<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 16 Sep 2026 22:22:08 +0000</lastBuildDate><item><title>சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்த விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 82-ஆக உயர்வு</title><link>https://www.maalaimalar.com/news/world/sudan-gold-mine-collapse-kills-at-least-82-people-with-many-more-missing</link><comments>https://www.maalaimalar.com/news/world/sudan-gold-mine-collapse-kills-at-least-82-people-with-many-more-missing#comments</comments><guid isPermaLink="false">e8c90807-c41a-4957-b63d-9f9f0093c68f</guid><pubDate>Wed, 16 Sep 2026 20:50:51 +0000</pubDate><atom:updated>2026-09-16T20:50:51.168Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sudan,சூடான்,gold mine collapse,தங்க சுரங்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/6cacgzmy/sudan-gold-mine-collapse.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sudan gold mine collapse]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/6cacgzmy/sudan-gold-mine-collapse.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சூடானின் தொலைதூர பகுதியில் உள்ள <a href="https://www.maalaimalar.com/topic/gold-mine">தங்க சுரங்கம்</a> ஒன்று இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82-ஆக உயர்ந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகளும் ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர். </p><p>அதேவேளையில், மீட்பு குழுவினர் போதிய உபகரணங்கள் இல்லாத நிலையில் காணாமல் போனவர்களை தேடும் பணியில் சிரமங்களை எதிர்கொண்டனர். கடுமையான போரில் சிக்கி தவிக்கும் ஒரு நாட்டில் நிகழ்ந்துள்ள மிக சமீபத்திய துயர சம்பவம் இதுவாகும்.</p><p>மேற்கு கோர்டோஃபான் மாகாணத்தில் உள்ள நுஹுத் நகரில் அமைந்துள்ள 'அல்-சாரா' தங்க சுரங்கத்தில் இந்த விபத்து நிகழ்ந்ததாக உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்தனர். இப்பகுதி, சூடான் ராணுவத்திற்கு எதிராக மூன்றாண்டுகளுக்கும் மேலாக போரிட்டு வரும் துணை ராணுவ படையான 'ரேபிட் சப்போர்ட் ஃபோர்சஸ்' (RSF) கட்டுப்பாட்டில் உள்ளது.</p><h2>82 உடல்கள் மீட்பு:</h2><p>'எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் ரூம்ஸ்' அமைப்பின் உறுப்பினரான சுலைமான் அபு ஹமீதா, புதன்கிழமை மதியத்திற்குள் மீட்பு குழுவினர் 82 உடல்களை மீட்டதாக கூறினார். "ஆனால் இன்னும் பலரைப்பற்றிய தகவல் இல்லை," என்று அபு ஹமீதா 'அசோசியேட்டட் பிரஸ்' செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.</p><p>'எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் ரூம்ஸ்' என்பது மோதல்களை கண்காணிக்கவும், போரினால் பாதிக்கப்பட்ட சூடான் முழுவதும் உள்ள சமூகங்களுக்கு ஆதரவளிக்கவும் செயல்படும் ஒரு அடித்தள அளவிலான அமைப்பாகும். உள்ளூர் நிர்வாக அதிகாரி ஒருவரும் 82 உடல்கள் மீட்கப்பட்டதை உறுதிப்படுத்தினார்.</p><p>ஞாயிற்றுக்கிழமையன்று சுரங்கத்தின் ஒரு பகுதியில் சரிவு தொடங்கி, அதனுடன் இணைக்கப்பட்ட மற்ற பகுதிகளுக்கும் பரவியதாக அந்த அதிகாரி தெரிவித்தார். மீட்புப் பணிகளுக்கு தனியார் உரிமையிலுள்ள ஒரே ஒரு ஃபோர்க்லிஃப்ட் (forklift) மட்டுமே கிடைத்துள்ளதாகவும், இது உயிர் பிழைத்தவர்களை தேடும் பணியை சிக்கலாக்குவதாகவும் அவர் கூறினார்.</p><h2>தேடுவதற்கான இயந்திரங்கள் இல்லை:</h2><p>"இந்த சரிவு மிகப்பெரியது மற்றும் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. 30 மீட்டருக்கும் (98 அடி) அதிகமான ஆழத்தில் மண் மற்றும் கற்களை அகற்றி, உயிர் பிழைத்தவர்களை தேடுவதற்கான இயந்திரங்கள் எங்களிடம் இல்லை," என்று உயிர் பிழைத்தவர்களில் ஒருவரான கைரல்-சையத் கபாரா தொலைபேசி வாயிலாக ஏ.பி.-இடம் கூறினார்.</p><p>'அல்-சாரா' தங்கச் சுரங்கமானது சூடான் முழுவதும் பரவியுள்ள ஆயிரக்கணக்கான சிறிய அளவிலான மற்றும் முறைசாரா சுரங்கங்களில் ஒன்றாகும். சூடான் நாடு போரினால் சூழப்பட்டுள்ளது; இந்த மோதல்கள் நாட்டின் சில பகுதிகளை பஞ்சத்தின் விளிம்புக்கே தள்ளியுள்ளன. சூடான் ஒரு முக்கிய தங்க உற்பத்தி நாடாக இருந்தாலும், அங்கு பாதுகாப்பு விதிமுறைகள் பரவலாகப் பின்பற்றப்படாததால், சுரங்கங்கள் இடிந்து விழுந்து உயிரிழப்புகள் ஏற்படுவது அரிதான நிகழ்வு அல்ல. 2023-இல் நிகழ்ந்த விபத்தில் 14 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்; 2021-இல் நடந்த விபத்தில் 38 பேர் பலியாகினர்.</p><p>விபத்தில் இருந்து உயிர் பிழைத்த மற்றொருவரான அல்-அமின் சுலைமான், புதன்கிழமை காலை நிலவரப்படி 60 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். "இன்னும் சிலர் உள்ளே சிக்கியுள்ளனர்," என்றும் அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>113 சலான்கள், ரூ. 10.68 லட்சம் அபராதம் நிலுவையில் இருந்த இருசக்கர வாகனம் பறிமுதல்</title><link>https://www.maalaimalar.com/news/national/gurugram-traffic-police-impounds-bike-with-113-pending-challans-worth-rs-1068-lakh</link><comments>https://www.maalaimalar.com/news/national/gurugram-traffic-police-impounds-bike-with-113-pending-challans-worth-rs-1068-lakh#comments</comments><guid isPermaLink="false">87ceb66d-ecf7-40f4-8e32-60e762835230</guid><pubDate>Wed, 16 Sep 2026 20:04:14 +0000</pubDate><atom:updated>2026-09-16T20:04:14.639Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Traffic Police,போக்குவரத்து காவல் துறை,gurugram,குருகிராம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/96fnvd39/gurugram-traffic-police.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ File Pic: குருகிராம்போக்குவரத்து காவல் துறை

]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/96fnvd39/gurugram-traffic-police.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/gurugram">குருகிராம்</a> போக்குவரத்து காவல்  துறையினர் எம்.டி.ஐ. சௌக் (MDI Chowk) பகுதியில் நடத்திய வாகன சோதனையின்போது, ​​மொத்தம் ரூ. 10.68 லட்சம் மதிப்பிலான 113 நிலுவை சலான்களை (போக்குவரத்து விதிமீறல் அபராதங்கள்) கொண்ட ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.</p><p>90 நாட்களுக்கு மேலாக நிலுவையில் உள்ள அபராத தொகையை செலுத்தாத வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மூத்த போக்குவரத்து காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். </p><h2>ஆவணங்கள் இல்லை:</h2><p>எம்.டி.ஐ. சௌக் பகுதியில் பணியில் இருந்த மண்டல அதிகாரியான ASI பிரவீன் குமார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ​​அவரது குழுவினர் ஒரு இருசக்கர வாகனத்தை நிறுத்தி ஆய்வு செய்தனர். அப்போது வாகன ஓட்டி அதற்கான எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்க தவறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>"சரிபார்த்ததில், அந்த இருசக்கர வாகனத்தின் மீது 1988-ஆம் ஆண்டின் மோட்டார் வாகன சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் 113 சலான்கள் நிலுவையில் இருப்பதும், அதற்கான மொத்த அபராத தொகை சுமார் ரூ. 10.68 லட்சம் இருப்பதும் தெரியவந்தது.</p><h2>இருசக்கர வாகனம் பறிமுதல்:</h2><p>"தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியது, மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் மற்றும் காப்பீடு இல்லாமை உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களுக்காக இந்த சலான்கள் பெரும்பாலும் விதிக்கப்பட்டிருந்தன. போலீஸார் அந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்," என்று மூத்த போக்குவரத்து காவல் அதிகாரி ஒருவர் கூறினார்.</p><p>போக்குவரத்து விதிகளை பின்பற்றவும், வாகனத்திற்கான அத்தியாவசிய ஆவணங்களை புதுப்பித்து வைத்திருக்கவும், நிலுவையில் உள்ள அபராத தொகையை உரிய நேரத்தில் செலுத்தவும் அனைத்து வாகன ஓட்டிகளையும் குருகிராம் போக்குவரத்து காவல் துறை செய்தி தொடர்பாளர் கேட்டுக்கொண்டார்.</p>]]></content:encoded></item><item><title>வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர்: இந்திய அணியில் நமன் திர், ஆகிப் நபிக்கு முதல்முறையாக வாய்ப்பு</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/hardik-pant-ignored-as-dhir-nabi-get-maiden-call-ups</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/hardik-pant-ignored-as-dhir-nabi-get-maiden-call-ups#comments</comments><guid isPermaLink="false">2174d022-7761-4307-8256-f4853b28224f</guid><pubDate>Wed, 16 Sep 2026 19:02:31 +0000</pubDate><atom:updated>2026-09-16T19:02:31.432Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Hardik Pandya,ஹர்திக் பாண்டியா,Rishabh Pant,இந்தியா வெஸ்ட் இண்டீஸ் தொடர்,INDvsWI,ரிஷப் பண்ட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/cimmjwoo/bcci.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ BCCI Poster]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/cimmjwoo/bcci.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் (ODI) தொடருக்கான <a href="https://www.maalaimalar.com/sports/cricket">இந்திய அணியில்</a>, பஞ்சாப் அணியின் இளம் ஆல்-ரவுண்டர் நமன் திர் மற்றும் ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி ஆகியோர் முதல்முறையாக அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேவேளையில், அனுபவ வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் <a href="https://www.maalaimalar.com/topic/rishabh-pant">ரிஷப் பண்ட்</a> ஆகியோர் வெவ்வேறு காரணங்களுக்காக அணியில் சேர்க்கப்படவில்லை.</p><p>திருவனந்தபுரத்தில் செப்டம்பர் 27-ஆம் தேதி தொடங்கும் இத்தொடரில், இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. டி20 அணியானது பெரும்பாலும் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான அணியையே கொண்டிருக்கும்; எனினும், யாஷ் தாக்கூர் மற்றும் விப்ராஜ் நிகம் ஆகியோருக்கு பதிலாக மயங்க் யாதவ் மற்றும் பிரின்ஸ் யாதவ் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.</p><h2>தேசிய தேர்வு குழு திட்டம்:</h2><p>பாண்டியா செப்டம்பர் 20-ஆம் தே<em>தி</em> உடல் தகுதி பெற்றவராக அறிவிக்கப்பட இருந்தாலும், 'இந்தியா ஏ' அணிக்காக 10 ஓவர்கள் வீசும் அளவுக்கு தகுதியுடையவர் என்பதை நிரூபித்தால் மட்டுமே தேசிய தேர்வு குழு அவரை தேர்ந்தெடுக்கும்.</p><p>வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான ஒருநாள் அணியில் சேர்ப்பதற்காக, நிதிஷ் குமார் ரெட்டியை ஆசிய விளையாட்டு போட்டிக்கான அணியில் இருந்து தேசிய தேர்வு குழு விடுவித்துள்ளது. அனுபவம் வாய்ந்த ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மீண்டும் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.</p><h2>ஒருநாள் அணியில் முதல்முறையாக வாய்ப்பு:</h2><p>பஞ்சாப் அணிக்காக உள்நாட்டு கிரிக்கெட்டிலும், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐ.பி.எல். (IPL) தொடரிலும் நமன் திர் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டத்தின் காரணமாக அவர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேவேளையில், இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் சர்ரே (Surrey) அணிக்காக சிறப்பாக செயல்பட்டதற்காக ஆகிப் நபிக்கு தேசிய ஒருநாள் அணியில் முதல்முறையாக வாய்ப்பு கிடைத்துள்ளது.</p><p>ஜடேஜாவின் வருகையுடன், அனுபவ வீரர்களுடன் புதிய வீரர்களின் திறனையும் மதிப்பிடுவதற்கான வாய்ப்பை இத்தொடர் தேர்வாளர்களுக்கு வழங்கும்.</p><h2>இந்திய ஒருநாள் அணி:</h2><p>ஷுப்மன் கில் (கேப்டன்), ரோகித் சர்மா, விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட், கே.எல். ராகுல் (துணை கேப்டன்), துருவ் ஜூரல், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார், முகமது சிராஜ், ஆகிப் நபி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், நமன் திர்</p><h2>இந்திய டி20 அணி:</h2><p>ஷ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), அபிஷேக் சர்மா, வைபவ் சூரியவன்ஷி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா [துணை கேப்டன்], ஷிவம் துபே, குல்தீப் யாதவ், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், பிரின்ஸ் யாதவ், நிதிஷ் குமார், நிதீஷ் குமார் ரெட்டி.</p>]]></content:encoded></item><item><title>பிரதமர் மோடி பிறந்தநாள்: குஜராத்தில் 88 லட்சத்திற்கும் அதிகமான விளக்குகள் ஏற்ற சிறப்பு ஏற்பாடு</title><link>https://www.maalaimalar.com/news/national/more-than-88-lakh-lamps-to-be-lit-on-modis-birthday-in-gujarat</link><comments>https://www.maalaimalar.com/news/national/more-than-88-lakh-lamps-to-be-lit-on-modis-birthday-in-gujarat#comments</comments><guid isPermaLink="false">c3a1a907-457e-40ba-8c8e-6db25dcbc5f9</guid><pubDate>Wed, 16 Sep 2026 18:05:04 +0000</pubDate><atom:updated>2026-09-16T18:05:04.389Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/39vszacu/PM-Modi.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/39vszacu/PM-Modi.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குஜராத் மாநிலம் முழுவதும் 18,500 இடங்களில் 88 லட்சத்திற்கும் அதிகமான மண் அகல் விளக்குகளை ஏற்றுதல், வத் நகரில் இருந்து வாரணாசிக்கு இருசக்கர வாகன பேரணி, கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் ஆரத்திகள் என பல்வேறு நிகழ்ச்சிகளுடன், நாளை (செப்டம்பர் 17) பிரதமர் <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">நரேந்திர மோடி</a> பிறந்தநாளும், அவரது 25 ஆண்டுகால பொதுவாழ்வு பணியும் கொண்டாடப்பட உள்ளன.</p><p>மாலை 7 மணிக்கு மாவட்டங்கள், மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் என மாநிலம் முழுவதும் 'ஆசீர்வாத் நோ திவ்டோ' (ஆசீர்வாதத்தின் விளக்கு) நிகழ்ச்சி நடைபெறும். <a href="https://www.maalaimalar.com/news/national">குஜராத்</a> அரசு மற்றும் பா.ஜ.க. வெளியிட்ட தகவல்களின்படி, மாலை 6 மணி முதல் பக்தி இசை, சத்சங்கம் (ஆன்மீகச் சொற்பொழிவுகள்) மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் தொடங்கும். </p><h2>88 லட்சம் அகல் விளக்குகள்:</h2><p>"பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நீண்ட ஆயுளுடனும் நாட்டிற்கு தொடர்ந்து சேவையாற்றவும் வேண்டி, 18,500-க்கும் மேற்பட்ட இடங்களில் 88 லட்சத்திற்கும் அதிகமான மண் அகல் விளக்குகள் ஏற்றப்படும்," என்று மாநில அரசு செய்தித் தொடர்பாளரும் அமைச்சருமான ஜிது வகானி தெரிவித்தார்.</p><p>மோடி பொதுவாழ்வில் 25 ஆண்டுகளை நிறைவு செய்வதையொட்டி, செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 7 வரை மாநிலம் தழுவிய 'சேவா சங்கல்ப் அபியான்' (சேவை உறுதிமொழி இயக்கம்) என்ற நிகழ்ச்சியை பா.ஜ.க. முன்னெடுக்கவுள்ளது.</p><h2>இருசக்கர வாகன பேரணி:</h2><p>பா.ஜ.க.வின் 'சேவா சங்கல்ப் அபியான்' இயக்கத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி பிறந்த ஊரான வத் நகரில் இருந்து வாரணாசிக்கு இருசக்கர வாகன பேரணி வியாழக்கிழமை காலை தொடங்கவுள்ளது; இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கிறார்.</p><p>மோடி 2001 அக்டோபர் 7 முதல் 2014 மே 22 வரை குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக பணியாற்றினார். அவர் தற்போது வாரணாசி மக்களவை தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.</p><p>இந்நிகழ்ச்சிகளில் குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், மாநில பா.ஜ.க. தலைவர் ஜெகதீஷ் விஸ்வகர்மா, மகாராஷ்டிர துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் மத்திய அமைச்சர் அனுப்ரியா படேல் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் போட்டியிட 60 வேட்பாளர்கள் மனு தாக்கல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/60-candidates-file-nominations-for-madurantakam-dharapuram-bypolls</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/60-candidates-file-nominations-for-madurantakam-dharapuram-bypolls#comments</comments><guid isPermaLink="false">58cc1820-2b39-4a6c-8da5-8bb3e71c4a65</guid><pubDate>Wed, 16 Sep 2026 17:15:48 +0000</pubDate><atom:updated>2026-09-16T17:15:48.131Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>dharapuram,தாராபுரம்,மதுராந்தகம்,bypolls,Madurantakam,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/53cu51d1/petition.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/53cu51d1/petition.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தனி தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் (புதன்கிழமை) நிறைவடைந்தது. இதில் ஆளும் த.வெ.க. (TVK) மற்றும் எதிர்க்கட்சியான <a href="https://www.maalaimalar.com/topic/dmk">தி.மு.க.</a> உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த மொத்தம் 60 வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்தனர். </p><p>இடதுசாரி கட்சிகள் இத்தொகுதிகளுக்கான தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu">தமிழகத்தில்</a> நடைபெறவுள்ள இந்த இடைத்தேர்தல்கள் சுவாரஸ்யமான ஐந்து முனை போட்டிக்கு களமாக அமையவுள்ளன.</p><h2>60 பேர் வேட்புமனு தாக்கல்:</h2><p>தலைமைத் தேர்தல் அதிகாரியின் இணையதள தகவலின்படி, மதுராந்தகத்தில் 40 பேரும் (28 ஆண்கள், 12 பெண்கள்), தாராபுரத்தில் 20 பேரும் (10 ஆண்கள், 10 பெண்கள்) வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.</p><p>இருப்பினும், நாளை (வியாழக்கிழமை) வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கும் என்றும், அதன்பிறகே களத்தில் உள்ள வேட்பாளர்களின் இறுதி எண்ணிக்கை தெரியவரும் என்றும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.</p><p>ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளின் உதவியுடன் ஜோசப் விஜய் தலைமையிலான த.வெ.க. (TVK) தனது முதல் அரசை அமைத்த பிறகு மாநிலத்தில் நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும்.</p><p>த.வெ.க. நிறுவனரும் முதலமைச்சருமான விஜய், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு முறையே முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான கே. மரகதம் குமரவேல் மற்றும் பி. சத்தியபாமா ஆகியோரை வேட்பாளர்களாக அறிவித்துள்ளார்.</p><p>குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகிய இருவரும் ஏப்ரல் 23 தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களாக அந்தந்த தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள்; பின்னர் அவர்கள் தங்கள் எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு ஆளும் த.வெ.க. கட்சியில் இணைந்தனர்.</p><h2>தி.மு.க., த.வெ.க. கட்சிகளுக்கு எதிரணி:</h2><p>மதுராந்தகத்திற்கு ஐ. பரந்தாமனையும், தாராபுரத்திற்கு எஸ். சுகன்யாவையும் தி.மு.க. வேட்பாளர்களாக அறிவித்துள்ளது.</p><p>தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (NDA) தலைமை தாங்கும் அ.தி.மு.க., மதுராந்தகத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கனிதா சம்பத் மற்றும் தாராபுரத்தில் கே. பானுமதி ஆகியோரை நிறுத்தி, முழுக்க முழுக்க பெண்களைக் கொண்ட வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே அறிவித்துள்ளது.</p><p>பாரம்பரியத் தேர்தல் கூட்டணிகளில் இருந்து விலகி தனி இடதுசாரி அணியாக போட்டியிட போவதாக சி.பி.ஐ. (எம்) மற்றும் சி.பி.ஐ. ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன; இதன் மூலம் அவை தி.மு.க. மற்றும் த.வெ.க. ஆகிய இரு கட்சிகளுக்கும் நேரடி எதிரணியாக களமிறங்குகின்றன.</p>]]></content:encoded></item><item><title>“தேர்தலில் போட்டியென இடதுசாரிகள் முன்பே அறிவித்திருந்தால் அவர்களை ஆதரித்திருப்போம்” - சீமான்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/if-the-left-parties-had-announced-earlier-that-they-were-contesting-the-election-we-would-have-supported-them-seeman</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/if-the-left-parties-had-announced-earlier-that-they-were-contesting-the-election-we-would-have-supported-them-seeman#comments</comments><guid isPermaLink="false">a4543cd0-2362-4dbf-919c-f4692bf7a108</guid><pubDate>Wed, 16 Sep 2026 16:28:03 +0000</pubDate><atom:updated>2026-09-16T16:28:03.353Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Seeman,by election,communists,சீமான்,இடைத்தேர்தல்,கம்யூனிஸ்டுகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/6kjvb5t4/New-Project-2026-09-16T215708.113.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “தேர்தலில் போட்டியென இடதுசாரிகள் முன்பே அறிவித்திருந்தால் அவர்களை ஆதரித்திருப்போம்” - சீமான்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/6kjvb5t4/New-Project-2026-09-16T215708.113.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் எதிர்பாராத ராஜிநாமாவால் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்துள்ளது. அக்.6ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்களுக்கு இன்றுதான் கடைசி நாள். முடிவுகள் அக்.9ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.</p><h2>ஐந்துமுனைப் போட்டி</h2><p>இந்த இடைத்தேர்தலில் ஆளும் தரப்பான தவெக, பிரதான எதிர்க்கட்சியான திமுக, அதிமுக, நாதக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடுகின்றன. தவெக ஆட்சியமைக்க கம்யூனிஸ்ட் வெளியிலிருந்து ஆதரவு தந்தநிலையில் இத்தேர்தலிலும் தவெகவிற்கு ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.</p><p>ஆனால் தவெக ஆட்சியின்மீதான அதிருப்தியாலும், தங்களின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கிலும் தனித்து களம் காண்கிறது. </p><p>ஆறு கட்சிகளுக்குமான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. </p><p>இந்நிலையில் இன்று தேர்தல் குறித்து செய்தியாளர்களிடையே பேசியுள்ள நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இடதுசாரிகள் முன்னரே போட்டி என அறிவித்திருந்தால் இந்த இடைத்தேர்தலில் இருந்து நாங்கள் விலகி இருப்போம் என தெரிவித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக செய்தியாளர்களிடத்தில் பேசிய அவர் கூறியதாவது;</p><p>“இடைத்தேர்தலில் போட்டியிடும் இடதுசாரிகளின் இந்த முடிவை பாராட்டுகிறேன். எனினும், இந்த முடிவை இடதுசாரிகள் காலம் தாழ்த்தி எடுத்துவிட்டனர் என்பதில் எனக்கு வருத்தம். நாட்டில் நிலவிய தீய ஆட்சிக்கு இடதுசாரிகள் நெடுங்காலம் துணை நின்று விட்டார்கள். இது வருந்தத்தக்கது.</p><p>எங்களுக்கு புரட்சிக்கர சிந்தனை, போராட்டக் குணத்தை விதைத்து வளர்த்ததே கம்யூனிஸ்ட் இயக்கங்கள்தான். </p><p>இந்த முடிவை முன்னரே அறிவித்திருந்தால் நாங்கள் போட்டியிடாமல், அவர்கள் நிறுத்தும் வேட்பாளர்களை ஆதரித்திருப்போம். அவர்கள் கொஞ்சம் காலம் தாழ்த்திவிட்டனர். எங்கள் அரசியலில் நாங்கள் உறுதியாக இருப்பதால் தனித்து போட்டியிடுகிறோம்.” என தெரிவித்தார்.  </p>]]></content:encoded></item><item><title>‘டேர் டெவில்’ படப்பிடிப்பு நவம்பரில் தொடக்கம்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/daredevil-filming-begins-in-november</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/daredevil-filming-begins-in-november#comments</comments><guid isPermaLink="false">ffbf26e6-41a1-4417-b5f5-bce1327c95ea</guid><pubDate>Wed, 16 Sep 2026 16:12:00 +0000</pubDate><atom:updated>2026-09-16T16:12:00.678Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Ajith Kumar,ஆதிக் ரவிச்சந்திரன்,adhik ravichandran,நடிகர் அஜித்குமார்,Dare Devil,டேர் டெவில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/hn6s2jth/New-Project-2026-09-16T205817.914.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘டேர் டெவில்’ படப்பிடிப்பு நவம்பரில் தொடக்கம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/hn6s2jth/New-Project-2026-09-16T205817.914.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/motorsports-city-actor-ajith-kumar-thanked-chief-minister-vijay">நடிகர் அஜித்குமார்</a> - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் மீண்டும் உருவாக உள்ள ‘டேர் டெவில்’ படத்தின் படப்பிடிப்பு நவ.2ம் தேதி தொடங்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. </p><p>பிரேவ்ஹார்ட்ஸ் புரொடக்ஷன்ஸ் பதாகையின்கீழ் இப்படத்தை நடிகை ஷாலினி அஜித்குமார் தயாரிக்கிறார். இதுவே ஷாலினி தயாரிக்கும் முதல் படமாகும். விடாமுயற்சி படத்திற்கு பிறகு அனிருத் ரவிச்சந்தர் அஜித்தின் படத்திற்கு இசையமைக்கிறார்.</p><p>கடந்த ஒரு வருடமாக கார் ரேஸில் கவனம் செலுத்தி வரும் நடிகர் அஜித்குமார், இதன்மூலம் மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்புகிறார்.</p><h2>குட் பேட் அக்லி</h2><p>ஆதிக் ரவிச்சந்தர் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான படம் குட் பேட் அக்லி. இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், அஜித்குமார் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்தது. வசூல்ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. </p><p>இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். இந்நிலையில் டேர் டெவில் படத்தில் ஆதிக் - அஜித் கூட்டணி மீண்டும் இணைகிறது. </p>]]></content:encoded></item><item><title>தமிழர் பண்பாட்டின் உன்னத அடையாளம் - மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா குறித்து முதலமைச்சர் விஜய் நெகிழ்ச்சி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-expresses-deep-emotion-regarding-the-consecration-ceremony-of-the-madurai-meenakshi-amman-templea-magnificent-symbol-of-tamil-culture</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-expresses-deep-emotion-regarding-the-consecration-ceremony-of-the-madurai-meenakshi-amman-templea-magnificent-symbol-of-tamil-culture#comments</comments><guid isPermaLink="false">db10ce7d-bb92-4b98-9916-352904db8a27</guid><pubDate>Wed, 16 Sep 2026 15:17:25 +0000</pubDate><atom:updated>2026-09-16T15:17:25.683Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai Meenakshi Amman temple,Consecration Ceremony,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/l63p5g3e/New-Project-2026-09-16T204642.559.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழர் பண்பாட்டின் உன்னத அடையாளம் - மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா குறித்து முதலமைச்சர் விஜய் நெகிழ்ச்சி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/l63p5g3e/New-Project-2026-09-16T204642.559.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை<a href="https://www.maalaimalar.com/spirituality/madurai-meenakshi-amman-temple-specials"> மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா </a>நாளை கோலாகலமாக நடைபெற உள்ளது. இவ்விழாவால் இறைவனின் திருவருள் அனைவரது வாழ்விலும் நிறைந்து, நலமும், வளமும், மகிழ்ச்சியும் பெருகட்டும் என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது;</p><p>“தமிழர்களின் ஆன்மிகம், கலை, பண்பாடு, கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலையின் பெருமைகளை நூற்றாண்டுகளைக் கடந்து பறைசாற்றி நிற்கும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்புடன் நடைபெறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். </p><p>தமிழர் பண்பாட்டின் உன்னத அடையாளத்தை உலகிற்கு உணர்த்தும் வகையிலும், நம் மண்ணின் ஆன்மிக மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தின் பெருமையை எடுத்துரைக்கும் வகையிலும் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெறும் இந்நன்னாளில், இறைவனின் திருவருள் அனைவரது வாழ்விலும் நிறைந்து, நலமும், வளமும், மகிழ்ச்சியும் பெருகட்டும்! </p><p>நமது தொன்மையான திருக்கோயில்களையும் அவற்றின் வரலாற்றுச் சிறப்பையும் பாதுகாத்து, ஆன்மிக மற்றும் பண்பாட்டுப் பெருமையை வருங்காலத் தலைமுறைகளுக்கும் எடுத்துச் செல்வோம்!” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>ஆசிய கோப்பை சாம்பியன்ஸ் டிராபி: இந்தியாவில் விளையாட பாகிஸ்தான் மறுப்பு- முன்வைக்கும் இரண்டு கோரிக்கைகள்..!</title><link>https://www.maalaimalar.com/sports/asian-champions-trophy-pakistan-hockey-refuses-to-play-in-india-seeks-neutral-venue</link><comments>https://www.maalaimalar.com/sports/asian-champions-trophy-pakistan-hockey-refuses-to-play-in-india-seeks-neutral-venue#comments</comments><guid isPermaLink="false">f3f842b6-b03b-49b8-942c-b8df97ee6684</guid><pubDate>Wed, 16 Sep 2026 15:11:27 +0000</pubDate><atom:updated>2026-09-16T15:11:27.516Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Hockey India,ஹாக்கி இந்தியா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/1h9dz2hp/PakistanHockey001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பாகிஸ்தான் ஹாக்கி பெடரேசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/1h9dz2hp/PakistanHockey001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் மொகாலியில் வருகிற அக்டோபர் 27-ந்தேதி முதல் நடைபெற இருக்கிறது. இதில் பாகிஸ்தான் பங்கேற்க மறுத்துள்ளது. இது தொடர்பாக ஆசிய ஹாக்கி பெடரேசனிடம் சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்தியாவில் இருந்து மாற்ற வேண்டும். அல்லது தாங்கள் விளையாடும் போட்டிகளை பொதுவான ஒரு இடத்தில் (இந்தியாவுக்கு வெளியில்) நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.</p><h2>பாகிஸ்தான் ஹாக்கி பெடரேசன் வேண்டுகோள்</h2><p>இது தொடர்பாக பாகிஸ்தான் ஹாக்கி பெடரேசன் தலைவர் மொகியுதீன் அகமது வானி கூறுகையில் "ஆசிய ஹாக்கி பெடரேசனை பாகிஸ்தான் ஹாக்கி பெட்ரேசன் அணுகியது. அப்போது தொடரை இந்தியாவில் இருந்து மாற்ற வேண்டும். இல்லையெனில் பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளை பொதுவான இடத்தில் நடத்த வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையிலான உணர்ச்சிபூர்வமாக தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு வீரர்கள் மற்றும் ஸ்டாஃப்களின் பாதுகாப்பு சூழ்நிலைக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும், "பாகிஸ்தானின் தடையற்ற மற்றும் முழுமையான பங்கேற்பை உறுதிசெய்யும் வகையில், நடுநிலையான ஒரு மைதானத்தைத் தேர்வு செய்வது குறித்த எங்களின் கண்ணியமான முன்மொழிவை ஆசிய ஹாக்கி சம்மேளனம் சாதகமாகப் பரிசீலிக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்றார்.</p><p>பாகிஸ்தான் அணி அக்டோபர் 27-ந்தேதி முதல் நவம்பர் 5-ந்தேதி வரை நடைபெறும் ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் ஜலந்தர் மற்றும் மொகாலியில் விளையாடும் என்று பஞ்சாப் மாநில முதல்வர் பகவத் மான் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பாகிஸ்தான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 16 செப். 2026...
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-16-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-16-september-2026#comments</comments><guid isPermaLink="false">a0811bc2-a555-463b-9aff-906d36ceb0c8</guid><pubDate>Wed, 16 Sep 2026 04:17:56 +0000</pubDate><atom:updated>2026-09-16T15:05:09.808Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/x1wtm4iq/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live news]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/x1wtm4iq/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-anant-nag-to-be-honoured-with-dadasaheb-phalke-award">தாதா சாகேப் பால்கே விருது பெறுகிறார் கன்னட நடிகர் ஆனந்த் நாக்</a></p><p>* கடந்த 2025-ம் ஆண்டில் ஆனந்த் நாக் இந்தியாவின் 'பத்ம பூஷன்' விருதை பெற்றுள்ளார்.</p><p>* கடந்த ஆண்டு கேரளாவின் மோகன்லால் தாதா சாகேப் பால்கே விருது பெற்றார். </p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/ipl-2027-auction-to-be-held-in-india">அடுத்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தை இந்தியாவில் நடத்த முடிவு: ஐ.பி.எல். நிர்வாகம்</a></p><p>* வெளிநாடுகளில் நடத்தப்பட்ட ஐ.பி.எல். ஏலம் மீண்டும் இந்தியாவிற்கு திரும்புகிறது.</p><p>* 2028-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். மெகா ஏலம் வெளிநாட்டில் நடத்தப்படலாம் என தெரிவித்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thaimaman-gold-ring-thittam-cm-vijay-to-launch-it-on-september-25th">தாய்மாமன் தங்க மோதிர திட்டம்: செப்.25-ந்தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்</a></p><p>* அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்மாமனின் அன்பளிப்பாக 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.  </p><p>* முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணம் காரணமாக இந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. </p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/tragedy-in-us-news-helicopter-covering-bus-crash-plummets-killing-three">அமெரிக்காவில் கோரம்: பேருந்து விபத்தை நேரலை செய்த செய்தி நிறுவன ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 3 பேர் உயிரிழப்பு... </a></p><p>*அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரில், சாலை விபத்து தொடர்பான செய்தியை நேரலை கவரேஜ் செய்து கொண்டிருந்த NBC4 செய்தி நிறுவனத்தின் ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கியது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-chennai-return-tomorrow-morning">முதலமைச்சர் விஜய் நாளை காலை சென்னை திரும்புகிறார் - விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு</a></p><p>* லண்டனில் தங்கி உள்ள முதலமைச்சர் விஜய் முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசி உள்ளார். </p><p>* தனது ரசிகர்களை தி ஷார்ட் நட்சத்திர விடுதியில் சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/mysuru-dasara-festival-will-tamil-nadu-cm-vijay-attend-collector-lakshmikant-answers">மைசூரு தசரா விழா: தமிழக முதலமைச்சர் விஜய் பங்கேற்பா?- ஆட்சியர் லட்சுமிகாந்த் பதில்</a></p><p>*மைசூரு  தசரா ஊர்வலத்திற்கு தமிழக முதல்வர் விஜய் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகின. </p><p>*'ஜம்பூ சவாரி' எனப்படும் தசரா யானைகள் ஊர்வலம் அடுத்த மாதம் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/hc-says-no-stay-on-madurantakam-dharapuram-byelections" rel="nofollow">மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடையில்லை- சென்னை உயர்நீதிமன்றம்</a></p><p>* நீதிபதிகள், எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முழு உரிமை உள்ளது.</p><p>* மக்களின் உரிமையை தேர்தல் ஆணையம் பாதுகாக்க வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dharapuram-bypoll-tvk-candidate-sathyabama-files-nomination" rel="nofollow">தாராபுரம் இடைத்தேர்தல்: வேட்பு மனு தாக்கல் செய்தார் தவெக வேட்பாளர் சத்யபாமா </a></p><p>* வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் ஆகும்.</p><p>* வேட்பு மனுக்களை திரும்ப பெற நாளை மறுநாள் கடைசி நாள் ஆகும். </p><p><a href="https://www.maalaimalar.com/sports/chess-olympiad-begins-today-in-uzbekistan-india-aims-to-retain-title" rel="nofollow">உஸ்பெகிஸ்தானில் இன்று தொடங்குகிறது செஸ் ஒலிம்பியாட் போட்டி- பட்டத்தை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா!</a></p><p>* முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப்பதக்கம் அளிக்கப்படும்.</p><p>* ஒவ்வொரு சுற்றும் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-hc-dismisses-election-petition-against-ev-velu">எ.வ.வேலுவுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்தது சென்னை ஐகோர்ட்</a></p><p>* எ.வ.வேலு வெற்றியை எதிர்த்து த.வெ.க. வேட்பாளர் அருள் ஆறுமுகம், சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். </p><p>* வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று எ.வ.வேலு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-praise-ramasami-padayatchiyar">ராமசாமி படையாட்சியாரின் மகத்தான மக்கள் பணியை நினைவுகூர்ந்து வணங்குகிறேன்- முதலமைச்சர் விஜய்</a></p><p>*  எஸ்.எஸ். இராமசாமி படையாச்சியார் அவர்களின் பிறந்தநாளில், அவரது மகத்தான மக்கள் பணியை நினைவுகூர்ந்து வணங்குகிறேன்.  </p><p>* எஸ்.எஸ். இராமசாமி படையாச்சியார் அவர்கள் ஆற்றிய தொண்டும், முன்னெடுப்புகளும், தமிழக அரசியல் களத்தில் அழியாத தடம் பதித்துள்ளன. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-financial-assistance-for-tuition-fees-should-also-be-provided-to-students-from-backward-classes-and-most-backward-classes">பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் கல்விக் கட்டண உதவி வழங்க வேண்டும்!- அன்புமணி</a></p><p>* அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இலவசக் கல்வி வழங்கப்பட்டாலும், தரமான கல்வி வழங்கப்படுவதில்லை. </p><p>* அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-condemned-anbil-mahesh-house-raid">அன்பில் மகேஷ் வீட்டில் நடைபெறும் ரெய்டு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை - மு.க.ஸ்டாலின்</a></p><p>* மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது ரெய்டு அஸ்திரத்தை ஏவியுள்ளது எதற்கும் லாயக்கற்ற த.வெ.க. அரசு.</p><p>* பொய்யான குற்றச்சாட்டுகளும் சட்டத்தின் முன் நிலைக்காது என்பதை இந்த அரசு விரைவில் உணரும்!</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/corruption-case-against-former-dmk-minister-anbil-mahesh">தி.மு.க முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது ஊழல் வழக்கு</a></p><p>* அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருவதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். </p><p>* தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது ஊழல் வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசார்  பதிவு செய்துள்ளனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-central-government-should-abandon-the-plan-to-levy-charges-on-upi-transactions">யு.பி.ஐ பரிவர்த்தனைக் கட்டண வசூல் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்!- அன்புமணி வலியுறுத்தல்</a></p><p>* பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்தும், கொரோனா காலத்தில் நேரடித் தொடர்புகளைத் தவிர்க்கவும் யுபிஐ மூலமான பரிவர்த்தனைகள் ஊக்குவிக்கப்பட்டன.</p><p>* ரூ.2000-க்கும் மேற்பட்ட வணிகப் பரிவத்தனைகளுக்கும் பொருள் வாங்கும் மக்கள் இந்தக் கட்டணத்தை செலுத்தத் தேவையில்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-thank-you-to-everyone-who-kindly-inquired-about-my-health">மருத்துவர்கள் அறிவுரைப்படி ஓய்வில் உள்ளேன்- மு.க.ஸ்டாலின்</a></p><p>* பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான நேற்று, கழக உடன்பிறப்புகள் மேற்கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்தேன். </p><p>* கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமின்றி, பிற கட்சிகள் மற்றும் இயக்கங்களின் தலைவர்கள் காட்டிய அன்பிற்கும் அக்கறைக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/perunthalaivar-kamarajar-breakfast-expansion-scheme-cm-vijay-to-launch-it-on-22nd">காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டம் - முதலமைச்சர் விஜய் 22-ந்தேதி தொடங்கி வைக்கிறார்</a></p><p>* முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் என்ற பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டம் என மாற்றியது. </p><p>* இடைத்தேர்தல் நடைபெறும் செங்கல்பட்டு, திருப்பூர் மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/central-crime-branch-police-conduct-raid-at-former-minister-anbil-maheshs-residence">முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை </a></p><p>* சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் திமுக பிரமுகரான பி.டி. அரசகுமாரை கைது செய்தனர். </p><p>* அன்பில் மகேஷின் திருச்சி வீடு மற்றும் அவர் தொடர்புடைய 6 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>தாதா சாகேப் பால்கே விருது பெறும் ஆனந்த் நாக்: பிரதமர் மோடி வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-congratulates-anant-nag-ji-on-being-conferred-dadasaheb-phalke-award</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-congratulates-anant-nag-ji-on-being-conferred-dadasaheb-phalke-award#comments</comments><guid isPermaLink="false">24e736fe-22ce-4eed-ab5f-28589662eacb</guid><pubDate>Wed, 16 Sep 2026 14:58:02 +0000</pubDate><atom:updated>2026-09-16T14:58:02.433Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆனந்த் நாக்,தாதா சாகேப் பால்கே விருது,Dadasaheb Phalke Award,pm modi,பிரதமர் மோடி,anant nag</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/fpnwj100/pm-modi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ pm modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/fpnwj100/pm-modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தாதாசாகேப் பால்கே விருது பெறவுள்ள நடிகர் அனந்த் நாக்-க்கு பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளப் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</strong></em></p><p>இந்தியத் திரைத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு வழங்கி வருகிறது.</p><h2>தாதா சாகேப் பால்கே விருது</h2><p>2024-ம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது கன்னட நடிகர் ஆனந்த் நாக்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாவிற்கு அவர் அளித்த பங்களிப்புக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>குஜராத் மாநிலம் கெவாடியாவில் வரும் 22-ம் தேதி நடைபெறவிருக்கும் 72-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் இந்த உயரிய விருது நடிகர் அனந்த் நாக்கிற்கு வழங்கப்படவுள்ளது.</p><p>கடந்த ஆண்டு கேரளாவின் மோகன்லால் தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>இந்நிலையில், தாதாசாகேப் பால்கே விருது பெறவுள்ள நடிகர் ஆனந்த் நாக்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><h2>பிரதமர் மோடி வாழ்த்து</h2><p>இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:</p><p>தாதா சாகேப் பால்கே விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற கலைஞர் ஆனந்த் நாக் அவர்களுக்கு வாழ்த்துகள்.</p><p>அவரது இயல்பான நடிப்பு, பன்முகத்தன்மை மற்றும் அபாரத் திறமை ஆகியவை இந்தியத் திரையுலகிலும், கன்னடத் திரையுலகிலும் ஆழமான முத்திரையைப் பதித்துள்ளன.</p><p>அவரைப் போன்ற மிகச் சிறந்த கலைஞருக்கு இது மிகவும் தகுதியான ஒரு கவுரவமாகும் என பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>“குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை கதை... அமைச்சர் பதவிக்காக சென்றுவிட்டு” - திருமாவளவனுக்கு பிரேமலதா பதிலடி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/like-the-story-of-falling-flat-on-ones-face-yet-getting-no-dirt-on-the-moustache-having-gone-seeking-a-ministerial-post-premalathas-retort-to-thirumavalavan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/like-the-story-of-falling-flat-on-ones-face-yet-getting-no-dirt-on-the-moustache-having-gone-seeking-a-ministerial-post-premalathas-retort-to-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">87dcc5b3-2f1e-4038-8e5d-74a2e82d3e8c</guid><pubDate>Wed, 16 Sep 2026 14:33:14 +0000</pubDate><atom:updated>2026-09-16T14:33:14.295Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,thirumavalavan,திருமாவளவன்,பிரேமலதா விஜயகாந்த்,premalatha vijayakanth</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/opicu6oi/New-Project-2026-09-16T200243.748.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை கதை... அமைச்சர் பதவிக்காக சென்றுவிட்டு” - திருமாவளவனுக்கு பிரேமலதா பதிலடி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/opicu6oi/New-Project-2026-09-16T200243.748.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சமீபத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்த விசிக தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/why-did-the-dmk-bring-the-dmdk-into-the-alliance-against-the-wishes-of-its-coalition-partners-thirumavalavan">திருமாவளவன்</a>, திமுகவை விட்டு கூட்டணிக் கட்சிகள் வெளியேற ஒரு முக்கிய காரணம் தேமுதிக என, அக்கட்சிமீது சில விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.</p><p>இந்நிலையில் திருமாவளவனின் விமர்சனங்கள் குறித்து இன்று பதிலளித்து பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.,</p><h2>மரியாதை உள்ளது...</h2><p>“திருமாவளவன்மீது தேமுதிக மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளது. 2015-ல் இவரும் சேர்ந்ததுதான் மக்கள் நலக்கூட்டணியை அமைத்தார். முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்தை ஏற்றவர். ஒரே வார்த்தையில் பதில் கூறுவேன். யாரையும் காயப்படுத்தக் கூடாது என பார்க்கிறேன்.</p><p>அவர் எனக்காக பிரசாரம் செய்ததை மறக்கமாட்டேன். அவர் வேண்டுமானால் மாற்றிப் பேசலாம். அதற்கான நன்றியுணர்வு என்னுள் இருக்கிறது.</p><h2>அமைச்சர் பதவிக்காக வெளியேறல்</h2><p>இன்று அமைச்சர் பதவி கிடைத்ததால், அவர் வேறு கூட்டணிக்கு சென்றுள்ளார். கம்யூனிஸ்டுகளைப் போல் விசிகவும் வெளியிலிருந்து ஆதரவு தந்திருக்கலாமே? நீங்கள் விரும்பியது அமைச்சர் பதவி. </p><p>நீங்கள் வென்றது இரண்டு இடங்கள். அதில் ஒருவருக்கு அமைச்சர் பதவி என்பதால் போயிருக்கிறீர்கள். இதற்காக நீங்கள் எதற்கு தேமுதிகவை இழுக்கிறீர்கள். மாற்றி மாற்றிப் பேசாதீர்கள்.</p><p>முடிவெடுக்க வேண்டியது திமுகவும், அதன் தலைமையும்தான். அப்படிப் பார்த்தால் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட 2 தொகுதிகளை  ஸ்டாலின் கூடுதலாக கொடுத்திருக்கிறார்; அதை நாங்கள் கேட்க முடியுமா? நாங்கள் ஏன் அதைப் பற்றிப் பேசவில்லை?</p><p>அதனால், நாம் வேறு ஒரு நிலைப்பாட்டை எடுத்துவிட்டு, அடுத்தவர் மீது குற்றம் சொல்வது மிக மிகத் தவறான செயல். அதை அண்ணன் திருமாவளவன் செய்ய மாட்டார் என்று நம்புகிறேன்.</p><h2>மீசையில் மண் ஒட்டவில்லை</h2><p>இனிமேலும் அதுபற்றி அவர் பேச மாட்டார் என்று நினைக்கிறேன். மீண்டும் அவர் அதைப் பற்றிப் பேசினால், ‘குப்புற விழுந்தும் என் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்ற கதையாகிவிடும். உங்களுக்கு அமைச்சர் பதவி கிடைத்தது சென்றீர்கள். </p><p>இதுதான் உண்மை. எதற்காக தேமுதிகமீது இவ்வளவு காழ்ப்புணர்ச்சி? கூட்டணி தலைமை எடுக்கும் முடிவை கேட்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது.</p><p>இதனால்தான் கூட்டணியை விட்டு வெளியேறினோம் என அவர் கூறினால், இது உண்மைக்கு புறம்பான பதில் என அனைவருக்கும் தெரியும். ” என தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>சூர்யா ஜோதிகா-வின்  20 வருட காதல்!</title><link>https://www.maalaimalar.com/ampstories/web-stories/surya-jyothika-love-celebrating-20-years-of-marriage-and-togetherness</link><comments>https://www.maalaimalar.com/ampstories/web-stories/surya-jyothika-love-celebrating-20-years-of-marriage-and-togetherness#comments</comments><guid isPermaLink="false">e15acc77-16ed-434c-8fcd-b14ac86d216f</guid><pubDate>Wed, 16 Sep 2026 14:27:38 +0000</pubDate><atom:updated>2026-09-16T14:27:38.827Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜோதிகா,சூர்யா,Suriya,Jyothika,Suriya Jyotika,Suriya Jyotika Wedding,20YearsOf Suriya Jyotika</media:keywords><media:content height="1080" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/j28zfydg/Untitled-design-2026-09-16T193326.215.png" width="1080"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/j28zfydg/Untitled-design-2026-09-16T193326.215.png?w=280" width="280"></media:thumbnail><category>வெப் ஸ்டோரீஸ் (Web stories)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/vs4mps49/Untitled-design-2026-09-16T191133.786.png" /></figure><p>சினிமா பந்தம் நிஜத்திலும் அழகான தருணம்!</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/9mc8rtxj/Untitled-design-2026-09-16T191033.814.png" /></figure><p>இருபது ஆண்டுகளாய் தொடரும் காதல் பயணம்</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/8yf4fi27/Untitled-design-2026-09-16T190829.174.png" /></figure><p>பூவெல்லாம் கேட்டுப்பார் இவர்களின் காதல் கதையை!</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/a39xvpun/Untitled-design-2026-09-16T191110.737.png" /></figure><p>"உயிரின் உயிரே..." உருக வைக்கும் காதல்!</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/prtgy83k/Untitled-design-2026-09-16T191432.714.png" /></figure><p>விழி மூடி யோசித்தால்..." உந்தன் முகமே!</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/74j6efvz/Untitled-design-2026-09-16T191529.775.png" /></figure><p>காதலின் உச்சமாய் வாழ்ந்து காட்டும் தம்பதி!</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/d5ljkaf0/Untitled-design-2026-09-16T191456.708.png" /></figure><p>"உனக்கென நான்..." என வாழும் ஜோடி!</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/4v45kor5/Untitled-design-2026-09-16T192249.865.png" /></figure><p>அன்பே அன்பே... நீ என் வானம்!</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/q5m7grkg/Untitled-design-2026-09-16T192029.733.png" /></figure><p>உயிர் ஆசை...உன்னோடு மட்டுமே என்றும்!</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/fy8hj1eg/Untitled-design-2026-09-16T191830.785.png" /></figure><p>திரையிலும் நிஜத்திலும் என்றும் ஜோடிப் புறாக்கள்!</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/ncxd43eo/Untitled-design-2026-09-16T191732.740.png" /></figure><p>சில்லுனு ஒரு காதல் நிஜமான அற்புதம்!</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/8djl5hte/Untitled-design-2026-09-16T193023.748.png" /></figure><p>சினிமா பந்தம் நிஜத்திலும் அழகான தருணம்!</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/pes41rsl/Untitled-design-2026-09-16T191912.701.png" /></figure><p>காலம் கடந்தும் மாறாத பேரன்பின் அடையாளம்!</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/7pl58skq/Untitled-design-2026-09-16T193121.691.png" /></figure><p>மாயாவி போல மனதை கவர்ந்த ஜோடி!</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/vnr2f1rt/Untitled-design-2026-09-16T193505.691.png" /></figure><p>காக்க காக்க என்றே இணைந்த இதயங்கள்!</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/uv19fy89/Untitled-design-2026-09-16T193601.723.png" /></figure><p>அன்றும்..இன்றும்..என்றும்..நம் காதல் மாறாதே!</p>]]></content:encoded></item><item><title>‘நேரம் தவறாமைதான் அப்பாவிடம் பிடிக்கும்’ - தந்தை குறித்து ஜேசன் சஞ்சய் நெகிழ்ச்சி!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/punctuality-is-what-i-like-about-dad-jason-sanjay-speaks-movingly-about-his-father</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/punctuality-is-what-i-like-about-dad-jason-sanjay-speaks-movingly-about-his-father#comments</comments><guid isPermaLink="false">51810f9b-d067-485b-bfd5-98b723de316d</guid><pubDate>Wed, 16 Sep 2026 13:49:23 +0000</pubDate><atom:updated>2026-09-16T13:49:23.052Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>jason sanjay,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,ஜேசன் சஞ்சய்,சிக்மா,sigma</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/8e9p5ul3/New-Project-2026-09-16T191850.521.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘நேரம் தவறாமைதான் அப்பாவிடம் பிடிக்கும்’ - தந்தை குறித்து ஜேசன் சஞ்சய் நெகிழ்ச்சி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/8e9p5ul3/New-Project-2026-09-16T191850.521.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டின் முதலமைச்சரும், நடிகருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள திரைப்படம் ‘<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-second-song-from-the-movie-sigma-has-been-released">சிக்மா</a>’. இப்படத்தின் சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.</p><p>இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் பதாகையின் கீழ் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். படம் அக்.2ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. </p><p>இதையொட்டி, படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா செப்.18ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் பட புரமோஷன் விழா ஒன்றில் ஜேசன் சஞ்சய் பேசிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.</p><p>அந்த வீடியோக்களில் முதலமைச்சர் விஜய் இப்படத்தை பார்க்க ஆவலாக இருப்பதாகவும், தனது தந்தை முதலமைச்சரானதில் தனக்கு மிகவும் மகிழ்ச்சி எனவும், மேலும் தனக்காக அவர் ரசிகர்களை கொடுத்துள்ளார் எனவும் தந்தை குறித்துப் பேசியுள்ளார்.</p><p>மேலும் தந்தையிடம் நீங்கள் கற்றுக்கொண்ட விஷயம் என்ன? என்ற கேள்விக்கு ‘நேரம் தவறாமை’ என பதிலளித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தாதா சாகேப் பால்கே விருது பெறுகிறார் கன்னட நடிகர் ஆனந்த் நாக்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-anant-nag-to-be-honoured-with-dadasaheb-phalke-award</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-anant-nag-to-be-honoured-with-dadasaheb-phalke-award#comments</comments><guid isPermaLink="false">c68e2598-3476-482b-9004-bd0b7c6188bb</guid><pubDate>Wed, 16 Sep 2026 13:28:27 +0000</pubDate><atom:updated>2026-09-16T13:28:27.891Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆனந்த் நாக்,தாதா சாகேப் பால்கே விருது,Dada Saheb Phalke,anant nag</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/ex4dq697/anant-nag.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ anant nag]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/ex4dq697/anant-nag.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கன்னட நடிகரான ஆனந்த் நாக்கிற்கு நாட்டின் உயரிய திரைப்பட விருதான 'தாதா சாகேப் பால்கே' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.</strong></em></p><p>இந்தியத் திரைத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு வழங்கி வருகிறது.</p><p>இந்நிலையில், 2024-ம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது கன்னட நடிகர் ஆனந்த் நாக்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாவிற்கு அவர் அளித்த பங்களிப்புக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>குஜராத் மாநிலம் கெவாடியாவில் வரும் 22-ம் தேதி நடைபெறவிருக்கும் 72-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் இந்த உயரிய விருது நடிகர் அனந்த் நாக்கிற்கு வழங்கப்படவுள்ளது.</p><p>தாதா சாகேப் பால்கே விருதுடன் தங்கத் தாமரை பதக்கம், பொன்னாடை மற்றும் 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு ஆகியவை அடங்கும்.</p><p>ஏற்கனவே, கடந்த 2025-ம் ஆண்டில் ஆனந்த் நாக் இந்தியாவின் 'பத்ம பூஷன்' விருதை பெற்றுள்ளார்.</p><p>கடந்த ஆண்டு கேரளாவின் மோகன்லால் தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் மசோதா நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/world/new-zealand-parliament-passes-trade-deal-with-india</link><comments>https://www.maalaimalar.com/news/world/new-zealand-parliament-passes-trade-deal-with-india#comments</comments><guid isPermaLink="false">d1dea483-85e7-4d57-a877-0c9a782d55f9</guid><pubDate>Wed, 16 Sep 2026 13:18:24 +0000</pubDate><atom:updated>2026-09-16T13:18:24.883Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Trade Agreement,வர்த்தக ஒப்பந்தம்,கிறிஸ்டோபர் லக்சன்,christopher luxon</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/bheucmjr/NZPM001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இந்தியா மற்றும் நியூசிலாந்து பிரதமர்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/bheucmjr/NZPM001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியா- நியூசிலாந்து இடையில் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் கடந்த ஏப்ரல் மாதம் 27-ந்தேதி கையெழுத்து ஆனது. இந்த ஒப்பந்தத்திற்கு நியூசிலாந்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருந்தபோதிலும் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் இதில் உறுதியாக இருந்தார்.</p><p>இது தொடர்பான மசோதா நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த இந்திய உடனான வர்த்தக ஒப்பந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாக கிறிஸ்டோபர் லக்சன் தெரிவித்துள்ளார்.</p><h2>இது தொடர்பாக கிறிஸ்டோபர் லக்சன் கூறியதாவது:-</h2><p>இந்தியா உடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் சாத்தியம் இல்லை என்று மக்கள் என்னிடம் சொன்னார்கள். நன்று, இன்று நாடாளுமன்ற இறுதி வாக்கெடுப்பில் இந்த ஒப்பந்தம் மசோதா நிறைவேறியது. இது நிகழ்ந்திருக்கிறது. இந்த சிறப்பு வாய்ந்த ஒப்பந்தம் மூலம், அதிக வேலை வாய்ப்புகள் மற்றும் வருமானம் நியூசிலாந்துக்கு கிடைக்கும். 140 கோடி இந்திய நுகர்வோர் நியூசிலாந்து பொருட்களை விற்பனை செய்வதற்கான கதவு திறக்கப்பட்டுள்ளது.</p><p>இவ்வாறு நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் தெரிவித்தார்.</p><p>அடுத்த மாதத்தில் இருந்து இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>இந்திய பொருட்களுக்கு வரி இல்லை</h2><p>டெக்ஸ்டைல்ஸ், தோல், காலணி, ஜூவல்லரி, பதப்படுத்தப்பட்ட பொருட்கள் போன்றவை வரியில்லாமல் நியூசிலாந்திற்கு இந்தியா ஏற்றுமதி செய்ய முடியும். </p><p>மறுபுறம், இருதரப்பு வர்த்தக மதிப்பில் 95 சதவீதத்தை உள்ளடக்கிய நியூசிலாந்தின் 70 சதவீத கட்டணப் பிரிவுகளுக்கு (tariff lines) இந்தியா கட்டண தளர்வை வழங்கியுள்ளது. அதேவேளையில், 29.97 சதவீத தயாரிப்பு வகைகளை இந்த ஒப்பந்தத்தின் வரம்பிற்கு வெளியே வைத்துள்ளது.</p><h2>பால் பொருட்களுக்கு இந்தியா விலக்கு அளிக்கவில்லை</h2><p>ஒப்பந்தத்தின் வரம்பிற்கு வெளியே உள்ள தயாரிப்புகளில் பால் பொருட்கள் (பால், க்ரீம், வே (whey), தயிர், சீஸ்), விலங்கு சார்ந்த பொருட்கள் (செம்மறி ஆட்டு இறைச்சி தவிர), விவசாயப் பொருட்கள் (வெங்காயம், கொண்டைக்கடலை, பட்டாணி, சோளம், பாதாம்), சர்க்கரை, செயற்கைத் தேன், விலங்கு/தாவர/நுண்ணுயிர் கொழுப்புகள் மற்றும் எண்ணெய்கள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள், ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், தாமிரம் மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் (கேத்தோடுகள், கார்ட்ரிட்ஜ்கள், தண்டுகள், கம்பிகள், சுருள்கள்), அலுமினியம் மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் (இங்காட்கள், பில்லட்டுகள், கம்பித் தண்டுகள்) ஆகியவை அடங்கும். </p><p>நியூசிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கு இந்தியா வரி இல்லாத அனுமதியை வழங்கும். இதில் மரக்கட்டைகள், coking coal, உலோகக் கழிவுகள் மற்றும் ஸ்கிராப், மரம், செம்மறி ஆட்டு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்படாத தோல் ஆகியவை அடங்கும்.</p><h2>ஒயினுக்கு படிப்படியாக வரிகள் குறைக்கப்படும்</h2><p>அதேபோல பெட்ரோலிய எண்ணெய், மால்ட் சாறு (malt extract), தாவர எண்ணெய்கள், குறிப்பிட்ட சில மின் மற்றும் இயந்திர உபகரணங்கள் மற்றும் பெப்டோன்கள் (peptones) போன்ற பொருட்களுக்கு இந்தியா 3, 5, 7 மற்றும் 10 ஆண்டுகளில் படிப்படியாக வரிகளைக் குறைக்கும். </p><p>கட்டணக் குறைப்புப் பலனைப் பெறும் நியூசிலாந்து தயாரிப்புகளில் ஒயின், மருந்துகள், பாலிமர்கள், அலுமினியம் மற்றும் இரும்பு/எஃகு பொருட்கள் ஆகியவை அடங்கும்.</p>]]></content:encoded></item><item><title>‘உழைக்காமல் கிடைத்த பதவியை அனுபவிப்பது எளிது’ - பிரவீன் சக்கரவர்த்திக்கு செல்வப்பெருந்தகை பதிலடி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/it-is-easy-to-enjoy-a-position-obtained-without-hard-work-selvaperunthagai-hits-back-at-praveen-chakravarty</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/it-is-easy-to-enjoy-a-position-obtained-without-hard-work-selvaperunthagai-hits-back-at-praveen-chakravarty#comments</comments><guid isPermaLink="false">1a97e850-4932-4638-81c9-07bef566cf0c</guid><pubDate>Wed, 16 Sep 2026 12:59:37 +0000</pubDate><atom:updated>2026-09-16T12:59:37.322Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,selvaperunthagai,tvk,Praveen Chakravarty,Prime Ministerial candidate</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/n7tiytc2/New-Project-2026-09-16T182626.956.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘உழைக்காமல் கிடைத்த பதவியை அனுபவிப்பது எளிது’ - பிரவீன் சக்கரவர்த்திக்கு செல்வப்பெருந்தகை பதிலடி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/n7tiytc2/New-Project-2026-09-16T182626.956.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த சில நாட்களாகவே ‘பிரதமர் வேட்பாளர்’ விவகாரத்தில் தமிழ்நாட்டின் கூட்டணிக் கட்சிகளான தவெக மற்றும் காங்கிரஸ் இடையே வார்த்தை மோதல் தொடர்ந்து வருகிறது. காங்கிரஸ்,  பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் என்பதில் உறுதியாக உள்ளது. இருப்பினும் இந்த விவகாரத்தால் காங்கிரஸ் உள்ளேயும் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. </p><p>ஆனால் தவெகவினர் முதலமைச்சர் விஜய்யை முன்னிறுத்தி பேசிவருகின்றனர். </p><p>இந்நிலையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் முன்னாள் மாநிலத்தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijays-act-in-house-a-disgrace-slams-tncc-chief">செல்வப்பெருந்தகை</a>.,</p><p>“ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காதவர்களுடன் கூட்டணிக்கான வாய்ப்பு என்ன இருக்கிறது?” என கருத்து தெரிவித்திருந்தார். </p><p>இதனைத்தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தியிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், கூட்டணி பற்றி கருத்து சொல்ல செல்வப்பெருந்தகை யார் என கேள்வி எழுப்பினார்.</p><p>இந்நிலையில் பிரவீன் சக்கரவர்த்தியின் இந்த கருத்துக்கு பதில்கூறும் வகையில் செல்வப்பெருந்தகை சமூக வலைதளப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது;</p><p>“கூட்டணி பற்றி பேச செல்வப்பெருந்தகை யார் எனக் கேட்கிறார் அறிவு ஜீவி என்று கூறிக்கொள்ளும் ஒருவர்.</p><p>வடமாநிலத்தில் எங்கள் தலைவர் சென்ற பின் அவர் இருந்த மேடையை தண்ணீர் உற்றி கழுவிய அழுக்கேறிய மதவாத மேட்டுக்குடி மனநிலையின் நீட்சியே இது.</p><h2>சிரித்தால் போதுமா?</h2><p>நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காத எவரோடும் கூட்டணி எதற்கு என்பதே என் கேள்வி?</p><p>அதற்கு நீண்ட நேரம் முதலமைச்சர் சிரித்துப் பேசினார் என்கிறார் அந்த அறிவு ஜீவி.</p><p>உங்களுடன் நீண்ட நேரம் சிரித்து பேசுவதுதான் கூட்டணியில் தொடருவதற்கான ஒப்பந்தமா? சரி முதலமைச்சராவது ஒரே ஒரு முறை ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று சொல்லிவிட்டால் போதுமே. பிரச்சினை தீர்ந்ததே.</p><h2>பாஜக குறித்துப் பேசினாலே..</h2><p>முதலமைச்சர் கூட சொல்ல வேண்டாம். அந்தக் கட்சியில் உள்ள முன்னனிப் பொறுப்பில் உள்ளவர்கள் யாராவது சொல்லட்டுமே, அது கூட வேண்டாம், நீண்ட நேரம் உங்களிடம் சிரித்துப் பேசிய முதலமைச்சரிடம் நமது அணியின் பிரதமர் வேட்பாளர் தலைவர் ராகுல் காந்திதான் என்று நீங்கள் அழுத்தமாகச் சொல்லி அதை அவர் ஏற்றுக்கொண்டு உங்களிடமாவது உத்தரவாதம் தந்தாரா? தந்திருந்தால் அதையாவது சொல்லுங்களேன். </p><p>பிரதமர் மோடி குறித்தோ, உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்தோ, பாஜக குறித்தோ சட்டப்பேரவையில் விமர்சித்தால் அது சட்டப்பேரவைக் குறிப்பில் இருந்து வேகமாக நீக்கப்படுகிறதே அது ஏன் என்று அடுத்த முறை சிரித்துப் பேசும் போது முதலமைச்சரிடம் கேட்டுச் சொல்லுங்கள்.</p><h2>காலம் பலரை முன்னிறுத்தும்... ஆனால்</h2><p>உழைக்காமல் கிடைத்த பதவியை அனுபவிப்பது எளிது; உழைத்து இயக்கத்தை வளர்ப்பதுதான் கடினம். பதவியின் உயரம் ஒருவரின் அரசியல் உயரத்தைத் தீர்மானிப்பதில்லை; அவர் இயக்கத்திற்காகச் செய்த உழைப்பும் அர்ப்பணிப்புமே அதைத் தீர்மானிக்கும்.</p><p>காலம் பலரை முன்னிறுத்தும்; அதே காலம் பலரை மறந்து போகும். ஆனால் ஒரு பேரியக்கத்திற்காக நேர்மையாக உழைத்தவர்களின் பங்களிப்பை வரலாறு பதிவு செய்கிறது. காங்கிரஸ் பேரியக்கம் தனிநபர்களைவிடப் பெரியது. பதவிகளைவிட அதன் கொள்கை பெரியது.</p><p>தற்போதைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் தான் பிரதமர் வேட்பாளர் என்போர் பக்கம் நின்று கொண்டு என் தலைவர் ராகுல் காந்தி தான் பிரதமர் எனச் சொல்லும் என் மீது கல்லெறிபவர் என்னை யார் என்று கேட்கிறார். </p><p>உரக்கச் சொல்கிறேன்.</p><p>நான் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என விரும்பும் காங்கிரஸ் தொண்டன். சுயமரியாதையுடன் இந்த மண்ணின் மைந்தன், பூர்வகுடி.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>132 ஆண்டுகள் கழித்து அமெரிக்க நூலகத்திற்குத் திருப்பிக் கொடுக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வார இதழ்!</title><link>https://www.maalaimalar.com/news/world/historic-weekly-returned-to-us-library-after-132-years</link><comments>https://www.maalaimalar.com/news/world/historic-weekly-returned-to-us-library-after-132-years#comments</comments><guid isPermaLink="false">567a9d91-0f0b-4e86-b055-2f0fb0c9e50f</guid><pubDate>Wed, 16 Sep 2026 12:53:55 +0000</pubDate><atom:updated>2026-09-16T12:53:55.035Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,America,library,நூலகம்,132YearsLater,132 ஆண்டுகள்,Rare Magazine,Fine Waived,Concord Library</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/hvw0zqlc/Rare-Magazine" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rare Magazine  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/hvw0zqlc/Rare-Magazine?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE">அமெரிக்காவின் </a>நியூ ஹாம்ப்ஷயர் மாகாணத்தில் உள்ள கான்கார்ட் பொது நூலகத்தில் இருந்து 132 ஆண்டுகளுக்கு முன்பு இரவல் வாங்கப்பட்ட 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பழைய மாத இதழ், தற்போது நூலகத்திடமே பத்திரமாகத் திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது.</p><h2>அபராதம் தள்ளுபடி</h2><p>செப்டம்பர் 1894-ஆம் ஆண்டு வெளியான "தி செஞ்சுரி இல்லஸ்ட்ரேட்டட் மன்த்லி மேகசின்". இந்த இதழை மொத்தம் 48,220 நாட்கள் தாமதமாகத் திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது. </p><p>நூலக விதிகளின்படி இதற்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.10 லட்சத்திற்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நூலகத்தின் புதிய சலுகையால் இந்த அபராதம் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.</p><h2>இதழ் திரும்பியது எப்படி?</h2><p>ஜான் என்ற வாசகர் இந்த இதழை நூலகத்தில் ஒப்படைத்தார். இது குறித்து அவர் கூறும்போது, இந்த இதழ் பல தசாப்தங்களாகத் தனது வீட்டில்தான் கிடந்ததாகவும், ஆனால் இது எப்படித் தன் வீட்டிற்கு வந்தது என்பது தனக்கே தெரியாது என்றும் கூறியுள்ளார். </p><p>சமீபத்தில் உள்ளூர் செய்தித்தாள் ஒன்றில், நூலகம் அபராதங்களை ரத்து செய்துள்ள செய்தியைப் படித்த பிறகே, இதைத் திரும்பக் கொடுக்க அவர் முடிவு செய்துள்ளார்.</p><h2>நூலகத்தின் புதிய திட்டம்</h2><p>கான்கார்ட் பொது நூலகம் கடந்த செப்டம்பர் 1 முதல் ஒரு வருட காலத்திற்கு அபராதக் கட்டணங்களுக்கு முழு விலக்கு அளிப்பதாக அறிவித்துள்ளது. "அபராதமில்லா நூலகம்" என்ற இந்தத் திட்டத்தின் மூலம் பல பழைய புத்தகங்கள் திரும்ப வரும் என்று எதிர்பார்த்ததாகவும், ஆனால் 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு இதழ் திரும்ப வரும் என்று தாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றும் நூலக நிர்வாகம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.</p><h2>அடுத்த கட்ட நடவடிக்கை</h2><p>132 ஆண்டுகள் பழமையான இந்த இதழ் இனி பொதுமக்களின் புழக்கத்திற்கு விடப்படாது. அதற்குப் பதிலாக, இந்த நூலகத்தில் உள்ள உள்ளூர் வரலாற்றைப் பாதுகாக்கும் பிரத்யேகப் பகுதியான "கான்கார்ட் அறையில்" காட்சிக்கு வைக்கப்படலாம் என்று நூலக நிர்வாகம் அதன் சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மெஸ்சி நிகழ்ச்சி சர்ச்சை: கேரளம் செய்தி சேனல் அலுவலகத்தில் போலீசார் அதிரடி சோதனை- எதிர்க்கட்சிகள் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/national/messi-event-row-police-raid-reporter-tv-office-promoters-homes-cm-defends-action</link><comments>https://www.maalaimalar.com/news/national/messi-event-row-police-raid-reporter-tv-office-promoters-homes-cm-defends-action#comments</comments><guid isPermaLink="false">4257d383-2132-4bc6-a458-aeaa89e97adc</guid><pubDate>Wed, 16 Sep 2026 12:36:29 +0000</pubDate><atom:updated>2026-09-16T12:36:29.103Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Messi,மெஸ்சி,VD Satheesan,கேரளம்,Keralam</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/imf7gv0p/PoliceRaid.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ போலீஸ் சோதனை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/imf7gv0p/PoliceRaid.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அர்ஜென்டினா அணியும், மெஸ்சியும் கேரளம் மாநிலம் வருகை தந்து விளையாடுவதாக இருந்தது. இது தொடர்பாக அர்ஜென்டினா அணியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. பின்னர், அர்ஜென்டினா அணி கேரளா வரவில்லை. இது தொடர்பாக பண முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது.</p><p>இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். முதல் தகவல் அறிக்கையின்படி (FIR), RBC பிரைவேட் லிமிடெட், அதன் நிர்வாக இயக்குநர் ஆண்டோ அகஸ்டின் மற்றும் பிற குற்றம் சாட்டப்பட்டவர்கள் கேரள அரசு மற்றும் பொதுமக்களை ஏமாற்றி தங்களுக்கு முறையற்ற ஆதாயத்தை அடையும் நோக்கத்துடன் அர்ஜென்டினா கால்பந்து சங்கத்துடனான (டிசம்பர் 20, 2024 தேதியிட்ட) ஒப்பந்தத்தில் சட்ட விரோதமான மற்றும் பொய்யான அம்சங்களை சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p>கிரேட்டர் கொச்சி மேம்பாட்டு ஆணையத்தின் (Greater Cochin Development Authority) கட்டுப்பாட்டில் உள்ள, கலூரில் அமைந்துள்ள அரசுக்குச் சொந்தமான ஜவஹர்லால் நேரு சர்வதேச விளையாட்டு அரங்கத்தை RBC-யிடம் ஒப்படைப்பதற்கும், 5 கோடி ரூபாய் பிணைத் தொகையை (security deposit) தள்ளுபடி செய்வதற்கும் செப்டம்பர் 26, 2025 அன்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன எனவும் FIR-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>RBC நிறுவனம் மெஸ்சி மற்றும் அர்ஜென்டினா அணி விளையாட வருவதற்கு ஸ்பான்சராக செயல்பட முன்வந்துள்ளது. இந்த நிறுவனம் ரிப்போர்ட்டர் டி.வி. என்ற செய்தி சேனலை நடத்தி வருகிறது. இந்த நிலையில் ரிப்போர்ட்டர் டி.வி. அலுவலகம் மற்றும் அகஸ்டின் சகோதரர்களுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவர்களுடைய பூர்வீக வீடு ஆகியவற்றில் SIT போலீசார் இன்று சோதனை நடத்தினர். கொச்சி மற்றும் வயநாடுகளில் உள்ள 5 இடங்களில் சோதனை நடத்தப்பட்து.</p><p>செய்திப் பிரிவு செயல்பட்டு வரும் ஆர்.பி.சி. அலுவலகத்தில் சோதனை நடத்திய போலீசார், செய்திப் பிரிவு இடத்திற்கு சென்று செய்தியாளர்களின் செல்போன்கள் மற்றும் பணிபுரிபவர்களின் செல்போன்களை பறிமுதல் செய்ததாகவும், செய்தி வெளியிடுவதற்கு இடையூறாக இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.</p><h2>சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி விளக்கம்</h2><p>இது தொடர்பாக SIT தலைவரும், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியுமான பி. விஜயன் கூறுகையில் "எந்த இடத்தில் சோதனை நடத்த சென்றாலும், அங்குள்ளவர்களிடம் போனை பயன்படுத்தக்கூடாது என சொல்லி வாங்கி வைத்து விடுவோம். நாங்கள் ஒரு போனைக் கூட பறிமுதல் செய்யவில்லை. செய்தி ரூமுக்குள் இடையூறு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் செல்லவில்லை. ஆவணங்களை சேகரிப்பதே எங்களுடைய நோக்கம். டிஜிட்டல் லாக்கர்களில் ஏற்பட்ட அணுகல் சிக்கல் காரணமாக, தேடுதலுக்கு அதிக நேரம் பிடித்தது. இந்த நடவடிக்கைகள் வீடியோவும் பதிவு செய்யப்பட்டன. </p><p>சோதனைப் பதிவேட்டின் ஒரு பகுதியாக, சம்பந்தப்பட்ட நபர்களின் கையொப்பங்களைப் பெறுகிறோம். அந்தப் பதிவேட்டைப் பார்த்து, ஏதேனும் பத்திரிகையாளர்களின் அலைபேசிகளை நாங்கள் பறிமுதல் செய்துள்ளோமா என்று பாருங்கள்" என்றார்.</p><h2>முதல்வர் வி.டி. சதீசன்</h2><p>இந்த சோதனையை கேரளம் மாநில முதல்வர் வி.டி. சதீசன் நியாயப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக வி.டி. சதீசன் கூறுகையில் "இந்தச் சோதனை, சட்டப்பூர்வமாக மேற்கொள்ளப்படும் காவல்துறை விசாரணையின் ஒரு பகுதியாகும். இதில் அரசு தலையிடாது. SIT முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. வாரண்ட் உடன் தேடுதல் வேட்டையை நடத்தியுள்ளது. இது தொடர்பாக ஜிஎஸ்டி துறை விசாரணை நடத்தியுள்ளது. விசாரணை தொடக்கத்தில் ஜி.எஸ்.டி. மோசடி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது" என்றார்.</p><h2>விளையாட்டுத்துறை அமைச்சர்</h2><p>அதன் ஸ்பான்சர் யார்? RBC-தான் அந்த ஸ்பான்சர். எனவே, அந்த ஆதரவாளர் தொடர்பான ஒரு விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும்போது, ​​அது வேறு எங்கே நடத்தப்பட முடியும்? அது இயல்பான ஒன்றுதானே?. செய்தி வெளியிட்டதற்காக எந்தவொரு ஊடக நிறுவனம் அல்லது பத்திரிகையாளர் மீதும் அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுத்ததில்லை; இனிமேலும் அவ்வாறு செய்யாது" என்றார்.</p><h2>பினராயி விஜயன் கண்டனம்</h2><p>முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான பினராயி விஜயன், செய்தி நிறுவனத்திற்குள் சென்ற பத்திரிகையாளர்களின் போன்களை பறிமுதல் செய்தது தொடர்பாக விமர்சனம் செய்திருந்திருந்தார். இதுபோன்ற சோதனை கேரளம் மாநிலத்தில் இதுவரை இல்லாதது. முதலமைச்சரின் நேர வற்புறுத்தலின் போரில் இந்த சோதனை நடத்தப்பட்டது என்று குற்றம்சாட்டியிருந்தார்.</p><h2>RBC நிர்வாக இயக்குநர் சொன்னது என்ன?</h2><p>ஆண்டோ அகஸ்டின் டி.வி.யின் நிர்வாக இயக்குநர் இது தொடர்பாக கூறுகையில் "போலீசார் மெஸ்சி நிகழ்ச்சி தொர்பாக எந்த கேள்வியும் கேட்கவில்லை" என்றார்.</p>]]></content:encoded></item><item><title>VIDEO- வேறு பெண்ணுடன் இருந்ததை தட்டிக் கேட்ட காதலியை காரால் மோதி இழுத்துச் சென்ற காதலன்- லக்னோவில் பரபரப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/video-lucknow-anamika-car-attack-shanawaz</link><comments>https://www.maalaimalar.com/news/national/video-lucknow-anamika-car-attack-shanawaz#comments</comments><guid isPermaLink="false">8cc9ca0f-aa3b-4a5c-87f5-a60aaa4f86d5</guid><pubDate>Wed, 16 Sep 2026 12:29:01 +0000</pubDate><atom:updated>2026-09-16T12:29:01.463Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Uttar Pradesh,உத்தரபிரதேச மாநிலம்,லக்னோ,lucknow,LucknowCrime,லக்னோசம்பவம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/66x3x413/gfd.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ drags girlfriend with his car]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/66x3x413/gfd.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஷாநவாஸ் தனது உண்மையான பெயர் மற்றும் அடையாளத்தை மறைத்து ஏமாற்றியதை அனாமிகா கண்டறிந்துள்ளார். </p><p>உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில், தனது உண்மையான அடையாளத்தை மறைத்து காதலித்து வந்த நபர் ஒருவர், தட்டிக் கேட்ட காதலியை காரால் மோதி, காரின் முன்பகுதியில் (போனட்) வைத்து இழுத்துச் சென்று ஏற்றி இறக்கிய கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="hi" dir="ltr">लखनऊ में अपने प्रेमी को नई गर्लफ्रेंड के साथ देख भड़की युवती. कार के सामने आई तो युवक ने किया हिट एंड रन का प्रयास...! <a href="https://t.co/a8qU6egytR">pic.twitter.com/a8qU6egytR</a></p>&mdash; Rupesh Mishra (@rupeshmishramp) <a href="https://x.com/rupeshmishramp/status/2100194257479053318?ref_src=twsrc%5Etfw">September 16, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2>உண்மை<strong>யை கண்டுபிடித்த காத</strong>லி</h2><p>லக்னோவைச் சேர்ந்த அனாமிகா என்ற பெண், 'யஷ் தாகூர்' என்ற பெயரில் அறிமுகமான ஷாநவாஸ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், ஷாநவாஸ் தனது உண்மையான பெயர் மற்றும் அடையாளத்தை மறைத்து ஏமாற்றியதை அனாமிகா கண்டறிந்துள்ளார். மேலும், இன்று காலை பூங்கா ஒன்றின் அருகே ஷாநவாஸ் வேறு ஒரு பெண்ணுடன் டீ கடையில் நின்று கொண்டிருந்தபோது அனாமிகா அவரை நேரில் பார்த்துப் பிடித்துள்ளார்.</p><h2>காரால் மோதி <strong>கொடூரத் தாக்குதல்</strong></h2><p>தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அனாமிகா, ஷாநவாஸிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை அங்கிருந்து செல்லவிடாமல் தடுக்க முயன்றார். அப்போது ஆத்திரமடைந்த ஷாநவாஸ், காரை வேகமாக இயக்கி அனாமிகா மீது மோதியுள்ளார். இதனால் அனாமிகா காரின் போனட் மீது விழுந்தநிலையிலும், காரை நிறுத்தாமல் ஷாநவாஸ் முன்னோக்கிச் சென்றுள்ளார். சற்று தூரத்தில் அனாமிகா காரில் இருந்து கீழே விழுந்தபோது, இரக்கமின்றி கார் சக்கரத்தை அவர் மீது ஏற்றிவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதில் அனாமிகாவிற்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.</p><h2>வைரல் வீ<strong>டியோ</strong></h2><p>இந்த கொடூர சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. வீடியோவில் அனாமிகா "காரை நிறுத்து" என்று கதறியும் ஷாநவாஸ் காரை நிறுத்தாமல் ஏற்றிச் செல்வது பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட அனாமிகா அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த லக்னோ காவல்துறையினர், தலைமறைவாக இருந்த ஷாநவாஸை தீவிரமாகத் தேடி கைது செய்துள்ளனர். பெயர் மற்றும் மத அடையாளத்தை மறைத்து காதலித்த விவகாரம் மற்றும் கொலை முயற்சி கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மகளிர் ப்ரீமியர் லீக் 2027: போட்டி தேதி, ஏலம் அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/sports/womens-premier-league-2027-tournament-dates-and-auction-announcement</link><comments>https://www.maalaimalar.com/sports/womens-premier-league-2027-tournament-dates-and-auction-announcement#comments</comments><guid isPermaLink="false">b0e4688f-2162-4e59-bcee-c74ae15b5320</guid><pubDate>Wed, 16 Sep 2026 12:26:51 +0000</pubDate><atom:updated>2026-09-16T12:26:51.432Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>BCCI,மகளிர் பிரீமியர் லீக்,பிசிசிஐ,WPL 2027</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/f6xwyl4h/New-Project-2026-09-16T171040.853.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Women's Premier League 2027: Tournament dates and auction announcement!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/f6xwyl4h/New-Project-2026-09-16T171040.853.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகளிர் ப்ரீமியர் லீக் தொடரின் ஐந்தாவது சீசன், அடுத்தாண்டு ஜனவரி 14 முதல் பிப்ரவரி 7 வரை நடைபெற உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. </p><p>வீராங்கனைகளை தேர்வு செய்வதற்கான ஏலம் அக்டோபர் 28ம் தேதி கொச்சியில் நடைபெறும் என்றும், வீராங்கனைகளை தக்கவைத்து கொள்வதற்கான இறுதிநாள் செப்.28 என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது. </p><p>நடப்பாண்டு சாம்பியனாக<a href="https://www.maalaimalar.com/sports/cricket/ipl-news-in-tamil/womens-premier-league-final-bengaluru-wins-the-toss-against-delhi-and-opts-to-bowl-808141"> ராயல் சேலஞ்சர்ஸ்</a> அணி உள்ளது. டெல்லியும், பெங்களூரு அணியும் இறுதிப்போட்டியில் மோதிய நிலையில், ஆர்சிபி த்ரில் வெற்றிப் பெற்றது. </p><p>ஐந்தாவது சீசனிலும் பெங்களூரு, டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் ஆகிய ஐந்து அணிகளும் தொடர்ந்து இடம்பெற்றுள்ளன. </p><p>இந்தியாவில் நடைபெறவுள்ள மகளிர் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக இத்தொடர் நடத்தப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>கடைசி நேர பெரிய மாற்றங்களைத் தவிர்க்க வேண்டும்..!- 2027 உலகக்கோப்பை குறித்து  யுவராஜ்சிங் முக்கிய அறிவுரை!</title><link>https://www.maalaimalar.com/sports/avoid-last-minute-major-changes-yuvraj-singh-2027-world-cup-advice</link><comments>https://www.maalaimalar.com/sports/avoid-last-minute-major-changes-yuvraj-singh-2027-world-cup-advice#comments</comments><guid isPermaLink="false">d2f8855b-3539-42b1-9046-1592532bb2ad</guid><pubDate>Wed, 16 Sep 2026 12:16:41 +0000</pubDate><atom:updated>2026-09-16T12:16:41.429Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Cricket,கிரிக்கெட்,யுவராஜ் சிங்,world cup,உலகக்கோப்பை,yuvaraj singh</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/cfxy4tkg/YV.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Yuvaraj singh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/cfxy4tkg/YV.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2011-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் (50 ஓவர்) தொடர் நாயகன் விருது பெற்ற யுவராஜ்சிங் கூறியதாவது:-</p><h2>மாற்றத்தை தவிர்க்க வேண்டும்</h2><p>2027-ம் ஆண்டு நடைபெறும் ஒரு நாள் போட்டிக்கான உலக கோப்பை போட்டிக்கு முன்பு மிகப் பெரிய அளவிலான மாற்றங்களை தவிர்க்க வேண்டும். </p><p>20 ஓவர் உலக கோப்பை வெற்றிகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு 50 ஓவர் உலக கோப்பைக்கான நிலையான ஒரு அணியை உருவாக்க வேண்டும்.</p><p>2027 உலக கோப்பையை கைப்பற்ற சிறந்த அணியை தேர்ந்தெடுத்து அதில் உறுதியாக இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த வீரர்களுக்கு போதுமான நேரம் கிடைக்கும். கடந்த காலங்களில் இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்திய கடைசி நேர பெரிய மாற்றங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்.</p><p>ஒரு ஆண்டுக்கு பிறகு விளையாடப் போகும் அதே அணியை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் கடைசி நேரத்தில் பெரிய மாற்றம் செய்யக் கூடாது.</p><p>கடைசி நேரத்திலோ அல்லது தொடர் நடைபெற்று கொண்டு இருக்கும் போதோ பெரிய மாற்றங்களை செய்த போதெல்லாம் இந்தியா சறுக்கலை சந்தித்து உள்ளது.</p><p>எனவே உலக கோப்பையை வெல்லக் கூடியது என்று நம்பும் அணியை உறுதி செய்து அவர்களுடன் நிற்பது முக்கியம்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>டி.ஆர் - பாக்யராஜ் இணைந்த ஒரே படம்... உயிர் கொடுக்கும் இளையராஜா - &apos;கன்னடத்து பைங்கிளி&apos; மெகா கூட்டணி!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-only-film-uniting-tr-and-bhagyaraj-ilaiyaraajas-soul-stirring-voicea-mega-collaboration-featuring-the-kannada-nightingale</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-only-film-uniting-tr-and-bhagyaraj-ilaiyaraajas-soul-stirring-voicea-mega-collaboration-featuring-the-kannada-nightingale#comments</comments><guid isPermaLink="false">672f1b4e-647f-4a51-a508-438991a346fc</guid><pubDate>Wed, 16 Sep 2026 12:00:10 +0000</pubDate><atom:updated>2026-09-16T12:00:10.106Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>இளையராஜா,T Rajendar,டி ராஜேந்தர்,ilaiyaraaja,Actor Bhagyaraj,Kannadathu Paingili,நடிகர் பாக்யராஜ்,கன்னடத்து பைங்கிளி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/s1robppi/New-Project-2026-09-16T172814.379.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டி.ஆர் - பாக்யராஜ் இணைந்த ஒரே படம்... உயிர் கொடுக்கும் இளையராஜா - 'கன்னடத்து பைங்கிளி' மெகா கூட்டணி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/s1robppi/New-Project-2026-09-16T172814.379.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>எம்.பி.எம். எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் இந்துமதி கோபி தயாரிப்பில் ஆர். கோபி வழங்கும் ‘கன்னடத்து பைங்கிளி’ திரைப்படத்தை ‘சிங்கம் புலி’, 'மொட்ட சிவா கெட்ட சிவா' &nbsp;படங்களை இயக்கிய சாய் ரமணி எழுதி இயக்கியுள்ளார். </p><p>பன்முக வித்தகரான&nbsp;டி. ராஜேந்தர் இசையமைக்கும் இப்படத்தில் அவரது இசையில் முதல் முறையாக இசைஞானி இளையராஜா பாடியுள்ளார். </p><h2>டிஆர் - பாக்யராஜ் இணைவு</h2><p>மேலும், சமீபத்தில் மறைந்த நடிகரும் இயக்குநருமான&nbsp;கே. <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/film-writers-association-boycotts-the-memorial-event-for-directors-bharathiraja-and-bhagyaraj">பாக்யராஜ்</a> நடித்த கடைசி படமாக இது அமைந்துள்ளது. டி.ஆர். மற்றும் பாக்யராஜ் இணைந்து பணியாற்றிய ஒரே படம்&nbsp;'கன்னடத்து பைங்கிளி' என்பதும் குறிப்பிடத்தக்கது. </p><p>நாயகனின்&nbsp;தந்தையாக படம் முழுவதும் வரும் பாத்திரத்தில் சிறப்பான பங்களிப்பை பாக்யராஜ் வழங்கியுள்ளார்.&nbsp;&nbsp;</p><h2>35 ஆண்டுகளுக்கு பின் மனைவியுடன் இணையும் பாக்யராஜ்</h2><p>சுமார் 35 ஆண்டுகளுக்கு பிறகு பாக்யராஜும், அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜும் இணைந்து நடித்த படமும் இது தான். அதுவும் கணவன் மனைவியாகவே நடித்துள்ளனர்.&nbsp;இப்படத்தில் புதுமுகங்கள் அமல் அஜித், ஆதியா முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். </p><p>சிங்கம் புலி, புகழ், ஆதவன், லொள்ளு சபா ஜீவா உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். கூமாபட்டி தங்கபாண்டி, ஆட்டோக்காரன் தீபக் மற்றும் இடியாப்பம் சிவா உள்ளிட்ட ஐந்து பிரபல யூடியூபர்கள் இப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகின்றனர்.&nbsp;</p><p>இவர்களுடன் ஸ்ரீகாந்த் ஐயங்கார் எனும் தெலுங்கில் பிரபலமாக இருக்கக்கூடிய நடிகர் அறிமுகம் ஆகிறார். கர்நாடகாவில் இருந்து ஸ்வேதா எனும் நடிகையும் அறிமுகமாகிறார்.</p><p>'பேராண்மை', 'மீகாமன்', 'வாகா' படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த எஸ். ஆர். சதீஷ் குமார் 'கன்னடத்து பைங்கிளி' திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டைட்டில் போஸ்டர் விரைவில் வெளியாக உள்ளது. </p><p>தமிழ்நாடு- கர்நாடகா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஓசூரில் 1990களில் நடைபெற்ற உண்மை சம்பவத்தின் அடிப்படையில் கதை அமைக்கப்பட்டுள்ளது என இயக்குநர் சாய் ரமணி தெரிவித்தார்.&nbsp;இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>UPI கட்டணம்: டிரம்ப் முன் அடிபணிய பிரதமர் முடிவு செய்துள்ளார்- ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-has-decided-to-prostrate-before-trump-rahul-on-upi-tax</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-has-decided-to-prostrate-before-trump-rahul-on-upi-tax#comments</comments><guid isPermaLink="false">9b1928d5-89d4-4ea2-aaad-dbaf4ccb94ce</guid><pubDate>Wed, 16 Sep 2026 11:33:10 +0000</pubDate><atom:updated>2026-09-16T11:33:10.032Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,pm modi,பிரதமர் மோடி,UPI payment</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/rkq9ghf0/RahulGandhi00002.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ UPI- Rahul Gandhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/rkq9ghf0/RahulGandhi00002.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன் மண்டியிடவும் (அடி பணியவும்), அமெரிக்காவிற்குப் பெருந்தொகையை வழங்கவும் பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, <a href="https://www.maalaimalar.com/news/national/american-crisis-upi-fee-row-centre-clarifies">UPI</a> பரிவர்த்தனைகள் மீது கட்டணம் விதிக்கும் அரசின் முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.</p><h2>UPI கட்டணம் அடுத்த மாதம் 15-ந்தேதி முதல் அமல்</h2><p>வங்கிக் கணக்கை பயன்படுத்தாமல் பண பரிமாற்றம் செய்ய மத்திய அரசு UPI என்ற நடைமுறையை கொண்டு வந்தது. இதை பயன்படுத்தி ஒரு வங்கிக் கணக்கில் இருந்து மற்றொரு வங்கிக் கணக்கிற்கு பணத்தை ஒரு விநாடியில் செலுத்த முடியும். இதன்மூலம் சிறு வியாபாரிகள் முதல் பெரிய வியாபாரிகள் வரை UPI பயன்படுத்தி வருகின்றனர்.</p><p>இந்த நிலையில்தான் வணிக நோக்கத்திற்காக 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணி பரிவர்த்தனை செய்தால், வணிக நிறுவனம் 0.4 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு நேற்று தெரிவித்தது. அக்டோபர் 15-ந்தேதியில் இருந்து இது அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதன்படி அடுத்த மாதம் 15-ந்தேதியில் இருந்து ஒரு வணிக நிறுவனத்தில் நுகர்வோர் ஒருவர் 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொள்முதல் செய்து, UPI மூலம் பணம் செலுத்தினால் அந்த வணிக நிறுவனம், 0.4 சதவீதம் என்ற அடிப்படையில் கட்டணம் வங்கிக்கு செலுத்த வேண்டும். அதேவேளையில் தனிநபர் ஒருவர் மற்றொருவருக்கு பணம் பரிமாற்றம் செய்தால் கட்டணம் கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அத்துடன் இந்த முடிவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.</p><h2>ராகுல் காந்தி குற்றச்சாட்டு</h2><p>இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முன் பிரதமர் மோடி மண்டியிட முடிவு செய்துள்ளார் என ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-</p><p>முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஜியிடம் ஒருமுறை அவர் இடதுசாரி கொள்கை கொண்டவரா அல்லது வலதுசாரி கொள்கை கொண்டவரா என்று கேட்கப்பட்டபோது, ​​நான் இடதுபுறமோ அல்லது வலதுபுறமோ சாய்வதில்லை. நான் நேராக நிற்கிறேன் என்று பதிலளித்தார். ஆனால் மோடி ஜியின் அணுகுமுறை முற்றிலும் மாறுபட்டது. அவர் இடதுசாரியும் அல்ல, வலதுசாரியும் அல்ல. அவர் டொனால்டு டிரம்ப் முன் நேராகப் படுத்துக்கொண்டு மண்டியிட (சாஷ்டாங்கமாகப் பணிய) முடிவு செய்துள்ளார்.</p><p>UPI-க்கு வரி விதிப்பதன் மூலமும், அமெரிக்காவிற்குப் பெருந்தொகையை வழங்குவதன் மூலமும் ஒவ்வொரு இந்தியர் மீதும் அவர் (மோடி) வரியை சுமத்தியுள்ளார். மோடி ஜி, இப்போதே UPI வரியை திரும்பப் பெறுங்கள்.</p><p>இவ்வாறு ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.</p><h2>காங்கிரஸ் குற்றச்சாட்டு</h2><p>இதற்கு முன்னதாக காங்கிரஸ், ஜீரோ MDR (வணிகர் தள்ளுபடி விகிதம்) முறையை நீக்கிவிட்டு UPI-க்குக் கட்டணம் விதிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கைக்கு அரசு பணிந்து விட்டது. பிரதமர் மோடி, NOTA (நோட்டா)வை நரேந்திராவின் தொடர்ச்சியான டிரம்ப் சமாதான நடவடிக்கை (Narendra's Ongoing Trump Appeasement) என்று வரையறுத்துள்ளார் எனத் தெரிவித்திருந்தது.</p><p>பிரதமர் மோடி அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணிந்து சமரசம் செய்து கொண்டுள்ளார். மீண்டும் ஒருமுறை சரணடைகிறார். ராகுல் காந்தி முன்னதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.</p><p>இதற்குப் பதிலடி கொடுத்த பாஜக, காங்கிரஸ் போலிச் செய்திகளை பரப்புவதாகக் குற்றம் சாட்டியதுடன், நுகர்வோர் மீது MDR கட்டணங்கள் விதிக்கப்படாது என்பதை அரசு மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளதாகவும் கூறியது.</p>]]></content:encoded></item><item><title>திமுகவினர் எதற்கும் அஞ்ச மாட்டார்கள்..!- சோதனை நிறைவுக்கு பிறகு அன்பில் மகேஷ் பேட்டி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-cadres-unafraid-anbil-mahesh-speaks-after-search</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-cadres-unafraid-anbil-mahesh-speaks-after-search#comments</comments><guid isPermaLink="false">16b1e46d-cfd6-411c-ac8d-40d28c72dd6c</guid><pubDate>Wed, 16 Sep 2026 11:23:57 +0000</pubDate><atom:updated>2026-09-16T11:23:57.110Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,anbil mahesh,Raid,அன்பில் மகேஷ்,சோதனை நிறைவு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/n8nebcri/Anbil.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anbil mahesh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/n8nebcri/Anbil.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி தென்னூரில் உள்ள முன்னாள் அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/corruption-case-against-former-dmk-minister-anbil-mahesh" rel="nofollow">அன்பில் மகேஷ் </a>இல்லத்தில் நடந்த சோதனை நிறைவடைந்தது.</p><p>இதைதொடர்ந்து, தென்னூரில் செய்தியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்தார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:</p><p>சந்தேகத்தின் அடிப்படையில் எனது இல்லத்தில் 8 மணி நேரமாக அதிகாரிகள் சோதனையிட்டனர்.</p><p>காலை 7 மணியளவில் அதிகாரிகள் இல்லத்தில் நுழைந்ததில் இருந்து முடியும் வரை முழு ஒத்துழைப்பு தரப்பட்டது.</p><p>எனது வீட்டில் வைத்திருந்த கல்வித்துறை சார்ந்த ஆவணங்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எடுத்து சென்றனர்.</p><p>புதிய தலைமைச் செயலகம், இடைத்தேர்தல் தொடர்பாக பேசியதால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சோதனை நடத்தப்பட்டுள்ளது.</p><p>அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இதுபோன்ற சோதனைகளை டேக் டைவர்ஷன் தவெக அரசு மேற்கொண்டுள்ளது.</p><p>நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் இல்லை நாங்கள், 75 ஆண்டு கால இயக்கம் திமுக.</p><p>மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை, திமுகவினர் எதற்கும் அஞ்சமாட்டார்கள்.</p><p>எனக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை செய்த அதிகாரிகள் எனக்கு எதிராக செயல்படுமாறு அன்பாக மிரட்டுகின்றனர். இந்த சோதனை உங்களுக்கு இல்லைங்க, அவரை குறிவைத்து தான், அவருக்கு எதிராக சொல்லுங்க என அன்பாக மிரட்டுகிறார்கள்.</p><p>18ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அதிகாரிகள் கூறிச்சென்றனர்.</p><p>18ம் தேதி காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜரான பின்னர் நேரடியாக இடைத்தேர்தல் நடக்கும் தாராபுரத்திற்கு செல்வேன்.</p><p>மிசா சட்டம், மு.க.ஸ்டாலின் குறித்து சட்டசபையில் அவதூறாக பேசிய அமைச்சர்கள் மீது வழக்குப்பதிய வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஓசோன் படல பாதுகாப்பு தினம்: &apos;பூமியை குளிர்விக்க உலகளாவிய நடவடிக்கை&apos; என்ற கருப்பொருளுடன்  கொண்டாட்டம்!</title><link>https://www.maalaimalar.com/news/world/ozone-layer-protection-day-global-action-to-cool-the-earth-celebration</link><comments>https://www.maalaimalar.com/news/world/ozone-layer-protection-day-global-action-to-cool-the-earth-celebration#comments</comments><guid isPermaLink="false">e51b21cd-ec10-4067-ac31-2618eb19c55b</guid><pubDate>Wed, 16 Sep 2026 11:23:38 +0000</pubDate><atom:updated>2026-09-16T11:23:38.423Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Ozone Day,ஓசோன் தினம்,Montreal Protocol,Kigali Amendment,கிகாலி திருத்தம்,Save Ozone Layer,ஓசோன் படலம்,Climate Action,Global Cooling</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/pyggxsth/World-Ozone-Day" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ World Ozone Day ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/pyggxsth/World-Ozone-Day?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பூமியின் உயிர்க்கவசமான ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்காக 1987-ஆம் ஆண்டு மாண்ட்ரியல் உடன்படிக்கை கையெழுத்தான தினத்தை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16-ஆம் தேதி சர்வதேச ஓசோன் படல பாதுகாப்பு தினமாக உலகளவில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.</p><h2>2026-ஆம் ஆண்டின் மையக்கருத்து</h2><p>இந்த ஆண்டிற்கான சர்வதேச ஓசோன் தினம் "பூமியை குளிர்விக்க உலகளாவிய நடவடிக்கை" என்ற கருப்பொருளின் கீழ் கடைப்பிடிக்கப்படுகிறது. </p><p>வரலாற்றுச் சிறப்புமிக்க 'கிகாலி திருத்தம்' கொண்டுவரப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, இந்த ஆண்டின் மையக்கருத்து அதனைச் சிறப்பிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.</p><h2>உலகை மாற்றிய மாண்ட்ரியல் உடன்படிக்கையும், கிகாலி திருத்தமும்!</h2><p>அறிவியல் பூர்வமான கொள்கைகள், அனைத்து நாடுகளின் பங்களிப்பு மற்றும் முறையான நிதியுதவி ஆகியவற்றின் மூலம் ஓசோன் படலத்தைச் சேதப்படுத்தும் வேதிப்பொருட்களை வெற்றிகரமாக ஒழிக்க முடியும் என்பதை இந்த உடன்படிக்கை நிரூபித்துக் காட்டியுள்ளது. </p><p>2016 அக்டோபர் 15 அன்று ருவாண்டாவின் கிகாலி நகரில் நடந்த மாநாட்டில், புவி வெப்பமயமாதலுக்குக் காரணமான வலிமைமிக்க பசுமை இல்ல வாயுக்களான ஹைட்ரோபுளோரோகார்பன்களை படிப்படியாகக் குறைக்க நாடுகள் ஒப்புக்கொண்டன. </p><p>கடந்த 10 ஆண்டுகளில், இந்த கிகாலி திருத்தம் சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத, ஆற்றல் திறன்மிக்க குளிர்சாதன தொழில்நுட்பங்களை உருவாக்கவும், உலக வெப்பநிலையைக் குறைக்கவும் பெரும் பங்காற்றியுள்ளது.</p><h2>பின்னணி: ஓசோன் படலத்தைப் பாதிக்கும் வேதிப்பொருட்கள்</h2><p>மனிதர்களால் உருவாக்கப்படும் சில வேதிப்பொருட்கள் ஓசோன் படலத்திற்குப் பலத்த சேதத்தை ஏற்படுத்துகின்றன. </p><p>குறிப்பாக, புரோமின் மற்றும் குளோரின் கொண்ட ஹாலோகார்பன்கள்.குளோரோபுளோரோகார்பன்கள், ஹைட்ரோகுளோரோபுளோரோகார்பன்கள், கார்பன் டெட்ராகுளோரைடு மற்றும் மெத்தில் புரோமைடு.</p><p>இதன் தீவிரத்தை உணர்ந்த சர்வதேச சமூகம், 1985 மார்ச் 22 அன்று 28 நாடுகளின் கையெழுத்துடன் 'வியன்னா மாநாட்டை' நடத்தியது. </p><p>அதன் தொடர்ச்சியாகவே 1987 செப்டம்பரில் மாண்ட்ரியல் உடன்படிக்கை வரையறுக்கப்பட்டு, 1994-இல் ஐநா பொதுச்சபையால் இந்தத் தினம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.</p><h2>தற்போதைய நிலவரம் மற்றும் விதிவிலக்குகள்</h2><p>உலக நாடுகள் அனைத்தும் மாண்ட்ரியல் உடன்படிக்கையின் இலக்குகளைச் சரியாகப் பின்பற்றி வருகின்றன. வளரும் நாடுகளில் HCFC-களின் பயன்பாட்டை 2040-க்குள் முழுமையாக நிறுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p>இருப்பினும், ஆஸ்துமா நோயாளிகளுக்கான இன்ஹேலர்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள்/விமானங்களில் பயன்படுத்தப்படும் தீயணைப்பு அமைப்புகள் போன்ற மாற்றுப் பொருட்கள் இல்லாத சில அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் தற்காலிக விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.</p><p>2009 செப்டம்பர் 16 அன்று, வியன்னா மாநாடு மற்றும் மாண்ட்ரியல் உடன்படிக்கை ஆகிய இரண்டும் ஐக்கிய நாடுகள் சபையின் வரலாற்றிலேயே அனைத்து நாடுகளாலும் அங்கீகரிக்கப்பட்ட முதல் உடன்படிக்கைகள் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு விதித்த தடை நீட்டிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/pakistan-extends-airspace-ban-for-indian-aircraft-till-oct-24</link><comments>https://www.maalaimalar.com/news/world/pakistan-extends-airspace-ban-for-indian-aircraft-till-oct-24#comments</comments><guid isPermaLink="false">9868d79c-3f57-4500-826a-718a848b21a8</guid><pubDate>Wed, 16 Sep 2026 11:17:42 +0000</pubDate><atom:updated>2026-09-16T11:17:42.053Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Pakistan,airspace,வான்வெளி,இந்திய விமானங்கள்,indian aircraft</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/v8w0gsnr/plane.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ flight]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/v8w0gsnr/plane.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.</strong></em></p><p>பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக கடந்த ஆண்டு மே 7-ம் தேதி அன்று இந்தியா <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%86%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">ஆபரேஷன் சிந்தூர்</a> நடவடிக்கையை மேற்கொண்டது. இதன் தொடர்ச்சியாக இரு நாடுகளும் மோதலில் ஈடுபட்டன. மே 9 அன்று பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்டப்பட்டது.</p><p>பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவின் வான்வெளியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.</p><p>பாகிஸ்தானும் தங்கள் வான்வெளியை பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு தடை விதித்தது.</p><p>அதன்படி, இந்திய விமான நிறுவனங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்தும் தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது.</p><p>இந்நிலையில், இந்திய விமான நிறுவனங்களுக்கான தனது வான்வெளித் தடையை அக்டோபர் 24-ம் தேதி வரை நீட்டித்து பாகிஸ்தான் உத்தரவிட்டது.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்க நெருக்கடியா? UPI கட்டண விவகாரத்தில் மத்திய அரசு அதிரடி விளக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/american-crisis-upi-fee-row-centre-clarifies</link><comments>https://www.maalaimalar.com/news/national/american-crisis-upi-fee-row-centre-clarifies#comments</comments><guid isPermaLink="false">31908eb3-3dd8-4cdb-9bc0-7e17cf7e0095</guid><pubDate>Wed, 16 Sep 2026 10:59:13 +0000</pubDate><atom:updated>2026-09-16T10:59:13.600Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,அமெரிக்கா,America,pmmodi,central government,மோடி,UPI payment</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/xmaqkoin/UPI.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[   PMModi ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/xmaqkoin/UPI.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தனிநபர்களுக்கு இடையேயான பணப்பரிவர்த்தனைகளுக்கும், கடைகளில் QR கோட் மூலம் செய்யப்படும் சாதாரண பரிவர்த்தனைகளுக்கும் எந்தவிதக் கட்டணமும் விதிக்கப்படாது. </p><p>UPI பரிவர்த்தனைகளுக்கு Merchant Discount Rate (MDR) கட்டணம் அமல்படுத்துவது அமெரிக்க நிறுவனங்களுக்கு பயனளிப்பதற்காகவே என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்தியாவின் கொள்கை முடிவுகள் முற்றிலும் சுயாதீனமாகவே எடுக்கப்படுகின்றன என்று மத்திய நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.</p><p>மத்திய அரசு அமெரிக்காவின் அழுத்தத்திற்கு பணிந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. <a href="https://www.maalaimalar.com/news/national/upi-charges-to-be-04-for-some-payments-above-rs-2000-free-for-consumers">UPI</a> மற்றும் RuPay தளங்களின் வளர்ச்சியால் Visa மற்றும் Mastercard போன்ற அமெரிக்க நிறுவனங்கள் சந்தையில் பெரும் பின்னடைவை சந்தித்ததாகவும், அவற்றை ஊக்குவிக்கவே இந்த கட்டணம் கொண்டுவரப்படுவதாகவும் காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் சாடினார்.</p><h2>மத்திய நிதி <strong>அமைச்சக</strong>த்தின் விளக்கம்</h2><p>இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த மத்திய நிதி அமைச்சகம், "UPI தொடர்பான முடிவுகள் அனைத்தும் நாட்டின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அமைப்பை மேலும் வலுப்படுத்தவும், நீடித்த வளர்ச்சிக்கு வழிவகுக்கவும் மட்டுமே எடுக்கப்படுகின்றன. இதில் எவ்வித வெளிநாட்டு தலையீடும் இல்லை" எனத் தெரிவித்தது.</p><h2>புதிய <strong>UPI கட்டண விதி</strong>முறைகள்</h2><p>*தனிநபர்களுக்கு இடையேயான (Person-to-Person) பணப்பரிவர்த்தனைகளுக்கும், கடைகளில் QR கோட் மூலம் செய்யப்படும் சாதாரண பரிவர்த்தனைகளுக்கும் எந்தவிதக் கட்டணமும் விதிக்கப்படாது. இவை எப்போதும் போல் முற்றிலும் இலவசமாகவே தொடரும்.</p><p>*அக்டோபர் 15 முதல், ரூ.2,000-க்கு மேல் மேற்கொள்ளப்படும் வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% MDR கட்டணம் விதிக்கப்படும். ஒரு மாதத்திற்கு ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக UPI மூலம் பணம் பெறும் வணிகர்கள் மட்டுமே இந்த வரம்பிற்குள் வருவார்கள்.</p><p>*இந்த கட்டணம் பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ரூ.300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், 95 சதவீதத்திற்கும் அதிகமான வணிகப் பரிவர்த்தனைகள் ரூ.2,000-க்கு குறைவாகவே இருப்பதால், சாதாரணக் கடைக்காரர்களோ அல்லது நுகர்வோரோ இதன் மூலம் பாதிக்கப்பட மாட்டார்கள்.</p><p>*இந்த MDR கட்டணத்தை வாடிக்கையாளர்கள் மீது வணிகர்கள் சுமத்தக்கூடாது என வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.</p><h2><strong>கட்டணம் வசூலிப்பதன் நோக்</strong>கம்</h2><p>இந்தக் கட்டணம் அரசுக்கோ அல்லது UPI அமைப்பை இயக்கும் NPCI நிறுவனத்திற்கோ செல்லும் வரி அல்ல என்றும் நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. UPI கட்டமைப்பு, தொழில்நுட்ப பராமரிப்பு மற்றும் வங்கிகளின் செயல்பாட்டுச் செலவுகளை ஈடுகட்டவே இந்த நிதி பயன்பாட்டுப் பங்கேற்பாளர்களுக்கு இடையே பகிர்ந்தளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>விஜய் சேதுபதியை தனிப்பட்ட முறையில் யாரும் தாக்க வேண்டாம் - இயக்குநர் சீனு ராமசாமி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-one-should-attack-vijay-sethupathi-personally-director-seenu-ramasamy</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-one-should-attack-vijay-sethupathi-personally-director-seenu-ramasamy#comments</comments><guid isPermaLink="false">3021c4a6-800b-4bff-a089-140c47386e5c</guid><pubDate>Wed, 16 Sep 2026 10:58:46 +0000</pubDate><atom:updated>2026-09-16T10:58:46.583Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>நடிகர் விஜய் சேதுபதி,Actor vijay Sethupathi,Bigg Boss,பிக்பாஸ்,Director Seenu Ramasamy,இயக்குநர் சீனு ராமசாமி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/5wba6xdf/New-Project-2026-09-16T162628.003.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விஜய் சேதுபதியை தனிப்பட்ட முறையில் யாரும் தாக்க வேண்டாம் - இயக்குநர் சீனு ராமசாமி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/5wba6xdf/New-Project-2026-09-16T162628.003.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தலைமைத்துவம் குறித்த<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/dharmadurai-completes-10-years-did-it-leave-a-lasting-impression-on-the-audience-director-seenu-ramasamys-post"> நடிகர் விஜய் சேதுபதி</a>யின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், அவசரப்பட்டு அவர்மீது தனிநபர் தாக்குதலை தொடுக்கவேண்டாம் என மக்களிடம் இயக்குநர் சீனு ராமசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்.,</p><p>“அனைவருக்கும் அன்பான வணக்கம். விஜய் சேதுபதியை உள்ளும், புறமும் நன்கறிவேன். எதையும் நேர்பட கண்கள் பார்த்து சொல்லக் கூடிய மனிதன்; மறைந்திருந்து தாக்கும் குணம் கொண்ட மனிதன் அல்ல. உண்மையில் தமிழ்நாடு சட்டசபை நிகழ்ச்சிகளை மக்கள் அதிகமாக பார்க்கிறார்கள்.</p><h2>அரசியல் சாயம்</h2><p>மற்ற ஓடிடி, சினிமா, இணையதள செயல்பாடுகள் எல்லாம் சட்டசபை காலங்களிலேயே மந்தமாகிவிட்டது, இதுதான் உண்மை. பிக்பாஸ் நிகழ்ச்சியை கொஞ்சம் அரசியல் சாயம் பூசி விட்டால் மக்களின் கவனத்தை பெற விடலாம் என்று அதை நடத்துபவர்கள் நினைத்திருக்கலாம்.</p><p>ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் சொல்லப்படும் ஒரு வசனத்தை எடுத்துக்கொண்டு இவ்வளவு சீரியஸாக ரியாக்ட் பண்ண வேண்டிய அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன். </p><p>அதை வைத்து அவரைத் தனிப்பட்ட முறையில் தாக்குவது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இன்று இந்தியா முழுக்க நன்கறிந்த பெருமைக்குரிய கலைஞன் சேது.</p><h2>வில்லன் கதாபாத்திரங்களிலும்...</h2><p>ஊக்கப்படுத்தப்பட்ட பல படங்களில் கெஸ்ட் ரோல் நடித்தவர், தனக்குப் பிடித்த பெரிய நடிகர்களின் படங்களிலேயே இமேஜ் பார்க்காமல் வில்லனாகவும் நடித்தவர், நிறைய புதிய இயக்குநர்களோடு பயணித்தவர், 100 மூத்த திரைத் தொழிலாளர்களுக்கு 100 சவரன் தங்கம் தந்தவர், பல படங்கள் சிக்கலில் சிக்கியபோது தன் சம்பளத்தை விட்டுக்கொடுத்து உதவியவர். </p><p>முன்பின் தெரியாத பலருக்கும் நன்மைகள் செய்த மனிதன் விஜய் சேதுபதி. ஆகவே அவசரப்பட்டு தனிப்பட்ட முறையில் அவரை யாரும் தாக்க வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சூடானில் தங்கம் வெட்டியெடுக்கும் சுரங்கம் இடிந்து விபத்து: 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பரிதாப பலி</title><link>https://www.maalaimalar.com/news/world/sudan-il-illegal-gold-mine-collapse-over-60-workers-killed</link><comments>https://www.maalaimalar.com/news/world/sudan-il-illegal-gold-mine-collapse-over-60-workers-killed#comments</comments><guid isPermaLink="false">1aa5f9ee-d086-4cc3-88eb-e5f3ec34dffd</guid><pubDate>Wed, 16 Sep 2026 10:33:54 +0000</pubDate><atom:updated>2026-09-16T10:33:54.040Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sudan,சூடான்,West Kordofan,al-Nuhud,தங்கம் சுரங்கம்,அல்-நூஹுத்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/doexbvy7/gold.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sudan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/doexbvy7/gold.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சூடானில் வெட்டியெடுக்கப்படும் பெரும் அளவிலான தங்கம் முறையான அரசாங்க பதிவுகளின்றி சட்டவிரோதமாக அண்டை நாடுகளுக்கு கடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. </p><p>ஆப்பிரிக்க நாடான சூடானின் மேற்கு கோர்டோஃபான் பிராந்தியத்தில் இயங்கி வந்த சட்டவிரோத தங்க சுரங்கம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில், 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>அல்-நூஹுத் நகருக்கு வடக்கே உள்ள தொலைதூர கிராமப்புறப் பகுதியில் அமைந்துள்ள இந்தச் சுரங்கத்தில், ஞாயிற்றுக்கிழமை தொழிலாளர்கள் தங்கத் தாதுக்களை வெட்டியெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக இடிபாடு ஏற்பட்டது. பகுதி மிகவும் தொலைதூரத்தில் அமைந்துள்ளதாலும், மீட்பு சாதனங்கள் போதுமான அளவு இல்லாததாலும் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது. உள்ளூர் வட்டாரங்கள் அளித்துள்ள தகவலின்படி, இதுவரை 60-க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p><h2>பா<strong>துகாப்பற்ற கைவினை சுரங்கங்க</strong>ள்</h2><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/ipl-2027-auction-to-be-held-in-india">சூடான்</a> ஆப்பிரிக்க கண்டத்தில் அதிக அளவில் தங்கம் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. எனினும், நாட்டின் பெரும்பாலான தங்க உற்பத்தி முறையான அனுமதி அல்லது பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் இல்லாத பாரம்பரிய மற்றும் கைவினைச் சுரங்க முறைகளையே நம்பியுள்ளது. இத்தகைய சுரங்கங்களில் எந்தவிதமான கட்டமைப்பு பாதுகாப்போ, அவசர கால பாதுகாப்பு வசதிகளோ இல்லாததால், நிலச்சரிவு மற்றும் சுரங்க இடிபாடுகள் அடிக்கடி நிகழும் அபாயகரமான சூழல் நிலவுகிறது.</p><p>சூடானில் வெட்டியெடுக்கப்படும் பெரும் அளவிலான தங்கம் முறையான அரசாங்க பதிவுகளின்றி சட்டவிரோதமாக அண்டை நாடுகளுக்கு கடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. போதிய தொழிலாளர் பாதுகாப்பு நடைமுறைகள் அமல்படுத்தப்படாததும், தொலைதூர பகுதிகளில் உள்ள சுரங்கங்களை கண்காணிக்க போதிய அரசு அமைப்புகள் இல்லாததுமே இத்தகைய தொடர் மனித உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணமாக அமைகிறது என சமூக ஆர்வலர்களும் நிபுணர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/districts-in-tamil-nadu-likely-to-experience-heavy-rain</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/districts-in-tamil-nadu-likely-to-experience-heavy-rain#comments</comments><guid isPermaLink="false">68859268-5c7e-4ad3-a3c4-1c8601164f7b</guid><pubDate>Wed, 16 Sep 2026 10:24:35 +0000</pubDate><atom:updated>2026-09-16T10:24:35.904Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,Chennai Rain,சென்னை மழை,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/ts1ns5rt/rain005.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மழை]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/ts1ns5rt/rain005.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை, மிதமான மழை பெய்யும் என எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட மற்றும் தென் தமிழகத்தின் பல பகுதிகள், புதுவை, காரைக்கால் ஆகிய இடங்களில் 40-50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.</strong></em></p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>சுமார் 0.9 கிமீ உயரத்தில் வடக்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தெற்கு உள் கர்நாடகா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><p>சுமார் 1.5 கிமீ உயரத்தில் தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய ராயலசீமா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.</p><h2><strong>கனமழை</strong></h2><p>இன்று நீலகிரி, கோயம்புத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் விழுப்புரம், சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>நாளை நீலகிரி, கோயம்புத்தூர், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சேலம், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>18-ந்தேதி நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>19-ந்தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் ஏனைய வட தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>20-ந்தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.</p><p>ஏனைய வட தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தென் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>இன்று தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு அந்தமான் கடல் பகுதிகள், இதர தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>நாளை தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலின் தென் பகுதிகள் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு அந்தமான் கடல் பகுதிகள், இதர தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>18-ந்தேதி தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>அடுத்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தை இந்தியாவில் நடத்த முடிவு: ஐ.பி.எல். நிர்வாகம்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/ipl-2027-auction-to-be-held-in-india</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/ipl-2027-auction-to-be-held-in-india#comments</comments><guid isPermaLink="false">11d5ab6d-b8f2-44bc-a654-e3f34a2cb423</guid><pubDate>Wed, 16 Sep 2026 09:49:04 +0000</pubDate><atom:updated>2026-09-16T09:49:04.367Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>IPL auction,ஐபிஎல் ஏலம்,IPL 2027,ஐபிஎல் 2027</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/yxq7d35i/IPL.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ipl auction]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/yxq7d35i/IPL.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அடுத்த ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலத்தை இந்தியாவில் நடத்த ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.</strong></em></p><p>இந்தியாவில் நடந்து வரும் ஐ.பி.எல். தொடரின் மூலம் சிறந்த வீரர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் இந்திய அணியில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.</p><p>இதற்கான வீரர்களை தேர்வு செய்வதற்காக ஏலம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2023-ம் ஆண்டு ஐ.பி.எல். ஏலம் இந்தியாவில் நடத்தப்பட்டது.</p><p>அதன்பின் 2024, 2025, 2026-ம் ஆண்டுகளில் ஐ.பி.எல். ஏலங்கள் துபாய், ஜெட்டா, அபுதாபி போன்ற வெளிநாடுகளில் நடத்தப்பட்டன. </p><p>இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலத்தை இந்தியாவில் நடத்த ஐ.பி.எல். நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு மினி ஏலம் நடத்தப்பட உள்ளது.</p><p>அணிகளின் நிர்வாகக் குழுவினர் வெளிநாடு செல்வதில் ஏற்பட்ட நடைமுறை சிக்கல்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.</p><p>ஏலம் இந்தியாவில் நடைபெறுவது உறுதியாகிவிட்டாலும், எங்கு நடக்கும் என முடிவாகவில்லை.</p><p>2028-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். மெகா ஏலம் வெளிநாட்டில் நடத்தப்படலாம் என தெரிவித்துள்ளது.</p><p>வெளிநாடுகளில் நடத்தப்பட்ட ஐ.பி.எல். ஏலம் மீண்டும் இந்தியாவிற்கு திரும்ப உள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>ஆசிய விளையாட்டில் மகளிர் கிரிக்கெட் நாளை தொடக்கம்: இந்தியா- ஜப்பான் கால் இறுதியில் மோதல்</title><link>https://www.maalaimalar.com/sports/womens-cricket-asian-games-india-vs-japan-quarterfinal</link><comments>https://www.maalaimalar.com/sports/womens-cricket-asian-games-india-vs-japan-quarterfinal#comments</comments><guid isPermaLink="false">68431d10-db8c-4350-b434-5f121bc511f6</guid><pubDate>Wed, 16 Sep 2026 09:47:37 +0000</pubDate><atom:updated>2026-09-16T09:47:37.700Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய மகளிர் கிரிக்கெட்,ஆசிய விளையாட்டு போட்டி,இந்தியா ஜப்பான்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/o79op9fj/INDvsJPN.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Indian Womens Team]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/o79op9fj/INDvsJPN.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>20-வது ஆசிய விளையாட்டு போட்டி  ஜப்பானில் உள்ள அய்சி - நகோயா நகரில் வருகிற 19-ந்தேதி  முதல் அக்டோபர் 4-ந் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 43 விளையாட்டுகள் 71 வகையில் 469 பிரிவில் நடைபெறுகிறது. </p><h2>மகளிர் கிரிக்கெட் நாளை தொடக்கம் </h2><p>ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிர் கிரிக்கெட்  நாளை (17- ந் தேதி) தொடங்குகிறது. 20 ஓவருக்கான  இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், மலேசியா, சீனா, ஜப்பான், தாய்லாந்து  ஆகிய  8 நாடுகள் பங்கேற்கின்றன.</p><p>நாக் அவுட் முறையில் போட்டி நடத்தப்படுகிறது.  நேரடியாக கால் இறுதி தொடங்குகிறது.</p><h2>இந்தியா-ஜப்பான்</h2><p>ஹர்மன்பிரீத் கவூர் தலைமையிலான இந்திய அணி கால் இறுதியில் ஜப்பானை எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது.</p><p>இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்புதான் ஆசிய கோப்பையை கைப்பற்றியது. இதனால் ஆசிய விளையாட்டில் தங்க பதக்கம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>2022-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கம் வென்றது. தற்போது சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ளும் ஆர்வத்தில் உள்ளது.</p><p>ஆசிய கோப்பை போட்டியில் ஷபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, ஸ்ரீசரணி, திப்தி சர்மா சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி இருந்தனர்.</p><h2>இலங்கை- மலேசியா</h2><p>நாளை அதிகாலை 5.30 மணிக்கு நடைபெறும் கால் இறுதியில் இலங்கை-மலேசியா அணிகள் மோதுகின்றன. நாளை மறுநாள் (18-ந் தேதி) நடைபெறும் கால் இறுதி ஆட்டங்களில் சீனா- வங்காளதேசம், பாகிஸ்தான்- தாய்லாந்து அணிகள் மோதுகின்றன. 20-ந்தேதி அரை இறுதி போட்டியும், 22-ந்தேதி இறுதிப் போட்டியும் நடக்கிறது.</p><h2>ஆண்கள் பிரிவு</h2><p>ஆண்கள் பிரிவு கிரிக்கெட் 24-ந்தேதி தொடங்குகிறது. கடந்த ஆசிய விளையாட்டில் இந்திய அணி தங்கம் வென்று இருந்தது.</p><p>ஷ்ரேயஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணி நேரடியாக கால் இறுதியில் விளையாடுகிறது. 28-ந்தேதி இந்திய அணி ஆடுகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/vijay-sethupathis-maharaja-to-be-remade-in-hollywood</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/vijay-sethupathis-maharaja-to-be-remade-in-hollywood#comments</comments><guid isPermaLink="false">0dfc01e1-9d37-4e49-b284-14caa65826b3</guid><pubDate>Wed, 16 Sep 2026 09:47:15 +0000</pubDate><atom:updated>2026-09-16T09:47:15.538Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Hollywood,maharaja,விஜய் சேதுபதி,Vijay sethupathi,மகாராஜா,ஹாலிவுட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/9jrl91py/New-Project-2026-09-16T145115.245.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/9jrl91py/New-Project-2026-09-16T145115.245.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் கடந்த 2024ம் ஆண்டு வெளியான ‘<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/maharaja-film-wins-two-national-awards">மகாராஜா</a>’ திரைப்படம், ஹாலிவுட்டில் மறுதயாரிப்பு செய்யப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. </p><h2>மகாராஜா </h2><p>நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப்,  நடிகை சாச்சனா நமிதாஸ், திவ்ய பாரதி, அபிராமி, சிங்கம் புலி, முனிஷ்காந்த், நட்டி நடராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த படம் ‘மகாராஜா’.</p><p>தி ரூட் , திங்க் ஸ்டுடியோஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு, அஜனீஸ் லோக்நாத் இசையமைத்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. </p><h2>ஹாலிவுட் ரீமேக்</h2><p>இந்தியாவில் மட்டுமின்றி சீனாவிலும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றநிலையில், ஹாலிவுட்டில் மறுதயாரிப்பு செய்யப்படவுள்ளது. மகாராஜா திரைப்படம் சீனாவில் 91.65 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. </p><p>மேலும், இப்படம் வெளிநாடுகளில் உள்ள ஓடிடி தளங்களிலும் பிரபலமடைந்தது.</p><p>தயாரிப்பாளர் சுதன் சுந்தரத்தின் தகவல்களின்படி, படத்தை ரீமேக் செய்யவுள்ள நிறுவனம் விஜய் சேதுபதிக்கான கதாபாத்திர தேர்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், மேலும் அடுத்த ஆண்டு படப்பணிகள் தொடங்கும் என்றும் தெரியவந்துள்ளது.</p><p>பெரும்பாலும் ஹாலிவுட் புகழ் மேத்யூ  மெக்கோனாஹே தேர்வாக வாய்ப்புள்ளதாக இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. </p>]]></content:encoded></item><item><title>தாய்மாமன் தங்க மோதிர திட்டம்: செப்.25-ந்தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thaimaman-gold-ring-thittam-cm-vijay-to-launch-it-on-september-25th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thaimaman-gold-ring-thittam-cm-vijay-to-launch-it-on-september-25th#comments</comments><guid isPermaLink="false">c103d95e-fd0f-4275-9b1b-51ba301f6a6e</guid><pubDate>Wed, 16 Sep 2026 09:33:12 +0000</pubDate><atom:updated>2026-09-16T09:33:12.314Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,மதுரை,madurai,thaimaman gold ring scheme,தாய்மாமன் தங்க மோதிர திட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/ue0xvdm0/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/ue0xvdm0/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p> தாய்மாமன் தங்க மோதிர திட்டம் செப்டம்பர் 25-ந்தேதி தொடங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. </p><p>தவெக அரசின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான 'தாய்மாமன் சீர் திட்டம்' செப்டம்பர் 15-ந்தேதி, பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளன்று முறைப்படி தொடங்கி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-chennai-return-tomorrow-morning">முதலமைச்சர் விஜயின்</a> லண்டன் பயணம் காரணமாக இந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. </p> <p>இந்நிலையில் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் செப்டம்பர் 25-ந்தேதி தொடங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தை மதுரையில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/breakfast-scheme-expansion-will-chief-minister-vijay-launch-it-in-perambur-on-the-22nd">முதலமைச்சர் விஜய்</a> தொடங்கி வைக்கிறார்.</p><p>தமிழக பாரம்பரிய மரபின்படி, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்மாமனின் அன்பளிப்பாக 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.  </p> <p>ஜூன் 22, 2026 முதல் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு இத்திட்டம் பொருந்தும். ஆண்டுதோறும் சுமார் ரூ. 755.83 கோடி இத்திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. </p><p>அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தை ஊக்குவிக்கவும், ஏழை எளிய குடும்பங்களின் தாய்மையின் மகிழ்ச்சியைக் கௌரவிக்கும் வகையிலும் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>விஜய் சேதுபதியின் ‘பத்தா’ டீசர் வெளியானது!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/vijay-sethupathis-paththa-teaser-released</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/vijay-sethupathis-paththa-teaser-released#comments</comments><guid isPermaLink="false">2d028353-1bbd-4e97-a2b1-a8824fee5c8d</guid><pubDate>Wed, 16 Sep 2026 09:13:50 +0000</pubDate><atom:updated>2026-09-16T09:13:50.655Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>லிஜோமோல் ஜோஸ்,lijomol jose,விஜய் சேதுபதி,Vijay sethupathi,Baththa,பத்தா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/l208ut0q/New-Project-2026-09-16T143649.046.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விஜய் சேதுபதியின் ‘பத்தா’ டீசர் வெளியானது!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/l208ut0q/New-Project-2026-09-16T143649.046.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாலாஜி தரணிதரன் எழுத்து மற்றும் இயக்கத்தில் <a href="https://www.maalaimalar.com/news/topnews/a-leader-is-not-someone-who-bolts-at-the-first-sign-of-trouble-did-vijay-sethupathi-criticize-chief-minister-vijay">விஜய் சேதுபதி</a> முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளப் படம் ‘பத்தா’. </p><p>சினி ஒன் ஸ்டூடியோஸ், ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். </p><p>இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து லிஜோ மோல் ஜோஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.</p><p>இந்நிலையில் இன்று படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. </p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/Dt4476TjEo0"></iframe></figure>]]></content:encoded></item><item><title>ரூ.13½ லட்சம் கோடி கடன் இருக்கும்போது புதிதாக தலைமைச் செயலகம் தேவையா? - சீமான் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/seeman-says-is-a-new-secretariat-necessary-when-there-is-a-debt-of-rs-13-5-lakh-crore</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/seeman-says-is-a-new-secretariat-necessary-when-there-is-a-debt-of-rs-13-5-lakh-crore#comments</comments><guid isPermaLink="false">d53e8fdd-3a9d-4794-a523-c4ab150d9452</guid><pubDate>Wed, 16 Sep 2026 08:49:04 +0000</pubDate><atom:updated>2026-09-16T08:49:04.524Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Seeman,naam tamilar katchi,New Secretariat,சீமான்,நாம் தமிழர் கட்சி,புதிய தலைமைச் செயலகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/k7ao2to1/seeman.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Seeman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/k7ao2to1/seeman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>புதிதாக தலைமைச் செயலகத்தை கட்டுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று சீமான் கூறினார்.</p><p>நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">சீமான்</a> இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- </p><p>13½ லட்சம் கோடி கடன் இருப்பதாக தமிழக அரசுதான் நிதிநிலை அறிக்கையில் கூறியிருந்தது. வட்டிக்கு கடன் வாங்கி வாங்கிய கடனுக்கு வட்டிக் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் எதற்கு புதிய தலைமைச் செயலகம்? தற்போதுள்ள தலைமைச் செயலகத்தில் பல மேதைகள் அமர்ந்து ஆகச்சிறந்த சட்டங்களையும் திட்டங்களையும் தீட்டியிருக்கிறார்கள். </p> <p>ஒருவேளை, தலைமைச் செயலகத்துக்கு அவசியம் ஏற்பட்டால் கருணாநிதி கட்டிய ஓமந்தூரார் மருத்துவமனை இருக்கும் கட்டிடத்தை பயன்படுத்தலாம். அதற்காக மருத்துவமனையை வேண்டுமானால் வேறு இடத்திற்கு மாற்றலாம். புதிதாக தலைமைச் செயலகத்தை கட்டுவதற்கு அனுமதிக்க மாட்டோம்.</p> <p>நடிகர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF">விஜய்சேதுபதி </a>தெரிவித்தது, பொதுவான கருத்து. அவர் குறிப்பிட்டது இதற்கு முன்பிருந்த அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும். தலைவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும் என்பதைதான் தம்பி விஜய்சேதுபதி தெரிவித்திருந்தார். அதனை விமர்சிப்பது சரியாக இருக்காது.</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>SIIMA விருதுகள்: டூரிஸ்ட் பேமிலி’ படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை வென்றார் சிம்ரன்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/evergreen-actress-simran-clinches-siima-2026-best-actress</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/evergreen-actress-simran-clinches-siima-2026-best-actress#comments</comments><guid isPermaLink="false">59de693c-aef1-4408-a0b6-0abd89e479ed</guid><pubDate>Wed, 16 Sep 2026 08:38:06 +0000</pubDate><atom:updated>2026-09-16T08:38:06.826Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>Tourist Family,SIIMA விருது வழங்கும் விழா,Simran,சிம்ரன்,Best actress award,SIIMA2026,சிறந்த நடிகை,டூரிஸ்ட் பேமிலி,SIIMA Awards</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/t9ibwfp0/Simran" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Simran]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/t9ibwfp0/Simran?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தென்னிந்திய திரையுலகின் முன்னணி மற்றும் எவர்கிரீன் நடிகைகளில் ஒருவரான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">சிம்ரன்</a>, டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தில் தனது அசாத்திய மற்றும் இயல்பான நடிப்பிற்காக SIIMA 2026-ல் சிறந்த நடிகைக்கான மதிப்புமிக்க விருதைத் தட்டிச் சென்றுள்ளார். </p><p>பெங்களூரில் நடைபெற்ற இந்த விருது விழாவில் ஒட்டுமொத்தப் படக்குழுவினரும் கலந்துகொண்டு தங்களது மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.</p><h2><strong>எவர்கிரீன் நடிகை</strong></h2><p>திரையுலகில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தனக்கான ஒரு வலுவான மற்றும் அழுத்தமான கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்து நடித்திருந்தார் சிம்ரன். </p><p>'<a href="https://www.maalaimalar.com/topic/tourist-family">டூரிஸ்ட் பேமிலி</a>' படத்தில் ஒரு நடுத்தரக் குடும்பத்தின் எதார்த்தமான சூழலையும், உணர்வுகளையும் மிக நேர்த்தியாகத் தனது நடிப்பில் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.</p><p>ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே இந்த கதாபாத்திரம் பெரும் பாராட்டுகளைப் பெற்ற நிலையில், தற்போது அதற்கான மிகச்சிறந்த அங்கீகாரமாக இந்த <strong>சைமா விருது</strong> கிடைத்துள்ளது. </p><p>பல ஆண்டுகளாகத் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாகத் திகழும் சிம்ரனுக்கு, இந்த வெற்றி அவரது திரைப்பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லாகும்.</p><h2><strong>அள்ளிக் குவித்த 6 சைமா விருதுகள்!</strong></h2><p>பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">சசிகுமார்</a> மற்றும் சிம்ரன் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியான 'டூரிஸ்ட் பேமிலி' திரைப்படம் SIIMA 2026 விருது விழாவில் மொத்தம் 6 விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.</p><ul><li><p>சிறந்த படம் (Best Film)</p></li><li><p>சிறந்த இயக்குநர் (Best Director)</p></li><li><p>சிறந்த அறிமுக இயக்குநர் (Best Debut Director) - அபிஷன் ஜீவிந்த்</p></li><li><p>சிறந்த முதன்மை நடிகர் (Best Lead Actor)</p></li><li><p>சிறந்த நடிகை (Best Actress) - சிம்ரன்</p></li><li><p>சிறந்த திரைக்கதை மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகள்</p></li></ul><p>இதன் மூலம் இந்த ஆண்டின் சைமா விழாவில் அதிக விருதுகளைப் பெற்ற தமிழ் திரைப்படம் என்ற பெருமையையும் இத்திரைப்படம் பெற்றுள்ளது.</p><h2><strong>படைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம்</strong></h2><p>ஒரு திரைப்படத்தின் உண்மையான வெற்றி என்பது அதன் வசூலைத் தாண்டி, அதில் உழைத்த திறமைகளுக்குக் கிடைக்கும் அங்கீகாரத்தில்தான் உள்ளது. தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியன் தயாரிப்பில் உருவான இத்திரைப்படம், கோவிட் சூழலுக்குப் பிந்தைய ஒரு புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் குடும்பத்தின் வாழ்வியலை நகைச்சுவை மற்றும் எதார்த்தமான பாணியில் பேசியிருந்தது.</p><p>படக்குழுவினரின் இந்த அசாத்திய கூட்டு உழைப்பிற்கு ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>5 லட்சம் போலி ஜிமெயில் கணக்குகள் மூலம் பரப்பப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்: கூகுளிடம் விளக்கம் கேட்கும் இந்திய காவல்துறை!</title><link>https://www.maalaimalar.com/news/world/500000-fake-gmail-accounts-bomb-threats-indian-police-questions-google</link><comments>https://www.maalaimalar.com/news/world/500000-fake-gmail-accounts-bomb-threats-indian-police-questions-google#comments</comments><guid isPermaLink="false">048d14c9-0742-4b44-9147-15ae009bd94e</guid><pubDate>Wed, 16 Sep 2026 08:37:13 +0000</pubDate><atom:updated>2026-09-16T08:37:13.711Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Google,குஜராத்,gujarat,Bomb threats,Cyber ​​Crime,ஜிமெயில்,சைபர் கிரைம்,fake Gmail accounts</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/q0qycu9l/google.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Google]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/q0qycu9l/google.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பொதுவாக ஒரு ஜிமெயில் கணக்கை உருவாக்கவும், பாதுகாப்பாகப் பயன்படுத்தவும் இருபடி சரிபார்ப்பு முறை அவசியமாகும். </p><p>குஜராத் மாநிலத்தில் அரசு அலுவலகங்களுக்கு அடுத்தடுத்து வந்த போலி வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வந்த சைபர் கிரைம் காவல்துறை, இதன் பின்னணியில் இருந்த மிகப்பெரிய குற்றப் பின்னணி வலையமைப்பை கண்டறிந்து முடக்கியுள்ளது. சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட போலி ஜிமெயில் கணக்குகளை உருவாக்கி, அவற்றின் மூலம் இந்த மிரட்டல்கள் விடுக்கப்பட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p><h2>பிரி<strong>க்ஸ் உச்சிமாநாட்டிற்கு அச்சுறுத்த</strong>ல்</h2><p>கடந்த 10-ஆம் தேதி, டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு சில நாட்களுக்கு முன்பு, <a href="https://www.maalaimalar.com/sports/rinku-singh-priya-saroj-to-tie-the-knot-in-december">குஜராத் அரசு </a>அலுவலகங்களுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அத்துடன் பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியாவுடன் ஒத்துழைக்கும் நாடுகளுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. இந்த மின்னஞ்சல்களைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர சோதனையில், அவை அனைத்தும் போலியானவை என்பது உறுதி செய்யப்பட்டது.</p><h2><strong>5 லட்சம் போலி ஜிமெயில் கணக்குகள்</strong></h2><p>வழக்கை விசாரித்த குஜராத் சைபர் கிரைம் காவல்துறையினர், இந்த விவகாரம் தொடர்பாக இருவரைக் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், 2022-ஆம் ஆண்டு முதல் சுமார் 5,13,847 போலி ஜிமெயில் கணக்குகள் மற்றும் அவற்றின் கடவுச்சொற்களை உருவாக்கி ஒரு சர்வதேச நெட்வொர்க் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த போலி கணக்குகள் வங்காளதேசத்தைச் சேர்ந்த நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு, அதன் மூலம் கிரிப்டோகரன்சி வடிவில் பணம் பெறப்பட்டதும் தெரியவந்துள்ளது.</p><h2><strong>கூகுள் நிறுவனத்தின் குறைபாடுகள்</strong></h2><p>பொதுவாக ஒரு ஜிமெயில் கணக்கை உருவாக்கவும், பாதுகாப்பாகப் பயன்படுத்தவும் இருபடி சரிபார்ப்பு முறை அவசியமாகும். ஆனால், இந்த போலி கணக்குகள் அனைத்திலும் இந்த பாதுகாப்பு முறையை குற்றவாளிகள் எவ்வாறு எளிதாக கடந்து சென்றார்கள் என்பது காவல்துறைக்கு பெரும் கேள்வியாக உருவெடுத்துள்ளது. </p><p>இதனைத் தொடர்ந்து, தங்களது தளத்தில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்யவும், கொள்கை மாற்றங்களைச் செய்யவும் வலியுறுத்தி கூகுள் நிறுவனத்திற்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் எழுத குஜராத் காவல்துறை முடிவு செய்துள்ளது. மேலும், இந்த வழக்கின் விசாரணையில் கூகுள் நிறுவனத்தையும் ஒரு தரப்பாக சேர்க்க திட்டமிட்டுள்ளனர். </p><p>இந்தியாவில் ஆன்லைன் மற்றும் தொழில்நுட்பக் குற்றங்கள் மூலம் ஆண்டுதோறும் பில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பு ஏற்படும் நிலையில், கூகுள் போன்ற சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களின் பாதுகாப்பு நடைமுறைகள் தற்போது கேள்வி குறியாகியுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>ஜப்பானில் வரலாற்றுச் சாதனை: 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியது!</title><link>https://www.maalaimalar.com/news/world/japan-makes-history-with-over-100000-people-aged-100-plus</link><comments>https://www.maalaimalar.com/news/world/japan-makes-history-with-over-100000-people-aged-100-plus#comments</comments><guid isPermaLink="false">99162cbc-ea2e-4bf3-868f-eaf3cd9aae9a</guid><pubDate>Wed, 16 Sep 2026 08:32:04 +0000</pubDate><atom:updated>2026-09-16T08:32:04.178Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>japan,ஜப்பான்,100 வயது,நீண்ட ஆயுள்,100 years,Aged people</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/pjxtovxr/Japan.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Japan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/pjxtovxr/Japan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலகில் நீண்ட ஆயுள் காலம் கொண்ட நாடாக உள்ள ஜப்பானில் முதல் முறையாக 100 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்து உள்ளது. </p><p>இம்மாத நிலவரப்படி, 100 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 56-வது ஆண்டாக அதிகரித்து 1,07,677-யை எட்டியுள்ளது.</p><p>இது கடந்த ஆண்டை விட சுமார் 8 ஆயிரம் அதிகம் என்று சுகாதார, தொழிலாளர் மற்றும் நலத்துறை அமைச்சகம் தெரிவித்தது.</p><p>இவர்களில் 88 சதவீதம் பேர் பெண்கள் ஆவார்கள். இதில், கியோட்டோவைச் சேர்ந்த 114 வயது பூயோ கிஷிமோட்டோ, குமாமோட்டோவைச் சேர்ந்த 112 வயது ஹிகாரு கட்டோ ஆகியோரும் அடங்குவர் என்று அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>ஜப்பானில் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் சரிவு இருந்து வருகிறது. அங்கு பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நிலையில் 100 வயதுப் பிரிவில் மட்டும்  எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>ஆரோக்கியமான உணவு முறைகள், மேம்பட்ட சுகாதார அமைப்பு ஆகியவை ஜப்பான் மக்களின் நீண்ட ஆயுளுக்குக் காரணம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.</p> ]]></content:encoded></item></channel></rss>