<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 12 Sep 2026 23:07:01 +0000</lastBuildDate><item><title>முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்த கார் பந்தயம் -  3ஆம் இடம் பிடித்து அஜித்தின் அணி அசத்தல் </title><link>https://www.maalaimalar.com/news/world/car-race-flagged-off-by-chief-minister-vijay-ajiths-team-impresses-by-securing-3rd-place</link><comments>https://www.maalaimalar.com/news/world/car-race-flagged-off-by-chief-minister-vijay-ajiths-team-impresses-by-securing-3rd-place#comments</comments><guid isPermaLink="false">d7d84a61-96cc-4821-8d35-bc1d516f6465</guid><pubDate>Sat, 12 Sep 2026 19:10:05 +0000</pubDate><atom:updated>2026-09-12T19:10:05.197Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Ajith,கார் பந்தயம்,car racing,அஜித்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/k2fpohlc/tn-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விஜய், அஜித்]]></media:title><media:description type="html"><![CDATA[ விஜய், அஜித்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/k2fpohlc/tn-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்த லே மான்ஸ் கார் பந்தய போட்டியில் நடிகர் அஜித்தின் அணி 3ஆம் இடம் பிடித்துள்ளது. </p><p>அரசுமுறைப் பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள<a href="https://www.maalaimalar.com/topic/vijay"> முதலமைச்சர் விஜய்</a>, தமிழ்நாட்டிற்குப் புதிய முதலீடுகளை ஈர்ப்பதோடு சர்வதேச விளையாட்டு உள்கட்டமைப்புகளையும் நேற்று நேரில் பார்வையிட்டார்.</p><h2>அஜித்-விஜய்</h2><p>அதேநேரம் நேற்று இரவு 9 மணியளவில் லண்டனில் நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/ajith-kumar">அஜித் குமாரின்</a> அணி பங்கேற்கும் மிச்செலின் லீ மான்ஸ் தொடரை முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார். </p> <p>அங்கு முதலமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அஜித்தை விஜய் ஓடிச் சென்று ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்தினார். விஜய் வருகைக்கு அஜித் நன்றி தெரிவித்தார்.</p><p>தொடர்ந்து அவர் பார்வையாளர் பகுதியில் நின்று பந்தயத்தை கண்டுகளித்தார். நடிகை திரிஷாவும் பந்தயத்தை கண்டுகளிக்க பார்வையாளர் திடலுக்கு வருகை தந்தார்.</p> <h2>போட்டி</h2><p>லே மான்ஸ் போட்டியில் சர்வதேச பந்தய வீரராகக் நடிகர் அஜித் குமார், LMP3 Pro/Am பிரிவில் 'Ajith RedAnt by Virage' அணியின் சார்பாக 16-ஆம் எண் கொண்ட 'Ligier' பந்தயக் காரை இயக்கினார்.</p><p>இப்போட்டியில் அஜித் குமாருடன் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த முன்னணி பந்தய வீரர் ரோமைன் வோஸ்னியாக் இணை காரோட்டியாக பங்கேற்றார்.</p><p>சுமார் 2 மணி நேரம் கார் பந்தயம் நடைபெற்றது. இதில் அஜித்குமாரின் அணி 3வது இடம் பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கனடாவில் வாடகைக்கு இருப்பவர் மாட்டிறைச்சி சமைப்பதை எதிர்த்த இந்திய வம்சாவளி வீட்டு உரிமையாளர் கைது</title><link>https://www.maalaimalar.com/news/world/indian-origin-landlord-arrested-for-protesting-tenants-cooking-beef-in-canada</link><comments>https://www.maalaimalar.com/news/world/indian-origin-landlord-arrested-for-protesting-tenants-cooking-beef-in-canada#comments</comments><guid isPermaLink="false">b73e9fdf-0610-4e70-bd3c-ec4afd28bb2f</guid><pubDate>Sat, 12 Sep 2026 23:01:51 +0000</pubDate><atom:updated>2026-09-12T23:01:51.290Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய வம்சாவளி,Indian origin,கனடா,canada,beef,மாட்டிறைச்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/8z96n1hd/tn-11.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/8z96n1hd/tn-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கனடாவில் இந்திய வம்சாவளி வீட்டு உரிமையாளர், தன் வீட்டில் வாடகைக்கு இருப்பவர் மாட்டிறைச்சி சமைப்பதை எதிர்த்ததால் கைது செய்யப்பட்டுள்ளார். </p>  <p><a href="https://www.maalaimalar.com/topic/canada">கனடாவில் </a>இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜ் திவானா என்ற பெண்மணி  தனது வீட்டை ஒருவருக்கு வாடைகைக்கு விட்டுள்ளார்.</p> <p>வாடகைக்கு இருப்பவர் அண்மையில் வீட்டுத் தோட்டத்தில் வைத்து பாார்பிக்யூ சமையல் செய்துள்ளார். இது <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">இறைச்சியை </a>ஒரு வகையாக வாட்டும் முறை. அவர்கள் மாட்டிறைச்சியை அவ்வாறு பார்பிக்யூ செய்துகொண்டிருந்தபோது ராஜ் திவானா அங்கு வந்துள்ளார்.</p><p>தனது இடத்தில் மாட்டிறைச்சி சமைக்கக் கூடாது எனக் கூறி அவர்களைத் தடுத்துள்ளார்.</p><h2>வீடியோ</h2><p>இது தொடர்பான வீடியோவில், ராஜ் திவானா பார்பிக்யூவில் வைக்கப்பட்டிருந்த உணவை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்துவதும், தனது இடத்தில் அதை சமைக்க அனுமதிக்க முடியாது என எச்சரிப்பதும் பதிவாகியுள்ளது.</p><p>வாடகைக்கு இருப்பவருக்கும் அவரும் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதை வாடகைக்கு இருப்பவரின் நண்பர் தனது கைபேசியில் படம்பிடித்துள்ளார்.</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/mjxbjshb/tn-12.jpg" /></figure><h2>குற்றச்சாட்டு</h2><p>வீசம்பவத்திற்குப் பிறகு, வாடகைக்கு இருக்கும் அந்த நபர் சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பதிவேற்றி ராஜ் திவானா தனது அனுமதி இன்றி வாடகை வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், கை கலப்பு செய்ததாவும் குறிப்பிட்டார்.</p><p>தான் வீட்டில் இல்லாத நேரத்தில் திவானா வீட்டிற்குள் நுழைந்து கதவின் பூட்டுகளை மாற்றித் தனக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாகவும் வாடகைதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.</p> <h2>கைது</h2><p>வாடகைதாரரின் புகாரை தொடர்ந்து கனடா காவல்துறையினர், ராஜ் திவானாவை அதிரடியாக கைது செய்து அழைத்துச் சென்றனர். அவரை கைவிலங்கிட்டு போலீசார் அழைத்துச் செல்லும் வீடியோ வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>பாலஸ்தீனத்தை தனி நாடாக உருவாக்க பிரிக்ஸ் நாடுகள் ஆதரவு - இஸ்ரேலுக்கு அறிவுரை வழங்கிய  &quot;டெல்லி பிரகடனம்&quot;</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-declaration-advises-israel-to-support-brics-statehood-for-palestine</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-declaration-advises-israel-to-support-brics-statehood-for-palestine#comments</comments><guid isPermaLink="false">4b6d3455-119b-4b70-a2b5-3859fdd3556d</guid><pubDate>Sat, 12 Sep 2026 22:17:21 +0000</pubDate><atom:updated>2026-09-12T22:17:21.024Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>palestine,காசா,இஸ்ரேல்,gaza,Israel,BRICS Summit,பிரிக்ஸ் உச்சிமாநாடு,பாலஸ்தீனம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/wyksrh6s/tn-4.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரிக்ஸ் ]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரிக்ஸ் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/wyksrh6s/tn-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரிக்ஸ் மாநாட்டில் எட்டப்பட்ட "டெல்லி பிரகடன"த்தில் பாலஸ்தீனம் மற்றும் லெபனான் பிரச்சனைகள் குறித்த நிலைப்பாட்டை பிரிக்ஸ் நாடுகள் அறிவித்துள்ளன.</p> <p>டெல்லியில் நடந்து வரும் 18வது<a href="https://www.maalaimalar.com/news/national/brics-summit-xi-jinping-says-middle-east-war-causes-serious-losses"> பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் </a>முதல் நாளான நேற்று"டெல்லி பிரகடனம்" என்ற பெயரில் உறுப்பு நாடுகள் பல நிலைப்பாடுகளுக்கு கூட்டாக ஆதரவளித்துள்ளது. </p><p>சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதின், ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான், பிரதமர் மோடி உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் கையொப்பம் இட்டு இந்த கூட்டுப் பிரகடனத்தை வெளியிட்டனர். </p> <h2>பாலஸ்தீன நாடு</h2><p>அந்த பிரகடனத்தில் குறிப்பாக, இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினைக்கு 'இரு நாடுகள் தீர்வே' ஒரே வழி என்றும் இஸ்ரேலுடன் இணைந்து சுதந்திரமான பாலஸ்தீன நாடு உருவாக்கப்பட வேண்டும் என்றும் பிரிக்ஸ் நாடுகள் கூட்டு நிலைப்பாடு எடுத்துள்ளன.</p><p>1967ஆம் ஆண்டிற்கு முந்தைய எல்லைகளை அடிப்படையாகக் கொண்டு, <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE">காசா முனை</a>, <a href="https://www.maalaimalar.com/news/world/west-bank-violence-israeli-settlers-torch-mosques-kill-palestinians">மேற்குக் கரை</a> மற்றும் கிழக்கு ஜெருசலேம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக பாலஸ்தீன நாடு அமைய வேண்டும். கிழக்கு ஜெருசலேமே அதன் தலைநகராக இருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>பாலஸ்தீனியர்கள் தங்களது எதிர்காலத்தை சுயநிர்ணயம் செய்யும் உரிமையையும், தங்களது தாய்நாட்டிற்கு திரும்பும் உரிமையையும் கொண்டுள்ளனர்; ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனத்திற்கு முழுமையான உறுப்பினர் தகுதி வழங்கப்பட வேண்டும் எனவும் பிரிக்ஸ் வலியுறுத்தியுள்ளது.</p> <h2>இடப்பெயர்வுக்கு தடை</h2><p>பாலஸ்தீனியர்களை தங்களது சொந்த நிலத்திலிருந்து தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ<a href="https://www.maalaimalar.com/news/world/israel-ministers-plan-to-remove-25-lakh-palestinians-from-gaza"> பலவந்தமாக வெளியேற்றும் இஸ்ரேலின் திட்டத்தை</a> பிரிக்ஸ் கூட்டமைப்பு கடுமையாக எதிர்த்துள்ளது.</p><p>போரின் உத்தியாக பொதுமக்களுக்கு உணவை மறுப்பதையோ, மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்கள் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதையோ பிரிக்ஸ் கண்டித்துள்ளது.</p><p>ஜெருசலேமில் உள்ள புனிதச் தலங்களை மக்கள் வழிபடுவதற்கான உரிமை பாதுகாப்பப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.</p> <h2>லெபனான் பிரச்சனை</h2><p><a href="https://www.maalaimalar.com/news/world/israel-launches-barrage-of-attacks-on-lebanon-4-killedincluding-womenand-20-critically-injured">லெபனானில்</a> அமைதியை நிலைநாட்ட ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் 1701 முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என "டெல்லி பிரகடனம்" சொல்கிறது.</p><p>லெபனானின் இறையாண்மை மற்றும் எல்லைகள் மதிக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ள பிரிக்ஸ், தெற்கு லெபனானில் தங்கியுள்ள இஸ்ரேலியப் படைகள் உடனடியாகத் தங்களது வீரர்களை திரும்ப அழைக்க வேண்டும் என கோரியுள்ளது.</p><p>மேலும் ஈரான் மீதான அமெரிக்காவின் போர் உலக நலனுக்கு உகந்ததல்ல என்றும் பிரிக்ஸ் நாடுகள் தெரிவித்துள்ளன. </p> ]]></content:encoded></item><item><title>கோவை அரசுப் பள்ளியில் பழங்குடியின மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்ததாக தலைமை ஆசிரியை மீது விசாரணை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/investigation-against-headmistress-who-made-tribal-students-clean-toilets-in-coimbatore-government-school</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/investigation-against-headmistress-who-made-tribal-students-clean-toilets-in-coimbatore-government-school#comments</comments><guid isPermaLink="false">d3023a89-af9c-40e8-807f-8ceb463a6a4d</guid><pubDate>Sat, 12 Sep 2026 21:03:51 +0000</pubDate><atom:updated>2026-09-12T21:03:51.060Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tribal people,Coimbatore,கோவை,government school,பழங்குடியினர்,அரசுப் பள்ளி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/w619inro/tn-9.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ வைரல் படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ வைரல் படம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/w619inro/tn-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கோயம்புத்தூர் அருகே உள்ள பழமலை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல நடுநிலைப் பள்ளியில் மாணவர்களை கழிப்பறை சுத்தம் செய்ய வைத்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p> <p>குஞ்சூர்பதி கிராமத்தில் அமைந்துள்ள இந்தப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் சுமார் 40 <a href="https://www.maalaimalar.com/news/national/using-caste-words-not-offence-under-sc-st-act-allahabad-high-court">பழங்குடியின </a>மாணவர்கள் விடுதியில் தங்கிப் படித்து வருகின்றனர். </p><p>மாணவர்கள்  சிலர் கழிப்பறையை  சுத்தம் செய்யும் புகைப்படங்கள் கடந்த வியாழக்கிழமை முதல் வைரலாக பரவி வருகிறது.</p><p>பள்ளிக்கு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">தூய்மைபணியாளர்கள் </a>சரியாக வருவதில்லை என்ற காரணத்தை கூறி, தலைமையாசிரியை மாணவிகளை இத்தகைய வேலைகளில் ஈடுபடுத்தியதாகப் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். </p><p>இதனால் குழந்தைகளுக்கு கடுமையான நோய்த்தொற்றுகள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மாணவிகளை தூய்மைப் பணியில் ஈடுபடுத்தியது மட்டுமின்றி, பள்ளி நிர்வாகம் மீது மேலும் பல தீவிர புகார்களைப் பெற்றோர்களும் உள்ளூர் மக்களும் முன்வைத்துள்ளனர். </p> <h2>பிற குற்றச்சாட்டுகள்</h2><p>வீட்டுப்பாடம் செய்யவில்லை எனக் கூறி ஒரு மாணவியை தலைமையாசிரியை பிரம்பால் கடுமையாகத் தாக்கியதில், அந்த சிறுமியின் முதுகில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.</p><p>இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் பள்ளிக்கு வந்து தலைமையாசிரியையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>பள்ளியின் குடிநீர்த் தொட்டிகள் தூய்மைப்படுத்தப்படாமல், அதில் தவளைகள் மிதப்பதாகப் பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் பள்ளியின் சுற்றுச்சுவர் பல இடங்களில் இடிந்து சேதமாகியுள்ளது எனவும் கூறப்படுகிறது.</p><p>ஆசிரியர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குப் பள்ளிக்கு வருவதில்லை என்றும், மாணவர்களுக்கு சரியான உணவும் வழங்கப்படுவதில்லை என்றும் குற்றம் சாட்டு எழுந்துள்ளது.</p> <h2>விசாரணை</h2><p>இச்சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு குழந்தை நலக் குழு (CWC) உறுப்பினர்கள் நேரடியாக பள்ளிக்கு சென்று ஆய்வு நடத்தி, விரிவான அறிக்கையை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு சமர்ப்பித்துள்ளனர்.</p><p>முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட தலைமையாசிரியை மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p>பழங்குடியின சிறுவர்கள் பயிலும் அரசுப் பள்ளியில் நடைபெற்றுள்ள இந்த மனித உரி மீறல் சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுத்து, இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நிகழாமல் இருக்க வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>டெல்லி 5 நட்சத்திர விடுதி அறையில் ஏர் இந்தியா விமானி மர்ம மரணம்</title><link>https://www.maalaimalar.com/news/national/air-india-pilot-dies-in-delhi-5-star-hotel-room</link><comments>https://www.maalaimalar.com/news/national/air-india-pilot-dies-in-delhi-5-star-hotel-room#comments</comments><guid isPermaLink="false">7f571e8d-d902-41b6-bb37-8ff5135641b5</guid><pubDate>Sat, 12 Sep 2026 20:08:41 +0000</pubDate><atom:updated>2026-09-12T20:08:41.209Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஏர் இந்தியா,Air India,delhi,Air India Pilot,டெல்லி,ஏர் இந்தியா விமானி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/o9yzb4fd/tn-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[  ஏர் இந்தியா விமானி மர்ம மரணம்]]></media:title><media:description type="html"><![CDATA[  ஏர் இந்தியா விமானி மர்ம மரணம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/o9yzb4fd/tn-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் ஏர் இந்தியா விமானி ஓட்டல் அறையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். </p><p>ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் பணியாற்றி, பின்னர் <a href="https://www.maalaimalar.com/news/national/phuket-flight-pilot-who-failed-drug-test-sacked-by-air-india">ஏர் இந்தியா</a> நிறுவனத்திற்கு மாறிய அந்த விமானி, போயிங் 787 விமானங்களை இயக்குவதற்கான பயிற்சிக்காகப் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF">டெல்லிக்கு </a>வந்துள்ளார். </p><p>அவர் செப்டம்பர் 10 அன்று தெற்கு டெல்லியில் உள்ள வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள ஒரு 5 நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளார்.</p> <h2>உயிரிழப்பு</h2><p>செப்டம்பர் 11 மாலை நேரத்தில், விமானியின் சகோதரர் தனது சகோதரருக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்ட போது அவர் பதிலளிக்கவில்லை.</p><p>இதனால் சந்தேகமடைந்த அவர் ஓட்டல் மேலாளரை  தொடர்புகொண்டு நிலைமையை கூறியுள்ளார்.</p><p>ஓட்டல் அறை உட்புறமாக பூட்டப்பட்டிருந்ததால், மேலாளர் மாற்றுச் சாவி மூலம் அறையை திறந்து பார்த்தபோது, விமானி சுயநினைவின்றி மயங்கிக் கிடந்தது தெரியவந்தது.</p><p>வசந்த் குஞ்ச் வடக்கு காவல் நிலையத்திற்கு வந்த அவசர அழைப்பைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.</p><p>ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.</p> <h2>பிரேதப் பரிசோதனை</h2><p>அவரது உடலுக்கு இன்று புதுடெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் டற்கூறாய்வு செய்யப்பட்டது. இறுதி மருத்துவ அறிக்கை கிடைத்த பிறகே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியும் எனக் காவல் துறை கூறியுள்ளது.</p><p>இந்தச் சம்பவத்தில் எந்தவிதமான சதிச்செயலும் இருப்பதாகத் தெரியவில்லை எனக்கூறிய காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.</p> <p>அந்த விமானி மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.</p><p>இச்சம்பவம் குறித்து ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டெல்லியில் ஓட்டல் அறையில் எங்களது விமானி சுயநினைவின்றி மீட்கப்பட்டு, மருத்துவமனையில் உயிரிழந்த செய்தி எங்களை அதிர்ச்சியிலும் ஆழ்ந்த துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ஏர் இந்தியா வழங்கி வருகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முரண்பாடுகள் ஒருபோதும் மோதல்களாக மாறக் கூடாது - சீன அத்திபாருடான பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/national/controversies-should-never-turn-into-conflicts-pm-modi-insists-in-talks-with-chinese-delegation</link><comments>https://www.maalaimalar.com/news/national/controversies-should-never-turn-into-conflicts-pm-modi-insists-in-talks-with-chinese-delegation#comments</comments><guid isPermaLink="false">073a6e25-8b64-4e1c-ac59-fd1e5df365a0</guid><pubDate>Sat, 12 Sep 2026 18:12:14 +0000</pubDate><atom:updated>2026-09-12T18:12:14.889Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,India-China,BRICS Summit,பிரிக்ஸ் உச்சிமாநாடு,பிரதமர் மோடி,இந்தியா-சீனா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/1da5dw11/tn-1.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மோடி, ஜி ஜின்பிங்  ]]></media:title><media:description type="html"><![CDATA[ மோடி, ஜி ஜின்பிங்  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/1da5dw11/tn-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள வந்துள்ள சீன அதிபரிடம் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.</p> <p>2019 இல் சீன வீரர்கள் கல்வான் பள்ளத்தாக்கில் எல்லைக் கட்டுப்பாடு கோட்டை அத்துமீறி கடந்து நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். </p><p>இதன் பின் சிக்கலில் இருந்த சீனாவுடனான உறவை பிரதமர் மோடி புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். </p><p>அதன் ஒரு பகுதியாக 7 ஆண்டுகள் கழித்து இந்தியா வருகை தந்துள்ளார் சீன அதிபர் ஜி ஜின்பிங். இன்றும் நாளையும் டெல்லியில் நடக்கும் 18வது பிரிக்ஸ் மாநாட்டில் அவர் கலந்துகொண்டுள்ளார். </p><p>அவருடன் <a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-urges-sustained-brics-momentum-at-delhi-summit">பிரதமர் மோடி</a> இன்று இருதரப்பு பேச்சுவார்தையையும் நடத்தி உள்ளார். </p><p>இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள சீரான முன்னேற்றத்தை இரு தலைவர்களும் வரவேற்றதாக இந்திய வெளியுறவு அமைச்சகம்  தெரிவித்துள்ளது.</p> <h2>இரு நாட்டு உறவு</h2><p>சந்திப்பின் போது பேசிய பிரதமர் மோடி, "இரு நாடுகளுக்கும் இடையிலான <a href="https://www.maalaimalar.com/news/national/chance-to-hold-bilateral-talks-with-chinese-president-prime-minister-modi-who-is-coming-to-india-to-attend-the-brics-conference">வேறுபாடுகள் </a>மற்றும் முரண்பாடுகள் ஒருபோதும் மோதல்களாக மாறக் கூடாது" என்று சுட்டிக்காட்டினார்.</p><p>இருதரப்பு உறவுகளுக்கு பரஸ்பர மரியாதை, பரஸ்பர உணர்திறன், மற்றும் பரஸ்பர நலன் ஆகிய மூன்று முக்கிய கோட்பாடுகள் வழிகாட்டியாக இருக்க வேண்டும் எனப் பிரதமர் வலியுறுத்தினார்.</p> <p>எல்லைப் பகுதிகளில் அமைதியும் நிலைத்தன்மையும் நிலவுவதே இருதரப்பு உறவுகளின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு அவசியமான அடிப்படை என்பதைப் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.</p><p>எல்லை விவகாரம் தொடர்பாக ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்கள் மற்றும் புரிதல்களை இரு நாடுகளும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.</p><p>எல்லைப் பிரச்சினைக்கு நியாயமான, தாரபூர்வமான மற்றும் இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வை எட்டுவதில் இரு தலைவர்களும் தங்களது உறுதியை வெளிப்படுத்தினர்.</p> <h2>வர்த்தக உறவு</h2><p>இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் குறித்தும் இருவரும் பேசினர். வர்த்தக சமனின்மை மற்றும் விநியோகச் சங்கிலிச் சிக்கல்கள் ஆகியவற்றை இரு தரப்பும் பரஸ்பரம் தீர்க்க வேண்டும் என்பதில் இருவரும் உடன்பட்டனர்.</p><p>இரு நாடுகளின் வர்த்தகங்களுக்கும் முறையான சந்தை அணுகலை வழங்குவது அவசியம் என ஒப்புக்கொள்ளப்பட்டது.</p><p>இந்தியா-சீனா இடையிலான இருதரப்பு உறவுகளை மீண்டும் சீரமைக்கும் நோக்கில் இந்த சந்திப்பு மிக முக்கியமான நகர்வாக பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>இது தான் ஏழ்மையை ஒழிப்பதா?.. பிரிக்ஸ் மாநாட்டுக்காக டெல்லியில் குடிசைப் பகுதிகள் திரையிட்டு மறைப்பு - ஆம் ஆத்மி, காங்கிரஸ் விமர்சனம்</title><link>https://www.maalaimalar.com/news/national/is-this-how-poverty-is-eradicated-slum-areas-in-delhi-screened-off-for-the-brics-summit-aam-aadmi-party-and-congress-criticize-the-move</link><comments>https://www.maalaimalar.com/news/national/is-this-how-poverty-is-eradicated-slum-areas-in-delhi-screened-off-for-the-brics-summit-aam-aadmi-party-and-congress-criticize-the-move#comments</comments><guid isPermaLink="false">f8275ffd-da4a-4a09-92a1-39a6aa93d10c</guid><pubDate>Sat, 12 Sep 2026 17:34:19 +0000</pubDate><atom:updated>2026-09-12T17:34:19.468Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆம் ஆத்மி,BRICS Summit,delhi,Aam Aadmi,பிரிக்ஸ் உச்சிமாநாடு,டெல்லி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/1jufqmrw/tn-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டெல்லி குடிசைப் பகுதிகள் திரையிட்டு மறைப்பு]]></media:title><media:description type="html"><![CDATA[ டெல்லி குடிசைப் பகுதிகள் திரையிட்டு மறைப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/1jufqmrw/tn-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி இன்று தொடங்கி நாளை வரை இரு தினங்களுக்கு 18வது <a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-urges-sustained-brics-momentum-at-delhi-summit">பிரிக்ஸ் உச்சி மாநாடு </a>நடைபெறுகிறது. </p><p>இதில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதின், ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் உள்ளிட்ட உறுப்பு நாட்டு தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். </p><p>பாரத் மண்டபத்தில் மாநாடு நடந்து வரும் சூழலில் தலைநகர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF">டெல்லியில் </a>பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. </p> <p>அதேநேரம் நகரை அழகுபடுத்தி காட்ட எடுக்கப்பட்ட முயற்சிகள் விமர்சனத்துக்குள்ளாகி வருகின்றன.</p><p>ஏழை மக்கள் வாழும் குடிசைப் பகுதிகளும், சேரிகளும் திரைகள் கொண்டு மறைக்கப்பட்டுள்ளன.</p><p>இதன் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன</p> <h2>ஆம் ஆத்மி விமர்சனம்</h2><p>இதனை கேலிச் சித்திரம் வெளியிட்டு விமர்சித்துள்ள ஆம் ஆத்மி கட்சி, "சேரிப் பகுதிகளை திரையிட்டு மறைப்பதால் நிஜம் மாறப்போவதில்லை. 2.6% ஜிடிபி வளர்ச்சியை 7.8% என அழைப்பது போன்றுதான் இதுவும் ஒரு ஏமாற்று வேலை" என குற்றம் சாட்டியுள்ளது.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Covering slums with curtains won’t change the reality, just like calling 2.6% GDP Growth 7.8%. <a href="https://t.co/8sP55anb4f">pic.twitter.com/8sP55anb4f</a></p>&mdash; AAP (@AamAadmiParty) <a href="https://x.com/AamAadmiParty/status/2098412025965883545?ref_src=twsrc%5Etfw">September 11, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>காங்கிரஸ் விமர்சனம்</h2><p>காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா, "பாஜகவிற்கு எல்லா 'ஹிஜாப்'களும் பிடிக்காமல் இல்லை; பிரதமரின் தோல்விகளையும் நாட்டின் வறுமையையும் மூடி மறைக்கும் இந்தத் திரையை தான் அவர்கள் அதிகம் விரும்புகிறார்கள்" என்று சாடியுள்ளார்.</p><p>வறுமையை ஒழிப்பதற்குப் பதிலாக வெளிநாட்டு விருந்தினர்களிடம் இருந்து வறுமையை மறைப்பதே அரசின் நோக்கமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>இதற்கு முன்பும் ஜி20 போன்ற முக்கியச் சர்வதேச நிகழ்வுகளின் போது டெல்லியின் முக்கியச் சாலைகளின் இருபுறமும் உள்ள குடிசைகளைத் திரையிட்டு மறைத்ததற்காக மத்திய அரசு விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. </p>  ]]></content:encoded></item><item><title>மத்திய கிழக்கில் இந்திய மாலுமிகள் பயணித்த 3 வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல்!</title><link>https://www.maalaimalar.com/news/world/three-ships-carrying-indian-sailors-attacked-in-the-middle-east</link><comments>https://www.maalaimalar.com/news/world/three-ships-carrying-indian-sailors-attacked-in-the-middle-east#comments</comments><guid isPermaLink="false">f505736e-64b9-4bd7-a375-44e4011319c8</guid><pubDate>Sat, 12 Sep 2026 17:00:22 +0000</pubDate><atom:updated>2026-09-12T17:00:22.934Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BRICS Summit,Indian sailors,இந்திய மாலுமிகள்,Iran War,ஈரான் போர்,பிரிக்ஸ் மாநாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/f6eelmb5/tn.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ வர்த்தக கப்பல்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ வர்த்தக கப்பல்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/f6eelmb5/tn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய கிழக்கில் இந்திய ஊழியர்களுடன் பயணித்த 3 வெளிநாட்டு வர்த்தகக் கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.</p><p>மத்திய கிழக்கில் <a href="https://www.maalaimalar.com/news/national/brics-summit-xi-jinping-says-middle-east-war-causes-serious-losses">ஈரான் - அமெரிக்க போர்</a> தீவிரமடைந்துள்ள நிலையில், இந்திய ஊழியர்களுடன் பயணித்த 3 வெளிநாட்டு வர்த்தகக் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D">கப்பல்கள் </a>செப்டம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.</p><p>நல்வாய்ப்பாக இத்தாக்குதல்களில் இந்திய மாலுமிகள் அனைவரும் காயமின்றிப் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.</p> <h2>தாக்குதல்கள்</h2><p>கடல்சார் நிர்வாக இயக்குநரகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஜிம்பாப்வே கொடியுடன் பயணித்த 'ரீஸ்கோ' என்ற கச்சா எண்ணெய் கப்பல், செப்டம்பர் 8 அன்று இரவு 11 மணியளவில் ஓமன் வளைகுடாப் பகுதியில் அமெரிக்கக் கடற்படையினரால் தாக்கப்பட்டது.</p><p>இக்கப்பலில் பயணித்த 21 இந்திய ஊழியர்களும் தாக்குதலுக்கு முன்பாகவே கப்பலை விட்டுப் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, ஈரானியத் துறைமுகத்தில் உள்ள பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர்.</p><p>ஓமன் வளைகுடா மற்றும் பாரசீக வளைகுடாப் பகுதிகளில் செப்டம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தாக்குதலுக்கு உள்ளான மற்ற இரு வெளிநாட்டுக் கப்பல்களிலும் இருந்த இந்திய ஊழியர்கள் அனைவரும் எவ்விதக் காயமுமின்றி மீட்புக் குழுவினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.</p> <p>பாரசீக வளைகுடா மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் இந்தியக் கொடியுடன் பயணிக்கும் கப்பல்கள் மற்றும் இந்தியாவை நோக்கி வரும் வெளிநாட்டுக் கப்பல்கள் என மொத்தம் 10 கப்பல்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றில் உள்ள மாலுமிகளை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.</p><p>பிப்ரவரி 28 அன்று அமெரிக்க படைகள் ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து இதுவரை இந்தியக் கொடி பொருந்திய 4 கப்பல்களும், இந்திய ஊழியர்கள் பயணித்த 50 கப்பல்களும் இத்தகைய தாக்குதல் சம்பவங்களை எதிர்கொண்டுள்ளன.</p> <h2>பிரதமர் மோடி - ஈரான் அதிபர்</h2><p>இதனிடையே டெல்லியில் நடைபெறும் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக வருகை தந்த ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானுடன் பிரதமர் மோடி நடத்திய பேச்சுவார்த்தையில், வளைகுடாப் பகுதியில் சிக்கியுள்ள இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்தார்.</p><p>மேலும் ஹார்முஸ் ஜலசந்தியில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என ஈரான் அதிபரிடம் பிரதமர் வலியுறுத்தினார்.</p><p>இச்சந்திப்பு குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, "ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானை சந்தித்ததில் மகிழ்ச்சி. இது அவரது முதல் இந்திய வருகை என்பதால் மிகவும் சிறப்பு வாய்ந்தது. பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுவதில் இந்தியா உறுதியாக உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>லண்டனில் நடிகர் அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!</title><link>https://www.maalaimalar.com/sports/cm-vijay-flags-off-ajith-car-race-london</link><comments>https://www.maalaimalar.com/sports/cm-vijay-flags-off-ajith-car-race-london#comments</comments><guid isPermaLink="false">cf3118c7-a8eb-4ce2-88a2-86083d0c4d6b</guid><pubDate>Sat, 12 Sep 2026 16:13:59 +0000</pubDate><atom:updated>2026-09-12T16:13:59.408Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Ajith kumar,நடிகர் அஜித் குமார்,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,Silverstone Circuit,Michelin Le Mans Cup,சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/hh2jht74/VJ.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/hh2jht74/VJ.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இங்கிலாந்தில் உள்ள சர்வதேச அளவில் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தய களத்தில் நடைபெற உள்ள 2026-ஆம் ஆண்டிற்கான 'மிச்செலின் லீ மான்ஸ் கப்' பந்தயத் தொடரின் 5-வது சுற்றை, தமிழக முதலமைச்சர் விஜய் [ஆசியப் பிரதிநிதியாகவும் சிறப்பழைப்பாளராகவும்] பங்கேற்றுப் பச்சைக்கொடி அசைத்து முறைப்படி தொடங்கி வைத்தார்.</p><h2>மு<strong>தலமைச்சரின் லண்டன் பயணம்</strong></h2><p>அரசுமுறைப் பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டிற்குப் புதிய முதலீடுகளை ஈர்ப்பதோடு சர்வதேச விளையாட்டு உள்கட்டமைப்புகளையும் நேரில் பார்வையிட்டார். சமீபத்தில் தமிழகத்தில் சர்வதேசத் தரத்திலான 'மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்' மற்றும் 'ஒலிம்பிக் நகரம்' அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சில்வர்ஸ்டோன் சர்க்கியூட்டின் பாதுகாப்பு மற்றும் வடிவமைப்பு முறைகளை ஆய்வு செய்வது மேலும் முக்கியத்துவம் சேர்க்கிறது.</p><p>திரையுலகில் 34 ஆண்டுகளுக்கும் மேலாக இரு துருவங்களாகக் கருதப்பட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான விஜய்யும் அஜித் குமாரும், சர்வதேச விளையாட்டுக் களம் ஒன்றில் இணைந்து நிற்பது உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p><h2>4<strong>4 பந்தய கார்களின் அணி</strong>வகுப்பு</h2><p>இந்த மிச்செலின் லீ மான்ஸ் தொடரில் மொத்தம் 44 பந்தயக் கார்கள் பங்கேற்றுள்ளன. இந்த பிரம்மாண்டப் போட்டியைத் தொடங்குவதற்கான பச்சைக்கொடியை முதலமைச்சர் விஜய் முறைப்படி அசைத்துத் தொடங்கி வைத்தார். சர்வதேச பந்தய வீரராகக் களம் காணும் நடிகர் அஜித் குமார், LMP3 Pro/Am பிரிவில் 'Ajith RedAnt by Virage' அணியின் சார்பாக 16-ஆம் எண் கொண்ட 'Ligier' பந்தயக் காரை இயக்குகிறார். இப்போட்டியில் அஜித் குமாருடன் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த முன்னணி பந்தய வீரர் ரோமைன் வோஸ்னியாக் இணை காரோட்டியாகப் பங்கேற்கிறார்.</p><h2><strong> நன்றி தெரிவித்</strong>த அஜித்</h2><p>இங்கிலாந்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் அஜித் குமார், முதலமைச்சர் விஜயின் வருகை மற்றும் அவரது விளையாட்டுகளுக்கான ஆதரவு குறித்து மனமாரப் பாராட்டினார். "கடந்த 34 ஆண்டுகளாகத் திரையுலகில் எனது நண்பராக பயணித்த தமிழக முதலமைச்சர் விஜய், தனது பிஸியான அதிகாரப்பூர்வ அட்டவணைக்கு இடையிலும் எங்களை ஊக்குவிக்கச் சில்வர்ஸ்டோன் வந்ததற்கு எனது மனமார்ந்த நன்றிகள்" என்று அஜித் தெரிவித்தார்.</p><h2>இந்தியாவில் <strong>சர்வதேச பந்த</strong>யங்கள்</h2><p>"தமிழ்நாட்டில் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. இதுபோன்ற பந்தயங்களை வருங்காலத்தில் சென்னை மற்றும் இந்தியாவில் நடத்துவதற்குத் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் திட்டமிடல்களைப் பார்வையிடவே அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது" என்றும் அஜித் குறிப்பிட்டார்.</p><h2>அஜித்துடன் விஜய் போஸ்</h2><p>நடிகர் அஜித்குமாரின் பந்தய காரில் அமர்ந்து முதலமைச்சர் விஜய் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். </p><p>பந்தய காரில் அமர்ந்திருந்த நடிகர் அஜித் குமாருக்கு கை கொடுத்து முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்தார்.</p><p>மிச்செலின் லீ மேன்ஸ் கோப்பைக்கான கார் பந்தய போட்டியில் பங்கேற்கும் அஜித்தை சந்தித்து முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்தார்.</p><p>இந்நிலையில், நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் மின்செலின் லீ மேன்ஸ் கோப்பைக்கான கார் பந்தய போட்டியை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Proud Moment of TAMILNADU People&#39;s <br><br>Our honorable CM Vijay  flagged off the car race.<br><br>all the best Thala <a href="https://x.com/Akracingoffl?ref_src=twsrc%5Etfw">@Akracingoffl</a> <a href="https://x.com/hashtag/CMJosephVijay%E2%80%8C?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CMJosephVijay‌</a> <a href="https://x.com/hashtag/CMVijay%E2%80%8C?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CMVijay‌</a> <a href="https://x.com/hashtag/Ajith?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Ajith</a> <a href="https://t.co/V0b141uzDs">pic.twitter.com/V0b141uzDs</a></p>&mdash; BOSS TVK ❤️❤️ (@BossTVK) <a href="https://x.com/BossTVK/status/2098808742389354578?ref_src=twsrc%5Etfw">September 12, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>மின் தேவையை சமாளிக்க கூடுதலாக 2000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்- மின்வாரியம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-electricity-board-adds-2000-mw-to-stabilise-grid</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-electricity-board-adds-2000-mw-to-stabilise-grid#comments</comments><guid isPermaLink="false">80adfa4a-8833-4287-bd69-3ed05945f382</guid><pubDate>Sat, 12 Sep 2026 15:44:43 +0000</pubDate><atom:updated>2026-09-12T15:44:43.301Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Electricity,Electricity board,மின்வாரியம்,megawatts,மெகாவாட் மின்வாரியம்,மின்சார கொள்முதல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/bwmyr3rp/electricity.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Electricity board]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/bwmyr3rp/electricity.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மின் தேவையை சமாளிக்க கூடுதலாக 2000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யவுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.</p><p>இதுகுறித்து மின் வாரியம் கூறியிருப்பதாவது:-</p><p>இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>இந்த ஆண்டு கோடைக்காலம் எதிர்பாராத வகையில் நீடித்ததன் காரணமாக, மின்சாரத் தேவையும் அதிகரித்துள்ளது. அதேவேளையில், காற்றின் வேகம் குறைந்ததால் காற்றாலை <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/increase-in-wind-power-generation-in-coimbatore" rel="nofollow">மின் உற்பத்தி</a>யும் எதிர்பார்த்த அளவிற்கு கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக சில நேரங்களில் மின்னழுத்தக் குறைபாடு போன்ற தொழில்நுட்ப பிரச்சினைகள் ஏற்பட்டன.</p><p>இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மின்சார வாரியம் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் வெளிச்சந்தையில் இருந்து கூடுதலாக 2000 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் தற்போது மின் தொகுப்பின் (Grid) நிலைமை சீராகவும், நம்பகத்தன்மையுடனும் உள்ளது. மேலும், மின் கட்டமைப்பு மாறுபாடுகள் மற்றும் மின் விநியோக நிலைமையை தொடர்ந்து மின்வாரிய தலைமையகத்தில் உயர்மட்ட அலுவலர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து, உடனுக்குடன் உரிய உத்தரவுகள் வழங்கி வருகிறது.</p><p>மின்விநியோக பாதிப்புகளை உடனடியாக சரிசெய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் சிறப்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு, மின்தடை ஏற்பட்ட பகுதிகளில் உடனடியாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு மின்விநியோகம் சீரமைக்கப்பட்டு வருகிறது.</p><p>மின்தடை ஏற்படும் நிகழ்வுகளை எந்தவித அலட்சியமும் இன்றி உடனடியாக சரிசெய்ய வேண்டும் என களப்பணியில் உள்ள அனைத்து அலுவலர்களுக்கும் ஏற்கனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, வழக்கமான பராமரிப்புப் பணிகளுக்காக திட்டமிடப்பட்ட மின்தடைகளை இயன்றவரை தவிர்க்கவும் களப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>பொதுமக்களுக்கு நாள் முழுவதும், குறிப்பாக இரவு நேரங்களிலும், சீரான, நம்பகமான மற்றும் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் தொடர்ந்து விழிப்புடன் செயல்பட்டு வருகிறது.</p><p>மேலும், மின் நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் மின்சாரத்துறை சார்ந்த புகார்களுக்கு, 24 மணி நேரமும் இயங்கும் நுகர்வோர் சேவை மையமான 'மின்னகம்' தை "94987 94987" என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பண்டிகை கால கட்டண கொள்ளை: விதிமீறலில் ஈடுபட்ட ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.17 லட்சம் அபராதம் விதித்து தமிழக அரசு அதிரடி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/festival-season-fare-fraud-omni-buses-fined-rs-17-lakh</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/festival-season-fare-fraud-omni-buses-fined-rs-17-lakh#comments</comments><guid isPermaLink="false">0db58c4b-a812-4b45-910f-e7c1c533d0aa</guid><pubDate>Sat, 12 Sep 2026 15:25:31 +0000</pubDate><atom:updated>2026-09-12T15:25:31.203Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,Omni buses,ஆம்னி பேருந்துகள்,ஆம்னி பேருந்து கட்டணம்,Vinayagar Chaturthi,Tamilnadu Government</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/4xvrcoab/omni.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Omni buses]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/4xvrcoab/omni.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கட்டண முறைகேடுகள் மட்டுமின்றி, பாதுகாப்பு மற்றும் தகுதிச் சான்றிதழ் தொடர்பான விதிமீறல்களிலும் ஈடுபடும் ஆம்னி பேருந்துகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. </p><p>விநாயகர் சதுர்த்தி மற்றும் வார இறுதி தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் பயணிகள் தரப்பிலிருந்து தொடர் புகார்கள் எழுந்தன. இப்புகார்களின் அடிப்படையில், தமிழக அரசின் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மாநிலம் முழுவதும் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு, கட்டணக் கொள்ளை மற்றும் விதிமீறல்களில் ஈடுபட்ட ஆம்னி பேருந்துகளுக்கு சுமார் 17 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><h2>மாநி<strong>லம் தழுவிய வாகன சோத</strong>னை</h2><p>போக்குவரத்து ஆணையர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய தனிப்படைகள் சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், மாதவரம் மற்றும் மாநிலத்தின் முக்கியச் சுங்கச்சாவடிகளில் தீவிர தணிக்கையை மேற்கொண்டு வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் இதுவரை 2,379 ஆம்னி பேருந்துகளில் அதிகாரிகள் நேரில் ஏறி ஆய்வு செய்துள்ளனர். </p><p>பயணிகளிடம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்தது மற்றும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டது தொடர்பாக 400 ஆம்னி பேருந்துகளுக்குத் தணிக்கை அறிக்கைகளுடன் '<a href="https://www.maalaimalar.com/news/topnews/spectacular-scene-in-london-chief-minister-vijay-runs-to-hug-ajith-shares-loving-kisshttps://www.maalaimalar.com/news/topnews/spectacular-scene-in-london-chief-minister-vijay-runs-to-hug-ajith-shares-loving-kiss">இ-சலான்</a>' வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிரடிச் சோதனைகளின் மூலம் விதிமீறிய பேருந்து உரிமையாளர்களிடம் இருந்து மொத்தம் 16.93 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.</p><p>கட்டண முறைகேடுகள் மட்டுமின்றி, பாதுகாப்பு மற்றும் தகுதிச் சான்றிதழ் தொடர்பான விதிமீறல்களிலும் ஈடுபடும் ஆம்னி பேருந்துகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. செல்லுபடியாகும் தகுதிச் சான்றிதழ் இல்லாமல் சட்டவிரோதமாக இயக்கப்பட்ட 4 ஆம்னி பேருந்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து சிறைபிடித்துள்ளனர். தீவிர விதிமீறல்களில் ஈடுபட்ட 7 ஆம்னி பேருந்துகள் மேற்கொண்டு இயங்குவதற்கு உடனடித் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>ஆன்லைன் <strong>பயணச்சீட்டு</strong> ரத்து </h2><p>பண்டிகைக் காலத்தில் ஆன்லைனில் முன்விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டுகளை ஆம்னி பேருந்து நிறுவனங்கள் திடீரென ரத்து செய்துவிட்டு, அதிக விலைக்கு விற்கும் சட்டவிரோதப் போக்கைத் தடுக்க அரசு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஆன்லைனில் முன்பதிவு செய்த பயணிகளின் டிக்கெட்டுகளை ரத்து செய்தால், சம்பந்தப்பட்ட ஆம்னி பேருந்து நிர்வாகமே அப்பயணிகளுக்கு உடனடியாக மாற்றுப் பேருந்து வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் சிரமத்திற்கு ஆளாகும் வகையில் டிக்கெட்டுகளை ரத்து செய்ய முயலும் நிறுவனங்களின் பேருந்து அனுமதிச் சான்றிதழ்கள் உடனடியாக ரத்து செய்யப்படும் என போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது.</p><h2>புகார்களுக்குக் க<strong>ட்டணமில்லா தொலைபேசி எண்</strong></h2><p>அதிகக் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் குறித்துப் பொதுமக்கள் கட்டணமில்லாத் தொலைபேசி எண் (1800 425 6151) மூலமாகவும், சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் வாயிலாகவும் உடனுக்குடன் புகார் அளிக்கலாம் எனத் தமிழகப் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>VIDEO- லண்டனில் கண்கொள்ளா காட்சி.. அஜித்தை பார்த்ததும் ஓடிவந்து ஆரத்தழுவிய முதலமைச்சர் விஜய்- அன்பு முத்தம் பரிமாற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/topnews/spectacular-scene-in-london-chief-minister-vijay-runs-to-hug-ajith-shares-loving-kiss</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/spectacular-scene-in-london-chief-minister-vijay-runs-to-hug-ajith-shares-loving-kiss#comments</comments><guid isPermaLink="false">38c13e71-4b79-48d9-a21b-8283873ce2fd</guid><pubDate>Sat, 12 Sep 2026 14:54:16 +0000</pubDate><atom:updated>2026-09-12T14:54:16.170Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நடிகர் அஜித் குமார்,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,Silverstone Circuit,Michelin Le Mans Cup,சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/b4i9m47n/FFFF.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chief Minister Vijay-Ajith Kumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/b4i9m47n/FFFF.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>விளையாட்டு (Sports)</category><content:encoded><![CDATA[ <p>சர்வதேசப் பந்தய வீரராகப் போட்டியிடும் நடிகர் அஜித் குமார், LMP3 Pro/Am பிரிவில் 'Ajith RedAnt by Virage' அணியின் சார்பில் 16-ஆம் எண் கொண்ட 'Ligier' பந்தயக் காரை இயக்குகிறார்.பந்தய மைதானத்தில் நடிகர் அஜித்தைக் கண்டவுடன் முதலமைச்சர் விஜய் அவரை நோக்கி விரைந்து சென்று நெகிழ்ச்சியுடன் ஆரத்தழுவித் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். </p><figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Perfect frame HD video of <a href="https://x.com/hashtag/ThalapathyVijay?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ThalapathyVijay</a> Running to Hug Thala <a href="https://x.com/hashtag/Ajithkumar?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Ajithkumar</a>.. What a Moment.. <a href="https://t.co/3s56HxdOy6">pic.twitter.com/3s56HxdOy6</a></p>&mdash; Laxmi Kanth (@iammoviebuff007) <a href="https://x.com/iammoviebuff007/status/2098784269963587728?ref_src=twsrc%5Etfw">September 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><p>இங்கிலாந்தில் உள்ள சர்வதேச அளவில் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தய களத்தில் நடைபெற உள்ள 2026-ஆம் ஆண்டிற்கான '<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/ajith-kumar-happy-to-welcome-cm-vijay">மிச்செலின் லீ மான்ஸ் கப்</a>' பந்தயத் தொடரின் 5-வது சுற்றை, தமிழக முதலமைச்சர் விஜய் [ஆசியப் பிரதிநிதியாகவும் சிறப்பழைப்பாளராகவும்] பங்கேற்றுப் பச்சைக்கொடி அசைத்து முறைப்படி தொடங்கி வைக்க உள்ளார்.</p><p>திரையுலகில் 34 ஆண்டுகளுக்கும் மேலாக இரு துருவங்களாகக் கருதப்பட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான விஜய்யும் அஜித் குமாரும், சர்வதேச விளையாட்டுக் களம் ஒன்றில் இணைந்து நிற்பது உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p><h2>ஆ<strong>ரத்தழுவிய விஜய்</strong></h2><p>பந்தய மைதானத்தில் நடிகர் அஜித்தைக் கண்டவுடன் முதலமைச்சர் விஜய் அவரை நோக்கி விரைந்து சென்று நெகிழ்ச்சியுடன் ஆரத்தழுவித் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். 34 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த இரு பெரும் நட்சத்திரங்களும் சர்வதேச விளையாட்டுக் களம் ஒன்றில் நேரில் சந்தித்துக்கொண்ட இந்த உணர்வுப்பூர்வமான காட்சி உலகெங்கிலும் உள்ள தமிழர்களையும் ரசிகர்களையும் பேரானந்தத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரே இடத்தில் அஜித்- விஜய் இருவரையும் சந்தித்த மகிழ்ச்சியில் ரசிகர்கள் திக்குமுக்காடி உள்ளனர்.</p><p>44 பந்தயக் கார்கள் பங்கேற்கும் இந்த பிரம்மாண்டமான 'மிச்செலின் லீ மான்ஸ் கப்' பந்தயத்தை முதலமைச்சர் விஜய் பச்சைக்கொடியை அசைத்து முறைப்படி தொடங்கி வைக்கிறார். சர்வதேசப் பந்தய வீரராகப் போட்டியிடும் நடிகர் அஜித் குமார், LMP3 Pro/Am பிரிவில் 'Ajith RedAnt by Virage' அணியின் சார்பில் 16-ஆம் எண் கொண்ட 'Ligier' பந்தயக் காரை இயக்குகிறார்.</p>]]></content:encoded></item><item><title>முதியோர் ஓய்வூதியத் தொகை தாமதம் ஏன்?- தமிழ்நாடு அரசு விளக்கம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/delay-in-old-age-pension-disbursement-tamil-nadu-government-clarification</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/delay-in-old-age-pension-disbursement-tamil-nadu-government-clarification#comments</comments><guid isPermaLink="false">eb8836c1-a1f1-4e0e-a5dc-c6d7fb0516ef</guid><pubDate>Sat, 12 Sep 2026 14:21:57 +0000</pubDate><atom:updated>2026-09-12T14:21:57.588Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,TN Government,Pension,உதவித்தொகை,old age pension scheme,முதியோர் ஓய்வூதியம்</media:keywords><media:content height="429" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/aasg0eau/images-6.jfif" width="713"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN Secretariat
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/aasg0eau/images-6.jfif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>செப்டம்பர் மாத ஓய்வுத்தொகை வரவு வைக்கப்படுவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து அச்சம் கொள்ள வேண்டாம் என தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.</p><h2>தாமதம் </h2><p>தமிழ்நாட்டில் செப்டம்பர் மாத முதியோர் ஓய்வுதியத் தொகை வரவு வைக்கப்படுவதில்  தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/southern-railway-announced-some-trains-including-the-vande-bharat-and-vaigai-express-are-delayed">தாமதம் </a>மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.</p><h2>அரசு தரப்பு விளக்கம் </h2><p>செப்டம்பர் மாத ஓய்வுத்தொகை வரவு வைக்கப்படுவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து அச்சம் கொள்ள வேண்டாம் என தமிழ அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.</p><p>தமிழ்நாடு அரசின் முன்னோடித் திட்டங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ், முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், வேளாண் தொழிலாளர்கள் உள்ளிட்ட நலிவுற்ற பிரிவினருக்கு 12 வகையான திட்டங்களின் கீழ் 35,37,372 பயனாளிகள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். </p><p>இவர்களில், சுமார் 15,56,674 ஓய்வூதியப் பயனாளிகளுக்கு ஆகஸ்ட் 2026 மாதத்திற்கான (செப்டம்பர் 2026-ல் வழங்கப்படும்) ஓய்வூதியத் தொகை அவர்களது வங்கிக் கணக்குகளில் ஏற்கனவே வரவு வைக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும், தேசிய சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், இந்திய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் இந்திரா காந்தி தேசிய முதியோர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/will-even-a-fraudulent-pension-scheme-not-be-implemented-during-the-dmk-regime-says-anbumani-ramadoss-804851">ஓய்வூதியத் திட்டம்</a>, இந்திரா காந்தி தேசிய விதவையர் ஓய்வூதியத் திட்டம் மற்றும் இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று திட்டங்களின் கீழ் சுமார் 19,20,858 பயனாளிகள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.</p><p>மேற்காணும் திட்டங்களின் கீழ் ஆகஸ்ட் 2026 மாதத்திற்கான (செப்டம்பர் 2026- வழங்கப்படும்) ஓய்வூதியத் தொகையை, இந்திய அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ள SNA-SPARSH நிதிப் பரிவர்த்தனை தளத்தின் மூலம் இம்மாதம் முதல் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p>இத்திட்டங்களின் பயனாளிகளுக்கான ஓய்வூதியப் பட்டியல் தயார் செய்யப்பட்டு, இந்திய அரசின் பங்களிப்புத் தொகைக்கான ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.</p><h2>தொடர் விடுமுறை </h2><p>இந்நிலையில், 11.09.2026 முதல் 14.09.2026 வரை இந்திய அரசு அலுவலகங்களுக்கு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/holidays-transport-corporation-achieves-rs-344-crore-revenue-through-special-buses">தொடர் விடுமுறை</a> என்பதால், மேற்குறிப்பிட்ட திட்டங்களுக்கான ஓய்வூதியப் பட்டியலுக்கு ஒப்புதல் பெறுவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.</p><p>எனவே, சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் ஓய்வூதியம் பெற்று வரும் பயனாளிகள், தங்களது ஓய்வூதியத் தொகை வரவு வைக்கப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், ஓய்வூதியத் தொகை 14.09.2026 முதல் உரிய முறையில் வழங்குவதற்கான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 12 செப். 2026...
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-12-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-12-september-2026#comments</comments><guid isPermaLink="false">46d65b0f-475d-4a26-9683-2f1c1d5bcde0</guid><pubDate>Sat, 12 Sep 2026 05:05:09 +0000</pubDate><atom:updated>2026-09-12T14:20:41.828Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/a3cevkbq/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live News]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/a3cevkbq/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/brics-delhi-declaration-2026-unanimous-condemnation-us-attack-on-iran">ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு கடும் கண்டனம்: BRICS மாநாட்டில் 'டெல்லி பிரகடனம் 2026' ஒருமனதாக ஏற்பு!... </a></p><p>*ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தைப் பின்பற்றி, பொதுமக்களின் பாதுகாப்பையும் சர்வதேச சட்ட விதிமுறைகளையும் அனைத்து நாடுகளும் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. </p><p>*ராணுவ மோதல்களில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் உச்சக்கட்ட நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madurai-declares-local-holiday-sept-16-17-for-meenakshi-amman-temple-kumbabishekam-exams-rescheduled">மதுரையில் செப்.16, 17 உள்ளூர் விடுமுறை: மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தால் பள்ளி, கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு!... </a></p><p>*17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க மகா கும்பாபிஷேக விழா என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>*செப்-24 பணி நாளாக அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.</p><p>தமிழகத்தில் வருகிற 18-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்... </p><p>* புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/we-will-not-spare-anyone-who-touches-our-leader-says-chennai-mayor-priya">என் தலைவரை தொட்டது யாராக இருந்தாலும் விடமாட்டோம்: மேயர் பிரியா எச்சரிக்கை!... </a></p><p>*முதலமைச்சர் சட்டமன்ற பேச்சை கண்டித்து திமுக சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. </p><p>*திரைப்படங்களில் மூன்று மணி நேரம் நடிப்பு காட்டுவது போல, முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்திற்கு வந்து ஒரு மணி நேரம் பேசிவிட்டுச் செல்கிறார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/seeman-says-amil-nadu-government-must-abandon-tughlaq-durbar-style-decision-to-construct-the-new-secretariat-at-pattinapakkam">பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்கும் ‘துக்ளக் தர்பார்’ முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்!- சீமான்</a></p><p>* ஒவ்வொரு நாளும் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் வருகைக்காகப் பல மணி நேரங்கள் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படுகின்ற அவலமும் நடைபெறும்.</p><p>* பொதுமக்கள் குறிப்பாகப் பள்ளி குழந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் நிலை உருவாகும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cpi-m-to-announce-byelection-support-tomorrow-madurantakam-dharapuram">இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு?- சிபிஐ(எம்) மாநிலக் குழு நாளை அறிவிப்பு... </a></p><p>*மதுராந்தகம், தாராபுரம்  இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு தருவது என்பது தொடர்பாக நாளை அறிவிக்கப்படும். </p><p>*நாளை பிற்பகல் 2 மணியளவில் ஆதரவு நிலைப்பாடு குறித்து தெரிவிக்கப்படும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-indictment-tvk-govt-5">'ப்யூஸ் போன' த.வெ.க. அரசு மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும்- உதயநிதி ஸ்டாலின்</a></p><p>* தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்சாரம் இருந்தாலும் voltage பிரச்சனை என மக்கள் வெகுண்டெழுந்து வீதிக்கு வந்து போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.</p><p>* துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரோ, இதைச் சரிசெய்யும் முயற்சிகளைச் செய்யாமல் தேவையில்லாத அவதூறுகளை உளறிக் கொண்டிருக்கிறார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/isharani-baruah-enter-final-in-vietnam-open-badminton">வியட்நாம் ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இஷாராணி பரூவா</a></p><p>* வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் தொடர் வியட்நாமில் நடந்து வருகிறது.</p><p>* மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் தன்வி ஷர்மா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/ai-technology-used-for-missile-production-anthropic-exposes-yemen-group">ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஏவுகணை தயாரிப்பு: ஏமன் குழுவின் முயற்சியை வெளிப்படுத்திய 'ஆந்த்ரோபிக்' நிறுவனம்!... </a></p><p>*வடக்கு ஏமனில் செயல்பட்டு வரும் இந்த அடையாளம் தெரியாத குழு, மூன்று வெவ்வேறு ஆயுத வளர்ச்சித் திட்டங்களில் ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியைப் பெற்றுள்ளது. </p><p>*இக்குழுவினர் ஒரு நேரடி ராக்கெட் சோதனையையும் நடத்தியுள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-says-tvk-government-must-focus-on-improving-the-energy-sector">தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி: எரிசக்தி துறையை மேம்படுத்துவதில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும்- தினகரன்</a></p><p>* தமிழகத்தில் நிலவும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டுகளைத் தடுத்து நிறுத்துவதோடு, பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும்.</p><p>* வீண் விதண்டாவாதப் பேச்சுகளின் மூலம் மக்களை மடைமாற்றுவதை விட்டுவிட்டு, எரிசக்தி துறையை மேம்படுத்துவதில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/spirituality/vinayagar-arupadai-veedu-6">ஆனைமுகனின் அறுபடை வீடும், அதன் சிறப்புகளும்</a></p><p>* சித்தி விநாயகர் நாம் விரும்புகிற காரியங்களை நிறைவேற்றித் தருபவராக உள்ளார்.</p><p>* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை வணங்கினால் தீட்சையும் ஞானமும் கிடைக்கும்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/zverev-enter-the-final-round-in-us-open-tennis">அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஸ்வரேவ்</a></p><p>* அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.</p><p>* ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி சுற்று போட்டிகள் நடந்தன.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/congress-leader-harish-rawat-quits-party-posts-after-cash-jewellery-recovered-from-aide-house">உதவியாளர் வீட்டில் பணம், நகைகளை கைப்பற்றிய ED: கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் விலகிய காங்கிரஸ் தலைவர்</a></p><p>* உதவியாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.</p><p>* சோதனையில் உயர்ரக கைக்கடிகாரங்கள், பணம் கைப்பற்றப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-by-elections-tvk-sets-up-election-task-force">மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்- த.வெ.க.வில் தேர்தல் பணிக்குழு அமைப்பு</a></p><p>*  இடைத்தேர்தல் வரலாற்றிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர் என்கிற புதிய வரலாறு படைக்கும் வகையில் அனைவரும் தேர்தல் பணியாற்றிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>* நம் வெற்றி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நமது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளைத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக விரைவில் முன்னெடுப்போம் என்று தெரிவித்துள்ளார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-urges-government-itself-must-fully-bear-the-cost-of-the-breakfast-scheme-in-government-schools">தலைமை ஆசிரியர்கள் மீது நிதிச் சுமை: அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டச் செலவை அரசே முழுமையாக ஏற்க வேண்டும்- தினகரன்</a></p><p>* தேவையான பெயர்ப்பலகை, மின்விளக்கு, குடிநீர் உள்ளிட்ட தொடக்க நிகழ்வுக்கான ஏற்பாடுகளுக்கான செலவினங்களைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் தலையில் சுமத்துவது ஏற்புடையதல்ல.</p><p>* அரசு நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள நிர்வாகச் சிக்கல்களையும் அதிகாரக் குளறுபடிகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-says-dmk-defeat-in-by-election">இடைத்தேர்தலில் திமுக தோல்வி அடைவது உறுதி - அமைச்சர் நிர்மல்குமார்</a></p><p>* மு.க.ஸ்டாலின் மிகப்பெரிய தியாகி என்று திமுக சித்தரிக்க முயன்றாலும் மக்கள் அதை நம்பமாட்டார்கள்.</p><p>* திமுக நடத்தும் போராட்டத்தை பார்த்து மக்கள் சிரித்தவாறே கடந்து செல்வர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/state-honours-for-the-late-solomon-pappaiah">மறைந்த சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை</a></p><p>* சாலமன் பாப்பையா காலமானார் என்ற செய்தி அறிந்து பலரும் இரங்கல் தெரிவித்தனர். </p><p>* தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என அமைச்சர் நிர்மல்குமார் என அறிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-ministers-and-members-of-the-legislative-assembly-must-also-disclose-their-asset-details">அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களும் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும்!- அன்புமணி ராமதாஸ்</a></p><p>* அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிப்பதற்காக இந்தியாவின் பல மாநிலங்களில் பல்வேறு நடவடிக்கைகள் கடந்த சில பத்தாண்டுகளில் மேற்கொள்ளப்பட்டன. </p><p>* சொத்து விவரங்களை தாக்கல் செய்ய அரசு ஊழியர்கள் தவறினால் அது விதிமீறலாகக் கருதப்படும்;  அது அவர்களின் பதவி உயர்வை பாதிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/saudi-arabia-shuts-down-pipeline-as-houthis-seize-island-opening-new-front-in-iran-war">முக்கியமான பைப்லைனை மூடிய சவுதி அரேபியா: கச்சா எண்ணெய் விலை மேலும் உயரும் அபாயம்..!</a></p><p>* ஈராக்கில் இருந்து டிரோன்கன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக சவுதி அரேபியா குற்றச்சாட்டு</p><p>* முன்னெச்சரிக்கை காரணமாக பைப்லைனை மூடியதாக சொல்கிறது சவுதி அரேபியா</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-12-9-2026">GOLD PRICE TODAY: சற்றே உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.14,170-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madurai-meenakshi-amman-temple-kumbabishekam-special-train-service-between-chennai-central-and-madurai">மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: சென்னை சென்ட்ரல் - மதுரை இடையே சிறப்பு ரெயில் இயக்கம்</a></p><p>&nbsp;* தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 16-ந்தேதி இரவு புறப்பட்டு செல்லும் சிறப்பு ரெயில், மறுநாள் காலை 5 மணிக்கு மதுரை சென்றடையும்.</p><p>* மதுரையில் இருந்து வருகிற 17-ந்தேதி இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், மறுநாள் காலை 3.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tirupati-kudai-rally-traffic-diversions-in-chennai-tomorrow">திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் - சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்</a></p><p>* திருக்குடை ஊர்வலம் வால்டாக்ஸ் சாலையை கடக்கும் வரை, காலை 8 மணி முதல் மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.&nbsp;</p><p>* ஊர்வலம் ஏ.பி. சாலை வரும்போது, பெரம்பூர் பேரக்ஸ் சாலை சந்திப்பில் இருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதி இல்லை.</p> ]]></content:encoded></item><item><title>ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு கடும் கண்டனம்: BRICS மாநாட்டில் &apos;டெல்லி பிரகடனம் 2026&apos; ஒருமனதாக ஏற்பு!</title><link>https://www.maalaimalar.com/news/world/brics-delhi-declaration-2026-unanimous-condemnation-us-attack-on-iran</link><comments>https://www.maalaimalar.com/news/world/brics-delhi-declaration-2026-unanimous-condemnation-us-attack-on-iran#comments</comments><guid isPermaLink="false">173318b6-b39e-4bd5-aa55-a11e94a17afe</guid><pubDate>Sat, 12 Sep 2026 14:16:32 +0000</pubDate><atom:updated>2026-09-12T14:16:32.587Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Donald Trump,அமெரிக்கா,America,ஈரான்,Iran,BRICS Summit,Delhi Declaration 2026,டெல்லி பிரகடனம் 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/jlhcdtcy/trump.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Donald Trump-BRICS summit   ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/jlhcdtcy/trump.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தைப் பின்பற்றி, பொதுமக்களின் பாதுகாப்பையும் சர்வதேச சட்ட விதிமுறைகளையும் அனைத்து நாடுகளும் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p>இந்தியத் தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும் 18-வது<a href="https://www.maalaimalar.com/news/world/brics-summit-chinese-president-xi-jinping-visits-india-after-7-years"> BRICS உச்சிமாநாட்டில்</a>, ஈரானின் அணு உலைகள் மற்றும் சிவில் கட்டமைப்புகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 'டெல்லி பிரகடனம் 2026' எனும் கூட்டுத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த முக்கிய அறிவிப்பை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முறைப்படி வெளியிட்டார்.</p><h2>அ<strong>மைதியை வலியுறுத்தும் பிரகடனம்</strong></h2><p>ராணுவ மோதல்களில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் உச்சக்கட்ட நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் உறுப்பு நாடுகள் கூட்டாகக் கேட்டுக்கொண்டுள்ளன.</p><p>ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தைப் பின்பற்றி, பொதுமக்களின் பாதுகாப்பையும் சர்வதேச சட்ட விதிமுறைகளையும் அனைத்து நாடுகளும் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஒருதலைப்பட்சமான ராணுவத் தாக்குதல்கள் மூலம் எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு காண முடியாது என்றும், ராஜதந்திர ரீதியிலான தூதரகப் பேச்சுவார்த்தைகள் மூலமே அமைதியை எட்ட முடியும் என்றும் கூட்டுப் பிரகடனம் தெளிவுபடுத்தியுள்ளது.</p><h2>வி<strong>டிய விடிய நடைபெற்ற தீவிர ஆலோசனை</strong></h2><p>மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கிடையே நிலவும் பல்வேறு தூதரகச் சவால்களுக்கு மத்தியில் இக்கூட்டுத் தீர்மானத்தைக் கொண்டுவருவது கடினமான சவாலாக இருந்தது. நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை 4 மணி வரை நீடித்த சர்வதேசப் பிரதிநிதிகளின் தொடர் ஆலோசனைகளுக்குப் பிறகே இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டுப் பிரகடனத்திற்கு அனைத்து நாடுகளும் சம்மதம் தெரிவித்தன.</p><h2>இந்தி<strong>யாவின் ராஜதந்திர வெற்றி</strong></h2><p>ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ள இம்மாநாட்டின் மூலமாக, உலக நாடுகளுக்கிடையேயான கருத்து வேறுபாடுகளைக் களைந்து ஒருமித்த கருத்தை உருவாக்கியதில் இந்தியா முன்னணிப் பங்கு வகித்துள்ளது. பிராந்திய பாதுகாப்பை உறுதி செய்யவும் உலகளாவிய அமைதியை நிலைநாட்டவும் தூதரக வழிகளே சிறந்தது என்பதை BRICS அமைப்பு இதன்மூலம் மீண்டும் உலகிற்கு உணர்த்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அரசியல் நாகரிகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் பேச்சு..!- திமுக எம்பி ஆ.ராசாவுக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mp-a-raja-remarks-condemned-manikam-thakur-slams-political-indecency</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mp-a-raja-remarks-condemned-manikam-thakur-slams-political-indecency#comments</comments><guid isPermaLink="false">f8faba66-c957-4162-b1c3-7bf02c4e185c</guid><pubDate>Sat, 12 Sep 2026 13:42:05 +0000</pubDate><atom:updated>2026-09-12T13:42:05.498Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,மாணிக்கம் தாகூர்,ஆ ராசா,Manickam Tagore,Aa Rasa</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/cmv5vdyc/manickam-tagore.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ A Rasa- Manickam tagore]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/cmv5vdyc/manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கொள்கை முழக்கம் போடும் திமுகவின் எம்பி அ.ராசா அவர்களின் இந்த அருவருக்கத்தக்க போக்கு தலைகுனிவானது என காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-     </p><p>அரசியல் நாகரிகத்தை அடியோடு குழிதோண்டிப் புதைத்து, பொதுவெளியில் தரம் தாழ்ந்த பேச்சுகளைப் பேசுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கொள்கை முழக்கம் போடும் திமுகவின் எம்பி அ.ராசா அவர்களின் இந்த அருவருக்கத்தக்க போக்கு தலைகுனிவானது!</p><p>மக்கள் தீர்ப்பை இன்னும் ஏற்றுக்கொள்ள முடியாமல் விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு, மாற்றுக் கருத்துக்களைக் கூட எதிர்கொள்ள முதிர்ச்சியின்றி பெண்களையும் தாய்மையையும் கொச்சைப்படுத்துவது தங்களின் அப்பட்டமான பலவீனத்தையே காட்டுகிறது.</p><p>தோல்வியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மனமில்லாமல், விரக்தி வரும்போதெல்லாம் பெண்களைக் குறிவைத்துத் தாக்குவதை திமுக வழக்கமாகக் கொண்டுள்ளது; உதயநிதி தொடங்கி இன்று வரை அக்கட்சியினர் அனைவரும் இதே மோசமான பாணியையே தொடர்ந்து பின்பற்றுகின்றனர்.</p><p>முதலமைச்சர் விஜய் அவர்கள் குறிப்பிட்ட "#ஆபாசநிதி" என்று சொன்னது போல, திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக உள்ள திரு.௮.ராசா MP அவர்கள் இன்று பேசிய பேச்சு அமைந்துள்ளது. அக்கட்சியினர் பெண்களைத் தொடர்ந்து இழிவாகப் பேசுவது சற்றும் குறைந்தபாடில்லை; பெண்களே திமுகவை முற்றிலுமாக நிராகரித்து வருவதற்குக் காரணம் இவர்களின் இந்த வக்கிர சிந்தனைதான்!</p><p>கருத்து மோதல்களை எதிர்கொள்ள முடியாமல், தவெக அமைச்சர் நிர்மல் குமார் அவர்களின் தாயாரைக் குறிவைத்து இத்தகைய தரம் தாழ்ந்த தனிநபர் வசைபாடல்களையும் அச்சுறுத்தல்களையும் தொடுப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஜனநாயகத்தில் இந்த அநாகரிக அரசியல் ஒருபோதும் ஏற்புடையதல்ல!</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>போகோ ஸ்டிக்கில் குதித்தபடியே 211 ரூபிக்ஸ் கியூப்களைச் சேர்த்து உலக சாதனை: கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த இளைஞர்!</title><link>https://www.maalaimalar.com/sports/pogo-stick-jumping-211-rubiks-cubes-world-record-young-man-enters-guinness-book</link><comments>https://www.maalaimalar.com/sports/pogo-stick-jumping-211-rubiks-cubes-world-record-young-man-enters-guinness-book#comments</comments><guid isPermaLink="false">eda5f2da-2070-4af8-a029-55b86ba7988b</guid><pubDate>Sat, 12 Sep 2026 13:40:25 +0000</pubDate><atom:updated>2026-09-12T13:40:25.401Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கின்னஸ் சாதனை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/ek7awmrd/Guinnes-World-Record" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Guinnes World Record ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/ek7awmrd/Guinnes-World-Record?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE">கனடாவின் </a>நோவா ஸ்கோடியா மாகாணத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவர், போகோ ஸ்டிக்கில் குதித்துக்கொண்டே 211 ரூபிக்ஸ் கியூப்களை துல்லியமாகச் சேர்த்து புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். </p><p>இதன் மூலம் அவரது நீண்ட நாள் கனவான கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் சாதனை தற்போது நனவாகியுள்ளது.</p><h2><strong>முந்தைய சாதனையை முறியடித்த அசாத்திய திறமை</strong></h2><p>அனாபோலிஸ் ராயல் பகுதியைச் சேர்ந்த சவுல் ஹாஃப்டிங் என்ற இந்த இளைஞர், தனது 16 வயதிலேயே (2021-ம் ஆண்டு) இந்த விசித்திரமான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88">உலக சாதனையை</a> மேற்கொள்ள முயன்றார். </p><p>இதற்கு முன்னதாக போகோ ஸ்டிக்கில் குதித்தபடியே 65 ரூபிக்ஸ் கியூப்களைச் சேர்த்ததே உலக சாதனையாக இருந்தது. ஆனால், சவுல் ஹாஃப்டிங் அந்த சாதனையைத் தகர்த்து, 211 ரூபிக்ஸ் கியூப்களைச் சேர்த்து அசாத்திய திறமையை வெளிப்படுத்தினார்.</p><h2><strong>கின்னஸ் புத்தகத்தில் அதிகாரப்பூர்வமாக இடம்</strong></h2><p>இவரது இந்த சாதனை கடந்த 2022-ம் ஆண்டே கின்னஸ் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டு, அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது. மேலும், <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88">கின்னஸ் உலக சாதனை</a>யின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் இது பதிவேற்றப்பட்டது.</p><p>இருப்பினும், ஆண்டுதோறும் அச்சிடப்படும் உலகப் புகழ்பெற்ற கின்னஸ் புத்தகத்தில் இவரது சாதனை அப்போது இடம்பெறவில்லை. "என்னுடைய இந்த சாதனை எவ்வளவு காலம் நீடிக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. </p><p>ஒருவேளை யாராவது இதை முறியடித்தாலும், பல ஆண்டுகளாக இந்த சாதனை என் வசம் இருந்தது எனக்குப் பெருமையே" என்று சவுல் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தார்.</p><h2><strong>கின்னஸ் உலக சாதனைகள் 2027 புத்தகத்தில் வெளியீடு</strong></h2><p>இந்நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் கின்னஸ் நிர்வாகத்திடம் இருந்து சவுலுக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில், தற்போது கடைகளில் விற்பனைக்கு வந்துள்ள 'கின்னஸ் உலக சாதனைகள் 2027' புத்தகத்தில் அவரது சாதனை பிரத்யேகமாக அச்சிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதுகுறித்து சவுல் ஹாஃப்டிங் கூறும்போது, "இது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். புத்தகத்தில் என் பெயரைப் பார்க்க மிகவும் ஆவலாக உள்ளேன். </p><p>என்னுடைய இந்த சாதனை மிகவும் தனித்துவமானது மற்றும் பார்ப்பதற்கே ஒரு சுவாரசியமான காட்சியாக இருக்கும்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்த புத்தகத்தை விளம்பரப்படுத்துவதற்கான ஊடகப் பயணங்களிலும் அவர் தற்போது பங்கேற்க உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>2 கோடி கேலன் தண்ணீரைச் சேமித்து உலக சாதனை: ‘இளம் எக்கோ-ஹீரோ’ விருது பெற்ற 13 வயது சிறுமி நேஹா!</title><link>https://www.maalaimalar.com/news/world/13-year-old-neha-saves-2-crore-gallons-wins-young-eco-hero-award</link><comments>https://www.maalaimalar.com/news/world/13-year-old-neha-saves-2-crore-gallons-wins-young-eco-hero-award#comments</comments><guid isPermaLink="false">39527396-58eb-4c30-b1ef-6266c6b14c42</guid><pubDate>Sat, 12 Sep 2026 13:09:00 +0000</pubDate><atom:updated>2026-09-12T13:09:00.404Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தண்ணீர் சேமிப்பு,நேஹா பிளண்ட்,Neha Blunt,WaterSaver App,வாட்டர் சேவர்,Young Eco Hero Award,எக்கோ ஹீரோ விருது,Youth Leadership,EcoFriendlyTech</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/ra3yfrg0/Neha-Blunt" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Neha Blunt]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/ra3yfrg0/Neha-Blunt?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அறிவியல் தொழில்நுட்பத்தையும், சமூக விழிப்புணர்வையும் கையில் எடுத்து, உலகளவில் மிக முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் ஒன்றான தண்ணீர் பற்றாக்குறைக்குத் தீர்வு கண்டுள்ளார் நேஹா பிளண்ட் என்ற 13 வயது சிறுமி. </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE">அமெரிக்காவின் </a>நியூஜெர்சி மாகாணத்தைச் சேர்ந்த இவர் உருவாக்கிய 'வாட்டர் சேவர்' என்ற இணைய செயலி மூலம், இன்று உலகம் முழுவதும் சுமார் 2 கோடி கேலன் தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளது.</p><p>இவரது இந்த அசாத்திய முயற்சியைப் பாராட்டி, சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்பான 'ஆக்ஷன் ஃபார் நேச்சர்' , இவருக்கு 2026-ம் ஆண்டிற்கான சர்வதேச இளம் எக்கோ-ஹீரோ விருதை வழங்கி கௌரவித்துள்ளது.</p><h2><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">தண்ணீர் சேமிப்பை</a> விளையாட்டாக மாற்றிய 'கோடிங்' நுட்பம்</h2><p>சாதாரண விழிப்புணர்வு பிரசாரங்கள் மக்களை முழுமையாகச் சென்றடைவதில்லை என்பதை நேஹா கவனித்தார். </p><p>மக்கள் தங்களுக்குத் தெரியாமலேயே அன்றாட வாழ்வில் தண்ணீரை வீணாக்குவதை மாற்ற தொழில்நுட்ப ரீதியாக தீர்வு காண முயன்றார்.</p><p>ஒரு பெரிய அரசு அமைப்போ அல்லது பெருநிறுவனமோ செய்ய வேண்டிய காரியத்தை, இந்த 13 வயது சிறுமி சாதித்துள்ளார்.</p><p>இதற்காக சுமார் 7 மாதங்கள் கடினமாக உழைத்து, சுயமாக கோடிங் கற்றுக்கொண்டு இந்த '<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">வாட்டர் சேவர்</a>' செயலியை நேஹா வடிவமைத்தார். இந்த செயலி மக்களுக்கு வெறும் அறிவுரைகளை வழங்காமல், அன்றாட தண்ணீர் பயன்பாட்டை ஒரு சவாலாக மாற்றுகிறது.</p><p>பயனர்கள் தங்கள் வீடுகளில் தினமும் எவ்வளவு தண்ணீர் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பதிவு செய்து, அதை எப்படிக் குறைக்கலாம் என்பதற்கான இலக்குகளை இதில் நிர்ணயித்துக் கொள்ளலாம்.</p><h2>10 லட்சம் மக்களைச் சென்றடைந்த உலகளாவிய இயக்கம்</h2><p>2023 ஆம் ஆண்டின் வசந்த காலத்தில், இந்த திட்டத்தை பள்ளிகள் மற்றும் சமூக அமைப்புகளுடன் இணைத்து ஒரு பெரிய மக்கள் இயக்கமாக நேஹா மாற்றினார். </p><p>கடினமான சுற்றுச்சூழல் வார்த்தைகளைப் பயன்படுத்தாமல், அன்றாட வாழ்வில் செய்யக்கூடிய எளிய மாற்றங்களை இந்த இயக்கம் வலியுறுத்தியது.</p><p>இந்த எளிய அணுகுமுறைக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக, உலகம் முழுவதும் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்களிடம் தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு சென்று சேர்ந்துள்ளது. </p><p>மேலும், சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் தங்களது அன்றாட தண்ணீர் பயன்படுத்தும் பழக்கத்தை மாற்றி, தண்ணீரைச் சேமிக்கத் தொடங்கியுள்ளனர்.</p><h2>சிறு துளி... பெரு வெள்ளம்!</h2><p>இந்த இயக்கம் மூலம் சேமிக்கப்பட்ட 2 கோடி கேலன் தண்ணீர் என்பது, ஏதோ ஒரு பெரிய உள்கட்டமைப்பு திட்டத்தினால் நடந்தது அல்ல. சாதாரண மக்கள் தங்கள் வீடுகளில் செய்த சின்னச் சின்ன மாற்றங்களால் சாத்தியமானது. </p><p>குளிக்கும் நேரத்தைக் குறைப்பது. பல் துலக்கும் போது குழாய்களை மூடி வைப்பது. வீடுகளில் உள்ள குழாய் கசிவுகளை உடனுக்குடன் சரி செய்வது. துணி துவைக்கும் இயந்திரங்களை முழு கொள்ளளவில் மட்டுமே பயன்படுத்துவது.</p><p>உலகளாவிய சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு முன்னால், தனிமனிதனாக நாம் செய்யும் சிறு மாற்றங்கள் என்ன பயனைத் தந்துவிடப் போகிறது என்று நினைப்பவர்களுக்கு, 2 கோடி கேலன் தண்ணீர் சேமிப்பு என்ற புள்ளிவிவரமே ஆகச்சிறந்த பதிலாகும்.</p><h2>சர்வதேச அங்கீகாரமும் இளைஞர்களுக்கான உந்துதலும்</h2><p>சர்வதேச அளவில் 3-வது இடத்தைப் பிடித்து நேஹா பெற்றுள்ள இந்த 'இளம் எக்கோ-ஹீரோ' விருது, இன்றைய இளைஞர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் வெறும் களப்பணிகளில் மட்டும் ஈடுபடாமல், மென்பொருள் எழுதுவது, தரவுகளை பகுப்பாய்வு செய்வது எனப் பொதுமக்களின் பழக்கவழக்கங்களையே மாற்றும் அளவிற்குத் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளனர் என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது.</p><p>இந்தத் திட்டம், சுற்றுச்சூழல் மீது ஆர்வம் கொண்ட பிற இளைஞர்களுக்கும் ஒரு புதிய பாதையைக் காட்டியுள்ளது. கணினி ஆர்வம் உள்ளவர்கள் மென்பொருள்களையும், கலை ஆர்வம் உள்ளவர்கள் விழிப்புணர்வு ஓவியங்களையும் என தங்களுக்குத் தெரிந்த திறமைகளைக் கொண்டு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை நேஹா நிரூபித்துள்ளார்.</p><h2>நேஹாவின் அடுத்தகட்ட திட்டங்கள்</h2><p>தண்ணீர் சேமிப்பு என்பது வறட்சி கால தற்காலிக நடவடிக்கையாக இல்லாமல், மக்களின் வாழ்நாள் பழக்கமாக மாற வேண்டும் என நேஹா விரும்புகிறார். </p><p>இதற்காக, தனது 'வாட்டர் சேவர்' செயலியில் மேலும் சில மேம்பாடுகளைச் செய்ய திட்டமிட்டுள்ளார். வெவ்வேறு பகுதிகளில் உள்ள தண்ணீர் பற்றாக்குறை நிலவரங்களைச் செயலியில் இணைப்பது. பள்ளிகளுக்கு இடையேயான தண்ணீர் சேமிப்புப் போட்டிகளை உருவாக்குவது.</p><p>இதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரத்தைச் சேமிக்கவும், குப்பைகளை முறையாக மேலாண்மை செய்யவும் புதிய செயலிகளை வடிவமைப்பது.</p><p>"ஒவ்வொரு சொட்டு தண்ணீரும் முக்கியமானது" என்ற எளிய தாரக மந்திரத்துடன் நேஹா தொடங்கிய இந்த முயற்சி, இன்று சர்வதேச அளவில் இளைஞர்களால் வழிநடத்தப்படும் ஒரு பெரும் புரட்சியாக உருவெடுத்து உலகிற்கு வழிகாட்டி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>கொத்தடிமைகளுக்கு தூயசக்தியின் நேர்மையான ஆட்சி கசக்கத்தான் செய்யும்!- தவெக</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/pure-power-honest-rule-will-torment-the-slaves-tvk-says</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/pure-power-honest-rule-will-torment-the-slaves-tvk-says#comments</comments><guid isPermaLink="false">8dba23f9-55ab-4136-a542-fb6bac6eaddd</guid><pubDate>Sat, 12 Sep 2026 13:08:22 +0000</pubDate><atom:updated>2026-09-12T13:08:22.258Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தவெக,tvk,TVK It wing,தூயசக்தி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/v3qz2nrz/TVK1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TVK]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/v3qz2nrz/TVK1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆவேசமாக அலறினாலும் சத்தமாக கதறினாலும்  தீயசக்தியினர் இனி மக்கள் மனங்களை வெல்ல முடியாது என தவெக ஐடி விங் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளது.</p><p>இதுகுறித்து தவெக ஐடி விங் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>பொதுவெளியில் ஆபாச மொழியில்</p><p>வன்மத்தோடு வசைபாடுவதிலும், கண்ணியமற்ற, மாண்பில்லாத பேச்சுகளால் அரசியல் மேடைகளை அசிங்கப்படுத்துவதிலும் கைதேர்ந்தவர்கள் அனைவரும் தீயசக்தியின் அடிவருடிகளே!</p><p>கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு என்ற பேரறிஞர் அண்ணாவின் கோட்பாட்டை மறந்து, ஊழல், சுரண்டல், லஞ்சம் என்ற தீயசக்தியின் கோட்பாட்டை நெஞ்சில் சுமக்கும் அறிவாலயக் கொத்தடிமைகளுக்கு தூயசக்தியின் நேர்மையான ஆட்சி கசக்கத்தான் செய்யும்!</p><p>தீயசக்தியின் கடந்தகால போலி வரலாற்று அத்தியாயங்கள் பக்கம் பக்கமாக அம்பலப்பட்டு விட்டது, ஆவேசமாக அலறினாலும் </p><p>சத்தமாக கதறினாலும்  தீயசக்தியினர் இனி மக்கள் மனங்களை வெல்ல முடியாது!</p><p>தீயசக்திக்கு மக்கள் மீண்டும் </p><p>பாடம் புகட்டப் போவது</p><p>உறுதி  உறுதி உறுதி!</p><p>இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மதுரையில் செப்.16, 17 உள்ளூர் விடுமுறை: மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தால் பள்ளி, கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு!  </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurai-declares-local-holiday-sept-16-17-for-meenakshi-amman-temple-kumbabishekam-exams-rescheduled</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurai-declares-local-holiday-sept-16-17-for-meenakshi-amman-temple-kumbabishekam-exams-rescheduled#comments</comments><guid isPermaLink="false">28985ddb-37ac-41df-8205-efb45ff3aeaf</guid><pubDate>Sat, 12 Sep 2026 12:30:35 +0000</pubDate><atom:updated>2026-09-12T12:30:35.672Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>மதுரை,madurai,மீனாட்சி அம்மன் கோவில்,meenakshi amman temple,Local holidays,மதுரை மாநகரம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/fwt1rm50/madura.jpg" width="1290"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Meenakshi Amman Temple]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/fwt1rm50/madura.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க மகா கும்பாபிஷேக விழா என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/people-can-no-longer-be-deceived-by-false-stories-thaveka-attacks-dmk">மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில்</a> வரும் 17-ஆம் தேதி மகா கும்பாபிஷேகப் பெருவிழா வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது. கடந்த 2009-ஆம் ஆண்டிற்குப் பிறகு, சுமார் 17 ஆண்டுகள் கழித்து இந்த வரலாற்று நிகழ்வு நடைபெறுவதால், தமிழகம் மட்டுமின்றி உலகெங்கிலுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>பக்தர்களின் வசதி, பாதுகாப்பு மற்றும் நகரின் போக்குவரத்து அமைதியை சீரமைக்கும் நோக்கில், செப்டம்பர் 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்கள் மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.</p><h2>பள்ளி மற்றும் கல்லூரிகளின் தேர்வு தேதிகளில் திடீர் மாற்றம்</h2><p>மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள இந்த இரண்டு நாள் விடுமுறையைத் தொடர்ந்து, மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை பொருந்தும். இந்த விடுமுறை காரணமாக, ஏற்கனவே பள்ளி மற்றும் கல்லூரிகளில் செப்டம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த காலாண்டு மற்றும் பருவத் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. </p><p>இத்தேர்வுகள் செப்டம்பர் 18 முதல் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், அக்டோபர் மாதத்தில் வரும் இரு சனிக்கிழமைகள் வேலை நாட்களாகச் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செப்-24 பணிநாளாக அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.</p><h2><strong>யாகசாலை</strong> பூஜைகள்</h2><p>கும்பாபிஷேகப் பெருவிழாவிற்கான பூர்வாங்க மற்றும் சிறப்பு பூஜைகள் கடந்த 6-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. திருக்கோவில் வளாகத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் 12 கால யாக பூஜை வேள்விகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. விழாவின் முக்கிய நிகழ்வான மகா கும்பாபிஷேகம் செப்டம்பர் 17-ஆம் தேதி காலை 7:40 மணி முதல் 8:10 மணிக்குள்ளான சுப முகூர்த்தத்தில் நடைபெறவுள்ளது. முதலில் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் சுவாமிகளின் தங்க விமானங்களுக்கும், தொடர்ந்து ராஜகோபுரங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் இனிதே நிறைவேற்றப்பட உள்ளது.</p><h2>நகர் முழுதும் ப<strong>லத்த பாதுகாப்பு</strong></h2><p>பெருவிழாவை முன்னிட்டு மதுரை மாநகரம் முழுவதும் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்களின் வசதிக்காகப் பல்வேறு இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள், சிறப்புப் போக்குவரத்து வசதிகள், 8,000-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கான நிறுத்துமிடங்கள் மற்றும் குடிநீர் வசதிகள் விரிவாகச் செய்யப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் முக்கிய வீதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, தீவிரக் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>3-வது போட்டியிலும் படுதோல்வி: பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/eng-vs-pak-pakisan-loss-3rd-test-england-white-wash-pakistan</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/eng-vs-pak-pakisan-loss-3rd-test-england-white-wash-pakistan#comments</comments><guid isPermaLink="false">92976446-d7a9-4b6b-b597-3f45ca119c14</guid><pubDate>Sat, 12 Sep 2026 12:15:57 +0000</pubDate><atom:updated>2026-09-12T12:15:57.871Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Joe Root,ஜோ ரூட்,ENG vs PAK</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/uy8m4fys/England0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இங்கிலாந்து அணி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/uy8m4fys/England0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இங்கிலாந்து- பாகிஸ்தான் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி பர்மிங்காமில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. இங்கிலாந்தின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 133 ரன்களில் சுருண்டது.</p><p>பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 453 ரன்கள் குவித்தது. முதல் இன்னிங்சில் சொதப்பிய பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் சிறப்பாக விளையாடியது. இதனால் 449 ரன்கள் சேர்த்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 130 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது பாகிஸ்தான்.</p><p>4-வது நாளான இன்று இங்கிலாந்து 130 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. முதல் ஓவரில் முபமது அப்பாஸ் டக்கெட், எமிலியோ கே ஆகியோரை டக்அவுட் ஆக்கினார். 3-வது விக்கெட்டுக்கு ஜோர்டான் டாக்ஸ் உடன், ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இலக்கை எளிதாக எட்டியது.</p><p>இதனால் இங்கிலாந்து 3 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது. ஜோடார்ன் காக்ஸ் 59 ரன்களுடனும், ஜோ ரூட் 62 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>பாலக்காடு அருகே விசித்திர தேங்காய் - காண குவிந்த மக்கள்!</title><link>https://www.maalaimalar.com/news/national/rare-four-eyed-coconut-near-palakkad-draws-curious-crowds</link><comments>https://www.maalaimalar.com/news/national/rare-four-eyed-coconut-near-palakkad-draws-curious-crowds#comments</comments><guid isPermaLink="false">3a937759-6329-4ec9-8145-cbb5157836d2</guid><pubDate>Sat, 12 Sep 2026 11:58:51 +0000</pubDate><atom:updated>2026-09-12T11:58:51.490Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>coconut,Palakkad,பாலக்காடு,கேரளா,Keralam,Coconut Wonder,Miracle Coconut,அதிசய தேங்காய்,விசித்திரதேங்காய்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/pqnmp0nx/Miracle-Coconut" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Miracle Coconut ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/pqnmp0nx/Miracle-Coconut?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">கேரள </a>மாநிலம் பாலக்காடு அருகே நான்கு கண்களுடன் கூடிய விசித்திரமான தேங்காய் ஒன்றை பொதுமக்கள் வியப்புடன் பார்த்துச் செல்லும் செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.</p><h2><strong>ராணுவ அதிகாரியின் தோட்டத்தில் கிடைத்த அதிசயம்</strong></h2><p>பாலக்காடு மாவட்டம் மண்ணம்பட்டா பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராம். ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான இவரது வீட்டுத் தோட்டத்தில் பல தென்னை மரங்கள் உள்ளன. வழக்கம்போல, இவரது தோட்டத்தில் இருந்து பறிக்கப்பட்ட <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D">தேங்காய்களை </a>உரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.</p><p>அப்போது, ஒரு குறிப்பிட்ட தேங்காயை உரித்த போது அது மற்ற தேங்காய்களை விட வடிவம் மற்றும் அமைப்பில் முற்றிலும் வித்தியாசமாக இருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.</p><h2><strong>நான்கு கண்கள் மற்றும் உள்ளே 2 குட்டி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D">தேங்காய்கள்</a></strong></h2><p>பொதுவாக ஒரு தேங்காய்க்கு மூன்று கண்கள் மட்டுமே இருப்பது இயற்கை. ஆனால், இந்த விசித்திரமான தேங்காயின் வெளிப்புறத்தில் 4 கண்கள் தெளிவாகக் காணப்பட்டன.</p><p>அதோடு மட்டுமின்றி, அந்தத் தேங்காயை உடைத்துப் பார்த்தபோது மற்றொரு பெரும் ஆச்சரியம் காத்திருந்தது. அந்தத் தேங்காயின் உள்புறத்தில் 2 சிறிய குட்டி தேங்காய்கள் முழுமையாக வளர்ந்த நிலையில் காணப்பட்டன. இந்த அபூர்வ நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2><strong>சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்</strong></h2><p><br>இந்த விசித்திரமான தேங்காய் குறித்த தகவல் காட்டுத்தீ போல பரவியதை அடுத்து, மண்ணம்பட்டா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஜெயராமின் வீட்டிற்குத் திரண்டு வந்து, இந்த அதிசய தேங்காயை ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.</p><p>மேலும், இந்த அபூர்வ தேங்காயின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி நெட்டிசன்களிடையே பெரும் வைரலாகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>மும்பை சொத்து மோசடி: கணவன் இறந்ததாக கூறி ரூ.1.11 கோடி பிளாட்டை விற்ற மனைவி கைது!</title><link>https://www.maalaimalar.com/news/national/mumbai-property-fraud-wife-arrested-for-selling-flat-claiming-husband-dead</link><comments>https://www.maalaimalar.com/news/national/mumbai-property-fraud-wife-arrested-for-selling-flat-claiming-husband-dead#comments</comments><guid isPermaLink="false">333cab89-f622-40cc-b0ab-8a34e1bf06af</guid><pubDate>Sat, 12 Sep 2026 11:58:20 +0000</pubDate><atom:updated>2026-09-12T11:58:20.100Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>mumbai,மும்பை,Crime,borivali,Mumbai Property Fraud,மும்பை சொத்து மோசடி,போரிவலி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/9dmbzh6w/arres.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mumbai Property Fraud]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/9dmbzh6w/arres.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஷாலினி டயானா கிராஸ்டா மற்றும் ரைன் கிராஸ்டா ஆகிய இருவருக்கும் 2007-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.</p><p>மும்பையின் போரிவலி பகுதியில் கூட்டு உரிமையில் இருந்த பிளாட்டை விற்பனை செய்வதற்காக, தனது கணவர் இறந்துவிட்டதாகக் போலி சான்றிதழ் தயாரித்து மோசடி செய்த 49 வயதான ஷாலினி டயானா கிராஸ்டா என்பவரை மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.</p><p>ஷாலினி டயானா கிராஸ்டா மற்றும் ரைன் கிராஸ்டா ஆகிய இருவருக்கும் 2007-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதன்பின்னர் 2016-ஆம் ஆண்டில், போரிவலி எல்.எம் பாதையிலுள்ள ராஜ் வில்லா கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் ஒரு படுக்கையறை கொண்ட பிளாட் ஒன்றை இருவரும் இணைந்து வாங்கினர். இதன் வாங்குவதற்காக சுமார் ரூ.56 லட்சம் கடன் பெறப்பட்டு, இருவரின் பெயரிலும் சொத்து பதிவு செய்யப்பட்டது.</p><h2>பிரிந்து <strong>வாழ்ந்த சூழலில்</strong> அரங்கேறிய சதி</h2><p>காலப்போக்கில் தம்பதியரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் தனித்தனியாக வாழத் தொடங்கினர். இருப்பினும், அந்த வீடு இருவரின் கூட்டு உரிமையிலேயே தொடர்ந்தது. கணவர் ரைன் தொடர்ந்து அதற்கான கடன் தவணைகளை செலுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கணவர் ரைன் உயிருடன் இருக்கும்போதே அவர் இறந்துவிட்டதாகக் கூறி போலி இறப்புச் சான்றிதழை ஷாலினி தயார் செய்துள்ளார். மேலும், வீட்டுவசதி சங்கத்திடமிருந்து போலி ஆட்சேபனை இல்லா சான்றிதழ் மற்றும் ரைனின் ஒரே வாரிசு தாந்தான் எனக் கூறி போலி வாக்குமூலப் பத்திரத்தையும் உருவாக்கியுள்ளார்.</p><h2><strong>ரூ.1.11 கோடிக்கு விற்ப</strong>னை</h2><p>இந்த போலி ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு, 2025 ஏப்ரல் 11 அன்று தர்மேஷ் ஜெகதீஷ் டன்னா மற்றும் தாரா தர்மேஷ் டன்னா ஆகியோருக்கு அந்த பிளாட்டை ஷாலினி விற்பனை செய்தார். வீட்டை வாங்கிய புதிய நபர்கள், அந்தச் சொத்தை அடமானம் வைத்து வங்கியில் சுமார் ரூ.1.11 கோடி கடனாகப் பெற்றுள்ளனர்.</p><h2>ந<strong>ண்பர் மூலம் அம்பலமான உண்</strong>மை</h2><p>2026 மே மாதத்தில் ரைனின் நண்பரான பிரசாத் படாடே, ரைனின் பிளாட் வேறு ஒருவர் பெயரில் அடமானம் வைக்கப்பட்டுள்ளதாக ரைனிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ரைன் மற்றும் அவரது தாயார் உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கியை அணுகி விசாரணை நடத்தியபோது முழு மோசடியும் வெளிச்சத்திற்கு வந்தது. வீட்டுவசதி சங்க அதிகாரிகளிடம் <a href="https://www.maalaimalar.com/news/national/kerala-cm-vt-satheesan-jokes-about-ai-video-showing-him-dancing-better-than-mohanlal-vijay">NOC </a>சான்றிதழைக் காட்டியபோது, அது தங்களால் வழங்கப்படவில்லை என்றும் அதில் உள்ள கையெழுத்துகள் போலியானவை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.</p><h2>போலீஸ் <strong>நடவடிக்கை</strong> </h2><p>இதனைத் தொடர்ந்து ரைன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணைக்குப் பிறகு செப்டம்பர் 9 அன்று ஷாலினியைக் கைது செய்தனர். பின்னர் அவர் போரிவலி நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் அடைக்கப்பட்டார். உயிருடன் இருக்கும் நபரை அரசு மற்றும் சொத்து ஆவணங்களில் இறந்தவராகக் காட்டி நடத்தப்பட்ட இந்த மோசடி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>போலி இறப்புச் சான்றிதழ் மற்றும் NOC தயார் செய்ய ஷாலினிக்கு உதவியவர்கள் யார், மேலும் இந்த விற்பனை மூலம் கிடைத்த ரூ.1.11 கோடி பணம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கட்டுமரக் கதைகளால் இனி மக்களை ஏமாற்ற முடியாது..! - திமுக மீது தவெக கடும் தாக்கு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/people-can-no-longer-be-deceived-by-false-stories-thaveka-attacks-dmk</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/people-can-no-longer-be-deceived-by-false-stories-thaveka-attacks-dmk#comments</comments><guid isPermaLink="false">7d7cb73e-e07a-42d3-93b0-d08d9ea12aa0</guid><pubDate>Sat, 12 Sep 2026 11:53:38 +0000</pubDate><atom:updated>2026-09-12T11:53:38.897Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,DMK,திமுக,தவெக,முதலமைச்சர் விஜய்,தவெக ஐடி விங்,TVK It wing</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/9qmcc9mr/TVK.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DMK vs TVK]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/9qmcc9mr/TVK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பொய் போராளியின் பிம்பம் உடைந்துவிட்டதே என பதறி திமுகவினர் போராட்டம் நடத்துவதாகவும், கத்தினாலும் கதறினாலும் இனி கட்டுமரக்கதைகளால் மக்களை ஏமாற்ற முடியாது என்பதுதான் நிதர்சனம் என தவெக ஐடி விங் பதிவிட்டுள்ளது.</p><p>இதுகுறித்து தவெக ஐடி விங் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>பொய்ப் போராளியின் போலி பிம்பம் உடைந்துவிட்டதே என்று பதறி, போராட்டம் என்ற பெயரில் “யாருமே இல்லாத டீக்கடையில் யாருக்கு டீ ஆற்றி” கதறுகிறார்கள் கொத்து பரோட்டாக்கள்!</p><p>மஞ்சள் துண்டு தந்தை முதல் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF" rel="nofollow">ஆபாசநதி</a> வரை, ஆபாசத்தையே அடிநாதமாகக் கொண்ட திமுக, இன்றும் ஆபாசநதியையும் வன்மநதியையும் வஞ்சனையில்லாமல் போராட்ட நாடகத்தில் ஓடவிட்டிருக்கிறது.</p><p>கட்டமைக்கப்பட்டப் போலி பிம்பம் உடைந்ததற்காகக் கதறும் கொத்து பரோட்டாக்கள், “Detention Copy எங்கே?” என்று கேட்டால், மீண்டும் கட்டுமரக் கதையைக் கட்டவிழ்த்துவிடுகிறார்கள்.</p><p>கத்தினாலும், கதறினாலும், இனி கட்டுமரக் கதைகளால் மக்களை ஏமாற்ற முடியாது என்பதுதான் நிதர்சனம்.</p><p>இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>VIDEO- மோகன்லால், விஜய்யை விட சிறப்பாக நடனமாடுகிறேன்: வைரல் AI வீடியோ குறித்து கேரள முதல்வர் வி.டி.சதீசன் நகைச்சுவை பதில்!</title><link>https://www.maalaimalar.com/news/national/kerala-cm-vt-satheesan-jokes-about-ai-video-showing-him-dancing-better-than-mohanlal-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/national/kerala-cm-vt-satheesan-jokes-about-ai-video-showing-him-dancing-better-than-mohanlal-vijay#comments</comments><guid isPermaLink="false">7b037445-eb11-44ab-ab4a-406be737b533</guid><pubDate>Sat, 12 Sep 2026 11:26:02 +0000</pubDate><atom:updated>2026-09-12T11:26:02.862Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Vijay,மோகன்லால்,mohanlal,Kerala CM V.D.Satheesan,கேரள முதல்வர் வி.டி.சதீசன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/2csr5uvm/AI.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Kerala CM V.D.Satheesan    ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/2csr5uvm/AI.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன், மின்வாரிய ஊழியர்களுடன் இணைந்து குழு நடனம் ஆடுவது போன்று தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது.</p><p>சமீபத்தில் சமூக வலைதளங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்று பெரிய அளவில் வைரலாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் ‘<a href="https://www.maalaimalar.com/news/national/missing-bengaluru-student-rescued-pregnant-aadhaar-otp-leads-cid-to-location">அலா போலே</a>’ பாடலுக்கு, நடிகை ஷம்னா காசிம் மற்றும் குழுவினரின் நடன அசைவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த வீடியோ வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன், மின்வாரிய ஊழியர்களுடன் இணைந்து குழு நடனம் ஆடுவது போன்று தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது.</p><h2>மின்வெட்<strong>டுக்கு எதிரான நகைச்சு</strong>வை போராட்டம்</h2><p>கேரளாவில் நிலவும் கடும் வெயில் மற்றும் மழைப்பொழிவு குறைவு காரணமாக மின் நுகர்வு அதிகரித்துள்ளதால், இரவு நேரங்களில் மின் விநியோகக் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது. </p><figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">WAIT… IS THIS ACTUALLY REAL?! <br><br>Kerala CM casually vibing to “Alabale” from Jailer 2 like this?! <br><br>AI videos are getting WAY TOO REAL now  <a href="https://t.co/PLG7L1NdGt">pic.twitter.com/PLG7L1NdGt</a></p>&mdash;   (@ItsKishoreVJ) <a href="https://x.com/ItsKishoreVJ/status/2098428983323058438?ref_src=twsrc%5Etfw">September 11, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><p>இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பொதுமக்களின் அதிருப்தியையும் கோபத்தையும் வெளிப்படுத்த மின்சார வாரியத்தையும் முதலமைச்சரையும் மையப்படுத்தி இந்த ஏஐ வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவின் பின்னணியில் உள்ள சட்ட அம்சங்கள் மற்றும் பதிப்புரிமை குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், முதலமைச்சர் வி.டி.சதீசன் இது குறித்து தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார்.</p><h2>முதலமை<strong>ச்சர் விஜய்யுட</strong>ன் ஒப்பீடு</h2><p>இந்த வைரல் வீடியோ குறித்து முதலமைச்சர் வி.டி.சதீசன் பேசுகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது இசை, நடனம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார். இன்று சமூக வலைதளங்களில் ஒரு சுவாரஸ்யமான வீடியோவைக் கண்டதாகவும், அதில் தாம் ஒரு குழு நடனத்திற்குத் தலைமை தாங்குவது போல் சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், நடிகர் மோகன்லாலை விடவும், தமது நண்பரும் தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய்யை விடவும் தாம் சிறப்பாக நடனமாடுவதாக அந்த வீடியோவில் உருவாக்கப்பட்டுள்ளதை கண்டு தாம் வியப்படைந்ததாக நகைச்சுவையாகத் தெரிவித்தார்.</p><h2>தொ<strong>ழில்நுட்ப வளர்ச்</strong>சி</h2><p>செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி குறித்துப் பேசிய அவர், எதிர்காலத்தில் இத்தகைய தொழில்நுட்ப உருவாக்கங்களைச் சட்டப்பூர்வமாக எப்படி வரையறை செய்வது என்பது குறித்து விரிவாக ஆராயப்பட வேண்டும் என்றார். தொழில்நுட்பத்தின் தலையீடு அதிகரித்து வருவதால், தற்போதைய சட்டக் கட்டமைப்பில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றும், பதிப்புரிமை, அறிவுசார் சொத்துரிமை மற்றும் பைரசி தொடர்பான சட்டங்கள் காலப்போக்கில் புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மாற வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி மாநகராட்சி சொத்துவரி செலுத்த செப்டம்பர் 30 கடைசி நாள்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thoothukudi-municipal-corporation-property-tax-payment-last-date-september-30</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thoothukudi-municipal-corporation-property-tax-payment-last-date-september-30#comments</comments><guid isPermaLink="false">f245f8ea-8f84-4f10-82d9-292968e1ef65</guid><pubDate>Sat, 12 Sep 2026 11:18:41 +0000</pubDate><atom:updated>2026-09-12T11:18:41.739Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தூத்துக்குடி,Thoothukudi,propertytax,Thoothukudi Corporation,Tax Deadline,TN UrbanEpay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/qk0nn7d7/Thoothukudi-Corporation" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Thoothukudi Corporation ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/qk0nn7d7/Thoothukudi-Corporation?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி </a>மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பொதுமக்கள், நடப்பு 2026-2027-ம் நிதியாண்டின் முதலாம் அரையாண்டிற்கான சொத்து வரியைச் செலுத்துவதற்கு வரும் செப்டம்பர் 30-ம் தேதி கடைசி நாள் என்று மாநகராட்சி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p><p>பொதுமக்கள் தங்களின் கட்டிடங்களுக்கான சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரியினங்களை எவ்வித தாமதமுமின்றி உடனடியாகச் செலுத்த வேண்டும் என்று மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p><h2><strong>வரிகளைச் செலுத்தும் எளிமையான வழிமுறைகள்</strong></h2><p>பொதுமக்கள் நெரிசலின்றி எளிதாக வரி செலுத்துவதற்காக மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு வழிமுறைகளை ஏற்படுத்தியுள்ளது<strong>. </strong>மாநகராட்சியின் கணினி வரி வசூல் மையங்களுக்கு நேரடியாகச் சென்று வரியைச் செலுத்தலாம். வரி வசூல் மையங்களில் உள்ள QR Code மூலமாகவும் நேரடியாகவும், விரைவாகவும் கட்டணத்தைச் செலுத்த முடியும். </p><p>பொதுமக்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலமாக வரி செலுத்த <a href="https://tnurbanepay.tn.gov.in/">www.tnurbanepay.tn.gov.in </a>என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியைப் பயன்படுத்தலாம்.</p><h2><strong>சனிக்கிழமைகளிலும் மையங்கள் செயல்படும்</strong></h2><p>பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி வரி செலுத்துவதற்கு வசதியாக ஒரு முக்கிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு பொது விடுமுறை நாட்களைத் தவிர்த்து, அனைத்து சனிக்கிழமைகளிலும் மாநகராட்சி கணினி வரி வசூல் மையங்கள் வழக்கம் போல் இயங்கும். </p><p>செயல்படும் நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை ஆகும்.</p><h2><strong>மாநகராட்சியின் வேண்டுகோள்</strong></h2><p>கடைசி நேர நெரிசலையும், தாமதக் கட்டணங்களையும் தவிர்க்கும் பொருட்டு, பொதுமக்கள் அனைவரும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் (செப்டம்பர் 30-க்குள்) தங்களது வரிகளைச் செலுத்த வேண்டும். </p><p>பொதுமக்கள் செலுத்தும் வரிப்பணமே மாநகராட்சியின் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுவதால், அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் தனது செய்திக்குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பிரிக்ஸ் கூட்டமைப்பின் உத்வேகம் தொடர வேண்டும்- மாநாட்டில் பிரதமர் மோடி உரை</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-urges-sustained-brics-momentum-at-delhi-summit</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-urges-sustained-brics-momentum-at-delhi-summit#comments</comments><guid isPermaLink="false">812f7318-f95a-4478-9ef5-a9744cad5f2d</guid><pubDate>Sat, 12 Sep 2026 11:11:08 +0000</pubDate><atom:updated>2026-09-12T11:11:08.414Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Conference,பிரிக்ஸ்,pm modi,bricks,பிரதமர் மோடி,பிரிக்ஸ் மாநாடு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/3197if0p/pm-modi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/3197if0p/pm-modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரிக்ஸ் கூட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். பிரிக்ஸ் அமைப்பு புதிய அடையாளத்தை பெற்றுள்ளது. இந்த கூட்டமைப்பின் உத்வேகம் தொடர வேண்டும் என்று பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். </p><p>டெல்லியில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><p>இந்தியாவின் BRICS தலைமைப் பொறுப்பானது,</p><p>மனிதாபிமானத்திற்கு முதலிடம் அளிக்கும் அணுகுமுறையைக் கொண்டுள்ளது. புதுமை, ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மை ஆகியவை எமது முன்னுரிமைகளாகும். </p><p>அதோடு, BRICS ஒத்துழைப்பை சாதாரண பொதுமக்களுடன் இணைப்பதில் நாங்கள் சிறப்பு கவனம் செலுத்திகிறோம். அந்த இலக்கை மையமாகக் கொண்டு, 350-க்கும் மேற்பட்ட கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.</p><h2>சீர்திருத்தங்கள்</h2><p>ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இனிமேலும் தாமதிக்க முடியாது.</p><p>உலகில் வர்த்தகத் தடைகள் அதிகரிக்கும் சூழலில், இந்தியா பிற நாடுகளுடன் பொருளாதார ரீதியான பாலங்களை அமைத்து வருகிறது.</p><p>உலகின் தெற்கு பகுதியில் உள்ள நாடுகள் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. பொதுமக்களை மையமாக கொண்டே பிரிக்ஸ் கூட்டமைப்பு செயல்படுகிறது.</p><h2>மனிதநேயத்திற்கு முன்னுரிமை</h2><p>மக்கள் மற்றும் மனிதநேயம், நிலைத்தன்மை என்பது தான் எங்களுக்கு முன்னுரிமை. பிரிக்ஸ் புதிய அடையாளம் பெற்றுள்ளது. பிரிக்ஸ் கூட்டமைப்பின் உத்வேகம் தொடர வேண்டும்.</p><p>பிரிக்ஸ் அமைப்பில் உள்ள அனைவரும் முன்னேற்ற பாதையை நோக்கி நடைபோடுவோம். அடுத்த 20 ஆண்டுகளுக்கான திட்டத்தை வடிவமைக்க வேண்டும்.</p><p>பிரிக்ஸ் கூட்டமைப்பினர் இணைந்து உலக அளவில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். ஒருங்கிணைந்து உலக நிர்வாகத்தை சீர்திருத்தம் செய்வது பற்றிய வரைபடத்தை தயாரிப்போம்.</p><h2>நாம் பின்தங்கி உள்ளோம்</h2><p>தற்போதைய உலக நிர்வாகக் கட்டமைப்பு ஒரு 'பிரமிடு' போல இயங்குகிறது. அதன் உச்சியில் அதிகாரமும், அதற்கு அடியில் அந்த முடிவுகளால் பாதிக்கப்படும் நாடுகளும் உள்ளன.</p><p>தெற்குலக நாடுகள் உலகளாவிய நெருக்கடிகளை எதிர்கொள்வதில் முன்வரிசையிலும், முடிவெடுக்கும் அதிகாரத்தில் கடைசி வரிசையிலும் தள்ளப்பட்டுள்ளன.</p><p>அந்த பிரமிடு அமைப்பை மாற்றி, அனைவருக்குமான சம தளமாகவும் கூட்டுப் பங்களிப்பாகவும் உருமாற்ற வேண்டும். அதில் ஒவ்வொரு நாட்டின் குரலுக்கு மதிப்பும், உரிமையும் இருக்க வேண்டும்.</p><h2>மாற்றும் நேரம் இது</h2><p>பிரிக்ஸ் உலக அரங்கில் ஒரு தனித்துவமான அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது. நாம் ஒருவருக்கொருவர் கருத்துக்களை மதிக்கிறோம், ஒருமித்த கருத்தின் மூலம் முன்னோக்கிச் செல்கிறோம். </p><p>அனைவரையும் ஒன்றிணைத்துச் செல்வதன் மூலமே நாம் முன்னேறப் பாடுபடுகிறோம். இப்போது நமது ஒற்றுமையையும், ஒருமித்த கருத்தையும், உலக அரங்கில் உறுதியான பலன்களாக மாற்ற வேண்டிய நேரம் இது.</p><h2>பிரதமர் மோடி பரிந்துரை</h2><p>பிரிக்ஸ் தொடர்ச்சி மற்றும் செயலாக்க பொறிமுறையை (continuity and implementation mechanism) உருவாக்க நான் பரிந்துரைக்கிறேன்.</p><p>'ட்ரொய்கா' (Troika) ஏற்பாடு மூலம் அனைத்து முயற்சிகளையும் முடிவுகளையும் தொடர்ந்து கண்காணிக்க இது உதவும்.</p><p>மேலும், ஒவ்வொரு முடிவுடன் தொடர்புடைய மையப்புள்ளி (nodal point), காலக்கெடு மற்றும் செயலாக்க நிலையை பதிவு செய்ய பாதுகாப்பான டிஜிட்டல் களஞ்சியத்தையும் உருவாக்கலாம்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | BRICS Summit: Prime Minister Narendra Modi says, &quot;The draft of the BRICS New Delhi Declaration 2026 is before us. It encapsulates the essence of our discussions and reflects our perspectives on key global and regional issues. It also outlines priorities for further… <a href="https://t.co/qZeAfoqpxy">pic.twitter.com/qZeAfoqpxy</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2098727102321431037?ref_src=twsrc%5Etfw">September 12, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>ஈரான் போர் உலக நலன்களுக்கு உகந்தது அல்ல: பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பேச்சு</title><link>https://www.maalaimalar.com/news/national/brics-summit-xi-jinping-says-middle-east-war-causes-serious-losses</link><comments>https://www.maalaimalar.com/news/national/brics-summit-xi-jinping-says-middle-east-war-causes-serious-losses#comments</comments><guid isPermaLink="false">75f350d4-4fc7-4e51-9ba5-3973a0003e4c</guid><pubDate>Sat, 12 Sep 2026 10:55:16 +0000</pubDate><atom:updated>2026-09-12T10:55:16.805Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Xi Jinping,ஜி ஜின்பிங்,BRICS Summit,US Iran war,அமெரிக்கா ஈரான் போர்,பிரிக்ஸ் மாநாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/mwx1jgcp/XiJinping002.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Xi Jinping]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/mwx1jgcp/XiJinping002.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் தலைவர்கள் தற்போதைய மோதல்கள் மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் சர்வதேச சமூகத்தின் மீது அவை ஏற்படுத்தும் பரந்த விளைவுகள் குறித்து விவாதித்தனர்.</p><h2>அப்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசியதாவது:-</h2><p>* <a href="https://www.maalaimalar.com/news/national/dialogue-and-diplomacy-way-forward-brics-new-delhi-declaration-agreed">பிரிக்ஸ்</a> நாடுகள் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதில் முன்னோடிப் பங்காற்ற வேண்டும்</p><p>* உலக அமைதி மற்றும் பாதுகாப்பைப் பாதிக்கும் விவகாரங்களில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளிடையே அதிக ஒத்துழைப்பு இருக்க வேண்டும்.</p><p>* மத்திய கிழக்கில் நடைபெறும் போர் அப்பகுதி மக்கள் மத்தியில் கடுமையான இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது சர்வதேச சமூகத்தின் பொதுவான நலன்களுக்கு உகந்தது அல்ல.</p><p>* மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிம்மதியை நிலைநாட்டத் தனது பங்கை ஆற்றுவதற்கு பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுடன் இணைந்து சீனா செயல்படும்.</p><p>​​* மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் போர் ஏற்படக்கூடாது</p><p>* பிரிக்ஸ் நாடுகள் வரலாற்றின் சரியான பக்கம் உறுதியாக நிற்க வேண்டும்.</p><p>* 2027 பிரிக்ஸ் மாநாட்டை சீனா நடத்தும்.</p><p>இவ்வாறு ஜி ஜின்பிங் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>காணாமல் போன பெங்களூரு மாணவி கர்ப்பமாக மீட்பு: ஆதார் OTP மூலம் இருப்பிடத்தை கண்டுபிடித்த சிஐடி போலீசார்</title><link>https://www.maalaimalar.com/news/national/missing-bengaluru-student-rescued-pregnant-aadhaar-otp-leads-cid-to-location</link><comments>https://www.maalaimalar.com/news/national/missing-bengaluru-student-rescued-pregnant-aadhaar-otp-leads-cid-to-location#comments</comments><guid isPermaLink="false">cf570480-b6c9-49de-9627-3e5dcac0ce32</guid><pubDate>Sat, 12 Sep 2026 10:54:56 +0000</pubDate><atom:updated>2026-09-12T10:54:56.526Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பெங்களூரு,bengaluru,பெங்களூரு மாணவி,Bengaluru student rescued,AadhaarOTP,CID police,சிஐடி போலீசார்,ஆதார் OTP</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/wcvx6caf/adhaer.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bengaluru student rescued]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/wcvx6caf/adhaer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாணவி மாயமாகி பல மாதங்கள் கடந்தும் எவ்வித தகவலும் கிடைக்காததால், அவரது பெற்றோர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். </p><p>பெங்களூரு வித்யாரண்யபுரா பகுதியைச் சேர்ந்த 18 வயதான இரண்டாம் ஆண்டு பியூசி மாணவி ஒருவர், கடந்த ஜனவரி 31-ஆம் தேதி கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார். அவருடன் அவரது தோழியான மற்றொரு சிறுமியும் மர்மமான முறையில் மாயமானார். இருவரின் குடும்பத்தினரும் பல இடங்களில் தேடியும் எந்தத் தகவலும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.</p><h2><strong>கைபேசி இல்லாமல் திட்டமிட்டுச் சென்ற மாணவிகள்</strong></h2><p>போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மாயமான இரு மாணவிகளும் தங்களின் மொபைல் போன்கள் மற்றும் உடைமைகளை வீட்டில் விட்டுச் சென்றது தெரியவந்தது. அவர்கள் தங்களின் கல்லூரி பைகள் மற்றும் <a href="https://www.maalaimalar.com/news/national/congress-unable-to-digest-indias-progress-spreading-negativity-over-brics-bjp">ஆதார் அட்டைகளை </a>மட்டுமே கையோடு எடுத்துச் சென்றிருந்தனர். பெங்களூரிலிருந்து புறப்பட்ட இருவரும் முதலில் மலை மகதேஸ்வரா மலைப்பகுதிக்குச் சென்று, பின்னர் அங்கிருந்து தனித்தனியாகப் பிரிந்து சென்றுள்ளனர்.</p><h2>ஆட்<strong>கொணர்வு மனு தா</strong>க்கல்</h2><p>மாணவி மாயமாகி பல மாதங்கள் கடந்தும் எவ்வித தகவலும் கிடைக்காததால், அவரது பெற்றோர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கை உடனடியாக மாநில குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. ஏப்ரல் மாதம் முதல் சிஐடி சிறப்புப் படை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.</p><h2>திருப்பத்<strong>தை ஏற்படுத்திய ஆதார் OT</strong>P </h2><p>கடந்த 7 மாதங்களாக எவ்வித தடயமும் இல்லாமல் இருந்த வழக்கில், இந்த வாரம் ஒரு முக்கிய டிஜிட்டல் திருப்பம் ஏற்பட்டது. அந்த 18 வயது மாணவி, ஏதோ ஒரு சேவைக்காகத் தனது ஆதார் எண்களைப் பயன்படுத்தி, அதற்குரிய ஒருமுறை கடவுச்சொல்லைப் பெறத் தனது கணவரின் மொபைல் எண்ணைப் பதிவு செய்துள்ளார். இந்த ஆதார் டிஜிட்டல் தடத்தைக் கண்டறிந்த சிஐடி புலனாய்வுக் குழுவினர், உடனடியாக அந்த மொபைல் எண்ணைக் கண்காணித்தனர்.</p><h2>கனகபுரா <strong>கிராமத்</strong>தில் மீட்பு </h2><p>குறிப்பிட்ட மொபைல் எண்ணின் உரிமையாளரைக் கண்டுபிடித்து விசாரணை நடத்தியதில், அவர் கனகபுரா தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும், அந்த மாணவி அவரைத் திருமணம் செய்து கொண்டு அங்கு வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. மேலும், மீட்கப்பட்ட மாணவி தற்போது கர்ப்பமாக இருப்பதாக மூத்த சிஐடி அதிகாரி தெரிவித்துள்ளார். இதையடுத்து, மாணவியைப் பத்திரமாக மீட்ட சிஐடி போலீசார், அவரை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெற்றோர் வசம் ஒப்படைத்தனர். அதே வேளையில், அவருடன் மாயமான மற்றொரு சிறுமியைத் தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் வருகிற 18-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/districts-in-tamil-nadu-likely-to-receive-rain-until-the-18th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/districts-in-tamil-nadu-likely-to-receive-rain-until-the-18th#comments</comments><guid isPermaLink="false">d702b4d7-2cb4-4303-9bc1-66dd9d0b6831</guid><pubDate>Sat, 12 Sep 2026 10:30:28 +0000</pubDate><atom:updated>2026-09-12T10:30:28.531Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/aw3z7t73/rain.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/aw3z7t73/rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.</strong></em> </p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>சுமார் 1.5 கிமீ உயரம் வரை தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><h2><strong>லேசான மழை</strong></h2><p>இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>14-ந்தேதி மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>15-ந்தேதி நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், அரியலூர், பெரம்பலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>16-ந்தேதி நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>17-ந்தேதி கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>18-ந்தேதி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>இதனிடையே இன்று முதல் 16-ந்தேதி வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p>நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p>]]></content:encoded></item><item><title>சிறையில் பிரஜ்வல் ரேவண்ணாவிடம் கைப்பற்றப்பட்ட செல்போனில் ஆபாச படங்கள்..!</title><link>https://www.maalaimalar.com/news/national/movies-found-on-seized-phone-pen-drive-of-jailed-convict-prajwal-revanna</link><comments>https://www.maalaimalar.com/news/national/movies-found-on-seized-phone-pen-drive-of-jailed-convict-prajwal-revanna#comments</comments><guid isPermaLink="false">69243b4a-476f-4a8a-a99c-ff0651f72680</guid><pubDate>Sat, 12 Sep 2026 10:05:19 +0000</pubDate><atom:updated>2026-09-12T10:05:19.747Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prajwal Revanna,பிரஜ்வல் ரேவண்ணா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/a7u686j3/PrajwalRevanna.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிரஜ்வால் ரேவண்ணா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/a7u686j3/PrajwalRevanna.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வீட்டில் வேலை செய்து வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தேவேகவுடா பேரனும், முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி ஆயுள் தண்டனை வழங்கியது. இவர் மீது மேலும் ஏராளமான பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.</p><h2>பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை</h2><p>இவர் தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சிறைச்சாலையில் அணியும் ஆடையின்றி, வழக்கமான ஆடையுடன் போன் பேசுவது போன்ற வீடியோ வெளியானது. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.</p><h2>செல்போன் மற்றும் பென் டிரைவ் பறிமுதல்</h2><p>அப்போது செல்போன் மற்றும் பென் டிரைவ் ஆகியவை கைப்பற்றப்பட்டன. செல்போனை ஆய்வுக்கு அனுப்பினர். அப்போது, செல்போனில் ஏராளமான ஆபாச படங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதேபோல் பென் டிரைவில் சினிமா படங்கள் மற்றும் வெப் சீரிஸ் போன்றவை டவுன்லோடு செய்யப்பட்டிருந்தது.</p><p>இதுகுறித்து ரேவண்ணாவிடம் போலீசார் விசாரணை நடத்தினார். அப்போது போன் என்னுடையது அல்ல. சக கைதிகளும் பயன்படுத்தினர். சுழற்சி அடிப்படையில் ஒவ்வொருவரிடமும் போன் மாறிமாறி வரும் எனத் தெரிவித்தார். எந்தவொரு ஆபாச படத்தையும் டவுன்லோடு செய்யவில்லை என்றார்.</p><h2>பெண் நண்பருடன் பேச்சு</h2><p>சோதனையின்போது கைப்பற்றப்பட்ட குறிப்பேடு ஒன்றில், ரேவண்ணாவின் குடும்பத்தினர் மற்றும் அவருக்கு அறிமுகமானவர்களின் தொலைபேசி எண்கள் இருந்தன. இடைத்தரகர்கள் மூலமாக குடும்பத்தினருடன் மேற்கொள்ளப்பட்ட அனுமதியற்ற தொடர்புகளும், ஒரு பெண் நண்பருக்கு நேரடியாக மேற்கொள்ளப்பட்ட அழைப்புகளும் அழைப்புப் பதிவுகளில் (call records) தெரிய வந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. விசாரணையின்போது, ​​அந்தப் பெண் நண்பருடனான தொடர்பை ரேவண்ணா ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.</p><p>தொலைபேசியின் அழைப்புப் பதிவுகளில் எண்கள் இடம்பெற்றுள்ள நபர்களுக்குக் காவல்துறை விரைவில் சம்மன் அல்லது அறிவிப்புகளை அனுப்பக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>மொபைல் போன், சிம் கார்டு, சார்ஜர், குறிப்பேடு (Notebook) ஆகியவை ஜெயில் சிறைக்குள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் விசாரணைக் கைதியான பிரதாப் ராய் மற்றும் ரேவண்ணா இருந்த அறையில் இவர் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.</p><h2>வார்டன் மூலம் செல்போன் கடத்தல்</h2><p>வார்டன் மூலம் செல்போனை கடத்தி வந்ததாகவும், விசாரணைக் கைதி மூலம் சிம்கார்டு பெற்றதாகவும், பிரதாப் ராய் மற்றும் ரேவண்ணா ஆகியோர் இதை பயன்படுத்தியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.</p><p>கடந்த 8-ந்தேதி இது தொடர்பாக நீதிமன்றத்தில் ரேவண்ணா ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிமன்றம் 3 நாள் போலீஸ் விசாரணைக்கு அனுமதி அளித்தது. பின்னர் செப்டம்பர் 10-ந்தேதி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.</p>]]></content:encoded></item><item><title>என் தலைவரை தொட்டது யாராக இருந்தாலும் விடமாட்டோம்: மேயர் பிரியா எச்சரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/we-will-not-spare-anyone-who-touches-our-leader-says-chennai-mayor-priya</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/we-will-not-spare-anyone-who-touches-our-leader-says-chennai-mayor-priya#comments</comments><guid isPermaLink="false">8236e690-eeb9-496f-9bf9-d7b1ede7335a</guid><pubDate>Sat, 12 Sep 2026 10:00:07 +0000</pubDate><atom:updated>2026-09-12T10:00:07.031Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,M.K.Stalin,மேயர் பிரியா,மு.க.ஸ்டாலின்,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,Chennai Mayor Priya,MISA Act,மிசா சட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/jrn6a14g/mayor.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chennai Mayor Priya]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/jrn6a14g/mayor.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திரைப்படங்களில் மூன்று மணி நேரம் நடிப்பு காட்டுவது போல, முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்திற்கு வந்து ஒரு மணி நேரம் பேசிவிட்டுச் செல்கிறார்.</p><p>தமிழக சட்டசபையில் முதலமைச்சர் விஜய், மிசா சட்டம் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து தெரிவித்த கருத்துக்கள் அரசியல் களத்தில் பெரும் காரசாரமான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. விஜயின் இந்த பேச்சைக் கண்டித்து திமுக சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, எதிர்தரப்பினரின் விமர்சனங்களுக்குக் காட்டமான பதிலடிகளை வழங்கி ஆவேசமாக உரையாற்றினார்.</p><h2>தகுதி குறி<strong>த்து மேயர் பிரியா</strong> கேள்வி</h2><p>ஆர்ப்பாட்டத்தில் மேயர் பிரியா பேசுகையில், சட்டமன்றத்திற்குள் வந்து எழுத்துக்கூட்டிப் படித்துவிட்டு திமுகவை நோக்கி கேள்வி கேட்கும் தகுதி யாருக்கும் இல்லை என்று சாடினார். "மிசா சட்டத்தைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? திமுகவை பார்த்து கேள்வி கேட்க என்ன தகுதி இருக்கிறது? சட்டமன்றத்தில் எவ்வாறு பேச வேண்டும் என்று அமைச்சர்களுக்கோ, எம்.எல்.ஏ.க்களுக்கோ முறையான பயிற்சிகள் அளிக்கப்படவில்லை. பயிற்சி வகுப்புகள் நடத்தியும் இதுபோன்ற பேச்சுக்கள் தொடர்வது வேடிக்கையானது" எனத் தெரிவித்தார்.</p><p>திரைப்படங்களில் மூன்று மணி நேரம் நடிப்பு காட்டுவது போல, முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்திற்கு வந்து ஒரு மணி நேரம் பேசிவிட்டுச் செல்கிறார் என்று மேயர் பிரியா விமர்சித்தார். தமிழ்நாட்டின் வரலாற்றில் அண்ணா, கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகிய தலைவர்கள் தமிழையும் தமிழ்நாட்டையும் வளர்த்தெடுக்க ஆற்றிய பங்களிப்பை இந்த மாநிலத்து மக்கள் நன்கு அறிவார்கள் என்று அவர் குறிப்பிட்டப் பேசினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cpi-m-to-announce-byelection-support-tomorrow-madurantakam-dharapuram">திமுக </a>எந்தவொரு பிரச்சனைக்கும் தாமாகச் சென்று வழிவகுக்காது எனக் குறிப்பிட்ட மேயர் பிரியா, அதேவேளையில் தங்களைத் தேடி வரும் பிரச்சனைகளை ஒருபோதும் விட்டுவிடாது என்றும் கூறினார். "என் தாயைப் பழித்தவனை யார் தடுத்தாலும் விடமாட்டேன் என்பது பழமொழி. அதேபோல் என் தலைவரை தொட்டது யாராக இருந்தாலும், அவர்கள் எவ்வளவு மாண்புமிகுந்த பதவியில் இருந்தாலும் திமுக தொண்டர்களாகிய நாங்கள் அவர்களை நிச்சயமாக சும்மா விடமாட்டோம்" என்று தனது கண்டனத்தை பதிவு செய்தார்.</p>]]></content:encoded></item><item><title>பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்கும் ‘துக்ளக் தர்பார்’ முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்!- சீமான்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/seeman-says-amil-nadu-government-must-abandon-tughlaq-durbar-style-decision-to-construct-the-new-secretariat-at-pattinapakkam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/seeman-says-amil-nadu-government-must-abandon-tughlaq-durbar-style-decision-to-construct-the-new-secretariat-at-pattinapakkam#comments</comments><guid isPermaLink="false">3bb835e6-59b1-4483-99da-073466a73904</guid><pubDate>Sat, 12 Sep 2026 09:59:28 +0000</pubDate><atom:updated>2026-09-12T09:59:28.506Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Seeman,தவெக,Naam Thamizhar katchi,பட்டினப்பாக்கம்,tvk,புதிய தலைமை செயலகம்,சீமான்,நாம் தமிழர் கட்சி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/1zqnwil2/seeman.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ சீமான்]]></media:title><media:description type="html"><![CDATA[ சீமான்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/1zqnwil2/seeman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>9 மீனவ கிராம மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் பட்டினப்பாக்கத்தில் தலைமைச்செயலகத்தை ஒருபோதும் அமையவிடமாட்டோம். மக்களின் துணையுடன் உறுதியாக தடுத்து நிறுத்துவோம். பட்டினப்பாக்கம் மீனவச்சொந்தங்கள் மிகுந்த நம்பிக்கையோடு இருங்கள்! என்று சீமான் கூறியுள்ளார்.</strong></em> </p><p>நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">சீமான்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>அவசியம் என்ன?</strong></h2><p>சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்கள் அறிவித்திருந்த புதிய தலைமைச்செயலகம் சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. 9 கிராம மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் பட்டினப்பாக்கத்தில் தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச்செயலகம் அமைக்க தவெக அரசு முடிவெடுத்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.</p><p>தமிழ்நாடு அரசின் களஞ்சியம் காலியாக உள்ளது, அரசுக்கு 10 இலட்சம் கோடி கடன் உள்ளது, ஆண்டுக்கு ஒன்றே முக்கால் இலட்சம் கோடி கடன் வாங்கும் நிலை உள்ளது, அதனால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்று தொடர்ந்து கூறிவரும் தவெக அரசு, வட்டி கட்டவே கடன் வாங்க வேண்டிய அளவிற்குக் கடுமையான நிதி நெருக்கடி உள்ள நிலையில், 1200 கோடிகளை வாரி இறைத்து அவசரகதியில் <a href="https://www.maalaimalar.com/topic/புதிய-தலைமை-செயலகம்">புதிய தலைமைச்செயலகம்</a> கட்ட வேண்டிய அவசியம் என்ன?</p><p>தற்போது செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் செயல்படும் தலைமைச் செயலகத்தில் கடும் இடநெருக்கடியும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது என்பதாலேயே புதிய தலைமைச்செயலகம் அமைக்கப்படுகிறது என்றால், அதைவிட அதிக இடநெருக்கடியும், போக்குவரத்து நெரிசலும் உள்ள பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்க வேண்டிய தேவை என்ன? மக்களின் தேவைக்கா? அல்லது முதல்வரின் தனிப்பட்டத் தேவைக்கா? பரந்தூர் கிராம மக்களின் எதிர்ப்பினை ஏற்று, புதிய வானூர்தி நிலையத்தைக் கைவிட்ட நீங்கள், பட்டினப்பாக்கத்தில் 9 மீனவ கிராம மக்களின் எதிர்ப்பினைக் கருத்திற்கொள்ளாதது ஏன்? 9 மீனவ கிராம மக்களின் வாழ்வாதாரத்தைவிடவும் உங்களின் தனிப்பட்ட வசதிதான் முதன்மையானதா? இதுதான் மீனவ மக்களின் நலன் மீதான உங்களின் அக்கறையா முதல்வர் விஜய் அவர்களே?</p><h2><strong>அவலம்</strong></h2><p>உலகப் புகழ்பெற்ற சாந்தோம் தேவாலயம் உள்ளிட்ட வழிபாட்டுத்தலங்கள், பத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள், தொழில் மையங்கள் மற்றும் மீனவ மக்களின் வியாபாரத்தலங்கள் எனப் பட்டினப்பாக்க குறுகிய சாலைகளை ஒவ்வொரு நாளும் பல்லாயிரம் மக்கள் ஒரே நேரத்தில் பயன்படுத்துவதால், இப்போதே அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இந்நிலையில், புதிய தலைமைச்செயலகமும் அங்கு அமைக்கப்பட்டால் பட்டினப்பாக்கம் பகுதியே கடுமையாகத் திணற நேரிடும். ஒவ்வொரு நாளும் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் வருகைக்காகப் பல மணி நேரங்கள் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படுகின்ற அவலமும் நடைபெறும். இதனால் பொதுமக்கள் குறிப்பாகப் பள்ளி குழந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் நிலை உருவாகும்.</p><p>அதுமட்டுமின்றி, பல்வேறு அரசுத் துறைகளின் அலுவலகங்கள், சட்டமன்றம், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தங்கும் விடுதிகள், பொதுமக்கள் காத்திருப்புக்கான இடங்கள், வாகன நிறுத்துமிடங்கள், குடிநீர் மற்றும் கழிப்பிடங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் இத்தனை குறுகிய இடத்திற்குள் எப்படி அமைக்க முடியும்? அப்படியே வலிந்து திணித்து அமைத்தாலும், மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்ததுபோல அடுத்த 100 ஆண்டுகளுக்கு விரிவுப்படுத்துவதற்கு இக்குறுகிய இடம் எப்படிப் போதுமானதாக இருக்க முடியும்? இதுதான் தவெக அரசின் தொலைநோக்கு சிந்தனையா? </p><p>எல்லாவற்றிற்கும் மேலாக, சென்னை பட்டினப்பாக்கம் பகுதியானது கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமி பேரலை தாக்கிய ஆபத்தான பகுதிகளில் ஒன்றாகும். எதிர்காலத்திலும் சுனாமியால் தாக்குதலுக்கு ஆளாகும் வாய்ப்புகளும் உண்டு. மேலும், புவிவெப்பமயமாதலால் பனிப்பாறை உருகி, கடல் மட்டம் தொடர்ந்து உயர்வதால், எதிர்வரும் 2040-2070 வரையிலான காலகட்டத்தில் கடல்மட்டம் 30 செமீ அளவிற்கு உயர்ந்து சென்னை கடற்கரை பரப்பில் 1.6 கிமீ அளவிற்கு (ஏறத்தாழ 71ச.கீ நிலப்பரப்பு) கடல்மட்டத்திற்கு கீழ் சென்று, நிரந்தரமாக வெள்ளம் சூழ் பகுதியாக மாறும் என்று "காலநிலை மாற்றத்திற்கான சென்னை செயல்திட்ட அறிக்கை"குறிப்பிடும் பகுதிக்குள்ளும் பட்டினப்பாக்கம் வருகிறது என்பதால், அடுத்த 100 ஆண்டுக்கான தொலைநோக்கு பார்வையுடன் தலைமைச்செயலகம் அமைக்க பட்டினப்பாக்கம் எப்படி சரியான தேர்வாக இருக்க முடியும்?</p><h2><strong>வெட்கக்கேடானது</strong></h2><p>தான் முதலமைச்சர் ஆவதற்கு முன்பே அனைவரையும் வீட்டிற்கு அழைத்துச் சந்தித்த முதல்வர் விஜய் அவர்கள், தற்போது தலைமைச்செயலகத்தையே தன் வீட்டிற்கு அருகில் அமைத்து அரசு ஊழியர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவருமே அங்கு வாருங்கள் என்று துக்ளக் தர்பார் நடத்த முயல்வது வெட்கக்கேடானது.</p><p>ஆகவே, முதல்வர் விஜய் அவர்களின் தனிப்பட்ட நலனுக்காக, நாட்டு மக்களின் வரிப்பணத்தை வீணடித்து, கடும் இடநெருக்கடியும், போக்குவரத்து நெரிசலும், சுனாமி ஆபத்தும் உள்ள பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.</p><p>இல்லையென்றால், பாதிக்கப்படும் பட்டினப்பாக்கம் 9 கிராம மீனவமக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த 9 மீனவ கிராம மக்களுக்கு நான் சொல்லிக்கொள்வது, நீங்கள் எது குறித்தும் அச்சம் கொள்ள வேண்டாம்; விளைநிலங்களை அழித்து சேலம் எட்டுவழிச்சாலை அமைக்கவிடமாட்டோம் என்று கூறினோம். அமைக்கவில்லை. விளைநிலங்களை அழித்து பரந்தூரில் வானூர்தி நிலையம் அமைக்கவிடமட்டோம் என்றோம். அமைக்க முடியவில்லை; சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வகையில் கடலில் பேனா சிலை வைக்கவிடமாட்டோம் என்றோம்; வைக்க முடியவில்லை. அதுபோல 9 மீனவ கிராம மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் பட்டினப்பாக்கத்தில் தலைமைச்செயலகத்தை ஒருபோதும் அமையவிடமாட்டோம். மக்களின் துணையுடன் உறுதியாக தடுத்து நிறுத்துவோம். பட்டினப்பாக்கம் மீனவச்சொந்தங்கள் மிகுந்த நம்பிக்கையோடு இருங்கள்! என்று கூறியுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 2 நாட்கள் மின்தடை ஏற்பட்டது ஏன்?- அமைச்சர் நிர்மல்குமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-two-day-power-cut-explained-by-minister-nirmalkumar</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-two-day-power-cut-explained-by-minister-nirmalkumar#comments</comments><guid isPermaLink="false">7cf1d334-1d03-4363-ba9f-d5094c76b388</guid><pubDate>Sat, 12 Sep 2026 09:35:42 +0000</pubDate><atom:updated>2026-09-12T09:35:42.082Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>மின்தடை,அமைச்சர் நிர்மல்குமார்,மின் தட்டுப்பாடு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/isvpm9ti/nirmal-kumar.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Nirmal kumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/isvpm9ti/nirmal-kumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் நேற்று மாலை முதல் போதுமான மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறோம் என அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார்.</p><p>தமிழகத்தில் நிலவும் மின்தடை குறித்து அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>காற்றாலை மின்சாரம் தடைபட்டதால் 2 நாட்கள் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது தமிழகத்தில் மட்டுமல்ல பெரும்பாலான மாநிலங்களில் நிலவும் தட்டுப்பாடு.</p><p>நேற்று மாலை தமிழகத்திற்கு தேவையான மின்சாரம் பொது விநியோகத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது.</p><p>நேற்று மாலை முதல் அனைத்து இடங்களிலும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இது தமிழகத்தில் மட்டுமல்ல பெரும்பாலான மாநிலங்களில் நிலவும் தட்டுப்பாடு தமிழகத்தில் நேற்று மாலை முதல் போதுமான மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.</p><p>இவ்வாறு அவர் கூறி உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஆசிய விளையாட்டு போட்டியில் புறக்கணிப்பு: தற்கொலை செய்து கொள்வதாக இந்திய வீராங்கனை வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு</title><link>https://www.maalaimalar.com/sports/harassed-and-bullied-teenage-wushu-athlete-threatens-suicide-after-asian-games-snub</link><comments>https://www.maalaimalar.com/sports/harassed-and-bullied-teenage-wushu-athlete-threatens-suicide-after-asian-games-snub#comments</comments><guid isPermaLink="false">d590bdc3-96ac-4c67-a0ab-ce07af6cfcb6</guid><pubDate>Sat, 12 Sep 2026 09:29:10 +0000</pubDate><atom:updated>2026-09-12T09:29:10.532Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Asian Games,ஆசிய விளையாட்டு போட்டி,wushu</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/sjdig6nr/Divyanshi0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Divyanshi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/sjdig6nr/Divyanshi0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானில் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் இன்று ஜப்பான் புறப்பட்டு செல்கிறார்கள். இந்த நிலையில் வுஷு விளையாட்டின் 18 வயதாக இந்தியாவின் இளம் வீராங்கனையான திவ்யான்ஷி, ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் இருந்து தன்னை நீக்கியதால், தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டல் விடுக்கும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>நியாயமற்ற முறையில் நீக்கம்</h2><p>ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் இருந்து கடைசி நமிடத்தில் நீக்கப்பட்டேன். 60 கிலோ சாண்டா பிரிவில் நியாயமற்ற முறையில் நீக்கப்பட்டேன். மாதக்கணக்கில் மனதளவில் துன்புறுத்தப்பட்டேன். வாழ்வதில் இனி எந்த பயனும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.</p><p>ரோஷிபினா தேவி என்பவர் 2022ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார். இவரை தேர்வுக்கான போட்டியில் திவ்யான்ஷி வீழ்த்தியிருந்தார். இருந்தபோதிலும் இடம் மறுக்கப்பட்டுள்ளது.</p><h2>விஷு பெடரேசன் சொல்வது என்ன?</h2><p>அதேவேளையில் விஷு பெடரேசன், திவன்யான்ஷிக்கு மருத்துவ ஆய்வின்போது ACL காயம் கண்டறியப்பட்டது. போட்டிக்கு தன்னை தயார் படுத்தும் வகையில் முறையான பயிற்சியை மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ளது. அதேவேளையில், திவ்யான்ஷியின் பயிற்சியாளர் அஷோக் கவுதம், ஆசிய போட்டியில் நீக்குவதற்கு ஏற்ப மோசமான நிலையில் காயம் இல்லை. கடைசி நேரத்தில் மாற்று வீராங்கனையை தேர்வு செய்ய காரணம் என்ன? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>ரோஷிபினாவுக்கும் இரண்டு கால்களில் ACL காயம் ஏற்பட்டுள்ளது. அவரை மட்டும் தேர்வு செய்தது எப்படி? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். வீராங்கனை ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தடைகளை நீக்கி வெற்றியை தரும் விநாயகர் மந்திரம்</title><link>https://www.maalaimalar.com/spirituality/vinayagar-mantra-6</link><comments>https://www.maalaimalar.com/spirituality/vinayagar-mantra-6#comments</comments><guid isPermaLink="false">b381deb3-a7dc-4e57-a283-59ac5f032633</guid><pubDate>Sat, 12 Sep 2026 09:25:16 +0000</pubDate><atom:updated>2026-09-12T09:25:16.879Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,வழிபாடு,worship,விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,Vinayagar Chaturthi 2026,விநாயகர் சதுர்த்தி 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/4occi9b7/vinayagar6.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vinayagar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/4occi9b7/vinayagar6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்து சமயத்தில் எந்தவொரு செயலை செய்ய தொடங்கும் முன்பும், முழுமுதற் கடவுளான விநாயகரை வணங்கி தொடங்குவது வழக்கம். காரணம், செய்யும் காரியங்கள் தடைகள் இன்றி வெற்றிகரமாக நடைபெற அருள் புரிபவர், விநாயகப் பெருமான். அவரை போற்றும், பத்ம புராணத்தில் இடம்பெற்ற ஒரு மந்திரத்தை பார்ப்போம்.</p> <p><em>ஓம் நமோ கணபதயே நமஹ</em></p><p><em>கணபதிர் விக்னராஜோ லம்பதுண்டோ கஜானன:</em></p><p><em>த்வைமாதுரஸ்ச ஹேரம்ப ஏகதந்தோ கணாதிப:</em></p><p><em>விநாயகஸ்சாருகர்ண: பஸூபாலோ பவாத்மஜ:</em></p><h2>பொருள்:-</h2><p>'ஓம்' எனும் பிரணவ மந்திரத்தின் அதிபதியான கணபதியை வணங்குகிறேன். பூத கணங்களுக்கு தலைவனாக விளங்குபவரே, இடையூறுகள் இல்லாது செய்பவரே, அழகான நீண்ட துதிக்கையை உடையவரே, யானை முகம் படைத்தவரே, கங்கா, கவுரி என இரண்டு தாய்களை கொண்டவரே, பக்தர்களுக்கு குறைவில்லாமல் அருள்புரிபவரே, ஒரு தந்தத்தை உடையவரே, பெரிய காதுகளை கொண்டவரே, உலக மக்களை காப்பவரே, பரமனின் புத்திரனே, உனக்கு வணக்கம். எங்கள் தடைகளை எல்லாம் விலக்கி, நிம்மதி பெருவாழ்வு வாழ வழிநடத்துவீராக.</p> <h2>விநாயகர் சதுர்த்தி</h2><p>விநாயகர் சதுர்த்தி நாளில், அருகம்புல் மாலை சாற்றி, இந்த மந்திரத்தைக் கூறி விநாயகரை வழிபட்டால் காரிய வெற்றியும், எல்லா வளங்களும் பெறலாம்.</p>]]></content:encoded></item><item><title>டெல்லியில் 18-வது பிரிக்ஸ் மாநாடு தொடங்கியது</title><link>https://www.maalaimalar.com/news/national/18th-brics-summit-begins-in-delhi</link><comments>https://www.maalaimalar.com/news/national/18th-brics-summit-begins-in-delhi#comments</comments><guid isPermaLink="false">86506be4-8006-4737-8ef9-055b19818ee5</guid><pubDate>Sat, 12 Sep 2026 09:04:36 +0000</pubDate><atom:updated>2026-09-12T09:04:36.793Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மாநாடு,Conference,delhi,டெல்லி,பிரிக்ஸ் மாநாடு,Bricks conference</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/06luvrx9/bricks.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bricks conference]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/06luvrx9/bricks.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரிக்ஸ் நாடுகளின் 18வது உச்சி மாநாடு தொடங்கியது.</p><p>பிரிக்ஸ் அமைப்பில் இந்தியா, ரஷியா, சீனா, பிரேசில், தென் ஆப்பி ரிக்கா, ஈரான், எகிப்து, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தோனேசியா, எத்தியோப்பியா ஆகிய 11 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.</p><p>மேலும், பெலாரஸ், பொலிவியா, கஜகஸ்தான், கியூபா, மலேசியா, நைஜீரியா, தாய்லாந்து, உகாண்டா, உஸ்பெகிஸ் தான், வியட்நாம் ஆகியவை நட்பு நாடுகளாக இருக்கின்றன.</p><h2>உச்சி மாநாடு</h2><p>பிரிக்ஸ் அமைப்பின் 18-வது உச்சி மாநாடு இன்று தொடங்கி  2 நாட்கள் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடக்கிறது. இந்த மாநாடு இந்தியாவில் 4-வது முறையாக நடை பெறுகிறது.</p><p>மாநாட்டில் பங்கேற்பதற்காக உலக தலைவர்கள் டெல்லியில் குவிந்து உள்ளனர். நேற்று நடந்த பிரிக்ஸ் வர்த்தக மன்ற கூட்டத்தில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.</p><h2>மாநாடு தொடங்கியது</h2><p>பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று பிற்பகல் 2.35 மணிக்கு அதிகாரபூர்வமாக தொடங்கியது. மாநாட்டில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபி யாண்டோ, எகிப்து அதிபர் அப்தெல் பத்தாக் எல்-சிசி, மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம், அபுதாபி இளவரசர் முகமது பின் சயீத் அல் நஹ்யான், பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் ஆர். மார்கோஸ், எத்தியோப்பிய  பிரதமர் அபி அகமது அலி, வியட்நாம் பிரதமர் லே மின் ஹங், பிரேசில் வெளியுறவுத் துறை மந்திரி மவுரோ வியரா, நைஜீரியா துணை அதிபர் செனட்டர் காஷிம் ஷெட்டிமா, உகாண்டா துணை அதிபர் ஜெசிகா அலுபோ, </p><p>புருண்டி அதிபர் எவரிஸ்ட் ண்டாயிஷிமியே, தாய்லாந்து துணைப் பிரத மர் சிகாசக் புவாங்செட் கியோ, கியூபா வெளி யுறவுத்துறை மந்திரி புருனோ ரோட்ரிக்ஸ் பரில்லா, பெலாரஸ் வெளியுறவுத் துறை மந்திரி மாக்சிம் ரைஷென்கோவ், உருகுவே  வெளியுறவு அமைச்சர் மரியோ லுபெட்கின் மற்றும் ஐ.நா.பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர்  டெட்ரோஸ் அதானோம் உள்ளிட்ேடார் கலந்து கொள்கிறார்கள்.</p><p>மேலும் பல சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கிறார்கள்.</p><h2>வர்த்தகம், நிதி</h2><p>இம்மாநாட்டில் வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் மற்றும் தெற்கு உலக நாடுகளுக்கு இடையிலான மேம்பாடு, வர்த்தகம், நிதி, தொழில்நுட்பம், நிலைத் தன்மை மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது.</p><p>மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக அனைவரையும் உள்ளடக்கிய உலகளாவிய நிர்வாகம் மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பை வலுப்ப டுத்துதல் என்ற தலைப்பில் அமர்வு நடக்கிறது. இதில் பிரிக்ஸ் தலைவர்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்துகின்றனர்.</p><h2>மோடி-சீன அதிபர் பேச்சுவார்த்தை</h2><p>மாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று காலை தலைநகர் பிஜீங்கில் இருந்து புறப்பட்டார். </p><p>அவர் 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வர உள்ளார். கடைசியாக 2019-ம் ஆண்டு இந்தியா வுக்கு வந்த ஜின்பிங், சென்னை மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>ஜின்பிங்குடன், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட அரசியல் குழுவின் நிலைக்குழு உறுப்பினரும், அக்கட்சியின் மத்தியக் குழுவின் பொது அலுவலக இயக்குநருமான காய் கி, வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகியோர் அடங்கிய உயர்மட்ட குழுவினரும் வருகிறார்கள்.</p><p>இதற்கிடையே உச்சி மாநாட்டுக்கு இடையே இன்று மாலை 5.45 மணிக்கு பிரதமர் மோடி- ஜின்பிங் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.</p><p>வர்த்தகம், முதலீடு உள்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோ சனை நடத்துகிறார்கள்.</p><h2>எல்லை பிரச்சினை</h2><p>கடந்த 2020-ம் ஆண்டு கிழக்கு லடாக்கில் ஏற்பட்ட எல்லை மோதலுக்குப் பிறகு இரு நாடுகளும் உறவைச் சீராக்க முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வரும் நிலையில்  இரு தலைவர்களின் சந்திப்பு முக்கி யத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இரு தலைவர்களின் சந்திப்பில் எல்லைப் பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.</p><p>இதற்கிடையே மோடி-ஜின்பிங் இருதரப்பு பேச்சு வார்த்தை தொடர்பாக இந்தியாவில் உள்ள சீன தூதர் எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும்போது, அதிபர் ஜின்பிங்-பிரதமர் மோடி  இடையிலான இரு தரப்புச் சந்திப்புக்கான ஏற்பாடுகளை சீனாவும் இந்தியாவும் செய்து வருகின்றன. </p><h2>3-வது ஆண்டு</h2><p>கசான், தியான்ஜின் ஆகிய இடங்களில் நடை பெற்ற சந்திப்புகளைத் தொடர்ந்து, இரு தலைவர்களும் நேரில் சந்தித்துக் கொள்வது தொடர்ந்து 3-வது ஆண்டாகும்.</p><p>இரு தரப்பு உறவுகளை  நீண்ட கால கண்ணோட்டத்தில் கையாளவும், தகவல் தொடர்பை அதிகரிக்கவும், ஒத்துழைப்பை மேம்படுத்தவும், வேறுபாடுகளைச் சரியாகக் கையாளவும், நல்ல அண்டை நாடுகளாக வும் ஒருவருக்கொருவர் வெற்றிபெற உதவும் கூட்டாளிகளாகவும் இருக்க இந்தியாவுடன் சீனா இணைந்து செயல்படும் என்று தெரிவித்தார்.</p><h2>பிரதமர் மோடியுடன் ஆலோசனை</h2><p>இந்தநிலையில் பிரதமர் மோடி இன்று காலை எத்தியோப்பிய பிரதமர், மலேசிய பிரதமர், அபுதாபி இளவரசர், வியட்நாம் பிரதமர் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினார். </p><p>நேற்று ரஷிய அதிபர் புதின், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் ஆகியோருடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.</p><p>இன்று மாலை 4.25 மணிக்கு பாரத் புத்தாக்க கண்காட்சியை  தலைவா்கள் பாா்வையிடுகின்றனா். பின்னா் பாரத் மண்டபத்தில் தலைவா்கள் ஒன்றாக குழு புகைப்படம் எடுக்க உள்ளனா். மேலும், தலைவா்கள் மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. </p><h2>விருந்து</h2><p>பின்னர் தலைவா்களுக்கு பிரதமா் மோடி  இரவு 7.30 மணிக்கு விருந்து  அளிக்கிறார். அதனுடன் இன்றைய முதல் நாள் மாநாடு நிறைவு பெறுகிறது.</p>]]></content:encoded></item><item><title>“சூப்பர் மேன் இல்ல, ஆனா ஒரு சூப்பர் பவர் இருக்கு” - விரைவில் வெளியாகும் &apos;பீப்&apos; படம் குறித்து நடிகர் ராகவ்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/not-a-superman-but-has-a-superpower-actor-raghav-on-upcoming-beep-film</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/not-a-superman-but-has-a-superpower-actor-raghav-on-upcoming-beep-film#comments</comments><guid isPermaLink="false">6bf5e173-da3a-4599-bc1f-c28275e57b83</guid><pubDate>Sat, 12 Sep 2026 08:51:58 +0000</pubDate><atom:updated>2026-09-12T08:51:58.814Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>Beep Movie,பீப் திரைப்படம்,Actor Raghav,நடிகர் ராகவ்,Crime Thriller,ThaniOruvan Vibe</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/2457x36g/Actor-Raghav" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Actor Raghav]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/2457x36g/Actor-Raghav?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>'எந்திரன்', 'வேலாயுதம்', 'நஞ்சுபுரம்', 'கல்யாண சமையல் சாதம்' போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் நடிகர் <strong>ராகவ்</strong>. </p><p>இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் கிரைம் த்ரில்லர் திரைப்படம் <strong>'பீப்' (Beep)</strong>. அறிமுக இயக்குநர் இல. சண்முகசுந்தர் இயக்கியுள்ள இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் சுவாரசியமான அனுபவங்களை நடிகர் ராகவ் பகிர்ந்துள்ளார்.</p><h2><strong>'பீப்' தலைப்பின் ரகசியம் என்ன?</strong></h2><p>படத்தின் தலைப்பு குறித்துப் பேசிய ராகவ், “நாம் ஒரு விஷயம் கேட்கக் கூடாது என்று நினைக்கும் போது அந்த இடத்தில் 'பீப்' சத்தம் போடுகிறோம். அதாவது, துண்டிக்கப்பட்ட குரல்கள் அல்லது வெளியில் சொல்லப்படாத விஷயங்கள் என்று இதற்கு அர்த்தம் கொள்ளலாம். </p><p>சமூகத்தில் வழக்கமாக வெளியில் சொல்லப்படாத பல அதிர்ச்சியூட்டும் உண்மைகளை இந்த படத்தில் தொட்டிருக்கிறோம். இது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் ஒரு பக்கா <a href="https://www.maalaimalar.com/topic/crime">கிரைம் </a>த்ரில்லராக இருக்கும்” என்றார்.</p><h2><strong>சூப்பர் மேன் இல்ல... ஆனா 'சூப்பர் பவர்' இருக்கு!</strong></h2><p>படத்தின் நாயகன் கதாபாத்திரம் குறித்துப் பேசிய அவர், “படத்தின் ஹீரோவுக்கு ஒரு விதமான 'சூப்பர் பவர்' இருக்கிறது. ஆனால், அவர் வழக்கமான சினிமா சூப்பர் மேன் கிடையாது. </p><p>நிஜ வாழ்க்கையில் சில மனிதர்கள் 4 டிஜிட் பெருக்கல் கணக்குகளை நொடிப் பொழுதில் சொல்வார்களே, அதுபோன்ற ஒரு எதார்த்தமான சூப்பர் பவர் தான் அது. நிஜ வாழ்வில் அப்படி ஒரு பவர் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை இயக்குநர் அழகாகக் காட்டியுள்ளார்.</p><p>எனது கதாபாத்திரத்தின் மேனரிசங்கள் அனைத்தும் இயக்குநரின் கற்பனையே. படத்தை முன்கூட்டியே பார்த்த என் மனைவியே, 'உன்னை இயக்குநர் முற்றிலும் வேறு மாதிரி காட்டியுள்ளார்' என்று ஆச்சரியப்பட்டார்,” எனக் குறிப்பிட்டார்.</p><h2><strong>17-வது மாடியில் இருந்து கயிற்றில் இறங்கி ரிஸ்க்!</strong></h2><p>படத்தில் இடம்பெற்ற சவாலான ஆக்ஷன் காட்சி பற்றிப் பகிர்ந்த ராகவ், “ஒரு முக்கியமான காட்சிக்காக 17-வது மாடியில் இருந்து கயிறு கட்டி 10-வது மாடி வரை தலைகீழாக இறங்குவது போல படமாக்கினார்கள். </p><p>அது எனக்கு மிகப்பெரிய சவாலாகவும் ரிஸ்க்காகவும் இருந்தது. ஒரு நடிகனாக இந்த அளவுக்கு நாம் ரிஸ்க் எடுத்துதான் ஆக வேண்டும்.</p><p>எனக்கு 'தனி ஒருவன்' படத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF">அரவிந்த் சாமி</a> நடித்தது போன்ற ஒரு பவர்புல்லான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. </p><p>இது தவிர நானும் சில கதைகளை எழுதி வைத்துள்ளேன், அதையும் விரைவில் இயக்குவேன் ,” என்றார். இத்திரைப்படம் விரைவில் வெளியாகும் என்றும் மக்களிடம் நல்</p><p>ல வரவேற்பை பெரும் என்ற நம்பிக்கையும் எனக்கு உள்ளது என்றும் கூறியுள்ளார்.</p><h2><strong>படத்தின் ஆன்மாவாக இருக்கும் பின்னணி இசை</strong></h2><p>இயக்குநர் ராஜு முருகனின் உதவி இயக்குநரான தினா ராகவனிடம் இணை இயக்குநராக இருந்த இல. சண்முகசுந்தர் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் இரண்டு பாடல்கள் மட்டுமே உள்ளன. </p><p>ஆனால், இசையமைப்பாளர் பிரசாந்த் விஹாரியின் பின்னணி இசை படத்தின் ஆன்மாவாக அமைந்துள்ளது. </p><p>குறிப்பாக, இடைவேளைக்குப் பிறகு கதையை நகர்த்துவதில் இசை முக்கியப் பங்கு வகிக்கிறது. ரசிகர்கள் தியேட்டரில் அமர்ந்து தாங்களே கதையோடு பயணித்து, சில கணக்குகளைப் போட்டு குற்றவாளியைக் கண்டுபிடிப்பது போன்ற ஒரு சுவாரசியமான திரைக்கதை இதில் உள்ளது என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார்.</p><h2><strong>தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம்</strong></h2><p>நடிகர் ராகவ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் 'பீப்' திரைப்படத்தை இல. சண்முக சுந்தர் இயக்கியுள்ளார். இதற்கு பிரசாந்த் விஹாரி இசையமைக்க, பிரதீப் பத்மகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். </p><p>மேலும், இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை அபிஷேக் மற்றும் விக்னேஷ் கவனிக்க, சண்டைக் காட்சிகளை ராம்குமார் வடிவமைத்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பிரிக்ஸ் உச்சிமாநாடு: 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு வருகை தந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்!</title><link>https://www.maalaimalar.com/news/world/brics-summit-chinese-president-xi-jinping-visits-india-after-7-years</link><comments>https://www.maalaimalar.com/news/world/brics-summit-chinese-president-xi-jinping-visits-india-after-7-years#comments</comments><guid isPermaLink="false">ab5598e2-3004-401f-8689-bb4cbfccdc1b</guid><pubDate>Sat, 12 Sep 2026 08:50:40 +0000</pubDate><atom:updated>2026-09-12T08:50:40.297Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா,BRICS Summit,Prime Minister Narendra Modi,பிரிக்ஸ் உச்சிமாநாடு,Chinese President Xi Jinping,பிரதமர் மோடி,சீன அதிபர் ஜி ஜின்பிங்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/tivtbwm2/brics.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Xi Jinping -Narendra Modi   ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/tivtbwm2/brics.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த 2019-ஆம் ஆண்டு மாமல்லபுரத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முறைசாரா உச்சிமாநாட்டிற்குப் பிறகு, சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவிற்கு வருகை தருவது இதுவே முதன்முறையாகும்.</p><p>18-வது <a href="https://www.maalaimalar.com/news/world/saudi-arabia-shuts-down-pipeline-as-houthis-seize-island-opening-new-front-in-iran-war">பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் </a>பங்கேற்பதற்காகச் சீன அதிபர் ஜி ஜின்பிங் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக டெல்லி வந்தடைந்தார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு இந்திய மத்திய இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கலைக் குழுவினரின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளுடன் சீன அதிபருக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு வழங்கப்பட்டது. </p><p>ஜின்பிங்குடன் சீன கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக் குழு நிலைக்குழு உறுப்பினரும், கட்சியின் மத்திய குழு அலுவலக இயக்குனருமான காய் கி, சீன வெளியுறவு மந்திரியும், கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான வாங் யி உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர். ஜி ஜின்பிங் பிரதமர் மோடியை இன்று மாலை 5.45 மணிக்கு சந்தித்து பேச உள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு மாமல்லபுரத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முறைசாரா உச்சிமாநாட்டிற்குப் பிறகு, சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவிற்கு வருகை தருவது இதுவே முதன்முறையாகும்</p><h2>மோடி-ஜி ஜி<strong>ன்பிங் சந்திப்பு</strong></h2><p>பிரிக்ஸ் மாநாட்டின் ஒருபகுதியாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அதிபர்ஜி ஜின்பிங் சந்தித்துப் பேசுகிறார். 2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட எல்லை மோதலுக்குப் பிறகு, இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் நிலவி வந்த பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியாக இந்தச் சந்திப்பு பார்க்கப்படுகிறது.</p><p>இந்த இருதரப்புப் பேச்சுவார்த்தையின் போது, எல்லைப் பகுதிகளில் அமைதியை உறுதி செய்வது, எல்லைக் எல்லை நிர்ணயம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வது மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஏற்றத்தாழ்வுகளைச் சீரமைப்பது ஆகிய முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன.</p><h2>பிரிக்ஸ் உச்சிமா<strong>நாட்டின் முக்கிய</strong>த்துவம்</h2><p>இந்தியாவின் தலைமையில் டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெறும் இந்த 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உட்படப் பல உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். உலகளாவிய பொருளாதாரச் சவால்கள், உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ப் பதற்றங்கள், ஆற்றல் பாதுகாப்பு மற்றும் விநியோகச் சங்கிலி சீரமைப்பு போன்ற முக்கிய சர்வதேச விவகாரங்கள் குறித்து இம்மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. இரு பெரிய ஆசிய வல்லரசுகளின் தலைவர்கள் சந்தித்துப் பேசுவது சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பிரிக்ஸ் புது டெல்லி பிரகடனம்: இந்தியாவின் முயற்சிக்கு அனைத்து நாடுகளும் ஒப்புதல்</title><link>https://www.maalaimalar.com/news/national/dialogue-and-diplomacy-way-forward-brics-new-delhi-declaration-agreed</link><comments>https://www.maalaimalar.com/news/national/dialogue-and-diplomacy-way-forward-brics-new-delhi-declaration-agreed#comments</comments><guid isPermaLink="false">56046714-85d8-4061-b86a-003e1dbc6bdd</guid><pubDate>Sat, 12 Sep 2026 08:37:29 +0000</pubDate><atom:updated>2026-09-12T08:37:29.532Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>BRICS Summit,பிரிக்ஸ் மாநாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/t2nje2h7/BricsSummit001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிரிக்ஸ் மாநாடு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/t2nje2h7/BricsSummit001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரிக்ஸ் மாநாடு இந்தியாவில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் புதுடெல்லி வந்துள்ளனர். ரஷிய அதிபர் புதின், ஈரான் அதிபர், சீன அதிபர் ஜி ஜின் பிங் உள்ளிட்ட தலைவர்கள் வந்துள்ளனர்.</p><p>பொதுவாக மாநாட்டின் போது உலகளவில் பாதிக்கப்படக்கூடிய ஒரு குறிப்பிட்ட சம்பவம் குறித்து பொது கருத்து ஒற்றுமையுடன் பிரகடனம் வெளியிடப்படும். தற்போது உலகளவில் அமெரிக்கா- ஈரான் போர், உக்ரைன்- ரஷியா போர் சண்டை நடைபெற்று வருகிறது. அதேபோல் ஹவுதி- சவுதி அரேபியா இடையே சண்டை நடைபெறுகிறது.</p><h2>பிரகடனம்</h2><p>இந்த நிலையில் எந்தவொரு நாட்டையும் குறிப்பிடாமல் எந்த வகையான ஆக்கிரமிப்பையும் வன்மையாக கண்டிக்கும் வகையில் ஒருமித்த கருத்துடன் பிரகடனம் வெளியிட இந்தியா முயற்சி மேற்கொண்டது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் அனைத்து நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.</p><p>இதன் அடிப்படையில் மோதலை முடிவுக்கு கொண்டு வர உரையாடலும் ராஜதந்திரமுமே முன்னேற்றத்திற்கான வழி என்பதை மையமாக வைத்து பிரிக்ஸ் புது டெல்லி பிரகடனம் வெளியிடப்பட இருக்கிறது. இதற்கு அனைத்து நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன.</p><p>இதனைத் தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு பிரகடனம் வெளியிடப்பட இருக்கிறது.</p>]]></content:encoded></item></channel></rss>