<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 27 Aug 2026 06:11:37 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: சட்டசபையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில்- 27 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-27-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-27-august-2026#comments</comments><guid isPermaLink="false">fdcac3cc-5277-4752-b476-f0f1c8922a11</guid><pubDate>Thu, 27 Aug 2026 04:02:06 +0000</pubDate><atom:updated>2026-08-27T06:10:14.929Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/7japzkku/minister.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/7japzkku/minister.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>"நேபாள வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் குறித்த விவரங்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்" என்று சட்டப்பேரவையில் நேபாள வெள்ளம் தொடர்பான கவன ஈர்ப்புக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பதில்.</p><p>நேபாள சம்பவம் தொடர்பாக கவனஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பர்ட்,"பேச்சின் இறுதியில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க ஐடியா ஒன்றை தந்தார்.</p><p>அவர்"காலநிலை மாற்றம் ஏற்பட்டு வருவதால், எந்தந்த பகுதிகளில் காலநிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து ஒவ்வொரு மாதமும் தெரிவித்தால், சுற்றுலா செல்பவர்களுக்கும், மீட்பு பணிகளுக்கும் வசதியாக இருக்கும்" என்றார்.</p><p>திருக்குறுங்குடி நம்பி ஆண்டவர் கோயிலுக்குச் செல்லும் பாதை, காலம் செல்ல செல்ல குறுகிக்கொண்டே செல்கிறது. பொதுமக்களின் வசதிக்காக அதன் பாதையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?- எம்எல்ஏ ரெட்டியார்பட்டி நாராயணன்</p><p>எம்எல்ஏ ரெட்டியார்பட்டி நாராயணணின் கோரிக்கையை ஏற்று, அதிகாரிகளிடம் பரிசீலித்து ஆவண செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்- வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார்</p><p>நேபாளம் சென்ற தமிழர்கள் 57 பேர் மாயம், அரசு தரிதமாக செயல்பட்டு அவர்களை தாயகம் மீட்டுவர நடவடிக்கை தேவை.  நேபாளத்திற்கு கோவை ஈஷா மூலம் ஆன்மிக பயணம் சென்றோரின் நிலை என்ன?- இபிஎஸ்.</p><p>நேபாள நாட்டில் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 160 பேர் உயிரிழப்பு, 750 பேரை காணவில்லை என செய்திகள் வருகின்றன. சுற்றுலா சென்ற 110 இந்தியர்கள் சிக்கியுள்ளதாகவும், குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு மாவட்டங்களில் 40-க்கும் மேற்பட்டோர் சென்றிருப்பதாக கூறப்படுகிறது.</p><p>எத்தனை தமிழர்கள் சிக்கியுள்ளனர்? அவர்களில் எத்தனை பேர் மீட்கப்பட்டுள்ளார்கள்.</p><p>தமிழர்களை மீட்க சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்களா? ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சிக்கி இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. இதில் அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்- உதயநிதி</p><p>மேலும், கரூர் சம்பவம் நடந்தபோது இதே சபையில் முதலமைச்சர் பேசிய பின்னர் கேள்வி கேளுங்கள் என நடந்ததாக சபாநாயகர் விளக்கம் அளித்தார்- ஜே.சி.டி.பிரபாகர். </p><p>இருப்பினும் சட்டசபையில் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் எதிர்க்கட்சித் தலைவரே முதலில் பேசட்டும் என அமைச்சர் ராஜ்மோகன் பரிந்துரைத்த நிலையில் சபாநாயகர் அனுமதி வழங்கினார்- ஜே.சி.டி.பிரபாகர். </p><p>அரசிற்கு கவனத்திற்கு கொண்டுவருவதற்கு முன்பே அமைச்சர் பதிலளிப்பதா?. அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம் அதன் பின்னர் விளக்கம் அளியுங்கள் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். அதற்கு, சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், அமைச்சர் பேசிய பின் உறுப்பினர்கள் கேள்வி கேட்பதில் ஒன்றும் தவறில்லையே என்றார். </p><p>பதில் அளித்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்:- </p><p>நாட்டையே உலுக்கிய சம்பவம் தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் முன்னால் பேசினால் என்ன, பின்னால் பேசினால் என்ன?. நாங்கள் கவனத்திற்கு கொண்டு வந்ததால் தான் அமைச்சர் பதிலளிக்கிறார் என்பதல்ல. </p><p>அதற்கு எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய பின்னர் அமைச்சர் பதிலளிப்பது தான் முறையாக இருக்கும் என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. </p><p>நேபாள விவகாரம்.. எதிர்கட்சிகள் கோரிக்கை ஏற்பு</p><p>தமிழகத்தில் இருந்து நேபாளம் சென்றவர்கள் வெள்ளத்தில் சிக்கியது குறித்து எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தில், அவர்கள் விளக்கும் முன்பாக அமைச்சர் ராஜ்மோகன் பதிலளிக்க, எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், அமைச்சருக்கு முன்பாக எதிர்க்கட்சிகள் எடுத்துரைக்க சபாநாயகர் வாய்ப்பளித்தார்.</p><p>தமிழ்நாடு சட்டசபை ஒருநாள் விடுமுறைபின் இன்று கூடியது. சபைகூட்டத்தொடர் தொடங்கியதும் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். இதனை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், நேபாளத்தில் பெரு வெள்ளம் தொடர்பாக விளக்கம் அளிக்க தொடங்கினார். </p><p>அதற்கு நேபாளம் பெரு வெள்ளம் தொடர்பாக சபையில் கவன ஈர்ப்பு கொடுக்கப்பட்ட நிலையில், அதற்கு முன்பாகவே அமைச்சர் விளக்கம் அளிப்பதற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். </p><p>கோவை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாமல் உள்ளனர். கூடுதல் நியமனம் அவசியம். Liver Transplantation சிகிச்சை செய்யவும் அரசு முன்வர வேண்டும் என்று அதிமுகவின் எஸ்.பி வேலுமணி வலியுறுத்தினார்.</p><p>அதற்கு பதில் அளித்த அமைச்சர் அருண்ராஜ்,"அரசு மருத்துவமனைகளில் உயர் சிறப்பு மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கிறது. முதல் முறையாக 284 உயர்சிறப்பு மருத்துவர் பணியிடம் உருவாக்கி இருக்கிறோம். Liver Transplantation தேவை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கைகள் எடுப்போம்" என்றார்.</p><h2>அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்த பாமக எம்எல்ஏ</h2><p>சட்டமன்றத்தில் பாமக எம்எல்ஏ கணேஷ்குமார் கூறுகையில்," செஞ்சி மருத்துவமனையில் கடந்த ஆட்சிக் காலத்தில் மகப்பேறுக்கான தனிக் கட்டடம் கட்டப்பட்டு ஆபரேஷன் தியேட்டர் நடைமுறைக்கு வராமல் இருந்தது அமைச்சர் ஆனந்திடம் ஒரே ஒரு கோரிக்கைதான் வைத்தேன். மறுநொடியே DM-ஐ அழைத்து சொன்னதன் விளைவாக 10 நாட்களுக்கு முன்பாக ஆபரேஷன் தியேட்டர் முழு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.</p><p>சிசேரியன் மிக சிறப்பாக சிசேரியன் நடைபெற்றுள்ளது. நீர்வளத்துறை அமைச்சருக்கும்(ஆனந்த்) சுகாதாரத்துறை அமைச்சருக்கும்(அருண்ராஜ்) நன்றிக்கடனுடன் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.</p><p>கலசப்பாக்கம் ஜவ்வாது மலைப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தப்படுமா? என்று உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எழுப்பிய கேள்விக்கு, மலைவாழ் மக்கள் வாழும் பகுதியில் சாலை வசதி மேம்படுத்த தொடர் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று வனத்துறை அமைச்சர் தெரிவித்தார்.</p><p>ராதாபுரம் தொகுதி பணகுடியில் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்கப்படுமா?- எம்எல்ஏ சதீஷ் கிறிஸ்டோபர்</p><p>ராதாபுரம் தொகுதி பணகுடியில் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்கப்படுவது குறித்து குழு மூலம் ஆய்வு செய்து ஆட்சியர் மூலம் நடவடிக்கைகள் எடுப்போம்- அமைச்சர் வெங்கடரமணன்.</p><p>“சோழிங்கநல்லூரை தனி மாவட்டமாக அல்லது தனி மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும்” என தவெக எம்.எல்.ஏ., ஈசிஆர் சரவணன் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர்,“சோழிங்கநல்லூரை தனி மாவட்டமாக அல்லது தனி மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும். 7 ஊராட்சிகள் செங்கல்பட்டிலும் 20 வார்டுகள் சென்னை மாநகராட்சியிலும் இருப்பதால் இரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கும் சென்று மக்கள் அவதியடையும் சூழ்நிலை உள்ளது” என்றார்.</p><p>மொடக்குறிச்சியில் நீர்நிலை புறம்போக்கு எனக் கூறி 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு பட்டா மறுக்கப்படுவதாக தவெக எம்.எல்.ஏ. சண்முகன் கூறியதற்கு, நீர் ஓடக் கூடிய இடமாக இல்லை என்றால் பரிசீலித்து நடவடிக்கை என அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்தார். </p><p>என்னுடைய திருவெறும்பூர் தொகுதியில் மழைக்காலத்தில் நெல் வீணாவதை தடுக்க குடோன்கள் கட்டித் தரப்படுமா?- எம்எல்ஏ நாவல்பட்டு விஜி.</p><p>செப்டம்பரில் இருந்து காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை கொள்முதல் நிலையம் செயல்பட நடவடிக்கைகள் எடுத்து இருக்கிறோம். தார்பாய் மூலமாக நெல்மணியை காய வைக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். எந்த இடத்தில் பிரச்னை வந்தாலும், கோரிக்கை வந்தாலும் அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்- அமைச்சர் வெங்கடரமணன்.</p><p>ராமநாதபுரம் பணங்குடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் எப்போது அமைக்கப்படும் என எம்எல்ஏ சதீஷ் கிறிஸ்டோபர் எழுப்பிய கேள்விக்கு, 2026-27 கொள்முதல் பருவத்தில் நடக்கும் சாகுபடிக்கு ஏற்றவாறு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் செயல்பாட்டை கண்காணிப்பதற்காக ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்படும் என அமைச்சர் வெங்கட்ராமன் தெரிவித்தார். </p><p>திருத்தணி அரசு மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி இல்லை என அதிமுக எம்எல்ஏ அரி எழுப்பிய கேள்விக்கு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி உள்ளது. பயனாளிகளை கணக்கில் கொண்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதியை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கூறினார். </p><p>சோழிங்கநல்லூரில் உள்ள ஊராட்சிகளை சென்னை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் என எம்எல்ஏ சரவணன் கோரிக்கை விடுத்தார். சென்னை மாநகராட்சியுடன் இணைப்பது தொடர்பாக ஆய்வு செய்து ஆட்சியர்களுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.</p><p>தென்காசியில் உள்ள இருளர், காட்டுநாயக்கன் சமுதாயத்தினருக்கு சாதிச்சான்று கிடைக்க நடவடிக்கை தேவை. வீரகுடி வெள்ளாளர் சமுதாயத்தினருக்கு தென்காசியில் வைச பிள்ளை என்றுதான் சாதி சான்று தருகின்றனர் என எம்எல்ஏ ராஜா எழுப்பிய கேள்விக்கு, குறும்பர், நாயக்கர் மலைவாழ் நாயக்கர் என்று சாதி சான்றிதழ் தருவதில் சிக்கல் உள்ளது. சாதிச்சான்றிதழ் கோரிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளோம், அனுமதி கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். </p><p>கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவர், செவிலியர் பற்றாக்குறை நிலவுவதாக எஸ்.பி.வேலுமணி கூறியதற்கு கோவை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார். </p><p>H1N1 காய்ச்சலை கட்டுப்படுத்த முதியவர், கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை உள்ளதா? என்று உறுப்பினர் லட்சுமணன் எழுப்பிய கேள்விக்கு, H1N1 வைரஸ் காய்ச்சல் கட்டுப்பாட்டில்தான் உள்ளது, தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். H1N1 வைரஸ் குறித்து ஆய்வு செய்து தேவைப்பட்டால் தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். </p><p>சட்டசபை நிகழ்வுக்கு பின்னர் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் ஆய்வு நடத்தப்படும். அனைத்து மருத்துவமனைகளிலும் ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அருண் ராஜ் தெரிவித்தார். </p><p>கும்மிடிப்பூண்டியில் அரசு மருத்துவமனைக்கு டயாலிசஸ் செய்வதற்கான கருவி கூடுதலாக வழங்க வேண்டும் என எம்எல்ஏ விஜயகுமார் கோரிக்கை விடுத்தார். அதற்கு அமைச்சர் அருண்ராஜ், கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்து தேவைப்பட்டால் டயாலிசஸ் கருவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். </p><p>செஞ்சி அரசு மருத்துவமனைக்கு சி.டி.ஸ்கேன் உள்ளிட்ட கூடுதல் நவீன உபகரணங்கள் வழங்கப்படுமா? என பா.ம.க. எம்எல்ஏ கணேஷ் குமார் எழுப்பிய கேள்விக்கு, ஆய்வு செய்து தேவைப்பட்டால் கூடுதலாக வழங்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.</p><p>தாம்பரம்-செங்கல்பட்டு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க அதிமுக ஆட்சியில் நடவடிக்கை, கடந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது. மேம்பாலம் குறித்து இன்றைய அரசின் நிலை என்ன? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, செங்கல்பட்டு முதல் சென்னை வரை போக்குவரத்து நெரிசல் அதிகளவில் உள்ளதால் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை- கன்னியாகுமரி 8 வழிச்சாலைக்கான பணிகளை தொடங்கியுள்ளோம், திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெறுகிறது என்றார். </p><p>திருத்துறைப்பூண்டியில் போக்குவரத்து நெரிசலாக உள்ளதால் ரெயில்வே மேம்பாலம் கட்டப்படுமா? என்று உறுப்பினர் மாரிமுத்து எழுப்பிய கேள்விக்கு, மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து தண்டவாளத்தை கடந்து செல்வதால் ரெயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.</p><p>கீழ்வேளூர் ரெயில்வே மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என பா.ம.க. எம்எல்ஏ லதா கோரிக்கை விடுத்தார். அதற்கு பதில் அளித்த அமைச்சர், பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். </p><p>வேலூர் காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து பாலாறு பாலம் வரை உயர்மட்ட பாலம் கட்ட அரசு ஆவணம் செய்யுமா? என்று எம்.எல்.ஏ. சுதாகர் கேள்வி எழுப்பினார். சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து உரியநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார். </p><p>தமிழக சட்டசபையில் உறுப்பினர்களின் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். </p><p>சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு மானிய கோரிக்கை தாக்கல் செய்ய உள்ள நிலையில் சட்டசபைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வருகை</p><p>சட்டசபையில் இன்று சமூக நீதித்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மீதான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது.</p>]]></content:encoded></item><item><title>நேபாள பெருவெள்ளம்: 57 தமிழர்கள் மாயம்- போர்க்கால அடிப்படையில் மீட்க சட்டசபையில் எதிர்கட்சிகள் முழக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nepal-flood-57-tamils-missing-opposition-demands-war-footing-rescue</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nepal-flood-57-tamils-missing-opposition-demands-war-footing-rescue#comments</comments><guid isPermaLink="false">18eed60f-7f39-456b-9e5b-c4a111bac3dd</guid><pubDate>Thu, 27 Aug 2026 06:05:09 +0000</pubDate><atom:updated>2026-08-27T06:05:09.817Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,எடப்பாடி பழனிசாமி,Udhayanidhi Stalin,CM Edappadi palaniswami announces,nepal flood,சட்டசபை,TN Assembl,நேபாள பெருவெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/xxf5j18j/rr.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Udhayanidhi Stalin   -Edappadi Palaniswami]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/xxf5j18j/rr.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாள நாட்டில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த பேரிடரில் கைலாஷ் மானசரோவர் ஆன்மீக பயணம் மேற்கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 57 பக்தர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் சிக்கியுள்ள சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அவசர நிலவரம் தொடர்பாக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-dmk-and-admk-members-arguments">தமிழ்நாடு சட்டசபையில்</a> விவாதம் நடைபெற்றது.</p><p>இதில் பேசிய எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், நேபாளத்தில் மாயமான தமிழர்களை மீட்பது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. நேபாள வெள்ளத்தில் 160 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சிவஞானம் உட்பட பலர் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மாநில அரசு உடனடியாக அமைத்துள்ள உதவி எண்களுக்கு வந்த அழைப்புகள் எத்தனை, அதன் பேரில் டெல்லி தமிழ்நாடு இல்லம் மற்றும் வெளியுறவு அமைச்சகம் மூலமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று கேள்வி எழுப்பினார்.</p><h2>அதிமுக <strong>பொதுச்செயலா</strong>ளர் இபிஎஸ் மற்றும் பாமக வலியுறுத்தல்</h2><p>அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டிலிருந்து ஆன்மீக சுற்றுலா சென்ற 57 பேரின் நிலையை சுட்டிக்காட்டினார். ஈஷா மையம் சார்பிலும், தனியார் சுற்றுலா நிறுவனங்கள் மூலமாகவும் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 57 பக்தர்கள் தற்போது தொடர்புகொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்கள் அனைவரையும் போர்க்கால அடிப்படையில் பாதுகாப்பாக மீட்டு வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.</p><p>இதற்கிடையில் பாமக சட்டமன்ற உறுப்பினர், மாயமான 57 தமிழர்களில் 20 பேர் நேபாள எல்லைப் பகுதியில் உள்ள ராணுவ மற்றும் காவல் முகாம்களில் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மீதமுள்ள 37 பேரைக் கண்டறியும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.</p><p>இந்த விவாதங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை உடனடியாக மீட்க டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அதிகாரிகளுக்கும் வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தொடர்புகொள்ள 24 மணி நேர உதவி மைய எண்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>சிறந்த ஆசிரியர் விருது.. போலீசிடம் சிக்காமல் 40 ஆண்டுகள் அரசு பள்ளி 
ஆசிரியராக பணியாற்றிய ஆயுள் தண்டனை கைதி! </title><link>https://www.maalaimalar.com/news/national/best-teacher-award-a-life-term-convict-who-worked-as-a-government-teacher-for-40-years-and-retired-without-ever-being-caught-by-the-police</link><comments>https://www.maalaimalar.com/news/national/best-teacher-award-a-life-term-convict-who-worked-as-a-government-teacher-for-40-years-and-retired-without-ever-being-caught-by-the-police#comments</comments><guid isPermaLink="false">6357a675-b193-4aa8-92b2-de16cd9baee6</guid><pubDate>Thu, 27 Aug 2026 05:59:52 +0000</pubDate><atom:updated>2026-08-27T05:59:52.497Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>school teacher,Telangana,Life imprisonment,ஆயுள் தண்டனை,தெலுங்கானா,பள்ளி ஆசிரியர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/l7ab9agv/tn-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கைதி]]></media:title><media:description type="html"><![CDATA[ கைதி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/l7ab9agv/tn-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/life-sentence">ஆயுள் தண்டனை</a> விதிக்கப்பட்ட கைதி ஒருவர் பரோலில் வெளியே வந்து, சுமார் 40 ஆண்டுகள் காவல்துறையின் கண்ணில் படாமல் சுதந்திரமாக வாழ்ந்துள்ள விசித்திர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. </p><p>தெலுங்கானா மாநிலம் மஹபூபாபாத் மாவட்டத்தில் தண்டலபல்லி மண்டலம் பெத்தமுப்பாரம் கிராமத்தை சேர்ந்தவர் சந்தெல வீரன்னா.</p><h2>தலைமறைவு</h2><p>இவருக்கு 1983இல் வாரங்கல் நீதிமன்றம் வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை விதித்தது.</p><p>அதே ஆண்டு டிசம்பரில் பரோலில் வெளிவந்த அவர் அதன்பின் தலைமறைவானார்.</p><p>அதன் பின் இவ்வளவு காலமும் மஹபூபாபாத் மாவட்டத்திலேயே அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி, சிறந்த ஆசிரியர் விருதையும் பெற்று, பணி ஓய்வும் பெற்றுள்ளார்.</p><h2>மீண்டும் சிறையில் அடைப்பு</h2><p>சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டு மே 16 அன்று வாரங்கல் மத்திய சிறை சிறப்பு அதிரடிப் படை போலிசார் வீரன்னாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.</p><p>அவருக்கு 3 ஆண்டுகளுக்குப் பரோல் மற்றும் தண்டனைக் குறைப்பு சலுகைகளை மறுத்து சிறைத்துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து வீரன்னாவின் மனைவி சாரம்மா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.</p><h2>நீதிமன்றம்</h2><p>இம்மனுவை விசாரித்த நீதிபதி டி. மாதவி தேவி அடங்கிய அமர்வு, குற்றவாளி வேண்டுமென்றே சட்டத்தின் பிடியில் இருந்து தப்பியோடி வாழ்ந்துள்ளார் என்பதைச் சுட்டிக்காட்டி மனுவைத் தள்ளுபடி செய்தது.</p><p>சிறைத்துறையின் அலட்சியப்போக்கிற்கு இந்தச் சம்பவம் ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.</p><p>ரோலில் செல்லும் கைதிகளை கண்காணிக்க டிராக்கிங் சிஸ்டம் மற்றும் புதிய வழிகாட்டுதல்களை உடனடியாக உருவாக்க வேண்டும் என்று சிறைத்துறைக்கு உத்தரவிட்டது.</p>]]></content:encoded></item><item><title>நேபாளில் தவிக்கும் தமிழர்கள் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம்: முதலில் உறுப்பினர்கள் பேச அனுமதிக்குமாறு அமளி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-dmk-and-admk-members-arguments</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-dmk-and-admk-members-arguments#comments</comments><guid isPermaLink="false">1f4dbb1f-bcc3-4c5c-8706-9c8f1aa80073</guid><pubDate>Thu, 27 Aug 2026 05:48:18 +0000</pubDate><atom:updated>2026-08-27T05:48:18.581Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,nepal flood,சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்,நேபாளம் வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/t8do3415/Assembly0.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்ட காட்சி]]></media:title><media:description type="html"><![CDATA[ உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்ட காட்சி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/t8do3415/Assembly0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சட்டசபையில் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் எதிர்க்கட்சித் தலைவரே முதலில் பேசட்டும் என அமைச்சர் ராஜ்மோகன் பரிந்துரைத்த நிலையில் சபாநாயகர் அனுமதி வழங்கினார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபை</a> ஒருநாள் விடுமுறை பின் இன்று கூடியது. சபை கூட்டத்தொடர் தொடங்கியதும் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். இதனை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், நேபாளத்தில் பெரு வெள்ளம் தொடர்பாக விளக்கம் அளிக்க தொடங்கினார். </p><p>அதற்கு நேபாளம் பெரு வெள்ளம் தொடர்பாக சபையில் கவன ஈர்ப்பு கொடுக்கப்பட்ட நிலையில், அதற்கு முன்பாகவே அமைச்சம் விளக்கம் அளிப்பதற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். </p><p>இதற்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், </p><p>நாட்டையே உலுக்கிய சம்பவம் தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் முன்னால் பேசினால் என்ன, பின்னால் பேசினால் என்ன?. நாங்கள் கவனத்திற்கு கொண்டு வந்ததால் தான் அமைச்சர் பதிலளிக்கிறார் என்பதல்ல என்றார்.</p><p>அதற்கு எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய பின்னர் அமைச்சர் பதிலளிப்பது தான் முறையாக இருக்கும் என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. </p><p>அரசிற்கு கவனத்திற்கு கொண்டுவருவதற்கு முன்பே அமைச்சர் பதிலளிப்பதா?. அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம் அதன் பின்னர் விளக்கம் அளியுங்கள் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். அதற்கு, சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், அமைச்சர் பேசிய பின் உறுப்பினர்கள் கேள்வி கேட்பதில் ஒன்றும் தவறில்லையே என்றார். </p><p>மேலும் கரூர் சம்பவம் நடந்தபோது இதே சபையில் முதலமைச்சர் பேசிய பின்னர் கேள்வி கேளுங்கள் என நடந்ததாக சபாநாயகர் விளக்கம் அளித்தார். </p><p>இருப்பினும் சட்டசபையில் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் எதிர்க்கட்சித் தலைவரே முதலில் பேசட்டும் என அமைச்சர் ராஜ்மோகன் பரிந்துரைத்த நிலையில் சபாநாயகர் அனுமதி வழங்கினார். </p> ]]></content:encoded></item><item><title>உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பு: பிரபல ஹரியான்வி பாடகர் அங்கித் பால்யான் சுட்டுக்கொலை</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/popular-haryanvi-singer-ankit-balyan-shot-dead-in-uttar-pradesh</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/popular-haryanvi-singer-ankit-balyan-shot-dead-in-uttar-pradesh#comments</comments><guid isPermaLink="false">a4fd91d9-ecee-477a-ab79-6b97e8517680</guid><pubDate>Thu, 27 Aug 2026 05:35:25 +0000</pubDate><atom:updated>2026-08-27T05:35:25.780Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Uttar Pradesh,உத்தரப் பிரதேசம்,Singer Ankit Balyan,Haryanvi singer dead,ஹரியான்வி பாடகர் கொலை,பாடகர் அங்கித் பால்யான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/71tur774/ANKIT.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ SinUttar Pradesh ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/71tur774/ANKIT.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரப் பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில், பிரபல ஹரியான்வி பாடகரும் யூடியூபருமான 32 வயதான அங்கித் பால்யான் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p><h2>உடற்பயி<strong>ற்சிகூடத்திற்கு</strong> வெளியே நடந்த துப்பாக்கிச்சூடு</h2><p>நேற்று மாலை ஷாம்லி நகர எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்திலிருந்து அங்கித் பால்யான் தனது காரை நோக்கி வெளியே வந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது. இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல், அங்கித்தை இலக்கு வைத்து சுமார் 18 முதல் 20 சுற்றுகள் சரமாரியாக <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/bollywood-mourns-celebrated-director-gugu-kohli-passes-away-after-heart-attack">துப்பாக்கிச்சூடு </a>நடத்தியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.</p><h2>உறவினர்க<strong>ள் போராட்டம்</strong></h2><p>இதுகுறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த ஷாம்லி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார், அங்கித்தின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அப்பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதனிடையே, இக்கொலையைக் கண்டித்து அங்கித்தின் குடும்பத்தினரும் ஆதரவாளர்களும் டெல்லி-முசாபர்நகர் சாலையில் உடலை வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி முழக்கங்களை எழுப்பினர். </p><p>கொலை செய்யப்பட்ட அங்கித் பால்யான் யூடியூபில் 3.6 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்டு புகழ்பெற்றவராக இருந்தார். வரவிருக்கும் பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட அவர் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மாநிலத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். </p><p>மேலும், இந்த கொலையின் பின்னணியில் அரசியல் பகை அல்லது முன்விரோதம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஹரியானாவின் பிரபல தாதா கும்பல் ஒன்று இக்கொலைக்கு பொறுப்பேற்றுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருவதையும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நேபாளத்தை திணறடிக்கும் திடீர் வெள்ளம்.. இந்தியாவுக்கும் ஆபத்து - இமயமலையில் என்ன நடக்கிறது?</title><link>https://www.maalaimalar.com/news/world/flash-floods-overwhelm-nepal-india-also-at-riskwhat-is-happening-in-the-himalayas</link><comments>https://www.maalaimalar.com/news/world/flash-floods-overwhelm-nepal-india-also-at-riskwhat-is-happening-in-the-himalayas#comments</comments><guid isPermaLink="false">b4bb34cf-da82-4845-a289-5abc51aad507</guid><pubDate>Thu, 27 Aug 2026 05:25:05 +0000</pubDate><atom:updated>2026-08-27T05:25:05.498Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாளம்,nepal,வெள்ளம்,floods,Himalayas,இமயமலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/pf1q35gp/tn-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நேபாள வெள்ளம்
]]></media:title><media:description type="html"><![CDATA[ நேபாள வெள்ளம்
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/pf1q35gp/tn-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் எல்லைக்கு அருகே இமயமலையை ஒட்டி அமைந்துள்ள அண்டை நாடு நேபாளம். அந்நாட்டின் திபெத் எல்லையோரம் அமைந்துள்ள ரசுவா மாவட்டத்தில் பாயும் போதே கோஷி நதியில் திடீரென ஏற்பட்ட <a href="https://www.maalaimalar.com/news/world/nepal-glacial-flood-disaster-157-dead-400-missing-as-india-rushes-relief-aid">வெள்ளப்பெருக்கு </a>160 உயிர்களைப் பலிவாங்கியுள்ளது. </p><p>400-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இதில் இந்தியாவில் இருந்து கைலாஷ் மானசரோவர் புனித பயணம் மேற்கொண்ட பக்தர்களில் 133 பேரும் அடங்குவர்.</p><p>சேறு மற்றும் இடிபாடுகளுக்கு அடியில் ஏராளமானோர் சிக்கியுள்ளனர். ரசுவாவுடன் சேர்த்து தாடிங், நுவாகோட் ஆகிய மாவட்டங்களும் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளன. பல கிராமங்கள், பாலங்கள் மற்றும் சாலைகள் பலத்த சேதமடைந்துள்ளன.</p><p>அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தியா முதற்கட்டமாக விமானப்படை விமானம் மூலம் நேற்று நள்ளிரவில் தற்காலிக கூடாரங்கள், கம்பளிகள், சோலார் விளக்குகள், உயிர்காக்கும் மருந்துகள் உள்ளிட்ட 10 டன் எடைகொண்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளது.</p><p>இந்தியப் பிரதமர் மோடி, நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்ததோடு, நேபாளத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும் என உறுதியளித்துள்ளார்.</p> <h2>மீட்புப் பணிகள்</h2><p>ரசுவா மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், நேபாள ராணுவமும் காவல்துறையும் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும், பல இடங்களுக்கான போக்குவரத்து பாதைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்புப் பணியில் சிக்கல் நீடிக்கிறது. ஹெலிகாப்டர்கள் மூலம் மக்களை மீட்கும் முயற்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.</p><p>தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். வெள்ளப் பாதிப்புகள் மற்றும் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் மீட்கப்படும் அதிரவைக்கும் காட்சிகளும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வருகின்றன.</p><p>பொதுவாகக் கனமழை பெய்யும்போது நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம். மழையை முன்கூட்டியே கணித்து, நதிக்கரையோர மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதன் மூலம் உயிர்ச்சேதங்களை தவிர்க்க முடியும். ஆனால் நேபாளத்தில் நிகழ்ந்தது முற்றிலும் வித்தியாசமான, யாரும் கணிக்க முடியாத ஒரு வெள்ளப்பெருக்கு. இது எவ்வாறு நிகழ்ந்தது என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது.</p> <h2>நிகழ்ந்தது எப்படி?</h2><p>இந்த அசம்பாவிதத்திற்கு நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நிலச்சரிவே காரணம் என நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் சிஷிர் கனால் நாடாளுமன்றத்தில் விளக்கமளித்தார்.</p><p>நேற்று காலை 8:30 மணிக்குத் திபெத் பகுதியில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் பதிவுகள் காட்டுகின்றன.</p><p>இந்த நிலநடுக்கத்தின் காரணமாகத் திபெத்தில் பனிப்பாறைகளும் பாறைகளும் சரிந்து, திபெத் - சீனா எல்லையில் உற்பத்தியாகும் லெண்டே கோலா என்ற நதியில் விழுந்து அதன் நீரோட்டத்தை அடைத்ததாக முதற்கட்டமாக சொல்லப்பட்டது.</p> <p>ஆனால், இமயமலை குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் International Centre for Integrated Mountain Development அமைப்பை சேர்ந்த நிபுணர்களின் முதற்கட்ட ஆய்வில், இமயமலையின் அதி உயர பகுதியில் ஏற்பட்ட பனி மற்றும் பாறைச் சரிவு லெண்டே கோலா நதியில் விழுந்து நீரோட்டத்தைத் தடுத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.</p><p>அங்கு நிலநடுக்கம் பதிவாகியிருந்தாலும், அதற்கும் பனிப்பாறை சரிவுக்கும் நேரடித் தொடர்பு இல்லை என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>பனிப்பாறைகள் சரிந்து நீரோட்டம் தடைப்பட்டதால், லெண்டே கோலா நதியில் பெருமளவு நீர் தேங்கி நீர்மட்டம் உயர்ந்தது. ஒரு கட்டத்தில் அணை போல் தேங்கியிருந்த அந்த அடைப்பு உடைந்தது. இதனால் தேங்கியிருந்த நீர் ஒரே நேரத்தில் கீழ்நோக்கிப் பாய்ந்தது.</p><p>இந்த லெண்டே கோலா நதி நேபாளத்தின் ரசுவா மாவட்டத்திற்குள் நுழையும் போது போதே கோஷி நதி என்று அழைக்கப்படுகிறது.</p><p>இவ்வாறு பெருமளவிலான நீர் ஒரே நேரத்தில் கீழ்நோக்கி வந்ததால் தான் போதே கோஷி நதியில் திடீர் பெருவெள்ளம் ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><h2>மீண்டும் வெள்ள அபாயமா?</h2><p>சீனா - நேபாள எல்லையில் உள்ள லெண்டே கோலா நதியில் இன்னும் பாறை அடைப்புகள் இருப்பதால், மீண்டும் ஒரு வெள்ளப்பெருக்கு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>குறிப்பாக, இதன் காரணமாக இந்தியாவில் உள்ள பீகார் மற்றும் உத்தரப் பிரதேச எல்லை மாநிலங்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p> <h2>எதிர்கால அச்சுறுத்தல்</h2><p>நேபாளத்தில் போதே கோஷி என்றும் திபெத்தில் லெண்டே கோலா என்றும் அழைக்கப்படும் இந்த நதியில் கடந்த 14 மாதங்களில் இரண்டு முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போதைய பாதிப்பு மிக அதிகம் என்பதால் இது பரவலாக கவனத்தை பெற்றுள்ளது.</p><p>நிலநடுக்கம் இல்லையென்றால் இமயமலையில் உறைநிலையில் உள்ள பனி மற்றும் பாறைகள் சரிந்தது ஏன் என்ற கேள்வி எழலாம்.</p><p>நிலநடுக்கம் மட்டுமே பனிச்சரிவை ஏற்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. இமயமலையில் உள்ள பாறைகளையும் பனிப்பாறைகளையும் பிணைத்து வைத்திருப்பது 'பெர்மா ப்ராஸ்ட்'  எனப்படும் அமைப்பாகும்.</p><p>ஆண்டுக் கணக்கில் உறைந்துபோயிருக்கும் மண் மற்றும் பனி அடுக்கே இந்த பெர்மாஃப்ராஸ்ட்.</p> <p>தற்போது தீவிரமடைந்து வரும் காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதல் காரணமாக உறைநிலையில் உள்ள இந்த பெர்மா ப்ராஸ்ட் உருகும்போது, பாறைகளுக்கும் பனிக்குமான பிடிப்பு தளர்வடைகிறது. இதனால் புவியீர்ப்பு விசையின் காரணமாக அவை மேலிருந்து சரிந்து கீழே விழுந்து நதியின் நீரோட்டத்தை அடைக்கின்றன. கோடைக் காலம் மற்றும் பருவமழைக் காலத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் போது இது நிகழ்கிறது.</p><p>பனி, பனிப்பாறைகள், பெர்மாஃப்ராஸ்ட் ஆகிய மூன்றும் சேர்ந்ததே 'உறைபனி மண்டலம்' எனப்படுகிறது. இது காலநிலை மாற்றத்தால் மிக வேகமாக உருமாறி வருகிறது. இமயமலைப் பனிப்பாறைகள் உலகச் சராசரியை விட அதிவேகமாக உருகி வருகின்றன.</p><p>புவி வெப்பமயமாதல் காரணமாக இமயமலைப் பகுதியில் வெப்பநிலை உலகளாவிய சராசரியை விட 2 முதல் 3 மடங்கு வேகமாக உயர்ந்து வருகிறது.</p> <p>இமயமலையில் நடக்கும் மாற்றங்கள் நேபாளத்தோடு நின்றுவிடாது; அது இந்தியாவிற்கும் நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தும்.</p><p>நேபாளத்தில் பாயும் போதே கோஷி, திரிசூலி போன்ற நதிகள் இந்தியாவின் கங்கை நதி அமைப்பில்தான் இணைகின்றன. நேபாளத்தில் இயற்கை அணைகள் உடைந்தால், அடுத்த சில மணிநேரங்களில் பீகார், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.</p><p>இத்தகைய எல்லை கடந்த பேரழிவுகளைச் சமாளிக்க இந்தியா, நேபாளம், சீனா ஆகிய மூன்று நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மோடி அரசின் துரோகப் போக்கு நாளுக்கு நாள் எல்லை மீறுகிறது- மாணிக்கம் தாகூர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-indictment-modi-govt</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-indictment-modi-govt#comments</comments><guid isPermaLink="false">46c3d081-0c0f-48f2-a114-04226e5a6e1b</guid><pubDate>Thu, 27 Aug 2026 05:19:13 +0000</pubDate><atom:updated>2026-08-27T05:19:13.091Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,Congress,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/sarueuiu/manickamtagore.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/sarueuiu/manickamtagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>எந்தவித நிபந்தனையுமின்றி தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய ரூ.5,109 கோடி கல்வி நிதி நிலுவைத் தொகையை உடனே விடுவிக்கக் கோரி மத்திய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.</strong></em></p><p>தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/மாணிக்கம்-தாகூர்">மாணிக்கம் தாகூர்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>வெட்கக்கேடானது</strong></h2><p>தமிழகத்திற்குச் சேர வேண்டிய ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட நிதியைத் தடுத்து நிறுத்தி, கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூபாய் 5,109 கோடியை விடுவிக்காமல் வஞ்சித்து வரும் மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் அரசியலை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.</p><p>தமிழக பள்ளிக்கல்வித் துறை கொள்கை விளக்கக் குறிப்பின்படி, 2024-25 நிதியாண்டில் ரூ.1,788 கோடி, 2025-26 இல் ரூ.1,496 கோடி, நடப்பு 2026-27 நிதியாண்டில் ரூ.1,825 கோடி என மொத்தம் ரூ.5,109 கோடி கல்வி நிதியை மோடி அரசு தடுத்து நிறுத்தியுள்ளது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு பெயரளவில் RTE திட்டத்திற்கு ரூ.714 கோடியை மட்டும் பெயரளவுக்கு விடுவித்துவிட்டு, பள்ளிக் கல்விக்கான ஒட்டுமொத்த நிதியையும் பிடித்து வைத்துப் பிளாக்மெயில் செய்வது வெட்கக்கேடானது.</p><h2><strong>கடுமையான நெருக்கடி</strong></h2><p>மத்திய அரசின் நிதியுதவி இல்லாத போதிலும், தமிழக அரசு தனது சொந்த நிதியிலிருந்து கடந்த 2 ஆண்டுகளில் ரூ.2,014 கோடியையும், நடப்பாண்டில் ரூ.647 கோடியையும் ஒதுக்கிப் பள்ளிகளை நடத்தி வருகிறது. ஆனால், மோடி அரசின் இந்த அதிகார மமதையால் அரசுப்பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாடு, ஆசிரியர் பயிற்சிகள் மற்றும் பள்ளிக் கட்டமைப்புப் பணிகள் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றன.</p><p>மும்மொழிக் கொள்கை விலக்கு உள்ளிட்ட தமிழகத்தின் நியாயமான குரலை நசுக்கி, பி.எம்.ஸ்ரீ. மற்றும் தேசிய கல்விக் கொள்கையை (NEP) கட்டாயமாகத் திணிக்கத் துடிக்கும் மோடி அரசின் அரசியல் பிடிவாதத்திற்குப் பிஞ்சுக் குழந்தைகளின் கல்வியைப் பணயம் வைப்பதா? இது கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான அப்பட்டமான தாக்குதல்.</p><p>தமிழக மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் இந்த அநீதியை உடனடியாகக் கைவிட வேண்டும். எந்தவித நிபந்தனையுமின்றி தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய ரூ.5,109 கோடி கல்வி நிதி நிலுவைத் தொகையை உடனே விடுவிக்கக் கோரி மத்திய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>517கி.மீ. ரேஞ்ச் வழங்கும் புது எம்.ஜி. எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்</title><link>https://www.maalaimalar.com/automobilenews/newautomobile/mg-hector-tomahawk-range-launched-in-india</link><comments>https://www.maalaimalar.com/automobilenews/newautomobile/mg-hector-tomahawk-range-launched-in-india#comments</comments><guid isPermaLink="false">09cd640d-2f32-4e19-9ac6-4d2bb55b6989</guid><pubDate>Thu, 27 Aug 2026 05:18:00 +0000</pubDate><atom:updated>2026-08-27T05:18:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>எலெக்ட்ரிக் கார்,MG Motor,எம்ஜி மோட்டார்,Electric Car</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/7hwyxf1v/MG-Hector-Tomahawk.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MG Hector Tomahawk]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/7hwyxf1v/MG-Hector-Tomahawk.png?w=280" width="280"></media:thumbnail><category>இது புதுசு (Automobile)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/mg-motor">எம்.ஜி. மோட்டார்</a> இந்தியா நிறுவனம் ஹெக்டர் டோமஹாக் எஸ்.யூ.வி. இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது . இந்த எலெக்ட்ரிக் காரின் அறிமுக விலைகள், BaaS மற்றும் நேரடி கொள்முதல் திட்டங்களுக்கு முறையே ரூ. 13.99 லட்சம் மற்றும் ரூ. 19.50 லட்சம் எனத் தொடங்குகின்றன. </p><p>PHEV பதிப்பின் விலை, BaaS மற்றும் நேரடி கொள்முதல் திட்டங்களுக்கு முறையே ரூ. 21.80 லட்சம் மற்றும் ரூ. 25.70 லட்சம் (அனைத்து விலைகளும், எக்ஸ்-ஷோரூம் விலைகள்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. </p><p>இந்த விலைகள், இந்த மாடலின் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான யூனிட் விற்பனைக்கு மட்டுமே செல்லுபடியாகும். இந்த மாடல் <a href="https://www.maalaimalar.com/topic/electric-car">EV</a> மற்றும் ICE ஆகிய இரண்டு வகைகளில் கிடைக்கிறது.</p><p>வாடிக்கையாளர்கள் எக்ஸைட், எக்ஸ்க்ளூசிவ் மற்றும் எசென்ஸ் ஆகிய மூன்று வேரியண்ட்களில் இருந்து தேர்வு செய்யலாம். இந்த காருக்கான முன்பதிவுகள் தொடங்கிய நிலையில், EV மற்றும் PHEV வேரியண்ட்களுக்கான டெலிவரி செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>சிறப்பு அம்சங்கள்:</h2><p>வெளிப்புற தோற்றத்தை பொறுத்தவரை, புதிய டோமஹாக் மூன்று வரிசை எஸ்.யூ.வி.-யில் எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், டைனமிக் டர்ன் இண்டிகேட்டர்கள், குரோம் இன்செர்ட்களுடன் கூடிய புதிய கருப்பு கிரில், புதிய 18-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள், எல்.இ.டி. டெயில் லைட்கள் மற்றும் பின்புற ஃபாக் லைட்கள், ஷார்க்-ஃபின் ஆன்டெனா மற்றும் ரூஃப் ரெயில்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.</p><p>2026 எம்.ஜி. டோமஹாக் ஐந்து இருக்கைகள் மற்றும் ஏழு இருக்கைகள் கொண்ட உள்ளமைப்புகளில் கிடைக்கிறது. அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் 256 வண்ண சுற்றுப்புற விளக்குகள், 10 ஸ்பீக்கர்கள் கொண்ட இன்ஃபினிட்டி மியூசிக் சிஸ்டம், வென்டிலேட்டெட் முன் இருக்கைகள், தானாக உள்ளிழுக்கும் மற்றும் மெமரி செயல்பாட்டுடன் கூடிய ஆறு வழிகளில் சரிசெய்யக்கூடிய மின்சார ஓட்டுநர் இருக்கை, பின்புற சன்ஷேடுகள், ஸ்லைடு மற்றும் சாய்வு வசதிகளுடன் கூடிய பின்புற இருக்கைகள், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 15.6-இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை அடங்கும்.</p><h2>கனெக்ட்டெட் கார் அம்சங்கள்:</h2><p>டோமஹாக் எஸ்.யூ.வி.யில் 80-க்கும் மேற்பட்ட கனெக்ட்டெட் கார் அம்சங்கள், 30-க்கும் மேற்பட்ட ஹிங்லிஷ் கட்டளைகள், வயர்லெஸ் ஆப்பிள் கார்-பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, வயர்லெஸ் சார்ஜர், ஐ-ஸ்வைப்+ ஜெஸ்டர் கண்ட்ரோல், 8.7-இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டெசர்ட் ஸ்குவாட்ரன் இன்டீரியர் தீம், பவர்டு டெயில்கேட், டிரான்ஸ்பேரண்ட் சேஸிஸ் மற்றும் வீல் வியூ கொண்ட 360-டிகிரி கேமரா, V2L தொழில்நுட்பம் உள்ளது.</p><p>இத்துடன் பல்வேறு இன்-கார் மோட்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. பாதுகாப்பு அம்சங்களில் ESP, TCS, HHC, EBD உடன் கூடிய ABS, EPB, லெவல் 2 ADAS மற்றும் ஆறு ஏர்பேக்குகள் அடங்கும். மேலும், இந்தியாவில் ஒரு காருக்கு முதல் முறையாக வழங்கப்படும் V2H தொழில்நுட்பமும் இதில் உள்ளது.</p><h2>பேட்டரி மற்றும் ரேஞ்ச்:</h2><p>எம்.ஜி. ஹெக்டர் டோமஹாக் EV-யின் இன்ஜின், 69.2kWh LFP பேட்டரி பேக் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட ஒற்றை எலெக்ட்ரிக் மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 517 கிலோமீட்டர் வரை செல்லும் என கூறப்படுகிறது. இது 201bhp மற்றும் 310 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்துகிறது. மேலும், இந்த கார் 8.2 நொடிகளில் 0-100 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் என கூறப்படுகிறது.</p><p>புதிய எம்.ஜி. ஹெக்டர் டோமஹாக்-இன் ஐ.சி.இ. (ICE) பதிப்பானது, 20.5kWh பேட்டரி பேக்குடன் இணைக்கப்பட்ட 1.5-லிட்டர், என்ஏ (NA) பெட்ரோல் என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இதன் மூலம் இது ஒரு PHEV வடிவில் கிடைக்கிறது. இந்த வெர்ஷன் 198bhp பவர், 230 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.</p><p>இந்த கார் மின்சாரத்தில் மட்டும் 115 கிலோமீட்டர் செல்லும் திறன் கொண்டுள்ளது. மேலும், எம்.ஜி. நிறுவனம் இந்த கார் 40 கிலோமீட்டர் மைலேஜ் தரும் என உறுதியளிக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை ஆழ்வார்பேட்டையில் அதிநவீன கண் அறுவை சிகிச்சை முறை அறிமுகம்: முதலமைச்சர் விஜய் பங்கேற்று தொடங்கி வைத்தார்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/advanced-eye-surgery-chennai-launch-by-cm-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/advanced-eye-surgery-chennai-launch-by-cm-vijay#comments</comments><guid isPermaLink="false">96e374fd-5c17-45ba-8c33-61307f1f7f96</guid><pubDate>Thu, 27 Aug 2026 05:07:20 +0000</pubDate><atom:updated>2026-08-27T05:07:20.094Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,Dr. Agarwal&apos;s Eye Hospital,Alwarpet eye hospital,ஆழ்வார்பேட்டை,டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/xanh32r0/Untitled-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chief Minister Vijay ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/xanh32r0/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள புகழ்பெற்ற டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையில் புதிய அதிநவீன கண் அறுவை சிகிச்சை தொழில்நுட்பத்தின் அறிமுக விழா இன்று நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் விஜய் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, புதிய மருத்துவ வசதிகள் மற்றும் நவீன கண் அறுவை சிகிச்சை முறைகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.</p><h2>மருத்துவத் து<strong>றையில் புதிய தொழில்</strong>நுட்ப மைல்கல்</h2><p>பொதுமக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கண் சிகிச்சைகளை மிகக் குறைந்த நேரத்திலும் துல்லியமாகவும் வழங்கும் நோக்கில் இந்த <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/inspection-of-all-hospitals-in-tamil-nadu-minister-arun-raj-announces-in-the-assembly">நவீன அறுவை சிகிச்சை</a> முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கண் கண்புரை, விழித்திரை பிரச்சனைகள் மற்றும் ஒளிவிலகல் குறைபாடுகளை அதிநவீன லேசர் மற்றும் கணினி சார்ந்த கருவிகளின் உதவியுடன் மிகக் குறைந்த காயம் மற்றும் விரைவான குணமடையும் வசதியோடு மேற்கொள்ள இத்தொழில்நுட்பம் வழிவகுக்கிறது.</p><h2>மருத்து<strong>வ நிபுணர்கள் பங்</strong>கேற்பு</h2><p>இந்த அறிமுக விழாவில் அகர்வால் கண் மருத்துவமனையின் முன்னணி கண் மருத்துவ நிபுணர்கள், மூத்த நிர்வாகிகள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர். நவீன கருவிகளின் செயல்பாடு மற்றும் சிகிச்சையின் நன்மைகள் குறித்து மருத்துவக் குழுவினர் நேரில் விளக்கமளித்தனர். சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு இப்புதிய சிகிச்சை முறை பெரும் பயனுள்ளதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY: சற்று குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்!</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-today-current-status-of-gold-rates</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-today-current-status-of-gold-rates#comments</comments><guid isPermaLink="false">8f50b4f5-63ed-4fea-b172-b91620b75619</guid><pubDate>Thu, 27 Aug 2026 05:06:20 +0000</pubDate><atom:updated>2026-08-27T05:06:20.188Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/0zpgn5pw/Gold" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/0zpgn5pw/Gold?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையை விட கிராமுக்கு ரூ. 70 மற்றும் சவரனுக்கு ரூ.560 வரை குறைந்து விற்பனையாகிறது.</p><h2><strong>தங்கம் விலை நிலவரம்</strong></h2><p>ஆவணி மாதம் பிறந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கம் விலை இன்று சரிவைச் சந்தித்துள்ளது.</p><ul><li><p><strong>ஆபரணத் தங்கம் (22 கேரட்):</strong> இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.<strong>14,940</strong>-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.<strong>1,19,520</strong>-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட சவரனுக்கு ரூ.560 குறைந்துள்ளது.</p></li><li><p><strong>24 கேரட்:</strong> இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.<strong>16,298</strong> என்ற விலையில் விற்பனையாகிறது.</p></li></ul><h2><strong>வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>வெள்ளி விலையிலும் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 265 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><h2><strong>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்</strong></h2><p><strong>26-08-2026- (22) - ரூ. 1,20,080</strong></p><p><strong>25-08-2026- (22 ) - ரூ.1,20,080</strong></p><p><strong>24-08-2026- (22 ) - ரூ.1,20,240</strong></p><p><strong>23-08-2026- (22 ) - ரூ.1,19,600</strong></p><p><strong>22-08-2026- (22 ) - ரூ.1,19,600</strong></p><h2><strong>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p><strong>26-08-2026- ஒரு கிராம் ரூ.265</strong></p><p><strong>25-08-2026- ஒரு கிராம் ரூ.265</strong></p><p><strong>24-08-2026- ஒரு கிராம் ரூ.275</strong></p><p><strong>23-08-2026- ஒரு கிராம் ரூ.270</strong></p><p><strong>22-08-2026- ஒரு கிராம் ரூ.270</strong></p> ]]></content:encoded></item><item><title>8000mAh பேட்டரியுடன் புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் அறிமுகம் - விலை மற்றும் முழு விவரங்கள்</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/realme-p4s-5g-with-8000mah-battery-launched-in-india</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/realme-p4s-5g-with-8000mah-battery-launched-in-india#comments</comments><guid isPermaLink="false">8c7ca5ba-4ef1-437f-a7e5-61d7cbe4696e</guid><pubDate>Thu, 27 Aug 2026 04:39:00 +0000</pubDate><atom:updated>2026-08-27T04:39:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Realme,ரியல்மி,smartphone,ஸ்மார்ட்போன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/mzq99s4g/Realme-P4s.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Realme P4s]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/mzq99s4g/Realme-P4s.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/realme">ரியல்மி</a> நிறுவனம் இந்திய சந்தையில் புதிய P சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. ரியல்மி P4s 5ஜி என அழைக்கப்படும்  இந்த ஸ்மார்ட்போன் P4 சீரீசில் எட்டாவது மாடல் ஆகும். </p><p>இந்த ஸ்மார்ட்போன் இருவித நிறங்களில் கிடைக்கிறது. மேலும் இதில் ஏற்படும் வெப்பத்தை கட்டுப்படுத்த வேப்பர் சேம்பர் வழங்கப்பட்டு இருக்கிறது. </p><p>இந்த <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மார்ட்போன்</a> ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 7000 சீரிஸ் சிப்செட், 8000mAh பேட்டரி, 80 வாட் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறது. </p><h2>ரியல்மி P4s சிறப்பு அம்சங்கள்:</h2><p>டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் ரியல்மி P4s 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ரியல்மி யு.ஐ. 7 ஓ.எஸ். உடன் வருகிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போனிற்கு மூன்று ஆண்டுகள் ஓ.எஸ். அப்கிரேடுகள், நான்கு ஆண்டுகள் செக்யூரிட்டி அபிடேட்கள் வழங்குவதாக ரியல்மி தெரிவித்து இருக்கிறது.</p><p>இந்த ஸ்மார்ட்போன் 6.78 இன்ச் 1.5K 1272x2772 பிக்சல் சாம்சங் M14 AMOLED டிஸ்ப்ளே, 144 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், HDR10+, அதிகபட்சம் 6500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உடன் வருகிறது. இத்துடன் IP66 + IP68 + IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.</p><p>புதிய ரியல்மி P4s ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 7400 அல்ட்ரா சிப்செட், ஹைப்பர் விஷன்+ ஏ.ஐ. சிப் வழங்கப்பட்டு இருக்கிறது. </p><p>இந்த ஸ்மார்ட்போன் அதிகபட்சம் 12 ஜிபி LPDDR4x ரேம், 14 ஜிபி வரை ரேம் எக்ஸ்பான்ஷன், 256 ஜிபி UFS3.1 ஸ்டோரேஜ் கொண்டிருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 16MP செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது.</p><p>இந்த ஸ்மார்ட்போன் 8000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 80 வாட் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, 4ஜி எல்டிஇ, வைபை 5, ப்ளூடூத் 5.4, யுஎஸ்பி டைப் சி போர்ட், eidou, GPS, GLONASS, Galileo, மற்றும் QZSS வழங்கப்பட்டு இருக்கிறது.</p><h2>விலை விவரங்கள்:</h2><p>ரியல்மி P4s ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 34,999 என்றும், 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 37,999 என்றும் டாப் எண்ட் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 41,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.</p><p>அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் ஹெச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் எஸ்பிஐ வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 3000 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. </p><p>இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை செப்டம்பர் 3-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் எலெக்ட்ரிக் சியான் மற்றும் டைட்டானியம் கிரே என இருவித நிறங்களில் கிடைக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் ஆய்வு - சட்டசபையில் அமைச்சர் அருண் ராஜ் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/inspection-of-all-hospitals-in-tamil-nadu-minister-arun-raj-announces-in-the-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/inspection-of-all-hospitals-in-tamil-nadu-minister-arun-raj-announces-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">9e33b084-d1ec-4154-b377-5ddb8a987214</guid><pubDate>Thu, 27 Aug 2026 04:31:36 +0000</pubDate><atom:updated>2026-08-27T04:31:36.127Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,Aadhav Arjuna,ஆதவ் அர்ஜுனா,Tamil Nadu Legislative Assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/yghrzg4w/tn-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அருண் ராஜ் ]]></media:title><media:description type="html"><![CDATA[ அருண் ராஜ் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/yghrzg4w/tn-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மீலாது நபியை முன்னிட்டு நேற்று சட்டமன்றம் நடைபெறவில்லை. ஒரு நாள் விடுமுறையை தொடர்ந்து சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கூட்டம் இன்று மீண்டும் தொடங்கியது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-27-august-2026">சட்டசபையில் இன்று</a> சமூக நீதித்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மீதான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது.</p><p>முன்னதாக, சட்டசபையில் உறுப்பினர்களின் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். </p><h2>கேள்வி பதில்</h2><h3>பாலங்கள்</h3><p>வேலூர் காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து பாலாறு பாலம் வரை உயர்மட்ட பாலம் கட்ட அரசு ஆவணம் செய்யுமா? என்று எம்.எல்.ஏ. சுதாகர் கேள்வி எழுப்பினார். சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து உரியநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார். </p> <p>கீழ்வேளூர் ரெயில்வே மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என பா.ம.க. எம்எல்ஏ லதா கோரிக்கை விடுத்தார். அதற்கு பதில் அளித்த அமைச்சர், பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.</p><p>திருத்துறைப்பூண்டியில் போக்குவரத்து நெரிசலாக உள்ளதால் ரெயில்வே மேம்பாலம் கட்டப்படுமா? என்று உறுப்பினர் மாரிமுத்து எழுப்பிய கேள்விக்கு, மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து தண்டவாளத்தை கடந்து செல்வதால் ரெயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.</p> <p>தாம்பரம்-செங்கல்பட்டு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க அதிமுக ஆட்சியில் நடவடிக்கை, கடந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது. </p><p>மேம்பாலம் குறித்து இன்றைய அரசின் தற்போதைய சூழ்நிலை என்ன? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, செங்கல்பட்டு முதல் சென்னை வரை போக்குவரத்து நெரிசல் அதிகளவில் உள்ளதால் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். </p><p>சென்னை- கன்னியாகுமரி 8 வழிச்சாலைக்கான பணிகளை தொடங்கியுள்ளோம், திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெறுகிறது என்றார்.</p><h2>செஞ்சி அரசு மருத்துவமனை</h2><p>செஞ்சி அரசு மருத்துவமனைக்கு சி.டி.ஸ்கேன் உள்ளிட்ட கூடுதல் நவீன உபகரணங்கள் வழங்கப்படுமா? என பா.ம.க. எம்எல்ஏ கணேஷ் குமார் எழுப்பிய கேள்விக்கு, ஆய்வு செய்து தேவைப்பட்டால் கூடுதலாக வழங்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.</p> <h2>கும்மிடிப்பூண்டிஅரசு மருத்துவமனை</h2><p>கும்மிடிப்பூண்டியில் அரசு மருத்துவமனைக்கு டயாலிசஸ் செய்வதற்கான கருவி கூடுதலாக வழங்க வேண்டும் என எம்எல்ஏ விஜயகுமார் கோரிக்கை விடுத்தார். அதற்கு அமைச்சர் அருண்ராஜ், கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்து தேவைப்பட்டால் டயாலிசஸ் கருவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.</p><p>சட்டசபை நிகழ்வுக்கு பின்னர் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் ஆய்வு நடத்தப்படும். அனைத்து மருத்துவமனைகளிலும் ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அருண் ராஜ் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>செப்டம்பர் நிகழ்வுக்கு தேதி குறித்த ஆப்பிள், வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/apple-surprise-and-shine-event-set-for-september-9</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/apple-surprise-and-shine-event-set-for-september-9#comments</comments><guid isPermaLink="false">75f4a58b-29fd-4815-9371-e0c5a8192d84</guid><pubDate>Thu, 27 Aug 2026 03:34:00 +0000</pubDate><atom:updated>2026-08-27T03:34:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Apple,ஆப்பிள்,Apple Event,ஆப்பிள் நிகழ்வு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/62vvmb6h/Apple-Surprise-and-Shine.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Apple Surprise and Shine]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/62vvmb6h/Apple-Surprise-and-Shine.png?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/apple">ஆப்பிள்</a> நிறுவனம் ஒருவழியாக தனது செப்டம்பர் நிகழ்வுக்கான தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த ஆண்டு செப்டம்பர் நிகழ்வுக்கு ஆப்பிள் நிறுவனம் "சர்ப்ரைஸ் அண்ட் ஷைன்" என்ற டேக்லைன் கொண்டுள்ளது. </p><p>2026 ஆண்டுக்கான ஐபோன் அறிமுக நிகழ்வு செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறும் என ஆப்பிள் அறிவித்துள்ளது. செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் நடைபெறும் நிகழ்வில் அறிமுகம் செய்யப்போகும் சாதனங்கள் குறித்து ஆப்பிள் எவ்வித தகவலும் வழங்கவில்லை. எனினும், ஆப்பிள் இந்த நிகழ்வில் அந்நிறுவனம் புதிய <a href="https://www.maalaimalar.com/topic/iphone">ஐபோன்</a> சீரிஸ் மற்றும் சாதனங்களை அறிமுகம் செய்யும் என்று கூறப்படுகிறது.</p><h2>ஆப்பிள் நிகழ்வு:</h2><p>ஆப்பிள் செப்டம்பர் நிகழ்வுகள் குறித்து இணையத்தில் வெளியான அழைப்பிதழ் பதிவுகளில், ஆப்பிள் நிகழ்வு செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.</p><p>மேலும், முந்தைய ஆண்டுகளை போன்றே இந்த ஆண்டு ஆப்பிள் நிகழ்வும் கலிஃபோர்னியாவில் உள்ள ஆப்பிள் பார்க் வளாகத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு தொடங்குகிறது.</p><h2>சர்ப்ரைஸ் அண்ட் ஷைன் நிகழ்வு:</h2><p>கொரோனா பெருந்தொற்று காலக்கட்டத்தில் தொடங்கி ஆப்பிள் தனது ஹார்டுவேர் நிகழ்வுகளை ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட காணொளிகளை ஆப்பிள் பார்க் அரங்கில் ஒளிபரப்புவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது. </p><p>இந்த முறை ஆப்பிள் இந்த வழக்கத்தை மாற்றி, மீண்டும் ஆப்பிள் நிர்வாகிகளை வைத்தே சாதனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.</p><p>இந்த நிகழ்வினை ஆன்லைனில் உலக நாடுகளில் மக்கள் நேரலையில் காண முடியும். இந்த நிகழ்வு ஆப்பிள் வலைதளம் மற்றும் அதன் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதேபோல் இந்த நிகழ்வு ஆப்பிள் டிவி செயலியிலும் நேரலை செய்ய்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>தலைமை மாற்றம்:</h2><p>முன்னதாக ஆப்பிள் வெளியிட்ட அறிவிப்பின் படி அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் டிம் குக் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது.</p><p>மேலும், ஆப்பிள் நிறுவனத்தின் ஹார்டுவேர் இன்ஜினியரிங் பிரிவின் மூத்த துணை தலைவராக இருக்கும் ஜான் டெர்னஸ் வருகிற செப்டம்பர் 1, 2026-ஆம் ஆண்டில் இருந்து ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பதவியேற்க இருக்கிறார்.</p><p>தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலகும் போதிலும், டிம் குக் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனத்தின் நிர்வாக குழுவின் தலைவராக பொறுப்பேற்க இருப்பதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்தது.</p>]]></content:encoded></item><item><title>நாட்டின் 7 முக்கிய ரெயில் வழித்தடங்கள் மேலும் விரிவாக்கம்- மத்திய ரெயில்வே அமைச்சர் தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/national/union-minister-ashwini-vaishnaw-inform-further-expansion-of-the-countrys-7-major-rail-routes</link><comments>https://www.maalaimalar.com/news/national/union-minister-ashwini-vaishnaw-inform-further-expansion-of-the-countrys-7-major-rail-routes#comments</comments><guid isPermaLink="false">d701f6be-e993-4947-8a84-059ae64ab7b9</guid><pubDate>Thu, 27 Aug 2026 03:23:01 +0000</pubDate><atom:updated>2026-08-27T03:23:01.006Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Ashwini Vaishnaw,அஸ்வினி வைஷ்ணவ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/qd3pyozf/vaishnaw.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்]]></media:title><media:description type="html"><![CDATA[ மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/qd3pyozf/vaishnaw.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நாட்டின் 7 முக்கிய ரெயில் வழித்தடங்கள் மேலும் விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாக மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.</strong></em></p><h2><strong>விரிவுபடுத்தும் பணி</strong></h2><p>இந்திய ரெயில்வேயில் 7 ரெயில் வழித்தடங்களில் அதிக அளவில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை நாட்டின் மொத்த ரெயில் போக்குவரத்தில் 41 சதவீதத்தை கையாள்வதில் முக்கிய பங்கை வகிக்கிறது. சுமார் 11 ஆயிரம் கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த வழித்தடங்களின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, அவற்றை 4 ரெயில் பாதைகளாக விரிவுபடுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதிகரித்து வரும் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தை திறம்பட கையாளும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.</p><h2><strong>7 வழித்தடங்கள்</strong></h2><p>இதுகுறித்து, மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வீடியோ வெளியிட்டு பேசியதாவது:-</p><p>டெல்லி – ஹவுரா, ஹவுரா – சென்னை, சென்னை – மும்பை, மும்பை – டெல்லி, டெல்லி – சென்னை, மும்பை – ஹவுரா மற்றும் டெல்லி – கவுகாத்தி ஆகிய 7 வழித்தடங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டு 4 ரெயில் பாதைகளாக மாற்றப்பட இருக்கிறது. இதன் மூலம் நாட்டின் நெரிசல் மிகுந்த வழித்தடங்களில் ரெயில் சேவைகள் மேம்படுத்தப்படும். மேலும், போக்குவரத்து செலவு குறைக்கப்பட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து முறை ஊக்குவிக்கப்படும்.</p><p>இந்த முக்கிய வழித்தடங்களை 4 பாதைகளாக விரிவுபடுத்துவது, எதிர்கால பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து வளர்ச்சிக்கு தேவையான கூடுதல் திறனை உருவாக்கும் முக்கிய நடவடிக்கையாகும். அதிக திறன், குறைந்த போக்குவரத்து செலவு மற்றும் தூய்மையான போக்குவரத்தை நோக்கமாகக் கொண்டு இந்திய ரெயில்வே தொடர்ந்து முன்னேறி வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் ரெயில்வே துறையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ரெயில்வேயின் இந்த உள்கட்டமைப்பு மேம்பாடு மிக முக்கியமானதாகும்.</p><p>இவ்வாறு அவர் பேசியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>160 பேர் பலி.. 133 இந்தியர்கள் மாயம் - நேபாள வெள்ள பாதிப்பின் வீடியோ, புகைப்படங்கள் </title><link>https://www.maalaimalar.com/news/world/nepal-glacial-flood-disaster-157-dead-400-missing-as-india-rushes-relief-aid</link><comments>https://www.maalaimalar.com/news/world/nepal-glacial-flood-disaster-157-dead-400-missing-as-india-rushes-relief-aid#comments</comments><guid isPermaLink="false">fa052eb9-0793-4d1f-ad74-30f8cbf9443e</guid><pubDate>Thu, 27 Aug 2026 02:32:59 +0000</pubDate><atom:updated>2026-08-27T02:32:59.536Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாளம்,nepal,வெள்ளம்,flood,வெள்ளப்பெருக்கு,Flash Flood</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/0ofvviqo/tn-5.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நேபாள வெள்ளம்]]></media:title><media:description type="html"><![CDATA[ நேபாள வெள்ளம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/0ofvviqo/tn-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திபெத்தை ஒட்டிய <a href="https://www.maalaimalar.com/news/world/52-magnitude-earthquake-hits-nepal-hours-after-tremor-triggered-deadly-floods">நேபாளத்தின் </a>ரசுவா மாவட்டத்தில், போதே கோஷி ஆற்றில்  பனிப்பாறை சரிவு காரணமாக ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது.</p><h2>பாதிப்பு </h2><p>இந்த வெள்ளத்தால் நேபாளத்தின் ரசுவா, நுவாகோட் மற்றும் தாடிங் ஆகிய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p>கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற 133 இந்தியர்கள் உட்பட சுமார் 400 பேர் மாயமாகியுள்ளனர். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Scary visuals from today show people desperately running for safety as the flash flood hits Gyirong Port, China, but they couldn’t find a safe place to escape.<br><br>The flood later hit Nepal, with hundreds reported missing, including 126 Indian tourists. <a href="https://t.co/4wzPFeYWYJ">pic.twitter.com/4wzPFeYWYJ</a></p>&mdash; Weather Monitor (@WeatherMonitors) <a href="https://x.com/WeatherMonitors/status/2092562900569493837?ref_src=twsrc%5Etfw">August 26, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Nepal: Visuals from the flood-affected Nuwakot district in Nepal. <br><br>The swollen Bhotekoshi River tore through Nuwakot, leading to homes being swept away, families being separated, and many people still missing. <a href="https://t.co/oQ2MJpnxsP">pic.twitter.com/oQ2MJpnxsP</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2092555899768566023?ref_src=twsrc%5Etfw">August 26, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>மோடி உறுதி</h2><p>"பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும், நாடு முழுவதும் இணைந்து செயல்பட வேண்டும்" என்று நேபாள பிரதமர் பாலேந்திர ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p><p>இந்தியப் பிரதமர் மோடி, நேபாள பிரதமருடன் தொலைபேசியில் பேசி இரங்கல் தெரிவித்ததுடன், தேவையான அனைத்து நிவாரணப் பொருட்களையும் மனிதநேய உதவிகளையும் வழங்க இந்தியா தயார் என உறுதி அளித்துள்ளார்.</p><p>நேபாளத்தில் பெருகிவரும் வெள்ளத்தால், அதை ஒட்டியுள்ள இந்திய மாநிலங்களான பீகார் மற்றும் உத்தரப் பிரதேச எல்லைப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">VIDEO | Nepal: Flash floods wash away villages, project sites in Rasuwa district; alert issued.<br><br>(Source: Third Party)<a href="https://x.com/hashtag/NepalFloods?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#NepalFloods</a> <br><br>(Full video available on PTI Videos - <a href="https://t.co/d8jp61yd2p">https://t.co/d8jp61yd2p</a>) <a href="https://t.co/dKMSgd757h">pic.twitter.com/dKMSgd757h</a></p>&mdash; Press Trust of India (@PTI_News) <a href="https://x.com/PTI_News/status/2092554516763922530?ref_src=twsrc%5Etfw">August 26, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Scary. Prayers for people of Nepal. <a href="https://t.co/9UXYCEMOzs">pic.twitter.com/9UXYCEMOzs</a></p>&mdash; Man Aman Singh Chhina (@manaman_chhina) <a href="https://x.com/manaman_chhina/status/2092531413023379965?ref_src=twsrc%5Etfw">August 26, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>இந்தியா நிவாரணம்</h2><p>இந்திய விமானப்படையின் C 130J விமானம் முதற்கட்டமாக மொத்தம் சுமார் 10 டன் எடையுள்ள அத்தியாவசிய பொருட்களுடன் நேற்று நள்ளிரவு நேபாளம் புற்பட்டுச் சென்றது.</p><p>இந்த பொருட்களில் தற்காலிகக் கூடாரங்கள், கம்பளிகள், தூய்மைப் பொருட்கள், சோலார் விளக்குகள் மற்றும் உயிர்காக்கும் முதலுதவி மருந்துகள் அடங்கும்.</p><p>காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம் சார்பில் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்காக 24 மணி நேர அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது.</p><p>நேபாள ராணுவம், காவல்துறை மற்றும் மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.</p><p>இதனிடையே நேபாள வெள்ளத்தின் வீடியோக்கள், சாட்டிலைட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/56w79082/tn-3.jpg" /></figure>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/todays-petrol-and-diesel-price-status-in-chennai-4</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/todays-petrol-and-diesel-price-status-in-chennai-4#comments</comments><guid isPermaLink="false">642e84a0-bdd6-4690-86e3-62659e81df02</guid><pubDate>Thu, 27 Aug 2026 01:55:48 +0000</pubDate><atom:updated>2026-08-27T01:55:48.523Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,கச்சா எண்ணெய்,Crude oil,பெட்ரோல் டீசல் விலை,Petrol and Diesel Prices</media:keywords><media:content height="614" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/5rumntr2/maalai-malar2026-08-18b0nhpc4wmaalai-malar2026-08-11blbkipxnmaalai-malar2026-08-08eyp4pp4lpetrol.avif" width="1024"><media:title type="html"><![CDATA[ பெட்ரோல் டீசல் விலை ]]></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல் டீசல் விலை ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/5rumntr2/maalai-malar2026-08-18b0nhpc4wmaalai-malar2026-08-11blbkipxnmaalai-malar2026-08-08eyp4pp4lpetrol.avif?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/china-warns-us-over-iran-trade-new-economic-sanctions-row">ஈரான் போரினால் </a>மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p><h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.</p> <h2>இன்றைய பெட்ரோல், டீசல் விலை</h2><p>அந்த வகையில் இன்றைய (27.08.2026 - வியாழக்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><h2>கச்சா எண்ணெய் விலை</h2><p>இன்று சர்வதேச சந்தையில் பிரனட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 87.30 டாலர் என விற்பனை ஆகி வருகிறது. </p>]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 27 ஆகஸ்ட் 2026: ஆவணி அவிட்டம்</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-27-august-2026-raaghavendar-thirumanjanam</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-27-august-2026-raaghavendar-thirumanjanam#comments</comments><guid isPermaLink="false">5524e1fe-b0a2-4fab-8434-e34a5517acc7</guid><pubDate>Thu, 27 Aug 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-08-27T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/18/26670527-ragavendrar.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Raaghavendar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/18/26670527-ragavendrar.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆவணி-10 (வியாழக்கிழமை)</p><p>பிறை : வளர்பிறை</p><p>திதி :  சதுர்த்தசி காலை 9.55 வரை பிறகு பவுர்ணமி </p><p>நட்சத்திரம் : அவிட்டம் பின்னிரவு 3.44 வரை பிறகு சதயம்</p> <p>யோகம் :  சித்த / மரணயோகம்</p><p>ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை</p><p>எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை</p><p>சூலம் : தெற்கு</p><p>நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை</p> <h2>குருபகவானுக்கு திருமஞ்சனம்</h2><p>பவுர்ணமி. ஆவணி அவிட்டம். யஜீர் உபாகர்மா ஸ்ரீ நடராஜர் அபிஷேகம். மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் தீர்த்தவாரி விருஷபாரூட தரிசனம், திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை, மைசூர் மண்டபம் எழுந்தருளல், சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். </p> <p>திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவா மிக்கு அபிஷேகம். குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமான் அபிஷேகம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமருக்குத் திருமஞ்சனம், ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஸ்ரீ உடையவர் கூட புறப்பாடு. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - ஜெயம்</p><p>ரிஷபம் - பணிவு</p><p>மிதுனம் - பண்பு</p><p>கடகம் - சுகம்</p><p>சிம்மம் - சுபம்</p><p>கன்னி - உயர்வு</p> <p>துலாம் - அமைதி</p><p>விருச்சிகம் - புகழ்</p><p>தனுசு - ஆதரவு</p><p>மகரம் - பெருமை</p><p>கும்பம் - பயணம்</p><p>மீனம் - போட்டி</p> ]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 27.8.2026 - இந்த ராசிக்காரர்களின் கவலைகள் அகலும் நாள் </title><link>https://www.maalaimalar.com/Today-Transit/today-rasi-palan-todays-rasi-palan-2782026-a-day-to-get-rid-of-worries-for-these-rasi-people</link><comments>https://www.maalaimalar.com/Today-Transit/today-rasi-palan-todays-rasi-palan-2782026-a-day-to-get-rid-of-worries-for-these-rasi-people#comments</comments><guid isPermaLink="false">1a1137ed-036f-4137-904d-ce997e6ae6e5</guid><pubDate>Thu, 27 Aug 2026 01:13:14 +0000</pubDate><atom:updated>2026-08-27T01:13:14.521Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-04-06/tfs7454t/astrology.jpg.jpeg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Today Rasi palan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-04-06/tfs7454t/astrology.jpg.jpeg?w=280" width="280"></media:thumbnail><category>இன்றைய ராசி பலன்கள்</category><category>ஆன்மிகம் (devotional)</category><category>ராசிபலன்(Rasipalan)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>நினைத்தது நிறைவேறும் நாள். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். திருமணப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.</p><h2>ரிஷபம்</h2><p>கவலைகள் அகலும் நாள். காசு பணப்புழக்கம் அதிகரிக்கும். புத்திசாலித் தனமான செயல்பாடுகளால் புகழ் கூடும். உத்தியோக முயற்சி பலன்தரும்.</p><h2>மிதுனம்</h2><p>வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். சிரித்துப் பேசும் நண்பர்களால் சில சிக்கல்கள் ஏற்படலாம். மறதியால் சில பணிகளைச் செய்யாமல் விட்டுவிடுவீர்கள்.</p><h2>கடகம்</h2><p>மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். விரயங்கள் கூடும். வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. வழிபாடுகளில் நம்பிக்கை அதிகரிக்கும்.</p> <h2>சிம்மம்</h2><p>தடைகள் அகலும் நாள். தொழில் வளர்ச்சி உண்டு. அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும்.</p><h2>கன்னி</h2><p>மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெற்று மகிழ்ச்சி காணும் நாள். குடும்பத்திலுள்ள கருத்துவேறுபாடுகள் அகலும். இடம் வாங்கும் முயற்சி வெற்றி தரும்.</p><h2>துலாம்</h2><p>நினைத்தது நிறைவேறும் நாள். நீண்ட தூரத்திற்கு இடமாற்றம் வரலாம். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகை கள் கிடைக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.</p> <h2>விருச்சிகம்</h2><p>வெற்றிச் செய்திகள் வீடு தேடி வரும் நாள். பயணங்களால் பலன் உண்டு. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புக் கிட்டும்.</p><h2>தனுசு</h2><p>யோகமான நாள். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும். தொழிலில் புதிய பங்குதாரர்களைச் சேர்க்கும் எண்ணம் உருவாகும்.</p> <h2>மகரம்</h2><p>கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும் நாள். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்ப்பர். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்கள் விரிவடையும்.</p><h2>கும்பம்</h2><p>பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். அலைபேசி வழியில் அனுகூலச் செய்தி உண்டு. உத்தியோக பிரச்சினை நீடிக்கும்.</p><h2>மீனம்</h2><p>நம்பிக்கைகள் நடைபெறும் நாள். அக்கம் பக்கத்து வீட்டாரின் ஆதரவு கிடைக்கும். தொழில் ரீதியாக புதிய திட்டமொன்றைத் தீட்டுவீர்கள்.</p>]]></content:encoded></item><item><title>2 பில்லியன் டாலர் செலவில் அணுசக்தி நுண் உலைகள் - அமெரிக்க ராணுவம் அதிரடி திட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/world/us-army-to-spend-usd-2b-to-build-nuclear-microreactors</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-army-to-spend-usd-2b-to-build-nuclear-microreactors#comments</comments><guid isPermaLink="false">c67b4bad-4715-4b2c-b881-4298a1ef0bbb</guid><pubDate>Thu, 27 Aug 2026 00:35:10 +0000</pubDate><atom:updated>2026-08-27T00:35:10.803Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ராணுவம்,அமெரிக்கா,அணுசக்தி,US army,nuclear microreactor</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/sa32ec8s/micro-reactor.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ micro reactor]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/sa32ec8s/micro-reactor.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வணிக ரீதியான மின்சார கட்டமைப்பை சாராத, நம்பகமான ஆற்றல் மூலமாக நியூயார்க் முதல் டெக்சாஸ் வரையிலான ஐந்து ராணுவ தளங்களில் அணுசக்தி நுண்-உலைகளை  (microreactors) சேர்க்க திட்டமிட்டுள்ளதாக <a href="https://www.maalaimalar.com/news/world">அமெரிக்க</a> ராணுவம் அறிவித்தது.</p><p>டேட்டா சென்டர்களின் அதீத மின்சார தேவையை பூர்த்தி செய்ய பெரிய அணு உலைகளுக்கு பல பில்லியன் டாலர் கடன்களை வழங்குதல் மற்றும் ராணுவம் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கான மேம்பட்ட உலை வடிவமைப்புகள் மற்றும் திட்டங்களை ஊக்குவிப்பதற்கான முன்னோடி திட்டம் என, அடுத்த தலைமுறை <a href="https://www.maalaimalar.com/topic/nuclear">அணுசக்தி</a> தொழில்நுட்பத்தை உருவாக்க டிரம்ப் நிர்வாகம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வரும் வேளையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><h2>2.2 பில்லியன் டாலர் ஒப்பந்தம்:</h2><p>தற்போது அமெரிக்காவில் வணிக ரீதியான மின்சார கட்டமைப்பிற்கு எந்தவொரு அணுசக்தி நுண்-உலையும் மின்சாரத்தை வழங்குவதில்லை. ராணுவத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து நிறுவனங்கள், செயல்திறன் சார்ந்த குறிப்பிட்ட மைல்கற்களை எட்டினால், இந்த நுண்-உலைகளை சொந்தமாக வைத்துக்கொள்ளவும், கட்டவும் மற்றும் இயக்கவும் ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 2.2 பில்லியன் டாலர் வரையிலான ஒப்பந்தங்களை பெறும். 20-க்கும் மேற்பட்ட அணுசக்தி நுண்-உலைகள் கட்டப்பட்டு இயக்கப்படும் என்று ராணுவம் எதிர்பார்க்கிறது.</p><p>மின்சார கட்டமைப்பு செயலிழக்கும் பட்சத்தில், ராணுவ தளங்களில் உள்ள முக்கியமான உள்கட்டமைப்புகளுக்கு நுண்-உலைகள் உறுதியான மின்சார ஆதாரத்தை வழங்குகின்றன என்று ராணுவம் மற்றும் தொழில் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த உலைகள் எரிபொருள் நிரப்பப்படாமலேயே பல ஆண்டுகள் இயங்கக்கூடியவை.</p><h2>ஜானஸ் திட்டத்தின் பகுதி:</h2><p>பாதுகாப்பான மற்றும் நம்பகமான அடிப்படை மின்சாரத்தை நேரடியாக தங்கள் தளங்களுக்கு வழங்கும் ராணுவத்தின் திறனை இந்த ஒப்பந்தங்கள் துரிதப்படுத்தும் என்று ராணுவ செயலாளர் டான் டிரிஸ்கோல் கூறினார். </p><p>"பாதுகாப்பற்றதாக அமையக்கூடிய வெளிப்புற மின்சாரக் கட்டமைப்புகளைச் சாராமல், உலகளவில் ராணுவச் செயல்பாடுகளை மேற்கொள்ளத் தேவையான ஆற்றல் உறுதித்தன்மையை நாங்கள் உருவாக்குகிறோம்," என்று அவர் கூறினார்.</p><p>அடுத்த தலைமுறை அணுசக்தியை வழங்குவதற்காக கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட ராணுவத்தின் "ஜானஸ் திட்டத்தின்" ஒரு பகுதியாக இந்த நிதியுதவி திட்டங்கள் அமைந்துள்ளன. மேம்பட்ட உலை வடிவமைப்புகள் வெறும் பரிசோதனைகள் மற்றும் முன்மாதிரிகளை தாண்டி, பல ஆண்டுகளுக்கு மின்சாரத்தை வழங்கும் நிலையை அடைய அணுசக்தி மேம்பாட்டை முன்னெடுத்து செல்ல அதிகாரிகள் நம்புகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>டி.என்.பி.எல்.: 2-வது தகுதி சுற்றில் வெற்றி- இறுதிப் போட்டிக்கு முன்னேறியது கோவை கிங்ஸ்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-kovai-kings-beat-trichy-grand-cholas-enter-finals</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-kovai-kings-beat-trichy-grand-cholas-enter-finals#comments</comments><guid isPermaLink="false">71fa203c-372b-4ee4-b0c7-4dd004d9ccb6</guid><pubDate>Wed, 26 Aug 2026 23:39:40 +0000</pubDate><atom:updated>2026-08-26T23:39:40.207Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tnpl,Trichy Grand Cholas,திருச்சி கிராண்ட் சோழாஸ்,கோவை கிங்ஸ்,டி.என்.பி.எல்.,kovai Kings</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/qqdljks7/Kovai-Kings-Win.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kovai Kings Win]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/qqdljks7/Kovai-Kings-Win.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/tnpl">டி.என்.பி.எல்.</a> 2026 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் கோவை கிங்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.</p><p>8 அணிகள் பங்கேற்ற 10-வது டி.என்.பி.எல். <a href="https://www.maalaimalar.com/sports/cricket">கிரிக்கெட்</a> தொடர் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல்கட்ட போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்றன. இதனை தொடர்ந்து தொடரின் தற்போதைய இறுதிக்கட்ட போட்டிகள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.</p><h2>2-ஆவது தகுதி சுற்றுப் போட்டி:</h2><p>சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடந்த இரண்டாவது தகுதி சுற்றுப் போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.</p><p>முதலில் பேட்டிங் ஆடிய கோவை கிங்ஸ் அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. அந்த அணியின் துவக்க வீரர்களான ராதாகிருஷ்ணன் மற்றும் சுரேஷ் லோகேஷ்வர் சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் ஈடுட்டனர். ராதாகிருஷ்ணன் 34 பந்துகளில் 48 ரன்கள் (5 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) எடுத்தார். சுரேஷ் தன் பங்கிற்கு 44 பந்துகளில் 66 ரன்கள் (8 பவுண்டரிகள், 1 சிக்சர்) விளாசினார்.</p><p>இதைத் தொடர்ந்து களமிறங்கிய பாலசுப்ரமணியம் சச்சின் மற்றும் ஆன்ட்ரே சித்தார்த் தலா 12 ரன்களை எடுத்தனற். பின்னர் களணிறங்கிய கேப்டன் ஷாருக் கான் 18 பந்துகளில் 34 ரன்கள் (3 பவுண்டரிகள், 2 சிக்சர்க்ள்) விளாசினார். </p><p>இதனால் கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்களை குவித்தது. திருச்சி சார்பில் ராஜ்குமார் 3 விக்கெட்டுகளையும், அதிசயராஜ் டேவிட்சன் மற்றும் ஈஸ்வரன் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.</p><h2>திருச்சி கிராண்ட் சோழாஸ் சொதப்பல்:</h2><p>சற்றே கடின இலக்கை துரத்திய திருச்சி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரரான ராஜ்குமார் ரன் ஏதும் எடுக்காமல் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். </p><p>இவரைத் தொடர்ந்து வந்த ஷியாம் சுந்தர் மற்றும் ஜெகன்நாதன் கௌஷிக் என இருவரும் டக் அவுட் ஆகி வெளியேறினர். இதனால் ஆரம்பத்திலேயே திருச்சி அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.</p><p>ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த போதிலும், இன்னிங்ஸ் தொடக்கத்தில் களமிறங்கிய கேப்டன் சுரேஷ் குமார் ரன் குவிப்பில் கவனம் செலுத்தினார். இவர் 27 பந்துகளில் 48 ரன்கள் (9 பவுண்டரிகள்) எடுத்து அவுட் ஆனார். </p><p>பின்னர் களமிறங்கிய சஞ்சய் யாதவ் 1 ரன்னுக்கும், இவரைத் தொடர்ந்து ஆடிய ஜாஃபர் ஜமால் டக் அவுட் ஆகியும் வெளியேறினர். பிறகு வந்த ராஜ்குமார் 7 ரன்கள், அந்தோனி தாஸ் 6 ரன்கள், செல்வ குமரன் 11 ரன்களும், அதிசயராஜ் டேவிட்சன் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆகினர்.</p><h2>இறுதிப் போட்டியில் கோவை கிங்ஸ்:</h2><p>இதனால் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 15.4 ஓவர்களில் வெறும் 99 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கோவை கிங்ஸ் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய மணிமாறன் சித்தார்த் 4 விக்கெட்டுகளையும், தீபன் லிங்கேஷ் 3 விக்கெட்டுகளையும், திவாகர் 2 விக்கெட்டுகளையும், ஆம்ப்ரிஷ் 1 விக்கெட் கைப்பற்றினர்.</p><p>இதனால், கோவை கிங்ஸ் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் கோவை கிங்ஸ் அணி 2026 டி.என்.பி.எல். தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நாளை (ஆகஸ்ட் 28) நடைபெறும் இறுதிப் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி நாளை இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>நேபாள வெள்ளம்: தமிழக சுற்றுலா பயணிகள் 37 பேர் மாயம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nepal-floods-37-tourists-from-tamil-nadu-77-isha-foundation-members-missing</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nepal-floods-37-tourists-from-tamil-nadu-77-isha-foundation-members-missing#comments</comments><guid isPermaLink="false">77036035-cb9f-4d0d-b2e5-0028664df363</guid><pubDate>Wed, 26 Aug 2026 21:11:22 +0000</pubDate><atom:updated>2026-08-26T21:11:22.597Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,Tourists,சுற்றுலா பயணிகள்,Nepal Floods,தமிழ்நாடு,நேபாள வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/qoh9yg0c/Nepal-flash-floods.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nepal flash floods]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/qoh9yg0c/Nepal-flash-floods.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாளத்தின் மத்திய மாவட்டங்களில் ஏற்பட்ட திடீர் <a href="https://www.maalaimalar.com/topic/nepal-floods">வெள்ளப்பெருக்கு</a> பெரும் சேதத்தை ஏற்படுத்தி, பாதிக்கப்பட்ட பகுதிகளை துண்டித்துள்ள நிலையில், மானசரோவர் யாத்திரை சென்ற பல யாத்ரீகர்கள் உட்பட 130-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் காணாமல் போயுள்ளனர்; மேலும் பலர் அங்கு சிக்கித் தவிக்கின்றனர் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu">தமிழ்நாடு</a>, கேரளா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்கள், பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் உதவ உதவி எண்களை (helplines) அறிவித்துள்ளன.</p><h2>37 தமிழர்கள் நிலை கேள்விக்குறி:</h2><p>பாதிக்கப்பட்ட இந்தியர்களில் குறைந்தது 59 பேர் கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்றவர்கள் என்று 'சம்ராட் டூர்ஸ் அண்ட் டிராவல்' நிறுவனம் தெரிவித்துள்ளது. நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தால் தகவல் தொடர்பு வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட இந்தியர்கள் குறித்த கூடுதல் விவரங்கள் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை.</p><p>தமிழ்நாட்டில் இருந்து சென்ற 57 சுற்றுலா பயணிகளில் 37 பேரின் நிலை குறித்த தகவல் இன்னும் தெரியவரவில்லை என்றும், 20 பேர் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>இந்த சுற்றுலாப் பயணிகள் இமயமலையில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்று கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>கோயம்புத்தூரை சேர்ந்த இலாப நோக்கற்ற அமைப்பான ஈஷா அறக்கட்டளை, குடியேற்ற மையத்தில் இருந்த தங்கள் அமைப்பை சேர்ந்த 77 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ளது.</p><h2>495 பேர் பாதுகாப்பாக திரும்பினர்:</h2><p>"குடியேற்ற அலுவலகத்தில் இருந்தவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை," என்று அதன் நிறுவனர் சத்குரு கூறினார்; அதேவேளையில் 495 பேர் பாதுகாப்பாக திரும்பிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். அந்த குறிப்பிட்ட குடியேற்ற மையத்தின் ஊழியர்கள் அனைவருடனும் தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளதாக நேபாள அரசு பின்னர் தெரிவித்தது.</p><p>இதேபோல் உத்தர பிரதேசத்தை சேர்ந்த பலரும் அண்டை நாடான நேபாளத்தில் சிக்கியிருப்பதாகக் கருதப்படுகிறது. சாலை வழியாக தனது சகாக்களுடன் நேபாளம் சென்றிருந்த விவசாய தலைவர் ராகேஷ் திகாயத், பொக்ஹாராவில் சிக்கிக்கொண்டார்.</p><p>"தற்போதைய சூழல் காரணமாக, சாலை வழியாகப் பயணம் செய்வது சாத்தியமில்லை என்பதால், எங்கள் வாகனங்களை அங்கேயே விட்டுவிட்டு, நாளை விமானம் மூலம் காத்மாண்டு சென்று, அங்கிருந்து தில்லிக்கு விமானத்தில் திரும்புவோம்," என்று பாரதிய கிசான் யூனியன் தலைவர் ஒரு காணொளி செய்தியில் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>அரசன் படப்பிடிப்பு தளத்தில் அனிருத், சிம்பு - வைரலாகும் புகைப்படம்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/anirudh-met-silambarasan-tr-at-arasan-shooting-spot</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/anirudh-met-silambarasan-tr-at-arasan-shooting-spot#comments</comments><guid isPermaLink="false">d56dba40-8b73-440d-a51b-bf4f9d5c2fae</guid><pubDate>Wed, 26 Aug 2026 20:23:01 +0000</pubDate><atom:updated>2026-08-26T20:23:01.285Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அனிருத்,Anirudh,Arasan,அரசன்,silambarasan,சிலம்பரசன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/umyh2d9c/Arasan-Movie-Team.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Arasan Movie Team]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/umyh2d9c/Arasan-Movie-Team.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/silambarasan">சிலம்பரசன்</a> நடிப்பில், இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு கூட்டணியில் உருவாகி வரும் <a href="https://www.maalaimalar.com/cinema">திரைப்படம்</a> ‘அரசன்.’ இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.</p><p>தற்போது சென்னை தரமணியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள அரங்கில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், எவ்வித தொய்வும் இல்லாமல் திட்டமிட்டபடி படப்பிடிப்பு வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.</p><h2>படப்பிடிப்பு தளத்தில் அனிருத்:</h2><p>இந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் சிலம்பரசன் டி.ஆர்., இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகிய மூவரும் சந்தித்து, படத்தின் பணிகள் குறித்து கலந்துரையாடினர். ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் இந்த மூவரின் கூட்டணி, ‘அரசன்’ படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.</p><p>‘வடசென்னை’ யுனிவர்ஸுடன் தொடர்புடைய கதைக்களத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ படத்தில், சிலம்பரசன் டி.ஆர். உடன் ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.</p><h2>அடுத்தடுத்த அப்டேட்கள்:</h2><p>சிலம்பரசன் டி.ஆர். – வெற்றிமாறன் – அனிருத் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த கூட்டணி இணைந்திருப்பதே ஒரு மிகப்பெரிய ட்ரீட்டாக அமைந்துள்ள நிலையில், ‘அரசன்’ படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>படப்பிடிப்பு எந்தவித இடையூறும் இன்றி தொடர்ந்து வேகமாக நடைபெற்று வருவதால், ‘அரசன்’ மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>வெள்ள பாதிப்பைத் தொடர்ந்து நேபாளத்தில் நிலநடுக்கம் - ரிக்டரில் 5.2 ஆக பதிவு</title><link>https://www.maalaimalar.com/news/world/52-magnitude-earthquake-hits-nepal-hours-after-tremor-triggered-deadly-floods</link><comments>https://www.maalaimalar.com/news/world/52-magnitude-earthquake-hits-nepal-hours-after-tremor-triggered-deadly-floods#comments</comments><guid isPermaLink="false">50261cce-243b-46ff-9c6d-05571e556a62</guid><pubDate>Wed, 26 Aug 2026 19:29:23 +0000</pubDate><atom:updated>2026-08-26T19:29:23.640Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாளம்,nepal,Earthquake,Nepal Floods,நிலநடுக்கம்,நேபாள வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/ld4a4kuw/Nepal-Floods.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nepal Floods]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/ld4a4kuw/Nepal-Floods.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>150-க்கும் மேற்பட்டோரின் உயிரை பறித்த திடீர் <a href="https://www.maalaimalar.com/topic/nepal-floods">வெள்ளப் பெருக்குக்கு</a> மத்தியில், குறைந்த தீவிரத்தன்மை கொண்ட நில அதிர்வு ஒன்று பேரழிவை தூண்டியதாக கூறப்பட்ட சில மணிநேரங்களுக்கு பிறகு, நேபாளத்தின் ரசுவா பகுதியில் 5.2 ரிக்டர் அளவிலான <a href="https://www.maalaimalar.com/topic/earthquake">நிலநடுக்கம்</a> ஏற்பட்டது.</p><p>முதற்கட்ட அறிக்கைகளின்படி, 5.2 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி, நிலச்சரிவுகள் அதிகம் ஏற்படும் பகுதியான கோடாரிக்கு வடமேற்கே சுமார் 55 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்தது. நிலநடுக்கத்தின் ஆழம் மற்றும் அதனால் ஏற்பட்ட சேதத்தின் அளவு குறித்த விவரங்கள் உடனடியாகக் கிடைக்கவில்லை.</p><h2>பதற்றம் அதிகரிப்பு:</h2><p>ரசுவாவில் வெள்ளப்பெருக்கை தொடர்ந்து நிவாரண மற்றும் மீட்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சமீபத்திய நிலநடுக்கம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களிடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது.</p><p>நேபாள-திபெத் எல்லை பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் குறைந்தது 157 பேர் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கணக்கானோர் காணாமல் போனதாகவும் இரவு 11:55 மணி நிலவரப்படி தகவல்கள் தெரிவிக்கின்றன. காணாமல் போனவர்களில் கைலாஷ் மானசரோவருக்கு சென்ற குறைந்தது 133 இந்திய யாத்ரீகர்களும் அடங்குவர்.</p><h2>அதிகரிக்கும் உயிரிழப்புகள்:</h2><p>நேபாள காவல்துறை 157 உடல்களை மீட்டுள்ளதுடன், வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் இருந்து குடும்பங்களை வெளியேற்றும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பேரிடர் ஏற்பட்ட பல மணி நேரங்களுக்குப் பிறகும், குறைந்தது 403 சுற்றுலாப் பயணிகள், அவர்களில் 341 பேர் வெளிநாட்டினர், காணாமல் போனதாக சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>காணாமல் போன வெளிநாட்டினரில் 142 இந்தியர்களும், ஆஸ்திரேலியா, பிரிட்டன், மலேசியா, நெதர்லாந்து, போர்ச்சுகல், தென்னாப்பிரிக்கா, தென் கொரியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்களும் அடங்குவர் என்று சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது.</p><h2>மீட்பு பணிகள் தீவிரம்:</h2><p>சேற்றுக்குழியில் புதைந்துள்ள உயிர் பிழைத்தவர்களையும் சடலங்களையும் கண்டறிய நேபாள மீட்புக் குழுவினர் காலக்கெடுவுக்குள் செயல்பட்டு வரும் நிலையில், நிவாரணப் பணிகளுக்கு அரசின் அனைத்து வளங்களையும் வழங்குவதாக பிரதமர் பலேந்திர ஷா உறுதியளித்துள்ளார்.</p><p>உள்ளூர் நேரப்படி காலை 9 மணியளவில், திபெத் பக்கத்திலிருந்து கடந்து வந்த போதே கோஷி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திபெத்தை ஒட்டியுள்ள ரசுவா, தாடிங் மற்றும் நுவாகோட் ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டதில் அடங்கும்.</p>]]></content:encoded></item><item><title>வெள்ள பாதிப்பு: பிரதமர் மோடியின் ஆதரவு மற்றும் உதவிக்கு நன்றி தெரிவித்த நேபாள பிரதமர்</title><link>https://www.maalaimalar.com/news/world/nepal-pm-shah-thanks-modi-for-solidarity-assistance-offer-amid-floods</link><comments>https://www.maalaimalar.com/news/world/nepal-pm-shah-thanks-modi-for-solidarity-assistance-offer-amid-floods#comments</comments><guid isPermaLink="false">6c86db8c-7e2b-40c2-850b-6a75f3e161d0</guid><pubDate>Wed, 26 Aug 2026 18:48:32 +0000</pubDate><atom:updated>2026-08-26T18:48:32.500Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>pm modi,Nepal Floods,பிரதமர் மோடி,Balen Shah,பாலன் ஷா,நேபாள வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/s5vpzegd/PM-Modi-and-Balen-Shah.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi and Balen Shah]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/s5vpzegd/PM-Modi-and-Balen-Shah.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக சாத்தியமான அனைத்து மனிதாபிமான உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்ததற்கும், ஆதரவு மற்றும் ஆறுதல் தெரிவித்ததற்கும் இந்திய பிரதமர் <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">நரேந்திர மோடிக்கு</a> நேபாள பிரதமர் பாலன் ஷா நன்றி தெரிவித்தார்.</p><p>திபெத்தில் உருவான கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கு நேபாளத்தின் மத்திய பகுதிகளை தாக்கியதில் சுமார் 100 பேர் உயிரிழந்தனர்; 133 இந்தியர்கள் உட்பட 750-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். </p><p>இந்த <a href="https://www.maalaimalar.com/topic/nepal-floods">வெள்ளம்</a> பல நகரங்கள் மற்றும் கிராமங்களை சேதப்படுத்தியதுடன், முக்கியமான பாலங்களை அடித்து சென்றது மற்றும் ஒரு டஜன் நீர்மின் திட்டங்களையும் முடக்கியது. </p><h2>பிரதமர் மோடிக்கு நன்றி:</h2><p>மோடியின் அன்பான தொலைபேசி அழைப்பு மற்றும் ஆழ்ந்த இரங்கலுக்கு நன்றி தெரிவித்த ஷா, சமூக ஊடக பதிவு ஒன்றில், "இந்த கடினமான நேரத்தில் நேபாளத்திற்கு நீங்கள் தெரிவித்த ஆதரவு வார்த்தைகளையும், தாராளமான உதவிக்கான முன்மொழிவையும் நாங்கள் பெரிதும் மதிக்கிறோம்," என்று கூறினார்.</p><p>"இந்த ஆதரவு மனப்பான்மையானது நமது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவின் வெளிப்பாடாகும், இதனை நாங்கள் மிகவும் உயர்வாக கருதுகிறோம்," என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><h2>பிரதமரின் எக்ஸ் பதிவு:</h2><p>முன்னதாக, சமூக ஊடக பதிவு ஒன்றில், தான் ஷாவிடம் பேசியதாகவும், நேபாளத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து தனது இரங்கலை தெரிவித்ததாகவும் மோடி கூறியிருந்தார்.</p><p>மேலும், நேபாளத்திற்கு "சாத்தியமான அனைத்து மனிதாபிமான உதவிகளையும்" வழங்க இந்தியா தயாராக இருப்பதாகவும், மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் இந்திய குழுக்கள் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.</p><h2>அமித் ஷா ஆலோசனை:</h2><p>நேபாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கினால் இரு மாநிலங்களின் கீழ்மட்ட பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்புள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் மாநில முதலமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.</p><p>நேபாளம்-சீனா எல்லைக்கு அருகில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் பனிப்பாறை ஏரி உடைப்பு வெள்ளம் காரணமாக, இந்திய எல்லையில் இருந்து சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நேபாளத்தின் ஃபுர்கே கோலா பகுதியில் திரிசூலி ஆற்றில் நீர்மட்டம் திடீரென உயர்ந்ததாக தகவல் கிடைத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நேபாள வெள்ளம்: உ.பி., பீகார் முதலமைச்சர்களுடன் அமித் ஷா தீவிர ஆலோசனை</title><link>https://www.maalaimalar.com/news/national/nepal-floods-amit-shah-speaks-to-cms-of-up-bihar</link><comments>https://www.maalaimalar.com/news/national/nepal-floods-amit-shah-speaks-to-cms-of-up-bihar#comments</comments><guid isPermaLink="false">23866234-3a8f-4860-8e84-d206265be935</guid><pubDate>Wed, 26 Aug 2026 18:01:16 +0000</pubDate><atom:updated>2026-08-26T18:01:16.423Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாளம்,பீகார்,Bihar,UP,Amit Shah,அமித் ஷா,Nepal Floods</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/vcptjbvl/Nepal-mud-debris-and-Amit-Shah.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nepal mud debris and Amit Shah]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/vcptjbvl/Nepal-mud-debris-and-Amit-Shah.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கினால் இரு மாநிலங்களின் கீழ்மட்ட பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்புள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/amit-shah">அமித் ஷா</a> உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் மாநில முதலமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national">மத்திய அரசு</a> நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது. </p><p>மத்திய நீர் ஆணையத்தின் (CWC) அறிவுறுத்தலின்படி, நேபாளம்-சீனா எல்லைக்கு அருகில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் பனிப்பாறை ஏரி உடைப்பு வெள்ளம் காரணமாக, இந்திய எல்லையில் இருந்து சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நேபாளத்தின் ஃபுர்கே கோலா பகுதியில் திரிசூலி ஆற்றில் நீர்மட்டம் திடீரென உயர்ந்ததாக தகவல் கிடைத்துள்ளது.</p><h2>பதற்றமான சூழல் ஏற்படவில்லை:</h2><p>நேபாள பகுதியில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைந்து வருவதாகவும், நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது. பதற்றமான சூழல் எதுவும் ஏற்படவில்லை என்று அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>"வெள்ளத்தின் தாக்கம் இந்தியாவில் உள்ள கண்டக் ஆற்றின் கீழ்மட்டப் பகுதிகளுக்குப் பரவக்கூடும்" என்று அது கூறியது.</p><p>உத்தர பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய இரு மாநிலங்களும் விழிப்புடன் இருக்குமாறும், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அது தெரிவித்தது. ஏற்படக்கூடிய வெள்ள சூழலை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><h2>முன்னேற்பாடுகள் தீவிரம்:</h2><p>"இந்தியா-நேபாள எல்லைக்கு அருகில் வசிக்கும் உள்ளூர் இந்திய சமூகத்தினரை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுதல் மற்றும் பிற உதவிகளை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளை பீகார் மற்றும் உத்தர பிரதேச மாநில அரசுகள் மேற்கொண்டுள்ளன" என்று அமைச்சகம் கூறியது.</p><p>இந்த பேரிடரில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த அமித் ஷா, இக்கட்டான சூழலில் இந்திய அரசு நேபாளத்துடன் துணை நிற்கும் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.</p><p>"நேபாளத்தில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மிகுந்த மனவேதனையை அளிக்கின்றன" என்று அவர் கூறினார்.</p><p>"நேபாளத்தில் ஏற்பட்டுள்ள இந்தப் பேரிடர் குறித்து பீகார் மற்றும் உத்தரப் பிரதேச மாநில முதல்வர்களுடன் நான் பேசினேன். இதன் தாக்கம் உணரப்படக்கூடிய எல்லைப் பகுதிகளில் உள்ளூர் நிர்வாகம் மற்றும் மீட்புக் குழுக்களுடன் இணைந்து NDRF-ம் தீவிர விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பேரிடர் காலங்களில் நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து நிற்க வேண்டும் - நேபாள பிரதமர் பாலன் ஷா</title><link>https://www.maalaimalar.com/news/world/nepal-pm-balen-shahs-appeal-after-deadly-flash-floods</link><comments>https://www.maalaimalar.com/news/world/nepal-pm-balen-shahs-appeal-after-deadly-flash-floods#comments</comments><guid isPermaLink="false">fc6238ad-c9d2-4f76-9817-525e9c0c54b0</guid><pubDate>Wed, 26 Aug 2026 17:22:37 +0000</pubDate><atom:updated>2026-08-26T17:22:37.732Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>nepal,வெள்ளம்,Balen Shah,Flash Floods,பாலன் ஷா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/vor1psqv/Balen-Shah.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Balen Shah]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/vor1psqv/Balen-Shah.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாளத்தை பேரழிவுகரமான திடீர் வெள்ளம் தாக்கியதை அடுத்து, <a href="https://www.maalaimalar.com/news/world">பிரதமர்</a> பலேந்திர ஷா ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்துள்ளார். </p><p>ரசுவா மாவட்டத்தில் உள்ள கிராமங்களை சூறையாடிய வெள்ளத்தில் குறைந்தது 98 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போதே கோஷி ஆற்றங்கரை பகுதிகளிலும் சேதம் ஏற்பட்டுள்ளது.</p><p>இன்று மாலை சமூக வலைதளத்தில் பதிவிட்ட பாலன் ஷா, "மக்கள் பொறுமையை கடைப்பிடித்து ஒன்றுபட்டு நிற்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.</p><h2>பிரதமரின் அறிக்கை:</h2><p>"தயவுசெய்து பொறுமையாக இருங்கள். உங்களின் மீட்பு, சிகிச்சை, உணவு மற்றும் தங்குமிடத்திற்கான முழு பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது. இதுபோன்ற பேரிடர் காலங்களில் நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து நிற்க வேண்டும்,” என்று அவர் அறிக்கையில் தெரிவித்தார்.</p><p>மீட்பு பணிகளுக்காக நேபாள அரசு தன்னிடம் உள்ள அனைத்து வளங்களையும் திரட்டியுள்ளது என்று அவரது பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.</p><p>நிவாரண பணிகளைத் தீவிரப்படுத்துவதற்காக, தேசிய பேரிடர் அபாய குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம், தேசிய மன்றம் மற்றும் அமைச்சரவை ஆகியவை அவசரகால கூட்டங்களை நடத்தின என்று அவர் மேலும் கூறினார்.</p><h2>மீட்பு பணிகள் தீவிரம்:</h2><p>இன்று காலை நேபாளத்தில் போட் கோஷி ஆற்றிலிருந்து எழுந்த தரைமட்ட அலைகளால் பாலங்களும் வீடுகளும் அடித்து செல்லப்பட்ட காட்சிகள், ஒரு பேரழிவை தவிர வேறொன்றையும் சித்தரிக்கவில்லை.</p><p>பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களைத் தேடி மீட்பதற்காக நேபாள இராணுவம், ஆயுதக் காவல் படை மற்றும் நேபாள பாதுகாப்புப் படை குழுக்கள் உடனடியாக களமிறக்கப்பட்டதாக ஷா கூறினார். </p><p>ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி நேபாள இராணுவம் 250-க்கும் மேற்பட்ட பொதுமக்களை மீட்டதாகவும், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக காத்மாண்டுவுக்குக் கொண்டுவரப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>95 பேர் உயிரிழப்பு: வேகமாக உருகிவரும் இமயமலை...  பேரிடருக்கு எளிதாக வழிவகுத்த நிலநடுக்கம்? - நேபாளில் வெள்ளப்பெருக்குக்கு காரணம் என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/world/95-dead-rapidly-melting-himalayas-did-an-earthquake-pave-the-way-for-disaster-what-caused-the-floods-in-nepal</link><comments>https://www.maalaimalar.com/news/world/95-dead-rapidly-melting-himalayas-did-an-earthquake-pave-the-way-for-disaster-what-caused-the-floods-in-nepal#comments</comments><guid isPermaLink="false">da0bbb48-58df-4d59-a212-01a71d50d441</guid><pubDate>Wed, 26 Aug 2026 16:27:54 +0000</pubDate><atom:updated>2026-08-26T16:27:54.334Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாளம்,nepal,floods,வெள்ளப்பெருக்கு,Himalayas,nepal flood,இமயமலை,நேபாள் வெள்ளப்பெருக்கு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/5ogzsdc1/New-Project-2026-08-26T211045.088.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கி 95 பேர் உயிரிழப்பு -  வேகமாக உருகிவரும் இமயமலை பனிப்பாறைகளே பேரிடருக்கு முக்கிய காரணம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/5ogzsdc1/New-Project-2026-08-26T211045.088.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திபெத்தை ஒட்டிய நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில், போதே கோஷி ஆற்றில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95ஆக உயர்ந்துள்ளது. </p><p>வெள்ளத்தால் வீடுகள், சாலைகள், கட்டிடங்கள்,  தொலைத்தொடர்பு வலையமைப்புகள் உள்ளிட்ட பிற முக்கிய உள்கட்டமைப்புகள் கடும் சேதமடைந்துள்ளன. 95 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில் காணாமல் போன சுமார் 400 பேரை தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக, நேபாள ராணுவம் மற்றும் தனியார் நிறுவனங்களால் இயக்கப்படும் 30-க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.</p><p>மீட்பு பணிகளில் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டாலும் தொலைத்தொடர்பு வலையமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என நேபாள் வெளியுறவு அமைச்சர் ஷிஷிர் கானல் தெரிவித்துள்ளார்.</p><p>நேபாள சுற்றுலா வாரியத் தகவலின் படி,  291 வெளிநாட்டினர் மற்றும் 93 நேபாள நாட்டினர் உட்பட 384 பயணிகள் காணாமல் போயுள்ளனர். இதில் 105 இந்தியர்கள் அடங்குவர். 57 தமிழர்கள் அடங்குவர். தமிழர்களில் 20 பேர் பாதுகாப்பாக இருப்பதாகவும், 37 பேரை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. </p><p>பெய்ஜிங்கில் உள்ள தூதரகம், கேரள அரசு, தமிழ்நாடு அரசு, நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் என அனைத்து அரசுகளும் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்த வலியுறுத்தியுள்ளன, மேலும் உதவி எண்களை அறிவித்துள்ளன. </p><h2>மீட்புப் பொருட்களை அனுப்பும் இந்தியா</h2><p>நேபாளத்தின் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவிடும் வகையில் போர்வைகள், மருந்துகள் என 10 டன் அத்தியாவசியப் பொருட்களை நேபாளத்திற்கு அனுப்புகிறது இந்தியா. நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் சி-130 ரக விமானம் இன்று இரவு ஹிண்டன் விமானப்படைத் தளத்திலிருந்து புறப்படவுள்ளது.</p><p>அதேவேளையில், கூடுதல் நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் சி-17 ரக விமானம் நாளை காலை நேபாளத்திற்குப் புறப்படும் என தெரிவிக்கப்படுகிறது. </p><h2>திடீர் வெள்ளப்பெருக்குக்கு காரணம் என்ன?</h2><p>நேபாளின் தலைநகரான காத்மாண்டுவில் இருந்து 100 கிலோ மீட்டருக்கு வடக்கே, திபெத்தின் எல்லை அருகே இன்று அதிகாலை 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பனிப்பாறைகள் விழுந்து இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. </p><p>நிலநடுக்கத்தால் நேபாளப் பகுதியில் உள்ள பனியாற்றிலிருந்து பனிப்பாறை சரிந்துள்ளது. இந்த பனிப்பாறைச் சரிவு அங்குள்ள லெண்டே ஆற்றில் விழுந்து, நீரோட்டத்தை தற்காலிகமாக ஒரு அணைப் போல தடுத்து நிறுத்தியுள்ளது. </p><p>பனிப்பாறைகளால் தேங்கி நின்ற நீர், அழுத்தம் தாங்காமல் ஒரே நேரத்தில் உடைந்ததால், திடீரென கீழ்நோக்கி நீர் பெருக்கெடுத்து பாய்ந்து இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. </p><p>அதாவது லெண்டே ஆற்றின் துணை ஆறான போதே கோஷி ஆற்றுப் பகுதியில் சரியாக இந்த வெள்ளப்பெருக்கு நிகழ்ந்துள்ளது.  லெண்டே ஆற்றில் கடந்த 14 மாதங்களில் இரண்டு முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.</p><h2>கடந்த ஆண்டும் இதேப் பகுதியில் வெள்ளப்பெருக்கு</h2><p>கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், திபெத்தில் நிலவிய கடும் வெப்பம் காரணமாக பனிப்பாறைகள் உடைந்து ​​இதே பகுதிகளில் இதேபோன்ற திடீர் வெள்ளப்பெருக்குகள் ஏற்பட்டன . இதில் ஒன்பது பேர் உயிரிழந்ததோடு, நேபாளத்தையும் சீனாவையும் இணைக்கும் பாலம் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகளும் சேதமடைந்தன.</p><h2>வேகமாக உருகிவரும் இமயமலை</h2><p>வெப்பமடைந்து வரும் இமயமலைப் பகுதியால் ஏற்படும் அபாயங்களையும் காலநிலை ஆராய்ச்சி நிபுணர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். </p><p>இந்தியா உட்பட பல நாடுகளை உள்ளடக்கிய இமயமலையின் பனிப்பிரதேசங்கள் மனிதனால் ஏற்படுத்தப்படும் காலநிலை மாற்றத்தால், உலகின் மற்ற பகுதிகளை விட வேகமாக வெப்பமடைந்து, உருகி வருகின்றன. இதனால் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடர்கள் ஏற்படும் அபாயங்களும் அதிகரித்து வருகின்றன. </p><p>அதிகரித்து வரும் உலகளாவிய வெப்பநிலை மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக, இந்து குஷ் இமயமலைப் பகுதி முழுவதும் உள்ள பனியாறுகள் அதிவேகமாக உருகி வருவதாகவும், 2000-ஆம் ஆண்டிலிருந்து பனி இழப்பு விகிதம் இருமடங்காகியுள்ளது என்றும் காத்மாண்டுவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். </p><h2>பேரிடருக்கு எளிதாக வழிவகுத்த நிலநடுக்கம்?</h2><p>கடந்த சில தினங்களாக இமயமலை பகுதியில் நிலவிய அதிக வெப்பநிலை காரணமாக, பனிப்பாறைகள் வேகமாக உருகி தண்ணீராக மாறியுள்ளன. உருகிய நீர் பனிப்பாறைகளின் அடிப்பகுதிக்குச் சென்று, அதன் பிடிப்பை தளர்த்தி, ஒட்டுமொத்த பனிப்பாறையும் சரிந்து விழ வழிவகுத்ததாக கூறப்படுகிறது.</p><p>வெள்ளம் ஏற்படுவதற்குச் சற்று முன்பு திபெத் பகுதியில் <strong>4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்</strong> ஏற்பட்டது. ஏற்கனவே உருகி வலுவிழந்து நின்ற பனிப்பாறைகள், இந்த நிலநடுக்கத்தின் அதிர்வால் எளிதாக உடைந்து சரிந்து விழுந்துள்ளன. </p>]]></content:encoded></item><item><title>‘ஆம் ஆத்மி ஆட்சியமைந்த 5 நாட்களில் எத்தனால் பெட்ரோலுக்கு தடை... இல்லையென்றால் அரசியலை விட்டு விலகத் தயார்’ - கெஜ்ரிவால் சவால்!</title><link>https://www.maalaimalar.com/news/national/ban-on-ethanol-blended-petrol-within-5-days-of-aam-aadmi-party-forming-the-government-otherwise-ready-to-quit-politics-kejriwals-challenge</link><comments>https://www.maalaimalar.com/news/national/ban-on-ethanol-blended-petrol-within-5-days-of-aam-aadmi-party-forming-the-government-otherwise-ready-to-quit-politics-kejriwals-challenge#comments</comments><guid isPermaLink="false">108691dd-be7d-491c-afad-7a07076c1ca8</guid><pubDate>Wed, 26 Aug 2026 15:37:25 +0000</pubDate><atom:updated>2026-08-26T15:37:25.255Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Arvind Kejriwal,அரவிந்த் கெஜ்ரிவால்,ஆம் ஆத்மி,Aam Aadmi Party,E20 petrol,எத்தனால் பெட்ரோல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/4br62vji/New-Project-2026-08-26T210413.545.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘ஆம் ஆத்மி ஆட்சியமைந்த 5 நாட்களில் எத்தனால் பெட்ரோலுக்கு தடை... இல்லையென்றால் அரசியலை விட்டு விலகத் தயார்’ - கெஜ்ரிவால் சவால்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/4br62vji/New-Project-2026-08-26T210413.545.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கோவாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், தனது கட்சி ஆட்சி அமைத்தால், 5 நாட்களுக்குள் எத்தனால் பெட்ரோலுக்கு தடை விதிக்கப்படும் என ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். </p><p>இல்லையென்றால் அரசியலைவிட்டு விலக தயார் எனவும் சவால் விடுத்துள்ளார். கோவாவில் நேற்று நடைபெற்ற எத்தனால் பெட்ரோல் எரிபொருள் கொள்கைக்கு எதிரான டவுன்ஹால் கூட்டத்தில் பேசிய அவர் இந்த அதிரடி தேர்தல் வாக்குறுதியை அளித்துள்ளார்.</p><p>கோவா மக்கள் சந்திப்புக் கூட்டம், எத்தனால் பெட்ரோலுக்கு எதிரான ஆம் ஆத்மி கட்சியின் நாடு தழுவிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும். இப்பிரச்னை தொடர்பான தேசிய மக்கள் சந்திப்பை ஆக.1ம் தேதியன்று டெல்லியில் நடத்தியது.</p><p>தொடர்ந்து மேற்கு வங்கம், குஜராத், ஹரியானா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, பீகார் மற்றும் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களிலும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.</p><p>40 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட கோவா சட்டமன்றத்திற்கு அடுத்தாண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது கோவாவில் இரண்டு ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>கோட்டா: 2வது முறையாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 20 வயது மாணவி அறையில் சடலமாக மீட்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/madhya-pradesh-student-preparing-for-neet-for-the-second-time-found-dead-in-her-room</link><comments>https://www.maalaimalar.com/news/national/madhya-pradesh-student-preparing-for-neet-for-the-second-time-found-dead-in-her-room#comments</comments><guid isPermaLink="false">6a6c87e4-0f48-4a8e-86d5-687a3b85455e</guid><pubDate>Wed, 26 Aug 2026 15:10:53 +0000</pubDate><atom:updated>2026-08-26T15:10:53.391Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>neet,நீட்,கோட்டா,Kota</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/lggvyge9/New-Project-2026-08-26T203155.274.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ம.பி.: 2வது முறையாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 20 வயது மாணவி அறையில் சடலமாக மீட்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/lggvyge9/New-Project-2026-08-26T203155.274.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வுக்கு இரண்டாவது முறையாக தயாராகி வந்த மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது மாணவி ஒருவர், ராஜஸ்தானில் தான் தங்கியிருந்த வாடகை குடியிருப்பில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>குஷ்பு படேல் என அடையாளம் காணப்பட்டுள்ள மாணவி, தனது தங்கையோடு தங்கி கோட்டாவில் உள்ள ஒரு தனியார் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சிப்பெற்று வந்துள்ளார். </p><p>2023 முதல் கோட்டாவில் வசித்து வந்த இருவரும் ஜூலை மாதம் லேண்ட்மார்க் சிட்டி பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றிற்கு குடிபெயர்ந்துள்ளனர். </p><p>நேற்றிரவு பயிற்சி வகுப்பு முடிந்து வீட்டிற்கு வந்த தங்கை கதவை தட்டியுள்ளார். நீண்டநேரம் ஆகியும் கதவை திறக்காததால் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மற்றவர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் வந்து கதவை உடைத்து பார்த்தபோது, குஷ்பு அறைக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.</p><p>தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், மாணவியின் சடலத்தை கைப்பற்றி எம்.பி.எஸ் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு உடலை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.</p><p>தொடர்ந்து குஷ்புவின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கோட்டாவிற்கு விரைந்த பிறகு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. </p><p>மேலும் மாணவியின் அறையிலிருந்து எந்தவித தற்கொலைக் குறிப்பும் கண்டெடுக்கப்படவில்லை. எனினும், கடந்த முறை எழுதிய நீட் தேர்வில் <strong>450 மதிப்பெண்கள்</strong> எடுத்திருந்ததாகவும், அந்த மதிப்பெண் திருப்தி அளிக்காததால் அவர் கடுமையான மன உளைச்சலிலும், அழுத்தத்திலும் இருந்ததாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>கோட்டாவில் உள்ள பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்றுவந்தவர்களில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை <strong>8 மாணவர்கள்</strong> தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>நேபாள பெருவெள்ளம்: மீட்புப் பணிகளை உறுதி செய்ய இ.பி.எஸ். வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/eps-urges-action-to-ensure-rescue-operations-in-nepal-floods</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/eps-urges-action-to-ensure-rescue-operations-in-nepal-floods#comments</comments><guid isPermaLink="false">00d78b5e-bf8b-47a2-b3f8-2169168c663b</guid><pubDate>Wed, 26 Aug 2026 15:04:53 +0000</pubDate><atom:updated>2026-08-26T15:04:53.915Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Edappadi Palaniswami,எடப்பாடி பழனிசாமி,நேபாளம்,nepal,வெள்ளம்,flood</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/k5ut0lji/EPS.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ edappadi palaniswami]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/k5ut0lji/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாளத்தில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்திட மத்திய அரசையும், அப்பணிகளுக்கான ஒருங்கிணைப்பு, முறையான தகவல் பரிமாற்றத்தை உறுதிசெய்திட மாநில அரசையும் வலியுறுத்துகிறேன் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.</p><h2>திடீர் வெள்ளம்</h2><p>நேபாளத்தில் இன்று காலை ஏற்பட்ட திடீர் வெள்ளம் ரசுவா மாவட்டத்தில் உள்ள போடே கோஷி ஆற்றில் கலந்தது. இது டிமுரே மற்றும் சியாப்ரு பெசி ஆகிய பகுதிகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.</p><p>எதிர்பாரா நிலையில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளப் பெருக்கில் ஆற்றங்கரையோரத்திலிருந்த பல்வேறு கட்டிடங்கள், வாகனங்கள், ஆற்றின் குறுக்கே இருந்த பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதுவரை 46 பேர் உயிரிழப்பு என உறுதி செய்யப்பட்ட நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.</p><h2>100-க்கு மேற்பட்ட இந்தியர் மாயம்</h2><p>நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கியுள்ள 291 வெளிநாட்டவர் உள்பட 384 சுற்றுலாப் பயணிகளைக் காணவில்லை என நேபாள சுற்றுலாத்துறை தெரிவித்தது. இதில் 105 பேர் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>இந்நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் கூறியுள்ளதாவது:</p><p>நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தால் 60 தமிழர்கள் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் காணாமல் போயுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையையும் அளிக்கிறது.</p><p>நேபாள நாட்டு அரசுடன் இணைந்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்திட மத்திய அரசையும், அப்பணிகளுக்கான ஒருங்கிணைப்பையும், முறையான தகவல் பரிமாற்றத்தையும் உறுதி செய்திட மாநில அரசையும் வலியுறுத்துகிறேன்.</p><p>காணாமல் போனதாக தேடப்படும் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு பத்திரமாக தாயகம் திரும்பிட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பிரதமர் மோடி அரசின் OBC விரோத முகமூடி மீண்டும் கிழிந்து விட்டது: மாணிக்கம் தாகூர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/modi-government-anti-obc-mask-torn-again-manickam-thakur</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/modi-government-anti-obc-mask-torn-again-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">8b291ba9-13b8-4df4-ae9c-2d36ac34cbe4</guid><pubDate>Wed, 26 Aug 2026 14:43:51 +0000</pubDate><atom:updated>2026-08-26T14:43:51.464Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>OBC,pm modi,பிரதமர் மோடி,ஓபிசி கிரீமிலேயர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/nxo18529/PMModiManickamTagore.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர் மோடி- மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/nxo18529/PMModiManickamTagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மறுஆய்வு மனுவை உடனடியாகத் திரும்பப் பெற்று, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கூடுதல் பணியிடங்கள் மூலம் நிலுவையில் உள்ள தேர்வர்களுக்கு உடனே பணி ஒதுக்கீடு செய்க என்று மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.</p><h2>தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</h2><p>உச்சநீதிமன்றம் கடந்த மார்ச் 11-ந்தேதி வழங்கிய வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை (UoI v. Rohith Nathan) முடக்க, மறுஆய்வு/விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ள மோடி அரசு, சமூக நீதியை சீர்குலைத்து OBC இளைஞர்களுக்கு வெளிப்படையான துரோகம் இழைக்கிறது.</p><h2>உச்சநீதிமன்றம் மிகத் தெளிவாக தீர்ப்பளித்துள்ளது:</h2><p>* 1993 OM விதிகளின்படி கிரீமிலேயர் கணக்கீட்டில் பெற்றோரின் ஊதியம் சேர்க்கப்படக் கூடாது. DoPT-யின் 2004 கடிதம் பொதுத்துறை/தனியார் ஊழியர்களின் பிள்ளைகளுக்கு எதிரான சட்டவிரோத பாகுபாடாகும்.</p><p>* பாதிக்கப்பட்ட தகுதியான தேர்வர்களுக்கு கூடுதல் பணியிடங்களை உருவாக்கி, 6 மாத காலத்திற்குள் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும்.</p><p>ஆனால், மோடி அரசோ இத்தீர்ப்பை அமல்படுத்தாமல் நழுவ சிறப்பு அமர்வை நாடுகிறது.</p><h2>ஒன்றிய அரசுக்கு எங்களின் கோரிக்கைகள்:</h2><p>மறுஆய்வு மனுவை உடனடியாகத் திரும்பப் பெற்று, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கூடுதல் பணியிடங்கள் மூலம் நிலுவையில் உள்ள தேர்வர்களுக்கு உடனே பணி ஒதுக்கீடு செய்க.</p><p>சாக்குப்போக்குகள் கூறாமல், உச்சநீதிமன்றம் விதித்த 6 மாத காலக்கெடுவை முழுமையாகப் பின்பற்றுக.</p><p>இத்தீர்ப்புக்கு முன் OBC பிரிவில் விண்ணப்பிக்க முடியாமல் பொதுப் பிரிவில் தள்ளப்பட்ட தேர்வர்களுக்கு UPSC, CSE உள்ளிட்ட அனைத்து தேர்வுகளிலும் கூடுதல் வாய்ப்புகளை வழங்குக.</p><p>ஏழை எளிய <a href="https://www.maalaimalar.com/news/national/west-bengal-obc-quota-suvendu-led-bjp-govt-removes-77-muslim-communities-from-obc-list-with-new-amendment">OBC</a> மாணவர்களுக்கும் EWS போன்ற பொருளாதார ரீதியிலான சலுகைகளை விரிவுபடுத்துக.</p><p>செல்லுபடியாகும் OBC-NCL சான்றிதழ்களை அடிப்படையாகக் கொண்டு பாதிக்கப்பட்ட மாணவர்களின் பணி/சேர்க்கை நிலையை உயர்த்துக.</p><p>மாநில வருவாய்த் துறையால் வழங்கப்பட்ட OBC-NCL சான்றிதழ்களை நிராகரிப்பது மாநிலங்களின் கூட்டாட்சி அதிகாரத்தை அவமதிக்கும் செயலாகும். சான்றிதழ்களை ஏற்றுக்கொண்டு மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.</p><p>மாநிலங்களின் சுயாட்சியையும், இந்தியா முழுவதும் உள்ள OBC மாணவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளையும் பாதுகாக்க அனைத்து எதிர்க்கட்சி ஆளும் மாநில அரசுகளும் இவ்வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அறிக்கையில் மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>விவசாயிகளுக்கு குட் நியூஸ்: செப்.1 முதல் மேட்டூர் அணை நீர் திறப்பு- தமிழ்நாடு அரசு அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mettur-dam-to-open-water-from-sept-1-for-45-days-tamil-nadu-government</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mettur-dam-to-open-water-from-sept-1-for-45-days-tamil-nadu-government#comments</comments><guid isPermaLink="false">ec602dc7-79dc-4024-b081-7fc9c9ebacfa</guid><pubDate>Wed, 26 Aug 2026 14:34:45 +0000</pubDate><atom:updated>2026-08-26T14:34:45.502Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,Tamil Nadu government,Cauvery water,#Mettur Dam,மேட்டூர் அணை நீர் திறப்பு,மேட்டூர் அணை நீர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/ydocnllw/matti.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mettur Dam ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/ydocnllw/matti.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேட்டூர் அணை செப்.1 முதல் 45 நாட்களுக்கு திறக்கப்படும் என ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் ஆனந்த் அறிவித்துள்ளார்.</p><p>மேட்டூர் அணையிலிருந்து 01.09.2026  முதல் 45 நாட்களுக்கு, அணையின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தைப் பொறுத்து தமிழ்நாடு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/measures-taken-to-rescue-tamils-stranded-in-nepal-floods-chief-minister-vijay">முதலமைச்சர் விஜய் </a>உத்தரவிற்கிணங்க, தென்மேற்கு பருவமழை காலத்தில் காவிரிப் படுகையில் போதிய மழைப்பொழிவு கிடைக்காத நிலையிலும், தமிழ்நாட்டின் குடிநீர் மற்றும் காவிரி டெல்டா பாசனத் தேவைகளைக் கருத்தில் கொண்டும், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்றும், சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து செப்டம்பர் 1 முதல் 45 நாட்களுக்கு, அணையின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தைப் பொறுத்து நீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. முதலமைச்சர் விஜய் மேட்டூர் அணையிலிருந்து, டெல்டா பாசனத்திற்காக நீரைத் திறந்து வைக்க உள்ளார். </p><p>2026–2027 பாசன ஆண்டின் தொடக்கத்தில் மேட்டூர் அணையில் பயன்பாட்டிற்குரிய நீர் இருப்பு 41.223 டி.எம்.சி. மட்டுமே இருந்தது. கர்நாடக அணைகளிலிருந்து கிடைக்க வேண்டிய நீர் போதிய அளவில் கிடைக்காததாலும், அணையின் குறைந்தபட்ச இருப்பான 10 டி.எம்.சி.யை பராமரிக்க வேண்டியிருந்ததாலும், டெல்டா பாசனத்திற்குத் தொடர்ச்சியாக நீர் வழங்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. இருப்பினும், பொதுமக்களின் அத்தியாவசிய குடிநீர்த் தேவைகளுக்காக மேட்டூர் அணையிலிருந்து தேவையான அளவு நீர் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.</p><h2>த<strong>மிழ்நாடு அரசின்</strong> தொடர் முயற்சி</h2><p>தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரைப் பெறுவதற்காக, தமிழ்நாடு அரசு சட்ட ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் தொடர்ந்து உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டது. காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முன்பு தமிழ்நாட்டின் உரிமைகள் மற்றும் நீர்த் தேவைகள் வலியுறுத்தப்பட்டதுடன்,  உச்ச நீதிமன்றத்திலும் தமிழ்நாட்டின் நியாயமான உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இத்தொடர் முயற்சிகளின் விளைவாக, பில்லிகுண்டுலுவில் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய நீரை உறுதி செய்வதற்கான உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன.   </p><p>தமிழ்நாடு அரசின் இத்தொடர் முயற்சிகளின் விளைவாக, வெவ்வேறு காலகட்டங்களில் தமிழ்நாட்டின் எல்லையான பில்லிகுண்டுலுவில் வினாடிக்கு 3,500 கனஅடி, 9,000 கனஅடி மற்றும் 12,000 கனஅடி நீர் கிடைப்பதை உறுதி செய்யுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டு, காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் அதனை உறுதி செய்து உத்தரவிட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரைப் பெறுவதற்கான உரிமை தொடர்ந்து நிலைநாட்டப்பட்டுள்ளது.</p><p>இதைத் தொடர்ந்து, காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு,  காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத்தை அணுகி, விகிதாசார அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய  நீரைப் பெறுவதற்காக இந்த அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாப்போம் என்பதில் இந்த அரசு அசைக்க முடியாத உறுதியுடன் உள்ளது.</p><h2>கா<strong>விரி டெல்டா</strong> மாவட்டங்கள்</h2><p>மேட்டூர் அணையின் நீர் இருப்பு படிப்படியாக உயர்ந்து வருவதையும், எதிர்பார்க்கப்படும் நீர்வரத்து மற்றும் வடகிழக்குப் பருவமழையையும் கருத்தில் கொண்டு, குடிநீர் மற்றும் டெல்டா பாசனத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் தற்போது நீர் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. இதனையொட்டி, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனப் பணிகளை உடனடியாகத் தொடங்குவதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும்.</p><p>விவசாயிகளுக்கு உரிய தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கி, நிலங்களை உழுது தயார் செய்தல், நாற்றங்கால் அமைத்தல், விதைப்பு மேற்கொள்ளுதல், தரமான விதைகள், உரங்கள் மற்றும் பிற வேளாண் இடுபொருட்களை போதிய அளவில் இருப்பில் வைத்தல் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். குறுகிய கால மற்றும் நடுத்தர கால நெல் ரகங்கள் உள்ளிட்ட பொருத்தமான பயிர் ரகங்களைத் தேர்வு செய்வதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட வேண்டும்.</p><p>விவசாயிகள், கிடைக்கும் நீரை சிக்கனமாகவும் திட்டமிட்டும் பயன்படுத்தி, வேளாண்மைத் துறையின் ஆலோசனையுடன் சாகுபடிப் பணிகளை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள், நீர்வளத்துறை மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, முறைப்பாசனத்தின் மூலம் கடைமடை வரை நீர் சென்றடைவதையும், கிடைக்கும் ஒவ்வொரு துளி நீரும் அதிகபட்ச பாசனப் பயனை அளிப்பதையும் “ஒவ்வொரு துளி நீரிலும் அதிக மகசூல்” கிடைப்பதையும் உறுதி செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>DRDO-வின் ஏவுகணைத் தயாரிப்பு தொழில்நுட்பங்களை தனியார் நிறுவனங்களுக்கு வழங்க மத்திய அரசு ஒப்புதல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/central-government-approves-transfer-of-drdos-missile-manufacturing-technologies-to-private-companies</link><comments>https://www.maalaimalar.com/news/national/central-government-approves-transfer-of-drdos-missile-manufacturing-technologies-to-private-companies#comments</comments><guid isPermaLink="false">f087fe52-cb78-410d-93c0-a807fdd4eae1</guid><pubDate>Wed, 26 Aug 2026 14:34:00 +0000</pubDate><atom:updated>2026-08-26T14:34:00.178Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Rajnath Singh,DRDO,பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு,ராஜ்நாத் சிங்,பாதுகாப்புத் துறை,Indian defence industry</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/hue5obkl/New-Project-2026-08-26T200342.532.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DRDO-வின் ஏவுகணைத் தயாரிப்பு தொழில்நுட்பங்களை தனியார் நிறுவனங்களுக்கு வழங்க மத்திய அரசு ஒப்புதல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/hue5obkl/New-Project-2026-08-26T200342.532.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கிய அனைத்து ஏவுகணை அமைப்புகளின் தயாரிப்பு தொழில்நுட்பங்களையும் உள்நாட்டு தனியார் நிறுவனங்களுக்கு வழங்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.</p><p>உள்நாட்டு உற்பத்தித் திறன்களை மேம்படுத்துதல், இறக்குமதியைச் சார்ந்திருப்பதை குறைத்தல், உள்நாட்டு மதிப்புக் கூட்டலை அதிகரித்தல், பாதுகாப்புத் துறைச் சார்ந்த தொழில்துறை அடித்தளத்தை வலுப்படுத்துதல், </p><p>விநியோக முறையில் இந்திய குறு, சிறு, நடுத்தர தொழில்துறை நிறுவனங்கள், இதர தொழில்நுட்பக் கூட்டாளர்களின் பங்களிப்பிற்கான வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவைகள் இதன் முக்கிய நோக்கம் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>இந்தத் தொழில்நுட்பப் பரிமாற்றம், தகுதியான உள்நாட்டு நிறுவனங்களுக்குத் தேவையான சான்றிதழ்கள், தகுதித் தேர்வுகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகளுக்கு உட்பட்டு மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க நடவடிக்கை- முதலமைச்சர் விஜய் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/measures-taken-to-rescue-tamils-stranded-in-nepal-floods-chief-minister-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/measures-taken-to-rescue-tamils-stranded-in-nepal-floods-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">a37f6f32-a45b-40b8-a865-5bd82555546e</guid><pubDate>Wed, 26 Aug 2026 14:11:58 +0000</pubDate><atom:updated>2026-08-26T14:11:58.264Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாளம்,Nepal Floods,முதல்வர் விஜய்,Chief Minister Vijay,Nepal disaster,நேபாள வெள்ளப்பெருக்கு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/63zban69/vj.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chief Minister Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/63zban69/vj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாளம் மற்றும் அதை ஒட்டிய சீனா எல்லைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக போடே கோசி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தமிழ்நாட்டைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஆன்மீகப் பயணிகள் அங்கு சிக்கித் தவித்து வருகின்றனர்.</p><h2>மத்திய அரசு <strong>மற்றும் இந்திய தூ</strong>தரகத்துடன் தொடர்பு</h2><p>நேபாளத்தில் நிலவும் இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் வாயிலாக அவர்களின் தற்போதைய நிலவரத்தைப் பெற்று, அனைவரையும் பாதுகாப்பாக மீட்டு கொண்டு வரத் தேவையான உதவிகளைத் தமிழக அரசு விரைந்து மேற்கொண்டு வருகிறது.</p><h2>முதலமைச்ச<strong>ர் விஜய் பதிவு</strong></h2><p>இது குறித்து தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ள <a href="https://www.maalaimalar.com/news/national/india-offers-humanitarian-aid-to-flood-hit-nepal-pm-modi">முதலமைச்சர் விஜய்</a>, "நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் தமிழர்கள் உட்பட இந்தியர்கள் பலர் காணாமல் போனதாகவும் சிக்கியுள்ளதாகவும் வரும் செய்திகள் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய இந்திய தூதரகத்தின் மூலம் நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று தெரிவித்துள்ளார்.</p><h2>உதவி எ<strong>ண்கள் அறிவி</strong>ப்பு</h2><p>பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தகவல்களைப் பெறவும், நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் தொடர்புகொள்ளவும் டெல்லி தமிழ்நாடு இல்லம் மற்றும் மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையம் சார்பில் அவசர உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. பயணிகள் அனைவரையும் பாதுகாப்பாகத் தாய்நாடு திரும்பச் செய்யத் தேவையான அனைத்து மீட்பு நடவடிக்கைகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 46 ஆக அதிகரிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/death-toll-in-nepal-flash-flood-rises-to-46-officials</link><comments>https://www.maalaimalar.com/news/world/death-toll-in-nepal-flash-flood-rises-to-46-officials#comments</comments><guid isPermaLink="false">1d89689a-45ea-4fe4-a38b-039143f86087</guid><pubDate>Wed, 26 Aug 2026 13:50:29 +0000</pubDate><atom:updated>2026-08-26T13:50:29.308Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாளம்,nepal,வெள்ளம்,flood,Death toll,பலி எண்ணிக்கை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/edq59w8x/flood.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ flood]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/edq59w8x/flood.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.</p><h2>கடும் சேதம்</h2><p>திபெத் எல்லைக்கு அருகே நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம், குடியிருப்புகள், வாகனங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை கடுமையாக சேதப்படுத்தியது.</p><p>இதனால் சேதங்களை மதிப்பிடுவதிலும், குறிப்பாக ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கான மீட்புப் பணிகளை விரைவுபடுத்துவதிலும் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.</p><p>அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, திபெத் பகுதியிலிருந்து பாய்ந்து வந்த திடீர் வெள்ள நீர், காலை 9 மணியளவில் நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போடே கோஷி ஆற்றில் கலந்தது. இது டிமுரே மற்றும் சியாப்ரு பெசி ஆகிய பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.</p><p>அதிகாரிகள் தற்போதைய நிலவரத்தை ஆய்வுசெய்து வருகின்றனர். சேதத்தின் முழு அளவு மற்றும் உயிரிழப்புகள் குறித்த விவரங்கள் முழுமையாகத் தெரியவரவில்லை.</p><h2>நேபாள பிரதமர் அவசரக் கூட்டம்</h2><p>வெள்ளப் பெருக்கினால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்கும், தற்போதைய நிலவரத்தை ஆய்வு செய்வதற்கும் அமைச்சரவையின் முக்கிய அவசரக் கூட்டத்தினை நேபாள பிரதமர் பாலன் ஷா கூட்டினார்.</p><p>பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த அவரது அரசாங்கம் நேபாள ராணுவம், ஆயுதக் காவல் படை மற்றும் நேபாள காவல்துறையை அனுப்பியது. பாதிக்கப்பட்ட பகுதிக்கு 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டதாக செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p>போட்டே கோஷி மற்றும் திரிசூலி ஆற்றுப் படுகைகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும், பாதுகாப்பான இடங்களுக்கு விரைந்து செல்லுமாறும் அதிகாரிகள் வலியுறுத்தினர். </p><h2>46 பேர் பலி</h2><p>இந்நிலையில், நேபாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 46 ஆக உயர்ந்துள்ளது. நூற்றுக்கணக்கானோரின் நிலை என்னவென தெரியவில்லை. தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>உடலில் சிறு உயிரைச் சுமக்கும் தருணம்: கர்ப்பகால உடற்பயிற்சி குறித்து சமந்தா நெகிழ்ச்சி!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/moment-of-carrying-new-life-in-body-samantha-on-pregnancy-workout</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/moment-of-carrying-new-life-in-body-samantha-on-pregnancy-workout#comments</comments><guid isPermaLink="false">282c9fc4-95db-465c-828b-a907027e6777</guid><pubDate>Wed, 26 Aug 2026 13:32:06 +0000</pubDate><atom:updated>2026-08-26T13:32:06.148Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Samantha,Raj Nidimoru,சமந்தா,ராஜ் நிடிமோரு,Samantha baby bump</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/06zwf0g0/sam.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Samantha baby bump]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/06zwf0g0/sam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரபல நடிகை சமந்தா ரூத் பிரபு தனது கர்ப்பகால உடற்பயிற்சி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, கர்ப்ப காலத்தில் உடலின் தேவைகளுக்கேற்ப உடற்பயிற்சிகளை மாற்றியமைக்க வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார். உடற்பயிற்சி மற்றும் உடல்தகுதியில் எப்போதும் தீவிர ஆர்வம் காட்டும் <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/toxic-shatters-negative-reviews-box-office-record">நடிகை சமந்தா</a>, கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி இலக்குகள் முற்றிலும் மாறிவிடும் என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>"ஒரு சிறிய மனிதனை உடலுக்குள் வளர்க்கும்போது நமது உடற்பயிற்சியின் நோக்கங்கள் மாறுகின்றன. இந்த உடல் செய்த அதிசயங்களிலேயே மிக வலிமையான விஷயம் இதுதான். உடல் கேட்கும் ஓய்வையும் மாற்றங்களையும் வழங்க வேண்டியது அவசியம்" என அவர் தெரிவித்துள்ளார்.</p><p>இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்துள்ள வீடியோவில் செஸ்ட் பிரஸ், கெட்டில்பெல் பயிற்சிகள் மற்றும் டெட்லிஃப்ட் போன்ற வலிமைப் பயிற்சிகளை அவர் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இருப்பினும், இவை அனைத்தும் அவரது கர்ப்ப காலத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கப்பட்ட பயிற்சிகளாகும்.</p><p>தனது பதிவில் ரசிகர்களுக்கு அவர் முக்கிய வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளார். "நான் பல வருடங்களாக உடற்பயிற்சி செய்து வருகிறேன். எனது மருத்துவரின் அனுமதி மற்றும் சிறப்பு சான்றிதழ் பெற்ற கர்ப்பகால பயிற்சியாளரின் மேற்பார்வையிலேயே இவற்றைச் செய்கிறேன். ஒவ்வொரு பெண்ணின் கர்ப்பகாலமும் வேறுபட்டது. எனவே எனது பயிற்சிகளைப் பார்த்து யாரும் அப்படியே பின்பற்ற வேண்டாம். உடற்பயிற்சி செய்வதற்கு முன் கண்டிப்பாக மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்" என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>இயக்குநர் ராஜ் நிடிமோருவை திருமணம் செய்துகொண்ட சமந்தா, அண்மையில் தனது கர்ப்பத்தை முறைப்படி அறிவித்திருந்தார். தான் நடித்து தயாரித்த 'மா இண்டி பங்காரம்' படத்தின் வெற்றி விழாவில் பேசிய அவர், விரைவில் மகப்பேறு விடுமுறை பெறவுள்ளதாகவும், அதன் பின்னர் மீண்டும் புதிய திரைப்படங்களில் நடிப்பேன் என்றும் உறுதியளித்திருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஜி.வி.பிரகாஷ், கயாடு லோகர் நடித்துள்ள ‘இம்மார்டல்’ டிரெய்லர் வெளியானது!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/immortal-trailer-released</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/immortal-trailer-released#comments</comments><guid isPermaLink="false">85840c78-d2cc-47ba-b5c4-2b4d3e6c7cb6</guid><pubDate>Wed, 26 Aug 2026 13:19:35 +0000</pubDate><atom:updated>2026-08-26T13:19:35.354Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Kayadu Lohar,கயாடு லோஹர்,ஜிவி பிரகாஷ்,gv prakash,Immortal,இம்மார்டல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/np67r04s/New-Project-2026-08-26T183725.742.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இம்மார்டல் டிரெய்லர் வெளியானது!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/np67r04s/New-Project-2026-08-26T183725.742.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>‘ஜாக்பாட்’ படத்தில் பணியாற்றிய மரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், கயாடு லோகர் நடிப்பில் உருவாகி உள்ளப் படம் இம்மார்டல். இப்படத்தில் டி.எம்.கார்த்திக், குமார் நடராஜன், லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர், அர்ஷு மஹர்ஜன், பெமா சாம்சோ மற்றும் சுனிதா ஷ்ரேஸ்தா ஆகியோரும் நடித்துள்ளனர்.</p><p>ஏகே ஃபிலிம் ஃபேக்டரி படத்தை தயாரிக்க, சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இப்படம் இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>முதலில் படம் ஜூலை.23 வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் விஜய்யின் ஜன நாயகன் வெளியீட்டால் ஒத்திவைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து செப்.4ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில் இன்று படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்துவருகிறது. </p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/iOMvWcMo8cA"></iframe></figure>]]></content:encoded></item><item><title>எதிர்மறை விமர்சனங்களை முறியடித்து வசூல் சாதனை: பாக்ஸ் ஆபிசில் &apos;டாக்சிக்&apos; மாபெரும் வசூல் வேட்டை!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/toxic-shatters-negative-reviews-box-office-record</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/toxic-shatters-negative-reviews-box-office-record#comments</comments><guid isPermaLink="false">2a57f39d-5dda-42e5-a3af-e5fcd3ada477</guid><pubDate>Wed, 26 Aug 2026 13:12:09 +0000</pubDate><atom:updated>2026-08-26T13:12:09.477Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நயன்தாரா,Nayanthara,Kiara Advani,Yash,Toxic,டாக்சிக்,யஷ்,Tara Sutaria,கீது மோகன்தாஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/otvqz1kk/toxic.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Toxic  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/otvqz1kk/toxic.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கே.ஜி.எஃப் படங்களுக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'டாக்சிக்' திரைப்படம் கலவையான மற்றும் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றபோதிலும், திரையரங்குகளில் வசூல் சாதனை படைத்து வருகிறது.</p><p>கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ், கியாரா அத்வானி, நயன்தாரா, தாரா சுதாரியா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள கேங்ஸ்டர் அதிரடித் திரைப்படம் '<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/toxic-review">டாக்சிக்</a>'. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு யாஷ் திரைக்கு திரும்பியுள்ளதால் ரசிகர்களிடையே இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.</p><p>திரையரங்குகளில் படம் வெளியான பிறகு, திரைக்கதையில் தெளிவின்மை மற்றும் இரண்டாம் பாதியில் அளவுக்கு அதிகமான வன்முறை காட்சிகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இருப்பினும், யாஷின் கம்பீரமான நடிப்பு மற்றும் மாஸ் காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்து, முதல் நாளிலேயே திரையரங்குகளை நிரப்பச் செய்துள்ளது.</p><h2>பாக்ஸ் ஆபி<strong>ஸில் வரலாற்</strong>றுச் சாதனை</h2><p>திரையரங்கு வசூலில் எதிர்மறை விமர்சனங்களை முறியடித்து முதல் நாளில் இந்திய அளவில் ரூ.60 கோடியை தாண்டி சாதனை படைத்துள்ளது. முன்பதிவு மற்றும் முதல் நாள் காட்சிகளின் மூலம் பல கோடி வசூலித்து, இந்தி உட்பட பல மொழிகளில் ஷாருக்கானின் 'பதான்' திரைப்படத்தின் ஆரம்ப நாள் வசூல் வேகத்தை முறியடித்துள்ளது. குறிப்பாக இந்தி மற்றும் கன்னட பதிப்புகளில் இப்படம் அதிக அளவிலான வசூலை ஈட்டியுள்ளது. கர்நாடகம், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் விடியற்காலை காட்சிகளிலேயே 80%க்கும் அதிகமான இருக்கைகள் நிரம்பி சாதனை படைத்தன.</p><h2>பண்டிகை கால <strong>தொடர் விடுமுறை சா</strong>தகம்</h2><p>இத்திரைப்படம் புதன்கிழமை அன்று வெளியானதால், தொடர்ந்து வரவிருக்கும் தொடர் அரசு விடுமுறை நாட்கள் வசூலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் நாளின் முடிவில் உலகம் முழுவதிலும் இருந்து இப்படம் ரூ.100 கோடியை தாண்டி வசூல் செய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பாகிஸ்தான் அணி ஏற்கனவே பல ரசிகர்களை இழந்துவிட்டது: வீரர்களுக்கு ரமீஸ் ராஜா எச்சரிக்கை..!</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/pak-team-has-already-lost-a-lot-of-fans-ramiz-raja-blunt-warning-to-cricketers</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/pak-team-has-already-lost-a-lot-of-fans-ramiz-raja-blunt-warning-to-cricketers#comments</comments><guid isPermaLink="false">0e041c82-0c58-4d20-a55e-4ab87cd895ae</guid><pubDate>Wed, 26 Aug 2026 13:07:34 +0000</pubDate><atom:updated>2026-08-26T13:07:34.946Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Pakistan Cricket Team,பாகிஸ்தான் கிரிக்கெட் அணி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/csa8vzoq/RamizRaja001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரமீஸ் ராஜா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/csa8vzoq/RamizRaja001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மோசமான ஆட்டத்திறன் காரணமாக பாகிஸ்தான் அணி தனது ரசிகர் பட்டாளத்தை இழந்து வருவதாக முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரமீஸ் ராஜா எச்சரித்துள்ளார். மேலும், தங்கள் தீவிர ஆதரவாளர்கள் கொண்டாடும் வகையிலான ஆட்டத்தை வெளிப்படுத்துமாறு வீரர்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><h2>இங்கிலாந்து தொடர்</h2><p><a href="https://www.maalaimalar.com/sports/will-pakistan-strike-back-in-second-test-against-england">பாகிஸ்தான்</a> டெஸ்ட் கிரிக்கெட் அணி சமீப காலமாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தற்போது இங்கிலாந்துக்கு எதிராக விளையாடி வருகிறது. முதல் போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்த நிலையில், நாளை 2-வது போட்டி நடைபெற இருக்கிறது.</p><h2>இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா கூறியதாவது:-</h2><p>பாகிஸ்தான் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிபெற வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பதில்லை. ஆனால் அவர்கள் வீரர்களிடம் இருந்து ஒரு போராட்ட குணம், நேர்மறையான உடல்மொழி மற்றும் போட்டியிடும் மனப்பான்மை ஆகியவற்றை எதிர்பார்க்கிறார்கள்.</p><p>சமூக ஊடகங்கள் பாகிஸ்தான் அணியை கடுமையாக விமர்சிக்கின்றன. அவர்கள் ஏற்கனவே பல ரசிகர்களை இழந்துவிட்டனர். எனவே, ஒரு டெஸ்ட் போட்டியில் தோற்பது என்பது வெறும் மற்றொரு தோல்வியாக மட்டுமல்லாமல், மேலும் ஒரு குறிப்பிட்ட வகையிலான ரசிகர்கள் கிரிக்கெட்டிலிருந்து விலகிச் செல்வதற்கும் காரணமாகிவிடுகிறது.</p><p>ஆதரவாளர்கள் தொடர்ந்து தங்களுக்கு ஆதரவளிக்கும் வகையிலான காரணங்களை பாகிஸ்தான் அணி வழங்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ரசிகர்களையும் ஆதரவாளர்களையும் இழக்கத் தொடங்கும்போது, ​​ஒரு அணியின் முக்கியத் தூண் சரிந்து விடுவதாகவே நான் எப்போதும் கருதுகிறேன். ஒரு சிறந்த அணியாக உருவெடுக்க ரசிகர்களின் ஆதரவு அவசியம். அதேபோல ரசிகர்களுக்கும் அணியின் ஆதரவு தேவை</p><p>எந்தவொரு அணியும் அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்று யாரும் விரும்புவதில்லை, எதிர்பார்க்கவும் முடியாது. ஆனால் முக்கியமானது அந்தப் போராட்ட குணம், களத்தில் உங்கள் இருப்பு மற்றும் உடல்மொழி ஆகியவைதான்.</p><p>இவ்வாறு ரமீஸ் ராஜா தெரிவித்தார்.</p><p>முந்தைய பாகிஸ்தான் சுற்றுப் பயணங்களுடன் ஒப்பிடுகையில், தற்போதைய தொடரில் ஆட்டோகிராப் (autograph) கேட்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் வாசன் மற்றும் குக் ஆகியோர் சுட்டிக்காட்டினர்.</p>]]></content:encoded></item><item><title>5 ஆண்டு உழைப்பு...வெறும் ரூ.19,000 முதலீடு: 30 ஆயிரம் மடங்கு லாபம் கொடுத்த படம் எது தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/do-you-know-which-movie-yielded-a-return-of-20000-times-on-an-investment-of-just-19000</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/do-you-know-which-movie-yielded-a-return-of-20000-times-on-an-investment-of-just-19000#comments</comments><guid isPermaLink="false">b89bf0c3-62f6-41fc-8008-0a2b8f68aadb</guid><pubDate>Wed, 26 Aug 2026 12:56:51 +0000</pubDate><atom:updated>2026-08-26T12:56:51.115Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>China,சீனா,அனிமேஷன் படம்,Niu Lai,animated film,நியு லாய்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/gaj54h2j/New-Project-2026-08-26T161141.773.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 5 ஆண்டு உழைப்பு...வெறும் ரூ.19,000 முதலீடு: 30 ஆயிரம் மடங்கு லாபம் கொடுத்த படம் எது தெரியுமா?]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/gaj54h2j/New-Project-2026-08-26T161141.773.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தயாரிப்பிற்காக இணையத்தில் பெரும் கிண்டல்களுக்கு உள்ளான சீன அனிமேஷன் திரைப்படம் ‘நியு லாய்’ அதன் தயாரிப்பில் இருந்து 30 மடங்கு லாபம் பெற்றுத் தந்துள்ளது. </p><p>வெறும் ரூ.19 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் உருவான இந்த அனிமேஷன் படம் ரூ.60 கோடிக்கும் அதிகமாக வசூலித்து 666 மடங்கு லாபம் கொடுத்த அப்செசன் (Obsession) படத்தின் சாதனையை முறியடித்துள்ளது. </p><h2>5 ஆண்டுகள் உழைப்பு</h2><p>சின் யுமெங் மற்றும் அவரது தாயார் சன் லிஃபாங் ஆகிய இருவரும் இணைந்து 5 ஆண்டுகள் உழைத்து இந்த 86 நிமிடப் படத்தை வீட்டிலேயே உருவாக்கியுள்ளனர். </p><p>படத்திற்கு எந்தவித டீசர், ட்ரெய்லர் அல்லது பெரிய விளம்பர போஸ்டர்கள் கூட கிடையாது. மை முறையில் வரையப்பட்ட ஒரு எளிய போஸ்டர் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. </p><h2>மோசமான ஆரம்பம்</h2><p>ஆகஸ்ட் 5 அன்று வெளியான இந்தத் திரைப்படத்தை முதல் 10 நாட்களில் வெறும் 300 பேர் மட்டுமே பார்த்தனர். இதனால் வெறும் ரூ.1.04 லட்சம் (7,700 யுவான்) மட்டுமே வசூலானது.</p><p>இப்படத்தின் மிக மோசமான அனிமேஷன் தரம், வித்தியாசமான குரல் பதிவுகள் காரணமாக சமூக வலைத்தளங்களில் மீம்களாகவும், “2026-ன் மிக மோசமான படம்” என்றும் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது.</p><p>இந்த நெகட்டிவ் விமர்சனமே படத்திற்குப் பெரிய விளம்பரமாக மாறியது. AI தொழில்நுட்பம் இல்லாமல் மனித உழைப்பால் உருவாக்கப்பட்ட படம் என்பதால், மக்கள் ஆர்வத்துடன் தியேட்டர்களுக்குச் சென்று பார்க்கத் தொடங்கினர்.</p>]]></content:encoded></item></channel></rss>