<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 01 Sep 2026 08:17:51 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: ரேஷன் கடைகளில் 3-ந்தேதி முதல் வெங்காயம் மலிவு விலையில் விற்பனை: அமைச்சர் வெங்கட்ரமணன் - 1 செப். 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-1-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-1-september-2026#comments</comments><guid isPermaLink="false">3665960b-ee31-49d1-bea4-c46614cb472a</guid><pubDate>Tue, 01 Sep 2026 03:55:42 +0000</pubDate><atom:updated>2026-09-01T08:16:37.445Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/b48fqijv/venkatramanan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/b48fqijv/venkatramanan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விருத்தாச்சலம் தொகுதியில் கோ ஆப் டெக்ஸ் நிறுவனத்தை தரம் உயர்த்த வேண்டும் - பிரேமலதா</p><p>முதலீட்டு மானியம் கோரியவர்களுக்கு வழங்குவதற்காக ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p><p>செயற்கை நுண்ணறிவு, சென்சார் தொழில்நுட்பங்கள் மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கான மானியம் ரூ.30 கோடி ஒதுக்கீடு.</p><p>குறு உற்பத்தி நிறுவனங்களுக்கான விளிம்புத்தொகை உதவித்தொகை திட்டம் ரூ.100 கோடியில் செயல்படுத்தப்படும் - அமைச்சர் மதன்ராஜா </p><p>மாநிலம் முழுவதும் உள்ள கதர் அங்காடிகள் ரூ.1 கோடி செலவில் புதுப்பிக்கப்படும்.</p><p>கதர், பட்டு உற்பத்தியில் ஈடுபடும் நூற்பாளர், நெசவாளருக்கான நலநிதி பங்குத்தொகை 12-ல் இருந்து 16% ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் விஜய் பாலாஜி</p> <p>முதலீட்டு மானியம் கோரியவர்களுக்கு வழங்குவதற்காக ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் - அமைச்சர் மதன்ராஜா </p><p>உயர்தர பட்டு ரகங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய காஞ்சிபுரத்தில் ரூ.2 கோடியில் பட்டு ஏற்றுமதி வர்த்தக மையம்.</p><p>கைத்தறி நெசவாளர் மின்செலவை குறைக்க 1,000 தனிநபர் கூடங்களில் 100% மானியத்தில் சூரிய ஒளி மின் தகடு அமைக்கப்படும் - அமைச்சர் விஜய் பாலாஜி</p> <p>நெசவாளர்கள் நலனை கருத்தில் கொண்டு கூலி மற்றும் அகவிலைப்படி 10 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் - அமைச்சர் விஜய் பாலாஜி</p><p>மருத்துவ கல்லூரிகளில் ஆய்வு செய்தபோது அதிக கட்டணம் வசூல் குறித்தஎந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.</p><p>அதிக கட்டணம் வசூலிக்கும் எந்த கல்லூரியாக இருந்தாலும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் அருண்ராஜ் திட்டவட்டம்</p><p>தனியார் மருத்துவ கல்லூரிகளில் நான்கரை ஆண்டுக்கு பதிலாக ஜந்தரை ஆண்டுக்கான கட்டணம் வசூல்.</p><p>பல்வேறு மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் கல்விக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது - அக்ரி கிருஷ்ணமூர்த்தி புகார்</p> <p>ரேஷன் கடைகளில் ஒரு குடும்ப அட்டைக்க ஒரு கிலோ வீதம் வெங்காயம் விற்பனை செய்யப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன்</p><p>தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் 3-ந்தேதி முதல் வெங்காயம் மலிவு விலையில் விற்பனை - அமைச்சர் வெங்கட்ரமணன்</p><p>திருவண்ணாமலை மலை அடிவாரத்தில் வசிக்கும் மக்களுடன் தமிழ்நாடு அரசு உடன் நிற்கும் - அமைச்சர் ஆதவ் உறுதி</p><p>திருவண்ணாமலை மலையடிவாரத்தில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட மாட்டார்கள் - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி</p><p>1,535 வீடுகள் அகற்ற வழக்கு நிலுவையில் உள்ளது. மக்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>திருவண்ணாமலை மலையடிவாரத்தில் வசித்து வரும் 1,535 குடும்பத்தினருக்கும் பட்டா வழங்க வேண்டும் - எ.வ.வேலு</p><p>வேறு இடம் கேட்டிருந்தால் கொடுத்திருப்பார்கள், இன்று ஒருநாளாவது அரசியல் செய்யாமல் இருங்கள் - அமைச்சர் ஆதவ் வேண்டுகோள்</p> <p>தமிழ்நாடு இளைஞர் கூட்டமைப்பினர் ஆக.22-ந்தேதி அனிதா நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி கடிதம் கொடுத்தார்கள்.</p><p>செப்.8 வரை பெசன்ட் நகர் மாதா கோவில் விழா இருப்பதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை வந்துவிடக்கூடாது என அனுமதி மறுப்பு - அமைச்சர் ஆதவ்</p> <p>பெசன்ட் நகர் தேவாலய கொடியேற்ற விழா முடிந்த நிலையில் அனிதா நினைவேந்தலுக்கு அனுமதி மறுப்பது ஏன்? - உதயநிதி</p><p>அமைதியாக நடக்கவிருந்த நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுக்காதது ஏன்? - உதயநிதி </p><p>சென்னை பெசன்ட் நகரில் நடத்தப்படவிருந்த அனிதா நினைவேந்தல் கூட்டத்திற்கு தவெக அரசு அனுமதி மறுத்துள்ளது - உதயநிதி</p> <p>தங்கை அனிதா கண்ட கனவு நிச்சயம் ஒருநாள் நிறைவேறும்.</p><p>அனைத்து மாணவர்களும் தன்னம்பிக்கையுடன் இருங்கள், வெற்றி நம் பக்கம் வரும் - அமைச்சர் ஆதவ்</p> <p>நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி உயிர்நீத்த தங்கை அனிதாவின் நினைவு நாள் இன்று.</p><p>எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின், எங்கள் முதல்வர் விஜய் நீட்டுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியும் மத்திய அரசு ஏற்கவில்லை.</p><p>2029 தேர்தல் சூழ்நிலை நீட் தேர்வை நாடாளுமன்றத்தில் தூக்கி எறியப்படும் நாளாக மாறும் -  அமைச்சர் ஆதவ்</p> <p>தமிழ்நாடு முழுவதும் உள்ள 54,481 அங்கன்வாடி மையங்களில் 42,223 சொந்த கட்டிடங்களில் செயல்படுகின்றன.</p><p>எஞ்சிய அங்கன்வாடிகளுக்கும் அரசு இடத்தில் புதிதாக கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ஜெகதீஸ்வரி</p><p>தருமபுரி தொகுதியில் உள்ள பல அங்கன்வாடி மையங்கள் வாடகை கட்டிடத்தில இயங்கி வருகிறது. புதிய அரசு கட்டிடம் தேவை - சவுமியா அன்புமணி</p><p>மதுரையில் விளையாட்டு ஒலிம்பிக் அகாடமி உருவாக்கப்பட உள்ளது - எம்எல்ஏ கார்த்திகேயன் கேள்விக்கு அமைச்சர் ஆதவ் பதில்</p><p>எல்லா மாவட்டத்திலும் உள்ள விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சி கூடம், ஓடுதளம், நீச்சல் குளம் அமைக்கப்படும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</p> <p>மாவட்டத்திற்கு ஒரு பள்ளியை தேர்வு செய்து விளையாட்டு கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>கிராமப்புறங்களில் விளையாட்டு வீரர்கள் காயமடையாத வகையில் மேட் அமைத்து விளையாட நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</p><p>சிவகங்கை, நெல்லை மாவட்டங்களில் பாரம்பரிய விளையாட்டு தொடர்பான சிறப்பு திட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளது - அமைச்சர் ஆதவ் </p><p>வேலவன் ஊராட்சியில் விளையாட்டு உபகரணம் வைப்பதற்காக புதிய கட்டடம் கட்டப்படும் என எம்எல்ஏ நாராயணன் கேள்விக்கு அமைச்சர் ஆதவ் பதில்</p><p>சட்டசபையில் வினாக்கள் விடைகள் நேரம் தொடங்கியது.</p><p>மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர், எம்எல்ஏ தமிமுன் அன்சாரி Ban NEET வாசகம் கொண்ட கருப்பு டீ சர்ட் அணிந்து சட்டசபைக்கு வருகை.</p><p>நீட் தேர்வால் மருத்துவம் படிக்க முடியாமல் தற்கொலை செய்த அனிதாவின் 9-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி கருப்பு உடையில் வருகை.</p><p>சட்டசபையில் இன்று வினாக்கள் விடைகள் நேரம் முடிந்ததும், கைத்தறி, துணிநூல், கதர் கிராமத் தொழில்கள், தொழிலாளர் நலன், திறன் மேம்பாடு, குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைகளின் மானியக் கோரிக்கை மீது விவாதம் நடக்கிறது.</p><p>மேலும் தமிழ்நாடு நகர் மற்றம் ஊரமைப்பு (திருத்தச்) சட்ட முன்வடிவு அறிமுகம் செய்யப்பட்டு கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் எடுத்துக் கொள்ளப்படும்.</p> ]]></content:encoded></item><item><title>ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்: பிரபல வீரரை அதிரடியாக நீக்கிய ஆஸ்திரேலியா</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/marnus-labuschagne-dropped-from-australias-odi-squads</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/marnus-labuschagne-dropped-from-australias-odi-squads#comments</comments><guid isPermaLink="false">cfb4bfb7-306a-44ef-bfb1-b2598732552a</guid><pubDate>Tue, 01 Sep 2026 08:15:44 +0000</pubDate><atom:updated>2026-09-01T08:15:44.247Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Australia,ஆஸ்திரேலியா,லபுசேன்,Marnus  Labuschagne,odi team,ஒருநாள் அணி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/vse9fbya/labushane.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ marnus]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/vse9fbya/labushane.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஜிம்பாப்வே மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து மார்னஸ் லபுஷேன் நீக்கப்பட்டுள்ளார்.</strong></em></p><p>ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி செப்டம்பர் மாதத்தில் ஜிம்பாப்வே மற்றும் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் பங்கேற்று விளையாடுகிறது.</p><p>இதில் ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் செப்டம்பர் 15-ம் தேதியும், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் செப்டம்பர் 24-ம் தேதியும் தொடங்குகின்றன.</p><p>இந்நிலையில், ஜிம்பாப்வே மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்களுக்கான பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று அறிக்கப்பட்டது.</p><p>எதிர்வரும் உலகக் கோப்பை உள்ளிட்ட முக்கியத் தொடர்களைக் கருத்தில் கொண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அணியில் சில அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>இன்று அறிவிக்கப்பட்ட ஆஸ்திரேலிய ஒருநாள் அணியில் நட்சத்திர வீரர் மார்னஸ் லபுஷேன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கடந்த சில ஒருநாள் போட்டிகளில் அவரது சுமாரான பார்ம் மற்றும் குறைவான ஸ்டிரைக் ரேட் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டது.</p><p>மேலும், அவருடன் மற்றொரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான மேத்யூ ஷார்ட்டும் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஒரு நாளில் உயிர் தப்பினோம் - நேபாள வெள்ளத்தில் இருந்து மீண்ட கோவை பக்தர்களின் பேட்டி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/narrow-escape-coimbatore-pilgrims-recount-nepal-flood-ordeal</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/narrow-escape-coimbatore-pilgrims-recount-nepal-flood-ordeal#comments</comments><guid isPermaLink="false">8e2eec39-afe8-4d81-b71a-6aba84714d4f</guid><pubDate>Tue, 01 Sep 2026 08:15:13 +0000</pubDate><atom:updated>2026-09-01T08:15:13.676Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>rescue,nepal flood,நேபாள பெருவெள்ளம்,தமிழர்கள் மீட்பு,Coimbatore Devotees,கோவை பக்தர்கள்,Kailash Yatra</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/frel71dw/Nepal-Flood" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nepal Flood ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/frel71dw/Nepal-Flood?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/nepal-flood">நேபாளத்தில்</a> கடந்த மாதம் 26-ந் தேதி ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர் மாயமாகி உள்ளனர்.</p><h2>தமிழர்கள் மீட்பு</h2><p>வெள்ள பாதிப்பில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">தமிழகத்தில்</a> இருந்து ஆன்மீக சுற்றுலா சென்ற பலரும் சிக்கி நேபாளம், திபெத் போன்ற இடங்களில் சிக்கி ஊர் திரும்ப முடியாமல் தவித்தனர். </p><p>அவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதன் பலனாக ஒவ்வொரு குழுவினராக மீட்கப்பட்டு சொந்த ஊர் திரும்பிய வண்ணம் உள்ளனர்.</p><p>அந்த வகையில் கோவை, திருப்பூர் மற்றும் பக்கத்து மாவட்டங்களைச் சேர்ந்த 28 பேர் விமானம் மூலமாக இன்று கோவை வந்தனர்.</p><h2>கோவை விமான நிலையம்</h2><p>கோவை விமான நிலையத்தில் அவர்களுக்கு உறவினர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். </p><p>ரோஜா பூக்களை கொடுத்தும், இனிப்புகளை வழங்கியும் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் நேபாளத்தில் இருந்து திரும்பியவர்களை உறவினர்கள் கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர் வடித்தனர்.</p><p>சொந்த ஊர் திரும்பியவர்கள் பதட்டத்துடனேயே இருந்தனர். அவர்கள் நேபாளத்தில் அவர்கள் சந்தித்த பெரும் துயரம் குறித்து கண்கலங்கியபடி பேசினர்.</p><h2>பிரேமா (திருப்பூர் கணியம்பூண்டி)</h2><p>நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து அறிந்து பெரும் துயரம் அடைந்தோம். நாங்கள் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியை பாதிப்புக்கு முன்னதாக ஒரு நாளைக்கு முன்பு தான் கடந்திருந்தோம். </p><p>அதனால் உயிர் தப்பினோம். பாதிப்பு நடந்த மறுநாள் தான் எங்களுக்கு விவரமே தெரியவந்தது. இதைக் கேட்டதும் மிகுந்த அதிர்ச்சி அடைந்தோம்.</p><p>ஆனால் நாங்கள் இருந்த பகுதியில் எந்த பாதிப்பும் இல்லை. தற்போது பத்திரமாக அனைவரும் ஊருக்கு திரும்பி விட்டோம்.</p><h2>தனசேகரன் (புஞ்சை புளியம்பட்டி, ஈரோடு)</h2><p>நேபாளத்தில் வெள்ளம் பாதித்த இடத்தில் இருந்து 200 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தோம். நாங்கள் வாட்ஸ்அப் குழு அமைத்து அதன் மூலம் ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்ட படி கைலாஷ் யாத்திரை மேற்கொண்டோம். </p><p>தரிசனம் முடித்துவிட்டு திரும்பும் போது தான் இந்த தகவல் கிடைத்தது. உடனே அனைவரும் பதட்டம் அடைந்தோம்.</p><p>எங்கள் உறவினர்கள் எங்களை தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டே இருந்தனர். அதன் பிறகு எங்கள் பகுதியில் எந்த பாதிப்பும் இல்லை என்பதை தெரிந்து கொண்ட பிறகு நாங்கள் பயணத்தை தொடர்ந்தோம். </p><p>நேற்று காலை தான் நேபாளத்திலிருந்து புறப்பட்டு டெல்லி வந்து சேர்ந்தோம். இதற்காக நடவடிக்கை மேற்கொண்ட மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.</p><h2>மோகனா (திருப்பூர் ஊத்துக்குளி)</h2><p>நாங்கள் அனைவரும் 18-ந் தேதி இங்கிருந்து புறப்பட்டு நேபாளம் சென்றோம். நாங்கள் சுற்றுப் பயணத்தில் இருந்தபோது இந்த தகவல் எங்களது உறவினர்கள் மூலமாக எங்களுக்கு கிடைத்தது.</p><p>உடனே அனைவரும் பதட்டம் அடைந்தோம். சம்பவம் நடந்த வெள்ள பகுதியை நாங்கள் அதற்கு முன்பு 3 நாட்களுக்கு முன்புதான் கடந்து வந்து இருந்தோம். அதன் பிறகு சாலைகள் அனைத்தும் மிகவும் மோசமடைந்து விட்டன.</p><p>ஆனாலும் நாங்கள் திட்டமிட்டபடி பத்திரமாக வந்து சேர்ந்து விட்டோம். இதற்கு தமிழக அரசும், மத்திய அரசும் உதவியாக இருந்தன. இதற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.</p><h2>சரோஜா, ரதி (சத்திய மங்கலம்)</h2><p>நாங்கள் கைலாஷ் யாத்திரைக்கு சென்று இருந்தோம். எங்களுக்கு உதவியாக நேபாளத்தைச் சேர்ந்த 7 வழிகாட்டிகள் வந்தனர்.</p><p>இந்த வெள்ள சம்பவத்தில் எங்களுக்கு வழிகாட்டியாக வந்த உதவியாளர் ஒருவரின் உடன் பிறந்த அண்ணன் ஒருவரும் வெள்ளத்தில் சிக்கி இறந்து விட்டதாக சுற்றுப்பயணத்தில் இருந்த போது தகவல் கிடைத்தது. </p><p>அந்த உதவியாளர் அவரது அண்ணனை இழந்தாலும் கடைசி வரை எங்களுடன் இருந்து வந்தார்.</p><p>நாங்கள் இருந்த பகுதி பாதிக்கப்பட்டு இருந்ததால் நைலம் வழியாக மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளோம். எங்களை சீன ராணுவம் 2 வாகனத்தில் வந்து பத்திரமாக கொண்டு வந்து விட்டனர்.</p><p>இந்த சம்பவத்தில் எவ்வளவு பேர் இறந்தனர், மாயமானார்கள் என்பது குறித்து அங்குள்ள மக்கள் பதட்டத்துடன் பேசிக் கொண்டனர். மொழி தெரியாததால் எங்களுக்கு புரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.</p><h2>நேபாளத்தில் இருந்து திரும்பிய பெற்றோரை வரவேற்க வந்த திருப்பூரைச் சேர்ந்த அஜய் என்பவர் கூறியதாவது:-</h2><p>நாங்கள் திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் வசித்து வருகிறோம். எனது பெற்றோர் மோகனா (47), சந்திரகுமார் (57) கடந்த 18-ந் தேதி திருப்பூரில் இருந்து 39 பேருடன் நேபாள் கைலாஷ் யாத்திரைக்கு சென்றனர்.</p><p> 2 வாரம் அவர்கள் அங்கு சுற்றுப்ப யணம் செய்து ஆன்மீக தரிசனம் மேற்கொண்டிருந்தனர்.</p><p>26-ந் தேதி நேபாளத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டதை அறிந்து பதட்டம் அடைந்து பெற்றோரை தொடர்பு கொண்டோம். அவர்களுடன் செல்போனை எடுத்து பேசினர். </p><p>அதன்பிறகே நாங்கள் சற்று நிதானம் ஆனோம். அவர்கள் மானசரோவர் என்ற இடத்தில் பாதுகாப்புடன் இருப்பதாகவும், சம்பவம் நடந்த போது ஏதோ நிலச்ச ரிவு ஏற்பட்டது போன்ற உணர்வை சந்தித்ததாகவும் கூறினர்.</p><p>சீனா எல்லையில் இருந்த தால் எனது பெற்றோர் உள்ளிட்ட குழுவினருக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதன் பிறகு சாலைகள் பாதிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் திட்டமிட்ட படி திரும்ப முடியவில்லை. சீன ராணுவம் எல்லையை கடக்க உதவியுள்ளனர். </p><p>அதன் பிறகு எனது பெற்றோர் மற்றும் குழுவி னர் டெல்லி வந்து கோவைக்கு விமானத்தில் வந்தனர். இன்று காலை அவர்களை நேரில் பார்த்தபிறகு தான் நிம்மதி அடைந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பேரிடருக்கு நடுவே வீறுகொண்டு நின்ற &apos;பச்சை வீடு&apos;: நேபாள வெள்ளத்தில் தப்பிய வீட்டின் உரிமையாளர் பகிர்ந்த திக்திக் நிமிஷங்கள்!</title><link>https://www.maalaimalar.com/news/world/green-house-stands-strong-amid-disaster-in-nepal-floods</link><comments>https://www.maalaimalar.com/news/world/green-house-stands-strong-amid-disaster-in-nepal-floods#comments</comments><guid isPermaLink="false">309e3213-bfbe-47d4-98fd-f70070b64259</guid><pubDate>Tue, 01 Sep 2026 08:15:09 +0000</pubDate><atom:updated>2026-09-01T08:15:09.049Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Baby Rescued,Nepal Floods,நேபாள நிலச்சரிவு,Rasuwa,ரசுவா,Nepal disaster,நேபாள வெள்ளம்,Nepal  Pets</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/xhzyczbe/ne.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Nepal floods-Green House]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/xhzyczbe/ne.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரம்மாண்டமான நவீனக் கட்டடங்கள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பல தசாப்த கால பழமையான இந்த சிறிய கட்டடம் எப்படித் தப்பியது என்பது குறித்துக் கட்டிடக் கலை வல்லுநர்கள் ஆராய்ந்து வருகின்றனர். </p><p>நேபாள நாட்டின் நுவாகோட் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, திரிசூலி ஆற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையை உடைத்துக்கொண்டு சீறிப்பாய்ந்த வெள்ள நீர், சுற்றியிருந்த பல அடுக்குக் கட்டடங்கள், வாகனங்கள் மற்றும் மக்களின் உடைமைகளை நொடிப் பொழுதில் அடித்துச் சென்றது. </p><p>பேரழிவின் கோரத்தாண்டவத்திற்கு மத்தியில், 'பிரகாஷ்' என்பவருக்குச் சொந்தமான 40 ஆண்டுகள் பழமையான <a href="https://www.maalaimalar.com/news/world/a-house-standing-like-a-pillar-amidst-the-surrounding-floodwaters-who-on-earth-is-that-engineer-a-question-sweeping-across-the-internet">பச்சை நிறச் சிறிய வீடு</a> மட்டும் சிறிதும் சேதமடையாமல் அசைக்க முடியாமல் உறுதியுடன் நின்றது. இந்த நிகழ்வு தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, உலகம் முழுவதும் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>வாழ்வி<strong>ன் கடைசி நொ</strong>டி என நினைத்தோம்</h2><p>வெள்ளம் சூழ்ந்த அச்சமூட்டும் தருணம் குறித்து ஊடகங்களிடம் பேசிய வீட்டின் உரிமையாளர் பிரகாஷ், "வெள்ள நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வீட்டின் கீழ் தளத்தை மூழ்கடித்தபோது, இதுதான் நமது வாழ்வின் கடைசி தருணம் என்று எண்ணினோம். இனி நாம் உயிரோடு பிழைக்க வாய்ப்பில்லை என்றே தோன்றியது" என்று கண்ணீர்மல்கக் கூறினார். நிலைமையின் தீவிரத்தைப் உணர்ந்த குடும்பத்தினர் உடனடியாக வீட்டின் மேல் தளத்திற்குச் சென்று, சுற்றிலும் நீர் சூழ்ந்த நிலையில் உயிருக்குப் போராடியபடி மணிக்கணக்கில் காத்துக்கொண்டிருந்தனர்.</p><h2>அழிவுக்கு நடுவே <strong>அசைக்க மு</strong>டியாத வலிமை</h2><p>சுற்றியுள்ள பிரம்மாண்டமான நவீனக் கட்டடங்கள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பல தசாப்த கால பழமையான இந்த சிறிய கட்டடம் எப்படித் தப்பியது என்பது குறித்துக் கட்டிடக் கலை வல்லுநர்கள் ஆராய்ந்து வருகின்றனர். கட்டடத்தின் உறுதியான கட்டுமானம், அதன் வடிவம் மற்றும் வெள்ள நீரின் பிரதான ஓட்டப் பாதையில் இருந்து சற்று விலகி அமைந்திருந்த புவியியல் அமைப்பு ஆகியவையே இந்த வீடு இடிந்து விழாமல் தப்பித்ததற்குக் காரணம் என அவர்கள் கணிக்கின்றனர்.</p><h2>மீட்புக் குழுவி<strong>னரின்</strong> துரித நடவடிக்கை </h2><p>வெள்ளத்தின் வேகம் சற்று குறைந்ததைத் தொடர்ந்து, தகவல் அறிந்து வந்த மீட்புக் குழுவினர் வீட்டின் மேல் தளத்தில் தவித்துக் கொண்டிருந்த பிரகாஷின் குடும்பத்தினரை பாதுகாப்பாக மீட்டு முகாம்களுக்கு அனுப்பி வைத்தனர். பேரழிவுக்கு இடையே ஒரு குடும்பம் அசாத்தியமான முறையில் உயிர்தப்பிய செய்தி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாள மக்களுக்குப் பெரும் நம்பிக்கையையும் ஆறுதலையும் அளித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரேஷன் கடைகளில் 3-ந்தேதி முதல்  மலிவு விலையில் வெங்காயம் விற்பனை: அமைச்சர் வெங்கட்ரமணன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-venkatramanan-says-onions-to-be-sold-at-subsidized-prices-in-ration-shops-starting-from-the-3rd</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-venkatramanan-says-onions-to-be-sold-at-subsidized-prices-in-ration-shops-starting-from-the-3rd#comments</comments><guid isPermaLink="false">8166eb79-70c7-48ae-b34a-ee81a6677170</guid><pubDate>Tue, 01 Sep 2026 07:54:26 +0000</pubDate><atom:updated>2026-09-01T07:54:26.514Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,Onion,வெங்காயம்,ரேஷன் கடை,TN assembly,onion price,வெங்காயம் விலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/ko6qixyq/venkatramanan.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் வெங்கட்ரமணன்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் வெங்கட்ரமணன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/ko6qixyq/venkatramanan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதற்கட்டமாக நகர்ப்புற பகுதிகளில் உள்ள 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் கொண்ட 8739 நியாய விலை கடைகளில், வரும் 3ஆம் தேதி முதல் 1 கிலோ வெங்காயம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.</strong></em> </p><p>அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை குறைப்பதற்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து உணவு பொருள் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கடரமனன்  <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">சட்டசபையில்</a> பேசியதாவது, </p><p>கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற விலை கண்காணிப்பு குழு கூட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை கட்டுப்படுத்தும் வகையில், ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆய்வுக் கூட்டத்தின் அடிப்படையில் தொடர் நடவடிக்கையாக அத்தியாவசிய பொருட்களின் விலையை தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தபப்பட்டுள்ளது. </p><p>ஈரான் போர் காரணமாக வாகன எரிவாயு விலை ஏற்றதால் போக்குவரத்து செலவு உயர்வு, அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், <a href="https://www.maalaimalar.com/topic/வெங்காயம்">வெங்காயங்கள்</a> போன்றவற்றின் விலை உயர்ந்துள்ளது. அதிக வெங்காய உற்பத்தியை கொண்ட மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் வெங்காயத்தின் வரத்து குறைந்ததன் காரணமாக வெளிச்சந்தையில் வெங்காயம் கிலோ 56 முதல் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p><p>ஏழை எளிய நடுத்தர மக்களின் நலனை கருத்தில் கொண்டு, வெங்காய விலை ஏற்றத்தை உடனடியாக கட்டுப்படுத்தும் வகையில் தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை நிலையம், தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மூலமாக முதற்கட்டமாக 1000 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு நியாயமாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p> <p>முதற்கட்டமாக நகர்ப்பகுதியில் ஒரு கிலோ வெங்காயம் 35 ரூபாய்க்கு கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள் பிரதான விற்பனை பண்டகசாலைகள் உறுப்பினர் அவர்களுக்கு அமுதம் அங்காடிகள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் அமைந்துள்ள நியாய விலை கடைகள் மூலமாக விற்பனை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக நகர்ப்புற பகுதிகளில் உள்ள 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் கொண்ட 8739 நியாய விலை கடைகளில், வரும் 3ஆம் தேதி முதல் 1 கிலோ வெங்காயம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>நேபாளப் பெருவெள்ளப் பேரழிவு: சீறிப்பாய்ந்த வெள்ளத்தில் இருந்து ஒன்றரை வயதுக் குழந்தை மீட்பு</title><link>https://www.maalaimalar.com/news/topnews/nepal-flood-disaster-one-and-half-year-old-child-rescued</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/nepal-flood-disaster-one-and-half-year-old-child-rescued#comments</comments><guid isPermaLink="false">3f34c5d8-432e-4a65-9230-473f6b05c9d2</guid><pubDate>Tue, 01 Sep 2026 07:39:11 +0000</pubDate><atom:updated>2026-09-01T07:39:11.162Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Baby Rescued,Nepal Floods,நேபாள நிலச்சரிவு,Rasuwa,ரசுவா,Nepal disaster,நேபாள வெள்ளம்,Nepal  Pets</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/esjntok3/nepal.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ baby rescued from raging floodwaters]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/esjntok3/nepal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>உலகம் (World)</category><content:encoded><![CDATA[ <p>பேரழிவிற்கு மத்தியிலும் நெகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்திய இந்த அன்பான தருணம், சமூக வலைதளங்களில் வெளியாகி லட்சக்கணக்கான மக்களின் கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.</p><p>நேபாள நாட்டின் பல்வேறு மாவட்டங்களை உலுக்கி வரும் திடீர் வெள்ளப்பெருக்கிற்கு இடையே, ரசுவா பகுதியில் வெள்ளப் பாதிப்புகளில் சிக்கியிருந்த ஒன்றரை வயதுப் பச்சிளம் குழந்தையை மீட்புப் படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். சீறிப்பாய்ந்து வந்த வெள்ளத்திலும் சேற்றுச் சகதியிலும் உயிருக்குப் போராடிய குழந்தையை மீட்புப் படையினர் மீட்டு, தாங்கே பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமிற்கு பத்திரமாக அழைத்து வந்தனர்.</p><h2>கையில் <strong>ஏந்தி தாலாட்டிய</strong> பெண் ராணுவத்தினர்</h2><p>பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தையை, அங்குப் பாதுகாப்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த பெண் ராணுவ வீராங்கனை ஒருவர் கையில் ஏந்தி, தோளில் சாய்த்துத் தாலாட்டி ஆறுதல் அளித்தார். பேரழிவிற்கு மத்தியிலும் நெகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்திய இந்த அன்பான தருணம், சமூக வலைதளங்களில் வெளியாகி லட்சக்கணக்கான மக்களின் கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.</p><h2>தீ<strong>விரமடையும் மீட்புப் பணி</strong>கள்</h2><p>திடீர் <a href="https://www.maalaimalar.com/news/world/waiting-amid-ruins-pets-grieve-nepal-floods">பனிப்பாறைச் சரிவு</a> மற்றும் ஆற்று வெள்ளப்பெருக்கு காரணமாக ரசுவா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சாலைகள், பாலங்கள் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து மற்றும் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், நேபாள ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையினர் ஹெலிகாப்டர்கள் மற்றும் அதிநவீனக் கருவிகள் மூலம் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.</p><h2>மருத்துவச் <strong>சிகிச்சை</strong></h2><p>மீட்கப்படும் குழந்தைகள், முதியோர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவக் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டு முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. உறவினர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினரைக் கண்டறிந்து, மீட்கப்பட்ட குழந்தைகளை அவர்களிடம் ஒப்படைப்பதற்கான முயற்சிகளையும் அதிகாரிகள் ஒருங்கிணைத்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>காமராஜருக்கு மெரினாவில் சமாதி அமைக்க இடம் கொடுக்கவில்லை- காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு தங்கம் தென்னரசு விளக்கம் 
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thangam-thennarasu-clarifies-congress-allegation-land-not-provided-for-kamarajar-memorial-at-marina</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thangam-thennarasu-clarifies-congress-allegation-land-not-provided-for-kamarajar-memorial-at-marina#comments</comments><guid isPermaLink="false">c97ac038-192e-41be-93ac-9efdca842916</guid><pubDate>Tue, 01 Sep 2026 07:34:08 +0000</pubDate><atom:updated>2026-09-01T07:34:08.153Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தங்கம் தென்னரசு,தமிழக சட்டசபை,Thangam Thennarasu,காமராஜர்,TN assembly,Tharahai Cuthbert,தாரகை கத்பட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/vbrcm9xf/thangamthennarasu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Thangam Thennarasu - Tharahai Cuthbert]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/vbrcm9xf/thangamthennarasu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>தாரகை கத்பட்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadhav-arjuna-says-our-dream-is-to-build-a-sports-stadium-like-nehru-stadium-in-every-district">சட்டசபையில்</a> காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D">தாரகை கத்பட்</a> பேசுகையில், திமுக ஆட்சிக் காலத்தில் காமராஜருக்கு மெரினா கடற்கரையில் உடல் நல்லடக்கம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதாக கூறினார். இதற்கு முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்து பேசியதாவது:</p> <h2>தங்கம் தென்னரசு</h2><p>வரலாற்றில் இந்த பேரவையின் பிழையான செய்திகள் பதிவாகி கூடாது என்ற நோக்கத்தோடு விளக்கம் அளிக்கிறேன்.</p><p>1975-ம் ஆண்டு காமராஜர் இயற்கை எழுதினார். அவர் மரணமடைந்த செய்தியை கேட்டவுடன் அன்றைய முதலமைச்சராக இருந்த கலைஞர் அவருக்கு உரிய மரியாதை செலுத்தினார்.</p><h2>காமராஜர்</h2><p>இங்கு இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அவரது உடலை தேனாம்பேட்டையில் இருக்கக்கூடிய காமராஜர் இல்லத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்று கூறினார்கள். காமராஜர் ஒரு தேசிய தலைவர் அவருக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும்.</p> <h2>ராஜாஜி மண்டபம்</h2><p>அவரது உடலை ராஜாஜி மண்டபத்திற்கு கொண்டு வந்து உரிய அரசு மரியாதை அளிக்கப்பட்டது. கிண்டியில் காந்தி மண்டபத்தில் அருகில் அவருக்கும் நினைவு இல்லம் அமைக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் ஆக இருந்தவர் இதனை பாராட்டினார்.</p> <h2>ராஜா ராம் நாயுடு</h2><p>பெருந்தலைவர் காமராஜர் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழவில்லை. அப்பொழுதே உறுப்பினர் ராஜா ராம் நாயுடு மேலவையில் பேசியதை அவையில் மேற்கோள் காட்டி</p><h2>கலைஞர்</h2><p>காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்கள் தான் அந்த இடத்தை கேட்டார்கள். ஆகையால் கிண்டியில் அவருக்கு இடம் அளிக்கப்பட்டது. காமராஜர் சமாதி மேற்கொள்ள அப்போதைய முதலமைச்சர் கலைஞர் இரவெல்லாம் தூங்காமல் அந்த பணியை மேற்கொண்டார் என ராஜாராம் நாயுடு சட்ட மேல் அவையில் பேசியதே சாட்சி. திமுக ஆட்சியில் காமராஜருக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டது.</p> <h2>சபாநாயகர்:-</h2><p>அந்த காலத்தில் கட்சி மாறுபாடுகளைக் கடந்து அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டார்கள்.</p><h2>காங்கிரஸ் தாரகை கத்பட்:-</h2><p>நான் பேசியது மெரினாவில் கேட்ட இடம் கிடைக்கவில்லை என்றுதான், சமாதி மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் அவர்கள் மேற்கொண்டார்கள்.</p><p>இவ்வாறு விவாதம் நடந்தது.</p> ]]></content:encoded></item><item><title>விநாயகர் சிலை 10 அடிக்கு மேல் கூடாது - காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ganesh-chaturthi-idol-size-limit-kanchipuram-collector-sneha</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ganesh-chaturthi-idol-size-limit-kanchipuram-collector-sneha#comments</comments><guid isPermaLink="false">d5652352-a818-44a3-b9a2-c4359c159861</guid><pubDate>Tue, 01 Sep 2026 07:34:02 +0000</pubDate><atom:updated>2026-09-01T07:34:02.866Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விநாயகர் சதுர்த்தி,Tamil Nadu Pollution Control Board,Vinayagar Chaturthi 2026,Kanchipuram Collector Sneha,கலெக்டர் சினேகா,மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/hultb4s9/Vinayagar-Chaturthi-2026" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vinayagar Chaturthi 2026 ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/hultb4s9/Vinayagar-Chaturthi-2026?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">விநாயகர் சதுர்த்தி </a>விழா வருகிற 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி பொதுஇடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடுகள் நடத்தி நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.</p><p>இந்தநிலையில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">காஞ்சீபுரம் </a>மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடு பாதுகாப்பு குறித்து அரசு அலுவலர்கள் மற்றும் சிலை அமைப்பாளர்களுடன் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D">மாவட்ட கலெக்டர்</a> சினேகா தலைமையில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.</p><h2>கூட்டத்தில் கலெக்டர் சினேகா கூறியதாவது,</h2><p>எதிர்வரும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு விநாயகர் சிலையை நிறுவ விரும்பும் எந்த ஒரு அமைப்பாளரும் சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்கள், தமிழ்நாடு மின்சார வாரியம், தீயணைப்பு துறை போன்ற அரசு அலுவலகங்களின் தடையின்மைச் சான்று பெற்று சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளரிடம் முன்கூட்டியே சமர்ப்பித்து சிலை நிறுவுவதற்கான அனுமதியை சிலை அமைப்பாளர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்.</p><h2>சுற்றுச்சூழல் பாதுகாப்பு</h2><p>மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விதித்துள்ள விதிகளின்படி சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத சிலைகளும், சிலைகளுக்கு வண்ணங்கள் பயன்படுத்துவதையும் ரசாயனங்கள் இல்லாத வகையில் சிலைகள் நிறுவுவதை உறுதி செய்ய வேண்டும்.</p><p> சிலைகள் அடித்தளம் மற்றும் மேடை உட்பட 10 அடிக்கு மிகாமல் நிறுவுவதை உறுதி செய்ய வேண்டும்.</p><h2>பாதுகாப்பு உறுதி</h2><p>கூடாரங்கள் தீப்பற்றக் கூடிய வகையில் இல்லாத வகையில் அமைப்பதை உறுதி செய்ய வேண்டும். மத வழிபாட்டுத்தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிலையங்களுக்கு அருகில் சிலைகள் வைப்பதை தவிர்க்க வேண்டும்.</p><p>பூஜையின் போது ஒலி பெருக்கி அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். சிலையின் பாதுகாப்பிற்காக 24 மணி நேரமும் தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும். போதிய மின் வசதிகள் ஏற்படுத்தப் பட வேண்டும்.</p><h2>நல்லிணக்கம் அவசியம்</h2><p>அரசியல் கட்சிகள் வகுப்புவாத தலைவர்களுக்கு ஆதரவாக பேனர்கள் போர்டுகள் அமைக்கக் கூடாது. பிற மதத்தினரின் உணர்வுகளை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். </p><p>பொது அமைதி, பொது பாதுகாப்பு மத நல்லிணக்கத்தை பேணுவதற்காக வருவாய் துறை, காவல் துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வகுத்துள்ள நிபந்தனைகளை சிலை அமைப்பாளர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.</p><h2>கரைப்பு கட்டுப்பாடு</h2><p>மாவட்டத்திலுள்ள 5 வட்டங்களிலும் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரால் தேர்வு செய்யப்படும் இடங்களில் மட்டுமே சிலைகள் கரைக்கப்பட வேண்டும்.</p><p>சிலைகள் கொண்டு செல்லும் வாகனங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் சிலைகள் கரைக்கும் இடங்களில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை துறை சார்ந்த அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.</p><h2>சுத்தம் வலியுறுத்தல்</h2><p>சிலைகள் கரைக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள் ஆறுகள், ஏரிகள், கடற்கரைகள் போன்றவற்றின் கரையோரங்களில் உள்ள சிலைகளை கரைக்கும் இடங்களில் எஞ்சியிருக்கும் பொருள்களை உள்ளாட்சி அமைப்புகள் சேகரித்து அகற்ற வேண்டும். </p><p>சிலைகள் கரைக்கும் நீரின் தரம் மதிப்பீட்டை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கரைப்பதற்கு முன்னும் கரைத்த பின்பும் தரத்தினை ஆய்வு செய்ய வேண்டும்.</p><h2>அனுமதி கட்டாயம்</h2><p>சிலை அமைப்பாளர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களை துறை சார்ந்த அலுவலர்கள் தனி பதிவேடு ஒன்றை பராமரிக்க வேண்டும். </p><p>கள ஆய்வு மேற்கொண்டு அரசின் உரிய விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். </p><p>பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கான அனுமதி வழங்கும் அதிகாரம் சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.</p><p>அவர்களிடம் உரிய அனுமதி பெற்ற பின்னரே விநாயகர் சிலைகளை நிறுவ வேண்டும் அனுமதியின்றி சிலைகள் வைக்கக் கூடாது என்று கூறினார்.</p><h2>அதிகாரிகள் பங்கேற்பு</h2><p>கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திவ்யஸ்ரீ, ஸ்ரீபெரும்புதூர் சார் ஆட்சியர் நல்லசிவன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை, காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் (பொ) பாலகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் (பொது) ரெங்கநாதன் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் அமைச்சர்கள் அறிவித்த புதிய அறிவிப்புகள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/new-announcements-made-by-ministers-in-the-legislative-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/new-announcements-made-by-ministers-in-the-legislative-assembly#comments</comments><guid isPermaLink="false">9b5d1de7-0a74-4e51-bf76-7cd82efd4074</guid><pubDate>Tue, 01 Sep 2026 07:28:42 +0000</pubDate><atom:updated>2026-09-01T07:28:42.607Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/661f6dfm/minister.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர்கள் விஜய் பாலாஜி- முகமது பர்வேஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர்கள் விஜய் பாலாஜி- முகமது பர்வேஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/661f6dfm/minister.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்நாடு மாநில பனைவெல்லம் மற்றும் தும்பு விற்பனை இணையத்திற்குச் கூட்டுறவு சொந்தமான இடங்களில் 10 விற்பனை அங்காடிகள் ரூபாய் 80 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.</strong></em></p><p>கதர் மற்றும் கிராம தொழில்கள் துறை அமைச்சர் விஜய் பாலாஜி அறிவித்த  <a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">புதிய அறிவிப்புகள்</a> :-</p><p>1) திருச்சி, சேலம் மற்றும் தஞ்சாவூர் கதர் அங்காடிகள் ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்படும்.</p><p>கதர் அங்காடிகள் "கதர் வாரியத்தின் முகம்" என்பதை கருத்தில் கொண்டு அவற்றை நவீனப்படுத்துவது அவசியமாகும். அதன்படி ஏற்கனவே திருச்சி, சேலம் மற்றும் தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் இயங்கும் கதரங்காடிகள் புதிய வடிவமைப்பு மற்றும் உட்புற அலங்காரங்களுடன் கூடிய நவீன அனுபவ அங்காடியாக ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்படும்.</p><p>2) கதர் மற்றும் பட்டு உற்பத்திப் பணிகளில் ஈடுபட்டுள்ள நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களுக்கான நலநிதி பங்குத் தொகை 12 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாக உயர்த்தப்படும்.</p><p>3) திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனா மரத்தூரில் ஜவ்வாது மலைத்தேன் அலகு ரூபாய் 25 இலட்சம் மதிப்பீட்டில் மத்திய கதர் ஆணை குழு உதவியுடன் அமைக்கப்படும்.</p><p>4) திருநெல்வேலி மாவட்ட பனை பொருட்கள் விற்பனை கூட்டுறவு சம்மேளனத்தின் தூத்துக்குடி தலைமை அலுவலகக் கட்டடம் மற்றும் வள்ளியூர் பனை பொருட்கள் இருப்பு கிடங்கு ஆகியவை ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.</p><p>5) தமிழ்நாடு மாநில பனைவெல்லம் மற்றும் தும்பு விற்பனை இணையத்திற்குச் கூட்டுறவு சொந்தமான இடங்களில் 10 விற்பனை அங்காடிகள் ரூபாய் 80 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.</p><h2><strong>தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை  அமைச்சர் முகமது பர்வேஸ்  புதிய அறிவிப்புகள்...</strong></h2><p>1) தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல பதிவு செய்துள்ள வாரியத்தில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய சிறப்பு கட்டுமானத் திறன் பயிற்சி வழங்க 5 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 76 கோடியே 46 இலட்சம் ரூபாய் செலவில் "கட்டுமானத் தொழில் திறன்மிகு மையங்கள்" நிறுவப்படும்.</p><p>2) தமிழ்நாடு தொழிலாளர்களின் கட்டுமானத் திறமையை ஊக்குவிக்கும் வகையில், மாநில மற்றும் மாவட்ட அளவில் பல்வேறு கட்டுமானத் தொழிற்பிரிவுகளில் போட்டிகள் நடத்தி முதல் மூன்று இடங்களை பெறும் வெற்றியாளர்களுக்கு ஆண்டுதோறும் "முதலமைச்சரின் கட்டுமானத் தொழிலாளர் வெற்றி விருதுகள்" பரிசுத்தொகையுடன் வழங்கப்படும்.</p><p>3) தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிக அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பினை பெறுவதற்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் மூலம் மாவட்டந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்துவதற்கான நிதியினை 3 கோடியே 4 இலட்சம் ரூபாயிலிருந்து 3 கோடியே 72 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.</p><p>4) பெருநகரங்ளுக்கு வேலை தேடி வரும் கட்டுமானத் தொழிலாளர்கள் பாதுகாப்பான முறையில் தங்குவதற்காக அடிப்படை வசதிகளுடன் கூடிய இடை நேர தங்குமிடங்கள் சென்னை மற்றும் கோயம்புத்தூர் பெருநகரங்களில் 14 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.</p><p>5) பதிவு பெற்ற 1000 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு சர்வதேச தரத்திலான சிறப்பு திறன் பயிற்சி அளித்து, வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை பெற வழிவகை செய்யும் பொருட்டு "அயலகம் செல்லும் தமிழ்நாடு கட்டுமான வெற்றி கரங்கள்" திட்டம் 15 கோடியே 6 இலட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.</p><p>6) தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் (GIG) தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்றுள்ள கிக் தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் நோக்கில் 10 இலட்சம் ரூபாய்க்கான விபத்துக் காப்பீடு வழங்கப்படும்.</p><p>7) தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட 1000 தொழிலாளர்களுக்கு, இ-பைக் வாங்குவதற்கு வங்கி மூலம் பெறப்படும் கடனுக்கான வட்டியை அரசே ஏற்கும்.</p><p>8) தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் தானியங்கி மோட்டார் மற்றும் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களில், 1000 தொழிலாளர்களுக்கு புதிதாக எலக்ட்ரிக் ஆட்டோ வாங்கிட 50 சதவீத மானியத் தொகை அதிகபட்சமாக 75 ஆயிரம் ரூபாய் வரையிலும் மற்றும் 1000 தொழிலாளர்களுக்கு பயன்பாட்டில் இருக்கும் ஆட்டோக்களை சி.என்.ஜி முறைக்கு மாற்றுவதற்கு 50 சதவீத மானியத் தொகை அதிகபட்சமாக 30 ஆயிரம் ரூபாய் வரையிலும் வழங்கப்படும்.</p><p>9) கட்டுமானத் தொழிலாளர்களின் திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்பினை அதிகரிக்கும் வகையில், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு கட்டுமான வேலை, தச்சு வேலை, மின்பணியாளர் வேலை, பிளம்பர், வர்ணம் பூசுதல் வேலை உள்ளிட்ட பல தொழில் இனங்களில், நாள் ஒன்றுக்கு 800 ரூபாய் ஊதிய இழப்பீட்டுத் தொகையுடன் கூடிய ஏழு நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி,50,000 தொழிலாளர்களுக்கு 48 கோடியே 26 இலட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.</p><p>10) கட்டுமானத்தொழிலாளர்களுக்கு செயல்முறை பயிற்சி மூலம் பாதுகாப்பு விழிப்புணர்வினை மேம்படுத்தி விபத்துக்களை தடுக்கும் பொருட்டு, பாதுகாப்புமாதிரிகள் மற்றும் சுயபாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய இரண்டு நடமாடும் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி மையங்கள் 2 கோடியே 10 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.</p><p>11) தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தின் சேவைகளை திறம்பட வழங்கும் பொருட்டு இவ்வாரியத்தின் மறுசீரமைப்பு இணையதளம் செய்யப்படும்.</p><p>12) ஆசிரியர் தேர்வு வாரியம்  நடத்தும் முதுகலை ஆசிரியர் தேர்வு மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வர்களுக்கு மென்பாடக் குறிப்புகள்  வழங்குவதற்காக, மெய்நிகர் கற்றல் வலைதளத்திற்கான வருடாந்திர நிதி ஒதுக்கீடு 15 68 இலட்சத்து ஆயிரம் ரூபாயிலிருந்து 25 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.</p><p>13) கட்டுமானத் தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், அவர்கள் அன்றாடப் பணி தொடர்பாக அதிக அளவில் காலையில் கூடி காத்திருக்கும் இடங்களில், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் வாரியத்தின் இணையதள சேவைகளை வழங்கும் வகையில் 50 வசதி மையங்கள் அமைக்கப்படும்.</p><p>14) அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பணிபுரியும் பயிற்றுநர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் 1 கோடி ரூபாய் செலவில் உயர் தொழில்நுட்பப் பயிற்சி வழங்கப்படும்.</p><p>15) "ஐடிஐ வெளிநாட்டு வேலைவாய்ப்பு வெற்றி திட்டம்" மூலம் அரசு தொழிற் பயிற்சி நிலைய மாணவர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பை உறுதி செய்ய 7 கோடியே 33 இலட்சம் ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த பயிற்சி வழங்கப்படும்.</p>]]></content:encoded></item><item><title>&apos;பயங்கரவாதம் யாருக்கும் உத்தி சார்ந்த சொத்து அல்ல&apos;: பிக்பேக்கில் பாகிஸ்தான் பிரதமர் முன்பாக பிரதமர் மோடி பேச்சு!</title><link>https://www.maalaimalar.com/news/national/terrorism-is-not-anyones-strategic-asset-pm-modi-addresses-sco-summit-in-bishkek</link><comments>https://www.maalaimalar.com/news/national/terrorism-is-not-anyones-strategic-asset-pm-modi-addresses-sco-summit-in-bishkek#comments</comments><guid isPermaLink="false">be6194f1-a83e-4b9d-b329-2e84845719c2</guid><pubDate>Tue, 01 Sep 2026 07:22:30 +0000</pubDate><atom:updated>2026-09-01T07:22:30.524Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Pakistan,பயங்கரவாதம்,Terrorism,shehbaz sharif,ஷாங்காய் உச்சி மாநாடு,BRICS Summit,pm modi,பிரதமர் மோடி,கிர்கிஸ்தான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/k5o83dpy/mooo.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/k5o83dpy/mooo.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பைப் பேண அனைத்து உறுப்பு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.</p><p>கிர்கிஸ்தான் நாட்டின் பிக்பேக் நகரில் நடைபெற்று வரும் 26-வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில் <a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-instagram-reel-7-8-percent-gdp-growth-countering-rahul-gandhi-claims">பிரதமர் நரேந்திர மோடி</a> கலந்துகொண்டு உரையாற்றினார். பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் மற்றும் உலகத் தலைவர்கள் முன்னிலையில் உரையாற்றிய பிரதமர், பயங்கரவாதத்திற்கு எதிராக ஒட்டுமொத்த சர்வதேச சமூகமும் ஒரே குரலில் பேச வேண்டும் என்று வலியுறுத்தினார். </p><p>பயங்கரவாத விவகாரத்தில் எந்தவொரு நாட்டிற்கும் இரட்டை நிலைப்பாடு இருக்கக் கூடாது என்றும், இந்த அச்சுறுத்தலை முற்றிலுமாக ஒழிக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.</p><h2>கடுமை<strong>யான எச்சரிக்கை</strong></h2><p>பயங்கரவாதத்தைக் கொள்கை அளவிலான ஒரு கருவியாகப் பயன்படுத்தும் நாடுகளுக்கும், பயங்கரவாதிகளுக்குப் புகலிடமும் ஆதரவும் அளிக்கும் அமைப்புகளுக்கும் உலக நாடுகள் தெளிவான செய்தியைச் சொல்ல வேண்டும் என்று பிரதமர் கூறினார். பயங்கரவாதம் என்பது எந்தவொரு நாட்டிற்கும் உத்தி சார்ந்த சொத்தாக மாற முடியாது என்பதை சுட்டிக்காட்டிய அவர், பயங்கரவாத கட்டமைப்புகளை ஒட்டுமொத்தமாகத் தகர்க்க வேண்டியது தற்போதைய காலகட்டத்தின் அவசரத் தேவை என்று குறிப்பிட்டார்.</p><h2>அமைதியை மு<strong>ன்னிறுத்திய பே</strong>ச்சு</h2><p>பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பைப் பேண அனைத்து உறுப்பு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். சர்வதேச அளவில் நிலவும் சவால்களுக்கு மத்தியிலும், அமைதியையும் வளர்ச்சியையும் முன்னெடுத்துச் செல்ல உறுதியான கொள்கை முடிவுகள் அவசியம் என்பதை இந்த உச்சிமாநாட்டு உரையின் மூலம் இந்தியா மீண்டும் நிலைநாட்டியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் பதிலளிக்க திணறிய அமைச்சர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-jagadeeshwari-struggled-to-answer-in-the-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-jagadeeshwari-struggled-to-answer-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">6b77c1e5-0a68-4ebd-806a-8f5284a59bf6</guid><pubDate>Tue, 01 Sep 2026 07:17:35 +0000</pubDate><atom:updated>2026-09-01T07:17:35.465Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,அமைச்சர் ஜெகதீஸ்வரி,Minister Jagadeeshwari</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/jlf6tp17/minisgerjegadeeshwari.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் ஜெகதீஸ்வரி]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ஜெகதீஸ்வரி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/jlf6tp17/minisgerjegadeeshwari.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>எல்லா கேள்விகளுக்கும் முதலமைச்சரின் ஆலோசனைக்கு பின்பு நடவடிக்கை எடுக்கப்படும் என ஒரே பதிலை கூறி  சமாளித்தார்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபையில்</a> இன்று கேள்வி நேரத்தின் போது விளையாட்டுத்துறை சம்பந்தமாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா 23 கேள்விகளுக்கு சளைக்காமல் தொடர்ச்சியாக பதில் அளித்தார்.  </p><p>அதன் பிறகு பாமக எம்.எல்.ஏ. சௌமியா அன்புமணி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் ஜெகதீஸ்வரியிடம் கேள்வி எழுப்பினார். அவர் கேட்ட கேள்விக்கு அமைச்சர்  நேரடியான பதில் அளிக்காமல் தன்னிடம் இருந்த ஒரு குறிப்பை பார்த்து  பதிலை வாசிக்க ஆரம்பித்தார். </p><p>தொடர்ந்து துணை கேள்விகள் கேட்கும் போதும் அதே பதிலை மீண்டும் கூற ஆரம்பித்தார்.</p><p>அப்போது அருகில் இருந்த அமைச்சர்கள் காந்திராஜ், வினோத்  மற்றும் முன்னிருக்கையில் இருந்த அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா அவரிடம் சில  ஆலோசனை கூறினர்.</p><p>இதையடுத்து அவர் எல்லா கேள்விகளுக்கும் முதலமைச்சரின் ஆலோசனைக்கு பின்பு நடவடிக்கை எடுக்கப்படும் என ஒரே பதிலை கூறி  சமாளித்தார்.</p>]]></content:encoded></item><item><title>கள்ளக்காதலை கைவிட மறுப்பு- விஷம் வைத்து கொலை... ரம்பத்தால் உடல் துண்டு துண்டாக வெட்டு! அதிர வைத்த கூடுவாஞ்சேரி கொலை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/guduvancherry-woman-murder-case-full-details</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/guduvancherry-woman-murder-case-full-details#comments</comments><guid isPermaLink="false">8a7519c4-f376-41ac-a83e-92cb76fc7f27</guid><pubDate>Tue, 01 Sep 2026 06:58:35 +0000</pubDate><atom:updated>2026-09-01T06:58:35.576Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Police Investigation,போலீசார் விசாரணை,affair,தம்பதி கைது,Couple Arrest,கள்ளக்காதல்,Guduvancherry Woman Murder,கூடுவாஞ்சேரி பெண் கொலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/4rrspo75/guduvancherry.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மணிப்பூரில் கைதான தம்பதியையும் அம்மாநில போலீசார் ஏ.கே.47 துப்பாக்கியுடன் நிற்பதையும் படத்தில் காணலாம்.]]></media:title><media:description type="html"><![CDATA[ மணிப்பூரில் கைதான தம்பதியையும் அம்மாநில போலீசார் ஏ.கே.47 துப்பாக்கியுடன் நிற்பதையும் படத்தில் காணலாம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/4rrspo75/guduvancherry.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பெண்ணை கொலை செய்து சூட்கேசில் அடைத்து ரெயிலில் அனுப்பி வைத்ததுடன் உடல் சதையையும் தனியாக துண்டித்தன் மூலம் நிச்சயம் நம்மை போலீசார் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்றே எண்ணி இருந்துள்ளனர். ஆனால் கூடுவாஞ்சேரி போலீசார் அதிரடியாக விசாரணை நடத்தி துப்பு துலக்கி கொலையாளிகள் இருவரையும் கைது செய்து சாதித்து காட்டி இருக்கிறார்கள்.</strong></em></p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/கூடுவாஞ்சேரி-பெண்-கொலை">கூடுவாஞ்சேரி</a> மசூதி தெருவில் ஒடிசாவை சேர்ந்த ஹயாத் நிஷா என்ற பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</p><p>கள்ளக்காதல் விவகாரம் காரணமாக அசாமை  சேர்ந்த ராகுல் அவரது  மனைவி பகவதி மாஜி ஆகியோர் இந்த கொடூர கொலையை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.</p><h2><strong>ரெயிலில்</strong></h2><p>கடந்த மாதம் ஹயாத் நிஷாவை கூடுவாஞ்சேரியில் உள்ள வீட்டில்  வைத்து கொலை செய்த பிறகு உடலை துண்டு துண்டாக வெட்டியதுடன் தலையையும் துண்டித்து அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைத்து சூட்கேசில் அடைத்து சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஆக்ராவுக்கு அனுப்பி வைத்ததும் தெரிய வந்தது.</p><p>இது தொடர்பாக ஆக்ரா போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்திய நிலையில் கூடுவாஞ்சேரி போலீசார் கொலையாளிகள் இருவரையும் கைது செய்ய அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.</p><h2><strong>மணிப்பூரில் கைது</strong></h2><p>இதை தொடர்ந்து ராகுல், பகவதி மாஜி இருவரையும் மணிப்பூரில் வைத்து போலீசார் கைது செய்தனர். இருவரும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு அவர்களிடம் அதிரடி விசாரணை நடத்தப்பட்டது.</p><p>போலீஸ் விசாரணையில் இந்த கொலை தொடர்பான பரபரப்பான புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு:-</p><p>கொலையுண்ட ஹயாத் நிஷாவுக்கு முறைப்படி ஒடிசா மாநிலத்தில் பெற்றோர்கள் பார்த்து வைத்த மாப்பிள்ளையுடன் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஹயாத் நிஷா அவரை பிரிந்துள்ளார்.</p><p>இதன் பிறகு தான் அதே ஊரைச் சேர்ந்த வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர் ஒடிசாவில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். 2-வது கணவருடன் ஒன்றாக ஒடிசாவில் குடும்பம் நடத்திய நிலையில் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஹயாத் நிஷா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்துள்ளார்.</p><h2><strong>சென்னையில் காதல்</strong></h2><p>இதன் பின்னர் கூடுவாஞ்சேரிக்கு வந்து தனது 19 வயது மகனுடன் தங்கி இருந்துள்ளார். மகன் ஏ.சி. மெக்கானிக்காக தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.</p><p>ஹயாத் நிஷாவும் அங்குள்ள நிறுவனம் ஒன்றில் வேலை செய்துள்ளார். அப்போதுதான் 3-வதாக அவருக்கு ராகுலுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகினார்கள். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதை தொடர்ந்து சென்னையில் பல இடங்களில் இருவரும் ஒன்றாக சுற்றி திரிந்துள்ளனர்.</p><h2><strong>மனைவிக்கு தெரியாமல்</strong></h2><p>ராகுல் மனைவிக்கு தெரியாமலேயே ஹயாத் நிஷாவுடனான காதலை வளர்த்து வந்துள்ளார். இருவரும் தனிமையில் பல முறை சந்தித்து பேசியதின் விளைவாக ஹயாத் நிஷா கர்ப்பமானார்.</p><p>இதை தொடர்ந்து அவர் ராகுலிடம் தன்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு வற்புறுத்தி இருக்கிறார். ஆனால் ராகுலோ எனக்கு திருமணமாகி நான் மனைவியுடன் வசித்து வரும் நிலையில் உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று மறுத்து வந்துள்ளார். </p><h2><strong>மிரட்டல்</strong></h2><p>ஆனால் ஹயாத் நிஷா தனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு நீதான் தந்தை. எனவே அதற்கு பொறுப்பேற்று என்னை திருமணம் செய்துக்கொள்ளாவிட்டால் நடப்பதே வேறு என்று மிரட்டல் விடுத்து உள்ளார். இதனால் வேறு வழியின்றி ராகுல் தனது மனைவி பகவதி மாஜியிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். இதன் பிறகு பகவதி மாஜியும் ஹயாத் நிஷாவை கண்டித்துள்ளார். </p><p>எங்கள் குடும்ப வாழ்க்கையில் நீ தலையிடாதே. எங்களை நிம்மதியாக வாழ விடு என்று கூறியிருக்கிறார். ஆனால் ஹயாத் நிஷா அதையெல்லாம் காதில் வாங்கி கொள்ளாமல் தொடர்ந்து இருவருக்கும் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.</p><h2><strong>ஒரே வீட்டில்</strong></h2><p>உங்கள் இருவருடன் ஒரே வீட்டில் கூட நான் தங்கி கொள்கிறேன் என்று ஹயாத் நிஷா கூறியுள்ளார். இப்படி தொடர்ந்து தொந்தரவு செய்ததால் அவரை கொலை செய்ய கணவன்-மனைவி இருவரும் முடிவு செய்தனர். </p><p>இதன்படி கடந்த 3-ந்தேதி கூடுவாஞ்சேரியில் உள்ள வீட்டில் வைத்து சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்து ஹயாத் நிஷாவை ராகுலும், பகவதி மாஜியும் சேர்ந்து  சத்தம் இல்லாமல் கொலை செய்துள்ளனர். </p><h2><strong>ரம்பம்</strong></h2><p>இதற்காக கடைக்கு சென்று கத்தி, ரம்பம் ஆகியவற்றை புதிதாக வாங்கி உள்ளனர். அதை வைத்து தான் கொலை செய்த பிறகு ஹயாத் நிஷாவின் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி எடுத்து உள்ளனர். </p><p>ரம்பத்தை வைத்து தலை மற்றும் கை,கால்களை துண்டித்து சூட்கேசில் அடைத்து இருக்கிறார்கள். கத்தியை வைத்து சதை பாகங்களை அறுத்துள்ளனர். இதற்காக யூடியூப் மூலம் வீடியோ காட்சிகளை இருவரும் போட்டு பார்த்து உள்ளனர்.</p><p>சூட்கேசில் எளிதாக உடல் பாகங்களை அடைப்பதற்காகவே சதை பகுதி முழுவதையும் வெட்டி எடுத்ததுடன் தலை முடியையும் வழித்து எடுத்து இருக்கிறார்கள். இதன் பின்னர் சதை பாகங்களை பெரிய அண்டாவில் போட்டு துர்நாற்றம் வீசாமல் இருப்பதற்காக அதில் வினிகர் உள்ளிட்ட திரவங்களை ஊற்றி உள்ளனர்.</p><p>யூடியூப் பார்த்து உடல் அழுகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என வீடியோக்களை ராகுலும், பகவதி மாஜியும் தெரிந்து கொண்டனர். இப்படி பெண்ணை கொலை செய்து சூட்கேசில் அடைத்து ரெயிலில் அனுப்பி வைத்ததுடன் உடல் சதையையும் தனியாக துண்டித்தன் மூலம் நிச்சயம் நம்மை போலீசார் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்றே எண்ணி இருந்துள்ளனர்.</p><p>ஆனால் கூடுவாஞ்சேரி போலீசார் அதிரடியாக விசாரணை நடத்தி துப்பு துலக்கி கொலையாளிகள் இருவரையும் கைது செய்து சாதித்து காட்டி இருக்கிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>ஒவ்வொரு மாவட்டத்திலும் நேரு ஸ்டேடியம் போன்று விளையாட்டு கட்டமைப்புகளை உருவாக்குவதே எங்கள் கனவு - அமைச்சர் ஆதவ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadhav-arjuna-says-our-dream-is-to-build-a-sports-stadium-like-nehru-stadium-in-every-district</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadhav-arjuna-says-our-dream-is-to-build-a-sports-stadium-like-nehru-stadium-in-every-district#comments</comments><guid isPermaLink="false">227698bb-ba84-4932-93df-ee269690fdfa</guid><pubDate>Tue, 01 Sep 2026 06:57:18 +0000</pubDate><atom:updated>2026-09-01T06:57:18.784Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,ஜவகர்லால் நேரு ஸ்டேடியம்,Jawaharlal Nehru stadium,TN assembly,அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,Minister Aadhav Arjuna</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/y8oahl3i/aadhav.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister aadhav arjuna]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/y8oahl3i/aadhav.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>சட்டசபை</h2><p>சட்டசபையில் வினா–விடை நேரத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/aadhav-arjuna-says-when-the-electoral-landscape-shifts-in-2029-it-will-mark-the-day-neet-is-cast-out-of-parliament">அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</a>, விளையாட்டு கட்டமைப்புகள் தொடர்பாக சுமார் 23 எம்எல்ஏக்கள் கேட்ட துணை கேள்விகளுக்கு தொடர்ச்சியாக பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது </p> <h2>பாரம்பரிய விளையாட்டுகள்</h2><p>தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு பள்ளியை தேர்வு செய்து, அனைத்து விளையாட்டு கட்டமைப்புகளும் இடம்பெறும் வகையில் உருவாக்க பள்ளிக்கல்வித்துறையுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>கபடி உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளை மாநில அளவிலான போட்டிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.</p> <h2>விளையாட்டு வீரர்கள்</h2><p>கிராமப்புறங்களில் மைதானங்களில் மண் தரையில் விளையாடுவதால் மாணவ மாணவிகளுக்கு காயங்கள் ஏற்படுவதைத் தடுக்க, மேட் அமைத்து விளையாடும் வகையில் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.</p><p>நானும் டெல்டா பகுதியைச் சேர்ந்தவன் காவிரியில் வளர்ந்தவன். டெல்டா பகுதிகளில் இருந்து அதிகளவில் வேகமாக ஓடக்கூடிய வீரர்கள் உருவாகின்றனர்.</p> <h2>கபடிக்கு சிறப்பு ஸ்டேடியம்</h2><p>தூத்துக்குடி, நாகப்பட்டினம் பகுதிகளில் நீச்சல் வீரர்களும், தென் மாவட்டங்களில் கபடி வீரர்களும் அதிகளவில் உள்ளனர். கபடிக்கு சிறப்பு ஸ்டேடியம் உருவாக்கப்படும் </p><h2>நேரு ஸ்டேடியம்</h2><p>ஒவ்வொரு மாவட்டத்திலும் சென்னை நேரு ஸ்டேடியம் போன்று விளையாட்டு கட்டமைப்புகளை உருவாக்குவதே தனது கனவு. மற்ற மாவட்டங்களில் சர்வதேச தரத்திலான விளையாட்டு விடுதிகள் அமைக்கப்பட்டால் சிறப்பாக இருக்கும் என அரசு கருதுகிறது . எதிர்காலத்தில் 36 ஆயிரம் பேர் அந்தந்த மாவட்டங்களிலேயே தங்கி பயிற்சி பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.</p> <p>நன்னிலம் பகுதியில் விளையாட்டுகளை மேம்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் காமராஜ் கூறினார் நன்னிலம் பகுதியில் இருந்து ஒரு ஒலிம்பிக் வீராங்கனை உருவாகும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>234 தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைக்க கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. ஆனால் ரூ.3 கோடியில் மினி ஸ்டேடியம் அமைக்க முடியாது. குறைந்தபட்சம் ரூ.10 கோடி முதல் ரூ.12 கோடி வரை கூடுதல் நிதி ஒதுக்கினால் தான் முழுமையான வசதிகளை செய்து கொடுக்க முடியும் </p> <p>ஆனாலும் சட்டமன்ற உறுப்பினர்களிடம் நிதி கேட்காமல் மினி ஸ்டேடியம் திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்து வருகிறோம்.</p><p>சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியை பள்ளிகளில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த பயன்படுத்தலாம். கல்வராயன் மலை, உதகை, குன்னூர் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் விளையாட்டுக்கான சிறப்பு நிகழ்வுகள் போதிய அளவில் நடைபெறவில்லை.</p> <h2>விளையாட்டு அரங்கம்</h2><p> இப்பகுதிகளில் மதுப்பழக்கம் அதிகமாக உள்ள நிலையில், விளையாட்டை மலைவாழ் மக்களிடம் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p> ஒவ்வொரு மாவட்டத்திலும் அமையும் விளையாட்டு அரங்கில் நீச்சல் குளம், ஜிம், ஓடுதளம் உருவாக்கும் வகையில் அரசின் செயல்பாடு இருக்கும் என்றார்.</p> ]]></content:encoded></item><item><title>இடிபாடுகளின் முன் தொடரும் காத்திருப்பு: நேபாள வெள்ளத்தில் குடும்பங்களை இழந்து தவிக்கும் செல்லப்பிராணிகள்!</title><link>https://www.maalaimalar.com/news/world/waiting-amid-ruins-pets-grieve-nepal-floods</link><comments>https://www.maalaimalar.com/news/world/waiting-amid-ruins-pets-grieve-nepal-floods#comments</comments><guid isPermaLink="false">e94d905a-bd90-4756-8b84-f13493a5edb9</guid><pubDate>Tue, 01 Sep 2026 06:49:26 +0000</pubDate><atom:updated>2026-09-01T06:49:26.520Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>செல்லப்பிராணிகள்,Nepal Floods,நேபாள நிலச்சரிவு,Nepal disaster,நேபாள வெள்ளம்,Nepal  Pets</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/8wltddvf/pets.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nepal  Pets    ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/8wltddvf/pets.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெருவெள்ளத்தால் அடித்து வரப்பட்ட தடிமனான சேற்றுச் சகதிக்குள் புதைந்து உயிருக்குப் போராடிய பல நாய்களை, உள்ளூர் மக்களும் மீட்புக் குழுவினரும் தீவிரமாகப் போராடி உயிருடன் மீட்டு வருகின்றனர். </p><p>நேபாள நாட்டில் பெருவெள்ளப் பெருக்கு காரணமாகப் பேரழிவு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் கரைபுரண்டு ஓடும் வெள்ளப்பெருக்கால் நூற்றுக்கணக்கான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டு, பல குடும்பங்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றன. இந்த இயற்கைச் சீற்றத்தில் மனிதர்கள் மட்டுமின்றி, அவர்களுடன் வாழ்ந்த வளர்ப்புப் பிராணிகளும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. </p><p>முற்றிலும் சேதமடைந்த தங்களின் பழைய வீடுகளின் இடிபாடுகளுக்கு இடையே, காணாமல் போன உரிமையாளர்களின் வருகைக்காகச் செல்லப்பிராணிகள் தொடர்ந்து காத்துக்கிடக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி காண்போரின் நெஞ்சை பதற வருகின்றன.</p><h2>இடிபாடுக<strong>ளுக்கு இடையே 'லில்லி</strong>'</h2><p>துங்கே பகுதியில் வெள்ளத்தின் கோரத்தாண்டவத்தால் வீடுகள் அனைத்தும் முற்றிலுமாக உருக்குலைந்து போயின. அந்தப் பகுதியில் வசித்து வந்த 'லில்லி' என்ற வளர்ப்பு நாய், தன் கழுத்தில் இருந்த பட்டை மாறாமல், தனது வீடு இருந்த இடத்திலேயே அமர்ந்து காணாமல் போன தனது குடும்பத்தினருக்காகப் பல மணி நேரமாகக் காத்துக்கொண்டிருக்கிறது. சுற்றிலும் சகதியும் இடிபாடுகளும் நிறைந்த சூழலில், தன்னைக் காப்பாற்ற வரும் மீட்புக் குழுவினரைக் கண்ட பின்னரும் அந்த இடத்தை விட்டு நகர மறுக்கும் லில்லியின் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.</p><h2>சேற்றுச் சகதியில் சி<strong>க்கிய பிராணிகள்</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/news/world/glof-event-not-the-cause-of-nepals-massive-floods-glacier-collapse-is-the-reason-new-report-by-scientists">பெருவெள்ளத்தால்</a> அடித்து வரப்பட்ட தடிமனான சேற்றுச் சகதிக்குள் புதைந்து உயிருக்குப் போராடிய பல நாய்களை, உள்ளூர் மக்களும் மீட்புக் குழுவினரும் தீவிரமாகப் போராடி உயிருடன் மீட்டு வருகின்றனர். கழுத்துவரை சேற்றில் மூழ்கிய நிலையிலும் நம்பிக்கையுடன் காத்திருந்த நாய்களைத் தூக்கி வெளியேற்றி, தண்ணீரில் கழுவி பராமரிக்கும் காட்சிகள் மனிதநேயம் இன்னும் சாகவில்லை என்பதை உணர்த்துகின்றன.</p><h2>கண்ணீர் மல்<strong>கிய மறுசந்திப்பு</strong>கள்</h2><p>பேரிடருக்கு இடையே சில இடங்களில் பிரிந்துபோன செல்லப்பிராணிகளும் அவற்றின் உரிமையாளர்களும் மீண்டும் ஒன்றிணைந்த உருக்கமான நிகழ்வுகளும் பதிவாகியுள்ளன. வெள்ளத்தில் சிக்கி உயிருக்குப் போராடி மீண்ட நாய் ஒன்றை, அதன் உரிமையாளர் மீண்டும் நேரில் கண்டு கட்டியணைத்து அழும் காட்சிகள் மீட்புப் முகாம்களில் உணர்ச்சிப்பூர்வமான சூழலை உருவாக்கியுள்ளன. மனித உயிர்களைக் காப்பாற்றும் அதே வேளையில், தங்களின் அன்பிற்குரிய செல்லப்பிராணிகளையும் மீட்க வேண்டும் என்ற நேபாள மக்களின் கோரிக்கை தீவிரமடைந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் பயங்கரம் - கத்தியால் குத்திய பெண்ணை சுட்ட போலீஸ்!</title><link>https://www.maalaimalar.com/news/world/new-york-times-square-knife-attack-two-killed</link><comments>https://www.maalaimalar.com/news/world/new-york-times-square-knife-attack-two-killed#comments</comments><guid isPermaLink="false">1e3e0609-2a77-43e2-9576-9081747b616d</guid><pubDate>Tue, 01 Sep 2026 06:48:28 +0000</pubDate><atom:updated>2026-09-01T06:48:28.597Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime,நியூயார்க்,துப்பாக்கிச் சூடு,New Yark,மனநல பாதிப்பு,டைம்ஸ் சதுக்கம்,Times Square Stabbing</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/xmzzj0f4/New-York" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ New York  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/xmzzj0f4/New-York?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE">அமெரிக்காவின் </a>உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான நியூயார்க் நகரின் டைம்ஸ் சதுக்கத்தில் நேற்று மாலை மக்கள் கூட்ட நெரிசலுக்கு இடையே ஒரு பயங்கர கத்திக்குத்து சம்பவம் அரங்கேறியுள்ளது.</p><p>எவ்வித காரணமும் இன்றி பொதுமக்களைக் கத்தியால் குத்திய பெண் ஒருவரை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D">நியூயார்க் </a>நகர போலீசார் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த இளம்பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>20 வினாடிகளில் நடந்த கொடூரம்</h2><p>டைம்ஸ் சதுக்கத்தின் 42வது வீதி மற்றும் 7வது அவென்யூ பகுதியில் நேற்று மாலை 4:30 மணியளவில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தபோது, கையில் இரண்டு பெரிய கத்திகளுடன் வந்த பெண் ஒருவர் திடீரென பொதுமக்களை நோக்கிப் பாய்ந்தார்.</p><p>அவர் முதலில் சாலையைக் கடக்கக் காத்திருந்த <strong>68 வயது முதியவர்</strong> ஒருவரின் வயிற்றுப் பகுதியில் கத்தியால் பலமாகக் குத்தினார். </p><p>அதற்கு அடுத்த 20 வினாடி இடைவெளியில், அங்கு நின்றுகொண்டிருந்த <strong>32 வயது இளம்பெண்</strong> ஒருவரையும் வயிற்றுப் பகுதியில் கொடூரமாகக் குத்தினார்.</p><p>இரத்த வெள்ளத்தில் இரண்டு பேர் சரிந்ததைக் கண்டதும், டைம்ஸ் சதுக்கத்தில் இருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.</p><h2><strong>போலீசாருடன் வாக்குவாதம் - <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81">துப்பாக்கிச் சூடு</a></strong></h2><p>தாக்குதலைத் தொடர்ந்து, அந்தப் பெண் அங்குள்ள போலீஸ் சப்ஸ்டேஷன் நோக்கி ஓடினார். </p><p>தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நியூயார்க் நகர போலீசார், அந்தப் பெண்ணைச் சுற்றி வளைத்தனர். கத்திகளைக் கீழே போடுமாறு போலீசார் சுமார் 4 நிமிடங்கள் வரை அப்பெண்ணிடம் தொடர்ந்து எச்சரித்தனர்.</p><p>ஆனால், அதற்கு மறுப்புத் தெரிவித்த அந்தப் பெண், <em>"நான் எதையும் கீழே போட மாட்டேன், உங்களை இருவரையும் கொன்றுவிடுவேன்"</em> என்று போலீசாரை நோக்கி கத்திகளுடன் பாய்ந்தார். </p><p>உடனடியாக போலீசார் அவரை நிலைநிறுத்த 'டேஸர்' கருவியைப் பயன்படுத்தினர். எனினும் அது பலனளிக்காததால், அதிகாரிகள் தற்காப்புக்காக அந்தப் பெண்ணை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.</p><h2><strong>இருவர் உயிரிழப்பு</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81">துப்பாக்கிச் சூட்டில்</a> குண்டு பாய்ந்து கீழே விழுந்த அந்தப் பெண்ணையும், கத்திக்குத்தால் பாதிக்கப்பட்ட இருவரையும் போலீசார் உடனடியாக மீட்டு பெல்லிவியூ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><p>அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி, வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் அடைந்திருந்த 32 வயது இளம்பெண் உயிரிழந்தார்.</p><p>அதேபோல், போலீசாரால் சுடப்பட்ட தாக்குதல் நடத்திய பெண்ணும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். க</p><p>த்திக்குத்துக்கு உள்ளான 68 வயது முதியவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>யார் இந்த பெண்? - போலீஸ் விளக்கம்</strong></h2><p>இதுகுறித்து நியூயார்க் நகர மேயர் சோஹ்ரான் மம்தானி மற்றும் போலீஸ் கமிஷனர் ஜெசிகா டிஷ் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தனர்.</p><p>அவர்கள் கூறுகையில், தாக்குதல் நடத்திய பெண் குயின்ஸ் பகுதியைச் சேர்ந்த <strong>பாமெலா சிஸ்னெரோஸ் </strong>(49) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவருக்கு ஏற்கனவே கடுமையான மனநலப் பாதிப்புகள் இருந்துள்ளன.</p><p>கடந்த 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் இவரால் ஏற்பட்ட மனநலப் பிரச்சினைகள் குறித்து போலீஸ் பதிவேட்டில் தரவுகள் உள்ளன. </p><p>இந்த சம்பவத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும், இது முற்றிலும் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரால் எவ்வித தூண்டுதலும் இன்றி திடீரென நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். </p><p>மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாகத் துறை ரீதியான விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>2029-ல் தேர்தல் சூழல் மாறும் போது நாடாளுமன்றத்தில் நீட் தூக்கி எறியப்பட்ட நாளாக மாறும்- ஆதவ் அர்ஜூனா பேச்சு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/aadhav-arjuna-says-when-the-electoral-landscape-shifts-in-2029-it-will-mark-the-day-neet-is-cast-out-of-parliament</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/aadhav-arjuna-says-when-the-electoral-landscape-shifts-in-2029-it-will-mark-the-day-neet-is-cast-out-of-parliament#comments</comments><guid isPermaLink="false">06f869b5-88ba-4081-9fbe-e1081b6c3a24</guid><pubDate>Tue, 01 Sep 2026 06:31:26 +0000</pubDate><atom:updated>2026-09-01T06:31:26.666Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,ஆதவ் அர்ஜூனா,தமிழக சட்டசபை,Aadhav Arjuna,நீட் தேர்வு,Neet exam,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/63h97zdf/udhaya.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்- ஆதவ் அர்ஜூனா]]></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்- ஆதவ் அர்ஜூனா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/63h97zdf/udhaya.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இனி வரும் காலங்களில் நம் மாணவ- மாணவிகள் நம்பிக்கையாக இருங்கள், உறுதியாக இருங்கள் இன்னொரு உயிர் போகக்கூடாது, வெற்றி நம் பக்கம் ஒரு நாள் வரும் என்றார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">சட்டசபையில்</a> கேள்வி நேரம் முடிந்ததும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது :-</p><p>இன்றைய தினம் தங்கை அனிதாவின் நினைவு தினம், 2017 ஆம் ஆண்டு 12-ம் வகுப்பு மாநில பாடத்திட்டத்தில் படித்த அனிதா 1176 மதிப்பெண் பெற்றிருந்தாலும் மருத்துவப் படிப்பிற்கான கட் ஆப் மதிப்பெண் 196.75 பெற்றிருந்தாலும், ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து  தன்னுடைய கோரிக்கைக்காக உச்ச நீதிமன்றம் வரை சென்று அதில் வெற்றி பெற முடியாத போது, நம்முடைய தங்கை உயிர் மாய்த்தார் </p><p>மூன்று  முதலமைச்சர்கள்  இந்த அவையிலும், திமுக தலைவர் ஸ்டாலினும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும்  இன்றைய முதலமைச்சர் விஜய்யும் நீட்டுக்கு எதிராக இதே சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினாலும், செவி சாய்க்காத  அரசாக மத்திய அரசு  உள்ளது.</p><p>அண்ணா கனவு கண்ட இருமொழி கொள்கைக்காக போராடி இருக்கிறோம் அண்ணா கனவு கண்ட இட ஒதுக்கீட்டிற்காக போராடி இருக்கிறோம், ஆனால் அனைவரும் சேர்ந்து இந்த நீட்டுக்கு எதிரான போராட்டத்தை வர இருக்கும் காலகட்டத்தில்  அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும்.</p><p>2029 ஆம் ஆண்டு தேர்தல் சூழல் மாறும் பொழுது, அனிதாவின் நினைவு நாளான இன்று பாராளுமன்றத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/நீட்-தேர்வு">நீட்</a> தூக்கி எறியப்பட்ட நாளாக ஒரு நாள் மாறும்.</p><p>இனி வரும் காலங்களில் நம் மாணவ- மாணவிகள் நம்பிக்கையாக இருங்கள், உறுதியாக இருங்கள் இன்னொரு உயிர் போகக்கூடாது, வெற்றி நம் பக்கம் ஒரு நாள் வரும்,</p><p>இந்த உயிரிழப்புகளுக்கு ஒரு நாள் பதில் அளிக்கும் வகையில் அரசியல் சூழல் மாறும், அனிதாவின் கண்ணீருக்கு விடை தேடி  நாம் ஒரு அரசியலை மேற்கொள்வோம்  என்றார்.</p><p>அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:- </p><p>தமிழ்நாடு மாணவர் இளைஞர் கூட்டமைப்பு சார்பில் அனிதாவின் குடும்பத்தினர் சார்பாகவும் அனிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடத்த திட்டமிட்டிருந்தனர். எந்த அரசியல் சார்பும் இல்லாமல் நடத்தப்பட இருந்த அனிதா நினைவேந்தல் கூட்டத்திற்கு இந்த அரசு மற்றும் சென்னை மாநகர காவல் துறை அனுமதி மறுத்துள்ளனர். </p><p>15 நாட்களுக்கு முன்பாகவே நினைவேந்தல்  கூட்டத்திற்கு அனுமதி கேட்டு கடிதம் கொடுத்துள்ளனர். ஆனால் காவல்துறை இதனை ஆர்ப்பாட்டம் என்று கூறி அனுமதி மறுத்துள்ளனர் .</p><p>அனிதாவின் சகோதரர் மணி  என்னை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார்.</p><p>நீட் எதிர்ப்பு மரண தொடர்பாக இந்தியாவில் நேரிட்ட முதல் மரணம் அனிதாவின் மரணம். </p><p>அனிதா மரணம் அடைந்தபோது நம்முடைய  முதலமைச்சர் அன்றைக்கு வீட்டில் நேரடியாக சென்று விசாரித்தார்கள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் அன்று சென்றிருந்தார்,</p><p>ஆளும் கட்சியும் இன்று நீட் எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறீர்கள். ஆனால் ஜனநாயக முறையில் அமைதியாக நடக்க இருந்த நினைவேந்தல் கூட்டத்திற்கு இந்த அரசாங்கம் அனுமதி  மறுத்து இருக்கிறது.</p><p>ஏன் அனுமதி மறுத்திருக்கிறது என்ற கேள்வியும் கேட்க விரும்புகிறேன். அனிதாவின் நினைவேந்தல் கூட்டத்திற்கு இந்த அரசு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்றார். </p><p>இதற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பதில் கூறியதாவது,</p><p>பெசன்ட் நகர் மாதா கோவில் திருவிழா நடைபெறுவதால், இன்னும் சில நிகழ்ச்சிகள் அங்கு நடைபெற உள்ளதால்  போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.</p><p>வேறொரு நாளில் அனுமதி கேட்டால் அனுமதி அது குறித்து அரசு பரிசீலித்து முடிவு எடுக்கும். அனிதாவின் நினைவு நாளான  இன்றாவது அரசியல் செய்யக்கூடாது என்று தெரிவித்தார்.</p><p>எதிர்க்கட்சித்  தலைவர் உதயநிதி ஸ்டாலின்:-</p><p>பெசன்ட் நகர் மாதா கோவில் கொடியேற்றம் கடந்த வாரம் முடிந்துவிட்டது, இத்தோடு செப்டம்பர் 7, 8 ஆகிய தேதிகளில் தான் கூட்டம் வரும் நிகழ்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் அங்கு மக்கள் கூட்டம் அதிகம் இல்லை.</p><p>நினைவேந்தல் ஏற்பாட்டாளர்கள் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்ததில் அங்கு பெரிய கூட்டம் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.</p><p>நினைவு நாள் நிகழ்ச்சி இன்று நடத்த வேண்டிய சூழல் இருக்கிறது. அதனால் அரசு மாற்று இடத்தை ஒதுக்கி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.</p><p>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா:-</p><p>உடனடியாக இந்த சூழல் தொடர்பாக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களுடன் பேசி மாற்று  இடம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>சிவகாசி அருகே பூட்டப்பட்ட பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து: ரூ.20 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து நாசம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/horrific-fire-at-locked-firecracker-shop-near-sivakasi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/horrific-fire-at-locked-firecracker-shop-near-sivakasi#comments</comments><guid isPermaLink="false">8d4e4562-cb93-432e-a9b6-ff7a1e9cde77</guid><pubDate>Tue, 01 Sep 2026 06:26:07 +0000</pubDate><atom:updated>2026-09-01T06:26:07.612Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>சிவகாசி,Sivakasi,firecracker explosion,Virudhunagar district,firecracker shop,பட்டாசு கடை தீ,விருதுநகர் மாவட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/qp7pywob/fire.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Firecracker shop ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/qp7pywob/fire.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது கடையில் வைக்கப்பட்டிருந்த வேதிப்பொருட்களின் வெப்பம் காரணமா என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  </p><p>விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான <a href="https://www.maalaimalar.com/news/national/president-murmu-distressed-loss-of-lives-due-to-up-firecracker-factory-explosion">பட்டாசு கடைகள்</a> மற்றும் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், சிவகாசி அருகே பூட்டப்பட்டிருந்த ஒரு பட்டாசு கடையில் எதிர்பாராதவிதமாக திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.</p><h2>ரூ.20 லட்சம் பட்<strong>டாசுகள் எரிந்து</strong> சாம்பல்</h2><p>கடை பூட்டப்பட்டிருந்த நிலையில், உள்ளே வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் ஒன்றன்பின் ஒன்றாக மிகக் கொடூரமாக வெடித்துச் சிதறின. இதனால் கடை முழுவதும் தீப்பற்றி எரிந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் கடையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் முற்றிலும் வெடித்து சிதறி சாம்பலாகின.</p><p>சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர், பல மணி நேரம் போராடி எரியும் தீயைக்ட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பூட்டப்பட்ட கடை என்பதால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.</p><h2>போ<strong>லீசார் தீவிர விசாரணை</strong></h2><p>விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது கடையில் வைக்கப்பட்டிருந்த வேதிப்பொருட்களின் வெப்பம் காரணமாக விபத்து நடந்ததா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கால்பந்து ஜாம்பவான் மெஸ்சி ஓய்வு - 21 ஆண்டுகால சகாப்தம் முடிவுக்கு வந்தது!</title><link>https://www.maalaimalar.com/sports/football/football-legend-messi-retires-21-year-era-ends</link><comments>https://www.maalaimalar.com/sports/football/football-legend-messi-retires-21-year-era-ends#comments</comments><guid isPermaLink="false">a1f7c7b5-2c06-468c-a065-01169d24370e</guid><pubDate>Tue, 01 Sep 2026 06:15:56 +0000</pubDate><atom:updated>2026-09-01T06:15:56.904Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Messi,மெஸ்சி,FIFA World Cup,Messi Retires,மெஸ்சி ஓய்வு,Argentina Football,கால்பந்து ஜாம்பவான்,பார்சிலோனா லெஜண்ட்,Football Legend</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/8yw2d0lo/Lionel-Messi" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Lionel Messi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/8yw2d0lo/Lionel-Messi?w=280" width="280"></media:thumbnail><category>கால்பந்து (Football)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">மெஸ்சியின்</a> மறக்க முடியாத முக்கிய தருணங்கள் உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான லியோனல் மெஸ்சி சர்வ தேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 39 வயதான அவர் 21 ஆண்டுகாலம் கால்பந்து உலகில் முத்திரை பதித்தார்.</p><h2>மெஸ்சி ஓய்வு</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/argentina">அர்ஜென்டினா </a>நாட்டைச் சேர்ந்த அவர் 2016-ம் ஆண்டு ஓய்வு பெற முடிவு செய்தார். பின்னர் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு கால்பந்து ஜாம்பவனாக ஜொலித்தார். சமீபத்தில் நடைபெற்ற உலக கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி ஸ்பெயினிடம் தோற்றது.</p><p>தோல்வியடைந்த 2 நாட் களுக்குப் பிறகு அதாவது ஜூலை 21-ந்தேதியே தனது ஓய்வு முடிவை வெளியிட தயாராக இருந்தார். தந்தை உடல்நலம் பாதிப்பு காரணமாக அதை வெளியிடுவதில் தாமதம் செய்தார். </p><p>அவரது தந்தை இறந்த பிறகு தற்போது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.</p><h2>மெஸ்சி சாதனை</h2><p>6 உலக கோப்பையில் விளையாடி உள்ள அவர் அர்ஜென்டினா அணிக்கு 2022-ல் உலககோப்பை பெற்றுக் கொடுத்தார். 2 முறை இறுதிப்போட்டி வரை வந்து உலக கோப்பையை இழந்தார். 2 கோபா அமெரிக்கா கோப்பையை வென்றார்.</p><p>உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களால் நேசிக்கப்படும் லியோனல் மெஸ்சி மறக்க முடியாத தருணங்கள் நிறைய இருக்கின்றன.</p><h2>உலக கோப்பையில் அறிமுகம்</h2><p>2005-ம் ஆண்டு அவர் சர்வதேச போட்டியில் அங்கேரிக்கு எதிராக அறிமுகமானார். 2006-ம் ஆண்டு உலக கோப்பையில் அறிமுகமான போது அவருக்கு 18 வயதாகும். </p><p>செர்பியா மற்றும் மாண்டென்க்ரோவுக்கு எதிராக மெஸ்சியின் தனது முதல் கோலை அடித்தார். அர்ஜென்டினா அணிக்காக உலககோப்பையில் கோல் அடித்த இளம் வீரராக அவர் ஜொலித்தார்.</p><h2>மரடோனாவுடன் சந்திப்பு</h2><p>2010 உலககோப்பை அர்ஜென்டினாவின் மற்றொரு கால்பந்து ஜாம்பவானான டிகோ மரடோனாவுடன் மெஸ்சியை ஒன்றிணைத்தது.</p><p>அப்போது அவர் தேசிய அணியின் பயிற்சியாளராக இருந்தார். கால் இறுதியில் அர்ஜென்டினா தோல்வி அடைந்தது. மெஸ்சியின் பரிணாம வளர்ச்சியில் இந்த போட்டி ஒரு முக்கிய கட்டமாக இருந்தது.</p><h2>பார்சிலோனா கிளப்பில் சாதனை</h2><p>ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடினார். 2022-ம் ஆண்டு மார்ச் 20-ந்தேதி கிரனடா அணிக்கு எதிராக ஹாட்ரிக் கோல்கள் அடித்தார். </p><p>இதன் மூலம் பார்சிலோனா கிளப் வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனை படைத்தார். அவர் அந்த கிளப்புக்காக 672 கோல்கள் அடித்தார். </p><p>அவரது அபாரமான ஆட்டம் அந்த கிளப்பில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.</p><h2>91 கோல்கள் அடித்த ஆண்டு</h2><p>2012-ல் கால்பந்து வரலாற்றில் இதுவரை பார்க்காத அளவுக்கு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">மெஸ்சி </a>அதிக கோல்களை அடித்து சாதித்தார். அவர் மொத்தம் 91 கோல்களை அடித்தார். </p><p>இதில் கிளப்புக்காக 79 கோல்களை பதிவு செய்தார். எஞ்சிய 12 கோல் நாட்டுக்காக அடித்தார். முல்லரின் சாதனையை முறியடித்ததோடு அந்த ஆண்டின் 4-வது முறையாக சிறந்த கால்பந்து விருதை பெற்றார்.</p><p>2014-ல் லாலிகாவில் கோல் அடிப்பதில் மெஸ்சி புதிய சாதனை படைத்தார். அவர் 472 கோல்களை பதிவு செய்தார்.</p><h2>முதல் சர்வதேச கோப்பை</h2><p>2021 ஜூலை மாதம் மெஸ்சி அர்ஜென்டினா அணிக்காக முதல் சர்வதேச கோப் பையை பெற்றுக் கொடுத்தார். </p><p>கோபா அமெரிக்க கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா 1-0 என்ற கணக்கில் பிரே சிலை தோற்கடித்தது.</p><h2>36 ஆண்டுகளுக்கு பிறகு உலககோப்பை</h2><p>2022-ம் ஆண்டு கத்தாரில் நடந்த உலககோப்பையை அர்ஜென்டினா அணிக்காக மெஸ்சி பெற்றுக் கொடுத்தார். 36 ஆண்டுகால அர்ஜென்டினாவின் கனவை நனவாக்கினார். </p><p>இந்த போட்டித் தொடரில் அவரது ஆட்டம் மிகவும் அற்புதமாக இருந்தது. 7 கோல்கள் அடித்து சிறந்த வீரராக தேர்வுப் பெற்றார்.</p><h2>8-வது சிறந்த வீரர் விருது</h2><p>உலகில் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை அவர் 8-வது முறையாக 2023-ல் பெற்று சாதித்தார். சர்வ தேச போட்டியில் சிறப்பான செயல்பாட்டுக்காக அவர் இந்த விருதை பெற்றார்.</p><h2>உலககோப்பையில் அதிக கோல்</h2><p>2026 உலககோப்பை யிலும் மெஸ்சி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 8 கோல்கள் அடித்து உலக கோப்பையில் அதிக கோல்கள் அடித்தவர் என்ற உச்ச நிலையை எட்டினார்.</p><p> அவரது கோல் எண்ணிக்கை 21-ஆக உயர்ந்தது. பின்னர் பிரான்ஸ் வீரர் எம்பாப்பே 22 கோல்களை பதிவுசெய்து அவரை முந்தி முதலிடத்தை பிடித்தார்.</p><h2>கடைசி உலககோப்பை</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">மெஸ்சியின் </a>கடைசி உலக கோப்பை பயணமாக அது அமைந்தது. இறுதிப்போட்டி வரை அர்ஜென்டினா அணியை அழைத்துச் சென்றார். இறுதிப் போட்டியில் ஸ்பெயினிடம் தோற்றாலும் அவரது தனிப்பட்ட செயல்பாடு மறக்க இயலாது.</p><p>அர்ஜென்டினாவை பொறுத்தவரை இனி ஒரு போதும் மற்றொரு மெஸ்சி வரப்போவதில்லை. ஏறக்குறைய 21 ஆண்டுகள் கால்பந்தில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி அர்ஜென்டினா அணியை தன் தோளில் சுமந்தார். </p><p>விடைபெறுவதை நினைத்து மெஸ்ஸியின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-released-water-from-mettur-dam-for-delta-irrigation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-released-water-from-mettur-dam-for-delta-irrigation#comments</comments><guid isPermaLink="false">e8817533-71fe-4da5-afbd-33f9ad464cdd</guid><pubDate>Tue, 01 Sep 2026 06:09:01 +0000</pubDate><atom:updated>2026-09-01T06:09:01.499Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Vijay,மேட்டூர் அணை,Mettur Dam,டெல்டா பாசனம்,Delta Irrigation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/sdcgng8b/vijay3.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ cm vijay - mettur dam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/sdcgng8b/vijay3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேட்டூர் அணை</h2><p>டெல்டா விவசாயிகளின் உயிர் மூச்சான மேட்டூர் அணை மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர் உள்பட 13 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சரிவர மழை பெய்யாத காரணத்தால் குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கப்படவில்லை.</p> <h2>கர்நாடகாவில் மழை</h2><p>ஆனால் கடந்த 2 வாரங்களாக கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 90 அடியை தாண்டியதை தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து செப்டம்பர் 1-ந்தேதி தண்ணீர் திறந்துவிடப்படும் என்றும், அந்த தண்ணீர் 45 நாட்கள் திறந்துவிடப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது.</p> <h2>மேட்டூர் அணை</h2><p>நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 91.15 அடியை எட்டி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 501 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.</p> <h2>முதலமைச்சர் விஜய் </h2><p>டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்காக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/puli-thevar-birthday-cm-vijay-pay-respect">முதலமைச்சர் விஜய்</a> சென்னையில் இருந்து தனி விமானத்தில் சேலம் விமான நிலையம் சென்றடைந்தார்.</p><p>சேலம் சென்றடைந்த முதலமைச்சர் விஜய் அங்கிருந்து சாலை மார்க்கமாக மேட்டூர் அணை பகுதிக்கு சென்றார்.</p> <h2>உற்சாக வரவேற்பு </h2><p>பட்டு வேட்டி சட்டையில் சேலம் சென்றடைந்த முதலமைச்சர் விஜய்க்கு தவெகவினர், பொதுமக்கள் வழிநெடுகிலும் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.</p><p>முதலமைச்சர் விஜயை வரவேற்கும் விதமாக 40 கி.மீ. தூரத்திற்கு பேனர்கள், கொடிக்கம்பங்கள் அமைத்து தவெகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.</p><p>மேட்டூர் அணை நீரை திறந்து வைப்பதற்காக வருகை தந்துள்ள முதலமைச்சர் விஜய்க்கு காவல்துறை சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது.</p> <h2>மேட்டூர் அணை திறப்பு</h2><p>இந்தநிலையில், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை <a href="https://www.maalaimalar.com/topic/vijay">முதலமைச்சர் விஜய்</a> திறந்து வைத்தார்.  காவிரியை வணங்கி மேட்டூர் அணையை முதலமைச்சர் திறந்து வைத்தார்.</p><p>அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரை முதலமைச்சர் விஜய் பூக்கள், நெல்மணிகளை தூவி வணங்கி வரவேற்றார்.</p><p>மேட்டூர் நீரை திறந்த வைத்த முதல்வரை சந்திக்க வந்த விவசாய சங்க பிரதிநிதிகளுடன் முதலமைச்சர் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.</p> <p>முதலமைச்சர் விஜய் வருகையொட்டி மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணை பகுதி முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>எச்.ராஜாவுக்கு சிறப்பு கோர்ட் விதித்த 6 மாத சிறை தண்டனை ரத்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/six-month-jail-sentence-imposed-on-h-raja-by-the-special-court-set-aside</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/six-month-jail-sentence-imposed-on-h-raja-by-the-special-court-set-aside#comments</comments><guid isPermaLink="false">9661ae8a-b754-46b6-9be4-a4e44c22d2f5</guid><pubDate>Tue, 01 Sep 2026 06:03:58 +0000</pubDate><atom:updated>2026-09-01T06:03:58.008Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,சென்னை ஐகோர்ட்,Madras HC,H raja,எச் ராஜா</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/858c9ump/Hraja.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ எச்.ராஜா]]></media:title><media:description type="html"><![CDATA[ எச்.ராஜா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/858c9ump/Hraja.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பெரியார் சிலை உடைப்பு தொடர்பான கருத்து தெரிவித்தது, திமுக எம்.பி., கனிமொழியை விமர்சனம் செய்ததாக தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜாவுக்கு எதிரான இரு வழக்குகளில் தலா 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து சிறப்பு கோர்ட் விதித்த தீர்ப்பை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.</strong></em></p><p>பாரதிய ஜனதா கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பு குழு தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/எச்-ராஜா">எச்.ராஜா</a>, கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் தனது எக்ஸ் தளத்தில் திரிபுராவில் லெனின் சிலை உடைக்கபட்டது போல், தமிழகத்தில் பெரியார் சிலையை அகற்றுவோம் என பதிவிட்டிருந்தார். </p><p>இதே போல் 2018-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் திமுக எம்.பி., கனிமொழிக்கு எதிராக எக்ஸ் தளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டிருந்தார். இதுதொடர்பாக தந்தை பெரியர் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், ஈரோடு போலீசார் , எச்.ராஜாவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர். இந்த இரு வழக்குகளையும் விசாரித்த சென்னையில் உள்ள எம்.பி,, எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட், ராஜாவுக்கு தலா 6 மாதம் சிறை தண்டனை விதித்து, கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பளித்திருந்தது. </p><p>இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரி எச்.ராஜா சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதி வி.லட்சுமிநாராயணன் இன்று பிறப்பித்த தீர்ப்பில், எச்ராஜாவின் பதிவுகளால் சமூகத்தில் இடையூறுகள் ஏற்பட்டது என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனக்கூறி, இரு வழக்குகளிலும் தண்டனை விதித்து பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>கல்வி முழக்கத்தை இழந்ததா ஆம் ஆத்மி?: அபிஜித் தீப்கே &apos;சிஜேபி&apos; அமைப்பின் B-டீமாக மாறியதாக அரவிந்த் கெஜ்ரிவால் மீது விமர்சனம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/did-aap-lose-its-education-slogan-arvind-kejriwal-slammed-for-making-abhijit-deepkes-cjp-b-team</link><comments>https://www.maalaimalar.com/news/national/did-aap-lose-its-education-slogan-arvind-kejriwal-slammed-for-making-abhijit-deepkes-cjp-b-team#comments</comments><guid isPermaLink="false">e0535337-8785-4a87-8e5d-0cd814cd2e3d</guid><pubDate>Tue, 01 Sep 2026 06:03:42 +0000</pubDate><atom:updated>2026-09-01T06:03:42.467Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Arvind Kejriwal,அரவிந்த் கெஜ்ரிவால்,Aam Aadmi Party,ஆம் ஆத்மி கட்சி,சிஜேபி,CJP,அபிஜித் தீப்கே,Abhijit Deepke</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/zclmopn4/abiu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Arvind Kejriwal-Abhijit Deepke]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/zclmopn4/abiu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சிஜேபி அமைப்பின் நிறுவனரான அபிஜித் தீப்கே மற்றும் அதன் முக்கியப் பொறுப்பாளர்கள் முன்பு ஆம் ஆத்மி கட்சியின் ஊடகப் பிரிவிலும், டெல்லி அரசின் கல்வித்துறை ஆலோசனைப் பிரிவிலும் தீவிரமாகப் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. </p><p>அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய அரசியல் அடையாளமாகவும், தேர்தல் வெற்றிகளுக்கான முதன்மை ஆயுதமாகவும் இருந்தது அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு மற்றும் கல்வித்துறை சீர்திருத்தங்கள் ஆகும். ஆனால், சமீபகாலமாக <a href="https://www.maalaimalar.com/news/national/central-government-files-petition-in-supreme-court-seeking-orders-to-withdraw-cases-against-neet-exam-protesters">ஆம் ஆத்மி கட்சி</a> சந்தித்து வரும் அரசியல் பின்னடைவுகள் மற்றும் தலைமை மீதான நம்பகத்தன்மை கேள்விகளால், கட்சி தனது முதன்மை முகவரியான கல்வி சார்ந்த முழக்கங்களை இழந்து வருவதாக அரசியல் கணிப்புகள் தெரிவிக்கின்றன. </p><p>இந்தச் சூழலில், அபிஜித் தீப்கே தலைமையிலான 'காக்ரோச் ஜனதா பார்ட்டி' (CJP) என்ற இளைஞர் அமைப்பு, அரசுப் பள்ளிகளின் தரம் மற்றும் கல்வித்துறை முறைகேடுகளுக்கு எதிராக முன்னெடுக்கும் தொடர் போராட்டங்கள் மற்றும் ஆய்வுகள் மூலம் தேசிய அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.</p><h2>சிஜேபிக்<strong>கு ஆம் ஆத்மியின்</strong> தொடர் ஆதரவு</h2><p>சமீபத்தில் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் சிஜேபி சார்பில் நடைபெற்ற இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் போராட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரடியாகப் பங்கேற்று தனது ஆதரவைத் தெரிவித்தார். களத்திலும் சமூக வலைத்தளங்களிலும் சிஜேபி அமைப்பின் கோரிக்கைகளுக்காக ஆம் ஆத்மி தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். </p><p>கல்வித் துறையை மையமாகக் கொண்டு ஆம் ஆத்மி எழுப்பி வந்த குரலை தற்போது சிஜேபி அமைப்பு கையில் எடுத்து முன்னெடுத்து வரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சி தனது அரசியல் மேடை மற்றும் முக்கியத்துவத்தை அந்த அமைப்பிடம் ஒப்படைத்துவிட்டு அதன் பி-டீமாக செயல்படுகிறதா என்ற விவாதம் வலுத்துள்ளது.</p><p>சிஜேபி அமைப்பின் நிறுவனரான அபிஜித் தீப்கே மற்றும் அதன் முக்கியப் பொறுப்பாளர்கள் முன்பு ஆம் ஆத்மி கட்சியின் ஊடகப் பிரிவிலும், டெல்லி அரசின் கல்வித்துறை ஆலோசனைப் பிரிவிலும் தீவிரமாகப் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தங்கள் பழைய நிர்வாகிகளின் தலைமையில் இயங்கும் இந்த இளைஞர் இயக்கம் தற்போது நாடு முழுவதும் பள்ளிகளின் உள்கட்டமைப்பு, ஆசிரியர் காலியிடங்கள் மற்றும் மாணவர் நலன் குறித்து கேள்விகளை எழுப்பி வரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சி தனது சொந்த முழக்கங்களையே பிறிதொரு அமைப்பின் மூலம் ஆதரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஜீவா நடிப்பில் 40 நாட்களில் நிறைவடைந்த &apos;தகப்பன்&apos; படப்பிடிப்பு: திட்டமிட்டதை விட வேகமாக முடித்த படக்குழு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/thagappan-film-completes-shoot-early</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/thagappan-film-completes-shoot-early#comments</comments><guid isPermaLink="false">d257e1ab-71c1-4285-b3b8-5b26c651b946</guid><pubDate>Tue, 01 Sep 2026 05:53:08 +0000</pubDate><atom:updated>2026-09-01T05:53:08.006Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜீவா,Jiiva,Thagappan,தகப்பன்,Lark Studios,ராவெங்கட்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/zv231g3l/Thagappan" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Thagappan ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/zv231g3l/Thagappan?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/jiiva">ஜீவா </a>நடிப்பில் உருவாகி வரும் 'தகப்பன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு, திட்டமிட்ட காலத்திற்கு முன்பாகவே 40 நாட்களில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.</p><h2><strong>45 நாள் திட்டம் 40 நாளில் நிறைவு</strong></h2><p>'கிடா' பட புகழ் இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் '<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D">தகப்பன்</a>'. இப்படத்தின் படப்பிடிப்பை மொத்தம் 45 நாட்களில் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். </p><p>ஆனால், முறையான திட்டமிடல் மற்றும் படக்குழுவினரின் தீவிர உழைப்பால், திட்டமிட்டதை விட 5 நாட்களுக்கு முன்பாகவே, அதாவது 40 நாட்களிலேயே ஒட்டுமொத்த படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது.</p><h2><strong>மதுரை பின்னணியில் குடும்பக் கதை</strong></h2><p>மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை பின்னணியாகக் கொண்டு, முழுக்க முழுக்க கிராமத்து மண்வாசனையுடன் இத்திரைப்படம் தயாராகி வருகிறது. </p><p>தந்தை மற்றும் மகன் இடையேயான ஆழமான உறவு, குடும்ப பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட ஒரு அழுத்தமான குடும்பக் கதையாக 'தகப்பன்' உருவாகி வருகிறது. </p><p>இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.</p><h2><strong>மேலூரில் தொடங்கி மதுரையில் முடிவு</strong></h2><p>இப்படத்தின் படப்பிடிப்பு பயணம் மதுரை மேலூர் பகுதியில் உள்ள ஒரு பாரம்பரியமிக்க கோவிலில் முறைப்படி பூஜையுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் பல்வேறு கட்டங்களாகப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது. </p><p>இறுதியாக மதுரை நகரப் பகுதிகளிலும் சில முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு, ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது.</p><p>விரைவில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் மற்றும் ரிலீஸ் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>மகள் கல்விக்காக வெறும் காலில் ஓடி மாரத்தான் வென்ற தாய்: மகாராஷ்டிராவில் நெகிழ்ச்சி சம்பவம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/barefoot-mother-wins-marathon-to-fund-daughters-studies</link><comments>https://www.maalaimalar.com/news/national/barefoot-mother-wins-marathon-to-fund-daughters-studies#comments</comments><guid isPermaLink="false">a52881ba-351f-4001-86fa-e03a91196c7d</guid><pubDate>Tue, 01 Sep 2026 05:22:25 +0000</pubDate><atom:updated>2026-09-01T05:22:25.060Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,மகாராஷ்டிரா,women empowerment,நெகிழ்ச்சி சம்பவம்,Inspirational Story,Ramabai Ranveer,ரமாபாய் ரன்வீர்,Marathon Winner</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/61l2fb6f/Marathon" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Marathon]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/61l2fb6f/Marathon?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தனது மகள்களின் உயர் கல்விச் செலவிற்காக 47 வயது தாய் ஒருவர், காலணிகள் இன்றி வெறும் கால்களுடன் ஓடி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">மாரத்தான்</a> போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். </p><p>வறுமைக்கு மத்தியிலும் மகள்களின் கனவை நனவாக்கப் போராடும் இந்த தாயின் விடாமுயற்சி, அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.</p><h2><strong>கணவரை இழந்த நிலையிலும் தளராத நம்பிக்கை</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE">மகாராஷ்டிராவின் </a>பீட் மாவட்டம், அம்பாஜோகை பகுதியைச் சேர்ந்தவர் ரமாபாய் ரன்வீர் (47). மும்பையில் நேரிட்ட விபத்து ஒன்றில் இவரது கணவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தனது இரண்டு மகள்களை வளர்க்கும் பொறுப்பு ரமாபாயின் தோள்களில் விழுந்தது. </p><p>ஆரம்பத்தில் விவசாயக் கூலி வேலை செய்து வந்த அவர், தனது மகள்கள் இருவரும் படித்து பெரிய அதிகாரிகளாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.</p><p>இதற்காக, தனது மூத்த மகளை அம்பாஜோகையில் உள்ள ஒரு போட்டித் தேர்வு பயிற்சி அகாடமியில் சேர்த்த ரமாபாய், மகளின் கல்விக்கு உதவ அதே அகாடமியிலேயே சமையல் வேலைக்கும் சேர்ந்தார். </p><p>அங்கு தினமும் மாணவர்களுக்கு சமையல் செய்து கொண்டே, போட்டித் தேர்வுகளுக்குப் படிக்கும் தனது மகள்களையும் கவனித்து வந்தார்.</p><h2><strong>புடவையுடன் வெறும் காலில் ஓடிய தாய்</strong></h2><p>இந்நிலையில், அப்பகுதியில் உள்ள உள்ளூர் அமைப்பு ஒன்று 'அமிர்த தௌட்' என்ற பெயரில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">மாரத்தான் </a>போட்டி ஒன்றை நடத்தியது. </p><p>இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ. 3,000 பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மகள்களுக்குப் படிக்கப் புத்தகங்கள் வாங்க இந்த பணம் உதவும் என எண்ணிய ரமாபாய், போட்டியில் பங்கேற்கத் துணிந்தார்.</p><p>போட்டித் தினத்தன்று, விளையாட்டு ஆடைகளுடன் வந்திருந்த இளம் வயது வீராங்கனைகளுக்கு மத்தியில், ரமாபாய் ஒரு சாதாரண புடவை அணிந்து களமிறங்கினார். </p><p>போட்டி தொடங்கியதும் அவர் அணிந்திருந்த செருப்புகள் நழுவத் தொடங்கின. சற்றும் யோசிக்காத அவர், செருப்புகளைக் கழற்றி கையிலேயே பிடித்துக் கொண்டு, கற்கள் நிறைந்த குளிர்ந்த சாலையில் வெறும் கால்களோடு ஓடத் தொடங்கினார்.</p><p>ஒரு கையால் புடவையைச் சரிசெய்து கொண்டு, மற்ற அனைத்து வீராங்கனைகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ரமாபாய் முதலிடத்தைப் பிடித்து எல்லையைக் கடந்தார். </p><p>இதைப் பார்த்த அங்கிருந்த பார்வையாளர்கள் அனைவரும் வியந்து அவருக்கு எழுந்து நின்று கைதட்டி பாராட்டு தெரிவித்தனர்.</p><h2><strong>இரண்டாம் இடம் பிடித்த மகள்</strong></h2><p>நெகிழ்ச்சியில் உச்சமாக, ரமாபாயின் மகள் பூஜாவும் இந்த போட்டியில் பங்கேற்று இரண்டாம் இடத்தை வென்றார். </p><p>தனது தாயை போட்டியில் பங்கேற்க வற்புறுத்திய பூஜா, 'கடினமான சூழ்நிலையிலும் எங்களை வளர்க்க என் தாய் ஒரு போதும் எங்களை கைவிட்டதில்லை. அவர் முதலிடம் பிடிப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை' என்று பெருமிதத்துடன் கூறினார்.</p><p>பூஜா தற்போது காவல்துறை பணிக்கான தேர்விற்கும், அவரது சகோதரி வங்கித் தேர்வுகளுக்கும் தயாராகி வருகின்றனர். </p><p>பூஜாவின் அர்பணிப்பைக் கண்டு, அவர் படிக்கும் அகாடமியின் இயக்குனர் அவரது பயிற்சிக் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><h2><strong>மகள்களின் எதிர்காலம் மட்டுமே கண்ணில் தெரிந்தது</strong></h2><p>வெற்றிக்குப் பின் பேசிய ரமாபாய் ரன்வீர், <em>"போட்டியில் பல பெண்கள் பங்கேற்றனர், ஆனால் எப்படியாவது நான் இந்த பரிசை வெல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். </em></p><p><em>நான் ஓடும்போது என் மகள்களின் எதிர்காலம் மட்டுமே என் கண் முன்னால் தெரிந்தது. இந்த ரூ. 3,000 பரிசுத்தொகையை வைத்து அவர்களுக்குத் தேவையான புத்தகங்களை வாங்குவேன்"</em> என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.</p><p>சமையலறையில் கஷ்டப்பட்டு உழைக்கும் ஒரு தாய், தனது மகள்களின் படிப்புக்காக ஓட்டப்பந்தயக் களத்திலும் சாதித்துக் காட்டியிருப்பது பலருக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இந்த வார விசேஷங்கள்: 1-9-2026 முதல் 7-9-2026</title><link>https://www.maalaimalar.com/spirituality/this-week-specials-1-9-2026-to-7-9-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/this-week-specials-1-9-2026-to-7-9-2026#comments</comments><guid isPermaLink="false">7d9632de-5b57-4025-a9e7-68602bdfd61e</guid><pubDate>Tue, 01 Sep 2026 05:18:21 +0000</pubDate><atom:updated>2026-09-01T05:18:21.832Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,வழிபாடு,Astrology,this week special,இந்த வார விசேஷங்கள்,worship</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/diu3s927/krishna2.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ krishna ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/diu3s927/krishna2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>1-ந் தேதி (செவ்வாய்)</h2><p>* திருச்செந்தூர் முருகப்பெருமான் கேடயச் சப்பரத்திலும், இரவு பல்லக்கிலும் திருவீதி உலா.</p><p>* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.</p><p>* திருவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.</p><p>* சமநோக்கு நாள்.</p> <h2>2-ந் தேதி (புதன்)</h2><p>* தேய்பிறை சஷ்டி விரதம்.</p><p>* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.</p><p>* திருப்போரூர் முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.</p><p>* கீழ்நோக்கு நாள்.</p> <h2>3-ந் தேதி (வியாழன்)</h2><p>* கார்த்திகை விரதம்.</p><p>* திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்கமயில் வாகனத்தில் புறப்பாடு.</p><p>* திருப்பதி ஏழுமலை யான் புஷ்பாங்கி சேவை.</p><p>* ரத்தினகிரி பாலமுருகன் தங்க ரத உற்சவம்.</p><p>* கீழ்நோக்கு நாள்.</p> <h2>4-ந் தேதி (வெள்ளி)</h2><p>* கோகுலாஷ்டமி.</p><p>* மதுரை நவநீத கிருஷ்ணசுவாமி விழா தொடக்கம்.</p><p>* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.</p><p>* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் சன்னிதியில் சுந்தரவல்லித் தாயார் பவனி.</p><p>* மேல்நோக்கு நாள்.</p> <h2>5-ந் தேதி (சனி)</h2><p>* மதுரை நவநீத கிருஷ்ணசுவாமி சேஷ வாகனத்தில் உறியடி உற்சவம்.</p><p>* தேரெழுந்தூர், தேவகோட்டை, திண்டுக்கல், பிள்ளையார் பட்டி, உப்பூர் தலங்களில் விநாயகப் பெருமான் உற்சவம் ஆரம்பம்.</p><p>* சமநோக்கு நாள்.</p> <h2>6-ந் தேதி (ஞாயிறு)</h2><p>* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் காலை வெள்ளி கேடய சப்பரத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் பவனி.</p><p>* மதுரை நவநீத கிருஷ்ணசுவாமி ஊஞ்சலில் வீணை மோகினி அலங்காரம், இரவு ராமாவதாரம்.</p><p>* திருவலஞ்சுழி சுவேத விநாயகர் உற்சவம் ஆரம்பம்.</p><p>* மேல்நோக்கு நாள்.</p> <h2>7-ந் தேதி (திங்கள்)</h2><p>* முகூர்த்த நாள்.</p><p>* சர்வ ஏகாதசி.</p><p>* உப்பூர் விநாயகப் பெருமான் சிம்ம வாகனத்தில் பவனி.</p><p>* மதுரை கூடலழகர், திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு.</p><p>* சமநோக்கு நாள்.</p> ]]></content:encoded></item><item><title>VIDEO- இந்தியப் பொருளாதார வளர்ச்சி 7.8%: இறக்குமதி தங்கத்தைக் தவித்து உள்நாட்டிலேயே திருமணம் செய்ய பிரதமர் மோடி அழைப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-instagram-reel-7-8-percent-gdp-growth-countering-rahul-gandhi-claims</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-instagram-reel-7-8-percent-gdp-growth-countering-rahul-gandhi-claims#comments</comments><guid isPermaLink="false">ffae8f5a-2a1c-4b9a-8082-8a7d652fe5be</guid><pubDate>Tue, 01 Sep 2026 05:15:53 +0000</pubDate><atom:updated>2026-09-01T05:15:53.986Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,INDIA,GDP,pm modi,பிரதமர் மோடி,ஜிடிபி சாதனை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/k4v1p9x9/mdi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Narendra modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/k4v1p9x9/mdi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பொய்களாலும் போலி குற்றச்சாட்டுகளாலும் நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சியை மறைத்துவிட முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடிதிட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.</p><p>உலகளாவிய பொருளாதார சவால்கள் மற்றும் உள்நாட்டின் விமர்சனங்களுக்கு இடையே, <a href="https://www.maalaimalar.com/news/national/india-gdp-surges-7-8-first-quarter-amid-global-challenges">இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி </a>வீதம் 7.8 சதவீதமாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சிகளின் பொய்ப் பிரசாரங்களை வளர்ச்சி புள்ளிவிவரங்கள் தகர்த்தெறிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">7.8% growth. <br><br>Strong numbers. <br><br>Even stronger confidence. <a href="https://t.co/ZVPpnAXrVU">pic.twitter.com/ZVPpnAXrVU</a></p>&mdash; Narendra Modi (@narendramodi) <a href="https://x.com/narendramodi/status/2094629917514400111?ref_src=twsrc%5Etfw">September 1, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2>பிரதமர் மோ<strong>டியின் இன்</strong>ஸ்டா ரீல்ஸ்</h2><p>தற்போது பிஷ்கெக் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்ஃபி வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், "7.8 சதவீத வளர்ச்சி என்பது வெறும் எண்கள் மட்டுமல்ல; நாட்டின் உழைப்பிற்கும் ஒட்டுமொத்த மக்களின் உறுதிப்பாட்டிற்கும் கிடைத்த வெற்றி" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>பொய் எதி<strong>ரொலி விமர்சனம்</strong></h2><p>காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னெடுத்து வரும் 'சத்ரோன் கி கூஞ்ச்' (மாணவர்களின் குரல்) என்ற பிரசாரத்தைக் குறிப்பிட்ட பிரதமர், "நாட்டின் முன்னேற்றத்தைக் கண்டு பொறுக்க முடியாமல் சிலர் 'பொய் எதிரொலி'களை பரப்பி விரக்தியை விதைக் முற்படுகிறார்கள்" என சாடினார். பொய்களாலும் போலி குற்றச்சாட்டுகளாலும் நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சியை மறைத்துவிட முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.</p><h2>இந்தியா ப<strong>டைத்த சாதனை</strong></h2><p>உலகளவில் உக்ரைன்-ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல், சர்வதேச விநியோகச் சங்கிலி முடக்கம், கோவிட் பெருந்தொற்றுக்குப் பிந்தைய பொருளாதாரப் பின்னடைவு ஆகிய பெரும் சவால்களுக்கு மத்தியிலும் இந்தியாவின் பொருளாதாரம் அதிவேகத்தில் வளர்ந்து வருகிறது. ரிசர்வ் வங்கி கணித்த 7 சதவீதத்தை விட ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 7.8 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது, உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளின் உறுதியான செயல்பாட்டைப் பிரதிபலிக்கிறது.</p><h2>சுதேசி கொள்கை</h2><p>நாட்டின் எதிர்காலச் சந்ததியினரின் கனவுகளை நனவாக்க 'சுதேசி' கொள்கையைக் தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் அழைப்பு விடுத்தார். தொடர்ந்து பேசிய பிரதமர், நாட்டின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்த மக்கள் இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மீதான மோகத்தைக் குறைக்க வேண்டும் என்றும், சுதேசிப் பொருட்களைப் பயன்படுத்த முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். </p><p>மேலும், இந்தியர்கள் தங்களது குடும்பத் திருமண நிகழ்வுகளை வெளிநாடுகளில் நடத்தாமல், உள்நாட்டிலேயே நடத்தும் 'வெட் இன் இந்தியா' முயற்சியை ஊக்குவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஆடம்பர செலவுகளையும் தேவையற்ற இறக்குமதிகளையும் குறைத்து, உள்ளூர் வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறைக்கு ஆதரவளிப்பதன் மூலம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மேலும் வேகமெடுக்கும் என்று பிரதமர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY : மாத தொடக்கத்தில் உயர்ந்த தங்கம் விலை- இன்றைய நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-01-09-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-01-09-2026#comments</comments><guid isPermaLink="false">f39e5adb-650a-4c5b-96e8-cc82fc561033</guid><pubDate>Tue, 01 Sep 2026 04:44:56 +0000</pubDate><atom:updated>2026-09-01T04:44:56.607Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/suphjroy/Gold03.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ தங்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/suphjroy/Gold03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கடந்த 3 நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">தங்கம்</a> விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் தங்கம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 505-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 40-க்கும் விற்பனையானது.</p><p>இந்த நிலையில் தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.135 குறைந்து ரூ.14 ஆயிரத்து 370-க்கும், சவரனுக்கு ரூ.1,080 குறைந்து ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து960-க்கும் விற்றது. </p><h2><strong>சற்று உயர்வு</strong></h2><p>இந்த நிலையில் மாத தொடக்க நாளான இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 385 ரூபாய்க்கும் சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><h2><strong>வெள்ளி விலை குறைவு</strong></h2><p>கடந்த 3 நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது. </p><h2><strong>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்</strong></h2><p>31-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,960</p><p>30-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,040</p><p>29-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,040</p><p>28-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,400</p><p>27-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,800</p><h2><strong>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>31-08-2026- ஒரு கிராம் ரூ.260</p><p>30-08-2026- ஒரு கிராம் ரூ.260</p><p>29-08-2026- ஒரு கிராம் ரூ.260</p><p>28-08-2026- ஒரு கிராம் ரூ.265</p><p>27-08-2026- ஒரு கிராம் ரூ.265</p>]]></content:encoded></item><item><title>முற்றிலும் புதிய ஆடி Q9 விலை விவரங்கள் அறிவிப்பு - இந்திய வெளியீடு எப்போ தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/automobilenews/newautomobile/india-bound-audi-q9-launched</link><comments>https://www.maalaimalar.com/automobilenews/newautomobile/india-bound-audi-q9-launched#comments</comments><guid isPermaLink="false">528e6c7f-c7ec-4381-b205-982fb93f5d24</guid><pubDate>Tue, 01 Sep 2026 04:32:00 +0000</pubDate><atom:updated>2026-09-01T04:32:00.000Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Car,Audi,ஆடி,கார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/7b88tslr/Audi-Q9.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Audi Q9]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/7b88tslr/Audi-Q9.png?w=280" width="280"></media:thumbnail><category>இது புதுசு (Automobile)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/audi">ஆடி</a> நிறுவனம் தனது முற்றிலும் புதிய Q9 மாடலின் பிரிட்டன் விலை விவரங்களை அறிவித்துள்ளது. அதன்படி ஆடியின் ஃபுல் சைஸ் எஸ்யூவி மாடலான Q9 பிரிட்டனில் 103,900 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ. 1.18 கோடி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. </p><p>இந்த மாடலின் விநியோகம் வருகிற நவம்பர் மாதம் துவக்க இருக்கிறது. இந்திய சந்தையில் இந்த <a href="https://www.maalaimalar.com/topic/car">கார்</a> அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படுகிறது.</p><p>5310மிமி நீளம், 2210மிமி அகலம் மற்றும் 1810 மிமி உயரம் என ஆடி நிறுவனத்தின் மிகப்பெரிய ப்ரொடக்ஷன் மாடல் என்ற பெருமையை புதிய Q9 பெற்றிருக்கிறது. இந்த காரின் வீல்பேஸ் 3140மிமி அளவில் உள்ளது. இந்த கார் 7 இருக்கைகள் கொண்ட வடிவில் கிடைக்கிறது. </p><h2>சக்திவாய்ந்த என்ஜின்:</h2><p>பிரிட்டனில் இந்த மாடல் 3.0 லிட்டர் வி6 டீசல் என்ஜின் என ஒற்றை பவர்டிரெய்ன் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது. இந்த யூனிட் 300 ஹெச்.பி. பவர் மற்றும் 630 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.</p><p>இத்துடன் 8-ஸ்பீடு டிப்டிரோனிக் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் மற்றும் குவாட்ரோ ஆல்-வீல் டிரைவ் வழங்கப்படுகிறது. மேலும், இந்த யூனிட் உடன் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.</p><h2>இந்திய வெளியீடு:</h2><p>இந்திய சந்தையில் புதிய Q9 மாடல் ஆடி Q7 மாடலின் மேல் ஃபிளாக்ஷிப் எஸ்.யூ.வி. மாடலாக நிலைநிறுத்தப்படும். இந்த காரின் அறிமுகத்தை ஒட்டி ஆடி இந்தியா தனது எஸ்.யூ.வி. மாடல்களை ரிப்ரெஷ் செய்யும் என்று கூறப்படுகிறது. இந்த காரின் வரிசையில், புதிய தலைமுறை ஆடி Q3 மாடலும் சில மாதங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.</p><p>அளவில் பெரிய ஆடம்பர எஸ்.யூ.வி. மாடல் என்ற வகையில், புதிய ஆடி Q9 இந்திய சந்தையில் பி.எம்.டபிள்யூ. X7 மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.எஸ். மாடல்களுக்கு போட்டியாக அமையும்.</p>]]></content:encoded></item><item><title>தாய்நாட்டு விடுதலைக்காக தன்னலமின்றி போராடிய பூலித்தேவனின் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்! - முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/puli-thevar-birthday-cm-vijay-pay-respect</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/puli-thevar-birthday-cm-vijay-pay-respect#comments</comments><guid isPermaLink="false">080b7fa5-c0c6-46b0-b23b-e69286bb509b</guid><pubDate>Tue, 01 Sep 2026 04:25:40 +0000</pubDate><atom:updated>2026-09-01T04:25:40.656Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,பூலித்தேவர்,freedom fighter,சுதந்திர போராட்ட வீரர்,Puli Thevar birthday</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/fujq04l5/cmvijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay - Puli thevar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/fujq04l5/cmvijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாவீரன் பூலித்தேவனின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1-ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.</p><p>திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நெற்கட்டும்செவல் என்ற பாளையத்தின் பாளையக்காரராகப் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D">பூலித்தேவன்</a> விளங்கினார்.</p> <p>இவரது காலம் தமிழ்நாட்டில் பாளையக்காரர் முறையின் வீரம் செறிந்த காலகட்டமாகப் போற்றப்படுகிறது. ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் வர்த்தக மற்றும் அரசியல் ஆதிக்கத்தை ஆரம்ப நிலையிலேயே எதிர்த்தவர்.</p><p>ஆற்காடு நவாப் முகமது அலியும் அவனுக்கு ஆதரவளித்த ஆங்கிலேயக் கம்பெனியும் பாளையக்காரர்களிடம் வரி வசூலிக்க முயன்றபோது, பூலித்தேவன் திறை (வரி) செலுத்த மறுத்துவிட்டார்.</p> <p>ஆங்கிலேயர்களை எதிர்க்கக் கருதி, பிற பாளையக்காரர்களான மேற்குப் பாளையக்காரர்களை ஒன்றிணைத்து ஒரு வலிமையான கூட்டமைப்பை உருவாக்கினார். இதில் மாவீரன் ஒண்டிவீரன் போன்ற தளபதிகள் இவருக்குப் பக்கபலமாக இருந்தனர்.</p><p>பூலித்தேவனை அடக்க பிரிட்டிஷாரால் அனுப்பப்பட்ட முகமது யூசுப்கான் பலமுறை நெற்கட்டும் செவலை முற்றுகையிட்டார். ஆரம்பத்தில் பூலித்தேவனின் கோட்டையைக் கைப்பற்ற முடியாமல் கான்சாஹிப் திணறினார்.</p> <p>நீண்ட போர்களுக்குப் பிறகு, ஆங்கிலேயர்களின் நவீன ஆயுதங்கள் மற்றும் பீரங்கிப் படைகளின் உதவியோடு 1761-இல் நெற்கட்டும்செவல் கோட்டையைக் கான்சாஹிப் கைப்பற்றினார்.</p><p>கோட்டையை இழந்தாலும் பூலித்தேவன் சோர்வடையாமல், மறைவிடங்களில் இருந்து தனது போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தினார்.</p><p>இந்திய விடுதலை வரலாற்றில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து முதன்முதலாகப் போராடிய மாவீரர்களில் பூலித்தேவன் குறிப்பிடத்தக்கவர். </p> <p>இந்நிலையில் மாவீரன் பூலித்தேவனின் பிறந்தநாளையொட்டி <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-to-visit-britain-on-the-10th">முதலமைச்சர் விஜய்</a> வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகத் தமிழக மண்ணில் முதல் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு முன்னதாகவே துணிச்சலுடன் களம் கண்ட விடுதலைப் போராட்ட வீரரும், நெற்கட்டும்செவல் பாளையக்காரருமான மாவீரன் பூலித்தேவனின் பிறந்தநாளில், அவரைப் போற்றிப் பெருமிதத்துடன் நினைவுகூர்கிறேன்.</p> <p>அடிமைத்தனத்தை ஏற்க மறுத்து, அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராகத் தனது இறுதி மூச்சுவரை அஞ்சாது போராடிய அவரது வீரமும், தாய்மண் மீதான பற்றும், சுயமரியாதை உணர்வும் தமிழர் வரலாற்றில் என்றும் அழியாத இடத்தைப் பெற்றுள்ளன.</p><p>தாய்நாட்டு விடுதலைக்காகத் தன்னலமின்றிப் போராடிய மாவீரன் பூலித்தேவனின் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>9000mAh பேட்டரியுடன் விரைவில் அறிமுகமாகும் புது போக்கோ ஸ்மார்ட்போன்</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/poco-x8-5g-with-9000mah-battery-india-launch-on-september-4</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/poco-x8-5g-with-9000mah-battery-india-launch-on-september-4#comments</comments><guid isPermaLink="false">d2ffde10-f592-4fa0-a849-2e3dbc6b66ca</guid><pubDate>Tue, 01 Sep 2026 03:42:00 +0000</pubDate><atom:updated>2026-09-01T03:42:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>POCO,smartphone,ஸ்மார்ட்போன்,போக்கோ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/h7pzs7qs/Poco-X8-Power-Teaser.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Poco X8 Power Teaser]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/h7pzs7qs/Poco-X8-Power-Teaser.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/poco">போக்கோ</a> நிறுவனம் இந்திய சந்தையில் தனது போக்கோ X8 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் போக்கோ X8 பவர் 5ஜி மாடலுடன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இரு மாடல்களும் வருகிற செப்டம்பர் 4-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. </p><p>வெளியீட்டை ஒட்டி போக்கோ நிறுவனம் பல்வேறு டீசர்களை வெளியிட்டதோடு, <a href="https://www.maalaimalar.com/topic/flipkart">ப்ளிப்கார்ட்</a> தளத்தில் மைக்ரோசைட் ஸ்மார்ட்போன்களின் முக்கிய சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் அதிக திறன் கொண்ட பேட்டரி மற்றும் நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்கும் என்று டீசர்களில் தெரியவந்துள்ளது.</p><h2>முக்கிய அம்சங்கள்:</h2><p>இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய போக்கோ X8 5ஜி ஸ்மார்ட்போன் 9000mAh பேட்டரி கொண்டிருக்கும் என்றும் இது 67 வாட் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், 22.5 வாட் வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் வசதி கொண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>இத்துடன் ஸ்மார்ட் சார்ஜிங், பைபாஸ் சார்ஜிங், பிபிஎஸ் ப்ரோடோகால் சப்போர்ட் போன்ற அம்சங்கள் மற்றும் 6 ஆண்டுகள் வரை பேட்டரி ஆரோக்கியம் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>புது போக்கோ ஸ்மார்ட்போன் 1.5K 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்ட AMOLED டிஸ்ப்ளே, மெல்லிய பெசல்கள், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மோஸ் சப்போர்ட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.</p><p>போக்கோ X8 மற்றும் போக்கோ X8 பவர் 5ஜி என இரு மாடல்களும் ஒரே மாதிரியான ஸ்கிரீன், டிசைன் மற்றும் பில்டு கொண்டிருக்கும். இத்துடன் டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மோஸ் சப்போர்ட் உடன் வரும் என்று உறுதியாகி இருக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-opening-mettur-dam-today-for-delta-irrigation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-opening-mettur-dam-today-for-delta-irrigation#comments</comments><guid isPermaLink="false">427091d5-926c-4ef7-b4dd-790c137e4fe8</guid><pubDate>Tue, 01 Sep 2026 03:21:41 +0000</pubDate><atom:updated>2026-09-01T03:21:41.413Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,மேட்டூர் அணை,Mettur Dam,டெல்டா பாசனம்,Delta Irrigation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/wkjvmtox/metturdam.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay - Mettur dam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/wkjvmtox/metturdam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மேட்டூர் அணையில் இருந்து இன்று டெல்டா பாசனத்திற்கு முதலமைச்சர் விஜய் தண்ணீர் திறந்து வைக்கிறார். இதற்காக அவர் சேலம் செல்வதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது.</strong></em></p> <h2>மேட்டூர் அணை</h2><p>டெல்டா விவசாயிகளின் உயிர் மூச்சான <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">மேட்டூர் அணை </a>மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர். திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர் உள்பட 13 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சரிவர மழை பெய்யாத காரணத்தால் குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கப்படவில்லை.</p> <p>ஆனால் கடந்த 2 வாரங்களாக கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்தது. </p><p>இதனால் அணையின் நீர்மட்டம் 90 அடியை தாண்டியதை தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து செப்டம்பர் 1-ந்தேதி தண்ணீர் திறந்துவிடப்படும் என்றும், அந்த தண்ணீர் 45 நாட்கள் திறந்துவிடப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது.</p> <h2>இன்று தண்ணீர் திறப்பு</h2><p>நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 91.15 அடியை எட்டி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 501 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.</p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>இந்தநிலையில், மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு இன்று காலை தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதற்காக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-important-measures-starting-with-an-increase-in-the-milk-procurement-price">முதலமைச்சர் விஜய்</a> சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் காலை 10.30 மணிக்கு சேலம் செல்கிறார். ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்திற்கு செல்லும் அவர், அங்கிருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக மேட்டூர் செல்கிறார். பின்னர் அவர் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைக்கிறார். முதலமைச்சர் விஜய் சேலம் செல்வதையொட்டி மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.</p> <h2>ஒகேனக்கல்</h2><p>நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து நேற்று காலை 10 மணி நிலவரப்படி வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>வரும் 10-ந்தேதி பிரிட்டன் செல்லும் முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-to-visit-britain-on-the-10th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-to-visit-britain-on-the-10th#comments</comments><guid isPermaLink="false">744f8d39-c67c-4904-9c24-b3433ea36b50</guid><pubDate>Tue, 01 Sep 2026 03:12:53 +0000</pubDate><atom:updated>2026-09-01T03:12:53.106Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,TN Govt,தமிழக அரசு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/914u6r1p/vijay08.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/914u6r1p/vijay08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் விஜய் தலைமையிலான உயர்மட்டக் குழு செப்டம்பர் 10-ஆம் தேதி பிரிட்டன் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ளது.</strong></em></p><p>தமிழ்நாட்டுக்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வருகிற 10-ந்தேதி முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">விஜய்</a> பிரிட்டனுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். முதலமைச்சர் விஜய் தலைமையிலான தொழில்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் வருகிற 10-ந்தேதி பிரிட்டன் சென்று செப்டம்பர் 16-ந்தேதி வரை சுற்றுப்பயணம் செய்ய உள்ளது.  இந்த பயணத்தின் போது பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் தொழில் அதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களைச் சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க  வருமாறு அழைப்பு விடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. </p><p>முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-changed-his-seat-again">விஜய்</a> வெளிநாட்டுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. </p><h2><strong>செமிகான் மாநாடு</strong></h2><p>இதனிடையே, செமிகண்டக்டர், செயற்கை நுண்ணறிவு (AI), சிப் தயாரிப்பு உள்ளிட்ட நவீன தொழில் நுட்பத் துறைகளில் ஈடுபட்டுள்ள பல நாட்டு நிறுவனங்கள் பங்கேற்கும் ‘செமிகான்’ (Semicon) மாநாடு இந்த வாரம் தைவானில் நடைபெறுகிறது.</p><p>இதில் பங்கேற்பதற்காகத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழுவினர் வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி தைவான் புறப்பட்டுச் செல்கின்றனர். இம்மாநாட்டின் மூலம் உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களின் முதலீடுகளைத் தமிழ்நாட்டை நோக்கி ஈர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>தென் மாநிலங்களுக்கு இடையே தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் கடும் போட்டி நிலவி வரும் சூழலில், தமிழக அரசின் இந்த அடுத்தடுத்த வெளிநாட்டுப் பயணங்கள் புதிய வேலைவாய்ப்புகளையும் தொழில் வளர்ச்சியையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு - ஓட்டல் உரிமையாளர்கள் அதிர்ச்சி</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/commercial-lpg-gas-cylinder-prices-hiked</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/commercial-lpg-gas-cylinder-prices-hiked#comments</comments><guid isPermaLink="false">7bc3cb65-284c-4452-b43c-52fcb476a040</guid><pubDate>Tue, 01 Sep 2026 02:50:24 +0000</pubDate><atom:updated>2026-09-01T02:50:24.208Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Commercial cylinder,சிலிண்டர் விலை,Gas cylinder,Cooking Gas Cylinder,வணிக சிலிண்டர் விலை உயர்வு,சமையல் கியாஸ் சிலிண்டர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/03/06/27240275-lpg.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Commercial gas cylinder ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/03/06/27240275-lpg.webp?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னையில் 19 கிலோ எடைகொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 10.50 உயர்ந்துள்ளது.</strong></em></p> <h2>எண்ணெய் நிறுவனங்கள்</h2><p>சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலைகளை நிர்ணயித்து வருகின்றன. இதில் சமையல், வணிக கியாஸ் சிலிண்டர்களின் விலைகளை மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைத்து வருகின்றன.</p> <h2>சிலிண்டர் விலை நிலவரம்</h2><p>இன்று மாதத்தின் முதல் நாள் என்பதால், சிலிண்டர் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது.</p> <h2>வணிக சிலிண்டர் விலை உயர்வு</h2><p>அதன்படி, சென்னையில் 19 கிலோ எடைகொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 10.50 உயர்ந்து, ரூ.2,916.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p>வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.957.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p>இதனால் ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் சிறு வணிகர்கள் பெரிதும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர்.</p>  ]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-and-diesel-price-in-chennai-1-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-and-diesel-price-in-chennai-1-september-2026#comments</comments><guid isPermaLink="false">9889b72d-b1f8-45c1-abe0-b8b234e71986</guid><pubDate>Tue, 01 Sep 2026 02:28:55 +0000</pubDate><atom:updated>2026-09-01T02:28:55.861Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,கச்சா எண்ணெய்,Crude oil,பெட்ரோல் டீசல் விலை,Pertrol Diesel Prices</media:keywords><media:content height="576" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/for3wnkv/maalai-malar2026-08-211xkldom8maalai-malar2026-08-14alj4ing3maalai-malar2026-07-28zqvhuwkktn-2.avif" width="1024"><media:title type="html"><![CDATA[ பெட்ரோல், டீசல் விலை]]></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல், டீசல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/for3wnkv/maalai-malar2026-08-211xkldom8maalai-malar2026-08-14alj4ing3maalai-malar2026-07-28zqvhuwkktn-2.avif?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் போரினால் மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p> <h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.</p> <h2>இன்றைய பெட்ரோல், டீசல் விலை</h2><p>அந்த வகையில் இன்றைய (1.9.2026 - (செவ்வாய்க்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 1.9.2026 - இந்த ராசிக்காரர்கள் முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள்</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-1-september-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-1-september-2026#comments</comments><guid isPermaLink="false">ecc1908f-3d24-47de-ac92-931faeba976f</guid><pubDate>Tue, 01 Sep 2026 02:00:42 +0000</pubDate><atom:updated>2026-09-01T02:00:42.139Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/13/20002724-rasi1.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/13/20002724-rasi1.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் உண்டு.</p><h2>ரிஷபம்</h2><p>யோகமான நாள். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு பற்றிய தகவல் வரலாம். வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.</p> <h2>மிதுனம்</h2><p>முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள். வேலைப்பளுவின் காரணமாக உத்தியோகத்திலிருந்து விடுபடலாமா என்று யோசிப்பீர்கள்.</p><h2>கடகம்</h2><p>தொழில் ரீதியாக எடுத்த முயற்சிக்கு நண்பர்களின் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் தற்காலிகப் பணி நிரந்தரப் பணியாக மாறலாம்.</p> <h2>சிம்மம்</h2><p>விமர்சனங்களால் ஏற்பட்ட விரிசல் மறையும் நாள். வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். பழைய கடன்கள் தீரும். உத்தியோகப் பிரச்சனை முடிவிற்கு வரும்.</p><h2>கன்னி</h2><p>முயற்சியில் தடைகள் ஏற்படும் நாள். திட்டமிட்ட காரியங்களில் மாற்றம் செய்வீர்கள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். நட்பு பகையாகலாம்.</p> <h2>துலாம்</h2><p>துணையாக இருப்பவர்கள் தோள்கொடுத்து உதவும் நாள். பொருளாதார வளர்ச்சி உண்டு. தன்னைச் சார்ந்தவர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள்.</p><h2>விருச்சிகம்</h2><p>வருமானம் திருப்தி தரும் நாள். அலைபேசி வழித்தகவல் ஆதாயம் தரும். உத்தியோகத்திலிருந்து விருப்ப ஓய்வில் வெளிவருவது பற்றிச் சிந்திப்பீர்கள்.</p> <h2>தனுசு</h2><p>வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சி கைகூடும். பழைய கடன்களைக் கொடுத்து மகிழ்வீர்கள்.</p><h2>மகரம்</h2><p>குடும்பச்சுமை கூடும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். கூடுதல் சம்பளத்துடன் கூடிய வேலை தேடி வரும்.</p> <h2>கும்பம்</h2><p>வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி அகலும் நாள். வரவும் செலவும் சமமாகும். ஆபரண சேர்க்கை உண்டு. அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சி ஆதாயம் தரும்.</p><h2>மீனம்</h2><p>காரிய வெற்றி ஏற்படும் நாள். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர். காலை நேரத்திலேயே கலகலப்பான தகவல் வந்து சேரும்.</p> ]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 1 செப்டம்பர் 2026: ஸ்ரீ வாஞ்சியம் முருகப் பெருமான் பவனி
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-1-september-2026-srivanjiyam-muruga-peruman-bhavani</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-1-september-2026-srivanjiyam-muruga-peruman-bhavani#comments</comments><guid isPermaLink="false">6cfeca0b-7ff7-47df-b6f6-dc30f2a18445</guid><pubDate>Tue, 01 Sep 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-09-01T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/09/12/18517495-muruga7.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/09/12/18517495-muruga7.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆவணி-15 (செவ்வாய்க்கிழமை)</p><p>பிறை : தேய்பிறை</p><p>திதி :  சதுர்த்தி காலை 7.56 மணி வரை பிறகு பஞ்சமி</p><p>நட்சத்திரம் : அசுவினி பின்னிரவு 3.32 மணி வரை பிறகு பரணி</p><p>யோகம் :  சித்தயோகம்</p> <p>ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை</p><p>எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை</p><p>சூலம் : வடக்கு</p><p>நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை</p> <h2>முருகர் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்</h2><p>திருச்செந்தூர் ஸ்ரீ முருகப் பெருமான் கேடயச் சப்பரத்திலும், இரவு பல்லக்கிலும் திருவீதியுலா. பெருவயல் ஸ்ரீ முருகப்பெருமான் பவனி வரும் காட்சி. சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம். </p> <p>திருநெல்வேலி சமீபம் 3-ஆம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்த மாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் திருக்கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல், ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமான் பவனி. </p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - ஆர்வம்</p><p>ரிஷபம் - தேர்ச்சி</p><p>மிதுனம் - வரவு</p><p>கடகம் - உழைப்பு</p><p>சிம்மம் - முயற்சி</p><p>கன்னி - ஜெயம்</p> <p>துலாம் - போட்டி</p><p>விருச்சிகம் - ஆக்கம்</p><p>தனுசு - அனுகூலம்</p><p>மகரம் - நன்மை</p><p>கும்பம் - மேன்மை</p><p>மீனம் - கடமை</p> ]]></content:encoded></item><item><title>அடுத்த வாரம் ரிலீஸ்: ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த சர்தார் 2 டிரெய்லர் வெளியீடு</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/sardar-2-trailer-launched</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/sardar-2-trailer-launched#comments</comments><guid isPermaLink="false">a77c3910-75e7-4751-a444-438df778ad64</guid><pubDate>Tue, 01 Sep 2026 01:29:50 +0000</pubDate><atom:updated>2026-09-01T01:29:50.631Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Karthi,கார்த்தி,Sardar 2,சர்தார் 2,PS Mithran,பிஎஸ் மித்ரன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/bprdzbtz/Sardar-2-Trailer.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sardar 2 Trailer Poster]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/bprdzbtz/Sardar-2-Trailer.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவர்  நடிப்பில் உருவாகி இருக்கும் ‘<a href="https://www.maalaimalar.com/topic/sardar-2">சர்தார் 2</a>’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியாக இருக்கிறது. </p><p>இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ <a href="https://www.maalaimalar.com/cinema">திரைப்படம்</a> ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது. </p><p>‘சர்தார் 2’ திரைப்படத்தில் கார்த்தி அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் கார்த்தியுடன் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.</p><h2>சாம் சி.எஸ். 100:</h2><p>இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். சாம் சி.எஸ். இசையமைக்கும் 100-வது திரைப்படம் ‘சர்தார் 2’ என்பதால், படத்தின் இசை மீதும் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் ‘சர்தார் 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், அறிமுக வீடியோ மற்றும் டீசர் வெளியாகி வைரலானது.</p><p>இதைத் தொடர்ந்து இந்தப் படத்தின் முதல் பாடலாக ‘மயில்வீரா’ சமீபத்தில் வெளியானது. தமிழ் கடவுளான முருகனை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடல், பக்தி கலந்த இசையுடன் அமைந்துள்ளது.</p><h2>ரிலீஸ் அப்டேட்:</h2><p>முதல் அறிவிப்பு வெளியானதில் இருந்தே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து உருவாகி இருக்கும் ‘சர்தார் 2’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.</p><p>அடுத்த வாரம் திரைப்படம் வெளியாவதை ஒட்டி நடிகர் கார்த்தியின் ‘சர்தார் 2’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ‘சர்தார் 2’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டது.</p> <figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/jpvb4l2RIXU"></iframe></figure>]]></content:encoded></item><item><title>அமெரிக்க ராணுவ செயலாளர் டான் டிரிஸ்கோல் பதவி விலகுகிறார் - வெள்ளை மாளிகை தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/world/army-secretary-dan-driscoll-is-stepping-down</link><comments>https://www.maalaimalar.com/news/world/army-secretary-dan-driscoll-is-stepping-down#comments</comments><guid isPermaLink="false">380e3a71-b0e1-4498-8af6-98f9ae75f2bf</guid><pubDate>Tue, 01 Sep 2026 01:16:14 +0000</pubDate><atom:updated>2026-09-01T01:16:14.319Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராணுவம்,டொனால்டு டிரம்ப்,Donald Trump,அமெரிக்கா,us,US Army Secretry</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/mycf86cn/daniel-driscoll.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Daniel Driscoll]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/mycf86cn/daniel-driscoll.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அதிபர் <a href="https://www.maalaimalar.com/topic/donald-trump">டொனால்டு டிரம்ப்</a> நிர்வாகத்தின் கீழ் உயர்மட்ட ராணுவ தலைவர் ஒருவர் வெளியேறும் சமீபத்திய நிகழ்வாக, ராணுவ செயலாளர் டான் டிரிஸ்கோல் 18 மாத பணிக்கு பிறகு பதவி விலகுவதாக வெள்ளை மாளிகை அறிவித்தது.</p><p>துணை அதிபர் <a href="https://www.maalaimalar.com/topic/jd-vance">ஜே.டி. வான்ஸ்</a> நண்பரான டிரிஸ்கோலின் வெளியேற்றத்திற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை; இருப்பினும், பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் உடனான கருத்து வேறுபாடுகள் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.</p><p>ராணுவத் தலைமையகத்தில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான மாற்றங்களின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது; குறிப்பாக ராணுவத்தில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. </p><h2>வெள்ளை மாளிகை அறிக்கை:</h2><p>"வரலாற்று சிறப்புமிக்க ராணுவ நடவடிக்கைகளின் போது சிறந்த தலைமைத்துவத்தை வழங்கியது, தயார்நிலை மற்றும் தாக்குதல் திறனுக்கு மீண்டும் முக்கியத்துவம் அளித்தது, ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு உதவியது மற்றும் பலவற்றின் மூலம் 'அமெரிக்காவை மீண்டும் வலிமையாக்குதல்' என்ற அதிபர் டிரம்ப் நோக்கத்தை ராணுவ துறையில் முன்னெடுப்பதில் செயலாளர் டிரிஸ்கோல் மிகவும் திறம்பட செயல்பட்டுள்ளார்," என்று வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் அன்னா கெல்லி ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.</p><p>"முப்படைகளின் தலைமை தளபதி மற்றும் பாதுகாப்புச்செயலாளர் ஆகியோருடன் இணைந்து அவர் ஆற்றிய பணிகளால், அமெரிக்க ராணுவம் முன்னெப்போதையும் விட வலிமையாக உள்ளது," என்றும் அவர் மேலும் கூறினார்.</p><h2>ராணுவ அதிகாரி தகவல்:</h2><p>பொதுவெளியில் கருத்து தெரிவிக்க அனுமதி இல்லாத நிலையில், பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், ராணுவத்தின் தற்போதைய நிலை குறித்து அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் டிரிஸ்கோல் பேசியதாகவும், பின்னர் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்ததாகவும் தெரிவித்தார். அந்த அதிகாரி கூடுதல் விவரங்களை வழங்கவில்லை.</p><p>டிரிஸ்கோலின் ராஜினாமா குறித்த தகவல் முன்னதாக 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' இதழில் வெளியானது. டிரிஸ்கோலின் வெளியேற்றத்திற்கு முன்னதாக, அவருடன் நெருக்கமாக இருந்த ஒருவர் ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டதும், அவர் முன்னெடுத்த டிரோன் திட்டம் கைவிடப்பட்டதும் நிகழ்ந்துள்ளன.</p>]]></content:encoded></item><item><title>போரை முடிவுக்குக் கொண்டுவர உதவ வேண்டும் - பிரதமர் மோடியை சந்தித்த ஈரான் அதிபர் வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/world/iran-president-meets-pm-modi-seeks-help-to-end-war</link><comments>https://www.maalaimalar.com/news/world/iran-president-meets-pm-modi-seeks-help-to-end-war#comments</comments><guid isPermaLink="false">5f9daa47-e70f-4c2f-acfb-815e1b47a1a7</guid><pubDate>Mon, 31 Aug 2026 23:47:10 +0000</pubDate><atom:updated>2026-08-31T23:47:10.546Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ஈரான்,Iran,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/vownhfzr/PM-Modi-and-Masoud-Pezeshkian.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi and Masoud Pezeshkian]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/vownhfzr/PM-Modi-and-Masoud-Pezeshkian.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிஷ்கெக்கில் நடைபெற்ற SCO உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக ஈரானிய அதிபர் மசூத் பெசஸ்கியானை சந்தித்த <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">பிரதமர் மோடி</a>, கடல்வழி போக்குவரத்து மற்றும் வர்த்தக சுதந்திரத்தை வலியுறுத்தினார். </p><p>மேலும், எந்த சூழ்நிலையிலும் பொதுமக்கள், வணிக கப்பல்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கான உள்கட்டமைப்பு மற்றும் மாலுமிகள் பாதிக்கப்படக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/world">அமெரிக்க</a> தடைகள் குறித்த அச்சுறுத்தல் இருந்தபோதிலும், இரு தலைவர்களும் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.</p><h2>பெசஸ்கியான் வலியுறுத்தல்:</h2><p>சுமார் இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற தங்களின் முதல் இருதரப்பு சந்திப்பில், ஹார்முஸ் நீரிணை மற்றும் சபஹார் துறைமுக ஒத்துழைப்பு உள்ளிட்ட மேற்கு ஆசியாவின் நிலவரம் குறித்து இருவரும் விவாதித்தனர். போரில் ஈடுபட்டுள்ள தரப்பினரை அப்பாதையில் இருந்து விலக்க, இந்தியாவின் "பரந்த" தொடர்புகளை பயன்படுத்துமாறு பெசஸ்கியான் மோடியிடம் கேட்டுக்கொண்டார்.</p><p>அதிகரித்து வரும் பதற்றங்கள் குறித்து கவலை தெரிவித்த பிரதமர் மோடி, இந்தப் பகுதியில் நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரும்பும் அதே வேளையில், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பதன் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தினார்.</p><h2>பிரிக்ஸ்-இல் இருதரப்பு சந்திப்பு:</h2><p>போர் மற்றும் ரத்தக் களரிப் பாதையில் இருந்து சம்பந்தப்பட்ட தரப்பினரை விலக்க இந்தியாவின் "பரந்த" தொடர்புகளைப் பயன்படுத்துமாறு அவர் மோடியை வலியுறுத்தினார். அரசியல், பொருளாதாரம், அறிவியல், கலாச்சாரம் மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த பிற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் அதிபர் அழைப்பு விடுத்தார்; இது தடைகளின் தாக்கத்தை தணித்து, உறவை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.</p><p>மோடியும் பெசஸ்கியானும் கடைசியாக 2024-ல் கசானில் நடைபெற்ற பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டின் போது இருதரப்பு சந்திப்பை நடத்தினர். இந்த சந்திப்பு, பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்த இரு தலைவர்களுக்கும் வாய்ப்பளித்தது.</p><p>பல்வேறு துறைகளில் ஈரானுடனான நீண்டகால "நட்பை" வலுப்படுத்துவதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை மோடி அடிக்கோடிட்டு காட்டினார். "எதிர்காலத்தில் எங்கள் வர்த்தக வரம்பை விரிவுபடுத்தவும் பன்முகப்படுத்தவும் விரும்புகிறோம். பிராந்தியத்தில் நிலவும் சூழல் குறித்தும் நாங்கள் விவாதித்தோம்.</p>]]></content:encoded></item><item><title>எம். எஸ். பாஸ்கர் நடிப்பில்  ‘விடியும் காத்திரு’… மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ms-bhaskar-starrer-vidiyum-kaathiru-1st-look-out</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ms-bhaskar-starrer-vidiyum-kaathiru-1st-look-out#comments</comments><guid isPermaLink="false">db89b297-642e-448f-8603-7187886233ca</guid><pubDate>Mon, 31 Aug 2026 21:46:34 +0000</pubDate><atom:updated>2026-08-31T21:46:34.146Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MS bhaskar,எம்எஸ் பாஸ்கர்,விடியும் காத்திரு,Vidiyum Kaathiru</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/a1ys2cfz/vidiyum-kathiru.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ vidiyum kathiru FL]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/a1ys2cfz/vidiyum-kathiru.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/ms-bhaskar">எம்.எஸ். பாஸ்கர்</a> நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘விடியும் காத்திரு’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.</p><p>Friends Production House நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை பி.எம். ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். அயோத்தி வளர்மதி இணைத் தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். இயக்குநர்கள் பாலா மற்றும்  மிஷ்கின் படங்களின் கதை விவாதங்களில் பங்காற்றிய ஆர். அரவிந்த ராஜன், தனது முதல் திரைப்படமாக ‘விடியும் காத்திரு’ படத்தை இயக்கியுள்ளார்.</p><h2>படக்குழு விவரம்:</h2><p>எம்.எஸ். பாஸ்கர் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் அம்ஜதா ஷெரின் முதன்மை பெண்கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், காவலர் கதாபாத்திரத்தில் கோபி அயோத்தி, பேபி ஶ்ரீஜிதா, ராகேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.</p><p>சுவாரஸ்யமான க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படம், ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைக்கும் வகையிலான பரபரப்பான திரைக்கதையுடன், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படமாக உருவாகி வருகிறது. </p><p>ஒரு கொலை நடந்த வீட்டிற்குள் செல்லும் இரண்டு காவல் அதிகாரிகளுக்கு அங்கு நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களை மையமாக வைத்து இப்படத்தின் திரைக்கதை பின்னப்பட்டுள்ளது.</p><h2>இறுதிக்கட்ட பணிகள்:</h2><p>இந்தப் படத்திற்கு சி. சத்யா இசையமைக்கிறார். ஜி. தாமோதரன் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். சண்டைக் காட்சிகளை மெட்ரோ மகேஷ் அமைக்க, ஐஸ்வர்யா நடன அமைப்பாளராக பணியாற்றுகிறார். ராஜன் வழிவிட்டான் கலை இயக்கத்தை கவனிக்கிறார்.</p><p>சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/israel-kills-5-civilians-in-fresh-airstrikes-in-gaza</link><comments>https://www.maalaimalar.com/news/world/israel-kills-5-civilians-in-fresh-airstrikes-in-gaza#comments</comments><guid isPermaLink="false">2b0416c1-477f-4bc6-929c-42a4851a13b3</guid><pubDate>Mon, 31 Aug 2026 21:02:23 +0000</pubDate><atom:updated>2026-08-31T21:02:23.652Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காசா,இஸ்ரேல்,gaza,Israel</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/65q41hso/gaza-atacked.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ gaza atacked]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/65q41hso/gaza-atacked.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/gaza">காசா</a> நகரை சுற்றியுள்ள பகுதிகளில் திங்கள்கிழமை நடந்த இஸ்ரேலிய வான்வழி தாக்குதல்களில் ஐந்து பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் மருத்துவமனையும் மீட்பு குழுவினரும் தெரிவித்தனர். மேலும், ஹமாஸ் "ராணுவ இயக்கத்தினரை" குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.</p><p>"காசா நகர நகராட்சி பூங்காவிற்கு அருகில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் நுழைவாயிலை குறிவைத்து நடத்தப்பட்ட இஸ்ரேலிய வான்வழி தாக்குதலை தொடர்ந்து, இரண்டு உடல்கள் தங்களுக்கு கிடைத்துள்ளதாக" காசா நகரில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனை தெரிவித்தது.</p><p>மருத்துவனை தகவல்:</p><p>காசா நகரின் தென்மேற்கே உள்ள டெல் அல்-ஹவா பகுதியில், பொதுமக்கள் வாகனம் ஒன்றை குறிவைத்து இஸ்ரேலிய ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டதன் விளைவாக, மேலும் மூன்று சடலங்களும் பலர் காயங்களுடன் மீட்கப்பட்டதாக மருத்துவமனை தெரிவித்தது.</p><p>ஹமாஸின் அதிகாரத்தின் கீழ் மீட்பு சேவையாக செயல்படும் குடிமை பாதுகாப்புப் பிரிவு, இரண்டு தாக்குதல்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையை ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியது.</p><p>ஆயுத விநியோகம்:</p><p>குடிமை பாதுகாப்பு துறையால் பகிரப்பட்ட படங்களில், இரண்டாவது தாக்குதலுக்கு இலக்கான, முற்றிலுமாக சிதைந்து, உருக்குலைந்த உலோகத்தால் ஆன கறுத்துப்போன ஓடாக மாறியிருந்த காரை, அதை சுற்றி பொதுமக்கள் கூட்டம் கூடியிருக்க, பணியாளர்கள் ஆய்வு செய்வது காட்டப்பட்டது.</p><p>ஏ.எஃப்.‌பி. தொடர்பு கொண்டபோது, ​​இஸ்ரேலிய இராணுவம், இரு தாக்குதல்களிலும் "ஹமாஸின் இராணுவ பிரிவான எஸ்ஸெடின் அல்-கஸ்ஸாம் படைப்பிரிவுகளை சேர்ந்தவர்களை தாக்கியதாக கூறியது.</p><p>பின்னர் அது, இறந்தவர்களில் ஒருவரை உமர் முகமது ரோஷ்டி சரஜ் என அடையாளம் கண்டதுடன், அவர் ஹமாஸுக்கு ஆயுதங்களை வழங்கியதாகவும் கூறியது. "பயங்கரவாதிகள் ஏற்படுத்திய அச்சுறுத்தலை அகற்றுவதற்காக அவர்கள் தாக்கப்பட்டனர்," என ராணுவ அறிக்கை ஒன்று தெரிவித்தது.</p><h2>தொடர் தாக்குதல்:</h2><p>அமெரிக்காவின் ஆதரவுடன் 2025 அக்டோபரில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தபோதிலும், காசா பகுதியில் வன்முறை ஓயவில்லை. தீவிரவாதிகள் எனக் கூறும் பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் தொடர்ந்து குறிவைத்து தாக்கி வருகிறது.</p><p>2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் நடத்திய முன்னெப்போதும் இல்லாத தாக்குதலே காசா போரைத் தூண்டியது. அந்த அமைப்பின் அச்சுறுத்தல்களை ஒழித்தே ஆக வேண்டும் என இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>