.maalaimalar.com/news/world/european-climate-agency-warns-2027-hottest-year#comments</comments><guid isPermaLink="false">e4054aaa-b0d7-44d6-b638-e75f01a6ef23</guid><pubDate>Fri, 11 Sep 2026 13:15:29 +0000</pubDate><atom:updated>2026-09-11T13:15:29.148Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>europe,Heat wave,ஐரோப்பியா,வெப்பம்,EL-Nino,கால நிலை மாற்றம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/s2hk5vct/world.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ El Nino]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/s2hk5vct/world.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஐரோப்பிய காலநிலை கண்காணிப்பு மையம்   வெளியிட்ட தகவலின்படி, உலகளவில் பதிவு செய்யப்பட்ட வரலாற்றிலேயே மிகக் கடுமையான வெப்பம் நிலவிய மாதமாக கடந்த ஆகஸ்ட் மாதம் பதிவாகியுள்ளது.</p><h2>எல் நினோ </h2><p>மேலும், வலுவடைந்து வரும் எல் நினோ காரணியால் வரவிருக்கும் நாட்களில் நிலவரம் இன்னும் மோசமடையக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>நிலம் மற்றும் கடல் பரப்பில் உலகளாவிய வெப்பம் நிலவியதன் உச்சக்கட்டமாக, மேற்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் கடுமையான வெப்ப அலைகளும் காட்டு தீயும் ஏற்பட்டன.</p><p>கோப்பர் நிகஸ் காலநிலை மாற்ற சேவை மையத்தின் தரவுகளின்படி, கடந்த ஆகஸ்ட் மாதத்தின் சராசரி உலகளாவிய காற்று வெப்பநிலை 62.52 டிகிரியாக இருந்தது.</p><p>இது இதற்கு முன் ஜூலை 2023ல் பதிவான சாதனையை விட 32.01 டிகிரி அதிகமாகும்.</p><h2>ஆகஸ்டில் அதிகபட்ச வெப்பநிலை  </h2><p>இருப்பினும், இந்த இடைவெளி மிகவும் குறைவு என்பதால், ஐரோப்பிய கண்காணிப்பு மையம் ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய 2  மாதங்களையுமே மிக அதிகபட்ச வெப்பநிலை கொண்ட மாதங்களாகக் கருதுகிறது.</p><p>கோப்பர்நிகஸ் மையத்தின் தரவுகள் 1940ம் ஆண்டு முதல் நிலவும் பதிவுகளை கொண்டு கணக்கிடப்பட்டவை என்றாலும், பனிக்கட்டிகள், மர வளையங்கள் மற்றும் பவளப்பாறைகளில் இருந்து பெறப்பட்ட ஆதாரங்களின் வரலாற்று அடிப்படையில் நோக்கும்போது, மனித குலம் இதுவரை கண்டிராத மிக அதிக வெப்பநிலையைத் தற்போது அனுபவித்து வருகிறது.</p><h2>கடல்சார் வெப்ப அலைகள் </h2><p>இந்த விதிவிலக்கான கோடை வெப்பநிலை, தொடர்ச்சியாக 3 மாதங்களாக கடல் மேற்பரப்பு வெப்பநிலையையும் மிக கடுமையான உச்சத்திற்கு தள்ளியுள்ளது.</p><p>சில வெப்பமடைந்த கடல் பகுதிகளில் கடல்சார் வெப்ப அலைகள்  தொடர்ச்சியாக 60 நாட்களுக்கும் மேலாக நீடித்து, இந்தச் சூழ்நிலை எவ்வளவு அசாதாரணமானது மற்றும் தீவிரமானது என்பதை வெளிப் படுத்தியுள்ளது.</p><p>உலகளாவிய கடல் மேற்பரப்பு வெப்பநிலை ஆகஸ்ட் மாதத்தில் ஒரு புதிய உலகளாவிய சாதனையைப் படைத்ததோடு, இதுவரை பதிவான கடல்களின் மிக வெப்பமான மாதமாகவும் இது கருதப்படுகிறது.</p><p>கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகிய புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால் ஏற்படும் உலகளாவிய வெப்பமயமாதலே இதற்கு முதன்மையான காரணமாகும்.</p><p>அதே நேரத்தில், பசிபிக் பெருங்கடலில் அசாதாரணமான சூடான நீர் திரள்வதனால் உருவாகும் எல் நினோ நிகழ்வும் தீவிரமடைந்து வருகிறது.</p><p>இந்த எல் நினோ, உலக அளவில் மழை மற்றும் காற்றோட்ட அமைப்புகளில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி, ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் காட்டுத் தீ ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க செய்கிறது.</p><p>உச்சமடையும் காலநிலை கணிப்பாளர்கள் கணிப்புப்படி, இந்த ஆண்டின் எல் நினோ நிகழ்வு ஆண்டின் இறுதியில் உச்சமடைந்து, நவீன காலத்தில் பார்க்கப்படாத ஒரு புதிய தீவிரத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>ஆரம்பத்தில் 2026ம் ஆண்டே மிக அதிக வெப்பமான ஆண்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதைய தரவுகளின்படி 2026-ம் ஆண்டு மட்டுமல்லாமல் 2027-ம் ஆண்டும் சாதனைகளை தகர்க்கும் மிக கடுமையான வெப்பமான ஆண்டாக உருவெடுக்கும் அபாயம் உள்ளது.</p><p>எரிபொருள்  காலநிலை மாற்றம் மற்றும் எல் நினோ ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் இணைந்து செயல்படுவதால், அடுத்த 6  மாதங்களில் தொடர்ந்து புதிய சாதனைகள் முறியடிக்கப்படலாம்.</p><p>2003-ம் ஆண்டின் சாதனையை முறியடித்து மேற்கு ஐரோப்பாவும் தனது மிக வெப்பமான கோடை காலத்தைச் சந்தித்துள்ளது.</p><p>நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயுவை எரிப்பதை நாம் நிறுத்தும் வரை, காலநிலை மாற்றம் ஒ வ்வொரு எல் நினோ நிகழ்வையும் இன்னும் வெப்ப மானதாக மாற்றும்.</p><p>இதனால் இது போன்ற சாதனை முறி யடிக்கும் வெப்ப நிலை மாதங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்று காலநிலை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>மோதல்களை தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தை, ராஜந்திரமுமே வழி: புதினிடம் வலியுறுத்திய பிரதமர் மோடி</title><link>https://www.maalaimalar.com/news/national/russian-president-putin-pm-modi-reiterated-that-dialogue-and-diplomacy-was-the-way-forward-in-resolving-conflicts</link><comments>https://www.maalaimalar.com/news/national/russian-president-putin-pm-modi-reiterated-that-dialogue-and-diplomacy-was-the-way-forward-in-resolving-conflicts#comments</comments><guid isPermaLink="false">cda22d23-20a5-4742-81e6-2ac690cc72d8</guid><pubDate>Fri, 11 Sep 2026 13:11:34 +0000</pubDate><atom:updated>2026-09-11T13:11:34.469Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Putin,புதின்,BRICS,பிரிக்ஸ்,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/n5em7ake/ModiPutin0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இந்திய பிரதமர் மோடி- ரஷிய அதிபர் புதின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/n5em7ake/ModiPutin0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்கள் பிரிக்ஸ் மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்வதற்கான ரஷிய அதிபர் புதின் டெல்லி வந்துள்ளார். டெல்லி வந்துள்ள புதினை, இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.</p><p>இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை குறித்து இந்தயி வெளியுறவுத்துறை அமைச்சம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-</p><p>* ரஷிய அதிபர் புதினுடனான பேச்சுவார்த்தையில், மோதல்களைத் தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தையும் ராஜதந்திரமுமே வழி என்று பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தினார்.</p><h2>அமைதி முயற்சிகளுக்கு உதவ இந்தியா தயார்</h2><p>* ரஷிய அதிபர் புதினுடனான பேச்சுவார்த்தையில், உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி முயற்சிகளுக்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.</p><p>* அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, எரிசக்தி, விண்வெளி மற்றும் திறன் பரிமாற்றம் ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகள் குறித்து பிரதமர் மோடியும் அதிபர் புதினும் விவாதித்தனர்.</p><h2>ரஷியா செல்கிறார் பிரதமர் மோடி</h2><p>* 24-வது இந்தியா- ரஷியா மாநாட்டிற்காக ரஷியாவிற்கு வருகை தருமாறு பிரதமர் மோடிக்கு அதிபர் புதின் அழைப்பு விடுத்தார். மேலும் மோடி அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார்</p><p>* மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல்கள் மற்றும் கருங்கடல் பிராந்தியத்தின் நிலைமை குறித்து பிரதமர் மோடியும் அதிபர் புதினும் தங்கள் கண்ணோட்டங்களைப் பகிர்ந்து கொண்டனர்.</p><p>* BRICS உட்பட பலதரப்புத் துறையில் இந்தியா- ரஷியா ஈடுபாடு குறித்து பிரதமர் மோடியும் அதிபர் புதினும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.</p><p>இவ்வாறு வெளியுறவுத்துறை அமைச்சம் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியா 5 லட்சம் வீரர்களை இழந்துள்ளது: இங்கிலாந்து பாதுகாப்புப்படை தலைவர்</title><link>https://www.maalaimalar.com/news/world/more-than-500000-russian-troops-killed-in-ukraine-uk-defence-chief-says</link><comments>https://www.maalaimalar.com/news/world/more-than-500000-russian-troops-killed-in-ukraine-uk-defence-chief-says#comments</comments><guid isPermaLink="false">4f3938c2-4f07-449a-9cb3-6abd2b743593</guid><pubDate>Fri, 11 Sep 2026 12:44:40 +0000</pubDate><atom:updated>2026-09-11T12:44:40.091Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிரோன் தாக்குதல்,drone attack,உக்ரைன் ரஷியா போர்,ukraine russia war</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/4ewqzrsw/UkraineProtest0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உக்ரைன்- ரஷியா போர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/4ewqzrsw/UkraineProtest0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ரஷியா தனது அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர்த் தொடுத்தது. முதலில் உக்ரைன் பின்வாங்கியது. பின்னர் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உதவியுடன் ரஷியாவுக்கு பதிலடி கொடுத்தது.</p><p>தற்போது உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் ஆயுதங்கள் மூலம் ரஷியாவை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக நீண்டு தூரம் சென்று தாக்கும் டிரோன்களை ரஷியாவுக்கு எதிராக பயன்படுத்தி வருகிறது. 4 ஆண்டுகளை தாண்டியும் நடைபெறும் இந்த சண்டை இன்னும் முடிவுக்கு வரவில்லை. இரண்டு பக்கத்திலும் ஏராளமான உயிரிழப்புகள், பொருட்சேதங்கள் ஏற்பட்டுள்ளன.</p><h2>5 லட்சம் வீரர்கள்</h2><p>இந்த நிலையில் உக்ரைனுக்கு எதிராக போரில் ரஷியாவைச் சேர்ந்த 1.5 மில்லியன் (15 லட்சம் வீரர்கள்) காயம் மற்றும் உயிரிழந்திருக்கலாம். இதில் உயிரிழந்தவர்கள் 5 லட்சம் பேர் என்று இங்கிலாந்தின் பாதுகாப்புப்படை தலைவரான விமானப்படை தலைவர் மார்ஷல் ரிச்சர்ட் நைட்டன் தெரிவித்துள்ளார்.</p><p>உக்ரைன் ராணுவம் இது தொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது. இது ஒத்துப்போகும் வகையிலான தகவலை தற்போது இங்கிலாந்து தெரிவித்துள்ளது. இதற்கு ரஷியா கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.</p><h2>20 ஆயிரம் வாகனங்கள்</h2><p>வீரர்களுடன் அதிக அளவில் ராணுவ தளவாடங்களையும் இழந்துள்ளது ரஷியா. 10 ஆயிரம் ஆயுதம் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள், சுமார் 3,000 வான் பாதுகாப்பு மற்றும் பீரங்கி அமைப்புகள், 370 விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களை இழந்துள்ளது என்றும் நைட்டன் தெரிவித்துள்ளார். அதேவேளையில் உக்ரைனின் இழப்பை அவர் வெளிப்படுத்தவில்லை.</p><h2>தொடர்ந்து 2-வது நாட்களாக தாக்குதல் நடத்திய ரஷியா</h2><p>இதற்கிடையே வெள்ளிக்கிமையான இன்று தொடர்ந்த 2-வது நாளாக உக்ரைனின் கீவ் நகரில் உள்ள சாலையோ கியாஸ் நிலையத்தை குறிவைத்து ரஷியா டிரோன் தாக்குதல் நடத்தியது. இரண்டு கியாஸ் நிலையம் மீது நடத்திய தாக்குதலில் இரணடு பேர் கொல்லப்பட்டனர். 6 பேர் காயம் அடைந்தனர்.</p><p>மத்திய உக்ரைனில் உள்ள பவ்லோஹார்டு நகரில் உள்ள ஷாப்பில் மால் மிது ரஷியா தாக்குதல் நடத்தியது. இதில் பொதுமக்கள் ஐந்து பேர் பலியானார்கள்.</p><h2>உக்ரைன் டிரோன் தாக்குதல்</h2><p>ரஷியாவின் தாக்குதலுக்கு பதிலடியாக உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் 777 டிரோன்களை தடுத்ததாக ரஷியா தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சாலமன் பாப்பையா மறைவு - மு.க.ஸ்டாலின் இரங்கல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/take-care-of-your-health-he-said-and-left-stalin-on-salomon-papayya</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/take-care-of-your-health-he-said-and-left-stalin-on-salomon-papayya#comments</comments><guid isPermaLink="false">3f8563d7-cd2f-4f95-87c9-64a1e80e86ec</guid><pubDate>Fri, 11 Sep 2026 12:35:17 +0000</pubDate><atom:updated>2026-09-11T12:35:17.772Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MKStalin,மு.க ஸ்டாலின்,Solomon Pappaiah,சாலமன் பாப்பையா</media:keywords><media:content height="1210" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/xso7kbo5/WhatsApp-Image-2026-09-11-at-6.01.22-PM-1.jpeg" width="1300"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பாப்பையா பரம்பரை எனச் சொல்லத்தக்க அளவுக்குத் தன்னைப் போலவே பல பேச்சாளர்களைத் தமிழுக்குக் கொடையாகத் தந்தவர்.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/xso7kbo5/WhatsApp-Image-2026-09-11-at-6.01.22-PM-1.jpeg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மறைவு </h2><p>பட்டிமன்ற பேச்சால் உலகெங்கும் உள்ள தமிழ் மக்களை கட்டிப்போட்ட சாலமன் பாப்பையா வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று தனது சொந்த ஊரான மதுரையில் காலமானார்.</p> <h2>மு.க .ஸ்டாலின் இரங்கல்</h2><p>இந்நிலையில் இவரின் மறைவிற்கு திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.</p><p>மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது;</p><p>“சிரித்த முகம் - சிந்தையைக் கவரும் தமிழ் –<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-helmet-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-tvk-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D"> மதுரை </a>மண்ணின் மணம் ஆகியவற்றால் உலகெங்கும் வாழும் தமிழர்களின் பேரன்பைப் பெற்ற பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், ஆற்றொணாத் துயரும் அடைந்தேன்.</p><p>திருக்குறளுக்கு உரை கண்டவர், புறநானூற்றுக்குப் புதிய வரிசை கண்டவர், கம்பனையும் ஆய்ந்தறிந்தவர் எனப் பண்டைத் தமிழிலக்கியத்தில் எந்த அளவுக்கு விற்பன்னராகத் திகழ்ந்தாரோ, அதே அளவுக்கு எளிய மொழியில் நகைச்சுவையாகப் பேசும் திறனும் கைவரப் பெற்றவராகப் பாப்பையா அவர்கள் திகழ்ந்தார்.</p><h2>பாப்பையாவோடுதான் பண்டிகை தொடங்கும்</h2><p>பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/every-festive-morning-began-with-you-csk-management-condoles-the-passing-of-solomon-pappaiah">பண்டிகை </a>நாட்கள் பாப்பையாவின் பட்டிமன்றத்தோடுதான் தமிழர்களுக்குத் தொடங்கும் எனும் அளவுக்குத் தமிழர்களின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டற இயைந்துவிட்ட பெருமைக்குரியவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள். </p><p>பட்டிமன்றம் என்றாலே பாப்பையாதான் எனக் கூறும் அளவுக்குத் தமிழ்நாடு மட்டுமல்லாது, உலகின் பல நாடுகளிலும் பல்லாயிரம் பட்டிமன்றங்களுக்கு நடுவராக இருந்தவர். </p><p>தற்கால மதுரையின் பெருமைமிகு அடையாளமாகவே மாறிப் போனவர். பாப்பையா பரம்பரை எனச் சொல்லத்தக்க அளவுக்குத் தன்னைப் போலவே பல பேச்சாளர்களைத் தமிழுக்குக் கொடையாகத் தந்தவர்.</p><p>தலைவர் கருணாநிதி மீதும், என் மீதும் மிகுந்த அன்பைப் பொழிந்தவர் பேராசிரியர் பாப்பையா. திமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர் எங்கள் மீது காட்டும் அன்பில் எந்த மாற்றமும் இருந்ததில்லை. </p><p>எப்போது சந்தித்தாலும் புன்னகையோடும், வாஞ்சையோடும் கரங்களைப் பற்றிக்கொள்ளும் அன்பிலான உறவை நாங்கள் கொண்டிருந்தோம். </p><p>கடந்த ஆண்டு மே மாதம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நான் மதுரை சென்றிருந்தபோது நடந்த மக்கள் சந்திப்பில் அவரது வீட்டு வாசலுக்கு வந்து என்னை வரவேற்றார். </p><p>சில மாதங்களுக்கு முன்புதான் துணைவியாரை இழந்திருந்த பேராசிரியரிடம், “உடல்நலனைப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு வந்தேன். அவர் இன்று நம்மை விட்டுப் பிரிந்ததை மனம் ஏற்க மறுக்கிறது.</p><p>தனது அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள். பேராசிரியர் சாலமன் பாப்பையாவை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தார்க்கும், மதுரை மக்களுக்கும், உலகெங்கும் வாழும் அவரது இரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”</p><p>இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item></channel></rss>