<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 09 Aug 2026 03:56:06 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்- 9 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-9-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-9-august-2026#comments</comments><guid isPermaLink="false">76352f68-a6e0-4f69-bc17-bafdc013c0fd</guid><pubDate>Sun, 09 Aug 2026 03:12:36 +0000</pubDate><atom:updated>2026-08-09T03:54:34.542Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/omtx1at6/TodayNews0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Today News Live]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/omtx1at6/TodayNews0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/savarkar-question-in-kerala-school-quiz-sparks-big-political-row">பள்ளி வினாடி வினாவில் சாவர்க்கர் குறித்த கேள்வி: கேரளாவில் வெடித்தது அரசியல் சர்ச்சை</a></p><p>* பொதுக் கல்வித்துறை அமைச்சர் என். சம்சுதீன் இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p>* சாவர்க்கரின் "உண்மையான வரலாற்றை" மறைத்து அவரைப் பெருமைப்படுத்தும் முயற்சிகள் நடைபெறுவதாக பினராயி விஜயன் விமர்சனம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/puducherry/amit-shah-receives-warm-reception-in-puducherry" rel="nofollow">பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை.. புதுச்சேரியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு உற்சாக வரவேற்பு!</a></p><p>* புதுச்சேரியில் குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி விருது வழங்கும் விழா நடைபெறுகிறது.</p><p>* விழாவில் குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி விருதை அமித்ஷா வழங்கி கவுரவிக்கிறார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/iran-makes-new-strait-demands-uae-says-ship-was-targeted">ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம்: அமெரிக்காவுக்கு ஈரான் புதிய நிபந்தனை..!</a></p><p>* அமெரிக்கா இனி ஒருபோதும் ஈரானை அச்சுறுத்தக்கூடாது.</p><p>* போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு ஈரானுக்கு முழுமையான இழப்பீடு" வழங்க வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/ashmita-chaliha-won-the-title-in-korea-mastesr-badminton">கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் அஷ்மிதா சலிஹா</a></p><p>* கொரியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் தொடர் கொரியாவில் நடந்து வருகிறது.</p><p>* இந்திய வீராங்கனைகள் பேட்மிண்டன் தொடரில் சிறந்து விளங்குவது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/turkiye-says-defence-pact-with-saudi-arabia-and-pak-is-not-aimed-at-iran-or-any-other-country">சவுதி அரேபியா, பாகிஸ்தான் உடனான பாதுகாப்பு ஒப்பந்தம் ஈரானை குறிவைத்தது அல்ல: துருக்கி சொல்கிறது</a></p><p>* பொதுவான அச்சுறுத்தல் என்று வரையறுக்கும் வகையில் நாங்கள் எதையும் எழுதவோ அல்லது அதில் கையெழுத்திடவோ இல்லை. </p><p>* எங்களைத் தாக்காத எந்தவொரு நாடும் எங்களுக்கு இலக்கு அல்ல.</p>]]></content:encoded></item><item><title>பள்ளி வினாடி வினாவில் சாவர்க்கர் குறித்த கேள்வி: கேரளாவில் வெடித்தது அரசியல் சர்ச்சை</title><link>https://www.maalaimalar.com/news/national/savarkar-question-in-kerala-school-quiz-sparks-big-political-row</link><comments>https://www.maalaimalar.com/news/national/savarkar-question-in-kerala-school-quiz-sparks-big-political-row#comments</comments><guid isPermaLink="false">66ffb7f0-cc60-4708-a3aa-82286f15e89d</guid><pubDate>Sun, 09 Aug 2026 03:46:58 +0000</pubDate><atom:updated>2026-08-09T03:46:58.612Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சாவர்க்கர்,Savarkar,கேரளா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/kidp19h1/Savarkar0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சாவர்க்கர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/kidp19h1/Savarkar0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரளாவில் பள்ளி ஒன்றில் நடைபெற்ற வினாடி வினா நிகழ்ச்சியில் இடம்பெற்ற வீர சாவர்க்கர் தொடர்பான கேள்வி, தற்போது மாநில அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>சாவர்க்கர்</h2><p>சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்டதாக கூறப்படும் இந்த வினாடி வினாவில், "ஆங்கிலேயர்களால் மிகக் கடுமையான தண்டனை பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர் யார்?" என்ற கேள்வி இடம்பெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதற்கான பதிலாக வி.டி. சாவர்க்கர் குறிப்பிடப்பட்டிருந்தது.</p><p>இந்தக் கேள்வியின் வரலாற்று அணுகுமுறை குறித்து இடதுசாரி அமைப்புகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட அரசியல் தரப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதன் மூலம் காங்கிரஸ் தலைமையிலான கேரள அரசு, சங் பரிவார் திட்டத்தை கல்வித்துறையில் அனுமதிக்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளன.</p><p>இதையடுத்து, கேரள பொதுக் கல்வித்துறை அமைச்சர் என். சம்சுதீன் இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த வினாடி வினா அரசின் அதிகாரப்பூர்வ அனுமதியுடன் நடத்தப்படவில்லை என்றும் கல்வித்துறை தெரிவித்துள்ளது. கேள்வியைத் தயாரித்தவர்கள் யார், அதன் பின்னணி என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.</p><p>சமூக அறிவியல் மன்றம் அல்லது பொதுக் கல்வித் துறை ஆகியவற்றின் செயல்பாட்டுத் திட்டத்தில் இந்த வினாடி-வினா நிகழ்ச்சி இடம்பெறவில்லை. மேலும், கேள்விகளைத் தயாரிக்கவோ அல்லது போட்டியைத் தனிப்பட்ட முறையில் நடத்தவோ இவ்விரு அமைப்புகளும் யாரையும் அங்கீகரிக்கவில்லை என்று கல்வித்துறை அமைச்சரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><h2>பினராயி விஜயன்</h2><p>இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மூத்த தலைவரும் கேரள முதல்வருமான பினராயி விஜயன், ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் யு.டி.எஃப். (UDF) அரசு "கூட்டுச் சதி" செய்வதாகக் குற்றம் சாட்டினார். மேலும் சாவர்க்கரின் "உண்மையான வரலாற்றை" மறைத்து அவரைப் பெருமைப்படுத்தும் முயற்சிகள் நடைபெறுவதாகவும் கூறினார். மேலும், கேரளாவில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் முயற்சிகளின் பின்னணியிலும் இந்தப் பிரச்சினையைப் பார்க்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.</p><p>மாநிலத்தின் பொதுக் கல்வித் துறையை "காவிமயமாக்குவதற்கும்", சுதந்திரப் போராட்ட வரலாற்றைத் திரிப்பதற்கும் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் ஒரு பகுதியாகவே அந்த வினாடி-வினா (quiz) கேள்வி அமைந்திருந்ததாக முன்னாள் பொதுக் கல்வித்துறை அமைச்சர் வி. சிவன்குட்டி குற்றம்சாட்டினார்.</p><p>ஆங்கிலேயர்களிடமிருந்து மிகக் கடுமையான தண்டனையைப் பெற்ற சுதந்திரப் போராட்ட வீரராகச் சாவர்க்கரைச் சித்தரிப்பது ஆட்சேபனைக்குரியது என்று கூறிய அவர், அக்கேள்வி தவறான வரலாற்றைப் பரப்பும் முயற்சியாக அமைந்திருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.</p><h2>சிவன்குட்டி</h2><p>விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இதற்குப் பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், சர்ச்சைக்குரிய அந்தக் கேள்வியையும் அதற்கான பதிலையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் சிவன்குட்டி வலியுறுத்தினார்.</p><p>மேலும், பொதுக் கல்வித் துறை மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.</p>]]></content:encoded></item><item><title>பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை.. புதுச்சேரியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு உற்சாக வரவேற்பு!</title><link>https://www.maalaimalar.com/news/puducherry/amit-shah-receives-warm-reception-in-puducherry</link><comments>https://www.maalaimalar.com/news/puducherry/amit-shah-receives-warm-reception-in-puducherry#comments</comments><guid isPermaLink="false">60980b72-f567-4c66-9e1d-880dbf4cb80a</guid><pubDate>Sun, 09 Aug 2026 03:40:41 +0000</pubDate><atom:updated>2026-08-09T03:40:41.968Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>புதுச்சேரி,Pondicherry,மத்திய அமைச்சர் அமித்ஷா,வண்ணக்கொடி விருது,union minister Amitshah</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/n11n6b2o/Amitshah.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Union Minister Amitshah-Pondycherry Rangasamy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/n11n6b2o/Amitshah.jpg?w=280" width="280"></media:thumbnail><category>புதுச்சேரி (Puducherry)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரியில் இன்று நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.</p><p>புதுவை காவல்துறையின் சிறப்பான சேவையை அங்கீகரிக்கும் வகையில் குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி விருது வழங்கும் விழா நடைபெறுகிறது.</p><p>இந்நிலையில், புதுவை காவல்துறைக்கு ஜனாதிபதியின் வண்ணக்கொடி விருது விழாவுக்கு வருகை தந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.</p><p>மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதலமைச்சர் ரங்கசாமி, துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.</p><p>பின்னர், அமைச்சர் அமித்ஷாவுக்கு காவல் துறையின் சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.</p><p>புதுச்சேரி கோரிமேட்டில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி விருதை அமித்ஷா வழங்கி கவுரவிக்கிறார்.</p><p>புதுவையில் அரசியல் தலைவர்கள், கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் அமித்ஷா தேசியக்கொடி பேரணியை தொடங்கி வைக்கிறார்.</p><p>மத்திய அமைச்சர் அமித்ஷா வருகையை ஒட்டி புதுச்சேரியில் டிரோன் பறக்கத்தடை, போக்குவரத்தில் மாற்றம், பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Union Home Minister Amit Shah arrives at the Police Ground in Gorimedu, Puducherry, to participate in the presentation ceremony of the President’s Police Colour to the Puducherry Police <a href="https://t.co/l5SpEpuqrQ">pic.twitter.com/l5SpEpuqrQ</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2086288327205089671?ref_src=twsrc%5Etfw">August 9, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>காவல் பணி, பேரிடர் மீட்பு உள்ளிட்ட அரசுப் பணிகளில் ட்ரோன்கள் அறிமுகம்: டெல்லி அரசு</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-drone-policy-to-enable-use-in-police-work-disaster-management-and-transport</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-drone-policy-to-enable-use-in-police-work-disaster-management-and-transport#comments</comments><guid isPermaLink="false">b2650ad9-b391-48de-8950-3e481e697f36</guid><pubDate>Sun, 09 Aug 2026 03:23:12 +0000</pubDate><atom:updated>2026-08-09T03:23:12.353Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>delhi,டெல்லி,drone policy,ட்ரோன் கொள்கை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/gprma12l/Untitled-design-19.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ காவல் பணி, பேரிடர் மீட்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மைக்கு ட்ரோன்கள் பயன்பாடு]]></media:title><media:description type="html"><![CDATA[ Delhi Drone Policy Jobs]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/gprma12l/Untitled-design-19.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் முன்மொழியப்பட்ட ட்ரோன் கொள்கையின்படி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பங்கஜ் சிங் தெரிவித்தார்.</p><p>தற்போது உருவாக்கப்பட்டு வரும் இந்தக் கொள்கையானது, ட்ரோன் ஆராய்ச்சி மையங்களை நிறுவுதல், பிரத்யேக விமானப் பரிசோதனை வசதிகளை ஏற்படுத்துதல், போக்குவரத்து மேலாண்மைக்கு ட்ரோன்களை பயன்படுத்துதல் மற்றும் ட்ரோன் சூழலமைப்பை மேம்படுத்த மானியங்கள் வழங்குதல் ஆகியவற்றை வலியுறுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h3><strong>டெல்லி ட்ரோன் கொள்கை</strong></h3><p>இதுகுறித்து அமைச்சர் பங்கஜ் சிங் கூறுகையில், “வேலைவாய்ப்புகளுடன், பாதுகாப்பான மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட ட்ரோன் செயல்பாடுகளை உறுதி செய்வதற்காக ஒரு விரிவான ட்ரோன் கொள்கை திட்டமிடப்பட்டு வருகிறது. கொள்கை தயாராக உள்ளது;  </p><p>ஒரு மாதத்தில் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக இதைச் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்தக் கொள்கையானது அரசாங்கத்தின் தகவல் மற்றும் தொழில்நுட்ப துறையால் உருவாக்கப்பட்டு வருகிறது” என்று அவர் கூறினார்.</p><p>இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, “தவறான பயன்பாட்டை தடுப்பதற்காக ட்ரோன் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துதல், கண்காணிப்பு மற்றும் வரைப்படமிடலுக்காக அரசு நிறுவனங்கள் ட்ரோன்களை பயன்படுத்த வழிவகை செய்தல், மற்றும் DGCA-வின் டிஜிட்டல் ஸ்கை தளத்துடனான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் ஆகியவை இந்தக் கொள்கையின் முக்கிய நோக்கங்களாகும்.</p><p>இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கும், தேவையான துணை உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும் அரசு தனி நிதி ஒதுக்கீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.</p><p>இந்த நிகழ்வுகளின் கீழ் பொது விழிப்புணர்வு மற்றும் அமலாக்கம், மக்களைச் சென்றடைதல், மண்டல அடையாளப் பலகைகள், விழிப்புணர்வு பட்டறைகள், பாதுகாப்பு கட்டமைப்பு மற்றும் ட்ரோன் எதிர்ப்புக்கான நிலையான இயக்க நடைமுறைகள் ஆகிய ஐந்து முக்கியப் பகுதிகளை மையமாகக் கொண்டு இந்தக் கொள்கை வகுக்கப்படும்.</p><p>டெல்லி ட்ரோன் கொள்கையின் சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக, தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் தலைமையில் அரசாங்கம் ஒரு குழுவை அமைத்தது.</p><h3><strong>அரசுத் துறைகளில் ட்ரோன் பயன்பாடு</strong></h3><p>மேலும், நகருக்குள் காவல் பணி, பேரிடர் மீட்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மை உள்ளிட்ட அரசாங்கப் பணிகளுக்காகவும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படும்.</p><p>ரியல் எஸ்டேட் திட்டங்கள், தொலைத்தொடர்பு மற்றும் ஊடகத் துறைகளில் ட்ரோன்களின் பயன்பாட்டைத் திட்டமிடுவதையும் இந்தக் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.</p><p>டெல்லியில், பல முக்கிய பிரமுகர்களின் இருப்பிடங்கள் காரணமாக, கிட்டத்தட்ட 60 சதவீதப் பகுதி ட்ரோன் இல்லாக மண்டலமாக உள்ளன.</p><p>எனவே அந்த வரம்புகளை கருத்தில் கொண்டு, இந்த கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><p>இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பள்ளிகளில் ட்ரோன் விழிப்புணர்வுப் பட்டறைகள், சிறப்பு மையங்களை உருவாக்குதல், தொலைநிலை விமானி பயிற்சி நிறுவனங்களை அமைத்தல் மற்றும் விமானி பயிற்சித் திட்டங்கள் போன்ற திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளையும் அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சிறார் பாதுகாப்புக்காக &apos;ஷீல்டு&apos; மசோதா: மீறினால் ரூ.10 கோடி அபராதம் விதிக்க முன்மொழிவு!</title><link>https://www.maalaimalar.com/news/national/shield-bill-for-child-safety-rs-10-crore-penalty-proposed-for-violations</link><comments>https://www.maalaimalar.com/news/national/shield-bill-for-child-safety-rs-10-crore-penalty-proposed-for-violations#comments</comments><guid isPermaLink="false">ffece0f6-cd13-4837-9f3f-09372baa2b45</guid><pubDate>Sun, 09 Aug 2026 03:16:22 +0000</pubDate><atom:updated>2026-08-09T03:16:22.930Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Violations,Child safety,அபராதம்,சிறுவர் பாதுகாப்பு,ஷீல்டு மசோதா,shield bill</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/fnqi8b3p/Baji.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/fnqi8b3p/Baji.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்-சிறுமிகள் சமூக ஊடக கணக்குகள் மற்றும் ஆன்லைன் கேமிங் கணக்குகளைத் தொடங்க தடை விதிக்க வகை செய்யும் தனிநபர் மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் ஆவதற்கு தயார் செய்யப்பட்டு உள்ளது.</p><h2>'ஷீல்டு' மசோதா</h2><p>சமூக ஊடகங்கள் வயது வித்தியாசமின்றி அனைவரையும் கட்டிப்போடுகின்றன. இதில் சிறுவர்-சிறுமிகள் பலர் அடிமைகளாக உள்ளனர். இதனால் அவர்கள் சில நேரங்களில் ஆபாச படங்களைப் பார்க்க நேரிடுகிறது. அதுபோல ஆன்லைன் கேமிங்கில் பைத்தியம் பிடித்தவர்கள் போல ஆகிவிடுகிறார்கள். இது சமூகத்துக்கு கேடு தரும் செயலாக பார்க்கப்படுகிறது.</p><p>எனவே இதனை தடுப்பதற்காகவும், சிறார் பாதுகாப்புக்காகவும் பா.ஜ.க எம்.பி. பைஜெயந்த் பாண்டா, ஒரு தனிநபர் மசோதாவை தயார் செய்துள்ளார். இளம் டிஜிட்டல் தலைமுறையினருக்கான ஆரோக்கியமான இணையச் சூழல்களைப் பாதுகாத்தல் (ஷீல்டு) மசோதா-2025' என அந்த மசோதாவுக்கு பெயரிடப்பட்டு உள்ளது.</p><h2>கட்டுப்பாடுகள்</h2><p>13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடக கணக்குகள் மற்றும் ஆன்லைன் கேமிங் கணக்குகள் தொடங்குவதற்கு இந்த மசோதா கட்டுப்பாடுகளை விதிக்கிறது. இதற்காக, சம்பந்தப்பட்ட தளங்கள் வயது சரிபார்ப்பு, பெற்றோர் கட்டுப்பாடுகள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட விளம்பரங்கள் மீதான கட்டுப்பாடுகள் போன்றவற்றை விதிக்க வேண்டும் என இந்த மசோதா வலியுறுத்துகிறது.</p><p>சிறுவர்கள் ஆபாசப் படங்கள், சூதாட்டம், பந்தயம், வன்முறை அல்லது பயங்கரவாத உள்ளடக்கம் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான உள்ளடக்கங்களை அணுகுவதைத் தடுக்க இந்தத் தளங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறது.</p><p>இதில் செய்யப்படும் மீறல்களுக்கு ரூ.10 கோடி வரை அபராதம் விதிக்கவும் முன்மொழியப்பட்டு உள்ளது. மேலும் மீண்டும் மீண்டும் அல்லது வேண்டுமென்றே மீறினால், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69 ஏ-ன் கீழ் அந்த தளங்களின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படலாம் அல்லது தடுக்கப்படலாம் என்பதையும் மசோதா முன்மொழிகிறது.</p><h2>அரிது</h2><p>இந்த மசோதாவை நேற்று முன்தினம் தாக்கல் செய்யலாம் என பைஜெயந்த் பாண்டா நினைத்திருந்தார். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டதால் அது ஈடேறவில்லை. இதுபோல ஏற்கனவே 2 முறை அவர் முயற்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p>மேலும், தனிநபர்களின் தத்ரூபமான சாயல்களை உருவாக்க செயற்கை நுண்ணறிவை தவறாகப் பயன் படுத்துவதை ஒழுங்குபடுத்தும் நோக்கில் தயார் செய்யப்பட்ட ஒரு தனிநபர் மசோதாவையும் தாக்கல் செய்ய முடியவில்லை. பொதுவாக தனிநபர் மசோதாக்கள் சட்டமாக இயற்றப்படுவது அரிது.</p><p>சுதந்திரத்துக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் 12 தனிநபர் மசோதாக்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் அஷ்மிதா சலிஹா</title><link>https://www.maalaimalar.com/sports/ashmita-chaliha-won-the-title-in-korea-mastesr-badminton</link><comments>https://www.maalaimalar.com/sports/ashmita-chaliha-won-the-title-in-korea-mastesr-badminton#comments</comments><guid isPermaLink="false">2d1c5f1e-f747-4453-97db-b7badb6ac9dd</guid><pubDate>Sun, 09 Aug 2026 03:09:11 +0000</pubDate><atom:updated>2026-08-09T03:09:11.048Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ashmita chaliha,அஷ்மிதா சலிஹா,korea masters badminton,கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/6yw3ro02/chaliha.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ashmita chaliha]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/6yw3ro02/chaliha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கொரியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் தொடர் கொரியாவில் நடந்து வருகிறது.</p><p>இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை அஷ்மிதா சலிஹா, சீன வீராங்கனையான ஹான் குயான்சி உடன் மோதினார்.</p><p>தொடக்கத்தில் சிறப்பாக ஆடிய அஷ்மிதா சலிஹா முதல் செட்டை 14-21 என இழந்தார். இதனால் சுதாரித்துக் கொண்ட அஷ்மிதா சலிஹா அதிரடியாக ஆடி 2வது செட்டை 21-14 என கைப்பற்றினார்.</p><h2>சாம்பியன் பட்டம்</h2><p>வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் சிறப்பாக ஆடிய அஷ்மிதா சலிஹா 21-14 என வென்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.</p><p>கடந்த வாரம் நடந்த தைபே ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்தியாவின் தன்வி ஷர்மா சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>சமீப காலமாக இந்திய வீராங்கனைகள் பேட்மிண்டன் தொடரில் சிறந்து விளங்கி வருவது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை கூட்டத்தில் திமுக, அதிமுக பங்கேற்காதது வருத்தம்- ப.சிதம்பரம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/p-chidambaram-regrets-dmk-aiadmk-absence-from-delimitation-talks</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/p-chidambaram-regrets-dmk-aiadmk-absence-from-delimitation-talks#comments</comments><guid isPermaLink="false">3c2c9714-c6d1-4b59-9a1e-2b2d476541f1</guid><pubDate>Sun, 09 Aug 2026 02:44:23 +0000</pubDate><atom:updated>2026-08-09T02:44:23.253Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,ADMK,பா.சிதம்பரம்,திமுக அதிமுக,Delimitation Bill,தொகுதி மறுவரையறை கூட்டம்,P Chidhambaram</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/mn8qcd9f/P-Chidambaram.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ P Chidambaram]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/mn8qcd9f/P-Chidambaram.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தொகுதி மறுவரையறை கூட்டத்தில் திமுக, அதிமுக எம்பிக்கள் பங்கேற்காதது வருத்தமளிப்பதாக ப.சிதம்பரம் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p>மேலும் அவர்,"தொகுதி மறுவரையறை மசோதா குறித்து ஒவ்வொறு கட்சியும் தங்கள் நிலைப்பாட்டை தெளிவாக அறிவிக்க வேண்டும்" என கூறினார்.</p><p>இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-</p><p>தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டிய அனைத்து தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் திமுக, அஇஅதிமுக, பாமாக மற்றும் தேமுதிக கட்சிகள் பங்கேற்கவில்லை என்பது எனக்கு வருத்தமளித்தது.</p><p>தொகுதி மறுவரை (delimitation) பற்றித் தமிழ்நாட்டில் ஒருமித்த கருத்து உள்ளது என்பதை உலகுக்கு அறிவிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டோம் .</p><p>2026 ஏப்ரல் மாதத்தில் உருவாகிய ஒற்றுமை ஆகஸ்ட் மாதத்தில் ஏன் குலைந்தது என்ற கேள்வியை மக்கள் கேட்க வேண்டும். </p><p>தொகுதி மறுவறை மசோதாவைப் பற்றி ஒவ்வொரு கட்சியும் தன் நிலையைத் தெளிவாக அறிவிக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>தொகுதி மறுவரையறை</h2><p>நாடு முழுவதும் தொகுதி மறுவரையறை காரணமாக தமிழகம் பாதிக்கப்படுவதாக கூறி அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.</p><p>கடந்த தி.மு.க. ஆட்சியிலும் தொகுதி மறுவரையறையின்போது தமிழகத்தின் நலன்கள் பாதிக்கப்படக்கூடாது என்று அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்தன.</p><p>முதலமைச்சர் விஜய் தலைமையில் நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக எம்.பி.க்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. </p><p>ஆனால், இந்த ஆலோசனைக் கூட்டத்தை தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் புறக்கணித்தன.</p><h2>பங்கேற்பு</h2><p>த.வெ.க. ஆதரவு கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் முதலமைச்சர் விஜய் நடத்தும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சிக்கு 3 மேல்சபை எம்.பி.க்கள் உள்பட 12 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும்  கூட்டத்தில் பங்கேற்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 2 எம்.பி.க்களும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 2 எம்.பி.க்களும், மார்க்சிஸ்டு எம்.பி.க்கள் இருவரும் பங்கேற்றனர்.</p><p>ம.தி.மு.க. சார்பில் துரை வைகோ எம்.பி.யாக உள்ளார். மேல் சபை எம்.பி.யான இவரும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த எம்.பி.யும் விஜய் நடத்தும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.</p><h2>தீர்மானம் நிறைவேற்றம்</h2><p>மக்கள் தொகை கட்டுப்பாட்டைச் சிறப்பாகச் செயல்படுத்திய தென் மாநிலங்கள், தொகுதி மறுவரையறை காரணமாகக் கூடுதல் இழப்பைச் சந்திக்க நேரிடும். எனவே தற்போதைய மக்களவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 543 ஆக மட்டுமே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும், புதிய தொகுதி மறுவரையறை நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. </p>]]></content:encoded></item><item><title>கனடா ஓபன் டென்னிஸ்: 4வது சுற்றில் நம்பர் 1 வீராங்கனை அதிர்ச்சி தோல்வி</title><link>https://www.maalaimalar.com/sports/tennis/sabalenka-lose-4th-round-in-canada-open-tennis</link><comments>https://www.maalaimalar.com/sports/tennis/sabalenka-lose-4th-round-in-canada-open-tennis#comments</comments><guid isPermaLink="false">976957b9-054c-44e1-ac9b-e4fed57cf32e</guid><pubDate>Sun, 09 Aug 2026 02:35:33 +0000</pubDate><atom:updated>2026-08-09T02:35:33.350Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Aryna Sabalenka,அரினா சபலென்கா,Canada Open Tennis,கனடா ஓபன் டென்னிஸ்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/11/19952224-saba.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ sabalenka]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/11/19952224-saba.webp?w=280" width="280"></media:thumbnail><category>டென்னிஸ் (Tennis)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோவில் நடந்து வருகிறது</p><p>முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவில் தற்போது 4-வது சுற்று ஆட்டம் நடந்து வருகிறது.</p><p>இன்று அதிகாலை நடந்த 4-வது சுற்று போட்டியில் நம்பர் 1 வீராங்கனையும், பெலாரசைச் சேர்ந்த அரினா சபலென்கா, ரஷியாவின் எகடரினா அலெக்சாண்ட்ரோவா உடன் மோதினார்.</p><h2>சபலென்கா தோல்வி</h2><p>இதில் சிறப்பாக ஆடிய அலெக்சாண்ட்ரோவா முதல் செட்டை 7-6 (7-3) என போராடி வென்றார். இதற்கு பதிலடியாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சபலென்கா 2வது செட்டை 6-4 என வென்றார்.</p><p>வெற்றியாளரை நிர்ணயிக்கும் முன்றாவது செட்டில் சிறப்பாக ஆடிய அலெக்சாண்ட்ரோவா 6-4 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.</p><p>இதன்மூலம் நம்பர் 1 வீராங்கனையான சபலென்கா அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.</p><h2>திணறும் சபலென்கா</h2><p>கடந்த மாதம் நடந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் அரினா சபலென்கா 4வது சுற்றில் தோல்வி அடைந்தார்.</p><p>நடப்பு ஆண்டில் பிரிஸ்பேன் ஓபன், இந்தியன் வெல்ஸ் மற்றும் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர்களில் மட்டுமே சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>சவுதி அரேபியா, பாகிஸ்தான் உடனான பாதுகாப்பு ஒப்பந்தம் ஈரானை குறிவைத்தது அல்ல: துருக்கி சொல்கிறது</title><link>https://www.maalaimalar.com/news/world/turkiye-says-defence-pact-with-saudi-arabia-and-pak-is-not-aimed-at-iran-or-any-other-country</link><comments>https://www.maalaimalar.com/news/world/turkiye-says-defence-pact-with-saudi-arabia-and-pak-is-not-aimed-at-iran-or-any-other-country#comments</comments><guid isPermaLink="false">91b9394f-0b76-447b-b906-1df227e32df8</guid><pubDate>Sun, 09 Aug 2026 02:31:20 +0000</pubDate><atom:updated>2026-08-09T02:31:20.529Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Pakistan,Turkey,Saudi Arabia,கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம்,Defence Agreement</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/k9pk40vo/Fiden0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ துருக்கி அமைச்சர் ஃபிடன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/k9pk40vo/Fiden0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கிக்கு இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தம் ஈரான் அல்லது வேறு எந்த நாட்டிற்கும் எதிரானதல்ல என்று துருக்கியின் வெளியுறவு அமைச்சர் சனிக்கிழமை தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஒப்பந்தம் பிராந்திய ஸ்திரத்தன்மையை நோக்கிய ஒரு முக்கியமான படி என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><h2>மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம்</h2><p>சவுதியின் புனித நகரமான மெக்காவில் வெள்ளிக்கிழமையன்று சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், துருக்கிய அதிபர் எர்டோகன் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதில், ஒரு நாட்டின் மீதான தாக்குதல் மூன்று நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>"மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம்" என்பது எண்ணெய் வளம் மிக்க சவுதி அரேபியா, அணுசக்தி நாடான பாகிஸ்தான் மற்றும் நேட்டோ (NATO) அமைப்பில் இரண்டாவது பெரிய ராணுவத்தையும் வேகமாக வளர்ந்து வரும் பாதுகாப்புத் துறையையும் கொண்ட துருக்கி ஆகியவற்றை ஒன்றிணைக்கிறது.</p><p>பிராந்தியத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மை மற்றும் அச்சுறுத்தல்கள் நிறைந்த சூழலில், இந்த ஒப்பந்தம் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பையும் தடுப்பு நடவடிக்கைகளையும் வலுப்படுத்துகிறது.</p><h2>இந்த ஒப்பந்தம் குறித்து துருக்கி வெளியுறவு அமைச்சர் ஃபிடன் கூறியதாவது:-</h2><p>தங்களுக்கு எதிராக விரோத நடவடிக்கைகளை மேற்கொள்ளாத வரை, எந்தவொரு குறிப்பிட்ட நாட்டையும் இந்த மூன்று நாடுகளும் எதிரியாகக் கருதவில்லை.</p><p>பொதுவான அச்சுறுத்தல் என்று வரையறுக்கும் வகையில் நாங்கள் எதையும் எழுதவோ அல்லது அதில் கையெழுத்திடவோ இல்லை. எங்களைத் தாக்காத எந்தவொரு நாடும் எங்களுக்கு இலக்கு அல்ல.</p><h2>நேட்டோவின் 5-வது பிரிவு என்ன சொல்கிறது?</h2><p>பரஸ்பர பாதுகாப்பு குறித்த இந்த ஒப்பந்தத்தின் விதிமுறையானது, தொழில்நுட்ப ரீதியாக நேட்டோவின் 5-வது பிரிவைப் (Article 5) போன்றது. அந்தப் பிரிவின்படி, 32 உறுப்பு நாடுகளில் ஒன்றின் மீதான தாக்குதல் அவை அனைத்தின் மீதான தாக்குதலாகக் கருதப்படுகிறது. </p><p>இந்த நடைமுறையின்படி ​​ஒரு உறுப்பு நாடு முறையாக உதவியைக் கோர வேண்டும். மற்ற இரண்டு நாடுகளின் உதவியானது உளவுத்துறை தகவல்களைப் பகிர்வது முதல் தளவாட ஆதரவு வரை அல்லது அச்சுறுத்தலைப் பொறுத்து ராணுவப் பிரிவுகளை நிலைநிறுத்துவது வரை அமையலாம்.</p><p>இவை அச்சுறுத்தலின் அளவைப் பொறுத்து மாறுபடும் பல அடுக்கு விஷயங்கள். எங்கள் பணிகளில் இதுவரை நாங்கள் வகுத்துள்ள கண்ணோட்டம் இதுதான்.</p><p>பிற நாடுகளும் இந்த ஒப்பந்தத்தில் இணைவதில் ஆர்வம் காட்டியுள்ளன.</p><p>இவ்வாடி ஃபிடன் தெரிவித்தார்.</p><p>எங்களின் இயற்கையான கூட்டணி நாடான எகிப்து அடுத்த கட்டத்தில் இதில் பங்கேற்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.</p><p>இந்த ஒப்பந்தத்தின் கீழ், மூன்று நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள், அத்துடன் அந்நாடுகளின் ராணுவத் தளபதிகள் ஆகியோர் வழக்கமான குழுக்கூட்டங்களை நடத்துவார்கள். மேலும், சவுதி அரேபியாவைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு செயலகத்தையும் இம்மூன்று நாடுகளும் அமைக்கும் என்று ஃபிடன் தெரிவித்தார்.</p><p>அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போரின்போது ஈரான் சவூதி அரேபியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போதைய ஒப்பந்த்தின்படி சவூதி அரேபியா உதவி கேட்டால் துருக்கி செல்ல வேண்டும். இந்த நிலையில்தான் ஈரான் இலக்கு அல்ல எனத் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இந்திய விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு: சம்பளம் ரூ.60,000 முதல் 1,80,000 வரை</title><link>https://www.maalaimalar.com/news/national/indian-airports-authority-recruitment-salary-rs-60000-to-180000</link><comments>https://www.maalaimalar.com/news/national/indian-airports-authority-recruitment-salary-rs-60000-to-180000#comments</comments><guid isPermaLink="false">024790ce-deaf-4f1a-b33c-613b266cd2c3</guid><pubDate>Sun, 09 Aug 2026 02:26:08 +0000</pubDate><atom:updated>2026-08-09T02:26:08.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காலி பணியிடம்,வேலைவாய்ப்பு,airport authority of india,AAI,Job Vacancy,இந்திய விமான நிலைய ஆணையம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/qg3evdh3/Untitled-design-18.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Manager and Junior Executive vacancies with salary up to Rs 1.8 lakh]]></media:title><media:description type="html"><![CDATA[ AAI Recruitment 2026]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/qg3evdh3/Untitled-design-18.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய விமான நிலைய ஆணையம் (AAI), பல்வேறு துறைகளில் மேலாளர்கள் மற்றும் இளநிலை நிர்வாகிகள் ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.</p><p>இந்த அறிவிப்பின்படி, தகுதியான விண்ணப்பத்தாரர்கள் AAI-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த வேலைவாய்ப்பில் சிவில், எலெக்ட்ரிக்கல், நிதி, தகவல் தொழில்நுட்பம், கட்டிடக்கலை, சட்டம், தீயணைப்புத் துறை, செயல்பாடுகள் (operations), வணிகம், பெருநிறுவன தொடர்பியல் (corporate communications) மற்றும் பிற துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதற்கான ஆள்சேர்ப்பு முறை கணினி வழி தேர்வுகள்  மூலம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h3><strong>வயது வரம்பு</strong></h3><p>AI ஆட்சேர்ப்புக்கான தகுதி நிபந்தனைகள் வெளியாகியுள்ளது. அதன்படி மேலாளர் பணிக்கு, 2026 செப்டம்பர் 7 ஆம் தேதி நிலவரப்படி அதிகபட்சமாக 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இளநிலை நிர்வாகி பணிக்கு, 7 செப்டம்பர் 2026 அன்று அதிகபட்சமாக 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.</p><p>மேலும் அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு. இதில் பட்டியல் சாதியினர் (SC/ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC - Non-Creamy Layer) 3 ஆண்டுகளும் அடங்கும்.</p><p>அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு, மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் 10 ஆண்டுகள் வரை வயது தளர்வு பெறலாம்.</p><p>மேலாளர் பதவிகளுக்கு, துறையைப் பொறுத்து, தொடர்புடைய இளங்கலை அல்லது முதுகலைப் பட்டத்துடன் மூன்று வருட பணி அனுபவமும் தேவைப்படுகிறது.</p><h3><strong>துறைகள்</strong></h3><p>நிதி, சட்டம், செயல்பாடுகள், மற்றும் நில அளவை மற்றும் நிலப்படவியல் ஆகிய துறைகளில் உள்ள இளநிலை நிர்வாகி பதவிகளுக்குக் குறிப்பிட்ட கல்வித் தகுதிகள் தேவைப்படுகின்றன, அதே சமயம் இந்தப் பதவிகளுக்குப் பணி அனுபவம் எதுவும் தேவையில்லை.</p><p>மேலாளர் (நிறுவனத் தொடர்பியல்) பதவிக்கு, விண்ணப்பதாரர்கள் மக்கள் தொடர்பியல், இதழியல் அல்லது அது தொடர்பான துறைகளில் இளங்கலைப் பட்டத்துடன், மூன்று வருடங்கள் தொடர்புடைய பணி அனுபவத்தையும் பெற்றிருக்கலாம்.</p><p>விண்ணப்பதாரர்கள், நிர்ணயிக்கப்பட்ட கடைசித் தேதிக்குள், அனைத்து கல்வித் தகுதி மற்றும் அனுபவத் தேவைகளையும் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><h3><strong>சம்பளம்</strong></h3><p>மேலாளர் பதவிகளுக்கான சம்பள விகிதம் ரூ. 60,000-3%-ரூ. 1,80,000 ஆகவும், இளநிலை நிர்வாகி பதவிகளுக்கான சம்பள விகிதம் ரூ. 40,000-3%-ரூ. 1,40,000 ஆகவும் உள்ளது. மேலாளர்களுக்கான தோராயமான ஆண்டு மொத்த சம்பளம் (CTC) ரூ. 21 லட்சமாகவும், இளநிலை நிர்வாகிகளுக்கானது ரூ. 14 லட்சமாகவும் உள்ளது.</p><p>இந்திய விமான நிலைய ஆணையத்தில் மேலாளர் மற்றும் இளநிலை நிர்வாகி பதவிகளில் 389 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.</p><h3><strong>கடைசி தேதி</strong></h3><p>மொத்தம் 389 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் செப்டம்பர் 7, 2026 வரை தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h3><strong>காலி பணியிடங்கள்</strong></h3><p>அதில், மேலாளர் (பொறியியல்-சிவில்) / Manager (Engineering-Civil): 145</p><p>மேலாளர் (பொறியியல்-மின்சாரம்)/(Engineering-Electrical): 16</p><p>மேலாளர் (நிதி)/(Finance): 34</p><p>மேலாளர் (தகவல் தொழில்நுட்பம்)/(Information Technology): 5</p><p>மேலாளர் (கட்டிடக்கலை)/(Architecture): 4</p><p>மேலாளர் (சட்டம்)/(Law): 2</p><p>மேலாளர் (தீயணைப்பு சேவைகள்)/(Fire Services): 14</p><p>மேலாளர் (செயல்பாடுகள்)/(Operations): 28</p><p>மேலாளர் (வணிகம்)/(Commercial): 9</p><p>மேலாளர் (நிறுவனத் திட்டமிடல் மற்றும் மேலாண்மை சேவைகள்)/(Corporate Planning &amp; Management Services): 1</p><p>மேலாளர் (நிறுவனத் தொடர்புகள்)/(Corporate Communications): 2</p><p>இளநிலை நிர்வாகி (நிதி)/(Finance): 36</p><p>இளநிலை நிர்வாகி (சட்டம்)/(Law): 6</p><p>இளநிலை நிர்வாகி (செயல்பாடுகள்)/(Operations): 79</p><p>இளநிலை நிர்வாகி (நில அளவை மற்றும் வரைபடவியல்)/(Survey &amp; Cartography): 8</p><p>தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு அறிவிப்பை கவனமாகப் படித்து, அனைத்து விவரங்களும் ஆவணங்களும் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>புதிய &apos;சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல வரி&apos;: தமிழகத்தில் மதுபானங்களின் விலை உயர வாய்ப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-liquor-prices-to-increase-due-to-environment-and-social-welfare-levy</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-liquor-prices-to-increase-due-to-environment-and-social-welfare-levy#comments</comments><guid isPermaLink="false">21a85f48-ac4f-48c1-bf2c-44b2f5681dd9</guid><pubDate>Sun, 09 Aug 2026 02:10:20 +0000</pubDate><atom:updated>2026-08-09T02:10:20.927Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மதுபானம்,Tasmac,மதுபானம் விலை உயர்வு,new tax,புதிய வரி விதிப்பு,Alcohol price increase</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/k82itb1b/TASMAC.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TASMAC]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/k82itb1b/TASMAC.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>புதிய வரி விதிப்பால் தமிழகத்தில் மதுபானங்களின் விலை உயரும்.</p><h2>சுற்றுச்சூழல் வரி</h2><p>தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. அரசுக்கு மதுபானங்கள் விற்பனை மூலம் வருவாய் அதிகம் கிடைத்து வருகிறது. இந்தநிலையில் த.வெ.க. அரசு மதுபான விற்பனையை ஒழுங்குபடுத்தவும். </p><p>காலி மதுபாட்டில்களை அகற்றுதல் மற்றும் மறுசுழற்சி செய்வதில் ஏற்படும் பிரச்சினைகளை சரி செய்யவும், மதுவிலக்கு மற்றும் மறுவாழ்வு, மதுவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றுக்காக 'சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல வரி்' எனும் புதிய வரி விதிப்பை கொண்டு வந்துள்ளது.</p><h2>ரூ.20 வரை நிர்ணயம்</h2><p>சட்டசபையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன், தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரிச் சட்டம், 2006-ல் திருத்தம் செய்து மசோதாவை தாக்கல் செய்தார். இதில் மதுபானங்களின் விற்பனைக்கு கூடுதலாக 'சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல வரி' விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.</p><p>இந்த வரி, ஒரு மதுப்பாட்டிலுக்கு அதிகபட்சம் ரூ.20 என நிர்ணயிக்கப்படும். இது ஏற்கனவே உள்ள வாட் வரிக்கு மேலாக வசூலிக்கப்படும். மதுபானத்தின் வகை, அளவு மற்றும் கொள்கலனின் அளவைப் பொறுத்து வரி விகிதம் மாறுபடும்.</p><h2>மதுபானம் விலை உயரும்</h2><p>இந்தத் திருத்தத்தின் மூலம், சட்டத்தில் புதிய பிரிவு 3(ஏ) சேர்க்கப்படுகிறது. இதன்படி, தமிழகத்தில் மதுபானம் விற்பனை செய்யும் ஒவ்வொரு வணிகர்களும், அரசு அறிவிக்கும் விற்பனை நிலையிலேயே இந்த வரியை செலுத்த வேண்டும். கவர்னரின் ஒப்புதல் பெறப்பட்டு, அரசு அறிவிக்கை வெளியிட்டதும் இந்த புதிய வரி அமலுக்கு வரும்.</p><p>இதன் மூலம் மதுபானங்கள் விலை உயரும். அதேநேரத்தில் டாஸ்மாக்கில் மதுபானங்கள் விலை உயராது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த புதிய வரியால் டாஸ்மாக் மதுபானங்கள் விலை விரைவில் உயரலாம் என்ற நிலை உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம்: அமெரிக்காவுக்கு ஈரான் புதிய நிபந்தனை..!</title><link>https://www.maalaimalar.com/news/world/iran-makes-new-strait-demands-uae-says-ship-was-targeted</link><comments>https://www.maalaimalar.com/news/world/iran-makes-new-strait-demands-uae-says-ship-was-targeted#comments</comments><guid isPermaLink="false">b71b1038-970a-4a41-919a-d84210a1ef24</guid><pubDate>Sun, 09 Aug 2026 02:05:29 +0000</pubDate><atom:updated>2026-08-09T02:05:29.544Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>USA,Iran,ஹார்முஸ் ஜலசந்தி,Strait of Hormuz,அமெரிக்கா ஈரான் போர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/tgw1p1x9/Hormuz001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஹார்முஸ் ஜலசந்தி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/tgw1p1x9/Hormuz001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் விரைவில் முடிவுக்கு வரலாம் என்று அமெரிக்க அதிபர் <a href="https://www.maalaimalar.com/news/world/iran-conflict-us-strategy-gen-don-kane-urges-washington-to-find-exit-plan-as-airstrikes-alone-may-not-meet-trumps-goals">டொனால்டு டிரம்ப்</a> தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் போர் முடிவுக்கான ஒப்பந்தம் இன்னும் எட்டப்படாமல் உள்ளது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தியை வணிக கப்பல்கள் எளிதாக கடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.</p><p>ஹார்முஸ் ஜலசந்தியை நிர்வகிப்பது தொடர்பாகத்தான் தற்போது சண்டை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஈரான் புதிய நிபந்தனையை விதித்துள்ளது. </p><h2>ஈரான் புதிய நிபந்தனை</h2><p>ஈரானின் உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்பான உச்ச தேசிய பாதுகாப்பு மன்றம் அமெரிக்கா தனது நடத்தையைச் சரிசெய்து கொள்ளும் வரை ஹார்முஸ் நீரிணை திறக்கப்படாது என்று அறிவித்துள்ளது. மேலும் ஹார்முஸ் ஜலசந்தி அதன் வழித்தடப் போக்குவரத்தையும் நிர்வகிப்பதற்கான ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை உலுக்கக்கூடிய வகையிலான புதிய நிபந்தனைகளையும் அது முன்வைத்துள்ளது.</p><h2>ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு மன்றம் முன்வைத்துள்ள நிபந்தனைகள் பின்வருமாறு:-</h2><p>அமெரிக்கா இனி ஒருபோதும் ஈரானை அச்சுறுத்தக்கூடாது. ஈரானுடனும் அப்பிராந்தியத்தில் உள்ள அதன் ஆயுதமேந்திய கூட்டாளிகளுடனும் நடத்தி வரும் போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். ஈரான் துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகையை அமெரிக்கா நீக்க வேண்டும். அத்துடன் அப்பகுதியிலிருந்து தனது படைகளைத் திரும்பப் பெற வேண்டும். போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு ஈரானுக்கு முழுமையான இழப்பீடு" வழங்க வேண்டும். பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் மற்றும் முடக்கப்பட்ட சொத்துக்களை எந்த நிபந்தனையுமின்றி விடுவிக்க வேண்டும்.</p><p>இவ்வாறு நிபந்தனைகளை விதித்துள்ளது.</p><p>இதற்கு அமெரிக்கா தரப்பில் உடனடியாக கருத்து ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இதற்கிடையே போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர டிரம்பிற்கு, அமெரிக்க தளபதி அழுத்தம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>அபுதாபி கப்பல் மீது தாக்குதல்</h2><p>அமெரிக்கா- ஈரான் இடையிலான போருக்கு மத்தியில் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முயன்ற கப்பல் மீது ஈரான் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியதாக ஐக்கிய அரபு அமீரகம் குற்றம்சாட்டியுள்ளது.</p><p>அபுதாபியைச் சேர்ந்த ADNOC என்ற எண்ணெய் மற்றும் கியாஸ் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும், அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் தொடங்கியதில் இருந்து 12-க்கும் அதிகமாக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 9 ஆகஸ்ட் 2026: சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம்
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-9-august-2026-surya-narayanar-tirumanjanam</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-9-august-2026-surya-narayanar-tirumanjanam#comments</comments><guid isPermaLink="false">3f9bdde2-0048-4f32-9e00-808604ceba37</guid><pubDate>Sun, 09 Aug 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-08-09T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/5es726pb/suryanarayanar1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Surya narayanar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/5es726pb/suryanarayanar1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆடி-24 (ஞாயிற்றுக்கிழமை)</p><p>பிறை : தேய்பிறை</p><p>திதி :  ஏகாதசி காலை 9.08 மணி வரை பிறகு துவாதசி</p><p>நட்சத்திரம் :  மிருகசீர்ஷம் நண்பகல் 1.38 வரை பிறகு திருவாதிரை</p><p>யோகம் :  சித்தயோகம்</p> <p>ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை</p><p>எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை</p><p>சூலம் : மேற்கு</p><p>நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை</p> <h2>கூற்றுவ நாயனார் குரு பூஜை</h2><p>சர்வ ஏகாதசி. சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி விமானத்தில் புறப்பாடு. கூற்றுவ நாயனார் குரு பூஜை. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சேஷ வாகனத்திலும் ஸ்ரீ ரெங்கமன்னார் கோவர்த்தனகிரியிலும் பவனி. திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் கிளி வாகனத்தில் பவனி. இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் தெப்பம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சன சேவை. </p> <p>திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சனம். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர் பெருமாள் கோவில்களில் காலை அலங்கார திருமஞ்சனம். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன் சிறப்பு அபிஷேகம்.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - லாபம்</p><p>ரிஷபம் - சிறப்பு</p><p>மிதுனம் - பாராட்டு</p><p>கடகம் - நன்மை</p><p>சிம்மம் - வெற்றி</p><p>கன்னி - துணிவு</p> <p>துலாம் - பணிவு</p><p>விருச்சிகம் - இரக்கம்</p><p>தனுசு - இன்பம்</p><p>மகரம் - கடமை</p><p>கும்பம் - உண்மை</p><p>மீனம் - கடமை</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்றைய நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-diesel-price-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-diesel-price-in-chennai#comments</comments><guid isPermaLink="false">a1beab87-6f0e-4013-b70b-08dbdf35e2a7</guid><pubDate>Sun, 09 Aug 2026 01:10:02 +0000</pubDate><atom:updated>2026-08-09T01:10:02.448Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல்,Petrol,பெட்ரோல் டீசல் விலை,Petrol Diesel Price,diesel,டீசல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/7xia9etr/tn-15.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Petrol, Diesel]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/7xia9etr/tn-15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் போர் ஓய்ந்து ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டு மத்திய கிழக்கில் இருந்து கச்சா எண்ணெய் வரத்து அதிகரித்த ஒரு சில நாட்களில் மீண்டும் போர் மூண்டுள்ளதால் சர்வதேச கச்சா எண்ணெய் விலைகளில் மீண்டும் தாக்கம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.</p><h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.</p><h2>பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</h2><p>இந்நிலையில், இன்றைய (09.08.2026 - ஞாயிற்றுக்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>Today Rasipalan | இன்றைய ராசிபலன் 9.8.2026: இவர்களுக்கு வரவு திருப்தி தரும்</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasipalan-982026-in-tamil</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasipalan-982026-in-tamil#comments</comments><guid isPermaLink="false">94e6a603-fdd8-4112-8bfc-f41cf80eb923</guid><pubDate>Sun, 09 Aug 2026 00:59:01 +0000</pubDate><atom:updated>2026-08-09T00:59:01.475Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/22/20441128-rasipalan.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/22/20441128-rasipalan.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>பற்றாக்குறை அகலும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். தொழிலில் முதலீடுகள் செய்ய முன்வருவீர்கள். பிள்ளைகளால் உதிரி வருமானம் உண்டு.</p><h2>ரிஷபம்</h2><p>வரவு திருப்தி தரும் நாள். குடும்பத்தில் அமைதி கூடும். வாகன மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.</p><h2>மிதுனம்</h2><p>எண்ணங்கள் ஈடேறும் நாள். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். சகோதர வழியில் ஒத்துழைப்பு கிட்டும்.</p><h2>கடகம்</h2><p>கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். வீடு, இடம் வாங்கும் முயற்சி வெற்றி தரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.</p><h2>சிம்மம்</h2><p>யோகமான நாள். நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். தொழிலில் வளர்ச்சி திருப்தி தரும். உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும்.</p><h2>கன்னி</h2><p>பிள்ளைகளால் பெருமை சேரும் நாள். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும்.</p><h2>துலாம்</h2><p>புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். கல்யாணக் கனவுகள் நனவாகும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. உத்தியோக முயற்சி கைகூடும்.</p><h2>விருச்சிகம்</h2><p>சிந்தித்துச் செயல்பட வேண் டிய நாள். சிக்கனத்தைக் கையாள்வது நல்லது. வரவைவிட செலவு கூடும். மற்றவர்களின் பிரச்சனையில் தலையிட வேண்டாம்.</p><h2>தனுசு</h2><p>முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு அகலும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.</p><h2>மகரம்</h2><p>அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வளர்ச்சிப் பாதைக்கு வித்திட்டவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.</p><h2>கும்பம்</h2><p>நேற்றைய பிரச்சனை இன்று முடிவிற்கு வரும் நாள். நினைத்த காரியம் நிறைவேறும். இடமாற்றம், எதிர்பார்த்தபடி அமையும். உடன்பிறப்புகளின் உதவி கிட்டும்.</p><h2>மீனம்</h2><p>தடைகள் அகலும் நாள். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.</p>]]></content:encoded></item><item><title>ஈரான் போரை முடிக்கின்ற வழியைப் பாருங்கள் - டிரம்புக்கு தலைமைத் தளபதி அழுத்தம் </title><link>https://www.maalaimalar.com/news/world/iran-conflict-us-strategy-gen-don-kane-urges-washington-to-find-exit-plan-as-airstrikes-alone-may-not-meet-trumps-goals</link><comments>https://www.maalaimalar.com/news/world/iran-conflict-us-strategy-gen-don-kane-urges-washington-to-find-exit-plan-as-airstrikes-alone-may-not-meet-trumps-goals#comments</comments><guid isPermaLink="false">88bdb205-90ad-463d-b705-60c3b0922151</guid><pubDate>Sun, 09 Aug 2026 00:19:39 +0000</pubDate><atom:updated>2026-08-09T00:19:39.739Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>trump,டிரம்ப்,Iran War,ஈரான் போர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/ua4jxg3d/tn-56.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டிரம்ப், டான் கெய்ன் ]]></media:title><media:description type="html"><![CDATA[ டிரம்ப், டான் கெய்ன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/ua4jxg3d/tn-56.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரானுடனான போரிலிருந்து வெளியேறுவதற்கான வழியை வாஷிங்டன் கண்டறிய வேண்டும் என அமெரிக்கக் கூட்டுப் படைகளின் தலைமைத் தளபதியான ஜெனரல் டான் கெய்ன் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.  </p><h2>ஜெனரல் டான் கெய்ன்</h2><p>சிஎன்என் ஊடகத்திற்கு கிடைத்த தகவல்களின் படி,  மோதலை தீவிரப்படுத்தும் வகையில் தற்போது பரிசீலிக்கப்படும் ராணுவ நடவடிக்கைகள் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்றும், வான்வழித் தாக்குதல்கள் மட்டுமே அதிபர் <a href="https://www.maalaimalar.com/news/world/us-senate-approves-100-percent-tariff-on-russian-oil-buyers-what-it-means-for-india">டிரம்பின் </a>இலக்குகளை அடைய உதவாது என்றும் ஜெனரல் டான் கெய்ன் நம்புகிறார்.</p> <h2>இழப்பு</h2><p>ராணுவத்தின் மீதான இழப்புகளையும், கையிருப்பில் ஆயுதங்கள் குறைந்து வருவதையும் கருத்தில் கொண்டு, ராணுவத்தைப் பாதுகாப்பதற்காகவே கெய்ன் மாற்று வழிகளைத் தேடி வருகிறார் என கூறப்படுகிறது.</p><p>ஈரானுக்குள் தரைப்படை வீரர்களை அனுப்பதொடர்ந்து தயக்கம் காட்டி வரும் அதிபர் டிரம்ப், வான்வழி தாக்குதல் மூலமே ஈரானை பேச்சுவார்த்தைக்குப் பணிய வைக்க முடியும் என நம்புகிறார். ஆனால், அந்த முடிவு வெற்றியடைவது கடினம் என கெய்ன் கருதுகிறார்.</p><p>ஈரானுடனான போர் ஒரு முக்கியமான திருப்புமுனையை எட்டியுள்ளதாகக் கருதும் கெய்ன், இது குறித்துப் பிற முக்கியஸ்தர்களான சிஐஏ இயக்குநர் ஜான் ரட்க்ளிப், வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் ஆகியோருடன் பேசி வருவதாக சிஎன்என் தகவல் தெரிவிக்கிறது.</p> <h2>டிரம்ப்</h2><p>மோதலைத் தீவிரப்படுத்துவதால் ஏற்படும் பாதகங்களை எச்சரித்த போதிலும், அதிபர் டிரம்புடனான தனது உறவு பாதிக்கப்படக் கூடாது என்பதில் கெய்ன் கவனமாக இருக்கிறார்.</p><p>சமீபத்தில் நடைபெற்ற வெள்ளை மாளிகை கூட்டத்தில், குறைந்து வரும் அமெரிக்க வெடிமருந்து இருப்புகள் குறித்து எச்சரித்த அதே வேளையில், "நீங்கள் இந்த ராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல விரும்பினால், ஈரானை நம்மால் முற்றிலும் நிர்மூலமாக்க முடியும்" என்றும் அவர் டிரம்பிடம் உறுதியளித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையரைக்கு சிரோமணி அகாலி தளம் ஆதரவு .. பாஜகவுடன் மீண்டும் மலரும் கூட்டணி?</title><link>https://www.maalaimalar.com/news/national/akali-dal-backs-delimitation-and-womens-quota-bill-after-modi-meet-key-shift-in-punjab-politics</link><comments>https://www.maalaimalar.com/news/national/akali-dal-backs-delimitation-and-womens-quota-bill-after-modi-meet-key-shift-in-punjab-politics#comments</comments><guid isPermaLink="false">da3a6661-c71f-4cfc-8777-9c64ee4ade5a</guid><pubDate>Sat, 08 Aug 2026 23:41:39 +0000</pubDate><atom:updated>2026-08-08T23:41:39.927Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sukhbir Singh Badal,Shiromani Akali Dal,Delimitation,தொகுதி மறுவரையரை,சிரோமணி அகாலி தளம்,சுக்பீர் சிங் பாதல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/5uhk3u0x/tn-52.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சுக்பீர் சிங் பாதல், மோடி]]></media:title><media:description type="html"><![CDATA[ சுக்பீர் சிங் பாதல், மோடி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/5uhk3u0x/tn-52.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பஞ்சாபில் முக்கிய மாநில கட்சியாக விளங்கும் சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் நேற்று முன் தினம் டெல்லியில் பிரதமர் மோடியை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். </p><p>இதன் மறுநாள், அதாவது நேற்று, முக்கிய அரசியல் திருப்பமாகதொகுதி மறுவரையறை  மற்றும் மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவுக்கு தமது கட்சி ஆதரவு அளிப்பதாக சுக்பீர் சிங் பாதல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.  </p> <h2>ஆதரவு</h2><p>நேற்று சண்டிகரில் நடைபெற்ற கட்சியின் மூத்த தலைவர்கள் கூட்டத்திற்குப் பிறகு, சுக்பீர் சிங் பாதல் வெளியிட்ட அறிக்கையில்,</p><p>"நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள தொகுதி மறுவரையறைச் செயல்பாடுகளுக்கு அகாலி தளம் முழு ஆதரவு அளிக்கிறது. அனைத்து மாநிலங்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் நியாயமான முறையில் இது செயல்படுத்தப்பட வேண்டும்.</p><p>அனைத்து மாநிலங்களுக்கும் சீரான முறையில் 50% நாடாளுமன்றத் தொகுதிகளை உயர்த்த மத்திய அரசு கொண்டுவந்துள்ள யோசனையை அகாலி தளம் ஆதரிக்கிறது.</p><p>சீக்கிய குருமார்களின் போதனைகளைப் பின்பற்றி, பெண்களுக்குச் சட்டசபைகள் மற்றும் நாடாளுமன்றத்தில் உடனடி இடஒதுக்கீடு வழங்குவதை அகாலி தளம் வலியுறுத்துகிறது." என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீட்டிற்கான அரசியலமைப்புத் திருத்த மசோதாவை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைத் திரட்டி வரும் நிலையில், அகாலி தளத்தின் இந்த ஆதரவு நிலைப்பாடு தேசிய அரசியலிலும், பஞ்சாப் மாநில அரசியலிலும் மிக முக்கியமான திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. சிரோமணி அகாலி தளம் வசம் 1 எம்.பி உள்ளது குறிப்பிடத்தக்கது.</p> <h2>கூட்டணி</h2><p>2020ஆம் ஆண்டு மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அகாலி தளம் வெளியேறியது.</p><p>பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராகவும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவும் இரு பழைய தோழமைகளும் மீண்டும் இணைய வேண்டிய சூழல் நிலவுவதாகக் கட்சியின் மூத்த தலைவர்கள் கருதுகின்றனர்.</p><p>பிரதமர் மோடியுடன் சுக்பீர் சிங் பாதல் நடத்திய பேச்சுவார்த்தை மிகவும் நேர்மறையாக அமைந்ததாகவும், பஞ்சாபின் வளர்ச்சி மற்றும் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கூட்டணி புதுப்பிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.</p><p>இதன் மூலம் பஞ்சாபில் பாஜக - அகாலி தளம் இடையே மீண்டும் கூட்டணி உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் பேசி வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>தேன் பொறியில் சிக்கிய விமானப்படை விங் கமாண்டர்.. ராணுவ ரகசியங்களை கசியவிட்ட குற்றச்சாட்டில் கைது </title><link>https://www.maalaimalar.com/news/national/indian-air-force-officer-honey-trapped-and-arrested-in-delhi-for-leaking-military-secrets</link><comments>https://www.maalaimalar.com/news/national/indian-air-force-officer-honey-trapped-and-arrested-in-delhi-for-leaking-military-secrets#comments</comments><guid isPermaLink="false">dd9a607a-af44-4c63-a680-fd9724747d85</guid><pubDate>Sat, 08 Aug 2026 23:09:29 +0000</pubDate><atom:updated>2026-08-08T23:09:29.034Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விமானப்படை,Air Force,spy,ஹனி டிராப்,Honey Trap,உளவாளி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/w85906na/tn-57.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கோப்புப் படம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ கோப்புப் படம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/w85906na/tn-57.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய விமானப்படை விங் கமாண்டர் ஒருவர் ஹனி டிராப் எனப்படும் தேன் பொறியில் சிக்கி நாட்டின்  ரகசியங்களை கசியவிட்ட  குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88">விமானப்படையின் </a>உளவுப் பிரிவு அளித்த தகவலின் பேரில், டெல்லி காவல்துறை மே மாத இறுதியில் இவரைக் கைது செய்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.</p><p>அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டத்தின்  கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தற்போது நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.</p> <h2>ரகசியங்கள் கசிவு</h2><p>காவல்துறை வட்டாரங்களின் கூற்றுப்படி, சோஷியல் மீடியா வாயிலாக அந்த அதிகாரிக்கு பெண் ஒருவருடன் அறிமுகம் கிடைத்துள்ளது.</p><p>ஹனி டிராப் என்பது இவ்வாறு பெண்கள் மூலம் ஒருவரை வலையில் வீழ்த்தி தங்களுக்கு தேவையானதை செய்ய வைப்பதை குறிக்கிறது.</p><p>இதற்கு விதிவிலக்கின்றி அந்த அதிகாரிக்கு ஆன்லைனில் ஏற்பட்ட இந்தப் பழக்கம், நாளடைவில் இந்திய ராணுவத்தின் வகைப்படுத்தப்பட்ட ரகசிய ஆவணங்கள் மற்றும் முக்கியமான தகவல்களை அனுப்பும் அளவிற்குச் சென்றுள்ளது.</p><p>இந்தியாவின் ராணுவ ரகசியங்களைச் சேகரிப்பதற்காக நடத்தப்பட்ட பாகிஸ்தானின் உளவு வேலையின் ஒரு பகுதியே இதுவாகும்.</p> <h2>தொடரும் விசாரணை</h2><p>டெல்லி காவல்துறை ஜூலை தொடக்கத்திலேயே நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துவிட்டது.</p><p>பாதுகாப்பு தொடர்பான தகவல்கள் எந்த அளவிற்கு வெளியே கசிந்துள்ளன, இந்த உளவு வலையமைப்பில் இன்னும் யார் யாரெல்லாம் தொடர்பில் இருக்கிறார்கள் என்பது குறித்த பல்வேறு கோணங்களில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>மதுபோதையில் மலம் கழித்து மாணவர்களை அள்ளச் செய்த அரசுப் பள்ளி தலைமையாசிரியர் | Madhya Pradesh</title><link>https://www.maalaimalar.com/news/national/drunk-headmaster-forces-students-to-clean-his-faeces-in-mp-government-school</link><comments>https://www.maalaimalar.com/news/national/drunk-headmaster-forces-students-to-clean-his-faeces-in-mp-government-school#comments</comments><guid isPermaLink="false">2833a485-3524-40fb-b379-2a7e1fa9e0ea</guid><pubDate>Sat, 08 Aug 2026 22:38:38 +0000</pubDate><atom:updated>2026-08-08T22:38:38.150Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்தியப் பிரதேசம்,அரசுப் பள்ளி,பள்ளி ஆசிரியர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/b6jo7oey/tn-54.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/b6jo7oey/tn-54.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்தியப் பிரதேச மாநில அரசு தொடக்கப் பள்ளியில் குடிபோதையில் தலைமையாசிரியர் பள்ளி வளாகத்தில் மலம் கழித்து அதனைப் பள்ளி மாணவர்களைக் கொண்டே சுத்தம் செய்ய வைத்த கொடூரம் அரங்கேறியுள்ளது. </p><h2>அரசுப் பள்ளி </h2><p>மத்தியப் பிரதேச மாநிலம் மைஹார் மாவட்டத்தில்  ஹர்டுவா கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட அமுவா தோலா அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக  பணியாற்றி வருபவர் சமைலால் கோல் (50)</p><p>இவர் தொடர்ந்து பள்ளிக்கு மதுபோதையில் வந்து பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதாக, அங்கு பயிலும் குழந்தைகளின் பெற்றோர்கள் நீண்ட நாட்களாகக் புகார் தெரிவித்து வந்தனர்.</p><p>பெற்றோர்களின் புகாரைத் தொடர்ந்து, கிராம பஞ்சாயத்துத் தலைவர் ராமாவதார் கோல் மற்றும் ஊர் பொதுமக்கள் நேரடியாகப் பள்ளிக்குச் சென்று ஆய்வு நடத்தினர்.</p> <h2>மது, குட்கா, மலம்</h2><p>ஆய்வின் போது, ஆசிரியர் சமைலால் கோல் தினமும் மது அருந்திவிட்டுப் பள்ளிக்கு வருவதை அம்மாணவர்கள் உறுதிப்படுத்தினர்.</p><p>மேலும், ஒருமுறை ஆசிரியர் பள்ளி வளாகத்திலேயே மலம் கழித்துவிட்டு, அதைத் தங்களை விட்டுச் சுத்தம் செய்ய வைத்ததாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.</p><p>பஞ்சாயத்துத் தலைவர் பார்வையிட்ட போது மலம் அகற்றப்பட்டிருந்த போதிலும், வகுப்பறைச் சுவர்கள் முழுவதும் ஆசிரியர் குட்கா மென்று துப்பிய கறைகளால் பாழாகியிருந்தது கண்டறியப்பட்டது.</p><p>"ஆசிரியர் தினமும் கடுமையான போதையில் இருந்திருக்கிறார். அவரது குடும்பத்தினர் தான் அவரைத் தினமும் காலையில் பள்ளியில் கொண்டு வந்து விட்டு, மாலையில் அழைத்துச் செல்கிறார்கள்" என்று பஞ்சாயத்து தலைவர் தெரிவித்துள்ளார்.</p> <h2>விசாரணை</h2><p>கிராம மக்கள் அளித்த புகாரின் பேரில் கல்வித் துறை அதிகாரிகள் பள்ளிக்கு நேரடியாக வந்து விசாரணை நடத்தினர்.</p><p>விசாரணையைத் தொடர்ந்து சமைலால் கோலுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.</p><p>பதில் பெறப்பட்ட பிறகு, அவர் மீது இடைநீக்கம் உள்ளிட்ட அடுத்தகட்டக் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>ஐரோப்பாவில் கேஷியர் வேலை.. ரூ.11 லட்சம் வாங்கிக்கொண்டு 
இந்திய பெண்ணை மதுக்கடை முதலாளியிடம் விற்ற வேலைவாய்ப்பு ஏஜென்சி</title><link>https://www.maalaimalar.com/news/national/indian-woman-trafficked-to-portugal-pune-agency-sells-cashier-job-seeker-to-liquor-shop-owner-after-taking-11-lakh</link><comments>https://www.maalaimalar.com/news/national/indian-woman-trafficked-to-portugal-pune-agency-sells-cashier-job-seeker-to-liquor-shop-owner-after-taking-11-lakh#comments</comments><guid isPermaLink="false">bc358f44-2239-4479-a18c-9e5a253221ed</guid><pubDate>Sat, 08 Aug 2026 21:48:41 +0000</pubDate><atom:updated>2026-08-08T21:48:41.750Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords></media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/9ll7g7qu/tn-48.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கோப்புப் படம் 
]]></media:title><media:description type="html"><![CDATA[ கோப்புப் படம் 
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/9ll7g7qu/tn-48.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஐரோப்பிய நாட்டில் மாதம் ரூ. 1.5 லட்சம் சம்பளத்தில் சூப்பர் மார்க்கெட் கேஷியர் வேலை வாங்கி  தருவதாகக் கூறி இந்திய பெண் ஒருவர் விற்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. </p><h2>கடத்தல்</h2><p>மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த அந்த 28 வயது பெண்ணை புனேவை மையமாகக் கொண்டு இயங்கும் ஒரு தனியார் <a href="https://www.maalaimalar.com/news/national/number-of-unemployed-graduates-increases-by-67-percent-across-the-country">வேலைவாய்ப்பு </a>ஏஜென்சி போர்ச்சுகல் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது.</p><p>பெண்ணிடம் ரூ. 11 லட்சத்தை இந்தியாவிலேயே வைத்து அந்த வேலைவாய்ப்பு ஏஜென்சி கட்டணமாக பெற்றுள்ளது. </p><p>போர்த்துகல் சென்றடைந்ததும், அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்த கும்பல், அவரை அங்கிருந்த ஒரு பீர் மதுபானக் கடை உரிமையாளரிடம் விற்றுள்ளது. </p> <h2>கட்டாய வேலை</h2><p>அங்கு அப்பெண்ணைப் பலவந்தப்படுத்தி வேலை செய்ய வைத்து, உடலளவிலான மற்றும் மனதளவிலான சித்ரவதைகளுக்கு ஆளாக்கியுள்ளனர்.</p><p>தனது பாஸ்போர்ட்டைத் திரும்பக் கேட்டபோது, அக்கும்பல் மேலும் பணத்தைக் கேட்டு மிரட்டியுள்ளது.</p><h2>மிரட்டல்</h2><p>ஒருவழியாக இந்தியா திரும்பிய பிறகும், அக்கும்பல் அப்பெண்ணின் கணவரைத் தொடர்புகொண்டு வேறு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மேலும் ரூ. 3 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளது.</p><p>இதனால் கடும் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட பெண், புனே குற்றப்பிரிவுகாவல்துறையை அணுகிப் புகார் அளித்தார்.</p><p>அவரது புகாரின் பேரில், மனிதக் கடத்தல், மோசடி மற்றும் மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் புனே மற்றும் போர்ச்சுகலை சேர்ந்த 7 நபர்கள் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>ஜென் Z தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்.. எனக்கு பதவி பொருட்டல்ல - தர்மேந்திர பிரதான் மனம் திறப்பு </title><link>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protest-dharmendra-pradhan-says-ministerial-post-not-important-after-resignation-amid-student-agitation</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protest-dharmendra-pradhan-says-ministerial-post-not-important-after-resignation-amid-student-agitation#comments</comments><guid isPermaLink="false">852c7bfa-403e-448d-8a93-b4ff5abc2f8d</guid><pubDate>Sat, 08 Aug 2026 20:58:57 +0000</pubDate><atom:updated>2026-08-08T20:58:57.887Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,நீட் வினாத்தாள் கசிவு,NEET Question Paper Leak,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/yw8m978k/tn-55.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தர்மேந்திர பிரதான் ]]></media:title><media:description type="html"><![CDATA[ தர்மேந்திர பிரதான் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/yw8m978k/tn-55.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளை எதிர்த்து மாணவர்கள் நடத்திய <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">போராட்டத்தால் </a>மத்தியக் கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த தர்மேந்திர பிரதான், தனது ராஜினாமா குறித்து முதன்முறையாக மௌனம் கலைத்துள்ளார்.</p><p>டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த தீவிர போராட்டங்களுக்கு மத்தியில் ஜூலை 25 அன்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அவர், இரு வாரங்களுக்குப் பிறகு நேற்று புவனேஸ்வரில் உள்ள ஜிஎம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் உரையாற்றினார். </p> <h2>தர்மேந்திர பிரதான்</h2><p>அவர் பேசியதாவது,</p><p>"ஜென் Z  நமது குழந்தைகள். ஆனால் நீட் விவகாரத்தின் போது சில சக்திகள் அவர்களைத் தவறாக வழிநடத்த முயன்றன. எனக்கு அப்போது தனிப்பட்ட சுயநலன்கள் எதுவும் இருக்கவில்லை.</p><p>இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 2 கோடி குழந்தைகள் பிறக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 2 கோடி குழந்தைகள் பிறந்துள்ளனர். அவர்களுக்குப் பல கனவுகளும் லட்சியங்களும் உள்ளன. அவர்கள்தான் இந்தியாவை உலகின் வழிகாட்டியாக மாற்றுவார்கள். எனக்கு இந்த அமைச்சர் பதவி முக்கியமில்லை" என்று தெரிவித்தார்.</p><p>விமான நிலையம் அருகே பிஜேடி இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பினர் "தர்மேந்திர பிரதான் திரும்பிப் போ" என முழக்கமிட்டு நடத்திய போராட்டத்தைக் குறிப்பிட்ட அவர், "நான் ஒரு விவசாயியின் மகன். நீங்கள் திரும்பிப் போகச் சொன்னாலும், நான் மீண்டும் மீண்டும் வருவேன்" என்றார்.</p><p>பிஜேடி இளைஞர் மற்றும் மாணவர் அணியினர் சுமார் 30 பேரை சம்பல்பூர் காவல்துறையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.</p> <h2>ஜந்தர் மந்தர் போராட்டம்</h2><p>நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் பதவியை தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யவேண்டும் என்ற முழக்கத்துடன் அபிஜித் தீப்கேவின் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்திய 1 மாத கால போராட்டம் கடந்த வாரம் வெற்றி பெற்றது.</p><p>அழுத்தத்தின் பேரில் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். அதேநேரம், பிரதமர் மோடியும் தனது நீண்ட நெடிய மௌனத்தை களைத்து கடந்த வாரம் இன்ஸ்டாகிராமில் வீடியோ மூலம் இதுபற்றி பேசினார்.</p><p>தேர்வு முறைகேடுகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளுக்கு அதிக தண்டனை விதிக்கும் சிறப்பு மசோதா ஆகிய அறிவுப்புகளை அவர் அடுத்தடுத்து வெளியிட்டார்.</p><p>இதனிடையே ஜூலை 20 நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்திய மாணவர்கள் மீது காவல்துறை மற்றும் ஆர்ஏஎப் படையால் பெல்லட் துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றால் நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் சர்ச்சையாகி வருவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>சக்ரவியூகத்தில் சிக்கிய இளைஞர்கள்.. பட்டம் பெற்றும் வேலை இல்லை..  கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டுவிட்டன - ராகுல்</title><link>https://www.maalaimalar.com/news/national/india-youth-jobs-crisis-rahul-gandhi-warns-on-rising-education-costs-unemployment-and-ai-risks</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-youth-jobs-crisis-rahul-gandhi-warns-on-rising-education-costs-unemployment-and-ai-risks#comments</comments><guid isPermaLink="false">4c8934c7-9dd1-40e1-9159-47f159f38452</guid><pubDate>Sat, 08 Aug 2026 19:58:21 +0000</pubDate><atom:updated>2026-08-08T19:58:21.974Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Unemployment,Employment,Education,கல்வி,வேலைவாய்ப்பு,வேலையின்மை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/o008moc4/tn-50.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராகுல்]]></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/o008moc4/tn-50.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள கே.பி. மைதானத்தில் நேற்று நடைபெற்ற ‘சத்ரோன் கி கூஞ்ச்’  என்ற <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">மாணவர் </a>கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டு உரையாற்றினார். </p><h2>கல்வி </h2><p>அப்போது பேசிய அவர், "அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யாவின் வல்லமையைப் பற்றி உலக அளவில் அதிகம் பேசப்படுகிறது. ஆனால், இந்தியாவில் உள்ள சுமார் 40 கோடி இளைஞர்களே நாட்டின் உண்மையான மற்றும் இணையற்ற ஆற்றலாகத் திகழ்கின்றனர்.</p><p>இந்த பிரயாக்ராஜ் முற்காலத்தில் நாட்டின் மிக முக்கியமான கல்வி மையமாகத் திகழ்ந்தது. அலகாபாத் பல்கலைக்கழகம் நாட்டின் மிகச்சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக இருந்தது.</p><p>ஆனால், தற்போதைய சூழலில் இந்திய இளைஞர்கள் ஒரு சக்ரவியூகத்தில் மாட்டியுள்ளனர்.</p><p>கல்வியின் செலவு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.</p><p>ஒரு நல்ல வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மாணவர்கள் தங்களின் வாழ்வில் பல ஆண்டுகளையும், பெற்றோரின் பெருந்தொகையையும் செலவிட்டுப் படிக்கின்றனர். ஆனால் பட்டம் பெற்ற பிறகும் தகுதிக்கேற்ற வேலை கிடைப்பதில்லை.</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/37yva6c2/tn-49.jpg" /></figure><h2>வேலையின்மை</h2><p>இந்தியாவில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக் கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டு விட்டன.</p><p>நாட்டின் உற்பத்தித் துறை கடுமையான சரிவை சந்தித்துள்ளது. இளைஞர்கள் சுயதொழில் தொடங்கவோ அல்லது வணிகம் செய்யவோ வங்கிகளில் கடன் பெறுவது மிகவும் கடினமாக உள்ளது.</p><p>அரசுப் பணிகளுக்கான அரசுப் தேர்வு வினாத்தாள்கள் தொடர்ந்து கசிவது தகுதியான மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்குகிறது.</p><p>ஏஐ தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் இருக்கும் வேலைகளும் பறிபோகும் அபாயம் எழுந்துள்ளது.</p><p>மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி வரி கொள்கைகள் நாட்டின் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களைச் சீரழித்துவிட்டன.</p><p>சிறு நிறுவனங்களுக்குத் தேவையான கடன் உதவிகளை வழங்கி ஊக்கப்படுத்த பொதுத்துறை வங்கிகள் தவறிவிட்டன.</p><p>பொதுத்துறை நிறுவனங்களைத் தொடர்ந்து தனியார்மயமாக்குவது வேலைவாய்ப்புகளை மேலும் சுருக்குகிறது.</p><p>முறையான வேலைகள் இல்லாததால் இளைஞர்கள் அதிகளவில் பகுதிநேர மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான கிக் வேலைகளுக்குத் தள்ளப்படுகிறார்கள். தனியார் துறையிலும் ஏஐ பயன்பாடு அதிகரிக்கும் போது இந்த வேலைகளும் குறையக்கூடும்.</p> <h2>இந்தியரின் தரவுகள்</h2><p>செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் அனைத்தும் மக்களின் தரவுகளைக் கொண்டே உருவாக்கப்படுகின்றன.</p><p>எனவே இந்தியர்களின் தரவுகள் இந்தியர்களுக்கே சொந்தமான சொத்தாகக் கருதப்பட வேண்டும்.</p><p>நாட்டின் எதிர்காலம் இளைஞர்களின் திறமையில் மட்டுமல்லாமல், அவர்கள் உருவாக்கும் தரவுகளின் மீதும் சார்ந்துள்ளது.</p><p>தொழில்நுட்ப மாற்றங்களால் உருவாகும் புதிய பொருளாதாரத்தின் நன்மைகள் இளைஞர்களைச் சென்றடையாவிட்டால், அந்தத் தொழில்நுட்பமே அவர்களுக்குப் புதிய வேலைகளைத் தருவதற்குப் பதிலாக இருக்கும் வேலையையும் பறித்துவிடும்.</p> <h2>ஆதிக்கம்</h2><p>நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரம் ஒருசிலரின் கைகளில் மட்டுமே குவிந்துள்ளது. நாட்டின் பெருநிறுவனங்கள் , அரசு மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியவை இந்தியாவின் முக்கிய நிறுவனங்களின் மீது ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றன.</p><p>நாட்டின் பொருளாதார வளங்கள், புதிய தொழில்நுட்பம் மூலம் உருவாகும் சொத்துக்கள் மற்றும் வேலைவாய்ப்புகள் ஆகியவற்றில் நாட்டின் இளைஞர்களுக்கும் சமமான பங்கு கிடைக்க வேண்டும் என்பதே எனது முதன்மை நோக்கம்" என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் உடன் பிரதமர் மோடி போனில் உரையாடல்.. 4வது குழந்தை பெற்றதற்கு வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/world/modi-jd-vance-call-leaders-discuss-strengthening-india-us-strategic-partnership-amid-fcra-concerns</link><comments>https://www.maalaimalar.com/news/world/modi-jd-vance-call-leaders-discuss-strengthening-india-us-strategic-partnership-amid-fcra-concerns#comments</comments><guid isPermaLink="false">5ad3ffdc-39c8-4e1c-8c6c-3b204e66d79b</guid><pubDate>Sat, 08 Aug 2026 18:52:43 +0000</pubDate><atom:updated>2026-08-08T18:52:43.799Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,JD Vance,ஜேடி வான்ஸ்,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/br8d91lj/tn-51.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மோடி, வான்ஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ மோடி, வான்ஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/br8d91lj/tn-51.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் உடன்  <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">பிரதமர் மோடி </a>தொலைபேசியில் உரையாடியுள்ளார். </p><p>நேற்று ஜேடி வான்ஸ் அழைப்பை அட்டென்ட் செய்து பேசிய பிரதமர் மோடி, முக்கிய துறைகளில் இந்தியா - அமெரிக்கா இடையிலான உலகளாவிய மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தியதாக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும்,  ஜே.டி. வேன்ஸ் மற்றும் உஷா வேன்ஸ் தம்பதியருக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்ததற்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதாக பிரதமர் மோடி தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார். </p><p>இத்தம்பதியருக்கு அண்மையில் நான்காவது ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு 'அலெக் நீல் வேன்ஸ்' என பெயரிடப்பட்டுள்ளது. </p> <h2>FCRA அச்சம்</h2><p>இந்தியாவின் வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தில் (FCRA) கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் குறித்து அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ரைலி மூர் கவலை தெரிவித்த சில நாட்களில் இந்த தொலைபேசி உரையாடல் நடந்துள்ளது.</p><p>FCRA சட்டத் திருத்தங்கள் மூலம் இந்தியாவில் உள்ள தேவாலயங்கள் மற்றும் சமய அறக்கட்டளைகளை இந்திய அரசு கையகப்படுத்த வாய்ப்புள்ளதாகவும், இது கிறிஸ்தவர்களுக்கு எதிரான நடவடிக்கை என்றும் அமெரிக்க எம்பி ரைலி மூர் குற்றம் சாட்டியிருந்தார்.</p><p>இதற்கு வியாழக்கிழமையன்று பதிலளித்த இந்திய வெளியுறவு அமைச்சகம், "சட்டமன்ற மற்றும் சட்ட விவகாரங்கள் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள்" என்றும், அமெரிக்கா உட்பட பல நாடுகளிலும் வெளிநாட்டு நிதி உதவிகளைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள் அமலில் உள்ளதையும் சுட்டிக்காட்டியது.</p> <h2>100% வரி </h2><p>ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவாயு தொடர்ந்து வாங்கும் நாடுகளுக்கு தடைகள் மற்றும் 100% வரை இறக்குமதி வரிகளைவிதிக்க அமெரிக்க அதிபருக்கு அதிகாரம் அளிக்கும் முக்கியமான மசோதாவிற்கு அமெரிக்க மேலவை ஒப்புதல் அளித்துள்ளது. </p><p>ரஷியாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் முன்னணி 5 நாடுகளுக்குக் கடுமையான தடைகள் மற்றும் கூடுதல் வரிகளை விதிக்க இந்த மசோதா அமெரிக்க அதிபருக்கு அதிகாரம் அளிக்கிறது.</p><p>இதில் ரஷியாவிடம் பெருமளவில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மற்றும் சீனா நேரடியாகப் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>மும்பை சித்திவிநாயகர் கோவில் நன்கொடையில் முறைகேடு - விரிவான விசாரணைக்கு முதல்வர் பட்நாவிஸ் உத்தரவு </title><link>https://www.maalaimalar.com/news/national/mumbai-siddhivinayak-temple-donation-scam-18-crore-irregularities-alleged-9-staff-arrested-as-maharashtra-cm-orders-audit-of-5-years-trust-finances</link><comments>https://www.maalaimalar.com/news/national/mumbai-siddhivinayak-temple-donation-scam-18-crore-irregularities-alleged-9-staff-arrested-as-maharashtra-cm-orders-audit-of-5-years-trust-finances#comments</comments><guid isPermaLink="false">e3dc798c-532d-494f-aa06-8fbdcf2b375e</guid><pubDate>Sat, 08 Aug 2026 18:03:26 +0000</pubDate><atom:updated>2026-08-08T18:03:26.813Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,சித்திவிநாயகர் கோவில்,அயோத்தி ராமர் கோவில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/pwz0yg5y/tn-47.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மும்பை சித்திவிநாயர் கோவில், பட்நாவிஸ்  ]]></media:title><media:description type="html"><![CDATA[ மும்பை சித்திவிநாயர் கோவில், பட்நாவிஸ்  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/pwz0yg5y/tn-47.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE">மகாராஷ்டிரா </a>மாநிலம் மும்பையில் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோவில் அமைந்துள்ளது.</p><p>செல்வத்தை அள்ளித்தருவதாக நம்பப்படும் இந்த சித்திவிநாயகர் கோவிலின் நன்கொடைப் பணத்தில் பெருமளவு முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. </p><h2>பாஜக ஆளும் மாநிலங்களில் தொடரும் நன்கொடை திருட்டுகள்</h2><p>உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் நன்கொடை படம் பெருமளவு அறக்கட்டளை ஊழியர்களால் திருடப்பட்ட விவகாரம் அதிர்வலையை ஏற்படுத்தி வரும் நிலையில் பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான மகாராஷ்டிராவிலும் நன்கொடை திருட்டு புகார்கள் வந்துள்ளன.</p><p>பாஜக ஆட்சி நடக்கும் உத்தரகாண்ட் மாநிலத்தின் புகழ்பெற்ற சோம்நாத் கோவிலில் நன்கொடை திருட்டு புகார்கள் எழுந்த நிலையில் இதுதொடர்பான விசாரணையில் கோவிலின் காவலாளி போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.</p> <h2>சித்தி விநாயகர் கோவில் திருட்டு</h2><p>மும்பையிலுள்ள இக்கோவிலுக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் காணிக்கை வருகிறது. இந்த ஆண்டு ரூ. 182 கோடியும் கடந்த ஆண்டு ரூ. 137 கோடியும் வந்துள்ளது.</p><p>சித்திவிநாயகர் கோவில் நன்கொடைத் தொகையில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.18 கோடி முறைகேடு நடந்துள்ளதாக மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா லைவர் ராஜ் தாக்கரே பரபரப்பு குற்றச்சாட்டைக் முன்வைத்தார்.</p><p>இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், கோவிலின் 9 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>நன்கொடை முறைகேடு குறித்து விரிவான விசாரணை நடத்த அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.</p><p>கடந்த 5 ஆண்டுகால கோவில் அறக்கட்டளையின்அனைத்து நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் ஆவணங்களை விரிவாகத் தணிக்கை செய்யத் தொடர்புடைய அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.</p><p>கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் கடந்த வியாழக்கிழமை முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸைச் சந்தித்து, 2023 முதல் 2026 வரையிலான காலக்கட்டத்தின் நன்கொடை விவரங்களைச் சமர்ப்பித்தனர். இந்த விவரங்களை ஆய்வு செய்த பிறகே, கடந்த 5 ஆண்டுகளின் அனைத்து ஆவணங்களையும் தணிக்கை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இஸ்லாமிய &apos;நேட்டோ&apos;.. இந்தியா, இஸ்ரேலுக்கு எதிராக காய் நகர்த்திய பாகிஸ்தான்  - மெக்கா ஒப்பந்தம் என்ன சொல்கிறது?</title><link>https://www.maalaimalar.com/news/world/islamic-nato-call-pakistan-urges-strong-alliance-of-muslim-nations-against-india-and-israel</link><comments>https://www.maalaimalar.com/news/world/islamic-nato-call-pakistan-urges-strong-alliance-of-muslim-nations-against-india-and-israel#comments</comments><guid isPermaLink="false">47017dc6-4809-48a4-9745-03b759399ed5</guid><pubDate>Sat, 08 Aug 2026 17:09:30 +0000</pubDate><atom:updated>2026-08-08T17:09:30.019Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா பாகிஸ்தான்,கவாஜா ஆசிப்,Khawaja Asif,நேட்டோ,NATO,India-Pakistan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/35dbidcd/tn-45.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மெக்கா ஒப்பந்தம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மெக்கா ஒப்பந்தம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/35dbidcd/tn-45.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியா மற்றும் இஸ்ரேலை எதிர்கொள்ள இஸ்லாமிய நாடுகளுக்கு நேட்டோ போன்ற போன்ற வலுவான கூட்டணி அத்தியாவசியம் என்று <a href="https://www.maalaimalar.com/news/world/direct-rail-route-to-india-via-pakistan-russias-new-land-trade-proposal">பாகிஸ்தான் </a>பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் பேசியுள்ளார்.</p><h2>நேட்டோ </h2><p>பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் நேட்டோ என்ற அமைப்பை கொண்டுள்ளன. இந்த நேட்டோ ராணுவம் ஒட்டுமொத்த ஐரோப்பாவுக்கும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு படையாக செயல்படுகிறது. </p><p>இந்நிலையில் இஸ்லாமிய நேட்டோவை உருவாக்க ஆசிப் அறிவுறுத்தியுள்ளார். </p> <h2>மெக்கா ஒப்பந்தம்</h2><p>நேற்று, மெக்காவில் சவூதி அரேபியா, துருக்கி, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் முத்தரப்புப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.</p><p>இந்த ஒப்பந்தத்தின்படி சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது நடத்தப்படும் ஆயுதத் தாக்குதல், மூன்று நாடுகளின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகக் கருதப்படும்.</p><p>இது நேட்டோ அமைப்பின் 'பிரிவு 5' கூட்டுப் பாதுகாப்பு விதியை ஒத்த ஒப்பந்தமாகப் பார்க்கப்படுகிறது.</p> <figure><img alt="ஆசிப் " src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/ihro30ho/tn-46.jpg" /><figcaption>ஆசிப் </figcaption></figure><h2>ஆசிப் பேச்சு</h2><p>இதையடுத்து பாகிஸ்தான் தொலைக்காட்சியொன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், சவூதி, துருக்கி மற்றும் பாகிஸ்தானுக்குப் பயங்கரவாதம் ஒரு பொதுவான அச்சுறுத்தல் எனக் குறிப்பிட்டுள்ள கவாஜா ஆசிப், ஆப்கானிஸ்தானிலிருந்து செயல்படும் இந்திய ஆதரவு அமைப்புகளே (தாலிபான்) பாகிஸ்தானில் பயங்கரவாத நடவடிக்கைகளை நடத்துகின்றன எனக் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>இஸ்ரேல் உருவாக்கப்பட்ட விதம் மற்றும் அதன் தற்போதைய வெளியுறவுக் கொள்கைகளுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் ஒருங்கிணைந்த பதிலை அளிக்க வேண்டும் எனக் கூறியுள்ள அவர், இஸ்ரேலுடன் சுமுக உறவை ஏற்படுத்துவதால் முஸ்லிம் நாடுகளுக்கு எந்தப் பயனும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.</p><p>பாலஸ்தீனத்திற்கு ஆதரவளிப்பதே இஸ்லாமிய கொள்கையின் அத்தியாவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே மேற்கு ஆசியாவில் தொடரும் போர் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் வணிகக் கப்பல்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் ஆகியவை இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைந்து கூட்டு ராஜதந்திரத்தை கையில் எடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>இந்தியா - பாகிஸ்தான்</h2><p>இருப்பினும், பாகிஸ்தான் பயங்கரவாதத்தை அரசுப் கொள்கையாகப் பயன்படுத்துவதாக இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது.</p><p>2025 பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே ஏப்பட்ட மோதல் அமைதி ஒப்பந்தம் மூலம் 2 நாட்களில் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 8 ஆகஸ்ட் 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-8-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-8-august-2026#comments</comments><guid isPermaLink="false">b54f04e3-e267-4cba-9339-bc533284a1e5</guid><pubDate>Sat, 08 Aug 2026 04:51:00 +0000</pubDate><atom:updated>2026-08-08T17:09:09.886Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/272sbpdk/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live News]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/272sbpdk/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/constituency-delimitation-issue-thirumavalavan-calls-upon-dmk-and-admk">தொகுதி மறுவரையறை விவகாரம்: திமுக, அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு</a></p><p>* தமிழக எம்.பி.க்களுடன் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.</p><p>* மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் சாய்குமார் தனித்தனியாக கடிதம் அனுப்பியுள்ளார்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/amit-shah-visit-tn-today">2 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார் அமித்ஷா</a></p><p>* அமித்ஷா மகாராஷ்டிர மாநில நிகழ்ச்சிகளை இன்று முடித்தபின் அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வருகிறார்.</p><p>* அமித்ஷா திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு கார் மூலம் சாலை மார்க்கமாக புதுச்சேரி செல்கிறார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/death-threat-audio-targeting-mla-zeeshan-siddique-goes-viral" rel="nofollow">உனது தந்தைக்கு அடுத்து நீதான்.. ஜீஷான் சித்திக் எம்எல்ஏவுக்கு கொலை மிரட்டல்</a></p><p>*  மிரட்டல் விடுக்கப்பட்ட அந்த ஆடியோ பதிவின் உண்மைத்தன்மை என்ன? </p><p>* கொலை மிரட்டல் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-8-8-2026">GOLD PRICE TODAY: தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம்: நகை வாங்குவோர் கலக்கம்!</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.13,965-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/people-are-watching-those-who-boycott-mps-meeting-manickam-thakur" rel="nofollow">எம்பிக்கள் கூட்டத்தை புறக்கணிப்பவர்களை மக்கள் கவனிக்கின்றனர்- மாணிக்கம் தாகூர்</a></p><p>* தவெக அரசு நடத்தும் அரசியல் நாடகத்தில் திமுக பங்கேற்காது என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.</p><p>* சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/us-senate-approves-100-percent-tariff-on-russian-oil-buyers-what-it-means-for-india">ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 100% வரி: அமெரிக்க செனட் சபை மசோதா ஒப்புதல்-இந்தியாவிற்குப் பெரும் சவாலா?... </a></p><p>*ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 100 சதவீத வரி விதிக்கும் அதிகாரம் அளிக்கும் புதிய தடைகள் மசோதாவிற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. </p><p>*உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து இந்தியா மலிவு விலையில் ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-devotees-carrying-mobile-phones-into-temples">கோவில்களில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை: 1-ந்தேதி முதல் பாதுகாப்பு பெட்டகம் அமைக்க உத்தரவு</a></p><p>* தமிழகத்தில் உள்ள கோவில்களுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.</p><p>* ஒலி பெருக்கி மூலமும் இந்த தகவலை அறிவிக்க வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-lok-sabha-constituencies-may-increase-from-39-to-59-under-delimitation-draft-list-out">தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் தமிழக மக்களவை தொகுதிகள் 59 ஆக உயரும்: உத்தேச பட்டியல் வெளியீடு!... </a></p><p>*தமிழ்நாட்டின் தற்போதைய மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 39-ல் இருந்து 59 ஆக உயரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>*இத்திட்டத்திற்கு தமிழகத்தின் பிரதான ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-constituency-delimitation-mps-meeting-tvk-government-drama-divert-attention-from-cauvery-issue">எம்பிக்கள் கூட்டம்: காவிரி பிரச்சனையை திசைத்திருப்ப த.வெ.க. அரசு நடத்தும் நாடகம் - கனிமொழி</a></p><p>* தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை ஏற்கெனவே நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானங்களில் தெரிவித்துவிட்டோம். </p><p>* த.வெ.க. அரசின் இன்றைய கூட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/constituency-delimitation-all-party-mps-meeting-government-not-send-any-letter-to-dmk-leadership">அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் கூட்டம் -  திமுக தலைமைக்கு கடிதம் எதுவும் எழுதவில்லை என தகவல்</a></p><p>* முதலமைச்சர் விஜய் நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தை தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் புறக்கணித்து உள்ளன. </p><p>* மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியூரில் இருக்கிறார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/mojtaba-khameneis-health-raises-concerns-in-iran" rel="nofollow">ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி உடல்நிலை கவலைக்கிடம்?</a></p><p>* மொஜ்தபா கமெனியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று இஸ்ரேலிய ஊடகம் தகவல்.</p><p>* எந்த நேரத்திலும் அவர் இறக்கக்கூடும் என்றும் ஈரானின் உயர்மட்டத் தலைவர்களிடையே தகவல்கள் பரவி வருகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-demands-withdrawal-of-fcra-bill-to-protect-minorities" rel="nofollow">சிறுபான்மையினர் நலன் காக்க FCRA மசோதாவை திரும்பப் பெற வேண்டும்!- மு.க.ஸ்டாலின்</a></p><p>* நாடாளுமன்ற பருவகாலக் கூட்டத்தொடரில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.</p><p>* நாடாளுமன்ற கூட்டுகுழுவிற்குப் பரிந்துரைக்குமாறு அமைச்சரிடம் வலியுறுத்தல்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/land-guideline-value-in-tamil-nadu-hiked-by-up-to-60-percent">தமிழகத்தில் நில வழிகாட்டி மதிப்பு 60% வரை உயர்வு: அரசு அதிரடி நடவடிக்கை!</a></p><p>* ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டப் பதிவாளர் தலைமையில், மண்டல வாரியாகக் கிராமங்களின் நில விவரங்களைச் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.</p><p>* சொத்துப் பதிவு மூலம் கிடைக்கும் முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணம் அதிகரிக்கும் என்பதால், அரசின் வருவாய் கணிசமாக உயரும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/who-will-pay-upi-transaction-fees-nirmala-sitharaman-clarifies">யுபிஐ பணப்பரிவர்த்தனைக் கட்டணம் யாருக்கெல்லாம் பொருந்தும்?-குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த நிர்மலா சீதாராமன்!... </a></p><p>*மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள ‘வரி மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதா 2026’ சமீபத்தில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. </p><p>*சாதாரணக் நுகர்வோர்கள் தங்கள் அன்றாடத் தேவைகளுக்காக மேற்கொள்ளும் நபர்-நபர் மற்றும் வணிகர்களுக்கானக் கட்டணங்கள்  போன்ற யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எவ்வித சேவைக் கட்டணமும் வசூலிக்கப்படாது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/ashmita-chaliha-enter-final-in-korea-mastesr-badminton">கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் அஷ்மிதா சலிஹா</a></p><p>* கொரியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் தொடர் கொரியாவில் நடந்து வருகிறது.</p><p>* இறுதிப்போட்டியில் அஷ்மிதா சலிஹா, சீன வீராங்கனை உடன் மோதுகிறார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/afghanistan-beat-ireland-in-second-odi">2வது ஒருநாள் போட்டி: ரஷித் கான் அசத்தலான பந்துவீச்சில் அயர்லாந்தை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்</a></p><p>* முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 299 ரன்கள் குவித்தது.</p><p>* 6 விக்கெட் வீழ்த்திய ரஷித் கானுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-wishes-to-new-judges-may-your-work-excel-in-ensuring-equal-justice-and-social-justice">சமநீதியும், சமூகநீதியும் கிடைக்க செய்யும் வகையில் தங்களது பணி சிறக்கட்டும்! - புதிய நீதிபதிகளுக்கு முதல்வர் வாழ்த்து</a></p><p>* சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். </p><p>* மக்கள் அனைவருக்கும் சமநீதியும், சமூகநீதியும் கிடைக்கச் செய்யும் வகையில் தங்களது பணி சிறக்கட்டும்!</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/youth-builds-safe-access-on-55-feet-palm-tree-for-palm-industry">55 அடி உயர மரத்தில் ரூ.60,000 செலவில் இரும்புப் படிக்கட்டு அமைத்த தூத்துக்குடி இளைஞர்!</a></p> <p>* தூத்துக்குடி இளைஞர் தினகர் 55 அடி பனை மரத்தில் இரும்பு படிக்கட்டு அமைத்தார்.</p><p>* பாதுகாப்பான பதநீர் இறக்க ரூ.60,000 செலவில் வளைவு படிக்கட்டுகள் வடிவமைக்கப்பட்டது</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-math-curriculum-storytelling-rajmohan">கணக்கு பாடங்களின் தலைப்புகள் மாற்றம்: இனி கதைகள் வழியே கணித பாடம்!- அமைச்சர் ராஜ்மோகன்... </a></p><p>*மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலும், ஆர்வம் தூண்டும் வகையிலும் கணித பாடப்புத்தகங்களிலுள்ள சிக்கலான தலைப்புகள் மாற்றி அமைக்கப்பட உள்ளன.</p><p>*உலர்வான சூத்திரங்களாக இல்லாமல், கதைகளின் ஊடே கணிதக் கருத்துகளை விவரிக்கும் புதிய கற்பித்தல் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/education-allocation-reduced-to-one-third-in-25-years-anbumani-ramadoss">கல்விக்கான ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 3-ல் ஒரு பங்காக குறைப்பு: அரசு பள்ளிகளை அழிப்பதற்கான திட்டமிட்ட சதியா? அன்புமணி ராமதாஸ்</a></p><p>* 2000-01-ம் ஆண்டு முதல் கணக்கிட்டு பார்த்தால் கல்விக்கான நிதி ஒதுக்கீடு மூன்றில் ஒரு பங்காக குறைந்திருக்கிறது. </p><p>* 2000-01 ஆம் ஆண்டில் பள்ளிக்கல்வி, உயர்கல்வி ஆகிய இரு அமைச்சகங்களும் ஒன்றாக இருந்தன. அப்போது கல்வித்துறைக்கு ரூ.4,949 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இது அன்றைய மாநில மொத்த உற்பத்தி மதிப்பான ரூ.1,26,099 கோடியில் 3.92% ஆகும்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/sai-sudharsan-has-been-ruled-out-of-the-test-series-against-sri-lanka">இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்: முன்னணி வீரர் திடீர் விலகல்</a></p><p>* முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15 அன்று காலே நகரில் தொடங்குகிறது.</p><p>* ஏற்கனவே காயம் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா விலகினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/land-grab-case-charges-framed-against-former-minister-ma-subramanian">நில அபகரிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீது குற்றச்சாட்டு பதிவு</a></p><p>* மா.சுப்பிரமணியன் மீது மோசடி, கூட்டுசதி, ஊழல் தடுப்பு பிரிவு உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ் சி.பி.சி.ஐ.டி. போலீசார், வழக்கு பதிவு செய்தனர்.</p><p> * மா.சுப்பிரமணியம் மற்றும் அவரின் மனைவி தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் மறுப்பதாகவும் இது முற்றிலும் தவறு எனவும் தெரிவித்தனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/heavy-rain-continue-in-kerala-orange-alert-for-7-districts"> கேரளத்தில் தொடரும் கனமழை - 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை </a></p><p>* கேரளத்தில் பெய்து வரும் கனமழையினால் நிலச்சரிவு, வெள்ளம் போன்ற இயற்கை சேதங்கள் ஏற்பட்டன.</p><p>*  மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/indian-woman-guinness-record-for-longest-hair">மிக நீண்ட கூந்தலுடன் கின்னஸ் சாதனை படைத்த இந்திய பெண்</a></p><p>* ரேணுவின் கூந்தல் ஹல்த்வானியில் கடந்த ஏப்ரல் மாதம் அதிகாரப்பூர்வமாக அளவிடப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டது.</p><p>* இந்திய கலாச்சாரத்தில், நீண்ட கூந்தல் என்பது பாரம்பரியத்தின் அடையாளமாகவும், மிகுந்த அழகாகவும் கருதப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/delimitation-issue-meeting-of-mps-from-all-parties-led-by-chief-minister-vijay-has-begun">தொகுதி மறுவரையறை- முதலமைச்சர் விஜய் தலைமையில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது</a></p><p>* த.வெ.க. ஆதரவு கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் முதலமைச்சர் விஜய் நடத்தும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். </p><p>* ம.தி.மு.க. சார்பில் துரை வைகோ எம்.பி.யாக உள்ளார். மேல் சபை எம்.பி.யான இவரும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-message-to-gen-zs-at-iit-event-have-courage-to-seek-solutions">கேள்வி மட்டும் கேட்காதீர்கள், விடையைக் கண்டறியுங்கள்: ஐ.ஐ.டி. விழாவில் பிரதமர் பேச்சு</a></p><p>* இந்தியாவின் ஸ்டார்ட்அப் (தொடக்கநிலை நிறுவனங்கள்) புரட்சியை வடிவமைத்து, அதற்கு வலுசேர்த்தவர்கள் உங்களைப் போன்ற, இதே தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள்தான்.</p><p>* சவால்களைப் பார்த்து அஞ்சாமல், அவற்றை வாய்ப்புகளாக மாற்றி, புதிய பாதைகளை உருவாக்குவதே Gen-Z இளைஞர்களின் மிகப்பெரிய பொறுப்பாகும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/from-goat-herder-to-district-collector-vanmathis-inspiring-journey">ஈரோட்டில் ஆடு மேய்த்த பெண்... இன்று மாவட்ட கலெக்டர்!</a></p><p>* ஈரோட்டில் ஆடு மேய்த்து படித்து தற்போது ஐ.ஏ.எஸ் அதிகாரியாக மகாராட்டிராவில் பணியாற்றுகிறார்.</p><p>* வறுமையிலும் பெற்றோர் ஆதரவுடன் கணினி முதுகலை பட்டம் முடித்து 2015 UPSC தேர்வில் அகில இந்திய 152-வது இடம் பிடித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/maharashtra-new-rules-for-swiggy-zomato-zepto-electric-vehicles-compulsory">ஸ்விகி, சொமேட்டோ, செப்டோ டெலிவரி நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு - மின்சார வாகனம் கட்டாயம்!</a></p><p>* மகாராஷ்டிரா டெலிவரி நிறுவனங்களுக்கு மின்சார பைக் பயன்படுத்த கட்டாயமாக்கியது.</p><p>* ஒவ்வொரு ஆர்டரிலும் 2% ஓட்டுநர் நல நிதிக்கு செல்லும், ஜிபிஎஸ் காப்பீடு உரிமம் கட்டாயம் கட்டண உச்சவரம்பு விதிக்கப்படும்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/womens-team-star-ashleigh-gardners-ex-wife-blasts-cricket-australia-over-cheating-scandal">சக வீராங்கனையுடன் தொடர்பு: ஆஸ்திரேலிய மகளிர் அணி துணை கேப்டன்மீது முன்னாள் மனைவி புகார்</a></p><p>* ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி துணை கேப்டனாக இருந்து வருபவர் ஆஷ்லே கார்ட்னர்</p><p>* மகளிர் பிக் பாஷ் லீக் தொடரில் சிட்னி சிக்சர்ஸ் அணி கேப்டனாக இவர் நியமிக்கப்பட்டார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/why-india-opposes-chinas-new-map">சீனா வெளியிட்ட புதிய வரைபடம் – இந்தியா ஏன் எதிர்ப்பு?</a></p><p>* சீனா அருணாச்சலத்தை ஸாங்னான் என பெயரிட்டு வரைபடம் வெளியிட்டது.</p><p>* லாங்ஜூ தக்லா போர் நினைவிடங்கள் வரைபடத்தில் முக்கியமாக சேர்கப்பட்டன</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-questions-custodial-death-in-palani-land-scam-case">காவல்நிலையம், சிறையில் குற்றவாளிகள் அதிகாரிகளால் அடித்துக் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது: நயினார் நாகேந்திரன்</a></p><p>* பழனி நிலமோசடி வழக்கில் தொடரும் மர்மங்கள்!</p><p>* அன்வர்தீன் உயிரிழந்தபோது பணியில் இருந்த அனைத்து சிறைக்காவல் அதிகாரிகளையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-mps-meet-oppose-constituency-delimitation">தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழக எம்பிக்கள் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்: திருமாவளவன் எம்பி பேட்டி!... </a></p><p>*மக்கள் தொகை கட்டுப்பாட்டைச் சிறப்பாகச் செயல்படுத்திய தென் மாநிலங்கள், தொகுதி மறுவரையறை காரணமாகக் கூடுதல் இழப்பைச் சந்திக்க நேரிடும்.</p><p>*கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சி வேறுபாடின்றித் தமிழ்நாடு மற்றும் தென் மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் ஒரே குரலில் தொகுதி மறுவரையறையை எதிர்த்துள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/charlie-chauhan-marries-cricketer-ramandeep-singh">நடிகையை திருமணம் செய்த கிரிக்கெட் வீரர்</a></p><p>* சார்லி சவுகானும், ரமண் தீப்பும் கடந்த 8 ஆண்டாகக் காதலித்து வந்தனர்.</p><p>* ஐ.பி.எல். கோப்பையை கே.கே.ஆர். வென்றபோது அந்த அணியில் ரமண்தீப் சிங் இடம்பெற்றார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-minister-vignesh-says-big-lobbies-tried-to-approach-us-in-many-ways">பெரிய பெரிய லாபிகள் பல வழிகளில் எங்ககிட்ட பேச முயற்சி பண்ணாங்க: அமைச்சர் விக்னேஷ்</a></p><p>* கடந்த ஆட்சியில எனது துறையில் ஊழல்கள் நடந்திருக்கு. நான் ஒரு விசயத்தை சொல்லனும்னு நினைத்தேன். இந்த துறையில் சில மாற்றங்கள் இல்ல, பல மாற்றங்கள் கொண்டு வருகிறோம்.</p><p>* இதனால் 1000 கோடி ரூபாய்க்கு மேல் தொழில் செய்து கொண்டிருந்தவர்கள், அடிமட்டத்தில் உள்ள சில ஊழியர்கள் என பல பேர் பாதிக்கப்படுகிறார்கள்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/iru-vijayabaskar-isakki-subbaiah-maragatham-kumaravelukku-thvekavil-mukkiya-poruppu">எம்.ஆர். மற்றும் சி. விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேலுக்கு த.வெ.க.-வில் முக்கிய பொறுப்பு</a></p><p>* Dr. C. விஜய பாஸ்கர் MBBS., முன்னாள் அமைச்சர், புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலாளர்</p><p>* இசக்கி சுப்பையா முன்னாள் அமைச்சர், தென்காசி மாவட்ட அமைப்புச் செயலாளர்</p>]]></content:encoded></item><item><title>ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து 4,052 மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்: அமைச்சர் சர்பானந்த சோனோவால்</title><link>https://www.maalaimalar.com/news/national/4052-sailors-rescued-safely-from-hormuz-strait-says-minister-sarbananda-sonowal</link><comments>https://www.maalaimalar.com/news/national/4052-sailors-rescued-safely-from-hormuz-strait-says-minister-sarbananda-sonowal#comments</comments><guid isPermaLink="false">f5b037ef-501d-4510-9b45-e0a5cb003e63</guid><pubDate>Sat, 08 Aug 2026 16:26:48 +0000</pubDate><atom:updated>2026-08-08T16:26:48.041Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய மாலுமிகள்,Sarbananda Sonowal,சர்பானந்த சோனாவால்,Hormuz,ஹார்முஸ் ஜலசந்தி,Indian seafarer</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/rusxbwom/Untitled-design-17.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ வளைகுடா மோதலுக்கு மத்தியில் 4,052 இந்திய மாலுமிகள் தாயகம் திரும்பினர் ]]></media:title><media:description type="html"><![CDATA[ Hormuz ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/rusxbwom/Untitled-design-17.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வளைகுடாப் பகுதியிலிருந்து இதுவரையில் 4,052 மாலுமிகள் தாயகம் திரும்பி அழைத்து வரப்பட்டுள்ளதாக, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்தார்.</p><h3><strong>இந்திய மாலுமிகள் மீட்பு</strong></h3><p>இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசிய அவர், “ஆகஸ்ட் 3 நிலவரப்படி, இந்தியாவை நோக்கி வந்த 62 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை வெற்றிகரமாகக் கடந்துள்ளன. இவற்றில், இந்தியாவை சேர்ந்த 23 கப்பல்களும், வெளிநாட்டை சேர்ந்த 39 கப்பல்களும் அடங்கும்.</p><p>மாறிவரும் கடல்சார் பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு, மத்திய கிழக்கு மோதலுக்கு மத்தியில் இந்திய மாலுமிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, கடல்சார் நிர்வாக தலைமை இயக்குநரகம் (DGMA) தனது அறிவுரைகளைத் தொடர்ந்து புதுப்பித்து வருகிறது.</p><p>இந்திய மாலுமிகளை ஏற்றிச் செல்லும் இந்திய மற்றும் வெளிநாட்டுக் கொடி கொண்ட கப்பல்களுக்கு, கூடுதல் எச்சரிக்கை, பயணத்திற்கேற்ற பாதுகாப்பு மதிப்பீடுகள், பாதுகாப்பு அறிவுரைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றுதல் மற்றும் சம்பவங்களை உடனடியாகத் தெரிவித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி DGMA ஓர் அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.</p><p>மேலும், பாப்-எல்-மண்டேப் ஜலசந்தி, தெற்கு செங்கடல் மற்றும் அதை ஒட்டிய ஏமன் கடல் பகுதிகளில் இயங்கும் கப்பல்களுக்கு ஓர் அறிவுரை வெளியிடப்பட்டுள்ளது.</p><p>அதில், கப்பல் உரிமையாளர்கள் மற்றும் மாலுமிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும், பாதுகாப்பு மற்றும் நிலவரங்களைத் தொடர்ந்து கண்காணிக்கவும், கூடுதல் இடர் தணிப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>மேலும், ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்புச் சூழல் தொடங்கியதிலிருந்தே, இந்திய மாலுமிகளைப் பாதுகாப்பதற்காகப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.</p><p>இவற்றில், 24x7 செயல்படும் ஒரு பிரத்யேக கட்டுப்பாட்டு அறையை நிறுவுதல், நிகழ்நேரக் கப்பல் மற்றும் பணியாளர் தரவுத்தளத்தைப் பராமரித்தல், மற்றும் கப்பல்கள், இந்திய மாலுமிகளின் நடமாட்டம், சம்பவங்கள் மற்றும் உயிரிழப்புகளைக் கண்காணிக்க ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் ஒரு சூழ்நிலை அறிக்கையை வெளியிடுதல் ஆகியவை அடங்கும்.</p><p>உடனடி அறிக்கை அளிப்பதையும் பதிலளிப்பதையும் உறுதி செய்வதற்காக, கடல்சார் விபத்துகள் குறித்து புகாரளித்தல், நெருக்கடி மேலாண்மை மற்றும் மாலுமிகளின் குறைகளை தீர்த்தல் ஆகியவற்றிற்காக பிரத்யேக 24x7 டிஜிட்டல் தளத்தையும் கடல்சார் மேலாண்மை இயக்குநரகம் உருவாக்கியுள்ளது.</p><p>கடல்சார் தலைமை இயக்குநர், வெளியுறவு அமைச்சகம், இந்திய கடற்படை மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களுடன் முகமைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பைப் பேணி வருகிறார்.</p><p>இது தவிர, சர்வதேச கடல்சார் அமைப்பு, இங்கிலாந்து கடல்சார் போக்குவரத்து ஆணையம், கடல்சார், கடலோர மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு முகமை மையம் மற்றும் கடலோர நாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு கூட்டு வழிமுறையின் மூலம், சிக்கித் தவிக்கும் மாலுமிகளை மீட்பதற்காக சர்வதேச ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p>பாதிக்கப்பட்ட மாலுமிகளின் குடும்பத்தினருடன் நெருங்கிய மற்றும் தொடர்ச்சியான தொடர்பில் இருப்பதன் மூலம் நலத்திட்டங்களும் உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.</p><p>மேலும், உயிரிழப்பு ஏற்படும் சூழல்களில் இழப்பீடும் அளிக்கப்படுகிறது. மாலுமிகள் நலநிதி சங்கம் மூலம் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டும் வருகிறது," என்று அமைச்சர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டசபையில் தனித் தீர்மானம்: தமிழக அரசு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-resolution-in-assembly-against-delimitation-tamil-nadu-government</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-resolution-in-assembly-against-delimitation-tamil-nadu-government#comments</comments><guid isPermaLink="false">cefb2e53-cc97-4028-8f33-4e01f9a14fb9</guid><pubDate>Sat, 08 Aug 2026 16:04:58 +0000</pubDate><atom:updated>2026-08-08T16:04:58.750Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,தொகுதி மறுவரையறை,Delimitation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/opxb44cs/TVCMVijay0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் கூட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/opxb44cs/TVCMVijay0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</h2><p>தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்ற தொகுதி மறுவரையறை தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் இன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.</p><p>இந்தக் கூட்டத்தில் பங்கேற்க, தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் (57) அழைப்பு விடுக்கப்பட்டது.  இந்தக் கூட்டத்தில், இந்திய தேசிய காங்கிரஸ் (11), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (2), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (2), இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (1) மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (1) ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 19 மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.</p><h2>புதிய மசோதாவை எதிர்த்து வாக்களிக்க வேண்டும்</h2><p>இந்தக் கூட்டத்தில் ஒன்றிய அரசால் உத்தேசிக்கப்பட்ட தொகுதி மறுவரையறை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மக்கள்தொகை கட்டுப்பாடு திட்டத்தினைச் சிறப்பாக செயல்படுத்திய தமிழ்நாடு மற்றும் இதர தென் மாநிலங்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பாதிக்கப்படாமல் காப்பது குறித்தும், தமிழ்நாட்டின் தற்போதைய பாராளுமன்ற பிரதிநிதித்துவம் தொடர்ந்து நீடிப்பது குறித்தும், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.</p><p>இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 ஆக இருக்கும்போதே, ஒவ்வொரு உறுப்பினருக்கும் பாராளுமன்றத்தில் பேசக் கிடைக்கும் நேரம் குறைவாக உள்ளது எனவும், உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், தங்களது கருத்துக்களை முழுமையாக எடுத்துக்கூறுவதில் உள்ள சிக்கல்கள் பற்றி கூறினர். மேலும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில், பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை மக்கள்தொகைக்கேற்ப அதிகப்படுத்தப்படவில்லை எனவும் கூறினர்.</p><p>தமிழ்நாடு மற்றும் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் மற்றும் முக்கியத்துவம், தொகுதி மறுவரையறை செய்வதின் மூலம் பாதிக்கும் என்பதால் இந்த ஒன்றிய அரசின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் தொகுதி மறுவரையறையினை இப்போதுள்ள எண்ணிக்கையிலேயே நிரந்தரமாக நிலைநிறுத்திடவும், தற்போதுள்ள நிலையே தொடரவும், தமிழ்நாட்டின் உரிமையினை பாராளுமன்றத்தில் நிலை நிறுத்துவதற்கும், அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், தொகுதி மறுவரையறை குறித்த ஒன்றிய அரசின் அரசமைப்பு சட்டத் திருத்தம் மற்றும் புதிய மசோதாவை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.</p><p>மேலும், 2026-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பிற்குப் பின் அரசமைப்பு பிரிவு 81(2)(a)-ன் கீழ் தென் மாநிலங்களின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதால், சட்ட முன்மொழிவை பாராளுமன்றத்தில் எதிர்க்க வேண்டும். சர்வ வல்லமை பெற்றதாக தொகுதி மறுவரையறை ஆணையம் உள்ளது. இந்த அதிகாரத்தை குறித்து பாராளுமன்றத்திற்கே இறுதிசெய்யும் அதிகாரம் இருக்க வேண்டும் உள்ளிட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.</p><p>அனைத்து மாநிலங்களின் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையினை 50% வரை உயர்த்தலாம் என்ற கருத்து மக்களை திசைதிருப்பும் ஆசை வார்த்தை (50% increase of existing Lok Sabha seats is an illusion to sweeten the pill) என்ற கருத்தை பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுத்து வைத்தனர்.</p><h2>தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவ உரிமை பாதிக்கப்படும்</h2><p>இந்தக் கூட்டத்தின்போது அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் உத்தேசிக்கப்பட்ட தொகுதி மறுவரையறை முன்மொழிவு செயல்படுத்தப்பட்டால், மக்கள்தொகை கட்டுப்பாட்டுத் திட்டத்தினை சிறப்பாகச் செயல்படுத்திய தமிழ்நாடு மற்றும் இதர தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவ உரிமை பாதிக்கப்படுமென்பதால், தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையான 543 என்ற அளவிலேயே நிரந்தரமாக வைப்பதற்கும், மாநிலங்களுக்கு இடையேயான எண்ணிக்கை பகிர்வை நிரந்தரமாக வைக்கவும், அதற்குத் தேவையான மற்றும் உரிய சட்ட திருத்தங்கள் பாராளுமன்றத்தில் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினார்கள்.</p><p>மேலும், தற்போது மக்களவை: மாநிலங்களவையினுடைய விகிதம் 2.2:1 என்ற அளவிலேயே நிலைநிறுத்த வேண்டும் என்றும், இதில் ஏதேனும் மாற்றம் ஏற்படின் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் கடுமையாகப் பாதிக்கும் என்றும் தெரிவித்தார்கள்.</p><h2>தனித்தீர்மானம்</h2><p>இதனைத் தொடர்ந்து இறுதியாக தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் உரிமையை நிரந்தரமாகப் பாதுகாத்திட தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அரசினர் தனித் தீர்மானம் நிறைவேற்றிட ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.</p><p>கூட்டத்தின் இறுதியில், தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் மற்றும் முக்கியத்துவம், தொகுதி மறுவரையறை செய்வதின் மூலம் பாதிக்கும் என்பதால் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் தொகுதி மறுவரையறையினை கைவிடவும், தற்போதுள்ள நிலையே தொடரவும், தமிழ்நாட்டின் உரிமையினை நிலைநிறுத்துவதற்கும், அனைத்துக் கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கோரிக்கை விடுத்தார்கள்.</p><p>இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பீகாரில் மதுவிலக்கிற்கு பிறகும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: மீண்டும் கொண்டு வரலாம்- NCAER</title><link>https://www.maalaimalar.com/news/national/bihar-liquor-ban-fails-crimes-against-women-up-ncaer-report</link><comments>https://www.maalaimalar.com/news/national/bihar-liquor-ban-fails-crimes-against-women-up-ncaer-report#comments</comments><guid isPermaLink="false">a648d70f-0ce4-46f3-abe8-1cace8801955</guid><pubDate>Sat, 08 Aug 2026 15:52:49 +0000</pubDate><atom:updated>2026-08-08T15:52:49.477Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பீகார்,Bihar,alcohol,மதுவிலக்கு,பொருளாதார ஆலோசனைக் குழு,NCAER</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/2d9qpeuc/Untitled-design-16.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: மதுவிலக்கு தோல்வி, கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு உயர்வு]]></media:title><media:description type="html"><![CDATA[ Bihar Liquor Ban ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/2d9qpeuc/Untitled-design-16.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் குறைப்பதில் மதுவிலக்கு தோல்வியடைந்துள்ளதாலும், அது கள்ளச்சாராயம் மற்றும் மாற்று போதைப்பொருட்களின் அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளதாலும், பீகார் தனது மதுவிலக்கை திரும்பப் பெற வேண்டும் என்று தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி மன்றம் (NCAER) என்ற பொருளாதார சிந்தனைக் குழுவின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.</p><p>‘பீகாரின் வளர்ச்சி சாதனைகள், முடிக்கப்படாத செயல்திட்டங்கள் மற்றும் முன்னோக்கிய பாதை குறித்த பேரியல் கண்ணோட்டம்’ என்ற தலைப்பிலான அந்த ஆய்வறிக்கை, மதுபான மீதான கலால் வரி தடையை மீட்டெடுப்பது, மாநிலத்தின் வருவாயை 14 முதல் 15 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் கூறியுள்ளது.</p><p><strong>பீகாரில் மதுவிலக்கு</strong></p><p>பீகாரில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மதுவிலக்கு கொள்கையை, ரத்னா சஹாய் தலைமையிலான பொருளாதார நிபுணர்கள் குழு ஆய்வு செய்தது.</p><p>இதையடுத்து அந்த நிபுணர்கள் குழு வெளியிட்ட அறிக்கையில், “பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் குறைப்பதில் மதுவிலக்கு தோல்வியடைந்துள்ளது. </p><p>மது அருந்துதல் குடும்ப வன்முறைக்கு கணிசமாக பங்களிக்கிறது என்ற நம்பிக்கையும், குடும்பங்கள் முன்பு மதுவுக்காக செலவழித்த பணத்தை அதிக பயனுள்ள தேவைகளுக்குத் திருப்பிவிடும் என்ற நம்பிக்கையுமே மதுவிலக்கை அறிமுகப்படுத்துவதற்கான முதன்மைக் காரணங்களாக இருந்தது.</p><p>மகளிர் அமைப்புகளும் ஆர்வலர்களும் கூட, மதுவிலக்கு மது தொடர்பான துஷ்பிரயோகத்தைக் குறைக்கும் என்று வாதிட்டு, இந்தத் தடையை வலுவாக ஆதரித்திருந்தனர்.</p><p>இந்தத் தடை பயனுள்ளதாக இருந்ததா என்பதை மதிப்பிடுவதற்கு இப்போது எங்களிடம் போதுமான தரவுகளும் தகவல்களும் உள்ளன. மதுவிலக்கு அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பீகாரில் பெண்களுக்கு எதிரான பதிவான குற்றங்கள் குறையவில்லை.</p><h3><strong>பொருளாதார சிந்தனைக் குழு அறிக்கை</strong></h3><p>மாறாக 2016-க்குப் பிந்தைய காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான மொத்தப் பதிவான குற்றங்கள் அதிகரித்துள்ளன. ஆய்வின்படி, மதுவிலக்குக்கு பிறகு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பரவலாகக் குறைந்ததற்கான ஆதாரங்கள் இல்லை.</p><p>அதே சமயம், சட்டவிரோத மதுபான வர்த்தகம் கணிசமாக அதிகரித்ததால், மது அருந்துதல் அதிகரித்தது. குற்றம் மற்றும் ஊழல் பெருகியது. மேலும் சட்டவிரோத போதைப்பொருட்கள் போன்ற மாற்றுச் சேர்க்கைப் பொருட்களின் பயன்பாடும் அதிகரித்தது.</p><p>மதுவிலக்கு மாநில வருவாயையும் பாதித்துள்ளது. மதுவிலக்குப் பிறகு பீகார் குறிப்பிடத்தக்க நிதிப் பாதிப்புகளைச் சந்தித்துள்ளது. தடைக்கு முந்தைய மூன்று ஆண்டுகளில், மதுபானத்தின் மீதான கலால் வரி மாநிலத்தின் சொந்த வருவாயில் சுமார் 14 சதவீதமாக இருந்தது.</p><p>அதே நேரத்தில், கண்காணிப்பு, அமலாக்கம் மற்றும் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் அதிக செலவினங்களை மேற்கொண்டது. இது நிதி நெருக்கடிகளை மேலும் அதிகரித்தது.</p><p>மதுபான மீதான கலால் வரியை அதன் முந்தைய நிலைகளுக்கு மீண்டும் கொண்டுவந்தால், மாநில வருவாயில் அந்த வரியின் பங்களிப்பை சுமார் 14 சதவீதமாக மீட்டெடுக்க உதவும்” என்று ஆய்வறிக்கை குறிப்பிட்டது.</p><h3><strong>பீகாரில் மீண்டும் மதுபான விற்பனை</strong></h3><p>இந்தத் தடை உத்தரவு அதன் நோக்கம் கொண்ட நோக்கங்களை அடையவில்லை என்றும் மாறாக அது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதற்கும், மாநில வருவாய் இழப்பிற்கும், அமலாக்கச் செலவினங்கள் உயர்வதற்கும் வழிவகுத்துள்ளது என்றும் அந்த ஆய்வறிக்கை முடிவு செய்தது.</p><p>பீகார் மாநிலம் நாட்டின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாகவும், அதே சமயம் மிகவும் ஏழ்மையான மாநிலமாகவும் நீடிக்கிறது என்பதையும் குறிப்பிட்டது.</p><p>அந்த ஆய்வறிக்கையின்படி, 2026-ல் பீகாரின் மக்கள் தொகை 13.2 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது இந்தியாவின் மக்கள் தொகையில் 9 சதவீதத்திற்கும் அதிகமாகும். மேலும், இறையாண்மை கொண்ட நாடுகளைத் தவிர மற்ற அனைத்து நாடுகளின் மக்கள் தொகையை விடவும், பீகாரில் மக்கள் தொகை அதிகமாக உள்ளது என்றும் அது குறிப்பிட்டது.</p>]]></content:encoded></item><item><title>எம்.ஆர். மற்றும் சி. விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேலுக்கு த.வெ.க.-வில் முக்கிய பொறுப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/iru-vijayabaskar-isakki-subbaiah-maragatham-kumaravelukku-thvekavil-mukkiya-poruppu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/iru-vijayabaskar-isakki-subbaiah-maragatham-kumaravelukku-thvekavil-mukkiya-poruppu#comments</comments><guid isPermaLink="false">4397c0c6-2825-4175-94df-cdb2a96c8957</guid><pubDate>Sat, 08 Aug 2026 15:30:22 +0000</pubDate><atom:updated>2026-08-08T15:30:22.900Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,MR Vijayabaskar,எம்ஆர் விஜயபாஸ்கர்,tvk,Isakki Subbaiah,இசக்கி சுப்பையா,சி விஜயபாஸ்கர்,Maragatham Kumaravel,மரகதம் குமரவேல்,C Vijayabaskar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/bssjx391/TVKvijayabaskar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், மரகதம் குமரவேல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/bssjx391/TVKvijayabaskar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>த.வெ.க. தலைவரும், முதலமைச்சருமான விஜய் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே மக்கள் தன்னெழுச்சியாகவும் பெருந்திரளாகவும் தங்களின் ஆதரவை அளித்து வருவதை இந்த நாடே அறியும். தமிழக வெற்றிக் கழகம் மக்களுக்காக எப்பொழுதுமே முதலும் முன்னோடியுமாக இயங்கி வருகிறது. இதனால் அதனுடைய கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவது அவசியமாகிறது.</p><p>அந்த வகையில் மாவட்ட அமைப்புச் செயலாளர்கள் மற்றும் துணைப் பொதுச் செயலாளர்களாக பின்வருபவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.</p><h2>மாவட்ட அமைப்புச் செயலாளர்கள்:-</h2><p>1. Dr. C. விஜய பாஸ்கர் MBBS., முன்னாள் அமைச்சர், புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலாளர்</p><p>2. M.R. விஜய பாஸ்கர். முன்னாள் அமைச்சர். கரூர் மாவட்ட அமைப்புச் செயலாளர் மற்றும் துணைப் பொதுச் செயலாளர்</p><p>3. இசக்கி சுப்பையா முன்னாள் அமைச்சர், தென்காசி மாவட்ட அமைப்புச் செயலாளர்</p><h2>துணைப் பொதுச் செயலாளர்கள்:-</h2><p>1. K. மரகதம் குமரவேல் ExMLA, மதுராந்தகம்</p><p>2. S. ராஜகோபால். நாங்குநேரி</p><p>3. H. ஜாகீர் உசேன், அம்பாசமுத்திரம்</p><p>4. V. குமார் ITI, பல்லாவரம்</p><p>5. S. யுவராஜ். சிங்காநல்லூர்</p><p>6. C.V. தினகரன், திருப்போரூர்</p><p>7. K. மணிகண்டன். DCS, ஆவடி</p><p>8. R.S. மணிகண்டன், வீரபாண்டி</p><p>9. K. அருள்ராஜ், திருவெறும்பூர்</p><p>10. SDR. சாமுவேல் ராஜ் DCT, தூத்துக்குடி</p><p>புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துகள். கழகத்தின் ஆக்கப்பூர்வப் பணிகள் குறித்து எனது உத்தரவு மற்றும் ஆலோசனையின்படியும், பொதுச் செயலாளர் என்.ஆனந்தின் வழிகாட்டுதலின்படியும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுடன் இணைந்து இந்தப் புதிய நிர்வாகிகள் பணிகளை மேற்கொள்வார்கள். கழகத் தோழர்கள். இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.</p>]]></content:encoded></item><item><title>விளிம்புநிலை மக்களை சமூகத்தில் முதன்மையான இடத்திற்கு கொண்டு வருவது அவசியம்: மோகன் பகவத்</title><link>https://www.maalaimalar.com/news/national/bringing-marginalised-communities-to-the-mainstream-is-essential-mohan-bhagwat</link><comments>https://www.maalaimalar.com/news/national/bringing-marginalised-communities-to-the-mainstream-is-essential-mohan-bhagwat#comments</comments><guid isPermaLink="false">5104cf2d-cedf-442e-98af-897d3982d76b</guid><pubDate>Sat, 08 Aug 2026 15:20:04 +0000</pubDate><atom:updated>2026-08-08T15:20:04.911Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Mohan Bhagwat,RSS,மோகன் பகவத்,ஆர்எஸ்எஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/5mjpnqfe/Untitled-design-15.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ RSS சமூக நீதி விளிம்புநிலை மக்களுக்கு முதன்மை: மோகன் பகவத் பர்தி சமூக முன்னேற்றம் வலியுறுத்தல்]]></media:title><media:description type="html"><![CDATA[ Mohan bhagwat]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/5mjpnqfe/Untitled-design-15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாட்டை உண்மையான அர்த்தத்தில் (விஸ்வகுரு) ஆக்குவதற்கு, விளிம்புநிலை மக்களை சமூகத்தில் முதன்மையான இடத்திற்கு கொண்டு வருவது அவசியம் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறினார்.</p><p>மகாராஷ்டிராவின் புல்டானா மாவட்டத்தில் பர்தி சமூகத்தினருக்கான பள்ளியில் மூன்று விளையாட்டு மைதானங்களை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் திறந்து வைத்தார். </p><p>அப்போது உரையாற்றிய அவர், “இன்று நாம் ‘அறிவிப்பு நீக்கப்பட்டவர்கள்’(de-notified) அல்லது 'பட்கே-விமுக்த்' என்று அழைக்கும் சமூகம், ஒரு காலத்தில் அறிவு வழங்குபவர்களாக இருந்தனர்.</p><p>அவர்கள் தங்கள் அறிவை தன்னலமின்றி பகிர்ந்துகொள்ள முன்வந்தனர்; ஆனால் காலப்போக்கில் அவர்கள் ஓரங்கட்டப்பட்டனர். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், அவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றதால், ஒட்டுமொத்த பர்தி சமூகமும் ஒரு குற்றப் பழங்குடியினர் என்று முத்திரை குத்தப்பட்டது.</p><p>இது அவர்களை வளர்ச்சியில் வெகுதூரம் பின்தங்கச் செய்தது. இந்திய சமூகம் ஒரு காலத்தில் முழுமையாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது, ஆனால் அது வெளிநாட்டுப் படையெடுப்பாளர்களால் அடிமைப்படுத்தப்பட்டதால், பிளவுபட்டது.</p><p>இதன் விளைவாக, சமூகத்தில் விளிம்புநிலை குழுக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அப்படியிருந்தும், இந்த சமூகங்கள் ஒருபோதும் அடிமைத்தனத்தை ஏற்றுக்கொள்ளவில்லை; அவர்கள் சுதந்திரத்திற்காக தொடர்ந்து போராடினர்.</p><p>இந்த ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம், பர்த்தி சமூகத்தின் வளர்ச்சிக்காக பல ஆண்டுகளாக உழைத்து வருகிறது” என்று அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் சிவசேனா (யுபிடி) தலைவர் அம்பாதாஸ் தான்வே உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டார்.</p>]]></content:encoded></item><item><title>பெரிய பெரிய லாபிகள் பல வழிகளில் எங்ககிட்ட பேச முயற்சி பண்ணாங்க: அமைச்சர் விக்னேஷ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-minister-vignesh-says-big-lobbies-tried-to-approach-us-in-many-ways</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-minister-vignesh-says-big-lobbies-tried-to-approach-us-in-many-ways#comments</comments><guid isPermaLink="false">b6f9c617-a3af-4499-bb91-d00c857ce31c</guid><pubDate>Sat, 08 Aug 2026 15:03:08 +0000</pubDate><atom:updated>2026-08-08T15:03:08.962Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tasmac,டாஸ்மாக்,அமைச்சர் விக்னேஷ்,Minister Vignesh</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/1znd8oyy/MinisterVignesh0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் விக்னேஷ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/1znd8oyy/MinisterVignesh0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மது விலக்கும் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் இன்று கோவையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-</p><p>கடந்த ஆட்சியில எனது துறைல ஊழல்கள் நடந்திருக்கு. நான் ஒரு விசயத்தை சொல்லனும்னு நினைத்தேன். இந்த துறையில் சில மாற்றங்கள் இல்ல, பல மாற்றங்கள் கொண்டு வருகிறோம். இதனால் 1000 கோடி ரூபாய்க்கு மேல் தொழில் செய்து கொண்டிருந்தவர்கள், அடிமட்டத்தில் உள்ள சில ஊழியர்கள் என பல பேர் பாதிக்கப்படுகிறார்கள்.</p><p>எவ்வளவோ வகையில், வழியில் என்னை அப்ரோச் செய்யவும், அணுகவும் முயற்சி செய்தாங்க. இது தமிழக வெற்றிக் கழத்தின் ஆட்சி. தமிழக முதல்வரோட ஆட்சி. இங்கு பணத்தால எந்த விசயமும் செய்ய முடியாது. பணம் கொடுக்கிறோம். எப்படியாவது இருக்கிற செட்டப்ப விடுங்க எனக் கூறுகிறார்கள். அதற்கு நாங்கள் வரல. மக்கள் மாற்றம் வேண்டும் என்று எங்களை தேர்வு செய்துள்ளனர். அதற்காக வந்திருக்கோம்.</p><h2>பெரிய பெரிய லாபிகள்</h2><p>பெரிய பெரிய லாபிகள் என்ன செய்கிறார்கள் என்றால், எங்களை அப்ரோச் செய்ய முடியல. இப்போது எங்களுடைய இமேஜ ஏதாவது செய்யலாம் என்று நினைக்கிறார்கள். மக்களுக்கு தெரியும். அவர்களால் இந்த மண்ணில் எதுவும் செய்ய முடியாது. மாற்றம் நடந்தே தீரும். டாஸ்மாக் மட்டும் கிடையாது. சுற்றுச்சூழல் துறையிலும் சரி மாற்றம் நடந்தே தீரும். அதனால் ஆபாசத்திற்கும், அவதூறுக்கும் பயபடுவோம் என்று நினைத்து விடாதீர்கள். அது பெரிய தோல்வியை கொடுக்கும்.</p><p>மதுபான பாட்டில்களில் மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு எனப் போடப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் உள்ள போர்டுகளில் இந்த வாசகம் இல்லை என்றால் போடப்படும்.</p><p>இவ்வாறு அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>யஷ் நடித்துள்ள டாக்சிக் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது - போதைப்பொருள் மாஃபியா பின்னணியில் கதைக்களம்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/yash-starrer-toxic-trailer-released-drug-mafia-backdrop</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/yash-starrer-toxic-trailer-released-drug-mafia-backdrop#comments</comments><guid isPermaLink="false">2c5f381f-0f12-41e1-a443-9a0d81bb7917</guid><pubDate>Sat, 08 Aug 2026 14:46:13 +0000</pubDate><atom:updated>2026-08-08T14:46:13.482Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Yash,Toxic,டாக்சிக்,யஷ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/27e9nvp4/Untitled-design-14.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ யஷ் ஆக்ஷன் கம்பேக்: கோவா போதைப்பொருள் மாஃபியா பின்னணியில் கேங்ஸ்டர் காதல் கதை]]></media:title><media:description type="html"><![CDATA[ Yash’s Toxic Trailer]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/27e9nvp4/Untitled-design-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>யஷ் நடிக்கும் ‘டாக்சிக்’ திரைப்படத்தின் டிரெய்லரை இன்று தயாரிப்பு நிறுவனம் இணையத்தில் வெளியிட்டுள்ளது. இயக்குனர் கீது மோகன்தாஸ் உருவாக்கியுள்ள இந்த படம், ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்க்கப்படும் ஆக்ஷன் படங்களில் ஒன்றாக உள்ளது. </p><p>கே.ஜி.எஃப் தொடரின் வெற்றிக்குப் பிறகு, யஷ் நடித்துள்ள டாக்சிக் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளன. கதை பின்னணியில் அதிரடி ஆக்ஷன், காதல் மற்றும்  கேங்ஸ்டர் பின்னணி காட்சிகள் இடம்பெற்றுள்ளன.</p><p>கீது மோகன்தாஸ் இயக்கிய 'டாக்சிக்' திரைப்படத்தில், யஷ் உடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹுமா குரேஷி உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.</p><h3><strong>டாக்சிக் கதைக்களம்</strong></h3><p>இந்த கேங்ஸ்டர் படம், 1940 மற்றும் 1970க்கு இடைப்பட்ட காலத்தில் கோவாவின் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் மாஃபியா வலைய மைப்புகளின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.</p><p>கே.ஜி.எஃப் படத்திற்குப் பிறகு யஷ் மற்றொரு ஆக்‌ஷன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால், ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளது.</p><p>இந்த டாக்சிக் டிரெய்லரில் காதல் மற்றும் பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது யஷ்-இன் முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சினிமா அனுபவத்தை வழங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இந்த மாத இறுதியில்(26ஆம் தேதி) டாக்சிக் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/Toxic?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Toxic</a> : A Fairy Tale for Grown-Ups <br><br>Trailer out now<br><br>Kannada:<a href="https://t.co/YuoYcOfAlv">https://t.co/YuoYcOfAlv</a><br>Hindi:<a href="https://t.co/1RCrndyRsk">https://t.co/1RCrndyRsk</a><br>Tamil:<a href="https://t.co/TsG7zsWo9D">https://t.co/TsG7zsWo9D</a><br>Telugu:<a href="https://t.co/XXEwfTCcky">https://t.co/XXEwfTCcky</a><br>Malayalam:<a href="https://t.co/xUJSup0lle">https://t.co/xUJSup0lle</a><a href="https://x.com/hashtag/ToxicTheMovie?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ToxicTheMovie</a> In Cinemas Worldwide from 26-08-2026.… <a href="https://t.co/oWaxu1HTl5">pic.twitter.com/oWaxu1HTl5</a></p>&mdash; KVN Productions (@KvnProductions) <a href="https://x.com/KvnProductions/status/2086082816861941910?ref_src=twsrc%5Etfw">August 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>டிஎன்பிஎல் 2026: சதுர்வேத் ருத்ரதாண்டவம்- கோவையை வீழ்த்தி சாதனை வெற்றி பெற்றது மதுரை</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/madurai-panthers-beat-kovai-kings-in-tnpl-2026</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/madurai-panthers-beat-kovai-kings-in-tnpl-2026#comments</comments><guid isPermaLink="false">d63ddfe5-6105-4fe4-bf9c-2255085b1855</guid><pubDate>Sat, 08 Aug 2026 14:31:16 +0000</pubDate><atom:updated>2026-08-08T14:31:16.085Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,madurai panthers,மதுரை பாந்தர்ஸ்,chaturved,சதுர்வேத்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/xjkzuxpd/chaturved1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ chaturved]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/xjkzuxpd/chaturved1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டி.என்.பி.எல். தொடரின் 7வது லீக் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணி இமாலய இலக்கை எட்டி சாதனை படைத்தது. </p><p>டிஎன்பிஎல் தொடரின் 7-வது லீக் போட்டி திண்டுக்கல்லில் இன்று நடைபெற்றது. இதில் மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.</p><p>அதன்படி, முதலில் களமிறங்கிய கோவை கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில்  4 விக்கெட்டுக்கு 239 ரன்களைக் குவித்தது.</p><h2>சித்தார்த் அதிரடி</h2><p>ஆண்ட்ரே சித்தார்த் 42 பந்தில் 87 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பொறுப்புடன் ஆடிய பாலசுப்ரமணியன் அரை சதம் கடந்தார். அவர் 43 பந்தில் 5 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 84 ரன்னில் ஆட்டமிழந்தார். லோகேஷ்வர் 38 ரன்னில் அவுட்டானார். </p><p>கடைசி நேரத்தில் மழை பெய்ததால் ஆட்டம் சிறிது தடைபட்டது. </p><p>மதுரை பாந்தர்ஸ் அணி சார்பில் குர்ஜப்நீத் சிங் 2 விக்கெட்டும், சரவணன், பெரியசாமி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.</p><p>இதையடுத்து, 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி மதுரை அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர். தொடக்க ஆட்டக்காரர் ராம்குமார் 6 ரன்னில் அவுட்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சித்தார்த் மகாதேவன் 41 ரன்னில் அவுட்டானார்.</p><h2>சதுர்வேத் சரவெடி</h2><p>என்.எஸ்.சதுர்வேத் ஆரம்பத்தில் மெதுவாக ஆடினார். அதன்பின், ருத்ர தாண்டவம் ஆடினார். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார்.</p><p>அதிரடியாக ஆடிய அவர் 47 பந்துகளில் 7 சிக்சர், 15 பவுண்டரிகளை விளாசி 121 ரன்னில் ஆட்டமிழந்தார்.</p><p>அடுத்து இறங்கிய கேப்டன் பாலச்சந்தர் அனிருத் 19 பந்தில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 37 ரன் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.</p><p>இறுதியில், மதுரை பாந்தர்ஸ் அணி 19.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 240 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.</p>]]></content:encoded></item><item><title>எட்டப்பர்கள் யார், முதுகில் குத்தியது யார் என்று தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும்: கனிமொழி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/who-are-traitors-and-backstabbers-tamil-people-know-well-kanimozhi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/who-are-traitors-and-backstabbers-tamil-people-know-well-kanimozhi#comments</comments><guid isPermaLink="false">2ca388e5-0855-4a90-b07c-bd6963a071ab</guid><pubDate>Sat, 08 Aug 2026 14:05:03 +0000</pubDate><atom:updated>2026-08-08T14:05:03.307Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,கனிமொழி எம்பி,மேகதாது அணை,Kanimozhi MP,Megadadu Dam,தொகுதி மறுவரையறை,Delimitation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/fn8owe9t/Untitled-design-13.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kanimozhi M.P]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/fn8owe9t/Untitled-design-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தொகுதி மறுவரையறை மசோதா குறித்து ஆலோசனை நடத்த அனைத்து கட்சி எம்.பி.க்களுக்கும் தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்திருந்த நிலையில், திமுக அந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.</p><p>இதையடுத்து அண்ணா அறிவாலயத்தில் மக்களவை எம்.பி கனிமொழி செய்தியாளர்களிடம் பேசினார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-  </p><h3><strong>தொகுதி மறுவரையறையில் திமுக நிலைப்பாடு</strong></h3><p>திராவிட முன்னேற்ற கழகம் மிகத்தெளிவாக, முதன்முதலில் இந்த தொகுதி மறுவரையறை மசோதா அறிமுகம் செய்யப்பட்டபோது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஐந்து மாநில முதல்வர்களை ஒன்றிணைத்து சென்னையில் ஒரு கூட்டத்தை நடத்தினார். </p><p>அந்த கூட்டத்தில் காங்கிரஸ் உட்பட சில முதலமைச்சர்கள் கலந்துகொண்டு, அந்த தீர்மானங்களை ஏற்றுக்கொண்டு கையெழுத்து போட்டார்கள். </p><p>அந்த கூட்டத்தில் தொகுதி மறுவரையறையை முற்றிலுமாக நாங்கள் எதிர்க்கவில்லை. நியாயமான தொகுதி மறுவரையறை என்பது தான் அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவாக இருந்தது.</p><p>இதையடுத்து தேர்தல் நேரத்தில் தொகுதி மறுவரையறை கொண்டு வரப்பட்ட போது, எங்களுக்கு தேர்தல் முக்கியமில்லை, தமிழ்நாட்டின் உரிமைகள் தான் முக்கியம் என திமுக தலைவர் கூறினார்.</p><p>மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களான எங்களிடம், இந்த மசோதாவிற்கு எதிராக நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் திமுக தலைவர் கூறினார்.</p><p>கடந்த காலத்தில் அந்த மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட போது, திமுக-வால் ஏற்றுக்கொள்ள முடியாத சில விஷயங்களை எடுத்து கூறினோம்.</p><p>அப்போது நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அந்த மசோதாவில், எந்த இடத்திலும் தமிழ்நாட்டிற்கான பங்கு எந்த விதத்திலும் மாறாது என்று குறிப்பிடப்படாமல் இருந்தது.</p><p>அதனால் அந்த மசோதாவை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நாங்கள் நிராகரித்தோம்.</p><p>இதுவரையில் ஒன்றிய அரசாங்கம் எங்களை அழைத்து பேசியதாக தகவல் இல்லை. ஒருவேளை ஒருசில நபரிடம் பேசி இருக்கலாம். ஆனால் திராவிட முன்னேற்ற கழகத்தை அழைத்து, இந்த மசோதா குறித்து கருத்து கேட்கவில்லை.</p><p>தற்பொழுது இந்த மசோதா அறிமுகம் செய்யப்படமாட்டாது என்பது தான் எங்களுக்கு வந்த தகவலாக உள்ளது.</p><p>மேலும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக இருக்கும் மசோதா குறித்து, எந்தவிதமான தகவலோ அல்லது மசோதாவின் நகலோ எங்களிடம் இல்லை.</p><h3><strong>மேகதாது விவகாரத்தை திசை திருப்ப முயற்சி</strong></h3><p>அப்படி இருக்கும்போது தமிழகத்தில் எதற்காக இந்த கூட்டம் கூட்டப்பட்டது. இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்.</p><p>ஒரு கூட்டம் நடத்த வேண்டுமென்றால், அரசாங்கம் கட்சி தலைமைக்கு தான் கடிதம் எழுத வேண்டும். ஆனால் தலைமை செயலாளர் தனிப்பட்ட முறையில் எம்.பி.க்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.</p><p>எங்கள் திமுக தலைவர் முதலமைச்சராக இருந்தபோது, கட்சி கூட்டத்தை கூட்டுவதற்கு, கட்சி தலைமைக்கு தான் கடிதம் எழுதினார். எனவே, இதுவே முறையில்லாத ஒன்றாக உள்ளது.</p><p>மேகதாது மற்றும் விவசாயிகள் பிரச்சனைகள் தீவிரமாக நடந்து வரும் சூழலில், அதை திசை திருப்ப வேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு இந்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.</p><p>தொகுதி மறுவரையறை என்பது மக்கள் தொகை அடிப்படையில் கணக்கிட கூடாது என்று தான் நாங்கள் வலியுறுத்தி வருகின்றோம்.</p><h3><strong>யார் எட்டப்பர்கள்</strong></h3><p>யார் எட்டப்பர்கள் என்றும், தேர்தலுக்கு பின்பு யார் முதுகில் குத்தினார்கள் என்றும் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும்.</p><p>திமுகவும், அதிமுகவும் மேகதாது விஷயத்தில் ஒருமித்த கருத்தைதான் கொண்டுள்ளோம்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பிரபல கால்பந்து வீரர் மெஸ்சியின் தந்தை காலமானார்</title><link>https://www.maalaimalar.com/sports/football/jorge-messi-lionel-messis-father-dies-at-68</link><comments>https://www.maalaimalar.com/sports/football/jorge-messi-lionel-messis-father-dies-at-68#comments</comments><guid isPermaLink="false">e7c54909-c0e1-487f-ab92-cf624f7feaef</guid><pubDate>Sat, 08 Aug 2026 13:55:55 +0000</pubDate><atom:updated>2026-08-08T13:55:55.920Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Lionel Messi,jorje messi,லியோனல் மெஸ்சி,ஜோர்ஜ் மெஸ்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/jw9sv1vk/messi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ messi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/jw9sv1vk/messi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கால்பந்து (Football)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கால்பந்து வீரரான மெஸ்சியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்சி இன்று காலமானார்.</p><p>உலகின் புகழ்பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சி. அர்ஜென்டினா வீரரான மெஸ்சியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்சி (68).</p><p>உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஜோர்ஜ் மெஸ்சி அர்ஜென்டினாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.</p><p>இந்நிலையில், ஜோர்ஜ் மெஸ்சி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.</p><p>லியோனல் மெஸ்சியின் தந்தை மறைவிற்கு கால்பந்து ரசிகர்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. 14-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-announces-statewide-aiadmk-protest-against-tvk-farm-loan-policy</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-announces-statewide-aiadmk-protest-against-tvk-farm-loan-policy#comments</comments><guid isPermaLink="false">7c6c4608-dcb2-43e0-8fb2-29eceeee9393</guid><pubDate>Sat, 08 Aug 2026 13:27:24 +0000</pubDate><atom:updated>2026-08-08T13:27:24.695Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,EPS,பயிர்க்கடன்,மேகதாது அணை விவகாரம்,mekedatu dam issue</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/ibvhmre1/EPS00001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/ibvhmre1/EPS00001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலின்போது, த.வெ.க. தனது தேர்தல் அறிக்கையில் 5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களில் 50 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தது.</p><h2>பயிர்க்கடன் தள்ளுபடி</h2><p>ஆட்சிக்கு வந்த த.வெ.க. அரசு குறு, சிறு விவசாயிகள் ரூ. 75,000/- வரை பயிர்க் கடன் பெற்றிருந்தால் அவை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும், ரூ. 75,000/-க்குமேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ. 35,000/- மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும், விவசாயிகளை தரம் பிரித்து ஒரு பகுதி கடனை தள்ளுபடி செய்து அறிவித்தது. இது, தமிழக விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>மேலும், கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முழு வேகத்துடன் முயற்சிகள் மேற்கொண்டு, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முடக்கப் பார்க்கிறது.</p><h2>மேகதாது அணை விவகாரம்</h2><p>பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமலும், மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் செயலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமலும் மெத்தனப் போக்கோடு இருந்து வரும் த.வெ.க. கூட்டணி அரசைக் கண்டித்து, அதிமுக சார்பிலும், டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் சார்பிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.</p><p>த.வெ.க. அரசு சட்டமன்றத்தில் வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும்போது, விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை இந்த அரசு வெளியிட வேண்டும் என்றும், அப்படி பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என்றால் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்றும், ஏற்கெனவே நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன்.</p> <p>இந்நிலையில், த.வெ.க. கூட்டணி அரசு 6.8.2026 அன்று தாக்கல் செய்துள்ள வேளாண் நிதிநிலை அறிக்கையில், பயிர்க் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கவில்லை. எனவே, விவசாயிகள் வங்கிகளில் பெற்ற பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் அவர்களை வஞ்சித்து வருவதோடு, மேகதாது பிரச்சனையில் மெத்தனம் காட்டி வரும் த.வெ.க. அரசைக் கண்டித்தும் காவிரியில் நமக்குரிய பங்கு நீரை உரிய முறையில் பெறுவதற்கு முயற்சி எடுக்காத த.வெ.க. பொய்க்கால் குதிரை அரசைக் கண்டித்தும், அதிமுக சார்பில், வருகின்ற 14.8.2026- வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில், தமிழகம் முழுவதும் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.</p><p>தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நான் தலைமையேற்க உள்ளேன். சென்னை மாவட்டம் நீங்கலாக, ஏனைய வருவாய் மாவட்டங்களில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களுக்குத் தலைமையேற்போர் பட்டியல் இத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.</p><p>சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதிக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள்; கழக சார்பு அமைப்புகளின் மாநில நிர்வாகிகள், சார்பு அமைப்புகளின் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள்; கிளை, வார்டு, வட்டக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள்; மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள்; உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.</p><p>விவசாயிகள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.</p><p>வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்ட, கழக அமைப்பு ரீதியான மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஒன்றிணைந்து, இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களை மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து நடத்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு எடப்பாடி பழனிசாமி அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பொது நிதியில் இருந்து 2192 கோடி ரூபாய் ஒதுக்கீடு: 62% நிறுவனங்களுக்கு தேர்வுக்குழுவுடன் தொடர்பு எனக் குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/national/rs-2192-crore-cleared-62-percent-for-firms-linked-to-government-tech-fund-panel</link><comments>https://www.maalaimalar.com/news/national/rs-2192-crore-cleared-62-percent-for-firms-linked-to-government-tech-fund-panel#comments</comments><guid isPermaLink="false">bd6b09cc-71b0-40ec-ba52-2e93f1d61a17</guid><pubDate>Sat, 08 Aug 2026 13:04:25 +0000</pubDate><atom:updated>2026-08-08T13:04:25.073Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords></media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/ccogpui5/Tech0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Deep Tech]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/ccogpui5/Tech0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆழ்ந்த அறிவியல் கண்டுபிடிப்புகள், பொறியியல் புத்தாக்கங்கள் அல்லது ஆராய்ச்சித் துறைகளில் ஏற்படும் முன்னேற்றங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட, தொழில்துறைகள், பொருளாதாரங்கள் மற்றும் வாழ்க்கையை அடியோடு மாற்றியமைக்கும் ஆற்றலைக் கொண்ட, அதிநவீன மற்றும் பெரும்பாலும் புரட்சிகரமான தொழில்நுட்பங்களே ஆழ் தொழில்நுட்பம் (Deep tech) எனப்படுகின்றன.</p><p>இதியாவின் ஆழ் தொழில்நுட்பத் துறையை ஊக்குவிக்கும் விதமாக தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடன் உதவி வழங்க முடிவு செய்தது. இதன் நோக்கில் உருவாக்கப்பட்ட ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புதுமை நிதியின் (RDI Fund) முதல் கட்டத்தில் 22 தனியார் நிறுவனங்களுக்கு ரூ.2,192 கோடி மதிப்பிலான மென்மையான கடன்கள் (Soft Loans) வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. விண்வெளி, எரிசக்தி, செமிகண்டக்டர், மருத்துவம் உள்ளிட்ட முன்னேறிய தொழில்நுட்பத் துறைகளில் செயல்படும் நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.</p><h2>12 பேர் கொண்ட குழு</h2><p>இந்த நிறுவனங்களை தேர்வு செய்ய 12 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டது. இந்த குழு 124 விண்ணபங்களை ஆய்வு செய்து, 22 நிறுவனங்களை தேர்வு செய்தது. இந்த 12 நிறுவனங்களுக்கு 2,192 கோடி ரூபாய் வழங்கப்பட இருக்கிறது.</p><p>இந்த நிலையில்தான் நலன் முரண்பாடு (Conflict of Interest) குறித்த கேள்வி எழுந்துள்ளது. 22 நிறுவனங்களைத் தேர்வு செய்த 12 பேர் கொண்ட முதலீட்டுக் குழுவில் இடம் பெற்றிருந்த 7 உறுப்பினர்களுடன், நிதிபெற்ற 15 நிறுவனங்களுக்கு முதலீட்டு அல்லது தொழில் ரீதியான தொடர்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த 15 நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.1,377 கோடிக்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>நிறுவனங்களுடன் குழுவில் உள்ளவர்களுக்கு தொடர்பு</h2><p>குழுவின் தலைவர் சௌரப் ஸ்ரீவாஸ்தவாவுடன் தொடர்புடைய முதலீட்டு நிறுவனங்கள் பல தேர்வு செய்யப்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளன. அதேபோல், குழுவின் பிற உறுப்பினர்களுக்கும் சில பயனாளி நிறுவனங்களில் பங்குகள் அல்லது முந்தைய தொழில் தொடர்புகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதற்கு பதிலளித்த குழு உறுப்பினர்கள், தங்களுடைய நலன்கள் முன்கூட்டியே அரசிடம் தெரிவிக்கப்பட்டதாகவும், தொடர்புடைய நிறுவனங்களின் மதிப்பீடு மற்றும் முடிவெடுப்பு நடவடிக்கைகளில் தாங்கள் விலகியதாகவும் கூறியுள்ளனர். </p><p>அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையும், நிறுவனங்கள் தகுதியின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்பட்டதாகவும், நலன் முரண்பாடு கொண்ட உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட முடிவுகளில் பங்கேற்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.</p><p>இந்த விவகாரம், பொதுநிதி ஒதுக்கீட்டில் வெளிப்படைத்தன்மை, நலன் முரண்பாடுகளைத் தவிர்த்தல் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை உறுதி செய்தல் ஆகியவை எவ்வளவு முக்கியம் என்பதை மீண்டும் முன்னிறுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்காவில் சோகம்: தனியாக மலையேற சென்ற இந்திய வம்சாவளி பி.எச்.டி மாணவர் உயிரிழப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/world/indian-origin-phd-student-dies-while-hiking-in-california</link><comments>https://www.maalaimalar.com/news/world/indian-origin-phd-student-dies-while-hiking-in-california#comments</comments><guid isPermaLink="false">1d551d01-dafd-4d8b-8d1b-a111c66fe4ce</guid><pubDate>Sat, 08 Aug 2026 12:49:25 +0000</pubDate><atom:updated>2026-08-08T12:49:25.996Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய மாணவர்,Vikram Mubayi,விக்ரம் முபாயி,UCSB,IndianOriginStudent,soloHiking Accident,BigPineLakes,Inyo National Forest</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/n2m7nkvt/Vikram-Mubayi" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vikram Mubayi  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/n2m7nkvt/Vikram-Mubayi?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மலைப்பகுதியில் தனியாக மலையேற்றம் சென்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முனைவர் பட்டம் பெற்ற மாணவர் விக்ரம் முபாயி என்பவரது உடல், அவர் காணாமல் போன இரண்டு நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளது. </p><p>இச்சம்பவம் சக மாணவர்களிடையேயும், அமெரிக்க வாழ் இந்தியர்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>என்ன நடந்தது?</h2><p>கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வேதிப் பொறியியல் துறையில் பி.எச்.டி படித்து வந்த விக்ரம் முபாயி, கடந்த வார இறுதியில் கலிபோர்னியாவின் புகழ்பெற்ற 'பிக் பைன் லேக்ஸ்' பகுதிக்குத் தனியாக மலையேற்றம் சென்றுள்ளார். </p><p>ஆகஸ்ட் 1-ஆம் தேதி இரவு 8:30 மணியளவில், தான் இருக்கும் இடத்தின் ஜி.பி.எஸ் குறியீடுகளைத் தனது குடும்பத்தினருடன் விக்ரம் பகிர்ந்துள்ளார். </p><p>அதன் பிறகு அவரிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை; திட்டமிட்டபடி அவர் தங்கும் இடத்திற்கும் திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த குடும்பத்தினர் காவல் துறையினருக்குப் புகார் அளித்தனர்.</p><h2>தீவிரத் தேடுதல் வேட்டை மற்றும் உடல் மீட்பு!</h2><p>புகாரைத் தொடர்ந்து 'இன்யோ கவுண்டி' மீட்புக் குழுவினர் மற்றும் கலிபோர்னியா நெடுஞ்சாலை ரோந்துப் படையினர் இணைந்து ஹெலிகாப்டர்கள் உதவியுடன் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். </p><p>தீவிரத் தேடுதலுக்குப் பின், ஆகஸ்ட் 3-ஆம் தேதி மாலையில் 'இன்யோ தேசியப் பூங்கா' பகுதியில் விக்ரம் முபாயி உயிரிழந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவர் எவ்வாறு உயிரிழந்தார் என்பதற்கான அதிகாரப்பூர்வத் தகவல்களைப் புலனாய்வாளர்கள் இன்னும் வெளியிடவில்லை. </p><p>எனினும், இதில் எவ்வித சதித்திட்டமும் இருப்பதாகத் தெரியவில்லை என்றும், இயற்கை சீற்றம் அல்லது விபத்தினால் இது நேர்ந்திருக்கலாம் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><h2>யார் இந்த விக்ரம் முபாயி?</h2><p>ஹாங்காங்கில் பிறந்து வளர்ந்த விக்ரம், ஒரு திறமையான மலையேற்ற வீரர் மற்றும் சைக்கிள் ஓட்டுநர். "அவர் நடக்கக் கற்றுக் கொண்ட காலத்திலிருந்தே அவரது தாய் அவருக்கு மலையேற்றப் பயிற்சியைக் கொடுத்தார்" என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். </p><p>கடந்த 2022-ஆம் ஆண்டு இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பை முடித்த அவர், தற்போது கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக இருந்தார். </p><p>கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில், பிளாஸ்டிக் மற்றும் தாவரக் கழிவுகளை பாக்டீரியாக்கள் மூலம் சிதைத்து, பெட்ரோலியத்திற்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த புதிய எரிபொருளை உருவாக்கும் மிக முக்கியப் பல்லுயிர் ஆராய்ச்சியில் அவர் ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>பெண்கள் பதிவு செய்யும் போலியான துன்புறுத்தல் வழக்குகள் விஷயத்தில் கருத்து கூற முடியாது: தலைமை நீதிபதி</title><link>https://www.maalaimalar.com/news/national/cannot-comment-on-fake-harassment-cases-filed-by-women-chief-justice</link><comments>https://www.maalaimalar.com/news/national/cannot-comment-on-fake-harassment-cases-filed-by-women-chief-justice#comments</comments><guid isPermaLink="false">2c4994be-4286-4c00-9905-6e445a1d998a</guid><pubDate>Sat, 08 Aug 2026 12:39:31 +0000</pubDate><atom:updated>2026-08-08T12:39:31.409Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,உச்ச நீதிமன்றம்,தலைமை நீதிபதி,Chief Justice of India,Surya Kant,சூர்ய காந்த்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/5ag1ca4t/Untitled-design-12.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பெண்கள் போலி துன்புறுத்தல் வழக்குகள்: ஒவ்வொரு வழக்கும் தனித்த உண்மை, பொதுவான கருத்து கூற முடியாது]]></media:title><media:description type="html"><![CDATA[ Supreme Court CJI Surya kant]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/5ag1ca4t/Untitled-design-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாட்டில் தேங்கி நிலுவையில் இருக்கும் நீதிமன்ற வழக்குகளின் எண்ணிக்கை 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை போல இப்போது இல்லை என்று இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்தார்.</p><p>மேலும், வழக்குகளை விரைவாக முடிப்பதற்காக தொழில்நுட்பத்தின் மூலம் வடிவமைக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் மிகச் சிறந்த பலன்களை அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p>இந்திய தலைமை நீதிபதி சூர்ய காந்த்-இடம், நீதிமன்றங்களில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். </p><h3><strong>இந்திய தலைமை நீதிபதி சூர்ய காந்த்</strong></h3><p>அப்போது அவர், “தேங்கியிருக்கும் வழக்குகளுக்கு பல காரணங்கள் உள்ளன; அவை படிப்படியாக ஒரு திட்டமிட்ட முறையில் தீர்க்கப்பட்டு வருகின்றன.</p><p>நாட்டில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை, 10 முதல் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப்போல் இப்போது இல்லை. தொழில்நுட்பத்தின் மூலம் வழக்குகளை விரைவாகத் தீர்ப்பதற்காக நாங்கள் ஏராளமான திட்டங்களை வகுத்துள்ளோம், அவை மிகவும் நல்ல பலன்களை அளித்துள்ளன” என்று கூறினார்.</p><h3><strong>போலி வழக்குகள்</strong></h3><p>மேலும், “பெண்கள் பதிவு செய்யும் பல துன்புறுத்தல் வழக்குகள் போலியானவை என நிரூபிக்கப்படுவது குறித்த விஷயத்தில் பொதுவான கருத்தைக் கூற முடியாது. ஒவ்வொரு வழக்கும் அதன் குறிப்பிட்ட உண்மைகளைப் பொறுத்தது.</p><p>நீதிபதிகள் நியமனத்திற்காக உச்ச நீதிமன்ற கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்ட பெயர்களை மத்திய அரசு மீண்டும் மீண்டும் திருப்பி அனுப்புவது குறித்து பத்திரிக்கையாளர்கள் இங்கே பேசக்கூடாது.</p><p>இது சட்ட சேவைகள் ஆணையத்தின் ஒரு நிகழ்ச்சி" என்று கூறினார்.</p><p>முன்னதாக, தலைமை நீதிபதி இங்கு நடைபெற்ற தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் மேற்கு மண்டல மாநாட்டில் உரையாற்றினார்.</p><p>மாநாட்டின் தொடக்க அமர்வில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் மற்றும் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் கலந்துகொண்டனர்.</p>]]></content:encoded></item></channel></rss>