<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 21 Jul 2026 05:11:54 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-21-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-21-july-2026#comments</comments><guid isPermaLink="false">e1a983bf-6930-4a96-8d7d-aee2f254884f</guid><pubDate>Tue, 21 Jul 2026 04:01:21 +0000</pubDate><atom:updated>2026-07-21T04:59:24.742Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/4243r6xf/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/4243r6xf/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/sports/single-call-from-virat-kohli-pv-sindhu-back-on-record-breaking-path-with-japan-open-title">விராட் கோலியின் ஒரே ஒரு போன் கால்: ஜப்பான் ஓபன் வெற்றியுடன் சாதனைப் பாதைக்குத் திரும்பிய பி.வி.சிந்து!...</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/3d3bc2a1-17f0-450c-8f98-a70fff36d1f4">நெல் கொள்முதலில் தொடரும் கையூட்டு: குவிண்டாலுக்கு ரூ.325 பறிப்பதைத் தடுக்க அன்புமணி வலியுறுத்தல்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/09a0f3aa-bfc4-4f11-9908-070d3eb4e781">GOLD PRICE TODAY: நாளுக்கு நாள் ஏறும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/diljit-dosanjh-supports-student-protests-despite-anti-national-tag-fears">'மீண்டும் என்னை தேசவிரோதி என்பார்கள்': மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த தில்ஜித் தோசாஞ்ச்!...</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/7b73f680-bc22-4187-be2e-eb93e6e20d27">தனது 83 ஆவது பிறந்தநாள் விழா ரத்து செய்யப்படுகிறது!- வைகோ</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/sikkim-tunnel-landslide-rescue-27-workers-trapped-methane-leak-hampers-operations">Sikkim: நிலச்சரிவால் சுரங்கப்பாதைக்குள் 27 தொழிலாளர்கள் சிக்கித் தவிப்பு - மீத்தேன் வாயு கசிவால் மீட்பதில் சிக்கல்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/cjp-dharna-continues-protest-march-to-parliament-over-dharmendra-pradhan-resignation-keeps-delhi-on-edge">இன்றும் பாராளுமன்றம் நோக்கி பேரணி தொடரும் - CJP அறிவிப்பு</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/6718ca4f-394f-4ce0-8f4d-f2a524f402dc">இங்கிலாந்து புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாமிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/ce5bfe19-8180-4674-acf1-75b69c84a40e">வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்- ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/0a27f43c-cc74-4fdc-8d32-fd9577d92fa3">கேபிள் டி.வி., டி.டி.எச். சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்த திட்டமா?- மத்திய அரசு விளக்கம்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/9f86052c-a139-4221-a893-68b35a1821b8">சென்னையில் நாளை (22.07.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்...</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/74493a2e-1175-4349-bd50-436bf3bd4bc3">போலி மருந்து தயாரிப்பு வழக்கில் 5 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு</a></p> ]]></content:encoded></item><item><title>விராட் கோலியின் ஒரே ஒரு போன் கால்: ஜப்பான் ஓபன் வெற்றியுடன் சாதனைப் பாதைக்குத் திரும்பிய பி.வி.சிந்து!</title><link>https://www.maalaimalar.com/sports/single-call-from-virat-kohli-pv-sindhu-back-on-record-breaking-path-with-japan-open-title</link><comments>https://www.maalaimalar.com/sports/single-call-from-virat-kohli-pv-sindhu-back-on-record-breaking-path-with-japan-open-title#comments</comments><guid isPermaLink="false">5ff3c63c-715f-4246-a996-551ddc7e1a26</guid><pubDate>Tue, 21 Jul 2026 04:57:05 +0000</pubDate><atom:updated>2026-07-21T04:57:05.634Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Virat Kohli,விராட் கோலி,pv sindhu,பேட்மிண்டன்,பி.வி.சிந்து,badminton</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/99lv5gcl/virat.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ virat-pv.sindhu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/99lv5gcl/virat.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் நட்சத்திரமான பி.வி. சிந்த ஜப்பான் ஓபன் சூப்பர் 750  தொடரின் இறுதிப்போட்டியில் ஜப்பானின் அகானே யமகுச்சியை வீழ்த்தி தனது முதல் சூப்பர் 750 பட்டத்தைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.</p><p>கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர் தோல்விகள், எலும்பு முறிவு  காயம் மற்றும் ஃபார்ம் இழப்பு போன்ற கடுமையான சவால்களைச் சந்தித்து வந்த பி.வி.சிந்துவின் இந்த பிரமாண்ட மீட்சிக்குக் காரணம், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியுடன் அவர் பேசிய ஒரு தொலைபேசி உரையாடல்தான் என்ற சுவாரசியமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.</p><h2><strong>சாம்பியன் பட்டம்:</strong></h2><p>இறுதிப்போட்டியில் ஜப்பானின் அகானே யமகுச்சியை 21-17, 21-17 என்ற நேர் செட்களில் வீழ்த்தி பி.வி. சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். 2024 சையத் மோடி சர்வதேச தொடருக்குப் பிறகு பி.வி.சிந்து கைப்பற்றும் முதல் முக்கியச் சர்வதேச பட்டம் இதுவாகும். தனது பேட்மிண்டன் வாழ்க்கையில் சிந்து வெல்லும் முதல் 'சூப்பர் 750' பட்டமும் இதுவே.</p><h2><strong>விராட் கோலியுடன் பேசிய தொலைபேசி உரையாடல்:</strong></h2><p>பாரிஸ் ஒலிம்பிக் தொடருக்குப் பிறகு ஃபார்ம் இல்லாமல் தவித்த பி.வி. சிந்து, மன அழுத்தத்தில் இருந்தபோது விளையாட்டு உலகத்தில் உச்சத்தைத் தொட்டு, பல விமர்சனங்களை எதிர்கொண்டு மீண்டும் மீண்டு வந்த விராட் கோலியைத் தொடர்புகொண்டு ஆலோசனைக் கேட்டுள்ளார்.</p><p>"நான் பட்டங்களை வெல்வதற்காக மட்டுமே என் வாழ்க்கையைத் தொடரவில்லை. விளையாட்டின் மீதான இயல்பான மகிழ்ச்சியைக் கண்டறியவே விரும்பினேன். மனதளவில் மிகவும் சோர்வடைந்திருந்த தருணத்தில் விராட் கோலியுடன் உரையாடினேன். உச்சக்கட்ட அழுத்தங்களையும், விமர்சனங்களையும் ஒரு விளையாட்டு வீரராக எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து அவர் அளித்த ஆலோசனைகளும் பார்வையும் தான் எனது மனநிலையை முற்றிலும் மாற்றியது".</p><p>"நாங்கள் என்ன பேசினோம் என்பது எப்போதும் எங்களுக்குள்ளேயே இருக்கும். ஆனால், எனக்கு ஒரு வழிகாட்டுதல் தேவைப்பட்ட அந்தத் தருணத்தில் அவர் எனக்கு ஆதரவாக நின்றதற்கு நான் என்றும் நன்றியுள்ளவளாக இருப்பேன். அவர் அதிக வார்த்தைகள் பேசவில்லை; ஆனால், அவர் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் எனக்கும் தத்தாவுக்கும் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. </p><p>சில உரையாடல்கள் நாம் உலகத்தைப் பார்க்கும் பார்வையையே முற்றிலும் மாற்றிவிடும்; எங்களுக்கு அந்த உரையாடல் அப்படிப்பட்டதுதான்." நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இந்த உரையாடலின் போது சிந்துவின் கணவர் தத்தாவும் உடனிருந்தார்.</p><h2><strong>காயத்தில் இருந்து மீண்ட கதை:</strong></h2><p>கால் எலும்பு முறிவு காயத்திலிருந்து மீண்டு வருவது சிந்துவுக்குப் பெரும் சவாலாக இருந்தது.மேலும், பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆரம்பக் கட்டத்திலேயே வெளியேறியது சிந்துவுக்குப் பலத்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. ஆனால், கடுமையான உடற்பயிற்சிகள், முறையான வழிகாட்டுதல் மற்றும் சரியான மனநிலையுடன் களம் கண்ட சிந்து, தற்போது ஜப்பான் ஓபன் தொடரைக் கைப்பற்றி தான் இன்னும் ஃபார்மில் தான் இருக்கிறேன் என்பதை உலகிற்கு நிரூபித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நெல் கொள்முதலில் தொடரும் கையூட்டு: குவிண்டாலுக்கு ரூ.325 பறிப்பதைத் தடுக்க அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-measures-to-prevent-the-deduction-of-rs-325-per-quintal</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-measures-to-prevent-the-deduction-of-rs-325-per-quintal#comments</comments><guid isPermaLink="false">3d3bc2a1-17f0-450c-8f98-a70fff36d1f4</guid><pubDate>Tue, 21 Jul 2026 04:56:15 +0000</pubDate><atom:updated>2026-07-21T04:56:15.981Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,நெல் கொள்முதல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/zxmts0af/Anbumaniramadoss01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/zxmts0af/Anbumaniramadoss01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>இனியும் தாமதிக்காமல் கொள்முதல் நிலைய சுரண்டல்களை தடுத்து, உழவர்களிடமிருந்து கையூட்டு இல்லாமல் உடனுக்குடன் நெல் வாங்கப்படுவதை அரசு உறுதி செய்யவேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.</aside><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>கவலை</strong></h2><p>தமிழ்நாடு முழுவதும், குறிப்பாக காவிரி பாசன மாவட்டங்களில் கோடை பருவ அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உழவர்களிடமிருந்து குவிண்டாலுக்கு ரூ.325 வரை கட்டாயமாகக் கையூட்டு பறிக்கப்படும் கொடுமை இன்னும் தொடர்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. உணவு அமைச்சர் மேற்கொண்ட கள ஆய்விலேயே கையூட்டு வசூலிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதைத் தடுக்க அரசுத் தரப்பில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படாதது கவலையளிக்கிறது.</p><p>காவிரி பாசன மாவட்டங்களில் 1.60 லட்சம் ஏக்கரில் கோடை பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. விளைந்த நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணி தீவிரமடைந்திருக்கும் நிலையில், அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்பனை செய்வது தான் உழவர்களுக்கு பெரும் துயரமாக மாறியிருக்கிறது. ஒருபுறம் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடப்பதால், உழவர்கள் தங்களில் நெல்லை விற்பனை செய்வதற்கு  ஒரு வாரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இன்னொருபுறம் கொள்முதல் நிலையங்களில் ஊழல் தொடர்கிறது.</p><h2><strong>முறைகேடுகள்</strong></h2><p>40 கிலோ எடை கொண்ட <a href="https://www.maalaimalar.com/topic/நெல்-கொள்முதல்">நெல் மூட்டையை</a> எடை வைத்து கொள்முதல் செய்வதற்கு கையூட்டாக ரூ.40 முதல் ரூ.60 வரை உழவர்கள் தர வேண்டியுள்ளது. இது தவிர ஒவ்வொரு மூட்டைக்கும் நிர்ணயிக்கப்பட்ட எடையான 40 கிலோவுக்கு பதிலாக கூடுதலாக எடை வைத்து கொள்முதல் செய்வதன் வாயிலாகவும், பதர்களைத் தூற்றுவதாகக் கூறி ஒன்றரை கிலோ வரையிலான நெல்லை ஒதுக்குவதன் வாயிலாகவும் 3 கிலோ நெல் கூடுதலாக வாங்கப்படுவதாக உழவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த வகையில் மட்டும் ஒரு குவிண்டாலுக்கு ரொக்கமாக ரூ.150, நெல்லாக ரூ.175 என மொத்தம்  ரூ.325 கையூட்டாக பறிக்கப்படுகிறது. தனியார் வணிகர்களை விட அரசு  கொள்முதல் நிலையங்களில் குவிண்டாலுக்கு அதிகபட்சமாக ரூ.500 முதல் ரூ.600 வரை கூடுதல் விலை கிடைக்கிறது என்பதால் தான் அரசு கொள்முதல் நிலையங்களைத் தேடி உழவர்கள் வருகிறார்கள். அதற்காக அவர்களை வாரக் கணக்கில் காத்திருக்க வைப்பதும், குவிண்டாலுக்கு ரூ.325 வரை கையூட்டாக பறித்துக் கொள்வதும் பெரும் அநீதி. இதே நிலை தொடர்ந்தால் உழவர்கள் தனியார் வணிகர்களிடம் நெல்லை விற்கத் தயாராகி விடுவார்கள்.அப்படி  ஒரு நிலை ஏற்பட்டால் நியாயவிலைக் கடைகளில் வழங்குவதற்கு அரிசியே கிடைக்காத நிலை உருவாகி விடும்.</p><p>காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதலில் முறைகேடுகள் நடப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை  தமிழக அரசு மறுக்க முடியாது. சில நாள்களுக்கு முன் கடலூர் மாவட்டத்தில் இது குறித்து ஆய்வு செய்த உணவுத் துறை அமைச்சர், நெல் விற்பனை செய்த உழவர் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுகிறார். கொள்முதலுக்காக கையூட்டு ஏதேனும் கொடுத்தீர்களா? என்று அமைச்சர் கேட்டபோது, எதிர்முனையில் இருந்த உழவர் முட்டைக்கு ரூ.50 கையூட்டு கொடுத்ததாக தெரிவிக்கிறார். இதைத் தொடர்ந்து உழவரிடம் கையூட்டு வாங்கிய கொள்முதல் நிலைய எழுத்தரை பணியிடை நீக்கம் செய்ய அமைச்சர் ஆணை பிறப்பிக்கிறார். இவற்றைப் பார்க்கும் போது நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழல் நடப்பதைத் தடுக்க வேண்டும் என ஆட்சியாளர்கள் விரும்புவதை புரிந்து கொள்ள முடிகிறது. அது வரவேற்கத்தக்கது. ஆனால், கொள்முதல் நிலைய  ஊழலுக்கான காரணங்களை கண்டுபிடித்து சரி செய்யாமல் அங்கொன்றும், இங்கொன்றுமாக கடைநிலை ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்வதால் ஊழல் ஒழியப்போவதில்லை; உழவர்களும் பயனடையப் போவதில்லை.</p><h2><strong>தமிழக அரசு</strong></h2><p>நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உழவர்களிடமிருந்து கையூட்டு வழங்கப்படுவதற்கு கொள்முதல் நிலையப் பணியாளர்கள் தரப்பில் சில நியாயங்கள் கூறப்படுகின்றன.  நெல் கொள்முதல் நிலையங்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்படவில்லை; பணியாளர்களுக்கு போதிய ஊதியமும் வழங்கப்படுவதில்லை. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின்  தவிர்க்க முடியாத செலவுகளுக்காக நிரந்தர முன்வைப்புத் தொகையாக ஒவ்வொரு நிலையத்திற்கும் ரூ.20 ஆயிரம் வழங்கப்பட வேண்டும். ஆனால், அந்தத் தொகை முறையாக வழங்கப் படவில்லை. அதே போல், நெல் எடை போடும் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு ரூ.10 மட்டுமே கூலியாக வழங்கப்படுவது போதுமானது அல்ல என்றெல்லாம் கொள்முதல் நிலையப் பணியாளர்கள் கூறுவதை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. இதை சரி செய்தால் மட்டும் தான் கொள்முதல் நிலைய ஊழலை ஒழிக்க முடியும்.</p><p>நெல் கொள்முதல் நிலைய கையூட்டு கலாச்சாரம் புதிதாக தோன்றியதில்லை. பல ஆண்டுகளாகவே இந்த சுரண்டல்  தொடர்கிறது. இதை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே கடந்த தேர்தலில் உழவர்கள் வாக்களித்தனர். அவர்களின் விருப்பத்தை அரசு நிறைவேற்ற வேண்டும். இனியும் தாமதிக்காமல் கொள்முதல் நிலைய சுரண்டல்களை தடுத்து, உழவர்களிடமிருந்து கையூட்டு இல்லாமல் உடனுக்குடன் நெல் வாங்கப்படுவதை அரசு உறுதி செய்யவேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>சிந்து நதிநீர் ஒப்பந்தம் மீண்டும் அமலுக்கு வர வாய்ப்பே இல்லை, ஆனால்.. பாகிஸ்தானுக்கு இந்தியா மெசேஜ் </title><link>https://www.maalaimalar.com/news/world/indus-waters-treaty-india-rules-out-return-to-status-quo-links-future-to-pakistans-anti-terror-action</link><comments>https://www.maalaimalar.com/news/world/indus-waters-treaty-india-rules-out-return-to-status-quo-links-future-to-pakistans-anti-terror-action#comments</comments><guid isPermaLink="false">afe7edbd-aafb-4af6-8c9c-bd83d8bbe490</guid><pubDate>Tue, 21 Jul 2026 04:53:42 +0000</pubDate><atom:updated>2026-07-21T04:53:42.040Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Pakistan,பஹல்காம் தாக்குதல்,Pahalgam attack,indus waters treaty,சிந்து நதிநீர் ஒப்பந்தம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/lvtxmu71/tn-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சிந்து நதிநீர் ஒப்பந்தம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சிந்து நதிநீர் ஒப்பந்தம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/lvtxmu71/tn-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜம்மு காஷ்மீரின் பஹ்லகாமில் கடந்த ஆண்டு ஏப்ரலில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் உடன் சிந்து மற்றும் அதன் கிளை நதிகளின் நீரை பகிரும் <a href="https://www.maalaimalar.com/news/national/what-is-the-indus-water-treaty-770109">சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை</a> இந்தியா தற்காலிகமாக நிறுத்தியது.</p><p>தற்போதுவரை இந்த ஒப்பந்தம் முடக்கத்திலேயே உள்ளது. மேலும் சிந்துவின் துணை நதியான செனாபில் அணை கட்ட இந்தியா முனைப்பு காட்டி வருகிறது. இந்தியாவில் இருந்து செல்லும் நீரை நம்பி பாகிஸ்தானின் விவசாயம் இருப்பதால் இந்த ஒப்பந்த முறிவை பாகிஸ்தான் கடுமையாக எதிர்த்து வருகிறது. </p><p>இதுதொடர்பாக இந்தியா மீது போர் தொடுக்கப்படும் போன்ற மிரட்டல்களையும் அந்நாட்டு அமைச்சர்கள் உள்ளிட்ட உயர் பொறுப்புகளில் உள்ளவர்கள் கூறி வருகின்றனர். மேலும் சர்வதேச அரங்கிலும் இந்த விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்பியுள்ளது. </p><p>சர்வதேச மேற்பார்வையில் 1960 இல் போடப்பட்ட  இந்த ஒப்பந்தத்தில் இருந்து தன்னிச்சையாக விலகும் அதிகாரம் இந்தியாவுக்கு இல்லை என பாகிஸ்தான் வாதிடுகிறது. </p> <h2>பாகிஸ்தானுக்கு இந்தியா திட்டவட்டமான பதில்</h2><p>இந்த சூழலில் இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு இந்தியா திட்டவட்டமான பதில் ஒன்றை தெரிவித்துள்ளது.</p><p>அதாவது இந்த ஒப்பந்தம் அதன் தற்போதைய வடிவில் மீண்டும் அமலுக்கு வர வாய்ப்பே இல்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p>பயங்கரவாதத்தை ஒழிப்பதில் பாகிஸ்தான் எவ்வித நம்பிக்கையான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.</p><p>ஐக்கிய நாடுகள் சபையால் தடைசெய்யப்பட்ட நபர்களும் அமைப்புகளும் இன்னமும் பாகிஸ்தானில் சுதந்திரமாக செயல்பட்டு வருகின்றனர்</p><p>பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் எடுக்கும் நடவடிக்கைகளைப் பொறுத்தே இந்த ஒப்பந்தத்தின் எதிர்காலம் அமையும்.</p><p>தற்போதைக்கு இந்த ஒப்பந்தத்தில் இருந்து முற்றிலுமாக வெளியேறும் எண்ணம் இந்தியாவுக்கு இல்லை என்றாலும், நாட்டின் நலன்களுக்கு எதிராக இருக்கும் எந்தவொரு சர்வதேச ஒப்பந்தத்தையும் ரத்து செய்யும் உரிமை ஒரு இறையாண்மை கொண்ட நாடாக இந்தியாவுக்கு உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <h2>குற்றச்சாட்டு</h2><p>ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்டதால் தான் பாகிஸ்தானில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டது என்ற குற்றச்சாட்டுகளை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.</p><p>பாகிஸ்தானில் போதிய நீர் சேமிப்புத் திறன் இல்லாதது, நீர் கசிவுகள் மற்றும் அந்நாட்டின் மாநிலங்களுக்கு இடையேயான நீர் தகராறுகளே அங்குள்ள நீர் பற்றாக்குறைக்கு உண்மையான காரணங்கள் என தெரிவித்துள்ளது.</p><p>ஜம்மு காஷ்மீரில் நீர்மின் திட்டங்களுக்குபாகிஸ்தான் தேவையில்லாமல் மீண்டும் மீண்டும் ஆட்சேபனை தெரிவித்து வளர்ச்சிப் பணிகளைத் தாமதப்படுத்துவதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>பட்ஜெட் விலையில் புது ரெட்மி ஸ்மார்ட்வாட்ச்கள்... லீக் ஆன முக்கிய தகவல்கள்!</title><link>https://www.maalaimalar.com/technology/newgadgets/redmi-watch-6-active-watch-6-lite-key-specifications-colours-price-revealed</link><comments>https://www.maalaimalar.com/technology/newgadgets/redmi-watch-6-active-watch-6-lite-key-specifications-colours-price-revealed#comments</comments><guid isPermaLink="false">c7037584-71f9-42d4-aea4-f31cc8b1a71f</guid><pubDate>Tue, 21 Jul 2026 04:41:00 +0000</pubDate><atom:updated>2026-07-21T04:41:00.000Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Redmi,ரெட்மி,Smartwatch,ஸ்மார்ட்வாட்ச்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/ikdufen9/rdmi-wtch-6.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரெட்மி வாட்ச் 6]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/ikdufen9/rdmi-wtch-6.png?w=280" width="280"></media:thumbnail><category>புதிய கேஜெட்டுகள் (New gadgets)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சில மாதங்களுக்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச சந்தைகளில் 'ரெட்மி வாட்ச் 6'-ஐ அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து, இப்போது 'ரெட்மி வாட்ச் 6 ஆக்டிவ்' மற்றும் 'ரெட்மி வாட்ச் 6 லைட்' ஆகிய மாடல்களை அறிமுகப்படுத்த சியோமி நிறுவனம் தயாராகி வருவதாக தெரிகிறது. </p><p>இவற்றின் வெளியீட்டுத் தேதி குறித்த விவரங்கள் இன்னும் தெரியவில்லை என்றாலும், பிரபல டிப்ஸ்டரான சுதன்ஷு மூலம் இந்த ஸ்மார்ட்வாட்ச்களின் முக்கிய சிறப்பம்சங்கள், ரெண்டர் படங்கள் மற்றும் ஐரோப்பாவில் எதிர்பார்க்கப்படும் விலை விவரங்கள் கசிந்துள்ளன.</p><p>'ரெட்மி வாட்ச் 6 ஆக்டிவ்' சற்று குறைவான விலையில் கிடைக்கும் மாடலாகவும், மேம்பட்ட அம்சங்களை விரும்பும் பயனர்களை குறிவைப்பதாகவும் அமைகிறது. அதே சமயம், 'வாட்ச் 6 லைட்' மாடலானது அடிப்படை அளவிலான உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி கண்காணிப்பு தேவைகளை மட்டும் எதிர்பார்க்கும் பயனர்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்று தெரிகிறது.</p><p><strong>சிறப்பம்சங்கள்:</strong></p><p>ரெட்மி வாட்ச் 6 மாடலில் உள்ள 2.07-இன்ச் ஸ்கிரீனுடன் ஒப்பிடும் போது, ரெட்மி வாட்ச் 6 ஆக்டிவ் மாடலில் சற்றே சிறிய அளவிலான 1.85-இன்ச் AMOLED ஸ்கிரீன் கொண்டிருக்கும். அதேபோல, 'வாட்ச் 6'-இன் அதிக ரெசல்யூஷன் 432×514 பிக்சல்களுடன் ஒப்பிடும் போது, 390×450 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட ரெட்மி வாட்ச் 6 ஆக்டிவ் ஸ்கிரீனின் பிரைட்னஸ் சற்று குறைவாகவே இருக்கும் என்று தெரிகிறது.</p><p>இதன் அம்சங்களை பொறுத்தவரை ரெட்மி வாட்ச் 6 ஆக்டிவ் மாடலில் ப்ளூடூத் 5.3 தொழில்நுட்பம் மூலம் ப்ளூடூத் காலிங் வசதி, கால் மற்றும் நோட்டிபிகேஷன் மற்றும் 140-க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும், இதில் பல்வேறு சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இதன் மூலம் இதயத் துடிப்பு கண்காணிப்பு, SpO₂, தூக்கத்தைக் கண்காணித்தல், கடந்த தூரம் மற்றும் எரிக்கப்பட்ட கலோரிகள் ஆகியவற்றை கண்காணித்தல், மற்றும் ஒரு நாளில் நடந்த படிகளை எண்ணும் 'பெடோமீட்டர்' போன்ற பல கண்காணிப்பு வசதிகள் இதில் கிடைக்கும். ரெட்மி வாட்ச் 6 ஆக்டிவ் மாடலில் 470mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம்.</p><p><strong>ரெட்மி வாட்ச் 6 லைட் அம்சங்கள்:</strong></p><p>இந்த மாடலில் 1.96 இன்ச் AMOLED ஸ்கிரீன், ரெட்மி வாட்ச் 6 ஆக்டிவ் மாடலில் உள்ளதை போன்ற இதயத் துடிப்பு கண்காணிப்பு, SpO₂, தூக்கத்தைக் கண்காணித்தல், கடந்த தூரம் மற்றும் எரிக்கப்பட்ட கலோரிகள் ஆகியவற்றை கண்காணித்தல், மற்றும் ஒரு நாளில் நடந்த படிகளை எண்ணும் 'பெடோமீட்டர்' போன்ற பல கண்காணிப்பு வசதிகள் இதிலும் வழங்கப்படலாம்.</p><p>இத்துடன் 9 ஆக்சிஸ் மோஷன் சென்சார், மல்டி சிஸ்டம் பொசிஷனிங் மற்றும் ஸ்பீக்கர் வழங்கப்படலாம். இந்த மாடலில் 470mAh பேட்டரி வழங்கப்படலாம். மற்றப்படி இரு மாடல்களும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். சாதனங்களுடன் இணைந்து இயங்கும் திறன் கொண்டிருக்கும்.</p><p>விலையை பொருத்தவரை ரெட்மி வாட்ச் 6 ஆக்டிவ் மாடல் 50 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 5500 என்றும் ரெட்மி வாட்ச் 6 லைட் மாடல் 60 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 6600 வரை நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY: நாளுக்கு நாள் ஏறும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-21-07-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-21-07-2026#comments</comments><guid isPermaLink="false">09a0f3aa-bfc4-4f11-9908-070d3eb4e781</guid><pubDate>Tue, 21 Jul 2026 04:19:10 +0000</pubDate><atom:updated>2026-07-21T04:19:10.695Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-04-29/8jne1dbu/Gold.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-04-29/8jne1dbu/Gold.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சர்வதேச பொருளாதார சூழல், போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. இதனால் தங்கத்தின் விலை கடந்த ஓரிரு நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக உள்ளது. </p><p>சென்னையில் நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,150-க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,05,200-க்கும் விற்பனையானது.</p><h2>தங்கம் விலை நிலவரம்</h2><p>இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு  ரூ.560 உயர்ந்து ரூ.1,05,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.13,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><h2>வெள்ளி விலை உயர்வு</h2><p>தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-</h2><p>20-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,200</p><p>19-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,080</p><p>18-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,080</p><p>17-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,800</p><p>16-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,200</p><h2>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-</h2><p>20-07-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>19-07-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>18-07-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>17-07-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>16-07-2026- ஒரு கிராம் ரூ.240</p> ]]></content:encoded></item><item><title>&apos;மீண்டும் என்னை தேசவிரோதி என்பார்கள்&apos;: மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த தில்ஜித் தோசாஞ்ச்!</title><link>https://www.maalaimalar.com/news/national/diljit-dosanjh-supports-student-protests-despite-anti-national-tag-fears</link><comments>https://www.maalaimalar.com/news/national/diljit-dosanjh-supports-student-protests-despite-anti-national-tag-fears#comments</comments><guid isPermaLink="false">15ea32a7-333e-40d6-8633-37e1ce6d07c1</guid><pubDate>Tue, 21 Jul 2026 04:19:02 +0000</pubDate><atom:updated>2026-07-21T04:19:02.016Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>delhi,டெல்லி,Cockroach Janta Party,சிஜேபி,diljit-dosanjh,தில்ஜித் தோசாஞ்ச்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/h51su07g/cjp.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Diljit Dosanjh ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/h51su07g/cjp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட்  தேர்வு முறைகேடுகள் மற்றும் கல்விச் சீர்திருத்தங்களை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நடத்தி வரும் சிஜேபி போராட்டத்திற்குப் பிரபல பஞ்சாபி பாடகரும் நடிகருமான தில்ஜித் தோசாஞ்ச் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். </p><p>மாணவர்கள் மீது காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையைக் கண்டித்துள்ள அவர், மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகக் குரல் கொடுப்பதால், தனக்கு மீண்டும் "தேசவிரோதி" என்ற முத்திரை குத்தப்படலாம் என்றும் கவலை தெரிவித்துள்ளார்.</p><h3>இதுகுறித்து, தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தில்ஜித் தோசாஞ்ச் கூறியுள்ளதாவது:</h3><p>"இன்று நடந்தது மிகவும் தவறானது. மாணவர்களை இப்படி நடத்தியிருக்கக் கூடாது. அவர்களின் கோரிக்கைகளை அரசு அதிகாரிகளும் நிர்வாகமும் கவனமாகக் கேட்டுப் பரிசீலிக்க வேண்டும். மக்களின் குரலே கடவுளின் குரல் ."மேலும், மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகப் பேசுவதால் மீண்டும் தன் மீது "தேசவிரோதி" என்ற விமர்சனங்கள் எழக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2><strong>போராட்டத்தின் பின்னனி:</strong></h2><p>நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முடிவுகளில் நடந்த முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், கல்வித் துறையில் உடனடி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். </p><p>டெல்லியில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறை பலப்பிரயோகம் செய்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தில்ஜித் தோசாஞ்ச் மட்டுமன்றி, பாலிவுட் பிரபலங்களான பூமி பெட்னேகர், ஹுமா குரேஷி உள்ளிட்ட பலரும் மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து, மாணவர்களின் போராட்டத்திற்குத் தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.</p><h2><strong>விவசாயிகள் போராட்டம்:</strong></h2><p>இதற்கு முன்னதாக, டெல்லியில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகள் போராட்டத்தின் போதும் தில்ஜித் தோசாஞ்ச் விவசாயிகளுக்கு ஆதரவாக நேரில் சென்று குரல் கொடுத்தார்.</p><p>விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததால், தாம் சந்தித்த கடுமையான விமர்சனங்கள், சமூக வலைதளத் தாக்குதல்கள் மற்றும் சட்ட ரீதியான சிக்கல்கள் குறித்து இப்போதும் வெளிப்படையாகப் பேச முடியாத நிலை உள்ளதாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தனது 83 ஆவது பிறந்தநாள் விழா ரத்து செய்யப்படுகிறது!- வைகோ </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vaiko-announced-my-83rd-birthday-celebration-is-being-cancelled</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vaiko-announced-my-83rd-birthday-celebration-is-being-cancelled#comments</comments><guid isPermaLink="false">7b73f680-bc22-4187-be2e-eb93e6e20d27</guid><pubDate>Tue, 21 Jul 2026 04:18:27 +0000</pubDate><atom:updated>2026-07-21T04:18:27.311Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வைகோ,vaiko,MDMK,மதிமுக</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/mahwcxp7/vaiko.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ வைகோ]]></media:title><media:description type="html"><![CDATA[ வைகோ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/mahwcxp7/vaiko.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>இந்த ஆண்டு மட்டுமல்ல, நான் வாழும் காலம் வரையிலும் செப்டம்பர் 22 ஆம் நாளை என் பிறந்தநாள் விழாவாக கழகத் தோழர்கள் நடத்தக் கூடாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.</aside><p>ம.தி.மு.க. பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/வைகோ">வைகோ</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>பிறந்தநாள் அல்ல</strong></h2><p>நான் 1944 ஆம் ஆண்டு, செப்டம்பர் 22 ஆம் நாள் பிறந்தேன். ஆனால், கலிங்கப்பட்டி ஆரம்ப பாடசாலையில் என்னை சேர்க்கும் போது வயது குறைவாக இருக்கிறது என்று கூறி, நான்கு மாதங்கள் முன்னதாக மே 22 இல் நான் பிறந்தேன் என்று பள்ளி ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டது.</p><p>என்னுடைய இறுதி வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) சான்றிதழில் எனது பிறந்த நாள் மே 22 என்று குறிக்கப்பட்டுள்ளது. எனக்கு வாழ்த்துக் கூற விரும்புகிறவர்கள் பல நேரங்களில் மே 22 ஆம் நாள் அன்று வாழ்த்துக் கூறுவார்கள். இந்த நாள் எனது பிறந்தநாள் அல்ல என்று தெரிவித்துவிடுவேன்.</p><p>எம் இயக்கத்தில் யாரும் எனது பிறந்தநாளைக் கொண்டாடக் கூடாது என்று திட்டவட்டமாகக் கூறி வந்தேன். 2002 ஆம் ஆண்டு மே 22 ஆம் நாள் அன்று காலையில் அன்றைய இந்திய தலைமை அமைச்சர் அடல்பிகாரி வாஜ்பாய் அவர்கள் என்னை அலைபேசியில் தொடர்புகொண்டு, இந்த இனிய நாள் மீண்டும் மீண்டும் உங்களுக்கு வருவதாக என்று வாழ்த்தினார்.</p><p>நான் உடனே அவரிடம், இந்த நாள் எனது பிறந்தநாள் அல்ல. பள்ளியில் சேர்ப்பதற்காக முன்னதாக உள்ள நாளை சேர்த்துவிட்டார்கள் என்றேன்.</p><p>வாஜ்பாய் அவர்கள் கவிஞர் அல்லவா? கணமும் தாமதிக்காமல் ஒரு வருடத்தில் 365 நாட்கள் உள்ளன. அதில் ஏதாவது ஒரு நாள் உங்கள் பிறந்தநாளாகத்தானே இருக்கும்! என்னுடைய வாழ்த்துக்கள் அந்த நாளுக்கு போய்ச் சேரட்டும் என்றார்.</p><h2><strong>பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள்</strong></h2><p>திராவிட இயக்கத் தலைவர்கள் பலர் 40 வயதிலேயே பிறந்தநாள் விழா கொண்டாட ஆரம்பித்துவிட்டார்களே! நீங்கள் ஏன் இப்படி மறுக்கிறீர்கள்? என்று கூறி வந்தனர். பின்னர் எப்படியோ எனது பிறந்த நாள் செப்டம்பர் 22 என்று அறிந்துகொண்டார்கள்.</p><p>எனக்குத் தெரியாமலேயே பல இடங்களில் அந்த நாளைக் கொண்டாடினார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளாக இன்றைய துணைப் பொதுச்செயலாளர் சகோதரர் ஜீவன் அவர்கள் பலரிடமும் கூறி, என் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் என்று எனக்குத் தெரியாமலேயே நடத்தி வந்தார்.</p><p>இந்தப் பின்னணியில், கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு “அண்ணே, இந்த வருடம் நீங்கள் எங்களை ஏமாற்ற விடமாட்டோம். செப்டம்பர் 22ஐ மிகப் பெரிய விழவாகக் கொண்டாட கழக முன்னணியினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து முடிவு செய்திருக்கிறோம். நீங்கள் மறுக்கவே கூடாது” என்று பிடிவாதமாக நிர்பந்தித்தார்கள். நான் அரை மனதுடன் அதற்கு இசைவு அளித்தேன்.</p><p>உடனே அவர்கள் எழும்பூரில், ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள ராஜா முத்தையா மன்றத்தை பதிவு செய்து, முன்பணமும் செலுத்திவிட்டார்கள். ஆனால் கடந்த சில நாட்களாக என் மனதில் இந்த ஏற்பாடு உறுத்தலாகவே இருந்தது.</p><h2><strong>எழுச்சி மாநாடு</strong></h2><p>அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை நமது இயக்கம் தோன்றிய நாள் முதல் மாபெரும் மாநாடுகளாக தொடர்ந்து நடத்தி வருகிறோம். அறிஞர் அண்ணாவின் 100ஆவது பிறந்த நாள் விழாவை செப்டம்பர் 15 இல் தி.மு.க. கொண்டாடவில்லை. மதுரை மாநகரே குலுங்கும் வகையில் நாம் எழுச்சி மாநாடாக நடத்தினோம்.</p><p>தி.மு.கழகம், அண்ணா பிறந்த நாளுக்கு அகில இந்திய தலைவர்களையோ, இந்திய தலைமை அமைச்சரையோ அழைத்து நடத்தவில்லை. அதற்கு மாறாக அந்த ஆண்டில் அவர்கள் செப்டம்பர் 15க்குப் பதிலாக செப்டம்பர் 21 ஆம் நாளில் காஞ்சிபுரத்தில் நடத்தினார்கள்.</p><p>“தி.மு.க தலைவர் தனது பிறந்தநாளை ஜூன் 3 ஆம் தேதிக்குப் பதிலாக வேறு நாளில் நடத்துவாரா?” என்று மாநாட்டில் கேட்டேன்.</p><p>தி.மு.க ஆட்சியில் இருந்த காலத்திலும், இந்தியாவின் தலைமை அமைச்சரை அழைத்துக் கொண்டு வந்து அண்ணா பிறந்தநாளை நடத்தும் எண்ணமாவது வந்ததா? இல்லை. ஆனால் நாங்கள் 1998 செப்டம்பர் 15 இல் தலைமை அமைச்சர் வாஜ்பாய் அவர்களையும், உள்துறை அமைச்சர் அத்வானி அவர்களையும், காஷ்மீர் முதலமைச்சர் டாக்டர் பரூக் அப்துல்லா அவர்களையும், பஞ்சாப் முதலமைச்சர் பர்காஷ்சிங் பாதல் அவர்களையும், இராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் அவர்களையும், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அவர்களையும் பங்கேற்கச் செய்து, மெரினா கடற்கரையில் விடியற்காலை இரண்டரை மணி வரை நடத்தினோம்.</p><p>இயக்கத்தில் தோழர்கள் அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை நடத்திவிட்டு, எனக்கு தெரியாமல் பொருட் செலவு செய்து, எனது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதை அறிந்து மிகவும் வேதனைப்பட்டேன்.</p><h2><strong>மனதைப் புண்படுத்த வேண்டாம்</strong></h2><p>இந்த ஆண்டு ‘வைகோ 83’ என்று இலச்சினை தயாரித்திருக்கிறார்கள். அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை மிகச் சிறப்பாக ஆண்டுதோறும் நடத்துவது மட்டும்தான் கழகத்தின் கடமை ஆகும். எனக்கு பிறந்தநாள் விழா எடுப்பதை நான் முற்றிலும் விரும்பவில்லை.</p><p>இந்த ஆண்டு மட்டுமல்ல, நான் வாழும் காலம் வரையிலும் செப்டம்பர் 22 ஆம் நாளை என் பிறந்தநாள் விழாவாக கழகத் தோழர்கள் நடத்தக் கூடாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>அந்த நாளில் யாரும் என்னைச் சந்திக்க முற்பட வேண்டாம். நான் எங்காவது பிறர் அறியாவண்ணம் அமைதியாகக் கழிக்க நினைக்கிறேன்.</p><p>என் புகைப்படம் போட்ட சுவரொட்டிகளை ஒட்டுவது, பேனர் அடிப்பது போன்ற செயல்களில் கழகத் தோழர்கள் ஈடுபட்டு என் மனதைப் புண்படுத்த வேண்டாம்.</p><p>‘வைகோ 83’ என்ற தலைப்பில் என் பிறந்தநாள் விழாவைக் கொண்டாட எவரும் முற்பட வேண்டாம் என்பதை மீண்டும் அழுத்தம் திருத்தமாகக் கூறிக் கொள்கிறேன்.</p><p>இந்த ஏற்பாட்டில் ஈடுபட்டவர்கள் மனம் காயப்படுமானால் என் மன அமைதிக்காக, என் எண்ணத்தைச் செயல்படுத்துமாறு உரிமையுடனும், நீங்காத பற்றுடனும் வேண்டிக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>இங்கிலாந்து புதிய பிரதமர்  ஆண்டி பர்ன்ஹாமிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!</title><link>https://www.maalaimalar.com/news/world/india-uk-ties-modi-greeting-pm-modi-congratulates-new-uk-pm-andy-burnham-says-ceta-will-boost-bilateral-partnership</link><comments>https://www.maalaimalar.com/news/world/india-uk-ties-modi-greeting-pm-modi-congratulates-new-uk-pm-andy-burnham-says-ceta-will-boost-bilateral-partnership#comments</comments><guid isPermaLink="false">6718ca4f-394f-4ce0-8f4d-f2a524f402dc</guid><pubDate>Tue, 21 Jul 2026 04:16:10 +0000</pubDate><atom:updated>2026-07-21T04:16:10.544Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,britain,England,பிரதமர் மோடி,பிரிட்டன்,இங்கிலாந்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/5ek4ripe/tn-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரதமர் மோடி, ஆண்டி பர்ன்ஹாம்]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர் மோடி, ஆண்டி பர்ன்ஹாம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/5ek4ripe/tn-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள ஆண்டி பர்ன்ஹாமிற்கு இந்திய பிரதமர் மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். </p><p>பிரதமர் மோடி தனது எக்ஸ்  பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, </p><p>"இங்கிலாந்து நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள  ஆண்டி பர்ன்ஹாம் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். </p><p>இந்தியாவும் இங்கிலாந்தும் பகிர்ந்தளிக்கப்பட்ட ஜனநாயக மதிப்பீடுகளால் பிணைக்கப்பட்டுள்ளன. </p><p>வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் இருநாட்டு மக்களிடையேயான உறவு என விரிவான ஒத்துழைப்பை இரு நாடுகளும்  பேணி வருகின்றன. </p><p>இந்த மாதத்தில் CETA (Comprehensive Economic and Trade Agreement) <a href="https://www.maalaimalar.com/news/world/india-uk-free-trade-agreement-signed-771672">ஒப்பந்தம் </a>நடைமுறைக்கு வருவதன் மூலம், நமது இருதரப்பு பங்களிப்பு மேலும் வலுவடையும்." என தெரிவித்துள்ளார்.  </p><p>மேலும், இந்தியா-இங்கிலாந்து இடையேயான விரிவான மூலோபாய பங்களிப்பை வலுப்படுத்தவும், பகிரப்பட்ட Vision 2035 இலக்குகளை முன்னோக்கி கொண்டு செல்லவும் ஆண்டி பர்ன்ஹாமுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருப்பதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.</p> <h2>இங்கிலாந்தில் அரசியல் மாற்றம்</h2><p>பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் முந்தைய இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் நேற்று ராஜினாமா செய்கிறார்.</p><p>அதைத் தொடர்ந்து, அண்மையில் நடந்த உட்கட்சித் தேர்தலில் வெற்றி பெற்று ஆளும் தொழிற்கட்சியின் புதிய தலைவராக தேர்வான ஆண்டி பர்ன்ஹாம் நேற்று இங்கிலாந்து மன்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். புதிய அரசாங்கத்தை அமைக்குமாறு அவருக்கு மன்னர் முறைப்படி அழைப்பு விடுத்தார்.</p> <p>புதிய பிரதமர் மன்னரின் கையை முத்தமிட்டுத் தனது விசுவாசத்தை உறுதிப்படுத்தியதை தொடர்ந்து அவர் அதிகாரப்பூர்வமாக பிரதமராக அறிவிக்கப்பட்டார்.</p><p>2016ம் ஆண்டு ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறியதில் இருந்து 6 பிரதமர்களும், 2022ம் ஆண்டு தொடங்கி 4 பிரதமர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.</p><p>கடந்த 10 ஆண்டுகளில் இங்கிலாந்தின் பிரதமராக பொறுப்பேற்கும் 7வது நபர் ஆண்டி பர்ன்ஹாம்.</p><h2>இந்தியா - இங்கிலாந்து ஒப்பந்தம் </h2><p>கடந்த ஆண்டு இறுதியில் இந்தியா- இங்கிலாந்து இடையே சுதந்திர வார்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகினது. இந்த ஒப்பந்தத்தில் இரு நாடுகளின் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி குறைப்பு உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.</p><p>இதில் இந்தியர்களுக்கான விசா பிரச்சனைகள் தீர்வு, கார்கள் மற்றும் ஸ்காட்ச் விஸ்கி போன்ற இங்கிலாந்து ஏற்றுமதிகள் மீதான வரிகள் குறைப்பு ஆகியவை அடங்கும்.</p>]]></content:encoded></item><item><title>வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்- ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/australia-back-opener-jake-weatherald-for-home-test-series-against-bangladesh</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/australia-back-opener-jake-weatherald-for-home-test-series-against-bangladesh#comments</comments><guid isPermaLink="false">ce5bfe19-8180-4674-acf1-75b69c84a40e</guid><pubDate>Tue, 21 Jul 2026 04:06:45 +0000</pubDate><atom:updated>2026-07-21T04:06:45.155Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Bangladesh,Australia,ஆஸ்திரேலியா,வங்கதேசம்,டெஸ்ட் தொடர்,Test series</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/ucv0h5mt/australia.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆஸ்திரேலியா அணி வீரர்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/ucv0h5mt/australia.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ், வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் ஆகியோர் காயத்திலிருந்து மீண்டு வந்துள்ளதால், அடுத்த மாதம் வங்கதேசத்திற்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறவுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான 13 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.</aside><h2><strong>போட்டி அட்டவணை</strong></h2><p>வங்கதேச அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 13-ந்தேதி தொடங்க உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 13-ந்தேதி தொடங்கி 17-ந்தேதி வரை டார்வினில் உள்ள மராரா மைதானத்தில் நடைபெற உள்ளது. இதன் மூலம் கடந்த 2004ஆம் ஆண்டிற்கு பிறகு இந்த மைதானத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் டெஸ்ட் ஆகஸ்ட் 22-ந்தேதி தொடங்கி 26-ந்தேதி வரை மெக்கேவில் கிரேட் பேரியர் ரீஃப் மைதானத்தில் நடைபெற உள்ளது. </p><h2><strong>ஆஸ்திரேலிய அணி வீரர்கள்</strong></h2><p>2 போட்டிகள் கொண்ட <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D">டெஸ்ட் தொடரில்</a> விளையாட உள்ள ஆஸ்திரேலிய அணி வீரர்களின் பெயர்களை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, </p><p>பேட் கம்மின்ஸ் தலைமையிலான அணியில் ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மார்னஸ் லாபுஷேன், நாதன் லயன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், ஜேக் வெதரால்ட், பியூ வெப்ஸ்டர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.</p><p>மேலும் இது 13 வீரர்கள் கொண்ட அணியாக இருந்தாலும், டெஸ்ட் தொடருக்கு முன்னதாக ஏதேனும் மாற்றங்கள் தேவைப்பட்டால், அதற்காகத் தயாராக வீரர்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. </p><h2><strong>உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை</strong></h2><p>இந்த ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற <a href="https://www.maalaimalar.com/topic/ஆஸ்திரேலியா">ஆஸ்திரேலியாவின்</a> சமீபத்திய டெஸ்ட் தொடரில் இடம்பெற்ற அணியிலிருந்து மைக்கேல் நெசர், டாட் மர்பி மற்றும் பிரெண்டன் டோகெட் ஆகியோர் நீக்கப்பட்ட வீரர்கள் ஆவர்.</p><p>உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், வங்கதேசம் நான்காவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>குறைந்த விலை ஸ்மர்ட்போன்களின் விலையையும் உயர்த்திய ஒப்போ</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/oppo-raises-prices-of-its-affordable-k-and-a-series-smartphones</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/oppo-raises-prices-of-its-affordable-k-and-a-series-smartphones#comments</comments><guid isPermaLink="false">aa589a16-29c1-4d30-b51c-cbbb353f2ba2</guid><pubDate>Tue, 21 Jul 2026 03:35:00 +0000</pubDate><atom:updated>2026-07-21T03:35:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விலை உயர்வு,price hike,OPPO,ஒப்போ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/kvje4hv7/oppo-k14-5g.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Oppo K14 5G]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/kvje4hv7/oppo-k14-5g.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆகியவற்றின் பற்றாக்குறையால் ஏற்படும் விலை உயர்வு மீண்டும் ஒப்போ ஸ்மார்ட்போன்களை பாதித்துள்ளது. இம்முறை, நிறுவனம் தனது பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களான ஒப்போ K14, K14x மற்றும் A6s 5G ஆகியவற்றின் விலையை உயர்த்தியுள்ளது. </p><p>ஒப்போ தவிர பல்வேறு ஸ்மார்ட்போன் பிரான்டுகளும் இந்திய சந்தையில் தங்களது மாடல்களின் விலையை அடிக்கடி உயர்த்தி வருகின்றன. சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் ஜப்பான் சந்தையில் தனது ஐபோன் மாடல்கள் விலையை கணிசமாக உயர்த்தியது.</p><p><strong>புதிய விலை:</strong></p><p>குறிப்பாக, ஒப்போ K14x மாடலின் விலை கடந்த இரண்டு மாதங்களில் இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் பேஸ் வேரியண்ட் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி மாடல் விலை, முந்தைய விலையான ரூ. 15,999-இல் இருந்து ரூ. 16,999-ஆக உயர்ந்துள்ளது. இந்த ரூ. 1,000 விலை உயர்வு மற்ற வேரியண்டுகளுக்கும் பொருந்தும்.</p><p>அதேவேளையில், ஒப்போ K14-இன் டாப் எண்ட் வேரியண்ட் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை அதிகபட்சமாக ரூ. 4,000 உயர்த்தப்பட்டுள்ளது.</p><p>ஒப்போவின் சில்லறை விற்பனையாளர்களுடன் பகிரப்பட்ட சுற்றறிக்கையின்படி, இந்த ஸ்மார்ட்போன்களுக்கான புதிய விலை உயர்வு நேற்று (ஜூலை 20) முதலே அமலுக்கு வந்துள்ளது. திருத்தப்பட்ட விலைகள் ப்ளிப்கார்ட் இணையதளத்திலும் ஏற்கனமே மாற்றப்பட்டு விட்டன. இருப்பினும், இந்த மாடல்களின் சில வேரியண்டுகள் தற்போது கையிருப்பில் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.</p><p><strong>அம்சங்கள்:</strong></p><p>ஒப்போ K14 சீரிஸ் மற்றும் A6s 5G ஆகியவை இந்நிறுவனத்தின் சமீபத்திய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களாக தொடர்கின்றன. இந்த மூன்று ஸ்மார்ட்போன்களும் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 பிராசஸர் மூலம் இயக்கப்படுகின்றன; இது அன்றாட பணிகளை சிறப்பாக கையாளும் திறன் கொண்டது. இவை அனைத்தும் 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட 6.75-இன்ச் HD+ LCD திரையைக் கொண்டுள்ளன.</p><p>இந்த மூன்று ஸ்மார்ட்போன்களிலும் 50MP + 2MP டூயல் பிரைமரி கேமரா செட்டப் கொண்டுள்ளன. இத்துடன் ஒப்போ K14 மாடலில் 8MP செல்ஃபி கேமராவும், ஒப்போ K14x மற்றும் ஒப்போ A6s 5G ஆகியவற்றில் சற்றே குறைந்த திறன் கொண்ட 5MP செல்ஃபி கேமரா கொண்டுள்ளன.</p><p>ஒப்போ K14 மாடலில் உள்ள 7,000mAh பேட்டரியுடன் ஒப்பிடுகையில், OPPO K14x மற்றும் A6s 5G ஆகியவை சிறிய அளவிலான 6,500mAh பேட்டரிகளை கொண்டுள்ளன. இந்த மூன்று ஸ்மார்ட்போன்களிலும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை ஆதரிக்கின்றன. மென்பொருளைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு 15-ஐ அடிப்படையாக கொண்ட ColorOS-உடன் வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>கேபிள் டி.வி., டி.டி.எச். சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்த திட்டமா?- மத்திய அரசு விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/central-govt-explain-is-there-a-plan-to-hike-charges-for-cable-tv-and-dth-services</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/central-govt-explain-is-there-a-plan-to-hike-charges-for-cable-tv-and-dth-services#comments</comments><guid isPermaLink="false">0a27f43c-cc74-4fdc-8d32-fd9577d92fa3</guid><pubDate>Tue, 21 Jul 2026 03:19:50 +0000</pubDate><atom:updated>2026-07-21T03:19:50.785Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,Central govt,Cable TV,கேபிள் டிவி,DTH,டிடிஎச்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/8g82lewl/cable.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/8g82lewl/cable.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>கேபிள் டி.வி., டி.டி.எச். சேவைகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக பரவும் தகவலுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.</aside><h2><strong>கேபிள் டி.வி. கட்டணம்</strong></h2><p>மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் சமீபத்தில் வரைவு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதை மையமாக வைத்து சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. அதில், கேபிள் டி.வி. மற்றும் டி.டி.எச். சேவைகளுக்கான கட்டணம் இப்போது வசூலிக்கப்படுவதில் இருந்து 4 முதல் 6 மடங்கு அதிகமாக வசூலிக்கப்பட உள்ளது. இதனால் 11 கோடி டி.வி.க்களின் இணைப்பு துண்டிக்கப்பட உள்ளது.</p><p>அதிகப்படியான லைசென்சு கட்டணம் விதிக்கப்பட உள்ளதால், லட்சக்கணக்கானவர்களின் வேலையும் பறிபோக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இந்த தகவல் பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.</p><h2><strong>வரைவு அறிக்கை</strong></h2><p>இதுதொடர்பாக <a href="https://www.maalaimalar.com/topic/மத்திய-அரசு">மத்திய அரசின்</a> பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது:-</p><p>இணையதளங்களில் பரவும் தகவலில் உண்மை இல்லை. மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் 'தொலைதொடர்பு விதிகள் 2026' தொடர்பான வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. தொடர்புடையவர்கள் இந்த வரைவு அறிக்கை தொடர்பாக வருகிற 27-ந்தேதி வரையிலும் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம். அந்த வரைவு அறிக்கையில் கேபிள் டி.வி. மற்றும் டி.டி.எச். சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான எந்த பிரிவுகளும் இல்லை.</p><p>தொலைக்காட்சி மற்றும் ரேடியோ சேவைகளுக்காக வழங்கப்பட்ட பல்வேறு வழிகாட்டுதல்களை ஒருங்கிணைப்பதை இந்த விதிகள் நோக்கமாக கொண்டுள்ளன. மேலும் தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒளிபரப்பு துறையின் செயல்பாடுகளை எளிதாக்குவதை ஊக்குவிக்கும் அதே வேளையில் தற்போதுள்ள நடைமுறையை மேலும் சுலபமாக்குவதற்கும், இணக்கமாக செயல்படுவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளன.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இந்த வார விசேஷங்கள்: 21-7-2026 முதல் 27-7-2026 வரை</title><link>https://www.maalaimalar.com/spirituality/this-week-specials-21-7-2026-to-27-7-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/this-week-specials-21-7-2026-to-27-7-2026#comments</comments><guid isPermaLink="false">ac9a6fd8-9078-4402-b741-ad707e9e5150</guid><pubDate>Tue, 21 Jul 2026 03:15:10 +0000</pubDate><atom:updated>2026-07-21T03:15:10.891Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,வழிபாடு,Astrology,this week special,இந்த வார விசேஷங்கள்,worship</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-04-21/t1l1nc5e/krishna2.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Krishna]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-04-21/t1l1nc5e/krishna2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>21-ந் தேதி (செவ்வாய்)</h2><p>* குரங்கணி முத்துமாலையம்மன் கோவிலில் நாராயண சுவாமி தீர்த்த உற்சவம்.</p><p>* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் உற்சவம் ஆரம்பம்.</p><p>* நத்தம் மாரியம்மன் பூந்தேரில் பவனி.</p><p>* வடமதுரை சவுந்திர ராஜப் பெருமாள் விழா தொடக்கம்.</p><p>* சமநோக்கு நாள்.</p><h2>22-ந் தேதி (புதன்)</h2><p>* ஆடி சுவாதி.</p><p>* சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளி சப்பரத்தில் பவனி.</p><p>* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கிருஷ்ணாவதாரம்.</p><p>* மதுரை மீனாட்சி அம்மன் புஷ்பப் பல்லக்கில் பவனி.</p><p>* சமநோக்கு நாள். </p><h2>23-ந் தேதி (வியாழன்)</h2><p>* ராமநாதபுரம் கோதண்டராமர் தீர்த்த உற்சவம்.</p><p>* வடமதுரை சவுந்திர ராஜப் பெருமாள் சிம்ம வாகனத்தில் பவனி.</p><p>* திருப்பரங்குன்றம் ஆண்டவர் புறப்பாடு.</p><p>* கீழ்நோக்கு நாள்.</p> <h2>24-ந் தேதி (வெள்ளி)</h2><p>* சங்கரன்கோவில் கோமதியம்மன் பூம்பல்லக்கில் பவனி.</p><p>* திருவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு.</p><p>* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் பவனி.</p><p>* சமநோக்கு நாள்.</p><h2>25–ந் தேதி (சனி)</h2><p>* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் ராஜாங்க சேவை.</p><p>* திருவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.</p><p>* திருவரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சனம்.</p><p>* மதுரை கூடலழகர் புறப்பாடு.</p><p>* சமநோக்கு நாள்.</p><h2>26-ந் தேதி (ஞாயிறு)</h2><p>* பிரதோஷம்.</p><p>* சங்கரன்கோவில் கோமதியம்மன் ரத உற்சவம்.</p><p>* திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.</p><p>* கீழ்நோக்கு நாள்.</p><h2>27-ந் தேதி (திங்கள்)</h2><p>* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் விழா தொடக்கம். </p><p>* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் சூர்ணோற்சவம்.</p><p>* வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் திருக்கல்யாணம்.</p> ]]></content:encoded></item><item><title>இன்றும் பாராளுமன்றம் நோக்கி பேரணி தொடரும் - CJP அறிவிப்பு </title><link>https://www.maalaimalar.com/news/national/cjp-dharna-continues-protest-march-to-parliament-over-dharmendra-pradhan-resignation-keeps-delhi-on-edge</link><comments>https://www.maalaimalar.com/news/national/cjp-dharna-continues-protest-march-to-parliament-over-dharmendra-pradhan-resignation-keeps-delhi-on-edge#comments</comments><guid isPermaLink="false">7fc1fd80-417d-4f98-86be-1dd210f24501</guid><pubDate>Tue, 21 Jul 2026 03:10:59 +0000</pubDate><atom:updated>2026-07-21T03:10:59.864Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>protest,rally,பேரணி,போராட்டம்,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,CJP</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/xp0ep1la/tn-4.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ CJP ]]></media:title><media:description type="html"><![CDATA[ CJP ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/xp0ep1la/tn-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி நேற்று நடத்தப்பட்ட 'நாடாளுமன்ற நோக்கிய பேரணி' இன்றும் தொடரும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ( (<a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-march-to-parliament-in-delhi-turns-violent-with-lathicharge-tear-gas-178-injured-and-70-arrested">CJP</a>) அறிவித்துள்ளது.  </p><p>நேற்று நடந்த பேரணியை தடியடி நடத்தியும் கண்ணீர்ப்புகை குண்டு வீசியும் போலீசார் கலைத்தனர். </p><p>இன்றும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கூட்டம் கூட உள்ளதால் இரண்டாவது நாளாக இன்றும் இந்தப் பேரணி தொடரும் என்று சிஜேபி நிறுவனர் அபிஜீத் திப்கே அறிவித்துள்ளார்.</p><p>ஜந்தர் மந்தரில் நேற்று இரவு நிலவிய பதற்றமான சூழ்நிலைக்கு இடையே செய்தியாளர்களிடம் பேசிய அபிஜீத் திப்கே, "நாங்கள் இங்கிருந்து நகரப்போவதில்லை. செவ்வாய்க்கிழமையும் நாடாளுமன்றத்தை நோக்கி மீண்டும் பேரணியாகச் செல்வோம்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.</p> <h2>வன்முறை</h2><p>நேற்று பேரணியின் போது நடந்த கல்வீச்சு மற்றும் வன்முறையில் 118க்கும் மேற்பட்ட காவல் துறையினர் காயமடைந்ததாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. 70க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களும் இதில் காயமடைந்தனர்.</p><p>நேற்று நடந்த மோதலின் போது ஜந்தர் மந்தரில் இருந்த போராட்ட மேடைகளை டெல்லி காவல்துறை அகற்றியிருந்தது.</p><p>இருப்பினும், இரவு மழை பெய்து கொண்டிருந்த போதிலும், நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் மீண்டும் ஜந்தர் மந்தருக்குத் திரும்பி, தற்காலிகக் கூடாரங்களையும் மேடைகளையும் அமைத்து போராட்டத்தைத் தொடர்ந்தனர்.</p><p>மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை இந்த அமைதிப் போராட்டம் ஓயாது என்றும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் சிஜேபி நிர்வாகிகள் தெரிவித்தனர்.</p> <h2>பேச்சுவார்த்தை</h2><p>சிஜேபி அமைப்பின் பிரதிநிதிகள் நேற்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவை இருமுறை சந்தித்துப் பேசினர்.</p><p>காலை நடந்த முதல் சந்திப்பில் கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாகச் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.</p><p>மாலை இரண்டாம் சந்திப்பில் சிஜேபி பிரதிநிதிகள் தங்கள் 3 முக்கியக் கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஜே.பி. நட்டாவிடம் முறைப்படி ஒப்படைத்தனர்.</p> <h2>இன்றும் பேரணி</h2><p>இன்று மீண்டும் பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால், ஜந்தர் மந்தர் பகுதியைச் சுற்றிலும் மீண்டும் பலத்த போலீஸ் பாதுகாப்பும், தடுப்புகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.</p><p>ஜந்தர் மந்தர் பகுதியில் இணையதளச் சேவைகள் முடக்கப்பட்ட நிலையிலும், மழைக்கு இடையிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களும் நூற்றுக்கணக்கான போலீசாரும் அங்கு குவிந்துள்ளதால் தலைநகரில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவுகிறது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை (22.07.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-30</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-30#comments</comments><guid isPermaLink="false">9f86052c-a139-4221-a893-68b35a1821b8</guid><pubDate>Tue, 21 Jul 2026 03:10:04 +0000</pubDate><atom:updated>2026-07-21T03:10:04.278Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மின்தடை,TNEB,மின்சார வாரியம்,Power Cut,தமிழ்நாடு மின்சார வாரியம்,சென்னையில் மின்தடை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/nfuqkutf/powercut.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/nfuqkutf/powercut.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை:</p><p>சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் <a href="https://www.maalaimalar.com/topic/சென்னையில்-மின்தடை">மின் தடை</a> செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><p>அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (22.07.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.  அதன்படி, </p><h2><strong>கோவிலம்பாக்கம்</strong></h2><p>வடக்குப்பட்டு ஓம் சக்தி நகர், சுபிக்ஷா அவென்யூ, சுசிலா நகர், பெரியார் சாலை, வடக்குப்பட்டு பிரதான சாலை, திருவேங்கடம் நகர், திருவள்ளூர் தெரு, நாவின்ஸ், விஷ்ராந்தி, செல்வகணபதி நகர், சத்யா நகர்.</p><h2><strong>ராமாபுரம்</strong></h2><p>ராயலா நகர், காந்தி நகர், நேரு நகர், குமரன் நகர்,ஜெயபாலாஜி நகர், வள்ளுவர் சாலை, ஜி ஆர் நகர், ராஜீவ் காந்தி நகர், கங்கை அவன்யு, மாந்திநாயகம் தோட்டம், மாரியம்மன் கோவில் தெரு.</p><h2><strong>முகலிவாக்கம்</strong></h2><p>சுரேஷ் நகர், உதயா நகர், குருசாமி நகர், சந்தோஷ் நகர், அவலன்சேரி, லக்ஷ்மி நகர், ஒத்தவாடை தெரு, ஏவி மல்லீஸ், ப்ரைம் எக்ஸ், மேக்ஸ் வொர்த் நகர் பேஸ்1, நாராயணன் நகர் பேஸ்1, 2 , தட்டான்குளம்.</p><h2><strong>அடையாறு</strong></h2><p>காந்தி நகர் 1 வது முதல் 3வது பிரதான சாலை வரை.</p><h2><strong>பல்லாவரம்</strong></h2><p>மல்லிகா நகர், ஹரியன் தெரு, பாரத் நகர், மாரியம்மன் கோவில் தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு, சரோஜினி தெரு, ஆபீசர் லேன், வெட்டரன் லேன்.</p><h2><strong>கீழ்க்கட்டளை</strong></h2><p>ஈஸ்வரி நகர், நியூ காலனி, வேம்புலி அம்மன் கோயில் தெரு, சித்ரா டவுன்ஷிப், ஜெயின் கிரீன் ஏக்கர்ஸ், லத்தீப் காலனி, காமராஜர் நகர்.</p><h2><strong>ஆலந்தூர்</strong></h2><p>எம்.கே.என். சாலை, அஷர்கானா, ஆலந்தூர் பிரதான சாலை, ரயில்வே ஸ்டேஷன் சாலை, மார்க்கெட் லேன், ஜி.எஸ்.டி. சாலை, ஈஸ்வரன் கோவில் தெரு, மதுரை தெரு, கருணீகர் தெரு, ஏரிக்கரை, ஆதம்பாக்கம் பகுதி, சாந்திநிகேதன் அபார்ட்மெண்ட்ஸ், மகாலட்சுமி அபார்ட்மெண்ட்ஸ், குரோவ் அபார்ட்மெண்ட்ஸ், மஸ்தான் கோரி அபார்ட்மெண்ட்ஸ், திருவள்ளுவர் பிரதான சாலை, வேளச்சேரி சாலை, பொன்னியம்மன் கோவில் தெரு, முத்தையால் ரெட்டி தெரு, குப்புசாமி காலனி, ஆபீஸ் காலனி, கக்கன் நகர், என்.ஜி.ஓ. காலனி, எஸ்.பி.ஐ. காலனி, மண்ணடியம்மன் மற்றும் பழனியம்மன் கோவில் தெரு, ரேஸ் கோர்ஸ் பகுதி, அம்பேத்கர் நகர், மடுவங்கரை.</p><h2><strong>பெரும்பாக்கம்</strong></h2><p>டிஎச்எஸ்சிபி பிளாக் எண் ஏஐ, ஏஜே, ஏகே, பிளாக் எண் 8 முதல் 86 வரை மற்றும் 152 முதல் 158 வரை, கிருஷ்ணா நகர், கோகுல் நகர், சௌமியா நகர், பெரும்பாக்கம் பிரதான சாலை, மாம்பாக்கம் பிரதான சாலை, பாரதியார் தெரு, அரசு மருத்துவமனை, நெசவாளர் நகர், அண்ணா சாலை, விமலா நகர், நல்லதம்பி தெரு, கோல்டன் அவென்யூ, சரஸ்வதி தெரு, சிவகாமி தெரு, சி.பி.ஐ. காலனி 1 வது முதல் 7 வது குறுக்குத் தெருக்கள் வரை.</p><h2><strong>மாங்காடு</strong></h2><p>ஜனனி நகர், சிதம்பரம் நகர், மலையம்பாக்கம், ரகுநாதபுரம், இந்திர நகர், செல்வராஜ் நகர், சாதிக் நகர், சிவானந்த நகர், ஸ்ரீராம் நகர், சக்ரா நகர், ஓம் சக்தி நகர், முத்துசாமி நகர், வீரா ஆஞ்சநேயர் கோவில் தெரு, மல்லிகா தியேட்டர், குன்றத்தூர் பிரதான சாலை.</p><h2><strong>ஆவடி</strong></h2><p>சி.டி.எச் சாலை, போலீஸ் கன்வர்சன் ஹால் முதல் ஹோட்டல் ஏ மற்றும் பி வரை, சரஸ்வதி நகர், தென்றல் நகர்.</p>]]></content:encoded></item><item><title>ராமின் &apos;ஏழு கடல் ஏழு மலை&apos; ரிலீஸ் தேதி அறிவிப்பு - சிறப்பு டீசர் வெளியீடு   
</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ezhukadal-ezhumalai-to-release-on-october-1-after-winning-multiple-international-film-festival-awards</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ezhukadal-ezhumalai-to-release-on-october-1-after-winning-multiple-international-film-festival-awards#comments</comments><guid isPermaLink="false">298bf204-a464-4a1e-bc99-1ebd6c0314a0</guid><pubDate>Tue, 21 Jul 2026 02:36:50 +0000</pubDate><atom:updated>2026-07-21T02:36:50.858Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Nivin Pauly,ஏழு கடல் ஏழு மலை,director ram,Ezhu Kadal Ezhu Malai,நிவின் பாலி,இயக்குநர் ராம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/y8kej4pn/nivin-pauly.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ nivin pauly]]></media:title><media:description type="html"><![CDATA[ nivin pauly]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/y8kej4pn/nivin-pauly.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.</p><h2>இயக்குநர் ராம் </h2><p>கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு, பறந்து போ உள்ளிட்ட படங்களை இயக்கி புகழ்பெற்றவர் இயக்குனர் ராம்.</p><p>தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்துடன் இயக்கும் இயக்குனர்களில் இயக்குனர் ராம் மிக முக்கியமானவர். </p><p>இவர் எடுக்கும் திரைப்படங்கள் ஒரு வாழ்க்கையின் தீஸிஸ் என்று சொல்லலாம். சமூதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட கதாப்பாத்திரங்களை மையமாக வைத்து படங்களை இயக்குவார்.</p><p>ராம் தற்பொழுது <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/a-man-a-witch-an-immortal-and-a-trainwreck-yezhu-kadal-yezhu-malai-trailer-released-756808">ஏழு கடல் ஏழு மலை</a> திரைப்படத்தை இயக்கியுள்ளார்.</p> <h2>ஏழு கடல் ஏழு மழை</h2><p>இப்படம் சுரேஷ் காமாட்சியின் 'வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்' தயாரிப்பில் நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ளது.</p><p>இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.</p><h2>சர்வதேச அங்கீகாரம்</h2><p>இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிட்டு பல விருதுகளை வென்றும், சர்வதேச பார்வையாளர்களின் பாராட்டையும் பெற்றது.</p><p>குறிப்பாக 46-வது மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ படம் திரையிடப்பட்டது.</p><p>இவ்விழாவில் இந்த ஆண்டு திரையிடப்படும் முதல் தமிழ் படம் இதுவாகும்.</p><p>ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது. ரொமேனியாவில் நடந்த ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிட தேர்வு செய்யப்பட்டது. </p><p>பார்வையாளர்களை காட்சியமைப்பினால் பிரமிப்பில் ஆழ்த்தும் 'நோ லிமிட்' எனும் பிரிவில் 'ஏழு கடல் ஏழு மலை' தேர்வானது.</p><h2>ரிலீஸ்</h2><p>படத்தின் டீசர், டிரெய்லர், பாடல்கள் முன்னதாக வெளியாகி கவனம் பெற்றிருந்தன. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை சிறப்பு டீசர் மூலம் படக்குழு அறிவித்துள்ளது. </p><p>அதன்படி படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி வெளியாக உள்ளது.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/d7iiPAxXUBo"></iframe></figure>]]></content:encoded></item><item><title>மதுபானங்கள் கொள்முதலில் புதிய நடைமுறை - ‘டாஸ்மாக்&apos; நிர்வாகம் அதிரடி
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-new-procedure-liquor-procurement</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-new-procedure-liquor-procurement#comments</comments><guid isPermaLink="false">fec29c07-00e4-40ab-b2b0-9b66348b5a71</guid><pubDate>Tue, 21 Jul 2026 02:29:32 +0000</pubDate><atom:updated>2026-07-21T02:29:32.037Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tasmac,டாஸ்மாக் நிர்வாகம்,டாஸ்மாக்,liquor procurement ​​,மதுபானங்கள் கொள்முதல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/4flrvvvq/tasmac.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tasmac]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/4flrvvvq/tasmac.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுபானங்கள் கொள்முதலில் புதிய நடைமுறையை ‘டாஸ்மாக்' நிர்வாகம் தொடங்கி உள்ளது.</p><h2>மது விற்பனை</h2><p>தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 'டாஸ்மாக்' கடைகள் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபான வகைகளை 11 நிறுவனங்களிடம் இருந்தும், 'பீர்' வகைகள் 6 நிறுவனங்களிடம் இருந்தும் 'டாஸ்மாக்' நிர்வாகம் கொள்முதல் செய்கிறது.</p><p>இதில் பிரபல அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் நடத்தும் நிறுவனங்களும் அடங்கும். எந்த நிறுவனத்தின் மதுபானம் அதிகம் விற்பனையாகிறதோ, அவை கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டன. அதாவது குறிப்பிட்ட நிறுவனங்களின் மது வகைகள் மட்டும் 60 முதல் 70 சதவீதம் வரையில் கொள்முதல் செய்யப்பட்டது.</p><h2>டாஸ்மாக் நிர்வாகம்</h2><p>இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு த.வெ.க. அரசு அமைந்தவுடன் '<a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D">டாஸ்மாக்</a>' நிர்வாகம் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த 6-ந் தேதி அன்று 'டாஸ்மாக்' நிர்வாக கூட்டம் நடைபெற்றது. இதில் குறிப்பிட்ட சில நிறுவனங்களிடம் இருந்து மட்டும் அதிகளவு மதுபானங்களை கொள்முதல் செய்யாமல் அனைத்து நிறுவனங்களிடம் இருந்தும் சரிசமமாக மதுபானங்கள் கொள்முதல் செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.</p> <h2>எலைட் கடைகள்</h2><p>அதன்படி அனைத்து நிறுவனங்களிடம் இருந்து சரிசமமாக மதுபானங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. உயரக மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் 'எலைட்' கடைகளில் பிரீமியம், மீடியம் ரக மதுவகைகளில் ஒரு பெட்டி கட்டாயம் விற்பனை செய்ய வேண்டும் என்றும் உத்தரவு வழங்கப்பட்டு உள்ளது.</p><h2>விரும்பிய மது வகைகள்</h2><p>'டாஸ்மாக்' கடைகளில் விற்பனை செய்யப்படும் சாதாரண ரக மதுபான வகைகளை அனைத்து மதுபான உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து சமமாக கொள்முதல் செய்தால், மதுபிரியர்கள் விரும்பும் மது வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும். இது மறைமுகமாக குறிப்பிட்ட நிறுவனத்தின் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-decides-to-introduce-54-more-liquor-brands">மதுவகைகளை</a> அதிகளவில் கொள்முதல் செய்வதற்கு புறவழி செயல் போன்று அமைந்துவிடும். மதுபிரியர்கள் விரும்பாத மதுபானங்கள் விற்பனையாகாமல் அப்படியே கடையில் தேங்கிவிடும்' என்பது 'டாஸ்மாக்' ஊழியர்களின் கருத்தாக உள்ளது.</p><p>புதுச்சேரி போன்று அண்டை மாநிலங்களில் விற்கப்படும் வெளிநாட்டு மதுபான வகைகளையும் 'டாஸ்மாக்' நிர்வாகம் கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும் என்பது மதுபிரியர்களின் விருப்பமாக இருக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>CJP பேரணி மோதல்: 118 போலீசார், 60 போராட்டக்காரர்கள் காயம்.. 70 பேர் கைது </title><link>https://www.maalaimalar.com/news/national/neet-protest-march-to-parliament-in-delhi-turns-violent-with-lathicharge-tear-gas-178-injured-and-70-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-protest-march-to-parliament-in-delhi-turns-violent-with-lathicharge-tear-gas-178-injured-and-70-arrested#comments</comments><guid isPermaLink="false">2bd3b9bc-d74f-4dec-b5c4-f56cd44cf819</guid><pubDate>Tue, 21 Jul 2026 01:57:04 +0000</pubDate><atom:updated>2026-07-21T01:57:04.717Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>protest,போராட்டம்,Sonam Wangchuk,சோனம் வாங்சுக்,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,Cockroach Janata Party</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/m9utb31r/cjp.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ CJP RALLY]]></media:title><media:description type="html"><![CDATA[ CJP RALLY]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/m9utb31r/cjp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி:</p><p>நேற்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் ஜந்தர் மந்தரில் ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வந்த கரப்பான்பூச்சி கட்சியை (சிஜேபி) சேர்ந்தவர்களும், நாடு முழுவதும் இருந்து வந்திருந்த பெருமளவிலான இளைஞர்களும்  நாடாளுமன்ற கட்டிடம் நோக்கி <a href="https://www.maalaimalar.com/news/national/most-anti-youth-pm-says-rahul-as-oppn-slams-govt-over-crackdown-on-protesters">பேரணி </a>செல்ல முயன்றனர். </p><p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி இந்த போராட்டம், பேரணி நடைபெற்றது. </p><p>ஜந்தர் மந்தரில் தொடங்கிய பேரணி, மத்திய டெல்லியின் முக்கியச் சாலைகளுக்கு பரவியதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.</p> <h2>தடியடி, கண்ணீர் புகை</h2><p>டெல்லி போலீசார் மற்றும் மத்திய படையினர் தடுப்புகளை மீறி முன்னேறும் அவர்களை தடுத்து நிறுத்த தடியடி நடத்தியும் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும் கலைக்க முயன்றனர். மேலும் அவர்கள் பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்தால் அவர்களை சுட்டுத் தள்ள மத்திய படையினர் துப்பாக்கியை தூக்கி குறிபார்த்தாவாறு நின்றிருந்தனர்.</p><p>தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீச்சுக்கு மத்தியில் போலீசார், போராட்டக்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.</p>  <h2>காயம் - கைது</h2><p>நாள் முடிவில் கிடைத்த தகவலின்படி, போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் 118 காவல் துறையினரும், போலீசாரின் தடியடியில் 60 போராட்டக்காரர்களும் காயமடைந்துள்ளனர்.</p><p>வன்முறையில் ஈடுபட்டதாக 70 பேரை காவல்துறையினர் கைது செய்துதுள்ளனர்.</p><p>பொதுச்சொத்துக்களுக்குசேதம் விளைவித்தல், அரசு ஊழியர்களைத் தாக்குதல் மற்றும் கலவரத்தை தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p> <h2>நட்டாவுடன் பேச்சுவார்த்தை</h2><p>போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், சிஜேபி அமைப்பின் பிரதிநிதிகள் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவை சந்தித்துப் <a href="https://www.maalaimalar.com/news/national/nadda-assures-protesting-cjp-that-govt-will-consider-its-demands-including-pradhans-resignation">பேச்சுவார்த்தை </a>நடத்தினர்.</p><p>இதன் பின்னர், ஜந்தர் மந்தருக்குத் திரும்புமாறு போராட்டக்காரர்களுக்கு சிஜேபி தலைமை அறிவுறுத்தியது. அதற்குள் ஜந்தர் மந்தரில் அமைக்கப்பட்டிருந்த போராட்ட மேடைகள் அகற்றப்பட்டிருந்தன. இருப்பினும் சிஜேபியினர் மற்றும் இளைஞர்கள் தங்கள் போராட்டத்தை ஜந்தர் மந்தரில் தொடர்ந்து வருகின்றனர்.</p><h2> உண்ணாவிரதம் </h2><p>இந்த போராட்டத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ், மூத்த பாலிவுட் நடிகை ஷாபனா அஸ்மி உள்ளிட்ட பிரபலன்களும் சமூக செயல்பாட்டாளர்களும் இளைஞர்களுக்கு பக்க பலமாக பங்கேற்றுள்ளனர். </p><p>இவர்களின் அறிவுறுத்தலின் பேரில், கடந்த 23 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த அகில இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த 3 மாணவர்கள் நேற்று தங்கள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டனர். </p><p>இந்த போராட்டத்திற்கு ஆதரவாக மருத்துவமனையில் இருந்தபடி கல்வியாளர் சோனம் வாங்சுக் தன் உண்ணாவிரதத்தை 23வது நாளாக தொடர்ந்து வருகிறார்.</p>]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 21.7.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு இனிய செய்தி இல்லம் தேடி வரும்</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-21-july-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-21-july-2026#comments</comments><guid isPermaLink="false">9b32cb51-594c-4414-8e7c-755a4d4915c6</guid><pubDate>Tue, 21 Jul 2026 01:42:52 +0000</pubDate><atom:updated>2026-07-21T01:42:52.259Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/01/20/25060454-rasipalan.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/01/20/25060454-rasipalan.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>ராசிபலன்(Rasipalan)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>அலைச்சல் ஏற்பட்டாலும் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் விருப்ப ஓய்வு பெற்று தொழில் தொடங்குவோமா என்று சிந்திப்பீர்கள்.</p><h2>ரிஷபம்</h2><p>அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். நாவன்மையால் நல்ல பெயர் எடுப்பீர்கள். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். தொழில் குறுக்கீடுகள் அகலும்.</p><h2>மிதுனம்</h2><p>மதி நுட்பத்தால் மகத்தான காரியமொன்றை செய்து முடிக்கும் நாள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வாகனம் மாற்றம் செய்யலாமா என்று சிந்திப்பீர்கள்.</p><h2>கடகம்</h2><p>நினைத்தது நிறைவேற்றும் நாள். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.</p> <h2>சிம்மம்</h2><p>தொட்ட காரியம் துளிர்விடும் நாள். வரவு எதிர்பார்த்தபடியே வந்து சேரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.</p><h2>கன்னி</h2><p>விடா முயற்சிக்குவெற்றி கிட்டும் நாள். வளர்ச்சிக்கு மாற்றினத்தவர்கள் கைகொடுத்து உதவுவர். பயணங்கள் மகிழ்ச்சிக்குரியதாக இருக்கும்.</p><h2>துலாம்</h2><p>முயற்சி கைகூடும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடி சிறப்பாக முடியும். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.</p><h2>விருச்சிகம்</h2><p>புகழ் கூடும் நாள். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தினர்களின் குணமறிந்து செயல்படுவது நல்லது.</p> <h2>தனுசு</h2><p>இனிய செய்தி இல்லம் தேடி வரும் நாள். வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொதுவாழ்வில் புகழ் கூடும்.</p><h2>மகரம்</h2><p>செல்வாக்கு உயரும் நாள். பெரிய மனிதர்களின் தொடர்பு உங்கள் தகுதியை உயர்த்தும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு உறுதியாகலாம்.</p><h2>கும்பம்</h2><p>விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வீடு மாற்றம், உத்தியோக மாற்றம் பற்றி யோசிப்பீர்கள். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை.</p><h2>மீனம்</h2><p>மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. நினைத்தது ஒன்றும் நடந்தது ஒன்றுமாக இருக்கும்.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்று பெட்ரோல் - டீசல் விலை நிலவரம் </title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/fuel-prices-stable-chennai-petrol-and-diesel-rates-unchanged-amid-hormuz-tension</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/fuel-prices-stable-chennai-petrol-and-diesel-rates-unchanged-amid-hormuz-tension#comments</comments><guid isPermaLink="false">31905645-a049-4ca8-9c20-76b909ceb173</guid><pubDate>Tue, 21 Jul 2026 01:37:42 +0000</pubDate><atom:updated>2026-07-21T01:37:42.193Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,கச்சா எண்ணெய்,Crude oil,பெட்ரோல் டீசல் விலை,Petrol and Diesel Prices</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/zb9pki7q/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பெட்ரோல் - டீசல் விலை]]></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல் - டீசல் விலை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/zb9pki7q/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/us-military-says-its-carrying-out-its-10th-consecutive-night-of-strikes-on-iran">ஈரான் போரினால்</a> மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.</p><h2>எண்ணெய் நிறுவனங்கள்</h2><p>இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது. கச்சா எண்ணெய்யை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது.</p><p>அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.</p> <h2>பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்</h2><p>அந்த வகையில் இன்று (21.07.2026 - செவ்வாய்கிழமை)க்கான பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ. 99.55-க்கும் நேற்றைய விலையில் எனது மாற்றமுமின்றி விற்பனை செய்யப்படுகிறது.</p><p>அதேவேளை, இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97 -க்கு நேற்றைய விலைப்படி விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கச்சா எண்ணெய்</h2><p>இன்று சர்வதேச சந்தையில் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 88.470 டாலர் என விற்பனை ஆகி வருகிறது. நேற்று 90 டாலர் என்ற அளவை தொட்ட நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது.</p><p>வரும் நாட்களில் போர் மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுவதால் விலை மேலும் உயரக்கூடும். இதனால் வாகன ஓட்டிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.</p><p>மத்திய அரசு உலக சந்தை நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 21 ஜூலை 2026:  முருகன் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-21-july-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-21-july-2026#comments</comments><guid isPermaLink="false">fb84c36c-b9d1-4022-937e-a09afbe1e12c</guid><pubDate>Tue, 21 Jul 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-07-21T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/12/08/22822872-muruga2.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/12/08/22822872-muruga2.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆடி-5 (செவ்வாய்க்கிழமை)</p><p>பிறை : வளர்பிறை</p><p>திதி :   சப்தமி காலை 8.41 வரை பிறகு அஷ்டமி</p><p>நட்சத்திரம் : சித்திரை நள்ளிரவு 1.21 வரை பிறகு சுவாதி</p><p>யோகம் :  சித்தயோகம்</p><p>ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை</p><p>எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை</p><p>சூலம் : வடக்கு</p><p>நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை</p> <h2>மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் கிளி வாகனத்தில் புறப்பாடு</h2><p>நத்தம் ஸ்ரீ மாரியம்மன் பூந்தேரில் பவனி. வடமதுரை சௌந்தராஜப் பெருமாள் உற்சவாரம்பம். மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் கிளி வாகனத்தில் புறப்பாடு, சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல், திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம். </p><p>திருநெல்வேலி சமீபம் 3-ஆம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் திருக்கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமான் பவனி.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - திடம்</p><p>ரிஷபம் - நிறைவு</p><p>மிதுனம் - உண்மை</p><p>கடகம் - கடமை</p><p>சிம்மம் - கண்ணியம்</p><p>கன்னி - கட்டுப்பாடு</p><p>துலாம் - இன்பம்</p><p>விருச்சிகம் - வாழ்வு</p><p>தனுசு - பரிவு</p><p>மகரம் - பக்தி</p><p>கும்பம் - உழைப்பு</p><p>மீனம் - சிறப்பு</p> ]]></content:encoded></item><item><title>Sikkim: நிலச்சரிவால் சுரங்கப்பாதைக்குள் 27 தொழிலாளர்கள் சிக்கித் தவிப்பு - மீத்தேன் வாயு கசிவால் மீட்பதில் சிக்கல் </title><link>https://www.maalaimalar.com/news/national/sikkim-tunnel-landslide-rescue-27-workers-trapped-methane-leak-hampers-operations</link><comments>https://www.maalaimalar.com/news/national/sikkim-tunnel-landslide-rescue-27-workers-trapped-methane-leak-hampers-operations#comments</comments><guid isPermaLink="false">9841c0d4-5d6f-4381-b096-fb55277764b3</guid><pubDate>Tue, 21 Jul 2026 01:03:45 +0000</pubDate><atom:updated>2026-07-21T01:03:45.544Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>landslide,சிக்கிம்,Tunnel,sikkim,நிலச்சரிவு,சுரங்கப்பாதை,மீத்தேன் வாசு கசிவு,methane gas leak</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/q0ujss4g/sikkim-landlslide-tunnel-collapse.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Sikkim tunnel ]]></media:title><media:description type="html"><![CDATA[ Sikkim tunnel]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/q0ujss4g/sikkim-landlslide-tunnel-collapse.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/sikkim-becomes-fully-literate-state-5th-in-the-country">சிக்கிமில் </a>நீர்மின் திட்ட சுரங்கப்பாதையில் திடீர் நிலச்சரிவு காரணமாக 27 தொழிலாளர்கள் உள்ளே சிக்கித் தவிக்கின்றனர். மீத்தேன் வாயு கசிவால் மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. </p><h2>நிலச்சரிவு </h2><p>சிக்கிம் மாநிலம் நாம்ச்சி மாவட்டத்தில் நேற்று மதியம் Teesta Stage-VI நீர்மின் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் சாமர்துங் சுரங்கப்பாதைக்கு வெளியே திடீரென <a href="https://www.maalaimalar.com/amp/story/news/national/disaster-8-killed-and-15-houses-destroyed-after-heavy-rain-and-flash-floods">நிலச்சரிவு </a>ஏற்பட்டது.</p><p>கனமழையினால் மலைச்சரிவில் இருந்து பெருமளவில் பாறைகளும் மண்ணும் சரிந்து விழுந்ததில், சுரங்கப்பாதையின் நுழைவு வாயில் முற்றிலும் அடைபட்டது. </p><p>நிலச்சரிவு ஏற்பட்ட போது சுரங்கத்தின் உள்ளே பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 27 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர்.</p> <h2>மீட்பு முயற்சி</h2><p>விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தேசிய பேரிடர் மீட்புப் படை மாநில பேரிடர் மீட்புப் படை மாவட்ட காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.</p><p>மீட்புப் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்ட போதிலும், சுரங்கப்பாதையின் உட்பகுதியில் இருந்து ஆபத்தான மீத்தேன் வாயு கசியத் தொடங்கியுள்ளது மீட்புக் குழுவினருக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.</p><p>வாயு கசிவு காரணமாக உள்ளே செல்ல முயன்ற சில மீட்புப் படை வீரர்களுக்கு தலைச்சுற்றல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.</p><p>இதனால் மீட்புப் பணிகள் மிகவும் கவனத்துடன் உச்சக்கட்ட எச்சரிக்கையுடனும் மெதுவாக நடத்தப்பட்டு வருகின்றன. வாயுவின் அளவுதொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.</p> <h2>சிறப்பு படை</h2><p>வாயு கசிவை சமாளிக்கும் வகையில், அதிநவீன வாயு கவசங்கள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் கூடிய சிறப்புப் பயிற்சி பெற்ற மீட்புக் குழுவினர் பக்கத்து மாநிலமான மேற்கு வங்கத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர்.</p><p>மீட்புப் படையினர் சிறப்பு மாஸ்க்குகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் நவீன துளையிடும் கருவிகளின் உதவியுடன் அடைபட்டுள்ள நுழைவு வாயிலைத் தோண்டி உள்ளே செல்ல தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.</p> <h2>தயார் நிலை</h2><p>சுரங்கத்தில் இருந்து வெளியே அழைத்துவரப்படும் தொழிலாளர்களுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ்களும், மருத்துவக் குழுக்களும் சம்பவ இடத்திலேயே தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.</p><p>உள்ளே சிக்கியுள்ள 27 தொழிலாளர்களையும் பத்திரமாக மீட்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக நிர்வாகம் உறுதியளித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வடக்கு மாசிடோனியாவிற்கு வருகை தந்தார் குடியரசுத் தலைவர் முர்மு</title><link>https://www.maalaimalar.com/news/world/president-murmu-arrives-in-north-macedonia</link><comments>https://www.maalaimalar.com/news/world/president-murmu-arrives-in-north-macedonia#comments</comments><guid isPermaLink="false">5411b50f-d84c-4f81-b325-4747c823437c</guid><pubDate>Tue, 21 Jul 2026 00:24:21 +0000</pubDate><atom:updated>2026-07-21T00:24:21.436Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திரவுபதி முர்மு,குடியரசு தலைவர்,Droupadi Murmu,North Macedonia</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/wtlb7she/mru.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ குடியரசுத் தலைவர் முர்மு - கோப்புப்படம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/wtlb7she/mru.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஐரோப்பிய நாடுகளுடனான உறவை வலுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் மூன்று நாடுகளுக்கான பயணத்தின் ஒரு பகுதியாக, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக வடக்கு மாசிடோனியாவிற்கு வந்துள்ளார். </p><p>வடக்கு மாசிடோனியாவிற்கு வருகை தரும் முதல் இந்திய குடியரசு தலைவர் இவர் ஆவார். </p><p>தென்கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள, கடல் எல்லை இல்லாத நாடான இங்கு, இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கும் தனது பயணத்தின் இரண்டாம் கட்டத்தில், குடியரசு தலைவர் முர்மு அந்நாட்டு அதிபர் கோர்டானா சில்ஜனோவ்ஸ்கா-டாவ்கோவாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவார்.</p><p><strong>நாடாளுமன்ற உரை:</strong></p><p>மேலும், அவர் பிரதமர் ஹிரிஸ்டிஜன் மிக்கோஸ்கி மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் அஃப்ரிம் காஷி ஆகியோரை சந்திப்பதோடு, அந்நாட்டு நாடாளுமன்றத்திலும் உரையாற்றுவார். இந்தியா-வடக்கு மாசிடோனியா வர்த்தக மன்றத்திலும் முர்மு உரையாற்ற உள்ளார்.</p><p>வேளாண்மை, மருந்துகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் (IT) மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் போன்ற முன்னுரிமைத் துறைகளில் பொருளாதார உறவுகளை ஆழமாக்குவதில் இரு தரப்பினரும் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர்.</p><p><strong>அன்னை தெரசா நினைவிடம்:</strong></p><p>குடியரசுத் தலைவர் முர்மு, அன்னை தெரசா நினைவிடத்தையும் பார்வையிடுவார். அன்னை தெரசா 1910-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26-ஆம் தேதி, வடக்கு மாசிடோனியாவின் தற்போதைய தலைநகரான ஸ்கோப்ஜேவில் பிறந்தார். 1928-ஆம் ஆண்டு அயர்லாந்தில் உள்ள 'சிஸ்டர்ஸ் ஆஃப் லொரெட்டோ' (Sisters of Loreto) அமைப்பில் இணைவதற்காக அங்கிருந்து புறப்படும் வரை அவர் ஸ்கோப்ஜேவிலேயே வசித்து வந்தார்; அதன்பிறகு அவர் இந்தியாவுக்குக் குடிபெயர்ந்தார்.</p><p>தனது பயணத்தின் இறுதிக்கட்டமாக, அதிபர் நிகுசோர் டானின் அழைப்பின் பேரில் ஜூலை 23 முதல் 25 வரை முர்மு ருமேனியாவிற்குப் பயணம் மேற்கொள்வார். மூன்று தசாப்தங்களுக்கும் மேலான காலத்தில் ருமேனியாவுக்கு இந்திய குடியரசு தலைவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாக அமையும்.</p><p><strong>முக்கியத்துவம்:</strong></p><p>இந்த மூன்று நாடுகளுக்கான அரசுமுறை பயணம், அந்நாடுகளுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும், பரந்த கிழக்கு ஐரோப்பிய பிராந்தியத்துடன் மத்திய அரசு கொண்டுள்ள ஈடுபாட்டிற்கும் இந்தியா அளிக்கும் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது.</p><p>வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா ஆகிய '3T'-களில் கவனம் செலுத்துவதே இந்த பயணத்தின் மிக முக்கியமான நோக்கங்களில் ஒன்றாகும் என்று வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் சி.பி. ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தொடர்ந்து 10-ஆவது நாளாக ஈரான் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்கா</title><link>https://www.maalaimalar.com/news/world/us-military-says-its-carrying-out-its-10th-consecutive-night-of-strikes-on-iran</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-military-says-its-carrying-out-its-10th-consecutive-night-of-strikes-on-iran#comments</comments><guid isPermaLink="false">c5d27fc6-ef7c-4836-aff7-ab2f80ca190c</guid><pubDate>Mon, 20 Jul 2026 23:55:57 +0000</pubDate><atom:updated>2026-07-20T23:55:57.677Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஈரான்,Iran,US military,அமெரிக்க இராணுவம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/pnd5w7eg/inr-udr-atk.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Iran Under Atak]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/pnd5w7eg/inr-udr-atk.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் மீது தொடர்ந்து 10-வது இரவாக தாக்குதல்களை நடத்தி வருவதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.</p><p>ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஈரான் மீது தொடர்ந்து 10-ஆவது இரவாக தாக்குதல்களை நடத்தி வருவதாக அமெரிக்க ராணுவம் நேற்று (திங்கள்கிழமை) இரவு அறிவித்தது. </p><p>மற்றொரு அமெரிக்க ராணுவ வீரர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மேலும் அமெரிக்காவின் நட்பு நாடுகளான குவைத், ஜோர்டான் மற்றும் அமெரிக்க கடற்படையின் 5-ஆவது கடற்படைப் பிரிவு (5th Fleet) அமைந்துள்ள பஹ்ரைன் ஆகியவற்றின் மீது ஈரான் தாக்குதல்களை நடத்தியதை தொடர்ந்து இந்த தாக்குதல்கள் மீண்டும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p><p><strong>நம்பிக்கைக்குரிய அறிகுறிகள்:</strong></p><p>ஹார்முஸ் நீரிணையில் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்படும் ஈரானின் ராணுவ திறன்களை மேலும் பலவீனப்படுத்தும் நோக்கிலேயே இந்த சமீபத்திய தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க மத்தியக் கட்டளை மையம் (US Central Command) சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளது.</p><p>அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் ஒரு முழு அளவிலான போரை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், ராஜதந்திர ரீதியில் நம்பிக்கைக்குரிய அறிகுறிகளும் தென்படுகின்றன; இமோதலில் முக்கிய மத்தியஸ்தராக செயல்படும் பாகிஸ்தானுக்கு ஈரானின் உள்துறை அமைச்சர் பேச்சுவார்த்தைக்காக சென்றுள்ளார்.</p><p>சண்டையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் கடந்த மாதம் கையெழுத்திடப்பட்ட இடைக்கால ஒப்பந்தம் முறிந்துவிட்டது. உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு மிக முக்கியமான பாதையான ஹார்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்து பெருமளவு முடங்கியுள்ளது. மேலும், சண்டை தீவிரமடைந்துள்ள நிலையில், இரு தரப்பினரும் லட்சக்கணக்கான மக்கள் சார்ந்திருக்கும் பொதுமக்களுக்கான உள்கட்டமைப்புகளை தங்கள் தாக்குதல்களுக்கு இலக்காக்கியுள்ளனர்.</p><p><strong>புதிய அச்சுறுத்தல்:</strong></p><p>போரின் போது எண்ணெய் ஏற்றுமதிக்கான மாற்று பாதையான செங்கடல் வழியாக சவூதி அரேபியா கப்பல் போக்குவரத்து செய்வதை தடுக்க திட்டமிட்டுள்ளதாக ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கூறியதை அடுத்து, உலக எரிசக்தி சந்தைகளுக்கு ஒரு புதிய அச்சுறுத்தல் உருவாகி இருக்கிறது.</p><p>இந்த பதற்றம் சமீப வாரங்களில் எண்ணெய் விலைகளை உயர்த்தியுள்ளது. திங்களன்று, பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 88 டாலருக்கும் அதிகமாக வர்த்தகமானது. மேலும், அமெரிக்காவில் சாதாரண பெட்ரோல் ஒரு கேலன் சராசரியாக 4 டாலராக உயர்ந்தது.</p><p><strong>டிரம்ப் எச்சரிக்கை:</strong></p><p>ஜோர்டானில் நடந்த தாக்குதல்களில் கொல்லப்பட்ட இரண்டு வீரர்களை அமெரிக்க இராணுவம் அடையாளம் கண்டுள்ளது; இதில் மூன்றாவது நபர் காணாமல் போயுள்ளார். இதற்கிடையில், ஈராக்கில் சுட்டு வீழ்த்தப்பட்ட ஈரானிய ஆளில்லா விமானத்தை "கட்டுப்பாட்டுடன் வெடிக்கச் செய்த" போது சனிக்கிழமையன்று மற்றொருவர் உயிரிழந்ததை இராணுவம் உறுதிப்படுத்தியது.</p><p>"ஒவ்வொரு முறையும் ஈரான் ஒரு அமெரிக்க வீரரைக் கொல்லும்போது, ​​அந்தக் கொலைக்கு அவர்கள் பல மடங்கு விலை கொடுப்பார்கள்!" என்று அதிபர் டொனால்டு டிரம்ப் சமூக ஊடகங்களில் எச்சரித்தார்.</p>]]></content:encoded></item><item><title>CJP கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கும்... ஜே.பி. நட்டா உறுதி</title><link>https://www.maalaimalar.com/news/national/nadda-assures-protesting-cjp-that-govt-will-consider-its-demands-including-pradhans-resignation</link><comments>https://www.maalaimalar.com/news/national/nadda-assures-protesting-cjp-that-govt-will-consider-its-demands-including-pradhans-resignation#comments</comments><guid isPermaLink="false">27708fdb-1052-4ed5-8695-e1b737299ac1</guid><pubDate>Mon, 20 Jul 2026 22:58:24 +0000</pubDate><atom:updated>2026-07-20T22:58:24.907Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>JP Nadda,ஜே.பி. நட்டா,CJP Protest,CJP,காக்ரோச் ஜந்தா கட்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/4qv98vo2/jp-n.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ JP Nadda with CJP]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/4qv98vo2/jp-n.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>போராட்டத்தில் ஈடுபட்டுள்ள CJP அமைப்பிற்கும் மத்திய அரசுக்கும் இடையே நடைபெற்ற முதல் நேரடிப் பேச்சுவார்த்தையில், மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா அந்த அமைப்பின் இரண்டு பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினார். ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்று காவல்துறையினரால் தடுக்கப்பட்ட நிலையில், அவர்களின் கோரிக்கைகள் குறித்து அரசின் உயர்மட்ட தலைவர்களுடன் உள்விவாதங்கள் நடத்தப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார். </p><p>தேர்வு முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, CJP அமைப்பின் செய்தி தொடர்பாளர்களான அசுதோஷ் ரன்கா மற்றும் சௌரவ் தாஸ் ஆகியோர் அமைச்சரின் இல்லத்தில் இரண்டு மணி நேரத்திற்குள் இருமுறை அவரை சந்தித்து மனுவை அளித்தனர். அதன் பின்னரே இந்த உறுதிமொழி கிடைத்தது என்று CJP அமைப்பு தெரிவித்தது.</p><p>"அவர் தலைவர்களுடன் பேசி, அதன் முடிவுகளை தெரிவிப்பார் என்பது மட்டுமே எங்களுக்கு கிடைத்த ஒரே உறுதிமொழி," என்று ரன்கா பி.டி.ஐ. (PTI) வீடியோக்களிடம் கூறினார்.</p><p><strong>பேச்சுவார்த்தை:</strong></p><p>நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்வதைத் தடுக்க காவல்துறையினர் கண்ணீர்ப்புகை மற்றும் தடியடியை பயன்படுத்தி போராட்டக்காரர்களை ஒடுக்கிய அதே நாளில், அரசுக்கும் இளைஞர்கள் தலைமையிலான CJP அமைப்பிற்கும் இடையிலான இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.</p><p>போராட்டக்காரர்கள் முன்னதாகவே அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்ததை தொடர்ந்து, காலை 11.50 மணி முதல் அவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் நட்டா ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.</p><p>"இச்சந்திப்பு சுமூகமான சூழலில் நடைபெற்றது. அவர்களின் பிரதிநிதி குழுவுடன் விரிவான ஆரம்பகட்ட வாய்மொழி விவாதம் நடைபெற்றது. மேலும் அவர்கள் மாலை 4 மணியளவில் என்னிடம் எழுத்துப்பூர்வமான மனுவை அளித்தனர்," என்று அவர் கூறினார்.</p><p>போராட்டக்காரர்கள் அனைவரும் தங்கள் அமர் போராட்டத்தைக் கைவிட்டு, இயல்பு நிலையை மீட்டெடுக்க நிர்வாகத்திற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டதாக அமைச்சர் தெரிவித்தார்.</p><p><strong>வாக்குறுதி அளிக்கப்படவில்லை:</strong></p><p>"இது குறித்து உரிய மட்டத்தில் விவாதிப்பதாக அமைச்சர் உறுதியளித்தார். இருப்பினும், இதுவரை எந்த உறுதியான வாக்குறுதிகளும் அளிக்கப்படவில்லை. கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை அமைதியான முறையில் போராடும் நாங்கள் ஓயமாட்டோம்," என்று இச்சந்திப்பிற்குப் பிறகு 'எக்ஸ்' தளத்தில் சௌரவ் தாஸ் பதிவிட்டார்.</p><p>CJP போராட்ட விவகாரம் குறித்து அரசுக்குள் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.</p><p>நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், பிற்பகலில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அலுவலகத்தில் அவரை சந்தித்தார்.</p><p>நாடாளுமன்ற வளாகத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அப்பகுதியில் அதிகரித்ததால் நாடாளுமன்ற வளாகத்தின் சில முக்கிய நுழைவு வாயில்கள் மூடப்பட்டிருந்த நிலையில், அமைச்சர் பிரதான் பல மணிநேரம் ஷாவின் அலுவலகத்திலேயே இருந்தார். பின்னர் மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு மற்றும் பியூஷ் கோயல் ஆகியோரும் அவர்களுடன் இணைந்தனர்.</p><p>இருப்பினும், இச்சந்திப்பில் என்ன விவாதிக்கப்பட்டது என்பது உடனடியாகத் தெரியவரவில்லை. ஜந்தர் மந்தர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இனி எந்தவிதமான கெடுபிடி நடவடிக்கைகளும் இருக்காது என்று ஜே.பி. நட்டா உறுதியளித்ததாக தாஸ் கூறினார்; இருப்பினும், காவல் துறை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதற்கான எந்தத் தகவலும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p>நட்டாவின் இல்லத்திற்கு நண்பகல் வாக்கில் சென்றடைந்த பிறகு, அந்த குழு அவரை இருமுறை சந்தித்ததாக ரங்கா தெரிவித்தார்.</p><p><strong>மூன்று கோரிக்கைகள்:</strong></p><p>"எங்களுக்கு மூன்று கோரிக்கைகள் உள்ளன: சோனம் வாங்சுக் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அவர் ஒரு காணொளிச் செய்தியைப் பகிர விரும்புகிறார், அதற்கான அனுமதி அவருக்கு வழங்கப்பட வேண்டும். தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும்; மேலும், நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து தற்கொலை செய்துகொண்டவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 கோடி இழப்பீடு வழங்கப்பட வேண்டும்," என்று அவர் கூறினார்.</p><p>"அமைதியான முறையில் போராடுபவர்கள்" மீதான காவல் துறை நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும் தாங்கள் வலியுறுத்தியதாக சிஜேபி (CJP) அமைப்பு தெரிவித்தது.</p><p>நட்டாவிடம் சமர்ப்பிக்கப்பட்ட மனுவில், நீட் 2026 வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ (CBSE) 12-ஆம் வகுப்பு இணையதள சிக்கல்கள் மற்றும் சியுஇடி (CUET) தேர்வு நடத்துவதில் ஏற்பட்ட தாமதங்கள் உள்ளிட்ட பொதுத் தேர்வுகளை நடத்துவதில் தொடர்ந்து தோல்விகள் ஏற்படுவதாக சிஜேபி குற்றம் சாட்டியது. மேலும், போராட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே கல்வி அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்குவதே தங்கள் முக்கிய கோரிக்கையாக இருந்து வருவதாகவும் அது கூறியது.</p>]]></content:encoded></item><item><title>போராட்டத்தில் தாக்கப்பட்ட மாணவர்கள்: பிரதமர் மோடியை கடுமையாக சாடிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி</title><link>https://www.maalaimalar.com/news/national/most-anti-youth-pm-says-rahul-as-oppn-slams-govt-over-crackdown-on-protesters</link><comments>https://www.maalaimalar.com/news/national/most-anti-youth-pm-says-rahul-as-oppn-slams-govt-over-crackdown-on-protesters#comments</comments><guid isPermaLink="false">d5676497-dd3e-45f7-80ac-cf23de04b8a9</guid><pubDate>Mon, 20 Jul 2026 20:36:32 +0000</pubDate><atom:updated>2026-07-20T20:36:32.382Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,protest,போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/vffwpam3/dp-rg.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ போராட்டம் - ராகுல் காந்தி

]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/vffwpam3/dp-rg.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக 'சலோ சன்சத்' (நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணி) போராட்டத்தின்போது CJP அமைப்பினர் மீது காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையை கண்டித்து எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன. </p><p>காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை நாட்டின் வரலாற்றிலேயே "இளைஞர்களுக்கு எதிரான மிக மோசமான" பிரதமர் என்று சாடினார். </p><p><strong>மாணவர்கள் காயம்:</strong></p><p>நாடாளுமன்றத்தை அடைவதை தடுப்பதற்காக போராட்டக்காரர்கள் மீது டெல்லி காவல்துறை அதிகப்படியான பலப்பிரயோகம் செய்ததாக 'காக்ரோச் ஜனதா பார்ட்டி' (CJP) குற்றம் சாட்டியது. இதில் பல மாணவர்கள் காயமடைந்ததாகவும், சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஜே. ஆங்மோ தள்ளப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.</p><p>இருப்பினும், ஆங்மோ தாக்கப்பட்டதாக கூறப்படுவதை டெல்லி காவல்துறை மறுத்தது. அத்தகவல்கள் "முற்றிலும் பொய்யானவை மற்றும் தவறானவை. எந்தவொரு தனிநபரும் குறிவைத்து தாக்கப்படவில்லை" என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி விவாதத்திற்கு வலியுறுத்தியதால், மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே அவை நடவடிக்கைகள் முடங்கின.</p><p><strong>எக்ஸ் தள பதிவு:</strong></p><p>மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி 'எக்ஸ்' தள பிதிவில், "பிரதமர் மோடி இந்திய வரலாற்றிலேயே 'இளைஞர்களுக்கு எதிரான மிக மோசமான' பிரதமர் ஆவார். அவர் எந்தளவுக்கு இளைஞர்களுக்கு எதிரானவர் என்றால், தோல்வியடைந்த கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை கூட அவரால் பெற முடியவில்லை.</p><p>152 முறை வினாத்தாள் கசிவு நடந்துள்ளது. 7.5 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், குற்றவாளி என ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை. தண்டனை யாருக்குக் கிடைத்தது? கடினமாக உழைக்கும் இளைஞர்களுக்குத்தான்," என குறிப்பிட்டு இருந்தார்.</p><p>தனது பதிவில் ஒரு காணொளி செய்தியையும் அவர் இணைத்திருந்தார். அதில் அரசாங்கத்தையும் காவல்துறையையும் விமர்சித்த ராகுல் காந்தி, போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் "நியாயமானவை" என்று குறிப்பிட்டார். அமைதியான முறையில் போராடுவது ஒரு "மீற முடியாத அடிப்படை உரிமை" என்று காந்தி கூறினார். போராட்டக்காரர்களான மாணவர்கள் காவல்துறையினரால் தாக்கப்படும் காட்சிகளும் அந்த காணொளியில் இடம்பெற்றிருந்தன.</p><p>காவல்துறை வட்டாரங்களின்படி, CJP போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசியதை தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் 50-க்கும் மேற்பட்ட காவலர்களும், அதே எண்ணிக்கையிலான போராட்டக்காரர்களும் காயமடைந்தனர். இதை தொடர்ந்து காவல்துறை தடியடி நடத்தியது.</p><p>100-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் தடுத்து வைக்கப்பட்டு, டெல்லியில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களுக்கு அழைத்து செல்லப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.</p><p><strong>எதிர்க்கட்சிகள் கண்டனம்:</strong></p><p>சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி, டி.எம்.சி. தலைவர் மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், சிவசேனா (யுபிடி) தலைவர் ஆதித்யா தாக்கரே மற்றும் தி.மு.க. எம்.பி. கனிமொழி ஆகியோரும் பா.ஜ.க. தலைமையிலான அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தனர்.</p><p>கல்வி தொடர்பான நியாயமான கேள்விகளை மாணவர்கள் எழுப்பும்போது, ​​அவர்களுக்கு பதிலாக தடியடியும் சிறைபிடிப்பும் மட்டுமே கிடைப்பதாக காந்தி கூறினார்.</p><p>"தேர்வு வினாத்தாள்களை கசியவிட்ட குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள். ஆனால் நியாயமான பிரச்சினைகளை எழுப்பும் மாணவர்கள் இழுத்து செல்லப்பட்டு தாக்கப்படுகிறார்கள். இந்த அரசு இளைஞர்களுக்கு துரோகம் இழைப்பது மட்டுமல்லாமல், அவர்கள் மீது பாய்ந்து தாக்குதலையும் நடத்துகிறது," என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.</p><p><strong>மாணவர்களுக்கு ஆதரவு:</strong></p><p>ஜனநாயக ரீதியான கருத்து வேறுபாடுகளை பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு ஒடுக்குவதாக இடதுசாரி கட்சிகள் குற்றம் சாட்டின. அத்துடன் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற தங்கள் கோரிக்கையையும் மீண்டும் வலியுறுத்தின.</p><p>தேர்வு முறைகேடுகள் தொடர்பான விவகாரத்தில் பொறுப்புக்கூறலை வலியுறுத்திப் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக, ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில் சி.பி.ஐ. (எம்) பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி, பிருந்தா காரத் மற்றும் பொலிட்பீரோ உறுப்பினர்களான விஜூ கிருஷ்ணன், அருண் குமார், மரியம் தவலே உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.</p>]]></content:encoded></item><item><title>3வது தேசிய விருது : ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு பாடகர் வேல்முருகன் காசு மாலையுடன் பாராட்டு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/singer-velmurugan-gifts-coin-garland-gv-prakash-kumars-national-award</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/singer-velmurugan-gifts-coin-garland-gv-prakash-kumars-national-award#comments</comments><guid isPermaLink="false">8ae90539-370d-4bc7-9d34-b8e1fc19aebb</guid><pubDate>Mon, 20 Jul 2026 18:10:36 +0000</pubDate><atom:updated>2026-07-20T18:10:36.467Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>GV Prakash Kumar,ஜிவி பிரகாஷ் குமார்,velmurugan,வேல்முருகன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/jvoob71m/gvp-vmn.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜி.வி. பிரகாஷ் - வேல்முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/jvoob71m/gvp-vmn.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அண்மையில் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில்  ஜி.வி. பிரகாஷ் குமார் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் மூன்றாவது முறையாக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>இந்த மகிழ்ச்சிகர செய்தியை முன்னிட்டு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமாரை பின்னணி பாடகர்  வேல்முருகன் நேரில் சந்தித்து புத்தம் புது நாணயங்களினால் உருவாக்கப்பட்ட காசு மாலையை அணிவித்து பாராட்டி வாழ்த்தினார். </p><p><strong>ஐயப்ப பிரசாதம்:</strong></p><p>அத்துடன் சபரிமலை ஐயப்பன் கோவிலின் பிரசாதத்தையும் வழங்கினார். அப்போது பிரபல இசையமைப்பாளர் என். ஆர். ரகுநந்தன் உடன் இருந்தார்.</p><p>முன்னதாக தேசிய விருது வென்ற இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு முதலமைச்சர் விஜய், முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உள்பட பல்வேறு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.</p><p><strong>ஜி.வி. வீடியோ:</strong></p><p>அதில், தனக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் விஜய், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ரசிகர்களுக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் நன்றி தெரிவித்தார்.</p><p>தற்போது பாடகர் வேல்முருகன், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாரை நேரில் சந்தித்தது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>போராட்டக்களத்தில் வன்முறை... பல்வேறு உயர்மட்ட கூட்டங்களை நடத்திய டெல்லி காவல் துறை..!</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-police-holds-high-level-meetings-after-protest-violence</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-police-holds-high-level-meetings-after-protest-violence#comments</comments><guid isPermaLink="false">f3d5b8e8-2c4d-41f9-b60e-9f70a4f37121</guid><pubDate>Mon, 20 Jul 2026 17:31:05 +0000</pubDate><atom:updated>2026-07-20T17:31:05.907Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>போராட்டம்,Delhi Police,CJP Protest,டெல்லி காவல் துறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/hyb9du4i/dl-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டெல்லி காவல் துறை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/hyb9du4i/dl-1.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களை தொடர்ந்து, சட்டம்-ஒழுங்கு நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக <a href="https://www.maalaimalar.com/topic/delhi-police">டெல்லி காவல்துறை</a> பல உயர்மட்டக் கூட்டங்களை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><strong>முக்கிய கூட்டம்:</strong></p><p>தகவல்களின்படி, போராட்டங்களுக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்க காலையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இதில் முக்கிய இடங்கள், பாதுகாப்பு படையினரின் நிலைநிறுத்தம் மற்றும் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அதை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.</p><p>"கூட்டத்தின்போது, ​​கூட்டத்தைக் கையாளுதல், பாதுகாப்பு படையினரின் நடமாட்டம், போக்குவரத்து ஒழுங்குமுறை மற்றும் அவசரக்கால நடவடிக்கைகள் உள்ளிட்ட பாதுகாப்பு திட்டத்தின் அனைத்து அம்சங்களும் ஆய்வு செய்யப்பட்டன," என்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.</p><p><strong>மூத்த அதிகாரிகள் ஆலோசனை:</strong></p><p>பின்னர், வன்முறைக்குப் பிந்தைய நிலவரத்தை மதிப்பிடுவதற்கும், மோதல்கள் குறித்த விசாரணையை ஆய்வு செய்வதற்கும் டெல்லி காவல் துணை ஆணையர் (DCP) அலுவலகத்தில் மற்றொரு உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றதாக அவர்கள் கூறினர்.</p><p>நிகழ்வுகளின் வரிசைமுறை, மோதலின்போது பாதுகாப்பு படையினர் நிலைநிறுத்தப்பட்ட விதம், பொது சொத்துக்கள் மற்றும் காவல் வாகனங்களுக்கு ஏற்பட்ட சேதம், மற்றும் வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படுபவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மூத்த அதிகாரிகள் விவாதித்தனர்.</p><p><strong>கூடுதல் நடவடிக்கை:</strong></p><p>நிலவரம் குறித்து ஆலோசிக்கவும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கவும் டெல்லி காவல்துறையின் உயர் அதிகாரிகள் டெல்லி காவல் துணை ஆணையர் அலுவலகத்திற்கு சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>மேலும், பதற்றம் நிறைந்த பகுதிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டதோடு, தலைநகரில் சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதற்கான கூடுதல் நடவடிக்கைகள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக அவர்கள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>உக்ரைனில் வணிக கப்பல் மீது தாக்குதல் - 4 இந்தியர்கள் உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/4-indians-killed-in-attack-on-ship-leaving-ukraine-said-mea</link><comments>https://www.maalaimalar.com/news/world/4-indians-killed-in-attack-on-ship-leaving-ukraine-said-mea#comments</comments><guid isPermaLink="false">259003f2-4096-4491-8347-5f95b49af280</guid><pubDate>Mon, 20 Jul 2026 17:06:54 +0000</pubDate><atom:updated>2026-07-20T17:06:54.420Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Ukraine,Attack,தாக்குதல்,உக்ரைன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/4csy5tpi/mv.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எம்.வி. கோல்டன் லியோ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/4csy5tpi/mv.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உக்ரைனின் ஒடெசா துறைமுகத்தில் இருந்து வெளியேறி கொண்டிருந்த வணிக கப்பல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அதில் பயணித்த நான்கு இந்தியர்கள் உயிரிழந்ததாக <a href="https://www.maalaimalar.com/topic/external-affairs">வெளியுறவு அமைச்சகம்</a> தெரிவித்தது.</p><p>'எம்.வி. கோல்டன் லியோ' (MV Golden Leo) என்ற அந்தக் கப்பலில், ஐந்து இந்தியர்கள் உட்பட மொத்தம் 17 பணியாளர்கள் இருந்தனர்.</p><p>இந்த தாக்குதலை கண்டித்த <a href="https://www.maalaimalar.com/topic/india">இந்தியா</a>, வணிக கப்பல்களை குறிவைப்பதும், அப்பாவி பணியாளர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதும் "கண்டிக்கத்தக்கது மற்றும் தவிர்க்கப்பட வேண்டியவை" என்று மீண்டும் வலியுறுத்தியது. இருப்பினும், இத்தாக்குதலை நடத்தியது யார் என்பது குறித்து மத்திய அரசு தரப்பில் எந்த தகவலும் வழங்க்படவில்லை.</p><p><strong>4 இந்தியர்கள் உயிரிழப்பு:</strong></p><p>"ஜூலை 19-ஆம் தேதியன்று மாலை, ஒடெசா துறைமுகத்தில் இருந்து வெளியேறி கொண்டிருந்த 'எம்.வி. கோல்டன் லியோ' கப்பல் தாக்குதலுக்கு உள்ளானது. இந்த சம்பவத்தின் போது, ​​ஐந்து இந்தியர்கள் உட்பட 17 பணியாளர்கள் கப்பலில் இருந்தனர்.</p><p>கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, நான்கு இந்தியர்கள் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர்; மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்," என்று வெளியுறவு அமைச்சகம் கூறியது.</p><p>உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க முழு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் வெளியுறவு அமைச்சகம் கூறியது.</p><p>"உயிரிழந்த இந்தியர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதுடன், காயமடைந்த இந்தியர் விரைவில் முழுமையாகக் குணமடைய வாழ்த்துகிறோம்," என்றும் அது குறிப்பிட்டது.</p><p><strong>கண்டன அறிக்கை:</strong></p><p>"இத்தகைய தாக்குதல்களை இந்தியா கண்டிக்கிறது. வணிகக் கப்பல்களைக் குறிவைப்பதும், அப்பாவிப் பணியாளர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதும் அல்லது கப்பல் போக்குவரத்து மற்றும் வர்த்தகச் சுதந்திரத்திற்குத் தடையை ஏற்படுத்துவதும் கண்டிக்கத்தக்கவை மற்றும் தவிர்க்கப்பட வேண்டியவை என்பதை மீண்டும் வலியுறுத்துகிறது," என்று வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே மோதல்கள் தீவிரமடைந்து வரும் சூழலில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: தி.மு.க. எம்.எல்.ஏ.-வுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-20-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-20-july-2026#comments</comments><guid isPermaLink="false">a891028b-8923-40ff-9440-b41df422083d</guid><pubDate>Mon, 20 Jul 2026 04:31:44 +0000</pubDate><atom:updated>2026-07-20T16:25:25.946Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/xyqaz6vp/WhatsApp-Image-2026-07-20-at-10.03.28-AM.jpeg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/xyqaz6vp/WhatsApp-Image-2026-07-20-at-10.03.28-AM.jpeg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://maalai-malar.quintype.com/story/52b8a0d4-0cab-43aa-a5dd-05f76c447996">அடுத்த Innings-ஐ ஆரம்பிக்கலாமா..!- உதயநிதி ஸ்டாலின்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/6bd77b89-90ea-4147-9ccc-2530e0701e29">பி.வி.சிந்து சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்- ஜி.கே.வாசன்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/e1474dd3-bd53-4fc3-92e3-55391f386b53">GOLD PRICE TODAY : வார தொடக்கத்தில் உயர்ந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/44c7459f-2679-4b16-a8a1-ec3118c9c686">மத்தியப் பிரதேசத்தில் பொது சிவில் சட்டம்.. அமைச்சரவை ஒப்புதல் - இன்று சட்டமன்றத்தில் தாக்கல்</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/football/football-world-cup-full-details-on-prize-money-and-golden-and-silver-awards">உலகக்கோப்பை கால்பந்து.. பரிசுத்தொகை, கோல்டன், சில்வர் விருதுகள் முழு விவரம்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/sports/football/world-cup-final-spain-beat-argentina-in-extra-time-to-claim-second-title-as-messi-bids-farewell-in-tears">நேசிக்கிறோம் லியோ.. மைதானத்திலேயே உடைந்து அழுத மெஸ்ஸி - அர்ஜென்டினா கால்பந்து கூட்டமைப்பு சமாதானம்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/sports/football/fifa-world-cup-spain-clinch-second-title-as-trump-hands-trophy-after-1-0-win-over-argentina">FIFA Worldcup: ஸ்பெயின் அணிக்கு உலகக்கோப்பையை வழங்கிய அமெரிக்க அதிபர் டிரம்ப்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-scam-protest-sonam-wangchuk-hunger-strike-at-jantar-mantar-with-three-key-demands">இன்றே உண்ணாவிரதத்தை கைவிட தயார்.. மூன்று நிபந்தனைகள் விதித்த சோனம் வாங்சுக்!</a></p> <p><a href="https://maalai-malar.quintype.com/story/aa19a0cc-e556-4402-8eb8-f9e0a9087dc3">முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு - விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. கைது</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/7824cb9d-6d11-4fb8-8b69-3182b2e561f0">நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று கூடுகிறது</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/e987724e-e437-406b-93b4-a72b467fd1fb">விளாத்திகுளம் எம்எல்ஏ கைது: தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க பாடம் புகட்டப்படும் - கனிமொழி</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/baa765ee-bf4b-47d5-8399-db6be4615c04">விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/dc277594-7acd-4341-9e39-17e9e465efe2">அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான சமூகநீதியை வென்றெடுக்க உறுதியேற்போம்!- அன்புமணி</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/76bc8537-d996-44b1-8933-1f9769709c7b">என்ஜினீயரிங் படிப்புக்கான பொது கலந்தாய்வு தொடங்கியது</a></p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/hnb3g8hj/modi1.jpg" /></figure><p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமானதாக அமையும் என நம்புகிறேன் - பிரதமர் மோடி</p><p>விண்வெளி துறையில் வானளாவிய வளர்ச்சியை இந்தியா தொட்டுள்ளது. விக்ரம் 1 ராக்கெட் வெற்றியை அடுத்து தனியார் நிறுவனத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு பாராட்டுகள் - பிரதமர் மோடி</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/7hsdt38x/modi.jpg" /></figure><p>சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் ரெயிலை இந்தியா அறிமுகம் செய்துள்ளது. உலகின் எந்த போர்களும் இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க முடியாது - பிரதமர் மோடி</p> <p><a href="https://maalai-malar.quintype.com/story/e5ab64bf-f201-41ca-8550-d9577780d25d">மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு 2 ஆண்டுகளில் ரூ.261 கோடி செலவு: RTI-யில் தகவல்!</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/f8312ac4-143d-4ef2-afbf-5c142d2fee6f">சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/86db5eea-b71a-48ff-b13e-a8cb62e6892e">விண்வெளி துறையில் வானளாவிய வளர்ச்சியை இந்தியா தொட்டுள்ளது - பிரதமர் மோடி</a></p><p>பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. கத்தார் நாட்டின் முன்னாள் மன்னர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல்தானி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/7128e287-4e58-4a06-b295-7271896099ab">VIDEO: பாராளுமன்றம் நோக்கி பேரணிக்கு ஆயத்தம்.. ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் மீது போலீசார் தடியடி</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/d29a6d2a-ac90-492f-96b9-936f1e06b538">தோல்வியால் விரக்தி.. மைதானத்தில் ஸ்பெயின் வீரர்கள் மீது அர்ஜென்டினா வீரர் சரமாரி தாக்குதல் - வைரல் வீடியோ</a></p><p>பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. மறைந்த முன்னாள் உறுப்பினர்கள், தலைவர்களுக்கு நாடாளுமன்றத்தில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.</p><p>கத்தார் நாட்டின் முன்னாள் மன்னர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல்தானி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.</p> <p>மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்து  திமுக எம்பிக்கள் பச்சை துண்டு அணிந்து சென்றுள்ளனர்.</p> <p>மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய சில நிமிடங்களில் மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். மக்களவையில் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சியினர் முழக்கமிட்டனர்.</p>  <p>எதிர்க்கட்சியினர் அமளி காரணமாக மக்களவையை மதியம் 12 மணி வரை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.</p> <p><a href="https://maalai-malar.quintype.com/story/cb17767b-2d99-40a0-950c-c4a779e423bc">சோழிங்கநல்லூர் அருகே சதுப்பு நிலத்தில் கவிழ்ந்த மாநகர பேருந்து- 6 பேர் படுகாயம்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/f2396a00-20a1-4788-a8ef-47068797740b">திருவள்ளூர் மாவட்டத்துக்கு 6-ந்தேதி உள்ளூர் விடுமுறை: கலெக்டர் கவிதா அறிவிப்பு</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/04774660-0332-4384-b7fe-ffffc97c38d6">நீட், ராமர் கோவில் முறைகேடு.. எதிர்க்கட்சி அமளியால் தொடங்கிய சில நிமிடங்களில் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு</a></p><p>மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேச ஆரம்பித்ததும் அவை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு.</p><p>நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கூட்டிய எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை திமுக எம்பிக்கள் புறக்கணித்தனர்.</p> <p>டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் போராட்டம் குறித்து கார்கே பேச ஆரம்பித்ததும் மாநிலங்களவையை ராதாகிருஷ்ணன் ஒத்திவைத்தார்.</p><p>மேகதாது விவகாரம் குறித்து 'போராடுவோம் போராடுவோம்' என திமுக எம்பிக்கள் மக்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.</p> <p>நீட் விவகாரத்தில் மாணவர்களுக்கு நீதி வேண்டும் என மக்களவையில் காங்கிரஸ் எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.</p><p>நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் தொடங்கிய நிலையில் அமளி காரணமாக மக்களவை, மாநிலங்களவை என நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நண்பகல் 12.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-question-to-tvk-govt">தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?- மு.க.ஸ்டாலின் கேள்வி</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/454180a1-952a-429d-9307-925bdaf59cb4">பா.ம.க.வின் 19-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை- அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார்</a></p><p>எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/06fdd6cb-ef0d-4c7b-a9b8-bfad79c1d376">நலமாக உள்ளேன்.. பேரணியில் பங்கேற்க என்னை டிஸ்சார்ஜ் செய்யுங்கள் - மருத்துவ அறிக்கைக்கு இடையில் வாங்சுக் வேண்டுகோள்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/4cdbf461-721a-437e-a832-36244f78c95f">விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 1000 பேர் கூண்டோடு ராஜினாமா</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/1cb43aff-8acd-465e-b970-b406ec103fb1">மாநிலங்களவையில் எதிரொலித்த CJP போராட்டம்.. போராட்டக் களத்தில் கண்ணீர் புகைகுண்டு வீச்சு</a> </p><p>எதிர்க்கட்சிகள் அமளி - நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2.30 மணி வரை ஒத்திவைப்பு</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/ec5f7594-ab41-4837-8f1f-0a4aa280ff83">துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்- உஷா தம்பதிக்கு 4-வது குழந்தை பிறந்தது</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/kolkata-court-orders-the-arrest-of-delhi-capitals-player-abishek-porel">டெல்லி கேப்பிட்டல்ஸ வீரர் அபிஷேக் போரலை கைது செய்ய கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவு!</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/75b67448-3134-400e-9b4c-161914f5ca29">சென்னையில் மாலை, இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்பு</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/venizula-earthquake-death-toll-passes-5000">வெனிசுலா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/delhi-parliament-siege-protest-section-163-restrictions">டெல்லியில் பரபரப்பு: நாடாளுமன்ற முற்றுகை போராட்டத்தால் 163 தடை உத்தரவு அமல்!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/cjp-leaders-meet-union-minister-jp-nadda-submit-letter-of-demands">மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவை சந்தித்த CJP தலைவர்கள்: முன்வைத்த முக்கிய 3 கோரிக்கைகள்</a></p><figure><img alt="CJP Leaders Meets JP Nadda" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/c99mr7jp/CJPProtest001.jpg" /></figure><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-cockroach-janata-party-chief-held">கரப்பான் பூச்சி கட்சி தலைவர் அபிஜித் தீப்கே கைது?</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-vijay-reviews-chennai-waste-to-gas-project">சென்னை இயற்கை எரிவாயு மையத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/ram-temple-donation-theft-case-do-not-politicise-issue-chief-justice-surya-kant">ராமர் கோவில் நன்கொடை திருட்டு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-politics-mla-arrest-dmk-mla-markandeyan-held-over-alleged-defamatory-speech-against-cm-vijay-claims-gunpoint-threat">"துப்பாக்கி முனையில் மிரட்டுகிறார்கள்" - மார்க்கண்டேயன் கூச்சல்..</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-dig-at-56-year-old-youth-rahul-gandhi-ahead-of-monsoon-session">நான் 56 வயது இளைஞர்களை பற்றி பேசவில்லை: ராகுல் காந்தியை மறைமுகமாக கிணடல் செய்த பிரதமர் மோடி</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/pmk-general-council-meeting-on-the-29th-joint-announcement-by-anbumani-ramadoss-and-vadivel-ravanan">29-ந்தேதி பா.ம.க. பொதுக்குழு கூட்டம்: அன்புமணி ராமதாஸ்- வடிவேல் ராவணன் கூட்டு அறிவிப்பு</a> </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cjp-protest-police-lathi-charge-students-and-youth-rally-in-delhi-left-parties-issue-condemn">டெல்லியில் மாணவர்கள், இளைஞர்கள் பேரணி மீது போலீஸ் தடியடி தாக்குதல்: இடதுசாரிகள் கட்சிகள் கண்டன அறிக்கை</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/i-will-break-your-bones-dmk-mla-markandeyan-gets-15-day-judicial-custody">முதலமைச்சர் விஜய் எலும்பை உடைப்பேன் என பேசிய திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை 15 நாள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு</a></p>]]></content:encoded></item><item><title>முதல்வர் எலும்பை உடைப்பேன் என பேச்சு.. திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்கு 15 நாள் சிறை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/i-will-break-your-bones-dmk-mla-markandeyan-gets-15-day-judicial-custody</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/i-will-break-your-bones-dmk-mla-markandeyan-gets-15-day-judicial-custody#comments</comments><guid isPermaLink="false">a88b860f-b619-463d-8400-2ac4e1853bd9</guid><pubDate>Mon, 20 Jul 2026 16:18:34 +0000</pubDate><atom:updated>2026-07-20T16:18:34.896Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>dmk mla,Markandeyan MLA,மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.,திமுக எம்.எல்.ஏ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/qfbd3obs/Untitled-design-43.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tuticorin DMK MLA 15-day remand ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/qfbd3obs/Untitled-design-43.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக முதல்வர் விஜய்யை அச்சுறுத்தும் தொனியில் பேசிய விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.</p><h3><strong>விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது:</strong></h3><p>கோவில்பட்டியில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் விஜயை அச்சுறுத்தும் வகையிலான கருத்துக்களைத் தெரிவித்தற்காக, தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இன்று, விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயனைக் கைது செய்தனர்.</p><p>சட்டமன்றத் தேர்தலில் திமுக-விற்கு வாக்கு செலுத்தியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சனிக்கிழமை கூட்டம் நடைபெற்றது. </p><p>திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் முன்னாள் அமைச்சர் பி.கீதா ஜீவன் உள்ளிட்ட பல திமுக தலைவர்களும் இதில் கலந்துகொண்டனர்.</p><p>இதையடுத்து விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், தமிழக முதல்வரை அச்சுறுத்தும் வகையில் சில கருத்துக்களைத் தெரிவித்தார்.</p><p>இதைத்தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் வடக்கு மாவட்டச் செயலர் பாலசுப்ரமணியன், தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் ஞாயிற்றுக்கிழமை புகார் அளித்தார்.</p><p>அதனைத் தொடர்ந்து, இன்று காலை, விளாத்திகுளத்தில் உள்ள மார்க்கண்டேயனின் விட்டிற்கு சென்று போலீசார் அவரைக் கைது செய்தனர்.</p><p>பின்னர் அவர் மேல் விசாரணைக்காக தூத்துக்குடியில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.</p><p>இதையடுத்து மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். திமுக எம்.எல்.ஏ கைது நடவடிக்கைக்கு எதிராக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கீதா ஜீவன் மற்றும் 100க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>இதையடுத்து முன்னாள் அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணனும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து, கைது செய்யப்பட்ட மார்க்கண்டேயனைச் சந்திக்க வேண்டும் என்று கூறினர். ஆனால், காவல்துறை அந்தக் கோரிக்கையை நிராகரித்தது.</p><p>பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், “மார்க்கண்டேயனை முன்னறிவிப்பின்றி காலை 6 மணிக்கு காவல்துறை கைது செய்துள்ளனர்.</p><p>இது நீண்ட காலம் நீடிக்காது. அதிகபட்சமாக, இந்த அரசாங்கம் இன்னும் நான்கு மாதங்களுக்கு நீடிக்கலாம். அதுவரை மட்டுமே காவல்துறையால் இந்த முறையில் செயல்பட முடியும்," என்று அவர் கூறினார்.</p><h3><strong>எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்கு நீதிமன்ற காவல்:</strong></h3><p>இந்நிலையில் தமிழக முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசிய திமுக எம்.எல்.ஏ மார்கண்டேயனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டெல்லியில் மாணவர்கள், இளைஞர்கள் பேரணி மீது போலீஸ் தடியடி தாக்குதல்: இடதுசாரிகள் கட்சிகள் கண்டன அறிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cjp-protest-police-lathi-charge-students-and-youth-rally-in-delhi-left-parties-issue-condemn</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cjp-protest-police-lathi-charge-students-and-youth-rally-in-delhi-left-parties-issue-condemn#comments</comments><guid isPermaLink="false">f85786da-0554-49b5-b5a6-e56b64382251</guid><pubDate>Mon, 20 Jul 2026 15:57:23 +0000</pubDate><atom:updated>2026-07-20T15:57:23.282Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>CPM,CPI,Communist,CJP Protest</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/crc9v48g/Communistgs.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Shanmugam- Veerapandian]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/crc9v48g/Communistgs.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சிபிஐ(எம்), சிபிஐ, சிபிஐ (எம்.எல்) லிபரேசன் ஆகிய இடதுசாரி கட்சிகள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><h2>தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தல்</h2><p>இடதுசாரி கட்சிகளின் மாநில ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று சென்னை, அம்பத்தூரில் உள்ள சிபிஐ (எம்.எல்) லிபரேசன் அலுவலகமான தோழர் கூடத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் சிபிஐ (எம்) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், சிபிஐ மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், சிபிஐ (எம்.எல்) லிபரேசன் மாநிலச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி மற்றும் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் பி.சம்பத், என்.குணசேகரன், நா.பெரியசாமி, எம்.ரவி, எஸ்.பாலசுந்தரம், அ.சந்திரமோகன், எஸ்.ஜானகிராமன் உள்ளிட்டோர் பங்கெடுத்துக் கொண்டனர்.</p><h2>இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-</h2><p>1) டெல்லியில் மாணவர்கள், இளைஞர்கள் பாராளுமன்ற நோக்கிச் சென்ற பேரணி மீது தடியடி தாக்குதல் நடத்திய மோடி அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளை வன்மையாக கண்டிக்கின்றோம். நீட் தேர்வு குளறுபடிகள், கல்வித்துறை சீர்கேடுகளுக்கு காரணமான அமைச்சர் தர்மேந்திர பிரதானை உடனடியாக பதவிநீக்கம் செய்ய வேண்டுமென இடதுசாரி கட்சிகளின் சார்பில் வலியுறுத்துகிறோம்.</p><p>2) தமிழக மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை முன்வைத்து இடதுசாரி கட்சிகள் சார்பில் தமிழகம் தழுவிய அளவில் செப்டம்பரில் லட்சக்கணக்கான உழைக்கும் மக்கள் பங்கேற்கும் மாபெரும் பேரணி நடைபெறும்.</p><p>3) நடைபெறும் பாராளுமன்ற கூட்டத் தொடரிலேயே நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்துகிறோம்.</p><p>4) இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டுப் பிரகடனம் ஆக.4-ல் வெளியிடப்படும். தமிழகத்திற்கான சமூக, பொருளாதார, பண்பாட்டு பிரச்சனைகளுக்கான மாற்று அரசியல் திட்டமாக இந்தப் பிரகடனம் அமையும். மாவட்ட மட்டத்தில் ஒருங்கிணைப்புக் குழுக்களை ஆக. 10-க்குள் அனைத்து மாவட்டங்களிலும் அமைப்பது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>5) அயோத்தி ராமர் கோவிலில் உண்டியல் வருவாயில் மிகப்பெரும் திருட்டு நடைபெற்றுள்ளது. கோவில் நிர்வாகிகள் உட்பட இதில் சம்பந்தப்பட்டுள்ள நிலையில் உறுதியாகவும், நேர்மையாகவும் விசாரணை நடைபெறுவதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டுமென்றும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் மின்சார வாரிய ஒப்பந்தப் பணியாளர்களை உடனடியாக பணி நிலைப்பு செய்க: அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-electricity-board-contract-workers-confirm-employee-immediately</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-electricity-board-contract-workers-confirm-employee-immediately#comments</comments><guid isPermaLink="false">3b4ee343-ac95-4413-8046-fb1337da6cca</guid><pubDate>Mon, 20 Jul 2026 15:42:41 +0000</pubDate><atom:updated>2026-07-20T15:42:41.345Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,TNEB,தமிழ்நாடு மின்சார வாரியம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/ppx7fxyc/AnbumaniRamadoss.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anbumani Ramadoss]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/ppx7fxyc/AnbumaniRamadoss.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு மின் வாரியத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் வரை இதே நிலையில் பணியாற்றி வருகின்றனர். வாழ்க்கையின் பெரும்பகுதியை மின்சார வாரியத்திலேயே கழித்து விட்ட நிலையில், தங்களின் வாழ்வாதார பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அதை முந்தைய அரசுகள் ஏற்கவில்லை.</p><h2>ஒப்பந்த ஊழியர்கள் விடுவிக்கப்படுவார்கள் என அறிவிப்பு</h2><p>தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், தங்களுக்கு பணி நிலைப்பு கிடைக்கும் என்று அவர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர். ஆனால், மின்சாரத்துறை அமைச்சரோ, அடுத்த 6 அல்லது 7 மாதங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள். அவர்களுக்கு பதில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நிரந்தரத் தொழிலாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று சில வாரங்களுக்கு முன் அறிவித்தார். பணி நிலைப்புக்காக கோரிக்கை விடுத்தால், பணி நீக்கத்திற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிடுவதை எதிர்த்தும், தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள மின்வாரிய ஒப்பந்தப் பணியாளர்கள் ஜூன் 22 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.</p><p>ஒப்பந்த பணியாளர்களின் போராட்டம் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிக்கும் நிலையில், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மின்சாரத் துறை அமைச்சரை ஒப்பந்தத் தொழிலாளர்களின் பிரதிநிதிகள் கடந்த 18-ஆம் தேதி மதுரையில் சந்தித்து பேச்சு நடத்தினர். ஆனால், அவர்களின் கோரிக்கைகளை ஏற்பது குறித்து அமைச்சர் உத்தரவாதம் அளிக்கவில்லை.</p><p>மின்சார வாரிய ஒப்பந்தப் பணியாளர்களை விதிகளை பின்பற்றி பணி நிலைப்பு செய்ய வேண்டும் என பத்தாண்டுகளுக்கு முன்பே சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மின்சார வாரியத்தில் 2 ஆண்டுகளில் 480 நாட்கள் தொடர்ந்து பணியாற்றிய ஊழியர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்பது விதியாகும். அதன்படி பணி நிலைப்பு பெற தகுதி பெற்ற கடலூர் மாவட்ட மின் வாரிய ஊழியர்கள், மாவட்ட தொழிலாளர் நலத்துறை ஆய்வாளரிடம் 20 ஆண்டுகளுக்கு முன்பு முறையிட்டனர்.</p><p>அவர்கள் தரப்பில் நியாயம் இருப்பதை உணர்ந்த தொழிலாளர் நல ஆய்வாளர்கள் அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று மின் வாரியத்திற்கு 2004 முதல் 2007 வரை பல்வேறு கட்டங்களாக ஆணையிட்டனர். ஆனால், அந்த ஆணையை அரசு செயல்படுத்தாததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ஒப்பந்த  தொழிலாளர்கள் வழக்குத் தொடர்ந்தனர். அவ்வழக்கில் 2015-ஆம் ஆண்டில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் 480 நாள்கள் தொடர்ந்து பணியாற்றிய ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிலைப்பு செய்ய அரசுக்கு ஆணையிட்டது.</p><h2>தொழிலாளர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு</h2><p>அதை எதிர்த்து மின்வாரியம் 2 நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தது. அங்கும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. அத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு தமிழக அரசு செய்தது. உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி அந்த வழக்கை மீண்டும் விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு, மின்வாரியத் தொழிலாளர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என மீண்டும் ஆணையிட்டது. ஆனால், அதன்பின் 11  ஆண்டுகளாகியும் அந்தத் தீர்ப்பு நடைமுறைப்படுத்தப் படவில்லை. ஒப்பந்தத் தொழிலாளர்கள் நலனில் தமிழக ஆட்சியாளர்கள் காட்டும் அக்கறை இவ்வளவு தான்.</p><p>2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில், தவெக ஆட்சிக்கு வந்தால், 5 ஆண்டுகள் பணியாற்றிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு பதிலாக ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ய முயல்பது நியாயமல்ல. தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலும் ஒப்பந்த பணியாளர்களின் பிரதிநிதிகளை மின்துறை அமைச்சர் அல்லது மின் துறை செயலாளர் சந்தித்து பேசி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி  அளிக்க  வேண்டும்.  அதன் மூலம் ஒரு மாதமாக நீடிக்கும் தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.</p><p>இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பீகாரில் புதிதாக திறக்கப்பட்ட 551 பள்ளிகளுக்கு காவி சாயம்: மதத்தை அரசு ஊக்குவிப்பதாக AIMIM குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/national/saffron-painting-of-551-new-schools-in-bihar-aimim-alleges-religious-push-by-government</link><comments>https://www.maalaimalar.com/news/national/saffron-painting-of-551-new-schools-in-bihar-aimim-alleges-religious-push-by-government#comments</comments><guid isPermaLink="false">e426c9d0-28bb-4fb3-9003-094a35d81996</guid><pubDate>Mon, 20 Jul 2026 15:28:17 +0000</pubDate><atom:updated>2026-07-20T15:28:17.626Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பீகார்,Bihar,government schools,AIMIM,அரசு பள்ளி,காவி வண்ணம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/0cbr1kc8/Untitled-design-42.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ AIMIM slams saffron paint on 551 new model schools in bihar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/0cbr1kc8/Untitled-design-42.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h3><strong>பீகார் அரசு பள்ளிகளில் காவி வண்ணம்:</strong></h3><p>பீகாரில் புதிதாகத் திறக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்ட மாதிரிப் பள்ளிகளுக்குக் காவி வண்ணம் பூச பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளதை அடுத்து, அரசியல் சர்ச்சை வெடித்துள்ளது. </p><p>பீகார் முதலமைச்சர் சம்ராட் சௌத்ரி, நேற்று 551 மாதிரிப் பள்ளிகளைத் திறந்து வைத்தார். அப்போது சரஸ்வதி வித்யா நிகேதன் பள்ளிகள் அனைத்திற்கும்  வழக்கமான வண்ணங்களுக்குப் பதிலாக காவி வண்ணம் பூசப்பட்டு இருந்தது.</p><h3><strong>ஏஐஎம்ஐஎம் குற்றச்சாட்டு:</strong></h3><p>இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட என்டிஏ கூட்டணிக் கட்சிகள் இந்த நடவடிக்கையை ஆதரித்த நிலையில், இது “காவிமயமாக்கல்” முயற்சி என்று ஏஐஎம்ஐஎம் குற்றம் சாட்டியது.</p><p>வரி செலுத்துவோரின் பணத்தைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட மதத்தை அரசு ஊக்குவிக்க முயற்சிப்பதாகவும் மாநில AIMIM தலைவர் அக்தருல் இமான் குற்றம் சாட்டினார்.</p><p>இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த அரசாங்கம் பள்ளிகளை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்தையுமே காவிமயமாக்குகிறது.</p><p>அது மசூதிகளை இடித்து, மசூதிகள் மற்றும் கோயில்களின் பெயரால் மக்களிடையே பகைமையைத் தூண்டிவிடுகிறது.</p><p>இது ஜனநாயகத்தின் ஆடையைக் களைவதற்கு வழிவகுத்துள்ளது. இந்த நடவடிக்கை நாட்டின் சமூகக் கட்டமைப்பையும் ஜனநாயக விழுமியங்களையும் பாதிக்கும்.</p><p>நாட்டின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு வருகிறது. முன்பு நிலவிய சமூக ஒற்றுமையும் அன்பும் புதிய தலைமுறையினரிடம் காணப்படவில்லை.</p><p>இது ஜனநாயகத்திற்கோ அல்லது எந்தவொரு நாகரிக சமூகத்திற்கோ நல்ல அறிகுறி அல்ல,” என்று அவர் கூறினார்.</p><h3><strong>பாஜக பதில்:</strong></h3><p>இதையடுத்து மாநில கல்வி அமைச்சர் மிதிலேஷ் திவாரி இந்த விமர்சனத்தை நிராகரித்ததோடு, வண்ணங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் சர்ச்சையை உருவாக்க முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.</p><p>இதுகுறித்து உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சரும், ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவருமான அசோக் சௌத்ரி கூறுகையில், “நிறங்களின் அடிப்படையில் நாம் பிளவுகளை உருவாக்கக் கூடாது. இன்று, குழந்தைகளுக்கு மத பேதமின்றி, உயர் தொழில்நுட்பக் கல்விக்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்துள்ளோம்.</p><p>இருப்பினும், இது எதிர்க்கட்சிகளுக்கு ஏற்புடையதாக இல்லை. காவி நிறம் சரஸ்வதி தேவியையும் செழிப்பையும் குறிக்கிறது. கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது.</p><p>பள்ளி கட்டிடங்களின் நிறம் குறித்து ஆட்சேபனை தெரிவிப்பதை விடுத்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இருபது ஆண்டு கால ஆட்சியில் கல்வியின் தரம் மேம்பட்டுள்ளதா என்பதில் எதிர்க்கட்சிகள் கவனம் செலுத்த வேண்டும்” என்று  கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>29-ந்தேதி பா.ம.க. பொதுக்குழு கூட்டம்: அன்புமணி ராமதாஸ்- வடிவேல் ராவணன் கூட்டு அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/pmk-general-council-meeting-on-the-29th-joint-announcement-by-anbumani-ramadoss-and-vadivel-ravanan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/pmk-general-council-meeting-on-the-29th-joint-announcement-by-anbumani-ramadoss-and-vadivel-ravanan#comments</comments><guid isPermaLink="false">06f47ba7-ac6f-4188-a2b7-603666c303a0</guid><pubDate>Mon, 20 Jul 2026 15:18:04 +0000</pubDate><atom:updated>2026-07-20T15:18:04.397Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,பா.ம.க. அன்புமணி ராமதாஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-08/44dc8lm6/anbumaniramadoss.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anbumani ramadoss]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-08/44dc8lm6/anbumaniramadoss.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாட்டாளி மக்கள் கட்சி தலைவரும் அன்புமணி ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-</p><p>பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக் குழுக்கூட்டம் வரும் 29.07.2025 (புதன்கிழமை) காலை 11.00 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள கான்ஃப்ளுயன்ஸ் (Confluence) அரங்கத்தில் நடைபெறுகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் இந்தக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நான் 56 வயது இளைஞர்களை பற்றி பேசவில்லை: ராகுல் காந்தியை மறைமுகமாக கிண்டல் செய்த பிரதமர் மோடி</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-dig-at-56-year-old-youth-rahul-gandhi-ahead-of-monsoon-session</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-dig-at-56-year-old-youth-rahul-gandhi-ahead-of-monsoon-session#comments</comments><guid isPermaLink="false">ea4bdf6c-77da-4a9b-a239-b3afbebf75dc</guid><pubDate>Mon, 20 Jul 2026 15:07:38 +0000</pubDate><atom:updated>2026-07-20T15:07:38.240Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Congress,காங்கிரஸ்,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/cpwol7w1/RahulgandhiPMmodi0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rahul Gandhi- PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/cpwol7w1/RahulgandhiPMmodi0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இது தொடர்பாக இந்திய பிரதமர் மோடி இன்று பேசினார். அப்போது அவர் "இந்தியாவின் இளைஞர்கள் விண்ணிற்கு புதிய ராக்கெட்டை செலுத்தியுள்ளனர். இது ஒரு அபாரமான வெற்றி. ராக்கெட்டை ஏவிய தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து இளைஞர்களின் வயது சராசரி 28 வயதாகும். நான் 56 வயது இளைஞர்களை பற்றி பேசிக் கொண்டிருக்கவில்லை" என்றார்.</p><p>மேலும், 56 வயது குறித்து மிகப்பெரிய அளவில் பிரதமர் மோடி பேசாமல் ""விண்வெளியில் இந்தியாவின் கொடியை நாட்டியுள்ள சராசரி வயது 28 கொண்ட இந்த இளைஞர்களுக்கு நிச்சயமாகப் பாராட்டுகள் உரித்தாக வேண்டும். இத்தகைய சாதனைகளே இந்தியாவுக்குத் தன்னம்பிக்கையை அளிக்கின்றன" என்றார்.</p><h2>காங்கிரஸ் எம்.பி. ரஞ்ஜீத் ரஞ்சன் கண்டனம்</h2><p>காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்திக்கு 56 வயதாகிறது. கடந்த ஜூன் மாதம்தான் அவருடைய பிறந்த நாள். ராகுல் காந்திக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவரை இளம் தலைவர் என காங்கிரஸ் கட்சியின் மற்ற தலைவர்கள் அழைத்து வருகிறார்கள். இந்த நிலையில்தான் ராகுல் காந்தியை கிண்டல் செய்யும் வகையில் மோடி மறைமுகமாக கிண்டல் செய்துள்ளார்.</p><p>இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ரஞ்ஜீத் ரஞ்சன் கூறுகையில் "இது வெட்கக்கேடான விஷயம். ராகுல் காந்தி உங்களிடம் வேலை கேட்கவில்லை. அவர் ஒரு 56 வயது இளைஞரைப் பற்றியும் பேசவில்லை. அவர், 20, 22, 25, அல்லது 26 வயதுடைய இளைஞர்களைப் பற்றிப் பேசுகிறார். அவர்கள் அரசு வேலைகளைப் பெற முடியாமல், வேலையில்லாமல் நம் நாட்டில் அலைந்து திரிகிறார்கள். தங்கள் நிலங்களை விற்றுத் தயாரானாலும், தேர்வுத் தாள்கள் கசிந்துவிடுகின்றன.</p><p>மொத்தம் 4 நிலைகளை கொண்ட இந்த ராக்கெட்டின் உயரம் 24 மீட்டர் ஆகும். 350 கிலோ வரையிலான செயற்கைகோள்களை சுமந்து செல்லக்கூடிய திறன் கொண்ட இந்த ராக்கெட்டின் என்ஜின்கள் முப்பரிமாண அச்சு தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டவை.</p><p>ஸ்கைரூட் நிறுவனம் கூறும்போது, "இந்தியாவின் அறிவியல் மற்றும் விண்வெளி பயணத்தை வடிவமைத்த 3 தொலைநோக்கர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்தியாவின் விண்வெளி திட்டத்தின் முன்னோடியான க்ரம் சாராபாய், விஞ்ஞானி சர்.சி.வி.ராமன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஆகியோரின் நுண் சிற்பங்களை கொண்ட் சிறிய பேலோடு உருவாக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆதிக்கம் செலுத்தி விருது வாங்கும் அளவிற்கு தனுஷை விட பெரிய நடிகர்கள் இல்லையா.. கஸ்தூரிராஜா ஆவேசம்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/was-politics-behind-dhanush-national-award-kasthuri-raja-explains</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/was-politics-behind-dhanush-national-award-kasthuri-raja-explains#comments</comments><guid isPermaLink="false">d53c8828-673b-4753-b871-569e41b2aa66</guid><pubDate>Mon, 20 Jul 2026 14:57:20 +0000</pubDate><atom:updated>2026-07-20T14:57:20.543Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Dhanush,தேசிய விருது,national award,Kasthuri Raja,கஸ்தூரி ராஜா,தனுஷ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/340568oi/Untitled-design-41.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kasturi Raja explains political motive behind honours]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/340568oi/Untitled-design-41.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>72வது தேசிய விருதுகள் பட்டியலில், நடிகரும் இயக்குநருமான தனுஷிற்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் நடிகர் தனுஷிற்கு விருது கொடுக்கப்பட்டதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக வதந்தி எழுந்தது.</p><p>இதையடுத்து நடிகர் தனுஷின் தந்தையான கஸ்தூரி ராஜாவிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:-</p><p>நடிகர் தனுஷிற்கு தேசிய விருது கொடுக்கப்பட்டது மகிழ்ச்சிதான், அவர் பயணம் பண்ணுகிற வழி, அவருடைய முயற்சிகள், அனைத்துமே அப்படியே இருக்கிறது. </p><p>அதனால் அவருக்கு விருது கிடைத்திருக்கிறது. மற்றபடி அதில் அரசியல் நிலைப்பாடு என எதுவும் இல்லை. </p><p>அரசு குழு (ஜூரி) எடுக்கும் முடிவுகளில் தான், தேசிய விருது கிடைக்கிறது. இந்த முறை என் மகனுக்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளது, மிகவும் பெருமையான விஷயம். </p><p>தனுஷை விட பெரிய நடிகர்கள் தமிழ்நாட்டில் இல்லையா, அவர்கள் ஏன் குழுவை அதிகாரம் செலுத்தி (influence) தேசிய விருதுகள் வாங்கவில்லை. இது அரசு மற்றும் தேர்வுக் குழு எடுக்கும் முடுவு தான் என நான் நினைக்கிறேன்.</p><p>நான்கு பேரை பார்த்து பேசி, ஐயா எனக்கு விருது கொடுங்க என்றும் சொல்லும் அளவிற்கு, தனுஷிற்கு அவ்வளவு பெரிய புத்திசாலித்தனம் எல்லாம் கிடையாது.</p><p>இதற்கு முன்னதாக அசுரன் மற்றும் ஆடுகளம் படத்திற்காக அவருக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அவர் விருதுகளுக்காக ஏங்குபவர் கிடையாது.</p><p>இந்தியாவில் சிறந்த நடிகருக்கான விருதை மம்மூட்டி வாங்கி இருக்கிறார். அப்படி இருக்கும்போது, எனது மகன் விருது வாங்கி இருப்பது, பாராட்டப்பட வேண்டிய விஷயம்.</p><p>ஹபீபி ஒரு இஸ்லாமிய படம் என்று சொல்வதில் எனக்கு கருத்து உடன்பாடு கிடையாது. அந்த படம் அப்பா, அம்மா, அண்ணன், தம்பி என ஒரு கூட்டுக் குடும்பத்தின் வாழ்க்கை.</p><p>அந்த படத்தில் நடித்ததற்காக நான் பெருமைப்படுகிறேன். அந்த படத்திற்காக விருது கிடைத்தால், அதற்கான பெருமை இயக்குநர் மீரா கதிரவனை தான் சேரும்.</p><p>இவ்வாறு இயக்குநர் கஸ்தூரி ராஜா கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>&quot;துப்பாக்கி முனையில் மிரட்டுகிறார்கள்&quot; - மார்க்கண்டேயன் கூச்சல்..</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-politics-mla-arrest-dmk-mla-markandeyan-held-over-alleged-defamatory-speech-against-cm-vijay-claims-gunpoint-threat</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-politics-mla-arrest-dmk-mla-markandeyan-held-over-alleged-defamatory-speech-against-cm-vijay-claims-gunpoint-threat#comments</comments><guid isPermaLink="false">993bfdab-da84-41f7-9902-19ae8d34395f</guid><pubDate>Mon, 20 Jul 2026 14:22:24 +0000</pubDate><atom:updated>2026-07-20T14:22:24.802Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MarkandayanArrest,DMKMLAArrest,மார்க்கண்டேயன்கைது,ThoothukudiGH,GunpointThreatAllege,துப்பாக்கிமுனைமிரட்டல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/7g1hea6e/MarkandayanArrest" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MarkandayanArrest  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/7g1hea6e/MarkandayanArrest?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் குறித்து பொதுக்கூட்டத்தில் அவதூறாக பேசியதாக எழுந்த புகாரில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜி.வி. மார்க்கண்டேயன் இன்று அதிகாலை அவரது இல்லத்தில் வைத்து அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.</p><h2><strong>10 மணி நேர விசாரணை:</strong></h2><p>கைது செய்யப்பட்ட மார்க்கண்டேயனை போலீசார் அழைத்துச் சென்று, சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக தீவிர விசாரணை நடத்தினர். </p><p>இந்த வழக்கின் விசாரணை நடைமுறைகள் முடிந்ததைத் தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்னதாக, மருத்துவப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் காவல்துறை பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.</p><h2><strong>துப்பாக்கி முனை மிரட்டல் - எம்.எல்.ஏ. கூச்சல்:</strong></h2><p>மருத்துவமனை வளாகத்திற்குள் போலீஸ் வாகனத்தில் இருந்து மார்க்கண்டேயன் இறக்கப்பட்டபோது, அங்கு திரண்டிருந்த செய்தியாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்களைப் பார்த்து அவர் திடீரென ஆவேசமாகக் கூச்சலிட்டார். <em><strong>"போலீசார் என்னை துப்பாக்கி முனையில் வைத்து மிரட்டுகிறார்கள்!"</strong></em> என அவர் உரத்த குரலில் கத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.</p><p>உடனே அவரைப் போலீசார் சூழ்ந்து கொண்டு மருத்துவப் பரிசோதனை அறைக்குள் வேகமாக அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் மருத்துவமனை வளாகத்தில் சில நிமிடங்கள் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.</p><h2><strong>கைதுக்கான பின்னணி:</strong></h2><p>கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய மார்க்கண்டேயன், தமிழக முதல்வர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது.</p><p>இது தொடர்பாக ஆளுங்கட்சியான தவெக நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி மாவட்ட போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். </p><p>மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அவரது ஆதரவாளர்களும், திமுக தலைவர்களும் தவெக அரசிற்கு எதிராகத் தீவிர கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>அரசு பணிகளில் ‘பெங்காலி’ கட்டாயம்: மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/bengali-mandatory-for-all-state-government-work-in-west-bengal-from-september-1-suvendu-adhikari</link><comments>https://www.maalaimalar.com/news/national/bengali-mandatory-for-all-state-government-work-in-west-bengal-from-september-1-suvendu-adhikari#comments</comments><guid isPermaLink="false">2e0f0a35-749e-40e1-a473-711c031fed5c</guid><pubDate>Mon, 20 Jul 2026 13:15:12 +0000</pubDate><atom:updated>2026-07-20T13:15:12.062Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Amit Shah,Bengali,suvendhu adhikari</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/06tnl06u/Untitled-design-39.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bengali made mandatory across all state government services from September 1]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/06tnl06u/Untitled-design-39.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h3><strong>மேற்கு வங்கத்தில் பெங்காலி கட்டாயம்:</strong></h3><p>மேற்கு வங்கத்தில் தாய்மொழியான பெங்காலி மொழியை செப்டம்பர் 1 முதல் அனைத்து மாநில அரசு பணிகளுக்கும் கட்டாயமாக்க போவதாக இன்று முதலமைச்சர் சுவேந்து அதிகாரி அறிவித்துள்ளார்.</p><p>குடிமக்கள் சேவைகள், டிஜிட்டல் அமைப்புகள், விண்ணப்பப் படிவங்கள், சான்றிதழ்கள், இணையதளங்கள், மொபைல் செயலிகள், பொது அறிவிப்புப் பலகைகள், பத்திரிக்கை வெளியீடுகள் மற்றும் பிற அதிகாரப்பூர்வ தகவல்தொடர்புகள் உள்ளிட்ட அனைத்து பொதுத் தகவல்தொடர்பு வழிகளிலும் செப்டம்பர் 1 முதல் பெங்காலி பயன்பாட்டை அரசு கட்டாயமாக்க போவதாக கூறினார்.</p><p>மேலும் முதல் தகவல் அறிக்கைகள் (FIR), குறைதீர்ப்பு, குடிமக்கள் தரவு மற்றும் பாதுகாப்பு, பொது விழிப்புணர்வு செய்திகள் போன்ற காவல்துறை மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான பொது சேவைகளிலும் பெங்காலி பயன்பாடு உறுதி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.</p><p>மேற்கு வங்க நிர்வாகத்தில் வங்காள மொழியைப் பரவலாகப் பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனக்குக் கடிதம் எழுதி பரிந்துரை செய்ததாகவும் சுவேந்து அதிகாரி கூறினார்.</p><h3><strong>சுவேந்து அதிகாரி அறிவிப்பு:</strong></h3><p>இந்த அறிவிப்பு குறித்து மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி கூறுகையில், “இந்தியாவின் மாபெரும் கல்வியாளரும், அரசியல்வாதியும், ஆழ்ந்த சிந்தனையாளருமான டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் 125வது பிறந்தநாள் இந்த ஆண்டில் வருகிறது.</p><p>டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, இந்திய மொழிகளைப் பாதுகாத்தல், மேம்படுத்துதல் மற்றும் பரவலாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் தீவிர ஆதரவாளராக இருந்தார்.</p><p>நிர்வாகம், கல்வி மற்றும் பொது வாழ்வில் இந்திய மொழிகளுக்கு உரிய இடம் கிடைக்க வேண்டும் என்பது அவரது உறுதியான நம்பிக்கையாக இருந்தது.</p><p>மேற்கு வங்க அரசாங்கத்தின் சார்பாக மத்திய உள்துறை அமைச்சர் வழங்கிய ஆலோசனையை ஏற்று, மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுத் துறைகளிலும் செப்டம்பர் 1, 2026 முதல் நமது தாய்மொழியான வங்காள மொழியைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளோம்.</p><p>2011-ல் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு அமைக்கப்பட்ட, ஓய்வுபெற்ற நீதிபதி சுசாந்தா சாட்டர்ஜி தலைமையிலான ஆணையத்தின் அறிக்கையைப் பொதுமக்கள் முன்னிலையில் நான் வெளியிடுவேன்.</p><p>திரிணாமூல் காங்கிரஸ் அரசின் ஆட்சிக் காலத்தில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தாலும், அது ஒருபோதும் வெளியிடப்படவில்லை.</p><p>செப்டம்பர் 1, 2026 முதல், மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்து நிர்வாக மட்டங்களிலும் வங்காள மொழி கட்டாயமாக்கப்படும்.</p><p> இந்த காலகட்டத்தில், எங்கள் அரசாங்கம் மொழிபெயர்ப்பாளர்களையும் மற்ற அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் செய்யும்.</p><p>இந்திய அரசுடன் அலுவல் ரீதியான தகவல்களுக்கு, வெளிநாட்டு மொழிக்குப் பதிலாக வங்காளம் மற்றும் அலுவல் மொழியான இந்தியைப் பயன்படுத்தலாம்” என்று முதலமைச்சர் சுவேந்து அதிகாரி கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை இயற்கை எரிவாயு மையத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-vijay-reviews-chennai-waste-to-gas-project</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-vijay-reviews-chennai-waste-to-gas-project#comments</comments><guid isPermaLink="false">7de47d8a-1164-4560-83b6-e669f53a4786</guid><pubDate>Mon, 20 Jul 2026 12:57:14 +0000</pubDate><atom:updated>2026-07-20T12:57:14.500Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>inspection,CMVIJAY,SolidWasteManagement,திடக்கழிவுமேலாண்மை,ChennaiCorporation</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/7ak60zmj/CMVijay-Inspects-waste-to-gas-plant" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CMVijay Inspects waste-to-gas plant]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/7ak60zmj/CMVijay-Inspects-waste-to-gas-plant?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று சென்னை சேத்துப்பட்டு பகுதியில் அமைந்துள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்திற்கு நேரில் சென்று அதிரடி கள ஆய்வு நடத்தினார். </p><p>இந்த ஆய்வின் போது, திடக்கழிவுகளில் இருந்து மக்கும் குப்பைகளைப் பயன்படுத்தி இயற்கை எரிவாயு தயாரிக்கும் திட்டத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டார்.</p><h2><strong>இயந்திரங்களின் செயல்பாடு குறித்து ஆய்வு:</strong></h2><p>சென்னையில் சேகரிக்கப்படும் கழிவுகளைக் கொண்டு எவ்வாறு எரிவாயு தயாரிக்கப்படுகிறது, இந்த மையத்தின் தினசரி உற்பத்தித் திறன் எவ்வளவு, மற்றும் சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்த என்னென்ன நவீன தொழில்நுட்பங்கள் இங்கு பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்து முதலமைச்சர் விஜய் அதிகாரிகளிடம் விரிவாகக் கேட்டறிந்தார்.</p><p>இயந்திரங்களின் இயக்க நிலை மற்றும் தூய்மைப் பணிகளை நேரடியாக ஆய்வு செய்த அவர், பணிகளை மேலும் தொய்வின்றி விரைவுபடுத்த அதிகாரிகளுக்குப் பல முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.</p><h2><strong>அதிகாரிகளுக்குப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு:</strong></h2><p>சென்னை மாநகராட்சியை முழுமையான தூய்மையான நகரமாக மாற்றுவதற்குத் திட்டமிட்டுள்ள அரசு, வீடுகளிலேயே மக்கும் மற்றும் மக்காத குப்பைகளைப் பிரித்து வாங்குவதை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.</p><p>மேலும், திடக்கழிவு மேலாண்மை விதிகளை அலட்சியப்படுத்தும் நிறுவனங்கள் அல்லது நபர்கள் மீது சட்டப்படியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>மக்களைக் கவர்ந்த எளிமை:</strong></h2><p>முன்னதாக, இந்தத் திடீர் ஆய்விற்காக முதலமைச்சர் வாகனப் பேரணியாகப் புறப்பட்ட போது, வழியெங்கும் சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.</p><p>அப்போது தனது காரில் இருந்தபடியே பொதுமக்களைப் பார்த்து கைகளை அசைத்து, அவர்களின் வாழ்த்துக்களைப் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் வைரலாகி வருகிறது.</p>]]></content:encoded></item></channel></rss>